<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 03 Aug 2026 01:12:56 +0000</lastBuildDate><item><title>மதுரை - கான்பூர் சென்டிரல் இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-madurai-and-kanpur-central-via-salem</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-madurai-and-kanpur-central-via-salem#comments</comments><guid isPermaLink="false">5180882a-e45e-4021-b79a-43bf1100898a</guid><pubDate>Mon, 03 Aug 2026 01:10:45 +0000</pubDate><atom:updated>2026-08-03T01:10:45.476Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,Madurai,மதுரை,Special train</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/nh6bo5b0/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/nh6bo5b0/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,  </p><p>தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் சென்டிரலில் இருந்து வருகிற 5,12,19,26 ஆகிய தேதிகளில் காலை 8.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.01925), காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் காலை 7.15 மணிக்கு மதுரை வந்தடையும். </p><p>மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து வருகிற 8,15,22,29 ஆகிய தேதிகளில் அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (01926), மேற்கண்ட வழித்தடம் வழியாக புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் அதிகாலை 4.30 மணிக்கு கான்பூர் சென்டிரல் சென்றடையும்.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-today-11</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-today-11#comments</comments><guid isPermaLink="false">25ae0a06-b7fe-4e95-a695-39b1fdf50df6</guid><pubDate>Mon, 03 Aug 2026 01:07:31 +0000</pubDate><atom:updated>2026-08-03T01:07:31.625Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மின் தடை,power cut</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/1mzuab0z/electricity.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/1mzuab0z/electricity.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>சென்னையில் 03.08.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><h2>மின் தடை</h2><p><strong>அம்பத்தூர்</strong>: கொரட்டூர், மண்ணூர்பேட்டை, டிஎன்ஹெச்பி, சென்ட்ரல் அவென்யூ, எம்.டி.எச். சாலை, ஆர்.எஸ். சாலை, முகப்பேர் சாலை, கிழக்கு அவென்யூ, மேனாம்பேடு சாலை, திருமுல்லைவாயில் சாலை.</p><p><strong>அடையாறு</strong>: இரட்டைப்பிள்ளையார் கோயில் தெரு, அண்ணா தெரு, பாரதி தெரு, சான் அகாடமி, வ.ஊ.சி. நகர் 1வது முதல் 4வது தெருக்கள் வரை, ஜோஷ்னா பிளாட்ஸ், ஸ்ரீனிவாச நகர், தேவி பிளாட்ஸ், முருகு நகர், கோமதி நகர், ஜெயின் பிளாட்ஸ்.</p><p><strong>தாம்பரம்</strong>: பெரியார் நகர், தேவராஜ் பிள்ளை தெரு, விஜிஎன், நித்யானந்தம் நகர், பெருமாள் கோயில் தெரு, ஜி.எஸ்.டி. சாலை, சர்வீஸ் சாலை, இரும்புலியூர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>
ஸ்ரீபெரும்புதூர், ஒரகடத்தில் தனியார் தொழிற்சாலைகளை முதல்-அமைச்சர் விஜய் இன்று பார்வையிடுகிறார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-is-visiting-private-factories-in-sriperumbudur-and-oragadam-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-is-visiting-private-factories-in-sriperumbudur-and-oragadam-today#comments</comments><guid isPermaLink="false">3c991be7-ddee-440d-835e-c109324ae82b</guid><pubDate>Mon, 03 Aug 2026 00:56:12 +0000</pubDate><atom:updated>2026-08-03T00:56:12.108Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,ஸ்ரீபெரும்புதூர்,தனியார் தொழிற்சாலை,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/3czncuvg/Vijay.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/3czncuvg/Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடத்தில் அமைந்துள்ள சிப்காட் தொழிற் வளர்ச்சி மையத்தில், 'டெய்ம்லர் பஸஸ் இந்தியா' என்ற நிறுவனம் சார்பில் 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரமாண்டமான ‘டெய்ம்லர் இந்தியா வர்த்தக வாகனங்கள் உற் பத்தி செய்யும் தொழிற்சாலை இயங்குகிறது. இந்த நிறுவனம் தமிழக அரசு டன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. 'பாரத்பென்ஸ்' மற்றும் 'மெர்சிடிஸ்-பென்ஸ்' முத்திரையிடப்பட்ட பஸ்களை யும், 'பஸ் சேஸ்'களையும் உற்பத்தி செய்கிறது. வணிக வாகன உற்பத்தியில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனத்தை இன்று (திங்கட்கிழமை) முதல்-அமைச்சர் விஜய் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.</p> <h2>கண்ணாடி தொழிற்சாலை</h2><p>அதேபோல், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கத்தில் செயல்படும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான செயின்ட் கோபின் நிறுவனமும், தமிழக அரசுடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.</p><p>இந்த நிறுவனம் உலகத்தரத்திலான கண்ணாடி தயாரிப்பு வளாகத்தை விரிவுபடுத்தி உள்ளது. இதனை முதல்-அமைச்சர் விஜய் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். தொடர்ந்து நிசான் கார் கம்பெனியையும் முதல்-அமைச்சர் விஜய் பார்வையிடுகிறார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>கர்நாடக அரசை கண்டித்து காவிரி ஆற்றில் மணலில் புதைந்து விவசாயிகள் போராட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmers-protest-by-burying-themselves-in-the-sand-in-the-cauvery-river-to-condemn-the-karnataka-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmers-protest-by-burying-themselves-in-the-sand-in-the-cauvery-river-to-condemn-the-karnataka-government#comments</comments><guid isPermaLink="false">41d30742-f7c5-48ec-af36-13ed34be60cf</guid><pubDate>Mon, 03 Aug 2026 00:55:50 +0000</pubDate><atom:updated>2026-08-03T00:55:50.497Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விவசாயிகள் போராட்டம்,Cauvery River,காவிரி,Farmers protest</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/xk6s6ssx/70.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/xk6s6ssx/70.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்து காவிரி ஆற்றில் மணலில் புதைந்து விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.</p><h2>மேகதாது விவகாரம்</h2><p>காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு முயற்சித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. மேலும் பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பிலும் போராட்டம் நடந்து வருகிறது.</p><p>தமிழகத்தில் நிலவி வரும் வறட்சியை கருத்தில் கொண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி காவிரி மேலாண்மை ஆணையம் உடனடியாக 4.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட மறுத்துவிட்டது.</p><h2>விவசாயிகள் போராட்டம்</h2><p>இந்நிலையில் தற்போது திடீரென கர்நாடக அரசு காவிரியில் 25 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்து விட்டு உள்ளது. உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்தும், மேகதாது அணை கட்டும் பணியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று திருச்சி காவிரி ஆற்றின் நடுப்பகுதியில் உள்ள ஒரு மணல் திட்டில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்திற்கு மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார்.</p><p>குழித்தோண்டி கழுத்தளவு மணலில் புதைந்தும், தூக்குக்கயிறு மாட்டிக் கொண்டும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">விவசாயிகள் போராட்டத்தில்</a> ஈடுபட்டனர். அப்போது சாகும் நிலையில் உள்ள விவசாயிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கோஷங்களை எழுப்பினார்கள். காவிரி ஆற்றின் நடுவில் நடைபெற்ற இந்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>சேலம்: பாலம் அமைக்கும் பணியால் ஓமலூரில் போக்குவரத்து மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-traffic-diversion-in-omalur-due-to-bridge-construction-work</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-traffic-diversion-in-omalur-due-to-bridge-construction-work#comments</comments><guid isPermaLink="false">a6e7b061-eaf1-4cf6-8bfe-16bc036b3977</guid><pubDate>Mon, 03 Aug 2026 00:52:59 +0000</pubDate><atom:updated>2026-08-03T00:52:59.374Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,சேலம்,போக்குவரத்து மாற்றம்,traffic diversion</media:keywords><media:content height="288" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/yz8f0epn/1.gif" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/yz8f0epn/1.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம், </p><p>சேலம் மாவட்டம் ஓமலூரில் மேச்சேரி சாலையில் பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால் வருகிற 8-ந் தேதி முதல் பணிகள் நிறைவடையும் வரை ஓமலூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஓமலூர், மேச்சேரி, பென்னாகரம் வழியாக பெரும்பாலை சாலை அனைத்து வகையான போக்குவரத்திற்கும் மூடப்படுகிறது. </p><p>வாகன ஓட்டிகள் ஓமலூர்-சங்ககிரி சாலையில் இருந்து அம்மன் கோவில்பட்டி, ரெட்டிப்பட்டி வழியாக அமரகுந்தி செல்லும் சாலை, எம்.செட்டிப்பட்டி-பாலிக்கடை சாலை வழியாக மாநில நெடுஞ்சாலையை அடைந்து மேச்சேரி நோக்கி செல்ல வேண்டும். அதேபோல், மேச்சேரியில் இருந்து ஓமலூர் நோக்கி செல்லும் வாகனங்கள், எம்.செட்டிப்பட்டி-பாலிக்கடை சாலை மற்றும் காமலாபுரம்-சின்னதிருப்பதி-ஜோடுகுளி சாலை வழியாக தேசிய நெடுஞ்சாலையை அடைந்து ஓமலூர் நோக்கி செல்ல வேண்டும். </p><p>எனவே பொதுமக்கள் மாற்று வழிகளை பயன்படுத்தி போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு எடப் பாடி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் மங்கையர்கரசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மனுக்களோடு வாருங்கள்; பணத்தோடு வந்தால் அனுமதி இல்லை</title><link>https://www.dailythanthi.com/others/thalayangam/come-with-petitions-not-with-money</link><comments>https://www.dailythanthi.com/others/thalayangam/come-with-petitions-not-with-money#comments</comments><guid isPermaLink="false">e74c266e-2950-4436-80e9-2a0d63dcbae8</guid><pubDate>Sun, 02 Aug 2026 23:42:39 +0000</pubDate><atom:updated>2026-08-02T23:42:39.379Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தலையங்கம்,லஞ்சம்,Bribery,Govt Offices,அரசு அலுவலகங்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/bltgn396/Untitled-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/bltgn396/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலையங்கம் (Thalayangam)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முதல்-அமைச்சர் விஜய் ஆட்சிக்கு வந்த உடனேயே மக்களின் நம்பிக்கை பொய்த்துப் போகாமல் இருக்க லஞ்சத்துக்கு எதிராக சாட்டையை சுழற்றினார். டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்களை சப்ளை செய்யும் நிறுவனங்கள் அரசாங்கத்தின் பல்வேறு மட்டங்களுக்கு லஞ்சமாக கொடுத்து வந்த பணத்தை ஒரு ரூபாய் கூட வேறு எங்கும் கொடுக்க வேண்டாம் என்று கூறி மடைமாற்றி அரசின் கஜானாவுக்கு திருப்பிவிட்டார். இதனால் அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைத்தது. எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களின் நிறுவனங்களுக்கு கூட நேர்மையான முறையில் அனுமதியும், அவர்களிடம் கொள்முதலை நடத்தியதும் வியப்பை கொடுத்தது. பாரபட்சம், சலுகை காட்டாமல் அனைத்து நிறுவனங்களிடம் இருந்தும் சமமான முறையில் கொள்முதல் செய்துவருவது விமர்சனங்களுக்கு வழிவகுத்தாலும், அந்த நிலையே தொடர்கிறது. ஜூன் மாதம் 23-ந்தேதி சட்டசபை கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய் பேசும்போது, மிகவும் ஆவேசமாக மக்கள் பணத்தை தொடமாட்டோம், தொடவும் விடமாட்டோம், தொட்டவர்களையும் விடமாட்டோம் என்று சொன்னது லஞ்ச ஒழிப்புத்துறையை முடுக்கி விட்டது.</p><p>தமிழக அரசின் டெண்டர்களில் வெளிப்படைத்தன்மை இருந்து வருகிறது. ஒப்பந்த புள்ளியில் குறைவான தொகையை குறிப்பிடுபவர்களுக்கு தங்கு தடையில்லாமல் ஒப்பந்தம் கிடைத்து வருகிறது. முன்பு வழங்கப்பட்ட பல டெண்டர்கள், முறைகேடுகள் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மக்களோடு அதிகம் தொடர்புடையதும், பணப்புழக்கம் அதிக உள்ள அலுவலகங்களில் ஒன்றான பதிவுத்துறையின் சார்பதிவாளர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், சோதனைச்சாவடிகள் என்று பல அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சுற்றி வளைத்து சோதனை நடத்தினார்கள். அரசு அலுவலகங்களில் யாராவது லஞ்சம் கேட்டால் 9498180936 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த எண்ணை மனதில் பதிந்து வைத்திருக்க சிரமமாக இருக்கிறது. எனவே 100, 108 என்பதுபோல மூன்று இலக்க எண்ணை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் முன்வைக்கிறார்கள். அதையும் தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.