<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 12 Aug 2026 16:22:03 +0000</lastBuildDate><item><title>திருப்பத்தூர்: போலி நகையை வைத்து தங்க மோதிரத்தை திருட முயற்சி – 19 வயது பெண் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirupathur-attempt-to-steal-a-gold-ring-using-fake-jewelry-19-year-old-woman-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirupathur-attempt-to-steal-a-gold-ring-using-fake-jewelry-19-year-old-woman-arrested#comments</comments><guid isPermaLink="false">254adbdc-0266-4b41-8565-e4c008ee5b7e</guid><pubDate>Wed, 12 Aug 2026 16:18:44 +0000</pubDate><atom:updated>2026-08-12T16:18:44.110Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirupattur,திருப்பத்தூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/scrz5x27/State-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/scrz5x27/State-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பத்தூர்,</p><p>திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள நகை கடை ஒன்றில், 19 வயது இளம்பெண் ஒருவர், நகை வாங்குவது போல் நடித்து தன்னிடம் இருந்த போலி நகையை வைத்து, 2 கிராம் தங்க மோதிரத்தை திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>அந்த பெண் நகையை மாற்ற முயன்றபோது, கடை உரிமையாளர் அவரை கையும், களவுமாக பிடித்தார். பின்னர் இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடை உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பெண்ணிடம் இருந்து பல போலி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>கோவை மாணவர் கொலை சம்பவம்; உண்மை முழுமையாக வெளிவர வேண்டும் - வேல்முருகன் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-student-murder-incident-the-full-truth-must-be-revealed-velmurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-student-murder-incident-the-full-truth-must-be-revealed-velmurugan#comments</comments><guid isPermaLink="false">3e49ac33-a6c1-49f2-b2d3-d740be056ec2</guid><pubDate>Wed, 12 Aug 2026 16:07:15 +0000</pubDate><atom:updated>2026-08-12T16:07:15.652Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,Velmurugan,வேல்முருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/qeynjxax/State-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/qeynjxax/State-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கல்லூரி மாணவர் அமுதன் கொலைக்கு காரணம் போதைப்பொருள் புகாரா? அல்லது முன் பகையா? என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-</p><p>“கோவை அருகே கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 19 வயதான அமுதன், கோவை ஒத்தக்கால் மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.</p><p>முதற்கட்ட காவல்துறை விசாரணையின்படி, மாணவர்களுக்கிடையே ஏற்கெனவே இருந்த மோதல், செல்போன் பறிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளின் தொடர்ச்சியாக, இந்தத் தாக்குதல் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, முன்பகைக் காரணமாக அமுதன் தாக்கப்பட்டதாக காவல்துறை தரப்புக் கூறுகிறது.</p><p>ஆனால், இந்த வழக்கில் இன்னொரு மிகத் தீவிரமான குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. அமுதன் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு தொடர்பாக காவல்துறைக்கு தகவல் அளித்திருந்ததாகவும், அந்தத் தகவல் சம்பந்தப்பட்டவர்களுக்கு கசிந்ததன் காரணமாகவே அமுதன் குறிவைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், அவரது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். </p><p>இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது, போதைப்பொருள் குறித்து அமுதன் தகவல் அளித்தார் என்பதும், அந்தத் தகவல் கசிந்ததால் அவர் கொல்லப்பட்டார் என்பதும், தற்போது குற்றச்சாட்டுகளாகவே உள்ளன. அவை விசாரணை மூலம் உறுதி செய்யப்பட வேண்டியவை. அதேவேளையில், காவல்துறை போதைப்பொருள் தொடர்பான காரணத்தை மறுத்து, மாணவர்களுக்கிடையேயான மோதலே முதற்கட்ட விசாரணையில் தெரியவரும் காரணம் எனக் கூறுகிறது.</p><p>எனவே, இந்த வழக்கில் ஒரு கோணத்தை மட்டும் ஏற்றுக்கொண்டு விசாரணையை முடித்துவிடாமல், இரு கோணங்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். குறிப்பாக, அமுதன் காவல்துறைக்கு போதைப்பொருள் தொடர்பாகத் தகவல் அளித்தாரா?</p><p>அவ்வாறு தகவல் அளித்திருந்தால், அவரிடம் காவல்துறை எப்போது, எந்த வழக்கின் அடிப்படையில் விசாரணை நடத்தியது?</p><p>அவர் அளித்ததாகக் கூறப்படும் தகவல் யாருக்கெல்லாம் சென்றது?</p><p>காவல்துறையிலிருந்து தகவல் கசிந்ததா? கல்லூரி மற்றும் விடுதியில் போதைப்பொருள் பயன்பாடு அல்லது விற்பனைத் தொடர்பான புகார்கள் ஏற்கெனவே இருந்தனவா? அமுதன் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பு, அவரை யாராவது மிரட்டினார்களா? செல்போன் பறிப்பு மற்றும் முன்பகைத் தொடர்பான காவல்துறை கூறும் சம்பவத்திற்கும் கொலைக்கும் உள்ள தொடர்பு என்ன? தாக்குதலில் பங்கேற்ற அனைவரும் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனரா? என்பவைத் தெளிவாக விசாரிக்கப்பட வேண்டும்.</p><p>அமுதன் கொலைக்கு உண்மையான காரணம் என்ன? என்பது எந்த அரசியல் அழுத்தத்திற்கும், எந்த முன்முடிவிற்கும் இடமின்றி ஆதாரங்களின் அடிப்படையில் கண்டறியப்பட வேண்டும். கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் நடமாட்டம் இருந்திருந்தால், அது ஒரு மாணவரின் உயிரை மட்டுமல்ல. ஒட்டுமொத்த இளைஞர் தலைமுறையின் எதிர்காலத்தையே பாதிக்கும் மிகப்பெரிய சமூகப் பிரச்சினையாகும். அதேபோல், ஒரு மாணவர் காவல்துறைக்கு இரகசியத் தகவல் அளித்ததற்காகக் குறிவைக்கப்பட்டிருந்தால், தகவல் அளிக்கும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து காவல்துறையின் பொறுப்பும் கேள்விக்குள்ளாகிறது.</p><p>எனவே, அமுதன் மரணத்தின் பின்னணியில் உள்ள முழு உண்மையும் வெளிச்சத்திற்கு வர வேண்டும். குற்றத்தில் நேரடியாக ஈடுபட்டவர்கள் மட்டுமல்லாமல், கொலைக்குப் பின்னால் வேறு சதி, தூண்டுதல் அல்லது தகவல் கசிவு இருந்தால் அதற்குக் காரணமான அனைவரும் கண்டறியப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அமுதனுக்கு நீதி கிடைக்க வேண்டும். உண்மை முழுமையாக வெளிவர வேண்டும்.</p><p>அதோடு, கல்லூரிகளில் போதைப்பொருள் நடமாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>நெல்லையில் கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-under-goonda-act-in-nellai-murder-attempt-case-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-under-goonda-act-in-nellai-murder-attempt-case-2#comments</comments><guid isPermaLink="false">a81754d2-afed-4c84-a6df-3ab666be542b</guid><pubDate>Wed, 12 Aug 2026 16:00:56 +0000</pubDate><atom:updated>2026-08-12T16:00:56.847Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,கைது,arrest,குண்டர் சட்டம்,Youth,வாலிபர்,Thug Act,கொலை முயற்சி வழக்கு,attempted murder</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/a0wbyei2/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/a0wbyei2/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>நெல்லை மாநகர பகுதியில் புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்ட வாலிபர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். </p><h2>கொலை முயற்சி வழக்கு</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a>, தச்சநல்லூர், வடக்கு சிதம்பரநகரைச் சேர்ந்த சுந்தரம் மகன் பேச்சிராஜா (வயது 26) என்பவர் நெல்லை மாநகர பகுதியில் புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">கொலை முயற்சி வழக்கு</a>களில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தார்.  </p><h2>வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது</h2><p>இதனையடுத்து அந்த வாலிபர், தச்சநல்லூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டரின் பரிந்துரையின் பேரில், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவுப்படி இன்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ்</a> பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார். </p>]]></content:encoded></item><item><title>முதுமலை முகாமில் விழாக்கோலம்: வளர்ப்பு யானைகளுக்கு சிறப்பு விருந்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/world-elephant-day-celebrations-special-feast-at-mudhumalai-camp</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/world-elephant-day-celebrations-special-feast-at-mudhumalai-camp#comments</comments><guid isPermaLink="false">ba6115f3-efff-4f54-8f2d-111206532fc8</guid><pubDate>Wed, 12 Aug 2026 15:57:39 +0000</pubDate><atom:updated>2026-08-12T15:57:39.668Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விருந்து,உலக யானைகள் தினம்,Mudumalai,முதுமலை,Elephants-யானைகள்,World Elephant Day</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/1bzft0za/elephant-day.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வளர்ப்பு யானைகள்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதுமலை முகாம் யானைகள் தினம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/1bzft0za/elephant-day.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2>நீலகிரி,</h2><p>உலக யானைகள் தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">முதுமலை யானைகள் முகாமில்</a> உள்ள வளர்ப்பு யானைகளுக்கு பொங்கல், கரும்பு, வெள்ளம், தர்பூசணி மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட அறுசுவை உணவுகள் வழங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. </p> <h2>யானைகள் தினம்</h2><p>ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12-ம் தேதி உலக யானைகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, சர்வதேச புகழ்பெற்ற முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. </p><h2>அறுசுவை உணவு விருந்து</h2><p>முகாமில் உள்ள ரகு, பொம்மி உள்ளிட்ட வளர்ப்பு யானைகள் அனைத்தும் ஆற்றுக்கு அழைத்து செல்லப்பட்டு, சுத்தமாக குளிப்பாட்டப்பட்டன. பின்னர், யானைகள் அனைத்தும் கம்பீரமாக அணிவகுத்து நிற்க வைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து, யானைகள் தின சிறப்பு விருந்தாக பச்சரிசிப் பொங்கல், கரும்பு, வெள்ளம், தர்பூசணி, ஆப்பிள் மற்றும் அன்னாசி போன்ற பழங்கள் தயார் செய்யப்பட்டன. பாகன்கள் மற்றும் வனத்துறையினர் இந்த அறுசுவை உணவுகளை யானைகளுக்கு ஆசையோடு ஊட்டி மகிழ்ந்தனர். தங்களுக்கு பிடித்தமான பழங்களை யானைகளும் மிகவும் உற்சாகத்துடன் தும்பிக்கையால் வாங்கி ருசித்து சாப்பிட்டன. </p><h2>சுற்றுலா பயணிகள் வாழ்த்து</h2><p>இந்த கொண்டாட்டத்தை காண்பதற்காக தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் முதுமலை முகாமில் குவிந்திருந்தனர். வளர்ப்பு யானைகள் வரிசையாக நின்று பழங்களை சாப்பிடுவதை கண்டு அவர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.மேலும், அங்கு திரண்டிருந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் ஒருசேர கைகளை தட்டி, 'ஹேப்பி எலிபன்ட் டே என உற்சாகக் குரல் எழுப்பி யானைகளுக்குத் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். </p><p>உலக யானைகள் தினத்தை முன்னிட்டு முதுமலை முகாம் இன்று விழாக்கோலம் பூண்டிருந்தது.</p>]]></content:encoded></item><item><title>200 யூனிட் இலவச மின்சாரம்: அதிக கட்டணம் வசூல் செய்யப்படுகிறதா? - தகவல் நம்பகத்தன்மை பிரிவு விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/200-units-of-free-electricity-are-excessive-charges-being-levied-clarification-from-the-information-verification-wing</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/200-units-of-free-electricity-are-excessive-charges-being-levied-clarification-from-the-information-verification-wing#comments</comments><guid isPermaLink="false">200bf1f5-ddf0-4dbe-9c69-5fc3b972c3d7</guid><pubDate>Wed, 12 Aug 2026 15:31:08 +0000</pubDate><atom:updated>2026-08-12T15:31:08.533Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழ்நாடு அரசு,electricity bill,Fact check,Free electricity,மின்கட்டணம்,மின்கட்டணம் உயர்வு,Fake News,இலவச மின்சாரம்,தவறான தகவல்,electricity bills,தகவல் சரிபார்ப்பகம்,TN Fact Check,தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம்,தகவல் நம்பகத்தன்மை,தகவல் நம்பகத்தன்மை பிரிவி,200 யூனிட்,Fact Verification</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/uqkrqkxz/Untitled-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/uqkrqkxz/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>200 யூனிட் கட்டணமில்லா மின் திட்டத்தால் கடந்த மூன்று மாதங்களாக அதிக மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாக பரவும் தவறான தகவல் குறித்து தகவல் நம்பகத்தன்மை பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>பரவும் செய்தி</h2><p>தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள 200 யூனிட் கட்டணமில்லா மின் திட்டத்தால் கடந்த மூன்று மாதங்களாக அதிக மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.</p><h2>உண்மை என்ன ?</h2><p>இது தொடர்பாக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழ்நாடு </a>மின் பகிர்மானக் கழகம் அளித்துள்ள விளக்கத்தில், "200 யூனிட் இலவச மின் திட்டத்தின் மூலம் 1  கோடியே 42 லட்சம் மின் நுகர்வோர்கள் பயனடைந்துள்ள நிலையில், ஜூன் மாதத்தில் 59.31 லட்சம் மின் நுகர்வோர்களும், ஜூலை மாதத்தில் 60.92 லட்சம் மின் நுகர்வோர்களும் இலவசமாக மின் சேவையை பெற்று பயனடைந்துள்ளனர். மின் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படாததால், அது  குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் - அரசாணை வெளியீடு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-thai-vazhthu-must-be-sung-first-government-order-issued</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-thai-vazhthu-must-be-sung-first-government-order-issued#comments</comments><guid isPermaLink="false">cc1240d6-f2b7-4045-ba96-e1e48bc74896</guid><pubDate>Wed, 12 Aug 2026 15:23:55 +0000</pubDate><atom:updated>2026-08-12T15:23:55.692Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TN govt,அரசாணை,தமிழ்த்தாய் வாழ்த்து,Tamil Thai Vaalthu Song</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/u9xy4g64/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/u9xy4g64/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் மு.சாய் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“தமிழக முதல்-அமைச்சரால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மொழியப்பெற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தனித்தீர்மானம் - தமிழ்மொழிக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் செலுத்தப்படும் மரியாதையின் வெளிப்பாடாக "தமிழ்த்தாய் வாழ்த்து" கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என ஆணை வெளியிடப்படுகிறது. </p> <p><strong>அரசாணை (நிலை) எண். 531</strong></p><p>நாள்: 12.08.2026</p><p>பராபவ வருடம், ஆடி - 27.</p><p>திருவள்ளுவர் ஆண்டு 2057.</p><p><strong>படிக்கப்பட்டது:-</strong></p><p>1. அரசாணை (நிலை) எண்.1393, பொது (அரசியல்)த் துறை, நாள் 17.06.1970.</p><p>2. குறிப்பாணை எண்.6678/71-6, பொது (அரசியல்)த் துறை, நாள் 05.05.1972.</p><p>3. அரசாணை (நிலை) எண்.1037, பொது (அரசியல்)த் துறை, நாள் 17.12.2021.