<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 06 Aug 2026 09:28:22 +0000</lastBuildDate><item><title>விவசாயிகள் நலனை காற்றில் பறக்கவிட்ட வேளாண் பட்ஜெட் - வானதி சீனிவாசன் விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/agriculture-budget-that-blew-away-farmers-welfare-vanathi-srinivasans-criticism</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/agriculture-budget-that-blew-away-farmers-welfare-vanathi-srinivasans-criticism#comments</comments><guid isPermaLink="false">875cd4d0-4073-4f10-9cff-f6ad3e122a40</guid><pubDate>Thu, 06 Aug 2026 09:20:11 +0000</pubDate><atom:updated>2026-08-06T09:20:11.149Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Farmers,விவசாயிகள்,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,வேளாண் பட்ஜெட்,agriculture budget</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/5rlsmo8a/1.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/5rlsmo8a/1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இன்று சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். இந்த நிலையில் பட்ஜெட் குறித்து தேசிய பாஜக மகளிரணி தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D">வானதி சீனிவாசன்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>'கோட் சூட் போட்ட விவசாயி' முதல்-அமைச்சர் அவர்களே.. இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக வேளாண் பட்ஜெட்டில், தவெக அளித்த தேர்தல் வாக்குறுதியில் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக குவிண்டாலுக்கு ரூ. 3,500 மற்றும் கரும்பிற்கு ரூ. 4,500  வழங்கப்படும் என்று அறிவித்தது என்னாச்சு..?</p><h2>கத்தி பட வசனம்</h2><p>60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் மாதந்தோறும் ரூ. 3,000 ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு என்னாச்சு...? விவசாயி உரிமைத் தொகை விதைப்புக் கால நிதியுதவி ரூ. 15,000 என்னாச்சு? Simple - ஆ சொல்லனும்னா நீங்க நடிச்ச கத்தி பட வசனம்தான் நினைவுக்கு வருகிறது. “மூன்றுவேளை பசி எடுத்தா சாப்பாட்டை நினைக்கிறோம்..! ஆனா அந்த சாப்பாட்டை உருவாக்குற விவசாயியை மட்டும் மறந்துடுறோம்..!" அப்படித்தான் இந்த தவெக அரசு பல கவர்ச்சித் திட்டங்களை அறிவித்துவிட்டு, அதற்கு வடிவம் கொடுக்கும் விவசாயிகள் நலனை காற்றில் பறக்கவிட்டது போல் அமைந்திருக்கிறது இந்த வேளாண் பட்ஜெட்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஐ.டி. என்ஜினீயரை காரில் கடத்தி நகை-பணம் பறிப்பு: 4 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-engineer-kidnapped-in-car-jewellery-and-cash-snatched-4-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-engineer-kidnapped-in-car-jewellery-and-cash-snatched-4-arrested#comments</comments><guid isPermaLink="false">4141e36d-b5e8-4968-8bcd-a3feaefb7a78</guid><pubDate>Thu, 06 Aug 2026 09:19:23 +0000</pubDate><atom:updated>2026-08-06T09:19:23.552Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,கைது,arrest,Car,காரில் கடத்தல்,Kidnapping,என்ஜினீயர்,Engineer,நகை-பணம் பறிப்பு,jewelry-money robbery,I.T. sector,ஐ.டி.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/7scd4k2l/4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 4 பேர் கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/7scd4k2l/4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,  </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88">கோவை</a>யில் ஐ.டி. <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%80%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D">என்ஜினீயரை</a> காரில் கடத்திச் சென்று, நகை மற்றும் பணத்தை பறிப்பில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>ஐ.டி. என்ஜினீயர் காரில் கடத்தல்</h2><p>கோவையில் ஐ.டி. என்ஜினீயர் சஞ்சய் என்பவரிடம் 'கிரைண்டர்' செயலி மூலம் நெல்லையைச் சேர்ந்த ஆத்விக் என்பவர் அறிமுகமானார். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து சஞ்சய்யை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">காரில் கடத்திச்</a> சென்றுள்ளார்.</p><h2>நகை-பணம் பறிப்பு, 4 பேர் கைது</h2><p>சிறுவாணி சாலையில் வைத்து அவரை தாக்கி, அவரிடமிருந்த ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பணத்தை பறித்துவிட்டு தப்பியோடினர். இது குறித்த புகாரின்பேரில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி ஆத்விக் உள்ளிட்ட 4 பேரையும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/heavy-rain-likely-in-7-districts-of-tamil-nadu-today-5</link><comments>https://www.dailythanthi.com/news/weather/heavy-rain-likely-in-7-districts-of-tamil-nadu-today-5#comments</comments><guid isPermaLink="false">8ec515f2-e9c1-4ac1-bcf8-2a2662418314</guid><pubDate>Thu, 06 Aug 2026 09:16:02 +0000</pubDate><atom:updated>2026-08-06T09:16:02.182Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,கனமழை,வானிலை,மழை,Weather update,heavy rain,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/qb8pui1i/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/qb8pui1i/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>சுமார் 5.8 கி.மீ. முதல் 7.6 கி.மீ. உயரம் வரை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் முதல் லட்சத்தீவு பகுதிகள் வரை தென் தமிழகம் மற்றும் கேரளா வழியாக ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. வட தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><p><strong>06-08-2026:</strong> ராணிப்பேட்டை, திருவள்ளூர், நீலகிரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர், தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், ஈரோடு, திருச்சி, கரூர், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>07-08-2026:</strong> கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><h3>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</h3><p><strong>06-08-2026 மற்றும் 07-08-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று குறையக்கூடும்.</p><p><strong>08-08-2026 முதல் 10-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.</p><h3>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</h3><p>06-08-2026 முதல் 10-08-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p><strong>நாளை</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வேளாண் நிதிநிலை அறிக்கை உழவர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது – அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-agricultural-budget-report-has-disappointed-farmers-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-agricultural-budget-report-has-disappointed-farmers-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">38488efd-09ea-4ce5-800b-4c6efdbfa536</guid><pubDate>Thu, 06 Aug 2026 09:00:35 +0000</pubDate><atom:updated>2026-08-06T09:00:35.094Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,Farmers,ஏமாற்றம்,உழவர்கள்,Agricultural Budget,வேளாண் நிதிநிலை அறிக்கை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/d6dk2itt/anbumani.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/d6dk2itt/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு அரசின் சார்பின் ஆறாம் முறையாகவும், த.வெ.க. அரசின் சார்பில் முதல் முறையாகவும் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகளைப் பார்க்கும் போது எந்த நோக்கத்திற்காக வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று பாமக 13 ஆண்டுகள் போராடி வெற்றி பெற்றதோ, அந்த நோக்கத்தில் ஒரு  விழுக்காடு கூட நிறைவேறவில்லை. இந்த நிதிநிலை அறிக்கை உழவர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது.</p><h2>நிதி ஒதுக்கீடு</h2><p>சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பும், வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீடும் கணிசமாக குறைக்கப்பட்டிருக்கிறது. வேளாண்துறைக்கு மட்டும் திமுக அரசில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ரூ.15,167.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் அதை விட ரூ.470.92 கோடி குறைவாக ரூ.14,696.70 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையில் 20 துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.58,374 கோடி என்றும், இது இடைக்கால நிதிநிலை அறிக்கையின் மதிப்பான ரூ.47,248 கோடியை விட ரூ.11,126 கோடி அதிகம் என்றும் கூறப்பட்டிருக்கிறது.</p><h2>மொத்த மதிப்பு குறைப்பு</h2><p>உண்மையில் வேளாண் நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பு குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள 20 துறைகளில் ஊரக வளர்ச்சித்துறைக்கான நிதி ஒதுக்கீடு மட்டும் இடைக்கால நிதிநிலை அறிக்கையின் மதிப்பான ரூ.6,329.29 கோடியிலிருந்து ரூ.11,774 கோடி உயர்த்தி மொத்தம் ரூ.18,103.02 கோடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வரை நடைமுறையிலிருந்த 100 நாள் வேலைத் திட்டத்திற்கு பதிலாக 125 நாள் வேலைத் திட்டம் அறிமுகம் செய்யபட்டிருப்பதாகவும், இந்தத் திட்டத்திற்கான மத்திய அரசின் பங்கு குறைக்கப்பட்டு, மாநில அரசின் பங்கு உயர்த்தப்பட்டிருப்பதால் தான் இந்தக் கூடுதல்  நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் கள அளவில் எந்த மாற்றமும் ஏற்பட்டு விடப்போவதில்லை. இந்த கூடுதல்  ஒதுக்கீட்டை கழித்துப் பார்த்தால் வேளாண் நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பு ரூ.46,600 கோடி மட்டும் தான். இது இடைக்கால நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பான ரூ.47,248 கோடியை விட ரூ.648 கோடி குறைவு ஆகும்.</p><p> நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பில் 25% வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. அதன்படி நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பான ரூ.4.62 லட்சம் கோடியில் வேளாண் நிதிநிலை அறிக்கைக்காக ரூ.1.16 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதில் பாதியளவு மட்டும் தான் வேளாண்மைக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் வேளாண்மைத் துறைக்கு மட்டும் வெறும் ரூ.14,696.70 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதை ஏற்கவே முடியாது.</p><h2>மிகப்பெரிய ஏமாற்றம்</h2><p>த.வெ.க. ஆட்சிக்கு வந்தால் நெல்லுக்கான கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3500, கரும்புக்கான கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.4500 வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது குறித்து எந்த அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை. நெல் கொள்முதலை கையாளும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு திமுக ஆட்சியின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில், ரூ.14,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் ரூ.18 கோடி மட்டும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு பார்க்கும் போது நடப்பாண்டில் நெல்லுக்காக தமிழக அரசு வழங்கும் ஊக்கத்தொகை உயர்த்தப்படாது என்றே தோன்றுகிறது. இது மிகப்பெரிய ஏமாற்றம்.</p><h2>தார்ப்பாய்கள்</h2><p>கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளுடன் உழவர்கள் காத்துக் கிடப்பதைத் தடுக்கவும், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாவதைத் தடுக்கவும் கிடங்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று பாமக வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதற்கான திட்டங்களை அறிவிக்காத அரசு, 43,500 விவசாயிகளுக்கு  ரூ.10 கோடியில்  தார்ப்பாய்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. ரூ.2298 மதிப்புள்ள தார்ப்பாய்களைக் கொண்டு பல டன் எடையுள்ள நெல்லை எவ்வாறு நனையாமல் பாதுகாக்க முடியும்? என்பது தெரியவில்லை.</p><p>பயறு வகைகளின் சாகுபடியை  15.19 லட்சம் ஏக்கரில் இருந்து 24.70 லட்சம் ஏக்கராகவும், எண்ணெய் வித்துகளின் சாகுபடி பரப்பை 9.26 லட்சம் ஏக்கரில் இருந்து 14.89 லட்சம் ஏக்கராகவும் உயர்த்த சிறப்புத் திட்டம்  செயல்படுத்தப் படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்காக உழவர்களுக்கு ஊக்கத்தொகை எதுவும் அறிவிக்கப்படவில்லை. பிற பயிர்களுடன் ஒப்பிடும் போது பயறு மற்றும் எண்ணெய் வித்துகள் சாகுபடியில் லாபம் குறைவாகவே கிடைக்கும் நிலையில், அதை ஈடு செய்யும் அளவுக்கு உழவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்காத நிலையில், இந்த முயற்சி வெற்றி பெறாது. இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள பல அறிவிப்புகள்  திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் &amp; அறிவிப்புகளின் நீட்சியாகவே உள்ளன. புதிதாக எதுவும் இல்லை.</p><h2>அஞ்சலையம்மாள் விருது</h2><p>நெல் உள்ளிட்ட 10 வகையான பயிர்களில் அதிக விளைச்சல் ஈட்டும் 3 உழவர்கள் வீதம் மொத்தம் 30 பேருக்கு வழங்கப்படும் விருதுகளுக்கு கடலூர் அஞ்சலையம்மாள் பெயர் சூட்டப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">நிதிநிலை அறிக்கை </a>மீதான விவாதத்திற்கு பதிலளிக்கும் போதாவது பயனுள்ள அறிவிப்புகளை அரசு வெளியிட வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் என்னென்ன?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-governments-agriculture-budget-will-it-please-farmers-immediate-update</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-governments-agriculture-budget-will-it-please-farmers-immediate-update#comments</comments><guid isPermaLink="false">d957c9d5-df5c-429f-a09b-b1846bb7c135</guid><pubDate>Thu, 06 Aug 2026 03:57:22 +0000</pubDate><atom:updated>2026-08-06T08:49:20.041Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,தமிழக சட்டசபை,TNAssembly,சட்டசபை கூட்டத்தொடர்,வேளாண் பட்ஜெட்,TNAgricultureBudget,தமிழக வேளாண் பட்ஜெட்,தவெக அரசு,TVK Government,tvk cabinet,CMVijay‌</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/fx7b3hh9/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/fx7b3hh9/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் 5-ந்தேதி தாக் கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தேர்தல் நேரத்தில் மக்களுக்கு பல் வேறு வாக்குறுதிகளை விஜய் அளித்து இருந்தார். எனவே பட்ஜெட் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.</p><p>தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர்  மரிய வில்சன் நேற்று (05.08.2026) தாக்கல் செய்தார். இதில், ஒவ்வொரு துறைக்கும் நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு அறிவிப்புகள் வெளியானது. </p><p>இந்தநிலையில்,  த.வெ.க. அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டை  வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் இன்று (06.05.2026) தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் விவசாய பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி, குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறுமா? விவசாயிகளை மகிழ்விக்கும் வகையில் வேளாண் பட்ஜெட் இருக்குமா? என்ற வகையில் விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.</p><h3>
கருப்பு சட்டையில் வந்த திமுக எம்.எல்.ஏ-க்கள்</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/ebaiopil/udayi33.jpg" /></figure><p>தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், திமுக எம்.எல்.ஏ-க்கள் கருப்பு சட்டை அணிந்து அவைக்கு வருகை தந்தனர்.</p> <h3>
ஈபிஎஸ் வருகை</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/z7ysr5rc/sami33.jpg" /></figure><p>இன்று தவெக அரசின் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. சட்டமன்ற வேளாண் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார்.</p><p><strong>வணக்கம் தெரிவித்துக் கொண்ட முதல்-அமைசர் விஜய் – ஈபிஎஸ்</strong></p><p>சட்டப்பேரவை இன்று காலை தொடங்குவதற்கு முன்பாக, சட்டப்பேரவை வளாகத்தில்  முதல்-அமைச்சர் விஜய் - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியும் நேரில் சந்தித்துக் கொண்டனர். அப்போது இருவரும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொண்டனர். </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/uzr9q7su/vvanakam33.jpg" /></figure><h3>வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்; அமைச்சர் வினோத்
</h3><p>த.வெ.க. அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டை  வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார்.</p><h3>கோட் சூட் போட்ட விவசாயி முதல்-அமைச்சர் விஜய்: வினோத் புகழாரம் </h3><p>கோட் சூட் போட்ட விவசாயி நீங்கள். ஊழலை ஒழிக்க உங்களை விட்டால் வேறு யாரும் இல்லை. நீங்கள் கொண்டாடப்படும் வரம்.</p><h3>சபாநாயகர் அறிவுரை</h3><p>முதல்-அமைச்சரை புகழ்ந்து அமைச்சர் படித்த சில பகுதிகளுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து வேளாண் அறிக்கையில் உள்ளதை மட்டும் படிக்க அமைச்சர் வினோத்துக்கு சபாநாயகர் அறிவுறுத்தினார்.</p><h3>
விவசாயிகளின் கருத்துகளை பெற்று நிதி நிலை அறிக்கை</h3><p>"விவசாயிகள், ஏற்றுமதியாளர்களின் கருத்துக்களை பெற்று நிதிநிலை அறிக்கை. விவசாயிகளுக்கான முன்னோடி திட்டங்களுடன் நிதிநிலை அறிக்கை தயாரிப்பு.</p><p>சிஎம் வகுத்துக் கொடுத்த சீரிய தொலைநோக்கு திட்டங்களுடன் நிதிநிலை அறிக்கை. செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் தொடர்வதோடு, புதிய திட்டங்கள் அறிமுகம். வேளாண்மை பாதித்தால் எந்த துறையும் செயல்பட முடியாது என்று கூற்றுக்கு ஏற்ப பட்ஜெட் -  அமைச்சர் வினோத்  </p><h3>வளமான மண்; வளமான வருங்காலம்</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/bd3nbwkp/man33.jpg" /></figure> <p>மண்ணின் வளத்தை பாதுகாக்க” தமிழ்நாடு மணவள பாதுகாப்பு இயக்கம் -ரூ.122.51 கோடி ஒதுக்கீடு</p> <h3>தரமான விதை! வளமான விவசாயம்!
