<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 12 Sep 2026 14:25:12 +0000</lastBuildDate><item><title>கோடை வெப்பத்தால் அதிகரிக்கும் மின் தேவை: கூடுதலாக 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கொள்முதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rising-electricity-demand-due-to-summer-heat-additional-2000-mw-of-power-procured</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rising-electricity-demand-due-to-summer-heat-additional-2000-mw-of-power-procured#comments</comments><guid isPermaLink="false">c7b34abb-fb17-46c9-83bb-d3cfeb40485c</guid><pubDate>Sat, 12 Sep 2026 14:22:17 +0000</pubDate><atom:updated>2026-09-12T14:22:17.411Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,தமிழ்நாடு மின்சார வாரியம்,Electricity Board,மின்சார வாரியம்,மின் தேவை,summer heat,கோடை வெப்பம்,Power Consumption,மின்சாரம் கொள்முதல்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/y6t03bwo/kler.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/y6t03bwo/kler.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>நீடித்த கோடை வெப்பத்தால் அதிகரிக்கும் மின் தேவையை சமாளிக்க கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. </p><h2>மின்சாரம் கொள்முதல்</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>இந்த ஆண்டு கோடைக்காலம் எதிர்பாராத வகையில் நீடித்ததன் காரணமாக, மின்சாரத் தேவையும் அதிகரித்துள்ளது. அதேவேளையில் காற்றின் வேகம் குறைந்ததால் காற்றாலை மின் உற்பத்தியும் எதிர்பார்த்த அளவிற்கு கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக சில நேரங்களில் மின்னழுத்தக் குறைபாடு போன்ற தொழில்நுட்ப பிரச்சினைகள் ஏற்பட்டன.</p><p>இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மின்சார வாரியம் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வெளிச்சந்தையில் இருந்து கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. </p><h2>சிறப்புக் குழுக்கள்</h2><p>இதன் மூலம் தற்போது மின் தொகுப்பின் (Grid) நிலமை சீராகவும், நம்பகத்தன்மையுடனும் உள்ளது. மேலும், மின் கட்டமைப்பு மாறுபாடுகள் மற்றும் மின் விநியோக நிலைமையை தொடர்ந்து மின்வாரிய தலைமையகத்தில் உயர்மட்ட அலுவலர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து, உடனுக்குடன் உரிய உத்தரவுகள் வழங்கி வருகிறது.</p><p>மின்விநியோக பாதிப்புகளை உடனடியாக சரிசெய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் சிறப்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, மின்தடை ஏற்பட்ட பகுதிகளில் உடனடியாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு மின்விநியோகம் சீரமைக்கப்பட்டு வருகிறது.</p><h2>தடையற்ற மின்சார விநியோகம்</h2><p>மின்தடை ஏற்படும் நிகழ்வுகளை எந்தவித அலட்சியமும் இன்றி உடனடியாக சரிசெய்ய வேண்டும் என களப்பணியில் உள்ள அனைத்து அலுவலர்களுக்கும் ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.</p><p>பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு. வழக்கமான பராமரிப்புப்பணிகளுக்காக திட்டமிடப்பட்ட மின்தடைகளை இயன்றவரை தவிர்க்கவும் களப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>பொதுமக்களுக்கு நாள் முழுவதும் குறிப்பாக இரவு நேரங்களிலும், சீரான, நம்பகமான மற்றும் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் தொடர்ந்து விழிப்புடன் செயல்பட்டு வருகிறது.</p><p>மேலும், மின் நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் மின்சாரத்துறை சார்ந்த புகார்களுக்கு, 24 மணி நேரமும் இயங்கும் நுகர்வோர் சேவை மையமான 'மின்னகம்'  94987 94987" என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>நெல்லை: விநாயகர் பிரியாணி சமைப்பது போன்று வைக்கப்பட்ட விளம்பர பேனரால் அதிர்ச்சி

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-shock-over-vinayagar-biryani-ad-banner</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-shock-over-vinayagar-biryani-ad-banner#comments</comments><guid isPermaLink="false">d3a489dc-ee5d-47b1-bd82-1c69fe5d5f68</guid><pubDate>Sat, 12 Sep 2026 14:22:02 +0000</pubDate><atom:updated>2026-09-12T14:22:02.878Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,கிரைம் செய்தி,நெல்லை,Nellai,Ganesh Chaturthi,விநாயகர் சதுர்த்தி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/kefowzi0/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/kefowzi0/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>     நெல்லை,</p><p>நெல்லையில் இந்து மதக்கடவுள் விநாயகர் பிரியாணி சமைப்பது போன்று ஓட்டலில் விளம்பர பேனர் வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p> <p>நெல்லை மாவட்டம் வி.எம்.சத்திரத்தில் அசைவ ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலில் இந்து மதப்பண்டிகையான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">விநாயகர் சதுர்த்தி</a> பண்டிகையொட்டி அரபிக் ஸ்டைல் சிக்கன் பிரியாணி சலுகை விலையில் வழங்கப்படுவதாக விளம்பர பேனர் வைக்கப்பட்டிருந்தது.</p> <h2>விநாயகர் பிரியாணி சமைப்பது போன்று வைக்கப்பட்ட விளம்பர பேனர்</h2><p>அந்த  விளம்பர பேனரில் இந்து மதக்கடவுள் விநாயகர் பிரியாணி சமைப்பது போன்ற படம் இடம்பெற்றிருந்தது. இந்த விளம்பரம் இந்து மதத்தினரின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பிரியாணி கடையில் இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்றினர்.</p><p>அதேவேளை, ஓட்டல் உரிமையாளர் வேற்று மதத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியான நிலையில் அவரது பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீசார் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>கண்ணியம் என்பது திமுகவின் மேடைகளில் வெறும் வெற்று முழக்கம்தானா? - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-dignity-merely-an-empty-slogan-on-dmk-platforms-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-dignity-merely-an-empty-slogan-on-dmk-platforms-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">88c4619f-e70b-42dd-9730-a1580df60b25</guid><pubDate>Sat, 12 Sep 2026 14:20:30 +0000</pubDate><atom:updated>2026-09-12T14:20:30.699Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore MP,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/7avn5y10/manickam-tagore.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/7avn5y10/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கண்ணியம் என்பது திமுகவின் மேடைகளில் வெறும் வெற்று முழக்கம்தானா? என்று <a href="https://www.dailythanthi.com/topic/manickam-tagore">மாணிக்கம் தாகூர்</a> எம்.பி. கேள்வி எழுப்பினார்.</p><p>தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>பொதுமேடைகளில் வரம்பு மீறும் திமுக</h2><p>திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுவெளியிலும் தொண்டர்கள் கூட்டத்திலும் "அரசியல் களத்தில் யாரை விமர்சித்தாலும் கண்ணியத்தோடும் நாகரிகத்தோடும் பேசுங்கள்" என்று உபதேசம் செய்கிறார். ஆனால் எதார்த்த களத்தில் நடப்பதோ அதற்கு முற்றிலும் நேர்மாறாக இருக்கிறது.</p><p>முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் ஆர்.எஸ்.பாரதி போன்ற மூத்த உறுப்பினர்கள் பொதுமேடைகளில் வரம்பு மீறி, முதல்-அமைச்சர் விஜய்யை ஒருமையில் விளிப்பதும், "ஓடுகாலி நாய்" எனத் தரம் கெட்ட வன்மச் சொற்களைப் பயன்படுத்துவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசியல் களத்தில் கொள்கை ரீதியான முரண்பாடுகளும் கருத்து மோதல்களும் இருப்பது இயல்புதான்; ஆனால் ஒரு மாநிலத்தின் முதல்-அமைச்சரை நோக்கி தனிநபர் வன்மத்தையும், அநாகரிகமான வசவுகளையும் வீசுவது ஒட்டுமொத்த ஜனநாயக மாண்புகளுக்கு விடுக்கப்படும் பெரும் அச்சுறுத்தல். கட்சித் தலைவரின் குடும்பம் முதல் முக்கிய நிர்வாகிகள் வரை இந்த எல்லை மீறல்களைத் தொடர்ந்து அரங்கேற்றுவதை திமுக தலைமை கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏன்?</p><h2>வீழ்ச்சிக்கான அறிகுறி</h2><p>மக்கள் தீர்ப்பை மதிக்காமல் மாநில முதல்-அமைச்சரையே பொதுமேடைகளில் ஒருமையில் இழிவுபடுத்துவது, பெண்களுக்கு எதிரான தொடர் அவமதிப்புகள் மீது தன் கட்சிக்குள் உரிய நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காப்பது, அதிகாரத்தை இழந்த விரக்தியில் பொதுவெளியில் தரம் தாழ்ந்து கூச்சலிடுவது என திமுக இன்று தன் நம்பகத்தன்மையை இழந்து மூழ்கும் கப்பலாக மாறிக் கொண்டிருக்கிறது.</p><p>பொது அமைதியையும் அரசியல் நாகரிகத்தையும் சீர்குலைக்கும் வகையில் முன்னாள் அமைச்சர்களும் நிர்வாகிகளும் இப்படி நாவடக்கமின்றிப் பேசுவதை திமுகவின் தலைமை கண்டும் காணாமல் இருப்பது அவர்களின் வீழ்ச்சிக்கான தெளிவான அறிகுறி. அரசியல் களம் மக்கள் நலனுக்கான ஆரோக்கியமான விவாதக் களமாக இருக்க வேண்டுமே தவிர, இத்தகைய நாகரிகமற்ற தனிநபர் வசவுகளுக்கான கூடாரமாக ஒருபோதும் மாறக்கூடாது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் பெண்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாக புகார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/complaint-alleging-police-assault-on-women-at-the-chennai-rk-nagar-police-station</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/complaint-alleging-police-assault-on-women-at-the-chennai-rk-nagar-police-station#comments</comments><guid isPermaLink="false">2878ea0f-4ac6-478f-b2b8-bca8dd29159e</guid><pubDate>Sat, 12 Sep 2026 14:08:24 +0000</pubDate><atom:updated>2026-09-12T14:08:24.287Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/387gyxiv/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/387gyxiv/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>சென்னை ஆர். கே நகர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நபர்களை பார்ப்பதற்காக ஆர்.கே.நகரில் வசித்து வரும் வள்ளி அவரது மகள் உள்ளிட்டோர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது போலீசார் அவர்களை மிரட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. </p><p>பெண்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலை வீடியோ எடுத்த மற்றொரு பெண்ணின் செல்போனை போலீசார் பறித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு காவல்துறை தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், குற்றவாளிகள் மீது கைது நடவடிக்கை எடுக்க விடாமல் பெண்கள் தடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் ஆர்.கே.நகர் காவல் நிலைய வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. </p>]]></content:encoded></item><item><title>தாராபுரம்: தகராறில் அரிவாள் வெட்டில் துண்டான கையுடன் ஆஸ்பத்திரிக்கு வந்த தொழிலாளி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dharapuram-worker-hand-severed-in-coconut-cutting-dispute</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dharapuram-worker-hand-severed-in-coconut-cutting-dispute#comments</comments><guid isPermaLink="false">bf9f0187-3d13-411a-b023-53ea5db40918</guid><pubDate>Sat, 12 Sep 2026 14:05:00 +0000</pubDate><atom:updated>2026-09-12T14:05:00.970Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தொழிலாளி,hospital,ஆஸ்பத்திரி,தாராபுரம்,Agricultural Workers,கை,அரிவாள்வெட்டு,Dharapuram</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/xh71gn78/muniyandi.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ முனியாண்டி]]></media:title><media:description type="html"><![CDATA[ தாராபுரம்: தகராறில் அரிவாள் வெட்டில் துண்டான கையுடன் ஆஸ்பத்திரிக்கு வந்த தொழிலாளி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/xh71gn78/muniyandi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தாராபுரம், </p><p>திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தேங்காய் வெட்டும் வேலை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தொழிலாளியின் கை துண்டிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p> <h2>தோட்ட தொழிலாளி</h2><p>தாராபுரம் அடுத்த கவுண்டையன் வலசு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவருக்கு சொந்தமான தோட்டத்தில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள வெள்ளோடு பகுதியை சேர்ந்த ரஞ்சித் (வயது 32) என்பவர் கடந்த பல ஆண்டுகளாக தேங்காய் வெட்டும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.</p> <h2>அரிவாள் வெட்டு</h2><p>இந்த நிலையில் திண்டுக்கல் சேர்ந்த மாவட்டத்தைச் முனியாண்டி என்பவர் புதிதாக தேங்காய் வெட்டுவதற்காக ஈஸ்வரன் தோட்டத்திற்கு புதிதாக வருகை புரிந்தார். சம்பவத்தன்று தோட்டத்தில் தேங்காய் வெட்டும் வேலை தொடர்பாக ரஞ்சித்துக்கும், அங்கு புதிதாக வேலைக்கு வந்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முனியாண்டி என்பவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த ரஞ்சித் தன் கையில் வைத்திருந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D">அரிவாளை</a> எடுத்து முனியாண்டியின் கையை துண்டாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த முனியாண்டி வலி தாங்க முடியாமல் அலறியுள்ளார்.</p><h2>பிளாஸ்டிக் கவர்</h2><p> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">வெட்டுப்பட்ட</a> கையை பிளாஸ்டிக் கவரில் வைத்துக்கொண்டு உடனடியாக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். தாராபுரம் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாததால் துண்டான கையை ஐஸ் பேக்கில் வைத்து கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><h2>வழக்கு பதிவு</h2><p>இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு தொழிலாளிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவரின் கையை மற்றொருவர் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.</p> ]]></content:encoded></item><item><title>தொடர் விடுமுறை: போக்குவரத்து துறையால் செய்யப்பட்ட முன்னேற்பாடுகள், நடவடிக்கைகள் என்னென்ன..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/extended-holidays-what-arrangements-and-measures-have-been-taken-by-the-transport-department</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/extended-holidays-what-arrangements-and-measures-have-been-taken-by-the-transport-department#comments</comments><guid isPermaLink="false">53b6f197-3468-4937-bd87-faaeecd2d889</guid><pubDate>Sat, 12 Sep 2026 13:53:18 +0000</pubDate><atom:updated>2026-09-12T13:53:18.182Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,தமிழகம்,போக்குவரத்து,Transport Corporation,தொடர் விடுமுறை,Holidays,விநாயகர் சதுர்த்தி,முன்னேற்பாடுகள்,Vinayagar Chathurthi</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/h53a5j1c/bus.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/h53a5j1c/bus.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தொடர் விடுமுறை முன்னிட்டு போக்குவரத்து துறையால் செய்யப்பட்ட முன்னேற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.  </p><h2>விநாயகர் சதுர்த்தி</h2><p>இது தொடர்பாக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p><a href="https://www.dailythanthi.com/topic/vinayagar-chaturthi">விநாயகர் சதுர்த்தி</a> பண்டிகையை முன்னிட்டு 12.09.2026, 13.09.2026 மற்றும் 14.09.2026 ஆகிய மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், சென்னையிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் பயணம் மேற்கொள்வார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு. அவர்களின் பயணம் சிரமமின்றி அமையும் வகையில் போக்குவரத்துத் துறை சார்பில் மேற்கொள்ள வேண்டிய விரிவான முன்னேற்பாடுகள் தொடர்பாக, போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டம் 09.09.2026 அன்று நடைபெற்றது.</p><p>அக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்களால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலின்படி, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து வழக்கமாக இயக்கப்படும் 1,099 பேருந்துகளுடன், கூடுதலாக 1.255 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 2.351 பேருந்துகள் இயக்க தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.