</p><p>முதல்-அமைச்சர் விஜய் வகுத்து கொடுத்த லஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான பாதையில் அதிகாரிகள் பயணிக்கத் தொடங்கி விட்டனர். அந்த வகையில், மானாமதுரையில் உள்ள தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கிருஷ்ணகுமார் நூதனமான அறிவிப்பு பலகை வைத்திருக்கிறார். அதில், "வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களுடன் மட்டுமே வரவேண்டும். பணம் வைத்து இருப்பவர்களுக்கு உள்ளே அனுமதி இல்லை" என்று குறிப்பிட்டுள்ளதோடு, அலுவலகத்தின் நுழைவுவாயிலில், "லஞ்சம் வாங்குவதும் குற்றம், கொடுப்பதும் குற்றம்" என்ற அறிவிப்பையும் வைத்திருக்கிறார்.</p><p>இதை ஒரு மாதிரி தாலுகா அலுவலகம் என்றே கூறலாம். அய்யன் திருவள்ளுவர், "எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு” என்று கூறினார். அதனை மெய்ப்பிக்கும் வகையில் மானாமதுரை தாசில்தார் கிருஷ்ணகுமார் செய்ததுபோல அனைத்து அரசு அலுவலகங்களும் இதே நடைமுறைகளை பின்பற்றினால் மக்களும் நேர்மையான அரசு அலுவலகத்துக்கு செல்கிறோம் என்ற பெருமையுடன் வெறுங்கையை வீசிக்கொண்டு மனுக்களோடு செல்ல முடியும். அரசு ஊழியர்களும் லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர் என்ற கவுரவத்தோடு நெஞ்சை நிமிர்த்தி என் மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை என்று யாருக்கும் அஞ்சாமல் அலுவலகத்துக்குள் வர முடியும், பணி முடிந்து மனநிறைவோடு வீட்டுக்கும் செல்லமுடியும்.</p>]]></content:encoded></item><item><title>கர்ப்பமானதால் கைவிரித்த காதலன்: பச்சிளம் குழந்தையை கொன்று தென்னந்தோப்பில் வீசிய நர்ஸ் - அதிர்ச்சி சம்பவம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nurse-kills-newborn-throws-in-coconut-grove</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nurse-kills-newborn-throws-in-coconut-grove#comments</comments><guid isPermaLink="false">14824409-9562-4060-b73f-ea1144a73464</guid><pubDate>Sun, 02 Aug 2026 23:33:45 +0000</pubDate><atom:updated>2026-08-02T23:33:45.358Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,நாகர்கோவில்,Kanniyakumari,குழந்தை கொலை,Nagarcoil</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/o98pf1zm/Untitled-10.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/o98pf1zm/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி,</p><p>காதலனுடன் தவறான உறவில் பிறந்ததால் பச்சிளம் ஆண் குழந்தையை கொன்று தென்னந்தோப்பில் நர்ஸ் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>பச்சிளம் குழந்தை பிணம்</h2><p>கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜா கோவில் அருகே முதியோர் இல்லம் மற்றும் மருத்துவமனை உள்ளது. இந்த வளாகத்தின் அருகே உள்ள தென்னந்தோப்பில் நேற்று முன்தினம் பிறந்து சில நிமிடங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை தொப்புள் கொடி கூட அறுபடாத நிலையில் இறந்து கிடந்தது.</p><p>இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை மருத்துவர், வடசேரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.</p><h2>காதலனால் கர்ப்பமான நர்ஸ்</h2><p>தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர், நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். அவருக்கும், ஒரு வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகி உள்ளனர். இதனால் நர்ஸ் கர்ப்பமானார்.</p><p>இதனையறிந்த அந்த வாலிபர், நர்சுடனான பழக்கத்தை துண்டித்து விட்டார். ஆனால், தான் கர்ப்பமாக இருந்ததை அந்த நர்ஸ் வேறு யாரிடமும் சொல்லாமல் மறைத்தபடி இருந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு நேற்று முன்தினம் குழந்தை பிறந்துள்ளது. திருமணம் நடைபெறாத நிலையில் காதலனால் கர்ப்பமாகி குழந்தை பெற்றது வெளியே தெரிந்தால் தனக்கும், தனது குடும்பத்துக்கும் அவமானம் என்று அந்த நர்ஸ் கருதினார். எனவே, குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே தொப்புள் கொடி அறுக்கப்படாத நிலையில் கொலை செய்து, முதியோர் இல்ல வளாக தென்னந்தோப்பில் வீசிச் சென்றிருக்கிறார்.</p><h2>மருத்துவமனையில் சிகிச்சை</h2><p>இதனை தொடர்ந்து அந்த நர்சை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் கேட்ட கேள்விகளுக்கு அவர் சரியாக பதிலளிக்கவில்லை என்று தெரிகிறது. இதற்கிடையே உடல் நலக்குறைவு மற்றும் பிரசவத்திற்கு பிந்தைய சிகிச்சைக்காக அவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்து மிரட்டல் - பள்ளி மாணவர் மீது போக்சோ வழக்கு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/college-student-sexual-harassment-video-blackmail-pocso-case</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/college-student-sexual-harassment-video-blackmail-pocso-case#comments</comments><guid isPermaLink="false">ea80ee9b-3998-457d-b0ae-446820e77a5b</guid><pubDate>Sun, 02 Aug 2026 22:50:47 +0000</pubDate><atom:updated>2026-08-02T22:50:47.513Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாலியல் தொல்லை,Threat,POCSO case,மிரட்டல்,போக்சோ வழக்கு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/3ded8sms/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/3ded8sms/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவையில் ஒரு கல்லூரியில் படித்து வரும் 19 வயது மாணவி ஒருவர், சிங்கப்பெண் அதிரடிப் படை உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், தான் 16 வயதாக இருக்கும்போது பள்ளியில் படித்தபோது என்னை விட 2 வயது குறைவான 14 வயது மாணவர் காதலிப்பதாக கூறினார். நான் அந்த மாணவரிடம் பேசி வந்தேன். ஒரு நாள் அந்த மாணவர், என்னை கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்தார்.</p><p>அதை செல்போனில் வீடியோவும் எடுத்தார். தற்போது அந்த மாணவர், எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த வீடியோவை காண்பித்து மிரட்டி வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். அதன்பேரில் தற்போது பிளஸ்-2 படித்து வரும் மாணவரை பிடித்து விசாரித்தனர். மேலும் கோவை மாநகர பகுதியை சேர்ந்த மகளிர் போலீசார், அந்த பள்ளி மாணவர் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர்.</p><p>இதுகுறித்து போலீசார் கூறும்போது, பாதிக்கப்பட்ட மாணவிக்கு தற்போது 19 வயது ஆகிறது. ஆனால் அவர் பாதிக்கப்பட்டபோது 16 வயது. எனவே அந்த மாணவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு போடப்பட்டு உள்ளது என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சாலையோர உணவகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-court-orders-legal-action-against-roadside-eateries</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-court-orders-legal-action-against-roadside-eateries#comments</comments><guid isPermaLink="false">6ef23b4a-b4c0-478d-b22d-4d0d2386dbc1</guid><pubDate>Sun, 02 Aug 2026 21:59:21 +0000</pubDate><atom:updated>2026-08-02T21:59:21.561Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை ஐகோர்ட்டு,Chennai Highcourt,hotels,உணவகங்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/dfrw72iw/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/dfrw72iw/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை ஐகோர்ட்டில் டி.எஸ்.ஸ்ரீதர் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "மண்ணடிப் பகுதியில் நடைபாதையை ஆக்கிரமித்து ஏராளமான சாலையோர உணவகங்கள் செயல்படுகின்றன. இந்த உணவகங்களில் சமைப்பதற்காக மழைநீர் வடிகால்களை இடித்து சேதப்படுத்துகின்றனர். சாலையில் வைத்து சமைக்கும்போது, மசாலாப் பொருட்கள் காற்றில் பறந்து சாலையில் செல்வோரின் கண்களில்படுகிறது. இதனால் கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.</p><p>சாலையில் கியாஸ் சிலிண்டர்களை வைத்து சமைக்கின்றனர். இதனாலும் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். இதுவரை நடவடிக்கை இல்லை" என்று கூறியிருந்தார்.</p><p>இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில், ஆக்கிரமிப்பு தொடர்பான இந்த புகாரை குற்ற வழக்காகப் பதிவு செய்ய முடியாது என வாதிடப்பட்டது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் ரவீந்திரன், மழைநீர் வடிகால்களை இடித்துச் சேதப்படுத்துவதும், மசாலாப் பொடிகளை வீசி பொதுமக்களின் உடல் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதும் குற்றமாகும் என்று வாதிட்டார்.</p><p>இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி, "இந்த மனு தொடர்பாக 2 வாரங்களில் உரிய விசாரணை நடத்தி சட்டரீதியான நடவடிக்கையை எஸ்பிளனேடு போலீசார் எடுக்க வேண்டும்" என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் குழப்பம்: சென்னை தியேட்டரில் மாணவர்கள் திடீர் போராட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/online-ticket-booking-confusion-students-protest-chennai-theatre</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/online-ticket-booking-confusion-students-protest-chennai-theatre#comments</comments><guid isPermaLink="false">1cd29535-8e14-4755-95b2-5da10e4123e1</guid><pubDate>Sun, 02 Aug 2026 21:24:37 +0000</pubDate><atom:updated>2026-08-02T21:24:37.955Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,protest,போராட்டம்,தியேட்டர்,theatre,அண்ணா சாலை,Anna Road</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/7kin0vys/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/7kin0vys/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>‘ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே' படம் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள கேசினோ தியேட்டரில் இந்தப் படத்தை நேற்று காலை 11:30 மணிக்கு பார்ப்பதற்காக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பலர் செல்போன் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர்.</p><p>ஆனால் தியேட்டருக்கு வந்தபோதுதான், 'ஸ்பைடர்மேன்' இரவு 11.30 தான் திரையிடப்பட இருப்பது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக தியேட்டர் நிர்வாகிகளிடம் மாணவர்கள் புகார் அளித்தனர். அப்போது செல்போன் செயலியில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. தற்போது 'ஜனநாயகன்' படம் திரையிடப்பட இருக்கிறது வேண்டுமானால் அந்த படத்தை பார்த்துக் கொள்ளுங்கள் என்று தியேட்டர் நிர்வாகத்தினர் கூறியதாக தெரிகிறது.</p><p>டிக்கெட் முன்பதிவு செய்த படத்தை பார்க்க முடியாத ஆத்திரத்தில் மாணவர்கள் தியேட்டர் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். 2 நாட்களுக்குள் முன்பதிவு செய்த டிக்கெட் கட்டணம் திரும்ப கிடைக்கும் என்று தியேட்டர் நிர்வாகத்தினர் கொடுத்த வாக்குறுதியை தொடர்ந்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பரப ரப்பு ஏற்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>டிராவல்ஸ் நிறுவனத்தில் ரூ.30 லட்சம் கையாடல்: 4-வது மாடியில் இருந்து குதித்து ஊழியர் தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/travel-company-rs-30-lakh-embezzlement-employee-dies-by-suicide</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/travel-company-rs-30-lakh-embezzlement-employee-dies-by-suicide#comments</comments><guid isPermaLink="false">0b7925f5-4df3-483f-bd90-a03a801cf241</guid><pubDate>Sun, 02 Aug 2026 20:25:54 +0000</pubDate><atom:updated>2026-08-02T20:25:54.739Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,தற்கொலை,கையாடல்,அண்ணாநகர்,Anna Nagar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/3aiu5f5k/Untitled-4.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/3aiu5f5k/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>டிராவல்ஸ் நிறுவனத்தில் ரூ.30 லட்சம் கையாடல் நடந்துள்ளதாக கூறி சரமாரியாக தாக்கியதால் 4-வது மாடியில் இருந்து குதித்து ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.</p><h2>4-வது மாடியில் இருந்து குதித்தார்</h2><p>ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆகாஷ் (23 வயது). இவர், சென்னை அண்ணாநகரில் தங்கி, அங்குள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலைக்கு சென்ற ஆகாஷ், அந்த டிராவல்ஸ் நிறுவனத்தின் 4-வது மாடியில் இருந்து திடீரென கீழே குதித்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். இதுகுறித்து அவரது உறவினர்களுக்கும், அண்ணாநகர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.