</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/ixhqxmlf/nel33.jpg" /></figure> <p>நெல் விதை உற்பத்தி மற்றும் விநியோக மானியத்திற்கான மாநில அரசின் சிறப்பு திட்டத்திற்கு ரூ.34.72 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><h3>வேளாண் தொழில் நுட்பம் உங்கள் விரல் நுனியில்!</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/sk1z2p26/uzvar33.jpg" /></figure> <p>ஒவ்வொரு உழவருக்கும் தனிப்பயன் சேவைகள் ஏஐ அடிப்படையிலான உழவர் செயலி தொடங்கப்படும். அதற்கு ரூ. 2 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p> <h3>விவசாயிகளுக்கு ரூ.4,000 சிறப்பு ஊக்கத்தொகை
</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/fa4724iu/poochi33.jpg" /></figure> <p>உயிர்ம உரப்பயன்பாட்டை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு ரூ.4,000 சிறப்பு ஊக்கத்தொகை -அமைச்சர் வினோத்.</p> <h3>
இலவச மின்சாரத்திற்காக ரூ.7,432 கோடி நிதி ஒதுக்கீடு</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/u9pyv044/water33.jpg" /></figure> <p>விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்திற்காக ரூ.7,432 கோடி நிதி ஒதுக்கீடு. உழவர் ஐடி பெற்ற 3 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.6 கோடியில் மண்வள அட்டை  - அமைச்சர் வினோத்.</p> <h3>
மக்காச்சோள உற்பத்தி - ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/pgfwx1sv/makaa33.jpg" /></figure> <p>மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டு திட்டத்திற்காக ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p> <h3>
காட்டுப்பன்றிகளால் பயிர் இழப்பு
</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/viv44ihq/panni33.jpg" /></figure><p>காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் இழப்புகளைத் தடுக்க காட்டுப்பன்றி சேதத் தடுப்புத் திட்டத்திற்காக ரூ.7.35 கோடி நிதி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத்</p> <h3>வேளாண் கண்காட்சி நடத்தப்படும்</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/pgcj2fry/veelna3.3jpg.jpg" /></figure><p>தொழில்நுட்பமும், பாரம்பரியமும் சங்கமிக்கும் திருவிழாவாக வேளாண் கண்காட்சி நடத்தப்படும். இதற்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத்</p><h3>43,500 தார்ப் பாய்கள் வாங்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு </h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/a5krmsx9/thaar33.jpg" /></figure><p>மழை வெயிலிலிருந்து விளை பொருட்களை பாதுகாக்க 43,500 தார்பாய்கள் திட்டத்திற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத் </p><h3>தமிழ்நாடு குறுதானிய இயக்கம் அமைக்கப்படும் </h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/unhltkfu/kuru33.jpg" /></figure><p>சாமை, தினை, வரகு, குதிரை வாலி, பனிவரகு போன்ற பயிர்களின் சாகுபடியை இருமடங்காக அதிகரிக்க தமிழ்நாடு குறுதானிய இயக்கம் அமைக்கப்படும். இத்திட்டதிற்காக ரூ.7.61 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்.</p><h3>கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டம் </h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/lo6azp0g/karumbi33.jpg" /></figure><p>கருப்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க கரும்பு சாகுபடி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு  -அமைச்சர் வினோத் </p><h3>3 புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள்
</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/w8ekfd6c/vithai33.jpg" /></figure><p>விதை சுத்திகரிப்பு திறனை அதிகரிக்க 3 புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ.7.1 கோடி நிதி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத்</p><h3>நம்மாழ்வார் விருது 
</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/0hpfvt63/namazavar33.jpg" /></figure><p>5 விவசாயிகளுக்கு சிறந்த உயிர்ம விவசாயிக்கான நம்மாழ்வார் விருது வழங்கப்படும். இதற்காக ரூ.11 லட்சம் நிதி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத்</p><h3>தளிர்கீரைகள் திட்டம் </h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/x73c2rno/thali33.jpg" /></figure> <p>சிறிய தளிர்..பெரிய ஆரோக்கியம் என்ற அடிப்படையில் தமிழ்நாடு தளிர்கீரைகள் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.1.20 கோடி நிதி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத்</p><h3>
மாடித்தோட்டம் ரூ.10 கோடி ஒதுக்கீடு  </h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/p4bxdx6b/madi33.jpg" /></figure><p>மாடித்தோட்டம் அமைக்க இடுபொருள் தொகுப்புகள், காய்கறி விதைத் தொகுப்புகள், பழச்செடித் தொகுப்புகள், நீரியல் தோட்டம், செங்குத்துத் தோட்டம், நிழல்வலைக் குடில்கள் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு -வேளாண் அமைச்சர் வினோத் </p> <p>வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு</p><h3>
அஞ்சலை அம்மாள் பெயரில் விருது</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/22u5sh46/anjsalai33.jpg" /></figure><p>மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டிக்காக அஞ்சலை அம்மாள் பெயரில் விருது வழங்கப்படும்.</p><p>அஞ்சலை அம்மாள் பெயரில் முதல் பரிசு ரூ.2.50 லட்சம். 2-வது பரிசு ரூ.1.50 லட்சம், 3-வது பரிசு. ரூ.1 லட்சம் வழங்கப்படும் - வேளாண் அமைச்சர் வினோத்</p><h3>
பனை பாதுகாப்பு திட்டம்
</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/21k62sx3/panai33.jpg" /></figure><p>பனை நடுவோம். பலன் பெறுவோம் என்பதன் அடிப்படையில் பனை பாதுகாப்பு இயக்கம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்.</p><h3>பருத்தி மறுமலர்ச்சி இயக்கம் 
</h3><p>தரமான பருத்தி உற்பத்தியை பெருக்கிட ஏதுவாக பருத்தி மறுமலர்ச்சி இயக்கம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.27.21 கோடி நிதி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத்.</p><h3>
தமிழ்நாடு தென்னை பதப்படுத்தும் கழகம் </h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/e8qahq6g/thennai33.jpg" /></figure><p>தென்னை சார்ந்த பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்கச் செய்ய ஏதுவாக தமிழ்நாடு தென்னை பதப்படுத்தும் கழகம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.5.30 கோடி நிதி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத் </p><h3>

வேளாண் காடுகள் திட்டம்</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/t3wz8sz9/kadu33.jpg" /></figure><p>விவசாய நிலங்களில் நிரந்தரப் பசுமைக்காக வேளாண் காடுகள் திட்டம் செயல்படுத்தப்படும்; இதற்காக ரூ.17.70 கோடி நிதி ஒதுக்கீடு -வேளாண் அமைச்சர் வினோத்</p><h3>
அரசு தோட்டக்கலைப் பண்ணைகளை மேம்படுத்த ரூ.2.3 கோடி ஒதுக்கீடு </h3><p>அரசு தோட்டக்கலைப் பண்ணைகளை மேம்படுத்த ரூ.2.3 கோடி ஒதுக்கீடு -வேளாண் அமைச்சர் வினோத்</p><h3>
நீர் மேலாண்மைக்கான துளித் துளித் தண்ணீர் திட்டம்
</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/7ubnmrjy/sottu33.jpg" /></figure><p>நீர் மேலாண்மைக்கான துளித் துளித் தண்ணீர் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.785 கோடி நிதி ஒதுக்கீடு -வேளாண் அமைச்சர் வினோத்</p><h3>
வெங்காய சேமிப்புக் கிடங்குகள் உருவாக்கப்படும்</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/baytqlwx/venkayam33.jpg" /></figure><p>வெங்காய சேமிப்புக் கிடங்குகள் அமைப்பதற்காக ரூ.22 கோடி மதிப்பீட்டில் 57 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன சேமிப்பு வசதிகள் உருவாக்கப்படும் -வேளாண் அமைச்சர் வினோத்</p><h3>
மாவட்ட அளவிலான "வெற்றி விவசாயி" விருது</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/n5eur664/farmem33.jpg" /></figure><p>நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துகள். பருத்தி உள்ளிட்ட ஒன்பது பயிர்களை இரண்டு ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டு, அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு, மாவட்ட அளவில் "வெற்றி விவசாயி விருது" வழங்கப்படும்</p><p>முதல் பரிசாக 50 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக 25 ஆயிரம் ரூபாய் என 90 பரிசுகள் வழங்கப்படும்; இதற்காக ரூ.67.50 லட்சம் மாநில நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்படும் - அமைச்சர் வினோத்</p><h3>உயர் மதிப்பு கொண்ட பழ உற்பத்தியை அதிகரிக்க திட்டம்</h3><p>புளுபெரி அவகோடா, கிவி உள்ளிட்டட உயர் மதிப்பு கொண்ட பழ உற்பத்தியை அதிகரிக்க திட்டம் செயல்படுத்தப்படும்.இதற்காக ரூ.1.87 கோடி நிதி ஒதுக்கீடு -வேளாண் அமைச்சர் வினோத்</p><h3> மருத்துவப் பயிர்கள் சாகுபடி ஊக்குவிப்பு திட்டம்
</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/87etbm1d/payir33.jpg" /></figure><p>1,720 ஏக்கரில் 1.51 கோடியில் மருத்துவப் பயிர்கள் சாகுபடி ஊக்குவிப்பு திட்டம் - வேளாண் அமைச்சர் வினோத்</p> <h3>
100% மானியத்தில் 500 பண்ணைக் குட்டைகள் உருவாக்கப்படும்</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/vrw4gh7b/kuttai33.jpg" /></figure><p>100% மானியத்தில் 500 பண்ணைக் குட்டைகள் உருவாக்குதல் மற்றும் 75% மானியத்தில் 500 பண்ணைக் குட்டைகள் தூர்வாருதல் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.8.5 கோடி நிதி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத் </p><h3>
 வேளாண் இயந்திரங்களைப் பழுது நீக்கி பராமரிக்கும் மையங்கள் அமைத்திட மானியம் </h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/391z5o33/truck33.jpg" /></figure><p>வேளாண் இயந்திரங்களைப் பழுது நீக்கி பராமரிக்கும் 15 மையங்கள் அமைத்திட 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். இதற்காக ரூ.1.12 கோடி நிதி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத்</p><h3>
வேளாண் இயந்திரங்கள், கருவிகள் கொள்முதல் </h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/twa87i0f/one33.jpg" /></figure><p>இ- வாடகை 2.0 செயலி மூலம் வேளாண்மைப் பொறியியல் துறையின் இயந்திரங்களை வாடகைக்கு வழங்கும் சேவையை வலுப்படுத்த, 463 வேளாண் இயந்திரங்கள், கருவிகள் கொள்முதல் செய்யப்படும் -வேளாண் அமைச்சர் வினோத் </p><h3>
மானியத்தில் ஆழ்துளை கிணறுகள்</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/jdlbyrny/watertwo33.jpg" /></figure><p>ஆயிரம் ஏக்கர் பாசனம் பரம்பை உருவாக்கிட பொதுப்பிரிவைச் சார்ந்த 500 விவசாயிகளுக்கு ஆழ்துளை அல்லது குழாய்க் கிணறுகள் பின்னேற்பு மானியத்தில் அமைத்தல் அதிகபட்ச மானியம் 60% ரூ.6 கோடி ஒதுக்கீடு -  -வேளாண் அமைச்சர் வினோத் </p><h3>கடலோர மாவட்டங்களில் நீலப் பசுமை தோட்டக்கலை</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/gv5mxtc5/sunclass33.jpg" /></figure><p>கடலோர மாவட்டங்களில் முன்னோடித் திட்டமாக நன்னீர் கிணறுகள் அமைத்து, மிளகாய் மற்றும் கொத்தமல்லி சாகுபடி செய்வதை ஊக்குவிக்க ரூ.49.4 லட்சம் நிதி ஒதுக்கீடு - -வேளாண் அமைச்சர் வினோத் </p><h3>1000 மெ.டன் சேமிப்பு கிடங்கு</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/ehx1xhu0/kudon33.jpg" /></figure> <p>2 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 1000 மெ.டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு வசதிகள் ரூ.4.80 கோடி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத் </p> <h3>
வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மற்றும் பயிற்சி மையங்கள்!
</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/fvj863ei/velan33.jpg" /></figure><p>திருக்கோவிலூர், முசிறி, காரைக்குடி, தாராபுரம் மற்றும் கும்பகோணம் ஆகிய இடங்களில் ரூ.4.6 கோடி மதிப்பில் புதிய வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மற்றும் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளது -  வேளாண் அமைச்சர் வினோத்</p><h3>உழவர் சந்தை புனரமைப்பு
</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/v8va4df7/uvazavar33.jpg" /></figure><p>உழவர் சந்தைகள் புனரமைக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு விவசாயிகளுக்கு நேரடி விற்பனை மற்றும் நிறைவான வருமானத்தை உறுதி செய்ய ஏற்பாடு -  வேளாண் அமைச்சர் வினோத் </p><h3>
கியூ ஆர் கோடுடன் விதைச் சான்றிதழ் வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/7wfcdi2u/nut33.jpg" /></figure><p>கியூ ஆர் கோடுடன் விதைச் சான்றிதழ் வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு -வேளாண் அமைச்சர் வினோத்</p><h3>
சாக்கோட்டையில் உயிர்ம வேளாண்மை பட்டயப் படிப்புக் கல்லூரி</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/i4gc13s7/education33.jpg" /></figure><p>தஞ்சை மாவட்டம், சாக்கோட்டையில் 'நம்மாழ்வார்' பெயரில் ஒரு புதிய உயிர்ம வேளாண்மை பட்டயப் படிப்புக் கல்லூரி அமைக்கப்படும். இதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத்</p><h3>
கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு புதிய பேருந்துகள்</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/jignpwwo/coimbator33.jpg" /></figure><p>கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களின் களப் பயிற்சிக்காக 6 புதிய பேருந்துகள் வாங்கப்படும். இதற்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு- வேளாண் அமைச்சர் வினோத்</p><h3>ஊட்டியில் புதிய வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் </h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/vwdi2en9/pasumai33.jpg" /></figure><p>நஞ்சில்லா வேளாண் முறைகளை ஊக்குவித்து விவசாயிகளின் விளைபொருட்களுக்கு சந்தை வாய்ப்புகளை உருவாக்க நீலகிரி மாவட்டம் ஊட்டியில் புதிய வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் செயல்படுத்தப்படும்; இதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு -வேளாண் அமைச்சர் வினோத்</p><h3>
தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் தரம் உயர்த்தப்படும்</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/ssbhafgz/neelagiri33.jpg" /></figure><p>நீலகிரி விவசாயிகளுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்த தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் தரம் உயர்த்தப்படும். இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத் </p><h3>
சிறு பால்பண்ணை அமைக்க ரூ.4.19 கோடி ஒதுக்கீடு </h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/kqmpwetp/milk33.jpg" /></figure><p>சிறு பால்பண்ணை அமைக்க ரூ.4.19 கோடி ஒதுக்கீடு -வேளாண் அமைச்சர் வினோத்</p><h3>மிளகாய், கொத்தமல்லி சாகுபடிக்கு ரூ.49.4 லட்சம் ஒதுக்கீடு</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/4yh4e5cd/milagai33.jpg" /></figure> <p>கடலோர மாவட்டங்களில் முன்னோடித் திட்டமாக நன்னீர் கிணறுகள் அமைத்து மிளகாய் மற்றும் கொத்தமல்லி சாகுபடிக்கு ரூ.49.4 லட்சம் ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத்</p> <h3>
காளான் உற்பத்திக் கூடங்கள் ரூ.50 லட்சம் நிதியில் அமைக்கப்படும் </h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/8v5zy111/kalan33.jpg" /></figure><p>காளான் வளர்ப்பினை ஊக்குவிக்க கிராமப்புற இளைஞர்கள், பெண்களுக்கு 50 சிறிய அளவிலான காளான் உற்பத்திக் கூடங்கள் ரூ.50 லட்சம் நிதியில் அமைக்கப்படும் -வேளாண் அமைச்சர் வினோத் -</p><h3>
"சிதம்பர ரகசியம் போல இருந்த சட்டமன்றம், இன்று சாமானிய மக்களும் விரும்பிப் பார்க்கும் செய்தி போலாகிவிட்டது" -பட்ஜெட் வாசிப்பின் போது அமைச்சர் வினோத்  
</h3><h3>
இன்று காலை 9.30 மணிக்கு வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசத் தொடங்கிய அமைச்சர் வினோத், கிட்டத்தட்ட 130 நிமிடங்கள் உரையாற்றினார்.

முன்னதாக, நேற்று 2026 -27ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் மரிய வில்சன், சுமார் 150 நிமிடங்கள் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.
