<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 17 Aug 2026 03:31:34 +0000</lastBuildDate><item><title>தவெக அரசு கடந்து வந்த 100 நாட்கள்..! - வெற்றி பயணமா..?, வெற்று பயணமா..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tvk-governments-first-100-days-a-journey-to-success-or-an-empty-journey</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tvk-governments-first-100-days-a-journey-to-success-or-an-empty-journey#comments</comments><guid isPermaLink="false">7c0b1514-e1de-43fb-82c6-61fc5f7a6425</guid><pubDate>Sun, 16 Aug 2026 01:12:30 +0000</pubDate><atom:updated>2026-08-16T01:12:30.471Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,Chief Minister Vijay,தவெக அரசு,TVK Government,Tamil Nadu Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/iyz837is/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/iyz837is/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் த.வெ.க. அரசு ஆட்சி பொறுப்பேற்று நாளையுடன் (ஆகஸ்டு 17) 100 நாட்கள் ஆகிறது. இத்தனை நாட்கள் கடந்து வந்த பாதை வெற்றிப் பயணமாக அமைந்ததா?, வெற்றுப் பயணமாக இருந்ததா? என்பது தொடர்பான அலசல் இது.</p><h2>திராவிட கட்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்ட த.வெ.க.</h2><p>தமிழகத்தில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தி.மு.க., அ.தி.மு.க. என்ற இரு திராவிட கட்சிகளே மாறி.. மாறி.. ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்தன. இருபெரும் திராவிட கட்சிகளின் ஆதிக்கத்துக்கு, அரசியலில் 2½ வயது குழந்தையான த.வெ.க. முட்டுக்கட்டை போட்டது.</p><p>கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தமிழக முதல்-அமைச்சராக ஜோசப் விஜய், மே மாதம் 10-ந் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன் அன்றைய தினம் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். தொடர்ந்து, மே 21-ந் தேதி நடைபெற்ற 2-வது அமைச்சரவை விரிவாக்கத்தில் 23 பேரும், மே 22-ந் தேதி நடைபெற்ற 3-வது அமைச்சரவை விரிவாக்கத்தில் 2 பேரும் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். அனைவருக்கும் துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/v7cqro4y/Untitled-7.jpg" /></figure><h2>த.வெ.க. அரசின் செயல்பாடு எப்படி?</h2><p>இந்த நிலையில், தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்று நாளையுடன் (திங்கட்கிழமை) 100 நாட்கள் ஆகிறது. பதவியேற்ற அந்த நாள் (மே 10) முதல் இந்த நாள் (100-வது நாள்) வரை த.வெ.க. அரசின் செயல்பாடு எப்படி? என்பதை பற்றி தொடர்ந்து பார்க்கப்போகிறோம்.</p><p>முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்ற மே 10-ந் தேதி 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். "2 மாதங்களுக்கு 500 யூனிட்டுகள் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு 2 மாதங்களுக்கு 200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும். </p><p>பெண்களின் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மாநிலம் முழுவதும் உருவாக்கப்படும். தமிழ்நாட்டில் போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிக்க, 65 போதைப்பொருட்கள் தடுப்பு படை அமைக்கப்படும்" என்பவைதான் அவை. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/rh7fapx2/CHENNAI-01.jpg" /></figure><h2>717 டாஸ்மாக் கடைகள் அடைப்பு</h2><p>அதன்பிறகு, குறுகிய நாட்கள் இடைவெளியில், புதிய புதிய அறிவிப்புகள் வெளிவரத் தொடங்கின. குறிப்பாக, கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் அருகே செயல்பட்ட 717 டாஸ்மாக் மதுக்கடைகள் அடைக்கப்பட்டன. தொடர்ந்து, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டார். இதன் மூலம் 58 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்ந்தது. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/8i4w66wl/Untitled-1.jpg" /></figure><h2>பயிர்க்கடன் தள்ளுபடி</h2><p>அதன்பின்னர், மாநிலம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை சீரமைத்து சுவையுடன் கூடிய தரமான உணவுகளை விநியோகம் செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டார். தொடர்ந்து, குறு விவசாயிகள் வாங்கிய ரூ.50 ஆயிரம் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய அவர் உத்தரவிட்டார். </p><p>அதன்பிறகு, மே 27-ந் தேதி டெல்லி சென்ற முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசினார். அப்போது, மேகதாது அணை, தமிழக மீனவர் பிரச்சினை உள்பட 4 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் அளித்தார். </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/uui6m36p/Untitled-5.jpg" /></figure><h2>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம்</h2><p>ஜூன் 9-ந் தேதி குழந்தைகள், பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கிவைத்தார். அதன்பிறகு, அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை அறிவித்தார். </p><p>தொடர்ந்து, கடந்த 5-ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், "திருமணமாகும் பெண்களுக்கு திருமண நாளில் அண்ணனின் சீர் என்ற திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்க நாணயமும், ஒரு பட்டுப்புடவையும் வழங்கப்படும். குடிசை வீடுகளுக்கு பதிலாக 70 ஆயிரம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும். பிளஸ்-1 மாணவர்களுக்கு ஹெல்மெட், வாட்டர் பாட்டிலுடன் கூடிய நவீன சைக்கிள் வழங்கப்படும். அரசு கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் கொடுக்கப்படும்" என்பது உள்பட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/2gu3pidi/Untitled-2.jpg" /></figure><h2>பட்ஜெட்டில் 125 வாக்குறுதிகள் </h2><p>பட்ஜெட் தொடர்பாக கருத்து தெரிவித்த நிதி அமைச்சர் மரிய வில்சன், "த.வெ.க. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளில் 125 பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது" என்றார். </p><p>இதற்கு மத்தியில், சத்தம் இல்லாமல் ஒரு சாதனையை தமிழக தொழில் துறை செய்துள்ளது. அதாவது, 100 நாட்களில் 104 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 1 லட்சத்து 21 ஆயிரத்து 788 பேர் வேலைவாய்ப்பை பெறும் வகையில் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 514 கோடிக்கு முதலீடுகளை ஈர்த்துள்ளது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/2o8pgrn4/Untitled-5.jpg" /></figure><h2>தொழில் முதலீடுகள் ஈர்ப்பு</h2><p>குறிப்பாக, கடந்த 13-ந் தேதி நடைபெற்ற, வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் மட்டும் போடப்பட்ட 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.67,452 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இதன் மூலம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 998 பேருக்கு வேலைவாய்ப்புகளும் கிடைக்க உள்ளன.  அதுவும், தொழில் முதலீடுகள் அனைத்தும் ஒரே பகுதியில் குவிந்துவிடாமல், 23 மாவட்டங்களுக்கு பரவலாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்முறையாக தொழில் நிறுவனம் அமைய இருக்கிறது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/jqvcqxem/Untitled-7.jpg" /></figure><h2>முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்</h2><p>இப்படி, சத்தம் இல்லாமல் தொழில் புரட்சியை த.வெ.க. அரசு ஏற்படுத்தினாலும், சட்டம் - ஒழுங்கு பிரச்சினை, பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு, மின் தடை பிரச்சினை, குப்பைகள் சரியாக அகற்றப்படாதது உள்ளிட்டவை புதிய அரசின் மீது குற்றச்சாட்டுகளாக வைக்கப்படுகின்றன. </p><p>கடந்த கால ஆட்சிகளில், தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்தால், அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கும். அல்லது அ.தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்தால் தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கும். ஆனால், இப்போது புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க.வுக்கு தி.மு.க., அ.தி.மு.க. என்ற இரு திராவிட கட்சிகள் எதிர்க்கட்சிகளாக உள்ளன.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/39xmkibq/Untitled-4.jpg" /></figure><h2>100 நாள் ஆட்சி எப்படி?</h2><p>இதனால், சட்டசபையில் இரு எதிர் கட்சிகளின் கேள்விக் கணைகளை த.வெ.க. அமைச்சர்கள் சமாளிக்க வேண்டியுள்ளது. எதிரில் இருப்பவர்கள் சட்டசபை அனுபவத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் என்றாலும், ஆளும் தரப்பினரும் அதைவொரு சவாலாக ஏற்று சமாளித்து வருகின்றனர். </p><p>மொத்தத்தில், கடந்த 100 நாள் த.வெ.க. ஆட்சி, ஊழலுக்கு எதிராக தனது பார்வையை கழுகுப்பார்வையாக அதிகரித்துள்ளதுடன், ஒவ்வொரு தடைகளையும் தாண்டி வெற்றி பெற்று வருவதாகவே தெரிகிறது. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/5i4uk29j/Untitled-7.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>சென்னை-சேலம் விமானம் திடீர் ரத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-salem-flight-suddenly-cancelled</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-salem-flight-suddenly-cancelled#comments</comments><guid isPermaLink="false">87353adb-2fe9-4068-9434-59bf7951ed7b</guid><pubDate>Mon, 17 Aug 2026 03:20:36 +0000</pubDate><atom:updated>2026-08-17T03:20:36.790Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>விமானம்,Salem,flight,சேலம்</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/xpd02sme/plane.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/xpd02sme/plane.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம் அருகே காமலாபுரத்தில் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து சேலத்திற்கும் இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் தினமும் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் அலைன்ஸ் ஏர் நிறுவனத்தின் சார்பில் பெங்களூரு- சேலம்-கொச்சி, கொச்சி- சேலம் -பெங்களூருவுக்கும் தினமும் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. </p><p>இந்த நிலையில் சென்னையில் இருந்து நேற்று மதியம் 2.20 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை-சேலம் விமானம் எந்திர தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் சேலம் விமான நிலையத்திற்கு நேற்று பிற்பகல் 3.20 மணிக்கு வர வேண்டிய அந்த விமானமும் வரவில்லை. பின்னர் பிற்பகல் 3.30 மணிக்கு சென்னைக்கு செல்ல வேண்டிய விமான சேவையும் ரத்து செய்யப்பட்டது. இதனால் அந்த விமானத்தில் முன்பதிவு செய்திருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். </p><p>அதேபோல், சேலம்-கொச்சி, மறுமார்க்கத்தில் கொச்சி-சேலம், சேலம்-பெங்களூரு ஆகிய விமானங்கள் நேற்று வழக்கம்போல் இயக்கப்பட்டன என்றும், இன்று (திங்கட்கிழமை) சென்னை - சேலம் விமானம் வழக்கம்போல் இயக்கப்படும் என்றும் சேலம் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>குழந்தைகளுக்கான ஆடைகள், உள்ளாடைகளின் விலை உயர்வு: திருப்பூர் உற்பத்தியாளர்கள் முடிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruppur-manufacturers-decide-to-hike-prices-of-childrens-clothing-and-innerwear</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruppur-manufacturers-decide-to-hike-prices-of-childrens-clothing-and-innerwear#comments</comments><guid isPermaLink="false">103bc063-9fbe-4c29-8ac5-298f709187af</guid><pubDate>Mon, 17 Aug 2026 03:17:40 +0000</pubDate><atom:updated>2026-08-17T03:17:40.675Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்,குழந்தைகள்,Clothing store,ஆடை உற்பத்தி,ஆடைகள்,திருப்பூர் உற்பத்தியாளர்கள்,Tiruppur manufacturers</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/27ybkga5/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/27ybkga5/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><h2>பின்னலாடை நிறுவனங்கள்</h2><p>திருப்பூரில் 2,500-க்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர். பின்னலாடை நிறுவனங்கள் மூலம் உள்ளாடைகள், டி-ஷர்ட் கள், டிராக் பேண்டுகள், இரவு நேரங்களில் அணியும் ஆடைகள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.</p><p>திருப்பூர் பின்னலாடை மூலம் ஆண்டுக்கு ரூ.70 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டப்படுகிறது. அதாவது, உள்நாட்டு விற்பனை சந்தை மூலம் ரூ.27 ஆயிரம் கோடியும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் சுமார் ரூ.42,500 கோடி முதல் ரூ.45,000 கோடி வரையிலும் வருமானம் பெறப்படுகிறது.</p><h2>5 சதவீதம் விலை உயர்வு</h2><p>மூலப்பொருள் மற்றும் உற்பத்தி செலவுகளில் தொடர்ந்து ஏற்பட்டுள்ள உயர்வு காரணமாக உள்ளாடைகள், இரவு நேரங்களில் அணியும் ஆடைகள், குழந்தைகளுக்கான ஆடைகள் ஆகியவற்றின் விலை 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூரில் உள்ள தென்னிந்திய உள்ளாடை உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-</p><p>பருத்தி விலை ஒரு கேண்டி (355 முதல் 356 கிலோ) ரூ.74 ஆயிரத்தை எட்டியுள்ளது. கடந்த 3 மாதங்களில் மட்டும் பின்னலாடைக்குரிய நூல் விலை கிலோவுக்கு 170 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. மேலும் தொழிலாளர் கூலி, சாயம் பூசுதல், எலாஸ்டிக், பதப்படுத்துதல், தையல் மற்றும் போக்குவரத்துக்கான கட்டணங்களும் அதிகரித்துள்ளன. இது உற்பத்தியாளர்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த உற்பத்தி செலவு சுமார் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.</p><h2>தடையற்ற மூலப்பொருட்கள் வினியோகம்</h2><p>இதன் காரணமாக உள்ளாடைகளின் விலையை முதலில் 10 சதவீதம் உயர்த்தலாம் என முடிவெடுத்தோம். உள்நாட்டு சந்தையில் தேவை குறைவாக இருந்ததால், முழு விலை உயர்வையும் நுகர்வோர் மீது சுமத்துவது கடினமாக இருந்தது. இதனால், விலை உயர்வு 5 சதவீதமாக மாற்றியமைக்கப்பட்டது.</p><p>உள்நாட்டு சந்தைக்கான உள்ளாடைகள் பொதுவாக சுமார் 90 சதவீதம் பருத்தி மற்றும் 10 சதவீதம் செயற்கை இழை ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. வெளி ஆடைகளை பொறுத்தவரை, பருத்தி இருப்பு குறைந்ததால் 5 மாதங்களுக்கு முன்பு உற்பத்தியாளர்கள் செயற்கை இழையின் அளவை 50 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக உயர்த்தி உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>பண்டிகை கால தேவையை பூர்த்தி செய்யவும், 38 நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தங்களைப் பயன்படுத்திக்கொள்ளவும் நூல், பருத்தி மற்றும் பிற மூலப்பொருட்களின் தடையற்ற உள்நாட்டு வினியோகத்தை உறுதி செய்ய மத்திய அரசை வலியுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>‘மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-must-take-steps-to-reopen-closed-firecracker-factories-communist-party-of-india-urges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-must-take-steps-to-reopen-closed-firecracker-factories-communist-party-of-india-urges#comments</comments><guid isPermaLink="false">5bcd24e0-c6c7-4329-8737-96c33c736cac</guid><pubDate>Mon, 17 Aug 2026 02:38:17 +0000</pubDate><atom:updated>2026-08-17T02:38:17.631Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Communist Party of India,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி,பட்டாசு ஆலைகள்,Crackers factory</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/p0l01yse/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/p0l01yse/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மூடப்பட்டுள்ள பட்டாசு உற்பத்தி ஆலைகளை திறக்கவும், பட்டாசு தொழிலை பாதுகாக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என </p><p>இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“நாட்டின் மொத்த பட்டாசு உற்பத்தியில் 90 விழுக்காடு&nbsp;&nbsp;பங்களிப்பையும், ரூ 6,000 கோடிக்கும் அதிகமான வருடாந்திர வணிகத்தையும், 10 லட்சம் தொழிலாளர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பையும் வழங்கக் கூடியது&nbsp;விருதுநகர் மாவட்ட, சிவகாசி பட்டாசு தொழில். அதை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.