<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 04 Sep 2026 03:22:25 +0000</lastBuildDate><item><title>கிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி நல்லுலகைப் படைத்திடுவோம்: முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-build-a-better-world-by-following-krishnas-teachings-chief-minister-vijay-greeting</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-build-a-better-world-by-following-krishnas-teachings-chief-minister-vijay-greeting#comments</comments><guid isPermaLink="false">90fc9319-506f-4ca3-90f0-bcb68579341c</guid><pubDate>Fri, 04 Sep 2026 03:11:10 +0000</pubDate><atom:updated>2026-09-04T03:11:10.648Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Greetings,வாழ்த்து,கிருஷ்ண ஜெயந்தி,krishna jayanthi,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="463" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/7o93twcp/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/7o93twcp/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பகவான் கிருஷ்ணரின் அவதார தினம் கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்ற பெயர்களில் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி, ரோகிணி நட்சத்திரம் கூடிய தினத்தில் பகவான் கிருஷ்ணர் அவதரித்ததாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. இதனால் அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் இணைந்த நாளிலேயே கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் வழக்கம் உள்ளது.</p><p>இந்த ஆண்டு இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையும் கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>அநீதிக்கு எதிரான அறம் வெல்லும், எத்தகைய சூழலிலும் கடமை தவறாது செயல்பட வேண்டும், தர்மத்தின் வழியில் மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் வாழ்க்கைப் பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்னும் ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி உயரிய வாழ்வியல் நெறிகளுடன் அன்பும் அறமும் தழைத்தோங்கும் நல்லுலகைப் படைத்திடுவோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>உழவர் சந்தைக்கு வந்த ‘5 அடி’ முருங்கைக்காய்... பொதுமக்கள் ஆர்வம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/5-feet-drumsticks-arrive-at-farmers-market-public-interest</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/5-feet-drumsticks-arrive-at-farmers-market-public-interest#comments</comments><guid isPermaLink="false">afeffd9d-0bbe-443c-8f15-06a0e67423ac</guid><pubDate>Fri, 04 Sep 2026 03:07:54 +0000</pubDate><atom:updated>2026-09-04T03:07:54.037Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பொதுமக்கள்,முருங்கைக்காய்,Drumstick,உழவர் சந்தை,Farmers Market</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/jvilojxx/131.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 5 அடி முருங்கைக்காய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/jvilojxx/131.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கம்பம்,</p><p>கம்பம் உழவர் சந்தைக்கு சுமார் 5 அடி நீளமுள்ள முருங்கைக்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.</p><p>கம்பத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகள் இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். வேளாண் துறை சார்பில் தினசரி விலை நிர்ணயம் செய்யப்படுவதால், வெளிச்சந்தையைவிட குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்கின்றன.</p><h2>உழவர் சந்தை</h2><p>இதனால் கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மட்டுமின்றி, கேரளம் மாநிலத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளும் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.</p><h2>கிலோ ரூ.40-க்கு விற்பனை</h2><p>இந்தநிலையில், நேற்று உழவர் சந்தைக்கு சுமார் 5 அடி நீளமுள்ள முருங்கைக்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. 1 கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த <a href="https://www.dailythanthi.com/topic/drumstick">முருங்கைக்காய்</a>, நீளமாகவும் வித்தியாசமான தோற்றத்துடனும் இருந்ததால் கேரளம் வியாபாரிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி 1,045 கோடி யூனிட் ஆக உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wind-power-generation-in-tamil-nadu-rises-to-1045-billion-units</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wind-power-generation-in-tamil-nadu-rises-to-1045-billion-units#comments</comments><guid isPermaLink="false">3cf5d88c-cd83-4883-b0ef-29190fcb868e</guid><pubDate>Fri, 04 Sep 2026 02:43:31 +0000</pubDate><atom:updated>2026-09-04T02:43:31.158Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,காற்றாலை மின்சாரம்,காற்றாலை மின் உற்பத்தி,Wind Powers</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/lpupa2o8/vava.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/lpupa2o8/vava.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ்நாட்டில் உள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88">காற்றாலை</a> மின் நிலையங்களில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை, 1,044.67 கோடி யூனிட் மின்சாரம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>காற்றாலை மின் உற்பத்தி</h2><p>இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்தப்படியாக தமிழ்நாடு அதிக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88">காற்றாலை</a> மின் கட்டமைப்பை கொண்டுள்ளது. தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் தற்போதைய நிலவரப்படி, 9,527 மெகா வாட் திறனில், காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து உள்ளன. </p><p>மே மாதம் முதல் செப்டம்பர் வரை காற்றாலை சீசன். இருப்பினும், ஏப்ரல் முதலே காற்றாலைகளில் மின்சாரம் கிடைக்கிறது. இந்த சீசனில் காற்றின் வேகம் அதிகம் இருந்ததால், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88">காற்றாலை</a> மின் நிலையங்களில் இருந்து தினமும் சராசரியாக, 8 கோடி யூனிட் மின்சாரம் கிடைத்தது.</p><p>இதன்படி இந்தாண்டு ஏப்ரல் 1ம் தேடி முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை, 1,044.67 கோடி யூனிட் மின்சாரம் கிடைத்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 1,011.20 கோடி யூனிட்டாக இருந்தது. இந்த ஆண்டில் 33 கோடி யூனிட் கூடுதலாக கிடைத்துள்ளது.</p><p>வரும் நாட்​களில் காற்​றின் வேகம் மேலும் அதி​கரித்தால், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88">காற்றாலை</a> மின் உற்​பத்தி மிக அதிக அளவை எட்​டும்​ என தகவல்​ வெளி​யாகி உள்​ளது.</p>]]></content:encoded></item><item><title>வருவாயில் மாஸ் காட்டிய சென்னை சென்டிரல்... நாட்டிலேயே 3-வது இடம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-central-shows-massive-revenue-3rd-place-in-the-country</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-central-shows-massive-revenue-3rd-place-in-the-country#comments</comments><guid isPermaLink="false">e6e1fc8a-514e-44b7-b328-1ee6590a23ab</guid><pubDate>Fri, 04 Sep 2026 02:27:05 +0000</pubDate><atom:updated>2026-09-04T02:27:05.896Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>revenue,Chennai Central Railway Station,வருவாய்,3rd Place,சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம்,3-வது இடம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/blfjajp8/chennai-central.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை சென்ட்ரல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/blfjajp8/chennai-central.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் ரூ.1,299 கோடி வருவாய் ஈட்டி 3-வது இடத்தை பெற்றுள்ளது. </p><p>ரெயில்வே துறையில் நவீன கட்டமைப்புகள் மற்றும் பல்வேறு தொலைநோக்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதால், ரெயில்களின் இயக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெற்கு ரெயில்வே பயனாளர் ஆலோசனை குழு உறுப்பினர் ஜாபர் அலி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-</p><h2>3-வது இடம்</h2><p>கடந்த நிதியாண்டில், பயணிகள் பிரிவில் அதிக வருவாய் ஈட்டிய நாட்டின் முதல் 10 ரெயில் நிலையங்களில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையமும் இடம்பெற்றுள்ளது. அதிக வருவாய் ஈட்டிய ரெயில் நிலையங்களின் பட்டியலில் சென்னை சென்டிரல் 3-வது இடத்தை பிடித்துள்ளது.</p><h2>அதிக வருவாய்</h2><p>டெல்லி ரெயில் நிலையம் ரூ.3,337 கோடி வருவாயுடன் முதலிடத்திலும், மேற்கு வங்காளத்தில் உள்ள ஹவுரா ரெயில் நிலையம் ரூ.1,692 கோடி வருவாயுடன் 2-வது இடத்திலும் உள்ளன. <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">சென்னை சென்டிரல் ரெயில் நிலையம்</a> ரூ.1,299 கோடி வருவாய் ஈட்டி 3-வது இடத்தை பெற்றுள்ளது. ரெயில்வேயில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகளுக்கு கிடைத்து வரும் வரவேற்பை இது வெளிப்படுத்துகிறது.</p><p>இவ்வாறு ஜாபர் அலி தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>புதிய தலைமைச் செயலகத்தை தடைசெய்ய முடியாத அளவுக்கு சட்டம் உருவாக்க வேண்டும் - பிரேமலதா யோசனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/need-law-to-protect-new-secretariat-premalatha-idea</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/need-law-to-protect-new-secretariat-premalatha-idea#comments</comments><guid isPermaLink="false">d2c87fc2-9941-44e0-8d3a-b66e68aafcb5</guid><pubDate>Fri, 04 Sep 2026 02:18:13 +0000</pubDate><atom:updated>2026-09-04T02:18:13.915Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>DMDK,தேமுதிக,தமிழக சட்டசபை,TN Assembly,Premalatha Vijayakanth,பிரேமலதா விஜயகாந்த்,புதிய தலைமைச் செயலகம்</media:keywords><media:content height="463" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/y2u4fqei/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரேமலதா விஜயகாந்த்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/y2u4fqei/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டசபையில் நேற்று முதல்-அமைச்சர் விஜய், முன்மொழிந்த அரசினர் தீர்மானத்தையும், பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்புகளையும் ஆதரித்து தே.மு.தி.க. உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>முதல்-அமைச்சர் விஜய், பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிக்கும் அனைத்து அறிவிப்புகளும் மிகச் சிறப்பாக, வரவேற்கக்கூடியதாக இருக்கிறது. அந்த அறிவிப்புகள் எல்லாம் ஆக்கப்பூர்வமாக வெகு விரைவில் செயல் வடிவம் பெற வேண்டும்.</p><p>தமிழ்நாடு, தமிழ்மொழிக்கு மிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இன்று எத்தனை குழந்தைகள் தமிழ் வாசிக்கிறார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது. பலருக்கு தமிழ் வாசிக்கவும், பேசவும் தெரியவில்லை. தமிழ்மொழி தமிழ்நாட்டில் ஒரு முக்கியமான இடத்தை பெறவேண்டும். பள்ளிகளில் இருந்து அதை கொண்டு வரவேண்டும்.</p><p>முதல்-அமைச்சர் புதிய தலைமைச் செயலகம் உருவாக்கப்படும் என அறிவித்துள்ளார். வரவேற்கத்தக்கது. கலைஞர் ரூ.1,500 கோடியில் தலைமைச் செயலகத்தை உருவாக்கினார். ஆனால் ஜெயலலிதா அதை ஓமந்தூரார் மருத்துவமனையாக மாற்றினார். அப்படி மாற்றவில்லையென்றால் அங்குதான் தலைமை செயலகம் இருந்திருக்கும்.</p><p>ஆகவே முதல்-அமைச்சர் எந்த ஆட்சி வந்தாலும், போனாலும் நீங்கள் உருவாக்கும் புதிய தலைமைச் செயலகத்தை தடை செய்யவே முடியாத அளவுக்கு சட்டத்தை உருவாக்கி அதற்கான பணிகளை தொடங்க வேண்டும். தமிழ்நாடு பாரம்பரியத்தை பறைசாற்றும் கட்டிடமாக அந்த கட்டிடம் இருக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>கூடுவாஞ்சேரி அருகே கோர விபத்து: கல்லூரி மாணவிகள் 2 பேர் பலி..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/horrific-accident-near-guduvancheri-two-college-students-killed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/horrific-accident-near-guduvancheri-two-college-students-killed#comments</comments><guid isPermaLink="false">a6cabe27-c497-41d8-bb97-2b731f31776d</guid><pubDate>Fri, 04 Sep 2026 01:50:14 +0000</pubDate><atom:updated>2026-09-04T01:50:14.311Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Accident,சாலை விபத்து,Chengalpattu,செங்கல்பட்டு,கூடுவாஞ்சேரி,Guduvancheri,Near Guduvancheri</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/criiupm5/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ராஜாத்தி , அலிஷா நிலோபர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/criiupm5/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>செங்கல்பட்டு,</p><p>செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாத்தி (19). கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அலிஷா நிலோபர் (19). தோழிகளான இருவரும் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.பி.ஏ. படித்து வந்தனர்.</p><p>நேற்று முன்தினம் இரவு இருவரும் ஒரே மொபட்டில் கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார், கண் இமைக்கும் நேரத்தில் மொபட் மீது பயங்கரமாக மோதியது.</p><h2>சம்பவ இடத்திலேயே மாணவி பலி</h2><p>கார் மோதியதில் மொபட்டில் சென்ற இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இதில் ராஜாத்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>ஆஸ்பத்திரியில் மற்றொரு மாணவி உயிரிழப்பு</h2><p>உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அலிஷா நிலோபரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அலிஷா நிலோபரும் பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>கார் டிரைவர் கைது</h2><p>இந்த விபத்து குறித்து <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தாம்பரம் </a>போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்கு காரணமானதாகக் கூறப்படும் சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த கார் டிரைவர் சதீஷ்குமார் (24) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>குடும்ப கட்டுப்பாடு செய்த இளம்பெண் திடீர் உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-dies-after-family-planning-surgery-relatives-protest</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-dies-after-family-planning-surgery-relatives-protest#comments</comments><guid isPermaLink="false">78c57545-e5bc-4c51-9723-99a2c97f29e8</guid><pubDate>Fri, 04 Sep 2026 01:49:36 +0000</pubDate><atom:updated>2026-09-04T01:49:36.270Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,போராட்டம்,சேலம்,Contraception,குடும்ப கட்டுப்பாடு</media:keywords><media:content height="463" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/rtvttppi/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/rtvttppi/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>குடும்ப கட்டுப்பாடு செய்த இளம்பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>3-வது குழந்தை</h2><p>சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே மோதூர் கிராமத்தை சேர்ந்தவர் மாதேஸ்வரன் ( 27 வயது). பொக்லைன் டிரைவர். இவருடைய மனைவி சுமதி (23 வயது). இவர்களுக்கு மவுரிசா (4 வயது), ஹர்சா (2 வயது) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், சுமதி மீண்டும் கர்ப்பமானார். அவருக்கு கடந்த 42 நாட்களுக்கு முன்பு கருமந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 3-வதாக ஆண் குழந்தை பிறந்தது.