</h3><h3>
அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டியது இருந்தால்... -சபாநாயகர்   
</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/pap1ne0i/brabha33.jpg" /></figure> <p>``வேளாண்  பட்ஜெட் அறிக்கையில் இருப்பது மட்டுமே அவை குறிப்பில் இருக்கும். அறிக்கையில் இல்லாத கருத்துகள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்படும்''  நாளை காலை 9 மணிக்கு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் -  சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்</p>]]></content:encoded></item><item><title>தென்னை சாகுபடிக்கு ரூ.16 கோடி சிறப்புத் திட்டம்: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-16-crore-special-scheme-for-coconut-cultivation-announcement-in-the-agriculture-budget</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-16-crore-special-scheme-for-coconut-cultivation-announcement-in-the-agriculture-budget#comments</comments><guid isPermaLink="false">bc0661e7-b508-47c6-8007-61e9cb200ba8</guid><pubDate>Thu, 06 Aug 2026 08:49:16 +0000</pubDate><atom:updated>2026-08-06T08:49:16.722Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,த.வெ.க,cultivation,Coconut,agriculture budget,தமிழக வேளாண் பட்ஜெட்,அமைச்சர் வினோத்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/2t2477r1/195.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் வினோத்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/2t2477r1/195.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார்.</p><p>அப்போது, தென்னைக்கான சிறப்புத் திட்டம் குறித்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D">அமைச்சர் வினோத்</a> கூறியதாவது:-</p><p>"வேர் முதல் நுனி வரை பயன்தரும்- தென்னை என்றும் மனிதனின் உற்ற துணை"</p><h2>தென்னை சாகுபடி</h2><p>தமிழ்நாட்டில் சுமார் 5 லட்சம் எக்டரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு சுமார் 670 கோடி தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தென்னை சாகுபடியிலும் சந்தைப்படுத்துவதிலும் தற்போது விவசாயிகள் சந்தித்து வரும் சவால்களைக் கருத்தில் கொண்டு பூச்சி நோய்த்தாக்குதல்களுக்குத் தீர்வளித்தல், உற்பத்தித்திறனை அதிகரித்தல், மதிப்புக்கூட்டலை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கான இனங்களைக் கொண்டு "தென்னைக்கான சிறப்புத் திட்டம்" மொத்தம் 16 கோடி ரூபாய் மாநில நிதியில் செயல்படுத்தப்படும்.</p><p><strong>i.</strong> தென்னை டானிக் பயன்படுத்துவதால் மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்கள் திறம்பட உறிஞ்சப்படுவதுடன், மரங்களின் வளர்ச்சித் திறன் மேம்பட்டு, பூக்கள் மற்றும் காய் பிடித்தல் அதிகரிக்கும். எனவே, தென்னை விவசாயிகளின் கோரிக்கைக்கு இணங்க, தென்னை மரங்களின் நலத்தையும் உற்பத்தித்திறனையும் மேம்படுத்தும் நோக்கில், 2026-27ஆம் ஆண்டில், 86 ஆயிரம் ஏக்கரிலான தென்னை மரங்களுக்கு "தென்னை டானிக்" வழங்குவதற்காக 6 கோடியே 20 லட்சம் ரூபாய் மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p><p><strong>ii.</strong> தென்னையைத் தாக்கும் வேர்வாடல் நோய் மற்றும் சுருள் வெள்ளை FF 80 ஆகியவற்றின் பாதிப்பால், 35 முதல் விழுக்காடு வரை மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இப்பாதிப்பைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகளுடன் நீடித்த, நிலையான உயிரி கட்டுப்பாட்டு முறைகளைத் தென்னை விவசாயிகளிடையே பெருமளவில் பரவலாக்கம் செய்திட 1,350 ஏக்கர் பரப்பளவில் 'அபெர்டோகிரைசா' என்ற இரைவிழுங்கிப் பூச்சிகள் மற்றும் 'கோகோகான்' நுண்ணுயிர்க் கலவை ஆகியவை 75 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இத்திட்டத்திற்காக ஒரு கோடி ரூபாய் மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p><p><strong>iii.</strong> தென்னையைத் தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈயைத் திறம்படக் கட்டுப்படுத்த கிரைசோபெர்லா இரைவிழுங்கி, ஐசாரியா ஃபுமோசோரோசியா பூஞ்சை ஆகிய உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகளைப் பெருமளவில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்குமாறு பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், புதிதாக 5 தென்னை ஒட்டுண்ணி உற்பத்தி மையங்கள் 3 கோடி ரூபாய் நிதியில் அமைக்கப்படும். கோயம்புத்தூர் மாவட்டம் ஆழியார் நகர், கண்ணம்பாளையம், தேனி மாவட்டம் வைகை அணை, விருதுநகர் மாவட்டம் தேவதானம் ஆகிய இடங்களில் புதிய கிரைசோபெர்லா உற்பத்தி மையங்களும், கன்னியாகுமரி மாவட்டம் புத்தளத்தில், ஐசாரியா ஃபுமோசோரோசியா உற்பத்தி மையமும் அமைக்கப்படும்.</p><p><strong>iv.</strong> தரமான தென்னங்கன்றுகள் கிடைப்பதை உறுதி விவசாயிகளுக்குக் செய்ய கரூர் முதலைப்பட்டி அரசு தோட்டக்கலைப் பண்ணையில் 15 ஏக்கர் பரப்பளவில் "புதிய தென்னை நாற்றுப்பண்ணை" ரூபாய் 48 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.</p><p><strong>V.</strong> தமிழ்நாடு தென்னைப் பதப்படுத்தும் கழகம் தென்னை விவசாயிகளின் வருமானத்தை நீடித்த நிலையான முறையில் பெருக்குவதற்கும், மதிப்புக் கூட்டுவதால், தென்னை மற்றும் தென்னை சார்ந்த பொருட்களுக்கு இலாபகரமான விலை கிடைக்கச்செய்யவும், நிலையான சந்தை வாய் வாய்ப்பினை உருவாக்கவும், <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">தென்னை</a> விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையினை செயல்படுத்தும் விதமாகவும் "தமிழ்நாடு தென்னைப் பதப்படுத்தும் கழகம்" வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையால் 22 கோடியே 30 லட்சம் ரூபாய் மாநில நிதி ஒதுக்கீட்டில் புதிதாக அமைக்கப்படும். இக்கழகத்தின் வாயிலாக, அறுவடைக்குப்பின் தேவைப்படும் கட்டமைப்பு வசதிகள், பதப்படுத்துதல், தரக்குறியீடு இடுதல், சிப்பம் கட்டுதல், ஏற்றுமதி ஆகியவை குறித்த ஆலோசனைகள் வழங்கப்படும். மேலும், விரிவான சேவைகளை வழங்க ஏதுவாக, தென்னை வளர்ச்சி வாரியம், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தோட்டக்கலைத் துறையுடன் ஒருங்கிணைந்து இக்கழகம் செயல்படும். நடப்பாண்டில், இதற்கென 5 கோடியே 30 லட்சம் ரூபாய் மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p><p><strong>vi.</strong> கொப்பரை விலை வீழ்ச்சியினைத் தடுத்து விலையினை நிலைப்படுத்த, குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொப்பரை கொள்முதல் செய்வதற்கான "விலை ஆதரவுத் திட்டம்" உரிய நேரத்தில் அறிவிக்கை செய்யப்பட்டு செயல்படுத்தப்படும் என அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>உதயநிதி ஸ்டாலின் காரில் ஏறச் சென்ற எடப்பாடி பழனிசாமி: சட்டசபை வளாகத்தில் ருசிகரம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/edappadi-palaniswami-moves-to-get-into-udhayanidhi-stalins-car-an-interesting-incident-at-the-assembly-complex-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/edappadi-palaniswami-moves-to-get-into-udhayanidhi-stalins-car-an-interesting-incident-at-the-assembly-complex-2#comments</comments><guid isPermaLink="false">c65cf039-c1bd-457d-b11d-2dafccff527c</guid><pubDate>Thu, 06 Aug 2026 08:41:32 +0000</pubDate><atom:updated>2026-08-06T08:41:32.413Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,Car,கார்,தமிழக சட்டசபை,TMK,எடப்பாடி கே.பழனிசாமி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/xs7yihoe/100.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:title><media:description type="html"><![CDATA[ எதிர்க்கட்சி தலைவர் காரில் ஏற முயன்ற பழனிசாமி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/xs7yihoe/100.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக சட்டசபையில் இன்று 2026-27-ம் ஆண்டுக்கான <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வேளாண் பட்ஜெட் தாக்கல்</a> செய்யப்பட்டது. மதியம் 12.30 மணியளவில் கூட்டம் முடிந்ததும் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் புறப்பட்டு சென்றனர். </p><h2>காரால் ஏற்பட்ட குழப்பம்</h2><p>சட்டமன்ற அதிமுக தலைவர் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">எடப்பாடி பழனிசாமி</a>, சட்டசபை வளாகத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்து விட்டு, அங்கு நின்ற இனோவா காரில் ஏற முயன்றார். அப்போது, அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார், சார் இது உங்கள் கார் இல்லை. <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">எதிர்க்கட்சி தலைவர் </a>உதயநிதி ஸ்டாலினுடையது என்று தெரிவித்தனர். உடனே சிரித்துக்கொண்டு காரில் ஏறுவதை எடப்பாடி பழனிசாமி தவிர்த்தார். அதன்பிறகு, அவருடைய காரில் புறப்பட்டு சென்றார்.</p><h2>மீண்டும் மீண்டும்</h2><p>எடப்பாடி பழனிசாமியின் காரும், உதயநிதி ஸ்டாலினின் காரும் ஒரே நிறத்தில் உள்ளதால், கடந்த 2022-ம் ஆண்டும் இதேபோன்ற சம்பவம் நடந்தது. 2022-ம் ஆண்டு ஏப்ரல் 12-ந் தேதி சட்டசபை நிகழ்ச்சிகள் முடிந்ததும், எதிர்க்கட்சி தலைவராக இருந்த எடப்பாடி பழனிசாமி, வெளியே வந்து காரில் ஏற முயன்றார். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார், சார் இது உங்கள் கார் இல்லை என்று தெரிவித்தனர். அவரும் ஓ.. சாரி என்று சிரித்துக் கொண்டே தனது காரை நோக்கி நடந்து சென்றார். தற்போது, அதுபோன்ற சம்பவம் மீண்டும் நடந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அரசு பேருந்து பெயர் பலகையில் ஓடிய வாசகம்; தக்காளி வெற்றிக்கழகம்: எம்.டி.சி விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-slogan-on-the-government-bus-nameplate</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-slogan-on-the-government-bus-nameplate#comments</comments><guid isPermaLink="false">af4b1798-0a63-4117-b5a1-77b0560037ce</guid><pubDate>Thu, 06 Aug 2026 08:32:32 +0000</pubDate><atom:updated>2026-08-06T08:32:32.277Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,சென்னை,bus,tngovt,அரசு பேருந்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/5cf2ayv0/taklai33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தக்காளி வெற்றிக்கழகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/5cf2ayv0/taklai33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசுப் பேருந்தின் டிஜிட்டல் பலகையில் ஒளிபரப்பான ‘தக்காளி வெற்றிக் கழகம்’ என்ற வாசகத்தால் தவெகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">சென்னை மாநகரப் பேருந்து </a>ஒன்றின் டிஜிட்டல் பெயர் பலகையில் “தக்காளி வெற்றி கழகம்” என இடம்பெற்றிருந்த வாசகம் சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாய் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) உடனடியாக விளக்கம் அளித்துள்ளது.</p><p>கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களின் கைவரிசையால் டிஜிட்டல் பெயர் பலகை மாற்றப்பட்டதாகவும், இது குறித்து தகவல் அறிந்தவுடன் சம்பந்தப்பட்ட பணிமனை அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டு உடனடியாக பெயர் பலகை சரிசெய்யப்பட்டதாகவும் எம்.டி.சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: இன்று முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-ministers-trophy-sports-tournaments-online-registration-begins-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-ministers-trophy-sports-tournaments-online-registration-begins-today#comments</comments><guid isPermaLink="false">f98c2cdc-9edb-4856-ba18-188c2b43fee2</guid><pubDate>Thu, 06 Aug 2026 08:23:56 +0000</pubDate><atom:updated>2026-08-06T08:23:56.513Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chief Minister Cup Sports Tournament,முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/v5zlc0ql/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/v5zlc0ql/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க 6-ந்தேதி(இன்று) முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆண்டுதோறும் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை தமிழ்நாடு முழுவதும் மாவட்ட மண்டல மாநில அளவில் நடத்தி வருகிறது. விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியானது, அனைத்து தரப்பினரையும் விளையாட்டில் ஈடுபட செய்யும் மிகச்சிறந்த முயற்சியாகும். இதன் மூலம் திறமையான விளையாட்டு வீரர்களை பாராட்டி, அவர்களை ஊக்குவித்து, உரிய அங்கீகாரம் மற்றும் பரிசுகளை வழங்குவது, இந்த போட்டிகளில் முக்கிய நோக்கமாகும்.</p><p>பொதுமக்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள முதல்-அமைச்சர் விளையாட்டு போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் 4-ந்தேதி மாவட்ட அளவில் தொடங்கப்பட உள்ளது. விளையாட்டு போட்டிகளில் பங்குகொள்ள ஆர்வமுள்ளோர் 06.08.2026 முதல் 31.08.2026 வரை tncmtrophy.sdat.in என்ற இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.</p><p>மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் நடத்தப்படவுள்ள போட்டிகளில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட 38 வகையான விளையாட்டுப் போட்டிகளுடன், இந்த ஆண்டு முதல் வில்வித்தை, வுஷூ (Wushu), துப்பாக்கிச் சுடுதல், யோகா, மல்லர்கம்பம், ஸ்பீடு ஸ்கேட்டிங், நீர்விளையாட்டுக்களான கயாக்யிங் (Kayaking) மற்றும் கேனோயிங் (Canoeing) போன்ற புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு மொத்தம் 45 வகையான விளையாட்டு போட்டிகள் வரும் செப்டம்பர் முதல் அக்டோபர் மாதம் வரை நடத்தப்பட உள்ளது.</p><p>இந்த போட்டிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் 19 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியர்கள் மட்டும் (01.01.2008 அன்று அல்லது அதற்குப் பின் பிறந்தவர்கள் மட்டும்), இளங்கலை முதலாம் ஆண்டு முதல் முதுகலை இரண்டாம் ஆண்டு வரை மற்றும் பாலிடெக்னிக் படிக்கும் மாணவ, மாணவியர்களும் (01.07.2001 அன்று அல்லது அதற்குப் பின் பிறந்தவர்கள் மட்டும்), 15 முதல் 35 வயது வரை உள்ள பொதுப் பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.</p><p>மாவட்டம் மற்றும் மண்டல அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.2 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூபாய் ஆயிரமும் வழங்கப்படும். மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். குழு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ.50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக தலா ரூ.25 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட உள்ளது.</p><p>எனவே விளையாட்டில் ஆர்வம் உள்ள அனைவரும் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்குகொள்ள tncmtrophy.sdat.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. தாங்களாகவோ, தங்கள் பள்ளி, கல்லூரி மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட விளையாட்டு அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். ‘’ஆடுகளம்’’ தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம்."</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>ஒகேனக்கல்லில் சீறிப்பாயும் காவிரி - குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-raging-at-hogenakkal-inflow-of-20000-cubic-feet-for-the-second-consecutive-day-ban-on-bathing-and-coracle-rides</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-raging-at-hogenakkal-inflow-of-20000-cubic-feet-for-the-second-consecutive-day-ban-on-bathing-and-coracle-rides#comments</comments><guid isPermaLink="false">abb73a8d-0d45-493c-8229-6a0a89ae56b2</guid><pubDate>Thu, 06 Aug 2026 08:16:56 +0000</pubDate><atom:updated>2026-08-06T08:16:56.490Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Dharmapuri,Cauvery,ban,பரிசல் இயக்க தடை,சுற்றுலா பயணிகள் குளிக்க தடை,ஒகேனக்கல் காவிரி ஆறு,நீர் வரத்து அதிகரிப்பு</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/puo9hnt7/84.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ ஒகேனக்கல் அருவி]]></media:title><media:description type="html"><![CDATA[ ஒகேனக்கல் காவிரியில் 2வது நாளாக 20,000 கன அடி நீர் சீறிப்பாய்கிறது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/puo9hnt7/84.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தருமபுரி,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஒகேனக்கல்</a> காவிரியில் 2வது நாளாக 20,000 கன அடி நீர் சீறிப்பாய்வதால், சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>ஒகேனக்கல் அருவி</h2><p>தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று (புதன் கிழமை) வினாடிக்கு 20,000 கன அடியாக உயர்ந்த நீர்வரத்து, இன்று (வியாழக்கிழமை) 2வது நாளாகவும் அதே அளவில் நீடிக்கிறது. இதனால் ஒகேனக்கல் முதன்மை அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து நீர்வீழ்ச்சிகளிலும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வெள்ளம்</a> கரைபுரண்டு சீறிப்பாய்ந்து ஓடுகிறது.</p><h2>பாதுகாப்பு நடவடிக்கைகள்</h2><p>ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தருமபுரி மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஒகேனக்கல் அருவிகள் மற்றும் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சுற்றுலா பயணிகள் </a>குளிப்பதற்கு இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், நீர்வரத்து அபாய கட்டத்தை எட்டியுள்ளதால், ஆற்றில் பரிசல்களை இயக்கவும் மாவட்ட நிர்வாகம் முழுமையாக தடை விதித்துள்ளது.</p><h2>தீவிர கண்காணிப்பு</h2><p>அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க, ஆற்றின் கரையோரப் பகுதிகளில் போலீசாரும், வருவாய்த் துறையினரும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.