<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 02 Aug 2026 09:35:15 +0000</lastBuildDate><item><title>கோவை: லாரி மீது கார் மோதி கோர விபத்து  - 5 பேர் பலி

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-car-crash-into-lorry-5-killed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-car-crash-into-lorry-5-killed#comments</comments><guid isPermaLink="false">3edfae3e-b007-4097-8c55-befa9dd1a4a2</guid><pubDate>Sun, 02 Aug 2026 09:18:53 +0000</pubDate><atom:updated>2026-08-02T09:18:53.345Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,Coimbatore,கோவை,Car,கார்,lorry,லாரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/j95sql4v/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/j95sql4v/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,       </p><p>கோவையில் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.</p><p><a href="https://www.dailythanthi.com/">கோவை </a>மாவட்டம் பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் நல்லாம்பள்ளி பகுதியில் உள்ள செடிகளுக்கு இன்று மதியம் லாரி மூலம் தண்ணீர் ஊற்றப்பட்டது. </p><p>அப்போது, உடுமலையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வேகமாக வந்த கார் நெடுஞ்சாலையில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த லாரி மீது பின்புறத்தில் இருந்து வேகமாக மோதியது.</p><h2>விபத்து - 5 பேர் பலி</h2><p>இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 3 பெண்கள், 2 ஆண்கள் என மொத்தம் 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். </p> ]]></content:encoded></item><item><title>திருச்சி விமான நிலையத்தில் ரூ.3.5 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-grade-cannabis-worth-rs-35-crore-seized-at-trichy-airport</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-grade-cannabis-worth-rs-35-crore-seized-at-trichy-airport#comments</comments><guid isPermaLink="false">7bc4d547-7745-4c55-b01d-1f8b2e94b861</guid><pubDate>Sun, 02 Aug 2026 09:10:24 +0000</pubDate><atom:updated>2026-08-02T09:10:24.843Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விமான நிலையம்,passenger,Cannabis,சோதனை,பறிமுதல்seized,திருச்சிTrichy,உயர்ரக கஞ்சா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/7vohf31q/157.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருச்சி விமான நிலையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/7vohf31q/157.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் வெளிநாடுகளில் இருந்தும் திருச்சிக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.</p><p>இதில் துபாய், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் தங்கம், போதைப்பொருள் உள்ளிட்டவை கடத்தப்பட்டு வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இதற்காக தொடர்ந்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.</p><h2>சோதனை</h2><p>இந்த நிலையில் நேற்று இரவு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிண்டோ விமானம் திருச்சி வந்தது இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த பயணி ஒருவரை தனியாக அழைத்துச் சென்று, அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.</p><h2>பறிமுதல்</h2><p>அப்போது அவரது உடைமையில் ரூ.3.5 கோடி மதிப்பிலான 3.5 கிலோ ஹைட்ரோபோனிக் வகை கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். </p><p>இதனை தொடர்ந்து அந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">திருச்சி விமான நிலைய</a> பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>விளையாட்டு விழாவில் விபரீதம்.. நிலைத்தடுமாறி விழுந்த அமைச்சர்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tug-of-war-rope-snaps-minister-falls-at-school-event</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tug-of-war-rope-snaps-minister-falls-at-school-event#comments</comments><guid isPermaLink="false">271d32f2-1fb5-4e55-893d-c82a9466f15e</guid><pubDate>Sun, 02 Aug 2026 09:08:39 +0000</pubDate><atom:updated>2026-08-02T09:08:39.388Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Parents,பெற்றோர்கள்,முன்னாள் மாணவர்கள்,விளையாட்டு விழா,போட்டிcompetition,Sports festival,அமைச்சர்Minister,கயிறு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/4xh4noun/rope.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கயிறு அறுந்ததால் கீழே விழுந்த அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/4xh4noun/rope.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கான கயிறு இழுத்தல் போட்டி நடத்தப்பட்டது. அந்த போட்டியில் கயிறு அறுந்ததால் கீழே விழுந்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D">அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்</a></p><h2>பள்ளி விழா</h2><p>சேலம் மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள ஹோலி கிராஸ் தனியார் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவரும், தமிழக பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சருமான லோகேஷ் தமிழ்ச்செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.</p><h2>விறுவிறுப்பான போட்டி</h2><p> விழாவின் ஒரு பகுதியாக, முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கான கயிறு இழுத்தல் போட்டி நடத்தப்பட்டது. இதில் முன்னாள் மாணவர்கள் அணியின் சார்பில் அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வனும் ஆர்வமுடன் களம் இறங்கினார். </p><h2>திடீரென அறுந்த கயிறு</h2><p> இரு அணிகளும் தங்களது முழு பலத்தையும் திரட்டி, வெற்றிக்காக விறுவிறுப்பாக கயிறை இழுத்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பலத்த சத்தத்துடன் கயிறு நடுவே சட்டென்று அறுந்தது.</p> <h2>பதறிய அதிகாரிகள்</h2><p> கயிறு அறுந்த வேகத்தில் நிலைதடுமாறிய அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடன் கயிறு பிடித்து இழுத்த 15-க்கும் மேற்பட்டோர் மைதானத்தில் கீழே விழுந்தனர். அமைச்சர் திடீரென கீழே விழுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த காவலர்களும், அதிகாரிகளும் பதறியடித்து கொண்டு ஓடிவந்து அமைச்சரை உடனடியாக பத்திரமாகத் தூக்கி விட்டனர். </p>]]></content:encoded></item><item><title>சிவகங்கை அருகே 16 -ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுப்பு!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/16th-century-inscription-discovered-near-sivaganga</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/16th-century-inscription-discovered-near-sivaganga#comments</comments><guid isPermaLink="false">d210093e-911f-4656-938f-4cea53971895</guid><pubDate>Sun, 02 Aug 2026 08:51:11 +0000</pubDate><atom:updated>2026-08-02T08:51:11.735Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிவகங்கை,Sivaganga,Inscription,discovered,கல்வெட்டு கண்டெடுப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/8q95rlt6/156.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கல்வெட்டு கண்டெடுப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/8q95rlt6/156.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை,</p><p>சிவகங்கை அருகே உள்ள கண்மாய் பகுதியில், கி.பி. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய வரலாற்று ஆதாரமான 'வாணாதிராயர் கல்வெட்டு' கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த வரலாற்று சான்று சுமார் 4 அடி நீளமுள்ள கல்வெட்டாகும். இதில் 'தெய்வ மாவலி வாணாதிராயர்’ என்பவர் வழங்கிய நிலத் தர்மம் (தானம்) குறித்த முக்கிய தகவல்கள் செதுக்கப்பட்டுள்ளன. <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">கல்வெட்டில்</a> உள்ள தமிழ் எழுத்துக்களின் வடிவமைப்பு மற்றும் வரிவடிவங்களின் அடிப்படையில் ஆய்வாளர்கள் இதன் காலத்தைக் கணித்துள்ளனர். </p><h2>ஆட்சிக் காலம்</h2><p>அதன்படி, இக்கல்வெட்டு கி.பி. 1515 முதல் 1533 வரை இப்பகுதியை ஆட்சி செய்த 'சுந்தரத் தோளுடையான் மாவலி வாணாதிராயன்' காலத்தைச் சேர்ந்தது எனத் தொல்லியல் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: நாட்டுப்படகு கடலில் மூழ்கி விபத்து; 6 மீனவர்கள் மீட்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-boat-sinks-in-sea-6-fishermen-rescued</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-boat-sinks-in-sea-6-fishermen-rescued#comments</comments><guid isPermaLink="false">baf3e7bf-b53b-4bfb-85ba-0638bff16445</guid><pubDate>Sun, 02 Aug 2026 08:31:28 +0000</pubDate><atom:updated>2026-08-02T08:31:28.441Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,fishermen,Thoothukudi,தூத்துக்குடி,மீனவர்கள் மீட்பு,boat accident,rescued,6,கடலில் மூழ்கி,நாட்டுப்படகு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/mnhxxxxe/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ படகு கடலில் மூழ்கியது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/mnhxxxxe/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், திருச்செந்தூர் - மணப்பாடு அருகே <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81">நாட்டுப்படகு</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81">கடலில் மூழ்கி</a>ய விபத்தில், படகில் இருந்த 6 மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.</p><h2>நாட்டுப்படகில் கடலுக்கு சென்ற 6 மீனவர்கள்</h2><p>தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் நவமணி தெருவைச் சேர்ந்த சுகிர்தன் (வயது 36) என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகில், நேற்று காலையில் 6 மீனவர்கள் தருவைகுளத்திலிருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நேற்று மாலை தருவைகுளத்தில் இருந்து 29 நாட்டிக்கல் மைல் தொலைவில், திருச்செந்தூர் - மணப்பாடு கடல் பகுதியில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.</p><h2>படகு கடலில் மூழ்கியது</h2><p>அப்போது பலத்த காற்று மற்றும் கடலில் திடீரென எழுந்த கடும் அலைச் சீற்றம் காரணமாக படகின் அடிப்பகுதியில் பிளவு ஏற்பட்டுத் தண்ணீர் புகுந்ததால், படகு கடலில் மூழ்கத் தொடங்கியது. படகு மூழ்குவதைக் கண்ட மீனவர்கள், உடனடியாக அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்றொரு படகிற்கு தகவல் அளித்து உதவி கோரினர்.</p><h2>6 மீனவர்கள் மீட்பு</h2><p>விரைந்து வந்த அந்தப் படகின் மீனவர்கள், உயிருக்குப் போராடிய 6 மீனவர்களையும் எவ்வித காயமுமின்றி பத்திரமாக மீட்டுத் தங்கள் படகிற்கு மாற்றினர். தற்போது கடலில் மூழ்கிய நாட்டுப்படகை கடலிலிருந்து மீட்டு கரைக்கு கொண்டு வருவதற்கான தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நெல்லையில் தங்க மோதிரம் பறிப்பு: 12 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த போலீசார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/gold-ring-snatched-in-nellai-police-arrest-culprit-within-12-hours</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/gold-ring-snatched-in-nellai-police-arrest-culprit-within-12-hours#comments</comments><guid isPermaLink="false">d8349a23-32f5-4532-9bb3-42b8957d71cf</guid><pubDate>Sun, 02 Aug 2026 08:23:27 +0000</pubDate><atom:updated>2026-08-02T08:23:27.930Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,கைது,Tirunelveli,திருநெல்வேலி,arrested,குற்றவாளி,Robbery,போலீசார்,பறிப்பு,தங்க மோதிரம்,gold ring,culprit</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/t70af568/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/t70af568/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> தாலுகா காவல் நிலைய சரக போலீசாரின் துரித நடவடிக்கையால் குற்றம் நடந்த 12 மணி நேரத்திற்குள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF">வழிப்பறி</a>யில் ஈடுபட்ட குற்றவாளியை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்து பறிக்கப்பட்ட தங்க மோதிரம் மீட்கப்பட்டது. </p><h2>தங்க மோதிரம் பறிப்பு</h2><p>திருநெல்வேலி மாவட்டம், தாலுகா காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 31.7.2026 அன்று மாலை, மதுபோதையில் இருந்த ஒருவரிடம் மர்ம நபர் ஒருவர், தனது பைக் கே.டி.சி. நகர் அருகே இருப்பதாகக் கூறி அழைத்துச் சென்றார். பின்னர் ஒரு தனியார் கல்லூரி அருகே சந்தோஷ்நகர்-2 பின்புறமுள்ள காட்டுப்பகுதியில் வைத்து அந்த நபரை தாக்கி, அவர் அணிந்திருந்த 3½ கிராம் எடையுள்ள தங்க மோதிரத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். இதில் காயமடைந்த புகார்தாரர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.</p><h2>12 மணி நேரத்திற்குள் குற்றவாளி கைது, மோதிரம் மீட்பு</h2><p>இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் தங்கப்பராஜா மற்றும் போலீசார் மேற்கொண்ட கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு மற்றும் தீவிர விசாரணையின் மூலம், தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு காவல் நிலையத்தைச் சேர்ந்த வரலாற்றுப் பதிவேடு குற்றவாளி சின்னதுரை (வயது 34) என்பவரை, திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே வைத்து, குற்றம் நடைபெற்ற 12 மணி நேரத்திற்குள் கைது செய்து, அவரிடமிருந்து பறிக்கப்பட்ட தங்க மோதிரத்தையும் மீட்டனர். மேலும் அந்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.</p><h2>எஸ்.பி. பாராட்டு</h2><p>இந்த சம்பவத்தில் குற்றம் நடைபெற்ற 12 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்து, பறிக்கப்பட்ட நகையை மீட்டதுடன், வழக்கில் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்ட தாலுகா காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி பாராட்டினார்.</p>]]></content:encoded></item><item><title>கோவை ரெயில் நிலையத்தில் இந்தி பெயர்பலகை சேதம் - வானதி சீனிவாசன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vanathi-srinivasan-condemns-damage-to-hindi-nameplate-at-coimbatore-railway-station</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vanathi-srinivasan-condemns-damage-to-hindi-nameplate-at-coimbatore-railway-station#comments</comments><guid isPermaLink="false">db14bb0e-2c68-41ae-8219-91e3ef725874</guid><pubDate>Sun, 02 Aug 2026 08:21:57 +0000</pubDate><atom:updated>2026-08-02T08:21:57.587Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,ரெயில் நிலையம்,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,Railway Stations,சேதம்,பெயர் பலகை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/qv5rmhi5/vanathi-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/qv5rmhi5/vanathi-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>தேசிய பாஜக மகளிரணி தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/vanathi-srinivasan">வானதி சீனிவாசன்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>பெயர் பலகை சேதம்</h2><p>கோவை, வடகோவை ரெயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பல ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்டு வரும் ரெயில் நிலைய  பணிகளின் போது, பெயர் பலகையில் இடம்பெற்றிருந்த இந்தி எழுத்துக்களை அழிக்கும் நோக்கில் பெயிண்ட் ஊற்றி சேதப்படுத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.