</p><p>இம்மாவட்டத்தில் 1100 பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கிவந்தன. அவற்றில் 200 ஆலைகள் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றவில்லை என்ற காரணங்களைக் கூறி மூடப்பட்டுள்ளன. இதனால் பல ஆயிரம் பேர் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளனர். அண்மையில் நிகழ்ந்த&nbsp;விபத்துகளைத் தொடர்ந்து, பாதுகாப்பு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்பதற்காக இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p>2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் மட்டும், இப்பகுதியில் பட்டாசு விபத்துகளில் 169 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய மற்றும் மாநில அரசுகள், பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை (ஷிளிறிs) மேம்படுத்தவும், சட்டவிரோத ஆலைகளை அகற்றவும், தகுதியான தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இது வரவேற்பிற்குரியன.</p><p>இருப்பினும், மூடப்பட்டுள்ள ஆலைகளை மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தி, பாதுகாப்பு விதிமுறைகளை நிறைவு செய்துள்ள ஆலைகளை மீண்டும் திறந்திட உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். எதிர்காலத்தில் எத்தகைய விபத்துகளும் ஏற்பட்டுவிடாமல் தடுத்திட அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திட வேண்டும்.</p><p>தொழில் பாதுகாப்பு என்ற பெயரில் தொழிலாளரின் உயிர் அச்சுறுத்தலுக்கு ஆளாகிவிடக் கூடாது. அதே சமயம் தொழிலும் முக்கியம். “தொழில் முக்கியம் ; தொழிலாளரின் உயிர் மிக மிக முக்கியம்“&nbsp;&nbsp;என்ற புரிந்துணர்வோடு அரசு செயல்பட வேண்டும். பட்டாசு தொழிலை பாதுகாக்கக் கோரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், இன்று (17.08.2026) உண்ணா நிலை அறப்போராட்டம் சிவகாசியில் நடைபெறுகிறது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.</p><p>எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக கோரிக்கைகளை ஏற்று பட்டாசு தொழிலை பாதுகாக்க, மூடிய தொழிற்சாலைகளை அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்து&nbsp;மீண்டும் திறக்க நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென,&nbsp;இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசையும், ஒன்றிய அரசையும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>காஞ்சிபுரம்:  கோவில் திருவிழாவில் தகராறு; 2 பேர் படுகொலை
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kanchipuram-conflict-at-temple-festival-2-killed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kanchipuram-conflict-at-temple-festival-2-killed#comments</comments><guid isPermaLink="false">1a8d2336-ddda-4b25-931f-4baae446fdd2</guid><pubDate>Mon, 17 Aug 2026 02:30:23 +0000</pubDate><atom:updated>2026-08-17T02:30:23.871Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Kanchipuram,காஞ்சிபுரம்,Temple festival,கோவில் திருவிழா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/czl72kxu/lsgskt.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/czl72kxu/lsgskt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>காஞ்சிபுரம்</p><p>காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோவில் திருவிழாவில் நடந்த தகராறில் 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.</p><p>காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி பகுதியில் அம்மன் கோவில் திருவிழா நடந்தது.  இதில் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.  அப்போது, ஒலிபெருக்கியில் கானா பாட்டு போட வேண்டும் என வலியுறுத்தி சிலர் தகராறில் ஈடுபட்டனர்.</p> <h2>2 பேர் படுகொலை</h2><p>இதில், தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டது.  அப்போது, இரு தரப்பினர் இடையே பெரிய அளவில் மோதல் ஏற்பட்டது.  இந்த சம்பவத்தில், 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.  இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று அவர்களுடைய உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><p>இதனை தொடர்ந்து, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இதனையடுத்து, அந்த் பகுதியில் வன்முறை பரவி விடாமல் தவிர்க்க, 200-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.  இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.</p> ]]></content:encoded></item><item><title>6 ஆயிரம் டன் ரேஷன் அரிசி கடத்தல்: 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/smuggling-of-6000-tonnes-of-ration-rice-2-officials-suspended</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/smuggling-of-6000-tonnes-of-ration-rice-2-officials-suspended#comments</comments><guid isPermaLink="false">d552edfd-4705-46de-b816-4e84e0e8d94c</guid><pubDate>Mon, 17 Aug 2026 02:28:43 +0000</pubDate><atom:updated>2026-08-17T02:28:43.760Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Anti-Corruption Police,Ration rice smuggling,ration rice,ரேஷன் அரிசி,Tamil Nadu Consumer Goods Trading Corporation,நுகர்பொருள் வாணிப கழகம்,ரேஷன் அரிசி கடத்தல்,லஞ்ச ஒழிப்பு போலீஸ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/u0z7jl75/CHENNAI-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/u0z7jl75/CHENNAI-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>6 ஆயிரம் டன்</h2><p>தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் காஞ்சிபுரம் மண்டல மேலாளர் மற்றும் தரக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆகிய 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அதாவது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்திற்கு அரிசி அரைத்துக் கொடுக்கும் தனியார் அரிசி ஆலைகளுடன் கூட்டு சேர்ந்து, பொது வினியோக திட்டத்துக்கு வழங்கப்பட வேண்டிய புதிய அரிசிக்கு பதிலாக 6 ஆயிரம் டன் பழைய பொது வினியோகத்திட்ட அரிசியை வழங்கியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p>தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தால் அரைப்பதற்காக வழங்கப்பட்ட நெல்லில் இருந்து கிடைத்த புதிய அரிசியை தனியார் சந்தையில் விற்றுவிட்டு, பழைய ரேஷன் அரிசியை மீண்டும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்துக்கு வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>ரூ.10.82 கோடி மதிப்பிலான...</h2><p>இந்த முறைகேடு 2025-26 'காரீப்' சந்தை பருவத்தில் மே மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையே நடந்துள்ளது. இது பல மாவட்டங்களில் நடந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் அரைக்கும் முக வர்களாக செயல்படும் 4 தனியார் அரிசி ஆலைகள், தங்களுக்கு வழங்கப்பட்ட நெல்லுக்கு பதிலாக ரூ.10.82 கோடி மதிப்புள்ள 6 ஆயிரம் டன் பழைய ரேஷன் அரிசியை வழங்கின.</p><p>சமீபத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு விசாரணையின்போது இந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் அரைக்கும் முகவர்களாக செயல்படும் 4 தனியார் அரிசி ஆலைகள், புதிய அரிசியை தங்கள் வளாகத்திலேயே வைத்துக்கொண்டு, மேற்கூறிய அளவிலான ரூ.10.82 கோடி மதிப்புள்ள அரிசியை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.</p><h2>2 அதிகாரிகள் பணியிடை நீக்கம்</h2><p>எனவே, அரைக்கும் முகவர்களிடம் இருந்து பெறப்பட்ட அரிசியின் தரத்தை சரிபார்க்க வேண்டிய பொறுப்பில் இருந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் மற்றும் தரக்கட்டுப்பாட்டு அலுவலர், அந்த ஆலைகளுடன் கூட்டு சேர்ந்து, பழைய ரேஷன் அரிசியை பெற்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் சேமிக்க அனுமதித்ததாக கூறப்படுகிறது.</p><p>லஞ்ச ஒழிப்பு விசாரணையின்போது இந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்ததை தொடர்ந்து, அந்த 2 அதிகாரிகளையும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. மேலும், முறைகேட்டில் ஈடுபட்ட 4 அரிசி ஆலை முகவர்களின் ஒப்பந்தங்களையும் ரத்து செய்து, அவர்களை கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக நடைபெற்று வரும் துறை ரீதியிலான தொடர் விசாரணையில் மேலும் பலர் சிக்கலாம் என்று கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஊர் ஊராக சென்று கழுதைப்பால் விற்பனை செய்யும் குடும்பம்... ஒரு சங்கு 100 ரூபாய் - ஆர்வத்துடன் வாங்கி குடிக்கும் மக்கள்  </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-family-travels-from-town-to-town-selling-donkey-milk-100-rupees-per-serving-people-eagerly-buy-and-drink-it</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-family-travels-from-town-to-town-selling-donkey-milk-100-rupees-per-serving-people-eagerly-buy-and-drink-it#comments</comments><guid isPermaLink="false">f9bbccc4-f410-4da5-a032-e1e7bebb9e3f</guid><pubDate>Mon, 17 Aug 2026 02:18:13 +0000</pubDate><atom:updated>2026-08-17T02:18:13.912Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>milk,Perambalur,donkey,கழுதைப்பால்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/9d00yohk/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/9d00yohk/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பெரம்பலுார்,</p><p>பெரம்பலுார் மாவட்டத்தில், துறைமங்கலம், கவுல்பாளையம், நெடுவாசல், சிறுவாச்சூர், நொச்சியம் விளாமுத்துார் உட்பட பல்வேறு கிராமங்களில், ஒரு குடும்பத்தினர், நான்கு வெள்ளை நிற கழுதைகளுடன், ஊர் ஊராக சென்று கழுதைப்பால் விற்பனை செய்கின்றனர். பால் கேட்பவர்களுக்கு, அங்கேயே கறந்து தருகின்றனர். குறிப்பாக, குழந்தைகளுக்காக பலர் பால் வாங்குகின்றனர். ஒரு சங்கு பால் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. </p><p>இது குறித்து கழுதைப்பால் விற்கும் பெண் கூறுகையில், “வி. களத்துார் கிராமத்தை சேர்ந்த நாங்கள், தமிழகம் முழுதும் சென்று, கழுதைப்பால் விற்று வருகிறோம். கழுதைப்பால் மருத்துவ குணம் கொண்டது. அதிகாலை வெறும் வயிற்றில் 7 நாட்கள் தொடர்ந்து குடித்தால் பலன் உண்டு. சிறிய குழந்தைகள் என்றால், ஒரு சங்கு போதும். பெரியவர்களுக்கு, 50 மில்லி கொடுக்க வேண்டும். நாங்கள், பால் விற்பனைக்காகவே கழுதை வளர்க்கிறோம். கழுதையை கிராம பகுதிகளுக்கு ஓட்டிச்சென்று, கலப்படம் இல்லாமல், அங்கேயே கறந்து விற்கிறோம்” என்றார்.</p><p>இருப்பினும் இது தொடர்பாக தனியார் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் கருணாகரன் கூறுகையில், "கழுதைப்பால், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது, மருத்துவ குணம் கொண்டது, நாள்பட்ட நோய்களை தீர்க்கும் என்பது நிரூபிக்கப்படவில்லை. குழந்தைகளுக்கு தாய்ப்பால் தவிர, வேறு எந்த பாலும் கொடுக்கக் கூடாது,'' என்றார்.</p>]]></content:encoded></item><item><title>நாட்டிலேயே முதல்முறையாக.. புதைப்பிடத்தில் வரிசையாக சங்குகள்: அகழாய்வில் கண்டுபிடிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-first-in-the-country-conch-shells-found-arranged-in-rows-at-a-burial-site-during-excavation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-first-in-the-country-conch-shells-found-arranged-in-rows-at-a-burial-site-during-excavation#comments</comments><guid isPermaLink="false">47b7fc21-85dc-44ca-9f13-10a7b77f1252</guid><pubDate>Mon, 17 Aug 2026 02:14:32 +0000</pubDate><atom:updated>2026-08-17T02:14:32.786Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Excavation,அகழாய்வு,சங்குகள்,Conch Shells</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/qfav4nvh/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/qfav4nvh/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விழுப்புரம்,</p><p>விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் ஒன்றியம், ஆதிச்சனுார் -வசந்தகிருஷ்ணாபுரம் என்ற பகுதியில், தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு நடக்கிறது. இதில், 20 -30 மீட் டர் சுற்றளவுள்ள, 10க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் தற்போது கண்டறியப்பட்டு, அகழாய்வு இயக்குநர் பொ.கோ.லோகநாதன், உதவி இயக்குநர்கள் பரத் - குமார், சுரேஷ் ஆகியோர் தலைமையில், ஏழு கல் வட்டங்களில் அகழாய்வு பணிகள் நடக்கின்றன.</p><p>இதுவரை நடந்த அகழாய்வில் இறந்தவர்களை மண் தொட்டியான ஈமப்பேழையில் வைத்து புதைப்பது, தரையில் கிடக்கையாக புதைப்பது எனும், இரண்டு விதமான புதைக்குழிகள் கண்டறியப்பட்டுள்ளன.</p><p>நாட்டில் இதுவரை கண்டறியப்படாத புதிய வகையில், புதைப்பிட பகுதியில், கல்வட்டத்தைப் போலவே வரிசையாக சங்குகள் அடுக் கப்பட்டு உள்ளன. இது, தொல்லியல் ஆய்வாளர்களை ஈர்த்துள்ளது.</p><p>இதுகுறித்து, அகழாய்வு இயக்குநர் லோகநாதன் கூறியதாவது:</p><p>வடமாவட்டங்களில், மலைப்பாங்கான பகுதிகள் அதிகம் என்பதால், இங்கு இறந்தவர்களை புதைத்த பின், அதைச்சுற்றி பல கைக்கற்களால் நான்கு புறமும் சுவர் போல எழுப்பி, அதன் மீது, மிகப்பெரிய கல்லால் மூடி, அதைச் சுற்றிலும் கற்களை வரிசை வரிசையாக வட்டவடிவில் நிரப்புவர்; இதை, கல்வட்டம் என்பர்.</p><p>ஆதிச்சனுாரில் இதே வகையிலான கல்வட்டங்களை கண்டறிந்துள்ளோம். இங்கு, 10-20 மீட் டர் சுற்றளவுள்ள மூடுகல் பயன்படுத்தப்பட்டு உள்ளது. அதைச்சுற்றி, 2-3 கல்வட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. </p><p>மூடுகல்லின் மீதும் அதை நீக்கிய பின் புதை குழியை சுற்றிலும், ஒன்று அல்லது இரண்டு வரிசைகளில், சங்குகள் அடுக்கப்பட்டுள்ளன. இதுபோல, புதைப்பிடத்தில் சங்குகளை வைக்கும் பழக்கம், வேறு எங்கும் நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைக் கவில்லை.</p><p>இதுவரை, மூன்று கல் வட்டங்களில் மூடுகற்கள் நீக்கப்பட்டுள்ளன. அவற்றில், இரண்டில் ஈமப்பேழையும், ஒன்றில் தரைமட்ட புதைப்பு முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒன்றில், ஈமப்பேழை இடுப்பு அல்லது கால் எலும்பு மட்டும், சிறிய அளவில் வெளிப்பட்டு உள்ளது. எலும்பை சுற்றிலும், சடங்கு கலையங்கள் அடுக்கப்பட்டு உள்ளன. அதன் அருகில், சில சங்கு ஆபரணங்கள் உள்ளிட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.</p><p>சங்காலான கழுத்தணியில், நட்சத்திர குறியீடு பொறிக்கப்பட்டுள்ளது. இன்னொரு புதைக்குழியில் செம்பு கிண்ணமும், மற்றொன்றில் இரும்பு வாளும் வெளிப்பட்டுள்ளன. இந்த தொல்லியல் பகுதி, 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்பு காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். தொடர்ந்து அகழாய்வுப் பணிகள் நடக்கின்றன. அவை முடிந்த பின்தான், முழு விபரம் தெரியவரும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p> ]]></content:encoded></item><item><title>ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-inflow-to-hogenakkal-has-increased-to-12000-cubic-feet-per-second</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-inflow-to-hogenakkal-has-increased-to-12000-cubic-feet-per-second#comments</comments><guid isPermaLink="false">825e8d95-0693-4ab6-83b1-78ea33ca6731</guid><pubDate>Mon, 17 Aug 2026 02:14:04 +0000</pubDate><atom:updated>2026-08-17T02:14:04.181Z</atom:updated><atom:author><atom:name>Lingavel Murugan M</atom:name><atom:uri>/api/author/2401545</atom:uri></atom:author><description></description><media:keywords>Hogenakkal,ஒகேனக்கல்,Hogenakkal Cauvery river,ஒகேனக்கல் காவிரி ஆறு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/vmxpt7hx/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/vmxpt7hx/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>ஒகேனக்கல்</h2><p>காவிரி மேலாண்மை வாரியம் கடந்த 15-ந் தேதி முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, கபினி அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 298 கனஅடி தண்ணீரும் என மொத்தமாக 12 ஆயிரத்து 298 கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.