</p><p>4. மத்திய அரசின் உள்துறை அமைச்சக கடித எண் 14/2/2025, 09.07.2026.</p><p>5. நேர்முகக் கடித எண். 7204/2026, சமபேசெ (சமுவ-1), நாள் 10.08.2026. </p><p><strong>ஆணை</strong></p><p>மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், பிரார்த்தனைப் பாடல்கள் பாடுவதில் சீரான தன்மையை உறுதி செய்வதற்காக எந்தவொரு மதத்தினருக்கோ பிரிவினருக்கோ தொடர்பு இல்லாத ஒரு பாடலை பிரார்த்தனைப் பாடலாக வைக்கவேண்டும் என்பதால், திரு. சுந்தரம் பிள்ளை அவர்கள் எழுதிய "மனோன்மணீயம்" என்ற நூலிலிருந்து ஆறு வரிகள் கொண்ட பாடலினை எடுத்து பிரார்த்தனைப் பாடலாக வைக்கலாம் என ஆணை வெளியிட்டுள்ளது.</p><p>2. அதனைத் தொடர்ந்து, மேலே மூன்றாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், "தமிழ்த்தாய் வாழ்த்து" பாடலை தமிழக அரசின் மாநிலப் பாடலாக அதிகாரப்பூர்வமாக அங்கீகாரம் வழங்கப்பட்டு தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படும் என ஆணையிடப்பட்டுள்ளது. </p><p>3. இந்நிலையில், ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தால் 2026 ஜூலை மாதம் ஒன்பதாம் தேதியிட்ட கடிதத்தில், மாநிலப் பாடல் பாடப்படுவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>4. இந்நிலையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 10.08.2026 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மொழியப்பெற்று ஒருமனதாக கீழ்க்காணும் தனித்தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது:-</p><p>“தமிழ் உலகின் தொன்மை வாய்ந்த செம்மொழியாகவும், தமிழர் நாகரிகம் உலகின் மிகப் பழமையான பண்பாட்டு மரபுகளில் ஒன்றாகவும் திகழ்வதை இப்பேரவை பெருமையுடன் பதிவு செய்கிறது. மனோன்மணியம் சுந்தரனாரால் 1891-இல் எழுதப்பட்ட "மனோன்மணீயம்" என்ற நாடக நூலின் பாயிரத்திலிருந்து எடுக்கப்பட்ட "தமிழ்த்தாய் வாழ்த்து" 1970 நவம்பர் 23 முதல் அரசு விழாக்களில் முதலில் பாடப்படவேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. </p><p>2021 டிசம்பர் 17 முதல் மாநிலப் பாடலாக அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டு தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படும் என்று ஆணையிடப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில், ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தால் 2026 ஜூலை மாதம் ஒன்பதாம் தேதியிட்ட கடிதத்தில், மாநிலப் பாடல் பாடப்படுவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1970-களில் இருந்து அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் "தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்" முதலில் பாடப்படுவது மரபுத்தன்மையாகவும், அரசாணைகளின் வாயிலாகவும் பின்பற்றப்பட்டு வருகிறது. </p><p>ஆகவே, "தமிழ்த்தாய் வாழ்த்து" தமிழ்மொழிக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் செலுத்தப்படும் மரியாதையின் வெளிப்பாடாகும் என்பதை இப்பேரவை வலியுறுத்துகிறது. இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளின் அடிப்படையில், தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளத்தை நிலைநிறுத்தும் வகையில், தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஏகமனதாக தீர்மானிக்கிறது."</p><p>5. அதனைத் தொடர்ந்து, மேலே ஐந்தாவதாகப் படிக்கப்பட்ட தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை செயலக செயலாளரிடமிருந்து பெறப்பட்ட நேர்முக கடிதத்தில், மேற்காணும் தீர்மானத்தின் நகலினை உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு அனுப்பியுள்ளார்.</p><p>6. எனவே, முதல்-அமைச்சரால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மொழியப்பெற்று ஒருமனதாக தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தனித்தீர்மானத்தினை ஏற்று, தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளின் அடிப்படையில், தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளத்தை நிலைநிறுத்தும் வகையில், தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன், மேலே மூன்றாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுடன் தமிழ்மொழிக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் செலுத்தப்படும் மரியாதையின் வெளிப்பாடாக "தமிழ்த்தாய் வாழ்த்து" கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என அரசு ஆணையிடுகிறது.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>திருநெல்வேலி மாவட்டத்தில் ஆகஸ்ட் 15-ந்தேதி டாஸ்மாக் கடைகள் மூடல்: கலெக்டர் உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-shops-to-be-closed-in-tirunelveli-district-on-august-15-collector-orders</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-shops-to-be-closed-in-tirunelveli-district-on-august-15-collector-orders#comments</comments><guid isPermaLink="false">0ce6ed62-663d-408f-9faa-8a6323e1e7f2</guid><pubDate>Wed, 12 Aug 2026 15:10:51 +0000</pubDate><atom:updated>2026-08-12T15:10:51.971Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,Collector orders,கலெக்டர் உத்தரவு,சுதந்திர தினம்,Independence Day,டாஸ்மாக் கடைகள் மூடல்,TASMAC shop closure</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/9l3l8n5j/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஆனந்த் மோகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/9l3l8n5j/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி </a>மாவட்டத்தில், சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற 15-ம் தேதி டாஸ்மாக் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">மதுபானக்கடைகளை</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D">மூட வேண்டும்</a> என மாவட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D">கலெக்டர் </a>ஆனந்த் மோகன் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81">உத்தரவிட்டுள்ளார்</a>. </p><p>இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>உள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் 15.8.2026, சனிக்கிழமை, சுதந்திர தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்தால் (டாஸ்மாக்) நடத்தப்படும் மதுபானக்கடைகள் (FL1 உரிமங்கள்) அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த FL2, FL3, FL3A, FL3AA &amp; FL11 உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது. </p><p>எனவே, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மதுபானக்கடைகள் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மற்றும் தங்கும் விடுதிகளுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் அனைத்தும் 15.8.2026 (சனிக்கிழமை) சுதந்திர தினத்தை முன்னிட்டு மூட வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/10-ips-officers-transferred-in-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/10-ips-officers-transferred-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">fdf5df31-17f3-46fa-9580-1508711548fc</guid><pubDate>Wed, 12 Aug 2026 15:10:29 +0000</pubDate><atom:updated>2026-08-12T15:10:29.703Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,IPS Officers,ஐபிஎஸ் அதிகாரிகள்,ips,ஐபிஎஸ்,transferred,அதிகாரிகள் இடமாற்றம்,TamilNadu Goverment</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/i04vef0l/tamilnadu.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/i04vef0l/tamilnadu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் 10 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.</p><p>அதன்படி,</p><ul><li><p>பாலநாகதேவி - சென்னை குற்றப்பிரிவு சி.ஐ.டி. காவல்துறை தலைமை இயக்குநராக (DGP) நியமனம்.</p></li><li><p>அபின் தினேஷ் மொடக் - சென்னை சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநராக நியமனம்.</p></li><li><p>வித்யா ஜெயந்த் குல்கர்னி - சென்னை பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநராக நியமனம்.</p></li><li><p>எம். ராமமூர்த்தி - சென்னை சி.ஐ.டி. ‘கியூ’ பிரிவு காவல் கண்காணிப்பாளராக நியமனம்.</p></li><li><p>பி.கே. அரவிந்த் - சென்னை சிறப்பு பிரிவு சி.ஐ.டி. காவல் கண்காணிப்பாளர்-1 ஆக நியமனம்.</p></li></ul><ul><li><p>அர்பிதா ராஜ்புத் - சென்னை அண்ணாநகர் காவல் துணை ஆணையராக நியமனம்.</p></li><li><p>ஐ. ஈஸ்வரன் - சென்னை தமிழ்நாடு கமாண்டோ படை காவல் கண்காணிப்பாளராக நியமனம்.</p></li><li><p>எஸ்.ஆர். செந்தில்குமார் - நாகப்பட்டினம் கடலோர பாதுகாப்புக் குழும காவல் கண்காணிப்பாளராக நியமனம்.</p></li><li><p>வி. சரவணகுமார் - சென்னை பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) காவல் கண்காணிப்பாளராக நியமனம்.</p></li><li><p>டி. ரமேஷ் பாபு - திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையராக நியமனம்.</p></li></ul>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் இணையவழி விற்பனை தளம் - அமைச்சர் ராஜ்குமார் திறந்து வைத்தார் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-housing-boards-online-sales-portal-minister-rajkumar-inaugurates-it</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-housing-boards-online-sales-portal-minister-rajkumar-inaugurates-it#comments</comments><guid isPermaLink="false">33a206e3-2c7f-4667-b71d-affefe9bd92b</guid><pubDate>Wed, 12 Aug 2026 15:07:02 +0000</pubDate><atom:updated>2026-08-12T15:07:02.610Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt,அமைச்சர் ராஜ்குமார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/eiocyxpq/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/eiocyxpq/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் விற்பனைக்குரிய வீடு / மனைகளை இணையதளம் (Online Allotment Portal) மூலமாக விற்பனை செய்திட இணையவழி விற்பனை தளத்தை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்குமார் துவக்கி வைத்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“தமிழ்நாடு முதல்-அமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் விற்பனைக்குரிய வீடு / மனைகளை இணையதளம் (Online Allotment Portal) மூலமாக விற்பனை செய்திட இணையவழி விற்பனைத் தளத்தை இன்று (12.08.2026) சென்னை, நாமக்கல் கவிஞர் மாளிகை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூட்ட அரங்கில் துவக்கி வைத்தார்கள். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் மனைகள் மற்றும் வீடுகள் கடந்த ஆண்டு 2,630 அலகுகள் மட்டும் மின்னணு முறையில் விற்பனை செய்யப்பட்டது.</p> <p>தற்பொழுது, இதுவரை இல்லாத அளவிற்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் பல்வேறு திட்டங்களில் விற்பனைக்கு உள்ள 7,659 அலகுகளில் 1) 21.08.2026 முதல் குலுக்கல் முறையில் 2,842 அலகுகளுக்கும், 2) 24.08.2026 முதல் முதலில் வருவோருக்கு முதலில் முன்னுரிமை அடிப்படையில் (FCFS) இடஒதுக்கீடு விகிதாச்சார முறையில் 2,184 அலகுகளுக்கும், 3) 25.08.2026 முதல் பொது ஒதுக்கீடு முறையில் (Common Pool) இட ஒதுக்கீடு விகிதாச்சாரமின்றி, முதலில் வருவோருக்கு முதலில் முன்னுரிமையில் 1,749 அலகுகளுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்காக Tamil Nadu Housing Board Online Portal-இல் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. </p><p>மேலும், இன்றைய தினத்தில் இருந்து 7 தினங்கள் கடந்து விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யலாம். பொதுமக்கள் பின்வருவனவற்றினை தயார் செய்ய மேற்படி கால இடைவெளியினை பயன்படுத்தி கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.</p><p>* இணையதளத்தில் உள்நுழைவு செய்வதற்கான பயனாளர் பெயர் மற்றும் L (User ID and Password)</p><p>* இணைய தளத்தில் உள்ள விவரங்கள் அடிப்படையில் அல்லது திட்டப் பகுதிக்கு நேரடியாகச் சென்று விருப்பமான அலகினை தெரிவு செய்து கொள்ளலாம்.</p><p>* இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ளலாம்.</p><p>* முன்பதிவு செய்வதற்கான கட்டண தொகையினை செலுத்துவதற்கு ஏதுவாக தங்களது வங்கி பணப் பரிவர்த்தனை வரம்பினை நிர்ணயம் செய்து கொள்ளலாம்.</p><p>* எந்தெந்த பிரிவில் விண்ணப்பிக்கப்படுகிறதோ, அதற்கான நிபந்தனைகளை கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும். </p><p>மேலும், விற்பனைக்கு தயாராக உள்ள 884 வணிக அலகுகள் (கடைகள் /பிரதான வணிக மனைகள் மற்றும் பொது உபயோக மனைகள்) e-Tender cum e-Auction முறையில் 25.08.2026 முதல் 24.09.2026 வரை மின் ஏலத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான தளம் Tamil Nadu e-Tenders Portal ஆகும். </p><p>தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் வெளிப்படையான இந்த செயல்பாடு, பொதுமக்களுக்கு வீடு மற்றும் மனைகளை வாங்குவதற்கான வாய்ப்புகளை பெருமளவில் அதிகரிப்பதுடன், வெளிப்படைத்தன்மையும் உறுதி செய்யப்படுகின்றது. மேலும் விற்பனைக்கு உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இவ்வாண்டில் விலை உயர்வு ஏதும் செய்யாமல் விற்பனை செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>மக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி, நிர்ணயிக்கப்பட்ட தேதிகளுக்குள் இணையவழி விற்பனைத் தளம் மூலம் விண்ணப்பித்து (அல்லது) முன்பதிவு செய்து, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் (TNHB) வீட்டுவசதி சேவையினை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சுங்கச்சாவடி அருகே வசிப்பவர்கள் கட்டணம் இன்றி பயணிக்கலாமா? நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/can-people-living-near-toll-booths-travel-without-paying-highways-authority-explains</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/can-people-living-near-toll-booths-travel-without-paying-highways-authority-explains#comments</comments><guid isPermaLink="false">c962bcd2-111a-4d17-8f45-c15faf2f3944</guid><pubDate>Wed, 12 Aug 2026 15:00:42 +0000</pubDate><atom:updated>2026-08-12T15:00:42.482Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Explanation,விளக்கம்,சுங்கச்சாவடி,ஆணையம்,நெடுஞ்சாலை,கட்டணம்,பயணம்,Travel,National Highways Authority,toll booth fare</media:keywords><media:content height="358" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/ohwm8aij/Untitled-2.jpg" width="630"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சுங்கச்சாவடிகளில் கட்டணம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/ohwm8aij/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF">சுங்கச்சாவடி</a>களின் அருகே வசிப்பவர்கள் தங்களின் அடையாள அட்டையைக் காண்பித்து இலவசமாகப் பயணிக்கலாம் என்று சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலுக்கு இந்தியத் தேசிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88">நெடுஞ்சாலை</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">ஆணையம்</a> (NHAI) மறுப்பு தெரிவித்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">விளக்கம் </a>அளித்துள்ளது. </p><p>நாடெங்கிலும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், சுங்கச்சாவடிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் அடையாள அட்டையை மட்டும் காட்டிவிட்டுக் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D">கட்டணமின்றி </a>வாகனங்களை இயக்கலாம் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. </p><h2>உள்ளூர் மாதாந்திர பாஸ்</h2><p>சுங்கச்சாவடிகளில் அடையாள அட்டையைக் காண்பித்து உள்ளூர் வாசிகள் முற்றிலும் கட்டணமின்றிப் பயணிக்கலாம் என்பது தவறான தகவலாகும். சுங்கச்சாவடியைச் சுற்றி 20 