<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 17 Sep 2026 01:31:11 +0000</lastBuildDate><item><title>கும்பாபிஷேக பாதுகாப்பு பணி: போலீசார் தங்குவதற்காக மதுரையில் 24 பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kumbabishekam-security-duty-two-day-holiday-for-24-schools-in-madurai-to-accommodate-police-personnel</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kumbabishekam-security-duty-two-day-holiday-for-24-schools-in-madurai-to-accommodate-police-personnel#comments</comments><guid isPermaLink="false">53dadfc6-e472-401c-8af0-59d1768b2547</guid><pubDate>Thu, 17 Sep 2026 01:30:39 +0000</pubDate><atom:updated>2026-09-17T01:30:39.399Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,Madurai,மதுரை,பள்ளிகளுக்கு விடுமுறை,மதுரை மீனாட்சி அம்மன் கோவில்,school holiday,போலீசார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/m3pe2luq/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/m3pe2luq/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இன்று (வியாழக்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது. இந்த விழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதற்காக சுமார் 6,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த பணிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் வந்துள்ளனர். </p><p>ஆனால், இவர்களை தனியார் மண்டபங்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து, மதுரை நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்களில் போலீசார் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><p>அதன்படி விளக்குத்தூண் அவ்வையார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, எம்.ஏ.வி.எம்.எம். மேல்நிலைப்பள்ளி, அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப்பள்ளி, திலகர்திடல் மீனாட்சி பெண்கள், மங்கையர்க்கரசி, வீரமாமுனிவர், சேதுபதி, மீனாட்சி பஜார் தொழிலாளர் நலத்துறை ஆகிய மேல்நிலைப்பள்ளிகள், தெப்பக்குளம் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சவுராஷ்டிரா ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள். மீனாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தியாகராஜர் மாதிரி மேல்நிலைப்பள்ளி, அண்ணாநகர் எம்.வி.எம்.எம். மேல்நிலைப்பள்ளி, மதிச்சியம் இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, கீரைத்துறை செயிண்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளி, தெற்குவாசல் ஈ.வெ.ரா. பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 24 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.</p><p>ஏற்கனவே, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் இன்று ஒரு நாள் விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில், மேற்கண்ட பள்ளிகளுக்கு மட்டும் நேற்றும் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த பள்ளிகள் மட்டும் அடுத்த மாதம் ஒரு சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக செயல்பட வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தயாளன் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மது போதையில் அண்ணனை தாக்கியதில் மரணம்: 2 சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு 5 ஆண்டுகள் சிறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/2-convicted-criminals-sentenced-to-5-years-in-prison-for-beating-brother-to-death-while-under-the-influence-of-alcohol</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/2-convicted-criminals-sentenced-to-5-years-in-prison-for-beating-brother-to-death-while-under-the-influence-of-alcohol#comments</comments><guid isPermaLink="false">4ad94a0b-ae22-4001-82f4-59c38653fb3c</guid><pubDate>Thu, 17 Sep 2026 01:24:26 +0000</pubDate><atom:updated>2026-09-17T01:24:26.885Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தாக்குதல்,drunkenness,Tirunelveli,திருநெல்வேலி,சிறை தண்டனை,jail sentence,Death,மரணம்,attack,brother,மதுபோதை,அண்ணன்,2 people,2 பேருக்கு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/vsbb4w4q/2-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-5-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  2 சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு 5 ஆண்டுகள் சிறை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/vsbb4w4q/2-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-5-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டம், திசையன்விளை அருகே <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88">மதுபோதை</a>யில் அண்ணனை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">தாக்கி</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D">மரணம்</a> ஏற்படுத்திய வழக்கில் தம்பி உள்பட 2 சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">சிறை தண்டனை</a> மற்றம் ரூ.1,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>மதுபோதையில் தாக்கி உயிரிழப்பு</h2><p>திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே கடந்த 2021-ம் ஆண்டு,  அந்தோணியார்புரத்தை சேர்ந்த மிக்கேல்தயாளன் (வயது 50) என்பவரை அவரது தம்பி அந்தோணிமில்டன்(45) மற்றும் அவரது உறவினரான தனசிங்(35) ஆகிய 2 பேரும் சேர்ந்து மதுபோதையில் முன்விரோதம் காரணமாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக திசையன்விளை போலீஸ் நிலையத்தில் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு, அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் புலன் விசாரணை மேற்கொண்டு மேற்சொன்ன நபர்களை கைது செய்தார்.</p><h2>கொலையாகாத மரணம் விளைவித்த குற்றம்</h2><p>புலன் விசாரணை முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து வழக்கின் விசாரணையானது, வள்ளியூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் (எண்-V) நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ராஜ்மோகன், மேற்சொன்ன நபர்கள் புரிந்த குற்றத்தை கொலையாகாத மரணம் விளைவித்த குற்றம் (IPC 304(ii)) என தீர்மானித்து, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கினார். </p><h2>தண்டனை விபரம்</h2><p>IPC 304(ii)-ன்படி 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம், IPC 201-ன்படி 1 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.500 அபராதம், மேலும் மேற்சொன்ன தண்டனைகளை குற்றவாளிகள் ஏககாலத்தில் (Concurrent) அனுபவிக்க நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டார். குற்றவாளிகள் 2 பேரும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் (History Sheet offenders) என்பது குறிப்பிடத்தக்கது. </p><h2>எஸ்.பி. பாராட்டு</h2><p>இந்த வழக்கில் திறம்பட சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த வள்ளியூர் உட்கோட்ட டி.எஸ்.பி. வெங்கடேஷ், திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் எழில் சுரேஷ்சிங், இவ்வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் (தற்போது உதவி கமிஷனர், சென்னை மாநகரம்), வழக்கில் விசாரணைக்கு உதவி செய்த நீதிமன்ற காவலர் சபரிஸ் செல்வா மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர சிறப்பாக வாதிட்ட அரசு வழக்கறிஞர் வடிவேல் ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி பாராட்டினார்.</p><h2>7 கொலை வழக்குகளில் 14 பேருக்கு தண்டனை</h2><p>திருநெல்வேலி மாவட்டத்தில் 2026-ம் ஆண்டில் இதுவரை 7 கொலை வழக்குகளில் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு, 14 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. இதில் 6 சரித்திர பதிவேடு உடைய குற்றவாளிகள் உள்பட 8 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.</p><p>திருநெல்வேலி மாவட்ட காவல்துறையானது, நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரும் முனைப்பில் தொடர்ந்து உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&apos;வெண்ணிலா கபடி குழு&apos; பாணியில் போட்டி: 16 புரோட்டாக்கள் சாப்பிட்டவருக்கு ரூ.6 ஆயிரம் பரிசு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vennila-kabadi-kuzhu-style-parotta-eating-contest-16-parottas-6k-prize</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vennila-kabadi-kuzhu-style-parotta-eating-contest-16-parottas-6k-prize#comments</comments><guid isPermaLink="false">2ca55d49-fe8c-42dc-a3a2-d8356180392f</guid><pubDate>Thu, 17 Sep 2026 01:20:43 +0000</pubDate><atom:updated>2026-09-17T01:20:43.181Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Karaikudi,காரைக்குடி,சிவகங்கை,Parotta,food eating,சாப்பிடும் போட்டி,புரோட்டா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/fle0mdvv/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/fle0mdvv/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>காரைக்குடி,</p><p>காரைக்குடியில் நடைபெற்ற புரோட்டா சாப்பிடும் போட்டியில் 16 புரோட்டாக்கள் சாப்பிட்டவர் வெற்றி பெற்றார்.</p><h2>புரோட்டா சாப்பிடும் போட்டி</h2><p>'வெண்ணிலா கபடி குழு' படத்தில் ஒரு கடையில் 50 புரோட்டா சாப்பிடும் போட்டியில் நடிகர் சூரி பங்கேற்று சாப்பிடுவது போன்ற காமெடி காட்சி பிரபலம். அதை நினைவுப்படுத்தும் வகையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட இந்து முன்னணி சார்பில் காரைக்குடி நூறடி ரோட்டில் உள்ள ஒரு கடையில் புரோட்டா சாப்பிடும் போட்டி நடைபெற்றது.</p><h2>16 புரோட்டாக்கள்</h2><p>இதில் 2 சிறுவர்கள் உள்பட 8 பேர் கலந்து கொண்டு போட்டிபோட்டு சாப்பிட்டனர். இந்த போட்டியில் காரைக்குடியை சேர்ந்த சேகர் என்பவர் அதிகபட்சமாக 16 புரோட்டாக்கள் சாப்பிட்டு வெற்றி பெற்றார்.
</p><h2>தீய பழக்கம் இல்லை</h2><p>அவருக்கு இந்து முன்னணி சார்பில் ரூ.6 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது. இதுகுறித்து சேகர் கூறுகையில், எனக்கு புகைத்தல், மது உள்ளிட்ட எந்த கெட்ட பழக்கமும் இல்லாததால் அதிக புரோட்டா சாப்பிட முடிந்தது. வாழ்க்கையில் தீய பழக்கம் இல்லாத நபர்கள் எதிலும் வெற்றி பெறலாம் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>மரவள்ளி கிழங்கு விலை உயர்வு: டன் ரூ.15,500க்கு விற்பனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rise-in-tapioca-prices-sold-at-15500-per-tonne</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rise-in-tapioca-prices-sold-at-15500-per-tonne#comments</comments><guid isPermaLink="false">2cbe555f-2fdc-46c1-b647-6dba05c799bb</guid><pubDate>Thu, 17 Sep 2026 01:20:00 +0000</pubDate><atom:updated>2026-09-17T01:20:00.287Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>விற்பனை,sales,மரவல்லிக்கிழங்கு</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/sfcw7rw2/4.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/sfcw7rw2/4.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,  </p><p>மரவள்ளி கிழங்கு விலை உயர்ந்து, டன், 15 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. தமிழகத்தில் மரவள்ளி கிழங்கு உணவுக்கும், சிப்ஸ் போன்ற ஸ்நாக்ஸ்களில் பயன்படுத்தவும், ஸ்டார்ச் மாவு, ஜவ்வரிசி உற்பத்திக்கும் பயன்படுகிறது.</p><p>ஈரோடு மாவட்டத்தில் மார்ச் முதல் மூன்று மாதங்கள் அறுவடை சீசனாகும். கடந்தாண்டும், இந்தாண்டும் மழை இன்மையால் உற்பத்தி, வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு குறித்து தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க தலைவர் சுதந்திரராசு கூறுகையில், "கடந்த ஜனவரி மாதம் டன், 8,000 முதல் 9,000 ரூபாய்க்கு விற்பனையானது. சீசன் நேரம் வரத்து இருந்ததால் விலை குறைந்தும், சீராகவும் இருந்தது. தற்போது குறைந்த அளவே அறுவடையாவதால், ஆலைக்கு, டன், 15 ஆயிரத்து 500 ரூபாய்க்கு வாங்கி செல்கின்றனர்.</p><p>"கடந்த மாதத்தை ஒப்பிடும்போது, 500 முதல் 800 ரூபாய் விலை அதிகம். உணவு, சிப்ஸ் போன்ற பயன்பாட்டுக்கு டன், 18 ஆயிரம் முதல், 20 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி செல்கின்றனர். தற்போது, விலை நன்றாக இருப்பதால், லாபம் கிடைக்கிறது. ஆனால், வரத்து குறைவாகவே உள்ளது," என்றார்.</p>]]></content:encoded></item><item><title>சுபமுகூர்த்த தினம்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/subhamukurtha-day-additional-tokens-allocated-at-sub-registrar-offices</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/subhamukurtha-day-additional-tokens-allocated-at-sub-registrar-offices#comments</comments><guid isPermaLink="false">23c52cee-344c-45e9-be91-dab008e3f106</guid><pubDate>Thu, 17 Sep 2026 01:18:08 +0000</pubDate><atom:updated>2026-09-17T01:18:08.538Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,சுபமுகூர்த்த தினம்,டோக்கன்,Sub-Registrar,சார்பதிவாளர் அலுவலகம்,tokens,ஒதுக்கீடு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/6ma77hyg/353.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சார்பதிவாளர் அலுவலகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/6ma77hyg/353.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி. அருண் சுந்தர் தயாளன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>கூடுதல் முன்பதிவு</h2><p>சுபமுகூர்த்த மற்றும் விசேஷ தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. </p><p>தற்போது ஆவணி மாதத்தில் வரும் கடைசி முகூர்த்த தினமான 17-ந்தேதி (இன்று) அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">முன்பதிவு டோக்கன்கள்</a> ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.