<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 26 Jul 2026 11:41:05 +0000</lastBuildDate><item><title>பூண்டு வரத்து குறைவு: கிலோ ரூ.350-ஐ தொட்டதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/garlic-supply-down-housewives-shocked-as-price-touches-rs350-per-kg</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/garlic-supply-down-housewives-shocked-as-price-touches-rs350-per-kg#comments</comments><guid isPermaLink="false">9886a80e-a070-4df3-97d5-189bc1b69d95</guid><pubDate>Sun, 26 Jul 2026 11:38:26 +0000</pubDate><atom:updated>2026-07-26T11:38:26.244Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Price,உயர்வு,பூண்டு விலை,Shocked,Garlic,வாணாபுரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/13c8gyik/90.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பூண்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/13c8gyik/90.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வாணாபுரம்</p><p>வாணாபுரம், தச்சம்பட்டு, வெறையூர் உள்ளிட்ட பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளன. மேலும் இப்பகுதிகளில் மோட்டார் சைக்கிள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பூண்டு, காய்கறிகள் உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்படுகின்றன. வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் விளையும் காய்கறிகள், பூண்டு ஆகியவை இப்பகுதியில் கொள்முதல் செய்து விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>விலை</h2><p>இந்த நிலையில் காய்கறி கடைகளில் கடந்த சில நாட்களாக பூண்டு வரத்து படிப்படியாக குறைந்ததால் பூண்டின் விலை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியது. கடந்த வாரம் பூண்டு கிலோ ரூ.160 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒரு கிலோ ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனையாகிறது.</p><p>அதே நேரத்தில் சில்லறை கடைகளில் ஒரு கிலோ பூண்டு ரூ.310 முதல் ரூ.360 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமையலுக்கு அன்றாடம் பூண்டு தேவைப்படுவதால் விலை உயர்வை கண்டு இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் மேலும் வேறு வழியின்றி கிலோ கணக்கில் இல்லாமல் ரூ.50 மற்றும் ரூ.100க்கு வாங்கி செல்கின்றனர்.</p><p>இதுதவிர மற்ற காய்கறிகளின் விலை அதிகரித்து வருகிறது. இதனால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிமாநிலங்களில் தற்போது மழையின்றி விவசாய பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கடும் வறட்சியில் இருந்து வரும் நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">பூண்டு</a> வரத்து குறைந்துள்ளதால் பூண்டின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு சில வாரங்கள் நீடிக்கும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சிவகாசியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட 11 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/11-people-arrested-for-illegal-firecracker-manufacturing-in-sivakasi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/11-people-arrested-for-illegal-firecracker-manufacturing-in-sivakasi#comments</comments><guid isPermaLink="false">698c5462-f953-47f5-a6dd-6e946b73a1a3</guid><pubDate>Sun, 26 Jul 2026 11:16:02 +0000</pubDate><atom:updated>2026-07-26T11:16:02.490Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,police investigation,Sivakasi,சிவகாசி,வெடி விபத்து,பட்டாசு ஆலை,பட்டாசு ஆலை விபத்து,போலீசார் சோதனை,பட்டாசு தயாரிப்பு,fire cracker factory</media:keywords><media:content height="543" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/ehogan8m/melum.jpg" width="805"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/ehogan8m/melum.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகாசி, </p><p>பட்டாசு விபத்தில் இன்று 3 பேர் உயிரிழந்துள்ளநிலையில், செங்கமலப்பட்டி சுற்று வட்டாரத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். </p><h2>வெடி விபத்து</h2><p>விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி பகுதியில் தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அங்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.</p><h2>3 பேர் பலி</h2><p>இந்த சம்பத்தின்போது பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புப் படையினர் மற்றும் போலீசார் விரைந்தனர். எனினும், இந்த விபத்தில் தொழிலாளர்கள் 2 பேர் பலியாகினர்.படுகாயமடைந்த மேலும் ஒரு தொழிலாளி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவரும் சிகிச்சை பலனின்றி பலியானார். இதையடுத்து இந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.</p><p>இதனிடையே பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><h2>11 பேர் கைது</h2><p>இந்நிலையில் சிவகாசியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பட்டாசு விபத்தில் 3 பேர் இன்று உயிரிழந்துள்ளநிலையில், செங்கமலப்பட்டி சுற்று வட்டாரத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் மற்றும் மூலப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>கார்கில் வெற்றி நாள்: நாட்டை காத்த வீரர்களுக்கு இதயப்பூர்வமான அஞ்சலி - மு.க.ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kargil-victory-day-heartfelt-tribute-to-the-soldiers-who-defended-the-country-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kargil-victory-day-heartfelt-tribute-to-the-soldiers-who-defended-the-country-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">f2714ffa-47a9-4590-9513-93f96adcd9c9</guid><pubDate>Sun, 26 Jul 2026 10:54:39 +0000</pubDate><atom:updated>2026-07-26T10:54:39.724Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Tribute,Kargil Victory Day,கார்கில் போர் வெற்றி தினம்,மு.க.ஸ்டாலின் MK Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/y3jcjioo/88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/y3jcjioo/88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திமுக தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>அஞ்சலி</h2><p>கார்கில் வெற்றி நாளில், மிகக் கடுமையான சூழலிலும் ஒப்பற்ற துணிச்சலுடனும் மன உறுதியுடனும் இந்தியாவைக் காத்த வீரர்களுக்கு நம் இதயப்பூர்வமான அஞ்சலியைச் செலுத்துகிறோம்!</p><p>தாய்நாட்டிற்காகத் தங்கள் இன்னுயிரை ஈந்த மாவீரர்களின் நினைவைப் போற்றுகிறோம். அவர்களின் குடும்பங்களுக்கு நாம் என்றும் கடமைப்பட்டுள்ளோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆகஸ்ட் 1-ல் தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி:  மாணிக்கம் தாகூர் வரவேற்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rahul-gandhi-to-visit-tamil-nadu-on-august-1-says-manickam-thakur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rahul-gandhi-to-visit-tamil-nadu-on-august-1-says-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">ad0fba90-2ac5-4c15-aefe-5f3f5036fd46</guid><pubDate>Sun, 26 Jul 2026 10:48:26 +0000</pubDate><atom:updated>2026-07-26T10:48:26.839Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,ராகுல் காந்தி,Rahul Gandhi,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore MP,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Tagore,தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/vsc4u8l5/Untitled-3.jpg" width="753"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/vsc4u8l5/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி தமிழகம் வருகை தருகிறார். இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- </p><h2>ராகுல் காந்தி வருகை</h2><p>ஆகஸ்ட் 1 அன்று தமிழகம் எங்கள் அன்புத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திய்யை உற்சாகத்துடன் வரவேற்கத் தயாராக உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் (அமைப்பு) கே.சி. வேணுகோபால் அறிவித்தபடி, ராகுல் காந்தி ஆகஸ்ட் 1 அன்று தமிழகம் வருகிறார்.</p><p>அரசியலமைப்பைப் பாதுகாப்பது, ஜனநாயகத்தை வலுப்படுத்துவது, சமூக நீதி நிலைநாட்டுவது, இளைஞர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவது என்ற இலட்சியங்களுக்காக இடைவிடாது போராடி வரும் ராகுல் காந்தி அவர்களின் இந்த வருகை, தமிழக காங்கிரஸ் தொண்டர்களுக்கும் மக்களுக்கும் புதிய உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளிக்கும்.</p><h2>மாணிக்கம் தாகூர் வரவேற்பு</h2><p>தமிழக மக்கள் சார்பிலும், தமிழக காங்கிரஸ் குடும்பம் சார்பிலும் அவருக்கு மனமார்ந்த வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறோம்.</p><p>2029-ல் ராகுல் காந்தியை இந்தியாவின் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பிரதமராக்கும் </a>இலக்கை நோக்கி நம் பயணம் மேலும் வலுப்பெறட்டும்!.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கரூர்: நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - ரூ. 57 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-anti-corruption-raid-at-municipal-office-rs-57k-cash-seized</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-anti-corruption-raid-at-municipal-office-rs-57k-cash-seized#comments</comments><guid isPermaLink="false">d1bbeffd-23a3-4dc4-b495-8e270c285fdd</guid><pubDate>Sun, 26 Jul 2026 10:45:40 +0000</pubDate><atom:updated>2026-07-26T10:45:40.783Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர்,Karur,Anti-Corruption Police,லஞ்ச ஒழிப்பு போலீசார்,லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/oml43eok/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/oml43eok/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கரூர்,</p><p>தமிழகத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனைகளை நடத்தி லட்சக்கணக்கான ரூபாய் லஞ்சப்பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். </p><p>அந்த வகையில் <a href="https://www.dailythanthi.com/">கரூர் </a>மாவட்டம் புகழூர் நகராட்சி அலுவலகத்தில்  லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை அதிரடி சோதனை நடத்தினர். 4 மணிநேரத்திற்கு மேல் நடந்த இந்த சோதனை நடைபெற்றது.  </p><h2>ரூ. 57 ஆயிரம் பறிமுதல்</h2><p>நகராட்சி ஆணையர்  வெங்கடாசலபதி மற்றும் 5க்கும் மேற்பட்ட அலுவலர்களிடம் விசாரணை நடைபெற்றது.  இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ. 57 ஆயிரம் ரொக்கப்பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து நகராட்சி ஆணையர் மற்றும் அலுவலர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/deadline-extended-for-mbbs-and-bds-course-applications</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/deadline-extended-for-mbbs-and-bds-course-applications#comments</comments><guid isPermaLink="false">6404409d-b675-4ebe-a27c-aa33ac23c715</guid><pubDate>Sun, 26 Jul 2026 10:18:12 +0000</pubDate><atom:updated>2026-07-26T10:18:12.277Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,MBBS,BDS,பி.டி.எஸ்,எம்.பி.பி.எஸ். படிப்பு,மருத்துவ கல்வி இயக்குநரகம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/ybqb00br/saooli.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/ybqb00br/saooli.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><h2>கலந்தாய்வு</h2><p>எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளங்கலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து, கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவை மருத்துவ கல்வி இயக்குனரகம் கடந்த மாதம் (ஜூன்) 29-ந்தேதி தொடங்கியது. </p> <h2>மாணவர் சேர்க்கைக் குழு</h2><p>விண்ணப்பப்பதிவு கடந்த 23-ம் தேதி நிறைவு பெற்றது. அதன்படி, இளங்கலை எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 40 ஆயிரத்து 760 விண்ணப்பங்களும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 29 ஆயிரத்து 726 விண்ணப்பங்களும் என மொத்தம் 70 ஆயிரத்து 486 விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு தெரிவித்திருந்தது.</p><h2>கடந்த ஆண்டை விட குறைவு</h2><p>இது கடந்த ஆண்டுகளுடனான விண்ணப்பங்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது, குறைவு ஆகும். கடந்த ஆண்டில் 72 ஆயிரத்து 743 விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியான விண்ணப்பங்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட இருக்கின்றன. அதனைத் தொடர்ந்து கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டு, அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை இடங்கள் நிரப்பப்பட உள்ளன.</p><h2>கால அவகாசம் நீட்டிப்பு</h2><p>இந்நிலையில் ஜூலை 23ம் தேதியுடன் விண்ணப்பக் காலம் முடிந்த நிலையில் ஜூலை 27ம் தேதி (நாளை) மாலை 5 மணி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: நடுக்கடலில் தீப்பற்றி எரிந்த மீன்பிடி விசைப்படகு  

