<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 28 Jul 2026 10:25:42 +0000</lastBuildDate><item><title>மழை வெள்ள முன்னெச்சரிக்கை: அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் தூர்வாரும் பணிகள் தீவிரம் - அமைச்சர் என். ஆனந்த் நேரில் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rain-flood-warning-adyar-buckingham-canal-dredging-work-in-full-swing-minister-n-anand-personally-inspects</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rain-flood-warning-adyar-buckingham-canal-dredging-work-in-full-swing-minister-n-anand-personally-inspects#comments</comments><guid isPermaLink="false">b7a1c03a-bbb2-4772-957e-a4c4a540f7d6</guid><pubDate>Tue, 28 Jul 2026 10:24:11 +0000</pubDate><atom:updated>2026-07-28T10:24:11.501Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,work,inspects,பருவமழை முன்னெச்சரிக்கை,அமைச்சர் என். ஆனந்த்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/o9l79e3h/24.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் என். ஆனந்த்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/o9l79e3h/24.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவுப்படி இன்று காலை 9.00 மணியளவில் சென்னை மாவட்டம், ஆலந்தூர் வட்டம், மணப்பாக்கம் கிராமம் அடையாறு ஆற்றுப்பகுதியினை தூர்வாரி சீரமைக்கும் பணி தொடங்கி வைத்து கள ஆய்வு மேற்கொண்டார். </p><p>அதன் பிறகு காலை 11.00 மணியளவில் சென்னை மாவட்டம், சோழிங்கநல்லூர் வட்டம் சோழிங்கநல்லூர், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையின் இணைப்பு மேம்பாலம் அருகே அமைந்துள்ள தெற்கு பக்கிங்ஹாம் கால்வாயில் தூர்வாரி சீரமைக்கும் பணியை மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D">நீர்வளத்துறை அமைச்சர்</a> என்.ஆனந்த் அவர்கள் கள ஆய்வு செய்து தொடங்கி வைத்தார்கள்.</p><h2>அடையாறு ஆற்றை தூர்வாரி சீரமைக்கும் பணி:</h2><p>அடையாறு ஆறு சென்னை நகரின் மூன்று முக்கிய ஆற்றுப்படுகையில் ஒன்றாகும். அடையாறு ஆறு ஆதனூர் ஏரியில் இருந்து உருவாகி மொத்தம் 42.38கி.மீ நீளத்திற்கு பயணித்து பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் அருகில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. அடையாறு ஆற்றின் நீர்பிடிப்பு பரப்பளவு 808 சதுர.கிமீ ஆகும். மேலும் அடையாறு ஆறு காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஏரிகளிலிருந்தும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீரையும், மழை நீரையும் கடலில் கலக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீர் அடையாறு ஆற்றில் தொலைதூரம் 17.18 கி.மீ கலக்கிறது. பின் அடையாறு ஆறு 17.00 கி.மீ சென்னை மாவட்டத்தில் பாய்ந்து கடலில் கலக்கிறது. பெருநகர சென்னை மாநகராட்சியின் எல்லைக்குள் ஓடும் இந்த ஆற்றில் ஆகாயத்தாமரைகள் மிதவைத் தாவரங்கள் மற்றும் மிதவைப் பொருட்கள் படர்ந்து நீரோட்டத்தை பாதிக்கும் வகையில் உள்ளது.</p><p>நீர்வளத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் இணைந்து தூர்வாரும் பணியை மேற்கொள்வதன் காரணத்தினால், அடையாறு ஆற்றில் விமான நிலைய ஓடுபாதை கீழ் நீரோட்டப்பாதை முதல் திரு.வி.க பாலம் வரை மற்றும் அடையாறு முகத்துவாரத்தில் பணி மேற்கொள்ளப்படுவதால், சென்னை பெருநகர பகுதிகளான மணப்பாக்கம், நந்தம்பாக்கம், கோடம்பாக்கம், ஜாபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் அடையாறு ஆற்றில் மழை மற்றும் வெள்ள நீர் தங்கு தடையின்றி செல்ல வழிவகை ஆகும்.</p><h2>தெற்கு பக்கிங்ஹாம் கால்வாய் தூர்வாரி சீரமைக்கும் பணி</h2><p>பக்கிங்ஹாம் கால்வாய் பழவேற்காடு ஏரியிலிருந்து மரக்காணம் உப்பங்கழினி வரை உள்ளது. 167 கி.மீ நீளமும் 20 முதல் 100 மீட்டர் வரை மாறுபட்ட அகலம் கொண்டுள்ளது. தெற்கு பக்கிங்ஹாம் கால்வாய், அடையாறு ஆற்றின் பகுதியில் இருந்து முட்டுக்காடு முகத்துவாரம் வரை சுமார் 23.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைந்துள்ளது. வெள்ளப்பெருக்கு காலங்களில் இக்கால்வாயில் சுமார் 8000 கன அடி மழைநீரானது ஒக்கியம் மடுவு வழியாக வங்காள விரிகுடாவில் சென்று சங்கமிக்கிறது.</p><p>சோழிங்கநல்லூர் பகுதியில், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலை இணைப்பு மேம்பாலம் அருகில் அமைந்துள்ள தெற்கு பக்கிங்ஹாம் கால்வாயில் அதிக அளவில் ஆகாயத்தாமரை, மிதக்கும் பொருட்கள் மேலே உள்ள பள்ளிக்கரணை மற்றும் ஒக்கியமடுவு போன்ற பகுதிகளில் இருந்து நீரோட்டத்தில் அடித்து வரப்பட்டும், மேலும் அப்பகுதியில் வளர்ந்துள்ள நீர்த்தாவரங்களும் சேர்ந்து அதிக அளவில் காணப்படுகிறது. இது நீரோட்டத்தை கடுமையாக பாதிப்பது மட்டுமின்றி, நீர் கடத்தும் திறனையும் குறைக்கின்றது. இதனால், மழைக்காலங்களில் நீர்த்தேக்கம் ஏற்பட்டு வெள்ள அபாயம் அதிகரிப்பதுடன் பொதுமக்கள் மற்றும் அருகில் உள்ள குடியிருப்புகளும் பாதிப்புக்கு உள்ளாகும். தேவையற்ற நீர்த்தேக்கத்தினால் துர்நாற்றம் மற்றும் கொசு உற்பத்தியாவது மட்டுமின்றி, சுகாதார கேடும் ஏற்படுகின்றது.</p><p>இவற்றை முறையாக தூர்வாரி பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி, மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், பெருநிறுவனப் பங்களிப்பு மற்றும் தன்னார்வலர்களின் பங்கேற்புடன், சோழிங்கநல்லூர் பகுதியில் அமைந்துள்ள, தெற்கு பக்கிங்ஹாம் கால்வாயில் அமைந்துள்ள ஆகாயத்தாமரை, மிதக்கும் பொருட்கள் மற்றும் கழிவுகள் ஆகியவற்றை அகற்றி மழைக்காலங்களில் மழை நீர் தங்கு தடையின்றி சென்று கடலில் கலக்க வழிவகை செய்யப்படவுள்ளது.</p><h2>வெள்ள முன்னெச்சரிக்கை</h2><p>பருவ மழை காலத்திற்கு முன்னர் வெள்ள முன்னெச்சரிக்கை பணியாக, திட்டமிடப்பட்டு முடிக்க தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவுப்படி, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்என்.ஆனந்த் அவர்கள் தூர்வாரும் பணியை கொடியசைத்து தொடங்கி வைத்து, கள ஆய்வு மேற்கொண்டு விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.</p><p>இந்நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் விஜய் பாலாஜி , சோழிங்கநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.சரவணன், ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஹரிஷ், தெற்கு வட்டார துணை ஆணையாளர் ஆஃப்தாப் ரசூல், தலைமைப் பொறியாளர்எம்.ஜானகி, நீர்வளத்துறை பொறியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>நெல்லையில் சக மாணவரை தாக்கிய பிளஸ் 2 மாணவர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/plus-2-student-arrested-for-assaulting-classmate-in-nellai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/plus-2-student-arrested-for-assaulting-classmate-in-nellai#comments</comments><guid isPermaLink="false">27bff284-70cc-4d77-bd02-991352651d0e</guid><pubDate>Tue, 28 Jul 2026 10:17:53 +0000</pubDate><atom:updated>2026-07-28T10:17:53.972Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,police enquiry,student arrested,போலீசார் விசாரணை,மாணவன் கைது</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/yz92xkz5/35.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ நெல்லை]]></media:title><media:description type="html"><![CDATA[ பிளஸ்-2 மாணவரை கட்டையால் அடித்த சக மாணவன் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/yz92xkz5/35.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நெல்லை மாவட்டம்</a> அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ்-2 மாணவனை கட்டையால் தாக்கிய வழக்கில், சக பள்ளி மாணவனை போலீசார் கைது செய்தனர். </p><h2>குடிநீர் பிடிப்பதில் தகராறு </h2><p>நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அரசு மேல்நிலைப்பள்ளி</a> அமைந்துள்ளது. அந்த பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் பட்டியல் இன மாணவர் ஒருவர் நேற்று (திங்கட்கிழமை) பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்கச் சென்றார். அப்போது அங்கிருந்த மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த சக மாணவர் ஒருவருக்கும் இவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. </p><h2>சாதிப் பெயரைச் சொல்லி தாக்குதல்</h2><p>இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அந்த மாணவர் அங்கிருந்த மரக்கட்டையை எடுத்து, பாதிக்கப்பட்ட மாணவரின் தலையின் பின்புறத்தில் பலமாகத் தாக்கினார். மேலும், சாதிப் பெயரைச் சொல்லி வசைபாடிவிட்டு அந்த மாணவர் பள்ளி வளாகத்தில் இருந்து தப்பியோடினார்.</p><p>தலையில் பலத்த காயமடைந்த மாணவரை மீட்ட பள்ளி ஆசிரியர்கள், உடனடியாக சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><h2>போலீசார் அதிரடி நடவடிக்கை</h2><p>பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மூலைக்கரைப்பட்டி போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தனிப்படை அமைத்துத் தேடி வந்த நிலையில், இன்று தலைமறைவாக இருந்த மாணவனை போலீசார்<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> கைது </a>செய்துள்ளனர்.</p><p>கைது செய்யப்பட்ட மாணவரை நெல்லை சிறார் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் நடந்த இந்தச் சாதியத் தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பட்டமளிப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்? - டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் விளக்கம்

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-didnt-he-attend-the-graduation-ceremony-dgp-maheshkumar-aggarwal-explains</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-didnt-he-attend-the-graduation-ceremony-dgp-maheshkumar-aggarwal-explains#comments</comments><guid isPermaLink="false">d28b12a9-e917-4e1b-a379-cb0efe2d83b9</guid><pubDate>Tue, 28 Jul 2026 09:55:25 +0000</pubDate><atom:updated>2026-07-28T09:55:25.929Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>DGP,டிஜிபி,Manonmaniam Sundaranar University,மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/aqysj2pg/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/aqysj2pg/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[   <p>நெல்லை,</p><p><a href="https://www.dailythanthi.com/">நெல்லை </a>மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்துகொண்டார். இந்த விழாவில் 37 ஆயிரத்து 877 பேருக்கு பட்டம் வழங்கப்படுகிறது. விழாவில் 871 பேருக்கு கவர்னர் அர்லேகர் நேரடியாக பட்டங்களை வழங்கினார்.</p><h2>டிஜிபி மகேஷ்குமார்</h2><p> இதனிடையே, தமிழக டிஜிபி மகேஷ்குமார் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கிரிமினாலஜி துறையில் ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற இருந்தார். அவர் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.</p><h2>விளக்கம்</h2><p>இந்நிலையில், பட்டமளிப்பு விழாவில் டிஜிபி மகேஷ்குமார் பங்கேற்கவில்லை. காவல்துறை ஆலோசனை கூட்டம் மற்றும் அலுவலக பணிச்சுமை காரணமாக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கமுடியவில்லை என்று டிஜிபி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. </p><p>அதேவேளை, இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3வது இடத்தில் பாடப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், நெல்லை, கடையம் எம்.எல்.ஏ.க்கள் இந்த விழாவில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  </p> ]]></content:encoded></item><item><title>சென்னை ஐஐடி வளாகத்தில் அமைச்சர் நிர்மல்குமார் ஆய்வு: வெளியிட்ட முக்கிய அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-nirmal-kumar-inspects-iit-chennai-campus-important-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-nirmal-kumar-inspects-iit-chennai-campus-important-announcement#comments</comments><guid isPermaLink="false">ed8f6a7c-92e9-413f-9dd5-9d81f940cf72</guid><pubDate>Tue, 28 Jul 2026 09:49:34 +0000</pubDate><atom:updated>2026-07-28T09:49:34.081Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,IIT Chennai,IIT Madras,எரிசக்தி துறை,ஆய்வுInspection,ஐஐடி மெட்ராஸ்,அமைச்சர் நிர்மல்குமார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/n19timiz/23.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நிர்மல்குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/n19timiz/23.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">சி.டி.ஆர். நிர்மல்குமார்</a>, தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் ஐஐடி சென்னை இடையே தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்காக மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக இன்று ஐஐடி சென்னை வளாகத்திற்கு நேரில் சென்று பல்வேறு நவீன மின்சார தொழில்நுட்பங்களை ஆய்வு செய்தார்.</p><h2>விரிவான ஆலோசனை</h2><p>அப்போது, Innovation Hub, தூய்மை எரிசக்தி ஆய்வகம் (Clean Energy Lab), திரவ மின்கல ஆய்வகம் (Flow Battery Lab ),மின்கல மறுசுழற்ச்சிக்கான உயிரித்தொழில்நுட்ப ஆய்வகம் மற்றும் 1 மெகாவாட் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு ஆகியவற்றை பார்வையிட்டு, மின்சார சேமிப்பு தொழில் நுட்பங்கள், பேட்டரி மறுசுழற்சி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒருங்கிணைப்பு மற்றும் மின் கட்டமைப்பு மேலாண்மை தொடர்பாக ஐஐடி ஆராய்ச்சியாளர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தினார். </p><p>பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி பசுமை எரிசக்தி மாநிலமாக மாற்றும் நோக்கில் பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.