</p><h2>ரூ.30 லட்சம் கையாடல்</h2><p>இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, டிராவல்ஸ் நிறுவனத்தில் சுமார் ரூ.30 லட்சம் வரை பணம் கையாடல் நடந்ததாகவும், அதுதொடர்பாக ஆகாஷிடம் நிறுவன உரிமையாளர்கள் விசாரணை நடத்தியபோது அவரை சரமாரியாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது.</p><p>இதனால் வலி தாங்க முடியாமல் அங்கிருந்து தப்பிப்பதற்காக ஆகாஷ் நிறுவனத்தின் 4-வது மாடியில் இருந்து கீழே குதித்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஆகாஷ், நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களிடம் விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் போதெல்லாம் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/karnatakavil-congress-aatchikku-varum-pothhellam-tamilagam-vanchikkappadugirathu-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/karnatakavil-congress-aatchikku-varum-pothhellam-tamilagam-vanchikkappadugirathu-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">e155b42b-1708-498c-a4bb-716b7530c6fc</guid><pubDate>Sun, 02 Aug 2026 18:10:27 +0000</pubDate><atom:updated>2026-08-02T18:10:27.785Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,காவிரி நீர்,Karnataka,கர்நாடகா,மாணிக்கம் தாகூர்,Cauvery issue,Manickam Tagore,Nainar Nagenthran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/mc98eodb/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/mc98eodb/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கர்நாடகாவில் “தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர் கூட திறக்கக் கூடாது” என்று எடியூரப்பா உட்பட பாஜக தலைவர்கள் நேற்று வீதியில் இறங்கி போராட்டம் நடத்தியதை பார்க்கத் தவறிவிட்டீர்களா, நயினார் அண்ணே என்று கேள்வி தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு பதிலளித்து, "கர்நாடகாவில் காங்கிரஸ் எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழுதெல்லாம் தமிழக விவசாயிகள் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்று நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாதீர்கள் தம்பி மாணிக்கம் தாகூர். நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தான், கடந்த 2018-ல் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) அமைக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா தெரியாதா? மத்திய பாஜக அரசு அமைத்த ஆணையம் தண்ணீரை வழங்குமாறு கர்நாடக அரசிற்கு உத்தரவிட்டாலும் கூட, அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் உங்கள் காங்கிரஸ் கட்சி, தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்துவிட்டது என்பது ஊரறிந்த விஷயம். இதில் மத்திய பாஜக அரசின் மீது நீங்கள் பழிபோடுவது மக்களை ஏமாற்றும் செயல். </p><p>எனவே, CWMA கூறிய பிறகும் கூட தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறந்து விடாமல் இழுத்தடித்த உங்கள் கர்நாடக காங்கிரஸை முடிந்தால் கேள்வி கேளுங்கள். தமிழக முதல்வரை சந்திக்க வருமாறு கூறிவிட்டு, பின்பு சாக்குபோக்கு சொல்லி கதவை சாற்றி, அவமானப்படுத்தியது ஏன் என உங்கள் கட்சியின் கர்நாடக முதல்வருக்கு முடிந்தால் கண்டனம் தெரிவியுங்கள்.</p><p>தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது போல, மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என பிடிவாதம் பிடிக்கும் உங்கள் சொந்த அரசிடம், அத்திட்டத்தை கைவிடுமாறு முடிந்தால் எடுத்துக் கூறுங்கள். அதை விட்டுவிட்டு வீண் விவாதம் வேண்டாம்.</p><p>தமிழகத்திற்கு வந்த உங்கள் கட்சி தலைவர் ராகுல் காந்தி, தற்போது தமிழகத்தில் பற்றி எரியும் காவிரி நீர் பிரச்சினை குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் திரும்பி சென்றதில் இருந்தே தெரிகிறது, காங்கிரஸ்காரர்களுக்கு தமிழகத்தின் மீதுள்ள அக்கறை.</p><p>கர்நாடகாவில் காங்கிரஸ் எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழுதெல்லாம் தமிழக விவசாயிகள் வஞ்சிக்கப்படுகிறார்கள். காவிரி நீர் பிரச்சினை மட்டுமா, கச்சத்தீவை தாரை வார்த்து மீனவர்களுக்கும் துரோகம் இழைத்த கட்சி தானே காங்கிரஸ். எனவே, தமிழக நலனைப் பற்றி நீங்கள் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம். தமிழகத்தின் உரிமையை பாதுகாப்பதில் பாஜக என்றுமே தெளிவான நிலைப்பாட்டில்தான் உள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>18 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/rain-possible-till-1-am-in-18-districts</link><comments>https://www.dailythanthi.com/news/weather/rain-possible-till-1-am-in-18-districts#comments</comments><guid isPermaLink="false">9c32fd06-721b-4589-a662-113eba784daa</guid><pubDate>Sun, 02 Aug 2026 17:16:15 +0000</pubDate><atom:updated>2026-08-02T17:16:15.972Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை அறிக்கை,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/2sihf76g/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/2sihf76g/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சராசரி கடல் மட்டத்திலிருந்து 5.8 கிலோ மீட்டர் உயரத்தில் வட உள்கர்நாடகத்திலிருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை தென் உள்கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகம் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. சராசரி கடல் மட்டத்தில் தெற்கு குஜராத்திலிருந்து கேரளா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 18 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, தேனி, நீலகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கோயம்புத்தூர், திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, திருப்பூர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தேயிலை தோட்டத்தில் அசையாமல் கிடந்த காட்டு யானை; அருகில் சென்ற தொழிலாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-lay-motionless-in-the-tea-estate-a-shock-awaited-the-workers-who-approached-it</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-lay-motionless-in-the-tea-estate-a-shock-awaited-the-workers-who-approached-it#comments</comments><guid isPermaLink="false">6d658580-501e-41a8-a180-4ac93ff07dfd</guid><pubDate>Sun, 02 Aug 2026 16:40:32 +0000</pubDate><atom:updated>2026-08-02T16:40:32.258Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nilgiris,நீலகிரி,காட்டு யானை,elephant</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/vkx9f5cj/State-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/vkx9f5cj/State-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி, </p><p>நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நாடுகாணி டான் டீ தேயிலைத் தோட்டத்தில், யானை ஒன்று படுத்துக் கிடந்ததை பார்த்த தொழிலாளர்கள், அது இறந்துவிட்டதாக நினைத்து அருகில் சென்றனர். </p><p>ஆனால் அருகில் சென்றபோது யானை அமைதியாக உறங்கிக் கொண்டு மூச்சுவிடுவதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக அங்கிருந்து விலகிச் சென்றனர்.</p><p>கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானைகள் பகல் நேரங்களில் தேயிலைத் தோட்டங்களில் ஓய்வெடுப்பது வழக்கமாக உள்ளது. மனிதர்களைப் போல படுத்து உறங்கிக் கொண்டிருந்த யானையின் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>கிருஷ்ணகிரி: மாங்கனி கண்காட்சியில் மக்களை கவர்ந்த நாய்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/krishnagiri-mangani-exhibition-dogs-attract-crowds</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/krishnagiri-mangani-exhibition-dogs-attract-crowds#comments</comments><guid isPermaLink="false">802b90a6-274f-4259-8614-0743e5401ca2</guid><pubDate>Sun, 02 Aug 2026 16:21:37 +0000</pubDate><atom:updated>2026-08-02T16:21:37.813Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பொதுமக்கள்,கிருஷ்ணகிரி,Public,குழந்தைகள்children,கண்காட்சிExhibition,நாய்கள்dogs,கவர்ந்த</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/3jbms08g/dog-show.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாய் கண்காட்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/3jbms08g/dog-show.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ணகிரி,</p><p>கிருஷ்ணகிரியில் உலகப் புகழ்பெற்ற 32-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி அரசு ஆடவர் கலைக்கல்லூரி மைதானத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.</p> <h2>பாரம்பரிய நாய் கண்காட்சி </h2><p>இதன் ஒரு பகுதியாக நேற்று பொதுமக்கள் மற்றும் நாய் வளர்ப்போர்களை கவரும் வகையில் அரிய வகை மற்றும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">பாரம்பரிய நாய் கண்காட்சி</a> நடைபெற்றது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட நாய்கள் இந்த போட்டியில் பங்கேற்க அழைத்து வரப்பட்டன.</p><h2>அணிவகுத்த  நாய்கள்</h2><p>இந்த கண்காட்சியில் தமிழ்நாட்டின் பாரம்பரிய நாய் இனங்களான ராஜபாளையம், சிப்பிப்பாறை, கன்னி மற்றும் கோம்பை ஆகிய நாய்கள் கம்பீரமாக வலம் வந்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தின. அதேபோல் ஜெர்மன் ஷெப்பர்ட், ராட்வைலர், கிரேட் டேன், பக், லேப்ரடார் மற்றும் வெளிநாட்டை சேர்ந்த அரிய வகை அக்கிடா உள்ளிட்ட பல நாய் இனங்களும் இதில் பங்கேற்றன.</p><h2>பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம்</h2><p>கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் அனைத்து நாய்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, தடுப்பூசி சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டன. போட்டியில் பங்கேற்ற நாய்கள், அதன் உரிமையாளர்கள் இட்ட கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து சாகசங்களை செய்து காட்டின. இதைப் பார்த்து மைதானத்தில் கூடியிருந்த குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.</p><h2>பரிசுகள் </h2><p>இதனை தொடர்ந்து, பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறப்பாக செயல்பட்ட மற்றும் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்ட நாய்களின் உரிமையாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும், சுழற்கோப்பைகளும், பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.</p><p>மாங்கனி கண்காட்சிக்கு வந்த பொதுமக்களை இந்த நாய் கண்காட்சி பெரிதும் கவர்ந்தது.</p>]]></content:encoded></item><item><title>ஸ்நாக்ஸ் பாக்கெட்டுக்குள் கிடந்த பிளாஸ்டிக் பந்து... தெரியாமல் விழுங்கிய 5 வயது குழந்தை மூச்சுத்திணறி உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/plastic-ball-found-inside-a-snack-packet-5-year-old-child-dies-of-suffocation-after-accidentally-swallowing-it</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/plastic-ball-found-inside-a-snack-packet-5-year-old-child-dies-of-suffocation-after-accidentally-swallowing-it#comments</comments><guid isPermaLink="false">b6292cf5-8627-4a3c-874e-c545a13619ea</guid><pubDate>Sun, 02 Aug 2026 16:18:22 +0000</pubDate><atom:updated>2026-08-02T16:18:22.589Z</atom:updated><atom:author><atom:name>Gokul Raj B</atom:name><atom:uri>/api/author/2401541</atom:uri></atom:author><description></description><media:keywords>குழந்தை,Karnataka,child,கர்நாடக மாநிலம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/uz5acn8x/National-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/uz5acn8x/National-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பெங்களூரு,</p><p>கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தில் உள்ள கவுரிபுரா கிராமத்தில், 5 வயது குழந்தைக்கு அதன் பெற்றோர் ஸ்நாக்ஸ் பாக்கெட் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளனர். அந்த ஸ்நாக்ஸ் பாக்கெட்டில் பரிசுப் பொருளாக ஒரு சிறிய பிளாஸ்டிக் பந்து இருந்துள்ளது. இதனை குழந்தையின் பெற்றோர் கவனிக்கவில்லை. </p><p>இந்நிலையில் குழந்தை அந்த பிளாஸ்டிக் பந்தை மிட்டாய் என்று நினைத்து விழுங்கியதாக தெரிகிறது. அப்போது அந்த குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. </p><p>இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் புகார் எதுவும் அளிக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் புகார் அளிக்கும் பட்சத்தில் இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். 