</p><h2>குடும்ப கட்டுப்பாடு</h2><p>தொடர்ந்து சுமதிக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதையடுத்து வாழப்பாடி அருகே ஆரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுமதிக்கு மருத்துவர்கள் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தனர். அதன்பிறகு சிறிது நேரத்தில் அவரது உடல்நிலை மோசமானது. அவரை ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சுமதியை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.</p><h2>உறவினர்கள் போராட்டம்</h2><p>இதனிடையே, தவறான சிகிச்சையால் சுமதி இறந்துவிட்டதாகவும், அவரது 3 குழந்தைகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் சுமதியின் குடும்பத்தினர், உறவினர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இழப்பீடு வழங்கும் வரை சுமதியின் உடலை வாங்கமாட்டோம் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>மாணவியை கிண்டல் செய்ததால் தகராறு: தம்பிக்கு பதிலாக அண்ணனை அடித்துக்கொன்ற கொடூரம்: கும்பல் வெறிச்செயல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/altercation-over-teasing-a-female-student-brutal-killing-of-the-elder-brother-instead-of-the-younger-one-a-gangs-savage-act</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/altercation-over-teasing-a-female-student-brutal-killing-of-the-elder-brother-instead-of-the-younger-one-a-gangs-savage-act#comments</comments><guid isPermaLink="false">ce52b87c-6d93-4d8f-a918-313b502ef6c6</guid><pubDate>Fri, 04 Sep 2026 01:39:58 +0000</pubDate><atom:updated>2026-09-04T01:39:58.072Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Crime News,Chennai,சென்னை,தமிழகம்,கிரைம் செய்திகள்,திருவொற்றியூர்,Tiruvottiyur</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/x0wsrwdt/nie.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/x0wsrwdt/nie.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவொற்றியூர், </p><p>கல்லூரி மாணவியை கிண்டல் செய்ததை தட்டிக் கேட்டதால் ஏற்பட்ட தகராறில் தம்பிக்கு பதிலாக அண்ணனை அடித்துக்கொன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>தட்டிக்கேட்டதால் தகராறு</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/chennai">சென்னை</a> திருவொற்றியூர் சார்லஸ் நகரைச் சேர்ந்தவர் சுனில் (வயது 22). இவர் கடந்த 30-ந் தேதி அதே பகுதியில் உள்ள அண்ணாமலை ரெயில்வே கேட் வழியாக நடந்து சென்ற போது, அவருடன் பேசிக்கொண்டு வந்த கல்லூரி மாணவியை அங்கு நின்றிருந்த ஒரு கும்பல் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை சுனில் தட்டிக்கேட்டதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.</p><h2>அண்ணனை வழிமறித்த கும்பல்</h2><p>இதையடுத்து அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து சென்று மது அருந்திவிட்டு மீண்டும் அண்ணாமலை ரெயில்வே கேட் பகுதிக்கு வந்தனர். நள்ளிரவில் அந்த வழியாக சுனிலின் அண்ணன் முனீஸ்வரன் (34) நடந்து சென்றார்.</p><p>அவரை வழிமறித்த கும்பல், சுனில் எங்கே? என்று கேட்டது. அதற்கு முனீஸ்வரன், தனக்கு தெரியாது என கூறினார். இதனால் ஏற்பட்ட வாய்த்தகராறில் ஆத்திரமடைந்த கும்பல்,மறைத்து வைத்திருந்த கட்டையால் முனீஸ்வரனை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியது.</p><h2>சிகிச்சை பலனின்றி</h2><p>இதில் தலையில் பலத்த காயமடைந்த முனீஸ்வரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த முனீஸ்வரன் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>4 பேர் கைது</h2><p>இதுகுறித்து சாத்தாங்காடு போலீசார் முதலில் அடிதடி வழக்குப்பதிவு செய்து, எண்ணூர் தாழங்குப்பம் குடியிருப்பைச் சேர்ந்த லோகேஷ்வரன் (21), ஜான்சன் (19), ஜெயந்தன் (19) மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.</p><p>இந்தநிலையில் முனீஸ்வரன் உயிரிழந்ததை தொடர்ந்து, இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>புதிய தலைமைச் செயலகத்தில் தமிழர் கட்டிடக்கலைக்கு இடம் உண்டா?  - வேல்முருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-there-a-place-for-tamil-architecture-in-the-new-secretariat-velmurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-there-a-place-for-tamil-architecture-in-the-new-secretariat-velmurugan#comments</comments><guid isPermaLink="false">f309aaf8-97bc-48d7-87ff-92854d287b57</guid><pubDate>Fri, 04 Sep 2026 01:28:01 +0000</pubDate><atom:updated>2026-09-04T01:28:01.926Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Velmurugan,வேல்முருகன்,Secretariat,தலைமைச் செயலகம்,தமிழக வாழ்வுரிமைக் கட்சி,தி.வேல்முருகன்,புதிய தலைமைச் செயலகம்,new Secretariat</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/5yh5yo3t/velmurugan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/5yh5yo3t/velmurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>புதிய தலைமைச் செயலகத்தில் தமிழர் கட்டிடக்கலைக்கு இடம் உண்டா? என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>புதிய தலைமைச் செயலகம்</h2><p>சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை வழக்காடு மொழியாகக் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருப்பதையும், தற்போதைய இடநெருக்கடி மற்றும் எதிர்கால நிர்வாகத் தேவைகளை கருத்தில் கொண்டு 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் வரவேற்கிறோம்.</p><p>தமிழ் என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாறு, பண்பாடு, அறிவு மற்றும் தமிழர்களின் அடையாளத்தைத் தாங்கி நிற்கும் செம்மொழியாகும். எனவே, தமிழ்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடுவதற்கான முழுமையான உரிமை நிலைநாட்டப்படுவது அவசியமானதாகும்.</p><p>அதேபோல், இந்தப் புதிய தலைமைச் செயலக வளாகம் குறித்து தமிழக மக்களின் எதிர்பார்ப்பையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.</p><h2>அடையாளமாக திகழ வேண்டும்</h2><p>புதிய தலைமைச் செயலகம் நவீன நிர்வாகத்திற்கான வசதிகளை மட்டுமே கொண்ட ஒரு கட்டடமாக அமைந்துவிடக் கூடாது. தமிழர் நாகரிகத்தின் தொன்மையையும், தமிழ்நாட்டின் தனித்துவமான கட்டிடக்கலை மரபையும் உலகிற்கு எடுத்துக்காட்டும் நிரந்தர அடையாளமாக அது திகழ வேண்டும்.</p><p>தஞ்சைப் பெருவுடையார் கோவில், மாமல்லபுரம் சிற்பக் கலை, செட்டிநாட்டு கட்டிடக்கலை உள்ளிட்ட நமது பாரம்பரியச் சின்னங்களின் தனித்துவமான கூறுகளை ஆய்வு செய்து, அவற்றின் சிறப்புகளை நவீன கட்டுமானத் தொழில்நுட்பத்துடன் இணைத்து, உருவாக்கப்பட வேண்டும்.</p><p>வளாகத்தின் நுழைவாயில் முதல் சட்டப்பேரவை அரங்கம் வரை, தூண்கள், மண்டபங்கள், சிற்பங்கள், கலைப்பொருட்கள், உள்கட்டமைப்பு மற்றும் அலங்கார வடிவமைப்புகளில் தமிழ்நாட்டின் வரலாறும் கலைப்பண்பாடும் வெளிப்படும் வகையில் திட்டமிடப்பட வேண்டும்.</p><h2>உலகத் தரத்தில் இருக்கட்டும்</h2><p>நவீன வசதிகள் உலகத் தரத்தில் இருக்கட்டும். அதன் வடிவமும் அடையாளமும் தமிழாக இருக்கட்டும். புனித ஜார்ஜ் கோட்டை தமிழ்நாட்டின் நிர்வாக வரலாற்றில் ஒரு முக்கியமான அடையாளமாக விளங்குவது போன்று, புதிதாக உருவாக்கப்படும் தலைமைச் செயலகமும் எதிர்காலத் தலைமுறைகள் பெருமையுடன் அடையாளம் காணும் வகையில் அமைய வேண்டும்.</p><p>இதற்காக, கட்டிட வடிவமைப்பை இறுதி செய்வதற்கு முன் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னணி கட்டிடக் கலைஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், தொல்லியல் வல்லுநர்கள், தமிழ் அறிஞர்கள் மற்றும் கலைத்துறையினரைக் கொண்ட வல்லுநர் குழுவை அமைத்து, அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று திட்டத்தை வடிவமைக்க வேண்டும்.</p><p>தமிழுக்கான உரிமையை நிலைநாட்டும் வகையிலும், <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழ்நாட்டின் </a>நிர்வாகக் கட்டமைப்பை நவீனப்படுத்தும் வகையிலும் அரசு முன்னெடுக்கும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. அதேவேளையில், புதிய தலைமைச் செயலகம் தமிழ்நாட்டின் ஆட்சி மையமாக மட்டுமின்றி, தமிழர் வரலாறு, பண்பாடு, கலை மற்றும் தொன்மையான கட்டிடக்கலைப் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் அடையாளச் சின்னமாக அமைய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த அப்டேட் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chance-of-rain-in-5-districts-including-chennai-today-weather-department-update</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chance-of-rain-in-5-districts-including-chennai-today-weather-department-update#comments</comments><guid isPermaLink="false">6b72c2a3-96e8-46c5-85e7-f027cd208466</guid><pubDate>Fri, 04 Sep 2026 01:20:35 +0000</pubDate><atom:updated>2026-09-04T01:20:35.093Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,சென்னை,Rain,Weather,தமிழகம்,Weather News,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,Weather update,வானிலை ஆய்வு மையம்,வானிலை அறிக்கை,weather condition,வானிலை தகவல்,வானிலை முன்னறிவிப்பு,Weather Status,வானிலை அறிவிப்பு,weather center,TN Rain,வானிலை அப்டேட்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/orvgbva8/vhnne.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/orvgbva8/vhnne.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>வானிலை செய்திகள் (Weather)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><h2>மழை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><p>இதன் காரணமாக <strong>இன்று (04-09-2026):</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>05-09-2026 முதல் 08-09-2026 வரை:</strong> தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான<a href="https://www.dailythanthi.com/topic/rain"> மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>09-09-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong><ins>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</ins></strong></p><p><strong>04-09-2026 முதல் 07-09-2026 வரை:</strong> கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><p><strong><ins>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</ins></strong></p><p><strong>04-09-2026 முதல் 07-09-2026 வரை:</strong> உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று (04-09-2026)</strong>: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-enters-garden-near-thalawadi-and-rampages</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-enters-garden-near-thalawadi-and-rampages#comments</comments><guid isPermaLink="false">833fff5b-0a04-40f1-95cc-30ed7ed3b130</guid><pubDate>Fri, 04 Sep 2026 01:20:31 +0000</pubDate><atom:updated>2026-09-04T01:20:31.437Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அட்டகாசம்,காட்டு யானை,wild elephant,தாளவாடி,Garden</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/ltiotgm0/129.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/ltiotgm0/129.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தாளவாடி,</p><p>தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசத்தில் ஈடுபட்டதால் 300 வாழைகள் நாசமாகின.</p><h2>காட்டு யானைகள்</h2><p>சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைப்புலிகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் காணப்படுகின்றன. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அருகே உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. தாளவாடி வனச்சரகத்துக்குட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 45).  விவசாயி. இவர் 3 ஏக்கரில் வாழை சாகுபடி செய்துள்ளார்.</p><h2>வாழைகள் சேதம்</h2><p>இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை தோட்டத்துக்குள் புகுந்து வாழை மற்றும் தக்காளி செடிகளை நாசம் செய்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் அட்டகாசத்தில் ஈடுபட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88">யானை</a>யை வனப்பகுதியில் விரட்டினர். யானையால் 300 வாழை, ½ ஏக்கர் தக்காளி செடிகள் நாசமாகின. எனவே வனத்துறையினர் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், தோட்டங்களுக்குள் யானைகள் புகாதவாறு அகழி அமைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>