</p><h2>அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்</h2><p><strong>*</strong> உலகத்தரத்திலான Battery Energy Storage System (BESS) மற்றும் பேட்டரி மறுசுழற்சி தொடர்பான விரிவான புதிய கொள்கை, ஐஐடி சென்னை நிபுணர்களுடன் இணைந்து விரைவில் வெளியிடப்படும்.</p><p><strong>*</strong> மின்கட்டமைப்பின் தேவையை கருத்தில் கொண்டு, Load Flow ஆய்வின் அடிப்படையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு வெளிப்படையான மற்றும் அறிவியல் சார்ந்த அனுமதி நடைமுறை செயல்படுத்தப்படும்.</p><p><strong>*</strong> முன்பிருந்த நிலுவை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விண்ணப்பங்கள் உரிய தொழில்நுட்ப ஆய்வுக்கு பின் விரைவாக பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p><strong>*</strong> வீட்டு மாடி சூரியமின் திட்டங்களை விரைவுபடுத்தும் வகையில், பொதுமக்கள் எளிதில் பயன்பெறும் புதிய கொள்கை, எளிய அனுமதி நடைமுறை மற்றும் ஒருங்கிணைந்த செயலி அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம் மானியம், மீட்டர் பொருத்துதல், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் ஒரே தளத்தில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.</p><p><strong>*</strong> அதிகரித்து வரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை திறம்பட ஒருங்கிணைத்து, காலை மற்றும் மாலை உச்ச மின் தேவையை திறமையாக சமாளிக்க BESS தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.</p><p>இந்த ஆய்வுப் பயணம், தமிழ்நாட்டில் தடையற்ற மின் விநியோகம், மேம்பட்ட மின் வலையமைப்பு, தூய்மையான எரிசக்தி பயன்பாடு மற்றும் எதிர்கால தொழில் நுட்பங்களை நடைமுறைப்படுத்தும் அரசின் உறுதியான முன்னெடுப்பாக அமையும். ஐ.ஐ.டி பேராசிரியர்கள் சத்ய நாராயணன் சேஷாத்திரி, நிதின் முரளிதரன் மற்றும் மரபு சாரா எரிசக்தி தலைமை பொறியாளர். பி.ஜி. கலைவாணி உடனிருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணைக்கு தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லையா? பெரும் சதி வலை பின்னப்படுகிறது - அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/does-the-mekedatu-dam-not-require-tamil-nadus-approval-a-huge-conspiracy-is-being-woven-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/does-the-mekedatu-dam-not-require-tamil-nadus-approval-a-huge-conspiracy-is-being-woven-anbumani#comments</comments><guid isPermaLink="false">420f876b-9bbb-47bb-be9a-b7e29474a030</guid><pubDate>Tue, 28 Jul 2026 09:29:38 +0000</pubDate><atom:updated>2026-07-28T09:29:38.855Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Anbumani Ramadas,மேகதாது அணை,Mekedatu dam,அன்புமணி ராமதஸ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/up128h1o/6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/up128h1o/6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF">அன்புமணி</a> ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>காவிரி ஆற்றின் குறுக்கே  எந்த அணையையும் கட்டுவதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட எந்த பாசன மாநிலங்களின் ஒப்புதலையும் கர்நாடக அரசு பெறத் தேவையில்லை என்றும், இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றும் மத்திய அரசு தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கர்நாடக அரசுக்கு ஆதரவான மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் இந்த நிலைப்பாடு கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.</p><h2>மத்திய நீர்வளத்துறை இணை மந்திரி</h2><p>நாடாளுமன்ற மாநிலங்களவையில் இது தொடர்பான எனது வினாவுக்கு எழுத்து மூலம் விடையளித்த மத்திய நீர்வளத்துறை இணை மந்திரி ராஜ் பூஷன் சவுத்ரி,‘‘ காவிரி சிக்கல் தொடர்பாக 16.02.2026 ஆம் நாள் சுப்ரீம் கோர்ட் அளித்தத் தீர்ப்பில், காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டுமானத்தையும் மேற்கொள்ள  தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட பிற பாசன மாநிலங்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று  எங்கும் கூறப்படவில்லை’’ என்று தெரிவித்துள்ளார். இதற்கு சான்றாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் இடம்பெற்றுள்ள  காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் ஒரு பத்தியையும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். உச்சநீதிமன்றத் தீர்ப்பில்  ஏதோ ஒரு பகுதியை மட்டும் காட்டி, காவிரியில் தமிழகத்துக்கு எந்த உரிமையும் கிடையாது என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த மத்திய அரசு முயல்கிறது. மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு எதிராக மத்திய அரசின் ஆதரவுடன் மிகப்பெரிய சதிவலை பின்னப்படுவதைத் தான் இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன.</p><p>தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே கடைமடை பாசனப் பகுதிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எந்த திட்டங்களையும் முதல் மடை பாசனப் பகுதிகள் செயல்படுத்தக் கூடாது என்பது தான் நடைமுறையாகும். உலக அளவிலான ஒப்பந்தங்களிலும் இந்த நிலைப்பாடு வலியுறுத்தப் பட்டுள்ளது. </p><h2>காவிரி நீர்ப்பகிர்வு</h2><p>காவிரி நீர்ப்பகிர்வு தொடர்பாக அப்போதைய சென்னை மாகாணத்திற்கும், மைசூர் மாகாணத்திற்கும் இடையே 1892, 1924 ஆகிய ஆண்டுகளில் கையெழுத்தான ஒப்பந்தங்களில் இது தெளிவாக கூறப்பட்டுள்ளது. ‘‘புதிய பாசன அணை அல்லது சிறிய அணைக்கட்டுகளை கட்ட வேண்டும் என்று மைசூர் அரசு விரும்பும் போது, அதற்கு பொருத்தமான விதிகளின்படி மெட்ராஸ் மாகாண அரசிடமிருந்து முன்கூட்டியே ஒப்புதல்  பெற வேண்டும். புதிய அணை தொடர்பான அனைத்து விவரங்களும் மெட்ராஸ் மாகாண அரசுக்கு முன்கூட்டியே  அனுப்பப்பட்டு, பணிகள் தொடங்கப்படுவதற்கு முன்பாக ஒப்புதல் பெறப்பட வேண்டும்’’  என்று ஒப்பந்தங்களில் மிகத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.</p><p>மாநிலங்களவையில் மத்திய மந்திரிாயால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள 16.02.2026 ஆம் நாளிட்ட தீர்ப்பின் முதல் அம்சமாக, இந்த ஒப்பந்தங்களின் கூறுகள் இப்போதும் செல்லும் என்று கூறப்பட்டிருக்கிறது. ‘1947 ஆம் ஆண்டின் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, இந்திய அரசு முழுமையான இறையாண்மை பெற்ற அதிகார அமைப்பாக மாறியதால், மேலாதிக்கக் கோட்பாடு செயல்படுவதற்கு இனி இடமில்லை. 1892 மற்றும் 1924 ஆம் ஆண்டுகளின் இரு ஒப்பந்தங்களும் எந்தவொரு அரசியல் ஏற்பாட்டையும் கொண்டிருக்கவில்லை; மேலும் அவை இந்தியாவின் இறையாண்மையின் எந்தவொரு அம்சத்தையும் பாதிக்கவுமில்லை. மாறாக, இந்த ஒப்பந்தங்கள் எந்தவொரு அரசியல் கூறுகளும் இல்லாத, பரந்த பொது நலன் சார்ந்த விஷயங்களை மட்டுமே உள்ளடக்கியுள்ளன. இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, இந்த ஒப்பந்தங்கள் செயலற்றவை என்றோ அல்லது முற்றிலும் காலாவதியானவை என்றோ ஆகிவிடாது’ என்று கூறப்பட்டுள்ளது. </p><h2>மத்திய அரசு</h2><p>கடைமடை பாசன மாநிலமான தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல், எந்த அணையையும் கர்நாடகம் கட்ட முடியாது என்பது தான் இதன் பொருள் ஆகும். இந்த உண்மையை மறைத்து விட்டு, மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை என மத்திய அரசு கூறுவது திசை திருப்பும் செயல். அதுமட்டுமின்றி, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பிலும் கர்நாடகத்தில் நடைமுறையில் உள்ள பாசனத் திட்டங்கள் பட்டியலிடப்பட்டு, வேறு எந்த புதிய பாசனத் திட்டமும் செயல்படுத்தப்படக் கூடாது என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது மேகதாது அணையை கட்ட தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை என்று மத்திய நீர்வளத்துறை மந்திரி ராஜ் பூஷன் சவுத்ரி எப்படி கூற முடியும்?</p><p>இந்த அடிப்படையில் தான் சிவசமுத்திரம் அணை திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்ட போது, அது திருப்பி அனுப்பப்பட்டதாக 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9&amp;ஆம் தேதி அப்போதைய நீர்வளத்துறை மந்திரி உமாபாரதி எனக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு முன் மத்திய நீர்வளத்துறை மந்திரியாக இருந்த கஜேந்திர ஷெகாவத், கடந்த 16.07.2021 ஆம் ஆண்டு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழுவினர் சந்தித்து மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்று வலியுறுத்தியது. அதற்கு பதிலளித்த மத்திய மந்திரி ஷெகாவத், தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடக அரசால் மேகதாது அணையை கட்ட முடியாது என்று உறுதியளித்தார். இவற்றுக்கெல்லாம் மாறான நிலைப்பாட்டை இப்போது நீர்வளத்துறை மந்திரி சவுத்ரி மேற்கொள்ள வேண்டிய தேவை என்ன?</p><h2>சதிவலை</h2><p>காவிரி பிரச்சினையில் மத்தியில் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதாவாக இருந்தாலும், காங்கிரசாக இருந்தாலும்  தமிழக நலனுக்கு எதிராக செயல்படுவதையே  வழக்கமாகக் கொண்டுள்ளன. மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய பாரதிய ஜனதா அரசு அனுமதி அளித்ததே தவறு ஆகும். தமிழகத்திற்கு எதிரான இந்த துரோகத்தை காங்கிரஸ் தலைமை கண்டிக்கவில்லை. அதன்  தொடர்ச்சியாக இப்போது தமிழ்நாட்டுக்கு எதிராக இன்னொரு சதிவலையை மத்திய பாரதிய ஜனதா அரசும், கர்நாடக காங்கிரஸ் அரசும் இணைந்து பின்னுகின்றன. இந்த சதிவலை கிழித்தெறியப்பட வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக அரசு கூடுதல் விழிப்புணர்வுடனும், எச்சரிக்கை உணர்வுடனும் செயல்பட வேண்டும்.</p><p>மாநிலங்களவையில் நான் எழுப்பிய இன்னொரு வினாவுக்கு விடையளித்த மத்திய மந்திரி ராஜ் பூஷன்,  கடந்த ஜூலை 16 ஆம் தேதி வரை தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய 25.31 டி.எம்.சி நீரில் 3.37 டி.எம்.சி நீரை மட்டுமே கர்நாடகம் வழங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். காவிரி பிரச்சினையில் நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை கர்நாடக அரசு எந்த அளவுக்கு மதிக்கிறது என்பதற்கு இதுவே சான்றாகும்</p><p>கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் இன்று பிற்பகல் நிலவரப்படி  64  டி.எம்.சி தண்ணீர் உள்ளது. 4 அணைகளுக்கும் சேர்த்து வினாடிக்கு 13 ஆயிரம் கன அடி நீர் வருகிறது. ஆனாலும் கூட தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுக்கிறது என்றால் அங்குள்ள ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு சட்டத்தை மதிக்காதவர்கள்; மனிதநேயமற்றவர்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். இப்போதே அரை டி.எம்.சி தண்ணீர் கூட கொடுக்காதவர்கள், மேகதாது அணையை கட்ட அனுமதித்தால் காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக மாற்றாமல் ஓயமாட்டார்கள் என்பதை எவராலும் மறுக்க முடியாது.</p><h2>அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம்</h2><p>மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு எடுத்துள்ள புதிய நிலைப்பாடு நமக்கு சொல்லும் செய்தி என்னவென்றால், காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு வழங்காமல் இருப்பதற்காக பெரும் சதி நடக்கிறது என்பதும்,  இதில் மத்திய அரசும் பங்குதாரராக உள்ளது என்பதும் தான். எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்; இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக கூட்ட வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையைத் தட்டிப் பறிக்க மத்திய பாஜக அரசு முயற்சி: வைகோ கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/central-bjp-governments-attempt-to-snatch-away-tamil-nadus-cauvery-water-rights-vaiko-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/central-bjp-governments-attempt-to-snatch-away-tamil-nadus-cauvery-water-rights-vaiko-condemns#comments</comments><guid isPermaLink="false">7fed22bc-8e8a-4e73-b9b4-64c8e6076ae0</guid><pubDate>Tue, 28 Jul 2026 09:11:17 +0000</pubDate><atom:updated>2026-07-28T09:11:17.494Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,கண்டனம்,Cauvery issue,Condemn,மத்திய அரசின்,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/l61j6fnp/22.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வைகோ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/l61j6fnp/22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மதிமுக பொதுச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B">வைகோ</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>மாநிலங்களவையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசின் நீர்வளத்துறை இணை மந்திரி ஸ்ரீ ராஜ் பூஷன் சவுத்ரி அளித்துள்ள பதில் தமிழ்நாட்டிற்கு பாதகம் விளைவிக்குமோ என்ற ஐயம் எழுந்துள்ளது.</p><p>“காவிரி பிரச்சினை தொடர்பாக சுப்ரீம் கோர்ட் கடந்த 2018 பிப் 16 -ம் தேதி அளித்த தீர்ப்பில், காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டுமானத்தையும் கட்ட தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதலை கர்நாடகா பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை."</p><p>“நடுவர் மன்ற தீர்ப்பின் ஒரு பகுதியாக, காவிரி நீரை அந்தந்த மாநிலத்தில் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் உள்ளிட்ட தங்களது தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளவும், பலனை அனுபவிக்கவும், திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளவும் எந்த கட்டுப்பாடும் இல்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது."</p><h2>மத்திய நீர்வளத்துறை இணை மந்திரி</h2><p>இவ்வாறு மத்திய நீர்வளத்துறை இணை மந்திரி கூறியிருப்பது கர்நாடக மாநிலம் மேகதாது அணை கட்டுவதற்கு வழங்கப்படும் அனுமதிக்கான சமிக்ஞை போன்று தெரிகிறது. 2018 பிப்ரவரி 16 -ம் நாள்  சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பு, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை உறுதி செய்வதாகவே இருக்கிறது.  சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மிகத் தெளிவானது.</p><p>"இந்தத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு முரணாக இல்லாத வகையில், ஒவ்வொரு மாநிலமும் தனது எல்லைக்குள் நீரின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தவும், அந்த மாநிலத்திற்குள் உள்ள நீரின் பயனை அனுபவிக்கவும் உள்ள அதிகாரம் பாதிக்கப்படாது. </p><h2>காவிரி நீர்</h2><p>"மேல்பகுதி மாநிலம், கீழ்ப்பகுதி மாநிலங்களுக்கு அட்டவணைப்படி வழங்க வேண்டிய நீர்வரத்தை பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது." கீழ்பகுதி மாநிலம், அதாவது தமிழ்நாடு பெற்று வரும் காவிரி நீர் வரத்தை தடுக்கும் வகையில் மேல்பகுதி மாநிலமான கர்நாடகம் தடுப்பணைகளை அமைக்க கூடாது என்பதுதான் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் சாரம்சமாகும்.</p><p>கர்நாடக மாநிலத்தின் எந்த நடவடிக்கையும் சுப்ரீம் கோர்ட் உறுதி செய்த காவிரி நீர்ப் பங்கீடு மற்றும் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிர்ணயிக்கப்பட்ட நீர்வரத்தை பாதிக்கக் கூடாது என்பதே தீர்ப்பின் முக்கியக் கோட்பாடாகும்.</p><p>காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பு, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு ஆகியவற்றை நீர்த்துப்போக செய்து, கர்நாடக மாநிலம், <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேகதாது அணை</a> கட்டுவதற்கு மத்திய பாஜக அரசு வஞ்சகமான முறையில் அனுமதி வழங்க முனைந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும்.</p><h2>கர்நாடக அரசுடன் நேரடி பேச்சுவார்த்தை</h2><p>தமிழ்நாடு அரசு இதில் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். மேகதாது அணை குறித்து கர்நாடக அரசுடன் நேரடி பேச்சுவார்த்தை என்பதே கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.</p><p>சர்வதேச நீர் பங்கீடு சட்டங்களின் படியும், இயற்கை நீதியின் படியும்  உரிமை உள்ள கீழ்பகுதி மாநிலமான தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையைத் தட்டிப் பறிப்பதற்கு மத்திய அரசின் துணையுடன் கர்நாடக மாநிலம் முயற்சிப்பதை முறியடிக்க வேண்டும். </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பட்டமளிப்பு விழாவில் முதலில் பாடப்பட்ட வந்தேமாதரம்:  இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vande-mataram-sung-first-at-the-convocation-ceremony-communist-party-of-india-condemns-it</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vande-mataram-sung-first-at-the-convocation-ceremony-communist-party-of-india-condemns-it#comments</comments><guid isPermaLink="false">aab2e0db-2cc3-47ca-b31b-d377efd95344</guid><pubDate>Tue, 28 Jul 2026 08:46:28 +0000</pubDate><atom:updated>2026-07-28T08:46:28.590Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Communist Party of India,இந்திய கம்யூனிஸ்டு கட்சி,வந்தே மாதரம்,Vande Mataram</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/30uie2py/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/30uie2py/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/">மனோன்மணியம் </a>சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதலில் வந்தேமாதரம் பாடல் பாடப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. </p><h2>இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்</h2><p>இது குறித்து இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் விடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு;</p> <p>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், வந்தேமாதரம் பாடல் முதலில் பாடப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்கல்வித்துறை அமைச்சர் திரு்விஸ்வநாதன் அந்த விழாவை புறக்கணித்துள்ளார். இது வரவேற்பிற்குரியது.</p><p>இருப்பினும் தமிழ்நாட்டில் உள்ள மனோன்மணியம் பல்கலைக் கழகம் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் வழிகாட்டலை பின்பற்றாமல், ஆளுநர் ஆர்.வி.அர்லேக்கர் ஆலோசனை அடிப்படையில் செயல்படுவது உயர்கல்வியில் தமிழ்நாட்டின் உரிமை பறிபோகிறதோ என்ற ஐயத்தை எழுப்புகிறது. அப்பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரின் இச்செயல் கண்டிக்கத்தக்கது. அவர் மீது உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.</p> <p>தமிழ்தாய் வாழ்த்துப் பாடலை இயற்றிய கவிஞர் மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் அமைந்துள்ள, பல்கலைக் கழகத்திலேயே, தமிழுக்கு முதன்மை இடம் கிடைக்கவில்லை என்பது தமிழக மக்கள் மத்தியில் கடும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>"வந்தேமாதரம் " ஒரு குறிப்பிட்ட மதத்தின் சார்பு உடையதாகவும், சில வரிகள் முஸ்லீம் சிறுபான்மை மக்களுக்கு எதிரானதாகவும் உள்ளதால், அப்பாடலை தேசிய கீதமாக ஏற்கக் கூடாது&nbsp;&nbsp;என விடுதலை இயக்கக் காலத்திலேயே தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த நிலையில், ஆளுநர் மாளிகை நிர்வாகத்தின் உத்தரவுப்படி, பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நிரலில் "வந்தேமாதரம்" பாடலுக்கு முதலிடம் வழங்கி, தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் நிலையில் வைத்தது மரபை மீறிய செயலாகும்.</p> <p>மத்திய அரசு அரசு நிகழ்ச்சிகளில் ஒவ்வொரு மாநிலத்தின் பாடல்களை முதலில் பாட வேண்டும் என அறிவுறுத்தியுள்ள நிலையிலும் கூட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி.அர்லேக்கர் தமிழை மூன்றாம் நிலைக்கு தள்ளச் செய்தது என்பது அவரது தமிழ் தமிழர் விரோத மனநிலையை வெளிப்படுத்துகிறது.</p><p>தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேக்கரை&nbsp;&nbsp;உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்&nbsp;&nbsp;தமிழ்நாடு மாநில செயற்குழு&nbsp;&nbsp;ஒன்றிய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>நெல்லையில் அரிவாளுடன் சுற்றிய 6 பேர் அதிரடி கைது: கார், பைக்குகள் பறிமுதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/6-people-arrested-for-roaming-around-in-paddy-fields-with-sickles-car-bikes-seized</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/6-people-arrested-for-roaming-around-in-paddy-fields-with-sickles-car-bikes-seized#comments</comments><guid isPermaLink="false">fe741204-2320-4ba4-85f2-324e64c628fa</guid><pubDate>Tue, 28 Jul 2026 08:31:34 +0000</pubDate><atom:updated>2026-07-28T08:31:34.915Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,போலீஸ்,Tirunelveli,திருநெல்வேலி,பறிமுதல்,Car,கார்,patrol,bike,seized,ரோந்து பணி,பைக்,அரிவாள்,Scythe,6 பேர் கைது,6 arrested</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/nqax6cnc/3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 6 பேர் கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/nqax6cnc/3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் பகுதியில் சந்தேகப்படும்படி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4">அரிவாள்களுடன் சுற்றித்திரிந்த</a> 6 பேரை அதிரடியாக கைது செய்து, அவர்களிடம் இருந்து 3 அரிவாள்களை போலீசார் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">பறிமுதல் </a>செய்தனர்.</p><p>திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி உட்கோட்டத்திற்கு உட்பட்ட முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்தில் இன்று அதிகாலையில் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அரிவாள்களுடன் சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்த 6 பேரை துரிதமாக செயல்பட்டு போலீசார் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர்.</p><h2>6 பேர் அதிரடி கைது</h2><p>ஏற்கனவே 19 வழக்குகளை உடைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி மணிகண்டன்(எ) வாத்துமணி (வயது 27), 18 வழக்குகளை உடைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி காளிமுத்து(23), 11 வழக்குகளை உடைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி பொன்ரங்கம்(எ)  பொன்ராஜ்(19) மற்றும் சுடலை கிருஷ்ணன்(எ) முருகன்(40), இசக்கிமுத்து(எ) இயேசுராஜா(29), மகாராஜன்(18) ஆகிய 6 பேர் இன்று காலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.</p><h2>3 அரிவாள்கள், 2 பைக்குகள், 1 கார் பறிமுதல்</h2><p>கைது நடவடிக்கையின்போது பொன்ரங்கம்(எ) பொன்ராஜ் தப்பிச் செல்ல முயன்றபோது கீழே விழுந்ததில் அவரது வலது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் 3 அரிவாள்கள், 2 பைக்குகள் மற்றும் 1 கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக முன்னீர்பள்ளம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>3-வது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து;  கனிமொழி கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-thai-which-was-relegated-to-3rd-place-congratulates-kanimozhi-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-thai-which-was-relegated-to-3rd-place-congratulates-kanimozhi-condemns#comments</comments><guid isPermaLink="false">727188f5-aed1-48ee-ba22-72d412ac597c</guid><pubDate>Tue, 28 Jul 2026 08:28:40 +0000</pubDate><atom:updated>2026-07-28T08:28:40.339Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,Nellai,கனிமொழி எம்பி,தமிழ்த்தாய் வாழ்த்து,TVKVijay‌,KanimozhiMP</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/ubpseqkp/kanimozi33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கனிமொழி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/ubpseqkp/kanimozi33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு, வந்தே மாதரம் முதலில் பாடப்பட்டதற்கு திமுக எம்.பி.கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.</p> <p>இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-</p><p>முதன்முறையாக தமிழ்நாடு பல்கலைக்கழகம் ஒன்றில், <a href="https://www.dailythanthi.com/search?q=kanimozi">தமிழ்த்தாய் வாழ்த்து</a> மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு, வந்தே மாதரம் பாடலுடன் பட்டமளிப்பு விழா தொடங்கியுள்ளது.  </p><p>வாய் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா என்று கேட்டவர், இப்போது இதைக் கண்டித்து எதாவது பேசுவாரா? என அதில் பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>உவர் நீராக மாறிய ஆழ்குழாய் தண்ணீரால் கருகும் நெற்பயிர்கள்: விவசாயிகள் வேதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmers-in-distress-as-rice-crops-scorched-by-brackish-water-from-deep-wells</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmers-in-distress-as-rice-crops-scorched-by-brackish-water-from-deep-wells#comments</comments><guid isPermaLink="false">a7ff0abb-5ff3-43ca-8b58-b210dac94d17</guid><pubDate>Tue, 28 Jul 2026 08:17:14 +0000</pubDate><atom:updated>2026-07-28T08:17:14.818Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur dam,விவசாயிகள்,நெற்பயிர்கள்,Rice Crops,water,டெல்டா விவசாயிகள்,Delta farmers,ஆழ்குழாய் தண்ணீர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/pyy6cjep/CHENNAI-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/pyy6cjep/CHENNAI-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர்,</p><h2>மேட்டூர் அணை</h2><p>காவிரி டெல்டாவின் உயிர்நாடியாக விளங்கும் மேட்டூர் அணை, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி திறக்கப்படு வது வழக்கம். அணை திறக்கப்பட்டதும் டெல்டா மாவட்டங் களில் குறுவை சாகுபடி முழுவீச்சில் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதுமான அளவில் பெய்யாததால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு உரிய தண்ணீர் வரவில்லை. இதன் காரணமாக டெல்டா பாசனத்திற்காக இதுவரை தண்ணீர் திறக்கப்படவில்லை.</p><h2>ஆழ்குழாயை நம்பிய விவசாயிகள்</h2><p>காவிரி நீர் கிடைக்காத சூழ்நிலையில், டெல்டா விவசாயிகள் வேறு வழியின்றி ஆழ்குழாய் கிணறுகளை நம்பியே குறுவை நெல் சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் 3.31 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடந்தது. </p><p>ஆனால் இந்த ஆண்டு தண்ணீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு 1.50 லட்சம் ஏக்கரில் மட்டுமே சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது வரை சுமார் 1 லட்சம் ஏக்கரில் மட்டுமே நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தப் பயிர்கள் அனைத்துக்கும் ஆழ்குழாய் தண்ணீர் மூலமே பாசனம் செய்யப்பட்டு வருகிறது.