</p><p>எனவே, இன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களோடு ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களோடு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>7 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/weather/heavy-rain-set-to-lash-7-districts-weather-office-issues-warning</link><comments>https://www.dailythanthi.com/news/weather/heavy-rain-set-to-lash-7-districts-weather-office-issues-warning#comments</comments><guid isPermaLink="false">77958742-7429-4551-85a7-c24d87934d76</guid><pubDate>Thu, 17 Sep 2026 01:11:03 +0000</pubDate><atom:updated>2026-09-17T01:11:03.936Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Rain,Weather,கனமழை,வானிலை,தமிழகம்,Weather News,WeatherUpdate,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,வானிலை ஆய்வு மையம்,கன மழை,heavy rain,வானிலை அறிக்கை,weather condition,வானிலை தகவல்,Weather Report,வானிலை முன்னறிவிப்பு,Weather Status,Rain Alert,வானிலை அறிவிப்பு,weather center,TN Rain,வானிலை அப்டேட்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/dm8avug2/kut.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/dm8avug2/kut.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 16 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><h2><strong>கனமழை</strong></h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>சுமார் 0.9 கிமீ உயரத்தில் வடக்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தெற்கு உள் கர்நாடகா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><p>சுமார் 1.5 கிமீ உயரத்தில் தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய ராயலசீமா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.</p><p>இதன்காரணமாக <strong><ins>இன்று (17-09-2026):</ins></strong> நீலகிரி, கோயம்புத்தூர், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">கனமழை</a></strong> பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <strong>மழை</strong> பெய்யக்கூடும்.</p> <h2>மழை</h2><p><strong>18-09-2026:</strong> நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">கனமழை</a></strong> பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>19-09-2026:</strong> நீலகிரி, கோயம்புத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">கனமழை</a></strong> பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் ஏனைய வட தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p> <p><strong>20-09-2026:</strong> நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">கனமழை</a></strong><a href="https://www.dailythanthi.com/topic/rain"> </a>பெய்யக்கூடும்.</p><p>ஏனைய வட தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>21-09-2026 மற்றும் 22-09-2026:</strong> வட தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p> <h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong><ins>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</ins></strong></p><p><strong>17-09-2026 முதல் 20-09-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.</p><p><strong><ins>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</ins></strong></p><p><strong>17-09-2026 முதல் 20-09-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.</p><p><strong><ins>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</ins></strong></p><p><strong>இன்று  (17-09-2026):</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>மீனவர்களுக்கான எச்சரிக்கை:</h2><p><strong><ins>வங்கக்கடல் பகுதிகள்:</ins></strong></p><p><strong>17-09-2026:</strong> தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலின் தென் பகுதிகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள், இதர தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>18-09-2026:</strong> தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>19-09-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் தென் பகுதிகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>20-09-2026:</strong> அந்தமான் கடலின் சில பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடலின் தென் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இதர அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p><strong><ins>தமிழக கடலோரப்பகுதிகள் &amp; அரபிக்கடல் பகுதிகள்:</ins></strong> எச்சரிக்கை ஏதுமில்லை.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>நெல்லை-பிரயாக்ராஜ் இடையே இன்று சிறப்பு ரெயில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-nellai-and-prayagraj-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-nellai-and-prayagraj-today#comments</comments><guid isPermaLink="false">4f844384-8bd4-4021-af60-cd21ccdafd04</guid><pubDate>Thu, 17 Sep 2026 01:06:51 +0000</pubDate><atom:updated>2026-09-17T01:06:51.843Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,சிறப்பு ரெயில்,Special train</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/6xyjk4yq/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/6xyjk4yq/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,  </p><p>சேலம், காட்பாடி வழியாக நெல்லை-பிரயாக்ராஜ் இடையே சிறப்பு ரெயில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) முதல் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.</p><h2>சிறப்பு ரெயில்</h2><p>உத்தரபிரதேச மாநிலத்தில் வரலாற்று சிறப்புமிக்க பிரயாக்ராஜ் நகரம் அமைந்துள்ளது. வடக்கு மத்திய ரெயில்வே சார்பில் பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் நெல்லை-பிரயாக்ராஜ் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.</p><p>பிரயாக்ராஜ் பகுதியில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண் 04171) வருகிற நாளை மறுநாள் (சனிக்கிழமை), 26-ந்தேதி, அக்டோபர் 3-ந்தேதி, 10-ந்தேதி ஆகிய சனிக்கிழமைகளில் மதியம் 1.15 மணிக்கு புறப்ப டுகிறது.</p><p>மறுமார்க்கத்தில் நெல்லை-பிரயாக்ராஜ் சிறப்பு ரெயில் (04172) நெல்லை யில் இருந்து வருகிற 21-ந்தேதி, 28-ந்தேதி, அக்டோபர் மாதம் 5-ந்தேதி. 12-ந்தேதி ஆகிய திங்கட்கிழமைகளில் அதிகாலை 3.30 மணிக்கு புறப்படுகிறது.</p><h2></h2><h2>எத்தனை பெட்டிகள்?</h2><p>இந்த ரெயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஜோலார்பேட்டை, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, வாராங்கல், நாக்பூர், ஜபல்பூர் வழி யாக இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் ஒரு ஏ.சி. மூன்றடுக்கு பெட்டி, 12 தூங்கும் வசதியுள்ள இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 6 பொது பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளி பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இதற்கான முன்பதிவு இன்று (வியாழக் கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>புறம்போக்கு நிலங்களில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு: தமிழக அரசு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/electricity-connections-for-houses-on-poramboke-lands-tamil-nadu-government-order</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/electricity-connections-for-houses-on-poramboke-lands-tamil-nadu-government-order#comments</comments><guid isPermaLink="false">049ef045-92a5-4557-beb5-45e722ffd2e2</guid><pubDate>Thu, 17 Sep 2026 01:00:07 +0000</pubDate><atom:updated>2026-09-17T01:00:07.839Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு மின்சார வாரியம்,தமிழக அரசு,TN govt,land,மின் இணைப்பு,Electricity connection,TNEB,புறம்போக்கு நிலம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/po0l5bq8/CHENNAI-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/po0l5bq8/CHENNAI-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-</p><p>புறம்போக்கு நிலங்களில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்குத் தடையில்லா சான்றின்றி மின் இணைப்பு வழங்கக் கோரி பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, புறம்போக்கு நிலங்களில் 250 சதுர அடிக்குள் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு மட்டும், அதி காரிகளின் தடையில்லா சான்று இன்றி வீட்டு உபயோக மின் இணைப்பு வழங்க மின்வாரியத் தலைவருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. </p><p>இருப்பினும், நீர்நிலை, மேய்க்கால், மந்தைவெளி, வனத்துறை நிலங்கள், மத்திய அரசுக்கு சொந்தமான ராணுவ கட்டுப்பாட்டு பகுதிகள், ரெயில்வே நிலங்கள், அனைத்து மத நிறுவனங்களின் பெயரில் உள்ள பட்டா நிலங்கள் மற்றும் கோவில் புறம்போக்கு நிலங்களில் உள்ள வீடுகளுக்கு இச்சலுகை பொருந்தாது.</p><p>இணைப்புகள் ‘குறைந்த அழுத்த மின் கட்டணம் ஐஏ (3) -புறம்போக்கு' பிரிவில் வகைப்படுத்தப்பட்டு, சாதாரண வீட்டு உபயோக கட்டணமே வசூலிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு மின் பகிர்மான விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள 'படிவம் 1'-ஐ பயன்படுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 'படிவம் 6' (பின்னிணைப்பு III)-ல் இழப்பீட்டு பத்திரம் வழங்குவதோடு, வழக்கமான பாதுகாப்பு வைப்புத் தொகையை விட இரு மடங்கு தொகையை செலுத்த வேண்டும்.</p><p>மின் இணைப்பு வழங்குவதற்கான அனைத்து கட்டணங்களும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி விண்ணப்பதாரரிடம் இருந்து வசூலிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் நீதித்துறை சாராத முத்திரைத்தாளில் ஒரு உறுதிமொழி அளிக்க வேண்டும். அதில், அரசுக்கு நிலம் தேவைப்படும்போதோ அல்லது எதிர்காலத்தில் ஏதாவது பிரச்சினை ஏற்படும்போதோ, எந்த நேரத்திலும் மின் இணைப்பு துண்டிக்கப்படும். நிலத்திலிருந்து வெளியேற்றப்படுவோம் என்றும் தெரிந்தே விண்ணப்பிப்பதாக கூற வேண்டும்.</p><p>இந்த மின் இணைப்பு பெறுவதன் மூலம், நிலத்தின் மீது எந்தவிதமான நிரந்தர உரிமையோ அல்லது முழு உரிமையோ கோர முடியாது. தாங்கள் குடியிருக்கும் வீடு தடை செய்யப்பட்ட நீர் நிலை, மேய்க்கால், மந்தைவெளி உள்ளிட்ட புறம்போக்கு நிலங்களில் இல்லை என்றும் அந்த உறுதிமொழிப் பத்திரத்தில் குறிப்பிட வேண்டும். மின் இணைப்பு வழங்குவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட வீடு தடை செய்யப்பட்ட புறம்போக்கு நிலங்களில் இல்லை என் பதை ‘தமிழ் நிலம்' இணையதளத்தின் மூலம் பிரிவு அதிகாரி உறுதிசெய்ய வேண்டும்.</p><p>இந்த அரசாணை வெளியிடப்பட்டதும், தமிழ்நாடு மின் பகிர்மான விதிகளின் விதிமுறை 27 (12)-ல் தேவையான திருத்தங்களை மேற்கொள்வதற்கும், இந்த மின் இணைப்புகளுக்கு தனி கட்டணப் பிரிவை உருவாக்குவதற்கும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தெரிவிக்கப்படும். இந்த திட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில், தாலுகா மற்றும் மாவட்ட வாரியாக எத்தனை பேருக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்ற விரிவான அறிக்கையை 3 மாதங்களுக்கு ஒரு முறை வாரியத் தலைவர் அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கடற்கரை-தாம்பரம் மின்சார ரெயில் சேவையில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-the-beach-tambaram-electric-train-service</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-the-beach-tambaram-electric-train-service#comments</comments><guid isPermaLink="false">bdac8495-c9a6-4ac8-8384-9f6674945c90</guid><pubDate>Thu, 17 Sep 2026 00:52:24 +0000</pubDate><atom:updated>2026-09-17T00:52:24.745Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tambaram,தாம்பரம்,மின்சார ரெயில்,electric train</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/qn6xtvwv/2.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/qn6xtvwv/2.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே குறிப்பிட்ட நேரத்தில் ரெயில்வே ஊழியர்கள் பராமரிப்புப் பணி மேற்கொள்ள இருப்பதால் சில மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன. அதன் விவரம் வருமாறு:-</p><p>* தாம்பரத்தில் இருந்து இன்று (வியாழக்கிழமை) காலை 11, மதியம் 1.30 ஆகிய நேரங்களில் கடற்கரை வரும் மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.</p><p>* சென்னை கடற்கரையில் இருந்து இன்று காலை 11.50, மாலை 3.25 ஆகிய நேரங்களில் தாம்பரம் செல்லும் மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-59</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-59#comments</comments><guid isPermaLink="false">f70bca2b-6fbf-4e4b-8091-b6f7a2aa922a</guid><pubDate>Thu, 17 Sep 2026 00:46:16 +0000</pubDate><atom:updated>2026-09-17T00:46:16.212Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல் விலை,டீசல் விலை,Petrol and diesel prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/5euux7c0/petrol.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/5euux7c0/petrol.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.</p> <h2>பெட்ரோல், டீசல் விலை</h2><p>இந்நிலையில், சென்னையில் இன்று (17.09.2026 வியாழக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ. 99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title> மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: விழாக்கோலம் பூண்டது மதுரை மாநகரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/meenakshi-amman-temple-consecration-madurai-city-wears-a-festive-look</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/meenakshi-amman-temple-consecration-madurai-city-wears-a-festive-look#comments</comments><guid isPermaLink="false">b0d52a6b-04d4-4ad4-abe2-ca8f8920cb38</guid><pubDate>Wed, 16 Sep 2026 23:01:27 +0000</pubDate><atom:updated>2026-09-16T23:01:27.220Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கும்பாபிஷேகம்,Madurai,மதுரை,Meenakshi Amman,மீனாட்சி அம்மன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/ipi6crc1/pooja.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/ipi6crc1/pooja.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று (வியாழக்கிழமை) காலையில் கோலாகலமாக நடக்கிறது.