<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 15 Aug 2026 03:24:21 +0000</lastBuildDate><item><title>80-வது சுதந்திர தினம்: கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றினார் முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/80th-independence-day-chief-minister-vijay-hoists-national-flag-first-time</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/80th-independence-day-chief-minister-vijay-hoists-national-flag-first-time#comments</comments><guid isPermaLink="false">2f11b451-bcb4-497f-bd57-9251e2f4936b</guid><pubDate>Sat, 15 Aug 2026 03:18:50 +0000</pubDate><atom:updated>2026-08-15T03:22:52.148Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சுதந்திர தினம்,Independece Day,தேசியக்கொடி ஏற்றினார்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/0nheth4f/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/0nheth4f/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் தனது முதல் சுதந்திர தின விழாவில், சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் இன்று தேசியக் கொடியேற்றினார்.</p><h2>சுதந்திர தின விழா</h2><p>நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு சார்பில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடக்கும் இந்த விழாவில் முதல்-அமைச்சர் தேசியக் கொடி ஏற்றுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு முதல்-அமைச்சர் விஜய் கலந்து கொண்டு தேசியக் கொடி ஏற்றினார்.</p><p>இதற்காக அவர், இன்று காலை சுமார் 8 மணியளவில் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டார். மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே வந்ததும், சென்னை காவல்துறையின் மோட்டார் சைக்கிள்கள் முன்னும் பின்னும் அணிவகுத்து அவரை கோட்டைக்கு அழைத்து வந்தனர்.</p><p>காலை சுமார் 8.35 மணியளவில் கோட்டை முன்பாக அமைக்கப்பட்டுள்ள அணிவகுப்பு மரியாதை ஏற்ற விஜய் மேடையை வந்தடைந்தார். அவரை தலைமைச் செயலாளர் சாய்குமார் வரவேற்றார். அதன்பிறகு மேடைக்கு வந்த விஜய், அங்கு காவல்துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து திறந்த ஜீப்பில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/xdzmujnw/Untitled-3-2.jpg" /></figure><h2>தேசியக் கொடி ஏற்றினார்</h2><p>பின்னர் கோட்டை கொத்தளத்துக்கு வருகை தந்தார். இந்த நிலையில் காலை 8.45 மணிக்கு கொடிக் கம்பத்தில் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்து, முதல்-அமைச்சர் விஜய் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து முதல்-அமைச்சர் விஜய் சுதந்திர தின உரையாற்றி வருகிறார்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/8ph51p8l/Untitled-3-3.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-lifted-on-11-types-of-liquor-at-tasmac-shops</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-lifted-on-11-types-of-liquor-at-tasmac-shops#comments</comments><guid isPermaLink="false">a5789d7f-aed2-4f04-b07c-4b8545c383a0</guid><pubDate>Sat, 15 Aug 2026 03:15:09 +0000</pubDate><atom:updated>2026-08-15T03:15:09.329Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டாஸ்மாக்,Tasmac,மதுபானம்,Liquor</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/r165qgli/Tssmac-shop.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/r165qgli/Tssmac-shop.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு என்ரிகா எண்டர்பிரைசஸ் நிறுவனம் மதுபானங்களை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் கடந்த 11-ந் தேதி உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, அந்த நிறுவனத்தின் குறிப்பிட்ட மதுபான தயாரிப்புகளில் செயற்கை சுவையூட்டும் பொருட்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. எனவே அதன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அந்த நிறுவனத்தின் 11 வகை மதுபானங்களின் விற்பனையை நிறுத்துமாறு தமிழக அரசின் டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டது.</p><h2>தடை நீக்கம்</h2><p>அதன்படி வி.எஸ்.ஓ.பி. எக்ஸ்ஷா கோல்டு பிராந்தி, லூயிஸ் வெர்னான்ட் எக்ஸ்ஓ பிளெண்டட் பிரீமியம் பிராந்தி, மெக்டொவெல்ஸ் வி.எஸ்.ஓ.பி. பிராந்தி, நம்பர் ஒன் மெக்டொவெல்ஸ் பைன் பிராந்தி, மென்'ஸ் கிளப் டீலக்ஸ் பிராந்தி, ஹனி பீ பைன் பிராந்தி, என்ரிகா வி.எஸ்.ஓ.பி. செலக்ட் பிராந்தி, என்ரிகா பிளாட்டினம் ரிசர்வ் எக்ஸ்ஓ பிராந்தி, என்ரிகா பிரீமியம் பிரெஞ்ச் பிராந்தி, வீரன் ஸ்பெஷல் பிராந்தி, என்ரிகா ஒல்டு இண்டி கிளா சிக் டார்க் ரம் ஆகியவை தடை செய்யப்பட்டன. இந்த நிலையில் மறுநாளே தடை நீக்கப்பட்டுள்ளது. உணவு தரக்கட்டுப்பாட்டு அமைப்பு தடையை நீக்கலாம் என பரிந்துரையை செய்ததையடுத்து தடை நீக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பயங்கரம்: ஒரே நாளில் பிளஸ்-2 மாணவர் உள்பட 3 பேர் படுகொலை- 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/horror-in-chennai-three-people-including-a-class-12-student-murdered-in-a-single-day-two-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/horror-in-chennai-three-people-including-a-class-12-student-murdered-in-a-single-day-two-arrested#comments</comments><guid isPermaLink="false">28b62ebc-3f0c-4c30-84e0-a82aeeb932e7</guid><pubDate>Sat, 15 Aug 2026 03:00:48 +0000</pubDate><atom:updated>2026-08-15T03:00:48.699Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Nepal,நேபாளம்,plus-2 student,வாலிபர்,2 arrested,2 பேர் கைது,young man,பிளஸ்-2 மாணவர்,படுகொலை,murdered,3 people,3 பேர்,பயங்கரம்,Horrifying</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/n4k83wlw/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கொலையான தனுஷ், ரஞ்சன், ஸ்ரீராம் சகா.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/n4k83wlw/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a>யில் நேற்று ஒரே நாளில் நடந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-2-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D">பிளஸ்-2 மாணவர் </a>உள்பட <a href="https://www.dailythanthi.com/topic/3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">3 பேர் படுகொலை</a> செய்யப்பட்ட சம்பவங்களில் <a href="https://www.dailythanthi.com/topic/2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">2 பேர் கைது</a> செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>பிளஸ்-2 மாணவர்</h2><p>சென்னை திருவொற்றியூர் தாங்கல் வசந்த் நகர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷின் மகன் தனுஷ் (வயது 16). இவர் விம்கோ நகரில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று மாலை சுமார் 4.30 மணியளவில் பள்ளி அருகே உள்ள அஜாக்ஸ் பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள காலி மைதானத்தில் தனுஷ் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தனுஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். </p><h2>தகராறு</h2><p>தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் பாஸ்கரன், திருவொற்றியூர் உதவி கமிஷனர் பால்ராஜ், இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் உள்ளிட்ட போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், 2 நாட்களுக்கு முன்பு அதே பள்ளியில் பிளஸ்-2 மாணவர் ஒருவருக்கும், பிளஸ்-1 மாணவர் ஒருவருக்கும் யார் சீனியர் என்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. </p><h2>மயங்கி விழுந்து சாவு</h2><p>இந்த நிலையில் அந்த பள்ளியின் பிளஸ்-1 மாணவர், அதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோருடன் சேர்ந்து தனுஷை அஜாக்ஸ் பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள காலி மைதானத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த தனுஷ், சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள பிளஸ்-1 மாணவர் உள்பட 10-க்கும் மேற்பட்டோரை தேடி வருகின்றனர். </p><h2>நேபாள வாலிபர் அடித்து கொலை</h2><p>சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நீச்சல் குளம் பின்பகுதியில் இளைஞர் ஒருவர் தலை உள்பட உடல் முழுவதும் பலத்த காயங்களோடு நேற்று காலை கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அண்ணாசதுக்கம் போலீசார் இறந்து கிடந்த இளைஞரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார். விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">நேபாளத்தை</a> சேர்ந்த ஸ்ரீராம்சாகா(27) என்பது தெரிந்தது.</p><p>இதுதொடர்பாக பீகாரை சேர்ந்த சன்னிசதா(26) என்பவரை போலீசார் கைது செய்தனர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில் ஏறி அவசரமாக அவர் சொந்த ஊருக்கு தப்பி ஓட முயன்றபோது அவரை பிடித்தனர். விசாரணையில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் ஸ்ரீராம்சாகாவை சன்னிசதா அடித்து படுகொலை செய்தது உறுதியானது. </p><figure><img alt="கைதான காமேஷ், சன்னி சதா." src="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/y3m00o30/கைதான-காமேஷ்-சன்னி-சதா.jpg" /></figure><h2>சமாதியில் ரத்த வெள்ளத்தில் பிணம்</h2><p>அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள பாதிரிவேடு போலீஸ் எல்லைக்கு உட்பட்டது சாணாபுத்தூர் கிராமம். இங்கு வசித்து வரும் கூலித்தொழிலாளி ராஜா என்பவரின் மூத்த மகன் ரஞ்சன்(18). சாணாபுத்தூர் கிராமத்தில் வீட்டின் அருகே தனியார் வயல்வெளியில் உள்ள சமாதி மீது நேற்று காலை ரஞ்சன் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலையில் புகுந்து காவலாளிகளை தாக்கி கட்டிப்போட்டு ரூ.4 லட்சம் பொருள் கொள்ளை வழக்கில் கைதானவர்களில் ரஞ்சனும் ஒருவர் என தெரியவந்தது. </p><h2>வாலிபர் வெட்டிக்கொலை</h2><p>இந்த வழக்கில் அதே கிராமத்தை சேர்ந்த காமேஷ்(22) என்பவரையும் பாதிரிவேடு போலீசார் கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட ரஞ்சனும், காமேசும் நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள். இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் இரவு ரஞ்சன், காமேஷை மது குடிக்க அழைத்தார். இருவரும் வயல்வெளியில் சமாதி உள்ள இடத்துக்கு சென்றனர். அங்கு மது போதை தலைக்கு ஏறிய நிலையில், முன் விரோதத்தில் ஏற்பட்ட தகராறில் ரஞ்சனை, காமேஷ் சரமாரியாக வெட்டி கொன்றது தெரியவந்தது.</p>]]></content:encoded></item><item><title>துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 17-ந் தேதி திருச்சி வருகை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vice-president-cp-radhakrishnan-to-visit-trichy-on-the-17th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vice-president-cp-radhakrishnan-to-visit-trichy-on-the-17th#comments</comments><guid isPermaLink="false">8326789d-8c62-4c1e-8bc1-58dc34655e3d</guid><pubDate>Sat, 15 Aug 2026 02:53:44 +0000</pubDate><atom:updated>2026-08-15T02:53:44.299Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சி.பி.ராதாகிருஷ்ணன்,திருச்சி,Trichy,C.P. Radhakrishnan</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/62dxoap4/7.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/62dxoap4/7.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,  </p><p>இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் மற்றும் தஞ்சை சாஸ்திரா பல்கலைக்கழகங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகிற 17-ந் தேதி (திங்கட்கி ழமை) காலை 7 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகிறார். பின்னர் அவர் திருச்சியில் இருந்து கார் மூலம் திருவாரூர் சென்று நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். </p><p>அதன்பிறகு அங்கிருந்து தஞ்சை செல்லும் அவர், அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு அன்றைய தினம் மாலையே கார் மூலம் திருச்சி வந்து மீண்டும் விமானம் மூலம் புறப்பட்டு செல்கிறார். துணை ஜனாதிபதி வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.</p> ]]></content:encoded></item><item><title>போலீசார் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ஒரு நாள் ஆப்சென்ட்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-personnel-who-ride-vehicles-without-wearing-a-helmet-will-be-marked-absent-for-the-day</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-personnel-who-ride-vehicles-without-wearing-a-helmet-will-be-marked-absent-for-the-day#comments</comments><guid isPermaLink="false">466c4b35-04d5-43a2-989d-a26c88ae8318</guid><pubDate>Sat, 15 Aug 2026 02:21:55 +0000</pubDate><atom:updated>2026-08-15T02:21:55.339Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>police,absent,ஹெல்மெட்,Helmet,போலீசார்,ஆப்சென்ட்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/tv1y6l70/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/tv1y6l70/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>'விபத்து தடுப்பு நடவடிக்கையாக, 'ஹெல்மெட்' அணியாமல், இரு சக்கர வாகனம் ஓட்டும் போலீசாரின் வாகனங்களை, பறிமுதல் செய்ய வேண்டும்; அவர்களுக்கு ஒரு நாள் 'ஆப்சென்ட்' போட வேண்டும்' என, மண்டல ஐ.ஜி.,க்கள் உத்தரவிட்டுள்ளனர்.</p><p>'பொதுமக்கள் அனை வரும் ஹெல்மெட் அணிந்து தான், இரு சக்கர வாகனம் ஓட்ட வேண்டும்' என, உத்தரவிடப் பட்டுள்ளது. சில நேரங்களில், சட்டத்தை அமல்படுத்த வேண்டிய போலீசாரே, அதனை மீறி வருகின்றனர். 'ஹெல்மெட்' அணியாமல் இரு சக்கர வாகனங்களில் போலீசார் சென்றால், பொதுமக்கள் அதை, 'வீடியோ' எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிடுகின்றனர். இது, காவல் துறைக்கு அவப்பெயர் ஏற்படுத்துகிறது.</p><p>இதனை தவிர்க்கவும், விபத்து தடுப்பு நடவ டிக்கையாகவும், 'ஹெல் மெட்' அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டும் போலீசாருக்கு, ஒரு நாள், 'ஆப்சென்ட்' போட வேண்டும்' என, மாவட்ட எஸ்.பி.,க்கள் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு ஐ.ஜி.,க்கள் மண்டல உத்தரவிட்டுள்ளனர். இது தொடர்பாக அவர் பிறப்பித்துள்ள உத்தரவு பின்வருமாறு;</p><p>போலீசார், 'ஹெல் மெட்' அணியாமல் இரு சக்கர வாகனம் ஒட்டுவது தெரியவந்தால், அவர்களின் வாகனத்தை பறிமுதல் செய்ய வேண் டும். சம்பந்தப்பட்ட நபர், ஐ.எஸ்.ஐ., முத்திரையுடன் கூடிய, புதிய ஹெல்மெட் வாங்கி வந்த பின், அவரிடம் வாகனத்தை ஒப்படைக்க வேண்டும்.</p><p>போலீசார் காலை, 7:00 மணிக்கு பணிக்கு வரும் போது, 'ஹெல்மெட்' அணிந்து வந்ததை, உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். அவர்கள் ஹெல்மெட் அணியாமல் வந்தது தெரியவந்தால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு நாள், ஆப்சென்ட்' போட வேண்டும்.</p><p>சாலையில், போலீசார் ஹெல்மெட் அணியாமல், இரு சக்கர வாகனம் ஓட்டிச் சென்றால், அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.