</p><h2>உவர் நீரக மாறி வருகிறது</h2><p>காவிரியில் தண்ணீர் வராததால் ஆழ்குழாய் நீரை தொடர்ந்து அதிகளவில் உறிஞ்சி பயன்படுத்தி வருவதால், தற்போது நிலத்தடி நீரின் தரமே பாதிக்கப்பட தொடங்கியுள்ளது. குறிப்பாக தஞ்சை அருகே வெண்ணாற்று பாசனப் பகுதிகளான வெள்ளாம்பெரம்பூர், தென்பெரம்பூர். அள்ளூர் அழிசிகுடி, பனவெளி, விட்டலபுரம் உள்ளிட்ட பல கிராமங்களில் நிலத்தடி நீரின் உப்புத்தன்மை அதிகரித்து, குடிநீருக்கே பயன்படுத்த முடியாத அளவுக்கு உவர் நீராக மாறி வருகிறது.</p><p>வேறு வழியின்றி இந்த உவர்நீரையே வயல்களுக்கு பாய்ச்சும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக வயல்களில் தண் ணீர் இருந்தாலும், மண்ணின் மேற்பரப்பில் வெண்மையாக உப்பு படிவம் உருவாகி வருகிறது. இந்த உப்புத்தன்மை நேரடியாக நெற்பயிர்களின் வேர்களை பாதித்து செடிகள் ஊட்டச்சத்தை உறிஞ்ச முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>பசுமை வயல்கள் மஞ்சளாக மாறின</h2><p>சுமார் 30 முதல் 45 நாட்கள் வளர்ச்சியடைந்த குறுவை நெற்ப யிர்களின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, பின்னர் முற்றிலும் காய்ந்து சருகுபோல் காட்சியளிக்கின்றன. பசுமையாக கண்ணுக்கு விருந்தாக இருக்க வேண்டிய வயல்கள் தற்போது வறண்ட தோற்றத்துடன் காணப்படுகின்றன. குறிப்பாக வெண்ணாற்று பாசனப் பகுதிகளில் பல வயல்களில் நெற்பயிர்கள் கருகத் தொடங்கியிருப்பது விவசாயிகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.</p><h2>விவசாயிகள் அச்சம்</h2><p>இந்த கிராமங்களில் மட்டும் தற்போது வரை 25 சதவீத பரப்பளவில் குறுவை நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. தென் மேற்கு பருவமழை இனியும் போதுமான அளவில் பெய்ய வில்லை என்றால் இந்த பாதிப்பு 50 முதல் 60 சதவீதம் வரை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. நிலத்தடி நீரில் உப்புத்தன்மை மேலும் அதிகரித்தால் தற்போது பாதிக்கப்படாத வயல்களிலும் இதே நிலை உருவாகும் என்பதால் விவசாயிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.</p><h2>மகசூல் கடுமையாக குறையும்</h2><p>உவர்நீரால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களில் கதிர் வந்தாலும், முழுமையான மகசூல் கிடைக்காது. சாதாரணமாக ஒரு நெற் கொத்தில் 300 நெல் மணிகள் உருவாகும். ஆனால் உவர்நீர் பாதிப்பால் அந்த எண்ணிக்கை 60 முதல் 80 மணிகள் வரை மட்டுமே குறையும். இதனால் அறுவடை செய்தாலும் விளைச்சல் மிகவும் குறைவாக இருக்கும். சந்தையில் கிடைக்கும் விலையும் சாகுபடி செலவுக்கு ஈடாக இருக்காது. இதனால் விவசாயிகள் கடன் சுமையை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும்.</p><h2>கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை</h2><p>ஒரு ஏக்கர் குறுவை சாகுபடிக்கு விதை, நாற்று நடவு, உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை எடுப்பு, டீசல் செலவு, தொழிலாளர் கூலி, அறுவடை எந்திர வாடகை உள்ளிட்ட செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மகசூல் பாதிக்கப்பட்டால், சாகுபடிக்காக செய்த முதலீட்டையே மீட்டெடுக்க முடியாத நிலை ஏற்படும். பலர் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று சாகுபடி செய்துள்ளதால், பயிர் கருகினால் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்படும் என்ற அச்சமும் நிலவுகிறது.</p><p>உவர்நீரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை வேளாண்மைத் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் இணைந்து உட னடியாக நேரில் ஆய்வு செய்து சேத மதிப்பீடு மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்துள்ளார் முதல்-அமைச்சர் விஜய்: உதயநிதி ஸ்டாலின் சாடல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-has-pawned-the-rights-of-tamil-nadu-udhayanidhi-stalin-has-slammed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-has-pawned-the-rights-of-tamil-nadu-udhayanidhi-stalin-has-slammed#comments</comments><guid isPermaLink="false">7bd2a192-cd35-4fba-bca6-5d98bf8c1c6a</guid><pubDate>Tue, 28 Jul 2026 08:01:05 +0000</pubDate><atom:updated>2026-07-28T08:01:05.756Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,மேகதாது விவகாரம்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,Mekedatu Issue</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/j8ykfvbz/16.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/j8ykfvbz/16.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மேகதாது அணை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகாவிற்குத் தேவை இல்லை என்ற ஒன்றிய இணை மந்திரியின் பதில் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. டெல்லி எஜமானர்களை பகைத்துக் கொள்ளாமலும் - ஆட்சிக்கட்டிலைக் காப்பாற்ற  காங்கிரசுக்கு எதிராக பேசாமலும், தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்துள்ளார் முதலமைச்சர்.</p><p>இந்த பிரச்சினையில், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் ஓரணியில் சென்று மத்திய அரசிடம் மேகதாதுவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென சட்டப்பேரவையில் பேசி இருந்தேன். கர்நாடகாவில் பட வசூல் பாதிக்கும் என்ற பயத்தில், இந்த ஷோபா மாடல் முதலமைச்சர், எதிர்க்கட்சிகள் சொன்னதையும் கேட்கவில்லை - விவசாயிகளின் கோரிக்கையையும் ஏற்கவில்லை. </p><p>இனியும் காலம் தாழ்த்தினால் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோகும். எனவே, மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை முறியடிக்க முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சாலையில் உலா வந்த காட்டு யானை... வாகனங்களை விரட்டியதால் போக்குவரத்து பாதிப்பு!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-wild-elephant-strolling-on-the-road-chased-away-vehicles-causing-traffic-disruption</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-wild-elephant-strolling-on-the-road-chased-away-vehicles-causing-traffic-disruption#comments</comments><guid isPermaLink="false">79394e87-8a38-4854-88f4-1de208c7cbfe</guid><pubDate>Tue, 28 Jul 2026 07:58:12 +0000</pubDate><atom:updated>2026-07-28T07:58:12.487Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சாலை,வாகனங்கள்,காட்டு யானை,wild elephant,போக்குவரத்து பாதிப்பு,Traffic disruption</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/wo6iy6yr/71.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/wo6iy6yr/71.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தாளவாடி, </p><p>தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் நேற்று மதியம் கும்பாரகுண்டி வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று வெளியேறியது. இதையடுத்து சாலையில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%20">காட்டு யானை </a>உலா வந்தது. பின்னர் அந்த வழியாக வந்த வாகனங்களை யானை வழிமறித்து நின்றது. இதைத்தொடர்ந்து திடீரென ஆவேசமடைந்த யானை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளை துரத்தியது. இதனால் அச்சம் அடைந்த வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். </p><h2>போக்குவரத்து பாதிப்பு</h2><p>அப்போது அங்கு நின்ற அரசு பஸ் நோக்கி யானை ஓடி வந்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் பயத்தில் உறைந்தனர். ஆனால் அவர்களை எதுவும் செய்யாமல் சிறிது நேரம் சாலையில் உலா வந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது. அதன்பின்னரே பயணிகள் நிம்மதி அடைந்தனர். யானை துரத்தியபோது ஆபத்தை உணராத சில வாகன ஓட்டிகள் அதன் அருகே சென்று செல்போனில் வீடியோ எடுத்தனர். அப்போது ஒரு பெண்ணும் யானையின் அருகே சென்று புகைப்படம் எடுத்தார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது விவகாரம்: பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும்; முதல்-அமைச்சர் விஜய் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/meghadatu-issue-pm-modi-should-intervene-immediately-cm-vijay-insists</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/meghadatu-issue-pm-modi-should-intervene-immediately-cm-vijay-insists#comments</comments><guid isPermaLink="false">b0d3299c-6e2e-469b-9331-e83cad94d9d1</guid><pubDate>Tue, 28 Jul 2026 07:57:28 +0000</pubDate><atom:updated>2026-07-28T07:57:28.875Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரதமர் மோடி,கர்நாடகா,Actor Vijay,மேகதாது அணை,மேகதாது விவகாரம்,மேகதாது அணை பிரச்சினை,முதல்-அமைச்சர் விஜய்,MekedatuDam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/t3b700xc/vijayone33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/t3b700xc/vijayone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மேகதாது அணை கட்ட தமிழக ஒப்புதல் தேவையில்லை என்ற பதிலுக்கு முதல்-அமைச்சர் விஜய் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- </p><p>கர்நாடகா காவிரி குறுக்கே அமைப்பை உருவாக்க கீழ்ப்படியான மாநிலங்களின் ஒப்புதல் பெற தேவையில்லை என்ற நீர்வளத்துறை பதிலை திரும்ப பெற வேண்டும்.  2018- ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்த மத்திய நீர்வளத்துறை இணை மந்திரி கருத்து ஏமாற்றமளிக்கும் பதில். மேகதாது அணை திட்டத்துக்கு எந்தவிஅத சட்டப்பூர்வ அல்லது நிர்வாக அனுமதியும் வழங்கக்கூடாது,</p><p>காவிரி என்பது வெறும் நீர் ஆதாரம் மட்டுமல்ல, லட்சக்கணக்கான விவசாயிகள் வாழ்வாதாரம்.கடைமடை மாநில அனுமதியின்றி மேலே உள்ள மாநிலம் அணை கட்ட முடியாது. நீர்வளத்துறை இணைமந்திரி அளித்த பதிலை திரும்ப பெற உத்திரவிட வேண்டும். </p> <p>தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நீரின் அளவு, நீர்வரத்து சீராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேகதாது அணை</a>க்கு எந்த அனுமதியும் தரக்கூடாது.முழுமையான தொழில்நுட்ப, சட்டப்பூர்வ ஆய்வுக்கு பிறகே இத்திட்டம் குறித்து முடிவு எடுக்கப்பட வேண்டும்.தமிழகம் ஒப்புதலின்றி கட்டுமானம் கூடாது.  </p><p>கீழ்பாசன மாநிலங்களுக்கு செல்லும் நீரின் அளவை பாதிக்கும் திட்டத்தை ஒப்புதலின்றி செயல்படுத்த முடியாது.  மேகதாது அணை திட்டத்துக்கு எந்தவித சட்டப்பூர்வ அல்லது நிர்வாக அனுமதியும் வழங்கக்கூடாது. மேக தாது விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும்.</p><p>என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வீட்டின் கதவை உடைத்து 17 சவரன் நகை திருட்டு: ஆட்டோ ஓட்டுநர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/auto-driver-arrested-for-stealing-17-sovereigns-of-jewellery-by-breaking-down-house-door</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/auto-driver-arrested-for-stealing-17-sovereigns-of-jewellery-by-breaking-down-house-door#comments</comments><guid isPermaLink="false">d169cd87-35ab-4608-ab35-beca8e4ab297</guid><pubDate>Tue, 28 Jul 2026 07:36:47 +0000</pubDate><atom:updated>2026-07-28T07:36:47.265Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Thoothukudi,arrested,தூத்துக்குடி,jewelry stolen,House,வீடு,ஆட்டோ ஓட்டுநர்,நகைகள் திருட்டு,கதவை உடைத்து,door broken</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/ztm0304x/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு; ஆட்டோ ஓட்டுநர் கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/ztm0304x/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மத்திய அரசு ஊழியர்கள் குடியிருப்பில், பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 17 சவரன் தங்க நகைகளை திருடிய ஆட்டோ ஓட்டுநரை தென்பாகம் போலீசார் கைது செய்தனர்.</p><h2>17 சவரன் தங்க நகைகள் திருட்டு</h2><p>தூத்துக்குடி மத்திய அரசு ஊழியர்கள் குடியிருப்பைச் சேர்ந்தவர் ராஜா சீனிவாசன். இவரது மனைவி உமாதேவி (வயது 61). இவர் கடந்த ஜூலை 22-ம் தேதி குடும்பத்தினருடன் சுந்தரவேல்புரத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன்கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த 17 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.</p><h2>சி.சி.டிவி. கேமரா பதிவுகள் ஆய்வு</h2><p>இந்த திருட்டு சம்பவம் குறித்து உமாதேவி அளித்த புகாரின்பேரில், தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, அண்ணாநகரைச் சேர்ந்த நாராயணன் மகன் சீமான்(38) என்பவர் இத்திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.</p><h2>ஆட்டோ ஓட்டுநர் கைது</h2><p>இதனைத் தொடர்ந்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%20%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D">ஆட்டோ ஓட்டுநரான</a> சீமானை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்த போலீசார், மேற்கொண்ட விசாரணையில், தனது நண்பர்கள் 2 பேரின் உதவியுடன் திருடப்பட்ட நகைகளை வங்கியில் அடகு வைத்திருப்பதாக தெரிவித்தார். கைது செய்யப்பட்ட சீமானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">திருட்டு</a> சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த, தலைமறைவான 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பள்ளி விழா மேடையில் அரசியல் பேச்சு; அமைச்சர் வன்னி அரசை விமர்சித்த நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/political-speech-on-the-school-festival-stage-nainar-nagendran-criticized-minister-vanniarasu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/political-speech-on-the-school-festival-stage-nainar-nagendran-criticized-minister-vanniarasu#comments</comments><guid isPermaLink="false">d1c0ebf7-465f-457f-a472-f827a8f8ebd2</guid><pubDate>Tue, 28 Jul 2026 07:25:39 +0000</pubDate><atom:updated>2026-07-28T07:25:39.664Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Festival,School,பள்ளி விழா,minister vanni arasu,அமைச்சர் வன்னி அரசு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/huse6k7c/70.