திருத்தணி முருகன் கோவிலுக்கு ரூ.33 லட்சம் நன்கொடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-33-lakh-donation-to-thirutani-murugan-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-33-lakh-donation-to-thirutani-murugan-temple#comments</comments><guid isPermaLink="false">df8821d0-1dd6-4073-86c9-92651d66f08f</guid><pubDate>Fri, 04 Sep 2026 01:04:34 +0000</pubDate><atom:updated>2026-09-04T01:04:34.844Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>முருகன் கோவில்,Murugan Temple,திருத்தணி,Tirutani,நன்கொடை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/db1fejln/128.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/db1fejln/128.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருத்தணி, </p><p>திருத்தணி முருகன் கோவிலுக்கு ஸ்டேட் வங்கி சார்பில் ரூ.33 லட்சத்து 40 ஆயிரம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF">திருத்தணி</a> முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், மாஸ்டர் பிளான் திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக 3 அடுக்குகள் கொண்ட அன்னதானக் கூடம், மலைக்கோவில் பகுதியில் புதிதாக 20 கடைகள், மலைப்பாதையில் நுழைவுக் கட்டணம் வசூலிப்பதற்கான சுங்கச்சாவடி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><h2>நன்கொடை</h2><p>இந்நிலையில், முருகன் கோவில் நுழைவுப் பாதையில் அமைக்கப்பட உள்ள சுங்கச்சாவடியில் தானியங்கி கதவுகள் அமைப்பதற்காக ஸ்டேட் வங்கி சார்பில் ரூ.33 லட்சத்து 40 ஆயிரம் நன்கொடையாக வழங்கப்பட்டது.</p><p>ஸ்டேட் வங்கியின் அகில இந்திய தலைவர் சல்லா சீனிவாசலு செட்டி, தானியங்கி கதவுகள் அமைப்பதற்கான காசோலையை கோவில் இணை கமிஷனர் ரமணி, அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன், அறங்காவலர்கள் சுரேஷ் பாபு, மோகனன் ஆகியோரிடம் வழங்கினார்.</p>]]></content:encoded></item><item><title>7 மாத கர்ப்பிணி கொலை: உடலை மூட்டையில் கட்டி கிணற்றுக்குள் வீசிய கொடூரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/7-month-pregnant-woman-murder-body-dumped-in-well</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/7-month-pregnant-woman-murder-body-dumped-in-well#comments</comments><guid isPermaLink="false">ca93edce-d493-4d77-95ce-1ac8e1c070f0</guid><pubDate>Fri, 04 Sep 2026 01:03:04 +0000</pubDate><atom:updated>2026-09-04T01:03:04.551Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,சேலம்,pregnant woman,கர்ப்பிணி,எடப்பாடி,கர்ப்பிணி கொலை,Edappadi</media:keywords><media:content height="463" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/vlfcde5i/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/vlfcde5i/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்</p><p>எடப்பாடி அருகே 7 மாத கர்ப்பிணி கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடலை மூட்டையில் கட்டி கிணற்றுக்குள் வீசியவர் குறித்து விசாரணை நடந்து வருகிறது.</p><h2>மூட்டையில் பிணம்</h2><p>சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே தானகுட்டிவளவு பகுதியை சேர்ந்த கோவிந்தம்மாள் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. அந்த வழியாக சென்றவர்கள் கிணற்றுக்குள் பார்த்தபோது வெள்ளை நிற சாக்கு மூட்டை ஒன்று மிதந்தது. இதுபற்றிய தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.</p><p>கிணற்றில் மிதந்த மூட்டையை வெளியே எடுத்து பிரித்து பார்த்தனர். அந்த மூட்டைக்குள் அழுகிய நிலையில் பெண்ணின் உடல் இருந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தியபோது, அந்த பெண்ணின் பெயர் கோகிலா (23 வயது) என்பதும், கருங்குள்ளன் வட்டம் பகுதியை சேர்ந்த பேராக்கவுண்டர் மகள் என்பதும் தெரியவந்தது.</p><p>அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாயின.</p><h2>7 மாத கர்ப்பம்</h2><p>கல்லூரி படிப்பை முடித்த கோகிலா, வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். திருமணமாகாத கோகிலா கடந்த மாதம் 20-ந்தேதி தனக்கு கடுமையான வயிற்று வலி இருப்பதாக குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். அவரை குடும்பத்தினர் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அவர் 7 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இதை அறிந்த கோகிலா குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து விசாரித்தபோது, பக்கத்து ஊரை சேர்ந்த அம்மாசி (26 வயது) என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.</p><p>இதையடுத்து கோகிலா குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் அம்மாசியை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஊரில் திருவிழா நடப்பதாகவும், அதன்பிறகு கோகிலாவை திருமணம் செய்து கொள்கிறேன் என்றும் அம்மாசி கூறியுள்ளார். மேலும் அதுவரை தன்னுடைய வீட்டில் கோகிலா இருக்கட்டும் என்று அவர் அழைத்துச் சென்றதாகவும் தெரிகிறது.</p><h2>வழக்குப்பதிவு</h2><p>இதற்கிடையே கடந்த 31-ந்தேதி கோகிலாவை காணவில்லை என்று அம்மாசி, கோகிலா குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கோகிலாவை கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையே கிணற்றுக்குள் மிதந்த மூட்டையில் கோகிலாவின் உடல் இருந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக கொங்கணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பட்டாசு தொழிலாளர்களை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் தவெக..- நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-seeks-political-gain-by-exploiting-fireworks-workers-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-seeks-political-gain-by-exploiting-fireworks-workers-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">4dc6f5f0-351b-4909-a8b4-b8baf27bf67f</guid><pubDate>Fri, 04 Sep 2026 01:00:20 +0000</pubDate><atom:updated>2026-09-04T01:00:20.182Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/13npjlfd/nainar.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/13npjlfd/nainar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> பட்டாசு உற்பத்தி அதிகரிக்கும் இவ்வேளையில், இதுபோன்ற கோர விபத்துகள் மீண்டும் நிகழாமல் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>அரசியல் ஆதாயம்</h2><p>பட்டாசு தொழிலாளர்களை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் தவெக அரசின் கவனத்திற்கு! விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சிவகாசி ஆகிய பகுதிகளில் இயங்கி வந்த பட்டாசு ஆலைகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் நெஞ்சை பதறச் செய்கின்றன.</p><p>கடந்த 2005 ஆம் ஆண்டு தனது திரைப்பட ப்ரோமோஷன்-காக விஜய் பட்டாசு தொழிலாளர்களிடம் அமர்ந்து பேசிய புகைப்படத்தை வைத்து, “பட்டாசு தொழிலாளர்களின் நலன் விரும்பி எங்கள் தலைவர்” என சட்டமன்றத்தில் அரசியல் ஆதாயம் தேடிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, தனது சொந்தத் துறையை முற்றிலுமாக கோட்டை விட்டு விட்டார் என்பதற்கான மற்றுமொரு அவலச் சான்று இது. தவெக ஆட்சியில் அமைச்சர்கள் எல்லாம் ரசிகர் மன்றத் தலைவர்கள் போல நடந்து கொள்வது சமூகத்திற்கு நல்லதல்ல.</p><h2>ஆய்வு செய்ய வேண்டும்</h2><p>எனவே, “லஞ்சம் வாங்காமல் லைசென்ஸ் கொடுத்துள்ளோம்” என்று தம்பட்டம் அடித்துக் கொண்டால் மட்டும் போதாது, பட்டாசு ஆலைகளில் முறையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதையும் அரசு முறையாக ஆய்வு செய்ய வேண்டும்! மேலும், நெருங்கி வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பட்டாசு உற்பத்தி அதிகரிக்கும் இவ்வேளையில், இதுபோன்ற கோர விபத்துகள் மீண்டும் நிகழாமல் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யையும், <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தொழில்துறை </a>அமைச்சர் கீர்த்தனாவையும் வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய் ஸ்டைலில் விநாயகர் சிலை?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-style-vinayagar-idol</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-style-vinayagar-idol#comments</comments><guid isPermaLink="false">ecc4c194-6c18-4948-8aa0-a8ab23032e50</guid><pubDate>Thu, 03 Sep 2026 23:23:49 +0000</pubDate><atom:updated>2026-09-03T23:23:49.516Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,விநாயகர் சதுர்த்தி,விநாயகர் சிலை,Vinayagar Idols,Vinayagar Chathurthi,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/agqiy5hr/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/agqiy5hr/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 14-ந்தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து பலவிதமான வடிவமைப்புகளுடன் விநாயகர் சிலைகள் தமிழகத்திற்கு வரத்தொடங்கியுள்ளன.</p><p>இந்தநிலையில், முதல்-அமைச்சர் விஜய் ஸ்டைலில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு உள்ளதை போன்ற படங்கள் சமூக வலைத்தளங்களில் கலக்கி வருகின்றன. சமீபத்தில் சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் செய்த சைகை வைரல் ஆனது.</p><p>விஜய் சைகை காட்சியை தத்ரூபமாக விநாயகர் வடிவில் வடி வமைப்பட்டுள்ளதை போன்ற படங்கள், வீடியோக்கள் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றன. இது உண்மையான சிலையா அல்லது ஏ.ஐ. தொழில்நுட்ப படமா என்பது உறுதியாகவில்லை.</p>]]></content:encoded></item><item><title>வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. எப்-17 ராக்கெட்...!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-gslv-f-17-rocket-has-successfully-lifted-off</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-gslv-f-17-rocket-has-successfully-lifted-off#comments</comments><guid isPermaLink="false">37409b32-43d9-46e9-8ca3-e1531322eeb3</guid><pubDate>Thu, 03 Sep 2026 21:29:08 +0000</pubDate><atom:updated>2026-09-03T21:29:08.542Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இஸ்ரோ,ISRO,ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்,GSLV Rocket,ஜி.எஸ்.எல்.வி. எப்-17 ராக்கெட்,GSLV F-17 rocket</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/k1hcd4dt/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/k1hcd4dt/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது மிகவும் லட்சியமிக்க 'ஜூசாட்-1 ஏ' என்று அழைக்கப்பட்ட 'இ.ஓ.எஸ். 5' என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை, 'ஜி.எஸ்.எல்.வி. எப்-17' ராக்கெட்டில் பொருத்தி விண்ணுக்கு அனுப்பும் பணிகளை மேற்கொண்டது. </p><p>இந்த ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்ததையடுத்து  ராக்கெட்டுக்கான 'கவுண்ட்டவுன்' நேற்று முன்தினம் இரவு தொடங்கியது.</p><h2>வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது....</h2><p>இந்த நிலையில், ராக்கெட்டுக்கான கவுண்ட்டவுன் முடிந்ததையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2.55 மணியளவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.</p><p>18 நிமிடங்களுக்குப் பிறகு செயற்கைக்கோள் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அதாவது பூமியில் இருந்து சுமார் 36 ஆயிரம் கிலோமீட்டர் உயரத்தில் புவி நிலை சுற்றுவட்டப்பாதையில் 'இ.ஓ.எஸ்.-5' செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்படது. இதனை இஸ்ரோ விஞ்ஞானிகள் உற்சாகமாக கொண்டாடினர். மேலும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/6287g2x2/Untitled-3.jpg" /></figure><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/s8b7pfti/Untitled-1.jpg" /></figure><h2>இந்தியாவின் நிலப்பரப்பை கண்காணிக்கும்</h2><p>இந்திய துணைக்கண்டத்தின் மீது நிலைத்திருக்கும் வகையில் செயல்பட உள்ளதால் மல்டி-ஸ்பெக்ட்ரல் மற்றும் ஹைப்பர்-ஸ்பெக்டரல் தொழில்நுட்பம் கொண்ட அதிநவீன கேமராக்கள் மூலம் இந்தியாவின் நிலப்பரப்பை தொடர்ந்து கண்காணித்து நிகழ்காலத்துக்கு நெருக்கமான புகைப்படங்களை வழங்கும் வகையில் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p>இந்தியாவின் எல்லைப் பகுதிகளை தொடர்ச்சியாக கண்காணித்து, நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளுக்குத் தேவையான முக்கியத் தரவுகளை வழங்கும். இது புவிசார் சுற்றுப்பாதையில் இருந்து இந்தியாவைக் கண்காணிக்கும் நாட்டின் முதல் இமே ஜிங் செயற்கைக்கோள் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்ய தனி இடம் வழங்க பரிசீலனை: ஐகோர்ட்டில் அரசு தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-informs-high-court-considering-allocating-a-separate-area-for-firecracker-sales-at-island-grounds</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-informs-high-court-considering-allocating-a-separate-area-for-firecracker-sales-at-island-grounds#comments</comments><guid isPermaLink="false">0567b637-ca14-483a-bb53-cd5530835df2</guid><pubDate>Thu, 03 Sep 2026 18:58:23 +0000</pubDate><atom:updated>2026-09-03T18:58:23.781Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Diwali festival,தீபாவளி பண்டிகை,பட்டாசு விற்பனை,தீவுத்திடல்,Island Ground,firecracker sale</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/f03c8tmd/CHENNAI-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/f03c8tmd/CHENNAI-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை ஐகோர்ட்டில், பட்டாசு விற்பனையாளர் சங்கம் தாக்கல் செய்துள்ள மனுவில், தீபாவளி பண்டிகை நவம்பர் 8-ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தீவுத்திடலில் பட்டாசு விற்பனைக்காக இடம் ஒதுக்கித்தரும்படி, ஜூலை 14-ந்தேதி மற்றும் 20-ந்தேதிகளில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக நிர்வாக இயக்குநர், பொது மேலாளர் ஆகியோரிடம் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. அதன் மீது, இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை" என்று கூறியிருந்தார்.</p><p>இந்த மனு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், கோரிக்கை மனுக்களை பரிசீலித்து, ஐகோர்ட்டின் முந்தைய உத்தரவுகளின்படி, வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையின்போது, தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்ய தனியாக இடம் ஒதுக்க உத்தரவிட வேண்டும்.</p><p>வழக்கு நிலுவையில் இருக்கும் வரை, தீவுத்திடலில் 'தீபாவளி பட்டாசு கண்காட்சி 2026' தொடர்பான புதிய டெண்டர் அறிவிப்புகளை வெளியிடவும் இடைக்கால தடை விதிக்க வேண்டும்" என வாதிடப்பட்டது. அரசு தரப்பில், ‘பட்டாசு கடைகள் ஒதுக்குவது தொடர்பாக, வருகிற 11-ந்தேதி கூட்டம் நடைபெறவுள்ளது. அதன்பின், மனுதாரர் தரப்பில் அளிக்கப்பட்ட விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பு வாதத்தைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.</p>]]></content:encoded></item><item><title>ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்த 2 மாதங்களுக்கு தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-month-ban-on-processions-and-public-meetings-in-ramanathapuram-district</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-month-ban-on-processions-and-public-meetings-in-ramanathapuram-district#comments</comments><guid isPermaLink="false">f0a09a0c-0328-445a-b4eb-cab5ec0e80f8</guid><pubDate>Thu, 03 Sep 2026 18:18:38 +0000</pubDate><atom:updated>2026-09-03T18:18:38.943Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ராமநாதபுரம்,Ramanathapuram,பொதுக்கூட்டம்,ஊர்வலம்,public meetings,processions</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/o80iby2e/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/o80iby2e/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>ராமநாதபுரம்,</p><h2>தலைவர்களின் பிறந்தநாள்</h2><p>ராமநாதபுரம் மாவட்டத்தில் தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாள் மற்றும் குருபூஜை நிகழ்வுகளின்போது சட்டம்-ஒழுங்கு, பொது அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பாதுகாக் கும் வகையில், பாரதிய நாகரிக பாதுகாப்பு சட்டம் பிரிவு 163-ன் கீழ் மாவட்ட நிர்வாகத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.</p><p>தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் மற்றும் தேவர் குருபூஜை உள்பட தலைவர்களின் நினைவு நாள், பிறந்த நாள், குருபூஜை நிகழ்வுகளின்போது அதிகளவில் தொண்டர்கள் வாடகை வாகனங்களில் வருவார்கள். வழித்தடங்களில் இடையூறுகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சி னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.</p><h2>2 மாதங்கள்</h2><p>அதன்படி, வருகிற 9-ந்தேதி முதல் 15-ந்தேதி வரையும், அடுத்த மாதம் 9-ந்தேதி அன்றும், 25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையும் பிறந்தநாள், நினைவு நாள் மற்றும் குருபூஜை நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக தொண்டர்களை ஏற்றிக் கொண்டு பிற மாவட்டங்களில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வரும் அனைத்து வகையான வாடகை, சுற்றுலா வாகனங்கள், ஆம்னி பஸ்கள், தற்காலிக, சிறப்பு அனுமதி பெற்ற வாகனங்கள், சரக்கு வாகனங்கள், டிராக்டர்கள், மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோ நுழைவது தடை செய்யப்படுகிறது.