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-fishing-boat-catches-fire-mid-sea</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-fishing-boat-catches-fire-mid-sea#comments</comments><guid isPermaLink="false">4c23b043-01be-4841-906d-3561fe58db2a</guid><pubDate>Sun, 26 Jul 2026 10:16:58 +0000</pubDate><atom:updated>2026-07-26T10:16:58.836Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Fire accident,தீ விபத்து,boat,படகு,தூத்துக்குடி,Tuticorin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/a7gex0zp/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/a7gex0zp/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[   <p>தூத்துக்குடி,</p><p><a href="https://www.dailythanthi.com/">தூத்துக்குடி </a>மாவட்டம் தருவகைக்குளத்தை சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலுக்கு விசைப்படகில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 160 நாடிகல் மைல் தொலைவில் நடுக்கடலில் இன்று மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.</p><h2>தீ விபத்து</h2><p>நடுக்கடலில் மீன்பிடி விசைப்படகில் மீனவர்கள் இன்று காலை சமையல் செய்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக விசைப்படகில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் அனைவரும் கடலில் குதித்து உயிர் தப்பினர். </p><p>இதையடுத்து, அங்கிருந்த மற்றொரு விசைப்படகு மீனவர்கள் இவர்களை பத்திரமாக மீட்டனர். ஆனாலும், இந்த தீ விபத்தில் மீன்பிடி விசைப்படகு முற்றிலும் எரிந்து நாசமானது. பல லட்ச ரூபாய் மதிப்புள்ள விசைப்படகு தீயில் எரிந்து நாசமானதால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>68 வயது  மூதாட்டியை எலி கடித்த சம்பவம்: தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனரகம் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/incident-of-a-rat-biting-a-68-year-old-woman-tamil-nadu-directorate-of-medical-education-issues-clarification</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/incident-of-a-rat-biting-a-68-year-old-woman-tamil-nadu-directorate-of-medical-education-issues-clarification#comments</comments><guid isPermaLink="false">7242a99a-8935-467b-a65a-10f660ea54f7</guid><pubDate>Sun, 26 Jul 2026 09:47:14 +0000</pubDate><atom:updated>2026-07-26T09:47:14.987Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,திருச்சி,Trichy,மூதாட்டி,எலி,Rat,Directorate of Medical Education,மருத்துவ கல்வி இயக்குநரகம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/o39735id/skier.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/o39735id/skier.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி, </p><p>கடந்த 23ஆம் தேதி <a href="https://www.dailythanthi.com/topic/திருச்சி">திருச்சி</a> அரசு மருத்துவமனையில் 68 வயது  மூதாட்டியை எலி கடித்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனரகம் விளக்கம் அளித்துள்ளது. </p><p>திருச்சி மேலகல்கண்டார்கோட்டை அருகில் உள்ள ஆலத்தூரை சேர்ந்தவர் ரத்தினம். இவரது மனைவி தமிழ்க்கொடி (வயது 68). நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் படுத்திருந்தபோது கட்டிலில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.</p><h2>எலும்பு முறிவு</h2><p>இதனை தொடர்ந்து குடும்பத்தினர் தமிழ்க்கொடியை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் எலும்பு முறிவிற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் அவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்ததாலும், சளி பிரச்சினை காரணமாகவும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்படவில்லை.</p><h2>அறுவை சிகிச்சை</h2><p>இதையடுத்து கடந்த 21-ம் தேதி தான் எலும்பு முறிவை சரிசெய்வதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்ததும் தமிழ்க் கொடி சிகிச்சைக்கு பிந்தைய கண்காணிப்பு வார்டிற்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் சிகிச்சையில் இருந்து வந்தார். தமிழ்க்கொடியின் மகன்கள் இருவரும் இரவு, பகல் என மாறி மாறி உடனிருந்து அவருக்கு உதவி செய்து வந்தனர்.</p><h2>எலி கடித்தது</h2><p>இந்நிலையில் கடந் த 23-ம் தேதி அன்று அதிகாலை 5 மணி அளவில் தூங்கிக்கொண்டிருந்த தமிழ்க்கொடியின் கால் பெருவிரலை எலி கடித்துக்கொண்டிருந்ததையும், விரலில் இருந்து ரத்தம் வழிந்ததையும் அவரது இளைய மகன் விஜயகுமார் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக எலியை அவர் விரட்டியுள்ளார். ஆனாலும் ரத்தம் தொடர்ந்து வழிந்து கொண்டே இருந்ததால் இதுபற்றி உடனடியாக அந்த வார்டில் இருந்த நர்சிடம் தெரிவித்துள்ளார்.</p><h2>எலி கடித்துக்குதறிய வீடியோ</h2><p>அதன்பின்னர் டாக்டர்கள் வந்து சிகிச்சை அளித்து, தமிழ்க்கொடியை தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றி உள்ளனர். தற்போது அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்க்கொடி கால் பெருவிரலின் பெரும்பகுதியை எலி கடித்துக்குதறிய வீடியோ மற்றும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. </p><p>இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் 68 வயது  மூதாட்டியை எலி கடித்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனரகம் விளக்கம் அளித்துள்ளது. </p><h2>தனியார் நிறுவனத்திற்கு நோட்டீஸ்</h2><p>இதுதொடர்பான விளக்கத்தில், “சர்க்கரை நோய் பாதிப்பு இருந்ததால் மூதாட்டிக்கு காலில் உணர்வு இல்லை, மூதாட்டி தற்போது நலமுடன் உள்ளார். மூதாட்டியின் விரல்கள் நல்ல இயக்கத்தில் உள்ளது. பழமையான கட்டிடம் என்பதால் மீண்டும் மீண்டும் எலி வளைகள் உருவானது. கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட திட்டம் உள்ளது. மாதாந்திர எலி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தூய்மை பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் 7 நாட்களுக்குள் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>16 வயதுக்குட்பட்டோரின் சமூக ஊடகப் பயன்பாட்டுக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/central-government-should-ban-social-media-use-by-those-under-16-anbumani-demands</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/central-government-should-ban-social-media-use-by-those-under-16-anbumani-demands#comments</comments><guid isPermaLink="false">f8976ebd-feb3-4009-8198-9a93fcd3884d</guid><pubDate>Sun, 26 Jul 2026 09:34:42 +0000</pubDate><atom:updated>2026-07-26T09:34:42.039Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி,Anbumani,சென்னை,மத்திய அரசு,Central Government,சமூக ஊடகம்,social media,தடை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/nxl2qkux/87.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/nxl2qkux/87.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF">அன்புமணி</a> ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-</p><p>15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் சட்டத்தை பிரான்ஸ் நாடாளுமன்றம் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. குழந்தைகளின் உடல் நலன், மனநலம் ஆகியவை சார்ந்து பார்க்கும் போது இது மிகவும் அவசியமான நடவடிக்கையாகும். சமூக ஊடகங்களுக்கு குழந்தைகள் அதிகம் அடிமையாகும் நாடுகளில் ஒன்றான இந்தியாவும் இத்தகைய தடையை முன்னெடுக்க வேண்டும்.</p><h2>முதல் நாடு </h2><p>பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் முயற்சியால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தத் தடை வரும்  ஜனவரி மாதம் முதல் முழுமையாக நடைமுறைக்கு வரும். இந்த சட்டத்தின்படி வரும் செப்டம்பர் மாதம் முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களில் கணக்குகளைத் தொடங்க முடியாது. ஏற்கனவே தொடங்கப்பட்ட 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கணக்குகள் ஜனவரி முதல் முடக்கப்படும். ஐரோப்பிய யூனியனில் இத்தகைய தடையை கொண்டு வந்துள்ள முதல் நாடு பிரான்ஸ் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.</p><p>குழந்தைகளின் நலன் கருதி அவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த முதன்முதலில் தடை விதித்த நாடு  ஆஸ்திரேலியா தான். கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்நாட்டில் இந்தத் தடை நடைமுறைக்கு வந்த பிறகு கனடா, பிரேசில், இந்தோனேஷியா ஆகிய நாடுகளும் குழந்தைகளின் சமூக ஊடக பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளன. இங்கிலாந்து, ஸ்பெயின், கிரீஸ், ஜெர்மனி, டென்மார்க் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட உலக நாடுகள் இதே போன்ற தடையை கொண்டு வருவது குறித்து ஆராய்ந்து வருகின்றன. இந்தியாவில் கர்நாடகம் மற்றும் ஆந்திர அரசுகள் குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதித்துள்ளன.</p><p>இந்தியாவிலும் சமூக ஊடகங்களை தடை செய்வதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. சமூக ஊடகங்களின் வாயிலாக ஆபாச உள்ளடக்கங்கள் குழந்தைகளுக்கு செல்வதாகவும், அதனால் கவனச் சிதறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாகவும் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 29ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட 2025-26ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில், சமூக ஊடகங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் மனநல, உடல்நல பாதிப்புகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டிருந்தது.</p><h2>சமூக ஊடகப்பயன்பாடு</h2><p>குழந்தைகளின் பதட்டம், மன அழுத்தம், சுயமரியாதைக் குறைவு, இணையவழி சீண்டல்களால் ஏற்படும்  பாதிப்புகள் ஆகியவற்றுக்கு சமூக ஊடகங்களில் மூழ்கிக்கிடப்பது தான் காரணம் என்றும். 16 முதல் 24 வயது பிரிவினர் தான் இத்தகைய பாதிப்புகளுக்கு அதிகம் ஆளாவதாக பொருளாதார ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டிருந்தது. இவற்றைத் தடுக்க குழந்தைகளின் சமூக ஊடகப்பயன்பாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும்; ஆன்லைன் வகுப்பு கூட குழந்தைகளுக்கு கூடாது என்றும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.</p><p>அண்மையில் நடத்தப்பட்ட பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில், சமூக ஊடகங்களின் பயன்பாடு காரணமாக மாணவர்களின் கற்றல் திறன் குறைவதாகவும், கவனச் சிதறல் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப் பட்டிருந்தது. சமூக ஊடகங்களில் வரும் செய்திகளை தங்களுடன் மாணவர்கள் ஒப்பிட்டுப் பார்ப்பதாகவும், அதனால், அவர்களின் தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் குறைவதாகவும் கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.</p><p>இவை அனைத்துக்கும் மேலாக புத்தகங்களையும், கட்டுரைகளையும் படிக்கும் வழக்கம்  வீழ்ச்சியடைந்து வருகிறது. சமூக ஊடகங்களுக்கு அடிமையாகும் குழந்தைகள் மாணவர்கள், ஏதேனும் காணொலியைப் பார்க்கும் போது 8 வினாடிகளுக்குள் அது தங்களை கவரவில்லை என்றால், அவர்கள் அதை தவிர்த்து விட்டு அடுத்த காணொலியைப் பார்க்கச் சென்று விடுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. பெரியவர்களுக்கே இந்த பிரச்சினை இருக்கும் போது குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து சொல்லத் தேவையில்லை.</p><h2>தடை</h2><p>சமூக ஊடகங்களுக்கு குழந்தைகள் அடிமையான பிறகு விளையாடும் வழக்கம் குறைந்துவிட்டது. கபடி, கிரிக்கெட் உள்ளிட்ட உடல்திறன் சார்ந்த விளையாட்டுகளை குழந்தைகள் மறந்து விட்டனர். ஆன்லைன் விளையாட்டுகளை மட்டுமே அவர்கள் விளையாட்டாக கருதுகின்றனர். இதனால் உடல் பருமன், விட்டமின்-டி குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு குழந்தைகள் ஆளாகின்றனர். இந்த பாதிப்புகளிலிருந்து  குழந்தைகளை மீட்டெடுக்க வேண்டும் என்றால் சமூக ஊடகங்களுக்கு தடை விதிப்பது தான் தீர்வாகும்.</p><p>கர்நாடகம், ஆந்திரம், கோவா ஆகிய மாநிலங்கள் குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டை தடை செய்யப் போவதாக அறிவித்திருக்கின்றன. ஆனால், அதை நோக்கிய உறுதியான நடவடிக்கைகளை எந்த மாநில அரசும் மேற்கொள்ளவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்யும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்கப்படவில்லை. இந்தியாவில்  தொலைத்தொடர்பு (Communication) என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மத்தியப் பட்டியலில் 31ஆம்  பொருளாக இடம் பெற்றுள்ளது. அதனால், மாநிலப் பட்டியலில் உள்ள பொது சுகாதாரம், குழந்தைகள் நலன் ஆகிய அதிகாரங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களை பயன்படுத்த குழந்தைகளுக்கு மாநில அரசுகள் தடை விதித்தாலும் அவை சட்டவிரோதமானவை என்று உச்சநீதிமன்றம் அறிவிக்கும் வாய்ப்புள்ளது.</p><h2>மத்திய அரசு</h2><p>குழந்தைகளின் உடல் நலன், மன நலம், கல்வி, எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர்களை சமூக ஊடங்களின் பிடியில் இருந்து மீட்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எனவே, பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை பின்பற்றி இந்தியாவில் 16 வயதுக்கு குறைவான குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் சட்டத்தை மத்திய அரசு உடனே கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பட்டமளிப்பு விழா: தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் முதலில் பாடப்பட வேண்டும் - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/graduation-ceremony-tamil-thai-vazhthu-song-should-be-sung-first-manikkam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/graduation-ceremony-tamil-thai-vazhthu-song-should-be-sung-first-manikkam-tagore#comments</comments><guid isPermaLink="false">4c2aab32-4d9d-433b-8611-3ebf08d281fe</guid><pubDate>Sun, 26 Jul 2026 09:26:23 +0000</pubDate><atom:updated>2026-07-26T09:26:23.145Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore MP,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Tagore,தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி,tamilnadu congress</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/dcqkiabj/Untitled-5.jpg" width="753"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/dcqkiabj/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>பட்டமளிப்பு விழா</h2><p>திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் முதலில் பாடப்பட வேண்டும்.  தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளோடு, மீண்டும் மீண்டும் விளையாடுவதை அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும்.</p><p>திருநெல்வேலி  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33ஆவது பட்டமளிப்பு விழா, வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க இருக்கிறார்.  </p><h2>பெரும் அநீதி</h2><p>இந்த விழாவில், முதலில், 'வந்தே மாதரம்', அடுத்து, 'தேசிய கீதம்', மூன்றாவதாக, 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாட வேண்டும் என்று, கவர்னர் மாளிகையில் இருந்து சுற்றறிக்கை வந்திருப்பதாகவும், அதன்படியே பட்டமளிப்பு விழா நடைபெறும் என்றும், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என். சந்திரசேகர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருக்கிறார். இது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் மனோன்மணியம் சுந்தரனார். அவரது பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிலேயே, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாக பாடப்பட வேண்டும் என்று மத்திய பாஜக அரசு கட்டாயப்படுத்துவது, தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் இழைக்கப்படும் பெரும் அநீதி.</p><h2>மன்னிப்பு கேட்க வேண்டும்</h2><p>"மாநில கவர்னர் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும், முதலில், 'வந்தே மாதரம்' அடுத்து, 'தேசிய கீதம்', மூன்றாவதாக, மாநிலப் பாடல் பாடப்பட வேண்டும்" என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார். தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் அவமதிக்கப்பட இதுவே காரணம்.  இந்த உத்தரவை திரும்பப் பெற்று, தமிழ்நாட்டு மக்களிடம் அமித்ஷா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்</p><p>'தமிழ், தமிழர், தமிழ்நாடு' என்றாலே பாஜகவுக்கும், அமித்ஷாவுக்கும் வேப்பங்காயாக கசக்கும் என்பது எல்லோரும் அறிந்ததே. இப்போது, அந்த வரிசையில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலும் சேர்ந்திருக்கிறது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த தமிழ்நாடு, எப்போதும் தேசியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தே வந்திருக்கிறது. அதே நேரத்தில், தமிழ் மொழி, தமிழ் கலாசாரம், மாநில உரிமைகளை உயிருக்கு மேலாக போற்றி வரும் மாநிலம் தமிழ்நாடு. இதை அமித்ஷா உணர்ந்து கொள்வது நல்லது. மாநில உரிமைகளை மதிக்காமல், தமிழ் மொழி, தமிழ் கலாசாரத்தை துச்சமென மதித்து அதிகார அத்துமீறலில் ஈடுபடும் அமித்ஷாவின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. </p><h2>முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து</h2><p>கவர்னரின் பின்னால் ஒளிந்து கொண்டு, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு அவமானம் இழைக்க நினைக்கும் அமித்ஷாவின் செயலை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது.    </p><p>தமிழ்நாடு சட்டமன்றத்தில், கவர்னர் உரையின்போது, முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்பட்டது. அதே நடைமுறையை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும், இனிவரும் அரசு விழாக்கள் அனைத்திலும் பின்பற்ற வேண்டும். <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஒட்டுமொத்த </a>தமிழ்நாட்டு மக்களின் விருப்பமும் இதுதான். அதை மத்திய பாஜக அரசும், அமித்ஷாவும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளோடு, மீண்டும் மீண்டும் விளையாடினால், அதற்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். அது மிகக் கடுமையானதாக இருக்கும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சிவகாசி அருகே பட்டாசு குடோனில் வெடிவிபத்து: உயிரிழப்பு 3 ஆக உயர்வு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/explosion-at-firecracker-godown-near-sivakasi-death-toll-rises-to-3</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/explosion-at-firecracker-godown-near-sivakasi-death-toll-rises-to-3#comments</comments><guid isPermaLink="false">91cad78e-5573-4f95-9e5a-bbff605c7aae</guid><pubDate>Sun, 26 Jul 2026 09:19:37 +0000</pubDate><atom:updated>2026-07-26T09:19:37.407Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,உயிரிழப்பு,police investigation,Sivakasi,சிவகாசி,வெடி விபத்து,cracker factory,போலீசார் விசாரணை,பட்டாசு குடோன்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/q7p7ptw3/mins.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/q7p7ptw3/mins.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகாசி, </p><p>சட்டவிரோதமாக செயல்பட்ட குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் உடல் மீட்கப்பட்டுள்ளது.</p><h2>பட்டாசு குடோன்</h2><p>விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டி மற்றும் நாராயணபுரம் பகுதிகளில் சட்டவிரோதமாகத் தகர கொட்டகை அமைத்து பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கம் பணியில் ஈடுபட்டிருந்தபோது பட்டாசு குடோனில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.</p><h2>கரும்புகை</h2><p>பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறியதால், விண்ணை முட்டும் அளவிற்கு அடர்ந்த கரும்புகை வெளியேறியது. இந்த விபத்தின் காரணமாகச் சுற்றுவட்டாரத்தில் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்குப் பலத்த அதிர்வு உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறினர். விபத்து குறித்து அந்த பகுதி மக்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.</p><h2>3 பேர் பலி</h2><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறை, போலீசார், தண்ணீரை கொண்டு பீச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் குடோனில் ஈடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இவ்விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் 90% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.</p><h2>தீவிர சிகிச்சை</h2><p>சட்டவிரோதமாக செயல்பட்ட குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் உடல் மீட்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கி மாயமான ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p><p>இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p> <figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/w2-VGzq1eDQ"></iframe></figure>]]></content:encoded></item><item><title>தற்சார்பையும், தேசப்பற்றையும் போற்றிய இன்றைய &quot;மனதின் குரல்&quot; - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/today-s-mann-ki-baat-celebrated-self-reliance-and-patriotism-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/today-s-mann-ki-baat-celebrated-self-reliance-and-patriotism-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">8e4f1e63-dea7-453c-86a2-54e5db9d09fc</guid><pubDate>Sun, 26 Jul 2026 08:54:27 +0000</pubDate><atom:updated>2026-07-26T08:54:27.919Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Mann Ki Baat,மனதின் குரல்,மனதின் குரல் நிகழ்ச்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/pj7o71z1/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/pj7o71z1/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2> "மனதின் குரல்" </h2><p>இன்றைய "மனதின் குரல்" நிகழ்ச்சியின் 136-ஆவது அத்தியாயத்தில் உரையாற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கார்கில் விஜய் திவாஸ் நன்னாளில், நாட்டின் எல்லையைக் காக்க வீரமரணமடைந்த நமது ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, 'சௌர்யா விஜய் யாத்திரை' குறித்தும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். மேலும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட INS மகேந்திரகிரி போர்க்கப்பல் கடற்படையில் இணைக்கப்பட்டதையும், பினாகா ராக்கெட் மற்றும் குஷா ஏவுகணை சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதையும் தற்சார்பு பாரதத்தின் உயரிய வலிமைக்குச் சான்றுகளாகப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.</p><p>விளையாட்டுத் துறையில் பி.வி.சிந்து ஜப்பான் ஓபன் பட்டம் வென்றதையும், லார்ட்ஸ் மைதானத்தில் நமது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் டெஸ்ட் வெற்றியைப் பெற்றதையும், விண்வெளித் துறையில் 'விக்ரம்-1' ராக்கெட்டின் வெற்றியையும் மற்றும் சர்வதேச அறிவியல் ஒலிம்பியாட்களில் நமது மாணவர்கள் பெற்ற பதக்கங்களையும் பாராட்டிய பிரதமர், நாட்டின் இளைய சமுதாயத்தின் திறமையையும் அறிவாற்றலையும் பெருமையுடன் சுட்டிக்காட்டினார்.</p><h2>பிரதமர் மோடி வேண்டுகோள்</h2><p>இறுதியாக, ஜூலை 27 அன்று பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உன்னத ஆசிரியர் பணியைப் பிரதமர் நினைவுகூர்ந்தார். மேலும், நாட்டின் சுதந்திர தினத்தை ஒட்டி, நமது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி 'ஹர் கர் திரங்கா' (Har Ghar Tiranga) இயக்கத்தை மக்கள் அனைவரும் மாபெரும் வெற்றியாக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விடுத்த வேண்டுகோளை ஏற்று, நாமும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பெருமையுடன் </a>தேசக் கடமையை ஆற்றுவோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு சட்டமன்ற செயலாளர் கடிதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/issue-regarding-former-aiadmk-mlas-legislative-assembly-secretary-writes-to-edappadi-palaniswami</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/issue-regarding-former-aiadmk-mlas-legislative-assembly-secretary-writes-to-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">2edd2213-b600-4fec-b2ef-13b20a928998</guid><pubDate>Sun, 26 Jul 2026 08:49:12 +0000</pubDate><atom:updated>2026-07-26T08:49:12.076Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,எடப்பாடி பழனிசாமி,அதிமுக,Edappadi Palaniswami,தமிழக சட்டசபை,TN Assembly,Assembly,முன்னாள் எம்.எல்.ஏ.,சட்டமன்றம்,தமிழக சட்டமன்றம்,சட்டமன்ற செயலாளர்,Assembly Secretary</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/6b9pw73p/kopp.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/6b9pw73p/kopp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக சட்டமன்ற செயளாளர், அதிமுக பொதுச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/edappadi-palaniswami">எடப்பாடி பழனிசாமி</a>க்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தாங்கள் 13.5.2026-ஆம் நாளன்று அளித்த தகுதிநீக்க மனு தொடர்பாக, நான்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்த பதில்கள் மீது கூடுதல் விளக்கம் தேவைப்பட்டதால், 1986-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுப்பினர்களின் (கட்சி மாறுதல் காரணம் கொண்டு தகுதியின்மையாக்குதல்) விதிகளில் விதி 7(7)-ன் கீழ்,  பேரவைத் தலைவர் அவர்கள் 3.7.2026 அன்று முனைவர் இசக்கி சுப்பையா அவர்களையும் 9.7.2026 அன்று திருமதி சத்தியபாமா, எஸ். ஜெயக்குமார் மற்றும் கே. மரகதம் குமரவேல் ஆகியோரையும் நேரில் அழைத்து விளக்கம் கோரினார்கள். </p> <h2>முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்</h2><p>அப்போது அவர்கள் தெரிவித்த கருத்துகள் மற்றும் பார்வையில் காணும் இச்செயலக கடிதங்கள் மற்றும் தங்களின் கடிதங்களைத் தொடர்ந்து, பேரவைத் தலைவர் அவர்கள் இருதரப்பினரையும் அழைத்து மேலும் சில விளக்கங்களை கோர விரும்புவதால், கீழ்க்காணும் அட்டவணையின்படி பேரவைத் தலைவர் அவர்கள் அறையில் மேற்காணும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் விளக்கமளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்கள்.</p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/kstg29fw/nonoe.jpg" /></figure><p>எனவே, அச்சமயத்தில் அவர்கள் விளக்கம் அளிக்கையில், தாங்களும் நேரில் வந்து தங்கள் தரப்பு விளக்கங்களை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப் பணிக்கப்பட்டுள்ளேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: வீட்டின் கதவை உடைத்து திருட முயற்சி- 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-attempt-to-break-into-house-door-and-steal-2-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-attempt-to-break-into-house-door-and-steal-2-arrested#comments</comments><guid isPermaLink="false">8115bf7a-3ce0-44c6-9fdc-ce6edb19181d</guid><pubDate>Sun, 26 Jul 2026 08:34:33 +0000</pubDate><atom:updated>2026-07-26T08:34:33.047Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,2 arrested,2 பேர் கைது,House,வீட்டின் கதவை உடைத்து,attempted theft,திருட்டு முயற்சி,door broken</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/ga5rrsol/2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 2 பேர் கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/ga5rrsol/2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரியில் ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியரின் பூட்டிய <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88%20%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">வீட்டின் கதவை உடைத்து</a> திருட முயன்ற வழக்கில் 2 பேரை போலீசார் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். </p><h2>மருத்துவ சிகிச்சை</h2><p>தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி ஏ.