<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 14 Sep 2026 13:24:17 +0000</lastBuildDate><item><title>லண்டனில் கார் உதிரி பாக நிறுவனத்துடன் முதல்-அமைச்சர் விஜய் ரூ.11 ஆயிரம் கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cm-vijay-signs-rs-11000-crore-mou-with-london-car-parts-company</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cm-vijay-signs-rs-11000-crore-mou-with-london-car-parts-company#comments</comments><guid isPermaLink="false">fc03914d-a2f9-413e-9ae2-11e57684e83d</guid><pubDate>Mon, 14 Sep 2026 13:21:31 +0000</pubDate><atom:updated>2026-09-14T13:21:31.714Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>புரிந்துணர்வு ஒப்பந்தம்,உதிரி பாகங்கள்,நிறுவனம்,Memorandum of Understanding,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/cxy4hurr/112.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/cxy4hurr/112.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>லண்டனில் கார் உதிரி பாக நிறுவனத்துடன் முதல்-அமைச்சர் விஜய் ரூ.11 ஆயிரம் கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடபட்டன.</p><p>இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:- </p><h2>ரூ.11ஆயிரம் கோடி முதலீடு</h2><p>இங்கிலாந்து, லண்டன் நகரில் இன்று (14.09.2026), சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் (Samvardhana Motherson International Ltd.,) நிறுவனம் அதன் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து,  வழிகாட்டி நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் சுமார் ரூ.11ஆயிரம் கோடி முதலீட்டில், வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி,  கூட்டிணைப்பு (Assembly) மற்றும் தளவாட வசதிகள் ஆகிய துறைகளில் சுமார் 7,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கிடும் வகையில் புரிந்துணர்வு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">ஒப்பந்தம் </a>மேற்கொள்ளப்பட்டது. </p><p>இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்,  சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் குழுமத்தின் உலகளாவிய சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்புத் துறைத் தலைவர் பாரி பெயிண்டர் மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப், இ.ஆ.ப. ஆகியோர் கையெழுத்திட்டு, ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், இங்கிலாந்து நாட்டிற்கான இந்தியத் தூதர் குமரன் பெரியசாமி, IFS, நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்ட மீனவர்கள் எதிர்ப்பு; நாளை ஆலோசனை கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fishermen-oppose-new-secretariat-pattinapakkam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fishermen-oppose-new-secretariat-pattinapakkam#comments</comments><guid isPermaLink="false">99dc28b3-bea3-459f-84e3-d313c17cedf4</guid><pubDate>Mon, 14 Sep 2026 12:57:43 +0000</pubDate><atom:updated>2026-09-14T12:57:43.162Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மீனவர்கள்,Chennai,சென்னை,fishermen,பட்டினப்பாக்கம்,தலைமை செயலகம்,ஆலோசனை கூட்டம்,Pattinapakkam,எதிர்ப்பு</media:keywords><media:content height="768" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/71vv01n5/new.jpg" width="1366"><media:title type="html"><![CDATA[ பட்டினப்பாக்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்ட மீனவர்கள் எதிர்ப்பு; நாளை ஆலோசனை கூட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/71vv01n5/new.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை <a href="https://www.dailythanthi.com/topic/pattinapakkam">பட்டினப்பாக்கம்</a> பகுதியில் தமிழக அரசின் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமை செயலக வளாகம் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1,200 கோடி மதிப்பீட்டில், சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் இந்த பிரம்மாண்ட கட்டடம் அமைய உள்ளது.</p> <h2>மக்கள் அச்சம்</h2><p>இந்நிலையில், இந்த திட்டத்திற்கு அப்பகுதி மீனவர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடலோர பகுதியில் இத்திட்டம் வருவதால், தங்களின் பாரம்பரிய மீன்பிடி தொழில் மற்றும் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்று அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.</p> <h2>கலந்தாய்வு கூட்டம்</h2><p>அரசின் இந்த முடிவை எதிர்த்து அடுத்தகட்டமாக போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து விவாதிக்க, மயிலாப்பூர் மற்றும் பட்டினப்பாக்கம் பகுதியை சேர்ந்த 9 மீனவ கிராம மக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் சார்பில் நாளை மாலை 4 மணிக்கு கலந்தாய்வு கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு.</p> <h2>மாற்று இடம்</h2><p>நாளை நடைபெறும் இந்த முக்கியக் கலந்தாய்வுக் கூட்டத்தின் முடிவில், புதிய தலைமை செயலகத்தை மாற்று இடத்தில் அமைக்க அரசை வலியுறுத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மீனவர்களின் அடுத்தகட்ட போராட்டம் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என்பதால், சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருவள்ளூர்: மைனர் சிறுமிக்கு திருமணம் - வரவேற்பு நிகழ்ச்சியை அதிரடியாக நிறுத்திய காவல்துறையினர் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvallur-police-abruptly-halt-reception-for-minor-girls-marriage</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvallur-police-abruptly-halt-reception-for-minor-girls-marriage#comments</comments><guid isPermaLink="false">8f811af5-df3e-4d91-932e-45ea39d49b8c</guid><pubDate>Mon, 14 Sep 2026 12:35:19 +0000</pubDate><atom:updated>2026-09-14T12:35:19.305Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thiruvallur,திருவள்ளூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/pn3kig7v/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/pn3kig7v/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர்,</p><p>திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள குமரஞ்சேரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று காலை ஒரு இளம் ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து மாலை பொன்னேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. </p><p>இதனிடையே மணப்பெண் இன்னும் திருமண வயது எட்டவில்லை என்றும், மைனர் பெண்ணிற்கு திருமணம் நடத்தி வைக்கப்படுவதாகவும் காவல்துறைக்கு சிலர் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் பெயரில் திருமண மண்டபத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். </p><p>மணப்பெண்ணின் ஆவணங்களை காவல்துறையினர் சோதனை செய்தபோது, அவருக்கு 16 வயது மட்டுமே நிரம்பி உள்ளது என்பதும், மைனர் சிறுமியான அவருக்கு 24 வயது இளைஞருடன் திருமண ஏற்பாடுகள் நடந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நிறுத்துமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக குழந்தைகள் நல அலுவலர் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-mous-signed-in-the-presence-of-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-mous-signed-in-the-presence-of-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">f157207f-1b16-4950-80a7-40aa9470a7a0</guid><pubDate>Mon, 14 Sep 2026 12:32:15 +0000</pubDate><atom:updated>2026-09-14T12:32:15.825Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கையெழுத்து,புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்,MoU signed,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/76giepq8/111.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/76giepq8/111.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை விரிவுபடுத்துவதற்கும், நிறுவுவதற்கும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் அமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டன.</p><p>இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட முன்னணி உலகளாவிய தகவல் தொடர்பு நிறுவனம் ஒன்று, தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையத்தை (GCC) அமைப்பதற்கு ஏதுவாக, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம், ஏர்ன்ஸ்ட் &amp; யங் (Ernst &amp; Young)  நிறுவனத்துடன் புரிந்துணர்வு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">ஒப்பந்தம்</a> ஒன்றை மேற்கொண்டது. சுமார் 1,000 கோடி ரூபாய் முதலீட்டையும், 2,000-க்கும் மேற்பட்ட உயர் மதிப்புடைய புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் வகையில் அமையவுள்ள இந்த மையம், சென்னையில் உள்ள மவுண்ட் பூந்தமல்லி சாலையில் புதிதாக அறிவிக்கப்பட்ட 'GCC காரிடார்' (GCC corridor) பகுதியில் அமைக்கப்படவுள்ளது.</p><h2>புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து</h2><p>ஸ்வீடனைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி குரூப், தமிழ்நாட்டில் எம்பெடட் சிஸ்டம்ஸ், மின்மயமாக்கல் மற்றும் தொழில்துறை டிஜிட்டல்மயமாக்கல் ஆகிய துறைகளில் 600 உயர் மதிப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னையில் உள்ள தனது உலகளாவிய திறன் மையங்களை, தனது இந்திய நிறுவனமான ஸ்ரியா சொல்யூஷன்ஸ் மூலம் விரிவாக்குவதற்கு உறுதியளித்து, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில், சிக்மா டெக்னாலஜி குரூப் (Sigma Technology Group) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் கார்ல்சன் மற்றும் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், தலைமை நிர்வாக அதிகாரி, ஸ்ரியா (Sigma AB Pvt Ltd-இன் ஒரு பகுதி)மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி (Guidance) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப், IAS ஆகியோருக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில், இங்கிலாந்து நாட்டிற்கான இந்திய தூதர் குமரன் பெரியசாமி, IFS,  நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>‘செயற்கை நுண்ணறிவு அனைத்து துறைகளிலும் உலகை ஆட்டிப் படைக்கிறது’ - ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/artificial-intelligence-is-dominating-the-world-across-all-sectors-high-court-judge-anand-venkatesh</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/artificial-intelligence-is-dominating-the-world-across-all-sectors-high-court-judge-anand-venkatesh#comments</comments><guid isPermaLink="false">a50585c6-feeb-4083-b6c7-a417ecb7796d</guid><pubDate>Mon, 14 Sep 2026 12:24:46 +0000</pubDate><atom:updated>2026-09-14T12:24:46.677Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Artificial Intelligence,செயற்கை நுண்ணறிவு,நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,Justice Anand Venkatesh</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/hm0w7584/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/hm0w7584/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>டி.வி.எம். சேவா பாலம் தொண்டு நிறுவனத்தின் 29 ஆம் ஆண்டு கல்வி விருதுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள்  வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சேவா பாலம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் எம்.இருளப்பன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கலந்து கொண்டு பல்வேறு தேர்வுகளில் சிறப்பிடங்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.மேலும் சிறந்த மருத்துவர், சிறந்த பள்ளி முதல்வர், சிறந்த சமூக சேவகர் உள்ளிட்ட பலருக்கும், நலிவடைந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் நீதிபதி வழங்கினார். அப்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசியதாவது;-</p><p>“தமிழ் மொழி, தமிழர் நாகரிகம் என்பது உலகெங்கிலும் காணக் கிடைக்காத தொன்மையான பொக்கிஷங்களை உள்ளடக்கியது என்பதில் பெருமை கொள்ளலாம். நான் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் தமிழ் இலக்கியத்தில் இருந்து சில முக்கிய அம்சங்களை தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். தியாகமும், நற்பண்புகளும் நிறைந்த சேவை மனப்பான்மை கொண்ட மனிதர்களே மிக அழகானவர்கள் என்று அவ்வையார் தெரிவித்துள்ளார். </p><p>வள்ளுவர் ஒப்புரவு, ஈகை ஆகிய அதிகாரங்களில் சமுதாயத்தில் நலிவடைந்தவர்களின் சேவைகளை பூர்த்தி செய்வது, ஒவ்வொரு மனிதனும் தன்னால் இயன்ற உதவிகளை மற்றவர்களுக்கு செய்வதற்கான ஈகை குண நலன்கள் குறித்தும் தெளிவாக தெரிவித்துள்ளார். கல்லால் கட்டப்பட்ட கோவில்களில் காணிக்கை செலுத்துவதற்கு முன்பாக நடமாடும் கோவில்களாக விளங்கும் நலிவடைந்தவர்களுக்கு ஈதல் வேண்டும் என்பதை திருமூலர் விளக்கமாகவே கூறியுள்ளார். </p><p>அதிக மதிப்பெண், உயர்ந்த பதவி, அளவற்ற செல்வங்களை பெறுவதுதான் உண்மையான வெற்றி என போற்றுகிறோம். ஆனால் வாழ்வில் நாம் செய்யும் சேவைகளின் மூலம் பெறப்படும் மன நிறைவுதான் வாழ்க்கையில் உண்மையான வெற்றியை நிர்ணயிக்கும் என்பதை குழந்தைகளுக்கு தொடர்ந்து வலியுறுத்தி போதிக்க வேண்டும்.