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் உள்ளூர் மக்களுக்குக் கட்டணச் சலுகைகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. இதற்காக 'உள்ளூர் மாதாந்திர பாஸ்' (Local Monthly Pass) முறை நடைமுறையில் உள்ளது. </p><p>குறிப்பிட்ட அந்தச் சுங்கச்சாவடிக்கு உரிய விதிகளின்படி முறைப்படி விண்ணப்பித்து இந்த மாதாந்திர பாஸை பெற்றுக் கொள்ள வேண்டும். எனவே, வெறுமனே அடையாள அட்டையைக் காட்டி இலவசமாகச் செல்ல முடியாது என்றும், சலுகையைப் பெற விரும்புவோர் அந்தந்தச் சுங்கச்சாவடியின் விதிமுறைகளைப் பின்பற்றி மாதாந்திர பாஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-tomorrow-11</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-tomorrow-11#comments</comments><guid isPermaLink="false">64976254-6195-4d07-b31f-602550812dd9</guid><pubDate>Wed, 12 Aug 2026 14:27:51 +0000</pubDate><atom:updated>2026-08-12T14:27:51.637Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,monthly maintenance work,தென்காசி,மாதாந்திர பராமரிப்பு பணி,Power outage tomorrow,நாளை மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/8ozxgkgj/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/8ozxgkgj/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p>திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF">தென்காசி</a> மாவட்டம், சங்கரன்கோவில் கோட்டம், கரிவலம்வந்தநல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை (13.8.2026, வியாழக்கிழமை) <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் காரணமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>இது தொடர்பாக சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>கரிவலம்வந்தநல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை (13.8.2026, வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்றைய தினத் கரிவலம்வந்தநல்லூர், பனையூர், குவளைக்கண்ணி, கோமதிமுத்துபுரம், இடையன்குளம், துரைச்சாமியாபுரம், எட்டிச்சேரி, சென்னிகுளம், லெட்சுமியாபுரம், காரிசாத்தான், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம் ஆகிய ஊர்களுக்கு மின்விநியோகம் தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>இன்ஸ்டாகிராம் மோகம்: மனைவியை ஆட்டோவில் கழுத்தை அறுத்து கொன்ற கணவர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/instagram-obsession-husband-arrested-for-killing-wife-by-slitting-her-throat-in-auto</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/instagram-obsession-husband-arrested-for-killing-wife-by-slitting-her-throat-in-auto#comments</comments><guid isPermaLink="false">b2b8c8c5-e672-42ca-93a6-0a50bbca316c</guid><pubDate>Wed, 12 Aug 2026 14:21:24 +0000</pubDate><atom:updated>2026-08-12T14:21:24.984Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,murder,இன்ஸ்டாகிராம்,Instagram,Auto,ஆட்டோ,problem,கணவன் மனைவி தகராறு,Husband wife,கழுத்து அறுத்து கொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/9ucpx92j/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மனைவியை ஆட்டோவில் கழுத்தை அறுத்து கொன்ற கணவர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/9ucpx92j/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a> அம்பத்தூரில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D">இன்ஸ்டாகிராமில்</a> ஆண் நண்பர்களுடன் பழகியதால் ஆத்திரமடைந்த கணவர், மனைவியை ஏமாற்றி அழைத்து, ஆட்டோவில் வைத்து கொடூரமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">கழுத்தை அறுத்து கொலை</a> செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. </p><h2>இளம்பெண் கொலை</h2><p>சென்னை அம்பத்தூரை அடுத்த கள்ளிக்குப்பம் பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென ஆட்டோவில் இருந்து பெண் ஒருவர் உடல் முழுவதும் வெட்டுக் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் வெளியே தூக்கி வீசப்பட்டார். பின்னர் அத்த ஆட்டோ அங்கிருந்து சென்றுவிட்டது. இதில் அந்த பெண் இறந்தார். அவர் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருந்தது தெரிந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சடையாண்டி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். </p><h2>ஆட்டோ டிரைவர்</h2><p>இதில் அம்பத்தூரைச் சேர்ந்த வைதேகி என்பவரை நடத்தை சந்தேகத்தில் கணவரே ஓடும் ஆட்டோவில் கழுத்தை அறுத்து கொன்று இருப்பது தெரிந்தது. இச்சம்பவம் குறித்த விபரம் பின்வருமாறு: </p><p>சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு இந்திராநகரை சேர்ந்த சின்னா, ஆட்டோ டிரைவர். இவரது மனைவி வைதேகி (வயது 24). இவரும் ஆட்டோ ஓட்டி வந்தார். இவர்களுக்கு திருமணம் ஆகி 2 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளது.</p><h2>இன்ஸ்டாகிராம் மோகத்தால் பிரச்சினை</h2><p>சின்னா வேலைக்குச் சென்ற பிறகு வைதேகி தினந்தோறும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் நேரத்தை செலவிட்டார். இதில் பல ஆண் நண்பர்களுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் நாள் முழுவதும் வைதேகி இன்ஸ்டாகிராமிலும், செல்போனில் ஆண் நண்பர்களுடன் பேசுவதிலும் மூழ்கினார். இதனை அறிந்த சின்னா மனைவி வைதேகியை பலமுறை கண்டித்தார். எனினும் வைதேகியின் இன்ஸ்டாகிராம் மோகம் குறையவில்லை. அப்படியே நீடித்து வந்தது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஏற்பட்ட மோதலினால் கோபம் அடைந்த வைதேகி திருமுல்லைவாயிலில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று அங்கேயே தங்கினார். அங்கேயும் இன்ஸ்டாகிராமில் பழகிய ஆண் நண்பர் ஒருவருடன் வைதேகி தொடர்ந்து பழக்கத்தில் இருந்தது சின்னாவிற்கு தெரியவந்தது. </p><h2>சமாதான பேச்சு</h2><p>இதையடுத்து நேற்று மாலை சின்னா, மனைவி வைதேகியிடம் செல்போனில் பேசினார். அப்போது "நாம் இருவரும் மீண்டும் ஒன்றாக குடும்பம் நடத்தலாம். நமக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும். இது தொடர்பாக நாம் பேசி தீர்த்து கொள்ளலாம்" என்று கூறி அம்பத்தூர் இந்திரா நகரில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்தார். </p><h2>கொலை திட்டம்</h2><p>கணவர் அழைத்ததால் வைதேகி தனக்கு நடக்கப்போகும் விபரீதத்தை அறியாமல் வீட்டுக்கு வந்தார். இருவரும் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் வைதேகி இன்ஸ்டாகிராம் பழக்கத்தை கைவிடுவதாக கூறவில்லை என்று தெரிகிறது. எனினும் சமாதானம் அடைந்ததாக சின்னா நாடகமாடினார். மேலும் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார். இதைத் தொடர்ந்து வைதேகியிடம் "நீ தான் நன்றாக ஆட்டோ ஓட்டுவாயே... நீ ஆட்டோ ஓட்டு, நான் பின்னால் அமர்ந்து சவாரி செய்கிறேன். எனக்கு ஆசையாக உள்ளது" என்று சின்னா கூறினார். </p><h2>மனைவி கழுத்தை அறுத்து கொலை</h2><p>இதை நம்பிய வைதேகி ஆட்டோ ஓட்ட, சின்னா பின்னால் அமர்ந்து கொண்டார். அவர்கள் அம்பத்தூரை அடுத்த கள்ளிக்குப்பத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்றபோது, திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வைதேகியின் கழுத்தை கொடூரமாக கொலை வெறியுடன் அறுத்தார். மேலும் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் வலி தாங்க முடியாமல் வைதேகி அலறியபடி ஆட்டோவை நிறுத்தினார். சிறிது நேரத்தில் வைதேகி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனே வைதேகியின் உடலை சாலையோரம் வீசிவிட்டு அதே ஆட்டோவில் சின்னா அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். </p><p>இச்சம்பவம் தொடர்பாக போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளில் உள்ள ஆட்டோவின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தி சின்னாவை தேடி வந்தனர். அப்போது மனைவியை கொலை செய்த சின்னா எந்தவித பதட்டமும் இல்லாமல் அம்பத்தூர் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள காமராஜர்புரத்தில் தனது நண்பர்களுடன் மது குடித்துக்கொண்டு இருந்தது தெரிந்தது.</p><h2>கணவர் கைது</h2><p>நள்ளிரவு 12 மணியளவில் போலீசார் விரைந்து சென்று சின்னாவை கைது செய்தனர். அவரிடம் போலீசார் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். </p><h2>ஆண் நண்பர்கள் யார்?</h2><p>மேலும் கொலை செய்யப்பட்ட வைதேகியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தினையும் ஆய்வு செய்து அவருடன் நெருங்கி பழகிய ஆண் நண்பர்கள் யார்? யார்? என்ற விபரங்களையும் சேகரித்து வருகிறார்கள். இன்ஸ்டாகிராமில் ஆண் நண்பர்களுடன் பழகியதால் மனைவியை ஏமாற்றி அழைத்து, ஆட்டோவில் வைத்து கொடூரமாக கணவர் கொலை செய்த சம்பவம் அம்பத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>அப்பாவி மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மூடி மறைக்க பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-tvk-government-trying-to-cover-up-the-truth-by-making-an-innocent-student-a-criminal-kanimozhi-question</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-tvk-government-trying-to-cover-up-the-truth-by-making-an-innocent-student-a-criminal-kanimozhi-question#comments</comments><guid isPermaLink="false">63bcdf73-a9ac-4c5e-8688-9b951f7f9405</guid><pubDate>Wed, 12 Aug 2026 14:11:22 +0000</pubDate><atom:updated>2026-08-12T14:11:22.990Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>குற்றவாளி,student,Question,கனிமொழி,மாணவர்,Criminal,கேள்வி,Kanimozhi Karunanidhi,உண்மை,தவெக அரசு,TVK Government</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/3k1i1ftz/33.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கனிமொழி]]></media:title><media:description type="html"><![CDATA[  திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/3k1i1ftz/33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அப்பாவி மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மூடி மறைக்கப் பார்க்கிறதா தவெக அரசு?" என்று <a href="https://www.dailythanthi.com/topic/kanimozhi">கனிமொழி</a> கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p> <h2>கோஷ்டி மோதல்</h2><p>கோவையில் தனியார் கல்லூரியில் படித்துவந்த முதலாம் ஆண்டு மாணவர், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D">போதைப் பொருள்</a> விற்பனை குறித்து தகவல் தெரிவித்ததற்காக போதை பழக்கத்தில் ஈடுபட்ட மாணவர்களால் அடித்து கொலை செய்யப்பட்டதாக சொல்லப்படும் நிலையில், அதை மாணவர்கள் இடையேயான கோஷ்டி மோதல் என்று திசைதிருப்பும் வகையில் வழக்கை முடித்து வைக்கப்பார்க்கிறது தவெக அரசு.</p> <h2>தவெக அரசு?</h2><p>கல்லூரி நிர்வாகமும் காவல்துறையும் போதைப் பொருள் விற்பனை குறித்து தகவல் அளித்த பின் பாதுகாக்க தவறியதால் தான், அம்மாணவர் கொலை செய்யப்பட்டதாக அவரது பெற்றோர் கூறும் நிலையில், பலியான அப்பாவி மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மூடி மறைக்க பார்க்கிறதா, தவெக அரசு?</p> <h2> நடவடிக்கை</h2><p>இந்த கொலையை செய்தவர்கள் மட்டுமின்றி, பாதுகாப்பு வழங்க தவறிய காவல்துறையினரையும் விசாரணைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சுதந்திர தின கொண்டாட்டம்; வார இறுதி நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/independence-day-celebrations-weekend-special-bus-services</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/independence-day-celebrations-weekend-special-bus-services#comments</comments><guid isPermaLink="false">5501f5d9-191e-4426-b453-01a18622a347</guid><pubDate>Wed, 12 Aug 2026 13:57:10 +0000</pubDate><atom:updated>2026-08-12T13:57:10.321Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு பஸ்கள்,special buses,Independence Day Celebration,சுதந்திர தின கொண்டாட்டம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/mqhryjvh/idcsa.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு பஸ்கள் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/mqhryjvh/idcsa.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>சுதந்திர தின கொண்டாட்டம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.</p><p>இந்திய நாடு, 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றது.  அந்த நாளை நினைவுகூரும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.</p>  <h2>சிறப்பு பஸ்கள் இயக்கம்</h2><p>இந்த நிலையில், சுதந்திர தின கொண்டாட்டம் மற்றும் வார இறுதி நாட்களை (ஆகஸ்டு 14, 15, 16) முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்களை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டு உள்ளது.</p><p>இதன்படி, சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரத்தில் இருந்து மதுரை, நெல்லை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஊர்களுக்கு ஆகஸ்டு 14 மற்றும் 15-ல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.</p><p>மேலும், சொந்த ஊர்களில் இருந்து திரும்ப ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க www.tnstc.in மூலம் முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்து உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக 3 அரசு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை - கோர்ட்டில் தமிழக அரசு பதில் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/disciplinary-action-against-three-government-officials-regarding-the-thoothukudi-firing-incident-tamil-nadu-governments-reply-in-court</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/disciplinary-action-against-three-government-officials-regarding-the-thoothukudi-firing-incident-tamil-nadu-governments-reply-in-court#comments</comments><guid isPermaLink="false">eddf8432-d039-469a-9c26-ffb8c3e69168</guid><pubDate>Wed, 12 Aug 2026 13:49:28 +0000</pubDate><atom:updated>2026-08-12T13:49:28.145Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt,தூத்துக்குடி துப்பாக்கி சூடு,Tuticorin firing incident</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/fplohlnp/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/fplohlnp/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூடக்கோறி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பொறுப்பானவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. </p><p>இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 3 அரசு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அரசின் நிலைபாடு என்ன?’ என்று கேள்வி எழுப்பினர். இது குறித்து பதிலளிக்க கால அவகாசம் தேவை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை வரும் 19-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. </p>]]></content:encoded></item><item><title>‘குவாரிகளுக்கு அனுமதி வழங்குவதற்கு முன் மாவட்ட கலெக்டர் கவனிக்க வேண்டும்’ - மதுரை ஐகோர்ட்டு கிளை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/district-collector-must-exercise-due-diligence-before-granting-permission-for-quarries-madurai-bench-of-the-madras-high-court</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/district-collector-must-exercise-due-diligence-before-granting-permission-for-quarries-madurai-bench-of-the-madras-high-court#comments</comments><guid isPermaLink="false">c963d2c7-91ee-4902-a08d-7e6d91b2ba77</guid><pubDate>Wed, 12 Aug 2026 13:33:13 +0000</pubDate><atom:updated>2026-08-12T13:33:13.719Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மதுரை ஐகோர்ட்டு கிளை,Madurai High Court</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/0yjd7vy0/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/0yjd7vy0/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>கனிமவள குவாரி அனுமதி தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், குவாரிகளுக்கு அனுமதி வழங்குவதற்கு முன் மாவட்ட கலெக்டர் கவனிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.