ஐ.டி.யு.சி. காலனியைச் சேர்ந்த சுந்தரபாண்டியன், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் தனது மனைவியுடன் கடந்த ஜூன் 19-ம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக கன்னியாகுமரியில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். </p><h2>வீட்டின் கதவு உடைப்பு</h2><p>அடுத்த நாள் காலையில் பக்கத்து வீட்டுக்காரர் சுந்தரபாண்டியன் வீட்டின் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக ஊருக்கு திரும்பி வந்து பார்த்த சுந்தரபாண்டியன், வீட்டில் பொருட்கள் எதுவும் திருடப்படவில்லை என்பதை உறுதி செய்தார். </p><h2>திருட்டு முயற்சி</h2><p>வீட்டின் கதவை உடைத்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">திருட்டு முயற்சி</a>யில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் சுந்தரபாண்டியன் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, போலீசார் நடத்திய விசாரணையில், இந்த திருட்டு முயற்சியில் ஈடுபட்டவர்கள் காயல்பட்டினம், ரத்தினாபுரியைச் சேர்ந்த கார்த்திக்ராஜா (வயது 36) மற்றும் முத்துசாமி(39) என்பது தெரியவந்தது. </p><h2>2 பேர் கைது</h2><p>இந்த நிலையில் காயல்பட்டினம் பகுதியில் மற்றொரு திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவதற்காக சுற்றித் திரிந்த கார்த்திக்ராஜா, முத்துசாமி ஆகிய 2 பேரையும் போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>‘ரீல்ஸ் மோகத்தை ஒதுக்கிவைத்துவிட்டு ரியல் ஆட்சியில் த.வெ.க. கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்’ - டி.டி.வி.தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-should-set-aside-its-obsession-with-reels-and-focus-more-on-real-governance-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-should-set-aside-its-obsession-with-reels-and-focus-more-on-real-governance-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">d9c6c544-2f49-496d-b4c0-03a435f5e753</guid><pubDate>Sun, 26 Jul 2026 08:33:21 +0000</pubDate><atom:updated>2026-07-26T08:33:21.970Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,த.வெ.க.,டி.டி.வி.தினகரன்,TTV Dinakaran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/abqty8dd/State-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/abqty8dd/State-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-</p><p>“புதுக்கோட்டையில் தூய்மைப் பணியாளர்களுக்காக நடைபெற்ற அரசு நல முகாமில் அமைச்சரின் சகோதரருக்கு என்ன வேலை? ஆளும் கட்சி என்பதால் அதிகாரிகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பிப்பதும், அதனை ரீல்ஸாக வெளியிட்டு சிலாகித்துக்கொள்வதும் அப்பட்டமான அதிகார அத்துமீறல் ஆகும்.</p><p>புதுக்கோட்டையில் நடைபெற்ற தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு நல முகாமில் சட்டத்திற்குப் புறம்பாக ஆய்வு எனும் பெயரில் அத்துமீறி நுழைந்து அதிகாரிகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்ததோடு, அதனை தனது ஆதரவாளர்களின் மூலம் பெருமிதமாக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸாக வெளியிட்டிருக்கும் தொழிலாளர் நலத்துறை அமைச்சரின் சகோதரரின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.</p><p>ஏற்கனவே, அரசு நிர்வாகத்தின் தலைமையகமான தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களின் அறை தொடங்கி முதல்-அமைச்சரின் அறை வரை த.வெ.க.வினர் ரீல்ஸ் எடுக்கும் தளங்களாக மாறிவிட்ட நிலையில், தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக ஒருங்கிணைக்கப்பட்ட அரசு முகாமை தனது தனிப்பட்ட விளம்பரக் கூடமாக மாற்றிக் கொள்வதற்கு அனுமதியும் அதிகாரமும் கொடுத்தது யார்?</p><p>அம்மா உணவகங்கள், அரசு மருத்துவமனைகள், அரசுப் பள்ளிகள் என அனைத்து இடங்களிலும் அத்துமீறி நுழைந்து ஆய்வு எனும் பெயரில் ரீல்ஸ் வேட்டையை நடத்திக் கொண்டிருக்கும் த.வெ.க.வினரை கண்டிக்கத் தவறிய அக்கட்சியின் தலைமையால், தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற நிலை தமிழகத்தில் உருவாகியிருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>எனவே, அரசு நிர்வாகத்தில் த.வெ.க.வினரின் தலையீடு முற்றிவரும் நிலையில், அதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து, ரீல்ஸ் மோகத்தை ஒதுக்கிவைத்துவிட்டு ரியல் ஆட்சியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என த.வெ.க. அரசையும் முதல்-அமைச்சர் விஜய்யையும் வலியுறுத்துகிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>சிவகாசி பட்டாசு குடோன் விபத்தில் இருவர் பலி: நயினார் நாகேந்திரன் இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-killed-in-sivakasi-firecracker-accident-nainar-nagendran-condoles</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-killed-in-sivakasi-firecracker-accident-nainar-nagendran-condoles#comments</comments><guid isPermaLink="false">a8aa0878-28fe-483b-ba76-94b63b4905ed</guid><pubDate>Sun, 26 Jul 2026 08:16:15 +0000</pubDate><atom:updated>2026-07-26T08:16:15.204Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Sivakasi,சிவகாசி,வெடி விபத்து,Firecracker accident</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/8u7cn7o5/15.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/8u7cn7o5/15.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சிவகாசி பட்டாசு குடோன் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் சட்டவிரோத பட்டாசு குடோனில் நிகழ்ந்த பயங்கர வெடிவிபத்தில் இரு தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. இவ்விபத்தில் தங்கள் இன்னுயிரை இழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளி விரைவில் முழுமையாகக் குணமடைய வேண்டுகிறேன்.</p><p>செங்கமலப்பட்டி மற்றும் நாராயணபுரம் பகுதிகளில் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளின்றி, சட்டவிரோதமாகப் பட்டாசு தயாரிக்கும் பணிகள் தங்குதடையின்றி நடைபெற்று வந்துள்ளன என்பதை இவ்விபத்து வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. ஆனால், மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்று கூறி அண்மையில் ஆட்சிப் பொறுப்பேற்ற தவெக அரசு, சிவகாசிப் பகுதிகளில் இயங்கும் சட்டவிரோத பட்டாசு ஆலைகளையும் குடோன்களையும் கண்காணிப்பதிலும், தொழிலாளர்களின் பாதுகாப்பு விதிகளை உறுதி செய்வதிலும் காட்டி வரும் அலட்சியமே இவ்விபத்திற்கு முக்கியக் காரணமாகும். ஏழை எளிய தொழிலாளர்களின் உயிர்ப் பாதுகாப்பு விஷயத்தில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் மெத்தனமாகச் செயல்படும் தவெக அரசின் போக்கு கண்டனத்திற்குரியது.</p><p>எனவே, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தகுந்த அரசு நிவாரண உதவியும், காயமடைந்தவருக்கு உயர்தர மருத்துவ சிகிச்சையும் உடனடியாக வழங்க தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சட்டவிரோதமாகப் பட்டாசு குடோன்களை நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நிகழாமல் தடுக்க அனைத்துப் பகுதிகளிலும் போர்க்கால அடிப்படையில் பாதுகாப்புத் தணிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>கன்னியாகுமரி: கோவிலில் 14 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kanyakumari-14-kg-of-silver-items-stolen-from-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kanyakumari-14-kg-of-silver-items-stolen-from-temple#comments</comments><guid isPermaLink="false">4fdf7b73-c818-44b2-af0f-ebd8c00ff91e</guid><pubDate>Sun, 26 Jul 2026 08:14:44 +0000</pubDate><atom:updated>2026-07-26T08:14:44.319Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,Kanyakumari,mysterious persons,மர்ம நபர்கள்,போலீஸ் வலைவீச்சு,Robbery,வெள்ளி பொருட்கள் கொள்ளை,police net sweep,silver items,மாயம்மா கோவில்,Mayamma Temple</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/idecnpcz/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கதவின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள் கொள்ளை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/idecnpcz/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி, </p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF">கன்னியாகுமரி</a>யில் உள்ள மாயம்மா கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு கோவில் பூசாரி அதிர்ச்சி அடைந்தார்.</p><h2>மாயம்மா கோவில் கதவின் பூட்டு உடைப்பு</h2><p>கன்னியாகுமரியில் கலங்கரை விளக்கம் அருகில் மாயம்மா கோவில் உள்ளது. இந்த கோவிலில் வடசேரியை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவர் பூஜைகள் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் அதிகாலையில் பூஜை செய்ய வந்தபோது <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு</a> திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். </p><h2>14 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை </h2><p>உள்ளே சென்று பார்த்தபோது கோவிலில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் மரப்பெட்டியில் வைத்திருந்த வெள்ளி பூஜை பொருட்கள், வெள்ளி கவசம், வெள்ளி நாணயம், வெள்ளி கவசம் பொருத்திய வலம்புரி சங்கு, கொலுசுகள் என மொத்தம் 14 கிலோ வெள்ளி பொருட்கள் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88">கொள்ளை</a>யடிக்கப்பட்டு இருந்தது. யாரோ மர்ம நபர்கள் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். </p><h2>மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு</h2><p>இதுகுறித்து முத்துக்கிருஷ்ணன் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>ஏக்கருக்கு ரூ.6 லட்சம் வரை வருவாய்... மலைவேம்பு சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmers-interested-in-mountain-neem-cultivation-earning-up-to-rs-6-lakh-per-acre</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmers-interested-in-mountain-neem-cultivation-earning-up-to-rs-6-lakh-per-acre#comments</comments><guid isPermaLink="false">ac7fdc77-d644-4e49-9eb1-856009766ffc</guid><pubDate>Sun, 26 Jul 2026 08:13:43 +0000</pubDate><atom:updated>2026-07-26T08:13:43.401Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Farmers,திருப்பூர்,விவசாயிகள்,Tirupur,மலைவேம்பு,mountain neem</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/b9wqgw46/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/b9wqgw46/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><p>மலைவேம்பு சாகுபடி</p><p>திருப்பூர் மாவட்டம் குமரலிங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்த நீர் ஆதாரத்தில் அதிக லாபம் தரும் பயிர்களை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக குறுகிய மற்றும் நீண்ட நாள் பயிர்களை சாகு படி செய்து வருகின்றனர்.</p><p>அந்த வகையில், என்.ஜி. புதூர் பகுதியில், மலைவேம்பு சாகுபடியில் விவசாயிகள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்கு, வறட்சியை தாங்கி வளரக்கூடிய மலைவேம்பு மரங்கள் அதிகளவில் பயிரிடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. செம்மண் மற்றும் வண்டல் மண் சார்ந்த நிலங்களில் சொட்டு நீர் பாசன முறை மூலம் இவை மிக வேகமாக வளர்கின்றன. நட்ட 5 முதல் 6 ஆண்டுகளுக்குள் மரங்களை வெட்டுவதற்கு தகுந்ததாக இருக்கும்.</p><p>விவசாயிகள் படையெடுப்பு</p><p>குறிப்பாக, இவை 'பிளைவுட்' தயாரிப்பு, தீப்பெட்டி தொழிற்சாலை மற்றும் காதிக ஆலைகளில் அதிகளவில் தேவைப்படுகிறது.  மலைவேம்பு சாகுபடியில் மரங்கள் நேராக உயரத்திற்கு வளர, தொடக்க காலத்தில் பக்க கிளைகளை சரியான முறையில் கவாத்து (வெட்டி விடுதல்) செய்வது மிக முக்கியமாகும். மரம் 30 முதல் 40 அங்குல தடிமன் அடையும் போதுதான் பிளைவுட் ஆலைகளுக்கு நல்ல விலைக்கு செல்லும். </p><p>அந்த நேரத்தில், பிளைவுட் ஆலை அதிபர்கள் மற்றும் வியாபாரிகள், தோட்டங்களுக்கே நேரில் சென்று மரத்தின் தடிமனை அளந்து மொத்தமாக கொள்முதல் செய்து வருகின்றனர். அறுவடையின் போது வியாபாரிகளே மரங்களை வெட்டி எடுத்து செல்வதால், வெட்டுக்கூலி மற்றும் போக்குவரத்து செலவு விவசாயிகளுக்கு மிச்சமாகிறது. மேலும், குறைந்த பராமரிப்பு மற்றும் இயற்கை பூச்சி எதிர்ப்பு திறன் கொண்ட பயிர் என்பதால் மலைவேம்பு சாகுபடியை நோக்கி விவசாயிகள் படையெடுத்து வருகின்றனர். </p><p>நல்ல லாபம்...</p><p>இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, மலைவேம்பு பயிரிட்ட முதல் 2 ஆண்டுகள் வரை நிலக்கடலை, உளுந்து, பாசிப்ப யறு போன்ற பயிர்களை ஊடு பயிராக சாகுபடி செய்து தொடர் வருமானம் பெறலாம். 10-க்கு 10 அடி இடைவெளியில் ஏக்கருக்கு சுமார் 400 மரங்கள் வரை நடவு செய்யலாம். 5 முதல் 6 ஆண்டுகளில் ஒரு மரம் 300 முதல் 500 கிலோ வரை எடை வந்து, ஏக்கருக்கு சராசரியாக 100 முதல் 120 டன் வரை மகசூல் கிடைக்கும். தற்போது சந்தையில், ஒரு டன் மலைவேம்பு ரூ.5,500 முதல் ரூ.6,500 வரை விற்பனையாகிறது. இதனால் ஏக்கருக்கு ரூ.6 லட்சம் வரை வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் நல்ல லாபம் கிடைக்கிறது என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>செந்தில் பாலாஜியிடம் 2-வது நாளாக போலீசார் விசாரணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/senthil-balaji-is-being-questioned-by-the-police-for-the-second-day</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/senthil-balaji-is-being-questioned-by-the-police-for-the-second-day#comments</comments><guid isPermaLink="false">a861b4ca-364c-4082-a5cf-21a9dd343bb4</guid><pubDate>Sun, 26 Jul 2026 07:44:51 +0000</pubDate><atom:updated>2026-07-26T07:44:51.723Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Senthil Balaji,செந்தில் பாலாஜி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/w6d8i2hk/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/w6d8i2hk/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>ஆட்சி கவிழ்ப்பு சதி வழக்கு</h2><p>த.