</p><p>இன்று நமது தலைமுறையினர் அனைவரும் அலைபேசியில் மூழ்கி கிடக்கின்றனர். ஒரு நிமிடம் கூட அலைபேசி இல்லாமல் இருக்க இயலாது நிலை ஏற்பட்டுவிட்டது. செயற்கை நுண்ணறிவு அனைத்து துறைகளிலும் உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. இருப்பினும் செயற்கை நுண்ணறிவுக்கு ஆன்மா ஒன்று கிடையாது. செயற்கை நுண்ணறிவு மூலம் சேவைகளை செய்திட இயலாது என்பதுதான் எதார்த்த உண்மை. எனவே சமூக சேவை ஆற்றுபவர்கள் தான் மக்கள் மனதில் என்றும் நிலைத்திருப்பார்கள்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தலில் அதிமுக வெல்லும் - எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-will-win-the-by-elections-edappadi-palaniswami</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-will-win-the-by-elections-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">1c4fd72e-6cb0-4630-854f-a8ba9469858a</guid><pubDate>Mon, 14 Sep 2026 12:09:46 +0000</pubDate><atom:updated>2026-09-14T12:09:46.755Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,அதிமுக,AIADMK,இடைத்தேர்தல்,Edappadi Palaniswami ​,by-elections</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/7i5270rh/eps.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/7i5270rh/eps.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இடைத்தேர்தலில் அதிமுக வெல்லும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்,</p><p>சென்னை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-</p><h2>அதிமுக வெற்றி பெறும்</h2><p>மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">அதிமுக</a> நிச்சயமாக வெற்றி பெறும் என்றார். மேலும் முதல்-அமைச்சர் விஜய் லண்டன் பயணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். </p><p>இதற்கு தமிழக முதல்-அமைச்சர் லண்டம் சென்றிருப்பதாக பத்திரிகைகள் மற்றும் சேனல்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அவர் தொழில் ஈர்ப்பு குறித்து இன்னும் ஏதும் செய்திகள் வெளியாகவில்லை. அதன்பின் தான் அது குறித்து கருத்து கூற முடியும். </p><p>இவ்வாறு அவர் பேசியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நீலகிரி: குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள் கூட்டம் - மக்கள் அச்சம்

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilagiri-kudiyiruppu-pagudikkul-pugundha-kattu-yanai-kootam-makkal-achcham</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilagiri-kudiyiruppu-pagudikkul-pugundha-kattu-yanai-kootam-makkal-achcham#comments</comments><guid isPermaLink="false">fa1d570d-3ef6-4c55-8ef9-b3cac2177184</guid><pubDate>Mon, 14 Sep 2026 11:56:43 +0000</pubDate><atom:updated>2026-09-14T11:56:43.662Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nilgiris,நீலகிரி,Elephants,யானைகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/f8fkrzfp/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/f8fkrzfp/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[   <p>நீலகிரி,</p><p>நீலகிரியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள் கூட்டத்தால் மக்கள் அச்சமடைந்தனர்.</p> <p>நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் தீவன பற்றாக்குறை, குறைந்த எல்லைக்குள் அதிக வனவிலங்குகள் உள்பட பல்வேறு காரணங்களால் வனவிலங்குகள் ஊருக்குள் புகும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன.</p> <h2>குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள்</h2><p>இந்நிலையில், <a href="https://www.dailythanthi.com/sports/நீலகிரி">நீலகிரி </a>மாவட்டம் குன்னூர் அருகே முத்த நாடு எஸ்டேட் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நேற்று இரவு காட்டு யானைகள் கூட்டம் நுழைந்தது. இதனால் மக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து, குட்டிகளுடன் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த யானைகளை மக்கள் சத்தம் போட்டு விரட்டியடித்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>பைக்கில் சென்ற பெண்ணை வேண்டுமென்றே இடித்து தள்ளிவிட்டு நிற்காமல் சென்ற கார் - அரியானாவில் அதிர்ச்சி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/car-deliberately-rams-into-woman-on-a-bike-and-speeds-away-shocking-incident-in-haryana</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/car-deliberately-rams-into-woman-on-a-bike-and-speeds-away-shocking-incident-in-haryana#comments</comments><guid isPermaLink="false">b5d96d60-3d87-4a04-93c5-25cf05eee690</guid><pubDate>Mon, 14 Sep 2026 11:38:49 +0000</pubDate><atom:updated>2026-09-14T11:38:49.473Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அரியானா,bike,பைக்,girl,Haryana</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/4wn4k81f/National-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/4wn4k81f/National-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சண்டிகர்,</p><p>அரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் உள்ள கோல்ப் கோர்ஸ் சாலையில், சியா என்ற இளம்பெண் தனது ஸ்போர்ட்ஸ் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அவருடன் மேலும் சில ரைடர்கள் தங்களது பைக்கில் சென்று கொண்டிருந்தனர். </p><p>அப்போது சியா அருகே ஒரு வெள்ளை நிற கார் வந்துள்ளது. அந்த காரில் இருந்தவர்கள் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் சியாவிடம் தவறான செய்கைகளை செய்து அத்துமீறிய நிலையில், சியா அவர்களை கண்டித்துவிட்டு பைக்கை வேகமாக முன்னோக்கி ஓட்டிச் சென்றார். </p><p>இந்நிலையில், சியாவை பின்தொடர்ந்து வந்த கார், கண்ணிமைக்கும் நேரத்தில் சியாவின் பைக்கை இடித்து தள்ளிவிட்டு நிற்காமல் அங்கிருந்து சென்றது. இதில் பைக்கில் இருந்து சியா தூக்கி வீசப்பட்டார். அவரது பைக் காருக்கு அடியில் சிக்கி சில மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டது. </p><p>சியாவுடன் வந்த அவரது நண்பர்கள் சம்பந்தப்பட்ட காரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த நபர் நிற்காமல் அங்கிருந்து தப்பியுள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் சியா மற்றும் அவரது நண்பர்களின் ஹெல்மெட்டுகளில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களில் பதிவாகியுள்ளன. </p><p>இந்த சம்பவத்திற்கு பிறகு சியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டிருந்த நிலையில், சிகிச்சைக்குப் பிறகு அவர் வீடு திரும்பினார். இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகளை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக காவல் நிலையத்திலும் அவர் புகார் அளித்துள்ளார்.</p> <p>போலீசார் இது குறித்து விசாரணை நடத்தியபோது, சியா மீது மோதிய கார் மணீஷ் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. ஆனால் மணீஷை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, தான் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருவதாகவும், சம்பவத்தின்போது தனது காரை நண்பர் ஒருவர் வாங்கி ஓட்டிச் சென்றதாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். </p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/-xI2ExpHRXs"></iframe></figure>]]></content:encoded></item><item><title>மாணவன் மரணத்திற்கு நீதி கேட்டு போராடுபவர்களை கைது செய்வதா..? - கனிமொழி கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/should-we-arrest-those-who-are-fighting-for-justice-for-the-students-death-kanimozhi-question</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/should-we-arrest-those-who-are-fighting-for-justice-for-the-students-death-kanimozhi-question#comments</comments><guid isPermaLink="false">bcb93a96-2e97-46ed-a42a-c2fb81da3dd5</guid><pubDate>Mon, 14 Sep 2026 11:23:09 +0000</pubDate><atom:updated>2026-09-14T11:23:09.180Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,கனிமொழி,Kanimozhi Karunanidhi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/xp7wwsw8/110.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/xp7wwsw8/110.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாணவன் மரணத்திற்கு நீதி கேட்டு போராடுபவர்களை காவல்துறையை ஏவி அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது தவெக அரசு என திமுக எம்பி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF">கனிமொழி</a> தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில்  கூறி இருப்பதாவது:-</p><p>மாணவன் தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடும் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மீது காவல்துறையை ஏவி அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது தவெக அரசு.</p><h2>கடும் கண்டனம்</h2><p>உடற்கூறு ஆய்வில் அம்மாணவன் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், குற்றத்தை விசாரித்து உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டிய காவல்துறை, நீதி கேட்கும் மக்களை கைது செய்வது கடும் கண்டனத்திற்குரியது.</p><p>குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்கிவிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையே ஒடுக்கும் கேடுகெட்ட ஆட்சியாக இந்த தவெக ஆட்சி உள்ளது.</p><p>இவ்வாறு அதில் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் அடகு கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சி - ஐ.டி. ஊழியர் கைது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/attempt-to-break-into-and-rob-a-pawn-shop-in-chennai-it-employee-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/attempt-to-break-into-and-rob-a-pawn-shop-in-chennai-it-employee-arrested#comments</comments><guid isPermaLink="false">137580ae-08b9-42ba-b6c0-08673c7ff137</guid><pubDate>Mon, 14 Sep 2026 11:20:59 +0000</pubDate><atom:updated>2026-09-14T11:20:59.198Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/lebae2a2/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/lebae2a2/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை திருவான்மியூர் அடுத்த இந்திராநகர் பகுதியில், அதிகாலை நேரத்தில் அடகு கடையின் பூட்டை உடைக்க முயன்ற நபரை அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். </p><p>அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த ஸ்ரீராம் ஸ்ரீனு பாபு(வயது 25) என்பதும், சாப்ட்வேர் இன்ஜினியரான அவர் சென்னை பெருங்குடியில் தங்கியிருந்து தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. </p><p>அவரிடமிருந்து செல்போன், கட்டிங் மெஷின், சுத்தியல் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து ஸ்ரீராமை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், கோர்ட்டு உத்தரவின்படி அவரை சிறையில் அடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>வாக்குச்சாவடி வடிவில் விநாயகர் பந்தல்: அசத்திய வேலூர் இளைஞர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-chaturthi-polling-station-pandal-chennai-youth</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-chaturthi-polling-station-pandal-chennai-youth#comments</comments><guid isPermaLink="false">c9908e3b-d135-4005-b5cf-865ff69a0f4f</guid><pubDate>Mon, 14 Sep 2026 11:05:53 +0000</pubDate><atom:updated>2026-09-14T11:05:53.734Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Election,Youth,வாக்குச்சாவடி,இளைஞர்கள்,விநாயகர்,vinayagar,தேர்தல் விழிப்புணர்வு,polling booths</media:keywords><media:content height="768" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/u7u4flho/pilyar.jpg" width="1366"><media:title type="html"><![CDATA[ வாக்குச்சாவடி]]></media:title><media:description type="html"><![CDATA[ வாக்குச்சாவடி வடிவில் விநாயகர் பந்தல்: அசத்திய இளைஞர்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/u7u4flho/pilyar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> வேலூர் தொரப்பாடி பாலாஜி நகர் பகுதி இளைஞர்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அரசுப் பள்ளி வாக்குச்சாவடி வடிவில் விழிப்புணர்வு பந்தல் அமைத்து பொதுமக்களின் பாராட்டை பெற்று வருகிறார்கள். </p><h2>ஜனநாயக கடமையை உணர்த்திய இளைஞர்கள்</h2><p>ஒவ்வொரு ஆண்டும்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF"> விநாயகர் சதுர்த்தி</a> விழாவின் போது விதவிதமான கருப்பொருள்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு காவல் நிலையம் வடிவில் வடிவமைத்திருந்தனர். </p> <p>அந்த வகையில், இந்த ஆண்டு ஒரு படி மேலே சென்ற சில பகுதி இளைஞர்கள், ஆன்மீகத்தோடு சமூக விழிப்புணர்வையும் புகுத்த முடிவு செய்தனர். நமது நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வாக்களிப்பதன் அவசியத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் இந்த விழிப்புணர்வு பந்தலை அவர்கள் அமைத்துள்ளனர்.