</p><p>இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று காலை 6 மணி நிலவரப் படி வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்தது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரித்து காலை 10 மணி நிலவரப்படி வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியானது. இரவு 9 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 9 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்தது.</p><h2>நீர்வரத்து அதிகரிப்பு</h2><p>இந்த நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 12,500 கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் ந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் ஆகிய அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தவெக அரசின் 100 நாள் ஆட்சி, ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி; முதல் அமைச்சர் விஜய் பெருமிதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-governments-100-day-rule-is-the-conscience-of-the-people-for-an-era-chief-minister-vijay-is-proud</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-governments-100-day-rule-is-the-conscience-of-the-people-for-an-era-chief-minister-vijay-is-proud#comments</comments><guid isPermaLink="false">1ef97362-b9ec-442e-9e6c-be404ff78de1</guid><pubDate>Mon, 17 Aug 2026 01:59:37 +0000</pubDate><atom:updated>2026-08-17T01:59:37.184Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆட்சி,100 நாள்,Chief Minister Vijay,முதல் அமைச்சர் விஜய்,தவெக அரசு,TVK Government</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/ap0ahqoy/cm-vijay.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/ap0ahqoy/cm-vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் த.வெ.க. அரசு ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் (ஆகஸ்டு 17) 100 நாட்கள் ஆகிறது. </p><p><a href="https://www.dailythanthi.com/topic/cm-vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> தலைமையிலான தவெக அரசு 100-வது நாளில் அடியெடுத்து வைப்பதை தொடர்ந்து தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>கடந்த 100 நாட்களில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-</p><p>ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி</p><p>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை</p><p>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்- ரூ.560 கோடி ஒதுக்கீடு</p><p>வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026 - 1 இலட்சம் கோடி முதலீடு</p><p>717 மதுபானக் கடைகள் மூடல்</p><p>வெற்றித் திறன் பயிற்சித் திட்டம் 12 இலட்சம் மாணவர்களுக்கும் 1 இலட்சம் இளைஞர்களுக்கும் திறன் பயிற்சிகள்</p><p>TN-VETTRI (கிராமப்புற மறுமலர்ச்சி) சுகாதாரம், குடிநீர், சாலைகள் மேம்படுத்த ஆண்டிற்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீடு</p><p>போதைப் பொருள் ஒடுக்குவதற்கான 65 சிறப்பு அதிரடிப்படைகள்</p><p>அண்ணனின் சீர் திருமண நன்னாளில் 3 கிராம் தங்க நாணயம், ஒரு பட்டுப் புடவை வழங்கப்படும் - ரூ.812 கோடி ஒதுக்கீடு</p><p>கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,000 நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,750 சிறப்பு ஊக்கத்தொகை</p><p>வெற்றி வீடு திட்டம் ரூ.3,500 கோடி ஒதுக்கீடு</p><p>வெற்றி 150 - 150 நாட்கள் உத்தரவாத வேலைவாய்ப்பு</p><p>வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்</p><p>200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம்</p><p>பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் ரூ.710 கோடி ஒதுக்கீடு</p><p>விவசாயிகளுக்கு ரூ.6,000 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி</p><p>வெற்றி மடிக்கணினித் திட்டம் ரூ.2,000 கோடி ஒதுக்கீடு</p><p>அரசு மற்றும் அரசு உதவி பெறும் 11-ம் வகுப்புப் பயிலும் மாணாக்கர்களுக்கு ஹெல்மெட் மற்றும் வாட்டர் பாட்டில் வசதிகளுடன் கூடிய நவீன பிராண்டட் மிதிவண்டிகள்</p><p>வெளிப்படையான &amp; நேர்மையான நிர்வாகம் பல அடுக்குமாடி கட்டடங்களுக்கு CMDA அளவிலேயே திட்ட அனுமதி. நேரடி தொடர்பற்ற பத்திரப் பதிவு</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="und" dir="ltr">100 நாள் ஆட்சி <br>ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி<br><br>100 Days of Governance <br>A Government for Generations<a href="https://x.com/hashtag/CMJosephVijay%E2%80%8C?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CMJosephVijay‌</a> <a href="https://t.co/so1MP9Mw96">pic.twitter.com/so1MP9Mw96</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2089163922746323414?ref_src=twsrc%5Etfw">August 17, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>கோவை, பாலக்காடு ரெயில் நிலைய குடிநீரில் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் பாக்டீரியா - அதிர்ச்சி தகவல் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bacteria-causing-diarrhea-found-in-drinking-water-at-coimbatore-and-palakkad-railway-stations-shocking-information</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bacteria-causing-diarrhea-found-in-drinking-water-at-coimbatore-and-palakkad-railway-stations-shocking-information#comments</comments><guid isPermaLink="false">414332ac-c412-4b34-abb3-3f13f75bba7c</guid><pubDate>Mon, 17 Aug 2026 01:31:22 +0000</pubDate><atom:updated>2026-08-17T01:31:22.947Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>railway station,ரெயில் நிலையம்,குடிநீர்,drinking water,பாக்டீரியா,bacteria</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/p3syjkwc/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/p3syjkwc/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவை, பாலக்காடு, ஐதராபாத் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரில் ‘ஈ-கோலை’ பாக்டீரியா கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.</p><p>இந்தியாவின் முக்கிய ரெயில் நிலையங்களில் பயணிகளின் பயன்பாட்டிற்காக வழங்கப்படும் குடிநீரின் தரம் குறித்து மத்திய தணிக்கை குழு(சி.ஏ.ஜி.) ஆய்வு மேற்கொண்டது. இதன்படி ரெயில் நிலையங்களில் உள்ள குடிநீர் குளிரூட்டிகள், நடைமேடைகளில் உள்ள குடிநீர் குழாய்களில் இருந்து குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. </p><p>இந்த ஆய்வின் முடிவில், பல்வேறு ரெயில் நிலையங்களின் குடிநீரில் பாக்டீரியா இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கோவை, பாலக்காடு, ஐதராபாத் உளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரில் ‘ஈ-கோலை’(E-coli) எனப்படும் பாக்டீரியா கலந்திருப்பது தெரியவந்துள்ளது. </p><p>ரெயில்வே விதிமுறைப்படி குடிநீரின் தரத்தை தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும் என்ற போதிலும் பல மாதங்களாக எந்த ஒரு தர கட்டுப்பாட்டு சோதனையும் நடத்தப்படவில்லை என தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் நீர் சுத்திகரிப்பு மையங்கள் பராமரிப்பின்றி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் தென்னக ரெயில்வே உடனடியாக தலையிட்டு குடிநீர் ஆதாரங்களை சுத்திகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் கால்வாய், ஏரி, குளங்கள் சீரமைப்பு பணிகள் இன்று தொடக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/restoration-work-on-canals-lakes-and-ponds-in-tamil-nadu-begins-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/restoration-work-on-canals-lakes-and-ponds-in-tamil-nadu-begins-today#comments</comments><guid isPermaLink="false">fa5c0c93-8391-4c64-92bc-6a28e500539b</guid><pubDate>Mon, 17 Aug 2026 01:25:12 +0000</pubDate><atom:updated>2026-08-17T01:25:12.341Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,சீரமைப்பு பணி,Water Resources Department,நீர்வளத்துறை,lakes,ஏரிகள்,ponds,குளங்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/w6n9n7hd/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/w6n9n7hd/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 11 ஆயிரம் கால்வாய்கள், ஏரிகளை சீரமைக்கும் பணி இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.</p><h2>நீர்நிலைகள் புனரமைக்கும் பணி</h2><p>புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு இந்த பருவமழை சவாலை சமாளிக்க ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி, சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏரிகள், கூவம் ஆறு மற்றும் நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளை தீவிரமாக தொடங்கி உள்ளது.</p><p>இதேபோல, வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், தமிழகத்தின் கிராமப்புற நீர்வளத்தை பாதுகாத்து மேம்படுத்தும் வகையிலும் மாபெரும் நீர்நிலை புனரமைப்புப் பணிகள் இன்று (திங்கட்கிழமை) தொடங்கப்பட உள்ளன.</p><p><strong>நீர்வளத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-</strong></p><h2>கால்வாய், ஏரிகள்</h2><p>முதல்-அமைச்சர் விஜய் உத்தரவின்படி, வளர்ச்சியடைந்த பாரதம் மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின்கீழ் (விபி ஜி ராம் ஜி). தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீர்வரத்து கால்வாய்கள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.</p><p>இதன்படி, மாநிலம் முழுவதும் 10,185 நீர்வரத்துக் கால்வாய் கள் மற்றும் 809 ஏரிகள், குளங்கள், ஊரணிகள் ஆகியவற்றை தூர்வாரி புனரமைக்கும் பணிகள் தொடங்க உள்ளன. ரூ.500 கோடி மதிப்பீட்டில் ஒரே கட்டமாக மேற்கொள்ளப்படும் இப்பணிகள், தமிழகத்தின் கிராமப்புற நீர்வளத்தை பாதுகாத்து மேம்படுத்தும் முக்கியமான முன்னெடுப்பாகும்.</p><h2>வெள்ள அபாயத்தை...</h2><p>வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக நீர்நிலைகளில் தேங்கியுள்ள மண், கழிவுகள் உள்ளிட்டவற்றை அகற்றி, நீர்வரத்து பாதைகளைச் சீரமைப்பதன் மூலம் மழைக்காலத்தில் கிடைக்கும் நீரை அதிகளவில் சேமிக்க முடியும். இதன் மூலம் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளின் நீர்த்தேக்கத்திறன் அதிகரிப்பதுடன், நிலத்தடி நீர்மட்டத்தையும் உயர்த்துவதற்கான வாய்ப்பு ஏற்படும்.</p><p>குறிப்பாக கிராமப்புறங்களில் விவசாய பாசனத்துக்கு தேவையான நீர்வளம் கிடைப்பதற்கும் இந்தப் பணிகள் பெரும் உதவியாக அமையும். அதீத மழைப்பொழிவு ஏற்படும் நேரங்களில் நீர்வரத்து கால் வாய்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதன் காரணமாக மழைநீர் தேங்கி விவசாய நிலங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகிறது.</p><p>தற்போது மேற்கொள்ளப்படும் கால்வாய் தூர்வாரும் பணிகள் மூலம் மழைநீர் தடையின்றி நீர்நிலைகளை சென்றடைய வழிவகை செய்யப்படும். இதனால் மழைநீரை சேமிப்பதோடு மட்டுமின்றி, பல்வேறு பகுதிகளில் ஏற்படும் நீர்த்தேக்கம் மற்றும் வெள்ள அபாயத்தையும் குறைக்க முடியும்.</p><h2>பொதுமக்களின் பங்களிப்பு</h2><p>தமிழகத்தின் கிராமப்புற நீர்நிலைகளை பாதுகாப்பது அரசின் பணியாக மட்டுமின்றி, பொதுமக்களின் பங்களிப்பும் அவசிய மான ஒன்றாக கருதப்படுகிறது. எனவே, இந்த புனரமைப்பு பணிகளில் உள்ளாட்சி அமைப்புகள், ஊர் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்பும் இடம்பெற உள்ளது.</p><p>முதல்-அமைச்சர் விஜய் அறிவுறுத்தலின்பேரில் நடைபெறும் இந்த மாபெரும் பணியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் அழைப்பு விடுத்துள்ளார்.</p><h2>நீண்டகால நடவடிக்கை</h2><p>கிராமப்புற நீர்வளத்தை காக்கும் நீண்டகால நடவடிக்கையான மழைநீரை வீணாக கடலில் கலக்காமல் சேமித்தல், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல், விவசாயிகளின் பாசன வசதியை மேம்படுத்துதல், வெள்ளப்பாதிப்பைத் தடுப்பது என பல்வேறு நோக்கங்களை ஒருங்கிணைத்து இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக பணிகள் முன்னெடுக்கப்படுவதால் வரும் மழை காலத்தில் கிடைக்கும் நீரை முழுமையாகப் பயன்படுத்துவதற்கான அடித்தளமாக உருவாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>15 ஆண்டுகளுக்குப் பிறகு ரப்பர் விலையில் புதிய உச்சம் - விவசாயிகள் மகிழ்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rubber-prices-hit-new-high-after-15-years-farmers-happy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rubber-prices-hit-new-high-after-15-years-farmers-happy#comments</comments><guid isPermaLink="false">2b2cb397-7b98-4673-8a27-654d07b830ad</guid><pubDate>Mon, 17 Aug 2026 01:24:53 +0000</pubDate><atom:updated>2026-08-17T01:24:53.392Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விலை உயர்வு,விவசாயிகள் மகிழ்ச்சி,farmers happy,prices rise,இயற்கை ரப்பர் உற்பத்தி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/6bpa4jn8/rubber.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/6bpa4jn8/rubber.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாகர்கோவில், </p><p>இந்தியாவில் கேரள மாநிலமும், தமிழகத்தில் குமரி மாவட்டமும் ரப்பர் சாகுபடியில் முதன்மையாக இருக்கிறது. குமரி மாவட்டத்தில் ஏறக்குறைய 25 ஆயிரம் ஹெக்டரில் ரப்பர் சாகுபடி நடைபெறுகிறது. பொதுவாக ரப்பரின் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்துள்ளது. அதாவது கடந்த 2010-ம் ஆண்டு கிலோ ரூ.255 என்ற உச்சத்தைத் தொட்டது. பிறகு மீண்டும் 200-க்கும் கீழ் வந்தது.</p><h2>புதிய உச்சம்</h2><p>15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ரப்பரின் விலை புதிய உச்சத்தை தொட்டது. கிலோ ரூ.275 என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. ரப்பரின் இந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">விலை உயர்வுக்கு</a> உலக அளவில் ஆட்டோ மொபைல் துறையில் ஏற்பட்டுள்ள விற்பனை புரட்சி, போர் காரணமாக கச்சா எண்ணெய்யின் விலையேற்றம் மற்றும் முக்கிய ரப்பர் உற்பத்தி நாடுகளான தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தியாவில் ரப்பருக்கான உற்பத்திச் செலவு அதிகரிப்பு காரணம் என கூறப்படுகிறது.</p><p>இந்த விலையேற்றம் விவசாயிகள் மத்தியில் தித்திப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலும் உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 2-ம் கட்ட கலந்தாய்வு 24-ந் தேதி தொடக்கம்</title><link>https://www.dailythanthi.com/education-and-employment/2nd-phase-counselling-at-tamil-nadu-agricultural-university-begins-on-the-24th</link><comments>https://www.dailythanthi.com/education-and-employment/2nd-phase-counselling-at-tamil-nadu-agricultural-university-begins-on-the-24th#comments</comments><guid isPermaLink="false">e0660fa6-6158-400b-8c21-85e786380c32</guid><pubDate>Mon, 17 Aug 2026 01:09:44 +0000</pubDate><atom:updated>2026-08-17T01:09:44.015Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கலந்தாய்வு,Counselling,2-ம் கட்டம்,தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்,Tamil Nadu Agricultural University</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/qxyhlmbv/agri-university.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/qxyhlmbv/agri-university.