வெ.க. ஆட்சியை கவிழ்ப்பதற்காக 15 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க 'மேகாலயா புராஜக்ட்' என்ற பெயரில் அரங்கேறிய மிகப்பெரிய சதித்திட்டம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஊத்தங்கரை த.வெ.க. எம்.எல்.ஏ. டாக்டர் இளையராஜா, சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் அளித்த புகார் அடிப்படையில், திருவல்லிக்கேணி போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.</p><p>இளையராஜா எம்.எல்.ஏ.வுக்கு ரூ.35 கோடி பேரம் பேசப்பட்ட தாகவும் திடுக்கிடும் தகவல் வெளியானது. இதுவரை இந்த வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக் கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் ஆகியோர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றனர். </p><h2>செந்தில் பாலாஜி ஆஜர்</h2><p>நேற்று முன்தினம் முறைப்படி, சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் ஆஜரானார்கள். முறைப்படி, முன்ஜாமீனை செந்தில்பாலாஜியும், அவரது தம்பி அசோக்குமாரும் பெற்றுக்கொண்டனர். முன்ஜாமீன் நிபந்தனையில் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் தினமும் காலையிலும், மாலையிலும் ஆஜராகி, கையெழுத்திடவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்றும் நிபந்தனையில் கூறப்பட்டுள்ளது.</p><p>அதன் அடிப்படையில், செந்தில்பாலாஜியும், அவரது தம்பி அசோக்குமாரும் நேற்று திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டனர். அவர்கள் இருவரிடமும், திருவல்லிக்கேணி துணை கமிஷனர் ஜெயச்சந்திரன் தலைமையில் கூடுதல் துணை கமிஷனர் குமரகுருபரன், உதவி கமிஷனர் அழகு ஆகியோர் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். வழக்குதொடர்பாக போலீசார் கைப்பற்றியுள்ள ஆவணங்களை காட்டி, 50-க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தப்பட்டது.</p><h2>2-வது நாளாக விசாரணை</h2><p>இந்த நிலையில், தவெக எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம் பேசிய வழக்கில் கையெழுத்திட வந்த செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதர் அசோக்குமார் ஆகிய இருவரிடமும் போலீசார் 2-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மேகமலை புலிகள் காப்பக விவகாரம்: கிராம மக்கள் போராட்டம் - வனச்சரக அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/megamalai-tiger-reserve-issue-villagers-protest-heavy-police-security-at-forest-range-offices</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/megamalai-tiger-reserve-issue-villagers-protest-heavy-police-security-at-forest-range-offices#comments</comments><guid isPermaLink="false">5b2c56a0-c1b3-4036-862a-49d515dba397</guid><pubDate>Sun, 26 Jul 2026 07:43:35 +0000</pubDate><atom:updated>2026-07-26T07:43:35.609Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,போராட்டம்,village,கிராம மக்கள்,மேகமலை,Megamalai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/c2mg5jf5/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/c2mg5jf5/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி,</p><p>தேனி மாவட்டம் வருசநாடு சுற்றுவட்டார மலை கிராமங்களில் வசிக்கும் மக்களை ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக ஆக்கிரமிப்பாளர்கள் என காரணம் காட்டி அவர்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். </p><p>வனத்துறையின் இந்த நடவடிக்கையை கண்டித்து கண்டமனூர் கடமலைகுண்டு-மயிலாடும்பாறை, வருசநாடு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் இன்று பொதுமக்கள் கடையடைப்பு போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர்.</p><p>இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருசநாடு, மேகமலை, கண்டமனூர் வனச்சரக அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. வனச்சரக அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ள போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>வனத்துறைக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் போராடி வரும் நிலையில், அவர்களால் வனசரக அலுவலகத்திற்கும், வனத்துறை பணியாளர்களுக்கும் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>விடுமுறை தினத்தையொட்டி திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்; 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/devotees-throng-tiruvannamalai-on-holiday-wait-for-3-hours-to-see-lord-shiva</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/devotees-throng-tiruvannamalai-on-holiday-wait-for-3-hours-to-see-lord-shiva#comments</comments><guid isPermaLink="false">cd7a8168-4aa2-4816-860a-c529b7dab5a6</guid><pubDate>Sun, 26 Jul 2026 07:35:17 +0000</pubDate><atom:updated>2026-07-26T07:35:17.816Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பக்தர்கள்,Devotees,Holiday,சாமி தரிசனம்,விடுமுறை தினம்,Sami Darshan,திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்,Tiruvannamalai temple</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/prmai3w3/tiruvannamalai.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/prmai3w3/tiruvannamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>ஆன்மிகம் (Devotional)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை,</p><p>திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்கள் மற்றும் விஷேச நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும். </p><h2>வாரவிடுமுறை நாள்</h2><p>அந்த வகையில், இன்று வார விடுமுறை நாளையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் வருகை தந்திருந்தனர். </p><h2>பக்தர்கள் சாமி தரிசனம்</h2><p>இன்று அதிகாலை முதல் திருவண்ணாலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில், அவர்கள் நீண்ட வரிசையில் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">சாமி தரிசனம் </a>செய்து வருகின்றனர். விடுமுறை நாட்களில் திருவண்ணாமலைக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>திருப்பத்தூர்: நிதி நிறுவன அதிபர் வீட்டில் ரூ.50 லட்சம் நகைகள் திருட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirupattur-rs-50-lakh-in-jewellery-stolen-from-the-house-of-a-financial-institution-president</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirupattur-rs-50-lakh-in-jewellery-stolen-from-the-house-of-a-financial-institution-president#comments</comments><guid isPermaLink="false">b0bd6d01-9596-4bc9-b667-94d7b260702b</guid><pubDate>Sun, 26 Jul 2026 07:12:25 +0000</pubDate><atom:updated>2026-07-26T07:12:25.691Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>President,mysterious persons,மர்ம நபர்கள்,Tirupattur,திருப்பத்தூர்,House,Police raid,jewelry theft,நிதி நிறுவனம்,வீடு,அதிபர்,financial institution,நகைகள் திருட்டு,போலீசார் வலைவீச்சு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/af06n0c2/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நகைகள் திருட்டு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/af06n0c2/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பத்தூர், </p><p>திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%20%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D">நிதி நிறுவன அதிபர்</a> வீட்டில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்</a>களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p><h2>நிதி நிறுவன அதிபர்</h2><p>திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே உள்ள புதுப்பேட்டை ராகவேந்திராநகரை சேர்ந்த மணிவண்ணன் (வயது 52), நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி கவிதா. இந்த நிலையில் நேற்று காலையில் கவிதா வீட்டில் உள்ள பீரோவை திறந்து பார்த்தபோது, நகைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.</p><h2>50 சவரன் நகைகள் திருட்டு, மர்ம நபர்களுக்கு வலைவீச்சு</h2><p>மர்ம நபர்கள் பீரோவை திறந்து 50 சவரன் நகைகளை நூதன முறையில் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சிவகங்கை: 100-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஆபாசமாக படம் எடுத்த வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sivaganga-youth-arrested-for-taking-obscene-pictures-of-over-100-young-women</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sivaganga-youth-arrested-for-taking-obscene-pictures-of-over-100-young-women#comments</comments><guid isPermaLink="false">13a42e86-fddd-488a-bbeb-d2bc1b8d29e5</guid><pubDate>Sun, 26 Jul 2026 07:04:41 +0000</pubDate><atom:updated>2026-07-26T07:04:41.879Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,young woman,இளம்பெண்,கிரைம் செய்திகள்,ஆபாச படம்,சிவகங்கை,Sivagangai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/ogrw7mw0/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/ogrw7mw0/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை,</p><p>சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூரில் பஸ் நிலையம் அருகே கல்லூரி மாணவி ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு செல்போனில் பேசுவது போன்று வாலிபர் ஒருவர் வந்தார். அவர் அந்த மாணவி அருகே நின்று அவரை வேறொரு கேமராவில் ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார். இதனை அறிந்த மற்றொரு மாணவி இதுகுறித்து பள்ளத்தூர் போலீசுக்கு தகவல் அளித்தார். </p><p>அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரை பிடித்து அவரிடம் இருந்து 2 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் ஆய்வு செய்தபோது அவற்றில் 60 இளம் பெண்களின் ஆபாச படங்கள் இருந்ததும், அவர் கானாடுகாத் தானை சேர்ந்த செந்தில்குமார் (வயது 42) என்பதும் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.</p><p>இதுகுறித்து போலீசார் கூறுகையில், காரைக்குடியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இவர், தினமும் கல்லூரி, பள்ளிக்கூடங்கள், ஆஸ்பத்திரிகள் போன்ற இடங்களுக்கு சென்று பெண்களை இதுபோன்ற ஆபாச படங்கள், வீடியோ எடுத்து ரசிப்பதையே வழக்கமாக கொண்டிருக்கிறார். இவ்வாறு 100-கும் மேற்பட்ட பெண்களை படம் பிடித்துள்ளார். இவரது செயலை அறிந்த அவருடைய மனைவி கண்டித்தும் செந்தில்குமார் கேட்காததால், அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் செந்தில்குமைார விட்டு பிரிந்து தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார், என்று தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்த்தாய் வாழ்த்தை பின்னுக்குத் தள்ளுவதா? கவர்னரின் அறிவுறுத்தலை விமர்சித்த வைரமுத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/should-we-push-back-the-tamil-greeting-vairamuthu-criticizes-governors-instruction</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/should-we-push-back-the-tamil-greeting-vairamuthu-criticizes-governors-instruction#comments</comments><guid isPermaLink="false">3db2dba9-db8a-439b-81c7-a1078ee214d8</guid><pubDate>Sun, 26 Jul 2026 06:59:13 +0000</pubDate><atom:updated>2026-07-26T06:59:13.498Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கவர்னர்,வைரமுத்து,Vairamuthu,Tamilnadu Governor,தமிழ்த்தாய் வாழ்த்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/fs8ptw70/vairamuthu.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வைரமுத்து]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/fs8ptw70/vairamuthu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி,</p><p>திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா ஜூலை 28 அன்று நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் தமிழ்நாடு கவர்னர் பங்கேற்கிறார். எனவே, இந்நிகழ்வில் முதலில் வந்தே மாதரம், அதன் பிறகு தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட வேண்டும் என்று கவர்னர் அலுவலகத்திலிருந்து சுற்றறிக்கை வந்துள்ளதாகவும், அதன்படியே இந்நிகழ்ச்சி நடைபெறும் என பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என்.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து வைரமுத்து தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>தமிழ்த்தாய் வாழ்த்து</h2><p>கவர்னரின் அறிவுறுத்தல் அச்சம் தருகிறது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE">பட்டமளிப்பு விழா</a>வில் மரபுகள் நொறுங்குகின்றன. ஒரு மாநிலத்தின்  சட்டமன்றத்திலோ மக்கள் மாளிகையிலோ ஒரு மாநிலத்தின் கல்வி எல்லைக்குட்பட்ட பல்கலைக்கழகத்திலோ முதலில் மாநிலமொழியின் வாழ்த்தும் பின்னர் தேசிய கீதமும் பாடப்பட்டு வந்ததே மரபு. முதலில் தேசப் பாடலும் பின்னர் தேசிய கீதமும் இறுதியில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட வேண்டும் என்று உரிமை மீறிய வரிசையை அறிவுறுத்துவது பெருமைக்குரியதல்ல.