</p><p>மேலும் நீர்நிலைகள் சேதமடையாமல் பராமரிக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் எனவும், குவாரி நடவடிக்கைகளால் நீர்நிலைகளுக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படக் கூடாது எனவும் தெரிவித்துள்ள நீதிபதிகள், தூர விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-the-day-after-tomorrow-7</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-the-day-after-tomorrow-7#comments</comments><guid isPermaLink="false">f3c3b944-05f5-4351-b05e-2a3fbfccc0f2</guid><pubDate>Wed, 12 Aug 2026 13:24:39 +0000</pubDate><atom:updated>2026-08-12T13:24:39.033Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மின் தடை,power cut</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/b2q79q45/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/b2q79q45/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>சென்னையில் 14.08.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><h2>மின் தடை</h2><p><strong>திருவொற்றியூர்</strong>: டி.எச். சாலை, ராஜா கடை, திருச்சினாங்குப்பம், கன்னிகோவில் தெரு, அப்பர்சாமி கோவில் தெரு, கணக்கர் தெரு, எல்லையம்மன் கோவில் தெரு, மார்கெட் லேன், எண்ணூர் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">எக்ஸ்பிரஸ் </a>சாலை, சாத்தாங்காடு பகுதி, நியூ தெரு, வசந்தா நகர், ஜான்ரவார் தெரு, ஐய்யப்பள்ளி தோட்டம், ஷேசாச்சல கிராமணி தெரு, திலகர் நகர், சின்னமேட்டுபாளையம், பெரியமேட்டுபாளையம், மேற்கு மற்றும் வடக்கு மாட வீதி, பிகேஎன் காலனி, வீரராகவன் தெரு, குமரன் நகர், கோமாதா நகர், பிபிடி சாலை.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இந்திய ராணுவம் சார்பில் சென்னை பரங்கிமலையில் சைனிக் நிலையம் திறப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sainik-centre-inaugurated-by-the-indian-army-at-parangimalai-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sainik-centre-inaugurated-by-the-indian-army-at-parangimalai-chennai#comments</comments><guid isPermaLink="false">02e7cd1f-0971-4c94-b434-9d97633fc65a</guid><pubDate>Wed, 12 Aug 2026 13:23:49 +0000</pubDate><atom:updated>2026-08-12T13:23:49.456Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,இந்திய ராணுவம்,indian army</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/zmtbinkj/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/zmtbinkj/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை பரங்கிமலையில் இந்திய ராணுவத்தின் சார்பில் சைனிக் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“சீருடை பணியாளர்கள், சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக, ஆகஸ்ட் 12-ந்தேதி(இன்று) சென்னையில் உள்ள பரங்கிமலையில் 'சைனிக் இன்ஸ்டிடியூட்' (Sainik Institute) கல்வி மையத்தை இந்திய ராணுவம் திறந்து வைத்துள்ளது. </p><p>ராணுவத்தின் 'தக்ஷின் பாரத் ஏரியா' (Dakshin Bharat Area) பிரிவின் கீழ் செயல்படும் இந்த மையம், ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோரக் காவல்படை மற்றும் சிவில் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த பணியாளர்கள் (பணியில் உள்ளவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள்) மற்றும் அவர்களது குடும்பத்தினர், முக்கியமான விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளை சென்னையின் மையத்தில் உள்ள இடத்தில், நியாயமான கட்டணத்தில் நடத்துவதற்கான வசதியான மற்றும் விசாலமான இடமாகத் திகழ்கிறது.</p><p>இந்த மையத்தில் குளிரூட்டப்பட்ட விசாலமான அரங்கம், திறந்தவெளி புல்வெளி மற்றும் ஒரு சிறிய ஓய்வறை ஆகியவை உள்ளன. மேலும், பாத்திரங்கள் கழுவும் வசதியுடன் கூடிய சுய-சேவை சமையலறை மற்றும் போதுமான வாகன நிறுத்துமிட வசதிகளும் இதில் அடங்கும்; இதனால் பல்வேறு அளவிலான கூட்டங்களை நடத்த இது ஏற்ற இடமாக அமைகிறது. இதனை 'தக்ஷின் பாரத் ஏரியா'வின் ராணுவ மகளிர் நலச் சங்கத்தின் (AWWA) மண்டலத் தலைவர் திறந்து வைத்தார்.</p><p>OTA-நங்கநல்லூர் மெட்ரோ நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த மையம், சென்னை மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து வரும் பணியாளர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு எளிதான போக்குவரத்து வசதியை அளிக்கிறது. இந்த மையம் 2026 ஆகஸ்ட் 15 முதல் செயல்பாட்டிற்கு வரும்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>அரசு மருத்துவமனைகளா? மனிதாபிமானமற்ற கட்டிடங்களா? - வானதி சீனிவாசன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-hospitals-or-inhumane-buildings-vanathi-srinivasan-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-hospitals-or-inhumane-buildings-vanathi-srinivasan-asks#comments</comments><guid isPermaLink="false">3b37040a-172a-4bc1-88b0-938be612bbb3</guid><pubDate>Wed, 12 Aug 2026 13:11:47 +0000</pubDate><atom:updated>2026-08-12T13:11:47.542Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,Government Hospital,அரசு மருத்துவமனை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/4hs6ei2o/vanathi.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/4hs6ei2o/vanathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஒரு சில ஊழியர்களின் மனிதாபிமானமற்ற செயல்களால் உயிர்காக்கும் அரசு மருத்துவமனைகளின் புனிதமும், நம்பிக்கையும் சீர்குலைவது வேதனையளிக்கிறது என பாஜக தேசிய மகளிரணி தலைவர் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வானதி சீனிவாசன்</a> தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>அவ்வளவு கீழ்த்தரமாகப் போய்விட்டார்களா?</h2><p>சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவோர்க்கு வழங்கப்படும் முட்டை உள்ளிட்ட உணவினை சுகாதாரமற்ற முறையிலும், மனிதாபிமானமின்றியும் வழங்கப்படுவதாகக் கூறும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவர்கள் என்றால் அவ்வளவு கீழ்த்தரமாகப் போய்விட்டார்களா?</p><p>ஏற்கனவே பல அரசு மருத்துவமனைகளில் எலிகள் தொல்லை மற்றும் சுகாதாரமற்ற சூழல் நிலவும் நிலையில் தற்போது சிகிச்சை பெறுவோர்களுக்கு  இதுபோன்று  உணவினை வழங்கும் போது அவர்கள் உடல் நோயுடன் மன அழுத்தமும் அதிரிக்கும் சூழல் ஏற்படும் அபாயம் உள்ளது.</p><h2>மனிதாபிமானமற்ற செயல்</h2><p>எத்தனை நவீன வசதிகள், கட்டமைப்புகளை ஏற்படுத்தினாலும் அதில் பணியாற்றும் ஊழியர்கள் சிகிச்சை பெறுவோரிடம் கனிவுடன் நடந்து கொண்டாலே அவர்களின் பாதி நோய்க்கு அதுவே மருந்து.  ஆனால் ஒரு சில ஊழியர்களின் இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயல்களால் உயிர்காக்கும் அரசு மருத்துவமனைகளின் புனிதமும், நம்பிக்கையும் சீர்குலைவது வேதனையளிக்கிறது.</p><p>எனவே அரசு மருத்துவமனைகளில் இதுபோன்று நடக்கும் அவலங்களைக் கருத்தில் கொண்டு சிகிச்சை பெறுவோரை கண்ணியமாகவும், கனிவுடனும் நடத்த மக்கள் நல்வாழ்வு &amp; சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஈஷாவின் இலவச யோகா வகுப்பு ‘உயிர்நோக்கம்’: மிஸ்டு கால் மூலம் பதிவு செய்யலாம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/free-online-yoga-class-uyirnokkam-by-isha-foundation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/free-online-yoga-class-uyirnokkam-by-isha-foundation#comments</comments><guid isPermaLink="false">84f3f8df-fc21-47e1-bfde-4f7c0175b647</guid><pubDate>Wed, 12 Aug 2026 13:02:37 +0000</pubDate><atom:updated>2026-08-12T13:02:37.627Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பதிவு,Isha,ஈஷா,Yoga Program,இலவசம்,Register,யோகா வகுப்புகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/xe2bhhd7/yoga.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஈஷா]]></media:title><media:description type="html"><![CDATA[ ஈஷாவின் இலவச யோகா வகுப்பு ‘உயிர்நோக்கம்’: மிஸ்டு கால் மூலம் பதிவு செய்யலாம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/xe2bhhd7/yoga.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>முதுகுதண்டு பலம், மன அமைதி பெற ஈஷாவின் இலவச <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE">யோகா வகுப்பு</a> ‘உயிர்நோக்கம்’: மிஸ்டு கால் மூலம் பதிவு செய்யலாம்!</p><h2>யோகா வகுப்பு</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%88%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88">ஈஷா அறக்கட்டளை </a>சார்பில், தமிழ் மக்களுக்காகவே சத்குருவால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 'உயிர்நோக்கம்' எனும் 3 நாள் இலவச ஆன்லைன் யோகா வகுப்பு வரும் ஆகஸ்ட் 21 முதல் 23 வரை நடைபெறுகிறது.</p><h2>மிஸ்டு கால்</h2><p> இந்த இலவச யோகா வகுப்பில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் ‘83000 99555’ என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்து உடனடியாகப் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சியில் யோக நமஸ்காரம், நாடி சுத்தி மற்றும் ஈஷா கிரியா எனும் 3 யோகப் பயிற்சிகள் கற்றுத்தரப்படுகின்றன. 3 நாட்கள் நடைபெறும் இந்த ஆன்லைன் யோக வகுப்பில், தினமும் 2 மணி நேரம் பங்கேற்றால் போதுமானது.</p><h2>சத்குரு</h2><p>சத்குருவால் வடிவமைக்கப்பட்டுள்ள இப்பயிற்சி நமது உடல், மனம், உணர்ச்சிகள், சக்திகள் மற்றும் நமக்குள் இருக்கும் பஞ்ச பூதங்களை நமது நல்வாழ்வை நோக்கி செயல்பட உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.</p><h2>யோக நமஸ்காரம்</h2><p>இப்பயிற்சியில் கற்றுத்தரப்படும் 'யோக நமஸ்காரம்' முழு உடலுக்கும் பலவிதமான நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக முதுகுதண்டை பாதுகாத்து புத்துணர்வாக்குகிறது. மேலும், முதுகுத்தண்டின் அடிப்பகுதியை சுறுசுறுப்பாகவும் சீராகவும் செயல்பட வைப்பதுடன், வயதாகும் வேகத்தை குறைத்து உடலை இளமையுடன் வைக்கவும் உதவுகிறது. </p><h2>'நாடி சுத்தி' பயிற்சி</h2><p>'நாடி சுத்தி' பயிற்சி நம் உடலில் பிராண சக்தி பாயும் பாதைகளான நாடிகளைத் தூய்மைப்படுத்துகிறது. இதன்மூலம் சிறந்த உடலமைப்பையும் உளவியல் நல்வாழ்வையும் பெற முடியும். மேலும் 'ஈஷா கிரியா' எனும் 12 நிமிட தியானம் ஆரோக்கியம், உயிரோட்டம், அமைதி மற்றும் நல்வாழ்வை கொண்டுவர உதவும் என்பதோடு, நவீன வாழ்க்கையின் பரபரப்பை சமாளிக்க இது ஒரு சக்திவாய்ந்த கருவியாகும்.</p><h2>வாழ்க்கை</h2><p>இப்பயிற்சி குறித்து சத்குரு கூறுகையில், "உயிர்நோக்கம் என்றால் உயிரின் நோக்கத்திற்கு நாம் மாறுவது. உங்கள் எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளிலிருந்து, உங்களுள் உள்ள உயிரின் நோக்கத்திற்கு நீங்கள் மாறினால், நீங்கள்தான் உங்கள் வாழ்க்கையின் இயக்குனராக இருப்பீர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.</p> <h2>மிஸ்டு கால்</h2><p>தமிழகத்தில் உள்ள அனைவரும் தங்களின் வீடுகளிலிருந்தே ஆன்லைனில் பங்கேற்றுப் பயன்பெறும் வகையில் இந்த வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. விருப்பமுள்ளவர்கள் 83000 99555 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் உடனடியாகப் பதிவு செய்து கொள்ளலாம். மிஸ்டு கால் கொடுத்தவுடன், அடுத்த கட்ட சேர்க்கை வழிகாட்டுதல்கள் தொலைபேசிக்கு அனுப்பி வைக்கப்படும். </p><h2>இணையதள முகவரி</h2><p>மேலும், isha.co/uyirnokkam என்ற இணையதள முகவரி மூலமாகவும் நேரடியாகப் பதிவு செய்து இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சரின் உத்தரவை மீறி செயல்பட்ட தவெக நிர்வாகி!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-functionary-acted-in-defiance-of-the-chief-ministers-order</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-functionary-acted-in-defiance-of-the-chief-ministers-order#comments</comments><guid isPermaLink="false">49954be8-317f-45a4-940f-5815e97aab6d</guid><pubDate>Wed, 12 Aug 2026 12:42:50 +0000</pubDate><atom:updated>2026-08-12T12:42:50.912Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Virudhunagar,விருதுநகர்,தவெக நிர்வாகி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/lqpzv517/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/lqpzv517/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர்,</p><p>கடந்த மாதம் பள்ளி மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் தவெக உறுப்பினர்கள் தேவையில்லாமல் ஆய்வு மேற்கொள்ளக்கூடாது. அத்துமீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல் அமைச்சர் சி.ஜோசப் விஜய் உத்தரவிட்டிருந்தார்.</p><h2>உத்தரவை மீறிய நிர்வாகி</h2><p>இந்த நிலையில், தவெக நிர்வாகியான விக்னேஷ்குமார் இன்று (புதன்கிழமை) விருதுநகர் மற்றும் சிவகாசி பகுதியிலுள்ள மாநகராட்சி நூலகங்கள் மற்றும் அறிவுசார் மையங்களில் ஆய்வினை மேற்கொண்டார். பின்னர் அங்குள்ள பயிற்சியாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகளிடம் குறைகளை கேட்டார். இது குறித்த வீடியோ பாடலுடன் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.</p><h2>நடவடிக்கை எடுக்கப்படுமா?</h2><p>கட்சித் தலைமையின் அறிவுறுத்தலுக்கு மாறாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், இதுதொடர்பாக கட்சி நிர்வாகம் சார்பில் அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘காவிரி பள்ளத்தாக்கு அதிகார அமைப்பு நிறுவப்படவேண்டும்’ - பழ.நெடுமாறன் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-cauvery-valley-authority-must-be-established-pazha-nedumaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-cauvery-valley-authority-must-be-established-pazha-nedumaran#comments</comments><guid isPermaLink="false">ba1c8780-3140-4fe8-a1f6-39b8b0b0c4c9</guid><pubDate>Wed, 12 Aug 2026 12:29:21 +0000</pubDate><atom:updated>2026-08-12T12:29:21.946Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Cauvery,காவிரி,பழ.நெடுமாறன்,Pazha.Nedumaran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/ugxj8mgi/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/ugxj8mgi/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் தில்லியில் நடைபெற்று, அதையடுத்து காவிரியிலிருந்து தமிழகத்திற்கு “கர்நாடகம் நாளொன்றுக்கு 1 டி.எம்.சி. வீதம் 15 நாட்களுக்கு 15 டி.எம்.சி. நீரைத் திறந்துவிட ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைத்தது. இதைத் தொடர்ந்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கூடி அதை உறுதி செய்து அவ்வாறே 15 டி.எம்.சி. நீரைத் தமிழகத்திற்குத் திறந்துவிடுமாறு கர்நாடகத்திற்கு ஆணைப் பிறப்பித்தது.</p><p>ஏற்கெனவே சூலை 28 ஆம் நாள் கூடிய காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டத்தில் தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு நாளொன்றுக்கு 3,500 கன அடி வீதம் மொத்தம் 4 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்துவிட கர்நாடகத்திற்கு ஆணையிட்டது. அந்த ஆணையை கர்நாடகம் நிறைவேற்ற மறுத்தது.</p><p>இப்போது 15 டி.எம்.