</p><p>பிரதமர் நரேந்திர மோடி  அவர்களின் தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்தில் 77 ரெயில் நிலையங்களை அம்ரித் பாரத் திட்டத்தில் தேர்வு செய்து, அதில் 17 ரெயில் நிலையங்களை நவீன வசதிகளுடன் மேம்படுத்தி வருகிறது. ஆனால் இத்தகைய வளர்ச்சித் திட்டங்களை சில பிரிவினைவாத சக்திகள் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சீர்குலைக்க முயல்வது தமிழக மக்களின் நலனுக்கே எதிரானது.</p><h2>சட்டவிரோத வன்முறை</h2><p>பொதுவாகவே மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் ரெயில்வே நிலையங்களில் இந்தி, உள்ளூர் மொழி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பெயர்கள் இடம்பெறுவது நீண்டகால நடைமுறையாகும். ஆனால் இதனை "இந்தி திணிப்பு" என தவறாக சித்தரித்து பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவது  சட்டவிரோத வன்முறையாகும்.</p><p>இது போன்ற செய்கைகளில் ஈடுபட்ட நபர்கள் மீதும், பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவோர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க காவல்துறையை வலியுறுத்துகிறேன். தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுக்க முயலும் பிரிவினைவாத அரசியலுக்கு மக்கள் உரிய பதிலளிப்பார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>&quot;ஒகேனக்கல் கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெறச் செய்த அனைவருக்கும் நன்றி&quot; - பிரேமலதா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmdk-thanks-everyone-who-made-the-hogenakkal-protest-demonstration-a-success-premalatha</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmdk-thanks-everyone-who-made-the-hogenakkal-protest-demonstration-a-success-premalatha#comments</comments><guid isPermaLink="false">fbf971e4-e0e3-4fa9-9749-c40d0d5cf21b</guid><pubDate>Sun, 02 Aug 2026 08:18:24 +0000</pubDate><atom:updated>2026-08-02T08:18:24.044Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>DMDK,தேமுதிக,ஒகேனக்கல்,Hogenakkal Cauvery,பிரேமலதா விஜயகாந்த்,பிரேமலதா,Premalatha Vijayakand,Premalatha</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/beitdgeh/Untitled-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/beitdgeh/Untitled-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மேகதாது அணை கட்ட எதிர்ப்புத் தெரிவித்தும், காவேரி நதியில் தண்ணீர் திறந்துவிடாததைக் கண்டித்தும், ஒகேனக்கலில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றியடையச் செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>போராட்டம் வெற்றி</h2><p>தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கலில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும், மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியைக் கண்டித்தும், காவிரி நதியிலிருந்து தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிடாத கர்நாடக அரசுகளின் செயல்பாட்டை எதிர்த்தும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற்றது. </p><p>இந்த ஆர்ப்பாட்டத்தை மாபெரும் வெற்றி ஆர்ப்பாட்டமாக மாற்றியமைக்க முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்ட கழக அவைத்தலைவர் இளங்கோவனுக்கும், தர்மபுரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் குமாருக்கும், தர்மபுரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் விஜயசங்கருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், திமுக முன்னாள் அமைச்சர் மற்றும் தர்மபுரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் அண்ணன் பழனியப்பனுக்கும், திமுக கூட்டணிக் கட்சி  நிர்வாகிகளுக்கும், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவர் காவேரி தனபாலனுக்கும், தாராபுரம் காளிமுத்துக்கும் தேமுதிக சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். </p><h2>மனமார்ந்த நன்றி</h2><p>அதேபோல், கழக அணி நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், பகுதி மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், அர்ப்பணிப்புடன் செயல்பட்ட கழகத் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தொண்டர்கள் </a>மற்றும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திட உறுதுணையாக இருந்த பொதுமக்கள் மற்றும் விவசாய பெருமக்கள் அனைவருக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் எங்களது மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்தது தமிழக அரசு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-has-dropped-the-cases-against-students-who-protested-against-the-neet-exam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-has-dropped-the-cases-against-students-who-protested-against-the-neet-exam#comments</comments><guid isPermaLink="false">80f91723-7d50-4264-9662-8d89610d30b9</guid><pubDate>Sun, 02 Aug 2026 08:15:07 +0000</pubDate><atom:updated>2026-08-02T08:15:07.185Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,protest,போராட்டம்,மாணவர்கள்,NEET,நீட்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/fo8vj9du/Vijay-CM.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/fo8vj9du/Vijay-CM.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் இதற்கு தொடர்புடைய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி  விலக வேண்டும் என வலியுறுத்தி  டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான்பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள் உள்படபலரும் பங்கேற்றனர்.  நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். தமிழ்நாட்டிலும் ஆதரவு வலுத்த நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.  </p><p>போராட்டம் தொடங்கி 36 நாள்களுக்குப் பிறகு, ஜூலை 25 ஆம் தேதியில் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். இதையடுத்து,  போராட்டம் கைவிடப்பட்ட நிலையில், மாணவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு  சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.   இந்த நிலையில், தமிழகத்திலும்  நீட் தேர்வுக்கு எதிராக போராடிய போது மாணவர்கள்  மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.</p><p>அமைச்சர் ராஜ்மோகன்  இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:   தமிழ்நாடு முதலமைச்சர்   உத்தரவின்படி, நீட் தேர்வை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது பதிவுசெய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுகின்றன. இதர விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நான் ஏற்கனவே சிறையை பார்த்தவன்... செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-have-already-seen-prison-senthil-balaji-sensational-interview</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-have-already-seen-prison-senthil-balaji-sensational-interview#comments</comments><guid isPermaLink="false">251a6c80-30dd-4e73-b369-10c9f5dd2867</guid><pubDate>Sun, 02 Aug 2026 07:58:54 +0000</pubDate><atom:updated>2026-08-02T07:58:54.328Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Senthil Balaji,செந்தில் பாலாஜி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/53zf5lrz/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/53zf5lrz/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) சட்டமன்ற உறுப்பினரிடம் குதிரைப் பேரம் பேச முயன்றதாகப் பதியப்பட்ட வழக்கில், சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி நிபந்தனை கையெழுத்திட்ட பின்னர் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><p>திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திட 5 நாள் விலக்கு கேட்டு கடிதம் எழுதியிருந்தேன். வழக்கு குறித்து மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசிக்க இருந்ததால் அவகாசம் கேட்டிருந்தேன். அமைச்சர் சொன்னது போல் நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. நான் ஏற்கனவே சிறையை பார்த்தவன்.. எதற்கும் பயந்து ஓட வேண்டிய அவசியம் இல்லை. </p><p>தவெக அரசு எத்தனை வழக்குகள் போட்டாலும் அதனை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்; எத்தனை வழக்குகள் போட்டாலும் அனைத்தும் பொய்யானவை என்பதை நிரூபிப்பேன். தவெக அரசு அமைந்ததிலிருந்தே தமிழ்நாட்டு மக்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>இதையெல்லாம் கண்டுகொள்ளாமல், வழக்கு போடுவது, கைது செய்வது, வழக்கில் தொடர்பில்லாதவர்களை வழக்கில் சேர்ப்பது போன்ற செயல்களில் தவெக அரசு ஈடுபட்டு வருகிறது. காவிரி, பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பிரச்சினைகளில் தவெக அரசு கவனம் செலுத்தவில்லை. மின் கட்டணம் உயர்ந்தது தொடர்பாக பதில் ஏதும் சொல்லாமல் அமைச்சர் நிர்மல்குமார் திசை திருப்புகிறார். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-the-day-after-tomorrow-19</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-the-day-after-tomorrow-19#comments</comments><guid isPermaLink="false">9ac984ad-363c-49be-8985-aab6ef9a7f28</guid><pubDate>Sun, 02 Aug 2026 07:30:32 +0000</pubDate><atom:updated>2026-08-02T07:30:32.425Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,monthly maintenance work,power outage,மாதாந்திர பராமரிப்பு பணி,மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/snydhkbo/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/snydhkbo/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மின்பகிர்மான வட்டம், திருநெல்வேலி மாவட்டத்தில் வள்ளியூர், திருநெல்வேலி கிராமப்புறம், கல்லிடைக்குறிச்சி கோட்டங்களுக்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் உள்ள பகுதிகளில் நாளை மறுநாள் (4.8.2026, செவ்வாய்க்கிழமை) <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் காரணமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>வள்ளியூர் கோட்டம்</h2><p>வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>கூடன்குளம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (4.8.2026, செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணை மின் நிலையத்தில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது. </p><h2>காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை</h2><p>கூடங்குளம், இடிந்தகரை, இருக்கன்துறை, பொன்னார்குளம், விஜயாபதி, ஆவுடையாள்புரம், தோமையார்புரம், சங்கனேரி, வைராவிகிணறு, தாமஸ்மண்டபம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p><h2>திருநெல்வேலி கிராமப்புற கோட்டம்</h2><p>திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>சீதபற்பநல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (4.8.2026, செவ்வாய்க்கிழமை)  மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன் துணை மின் நிலையத்தில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம் பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும். </p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>அதன்படி புதூர், சீதபற்பநல்லூர், உகந்தான்பட்டி, சுப்பிரமணியபுரம், சமத்துவபுரம், சிறுக்கன்குறிச்சி, காங்கேயன்குளம், வல்லவன்கோட்டை, வெள்ளாளங்குளம், முத்தன்குளம், மாறாந்தை, கல்லத்திகுளம், நாலான்குறிச்சி, கீழகரும்புளியூத்து ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>கல்லிடைக்குறிச்சி கோட்டம்</h2><p>கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும்பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>கல்லிடைக்குறிச்சி கோட்டம் விக்கிரமசிங்கபுரம் மற்றும் ஆழ்வார்குறிச்சி துணை மின் நாளை மறுநாள் (4.8.2026, செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணை மின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம் பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும். </p><p>அதன்படி காரையார், சேர்வலார், பாபநாசம், டாணா, விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம், அடையகருங்குளம், ஆறுமுகபட்டி, கோட்டைவிளைபட்டி, முதலியார்பட்டி, தாட்டான்பட்டி, கொண்டபையன்பட்டி, வடமலைசமுத்திரம், பசுக்கிடைவிளை, சங்கரபாண்டியபுரம், கருத்தையாபுரம், அய்யனார்குளம். </p><p>ஆழ்வார்குறிச்சி, கருத்தபிள்ளையூர், A.P. நாடானூர், துப்பாகுடி, கலிதீர்த்தான்பட்டி, பொட்டல்புதூர், ஆம்பூர், பாப்பான்குளம், சம்பன்குளம், செல்லப்பிள்ளையார்குளம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நெல்லையில் இந்த ஆண்டு இதுவரை 81 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/81-people-have-been-arrested-under-the-detention-act-in-nellai-so-far-this-year</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/81-people-have-been-arrested-under-the-detention-act-in-nellai-so-far-this-year#comments</comments><guid isPermaLink="false">81546926-aed3-4920-8ef3-34698534500b</guid><pubDate>Sun, 02 Aug 2026 07:19:56 +0000</pubDate><atom:updated>2026-08-02T07:19:56.995Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தாக்குதல்,கைது,Tirunelveli,திருநெல்வேலி,arrest,attempt to murder,attack,கொலை முயற்சி,இந்த ஆண்டு,This year,தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டம்,Tamil Nadu Detention Act</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/gykm1hn2/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/gykm1hn2/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டத்தில், இந்த ஆண்டு இதுவரை 81 பேர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின்</a> கீழ் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்யப்பட்டு  தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.