</p><h2>அச்சு அசல் அரசு பள்ளி</h2><p>பொதுவாக தேர்தல் காலங்களில் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் அரசு பள்ளிகளே <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF">வாக்குச்சாவடிகளாக</a> மாற்றப்படும். அதனை அச்சு அசல் பிரதிபலிக்கும் வகையில், ஒரு அரசு பள்ளியின் முகப்பு தோற்றத்தை பந்தலாக வடிவமைத்துள்ளனர். </p><p>அங்கு வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலையானது, பொதுமக்கள் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றுவதை மேற்பார்வையிடுவது போலவும், வாக்களித்ததன் அடையாளமாக விரலில் மை வைக்கப்பட்டிருப்பது போலவும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><h2>பொதுமக்கள் பாராட்டு </h2><p>திருவிழா கொண்டாட்டத்தை வெறும் பொழுதுபோக்காக மட்டுமில்லாமல், ஒரு தேர்தல் விழிப்புணர்வு மையமாக மாற்றிய அந்த இளைஞர்களின் ஆக்கப்பூர்வமான சிந்தனைக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பந்தலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த வித்தியாசமான முயற்சியை பாராட்டி வருகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>எந்த அழுத்தத்திற்கும் அடிபணியமாட்டேன்... சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-will-not-bow-to-any-pressure-speaker-jct-prabhakar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-will-not-bow-to-any-pressure-speaker-jct-prabhakar#comments</comments><guid isPermaLink="false">195cdaf4-6158-435c-811c-2c04ab145698</guid><pubDate>Mon, 14 Sep 2026 10:55:20 +0000</pubDate><atom:updated>2026-09-14T10:55:20.085Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சபாநாயகர்,Assembly Speaker,J.C.T. Prabhakar,ஜே.சி.டி. பிரபாகர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/v7wuh1mz/jcd-prabakar.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/v7wuh1mz/jcd-prabakar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>எந்த துண்டிற்கும் நான் பயந்தவன் அல்ல என்று சபாநாயகர்<a href="https://www.dailythanthi.com/topic/jcd-prabhakar"> </a>ஜேசிடி பிரபாகர் கூறியுள்ளார்.</p><p>நெல்லையில் சட்டபேரவை சபாநாயகர்<a href="https://www.dailythanthi.com/topic/jcd-prabhakar"> ஜேசிடி பிரபாகர் </a>செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது அவர் பேசியதாவது:-</p><p>எந்த துண்டிற்கும், எந்த சீட்டுக்கும் நான் அடிபணிய மாட்டேன். எனக்கு இருக்கும் சந்தேகங்களை என்னுடைய துறை சார்ந்த சட்டப்பேரவை அலுவலர்களிடம் இருந்து சில குறிப்புகளை கேட்டு வாங்குவேன். சர்க்காரியா கமிஷன் எந்த ஆண்டில் சட்டப்பேரவை பேசப்பட்டது என்பது குறித்த குறிப்புகளை எடுத்து தாருங்கள் என்று கூறினேன். ஏனென்றால், விவாதத்திற்கு உடனடியாக தயாராக வேண்டும் என்பதால் அவைக்குறிப்பில், அவை இருப்பது எனக்கு தெரிந்தும், அவற்றின் தேதிகளை பற்றி கேட்டேன். அதைப்பற்றிய துண்டுச்சீட்டைத்தான் கொடுத்தார்கள்.</p><h2>ராஜினாமா கடிதங்கள் பரிசீலணை</h2><p>சபையை எப்படி நடத்தவேண்டும் என்றும் யாரை  பேசுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும், எனக்கு நன்றாக தெரியும்.  என்னை பொறுத்தவரையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்ட நேரமும், ஒதுக்கப்பட்ட நேரமும் அவர்களுக்கு போதும் என்று நான் எண்ணுகிறேன். மேலும், அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 4 தொகுதிகளுக்கான ராஜினாமா கடிதங்கள் பரிசீலணையில் உள்ளன. </p><p>இவ்வாறு அவர் பேசியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சேலம்:  தவெக கொடி நிறத்தில் புதிய அரசு பேருந்துகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-thamizhaga-vetri-kazhagam-kodi-colour-buses</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-thamizhaga-vetri-kazhagam-kodi-colour-buses#comments</comments><guid isPermaLink="false">0ac18fb5-f6ed-4319-ae3b-b5bd8b4ea3e7</guid><pubDate>Mon, 14 Sep 2026 10:37:27 +0000</pubDate><atom:updated>2026-09-14T10:37:27.632Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Government bus,சேலம்,அரசு பேருந்துகள்,party flag,கட்சி கொடி,In Salem</media:keywords><media:content height="768" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/bkn8whyz/gbus.jpg" width="1366"><media:title type="html"><![CDATA[ புதிய அரசு பேருந்துகள்]]></media:title><media:description type="html"><![CDATA[ சேலம்:  தவெக கொடி நிறத்தில் புதிய அரசு பேருந்துகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/bkn8whyz/gbus.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம் புதிய பேருந்து நிலையத்தில், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95">தவெக</a> கட்சி கொடி நிறமான மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம் பூசப்பட்ட 25 புதிய அரசு பேருந்துகள் அணிவகுத்து நிறுத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>புதிய அரசு பேருந்துகள்</h2><p>தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சேலம் மாவட்டத்திற்கு புதிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பேருந்துகள்</a> ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த பேருந்துகள் சேலம் ஜான்சன்பேட்டை அரசு போக்குவரத்து பணிமனையில் புதிய பேருந்துகள் தயார் நிலையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. </p> <h2>தவெக கொடி நிறம்</h2><p>இந்த புதிய பேருந்துகளின் மேல் பகுதி மஞ்சள் நிறத்திலும், கீழ் பகுதி சிவப்பு நிறத்திலும் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் அதிகாரப்பூர்வ கட்சி கொடியும் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தை கொண்டுள்ளதால், இப்பேருந்துகள் தவெக கொடி நிறத்திலேயே இருப்பதாக பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.</p> <h2>புறநகர் பகுதிகளுக்கு இயக்கம்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D">சேலம்</a> புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு புறநகர் பகுதிகளுக்கு இந்த புதிய பேருந்துகளை இயக்குவதற்கு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். </p><h2>தமிழ்நாடு அரசு</h2><p>மேலும், கடந்த காலங்களை போல இல்லாமல், இந்த பேருந்துகளில் "தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்" என்று முழுமையாக எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அரசு பேருந்துகளின் இந்த திடீர் நிற மாற்றம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சிறப்பாக பணியாற்றிய 180 பேருக்கு ‘அண்ணா சிறப்புப் பதக்கங்கள்’ - தமிழக அரசு அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anna-special-medals-to-180-people-for-outstanding-service-tamil-nadu-government-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anna-special-medals-to-180-people-for-outstanding-service-tamil-nadu-government-announcement#comments</comments><guid isPermaLink="false">80053cf9-d5d9-4dff-90c5-50eb3d627350</guid><pubDate>Mon, 14 Sep 2026 10:25:16 +0000</pubDate><atom:updated>2026-09-14T10:25:16.782Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,Anna,அண்ணா,அண்ணா பதக்கம்,Anna Medal,Tamil Nadu government announcement</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/a1adtrph/cmvijay-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/a1adtrph/cmvijay-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சிறப்பாக பணியாற்றிய 180 பேருக்கு ‘அண்ணா சிறப்புப் பதக்கங்கள்’ வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.</p><p>இது குறித்து வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ் நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை. சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை. ஊர்க்காவல் படை விரல்ரேகைப் கூடம் மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் சார்நிலை அலுவலர்களிள் சிறப்பான பணிகளை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் நாள் தமிழக முதல்-அமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. </p><h2>அண்ணா சிறப்புப் பதக்கங்கள்</h2><p>இந்த ஆண்டு, காவல் துறையில், தலைமைக் காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 138 நபர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில், தீயணைப்பு வீரர் முதல் துணை இயக்குநர் வரையிலான 20 நபர்களுக்கும். சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையில், முதல்நிலை சிறைக்காவலர் முதல் துணை சிறை அலுவலர் வரையிலான 10 நபர்களுக்கும் ஊர்க்காவல் படையில், ஊர்க்காவல் படைவீரர் முதல் படைத்தளபதி வரையிலான 5 நபர்களுக்கும், விரல்ரேகைப் பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கும் மற்றும் தடய அறிவியல் துறையில் 4 அலுவலர்களுக்கும். அவர்களின் மெச்சத்தக்க பணியினை அங்கீகரிக்கும் வகையில் 'தமிழக முதல்-அமைச்சரின் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">அண்ணா சிறப்புப் பதக்கங்கள்</a>" வழங்கிட தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். </p><p>மேலும், 19.05.2026 அன்று காலை சுமார் 09.45 மணியளவில், நாகர்கோவில் லெமூரியா கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த கணபதிபுரத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் ராட்சத கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு, அதில் 9 வயதுடைய வைஷ்ணவி என்ற சிறுமியை மட்டும் பொதுமக்கள் காப்பாற்றிய நிலையில், 9 வயதுடைய சிறுவன் சைலேஷ் கடலுக்குள் சுமார் 100 அடி தொலைவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான். இந்நிலையில், தனது இரவுப் பணியை முடித்துவிட்டு, வீடு திரும்பி கொண்டிருந்த நாகர்கோவில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு ஓட்டுநர் ஆர். ராஜசேகர் மேற்படி தகவலை கேள்விப்பட்டவுடன் ராஜாக்கமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டு, உடனடியாக கடற்கரைக்கு விரைந்து சென்று அங்கிருந்த உயிர்காக்கும் மிதவையை பயன்படுத்தி, தன் சொந்த பாதுகாப்பை பற்றி கவலைப்படாமல் கடலில் நீந்தி சென்று அச்சிறுவனை மீட்டுக் கரைக்கு கொண்டு வந்து அச்சிறுவனின் உயிரை காப்பாற்றினர்.</p><h2>அண்ணா வீரதீர் பதக்கம்</h2><p>கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர்,மாவட்ட ஆட்சியர், ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் அன்னாரது துணிச்சலான செயலை வெகுவாக பாராட்டியுள்ளார்கள். இவரின் துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பு செயலை பாராட்டி இவருக்கு 'தமிழக முதல்-அமைச்சரின் தீயணைப்பு பணிக்கான அண்ணா வீரதீர் பதக்கம் வழங்கிட  தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். மேற்கண்ட பதக்கங்கள், தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>2,900 கண் திருஷ்டி யந்திரங்கள்; 42 அடி உயரம் - கவனம் பெற்ற கொளத்தூர் விநாயகர் சிலை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/2900-evil-eye-yantras-42-feet-tall-the-kolathur-vinayagar-idol-that-grabbed-attention</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/2900-evil-eye-yantras-42-feet-tall-the-kolathur-vinayagar-idol-that-grabbed-attention#comments</comments><guid isPermaLink="false">e910a2c7-fe69-428d-bb31-f3e33ed42362</guid><pubDate>Mon, 14 Sep 2026 10:16:32 +0000</pubDate><atom:updated>2026-09-14T10:16:32.426Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chathurthi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/t45jvj9a/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/t45jvj9a/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான், ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி தினத்தில் அவதரித்தார். இந்த நாள் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று (14.9.2026) விநாயகர் சதுர்த்தி விழா, நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.</p><p>விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில்களில் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இதனால் கோவில்களில் இன்று கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. வீடுகளில் விநாயகர் வழிபாடு மேற்கொள்ளும் மக்கள், விநாயகர் சிலைகளை வைத்து அலங்கரித்து, கொழுக்கட்டை, மோதகம், லட்டு, அப்பம், அவல், பொரி, கடலை, சுண்டல் போன்ற நைவேத்யங்களை படைத்து பூஜை செய்கின்றனர்.</p><p>இதேபோல் கோவில்கள் சார்பிலும், பல்வேறு இந்து அமைப்புகள் சார்பிலும் பொது இடங்களில் பிரமாண்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் சுமார் 1 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. தலைநகர் சென்னையில் மட்டும் 1,562 சிலைகளை வைத்து வழிபட காவல்துறை அனுமதி வழங்கியிருக்கிறது.</p> <p>அந்த வகையில் சென்னை கொளத்தூரில் 2,900 கண் திருஷ்டி கணபதி யந்திரங்கள் மற்றும் 2,800 கண் திருஷ்டி சூரிய சக்கரங்களால் விநாயகர் சிலை அலங்கரிக்கப்பட்டுள்ளது. 42 அடி உயரம் கொண்ட இந்த பிரம்மாண்ட விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதை தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. </p> ]]></content:encoded></item><item><title>இயற்கையின் அரணாக விளங்கும் கொடைக்கானல் மலையை சிதைத்து கல் எடுப்பது வளர்ச்சியா? - வேல்முருகன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-quarrying-kodaikanal-hills-development-or-destruction-velmurugan-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-quarrying-kodaikanal-hills-development-or-destruction-velmurugan-asks#comments</comments><guid isPermaLink="false">adcfe1a5-f74d-426d-ab4c-dc2055253a36</guid><pubDate>Mon, 14 Sep 2026 10:13:41 +0000</pubDate><atom:updated>2026-09-14T10:13:41.847Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கொடைக்கானல்,Kodaikanal,Velmurugan,வேல்முருகன்,மலை,hill,வளர்ச்சி,இயற்கை,கேள்வி,stone,கல்,Questions,Natural</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/8xw00zs1/velmurugan.