இதை முன்னிட்டு கோவிலில் பல மாதங்களாக திருப்பணிகள் ரூ.25 கோடி மதிப்பில் நடந்தன. தீவிபத்தில் சேதம் அடைந்த வீரவசந்தராயர் மண்டபம் புனரமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. யாகசாலை பூஜைக்காக வடக்கு ஆடி வீதியில் 184 குண்டங்களுடன் பிர மாண்ட யாகசாலை அமைக்கப்பட்டது. மூலவர் மீனாட்சி அம்மன், சுந்த ரேசுவரருக்காக பிரத்யேக தங்க குடங்கள் யாக சாலையில் வைக்கப்பட் டன. கங்கை, யமுனை, காவிரி, வைகை உள்ளிட்ட பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரை கலசங்களில் நிரப்பி யாகசாலை யில் வைத்து தினமும் பூஜைகள் நடந்து வருகின்றன. 400-க்கும் மேற் பட்ட சிவாச்சாரியார்கள் வேள்விகளை நடத்திவருகின்றனர். கடந்த 11-ந் தேதியன்று முதல்கால யாக பூைஜகள் தொடங்கிய நிலையில், மற்ற கால பூஜைகளும் நடந்து வந்தன.</p><h2>பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம்</h2><p>நேற்று அதிகாலை 3.45 மணி அளவில் 10-ம்கால யாகசாலை பூஜைகள் நடந்தன. அந்த வழிபாடு நிறைவு பெற்ற பிறகு பரிவார தெய்வங்களுக் கான கும்பாபிஷேகம் தொடங்கியது.மேளதாளங்கள் முழங்க யானை, டங்கா மாடு அணிவகுத்து செல்ல யாக சாலையில் இருந்து புனிதநீர் கலசங்கள் புறப்பாடாகி கோவிலுக்குள் உள்ள பரிவார தெய்வங்கள் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டன. காலை 5 மணி முதல் 6 மணிக்குள் சித்தி விநாயகர், கூடல்குமாரர், தட் சிணாமூர்த்தி, துர்க்கை, மகாலட்சுமி, பத்திரகாளி, அக்னி வீரபத்திரர், 63 நாயன்மார்கள், நவகிரகங்கள் உள்பட 414 பரிவார தெய்வங்களுக்கு நேற்று புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.மூலவர் மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர். தங்க விமானங்கள், சன்னதி விமானங்கள், 12 கோபுரங்கள் உள்ளிட்டவற்றுக்கான கும்ப கலசங்களுக்கு நேற்று மாலை 11-ம் கால யாகசாலை<a href="https://www.dailythanthi.com/devotional"> பூஜைகள்</a> நடந்தன. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.</p><h2>இன்று மகா கும்பாபிஷேகம்</h2><p>விழாவின் சிகரமாக மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் மகா கும்பாபிஷேக விழா இன்று (வியாழக்கிழமை) காலையில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதனால் மதுரை மாநகர் விழாக்கோலம் பூண்டு காணும் இட மெல்லாம் மின்னொளி அலங்காரத்தில் ஜொலிக்கிறது. முன்னதாக இன்று அதிகாலை 3.45 மணிக்கு 12-ம் கால யாக பூஜை நடைபெற்றது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கடங்கள் புறப் பாடு 5.45 மணிக்கு  நடைபெற்றது. அதனை சிவாச்சாரியார்கள் 4 ராஜ கோபுரங்கள் உள்பட 12 கோபுரங்கள், தங்க விமானங்களுக்கு கொண்டு சென்றபிறகு சரியாக 7.40 மணிக்கு கோபுரங்களுக்கு பக்தி கோஷங்கள் விண்ணதிர முழங்க கும்பாபிஷேகம் நடைபெறும். </p><p>பின்பு மூலவர் <a href="https://www.dailythanthi.com/devotional">மீனாட்சி அம்மனுக்கு</a> காலை 8.10 மணிக்கும், சுந்தரேசுவரருக்கு 8.50 மணிக்கும் புனித நீரால் மகா கும்பாபிஷேம் நடைபெறுகிறது. அதன்பின் னர் அலங்காரம், சிறப்பு தீபாராதனைகள் நடைபெறும். காலை 10 மணி முதல் இரவு வரை நடைசாத்தப்படாமல் மூலவர் தரிச னத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். கும்பாபிஷேகத்தை காண முடி யாத பக்தர்களுக்காக இன்றிரவு 7 மணிக்கு நான்கு மாசி வீதிகளிலும் மீனாட்சி, சுந்தரேசுவரர் வீதி உலா வந்து காட்சி அளிக்கிறார்கள்.</p> ]]></content:encoded></item><item><title>டெங்கு காய்ச்சல் பாதிப்பு: பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை- தமிழக அரசு தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dengue-fever-cases-no-need-for-public-alarm-tamil-nadu-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dengue-fever-cases-no-need-for-public-alarm-tamil-nadu-government#comments</comments><guid isPermaLink="false">d3602cab-cb3d-4c4c-a7f4-ea8ce48e26b2</guid><pubDate>Wed, 16 Sep 2026 21:04:46 +0000</pubDate><atom:updated>2026-09-16T21:04:46.840Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt,டெங்கு காய்ச்சல்,Dengue Fever</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/od29nmxk/dengue.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/od29nmxk/dengue.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்ககம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவல் என்பது வழக்கத்திற்கு மாறானதாகவோ அல்லது அபாயகரமான அளவிலோ இல்லை. ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்காலத்தில் தட்பவெப்பநிலை மாற்றங்களின் காரணமாக டெங்கு பாதிப்புகளில் பருவகால மாறுபாடு ஏற்படுவது இயல்பானதாகும்.</p> <p>கடந்த 3 ஆண்டுகளில் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான தரவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, 2024-ம் ஆண்டில் மொத்தம் 34,339 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 13 உயிரிழப்புகளும், 2025-ம் ஆண்டில் 15,688 பேர் பாதிக்கப்பட்டு, 13 உயிரிழப்புகளும், இந்த ஆண்டில் செப் டம்பர் 16-ந் தேதி வரையிலான நிலவரப்படி, 16,334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். </p><p>9 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.காய்ச்சல் பாதிப்புகளைக் கண்காணித்து, தேவையான மருத்துவச் சிகிச்சையை விரைவாக வழங்கும் வகையில் காய்ச்சல் வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>லண்டன் சுற்றுப்பயணம் நிறைவு:  முதல்-அமைச்சர் விஜய் இன்று சென்னை திரும்புகிறார்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/london-tour-concludes-chief-minister-vijay-returns-to-chennai-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/london-tour-concludes-chief-minister-vijay-returns-to-chennai-today#comments</comments><guid isPermaLink="false">8ff800b0-f92f-4aa4-93bb-33337c54e74c</guid><pubDate>Wed, 16 Sep 2026 20:23:13 +0000</pubDate><atom:updated>2026-09-16T20:23:13.731Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,London,லண்டன்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/d0h5p9yh/vijay.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/d0h5p9yh/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல் அமைச்சர் விஜய் கடந்த 10 ஆம் தேதி இரவு லண்டன் புறப்பட்டு சென்றார். 6 நாள் பயணமாக லண்டன் சென்ற முதல் அமைச்சர் விஜய்க்கு அங்கு வசிக்கும் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத்தொடர்ந்து 12-ந் தேதி முதல்-அமைச்சர் விஜய், தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைப்பதற்காக புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயத் திடலுக்கு உலகப் புகழ் பெற்ற சில்வர்ஸ்டோன் பந்தயக் களத்தில் உள்ள உள்கட்டமைப்பு, பந்தயச் சுற்றுப்பாதை, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போட்டிகளை வணிக ரீதியாக நடத்தும் முறைகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டார். பின்னர் அங்கு நடிகர் அஜித் பங்கேற்ற கார் ரேசையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.</p><h2>சென்னை புறப்பட்டார் </h2><p>அதன் தொடர்ச்சியாக 2 நாட்கள் முதல்-அமைச்சர் விஜய், பல்வேறு தொழில் அதிபர்களை சந்தித்து தமிழ்நாட்டுக்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்த்தார். சுமார் ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன் மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக அரசு அறிவித்தது.   இதற்கிடையே நேற்று இரவு விஜய், தனது அரசு முறை சுற்றுப்பயணத்தை முடித்து லண்டனில் இருந்து சென்னை புறப்பட்டார்.  </p><h2>தவெகவினர் ஆர்வம்</h2><p>விஜய் தங்கியுள்ள ஹோட்டலில் இருந்து கிளம்பும் போது அவரைக்காண ஏராளமன ரசிகர்கள்  காத்திருந்தனர். ரசிகர்களை பார்த்து உற்சாகமாக கை அசைத்த முதல் அமைச்சர் விஜய், அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். சிலருக்கு ஆட்டோகிராப்பும் போட்டு கொடுத்தார்.. லண்டனில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட முதல் அமைச்சர் விஜய், இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க த.வெ.க.வினர் ஏற்பாடு செய்துள்ளனர். </p> ]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: 99 வேட்பு மனுக்கள் தாக்கல் இன்று பரிசீலனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-by-elections-99-nomination-papers-filed-scrutiny-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-by-elections-99-nomination-papers-filed-scrutiny-today#comments</comments><guid isPermaLink="false">603a2f3c-9449-4bdf-8524-aca992364c3e</guid><pubDate>Wed, 16 Sep 2026 19:35:19 +0000</pubDate><atom:updated>2026-09-16T19:35:19.460Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இடைத்தேர்தல்,மதுராந்தகம்,தாராபுரம்,வேட்பு மனு</media:keywords><media:content height="288" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/pqb1hep0/Election.jpg" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேட்பு மனுக்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/pqb1hep0/Election.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>இடைத்தேர்தல்</p><p>தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் (தனி) மற்றும் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில் ஆளும் த.வெ.க., பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர், கம்யூனிஸ்டு கட்சிகள் தனித்தனியாக களம் காண்கின்றன. இதனால் 5 முனைப்போட்டி நிலவுகிறது. அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் கடந்த 9-ந்தேதி முதல் தொடங்கி நடந்தது. விறுவிறுப்பாக நடந்த வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. </p><p>மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சுகந்தி மற்றும் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 30 பேர் நேற்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.ஏற்கனவே த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பில் பரந்தாமன். நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் உள்ளிட்ட 18 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இதன்மூலம் மதுராந்தகம் தொகுதியில் பிரதான கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 48 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.</p><h2>தாராபுரத்தில் </h2><p>தாராபுரம் பகுதியில் த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமா, அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆனந்த், அருண்ராஜ் மற்றும் தொண்டர்களுடன் வந்து, தேர்தல் நடத்தும் அலுவலரான ஆர்.டி.ஓ. பெலிக்ஸ் ராஜாவிடம் காலை 11 மணிக்கு மேல் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்தபோது, த.வெ.க. வேட்பாளர் சத்திய பாமாவுக்கு எதிராக அ.தி. மு.க. தொண்டர்கள் கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு உண்டானது.</p><h2>மொத்தம் 51 வேட்பு மனுக்கள்</h2><p>அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் லட்சுமணன், கள் இயக்க வேட்பாளர் முத்துசாமி உள்ளிட்டோரும் மனு தாக்கல் செய்தனர். மாலை 3 மணியுடன் மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், பிரதான கட்சிகள், மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் உள்பட 39 வேட்பாளர்கள் மொத்தம் 51 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். மதுராந்தகம் மற்றும் தாராபுரம் என இரு தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 99 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.இன்று (வியாழக்கிழமை) வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெற உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘லண்டனில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்’ - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tamil-nadu-government-should-release-a-white-paper-on-the-investments-attracted-in-london-former-minister-jayakumar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tamil-nadu-government-should-release-a-white-paper-on-the-investments-attracted-in-london-former-minister-jayakumar#comments</comments><guid isPermaLink="false">070abf6b-1dc2-4ce1-a914-078cfc2f3ba0</guid><pubDate>Wed, 16 Sep 2026 16:38:53 +0000</pubDate><atom:updated>2026-09-16T16:38:53.881Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜெயக்குமார்,Jayakumar,London,லண்டன்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/m3k4ij5h/State-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/m3k4ij5h/State-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“தமிழக முதல்-அமைச்சர் விஜய் லண்டன் பயணத்தின்போது நடிகர் அஜித்தை சந்தித்தது பண்பாடு. அதில் விமர்சிக்க ஒன்றுமில்லை. ஆனால் முதல்-அமைச்சர் விஜய்யின் லண்டன் பயணத்தால் கிடைத்த பயன் என்ன? என்பது குறித்து தமிழக மக்களிடம் தெரிவிக்க வேண்டும். </p><p>லண்டனில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இருதரப்பு ஒப்பந்தங்கள் எப்போது கையெழுத்தாகும்? திட்டங்கள் எப்போது செயல்பாட்டுக்கு வரும்? இந்த முதலீடுகளின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்? என்ற விவரங்கள் அடங்கிய வெளிப்படையான வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>குன்னூர் அருகே இறந்த குட்டியை சுமந்து அலையும் தாய் குரங்கு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kunnur-near-dead-infant-monkey-carried-by-mother</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kunnur-near-dead-infant-monkey-carried-by-mother#comments</comments><guid isPermaLink="false">7134a014-7244-4b96-83cf-a1aa943dbfd4</guid><pubDate>Wed, 16 Sep 2026 16:01:48 +0000</pubDate><atom:updated>2026-09-16T16:01:48.545Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Mother,dead,குரங்கு,monkey,குன்னூர்,Coonoor,carrying,குட்டி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/zn2lhojs/mothermonkey.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ குரங்கு]]></media:title><media:description type="html"><![CDATA[ குன்னூர் அருகே இறந்த குட்டியை சுமந்து அலையும் தாய் குரங்கு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/zn2lhojs/mothermonkey.