கர்நாடக கபினி அணையிலிருந்து தொடர்ந்து நீர் திறந்து விடப்பட்டு வருவதால், ஒகேனக்கல்லுக்கான நீர்வரத்து வரும் நாட்களிலும் மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரண்ட்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/arrest-warrant-issued-for-former-dmk-minister-ponmudi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/arrest-warrant-issued-for-former-dmk-minister-ponmudi#comments</comments><guid isPermaLink="false">92c945bc-ab11-46a2-a8fd-832708492eba</guid><pubDate>Thu, 06 Aug 2026 07:54:24 +0000</pubDate><atom:updated>2026-08-06T07:54:24.455Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,பொன்முடி,DMK,சென்னை ஐகோர்ட்டு,arrest,Court,Arrestwarrant</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/b4n0x4kf/ponmudi33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பொன்முடிக்கு பிடிவாரண்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/b4n0x4kf/ponmudi33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சைவ, வைணவ சமயங்கள், பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><h2>சர்ச்சை பேச்சு</h2><p>சென்னையில் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய <a href="https://www.dailythanthi.com/search?q=ponmudi">முன்னாள் அமைச்சர் பொன்முடி</a>, சைவ, வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.</p><p>இதுசம்பந்தமாக சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன், சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், வெறுப்பு பேச்சு பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான இந்த புகாரை விசாரித்து, மதரீதியாக வெறுப்புணர்வை ஏற்படுத்துதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவரை தண்டிக்க வேண்டும் என கோரப்பட்டது.</p><p> இந்த புகார் மனு,  எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றமான ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு மாற்றபட்டு  நிலுவையில் உள்ளது. </p><h2>வழக்கு தள்ளுபடி</h2><p>தனக்கு எதிரான புகாரை விசாரணைக்கு ஏற்று ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் அனுப்பிய சம்மன் மற்றும் வழக்கை ரத்து செய்யக் கோரி பொன்முடி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p>இந்த வழக்கை விசாரித்த  சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் , திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் வழக்கை ஆறு மாதத்தில் முடிக்க உத்தரவிட்டார்.</p><p>இந்த வழக்கு இன்று சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் உமா ஆனந்த தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை  சென்னை ஐகோர்ட்டு நீக்கி இருப்பதாகவும் ஆறு மாதத்தில் விசாரணை முடிக்க  சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டதாகவும் தெரிவித்தார்.</p><h2>பொன்முடிக்கு பிடிவாரண்ட்</h2><p>பொன்முடி தரப்பில் ஆஜராக இருந்த வழக்கறிஞர் வழக்கில் இன்று ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது ஆனால் வழக்கில் இன்று ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரி பொன்முடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரிப்பதாக உத்தரவிட்ட நீதிபதி</p><p>சைவ, வைணவ சமயங்கள், பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படுகிறது.  பொன்முடியை செப்டம்பர் 2ஆம் தேதிக்குள் கைது செய்து ஆஜர்படுத்த காவல் துறைக்கு சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டு உத்தரவிடுகிறது என கூறி வழக்கு விசாரணையை செப்டம்பர் 2 தேதிக்கு தள்ளிவைத்தார்.</p>]]></content:encoded></item><item><title>‘பழைய திட்டங்களின் பெயர்களை மட்டுமே மாற்றியுள்ளனர்’ - வேளாண் பட்ஜெட் குறித்து பிரேமலதா விஜயகாந்த்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/they-have-merely-changed-the-names-of-old-schemes-premalatha-vijayakanth-on-the-agriculture-budget</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/they-have-merely-changed-the-names-of-old-schemes-premalatha-vijayakanth-on-the-agriculture-budget#comments</comments><guid isPermaLink="false">e4845c04-7f0a-4760-ba20-b524dc8d6850</guid><pubDate>Thu, 06 Aug 2026 07:52:53 +0000</pubDate><atom:updated>2026-08-06T07:52:53.746Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Premalatha Vijayakanth,பிரேமலதா விஜயகாந்த்,வேளாண் பட்ஜெட்,agriculture budget</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/i2yffzy6/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/i2yffzy6/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>2026-27ஆம் நிதியாண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட், சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசின் வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்நிலையில், வேளாண் பட்ஜெட்டில் பழைய திட்டங்களின் பெயர்களை மட்டுமே மாற்றியுள்ளனர் என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ. விமர்சித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-</p><p>“இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டில், பல்வேறு துறைகளுக்குப் பல கோடி ரூபாய் மதிப்பிலான நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டன. இருப்பினும், மிகவும் முக்கியமானதாக கருதப்படும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு எந்தவிதமான ஒதுக்கீடும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. </p><p>தற்போது விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல், திறந்தவெளிகளில் சேமித்து வைக்கப்படுகிறது. முறையான சேமிப்புக் கிடங்கு வசதிகள் எதுவும் இல்லை. தரிசு நிலங்களை சாகுபடிக்கு ஏற்ற நிலங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. பழைய திட்டங்களின் பெயர்களை மட்டுமே மாற்றியுள்ளனர்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>வெற்று பட்ஜெட்டாக இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது - மு.க.ஸ்டாலின் விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/this-agricultural-budget-is-an-empty-one-mk-stalins-criticism</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/this-agricultural-budget-is-an-empty-one-mk-stalins-criticism#comments</comments><guid isPermaLink="false">aa2dce38-bdb9-4abd-a4a1-b1d3f3c8d85f</guid><pubDate>Thu, 06 Aug 2026 07:50:04 +0000</pubDate><atom:updated>2026-08-06T07:50:04.477Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,பட்ஜெட்,Budget,வேளாண் பட்ஜெட்,Agricultural Budget,mk stalin,தமிழக வேளாண் பட்ஜெட்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/vt0xzi40/Untitled-20.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/vt0xzi40/Untitled-20.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இன்று சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். இந்த நிலையில் பட்ஜெட் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- </p><h2>பெயர்மாற்ற நிகழ்வு</h2><p>வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதல்-அமைச்சரின் உச்சிகுளிர பாராட்டுமழை பொழியப் பயன்பட்டதுதான் தமிழக வேளாண் பட்ஜெட். மற்றுமொரு பெயர்மாற்ற நிகழ்வாக மட்டுமே நடந்து முடிந்துள்ளது.</p><p>திராவிட மாடல் அரசின் திட்டங்களின் மேல் 'வெற்றி' என்ற லேபிளை ஒட்டினால் வேலை முடிந்தது என்று இந்த அரசு நினைக்கிறதா?</p><h2>வெற்று பட்ஜெட்</h2><p>குறுவை சாகுபடி பாதித்து அரசின் உதவிக்கரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் டெல்டா உழவர்களுக்கு எதுவுமில்லாத, வெற்று பட்ஜெட்டாக இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.</p><p>உழவர் பெருமக்களின் கோரிக்கைகளை உரத்த குரலில் இந்தக் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கூட்டத்தொடர் </a>முழுவதும் கழக உறுப்பினர்கள் எழுப்புவார்கள். உறக்கத்தில் இருக்கும் அரசு விழித்துக் கொண்டு பதில் சொல்லியாக வேண்டும். தீர்வு கிடைக்க வேண்டும்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணி: முக்கிய ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/maintenance-work-in-madurai-division-major-trains-diverted</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/maintenance-work-in-madurai-division-major-trains-diverted#comments</comments><guid isPermaLink="false">27268352-345b-4d31-8e08-1e4678709f5a</guid><pubDate>Thu, 06 Aug 2026 07:44:17 +0000</pubDate><atom:updated>2026-08-06T07:44:17.956Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>maintenance work,பராமரிப்பு பணி,முக்கிய ரெயில்கள்,major trains</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/d27eawmy/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/d27eawmy/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மதுரை கோட்டத்தில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதால், முக்கிய ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p>”கன்னியாகுமரியில் இருந்து ஹவுராவுக்கு ஆகஸ்டு 8-ந் தேதி காலை 5.50 மணிக்கு புறப்படும் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12666) கொடை ரோடு, திண்டுக்கலை தவிர்த்து, மாற்றுப்பாதையில் மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படுகிறது. அவ்வாறு செல்லும்போது, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும். </p><p>இதேபோல், நாகர்கோவிலில் இருந்து - மும்பை லோக்மான்ய திலக்குக்கு ஆகஸ்டு 9, 13, 20, 27 ஆகிய தேதிகளில் காலை 6.15 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16352) திண்டுக்கல்லை தவிர்த்து, மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படுகிறது. அவ்வாறு செல்லும்போது மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். </p><p>மேலும், குருவாயூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஆகஸ்டு 12-ந் தேதி இரவு 11.15 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128) மதுரை, சோழவந்தான், கொடை ரோடு, திண்டுக்கல், மணப்பாறை ஆகிய ரெயில் நிலையங்களை தவிர்த்து, மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படுகிறது. அவ்வாறு செல்லும்போது, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். </p><p>இதேபோல், நாகர்கோவிலில் இருந்து கச்சிக்குடாவுக்கு ஆகஸ்டு 22, 29 ஆகிய தேதிகளில் காலை 9.25 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16354) மதுரை, திண்டுக்கல் ரெயில் நிலையங்களை தவிர்த்து, மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படுகிறது. அவ்வாறு செல்லும்போது, மானாமதுரை, காரைக்குடி ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>
2 பெண் அமைச்சர்களுக்கு பிறந்த நாள்: சட்டசபையில் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/birthdays-of-two-female-ministers-greetings-in-the-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/birthdays-of-two-female-ministers-greetings-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">35759dc9-71c9-4b08-a4ca-c47675cd3210</guid><pubDate>Thu, 06 Aug 2026 07:37:31 +0000</pubDate><atom:updated>2026-08-06T07:37:31.495Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,Legislative Assembly,Assembly,சபாநாயகர்,பிறந்த நாள்,Agricultural Budget,தமிழக வேளாண் பட்ஜெட்,கால்நடைத்துறை அமைச்சர் கமலி,பால்வளத் துறை அமைச்சர் விஜயலட்சுமி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/29lvxyzw/10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/29lvxyzw/10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக சட்டசபையில் இன்று 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கூட்டத்தை திருக்குறள் வாசித்து தொடங்கிவைத்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது, கால்நடைத் துறை அமைச்சர் கமலி, பால்வளத் துறை அமைச்சர் விஜயலட்சுமி ஆகியோருக்கு இன்று பிறந்த நாள் என்று குறிப்பிட்ட் அவர், இருவருக்கும பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யும் அவர்கள் இருக்கை நோக்கி திரும்பி பார்த்து வாழ்த்து தெரிவித்தார். </p><p>இதேபோல், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலரும் அமைச்சர்கள் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களும் எழுந்து நின்று தங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.</p> ]]></content:encoded></item><item><title>
தமிழக அரசியலில் பரபரப்பு; அமைச்சர் ஆனந்த் உடன் சி.வி. சண்முகம், வேலுமணி சந்திப்பு
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-politics-row-minister-anand-cv-shanmugam-velumani-meet</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-politics-row-minister-anand-cv-shanmugam-velumani-meet#comments</comments><guid isPermaLink="false">7e4a5d2d-e12c-4bac-a968-56aa919dadb5</guid><pubDate>Thu, 06 Aug 2026 07:35:30 +0000</pubDate><atom:updated>2026-08-06T07:35:30.092Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>SP Velumani,சி.வி. சண்முகம்,வேலுமணி,C.V. Shanmugam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/2c36ibdz/spasa.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/2c36ibdz/spasa.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>தமிழக அமைச்சர் ஆனந்த் உடன், அ.தி.மு.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி இன்று சந்தித்து பேசியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.</p><p>தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த த.வெ.க. ஆட்சியமைத்தது.  அக்கட்சியின் தலைவர் விஜய் முதல்-அமைச்சகராக கடந்த மே மாதம் 10-ந்தேதி பொறுப்பேற்று கொண்டார்.  இதனை தொடர்ந்து பெரும்பான்மையை நிரூபிக்க அவையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.</p>  <h2>நம்பிக்கை வாக்கெடுப்பு</h2><p>அப்போது, தேர்தலில் 47 இடங்களை வென்றிருந்த அ.தி.மு.க.வில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஓர் அணியும், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் மற்றோர் அணியும் என 2 ஆக பிரிந்து செயல்பட்டது.</p><p>சட்டசபையில் த.வெ.க. ஆட்சி அமைக்க பெரும்பான்மையை நிரூபிக்க நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பு அணியில் 25 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர். எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு அணியில் 22 எம்.எல்.ஏ.க்கள் வாக்கெடுப்பில் பங்கேற்றனர்.</p>  <h2>கட்சி பதவி பறிப்பு</h2><p>த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் கட்சி பதவியை பறித்து எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தார். மேலும் கட்சி கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சபாநாயகரிடம் மனு அளித்தனர். இதேபோல எஸ்.பி.வேலுமணி தரப்பிலும் கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை கோரி சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது.</p><p>அதன் பின்னர் இரு தரப்பிற்கும் இடையே சமாதானம் ஏற்பட்டு, கடந்த ஜூன் 25 அன்று எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணியை கட்சியின் துணை பொதுச்செயலாளராக நியமித்து உத்தரவிட்டார்.</p><p>இந்த சூழலில் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் அ.தி.மு.க. கொடிகள், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் படங்கள் ஏதுமின்றி தனது ஆதரவாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டார்.</p>  <h2>கட்சி பதவியை ஏற்க போவதில்லை</h2><p>அப்போது தனது ஆதரவாளர்களிடம் பேசிய வேலுமணி, “தேர்தல் முடிந்து அடுத்த 25 நாட்கள் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியும். என்னை நம்பி 30 மாவட்ட செயலாளர்கள் போர்க்கொடி தூக்கி வந்த நிலையில், அவர்களுக்கு எந்த பொறுப்பும் வழங்காமல் தனக்கு மட்டும் பதவி கொடுப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.</p><p>சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர், தங்கமணி மற்றும் வீரமணி போன்ற கட்சியின் வளர்ச்சிக்கு உழைத்த மூத்த தலைவர்களை புறக்கணித்துவிட்டு தமக்கு மட்டும் பதவி தருவது அநீதியானது. எனவே எடப்பாடி பழனிசாமி கொடுத்த துணை பொதுச்செயலாளர் பதவியை ஏற்கப்போவதில்லை.  அ.தி.மு.க.வை, தி.மு.க.வுடன் இணைப்பது அல்லது கூட்டணி வைப்பது போன்ற பேச்சுகள் எழுந்ததாலேயே உள்கட்சி பூசல் வெடித்தது. எம்.ஜி.ஆர். தி.மு.க.வை எதிர்ப்பதற்காகவே கட்சியை தொடங்கினார் என்பதால் தி.மு.க.வுடன் சமரசம் ஆவதை ஒருபோதும் ஏற்க முடியாது. அதேநேரம், தான் அ.தி.மு.க.விலேயே நீடித்து தி.மு.க.வை தொடர்ந்து எதிர்ப்பேன்” என்றும் தெளிவுபடுத்தினார்.</p><p>இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>  <h2>புதிய பதவிகள் புறக்கணிப்பு</h2><p>இதனிடையே, பழனியில் எம்.எல்.ஏ. அலுவலக திறப்பு விழாவில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து புதிய பதவிகளை புறக்கணிப்பதாக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சி.வி. சண்முகம் கூட்டாக பேட்டி அளித்தனர்.</p><p>எஸ்.பி. வேலுமணி கூறுகையில், எங்களுக்கு வழங்கப்பட்ட துணை பொதுச்செயலாளர் உள்ளிட்ட புதிய பொறுப்புகளை ஏற்க முடியாது. கட்சியை விட்டு நீக்கப்பட்ட சசிகலா, டி.டி.வி. தினகரனை சேர்த்து கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றார்.</p>  <h2>அமைச்சர் ஆனந்த் உடன் சந்திப்பு</h2><p>இந்த சூழலில், சென்னை தலைமை செயலகத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் உடன் அ.தி.மு.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களான சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி, கே.பி. அன்பழகன் இன்று சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><p>அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.  இதனால், தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.</p>  <h2>செய்தியாளர் சந்திப்பு</h2><p>இதுபற்றி எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடர்பாக அமைச்சர் ஆனந்தை சந்தித்து பேசினோம்.  அதுதொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தோம் என்றார்.  நாங்கள் எப்போதும் அ.தி.மு.க.வினர்தான் என்று கூறினார்.</p><p>இதேபோன்று, சி.வி. சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசுவீர்களா? என கேட்கப்பட்டது.  அதற்கு பதிலளித்த அவர், நான் ஏன் அவரை சந்திக்க வேண்டும்.  அவருக்கும், எனக்கும் என்ன உள்ளது? தேவையற்ற கேள்விகளுக்கு பதில் கூற விரும்பவில்லை என கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>தொலைநோக்கு பார்வையுடன் கூடிய வேளாண் பட்ஜெட்: முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/agriculture-budget-with-vision-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/agriculture-budget-with-vision-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">07c659ab-0267-40e4-9275-6495f35755e1</guid><pubDate>Thu, 06 Aug 2026 07:27:45 +0000</pubDate><atom:updated>2026-08-06T07:27:45.673Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,வேளாண் பட்ஜெட்,agriculture budget,தமிழக வேளாண் பட்ஜெட்,CMVijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/lb25tzmx/cmone33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