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வேல்முருகன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/8xw00zs1/velmurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இயற்கையின் அரணாக விளங்கும் கொடைக்கானல் மலையைச் சிதைத்துக் கல் எடுப்பது வளர்ச்சியா? அல்லது அழிவுக்கான தொடக்கமா? என்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் </a>வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- </p> <h2>குவாரி பணி</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D">கொடைக்கானல்</a> மலைப்பகுதியில் பாறைகள் பெருமளவில் உடைக்கப்பட்டு கற்கள் எடுக்கப்படுவதாக வெளியாகியுள்ள காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. குவாரி பணிகளுக்கு அரசு அனுமதி வழங்கியிருந்தால், அதன் எல்லை, காலக்கெடு, வெட்டியெடுக்கப்பட வேண்டிய கனிமத்தின் அளவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிபந்தனைகள் ஆகியவை முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்பதை அரசு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்.</p><h2>உண்மை நிலை</h2><p>அனுமதிக்கப்பட்ட பரப்பை தாண்டி பணிகள் நடைபெறுகின்றனவா? நிர்ணயிக்கப்பட்ட அளவை காட்டிலும் கூடுதலாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளனவா? இயற்கையான நில அமைப்பில் ஆபத்தான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா? இவற்றின் உண்மை நிலையை அரசு மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். </p><p>தமிழ்நாட்டில் உள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF">கல் குவாரிகளில்</a> அளவுக்கு அதிகமாக கனிமங்கள் எடுக்கப்படுவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து, மாநில அளவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பல இடங்களில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.</p><h2>கேள்வி எழுகிறது</h2><p>இந்நிலையில், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த கொடைக்கானல் மலைத்தொடரில் அதிகாரிகளின் கண்காணிப்பு எந்த அளவுக்கு உள்ளது என்ற கேள்வி எழுகிறது.</p> <h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>கனமழை பெய்து நிலச்சரிவு அல்லது வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பிறகா நடவடிக்கை எடுக்க போகிறோம்? மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே மிக அவசியம். இயற்கை  சமநிலையை  பாதிக்கும் திட்டங்கள் குறித்து முறையான அறிவியல் ஆய்வு நடத்தாமல் தொடர்ந்து அனுமதிப்பது, எதிர்காலத்தில் மீள முடியாத பேரிடரை உருவாக்கக்கூடும்.</p> <h2>அலட்சியம் காட்டக்கூடாது</h2><p>தமிழ்நாடு அரசு, சம்பந்தப்பட்ட இடத்தில் உடனடியாக கள ஆய்வு நடத்தி, அனுமதி ஆவணங்கள் மற்றும் குத்தகை நிபந்தனைகளை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும். விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் பொறுப்பற்ற அதிகாரிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் உயிர்  பாதுகாப்பை விட எந்த  குவாரியும் முக்கியமல்ல. கொடைக்கானல் மலையை பாதுகாப்பதில் அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது.</p><p>மலை வளத்தை பாதுகாத்து, எதிர்கால தலைமுறைக்கான இயற்கைச் செல்வத்தை நிலைநிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>செல்போன் வெளிச்சத்தில் அமைச்சர் பேட்டி அளிக்கும் நிலை; மின்வெட்டு குறித்து அன்புமணி கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-giving-interview-in-cell-phone-light-anbumani-condemns-power-cuts</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-giving-interview-in-cell-phone-light-anbumani-condemns-power-cuts#comments</comments><guid isPermaLink="false">0174bff1-a92c-41e5-b485-720007a131c0</guid><pubDate>Mon, 14 Sep 2026 09:55:19 +0000</pubDate><atom:updated>2026-09-14T09:55:19.431Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,cell phone,செல்போன்,மின்வெட்டு,அமைச்சர் பேட்டி,light,Minister Interview,Anbumani Ramadas MP</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/t4fguyby/anbumani.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/t4fguyby/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>செல்போன் வெளிச்சத்தில் அமைச்சர் பேட்டி அளிக்கும் நிலை உருவாகியுள்ளது குறித்து அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>செல்போன் வெளிச்சத்தில் அமைச்சர் பேட்டி</h2><p>வேலூர் மாநகரில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேர்காணல் அளித்துக் கொண்டிருந்த போது  திடீரென மின்தடை ஏற்பட்டதால்  செல்போன் வெளிச்சத்தில் நேர்காணல் அளிக்க வேண்டிய  சூழல் ஏற்பட்டிருக்கிறது.  சென்னை முதல் கன்னியாகுமரி வரை  அனைத்து இடங்களிலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக   அறிவிக்கப்படாத கடுமையான மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதையே  இந்த நிகழ்வு காட்டுகிறது. இவ்வளவுக்குப் பிறகும் மின்வெட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.</p><p>தமிழ்நாட்டில் கோடைக்காலத்தில் 20,500 மெகாவாட் - 21,000 மெகாவாட் என்ற உச்சத்தைத் தொட்ட தமிழகத்தின் மின் தேவை,  வெப்பத்தின் அளவு குறையாததால் இப்போதும் அதே அளவிலேயே நீடிக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது இது 4000 மெகாவாட் அதிகம் ஆகும். இந்தக் கூடுதல் தேவையை சமாளிக்கத் தேவையான அளவுக்கு மின்சாரத்திற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்யாதது  தான் மின்வெட்டுக்கு காரணம் ஆகும்.</p><h2>மின்சாரப்பற்றாக்குறை</h2><p>சென்னை முதல் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் வரை அனைத்து இடங்களிலும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்டித்து மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனாலும், மின்வெட்டு இன்னும் நீக்கப்படவில்லை. பொதுவாக அமைச்சர்கள் கலந்து கொள்ளும் பகுதிகளில் மின் தடை ஏற்படாமல் அதிகாரிகள் பார்த்துக் கொள்வார்கள். ஆனால்,  அதிகாரிகளின் முயற்சிகளையும் தாண்டி மின்சாரம் தடை படுகிறது என்றால் சமாளிக்க முடியாத அளவுக்கு மின்சாரப்பற்றாக்குறை நிலவுகிறது என்று தான் பொருள்.</p><p>சென்னை பருத்திப்பட்டு பகுதியில் பூமிக்கு அடியில் மின்சாரம் கொண்டு செல்லும் வயர்கள் எரிந்து விட்டதால் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின் தடை </a>செய்யப்பட்டுள்ளது. ஆனால், போதிய பணியாளர்கள் இல்லாததால் அதை சரி செய்ய 8 மணி நேரத்திற்கும் மேலாகியுள்ளது. அதனால், அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள்  8 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லாமல் அவ்திப்பட்டுள்ளனர்.</p><h2>அரசு நடவடிக்கை</h2><p>மின்வெட்டை சமாளிக்க 2000 மெகாவாட் மின்சாரம் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், களத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மின்வெட்டால் மக்கள் படும் அவதிகளை உணர்ந்து கொண்டு உடனடியாக மின்வெட்டைப் போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மயிலாடுதுறை அருகே வங்கக்கடலில் எண்ணெய், எரிவாயு கிணறுகளுக்கு அனுமதிக்கோரி விண்ணப்பம் 

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/application-for-oil-gas-wells-near-mayiladuthurai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/application-for-oil-gas-wells-near-mayiladuthurai#comments</comments><guid isPermaLink="false">c6647cf1-e1ef-404a-92f7-843ce48c5883</guid><pubDate>Mon, 14 Sep 2026 09:52:37 +0000</pubDate><atom:updated>2026-09-14T09:52:37.709Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மயிலாடுதுறை,வங்கக்கடல்,எண்ணெய் கிணறு,எரிவாயு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/x0ipsmt4/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/x0ipsmt4/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மயிலாடுதுறை, </p><p>மயிலாடுதுறை அருகே வங்கக்கடலில் 5 எண்ணெய், எரிவாயு கிணறுகளுக்கு அனுமதிக்கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. </p> <h2>வங்கக்கடலில் எரிவாயு கிணறு</h2><p><a href="https://www.dailythanthi.com/sports/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">மயிலாடுதுறை </a>மாவட்டம் அருகே வங்கக் கடலில் 5 எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி கிணறுகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஹார்டி எக்ஸ்ப்ளோரேஷன் அண்ட் புரொடக்ஷன் இந்தியா நிறுவனம் விண்ணப்பம் செய்துள்ளது.</p><p>மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கிழக்கே வங்கக்கடலில் 81 சதுர கி.மீ. பரப்பளவில் எண்ணெய் வயல் அமைந்துள்ள நிலையில் அதே பகுதியில் மேலும் புதிய எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகளை அமைக்கக் கோரி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு விண்ணப்பம் செய்துள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சென்னை பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.3.15 கோடி நகைகள் மாயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-punjab-national-bank-rs-3-15-crore-jewellery-missing</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-punjab-national-bank-rs-3-15-crore-jewellery-missing#comments</comments><guid isPermaLink="false">154e44d4-ddad-4310-be3b-7b282e54a78e</guid><pubDate>Mon, 14 Sep 2026 09:48:17 +0000</pubDate><atom:updated>2026-09-14T09:48:17.339Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,நகைகள்,jewellery,missing,மாயம்,பஞ்சாப் நேஷனல் வங்கி,Punjab National Bank</media:keywords><media:content height="768" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/c9harr9r/pnb.jpg" width="1366"><media:title type="html"><![CDATA[ பஞ்சாப் நேஷனல் வங்கி]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.3.15 கோடி நகைகள் மாயம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/c9harr9r/pnb.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர் சாலையில் இயங்கி வருகிறது பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை. இந்த வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த, வாடிக்கையாளர்களின் அசல் தங்க நகைகளை எடுத்து கொண்டு, அதற்கு பதிலாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88">போலி நகைகளை</a> மாற்றி வைத்து 3.15 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்துள்ளனர் வங்கியின் ஊழியர்கள்.</p> <h2>நகை மாயம்</h2><p>வங்கிக்கு கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி கணேஷ் சந்திரபாண்டா என்பவர் புதிய முதன்மை மேலாளராக பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற சில நாட்களிலேயே வாடிக்கையாளர் ஒருவரின் நகை பாக்கெட் மாயமானதை கண்டு அதிர்ச்சிடைந்த மேலாளர். உடனே வங்கியின் தூய்மை பணி உதவியாளர் புருஷோத்தமன் நகை பெட்டி லாக்கருக்கு அடியில கிடந்துச்சு என்று எடுத்து கொடுத்துள்ளார். </p><h2>மறு ஆய்வு</h2><p>இதில் மேலாளருக்கு சந்தேகம் வர, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF">வங்கியின்</a> கட்டுப்பாட்டு அலுவலக அனுமதி பெற்று, அங்கீகரிக்கப்பட்ட நகை மதிப்பீட்டாளர் ரமேஷ் குமார் மூலமாக பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த அனைத்து அடகு நகைகளையும்ஆராய்ந்து மறு ஆய்வு செய்தனர்.</p> <h2>மாட்டிக்கொண்ட ஊழியர்கள்</h2><p>வாங்கியில் நடைபெற்ற இந்த தணிக்கையில் தான் மொத்தமும் வெளிவந்தது. பல்வேறு வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த 24 தங்க நகை கடன் கணக்குகளில் இருந்த அசல் தங்க நகைகள் அனைத்தும் திருடப்பட்டு, அதற்கு பதிலாக போலி நகைகள் மாற்றப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கணக்குப்படி 2,137.800 கிராம் தங்கம் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் 1,919 கிராம் மட்டுமே இருந்துள்ளது.</p> <h2>மத்திய குற்றப்பிரிவு </h2><p>வங்கி மேலாளர் கொடுத்த புகாரின் பேரில், மத்திய குற்றப்பிரிவு மோசடி தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இந்த கூட்டு சதியில் வங்கியின் முன்னாள் மூத்த கிளை மேலாளர் சரவண பாபு, அலுவலக உதவியாளர் புருஷோத்தமன், மற்றும் பாதுகாப்பு பெட்டக சாவி பொறுப்பாளர்கள் என 4 பேர் மீது வழக்கு பாய்ந்துள்ளது.