சி. தண்ணீரை அளிக்குமாறு காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை “அணைகளில் தண்ணீர் இருப்பை கருத்தில் கொண்டு தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக முடிவெடுக்கப்படும்” என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்திருக்கிறார். மேலும், “கர்நாடக விவசாயிகளைப் பாதுகாக்கவே மக்கள் எங்களை ஆட்சி அதிகாரத்தில் அமரவைத்துள்ளனர். எந்த காரணத்திற்காகவும் எந்தவொரு விவசாயிக்கும் இன்னல் நேரிட நாங்கள் விடமாட்டோம்” என அறிவித்திருப்பதின் மூலம் தமிழகத்திற்குத் தண்ணீர் தர முன்வருவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.</p><p>1974 ஆம் ஆண்டு நவம்பர் இறுதியில் டெல்லியில் தமிழக முதல்-அமைச்சர் மு.கருணாநிதி, கர்நாடக முதல்வர் தேவராஜ் அர்சு, கேரள முதல்வர் அச்சுதமேனன் ஆகிய மூன்றுபேரும் கூடிப் பேசி காவிரிப் பள்ளத்தாக்கு அதிகார அமைப்பு ஏற்படுத்தும் யோசனையை ஒப்புக்கொண்டார்கள். ஆனால், அந்த அமைப்பு அமைக்கப்படுவதற்கு முன்னரே இந்திய அரசு தானே இப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதாக கூறியதால், முதல்வர்களிடையே கொள்கையளவு உடன்பாட்டுடன் இந்தப்பேச்சுகள் நின்றன. அதன்பிறகு இந்திய அரசு காலம் கடத்தியதே தவிர, காவிரிப் பிரச்சனையைத் தீர்க்க முன்வரவில்லை. தொடர்ந்து வந்த பிரதமர்களும் அவ்வாறே செய்தனர். பிரதமராக பி.வி. நரசிம்மராவ் இருந்தபோது, மூன்று மாநில முதல்வர்களும் ஒப்புக்கொண்டபடி, காவிரிப் பள்ளத்தாக்கு அதிகார அமைப்பை அமைக்காமல் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என எந்த அதிகாரமும் இல்லாத அமைப்புகளை நிறுவி பிரச்சனையை நீர்த்துப்போக வைத்தார்.</p><p>காவிரி பள்ளத்தாக்கு அதிகார அமைப்பு அமைக்கப்பட்டால் அதனுடைய முழு கட்டுப்பாட்டில் காவிரி தொடர்பாக இந்த மூன்று மாநிலங்களிலும் உள்ள அணைகள் பாசனக் கால்வாய்கள் அனைத்தும் அதன் அதிகார வரம்பிற்குள் சென்றுவிடும். எந்த மாநிலத்திற்கும் அணைகளின் நீரைத் திறந்துவிடுவதோ அல்லது மூடுவதோ அனைத்தும் அதனுடைய கட்டுப்பாட்டில் இருக்கும். அணையில் நீர் இல்லை நாங்கள் என்ன செய்வது? என்று கர்நாடகம் நாடகம் ஆடுவதுபோன்ற செயல்கள் நடைபெற முடியாது. அனைத்து அதிகாரமும் படைத்த அமைப்பாக அது விளங்கும்.</p><p>காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை கர்நாடகம் மதிக்க மறுக்கும்போது, யாரும் எதுவும் செய்ய முடியவில்லை. தமிழகம் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டின் கதவைத் தட்டவேண்டிய நிலைமையில்தான் இருக்கிறது. காவிரிப் பள்ளத்தாக்கு அதிகார அமைப்பை நிறுவினாலொழிய காவிரிப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது. தமிழகத்திற்கு நியாயம் கிடைக்கும். இல்லாவிட்டால் அதுவரை தமிழகம் காவிரியில் பெருகிவரும் வெள்ள நீரைத் தவிர தனக்கு உரிமையான நீரை உரிய காலத்தில் பெறவே முடியாது.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>3 மாதத்தில் திருமணம்: பைக்கில் தந்தையுடன் சென்ற இளம்பெண் லாரி மோதி பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-to-marry-in-3-months-dies-after-lorry-hits-bike</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-to-marry-in-3-months-dies-after-lorry-hits-bike#comments</comments><guid isPermaLink="false">1db86aca-d252-4058-af61-77a93bb3219f</guid><pubDate>Wed, 12 Aug 2026 12:28:09 +0000</pubDate><atom:updated>2026-08-12T12:28:09.509Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமணம்,இளம்பெண்,Marriage,bike,பைக்,லாரி,Father,தந்தை,tipper lorry,மோதி பலி,young woman killed</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/guttuhbv/bride-death.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ இளம்பெண் லாரி மோதி பலி]]></media:title><media:description type="html"><![CDATA[ 3 மாதத்தில் திருமணம் நடைபெற இருந்த இளம்பெண், தந்தையுடன் பைக்கில் சென்றபோது லாரி மோதிய விபத்தில் பலியானார். ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/guttuhbv/bride-death.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவொற்றியூர், </p><p>3 மாதத்தில் திருமணம் நடைபெற இருந்த இளம்பெண், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88">தந்தையுடன்</a> பைக்கில் சென்றபோது லாரி மோதிய விபத்தில் பலியானார். </p><h2> திருமண ஏற்பாடு</h2><p>சென்னை எர்ணாவூர் ராமகிருஷ்ணா நகரை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகள் திருநிறைச்செல்வி. இவருக்கு ஏற்கனவே திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. அடுத்த 3 மாதத்தில் திருமணம் நடைபெற இருந்தது. </p> <h2>ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி</h2><p>இந்த நிலையில், மகேந்திரனுக்கு உடல் நலம் சரியில்லாததால், இன்று மகள் திருநிறைச்செல்வியை பைக்கில் அழைத்துக்கொண்டு, ராயபுரத்தில் உள்ள ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.</p><h2>லாரி பைக் மீது மோதியது</h2><p>பின்னர், திருவொற்றியூர் - எண்ணூர் விரைவுச் சாலையில் பைக்கில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். கடற்கரை ஒட்டிய இந்த சாலையில் பைக் வந்தபோது, எல்லையம்மன் கோவில் அருகே, அதிவேகமாக வந்த சரக்கு<a href="https://www.dailythanthi.com/topic/lorry-wheel"> லாரி பைக்</a> மீது கண் இமைக்கும் நேரத்தில் வேகமாக மோதியது. இதில், இருவரும் கீழே விழுந்தனர். பைக்கில் பின்புறமாக இருந்த திருநிறைச்செல்வியின் தலையில் லாரியின் டயர் ஏறியது. சம்பவ இடத்திலேயே அவர் தலை தசுங்கி இறந்தார். </p><h2>தந்தை கதறி அழுதார்</h2><p>மகேந்திரன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். தனது கண்முன்னே மகள் இறந்து கிடப்பதை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார். அது பார்ப்போரை கண்கலங்க செய்தது. விபத்து குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு திருவொற்றியூர் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்தனர். திருநிறைச்செல்வியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய லாரி டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர். </p> <h2>திருமண கணவு</h2><p>உயிரிழந்த திருநிறைச்செல்விக்கு அடுத்த வாரம் திருமண நிச்சயதார்த்தத்திற்கும், 3 மாதம் கழித்து திருமணத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். திருமணக் கனவோடு இருந்த இளம்பெண், இப்படி தந்தை கண்முன்னே விபத்தில் சிக்கி பலியான சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.</p> ]]></content:encoded></item><item><title>
எம்.ஜி.ஆர். பாடலை பாடி முதல்-அமைச்சர் விஜய்யை புகழ்ந்த நிதி அமைச்சர் மரிய வில்சன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/finance-minister-maria-wilson-praised-chief-minister-vijay-by-singing-an-mgr-song</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/finance-minister-maria-wilson-praised-chief-minister-vijay-by-singing-an-mgr-song#comments</comments><guid isPermaLink="false">2d963799-7f2c-45a2-92fc-c7165381b737</guid><pubDate>Wed, 12 Aug 2026 11:34:04 +0000</pubDate><atom:updated>2026-08-12T11:34:04.793Z</atom:updated><atom:author><atom:name>Irudaya Raja</atom:name><atom:uri>/api/author/2562829</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,Tamil Nadu Assembly,தமிழக சட்டசபை,எம்ஜிஆர்,பட்ஜெட் கூட்டத்தொடர்,maria wilson,குட்டிக்கதை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/8c02jho3/mariya-vilsan.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய் - மரிய வில்சன்]]></media:title><media:description type="html"><![CDATA[ சட்டசபையில் நிதி அமைச்சர் மரிய வில்சன், முதல்-அமைச்சரை பாராட்டி பேசினார்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/8c02jho3/mariya-vilsan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p> சென்னை,</p><p>பாடல், கவிதை, குட்டிக்கதையை மேற்கோள் காட்டி முதல்-அமைச்சர் விஜய்யை நிதி அமைச்சர் மரிய வில்சன் பாராட்டி பேசினார்.</p><p>தமிழக சட்டசபையில் இன்று<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D"> பட்ஜெட் மீதான விவாதம் </a>நடைபெற்றது. இதில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்டசபையில் தனித் தீர்மானத்தை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a> முன்மொழிந்தார்.</p><h2><strong>குட்டிக் கதை</strong></h2><p>இந்த விவாதத்தில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D">அமைச்சர் மரிய வில்சன்</a> பேசுகையில், குட்டிக்கதை கூறினார். ‘இன்று ஒரு கதை சொல்லி ஆரம்ப்பிக்க போகிறேன், தலைவர் அவர்களைப்போல் குட்டிக்கதை  வாராது என்று கதையை கூற ஆரம்பித்தார்.. </p><p>“அடுத்து யார் தேசத்தை ஆள போகிறார்” என்கிற போட்டியை ஒரு பெரியவர் வைத்தார். அதில் கலந்துக்கொள்ள இளைஞர்கள் வந்தனர். அந்த பெரியவர் அனைவருக்கும் விதை ஒன்று கொடுத்து, மூன்று மாதம் கழித்து இந்த விதையை நன்கு முளைக்க வைத்து வளர்த்து வரும்படி அனுப்பி வைத்துள்ளார். மூன்று மாதம் கழித்து, அந்த விதையை முளைக்க வைத்து வளர்த்து அனைவரும் கொண்டு வந்தனர். அதில் ஒருவர் மட்டும் அந்த விதையை அப்டியே கொண்டு வந்தார். பெரியவர் உடனே இவர் தான் இந்த போட்டியின் வெற்றியாளர் என்று அறிவித்தார். </p><p>அனைவரும் ஏன் என்று கேள்வி எழுப்பவே, நான் கொடுத்த விதை வேகவைத்தது, அது ஒருநாளும் முளைக்காது. வெற்றி அடையும் என்கிற நோக்கில் குறுக்கு வழியில் செல்லாமல் அந்த விதையை அவ்வாறே கொண்டு வந்ததால் அவரே வெற்றியாளர் என்றார். வெற்றிபெற பொய் சொல்லாமல் குறுக்கு வழியை கடைப்பிடிக்காமல் நேர்மையாக இருந்தால் எல்லாம் இங்கு சாத்தியம் என்பதற்கு எங்க தலைவரே (முதல் அமைச்சர் - விஜய்) சாட்சி’ என்று நிதி அமைச்சர் தனது குட்டிக்கதையை முடித்தார்.</p><h2>கவிதை</h2><p>அதன்பின் தொடர்ந்து பேசிய அவர், முதல் அமைச்சர் அவர்கள் எப்பவும் <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D">எம்ஜிஆர்</a>-ஐ  மறுபதிப்பு செய்வார், அவ்வாறு அவர் ஸ்ரீபெரும்பதூரில்- அவரே சொல்லி இருப்பார். அதை இங்கே ஒரு கவிதையாக (qoute) சொல்கிறேன், உங்கள் அனுமதியோடு, என்று சபாநாயகரிடம் அனுமதி கேட்டு பேச்சை தொடர்ந்தார்.</p><p>“மர்மயோகி என்ற படத்தில் எம்ஜிஆரின் பெயர் கரிகாலன், அதில் தலைவர் அழகாக சொல்லியிருப்பார். குறிவைத்தால் தவற மாட்டேன், தவறுமானால் குறியே வைக்கமாட்டேன்” அதை திரும்பவும் நிகழ்த்தி சாதித்து காட்டியது நமது தலைவர் தான், என்று கவிதையை முடித்தார்.</p><h2><strong>பாட்டு</strong></h2><p>ஒரு கதை சொல்லியாச்சு, ஒரு கவிதை சொல்லியாச்சி, இன்னும் ஒரு பாட்டு மட்டும் பாடிக்கொள்கிறேன், புரட்சி தலைவர் நினைவாக எதிர்க்கட்சியை பார்த்து, என்று கூறி அந்த பாடலை பாடினார். </p><p> “கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்,</p><p>    கடமை இருந்தால் வீரன் ஆகலாம்,</p><p>    பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்,</p><p>    மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்”</p><p>என்று முதல் அமைச்சர் விஜய்-ஐ கைகாட்டி பாடி முடித்தார். </p> <p>இந்த பாராட்டு மழையில் நனைந்த முதல்-அமைச்சர் தலையை குனிந்தவாறு சிரித்தார். </p><p>அதன்பின் தொடர்ந்து பேசிய மரிய வில்சன், “எங்கள் அண்ணன், தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களை பற்றி எம்ஜிஆர் பாடியதற்கு ரொம்ப சந்தோஷம், அப்பவே சொல்லிட்டாருனு நினைக்கிறேன்” என்று கூறி தனது உரையை முடித்தார். அப்போது தவெக உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், சமூக விரோதிகளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை - 1577 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-drive-against-history-sheeters-anti-socials-1577-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-drive-against-history-sheeters-anti-socials-1577-arrested#comments</comments><guid isPermaLink="false">137b9dd9-5f80-424f-a755-c26f3f27e233</guid><pubDate>Wed, 12 Aug 2026 11:29:53 +0000</pubDate><atom:updated>2026-08-12T11:29:53.200Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrested,criminals,சமூக விரோதிகள்,சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள்,சிறப்பு நடவடிக்கை,Special operation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/0l2cxyy4/dig.jpg" width="752"><media:title type="html"><![CDATA[  மகேஷ் குமார் அகர்வால்]]></media:title><media:description type="html"><![CDATA[ சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், சமூக விரோதிகளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/0l2cxyy4/dig.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சரித்திரப் பதிவேடு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">குற்றவாளிகள்</a>, சமூக விரோதிகளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கையில் 1577 பேர் கைது. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><h2>தடுப்பு காவல் நடவடிக்கை</h2><p>சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில், முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு காவல் <a href="https://www.dailythanthi.com/topic/action-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">நடவடிக்கையின்</a> ஒரு பகுதியாக, காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் குற்றகுணத்தார் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளிகளுக்கு எதிராக தீவிர அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.</p><h2>1577 குற்றவாளிகள் கைது</h2><p>கடந்த 29.07.2026 முதல் 11.08.2026 வரை. சரித்திரப் பதிவேடு ரவுடிகள் மற்றும் குற்றகுணத்தார் மீது மாநிலம் முழுவதும் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நடவடிக்கைகளின் போது 52,279 சரித்திரப் பதிவேடு ரவுடிகள் மற்றும் குற்றகுணத்தார் சோதனை செய்யப்பட்டனர். அவர்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 1577 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.</p> <h2>சிறப்பு நடவடிக்கை</h2><p>பிணையில் வெளிவர முடியாத பிடியாணைகள் நிறைவேற்றும் சிறப்பு நடவடிக்கையில் 29.07.2026 முதல் 11.08.2026 வரை மொத்தம் 3288 பிணையில் வெளிவர முடியாத பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணைகள் நிறைவேற்றுதல் மற்றும் தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்வதற்கான தீவிர முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><h2>வழக்கமான சோதனைகள்</h2><p>மாநிலம் முழுவதும் உள்ள மாநகர காவல் ஆணையாளர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் சிறப்பு பிரிவு அதிகாரிகள் ஆகியோருக்கு. சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், குற்றகுணத்தார், தொடர்குற்றவாளிகள், மற்றும் சமூக விரோதிகள் மீது தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளவும். வழக்கமான சோதனைகள். </p><h2>கண்காணிப்பு பணி</h2><p>தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தீவிரமான கண்காணிப்புகள் மூலம் குற்ற செயல்களை தடுக்கவும். சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் கண்காணிப்பு பணிக்கான அமலாக்க ஒருங்கிணைப்பை மேம்படுத்தியுள்ளதுடன். தடுப்பு காவல் நடவடிக்கைகளை வலுப்படுத்தி, பிடியாணைகள் நிறைவேற்றுதலை அதிகரித்து. </p> <h2>அமலாக்க நடவடிக்கை</h2><p>தொடர் குற்றவாளிகள் மற்றும் சட்டம்-ஒழுங்கிற்கு அச்சுறுத்தலாக உள்ளவர்களுக்கு எதிராக இலக்கு வைத்து நடவடிக்கை எடுக்க உதவியுள்ளன. இதன் மூலம் மாநிலம் முழுவதும் பொது ஒழுங்கை உயர்தரத்தில் பராமரிப்பதற்கும். பொதுமக்கள். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நடவடிக்கைகள் மேலும் வலுப்பெற்றுள்ளன. சட்ட அமலாக்க நடவடிக்கைகள் மேலும் வலுப்பெற்றுள்ளன.