</p> <h2>கூடுதல் கட்டணம்</h2><p>அதன்படி, 11.09.2026 இரவு, இயக்க உத்தேசிக்கப்பட்ட 2,354 பேருந்துகளில், அன்றைய பயணிகளின் எண்ணிக்கை மற்றும் பயணத் தேவையின் அடிப்படையில் 2,213 பேருந்துகள் பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டன.</p><p>முன்னேற்பாடாக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மீதமுள்ள 141 பேருந்துகளில், 12.09.2026 காலை முதல் பயணிகளின் தேவைக்கேற்ப 41 பேருந்துகள் பல்வேறு மாவட்டங்களுக்கு தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன.</p><p>மேலும். தொடர் விடுமுறையை பயன்படுத்தி சில ஆம்னி பேருந்துகளில் நடைமுறையில் உள்ள கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகளிடமிருந்தும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் புகார்கள் பெறப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய சிறப்பு குழுக்கள் 10.09.2026 அன்று அமைக்கப்பட்டு உடனடியாக தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.</p> <h2>அபராதம்</h2><p>அதன்படி, 10.09.2026 முதல் 12.09.2026 அதிகாலை வரை தமிழ்நாடு முழுவதும் 2,379 ஆம்னி பேருந்துகள் தணிக்கை செய்யப்பட்டன. இத்தணிக்கையின் போது, பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளிடம் நேரடியாக பயணக் கட்டணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக கண்டறியப்பட்ட இடங்களில், அவ்வாறு வசூலிக்கப்பட்ட கூடுதல் தொகையை சம்பந்தப்பட்ட பயணிகளுக்கு திருப்பி வழங்குவதற்கான நடவடிக்கைகள் போக்குவரத்துத் துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டன.</p><p>இந்த சிறப்பு தணிக்கையின் போது. 400 ஆம்னி பேருந்துகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, அவற்றிற்கு தணிக்கை அறிக்கை மற்றும் இ-சலான் வழங்கப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களிடம் விளக்கம் கோரி அறிவிப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.</p><p>மேலும் விதிமீறல்களுக்காக ரூபாய்: 10.31,500/- இணக்கக் கட்டணம் (அபராதம்) நிர்ணயிக்கப்பட்டு. அதில் ரூபாய்.1,60,500/- உடனடியாக வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு தமிழ்நாட்டில் இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளிடமிருந்து தமிழ்நாட்டிற்கு செலுத்த வேண்டிய வரியாக ரூபாய்.15,33,220/- வசூலிக்கப்பட்டுள்ளது.</p> <h2>ஆன்லைன் மூலம் பதிவு</h2><p>மேலும், தகுதிச் சான்றிதழ் இல்லாமலும், உரிய சாலை வரி செலுத்தாமலும் இயக்கப்பட்ட 4 வெளிமாநில ஆம்னி பேருந்துகள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன. அப்பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளுக்கு உடனடியாக மாற்றுப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு, அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சிரமமின்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.</p><p>பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காலங்களில் பொதுமக்கள் எந்தவித சிரமமும் இன்றி பயணம் மேற்கொள்வதை உறுதி செய்யவும். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும். அனுமதி, வரி. தகுதிச் சான்றிதழ் உள்ளிட்ட விதிமீறல்களை கட்டுப்படுத்தவும். 16.09.2026 வரை தமிழ்நாடு முழுவதும் சிறப்பு வாகனத் தணிக்கையை தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ள போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>அவர்களால் ஆம்னி பேருந்துகளில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டு, வாகன உரிமையாளர்களால் ரத்து செய்யப்படும் நேர்வில், அப்பயணிகளுக்கு மாற்றுப்பேருந்தில் பயணம் செய்ய அந்த வாகன உரிமையாளர்கள் ஏற்பாடு செய்யவேண்டும். தவறும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட ஆம்னி பேருந்தின் அனுமதிச்சீட்டின் மீது மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.</p><p>மேலும். 10.09.2026 முதல் 16.09.2026 வரை பொதுமக்களின் தேவைக்கேற்ப பேருந்துகள் தங்குதடையின்றி இயக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பொது மேலாளர்கள் மற்றும் துணை மேலாளர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.</p><h2>நேரடி கண்காணிப்பு</h2><p>அத்துடன், தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய பேருந்து நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கையை தொடர்ந்து கண்காணித்து, தேவைக்கேற்ப கூடுதல் அரசு சிறப்பு பேருந்துகளை உடனுக்குடன் இயக்குவதற்கும் சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழகங்களின் மேலாண்மை இயக்குநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, அந்தந்த பகுதிகளின் பொது மேலாளர்கள். துணை மேலாளர்கள் மற்றும் பணிமனை மேலாளர்கள் பேருந்து நிலையங்களில் நேரடி கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>மேற்கண்ட அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்து கண்காணிக்கும் பொருட்டு. போக்குவரத்துத் துறை செயலாளர் மற்றும் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் ஆகியோர் நிலைமையை தொடர்ந்து ஆய்வு செய்து, அதன் விவரங்களை உடனுக்குடன் அளித்து வருகின்றனர்.</p><p>பொதுமக்களின் பாதுகாப்பான, சிரமமற்ற மற்றும் தடையற்ற பண்டிகைக்காலப் பயணத்தை உறுதி செய்ய போக்குவரத்துத் துறை சார்பில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை, கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளும் போக்குவரத்து துறையால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>18 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chance-of-rain-in-18-districts-until-10-pm</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chance-of-rain-in-18-districts-until-10-pm#comments</comments><guid isPermaLink="false">882d5ea1-d6f9-47fe-b24e-d77103ab778b</guid><pubDate>Sat, 12 Sep 2026 13:42:20 +0000</pubDate><atom:updated>2026-09-12T13:42:20.146Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,மழை,மழை செய்திகள்,Rain News,Rain Alert,மழை எச்சரிக்கை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/8y8ta54q/rain2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/8y8ta54q/rain2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><h2>18 மாவட்டங்களில் மழை</h2><p>இந்த நிலையில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழகத்தில் </a>18 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி திண்டுக்கல், கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், தேனி, அரியலூர், கோவை, தர்மபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, மதுரை, பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்திடம் அரிய ஓலைச்சுவடிகளை ஒப்படைத்த ஈரோடு விவசாயி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-farmer-hands-over-rare-palm-leaf-manuscripts-to-chennai-siddha-research-centre</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-farmer-hands-over-rare-palm-leaf-manuscripts-to-chennai-siddha-research-centre#comments</comments><guid isPermaLink="false">0f780eaa-9ec8-4082-8be2-e099ff8ae787</guid><pubDate>Sat, 12 Sep 2026 13:35:00 +0000</pubDate><atom:updated>2026-09-12T13:35:00.159Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,farmer,விவசாயி,Erode,ஈரோடு,Research,Siddha,சித்த மருத்துவம்,ஓலைச்சுவடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/sogfp8ay/palmleaves.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஜெகநாதன்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்திடம் அரிய ஓலைச்சுவடிகளை ஒப்படைத்த ஈரோடு விவசாயி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/sogfp8ay/palmleaves.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்திடம் அரிய ஓலைச்சுவடிகளை ஈரோடு விவசாயி ஒப்படைத்தார்.</p><h2>விவசாயி</h2><p>ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோவில் அருகே உள்ள பொன்னாண்டான்வலசு பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். விவசாயியான இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இவருடைய முன்னோர்கள் தங்களது வீட்டில் தலைமுறை தலைமுறையாக சில பண்டைய கால <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%93%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF">ஓலைச்சுவடிகளை</a> பாதுகாப்பாக வைத்து வந்துள்ளனர்.</p><h2>மருத்துவ குறிப்புகள்</h2><p>இந்த ஓலைச்சுவடிகளை ஜெகநாதன் பராமரித்து வந்ததோடு, அதில் இருந்த அரிய மருத்துவக் குறிப்புகள் சிலவற்றையும் அவ்வப்போது படித்து புரிந்து கொண்டுள்ளார். ஒரு கட்டத்தில், இந்த ஓலைச்சுவடிகளில் மனித குலத்திற்கு பயன்படக்கூடிய ஏராளமான ரகசிய மருத்துவ குறிப்புகள் இருப்பதை அவர் கண்டறிந்தார். </p><h2>சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம்</h2><p>இந்த அரிய தகவல்கள் தனக்கு மட்டுமே பயன்படாமல், உலக மக்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்று அவர் விரும்பினார். இதனையடுத்து, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D">சித்த மருத்துவ ஆராய்ச்சி</a> குழும அதிகாரிகளை ஜெகநாதன் தொடர்பு கொண்டு, தன்னிடம் உள்ள ஓலைச்சுவடிகள் குறித்த விபரங்களை தெரிவித்தார்.</p><h2>அரிய பொக்கிஷம்</h2><p>அவரது தகவலின் பேரில், அந்த ஓலைச்சுவடிகளை பெற்று ஆய்வு செய்த சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் வல்லுநர்கள், அதில் பழங்கால அரிய சித்த மருத்துவ முறைகள் அடங்கியிருப்பதை உறுதி செய்தனர். சுயநலமின்றி, மக்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த ஓலைச்சுவடிகளை அரசிடம்  விவசாயி ஜெகநாதன் ஒப்படைத்தார்.</p><p><strong>இது குறித்து சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தைச் சேர்ந்த அலுவலர் மாணிக்கவாசகம் கூறியதாவது:-</strong></p> <h2>பராமரிப்பு</h2><p>பொதுமக்கள் பலரும் இதுபோன்ற ஓலைச்சுவடிகளை முறையாக பராமரிக்க வேண்டும். தமிழ் மருத்துவத்தின் பாரம்பரிய சித்த மருத்துவ குறிப்புகள் ஓலைச்சுவடிகளில்தான் அதிகம் உள்ளன. நீங்கள் இதுபோன்ற ஓலைச்சுவடிகளை முறையாக பராமரிப்பது மட்டுமின்றி, அரிய மருத்துவ குறிப்புகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதாகவும் கூறியுள்ளீர்கள். </p> <h2>புத்தகம்</h2><p>சித்த மருத்துவம் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய பிரசாதம் ஆகும். இதுபோன்ற ஓலைச்சுவடிகளின் குறிப்புகளை புத்தகம் மற்றும் ஆன்லைன் போர்டல் மூலம் நாங்கள் வெளிப்படுத்தி வருகிறோம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம் இடைத்தேர்தல்:  ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்யும் தி.மு.க., த.வெ.க. வேட்பாளர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/maduranthakam-by-election-dmk-and-tvk-candidates-to-file-nomination-papers-on-the-same-day</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/maduranthakam-by-election-dmk-and-tvk-candidates-to-file-nomination-papers-on-the-same-day#comments</comments><guid isPermaLink="false">91c08439-acb0-400d-afcc-690703f5f9e3</guid><pubDate>Sat, 12 Sep 2026 13:15:00 +0000</pubDate><atom:updated>2026-09-12T13:15:00.344Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Tamilnadu,திமுக,DMK,தமிழகம்,இடைத்தேர்தல்,வேட்புமனு தாக்கல்,மதுராந்தகம்,candidates,Maduranthakam,வேட்பாளர்கள்,Nomination,byelection</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/15s4d0ki/koer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/15s4d0ki/koer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுவை தி.மு.க., த.வெ.க. வேட்பாளர்கள் ஒரேநாளில் தாக்கல் செய்ய உள்ளனர்.</p><h2>இடைத்தேர்தல்</h2><p>தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ந் தேதி தொடங்கியுள்ள நிலையில், இடைத்தேர்தலிலும் த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் ஆகிய கட்சிகள் இடையே 4 முனைப்போட்டி நிலவுகிறது. </p><p>இதில், நாம் தமிழர் கட்சியை தவிர, தேர்தல் களம் காணும் 3 கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன.  கடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்) ஆகிய 2 பேரும் தற்போது த.வெ.க. சார்பில் அதே தொகுதிகளில் களம் காண்கின்றனர். </p><h2>தி.மு.க., த.வெ.க.</h2><p>பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. சார்பில் ஐ.பரந்தாமன் (மதுராந்தகம்), எஸ்.சுகன்யா (தாராபுரம்) ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத் (மதுராந்தகம்), பானுமதி (தாராபுரம்) ஆகியோர் போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை நாளை (ஞாயிற்றுக்கிழமை) அறிவிக்க உள்ளது. இடைத்தேர்தல் என்ற போதிலும் கடுமையான போட்டி நிலவுவதால், வெற்றி பெற அரசியல் கட்சிகள் பல்வேறு வியூகம் வகுத்து வருகின்றன.</p><h2>வேட்புமனு தாக்கல்</h2><p>இந்நிலையில் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் த.வெ.க., தி.மு.க. வேட்பாளர்கள் செப்.15ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். இதன்படி த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேல், தி.மு.க. வேட்பாளர் பரந்தாமன் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் செப்.16ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. </p>]]></content:encoded></item><item><title>கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யும் தமிழக அரசு..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/procurement-of-an-additional-2000-mw-of-electricity-tamil-nadu-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/procurement-of-an-additional-2000-mw-of-electricity-tamil-nadu-government#comments</comments><guid isPermaLink="false">04c1f2b7-8ec5-497b-8823-ada57b6c6148</guid><pubDate>Sat, 12 Sep 2026 13:06:09 +0000</pubDate><atom:updated>2026-09-12T13:06:09.805Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,மின்சாரம்,electricity,Tamil Nadu Government,தமிழக அரசு,மின்வாரியம்,Electricity Board,தமிழ்நாடு மின்வாரியம்,Tamilnadu Electricity Board,மின்சாரம் கொள்முதல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/ulm9ntwk/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு மின்சார வாரியம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/ulm9ntwk/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>நீடித்த கோடை வெப்பத்தால் அதிகரிக்கும் மின் தேவையை சமாளிக்க கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.</p><h2>மின்சாரத் தேவை அதிகரிப்பு</h2><p>இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>இந்த ஆண்டு கோடைக்காலம் எதிர்பாராத வகையில் நீடித்ததன் காரணமாக, மின்சாரத் தேவையும் அதிகரித்துள்ளது. அதேவேளையில், காற்றின் வேகம் குறைந்ததால் காற்றாலை மின் உற்பத்தியும் எதிர்பார்த்த அளவிற்கு கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக சில நேரங்களில் மின்னழுத்தக் குறைபாடு போன்ற தொழில்நுட்ப பிரச்சினைகள் ஏற்பட்டன.</p><p>இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மின்சார வாரியம் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வெளிச்சந்தையில் இருந்து கூடுதலாக 2000 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் தற்போது மின் தொகுப்பின் (Grid) நிலைமை சீராகவும், நம்பகத்தன்மையுடனும் உள்ளது. மேலும், மின் கட்டமைப்பு மாறுபாடுகள் மற்றும் மின் விநியோக நிலைமையை தொடர்ந்து மின்வாரிய தலைமையகத்தில் உயர்மட்ட அலுவலர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து, உடனுக்குடன் உரிய உத்தரவுகள் வழங்கி வருகிறது.</p><h2>பணியாளர்களுக்கு அறிவுறுத்தல்</h2><p>மின்விநியோக பாதிப்புகளை உடனடியாக சரிசெய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் சிறப்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, மின்தடை ஏற்பட்ட பகுதிகளில் உடனடியாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு மின்விநியோகம் சீரமைக்கப்பட்டு வருகிறது.</p><p>மின்தடை ஏற்படும் நிகழ்வுகளை எந்தவித அலட்சியமும் இன்றி உடனடியாக சரிசெய்ய வேண்டும் என களப்பணியில் உள்ள அனைத்து அலுவலர்களுக்கும் ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, வழக்கமான பராமரிப்புப் பணிகளுக்காக திட்டமிடப்பட்ட மின்தடைகளை இயன்றவரை தவிர்க்கவும் களப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>விழிப்புடன் செயல்பட்டு வரும் மின்வாரியம்</h2><p>பொதுமக்களுக்கு நாள் முழுவதும், குறிப்பாக இரவு நேரங்களிலும், சீரான, நம்பகமான மற்றும் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்ய <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழ்நாடு </a>மின்சார வாரியம் தொடர்ந்து விழிப்புடன் செயல்பட்டு வருகிறது.