</p> <p>திருடப்பட்ட அசல் தங்க நகைகளை மீட்கவும், தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை பிடிக்கவும் போலீசார் தற்போது தீவிரமாக தேடி வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>செங்கல்பட்டு அருகே அடுத்தடுத்து 7 கார்கள் மோதி விபத்து - போக்குவரத்து பாதிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/accident-involving-7-cars-colliding-in-succession-near-chengalpattu-traffic-disrupted</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/accident-involving-7-cars-colliding-in-succession-near-chengalpattu-traffic-disrupted#comments</comments><guid isPermaLink="false">2d7f7180-b640-40e0-bbc6-973709d6257f</guid><pubDate>Mon, 14 Sep 2026 09:45:51 +0000</pubDate><atom:updated>2026-09-14T09:45:51.327Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Chengalpattu,செங்கல்பட்டு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/80cmp8t8/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/80cmp8t8/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>செங்கல்பட்டு,</p><p>தொடர் விடுமுறையை கொண்டாட சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள், தற்போது விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், செங்கல்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் புலிப்பாக்கம் என்ற இடத்தில் சாலையில் சென்ற ஒரு கார் திடீரென பிரேக் பிடித்து நின்றதால், பின்னால் வந்த கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. </p><p>இந்த சம்பவத்தில் 7 கார்கள் சேதமடைந்தன. கார்களில் இருந்தவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், காயமடைந்த வாகன ஓட்டிகளை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. </p> ]]></content:encoded></item><item><title>தேனியில் 4,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/4000-year-old-rock-paintings-discovered-in-theni</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/4000-year-old-rock-paintings-discovered-in-theni#comments</comments><guid isPermaLink="false">235f0183-4c21-4c09-aa02-e782ab0b92c7</guid><pubDate>Mon, 14 Sep 2026 09:16:24 +0000</pubDate><atom:updated>2026-09-14T09:16:24.173Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Theni,தேனி,பாறை ஓவியங்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/0vmg8u3b/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/0vmg8u3b/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி,</p><p>தேனி மாவட்டம் கடமலை குண்டு மலைப்பகுதியில் சுமார் 4,000 ஆண்டுகள் பழமையான வெள்ளை நிற பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சங்கிலி கரடு பகுதியில் கண்டறியப்பட்ட ஓவியங்களில் மனித உருவங்கள், வேட்டை காட்சிகள் மற்றும் சடங்கு நிகழ்வுகளை பிரதிபலிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.</p><p>மேலும் இரும்பு உருக்கு எச்சங்கள், சுடுமண் குழாய்கள் உளிட்ட தொல்பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எனவே பகுதியில் முழுமையான தொல்பொருள் ஆய்வு நடத்த வேண்டும் என்று தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>8-வது முறையாக ஆசியக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணி! - வானதி சீனிவாசன் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/indian-womens-team-wins-asia-cup-for-the-8th-time-vanathi-srinivasan-congratulations</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/indian-womens-team-wins-asia-cup-for-the-8th-time-vanathi-srinivasan-congratulations#comments</comments><guid isPermaLink="false">349412d1-aea0-43f0-9f4d-5e333fce62b5</guid><pubDate>Mon, 14 Sep 2026 09:15:48 +0000</pubDate><atom:updated>2026-09-14T09:15:48.835Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Asia Cup,இந்திய மகளிர் அணி,வாழ்த்து,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,வெற்றி,Indian Women&apos;s Team,ஆசியக் கோப்பை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/mbrg5ckk/vanathi.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/mbrg5ckk/vanathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> 8-வது முறையாக ஆசியக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு வானதி சீனிவாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><p>துபாயில் நடைபெற்ற 2026 மகளிர் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி ஆசிய கோப்பையை கைப்பற்றுவது இது 8-வது முறையாகும். இது குறித்து முன்னாள் பாஜக தேசிய மகளிரணி தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/vanathi-srinivasan">வானதி சீனிவாசன் </a>தனதி எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>மனமார்ந்த வாழ்த்துகள்</h2><p>இலங்கையை வீழ்த்தி, 8-வது முறையாக மகளிர் டி20 ஆசியக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! உங்களின் கடின உழைப்பு, தளராத உறுதி மற்றும் தேசத்திற்கான எழுச்சியூட்டும் அர்ப்பணிப்பு ஆகியவை இந்த மகத்தான வெற்றியைச் சாத்தியமாக்கியுள்ளன. உங்களைப் பற்றிப் பெருமைப்படுகிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திராவிட கழக பேரணிக்கு அனுமதி மறுப்பு - டிடிவி தினகரன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dravida-kazhagam-rally-denied-permission-ttv-dhinakaran-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dravida-kazhagam-rally-denied-permission-ttv-dhinakaran-condemns#comments</comments><guid isPermaLink="false">04c9f91a-8830-4761-8b7c-ba80a95edca1</guid><pubDate>Mon, 14 Sep 2026 08:47:54 +0000</pubDate><atom:updated>2026-09-14T08:47:54.547Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டிடிவி தினகரன்,Dravidar Kazhagam,திராவிடர் கழகம்,பேரணி,Cycle Rally,அனுமதி மறுப்பு,permission denied</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/iej9ndwu/ttv1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/iej9ndwu/ttv1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழிப்புணர்வு பேரணிக்கு அனுமதி மறுத்துள்ளதற்கு அமமுக பொதுச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/ttv-dhinakaran">டிடிவி தினகரன்</a> கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>அனுமதி மறுப்பு</h2><p>தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி, அவர் பிறந்த ஈரோட்டில் உள்ள பன்னீர்செல்வம் பூங்காவில் இருந்து பெரியார் இல்லம் வரை திராவிடர் கழகம் சார்பில் திட்டமிடப்பட்டிருந்த விழிப்புணர்வு பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>ஏற்கனவே, கடந்த ஜூலை மாதம் நீட் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகம் நடத்தவிருந்த இருசக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி மறுத்தும், பெரியார் திடலில் காவல்துறையினரைக் குவித்தும் அடக்குமுறையைக் கையாண்ட தவெக அரசு, தற்போது அவரது பிறந்தநாளை முன்னிட்டு திட்டமிடப்பட்டிருந்த விழிப்புணர்வு பேரணிக்கும் அனுமதி மறுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.</p><h2>அம்பலம்</h2><p>சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு, சாதி ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம் எனப் பல்வேறு கொள்கைகளுக்காகத் தனது வாழ்நாள் முழுவதும் போராடிய தந்தை பெரியாரின் பிறந்தநாளில், அவரது சொந்த மண்ணிலேயே அவரது கொள்கைகளை வலியுறுத்தி நடத்தப்படவிருந்த பேரணிக்கு அனுமதி மறுத்திருப்பதன் மூலம், பெரியாரை அரசியலுக்காக மட்டுமே தவெக தனது கொள்கைத் தலைவராக முன்வைத்திருப்பது அம்பலமாகியுள்ளது.</p><p>ஒவ்வொரு ஆண்டும் பெரியாரின் பிறந்தநாளையொட்டி நடைபெறும் விழிப்புணர்வு பேரணிக்கு, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை காரணம் காட்டி அனுமதி மறுத்திருப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.</p><p>எனவே, பெரியாரை கொள்கைத் தலைவராக முன்மொழிந்திருக்கும் தவெக, அவரையும் அவரது பெயரையும் வெறும் அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தும் நாடகத்தைக் கைவிட்டு, பெரியாரின் பிறந்தநாளன்று திராவிடர் கழகம் திட்டமிட்டிருந்த விழிப்புணர்வு பேரணிக்கு உடனடியாக அனுமதி வழங்கி, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்திட வேண்டும் என்று இந்நேரத்தில் வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தி: நயினார் நாகேந்திரன் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayaka-chaturthi-greetings-from-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayaka-chaturthi-greetings-from-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">778298cf-3405-4020-8a35-7a2d8f3da91b</guid><pubDate>Mon, 14 Sep 2026 08:19:46 +0000</pubDate><atom:updated>2026-09-14T08:19:46.897Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,greeting,விநாயகர் சதுர்த்தி,Vinayaka Chaturthi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/qvgata9e/332.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/qvgata9e/332.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>வாழ்த்து</h2><p>பாரத மக்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். நம் வாழ்வில் ஏற்படும் தடைகளையும் துயரங்களையும் நீக்கி, நம் வினைகள் அனைத்தையும் தீர்த்து, வெற்றி, வளம், மகிழ்ச்சி மற்றும் நிம்மதியை அருளும் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை போற்றி வணங்கும் இப்புனித நன்னாளில், அனைவரது வாழ்விலும் புதிய நம்பிக்கையும், நல்ல சிந்தனையும், மகிழ்ச்சியும் நிறைந்து, தொடங்கும் ஒவ்வொரு செயலும் வெற்றியடையவும், இல்லங்கள் அனைத்திலும் அன்பும் அமைதியும் செழிக்கவும் விநாயகப் பெருமானை பிரார்த்திப்போம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது: அமைச்சர் அருண்ராஜ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kolathur-mla-vs-babus-health-condition-is-stable-minister-arunraj</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kolathur-mla-vs-babus-health-condition-is-stable-minister-arunraj#comments</comments><guid isPermaLink="false">72c8b231-fa87-4832-b300-665165f2e65d</guid><pubDate>Mon, 14 Sep 2026 08:13:20 +0000</pubDate><atom:updated>2026-09-14T08:13:20.857Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கொளத்தூர்,Kolathur,வி.எஸ்.பாபு,VS Babu,Minister Arunraj,அமைச்சர் அருண்ராஜ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/o13u07gi/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/o13u07gi/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து த.வெ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வி.எஸ்.பாபு. இவர் தனது குடும்பத்துடன் கொளத்தூரில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். </p><p>இந்த நிலையில், வி.எஸ்.பாபுவுக்கு கடந்த 9-ம் தேதி அதிகாலை திடீரென கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே அவரை குடும்பத்தினர் அவரை சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் குழு, உடனடியாக அவரை தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்து அவசர சிகிச்சைகளை தொடங்கினர்.</p><p>சுவாசக்கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு. தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் பல்துறை நிபுணர்கள் அடங்கிய மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் உள்ளார். அவருக்கு தேவையான மருத்துவ மேலாண்மை மற்றும் சுவாச ஆதரவு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து தீவிர மருத்துவ மேற்பார்வையின் கீழ் வி.எஸ்.பாபு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.</p><p>இந்த நிலையில், உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிகப்பட்டுள்ள எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவை சுகாதரத்துறை அமைச்சர் அருண்ராஜ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.</p><p>அதன்பின்னர் அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>நுரையீரல் தொற்று காரணமாக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு சிகிச்சை பெற்று வருகிறார். வி.எஸ்.பாபு நலமுடன் உள்ளார், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். எம்.எல்.ஏ.வின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>19 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/rain-possible-till-4-pm-in-19-districts</link><comments>https://www.dailythanthi.com/news/weather/rain-possible-till-4-pm-in-19-districts#comments</comments><guid isPermaLink="false">35e53d54-ea8f-48fb-ad8a-d02d66fbdff6</guid><pubDate>Mon, 14 Sep 2026 08:12:32 +0000</pubDate><atom:updated>2026-09-14T08:12:32.543Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/m8tfygw7/Untitled-12.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/m8tfygw7/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுமார் 1.5 கி.மீ. உயரம் வரை தென்மேற்கு மத்தியப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு விதர்பா பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து மன்னார் வளைகுடா வரை மராத்வாடா, வடக்கு உள் கர்நாடகா, ராயலசீமா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், நாகப்பட்டினம், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, கடலூர், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தி.க. பேரணிக்கு அனுமதி மறுப்பு: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-rally-permission-denial-udayanidhi-stalin-criticism</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-rally-permission-denial-udayanidhi-stalin-criticism#comments</comments><guid isPermaLink="false">fa7ce0a9-baab-4f5a-8021-038f97b07fc0</guid><pubDate>Mon, 14 Sep 2026 07:57:29 +0000</pubDate><atom:updated>2026-09-14T07:57:29.252Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Dravidar Kazhagam,திராவிடர் கழகம்,பேரணி,அனுமதி மறுப்பு,Udhayanithi Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/bavuvcqg/Untitled-11.