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-tomorrow-15</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-tomorrow-15#comments</comments><guid isPermaLink="false">68fb7d39-c3d1-4725-9f34-782680029c70</guid><pubDate>Wed, 12 Aug 2026 11:07:54 +0000</pubDate><atom:updated>2026-08-12T11:07:54.386Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,monthly maintenance work,மாதாந்திர பராமரிப்பு பணி,Power outage tomorrow,நாளை மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/fj7npu0a/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/fj7npu0a/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மின்பகிர்மான வட்டம், திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம், வள்ளியூர் கோட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் நாளை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் நடைபெற உள்ளதால் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம்</h2><p>திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர்  ரவி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>கொக்கிரகுளம் துணை மின் நிலையத்தில் நாளை (13.8.2026, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும். </p><h2>காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை</h2><p>திருநெல்வேலி சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், வண்ணார்பேட்டை வடக்கு மற்றும் தெற்கு புறவழிச் சாலை, வண்ணாரப்பேட்டை முழுவதும், இளங்கோ நகர், பரணி நகர், திருநெல்வேலி சந்திப்பு முதல் மேரி சார்ஜன்ட் பள்ளி வரையிலான திருவனந்தபுரம் சாலை,  பாளை புதுப்பேட்டை தெரு,  சுப்பிரமணியபுரம்  மற்றும் மாருதி நகர் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p><h2>வள்ளியூர் கோட்டம்</h2><p>வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன் அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>திசையன்விளை, களக்காடு மற்றும் கோட்டைகருங்குளம் துணை மின் நிலையங்களில் நாளை (13.8.2026, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் கீழே குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது. </p><h2>காலை 9 மணி முதல் மதியம 2 மணி வரை</h2><p>திசையன்விளை, மகாதேவன்குளம், கரைச்சுத்துஉவரி, கூட்டப்பனை, கூடுதாலை, குட்டம், விமனங்குடி. </p><p>களக்காடு நகரம், பெருமாள்குளம், சாலைபுதூர், SN பள்ளிவாசல், மாவடி, டோனாவூர், புலியூர் குறிச்சி, கோதைசேரி, வடமலைசமுத்திரம், கருவேலன்குளம், கோவிலம்மாள்புரம், வடுகச்சிமதில். </p><p>கோட்டைகருங்குளம், குமாரபுரம், வாழை தோட்டம், சீலாத்திகுளம், முடவன்குளம், தெற்கு கள்ளிகுளம், சமூக ரெங்கபுரம், திருவெம்பலாபுரம் ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம 2 மணி வரை மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் தோகை விரித்தாடிய மயில்: பக்தர்கள் பரவசம்! </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/peacock-flaunts-its-beauty-in-the-tiruchendur-temple-complex-devotees-are-ecstatic</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/peacock-flaunts-its-beauty-in-the-tiruchendur-temple-complex-devotees-are-ecstatic#comments</comments><guid isPermaLink="false">af5ea613-0fff-4cf5-bd36-fae054ebf282</guid><pubDate>Wed, 12 Aug 2026 11:04:22 +0000</pubDate><atom:updated>2026-08-12T11:04:22.807Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Devotees,Tiruchendur temple,திருச்செந்தூர் கோவில்,பக்தர்கள் தரிசனம்,முருகப்பெருமான்,peacock</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/msed2ks4/7.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் தோகை விரித்தாடிய மயில் ]]></media:title><media:description type="html"><![CDATA[ சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் மயில் ஒன்று தோகை விரித்தாடியது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/msed2ks4/7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் அருள்மிகு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">சுப்பிரமணிய சுவாமி கோவில்</a> வளாகத்தில் மயில் ஒன்று தோகை விரித்தாடிய காட்சி பக்தர்களைப் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.</p><h2>திருச்செந்தூர் கோவில்- மயில் நடனம்</h2><p>முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">திருச்செந்தூர் </a>கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இன்று (புதன்கிழமை) கோவில் வளாகப் பகுதிக்குள் நுழைந்த மயில் ஒன்று, திடீரென தனது வண்ணமயமான தோகைகளை விரித்து கம்பீரமாக ஆடத் தொடங்கியது.</p><h2>பக்தர்கள் மகிழ்ச்சி</h2><p>முருகனின் வாகனமான மயிலே நேரில் வந்து ஆடுவது போல் இருந்த இந்த அழகிய காட்சியைக் கண்டு அங்கிருந்த பக்தர்கள் நெகிழ்ந்து போயினர். பலர் இந்த அதிசய நிகழ்வை தங்களது செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்களாக எடுத்து மகிழ்ந்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களிலும் வேகமாகப் பரவி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>திண்டுக்கல்: ஆசிரியரை தாக்கிய தவெக பிரமுகர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dindigul-tvk-functionary-arrested-for-attacking-teacher</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dindigul-tvk-functionary-arrested-for-attacking-teacher#comments</comments><guid isPermaLink="false">debd5be2-d2fe-4b07-8f4d-7a50e47688f2</guid><pubDate>Wed, 12 Aug 2026 11:01:52 +0000</pubDate><atom:updated>2026-08-12T11:01:52.397Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திண்டுக்கல்,கைது,arrest,ஆசிரியர்,Government School,police enquiry,தவெக தொண்டர்</media:keywords><media:content height="542" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/import/h-upload/2022/12/31/1067580-arrest-01.webp" width="794"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆசிரியரை தாக்கிய தவெக பிரமுகர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/import/h-upload/2022/12/31/1067580-arrest-01.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">திண்டுக்கல்</a> அருகே மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அரசுப் பள்ளி ஆசிரியரை மதுபோதையில் தாக்கி, அவரது மொபைல் போனைப் பறித்த தமிழக வெற்றிக் கழக (தவெக) பிரமுகரைத் தாலுகா போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.</p><h2>கணக்கெடுப்பு பணி</h2><p>திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை நாடுகண்டனூர் ஆரம்பப்பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருபவர் ஜெயலட்சுமி (வயது 40). அவர் தற்போது அரசு உத்தரவுப்படி பாடியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டு வந்தார். அதன்படி, பாடியூர் லட்சுமணபட்டி பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று விபரங்களைச் சேகரித்துக் கொண்டிருந்தார்.</p><h2>வாக்குவாதம் -தாக்குதல்</h2><p>அப்போது அதே பகுதியைச் சேர்ந்த தவெக பிரமுகரான பாலமுருகன் (வயது 37) என்பவர் மதுபோதையில் அங்கு வந்தார். கணக்கெடுப்பு நடத்திக் கொண்டிருந்த ஆசிரியரிடம், "யாரிடம் கேட்டு விபரம் சேகரிக்கிறாய்?" என வம்புக்கு இழுத்தார். ஆசிரியர் ஜெயலட்சுமி தனது அரசு அடையாள அட்டையைக் காண்பித்து அமைதியாகப் பதிலளித்தார்.</p><p>எனினும் ஆத்திரமடைந்த பாலமுருகன், அவரை ஆபாச வார்த்தைகளால் திட்டி, அவர் கையில் வைத்திருந்த அரசுப் பணிக்குரிய செல்போனைப் பறித்து பலவந்தமாக தாக்கினார். இதில் காயமடைந்த அவர் அலறியடி கூச்சலிடவே, அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டனர்.</p><h2>தவெக பிரமுகர் கைது</h2><p>இச்சம்பவத்தில் காயமடைந்த ஆசிரியை ஜெயலட்சுமி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.</p><p>புகாரின் பேரில் உடனடியாகச் செயல்பட்ட தாலுகா இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார், ஆசிரியை மீது தாக்குதல் நடத்திய பாலமுருகனை விரைந்து சென்று அதிரடியாகக் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்தனர். மேலும் அவரிடமிருந்த ஆசிரியையின் மொபைல் போனும் பறிமுதல் செய்யப்பட்டது. அரசுப் பணியில் இருந்த பெண் ஊழியர் மீது மதுபோதையில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவி உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/college-student-dies-of-electrocution-near-tambaram</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/college-student-dies-of-electrocution-near-tambaram#comments</comments><guid isPermaLink="false">3c8899a8-4143-4458-8a1e-db4f5b1b0885</guid><pubDate>Wed, 12 Aug 2026 10:55:44 +0000</pubDate><atom:updated>2026-08-12T10:55:44.605Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,சென்னை,மின்சாரம் தாக்கி,police enquiry,கல்லூரி மாணவி பலி,College student dies,Death by electrocution</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/6456x8ua/5.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ யமுனா]]></media:title><media:description type="html"><![CDATA[ மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவி யமுனா உயிரிழந்தார்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/6456x8ua/5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை தாம்பரம்</a> அருகே வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த கல்லூரி மாணவி எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.</p><h2>மின்சாரம் தாக்கி மாணவி பலி</h2><p>சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர், கஸ்பாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் யமுனா (வயது 19). இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் இன்று (புதன் கிழமை) மாணவி யமுனா தனது வீட்டில் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டார். அப்போது, எதிர்பாராதவிதமாக வீட்டின் ஒரு பகுதியில் ஏற்பட்டிருந்த மின்கசிவு காரணமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட யமுனா, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேலையூர் போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.</p><p>மேலும், இந்த <a href="https://www.dailythanthi.com/topic/விபத்து">விபத்து </a>குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின்கசிவுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவி மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் கஸ்பாபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் பெண் வெட்டிக் கொலை: ஆடு மேய்க்கும் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-hacked-to-death-in-thoothukudi-goat-herder-gets-life-sentence</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-hacked-to-death-in-thoothukudi-goat-herder-gets-life-sentence#comments</comments><guid isPermaLink="false">2c2489f2-3bb3-4d33-8f50-d0c7716bee04</guid><pubDate>Wed, 12 Aug 2026 10:52:52 +0000</pubDate><atom:updated>2026-08-12T10:52:52.369Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,murder,life imprisonment,ஆயுள் தண்டனை,Worker,தொழிலாளி,பெண்,Woman,வெட்டிக்கொலை,goat,ஆடு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/bsw9t2qe/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆயுள் தண்டனை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/bsw9t2qe/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், கயத்தாறு அருகே ஆடு மேய்க்கும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">பெண் வெட்டிக்கொலை</a> செய்யப்பட்ட வழக்கில், ஆடு மேய்க்கும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை</a>, ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. </p><h2>முன்விரோதம்</h2><p>தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள காப்புலிங்கம்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் சந்தனமாரி (வயது 45). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவரது ஆடுகளும், அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளி சண்முகராஜ் என்பவரது ஆடுகளும் ஒரே தொழுவத்தில் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் ஆடுகளை தனியாகப் பிரித்து அழைத்துச் செல்லுமாறு சந்தனமாரி கூறியதால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.</p><h2>பெண் வெட்டிக்கொலை</h2><p>கடந்த 15.5.2015 அன்று சந்தனமாரி வழக்கம்போல் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த சண்முகராஜ் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரமடைந்த சண்முகராஜ், சாதி பெயரைச் சொல்லி திட்டியதுடன், சந்தனமாரியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தார். இச்சம்பவம் குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகராஜை கைது செய்தனர்.</p><h2>ஆயுள் தண்டனை</h2><p>இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முழுமையாக முடிவடைந்த நிலையில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் சண்முகராஜுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி வஷித்குமார் தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் அரசு சார்பில் வழக்கறிஞர் மணிகண்ட பிரபு ஆஜரானார்.</p>]]></content:encoded></item><item><title> தூத்துக்குடி மாவட்டத்திற்கு 14-ல் உள்ளூர் விடுமுறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-district-local-holiday-on-14</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-district-local-holiday-on-14#comments</comments><guid isPermaLink="false">206fda8f-1603-41a3-96b0-192287dd7771</guid><pubDate>Wed, 12 Aug 2026 10:47:15 +0000</pubDate><atom:updated>2026-08-12T10:47:15.660Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தூத்துக்குடி,Local Holiday,Tuticorin,உள்ளூர் விடுமுறை,விழாFestival,பேராலயம்,Cathedral</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/ov9wzt21/church.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பேராலயத்தின் விண்ணேற்பு பெருவிழா]]></media:title><media:description type="html"><![CDATA[  பெருவிழாவையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகிற 14-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/ov9wzt21/church.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>காமநாயக்கன்பட்டி பரலோக மாதா பேராலய விண்ணேற்பு பெருவிழாவையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகிற 14-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>மாதா பேராலயம்</h2><p>தூத்துக்குடி மாவட்டம் காமநாயக்கன்பட்டியில் புகழ்பெற்ற பரலோக மாதா பேராலயம் அமைந்துள்ளது. இந்த பேராலயத்தின் விண்ணேற்பு பெருவிழா ஆண்டுதோறும் மிக விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டுக்கான விண்ணேற்பு பெருவிழாவையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகிற 14-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-</p><h2>உள்ளூர் விடுமுறை</h2><p>காமநாயக்கன்பட்டி பரலோக மாதா பேராலய விண்ணேற்பு பெருவிழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது.</p> <h2>சனிக்கிழமை வேலை நாள்</h2><p>இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பின்னர் ஒரு சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருப்பூரில் தாய் - மகள் கொலை: கைதான எம்.பி.ஏ. மாணவன் பரபரப்பு வாக்குமூலம்