</p><p>இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சென்னை-கடலூர் சரக்கு கப்பல் சேவை ஜனவரி மாதம் தொடங்கும் - துறைமுக அதிகாரிகள் தகவல் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-cuddalore-cargo-ship-service-to-begin-in-january-port-officials</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-cuddalore-cargo-ship-service-to-begin-in-january-port-officials#comments</comments><guid isPermaLink="false">2bf2f0f9-182c-4e70-abaf-0abfc00c7050</guid><pubDate>Sat, 15 Aug 2026 01:57:01 +0000</pubDate><atom:updated>2026-08-15T01:57:01.896Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,துறைமுகம்,Cuddalore,கடலூர்,Harbour</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/vqoy9gpb/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/vqoy9gpb/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>கடலுார் துறைமுகத்தில், 40 ஆண்டுகளுக்கு முன் உரங்கள், நிலக்கரி ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டன. சுமார் 111 ஏக்கர் பரப்பளவு கொண்ட கடலுார் துறைமுகத்தில், சரக்கு கப்பல்கள் கரைக்கு அருகே வராமல் கடலுக்கு உள்ளேயே நிறுத்தப்பட்டு, சிறிய படகுகளில் சரக்குகள் இறக்கப்படும். பின்னர் அவை துறைமுகத்திற்கு எடுத்து வரப்படும். இது போன்ற பல்வேறு காரணங்களால், கடலூர் துறைமுக பணிகள் காலப்போக்கில் முடங்கின.</p><p>இதற்கிடையே, கடலுார் துறைமுகத்தை மேம்படுத்தி, மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர, 'மஹதி கடலுார் போர்ட் அண்டு மேரிடைம்' என்ற நிறுவனத்துடன் தமிழக அரசு, கடந்த ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி, இந்த துறைமுகத்தில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை ஆகஸ்ட் மாதத்தில் முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பணிகள் இன்னும் முடியவில்லை. </p><p>மேலும், பணிகளை முடிக்க, அந்த நிறுவனம் அவகாசம் கேட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை துறைமுக அதிகாரிகள் கூறுகையில், “கடலுார் துறைமுகத்தில், கப்பல்களை நிறுத்துவதற்கான இரண்டு இடங்கள் தயாராக உள்ளன. கடலுார் துறைமுகம், 9 மீட்டர் ஆழம் கொண்டது என்பதால், பெரிய கண்டெய்னர் கப்பலை இயக்க முடியும். அடுத்தகட்டமாக பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. </p><p>அந்த பணிகள் இந்த மாதத்தில் முடியும் என எதிர்பார்த்த நிலையில், இன்னும் பணிகள் நிறைவடையாததால், பணிகளை முடிக்க வரும் ஜனவரி வரை அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. எனவே, சென்னை -கடலுார் சரக்கு கப்பல் சேவை அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்தனர். </p> ]]></content:encoded></item><item><title>மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா: வண்ணமயமான பட்டங்களை பார்த்து ரசித்த பொதுமக்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/international-kite-festival-in-mamallapuram-colorful-kites-delight-public</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/international-kite-festival-in-mamallapuram-colorful-kites-delight-public#comments</comments><guid isPermaLink="false">1d7d3434-0027-4487-806e-0470e30be8f2</guid><pubDate>Sat, 15 Aug 2026 01:53:47 +0000</pubDate><atom:updated>2026-08-15T01:53:47.870Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Mamallapuram,மாமல்லபுரம்,பட்டம் விடும் திருவிழா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/0wf1usjk/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/0wf1usjk/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>செங்கல்பட்டு,</p><p>மாமல்லபுரத்தில் 5-வது சர்வதேச பட்டம் விடும் திருவிழா நேற்று தொடங்கியது. வண்ணமயமான பட்டங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.</p><h2>பட்டம் விடும் திருவிழா</h2><p>செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுற்றுலா வளர்ச்சிக் கழக மைதானத்தில் 5-வது சர்வதேச பட்டம் விடும் திருவிழா நேற்று தொடங்கியது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வீரப்பன், சுற்றுலாத்துறை கமிஷனர் ஜெயசீலன், திருப்போரூர் எம்.எல்.ஏ. பா.விஜயராஜ், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் எஸ்.சக்திவேல் ஆகியோர் முன்னிலையில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் பட்டம் விடும் திருவிழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த பட்டம் பறக்கவிடும் வீரர்களுக்கு அமைச்சர் பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.</p><p>இந்த விழா ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று, இந்தியாவின் பஞ்சாப், தமிழ்நாடு, குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், இந்தோனேசியா, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களும் கலந்துகொண்டு பட்டங்களை பறக்கவிட்டனர்.</p><h2>பார்வையாளர்களை கவர்ந்தது</h2><p>காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், கடற்கரை பகுதியில் வண்ணமயமான 70 பட்டங்கள் வானில் பறக்கவிடப்பட்டன. இந்திய தேசிய கொடி, ஆமை, டால்பின், ஆக்டோபஸ், மிக்கி மவுஸ், ஜல்லிக்கட்டு காளை, சூப்பர்மேன், மீன்கள், டிராகன் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் எல்.இ.டி. விளக்குகளுடன் ஜொலித்த பட்டங்கள் வானில் பறந்த காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. வானில் பறந்த வண்ணமயமான பட்டங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்ததுடன், பல்வேறு இடங்களில் நின்று புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.</p><p>விழாவில் மாமல்லபுரம் சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாளர் கமலக்கண்ணன், மாமல்லபுரம் நகராட்சி கமிஷனர் அபர்ணா, நகராட்சி பொறியாளர் சுபாஷினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்களின் பாதுகாப்புக்காக செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அய்மன் ஜமால் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். மேலும், பட்டம் விடும் திருவிழா நடைபெறும் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்கள் மெதுவாக செல்லும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.</p>]]></content:encoded></item><item><title>போலீசாரை துப்பாக்கி காட்டி மிரட்டிய ரவுடி அதிரடி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rowdy-who-threatened-police-with-a-gun-arrested-in-a-swift-operation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rowdy-who-threatened-police-with-a-gun-arrested-in-a-swift-operation#comments</comments><guid isPermaLink="false">1bf96dfd-d86a-4926-899f-fc94306f8c9f</guid><pubDate>Sat, 15 Aug 2026 01:39:55 +0000</pubDate><atom:updated>2026-08-15T01:39:55.434Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,போலீஸ்,கைது,Tirunelveli,திருநெல்வேலி,arrest,Threat,மிரட்டல்,Rowdy,ரவுடி,துப்பாக்கி,gun</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/3z2u7xby/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-5-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாட்டு துப்பாக்கி, 5 தோட்டாக்களுடன் ரவுடி கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/3z2u7xby/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-5-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>நெல்லை அருகே தாழையூத்து பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் பொதுமக்களை அச்சுறுத்தியதோடு, போலீசாரையும் துப்பாக்கி காட்டி மிரட்டிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">ரவுடி</a>யை போலீசார் கைது செய்தனர்.</p><h2>நாட்டு துப்பாக்கியுடன் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டம், தாழையூத்து பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு அரிசி ஆலை அருகே ஒரு நபர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF">நாட்டு துப்பாக்கி</a>யுடன் சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்துவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.</p><h2>நாட்டு துப்பாக்கி, 5 தோட்டாக்கள் பறிமுதல்</h2><p>அப்போது அங்கிருந்த ராஜவல்லிபுரம், மேலத்தெருவைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் இசக்கிமுத்து(எ) ராஜாவை போலீசார் மடக்கி பிடித்தனர். போலீசாரைக் கண்டதும், தன்னை கைது செய்ய வந்தால் போலீசாரை சுட்டுக் கொன்று விடுவதாக அவர் மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் A வகை சரித்திர பதிவேடு குற்றவாளியான ராஜாவிடமிருந்து ஒரு நாட்டு துப்பாக்கி மற்றும் 5 <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">தோட்டாக்களை</a> போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">பறிமுதல்</a> செய்தனர். </p><h2>ரவுடி கைது</h2><p>இதுதொடர்பாக தாழையூத்து காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து இசக்கிமுத்து(எ) ராஜா கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். </p>]]></content:encoded></item><item><title>காங். மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருது: இன்று வழங்குகிறார் முதல்-அமைச்சர் விஜய் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thagaisal-tamizhar-award-for-senior-congress-leader-krishnasamy-chief-minister-vijay-to-present-it-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thagaisal-tamizhar-award-for-senior-congress-leader-krishnasamy-chief-minister-vijay-to-present-it-today#comments</comments><guid isPermaLink="false">828f66b0-6f1f-4cf2-8e16-938147b381fd</guid><pubDate>Sat, 15 Aug 2026 01:39:51 +0000</pubDate><atom:updated>2026-08-15T01:39:51.039Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>விருது,Award,கிருஷ்ணசாமி,Krishnasamy,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/kmbe1rtm/4.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/kmbe1rtm/4.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>தகைசால் தமிழர் விருது என்பது தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் தொண்டாற்றிச் சிறப்பிடம் பெற்ற தகைசான்ற நபர்களைப் பெருமைப்படுத்த தமிழ்நாடு அரசால் கடந்த 2021-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டு வரும் ஒரு உயரிய விருதாகும். ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் தகைசால் தமிழர் விருதை கோட்டை கொத்தளத்தில் நடக்கும் விழாவில் முதல்-அமைச்சர் வழங்கி வருகிறார்.</p><h2>தகைசால் தமிழர் விருது</h2><p>இந்த விருதை பெறும் நபருக்கு ரூ.10 லட்சம் பரிசாக வழங்கப்படுகிறது. அந்தவகையில், கடந்த 2021-ம் ஆண்டு பொதுவுடைமை இயக்க மூத்த தலைவர் என்.சங்கரய்யாவுக்கும், 2022-ம் ஆண்டு கம்யூனிஸ்டு கட்சி மூத்ததலைவர் நல்லகண்ணு, 2023-ம் ஆண்டுதிராவிடர் கழக தலைவர் கி.வீரமணி 2024-ம் ஆண்டு காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், 2025-ம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே. எம்.காதர் மொய்தீன் ஆகியோருக்கு 'தகைசால் தமிழர்' விருது வழங்கப்பட்டது. </p><p>இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான 'தகைசால் தமிழர்' விருதைதமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கும், கல்பனா சாவ்லா விருதை கோவையை சேர்ந்த நவ்ஷீன் பானு சந்த் என் பவருக்கும் முதல்-அமைச்சர் விஜய் வழங்குகிறார்.</p><p>அதன்படி, இன்று கோட்டை கொத்தளத்தில் நடக்கும் சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் விஜய் அந்த விருதை கிருஷ்ணசாமிக்கு வழங்குவார். கிருஷ்ணசாமி, பா.ம.க. எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணியின் தந்தை ஆவார். இவரது மகன் விஷ்ணு பிரசாத் கடலூர் எம்.பி.யாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>கல்பனா சாவ்லா விருது</h2><p>மேலும், வீரசாகசம் புரிந்தவர்களுக்கு கல்பனா சாவ்லா பெயரிலான விருதுகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில், கோவையை சேர்ந்த நவ்ஷீன் பானு சந்த் என்ற பெண்ணுக்கு இந்த ஆண்டு வழங்கப்படுகிறது. இவர் உலகிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரத்தை 2 முறை தொட்டவர். அதாவது, டென்சிங் ஹிலாரி எவரெஸ்ட் மாரத்தான் என்ற உலகிலேயே கடின மான மலையேற்றத்தை அவர் ஏறியுள்ளார்.</p><p>மேலும், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரில் விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது டயபடாலஜி மருத்துவ பிரிவில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர் வி.மோகன் என்பவருக்கு வழங்கப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>வேளாங்கண்ணி திருவிழா: சேலம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/velankanni-festival-special-train-operation-via-salem</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/velankanni-festival-special-train-operation-via-salem#comments</comments><guid isPermaLink="false">47909cda-1228-4b08-bfe2-5281299e2d5e</guid><pubDate>Sat, 15 Aug 2026 01:28:27 +0000</pubDate><atom:updated>2026-08-15T01:28:27.586Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,Special Train ​,Velankanni,வேளாங்கண்ணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/cuzoj80v/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/cuzoj80v/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,  </p><p>வேளாங்கண்ணியில் நடைபெறும் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா ஆலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக கோவா மாநிலம் வாஸ்கோடகாமாவில் இருந்து சேலம் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு கட்டண ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.</p><p>இது குறித்து சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>இந்த சிறப்பு ரெயில் (07365) வருகிற செப்டம்பர் மாதம் 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வாஸ்கோடகாமாவில் இருந்து இரவு 9.55 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரெயில் எஸ்.எம்.வி.டி. பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக மறுநாள் 7-ந்தேதி மாலை 4.00 மணிக்கு சேலம் வந்த டையும். பின்னர், இங்கிருந்து மாலை 4.10 மணிக்கு புறப்பட்டு நாமக்கல், கரூர், திருச்சி வழியாக 8-ந்தேதி அதிகாலை 3.45 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.</p><p>மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரெயில் (07366) வருகிற செப்டம்பர் மாதம் 9-ந் தேதி வேளாங்கண்ணியில் இருந்து இரவு 1.00 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் 10-ந்தேதி காலை 7.20 மணிக்கு சேலம் வந்தடை யும். இங்கிருந்து காலை 7.30 மணிக்கு புறப்பட்டு செப்டம்பர் 10-ந் தேதி அதிகாலை 3.00 மணிக்கு வாஸ்கோடகாமா சென்றடையும்.</p><p>இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் மூவர்ணத்தில் ஜொலித்த முக்கிய கட்டிடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/key-buildings-in-chennai-illuminated-in-the-tricolour-to-mark-independence-day</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/key-buildings-in-chennai-illuminated-in-the-tricolour-to-mark-independence-day#comments</comments><guid isPermaLink="false">aecffd40-ef01-489f-8f93-0489784badfe</guid><pubDate>Sat, 15 Aug 2026 01:12:57 +0000</pubDate><atom:updated>2026-08-15T01:12:57.267Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,சுதந்திர தினம்,Independence Day</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/vgbhyfb5/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/vgbhyfb5/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><p>இந்தியாவின் 80-ம் ஆண்டு சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் சுதந்திர தின விழாவை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் உற்சாகமாக நடைபெற்று வருகின்றன. அரசு அலுவலகங்கள், ரெயில் நிலையங்கள், புராதன கட்டிடங்கள் உள்ளிட்டவை மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்து வருகின்றன.