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/huse6k7c/70.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>சமீபத்தில் நீங்கள் கலந்து கொண்ட பள்ளி விழாவில் “ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்” என NCC மாணவர்கள் உங்களுக்கு வரவேற்பளித்ததை, “ஜெய் ஸ்ரீராம்” என தவறாகப் புரிந்து கொண்டு, பள்ளி மேடையிலேயே பாஜகவை வாய்க்கு வந்தபடி நீங்கள் வசைபாடியிருப்பது, இந்து மதத்தின் மீதும் பாஜகவின் மீதும் நீங்கள் கொண்டுள்ள அளவுகடந்த வெறுப்பின் வெளிப்பாடாகத்தான் தெரிகிறது. பள்ளிகளில் அரசியல் பேசக் கூடாது என்ற அடிப்படை தெரியாமல், பள்ளி மாணவர்களிடையே இவ்வாறான வெறுப்பு பிரசாரத்தை முன்னெடுத்த உங்கள் அரசியல் மாண்பற்ற செயல் கடும் கண்டனத்திற்குரியது. </p><h2>ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்</h2><p>காலங்காலமாக இந்திய இராணுவப் படைகளிலும், சீருடைப் பணிகளிலும் மூத்தவர்களை “ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்” என விளிப்பது தான் மரபு. அதுமட்டுமன்றி, பல பத்தாண்டுகளாக இந்திய இராணுவத்தின் ஒவ்வொரு படைப்பிரிவிலும், ஒவ்வொரு இந்துக் கடவுளின் பெயரைக் கூறி கோஷங்களை எழுப்புவதும் வழக்கமான ஒன்று தான். எனவே, இங்கு யாரும் எதையும் புதிதாக திணிக்கவில்லை என்பதை தேசிய மாணவர் படைக்கும், சாரணர் படைக்கும் வித்தியாசம் தெரியாத <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%20">அமைச்சர் வன்னி அரசு  </a>புரிந்து கொள்ள வேண்டும். </p><p>மேலும், சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் போதிக்க வேண்டிய பள்ளி மாணவர்களிடையே, தனது அமைச்சர்கள் இதுபோன்ற இந்து மத வெறுப்பு கருத்துக்களை பரப்புவதை முதல்-அமைச்சர் விஜய் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை ஐஐடி இணையதளத்தை முடக்கிய மாணவர்.. காரணம் என்ன தெரியுமா..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rejected-cybersecurity-applicant-allegedly-hacks-iit-madras-portal</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rejected-cybersecurity-applicant-allegedly-hacks-iit-madras-portal#comments</comments><guid isPermaLink="false">357c7876-a421-49bd-a51b-e231a940ea23</guid><pubDate>Tue, 28 Jul 2026 07:17:30 +0000</pubDate><atom:updated>2026-07-28T07:17:30.255Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Hacking,ஹேக்கிங்,சென்னை ஐஐடி,IIT Madras,Hackers,சைபர் பாதுகாப்பு,இணையதளம் ஹேக்கிங்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/q9mxvtap/hacking-image.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ இணைதளம் முடக்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ இணையதளம் முடக்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/q9mxvtap/hacking-image.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை ஐஐடி இணையதளப் பக்கம் அண்மையில் ஹேக் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>சென்னை ஐஐடி மற்றும் கான்பூர் ஐஐடி ஆகிய முன்னணி கல்வி நிறுவனங்கள் இணைந்து, இந்தியாவின் முதல் செயல்முறை சார்ந்த 'இளநிலை சைபர் செக்யூரிட்டி’ என்ற பட்டப்படிப்பை 2026-27 கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தியுள்ளன. நாட்டில் அதிகரித்து வரும் சைபர் செக்யூரிட்டி வல்லுநர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய இந்தப் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.</p><p>இந்த படிப்பிற்கு விண்ணப்பித்த நபர் ஒருவர், மாணவர் சேர்க்கைக்கான தகுதிப் பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அந்த விண்ணப்பதாரர், அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், தனது சைபர் செக்யூரிட்டி திறமையை நிரூபிக்கவும், சென்னை ஐஐடி இணையதளப் பக்கத்தில் ஊடுருவி முடக்கியிருக்கிறார். </p><h2>நோக்கம் என்ன?</h2><p>சென்னை ஐஐடியின் ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கான இணையப் பக்கத்தை (Student/Staff Services Portal) முடக்கிய அந்த நபர், ‘எனக்கு எந்தத் தீங்கும் விளைவிக்கும் நோக்கம் இல்லை... எனக்குத் தேவை ஒரு நியாயமான வாய்ப்பு மட்டுமே" என்ற செய்தியை பகிர்ந்துள்ளார். </p><p>சைபர் பாதுகாப்பு ஆர்வலர் என்று கூறப்படும் அந்த நபர், நியாயமற்ற சேர்க்கை செயல்முறை தொடர்பாக அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இந்தச் செயலைச் செய்ததாக அவர் கூறியுள்ளார். அவரது மெசேஜ் தொடர்பான ஸ்கிரீன்ஷாட் ரெட்டிட்டில் பரவலாகப் பகிரப்பட்டுள்ளது. </p><p>அதில் நபர் சென்னை ஐஐடி-யில் <a href="https://www.dailythanthi.com/topic/சைபர்-பாதுகாப்பு">சைபர் பாதுகாப்பில்</a> இளங்கலை அறிவியல் (BCyber) பட்டப் படிப்புக்கு விண்ணப்பித்ததாகவும், ஆனால் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியும், தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்தும், தனது சைபர் பாதுகாப்புப் பணிகளை வெளிப்படுத்தியிருந்தும், தேர்வு செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.</p><figure><img alt="இணையதளம் முடக்கம்" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/ltueftf1/hacking-image2.jpg" /><figcaption>இணையதளம் முடக்கம்</figcaption></figure><h2>பாதுகாப்பு குறைபாடுகள்</h2><p>சென்னை ஐஐடி மற்றும் கான்பூர் ஐஐடி-யில் உள்ள நிர்வாக சர்வர்கள், தரவுத்தளங்கள், பணம் செலுத்தும் முறைகள், விண்ணப்பதாரரின் தகவல்கள் மற்றும் பிற முக்கியமான தரவுகளை தன்னால் அணுக முடிந்ததாக கூறியிருந்தார். ஆனால் அவர் கூறிய இந்த தகவல் உண்மைதானா? என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.</p><p>கான்பூர் ஐஐடி இணையதளத்தின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து பலமுறை தெரிவித்ததாகவும், தனது விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்யக் கோரியதாகவும், ஆனால் தனது மின்னஞ்சல்களுக்குப் பதில் வரவில்லை என்றும் அந்த நபர் கூறியுள்ளார். தான் 13 வயது முதலே கோடிங் செய்து வருவதாகவும், சைபர் பாதுகாப்பை  கற்றுக்கொள்வதில் பல ஆண்டுகளை அர்ப்பணித்ததாகவும், தனது திறமையை மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.</p><h2>சட்டவிரோதம்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/hacking">ஹேக்கிங் தொடர்பான ஸ்கிரீன்ஷாட்கள்</a> பரவத் தொடங்கிய அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட இணையதளத்தை கிளிக் செய்தபோது ஓபன் ஆகாமல், “502 Bad Gateway” என்ற பிழையை கண்டதாக பயனர்கள் தெரிவித்தனர். </p><p>இந்தச் செயல் இணைய உலகிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இணையவாசிகள் பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். நோக்கம் எதுவாக இருந்தாலும், <a href="https://www.dailythanthi.com/topic/hacking">இந்த ஊடுருவல் சட்டவிரோதமானது</a> என்று சிலர் கண்டனம் தெரிவித்தனர். இணையப் பாதுகாப்பு வல்லுநர்கள் எவ்வாறு அடையாளம் காணப்பட்டு மதிப்பிடப்படுகிறார்கள் என்பதில் உள்ள குறைபாடுகளை இது எடுத்துக்காட்டுவதாக சிலர் வாதிட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது விவகாரம்: தேர்தல் அரசியலுக்காக பின்வாங்கும் மத்திய அரசு - அண்ணாமலை சாடல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mekedatu-issue-central-government-backing-down-for-electoral-politics-annamalai-criticizes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mekedatu-issue-central-government-backing-down-for-electoral-politics-annamalai-criticizes#comments</comments><guid isPermaLink="false">ecaa6a67-4f1a-46f3-afc1-b023d277ae0e</guid><pubDate>Tue, 28 Jul 2026 07:02:12 +0000</pubDate><atom:updated>2026-07-28T07:02:12.022Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Annamalai,அண்ணாமலை,மத்திய அரசு,Central Government,மேகதாது விவகாரம்,Mekedatu Issue</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/df3pxwsg/14.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/df3pxwsg/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை, மேகதாது விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>“கடந்த 16.02.2018 அன்று, உச்சநீதிமன்றம் வழங்கிய காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பில், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டமைப்பையும் புதிதாக ஏற்படுத்த, காவிரி நதி பாயும் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என நேற்றைய தினம், மாநிலங்களவையில், காவிரி நதி தொடர்பாக, மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் அளித்துள்ள பதில் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. </p><p>கடந்த 05.08.2021 அன்று அன்றைய மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத், அணைக் கட்டுமானத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க, கர்நாடக மாநிலத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி நிபந்தனைக்குட்பட்டது என்றும், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு சட்டத்தின்படி, காவிரி கடைமட்டத்தில் பாயும் மாநிலங்களின், (குறிப்பாக தமிழ்நாட்டின்) ஒப்புதல் இன்றி, நதியின் குறுக்கே அணை உள்ளிட்ட கட்டமைப்புகளை அமைக்க முடியாது என்றும் நாடாளுமன்றத்திலேயே தெளிவாக தெரிவித்திருந்தார். </p><p>இந்த நிலையில், தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமைகளையும், நலன்களையும் புறக்கணித்து, மத்திய அரசு தனது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து திடீரென பின்வாங்கியிருப்பது, கர்நாடகத் தேர்தல் அரசியலுக்காகவா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.  </p><p>விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்தகைய முக்கியமான விவகாரங்களில், மத்திய அரசு, நேர்மையாகவும், வெளிப்படையாகவும், ஒரே நிலைப்பாட்டிலும் செயல்பட வேண்டும் என எதிர்பார்ப்பது தவறா?</p><p>தமிழ்நாட்டு மக்களை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு சகோதர மாநிலங்களுக்கிடையேயான நல்லுறவை பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவிரி விவகாரத்தில் சட்டத்திற்கும் நீதிக்கும் உட்பட்டு செயல்படுமாறு, மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>விழுப்புரம்: ரெயில்வே மேம்பாலத்தில் விபத்து - 2 பேர் பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-killed-in-accident-on-railway-overbridge-in-villupuram</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-killed-in-accident-on-railway-overbridge-in-villupuram#comments</comments><guid isPermaLink="false">760e18c6-9cbb-4e84-a5d0-5b2cb6b70e64</guid><pubDate>Tue, 28 Jul 2026 06:53:53 +0000</pubDate><atom:updated>2026-07-28T06:53:53.289Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,விழுப்புரம்,Viluppuram,Railway Bridge,2 பேர் உயிரிழப்பு</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/sy4pcq65/36.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ விபத்து]]></media:title><media:description type="html"><![CDATA[ விழுப்புரத்தில் ரயில்வே மேம்பாலத்தில் நடந்த விபத்தில் இருவர் உயிரிழப்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/sy4pcq65/36.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விழுப்புரம்,</p><p>விழுப்புரம் அருகே உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் நேரிட்ட அடுத்தடுத்த சங்கிலித் தொடர் வாகன விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். </p><h2>சங்கிலித் தொடர் வாகன விபத்து</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விழுப்புரம் மாவட்டம்</a>, அய்யூர் அகரம் ரெயில்வே மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த பைக் ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த சொகுசு பஸ்சின் மீது பலமாக மோதியது. </p><p>இந்த எதிர்பாராத மோதலால் பேருந்து ஓட்டுநர் வாகனத்தை திடீரென நிறுத்த முயன்றார். அப்போது, பேருந்தின் பின்னால் அதிவேகமாக வந்துகொண்டிருந்த கார் மற்றும் டெம்போ ஆகிய வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து மோதிக்கொண்டன.</p><h2>2 பேர் உயிரிழப்பு</h2><p>இந்த கோர விபத்தின் தாக்கத்தால், பைக்கில் பயணித்த விழுப்புரம் மாவட்டம் நரசிங்கபுரத்தைச் சேர்ந்த பூபதி மற்றும் காரில் பயணித்த சென்னை, முடிச்சூரைச் சேர்ந்த ஜான் அன்பழகன் (வயது 55) ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><h2>மீட்புப்பணி</h2><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த விழுப்புரம் போலீசார் மற்றும் பொதுமக்கள், வாகன இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். மேலும் படுகாயமடைந்த லாசர், சாலமன் மற்றும் கார் ஓட்டுநர் பாலாஜி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு பொது ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து விழுப்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தீவிர விசாரணை</a> மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை - அமைச்சர் நிர்மல் குமார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-mothers-day-greetings-are-a-priority-in-tamil-nadu-minister-nirmal-kumar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-mothers-day-greetings-are-a-priority-in-tamil-nadu-minister-nirmal-kumar#comments</comments><guid isPermaLink="false">375856b6-aea5-404b-b4be-4e49091f6290</guid><pubDate>Tue, 28 Jul 2026 06:53:45 +0000</pubDate><atom:updated>2026-07-28T06:53:45.371Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,Tamilnadu ​,தமிழ்த்தாய் வாழ்த்து,அமைச்சர் நிர்மல் குமார்,Minister Nirmal Kumar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/v77kcnxt/nirmalkumar.