தொலைநோக்கு பார்வையுடன் கூடிய வேளாண் பட்ஜெட்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/lb25tzmx/cmone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அனைவரும் பாராட்டும் வகையில் திருத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன், வேளாண்மை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் என முதல்-அமைச்சர் விஜய் கூறியுள்ளார். </p><h2>தமிழக வேளாண் பட்ஜெட்</h2><p>2026-27ஆம் நிதியாண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட், பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் அமைச்சர் வினோத் தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.</p><p>வேளாண் நிதி அறிக்கையை தாக்கல் செய்த வேளாண் அமைச்சர் வினோத் சுமார் இரண்டு மணி நேரம் உரையாற்றினார். காலை 9.31 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கிய அமைச்சர் வினோத் 11.38க்கு உரையை நிறைவு செய்தார்.</p><h2>தொலைநோக்கு பார்வை</h2><p>இந்தநிலையில்,  <a href="https://www.dailythanthi.com/search?q=vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழ்நாட்டின் வளர்ச்சியை இலக்காகவும், மக்கள் நலனை மையமாகவும் கொண்டு, ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றே மாதங்களில் அனைவரும் பாராட்டும் வகையில் 2026 - 27ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள  நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் மரிய வில்சன் வேளாண்மை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள  வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.</p><p>தொலைநோக்குப் பார்வையுடன்கூடிய திருத்திய நிதிநிலை அறிக்கையானது மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், திருநர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழில்முனைவோர், அரசுப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்கும் புதிய நம்பிக்கையை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.</p><h2>வெற்றிப் பயணம் தொடரட்டும்</h2><p>வேளாண்மை நிதிநிலை அறிக்கையானது, தமிழ்நாட்டின் வேளாண் வளர்ச்சியோடு, அதன் தொழில்சார்ந்த கால்நடை மற்றும் மீன் வளர்ப்பு, பால்வளம், உணவுப் பொருட்களைப் பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டுதல் போன்ற தொழில்களையும் மேம்படுத்துவதோடு, அனைத்துத் தரப்பு விவசாயிகளின் நலனையும் வாழ்வாதாரத்தையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p>வளமான தமிழ்நாட்டை நோக்கிய நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&apos;வேளாண் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை&apos; - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-new-announcements-in-the-agriculture-budget-udhayanidhi-stalins-criticism</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-new-announcements-in-the-agriculture-budget-udhayanidhi-stalins-criticism#comments</comments><guid isPermaLink="false">81c08266-4df8-4f7b-9910-df8c6f67fd93</guid><pubDate>Thu, 06 Aug 2026 07:18:53 +0000</pubDate><atom:updated>2026-08-06T07:18:53.440Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,வேளாண் பட்ஜெட்,agriculture budget</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/5surtkfn/14.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/5surtkfn/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தவெக அரசின் வேளான் பட்ஜெட்டில் உருப்படியாக எதுவும் இல்லை என எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இது தொடர்பாக பேசியதாவது;</p><p>தவெக ஆட்சி அமைந்து கடைசி 3 மாதங்களில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் விவசாயிகள். அவர்களுக்கு ஆதரவாகவும், அவர்களுடைய உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் விதமாகவும், இந்த அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் தான் இன்று எங்களின் தலைவரின் உத்தரவின் பேரில் திமுகவின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கருப்பு சட்டை அணிந்து எங்களின் எதிர்ப்பை தெரிவித்தோம். </p><p>"தவெக அரசின் வேளாண் பட்ஜெட் என்று சொல்வதை விட, முதல்-அமைச்சருக்கு ஜால்ரா அடித்த புகழுரை என்று சொல்லலாம். தவெக அரசின் வேளாண் பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க விஷயங்கள் எதுவுமில்லை. புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை. தேர்தல் நேரத்தில் பல வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றினர். கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. மேகதாது, பயிர்க்கடன் தள்ளுபடி, குறுவை சகுபடி பிரச்சினை என பல பிரச்சினைகள் தமிழகத்தில் உள்ளன.</p><p>எந்த விதமான கோரிக்கைகளுக்கும், கேள்விகளுக்கும் முதல்-அமைச்சர் வாய் திறந்து பதில் தரவில்லை. காவிரி விவகாரம் குறித்துப் பேச நாளை ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வர கடிதம் வழங்கியுள்ளோம். அப்போது நிறைய கேள்விகள் கேட்போம். முடிஞ்சா, தைரியம் இருந்தா முதல்-அமைச்சர் வாயை திறந்து பதில் சொல்லட்டும்.”</p><p>இவ்வாறு அவர் பேசினார். </p>  ]]></content:encoded></item><item><title>பி.எப். பணம் முறைகேடு புகார்: கோட்டக்குப்பம் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் திடீர் போராட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/allegation-of-pf-fund-misappropriation-kottakuppam-municipality-sanitation-workers-stage-a-sudden-protest</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/allegation-of-pf-fund-misappropriation-kottakuppam-municipality-sanitation-workers-stage-a-sudden-protest#comments</comments><guid isPermaLink="false">d9a994c2-8557-456a-8bb7-92270dc09563</guid><pubDate>Thu, 06 Aug 2026 07:09:45 +0000</pubDate><atom:updated>2026-08-06T07:09:45.178Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,விழுப்புரம்,போராட்டம்,தூய்மைப் பணியாளர்கள்,PF Amount,ESI</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/qh6iqyv2/83.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ தூய்மைப் பணியாளர்கள்- போராட்டம்]]></media:title><media:description type="html"><![CDATA[ விழுப்புரம் தூய்மைப் பணியாளர்கள்- போராட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/qh6iqyv2/83.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விழுப்புரம்,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விழுப்புரம் மாவட்டம்</a> கோட்டக்குப்பம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தூய்மைப் பணியாளர்கள்</a>, தங்களது ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பி.எப் மற்றும் இ.எஸ்.ஐ தொகையை உரிய கணக்குகளில் செலுத்தாத ஒப்பந்த நிறுவனத்தைக் கண்டித்து திடீர் பணிப்புறக்கணிப்பு மற்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p><h2>பி.எப். பணம் முறைகேடு புகார்</h2><p>விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சிப் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த முறையில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் மாதாந்திர ஊதியத்திலிருந்து குறிப்பிட்ட தொகை, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வருங்கால வைப்பு நிதி (பி.எப்) </a>மற்றும் மருத்துவக் காப்பீடு (இ.எஸ்.ஐ)-க்காகத் தொடர்ந்து பிடித்தம் செய்யப்பட்டு வந்தது. எனினும், அவ்வாறு பிடித்தம் செய்யப்பட்ட பல மாதங்களுக்கான நிதி, பணியாளர்களின் தனிநபர் கணக்குகளில் முறையாகச் செலுத்தப்படாமல் ஒப்பந்த நிறுவனங்களால் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகப் பணியாளர்கள் குற்றம் சாட்டினர்.</p><h2>கோரிக்கைகள்</h2><p>பணியாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட முழுமையான பி.எப் மற்றும் இ.எஸ்.ஐ நிலுவைத் தொகையை உடனடியாகச் சம்பந்தப்பட்ட கணக்குகளில் வரவு வைக்க வேண்டும். தொழிலாளர் நல விதிமுறைகளை மீறிச் செயல்படும் ஒப்பந்த நிறுவனங்கள் மீதும், அதனை முறையாகக் கண்காணிக்கத் தவறிய நகராட்சி நிர்வாகத்தின் மீதும் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலுவையில் உள்ள இதர ஊதியப் பலன்களைத் தாமதமின்றி வழங்க வேண்டும்.</p><p>ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்களின் இந்தத் தொடர் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் காரணமாக, கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகள் தேங்கிச் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. நகராட்சி அதிகாரிகள் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்திப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் - எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/agriculture-budget-a-huge-disappointment-for-farmers-edappadi-palaniswami</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/agriculture-budget-a-huge-disappointment-for-farmers-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">d1993837-300b-48b6-be51-de11911c9a69</guid><pubDate>Thu, 06 Aug 2026 06:52:26 +0000</pubDate><atom:updated>2026-08-06T06:52:26.787Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,எடப்பாடி பழனிசாமி,அதிமுக,Edappadi Palaniswami,வேளாண் பட்ஜெட்,agriculture budget,தமிழக வேளாண் பட்ஜெட்,TN Agriculture Budget</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/ff1rlkyb/Untitled-20.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/ff1rlkyb/Untitled-20.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். இந்த நிலையில் பட்ஜெட் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது;-</p><h2>முக்கிய திட்டம் ஏதுமில்லை</h2><p>வேளாண் பட்ஜெட்  மீது விவசாயிகள் பெரிய எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியது. சுமார் இரண்டரை மணி நேர பட்ஜெட் அறிவிப்பில் முக்கிய திட்டம் ஏதுமில்லை.  கரும்பு டன் ஒன்றுக்கு ஆதார விலை ரூ.4,500 என்றார்கள் அந்த வாக்குறுதி என்ன ஆனது? நெல் குவிண்டாலுக்கு ரூ.3.500 வழங்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது? </p><p>விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட் இது. விவசாயிகளுக்கு இது நன்மை பயக்கக்கூடிய பட்ஜெட் இல்லை. முந்தைய ஆட்சியைப் போல வேளான் பட்ஜெட் என்ற பெயரில் நாடகம் அரங்கேற்றியுள்ளனர். தேர்தல் நேரத்தில் இனிக்க இனிக்க பேசிவிட்டு ஏமாற்றி உள்ளது தவெக அரசு. குடிமராமத்து என்ற அற்புதமான திட்டம் பற்றி பட்ஜெட்டில் ஏதுமில்லை. </p><h2>வாசிக்கப்பட்டதுதான் சாதனை</h2><p>தவெக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-governments-agriculture-budget-will-it-please-farmers-immediate-update">வேளாண் பட்ஜெட்டின் சாதனை</a> சும்மர் 2 மணி நேரம் வாசிக்கப்பட்டதுதான். காவிரி விவகாரத்தில் முதல்-அமைச்சர் வாய் திறந்து பேசுவதில்லை. தமிழ்நாட்டு முதல்-அமைச்சர் கர்நாடகாவுக்கு வர வேண்டாம் என அம்மாநில முதல்-மந்திரி சொல்கிறார். தமிழ்நாட்டுக்கு இது எவ்வளவு பெரிய தலைகுனிவு என முதல்-அமைச்சர் எண்ணிப்பார்க்க வேண்டும். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் தலைகுனிவு ஏற்படும் வகையில் முதல்-அமைச்சர் நடந்தது வருத்தமளிக்கிறது.</p><p>பொது பட்ஜெட்டுக்கு பூஜ்ஜியம் மார்க், வேளான் பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் கொடுக்கலாம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>
விவசாயிகள் நலனிற்காக பயிர் கடன் ரூ.17,000 கோடி; இலவச மின்சாரத்திற்கு ரூ.7,432 கோடி ஒதுக்கீடு
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmers-welfare-crop-loan-rs-17000-crore-free-electricity-rs-7432-crore-allocation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmers-welfare-crop-loan-rs-17000-crore-free-electricity-rs-7432-crore-allocation#comments</comments><guid isPermaLink="false">759a2dc8-ed3b-4948-9187-dded4bd41e41</guid><pubDate>Thu, 06 Aug 2026 06:41:34 +0000</pubDate><atom:updated>2026-08-06T06:41:34.809Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Farmers,விவசாயிகள்,Free electricity,agriculture budget,இலவச மின்சாரம்,தமிழக வேளாண் பட்ஜெட்,TN Agriculture Budget,பட்ஜெட் 2026,Budget 2026</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/234x49r5/tnafrt.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/234x49r5/tnafrt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>தமிழக விவசாயிகளின் நலனிற்காக பயிர் கடன் ரூ.17,000 கோடியும், இலவச மின்சாரத்திற்கு ரூ.7,432 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.</p>  <h2>பட்ஜெட் கூட்டத்தொடர்</h2><p>தமிழக சட்டசபையில், 2026-27-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.  இதன்படி, காலை 9.30 மணிக்கு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.</p><p>இதனை முன்னிட்டு, தமிழக முதல்-அமைச்சர் விஜய், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, துறை சார்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரும் அவைக்கு வருகை தந்தனர்.</p><p>வேளாண் பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு, தமிழக முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத் ஆசி பெற்றார்.  இதன்பின்னர் சபாநாயகர் பிரபாகர் அவைக்கு வருகை தந்ததும், உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை தந்தனர்.  அவையில் திருக்குறள் வாசிக்கப்பட்டது.</p>  <h2>வேளாண் பட்ஜெட் தாக்கல்</h2><p>இதனை தொடர்ந்து, தமிழக வேளாண் துறை அமைச்சர் வினோத், 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார்.</p><p>அவர் பேசும்போது, த.வெ.க. அரசின் முதல் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.  விவசாய குடும்பங்களின் மகனாக இருப்பதால் இலவச மும்முனை மின்சாரத்தை தொடர முதல்வர் அறிவுரை வழங்கி உள்ளார்.  வேளாண்மையை பெருக்க பல்வேறு திட்டங்களை மேற்கொள்ள உள்ளோம் என கூறினார்.</p>  <h2>விவசாயிகளின் அரசு</h2><p>ஓர் அரசு வல்லரசாகும் முன்பு விவசாயிகளின் அரசாக மாற வேண்டும் என்பதே முதல்வரின் கொள்கை என்று அவர் பேசியுள்ளார்.  தொடர்ந்து பட்ஜெட்டில் விவசாயிகள் பயன் பெறும் வகையிலான பல்வேறு திட்டங்களை அறிவித்து அவர் பேசினார்.</p>  <h2>விவசாயிகள் நலன்</h2><p>அதில், தமிழக விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்திற்காக ரூ.7,432 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.</p><p>விவசாயிகளுக்கு பயிர் கடன் ரூ.17,000 கோடி</p><p>உயிர்ம உர பயன்பாட்டை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு ரூ.4,000 சிறப்பு ஊக்கத்தொகை.</p>  <p>உழவர் ஐ.டி. பெற்ற 3 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.6 கோடியில் மண்வள அட்டைகள் வழங்கப்படும்.</p><p>விவசாயிகளின் வருமான மேம்பாட்டு ஆணையம் ரூ.5.20 கோடி</p><p>ஏ.ஐ. அடிப்படையிலான உழவர் செயலி ரூ.2 கோடி</p>  <p>ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மண் நல அட்டை</p><p>4.75 லட்சம் விவசாயிகளுக்கு சிறுதானிய சாகுபடி இயக்கம்</p><p>24,000 விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் கருவிகள்</p>  <p>1,000 விவசாயிகளுக்கு மானியத்தில் சூரிய பம்புசெட்</p><p>100 விவசாயிகளுக்கு 50% மானியத்தில் கதிரடிக்கும் களம் உள்ளிட்டவற்றை அறிவித்து உள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>அலங்காநல்லூர் அருகே டேங்கர் லாரி வெறியாட்டம்: மதுபோதை ஓட்டுநரால் தொடர் விபத்து; ஒருவர் பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tanker-lorry-rampage-near-alanganallur-drunk-driver-causes-chain-of-accidents-one-dead</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tanker-lorry-rampage-near-alanganallur-drunk-driver-causes-chain-of-accidents-one-dead#comments</comments><guid isPermaLink="false">6bee26ba-f289-4534-935d-999aba230e1f</guid><pubDate>Thu, 06 Aug 2026 06:18:52 +0000</pubDate><atom:updated>2026-08-06T06:18:52.437Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,Madurai,மதுரை,Death,உயிரிழப்பு,லாரி,police enquiry</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/g102z9fh/82.