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>குன்னூர்,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF">நீலகிரி</a> மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வெலிங்டன், அருவங்காடு, பாய்ஸ் கம்பெனி உள்ளிட்ட இடங்களில் சமீபகாலமாக குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. </p> <h2>குரங்கு கூட்டம்</h2><p>இப்பகுதிகளில் உள்ள குடியிருப்பு வளாகங்களுக்குள் புகுந்து வரும் <a href="https://www.dailythanthi.com/topic//%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">குரங்கு</a> கூட்டங்கள், கேபிள் வயர்கள் மற்றும் இணையதள வயர்களை கடித்து துண்டித்து அட்டகாசம் செய்து வருகின்றன. மேலும், வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து உணவுப் பொருட்களையும் சேதப்படுத்தி விடுகின்றன. இதனால் நிம்மதியிழந்த பொதுமக்கள், இந்த குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.</p><h2>கண்கலங்க வைத்த காட்சி</h2><p>இந்த நிலையில், வெலிங்டன் பகுதியில் பார்ப்போரின் நெஞ்சை உருக்கும் சோகமான காட்சி ஒன்று அரங்கேறியுள்ளது. அங்குள்ள சாலை ஒன்றில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், குட்டி குரங்கு ஒன்று சாலையோரமாக பரிதாபமாக இறந்து கிடந்தது. ஆனால், தன் குட்டி இறந்தது கூட தெரியாமல் பாச போராட்டம் நடத்திய தாய் குரங்கு, அந்த குட்டியை தனது மார்போடு அணைத்தபடி தூக்கி கொண்டு அங்கும் இங்குமாக அலைந்து திரிந்தது. </p> <h2>தாய் பாசம்</h2><p>குட்டிக்கு உயிர் இருப்பதாகவே நினைத்து, அதை தூக்கி கொண்டு தாய் குரங்கு தவிப்புடன் சுற்றிய இந்த நெஞ்சை உருக்கும் காட்சி, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளையும் பொதுமக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியதுடன், பலரையும் கண்கலங்கச் செய்தது.</p>]]></content:encoded></item><item><title>பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பெருங்குடி கண்காணிப்பு அலுவலர் ஆலோசனை..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/perungudi-monitoring-officer-holds-consultation-on-monsoon-preparedness-measures</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/perungudi-monitoring-officer-holds-consultation-on-monsoon-preparedness-measures#comments</comments><guid isPermaLink="false">c2e8b3d2-0a0b-4d0b-839b-e90d23d548bf</guid><pubDate>Wed, 16 Sep 2026 15:51:30 +0000</pubDate><atom:updated>2026-09-16T15:51:30.706Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,பெருங்குடி,Perungudi,பெருங்குடி மண்டலம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/2mrl4zut/Untitled-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெருங்குடி கண்காணிப்பு அலுவலர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/2mrl4zut/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெருங்குடி மண்டலக் கண்காணிப்பு அலுவலர் மகேஷ்வரி ரவிக்குமார் தலைமையில், பெருங்குடி மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. </p><h2>ஆலோசனைக் கூட்டம்</h2><p>இது தொடர்பாக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை </a>மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>பெருங்குடி மண்டலத்தில் வார்டு 181 முதல் 191க்குட்பட்ட 11 வார்டுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மண்டலக் கண்காணிப்பு அலுவலர் மகேஷ்வரி ரவிக்குமார் தலைமையில் இன்று (16.09.2026) பெருங்குடி மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.</p><p>இக்கூட்டத்தில், மண்டல அலுவலர் என்.ஶ்ரீதேவி, பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னைக் குடிநீர் வாரியம், தமிழ்நாடு மின்சாரத்துறை, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட சேவைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p><h2>அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்</h2><p>இக்கூட்டத்தில், பெருங்குடி மண்டலத்தில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்களை பணிகளை விரைந்து முடித்திடவும், மழைநீர் சீராகச் செல்லும் வகையில் வண்டல் வடிகட்டித் தொட்டிகள் மற்றும் மழைநீர் வடிகால்கள், கால்வாய்கள், ஆறுகள், குளம், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகள், ஆகாயத்தாமரைகள் அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடித்திடவும், மழைநீர் தேங்கும் இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டமைப்புகளை விரைந்து முடித்திடவும், மோட்டார் பம்புகளை தயார்நிலையில் வைத்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>14 நிவாரண முகாம்களில் பொதுமக்களை தங்கவைப்பதற்கான அடிப்படை வசதிகள் மற்றும் உணவு சமைத்திடும் 6 மைய சமையலறைகளில் உணவுப் பொருட்களின் இருப்பினை உறுதி செய்திடவும், மாநகராட்சி உள்ளிட்ட சேவைத்துறைகளின் சார்பில் நடைபெறும் பணிகளை ஒருங்கிணைந்து செப்டம்பர் மாத இறுதிக்குள் முடித்திடவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><h2>கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு</h2><p>இதனைத் தொடர்ந்து, ரேடியல் சாலை முதல் பெருங்குடி குப்பைக் கிடங்கு வரையிலான நெடுஞ்சாலைத்துறையின் சாலைப் பகுதியில் உள்ள சதுப்பு நிலப்பகுதியில் உள்ள நீர் எளிதில் வெளியேறும் வகையில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி மற்றும் இந்த சாலையில் உள்ள 17 கல்வெர்ட்டுகளின் வழியே மழைநீர் தங்குதடையின்றி பக்கிங்ஹாம் கால்வாயில் செல்லும் வகையில் ஆகாயத்தாமரைகளை அகற்றி வண்டல்கள் தூர்வாரிடும் பணி ஆகியவற்றினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.</p><p>பின்னர், இந்த சாலையில் உள்ள பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் சரிந்துள்ள மண் மேடு பகுதியினைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, இப்பகுதியில் தண்ணீர் எளிதில் செல்லும் வகையில் சரிந்த மண் மேடுகளை அகற்றி நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட வீடுகள்; தடையில்லா சான்று இல்லாமல் மின் இணைப்பு - தமிழக அரசு அரசாணை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/houses-built-on-poramboke-government-owned-land-electricity-connections-granted-without-a-no-objection-certificate-tamil-nadu-government-order</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/houses-built-on-poramboke-government-owned-land-electricity-connections-granted-without-a-no-objection-certificate-tamil-nadu-government-order#comments</comments><guid isPermaLink="false">be0ad5be-2291-47f1-9001-5c80f40d1e9a</guid><pubDate>Wed, 16 Sep 2026 15:47:16 +0000</pubDate><atom:updated>2026-09-16T15:47:16.246Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt,மின் இணைப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/xcvq2kp1/State-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/xcvq2kp1/State-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>புறம்போக்கு நிலங்களில் கட்டப்பட்டிருக்கக் கூடிய வீடுகளுக்கு அரசு அதிகாரியிடம் இருந்து தடையில்லா சான்று பெறாமலேயே மின் இணைப்பு வழங்குவது தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து ஏராளமான கோரிக்கைகள் வந்தன. இது குறித்து எரிசக்தித்துறை அமைச்சர் நிர்மல் குமார் கடந்த ஜூலை மாதம் ஆய்வு செய்தார். </p><p>இந்த நிலையில், புறம்போக்கு நிலங்களில் கட்டப்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு பெறுவதற்கு என்.ஓ.சி.(NOC) எனப்படும் தடையில்லா சான்று தேவையில்லை என உத்தரவு பிறப்பித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, புறம்போக்கு நிலங்களில் 250 சதுர அடிக்குள் கட்டப்பட்ட வீடுகளுக்கு மட்டும் தடையில்லா சான்று இல்லாமல் வீட்டு உபயோக மின் இணைப்பு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. </p><p>அதே சமயம், நீர்நிலை புறம்போக்கு, மேய்ச்சல் மந்தைவெளி புறம்போக்கு நிலங்களில் வீடுகள் கட்டப்பட்டிருந்தால் அதற்கு இந்த உத்தரவு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி, வனத்துறைக்கு சொந்தமான நிலங்கள், வன புறம்போக்கு நிலங்கள், மத்திய அரசுக்கு சொந்தமான ராணுவ கட்டுப்பாட்டு பகுதிகள், ரெயில்வே நிலங்கள், மத நிறுவனங்களின் பெயரில் இருக்கக் கூடிய பட்டா நிலங்கள், கோவில் புறம்போக்கு நிலங்கள் ஆகியற்றிற்கும் இந்த உத்தரவு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>இபிஎப்ஓ ஊதிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு: பிரதமர்  மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/epfo-wage-ceiling-raised-to-rs-25000-nainar-nagendran-thanks-pm-modi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/epfo-wage-ceiling-raised-to-rs-25000-nainar-nagendran-thanks-pm-modi#comments</comments><guid isPermaLink="false">3648f382-a1a4-424e-90df-e70808f0bd7c</guid><pubDate>Wed, 16 Sep 2026 15:16:59 +0000</pubDate><atom:updated>2026-09-16T15:16:59.364Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>PM Modi,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,EPFO,உயர்வு,thanks,நன்றி,மோடி,Wage,Raised,இபிஎப்ஓ</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/vzp570k8/nainar-nagendheran.new.gif" width="752"><media:title type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/vzp570k8/nainar-nagendheran.new.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இபிஎப்ஓ ஊதிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு: உழைக்கும் வர்க்கத்தின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி என்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன்</a> தெரிவித்தார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>நிதி பாதுகாப்பு</h2><p> பாரத பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின்  கட்டாய பங்களிப்பிற்கான மாத ஊதிய உச்சவரம்பை ரூ.15,000-லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்த வரலாற்று சிறப்புமிக்க ஒப்புதலை வழங்கியுள்ளது. </p><p>இதன் மூலம், 51 லட்சத்துக்கும் அதிகமான கூடுதல் தொழிலாளர்கள் நேரடியாக சட்டப்பூர்வ சமூகப் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்படுவார்கள். குறிப்பாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை மாத ஊதியம் பெறும் முறைசார் துறையை சேர்ந்த தொழிலாளர்களுக்கு இது மிகப்பெரிய நிதி பாதுகாப்பை உறுதி செய்கிறது.</p><h2>ரூ.56,696 கோடி</h2><p>இந்தத் திட்ட விரிவாக்கத்திற்காக மத்திய அரசு அடுத்த 5 ஆண்டுகளில் தோராயமாக ரூ.56,696 கோடி செலவிட திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் புதிய பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி சேமிப்பு மட்டுமின்றி, ஊழியர் ஓய்வூதியத் திட்டம்  வாயிலாக முதுமைக் கால ஓய்வூதியமும், ஊழியர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஆயுள் காப்பீட்டு பாதுகாப்பும் முழுமையாக கிடைக்கும்.</p> <h2>பாராட்டு</h2><p>நாட்டின் வளர்ச்சி நாயகனாகவும், தொழிலாளர்களின் காவலனாகவும் திகழும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF">பிரதமர் மோடியின்</a> இத்தகைய தொழிலாளர் நலன் காக்கும் தொலைநோக்கு முடிவை மனதார பாராட்டுவதோடு, உழைக்கும் மக்களின் சார்பாக அவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைதெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா; அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி பெருகட்டும் - முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-meenakshi-amman-temple-consecration-ceremony-may-happiness-abound-in-everyones-lives-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-meenakshi-amman-temple-consecration-ceremony-may-happiness-abound-in-everyones-lives-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">29563fed-fd10-4b66-95a8-d901f4120040</guid><pubDate>Wed, 16 Sep 2026 15:15:39 +0000</pubDate><atom:updated>2026-09-16T15:15:39.444Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,Meenakshi Amman Temple,மீனாட்சி அம்மன் கோவில்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/anxqreag/State-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/anxqreag/State-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா நாளை(செப்டம்பர் 17-ந்தேதி) கோலாகலமாக நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு நாளை மதுரையில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோவிலில் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரை வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இந்த நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா சிறப்புடன் நடைபெறுவதில் பெருமகிழ்ச்சி அடைவதாக தமிழக முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-</p><p>“தமிழர்களின் ஆன்மிகம், கலை, பண்பாடு, கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையின் பெருமைகளை நூற்றாண்டுகளைக் கடந்து பறைசாற்றி நிற்கும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்புடன் நடைபெறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். </p><p>தமிழர் பண்பாட்டின் உன்னத அடையாளத்தை உலகிற்கு உணர்த்தும் வகையிலும், நம் மண்ணின் ஆன்மிக மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தின் பெருமையை எடுத்துரைக்கும் வகையிலும் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெறும் இந்நன்னாளில், இறைவனின் திருவருள் அனைவரது வாழ்விலும் நிறைந்து, நலமும், வளமும், மகிழ்ச்சியும் பெருகட்டும்! </p><p>நமது தொன்மையான திருக்கோயில்களையும் அவற்றின் வரலாற்றுச் சிறப்பையும் பாதுகாத்து, ஆன்மிக மற்றும் பண்பாட்டுப் பெருமையை வருங்காலத் தலைமுறைகளுக்கும் எடுத்துச் செல்வோம்!”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>நாளை சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-tokens-to-be-allocated-at-sub-registrar-offices-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-tokens-to-be-allocated-at-sub-registrar-offices-tomorrow#comments</comments><guid isPermaLink="false">317a434a-2329-4997-9d3d-634ddc9f8f02</guid><pubDate>Wed, 16 Sep 2026 15:14:41 +0000</pubDate><atom:updated>2026-09-16T15:14:41.744Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கூடுதல் டோக்கன்கள்,sub-registrar offices,சார்பதிவாளர் அலுவலகம்,Additional Tokens,Avani,ஆவணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/d1gb35rf/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சார்பதிவாளர் அலுவலகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/d1gb35rf/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணி மாதத்தில் வரும் கடைசி முகூர்த்தம் தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று பதிவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.