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/v77kcnxt/nirmalkumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.</p><p>நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இன்று பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் கலையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முதலில் வந்தே மாதரம், அதன் பிறகு தேசிய கீதமும், 3 -ஆவதாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட வேண்டும் என்று கவர்னர் அலுவலகத்திலிருந்து சுற்றறிக்கை வந்துள்ளதாகவும், அதன்படியே இந்நிகழ்ச்சி நடைபெறும் என பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என்.சந்திரசேகர் தெரிவித்திருந்தார்.</p><h2>தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை</h2><p>இந்நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் சென்னையில்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் கவர்னர் தரப்பில்  இருந்து பல வழிகாட்டுதல்கள் கொடுத்து வருகிறார்கள். அது ஏற்புடையதல்ல. இங்கு தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை அளிக்கப்படும். மேற்கு வங்காளம்  போன்ற பாஜக ஆளும் மற்ற மாநிலங்களில்கூட அந்தந்த மாநில மொழிக்கே முன்னுரிமை அளிக்கின்றனர். அதனால் தமிழகத்தில்<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81"> தமிழ்த்தாய் வாழ்த்து</a> 3 -ஆவதாக பாடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.</p><p>இவ்வாறு அவர் பேசியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மாமல்லபுரத்தில் நாளை பா.ம.க. பொதுக்குழு கூட்டம்: அன்புமணி தலைமையில் நடக்கிறது</title><link>https://www.dailythanthi.com/news/politics/pmk-general-committee-meeting-to-be-held-in-mamallapuram-tomorrow-anbumani-to-preside</link><comments>https://www.dailythanthi.com/news/politics/pmk-general-committee-meeting-to-be-held-in-mamallapuram-tomorrow-anbumani-to-preside#comments</comments><guid isPermaLink="false">bf6c7d3a-a596-403b-8942-04ef9aba6d31</guid><pubDate>Tue, 28 Jul 2026 06:47:35 +0000</pubDate><atom:updated>2026-07-28T06:47:35.338Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,பாமக,PMK,Chennai,சென்னை,Mamallapuram,மாமல்லபுரம்,பொதுக்குழு கூட்டம்,Anbumani Ramadas,tomorrow,நாளை,General Committee Meeting,தலைமையில்,Led by</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/2gvllzjn/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.gif" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பா.ம.க. தலைவர் அன்புமணி ராதாஸ் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/2gvllzjn/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.gif?w=280" width="280"></media:thumbnail><category>அரசியல் களம் (Politics)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%BE.%E0%AE%AE.%E0%AE%95.%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாாஸ்</a> தலைமையில் மாமல்லபுரத்தில் நாளை நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.</p><h2>மோதல்</h2><p>தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு பா.ம.க.வில் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், கட்சியின் தலைவரும், மகனுமான டாக்டர் அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.</p><h2>சட்டமன்ற தேர்தலில் 4 இடங்களில் வெற்றி</h2><p>இதனால், கட்சியும் இரண்டாக உடைந்தது. பா.ம.க.வின் டாக்டர் ராமதாஸ் தரப்பு, சசிகலாவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டது. பா.ம.க.வின் டாக்டர் அன்புமணி தரப்பு, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றது. தேர்தலில் பா.ம.க.வின் அன்புமணி தரப்பு 4 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், டாக்டர் ராமதாஸ் தரப்பு ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.</p><h2>டாக்டர் ராமதாஸின் 88-வது பிறந்த நாள்</h2><p>இந்த நிலையில், தேர்தலுக்கு பிறகு திண்டிவனம் தைலாபுரம் தோட்டம் சென்று டாக்டர் ராமதாசை, அன்புமணி ராமதாஸ் குடும்பத்துடன் சந்தித்தார். அப்போதே இருவரும் கண்ணீர் மல்க கட்டியணைத்து சேர்ந்துவிட்டனர். அதனைத் தொடர்ந்து, சமீபத்தில் தனது 88-வது பிறந்த நாளை கொண்டாடிய டாக்டர் ராமதாஸ், விழாவில் கலந்துகொண்ட மகன் அன்புமணி முன்னிலையிலேயே இனி அரசியலை விட்டு ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். பா.ம.க.வை அன்புமணி வழிநடத்துவார் என்றும் கூறினார்.</p><h2>அன்புமணி தலைமையில் நாளை பா.ம.க. பொதுக்குழு கூட்டம்</h2><p>இதனால் பா.ம.க.வை வழிநடத்துவதில் இருந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%BE.%E0%AE%AE.%E0%AE%95.%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">பா.ம.க. பொதுக்குழு கூட்டம்</a> <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88">நாளை</a> (ஜூலை 29-ந்தேதி) காலை 11 மணிக்கு மாமல்லபுரம் கான்ப்ளுயன்ஸ் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.</p>]]></content:encoded></item><item><title>திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 4 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/four-bangladeshi-nationals-arrested-for-staying-illegally-in-tiruppur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/four-bangladeshi-nationals-arrested-for-staying-illegally-in-tiruppur#comments</comments><guid isPermaLink="false">0168763e-aa83-4b0a-bbed-a85e59925b7a</guid><pubDate>Tue, 28 Jul 2026 06:26:31 +0000</pubDate><atom:updated>2026-07-28T06:26:31.125Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்,Bangladeshis,வங்கதேசத்தினர்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/w0tp96lj/11.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/w0tp96lj/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>திருப்பூர்,   </p><p>திருப்பூர் முதலிபாளையம் அருகே நல்லூர் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், வங்காளதேசத்தை சேர்ந்த நஸ்ருல் இஸ்லாம் (வயது 39), நைமூர் ரஹ்மான் பாஹிம், நசீர் ஹொசைன் (29), மில் கிங்ஸ்டன் காக்ரா (36) என்பது தெரிய வந்தது. </p><p>இதையடுத்து அவர்கள் வைத்திருந்த ஆதார் கார்டுகளை சோதனை செய்தபோது, அது போலியானது என தெரியவந்தது. இவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து, திருப்பூர் சிட்கோ மற்றும் முதலிபாளையம் பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/controversy-at-nellai-manonmaniam-sundaranar-university-convocation-ceremony</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/controversy-at-nellai-manonmaniam-sundaranar-university-convocation-ceremony#comments</comments><guid isPermaLink="false">caadba1b-038f-42fd-955d-ff8db05f7089</guid><pubDate>Tue, 28 Jul 2026 06:09:17 +0000</pubDate><atom:updated>2026-07-28T06:09:17.945Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,பட்டமளிப்பு விழா,Convocation Ceremony,Manonmaniam Sundaranar University,மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,கவர்னர் அர்லேகர்,Governor Arlekar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/2eh69wtk/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/2eh69wtk/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><h2>மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்</h2><p>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்துகொண்டுள்ளார். இந்த விழாவில் மொத்தம் 37 ஆயிரத்து 877 பேர் பட்டம் பெற உள்ளதாகவும், கவர்னர் அர்லேகர் நேரடியாக 871 பேருக்குப் பட்டங்களை வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. </p><p>இதற்கிடையில் பட்டமளிப்பு விழாவில் 871 பேருக்கு நேரடியாகப் பட்டங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தங்கம் பதக்கம் பெறும் 113 பேருக்கு மட்டுமே கவர்னர் நேரடியாகப் பட்டங்கள் வழங்குவார் என அறிவிக்கப்பட்டது. இதனால் கவர்னரிடம் நேரடியாகப் பட்டங்களைப் பெறுவோம் என்ற நம்பிக்கையில் வந்த மாணவ, மாணவிகளுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. </p><h2>பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு</h2><p>இதனால் பட்டமளிப்பு விழாவிற்கு வந்திருந்த மாணவிகள் பலர் கண்ணீர் விட்டு அழுதனர். மேலும் இந்த அறிவிப்புக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்கலை., நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, கவர்னரே அனைவருக்கும் பட்டம் வழங்குவார் என்றும் கவர்னரின் செயலாளர் சஜன்சிங் சவான் அறிவித்தார். இதனால் பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு ஏற்பட்டது.</p><p>இந்த நிலையில் சுமார் 45 நிமிடம் தாமதமாக பட்டமளிப்பு விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் முதலில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்ததற்கு கண்டனம் தெரிவித்து உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்துள்ளார்.</p><h2>போலீஸ் பாதுகாப்பு</h2><p>இதைபோல தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்ததற்கு கண்டனம் தெரிவித்து பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக நெல்லை தவெக எம்எல்ஏ முருகன், கடையநல்லூர் எம்எல்ஏ ராஜேந்திரன் அறிவித்துள்ளனர். தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிப்பதாக அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்துவதால் பல்கலைக்கழகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை மாநகரில் புதிய திட்டங்கள்; கமிஷனர் சமீரன் ஆலோசனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-projects-in-chennai-city-commissioner-sameerans-advice</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-projects-in-chennai-city-commissioner-sameerans-advice#comments</comments><guid isPermaLink="false">1e1e524a-c4d9-420b-b12c-d01a816ef02f</guid><pubDate>Tue, 28 Jul 2026 06:05:01 +0000</pubDate><atom:updated>2026-07-28T06:05:01.318Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,மாநகராட்சி,Chennai Corporation,ஆலோசனைக்கூட்டம்,New projects,consultation meeting,புதிய திட்டங்கள்,கமிஷனர் சமீரன்,Commissioner Sameeran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/4hczedlb/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கமிஷனர் சமீரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/4hczedlb/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">சென்னை மாநகராட்சி</a>யில் புதிய திட்டங்கள் மேற்கொள்வது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">கமிஷனர் சமீரன்</a> தலைமையில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">ஆலோசனைக் கூட்டம்</a> ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. </p><h2>கமிஷனர் சமீரன் தலைமையில் கலந்தாலோசனைக் கூட்டம்</h2><p>பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் சமீரன் தலைமையில், நகர்ப்புற சவால் நிதியின் கீழ் (Urban Challenge Fund) பெருநகர சென்னை மாநகராட்சியில் புதிய திட்டங்கள் மேற்கொள்வது தொடர்பாக கலந்தாலோசனைக் கூட்டம் ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் கவிதா ராமு, இணை ஆணையாளர் (பணிகள்) சரவணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். </p><h2>நீர்நிலைகள் மேம்பாடு</h2><p>இந்த கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியில் குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் மேம்பாடு, பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையிலான நடவடிக்கைகள், பூங்கா மேம்பாடு (Blue Green Infrastructure), தண்டையார்பேட்டை - வண்ணாரப்பேட்டை - ராயபுரம், அடையாறு - பெசன்ட்நகர், தியாகராயநகர் - தேனாம்பேட்டை, ராயப்பேட்டை - திருவல்லிக்கேனி உள்ளிட்ட மாநகரப் பகுதிகளில் மேம்பாட்டுத் திட்டங்கள் (Area Developement - Neighbourhood Developement), விபத்தினைத் தடுத்து சீரான போக்குவரத்திற்கு ஏதுவாக நடைபாதைகள், சாலை சந்திப்புகள் மற்றும் சாலை வளைவுகள் மேம்பாடு (Pedestrian Footpath &amp; Junction Improvements), பெசன்ட்நகர், திருவான்மியூர், பாலவாக்கம் கடற்கரை மேம்பாடு (Beach Front) உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளுதல் தொடர்பாக கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டது. </p><p>இந்த திட்டங்களை நகர்ப்புற சவால் நிதியின் (Urban Challenge Fund) கீழ் மேற்கொள்வதற்கு ஏதுவாக விரிவான திட்ட அறிக்கை தயாரித்திட அலுவலர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல நிரந்தர தடை: அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/permanent-ban-on-transporting-minerals-to-foreign-states-anbumani-insists</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/permanent-ban-on-transporting-minerals-to-foreign-states-anbumani-insists#comments</comments><guid isPermaLink="false">873f0268-d49a-4317-9eff-27c84047f744</guid><pubDate>Tue, 28 Jul 2026 05:29:54 +0000</pubDate><atom:updated>2026-07-28T05:29:54.700Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,Mineral resources,கனிமவளங்கள்,தவெக அரசு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/gpa6zhjb/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/gpa6zhjb/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டின்  நெல்லை, தென்காசி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கேரளத்திற்கு மிகப்பெரிய அளவில் கருங்கல் பாறைகள், ஜல்லி, எம் சாண்ட் உள்ளிட்ட கனிமவளங்கள் கடத்தப்பட்டு வருகின்றன. முந்தைய திமுக ஆட்சியில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த காட்பாதரின் ஆதரவுடன் கனிமவளக் கடத்தல் உச்சக்கட்டத்தை அடைந்தது. இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று தவெக அரசு பொறுப்பேற்ற சில நாள்களிலேயே  வலியுறுத்தியிருந்தேன்.