</p><h2>மாநில மொழிகளுக்கு முன்னுரிமை</h2><p>தமிழ்த்தாய் வாழ்த்து இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார்  பல்கலைக்கழகத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்து தரைக்குத் தள்ளப்படுவதா? இருதயத்தின் ரத்தம் மார்பில் வடிகிறது வேண்டாம் இந்த வரிசை மீறல். அந்தந்த மாநில மொழிகளுக்கு முன்னுரிமை தருவதுதான் இறையாண்மையின் நிறையாண்மை காக்கும் முறையாண்மையாகும். வெற்றித்தமிழர் பேரவை சார்பில் என் கண்டனத்தைப் பதிவுசெய்கிறேன். கழற்றப்பட்ட தமிழ்த்தாயின் மகுடம் சிரசு சேரட்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>‘ஜனநாயகன் படத்தில் அம்பேத்கர், மார்க்ஸ், பெரியாரின் கருத்துகள் உள்ளன’ - அமைச்சர் வன்னி அரசு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-film-jananayagan-contains-the-ideas-of-ambedkar-marx-and-periyar-minister-vanni-arasu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-film-jananayagan-contains-the-ideas-of-ambedkar-marx-and-periyar-minister-vanni-arasu#comments</comments><guid isPermaLink="false">75b96379-15c4-4c1d-bfe3-46d7d0e33541</guid><pubDate>Sun, 26 Jul 2026 06:45:37 +0000</pubDate><atom:updated>2026-07-26T06:45:37.004Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜனநாயகன்,Jananayagan,minister vanni arasu,அமைச்சர் வன்னி அரசு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/v7ajk2kt/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/v7ajk2kt/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சி, </p><p>எச்.வினோத் இயக்கத்தில் முதல்-அமைச்சர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை கடந்து கடந்த 23-ந்தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. முதல்-அமைச்சர் விஜய்யின் கடைசி திரைப்படம் என்று கூறப்படுவதால், இந்த படத்தை விஜய் ரசிகர்களும், த.வெ.க. தொண்டர்களும் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். </p><p>திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே பல்வேறு த.வெ.க. அமைச்சர்கள் படத்தின் முதல் காட்சியை பார்த்தனர். அந்த வகையில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் சென்னையில் உள்ள திரையரங்கில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை பார்த்தார். பின்னர் இந்த படம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் பார்க்க வேண்டிய படம் ‘ஜனநாயகன்’. அந்தப் படம் பலருக்குப் பாடமாக அமைந்து இருக்கிறது. ஜாதி மதங்களை யார் எப்படி பிரிக்க முயற்சிக்கிறார்கள் என்பது தெளிவாக காண்பிக்கப்பட்டிருந்தது. </p><p>மாணவர்களின் போராட்டத்தை ஜனநாயகன் படம் மழுங்கடித்து விட்டதாக கூறுகிறார்கள். இந்த படத்தைப் பார்ப்பதன் மூலமாக மூளைக்கு சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் ஏற்படுமே தவிர, மாணவர்களை மூளைச் சலவை செய்யும் படமல்ல” என்று கூறியிருந்தார். </p><p>இந்நிலையில், ஜே.சி.டி.பிரபாகரின் கருத்து குறித்து அமைச்சர் வன்னி அரசிடம் கள்ளக்குறிச்சியில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “ஜனநாயகன் படத்தில் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து பேசப்பட்டுள்ளது. பெண் பிள்ளைகளை புலிகளைப் போல் வளர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ், பெரியாரின் கருத்துகள் அதில் இருக்கின்றன. ‘ஜனநாயகன்’ திரைப்படம் எந்த வகையிலும் சீர்கேடாக இல்லை என்பதே என்னுடைய கருத்து” என்று தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>தேனியில் 139 சவரன் நகைகள் மோசடி வழக்கில் பெண் ஊழியர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/female-employee-arrested-in-theni-in-139-sovereign-jewelry-fraud-case</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/female-employee-arrested-in-theni-in-139-sovereign-jewelry-fraud-case#comments</comments><guid isPermaLink="false">f3ef0c30-9148-494a-8976-d463c95875af</guid><pubDate>Sun, 26 Jul 2026 06:45:03 +0000</pubDate><atom:updated>2026-07-26T06:45:03.627Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Theni,தேனி,Case,பெண்,Woman,வழக்கு,Jewelry Fraud,நகை மோசடி,special police,தனிப்படை போலீசார்,Employee Arrested,ஊழியர் கைது</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/0bsqllo4/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நகை மோசடி, கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/0bsqllo4/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி, </p><p>தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் நகை அடகுக்கடை நடத்தி 139 சவரன் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF">நகைகள் மோசடி</a> செய்யப்பட்ட வழக்கில் பெண் ஊழியரை தனிப்படை போலீசார் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர்.</p><h2>139 சவரன் நகை மோசடி</h2><p>தேனி மாவட்டம், வருசநாடு அருகே தும்மக்குண்டுவைச் சேர்ந்தவர் முருகன்(எ) துரைமுருகன் (வயது 38). இவர் ஆண்டிப்பட்டியில் நகை அடகுக்கடை நடத்தி வந்தார். இவர் 64 வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 139 சவரன் நகைகளை திருப்பி கொடுக்காமல் மோசடி நடந்துள்ளதாக தெரியவந்தது.</p><h2>பெண் ஊழியர் கைது</h2><p>இந்த மோசடி தொடர்பாக உரிமையாளர் முருகன்(எ) துரைமுருகன், அவருடைய தந்தை முருகேசன், கடை ஊழியரான ஸ்ரீமதி(26) ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை போலீசார் அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார் ஸ்ரீமதியை நேற்று கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சேலம் மாவட்டத்துக்கு ஆக.5-ந்தேதி உள்ளூர் விடுமுறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/local-holiday-for-salem-district-on-august-5</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/local-holiday-for-salem-district-on-august-5#comments</comments><guid isPermaLink="false">75d70ccf-2cd5-49c1-a2a6-035bfd24edde</guid><pubDate>Sun, 26 Jul 2026 06:31:06 +0000</pubDate><atom:updated>2026-07-26T06:31:06.146Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,Local Holiday,சேலம்,உள்ளூர் விடுமுறை</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/hl53cop3/13.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/hl53cop3/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம், </p><p>சேலம் மாநகரில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. சேலம் மாநகரில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களுக்கும் தாய் கோவிலாக கோட்டை மாரியம்மன் கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு 22 நாட்கள் ஆடிப்பெருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.</p><p>அந்த வகையில், இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 21-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின்போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலில் பொங்கல் வைத்து மாவிளக்கு போட்டு அம்மனை வழிபடுவார்கள். இதை தவிர உருளுதண்டம் போட்டும், அக்னி கரகம் எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.</p><p>இந்த நிலையில், கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவு பிறப்பித்துள்ளார். அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.</p><p>அதேநேரம் மாவட்ட மற்றும் சார்நிலை கருவூலங்கள், குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும். உள்ளூர் விடுமுறைக்கு மாற்றாக, அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகள், ஆக., 8ல் பணி நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>காரைக்குடியில் இளம்பெண்களை செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்தவர் கைது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/man-arrested-in-karaikudi-for-secretly-filming-young-women-on-his-mobile-phone</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/man-arrested-in-karaikudi-for-secretly-filming-young-women-on-his-mobile-phone#comments</comments><guid isPermaLink="false">96098bac-f93a-43cd-be6e-d4948f618dd6</guid><pubDate>Sun, 26 Jul 2026 06:18:51 +0000</pubDate><atom:updated>2026-07-26T06:18:51.142Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Karaikudi,காரைக்குடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/6odcwskb/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/6odcwskb/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை,</p><p>சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இளம்பெண்கள், கல்லூரி மாணவிகளை செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். பேருந்து நிலையத்தில் இளம்பெண் ஒருவரை தனது செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்தபோது அந்த நபர் பிடிக்கப்பட்டார்.</p><p>அந்த பெண் அளித்த புகாரின்பேரில் போலீசார் கானாடுகாத்தான் பகுதியை சேர்ந்த 45 வயதான செந்தில்குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை ஆய்வு செய்தபோது அதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசமான முறையில் அவர் வீடியோ எடுத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து செந்தில்குமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். </p>]]></content:encoded></item><item><title>கார்கில் வீரர்களின் தியாகம் இந்திய வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-sacrifice-of-kargil-soldiers-will-forever-remain-in-indian-history-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-sacrifice-of-kargil-soldiers-will-forever-remain-in-indian-history-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">437bb055-aae3-4f33-aa7c-9d44980e2ae0</guid><pubDate>Sun, 26 Jul 2026 06:18:00 +0000</pubDate><atom:updated>2026-07-26T06:18:00.746Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,கார்கில் வெற்றி தினம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/mgj4qonv/nainar.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/mgj4qonv/nainar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>கார்கில் விஜய் திவாஸ் நாளையொட்டி, தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக தங்களின் இன்னுயிரை அர்ப்பணித்த அனைத்து வீரத் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF">தியாகி</a>களுக்கும் நமது மரியாதையையும் பணிவான அஞ்சலியையும் செலுத்துவோம்.</p><h2>பொற்குறியீடு</h2><p>1999-ஆம் ஆண்டு கார்கிலின் கடினமான, அணுக முடியாத மலைச் சிகரங்களில், இணையற்ற துணிச்சல், ஒப்பற்ற வீரம் மற்றும் அசைக்க முடியாத மன உறுதியுடன் போராடி, நாட்டின் இறையாண்மையையும் பெருமையையும் காத்த நமது வீரர்களின் தியாகம் இந்தியாவின் வரலாற்றில் என்றென்றும் பொற்குறியீடாக நிலைத்திருக்கும். அவர்களின் வீரச் செயல்களுக்கும் அளப்பரிய தியாகத்திற்கும் இந்திய தேசம் என்றும் நன்றிக்கடன்பட்டே இருக்கும்.</p><h2>தியாக மனப்பான்மை</h2><p>நமது இந்திய இராணுவத்தின் வீரமும், தன்னலமற்ற சேவையும், தாய்நாட்டிற்காக எதையும் அர்ப்பணிக்கும் உயர்ந்த பண்பும், வருங்கால தலைமுறைகளுக்கு தேசப்பற்று, கடமை உணர்வு மற்றும் தியாக மனப்பான்மையை விதைக்கும் அழியாத உந்துசக்தியாக என்றும் விளங்கட்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நடைபயிற்சி சென்றவரை கல்லால் தாக்கி செல்போன் பறிப்பு: வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-attacking-a-hiker-with-a-stone-and-snatching-his-cell-phone</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-attacking-a-hiker-with-a-stone-and-snatching-his-cell-phone#comments</comments><guid isPermaLink="false">b006bd6f-73e3-46a5-a519-48c1b1e2e046</guid><pubDate>Sun, 26 Jul 2026 06:03:13 +0000</pubDate><atom:updated>2026-07-26T06:03:13.520Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தாக்குதல்,Thoothukudi,தூத்துக்குடி,Walking,Youth arrested,வாலிபர் கைது,cell phone snatched,செல்போன் பறிப்பு,ஏரல்,Stone attack,நடைபயிற்சி,கல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/582pkgth/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வாலிபர் கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/582pkgth/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவகளை பகுதியில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">கல்லால் தாக்கி கொலை முயற்சி</a>யில் ஈடுபட்டு செல்போனை பறித்து சென்ற <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">வாலிபர் கைது</a> செய்யப்பட்டார். </p><h2>நடைபயிற்சி சென்றவரிடம் செல்போன் பறிப்பு</h2><p>தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருங்குளம்- சிவகளை ரோடு பகுதியில் கடந்த 23-ம் தேதி நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்த ஒரு நபரை அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் வழிமறித்து, கல்லால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டு, அந்த நபரின் செல்போனை பறித்துச் சென்றார்.