</p><h2>கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஆவணி </a>மாதத்தில் வரும் கடைசி முகூர்த்தம் தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு</p><p>சுபமுகூர்த்த மற்றும் விசேஷ தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.</p><p>தற்போது ஆவணி மாதத்தில் வரும் கடைசி முகூர்த்த தினமான 17.09.2026 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.</p><h2>கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகள்</h2><p>எனவே, ஆவணி மாதத்தில் வரும் கடைசி முகூர்த்த தினமான 17.09.2026 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகள் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தேர்தல் வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் நிறைவேற்றுவாரா? - வேல்முருகன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-chief-minister-fulfill-the-election-promises-velmurugan-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-chief-minister-fulfill-the-election-promises-velmurugan-asks#comments</comments><guid isPermaLink="false">afde0402-cacd-4ddd-954e-970f200e9343</guid><pubDate>Wed, 16 Sep 2026 14:57:27 +0000</pubDate><atom:updated>2026-09-16T14:57:27.714Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Velmurugan,வேல்முருகன்,தமிழக வாழ்வுரிமைக் கட்சி,தி.வேல்முருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/w8lhyxly/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/w8lhyxly/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விதை, உரம், பூச்சிக்கொல்லி, தொழிலாளர் கூலி உள்ளிட்ட இடுபொருட்களின் விலை உயர்ந்து வரும் நிலையில், சாகுபடிக்கான செலவுகளைச் சமாளிப்பதற்காக விவசாயிகள் கடன் பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர் என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழக </a>வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>பயிர்க்கடன் தள்ளுபடி கோரி போராட்டம்</h2><p>திருச்சி சமயபுரத்தில் விவசாயிகள், பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற முதன்மையான கோரிக்கையை முன்வைத்து இரவு பகலாகத் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>விவசாயிகளின் பிரச்சினை பயிர்க்கடனோடு மட்டும் முடிந்துவிடவில்லை. சாகுபடிக்குத் தேவையான தண்ணீர் கிடைப்பதில் ஏற்படும் சிக்கல், அவர்கள் பெரும் செலவில் விளைவித்த நெல்லை அரசு உரிய முறையில் கொள்முதல் செய்வதில் காணப்படும் பிரச்சினைகள் என பல்வேறு நெருக்கடிகளையும் அவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இத்தகைய சூழலில், ஏற்கெனவே சுமந்து வரும் கடன் மேலும் பெருகி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நெருக்கடிக்குள் தள்ளுகிறது.</p><p>மழை, வறட்சி, நீர்ப்பற்றாக்குறை, உற்பத்திச் செலவு உயர்வு, இடுபொருட்களின் விலை அதிகரிப்பு, விளைபொருளுக்கான உரிய விலை கிடைக்காத நிலை என ஆண்டுதோறும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு விவசாயம் செய்யும் உழவர்களுக்கு, பயிர்க்கடன் என்பது சாதாரண நிதிச் சுமை அல்ல. அது அவர்களின் குடும்ப வாழ்க்கையையும் அடுத்தடுத்த சாகுபடி காலத்தையும் பாதிக்கும் பெரும் சுமையாக மாறுகிறது.</p><h2>நீருக்காகப் போராடும் நிலை</h2><p>ஒருபுறம், பயிரிடுவதற்குத் தேவையான நீருக்காகப் போராட வேண்டிய நிலை. மறுபுறம், விளைவித்த நெல்லை முறையாகக் கொள்முதல் செய்ய வலியுறுத்த வேண்டிய கட்டாயம். இதற்கிடையே, சாகுபடிக்காகப் பெற்ற கடனைச் செலுத்த முடியாமல் தவிக்கும் நிலை. இவை அனைத்தும் விவசாயிகளின் நெருக்கடியை வெளிப்படுத்துகின்றன.</p><p>விவசாயிகள் உணவை உற்பத்தி செய்து மக்களின் பசியைப் போக்குகின்றனர். ஆனால் அவர்களது உழைப்புக்கான பாதுகாப்பையும், விளைபொருளுக்கான உரிய கொள்முதலையும், கடன் சுமையிலிருந்து விடுதலையையும் உறுதி செய்வது அரசின் பொறுப்பு.</p><p>தேர்தலுக்கு முன்பாக விவசாயிகளிடம் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் வெறும் தேர்தல் பரப்புரை வார்த்தைகளாக மட்டுமே இருந்துவிடக் கூடாது. ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் அவை செயல்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக, பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தமிழக அரசு தெளிவான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.</p><h2>கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்</h2><p>சமயபுரத்தில் போராடி வரும் விவசாயிகளின் முதன்மையான கோரிக்கையான பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்வது குறித்து தமிழக அரசு உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதோடு, சாகுபடிக்குத் தேவையான நீரை உறுதி செய்வதற்கும், விவசாயிகள் விளைவித்த நெல்லை காலதாமதமின்றி முறையாகக் கொள்முதல் செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.</p><p>விவசாயிகள் ஒவ்வொரு பிரச்சினைக்கும் தனித்தனியாகப் போராட்டக் களத்திற்கு வர வேண்டிய நிலை முடிவுக்கு வர வேண்டும். அவர்களின் உழைப்புக்குப் பாதுகாப்பும், விளைபொருளுக்கு உரிய சந்தையும், வாழ்வாதாரத்திற்கு நிலைத்தன்மையும் உருவாக்கப்பட வேண்டும்.</p><p>சமயபுரத்தில் இரவு பகலாகக் காத்திருக்கும் விவசாயிகளின் முதன்மையான கோரிக்கையான பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் நீர்ப்பாசனப் பிரச்சினைக்கும், நெல் கொள்முதல் தொடர்பான சிக்கல்களுக்கும் தீர்வு காண வேண்டும். தேர்தல் காலத்தில் விவசாயிகளிடம் அளித்த வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்றி, உழவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.</p><h2>விவசாயிகள் போராட்டம்</h2><p>தேர்தல் வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் நிறைவேற்றுவாரா? இரவு பகலாக விவசாயிகள் போராடுவது ஏன்? திருச்சி சமயபுரத்தில் விவசாயிகள் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற முதன்மையான கோரிக்கையை முன்வைத்து இரவு பகலாகத் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>அவர்களின் போராட்டம் ஒரு கோரிக்கைக்குள் மட்டும் அடங்கிவிடவில்லை. விவசாயத்திற்குத் தேவையான நீர் கிடைக்காத நிலை, பெரும் செலவில் உற்பத்தி செய்த நெல்லை உரிய முறையில் அரசு கொள்முதல் செய்யாத சிக்கல், சாகுபடிக்காகப் பெற்ற கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அதிகரித்து வரும் நிதிச் சுமை என, உழவர்களின் வாழ்வாதாரமே பல்வேறு முனைகளில் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.</p><p>விதை, உரம், பூச்சிக்கொல்லி, தொழிலாளர் கூலி உள்ளிட்ட இடுபொருட்களின் விலை உயர்ந்து வரும் நிலையில், சாகுபடிக்கான செலவுகளைச் சமாளிப்பதற்காக விவசாயிகள் கடன் பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். அதன்பிறகு விளைச்சலைக் காப்பாற்ற தண்ணீருக்காகப் போராடவும், அறுவடைக்குப் பிறகு நெல்லை விற்பனை செய்ய கொள்முதல் மையங்களை நாடவும் வேண்டிய சூழல் உருவாகிறது. எதிர்பார்த்த வருவாய் கிடைக்காதபோது, அந்தக் கடன் சுமை அடுத்த சாகுபடிக்கும் தொடர்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>புதிய தலைமை செயலகம் அவசியம்; ஆனால் பட்டினப்பாக்கத்தில் அமைப்பது தவறானது - அன்புமணி ராமதாஸ் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-new-secretariat-is-essential-but-locating-it-at-pattinapakkam-is-a-mistake-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-new-secretariat-is-essential-but-locating-it-at-pattinapakkam-is-a-mistake-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">d645da6f-5ebe-4e34-926c-8eb383b2d21b</guid><pubDate>Wed, 16 Sep 2026 13:53:42 +0000</pubDate><atom:updated>2026-09-16T13:53:42.432Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/7y26hczn/State-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/7y26hczn/State-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“தமிழக அரசு புதிதாக பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு புதிய தலைமை செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அவசியமானது. அதில் மாற்றுக் கருத்து கிடையாது. பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கையும் இதுதான். </p><p>ஆனால் அதே சமயம், பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் மற்றும் சட்டமன்ற வளகம் கட்டுவது என்பது மிக தவறான ஒரு முடிவு. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கிய காரணம் அந்த பகுதி குறுகிய பகுதி. போக்குவருத்து நெரிசல் மிக அதிகமாக இருக்கிறது. </p><p>அந்த பகுதியில் பல கல்வி நிலையங்கள், பல கல்லூரிகள், சாந்தோம் தேவாலயம், பத்திரப்பதிவு தலைமை அலுவலகம் ஆகியவை இருக்கின்றன. மேலும் அங்கு குறுகிய சாலைகள்தான் உள்ளன. நாளை அங்கே தலைமை செயலகம், சட்டமன்ற வலாகம் வந்தால் லட்சக்கணக்கான மக்கள் அங்கே செல்வார்கள். அப்போது அங்கே செல்வதற்கு இடம் இருக்காது. போக்குவரத்து நெரிசல் மிக மோசமாக இருக்கும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>பல்கலைக்கழகங்கள் அடுக்குமாடி கட்டடங்களாக சுருங்குகின்றனவா? - வேல்முருகன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/are-universities-being-reduced-to-tower-blocks-asks-velmurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/are-universities-being-reduced-to-tower-blocks-asks-velmurugan#comments</comments><guid isPermaLink="false">e41695b5-7661-4cd5-a943-af0d17e8eb6c</guid><pubDate>Wed, 16 Sep 2026 13:45:29 +0000</pubDate><atom:updated>2026-09-16T13:45:29.584Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Universities,Velmurugan,வேல்முருகன்,Buildings,கேள்வி,பல்கலைக்கழகங்கள்,asks,அடுக்குமாடி கட்டிடங்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/4tr0yo9f/velmurugan.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வேல்முருகன்]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/4tr0yo9f/velmurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பல்கலைக்கழகங்கள் அடுக்குமாடி கட்டடங்களாக சுருங்குகின்றனவா? மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறதா? என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D"> வேல்முருகன்</a> கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>திருத்த மசோதா</h2><p>தமிழ்நாட்டில் தனியார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பல்கலைக்கழகங்களை</a> அமைப்பதற்கான விதிமுறைகளில் தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், நமது உயர்கல்வி கட்டமைப்பின் எதிர்காலம் குறித்து ஆழமான கவலையை ஏற்படுத்துகின்றன.</p> <p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதா, 2026 மூலம், இதுவரை தனியார் பல்கலைக்கழகம் அமைக்க தேவையான 100 ஏக்கர் தொடர்ச்சியான நிலம் என்ற நிபந்தனை பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.</p><h2>நிரந்தர நிதி குறைக்கப்பட்டுள்ளது</h2><p>இனி, சென்னை மாநகராட்சி பகுதியில் 12 ஏக்கர். பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 18 ஏக்கர். மாநிலத்தின் பிற பகுதிகளில் 25 ஏக்கர் நிலம் இருந்தால் தனியார் பல்கலைக்கழகம் அமைக்க முடியும். மேலும், நிறுவனம் பராமரிக்க வேண்டிய நிரந்தர நிதியும் ரூ. 50 கோடியிலிருந்து ரூ. 25 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.</p> <h2>புதிய அளவுகள் </h2><p>சென்னை போன்ற நகர்ப்புற பகுதிகளில் 100 ஏக்கர் தொடர்ச்சியான நிலத்தை பெறுவது கடினம் என்பதால் இந்த தளர்வு தேவைப்படுவதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கல்வி கட்டடங்கள், விடுதிகள், ஆய்வகங்கள், விளையாட்டு வசதிகள் உள்ளிட்ட தேவைகளை கருத்தில் கொண்டே புதிய அளவுகள் நிர்ணயிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>விதிமுறை மாற்றப்பட்டதா?</h2><p>ஆனால், நில பற்றாக்குறையை சமாளிப்பதற்காக விதிமுறை மாற்றப்பட்டதா? அல்லது தனியார் உயர்கல்வி நிறுவனங்களை அதிகரிப்பதற்கான தடைகள் அகற்றப்படுகின்றனவா? கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை உயர்வதைவிட அவற்றின் தரம் உறுதி செய்யப்படுகிறதா? அல்லது தனியார் நிறுவனங்களின் லாப கணக்கா?</p><h2>சட்ட திருத்த முயற்சி</h2><p>இந்தக் கேள்வியை நான் இன்று மட்டும் கேட்கவில்லை! தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பான சட்டத் திருத்த முயற்சி கடந்த திமுக ஆட்சி காலத்திலும் முன்வைக்கப்பட்டது. அப்போது திமுக கூட்டணியில் அங்கம் வகித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த நான், மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பு, சமூகநீதி, ஏழை எளிய குடும்பங்களின் எதிர்காலம் உள்ளிட்ட அம்சங்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சட்டப்பேரவையிலேயே சுட்டிக்காட்டினேன்.</p><h2>வேறு வடிவில் </h2><p>பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அப்போது திமுக அரசு அந்த மசோதாவை திரும்ப பெற்றது. 2026 பிப்ரவரி 20 அன்று சட்டப்பேரவையில் அது அதிகாரப்பூர்வமாக திரும்ப பெறப்பட்டது. ஆனால், இன்று அதே விவகாரம் வேறு வடிவில் மீண்டும் நம் முன் நிறுத்தப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சியில் திரும்ப பெறப்பட்ட முயற்சியை, இன்றைய அரசு மாற்றிய வடிவில் மீண்டும் முன்னெடுத்து சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளது.</p><h2>என்ன பதில்?</h2><p>அதனால்தான் நான் மீண்டும் கேட்கிறேன். அன்று எழுந்த ஆட்சேபனைகளுக்கு இப்போது என்ன பதில்? அப்போது தேவைப்பட்ட மறுபரிசீலனை இன்று ஏன் தேவையில்லை? மாணவர்களின் நலன் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இன்றைய அரசு என்ன விளக்கம் அளிக்க போகிறது?</p> <p>ஒரு பல்கலைக்கழகத்தின் தரத்தை அதன் நிலப்பரப்பை மட்டும் வைத்து தீர்மானிக்க முடியாது. ஆனால் நிலப்பரப்பை கணிசமாக குறைக்கும் நிலையில், அதற்கேற்ப கட்டாயமான உள்கட்டமைப்பு மற்றும் கல்வி தர அளவுகோல்கள் இன்னும் வலுவாக இருக்க வேண்டும்.</p><h2>சமூக அமைப்பு</h2><p>பல்கலைக்கழகம் என்பது வகுப்பறைகளின் தொகுப்பு மட்டுமல்ல. அது அறிவையும் ஆராய்ச்சியையும் உருவாக்கும் சமூக அமைப்பு. தரமான பேராசிரியர்கள், சிறந்த ஆராய்ச்சி, மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விச் சூழல், வேலைவாய்ப்புக்கான திறன் மேம்பாடு ஆகியவையே அதன் உண்மையான அடையாளம்.