</p><p>மேலும், வரும் 5-ந்தேதி (நாளை மறுநாள்) முதல் 2 மாத காலத்திற்கு, முன் அனுமதியின்றி 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுதல், பொதுக்கூட்டம் நடத்துதல், ஊர்வலம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நிகழ்வுகளின்போது ஜோதி எடுத்துச்செல்வதும் தடை செய்யப்பட்டு உள்ளது. நிகழ்வு நடைபெறும் இடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்குள் மட்டும், மாவட்ட நிர்வாகத்தின் முன்அனுமதியுடன் ஜோதி எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படும்.</p><h2>ஒத்துழைப்பு</h2><p>தனிப்பட்ட வாகனங்களில் பயணம் செய்பவர்கள் அசல் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனத்தின் ஆவணங்களை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். அனைத்து தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்தின் தடை உத்தரவுகளை முழுமையாக கடைப்பிடித்து மாவட்ட நிர்வாகத்திற்கும், போலீசாருக்கும் முழுஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி பணியிடை நீக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/electricity-board-official-suspended-for-accepting-a-bribe-of-rs-10000</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/electricity-board-official-suspended-for-accepting-a-bribe-of-rs-10000#comments</comments><guid isPermaLink="false">3be589d5-67d2-45e7-b815-945768ec8717</guid><pubDate>Thu, 03 Sep 2026 17:45:05 +0000</pubDate><atom:updated>2026-09-03T17:45:05.994Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>லஞ்சம்,Electricity Board,bribe,தமிழ்நாடு மின்வாரியம்,மின்வாரிய அதிகாரி,Electricity officer</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/94jjsfa7/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/94jjsfa7/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><p>திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த தெக்கலூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர், நத்தக் காட்டுப்பிரிவு பகுதியில் அழகு சாதன பொருள்கள் தயாரித்து ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறார். இந்தநிலையில், இந்த நிறுவனத்தின் மின் பயன்பாட்டை வணிக பயன்பாட்டில் இருந்து சிறு, குறு தொழில் பயன்பாட்டுக்கு மாற்ற முடிவு செய்தார். </p><p>இதற்காக, ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளார். இதையடுத்து, உதவி மின் பொறியாளர் இசக்கிமுத்துவை (33) சந்தித்தார். அவர் மின் இணைப்பை மாற்ற ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரகாஷ், இசக்கிமுத்துவிடம் முன்பணமாக ரூ.5 ஆயிரம் மட்டும் கொடுத்துள்ளார்.</p><p>இதையடுத்து, இது தொடர்பாக திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் அளித்தார். அதன்பேரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரத்தை அவரிடம் கொடுத்து அனுப்பினர். அந்த பணத்தை இசக்கிமுத்துவிடம் கொடுக்கும்போது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், இசக்கிமுத்துவை கையும் களவுமாக பிடித்து, விசாரணை நடத்தினர்.</p><p>இதையடுத்து, இசக்கிமுத்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில், உதவி மின் பொறியாளர் இசக்கிமுத்துவை பணியிடை நீக்கம் செய்து மேற்பார்வை பொறியாளர் சுமதி உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி: முதல்-அமைச்சர் விஜய்க்கு நடிகர் அஜித்குமார் நன்றி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/actor-ajith-kumar-thanks-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/actor-ajith-kumar-thanks-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">636dca76-587b-4995-add2-a0166a1390ae</guid><pubDate>Thu, 03 Sep 2026 17:18:09 +0000</pubDate><atom:updated>2026-09-03T17:18:09.785Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,அஜித்குமார்,நடிகர் அஜித்குமார்,Actor Ajith Kumar,Ajith Kumar,Ajith Kumar Racing,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/9vtk92ra/CHENNAI-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/9vtk92ra/CHENNAI-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரில் இன்றைய அவை நடவடிக்கையின்போது, 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் விஜய் பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, தமிழ்நாட்டில் இளைஞர்களிடையே மோட்டார் பந்தயங்கள் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, விளையாட்டு சுற்றுலாவையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்தப் புதிய "மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்" உருவாக்கப்படும்.</p><p>பார்முலா 1, பார்முலா 2, பார்முலா 3, மற்றும் பார்முலா 4 உள்ளிட்ட பன்னாட்டுப் பந்தயங்களை நடத்தும் வகையில் சர்வதேசத் தரத்திலான பந்தயத் தடம் மற்றும் பயிற்சி மையங்கள் இங்கு அமைக்கப்படும். தேசிய மற்றும் சர்வதேச அளவிலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் வீரர்களை உருவாக்குவதோடு, தமிழ்நாட்டை உலகளாவிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் மையமாக மாற்றுவதே இதன் முக்கிய நோக்கமாகும் என்று தெரிவித்தார்.</p><p><strong>இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய்யின் இந்த அறிவிப்புக்கு நடிகரும், கார் ரேசருமான அஜித்குமார் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,</strong></p><p>“தமிழ்நாட்டின் இளைஞர்களை விளையாட்டுத் துறையின் பக்கம் ஈர்த்து, அவர்களிடம் உள்ள திறமைகளைக் கண்டறிந்து, அவற்றை முறையாக வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு முன்னெடுப்புகள் மிகுந்த பாராட்டுக்குரியவை.</p><p>குறிப்பாக, தமிழ்நாட்டில் பிரத்யேகமான மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தற்போது மோட்டார் ஸ்போர்ட்ஸில் ஈடுபட்டு வரும் ஒருவராக, விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் புகழ்பெற்ற வார்த்தைகளை சற்றே மாற்றி இவ்வாறு கூற விரும்புகிறேன்.</p><p>"One small step by the Tamil Nadu Government, one giant leap for Indian motorsports.". முதல்-அமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அனைத்து முயற்சிகளும் பெரும் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் அனைத்து விளையாட்டு முன்னெடுப்புகளும் மாபெரும் வெற்றி பெறட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இந்திய ராணுவ தென்பகுதி புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உல்லாஸ் கிர்பேகர் பொறுப்பேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/lieutenant-general-ullah-kirbekar-takes-charge-as-the-new-commander-of-the-indian-armys-southern-command</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/lieutenant-general-ullah-kirbekar-takes-charge-as-the-new-commander-of-the-indian-armys-southern-command#comments</comments><guid isPermaLink="false">82d4fc2f-b3f7-4c5a-b603-6bea12e599bb</guid><pubDate>Thu, 03 Sep 2026 16:40:10 +0000</pubDate><atom:updated>2026-09-03T16:40:10.548Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,இந்திய ராணுவம்,indian army,takes charge,பொறுப்பேற்பு,southern region,புதிய தளபதி,லெப்டினன்ட் ஜெனரல்,Lieutenant General,தென்பகுதி,உல்லாஸ் கிர்பேகர்,New Commander,Ullah Kirbekar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/1l2nylku/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்திய ராணுவ தென்பகுதி புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உல்லாஸ் கிர்பேகர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/1l2nylku/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D">இந்திய ராணுவ</a> தென்பகுதி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF">புதிய தளபதியாக</a> நியமிக்கப்பட்டுள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D">லெப்டினன்ட் ஜெனரல்</a> உல்லாஸ் கிர்பேகர் தனது பணிகளை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a> வெற்றிப் போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி தொடங்கினார். </p><h2>லெப்டினன்ட் ஜெனரல் உல்லாஸ் கிர்பேகர் பொறுப்பேற்பு</h2><p>லெப்டினன்ட் ஜெனரல் உல்லாஸ் கிர்பேகர், இந்திய ராணுவத்தின் தென்பகுதி தளபதியாக நேற்று முன்தினம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">பொறுப்பேற்றார்</a>. அவர் தனது பணிகளை சென்னை வெற்றிப் போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி தொடங்கினார்.</p><h2>1989-ல் சமிக்ஞை பிரிவில் அதிகாரி</h2><p>டிசம்பர் 1989-ல் சமிக்ஞை பிரிவில் அதிகாரியாகப் பணியில் சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் உல்லாஸ் கிர்பேகர், தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவர் ஆவார். இவர் நீலகிரி மாவட்டம் வெலிங்டனிலுள்ள பாதுகாப்பு சேவை அலுவலர் கல்லூரி, தேசிய பாதுகாப்பு கல்லூரி ஆகியவற்றில் பயிற்சிகளை முடித்துள்ளார். இவர் கான்பூர் ஐஐடி-யில் கணினி அறிவியலில் தொழில்நுட்ப முதுகலைப் பட்டமும், அமெரிக்காவின் கடற்படை முதுகலை பள்ளியில் தகவல் போர்முறை பிரிவில் அறிவியல் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.</p><h2>பல்வேறு நிலப்பரப்புகளிலும் பணியாற்றிய அனுபவம்</h2><p>பல்வேறு நிலப்பரப்புகளிலும் பணியாற்றிய அனுபவத்தை இவர் பெற்றுள்ளார். இவர் கிழக்கு மண்டலத்தில் மலைப்பகுதிப்பிரிவு சிக்னல் படைப்பிரிவு, சிறப்பு உளவுப் பிரிவு ஆகியவற்றிற்குத் தலைமை தாங்கியுள்ளார். இவர் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநரகம், தகவல் அமைப்புகளுக்கான தலைமை இயக்குநரகம் மற்றும் கிழக்கு மண்டல தலைமையகம்; திட்ட மேலாண்மை அமைப்பு, தந்திரோபாய தகவல் தொடர்பு அமைப்பு; லடாக் பிராந்தியத்தில் உள்ள படைப்பிரிவு  தலைமையகத்தின் தலைமை சிக்னல் அதிகாரி; கிழக்கு கமாண்ட் தலைமை சிக்னல் அதிகாரி; ராணுவத் தலைமையகத்தில் நிர்வாகம் மற்றும் ஒருங்கிணைப்புப் பிரிவின் கூடுதல் தலைமை இயக்குநர்; மற்றும் நிதித் திட்டமிடல் தலைமை இயக்குநர் போன்ற பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். மேலும், மௌவ் நகரில் உள்ள ராணுவத் தொலைத்தொடர்பு பொறியியல் கல்லூரி மற்றும் வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் அலுவலர் கல்லூரி ஆகியவற்றில் பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.</p><h2>2023-ல் சேனா பதக்கம்</h2><p>லெப்டினன்ட் ஜெனரல் உல்லாஸ் கிர்பேகர், அவரது சிறப்பான பணிக்காக 2023 ஜனவரி 26 அன்று 'சேனா பதக்கம்' மற்றும் 2025 ஜனவரி 26 அன்று 'அதி விசிஷ்ட சேவா பதக்கம்' ஆகியவற்றைப் பெற்றார். இவர் 2024 டிசம்பர் 1 முதல் சிக்னல் படைப்பிரிவின் 72-வது கர்னல் கமாண்டன்டாக நியமிக்கப்பட்டார். </p><p>இந்திய ராணுவ தென்பகுதி தலைவர் என்ற முறையில், லெப்டினன்ட் ஜெனரல் உல்லாஸ் கிர்பேகர், இப்பகுதியில் செயல்பாட்டு, தளவாட, நிர்வாக மற்றும் முன்னாள் வீரர்களின் நலன் சார்ந்த பொறுப்புகளை மேற்பார்வையிடுவார். அத்துடன் சிவில் நிர்வாகத்துடனும், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுடனும் ராணுவத்தின் தொடர்பை வலுப்படுத்துவதுடன், இப்பகுதியில் வளர்ந்து வரும் பாதுகாப்புத் தொழில்துறையின் நலன்களுக்கான நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவார். </p>]]></content:encoded></item><item><title>ரூ.1,200 கோடியில் புதிய தலைமை செயலகம் : சென்னையில் 3 இடங்கள் தேர்வு?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vijay-announces-new-secretariat-at-rs-1200-crore-3-locations-selected-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vijay-announces-new-secretariat-at-rs-1200-crore-3-locations-selected-in-chennai#comments</comments><guid isPermaLink="false">a66006f2-335d-4323-b3c5-6c77560085c6</guid><pubDate>Thu, 03 Sep 2026 16:26:19 +0000</pubDate><atom:updated>2026-09-03T16:26:19.752Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,Vijay,விஜய்,தமிழக சட்டசபை,Secretariat,சென்னை தலைமை செயலகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/og37woz3/cheniaian33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ புதிய தலைமை செயலகம்]]></media:title><media:description type="html"><![CDATA[ 
ரூ.1,200 கோடியில் புதிய தலைமை செயலகம் விஜய் அறிவிப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/og37woz3/cheniaian33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என சட்டசபையில்  முதல்-அமைச்சர் விஜய் இன்று  பேரவை விதி 110 -ன் கீழ் அறிவித்துள்ள நிலையில், இதற்காக  சென்னையில் மூன்று இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.</p><h2>தமிழக அரசு அடையாளம் </h2><p>இந்த மூன்று இடங்களில் இறுதியாக முடிவு செய்யப்படும் இடத்தை இம்மாத நடுப்பகுதிக்குள் அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம், பட்டினப்பாக்கத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் உருவாக்கப்பட்ட குடியிருப்புப் பகுதி, நந்தம்பாக்கத்தில் தற்போது செயல்படாத இந்தியன் டிரக்ஸ் அண்ட் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் இருந்த இடம். இந்த மூன்று இடங்களையே தமிழக அரசு அடையாளம் கண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>இந்த ஒவ்வொரு இடமும் அதற்கே உரிய சாதக, பாதகங்களைக் கொண்டுள்ளன. கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம் பகுதியானது, ஆளுநர் மாளிகையான லோக் பவனுக்கு எதிரே உள்ளது. இங்கு அகலமான சர்தார் படேல் சாலை உள்ளது. எனவே, எளிதில் செல்வதற்கு ஏற்ற இடமாக இது கருதப்படுகிறது. </p><h2>ஜெயலலிதா அடிக்கல் நாட்டிய இடம்</h2><p>இந்த பகுதியில்தான் 43 ஏக்கர் பரப்பளவில் தலைமைச் செயலகம் கட்ட முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2003-ல் அடிக்கல் நாட்டினார். எனினும், இதன் அருகில்தான் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு ஏராளமான மாணவர்கள் பயின்று வரும் நிலையில், இடத்தைத் தேர்வு செய்வதற்கு முன்பாக கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயமாக இது கருதப்படுகிறது.</p> <h2>பட்டினப்பாக்கம், நந்தம்பாக்கம்</h2><p>பட்டினப்பாக்கத்தைப் பொறுத்தவரை இப்பகுதிக்கு அகலமான சாலை வசதி இல்லை. அதோடு, நகரின் முக்கிய பகுதிகளான மயிலாப்பூர் மற்றும் அடையாறுக்கு அருகில் உள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.