</p><p>மேலும், மின் நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் மின்சாரத்துறை சார்ந்த புகார்களுக்கு, 24 மணி நேரமும் இயங்கும் நுகர்வோர் சேவை மையமான 'மின்னகம்' தை "94987 94987'' என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>செவிலியர் பணி நிரந்தரம்: வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு - டிடிவி தினகரன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/permanent-status-for-nurses-tvk-government-reneges-on-promise-ttv-dhinakaran-condemns-the-move</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/permanent-status-for-nurses-tvk-government-reneges-on-promise-ttv-dhinakaran-condemns-the-move#comments</comments><guid isPermaLink="false">2ea4fead-d848-47a8-b673-9089fa05af11</guid><pubDate>Sat, 12 Sep 2026 12:47:37 +0000</pubDate><atom:updated>2026-09-12T12:47:37.788Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,AMMK,அமமுக</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/qm5kc66r/ttv.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/qm5kc66r/ttv.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு என டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். </p><p>இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>செவிலியர்கள் பெரும் ஏமாற்றம்</h2><p>தமிழ்நாட்டில் காலியாக உள்ள 4,724 செவிலியர் பணியிடங்களை தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பாணைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.</p><p>தமிழகத்தில் 4.75 லட்சம் செவிலியர்கள் பதிவு செய்து அரசு வேலைக்காக காத்திருக்கும் நிலையில், அப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க அறிவிப்பாணையை வெளியிட்டிருக்கும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயல்பாடு அவர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>அரசாணையை ரத்து செய்க</h2><p>ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதியளித்த தவெக, ஆட்சிக்கு வந்த பிறகும் அவர்களை பணி நிரந்தரம் செய்யாமல், புதிதாக பணிக்கு எடுப்பவர்களையும் ஒப்பந்த அடிப்படையிலேயே நியமிக்க முற்படுவது கடும் கண்டனத்திற்குரியது.</p><p>எனவே, தற்காலிக அடிப்படையில் பணிநியமனம் செய்வதற்கான அறிவிப்பாணையை உடனடியாக ரத்து செய்துவிட்டு, அரசு மருத்துவமனைகளில் நிலவும் செவிலியர் காலிப்பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் பதிவுசெய்து காத்திருப்போரை கொண்டு நிரப்பிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையையும், <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழக </a>அரசையும் வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘ஜனநாயகத்தில் அநாகரிக அரசியல் ஒருபோதும் ஏற்புடையதல்ல’ - மாணிக்கம் தாகூர் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/uncivilized-politics-is-never-acceptable-in-a-democracy-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/uncivilized-politics-is-never-acceptable-in-a-democracy-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">14596d4a-bbec-4227-b7c5-938f6ae3a81c</guid><pubDate>Sat, 12 Sep 2026 12:38:14 +0000</pubDate><atom:updated>2026-09-12T12:38:14.887Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/3im707jx/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/3im707jx/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“அரசியல் நாகரிகத்தை அடியோடு குழிதோண்டிப் புதைத்து, பொதுவெளியில் தரம் தாழ்ந்த பேச்சுகளைப் பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கொள்கை முழக்கம் போடும் தி.மு.க.வின் எம்.பி. ஆ.ராசாவின் இந்த அருவருக்கத்தக்க போக்கு தலைகுனிவானது. </p><p>மக்கள் தீர்ப்பை இன்னும் ஏற்றுக்கொள்ள முடியாமல் விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு, மாற்றுக் கருத்துக்களைக் கூட எதிர்கொள்ள முதிர்ச்சியின்றி பெண்களையும், தாய்மையையும் கொச்சைப்படுத்துவது தங்களின் அப்பட்டமான பலவீனத்தையே காட்டுகிறது. தோல்வியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மனமில்லாமல், விரக்தி வரும்போதெல்லாம் பெண்களை குறிவைத்து தாக்குவதை தி.மு.க. வழக்கமாகக் கொண்டுள்ளது. உதயநிதி தொடங்கி இன்று வரை அக்கட்சியினர் அனைவரும் இதே மோசமான பாணியையே தொடர்ந்து பின்பற்றுகின்றனர்.</p><p>முதல்-அமைச்சர் விஜய் குறிப்பிட்ட 'ஆபாச நதி' என்று சொன்னது போல, தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள ஆ.ராசா எம்.பி. இன்று பேசிய பேச்சு அமைந்துள்ளது. அக்கட்சியினர் பெண்களைத் தொடர்ந்து இழிவாகப் பேசுவது சற்றும் குறைந்தபாடில்லை; பெண்களே தி.மு.க.வை முற்றிலுமாக நிராகரித்து வருவதற்குக் காரணம் இவர்களின் இந்த வக்கிர சிந்தனைதான்.</p><p>கருத்து மோதல்களை எதிர்கொள்ள முடியாமல், த.வெ.க. அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமாரின் தாயாரை குறிவைத்து இத்தகைய தரம் தாழ்ந்த தனிநபர் வசைபாடல்களையும் அச்சுறுத்தல்களையும் தொடுப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஜனநாயகத்தில் இந்த அநாகரிக அரசியல் ஒருபோதும் ஏற்புடையதல்ல.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-corporation-commissioner-reviews-precautionary-measures</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-corporation-commissioner-reviews-precautionary-measures#comments</comments><guid isPermaLink="false">8cbd2c7a-78a8-4752-865e-24947fe1438a</guid><pubDate>Sat, 12 Sep 2026 12:31:07 +0000</pubDate><atom:updated>2026-09-12T12:31:07.301Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,தமிழகம்,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,வடகிழக்கு பருவமழை,Northeast Monsoon,முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/s7ry4b3q/pp.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/s7ry4b3q/pp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, மணலி மற்றும் மாதவரம் மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.</p><p>இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>பெருநகர <a href="https://www.dailythanthi.com/topic/chennai">சென்னை</a> மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (12.09.2026) வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, மணலி மற்றும் மாதவரம் மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.</p><p>மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாதவரம் மண்டலம், வார்டு-24க்குட்பட்ட மாதவரம்-ரெட்ஹில்ஸ் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மற்றும் புழல் உபரிநீர் கால்வாயில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, ஶ்ரீ பாலாஜி நகர் 3ஆவது பிரதான சாலைப் பகுதியில் அம்பத்தூர் மற்றும் கொரட்டூர் ஏரியில் இருந்து வரும் உபரி நீர் கால்வாய் சேரும் பகுதியினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.</p><p>பின்னர், மணலி மண்டலம், வார்டு-18க்குட்பட்ட சி.பி.சி.எல். பாட்டில் பாலப் பகுதி மற்றும் ஆமுல்லாவயில் பாலப் பகுதியில் உள்ள புழல் உபரிநீர் கால்வாயினைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, ஆகாயத் தாமரைகள், செடிகள் மற்றும் தூவாரும் பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>இந்த ஆய்வுகளின்போது, மாநகராட்சி, சென்னை குடிநீர் வாரியம், நீர்வளத்துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட சேவைத் துறைகளின் அலுவலர்கள் உடனிருந்தனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்திக்கு சென்று திரும்ப மானாமதுரையில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-from-manamadurai-to-tambaram-for-vinayagar-chaturthi-and-return</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-from-manamadurai-to-tambaram-for-vinayagar-chaturthi-and-return#comments</comments><guid isPermaLink="false">ce2ea1a6-d1ba-4f8f-9878-441bfb69f1c6</guid><pubDate>Sat, 12 Sep 2026 12:16:23 +0000</pubDate><atom:updated>2026-09-12T12:16:23.040Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,சிறப்பு ரெயில்,தாம்பரம்,தெற்கு ரெயில்வே,Southern Railway,மானாமதுரை,Manamadurai,Special Train ​,Vinayagar Chaturthi,விநாயகர் சதுர்த்தி,Thambaram</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/vm4y3pwo/sumi.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/vm4y3pwo/sumi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>விநாயகர் சதுர்த்திக்கு சென்று திரும்ப மானாமதுரையில் இருந்து தாம்பரத்திற்கு முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரெயில் இயக்கப்படுகிறது. </p><h2>தெற்கு ரெயில்வே</h2><p>இது தொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/topic/southern-railway">தெற்கு ரெயில்வே</a> வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p>விநாயகர் சதுர்த்திக்கு சென்று திரும்பும் பயணிகள் வசதிக்காக மானாமதுரையில் இருந்து தாம்பரத்திற்கு முன்பதிவில்லாத மெமு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. </p><p>மானாமதுரையில் இருந்து வரும் 14-ந் தேதி மதியம் 2.30 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரெயில் அன்று இரவு 11.55 மணிக்கு தாம்பரத்தை வந்தடைகிறது.</p><p>12 பெட்டிகளை கொண்ட இந்த மெமு ரெயில், திருபுவனம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, அம்பாத்துறை, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம்,  செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>ராசிபுரம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 4 இளைஞர்கள் படுகாயம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/terrible-accident-in-which-two-wheelers-collide-head-on-near-rasipuram-4-youths-seriously-injured</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/terrible-accident-in-which-two-wheelers-collide-head-on-near-rasipuram-4-youths-seriously-injured#comments</comments><guid isPermaLink="false">0cfaac0b-9b5c-4cd0-94b1-c29740d796e6</guid><pubDate>Sat, 12 Sep 2026 12:13:40 +0000</pubDate><atom:updated>2026-09-12T12:13:40.697Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,hospital,bike accident,மோதி விபத்து,போலீசார் விசாரணை,இரு சக்கர வாகனம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/bibikh4x/11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மோதிய இரு சக்கர வாகனங்கள்
]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/bibikh4x/11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல்,</p><p>ராசிபுரம் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 4 இளைஞர்கள் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><h2>வாகனங்கள் மோதி விபத்து</h2><p>நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சாலையில் உள்ள ஏடிஎம் சிட்டி பகுதியில் ஆசிக் என்ற இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென சாலையை கடக்க முயன்றார். இதனிடையெ அந்த சாலை வழியே அதிவேகமாக வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் ஆசிக்கின் வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆசிக்கும் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த அன்புச்செல்வன், கார்த்தி மற்றும் தீபேஸ் ஆகிய 4 இளைஞர்களும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்து படுகாயமடைந்தனர்.</p><p>இந்த விபத்தை நேரில் கண்ட பொதுமக்கள் காயமடைந்த 4 பேரையும் மீட்டு ராசிபுரம் அரசு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">ஆஸ்பத்திரிக்கு</a> அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த ராசிபுரம்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D"> போலீசார் </a>வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த விபத்து அதிவேகம் காரணமாக நடந்ததா இல்லையெனில் கவனக்குறைவு காரணமாக நடந்ததா என்று இளைஞர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்: தன்னார்வலர்களுடன் மாநகராட்சி கலந்தாய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monsoon-preparedness-measures-intensified-in-chennai-corporation-holds-consultation-with-volunteers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monsoon-preparedness-measures-intensified-in-chennai-corporation-holds-consultation-with-volunteers#comments</comments><guid isPermaLink="false">cbf32b9d-1703-4831-a296-1b4b97dcd72c</guid><pubDate>Sat, 12 Sep 2026 12:07:23 +0000</pubDate><atom:updated>2026-09-12T12:07:23.554Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,பருவமழை,பருவமழை முன்னெச்சரிக்கை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/l72joe2q/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாநகராட்சி கலந்தாய்வு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/l72joe2q/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தெற்கு வட்டாரத்தில் உள்ள வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் உள்ள குடியிருப்பு நலச்சங்கப் பிரதிநதிகள் மற்றும் தன்னார்வலர்களுடன் மாநகராட்சி உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. </p><p>சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>கலந்தாய்வுக் கூட்டம்</h2><p>பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், அவசர காலங்களில் மேற்கொள்ளப்படும் மீட்பு நடவடிக்கைகள் செயல் விளக்கங்கள் குறித்தும் குடியிருப்பு நலச்சங்கங்கள் உள்ளிட்ட தன்னார்வலர்கள் பங்கேற்ற, சேவையாற்றுவது குறித்தும், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் உள்ள குடியிருப்பு நலச்சங்கப் பிரதிநதிகள் மற்றும் தன்னார்வலர்களுடன் மாநகராட்சி உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் பங்கேற்று கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.</p><p>இக்கூட்டங்களில் மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நடைபெற்று வரும் பணிகள், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன வெள்ள மீட்பு மற்றும் நிவாரண மையங்கள், மையப்படுத்தப்பட்ட சமையல் கூடங்கள், மருத்துவமனைகள், அவசரகால அழைப்புகள், மீட்புப் படகுகள் வைக்கப்பட்டுள்ள விவரங்கள், குடிநீர் விநியோகம், தன்னார்வலர்களாக நம்ம சென்னை செயலியில் பதிவு செய்தல், குடியிருப்பு நலச் சங்கங்கத்தினர் உள்ளிட்ட தன்னார்வலர்களின் பங்களிப்பு உள்ளிட்ட அனைத்துத் தகவல்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி அலுவலர்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.</p><h2>மக்களை மீட்க செயல்விளக்கங்கள்</h2><p>மேலும் அரக்கோணத்தில் இருந்து வருகை புரிந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அவசர காலங்களில் மக்களுக்கான முன்னெச்சரிக்கைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள், குழந்தைகள் உள்ளிட்ட மக்களை மீட்டு பாதுகாத்திடும் செயல்விளக்கங்கள் வழங்கப்பட்டது.