</p><p>அதைத்  தொடர்ந்து சில குவாரிகளுக்கு  கனிமவளத்துறை அமைச்சரே நேரில் சென்று ஆய்வு நடத்தினாலும்  கனிமக் கொள்ளையும், கடத்தலும் குறையவில்லை. தமிழகத்தில் பற்றாக்குறை காலங்களில் கனிமவளங்களை கேரளத்திற்கு கொண்டு செல்லக் கூடாது என்று தான் தடை விதிக்கப்பட்டிருக்கிறதே தவிர, நிரந்தரத் தடை இன்று வரை அரசால் விதிக்கப்படவில்லை; அதனால் உடனடியாக கனிமக் கடத்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கடந்த 22-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தேன்.</p><p>அதன் தொடர்ச்சியாகத் தான் வெளி மாநிலங்களுக்கு கனிமங்களைக் கடத்திச் செல்வதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும்  வகையில் அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை தற்காலிகமானதாக இருந்தாலும் வரவேற்கத்தக்கது. இந்தத் தடை முழு அளவில்  செயல்படுத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து கேரளம் செல்லும் அனைத்துச் சாலைகளிலும் கண்காணிப்பு கேமராக்களைப் பொறுத்தி கனிமவளங்கள் கடத்தப்படுகின்றனவா? என்பதைக் கண்காணிக்க வேண்டும்.</p><p>அதுமட்டுமின்றி, இப்போது 3  மாதங்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டுள்ள கனிமவளக் கடத்தலுக்கானத் தடையை நிரந்தரத் தடையாக  மாற்ற வேண்டும். மேலும், கனிமக் கொள்ளை மற்றும் கடத்தல் குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும். எந்த அளவுக்கு கனிமக் கொள்ளை நடந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதை கனிமக் கொள்ளையர்களிடம் இருந்து வசூலிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>புதுக்கோட்டையில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பஸ் பயணம்: பெற்றோர் கலக்கம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/school-students-travel-dangerously-by-bus-in-pudukkottai-parents-concerned</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/school-students-travel-dangerously-by-bus-in-pudukkottai-parents-concerned#comments</comments><guid isPermaLink="false">a96db9ba-0de7-4b21-b9e1-3224da51e1d5</guid><pubDate>Tue, 28 Jul 2026 05:29:07 +0000</pubDate><atom:updated>2026-07-28T05:29:07.699Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Pudukkottai,புதுக்கோட்டை,School students,பள்ளி மாணவர்கள்,private buses,பஸ் பயணம்</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/1luz7q1w/34.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ ஆபத்தான முறையில் பஸ்சில் பயனம் செய்யும் பள்ளி மாணவர்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆபத்தான முறையில் பஸ்சில் பயனம் செய்யும் பள்ளி மாணவர்கள்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/1luz7q1w/34.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுக்கோட்டை, </p><p>புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பஸ்சில் பயணம் செய்வதால் பெற்றோர் கலக்கமடைகின்றனர். </p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">புதுக்கோட்டை மாவட்டம்</a> மீமிசலில் இருந்து பேராவூரணி வழியாகப் பட்டுக்கோட்டை நோக்கி தினமும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடங்கும் காலை நேரத்திலும், மாலை நேரத்திலும் இந்த வழித்தடத்தில் கடுமையான கூட்ட நெரிசல் காணப்படுகிறது.</p><h2>படியில் தொங்கும் மாணவர்கள்</h2><p>போதிய பஸ் வசதிகள் இல்லாத காரணத்தினால்,<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> பள்ளி மாணவர்கள்</a> வேறு வழியின்றி இந்த தனியார் பஸ்களில் கூட்ட நெரிசலில் சிக்கி பயணம் செய்கின்றனர். குறிப்பாக, பேருந்தின் உட்புறத்தில் இடமில்லாததால் மாணவர்கள் ஆபத்தான முறையில் பின் மற்றும் முன் பக்கப் படிக்கட்டுகளில் தொங்கியபடியும், சிலர் கூரை மீது ஏறும் நிலையிலும் பயணிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.</p><h2>தொடரும் விபத்து அபாயங்கள்</h2><p>பஸ்கள் வளைவுகளில் திரும்பும்போதும், வேகத்தடைகளைக் கடக்கும்போதும் படியில் தொங்கும் மாணவர்கள் நிலைதடுமாறி கீழே விழும் அபாயம் உள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்கனவே ஆலங்குடி அருகே பஸ்சின் படிக்கட்டில் பயணித்த புவியரசன் என்ற 10-ஆம் வகுப்பு மாணவன் கீழே விழுந்து உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p><h2>பெற்றோரின் கோரிக்கை</h2><p>தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு அவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்பும் வரை பெரும் மன உளைச்சலில் இருப்பதாகப் பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே, இந்த வழித்தடத்தில் பள்ளி நேரங்களில் கூடுதல் அரசு பஸ்களை இயக்க போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விதிகளுக்குப் புறம்பாக மாணவர்களை ஏற்றிச் செல்லும் தனியார் பஸ்கள் மீது கடுமையான கண்காணிப்பு மற்றும் சட்ட நடவடிக்கை தேவை என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>
காமன்வெல்த்: வெள்ளி பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு கமல்ஹாசன் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/commonwealth-kamal-haasan-congratulates-silver-medalist-raja-muthupandi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/commonwealth-kamal-haasan-congratulates-silver-medalist-raja-muthupandi#comments</comments><guid isPermaLink="false">914a4737-bb62-45d2-9ef5-a2c61fa59eba</guid><pubDate>Tue, 28 Jul 2026 05:18:21 +0000</pubDate><atom:updated>2026-07-28T05:18:21.025Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கமல்ஹாசன்,Kamal Haasan,Commonwealth Games,காமன்வெல்த்,வெள்ளி பதக்கம்,ராஜா முத்துப்பாண்டி,Raja Muthupandi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/7necipbv/7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/7necipbv/7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வருகிறது. இதில் 74 நாடுகளில் இருந்து 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.</p><p>நேற்று முன்தினம் பளுதூக்குதலில் மீராபாய் சானு தங்கமும், ரிஷிகாந்தா சிங் வெள்ளிப்பதக்கமும் வென்று பிரமாதப்படுத்தினர். அதனை தொடர்ந்து நள்ளிரவில் நடந்த போட்டியில் தமிழக பளுதூக்குதல் வீரர் ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப்பதக்கம் வென்று முத்திரை பதித்தார்.</p> <p>ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி ஸ்னாட்ச் முறையில் 126 கிலோ, கிளீன் அண்ட் ஜெர்க் முறையில் 160 கிலோ என மொத்தம் 286 கிலோ எடை தூக்கி 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை முத்தமிட்டார். </p><p>அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன், ராஜா முத்துப்பாண்டிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை  வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பளு தூக்கும் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தந்திருக்கும் வெற்றி இளைஞர் ராஜா முத்துப்பாண்டியை வாழ்த்துகிறேன். சிறு நகரங்களில் இருக்கும் விளையாட்டு வீரர்களும் வெற்றியின் ருசியை அறிய இவரது பதக்கம் உதவும். வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>பின்னலாடை தயாரிப்பு நூல் விலை கிலோவுக்கு ரூ.5 உயர்வு: உற்பத்தியாளர்கள் கவலை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/knitting-yarn-prices-rise-by-rs-5-per-kg-manufacturers-concerned</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/knitting-yarn-prices-rise-by-rs-5-per-kg-manufacturers-concerned#comments</comments><guid isPermaLink="false">ba31156e-ece0-4ac4-9fdc-5fa19251067e</guid><pubDate>Tue, 28 Jul 2026 05:16:56 +0000</pubDate><atom:updated>2026-07-28T05:16:56.774Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பின்னலாடை உற்பத்தியாளர்கள்,Rise,கவலை,நூல் விலை உயர்வு,knitwear manufacturers,Yarn price</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/xw4hkkud/69.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/xw4hkkud/69.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர், </p><p>பின்னலாடை தயாரிப்புக்கான ஒசைரி நூல் விலை கிலோவுக்கு ரூ.5 உயர்ந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். </p><h2>பஞ்சு விலை உயர்வு </h2><p>சர்வதேச சந்தையில் பஞ்சு விலை தொடர்ந்து உயரத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, நம் நாட்டிலும் பஞ்சு விலை உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, ரூ.68 ஆயிரமாக இருந்த ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு, ரூ.70 ஆயிரமாக விலை உயர்ந்துள்ளது. அதேபோல், பின்னலாடை தயாரிப்புக்கான ஒசைரி நூலும் கிலோவுக்கு ரூ.5 அதிகரித்துள்ளது. கடந்த மாத (ஜூன்) தொடக்கத்தில், ஒசைரி நூல் விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்தது. ஆனால், கடந்த 22-ந் தேதி ரூ.5-ம், நேற்று ரூ.5-ம் விலை உயர்ந்து பழைய  நிலையை எட்டியுள்ளது. </p><h2>உற்பத்தியாளர்கள் கவலை </h2><p>நூல் விலை தொடர்ந்து இவ்வாறு உயர்வதால், உற்பத்தி செலவு அதிகரித்து, நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்படுவதாக ஜவுளி தொழில் துறையினர் கவலை தெரிவித்துள்ளனர். நூல் விலை உயர்வு குறித்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பின்னலாடை உற்பத்தியாளர்கள்</a> கூறும்போது, "பஞ்சு இறக்குமதிக்கான வரி விலக்கு குறுகிய காலத்திற்கு அளிக்கப்படுவதால் எந்தப் பயனும் இல்லை. தற்போதைய விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், 2027 பிப்ரவரி மாதம் வரையிலான வரி விலக்கு சலுகை நீட்டிக்கப்பட வேண்டும்" என்று கூறினர். </p>]]></content:encoded></item><item><title>மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. தொகுப்பூதிய
ஊழியர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் - அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/manonmaniam-sundaranar-university-staff-members-should-be-given-permanent-positions-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/manonmaniam-sundaranar-university-staff-members-should-be-given-permanent-positions-anbumani#comments</comments><guid isPermaLink="false">da67e615-855b-4834-9817-a4daca628ca8</guid><pubDate>Tue, 28 Jul 2026 04:55:23 +0000</pubDate><atom:updated>2026-07-28T04:55:23.456Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,தொகுப்பூதிய பணியாளர்கள்,Jobs,permanent,Manonmaniam Sundaranar University,மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,பணி நிலைப்பு,Anbumani Ramadas MP</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/tmt7x14q/anbumani.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/tmt7x14q/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில்  தினக்கூலி பணியாளர்களாகவும், தொகுப்பூதிய பணியாளர்களாகவும் பணியாற்றி வரும்  53  தொழிலாளர்களுக்கு 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணி நிலைப்பு வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் மறுப்பதாக  குற்றச்சாட்டுகள்  எழுந்துள்ளன. அறத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டிய பல்கலைக்கழகத்திலேயே அறமும், மனிதநேயமும் மீறப்படுவது கண்டிக்கத்தக்கது.</p><h2>தொகுப்பூதிய பணியாளர்கள்</h2><p>மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில்  தூய்மைப் பணியாளர்கள், இரவுக் காவலர்கள், பாதுகாவலர்கள், மின்னியலாளர்கள்,  அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட பணிகளில்  தொகுப்பூதிய பணியாளர்களாக 53 பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அதே பல்கலைக்கழகத்தில்  17 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை  பணியாற்றி வருகின்றனர். அவர்களின் பணிச் செயல்பாடுகள் குறித்து  எந்தப் புகாரும் இதுவரை  எழவில்லை.