5 வயது குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தஞ்சாவூர் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 பேர் பலி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-killed-in-gas-cylinder-explosion-near-thanjavur-communist-party-of-india-condoles</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-killed-in-gas-cylinder-explosion-near-thanjavur-communist-party-of-india-condoles#comments</comments><guid isPermaLink="false">4783d376-2bf6-48d1-8c1e-73d3d41eabad</guid><pubDate>Sun, 02 Aug 2026 16:09:17 +0000</pubDate><atom:updated>2026-08-02T16:09:17.569Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,Communist Party of India,தஞ்சாவூர்,இரங்கல்,சிலிண்டர்,வெடித்து விபத்து,cylinder explosion</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/nuqvd4dr/152.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்திய கம்யூனிஸ்ட் கட்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/nuqvd4dr/152.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தஞ்சாவூர் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து&nbsp;3 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">இந்திய கம்யூனிஸ்ட் கட்சி</a> இரங்கல் தெரிவித்துள்ளது.</p><p>இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே&nbsp;&nbsp;உஞ்சியவிடுதி சின்ன அம்மன்குடி கிராமத்தில்&nbsp;&nbsp;கடந்த வியாழன் அன்று&nbsp;&nbsp;&nbsp;வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் இன்று இறந்துவிட்டனர் என்ற செய்தி மிகுந்த துயரத்தை தருகிறது.</p><p>விவசாய&nbsp;&nbsp;கூலித்தொழிலாளியான முருகையன் (50) வீட்டில்&nbsp;&nbsp;கடந்த வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியது. இதில் தீயை அணைக்க முயன்ற முருகையனின் மனைவி செல்வி (45), மகள் அபிநயா (18), அப்பகுதியைச் சோ்ந்த காசிவேல் (45), ராஜசேகா் (45), அப்புராஜ் மகன் பழனிவேல் (37), வேம்பையன் (45), இவரது மனைவி கலையரசி (38) ஆகியோா் பலத்த காயமடைந்து, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.</p> <h2>இரங்கல்</h2><p>இதில் பழனிவேல், காசிநாதன், வேம்பையன் ஆகிய மூன்று பேரும் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலியை செலுத்துகிறது. அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் ,ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு ரூ 10 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும்.</p><p>மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் குணமடைய விழைகிறது .</p><p>சிகிச்சை பெறுவோருக்கு தரமான இலவச சிகிச்சையை தமிழ்நாடு அரசு வழங்கிட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நீலகிரி: வனப்பகுதியில் இறந்து கிடந்த சிறுத்தை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-leopard-found-dead-in-the-forest-area</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-leopard-found-dead-in-the-forest-area#comments</comments><guid isPermaLink="false">832adc6e-2eb8-4020-af58-0ed7f515a316</guid><pubDate>Sun, 02 Aug 2026 16:04:50 +0000</pubDate><atom:updated>2026-08-02T16:04:50.685Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nilgiris,நீலகிரி,leopard,சிறுத்தை</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/gm2qxjd8/7.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/gm2qxjd8/7.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>நீலகிரி,</p><p>நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபகாலமாக சிறுத்தைக ளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. அவை உணவு மற்றும் குடிநீர் தேடி குடியிருப்பு பகுதிகளில் உலா வருகின்றன. அத்துடன் வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடுவதால், பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.</p><p>இந்த நிலையில் குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே உள்ள ஐபீல்ட் வனப்பகுதியில் சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. </p><p>அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குன்னூர் வனத்துறையினர் சிறுத்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, இறந்து கிடந்தது ஆண் சிறுத்தை ஆகும். 10 முதல் 15 வயதுக்குள் இருக்கும். வன விலங்குகளுக்குள் ஏற்பட்ட ஏற்பட்ட மோதல் காரணமாக சிறுத்தை இறந்து இருக்கலாம். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனர்.</p><p>பின்னர் முதுமலையில் இருந்து வன கால்நடை டாக்டர் ராஜேஷ் வரவழைக்கப்பட்டு சிறுத்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் உடல் அங்கேயே தீ வைத்து எரிக்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>டெல்லி சென்ற, தமிழக விவசாயிகளை நாக்பூரிலேயே தடுத்து நிறுத்தியது யார்? - வேல்முருகன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/who-stopped-tamil-nadu-farmers-in-nagpur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/who-stopped-tamil-nadu-farmers-in-nagpur#comments</comments><guid isPermaLink="false">3c4dc600-4a04-499f-9ad5-b32c1307713b</guid><pubDate>Sun, 02 Aug 2026 15:54:56 +0000</pubDate><atom:updated>2026-08-02T15:54:56.344Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டெல்லி,Velmurugan,வேல்முருகன்,Nagpur,நாக்பூர்,கேள்வி,Delhi.,தமிழக விவசாயிகள்,Tamil Nadu farmers</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/75jz09lo/velmurugan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/75jz09lo/velmurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>டெல்லி சென்ற, தமிழக விவசாயிகளை நாக்பூரிலேயே தடுத்து நிறுத்தியது யார்? என்று வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>டெல்லி சென்ற, தமிழக விவசாயிகளை நாக்பூரிலேயே தடுத்து நிறுத்தியது யார்?</p><p>தமிழக உரிமைகள் மீது தாக்குதல் நடந்தும், தமிழக அரசு அமைதியாக இருப்பது ஏன்?</p> <h2>கோரிக்கை</h2><p>டெல்லியில் காவிரி உரிமை உள்ளிட்ட தமிழ்நாட்டு விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியான முறையில் போராடச் சென்ற தமிழக விவசாயிகளை, மராட்டிய மாநிலத்தின் நாக்பூரில் மராட்டிய காவல்துறையினர்,  ரெயிலிலிருந்து கட்டாயமாக இறக்கி, அவர்களை தமிழகத்திற்கு திருப்பி அனுப்பியிருப்பது மிகக் கடுமையாக கண்டிக்கத்தக்க, சனநாயக விரோத செயலாகும்.</p><h2>தாக்குதல்</h2><p>இந்திய அரசியலமைப்பு, நாட்டின் எந்த மாநிலத்திற்கும் சென்று தங்களது கருத்துகளை அமைதியான முறையில் வெளிப்படுத்தும் உரிமையை ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கியுள்ளது. அந்த அடிப்படை உரிமையையே பறிக்கும் வகையில் தமிழக விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பது, விவசாயிகளின் உரிமைகள் மீது மட்டுமல்ல, தமிழ்நாட்டின் உரிமைகள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகும்.</p><h2>குற்றவாளிகள் அல்ல</h2><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">தமிழக விவசாயிகள்</a> குற்றவாளிகள் அல்ல. தங்களது வாழ்வாதாரத்தையும், காவிரி உரிமையையும் காக்க சனநாயக வழியில் போராட சென்றவர்கள். அவர்களை வழிமறித்து சொந்த மாநிலத்திற்கே திருப்பி அனுப்பியிருப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கும், சனநாயக மாண்பிற்கும் எதிரான செயல்.</p> <h2>நடவடிக்கை</h2><p>இந்த விவகாரத்தை தமிழக அரசு சாதாரண நிகழ்வாக கருதி வேடிக்கை பார்க்கக்கூடாது. உடனடியாக மராட்டிய  அரசிடம் கடும் கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும். மேலும், மத்திய அரசின் கவனத்திற்கு இந்த அநீதியை கொண்டு சென்று, இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.</p> <h2>விவசாயிகளின் உரிமை</h2><p>தமிழக விவசாயிகளின் சனநாயக உரிமையை பறித்த மராட்டிய காவல்துறையின் நடவடிக்கையை, <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20">தமிழக வாழ்வுரிமைக் கட்சி </a>மிக வன்மையாகக் கண்டிக்கிறது. விவசாயிகளின் உரிமையை பாதுகாப்பதிலும், தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டுவதிலும் தமிழக அரசு உடனடியாக உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>காதர் மொகதீன் மகன் மரணம்; எடப்பாடி பழனிசாமி இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kader-moghadeens-son-passes-away-edappadi-palaniswami-condoles</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kader-moghadeens-son-passes-away-edappadi-palaniswami-condoles#comments</comments><guid isPermaLink="false">7a2b7ec0-dafe-4e6e-8e19-5c5089a5d5d0</guid><pubDate>Sun, 02 Aug 2026 15:34:00 +0000</pubDate><atom:updated>2026-08-02T15:34:00.853Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,எடப்பாடி பழனிசாமி,அதிமுக,Palanisamy,காதர் மொகதீன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/f9o1evhh/eps33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/f9o1evhh/eps33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவராக இருப்பவர் காதர் மொகிதீன். இவரின் மகன் கலீலூர் ரஹ்மான் மருத்துவராக இருந்தார். சமீபகாலமாக அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு அவர் காலமானார். ஐயூஎம்எல் தமிழ்நாடு தங்களின் எக்ஸ் பக்கத்தில் அவரின் மறைவு செய்தியை வெளியிட்டனர். அவரின் மறைவுக்கு முதல்-அமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்தார். திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கலை தெரிவித்தார். இதேபோல அமைச்சர்களும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ரஹ்மான் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்தநிலையில்,  ஐயூஎம்எல் தலைவர் காதர் மொகிதீனின் மகன் கலீலூர் ரஹ்மான் காலமான செய்தி அறிந்து துயருற்றேன் என <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">எடப்பாடி பழனிசாமி </a>இரங்கல் தெரிவித்துள்ளார்.</p><p>அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், </p><p>இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் திரு. காதர் மொகிதீன் அவர்களின் மகன் மருத்துவர் கே.எம்.கே. கலீலூர் ரஹ்மான் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து துயருற்றேன்.</p><p>பாசமிகு மகனை இழந்து வாடும் காதர் மொகிதீன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த  கலீலூர் ரஹ்மான் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என அதில் பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக விவசாயிகளை இறக்கிவிட்டது அநீதி: அன்புமணி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/injustice-has-brought-down-tamil-nadu-farmers-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/injustice-has-brought-down-tamil-nadu-farmers-anbumani#comments</comments><guid isPermaLink="false">365a185b-b795-4ac3-973e-a9ddd719af6c</guid><pubDate>Sun, 02 Aug 2026 15:25:53 +0000</pubDate><atom:updated>2026-08-02T15:25:53.736Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani,Chennai,சென்னை,மேகதாது,அன்புமணி ராமதஸ்,விவசாயிfarmer</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/w9e42gp6/31.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/w9e42gp6/31.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காவிரி நீர் பிரச்னைகளை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்த சென்ற தமிழ்நாடு விவசாயிகளை, மகாராஷ்டிரா அரசு நடுவழியில் நிறுத்தி அவர்களை திருப்பி அனுப்பிய சம்பவத்திற்கு தமிழ்நாடு அரசு விளக்கம் கோர வேண்டும் என பாமக தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF">அன்புமணி ராமதாஸ்</a> கூறியுள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>காவிரி நீர் பிரச்சினை, மேகதாது அணை விவகாரம் ஆகியவற்றில் தமிழகத்திற்கு இழைக்கப்படும் அநீதி, மத்திய நீர்வள அமைச்சகத்தின் ஒரு சார்பான  நிலைப்பாடு ஆகியவற்றைக் கண்டித்து  டெல்லியில்  நாளை மறுநாள் மத்திய நீர்வள அமைச்சகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக  தொடர்வண்டி முலம் சென்ற காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்தவர்களை மராட்டிய மாநிலம் நாக்பூரில் அம்மாநில காவல்துறையினர் தடுத்தி நிறுத்தி இறக்கி விட்டதுடன், அவர்களை வலுக்கட்டாயமாக தமிழ்நாட்டுக்கு திருப்பி அனுப்பி்யுள்ளனர். தமிழக உழவர்கள் மீதான இந்த அடக்குமுறை அநீதியானது; கண்டிக்கத்தக்கது.</p> <h2>மனித உரிமை மீறல்</h2><p>மேகதாது விவகாரத்தில் தமிழகத்திற்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டித்து போராட்டம் நடத்தும் அனைத்து உரிமைகளும் தமிழக விவசாயிகளுக்கு உண்டு. அவர்களின் போராட்டத்தைத்  தடுப்பதற்காக அவர்களை மராட்டிய காவல்துறை தடுத்து நிறுத்தி இறக்கி விட்டது மனித உரிமை மீறல் ஆகும். </p><p>அதுமட்டுமின்றி, இது தமிழ்நாட்டின்  உரிமைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இதை தமிழ்நாடு அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது. டெல்லிக்கு தொடர்வண்டியில் பயணம் செய்த விவசாயிகளை எதற்காக தடுத்து நிறுத்தினார்கள் என்று மராட்டிய அரசிடமும், காவல்துறையிடமும் தமிழக அரசு விளக்கம் கேட்க வேண்டும். அத்துமீறிய இந்த செயலுக்காக மராட்டிய அரசை கடுமையாக கண்டிக்க வேண்டும். </p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-tomorrow-9</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-tomorrow-9#comments</comments><guid isPermaLink="false">4f83fe5a-388c-42b3-9063-246299eeba77</guid><pubDate>Sun, 02 Aug 2026 15:17:35 +0000</pubDate><atom:updated>2026-08-02T15:17:35.038Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மின் தடை,power cut</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/u623bcvr/ep.