</p><p>இந்நிகழ்வுகளில், மாமன்ற உறுப்பினர்கள், பெருநகர <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை </a>மாநகராட்சி, சென்னை குடிநீர் வாரியம், நீர்வளத்துறை, மின்சாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, காவல் துறை உள்ளிட்ட தொடர்புடைய துறைகளின் அலுவலர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், அனைத்து குடியிருப்பு நல சங்கத்தினர், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நெருங்கும் விநாயகர் சதுர்த்தி; கோயம்பேடு சந்தை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-chaturthi-approaches-severe-traffic-congestion-in-the-koyambedu-market-area</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-chaturthi-approaches-severe-traffic-congestion-in-the-koyambedu-market-area#comments</comments><guid isPermaLink="false">e2e13a4c-49b1-45e6-b250-d974e0d98e9d</guid><pubDate>Sat, 12 Sep 2026 12:03:17 +0000</pubDate><atom:updated>2026-09-12T12:03:17.005Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Koyambedu,கோயம்பேடு,விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chathurthi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/pbt7cnth/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/pbt7cnth/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் 14-ந்தேதி(திங்கள்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. பண்டிகைக்கான ஏற்பாடுகள் களைகட்டத் தொடங்கியுள்ள நிலையில், சனி, ஞாயிறு வார விடுமுறை என்பதால் வெளியூர்களில் வசிப்பவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் விடுமுறையை கழிப்பதற்காக சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். </p><p>இதனிடையே தொடர் விடுமுறையின் எதிரொலியாக சென்னை கோயம்பேடு சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. காய்கறி, பழங்கள் மற்றும் பூக்களை வாங்குவதற்காக ஏராளமான வியாபாரிகளும், பொதுமக்களும் கோயம்பேடு சந்தையில் குவிந்துள்ளனர். </p> <p>தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் சரக்கு வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால் கோயம்பேடு சந்தை மற்றும் சுற்றுவட்டார சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்து வாகனங்கள் நீண்ட நேரம் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. போதி அளவில் போக்குவரத்து போலீசார் பணியில் இல்லாததே நெரிசலுக்கு காரணம் என வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தியையொட்டி அதிகரித்த பூக்கள் விலை; திண்டுக்கலில் மல்லிகை கிலோ ரூ.1,500 வரை விற்பனை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/flower-prices-rise-ahead-of-vinayagar-chaturthi-jasmine-sells-for-up-to-1500-per-kg-in-dindigul</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/flower-prices-rise-ahead-of-vinayagar-chaturthi-jasmine-sells-for-up-to-1500-per-kg-in-dindigul#comments</comments><guid isPermaLink="false">7f42173e-b683-4f18-86e0-2d99b90b553a</guid><pubDate>Sat, 12 Sep 2026 11:28:12 +0000</pubDate><atom:updated>2026-09-12T11:28:12.698Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Dindigul,திண்டுக்கல்,விநாயகர் சதுர்த்தி,பூக்கள் விலை,flowers,Vinayagar Chathurthi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/ii4lcr64/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/ii4lcr64/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><p>விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த நாள் எதிரொலியாக திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தேவை அதிகரிப்பு மற்றும் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் வறட்சி காரணமாக பூக்களின் உற்பத்தி குறைந்திருந்தது. </p><p>இந்நிலையில் தற்போது பண்டிகை கால விற்பனையாக பூக்களின் விலை அதிகரித்துள்ளது. திண்டுக்கலில் ஒரு கிலோ மல்லிகை பூவின் விலை நேற்று ரூ.500 ஆக இருந்த நிலையில் இன்று ரூ.1,300 முதல் ரூ.1,500 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல் முல்லை ஒரு கிலோ நேற்று ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று கிலோ ரூ.1,000 வரை விற்பனையாகிறது. </p><p>ரோஜா பூக்களின் விலை கிலோ ரூ.200-ல் இருந்து ரூ.500 ஆக அதிகரித்துள்ளது. செவ்வந்தி ஒரு கிலோ ரூ.100-ல் இருந்து ரூ.400 ஆக உயர்ந்துள்ளது. இதே போல் சம்பங்கி ஒரு கிலோ ரூ.700, கனகாம்பரம் கிலோ ரூ.1,200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>லாரி மோதி 50 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு - பரமக்குடி அருகே பரிதாபம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/50-sheep-killed-after-being-hit-by-a-lorry-tragic-incident-near-paramakudi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/50-sheep-killed-after-being-hit-by-a-lorry-tragic-incident-near-paramakudi#comments</comments><guid isPermaLink="false">d7adb1b9-3dd2-48c5-9977-df37022fa248</guid><pubDate>Sat, 12 Sep 2026 10:54:12 +0000</pubDate><atom:updated>2026-09-12T10:54:12.850Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ராமநாதபுரம்,லாரி மோதி விபத்து,பரமக்குடி,paramakudi,sheep,Lorry accident,ramanadhapuram,செம்மறி ஆடுகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/kak69ln8/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ செம்மறி ஆடுகள் உயிரிழப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/kak69ln8/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமநாதபுரம்,</p><p>பரமக்குடி அருகே பிடாரிசேரி பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த 50 செம்மறி ஆடுகள் மீது லாரி மோதியதில், அவை அனைத்தும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.</p><h2>சொந்த கிராமத்துக்கு அழைத்துச் சென்றபோது விபத்து</h2><p>அருப்புக்கோட்டை அருகே உள்ள கல்லூரணியைச் சேர்ந்த கேசவனுக்கு சொந்தமான செம்மறி ஆடுகளை, அவரது சொந்த கிராமத்துக்கு அழைத்துச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.</p><h2>தூக்க கலக்கத்தில் லாரி ஓட்டியதால் விபத்து</h2><p>பார்த்திபனூரில் இருந்து அருப்புக்கோட்டைக்கு கருவேல மரத்தூள் ஏற்றிச் சென்ற லாரி, ஓட்டுநரின் தூக்க கலக்கத்தால் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்றுகொண்டிருந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஆடுகள் </a>மீது மோதியதாக தெரிகிறது. இதில் 50 செம்மறி ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.</p><h2>ரூ.5 லட்சம் மதிப்பிலான ஆடுகள்</h2><p>விபத்தில் உயிரிழந்த செம்மறி ஆடுகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆடுகளின் உரிமையாளர் கேசவன் பெரும் இழப்பை சந்தித்துள்ளார்.</p><h2>லாரி ஓட்டுநர் கைது</h2><p>இச்சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுநர் அர்ஜுனனை பார்த்திபனூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுடன் ‘ஈழத் தமிழ்ப் பெண்கள் குரல்’ அமைப்பினர் சந்திப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/members-of-the-voice-of-eelam-tamil-women-organization-meet-dmk-leader-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/members-of-the-voice-of-eelam-tamil-women-organization-meet-dmk-leader-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">d52f4346-5a6d-4ab3-bc02-5f6b773e6004</guid><pubDate>Sat, 12 Sep 2026 10:48:26 +0000</pubDate><atom:updated>2026-09-12T10:48:26.952Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,M.K.Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/t05zbd8u/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/t05zbd8u/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை ‘ஈழத் தமிழ்ப் பெண்கள் குரல்’ அமைப்பினர் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று சந்தித்தனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-</p><p>“இலங்கைத் தீவில் தொடர்ந்து கொண்டிருக்கும் கட்டமைக்கப்பட்ட பண்பாட்டு மற்றும் தமிழர் தாயகக் கோட்பாடையே சிதைக்கும் இனஅழிப்பின் சாட்சியங்களாக தீவின் ஈழத்தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களான ஈழத்தின் திருகோணமலை மாவட்ட சாந்தமலர் அந்தோனிஜோன்சன், மட்டக்களப்பு மாவட்ட லக்ஸ்மணரஜனி ஜெயப்பிரகாசி, அம்பாறை மாவட்ட சிந்துஜா சௌயன், முல்லைத்தீவு மாவட்ட ஜெகதாம்பிகை விக்கினேஸ்வரன், வவுனியா மாவட்ட சரோஜா குகநேசதாசன், </p><p>மன்னார் மாவட்ட பற்றீசியா அலெக்ஸ், கிளிநொச்சி மாவட்ட வன்செலீன் கந்தசாமி, சுபதர்சினி சச்சிதானந்தம், யாழ்ப்பாண மாவட்ட ஜமுனா சந்திரகுமார், விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் ஆகிய பத்து பெண்கள் அடங்கிய ‘ஈழத் தமிழ்ப் பெண்கள் குரல்’ அமைப்பினர் நேரில் சந்தித்து ஏற்கனவே இன அழிப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் பெரும் அர்ப்பணிப்போடு இயங்கிய தமிழக தொப்புள்கொடி உறவுகளுக்கு நன்றி தெரிவித்தனர்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ஒவ்வொரு டாஸ்மாக் கடை அருகிலும் தானியங்கி எந்திரம்: தமிழக அரசு திட்டம்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/automated-machine-near-every-tasmac-shop-tamil-nadu-governments-plan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/automated-machine-near-every-tasmac-shop-tamil-nadu-governments-plan#comments</comments><guid isPermaLink="false">9b9b3264-5ef9-481b-9b51-737f4973b1c3</guid><pubDate>Sat, 12 Sep 2026 10:40:10 +0000</pubDate><atom:updated>2026-09-12T10:40:10.338Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu Government,தமிழக அரசு,டாஸ்மாக்,Tasmac,டாஸ்மாக் கடை,Tasmac shop</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/ho75p31o/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தானியங்கி எந்திரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/ho75p31o/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காலி பாட்டில்களை எளிதாகத் திரும்பப் பெறும் வகையில் தமிழகம் முழுவதும் சுமார் 4 ஆயிரம் அதிநவீன தானியங்கி எந்திரங்கள் நிறுவப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.</p><h2>பொதுநல வழக்கு</h2><p>டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்பனை செய்யப்படும் காலி மதுபாட்டில்கள் உரிய முறையில் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று கோரி <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை </a>உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.</p><h2>அரசுத் தரப்பில் விளக்கம்</h2><p>இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், காலி மதுபாட்டில்களைத் திரும்ப ஒப்படைக்கும் பொதுமக்களுக்கு ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p><h2>4 ஆயிரம் தானியங்கி எந்திரங்கள்</h2><p>காலி பாட்டில்களை எளிதாகத் திரும்பப் பெறும் வகையில் தமிழகம் முழுவதும் சுமார் 4 ஆயிரம் அதிநவீன தானியங்கி எந்திரங்கள் நிறுவப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு டாஸ்மாக் மதுபானக் கடையின் அருகிலும் ஒரு எந்திரத்தை நிறுவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டது.</p><h2>ஒப்பந்ததாரரைத் தேர்வு செய்ய டெண்டர்</h2><p>இந்த தானியங்கி எந்திரங்களை நிறுவி இயக்குவதற்கான பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரரைத் தேர்வு செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டு, எந்திரங்களை நிறுவும் பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>அதுவரை ஊழியர்களே பாட்டில்களைப் பெற வேண்டும்</h2><p>இதற்கிடையே, ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டு பணிகளைத் தொடங்கும் வரை, டாஸ்மாக் ஊழியர்களே பொதுமக்களிடம் இருந்து காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று நீதிபதிகள் வலியுறுத்தினர்.</p>]]></content:encoded></item><item><title>15-ம் தேதி முதல் கட்டாயம்: கடன் அடமான ஆவணப்பதிவுகள் இனி ஆன்லைனில்... நேரில் செல்ல தேவையில்லை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mandatory-from-the-15th-registration-of-loan-mortgage-documents-to-be-done-onlineno-need-to-visit-in-person</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mandatory-from-the-15th-registration-of-loan-mortgage-documents-to-be-done-onlineno-need-to-visit-in-person#comments</comments><guid isPermaLink="false">5ee47100-0d0c-4f1b-9a6b-7eb087321f70</guid><pubDate>Sat, 12 Sep 2026 10:37:07 +0000</pubDate><atom:updated>2026-09-12T10:37:07.052Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,ஆன்லைன்,தமிழக அரசு,வங்கிகள்,Registration,Bank loan,நிதிநிறுவனம்,வருகையில்லா ஆவணப்பதிவு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/yr4hz95p/tn-gg.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/yr4hz95p/tn-gg.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் சொத்துகளை அடமானமாக வைத்து பெறப்படும் கடன்கள் தொடர்பான முக்கிய ஆவணங்களை இனி நேரடியாக அலுவலகத்துக்கு சென்று பதிவு செய்ய வேண்டாம். </p><h2>மின்னணு முறை</h2><p>இதன்படி செப்டம்பர் 15ம் தேதி முதல், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அடமானம் தொடர்பான ஆவணங்களை மின்னணு முறையில், ஆவணதாரரின் நேரடி வருகை தேவையில்லாத வகையில் பதிவு செய்வது கட்டாயமாகிறது. இதன் மூலம் சொத்து அடமானப் பதிவுகளை விரைவுபடுத்துவதுடன், ஒருசொத்து ஏற்கனவே வேறு எந்தக்கடனுக்கும் அடமானமாக வைக்கப்பட்டுள்ளதா என்பதை எளிதாகக் கண்டறிய முடியும்.</p><p>தமிழகத்தில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கும் கடன்களுக்கு சொத்துகள் பிணையாக வைக்கப்படும் போது, சொத்து உரிமை ஆவணங்களை ஒப்படைத்தது தொடர்பாகவும், கடன் திருப்பி செலுத்தப்பட்டது தொடர்பாகவும் பதிவு செய்யப்படுகிறது. அடமானம் தொடர்பான இந்த ஆவணங்கள் இனி மின்னணு முறையில் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. </p><h2>வில்லங்க சான்றிதழ்</h2><p>இதற்கான உத்தரவை தமிழக அரசின் வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறை வெளியிட்டுள்ளது. செப் 10-தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, செப்டம் பர் 15ம் தேதி முதல் அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களும் இந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். இதன் மூலம் அடமானம் தொடர்பான பதிவுகளும் நேரடி வருகையில்லா டிஜிட்டல் பதிவு முறையின் கீழ் கொண்டு வரப்படுகின்றன. </p><p>வங்கிகள் கடன் வழங்குவதற்கு முன்பு, குறிப்பிட்ட சொத்து ஏற்கனவே வேறுஒருவருக்கு அல்லது வேறு நிறுவனத்திடம் அடமானமாக வைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்காக வில்லங்க சான்றிதழை முக்கியமாக நம்புகின்றன.</p><h2>நேரடி வருகையில்லாத பதிவு முறை</h2><p>புதிய நடைமுறை மூலம் அடமானப் பதிவுகள் முறையாகவும் உடனடியாகவும் பதிவாகும் என்பதால், சொத்தின் மீது ஏற்கனவே உள்ள கடன் அல்லது அடமான விவரங்களை உறுதி செய்வது மேலும் எளிதாகும். இதன் மூலம் ஒரே சொத்தை வைத்து பல்வேறு இடங்களில் கடன்பெறும் முறைகேடுகளையும் கட்டுப்படுத்த முடியும் என அரசு கருதுகிறது.</p><p>இந்த நடவடிக்கை தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் 'புராஜெக்ட் ஸ்டார் 3.0' மின்னணு பதிவு தளத்தின் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த டிஜிட்டல் பதிவு தளம் ஆகஸ்ட் 17ம் தேதி தொடங்கப்பட்டது.</p><p>இதன் முதல் கட்டத்தில், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் மனைகளை கட்டுமான நிறுவனங்கள் முதல் முறையாக விற்பனை செய்யும் போது பயன்படுத்தப்படும் வைப்புத் தொகை உள்ளிட்ட சில ஆவணங்களுக்கு நேரடி வருகையில்லாத பதிவு முறை ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டது.</p><h2>புதியநடைமுறை</h2><p>இதன் தொடர்ச்சியாக, அடமானம் தொடர்பான ஆவணங்களுக்கும் இந்த வசதி விரிவு படுத்தப்பட்டுள்ளது. இதற்கான முடிவு குறித்து செப்டம்பர் 7ம்தேதி சட்டப்பேரவையில் வணிகவரிகள் மற்றும் பதிவுத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நடைமுறைப்படுத்துவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><p>இந்த நேரடி வருகையில்லா பதிவுமுறையில், பதிவு அலுவலகத்திற்கு சம்பந்தப்பட்டவர்கள் நேரில் சென்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இருக்காது. பதிவு செய்யப்படும் ஆவணங்களில் பதிவுத்துறை அதிகாரியின் மின்னணு கையொப்பம் இடம்பெறும். மேலும், பதிவு செய்யப்பட்ட ஆவணத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் கியூ.ஆர். குறியீடு இடம்பெறும் வகையில் புதியநடைமுறை வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><h2>உண்மைத்தன்மை</h2><p>இதன்மூலம் ஆவணம் உண்மையானதா என்பதை பின்னர் எளிதாக சரிபார்க்க முடியும். தமிழக பதிவுத்துறையில் சொத்து தொடர்பான முக்கிய ஆவணங்களின் பதிவு நடவடிக்கைகள் படிப்படியாக முழுமையான டிஜிட்டல்முறைக்கு மாற்றப்பட்டு வருகின்றன.</p><p>ஆவணங்களை நேரில் சமர்ப்பிக்க வேண்டிய தேவையை குறைப்பதுடன், மின்னணு கையொப்பம், கியூ.ஆர். குறியீடு மூலம் ஆவணங்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்யவும், சொத்துகளின் மீது உள்ள அடமான விவரங்களை தெளிவாகப் பதிவு செய்யவும் இந்த புதியநடை முறை வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஈரோடு அருகே கரும்பு லாரியை வழிமறித்த ஒற்றை யானை; விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்த ஓட்டுநர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/lone-elephant-stops-sugarcane-lorry-near-erode</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/lone-elephant-stops-sugarcane-lorry-near-erode#comments</comments><guid isPermaLink="false">25df9aec-587d-4de6-95d0-72213845dc73</guid><pubDate>Sat, 12 Sep 2026 10:35:12 +0000</pubDate><atom:updated>2026-09-12T10:35:12.022Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Greetings,வாழ்த்து,ஈரோடு,elephant,யானை,ஓட்டுநர்,Vinayagar Chaturthi,விநாயகர் சதுர்த்தி,sugarcane,கரும்பு லாரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/c4ob9j1d/elephantsugar.