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ லாரி ஓட்டுநரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ மதுபோதையில் டேங்கர் லாரியை இயக்கி, தொடர் விபத்துகளை ஏற்படுத்திய ஓட்டுநரை பொதுமக்கள் வீதி வீதியாக விரட்டிப் பிடித்தனர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/g102z9fh/82.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மதுரை மாவட்டம் </a>அலங்காநல்லூர் அருகே கடுமையான மதுபோதையில் டேங்கர் லாரியை இயக்கி, தொடர் விபத்துகளை ஏற்படுத்திய ஓட்டுநரை பொதுமக்கள் வீதி வீதியாக விரட்டிப் பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>மதுபோதையில் நேர்ந்த விபரீதம்</h2><p>மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஜெயப்பிரகாஷ் (வயது 29). அவர் மிகக் கடுமையான மதுபோதையில் டேங்கர் லாரி ஒன்றை ஓட்டிச் சென்றார். அப்போது, போதையின் உச்சத்தில் இருந்ததால் லாரி அவரது கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் சென்று கொண்டிருந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது அடுத்தடுத்து பயங்கரமாக மோதியது.</p><h2>உயிரிழப்பு</h2><p>இந்த கோர விபத்தில், <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">லாரி </a>மோதியதில் முத்துப்பாண்டி என்பவர் படுகாயமடைந்தார். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், விபத்துக்குள்ளான மற்ற வாகனங்களில் பயணித்த 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து தற்பொழுது ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><h2>4 கி.மீ விரட்டியடித்த பொதுமக்கள்</h2><p>விபத்தை ஏற்படுத்திய பின்னரும் ஜெயப்பிரகாஷ் லாரியை நிறுத்தாமல் தப்பியோட முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பொதுமக்கள்</a> மற்றும் வாகன ஓட்டிகள், லாரியை சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு ஓட ஓட விரட்டிச் சென்றனர். இறுதியாக லாரியை மடக்கிப் பிடித்த பொதுமக்கள், போதையில் இருந்த ஓட்டுநரை கீழே இழுத்துப்போட்டு சரமாரியாக தர்ம அடி கொடுத்தனர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அலங்காநல்லூர் போலீசார், பொதுமக்களிடம் இருந்து ஓட்டுநரை மீட்டனர். காயமடைந்த அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மேலும் விபத்து மற்றும் பொதுமக்களின் தாக்குதல் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுபோதையால் ஏற்பட்ட இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சிறு, குறு விவசாயிகளுக்கு &apos;அஞ்சலையம்மாள்&apos; விருது: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anjalaiyammal-award-for-small-and-marginal-farmers-announcement-in-the-agriculture-budget</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anjalaiyammal-award-for-small-and-marginal-farmers-announcement-in-the-agriculture-budget#comments</comments><guid isPermaLink="false">7d9432b7-5356-4f45-ad61-d634ad56b527</guid><pubDate>Thu, 06 Aug 2026 05:53:21 +0000</pubDate><atom:updated>2026-08-06T05:53:21.999Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழக அரசு,வேளாண் பட்ஜெட்,agriculture budget,தமிழக வேளாண் பட்ஜெட்,TN Agriculture Budget,TamilNadu Goverment,அமைச்சர் வினோத்,Minister Vinoth,அஞ்சலையம்மாள் விருது,Anjalaiyammal Award</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/uqf8yupo/Untitled-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/uqf8yupo/Untitled-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்து வருகிறார்.</p><h2>30 விவசாயிகளுக்கு பரிசு</h2><p>மக்கள் சேவகர் அஞ்சலையம்மாள் சிறு, குறு விவசாயி விருது குறித்து அமைச்சர் வினோத் கூறியதாவது:-</p><p>2026-27 ஆம் ஆண்டில், சிறு, குறு விவசாயிகளை ஊக்குவிக்க, 'மக்கள் சேவகர் அஞ்சலையம்மாள்' பெயரில் மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டிகள் நடத்தப்பட்டு பயறு வகைகள், எண்ணெய்வித்துகள் சிறுதானியங்கள், உள்ளிட்ட 10 பயிர்களில் அதிக மகசூல் பெறும் முதல் 3 விவசாயிகளுக்கு முறையே 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், ஒரு லட்சம் ரூபாய் என மொத்தம் 30 விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்க 50 லட்சம் ரூபாய் மாநில நிதியிலிருந்து ஒதுக்கப்படும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>விபி-ஜி ராம் ஜி திட்டத்தால் கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்புகள் குறைக்கப்பட்டுள்ளது - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-vpg-ramg-scheme-has-reduced-employment-opportunities-for-rural-people-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-vpg-ramg-scheme-has-reduced-employment-opportunities-for-rural-people-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">06f21ff8-b6e6-4598-8bc3-1a1b0637f210</guid><pubDate>Thu, 06 Aug 2026 05:49:18 +0000</pubDate><atom:updated>2026-08-06T05:49:18.461Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,விபி-ஜி ராம் ஜி திட்டம்,VPG-RAMG Scheme</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/fd0sm9d1/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/fd0sm9d1/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;</p><p>”கிராமப்புற மக்களிடையே நிலவுகிற வேலையில்லா திண்டாட்டத்தை போக்குகின்ற வகையில் அன்னை சோனியா காந்தி அவர்களின் தீவிர முயற்சியின் காரணமாக 2006 ஆம் ஆண்டு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு கொண்டு வந்த திட்டம் தான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம். ஒரு நிதியாண்டில் 100 நாட்கள் வேலை வாய்ப்பு வழங்கி கிராமப்புற மக்களின் குறைந்தபட்ச வாழ்வாதாரத்தை உறுதி செய்தது. உலக நாடுகளிடையே  மிகப்பெரிய வரவேற்பை இத்திட்டம் பெற்றது. இத்திட்டத்தின்படி, ஆண்டுதோறும் சராசரியாக 5 கோடி குடும்பங்களுக்கு தொடக்கத்தில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. </p><p>இந்நிலையில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் என்பதால் அதைப் புறக்கணிக்கிற அணுகுமுறையை கையாண்டது. நிதி ஒதுக்கீடும் குறைக்கப்பட்டது. இருந்தாலும் இத்திட்டத்தை கைவிட முடியாமல் ஏனோதானோ என்று நடைமுறைப்படுத்தி வந்தது.  </p><p>மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை சீரழிக்கிற நோக்கத்தில் அவரது பெயரை நீக்கியதோடு, வாயில் நுழையாத விபி-ஜி ராம் ஜி என்ற பெயர் மாற்ற நாடகத்தை நடத்தி புதிய திட்டத்தை அமலுக்கு கொண்டு வந்தது. ஆண்டுதோறும் அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் இந்த முக்கிய காலகட்டத்திலேயே ஜுலை 31 வரை வெறும் 70.32 கோடி மனித வேலை நாட்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் உருவாக்கப்பட்ட வேலை நாட்களோடு ஒப்பிடுகையில் 34 சதவிகிதமாக இருப்பது அதிர்ச்சி தரக்கூடிய மிகப்பெரிய வீழ்ச்சியாகும். பா.ஜ.க. அரசின் புதிய திட்டத்தின்படி ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 80  சதவிகித நிதி ஒதுக்கீட்டிற்கு பதிலாக 60 சதவிகிதமாக குறைத்து மாநில அரசுகள் மீது மீதமுள்ள 40 சதவிகித நிதிச் சுமையை ஏற்றியிருக்கிறது. இதைவிட மாநில விரோதப் போக்கு வேறு எதுவும் இருக்க முடியாது. </p><p>புதிய விதிமுறைகளின் தெளிவற்ற தன்மையால் கிராமப்புற மக்களின் வேலை வாய்ப்புகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், பீகார் ஆகிய பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும் மாநிலங்களிலேயே இந்த அவலநிலை உள்ளது. பெயரை மாற்றினால் பெருமை சேராது, ஏழைகளின் வயிற்றில் அடித்தால் பா.ஜ.க.வை நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள். மழை பொழிவு குறைந்து ஏழை, எளிய மக்கள் வேலையில்லா திண்டாட்டத்தில் தவிக்கும் சூழலில் அவர்களது ஒரே வாழ்வாதாரமான வேலை வாய்ப்பையும் பறிப்பது தான் நரேந்திர மோடி அரசின் ‘விக்சித் பாரத்” சாதனையா ? இந்த பேரழிவுக்கு மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானும், பிரதமர் மோடியும் நாட்டு மக்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் ? கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தியை சீரழிக்கும் பா.ஜ.க.வின் நடவடிக்கையை எவராலும் மன்னிக்க முடியாது. அதற்குரிய விலையை நாட்டு மக்கள் நேரம் வழங்கும் போது அளிப்பார்கள்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>&apos;உழவர் ஏஐ&apos; திட்டம் அறிமுகம்... வேளாண் பட்ஜெட்டில் ரூ.2 கோடி ஒதுக்கீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/uzhavar-ai-scheme-launched-2-crore-allocated-in-the-agriculture-budget</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/uzhavar-ai-scheme-launched-2-crore-allocated-in-the-agriculture-budget#comments</comments><guid isPermaLink="false">3778a1ad-5390-43cc-8e42-ff9baaaa9c82</guid><pubDate>Thu, 06 Aug 2026 05:37:27 +0000</pubDate><atom:updated>2026-08-06T05:37:27.908Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழக அரசு,விவசாயம்,agriculture,Artificial Intelligence,செயற்கை நுண்ணறிவு,வேளாண் பட்ஜெட்,agriculture budget,வேளாண்துறை,தமிழக வேளாண் பட்ஜெட்,TN Agriculture Budget,அமைச்சர் வினோத்,உழவர் AI,Uzhavar AI,Smart Farming,Digital Agriculture,Machine Learning</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/osnnnslw/Untitled-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/osnnnslw/Untitled-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்து வருகிறார்.</p><h2>உழவர் ஏஐ</h2><p>உழவர் செயற்கை நுண்ணறிவுத் (AI) திட்டம் குறித்து அமைச்சர் வினோத் கூறியதாவது:-</p><p>"சரியான நேரத்தில் விவசாயிகளுக்குக் கிடைக்கும் தகவல், சரியான நேரத்தில் பெய்யும் மழைக்கு நிகர்" என்பதை உணர்ந்துதான் விவசாயிகளுக்குச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தி மண் வளம் மற்றும் பயிர் சாகுபடி குறித்த தகவல்களை உடனுக்குடன் வழங்க வேண்டும் என்ற தொலைநோக்குத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>அதன்படி, செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் இயந்திரவழி கற்றலுக்கு (Machine Learning) உரிய தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து, வானிலை முன்னறிவிப்பு, மண் நலம் மற்றும் மண் வளம், பூச்சி, நோய் மேலாண்மை, பருவ நிலைக்கு ஏற்ற பயிர் என, விதைப்பு முதல் அறுவடை வரையிலான அனைத்துத் தொழில்நுட்ப ஆலோசனைகளும் சேவைகளும் வழங்கப்படும். </p><h2>ரூ.2 கோடி ஒதுக்கீடு</h2><p>இவற்றோடு சந்தை நிலவரம், குரல் வழி வேளாண் சேவைகள் (Voice-First Agriculture Services), அரசு திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து அறிவுசார் வேளாண் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சேவைகளையும் </a>விவசாயிகள் தங்களது கைப்பேசி வாயிலாக எளிதாகப் பெறும் வகையில், 2026-27 ஆம் ஆண்டில் "உழவர் செயற்கை நுண்ணறிவுத் திட்டம்" செயல்படுத்திட மாநில நிதியிலிருந்து 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>எல் நினோவால்12 மாவட்டங்களில் பெரும் தாக்கம் ஏற்படும் என கணிப்பு: அமைச்சர் வினோத்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/el-ni%C3%B1o-predicted-to-have-a-major-impact-on-12-districts-minister-vinoth</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/el-ni%C3%B1o-predicted-to-have-a-major-impact-on-12-districts-minister-vinoth#comments</comments><guid isPermaLink="false">44eea55e-7e80-4718-b1e8-66124779f586</guid><pubDate>Thu, 06 Aug 2026 05:28:01 +0000</pubDate><atom:updated>2026-08-06T05:28:01.329Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>agriculture budget,தமிழக வேளாண் பட்ஜெட்,சூப்பர் எல் நினோ,Super El Niño</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/6bby80zy/11.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/6bby80zy/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பட்ஜெட்டில் எல் நினோ மற்றும் பயிர் சாகுபடி குறித்து அமைச்சர் பேசியவை பின்வருமாறு பின்வருமாறு,</p><p>இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள சூப்பர் எல் நினோ நிகழ்வினால் நாடு முழுவதும் பெரும் தாக்கம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் அதிக தாக்கம் ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் அனைத்து மாவட்டங்களுக்கும் தயாரிக்கப்பட்டுள்ள மாவட்ட வேளாண்மை இடை ஏற்பாட்டு திட்டம் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்டு அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகளை ஒருங்கிணைந்த முறையில் செயல்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.” என்றார். </p><p>முன்னதாக நேற்று 2026-2027 பொது பட்ஜெட்டில், வரவிருக்கும் 'சூப்பர் எல் நினோ' மற்றும் வறட்சிச் சூழலின் தாக்கத்தை எதிர்கொள்ளவும் சமாளிக்கவும் ரூ. 340 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>நெல் விதை உற்பத்தி மானியத்திற்கான சிறப்புத் திட்டம் - ரூ.34 கோடி ஒதுக்கீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-scheme-for-paddy-seed-production-subsidy-rs-34-crore-allocated</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-scheme-for-paddy-seed-production-subsidy-rs-34-crore-allocated#comments</comments><guid isPermaLink="false">eb28cc30-f441-4a95-8e81-164ca169d5b5</guid><pubDate>Thu, 06 Aug 2026 05:22:13 +0000</pubDate><atom:updated>2026-08-06T05:22:13.409Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Tamilnadu,தமிழ்நாடு,தமிழக அரசு,Agricultural,subsidy,வேளாண் பட்ஜெட்,Agricultural Budget,தமிழக வேளாண் பட்ஜெட்,subsidy for farmers</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/46qtrz2s/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/46qtrz2s/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்து வருகிறார்.</p><p>நெல் விதை உற்பத்தி மற்றும் விதை விநியோக மானியத்திற்கான சிறப்புத் திட்டம் குறித்து அமைச்சர் வினோத் கூறியதாவது:-</p><p>விவசாயிகளுக்கு இடுபொருட்கள் போதிய அளவில் குறித்த பருவத்தில் கிடைக்கச் செய்ய, இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. நெல் உற்பத்தி, உற்பத்தித்திறனை அதிகரிப்பதில் முக்கியப் பங்களிப்பை வழங்கும் தரமான விதை உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கான மானியத்தினை 2026-2027ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு நிறுத்திவிட்டது.</p><p>ஆனால் விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, அவர்களின் நலன் கருதி, முதல்-அமைச்சர் தாயுள்ளத்தோடு அறிவுறுத்தியபடி, விதைப்பண்ணைகள் அமைத்து 7,730 மெட்ரிக் டன் சான்று நெல் விதை உற்பத்தி செய்து தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமைக்கு வழங்கும் விவசாயிகளுக்கு. "நெல் விதை உற்பத்தி" மானியமும் 14,570 மெட்ரிக் டன் சான்றளிக்கப்பட்ட விதைகளை மானியத்தில் விநியோகிக்க "நெல் விதை விநியோக மானியமும் வழங்குவதற்கு 2026-2027ஆம் ஆண்டில், ரூ.34 கோடியே 72 லட்சம் மாநில நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஓர் அரசு வல்லரசாகும் முன்பு விவசாயிகளின் அரசாக மாற வேண்டும் என்பதே முதல்-அமைச்சரின் கொள்கை:  அமைச்சர் வினோத்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/before-india-becomes-a-superpower-it-must-become-a-farmers-state-first-says-chief-ministers-policy-minister-vinod</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/before-india-becomes-a-superpower-it-must-become-a-farmers-state-first-says-chief-ministers-policy-minister-vinod#comments</comments><guid isPermaLink="false">47529bd1-8770-42df-b0a2-a23890652126</guid><pubDate>Thu, 06 Aug 2026 05:09:39 +0000</pubDate><atom:updated>2026-08-06T05:09:39.540Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Farmers,விவசாயிகள்,Free electricity,வேளாண் பட்ஜெட்,agriculture budget,இலவச மின்சாரம்,TN Agriculture Budget</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/8h8o45kg/tnafr.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேளாண் பட்ஜெட், அமைச்சர் வினோத்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/8h8o45kg/tnafr.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>ஓர் அரசு வல்லரசாகும் முன்பு விவசாயிகளின் அரசாக மாற வேண்டும் என்பதே முதல்-அமைச்சரின் கொள்கை என வேளாண் பட்ஜெட் தாக்கலின்போது அமைச்சர் வினோத் பேசியுள்ளார்.</p><p>தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று கடந்த மே மாதம் 10-ந்தேதி ஆட்சியமைத்த த.வெ.க. அரசு, இரண்டரை மாதங்களுக்கு பின்னர், 2026-27-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று தாக்கல் செய்தது.</p>  <h2>எம்.எல்.ஏ.க்கள் வருகை</h2><p>இந்த நிலையில், தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.  இதன்படி, காலை 9.30 மணிக்கு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.  இதனை முன்னிட்டு, தமிழக முதல்-அமைச்சர் விஜய், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, துறை சார்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரும் அவைக்கு வருகை தந்தனர்.</p><p>வேளாண் பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு, தமிழக முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத் ஆசி பெற்றார்.  