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கல்வி&amp;வேலைவாய்ப்பு (Eduction and Jobs)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p>கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் கடந்த ஜூலை 3-ந் தேதி தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்பிறகு வேளாண்மை படிப்புகளுக்கான இணைய வழி கலந்தாய்வு 9-ந் தேதி தொடங்கியது. இதேபோல் அரசுப் பள்ளிகளில் படித்த 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கைக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கான சான்றிதழ் சரி பார்ப்பு மற்றும் சேர்க்கை ஆணை வழங்கும் பணி கடந்த மாதம் 20-ந் தேதி நடைபெற்றது. </p><h2>கலந்தாய்வு</h2><p>7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மொத்தமுள்ள 424 இடங்களில் தற்போது வரை 202 இடங்கள் நிரம்பி உள்ளன. மீதி 222 இடங்கள் காலியாக உள்ளன. பொது கலந்தாய்வில் மொத்தம் உள்ள 5,236 இடங்களில் 4,124 இடங்கள் நிரம்பின. 1,112 இடங்கள் காலியாக உள்ளன. காலியாக உள்ள இடங்களுக்கான<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81"> கலந்தாய்வு</a> வருகிற 24-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான அழைப்பு மாணவ-மாணவிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. கலந்தாய்வில் குறிப்பிட்ட தேதிகளில் மாணவ- மாணவிகள் தகுந்த சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும். இந்த தகவலை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் மானியக் கோரிக்கை விவாதம் இன்று தொடக்கம்: 3 துறைகள் மீது நடக்கிறது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/debate-on-demands-for-grants-begins-in-the-assembly-today-covers-three-departments</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/debate-on-demands-for-grants-begins-in-the-assembly-today-covers-three-departments#comments</comments><guid isPermaLink="false">e3faab9d-26f0-43dc-b7b3-0790df2253af</guid><pubDate>Mon, 17 Aug 2026 00:56:58 +0000</pubDate><atom:updated>2026-08-17T00:56:58.075Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,TN Assembly,மானிய கோரிக்கை,பட்ஜெட் 2026,Budget 2026</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/7878kerj/CHENNAI-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/7878kerj/CHENNAI-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சட்டசபையில் இன்று (திங்கட்கிழமை) மானியக் கோரிக்கை விவாதம் தொடங்குகிறது. முதல் நாளில் 3 துறைகள் மீது நடக்கிறது. </p><h2>பட்ஜெட் கூட்டத் தொடர்</h2><p>தமிழகத்தில் புதிதாக த.வெ.க. அரசு ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், கடந்த 5-ந் தேதி 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், அடுத்த நாள் (6-ந் தேதி) வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 7, 10, 11 ஆகிய தேதிகளில் இரு பட்ஜெட்டுகள் மீதும் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள்.</p><p>அதனைத் தொடர்ந்து, கடந்த 12-ந் தேதி இரு பட்ஜெட்டுகள் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோர் பேசினார்கள். அத்துடன் பட்ஜெட் மீதான விவாதம் நிறைவடைந்தது. சுதந்திர தினத்தை முன்னிட்டு அடுத்த 4 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டது.</p><h2>மானியக் கோரிக்கை விவாதம் தொடக்கம்</h2><p>4 நாட்கள் விடுமுறைக்கு பிறகு, தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடுகிறது. இன்று முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது. முதல் நாளில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது.</p><p>இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் கோ.க.அருண்ராஜ், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் பேசுகிறார்கள். நிறைவாக, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிட இருக்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-50</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-50#comments</comments><guid isPermaLink="false">8368094d-2fae-469f-855f-cf03aa2c115f</guid><pubDate>Mon, 17 Aug 2026 00:36:41 +0000</pubDate><atom:updated>2026-08-17T00:36:41.331Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல் விலை,டீசல் விலை,Petrol and diesel prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/i7s9wl0e/petrol.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/i7s9wl0e/petrol.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.</p> <h2>பெட்ரோல், டீசல் விலை</h2><p>இந்நிலையில், சென்னையில் இன்று (17.08.2026 திங்கட்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ. 99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் சட்டசபையில் இன்று தொடங்குகிறது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/debates-on-demands-for-grants-begin-in-the-legislative-assembly-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/debates-on-demands-for-grants-begin-in-the-legislative-assembly-today#comments</comments><guid isPermaLink="false">16ecbaac-5176-4c53-848b-e08ccd1ad020</guid><pubDate>Sun, 16 Aug 2026 18:57:41 +0000</pubDate><atom:updated>2026-08-16T18:57:41.397Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,Assembly,மானிய கோரிக்கை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/5pacvg83/ass.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக பட்ஜெட்டை தொடர்ந்து துறை ரீதியான மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் இன்று தொடங்குகிறது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/5pacvg83/ass.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக பட்ஜெட்டை தொடர்ந்து துறை ரீதியான மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் இன்று தொடங்குகிறது.</p><h2>சட்டசபை கூட்டம்</h2><p>தமிழக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">சட்டசபை</a>யில் கடந்த 5-ந் தேதி, 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 6-ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.</p><p>இந்த நிலையில், கடந்த 7, 10, 11 ஆகிய தேதிகளில் 3 நாட்கள், பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.</p><h2>4 நாட்கள் விடுமுறை</h2><p>அதனைத் தொடர்ந்து, சட்டசபையில், 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோர் பதில் அளித்தனர். அதனைத் தொடர்ந்து, சட்டசபை கூட்டம் நிறைவடைந்தது.</p><p>இதனைத் தொடர்ந்து வியாழன்  (13-ந் தேதி) மற்றும் வெள்ளிக்கிழமை (14-ந் தேதி) சட்டசபை கூட்டம் நடைபெறவில்லை. நேற்று முன்தினம் (15-ந் தேதி) சுதந்திர தினம் என்பதால், அரசு விடுமுறை நாளாகும். அடுத்த நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இப்படி, தொடர்ந்து 4 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.</p><h2>இன்று மானியக் கோரிக்கை விவாதம்</h2><p>இந்நிலையில் இன்று 17-ந் தேதி (திங்கட்கிழமை) சட்டசபை மீண்டும் கூட இருக்கின்றது. அதில் முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதமும் தொடங்குகிறது.</p><p>முதல் நாளில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகியவை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>“மீசை மழிக்கும் சவாலுக்கு ஆர்.எஸ்.பாரதி தயாராக இருக்க வேண்டும்” - தவெக எம்எல்ஏ இசிஆர் சரவணன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-bharathi-must-be-prepared-for-the-moustache-shaving-challenge-tvk-mla-ecr-saravanan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-bharathi-must-be-prepared-for-the-moustache-shaving-challenge-tvk-mla-ecr-saravanan#comments</comments><guid isPermaLink="false">cf849736-1748-4045-b085-8d52a0ceec71</guid><pubDate>Sun, 16 Aug 2026 17:56:24 +0000</pubDate><atom:updated>2026-08-16T17:56:24.516Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,ஆர்.எஸ்.பாரதி,எம்எல்ஏ,R.S. Bharathi,இசிஆர் சரவணன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/sfvkksfr/ec.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சட்டமன்றத் தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியனுக்கு வாக்களிக்காதவர்களுக்கு நல்ல சாவே வராது என கூறிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு, சோழிங்கநல்லூர் தொகுதி தவெக எம்எல்ஏ இசிஆர் சரவணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/sfvkksfr/ec.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டமன்றத் தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியனுக்கு வாக்களிக்காதவர்களுக்கு நல்ல சாவே வராது என கூறிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு, சோழிங்கநல்லூர் தொகுதி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95">தவெக </a>எம்எல்ஏ இசிஆர் சரவணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><h2> ஆர்.எஸ்.பாரதிக்கு கண்டனம்</h2><p>இசிஆரில் நடைபெற்ற விழாவில் பேசிய இசிஆர் சரவணன், மாநகராட்சி தேர்தலில் தவெக வெற்றி பெற்றால் ஒருபக்க மீசையை மழித்துக்கொள்வேன் என ஆர்.எஸ்.பாரதி ஏற்கனவே சவால் விடுத்துள்ளதாக குறிப்பிட்ட அவர், தேர்தல் முடிவுக்குப் பிறகு அந்த சவாலை நிறைவேற்றுவதற்கு ஆர்.எஸ்.பாரதி தயாராக இருக்க வேண்டும் என கூறினார்.</p><h2>100வது சுதந்திர தினம் </h2><p>மேலும், 100வது சுதந்திர தினத்தன்றும் முதல்-அமைச்சர் விஜய் தான் தலைமை செயலகத்தில் தேசிய கொடி ஏற்றப்போகிறார் எனவும் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: முதல்-அமைச்சர் விஜய் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/karnataka-tamilar-shooting-incident-cm-vijay-condemnation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/karnataka-tamilar-shooting-incident-cm-vijay-condemnation#comments</comments><guid isPermaLink="false">2a0042f2-321e-4478-8d30-52e69afa27ec</guid><pubDate>Sun, 16 Aug 2026 16:33:31 +0000</pubDate><atom:updated>2026-08-16T16:33:31.103Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,கண்டனம்,சுட்டுக்கொலை,தமிழர்கள்,shot dead,Tamils,‪Karnataka‬,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/kb9kpo4a/cmjoseph-vijay.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/kb9kpo4a/cmjoseph-vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a> கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து  முதல்-அமைச்சர் விஜய் விஜய் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p> <h2>வேதனை அளிக்கிறது</h2><p>கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டம், ஹனூர் தாலுக்காவில் உள்ள கிராமங்களில் வசித்து வந்த தமிழர்களான அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார் ஆகியோர், 2026 ஆகஸ்ட் 15 அன்று அதிகாலையில், காவிரி வனவிலங்கு சரணாலய பகுதியில், கர்நாடக வன துறையினரால் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">சுட்டுக்கொல்லப்பட்டது</a> வேதனை அளிக்கிறது. இந்த படுகொலையை வன்மையாக கண்டிக்கிறேன். </p> <p>இந்த சம்பவம் தொடர்பாகக் கர்நாடக வனத்துறை கொடுத்த விளக்கம் ஏற்புடையதல்ல.</p><h2>நேர்மையான விசாரணை</h2><p>இந்த கொடூர சம்பவம் தொடர்பாக நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும். உயர்மட்ட  விசாரணை குழு அமைத்து, தவறிழைத்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கர்நாடக அரசு வழங்க வேண்டும்.</p><h2>நடவடிக்கை</h2><p>இதுபோன்று இனியொரு சம்பவம் நடக்காமல் இருக்க, கர்நாடக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>கொசஸ்தலை ஆற்றையும் எண்ணூர் கழிமுகத்தையும் மீட்டெடுக்க வேண்டும் - சீமான்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kosasthalai-river-and-ennore-estuary-should-be-restored-seeman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kosasthalai-river-and-ennore-estuary-should-be-restored-seeman#comments</comments><guid isPermaLink="false">c3703537-a359-41fb-a431-d3fd214b0245</guid><pubDate>Sun, 16 Aug 2026 16:25:09 +0000</pubDate><atom:updated>2026-08-16T16:25:09.021Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,Seeman,நாம் தமிழர் கட்சி,Kosasthalai river,கொசஸ்தலை ஆறு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/6ob8uph8/seeman.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/6ob8uph8/seeman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் <a href="https://www.dailythanthi.com/topic/seeman">சீமான்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>எண்ணூர் கழிமுகத்திலும் கொசஸ்தலை ஆற்றிலும் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதக்கும் சம்பவம் வெறும் சுற்றுச்சூழல் பேரழிவு மட்டுமல்ல, எளிய மீனவ மக்களின் வாழ்வாதாரத்தின் மீதான நேரடி தாக்குதலாகும். </p><h2>சுற்றுச்சூழல் பேரிடர்</h2><p>இதுவரை கண்டிராத மிகப்பெரிய சுற்றுச்சூழல் பேரிடராக, எண்ணூர் கழிமுகத்திலும் கொசஸ்தலை ஆற்றிலும் இன்று 16.08.2026, டன் கணக்கில் மீன்களும் கடல்வாழ் உயிரினங்களும் செத்து மிதந்து கரை ஒதுங்கி வரும் சீரழிவு நடந்தேறியுள்ளது. இந்த நச்சு மாசுபாட்டால் தங்களின் வாழ்வாதாரமே ஒட்டுமொத்தமாக அழிந்துபோன நிலையில், சம்பவம் நடந்து இத்தனை மணி நேரமாகியும் எந்தவொரு அரசு அதிகாரியோ அல்லது ஆட்சியாளர்களோ தங்களை நேரில் வந்து சந்திக்காதது அப்பகுதி மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த 8 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள், உடனடியாக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தாழங்குப்பம் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><h2>உரிய இழப்பீடு</h2><p>காலம் காலமாக அனல்மின் நிலையங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் நச்சுக் கழிவுகள் கொசஸ்தலை ஆற்றில் கலக்கப்பட்டு, அந்நிலப்பரப்பே சீரழிக்கப்பட்டு வருகிறது. தற்போது வேதிப்பொருள் கழிவுகளால் பல்லாயிரக்கணக்கான மீன்களும், நண்டு, இறால் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களும் செத்து மடிந்து மிதப்பது அப்பகுதி மக்களின் வாழ்வையே கேள்விக்குறியாக்கியுள்ளது. இவ்வளவு பெரிய சூழலியல் சீரழிவு தொடர்ந்து நடப்பதற்கு தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மாநில Pollution Control Board (TNPCB) அமைப்பின் அலட்சியமும், போலி கண்காணிப்புமே முதன்மை காரணம். தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை நாசமாக்கும் நிறுவனங்களைக் கண்டறிந்து தண்டிப்பதற்குப் பதிலாக, பெரு நிறுவனங்களுக்கு துணைபோகும் கடந்த திமுக அதிமுக ஆட்சியாளர்களின் போக்கையே தற்போதைய தவெக அரசும் பின்பற்றுவது மாற்றம் என்று வாக்களித்த மக்களுக்கு செய்யும் அநீதியாகும். குற்றமிழைத்த தொழிற்சாலைகள் மீது சட்டப்பூர்வமாக வழக்குப் பதிவு செய்து, உடனடியாக அவற்றின் செயல்பாடுகளை முடக்க வேண்டும். அத்துடன், பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டை அந்த நச்சு நிறுவனங்களிடமிருந்தே பெற்றுத்தர உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>'வளர்ச்சி' என்ற பெயரில் சுற்றுச்சூழல் விதிகளையும், கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) விதிகளையும் தளர்த்தி, கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆற்றுப்படுகைகளையும் கழிமுகங்களையும் நச்சுக் கிடங்காக மாற்ற மத்திய பாஜக அரசு வழிவகுத்துள்ளது. மாநிலத்தின் இயற்கை வளங்களையும், பூர்வகுடி மக்களின் வாழ்வுரிமையையும் பலியிடும் இந்தச் சுற்றுச்சூழல் துரோகத்தை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மத்திய, மாநில அரசுகள் இனியும் வேடிக்கை பார்க்காமல், கொசஸ்தலை ஆற்றையும் எண்ணூர் கழிமுகத்தையும் மீட்டெடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.  