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ யானை]]></media:title><media:description type="html"><![CDATA[ ஈரோடு அருகே கரும்பு லாரியை வழிமறித்த ஒற்றை யானை; விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்த ஓட்டுநர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/c4ob9j1d/elephantsugar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p> <p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81">ஈரோடு</a> அருகே கரும்பு லாரியை வழிமறித்த ஒற்றை யானைக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்த ஓட்டுநர்.</p> <h2>வனவிலங்குகள்</h2><p>ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அடர்ந்த வனப்பகுதி என்பதால், இந்த சாலையில் அடிக்கடி காட்டு யானைகள், சிறுத்தைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடுவது வழக்கம்.</p><h2>யானைகள்</h2><p>குறிப்பாக, சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கரும்பு ஏற்றிக்கொண்டு வரும் லாரிகளை குறிவைத்து, சில யானைகள் சாலையில் உலா வருவது தொடர்கதையாகி வருகிறது.</p>  <p>அந்த வழியாக கரும்பு ஏற்றி வந்த லாரியை பார்த்ததும் காட்டில் இருந்து ஒரு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88">யானை</a> சாலையை நோக்கி ஓடி வந்தது. லாரியை மறித்து அது நின்றதால், ஓட்டுநர் லாரியை மெதுவாக நிறுத்தினார்.</p><h2>சதுர்த்தி வாழ்த்து</h2><p>யானையை கண்டு அச்சப்படாமல், சமயோசிதமாகவும் பாசத்துடனும் செயல்பட்ட அந்த லாரி ஓட்டுநர், "நாளைக்கு உனக்கு பிறந்தநாளு... ஒரு கத்தை கரும்பு எடுத்துக்கோ" என்று பாசத்துடன் கத்தினார். விநாயகரின் மறு உருவமாக கருதப்படும் யானைக்கு, அவர் முன்கூட்டியே தனது சதுர்த்தி வாழ்த்துகளை தெரிவித்தார்.</p><h2>கரும்புகளை எடுத்த யானை</h2><p>ஓட்டுநரின் குரலை கேட்டு அமைதியான அந்த யானை, லாரியை எவ்வித சேதமும் செய்யாமல், அதில் இருந்த ஒரு கத்தை கரும்புகளை மட்டும் தனது தும்பிக்கையால் லாவகமாக எடுத்துக்கொண்டது. பின்னர், லாரிக்கு வழிவிட்டு அமைதியாக சாலையோரம் நகர்ந்து சென்று கரும்புகளை ருசிக்க தொடங்கியது.</p><h2>வரவேற்பு</h2><p>யானையிடம் மனித நேயத்துடனும் பாசத்துடனும் பேசிய ஓட்டுநரின் இந்த நெகிழ்ச்சியான செயல், அங்கிருந்த சக வாகன ஓட்டிகளால் வீடியோ எடுக்கப்பட்டது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title> கவுண்டம்பாளையம் தொகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை; அமைச்சர் அருண்ராஜ் மற்றும் எம்.எல்.ஏ கனிமொழி ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dengue-prevention-drive-in-goundampalayam-constituency-minister-arunraj-and-mla-kanimozhi-inspect</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dengue-prevention-drive-in-goundampalayam-constituency-minister-arunraj-and-mla-kanimozhi-inspect#comments</comments><guid isPermaLink="false">f2d335ed-e7dc-426d-8137-292dcd21ccae</guid><pubDate>Sat, 12 Sep 2026 10:22:48 +0000</pubDate><atom:updated>2026-09-12T10:22:48.482Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நடவடிக்கை,Dengue,ஆய்வு,inspection,Prevention,தொகுதி,கவுண்டம்பாளையம்,டெங்கு தடுப்பு,Minister Arunraj,அமைச்சர் அருண்ராஜ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/wvy2ej52/arunrajkanimozhi.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் அருண்ராஜ்,எம்.எல்.ஏ கனிமொழி]]></media:title><media:description type="html"><![CDATA[ கவுண்டம்பாளையம் தொகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை; அமைச்சர் அருண்ராஜ் மற்றும் எம்.எல்.ஏ கனிமொழி ஆய்வு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/wvy2ej52/arunrajkanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை ,</p><p>கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 23-வது வார்டு சித்ரா பகுதி சவுபாக்கியா நகரில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D">அமைச்சர் அருண்ராஜ்</a> இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.</p><p>இந்த ஆய்வின் போது, கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் மற்றும் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.</p> <h2>வீடு வீடாக ஆய்வு</h2><p>அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொசு மருந்து அடித்தல், தூய்மை பணிகள் மற்றும் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர் அருண்ராஜ் தீவிரமாக கண்காணித்தார். வீடுகளில் கொசு புழுக்கள் உற்பத்தியாகிறதா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.</p><h2>அமைச்சர் வேண்டுகோள்</h2><p>பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். தேவையற்ற பொருட்கள், பழைய டயர்கள், தேங்காய் சிரட்டைகள் போன்றவற்றில் மழைநீர் தேங்குவதை தவிர்த்து, சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும்.</p> <h2>அரசு மருத்துவமனைக்கு செல்லுங்கள்</h2><p>பொதுமக்களுக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D">காய்ச்சல்</a> உள்ளிட்ட அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால், அலட்சியமாக இருக்காமல் உடனடியாக அருகிலுள்ள அரசு சுகாதார நிலையத்தை அணுகி உரிய மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.டெங்கு பாதிப்பை முற்றிலுமாக தடுக்க அரசின் நடவடிக்கைகளுடன் பொதுமக்களின் ஒத்துழைப்பும் மிக முக்கியம். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு டெங்கு இல்லாத கோவையை உருவாக்குவோம்.</p> ]]></content:encoded></item><item><title>மதுராந்தகம் தொகுதி தேர்தல் பணியில் மாவட்ட அமைச்சர் சரத்குமாருக்கு இடமில்லை– தவெக வட்டாரத்தில் பரபரப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-sarathkumar-boycotting-the-election-campaign-excitement-in-the-tvk-area</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-sarathkumar-boycotting-the-election-campaign-excitement-in-the-tvk-area#comments</comments><guid isPermaLink="false">72459600-fce4-4250-8c07-a59be584ce73</guid><pubDate>Sat, 12 Sep 2026 10:19:03 +0000</pubDate><atom:updated>2026-09-12T10:19:03.405Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,சட்டமன்ற தேர்தல்,election 2026,Minister Sarathkumar,அமைச்சர் சரத்குமார்,அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,Minister Aadhav Arjuna</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/1tuntp0w/1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் சரத்குமார்- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா]]></media:title><media:description type="html"><![CDATA[ மதுராந்தகம் தேர்தல் களத்தில் அமைச்சர் சரத்குமார் புறக்கணிப்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/1tuntp0w/1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மதுராந்தகம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலின் முதன்மைப் பொறுப்பு, செங்கல்பட்டு மாவட்ட  அமைச்சர் சரத்குமாருக்கு வழங்கப்படாமல் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>மதுராந்தகம் இடைத்தேர்தல்</h2><p>தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு வரும் அக்டோபர் 6, 2026 அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வெளியிட்டுள்ள தேர்தல் பணிக்குழு பட்டியல் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. </p><p>குறிப்பாக, செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பு அமைச்சரான டி.சரத்குமார் தேர்தல் பணிகளில் ஓரம்கட்டப்பட்டு, அவருக்குப் பதிலாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D">அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு </a>முதன்மைப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.</p><h2>அதிமுகவிலிருந்து வந்த வேட்பாளர்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF">மதுராந்தகம் தொகுதி</a> இடைத்தேர்தலில் தவெக சார்பில், அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி கட்சியில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். இடைத்தேர்தலில் முதல் வெற்றியைப் பதிவு செய்ய தவெக தலைமை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.</p><h2>சரத்குமார் ஓரம்கட்டப்பட்டதாக கூறப்படுவது ஏன்?</h2><p>பொதுவாக ஒரு மாவட்டத்தில் தேர்தல் அல்லது இடைத்தேர்தல் நடக்கும்போது, அந்த மாவட்ட பொறுப்பு அமைச்சரிடமே தேர்தல் பொறுப்புகள் முழுமையாக ஒப்படைக்கப்படுவது வழக்கம். தவெக அமைச்சரவையில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சராக உள்ள தாம்பரம் தொகுதி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D">எம்.எல்.ஏ டி. சரத்குமார்</a> தான், மதுராந்தகம் உள்ளடங்கிய செங்கல்பட்டு மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராகவும் உள்ளார்.</p><p>ஆனால், தவெக தலைமை தற்போது வெளியிட்டுள்ள மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பணிக்குழுப் பட்டியலில், பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான ஆதவ் அர்ஜுனா முதன்மைப் பொறுப்பாளராக (தேர்தல் பணிக்குழுத் தலைவர்) நியமிக்கப்பட்டுள்ளார். உள்ளூர் மாவட்ட அமைச்சரான சரத்குமாருக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்படாததால், அவர் தேர்தல் பணிகளில் இருந்து தவெக தலைமையால் ஓரம்கட்டப்பட்டு விட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.</p><h2>கட்சித் தரப்பு விளக்கம் -சரத்குமாரின் நிலைப்பாடு</h2><p>இந்த சர்ச்சை குறித்து தவெக தரப்பில் விசாரித்தபோது, "அமைச்சர் சரத்குமார் ஓரம்கட்டப்பட்டார் என்பதில் உண்மையில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளராக இருப்பதால், ஒட்டுமொத்த தேர்தல் வியூகங்களின் அடிப்படையில் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது" என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.</p><p>இதற்கிடையே, தன் மீதான அரசியல் வியூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைச்சர் சரத்குமார், மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என தனது சமூக வலைதளப் பக்கங்கள் வாயிலாக வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.</p><p>கட்சித் தலைமையின் முடிவுக்கு கட்டுப்பட்டு, வேட்பாளரின் வெற்றிக்காகத் தீவிரமாக உழைக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் ஆதரவாளர்கள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மாவட்ட அமைச்சரைத் தாண்டி தவெக தலைமை எடுத்துள்ள இந்த முடிவு, செங்கல்பட்டு மாவட்ட அரசியல் களத்தில் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.</p><figure><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DdHQNGaRIY4/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:658px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DdHQNGaRIY4/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a></div></blockquote>
<script async src="//platform.instagram.com/en_US/embeds.js"></script></figure>]]></content:encoded></item><item><title>பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்! - சீமான்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-decision-to-construct-the-new-secretariat-at-pattinapakkam-must-be-abandoned-seeman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-decision-to-construct-the-new-secretariat-at-pattinapakkam-must-be-abandoned-seeman#comments</comments><guid isPermaLink="false">c0ef3436-692d-41c2-946a-e8b64b1ab6bc</guid><pubDate>Sat, 12 Sep 2026 10:09:46 +0000</pubDate><atom:updated>2026-09-12T10:09:46.063Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>நாதக,சீமான்,Seeman,நாம் தமிழர் கட்சி,பட்டினப்பாக்கம்,Pattinapakkam,new Secretariat,புதிய தலைமைச்செயலகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/psmbysvj/seeman.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சீமான்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/psmbysvj/seeman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கடும் இடநெருக்கடியும், போக்குவரத்து நெரிசலும் உள்ள பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் ‘துக்ளக் தர்பார்’ முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என  சீமான் வலியுறுத்தியுள்ளார். </p><p>நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>அவசியம் என்ன?</h2><p>சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் விஜய் அறிவித்திருந்த புதிய தலைமைச்செயலகம் சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. 9 கிராம மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் பட்டினப்பாக்கத்தில் தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச்செயலகம் அமைக்க தவெக அரசு முடிவெடுத்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.</p><p>தமிழ்நாடு அரசின் களஞ்சியம் காலியாக உள்ளது, அரசுக்கு 10 லட்சம் கோடி கடன் உள்ளது, ஆண்டுக்கு ஒன்றே முக்கால் லட்சம் கோடி கடன் வாங்கும் நிலை உள்ளது, அதனால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்று தொடர்ந்து கூறிவரும் தவெக அரசு, வட்டி கட்டவே கடன் வாங்க வேண்டிய அளவிற்குக் கடுமையான நிதி நெருக்கடி உள்ள நிலையில், 1200 கோடிகளை வாரி இறைத்து அவசரகதியில் புதிய தலைமைச்செயலகம் கட்ட வேண்டிய அவசியம் என்ன?</p><h2>தனிப்பட்டத் தேவைக்கா?</h2><p>தற்போது செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் செயல்படும் தலைமைச் செயலகத்தில் கடும் இடநெருக்கடியும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது என்பதாலேயே புதிய தலைமைச்செயலகம் அமைக்கப்படுகிறது என்றால், அதைவிட அதிக இடநெருக்கடியும், போக்குவரத்து நெரிசலும் உள்ள பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்க வேண்டிய தேவை என்ன? மக்களின் தேவைக்கா? அல்லது முதல்-அமைச்சரின் தனிப்பட்டத் தேவைக்கா? பரந்தூர் கிராம மக்களின் எதிர்ப்பினை ஏற்று, புதிய வானூர்தி நிலையத்தைக் கைவிட்ட நீங்கள், பட்டினப்பாக்கத்தில் 9 மீனவ கிராம மக்களின் எதிர்ப்பினைக் கருத்திற்கொள்ளாதது ஏன்? 9 மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரத்தைவிடவும் உங்களின் தனிப்பட்ட வசதிதான் முதன்மையானதா? இதுதான் மீனவ மக்களின் நலன் மீதான உங்களின் அக்கறையா முதல்-அமைச்சர் விஜய்யே?</p><p>உலகப் புகழ்பெற்ற சாந்தோம் தேவாலயம் உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்கள், பத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள், தொழில் மையங்கள் மற்றும் மீனவ மக்களின் வியாபாரத்தலங்கள் எனப் பட்டினப்பாக்க குறுகிய சாலைகளை ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் மக்கள் ஒரே நேரத்தில் பயன்படுத்துவதால், இப்போதே அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இந்நிலையில், புதிய தலைமைச்செயலகமும் அங்கு அமைக்கப்பட்டால் பட்டினப்பாக்கம் பகுதியே கடுமையாகத் திணற நேரிடும். ஒவ்வொரு நாளும் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் வருகைக்காகப் பல மணி நேரங்கள் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படுகின்ற அவலமும் நடைபெறும். இதனால் பொதுமக்கள் குறிப்பாகப் பள்ளி குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை உருவாகும்.</p><h2>இதுதான் தொலைநோக்கு சிந்தனையா?</h2><p>அதுமட்டுமின்றி, பல்வேறு அரசுத் துறைகளின் அலுவலகங்கள், சட்டமன்றம், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தங்கும் விடுதிகள், பொதுமக்கள் காத்திருப்புக்கான இடங்கள், வாகன நிறுத்துமிடங்கள், குடிநீர் மற்றும் கழிப்பிடங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் இத்தனை குறுகிய இடத்திற்குள் எப்படி அமைக்க முடியும்? அப்படியே வலிந்து திணித்து அமைத்தாலும், முதல்-அமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் அறிவித்ததுபோல அடுத்த 100 ஆண்டுகளுக்கு விரிவுப்படுத்துவதற்கு இக்குறுகிய இடம் எப்படிப் போதுமானதாக இருக்க முடியும்? இதுதான் தவெக அரசின் தொலைநோக்கு சிந்தனையா?</p><p>எல்லாவற்றிற்கும் மேலாக, சென்னை பட்டினப்பாக்கம் பகுதியானது கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமி பேரலை தாக்கிய ஆபத்தான பகுதிகளில் ஒன்றாகும். எதிர்காலத்திலும் சுனாமியால் தாக்குதலுக்கு ஆளாகும் வாய்ப்புகளும் உண்டு. மேலும், புவிவெப்பமயமாதலால் பனிப்பாறை உருகி, கடல் மட்டம் தொடர்ந்து உயர்வதால், எதிர்வரும் 2040-2070 வரையிலான காலகட்டத்தில் கடல்மட்டம் 30 செமீ அளவிற்கு உயர்ந்து சென்னை கடற்கரை பரப்பில் 1.6 கிமீ அளவிற்கு (ஏறத்தாழ 71ச.