</p> <p>அந்த வகையில், சென்னையில் உள்ள முக்கிய கட்டிடங்கள் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக சென்னையின் அடையாளமாக திகழும் சென்டிரல் ரெயில் நிலையம், சென்னை மாநகராட்சி கட்டிடமான ரிப்பன் மாளிகை, தலைமைச் செயலக கட்டிடம், எழும்பூர் ரெயில் நிலையம் உள்ளிட்ட கட்டிடங்கள் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இதனை கண்டுகளித்த பொதுமக்கள் தங்கள் செல்போன்களில் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர். </p>]]></content:encoded></item><item><title>சுதந்திர தின விழா: சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/independence-day-celebrations-traffic-diversions-in-chennai-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/independence-day-celebrations-traffic-diversions-in-chennai-today#comments</comments><guid isPermaLink="false">72527740-56f1-4579-aa3e-a1c8212eee49</guid><pubDate>Sat, 15 Aug 2026 01:12:06 +0000</pubDate><atom:updated>2026-08-15T01:12:06.878Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>போக்குவரத்து மாற்றம்,Independence Day,சுதந்திர தின விழா,Traffic diversions</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/h2kmbluf/traffic.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/h2kmbluf/traffic.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுதந்திர தின விழாவையொட்டி இன்று போக்குவரத்து மாற்றத்தை போலீசார் அறிவித்துள்ளனர். அதன்படி மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை முதல் போர் நினைவு சின்னம் வரை உள்ள காமராஜர் சாலை, போர் நினைவு சின்னத்தில் இருந்து ரிசர்வ் வங்கியின் சுரங்கப்பாதை வடக்குப்பகுதி வரை அமைந்துள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச்சாலை ஆகியவற்றில் உரிய வாகன அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே, வாகனங்களில் செல்லமுடியும். உரிய அனுமதி அட்டை இல்லாத வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.</p><p>இதேபோல, காமராஜர் சாலையில் இருந்து பாரிமுனைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும், உழைப்பாளர் சிலையில் இருந்து வாலாஜா சாலை வழியாக திருப்பிவிடப்படும். அதேபோல, பாரிமுனையில் இருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்களும், வடக்குகோட்டை பக்க சாலை, ராஜா அண்ணாமலை சந்திப்பு, முத்துசாமி சாலை வழியாக திருப்பிவிடப்படும்.</p><h2>அடையாள அட்டை</h2><p>சுதந்திர தினத்தன்று சென்னை கோட்டையில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்ள வாகனங்களில் வருபவர்களுக்கு, வாகன அனுமதி அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. சிவப்பு மற்றும் 'பர்பிள்' வண்ண அனுமதி அட்டைகள் வைத்திருப்பவர்கள் காலை 8 மணி வரை கோட்டை உள்வாயில் அருகே போக அனுமதி உண்டு. அவர்கள் கோட்டை வளாகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் வாகனங்களை நிறுத்தவேண்டும். ராஜாஜி சாலை வழியாக வருபவர்களுக்கும் இந்த அனுமதி பொருந்தும்.</p><p>இதே அடையாள அட்டையுடன், போர் நினைவுச் சின்னம் வழியாக வருபவர்கள் கொடிமர சாலை, முத்துசாமி பாலம், பாரிமுனை சந்திப்பு, ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக சென்று கோட்டையின் வெளி வாயில் அருகே இறங்கிக்கொண்டு, தங்களது வாகனங்களை கோட்டைக்கு எதிரே உள்ள பொதுப்பணித்துறை இடத்தில் நிறுத்தவேண்டும்.</p><p>நீல மற்றும் 'பிங்க்' வண்ண அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள், காலை 8.30 மணி வரை ராஜாஜி சாலை வழியாக போர் நினைவு சின் னம், கொடிமர சாலை, முத்துசாமி சாலை, பாரிமுனை சந்திப்பு, ரிசர்வ் வங்கி வழியாக சென்று கோட்டையின் வெளிவாயிலின் அருகே இறங்கிக் கொள்ள வேண்டும். வாகனங்களை பொதுப்பணித்துறை வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்த வேண்டும்.</p><p>நீல மற்றும் 'பிங்க்' வண்ண அனுமதி அட்டை வைத்திருக்கும், காமராஜர் சாலை வழியாக வருபவர்கள் காலை 8.30 மணிக்கு பின்னர் உழைப்பா ளர் சிலையில் இருந்து வாலாஜா சாலை, அண்ணாசாலை வழியாக சென்று முத்துசாமி பாலம், பாரிமுனை சந்திப்பு, ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதை வழியாக சென்று கோட்டையின் வெளிவாயில் அருகே இறங்கிக் கொள்ள வேண்டும். பொதுப்பணித்துறை இடத்தில் வாகனங்களை நிறுத்தவேண்டும்.</p><h2>தீவுத்திடலில்...</h2><p>வாகன அனுமதி அட்டை இல்லாதவர்கள் போர் நினைவு சின்னம் அருகே இறங்கிக்கொள்ள வேண்டும்.</p><p>வாகனங்களை தீவுத்திடலில் நிறுத்தவேண்டும் என்று போக்குவரத்து போலீசார் சார்பில் விரிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-price-situation-in-chennai-123</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-price-situation-in-chennai-123#comments</comments><guid isPermaLink="false">6e778d0f-d94f-4dd9-a9bf-eb200472092b</guid><pubDate>Sat, 15 Aug 2026 01:07:55 +0000</pubDate><atom:updated>2026-08-15T01:07:55.175Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல் விலை,டீசல் விலை,Petrol and diesel prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/jtzaynp6/petrol.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/jtzaynp6/petrol.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.</p><h2>பெட்ரோல், டீசல் விலை</h2><p>இந்நிலையில், சென்னையில் இன்று (15.08.2026 சனிக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ. 99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>சுதந்திர தின விழா: கோட்டை கொத்தளத்தில் இன்று தேசியக் கொடியேற்றுகிறார் முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/independence-day-celebration-chief-minister-vijay-to-hoist-the-national-flag-at-the-fort-ramparts-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/independence-day-celebration-chief-minister-vijay-to-hoist-the-national-flag-at-the-fort-ramparts-today#comments</comments><guid isPermaLink="false">fd57c90c-5a6b-4708-88aa-896f95058793</guid><pubDate>Fri, 14 Aug 2026 22:08:40 +0000</pubDate><atom:updated>2026-08-14T22:08:40.800Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Independence Day,சுதந்திர தின விழா,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/zdeo8k4e/cm.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழகத்தின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் பங்கேற்கும் முதல் சுதந்திர தின விழா இன்று சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் நடைபெறுகிறது. ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/zdeo8k4e/cm.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழகத்தின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">விஜய் </a>பங்கேற்கும் முதல் சுதந்திர தின விழா இன்று சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் நடைபெறுகிறது. தமிழக அரசு சார்பில் நடைபெறும் விழாவில் காலை 8.45 மணிக்கு அவர் தேசியக் கொடியை ஏற்றுகிறார்</p><h2>காவல்துறையினரின் அணிவகுப்பு</h2><p>இதற்காக இன்று காலை 8.20 மணிக்கு நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து காரில் விஜய் புறப்படுகிறார். மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே வந்ததும், காவல்துறையின் மோட்டார் சைக்கிள்கள் அணிவகுத்து அவரை கோட்டைக்கு அழைத்து வருகின்றன.</p><p>கோட்டை கொத்தளத்தில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ளும் விஜய், தொடர்ந்து திறந்த ஜீப்பில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிடுகிறார். பின்னர் கோட்டை கொத்தளத்துக்கு சென்று 8.45 மணியளவில் தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார்.</p><h2>சுதந்திர தின உரை</h2><p>தேசியக் கொடியை ஏற்றிய பிறகு முதல்-அமைச்சர் விஜய் சுதந்திர தின உரையாற்றுகிறார். இதில் தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து அவர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கான ஓய்வூதிய உயர்வு தொடர்பான அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.</p><h2>விருதுகள் வழங்கல்</h2><p>சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக தகைசால் தமிழர் விருது, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பெயரிலான விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதல்-அமைச்சரின் நல் ஆளுமை விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை விஜய் வழங்குகிறார். விழாவையொட்டி சென்னை முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தேசிய கொடியுடன் 3.29 மணி நேரம் நீரில் மிதந்து அசத்திய கல்லூரி மாணவி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/college-student-impresses-by-floating-in-water-for-3-hours-and-29-minutes-while-holding-the-national-flag</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/college-student-impresses-by-floating-in-water-for-3-hours-and-29-minutes-while-holding-the-national-flag#comments</comments><guid isPermaLink="false">76aef1b2-d7a9-4205-800d-af1d6dc1ec18</guid><pubDate>Fri, 14 Aug 2026 21:12:20 +0000</pubDate><atom:updated>2026-08-14T21:12:20.659Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கிருஷ்ணகிரி,சுதந்திர தினம்,national flag,தேசிய கொடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/syl6xnin/swim.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி நித்யபாரதி, கையில் தேசிய கொடியை ஏந்தியபடி தொடர்ந்து 3 மணி நேரம் 29 நிமிடங்கள் நீரில் மிதந்து அசத்தியுள்ளார்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/syl6xnin/swim.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ணகிரி, </p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF">கிருஷ்ணகிரி </a>மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி நித்யபாரதி, கையில் தேசிய கொடியை ஏந்தியபடி தொடர்ந்து 3 மணி நேரம் 29 நிமிடங்கள் நீரில் மிதந்து அசத்தியுள்ளார்.</p><h2>கல்லூரி மாணவி நித்யபாரதி</h2><p>கிருஷ்ணகிரி மாவட்டம் வெங்கடாபுரம் பஞ்சாயத்துக்குட்பட்ட கே.ஏ. நகரை சேர்ந்தவர் ராமன். இவரது மனைவி வள்ளியம்மாள். இவர்களது மகள் நித்யபாரதி . நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் ரோபோடிக்ஸ் பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.</p><h2>3 மணி 29 நிமிடங்கள்</h2><p>இந்நிலையில், நீச்சல் குளத்தில் கையில் தேசிய கொடியை ஏந்தியபடி தொடர்ந்து 3 மணி நேரம் 29 நிமிடங்கள் நீரில் மிதந்து நித்யபாரதி அசத்தியுள்ளார். காலை 8 மணிக்கு தொடங்கி, தொடர்ந்து 11.29 மணி வரை நீரில் மிதந்து அசத்தினார். </p><p>சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியுடன் மேற்கொண்ட இந்த முயற்சி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.</p><p>மாணவியின் சாதனை முயற்சியை பாராட்டி பொதுமக்கள் மற்றும் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நாளை விடுமுறை... இன்றே டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுத்த மதுப்பிரியர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-tomorrow-liquor-enthusiasts-flocked-to-tasmac-shops-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-tomorrow-liquor-enthusiasts-flocked-to-tasmac-shops-today#comments</comments><guid isPermaLink="false">4028d75a-1f3d-47c2-84ab-9812ba314172</guid><pubDate>Fri, 14 Aug 2026 17:41:21 +0000</pubDate><atom:updated>2026-08-14T17:41:21.955Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்சி,டாஸ்மாக்,Tasmac,சுதந்திர தினம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/tw4opr9n/tas.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாளை மதுகடைகள் திறக்கப்படாது என்பதால் இன்றே மதுப்பிரியர்கள் படையெடுத்துள்ளனர். ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/tw4opr9n/tas.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>நாளை மதுகடைகள் திறக்கப்படாது என்பதால் இன்றே மதுப்பிரியர்கள் படையெடுத்துள்ளனர். </p><h2>விடுமுறை </h2><p>சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D">டாஸ்மாக் </a>மதுபானக் கடைகளுக்கு நாளை (ஆக. 15) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>குவிந்த மதுபிரியர்கள்</h2><p>இதையடுத்து, நாளை மதுபானக் கடைகள் மூடப்படுவதால், இன்று திருவெறும்பூரில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்க ஏராளமான மதுபிரியர்கள் குவிந்தனர்.</p><h2>பரபரப்பு</h2><p>ஒரே நேரத்தில் ஏராளமானோர் மதுபானம் வாங்க குவிந்ததால், டாஸ்மாக் கடை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. </p>]]></content:encoded></item><item><title>கோவை மாணவர் அமுதன் கொலை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-student-amudhan-murder-cpm-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-student-amudhan-murder-cpm-condemns#comments</comments><guid isPermaLink="false">f9566b0e-49ba-418d-8a4c-151677b23ba5</guid><pubDate>Fri, 14 Aug 2026 16:11:47 +0000</pubDate><atom:updated>2026-08-14T16:11:47.161Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,கொலை,கண்டனம்,மாணவர்,condemns,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,Student dead,CPI(M)</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/qk5z6ldp/communist.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பெ.சண்முகம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கோவை மாணவர் அமுதன் கொலை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/qk5z6ldp/communist.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கோவை மாணவர் அமுதன் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">கொலை</a> சம்பவத்திற்கு கண்டனம்! இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- </p><h2>கண்டனம்</h2><p>உரிய விசாரணை நடத்தவும், போதைப் பொருள் கலாச்சாரத்தை முற்றாக ஒழித்திடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!! <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88">கோவை</a> மாவட்டம் இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவர் அமுதன் கும்பல் தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளார். இந்த கொடூரக் கொலைக்கு மார்க்சிஸ்ட் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. </p><p>மாணவரை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். இந்தக் கொடிய சம்பவம் தற்செயலாக நடந்ததில்லை. இதற்கு முன்பாக தொடர்ச்சியாக சிறிதும் பெரிதுமாக இரண்டு தாக்குதல்கள் மாணவர்களுக்குள் நடந்திருக்கிறது.</p><h2>சிறுமைப்படுத்துவது சரியானது அல்ல</h2><p>மாணவர்களின் இந்த கொலைவெறி தாக்குதலுக்கு மிக அடிப்படையாக கல்லூரியில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் புழக்கம் முக்கிய காரணமாக இருந்து வருகிறது. மாநில அரசும் காவல்துறையும் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் என்று இதை சிறுமைப்படுத்துவது சரியானது அல்ல. இவர்கள் கும்பலாக செயல்படுவதற்கும் தயக்கமின்றி தாக்குதல்களில் ஈடுபடுவதற்கும் கஞ்சாவும் போதைப் பொருட்களுமே உந்துதலாக இருந்து வருகிறது.