</p><h2>கொலை முயற்சி, தொடர் தாக்குதல்</h2><p>திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கொலை முயற்சி, தொடர் தாக்குதல், சொத்துச் சேதம் ஏற்படுத்துதல் மற்றும் குற்றமுறு மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், மூலச்சி, வடக்கு தெருவைச் சேர்ந்த குருநாதன் மகன் மாடசாமி(எ) மகேஷ் (வயது 36), குருநாதன் மகன் மணிகண்டன்(32), குருநாதன் மகன் கிருஷ்ணன்(எ) கிட்டு(29) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். </p><p>இந்த நிலையில், மேற்சொன்ன 3 பேரும் கொலை முயற்சி,தொடர் தாக்குதல், சொத்துச் சேதம் ஏற்படுத்துதல் மற்றும் குற்றமுறு மிரட்டல் போன்ற தொடர் சட்டவிரோத குற்றச்செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால், சேரன்மகாதேவி டி.எஸ்.பி. அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ் மேற்சொன்ன 3 பேர் மீதும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் பரிந்துரை செய்தார்.</p><h2>3 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் கைது</h2><p>அதன்பேரில், திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி பரிந்துரையின்படி, திருநெல்வேலி மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில், மேற்சொன்ன 3 பேரும் நேற்று தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.</p><h2>இந்த ஆண்டு இதுவரை 81 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது</h2><p>திருநெல்வேலி மாவட்டத்தில், இந்த ஆண்டு இதுவரை 81 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு  தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>மு.க.ஸ்டாலின் சொல்வதைத்தான் டி.கே.சிவக்குமார் செய்கிறார்; அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-nirmal-kumar-alleges-that-dk-sivakumar-is-doing-what-mk-stalin-says</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-nirmal-kumar-alleges-that-dk-sivakumar-is-doing-what-mk-stalin-says#comments</comments><guid isPermaLink="false">f0511e2a-08f4-4daf-8897-2283bdb45d7c</guid><pubDate>Sun, 02 Aug 2026 07:18:15 +0000</pubDate><atom:updated>2026-08-02T07:18:15.198Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,M.K.Stalin,டி.கே.சிவக்குமார்,DK Shivakumar,அமைச்சர் நிர்மல் குமார்,Minister Nirmal Kumar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/t2d12pbq/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/t2d12pbq/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை விமான நிலையத்தில் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>கர்நாடக முதல்-மந்திரி டி.கே சிவகுமாருக்கும், மு,க.ஸ்டாலின் குடும்பத்துக்கும் கட்சியைத் தாண்டிய நல்ல உறவு இருக்கிறது. எனவே, இவர்கள் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் டி.கே. சிவகுமார் செய்வார். எல்லாவற்றையும் விட திமுக குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று பல வகையில் டி.கே. சிவகுமார் விரும்பினார்.</p><p>காங்கிரஸ் தலைமை சொல்வதைக் கேட்பதைவிட, டி.கே. சிவகுமார் திமுக குடும்பம், மு.க.ஸ்டாலின் சொல்வதைத்தான் கேட்பார் என்று பல தரப்பினர் சொல்லி வந்தனர். அதேமாதிரிதான் கடந்த ஒரு வாரம் நடைபெற்றது. டி.கே. சிவகுமார் என்ன சொல்ல வேண்டும் என்று நினைக்கிறாரோ, அதைத்தான் திமுக சொல்கிறது. திமுக சொல்வதைத்தான் அவரும் சொல்கிறார். </p><p>இதேமாதிரிதான் இவர்கள் இருவரும் சேர்ந்து கருணாநிதி காலத்திலும் ”தண்ணீர் கொடுக்காதீர்கள், தண்ணீர் கொடுத்தால் ஜெயலலிதாவுக்கு நற்பெயர் கிடைத்துவிடும்” என்று கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுத்து, முட்டுக்கட்டை போட்டார்கள். அதையேதான் திமுக இப்போதும் செய்கிறது. தமிழக முதல்-அமைச்சர் தனிமைப்பட்டு நிற்கிறார் என்ற வார்த்தை தமிழக மக்களுக்கு பின்னடைவை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர்கள் தெரிவித்ததைப் போல உள்ளது.</p><p>மேகதாது விவகாரத்தில், நேற்று காலை முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனைகளை நடத்தி, உச்சச்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம் என்று முடிவு எடுத்தபோது, திமுக 5 மணிக்கு மேல் அவசரமாக வழக்குப் பதிவு செய்கிறது. இதுமாதிரி ஒரே மாநிலத்தில் பல வழக்குகளைப் பதிவு செய்தால் எவ்வளவு குழப்பத்தை விளைவிக்கும்? எந்த அளவுக்கு அந்த மாநிலத்தின் உரிமைகளை பின்நோக்கித் தள்ளும்.</p><p>கடந்த 5 வருடங்களாக அவர்கள் என்ன செய்தார்கள்? கடந்த 30 ஆண்டுகளாக எல்லாவகையிலும் காவிரி நீர் பிரச்னையில் குழப்பத்தை ஏற்படுத்தியது திமுகவும் அதன் தலைவர் கருணாநிதியும்தான். இப்போதும் அதே குழப்பத்தைத் தான் ஏற்படுத்துகிறார்கள். எம்.எல்.ஏ. பேர விவகாரத்தில் பெங்களூருவில் தான் பணம் பிடிப்பட்டது.. திமுகவுக்கு பெங்களூரு பாதுகாப்பானதாக உள்ளதா?. தமிழகத்தில் 17 டி.எம்.சி. காவிரி நீர் வர வேண்டி இருக்கிறது. விநாடிக்கு 3,500 கன அடி என்பது போதாது. இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-the-day-after-tomorrow-12</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-the-day-after-tomorrow-12#comments</comments><guid isPermaLink="false">1f6d5656-840d-4011-a6c9-1c800b56587b</guid><pubDate>Sun, 02 Aug 2026 07:06:17 +0000</pubDate><atom:updated>2026-08-02T07:06:17.000Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,monthly maintenance work,power outage,தென்காசி,மாதாந்திர பராமரிப்பு பணி,மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/z99xvzt5/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/z99xvzt5/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மின்பகிர்மான வட்டம், தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர் கோட்டத்தில் உள்ள துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மறுநாள் (4.8.2026, செவ்வாய்க்கிழமை) <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் காரணமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>கடையநல்லூர் கோட்டம்</h2><p>கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பகவிநாயகசுந்தரம் அவெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>நாரணாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (4.8.2026, செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பின்வருமாறு குறிப்பிட்டுள்ள நேரத்தில் மின்விநியோகம் பின்வரும் இடங்களில் இருக்காது. </p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>தரணிநகர், வாசுதேவநல்லூர், சங்கனாப்பேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம், கீழப்புதூர், நெல்கட்டும்சேவல், சுப்ரமணியபுரம், உள்ளார், வெள்ளானைகோட்டை, மலையடிக்குறிச்சி மற்றும் தாருகாபுரம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>‘வி த லீடர்ஸ்’ இயக்கம் சார்பில் கடற்கரை தூய்மைப் பணி: அண்ணாமலை தொடங்கி வைத்தார்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/annamalai-inaugurated-the-beach-cleanup-campaign-on-behalf-of-the-we-the-leaders-movement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/annamalai-inaugurated-the-beach-cleanup-campaign-on-behalf-of-the-we-the-leaders-movement#comments</comments><guid isPermaLink="false">08103a9f-880d-4540-943c-256d95dff5ab</guid><pubDate>Sun, 02 Aug 2026 07:06:09 +0000</pubDate><atom:updated>2026-08-02T07:06:09.406Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Annamalai,அண்ணாமலை,கடற்கரை,cleaning work,beach,தூய்மைப் பணிகள்,வி த லீடர்ஸ்,we the leaders</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/4jalgmjc/106.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/4jalgmjc/106.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி,</p><h2>'கடற்கரை தூய்மை இயக்கம்'</h2><p>'வி த லீடர்ஸ்' (We The Leaders) அமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு சமூக விழிப்புணர்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 'கடற்கரை தூய்மை இயக்கம்' கன்னியாகுமரி கடற்கரைச் சாலையில் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது. இப்பணியை 'வி த லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் கே.அண்ணாமலை நேரில் பங்கேற்றுத் தொடங்கி வைத்தார்.</p><p>கன்னியாகுமரி தொடங்கி திருநெல்வேலியின் உவரி, தூத்துக்குடி மாவட்டத்தின் மணப்பாடு மற்றும் திருச்செந்தூர் ஆகிய கடலோரப் பகுதிகளில் இந்தத் தூய்மைப் பிரசார இயக்கம் தொடர்ந்து தீவிரமாக நடைபெறவுள்ளது. கடற்கரைப் பகுதிகளில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பிற குப்பைகளை அகற்றி, கடலோரச் சூழலையும் கடல்வாழ் உயிரினங்களையும் பாதுகாக்கும் நோக்கில் இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.</p><h2>வாழ்வாதாரச் சவால்</h2><p>இந்தத் தூய்மைப் பணியில் 'வி த லீடர்ஸ்' அமைப்பின் தன்னார்வலர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் உள்ளூர் மீனவச் சமூகத்தினர் திரளாகக் கலந்துகொண்டு கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தூய்மைப் பணியைத் தொடர்ந்து, அப்பகுதி மீனவர்கள் மற்றும் உள்ளூர் மக்களுடன் அண்ணாமலை கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகளையும் வாழ்வாதாரச் சவால்களையும் கேட்டறிந்தார்.</p><h2>மக்கள் சார்ந்த களப்பணி</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D">'வி த லீடர்ஸ்' </a>இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து, போதைப்பொருள் ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, இளைஞர்களுக்கான திறன் பயிற்சி போன்ற ஆறு முக்கிய தலைப்புகளில் மக்கள் சார்ந்த களப்பணிகளை முன்னெடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இம்மாதம் சுற்றுச்சூழல் மற்றும் கடலோரப் பாதுகாப்பை வலியுறுத்தி இந்த மாநிலம் தழுவிய கடற்கரை தூய்மை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழர்கள் - நயினார் நாகேந்திரன் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamils-who-won-medals-at-the-commonwealth-games-nayinar-nagendran-extends-congratulations</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamils-who-won-medals-at-the-commonwealth-games-nayinar-nagendran-extends-congratulations#comments</comments><guid isPermaLink="false">7dc54a4f-0979-4eb0-9d9c-4043b3baf031</guid><pubDate>Sun, 02 Aug 2026 07:00:15 +0000</pubDate><atom:updated>2026-08-02T07:00:15.186Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,நயினார் நாகேந்திரன்,Nayinar Nagendran,காமன்வெல்த் போட்டி,Commonwealth Games,காமன்வெல்த்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/kac5k3tl/Untitled-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/kac5k3tl/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>வாழ்த்துகள்</h2><p>காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் மும்முறை தாண்டுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற பிரவீன் சித்திரவேலுவுக்கும், வெண்கலப் பதக்கத்தை வென்ற செல்வ பிரபு திருமாறனுக்கும் மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>அவர்களின் அபாரமான திறமையும், விடாமுயற்சியும், அர்ப்பணிப்பும் தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் உலக அரங்கில் பெருமை சேர்த்துள்ளது. இந்த மகத்தான சாதனை, பதக்க வெற்றியைத் தாண்டி, இலக்கை நோக்கி உழைத்தால் வெற்றி நிச்சயம் என்பதை அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும்  ஊக்கமூட்டும் வரலாறாக அமைந்துள்ளது.</p><h2>சாதனை பயணம் தொடரட்டும்</h2><p>இன்னும் பல சர்வதேச <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">போட்டிகளில் </a>வெற்றிகளை குவித்து, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் மேலும் பல பெருமைகளைப் பெற்றுத் தர வாழ்த்துகள்! உங்கள் சாதனை பயணம் தொடரட்டும்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருப்பத்தூர்:  சருகுமான் வேட்டையாடிய 2 பேர் கைது, நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruppathur-two-men-arrested-for-hunting-sarukuman-country-made-guns-seized</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruppathur-two-men-arrested-for-hunting-sarukuman-country-made-guns-seized#comments</comments><guid isPermaLink="false">498d495e-6c01-47ce-b875-072818da2932</guid><pubDate>Sun, 02 Aug 2026 06:49:11 +0000</pubDate><atom:updated>2026-08-02T06:49:11.772Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirupattur,திருப்பத்தூர்,guns,நாட்டு துப்பாக்கிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/lkjqo8ez/tdftp.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/lkjqo8ez/tdftp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>திருப்பத்தூர்</p><p>திருப்பத்தூர் மாவட்டத்தில் காப்புக்காடு பகுதியில் சருகுமானை வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டு, நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.</p><p>திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் வெளியிட்டு உள்ள செய்தியில், திருப்பத்தூர் வனக்கோட்டம் சிங்காரப்பேட்டை வனச்சரகம், சிங்காரப்பேட்டை பிரிவு ஆனந்தவாடி பீட் இன்னர் ஜவ்வாது காப்புக்காடு பகுதியில் இன்று (02.08.2026) அதிகாலை ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது.</p><p>அப்போது இரண்டு நபர்கள் காப்புக்காடு பகுதியில் அத்துமீறி நுழைந்து, இரண்டு நாட்டு துப்பாக்கி எடுத்து சென்று வன உயிரினமான இந்திய சருகுமான் ஒன்றை வேட்டையாடி எடுத்து வந்த வனக்குற்றம் கண்டுபிடித்து மேல்நடவடிக்கை எடுக்கும் பொருட்டு எதிரி 1 சங்கர் த/பெ சாமிநாதன் (வயது 37), எதிரி 2 சங்கர் த/பெ கோவிந்தசாமி (வயது 55) மற்றும் இறந்த நிலையிலுள்ள சருகுமான் ஒன்று, இரண்டு நாட்டு துப்பாக்கிகள் ஆகியவற்றை சிங்காரப்பேட்டை வனச்சரக அலுவலகம் கொண்டு வந்து 1972 வனஉயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி WLOR No:03/2026 நாள்:02.08.2026 பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் விரிவான அறிக்கை பின்னர் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் 32 டன் பழைய பொருட்கள் சேகரிக்கப்பட்டு அகற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/32-tons-of-old-materials-collected-and-disposed-of-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/32-tons-of-old-materials-collected-and-disposed-of-in-chennai#comments</comments><guid isPermaLink="false">1a155f24-f55f-4414-b7cd-328e956f05c7</guid><pubDate>Sun, 02 Aug 2026 06:44:53 +0000</pubDate><atom:updated>2026-08-02T06:44:53.115Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,பழைய பொருட்கள்,அகற்றம்,disposal,waste materials</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/wd27pmv0/105.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/wd27pmv0/105.