கீ நிலப்பரப்பு) கடல்மட்டத்திற்கு கீழ் சென்று, நிரந்தரமாக வெள்ளம் சூழ் பகுதியாக மாறும் என்று "காலநிலை மாற்றத்திற்கான சென்னை செயல்திட்ட அறிக்கை"குறிப்பிடும் பகுதிக்குள்ளும் பட்டினப்பாக்கம் வருகிறது என்பதால், அடுத்த 100 ஆண்டுக்கான தொலைநோக்கு பார்வையுடன் தலைமைச்செயலகம் அமைக்க பட்டினப்பாக்கம் எப்படி சரியான தேர்வாக இருக்க முடியும்?</p><h2>முடிவை கைவிட வேண்டும்</h2><p>தான் முதல்-அமைச்சர் ஆவதற்கு முன்பே அனைவரையும் வீட்டிற்கு அழைத்துச் சந்தித்த முதல்-அமைச்சர் விஜய், தற்போது தலைமைச்செயலகத்தையே தன் வீட்டிற்கு அருகில் அமைத்து அரசு ஊழியர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருமே அங்கு வாருங்கள் என்று துக்ளக் தர்பார் நடத்த முயல்வது வெட்கக்கேடானது.</p><p>ஆகவே, முதல்-அமைச்சர் விஜய்யின் தனிப்பட்ட நலனுக்காக, நாட்டு மக்களின் வரிப்பணத்தை வீணடித்து, கடும் இடநெருக்கடியும், போக்குவரத்து நெரிசலும், சுனாமி ஆபத்தும் உள்ள பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.</p><h2>நா.த.க. போராட்டத்தை முன்னெடுக்கும்</h2><p>இல்லையென்றால், பாதிக்கப்படும் பட்டினப்பாக்கம் 9 கிராம மீனவமக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த 9 மீனவ கிராம மக்களுக்கு நான் சொல்லிக்கொள்வது, நீங்கள் எது குறித்தும் அச்சம் கொள்ள வேண்டாம்; விளைநிலங்களை அழித்து சேலம் எட்டுவழிச்சாலை அமைக்கவிடமாட்டோம் என்று கூறினோம். அமைக்கவில்லை. விளைநிலங்களை அழித்து பரந்தூரில் வானூர்தி நிலையம் அமைக்கவிடமட்டோம் என்றோம். அமைக்க முடியவில்லை; சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையில் கடலில் பேனா சிலை வைக்கவிடமாட்டோம் என்றோம்; வைக்க முடியவில்லை. அதுபோல 9 மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பட்டினப்பாக்கத்தில் </a>தலைமைச்செயலகத்தை ஒருபோதும் அமையவிடமாட்டோம். மக்களின் துணையுடன் உறுதியாக தடுத்து நிறுத்துவோம். பட்டினப்பாக்கம் மீனவச்சொந்தங்கள் மிகுந்த நம்பிக்கையோடு இருங்கள்!.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நெல்லையில் ஆய்வுப் பணிக்கு சென்ற அமைச்சர் வன்னி அரசு; டிரைவரை பாம்பு கடித்ததால் பரபரப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-vanni-arasu-visits-nellai-for-inspection-work-commotion-ensues-after-driver-is-bitten-by-a-snake</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-vanni-arasu-visits-nellai-for-inspection-work-commotion-ensues-after-driver-is-bitten-by-a-snake#comments</comments><guid isPermaLink="false">381dcee4-1744-4c72-a220-8a8b585fd028</guid><pubDate>Sat, 12 Sep 2026 10:09:05 +0000</pubDate><atom:updated>2026-09-12T10:09:05.711Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Tirunelveli,Snake,பாம்பு,minister vanni arasu,அமைச்சர் வன்னி அரசு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/4p118b3y/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/4p118b3y/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை, </p><p>நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களை நேரடியாக சென்று சந்தித்து அவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காகவும், பழங்குடியின மக்கள் நலன் குறித்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காகவும் சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு இன்று நெல்லைக்கு வருகை தந்தார். </p><p>தொடர்ந்து பாபநாசம் முண்டந்துறை பகுதியில் அமைச்சர் வன்னி அரசு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். அப்போது அமைச்சருடன் வந்த டிரைவர் மணிகண்டன் என்பவரை மலைப்பாம்பு ஒன்று கடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக மணிகண்டனை மீட்டு அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது மணிகண்டன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  </p> ]]></content:encoded></item><item><title>8 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அப்டேட்</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-in-8-districts-today-meteorological-centre-update</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-in-8-districts-today-meteorological-centre-update#comments</comments><guid isPermaLink="false">7a1b3f23-0c0d-4a0b-8ce8-0b54df3eb64f</guid><pubDate>Sat, 12 Sep 2026 10:05:18 +0000</pubDate><atom:updated>2026-09-12T10:05:18.848Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Rain,Weather,கனமழை,வானிலை,தமிழகம்,Weather News,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,Weather update,வானிலை ஆய்வு மையம்,கன மழை,வானிலை அறிக்கை,weather condition,வானிலை தகவல்,Weather Report,வானிலை முன்னறிவிப்பு,Weather Status,வானிலை அறிவிப்பு,weather center,வானிலை அப்டேட்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/shy8gep6/vavan.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/shy8gep6/vavan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>வரும் செப்.15இல் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><h2>மழை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தெற்கு உள் கர்நாடகாவிலிருந்து மன்னார் வளைகுடா வரை தமிழகத்தின் வழியாக நீடிக்கும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (trough) தொடர்ந்து நிலவுகிறது; இது தற்போது கடல் மட்டத்திலிருந்து 1.5 கி.மீ உயரம் வரை பரவியுள்ளது.</p><p>இதன்காரணமாக <strong>இன்று (12.09.2026)</strong>, தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சேலம், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்ய வாய்ப்புள்ளது.</p><p>தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்ய வாய்ப்புள்ளது.</p><p><strong>நாளை (13.09.2026):</strong> மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் மதுரை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, வேலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்ய வாய்ப்புள்ளது.</p><p>தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்ய வாய்ப்புள்ளது.</p><p><strong>14.09.2026:</strong> மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்ய வாய்ப்புள்ளது.  </p><p>தமிழ்நாட்டின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><h2>கனமழை</h2><p><strong>15.09.2026:</strong> நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>தமிழ்நாட்டின் மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், அரியலூர், பெரம்பலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>தமிழ்நாட்டின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>16.09.2026:</strong> நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>தமிழ்நாட்டின் தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு.. வெளியான முக்கிய அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/attention-pensioners-important-announcement-released</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/attention-pensioners-important-announcement-released#comments</comments><guid isPermaLink="false">2f708523-61bc-490c-870a-c6bd1f42110e</guid><pubDate>Sat, 12 Sep 2026 09:32:27 +0000</pubDate><atom:updated>2026-09-12T09:32:27.691Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Holiday,தமிழக அரசு,TN govt,pension,ஓய்வூதியம்,தொடர் விடுமுறை,ஓய்வூதியதாரர்கள்,Pensioners</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/avxezwh1/akie.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ AI]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/avxezwh1/akie.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>ஓய்வூதியத் தொகை வரவு வைக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டாலும் பயனாளிகள் அச்சப்பட தேவையில்லை என்று <a href="https://www.dailythanthi.com/topic/tn-govt">தமிழக அரசு</a> தெரிவித்துள்ளது. </p><h2>ஓய்வூதியம்</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழ்நாடு அரசின் முன்னோடித் திட்டங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ், முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், வேளாண் தொழிலாளர்கள் உள்ளிட்ட நலிவுற்ற பிரிவினருக்கு 12 வகையான திட்டங்களின் கீழ் 35,37,372 பயனாளிகள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.</p><p>இவர்களில், சுமார் 15,56,674 ஓய்வூதியப் பயனாளிகளுக்கு ஆகஸ்ட் 2026 மாதத்திற்கான (செப்டம்பர் 2026-ல் வழங்கப்படும்) ஓய்வூதியத்தொகை அவர்களது வங்கிக் கணக்குகளில் ஏற்கனவே வரவு வைக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், தேசிய சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், இந்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், இந்திரா காந்தி தேசிய விதவையர் ஓய்வூதியத் திட்டம் மற்றும் இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று திட்டங்களின் கீழ் சுமார் 19,20,858 பயனாளிகள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.</p><p>மேற்காணும் திட்டங்களின் கீழ் ஆகஸ்ட் 2026 மாதத்திற்கான (செப்டம்பர் 2026-ல் வழங்கப்படும்) ஓய்வூதியத் தொகையை, இந்திய அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ள SNA-SPARSH நிதிப் பரிவர்த்தனை தளத்தின் மூலம் இம்மாதம் முதல் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><h2>தொடர் நடவடிக்கைகள்</h2><p>இத்திட்டங்களின் பயனாளிகளுக்கான ஓய்வூதியப் பட்டியல் தயார் செய்யப்பட்டு, இந்திய அரசின் பங்களிப்புத் தொகைக்கான ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில், 11.09.2026 முதல் 14.09.2026 வரை இந்திய அரசு அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை என்பதால், மேற்குறிப்பிட்ட திட்டங்களுக்கான ஓய்வூதியப் பட்டியலுக்கு ஒப்புதல் பெறுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.</p><p>எனவே, சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் ஓய்வூதியம் பெற்று வரும் பயனாளிகள், தங்களது ஓய்வூதியத் தொகை வரவு வைக்கப்படுவதில் ஏற்படும் தாமதம் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், ஓய்வூதியத் தொகை 14.09.2026 முதல் உரிய முறையில் வழங்குவதற்கான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் 2 தொகுதிகளில் இடைத்தேர்தல் தேவையில்லாமல் திணிப்பு - கி.வீரமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/by-elections-imposed-without-need-in-two-constituencies-in-tamil-nadu-k-veeramani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/by-elections-imposed-without-need-in-two-constituencies-in-tamil-nadu-k-veeramani#comments</comments><guid isPermaLink="false">a50320c3-d571-4ccc-b3f6-58d36f577101</guid><pubDate>Sat, 12 Sep 2026 09:27:32 +0000</pubDate><atom:updated>2026-09-12T09:27:32.595Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,இடைத்தேர்தல்,திமுக அரசு,K. Veeramani,கி.வீரமணி,தொகுதி,constituencies,by-elections</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/w80jdj0a/veeramani.jpg" width="768"><media:title type="html"><![CDATA[ கி.வீரமணி]]></media:title><media:description type="html"><![CDATA[  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/w80jdj0a/veeramani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டில் இரண்டு தொகுதிகளில் தேவையின்றி இரண்டு இடங்களில் இடைத்தேர்தல் "திணிக்கப்படுகிறது!" த.வெ.க.வின் 4 மாத ஆட்சியில் சாதனைகள் இல்லை - வேதனைகள்தான்! இதற்குப் பாடம் கற்பிக்கும் வகையிலும்,<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95"> தி.மு.க.வின்</a> கடந்த கால ஆட்சியின் மாட்சியைக் கருத்தில் கொண்டும் தேர்தல் நடைபெறும் இரு தொகுதிகளிலும் தனது ஆதரவை அளிக்கும் – பிரச்சாரமும் மேற்கொள்ளும்.</p> <h2>இடைத்தேர்தல்</h2><p>தமிழ்நாட்டில் இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் தேவையில்லாமல் திணிக்கப்பட்டுள்ளது. த.வெ.க. தலைமையில் கடந்த நான்கு மாதங்களாக நடைபெறும் ஆட்சியில், சாதனைகள் கிடையாது; வேதனைகள்தான், “குதிரை பேரங்கள்தான்". இந்த நிலையில், 4 மாத த.வெ.க. ஆட்சிக்குப் பாடம் கற்பிக்கவும், கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க ஆட்சியின் திட்டங்கள் கருதியும், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கும் நடைபெறும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தி.மு.க.வை ஆதரிப்பது என்றும், வெற்றிக்குப் பாடுபடுவது, பிரச்சாரம் செய்வது என்றும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF">கி.வீரமணி</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p> <h2>அவரது அறிக்கை வருமாறு:</h2><p>தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு, பொது தேர்தல் நடைபெற்ற சில மாதங்களிலேயே அவசியமற்ற ஓர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">இடைத்தேர்தல்</a> திணிக்கப்பட்டுள்ளது.</p> <p>மொத்தம் காலியாக உள்ள ஏழு தொகுதிகளில், பிற அய்ந்து தொகுதிகளின் வெற்றியை எதிர்த்துத் தேர்தல் வழக்கு இருப்பதால், அவற்றை விடுத்து இவ் விரண்டு தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.</p> <h2>த.வெ.க. அரசு </h2><p>இந்த இரண்டு தொகுதிகளிலும் முன்பு அ.இ.அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்றவர்கள், மக்கள் தங்களை தேர்ந்தெடுக்க காரணமான கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாக, போதிய தனி பெரும்பான்மை இல்லாத த.வெ.க. அரசு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு நடத்தியபோது அவரகளுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.</p><h2>குதிரை பேரம் </h2><p>தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத விசித்திரமான குதிரை பேரம் நடைபெற்றது. பின்னர் சில நாட்களிலேயே தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளிலிருந்து விலகி, தலைமை செயலகத்துக்குள்ளேயே அமைச்சரை சந்தித்து த.வெ.க.வில் இணைந்துவிட்டதாகக் கூறிய, தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத விசித்திரமான 'குதிரை பேரம்' நடைபெற்றது.</p><h2>அரசியல் அறவழியா?</h2><p>அதன் விளைவாக திணிக்கப்பட்டுள்ள இந்த இடைத்தேர்தல் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் கட்சி மாறி வந்தவர்களுக்கே வேட்பாளர்களாக மீண்டும் இடமளித்துள்ளது ஆளுங்கட்சி! இது அரசியல் அறவழியா? அவர்கள் முன்பு போட்டியிட்டு வெற்றிபெற்ற அ.இ.அ.தி.மு.க. இப்போது வேறு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.</p><h2>தி.மு.க. வேட்பாளர்கள்</h2><p>தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வழக்குரைஞர் பரந்தாமன் மதுராந்தகம் தொகுதிக்கும், வழக்குரைஞர் சுகன்யா தாராபுரம் தொகுதிக்கும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>அறுதி பெரும்பான்மை</h2><p>சட்டமன்ற பொது தேர்தலில் அறுதி பெரும்பான்மை பெறாத த.வெ.க.வுக்கு, அப்போது தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சில கட்சிகள் ஆதரவளித்து, ஆட்சியிலும் பங்கு பெற்றன. கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டும் வெளியில் இருந்து ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்தன.</p><h2>மக்களின் வரிப்பணம் அல்லவா?</h2><p>ஆனால் அதையும் தாண்டி, த.வெ.க.வுக்கு ஏற்பட்ட அச்ச உணர்வின் காரணமாக, அ.தி.மு.க.வில் இருந்து சில சட்டமன்ற உறுப்பினர்களை ஆசைகாட்டி இழுத்தனர். அதனால் கட்சித்தாவல் சட்டப்படி அவர்களின் பதவி பறிக்கப்படும் சூழல் ஏற்படும் என்பதால், அவர்களைப் பதவி விலகச் செய்து தற்போது இடைத்தேர்தல் நடைபெற வேண்டிய அவசியத்தை உருவாக்கியுள்ளனர்.</p><h2>மக்கள் அறிய மாட்டார்களா?</h2><p>இதற்கான தேவை என்ன? இந்த தேர்தல் நடைபெறுவதற்கு செலவழிக்கப்படும் தொகை மக்களின் வரிப்பணம் அல்லவா? இதை வீணடிக்க யார் உரிமை தந்தது? இந்தத் தேர்தலைத் திணித்து மக்கள் பணத்தை வீணடிக்க காரணம் யார் என்பதை மக்கள் அறிய மாட்டார்களா?</p><h2>அவசியம்</h2><p>தற்போது ஆட்சிக்கான பெரும்பான்மையில் எந்த பிரச்சினையுமில்லை. இந்த இடை தேர்தல் வெற்றி தோல்வி, ஆட்சியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது என்ற நிலையில், நடைபெறவுள்ள இடை தேர்தலின் முக்கியத்துவம் என்ன என்பதை சிந்தித்துப் பார்த்து, அதற்கேற்ப மக்கள் வாக்களிக்க வேண்டியது அவசியமாகும்.</p><h2>இடைத் தேர்தல் என்பது எடைத்தேர்தலே!</h2><p>கடந்த 120 நாட்களாகத் தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் த.வெ.