</p><h2>உத்தரவாதம்</h2><p>கல்வி வணிகமாகிவிடக் கூடாது. ஏழை மற்றும் நடுத்தர குடும்ப மாணவர்களுக்கான கல்வி வாய்ப்பு, கல்வி உதவித்தொகை, கட்டண சலுகை, இடஒதுக்கீடு ஆகியவை எவ்வாறு பாதுகாக்கப்படும் என்பதற்கு அரசு தெளிவான சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும்.</p> <h2>எதிர்ப்பு இல்லை</h2><p>தனியார் முதலீட்டை வரவேற்பதில் எங்களுக்கு எதிர்ப்பு இல்லை. ஆனால் முதலீட்டின் பெயரில் கல்வியின் நோக்கம் மாறக்கூடாது. அரசு பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் போதிய நிதியின்றி தவிக்கும் நிலையில், தனியார் உயர்கல்வி நிறுவனங்களுக்கு விதிமுறைகளை தளர்த்துவதற்கு முன்பாக, அரசு தனது கல்வி கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்.</p> <h2>மாணவர் பாதுகாப்பு</h2><p>எனவே, 2026-ம் ஆண்டுக்கான தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்தத்தின் கீழ் உருவாகும் நிறுவனங்களுக்கு கல்வி தரம், ஆசிரியர் மாணவர் விகிதம், ஆய்வக மற்றும் ஆராய்ச்சி வசதிகள், மாணவர் பாதுகாப்பு, விடுதி மற்றும் அடிப்படை வசதிகள், கட்டண வெளிப்படைத்தன்மை, சமூகநீதி மற்றும் மாணவர் உரிமைகள் ஆகியவற்றில் கடுமையான, வெளிப்படையான விதிமுறைகளை அரசு உறுதி செய்ய வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பல்கலைக்கழகங்கள் அடுக்குமாடிக் கட்டடங்களாகச் சுருங்குகின்றனவா?<br>மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறதா?<br><br>தமிழ்நாட்டில் தனியார் பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கான விதிமுறைகளில் தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், நமது உயர்கல்விக் கட்டமைப்பின் எதிர்காலம் குறித்து ஆழமான கவலையை… <a href="https://t.co/zPRtZCf73S">pic.twitter.com/zPRtZCf73S</a></p>&mdash; Velmurugan.T (@VelmuruganTVK) <a href="https://x.com/VelmuruganTVK/status/2100201215556452555?ref_src=twsrc%5Etfw">September 16, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>‘விஜய் சேதுபதி பேசியது அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் பொருந்தும்’ - சீமான்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-vijay-sethupathi-said-applies-to-all-political-leaders-seeman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-vijay-sethupathi-said-applies-to-all-political-leaders-seeman#comments</comments><guid isPermaLink="false">674fccc0-acb0-4e80-a467-2a1629e8e540</guid><pubDate>Wed, 16 Sep 2026 13:42:40 +0000</pubDate><atom:updated>2026-09-16T13:42:40.852Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,Seeman,விஜய் சேதுபதி,vijay sethupathi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/nhqg4cf9/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/nhqg4cf9/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேசிய கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-</p> <p>“அரசியல் தெரிந்தவர்கள், அரசியல் தெரிந்தவர்களிடம் நீங்கள் பேசலாம். ஆனால் அவதூறு பேசுபவர்களிடம் எதுவும் பேச முடியாது. நடிகர் விஜய் சேதுபதி சொன்ன கருத்து அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் பொருந்தும். ஏன் கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்தவர்களுக்கு அது பொருந்தாதா? </p><p>அவர் சொன்னது ஒரு பொதுவான கருத்து. இந்த கருத்தை ‘வையத் தலைமை கொள்’ புத்தகத்தில் வெ.இறையன்பு எழுதியுள்ளார். ஒரு தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்? என உலகம் முழுவதும் இருக்கும் கோட்பாட்டை அவர் எழுதுகிறார். அதை விஜய் சேதுபதி பதிவு செய்துள்ளார். </p><p>அவர் கூறிய பொதுவான கருத்தை ஒருவரோடு பொருத்திப் பார்த்து பிரச்சினை செய்வது அவசியமற்றது. நீங்கள் ஏன் உங்களை சொல்வதாக நினைத்துக் கொள்ள வேண்டும்? அப்படியென்றால் அவர் சொன்னதுபோல் பிரச்சினைகளை கண்டு ஓடுபவர் தானா?”</p><p>இவ்வாறு சீமான் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>‘பரந்தூரில் கேட்டதை பட்டினப்பாக்கம் மக்களிடம் முதல்-அமைச்சர் ஏன் கேட்கவில்லை?’ - செல்வப்பெருந்தகை கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-didnt-the-chief-minister-ask-the-people-of-pattinapakkam-what-he-asked-in-parandur-selvaperunthagai-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-didnt-the-chief-minister-ask-the-people-of-pattinapakkam-what-he-asked-in-parandur-selvaperunthagai-asks#comments</comments><guid isPermaLink="false">f5de2429-a5a0-4109-9ae0-27e24994c289</guid><pubDate>Wed, 16 Sep 2026 13:28:25 +0000</pubDate><atom:updated>2026-09-16T13:28:25.264Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>செல்வப்பெருந்தகை,Selvaperunthagai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/zaxkhjsq/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/zaxkhjsq/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“அரசு சார்பில் ஒரு எதிர்கால திட்டம் போடப்படும்போது அனைத்து கட்சி தலைவர்களை அழைத்து ஆலோசிக்க வேண்டும். மேலும் எந்த பகுதியில் ஒரு திட்டம் வருகிறதோ அந்த பகுதிக்கு சென்று அந்த மக்களிடம் ஆலோசனை பெற வேண்டும். </p><p>பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில், அந்த பகுதிக்கு நேரில் சென்று அங்குள்ள மகக்ளிடம் பேசி, விமான நிலையம் வேண்டாம் என்ற முடிவுக்கு முதல்-அமைச்சர் வந்தார். பரந்தூர் மக்களிடம் கேட்டதுபோல் பட்டினப்பாக்கம் மக்களிடம் முதல்-அமைச்சர் ஏன் க்ஜருத்து கேட்கவில்லை? </p> <p>இன்று கம்யூனிஸ்ட்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவு கொடுத்தாலும், மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கிறார்கள். அதே போன்று அனைத்து கூட்டணி கட்சிகளும் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவை; நாளை  &apos;ஆசீர்வாத தீபம்&apos; ஏற்றி பிரார்த்திப்போம் - எல். முருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/25-years-of-modis-public-service-let-us-light-blessing-lamp-and-pray-tomorrow-l-murugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/25-years-of-modis-public-service-let-us-light-blessing-lamp-and-pray-tomorrow-l-murugan#comments</comments><guid isPermaLink="false">c8179092-dd25-403f-abf4-b0ab802f4a69</guid><pubDate>Wed, 16 Sep 2026 13:22:02 +0000</pubDate><atom:updated>2026-09-16T13:22:02.837Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>L. Murugan,Modi,service,Public,மக்கள்,எல். முருகன்,மோடி,Deepam,prayers,தீபம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/ycmbidpe/l.murugan.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ எல். முருகன்]]></media:title><media:description type="html"><![CDATA[ மத்திய இணை மந்திரி எல். முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/ycmbidpe/l.murugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவை நாளை  'ஆசீர்வாத தீபம்' ஏற்றி பிரார்த்திப்போம் என்று மத்திய இணை மந்திரி எல். முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D">எல். முருகன்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>பொது சேவை</h2><p>மக்களுக்கு சேவை செய்வதன் மூலம் நாட்டிற்கு சேவையாற்றுவதே பாரத பிரதமர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF">மோடியின்</a> வாழ்க்கையின் வழிகாட்டும் கொள்கையாக இருந்து வருகிறது. பொது சேவை மற்றும் தேச கட்டமைப்பிற்காக அர்ப்பணிப்புடன் அரும்பணியாற்றி வரும்  நரேந்திர மோடியின்  25 ஆண்டுகால அரசு தலைமை பணி ஈடு இணையற்றது.</p><h2>முன்மாதிரி மாநிலம்</h2><p>நரேந்திர மோடி குஜராத் முதல்-மந்திரியாக பதவியேற்ற பிறகு, அது தேசத்திற்கே முன்மாதிரி மாநிலமாக உருவெடுத்தது. அதுபோலவே, அவர் பாரத பிரதமராக பதவியேற்ற பிறகு நமது நாடு உலகிற்கே குருவாக  மாறி வருகிறது.</p><h2>உயரிய விருது</h2><p>உலகளவில் 37 நாடுகளின் உயரிய விருதை பிரதமர் பெற்றுள்ளார். கொரானா காலத்தில் உலகமே பெரும் இன்னல்களை சந்தித்து திகைத்து நின்றபோது, பிரதமரின் சீரிய தலைமை, கொரனாவைில் இருந்து மக்களை காக்க எடுத்த நடவடிக்கைகள் வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும். கொரானா தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு உலக நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. </p><h2>வளர்ச்சியடைந்த இந்தியா- 2047</h2><p>உஜ்வாலா சமையல் எரிவாயு திட்டம், முத்ரா கடன் திட்டம், ஜன்தன் வங்கி கணக்கு திட்டம் உள்ளிட்ட பிரதமரின் தொலைநோக்கு மக்கள் நல திட்டங்கள் நாட்டை வளர்ச்சி பாதையில் வழிநடத்தி பீடுநடை போட செய்துள்ளது. </p> <p>அவரது தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமை நாட்டிற்கு ஒரு புதிய திசையையும் புதுப்பிக்கப்பட்ட வலிமையையும் அளித்துள்ளது. பிரதமரின் உறுதிப்பாடு மற்றும் செயல்திறன் காரணமாக வளர்ச்சியடைந்த இந்தியா- 2047 என்ற இலக்கை நோக்கி நாம் வேகமாக முன்னேறி வருகிறோம்.</p><h2>ஆசீர்வாத தீபம்</h2><p>நாட்டின் இந்த முன்னேற்ற பயணத்திற்கும், பிரதமர் நரேந்திர மோடியின்  சிறப்பான தலைமைக்கு நமது நல்வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவிக்கும் வகையில், செப்டம்பர் 17 அன்று மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் நம் வீடுகளில் 'ஆசீர்வாத தீபம்' ஏற்றுவோம். அவருக்கு நமது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவிப்போம்.  அவரது நீண்ட ஆயுள் மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்வோம்.</p> <p>இந்தியர்கள் ஒவ்வொருவரும் இணைந்து ஆசிர்வாத தீபத்தை ஏற்றி, நமது பிரதமரின் நீண்ட ஆயுளுக்கும் நல்ல ஆரோக்கியத்துக்கும் பிரார்த்திக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறியுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் 25 ஆண்டுகால மக்கள் சேவை<br><br>நாளை &#39;ஆசீர்வாத தீபம்&#39; ஏற்றி பிரார்த்திப்போம்<br><br>மக்களுக்குச் சேவை செய்வதன் மூலம் நாட்டிற்குச் சேவையாற்றுவதே பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் வாழ்க்கையின் வழிகாட்டும் கொள்கையாக இருந்து வருகிறது. பொதுச் சேவை… <a href="https://t.co/12wD2HLIZg">pic.twitter.com/12wD2HLIZg</a></p>&mdash; Dr.L.Murugan (@DrLMurugan) <a href="https://x.com/DrLMurugan/status/2100209022624489751?ref_src=twsrc%5Etfw">September 16, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>‘புதிய தலைமை செயலகத்திற்கு வேறு இடத்தை தேர்வு செய்ய வேண்டும்’ - நயினார் நாகேந்திரன் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-different-location-must-be-selected-for-the-new-secretariat-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-different-location-must-be-selected-for-the-new-secretariat-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">f85f2277-c679-4900-8e33-c973ffefed37</guid><pubDate>Wed, 16 Sep 2026 13:10:48 +0000</pubDate><atom:updated>2026-09-16T13:10:48.899Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/ddt4ch1o/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/ddt4ch1o/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“தலைமை செயலகத்தை பட்டினப்பாக்கத்திற்கு மாற்றப்போவதாகவும், ரூ.1,200 கோடியில் திட்டம் போடப்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள். ஆனால் இன்னும் இடத்தை தேர்வு செய்யவில்லை, திட்ட அறிக்கை தயார் செய்யவில்லை, செலவு மதிப்பீடு செய்யவில்லை. இருப்பினும் ரூ.1,200 கோடியில் திட்டம் என்று சொன்னால் என்ன அர்த்தம் என்று புரியவில்லை. இப்போது ரூ.2,000 கோடி என்று வேறு சொல்கிறார்கள். </p><p>முதல்-அமைச்சர் விஜய் சினிமாவில் இருந்தபோது மீனவர்களை காப்பாற்றுவது போல் ஒரு திரைப்படத்தில் நடித்தார். ஆனால் இப்போது, மீனவர்களின் வீடுகளை இடிப்பது போல் நடவடிக்கைகள் இருந்து வருகின்றன. இது முற்றிலும் கண்டனத்திற்குரியது. புதிய தலைமை செயலகத்திற்கு வேறு இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் விஜய்யிடம் கேட்டுக்கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title> “ஆர்ப்பாட்டத்தில் ஆபாசமாக பேசிய தி.மு.கவினர் மீது வழக்கு பதிந்தது சரியானது தான்” - பிரேமலதா விஜயகாந்த்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-was-indeed-right-to-register-a-case-against-the-dmk-members-who-spoke-obscenely-at-the-protest-premalatha-vijayakanth</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-was-indeed-right-to-register-a-case-against-the-dmk-members-who-spoke-obscenely-at-the-protest-premalatha-vijayakanth#comments</comments><guid isPermaLink="false">f3fcdd17-d4ff-484b-b596-08fdec6141a9</guid><pubDate>Wed, 16 Sep 2026 13:09:52 +0000</pubDate><atom:updated>2026-09-16T13:09:52.753Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,DMDK,தேமுதிக,பிரேமலதா விஜயகாந்த்,பிரேமலதா,தி.மு.க.,Premalatha Vijayakand,Premalatha</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/2cjgeyg4/premalatha.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரேமலதா விஜயகாந்த்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/2cjgeyg4/premalatha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஆர்ப்பாட்டத்தில் ஆபாசமாக பேசிய தி.மு.கவினர் மீது வழக்கு பதிந்தது சரியானது தான் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.</p><h2>வழக்கு பதிந்தது சரிதான்</h2><p>தேமுதிகவின் 22 ஆம் ஆண்டு கட்சி தொடக்க நாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள <a href="https://www.dailythanthi.com/topic/dmdk">தேமுதிக </a>அலுவலகத்தில் கட்சி கொடியினை, கட்சியின் பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தி.மு.கவினர் மீது வழக்கு பதிந்தது தொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது;-</p><p>“ஆர்ப்பாட்டத்தில் ஆபாசமாக பேசிய தி.மு.கவினர் மீது வழக்கு பதிந்தது சரியானது தான்... நிர்மல் குமார் அம்மா என்ன பண்ணாங்க.? எதுக்கு அவங்க அம்மாவ பத்தி பேசுனீங்க? அடுத்தவங்க முதுகை சொரியும் முன் உங்கள் முதுகை பாருங்கள்.. பெற்ற தாய் குறித்து பொதுவெளியில் பேசும் உரிமை யாருக்கும் கிடையாது.