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>திடக்கழிவு அகற்றம்</h2><p>பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பொதுமக்கள் முன்கூட்டியே தரும் தகவலின் அடிப்படையில், அவர்களின் வீடுகளிலிருந்து பழைய சோபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகள் ஆகிய திடக்கழிவுகளை ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பெற்று அகற்றும் பணி 11.10.2025 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.</p><p>அதனடிப்படையில், நேற்று (01.08.2026) மட்டும் 50 நபர்களிடமிருந்து வரப்பெற்ற தகவலின் அடிப்படையில், 32.11 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் பெறப்பட்டு, கொடுங்கையூரில் உள்ள எரியூட்டும் நிலையத்திற்கு எடுத்துச் சென்று விஞ்ஞான முறையில் எரியூட்டி அகற்றப்பட்டது. இதற்காக 29 எண்ணிக்கையிலான வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.</p><h2>“நம்ம சென்னை” செயலி</h2><p>ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று நடைபெறும் இச்சேவையை பெறுவதற்கு, பொதுமக்கள் முன்கூட்டியே பெருநகர சென்னை மாநகராட்சியின் “நம்ம சென்னை” செயலியில் பதிவு செய்ய வேண்டும் (அல்லது) பெருநகர சென்னை மாநகராட்சியின் 1913 என்ற எண்ணிற்கு தகவல் அளிக்கப்பட வேண்டும் (அல்லது) பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலம் பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ள 94450 61913 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவலை அனுப்ப வேண்டும்.</p><p>இதனடிப்படையில் மாநகராட்சிப் பணியாளர்கள் பதிவு செய்த நபர்களின் வீடுகளுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் நேரடியாகச் சென்று, பழைய சோபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகள் உள்ளிட்ட பொருட்களை சேகரித்து பாதுகாப்பாகவும், அறிவியல் முறையிலும் அகற்றும் பணிகளை மேற்கொள்வார்கள். இச்சேவையினை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கெங்குரெட்டி சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளதா.. - மாநகராட்சி ஆணையர் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-water-stagnating-in-the-gengureddy-subway-corporation-commissioner-inspects</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-water-stagnating-in-the-gengureddy-subway-corporation-commissioner-inspects#comments</comments><guid isPermaLink="false">d443cfb1-43d6-49c7-9655-4702e04ba992</guid><pubDate>Sun, 02 Aug 2026 06:41:02 +0000</pubDate><atom:updated>2026-08-02T06:41:02.445Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,சுரங்கப்பாதை,மாநகராட்சி ஆணையர்,சென்னை மாநகராட்சி ஆணையர்,Chennai Corporation Commissioner</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/8ju2e85p/Untitled-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/8ju2e85p/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ். சமீரன் பருவமழையினை முன்னிட்டு இன்று கெங்குரெட்டி சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளதா என்பதையும், கண்காணிப்பு நடவடிக்கைகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>தண்ணீர் தேங்கியுள்ளதா?</h2><p>பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் , பருவமழையினை முன்னிட்டு, சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளதா என்பதையும் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் இன்று (01.98.2026) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.</p><p>இதனைத் தொடர்ந்து, பருவமழையினை முன்னிட்டு, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நேரு பூங்கா அருகில் உள்ள கெங்குரெட்டி சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளதா என்பதையும், அதில் உள்ள‌ மழைநீர் சேகரிப்புத் தொட்டி, மோட்டார் அறையினையும் பார்வையிட்டு, கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><h2>24 சுரங்கப் பாதைகள்</h2><p>பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் மாநகராட்சியின் 19 சுரங்கப்பாதைகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் 5 சுரங்கப்பாதைகள் என மொத்தம் 24 சுரங்கப் பாதைகள் உள்ளன. இவற்றில் தொடர் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கண்காணிப்பு நடவடிக்கைகள் </a>மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மழையினை முன்னிட்டு, சுரங்கப்பாதைகளில் மழை நீர்த் தேக்கமின்றியும் போக்குவரத்து மற்றும் மக்களுக்கு இடையூறின்றி செல்வதற்குமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் சுரங்கப்பாதைகளில் உள்ள மழைநீர் சேகரிப்புத் தொட்டி மற்றும் மோட்டார் அறையினை சரி பார்த்து தயார் நிலையில் வைத்திடவும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அனைத்து வட்டார துணை ஆணையர்கள், மற்றும் பொறியாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.</p><p>இந்த ஆய்வின்போது தலைமைப் பொறியாளர் சங்கரவேலு, கண்காணிப்புப் பொறியாளர் இளங்கோ உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நச்சுப்பாம்புகள்... துரோகிகள்... காங்கிரசை கடுமையாக சாடிய திமுக</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/poisonous-snakes-traitors-dmk-strongly-criticizes-congress</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/poisonous-snakes-traitors-dmk-strongly-criticizes-congress#comments</comments><guid isPermaLink="false">d6f09594-5373-4830-b403-b3edb95b2672</guid><pubDate>Sun, 02 Aug 2026 06:24:42 +0000</pubDate><atom:updated>2026-08-02T06:24:42.805Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,காங்கிரஸ்,தயாநிதி மாறன்,துரோகி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/ev35f2uw/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/ev35f2uw/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திமுக எம்.பி. தயாநிதி மாறன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><p>நம்பிக்கையை விற்று, பதவியை வாங்கும் நச்சுப்பாம்புகள்! தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டு காவிரி உரிமை குறித்து பேசாமல் இருப்பவர்கள் துரோகிகள். காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையைக் காவு வாங்கும் மேகதாது அணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்காதவர்கள் துரோகிகள்.</p><p>நீட் தேர்வு முறையையே ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தாமல், தேர்வில் முறைகேடு நடப்பதாக மட்டும் பேசுகிறவர்கள் துரோகிகள். பாஜகவின் குதிரைப் பேரங்களைக் கண்டிக்கிறவர்கள், தவெகவின் அருவருப்பான குதிரைப் பேரங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் துரோகத்தின் தொடர்ச்சியே.</p><p>ஆட்சியையும் அமைச்சர்களையும் விமர்சித்து எக்ஸ்-இல் பதிவிட்டால்கூட கைது செய்யும் பாசிச தவெக ஆட்சியைக் கண்டிக்காததும் துரோகமே. டெல்லி போலீசுக்குச் சற்றும் குறைவில்லாமல், தமிழ்நாடு போலீசும் நீட்டுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது அராஜகத் தாக்குதலை நடத்தியதைக் கண்டிக்காததும் துரோகத்தின் உச்சமே. தமிழ்நாட்டுக்கு வந்து ஒருவர் அரசியல் பாடம் எடுத்ததைப் படித்தபோது, இதெல்லாம் வரிசையாக நினைவுக்கு வந்தது. அப்பப்பா… எவ்வளவு துரோகங்கள்!. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணை கட்டப்பட்டிருந்தால், இப்போது வரும் தண்ணீரும் கிடைத்திருக்காது - அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/had-the-mekedatu-dam-been-built-even-the-water-currently-flowing-in-would-not-have-been-available-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/had-the-mekedatu-dam-been-built-even-the-water-currently-flowing-in-would-not-have-been-available-anbumani#comments</comments><guid isPermaLink="false">23219a9d-4bfb-43ca-b0ef-906526554354</guid><pubDate>Sun, 02 Aug 2026 06:22:39 +0000</pubDate><atom:updated>2026-08-02T06:22:39.233Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,அன்புமணி,Anbumani,மேகதாது அணை,Mekedatu dam,மேகதாது அணை பிரச்சினை,Mekedatu Dam Issue</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/oazgpdaf/Untitled-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/oazgpdaf/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மேகதாது அணை விவகாரத்தில்  தவறான நிலைப்பாடுகளை எடுத்து  கர்நாடக அரசின் சதிகளுக்கும், சூழ்ச்சிகளுக்கும் தமிழக அரசு இரையாகி விடக் கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>கர்நாடகாவின் வெள்ள வடிகால் தமிழகம்</h2><p>கர்நாடகத்தில் கபினி அணை நிரம்பியதால் தமிழ்நாட்டுக்கு காவிரியியில்  நேற்று வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்ட நிலையில், இன்று காலை வினாடிக்கு 10 ஆயிரமாக குறைக்கப்பட்டு விட்டது. பின்னர் நீர்வரத்து வினாடிக்கு 28,009 கன அடியாக அதிகரித்ததைத் தொடர்ந்து நீர் திறப்பு வினாடிக்கு 14,958 கன அடியாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டிற்கு சட்டப்படியாக வழங்கப்பட வேண்டிய நீரை வழங்க கர்நாடக அரசு தயாராக இல்லை என்பதையும், உபரிநீரை திறந்து விடும் வெள்ள வடிகாலாக மட்டுமே தமிழகத்தின் காவிரியை பயன்படுத்துகிறது என்பதையுமே இது காட்டுகிறது.</p><p>கர்நாடகத்தில் உள்ள அணைகளில்  இன்று காலை நிலவரப்படி 74.05 டி.எம்.சி  தண்ணீர் உள்ளது. இது அங்குள்ள 4 அணைகளின் மொத்தக் கொள்ளளவான 114.57 டி.எம்.சியில்  64 சதவீதம் ஆகும்.  கபினி அணையில் 94 சதவீதம், ஹாரங்கி அணையில் 92 சதவீதம், ஹேமாவதி அணையில் 73 சதவீதம், கிருஷ்ணராஜசாகர் அணையில் 42 சதவீத நீர் உள்ளது. ஜூலை மாத இறுதி வரை தமிழ்நாட்டுக்கு கர்நாடகம்  40 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டியுள்ள நிலையில்,  தமிழகத்திற்கு சட்டப்படியும், நியாயப்படியும் தண்ணீர் வழங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் கிருஷ்ணராஜ சாகர் தவிர மீதமுள்ள 3 அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு கர்நாடகம் தண்ணீரை திறந்து விட்டிருக்கலாம்.</p><h2>வேறு வழியின்றி தண்ணீர் திறப்பு</h2><p>ஆனால், கபினி அணை  நிரம்பிய நிலையில்  அதன் உபரி நீரை எங்கும் தேக்கி வைக்க முடியாது என்பதால் தான் வேறு வழியின்றி காவிரியில் திறந்து விட்டிருக்கிறது. ஹாரங்கி அணை நிரம்பி விட்ட நிலையில்,  அந்த அணைக்கு  10430 கன அடி நீர் வரும் நிலையில், அதைவிட  அதிகமாக14470 கன அடி நீரை  திறந்து விட்டு கிருஷ்ணராஜசாகர் அணையில்  சேமித்து வைக்கிறது.  ஹேமாவதி அணை இன்னும் ஒரு வாரத்தில் நிரம்பி விடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதன் பின் அதன் உபரி நீரையும்  கிருஷ்ணராஜசாகர் அணையில் தான் சேமித்து வைக்கும். தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என்ற கர்நாடகத்தின் நிலைப்பாட்டையே இது காட்டுகிறது.</p><p>கர்நாடக அரசால் புதிதாக கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள  மேகதாது அணை மேற்கண்ட 4 அணைகளுக்கும் கீழாக, தமிழக  எல்லைக்கு அருகில் அமையும்.  அந்த அணை மட்டும் கட்டப்பட்டிருந்தால் கபினி அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீரும் கூட தமிழ்நாட்டுக்கு கிடைக்காது. ஹாரங்கி, ஹேமாவதி அணைகளில் இருந்து  திறக்கப்பட்டு, கிருஷ்ணராஜ சாகர் அணை வழியாக காவிரியில் விடப்படும் தண்ணீரும் கூட மேகதாது அணையில் தடுக்கப்பட்டு விடும்.  மேகதாது அணையும் நிரம்பி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கிடைப்பது என்பது எட்டாவது அதிசயமாகவும், குதிரைக் கொம்பாகவும் தான் இருக்கும்.  அதனால் தான் மேகதாது அணையை கட்ட அனுமதிக்கக் கூடாது என்று கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.</p><h2>அணை கட்ட அனுமதிக்கக் கூடாது </h2><p>எனவே, மேகதாது அணை விவகாரத்தில்  தவறான <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நிலைப்பாடுகளை </a>எடுத்து  கர்நாடக அரசின் சதிகளுக்கும், சூழ்ச்சிகளுக்கும் தமிழக அரசு இரையாகி விடக் கூடாது. மேகதாது அணையை கட்ட அனுமதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.  அனைத்து அரசியல் கட்சிகள்,  வேளாண் அமைப்புகள் ஆகியவற்றின் கருத்துகளை அறிந்து  தெளிவான செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>ஆடிப்பெருக்கை முன்னிட்டு நாளை பவானி கூடுதுறையில் பக்தர்கள் குளிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/security-arrangements-intensified-for-devotees-to-bathe-at-bhavani-kuduthurai-tomorrow-on-the-occasion-of-aadi-peruku</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/security-arrangements-intensified-for-devotees-to-bathe-at-bhavani-kuduthurai-tomorrow-on-the-occasion-of-aadi-peruku#comments</comments><guid isPermaLink="false">5aa212b1-6a26-4ca2-84ef-2d1779066a45</guid><pubDate>Sun, 02 Aug 2026 06:19:18 +0000</pubDate><atom:updated>2026-08-02T06:19:18.645Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பக்தர்கள்,Security Arrangements,ஆடிப்பெருக்கு,Aadiperukku,பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்,bhavani koodudurai பவானி கூடுதுறை,பவானி கூடுதுறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/3b71dnwa/kuuduthurai.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/3b71dnwa/kuuduthurai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பவானி,</p><p>நாளை ஆடிப்பெருக்கை முன்னிட்டு பவானி கூடுதுறையில் பக்தர்கள் குளிக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. 100 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது</p><h2>பாதுகாப்பு ஏற்பாடுகள்</h2><p>மார்கழி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகிய நாட்கள் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது. இந்த நாட்களில் நீர்நிலை கரையோரம் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபடுவார்கள். அதேபோல் ஆடிப்பிறப்பு, ஆடிப்பெருக்கு ஆகியவையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆடிப்பெருக்கு அன்று புதுமண தம்பதிகள் மாலைகளை ஆற்றில் விட்டு புனிதநீராடி தாலி கயிறு பிரித்து கட்டும் நிகழ்வு நடைபெறும்.</p><p>இதற்காக ஈரோடு மாவட்டத்தில் பவானி கூடுதுறையில் ஏராளமானோர் கூடுவார்கள். ஆற்றில் புனிதநீராடிவிட்டு பவானி சங்கமேஸ்வரரை வழிபட்டால் ஆண்டு முழுவதும் நல்லதே  நடக்கும் என்கிற ஐதீகத்தின் காரணமாக ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வது வழக்கம். ஈரோடு மட்டுமின்றி சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் வருவார்கள். இந்த நிலையில் நாளை (திங்கட்கிழமை) ஆடிப்பெருக்கு என்பதால் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">பவானி கூடுதுறை</a>யில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.