</p><h2>கல்லூரி நிர்வாகம் தயாராக இல்லை</h2><p>கல்லூரி நிர்வாகத்தை பொறுத்தவரை, கொலை செய்யப்படட மாணவர் தங்களிடத்தில் கல்வி கற்க வந்தவர் என்கிற மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ளவில்லை. மாணவர் மறைவுக்கு பின்புகூட பெற்றோரை ஆறுதல் படுத்தக்கூட கல்லூரி நிர்வாகம் தயாராக இல்லை. மாணவரின் பெற்றோர் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள் உள்பட அனைத்து அம்சங்களையும் முழுமையாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.</p> <h2>போதை கலாச்சாரம்</h2><p>கோவை மாவட்டத்தில் போதை கலாச்சாரத்தோடு இணைந்து வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கோவையில் கடந்த 10 நாட்களில் 3 படுகொலை சம்பவங்கள் நடந்திருக்கிறது. இந்த உண்மையை மறைத்து சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மட்டும் பார்ப்பது பொருத்தமற்றது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.</p> <h2>சமூக பொறுப்புணர்வு </h2><p>எனவே, கோவையை சூழ்ந்து வருகிற இந்த போதை சார்ந்த வன்முறைகளை தடுத்து நிறுத்திடவும், போதை கலாச்சாரத்தை முற்றாக ஒழிப்பதற்கும் காவல்துறை முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>கல்லூரி நிர்வாகங்கள் பணம் குவிக்கும் நோக்கத்தோடு மாணவர்களை சேர்க்காமல், சமூக பொறுப்புணர்வு கொண்ட குடிமக்களாக மாணவர்களை உருவாக்கிட வேண்டும் என்கிற சமூக அக்கறையுடன் கல்வி நிர்வாகங்கள் நடந்து கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&quot;இன்னும் எத்தனை நாட்களுக்கு முதல்-அமைச்சர் அமைதி காக்கப் போகிறார்?&quot; - கனிமொழி எம்.பி. கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/for-how-much-longer-will-the-chief-minister-remain-silent-mp-kanimozhi-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/for-how-much-longer-will-the-chief-minister-remain-silent-mp-kanimozhi-asks#comments</comments><guid isPermaLink="false">83ddea45-576e-4f4f-961e-0cd9c5f1d4b0</guid><pubDate>Fri, 14 Aug 2026 16:01:10 +0000</pubDate><atom:updated>2026-08-14T16:01:10.097Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,திமுக,DMK,தமிழகம்,கனிமொழி எம்.பி.,Kanimozhi MP,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/hp3jyxm5/kanis.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/hp3jyxm5/kanis.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தேர்தல் வாக்குறுதி அளித்ததை மறந்துவிட்டதால் த.வெ.க. அரசு அமைதி காக்கிறதா? என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/kanimozhi">கனிமொழி எம்.பி. </a>கேள்வி எழுப்பியுள்ளார். </p><h2>24 மணி நேரம் கடந்துவிட்டது</h2><p>இது தொடர்பாக, அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- </p><p>ஆகஸ்ட் 10ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட MMDR சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 24 மணி நேரம் கடந்துவிட்டது.</p><p>தமிழ்நாட்டைப் பொருளாதார இறையாண்மை கொண்ட மாநிலமாக மாற்றுவோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்ததை மறந்துவிட்டதால் த.வெ.க. அரசு அமைதி காக்கிறதா?</p><h2>தீவிரமான பிரச்சினை</h2><p>இச்சட்டத் திருத்தம் மாநிலத்தின் நிதிச்சுமையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், மாநில அரசின் அதிகார வரம்புக்குள் உள்ள நிலத்தின் மீது ஒன்றிய அரசு அதிகாரம் செலுத்த முயல்வதும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு முற்றிலும் முரணானது.</p><p>இவ்வளவு தீவிரமான ஒரு பிரச்சினை தொடர்பாக முதல்-அமைச்சர் இன்னும் எத்தனை நாட்களுக்கு அமைதி காக்கப் போகிறார்?</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title> பள்ளி மாணவர் கொலை: தலைநகரிலேயே மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லையா? - வேல்முருகன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-school-student-murder-raises-questions-on-student-safety-in-capital</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-school-student-murder-raises-questions-on-student-safety-in-capital#comments</comments><guid isPermaLink="false">c6db6764-e79a-4d24-9e72-4a373af2abff</guid><pubDate>Fri, 14 Aug 2026 16:01:06 +0000</pubDate><atom:updated>2026-08-14T16:01:06.549Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,murder,கொலை,Question,Velmurugan,வேல்முருகன்,school student,பள்ளி மாணவர்,கேள்வி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/3kacvc2y/velmurugan.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வேல்முருகன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/3kacvc2y/velmurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> பள்ளி மாணவர் கொலை மாணவர்களின் கைகளில் வன்முறையா? தலைநகரிலேயே மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லையா?  என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்  தெரிவித்திருப்பதாவது:-</p> <h2>மாணவர்</h2><p>சென்னை திருவொற்றியூரில் பள்ளி அருகே 12ஆம் வகுப்பு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D">மாணவர்</a> தனுஷ் தாக்குதலில் உயிரிழந்ததாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. இந்தச் சம்பவத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்கள் உள்ளிட்டோர் தொடர்புடையதாக கூறப்படும் நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p> <p>அவ்வப்போது பள்ளி மாணவர்களை மையப்படுத்தி வெளியாகும் வன்முறை செய்திகள், ஒரு மாணவனின் தவறாக மட்டும் கடந்து செல்ல முடியாத அளவிற்கு சமூகத்தின் எதிர்காலம் குறித்த கவலையை ஏற்படுத்துகின்றன.</p><h2>அச்சம் இயல்பாகவே எழுகிறது</h2><p>உண்மையில் மாணவர்களுக்கு பள்ளியில், பாடங்கள் கற்று தரப்படுகின்றன. தேர்வுக்கு தயார்படுத்தப்படுகிறார்கள். மதிப்பெண்கள் பெறுவதற்காக பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால் கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது? கருத்து வேறுபாட்டை எப்படி கையாள்வது? மற்றொரு மனிதனின் உயிரை எவ்வாறு மதிப்பது? தோல்வியையும் அவமானத்தையும் வன்முறையின்றி எதிர்கொள்வது எப்படி? சமூகத்தில் பொறுப்புள்ள மனிதராக எப்படி வாழ்வது? இவை போதுமான அளவில் கற்று கொடுக்கப்படுகிறதா? பள்ளி மற்றும் கல்லூரிகள் அரசின் நிர்வாக அமைப்புகளால் கண்காணிக்கப்படுகிறதா? கல்வி கற்கும் வயதில் வன்முறை உருவாகிறது என்றால், நாளைய சமூகத்தில் அது எந்த வடிவத்தை எடுக்கும் என்ற அச்சம் இயல்பாகவே எழுகிறது.</p> <h2>மாணவன் உயிரிழக்கும் நிலை </h2><p>மேலும், சென்னை போன்ற மாநிலத்தின் நிர்வாக செயல்பாடு உள்ள தலைநகரிலேயே பள்ளி மாணவன் தாக்குதலில் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டிருப்பது, மாணவர்கள் மட்டுமல்லாமல் பெண்கள், குழந்தைகள், பொதுமக்களின் பாதுகாப்பு குறித்தும் கேள்விகளை எழுப்புகிறது.</p> <h2>உறுதி செய்யப்படுகிறது?</h2><p>தலைநகரின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்ய முடியாத நிலையில், தமிழ்நாட்டின் தொலைதூர பகுதிகளில் பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் பாதுகாப்பு எவ்வாறு உறுதி செய்யப்படுகிறது?</p> <h2>நம்பிக்கை</h2><p>ஒவ்வொரு பள்ளி வாசலும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரும் அச்சமின்றி கல்வி கற்க வேண்டும். ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளை பாதுகாப்பாக வீடு திரும்புவார் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.</p><h2>அரசின் கண்காணிப்பு</h2><p>இந்த சம்பவத்திற்குப் பிறகாவது, பள்ளிகளில் மாணவர்களின் மனநிலை மற்றும் நடத்தை மாற்றங்கள், மாணவர்களிடையேயான குழு மோதல்கள், போதைப்பொருள் பயன்பாட்டின் தாக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய ஆலோசனையும், வழிகாட்டுதலும் வழங்கும் வகையில் அரசின் கண்காணிப்பு மற்றும் மாணவர் நல அமைப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டும்.</p><h2>தடுப்பு நடவடிக்கை</h2><p>ஆசிரியர்கள், பெற்றோர், கல்வித்துறை, காவல்துறை என அனைவரும் இணைந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மதிப்பெண் அட்டையில் அதிக மதிப்பெண் பெறும் தலைமுறை மட்டும் நமக்கு தேவையில்லை. மனித உயிரை மதிக்கும் தலைமுறை வேண்டும். வன்முறையை நிராகரிக்கும் தலைமுறை வேண்டும். சகிப்புத்தன்மையுடன் வாழ தெரிந்த தலைமுறை வேண்டும். இன்றைய மாணவர்கள் நாளைய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81">தமிழ்நாடு</a>.</p><h2>நிரந்தர தடுப்பு நடவடிக்கை</h2><p>அவர்களின் கைகளில் புத்தகத்திற்கு பதிலாக வன்முறை உருவாக தொடங்கினால், கேள்வி மாணவர்களிடம் மட்டும் இல்லை. நாம் உருவாக்கி கொண்டிருக்கும் சமூகத்திடமும் இருக்கிறது. தமிழ்நாடு அரசு இந்த சம்பவத்தை ஒரு தனிப்பட்ட குற்றமாக மட்டும் பார்க்காமல், மாணவர்களிடையே உருவாகும் வன்முறையின் வேரை கண்டறிந்து நிரந்தரத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>வளசரவாக்கத்தில் மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள்:  தெற்கு வட்டார துணை ஆணையாளர் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pre-monsoon-preparedness-works-in-valasaravakkam-south-zone-deputy-commissioner-inspects</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pre-monsoon-preparedness-works-in-valasaravakkam-south-zone-deputy-commissioner-inspects#comments</comments><guid isPermaLink="false">f3142a45-5724-4656-89c9-1e729bedf865</guid><pubDate>Fri, 14 Aug 2026 15:42:24 +0000</pubDate><atom:updated>2026-08-14T15:42:24.772Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,வளசரவாக்கம்,Valasaravakkam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/qkelyvu4/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/qkelyvu4/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வளசரவாக்கம் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டப்பணிகளை தெற்கு வட்டார துணை ஆணையாளர் அதாப் ரசூல் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>துணை ஆணையாளர் ஆய்வு</h2><p>பெருநகர சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டப்பணிகளை தெற்கு வட்டார துணை ஆணையாளர் அதாப் ரசூல் இன்று (14.08.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.</p><p>வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வளசரவாக்கம் மண்டலம், வார்டு-148க்குட்பட்ட விருகம்பாக்கம் கால்வாயின் தொடக்க இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள், வார்டு-149க்குட்பட்ட மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் மற்றும் வார்டு-151க்குட்பட்ட ஆற்காடு சாலை, போரூர் சந்திப்புப் பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் மற்றும் வண்டல் வடிகட்டித் தொட்டி பணிகளைப் பார்வையிட்டு, தூர்வாரும் பணிகளை விரைந்து முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><h2>அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்</h2><p>தொடர்ந்து, வார்டு-152க்குட்பட்ட தேவி குப்பம் பிரதான சாலையில் கட்டப்பட்டு வரும் தூய்மைப் பணியாளர்களுக்கான ஓய்வறைக் கட்டடப் பணியினைப் பார்வையிட்டு, விரைந்து முடித்திட <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அலுவலர்களுக்கு </a>அறிவுறுத்தினார்.</p><p>பின்னர், வார்டு-149க்குட்பட்ட சம்பத் நகரில் உள்ள அம்மா உணவகத்தினைப் பார்வையிட்டு, உணவுப் பொருட்களின் இருப்பு, சமையலைறையினை ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் கலந்துரையாடினார். தொடர்ச்சியாக, வார்டு-149ல் உள்ள இலவச ஒப்பனை அறையினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title> டிக்கெட்டுகளில் மை அழியும் பிரச்சினை: தீர்வு காண தெற்கு ரெயில்வே கடிதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/southern-railways-urges-upgrade-to-printers-over-fading-ticket-ink</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/southern-railways-urges-upgrade-to-printers-over-fading-ticket-ink#comments</comments><guid isPermaLink="false">bbfe2958-d92d-4e73-99d2-ad45c02416d7</guid><pubDate>Fri, 14 Aug 2026 15:28:47 +0000</pubDate><atom:updated>2026-08-14T15:28:47.689Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தெற்கு ரெயில்வே,Southern Railway,கடிதம்,letter,பிரச்சினை,டிக்கெட்டு,Tickets,Solution</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/o951wsr7/train-ticket-issue.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ டிக்கெட்டு]]></media:title><media:description type="html"><![CDATA[ டிக்கெட்டுகளில் மை அழியும் பிரச்சினை: தீர்வு காண தெற்கு ரெயில்வே கடிதம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/o951wsr7/train-ticket-issue.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>டிக்கெட்டுகளில் மை அழியும் பிரச்சினை: தீர்வு காண தெற்கு ரெயில்வே கடிதம். மெலும் டிக்கெட் மை அழிந்து போவதால் டிக்கெட் பரிசோதகர், பயணிகள் இடையே வாக்குவாதம் ஏற்படுவதால், பிரிண்டர்களின் திறனை மேம்படுத்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87">தெற்கு ரெயில்வே</a> வலியுறுத்தல்</p><h2>டிக்கெட்டுகளில் மை அழியும் பிரச்சினை</h2><p>ரெயில் டிக்கெட்டுகளில் அச்சிடப்படும் மை மிக விரைவாக அழிந்து போவதால் பயணிகளுக்கும்,<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D"> டிக்கெட் </a>பரிசோதகர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த முக்கிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணக் கோரி, தெற்கு ரெயில்வே தரப்பில் இந்திய ரெயில்வே வாரியத்திற்கு அவசர கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.</p><h2>பயணிகள் - டி.டி.ஆர் இடையே மோதல்</h2><p>தற்போது ரெயில் நிலைய கவுண்டர்களில் வழங்கப்படும் கணினிமயமாக்கப்பட்ட பயணச்சீட்டுகளில் பயன்படுத்தப்படும் மையின் தரம் குறைவாக உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. டிக்கெட் வாங்கிய சில மணி நேரங்களிலேயே அல்லது பாக்கெட்டில் வைத்திருக்கும் போது, அதில் உள்ள ரெயில் எண், பயண தேதி மற்றும் இருக்கை எண்கள் போன்ற முக்கிய விவரங்கள் முற்றிலும் அழிந்து விடுகின்றன.</p><p>இதனால், ரெயிலில் டிக்கெட் பரிசோதனை செய்யும் போது, பயணிகளுக்கும் டிக்கெட் பரிசோதகர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதங்களும் தேவையற்ற மன உளைச்சல்களும் ஏற்பட்டு வருகின்றன.</p><h2>பிரிண்டர்களின் திறனை மேம்படுத்த வலியுறுத்தல்</h2><p>இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தெற்கு ரெயில்வே நிர்வாகம் தற்போது களமிறங்கியுள்ளது. இது தொடர்பாக இந்திய ரெயில்வே வாரியத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ரெயில் நிலையங்களில் டிக்கெட் அச்சிட பயன்படுத்தப்படும் பிரிண்டர்களின் திறனை உடனடியாக மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. </p> <h2>நிரந்தர தீர்வு</h2><p>  தரமான மைகளை பயன்படுத்த வேண்டும் என்றும், டிக்கெட் அச்சிடும் தொழில்நுட்பத்தை நவீனப்படுத்த வேண்டும் என்றும் தெற்கு ரெயில்வே தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது. தெற்கு ரெயில்வேயின் இந்த நடவடிக்கையால், விரைவில் ரெயில் டிக்கெட்டுகளில் மை அழியும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். </p>]]></content:encoded></item><item><title>சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/heavy-rain-in-areas-surrounding-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/heavy-rain-in-areas-surrounding-chennai#comments</comments><guid isPermaLink="false">5a460a8f-fe0b-4073-bef4-fcc9e84cd911</guid><pubDate>Fri, 14 Aug 2026 15:08:11 +0000</pubDate><atom:updated>2026-08-14T15:08:11.387Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,சென்னை,Rain,Weather,கனமழை,வானிலை,தமிழகம்,WeatherUpdate,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,weather forecast,கன மழை,heavy rain,வானிலை அறிக்கை,வானிலை முன்னறிவிப்பு,Weather Status,வானிலை அறிவிப்பு,weather center,TN Rain</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/ki7p23ke/vekkali.