</p><h2>வாலிபர் கைது</h2><p>இதுகுறித்த புகாரின் ஏரல் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் ஏரல் பகுதியைச் சேர்ந்த முப்பிலிமாடன் மகன் ராஜூ(எ) ராஜபாண்டி (வயது 32) என்ற சரித்திர பதிவேடு குற்றவாளி இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ராஜபாண்டியை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் டாஸ்மாக் பார் தொடங்குவதற்கான விதிமுறைகளில் தளர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/relaxation-in-rules-for-starting-tasmac-bars-in-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/relaxation-in-rules-for-starting-tasmac-bars-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">1bacc785-6675-4684-8520-8f4f9cada9b9</guid><pubDate>Sun, 26 Jul 2026 05:59:47 +0000</pubDate><atom:updated>2026-07-26T05:59:47.862Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டாஸ்மாக்,Tasmac,டாஸ்மாக் கடை,Tasmac shop,டாஸ்மாக் பார்,tasmac bar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/4dgs25ji/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/4dgs25ji/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுடன் இணைந்து இயங்கும் பார்களைத் தொடங்குவது மற்றும் உரிமம் வழங்குவது தொடர்பாகப் புதிய தளர்வுகளையும் விதிமுறை மாற்றங்களையும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது..</p><p>அதன்படி, இதுவரை டாஸ்மாக் மதுக்கடையை ஒட்டியே (இணைந்தே) பார் தொடங்க அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், இனி மதுக்கடையில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் பார்களைத் அமைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட உள்ளது பார் அமைப்பதற்கான குறைந்தபட்ச இடத்தின் பரப்பளவு '15 சதுர மீட்டரில் இருந்து 20 சதுர மீட்டராக' உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பார்களில் கூடுதல் இடவசதி மற்றும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>புதிய டெண்டர் மற்றும் தளர்வு விதிமுறைகளின் மூலம் குறிப்பிட்ட நபர்கள் அல்லது குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்கள் மட்டுமே தொடர்ந்து பார் நடத்தும் பழைய நடைமுறை மாற்றப்பட்டு, புதிய நபர்களுக்கும் ஏலம்/டெண்டரில் பங்கேற்க வாய்ப்பு உருவாகும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது. டாஸ்மாக் பார்களுக்கான பழைய உரிமக் காலம் அண்மையில் நிறைவடைந்த நிலையில், புதிய டெண்டர் விதிமுறைகளை இறுதி செய்யும் வரை தற்காலிகமாக பார்களின் இயக்கம் நீட்டிக்கப்பட்டிருந்தது.</p><p>பார் அமைப்பதற்கான இட அமைப்பில் தளர்வுகள் தரப்பட்டாலும், பார்களில் பீடி-சிகரெட் விற்பனைக்கான தடை, சிற்றுண்டி மற்றும் குடிநீரை அதிக விலைக்கு விற்கக் கூடாது போன்ற இதர கட்டுப்பாடுகள் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>மலை கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு - தேனியில் கடையடைப்பு போராட்டம்   </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-protest-against-the-eviction-of-hill-village-residents-shop-closure-strike-in-theni</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-protest-against-the-eviction-of-hill-village-residents-shop-closure-strike-in-theni#comments</comments><guid isPermaLink="false">5365d3b7-13f0-4aaa-b46f-e61841576377</guid><pubDate>Sun, 26 Jul 2026 05:35:55 +0000</pubDate><atom:updated>2026-07-26T05:35:55.934Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Theni,தேனி,கடையடைப்பு போராட்டம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/erueajpk/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/erueajpk/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி,</p><p>தேனி மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து, 3 தலைமுறைகளாக வசித்து வரும் மலை கிராம மக்களை அவர்களின் கிராமங்களில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனை கண்டித்து கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள 150-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. </p><p>இதனால் அங்கு ஆயிரக்கணக்கான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அரசு ஆவணங்களுடன் பல ஆண்டுகளாக வசித்து வரும் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும், தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடையடைப்பு போராட்டம் காரணமாக வருசநாடு சுற்றுவட்டார கிராமங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. </p> ]]></content:encoded></item><item><title>விடுமுறை தினம்: திருச்செந்தூர் கோவிலில் 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-devotees-wait-for-5-hours-at-tiruchendur-temple-to-have-darshan-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-devotees-wait-for-5-hours-at-tiruchendur-temple-to-have-darshan-2#comments</comments><guid isPermaLink="false">b1b84843-5059-4f2f-84bb-c670beb80c7e</guid><pubDate>Sun, 26 Jul 2026 05:30:57 +0000</pubDate><atom:updated>2026-07-26T05:30:57.423Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பக்தர்கள்,Devotees,Holiday,திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்,சாமி தரிசனம்,விடுமுறை தினம்,Sami Darshan,Tiruchendur Subramania Swamy Temple</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/ja26etw9/tiruchendhur.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/ja26etw9/tiruchendhur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>ஆன்மிகம் (Devotional)</category><content:encoded><![CDATA[ <p>திருச்செந்தூர், </p><p>முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாகவும், ஆன்மீக, சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவில் கடற்கரை அருகில் அமைந்துள்ளதாலும் நாள் தோறும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.</p><h2>சாமி தரிசனம்</h2><p>இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். அவர்கள் அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">சாமி தரிசனம் </a>செய்தனர்.</p><h2>உதயமார்த்தாண்ட அபிஷேகம்</h2><p>பக்தர்கள் வாகனங்கள் வருகையால் திருச்செந்தூர் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வாகனங்கள் தெப்பக்குளம் அருகில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் சாலையில் இரு பக்கமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஞாயிறு விடுமுறை நாளான இன்று வழக்கம் போல் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>சிவகாசி அருகே பட்டாசு குடோனில் வெடிவிபத்து - 2 பேர் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/explosion-at-a-cracker-warehouse-near-sivakasi-2-dead</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/explosion-at-a-cracker-warehouse-near-sivakasi-2-dead#comments</comments><guid isPermaLink="false">ac14da68-419c-4196-8fce-a900c54dee7a</guid><pubDate>Sun, 26 Jul 2026 05:25:43 +0000</pubDate><atom:updated>2026-07-26T05:25:43.257Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Sivakasi,சிவகாசி,வெடிவிபத்து,Fireworks Factory,சிவகாசி பட்டாசு ஆலை,fireworks accident,பட்டாசு குடோன்,Fireworks explosion</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/cyavrmxa/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/cyavrmxa/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர்,</p><h2>தகர கொட்டகை</h2><p>விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டி மற்றும் நாராயணபுரம் பகுதிகளில் சட்டவிரோதமாகத் தகர கொட்டகை அமைத்து பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கம் பணியில் ஈடுபட்டிருந்தபோது பட்டாசு குடோனில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.</p><p>பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறியதால், விண்ணை முட்டும் அளவிற்கு அடர்ந்த கரும்புகை வெளியேறியது. இந்த விபத்தின் காரணமாகச் சுற்றுவட்டாரத்தில் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்குப் பலத்த அதிர்வு உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறினர். விபத்து குறித்து அந்த பகுதி மக்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். </p><h2>2 பேர் பலி</h2><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறை, போலீசார், தண்ணீரை கொண்டு பீச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் குடோனில் ஈடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இவ்விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் 90% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.</p><p>காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>பட்டாசு ஆலை</h2><p>இதைபோல சிவகாசி அருகே பேர்நாயக்கன்பட்டியில் ஜெய் விநாயகா கம்பி மத்தாப்பு பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின்கசிவு காரணமாக காகித அட்டைகளில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>கோவை கோனியம்மன் கோவில் ஊழியர்கள், அதிகாரிகள் என 8 பேர் சஸ்பெண்ட் - அமைச்சர் ரமேஷ் உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/8-employees-and-officials-of-coimbatore-koniamman-temple-suspended-minister-ramesh-orders</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/8-employees-and-officials-of-coimbatore-koniamman-temple-suspended-minister-ramesh-orders#comments</comments><guid isPermaLink="false">297e2304-72d9-47be-b2a9-17d80a90632f</guid><pubDate>Sun, 26 Jul 2026 05:15:54 +0000</pubDate><atom:updated>2026-07-26T05:15:54.308Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,சஸ்பெண்ட்,suspend,Koniamman Temple,கோனியம்மன் கோவில்,Officers- அதிகாரிகள்,Minister ramesh,அமைச்சர் ரமேஷ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/99e7z5cv/minister-ramesh1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ரமேஷ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/99e7z5cv/minister-ramesh1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவில் உண்டியலை திருடிய  4 ஊழியர்கள் மற்றும் அதை கண்டுபிடிக்காத 4 அதிகாரிகளையும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.</p><p>கோவை கோனியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின் போது ஒரு உண்டியலை அங்குள்ள ஊழியர்கள் திருடியுள்ளனர். பணம் கையாடல் செய்யப்பட்ட விவகாரத்தில், முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியர்கள் மற்றும் கவனக்குறைவாக செயல்பட்ட அதிகாரிகள் என மொத்தம் 8 பேர் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்களின் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>8 பேர் சஸ்பெண்ட்</h2><p>இந்த நிலையில் கோனியம்மன் கோவிலில் வேலை செய்து வந்த  ஊழியர்கள் பாலசுப்ரமணியன், சரவணன், பிரதீப் குமார், கிருஷ்ணராஜ் ஆகிய 4 பேரும் அதை கண்டுபிடிக்காமல் உடந்தையாக இருந்த  அதிகாரிகள்  ராம்குமார், உதயகுமார், குமார், உஷா நந்தினி என  இவர்கள் 4 பேரையும் சேர்த்து மொத்தமாக 8 பேரை அமைச்சர் ரமேஷ் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D">சஸ்பெண்ட்</a> செய்து உத்தரவிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>காவிரி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் கூறியது உண்மைக்கு முரணானது:  அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalins-remarks-on-the-cauvery-issue-are-contrary-to-the-truth-minister-aadhav-arjuna-clarifies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalins-remarks-on-the-cauvery-issue-are-contrary-to-the-truth-minister-aadhav-arjuna-clarifies#comments</comments><guid isPermaLink="false">e29813b1-827b-45f6-927e-19f9077d56e0</guid><pubDate>Sun, 26 Jul 2026 05:15:42 +0000</pubDate><atom:updated>2026-07-26T05:15:42.012Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆதவ் அர்ஜுனா,Stalin,ஸ்டாலின்,காவிரி ஆணையம்,Adhav Arjuna</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/in1urleu/Adhav-arjuna.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆதவ் அர்ஜுனா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/in1urleu/Adhav-arjuna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>காவிரி விவகாரத்தில் முதல்  அமைச்சர் விஜய் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று முன்னாள் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்த நிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , காவிரி நதிநீர் மற்றும் மேகதாது அணை குறித்த பிரச்சினை தொடர்பாக முதலமைச்சர் விஜய் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனும் அடிப்படையில் பல கேள்விகளை எழுப்பி உள்ளது உண்மைக்கு முரணானதாகும் காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம், மாநிலத்தின் குடிநீர் பாதுகாப்பு மற்றும் தமிழ்நாட்டின் சட்டப்பூர்வ நீர் உரிமை ஆகியவற்றை பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு தொடர் மற்றும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.</p><h2>பிரதமரிடம் வலியுறுத்தல்</h2><p>அந்த அடிப்படையில், முதலமைச்சர் 27.05.2026 அன்று   பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, காவிரி நீர் பகிர்வு தொடர்பாக தமிழ்நாட்டின் உரிமைகள், கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டம் மற்றும் அதனால் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பும்,  2018 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய  தீர்ப்பும் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், மேகதாது அணைத் திட்டத்திற்கு எந்தவித அனுமதியும் வழங்கக்கூடாது என்றும் பிரதமரிடம் வலியுறுத்தினார்.