</p><h2>தடுப்புகள் அமைப்பு</h2><p>காவிரி ஆற்றில் ஒரே நேரத்தில் ஆண்கள், பெண்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நீராடுவார்கள் என்பதால் படித்துறை பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆற்றில் இறங்கி குளிக்க முடியாதவர்களுக்காக படித்துறைகளில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு குளிப்பதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. வாகனங்களை நிறுத்துவதற்காக பவானி போக்குவரத்து போலீசாரால் பவானி பழைய பஸ் நிலையம், செல்லியாண்டி அம்மன் கோவில் திடல் மற்றும் பவானி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய பகுதிகளில் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.</p><h2>கண்காணிப்பு கேமராக்கள்</h2><p>கூட்ட நெரிசலை பயன்படுத்தி சமூக விரோத செயல்கள் நடப்பதை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சங்கமேஸ்வரர் கோவில் மற்றும் கூடுதுறை பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. பவானி நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம், பவானி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 200 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.</p><h2>போக்குவரத்து மாற்றம்</h2><p>கோவை, சேலம், ஈரோடு, ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் லட்சுமி நகரில் நிறுத்தப்பட்டு பொதுமக்கள் பவானி நகருக்குள் வருவதற்கு ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மேட்டூர், அந்தியூர், பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரிங் ரோடு வழியாக ஈரோடு செல்வதற்கு போலீசார் போக்குவரத்தில் மாற்றம் செய்து வருகின்றனர். ஆற்றங்கரையோரம் பவானி தீயணைப்பு நிலையம் சார்பில் நீச்சல் வீரர்களும், பவானி அரசு மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்களுடன் நடமாடும் முதலுதவி சிகிச்சை மையமும், ஆம்புலன்சும் தயார் நிலையில் வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நெல்லையில் 6.1 கிலோ கஞ்சா, கார், பைக் பறிமுதல்: 6 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/61-kg-of-ganja-car-bike-seized-in-paddy-field-6-people-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/61-kg-of-ganja-car-bike-seized-in-paddy-field-6-people-arrested#comments</comments><guid isPermaLink="false">64d5326f-d0fa-45bd-a28a-f352d9b04c0b</guid><pubDate>Sun, 02 Aug 2026 06:06:46 +0000</pubDate><atom:updated>2026-08-02T06:06:46.214Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,Ganja,கஞ்சா,பறிமுதல்,Car,கார்,bike,seized,பைக்,6 பேர் கைது,6 arrested</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/78ofg28f/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கஞ்சா பறிமுதல், கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/78ofg28f/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டத்தில் ஒரே நாளில் 2 இடங்களில் மொத்தம் 6.1 கிலோ <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE">கஞ்சா</a>, கார் மற்றும் பைக்கை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">பறிமுதல்</a> செய்த போலீசார் 6 பேரை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்துள்ளனர். </p><h2>போலீசார் சோதனை</h2><p>திருநெல்வேலி மாவட்டம், மூலக்கரைப்பட்டி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் நேற்று போலீசார் வழக்கமான வாகன தணிக்கை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி ஒரு கார் மற்றும் ஒரு பைக்கில் வந்த சின்னமூலக்கரை பகுதியைச் சேர்ந்த ரவி (வயது 24), சூர்யா(23), பேச்சிமுத்து(34) மற்றும் நெல்லையப்பபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(19) ஆகிய 4 பேரையும் போலீசார் சோதனை செய்தனர். </p><p>அந்த சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 5 கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக அவர்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.</p><h2>5 கிலோ கஞ்சா, கார், பைக் பறிமுதல்; 4 பேர் கைது</h2><p>இதுகுறித்து மூலக்கரைப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, அவர்களிடமிருந்து 5 கிலோ கஞ்சா, ஒரு கார் மற்றும் ஒரு பைக்கை பறிமுதல் செய்து, மேற்சொன்ன 4 பேரையும் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். </p><p>இதேபோன்று நேற்றைய தினம் திருநெல்வேலி தாலுகா போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மேலகுளம் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த சிவந்திபட்டியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன்(33) மற்றும் சங்கரன்கோவிலைச் சேர்ந்த மாரிமுத்து(24) ஆகிய 2 பேரையும் பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக அவர்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.</p><h2>1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது</h2><p>இதுகுறித்து திருநெல்வேலி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, 2 பேரையும் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதன் மூலம் நேற்று ஒரே நாளில் திருநெல்வேலி மாவட்ட போலீசார் மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளில் மொத்தம் 6.1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதுடன், 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>கொல்லிமலை மலைப்பாதையில் 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/traffic-changes-on-the-kollimalai-mountain-pass-for-2-days</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/traffic-changes-on-the-kollimalai-mountain-pass-for-2-days#comments</comments><guid isPermaLink="false">f9f3b198-8ad6-4185-ba36-04ffe6282466</guid><pubDate>Sun, 02 Aug 2026 06:06:03 +0000</pubDate><atom:updated>2026-08-02T06:06:03.488Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நாமக்கல்,போக்குவரத்து மாற்றம்,Traffic change,கொல்லிமலை,kollimalai,namakal</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/8r59tamm/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/8r59tamm/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல்,</p><p>நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுலாத்தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. இந்த மலையை சுற்றி பார்க்க தமிழகம் மட்டும் அல்லாது கேரளம், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.</p><p>இந்த நிலையில், வல்வில் ஓரி விழாவையொட்டி, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக பயணம் செய்யவும், கொல்லிமலை மலைப்பாதையில் இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாள்களுக்கு தற்காலிகமாக ஒருவழிப் போக்குவரத்து முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.</p><p>இதன்படி, கொல்லிமலைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் காரவள்ளி மலைப்பாதை வழியாக மட்டுமே அனுமதிக்கப்படும். அதேபோல், கொல்லிமலையில் இருந்து கீழே இறங்கும் வாகனங்கள் முள்ளுக்குறிச்சி மலைப்பாதை வழியாக மட்டுமே இயக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதேபோல, செம்மேடு, செங்கரை, சோளக்காடு ஆகிய இடங்களில் உள்ள 3 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் சேந்தமங்கலம் வட்டம், காரவள்ளியில் செயல்படும் ஒரு மதுபான சில்லறை விற்பனைக் கடை என 4 கடைகளும் இரண்டு நாட்கள் கட்டாயம் மூட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நாளை நாமக்கல் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: பெண்ணுக்கு பாலியல் தொல்லை; வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-woman-sexually-harassed-police-net-youth</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-woman-sexually-harassed-police-net-youth#comments</comments><guid isPermaLink="false">d647a807-695a-4286-b24d-4dd15e402260</guid><pubDate>Sun, 02 Aug 2026 05:30:46 +0000</pubDate><atom:updated>2026-08-02T05:30:46.418Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Sexual harassment,பாலியல் தொல்லை,Youth,வாலிபர்,பெண்,Woman,போலீசார் வலைவீச்சு,police net sweep</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/8sdiwbsr/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8812.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெண்ணுக்கு பாலியல் தொல்லை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/8sdiwbsr/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8812.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், குரும்பூர் அருகே வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88">பெண்ணுக்கு பாலியல் தொல்லை</a> கொடுத்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p><h2>பெண்ணுக்கு பாலியல் தொல்லை</h2><p>தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே உள்ள அங்கமங்கலம் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர், சென்னை சென்று வசித்து வந்த நிலையில், குடும்ப தகராறு காரணமாக கணவரைப் பிரிந்து அங்கமங்கலத்தில் உள்ள தனது தாய் வீட்டில் மகளுடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கேண்டீனில் வேலை பார்த்து வருகிறார். </p><p>இந்த நிலையில் கீழக்கல்லாம்பாறையைச் சேர்ந்த உப்பிலி என்பவரது மகன் இமான்(எ) வைகுண்டம் (வயது 28), கடந்த 8 மாதங்களாக அந்தப் பெண்ணிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. </p><h2>வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு</h2><p>கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு நேர பணியை முடித்துவிட்டு, அப்பெண் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, வழியில் வந்த வைகுண்டம் எதிர்பாராதவிதமாக அவரது கையைப் பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரின் பேரில், குரும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள வைகுண்டத்தை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>உற்பத்தி பாதிப்பு: பட்டுப்புழுக்களை தீயிட்டு எரிக்கும் விவசாயிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/production-affected-farmers-burn-silkworms</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/production-affected-farmers-burn-silkworms#comments</comments><guid isPermaLink="false">aace55fe-3f19-4c5a-b14d-ebfb480517b2</guid><pubDate>Sun, 02 Aug 2026 05:29:30 +0000</pubDate><atom:updated>2026-08-02T05:29:30.605Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Dindigul,திண்டுக்கல்,விவசாயிகள்,பட்டுப்புழு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/vddbfxtd/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/vddbfxtd/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>பட்டுப்புழு வளர்ப்பு</h2><p>திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, ஆயக்குடி, கணக்கன்பட்டி, சத்திரப்பட்டி, தாளையூத்து, தொப்பம்பட்டி, சாணார்பட்டி பகு திகளில் மல்பெரி சாகுபடி மூலம் விவசாயிகள் பட்டுக்கூடு உற்பத்தி செய்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக சீதோஷ்ண நிலை மாறுபாட்டால் மாவட்டத்தில் பட்டுக்கூடு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பட்டுப்புழு வளர்ப்பை கைவிடாமல் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>இந்த நிலையில் பழனி பகுதியில் தரம் இல்லாத முட்டைகள், வீரியம் இல்லாத இளம்புழுக்களால் பட்டுக்கூடு உற்பத்தி கடுமையாக பாதித்துள்ளது. அதாவது தரமற்ற புழுக்களால் கூடுகள் உருவாவதில் பாதிப்பு ஏற்பட்டு உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.</p><h2>தீ வைத்து எரிப்பு</h2><p>பழனி அருகே கணக்கன்பட்டி பகுதியில் தரமில்லாத முட்டை களால் பட்டுக்கூடு உற்பத்தி கடுமையாக பாதித்ததால் விவசாயி ஒருவர், தனது தோட்டத்தில் உள்ள கூடு கட்டாத பட்டுப்புழுக்களை குப்பையில் கொட்டினார். இதேபோல் பட்டுக்கூடு உற்பத்தியில் ஈடுபடும் பல விவசாயிகளும் கூடு கட்டாத புழுக்களை குப்பையில் கொட்டியும், தீவைத்தும் எரிக்கின்றனர்.</p><p>கடும் வெயில் நிலவினாலும் தரமில்லாத இளம்பு ழுக்கள், முட்டைகள் தான் பட்டுக்கூடு உற்பத்தி பாதிப்புக்கு பிரதான காரணமாகும். எனவே மத்திய, மாநில பட்டு வளர்ச்சி துறை அதிகாரிகள் புழுக்கள் வளர்ச்சி இல்லாதது குறித்து ஆய்வு செய்து போதிய தொழில்நுட்ப ஆலோசனை கள் வழங்க வேண்டும். அதேபோல் காப்பீடு திட்டத்தையும் புதுப்பிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தீரன் சின்னமலை நினைவு தினம்: திருப்பூர் மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiran-chinnamalai-memorial-day-local-holiday-for-tiruppur-district-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiran-chinnamalai-memorial-day-local-holiday-for-tiruppur-district-tomorrow#comments</comments><guid isPermaLink="false">ed172f74-e26b-4a93-9c49-0e1e30560201</guid><pubDate>Sun, 02 Aug 2026 05:25:28 +0000</pubDate><atom:updated>2026-08-02T05:25:28.771Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Local Holiday,Memorial Day,உள்ளூர் விடுமுறை,நினைவு தினம்,தீரன் சின்னமலை,Theeran Chinnamalai,திருப்பூர் மாவட்டம்,Tiruppur District</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/2wtdfql7/104.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/2wtdfql7/104.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><p>தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்துக்கு திங்கள்கிழமை (ஆகஸ்ட் 3) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>உள்ளூர் விடுமுறை</h2><p>இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிலையங்களுக்கு திங்கள்கிழமை (ஆகஸ்ட் 3) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>ஆகஸ்ட் 22-ஆம் தேதி பணி நாள்</h2><p>இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஆகஸ்ட் 22-ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளில் ஏற்கெனவே தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தால் இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது. தேர்வுகள் அறிவித்தபடி நடைபெறும். இந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">உள்ளூர் விடுமுறை</a> நாள் செலாவணி முறிச்சட்டத்தின்கீழ் வராது என்பதால், வங்கிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இயற்கைக்கு எதிரான மாமல்லன் நீர்த்தேக்கம் திட்டத்தை கைவிட வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-eco-unfriendly-mamallan-reservoir-project-must-be-abandoned-anbumani-urges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-eco-unfriendly-mamallan-reservoir-project-must-be-abandoned-anbumani-urges#comments</comments><guid isPermaLink="false">b62b0f70-e87c-4f7c-b4b4-4bf7d9084c74</guid><pubDate>Sun, 02 Aug 2026 05:15:45 +0000</pubDate><atom:updated>2026-08-02T05:15:45.569Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK,அன்புமணி,Anbumani,Chennai,சென்னை,மாமல்லன் நீர்த்தேக்கம்,Mamallan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/hh7mjo5v/anbumani.