</p><p>மேலும்  இந்தப் பகுதி முதல்-அமைச்சர் விஜய்யின் இல்லம் மற்றும் தவெக தலைமை அலுவலகம் அமைந்துள்ள பனையூரில் இருந்து தற்போதைய தலைமைச் செயலகம் செல்லும் தூரத்தை விட குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p>இதேபோல், நந்தம்பாக்கத்தில் இந்தியன் டிரக்ஸ் அண்ட் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் செயல்பட்டு வந்த சுமார் 62 ஏக்கர் நிலம் தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலத்தின் ஒரு பகுதியில் சென்னை வர்த்தக மையம் அமைக்கப்பட்டது. எஞ்சியுள்ள இடம் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான பரிசீலனையில் உள்ளது. நந்தம்பாக்கத்துக்கு மெட்ரோ ரெயில் சேவைகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>இடத்தை இறுதி செய்வதற்கு முன்பாக, அதன் சாதக, பாதகங்கள் குறித்து ஆராயப்பட்டு முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>இளம்பெண்ணுக்கு சரமாரி அரிவாள் வெட்டு: மர்ம நபர்கள் 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-net-2-suspects-for-slashing-young-woman-with-sickle</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-net-2-suspects-for-slashing-young-woman-with-sickle#comments</comments><guid isPermaLink="false">5e969f04-8422-4b89-885f-83665824fa05</guid><pubDate>Thu, 03 Sep 2026 15:52:59 +0000</pubDate><atom:updated>2026-09-03T15:52:59.900Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,young woman,தூத்துக்குடி,இளம்பெண்,Sickle cut,அரிவாள் வெட்டு,mysterious persons,மர்ம நபர்கள்,Udangudi,உடன்குடி,போலீசார் வலைவீச்சு,police netting</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/lx9tpi4e/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மர்ம நபர்கள் 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/lx9tpi4e/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், உடன்குடி பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D">இளம்பெண்</a>ணை வழிமறித்து சரமாரியாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">அரிவாளால் வெட்டி</a>விட்டுத் தப்பியோடிய 2 <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">மர்ம நபர்களை</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81">போலீசார் தீவிரமாக வலைவீசி</a> தேடி வருகின்றனர். </p><h2>இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு</h2><p>தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி செட்டியாபத்து அருகேயுள்ள குமாரசாமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (தொழிலாளி). இவரது மனைவி சாந்தி (வயது 31). இவர் நேற்று இரவு நேரம் உடன்குடி அருகே உள்ள செட்டியாபத்து செல்வபுரம் பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கே பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், திடீரென சாந்தியை வழிமறித்தனர். கண்இமைக்கும் நேரத்தில் அந்த 2 பேர், தாங்கள் வைத்திருந்த அரிவாளால் சாந்தியை சரமாரியாக வெட்டிவிட்டு, பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். </p><h2>தீவிர சிகிச்சை</h2><p>இதில் பலத்த காயமடைந்த சாந்தி, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி சாலையில் அலறி துடித்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதியினர், அவரை உடனடியாக மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. </p><h2>மர்ம நபர்கள் 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு</h2><p>இந்த சம்பவம் குறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்கள் யார்? தாக்குதலுக்கான பின்னணி மற்றும் காரணம் என்ன? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி, தப்பியோடிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசியில் பட்டாசு ஆலை விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழப்பு: மாணிக்கம் தாகூர் எம்.பி. இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/workers-killed-in-firecracker-factory-accident-in-srivilliputhur-sivakasi-manickam-thakur-mp-condoles</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/workers-killed-in-firecracker-factory-accident-in-srivilliputhur-sivakasi-manickam-thakur-mp-condoles#comments</comments><guid isPermaLink="false">0931c4aa-65d9-4029-a122-5579749522ac</guid><pubDate>Thu, 03 Sep 2026 15:40:22 +0000</pubDate><atom:updated>2026-09-03T15:40:22.561Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,இரங்கல்,ஸ்ரீவில்லிபுத்தூர்,Srivilliputhur,Sivakasi,சிவகாசி,loss of life,workers,condolences,Firecracker Factory Accident,தொழிலாளர்கள் உயிரிழப்பு,மாணிக்கம் தாகூர் எம்.பி.,பட்டாசு ஆலையில் வெடிவிபத்து,Manickam Thakur MP</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/buqb69gg/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் மாணிக்கம் தாகூர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/buqb69gg/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">ஸ்ரீவில்லிபுத்தூர்</a> மற்றும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF">சிவகாசி</a>யில் அடுத்தடுத்து நடந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">வெடிவிபத்து</a>களில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">தொழிலாளர்கள் உயிரிழந்ததற்கு</a> மாணிக்கம் தாகூர் எம்.பி. இரங்கல் தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF">மாணிக்கம் தாகூர் எம்.பி.</a> வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: </p><p>ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சிவகாசி ஆகிய இரண்டு இடங்களில் உள்ள பட்டாசு ஆலைகளில் அடுத்தடுத்து நிகழ்ந்த கோர வெடிவிபத்துகளில் தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், சொல்லொணா வேதனையும் அடைந்தேன். </p><p>உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>நாமக்கல்: கல்லூரி பேருந்து மோதி 4 மாணவிகள் உயிரிழப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/4-students-killed-in-college-bus-crash</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/4-students-killed-in-college-bus-crash#comments</comments><guid isPermaLink="false">727641ca-dacc-46f8-bb64-1a65ca44e999</guid><pubDate>Thu, 03 Sep 2026 15:33:36 +0000</pubDate><atom:updated>2026-09-03T15:33:36.519Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Namakkal,நாமக்கல்,RoadAccident,கல்லூரி பேருந்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/1lynhbzt/bus33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
நாமக்கல்]]></media:title><media:description type="html"><![CDATA[ ல்லூரி பேருந்து மோதி 4 மாணவிகள் உயிரிழப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/1lynhbzt/bus33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல்,</p><p>திருச்செங்கோடு அருகே இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றபோது தனியார் கல்லூரி பேருந்து மோதியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பள்ளி மாணவிகள், ஒரு கல்லூரி மாணவி உயிரிழந்தனர்.</p><h2>இருசக்கர வாகனத்தில் அழைத்து வருவது வழக்கம் </h2><p>நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் அருகே கொன்னையார் ஊராட்சி சக்கராம்பாளையம் போயர் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சேகர்-அமுதா தம்பதி மகள்கள் பிளஸ் 1 படிக்கும் நிவேதா(17), ஏழாவது படிக்கும் தனுஸ்ரீ(13), ஆறாம் வகுப்பு படிக்கும் அபிநயா(12).</p><p>எலச்சிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் இவர்களை ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் படித்து வரும் (சித்தப்பா ரமேஷ்பாபு மகள்) சுபிதா என்ற கலைச்செல்வி (19) தினமும் பள்ளிக்கு சென்று இருசக்கர வாகனத்தில் அழைத்து வருவது வழக்கம்.</p><h2>சாலையை கடக்க முயன்றபோது </h2><p>அந்த வகையில் இன்று மாலை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF">கல்லூரி</a> முடிந்து வீட்டிற்கு வந்த கலைச்செல்வி இரு சக்கர வாகனத்தில் மூவரையும் அழைத்து வர பிற்பகல் 4.30 மணியளவில் பள்ளிக்கு சென்றார். அங்கிருந்து வீட்டிற்கு 4 பேரும் ராசிபுரம்–திருச்செங்கோடு சாலையில் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, சக்கராம்பாளையம் தனியார் பெட்ரோல் பங்க் அருகில் பிரிவு சாலையை கடக்க முயன்றனர்.</p><p>அப்போது ராசிபுரத்தில் இருந்து சங்ககிரி நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே கலைச்செல்வி, அபிநயா உயிரிழந்தனர்.</p><p>நிவேதா, தனுஸ்ரீ உயிருக்கு போராடிய நிலையில் சாலையோரம் கிடந்தனர். இந்த விபத்தை பார்த்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து இருவரையும் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.</p><h2>விபத்தை ஏற்படுத்திய கல்லூரி பேருந்து </h2><p>ஆனால், அவர்கள் இருவரும் செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் தனியார் கல்லூரி பேருந்தில் இருந்த 30–க்கும் மேற்பட்ட மாணவிகள் இதர பேருந்துகள் வாயிலாக தங்களுடைய வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.</p><p>ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததால் சக்கராம்பாளையம் கிராமம் சோகத்தில் மூழ்கி உள்ளது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள எலச்சிபாளையம் போலீசார் தப்பியோடிய கல்லூரி பேருந்து ஓட்டுநரை தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ஜோசியக்காரர்கள் பேசுவதை சீரியஸ் ஆக எடுக்க தேவையில்லை -   மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8Dno-need-to-take-what-fortune-tellers-say-seriously-manickam-thakur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8Dno-need-to-take-what-fortune-tellers-say-seriously-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">b1169751-5969-4a3d-8511-cf5dfa14a11e</guid><pubDate>Thu, 03 Sep 2026 15:19:44 +0000</pubDate><atom:updated>2026-09-03T15:19:44.236Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,ராகுல் காந்தி,மாணிக்கம் தாகூர்,ManickamTagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/0gsed9hh/thakur33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[  மாணிக்கம் தாகூர்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/0gsed9hh/thakur33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்தான் 2029 மக்களவைத் தேர்தலில் அடுத்த பிரதமர் என்று சமூக வலைத்தளத்தில் மீம்ஸ்கள் வெளியாகி விவாதத்துக்குரியதாக மாறியிருக்கிறது.  இதனிடையே, அடுத்த பிரதமர் யார்? என்று தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">ராகுல் காந்தி</a>க்கு அடுத்த இடத்தில் முதல்-அமைச்சர் விஜய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><p>இந்தநிலையில்,  மதுரை திருப்பரங்குன்றத்தில் காங்., மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>ஜோசியக்காரர்கள் பேசுவதை சீரியஸ் ஆக எடுக்கத் தேவையில்லை. அது ஜோசியக்காரர்களின் ஆருடம். கட்சியின் நிலைப்பாடு அது இல்லை, அது தனிப்பட்ட நபர்களின் கருத்து என்று தவெக பொருளாளர் தெளிவுபடுத்திவிட்டார். </p><p>தமிழக முதல்-அமைச்சராக விஜய் இருக்க வேண்டும், நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி அரசு என்பது எங்கள் எண்ணம். விஜய் அவர்கள் முதல்-அமைச்சராகும்  முதல் இலக்கு நிறைவேறிவிட்டது, ராகுல் காந்தியை பிரதமராக்க சேர்ந்து பணியாற்றுவோம் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>மதுபோதையில் தகராறு: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கீழே தள்ளிய வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/drunk-altercation-youth-arrested-for-pushing-police-sub-inspector-down</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/drunk-altercation-youth-arrested-for-pushing-police-sub-inspector-down#comments</comments><guid isPermaLink="false">837932c1-956c-40f2-b25c-97cd5065949a</guid><pubDate>Thu, 03 Sep 2026 14:58:33 +0000</pubDate><atom:updated>2026-09-03T14:58:33.967Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>drunkenness,Thoothukudi,தூத்துக்குடி,Youth arrested,வாலிபர் கைது,மதுபோதை,காயம்,Injury,Dispute,தகராறு,Police sub-inspector,போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/a63bzol7/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வாலிபர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/a63bzol7/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், ஆத்தூர் பஜார் பகுதியில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81">மதுபோதையில் தகராறு</a> செய்த வாலிபர்களை பிடிக்கச் சென்றபோது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D">போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்</a> பலத்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">காயம்</a> அடைந்தது தொடர்பாக ஒருவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்யப்பட்டுள்ளார். </p><h2>மதுபோதையில் தகராறு செய்த வாலிபர்கள்</h2><p>தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் பரதர் தெருவைச் சேர்ந்த ஜான் மகன் ராகேஷ் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அந்தோணி மகன் எமர்சன் ஆகிய 2 பேரும் ஆத்தூர் பஜார் பகுதியில் மதுபோதையில் பொதுமக்களுக்கு இடையூறாக தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ஆத்தூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பொன் முனியசாமி (வயது 59) தலைமையிலான போலீசார், தகராறில் ஈடுபட்ட 2 பேரையும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வர முயன்றனர். </p><h2>வாலிபர்களை பிடிக்க சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு காயம்</h2><p>போலீசாரின் வாகனத்திற்கு பின்னால் தங்களது பைக்கில் வருவது போல வந்த 2 பேரும், ஆத்தூர் பஜார் சாலையில் திடீரென திரும்பி தப்பிச் செல்ல முயன்றனர். இதைக் கண்ட சப்-இன்ஸ்பெக்டர் பொன் முனியசாமி மற்றும் போலீசார், தங்களது பைக்கில் அவர்களைப் பின்தொடர்ந்து சென்று மடக்கிப் பிடிக்க முயன்றனர். அப்போது தப்பியோட முயன்ற வாலிபர்கள் 2 பேரும் சப்-இன்ஸ்பெக்டர் பொன் முனியசாமியை ஓடும் பைக்கில் இருந்து பலமாகத் தள்ளிவிட்டு தப்பினர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சப்-இன்ஸ்பெக்டர் பொன் முனியசாமிக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அவர் ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். </p><h2>வாலிபர் கைது</h2><p>இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தப்பியோடிய எமர்சனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு நபரான ராகேஷை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>குடும்பத்திற்கு பில்லி சூனியம் வைத்ததாக கூறி மூதாட்டி கொலை - அக்கா, தங்கை கைது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/elderly-woman-murdered-over-allegations-of-casting-a-black-magic-spell-on-a-family-sisters-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/elderly-woman-murdered-over-allegations-of-casting-a-black-magic-spell-on-a-family-sisters-arrested#comments</comments><guid isPermaLink="false">1f87b5af-93a5-463a-b56f-77ca912db1c0</guid><pubDate>Thu, 03 Sep 2026 14:46:15 +0000</pubDate><atom:updated>2026-09-03T14:46:15.429Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Theni,தேனி,பில்லிசூனியம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/j7i24zk1/State-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/j7i24zk1/State-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி,</p><p>தேனி மாவட்டம் வருசநாடு அருகே, தங்கம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஜக்கம்மாள் என்ற மூதாட்டி, கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.  </p><p>இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், மூதாட்டியின் அக்கா மகள்களான அய்யம்மாள் மற்றும் நாகராணி ஆகிய இருவரும் சேர்ந்து இந்த கொலையை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. அவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. </p><p>மூதாட்டி ஜக்கம்மாள் தங்கள் குடும்பத்திற்கு பில்லி சூனியம் வைத்ததாகவும், அதனால் தங்கள் குடும்பத்தினருக்கு உடல்நலக் குறைவு மற்றும் கஷ்டங்கள் ஏற்பட்டு, தங்கள் பெற்றோர் உயிரிழந்ததாகவும் அய்யம்மாள் மற்றும் நாகராணி நம்பியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சகோதரிகள் இருவரும், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி ஜக்கம்மாளை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதையடுத்து, இருவரையும் கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். </p>]]></content:encoded></item><item><title>ஊழியர்கள் சஸ்பெண்ட் எதிரொலி:  டாஸ்மாக் கடைகள் திடீர் மூடல் - மதுபிரியர்கள் ஏமாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-stores-suddenly-closed-wine-lovers-disappointed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-stores-suddenly-closed-wine-lovers-disappointed#comments</comments><guid isPermaLink="false">8d53f9f0-8da7-4899-8dcb-fa9bf8749c89</guid><pubDate>Thu, 03 Sep 2026 14:38:04 +0000</pubDate><atom:updated>2026-09-03T14:38:04.030Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,டாஸ்மாக்,மதுபிரியர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/aeysti7b/tasmac33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