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/u623bcvr/ep.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மின்சாரம் நிறுத்தம் தொடர்பாக தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு பின்வருமாறு:</p><p>03.08.2026 திங்கட்கிழமை பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம்.</p><p>சென்னையில் 03.08.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.  </p><h2>மின் தடை ஏற்படும் இடங்கள்</h2><p><strong>அம்பத்தூர்:</strong> கொரட்டூர், மண்ணூர்பேட்டை, டிஎன்ஹெச்பி, சென்ட்ரல் அவென்யூ, எம்.டி.எச். சாலை, ஆர்.எஸ். சாலை, முகப்பேர் சாலை, கிழக்கு அவென்யூ, மேனாம்பேடு சாலை, திருமுல்லைவாயில் சாலை.</p><p><strong>அடையாறு:</strong> இரட்டைப்பிள்ளையார் கோயில் தெரு, அண்ணா தெரு, பாரதி தெரு, சான் அகாடமி, வ.ஊ.சி. நகர் 1வது முதல் 4வது தெருக்கள் வரை, ஜோஷ்னா ஃபிளாட்ஸ், ஸ்ரீனிவாச நகர், தேவி பிளாட்ஸ், முருகு நகர், கோமதி நகர், ஜெயின் பிளாட்ஸ். </p><p>தாம்பரம்: பெரியார் நகர், தேவராஜ் பிள்ளை தெரு, விஜிஎன், நித்யானந்தம் நகர், பெருமாள் கோயில் தெரு ஜி.எஸ்.டி. சாலை, சர்வீஸ் சாலை, இரும்புலியூர்.</p> ]]></content:encoded></item><item><title>காவிரி விவகாரம்: முதல்-அமைச்சர் வாய் திறந்தால் பலருக்கு ஆபத்து - அமைச்சர் செங்கோட்டையன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-the-chief-minister-opens-his-mouth-many-people-will-be-in-danger-minister-sengottaiyan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-the-chief-minister-opens-his-mouth-many-people-will-be-in-danger-minister-sengottaiyan#comments</comments><guid isPermaLink="false">abf91de8-7231-4853-8016-3a35899447b8</guid><pubDate>Sun, 02 Aug 2026 15:16:34 +0000</pubDate><atom:updated>2026-08-02T15:16:34.275Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,Sengottaiyan,காவிரி விவகாரம்,அமைச்சர் செங்கோட்டையன்,முதல்-அமைச்சர் விஜய்,CMVijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/fo2z1m8s/kottai33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
காவிரி விவகாரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/fo2z1m8s/kottai33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி விவகாரத்தில் முதல்-அமைச்சர் விஜய்  வாய் திறந்தால் பலருக்கு ஆபத்து வருகிறது, அதனால் அவர் வாய் திறப்பதில்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.</p><p>ஈரோடு,</p><p>அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையில்லை எனத் திமிராகப் பேசியுள்ள 'கட்சித் தாவல் வல்லுநர்' நிர்மல் குமார்</p><p>காவிரி தொடர்பாகத் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் உறக்கம் கலைத்து திருவாய் மலர்வது எப்போது? என </p><p>முன்னாள் அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பி உள்லார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்,  ஈரோடு கோபி செட்டி பாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தில் எல்லாரையும் ஒருங்கிணைத்து தான் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அதில் கருத்து வேறுபாடுகள் இல்லை.</p><p>அண்டை மாநிலத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டு இருக்கிறது என்பதை உதாரணம் காட்டி, எங்களிடத்தில் கேள்வி கேட்பதைக் காட்டிலும், எல்லோரும் ஒருங்கிணைந்து டெல்டா விவசாயிகளை வாழ வைக்க வேண்டும் என்பது எல்லோருடைய கனவு.</p><p>அந்த கனவு நிறைவேறும் காலம். வெற்றிகரமாக நேற்று துவங்கப்பட்டு உள்ளது. நல்ல ஒரு முதல்-அமைச்சர் நமக்கு கிடைத்து உள்ளார். அந்த காலம் பொற்காலமாக அமையும். <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a> வாய் திறந்தால் பலருக்கு ஆபத்து வருகிறது. அதனால் தான் அவர் வாய் திறப்பது இல்லை.</p> <p>வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் ஆக உள்ளது. அதில் அவர்களின் நலன்களுக்கான அனைத்து திட்டங்களும் இடம்பெறும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>காவிரி விவகாரம்: முதல்-அமைச்சர் விஜய் உறக்கம் கலைத்து திருவாய் மலர்வது எப்போது? முன்னாள் அமைச்சர் ரகுபதி கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/when-will-cm-vijay-awaken-on-cauvery-issue</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/when-will-cm-vijay-awaken-on-cauvery-issue#comments</comments><guid isPermaLink="false">7edd8626-802c-4189-abcf-245ffdce96d9</guid><pubDate>Sun, 02 Aug 2026 15:15:39 +0000</pubDate><atom:updated>2026-08-02T15:15:39.841Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கேள்வி,ரகுபதி,Cauvery issue,காவிரி விவகாரம்,Asked,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/yo94un4g/ragupathi.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Former Minister Raghupathi ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/yo94un4g/ragupathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையில்லை எனத் திமிராகப் பேசியுள்ள 'கட்சித் தாவல் வல்லுநர்' நிர்மல் குமார். காவிரி தொடர்பாக தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் உறக்கம் கலைத்து திருவாய் மலர்வது எப்போது? இது தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p> <h2>அவசர மனு தாக்கல்</h2><p> கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில், காவிரி நீரை உடனடியாக தமிழ்நாட்டுக்கு விடுவிக்க உச்சநீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவகுமார் தினமும் உயர்நிலை கூட்டங்களை கூட்டி வருகிறார், டெல்லி சென்று மத்திய மந்திரிகளை சந்திக்கிறார், முன்னாள் முதல்-மந்திரிகள், கர்நாடக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் அடங்கிய அனைத்து கட்சி கூட்டத்தையும் இன்று அறிவித்திருக்கிறார்.</p><h2>தூங்குமூஞ்சி த.வெ.க.</h2><p> ஆனால், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சினையில் தூங்குமூஞ்சி த.வெ.க. அரசு மெத்தனத்தோடும் மிதப்போடும் செயல்பட்டு வருகிறது. 'கட்சித்தாவல் வல்லுநர்' நிர்மல் குமார் ஒருபடி மேலே சென்று த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளித்து வரும் கட்சிகள் உட்பட தமிழ்நாட்டின் அனைத்து எதிர்க்கட்சிகளும் கர்நாடகத்துக்கு ஆதரவாக செயல்படுவது போல கொச்சைப்படுத்தி பேசியுள்ளார். காவிரி நடுவர் மன்றம் கண்ட தலைவர் கலைஞர் குறித்தும் அவதூறாக பேசியிருக்கிறார்.</p><h2>மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்</h2><p> தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக இருக்கும் ஜோசப் விஜய், நீர்வளத்துறைக்கு அமைச்சரான ஆனந்த்  <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேகதாது அணை</a> தொடர்பாக இதுவரை வெளிப்படையாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் குறித்த நிர்மல் குமாரின் கருத்தையும், அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையில்லை எனும் அவரது நிலைப்பாட்டையும்  ஏற்றுக்கொள்கின்றனரா என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.</p><h2>கிள்ளுக்கீரை</h2><p>ஊடகங்களைச் சந்தித்தால் தனது இமேஜ் சரிந்துவிடும் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் அஞ்சுவதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால், காவிரி போன்ற முக்கிய பிரச்சினையில் முதல்-அமைச்சர் தனது நிலைப்பாட்டை மக்களுக்கு அறிவிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அவருக்கு இருக்கிறது. மாநில நிர்வாகத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர் எல்லாவற்றிலும் வாய்மூடியே இருப்பது தமிழ்நாட்டில் பலவீனமான ஆட்சி இருப்பதான தோற்றத்தை ஏற்படுத்திவிடும். அண்டை மாநிலங்கள் மட்டுமல்ல, இங்குள்ள கவர்னரும் நமது மாநில அரசை கிள்ளுக்கீரையாக எண்ணுவதற்கே இது வழிவகுக்கும்.</p> <h2>பிரயோஜனமும் இல்லை</h2><p>மாநிலத்தின் உயிர்ப் பிரச்சினைகளில் கூட யாரையும் கலந்தாலோசிக்காமல் முதலமைச்சர் உறக்கத்தில் இருப்பதும், வார இறுதி நாட்களில் முழுமையான ஓய்வு நிலைக்கு சென்று விடுவதும் காவிரி விவசாயிகளை கடும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. நமது முதல்-அமைச்சரையும் அரசையும் நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை, மழை பெய்து கர்நாடகம் தானாக தண்ணீர் திறந்துவிட்டால்தான் உண்டு எனும் அளவுக்கு அவநம்பிக்கையில் அவர்களைத் த.வெ.க. அரசு தள்ளுவது கடும் கண்டனத்துக்குரியது.</p> <h2>அனைத்து கட்சிக்கூட்டம்</h2><p>உடனடியாக அனைத்து கட்சிக்கூட்டம் கூட்டி, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாட்டின் காவிரி உரிமையை நிலைநாட்டும் வகையில் தமிழ்நாடு அரசு தீவிரமாக செயல்பட வேண்டும். தான்தோன்றித்தனமாக பேசியுள்ள <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">அமைச்சர் நிர்மல் குமார்</a> தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். காவிரி பிரச்சினையில் அரசுடன் ஒத்துழைக்கவும் ஆலோசனைகள் கூறவும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் தயாராகவே இருக்கின்றன. மாநில நலன் சார்ந்த விவகாரங்களில் குறுகிய மனப்பான்மையுடன் செயல்படுவதைத் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4.%E0%AE%B5%E0%AF%86.%E0%AE%95.%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20">த.வெ.க. அரசு </a>இனியேனும் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-tourists-bathing-at-courtallam-main-falls</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-tourists-bathing-at-courtallam-main-falls#comments</comments><guid isPermaLink="false">eb69d59c-8a11-4846-bb43-a281b5a284fe</guid><pubDate>Sun, 02 Aug 2026 15:08:22 +0000</pubDate><atom:updated>2026-08-02T15:08:22.784Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சுற்றுலா பயணிகள்,குற்றாலம்,Courtallam,tourist,மெயின் அருவி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/616kzogp/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/616kzogp/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><p>தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த சில வாரங்களாக நீர்வரத்து மிகக்குறைந்த அளவிலேயே இருந்தது. இதற்கிடையே, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.இதனால் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்ததையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.</p><p>இந்த நிலையில், குற்றாலத்தில் நீர்வரத்து இன்று சீரானது. இதனால், 2 நாட்கள் தடைக்கு பின்னர் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால், சுற்றுலாவாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இன்று வார விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து அங்குள்ள அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். </p><p>இந்நிலையில் குற்றாலத்தில் தற்போது நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை போலீசார் வெளியேற்றினர். தொடர்ந்து குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. </p>]]></content:encoded></item><item><title>சிவகாசி: கணவரை உதறிவிட்டு வந்த இளம்பெண்...3 வயது பெண் குழந்தை உயிரை பறித்த கள்ளக்காதலன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-thief-who-took-the-life-of-a-3-year-old-girl</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-thief-who-took-the-life-of-a-3-year-old-girl#comments</comments><guid isPermaLink="false">c6d0d616-8fe3-40d6-b0f5-68f8abd7f438</guid><pubDate>Sun, 02 Aug 2026 14:47:30 +0000</pubDate><atom:updated>2026-08-02T14:47:30.836Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrest,கள்ளக்காதல்,Love,சிவகாசி,பெண் குழந்தை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/mt3w8b28/love33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 3 வயது பெண் குழந்தை உயிரை பறித்த கள்ளக்காதலன்