எண்ணூர் கழிமுக மாசுபாட்டால் வாழ்வாதாரமிழந்து தாழங்குப்பம் நெடுஞ்சாலையில் நீதிக்காகப் போராடி வரும் மீனவ கிராம மக்களின் அறவழிப் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தனது முழுமையான ஆதரவைத் தெரிவிப்பதோடு, பாதிக்கப்பட்ட எளிய மக்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்கும் வரை இந்த அறப்போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து தோளோடு தோள் நின்று இறுதிவரை களமாடும் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அப்பாவி கிராம மக்கள் மீது என்கவுன்டர் நடத்த வேண்டிய அவசியம் என்ன? - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-is-the-need-to-carry-out-an-encounter-against-innocent-villagers-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-is-the-need-to-carry-out-an-encounter-against-innocent-villagers-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">7d9b61f3-4e8d-46a6-bcfc-693321e2d873</guid><pubDate>Sun, 16 Aug 2026 15:59:55 +0000</pubDate><atom:updated>2026-08-16T15:59:55.404Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore MP,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/3srfndr1/manickam-tagore.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/3srfndr1/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அதிகாலை நேரத்தில் அப்பாவி கிராம மக்கள் மீது என்கவுன்டர் நடத்த வேண்டிய அவசியம் என்ன? என்று  காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>மூவர் சுட்டுக் கொலை</h2><p>கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் காவிரி வனப்பகுதியில் அப்பாவித் தமிழர்களான அந்தோணிசாமி, ஜான்ரோஸ் பீட்டர், குமார் ஆகிய மூவரை மான் வேட்டை என்ற பொய்க் காரணத்தைக் கூறி கர்நாடக வனத்துறை கொடூரமாகச் சுட்டுக் கொன்ற சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!</p><p>அதிகாலை நேரத்தில் அப்பாவி கிராம மக்கள் மீது என்கவுன்டர் நடத்த வேண்டிய அவசியம் என்ன?</p><h2>கைது செய்ய வேண்டும்</h2><p>கர்நாடக வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, அப்பாவி எளிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய வனத்துறை ஊழியர்களை உடனடியாகப் பணிநீக்கம் செய்து, கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்!</p><p>அப்பாவித் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழர்களைக் </a>குறிவைத்துத் தாக்கப்படும் இதுபோன்ற கொடூர வன்முறைச் செயல்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்!</p><p>இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல் - 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/1967-grams-of-gold-seized-at-chennai-airport</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/1967-grams-of-gold-seized-at-chennai-airport#comments</comments><guid isPermaLink="false">0e03097b-7d1d-49cc-897b-01e32eecf418</guid><pubDate>Sun, 16 Aug 2026 15:42:06 +0000</pubDate><atom:updated>2026-08-16T15:42:06.237Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,கைது,airport,விமான நிலையம்,smuggled gold,கடத்தல் தங்கம் பறிமுதல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/om4e97a8/gold-smuggle.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கடத்தல் தங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/om4e97a8/gold-smuggle.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் இருந்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">சென்னை சர்வதேச விமான நிலையம்</a> வந்த பயணிகளிடம் இருந்து 1,967 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தில் சட்டவிரோதமாகத் தங்கம் கடத்திய 2 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.</p> <h2>ரகசிய தகவல் </h2><p>தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் விமானத்தில் பெருமளவில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">தங்கம்</a> கடத்தி வரப்படுவதாக சென்னை சுங்கத்துறையின் விமானப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று சென்னை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். </p> <h2>மியான்மர் நாட்டு பயணிகள்</h2><p>அப்போது பாங்காக்கில் இருந்து சென்னை வந்து இறங்கிய விமான பயணிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அந்த சமயத்தில், மியான்மர் நாட்டை சேர்ந்த ஒரு பெண் பயணியும், அவருடன் வந்த ஆண் பயணி ஆகியோரை சென்னை சுங்கத்துறையின் விமானப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். அவர்கள் இருவரின் மீதும் அதிகாரிகளுக்கு பெரும் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்களை தனியறைக்கு அழைத்து சென்று சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் நடத்தினர்.</p><h2>உடலுக்குள் தங்கம்</h2><p>அதிகாரிகள் நடத்திய சோதனையில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் அம்பலமாகின:ஆண் பயணி அவரது உடலுக்குள் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 பிரம்மாண்ட தங்க கட்டிகளை அதிகாரிகள் கண்டுபிடித்துப் பறிமுதல் செய்தனர். பெண் பயணியியை சோதனையிட்டபோது, அவரும் தனது உடலுக்குள் ரகசியமாக சிறிய அளவிலான தங்க உருண்டைகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகள் நடத்திய மேல் சோதனையில், அவர்கள் உடலில் மேலும் சில தங்க கட்டிகள் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததும் உறுதி செய்யப்பட்டு, அவை அனைத்தும் வெளியே எடுக்கப்பட்டன. </p> <h2>ரூ.2.65 கோடி தங்கம் பறிமுதல்</h2><p>அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 24 காரட் சுத்த தங்க கட்டிகளின் மொத்த நிகர எடை 1,967 கிராம் (சுமார் 2 கிலோ) ஆகும். இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.2.65 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்கம் சுங்க சட்ட விதிகளின் கீழ் முறைப்படி பறிமுதல் செய்யப்பட்டது.</p> <h2>நீதிமன்ற காவலில் அடைப்பு</h2><p>கடத்தப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சுங்க சட்ட விதிகளின் கீழ் இரு பயணிகளும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.  மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஒவ்வொரு தேசிய இனமும் மொழிவழி அணிதிரள வேண்டும் - வன்னி அரசு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/every-nationality-should-unite-through-language-vanniarasu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/every-nationality-should-unite-through-language-vanniarasu#comments</comments><guid isPermaLink="false">c358daf1-23d3-419a-a2dc-082da1606bfe</guid><pubDate>Sun, 16 Aug 2026 15:29:41 +0000</pubDate><atom:updated>2026-08-16T15:29:41.909Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விசிக,VCK,minister vanni arasu,அமைச்சர் வன்னி அரசு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/dqy58g8g/vanni-arasu.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வன்னி அரசு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/dqy58g8g/vanni-arasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சமூக நீதித்துறை அமைச்சரும், விசிக துணை பொதுச்செயலாளருமான<a href="https://www.dailythanthi.com/topic/vanni-arasu"> வன்னி அரசு </a>தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு</h2><p>விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அடிப்படையான ஐவகை கொள்கை முழக்கங்களுள் 'தமிழ்த் தேசியம்' என்பதுவும் ஒன்றாகும். 1991 ஆம் ஆண்டு இயக்கத்தின் கொடியை வடிவமைத்து அறிமுகப் படுத்திய போதே "சாதி ஒழிப்பு, தமிழ்த் தேசியம், மகளிர் விடுதலை, பாட்டாளி வர்க்க விடுதலை மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு" ஆகியவற்றை அறிவித்தோம். அது முதல் கடந்த முப்பைத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நாம் உரத்துப் பேசிவரும் கொள்கைளுள் ஒன்று தான் தமிழ்த் தேசியம் ஆகும். இந்தக் கொள்கையின் அடிப்படையில்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழீழ விடுதலை மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆதரவு நிலைப்பாட்டை மேற்கொண்டு பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள்  என பல்வேறு செயற்திட்டங்களைத் தீட்டி வீரியமாகக்  களமாடியிருக்கிறோம். குறிப்பாக, தமிழீழ அங்கீகார மாநாடு, எழும் தமிழீழம் மாநாடு, தமிழர் இறையாண்மை மாநாடு, மாநில சுயாட்சி மாநாடு என இலட்சக் கணக்கிலே மக்களைத் திரட்டி தமிழ்த்தேசிய அரசியலுக்கான அரசியல் உரையாடல்களைத் தீவிரப்படுத்தினோம். அதன் தொடர்ச்சியாகவே தற்போது தமிழ்த்தேசிய எழுச்சி மாநாட்டை ஒருங்கிணைத்துள்ளோம். </p><p>இம்மாநாடு கடந்த மே-17, 2026 அன்று நடைபெறுவதாக மார்ச் மாதத்திலேயே அறிவிக்கப்பட்டது. தவிர்க்கமுடியாத அரசியல் நிலைமைகளால் தள்ளிவைக்கப்பட்டு தற்போது ஆகஸ்ட் 17 அன்று நடைபெறவுள்ளது. </p><p>சட்டப் பேரவை தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றமும் அரங்கேறியுள்ள தற்போதைய சூழலில், 'இம்மாநாடு பொருத்தமற்றதாக உள்ளதே'- என ஒருசிலர் பேசுகின்றனர். ஆனால், தேர்தல் அரசியலைக் கடந்து கருத்தியல் நோக்கில் அணுகுவோர் இதனை வெகுவாக வரவேற்கும் நிலையைக் காணமுடிகிறது. குறிப்பாக,  பாரதிய ஜனதா மற்றும் சங்கப் பரிவாரங்கள் உயர்த்திப் பிடிக்கும் 'ஹிந்து ராஷ்ட்ரா' என்னும் மதவழி தேசியவாதத்தின் விளைவுகளைப் புரிந்தோர் அதற்கு எதிரான ஒரு நடவடிக்கையாக நாம் முன்னிறுத்தும் தமிழ்த்தேசியம் என்னும் மொழிவழி தேசியத்தை வரவேற்கின்றனர். </p><p>புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின்  'மதசார்பற்ற - சமத்துவ இந்தியா' என்னும் புரட்சிகரக் கனவைச் சிதைக்கும் உள்நோக்கம் கொண்ட சங்கப் பரிவாரங்களின் 'மதவழி தேசிய'த்துக்கு மாற்றாகக் கட்டமைக்க வேண்டிய தேசியவாத அரசியல் 'மொழிவழி தேசியமே' என்பதை ஓங்கி ஒலிக்கும் கருத்தியல் களமே இந்த மாநாடு ஆகும். </p><h2>இன்றியமையாத தேவை</h2><p>தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் மொழிவழி தேசியம் என்றால் அது 'தமிழ்த் தேசியமே' ஆகும். தமிழ்த் தேசியம் என்பது மொழி அடையாளத்தை மட்டுமே உள்ளடக்கமாகக் கொண்டதல்ல என்பதைத்  தெளிவுப்படுத்தும் நோக்கில் இன்று இம்மாநாட்டை நாம் ஒருங்கிணைக்க வேண்டிய வரலாற்றுத் தேவை எழுந்துள்ளது. 'தமிழ், தமிழன் மற்றும் தமிழ்நாடு' என 'மொழி-இனம்-வாழ்நிலம்' என்கிற அலகுகளைக் கொண்டு தனித்து இயங்கும் அரசு மற்றும் ஆட்சியதிகாரத்தை வென்றெடுக்கும் நோக்கத்தை இது முதன்மைக்கூறாகப் பெற்றிருந்தாலும் அதன் பிற அடிப்படைக் கூறுகளை அடையாளப்படுத்துவதும் அவற்றைக் கூர்மைப்படுத்துவதும் தமிழ்த்தேசியத்தின் இன்றியமையாத தேவைகளாக உள்ளன. அந்தப் பிற அடிப்படைக் கூறுகளுள் முதனமையானவை சாதி ஒழிப்பு மற்றும் மதசார்பின்மை ஆகியவை ஆகும். அத்துடன் அவற்றின்வழியிலான 'சுதந்திரம் சமத்துவம் மற்றும் சகோதரத்துவம்' ஆகியனவும் ஆகும். </p><h2>'ஹிந்து ராஷ்ட்ரம்'</h2><p>இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உயிர்மூச்சுக் கோட்பாடுகளான சுதந்திரம் சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை வென்றெடுக்க சாதி ஒழிப்பும் மதசார்பின்மையும் தவிர்க்கமுடியாத கட்டாயத் தேவைகளாகும். இத்தகைய சாதிஒழிப்புக்கும் மதச்சார்பின்மைக்கும் நேரெதிரான செயலதிட்டமே சங்கப்பரிவாரங்களின் மதசார்புத் தேசியவாதமான 'ஹிந்து ராஷ்ட்ரம்' என்கிற அரசியலாகும். இதற்கு எதிராக அல்லது மாற்றாக இன்னொரு மதசார்பு தேசியத்தை முன்னிறுத்த இயலாது. இந்நிலையில் தான் 'மதம் சார்ந்த அடையாள அரசியலுக்கு' எதிராக 'மதசார்பின்மை என்னும் அடையாளமற்ற அரசியல்' தேவையாகிறது. தேசிய இனம் என்னும் அடையாளமும், தேசிய இனங்களின் அய்க்கியமும், தேசிய இனங்களின் கூட்டாட்சி என்னும் அடிப்படையிலான தேசியமே மொழிவழி தேசியமாகும். அதனடிப்படையில், தமிழர்கள் தமிழ்த் தேசிய இனமாக எழுச்சிபெறவேண்டும் என்பதைப் போல ஒவ்வொரு தேசிய இனமும் மொழிவழி அடையாமாகவே அணிதிரள வேண்டும். அத்தகைய தேசிய இனங்களுக்கிடையில் நல்லிணக்கமான நட்புறவு மற்றும் ஐக்கியத்தைக் கட்டமைக்க வேண்டும். தேசிய இனங்களுக்கிடையிலான ஐக்கியத்திலிருந்தே இந்திய அளவில் மதவாத தேசியத்திற்கு எதிரான மாற்று தேசியத்தை புதிதாகக் கட்டி எழுப்பமுடியும்.</p><p>இவ்வாறு அதில் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடகாவில் 3 தமிழர்கள் என்கவுன்ட்டர்: தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? - சீமான் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-tamils-killed-in-an-encounter-in-karnataka-what-is-the-tamil-nadu-governments-stance-seeman-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-tamils-killed-in-an-encounter-in-karnataka-what-is-the-tamil-nadu-governments-stance-seeman-asks#comments</comments><guid isPermaLink="false">7852dfd2-0bb5-4f3f-850a-dd985edeee3a</guid><pubDate>Sun, 16 Aug 2026 15:25:54 +0000</pubDate><atom:updated>2026-08-16T15:25:54.623Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,நாதக,சீமான்,NTK,Seeman,தமிழகம்,Karnataka,கர்நாடகா,தமிழர்கள்,Tamils</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/zgkt7bcr/depam.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/zgkt7bcr/depam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா சாக்கியா அருகே காவேரி வனவிலங்கு சரணாலயத்தில் மரிமங்கலா வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் அடிக்கடி வேட்டைக்காரர்கள் புகுந்து மான் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடி வருகிறார்கள். இதனால் வனப்பகுதியில் ரோந்து பணியை வனத்துறையினர் அதிகரித்துள்ளனர். </p><p>இந்த நிலையில் சாக்கியா வனப்பகுதியில் மர்மநபர்கள் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு அவர்கள் சென்றபோது வனத்துறையினர், வேட்டைக்காரர்கள் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. அந்த சமயத்தில் வேட்டைக்காரர்கள் சுட்டதில் வனக்காவலர் ஒருவர் காயம் அடைந்தார்.</p><p>பின்னர் வேட்டைக்காரர்கள் 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அப்போது வனத்துறையினர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் 3 பேர் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது. இதனால் அவர்கள் அங்கேயே சுருண்டு விழுந்தனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார்.</p><h2>தமிழர்கள்</h2><p>என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட 3 பேரும்  ஹனூர் அருகே தோமியார்பாளையாவை சேர்ந்த அந்தோணி சாமி, பீட்டர் மற்றும் குமார் என்பதும் அவர்களின் பூர்வீக தமிழகம் என்பதும் தெரியவந்தது. இந்த நிலையில் வனத்துறையினர் 3 பேரை என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றதை அறிந்து அவர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே சாக்கியா, தோமியார்பாளையா கிராம மக்கள், வனத்துறையினரின் நடவடிக்கைக்கு எதிராக ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர்.</p><h2>வழக்கு தொடர வேண்டும்</h2><p>இந்நிலையில் கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர்கள் மானை வேட்டையாட வந்தார்கள் என்று கர்நாடக அரசு பழிபோடுவதை தமிழ்நாடு அரசு ஏற்கிறதா? எதிர்க்கிறதா? இதில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? தமிழ்நாடு வனத்துறை அமைச்சர், தமிழ்நாடு முதல்-அமைச்சரின் கருத்து என்ன?</p><p>வனத்துறை அமைச்சர் தலைமையில் ஆய்வுக்குழுவை அனுப்புக. கர்நாடக வனத்துறை மீது கொலை வழக்குப்பதிந்து சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>
கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் குறித்து பேசும் புதிய அரசியலை முன்னெடுப்போம்: அண்ணாமலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-champion-a-new-brand-of-politics-that-focuses-on-education-employment-technology-and-the-environment-annamalai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-champion-a-new-brand-of-politics-that-focuses-on-education-employment-technology-and-the-environment-annamalai#comments</comments><guid isPermaLink="false">3c4705e8-c42d-4eea-8fe7-a1de2c77a512</guid><pubDate>Sun, 16 Aug 2026 15:22:35 +0000</pubDate><atom:updated>2026-08-16T15:22:35.765Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Annamalai,அண்ணாமலை,we the leaders,வீ தி லீடர்ஸ் அமைப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/zqhnycub/Untitled-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/zqhnycub/Untitled-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் நல்லாட்சி குறித்து பேசும் புதிய அரசியலை நாம் முன்னெடுத்துச் செல்வோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வீ த லீடர்ஸ் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>நமது இலக்கு 20 லட்சம் மரங்கள்</h2><p>இன்று மாலை, நமது வீ த லீடர்ஸ் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியில், பெரும் திரளெனக் கூடியிருந்த சகோதர சகோதரிகளுடன் பங்கேற்றதில் பெரும் மகிழ்ச்சி. இந்தப் பேரணியில் பங்கேற்றுச் சிறப்பித்த, சின்னக் கலைவாணர், அண்ணன் அமரர் விவேக்கின் மனைவி அருள்செல்விக்கு, எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இயற்கையைப் பாதுகாப்பது என்பது வெறும் மரங்களை நடுவது மட்டும் அல்ல. நமது நீர்வளம், கிராமப்புற வளர்ச்சி, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலத் தலைமுறையின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதும் தான். காவிரி நதி நீர் பிரச்சினை, மேகதாது அணைத் திட்டம் போன்ற விவகாரங்களில் தமிழ்நாட்டின் நீர்வள உரிமைகளைப் பாதுகாப்பது அவசியம். அதேபோல், நமது கிராமங்களில் உள்ள ஏரிகள், குளங்கள், ஊரணிகள், கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளைப் பாதுகாத்து, மழைநீரை சேமிக்கும் வகையில் அவற்றை மேம்படுத்த வேண்டியதும் நமது கடமை.</p><p>கடந்த 16 நாட்களில் நமது வீ த லீடர்ஸ் சார்பில், 6,25,760 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மாதத்திற்கான நமது இலக்கு 20 லட்சம் மரங்கள். இன்னும் 15 நாட்களில் 14 லட்சம் மரங்களை நட்டு இந்த இலக்கை எட்ட வேண்டும். அண்ணன், சின்னக் கலைவாணர் அமரர் விவேக்கின் பசுமைப் பணியை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். அவர் ஏற்கனவே 37 லட்சம் மரக்கன்றுகளை நட்டு உருவாக்கிய பசுமைப் பாதையை, வரும் மாதங்களில் மீதமுள்ள மரங்களை நட்டு, அவரது 1 கோடி மரங்கள் என்ற கனவை நிறைவேற்றும் பணியில் நாமும் பங்கெடுப்போம்.</p><h2>இளைஞர்கள் விரும்புவதில்லை</h2><p>தமிழக முதல்-அமைச்சர் விஜய்யிடம் ஒரு வேண்டுகோள். ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை வழங்க வேண்டும் என்ற உங்கள் நிலைப்பாட்டை வரவேற்கிறோம். ஆனால், உங்கள் அமைச்சரவையில் சிலர் லஞ்சம் பெறுவதாக வரும் குற்றச்சாட்டுகளை விசாரித்து, தவறு நடந்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவது உங்கள் பொறுப்பு.</p><p>இன்றைய இளைஞர்களின் குரலை நாம் கேட்க வேண்டும். அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டு, அவர்களின் எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ள வேண்டும். பிறர் குடும்பத்தைப் பற்றி தரக்குறைவாகப் பேசுவது, தனிப்பட்ட தாக்குதல்கள் செய்வது போன்ற, அநாகரிக அரசியலை, இன்றைய இளைஞர்கள் விரும்புவதில்லை. கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் நல்லாட்சி குறித்து பேசும் புதிய அரசியலை நாம் முன்னெடுத்துச் செல்வோம்.</p><p>நீர்நிலைகளை காப்போம்; மரங்களை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வளர்ப்போம்</a>; அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவோம். கிராமங்களை முன்னேற்றுவோம். நம் குழந்தைகளின் எதிர்காலத்தை சிறப்பாக்குவோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் சட்டசபையில் நாளை தொடங்குகிறது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/debates-on-demands-for-grants-begin-in-the-legislative-assembly-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/debates-on-demands-for-grants-begin-in-the-legislative-assembly-tomorrow#comments</comments><guid isPermaLink="false">ce1f2047-9a78-4cde-a79f-1c6a6c8f620d</guid><pubDate>Sun, 16 Aug 2026 14:49:07 +0000</pubDate><atom:updated>2026-08-16T14:49:07.920Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,தமிழக சட்டசபை,TN Assembly,Assembly Session,Budget,மானிய கோரிக்கை,Budget 2026,சட்டசபை கூட்டத் தொடர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/w8vqfukr/kolee.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/w8vqfukr/kolee.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக பட்ஜெட்டை தொடர்ந்து துறை ரீதியான மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நாளை தொடங்குகிறது.</p><h2>சட்டசபை கூட்டம்</h2><p>தமிழக சட்டசபையில் கடந்த 5-ந் தேதி, 2026-2027-ம் ஆண்டுக்கான <a href="https://www.dailythanthi.com/topic/budget">பொது பட்ஜெட்</a>டும், 6-ந் தேதி <a href="https://www.dailythanthi.com/topic/budget">வேளாண் பட்ஜெட்</a>டும் தாக்கல் செய்யப்பட்டது.</p><p>இந்த நிலையில், கடந்த 7, 10, 11 ஆகிய தேதிகளில் 3 நாட்கள், பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.</p><h2>4 நாட்கள் விடுமுறை</h2><p>அதனைத் தொடர்ந்து, சட்டசபையில் இன்று, 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோர் பதில் அளித்தனர். அதனைத் தொடர்ந்து, சட்டசபை கூட்டம் நிறைவடைந்தது.</p><p>இதனைத் தொடர்ந்து வியாழன்  (13-ந் தேதி) மற்றும் வெள்ளிக்கிழமை (14-ந் தேதி) சட்டசபை கூட்டம் நடைபெறவில்லை. நேற்று (15-ந் தேதி) சுதந்திர தினம் என்பதால், அரசு விடுமுறை நாளாகும். அடுத்த நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இப்படி, தொடர்ந்து 4 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது</p><h2>நாளை மானியக் கோரிக்கை விவாதம்</h2><p>இந்நிலையில் நாளை  17-ந் தேதி (திங்கட்கிழமை) சட்டசபை மீண்டும் கூட இருக்கின்றது. அதில் முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதமும் தொடங்குகிறது.</p><p>முதல் நாளில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகியவை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>லேப்டாப்புக்கு சார்ஜ் போட்டபோது மின்சாரம் தாக்கி பிளஸ்-1 மாணவர் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/plus-1-student-dies-after-being-electrocuted-while-charging-laptop</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/plus-1-student-dies-after-being-electrocuted-while-charging-laptop#comments</comments><guid isPermaLink="false">2c13321f-6d69-4acd-a534-7a10636f7e0f</guid><pubDate>Sun, 16 Aug 2026 14:29:37 +0000</pubDate><atom:updated>2026-08-16T14:29:37.806Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>லேப்டாப்,மின்சாரம் தாக்கி உயிரிழப்பு,மாணவர்,Plus-1 student,Laptop,Charge,சார்ஜ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/27iovfw5/death.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/27iovfw5/death.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர், </p><p>லேப்டாப்புக்கு சார்ஜ் போட்டபோது மின்சாரம் தாக்கி பிளஸ்-1 மாணவர் பரிதாபமாக இறந்தார்.</p><h2>மின்சாரம் தாக்கியது</h2><p>திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 27-வது வார்டு கற்குழாய் சாலை பகுதியை சேர்ந்தவர் செந்தில். பெயிண்டர். இவருக்கு கவிதா என்கிற மனைவியும், சீனிவாசன் (15), ஜீவா, ரித்தி என 3 மகன்களும் உள்ளனர். மூத்த மகனான சீனிவாசன் திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்த நிலையில் சீனிவாசன் தனது நண்பரின் லேப்டாப்பை வாங்கி கொண்டு வந்து வீட்டில் வைத்து கேம் விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து சார்ஜ் இல்லாததால் லேப்டாப்பை சார்ஜ் போடுவதற்காக சென்றார். அப்போது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">மின்சாரம் </a>தாக்கி அவர் மயங்கி கீழே விழுந்தார்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>அதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் செந்தில் தனது மகனை திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சீனிவாசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தென்காசியில் நடைபெற்ற ஸ்கேட்டிங் மாரத்தான்: 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/skating-marathon-in-tenkasi-over-400-students-participate</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/skating-marathon-in-tenkasi-over-400-students-participate#comments</comments><guid isPermaLink="false">439a4639-7909-4826-989e-26160408849e</guid><pubDate>Sun, 16 Aug 2026 14:14:26 +0000</pubDate><atom:updated>2026-08-16T14:14:26.066Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,தென்காசி,மாணவர்கள்,marathon,மாரத்தான்,பங்கேற்பு,skating,ஸ்கேட்டிங்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/zkt1j87l/skate.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஸ்கேட்டிங் மாரத்தான்]]></media:title><media:description type="html"><![CDATA[ தென்காசியில் நடைபெற்ற ஸ்கேட்டிங் மாரத்தான்: 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/zkt1j87l/skate.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><p>நாட்டின் 80-வது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE">சுதந்திர தின விழாவை </a>முன்னிட்டு, தென்காசி மாவட்டம் மத்தளம்பாறையில் உலக சாதனை படைக்கும் நோக்கத்துடன் இந்த ஸ்கேட்டிங் மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது </p> <h2>உலக சாதனை</h2><p>குளோபல் டேலண்ட் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட், யுனிவர்சல் ஸ்போர்ட்ஸ் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் மற்றும் எலைட் லெஜெண்ட்ஸ் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் ஆகிய 3 முக்கிய உலக சாதனை அமைப்புகளின் புத்தகங்களில் இடம் பிடிக்கும் வகையில் இந்த சாதனை முயற்சி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.</p><h2>400 மாணவ-மாணவிகள் குவிந்தனர்</h2><p>இந்த மாரத்தான் போட்டியில் தென்காசி மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தங்களது ஸ்கேட்டிங் காலணிகளுடன் ஆவலோடு வந்து குவிந்தனர்.</p><h2>80 நிமிடங்கள் இடைவிடாத சாதனை</h2><p>போட்டி தொடங்கியதும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து மாணவர்களும் கைகளில் தேசிய கொடியை ஏந்தியபடி, சாலைகளில் விறுவிறுப்பாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D">ஸ்கேட்டிங் </a>செய்ய தொடங்கினர். சற்றும் சளைக்காமல், 80 நிமிடங்கள் இடைவிடாது ஸ்கேட்டிங் செய்து அவர்கள் இலக்கை நோக்கி பாய்ந்தனர். மாணவர்களின் இந்த அசாத்திய வேகம் மற்றும் திறமையை கண்டு அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் பெற்றோர் வியப்பில் ஆழ்ந்தனர்.</p><h2> சான்றிதழ்கள்</h2><p>வெற்றிகரமாக உலக சாதனை இலக்கை எட்டிய அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் பங்கேற்ற அனைத்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">மாணவர்களுக்கும்</a> சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. </p>]]></content:encoded></item><item><title>கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை: வைகோ கடும் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-tamils-shot-dead-in-karnataka-forest-area-vaiko-strongly-condemns-the-incident</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-tamils-shot-dead-in-karnataka-forest-area-vaiko-strongly-condemns-the-incident#comments</comments><guid isPermaLink="false">97ad3ee1-f4af-4202-867a-38e2e1702660</guid><pubDate>Sun, 16 Aug 2026 13:49:07 +0000</pubDate><atom:updated>2026-08-16T13:49:07.253Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Crime News,தமிழகம்,Vaiko,வைகோ,Karnataka,கர்நாடகா,கிரைம் செய்திகள்,மதிமுக,MDMK |</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/pxpf0cow/klerer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/pxpf0cow/klerer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்திற்கு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/vaiko">வைகோ</a> கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><h2>துப்பாக்கி சூடு</h2><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>கர்நாடக மாநிலம் சாம்ராஜநகர் மாவட்டத்தின் ஹானூர் தாலுகாவில் மரியமங்கலம் கிராமம் அமைந்துள்ளது. இந்த ஊர் காவிரி வனவிலங்கு சரணாலய வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.</p><p>இன்று அதிகாலை தோமையார்பாளையம் மற்றும் சாக்யா குறுவட்ட வன அலுவலர்கள் அந்தப் பகுதிக்கு ரோந்து சென்றுள்ளனர். தோமையார்பாளையம், மரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த தமிழர்கள் காட்டுக்குள் மேச்சலுக்கு போன தங்கள் மாடுகளை தேடி சென்று உள்ளனர். அவர்கள் மீது மான் வேட்டையாடச் சென்றதாக சாக்யா பகுதி வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.</p><p>கர்நாடக வனத்துறையினரின் வெறித்தனமான துப்பாக்கிச் சூட்டில் ஜகன்னாததொட்டி என்ற இடத்தைச் சேர்ந்த பெரியநாயகம் என்பவரின் மகனான அந்தோணிசாமி (வயது 50), மரியமங்கலத்தை சேர்ந்த யாகூப் என்பவரின் மகன் ஜான்ரோஸ் பீட்டர் (வயது 42), லாசர்தொட்டி என்ற இடத்தைச் சேர்ந்த சவேரியப்பன் என்பவரின் மகன் குமார் (33) ஆகிய மூவர் உயிரிழந்துள்ளனர்.</p><p>மரியமங்கலத்தைச் சேர்ந்த பெஞ்சமின் என்பவரின் மகன் மகிமைதா° (வயது-48) என்பவர் காயமடைந்துள்ளார். மரியமங்கலம் ஊரை அடுத்துள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில், சிலர் துப்பாக்கியுடன் மான் வேட்டையில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்ததாகவும் அதனால் அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கர்நாடக வனத்துறையினர் கூறுகின்றனர்.</p><p>வேட்டையில் ஈடுபட்டவர்கள் வசம் ஆயுதங்கள் இருந்தன. இது ஒரு என்கவுன்டர் சம்பவம். “என கர்நாடகா வனத்துறை அமைச்சர் ராமலிங்கா ரெட்டி தெரிவித்திருப்பது  ஏற்கத்தக்கது அல்ல. கடும் கண்டனத்துக்குரியது.</p><p>மான் வேட்டையாட சென்றார்கள் என்று காரணம் கற்பித்து மூன்று தமிழர்களின் உயிரை பறித்துப் பச்சை படுகொலை நடத்தியுள்ள கர்நாடக மாநில அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.</p><p>மேய்ச்சலுக்கு போன மாடுகளை தேடி வனப்பகுதிக்குள் சென்ற அப்பாவித் தமிழர்களை சுட்டுக் கொன்ற வனத்துறை அலுவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்வதுடன் அவர்களை கைது செய்து கூண்டில் நிறுத்த வேண்டும்.</p><p>உயிரிழந்த தமிழர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு தொகையையும் கர்நாடக மாநில அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற வாகை சந்திரசேகர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vaakai-chandrasekar-meets-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vaakai-chandrasekar-meets-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">83af062b-4c52-4bdc-821f-23c527fc4dde</guid><pubDate>Sun, 16 Aug 2026 13:46:05 +0000</pubDate><atom:updated>2026-08-16T13:46:05.565Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,வாழ்த்து,Wishes,met,M.K. Stalin,வாகை சந்திரசேகர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/693kpvex/vagai.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வாகை சந்திரசேகர்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற வாகை சந்திரசேகர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/693kpvex/vagai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/mkstalin">திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை</a> சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று முக்கிய பிரமுகர்கள் அடுத்தடுத்து நேரில் சந்தித்து வாழ்த்துகளையும், நன்றியையும் பரிமாறி கொண்டனர். இதனால் இன்று காலை முதலே பரபரப்புடன் காணப்பட்டது.