ஊழியர்கள் சஸ்பெண்ட் எதிரொலி]]></media:title><media:description type="html"><![CDATA[ டாஸ்மாக் கடைகள் திடீர் மூடல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/aeysti7b/tasmac33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><p>தமிழகத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 48 டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள் உள்ளன.</p><h2>ரூ.10 வசூல்</h2><p>இந்தக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு அரசு நிர் ணயித்த அதிகபட்ச சில்லறை விலையைவிட, பாட்டிலுக்கு ரூ.10 மற்றும் அதற்கு மேலும் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக நீண்டகாலமாக புகார்கள் இருந்து வருகின்றன. இந்தக் கூடுதல் வசூல் முறைக்கு முழுமை யாக முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று த.வெ.க. அரசு அறிவித்தது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.</p><p>செயலி மூலம் முன்பதிவு செய்துவிட்டு, கடைகளில் நேரடியாக மதுபானங்களை வாங்கும் நடைமுறையும் கொண்டு வரப்பட்டது. அதனால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.</p><h2>டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு</h2><p>இதன் ஒரு பகுதியாக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D">டாஸ்மாக் </a>ஊழியர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். அதில் பெரும்பாலானவை அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதன்படி, கடந்த 1-ந்தேதி முதல் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. </p><p>செப்டம்பர் மாதம் முதல் ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட சலுகைகள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இனிமேல் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பதை அரசு எந்த வகையிலும் அனுமதிக்காது என்று அமைச்சர் விக்னேஷ் கடுமையாக எச்சரித்தார்.</p><h2>பணியிடை நீக்கம் </h2><p>அரசு நிர்ணயித்த விலையைவிட ஒரு ரூபாய் கூடுதலாக வசூலித்தால்கூட முதல் முறையில் 3 மாதங்கள் பணியிடைநீக்கம் செய்யப்படுவார்கள். அதே தவறை மீண்டும் செய்தால் நிரந்தரமாக பணியில் இருந்து நீக்கப்ப டுவார்கள் என்று சட்டப்பேரவையிலும் அமைச்சர் அறிவித்தார்.</p><p>இந்தநிலையில், டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்தும், அமைச்சரின் எச்சரிக்கையையும் மீறி பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குவது தொடர்வதாக மதுப்பிரியர்கள் வேதனை தெரிவித்தனர். இதுதொடர்பான செய்தி நேற்றைய தினத்தந்தியில் பிரசுரிக்கப்பட்டது. இது அரசின் கவனத்துக்குச் சென்றது.</p><p>மேலும், டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை வசூலிப்பது உள்ளிட்ட புகார்களை மதுபிரியர்கள் எளிதாகத் தெரிவிக்கும் வகையில் தமிழக அரசு புதிய புகார் சேவை மையத்தை தொடங்கியது. இந்த மையத்திற்கு வந்த புகார்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், 67 டாஸ் மாக் ஊழியர்கள் தவறு செய்தது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்ததாக 67 டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>அந்த வகையில், கடந்த 2 நாட்களில் மட்டும் மொத்தம் 67 ஊழியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 3 மாதங்கள் பணி வழங்கப்படாது. அரசின் நடவடிக்கை டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இந்தநிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வாங்கியதாக எழுந்த புகாரின் பேரில், 6 டாஸ்மாக் ஊழியர்கள் நேற்று முன்தினம் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.</p><h2>ஊழியர்கள் சஸ்பெண்ட் எதிரொலி</h2><p>இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் ஊழியர்கள் டாஸ்மாக் கடைகளை திறக்காமல் போராட்டத்தில் குவிந்தனர். சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி, டாஸ்மாக் அலுவலகத்தில் நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினர். இந்த பிரச்னைக்காக திண்டிவனம் நகர மற்றும் கிராமப்பகுதியிலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் நேற்று மதியம் 12:00 மணியிலிருந்து திறக்கப்பவில்லை.</p><h2>மதுபிரியர்கள் ஏமாற்றம்</h2><p>இந்தநிலையில் சென்னை புறநகர் பகுதிகளான குன்றத்தூர், திருமுடிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் திடீரென எந்த முன்னறிவிப்பின்றி மூடப்பட்டது.  பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குவதை தடுக்கும் நடவடிக்கையில் ஏற்படும் செலவினத்தை ஏற்க வலியுறுத்தியதாக தெரிகிறது. </p><p>காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டத்திலும் தங்கள் சொந்த காசை செலவிடவேண்டியதாக ஊழியர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். டாஸ்மாக் கடைகள் போராட்டம் காரணமாக மூடப்பட்டதால், டாஸ்மாக் கடைக்கு வந்திருந்த மதுப்பிரியர்கள் ஏமாற்றமடைந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>வீடு புகுந்து புதுமாப்பிள்ளைக்கு சரமாரி வெட்டு: முகமூடி கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-net-masked-gang-that-broke-into-a-house-and-attacked-a-newlywed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-net-masked-gang-that-broke-into-a-house-and-attacked-a-newlywed#comments</comments><guid isPermaLink="false">9f6b1843-c06f-4feb-859e-6d5fa71bca97</guid><pubDate>Thu, 03 Sep 2026 14:24:54 +0000</pubDate><atom:updated>2026-09-03T14:24:54.569Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Sickle cut,அரிவாள் வெட்டு,போலீஸ் வலைவீச்சு,கும்பல்,mask,newlywed,புதுமாப்பிள்ளை,முகமூடி,Gang,வீடு புகுந்து,police netting,house break-in</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/q01rq7ex/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முகமூடி கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/q01rq7ex/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a>யில் வீடுபுகுந்து வாலிபரை அவரது மனைவி கண்முன்னே சரமாரியாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">அரிவாளால் வெட்டிவிட்டு </a>தப்பியோடிய 4 பேர் கொண்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF">முகமூடி</a>க் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D">கும்பலை</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81">போலீசார் வலைவீசி </a>தேடி வருகின்றனர். </p><h2>புதுமாப்பிள்ளை</h2><p>தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் பெரிய தெப்பக்குளம் அருகேயுள்ள வடக்கு ரதவீதியைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் முத்துக்கணேசன் (வயது 29), மெக்கானிக்கல் என்ஜினீயர். இவர் எட்டயபுரம் நாவலக்கம்பட்டி சாலையில் உள்ள ஒரு தனியார் சோலார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் மகேஸ்வரி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. </p><h2>வாலிபரை அரிவாளால் வெட்டிய முகமூடி கும்பல்</h2><p>முத்துக்கணேசன் தினமும் மதியம் உணவருந்த வீட்டிற்கு வருவது வழக்கம். அந்த வகையில் நேற்று மதியம் அவர் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, மனைவி மகேஸ்வரி உணவு பரிமாறிக் கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் முகமூடி அணிந்தபடி வந்த 4 பேர் கொண்ட கும்பல், கதவு திறந்திருந்த நிலையிலிருந்த வீட்டின் உள்ளே அத்துமீறி நுழைந்தது. கண்இமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் உணவருந்திக் கொண்டிருந்த முத்துக்கணேசனை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி கதறி கூச்சலிட்டார். </p><h2>வாலிபருக்கு தீவிர சிகிச்சை</h2><p>உடல் முழுவதும் பலத்த வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் முத்துக்கணேசன் உயிருக்குப் போராடினார். அறை முழுவதும் ரத்தம் சிதறிக் கிடந்தது. அப்போது அப்பகுதியில் பாம்பு பிடிப்பதற்காக சென்ற தீயணைப்புத் துறையினர், மகேஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு வீட்டிற்குள் விரைந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த முத்துக்கணேசனை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><h2>உறவினர்கள் திடீர் சாலை மறியல்</h2><p>இந்த சம்பவத்தை அறிந்து ஆத்திரமடைந்த முத்துக்கணேசனின் உறவினர்கள், கோவில்பட்டி - விளாத்திகுளம் பிரதான சாலையில் மாலை நேரம் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி முழக்கமிட்டதால், அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.</p><h2>முகமூடி கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு</h2><p>இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பவுல் யேசுதாசன், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்தார். இதையேற்று அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இச்சம்பவம் குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முன்பகையினால் இந்தத் தாக்குதல் நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி, தப்பிய முகமூடி கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக கல்லூரி பிரதிநிதிகளுடன் மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coordination-meeting-regarding-womens-safety-in-chennai-held-with-college-representatives-chaired-by-the-corporation-commissioner</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coordination-meeting-regarding-womens-safety-in-chennai-held-with-college-representatives-chaired-by-the-corporation-commissioner#comments</comments><guid isPermaLink="false">b43d365a-2d6e-4069-b078-a5e1c5743a2e</guid><pubDate>Thu, 03 Sep 2026 14:23:42 +0000</pubDate><atom:updated>2026-09-03T14:23:42.074Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,பெண்கள் பாதுகாப்பு,Women Safety,மாநகராட்சி ஆணையாளர்,Commissioner Sameeran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/6ct32iu2/State-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/6ct32iu2/State-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் பொது இடங்கள் மற்றும் பொது போக்குவரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்வது குறித்து கல்லூரி பிரதிநிதிகளுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பொது இடங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்வது குறித்த கல்லூரி பிரதிநிதிகளுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் இன்று (03.09.2026) ரிப்பன் கட்டிட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது.</p><p>பெருநகர சென்னை மாநகராட்சியின் பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகம் சார்பில் பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் சமூக நலத்திட்டங்கள் கிடைக்கப்பெறுவது தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.</p><p>இதன் ஒரு பகுதியாக, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பெண்களுக்கு பொது இடங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து அமைப்புகளில் போதுமான அளவு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான அண்ணா ஆத்ர்ஷ் கல்லூரி, மகளிர் கிறிஸ்தவ கல்லூரி, நாசரேத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குருநானக் கல்லூரி, லயோலா கல்லூரி, எத்திராஜ் கல்லூரி, டி.ஜி. வைஷ்ணவா கல்லூரி, இராணி மேரி கல்லூரி, மெட்ராஸ் சமூகப் பணி பள்ளி, நாம் அறக்கட்டளை, குளோபல் அட்ஜஸ்ட்மென்ட் அறக்கட்டளை, பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின நீதி, சிங்கப்பெண் சிறப்புப் படை, பெண் உரிமை இயக்கம் மற்றும் மாவட்ட சமூக நலத்துறை உள்ளிட்ட கல்லூரிகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது.</p><p>இக்கூட்டத்தில், பொது இடங்கள், பேருந்து, இரயில் நிலையம், மெட்ரோ ரெயில் நிலையம், கல்லூரிகள், கால் டாக்சி உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துகளில் பெண்களுக்கு போதுமான பாதுகாப்பினை ஏற்படுத்துதல், உறுதி செய்தல், இதர தொழில்நுட்பம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், செயற்கை நுண்ணறிவு மூலம் பெண்களை தவறாகச் சித்தரிப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்திட அறிவுறுத்தப்பட்டது. </p><p>மேலும், கல்லூரிகளில் பெண்கள் பாதுகாப்பிற்கென ஒருங்கிணைப்பு அலுவலர்களை நியமித்து பாலின அடிப்படையிலான புகார்களுக்கு தீர்வு காணுதல், மாணவிகளுக்குள் மகளிர் மன்றம் ஏற்படுத்தி ஒரு கட்டமைப்பை உருவாக்குதல் அல்லது மாணவியர்களுக்கான குழுக்களை அமைத்து பாலினப் பாதுகாப்பு விழிப்புணர்வு முயற்சிகளை வலுப்படுத்துதல் தொடர்பான பணிகளை மேற்கொள்வது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.