இதன்பின்னர் சபாநாயகர் பிரபாகர் அவைக்கு வருகை தந்ததும், உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை தந்தனர்.  அவையில் திருக்குறள் வாசிக்கப்பட்டது.</p>  <h2>வேளாண் பட்ஜெட் தாக்கல்</h2><p>இதனை தொடர்ந்து, தமிழக வேளாண் துறை அமைச்சர் வினோத், 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசி வருகிறார்.</p><p>அவர் பேசும்போது, த.வெ.க. அரசின் முதல் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.  விவசாய குடும்பங்களின் மகனாக இருப்பதால் இலவச மும்முனை மின்சாரத்தை தொடர முதல்வர் அறிவுரை வழங்கி உள்ளார்.  வேளாண்மையை பெருக்க பல்வேறு திட்டங்களை மேற்கொள்ள உள்ளோம்.</p>  <h2>விவசாயிகளின் அரசு</h2><p>ஓர் அரசு வல்லரசாகும் முன்பு விவசாயிகளின் அரசாக மாற வேண்டும் என்பதே முதல்வரின் கொள்கை என்று அவர் பேசியுள்ளார்.  தொடர்ந்து பட்ஜெட்டில் திட்டங்களை அறிவித்து அவர் பேசி வருகிறார்.</p><p>அதில், தமிழக விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்திற்காக ரூ.7,432 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.</p><p>உயிர்ம உர பயன்பாட்டை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு ரூ.4,000 சிறப்பு ஊக்கத்தொகை.</p>  <h2>மண் வளம்</h2><p>மண் புழுக்கள் வாழும் அளவுக்கு மண்வளத்தை அதிகரிக்க வேண்டிய நிலை உள்ளது.  5 ஆண்டுகளுக்கு ரூ.600 கோடியில் மண்வள பாதுகாப்பு இயக்கம்.</p><p>மண் வளம் பாதுகாக்க ரசாயன உரம் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.</p><p>விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் ரூ.4 கோடி</p>  <p>விதை பண்ணைகள் அமைத்து விதை மேம்பாட்டு மையம் மூலம் விற்பனை செய்ய ரூ.34.72 கோடி ஒதுக்கீடு</p><p>பிரதம மந்திரி பயிர்க்காப்பீடு திட்டம் ரூ.648 கோடி</p><p>நஞ்சில்லா உணவு உற்பத்தி, இயற்கை வேளாண் தொகுப்பை உருவாக்க ரூ.9 கோடி என அறிவித்து தொடர்ந்து அவர் பேசி வருகிறார்.</p> ]]></content:encoded></item><item><title>மேட்டுப்பாளையம்-ஊட்டி சிறப்பு மலைரெயில் மீண்டும் நீட்டிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mettupalayam-ooty-special-mountain-train-extended-again</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mettupalayam-ooty-special-mountain-train-extended-again#comments</comments><guid isPermaLink="false">1dba5c34-009f-4aa4-9830-aac7746b9c4f</guid><pubDate>Thu, 06 Aug 2026 04:38:28 +0000</pubDate><atom:updated>2026-08-06T04:38:28.647Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>ஊட்டி,Ooty,மலைரெயில் சேவை,Mountain train</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/o5z198l2/10.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/o5z198l2/10.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மேட்டுப்பாளையம்,</p><h2>சிறப்பு மலைரெயில்</h2><p>கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு அழகிய மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர்.</p><p>மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினமும் காலை 7.10 மணிக்கு புறப்பட்டு செல்லும் மலைரெயில் மதியம் 12 மணிக்கு ஊட்டியை சென்றடையும். இந்த ரெயிலில் பயணம் செய்யும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்ததால் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு கோடைகால சிறப்பு மலை ரெயிலை கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி முதல் ஜூலை மாதம் 5-ந் தேதி வரை சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் இயக்கியது.</p><p>இந்த சிறப்பு மலை ரெயிலுக்கு சுற்றுலா பயணிகளிடையே நல்ல வரவேற்பு இருந்ததால் சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் சேவையை மேலும் ஒரு மாத காலம் நீட்டிப்பு செய்து ஜூலை மாதம் 10-ந் தேதி முதல் கடந்த 2-ந் தேதி வரை வாரத்தில் வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்களும், இதே போன்று ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு ஜூலை மாதம் 11-ந் தேதி முதல் கடந்த 3-ந் தேதி வரை சனிக்கிழமை, திங்கட்கிழமை ஆகிய 2 நாட்களும் இயக்கப்பட்டது.</p><h2>மீண்டும் நீட்டிப்பு</h2><p>தற்போது சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் மீண்டும் 2 மாதத்திற்கு மேட்டுப்பாளையம்-ஊட்டி, ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு மலைரெயில் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற அக்டோபர் மாதம் 4-ந் தேதி வரை வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்கள் சிறப்பு மலைரெயில் இயக்கப்படுகிறது. </p><p>காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு புறப்பட்டு செல்லும் மலை ரெயில் மதியம் 2.25 மணிக்கு ஊட்டியை சென்றடையும். இதே போன்று ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு நாளை மறு நாள்(சனிக்கிழமை) முதல் அக்டோபர் மாதம் 5-ந் தேதி வரை சனி, திங்கட்கிழமை ஆகிய 2 நாட்கள் சிறப்பு மலைரெயில் இயக்கப்படும். ஊட்டியில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்படும் சிறப்பு மலை ரெயில் மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையத்தை வந்தடையும். மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை முதல் வகுப்பு 40 இருக்கைகளும், 2-ம் வகுப்பு 140 இருக்கைகளும், குன்னூரில் இருந்து ஊட்டிக்கு முதல் வகுப்பு 80 இருக்கைகளும், 2-ம் வகுப்பு 140 இருக்கைகளும் ஒதுக்கப் பட்டு உள்ளது. இது சுற்றுலா பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் 13 வயது மகன் தூக்குப்போட்டு தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/popular-youtuber-savukku-shankars-13-year-old-son-commits-suicide-by-hanging</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/popular-youtuber-savukku-shankars-13-year-old-son-commits-suicide-by-hanging#comments</comments><guid isPermaLink="false">10efd0f0-28b7-4551-bc13-33f7294186b9</guid><pubDate>Thu, 06 Aug 2026 04:07:07 +0000</pubDate><atom:updated>2026-08-06T04:07:07.620Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தூக்குப்போட்டு தற்கொலை,சவுக்கு சங்கர்,தற்கொலை,மரக்காணம்,YouTuber Savukku Shankar,யூடியூபர் சவுக்கு சங்கர்,Savukku Sankar,sucide தற்கொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/i435i8e1/6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/i435i8e1/6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மரக்காணம், </p><p>மரக்காணம் அருகே தாத்தா வீட்டில் இருந்த பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் 13 வயது மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். </p> <h2>சவுக்கு சங்கர் மகன்</h2><p>சென்னையை சேர்ந்த பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர். இவரது மனைவி ஆர்த்தி, சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மகன் தியோ ஆழிசை (வயது 13). கருத்துவேறுபாடு காரணமாக சவுக்கு சங்கரும், ஆர்த்தியும் தனித்தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம் நடுக்குப்பத்தில் ஆர்த்தியின் பெற்றோர் உள்ளனர். அங்கு தாத்தா செந்தாமரைக் கண்ணன் மற்றும் பாட்டி கவனிப்பில் இருந்து சிறுவன் தியோ ஆழிசை, மரக்காணம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.</p> <h2>தூக்கில் தொங்கிய சிறுவன்</h2><p>தாய் மீதான ஏக்கத்தில் கடந்த சில நாட்களாக சிறுவன் சோகமாக இருந்துள்ளான். எனவே தாயார் ஆர்த்தியை பார்ப்பதற்காக சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். அங்கு சில நாட்கள் இருந்த நிலையில், நேற்று முன்தினம் சிறுவன் தியோ ஆழிசை நடுக்குப்பம் கிராமத்துக்கு அழைத்து வரப்பட்டான்.</p><p>நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு கிளம்புமாறு பேரனிடம் தாத்தா, பாட்டி கூறிவிட்டு மற்ற வேலைகளை கவனித்தனர். வீட்டின் பின்பக்கம் சென்ற சிறுவன் நீண்ட நேரமாகியும் வரவில்லை. சந்தேகமடைந்த தாத்தா, பாட்டி பின்பக்கம் சென்று பார்த்தபோது, அங்குள்ள வேப்ப மரத்தில் சிறுவன் தியோ ஆழிசை தூக்கில் தொங்கியவாறு இருந்தான்.</p><p>இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், சிறுவனை மீட்டு மரக்காணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே தியோ ஆழிசை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.</p>  <h2>போலீசார் விசாரணை</h2><p>இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாமல் சிறுவன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.</p>]]></content:encoded></item><item><title>8 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது; வெளியுறவுச் செயலர் இலங்கை அரசிடம் பேசமாட்டாரா? - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/8-rameswaram-fishermen-arrested-wont-the-foreign-secretary-speak-to-the-sri-lankan-government-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/8-rameswaram-fishermen-arrested-wont-the-foreign-secretary-speak-to-the-sri-lankan-government-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">e64557f9-8f54-48e2-8a75-c1d0a4720e4d</guid><pubDate>Thu, 06 Aug 2026 03:53:38 +0000</pubDate><atom:updated>2026-08-06T03:53:38.598Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,Sri Lanka,இலங்கை,மாணிக்கம் தாகூர்,Rameswaram fishermen,ராமேஸ்வரம் மீனவர்கள்,Manickam Tagore MP,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/fb6rii1y/manickam-tagore.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/fb6rii1y/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மோடி அரசுக்குத், தமிழ்நாட்டு மக்களின் நலன் மீதும் மீனவர்களின் வாழ்வாதாரம் மீதும் துளியளவும் அக்கறையில்லை என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- </p><h2>மீனவர்கள் கைது</h2><p>8 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது! படகுகளும் பறிமுதல்!.. இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி கொழும்புவில் இருக்கும்போதே இந்த அத்துமீறல் நடந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்பது குறித்து வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி இலங்கை அரசிடம் பேசமாட்டாரா?</p><p>2023 முதல் இதுவரை 1,306 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 179 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் மாநிலங்களவையிலேயே பிரவீன் சக்ரவர்த்தியின் கேள்விக்கு பதிலளித்த ஒப்புக்கொண்டுவிட்டுப் பொறுப்பிலிருந்து நழுவும் மோடி அரசுக்குத், தமிழ்நாட்டு மக்களின் நலன் மீதும் மீனவர்களின் வாழ்வாதாரம் மீதும் துளியளவும் அக்கறையில்லை என்பது மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது!</p><h2>கவன ஈர்ப்புத் தீர்மான</h2><p>இலங்கையின் இந்தத் தொடர் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அத்துமீறலுக்கு </a>முற்றுப்புள்ளி வைக்கவும், சிறைபிடிக்கப்பட்ட அனைவரையும் அவர்களின் படகுகளுடன் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் பாராளுமன்றத்தில் இன்று (06.08.2026)  கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்துள்ளேன்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கபட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பயணச்சீட்டில் எழுத்துகள் அழிவதால் தொடரும் அவலம்; டிக்கெட் இருந்தும் ரூ.510 அபராதம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-ongoing-ordeal-caused-by-fading-text-on-travel-tickets-a-510-fine-despite-holding-a-ticket</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-ongoing-ordeal-caused-by-fading-text-on-travel-tickets-a-510-fine-despite-holding-a-ticket#comments</comments><guid isPermaLink="false">afbeae8b-1f85-419d-8dbe-5766bd5bca35</guid><pubDate>Thu, 06 Aug 2026 03:32:11 +0000</pubDate><atom:updated>2026-08-06T03:32:11.068Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,ரெயில் டிக்கெட்,Southern Railway,ரெயில்,Railway,பட்டாபிராம்,Pattabiram,Rail ticket,பயணச்சீட்டு,ரெயில் டிக்கெட்டுகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/pwqikbuh/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/pwqikbuh/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பட்டாபிராம் ரெயில் நிலையத்தில் வாங்கிய மாதாந்திர பயணச்சீட்டில் அச்சிடப்பட்டிருந்த விவரங்கள் சில நாட்களில் அழிந்துவிட்டதால், கல்லூரி மாணவிக்கு டிக்கெட் பரிசோதகர் ரூ.510 அபராதம் விதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் ரெயில்வேயின் பயணச்சீட்டு அச்சிடும் முறையை கேள்விக்குறியாக்கியுள்ளது.</p><h2>மாணவிக்கு அபராதம்</h2><p>பட்டாபிராம் உழைப்பாளர் நகரைச் சேர்ந்த வினோத் கிறிஸ்டோபரின் மகள், சென்னையில் உள்ள கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். அவர் வழக்கம்போல் மின்சார ரெயிலில் கல்லூரிக்கு சென்று, சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இறங்கியபோது டிக்கெட் பரிசோதகர்கள் மாதாந்திர பயணச்சீட்டை சோதனை செய்தனர்.</p><p>அப்போது, பயணச்சீட்டில் எண்ணைத் தவிர மற்ற விவரங்கள் அனைத்தும் அழிந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மாணவி விளக்கம் அளித்தும், அதனை ஏற்காத டிக்கெட் பரிசோதகர்கள் ரூ.510 அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது.</p><h2>மன உளைச்சலுக்கு ஆளான மாணவி</h2><p>திடீர் நடவடிக்கையால் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பதற்றமடைந்த </a>மாணவி, தனது தந்தை வினோத் கிறிஸ்டோபருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, அவர் ஜி-பே மூலம் அபராதத் தொகையை செலுத்தினார். இந்தச் சம்பவத்தால் மாணவி மன உளைச்சலுக்கு ஆளானதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.</p><h2>புகார் அளிக்க சென்ற தந்தை</h2><p>அபராதம் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வினோத் கிறிஸ்டோபர் பட்டாபிராம் ரெயில் நிலைய டிக்கெட் கவுன்டரில் புகார் அளிக்கச் சென்றார். ஆனால், அங்கிருந்த ஊழியர்கள் உரிய பதில் அளிக்கவில்லை என்றும், புகார் புத்தகத்தை கேட்டபோது ஒருவரிடமிருந்து மற்றொருவரிடம் அனுப்பி அலைக்கழித்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.</p><h2>மற்ற பயணிகளுக்கும் அதே பாதிப்பு</h2><p>அதே நேரத்தில், மேலும் சில பயணிகளும் தங்களது மாதாந்திர பயணச்சீட்டுகளில் அச்சிடப்பட்ட தகவல்கள் அழிந்துவிட்டதாக புகார் தெரிவித்தனர். செல்லுபடியாகும் பயணச்சீட்டு இருந்தும் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.</p><h2>அச்சு தரம் குறித்து கேள்வி</h2><p>ரெயில்வே நிலையங்களில் தற்போது பயன்படுத்தப்படும் தெர்மல் காகிதங்களில் அச்சிடப்படும் பயணச்சீட்டுகளின் எழுத்துகள் சில நாட்களிலேயே அழிந்துவிடுவதாகவும், அச்சு இயந்திரங்களின் பராமரிப்பு குறைபாடுகள் அல்லது கார்பன் ரிப்பன் தொடர்பான சிக்கல்களும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.</p><h2>நடவடிக்கை எடுக்க கோரிக்கை</h2><p>பயணிகளின் தவறு இல்லாத நிலையில் அபராதம் விதிக்கப்படுவது <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தவிர்க்கப்பட </a>வேண்டும் என்றும், பயணச்சீட்டு அச்சிடும் முறையில் உள்ள குறைபாடுகளை ரெயில்வே நிர்வாகம் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குவதுடன், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சிறையில் அடைத்தாலும் பரவாயில்லை; டிசம்பரில் வங்காளதேசம் செல்வேன் - ஷேக் ஹசீனா உறுதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-dont-mind-being-imprisoned-i-will-go-to-bangladesh-in-december-sheikh-hasina-asserts</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-dont-mind-being-imprisoned-i-will-go-to-bangladesh-in-december-sheikh-hasina-asserts#comments</comments><guid isPermaLink="false">5139cb93-1e92-4e72-b815-43bf94f62456</guid><pubDate>Thu, 06 Aug 2026 03:30:41 +0000</pubDate><atom:updated>2026-08-06T03:30:41.953Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Bangladesh,வங்காளதேசம்,ஷேக் ஹசீனா,Sheikh Hasina</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/dc3j5h56/National-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/dc3j5h56/National-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><p>வங்காள தேசத்தில் 2024-ம் ஆண்டு வெடித்த மாணவர் புரட்சி காரணமாக, அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, அவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அதன்பிறகு அமைந்த முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு மற்றும் தற்போதைய தாரிக் ரஹ்மான் தலைமையிலான அரசும், ஷேக் ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்குமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன.</p><p>இந்நிலையில், தனது நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பதவியில் இருந்து நீக்கப்பட்ட வங்காள தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, டிசம்பர் மாதம் தனது மூத்த கட்சியினருடன் நாடு திரும்பி அந்நாட்டில் உள்ள கோர்ட்டில் சரணடையத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக மாணவர்கள் தலைமையிலான போராட்டங்கள் மீது கொடூரமான அடக்கு முறையை நடத்த உத்தரவிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்காக, வங்காளதேச கோர்ட்டில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.</p> <p>இந்த நிலையில், வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, டிசம்பர் மாதம் தாயகம் திரும்ப இருப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தன்னை சிறையில் அடைத்தாலும் பரவாவில்லை என்றும் சிறை தண்டனை அல்லது மரண தண்டனையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும், ஜனநாயகம் மற்றும் நீதியை நிலைநாட்டவே திரும்புவதாகவும் அவர் கூறினார்.