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/bavuvcqg/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெரியார் - அண்ணாவின் பிறந்தநாள் பேரணிகளுக்கு அனுமதி மறுப்பது ஏன்? என்று தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் பிறந்த ஈரோட்டு மண்ணில் தி.க. சார்பில் செப்டம்பர் 17-ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிக்கும், குடியாத்தத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.கழகம் உள்ளிட்ட கட்சிகள் நடத்தவிருந்த பேரணிக்கும், இந்த சர்க்கஸ் அரசின் காவல்துறை அனுமதி மறுத்து இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.</p><p>முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை, வலதுசாரி அமைப்புகளின் பேரணிகளுக்கு அனுமதி வழங்கிவிட்டு, தமிழ்நாட்டை செதுக்கிய பெரியார் - அண்ணாவின் பிறந்தநாள் பேரணிகளுக்கு அனுமதி மறுப்பது ஏன்?</p><p>பெரியாரையும், அண்ணாவையும் கொள்கைத்தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் முதல்-அமைச்சர், யாரை திருப்திப்படுத்த இதைச் செய்கிறார்? காவல்துறை, முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? இல்லை அவரது காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?</p><p>பெரியார் - அண்ணாவை புறக்கணிக்கும் ரீல்ஸ் முதல்-அமைச்சர், அவருடைய அடிமைத்தனத்தையும், ஆணவத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, உடனே இந்த பேரணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் பிறந்த ஈரோட்டு மண்ணில் தி.க. சார்பில் செப்டம்பர் 17-ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிக்கும், <br><br>குடியாத்தத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.கழகம் உள்ளிட்ட கட்சிகள் நடத்தவிருந்த பேரணிக்கும், <br><br>இந்த Circus அரசின்…</p>&mdash; Udhay (@Udhaystalin) <a href="https://x.com/Udhaystalin/status/2099402897469452489?ref_src=twsrc%5Etfw">September 14, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்திருத்தங்களை திரும்பப்பெறுக: தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/withdraw-the-town-and-country-planning-amendments-stpi-urges-tamil-nadu-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/withdraw-the-town-and-country-planning-amendments-stpi-urges-tamil-nadu-government#comments</comments><guid isPermaLink="false">06f6b8ae-79b6-4c7b-841d-2ea03896ede6</guid><pubDate>Mon, 14 Sep 2026 07:31:09 +0000</pubDate><atom:updated>2026-09-14T07:31:09.166Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,தமிழக அரசு,சட்ட திருத்தம்,வலியுறுத்தல்,Amendment,STPI Party -எஸ்.டி.பி.ஐ. கட்சி,எஸ்டிபிஐ கட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/401ykjh2/201.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முபாரக்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/401ykjh2/201.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்திருத்தங்களை திரும்பப்பெற தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><h2>சட்டத்திருத்தம்</h2><p>தமிழ்நாட்டில் 'வளர்ச்சி' என்ற போர்வையில் விவசாய நிலங்களை விவசாயமல்லாத பிற பயன்பாடுகளுக்கு மிக எளிதாக மாற்றுவதற்கு வழிவகை செய்யும் வகையில், அரசு மேற்கொண்டு வரும் சட்டத்திருத்தங்களும் அரசாணைகளும் கடும் கண்டனத்திற்குரியவை. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் செப்டம்பர் 8-ம் தேதி நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு (திருத்தச்) சட்டமுன்வடிவு மற்றும் கடந்த ஜூலை 31-ம் தேதி வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை வெளியிட்ட அரசாணை ஆகியவை வேளாண் பெருமக்களின் வாழ்வாதாரத்திற்கும், நில உரிமைக்கும் விடப்பட்ட மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.</p><h2>நன்செய் நிலங்கள்</h2><p>கூட்டாட்சித் தத்துவத்தில் மாநில உரிமைகள் எந்தளவுக்கு முக்கியமோ, அதே அளவிற்கு ஜனநாயகத்தின் அடிநாதமாக விளங்கும் உள்ளாட்சி அமைப்புகளின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால், திட்டப் பரப்பிடம் அல்லாத பகுதிகளில் உள்ள நன்செய் நிலங்களை மேம்படுத்துவதற்கும் பயன்பாடு மாற்றம் செய்வதற்கும் மாவட்ட ஆட்சியரின் முன் ஒப்புதல் பெற வேண்டும் என்ற நடைமுறையை நீக்கி, அதற்கான அனைத்து அதிகாரங்களையும் நகர் மற்றும் ஊரமைப்பு இயக்ககத்தின் (DTCP) இயக்குனரிடம் மாநில அரசு வழங்கியுள்ளது. மாநில அளவிலான ஒரே ஒரு அதிகாரியிடம் அனைத்து அதிகாரங்களும் குவிக்கப்படும்போது, உள்ளாட்சி அமைப்புகள் தங்களின் எல்லைக்குள் நடக்கும் திட்டங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை இழப்பதுடன், உள்ளூர் மக்களின் தேவைகளுக்கோ அல்லது உள்ளாட்சி மன்றங்களின் தீர்மானங்களுக்கோ சட்டப்பூர்வ மதிப்பு குறையும் அபாய நிலை ஏற்படுகிறது.</p><p>இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள 'அதிகாரப் பரவலாக்கம்' என்ற கோட்பாட்டிற்கு மாறாக, உள்ளாட்சிகளின் சுயாட்சியைக் குறைத்து மாநில அரசு அதிகாரத்தை மையப்படுத்துவது அரசமைப்புச் சட்டத்தின் நோக்கத்திற்கே முற்றிலுமாக முரணானதாகும்.  ஏற்கெனவே 2017-ல் பிறப்பிக்கப்பட்ட விதிகளின்படி, வேளாண் நிலங்களைப் பயன்பாடு மாற்றம் செய்ய வேளாண் துறை இணை இயக்குனரிடம் தடையின்மை சான்றிதழ் (NOC) பெற வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. தற்போது அதையும் தளர்த்தி, பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பெருநிறுவனங்களுக்கும் விவசாய நிலங்களைச் சிவப்புக் கம்பளம் விரித்துத் தாரைவார்க்க தவெக அரசு முயல்கிறது.</p><h2>வளர்ச்சி திட்டம்</h2><p>'வளர்ச்சித் திட்டங்களை விரைவுபடுத்துதல்' என்ற பெயரில் காலதாமதத்தைக் குறைக்க விரும்புவதாக அரசு தரப்பில் கூறப்பட்டாலும், நடைமுறையில் இது உள்ளாட்சி பிரதிநிதிகளின் சுதந்திரத்தையும், நிலத்தின் தன்மையை பரிசீலிக்கும் அடிப்படைச் சுற்றுச்சூழல் மற்றும் நிர்வாகத் தடுப்பணைகளையே அரசு தகர்த்தெறியும் ஜனநாயக விரோத செயலாகும்.</p><p>1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்டுவது என்ற பெயரில், உணவு உற்பத்திக்கு ஆதாரமாக விளங்கும் நன்செய் நிலங்களையும், நிலத்தடி நீரைச் சேமித்துச் சூழலியல் சமநிலையைப் பேணும் வேளாண் பரப்புகளையும் அரசு தியாகம் செய்யத் துணிவது எதிர்கால தலைமுறையின் உணவுப் பாதுகாப்பிற்கும் சுற்றுச்சூழல் சமநிலைக்கும் பேரழிவை உண்டாக்கும். இது உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தங்களது ஊரின் நிலங்களைப் பாதுகாக்கும் உரிமையையும் நேரடியாகப் பறிப்பதாகவே அமைகிறது.</p><h2>வலியுறுத்தல்</h2><p>எனவே, தமிழ்நாட்டின் வேளாண் எதிர்காலத்தையும், பரவலாக்கப்பட்ட ஜனநாயக அமைப்பான உள்ளாட்சிகளின் சுயாட்சியையும் சீர்குலைக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத் திருத்தங்களையும், ஜூலை 31 அரசாணையையும் தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90">எஸ்டிபிஐ கட்சி </a>சார்பில் வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பெற்ற மகனையே முறையாக வளர்க்காத மு.க.ஸ்டாலின்: அமைச்சர் ரமேஷ் சாடல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalin-failed-to-properly-raise-his-own-son-minister-ramesh-slams-him</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalin-failed-to-properly-raise-his-own-son-minister-ramesh-slams-him#comments</comments><guid isPermaLink="false">a723b061-5e1a-41d1-96bc-eeb9e5d06db5</guid><pubDate>Mon, 14 Sep 2026 07:27:58 +0000</pubDate><atom:updated>2026-09-14T07:27:58.926Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,M.K.Stalin,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,Minister ramesh,அமைச்சர் ரமேஷ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/eqpdijew/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/eqpdijew/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>திருச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>அரசியல், கருத்தியல் ரீதியான கேள்விகளுக்கு பதில் சொல்லலாம். வீட்டில் அமர்ந்துகொண்டு வாய்க்கு வந்தவற்றையெல்லாம் பேசலாம் என நினைத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் இதெல்லாம் ஒரு அரசியல் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் கிடையாது.</p><p>முதல்-அமைச்சர் விஜய் மிகத் தெளிவாக ஆட்சி நிர்வாகம் நடத்தி வருகிறார். அனைவரும் பாராட்டக் கூடிய வகையில் ஆட்சி நிர்வாகம் நடத்தி வருகிறார். உலகளவில் விளையாட்டுத் துறையில் தமிழர்கள் சாதிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் விரும்புகிறார். மற்றவர்கள் விமர்சனத்துக்காக எதை வேண்டுமானாலும் பேசுவார்கள். அதனால்தான் எதிர்க்கட்சியாகக்கூட அமர முடியாத நிலைமையில் (அதிமுகவினர்) உள்ளனர்.</p><p>ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவது என்பது ஜனநாயக உரிமை. இதனை யாரும் மறுக்கவில்லை. ஆனால், அவதூறாகவும் ஆபாசமாகவும் கீழ்த்தரமாகவும் பேசுவதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். தி.மு.க.வினர் ஆபாசமாகப் பேசவில்லை என்றால்தான் ஆச்சரியப்பட வேண்டும். திமுகவின் டி.என்.ஏ.-வே அதுதான். ஆபாசமாகவும், அவதூறாகவும், கீழ்த்தரமாகவும் பேசுவதுதான் திமுகவின் டி.என்.ஏ. இப்படித்தான் திமுக முன்னாள் அமைச்சர்கள் எல்லோரும் வளர்ந்துள்ளனர்.</p><p>பெற்ற மகனையே முறையாக வளர்க்காத முன்னாள் கொளத்தூர் எம்.எல்.ஏ. (மு.க. ஸ்டாலின்), கட்சியை ஒழுங்காக வைத்திருப்பார் என எதிர்பார்க்க முடியாது. மின்வெட்டு பிரச்சினை சரிசெய்யப்பட்டுவிட்டதாக மின்துறை அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் எங்கும் மின்வெட்டு இல்லை; மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். மின்வெட்டு இருப்பதாக அரசியல் செய்வதற்காக சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர். அரசியல் ஆதாயத்திற்காக சிலர் குற்றம்சாட்டுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய் இந்தியாவிற்கே வழிகாட்டியாக திகழ்கிறார் : அமைச்சர் செங்கோட்டையன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-stands-as-a-guiding-light-for-all-of-india-minister-sengottaiyan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-stands-as-a-guiding-light-for-all-of-india-minister-sengottaiyan#comments</comments><guid isPermaLink="false">6239680e-2d6c-444e-b6d2-703d6f7b13d7</guid><pubDate>Mon, 14 Sep 2026 07:10:11 +0000</pubDate><atom:updated>2026-09-14T07:10:11.246Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,செங்கோட்டையன்,Sengottaiyan,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/le5ejz9k/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/le5ejz9k/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>வேலூர்,</p><p>வேலூரில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>முதல்-அமைச்சரைப் பொறுத்தவரை, தொலைநோக்குச் சிந்தனையுடன் பல்வேறு திட்டங்களை உருவாக்கி வருகிறார். வரலாறு படைக்கும் தலைவராகவும், இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழும் தலைவராகவும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் விளங்கி வருகிறார்.</p><p>வெற்றித் தலைவர், தமிழகத்தின் நிரந்தர முதல்-அமைச்சர் விஜய் ஆட்சியில், அனைத்து துறைகளும் போட்டி போட்டுக்கொண்டு சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில் சுழன்று பணியாற்றி வருகின்றன. தமிழ்நாட்டில் நேர்மையான ஆட்சியை நடத்துவதற்காக முதல்-அமைச்சர் பல்வேறு திட்டங்களை உருவாக்கி வருகிறார்.</p><p>முதல்-அமைச்சர் குறிப்பிட்ட ஒரே கருத்து, 'மக்களுடைய வரிப் பணத்திலிருந்து ஒரு ரூபாய் கூட இந்த அரசின் சார்பாக சிந்தாமல், சிதறாமல் பணிகள் நடைபெறும்' என்பதுதான். உணவு உற்பத்தியைப் பொறுத்தவரை, நமக்குத் தேவையாண அளவுக்கு மட்டுமல்லாமல், கூடுதலாகவே அனைத்து உணவுப் பொருட்களும் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.</p><p>இந்தியாவின் இலக்காக, தற்போது நமக்குத் தேவையான உணவை இருமடங்கு அளவுக்கு உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் அந்தந்த சிவில் சப்ளை கார்ப்பரேஷன்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உணவைப் பொறுத்தவரை, நம்மிடம் தேவையான அளவுக்கு தானியங்கள், உணவுப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் அனைத்தும் போதுமான அளவில் உள்ளன. எனவே, உணவுப் பொருட்களுக்கு எந்தவிதத் தட்டுப்பாடும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.</p><p>லண்டன் பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கம்யூனிஸ்ட் தலைவர் கூறியது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "ஒரு தொழில் முதலீட்டாளர் இங்கு வருகிறார் என்றால், அதற்கான இடம் வேண்டும். தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் இருக்க வேண்டும். போக்குவரத்து வசதி இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். தடையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும். வெளியில் இருந்து அறிக்கை கொடுப்பது ஈஸி; கேட்பதும் ஈஸி. செயல்படுத்திப் பாருங்கள்; அப்போதுதான் தெரியும்" என்று அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார்.