</p><p>இக்கூட்டத்தில், இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன், பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகக் குழுத் தலைவர் முனைவர் லெஜிஸ் மற்றும் அலுவலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள், கல்லூரி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தாம்பரம்-நெல்லை சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/extension-of-tambaram-nellai-special-train-service</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/extension-of-tambaram-nellai-special-train-service#comments</comments><guid isPermaLink="false">34288a2c-1310-4557-a525-0a076f001089</guid><pubDate>Thu, 03 Sep 2026 14:18:23 +0000</pubDate><atom:updated>2026-09-03T14:18:23.722Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,சிறப்பு ரெயில்,Tambaram,தாம்பரம்,Special train</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/o75avhvy/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/o75avhvy/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;</p><h2>தாம்பரம்-நெல்லை</h2><p>* நெல்லையில் இருந்து தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06166), வருகிற 6-ந்தேதி முதல் 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரையிலும், மறுமார்க்க மாக, தாம்பரத்தில் இருந்து நெல்லை செல்லும் சிறப்பு ரெயில் (06165), வருகிற 7-ந்தேதி முதல் 28-ந்தேதி (திங்கட்கிழமை) வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><p>* நெல்லையில் இருந்து தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06070), இன்று (3-ந்தேதி) முதல் அக்டோபர் 29-ந்தேதி வரையிலும், மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து நெல்லை செல்லும் சிறப்பு ரெயில் (06069), நாளை (4-ந்தேதி) முதல் அக்டோபர் 30-ந் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>கவிஞர் தமிழ்ஒளி நினைவைப் போற்றும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் - தமிழக அரசு அறிவிப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-announces-competitions-for-school-students-to-honor-the-memory-of-poet-tamiloli</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-announces-competitions-for-school-students-to-honor-the-memory-of-poet-tamiloli#comments</comments><guid isPermaLink="false">d029531f-ecfa-46b0-9ce4-e37c5b4345b3</guid><pubDate>Thu, 03 Sep 2026 14:02:28 +0000</pubDate><atom:updated>2026-09-03T14:02:28.741Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/k3ui7kkg/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/k3ui7kkg/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“கவிஞர் தமிழ்ஒளி, கடலூர்(தென்னாற்காடு மாவட்டம்), குறிஞ்சிப்பாடியை அடுத்த ஆடூர் அகரம் என்னும் சிற்றூரில் சின்னையா, செங்கேணி அம்மாள் இணையருக்குப் 21.09.1924-ல் பிறந்தார். தமிழ் ஒளி அவர்களின் இயற்பெயர் விசயரங்கம். தமது தொடக்கக் கல்வியைப் புதுவை முத்தியாலுப்பேட்டை நடுநிலைப் பள்ளியில் கற்றார். உயர்கல்வியைக் கலவைக் கல்லூரியில் படித்தார். மாணவராயிருந்தபோதே பாரதியார், பாரதிதாசன் கவிதைகளால் ஈர்க்கப்பெற்றார்.</p><p>கவிஞர் தமிழ்ஒளி பாரதியாரின் வழித்தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கி கவிதைகளைப் படைத்தவர். கவிதைகள் மட்டுமல்லாது கதைகள், கட்டுரைகள், இலக்கியத் திறனாய்வுகள், மேடை நாடகங்கள், குழந்தைப் பாடல்கள் ஆகியவற்றை இயற்றியவர். அவரின் கவிதைகள் தனித்தன்மை வாய்ந்தவை.</p><p>அவர் பொதுவுடைமைக் கொள்கைகளை உயிர்மூச்சாகக் கொண்டிருந்தவர். உலகத் தொழிலாளர்களின் உரிமை நாளான மே நாளை வரவேற்றுப் பாடியவர். தமிழ்ஒளியின் சிறுகதைகளில் வரும் பாத்திரங்கள் பெரும்பாலோர் ஒடுக்கப்பெற்றவர்கள், தொழிலாளர்கள், போராளிகள் என அடித்தட்டு மக்களாகவே இருந்தார்கள். கவிஞர் தமிழ்ஒளி சாதியத்தையும் விளிம்புநிலை மக்களின் விடுதலையையும் பாடியவர். </p><p>கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் நூற்றாண்டினை முன்னிட்டு அவரின் பெயரில் பள்ளி மாணவர்களுக்கு தமிழ்சார்ந்த போட்டிகள் நடத்திட அரசாணை வெளியிடப்பட்டது. எனவே, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆண்டுதோறும் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு கவிஞர் தமிழ்ஒளி கவிதை ஒப்பித்தல் போட்டியும், 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு பொதுவான தலைப்புகளில் பேச்சுப் போட்டி மற்றும் கவிதைப் போட்டியும் நடத்தப்பெற்று வருகிறது. </p><p>போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000/- இரண்டாம் பரிசு ரூ.7,000/- மூன்றாம் பரிசு ரூ.5,000/-மற்றும் சான்றிதழும், கேடயமும் வழங்கப்பெற்று வருகிறது. 2026 ஆம் ஆண்டிற்கு, 'கவிஞர் தமிழ்ஒளி' நினைவைப் போற்றும் வகையில் பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி மற்றும் கவிஞர் தமிழ்ஒளி கவிதை ஒப்பித்தல் ஆகிய போட்டிகள் தியாகராய நகர், ஸ்ரீ ராமகிருஷ்ணா பதின்ம மேல்நிலைப் பள்ளியில் 09.09.2026ஆம் நாளன்று நடைபெற உள்ளன.</p><p>மாணவியர் கவிஞர் தமிழ்ஒளி கவிதை ஒப்பித்தல் போட்டியில் கலந்துகொள்ளும் மாணவ, https://tamiloli.in என்ற இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள கவிதைகளைப் பதிவிறக்கம் செய்து, கவிதைகளை ஒப்பித்தல் வேண்டும். பேச்சுப்போட்டியில் பங்கேற்போர் பாரதியின் கனவும் இன்றைய இளைஞர்களும், நீர் மேலாண்மையின் அவசியத் தேவை, நட்பின் இலக்கணம், பிளாஸ்டிக் இல்லாத உலகம் என்ற தலைப்புகளில் பேச வேண்டும். கவிதைப் போட்டியில் பங்கேற்போர், கல்வி தரும் ஒளி என்ற தலைப்பில் கவிதை எழுதுதல் வேண்டும்.</p><p>இப்போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ/ மாணவியர் https://tamiloli.in என்ற இணையத்தில் உள்ள பங்கேற்புப் படிவத்தை பதிவிறக்கம் செய்து இணைப்பிலுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி நிறைவு செய்து பள்ளி தலைமையாசிரியர் பரிந்துரையுடன் தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், எழும்பூர் என்ற முகவரிக்கு நேரில் அல்லது அஞ்சல் அல்லது tvt.officiallanguage@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு வரும் 08.09.2026 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சென்னை சென்டிரல் - அரக்கோணம் வழித்தடத்தில் புதிய ஏ.சி. மின்சார ரெயில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-ac-electric-train-on-chennai-central-arakkonam-route</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-ac-electric-train-on-chennai-central-arakkonam-route#comments</comments><guid isPermaLink="false">a59c496d-8a6d-400d-b8ac-b93b64403e2b</guid><pubDate>Thu, 03 Sep 2026 13:51:43 +0000</pubDate><atom:updated>2026-09-03T13:51:43.846Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தெற்கு ரெயில்வே,மின்சார ரெயில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/o1k16doe/acrail33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ புதிய ஏ.சி. மின்சார ரெயில்]]></media:title><media:description type="html"><![CDATA[ 

சென்னை சென்டிரல் - அரக்கோணம் வழித்தடத்தில் புதிய ஏ.சி. மின்சார ரெயில்
]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/o1k16doe/acrail33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>அரக்கோணத்திற்கு புதிய ஏ.சி.மின்சார ரெயில் ஒரு வாரத்தில் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>சென்னையில் <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">ஏ.சி. மின்சார ரெயில் </a>கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கப்படுகிறது. முற்றிலும் குளிர்சாதன வசதி உள்ள ரெயிலுக்கு ஆரம்பக் கட்டத்தில் பயணிகளிடம் அதிக வரவேற்பு இல்லை. ஆனால் தற்போது இந்த ஏ.சி. ரெயிலில் பயணம் செய்ய மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.</p><p>குறிப்பாக அரசு தனியார் அலுவலகங்களில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் வேலைக்கு வரவும் அவர்கள் பணி முடிந்து வீடு செல்லவும் இந்த ரெயில் வசதியாக உள்ளது.</p><p>ஒரு மின்சார ஏசி ரெயில் பெரம்பூரில் தயாரிக்கப்பட்டு தெற்கு ரெயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ரெயில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.</p><p>புதிய ஏ.சி. மின்சார ரெயில் சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் வரை இயக்குவதற்கு திட்ட மிடப்பட்டுள்ளது அதற்கான கால அட்டவணை தயாரித்து வைத்து ரெயில்வே அனுப்பப்பட்டுள்ளது.</p><p>திருவள்ளூர், ஆவடி திருநின்றவூர், அம்பத்தூர் வழியாக இந்த ரெயில் இயக்கப்பட உள்ளன. புறநகர் பகுதி மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக அரக்கோணத்திற்கு விடப் படுகிறது. அரசுக அலுவல வேலை நேரத்தை கணக் கிட்டு இயக்கவும் அட்ட வணை தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் ஏ.சி. மின்சார ரெயில் பொதுமக்கள் பாட்டிற்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>விருதுநகர்: வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிதி உதவி - முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/virudhunagar-financial-assistance-for-families-of-those-who-died-in-the-explosion-chief-minister-vijay-announces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/virudhunagar-financial-assistance-for-families-of-those-who-died-in-the-explosion-chief-minister-vijay-announces#comments</comments><guid isPermaLink="false">e3598607-a383-4533-8f6b-f14c438fd941</guid><pubDate>Thu, 03 Sep 2026 13:32:00 +0000</pubDate><atom:updated>2026-09-03T13:32:00.888Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Virudhunagar,விருதுநகர்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/m81suwii/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/m81suwii/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டுவந்த தனியாருக்கு சொந்தமான வெடிபொருள்கள் தொழிற்சாலைகளில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், அவர்களுக்கு நிதியுதவி வழங்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், அனுப்பன்குளம் கிராமம் மற்றும் திருவில்லிபுத்தூர் வட்டம், விழுப்பனூர் கிராமம் ஆகிய பகுதிகளில் இயங்கிவந்த தனியாருக்கு சொந்தமான வெடிபொருள்கள் தொழிற்சாலைகளில் இன்று (3.9.2026) எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்துகளில் அங்கு பணியிலிருந்த வத்திராயிருப்பு வட்டம், குன்னூர் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் (வயது 56), த/பெ.குருவன் என்பவரும்; சிவகாசி வட்டம், சிலோன் காலனியைச் சேர்ந்த சக்திவேல் (வயது 55), த/பெ. சிதம்பரம் என்பவரும் பலத்த காயமுற்று உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.</p><p>மேலும், விழுப்பனூர் கிராமத்தில் நடந்த விபத்தில் பலத்த காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள காளிராஜ் (வயது 49), த/பெ.கருப்பையா மற்றும் லேசான காயமடைந்து அம்மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள கருப்பாயி (வயது 47), க/பெ.ராஜேந்திரன், மகாலட்சுமி (வயது 36), க/பெ. சந்தனம், பவானி (வயது 49), க/பெ. இருளப்பன் மற்றும் இருளாயி (வயது 70), க/பெ. சக்கணன் ஆகியோருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.</p><p>இவ்விபத்துகளில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா நான்கு லட்சம் ரூபாயும், பலத்த காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நபர்களுக்குத் தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>நெய், சர்க்கரை விலை உயர்வால் கோவில்பட்டியில் ஸ்வீட்ஸ், காரம் விலை அதிகரிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/prices-of-sweets-and-sweets-increase-in-kovilpatti-due-to-rise-in-ghee-and-sugar-prices</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/prices-of-sweets-and-sweets-increase-in-kovilpatti-due-to-rise-in-ghee-and-sugar-prices#comments</comments><guid isPermaLink="false">35078782-2008-4be1-9588-488bd18b19a8</guid><pubDate>Thu, 03 Sep 2026 13:13:07 +0000</pubDate><atom:updated>2026-09-03T13:13:07.272Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>salt,Kovilpatti,கோவில்பட்டி,sweets,Sugar,சர்க்கரை,விலை உயர்வு,price rise,நெய்,ghee,Raw materials,மூலப்பொருட்கள்,ஸ்வீட்ஸ்,காரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/qntgve95/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கோவில்பட்டியில் ஸ்வீட்ஸ், காரம் விலை அதிகரிப்பு; வணிகர் சங்கம் அறிவிப்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/qntgve95/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவில்பட்டி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88">சர்க்கரை</a>, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D">நெய்</a> உள்ளிட்ட மூலப்பொருட்களின் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">விலை உயர்வு</a> காரணமாக கோவில்பட்டியில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">இனிப்பு</a>, கார வகைகள், கேக் மற்றும் பன் வகைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. </p><p>சர்க்கரை, நெய் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாகக் கோவில்பட்டியில் இனிப்பு, கார வகைகள், கேக் மற்றும் பன் வகைகளின் விலையை உயர்த்தியுள்ளதாகக் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF">கோவில்பட்டி</a> லாலா ஸ்வீட்ஸ், பேக்கரி, மிட்டாய் கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். </p><h2>இனிப்பு, கார வகைகள் விலை உயர்வு</h2><p>சர்க்கரை, நெய் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பால் உயர்த்தப்பட்டுள்ள இனிப்பு மற்றும் கார வகைகளின் புதிய விலை பட்டியல் (கிலோவில்) பின்வருமாறு: </p><p>இனிப்பு வகைகள்- ரூ.300-லிருந்து ரூ. 340-ஆக உயர்வு. </p><p>கார வகைகள்- ரூ.300-லிருந்து ரூ. 320-ஆக உயர்வு. </p><p>சிப்ஸ் மற்றும் கேக் வகைகள்- ரூ.400-லிருந்து ரூ.500-ஆக உயர்வு. </p><p>ஸ்வீட்ஸ்; பெரி வகைகள்- கிலோவுக்கு ரூ.80 உயர்வு. </p><p>ரஸ்க் வகைகள்- கிலோவுக்கு ரூ.60 உயர்வு. </p><p>பன் வகைகள்- கிலோவுக்கு ரூ.30 உயர்வு. </p><p>முந்திரி ஸ்வீட் வகைகள்- ரூ.1,000-லிருந்து ரூ.1,200-ஆக உயர்வு. </p><p>மில்க் &amp; நெய் ஸ்வீட்ஸ்- ரூ.500-லிருந்து ரூ.600-ஆக உயர்வு.</p><p>பிளாக் பாரஸ்ட் கேக்- ரூ.700-லிருந்து ரூ.800-ஆக உயர்வு. </p><p>மக்ரூன்- ரூ.1,000-லிருந்து ரூ.1,200-ஆக உயர்வு. </p><h2>மூலப்பொருட்கள் விலை உயர்வு; வணிகர் சங்கம் அறிவிப்பு</h2><p>திடீர் விலை உயர்வு குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மண்டலத் தலைவர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சர்க்கரை, நெய் உள்ளிட்ட ஸ்வீட்ஸ் மற்றும் கார வகைகள் தயாரிக்கத் தேவைப்படும் மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மற்றும் தொழிலாளர்களின் ஊதியமும் கணிசமாக அதிகரித்துவிட்டது. இதன் காரணமாகவே இனிப்பு மற்றும் கார வகைகளின் விலையை வேறு வழியின்றி உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டது" என்று கூறினார். </p><h2>விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை</h2><p>இந்தத் திடீர் விலை உயர்வு குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில், "ஏற்கெனவே சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஸ்வீட்ஸ் மற்றும் கார வகைகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை ஏற்றம் சாமானிய மற்றும் நடுத்தர மக்களைக் கடுமையாகப் பாதிக்கும். எனவே, தமிழக அரசு இப்பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு மூலப்பொருட்களின் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தினர். </p>]]></content:encoded></item><item><title>பாதியாக குறைந்த பவானிசாகர் அணை நீர்மட்டம்: விவசாயிகள் கவலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bhavanisagar-dam-water-level-drops-by-half-farmers-concerned</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bhavanisagar-dam-water-level-drops-by-half-farmers-concerned#comments</comments><guid isPermaLink="false">8dad4702-13aa-41a5-a17a-ba1562801082</guid><pubDate>Thu, 03 Sep 2026 13:04:06 +0000</pubDate><atom:updated>2026-09-03T13:04:06.722Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Bhavanisagar Dam,பவானிசாகர் அணை,water level,நீர்மட்டம்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/yy5wuk7i/10.