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/ki7p23ke/vekkali.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>வானிலை செய்திகள் (Weather)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (feeble Trough) நிலவுகிறது.</p><h2>கன மழை</h2><p>இதன்காரணமாக இன்று (14-08-2026): கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <a href="https://www.dailythanthi.com/topic/rain">கனமழை</a> பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. </p><h2>லேசான மழை</h2><p>மேலும் ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய <a href="https://www.dailythanthi.com/topic/rain">லேசான மழை </a>பெய்யக்கூடும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><h2>பலத்த மழை</h2><p>இந்நிலையில் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன்படி சென்னையில் அண்ணாசாலை, கிண்டி, ஈக்காட்டுதாங்கல், வடபழனி, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பொழிந்து வருகிறது. வட சென்னையில் பெரம்பூர், ஜமாலியா, மாதவரம், மூலக்கடை, கொளத்தூர் பகுதிகளில் <a href="https://www.dailythanthi.com/topic/rain">பலத்த மழை</a> பெய்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள் - வானதி சீனிவாசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/happy-independence-day-greetings-to-all-vanathi-srinivasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/happy-independence-day-greetings-to-all-vanathi-srinivasan#comments</comments><guid isPermaLink="false">695096eb-cb1a-44cd-afc5-a0389a89d91d</guid><pubDate>Fri, 14 Aug 2026 15:04:19 +0000</pubDate><atom:updated>2026-08-14T15:04:19.474Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,வாழ்த்துகள்,Hydrogen Train,சுதந்திர தினம்,Independence Day,Wishes</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/68qj5eja/vanathi-srinivasan.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:title><media:description type="html"><![CDATA[ அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள் - வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/68qj5eja/vanathi-srinivasan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அனைவருக்கும் இனிய <a href="https://www.dailythanthi.com/topic/independence-day">சுதந்திர தின நல்வாழ்த்துகள்</a>...! என்று பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- இந்தியாவை உலகின் முதல் பொருளாதார நாடாக்கும் பிரதமர் மோடியின் கனவு நனவாக துணை நிற்போம். </p><h2>வளர்ச்சி</h2><p>சுதந்திர <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE">இந்தியா</a> இன்று 79 ஆண்டுகளை நிறைவு செய்து, 80-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த 79 ஆண்டுகளில், அதிலும் குறிப்பாக கடந்த 12 ஆண்டுகளில், இந்தியா அடைந்திருக்கும் வளர்ச்சி, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜெர்மனி, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளையே மிரள வைத்துள்ளது.</p> <h2>அன்று கேலி இன்று சாதனை</h2><p>1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, குண்டூசி கூட சொந்தமாகத் தயாரிக்க முடியாத நாடு என்று கேலி பேசினார்கள். பாம்பாட்டிகள் தேசம், பிச்சைக்காரர்கள் நிறைந்த நாடு என்று ஏளனம் செய்தார்கள். ஆனால், இன்று வணிக ரீதியாக செயற்கைக்கோள்களை ஏவும் அளவுக்கு இந்தியா வளர்ந்துள்ளது. இந்தியத் தொழில்நுட்பத்தில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இயந்திரத்தை உருவாக்கியிருக்கிறோம். உலகின் நீளமான ஹைட்ரஜன் ரயிலை இயக்கும் சாதனையையும் படைத்திருக்கிறோம்.</p><h2>844 மருத்துவக்கல்லூரிகள்</h2><p>கடந்த 2014-ல் பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தபோது, இந்தியாவில் 387 மருத்துவக் கல்லூரிகளும், 51,348 எம்.பி.பி.எஸ். இடங்களும் மட்டுமே இருந்தன. மோடி அரசு மேற்கொண்ட முயற்சிகளால், இன்று இந்தியாவில் 844 மருத்துவக் கல்லூரிகளும், 1,39,000 எம்.பி.பி.எஸ். இடங்களும் உள்ளன.</p> <h2>90 புதிய விமான நிலையங்கள்</h2><p>1947 முதல் 2014 வரை, 67 ஆண்டுகளில் இந்தியாவில் 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் 90 புதிய விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இப்படி மோடி அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம்.</p><h2>4-வது பெரிய பொருளாதார நாடு</h2><p>2014-ல் உலகின் 11-வது பெரிய பொருளாதார நாடாக இருந்த இந்தியா, இப்போது அமெரிக்கா, சீனா, ஜெர்மனிக்கு அடுத்த நான்காவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் இந்த வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர். வங்கதேசம், நேபாளம், இலங்கை போல இந்தியாவையும் அரசியல், பொருளாதார ரீதியாகச் சீர்குலைக்கப் பார்க்கிறார்கள்.</p><h2>18 மணி நேரம்</h2><p>எத்தனையோ நெருக்கடிகளை எதிர்கொண்டு, அவதூறுகளை தாங்கிக்கொண்டு, 2047-ல் சுதந்திர நூற்றாண்டைக் கொண்டாடும் தருணத்தில், உலகின் முதல் பொருளாதார பலம் மிக்க நாடாக இந்தியாவை மாற்ற பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு நாளும் 18 மணி நேரத்திற்கும் மேலாக உழைத்து வருகிறார்.</p> <h2>மோடியின் கனவு</h2><p>இந்தியாவை உலகின் முதல் பொருளாதார நாடாக்கும், உலகின் வல்லரசாக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் கனவை நனவாக்க நாம் அனைவரும் துணை நிற்போம். அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>ஊழல், அநீதி, அடக்குமுறையிலிருந்தும் விடுதலை பெறுவதே உண்மையான சுதந்திரம் -  கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/true-freedom-is-freedom-from-corruption-injustice-and-oppression-kanimozhi-santosh-mla</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/true-freedom-is-freedom-from-corruption-injustice-and-oppression-kanimozhi-santosh-mla#comments</comments><guid isPermaLink="false">ef323f35-7f6c-4402-a94a-4fb2e6dbd917</guid><pubDate>Fri, 14 Aug 2026 14:59:37 +0000</pubDate><atom:updated>2026-08-14T14:59:37.202Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விடுதலை,சுதந்திர தினம்,Independence Day Festival,கனிமொழி சந்தோஷ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/q8q93c75/mla33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
ஊழல், அநீதி, அடக்குமுறையிலிருந்தும் விடுதலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/q8q93c75/mla33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p>ஊழல், அநீதி, அடக்குமுறையிலிருந்தும் விடுதலை பெறுவதே உண்மையான சுதந்திரம்  என கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ கூறியுள்ளார். </p><p>நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:</p><p>நாட்டின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களை இந்நாளில் நன்றியுடன் நினைவுகூர்வோம்.</p><p>வெள்ளையர்களிடமிருந்து விடுதலை பெற்றது மட்டுமல்ல; ஊழல், அநீதி, அடக்குமுறை இல்லாத சமூகத்தை உருவாக்குவதும் உண்மையான சுதந்திரமே.</p><p>ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமை, சமூகநீதி, பாதுகாப்பு மற்றும் கண்ணியமான வாழ்க்கை கிடைப்பதை உறுதி செய்வதே சுதந்திரத்தின் உண்மையான நோக்கமாகும்.</p><p>மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து, வெளிப்படையான நிர்வாகத்தை முன்னெடுத்து, ஊழலில் இருந்து விடுதலை பெற்ற, சமூகநீதி நிறைந்த, வளமான தமிழகத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.</p><p>சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில், <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D">ஜனநாயகத்தையும் அரசியலமைப்பின் மாண்புகளையும் காப்போம்.</a></p><p>சுதந்திரம் போற்றுவோம்!ஊழலில் இருந்து விடுதலை பெறுவோம்!மக்கள் நலனுடன் புதிய தமிழகத்தை உருவாக்குவோம்</p><p>என்று அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கோடம்பாக்கம் மண்டலத்தில் மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள்:  வட்டார துணை ஆணையாளர் ஆய்வு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monsoon-preparedness-works-in-kodambakkam-zone-zonal-deputy-commissioner-inspects</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monsoon-preparedness-works-in-kodambakkam-zone-zonal-deputy-commissioner-inspects#comments</comments><guid isPermaLink="false">902af53d-c999-475a-8b3b-ce5da76c6304</guid><pubDate>Fri, 14 Aug 2026 14:53:57 +0000</pubDate><atom:updated>2026-08-14T14:53:57.321Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Kodambakkam,கோடம்பாக்கம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/ft8miezl/kodampakam33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/ft8miezl/kodampakam33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கோடம்பாக்கம் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர்.கவுஷிக் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>துணை ஆணையாளர் ஆய்வு</h2><p>வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, கோடம்பாக்கம் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர்.கவுஷிக் இன்று (14.08.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.</p><p>மத்திய வட்டார துணை ஆணையாளர், கோடம்பாக்கம் மண்டலம்,வார்டு-129க்குப்பட்ட வடபழனி மாநகரப் போக்குவரத்து கழக பேருந்து பணிமனை மற்றும் வார்டு-128க்குட்பட்ட கே.கே.நகர், வேம்புலியம்மன் கோயில் தெருவில் உள்ள காலி இடம் ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மழைநீர் தேங்காமல் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.</p><h2>அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்</h2><p>தொடர்ந்து, வார்டு-136க்குட்பட்ட டாக்டர் ராமசாமி சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். கால்வாயின் ஆரம்பிக்கும் இடத்தில் தூர்வாரும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பணிகள் </a>மேற்கொள்ளவும், பி.டி.ராஜன் சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>இந்த ஆய்வுகளின்போது, மண்டல அலுவலர் ஆர்.புருஷோத்தமன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>80-வது சுதந்திர தினம்: ஆதியோகி சிலையில் ஒளிர்ந்த மூவர்ணக்கொடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/80th-independence-day-tricolour-illuminates-adiyogi-statue</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/80th-independence-day-tricolour-illuminates-adiyogi-statue#comments</comments><guid isPermaLink="false">4e481e47-c43f-4f3c-95e6-a6062b2137f4</guid><pubDate>Fri, 14 Aug 2026 14:43:42 +0000</pubDate><atom:updated>2026-08-14T14:43:42.590Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சுதந்திர தினம்,Independence Day,Adiyogi,மூவர்ணக்கொடி,tricolour flag,ஆதியோகி சிலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/bpe5aske/lord-shiva.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மூவர்ணக்கொடி]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆதியோகி சிலையில் ஒளிர்ந்த மூவர்ணக்கொடி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/bpe5aske/lord-shiva.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p>80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள 112 அடி உயர ஆதியோகி சிலை, <a href="https://www.dailythanthi.com/topic/national-flag">தேசியக்கொடியின்</a> மூவர்ணத்தில் ஒளிர்ந்தது</p> <h2>தேசியக்கொடி நிறத்தில் ஆதியோகி</h2><p>இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தின் 112 அடி உயர <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88">ஆதியோகி சிலை</a>, மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஆதியோகி சிலை மீது முப்பரிமாண லேசர் ஒளிப்பாய்ச்சல் மூலம் தேசியக்கொடியின் காவி, வெள்ளை, பச்சை ஆகிய நிறங்கள் பிரதிபலிக்கப்பட்டன. </p><p>இரவு நேரத்தில் வான்வெளியில்  ஒளிர செய்யப்பட்ட மூவர்ண காட்சியானது, அங்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களிடமும் சுற்றுலாப் பயணிகளிடமும் பலத்த தேசப்பற்றையும், பரவசத்தையும் ஏற்படுத்தியது.</p> <h2> லேசர் ஒளிக்காட்சி </h2><p>ஆதியோகி சிலையின் இந்த மூவர்ண அலங்கார புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. உலகிலேயே மிகப்பெரிய திருமுக சிலையாக கின்னஸ் சாதனை படைத்துள்ள இந்த ஆதியோகி சிலைக்கு, ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய தேசிய விழாக்களின் போது இதுபோன்று மூவர்ண ஒளியூட்டப்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>பெரியார் நினைவு மண்டப கட்டுமானப் பணிகள் நிறுத்தம் என பரவும் செய்தி - தகவல் நம்பகத்தன்மை பிரிவு மறுப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/reports-circulating-about-the-suspension-of-construction-work-on-the-periyar-memorial-hall-information-verification-wing-issues-denial</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/reports-circulating-about-the-suspension-of-construction-work-on-the-periyar-memorial-hall-information-verification-wing-issues-denial#comments</comments><guid isPermaLink="false">0d128235-bd00-4fa3-a27c-70dcb75ec614</guid><pubDate>Fri, 14 Aug 2026 14:12:50 +0000</pubDate><atom:updated>2026-08-14T14:12:50.739Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Fact Check Unit,Fact check,தகவல் சரிபார்ப்பகம்,TN Fact Check,தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம்,தகவல் நம்பகத்தன்மை பிரிவு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/c6tv2ofg/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/c6tv2ofg/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பெரியார் நினைவு மண்டப கட்டுமானப் பணிகள் நிறுத்தம் என பரவும் தவறான தகவல் குறித்து தகவல் நம்பகத்தன்மை பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>பரவும் செய்தி</h2><p>கேரளத்தின் வைக்கம் அருகே தந்தை பெரியார் நினைவு மண்டப கட்டுமானப் பணிகள் நிறுத்தம் என செய்தி வெளியாகியுள்ளது.</p><h2>உண்மை என்ன?</h2><p>இது முற்றிலும் தவறான தகவல்.</p><p>இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அளித்துள்ள விளக்கத்தில், “கேரள மாநிலம் ஆறுக்குட்டிப் பகுதியில் பெய்து வரும் பருவ மழையால் கட்டட வெளிப்புறப்பணிகள் மேற்கொள்வதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. எனினும் பணிகள் நிறுத்தப்படவில்லை. மழை நின்றவுடன் மீண்டும் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தவறான தகவலைப் பரப்பாதீர்!