]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/mt3w8b28/love33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர்,</p><p>கள்ளக்காதல் தகராறில் 3 வயது பெண் குழந்தை கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.</p><p>விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சின்ன கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் துரைப்பாண்டி (வயது 23) இவரது மனைவி சுவாதி (வயது 22) இவர்களது மகள் விஷ்ணு பிரியா (வயது 3) சுவாதி அதே பகுதியில் உள்ள தனிஅயர் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தார்.</p><h2>கள்ளக்காதல்</h2><p>அப்போது அங்கு வேலைபார்த்த திருத்தங்கல் பெரியார் நகரை சேர்ந்த விக்னேஷ்வரன் (வயது 27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. சுவாதிக்கும் அவரது கணவர் துரைப்பாண்டிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுவாதி கடந்த 25 நாட்க்ளுக்கு முன்பு கணவரை பிரிந்தார்.</p><p>அவர் குழந்தையுடன் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பசும்பொன் நகர் பகுதியில் வசித்து வந்தார். சுவாதியுடன் அவரது கள்ளக்காதலன் விக்னேஸ்வரன் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தார். இதனை அறிந்த சுவாதியின் உறவினர்கள் அவரை பார்த்து குழந்தையின் நலன் கருதி கணவன் - மனைவி இருவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றாக சேர்ந்து வாழுமாறு கூறினர். அவர் அதனை ஏற்கவில்லை. துரைப்பாண்டியுடன் வாழ முடியாது என்று திட்டவட்டமாக கூறிய சுவாது. விக்னேஸ்வரன் தான் தன்னுடைய கணவர் என்று கூறினார். துரைப்பாண்டியனும் பல முறை மனைவியை சந்தித்து குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். சுவாதி அவரை அவமானப்படுத்தி அனுப்பி விட்டார்.</p><h2>தினமும் குடித்து விட்டு பிரச்சினை</h2><p>இந்தநிலையில் கள்ளக்காதலன் விக்னேஸ்வரன் தினமும் குடித்துவிட்டு வந்து சுவாதியுடன் பிரச்சினை செய்து வந்ததாக கூறப்படுகிறது. விக்னேஸ்வரன் நேற்று இரவு அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">உல்லாசமாக இருக்கலாம்</a> என்று கூறி சுவாதியை அழைத்துள்ளார். அதற்கு சுவாதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த விக்னேஸ்வரன், 3 வயது குழந்தை விஷ்ணு பிரியாவின் தலைமுடியை இழுத்து, முகத்தில் நகத்தால் கீறி, வயிற்றில் சரமாரியாக அடித்து கொடூரமான முறையில் தாக்கினார். இதில் குழந்தை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தது. இது தொடர்பாக போலீசார் விக்னேஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நாக்பூரில் தமிழக விவசாயிகள் கைது: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-farmers-arrested-in-nagpur-udhayanidhi-stalin-condemns-the-move</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-farmers-arrested-in-nagpur-udhayanidhi-stalin-condemns-the-move#comments</comments><guid isPermaLink="false">6d8470a7-a2cc-45ff-b7e0-9eaa2d71dd9a</guid><pubDate>Sun, 02 Aug 2026 14:34:02 +0000</pubDate><atom:updated>2026-08-02T14:34:02.951Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,தமிழக விவசாயிகள்,Tamil Nadu farmers</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/d3irpemh/14.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/d3irpemh/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாக்பூரில் கைது செய்யப்பட்டுள்ள  நம் விவசாயிகளை உடனே விடுவிக்க தமிழ்நாடு முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று டெல்லியில் முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக ரயிலில் சென்ற தமிழ்நாட்டு விவசாயிகளை நாக்பூரில் கைது செய்துள்ள மகாராஷ்டிரா மாநில காவல்துறையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.</p><p>மேகதாது விஷயத்தில் தொடக்கம் முதலே கர்நாடகாவுக்கு ஆதரவாக ஒருதலைபட்சமாக செயல்படும் நீர்வளத்துறையின் போக்கை கண்டித்துதான் தமிழ்நாட்டு விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தை அறிவித்தனர்.</p><p>ஆனால், அவர்கள் ரயிலில் சென்று கொண்டிருக்கும் போதே நடுவழியில் இறங்க வைத்து, தமிழ்நாட்டுக்கே திரும்பிச் செல்லுங்கள் என கட்டாயப்படுத்தி உள்ளது மகாராஷ்டிர காவல்துறை.</p><p>நாக்பூரில் கைது செய்யப்பட்டுள்ள  நம் விவசாயிகளை உடனே விடுவிக்க தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். </p><p>நம் விவசாயிகளை கைது செய்த மகாராஷ்டிர அரசிடம் அதற்கான விளக்கத்தைக் கேட்பதுடன், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கான உறுதியைப் பெற வேண்டும். டெல்லி சென்று போராட அவர்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். ஜனநாயக வழியில் போராடும் உரிமையைப் பறிக்கக் கூடாது.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>ஊர்க்கூடி தேர் இழுத்த கிராம மக்கள்; வன்னியரசு பாராட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vanniyarasu-hails-villagers-chariot-festival</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vanniyarasu-hails-villagers-chariot-festival#comments</comments><guid isPermaLink="false">1a0c043a-a2a3-4008-b781-b613b5ef85da</guid><pubDate>Sun, 02 Aug 2026 14:15:58 +0000</pubDate><atom:updated>2026-08-02T14:15:58.596Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாராட்டு,கிராம மக்கள்,praises,chariots,தேர்,village people,Vanniyararasu,அமைச்சர் வன்னியரசு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/7c608g7i/vanniarsu.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/7c608g7i/vanniarsu.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஊர்க்கூடி தேர் இழுத்த கிராம மக்கள்; வன்னியரசு பாராட்டு இது தொடர்பாக, தமிழக<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81"> சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு</a> பதிவிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:- </p> <h2>ஆடி மாத தேர் திருவிழா</h2><p>கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம் - பூட்டை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு பூட்டை மாரியம்மன் கோவில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE">ஆடி மாத தேர் திருவிழா</a> நேற்று (01.08.26) வெகு சிறப்பாக நடைபெற்றது.</p> <h2>தேரோட்டம்</h2><p>பூட்டை கிராம மக்களின் அழைப்பின் பேரில், தேர் திருவிழாவில் பங்கேற்று, ஜாகிர்தார்களுடன் இணைந்து தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தோம்.</p><h2> பக்தர்கள் பங்கேற்பு</h2><p>அனைத்து சமூகத்தினருக்கும் தேரோட்டம் பொதுவாக நடைபெற வேண்டுமென சட்டப்போராட்டம் நடைபெற்ற காலங்கள் முன்னர் இருந்ததுண்டு. இன்று அனைத்து தரப்பு மக்களும் இணைந்து தேரோட்டத்தை சிறப்பாக முன்னெடுத்து செல்லும் சமூக நல்லிணக்கம் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதிலிருந்து திரளான பக்தர்கள் கோவில் தேரோட்டத்தில் பங்கேற்று சிறப்பித்தனர்.</p><h2>பாதுகாப்பு</h2><p>இந்து சமய அறநிலையத்துறையின் ஒருங்கிணைப்பு பாராட்டத்தக்கதாய் அமைந்திருந்தது. கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செஹனாஸ் இலியாஸ் முன்னின்று தேரோட்டத்துக்கு பாதுகாப்பு வழங்கினார்.</p><h2>பங்கேற்றனர்</h2><p>இந்நிகழ்வில் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ராகேஷ், பாட்டாளி மக்கள் கட்சியின் கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட செயலாளர் பப்லு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சங்கராபுரம் தொகுதி மாவட்ட செயலாளர் இல. சிலம்பன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகளும் உடன் பங்கேற்றனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம் - பூட்டை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு பூட்டை மாரியம்மன் திருக்கோவில் ஆடி மாத <br>தேர் திருவிழா நேற்று (01.08.26) வெகு சிறப்பாக நடைபெற்றது.<br><br>பூட்டை கிராம மக்களின் அழைப்பின் பேரில், தேர் திருவிழாவில் பங்கேற்று,… <a href="https://t.co/V8wosAmAcD">pic.twitter.com/V8wosAmAcD</a></p>&mdash; வன்னி அரசு (@VanniTamizhVCK) <a href="https://x.com/VanniTamizhVCK/status/2083897253371298295?ref_src=twsrc%5Etfw">August 2, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>ஆசை 60 நாள், மோகம் 30 நாள்: கிணத்துக்கடவு அருகே இளம்பெண் கொலையில் திடுக்கிடும் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/shocking-information-about-the-murder-of-a-young-woman-near-kindathukadavu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/shocking-information-about-the-murder-of-a-young-woman-near-kindathukadavu#comments</comments><guid isPermaLink="false">6c553d0c-50b9-41e3-b15a-5d0fcb7eb557</guid><pubDate>Sun, 02 Aug 2026 14:10:33 +0000</pubDate><atom:updated>2026-08-02T14:10:33.939Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,கைது,இளம்பெண்,arrest,கள்ளக்காதல்,உல்லாசம்,women</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/kq0ci33q/women333.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இளம்பெண் கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/kq0ci33q/women333.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கள்ளக்காதலியை கொன்று எரித்த வாலிபர் தந்தையுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><p>கோவை -பொள்ளாச்சி நான்கு வழிச்சாலை கிணத்துக்கடவு அருகே நல்லட்டிபாளையத்தில் தனியார் நிறுவனத்தின் பின்புறம் தனியாருக்கு சொந்தமான இடத்தில் நேற்று முன்தினம் 30 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் தீயில் எரிந்து கருகிய நிலையில் கிடந்தது.</p><p>இது குறித்து நல்லட்டிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் மதுக்கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இளம்பெண்ணை எரித்துக் கொலை செய்த மர்மநபர்களை கண்டுபிடிக்க கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன் குமார் ரெட்டி உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் மேற்பார்வையில் பேரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.</p><h2>கண்காணிப்பு கேமரா பதிவு</h2><p>இந்த தனிப்படை போலீசார் கிணத்துக்கடவு, கோவில்பாளையம், வடசித்தூர், வடக்கிபாளை யம் மற்றும் தமிழக -கேரள எல்லையில் உள்ள 120-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக் களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்குகளிலும் விசாரணை நடத்தினர்.இந்த நிலையில், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் கண்காணிப்பு கேமராவில் ஒரு மோட்டார் சைக்கிள் அடிக்கடி வந்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த நாளில். தனியாருக்கு சொந்தமான இடத்தில் திடீரென்று தீப்பிடித்து எரியும் காட்சியும் பதிவாகி இருந்தது.</p><p>இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார், அடிக்கடி வந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை வைத்து அது எங்கிருந்து வந்தது என்று விசாரித்தனர். இதில் அந்த மோட்டார் சைக்கிள் பொள்ளாச்சியில் இருந்து வந்ததும், அதில் 2 பேர் வந்ததும் தெரிய வந்தது. இதில் பொள்ளாச்சியை சேர்ந்த ஒருவருக்கு பெண் கொலையில் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகத்தினர்.</p><h2>பெண் கொலை</h2><p>இந்தநிலையில் அந்த நபர் அங்குள்ள ஒரு எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றும் பழனிமுத்து (வயது 35) என்பதும் அவருடன் வந்து சென்றவர் அவரது தந்தையான குருநாதன் (வயது 60) என்பதும் தெரியவந்தது.</p><p>இதனையடுத்து 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.</p><p>குருநாதனின் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகும். பல ஆண்டுகளுக்கு முன்பே இவர்கள் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் குடியேறி இங்கு வேலை பார்த்துள்ளனர். குருநாதன் அவரது மகன் பழனிமுத்து ஆகியோர் பொளாச்சியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்துள்ளனர்.</p><p>அப்போது அதே ஜவுளிக்கடையில் வேலைபார்த்த ஒரு பெண்ணை ஒரு பெண்ணை பழனிமுத்து காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு 13 வயது மற்றும் 7 வயதில் 2 மகன்கள் இருக்கிறார்கள்.</p><h2>கள்ளக்காதல் விவகாரம் </h2><p>இந்தநிலையில் அந்த ஜவுளிக்கடையில் பணியாற்றிய சங்கீதா (வயது 30) என்ற பெண்ணுடன் பழனிமுத்துக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண் ஏற்கனவே திருமணம் ஆனவர். பொள்ளாச்சி ஜமீன் கோட்டாம்பட்டியை சேர்ந்தவர். சங்கீதாவுடன் பழனிமுத்து நெருங்கி பழகினார். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் பழனிமுத்துவின் மனைவிக்கு தெரியவந்தது. இதனால் கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக பழனிமுத்துவும் அவரது மனைவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.</p><p>அதேசமயம் சங்கீதாவுடனான நெருக்கத்தை பழனி முத்து அதிகரித்து கொண்டார்.  கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சங்கீதா அவரது குடும்பத்தை பிரிந்து பழனிமுத்துவுடன் வந்தார். 2 பேரும் கிணத்துகடவு காமராஜர் நகரில்  ஒரு வாடகை வீடு எடுத்து தங்கினர். அங்கு 2 பேரும் உல்லாசமாக இருந்து வந்தனர். </p><h2>ஆசை 60 நாள், மோகம் 30 நாள் </h2><p>ஆசை 60 நாள், மோகம் 30 நாள் என்பதை போல அவர்களது மகிழ்ச்சி வெகுநாட்கள் நீடிக்கவில்லை. 