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mother-daughter-murder-in-tiruppur-mba-student-confession</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mother-daughter-murder-in-tiruppur-mba-student-confession#comments</comments><guid isPermaLink="false">529d554e-7a7c-4f1e-8b8a-bd7c6a6607cd</guid><pubDate>Wed, 12 Aug 2026 10:42:13 +0000</pubDate><atom:updated>2026-08-12T10:42:13.515Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,கிரைம் செய்தி,திருப்பூர்,Tirupur,Palladam,பல்லடம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/2u3rbum6/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/2u3rbum6/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>திருப்பூர்,</p><p>திருப்பூரில் தாய் - மகளை கொலை செய்த எம்.பி.ஏ. மாணவன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். </p><h2>இன்ஸ்டாகிராம் காதல்</h2><p>திருப்பூர் மாவட்டம் <a href="https://www.dailythanthi.com/">பல்லடம் </a>அருகே உள்ள பச்சாபாளையத்தை சேர்ந்த தம்பதி பழனிசாமி - தனலட்சுமி. இவர்களது மகள் பூவரசிக்கும் (வயது 25). திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அக்சயன் என்ற வாலிபருக்கும் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டது.  கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பூவரசி வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அக்சயனுடன் பேசுவதை தவிர்த்து  வந்தார். </p> <h2>வெட்டி கொலை</h2><p>இதனால், ஆத்திரம் அடைந்த அக்சயன், நேற்று பூவரசியின் வீட்டிற்கே நேரடியாக சென்று தகராறில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றவே, சுற்றும் முற்றும் பார்த்த அக்சயன், வீட்டில் ஓரமாக இருந்த அரிவாளை எடுத்து கண் இமைக்கும் நேரத்தில் பூவரசியை வெட்டினார். தடுக்க வந்த தாய் தனலட்சுமியையும் (45) வெட்டினார். இதில், தாய் - மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அங்கு கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியடையச் செய்தது.</p><h2>பரபரப்பு வாக்குமூலம்</h2><p>ரத்தம் சொட்ட சொட்ட அரிவாளுடன் நின்ற அக்சயனை பிடித்து, கயிற்றால் கையை கட்டிவைத்து பல்லடம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார், தாய் - மகள் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், கொலையாளி அக்சயனையும் கைது செய்தனர்.</p> <p>காவல் நிலையம் அழைத்து சென்று அக்சயனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><h2>காதலாக மாறிய நட்பு</h2><p>நான் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவன். கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறேன். எனக்கும் பல்லடத்தை சேர்ந்த பூவரசிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் நண்பர்களாக பழகிய நாங்கள், பின்பு செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு பேசத் தொடங்கினோம்.</p><p>அதன்பிறகு, நேரில் சந்திக்க முடிவு செய்தோம். பூவரசியை பார்க்க நான் பல்லடம் சென்றேன். அங்கு பூவரசியுடனான முதல் சந்திப்பிலேயே எங்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. கடந்த 4 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தோம்.</p><h2>வேலைக்கு சென்ற பிறகு திருமணம்</h2><p>பூவரசி வீட்டிற்கு ஒரே பெண் என்பதால், எங்களுடைய இந்த காதலை அவருடைய பெற்றோர் ஏற்றுக்கொள்வார்கள் என்று கூறினார். படிப்பு முடிந்து வேலைக்கு சென்ற பிறகு திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம்.</p><p>ஆனால், அதற்கு முன்பாக நண்பர்கள் முன்னிலையில் பூவரசிக்கு சிறிய தங்கச் சங்கிலியை கழுத்தில் அணிவித்தேன். இந்த தங்க சங்கிலியை பார்த்த அவரது தாயார், இதுகுறித்து பூவரசியிடம் விசாரித்துள்ளார். அவரும் எங்களுடைய காதலை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.</p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/gyy90j5i/1.jpg" /></figure><h2>பேசுவதை குறைத்தார்</h2><p>இதற்கு பூவரசியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, பூவரசியின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. என்னுடன் பேசுவதை படிப்படியாக குறைத்துக்கொண்டார். 6 மாதமாக பொறுத்து பார்த்த நானும், அவரை நேரடியாக சந்தித்து பேசினேன்.</p><p>அப்போது பூவரசி, பெற்றோர் எதிர்பதால் நாம் பிரிந்துவிடலாம் என்று கூறினார். ஆனால், பூவரசி இல்லாமல் என்னால் வாழ முடியாது என்ற நிலைக்கு வந்தேன். பூவரசியின் வீட்டிற்கே சென்று அவரது பெற்றோரிடம் பெண் கேட்க முடிவு செய்தேன். கடந்த 3 நாட்களாக பல்லடத்தில் விடுதியில் தங்கி, வீட்டின் முகவரியை கண்டுபிடித்தேன். 10-ந் தேதி மாலை அவரது வீட்டிற்கு சென்று பெண் கேட்டபோது, என்னை திட்டி வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டனர்.</p> <h2>ஆத்திரத்தில் கொலை</h2><p>இதனால் ஆத்திரம் அடைந்த நான், எனக்கு கிடைக்காத பூவரசி யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று நினைத்தேன். 11-ந் தேதி (நேற்று) காலை 8 மணிக்கு மீண்டும் பூவரசியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டேன். அப்போது, பூவரசியின் தாய் தனலட்சுமி என்னை திட்டி வெளியே போகச் சொன்னார். அப்போதும் நான், எனது எதிர்கால திட்டங்கள், பூவரசியை திருமணம் செய்துகொண்டு எதிர்கால கனவுகள் அனைத்தையும் கூறினேன். எங்களுடைய காதலை சேர்த்து வையுங்கள். பூவரசியை மகாராணிபோல் பார்த்துக்கொள்கிறேன் என்று கெஞ்சினேன். ஆனால், பூவரசியின் தாயார், என்னை கேவலமாக பேசி வெளியே போகச் சொன்னார். இதனால், ஆத்திரம் அடைந்த நான் பூவரசியையும் அவரது தாயாரையும் கொலை செய்தேன்</p><p>இவ்வாறு அவர் போலீசிடம் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம்: தமிழக நலனுக்கு எதிரானது! - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/resolution-against-constituency-delimitation-against-tamil-nadus-interests-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/resolution-against-constituency-delimitation-against-tamil-nadus-interests-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">d792f4b9-6197-4cea-8369-7eda6083926d</guid><pubDate>Wed, 12 Aug 2026 10:20:27 +0000</pubDate><atom:updated>2026-08-12T10:20:27.030Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/0ecqs10u/Untitled-22.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/0ecqs10u/Untitled-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தொகுதி மறுவரையறைக்கு எதிரான தவெக அரசின் தீர்மானம்  தமிழக நலனுக்கு எதிரானது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கை</h2><p>தமிழக சட்டமன்றத்தில் இன்று தொகுதி மறுவரையறைக்கு (Delimitation) எதிராகத் தீர்மானம் கொண்டு வந்துள்ள தவெக அரசின் செயல், ஜனநாயகத்தின் மாண்பினைச் சிதைக்கும் முயற்சியாகும். "ஒரு ஓட்டுக்கு ஒரு மதிப்பு" என்பதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை. மக்கள்தொகை அதிகரிப்பிற்கு ஏற்ப தொகுதிகள் பிரிக்கப்படும்போது தான், ஒவ்வொரு குடிமகனின் குரலும் நாடாளுமன்றத்தில் சமமான வலிமையுடன் ஒலிக்கும். இது வெறும் எல்லைகளைப் பிரிப்பது அல்ல; மக்களின் சரியான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாகும்.</p><h2>எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதல்ல</h2><p>பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு, எந்த மாநிலத்திற்கும், குறிப்பாகத் தென் மாநிலங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ள நிலையில், தவெக அரசின் இந்த எதிர்ப்பு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழகத்தின் </a>எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதல்ல. கண்மூடித்தனமாக இத்தகைய சீர்திருத்தங்களை எதிர்ப்பதைத் தவிர்த்து, முதல்-அமைச்சர் விஜய்யின் அரசு தனது முடிவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இந்து சமய அறநிலையத்துறையில் நியமன விதிகளை தளர்த்த கூடாது - காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/appointment-rules-should-not-be-relaxed-in-the-hindu-religious-endowments-department-kadeshwara-subramaniam-insists</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/appointment-rules-should-not-be-relaxed-in-the-hindu-religious-endowments-department-kadeshwara-subramaniam-insists#comments</comments><guid isPermaLink="false">40e49cef-90a1-4b7d-8256-c90f54715e77</guid><pubDate>Wed, 12 Aug 2026 10:07:30 +0000</pubDate><atom:updated>2026-08-12T10:07:30.681Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஊழல்,இந்து சமய அறநிலையத்துறை,Rules,Assets,விதி,temple lands,கோவில் நிலங்கள்,Hindu Religious Endowments Department</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/q40y4jo6/Kadeshwara-Subramaniam.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ காடேஸ்வரா சுப்பிரமணியம்]]></media:title><media:description type="html"><![CDATA[ இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/q40y4jo6/Kadeshwara-Subramaniam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">இந்து சமய அறநிலையத்துறையில்</a> நியமன விதிகளை தளர்த்தக கூடாது. உரிய தகுதிகளின் அடிப்படையில் பதவி வழங்கினால் தான் கோவில்களை நிர்வகிக்க முடியும். இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>முக்கியமான பணி </h2><p>இந்து சமய அறநிலைய துறையின் கீழ் 48 ஆயிரம் கோவில்கள் உள்ளன. கோவில்களின் புனரமைப்பு, வரவு செலவு கணக்குகள் நிர்வகித்தல் உட்பட பல விஷயங்களை அறநிலையத்துறை கவனிக்க வேண்டியுள்ளது. அது மட்டுமல்லாமல் கோவில்களுக்கு சொந்தமான லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் அதன் குத்தகை வருவாய் கணக்குகளையும் பார்க்க வேண்டிய மிக முக்கியமான பணி உள்ளது.</p><h2>உதவி ஆணையர்</h2><p>இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் மற்றும் அதற்கு மேற்பட்ட பதவிகளுக்கு வருபவர்கள் சட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும் எனும் நடைமுறை தற்போது பின்பற்றப்படுகிறது. இந்நிலையில் அந்த விதியை தளர்த்தி வருவாய்த்துறை உட்பட பலதுறைகளை சேர்ந்தவர்களை நியமிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>நிலங்கள் கொள்ளை போகிறது</h2><p>ஏற்கனவே தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்கள் கொள்ளை போகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பழனி கோவில் நிலமோசடி, தாடிக்கொம்பு பெருமாள் கோவில் நிலமோசடி என <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">கோவில் நிலங்கள் </a>முறைகேடாக விற்கப்பட்டு வருகின்றன.</p> <h2>குத்தகை பாக்கி</h2><p>கோவில் நிலங்களின் குத்தகை பாக்கி கோவில் இடங்களில் உள்ள கடைகளின் வாடகை பாக்கி கோடிக்கணக்கில் வசூல் ஆகாமல் இருக்கிறது. கோவில் நிலங்கள் குறித்த பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அறநிலையத்துறையில் பதவிக்கு வரும் உதவி ஆணையர் மற்றும் அதற்கு மேற்பட்ட பொறுப்புகளில் இருப்பவர்கள் சட்டப் படிப்பு படித்தவராக இருந்தால்தான் நிலைமையை எதிர்கொள்ள முடியும். அதனால்தான் உதவி ஆணையர் பதவிக்கு வருபவர்கள் தமிழக தேர்வாணையமான டி.என்.பி.சி தேர்வெழுதி சட்டப் படிப்பும் படித்திருக்க வேண்டும் என்பது விதியாக உள்ளது.</p><h2>கடும் சவால்</h2><p>தற்போது சட்டப்படிப்பு தகுதி தேவையில்லை எனும் போது கோவில்களை நிர்வாகிக்க கடும் சவாலை அவர்கள் எதிர்கொள்ள நேரிடும். அரசு துறைகளில் ஒரு துறையில் இருந்து மற்றொரு துறைக்கு இடமாற்றம் செய்வது என்பது வாடிக்கையான நிகழ்வு. ஆனால் அறநிலையத்துறையை பொருத்தவரை பிற துறைகளில் இருந்து இடமாற்றமாகி வருபவர்கள் தனித்துவமான கோவில் நிர்வாகிப்பணிகளை அனுபவம் வாய்ந்தராக செய்ய முடியாது.</p> <h2>கோவில் நிர்வாகம் சீர்குலையும்</h2><p>உதவி ஆணையாளர் பதவிக்கு வருபவர்கள் இந்து மதம் பற்றியும் அதன் வரலாறுகள் பற்றியும் படித்திருப்பவராக இருந்தால் தான் கோவில்களை உணர்வோடு பராமரிக்க முடியும். யார் வேண்டுமானாலும் இந்த பதவிக்கு வர முடியும் என்ற சூழ்நிலை வரும் பொழுது கோவில் நிர்வாகம் சீர்குலையும். </p><h2>அபாய நிலை உருவாகலாம்</h2><p>ஏற்கனவே அறநிலையத்துறையில் கோவில் உண்டியல் வருமானம் கோவில் நிலங்கள் கோவில் சொத்துக்களில் ஊழல் மலிந்துள்ளது. இதில் சட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் என்ற விதியை தளர்த்தும்போது இன்னும் பல விதமான ஊழல்கள் ஏற்பட்டு கோவில் சொத்துக்கள் கொள்ளை போகும் சூழ்நிலை ஏற்படும். இன்னும் பல கோவில் நிலங்கள் அபகரிக்கக்கூடிய அபாய நிலை உருவாகலாம்.</p><h2>அதிகாரிகள் பற்றாக்குறை</h2><p>ஆளும் த.வெ.க அரசு சட்டசபையில் கொண்டு வரவுள்ள அறநிலையத்துறை பதவி தகுதி குறித்த இந்த திருத்தத்தை மற்ற கட்சிகள் அனைத்தும் கோவில்கள் நலனை கொண்டு எதிர்க்க வேண்டும்.</p><p>அறநிலையத்துறையில் அதிகாரிகள் பற்றாக்குறையை நீக்க தற்போது உள்ள விதிமுறைகளின் படியே பணி நியமனங்கள் வழங்கப்பட வேண்டும். இந்து சமய அறநிலைத்துறையில் ஏற்கனவே உள்ள நியமன விதிகளை தளர்த்தக்கூடாது என இந்துமுன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பழனி கோவில் நிலமோசடி விவகாரம் - சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார்பதிவாளர் மீது புதிய வழக்கு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-temple-land-fraud-case-new-case-filed-against-suspended-sub-registrar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-temple-land-fraud-case-new-case-filed-against-suspended-sub-registrar#comments</comments><guid isPermaLink="false">5c6f4e29-2bad-4f79-bc03-5107af9d220f</guid><pubDate>Wed, 12 Aug 2026 10:02:41 +0000</pubDate><atom:updated>2026-08-12T10:02:41.965Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பழனி,Case,வழக்கு,Palani,நிலமோசடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/wb8jhkmk/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/wb8jhkmk/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><p>பழனி கோவில் அடிவாரம் பகுதியில் தண்டபாணி சுவாமிகள் மடத்தின் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் உள்ளது. இந்த நிலம் கடந்த மாதம் 6-ந்தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில், தனி நபர்களுக்கு ரூ.2 கோடிக்கு கிரையமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது.</p><p>தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த மோசடி தொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் நிலத்தை விற்பனை செய்த விழுப்புரத்தைச் சேர்ந்த ஆசிரியர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை (60), சேதுபதி (67) அவர்களுக்கு உதவிய பழனி கவுண்டன்குளம் பகுதியை சேர்ந்த வக்கீல் அன்வர்தீன் (65) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து கடந்த 3 நாட்களாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.</p><p>இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் நெஞ்சுவலி காரணமாக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மேலும் அவர் சார் பதிவாளர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். </p><p>இந்த நிலையில், பழனி அருகே ஆயக்குடியில் தனியார் நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்ததாக சார்பதிவாளர் ஈஸ்வரி அளித்த புகாரின் பேரில், ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்ற மணி, நிலத்தை வாங்கிய கந்தசாமி ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு இது கோவில் நிலம் என தகவல் பரவிய நிலையில், தற்போது தனியார் நிலம் என உறுதி செய்து பத்திரப்பதிவுத்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. </p> ]]></content:encoded></item><item><title>மத்திய அரசே!..மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்காதே! - வேல்முருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/central-government-do-not-reduce-the-representation-of-the-states-velmurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/central-government-do-not-reduce-the-representation-of-the-states-velmurugan#comments</comments><guid isPermaLink="false">cbff339d-1793-4267-9a5e-3734b1651726</guid><pubDate>Wed, 12 Aug 2026 09:51:59 +0000</pubDate><atom:updated>2026-08-12T09:51:59.418Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Velmurugan,வேல்முருகன்,தி.