</p><h2>பிரேமலதா கண்டனம்</h2><p>பேசிய அவரையும் பெற்றெடுத்தது ஒரு தாய்தான். அதற்கு எனது கடுமையான கண்டனங்கள். மைக் கிடைத்துவிட்டது என்பதற்காக, வாய்க்கு வந்தபடி என்னென்னவோ பேசக் கூடாது. அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்தது சரியான முடிவுதான். வார்த்தைகள் என்றைக்கும் மாறாது, வரலாறும் மாறாது.</p><p>சிம்பிளா ஒரு வார்த்தை சொல்லிட்டு போய்டுவேன், யாரையும் காயப்படுத்தக்கூடாதுன்னு என்னோட வார்த்தைகளை பார்த்து பயன்படுத்துறேன். முதல்-அமைச்சர் லண்டன் பயணத்தில் நீங்க என்னலாம் பார்த்தீங்களோ. நானும் அதையெல்லாம் பார்த்தேன்”</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் 19ம் தேதி கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-camp-for-fingerprint-registration-at-all-ration-shops-in-tamil-nadu-on-the-19th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-camp-for-fingerprint-registration-at-all-ration-shops-in-tamil-nadu-on-the-19th#comments</comments><guid isPermaLink="false">fcaa156f-6e8e-4473-9b84-6506ab6eda2c</guid><pubDate>Wed, 16 Sep 2026 12:49:01 +0000</pubDate><atom:updated>2026-09-16T12:49:01.668Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழ்நாடு,Ration shop,Special camp,சிறப்பு முகாம்,ரேசன் கடை,ration shops,கைவிரல் ரேகை பதிவு,ரேசன் கடைகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/3ph82wi3/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/3ph82wi3/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் 19ம் தேதி கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.</p><h2>ரேசன் கடைகளில் சிறப்பு முகாம்</h2><p>இது தொடர்பாக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழக அரசு</a> வெளியிட்டுள்ள செய்திக்குறிபில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் விரல் ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை (eKYC) மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதும் இடையூறுமின்றி இப்பணியினை செய்திட அறிவுறுத்தப்பட்டு கடந்த அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் விரல் ரேகை சரிபார்ப்பு (eKYC) பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 96.48% (eKYC) பணியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><h2>கைவிரல் ரேகை பதிவு</h2><p>இந்த (eKYC) பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு 19.09.2026 அன்று தமிழகத்திலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் (இடைதேர்தல் நடைபெறவிருக்கும் மதுராந்தகம், தாராபுரம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளை தவிர்த்து) சிறப்பு முகாம் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.</p><p>எனவே, இன்று வரை, நியாய விலைக் கடைகள் மூலம் கைரேகை பதிவு (eKYC) செய்யப்படாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் 19.09.2026 அன்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் நடைபெறும் சிறப்பு முகாமினை பயன்படுத்தி தங்களது கைரேகைப் பதிவினை (eKYC பதிவினை) மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிரான வழக்கு - தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-against-the-construction-of-the-pen-memorial-green-tribunal-warns-tamil-nadu-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-against-the-construction-of-the-pen-memorial-green-tribunal-warns-tamil-nadu-government#comments</comments><guid isPermaLink="false">ecca933c-b51e-45fe-abb1-93acc731a44e</guid><pubDate>Wed, 16 Sep 2026 12:47:46 +0000</pubDate><atom:updated>2026-09-16T12:47:46.917Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt,Green Tribunal,பசுமை தீர்ப்பாயம்,பேனா நினைவுச் சின்னம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/usjav8nv/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/usjav8nv/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவாக வங்கக்கடலில் 134 அடி உயரத்தில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு சுற்றுச்சூழல் ஒப்புதல் வந்து வழங்கி இருந்தது. இந்த ஒப்புதலை எதிர்த்து நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வெண்ணிலா தாயுமானவன், சென்னையை சேர்ந்த மீனவர் பாரதி, திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். </p><p>இந்த வழக்கு நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு 2022 ஆம் ஆண்டே உத்தரவு பிறப்பித்தும் தமிழக அரசு இதுவரை அறிக்கை தாக்கல் செய்யாமல் அவகாசம் மட்டுமே பெற்று வருவதாக தீர்ப்பாயம் அதிருப்தி தெரிவித்தது. </p><p>மேலும், தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன? என்ற கேள்வியையும் தீர்ப்பாயம் எழுப்பியுள்ளது. அதோடு, இந்த பிரதான வழக்கில் வரும் அக்டோபர் 29-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள பசுமை தீர்ப்பாயம், இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 29-ந்தேதிக்கு தள்ளிவைத்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பரிகாரம் செய்ய வந்த பெண்களுடன் உல்லாசம்: சிறுமியை சீண்டியதால் அம்பலமான சாமியாரின் தந்திரம்...!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/having-fun-with-women-who-came-to-seek-redress-the-preachers-trick-was-exposed-after-he-raped-a-girl</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/having-fun-with-women-who-came-to-seek-redress-the-preachers-trick-was-exposed-after-he-raped-a-girl#comments</comments><guid isPermaLink="false">fd921816-9dfa-475b-9686-16a84847820f</guid><pubDate>Wed, 16 Sep 2026 12:35:35 +0000</pubDate><atom:updated>2026-09-16T12:35:35.229Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,சேலம்,சிறுமிக்கு பாலியல் தொல்லை,Preacher arrested,rape attempt,போலி சாமியார் கைது</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/u4vb5qmb/13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சாமியார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/u4vb5qmb/13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>வாழப்பாடி அருகே பரிகாரம் செய்வதாக கூறி பெண்கள் மற்றும் சிறுமிகளை ஏமாற்றி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறப்படும் நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.</p><h2>சிறுமிக்கு பாலியல் தொல்லை</h2><p>சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த வெள்ளாளக்குண்டம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயராஜா. இவர், பிரிட்ஜ் மற்றும் வாஷிங் மெஷின் உள்ளிட்ட மின்சாதனங்களை பழுதுபார்க்கும் கடை நடத்தி வருகிறார். மேலும், தான் ஆன்மிகவாதி என்றும், பல்வேறு தோஷங்களுக்கு பரிகாரம் செய்வதாகவும் கூறி வந்ததாக தெரிகிறது.</p><p>இந்த நிலையில், அவரது கடைக்கு சென்ற சிறுமி ஒருவரிடம் <a href="https://www.dailythanthi.com/topic/பாலியல்">பாலியல்</a> ரீதியாக சீண்டியுள்ளார். இதனை சிறுமி தனது பெற்றோரிடம் சென்று கூறியுள்ளார். உடனடியாக பெற்றோர்கள் இது குறித்து வாழப்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.</p><h2>குற்றவாளி கைது</h2><p>பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஜயராஜாவை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் பரிகாரம் செய்வதாக கூறி, தன்னிடம் உதவி நாடி வந்த பெண்களிடம் உல்லாசமாக இருந்துள்ளார் எனும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது. மேலும், விஜயராஜா பயன்படுத்திய லேப்டாப்பை கைப்பற்றி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a> ஆய்வு செய்தனர். அப்போது 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பள்ளி சிறுமிகளின் ஆபாச படங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, லேப்டாப் மற்றும் செல்போனை போலீசார் பறிமுதல் செய்து, சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் ஆய்வு செய்து வருகின்றனர்.</p><p>இதில் பாதிக்கப்பட்டவர்கள் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களா அல்லது வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக பரிகாரம் செய்வதாக கூறி பெண்களிடம் உல்லாசமாக இருந்து, அதை பதிவு செய்து பெண்களை மிரட்டியுள்ளாரா என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டெங்கு பாதிப்பால் பறிபோன 9 உயிர்கள்; உடனடி நடவடிக்கை எடுக்க நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nine-lives-lost-to-dengue-nainar-nagendran-urges-immediate-action</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nine-lives-lost-to-dengue-nainar-nagendran-urges-immediate-action#comments</comments><guid isPermaLink="false">bbe45a62-5e31-42b0-8e28-26fc80311d70</guid><pubDate>Wed, 16 Sep 2026 12:17:14 +0000</pubDate><atom:updated>2026-09-16T12:17:14.239Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/n2lejrmd/nainar.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/n2lejrmd/nainar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>டெங்கு பாதிப்பால் 9 உயிர்கள் பறிபோன நிலையில், தவெக அரசு மெத்தனத்தைக் கைவிட்டுப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.</p><h2>நாள்தோறும் 70 முதல் 100 பேர் வரை பாதிப்பு</h2><p>இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதும், இதுவரை 15,933-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியும் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் 70 முதல் 100 பேர் வரை பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வரும் இந்த இக்கட்டான சூழல், பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>காலநிலை மாற்றத்தால் கொசுக்கள் பெருகும் எனத் தெரிந்திருந்தும், தவெக அரசின் சுகாதாரத் துறை உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் 9 பேர் உயிரிழக்கும் அளவுக்கு மெத்தனமாகச் செயல்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பாதிப்புகள் தீவிரமடைந்த பின் கண்துடைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடாமல், ஆரம்பத்திலேயே கொசு ஒழிப்பு மற்றும் சுகாதாரப் பணிகளை முடுக்கிவிட்டிருந்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதையும் இந்த உயிரிழப்புகளையும் தடுத்திருக்க முடியும்.</p><h2>போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை</h2><p>எனவே, இனியாவது விஜய் அரசு தனது மெத்தனப் போக்கைக் கைவிட்டு, போர்க்கால அடிப்படையில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu/nine-dead-as-dengue-cases-surge-minister-urges-masks">டெங்கு தடுப்பு</a> நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மாவட்ட மருத்துவமனைகளிலும் போதிய படுக்கைகள், மருந்துகள், ரத்தத் தட்டணுக்கள் (platelets) இருப்பு மற்றும் மருத்துவர்கள் பணியில் இருப்பதை 24 மணி நேரமும் உறுதி செய்ய வேண்டும். மேலும், தமிழகம் முழுவதும் வீடு வீடாகக் கொசு ஒழிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தி, தொடர் மருத்துவ முகாம்களை நடத்தி மக்களின், குறிப்பாகக் குழந்தைகளின் உயிரைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் போக்குவரத்து விதிமீறல்அபராதம் குறித்த தகவல்களைப் பெற 15 இடங்களில் சிறப்பு மையங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-centers-set-up-at-15-locations-in-chennai-to-provide-information-on-traffic-violation-fines</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-centers-set-up-at-15-locations-in-chennai-to-provide-information-on-traffic-violation-fines#comments</comments><guid isPermaLink="false">58560d21-1187-4cb4-bc97-19b4a38299bb</guid><pubDate>Wed, 16 Sep 2026 12:14:53 +0000</pubDate><atom:updated>2026-09-16T12:14:53.412Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,fine,traffic violation,போக்குவரத்து விதிமீறல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/xep34ufg/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/xep34ufg/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக வாகன ஓட்டிகளுக்கு இ-சலான்(E-Challan) மூலம் அபராதம் விதிக்கப்படுகிறது. நேரடியாக வாகன ஓட்டிகளின் செல்போன் எண்ணுக்கு மெசேஜ் அனுப்பப்பட்டு அபராதம் குறித்த தகவல் தெரிவிக்கப்படும். ஆனால் இது போன்ற மெசேஜ்கள் மூலமாக சைபர் கிரைம் மோசடிகள் அரங்கேறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. </p><p>அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து செல்போனுக்கு ஏதேனும் மெசேஜ் வந்தால், அதில் உள்ள லிங்க் போன்றவற்றை தொட்டு உள்ளே செல்ல வேண்டாம் என காவல்துறை தரப்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம், மோசடி குறித்த பயம் காரணமாக காவல்துறை சார்பில் அனுப்பப்படும் போக்குவரத்து விதிமீறல் அபராதம் தொடர்பான மெசேஜ்களையும் பலர் பார்க்காமல் விட்டுவிடுகின்றனர். இதனால் அபராதத்தை செலுத்தாமல் பலர் இருந்து வருவதாக கூறப்படுகிறது. </p><p>இதனை தவிர்க்கும் வகையில், அபராதம் குறித்த தகவல்களை பெறுவதற்காக சென்னை காவல்துறை சார்பில் சிறப்பு மையங்களை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களுக்கு அபராத தொகை எவ்வளவு இருக்கிறது என்பதை நேரடியாக அந்த மையங்களுக்கு சென்று தெரிந்து கொண்டு அபராதத்தை செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>சென்னையில் ஒவ்வொரு காவல் மாவட்டத்திலும் ஒரு மையம் என்ற அடிப்படையில் மொத்தம் 15 சிறப்பு அழைப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அழைப்பு மையங்கள் வரும் 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>கணவருடன் கருத்து வேறுபாடு: இன்ஸ்டாகிராமில் ஆறுதல் கூறி..150 பவுன் நகை, ரூ.30 லட்சம் மோசடி செய்த வாலிபர்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dispute-with-husband-young-man-swindles-150-sovereigns-of-gold-and-30-lakhs-after-offering-comfort-on-instagram</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dispute-with-husband-young-man-swindles-150-sovereigns-of-gold-and-30-lakhs-after-offering-comfort-on-instagram#comments</comments><guid isPermaLink="false">d8677025-4861-4301-b4be-04f3471b7667</guid><pubDate>Wed, 16 Sep 2026 11:54:33 +0000</pubDate><atom:updated>2026-09-16T11:54:33.976Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,இன்ஸ்டாகிராம்,Instagram,திருவொற்றியூர்,தண்டையார்பேட்டை,Tondiarpet,Thiruvotriyur</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/ph1n5acg/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இன்ஸ்டாகிராமில் ஆறுதல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/ph1n5acg/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திருவொற்றியூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பழகி, 150 பவுன் நகை மற்றும் ரூ.30 லட்சம் பணத்தை மோசடி செய்ததாக இளம்பெண் புகார் அளித்துள்ளார்.