2 பேருக்கும். இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இருவருக்கும் பணப்பிரச்சினையில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவும் பழனிமுத்துவுக்கும், கள்ளக்காதலி சங்கீதாவுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டிருக்கிறது. <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95">உல்லாசமாக இருந்தால் சரி ஆகிவிடும் </a>என்று பழனிமுத்து சங்கீதாவை அழைத்துள்ளார். அதற்கு சங்கீதா மறுத்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த பழனிமுத்து, சுத்தியை எடுத்து சங்கீதாவை குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்துள்ளார்.</p><h2>காட்டுப்பகுதி</h2><p>சங்கீதாவை கொலை செய்ததை மறைக்க பழனி முத்து முயன்றுள்ளார். இதற்காக தனது தந்தையான குருநாதனுக்கு போனில் பேசி ஆலோசனை கேட்டுள்ளார்.அவரும் அதிர்ச்சி அடைந்து பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவுக்கு வந்துள்ளார். 2 பேரும் சேர்ந்து சங்கீதாவின் பிணத்தை சாக்குப்பையில் திணித்து</p><p>கட்டியிருக்கிறார்கள். பின்னா மோட்டார்சைக்கிளில் பிணத்தை ஏற்றிக் கொண்டு வேலை பார்த்த தொழிற்சாலை அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு பழனிமுத்து சென்று இருக்கிறார். கோவில்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்கியிருக்கிறார்கள். பெட்ரோலை சங்கீதா உடலில் ஊற்றி எரித்துள்ளனர். அதன்பின் வின் அங்கிருந்து  தப்பிச் சென்றுள்ளனர்.</p><p>பிறகு பழனிமுத்து வேலைக்கும் செல்லாமல் தலைமறைஆக இருந்துள்ளார். கண்கானிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்து அவர் பணியாற்றிய தொழிற்சாலையில் அவர் வேலைக்கு வரவில்லை என தெரிவித்துள்ளனர். </p><p>உடனே சந்தேகம் கொண்ட போலீசார் அவரை பிடித்து விசாரித்தபோது கொலையாளி அவர் தான் என்பது தெரியவந்தது. இதனையடுத்து பழனிமுத்துவையும், கொலையை மறைக்க உடந்தையாக இருந்த அவரது தந்தை குருநாதனை யும் போலீசார் கைது செய்தனர். இன்று 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>இறந்துவிட்டதாக நினைத்து காட்டு யானையின் அருகில் சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-shock-awaited-those-who-approached-a-wild-elephant-thinking-it-was-dead</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-shock-awaited-those-who-approached-a-wild-elephant-thinking-it-was-dead#comments</comments><guid isPermaLink="false">b42ba7b2-6c57-4d5d-ae23-ca6f64e35141</guid><pubDate>Sun, 02 Aug 2026 13:59:16 +0000</pubDate><atom:updated>2026-08-02T13:59:16.648Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nilgiris,நீலகிரி,elephant,யானை</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/gh2hfm1t/13.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/gh2hfm1t/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காட்டு யானை இறந்துவிட்டதாக நினைத்து அருகில் சென்ற தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நாடுகாணி டான் டீ தேயிலைத் தோட்டத்தில் யானை ஒன்று படுத்துக் கிடந்ததை பார்த்த தொழிலாளர்கள், அது இறந்துவிட்டதாக நினைத்து அருகில் சென்றனர். </p><p>அருகில் சென்று பார்த்தபோது, அந்த யானை அமைதியாக உறங்கிக் கொண்டு இருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள், விழித்துக்கொண்டால் நமக்கு என்ன கதி ஏற்படுமோ என நினைத்தவாறு அங்கிருந்து உடனடியாக விலகிச் சென்றனர். </p><p>கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானைகள் பகல் நேரங்களில் தேயிலைத் தோட்டங்களில் ஓய்வெடுப்பது வழக்கமாக உள்ளது. மனிதர்களைப் போல படுத்து உறங்கிக் கொண்டிருந்த யானையின் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.</p>  ]]></content:encoded></item><item><title>கியாஸ் சிலிண்டர் வெடிப்பு: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/gas-cylinder-explosion-death-toll-rises-to-3</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/gas-cylinder-explosion-death-toll-rises-to-3#comments</comments><guid isPermaLink="false">4b1c05b7-8196-4607-ae2b-c6ca359af0ab</guid><pubDate>Sun, 02 Aug 2026 13:36:25 +0000</pubDate><atom:updated>2026-08-02T13:36:25.224Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பலி,தஞ்சாவூர்,அரசு மருத்துவக் கல்லூரி,சிலிண்டர் வெடிப்பு,cylinder explosion,பலிdies</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/5smrlx03/163.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிலிண்டர் வெடிப்பு பலி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/5smrlx03/163.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர், </p><p>தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே உள்ள அம்மங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகையன் (வயது 66). கூலி தொழிலாளி.</p> <p>இந்த நிலையில், கடந்த மாதம் (ஜூலை 30-ந் தேதி அதிகாலை இவரது வீடு திடீரென தீப்பிடித்து எறிந்தது. இதனால் முருகையன், அவரது குடும்பத்தினர்கள் மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென வீட்டில் இருந்த சமையல் கியாஸ் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">சிலிண்டர் வெடித்து</a> சிதறியது.</p><h2>தீவிர சிகிச்சை</h2><p>இந்த விபத்தில் முருகையனின் மனைவி செல்வி, மகள் அபிநயா, அதே கிராமத்தை சேர்ந்த காசிநாதன் (37), ராஜசேகர், பழனிவேல் (37), வேம்பையன் (47), வேம்பையனின் மனைவி கலையரசி, செல்வராஜ், காளியம்மாள், புவனேஷ் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.</p><h2>உயிரிழப்பு</h2><p>இந்த நிலையில் நேற்று மாலை பழனிவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த வேம்பையன். காசிநாதன் ஆகிய 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், சிலருக்கு தொடர்ந்து, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>சேலம்: வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/4-sovereign-gold-chain-snatched-from-woman-sleeping-at-home</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/4-sovereign-gold-chain-snatched-from-woman-sleeping-at-home#comments</comments><guid isPermaLink="false">85f711d5-2b09-42eb-b8de-9060dd7955d7</guid><pubDate>Sun, 02 Aug 2026 13:34:01 +0000</pubDate><atom:updated>2026-08-02T13:34:01.225Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,நகை பறிப்பு,chain snatching,சேலம்</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/gre017wz/chainsnatching.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/gre017wz/chainsnatching.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே குட்டப்பட்டி 4 ரோடு பகுதியை சேர்ந்தவர் தன்ராஜ். இவரது மனைவி சுபரஞ்சனா (வயது 23). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் வளாகத்தில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர் மநபர் பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்து விட்டு தப்பி சென்றார். </p><p>இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சுபரஞ்சனா, மர்ம நபரை பிடிக்க முற்பட்டார். எனினும், அந்த நபர் நகையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றுவிட்டார். இதுகுறித்து சுபரஞ்சனா போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள சிசிடிவி காட்களை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>ஆந்திராவில் இருந்து ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.1.8 கோடி திருவள்ளூரில் பறிமுதல் - ஹவாலா பணமா? என விசாரணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-18-crore-brought-from-andhra-pradesh-without-documentation-seized-in-thiruvallur-investigation-underway-to-determine-if-it-is-hawala-money</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-18-crore-brought-from-andhra-pradesh-without-documentation-seized-in-thiruvallur-investigation-underway-to-determine-if-it-is-hawala-money#comments</comments><guid isPermaLink="false">33eb0e83-eb18-4d27-9c3f-915a6c1d20c0</guid><pubDate>Sun, 02 Aug 2026 13:21:20 +0000</pubDate><atom:updated>2026-08-02T13:21:20.598Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆந்திரா,Thiruvallur,திருவள்ளூர்,Andhra Pradesh,ஹவாலா பணம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/kqs0lc0l/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/kqs0lc0l/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர்,</p><p>திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில், ஆந்திராவில் இருந்து உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 1 கோடியே 8 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. </p><p>மொண்டியம்மன் நகர் சோதனைச் சாவடி அருகே, பார்சல் லாரியை போலீசார் சோதனையிட்டபோது, மூன்று பைகளில் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஆந்திராவைச் சேர்ந்த இருவர் மற்றும் லாரி ஓட்டுநரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். </p><p>சென்னையில் நகை வாங்குவதற்காக பணத்தை கொண்டு வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ள நிலையில், உரிய ஆவணங்கள் இல்லாததால் ஹவாலா பணமா? என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு, பணம் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விடுமுறையை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த சுற்றுலா பயணிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-flocked-to-the-thanjavur-big-temple-for-the-holidays</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-flocked-to-the-thanjavur-big-temple-for-the-holidays#comments</comments><guid isPermaLink="false">d3e4f8d0-8c3a-4c59-868f-88a9fd116b91</guid><pubDate>Sun, 02 Aug 2026 13:18:38 +0000</pubDate><atom:updated>2026-08-02T13:18:38.768Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தஞ்சை பெரிய கோவில்,Thanjavur,விடுமுறை,Holiday,தஞ்சாவூர்,Tanjore Big Temple</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/o0mw20dx/162.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தஞ்சை பெரிய கோவில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/o0mw20dx/162.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர்,</p><p>தொடர் விடுமுறையை முன்னிட்டு, உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் குவிந்துள்ளனர்.</p><h2>தஞ்சை பெரிய கோவில்</h2><p>ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர் காலத்து கட்டிடக்கலை, நுணுக்கமான சிற்பக்கலை மற்றும் கோவிலின் பிரம்மாண்ட அழகை பொதுமக்கள் வியப்புடன் ரசித்தனர். மேலும், சுவாமி தரிசனம் செய்வதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளி மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகை தந்துள்ளதால் கோவில் வளாகம் முழுவதும் மக்கள் கூட்டத்தால் நிறைந்து காணப்படுகிறது. </p><p>பக்தர்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் கோவில் நிர்வாகமும் காவல்துறையினரும் இணைந்து பலத்த பாதுகாப்பு மற்றும் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தொடர் மழை.. ஒரே நாளில் 25 அடி உயர்ந்த சேர்வலாறு அணை நீர்மட்டம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/continuous-rain-chervalar-dam-water-level-rises-by-25-feet-in-a-single-day</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/continuous-rain-chervalar-dam-water-level-rises-by-25-feet-in-a-single-day#comments</comments><guid isPermaLink="false">bdeb0b74-b854-47a6-bd00-6d4e9361cc10</guid><pubDate>Sun, 02 Aug 2026 13:15:27 +0000</pubDate><atom:updated>2026-08-02T13:15:27.404Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,பாபநாசம் அணை,Papanasam dam,சேர்வலாறு அணை,Servalar Dam</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/axk99wyv/11.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/axk99wyv/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை, </p><p>மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 25 அடி உயர்ந்தது.  </p><h2>5 அடி உயர்ந்த பாபநாசம்</h2><p>நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று முன்தினம் மாலையில் பரவ லாக மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் கொட்டித்தீர்த்த கன மழையால் அணைகளுக்கு நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்தது. தென் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய நீராதாரமாக திகழும் பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.