</a></p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோவை மாநகராட்சியில் விதிகளை மீறி நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்கள் பணிநீக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/54-junior-assistants-appointed-in-violation-of-rules-dismissed-by-coimbatore-corporation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/54-junior-assistants-appointed-in-violation-of-rules-dismissed-by-coimbatore-corporation#comments</comments><guid isPermaLink="false">6f05cf44-82f6-4b7f-93f5-ef1e73615162</guid><pubDate>Fri, 14 Aug 2026 14:09:23 +0000</pubDate><atom:updated>2026-08-14T14:09:23.277Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,Tamilnadu,கோவை,பணி நீக்கம்,Supreme Court,சுப்ரீம்கோர்ட்டு,தமிழகம்,சென்னை ஐகோர்ட்டு,suspend,Chennai High Court,கோவை மாநகராட்சி,Kovai,Coimbatore Corporation,இளநிலை உதவியாளர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/ssb6hr4k/kovai.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/ssb6hr4k/kovai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/coimbatore">கோவை</a> மாநகராட்சி இளநிலை உதவியாளர்கள் 54 பேர், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் இன்று பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.</p><h2>அ.தி.மு.க. ஆட்சி</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/coimbatore">கோவை மாநகராட்சி</a>யில், அ.தி.மு.க. ஆட்சியில் தேர்வு நடைமுறைகளை பின்பற்றாமல் 54 இளநிலை உதவியாளர்கள் நியமனம் செய்யப்பட்டதாக கடந்த 2021-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.</p><h2>54 இளநிலை உதவியாளர்கள்</h2><p>இந்த சூழலில், இந்த வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவில், கோவை மாநகராட்சியில் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களை பணி நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டது. காலியான பணியிடங்களுக்கு தகுதியானவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் எனவும், முறைகேடான பணி நியமனங்களுக்கு துணை போன அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. </p><h2>பணி நீக்கம்</h2><p>சென்னை ஐகோட்டின் தீர்ப்பினை தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம்கோர்ட்டு தள்ளுபடி செய்த நிலையில், 54 பேரையும் பணி நீக்கம் செய்து கோவை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இளநிலை உதவியாளர்கள் 54 பேரும் இன்றுடன் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>ராயபுரம் மண்டலத்தில் மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள்: துணை ஆணையாளர் நேரில் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monsoon-preparedness-works-in-royapuram-zone-deputy-commissioner-inspects-in-person</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monsoon-preparedness-works-in-royapuram-zone-deputy-commissioner-inspects-in-person#comments</comments><guid isPermaLink="false">9d55b0aa-a17e-4dac-8595-1c1e71a24264</guid><pubDate>Fri, 14 Aug 2026 13:50:57 +0000</pubDate><atom:updated>2026-08-14T13:50:57.586Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,ராயபுரம்,ராயபுரம் மண்டலம்,Royapuram</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/0kvmvvsf/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/0kvmvvsf/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, ராயபுரம் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகளை வடக்கு வட்டார துணை ஆணையாளர் ஸ்வேதா சுமன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>தூர்வாரும் பணிகள்</h2><p>வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ராயபுரம் மண்டலம், வார்டு - 61க்குட்பட்ட சேட் காலனி 1ஆவது தெரு மற்றும் வார்டு - 63க்குட்பட்ட பாரதி சாலையில் உள்ள மழைநீர் வடிகால்களில் மேற்கொள்ளப்படும் தூர்வாரும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அனைத்து மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டித் தொட்டிகளிலும் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளவும், பணிகளை விரைந்து முடித்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>மேலும், வார்டு–61க்குட்பட்ட காந்தி இர்வின் சாலையில் உள்ள இலவச ஒப்பனை அறையினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மக்கள் பயன்படுத்தும் வகையில் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, வார்டு-59க்குட்பட்ட அண்ணா சாலையில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.</p><h2>அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்</h2><p>பின்னர், வார்டு–63க்குட்பட்ட பாரதி சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கைவிடப்பட்ட வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்தி சீர்செய்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், தெற்கு கூவம் சாலையில் உள்ள இயற்கை உரம் உற்பத்தி மையம், தெற்கு காஞ்சிபுரம் பச்சையப்பன் தெருவில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடப் பணி, வீரபத்திரன் தெருவில் உள்ள வள மீட்பு மையம், அங்கு கட்டப்பட்டு வரும் பல்நோக்கு மையக் கட்டடப் பணி மற்றும் அங்குள்ள கால்நடைக் காப்பகத்தில் பராமரிக்கப்படும் மாடுகளின் விவரங்கள் ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, நடைபெற்று வரும் திட்டப் பணிகளை விரைந்து முடித்திடவும், கால்நடை காப்பகத்தினை தூய்மையாகப் பராமரித்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>இந்த ஆய்வுகளின்போது, மேற்பார்வைப் பொறியாளர் (வடக்கு) ஜி.சொக்கலிங்கம் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிரான சகோதரரை தாக்கிய வழக்கு: இன்றும் சமரசம் எட்டப்படவில்லை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-regarding-the-assault-on-minister-maria-wilsons-brother-no-settlement-reached-today-either</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-regarding-the-assault-on-minister-maria-wilsons-brother-no-settlement-reached-today-either#comments</comments><guid isPermaLink="false">a724ce85-7796-4074-9a39-f0b4b2a699bd</guid><pubDate>Fri, 14 Aug 2026 13:46:31 +0000</pubDate><atom:updated>2026-08-14T13:46:31.971Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தாக்குதல்,தமிழகம்,வழக்கு,சொத்து தகராறு,சமரசம்,அமைச்சர் மரிய வில்சன்,Minister Maria Wilson,MarieWilson</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/gjetph1t/eddu.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/gjetph1t/eddu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிரான அவரது சகோதரரை தாக்கிய வழக்கில் இன்றும் சமரசம் எட்டப்படாததால் 5வது முறையாக விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><h2>அமைச்சர் மரிய வில்சன்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/mariewilson">தமிழ்நாடு நிதி அமைச்சர் மரிய வில்சன்</a>, கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட்  8ம் தேதி புதுச்சேரி, எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குலோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மரிய குலோத்தையும், அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. </p><p>இதுகுறித்து, லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது‌. புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின் அதன் நகலைப் பெற நேரில் ஆஜராக உத்தரவிட்டபோதும், மரிய வில்சன் தொடர்ந்து நேரில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதனால் கடந்த ஜூலை 10 ஆம் தேதி கட்டாயமாக ஆஜராக வேண்டும் என மரிய வில்சனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.</p><h2>சமரச தீர்வு மையம்</h2><p>இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மரிய வில்சன் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், இரு தரப்பிலும் சமாதானம் செய்ய தயாராக இருப்பதால், உயர் நீதிமன்றத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் ஆஜராகி பிரச்சனைக்கு தீர்வு காண உத்தரவிட்டது.</p><h2>சமரசம் எட்டப்படவில்லை</h2><p>நீதிமன்றத்தின் உத்தரவின் படி, கடந்த ஜூலை 13ம் தேதி இரு தரப்பிலும் சமரச தீர்வு மையத்தில் ஆஜராகி பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாததால் ஜூலை 21ம் தேதிக்கு பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், ஜூலை 21ம் தேதி அன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போதும் தீர்வு எட்டப்படவில்லை. அடுத்து கடந்த ஜூலை 28ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இரு தரப்பிலும் சமரசம் எட்டப்படவில்லை. பின்னர் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.</p><h2>4வது முறையாக</h2><p>இந்நிலையில் சொத்து தகராறு வழக்கில் சமரச தீர்வு மையத்தில் 4வது முறையாக அமைச்சர் மரிய வில்சன் இன்று ஆஜரானார். இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் சமரசம் எட்டப்படவில்லை. உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தை அறிக்கையை  உயர்நீதிமன்றத்திக்கு அனுப்ப சமரச தீர்வு மையம் முடிவு செய்துள்ளது. இந்த பணிகளுக்காக வழக்கு அடுத்த வாரம் ஒத்திவைக்கப்பட்டது. </p> ]]></content:encoded></item><item><title>தீபாவளியை ஒட்டி கிளாம்பாக்கம் ரெயில்நிலையம் திறக்க வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/possibility-of-opening-the-kalampakkam-railway-station-around-diwali</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/possibility-of-opening-the-kalampakkam-railway-station-around-diwali#comments</comments><guid isPermaLink="false">6778d667-83dd-402f-9c4e-80852584bcd1</guid><pubDate>Fri, 14 Aug 2026 13:42:34 +0000</pubDate><atom:updated>2026-08-14T13:42:34.546Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தீபாவளி,கிளாம்பாக்கம்,Kilambakkam Bus Stand,Kilambakkam Bus Terminus,Diwali2026,TNNews</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/f9tkls8j/kilnbappakam33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
 கிளாம்பாக்கம் ரெயில்நிலையம் திறக்க வாய்ப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/f9tkls8j/kilnbappakam33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தீபாவளி பண்டிகைக்கு முன்பு அல்லது பிறகோ கிளாம்பாக்கம் புறநகர் ரெயில் நிலையம் திறக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை ரெயில்வே கோட்ட மேலாளர் சைலேந்திர சிங் கூறியுள்ளார்.</p><h2>கிளாம்பாக்கம் புறநகர் ரெயில் நிலையம் </h2><p>சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது. வண்டலூர் மற்றும் கூடுவாஞ்சேரி புறநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே கிளாம்பாக்கம் அமைந்துள்ளதால், கிளாம்பாக்கத்தில் புறநகர் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.</p><p>இந்தநிலையில், சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் சைலேந்திர சிங் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>கிளாம்பாக்கம் புறநகர் ரெயில் நிலையத்தில் 3 நடைமேடைகள் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. பேருந்துநிலையம் - ரெயில்நிலையம் இடையிலான ஸ்கை வாக் அமைக்கும் பணி நிறைவடையவில்லை பணிகள் நடைபெற்று வருகின்றன. கிளாம்பாக்கம் ரெயில்நிலையத்தை பராமரிப்பது குறித்து மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>பணிகளை முடித்து, நடப்பாண்டில் தீபாவளிக்கு முன்பாகவோ அல்லது <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF">தீபாவளி</a>க்கு பிறகோ கிளாம்பாக்கம் புறநகர் ரெயில் நிலையம் திறக்க வாய்ப்புள்ளது.</p><h2>ஆதம்பாக்கம் ரெயில் நிலையம்</h2><p>ஆதம்பாக்கம் ரெயில் நிலைய தண்டவாளத்தில் தொழில்நுட்ப கோளாறு உள்ளது. தண்டவாளம் வளைந்து உள்ளதால், ஆதம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பயணிகள் இறங்குவதில் சிரமம் இருக்கிறது. எனவே, இதை சரி செய்யும் பணிகளில் ஈடுபட உள்ளோம். இப்பணிகளுக்கு ஒப்பந்தம் விட்டு, பணி நடைபெற உள்ளது. விரைவில், இந்த ஒரு ரெயில் நிலைய பாதுகாப்பு பணிகளுக்கான சான்றிதழ் பெற்று ரயில்கள் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்படும்.</p><h2> ஏசி மின்சார ரெயில் </h2><p>சென்னை ரயில்வே கோட்டத்துக்கு 2-வது ஏசி மின்சார ரெயில் ஒரு மாதத்தில் பயன்பாட்டுக்கு கொண்ட வர திட்டமிடப்பட்டுள்ளது. தாம்பரம் - கடற்கரை தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், சேத்துப்பட்டு நிலையத்தில் நெடுநேரம் நிறுத்தி இயக்கப்படுவதால், பயணிகள் சிரமத்தை சந்திப்பதாக புகார்கள் வருகின்றன. லோக்கல் பாஸ்ட் ரயில்களை விரைவு பாதையில் இருந்து மின்சார ரயில் பாதைக்கு மாற்றி இயக்குவதால், இந்த தாமதம் ஏற்படுகிறது. விரைவில், இப்பிரச்சினை சரிசெய்யப்படும்</p><p>தாம்பரம் - செங்கல்பட்டு 4-வது பாதை </p><p>ஆவடி - கும்மிடிப்பூண்டி 3-வது மற்றும் 4-வது பாதை, அரக்கோணம் - செங்கல்பட்டு 2-வது பாதை, தாம்பரம் - செங்கல்பட்டு, 4-வது பாதை, வில்லிவாக்கம் - அம்பத்தூர் 5-வது மற்றும் 6-வது பாதைகள் இந்த நான்கு திட்டங்களும் தற்போது வெவ்வேறு ஒப்புதல் மற்றும் டெண்டர் கட்டங்களில் உள்ளன. சில திட்டங்களில் டெண்டர் கோருதல், டெண்டர் இறுதி செய்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>நாளை கிராம சபையில் நமது குரல் ஒலிக்கட்டும் - அண்ணாமலை அழைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-our-voice-be-heard-at-the-gram-sabha-tomorrow-annamalais-call</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-our-voice-be-heard-at-the-gram-sabha-tomorrow-annamalais-call#comments</comments><guid isPermaLink="false">18098c56-1a61-439f-a173-43ffaefcfbe2</guid><pubDate>Fri, 14 Aug 2026 13:23:35 +0000</pubDate><atom:updated>2026-08-14T13:23:35.960Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Annamalai,அண்ணாமலை,தமிழகம்,Gram Sabha Meeting,தமிழக செய்திகள்,கிராம சபை,we the leaders,வீ தி லீடர்ஸ் அமைப்பு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/p3bgeq7m/aga.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/p3bgeq7m/aga.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாளை (ஆகஸ்ட் 15ம் தேதி), கிராம சபையில் நமது குரல் ஒலிக்கட்டும் என்றும், கருத்துகளை முன்வைப்போம். தீர்வுகளை உருவாக்குவோம். கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்போம். நமது கிராமத்தின் வளர்ச்சிக்குப் பணியாற்றுவோம் என்றும் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/annamalai">அண்ணாமலை</a> தெரிவித்துள்ளார். மேலும் வீடியோ பதிவு ஒன்றையும் டேக் செய்துள்ளார். </p><h2>மிக முக்கிய பொறுப்பு</h2><p>முன்னதாக அவர் தனது  எக்ஸ் வலை தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது;-  </p><p>“நம் மண், நம் நீர், நம் காற்று இவை அனைத்தும் நமது அடுத்த தலைமுறைக்கு நாம் பாதுகாத்து வழங்க வேண்டிய பொக்கிஷங்கள். நம் தலைமுறையையும், வருங்கால தலைமுறையையும் பாதுகாக்க வேண்டிய மிக முக்கிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.