</p> <h2>தேசிய விருது</h2><p> இயல் இசை நாடக மன்றத்தின் முன்னாள் தலைவருமான பிரபல நடிகர் வாகை சந்திரசேகர், கலை துறையில் ஆற்றிய சாதனைக்காக அண்மையில் இந்திய குடியரசு தலைவரிடமிருந்து உயரிய 'சங்கீத நாடக அகாடமி' (அகாதெமி புரஸ்கார்) <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81">தேசிய விருதை</a> பெற்றார். </p><h2>ஸ்டாலின் வாழ்த்து</h2><p>இந்த நிலையில், இன்று அவர் தனது டெல்லி பயணத்தை முடித்து கொண்டு, பெற்ற விருதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். வாகை சந்திரசேகரின் சாதனையை பாராட்டி மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். </p> <figure><img alt="பி.வில்சன் எம்பி திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/dacdr4qz/wilson.jpg" /><figcaption>பி.வில்சன் எம்பி</figcaption></figure><h2>பி.வில்சன் எம்பி</h2><p>இதனை தொடர்ந்து, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த வழக்குரைஞருமான பி.வில்சன் எம்பி திமுக தலைவரை சந்தித்து பேசினார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வெளிநாட்டு நிதி பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து மிக வலுவான குரல் எழுப்பி வருகிறார்.</p><h2>கிறித்தவ அமைப்புகளின் சார்பில் நன்றி</h2><p>திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தொடர் எதிர்ப்பின் காரணமாக, இந்த மசோதா தற்போது நாடாளுமன்ற கூட்டு நடவடிக்கை குழுவின் தீவிர பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த திருப்பத்தை அடுத்து, சிறுபான்மையினர் கூட்டு நடவடிக்கை மன்றத்தின் தலைவர் என்ற முறையில், சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக தொடர்ந்து சமரசமின்றி குரல் கொடுத்து வரும் கழக தலைமைகளுக்கு கிறித்தவ அமைப்புகளின் சார்பில் நன்றி தெரிவித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>மனித உயிர்களைப் பறிப்பதற்கு எந்த அரசுக்கும் அதிகார அமைப்பிற்கும் உரிமை கிடையாது - கனிமொழி எம்.பி.</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-government-or-authority-has-the-right-to-take-human-lives-kanimozhi-mp</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-government-or-authority-has-the-right-to-take-human-lives-kanimozhi-mp#comments</comments><guid isPermaLink="false">c8b4ae53-93ff-47cb-b41f-c43c8cbfe31b</guid><pubDate>Sun, 16 Aug 2026 13:22:21 +0000</pubDate><atom:updated>2026-08-16T13:22:21.869Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,கனிமொழி எம்.பி.,Kanimozhi MP,கனிமொழி,Kanimozhi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/g571y6na/Untitled-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/g571y6na/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,   </p><p>மனித உயிர்களைப் பறிப்பதற்கு எந்த அரசுக்கும் அதிகார அமைப்பிற்கும் உரிமை கிடையாது என தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>தமிழர்கள் சுட்டுக்கொலை</h2><p>கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில், கர்நாடக வனத்துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று தமிழர்கள் உயிரிழந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>மனித உயிர்களைப் பறிப்பதற்கு எந்த அரசுக்கும் அதிகார அமைப்பிற்கும் உரிமை கிடையாது.</p><h2>நிவாரணம் வழங்க வேண்டும்</h2><p>உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் எழுப்பியுள்ள சந்தேகங்களைக் கருத்தில் கொண்டு வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும். உயிரிழந்த மூன்று பேரின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு உரிய <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நிவாரணம் </a>வழங்குவதோடு, இந்தச் சம்பவத்தில் உண்மை நிலையை வெளிக்கொணர கர்நாடக அரசிற்கு தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோழித்தீவன உற்பத்தியால் மக்காச்சோளத்துக்கு மவுசு அதிகரிப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/poultry-feed-production-increases-maize-prices-farmers-happy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/poultry-feed-production-increases-maize-prices-farmers-happy#comments</comments><guid isPermaLink="false">374cc4b8-0c2f-45a7-b62d-fdef5a560b04</guid><pubDate>Sun, 16 Aug 2026 13:17:18 +0000</pubDate><atom:updated>2026-08-16T13:17:18.803Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Price,maize,மக்காச்சோளம்,விவசாயிகள் மகிழ்ச்சி,விலை அதிகரிப்பு,farmers happy</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/zjxg8wg5/corn.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/zjxg8wg5/corn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>போடிப்பட்டி, </p><p>கோழித்தீவன உற்பத்தியால் மக்காச்சோளத்துக்கு மவுசு அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.</p><h2>எத்தனால் உற்பத்தி</h2><p>இந்திய அளவில் முக்கிய விவசாயப்பயிராக மக்காச்சோளம் உள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, மத்தியப்பிரதேசம், ஆந்திரா, மேற்குவங்காளம் மாநிலங்களில் அதிக அளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.</p><p>இந்திய அளவில் ஆண்டுதோறும் சுமார் 2 கோடியே 65 லட்சம் ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் தமிழ்நாட்டின் பங்களிப்பு சுமார் 13 லட்சத்து 34 ஆயிரம் ஏக்கராக உள்ளது. தமிழ்நாட்டின் தேவையில் 50 சதவீத அளவுக்கே சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கோழித்தீவன உற்பத்தியில் முக்கிய மூலப்பொருளாக உள்ள மக்காச்சோளத்துக்கு சமீப காலங்களாக மவுசு அதிகரித்துள்ளது. பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலக்கப்பட்டு வரும் நிலையில், எத்தனால் உற்பத்தியில் முக்கிய மூலப்பொருளாக மக்காச்சோளம் உள்ளது.</p><h2>விலை உயர்வு</h2><p>எளிதில் மக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் பைகள் தயாரிப்பிலும் மக்காச்சோளம் பயன்படுத்தப்படுகிறது. இதைத்தவிர வழக்கமான பயன்பாடுகளிலும் மக்காச்சோளம் உள்ளது. இதனால் மக்காச்சோளத்தின் தேவை அதிகரித்து, விலை ஏறுமுகமாகவே உள்ளது. தற்போது ஒரு குவிண்டால் மக்காச்சோளம் ரூ.2 ஆயிரத்து 700 க்கு மேல் விற்பனையாகிறது.</p><p>பருவமழை கைவிட்டதால், வரும் காலங்களில் உற்பத்தி குறைந்து, விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் நீர் இருப்பு போதுமான அளவில் இருப்பவர்கள் மக்காச்சோளம் சாகுபடி செய்யலாம் என்று வேளாண்மைத்துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.</p><p>மேலும் அறுவடை செய்த மக்காச்சோளத்தை இருப்பு வைத்து விவசாயிகள் விற்பனை செய்வதன் மூலம் அதிக லாபம் பெற வாய்ப்பு உள்ளது. ஆனால் வெளிமாநில வரத்து எந்த அளவுக்கு இருக்கும் என்ற கணக்கீடுகளைப் பெற்று வேளாண்மைத்துறையினர் உரிய ஆலோசனைகள் வழங்கினால் விலை சரிவால் இழப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம். தற்போது நிலவி வரும் விலை உயர்வு விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவே உள்ளது.</p><h2>பொருளாதார பாதுகாப்பு</h2><p>இதுகுறித்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF">விவசாயிகள் </a>கூறுகையில், படைப்புழுக்களிடமிருந்து பாதுகாக்க அதிக அளவில் மருந்து தெளிக்க வேண்டியது உள்ளது. மேலும் உரம், கூலி என அனைத்து செலவினங்களும் உயர்ந்துள்ளன. இதனால் மக்காச்சோள சாகுபடி அதிக செலவுபிடிக்கும் விஷயமாக மாறி விட்டது. மக்காச்சோளத்துக்கு ஆதார விலையாக குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரத்து 410 நிர்ணயம் செய்யப்பட்டிருந்தும், அதைவிடக் குறைவாகவே கொள்முதல் செய்து வந்தனர்.</p><p>தற்போதுதான் விலை உயர்ந்துள்ளது. இனிவரும் காலங்களில் ஆதார விலையைவிட குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யும் நிலை வரக்கூடாது. விலை குறைவு ஏற்பட்டால் அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியான பாதுகாப்பு கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கோவை மாணவர் கொலை வழக்கு: கைது எண்ணிக்கை மேலும் உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-student-murder-case-number-of-arrests-rises-further</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-student-murder-case-number-of-arrests-rises-further#comments</comments><guid isPermaLink="false">b1c723f9-f74a-4906-8ab6-5bad8289fbf7</guid><pubDate>Sun, 16 Aug 2026 13:09:06 +0000</pubDate><atom:updated>2026-08-16T13:09:06.695Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,Tamilnadu,கோவை,Crime News,தமிழகம்,கிரைம் செய்திகள்,கோயம்புத்தூர்,மாணவர் கொலை,Kovai,College student murder</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/rkhnxhit/pon.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/rkhnxhit/pon.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/coimbatore">கோவை</a> தனியார் கல்லூரியில் சக மாணவர்களால் அமுதன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ஏற்கனவே 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><h2>மாணவர் கொலை</h2><p>கள்ளக்குறிச்சி வடக்கனந்தல் பகுதியை சேர்ந்தவர் அமுதன் (வயது 19). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.கடந்த 10-ந்தேதி அமுதனை சக மாணவர்கள் தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது.</p><p>மாணவர்களுக்கு இடையேயான மோதலில் அமுதன் உயிரிழந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், போதைப்பொருள் விவகாரம் தொடர்பாகவே தனது மகன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அமுதனின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், இந்த போதைப்பொருள் குற்றச்சாட்டை கோவை மாவட்ட போலீசாரும் கல்லூரி நிர்வாகமும் மறுத்துள்ளன.</p><h2>வழக்குப்பதிவு</h2><p>இதனிடையே, அமுதனின் பெற்றோரை தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அமுதனின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை உறுதுணையாக இருப்பதாக தெரிவித்தார். மேலும், இச்சம்பவம் குறித்து நாளை ( திங்கள்கிழமை) சட்டப்பேரவையில் விரிவாக பேசவிருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.</p><p>இச்சம்பவம் குறித்து அமுதனின் நண்பர் அளித்த புகாரின் பேரில், செட்டிபாளையம் போலீசார் 14 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதன்படி கலவரத்தில் ஈடுபடுதல், சட்டவிரோதமாக வழிமறித்தல், சட்டவிரோதமாக அடைத்து வைத்தல், கடத்தல், கொலை முயற்சி, கொலை ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது ‘தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்பிரிவு’ கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளது.</p> <h2>10 பேர் கைது</h2><p>இவ்வழக்கை விசாரிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஏற்கனவே 9 மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தேனியைச் சேர்ந்த மேலும் ஒரு மாணவரும்  கைது செய்யப்பட்டார். இதன் மூலம் கைதானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது. தலைமறைவாக இருந்த மேலும் 4 மாணவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். </p><h2>மேலும் 4 பேர் கைது</h2><p>இந்நிலையில் கோவை மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ஏற்கனவே 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 4 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>முன்னதாக  கள்ளக்குறிச்சி வடக்கனந்தலில் உள்ள அமுதன் குடும்பத்தினரை சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். தொடர்ந்து சமூக நீதித்துறையின் சார்பில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் முதற்கட்டமாக ரூ.6 லட்சம் நிதியுதவிக்கான ஆணையை அமுதனின் பெற்றோரிடம் அமைச்சர்கள் வழங்கினர்.</p> ]]></content:encoded></item><item><title>வார விடுமுறையையொட்டி ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-flock-to-ooty-for-the-weekend</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-flock-to-ooty-for-the-weekend#comments</comments><guid isPermaLink="false">bd2604bf-27da-44a2-b132-ef604f48fda5</guid><pubDate>Sun, 16 Aug 2026 12:54:18 +0000</pubDate><atom:updated>2026-08-16T12:54:18.975Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஊட்டி,Ooty,Weekend,வார விடுமுறை,Tourists flock,ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/9zl2q1jp/ooty.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/9zl2q1jp/ooty.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கவும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் முதலாவது சீசனும், அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2-வது சீசனும் நடைபெறுகிறது.</p><h2>குவிந்த சுற்றுலா பயணிகள் </h2><p>இந்த நிலையில், வார விடுமுறை நாளான இன்று ஊட்டியில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளம் போன்ற மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்தனர்.</p><p>அரசு தாவரவியல் பூங்கா, ஊட்டி படகு இல்லம், உள்ளிட்ட பல இடங்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் இருந்தது. அங்கு செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். </p><p>அதைபோல ஊட்டி தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்தனர். தொட்டபெட்டா மலை சிகரம் சென்ற சுற்றுலா பயணிகள் தொலைநோக்கி மூலம் மலைகள், பள்ளத்தாக்குகளை கண்டு ரசித்தனர். குறிப்பாக மலைச் சிகரத்தில் இருந்து தெரியும்<a href="https://www.dailythanthi.com/topic/ooty"> ஊட்டி</a> நகர வனப்பகுதிகள், கோவை, மேட்டுப்பாளையம் மற்றும் மலைகளில் தவழ்ந்து சென்ற மேகக் கூட்டங்களையும் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் மூவர் சுட்டுக்கொலை: பிரேமலதா கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-tamils-shot-dead-in-karnataka-forest-area-premalatha-condemns-incident</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-tamils-shot-dead-in-karnataka-forest-area-premalatha-condemns-incident#comments</comments><guid isPermaLink="false">f9f65fd0-baa8-42b8-bc6a-6e87350abb11</guid><pubDate>Sun, 16 Aug 2026 12:53:01 +0000</pubDate><atom:updated>2026-08-16T12:53:01.250Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>DMDK,தேமுதிக,பிரேமலதா விஜயகாந்த்,பிரேமலதா,Premalatha Vijayakand,Premalatha</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/pzrgm52b/premalatha.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/pzrgm52b/premalatha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மனித உயிர்களின் மதிப்பை சிறிதும் கருத்தில் கொள்ளாமல் நிகழ்த்தப்பட்டுள்ள இந்தக் கொடூரச் சம்பவத்தை தேமுதிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>தமிழர்கள் மூவர் சுட்டுக்கொலை</h2><p>கர்நாடக மாநிலம் ஹானூர் அருகே உள்ள மரிமங்கலம் பகுதியில், மான் வேட்டையில் ஈடுபட்டதாகக் கூறி கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழர்களான அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர் மற்றும் ஜெபஸ்டின் டேவிட் குமார் ஆகிய மூவர் உயிரிழந்திருக்கும் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் எற்படுத்தியுள்ளது.</p><p>வேட்டையில் ஈடுபட்டதாகவும், வனத்துறை அலுவலர்களைத் தாக்கியதாகவும் கூறப்படும் நிலையில், மூன்று பேரின் உயிரையும் பறிக்கும் அளவிற்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. மனித உயிர்களின் மதிப்பை சிறிதும் கருத்தில் கொள்ளாமல் நிகழ்த்தப்பட்டுள்ள இந்தக் கொடூரச் சம்பவத்தை தேமுதிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.