க. ஆட்சியின் செயல்பாடுகளை அளவிடுவதற்கான வாய்ப்பே இந்த இடைத் தேர்தல்! பொதுவாக இடைத் தேர்தல்கள் என்பவையே, அரசை எடைபோட்டுப் பார்க்கும் தேர்தலே!</p><p><strong>அப்படி எடை போட்டு பார்த்தால் இந்த நான்கு மாதங்களில் ஆட்சியில் நடைபெற்றவை என்ன?</strong></p><h2>கட்சி தாவல்</h2><p>தமிழ்நாட்டில் இதுவரை அறிந்திராத குதிரை பேரங்களும், கட்சி தாவல்களும், நமது அரசியல் மாண்பை கேலிக்கு உள்ளாக்கியுள்ளன. அந்தச் சூழ்நிலைக்கு இலக்கான இரண்டு தொகுதிகளில் தான் இப்போது இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வாக்களித்த மக்களின் முடிவுக்கு எதிராகவே, கட்சி மாறிய வேட்பாளர்கள் இப்போது மீண்டும் வருகின்றனர்.</p> <h2>சட்டம்-ஒழுங்கு</h2><p> தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவரும் செய்திகள் அன்றாடம் வந்து கொண்டிருக்கின்றன. கொலைகளும், கூலி படைகளும், பாலியல் வன்கொடுமைகளும், ஆணவப் படுகொலைகளும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன.</p><h2>100 நாள் வேலை திட்டம்</h2><p> தமிழ்நாட்டை, ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை வஞ்சிக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்காமல், மக்களை பாதுகாத்து வந்தது கடந்த தி.மு.க. ஆட்சி. ஆனால், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் என்ற பெயரில் நடைபெற்றுவந்த 100 நாள் வேலை திட்டத்தை வீணடிக்கும் வகையில் மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்த திட்டத்தை ஏற்று கையொப்பமிட்டிருக்கிறது தற்போதைய த.வெ.க. அரசு.</p> <h2>பரந்தூர் விமான நிலைய திட்டம்</h2><p>தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியையும், பொருளாதார வளர்ச்சியையும் விரிவாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட கட்டமைப்பு திட்டங்களை இந்த அரசு கைவிட்டுள்ளது. அவற்றுள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவக் கூடிய பரந்தூர் விமான நிலைய திட்டம், பரந்தூர் வரையிலான மெட்ரோ விரிவாக்கம், உலகளாவிய விளையாட்டு நகரம், கிழக்கு கடற்கரை சாலை மேம்பாலத் திட்டம், சென்னை கிண்டி - வேளச்சேரி மேம்பாலத் திட்டம் ஆகியவை வெளிப்படையாக கைவிடப்பட்டுவிட்டன. இன்னும் பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.</p><h2>த.வெ.க. நிறைவேற்றவில்லை</h2><p> தேர்தலில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதற்கான காரணங்களை தேடி கொண்டிருக்கிறது த.வெ.க. அரசு. திராவிட முன்னேற்ற கழக அரசு கொண்டுவந்த மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமை தொகையை ரூ.2500 ஆக உயர்த்தி தருவோம் என்ற வாக்குறுதியைத் த.வெ.க. நிறைவேற்றவில்லை. அனைத்து வீடுகளுக்கும் ஆறு சிலிண்டர்கள் தருவோம் என்று சொன்னதை, தகுதி உடையவர்களுக்கு மூன்று சிலிண்டர் என்று மாற்றி, சொன்னதற்கு மாறாக நடந்துகொள்கிறது த.வெ.க. அரசு.</p> <h2>ஆட்சி சரியாக நடைபெறுகிறதா?</h2><p> ஆதரவு அளித்துள்ள கட்சிகளே, இந்த அரசின் பல நிலைப்பாடுகளுக்குக் கண்டனம் தெரிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காட்சிகளே நிரம்பியிருக்கின்றனவே தவிர, ஆட்சி சரியாக நடைபெறுகிறதா?</p> <h2>புதிய தலைமை செயலகம்</h2><p> நிதிநிலையை காரணம் காட்டி, மக்கள் நலத் திட்டங்களை தவிர்க்கும் அரசு, ரூ.1200 கோடி செலவில் புதிய தலைமை செயலகம் என்றும், பல கோடி செலவில் முதல்-அமைச்சர் அலுவலகம் மாற்றம் என்றும் தேவையற்றவற்றுக்கு செலவழிக்கும் அவலம்.</p><h2>தேசிய கல்வி கொள்கை</h2><p> மத்திய பா.ஜ.க. அரசின் தேசிய கல்வி கொள்கையின் அம்சங்களை நிறைவேற்ற மறைமுகமாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தனியார் பல்கலைக்கழகங்களுக்கு சாதமாக சில சட்டங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன.</p> <h2>அரசியல் காழ்ப்புணர்ச்சி</h2><p> மக்கள் நலத் திட்டங்களுக்கு எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பணியாற்றாமல், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் கைது, வழக்குகள் தொடர்வதிலேயே இந்த அரசு குறியாக இருப்பதுடன், அதற்கு முகாந்திரங்கள் இல்லை என்று நீதிமன்றங்களின் கண்டனங்களையும் பெற்றுள்ளது. இதுவே, இதன் காழ்ப்புணர்ச்சிக்கு அடையாளமாகும்.</p> <h2>இது நியாயந்தானா? </h2><p> தமிழ்நாட்டு சட்டமன்றத்தில், தேர்தல் தொகுதி மறுவரையறைப்பற்றி, எதிர்க்கட்சிகள் உள்பட அனைவரின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றாக இருக்க, உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடந்த தென்மண்டல முதl-அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பின், அந்த முடிவு மாற்றப்பட்டதே, இது நியாயந்தானா? உரிமையை அடகு வைத்த கொடுமையல்லவா? இன்னும் இந்த 120 நாட்களில் நடைபெற்றுள்ள மக்கள் நலத் திட்டங்கள் என்று சொல்வதற்கு எதுவுமில்லை என்பதே தற்போதைய நிலை.</p> <p><strong>திராவிட முன்னேற்றக் கழகத்துக்கே நமது ஆதரவு!</strong></p><h2> மக்களுக்கான குரல்</h2><p>இந்த இடை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெற வேண்டியது அவசியமான ஒன்றாகும். கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பான ஆட்சியை வழங்கினாலும், மக்களின் மாறுபட்ட முடிவின் காரணமாக எதிர்க்கட்சியாக ஆக்கப்பட்டபோதும், ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு மக்களுக்காக குரல் கொடுத்து வருவது திராவிட முன்னேற்றக் கழகமே!</p> <h2> பாடம் கற்பிக்க முடியும்</h2><p>இன்னும், தனது பா.ஜ.க. கூட்டணியை விடாமல், அவர்களுடன் இணைந்தே போட்டியிடுகிறது அ.இ.அ.தி.மு.க! தமிழ்நாட்டில் பா.ஜ.க கூட்டணி என்பது முற்றிலும் தோற்கடிக்கப்பட வேண்டிய கூட்டணியே ஆகும்.</p> <p>இந்த தேர்தலில், தி.மு.க. வெற்றி பெறுவதன் மூலம் த.வெ.க. அரசுக்கு ஒரு பாடம் கற்பிக்க முடியும். அதன் தவறான நிலைப்பாடுகள், போக்குகள், அரசியல் காழ்ப்புணர்ச்சி ஆகியவை மக்களுக்கு விரோதமானவை என்பதை எடுத்துச் சொல்லி திருத்த முயலும் மாறுபட்ட மக்கள் தீர்ப்பு. ஆரோக்கிய அரசியல் உருவாக தோல்வி ஒரு பாடமாக ஆவதற்கு, இந்த இடைத் தேர்தல் ஒரு முக்கியமான வாய்ப்பாகும்.</p><h2>ஜனநாயக மாண்பு</h2><p>எனவே, நான்கு மாத த.வெ.க. ஆட்சிக்கு பாடம் கற்பிக்கவும், ஜனநாயகத்தின் மாண்பையும் கருதி, இவ் விரு தொகுதி மக்களும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.</p> <h2>உதவும் அல்லவா!</h2><p>போதிய பெரும்பான்மை ஆளுங்கட்சிக்கு இல்லை என்ற நிலையில், த.வெ.க.வுக்கு ஆதரவு கொடுத்த கட்சிகளே, ஆளுங்கட்சியின் நடவடிக்கைகளுக்கு விமர்சனமும், எதிர்ப்பும் தெரிவிக்கும் நிலையில், சட்டமன்ற நடவடிக்கைகளின் மரபும், மாண்பும் காணாமல் போன விசித்திரத்தை உருவாக்கிய ஆளுங்கட்சி தோற்றால், தங்களது அதிகார, ஆணவம்பற்றி அவர்களே உணர்ந்து, மாற்றத்தை ஏற்படுத்தி கொள்ள தி.மு.க.வின் வெற்றி உதவும் அல்லவா!</p><h2>நல்ல அரசியல் திருப்பம்</h2><p>திராவிடர் கழகத்தின் முழுமையான ஆதரவை திராவிட முன்னேற்ற கழகத்திற்கு வழங்கி, பிரச்சாரத்திலும் கழகம் ஈடுபடும்! மயக்கமின்றி, தயக்கமின்றி இரண்டு தொகுதி வாக்காள பெருமக்களும் ஆழ்ந்து சிந்தித்து, வாக்களித்து தி.மு.க.வை வெற்றி பெற வைத்தால், அது ஒரு நல்ல அரசியல் திருப்பம் ஆகும்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பயன்படுத்திய விவகாரம்: விநாயகர் சிலைகளை தடையின்றி விற்பனை செய்ய மதுரை ஐகோர்ட்டு கிளை அனுமதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/issue-regarding-the-use-of-plaster-of-paris-madurai-bench-of-the-high-court-permits-the-sale-of-vinayagar-idols-without-hindrance</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/issue-regarding-the-use-of-plaster-of-paris-madurai-bench-of-the-high-court-permits-the-sale-of-vinayagar-idols-without-hindrance#comments</comments><guid isPermaLink="false">9442da23-d884-403c-b857-f3e926af0990</guid><pubDate>Sat, 12 Sep 2026 09:13:49 +0000</pubDate><atom:updated>2026-09-12T09:13:49.876Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai High Court Branch,மதுரை ஐகோர்ட்டு கிளை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/6e3v466d/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/6e3v466d/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி பண்டிகை உள்ளிட்ட விழாக்களுக்கு சிலைகள் தயாரித்து விற்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் ராஜஸ்தானை சேர்ந்த வேலராம் என்பவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், அனுமதியின்றி தொழில் செய்வதாக கூறி மதுரை மாநகராட்சி நிர்வாகம் தனக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும், உரிய விளக்கமளிக்க 7 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் அதற்குள் தன்னுடைய சிலை தயாரிப்பு வளாகத்தை பூட்டி சீல் வைத்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.</p><p>மேலும் சிலைகள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மற்றும் தெர்மாகோல் போன்றவற்றிற்கு விதிக்கப்பட்ட நிபந்தனையை நீக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி விக்டோரியா கவுரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பயன்படுத்தி சிலை தயாரிக்க கூடாது என்ற நிபந்தனைக்கு இடைக்கால தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.</p><p>மேலும் விநாயகர் சிலைகளை தடையின்றி விற்பனை செய்ய அனுமதி வழங்குவதாகவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். விநாயகர் சதுர்த்தி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு சிலை தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>&apos;ப்யூஸ் போன&apos; த.வெ.க. அரசு.. - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-government-with-a-blown-fuse-udhayanidhi-stalins-criticism</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-government-with-a-blown-fuse-udhayanidhi-stalins-criticism#comments</comments><guid isPermaLink="false">d11eeee8-8cbf-4faf-b7b8-98865efe3130</guid><pubDate>Sat, 12 Sep 2026 08:53:16 +0000</pubDate><atom:updated>2026-09-12T08:53:16.619Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,திமுக,DMK,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,உதயநிதி,Udhayanidhi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/b6onhzdv/udhay.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/b6onhzdv/udhay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாமல் திண்டாடும் 'ப்யூஸ் போன' த.வெ.க. அரசு திசைதிருப்பும் வேலைகளை நிறுத்திவிட்டு, மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>போராடும் மக்கள்</h2><p>தொடர்ந்து <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழ்நாடு </a>முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்சாரம் இருந்தாலும் voltage பிரச்சினை என மக்கள் வெகுண்டெழுந்து வீதிக்கு வந்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.</p><p>ஆனால், துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரோ, இதைச் சரிசெய்யும் முயற்சிகளைச் செய்யாமல் தேவையில்லாத அவதூறுகளை உளறிக் கொண்டிருக்கிறார்.</p><h2>'ப்யூஸ் போன' அரசு</h2><p>மின்சாரம், ஆவின் பால் விநியோகம் என மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாமல் திண்டாடும் 'ப்யூஸ் போன' த.வெ.க. அரசு திசைதிருப்பும் வேலைகளை நிறுத்திவிட்டு, மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு; மல்லை சத்யா அறிவிப்பு
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/idaithearthalil-thimukavukku-aatharavu-mallai-sathya-arivippu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/idaithearthalil-thimukavukku-aatharavu-mallai-sathya-arivippu#comments</comments><guid isPermaLink="false">ebc2569d-99a8-4ebd-a1d9-f10bef3c081a</guid><pubDate>Sat, 12 Sep 2026 08:49:16 +0000</pubDate><atom:updated>2026-09-12T08:49:16.952Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,மல்லை சத்யா,Mallai Sathya,தி.மு.க.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/ybha9009/stdpe.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தி.மு.க.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/ybha9009/stdpe.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்கிறோம் என்று மல்லை சத்யா அறிவித்து உள்ளார்.</p><p>தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க. ஆட்சியமைத்து உள்ளது.  முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்று உள்ளார்.  இதில். அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற 6 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க.வில் இணைந்தனர்.</p> <p>இதனால், காலியாக உள்ள 6 தொகுதிகளில், மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) தொகுதிகளுக்கு மட்டும் அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் 9-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் களம் காண அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதன்படி, ஆளும் கட்சியான த.வெ.க. மற்றும் தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.</p> <h2>வேட்பாளர்கள் அறிவிப்பு</h2><p>இதில், மற்ற கட்சிகளை முந்திக்கொண்டு தி.மு.க. முதல் கட்சியாக 2 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது. அதன்படி மதுராந்தகத்தில் பரந்தாமனும், தாராபுரத்தில் சுகன்யாவும் போட்டியிடுகிறார்கள் என அறிவிக்கப்பட்டது.</p><p>இந்த நிலையில், இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்கிறோம் என்று திராவிட வெற்றிக்கழக தலைவர் மல்லை சத்யா அறிவித்து உள்ளார். அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, த.வெ.க. அரசுக்கு எதிராக மக்கள் மத்தியில் எதிர்ப்பு அலை வீசுகிறது என்று கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து நாளை அறிவிக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-communist-party-marxist-will-announce-its-stance-on-the-by-election-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-communist-party-marxist-will-announce-its-stance-on-the-by-election-tomorrow#comments</comments><guid isPermaLink="false">af08ed3b-4448-426e-866a-c038f5d5f6ab</guid><pubDate>Sat, 12 Sep 2026 08:41:37 +0000</pubDate><atom:updated>2026-09-12T08:41:37.952Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,TVK,தவெக,Tamilnadu,அதிமுக,திமுக,DMK,தமிழகம்,இடைத்தேர்தல்,பெ.சண்முகம்,Marxist Communist Party,மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு,byelection</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/prdeppsn/vasai.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/prdeppsn/vasai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து நாளை நடைபெறும் மாநிலக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அறிவித்துள்ளார். </p><h2>‘மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’</h2><p>மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்லுக்கு <a href="https://www.dailythanthi.com/topic/tvk">த.வெ.க.</a>, தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. இதில் ஆளும் த.வெ.க. தலைமையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து ‘மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என்ற பெயரில் ஒரு அணியை உருவாக்கி உள்ளது. இந்த அணியில் உள்ளவர்கள் த.வெ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவை தெரிவித்துள்ளனர்.</p><h2>இடைத்தேர்தல் நிலைப்பாடு</h2><p>அதே நேரம் அரசை வெளியில் இருந்து ஆதரிக்கும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இந்தநிலையில் மார்க்சிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. அதில் சட்டசபை இடைத்தேர்தலில் என்ன நிலைப்பாட்டை எடுப்பது என்பது தொடர்பாக முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. </p><p>இந்நிலையில் இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து நாளை திருச்சியில் நடைபெறும் மாநிலக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். </p><h2>மாநில குழு கூட்டம்</h2><p>இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இன்று நடைபெற்ற கூட்டத்தில் இடைத்தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. மாநில குழுவை கூட்டி, முடிவை எடுக்க திட்டமிட்டுள்ளோம். நாளை காலை அவசர மாநில குழு கூட்டம் திருச்சியில் நடக்கிறது. முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் முடிவு என்பதால், மாநில குழு கூட்டத்தில் விவாதிக்க இருக்கிறோம். நாளை மதியம் 2 மணிக்கு முடிவு அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இணக்கமான சூழல் உருவாவதை உறுதி செய்ய வேண்டும் - டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ensure-harmonious-environment-between-police-and-public-says-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ensure-harmonious-environment-between-police-and-public-says-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">5dceb04a-cf40-4de5-98ae-cc4a4528165a</guid><pubDate>Sat, 12 Sep 2026 08:22:28 +0000</pubDate><atom:updated>2026-09-12T08:22:28.753Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,TTV Dhinakaran,டிடிவி தினகரன்,அமமுக,ஆர்.