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/yy5wuk7i/10.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>கடந்த ஆண்டு 101 அடியில் களை கட்டிய பவானிசாகர் அணையின் நீர் மட்டம் இந்த ஆண்டு பாதியாக குறைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.</p><h2>2-வது பெரிய அணை</h2><p>தமிழ்நாட்டின் 2-வது பெரிய அணை என்ற பெருமையை கொண்டது பவானிசாகர் அணை. நீலகிரி மலைப்பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து தெங்குமரஹாடா வழியாக வரும் மாயாறும் கலக்குமிடத்தை தேர்வு செய்து இந்த அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் மொத்த நீர் மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது. அணையின் மொத்த நீர் கொள்ளளவு 32.8 டி.எம்.சி. ஆகும். பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆறு மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படுகிறது. பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் சத்தியமங்கலம் வழியாக கொடிவேரி அணைக்கு வருகிறது. தொடர்ந்து அங்கிருந்து அரக்கன் கோட்டை-தடப்பள்ளி பாசன பகுதிக்கு பிரிந்து அதன்பின்னர் காலிங்கராயன் பாசன பகுதிக்கு வந்து சேர்ந்து அங்கிருந்து பிரிந்து பவானி கூடுதுறையில் காவிரி ஆற்றில் கலக்கிறது.</p><h2>2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர்</h2><p>இதனால் பவானிசாகரில் இருந்து பவானி கூடுதுறை வரை உள்ள 2 கரையோர பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான ஊராட்சிகள் மற்றும் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளின் குடிநீர் ஆதாரமாக விளங்குவதோடு சுமார் 35 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீர் ஈரோடு, கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந் தேதி காலை 8 மணிக்கு 101.42 அடியாக இருந்தது.</p><h2>பாதியாக குறைந்தது</h2><p>அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 381 கன அடியாக இருந்தது. அணையின் நீர் கொள்ளளவு 29.85 டி.எம்.சியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் அதிக அளவில் இருந்ததால் கடந்த ஆண்டு கீழ்பவானி வாய்க்கால் மற்றும் பவானி ஆற்றில் பாசனத்துக்காக முழுவதுமாக தண்ணீர் திறக்கப்பட்டது.</p><p>ஆனால் இந்த ஆண்டில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தென் மேற்கு பருவமழை பொய்த்துப்போனது. இதன்காரணமாக அணைக்கு நீர் வரத்து பெரிதும் குறைந்தது. இந்தநிலையில் நேற்று காலை 8 மணி அளவில் பவானிசாகர் அணை நீர்மட்டம் 50.65 அடியாக குறைந்தது. அணைக்கு வினாடிக்கு 933 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 105 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது அணையில் 4.59 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் அணையின் நீர்மட்டம் பாதியாக குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபைக்கு 3 நாட்கள் விடுமுறை: திங்கட்கிழமை முதல்-அமைச்சர் விஜய்யின் பதிலுரை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/3-day-holiday-for-the-assembly-chief-minister-vijays-response-on-monday</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/3-day-holiday-for-the-assembly-chief-minister-vijays-response-on-monday#comments</comments><guid isPermaLink="false">f01e1090-7b79-44ad-8bd0-a2ed31a229ad</guid><pubDate>Thu, 03 Sep 2026 12:48:01 +0000</pubDate><atom:updated>2026-09-03T12:48:01.917Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,தமிழக சட்டசபை,TNAssembly</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/zbdrm23q/vijayone33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
சட்டசபை]]></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய்யின் பதிலுரை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/zbdrm23q/vijayone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சட்டசபைக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. அடுத்து வரும் திங்கட்கிழமை (7-ந் தேதி) முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் பதிலுரையுடன் சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது. </p><p>3 நாட்கள் விடுமுறை </p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழக சட்டசபை</a>யில் இன்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. சட்டமன்ற தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை குறித்து பேசியதால், அவையில் அனல் பறந்தது. </p><p>இந்த நிலையில், நாளை (வெள்ளிக்கிழமை) கிருஷ்ண ஜெயந்தி என்பதால் அரசு விடுமுறை நாளாகும். தொடர்ந்து, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வருவதால் அன்றும் சட்டசபைக்கு விடுமுறை. இவ்வாறு 3 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்படுகிறது. அடுத்து, வரும் திங்கட்கிழமை (7-ந் தேதி) சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது. </p><p>முதல்-அமைச்சர் பதிலுரை</p><p>அன்றைய தினம், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பதில் அளிக்க இருக்கிறார். முன்னதாக, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை அவர் இன்றே வெளியிட்டுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>இ.வி.எம். குளறுபடி; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கை தொடர்ந்து எடுத்து செல்வோம் - தி.மு.க. சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/evm-irregularities-we-will-continue-to-pursue-the-case-in-the-supreme-court-dmk-legal-wing-secretary-nr-elango</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/evm-irregularities-we-will-continue-to-pursue-the-case-in-the-supreme-court-dmk-legal-wing-secretary-nr-elango#comments</comments><guid isPermaLink="false">adcc00fd-2784-4227-9338-ba4e957ee952</guid><pubDate>Thu, 03 Sep 2026 12:29:52 +0000</pubDate><atom:updated>2026-09-03T12:29:52.668Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,தி.மு.க.,EVM Machine,இவிஎம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/t784vjms/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/t784vjms/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தி.மு.க. சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்(இ.வி.எம்.) பழுதுபட்டுள்ளது தொடர்பாக ஏற்கனவே ஆதரங்களுடன் சுப்ரீம் கோர்ட்டில் எடுத்து வைத்தோம். தேர்தல் ஆணையம் மொத்தம் 19 இ.வி.எம்.களை சரிபார்த்துவிட்டு 14 இ.வி.எம்.கள் சரியாக இயங்குகின்றன என்று மட்டும் ஒரு அறிக்கையை கொடுத்துள்ளார்கள். </p><p>இது தவறு 14 மெஷின்களில் ஐந்து மெஷின்கள் சரியாக இல்லை என்றால் ஏறக்குறைய 32.33%  இ.வி.எம்.கள் பழுதடைந்திருக்கிறது என்பதை நாங்கள் ஆதாரப்பூர்வமாக நிரூபித்திருக்கிறோம். எனவே கொளத்தூர் தொகுதியினுடைய 100% இ.வி.எம்.களையும் சரி பார்க்க வேண்டும். அந்த VV பேட்டில் இருக்கக்கூடிய வாக்கு சீட்டுகளை எண்ணி பார்க்க வேண்டும் என்று ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்தோம். </p><p>இதனுடைய விளைவாக கான்சிகவன்சியல் பிரேயராக எங்களது  தலைவர் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டிருந்தோம். ஆக இரண்டு பிரேயர்கள் செய்யப்பட்டிருந்தன. இ.வி.எம். தொடர்பாக அதிக குற்றச்சாட்டுகள் எழுந்ததால் இந்த வழக்கை தொடுக்க வேண்டும் என கழக சட்டத்துறைதான் முன்னெடுத்தது. கழக தலைவரிடம் எடுத்துச் சொல்லி அவருடைய ஒப்புதலை பெற்று நாங்கள் அந்த மெஷின்களை சரிபார்த்தோம். </p><p>அதில் ஐந்து மெஷின்கள் குறைபாடு உடையவதாக இருக்கவே சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறோம். ‘ரெப்ரசென்டேஷன் ஆப் பீப்பிள் ஆக்ட்’ பிரிவு 100-ன் படி இன்னென்ன காரணங்களுக்காகத்தான் தேர்தலை தள்ளுப்படி செய்ய வேண்டும் என்று ஒரு பிரிவு இருக்கிறது. அதில் இ.வி.எம்.கள் சரியாக இல்லை என்றால் பழுதடைந்திருந்தால் தேர்தலை தள்ளுபடி செய்யலாம் என்ற காரணம் அதில் சொல்லப்படவில்லை. ஏனென்றால் அது 1951-ல் இயற்றப்பட்ட சட்டம். இ.வி.எம்.கள் அறிமுகப்படுத்தியபோது கூட அதற்கு ஏற்றவர் போல் ரெப்ரசென்டேஷன் ஆப் பீப்பிள் ஆக்ட் சட்டத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.</p><p>இரண்டாவதாக அரசியல் அமைப்பு சட்டத்தில் எல்லா தேர்தல் வழக்குகளையும் தேர்தல் குறித்த வழக்குகளையும் தேர்தல் மனுவாகத்தான் தாக்கல் செய்ய முடியும் என்று சொல்லி சொல்லியிருக்கிறது. தேர்தல் மனுவை 45 நாட்களுக்குள்ளாக தாக்கல் செய்ய வேண்டும். கொளத்தூர் தொகுதியை பொறுத்தவரை நாங்கள் தேர்தல் முடிவு வந்த மூன்றாவது தினமே 7. 5. 2026-லேயே அதற்குரிய பணத்தைக்கட்டி தேர்தல் ஆணையத்தில் எங்களுக்கு இந்த 14 இ.வி.எம்.களை சரிபார்க்க  வேண்டும் என கேட்டிருந்தோம். </p><p>ஆனால் தேர்தல் ஆணையம் 45 நாட்களுக்கு பிறகுதான், சொல்லப்போனால் மூன்று மாதங்களுக்கு பிறகுதான் அந்த இயந்திரங்களை எடுத்து பரிசோதனை செய்தார்கள். எனவே தேர்தல் மனுவை ஒரு எதிர்பார்க்கும் நோக்கில் தாக்கல் செய்ய முடியாது. இன்றைக்கு ஐகோர்ட்டு, கொளத்தூர் தொகுதியில் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்பது தேர்தல் மனுவாகத்தான் தாக்கல் செய்திருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. </p><p>எனவே அது நிலைக்கத்தக்கதுஅல்ல. இருப்பினும் கூட 100% இ.வி.எம். மெஷின்களை சரிபார்ப்பது குறித்து உரிய மனுவை உரிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்து கொள்ளக்கூடிய அனுமதியை வழங்கி இன்றைக்கு தீர்ப்பளித்திருக்கிறார்கள். எனவே இது குறித்து தலைமைக் கழகத்திடம் எடுத்துச் சொல்லி இதை சுப்ரீம் கோர்ட்டிற்கு எடுத்துச் செல்ல நாங்கள் கேட்போம். தலைமைக் கழகத்தினுடைய அறிவுறுத்தல் படி நாங்கள் செயல்படுவோம்.</p><p>இ.வி.எம்.கள் பழுதாகி இருந்தால் என்ன நிலைமை என்பதற்கு இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் கொளத்தூர் தொகுதியில்தான் இந்த சட்ட சிக்கல் எழுப்பப்பட்டிருக்கிறது. எப்படி இட ஒதுக்கீட்டை 1950-களிலே உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் செல்லாது என்று சொன்னபோது ஒரு தொடர்ச்சியான போராட்டத்தின் வழியாக அரசியலமைப்பு சட்டம் மாறியதோ அதை போலத்தான் இ.வி.எம்.கள் பழுதடைந்தது தெரிந்தால் அந்த தேர்தல் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்ற ஒரு சட்டம் வரும். உச்ச நீதிமன்றமோ அல்லது உயர் நீதிமன்றமோ வரும் காலங்களில் அதுபோன்ற ஒரு தீர்ப்பை சொல்லுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.</p> <p>இதற்கு பிறகு இந்த ஐந்து மெஷின்களில் எப்படி குறைபாடுகள் இருக்கிறது உட்பட 18 கேள்விகளை எழுப்பி நாங்கள் தேர்தல் ஆணயத்திற்கு ஐந்தாம் தேதியே கடிதம் கொடுத்திருக்கிறோம் அதற்கும் இன்னும் பதில் வரவில்லை. ஒரு கம்ப்யூட்டர் 100% சரியாக இயங்குகிறது என்றால் சிக்மா லெவல் 100% சரியாக இயங்குகிறது என்று சொல்வார்கள். ஆனால் தேர்தல் ஆணையமே தன்னுடைய இணையதளத்தில் இந்த இ.வி.எம். மெஷின்கள் 4 சிக்மா லெவலில் தான் அதனுடைய நம்பகத்தன்மை இருக்கிறது என்று சொல்லியிருக்கிறது. </p><p>அதாவது ஒரு லட்சம் ஓட்டு போட்டால் அதுல ஏறக்குறைய 1600 வாக்குகள் சரியாக பதிவிடாமல் போகலாம் என்ற ஒரு நிலைதான் இருப்பதாக தேர்தல் ஆணையமே சொல்லியிருக்கிறது. இதையெல்லாம் நாங்கள் கழக தலைவர் எப்படி சொல்கிறாரோ அப்படி சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக வழக்கை தொடர்ந்து எடுத்து செல்வோம்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>தங்கக் கம்மலை நேர்மையாக ஒப்படைத்த சிறுமிக்கு பாராட்டு; அசைவ விருந்து கொடுத்து கவுரவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/praise-for-the-girl-who-honestly-handed-over-the-gold-amulet-honored-with-a-non-vegetarian-feast</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/praise-for-the-girl-who-honestly-handed-over-the-gold-amulet-honored-with-a-non-vegetarian-feast#comments</comments><guid isPermaLink="false">8d14bc0e-e1d1-439e-9450-31e1eee7a2c5</guid><pubDate>Thu, 03 Sep 2026 12:29:36 +0000</pubDate><atom:updated>2026-09-03T12:29:36.222Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,தென்காசி,சிறுமி,girl,ஒப்படைப்பு,non-vegetarian food,Appreciation,பாராட்டு,honesty,நேர்மை,அசைவ விருந்து,கம்மல்,Necklace,dedication</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/oct8ajkx/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தங்கக் கம்மலை நேர்மையாக ஒப்படைத்த சிறுமி; அசைவ விருந்து வைத்து கவுரவிப்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/oct8ajkx/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF">தென்காசி</a> மாவட்டத்தில் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட தங்கக் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D">கம்மலை </a>உரியவரிடம் நேர்மையாக ஒப்படைத்த 6-ம் வகுப்பு படிக்கும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF">சிறுமி</a> தீபிகாவிற்குப் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">பாராட்டு</a>கள் குவிந்து வருகிறது. </p><h2>தங்கக் கம்மலை உரியவரிடம் நேர்மையுடன் ஒப்படைத்த சிறுமி</h2><p>தென்காசி மாவட்டம், வெங்கடம்பட்டி ஆலமரத்தடி சுடலைமாடன் சுவாமி கோவில் கொடை விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற 6-ம் வகுப்பு படிக்கும் சிறுமி தீபிகா, அங்கு தவறி விழுந்த மற்றொரு நபரின் தங்கக் கம்மல் ஒன்றை கண்டெடுத்தார். பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல், அந்த தங்கக் கம்மலை உரியவரிடம் நேர்மையுடன் ஒப்படைத்தார். </p><h2>சிறுமிக்கு பாராட்டு</h2><p>சிறுமியின் இந்த நேர்மையான செயலைப் பாராட்டி சால்வைகள், ரொக்கப் பரிசுகள், கேடயங்கள் வழங்கி சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சியினரும் நேரில் சென்று பாராட்டி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, ஆலங்குளத்தைச் சேர்ந்த ஒரு பிரியாணி ஓட்டல் உரிமையாளர் சாம்பவர் வடகரை ஹரிஹர செல்வன், சிறுமி தீபிகா, அவரது தாய் ஜெயந்தி, தந்தை திரவியக்கனி மற்றும் அவரது சகோதரனை ஆலங்குளத்திற்கு நேரில் வரவழைத்தார்.</p><h2>அசைவ விருந்து</h2><p>அவர்களை அன்போடு வரவேற்ற அந்த பிரியாணி கடை நிர்வாகம், அந்த சிறுமியின் குடும்பத்தினர் அனைவருக்கும் பிரியாணி, சிக்கன் உள்ளிட்ட சுவையான அசைவ விருந்து அளித்து உபசரித்தது. மேலும் அந்த பிரியாணி ஓட்டல் அதிபர் ஹரி, சிறுமிக்கு ஐஸ்கிரீம் வழங்கி வாழ்த்தினார். இந்த நிகழ்வில் சமூக சேவகர் வெங்காடம்பட்டி திருமாறன், இன்ஜினியர் பார்த்திபன், மணியன் ஆகியோர் உடனிருந்து சிறுமியை வாழ்த்தினர். </p><p>நேர்மையான குணத்திற்கும், சத்திய வாழ்விற்கும் சமூகத்தில் எப்போதும் நல்மதிப்பு கிடைக்கும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். பிறர் பொருளுக்கு ஆசைப்படாத இந்தச் சிறுமியைப் போல தங்கள் குழந்தைகளையும் வளர்க்க வேண்டும் என பெற்றோர்கள் விரும்புகின்றனர். மேலும் இந்த சிறுமியின் நேர்மை குறித்த தகவல் நடிகர் ரஜினிகாந்தின் பார்வைக்கும் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item></channel></rss>