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/hh7mjo5v/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இயற்கைக்கு எதிரான மாமல்லன் நீர்த்தேக்கம் திட்டத்தை கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>திட்டத்தை அரசு கைவிடாது</h2><p>சென்னை கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் வாழும் 5000 மீனவர் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் சரி செய்ய முடியாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்தை தமிழக அரசு கைவிடாது என்று வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. மீனவ மக்களுக்கு எதிரான இத்திட்டத்தை கைவிடுவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த தவெக இப்போது பின்வாங்குவது கண்டிக்கத்தக்கது.</p><p>சென்னையை அடுத்த கானத்தூர் ரெட்டிக்குப்பத்துக்கும், கொக்கிலிமேட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள உப்பங்கழிகளை அழித்து 5,161 ஏக்கர் நிலப்பரப்பில் மாமல்லன் நீர்த்தேக்கத்திற்கு முந்தைய திமுக ஆட்சியில் கடந்த ஜனவரி 19-ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. மாமல்லன் நீர்த்தேக்கம் கட்டப்பட்டால் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகளை சுட்டிக்காட்டி, அப்போதே பாட்டாளி மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. சோழிங்கநல்லூர், திருப்போரூர் உள்ளிட்ட சட்டப் பேரவை தொகுதி தேர்தல் பரப்புரைகளின் போது த.வெ.க.வும் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது. சுற்றுச்சூழலை பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம் என்று இன்றைய முதல்-அமைச்சரும். அப்போதைய தவெக தலைவருமான விஜய்யும் வாக்குறுதி அளித்திருந்தார். அதனால், மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டம் கைவிடப்படும் என்று கோவளம் பகுதியில் வாழும் மீனவ மக்கள் உறுதியாக நம்பினர்.</p><h2>எந்த பதிலும் இல்லை</h2><p>ஆனால், த.வெ.க. ஆட்சிக்கு வந்து 3 மாதங்களாகிவிட்ட நிலையில், மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்தைக் கைவிடுவது குறித்து ஆட்சியாளர்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. மாறாக, மாமல்லன் நீர்த்தேக்கத்தை கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ள மீனவ மக்கள் தங்களின் எதிர்காலம் என்னவாகுமோ? என்ற அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.</p><p>மாமல்லன் நீர்த்தேக்கம் அமைக்கப்படும் பகுதி இயற்கையின் அதிசயம் ஆகும். இங்கு தான் கடல் நீரும், நன்னீரும் கலக்கின்றன. அதனால், இந்த பகுதியில் தான் அரிய வகை நண்டு, இரால், மீன்கள் போன்றவை இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன, அதுமட்டுமின்றி, சதுப்பு நிலங்களை உள்ளடக்கிய இந்த நீர்நிலையின் தனித்துவமான தன்மைக்காகத் தான் இங்கு லட்சக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் வலசை வருகின்றன. கடல் நீரும், நன்னீரும் சங்கமிக்கும் இடமாக உள்ள இப்பகுதியை நீர்த்தேக்கம் என்ற பெயரில் அடைத்து விட்டால் இதன் தனித்துவம் அழிந்து விடும். அதனால், இப்பகுதியில் உள்ள மீன்வளம் அழிந்து விடும்.</p><h2>மீன்வளம் அழிந்து விடும்</h2><p>மாமல்லன் நீர்த்தேக்கம் அமைந்துள்ள கானத்தூர் ரெட்டிக்குப்பம் முதல் கொக்கிலிமேடு குப்பம் வரையிலான பகுதிகளில் பல மீனவர் குடியிருப்புகள் உள்ளன. அவற்றில் உள்ள 5 ஆயிரம் மீனவர் குடும்பங்களுக்கு இந்த பகுதியில் மீன் பிடிப்பது தான் வாழ்வாதாரமாகும். மாமல்லன் நீர்த்தேக்கம் அமைக்கப்படுவதால் அங்குள்ள மீன் வளம் முற்றிலுமாக அழிந்து விடும். அதனால், 5000 மீனவர் குடும்பங்கள் வாழ்வாதாரங்களை இழப்பார்கள்.</p><p>அதுமட்டுமின்றி, இந்த பகுதியின் பல்லுயிர் வாழிடச் சூழலையும் மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டம் சிதைத்து விடும். வெளிநாட்டு பறவைகள் இந்தப் பகுதிகளுக்கு வலசை வருவது அடியோடு நின்று விடும். இவை அனைத்துக்கும் மேலாக, கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதிகள் கடல் சீற்றத்திற்கு ஆளாகவும் வழிவகுக்கும்.</p><h2>கற்பனை செய்து பார்க்க முடியாத பாதிப்பு</h2><p>கானத்தூர் ரெட்டிக்குப்பம் முதல் கொக்கிலிமேடு வரையிலான பகுதியில் அமைந்துள்ள உப்பங்கழிகளும், கழிவெளிப் பகுதிகளும் கடல்நீரின் சீற்றத்தைத் தடுத்து நிலப்பகுதிகளை காக்கும் இயற்கை அரணாகத் திகழ்கின்றன. இவற்றை அழித்து மாமல்லன் நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டால், இனிவரும் காலங்களில் கானத்தூர் ரெட்டிக்குப்பம், கோவளம், நெம்மேலி, பட்டிப்புலம், தேவனேரி, மாமல்லபுரம், கொக்கிலிமேடு உள்ளிட்ட கடலோர கிராமங்களுக்குள்ளும், திருப்போரூர், தெற்கு பட்டு, கேளம்பாக்கம் உள்ளிட்ட உட்புற  பகுதிகளுக்குள்ளும் கடல் நீர் உள்புகும் ஆபத்து உருவாகி விடும். புயல் மற்றும் சூறாவளி காலங்களில்  இந்த பகுதிகளுக்கு கற்பனை செய்து பார்க்க முடியாத பாதிப்புகளை இந்தத் திட்டம் ஏற்படுத்தி விடும்.</p><p>சென்னை பெருநகர எல்லையும், மக்கள்தொகையும் ஆண்டுக்கு ஆண்டு விரிவடைந்து கொண்டே செல்லும் நிலையில், அதிகரித்து வரும் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதற்காகவும், சென்னையில் பெய்யும் மழை மூலம் கிடைக்கும் நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கவும் புதிய நீர்த்தேக்கங்கள் கட்டப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இன்னும் கேட்டால் இந்தக் கருத்தை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், இயற்கை நமக்கு அளித்த கழிவெளிகளை அழித்து இத்தகைய நீர்த்தேக்கங்களை அமைப்பது இயற்கை மீது நடத்தப்படும் தாக்குதல் ஆகும். இத்தகைய செயல்களை அனுமதிக்கவே முடியாது.</p><h2>தீமைகளே அதிகம்</h2><p>கோவளம் பகுதியில் மாமல்லன் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நீர்த்தேக்கம் </a>அமைப்பதால் ஏற்படும் நன்மைகளை விட தீமைகள் அதிகம் என்பதற்கு ஆயிரமாயிரம் சான்றுகளைக் கூற முடியும். இதை உணர்ந்து உப்பங்கழிகள், கழிவெளிகள் உள்ளிட்ட இயற்கைக் கொடுத்த கொடைகள், சுற்றுச்சூழல், மீனவர்களின் வாழ்வாதாரம் உள்ளிட்டவற்றை பாதுகாக்கும் மாமல்லன் நீர்த்தேக்கத்தை கைவிடுவதாக அரசு அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் கோலாகலமாகத் தொடங்கிய 18-வது ஈஷா கிராமோத்சவம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-18th-isha-gramotsavam-kicked-off-in-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-18th-isha-gramotsavam-kicked-off-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">b19507d8-3a2c-4b6b-9b7e-6e54c784b888</guid><pubDate>Sun, 02 Aug 2026 05:09:50 +0000</pubDate><atom:updated>2026-08-02T05:09:50.922Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Sports,Isha,ஈஷா,விளையாட்டு போட்டிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/jnt10194/Isha-Gramotsavam.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஈஷா கிராமோத்சவம் விளையாட்டு போட்டிகள்]]></media:title><media:description type="html"><![CDATA[ 18-வது ஈஷா கிராமோத்சவம். காரைக்குடியில் அமைச்சர் டி. கே. பிரபு விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார்!
]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/jnt10194/Isha-Gramotsavam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>பிற விளையாட்டு (Other sports)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>சத்குருவின் ஈஷா அமைப்பால் ஆண்டுதோறும் நடத்தப்படும் மாபெரும் கிராமப்புற விளையாட்டுத் திருவிழாவான ஈஷா கிராமோத்சவத்தின் 18-ஆவது பதிப்பிற்கான முதற்கட்ட கிளஸ்டர் போட்டிகள் தமிழ்நாடு முழுவதும் நேற்று (01/08/2026) கோலாகலமாகத் தொடங்கின. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற போட்டிகளை தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி. கே. பிரபு தொடங்கி வைத்தார்.</p><p>இதேபோல், உடுமலைப்பேட்டையில் நாடாளுமன்ற உறுப்பினர் கே. ஈஸ்வரசாமி, பூந்தமல்லியில் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம். ஹரீஷ், மதுரை கோச்சடையில் மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆர். தங்கபாண்டி, ஆற்காட்டில் ராணிப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐ. தாஹிரா, ஓமலூரில் ஓமலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர். மணி, முசிறியில் முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சி. விக்னேஷ் மற்றும் திருத்தணியில் திருத்தணி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சுபம் திமான், ஐ.பி.எஸ். ஆகியோர் போட்டிகளைத் துவக்கி வைத்து வீரர்களை உற்சாகப்படுத்தினர். மேலும் பல்வேறு இடங்களில் முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தனர்.</p><p>ஈஷா கிராமோத்சவத்தில் ஆண்களுக்கான கைப்பந்து (வாலிபால்) மற்றும் பெண்களுக்கான எறிபந்து (த்ரோபால்) போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் 14 வயதுக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்கலாம். தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்கு இதில் பங்கேற்க அனுமதி இல்லை.</p><figure><img alt="ஈஷா கிராமோத்சவம் விளையாட்டு போட்டிகள் தொடங்கின" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/dg9xszwl/Isha-Gramotsavam2.jpg" /><figcaption>ஈஷா கிராமோத்சவம் விளையாட்டு போட்டிகள் தொடங்கின</figcaption></figure><h2>முதற்கட்ட கிளஸ்டர் போட்டிகள்</h2><p>தமிழ்நாட்டில் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் முதற்கட்ட கிளஸ்டர் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று (ஆக.1) போட்டிகள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வரும் ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளிலும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">போட்டிகள்</a> நடைபெறுகின்றன. </p><p>இதில் வாலிபால் பிரிவில் 2,400 அணிகளைச் சேர்ந்த 24,000 வீரர்களும், த்ரோபால் பிரிவில் 31 இடங்களில் 620 அணிகளைச் சேர்ந்த 6,200 வீரர்களும் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு இடத்திலும் தலா 45 அணிகள் வீதம், இம்முதற்கட்டப் போட்டிகளில் மொத்தம் சுமார் 30,000 கிராமப்புற மக்கள் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>ஆதியோகி வளாகத்தில் இறுதிப்போட்டிகள்</h2><p>அடுத்ததாக இரண்டாம் கட்ட மண்டல (டிவிஷனல்) அளவிலான போட்டிகள் ஆகஸ்ட் 3 மற்றும் 4-வது வார இறுதி நாட்களில் நடைபெறும். கிளஸ்டர், டிவிஷனல் மற்றும் இறுதிப்போட்டிகள் என மூன்று கட்டங்களாக நடைபெறும் இந்த விளையாட்டுத் திருவிழாவின் பிரம்மாண்ட இறுதிப்போட்டிகள் செப்டம்பர் 6-ஆம் தேதி கோவை ஆதியோகி வளாகத்தில் சத்குருவின் முன்னிலையில் நடைபெறவுள்ளன.</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">ஈஷா கிராமோத்சவம்</a> 2026-இன் இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் கைப்பந்து மற்றும் எறிபந்து அணிகளுக்கு தலா ரூ.5 லட்சம், இரண்டாம் இடத்திற்கு ரூ.3 லட்சம், மூன்றாம் இடத்திற்கு ரூ.1 லட்சம், நான்காம் இடத்திற்கு ரூ.50,000 பரிசாக வழங்கப்படும். இதுதவிர கிளஸ்டர் மற்றும் டிவிஷனல் போட்டிகளிலும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் போட்டிகளும் நடத்தப்பட்டு, வெற்றி பெறும் அணிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். கிராமப்புற இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">விளையாட்டுத் திருவிழாவில்</a> மொத்தம் ரூ.1 கோடிக்கும் அதிகமான பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது.</p><h2>வட இந்தியாவிலும் போட்டிகள்</h2><p>கடந்த ஆண்டு வரை தென்னிந்திய மாநிலங்களில் மட்டுமே நடைபெற்ற ஈஷா கிராமோத்சவம், இந்த ஆண்டு வட இந்தியாவிற்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுடன் இணைந்து உத்தரப் பிரதேசம், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் போட்டிகள் நடைபெறுகின்றன.</p><p>இந்த மாபெரும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">கிராமப்புற விளையாட்டுத் திருவிழாவில்</a> சுமார் 7,000 அணிகள் மூலம் 40,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, 15,000 பெண்கள் உட்பட 80,000-க்கும் அதிகமான கிராமப்புற வீரர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர்.</p><h2>கிராமோத்சவத்தின் நோக்கம்</h2><p>கிராமங்களில் 60 சதவீத மக்கள் உழைக்கும் வயதில் இருந்தாலும், வேலை வாய்ப்பின்மை மற்றும் நலிவடையும் விவசாயம் போன்ற காரணங்களால் இளைஞர்கள் வறுமைக்கும் போதைப்பழக்கத்திற்கும் தள்ளப்படுகிறார்கள். அதேபோல், பெண்களுக்கு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு விளையாடுவதற்கான வாய்ப்புகளே இல்லாமல் போகிறது. இந்தச் சூழலை மாற்றி, "கிராமப்புற மக்களின் அன்றாட வாழ்வில் விளையாட்டை ஒரு அங்கமாக மாற்ற வேண்டும்" என்ற சத்குருவின் தொலைநோக்குப் பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் 'ஈஷா கிராமோத்சவம்' தொடங்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>திருவள்ளூரில் தொழிலாளி வெட்டிக்கொலை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/worker-hacked-to-death-in-thiruvallur-police-hunt-down-mysterious-individuals</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/worker-hacked-to-death-in-thiruvallur-police-hunt-down-mysterious-individuals#comments</comments><guid isPermaLink="false">b338ca47-e9a5-41cf-ae61-c5f39cf7485f</guid><pubDate>Sun, 02 Aug 2026 04:59:52 +0000</pubDate><atom:updated>2026-08-02T04:59:52.240Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thiruvallur,திருவள்ளூர்,mysterious persons,மர்ம நபர்கள்,Worker,தொழிலாளி,வெட்டிக்கொலை,hacked to death,போலீசார் வலைவீச்சு,police net sweep</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/wyxacnzi/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தொழிலாளி வெட்டிக்கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/wyxacnzi/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர், </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">திருவள்ளூர் </a>மாவட்டம், ஆவடி அருகே பைக்கில் சென்ற <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">தொழிலாளியை வெட்டிக்கொலை</a> செய்த மர்ம நபர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.</p><h2>தொழிலாளி வெட்டிக்கொலை</h2><p>ஆவடியை அடுத்த பொத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ் (வயது 38). கூலி தொழிலாளியான இவர், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு மீனா(35) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். </p><p>நேற்று மாலை சதீஷ், தனது பைக்கில் ஆவடி அடுத்த பொத்தூர் பகுதியில் உள்ள ஆலமரம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர், சதீசை வழிமறித்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது 2 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சதீசை வெட்டியதுடன், இரும்பு கம்பி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களாலும் சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த சதீஷ், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். </p><h2>முன்விரோதம் காரணமா?</h2><p>இந்த சம்பவத்தை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சதீசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். </p><h2>மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு</h2><p>மேலும் தொழில் போட்டி அல்லது முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தென்காசி:  குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க அனுமதி; சுற்றுலாவாசிகள் மகிழ்ச்சி