</p><h2>இழப்பீடு வழங்க வேண்டும்</h2><p>சட்டத்தை அமல்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள வனத்துறையினர், தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி உயிரைப் பறிக்கும் வகையில் செயல்பட்டிருந்தால், அதற்கு உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தச் சம்பவம் தொடர்பாக உடனடியாக கொலை வழக்குப் பதிவு செய்து, வெளிப்படைத்தன்மை மிக்க, பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும். விசாரணையின் மூலம் உண்மை வெளிக்கொண்டு வரப்பட்டு, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>மேலும், உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கும் தமிழக அரக உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் குடும்பங்களில் தகுதியான ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.</p><h2>தண்டிக்கப்பட வேண்டும்</h2><p>தமிழ்நாடு - கர்நாடக எல்லைப் பகுதிகளில் வாழும் தமிழர்களின் உயிருக்கும், உடைமைக்கும், உரிமைகளுக்கும் உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது இரு மாநில அரசுகளின் கடமையாகும். எனவே, தமிழ்நாடு அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, கர்நாடக அரசிடம் உரிய முறையில் வலியுறுத்தி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>தமிழர்களின் உயிரிழப்பை சாதாரணமாகக் கடந்து செல்லாமல், இந்தச் சம்பவத்திற்கு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">காரணமானவர்கள் </a>சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கைகளை கர்நாடக அரக மேற்கொள்ள வேண்டும் என தேமுதிக சார்பில் வலியுறுத்துகிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தவெக அரசுக்கு ஓராண்டு காலம் அவகாசம் கொடுப்போம் - அண்ணாமலை பேச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-give-the-tvk-government-a-one-year-grace-period-annamalais-remarks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-give-the-tvk-government-a-one-year-grace-period-annamalais-remarks#comments</comments><guid isPermaLink="false">d2383618-917e-4f1a-ab45-f639dc57f71b</guid><pubDate>Sun, 16 Aug 2026 12:28:47 +0000</pubDate><atom:updated>2026-08-16T12:28:47.780Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Annamalai,அண்ணாமலை,Chennai,சென்னை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/zcl07fid/Untitled-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அண்ணாமலை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/zcl07fid/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை ,</p><p>சென்னை அண்ணாமலையின் தலைமையில் வீ த லீடர்ஸ் அமைப்பு சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் சுமார் 1,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். மரங்களை வளர்த்து, நீர்நிலைகளை பாதுகாக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த பேரணி நடைபெற்றது.</p><h2>73 நாட்களில் 20 லட்சம் பேர் இணைவு</h2><p>தவெக ஆட்சியில் ஊழல் குறையவில்லை தொடங்கியுள்ளது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேரணியில் வீ த லீடர்ஸ் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை பேசியதாவது;-</p><p>நமது அமைப்பை அரசியலாக மாற்றி மக்களுக்கான அரசியலாக செயல்படப்போகிறோம். சேவை மனப்பான்மையோடு வருபவர்களால் மட்டும்தான் அடிப்படை அரசியலை மாற்ற முடியும். வீ த லீடர்ஸ் அமைப்பை தொடங்கிய 73 நாட்களில் 20 லட்சம் தன்னார்வலர்கள் இணைந்துள்ளனர்.</p><p>தலைவர்கள் டெல்லியில் அமர்ந்து தமிழ்நாட்டின் முடிவை எடுக்கக்கூடாது. டெல்லி, சென்னை ஜார்ஜ் கோட்டை, போயஸ் கார்டன், பனையூரில் இருந்து முடிவெடுப்பேன் என்ற காலம் மாறிவிட்டது.</p><h2>எதிர்க்கட்சிகள் ஆட்சியை கவிழ்க்க முயற்சி</h2><p>நான் அரசியல் பேசவில்லை என கூறுகின்றனர். உலகத்தில் அரசியல் பேசுவதுதான் எளிமையான வேலை. அரசியலை செய்வதற்கு அண்ணாமலை வேண்டாம். புதிதாக வந்துள்ளவர்களுக்கு ஓராண்டு தருவோம். ஓராண்டுக்கு பிறகு செயல்பாடு சரியில்லை என்றால் முதல் ஆளாக குரல் கொடுப்போம். ஆளுங்கட்சியை கவிழ்த்து ஆட்சிக்கு வர வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சியின் அரசியலாக உள்ளது. அட்ஜெஸ்ட்மெண்ட் அரசியலை விட்டுவிட்டு மக்களுக்கான அரசியலை எதிர்க்கட்சிகள் செய்ய வேண்டும்.</p><p>மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு நியாயமான தீர்ப்பை தமிழகத்துக்கு தர வேண்டும். மேகதாது கட்டுவதில் பிரச்சினை இல்லை என மத்திய அரசு கூறுவதை கேட்கும்போது நெஞ்சு வலிக்கிறது. பள்ளிகள், நீர்நிலைகள், கிராமப்புறங்களை சீரமைக்க முதல்-அமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறேன்.</p><p>வீ த லீடர்ஸ் அமைப்பு மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்க்கிறது. பிரதமர் மோடியை நான் நம்புகிறேன். அவர் நேர்மையான மனிதர். தவறு செய்யாத மனிதர். எனவே அவர் இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினையை தீர்க்க யோசித்து முடிவு எடுக்க வேண்டும். இரு மாநில முதல்-அமைச்சர்களையும் அமர வைத்து பேச வேண்டும்.</p><h2>ஊழல் குறையவில்லை</h2><p>அமித் ஷாவை பார்த்தார். அதனால் பாஜகவின் பீ டீம் என என்னைப் பற்றி பேசுகிறார்கள். டெல்லியில் பொறுப்பெடுத்து 3 ஆண்டுகள் அங்கிருக்கும்படி அமித் ஷா கூறினார். அவரிடம் வேண்டாம் என சொல்லிவிட்டேன். தமிழ்நாட்டிலேயே மக்கள் சேவை செய்து, அரசியல் செய்கிறேன் என அமித் ஷாவிடம் கூறினேன்.</p><p>தவெக ஆட்சியில் ஊழல் குறைந்துள்ளது என கூறிகிறார்கள். ஆனால் ஊழல் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">குறையவில்லை </a>தொடங்கியுள்ளது. டெண்டருக்கு அமைச்சர்கள் பணம் வாங்குகிறார்கள். அது குறித்து என்னிடம் ஆடியோவே உள்ளது. சில அமைச்சர்கள் ஊழல் செய்கிறார்கள். ஊழல் செய்பவர்களுக்கு எதிராக முதல்-அமைச்சர் கடிவாளம் போட வேண்டும். நமது காலத்தில் ஊழலை ஒழிக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>அந்தியூர் அருகே 85 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/elderly-woman-raped-in-remote-hill-village-anthiyur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/elderly-woman-raped-in-remote-hill-village-anthiyur#comments</comments><guid isPermaLink="false">908402ae-3bed-4929-9e35-9a0f988fb0be</guid><pubDate>Sun, 16 Aug 2026 12:26:59 +0000</pubDate><atom:updated>2026-08-16T12:26:59.466Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>old woman,மூதாட்டி,பாலியல் பலாத்காரம்,sexually assaulted,அந்தியூர்,Anthiyur</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/34pobgj1/grandma-rape.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 85 வயது மூதாட்டி]]></media:title><media:description type="html"><![CDATA[ அந்தியூர் அருகே 85 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/34pobgj1/grandma-rape.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு, </p><p>ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே, வீட்டில் தனியாக இருந்த 85 வயது மூதாட்டி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">பாலியல் பலாத்காரம்</a> செய்யப்பட்ட கொடூர சம்பவம் மாவட்டத்தையே உலுக்கியுள்ளது.</p> <h2>மலைப்பகுதியில் தனி வீடு</h2><p>ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியை ஒட்டியுள்ளது கரும்பாறை கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்து வீட்டில் 85 வயது மதிக்கத்தக்க <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF">மூதாட்டி</a> ஒருவர் தனியாக வசித்து வந்தார். இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். </p> <h2>பாலியல் பலாத்காரம்</h2><p>இந்த நிலையில் தனியாக வீட்டில் வசித்து வந்த மூதாட்டி நேற்று இரவு வழக்கம் போல் தூங்கி கொண்டிருந்தார். அப்போது இரவில் மூதாட்டி வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடீரென மூதாட்டி வாயை பொத்தி மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். </p><h2> சிகிச்சை</h2><p>மறுநாள் காலை மூதாட்டியின் உறவினர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்தனர். மூதாட்டி ஆடைகள் கலைந்த நிலையில், ரத்த வெள்ளத்தில் படுக்கையில் கிடந்து துடித்துள்ளார்.அவரை மீட்டு உடனடியாக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமைமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். </p> <h2>போலீஸ் விசாரணை</h2><p>இது குறித்து அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமரா காட்சி காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் விசா  ரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.</p><p>இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஒரே குடும்பம்... 3 நீட் வெற்றியாளர்கள்! மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்த சகோதரர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/one-family-3-neet-winners-brothers-who-secured-a-place-in-medical-college</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/one-family-3-neet-winners-brothers-who-secured-a-place-in-medical-college#comments</comments><guid isPermaLink="false">b8a649a0-d203-484f-9133-e08df5b9f35d</guid><pubDate>Sun, 16 Aug 2026 12:15:43 +0000</pubDate><atom:updated>2026-08-16T12:15:43.343Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,வெற்றி,winners,சகோதரர்கள்,Brothers,மருத்துவக் கல்லூரி,medical college,NEET,நீட்,ஒரே குடும்பம்,one family</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/onhe42os/115.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/onhe42os/115.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே வெள்ளாங்குளி பகுதியைச் சேர்ந்தவர் நெசவாளரான ராம்குமார் (வயது 49). இவருடைய மனைவி மங்கையர் திலகம். இந்த தம்பதிக்கு வெங்கட் ஸ்ரீ, அருண், தரண் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் 3 பேரும் வெள்ளாங்குளி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்தனர். மூத்த மகன் வெங்கட் ஸ்ரீ கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர் கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதியும் போதிய மதிப்பெண்கள் கிடைக்கவில்லை. இந்த ஆண்டும் அவர் நீட் தேர்வு எழுதியதில் 720-க்கு 440 மதிப்பெண்கள் பெற்றார்.</p><h2>மருத்துவக் கல்லூரிகளில் இடம்...</h2><p>இதேபோன்று அவருடைய தம்பிகளான இரட்டையர்கள் அருண், தரண் ஆகியோரும் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்று <a href="https://www.dailythanthi.com/topic/neet-exam">நீட் தேர்வு </a>எழுதினர். இதில் அவர்கள் முறையே 511 மற்றும் 494 மதிப்பெண்கள் பெற்றனர். இதையடுத்து 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வில் 3 பேருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. வெங்கட் ஸ்ரீக்கு நாகர்கோவில் பல் மருத்துவக் கல்லூரியிலும், அருணுக்கு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியிலும், தரணுக்கு கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது. எனவே சகோதரர்களை அனைவரும் பாராட்டினர்.</p>]]></content:encoded></item><item><title>சேலத்தில் அகில இந்திய அளவிலான நாய்கள் கண்காட்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/all-india-dog-show-in-salem</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/all-india-dog-show-in-salem#comments</comments><guid isPermaLink="false">c9afc28d-1cad-45c8-8f95-2a0976e55f35</guid><pubDate>Sun, 16 Aug 2026 11:52:03 +0000</pubDate><atom:updated>2026-08-16T11:52:03.331Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,சேலம்,கண்காட்சி,நாய்,participated,Dog show</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/d4ncollt/all-india-dog-show.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ நாய்கள் கண்காட்சி]]></media:title><media:description type="html"><![CDATA[ சேலத்தில் அகில இந்திய அளவிலான நாய்கள் கண்காட்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/d4ncollt/all-india-dog-show.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம், </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D">சேலத்தில்</a> நடைபெற்ற அகில இந்திய நாய் கண்காட்சியில், பல்வேறு மாநிலங்களில் இருந்து 400-க்கும் மேற்பட்ட நாய் வகைகள் பங்கேற்று பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. </p> <h2>பிரம்மாண்ட கண்காட்சி</h2><p>சேலம் மாநகரில் அகில இந்திய அளவிலான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">நாய் கண்காட்சி</a> மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த கண்காட்சியில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மற்றும் டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து நாய் வளர்ப்போர் தங்களது செல்ல பிராணிகளுடன் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.</p><h2>400-க்கும் மேற்பட்ட நாய்கள்</h2><p>இக்கண்காட்சியில் ஜெர்மன் ஷெப்பர்ட், ராட்வீலர், டாபர்மேன், லேப்ரடார், கோல்டன் ரெட்ரீவர், பக்  உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட நாய்கள் அணிவகுத்து நின்றன. மேலும், நம் நாட்டுக்கே பெருமை சேர்க்கும் சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை, ராஜபாளையம் போன்ற பாரம்பரிய நாட்டு நாய் வகைகளும் கம்பீரமாக இடம்பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.</p> <h2>பார்வையாளர்கள் உற்சாகம்</h2><p>கண்காட்சியில் பங்கேற்ற நாய்களின் சுறுசுறுப்பு, கீழ்ப்படிதல், அதன் உடலமைப்பு மற்றும் ஓட்டப்பந்தயம் ஆகியவற்றின் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டு சிறந்த நாய்களுக்கு பரிசுகளும், கோப்பைகளும் வழங்கப்பட்டன. வண்ண வண்ண உடைகளுடனும், விதவிதமான சிகை அலங்காரங்களுடனும் வலம் வந்த நாய்களை காண சேலம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் நாய் பிரியர்கள் கண்காட்சிக்கு திரண்டு வந்தனர். </p>]]></content:encoded></item><item><title>முதியோர்கள் பாதுகாப்பில் கோட்டை விடும் தவெக அரசு - வானதி சீனிவாசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-government-fails-to-ensure-the-safety-of-the-elderly-vanathi-srinivasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-government-fails-to-ensure-the-safety-of-the-elderly-vanathi-srinivasan#comments</comments><guid isPermaLink="false">1ec81ee5-63ef-49ea-936c-561dbb9a8fbe</guid><pubDate>Sun, 16 Aug 2026 11:46:42 +0000</pubDate><atom:updated>2026-08-16T11:46:42.262Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/c207agur/vanathi.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/c207agur/vanathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மூத்த குடிமக்களுக்கான நலத்திட்டங்களுடன், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் சிறப்பு திட்டங்களையும் தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை</h2><p>ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தனியாக வசித்து வந்த 85 வயது மூதாட்டி மர்ம நபரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.</p><p>இதேபோல் கடந்த வாரம் மட்டும் சென்னையில் மூதாட்டி நகைக்காக கொலை செய்யப்பட்ட சம்பவம், கோவையில் பெண் படுகொலை என தொடர்ந்து பெண்கள் மற்றும் முதியோர்கள் குறிவைக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது, மூத்த குடிமக்களின் பாதுகாப்பில் தவெக அரசு மெத்தனமாக செயல்படுவதையே காட்டுகிறது.</p><h2>கூடுதல் கவனம் தேவை</h2><p>தங்கள் வாழ்நாள் அனுபவங்களையும் நினைவுகளையும் சுமந்து நிம்மதியாக வாழ வேண்டிய முதியோர்கள், இன்று தனிமையிலும் அச்சத்திலும் வாழும் நிலைக்குத் தள்ளப்படுவது வேதனைக்குரியது.</p><p>எனவே மூத்த குடிமக்களுக்கான நலத்திட்டங்களுடன், அவர்களின் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பாதுகாப்பை </a>உறுதி செய்யும் சிறப்பு திட்டங்களையும் தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்.</p><p>மேலும் முதியோர்களின் முதுமைக் காலத்தை அச்சமற்றதும் மகிழ்ச்சியானதுமாக மாற்ற குடும்பத்தினரும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>