வேல்முருகன்,வேல்முருகன் கைது</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/71v9du7h/velmurugan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/71v9du7h/velmurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மத்திய அரசே!..மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்காதே! எதேச்சதிகார முடிவுகளைத் திணிக்காதே! என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>தொகுதி மறுவரையறை</h2><p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல்-அமைச்சர் கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரையறைத் தொடர்பான தீர்மானத்தை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வரவேற்கிறது. தொகுதி மறுவரையறையால் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் அரசியல் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பிரதிநிதித்துவம் </a>பாதிக்கப்படக் கூடாது என்பதும் இந்த விவகாரத்தின் முக்கியமான அம்சங்களாகும்.</p><p>1971 மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகு, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள், அதற்காகவே நாடாளுமன்ற இடங்களை இழக்கக் கூடாது என்பதற்காக, மாநிலங்களுக்கான மக்களவை இடங்களின் மறுபங்கீடு முடக்கப்பட்டது. 42 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் இதற்கு வழிவகுத்தது. பின்னர் 84வது திருத்தம், 2001, இந்த ஏற்பாட்டை 2026க்குப் பிந்தைய முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வரை நீட்டித்தது. இதன் விளைவாக தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகள் பாதுகாக்கப்பட்டன.</p><p>மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியதற்காக ஒரு மாநிலம் அரசியல் ரீதியாகத் தண்டிக்கப்படக் கூடாது. இப்போது எழுந்துள்ள அச்சம் என்னவென்றால், மக்கள்தொகையை அடிப்படையாகக் கொண்டு மீண்டும் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், மக்கள் தொகை அதிகரித்த மாநிலங்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைக்கும். அதே நேரத்தில் தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் மொத்த மக்களவைப் பிரதிநிதித்துவத்தில் உள்ள பங்கு குறையக்கூடிய நிலை உருவாகலாம். இதனால் குடும்பக் கட்டுப்பாடு, பெண்கள் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் முன்னேறி மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்திய தமிழ்நாட்டுக்கே எதிர்மறையான அரசியல் விளைவு ஏற்படும் அபாயம் உள்ளது.</p><h2>எப்படி உறுதி செய்வது?</h2><p>2026 இல் மத்திய அரசின் விளக்கத்தில் முன்வைக்கப்பட்ட ஒரு மாதிரி கணக்கீட்டின்படி, மக்களவை இடங்கள் சுமார் 543 இலிருந்து 815 ஆக அதிகரிக்கப்பட்டால், தமிழ்நாட்டின் இடங்கள் 39 இலிருந்து 59 ஆக உயரலாம் என்று காட்டப்பட்டது. அந்த மாதிரியில் மாநிலங்களின் தற்போதைய பிரதிநிதித்துவப் பங்கை பெருமளவில் பாதுகாக்கும் வகையில் சுமார் 50% இடங்கள் அதிகரிக்கப்படும் என விளக்கப்பட்டது. ஆனால் இது இறுதி தொகுதி எண்ணிக்கை அல்ல. ஒரு மாதிரி கணக்கீடு மட்டுமே.</p><p>எனவே விவாதம் “543 வேண்டுமா? 815 வேண்டுமா?” என்பதில் முடிந்துவிடக் கூடாது. உண்மையான கேள்வி என்பது, மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரித்தாலும், இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் பிரதிநிதித்துவ விகிதம் குறையாமல் இருப்பதை எப்படி உறுதி செய்வது?</p><p>இதற்கான அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்புதான் தமிழ்நாட்டின் நீண்டகாலக் கோரிக்கை</p><p>1.தமிழ்நாட்டின் தற்போதைய 39 மக்களவைத் தொகுதிகள் குறைக்கப்படக் கூடாது.</p><p>2.மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதற்காக, தமிழ்நாட்டின் அரசியல் பிரதிநிதித்துவம் குறையக் கூடாது.</p><p>3.எதிர்காலத்தில் மக்களவை இடங்கள் அதிகரிக்கப்பட்டாலும், தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவப் பங்கு குறையாத வகையில் அரசியலமைப்புச் சட்ட உத்தரவாதம் வழங்க வேண்டும்.</p><p>4.தொகுதி மறுவரையறைக்கான கணக்கீட்டு முறை வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும்.</p><p>5.தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுடன் முறையான ஆலோசனை நடத்தாமல் இறுதி முடிவு எடுக்கக் கூடாது.</p><h2>மாற்றுக் கருத்து இல்லை</h2><p>பெண்களுக்கு 33% நாடாளுமன்ற <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">இடஒதுக்கீடு </a>வழங்கப்பட வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அந்த சமூகநீதி நடைமுறைப்படுத்தப்படும் போது, மாநிலங்களின் பிரதிநிதித்துவச் சமநிலையும் பாதுகாக்கப்பட வேண்டும். இன்றைய தீர்மானத்தில் 2029 தேர்தலுக்கான பெண்கள் இடஒதுக்கீட்டைத் தாமதமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p>தமிழ்நாடு அரசின் தீர்மானம் என்பது, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் தீர்மானம் ஆகும். இதை கவனத்தில் கொண்டு, மத்திய அரசு தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு மதிப்பளித்து, தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் எந்த விதத்திலும் குறைந்து விடாதபடி, தமிழ்நாடு அரசுடன் ஆலோசனை செய்து தமிழ்நாடு அரசின் தீர்மானத்தின் படி  தொகுதி மறுவரையறை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வு கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>திருநெல்வேலி: ரூ.5 லட்சம் பண மோசடி வழக்கில் 2 இளம்பெண்கள் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirunelveli-2-young-women-arrested-in-rs-5-lakh-money-laundering-case</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirunelveli-2-young-women-arrested-in-rs-5-lakh-money-laundering-case#comments</comments><guid isPermaLink="false">95b78ff9-1187-426e-ab6f-345a976cc28c</guid><pubDate>Wed, 12 Aug 2026 09:27:29 +0000</pubDate><atom:updated>2026-08-12T09:27:29.269Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,young women,இளம்பெண்கள்,பண மோசடி,money laundering,2 பேர் கைது,Case,வழக்கு,2 people arrested</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/vtyxurkn/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பண மோசடி வழக்கில் 2 இளம்பெண்கள் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/vtyxurkn/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதந்தோறும் லட்சக்கணக்கில் வருமானம் தருவதாக ஆசைவார்த்தை கூறி ரூ.5 லட்சம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF">பண மோசடி</a>யில் ஈடுபட்ட 2 <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">இளம்பெண்களை</a> நெல்லை சந்திப்புப் போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். </p><h2>பண மோசடி புகார்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a>யில் இயங்கி வந்த ஒரு தனியார் நிறுவனத்தில் ரூ. 5 லட்சம் முதலீடு செய்தால், மாதம் தோறும் லட்சக்கணக்கில் அதிக வருமானம் ஈட்டலாம் என கூறி பொதுமக்களிடம் இருந்து பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால் வாக்குறுதி அளித்தபடி வருமானம் தராமலும், முதலீடு செய்த பணத்தைத் திருப்பிக் கொடுக்காமலும் ஏமாற்றியதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.</p><h2>2 இளம்பெண்கள் கைது</h2><p>இந்த புகாரின் பேரில் நெல்லை சந்திப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பண மோசடியில் ஈடுபட்டது திருநெல்வேலி அருகே உள்ள காரையிருப்பு பகுதியைச் சேர்ந்த சண்முகலட்சுமி (வயது 23) மற்றும் பூரணசெல்வி(30) ஆகிய 2 பேர் என்பது தெரியவந்தது. </p><p>இதையடுத்து அந்த 2 இளம்பெண்களையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் மேலும் பலரிடம் இதுபோன்று மோசடி செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>220 கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம்; விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/appointment-of-trustees-for-220-temples-application-deadline-extended</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/appointment-of-trustees-for-220-temples-application-deadline-extended#comments</comments><guid isPermaLink="false">256b941d-1725-435a-8e23-84861ff695f2</guid><pubDate>Wed, 12 Aug 2026 09:15:31 +0000</pubDate><atom:updated>2026-08-12T09:15:31.341Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>temples,கோவில்கள்,அறநிலையத்துறை,இந்து சமய அறநிலையத்துறை,Hindu Religious and Charitable Endowments Department,Trustees,அறங்காவலர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/0baldls8/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அறங்காவலர்கள் நியமனம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/0baldls8/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 220 திருக்கோவில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>அறங்காவலர்கள் நியமனம்</h2><p>இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சட்டப்பிரிவு 46(iii)-ன்கீழ் உள்ள 220 திருக்கோவில்களுக்கு பரம்பரை முறைவழிசாரா அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, கடந்த 14.06.2026 அன்று தமிழ் மற்றும் ஆங்கில முன்னனி நாளிதழ்களிலும், இத்துறையின் வலைதளத்திலும் விளம்பரம் செய்யப்பட்டது. இவ்விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் 22.07.2026 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திருக்கோவில்களின் நலனைக் கருத்தில் கொண்டு, முதற்கட்டமாக 12.08.2026 மாலை 5.45 மணி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டது.</p><h2>கால அவகாசம் நீட்டிப்பு</h2><p>விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான இறுதிநாள் இன்றுடன் நிறைவடையும் நிலையில், பக்தர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, அதிகப்படியான தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக, விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் 28.08.2026 அன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><h2>28ம் தேதி வரை அவகாசம்</h2><p>எனவே, இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுடைய விருப்பமுள்ள பக்தர்கள், நிர்ணயிக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, 28.08.2026 அன்று மாலை 5.45 மணிவரை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">இணையத்தளம் </a>வாயிலாக பதிவேற்றம் செய்து / நேரில் / அஞ்சல் மூலமாக அந்தந்த திருக்கோவில் அமைந்துள்ள மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பலாம் என தெரிவிக்கப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விவசாயி மீதான வழக்கை சாதகமாக முடித்து வைப்பதற்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம் பெற்ற எஸ்.ஐ. கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-si-arrested-rs3000-bribe-farmer-case</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-si-arrested-rs3000-bribe-farmer-case#comments</comments><guid isPermaLink="false">c2af1258-8c73-420d-bad1-b27532cc01c8</guid><pubDate>Wed, 12 Aug 2026 09:11:54 +0000</pubDate><atom:updated>2026-08-12T09:11:54.659Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>போலீஸ்,கைது,விவசாயி,arrest,லஞ்சம்,வழக்கு,Favor of Farmers</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/seo3mpzp/policecoruption.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ எஸ்.ஐ.]]></media:title><media:description type="html"><![CDATA[ ரூ.3,000 லஞ்சம் பெற்ற எஸ்.ஐ. கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/seo3mpzp/policecoruption.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல்,</p><p> நில பிரச்சினை வழக்கை சாதகமாக முடிக்க விவசாயியிடம் ரூ.30 ஆயிரம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">லஞ்சம்</a> வாங்கிய நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கினார்.</p><h2>நில ஆக்கிரமிப்பு</h2><p>நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள சாலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சவுமியராஜ்,  விவசாயி. இவருக்கும், இவரது பக்கத்து நிலத்துக்காரரான முத்துசாமி என்பவருக்கும் இடையே நில ஆக்கிரமிப்பு தொடர்பாக நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வந்தது. இது தொடர்பாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.</p><h2>ரூ.30 ஆயிரம் லஞ்சம்</h2><p>இந்த வழக்கை விவசாயி சவுமியராஜுக்கு சாதகமாக முடித்து தருவதற்கும், மேல் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கும் நல்லூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கெங்காதரன் (53) என்பவர் ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத சவுமியராஜ் இதுகுறித்து நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.</p><h2> சப்-இன்ஸ்பெக்டர் கைது</h2><p>லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின்படி, சவுமியராஜ் ரசாயனம் தடவிய ரூ.30 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு நல்லூர் காவல் நிலையத்திற்கு சென்றார். அங்கு சப்-இன்ஸ்பெக்டர் கெங்காதரனிடம் அந்த பணத்தை கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்ச பணத்தை பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கெங்காதரனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். காவல் நிலையத்திலேயே சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்வா? - தகவல் நம்பகத்தன்மை பிரிவு விளக்கம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/property-tax-hike-in-chennai-corporation-clarification-from-the-information-verification-wing</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/property-tax-hike-in-chennai-corporation-clarification-from-the-information-verification-wing#comments</comments><guid isPermaLink="false">7de7e24c-52bc-4e06-bf66-8be8e3f0ceba</guid><pubDate>Wed, 12 Aug 2026 09:01:18 +0000</pubDate><atom:updated>2026-08-12T09:01:18.693Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,Fact check,தகவல் சரிபார்ப்பகம்,TN Fact Check,தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம்,தகவல் நம்பகத்தன்மை பிரிவி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/x0v7yi6x/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/x0v7yi6x/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டதாக பரவும் தவறான தகவல் குறித்து  தகவல் நம்பகத்தன்மை பிரிவு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக அப்பிரிவி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>பரவும் செய்தி</h2><p>பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவி வருகிறது.</p><h2>உண்மை என்ன ?</h2><p>இது தொடர்பாக பெருநகர சென்னை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மாநகராட்சி </a>அளித்துள்ள விளக்கத்தில், "சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை. குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டு, சொத்துவரி செலுத்துவோருக்கு மட்டுமே சுய-அறிவிப்பு (Self-Declaration) / உரிய தரவுகளின் அடிப்படையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மீது ஆட்சேபனை இருந்தால் 15 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தவறான தகவலைப் பரப்பாதீர் !</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>