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tenkasi-courtallam-main-falls-five-falls-bathing-allowed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tenkasi-courtallam-main-falls-five-falls-bathing-allowed#comments</comments><guid isPermaLink="false">32f5842b-798a-4e0f-a1bf-9e807f53f848</guid><pubDate>Sun, 02 Aug 2026 04:51:55 +0000</pubDate><atom:updated>2026-08-02T04:51:55.963Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,தென்காசி,குற்றாலம்,Courtallam Falls,Falls</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/tbwuicy6/tdfat.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/tbwuicy6/tdfat.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>தென்காசி</p><p>தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நீர்வரத்து இன்று சீரான நிலையில் மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.</p><p>குற்றால அருவிகளில் கடந்த சில வாரங்களாக நீர்வரத்து மிகக்குறைந்த அளவிலேயே இருந்தது. இதற்கிடையே, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.</p>  <h2>குளிக்க தடை</h2><p>இதனால் கடந்த 30-ந்தேதி அருவிகளில் நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.  இதனையடுத்து அன்று மாலையில் நீர்வரத்து சீரானதை தொடர்ந்து குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.</p><p>இதனையடுத்து, குற்றாலம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் மழை பெய்தது. இதனால் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்ததையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டது.</p>  <h2>மகிழ்ச்சி</h2><p>இந்த நிலையில், தொடர்மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க 2வது நாளாக நேற்றும் தடை விதிக்கப்பட்டது.  இதனால், விடுமுறை நாளில் ஆவலுடன் நீராட வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.</p><p>இந்த நிலையில், குற்றாலத்தில் நீர்வரத்து இன்று சீரானது.  இதனால், 2 நாட்கள் தடைக்கு பின்னர் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.  இதன்படி, தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.  இதனால், சுற்றுலாவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>ஆடிப்பெருக்கை முன்னிட்டு வாழைத்தார் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/banana-prices-rise-due-to-increase-in-demand-farmers-happy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/banana-prices-rise-due-to-increase-in-demand-farmers-happy#comments</comments><guid isPermaLink="false">1cb1246e-86f7-4c10-b792-f1003641b859</guid><pubDate>Sun, 02 Aug 2026 04:43:31 +0000</pubDate><atom:updated>2026-08-02T04:43:31.189Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆடிப்பெருக்கு,aadi perukku,Banana,வாழைப்பழம்,வாழைத்தார்,Banana price hike</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/i1whwqj6/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/i1whwqj6/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல்,</p><h2>வாழைத்தார் சந்தை</h2><p>நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான பொத்த னூர், பாண்டமங்கலம், குச்சிப்பாளையம், வெங்கரை, நன்செய்இடையாறு, அனிச்சம்பாளையம், குப்புச்சிபாளையம், பொய்யேரி, ஓலப்பாளையம், செங்கப்பள்ளி, எல்லைமேடு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத்தார் களை விவசாயிகள் பரமத்திவேலூரில் உள்ள வாழைத்தார் ஏல சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.</p><p>ஏலத்தில் சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வாழைத்தார்களை ஏலத்திற்கு எடுத்து செல்கின்றனர். ஏலம் எடுக்கப்பட்ட வாழைத்தார்களை வியாபாரிகள் ஆந்திரா, கேரளம், கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வருகின்றனர்.</p><h2>விலை உயர்வு</h2><p>கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.400 வரையிலும், பச்சைநாடன் வாழைத்தார் ஒன்று ரூ.350 வரையிலும், ரஸ்தாளி வாழைத்தார் ஒன்று ரூ.350 வரை யிலும், கற்பூரவள்ளி வாழைத்தார் ஒன்று ரூ.400 வரையிலும், மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.5 வரையிலும், செவ்வாழை காய் ஒன்று ரூ.8 வரையிலும் ஏலம் போனது.</p><p>இந்தநிலையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு இன்று நடை பெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ஒன்று அதிகபட்சமாக ரூ.550-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் ஒன்று ரூ.450-க்கும். ரஸ்தாளி வாழைத்தார் ஒன்று ரூ.450-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ஒன்று ரூ.500-க்கும், மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.7-க்கும், செவ்வாழை ஒரு காய் ஒன்று ரூ.10-க்கும் ஏலம் போனது. வாழைத்தார்கள் விலை உயர்ந்துள்ளதால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>
 2040-ம் ஆண்டு நிலவுக்கு மனிதர்கள்  செல்வார்கள்: இஸ்ரோ தலைவர் இலக்கு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/humans-will-go-to-the-moon-by-2040-isro-chairman-sets-target</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/humans-will-go-to-the-moon-by-2040-isro-chairman-sets-target#comments</comments><guid isPermaLink="false">2ff0820c-8a80-4aab-9219-734bc83c9be6</guid><pubDate>Sun, 02 Aug 2026 04:39:33 +0000</pubDate><atom:updated>2026-08-02T04:39:33.181Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இஸ்ரோ,விண்வெளி ஆய்வு,நிலா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/hkgbkfco/Isro-naryaanan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/hkgbkfco/Isro-naryaanan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2>இஸ்ரோவின் இலக்கு</h2><p>இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையத்தை 2035-ம் ஆண்டுக்குள் அமைப்பதற்கும், 2040-ம் ஆண்டுக்குள் இந்திய ராக்கெட் மூலம் இந்தியரை நிலவுக்கு அனுப்புவதற்கும் இஸ்ரோ இலக்கு நிர்ணயித்து தீவிரமாக பணியாற்றி வருகிறது என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-இந்தியாவை வருகிற 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி அமைப்புகளுக்கு இடையே வலுவான ஒத்துழைப்பு அவசியம். ஆராய்ச்சிகள் வெறும் கட்டுரைகளாக மட்டும் நின்றுவிடாமல், சமூகத்திற்கு பயன் தரும் தொழில்நுட்பங்களாகவும், காப்புரிமைகளாகவும், தயாரிப்புகளாகவும் மாற வேண்டும்.</p> <h2>மீனவர்களுக்கு வருமானம்</h2><p>இஸ்ரோவின் பங்களிப்புகளாக, தொலைதொடர்பு, வானிலை முன்னறி விப்பு, பேரிடர் மேலாண்மை, விவசாயம், மீன்வளம், நீர் வளங்கள் மற் றும் எல்லை பாதுகாப்பு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட துறைகளுக்கு இஸ்ரோவின் செயற்கைக்கோள்கள் ஆதரவளித்து வருகிறது.குறிப்பாக செயற்கைக்கோள் மூலம் வழங்கப்படும் ஆலோசனைகள் மீனவர்களின் வருமானத்தை மேம்படுத்த உதவியுள்ளது.தொடக்கத்தில் பல்வேறு சவால்கள் இருந்தபோதிலும், இந்தியா உள்நாட் டிலேயே 'கிரையோஜெனிக்' தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளது.</p><h2>மீனவர்களுக்கு வருமானம்</h2><p>இஸ்ரோவின் பங்களிப்புகளாக, தொலைதொடர்பு, வானிலை முன்னறி விப்பு, பேரிடர் மேலாண்மை, விவசாயம், மீன்வளம், நீர் வளங்கள் மற்றும் எல்லை பாதுகாப்பு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட துறைகளுக்கு இஸ்ரோவின் செயற்கைக்கோள்கள் ஆதரவளித்து வருகிறது.குறிப்பாக செயற்கைக்கோள் மூலம் வழங்கப்படும் ஆலோசனைகள் மீனவர்களின் வருமானத்தை மேம்படுத்த உதவியுள்ளது.தொடக்கத்தில் பல்வேறு சவால்கள் இருந்தபோதிலும், இந்தியா உள்நாட் டிலேயே 'கிரையோஜெனிக்' தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளது.</p><h2>104 செயற்கைக்கோள்</h2><p>ஏவுதல் திறன்களுக்காக சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளதை யும் அவர் நினைவுகூர்ந்தார். 'சந்திரயான்' திட்டம் மற்றும் ஒரே பயணத் தில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது போன்றவை இஸ்ரோவின் முக்கிய மைல்கற்கள் ஆகும்.மாணவர்களுக்கு கூட்டு ஆராய்ச்சி, பயிற்சிகள் மற்றும் புதிய கண்டுபிடிப் புகளை உருவாக்குவதற்கான அதிக வாய்ப்புகளை இஸ்ரோ வழங்கும்’ இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>தொடர் மழை: நெல்லை அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/continuous-rains-water-levels-in-nellai-dams-rise-sharply</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/continuous-rains-water-levels-in-nellai-dams-rise-sharply#comments</comments><guid isPermaLink="false">da45a909-218e-4457-8b09-316c815e40d1</guid><pubDate>Sun, 02 Aug 2026 04:31:33 +0000</pubDate><atom:updated>2026-08-02T04:31:33.541Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,பாபநாசம் அணை,Papanasam dam,குண்டாறு அணை,Gundaru Dam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/n47248iq/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ குண்டாறு அணை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/n47248iq/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான பாபநாசம், மணிமுத்தாறு, மாஞ்சோலை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. </p><p>156 அடியுடைய சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 2 நாட்களில் 27.20 அடி உயர்ந்து 103.97 அடியை எட்டியுள்ளது. 143 அடியுடைய பாபநாசம் அணையின் நீர்மட்டம் 2 நாட்களில் 9.90 அடி உயர்ந்து 73.30 அடியை எட்டியுள்ளது. கொடுமுடியாறு, கடனாநிதி, கருப்பாநதி, அடவிநயினார் உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.</p><p>இதைப்போல் 36.10 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை நிரம்பி வழிகிறது. இதனால் அணைக்கு வருகின்ற 120 கன அடி தண்ணீரும் அப்படியே திறந்து விடப்படுகிறது. தொடர் மழையால் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால், குடிநீர் தேவை பூர்த்தியடைவதுடன் விவசாயப் பணிகளும் தீவிரமடைந்துள்ளதால் பொதுமக்களும் விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>&quot;நல்ல மனமும், மக்கள் நல எண்ணமும் இருக்கும் இடத்தில் இயற்கையும் துணையாக நிற்கும்&quot; - அமைச்சர் கீர்த்தனா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nature-stands-as-an-ally-where-there-is-a-good-heart-and-a-concern-for-the-welfare-of-the-people-minister-keerthana</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nature-stands-as-an-ally-where-there-is-a-good-heart-and-a-concern-for-the-welfare-of-the-people-minister-keerthana#comments</comments><guid isPermaLink="false">d4ee9960-4b35-44ff-a675-70e3de3f23a2</guid><pubDate>Sun, 02 Aug 2026 04:28:35 +0000</pubDate><atom:updated>2026-08-02T04:28:35.757Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கீர்த்தனா,அமைச்சர் கீர்த்தனா,Minister Keerthana,Keerthana</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/jyqsbz84/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/jyqsbz84/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இடையே, காவிரி நீர் பங்கீடு தொடர்பாக பல ஆண்டுகளாக சிக்கல் நீடித்து வருகிறது. எனினும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தமிழகத்திற்கு உரிய நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது.</p><h2>டெல்லியில் கூட்டம்</h2><p>சமீபத்தில் இதுதொடர்பாக, டெல்லியில் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டம் நடந்தது. இதில் தமிழகம், கர்நாடக நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் காவிரியில் இருந்து ஜூலை 29-ந்தேதி முதல் தினமும் 3,500 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகாவுக்கு காவிரி நீர் முறைப்படுத்தும் குழு உத்தரவிட்டது.</p><p>ஆனால், தமிழகத்திற்கு காவிரியில் இருந்து கர்நாடக அரசு தண்ணீரை திறந்துவிடவில்லை. கர்நாடகாவில் நீர் தேவை அதிகமாக இருப்பதால் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழகத்திற்கு </a>தண்ணீர் திறந்துவிடும் சூழ்நிலை தற்போது இல்லை என அம்மாநில அரசு கூறியது. தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறக்குமாறு காவிரி நீர் முறைப்படுத்தும் குழு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில், கர்நாடக அரசு முறையீடு செய்தது.</p><h2>ஆணையம் உத்தரவு</h2><p>ஆனால், தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க வேண்டும் என்று காவிரி நீர் முறைப்படுத்தும் குழு பிறப்பித்த உத்தரவை காவிரி மேலாண்மை ஆணையமும் உறுதிப்படுத்தியது. இதன்படி, தமிழகத்திற்கு தினமும் 3,500 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.</p><p>இந்த நிலையில், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மொத்தம் 84 அடி நீர்மட்டம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் தற்போது 81.95 அடியாக உள்ளது. கபினி அணை முழுக்கொள்ளளவை எட்டுவதால், தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீரின் அளவு, விநாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.</p><h2>இயற்கை யாருக்கும் சொந்தமல்ல</h2><p>இதுபற்றி கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, கர்நாடகாவில் அணைகள் நிரம்புகின்றன. இதனால், உபரி நீரை திறந்து விடுவதுதான் நல்லது. இயற்கை யாருக்கும் சொந்தமல்ல என்று கூறினார்.</p><p>இந்த நிலையில், "நல்ல மனமும், மக்கள் நல எண்ணமும் இருக்கும் இடத்தில் இயற்கையும் துணையாக நிற்கும்” என தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>இயற்கையின் ஆசீர்வாதம்</h2><p>இயற்கையின் அருள் எப்போதும் மக்களின் நலனுக்கே துணை நிற்கிறது. கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழையால், காவிரியில் நீர்வரத்து அதிகரித்து, டெல்டா விவசாயிகளின் பாசனத் தேவைகள் பூர்த்தியாகும் சூழல் உருவாகியுள்ளது.</p><p>எத்தனை இடையூறுகளும், எத்தனை தடைகளும் வந்தாலும், மக்களின் நலனையே சிந்திக்கும் நம் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அண்ணனிளின் நல்ல மனதிற்கு இயற்கையே துணை நிற்கிறது. மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒவ்வொரு நல்ல முயற்சிக்கும் இயற்கையின் ஆசீர்வாதம் என்றும் இருப்பதை இந்த நிகழ்வு மீண்டும் ஒருமுறை உணர்த்துகிறது.