</p><p>143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு நேற்று முன்தினம் காலையில் வினாடிக்கு 898 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் அணையின் நீர்மட்டம் 63.40 அடியாக இருந்தது. நேற்று காலையில் அணைக்கு வினாடிக்கு 5,083 கன அடியாக அதிகரித்ததால் ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் சுமார் 5 அடி உயர்ந்து 68.35 அடியை எட்டியது.</p><h2>100 அடியை தாண்டிய சேர்வலாறு</h2><p>மேலும் அதன் அருகே உள்ள உச்ச நீர்மட்டம் 156 அடி கொண்ட சேர்வ லாறு அணை நீர்மட்டம் 76.77 அடியில் இருந்து ஒரே நாளில் சுமார் 25 அடி உயர்ந்து 102 அடியை தாண்டியது. தொடர்ந்து அணை நீர் பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.</p><p>இதேபோன்று மற்ற அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தாம்பரம் அருகே இரவு நேரங்களில் ஹெல்மெட் அணிந்து பைக் திருட்டில் ஈடுபடும் மர்ம நபர்கள் - பொதுமக்கள் அச்சம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mystery-individuals-wearing-helmets-stealing-bikes-at-night-near-tambaram-public-alarmed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mystery-individuals-wearing-helmets-stealing-bikes-at-night-near-tambaram-public-alarmed#comments</comments><guid isPermaLink="false">a4383a2f-b066-4e52-b369-64036d3ee94d</guid><pubDate>Sun, 02 Aug 2026 12:42:59 +0000</pubDate><atom:updated>2026-08-02T12:42:59.334Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tambaram,தாம்பரம்,bike theft,பைக் திருட்டு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/xuqye1a4/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/xuqye1a4/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>செங்கல்பட்டு,</p><p>தாம்பரம் அருகே இரவு நேரங்களில் ஹெல்மெட் அணிந்தபடி இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் மர்மநபர்களின் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. </p><p>செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இரவு நேரங்களில் ஹெல்மெட் அணிந்தபடி வீடுகளுக்குள் நுழைந்து, இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் மர்மநபர்களின் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. </p><p>குறிப்பாக சி.டி.ஓ. காலனி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள், மருத்துவமனைகள் மற்றும் வணிக வளாகங்களில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் குறிவைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்களை சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் விரைந்து கைது செய்து, தொடர் திருட்டுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை மேலும் 30 காசுகள் சரிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/egg-procurement-price-in-namakkal-drops-by-another-30-paise</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/egg-procurement-price-in-namakkal-drops-by-another-30-paise#comments</comments><guid isPermaLink="false">3f7a5385-9db3-4776-a49a-aaebe1af1015</guid><pubDate>Sun, 02 Aug 2026 12:25:09 +0000</pubDate><atom:updated>2026-08-02T12:25:09.427Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Namakkal,நாமக்கல்,முட்டை விலை,egg price</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/wlog11n8/10.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/wlog11n8/10.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல், </p><p>நாமக்கல் மாவட்டத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. </p><h2>30 காசுகள் சரிவு </h2><p>நாமக்கல் மாவட்டத்தில் கோழி முட்டை கொள்முதல் விலை 570 காசுகளாக (ரூ.5.70) இருந்து வந்தது. இதற்கிடையே இன்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 30 காசுகள் குறைக்க நிர்வாகிகள் முடிவு செய்தனர். எனவே இன்று முட்டை கொள்முதல் விலை 540 காசுகளாக (ரூ.5.40) குறைந்துள்ளது. </p><p>ஆடி மாதம் காரணமாக முட்டையின் நுகர்வு குறைந்துள்ளதாக விலை குறைந்து வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர். நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை கடந்த ஒரு வாரத்தில் ரூ.1.10 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தலுக்காக நான் வெறியோடு காத்து இருக்கிறேன் - சீமான் ஆவேசம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-am-eagerly-waiting-for-the-by-election-seeman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-am-eagerly-waiting-for-the-by-election-seeman#comments</comments><guid isPermaLink="false">2affd351-644c-4981-a1ed-e00000e0a9d1</guid><pubDate>Sun, 02 Aug 2026 12:21:14 +0000</pubDate><atom:updated>2026-08-02T12:21:14.980Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,சீமான்,NTK,இடைத்தேர்தல்,Seeman Speech</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/ds8qu49y/seeman33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சீமான் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/ds8qu49y/seeman33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இடைத்தேர்தலுக்காக நான் வெறியோடு காத்து இருக்கிறேன் என சீமான் கூறியுள்ளார்.</p><p>நாம் தமிழர் கட்சியில் புதிதாக 1,000 பேர் இணையும் நிகழ்ச்சி, பல்லாவரத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாதகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில்  சீமான் பேசியதாவது:-</p><h2>திரள் நிதி கூட்டம்</h2><p>நடிகருக்கும் தலைவருக்கும் வித்தியாசம் தெரியாத தறுதலை கூட்டம், நடிகனிடம் ஆட்சியை கொடுத்துவிட்டார்கள். பிளாக்கில் டிக்கெட் விற்ற கூட்டம் எங்களை திரள்நிதி கூட்டம் என்கிறார்கள்.  திரள்நிதி திருடர்கள் என்கிறார்கள், இது மக்கள் இயக்கம்; மக்களிடம் இருந்துதானே பெறமுடியும், நீங்கள் வாக்குகளை மக்களிடம்தானே கேட்கிறீர்கள்; நாங்கள் வாக்குகளையும் கேட்கிறோம், வலிமையையும் கேட்கிறோம் திரள்நிதியில் ஒரு தேநீர்கூட அருந்தமாட்டோம். </p><h2>பென்ஸ் கார்</h2><p>சீமான் பென்ஸ் கார் வாங்கிட்டார்னு சொல்றாங்க, என்னுடைய மாமா ஒருத்தர் கார் வாங்கி கொண்டு வந்து வீட்டு வாசலில் நிறுத்தி விட்டு சென்றார்.</p><p>தமிழகத்தில் இத்தனை தொகுதி இருக்கும்போது பெரம்பூரில் மதம், திருச்சி கிழக்கில் சாதி மதம் காரணங்களுக்காக போட்டியிட்டுவிட்ட ஜோசப் விஜயால், எப்படி சாதி மதத்தை ஒழிக்க முடியும்?</p><p>திமுக செய்த வெறும் விளம்பர அரசைத்தான், இவர்களும் செய்கிறார்கள். மக்கள் பணத்தை வீணடிக்க மாட்டோம் என்றவர்கள் பஸ் நிலையங்களில் விளம்பர பதாகை வைத்துள்ளார்கள். இவ்வளவு கோடிகளை செலவழித்து எதுக்கு தெருத்தெருவாய் விளம்பரம். விளம்பர அரசுதான்.. ஒன்லி ரீஸ்தான் தினமும் நடந்து கொண்டிருக்கிறது. </p><h2>மின்சார வெட்டு </h2><p>6 மணி நேரம் தான் தமிழ்நாட்டில் மின்சாரம் இருக்கிறது. ஆனால் அதற்கு இவ்வளவு மின் கட்டணம் வந்துள்ளது. இன்னும் 6 மாதம் கழித்து யாரும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">தமிழக வெற்றி கழகத்திற்கு ஓட்டு போடுவோம் </a>என்று சொல்ல மாட்டார்கள். மீன்பிடிக்கு சென்று 850 பேர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். அவர்களது குடும்பத்துக்கு ஏதாவது நிதியோ, அரசு பணியோ கொடுக்கப்பட்டதா? ஆகவே கரூர் அசம்பாவிதத்திற்கு அரசு வேலை கொடுத்ததை நான் எதிர்ப்பேன்.</p><p>லஞ்சம் கேட்டா கொடுக்காதீர்கள் என்று சொல்லக்கூடியவர், லஞ்சம் வாங்கினால் அவரை டிஸ்மிஸ் செய்வேன் என்று சொல்ல முடியவில்லை. ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீரை தருவதற்கு முன் வரும் மத்திய அரசு, நதிநீரை பெற்று தர ஏன் முன்வரவில்லை? இடைத்தேர்தல் எப்போது வைப்பார்கள் என்று  காத்து இருக்கிறேன் வெறியோடு இருக்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மகளை கொலை செய்து சிறை சென்றவர்... ஜாமீனில் வெளியே வந்து மனைவியை வெட்டிக் கொல்ல முயற்சி - சென்னையில் பயங்கரம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/man-jailed-for-murdering-daughter-released-on-bail-attempts-to-hack-wife-to-death-horrifying-incident-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/man-jailed-for-murdering-daughter-released-on-bail-attempts-to-hack-wife-to-death-horrifying-incident-in-chennai#comments</comments><guid isPermaLink="false">483e0967-0786-42e2-ad94-1aed3046103f</guid><pubDate>Sun, 02 Aug 2026 12:09:25 +0000</pubDate><atom:updated>2026-08-02T12:09:25.690Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/a0fycz00/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/a0fycz00/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் பெற்ற மகளை கொலை செய்த வழக்கில் கைதாகி சிறைக்கு சென்ற நபர், ஜாமீனில் வெளியே வந்து தனது மனைவியை வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>சென்னை அடுத்த பெரம்பூரை சேர்ந்த ரெபேக்கா என்ற பெண், கீழ்பாக்கம் ஈ.வி.ஆர். சாலையில் உள்ள தனியார் வங்கியில் கேஷியராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் சதீஷ். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில், கணவரின் நடத்தை சரியில்லாததால், விவாகரத்து கோரி கோர்ட்டில் ரெபேக்கா வழக்கு தாக்கல் செய்திருந்தார். </p> <p>மேலும், தனது மகளை தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்றும் ரெபேக்கா கோரிக்கை விடுத்திருந்தார். இதனிடையே, குழந்தையை பிரித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் சதீஷ் கடந்த ஆண்டு தனது மகளை கொலை செய்து, தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அவர் மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சைப் பின் சிறையில் அடைக்கப்பட்டார். </p><p>இந்நிலையில், சதீஷ் கடந்த வாரம் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார். சம்பவத்தன்று ரெபேக்கா வேலை செய்யும் வங்கிக்கு சென்ற அவர், மறைத்து வைத்திருந்த கத்தியால் ரெபேக்காவின் தலை மற்றும் கையில் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த ரெபேக்கா கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மறுபுறம் சதீஷை கைது செய்த போலீசார், அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர். </p> ]]></content:encoded></item><item><title>நாளை காஞ்சிபுரம் செல்கிறார் முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-to-visit-kanchipuram-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-to-visit-kanchipuram-tomorrow#comments</comments><guid isPermaLink="false">fb9426a4-9602-47a3-a9c1-821e7ebf3209</guid><pubDate>Sun, 02 Aug 2026 12:01:06 +0000</pubDate><atom:updated>2026-08-02T12:01:06.389Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,விஜய்,Kanchipuram,காஞ்சிபுரம்,CMVijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/pizt011m/vijaycm33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  முதல்-அமைச்சர் விஜய்|]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/pizt011m/vijaycm33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><p>இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்பதூர், ஒரகடம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளை விஜய் நாளை பார்வையிடுகிறார். </p><p>முதல்-அமைச்சர் விஜய் அவ்வப்போது ஆய்வு பணிகளை மேற்கொள்வதினை வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் சென்னை மெட்ரோ ரெயில் நிலைய தலைமை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய விஜய், 2 ஆம் கட்ட மெட்ரோ ரெயில் நிலைய பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.</p><p>அந்த வகையில் நாளை முதல்-அமைச்சர் விஜய் காஞ்சிபுரம் மாவட்டம் செல்கிறார். கோவில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல தொழிற்சாலைகளும் உள்ளன. சுங்குவார்சத்திரம், இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்பதூர் என பல தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகள் இங்கு உள்ளன. முதல்வர் விஜய் நாளை இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்பதூர், ஒரகடம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளை விஜய் பார்வையிடுகிறார்.</p><p>தமிழக அரசுடன் டைம்லர் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு வணிக வாகன உற்பத்தி செய்து வரும் நிலையில், காஞ்சிபுரம் ஒரகடத்தில் உள்ள  டைம்லர் வணிக வாகன உற்பத்தி தொழிற்சாலையை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a> பார்வையிடுகிறார். இதே போன்று தமிழக அரசுடன் புர்ந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள செயிண்ட் கோபைன் நிறுவனம் கண்ணாடி உற்பத்தி செய்து வருகிறது. ஸ்ரீபெரும்பத்தூர் சிப்காட்டில் இயங்கி வரும் இந்த ஆலையிலும் முதல்-அமைச்சர் விஜய் நாளை ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. </p><p>இதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.</p>]]></content:encoded></item></channel></rss>