</p><p>வங்காளதேசத்தில் தற்போது சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அவரது மகன் சாஜிப் வாசித் ஜாய் குற்றம் சாட்டியுள்ளார். இந்த போராட்டங்கள் அமைதியான மாணவர் இயக்கம் அல்ல என்றும், திட்டமிட்ட வன்முறை என்றும் ஹசீனா தெரிவித்தார். வங்காளதேச நிலைமை கவலையளிப்பதாகவும், சர்வதேச சமூகம் உதவ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>9-ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/abduction-and-sexual-assault-of-a-9th-grade-student-youth-sentenced-to-20-years-in-prison</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/abduction-and-sexual-assault-of-a-9th-grade-student-youth-sentenced-to-20-years-in-prison#comments</comments><guid isPermaLink="false">4e0ae9a4-4161-4c31-b717-228638c75228</guid><pubDate>Thu, 06 Aug 2026 03:19:45 +0000</pubDate><atom:updated>2026-08-06T03:19:45.676Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறை தண்டனை,Prison sentence,போக்சோ சட்டம்,POCSO act</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/y1rew9n7/9.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/y1rew9n7/9.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி, </p><p>திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பகுதியை சேர்ந்த 14 வயதுடைய 9-ம்வகுப்பு மாணவி கடந்த 7-4-2022 அன்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் இதுபற்றி அவருடைய பெற்றோர் துவரங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் சிறுமி மாயம் என்ற பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சிறுமியை தேடிவந்தனர். விசாரணையில் அந்த சிறுமியை மருங்காபுரி தாலுகா கஞ்சநாயக்கன் பட்டி, செட்டியபட்டி, கோவில்பாறைக்களம் பகுதியை சேர்ந்த துரை என்பவரின் மகன் சின்னையா (வயது 21), கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.</p><h2>20 ஆண்டுகள் சிறை</h2><p>அத்துடன் சின்னையா ஏற்கனவே மற்றொரு போக்சோ வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ளதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சிறுமி மாயம் என்ற வழக்கை மாற்றி, சின்னையா மீது போக்சோ சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு திருச்சி மகிளா கோர்ட்டில் நீதிபதி சண்முகபிரியா முன்னிலையில் நடந்து வந்தது. போலீசார் தரப்பில் அரசு வக்கீல் சுமதி ஆஜரானார். இந்த வழக்கில் சாட்சி விசாரணைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட சின்னையாவுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>குமரி: ஒரே கல்லில் உருவான 11 அடி உயர கிருஷ்ணர் சிலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/an-11-foot-tall-statue-of-lord-krishna-carved-from-a-single-stone</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/an-11-foot-tall-statue-of-lord-krishna-carved-from-a-single-stone#comments</comments><guid isPermaLink="false">b403b984-9ac4-4a9e-a209-23a5d0ed9656</guid><pubDate>Thu, 06 Aug 2026 03:07:18 +0000</pubDate><atom:updated>2026-08-06T03:07:18.486Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,Kanyakumari,கிருஷ்ணர் சிலை,Krishna statue</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/qn5ldgsp/8.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/qn5ldgsp/8.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி,</p><p>15 டன் எடையில் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட 11 அடி உயர கிருஷ்ணர் சிலை குமரியில் இருந்து லாரி மூலம் நெல்லைக்கு அனுப்பி வைக் கப்பட்டது.</p><h2>கிருஷ்ணர் சிலை</h2><p>குமரி மாவட்டம் மயிலாடியில் ஏராளமான சிற்பக்கூடங்கள் உள்ளன. இங் குள்ள சிற்பக்கூடத்தில் இருந்து ஏராளமான சாமிசிலைகள் செய்யப்பட்டு உள்நாடு மற்றும் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மயிலாடி சிற்பம் புவிசார் குறியீடு பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் மயி லாடி சேந்தன்புதூர் பகுதியை சேர்ந்த சிற்பி சுப்பிரமணியன் ஆசாரியின் சிற்பக்கூடத்தில் 15 டன் எடையுள்ள ஒரே கல்லில் கிருஷ்ணர் சிலை வடி வமைக்கப்பட்டுள்ளது. இது 11 அடி உயரமும், 32 அடி அகலத்தில் கிருஷ்ணர் சிலையை த்ரூபமாக கடந்த 8 மாதங்களாக தொழிலாளர்கள் வடிவமைத்தனர். </p><h2>புதிய கோவிலுக்கு... </h2><p>திருநெல்வேலி டவுனில் புதியதாக கட்டப்பட உள்ள கிருஷ்ணசாமி கோவிலுக்கு அனுப்புவதற்காக இந்த சிலை வடிவமைக்கப்பட்டது. அந்த கோவிலில் இந்த சிலை நிறுவப்பட உள்ளது. அதன்படி கிருஷ்ணர் சிலையை நெல்லைக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.</p><p>அதன்படி மயிலாடியில் சிற்ப கலைஞர்கள் சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் 10 சக்கரம் கொண்ட கனரக லாரியில் சிலையை கிரேன் மூலம் ஏற்றி நெல்லைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சாமி சிலையை காண அங்கு ஏராளமான பக்தர்கள் திரண்டு பார்வையிட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>கச்சத்தீவு அருகே 8 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sri-lankan-navy-arrests-8-tamil-nadu-fishermen-near-katchatheevu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sri-lankan-navy-arrests-8-tamil-nadu-fishermen-near-katchatheevu#comments</comments><guid isPermaLink="false">14f18112-aba0-41e8-8697-0e8bd056fb45</guid><pubDate>Thu, 06 Aug 2026 03:00:56 +0000</pubDate><atom:updated>2026-08-06T03:00:56.053Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,தமிழக மீனவர்கள்,இலங்கை கடற்படை,fishermen,கைது,arrest,Sri Lanka</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/wlv9mlhf/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/wlv9mlhf/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமநாதபுரம்,</p><p>எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், அவர்களின் படகுகள் மற்றும் உடைமைகளை சேதப்படுத்துவதுமான சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இதை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். </p><p>இந்த நிலையில், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டை பெற்று சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அந்த பகுதியில் ரோந்து சென்ற இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்து, அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். </p><p>அந்த மீனவர்கள் எல்லை தாண்டி சென்றதாக கூறப்படும் நிலையில், அவர்களிடம் இலங்கை கடற்படையினர் நடத்திய விசாரணையில், தங்களின் படகு சேதமடைந்ததால் எல்லை தாண்டி வந்தோம் என்று அவர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், கைது செய்யப்பட்ட 8 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் இலங்கைக்கு அழைத்துச் சென்று அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>திண்டுக்கல்: கிராமத்துக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்திய காட்டெருமை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dindigul-indian-bison-enters-village-and-terrorizes-residents</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dindigul-indian-bison-enters-village-and-terrorizes-residents#comments</comments><guid isPermaLink="false">8f5f709a-63ea-456a-9713-f04b22a8d7e0</guid><pubDate>Thu, 06 Aug 2026 02:52:45 +0000</pubDate><atom:updated>2026-08-06T02:52:45.935Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Dindigul,திண்டுக்கல்,காட்டெருமை</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/8lb2wf0c/7.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/8lb2wf0c/7.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல், </p><p>கொடைக்கானல் கீழ்மலையில் உள்ள மங்களம்கொம்பு, தாண்டிக்குடி. பெரும்பாறை, கானல்காடு, கே.சி.பட்டி, குப்பம்மாள்பட்டி உள்ளிட்ட மலைக் கிராமங்களில் காட்டு யானை, காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குக ளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. தற்போது வெயில் வாட்டி வதைப்பதால் இரை மற்றும் தண்ணீர் தேடி மலைக்கிராமங்களுக்குள் வனவிலங்கு கள் புகுந்து மக்களை பீதியடைய செய்து வருகின்றன.</p><p>இந்தநிலையில் பெரும்பாறை அருகே உள்ள மஞ்சள்பரப்பு கிராமத்துக்குள் நேற்று கம்பீர தோற்றத்துடன் காட்டெருமை ஒன்று உலா வந்தது. அந்த காட்டெருமை மஞ்சள்பரப்பில் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார், மோட்டார் சைக்கிள்களை உரசிக்கொண்டு சென்றது. இதனை பார்த்ததும் கிராம மக்கள் அச்சம் அடைந்ததுடன், பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தஞ்சம் அடைந்தனர். </p><p>காட்டெருமையை கண்ட இளைஞர்கள் சிலர் ஆபத்தை உணராமல் அதன் அருகே சென்று தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். சுமார் 1 மணி நேரமாக கிராமத் தில் உலா வந்த காட்டெருமை, அதன்பிறகு வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.</p>]]></content:encoded></item><item><title>சுதந்திர தின விழா ஒத்திகை: சென்னையில் மூன்று நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/independence-day-rehearsal-traffic-diversions-in-chennai-for-three-days</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/independence-day-rehearsal-traffic-diversions-in-chennai-for-three-days#comments</comments><guid isPermaLink="false">9917ae26-b5e0-4ab1-bb33-bb78617b707b</guid><pubDate>Thu, 06 Aug 2026 02:17:33 +0000</pubDate><atom:updated>2026-08-06T02:17:33.812Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,போக்குவரத்து,மெரினா,போக்குவரத்து மாற்றம்,Chennai Beach,போக்குவரத்து துறை,சுதந்திர தின விழா,traffic diversion,Traffic diversions,சென்னை கோட்டை,Chennai Fort</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/6u5iuv2r/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/6u5iuv2r/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை கோட்டையில் சுதந்திர தினவிழா, வரும் 15ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, நாளை, 11, 13 ஆகிய மூன்று நாட்கள், ஒத்திகை நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதற்காக இந்நாட்களில் காலை 6 மணி முதல் ஒத்திகை முடியும் வரை, மெரினாவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.</p><h2>போக்குவரத்து மாற்றம்</h2><p>இது தொடர்பாக காவல்துறை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வெளியிட்டுள்ள </a>அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>உழைப்பாளர் சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரையிலான காமராஜர் சாலை, போர் நினைவுச் சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரையிலான ராஜாஜி சாலைகளில் அனுமதி அட்டை பெற்றிருப்போர் தவிர, மற்ற வாகனங்களுக்கு அனுமதி இல்லை</p><p>காமராஜர் சாலை - ராஜாஜி சாலை வழியாக பாரிமுனை நோக்கி செல்லும் வாகனங்கள், உழைப்பாளர் சிலையிலிருந்து வாலாஜா சாலை - அண்ணா சாலை - முத்துசாமி பாலம் - முத்துசாமி சாலை வழியாக பாரிமுனை செல்லலாம்</p><p>பாரிமுனையிலிருந்து, தலைமைச் செயலகம் வழியாக காமராஜர் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும், வடக்கு கோட்டை பக்க சாலை - ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு - முத்துசாமி சாலை - முத்துசாமி பாலம் - அண்ணா சாலை - வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலை செல்லலாம்.</p><h2>அனுமதி அட்டை</h2><p>சிவப்பு மற்றும் ஊதா வண்ண வாகன அனுமதி அட்டை வைத்திருப்போர், காலை, 8:30 மணி வரை ராஜாஜி சாலை வழியாக சென்று தலைமைச் செயலக உள்வாயிலின் அருகே இறங்கி, வாகனத்தை கோட்டை வளாகத்தில் நிறுத்த வேண்டும்</p><p>சிவப்பு மற்றும் ஊதா வண்ண வாகன அனுமதி அட்டை வைத்திருப்போர், காலை 8:30 மணிக்கு பின் வந்தால், போர் நினைவுச்சின்னம் - கொடிமரச்சாலை - முத்துசாமி பாலம் - வடக்கு கோட்டை பக்க சாலை - ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக தலைமைச் செயலக வெளிவாயிலின் அருகே இறங்கி, பொதுப்பணித் துறை வாகன நிறுத்தத்தில், வாகனங்களை நிறுத்த வேண்டும்</p><p>நீல மற்றும் இளஞ்சிவப்பு வண்ண அனுமதி அட்டை வைத்திருப்போர், காலை 8:30 மணி வரை ராஜாஜி சாலை - போர்நினைவுச்சின்னம் கொடிமரச்சாலை - முத்துசாமி சாலை - வடக்கு கோட்டை பக்க சாலை - ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக தலைமைச் செயலக வெளி வாயிலின் அருகே இறங்கிக் கொள்ள வேண்டும். பின், பொதுப்பணித்துறை அலுவலக வாகன நிறுத்தத்தில் வாகனத்தை நிறுத்த வேண்டும்.</p><p>நீல மற்றும் இளஞ்சிவப்பு வண்ண அனுமதி அட்டை வைத்திருப்போர், காலை 8:30 மணிக்கு பின் வந்தால், காமராஜர் சாலை - வாலாஜா சாலை - அண்ணாசாலை - முத்து சாமி பாலம் - வடக்கு கோட்டை பக்க சாலை - ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக தலைமைச் செயலக வெளிவாயிலின் அருகே இறங்கிக் கொள்ள வேண்டும். பின் வாகனத்தை பொதுப்பணித்துறை வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும்</p><p>அனுமதி அட்டை இல்லாத வாகனங்களில் வருவோர், போர் நினைவுச் சின்னம் அருகில் இறங்கி, வாகனங்களை தீவுத்திடல் உள்ளே நிறுத்த வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகம் வருகிறார் அமித்ஷா:  திருவண்ணாமலை கோவிலில் தரிசனம் செய்கிறார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/amit-shah-visits-tamil-nadu-to-offer-prayers-at-the-tiruvannamalai-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/amit-shah-visits-tamil-nadu-to-offer-prayers-at-the-tiruvannamalai-temple#comments</comments><guid isPermaLink="false">7d7b56e6-8926-4661-9b33-f89f0d5105bd</guid><pubDate>Thu, 06 Aug 2026 02:08:41 +0000</pubDate><atom:updated>2026-08-06T02:08:41.344Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>அமித்ஷா,Amit Shah,திருவண்ணாமலை,Tiruvannamalai</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/dq0acyp4/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/dq0acyp4/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>புதுச்சேரி, </p><p>மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரி வருகிறார்.</p><p>புதுச்சேரி போலீஸ் துறைக்கு, ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த விருதினை வழங்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாளை மறுநாள் புதுச்சேரி வருகிறார். இதற்காக, டெல்லியில் இருந்து சென்னை விமான நிலையம் வரும் அவர், ஹெலிகாப்டர் வாயிலாக அன்று மாலை, 4:55 மணிக்கு புதுச்சேரி செல்கிறார்.</p><p>புதுச்சேரி கடற்கரையையொட்டி உள்ள நீதிபதிகள் விருந்தினர் மாளிகையில் அன்று இரவு தங்குகிறார். அதன்பின், 9ம் தேதி காலை, 8:10 மணிக்கு புதுச்சேரி கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நடக்கும் விழாவில், போலீசாருக்கு ஜனாதிபதி விருதை அமித் ஷா வழங்குகிறார்.</p><p>அந்த விழாவிற்கு பின், காலை  10:50 மணிக்கு ஹெலிகாப்டர் வாயிலாக திருவண்ணாமலை சென்று, கோவிலில் தரிசனம் செய்கிறார். ரமணர் ஆசிரமத்துக்கும் செல்கிறார். பின், அங்கிருந்து ஹெலிகாப்டரில் சென்னை வந்து, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.</p>]]></content:encoded></item><item><title>மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை குறைக்கப்பட்டுள்ளதா? - அரசு விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/has-the-relief-amount-for-the-fishing-ban-period-been-reduced-government-clarification</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/has-the-relief-amount-for-the-fishing-ban-period-been-reduced-government-clarification#comments</comments><guid isPermaLink="false">914916d8-43c3-43ad-8164-c17d23398480</guid><pubDate>Thu, 06 Aug 2026 02:04:04 +0000</pubDate><atom:updated>2026-08-06T02:04:04.391Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,மீன்வளத்துறை,Fact Check Unit,Fact check,தமிழக அரசு விளக்கம்,அரசு விளக்கம்,தகவல் சரிபார்ப்பகம்,TN Fact Check,தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம்,தகவல் நம்பகத்தன்மை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/vcz5sceu/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/vcz5sceu/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை குறைக்கப்பட்டுள்ளதாக பரப்பப்படும் தவறான தகவல் பரவி வருவதாக தகவல் நம்பகத்தன்மை பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அப்பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p><strong>பரவும் செய்தி!</strong></p><p>ஏற்கனவே ரூ.8,000-ஆக உள்ள மீன்பிடி <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தடைக்கால </a>நிவாரணம், ரூ.7,000-ஆக தமிழ்நாடு அரசு குறைத்திருப்பதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவி வருகிறது.</p><p><strong>உண்மை என்ன?</strong></p><p><strong>இது முற்றிலும் தவறான தகவல்.</strong></p><p>மீனவர்களுக்கான மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை (Ban Period Assistance) ரூ.8,000 தொடர்ந்து தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. </p><p>2026 - 2027 பட்ஜெட்டில் வடகிழக்கு பருவமழை காலங்களில்  மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் சிறப்பு உதவித் தொகை (Lean Period Fishing Assistance) ரூ.6,000-லிருந்து ரூ.7,000-ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><strong>தவறான தகவலைப் பரப்பாதீர்!</strong></p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>