</p><h2>இயற்கையும் துணை நிற்கும்</h2><p>இதன் மூலம் காவிரி டெல்டா <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விவசாயிகளின் </a>குறுவை, சம்பா சாகுபடிகள் செழித்து வளர்ந்து, விவசாயிகளின் இல்லங்களில் வளமும் மகிழ்ச்சியும் பெருக இறைவனை மனமார வேண்டுகிறேன்.</p><p>"நல்ல மனமும், மக்கள் நல எண்ணமும் இருக்கும் இடத்தில் இயற்கையும் துணையாக நிற்கும்."</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விடுமுறை தினம்: திருச்செந்தூர் கோவிலில் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-devotees-wait-4-hours-at-tiruchendur-temple-to-have-darshan-of-lord-shiva</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-devotees-wait-4-hours-at-tiruchendur-temple-to-have-darshan-of-lord-shiva#comments</comments><guid isPermaLink="false">6e581ee7-5045-4b06-a4bc-3dc76a99d30b</guid><pubDate>Sun, 02 Aug 2026 04:15:26 +0000</pubDate><atom:updated>2026-08-02T04:15:26.493Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பக்தர்கள்,Devotees,Holiday,திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்,சாமி தரிசனம்,விடுமுறை தினம்,Sami Darshan,Tiruchendur Subramania Swamy Temple</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/o2aqwww7/tiruchendhur-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/o2aqwww7/tiruchendhur-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>ஆன்மிகம் (Devotional)</category><content:encoded><![CDATA[ <p>திருச்செந்தூர்,</p><p>முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாகவும், ஆன்மீக, சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவில் கடற்கரை அருகில் அமைந்துள்ளதாலும் நாள் தோறும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.</p><h2>சாமி தரிசனம்</h2><p>இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். அவர்கள் அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.</p><h2>போக்குவரத்து நெரிசல்</h2><p>பக்தர்கள் வாகனங்கள் வருகையால் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">திருச்செந்தூர் </a>நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வாகனங்கள் தெப்பக்குளம் அருகில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் சாலையில் இரு பக்கமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஞாயிறு விடுமுறை நாளான இன்று வழக்கம் போல் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>
தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீரின் அளவு 9,958 கன அடியாக சரிவு
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-released-to-tamil-nadu-drops-to-9958-cusecs</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-released-to-tamil-nadu-drops-to-9958-cusecs#comments</comments><guid isPermaLink="false">974ea765-8f6b-4681-90e4-afeddfb0a28c</guid><pubDate>Sun, 02 Aug 2026 04:10:31 +0000</pubDate><atom:updated>2026-08-02T04:10:31.153Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழ்நாடு,water release,கன அடி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/1jtea1tc/tncrd.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/1jtea1tc/tncrd.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>ஒகேனக்கல்</p><p>தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீரின் அளவு 25,000 கன அடியில் இருந்து 9,958 கன அடியாக சரிவடைந்துள்ளது.</p><p>கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இடையே, காவிரி நீர் பங்கீடு தொடர்பாக பல ஆண்டுகளாக சிக்கல் நீடித்து வருகிறது.  எனினும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தமிழகத்திற்கு உரிய நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது.</p>  <h2>டெல்லியில் கூட்டம்</h2><p>சமீபத்தில் இதுதொடர்பாக, டெல்லியில் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டம் நடந்தது.  இதில் தமிழகம், கர்நாடக நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் காவிரியில் இருந்து ஜூலை 29-ந்தேதி முதல் தினமும் 3,500 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகாவுக்கு காவிரி நீர் முறைப்படுத்தும் குழு உத்தரவிட்டது.</p><p>ஆனால், தமிழகத்திற்கு காவிரியில் இருந்து கர்நாடக அரசு தண்ணீரை திறந்துவிடவில்லை.  கர்நாடகாவில் நீர் தேவை அதிகமாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் சூழ்நிலை தற்போது இல்லை என அம்மாநில அரசு கூறியது.  தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறக்குமாறு காவிரி நீர் முறைப்படுத்தும் குழு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில், கர்நாடக அரசு முறையீடு செய்தது.</p>  <p>ஆணையம் உத்தரவு</p><p>ஆனால், தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க வேண்டும் என்று காவிரி நீர் முறைப்படுத்தும் குழு பிறப்பித்த உத்தரவை காவிரி மேலாண்மை ஆணையமும் உறுதிப்படுத்தியது.  இதன்படி, தமிழகத்திற்கு தினமும் 3,500 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.</p><p>இந்த நிலையில், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.  மொத்தம் 84 அடி நீர்மட்டம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் தற்போது 81.95 அடியாக உள்ளது.  கபினி அணை முழுக்கொள்ளளவை எட்டுவதால், தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீரின் அளவு, விநாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.</p>  <p>உபரி நீர் திறப்பு</p><p>இந்த சூழலில், தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீரின் அளவு 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைக்கப்பட்டு உள்ளது.  இதன்படி, தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீரின் அளவு இன்று காலை 9,958 கன அடியாக சரிந்துள்ளது.</p><p>இதுபற்றி கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, கர்நாடகாவில் அணைகள் நிரம்புகின்றன.  இதனால், உபரி நீரை திறந்து விடுவதுதான் நல்லது.  இயற்கை யாருக்கும் சொந்தமல்ல என்று கூறினார்.</p><p>இந்த நிலையில், கர்நாடகாவில் முதல்-மந்திரி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடைபெறுகிறது.  அதில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் தாழ்வு: படகு சேவை தற்காலிக நிறுத்தம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sea-water-level-drops-in-kanyakumari-boat-service-temporarily-suspended</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sea-water-level-drops-in-kanyakumari-boat-service-temporarily-suspended#comments</comments><guid isPermaLink="false">a7fa1771-59f1-447e-ac75-d7b7b7ce333b</guid><pubDate>Sun, 02 Aug 2026 03:55:32 +0000</pubDate><atom:updated>2026-08-02T03:55:32.347Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,சுற்றுலா பயணிகள்,Kanyakumari,tourist,படகு சேவை,Boat Service</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/624sxnln/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/624sxnln/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி,</p><p>வார விடுமுறை நாளான இன்று, சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் திடீரென கடல் நீர்மட்டம் கணிசமாகக் குறைந்து, கடல் உள்வாங்கியது. இதன் காரணமாக, கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை மற்றும் புதிதாக திறக்கப்பட்ட கண்ணாடி கூண்டு பாலம் ஆகியவற்றுக்கான சுற்றுலாப் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.</p><h2>இயக்க முடியாத சூழல்..</h2><p>கன்னியாகுமரி கடற்பகுதியில் நிலவும் இந்தத் திடீர் இயற்கை மாற்றம் காரணமாக, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்குச் சொந்தமான படகுகளை படகுத் தளத்தில் இருந்து தடையின்றி இயக்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.</p><p>கடல் நீர்மட்டம் தாழ்வாக இருக்கும்போது படகுகளை இயக்கினால், அவை கடற்படுகையில் உள்ள பாறைகளிலோ அல்லது மணல் திட்டுகளிலோ மோதி சேதமடைய வாய்ப்புள்ளது. பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, படகு சேவை உடனடியாக ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் அறிவித்தனர்.</p><h2>சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்..</h2><p>வார விடுமுறையை முன்னிட்டு விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை நேரில் கண்டு ரசிப்பதற்காகப் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு திரண்டிருந்தனர்.</p><p>ஆனால் படகு சேவை நிறுத்தப்பட்டால், அவர்கள் கடற்கரையிலிருந்தே <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சிலைகளைப் </a>பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சூழல் ஏற்பட்டது.</p><p>கடல் மட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியதும், எவ்வித தாமதமும் இன்றி சுற்றுலா பயணிகளுக்கு படகு சேவை மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவியை விமானத்தில் அழைத்துச்சென்ற ஆசிரியை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/teacher-takes-government-school-girl-who-scored-highest-in-public-exam-on-plane</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/teacher-takes-government-school-girl-who-scored-highest-in-public-exam-on-plane#comments</comments><guid isPermaLink="false">30322723-f510-4cfe-af11-47758eb2d82c</guid><pubDate>Sun, 02 Aug 2026 03:45:23 +0000</pubDate><atom:updated>2026-08-02T03:45:23.172Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>plane,student,ஆசிரியை,Government School,female teacher,விமான பயணம்,அரசு பள்ளி மாணவி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/42exfvg6/103.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/42exfvg6/103.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாகர்கோவில்,</p><p>அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்த அரசுப் பள்ளி மாணவியை, அவருடைய ஆசிரியை விமானத்தில் அழைத்துச்சென்று அசத்தினார்.</p><h2>பள்ளி மாணவி</h2><p>நாகர்கோவில் அனந்தநாடார்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை தாவரவியல் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் மலர்விழி. இவர் கடந்த கல்வி ஆண்டின் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வின்போது மாணவ- மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக தான் பயிற்றுவித்த தாவரவியல் பாடத்துடன் இணைந்த உயிரியல் பாடத்தில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெறும் மாணவரை, தனது சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் செல்வதாக வாக்குறுதி அளித்திருந்தார். ஆசிரியரின் இந்த ஊக்கத்தைப் பயன்படுத்தி சிறப்பாகப் படித்த மாணவி மகிழா, பொதுத் தேர்வில் 90 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். இவர் 600-க்கு 524 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். தற்போது இவர் கல்லூரியில் என்ஜினீயரிங் படிப்பை தொடர இருக்கிறார்.</p><h2>விமான பயணம்</h2><p>இதற்கிடையே ஆசிரியை மலர்விழி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மாணவி மகிழாவை விமானத்தில் அழைத்துச் செல்ல முடிவு செய்தார். அதன்படி கடந்த மாதம் 23-ந்தேதி ஆசிரியை மலர்விழி, மாணவி மகிழாவை நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு அழைத்துச் சென்றார். பின்னர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து ஐதராபாத்துக்கு விமானத்தில் மாணவியை அழைத்துச் சென்றார். அங்கிருந்து சென்னைக்கு மற்றொரு விமானத்தில் மாணவியை அழைத்து வந்தார். மாணவியின் கனவாக இருந்த விமானப் பயணத்தை ஆசிரியை மலர்விழி தான் அளித்த வாக்குறுதி மூலமாக நிறைவேற்றியது அவரை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது. பின்னர் அங்கிருந்து ரெயிலில் ஏ.சி. பெட்டியில் ஆசிரியையும், மாணவியும் பயணித்து 26-ந்தேதி நாகர்கோவில் வந்தடைந்தனர்.</p><h2>பாராட்டு</h2><p>ஆசிரியை மலர்விழி இதற்கு முன்பு மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியபோது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு செயல்பாடுகளில் சிறப்பாகப் பங்காற்றிய 4 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்களை டெல்லிக்கு விமானத்தில் அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது. அரசு பள்ளி மாணவர்களின் திறனை வெளிக்கொணர தொடர்ந்து பல்வேறு ஊக்க நடவடிக்கைகளை எடுத்து வரும் ஆசிரியையின் இந்த செயலை தலைமை ஆசிரியர் ஐரிஷ் லிண்ட், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெரிதும் பாராட்டினர்.</p><h2>மாணவி நெகிழ்ச்சி</h2><p>விமானப் பயணம் மேற்கொண்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF">அரசு பள்ளி மாணவி</a> மகிழா, கடந்த சில தினங்களுக்கு முன்பு காலைநேர கூடுகையின்போது பள்ளிக்கு வந்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>என்னை விமானத்தில் அழைத்துச் செல்வதாக ஆசிரியை என்னிடம் தகவல் தெரிவித்ததும் எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. நான் முதன்முதலாக விமானத்தில் இப்போதுதான் பயணம் செய்திருக்கிறேன். மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்குகூட கிடைக்காத வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதற்காக ஆசிரியை மலர்விழிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>காதர் மொகிதீன் மகன் மறைவுக்கு முதல்-அமைச்சர் விஜய் இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-condoles-the-death-of-kader-mohideens-son</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-condoles-the-death-of-kader-mohideens-son#comments</comments><guid isPermaLink="false">f7093ffc-9f58-4724-acbd-ecc23113b8fd</guid><pubDate>Sun, 02 Aug 2026 03:23:40 +0000</pubDate><atom:updated>2026-08-02T03:23:40.976Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,kader mohideen,CM Vijay,காதர் மொகிதீன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/blpuay6h/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/blpuay6h/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><p>இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர்  பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனின் மூத்த மகன் மருத்துவர் கே.எம்.கே.கலீலூர் ரஹ்மான் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து  மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.</p><p>தனது அன்பு மகனை இழந்து தவிக்கும் பேராசிரியர்  கே.எம்.காதர் மொகிதீனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தின் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item></channel></rss>