</p><h2>குடும்பப் பிரச்சினையை கூறிய பெண்</h2><p>திருவொற்றியூரை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (29). இவருக்கு தண்டையார்பேட்டையை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த இளம்பெண், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.</p><h2>ஆறுதல் கூறி நகை, பணம் பெற்றதாக புகார்</h2><p>இளம்பெண்ணின் தந்தை பாரிமுனையில் நகைக்கடை நடத்தி வருகிறார். குடும்ப பிரச்சினைகள் குறித்து ஹரிகிருஷ்ணனிடம் இளம்பெண் கூறிய நிலையில், அவர் ஆறுதல் கூறி, பெண்ணிடம் சிறுகச் சிறுக 150 பவுன் நகை மற்றும் ரூ.30 லட்சம் பணத்தை ஹரிகிருஷ்ணன் பெற்றதாக கூறப்படுகிறது.</p><h2>கணவர் கேட்டபோது மோசடி வெளிச்சம்</h2><p>இதற்கிடையே, இளம்பெண்ணின் கணவர் மீண்டும் அவருடன் சேர்ந்தபோது, நகை மற்றும் பணம் குறித்து கேட்டுள்ளார். அப்போது, இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய ஹரிகிருஷ்ணனிடம் நகை மற்றும் பணத்தை கொடுத்திருப்பதும், அவற்றை அவர் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுவதும் தெரியவந்தது.</p><h2>வாலிபர் கைது</h2><p>இதையடுத்து, இளம்பெண் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">திருவொற்றியூர் </a>போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஹரிகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>சிவகங்கையில் பயங்கரம்: சொகுசு காரில் மது அருந்திய 2 வாலிபர்கள் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/horror-in-sivagangai-two-youths-drinking-in-luxury-car-chased-and-hacked-to-death</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/horror-in-sivagangai-two-youths-drinking-in-luxury-car-chased-and-hacked-to-death#comments</comments><guid isPermaLink="false">e3826d92-6d0d-4d7d-a9c1-8962a2dd993b</guid><pubDate>Wed, 16 Sep 2026 11:47:00 +0000</pubDate><atom:updated>2026-09-16T11:47:00.156Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிவகங்கை,Sivagangai,வெட்டிக்கொலை,youths,வாலிபர்கள்,alcohol,மது,hacked to death,ஓட ஓட விரட்டி</media:keywords><media:content height="357" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/dtrjw3gd/sivagangai.jpg" width="680"><media:title type="html"><![CDATA[ 2 வாலிபர்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிவகங்கையில் பயங்கரம்: சொகுசு காரில் மது அருந்திய 2 வாலிபர்கள் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/dtrjw3gd/sivagangai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை,</p><p>சிவகங்கை அருகே காரில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்த காளையார்கோவிலை சேர்ந்த 2 இளைஞர்களை மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">வெட்டிக்கொலை</a> செய்த சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>சொகுசு காரில் மது அருந்தினர்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">சிவகங்கை</a> மாவட்டம் காளையார்கோவில் பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பழலை நகர் கொடிக்காடு கண்மாய் பகுதிக்கு ஒரு சொகுசு காரில் வந்தனர். அங்குள்ள ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் காரை நிறுத்திவிட்டு, அதன் அருகே அமர்ந்து அவர்கள் மது அருந்தி கொண்டிருந்ததாக தெரிகிறது.</p> <h2>ஓட ஓட விரட்டி கொலை</h2><p>அப்போது, அந்த பகுதிக்கு இரண்டு இருசக்கர வாகனங்களில் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் சிலர் திடீரென வந்தனர். அவர்கள் காரின் அருகே அமர்ந்திருந்த இளைஞர்களை நோக்கி ஆக்ரோஷமாக பாய்ந்தனர். ஆபத்தை உணர்ந்த இரண்டு இளைஞர்களும் தப்பிப்பதற்காக கண்மாய் பகுதியை நோக்கி ஓடினர். ஆனாலும் விடாமல் துரத்திய அந்த மர்ம கும்பல், இருவரையும் ஓட ஓட விரட்டி பிடித்து, அரிவாளால் சரமாரியாக வெட்டியது. </p><p>இதில் தலை மற்றும் உடல் பகுதிகளில் கொடூரமான வெட்டுக்காயங்கள் விழுந்து, தலை சிதைந்த நிலையில் இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர். அந்த மர்ம கும்பல் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றது.</p><h2>போலீஸ் விசாரணை</h2><p>இதுகுறித்து தகவல் அறிந்த சிவகங்கை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த 2 வாலிபர்களின் உடல்களையும் கைப்பற்றினர். பின்னர் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். </p><p> இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>8 மணி நேரம் நடந்த சோதனை - ‘அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம்’ - அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/8-hour-raid-political-vendetta-is-the-reason-anbil-mahesh-alleges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/8-hour-raid-political-vendetta-is-the-reason-anbil-mahesh-alleges#comments</comments><guid isPermaLink="false">d3ef2f82-63e7-4bb0-8b70-39fe883a97f6</guid><pubDate>Wed, 16 Sep 2026 11:24:06 +0000</pubDate><atom:updated>2026-09-16T11:24:06.560Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbil Mahesh,அன்பில் மகேஷ் பொய்யாமொழி,சோதனை,மத்திய குற்றப்பிரிவு போலீசார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/2ahtlcdd/an.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்பில் மகேஷ் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/2ahtlcdd/an.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தனது வீட்டில் நடைபெற்ற சோதனைக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம்  என <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D">அன்பில் மகேஷ்</a> குற்றம் சாட்டி உள்ளார்.</p><h2>சோதனை </h2><p>திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் இன்று காலை முதல் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனை நிறைவடைந்த நிலையில், இதுகுறித்து அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் பேசினார்.</p><h2>8 மணி நேரம்</h2><p>அப்போது அவர் கூறுகையில், “காலை முதல் சுமார் 8 மணி நேரமாக எனது வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். எனது அனைத்து கோப்புகள் மற்றும் வீட்டின் அனைத்து அறைகளிலும் சோதனை நடத்த போலீசாருக்கு அனுமதி அளித்தேன்” என்றார்.</p><h2>அரசியல் காழ்ப்புணர்ச்சி</h2><p>ஆளுங்கட்சியை விமர்சித்ததன் காரணமாகவே தனது வீட்டில் சோதனை நடைபெற்றதாக அன்பில் மகேஷ் குற்றம்சாட்டினார்.</p><p>“அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காகவும், அரசியல் மடைமாற்றத்திற்காகவும் எனது வீட்டில் சோதனை நடைபெற்றுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.</p><h2>18-ம் தேதி</h2><p>விசாரணைக்காக வரும் 18-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு தனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.</p><p>மேலும், 'எதிர்த்து பேசினால் அடுத்த நிமிடம் ரெய்டு அடிப்பதா?. இந்த மாதிரி சலசலப்புக்கெல்லாம் நான் அஞ்ச மாட்டேன். எழுதி வைத்துக்கொள்ளுங்கள், 18-ம் தேதி விசாரணைக்கு ஆஜரானபின் நேராக தாராபுரத்தில் பிரசாரத்தில் ஈடுபடுவேன். என்ன பொய் வழக்கு போட்டாலும் நீதிமன்றத்தை நாடி நீதியை நிலைநாட்டுவோம்’ என்றார். </p>]]></content:encoded></item><item><title>கடலூரில் தங்க செயினுடன் விநாயகர் சிலையை ஆற்றில் கரைத்த முன்னாள் அரசு அதிகாரி - நகையை தேடும் பணி தீவிரம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/former-government-official-immerses-vinayagar-idol-along-with-a-gold-chain-in-the-river-in-cuddalore-intensive-search-for-the-jewelry-underway</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/former-government-official-immerses-vinayagar-idol-along-with-a-gold-chain-in-the-river-in-cuddalore-intensive-search-for-the-jewelry-underway#comments</comments><guid isPermaLink="false">6cc776fc-5d81-4c83-afe5-dd74cca4d0fb</guid><pubDate>Wed, 16 Sep 2026 11:07:27 +0000</pubDate><atom:updated>2026-09-16T11:07:27.458Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Cuddalore,கடலூர்,விநாயகர் சிலை,vinayagar statue,Gold chain,தங்க செயின்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/26ez6sc4/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/26ez6sc4/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர்,</p><p>நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 14-ந்தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி வீடுகளிலும், பொது இடங்களிலும் வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை எடுத்துச் சென்று நீர்நிலைகளில் பொதுமக்கள் கரைத்து வருகின்றனர்.  </p><p>அந்த வகையில், கடலூர் மாவட்டம் வண்ணாரப்பாளையத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி, விநாயகர் சதுர்த்தியையொட்டி வீட்டில் வைத்து வழிபட்ட சிலைக்கு ஒன்றரை பவுன் தங்க செயினை அணிவித்திருந்தார். தொடர்ந்து 3-வது நாளில் அந்த சிலையை கடலூர் தேவனாம்பட்டினம் அருகே உப்பனாற்றில் கரைத்துள்ளார். </p><p>சிலையை ஆற்றில் கரைத்த பிறகுதான் அதில் தங்க செயின் இருந்தது நினைவுக்கு வந்துள்ளது. இதையடுத்து பொதுமக்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் ஆற்றில் தேடியும் நகை கிடைக்கவில்லை. தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நகையை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>திருவாரூரில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு: 4 பேருக்கு டெங்கு உறுதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fever-cases-increase-in-thiruvarur-4-people-confirmed-with-dengue</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fever-cases-increase-in-thiruvarur-4-people-confirmed-with-dengue#comments</comments><guid isPermaLink="false">5140af23-006d-4e2f-95c1-683490060c6e</guid><pubDate>Wed, 16 Sep 2026 11:07:06 +0000</pubDate><atom:updated>2026-09-16T11:07:06.392Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thiruvarur,திருவாரூர்,hospital,மருத்துவமனை,டெங்குகாய்ச்சல்,dengu</media:keywords><media:content height="542" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/import/Articles/2022/Jan/202201042134552453_Treatment-for-47-people-infected-with-dengue-fever_SECVPF.gif" width="794"><media:title type="html"><![CDATA[ டெங்கு காய்ச்சல் பாதித்த 47 பேருக்கு சிகிச்சை]]></media:title><media:description type="html"><![CDATA[ டெங்கு காய்ச்சல் 4 பேருக்கு உறுதி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/import/Articles/2022/Jan/202201042134552453_Treatment-for-47-people-infected-with-dengue-fever_SECVPF.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவாரூர்,</p><p>திருவாரூர் பகுதியில் காய்ச்சல் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 27 பேரில் 4 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><h2>4 பேருக்கு டெங்கு</h2><p>தமிழகத்தில் தற்போது நிலவி வரும் வெப்பநிலை மற்றும் திடீரென பெய்யும் மழையால் சீதோஷ்ண நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு வகையான நோய்களும் காய்ச்சல் பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன. திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D">காய்ச்சல்</a> காரணமாக 27 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>காய்ச்சலால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு <a href="https://www.dailythanthi.com/topic/சிகிச்சை">சிகிச்சை</a> பெற்று வரும் 27 பேரில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் தேவையான அளவு மருந்துகள் கையிருப்பில் உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><h2>சுகாதாரத்துறை அறிவுரை</h2><p>காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்கள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளை அணுகி, மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், வீடுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்றும் கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இரவு 7 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chance-of-rain-in-9-districts-until-7-pm-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chance-of-rain-in-9-districts-until-7-pm-2#comments</comments><guid isPermaLink="false">38491159-386c-4574-b09d-4a68b35548cb</guid><pubDate>Wed, 16 Sep 2026 11:01:33 +0000</pubDate><atom:updated>2026-09-16T11:01:33.504Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,மழை,மழை செய்திகள்,Rain News,Rain Alert,மழை எச்சரிக்கை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/zg9mr279/rain1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/zg9mr279/rain1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>9 மாவட்டங்களில் மழை</p><p>சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் வடக்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தெற்கு உள் கர்நாடகா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. சுமார் 1.5 கி.மீ. உயரத்தில் தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய ராயலசீமா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.</p><p>இந்த நிலையில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழகத்தில் </a>9 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p>அதன்படி தென்காசி, அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>