</p><p>"நிலவரி உயர்த்தும் திட்டம் உள்ளதா" என செய்தியாளர்கள் கேட்டதற்கு, "தமிழ்நாட்டில் நிலவரி இல்லை. சட்டமன்றக் கூட்டத்தொடரில், முதலமைச்சரின் ஆணைப்படி, அவருடைய ஒப்புதலுடன் நிலவரி ரத்து செய்யப்பட்டுள்ளது. சுமார் ரூ.28 கோடி அளவிலான நிலவரி முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. நிலவரி என்பது விவசாயிகளுக்குத் தேவையில்லாதது' என அமைச்சர் பதிலளித்தார்.</p><p>அமைச்சர் செங்கோட்டையன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது திடீரென மின்தடை ஏற்பட்டது. உடனே பத்திரிகையாளர்கள் மொபைல் போனில் டார்ச் லைட் அடித்தனர். அந்த வெளிச்சத்தில் அமைச்சர் பேட்டி அளித்தார். பின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு மின்சாரம் வந்தது.</p>]]></content:encoded></item><item><title>பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் தேரோட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chariot-procession-at-the-pillaiyarpatti-karpaga-vinayagar-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chariot-procession-at-the-pillaiyarpatti-karpaga-vinayagar-temple#comments</comments><guid isPermaLink="false">06a1b6eb-7ff8-483e-89c9-a4b6fefcbdbe</guid><pubDate>Mon, 14 Sep 2026 06:59:04 +0000</pubDate><atom:updated>2026-09-14T06:59:04.203Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Festival,Therottam,தேரோட்டம்,விநாயகர் சதுர்த்தி விழா,Pillaiyarpatti Karpaga Vinayagar,பிள்ளையார்பட்டி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/jfhbg00j/Pillaiyarpatti-Therottam.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ தேரோட்டம்]]></media:title><media:description type="html"><![CDATA[ பிள்ளையார்பட்டி விநாயகர் சதுர்த்தி விழா, தேரோட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/jfhbg00j/Pillaiyarpatti-Therottam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பத்தூர், </p><p>விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து தேர் இழுத்தனர்.</p><h2>கற்பக விநாயகர் கோவில்</h2><p>சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் <a href="https://www.dailythanthi.com/topic/விநாயகர்-சதுர்த்தி-விழா">விநாயகர் சதுர்த்தி விழா</a> 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டின் சதுர்த்தி விழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.</p><p>விழாவையொட்டி நாள்தோறும் இரவு வாகன வீதி உலா நடைபெற்றது. மூஷிக வாகனம், சிம்ம வாகனம், பூத வாகனம், கமல வாகனம், ரிஷப வாகனம், மயில் வாகனம், குதிரை வாகனம் என தினமும் வெவ்வேறு வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் கஜமுக சூரசம்ஹாரமும் நடந்தது.</p><figure><img alt="பிள்ளையார்பட்டி விநாயகர் சதுர்த்தி விழா, தேரோட்டம்" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/dfvb0wrb/Pillaiyarpatti-Therottam2.jpg" /><figcaption>பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுத்த சண்டிகேஸ்வரர் தேர்.</figcaption></figure><h2>தேரோட்டம்</h2><p>விழாவின் 9-ம் நாளான நேற்று மாலை தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக கோவில் திருக்குளத்தின் முன்பு அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் கற்பகவிநாயகரும், சிறிய தேரில் சண்டிகேசுவரரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து தேரில் எழுந்தருளிய சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது.</p><p>தொடர்ந்து மாலை 5 மணிக்கு <a href="https://www.dailythanthi.com/topic/therottam">தேரோட்டம்</a> தொடங்கியது. பெரிய தேரை ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். பின்னால் வந்த சிறிய தேரான சண்டிகேஸ்வரர் தேரை பெண்கள் மட்டுமே இழுத்து வந்தனர். தேர் கோவிலை சுற்றி நான்கு ரத வீதி வழியாக வந்து நிலையை அடைந்தது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.</p><h2>சந்தனகாப்பு அலங்காரம்</h2><p>முன்னதாக ஆண்டிற்கு ஒரு முறை சந்தனகாப்பு அலங்காரத்தில் மூலவர் காட்சியளிக்கும் நிகழ்ச்சி நேற்று தேரோட்டத்துக்கு முன்பாக நடைபெற்றது. நேற்று மாலை 4.30 மணி முதல் மூலவருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் இரவு 10 மணி வரை பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கற்பகவிநாயகரை தரிசனம் செய்தனர்.</p><h2>விநாயகர் சதுர்த்தி</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE">விநாயகர் சதுர்த்தியான இன்று</a> (திங்கட்கிழமை) அதிகாலை கோவில் நடைதிறக்கப்பட்டு மூலவர் கற்பகவிநாயகர் தங்கஅங்கியில் எழுந்தருளி அருள்பாலித்தார். உற்சவர் தங்க மூஷிக வாகனத்தில் கோவில் திருக்குளத்தில் எழுந்தருள, அங்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து மதியம் உச்சிகால பூஜையின்போது மூலவர் கற்பகவிநாயகருக்கு முக்குறுணி கொழுக்கட்டை படைக்கப்பட்டது. இரவு பஞ்சமூர்த்தி சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியுடன் விழா நிறைவுபெறுகிறது.</p>]]></content:encoded></item><item><title>அநாகரிகமாக பேசும் திமுகவினரை மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் - திருமாவளவன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalin-must-reprimand-dmk-members-who-speak-uncivilly-thirumavalavan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalin-must-reprimand-dmk-members-who-speak-uncivilly-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">2aa61206-7fc4-4e66-8f9f-e8bca3e735ad</guid><pubDate>Mon, 14 Sep 2026 06:44:27 +0000</pubDate><atom:updated>2026-09-14T06:44:27.393Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,M.K.Stalin,திருமாவளவன்,Thirumavalavan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/jwo9k7w8/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/jwo9k7w8/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரையில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>இடைத்தேர்தலில் இடதுசாரிகள் தனித்துப் போட்டி என்றாலும் தவெக ஆட்சி தொடர ஆதரவு நீடிக்கும். இடதுசாரிகள் எடுத்துள்ள முடிவு அவர்களின் அரசியல் உரிமை. இடதுசாரிகள் இடைத்தேர்தலில் போட்டியிடுவதால் தவெக கூட்டணிக்கு பாதிப்பு இல்லை. இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து விசிக பிரசாரம் செய்யும்.</p><p>போராட்டத்தின்போது நாகரிக வரம்புகளை மீறி திமுகவினர் சிலர் அநாகரிகமாக பேசியுள்ளனர். ஈன்ற தாயைப் பழிக்கும் இழிச்சொற்களால் அரசியல் எதிரிகளை விமர்சிப்பது அழகல்ல; அமைச்சர் நிர்மல்குமாரின் தாயை பழிக்கும் வகையில் திமுக எம்.பி. ஆ.ராசா பேசியதை விசிக கண்டிக்கிறது. பக்குவப்படுத்தப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் கொச்சையாக பேசுவது கவலை அளிக்கிறது.</p><p>திமுகவினரின் அநாகரிகமான பேச்சு தவெகவிற்கு எதிராக போகும் என்பதைவிட, திமுகவிற்கு எதிராக மக்களிடத்திலே கருத்து பதிவாகும் என்பதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அநாகரிகமாக பேசும் திமுகவினரை வெளிப்படையாக, பொதுமக்கள் அறியக்கூடிய வகையில் மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தி திருநாள்: அண்ணாமலை வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-chaturthi-annamalai-wishes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-chaturthi-annamalai-wishes#comments</comments><guid isPermaLink="false">648efbd3-bdbf-4c3c-8bf3-e2ef38b7d2b8</guid><pubDate>Mon, 14 Sep 2026 05:58:18 +0000</pubDate><atom:updated>2026-09-14T05:58:18.276Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Annamalai,அண்ணாமலை,சென்னை,வாழ்த்து,Vinayagar Chaturthi,விநாயகர் சதுர்த்தி,best wishes</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/ddvxl6ka/330.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அண்ணாமலை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/ddvxl6ka/330.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு வி தி லீடர்ஸ் இயக்கத்தின் நிறுவனர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். </p><h2>வாழ்த்து</h2><p>இது தொடர்பாக, அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். விநாயகப் பெருமானின் அருளால், அனைவருக்கும் எண்ணிய காரியங்கள் அனைத்தும் இனிதே நிறைவேறட்டும். </p><p>வாழ்வில் வளமும், நலமும், மகிழ்ச்சியும் பெருகி, குடும்பத்தில் அன்பும் அமைதியும் என்றும் நிலைத்திருக்கட்டும். இனிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">விநாயகர் சதுர்த்தி</a> நல்வாழ்த்துக்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/inflow-to-mettur-dam-increases-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/inflow-to-mettur-dam-increases-2#comments</comments><guid isPermaLink="false">db83c84c-68ea-4676-996d-53fc9fcb5dfe</guid><pubDate>Mon, 14 Sep 2026 05:56:38 +0000</pubDate><atom:updated>2026-09-14T05:56:38.837Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur dam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/13w455x3/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/13w455x3/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு நேற்று முன்தினம் வினாடிக்கு 9 ஆயிரத்து 786 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதன்காரணமாக ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது.</p><p>இதன்காரணமாக ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தாலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.</p><p>இந்த நிலையில், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று 7 ஆயிரத்து 598 கனஅடியாக இருந்த நிலையில், இன்று காலை 10 மணி நிலவரப்படி 8,618 கன அடியாக அதிகரித்துள்ளது.  தற்போதைய நிலையில் அணைக்கு நீர்வரத்தானது தண்ணீர் திறப்பை விட குறைவாகவே இருப்பதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. அணையின் நீர்மட்டம் 88.21 அடியாக சரிந்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக 12000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ரூ.25 லட்சம் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர்!</title><link>https://www.dailythanthi.com/devotional/from-rs1-to-rs500-vinayagar-adorned-with-new-currency-notes</link><comments>https://www.dailythanthi.com/devotional/from-rs1-to-rs500-vinayagar-adorned-with-new-currency-notes#comments</comments><guid isPermaLink="false">05b8d872-6428-4330-91ee-2ec0f74709f2</guid><pubDate>Mon, 14 Sep 2026 05:51:18 +0000</pubDate><atom:updated>2026-09-14T05:51:18.606Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Kanchipuram,காஞ்சிபுரம்,விநாயகர் கோவில்,சிறப்பு அலங்காரம்,Vinayagar Chathurthi,புதிய ரூபாய் நோட்டுகள்,New currency notes</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/f33ez8cl/331.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விநாயகர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/f33ez8cl/331.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (Devotional)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>காஞ்சிபுரம்,</p><p>காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் சன்னதி தெருவில் ஸ்ரீ ஏலேல சிங்க விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 25-வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.</p><h2>அலங்காரம்</h2><p>இதையொட்டி, கோவில் சன்னதி முழுவதும் ரூ.1, ரூ.2, ரூ.5 மற்றும் ரூ.500 உள்ளிட்ட புதிய ரூபாய் நோட்டுகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மொத்தம் ரூ.25 லட்சம் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகள் இந்த அலங்காரத்திற்காக பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.</p><h2>தரிசனம்</h2><p>புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஏலேல சிங்க விநாயகர் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">சாமி தரிசனம்</a> செய்து வழிபட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>ஆம்னி பஸ்சில் 40 பவுன் நகைகள் கொள்ளை: மத்தியபிரதேசத்தில் பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளி கைது!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/40-sovereign-jewelry-stolen-from-omni-bus-main-culprit-hiding-in-madhya-pradesh-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/40-sovereign-jewelry-stolen-from-omni-bus-main-culprit-hiding-in-madhya-pradesh-arrested#comments</comments><guid isPermaLink="false">b1e40ac7-df4c-4475-9dac-09cb8ddb9f61</guid><pubDate>Mon, 14 Sep 2026 05:32:29 +0000</pubDate><atom:updated>2026-09-14T05:32:29.722Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,மத்தியபிரதேசம்,கைது,arrest,குற்றவாளி,jewelry,நகை,Madhya Pradesh:,பஸ் bus</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/kltvh9r1/329.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/kltvh9r1/329.