கே.நகர்,RK Nagar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/5b31ug7e/Untitled-12.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/5b31ug7e/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இணக்கமான சூழல் உருவாவதை உறுதி செய்ய வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்த பெண்கள் மீது தாக்குதல் - பெண்களை இழிவுபடுத்தினால் சட்டம் தன் கடமையைச் செய்யும் என சட்டமன்றத்தில் பஞ்ச் டயலாக் பேசும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்?</p><p>சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களைப் பார்க்கச் சென்ற பெண் ஒருவரைத் தாக்கியதோடு, அதனைத் தட்டிக்கேட்ட பெண் வழக்கறிஞரையும் காவல்துறையினர் தாக்கியதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.</p><p>ஒருபுறம், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் காவல்துறையைப் பாராட்டிப் பேசுகிறார். மறுபுறம், காவல் ஆய்வாளர் மிரட்டியதாகப் புகார் அளித்த நபர் அடுத்த நாளே படுகொலை செய்யப்பட்டதாகவும், காவல் நிலையத்திற்கு வரும் பெண்கள் மிரட்டப்பட்டு, அவமதிக்கப்பட்டு, தாக்கப்படுவதாகவும் வெளியாகும் செய்திகள், தமிழகத்தில் பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையே அவர்களுக்கு அச்சுறுத்தலாக மாறிவிட்டதா என்ற கேள்வியை எழுப்புகிறது.</p><p>பொதுமக்களின் குறைகளைக் களைய வேண்டிய காவல்துறையினரின் தவறுகளைக் கண்டுகொள்ளாமல் கடந்து செல்வதும், அவர்களின் அதிகாரத் துஷ்பிரயோகத்திற்கு இடமளிப்பதும், அவர்கள் இழைக்கும் தவறுகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கு சமமாகும் என்பதை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உணர வேண்டும்.</p><p>எனவே, ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் காவலர்கள் பெண்களைத் தாக்கியதாக எழுந்துள்ள புகாரை விரிவாக விசாரித்து, குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இணக்கமான சூழல் உருவாவதை உறுதி செய்ய வேண்டும் என தவெக அரசையும், அதன் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும்: சென்னை ஐகோர்ட்டில் மனு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/petition-filed-in-madras-high-court-seeking-a-stay-on-the-maduranthakam-and-dharapuram-by-elections</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/petition-filed-in-madras-high-court-seeking-a-stay-on-the-maduranthakam-and-dharapuram-by-elections#comments</comments><guid isPermaLink="false">76da6a4b-546d-40c4-a315-87eaf0e21f3c</guid><pubDate>Sat, 12 Sep 2026 08:18:34 +0000</pubDate><atom:updated>2026-09-12T08:18:34.466Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இடைத்தேர்தல்,சென்னை ஐகோர்ட்,மதுராந்தகம்,தாராபுரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/zitu28wg/chennai-high-court.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/zitu28wg/chennai-high-court.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ந் தேதி தொடங்கியுள்ள நிலையில், இடைத்தேர்தலிலும் த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் ஆகிய கட்சிகள் இடையே 4 முனைப்போட்டி நிலவுகிறது. இதில், நாம் தமிழர் கட்சியை தவிர, தேர்தல் களம் காணும் 3 கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. கடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்) ஆகிய 2 பேரும் தற்போது த.வெ.க. சார்பில் அதே தொகுதிகளில் களம் காண்கின்றனர்.</p> <p>பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. சார்பில் ஐ.பரந்தாமன் (மதுராந்தகம்), எஸ்.சுகன்யா (தாராபுரம்) ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத் (மதுராந்தகம்), பானுமதி (தாராபுரம்) ஆகியோர் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. தேர்தல் நடத்துவதற்கான முழு ஏற்பாடுகளும்  நடைபெற்று வருகின்றன. </p><p>இந்த நிலையில், இடைத்தேர்தல் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமாவின் வேட்புமனுக்களை ஏற்க தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராஜினாமா செய்பவர்களை குறிப்பிட்ட காலத்துக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க சட்டம் கொண்டு வர வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>சாலமன் பாப்பையா வசித்த தெருவுக்கு அவரது பெயர்: மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் - மதுரை மேயர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-street-where-solomon-papaiah-lived-will-be-named-after-him-resolution-will-be-passed-in-the-council-meeting-madurai-mayor</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-street-where-solomon-papaiah-lived-will-be-named-after-him-resolution-will-be-passed-in-the-council-meeting-madurai-mayor#comments</comments><guid isPermaLink="false">ecf1bbff-12d3-4be2-8e98-469bcb0262e2</guid><pubDate>Sat, 12 Sep 2026 08:12:56 +0000</pubDate><atom:updated>2026-09-12T08:12:56.081Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,Mayor,தெரு,மதுரை மேயர்,council meeting,Street,சாலமன் பாப்பையா,பெயர் சூட்டல்,Solomon Papaiah</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/wye8w5qg/16.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/wye8w5qg/16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 90. மதுரையை சேர்ந்த சாலமன் பாப்பையா பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றிய இவர், தமிழ் இலக்கியங்கள் குறித்து ஆற்றிய உரைகளாலும் பிரபலமானவர். திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார்.</p><h2>உடல் தகனம்</h2><p>இந்த நிலையில், மதுரை வெப் மெமோரியல் தேவாலயத்தில் வைத்து உறவினர்கள் முன்னிலையில் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது. துப்பாக்கி குண்டுகள் முழக்கம் இல்லாமல் சாலமன் பாப்பையாவின் உடலுக்கு கவுரவ மரியாதை அளிக்கப்பட்டது. அரசு சார்பில் அமைச்சர்கள் நிர்மல்குமார், விஸ்வநாதன் ஆகியோர் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். இதையடுத்து தத்தநேரி மின் மயானத்தில் சாலமன் பாப்பையாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.</p><h2>மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம்</h2><p>இந்நிலையில் மதுரையில் பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையாவின் இல்லத்திற்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் அளித்துவிட்டு மதுரை மாநகராட்சியின் மேயர்(பொறுப்பு)  நாகராஜன் வெளியில் வந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE">சாலமன் பாப்பையா </a>வசித்த தெருவிற்கு அவரது பெயரைச் சூட்டுவதற்கு மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும், என்று அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>மதுரை முனியாண்டி கோவிலில் கிடாய் வெட்டு திருவிழா: 25,000 பேருக்கு பிரமாண்ட கறிவிருந்து </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kidai-vettu-festival-at-muniyandi-temple-madurai-a-grand-curry-feast-for-25000-people</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kidai-vettu-festival-at-muniyandi-temple-madurai-a-grand-curry-feast-for-25000-people#comments</comments><guid isPermaLink="false">be3b935b-a7df-4200-b414-7c4c483b2cc4</guid><pubDate>Sat, 12 Sep 2026 08:09:57 +0000</pubDate><atom:updated>2026-09-12T08:09:57.229Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,Festival,people,திருவிழா,அன்னதானம்,ஆடு,feast,முனியாண்டி கோவில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/80m9v5cs/1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ முனியாண்டி சாமி- அன்னதானம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மதுரை முனியாண்டி கோவிலில் கிடாய் வெட்டு திருவிழா.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/80m9v5cs/1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரை முனியாண்டி கோவிலில் நடைபெற்ற கிடாய் வெட்டு திருவிழாவில் சுமார் 25,000-க்கும் மேற்பட்டோருக்கு கறிவிருந்து அன்னதானம் வழங்கப்பட்டது.</p><h2>கிடாய் வெட்டு திருவிழா</h2><p>மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே உள்ள வெள்ளக்கல் பகுதியில் புகழ்பெற்ற 4-வது கழுங்கடி அருள்மிகு<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D"> ஸ்ரீ முனியாண்டி சுவாமி திருக்கோவில் </a>அமைந்துள்ளது. இந்த கோவிலின் 38-வது ஆண்டு கிடாய் வெட்டு திருவிழா மற்றும் மாபெரும் சமபந்தி கறிவிருந்து அன்னதானம் இன்று (சனிக்கிழமை) பெரும் விமர்சையாக நடைபெற்று வருகிறது.</p><h2>450 கிடாய்கள், 10 ஆயிரம் கிலோ அரிசி</h2><p>இத்திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய சுமார் 450 ஆட்டுக் கிடாய்கள் முனியாண்டி சுவாமிக்கு பலியிடப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, விடிய விடிய 10,000 கிலோ அரிசி மற்றும் டன் கணக்கிலான மசாலாப் பொருட்களைக் கொண்டு பிரம்மாண்டமான முறையில் கறிவிருந்து தயார் செய்யப்பட்டது.</p><h2>25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகை</h2><p>இன்று காலை முதல் நடைபெற்று வரும் இந்த மகா அன்னதானத்தில், மதுரையின் சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த 25,000-க்கும் மேற்பட்ட<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"> பக்தர்கள் </a>நீண்ட வரிசையில் காத்திருந்து ஆவி பறக்கும் கறிவிருந்தை பிரசாதமாக உண்டு மகிழ்ந்து வருகின்றனர்.</p><h2>விழா சிறப்புகள்</h2><p>திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளக்கல் கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த பாரம்பரிய விழாவில், முனியாண்டி சுவாமிக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. இதில் ஏராளமான அரசியல் பிரமுகர்கள், முக்கியப் புள்ளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மதுரையின் பாரம்பரிய முனியாண்டி விலாஸ் உணவகங்களின் பின்னணியோடு தொடர்புடைய இந்த பிரம்மாண்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE">கறிவிருந்து திருவிழா</a>, இப்பகுதியில் பெரும் திருவிழா கோலத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><figure><iframe src="https://www.facebook.com/plugins/post.php?width=552&height=500&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fwatch%2F%3Fv%3D1445189160848379" width="552" height="500" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></figure>]]></content:encoded></item><item><title>காதலித்த வாலிபர் மிரட்டியதால் சோக முடிவு: நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் கல்லூரி மாணவி தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/college-student-dies-by-suicide-after-threats-from-lover</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/college-student-dies-by-suicide-after-threats-from-lover#comments</comments><guid isPermaLink="false">98811b69-a516-4c89-8f67-0745fa99e7a3</guid><pubDate>Sat, 12 Sep 2026 08:04:08 +0000</pubDate><atom:updated>2026-09-12T08:04:08.598Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருப்பத்தூர்,தற்கொலை,Thirupathur,வாணியம்பாடி,Vaniyambadi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/6e7fpur5/Untitled-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/6e7fpur5/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பத்தூர்,</p><p>நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில், காதலித்த வாலிபர் மிரட்டியதால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.</p><h2>நாளை திருமணம்</h2><p>திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கொத்தக்கோட்டை கோடியூர் பகுதியை சேர்ந்தவர்கள் விநாயகம் அலமேலு தம்பதி. இவர்களுடைய மகள் ஸ்ரீ தர்ஷினி (20 வயது). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு கணினி அறிவியல் படித்து வந்தார்.</p><p>இவருக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து திருமணம் பேசி முடித்திருந்தனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருப்பத்தூர் அடுத்த பேராம்பட்டு மங்குண்டு பெருமாள் கோவிலில் திருமணம் நடக்க இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை மணமகன், மணமகள் வீட்டார் தீவிரமாக செய்து வந்தனர்.</p><h2>விஷம் குடித்து தற்கொலை</h2><p>மாணவியை வாலிபர் ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மாணவிக்கு திருமணம் நடக்க இருந்ததை அறிந்த அந்த வாலிபர் மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டு என்னை விட்டுவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்வாயா? என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மாணவி ஸ்ரீ தர்ஷினி மனமுடைந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அனைவரும் வழக்கம்போல் தூங்கச்சென்றனர். நேற்று காலையில் பார்த்தபோது மாணவி ஸ்ரீ தர்ஷினி படுக்கையில் பிணமாக கிடந்தார். அருகில் சென்று பார்த்தபோது அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி ஸ்ரீ தர்ஷினியின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் மாணவியை காதலித்த வாலிபர் செல்போனில் மிரட்டியது தெரிய வந்தது. இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: வீட்டின் தண்ணீர் தொட்டியில் பதுங்கிய 5 அடி நீள நல்ல பாம்பு மீட்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-5-foot-long-snake-rescued-from-water-tank-in-house</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-5-foot-long-snake-rescued-from-water-tank-in-house#comments</comments><guid isPermaLink="false">39caf11e-b6a9-40ce-b00c-2cf7bee35546</guid><pubDate>Sat, 12 Sep 2026 07:57:02 +0000</pubDate><atom:updated>2026-09-12T07:57:02.463Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Snake,House,வீடு,மீட்பு,Rescue,தண்ணீர் தொட்டி,water tank,hidden,நல்லபாம்பு,பதுங்கி இருந்த</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/pk7xx8o1/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-5-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வீட்டின் தண்ணீர் தொட்டியில் பதுங்கிய 5 அடி நீள நல்ல பாம்பு மீட்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/pk7xx8o1/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-5-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF">தண்ணீர் தொட்டி</a>யில் பதுங்கியிருந்த 5 அடி நீளமுள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">நல்ல பாம்பை</a> சிப்காட் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">தீயணைப்பு </a>மற்றும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">மீட்பு</a>ப் படையினர் பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.</p><h2>தண்ணீர் தொட்டிக்குள் சென்று பதுங்கிய நல்ல பாம்பு</h2><p>தூத்துக்குடி மடத்தூர், கல்லூரி நகர் பகுதியில் வசித்து வருபவர் மங்கேஷ்பாபு. இவரது வீட்டின் வளாகத்திற்குள் திடீரெனப் புகுந்த நல்ல பாம்பு ஒன்று, அங்கிருந்த தண்ணீர் தொட்டிக்குள் சென்று பதுங்கிக் கொண்டது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக வெளியேறி, சிப்காட் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். </p><h2>நல்ல பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைப்பு</h2><p>இதையடுத்து சிப்காட் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில், சிறப்பு நிலை அலுவலர் இசக்கிராஜன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தவசி, ஜெயக்குமார், அஜித் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீர் தொட்டிக்குள் பதுங்கியிருந்த 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பை சாதுரியமாக மீட்டு, பாதுகாப்பாக வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். சாதுரியமாக செயல்பட்டு பாம்பை மீட்ட தீயணைப்புத் துறை வீரர்களுக்கு வீட்டின் உரிமையாளர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item></channel></rss>