</p><h2>கடிதம்</h2><p>அதே நாளான 19.06.2026 அன்று, கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் ஒருதலைப்பட்ச முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும், கர்நாடக அரசின் மேகதாது திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு (DPR) ஜல் சக்தி அமைச்சகம் எந்தவித அனுமதியும் வழங்கக்கூடாது என்றும், மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தகராறு சட்டம், 1956-இன் பிரிவு 4-ன் கீழ் நடுவர் மன்றத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும், கர்நாடக அரசின் DPR-ஐ மத்திய நீர்வள ஆணையம் பரிசீலிக்கவோ, செயல்படுத்தவோ அல்லது அதற்கு ஒப்புதல் வழங்கவோ கூடாது என்றும், தமிழ்நாடு உள்ளிட்ட இணை ஆற்றுப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் பெறாமல் மேகதாது அல்லது காவிரி ஆற்றுப்படுகையில் வேறு எந்த இடத்திலும் புதிய அணை அல்லது நீர்த்தேக்கத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று கர்நாடக அரசுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை  முதலமைச்சர் கடிதம் மூலம் பிரதமருக்கு அனுப்பி வைத்து, தமிழ்நாடு சட்டமன்றம் முன்வைத்துள்ள கோரிக்கைகளின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்நாடு நீர்வளத்துறை, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு (CWRC) கூட்டங்களில் தொடர்ந்து தமிழ்நாட்டின் உரிமைகளை வலியுறுத்தி வருகிறது. தமிழ்நாட்டிற்குரிய நீரை உரிய காலத்தில் திறந்துவிட வேண்டும் என்பதையும், கர்நாடக அரசின் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதையும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறது.எனவே, தமிழ்நாட்டின் சட்டப்பூர்வ நீர் உரிமையைப் பாதுகாப்பதற்காக சட்டரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அனைத்து நடவடிக்கைகளையும்  முதலமைச்சர் தலைமையிலான அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>உரிய  வாதங்கள் வைக்கவில்லை</h2><p>ஆனால், முதலமைச்சர் பொறுப்பில் இருந்த மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற தி.மு.க ஆட்சியில், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயார் செய்த நிலையில், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்தது. அந்த மனுவை உச்ச நீதிமன்றம் 13.11.2025 அன்று தள்ளுபடி செய்தது. தமிழ்நாடு அரசின் மனுவை உச்ச நீதிமன்றம்  தள்ளுபடி செய்ததை எதிர்த்து, அன்றைய தி.மு.க அரசு, மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது. அந்த சீராய்வு மனுவும் 15.04.2026 அன்று உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. அதையடுத்து, மறுசீராய்வு மனுவை அன்றைய தி.மு.க தலைமையிலான தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. தமிழக உரிமைக் காக்கும் கடைசி வாய்ப்பாக இருந்த அந்த மனு மீதும் கவனமாக, உரிய வாதங்களை வலுவாக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தி.மு.க அரசு எடுத்து வைக்கவில்லை. அதையடுத்து, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு, மறு சீராய்வு மனுவையும் 25.04.2026 அன்று தள்ளுபடி செய்தது. கடந்த ஆட்சியில் நடைபெற்ற இதுபோன்ற சட்டக் குளறுபடிகளால்தான், தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினையான காவிரி நநி நீர் பிரச்சினையும், மேகதாது அணை விவகாரமும் இன்றைக்கு மிகப்பெரிய சோதனையாக உருவெடுத்துள்ளது.</p><h2>விமர்சனங்களை வரவேற்கிறோம்</h2><p>இதுபோன்ற கடந்தகால குளறுபடிகளைப் பேசுவதன் மூலம், காவிரி நதி நீர் விவகாரத்தில், மேகதாது அணை பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைக் குரலை திசைதிருப்ப நாங்கள் விரும்பவில்லை. அப்படிப்பட்ட குறுகிய அரசியல் நோக்கம் எங்களுக்குக் கிடையாது. அதே நேரத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமல்ல... வேறு யாரிடம் இருந்தும்... ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் வந்தால், அவற்றை கருத்தில் கொள்வதற்கும், கவனப்படுத்துவதற்கும், ஏற்றுக் கொள்வதற்கும் நாங்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறோம். அதை முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புரிந்துகொள்ள வேண்டும்.</p> <h2>மக்களின் வாழ்வுரிமை</h2><p>காவிரி நீர் உரிமை என்பது அரசியல் சார்ந்த பிரச்சனை அல்ல; அது தமிழ்நாட்டு மக்களின் வாழ்வுரிமை, டெல்டா விவசாயிகளின் எதிர்காலம் மற்றும் மாநிலத்தின் நீராதார பாதுகாப்புடன் தொடர்புடைய அடிப்படை உரிமைப் பிரச்சினையாகும். அதில், எந்தவித குறுகிய அரசியல் நோக்கத்தோடும், அரசியல் ஆதாயத்தின் கணக்குகளோடும்,முதலமைச்சர் .சி.ஜோசப் விஜய்  தலைமையிலான அரசு செயல்படவில்லை. மாறாக, காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும் முழுமையாக அமல்படுத்தப்படும் வரையிலும், தமிழ்நாட்டின் உரிமை முழுமையாக நிலைநாட்டப்படும் வரையிலும், சட்டப்பூர்வமான மற்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வழிமுறைகளிலும் தொடர்ந்து முன்னெடுக்கும். காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளைக் காக்கும்! தமிழகத்தின் காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்கும்!” என்று பதிவிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் 6 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-with-6-kg-of-ganja-in-thoothukudi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-with-6-kg-of-ganja-in-thoothukudi#comments</comments><guid isPermaLink="false">9795c7b9-0bec-4b27-8fe1-f553d6940a3c</guid><pubDate>Sun, 26 Jul 2026 05:02:44 +0000</pubDate><atom:updated>2026-07-26T05:02:44.609Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,போலீஸ்,Thoothukudi,Ganja,தூத்துக்குடி,கஞ்சா,Youth arrested,வாலிபர் கைது,Seizure,பறிமுதல்,patrol,ரோந்து பணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/gsncseul/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வாலிபர் கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/gsncseul/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரோச்பார்க் பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காக 6 கிலோ <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE">கஞ்சா</a> வைத்திருந்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">வாலிபர் கைது</a> செய்யப்பட்டார்.</p><h2>போலீஸ் ரோந்து பணி</h2><p>தூத்துக்குடி மாநகர், ரோச்பார்க் பகுதியில் தெற்கு காவல் நிலைய போலீசார் ரோந்து பணிக்கு சென்றபோது, அங்கே சந்தேகப்படும்படியான நபரை பிடித்து சோதனை செய்தனர். அதில் அவர் சட்ட விரோதமாக விற்பனை செய்ய கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.</p><h2>6 கிலோ கஞ்சா பறிமுதல் </h2><p>இது தொடர்பாக தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப்பதிவு செய்து சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த தூத்துக்குடி அழகேசபுரம் பகுதியைச் சேர்ந்த ஜான்சன் மகன் ஜேம்ஸ் சந்தோசம் (வயது 27) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 6 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தார். </p>]]></content:encoded></item><item><title>கூட்டுறவுத்துறை சார்ந்த கோரிக்கை மனுக்களுக்கு உடனடி தீர்வு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/immediate-resolution-for-petitions-related-to-the-cooperative-department-guidelines-issued</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/immediate-resolution-for-petitions-related-to-the-cooperative-department-guidelines-issued#comments</comments><guid isPermaLink="false">aad1e70a-941c-477f-babc-616d088b9a75</guid><pubDate>Sun, 26 Jul 2026 04:58:08 +0000</pubDate><atom:updated>2026-07-26T04:58:08.710Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கூட்டுறவுத்துறை,Cooperative Department</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/kat0ip09/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/kat0ip09/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>கூட்டுறவு துறை சார்ந்த கோரிக்கை மீது நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி வட்டார அளவில் கூட்டுறவு சார் பதிவாளர் அலுவலர்கள் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை அன்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மணுக்களை பெற்று அவற்றை தகுதியின் அடிப்படையில் பரிசீலித்து தீர்வு காண வேண்டும் என்றும், கூட்டுறவு பதிவாளர் மற்றும் கள அலுவலர் அளவில் தீர்வு காண இயலாத கோரிக்கை மணுக்களையும் துணை பதிவாளர்களால் நேரடியாக பெறப்படும் கோரிக்கை மனுக்களையும் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமை அன்று தகுதியின் அடிப்படையில் பரிசீலித்து தீர்வு காணவும் உத்தரவிடப்பட்டுள்ளது. </p> <p>அதேபோல் தீர்வு காண முடியாத கோரிக்கை மணுக்களையும் மண்டல இணை பதிவாளர்களால் நேரடியாக பெறப்படும் மணுக்களையும் மாதம்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை என்று மண்டல இணைப்பதிவாளர்கள் தகுதியின் அடிப்படையில் பரிசீலித்து தீர்வு காண அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. உடனுக்குடன் தீர்வு காணப்பட்ட மனுக்கள் குறித்த மாதாந்திர அறிக்கையை அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>மாணவர் போராட்டம் என்ற கண்ணாடியில் மோடி அரசின் சர்வாதிகார முகம் தோலுரிக்கப்பட்டுவிட்டது - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-modi-governments-authoritarian-face-has-been-exposed-in-the-mirror-of-student-protests-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-modi-governments-authoritarian-face-has-been-exposed-in-the-mirror-of-student-protests-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">6d893a86-f299-42d6-a1fb-ddda651b61b0</guid><pubDate>Sun, 26 Jul 2026 04:46:03 +0000</pubDate><atom:updated>2026-07-26T04:46:03.521Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணிக்கம் தாகூர்,Modi government,Manickam Tagore MP,மோடி அரசு,student protest,மாணவர் போராட்டம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/ul6qbc35/9.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/ul6qbc35/9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>நேற்று மதியம் 2:30 மணிக்கு அப்புறம் பாஜக 'Eco-system'க்கு திடீர் விழிப்பு வந்துடுச்சோ? முன்னாள் கல்வி அமைச்சர்2:30அது பண்ணாரு, இது பண்ணாருன்னு "சீர்திருத்த" புராணம் பாடுறவங்க... மாணவர்கள் நியாயமான கோரிக்கைகளுக்காக தெருவில் இறங்கி போராடியபோது எங்க போனாங்க? மாணவர்களுக்கு தர்மேந்திர பிரதான் அது பண்ணாரு, இது பண்ணாருன்னு "சீர்திருத்த" புராணம் பாடுறவங்க... மாணவர்கள் நியாயமான கோரிக்கைகளுக்காக தெருவில் இறங்கி போராடியபோது எங்க போனாங்க? மாணவர்கள் குரலை நசுக்குவதும், பதவி தப்பியதும் முட்டுக்கொடுப்பதும் தான் பாஜகவின் 'System' - அரசு அதிகாரமும் கல்வி அமைப்பும் தங்களின் 'தனிச்சொத்து' என்று ஆளும் பாஜக நினைக்கலாம், ஆனால் அது மக்களுக்கானது, நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்குமானது!</p><h2>மாணவர் போராட்டம்</h2><p>வீதியில் இறங்கிப் போராடிய இந்திய இளைஞர்கள், மோடி அரசுக்கு அந்த நிதர்சனமான உண்மையை கண்ணாடியாக நின்று சுட்டிக்காட்டிவிட்டார்கள். அதிகார போதைக்கு மக்கள் சக்தி தான் பதில்! <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%20">மாணவர் போராட்டம் </a>என்ற கண்ணாடியில் மோடி அரசின் சர்வாதிகார முகம் தோலுரிக்கப்பட்டுவிட்டது. இளைஞர்கள் விழித்துக்கொண்டார்கள், மோடி அரசே... உங்கள் போலி முட்டுகளுக்கு இனி வேலை இல்லை! இந்த இக்கட்டான சூழ்நிலையில் மாணவர்களுக்காக உங்கள் 'Eco-system' நிற்கவில்லை, எங்கள் தலைவர் ராகுல் காந்தி அவர்களுடன் களத்தில் நின்றார். அதனால்தான் தைரியமாகச் சொல்கிறார்: "மோடி இந்தியாவின் கடந்த காலம், கடந்த காலத்தால் ஒருபோதும் எதிர்காலத்தை எதிர்த்துப் போராட முடியாது!</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்: அருவிகளில் ஆனந்த குளியல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-flock-to-courtallam-enjoying-a-blissful-bath-in-the-waterfalls</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-flock-to-courtallam-enjoying-a-blissful-bath-in-the-waterfalls#comments</comments><guid isPermaLink="false">b1945814-13dc-4eb8-a1bd-7c9f87417c2f</guid><pubDate>Sun, 26 Jul 2026 04:45:38 +0000</pubDate><atom:updated>2026-07-26T04:45:38.728Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tourists,சுற்றுலா பயணிகள்,குற்றாலம்,Courtallam</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/kmn3k8bs/10.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/kmn3k8bs/10.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p>கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. தற்போது தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளா மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுந்து வரும் நிலையில் அருவிகளில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.</p><p>இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் காலை முதலே மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது. வெளியூர்களில் இருந்து கார், வேன், ஆட்டோ, பஸ் உள்ளிட்ட வாகனங்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குடும்பமாக வருகை புரிந்தனர். அவர்கள் அருவிகளில் உற்சாகமாக குளித்துவிட்டு குற்றாலத்தில் உள்ள பூங்கா பகுதி மற்றும் அருவி கரைகளுக்கு செல்லும் சாலை ஓரப் பகுதிகளில் உள்ள மர நிழல்களில் அமர்ந்து குடும்பமாக உணவு உண்டு மகிழ்ந்து நேரத்தை செலவிட்டனர். </p><p>மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை இல்லை. இதனால் அருவிகளுக்கு வரும் நீரின் அளவும் கனிசமாக குறைந்துள்ளது. எனினும், சுற்றுலா பயணிகள் குறைவாக வரும் தண்ணீரில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.</p> ]]></content:encoded></item></channel></rss>