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>நெல்லை மாவட்டம், பொதிகை நகரைச் சேர்ந்தவர் ஜஸ்டின் (வயது 56). இவருடைய மனைவி ஜூலியட். இவர் ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் 2 பேரும் சென்னையில் உள்ள மகன் வீட்டுக்கு செல்வதற்காக கடந்த மாதம் 27-ந் தேதி இரவில் நெல்லையில் இருந்து ஆம்னி பஸ்சில் புறப்பட்டு சென்றனர்.</p><h2>கொள்ளை</h2><p>அவர்கள் சுமார் 40 பவுன் தங்க நகைகளை கைப்பையில் வைத்திருந்தனர். அந்த பஸ், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சுங்கச்சாவடியை கடந்து கரிசல்குளம் விலக்கு அருகில் சென்ற போது, சாலையோர ஓட்டலில் பயணிகள் சாப்பிடுவதற்காக டிரைவர் பஸ்சை நிறுத்தினார்.</p><p>அப்போது அந்த கைப்பையை பஸ்சிலேயே வைத்து விட்டு ஜஸ்டினும், ஜூலியட்டும் உணவு சாப்பிட சென்றனர். சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது பஸ்சுக்குள் வைத்திருந்த கைப்பையில் இருந்த 40 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.</p><h2>தனிப்படை</h2><p>இதுகுறித்த புகாரின் பேரில் காயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பஸ்சில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் சம்பவ நேரத்தில் பதிவான செல்போன் தொடர்புகள் குறித்து ஆய்வு செய்தனர். அதில், நகை திருட்டில் ஈடுபட்டவர்கள் மத்தியபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின்படியும், கோவில்பட்டி உதவி போலீஸ் சூப்பிரண்டு நீல் சர்மா ஆலோசனையின் படியும், கோவில்பட்டி மேற்கு இன்ஸ்பெக்டர் வானமாமலை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.</p><h2>கைது</h2><p>இந்த தனிப்படை போலீசார் மத்தியபிரதேசத்துக்கு சென்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் முக்கிய குற்றவாளியான மக்சூத் கான் (35) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 40 பவுன் தங்க நகைகளும் பத்திரமாக மீட்கப்பட்டன. ஆனால் இந்த நகை கொள்ளையில் தொடர்புடைய அவரது கூட்டாளிகளான ரபிக் (40), கடுக்கான் என்ற முகதின் கான் ஆகிய 2 பேர் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. </p><p>இதையடுத்து மக்சூத்கானை தனிப்படை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார் </a>கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்திற்கு நேற்று அழைத்து வந்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தப்பி ஓடிய கூட்டாளிகள் 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தங்கம் விலை சற்று குறைந்தது... இன்றைய நிலவரம் என்ன..?</title><link>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-dips-slightly-todays-rates</link><comments>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-dips-slightly-todays-rates#comments</comments><guid isPermaLink="false">7681ca2e-ecd2-4e6c-84a6-99d2ee2a5b05</guid><pubDate>Mon, 14 Sep 2026 04:27:08 +0000</pubDate><atom:updated>2026-09-14T04:27:08.066Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Gold Rate,தங்கம் விலை,வெள்ளி விலை,Silver rate,Gold Price,Silver Price,விலை நிலவரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/4pr9our9/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/4pr9our9/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தங்கம் (Gold Rate)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.1,13,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.15 உயர்ந்து 14,170-க்கு விற்பனை செய்யப்பட்டது.</p><p>இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.360 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.45 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,125-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>தேசிய அளவில் மு.க.ஸ்டாலின் தலைமையில் 3-வது அணியை உருவாக்க திமுக முயற்சி..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-attempts-to-form-a-third-front-at-the-national-level-under-the-leadership-of-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-attempts-to-form-a-third-front-at-the-national-level-under-the-leadership-of-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">6db676c6-7139-4dcc-bdeb-600f3ae95347</guid><pubDate>Mon, 14 Sep 2026 04:00:43 +0000</pubDate><atom:updated>2026-09-14T04:00:43.845Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,M.K.Stalin,கனிமொழி எம்.பி.,Kanimozhi MP,உத்தவ் தாக்கரே,Uddav Thackeray</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/h2nvwkpq/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/h2nvwkpq/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாடாளுமன்ற மக்களவையில் தொகுதி மறுவரையறை மற்றும் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பு திருத்த மசோதா தோல்வியடைந்தது. இதனை தொடர்ந்து, 'இந்தியா' கூட்டணியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விவாதிக்க தி.மு.க. நாடாளுமன்ற குழுத்தலைவரும், எம்.பி.யுமான கனிமொழி, மும்பை பந்திராவில் உள்ள உத்தவ் தாக்கரேவின் 'மாதோஸ்ரீ' இல்லத்திற்கு நேற்று முன்தினம் சென்றார். </p><p>இல்லத்திற்கு வந்த கனிமொழி எம்.பி.யை உத்தவ் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேரில் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். இந்த சந்திப்பின் போது உத்தவ் சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனில் தேசாய் மற்றும் மிலிந்த் நர்வேக்கர் ஆகியோரும் உடன் இருந்தனர். இந்த சந்திப்பின்போது, நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா குறித்தும், அது தொடர்பாக இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலைப்பாடு என்ன என்பது குறித்தும் இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர். </p><p>மேலும், 'இந்தியா' கூட்டணியில் உள்ள பிராந்திய மற்றும் சிறிய கட்சிகளின் முக்கியத்துவம் மற்றும் வர விருக்கும் அரசியல் சவால்களில் அவர்களின் பங்கு உள்பட பல்வேறு இதர முக்கிய விஷயங்கள் குறித்தும் இந்த சந்திப்பில் ஒரு மணிநேரம் ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து சரத்பவார் மற்றும் அவரது மகளும் லோக்சபா எம்.பி.யுமான சுப்ரியா சுலே ஆகியோரை டெல்லியில் கனிமொழி சந்தித்து பேசினார்.</p><p>'இந்தியா' கூட்டணியில், காங்கிரசுடன் முரண்பாட்டில் உள்ள மாநில கட் சிகளை ஒன்றிணைத்து, தேசிய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை உருவாக்க திமுக திட்டமிட்டிருப்பதற்கு இந்த சந்திப்புகள், அச்சாரம் என்று கூறப்படுகிறது.</p><p><strong>இதுகுறித்து திமுக நிர்வாகிகள் கூறியதாவது:-</strong></p><p>உத்தவ் தாக்கரேவை, கனிமொழி சந்தித்தபோது, தென் மாநிலங்களை பாதிக்கும் தொகுதி மறுசீரமைப்பு பிரச்சினை குறித்தும் அதற்கு எதிராக மாநில கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவது குறித்தும் கனிமொழி விவாதித்து உள்ளார். மேலும், தேசிய அளவில் மூன்றாவது அணியை உருவாக்குவது குறித்தும் பேசியுள்ளார். சென்னையில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நடந்த தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்றது; திமுக, புறக்கணித்தது.</p><p>இதேபோல, மராட்டியத்தில், காங்கிரசுடன் உத்தவ் தாக்கரேக்கு கருத்து வேறுபாடு உருவாகி உள்ளது. இந்த சூழலில், மூன்றாவது அணியை உருவாக்க, மாநில கட்சிகளின் தலைவர்களை அடுத்தடுத்து சந்திக்க கனிமொழி திட்டமிட்டுள்ளார். அடுத்தகட்டமாக, ஆம்-ஆத்மி கட்சியை சேர்ந்தவரான பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவையும் கனிமொழி சந்திக்க உள்ளார்.</p><p>மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிந்ததும் மேற்கு வங்காள முன்னாள் முதல்-மந்திரி மம்தா பானர்ஜியையும் கனிமொழி சந்தித்து, தேசிய அளவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுவார். இவ்வாறு அவர்கள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை பெண்ணிடம் 26 பவுன் நகை கொள்ளை:  ரெயிலில் தம்பதி கைவரிசை; 2 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-woman-robbed-of-26-pounds-of-jewellery-couple-arrested-on-train-police-recover-it-in-2-hours</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-woman-robbed-of-26-pounds-of-jewellery-couple-arrested-on-train-police-recover-it-in-2-hours#comments</comments><guid isPermaLink="false">58f8832f-8596-4fe2-b7ec-6f42f95a852c</guid><pubDate>Mon, 14 Sep 2026 03:46:33 +0000</pubDate><atom:updated>2026-09-14T03:46:33.753Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,jewellery,நகை கொள்ளை,சென்னை பெண்,robbed</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/ulevsda2/cwirt.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ai image]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/ulevsda2/cwirt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>மதுரை</p><p>ரெயிலில் சென்னை பெண்ணிடம் கொள்ளை போன 26 பவுன் நகையை, தம்பதியிடம் இருந்து 2 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்.</p><p><a href="https://www.dailythanthi.com/">சென்னை</a> தாம்பரம் இரும்புலியூர் பாரதிதாசன் தெருவை சேர்ந்த சேது மனைவி மகாதேவி. இவர் தாம்பரம்-மதுரை கூடல் எக்ஸ்பிரசில் மானாமதுரை செல்வதற்காக சென்னையில் இருந்து வந்துள்ளார். இதற்காக சாதாரண டிக்கெட்டில் ரெயில் என்ஜினுக்கு அடுத்த பொதுப்பெட்டியில் பயணம் செய்தார்.</p> <h2>26 பவுன் நகைகள்</h2><p>இதற்கிடையே அவர் கொண்டு வந்த சுமார் 26 பவுன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் வைத்திருந்த பையை காணவில்லை என்று கூடல்நகர் ரெயில்வே ஸ்டேசன் மாஸ்டரிடம் தெரிவித்துள்ளார்.  தொடர்ந்து கூடல்நகர் ஸ்டேசன் மாஸ்டர் இதுகுறித்து மதுரை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.</p><p>ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் ஏட்டு சத்தியமூர்த்தி ரெயில் மதுரை வந்தவுடன், குறிப்பிட்ட பெட்டியில் ஏறி சோதனை செய்தபோது நகைப்பை எதுவும் கிடைக்கவில்லை. பின்னர் மதுரை ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, வயதான தம்பதி மகாதேவியின் பையுடன் சென்னை-கன்னியாகுமரி சிறப்பு ரெயிலின் பொதுப்பெட்டியில் ஏறியது தெரியவந்தது.</p> <h2>2 மணி நேரத்தில் மீட்பு</h2><p>உடனடியாக விருதுநகர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சுடலை, ஏட்டு முருகன் மற்றும் தமிழக ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் ரெயில் விருதுநகர் ரெயில் நிலையத்தை கடந்து விட்டது. பின்னர் விருதுநகர் ரெயில் நிலைய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அங்குள்ள ஆட்டோ டிரைவர்களிடம் விசாரணை நடத்தினர்.</p><p>அதில், சந்தேகத்துக்கு இடமான தம்பதி ஆட்டோவில் விருதுநகர் பஸ் நிலையம் சென்றது தெரியவந்தது.  உடனடியாக ரெயில்வே போலீசார் விருதுநகர் பஸ் நிலையம் சென்றனர். அப்போது அங்கு நின்றிருந்த வயதான தம்பதியை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் சென்னை வண்ணாரப்பேட்டை ஜெ.ஜெ.நகரை சேர்ந்த காளியப்பன் (66), அவரது மனைவி சோலையம்மாள் (62) என்பதும், மகாதேவியின் நகைப்பையை திருடியதும் தெரியவந்தது.</p><p>அவர்களிடம் இருந்து நகை மற்றும் ரொக்கப்பணம் வைத்திருந்த பையை போலீசார் 2 மணி நேரத்தில் மீட்டனர். இதுதொடர்பாக மதுரை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பதியை கைது செய்து மதுரை 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ஆனால், வயது முதிர்வு காரணமாக அவர்கள் 2 பேரையும் நீதிபதி ஜாமீனில் விடுவித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை: அரசு பஸ்களில் 2.31 லட்சம் பேர் பயணம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-chaturthi-series-holiday-231-lakh-people-travel-in-government-buses</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-chaturthi-series-holiday-231-lakh-people-travel-in-government-buses#comments</comments><guid isPermaLink="false">c3a36a2a-e02d-4da4-bb03-b3cca53a3171</guid><pubDate>Mon, 14 Sep 2026 03:32:39 +0000</pubDate><atom:updated>2026-09-14T03:32:39.496Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Government bus,Holiday,சிறப்பு பஸ்,பயணம்,Vinayagar Chaturthi,விநாயகர் சதுர்த்தி,தொடர் விடுமுறையையொட்டி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/m1woloha/327.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பயணம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/m1woloha/327.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையையொட்டி, சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசு பஸ்களில் 11, 12-ந்தேதிகளில் 2 லட்சத்து 31 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர்.</p><h2>சிறப்பு பஸ்</h2><p>தொடர் விடுமுறை முடிந்து 14 மற்றும் 16-ந் தேதிகளில் சென்னை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, பயணிகள் சிரமமின்றி சென்னை திரும்பும் வகையில் 14-ந்தேதி 2,240 சிறப்பு பஸ்களும், 15-ந்தேதி 1,325 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 3,565 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.</p><p>மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் வரும் பயணிகள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்லும் வகையில், மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">போக்குவரத்துத்துறை</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>