</p><p>சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை முன்னெடுத்துச் செல்லும் வகையில், வரும் ஆகஸ்ட் 16, 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 3 மணிக்கு, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் நடைபெறும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியில், அனைவரும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.</p><p>மரங்களை வளர்ப்போம், நீர்நிலைகளைப் பாதுகாப்போம். நமது செயல்களால் ஒரு பசுமையான தமிழகத்தை உருவாக்குவோம். சுற்றுச்சூழல் பாதுகாப்பை மக்கள் இயக்கமாக மாற்றுவோம். மாறுவோம். மாற்றுவோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">வரும் ஆகஸ்ட் 15 அன்று, கிராம சபையில் நமது குரல் ஒலிக்கட்டும். <br><br>கருத்துகளை முன்வைப்போம். தீர்வுகளை உருவாக்குவோம். கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்போம். நமது கிராமத்தின் வளர்ச்சிக்குப் பணியாற்றுவோம்.<br><br>நமது கிராமம், நமது பொறுப்பு! <a href="https://t.co/4nIxgUypO4">pic.twitter.com/4nIxgUypO4</a></p>&mdash; K.Annamalai (@annamalai_k) <a href="https://x.com/annamalai_k/status/2088226717672559092?ref_src=twsrc%5Etfw">August 14, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>தென்பெண்ணை ஆற்றில் ராஜராஜ சோழன் காலத்து செப்பு நாணயம் கண்டெடுப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ancient-copper-coin-and-artifacts-found-in-thenpennai-riverbed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ancient-copper-coin-and-artifacts-found-in-thenpennai-riverbed#comments</comments><guid isPermaLink="false">75d6d181-e7c1-4735-b02d-03818a26babe</guid><pubDate>Fri, 14 Aug 2026 13:15:40 +0000</pubDate><atom:updated>2026-08-14T13:15:40.409Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ராஜராஜ சோழன்,Rajaraja Cholan,தென்பெண்ணை ஆறு,கண்டெடுப்பு,Thenpennai River,மணி,discovered</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/yc34ed9a/river.jpg" width="752"><media:title type="html"><![CDATA[  உதவி இயக்குநர் லோகநாதன்]]></media:title><media:description type="html"><![CDATA[ தென்பெண்ணை ஆற்றில் ராஜராஜ சோழன் காலத்து செப்பு நாணயம் கண்டெடுப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/yc34ed9a/river.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருக்கோவிலூர்,</p><p>விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே பாய்ந்தோடும் தென்பெண்ணை ஆற்றுப் படுகையில், மாமன்னன்  <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D">ராஜராஜ சோழன்</a> ஆட்சிக்காலத்து செப்பு<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D"> நாணயம்</a> மற்றும் பழங்கால அரிய தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>புதிய கற்கால ஆயுதம்</p><p>திருக்கோவிலூர் தென்பெண்ணை குழுவினர் அளித்த வரலாற்று தகவலின் அடிப்படையில், தொல்லியல் துறையினர் அந்த பகுதியில் தீவிர கள ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது 18 சென்டிமீட்டர் நீளமும், 4.5 சென்டிமீட்டர் அகலமும் கொண்ட ஈட்டி போன்ற அரிய கல் ஆயுதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.</p><p>இது புதிய கற்காலத்தை சேர்ந்த மனிதர்கள் பயன்படுத்திய வேட்டை ஆயுதம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே பகுதியில்  மூதாதையர்கள் பயன்படுத்திய அரிய நீலநிற மணி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது சங்க காலத்தை சேர்ந்தது</p> <p>ஆராய்ச்சியாளர்கள் தீவிரம்</p><p>திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றின் தென்கரை மற்றும் வடகரை பகுதிகள் வரலாற்று சிறப்புமிக்க இடங்களாக கருதப்படுகின்றன. மேலும், இப்பகுதியின் வரலாற்று பெருமையை முழுமையாக வெளிக்கொணர விரிவான தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் உதவி இயக்குநர் லோகநாதன் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பள்ளியிலேயே மது அருந்திய மாணவிகள்; தலைமை ஆசிரியை அதிரடி பணியிடமாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/students-caught-drinking-alcohol-at-school-principal-transferred</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/students-caught-drinking-alcohol-at-school-principal-transferred#comments</comments><guid isPermaLink="false">e4e2cd35-5af6-4e1d-a948-1fb8738d821d</guid><pubDate>Fri, 14 Aug 2026 13:08:06 +0000</pubDate><atom:updated>2026-08-14T13:08:06.337Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,education,students,பள்ளி மாணவிகள்,அரசு பள்ளி மாணவிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/t782kid7/students33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தலைமை ஆசிரியர் அதிரடி பணியிடமாற்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/t782kid7/students33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி,</p><p>தக்கலை அருகே அரசு பள்ளியில், மாணவிகள் மது அருந்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பள்ளி தலைமை ஆசிரியைபணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.</p><h2>வகுப்பறையில் மது</h2><p>கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி, நீட் தேர்வு, கியூட் தேர்வு, ஜே.இ.இ உள்ளிட்ட தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி மையமாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதி, இந்த தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள், இந்த பள்ளியில் நடைபெற்றது.</p><p>இந்த பயிற்சி வகுப்பிற்கு மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பயிற்சி வகுப்பு முடிந்த பின்னர் ஒரு சில மாணவிகள் குழுவாக இணைந்து வகுப்பறையில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். வெளியில் இருந்து உணவுகளையும் பார்சல் வாங்கி வந்து சாப்பிட்டு உள்ளனர்.</p><p>இதனை அவர்களுடன் வந்த சக மாணவி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து உள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட  கலெக்டர் பிரதாப் உடனடியாக விசாரணை நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கும், மாவட்ட காவல்துறைக்கும் உத்தரவிட்டார். </p> <h2>ஆண் நண்பர் உதவி</h2><p>இதனைத் தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் விசாரணை நடத்தினார். காவல்துறையும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த வீடியோவில், மதுபான பாட்டில்களை அவர்களது ஆண் நண்பர் ஒருவர் டாஸ்மாக் கடையில் இருந்து வாங்கி வந்து கொடுத்ததாக மாணவிகள் பேசும் உரையாடலும் பதிவாகியுள்ளது.</p><p>மேலும் இது குறித்து அதிகாரிகள், தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்று <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">சம்பந்தப்பட்ட மாணவிகள் </a>மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவிகளுக்கு மது பாட்டில் வாங்கி கொடுத்த நபர் யார் என்றும், இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p><h2>தலைமை ஆசிரியை பணியிடமாற்றம்</h2><p>இதனிடையே தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்த பிரமிளா இவாஞ்சலின், நாகர்கோவில் வடசேரி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அதேபோல் வடசேரி பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டாலின், தக்கலை அரசு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் உத்தரவிட்டுள்ளார்.</p><p>அரசு பள்ளி மாணவிகள் மது அருந்திய சம்பவம் கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பள்ளி, கல்லூரிகளில் குற்றச் சம்பவங்கள் நடைபெறாத வகையில், கல்வித் துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், மாணவ மாணவிகளுக்கு கவுன்சிலிங் நடத்தப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையால் எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகள் என்னென்ன..? </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-are-the-series-of-actions-taken-by-the-singapenn-special-task-force</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-are-the-series-of-actions-taken-by-the-singapenn-special-task-force#comments</comments><guid isPermaLink="false">590b0d82-96d8-400e-9d49-16a5149918de</guid><pubDate>Fri, 14 Aug 2026 13:01:56 +0000</pubDate><atom:updated>2026-08-14T13:01:56.135Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,குழந்தைகள்,பெண்கள்,womens,Girls,Singapen Athiradi Padai,சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை,Singapen Special Task Force</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/4mysco0z/moha.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/4mysco0z/moha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையால் எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை</h2><p>இதுதொடர்பாக காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p><a href="https://www.dailythanthi.com/topic/தமிழ்நாடு">தமிழ்நாடு</a> காவல்துறையின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மாநிலம் முழுவதும் துரிதமான கள நடவடிக்கைகள் சமூக பங்களிப்புடன் கூடிய காவல் பணிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.</p><h2>விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்</h2><p>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் தினமும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதால், அவர்கள் தன்னம்பிக்கையுடன் தானே முன்வந்து இதற்கு முன்னர் நடந்த சம்பவங்களையும் தெரிவித்து சட்டரீதியான தீர்வுகளை பெறுகின்றனர். </p><p>கடந்த ஒரு வாரகாலத்தில் 07.08.2026 முதல் 13.08.2026 வரை, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மாவட்ட களப்பிரிவுகள் 255 புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுத்து 22 குற்றவழக்குகள் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், காணாமல் போன 2 பெண்கள் மற்றும் 4 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாக அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த காலகட்டத்தில் பள்ளிகள் கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இடையே 3,537 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. </p><h2>தீவிர ரோந்து பணிகள்</h2><p>மேலும், மாநிலம் முழுவதும் அடையாளம் காணப்பட்ட 12,115 குற்றம் நடைபெற வாய்ப்புள்ள பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் தீவிர ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன.</p><p>இந்த காலகட்டத்தில், அறிவுசார் குறைபாடுடைய 11 நபர்கள் மீட்கப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. 2 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டது. மேலும், 40 பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் மீண்டும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டனர். </p><h2>வழக்குகள் பதிவு</h2><p>கடந்த வாரத்தின்போது, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை (SSF) களப்பிரிவுகள் சென்னை, ஆவடி, கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தேனி, திருநெல்வேலி, சிவகங்கை, திருப்பத்தூர், தென்காசி, திருப்பூர், திருச்சி, திருவள்ளுர் மற்றும் நாமக்கல் ஆகிய பகுதிகளில் பதிவான வழக்குகளுக்கு விரைவாகச் செயல்பட்டு, குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் (POCSO Act), தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் (TNPHW), பாரதிய நியாய சன்ஹிதா (Bharatiya Nyaya Sanhita BNS) (Information Technology Act) உள்ளிட்ட தொடர்புடைய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. </p><h2>பாதுகாப்பான மாநிலம் </h2><p>மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதுடன், குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.</p><p>இத்தகைய துரிதமான மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்தி வரும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு, தமிழகத்தை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாநிலமாக உருவாக்குவதில் முக்கிய பங்காற்றி வருகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் நாங்கள் இருக்கும்போது...ஆனால் இப்போது? திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/when-we-were-in-the-assemblybut-now-dindigul-srinivasan-interview</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/when-we-were-in-the-assemblybut-now-dindigul-srinivasan-interview#comments</comments><guid isPermaLink="false">77883230-8976-4afe-98a0-18d5af8adcb0</guid><pubDate>Fri, 14 Aug 2026 12:53:06 +0000</pubDate><atom:updated>2026-08-14T12:53:06.633Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>AIADMK,சட்டசபை,திண்டுக்கல் சீனிவாசன்,tngovt</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/nfi02ofx/dingul33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/nfi02ofx/dingul33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><p>ஒரு மோசமான சூழ்நிலையில், சட்டப்பேரவை கேவலமாக நடந்துகொண்டு இருக்கிறது என திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.</p><p>விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும், மேகேதாட்டு அணை கட்டுவதை தடுக்க தவறிய தவெக அரசை கண்டித்தும் திண்டுக்கல்லில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தலைமை வகித்தார். திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.பரமசிவம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.</p><p>ஆர்ப்பாட்ட முடிவில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><h2>சட்டசபை கேவலமாக நடந்துகொண்டு இருக்கிறது</h2><p>சட்டசபையில் நாங்கள் இருக்கும்போது ஜனநாயகம் இருந்தது. இப்போது 'ஜனநாயகன்' என்று பெயர் வைத்திருக்கிற நடிகர் கட்சியில் ஜனநாயகம் கிடையாது. சர்வாதிகாரம்தான் நடந்துகொண்டு இருக்கிறது</p><p>கேலிக்கூத்து நடக்கிறது. ஒரு மோசமான சூழ்நிலையில், சட்டசபை கேவலமாக நடந்துகொண்டு இருக்கிறது; ஒரு லட்சம் கோடி வெளிநாட்டு ஒப்பந்தங்கள் என்று ஏமாற்றுகிறார்கள்.</p><p>எம்.ஜி.ஆர் ஆட்சியை நாங்கதான் கொடுக்கிறோம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறுவதை விட வெட்கக்கேடு எதுவுமே இல்லை. நிதியமைச்சர் மரிய வில்சன் ஆணவத்தின் உச்சியில் இருக்கிறார். நான் இப்படித்தான் இருப்பேன் என்று திமிராக பேசுகிறார். </p><h2>எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பிள்ளைகள் நாங்கள்</h2><p>எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பிள்ளைகள் நாங்கள். எடப்பாடி தலைமையில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">அதிமுக</a> செயல்படுகிறது. அதிமுக ஆட்சிதான் நடக்கிறது என்றால், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ராஜினாமா செய்துவிட்டு போய்விடலாம். இன்னும் 6 மாதம் நேரம் கொடுங்கள் என கேட்கலாம். அதை விட்டுவிட்டு எல்லாம் எங்களுக்கு தெரியும் என்பது மாதிரி பேசுவது தவறு.</p><h2>விவசாயிகள் வாழ்க்கையிலும் வயித்துலையும் அடிக்காதீங்க</h2><p>நிதி இல்லன்னு தெரிஞ்சுதான் வாக்குறுதி கொடுக்குறாங்க. விவசாயிகள் வாழ்க்கையிலும் வயித்துலையும் அடிக்காதீங்க.வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என்றுதான் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆர்ப்பாட்டம் அறிவித்தார்” </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>“நான் முதல்-அமைச்சர் விஜய்க்கு ஒரு அறிவுரை சொல்வதானால்..!!” - ஆர்.எஸ்.பாரதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-i-were-to-offer-a-piece-of-advice-to-chief-minister-vijay-rs-bharathi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-i-were-to-offer-a-piece-of-advice-to-chief-minister-vijay-rs-bharathi#comments</comments><guid isPermaLink="false">9783638b-8e3f-4b95-bcb7-a3f6c5e3ecf3</guid><pubDate>Fri, 14 Aug 2026 12:34:18 +0000</pubDate><atom:updated>2026-08-14T12:34:18.875Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,Vijay,Tamilnadu,திமுக,DMK,தமிழகம்,ஆர்.எஸ்.பாரதி,R.S. Bharathi,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,அமைச்சர் நிர்மல்குமார்,Minister Nirmal Kumar</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/odcvddzg/bha.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/odcvddzg/bha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமைச்சர் நிர்மல் குமாரது பேச்சிற்கு<a href="https://www.dailythanthi.com/topic/dmk"> தி.மு.க.</a> அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-</p><p>அமைச்சர் நிர்மல் குமாருக்கு வாயில் உண்மையே வராது. அதற்கு காரணம், அவர் ஆர்.எஸ்.எஸ்-ஸில் இருந்தவர். RSS மற்றும் BJP-யில் இருந்தவருக்கு மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதற்கு எந்த யோக்கியதையும் கிடையாது. நாங்கள் தொடக்கத்திலிருந்தே பாஜகவை எதிர்த்தவர்கள். இன்றும் அதே நிலைப்பாட்டில்தான் இருக்கிறோம்.</p><h2>நிர்மல் குமார்</h2><p>நிர்மல் குமார் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு மாதிரி பேசக்கூடியவர். அவர் ஆர்.எஸ்.எஸ்-ஸில் இருந்தார், அதிமுக-வில் இருந்தார். இப்போது தவெக கட்சியில் இருக்கிறார். இன்னும் இந்த ஆட்சி முடிவதற்குள் அவர் எந்தக் கட்சிக்கு போவார் என்று தெரியவில்லை. புதுசாக தனுஷ் ஒரு கட்சி ஆரம்பிக்கப் போகிறார், அண்ணாமலை ஒரு கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்றெல்லாம் பேசுகிறார்கள்.</p><h2>ஆதவ் அர்ஜுனா</h2><p>இப்படி புதிதாக யார் கட்சி ஆரம்பித்தாலும், உடனே போய் முதலில் கையெழுத்துப் போட்டு உறுப்பினர் அட்டை வாங்கி வைத்துக்கொள்வது சிலருக்கு பாரம்பரியமான பழக்கம். அதில் முதன்மையானவர்தான் இன்றைக்கு இருக்கக்கூடிய நிர்மல் குமார். அதேபோல ஆதவ் அர்ஜுனா போன்றவர்கள் எல்லா கட்சிக்கும் சுற்றிவிட்டுப் போவார்கள். ஆகையினால், அவர்கள் வைக்கும் வாதம் சரியாக இருக்க வேண்டும்.</p><p>கடந்த முறை பாராளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா கொண்டுவரப்பட்டபோது, திமுக-வால் தான் அது தோற்கடிக்கப்பட்டது. எங்கள் தலைவர் தளபதி அவர்கள் அன்று கருப்புச் சட்டை அணிந்து, அந்தச் சட்ட மசோதாவையே எரித்து எதிர்ப்பைப் பதிவு செய்தார். அதற்குப் பிறகுதான் அது தோற்கடிக்கப்பட்டது என்பதுதான் உண்மை.</p><p>திமுக மிகத் தெளிவாகச் சொல்லிவிட்டது. நாங்கள் கொடுத்த சில திருத்தங்களை மசோதாவில் சேர்த்து வைத்தால், அதை ஆதரிப்பதா இல்லையா என்பதைப் பார்த்துதான் முடிவு செய்ய முடியும். ஆனால், இவர்கள் ஊழலை மறைப்பதற்காகத் திரும்பத் திரும்பத் திசை திருப்புகிறார்கள்.</p><h2>கோவை மாணவர் கொலை</h2><p>கோவையில் மாணவர் கொலை சம்பவம் நடந்துள்ளது. அன்று <a href="https://www.dailythanthi.com/topic/dmk">திமுக</a> ஆட்சியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவத்தில் 85 நாட்களுக்குள் தண்டனை பெற்றுத் தந்து தவறு செய்தவர்களை உள்ளே சிறைக்கு அனுப்பினோம். ஆனால், தூத்துக்குடி பெண் பாதிக்கபட்ட விவகாரத்தில், அவர்கள் கட்சியினரே சம்மந்தப்பட்டிருப்பதாக புகார் அளித்தும் 100 நாட்கள் ஆகியும் அதற்கு இன்னும் பரிகாரம் கிடைக்கவில்லை; கேசும் போடவில்லை, ஒன்றும் செய்யவில்லை.</p><h2>'நான்காவது தூண்'</h2><p>நேற்று ஒரு மாநாடு நடந்தது. எவ்வளவு பெரிய மாநாடாக இருந்தாலும், 'நான்காவது தூண்' (Fourth Pillar) எனப்படும் பத்திரிகையாளர்களுக்கு முதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆனால், பத்திரிகையாளர்களையே உள்ளே விடவில்லை. அங்கு என்ன நடந்தது என்று யாருக்குமே தெரியவில்லை; முதலமைச்சரே பேசவில்லை. முதலீட்டாளர்கள் எல்லாம் வந்துவிட்டதாக இவர்கள் சொல்கிறார்கள். ஆனால், எங்கள் தலைவர் அன்றைக்குக் கொண்டுவந்து போட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இரண்டாம் கட்டத்திற்கான தொகையைப் போட்டிருக்கிறார்கள்; அவ்வளவுதான்.</p><p>அப்படி இருக்கும்போது பத்திரிகையாளர்களை அனுமதித்தால் என்ன? மக்களுக்கு உண்மைகள் வெட்டவெளிச்சமாகத் தெரிந்துவிடும் என்பதற்காகவே இந்த ரகசியம். பத்திரிகையாளர்களையே அனுமதிக்காமல் ஒரு கூட்டத்தை நடத்துவது தமிழ்நாட்டிலேயே இதுதான் முதல் முறை.</p><h2>சொத்து வரி/வீட்டு வரி</h2><p>அதேபோல, சென்னையில் சொத்து வரி/வீட்டு வரி பயங்கரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இன்றைக்குக் கார்ப்பரேஷனில் 'சுய மதிப்பீடு' (Self-Declaration) மூலம் வரி போடுகிறார்கள். அபார்ட்மெண்டில் 50 வீடுகள் உள்ள இடத்தில் இரண்டு பேருக்குத்தான் மதிப்பீடு செய்தார்கள் என்று பச்சையாக  பொய் சொல்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனி மதிப்பீடு மற்றும் பட்டா இருக்கும். அப்படி தவறாக இருந்தால் CMDA மூலம் அந்த கட்டடங்களை இடிக்க வேண்டியதுதானே? அந்த அதிகாரம் உங்களுக்கு இருக்கிறதே!</p><h2>பொய் பேசும் அமைச்சர்கள்</h2><p>இப்படிப் பொய் பேசும் அமைச்சர்கள் தான் இன்றைக்கு இருக்கிறார்கள். நேற்றைய தினம் எங்கள் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளரும் முன்னாள் மேயருமான மா.சுப்பிரமணியம் கண்டன அறிக்கை வெளியிட்டு, மக்கள் மத்தியில் பெரிய கொதிப்பு ஏற்பட்ட பிறகு, தற்போது தற்காலிகமாக அதை நிறுத்தி வைப்பதாக சொல்கிறார்கள். </p><p>நிரந்தரமான தீர்வை இவர்களால் சொல்ல முடியவில்லை. உள்ளாட்சித் துறை அமைச்சரும், அதிகாரிகளும் இதுபற்றி வாய் திறக்கவில்லை. இந்த வரி உயர்வைக் கைவிடாவிட்டால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம்.</p><h2>தொகுதி மறுசீரமைப்பு </h2><p>தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) மசோதாவைப் பொறுத்தவரை, திமுக 'Fair Delimitation' என்ற நிலைப்பாட்டில்தான் இருக்கிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானத்தை திமுக ஏற்றுக்கொண்டது. நியாயமான தொகுதி மறுசீரமைப்பு என்பதுதான் எங்கள் கொள்கை. நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று சொன்னோம்.</p><h2>சர்க்காரியா கமிஷன்</h2><p>அவர் சர்க்காரியா கமிஷனைப் பற்றியெல்லாம் பேசுகிறார். அப்போது அவர் பிறந்திருக்கவே மாட்டார். சர்க்காரியா கமிஷனுக்குச் சவால் விட்ட ஒரே தலைவர் எங்கள் தலைவர் கலைஞர் மட்டும்தான். அதற்குப் பிறகு பல ஆண்டுகள் எம்.ஜி.ஆர் ஆட்சி நடந்தது. அவர்களால் ஒரு வழக்காவது போட முடிந்ததா? 2001-இல் இரவோடு இரவாகக் கலைஞரைக் கைது செய்தார்களே, அதற்குப் பிறகு 15 ஆண்டுகள் அவர்கள் ஆட்சியில்தான் இருந்தார்கள். ஒரு வழக்கையாவது நிரூபிக்க முடிந்ததா? இதெல்லாம் வரலாறு தெரிந்து பேச வேண்டும்.</p> <h2>விஜய்க்கு அறிவுரை</h2><p>அவர் நேத்துதான் கட்சி ஆரம்பித்து வந்திருக்கிறார். நான் விஜய்க்கு ஒரு அறிவுரை சொல்வதானால்.. பல கட்சிகளுக்கு சென்று வந்த இதுபோன்ற ஆட்களைத் தயவுசெய்து பக்கத்தில் சேர்க்காமல் இருப்பது அவருக்கு நல்லது. 'கூடா நட்பு கேடாய் முடியும்' என்பதைப் போல, இந்த ஆட்சிக்கு கேடு இவர்களால் தான் வரப்போகிறது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மீனவர் பிரச்சினை: அரசு உணர்வுப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் - உதயநிதி ஸ்டாலின் பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fishermens-issue-government-must-take-a-sensitive-approach-udhayanidhi-stalins-post</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fishermens-issue-government-must-take-a-sensitive-approach-udhayanidhi-stalins-post#comments</comments><guid isPermaLink="false">0119a497-a490-4115-a1fa-b2d766654449</guid><pubDate>Fri, 14 Aug 2026 12:08:20 +0000</pubDate><atom:updated>2026-08-14T12:08:20.596Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Tamilnadu,திமுக,DMK,தமிழகம்,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,Fishermen Issue,தமிழக மீனவர் பிரச்சினை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/girf2nja/seri.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/girf2nja/seri.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/udhayanidhi-stalin">உதயநிதி ஸ்டாலின்</a> தெரிவித்துள்ளார். </p><h2>கடிதம் மட்டும் எழுதுவது ஏன்?</h2><p>இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது கண்டிக்கத்தக்கது. </p><p>இந்த பிரச்சினை தொடர்பாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இந்த அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.</p><p>மீனவர் பிரச்சினையில், ‘மானே - தேனே - பொன்மானே என்று கடிதம் எழுதினால் மட்டும் போதுமா - உணர்வுப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டாமா?’ என்று ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நம்மை பார்த்து சொன்னவர்கள், இப்போது கடமைக்கு கடிதம் மட்டும் எழுதுவது ஏன்? </p><h2>மீனவர் பிரச்சினை</h2><p>ஆட்சிக்கு முன் - ஆட்சிக்குப் பின் என ஒவ்வொரு விஷயத்திலும் இரட்டை வேடம் போடுவது போல, மீனவர் பிரச்சினையிலும் இந்த SofaModel அரசு ஏமாற்று வேலைகளில் ஈடுபடக்கூடாது.</p><p>இவர்கள் சொன்ன அந்த உணர்வுப்பூர்வமான நடவடிக்கையை உடனடியாக மேற்கொண்டு, இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி வகுப்புகள்: அமைச்சர் முகமது பர்வேஸ் தொடங்கி வைத்தார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/training-classes-at-government-industrial-training-institutes-minister-mohammed-parvez-inaugurates</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/training-classes-at-government-industrial-training-institutes-minister-mohammed-parvez-inaugurates#comments</comments><guid isPermaLink="false">fbad9659-c024-4567-80e4-e565a62cf38f</guid><pubDate>Fri, 14 Aug 2026 11:54:17 +0000</pubDate><atom:updated>2026-08-14T11:54:17.100Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,அரசு தொழிற்பயிற்சி நிலையம்,அமைச்சர் முகமது பர்வேஸ்,Industrial Training</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/hcjnug9f/ten.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/hcjnug9f/ten.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி வகுப்புக்களை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ் இன்று தொடங்கி வைத்தார்.</p><h2>அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள்</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் 36,344 இருக்கைகளுடன் மற்றும் 277 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் 26,388 இருக்கைகளுடன் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 70 பொறியியல் மற்றும் 34 பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. </p><h2>31.08.2026 வரை சேர்க்கை</h2><p>அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பிரபலமான தொழிற்பிரிவுகளான பிட்டர், எலக்ட்ரீசியன், ஏசி மெக்கானிக், வெல்டர், கணினி உள்ளிட்ட தொழிற்பிரிவுகளிலும் தொழில் 4.0 தரத்திலான அட்வான்ஸ்டு சி.என்.சி, ரோபோட்டிக்ஸ், எலக்ட்ரிக் வெஹிக்கிள் போன்ற நவீன தொழிற்பிரிவுகளிலும் பயிற்சி வழங்கப்படுகிறது. அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்களிலும் 31.08.2026 வரை சேர்க்கை நடைபெறுகிறது. இந்த நிலையங்களில் ஒவ்வொரு கல்வியாண்டும் ஆகஸ்டு திங்களில் பயிற்சி தொடங்கும். </p><h2>பணி நியமன ஆணை</h2><p>அதன்வழி, கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 14.08.2026 அன்று நடைபெற்ற விழாவில் 2026-27-ஆம் கல்வியாண்டுக்கு அரசு தொழிற்பயிற்சி நிலைய வகுப்புகளைத் தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடை, காலணி மற்றும் வரைபடக் கருவிகளை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ் வழங்கினார்.</p><p>சென்ற ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்துச் சென்ற மாணவர்களில் 95 சதவீதம் பேர் பல முன்னணி தொழில் நிறுவனங்களில் நல்ல வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். அவர்களில் 10 மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் வழங்கினார்.</p><h2>ரூ.50,000/- ரொக்கப்பரிசு</h2><p>2026 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்த துறையால் நடத்தப்பட்ட 9வது மாநில அளவிலான படைப்புத் திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற 17 அரசு தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளர்கள் அடங்கிய 5 குழுக்களுக்கு தலா ரூ.50,000/- ரொக்கப்பரிசும் பாராட்டுச் சான்றிதழும் அமைச்சர் அவர்கள் வழங்கினார். மேலும், இவ்விழாவில் 2026-ஆம் கல்வியாண்டில் 100 சதவீத சேர்க்கை மேற்கொண்ட அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களுக்கு அமைச்சர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.</p><p>இவ்விழாவில், கொ. வீரராகவராவ், இ.ஆ.ப., அரசுச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, டாக்டர் சி.பழனி, இ.ஆ.ப., இயக்குநர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, துறையின் உயர் அலுவலர்கள் மற்றும் தொழில் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>பிரதமரை அவமதித்த விஷக்கிருமிகளை உடனடியாக கைது செய்க! - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/immediately-arrest-the-toxic-elements-who-insulted-the-prime-minister-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/immediately-arrest-the-toxic-elements-who-insulted-the-prime-minister-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">b304305a-9f44-4a72-b1ff-43b8370242b1</guid><pubDate>Fri, 14 Aug 2026 11:50:33 +0000</pubDate><atom:updated>2026-08-14T11:50:33.601Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/q1p4ve5t/Untitled-22.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/q1p4ve5t/Untitled-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்த விஷக்கிருமிகளை உடனடியாகச் சிறையில் அடைக்க வேண்டும். தவறினால், லட்சக்கணக்கான பாஜக தொண்டர்களின் போராட்டப் பெருவெள்ளம் உங்கள் அதிகாரக் கோட்டைகளைத் தகர்த்தெறியும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>போஸ்டரால் சர்ச்சை</h2><p>திருச்சியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை கொலையாளி போலவும், ரத்தக்கறை படிந்தவராகவும் சித்தரித்து ஒட்டப்பட்டுள்ள அருவருக்கத்தக்க போஸ்டர்கள் கடும் கண்டனத்திற்குரியவை. உலகம் போற்றும் ஒரு உன்னதத் தலைவரான பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை இழிவுபடுத்துவது, ஜனநாயகத்தின் பெயரால் செய்யப்படும் அப்பட்டமான தேசவிரோதச் செயலாகும்.</p><p>இவ்வாறு பாரதப் பிரதமர் மீது நஞ்சைக் கக்கி வருவதைப் பார்த்துப் பொறுமை காக்க <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பாஜக </a>ஒன்றும் கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்கும் இயக்கமல்ல. எனவே, காவல்துறை ஒருதலைப்பட்சமாக செயல்படாமல் வன்மத்தைப் பரப்பும் இந்த விஷக்கிருமிகளை உடனடியாகச் சிறையில் அடைக்க வேண்டும். தவறினால், லட்சக்கணக்கான பாஜக தொண்டர்களின் போராட்டப் பெருவெள்ளம் உங்கள் அதிகாரக் கோட்டைகளைத் தகர்த்தெறியும் என எச்சரிக்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.b</p>]]></content:encoded></item></channel></rss>