</p><h2>53 பணியாளர்கள்</h2><p>மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விதிகளின்படி தினக்கூலி பணியாளராக சேரும் ஒருவர் ஐந்தாண்டுகள் பணி செய்த பின்னர் தொகுப்பூதிய பணியாளராக மாற்றப்படுவார். அடுத்த பத்தாண்டுகள்  தொகுப்பூதிய பணியாளராக பணி செய்த பின்னர் பணி நிலைப்பு செய்யப்பட வேண்டும். ஆனால், இந்த 53 பணியாளர்கள் விஷயத்தில் மட்டும் இந்த விதிகளை பல்கலைக்கழக நிர்வாகம் கடைபிடிக்க மறுக்கிறது.</p><h2>துணை வேந்தரிடம் மனு</h2><p>தொகுப்பூதிய பணியாளர்களாக பணியாற்றும்  53  பேரும்  50 வயதைக் கடந்தவர்கள். இந்த வயதில் அவர்களால் வேறு எங்கும்  சென்று வேலை தேட முடியாது. பணி நிலைப்பு என்பது அவர்களின் உரிமை. இந்த உரிமையை பெறுவதற்காக தகுதியை அவர்கள்  2 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே பெற்று விட்டனர். அதனடிப்படையில் பணி நிலைப்பு வழங்குங்கள் என முந்தைய துணை வேந்தரிடம் 3 முறையும், இப்போதைய துணை வேந்தரிடம் இரு முறையும் மனு கொடுத்துள்ளனர். ஆனாலும் நீதி வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் மறுக்கிறது.</p><h2>கடுமையான பொருளாதார நெருக்கடி</h2><p>பணி நிலைப்பு கிடைக்காத மன உளைச்சலில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்;  ஒருவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு பணி செய்ய முடியாத அளவுக்கு படுக்கையில் வீழ்ந்துள்ளார்.  இதனால் அவர்களின் குடும்பங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இதே நிலை பிற பணியாளர்களுக்கு ஏற்பட்டு விடக் கூடாது.</p><h2>பணி நிலைப்பு</h2><p>தொகுப்பூதிய பணியாளர்களின் தேவைகளும், மனித உரிமைகளும்  மதிக்கப்பட வேண்டும். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 17 முதல் 25 ஆண்டுகளாக பணியாற்றி வரும்  தொகுப்பூதிய பணியாளர்களுக்கு பணி நிலைப்பு  வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் முன்வர வேண்டும். தொகுப்பூதிய பணியாளராக 10 ஆண்டுகளை எப்போது அவர்கள் நிறைவு செய்தார்களோ, அப்போது முதல் அவர்கள் நிரந்தரப் பணியாளர்களாக கருதப்பட்டு பணி மூப்பு வழங்கப்பட வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>225 ஆடுகளை பலியிட்டு கறிவிருந்து... ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோவில் திருவிழா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/225-goats-sacrificed-and-feasted-temple-festival-attended-only-by-men</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/225-goats-sacrificed-and-feasted-temple-festival-attended-only-by-men#comments</comments><guid isPermaLink="false">3c650dbc-de79-4ca6-b2e7-9b1d5ac34561</guid><pubDate>Tue, 28 Jul 2026 04:51:19 +0000</pubDate><atom:updated>2026-07-28T04:51:19.696Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Namakkal,நாமக்கல்,Temple festival,கோவில் திருவிழா,ஆண்கள்,goat,man,ஆடு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/gz3xzrel/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/gz3xzrel/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல்,</p><h2>பொங்களாயி அம்மன் கோவில் திருவிழா</h2><p>நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ளது மலையாம்பட்டி கிராமம். இக்கிராமத்தில் மலையாள தெய்வம் பொங்களாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு கிடா வெட்டி, பொங்கல் வைத்து திருவிழா நடைபெறுவது சிறப்பாகும்.</p><p>அதன்படி, இந்தாண்டு கோவில் திருவிழா நேற்று முன்தினம் இரவு சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. இதையொட்டி பொங்களாயி அம்மன், விநாயகருக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.</p><p>தொடர்ந்து பொங்கல் வைத்து பூஜை செய்யப்பட்டது. பின்னர் இரவு முதலில் பெண் ஆட்டை பலி கொடுத்துவிட்டு, வேண்டுதலுக்காக கொடுக்கப்பட்ட மற்ற ஆட்டு கிடாக்களை வெட்டி இரவு முழுவதும் அங்கேயே சமையல் செய்தனர்.</p><h2>பக்தர்களின் நம்பிக்கை</h2><p>இந்த சமபந்தி விருந்துக்காக 225 கிடாக்கள் வெட்டப்பட்டன. மொத்தம் 3 ஆயிரம் கிலோ கறி சமைக்கப்பட்டு, 500 கிலோக்கும் மேலான அரிசியை பொங்கல் வைத்தனர். பின்னர் நேற்று காலை 6 மணிக்கு ஆண்கள் மட்டுமே பங்கேற்ற சமபந்தி கறிவிருந்து தொடங்கியது. இந்த விருந்து மதியம் 12.30 மணி வரை நடந்தது. </p><p>இதில் சேலம், கரூர், திருச்சி, தர்மபுரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நீண்டவரிசை யில் நின்று அவர்கள் உணவுகளை தட்டுகளில் வாங்கி சாப்பிட்டனர்.</p><p>கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் கனமழை பெய்தபோது அங்கு சென்று கொண்டிருந்த கர்ப்பிணியான மலையாள பெண்ணுக்கு யாரும் உதவி செய்யவில்லை. இதனால் கோபமடைந்த அந்த பெண் சாபம் விட்டதாகவும், இதனால் பெண்கள் விழாவில் பங்கேற்பதில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த கோவிலில் வேண்டுதல் வைத்தால் திருமண தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>திருவண்ணாமலை: இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு செல்லும் முகப்பில் தடுப்பு வேலி - உடல் பருமன் உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruvannamalai-barrier-fence-at-the-entrance-to-idukku-pillayar-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruvannamalai-barrier-fence-at-the-entrance-to-idukku-pillayar-temple#comments</comments><guid isPermaLink="false">709f5ac8-2f03-4d5c-95e0-8d9304b3710a</guid><pubDate>Tue, 28 Jul 2026 04:50:07 +0000</pubDate><atom:updated>2026-07-28T04:50:07.924Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,ஆந்திரா,பக்தர்கள்,Tiruvannamalai,உடல் பருமன்,Tiruvannamalai temple,Idukku Pillaiyar Temple,இடுக்குபிள்ளையார் கோவில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/if79zau4/thiruvannamalai33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
திருவண்ணாமலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/if79zau4/thiruvannamalai33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை,</p><p>திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அஷ்டலிங்க கோவில் களில் 7-வது லிங்கமான குபேர லிங்கம் கோவில் அருகில் இடுக்கு பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. அருணாச லேஸ்வரர் கோவில் நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்த கோவி லில் குகை போன்ற வாசல் உள்ளது. இந்த குகை போன்ற வாசலில் பின்புறத்தில் இருந்து உள்ளே நுழைந்து முன்பக் கம் வழியாக வந்து வழிபாடு செய்வார்கள்.</p><p>கடந்த 24-ந்தேதி நள்ளிரவில் குடும்பத்தினருடன் <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">கிரிவலம்</a> வந்த ஆந்திராவை சேர்ந்த சேர்ந்த மணிக்குமார் என்பவர் இடுக்கு பிள்ளையார் கோவிலில் வழிபாடு செய்தபோது குகை போன்ற வாசலில் உள்ளே நுழைந்து உள்ளார். இதில் சிக்கி மூச்சுதிணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p>இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்கு முன்பு நேற்று முன்தினம் கிரிவலம் வந்த ஆந்தி ராவை சேர்ந்த பெண் ஒருவர் சிக்கியதாக வீடியோ ஒன்று வைரலாக பரவியது. அடுத்தடுத்த சம்பவங்களால் பக்தர்களிைேடய பரபரப்பு ஏற்பட்டது.</p><p>இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். அதனைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் இடுக்கு பிள்ளையார் கோவிலில் அறிவிப்பு பலகை நேற்று வைக்கப்பட்டது. </p><p>அதில், இடுக்கு பிள்ளையார் கோவிலின் வாயில் மிக குறுகலாக உள்ளதால் உடல்பருமன் உள்ளவர்கள், உடல் நலக்குறைவு உள்ளவர்கள் மற்றும் வயதானவர்கள் உள்ளே செல்ல அனுமதியில்லை. மேலும் பக்தர்கள் வரிசையில் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்புகளின் முகப்பு பகுதியில் இரண்டு கம்பிகள் வைத்து வெல்டிங் செய்யப்பட்டு உள்ளது. அந்த இருகம்பிகள் வழியாக உள்ளே செல்ல முடிந்த பக்தர்கள் மட்டுமே இடுக்கு பிள்ளையார் கோவில் குகை போன்ற வாசல் வழியாக செல்ல கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&apos;சூப்பர் எல் நினோ&apos; தாக்குதல்: நீலகிரியில் தேயிலை சாகுபடி பாதிப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/super-el-nino-attack-tea-cultivation-in-nilgiris-affected</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/super-el-nino-attack-tea-cultivation-in-nilgiris-affected#comments</comments><guid isPermaLink="false">ef5f5271-d442-4b9b-b320-b60e376eb725</guid><pubDate>Tue, 28 Jul 2026 04:45:12 +0000</pubDate><atom:updated>2026-07-28T04:45:12.947Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nilgiris,நீலகிரி,சூப்பர் எல் நினோ,தேயிலை சாகுபடி,Super El Niño,Tea Cultivation</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/j80sgpd5/10.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/j80sgpd5/10.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஊட்டி, </p><p>'சூப்பர் எல் நினோ' தாக்கத்தால் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம், நீலகிரியில் தேயிலை சாகுபடியை பாதிக்கும் என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வறிக்கையின் மூலம் வெளிவந்துள்ளது. இதுகுறித்து, யுபாசி தேயிலை ஆராய்ச்சி அறக்கட்டளை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><h2>தேயிலை செடிகளை நேரடியாக பாதிக்கும்</h2><p>தேயிலை செடிகளில் இருந்து இளம் தளிர்கள் தொடர்ந்து பறிக்கப்படுவதால், 'சூப்பர் எல் நினோ'வால் அதிகரிக்கும் வெப்பநிலை, மண்ணின் ஈரப்பதம், காற்றின் ஈரப்பதம், மகசூல் மற்றும் தேயிலையின் தரத்தை நேரடியாக பாதிக்கின்றன. நீலகிரியில் சராசரி வெப்பநிலை 0.50 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. மேலும், பனிப்பொழிவு, ஆலங்கட்டி மழையின் தாக்கம் அதிகரித்துள்ளதால், தேயிலை செடிகளின் வளர்ச்சியும், மகசூலும் பாதிக்கப்பட்டுள்ளது. </p><h2>தாக்கத்தை சமாளிப்பது எப்படி?</h2><p>'சூப்பர் எல் நினோ' தாக்கத்தை சமாளிக்க, கிளிரிசிடியா போன்ற நிழல் தரும் மரங்களை வளர்க்க வேண்டும். மேலும், மண் - நீர் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும். வறட்சியை தாங்கும் சாகுபடி முறைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது</p>]]></content:encoded></item><item><title>நாட்டையும் காக்க தெரியவில்லை, இளைஞர்களின் எதிர்காலத்தையும் காக்க தெரியவில்லை! - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/they-dont-know-how-to-protect-the-country-they-dont-know-how-to-protect-the-future-of-the-youth-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/they-dont-know-how-to-protect-the-country-they-dont-know-how-to-protect-the-future-of-the-youth-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">362c6853-b9d5-4213-ab51-b2725b6df9a4</guid><pubDate>Tue, 28 Jul 2026 04:35:56 +0000</pubDate><atom:updated>2026-07-28T04:35:56.952Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Youth,இளைஞர்கள்,Manickam Tagore MP,Future,எதிர்காலம்,மாணிக்கம் தாகூர் எம்.பி.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/0ip0vdtn/manikam-takore.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/0ip0vdtn/manikam-takore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>நீட்/ நெட் தேர்வு வினாத்தாள் கசிந்த ஆட்சியில், இப்போது DRDO-வின் 31 GB இராணுவ ரகசியத் தரவுகள் &amp; விஞ்ஞானிகளின் கையொப்பங்கள் டார்க் வெப்பில் 8,000 டாலருக்கு விற்பனை செய்துள்ளது.</p><p>Alibi Global சுட்டிக்காட்டி உளவுத்துறையை எச்சரித்தும், பாதுகாப்பு அமைச்சகமும் மத்திய<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%AA%E0%AE%BE.%E0%AE%9C.%E0%AE%95%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81"> பா.ஜ.க அரசு</a>ம் அலட்சியம் காட்டுவது ஏன்?வினாத்தாள் கசிவு'மாடலில் இருந்து தேசிய பாதுகாப்பு கசிவு வரை நாட்டின் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கியுள்ளது மோடி அரசு. </p><h2>சைபர் அச்சுறுத்தல்கள்</h2><p>நாட்டையும் காக்கத் தெரியவில்லை, இளைஞர்களின் எதிர்காலத்தையும் காக்கத் தெரியவில்லை. நாட்டின் முக்கியமான தரவுகள் கசிவது இது முதன்முறையல்ல! தொடர் சைபர் அச்சுறுத்தல்கள் இருந்தும், எந்தவொரு தீவிரமான சைபர் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளோ அல்லது நடவடிக்கைகளோ  எடுக்காமல் மோடி அரசு மௌனம் காப்பது ஆபத்தானது.</p><p> பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் அவர்களே, நாட்டின் மிக முக்கிய இராணுவ ரகசியங்களே டார்க் வெப்பில் விற்பனைக்கு வரும் நிலைக்கு யார் பொறுப்பு? மோடி அரசின் இந்த இமாலயப் பாதுகாப்பு வீழ்ச்சிக்கு எப்போது பதில் சொல்லப் போகிறீர்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு ஜாமின் கிடைக்குமா? - இன்று விசாரணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-dmk-mla-markandeyan-get-bail-hearing-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-dmk-mla-markandeyan-get-bail-hearing-today#comments</comments><guid isPermaLink="false">26995b9e-2387-46b1-92ee-6adcfa3bd1e4</guid><pubDate>Tue, 28 Jul 2026 04:14:01 +0000</pubDate><atom:updated>2026-07-28T04:14:01.273Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,சென்னை ஐகோர்ட்டு,மார்க்கண்டேயன்,Markandeyan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/lq8mkfm6/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/lq8mkfm6/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>தி.மு.க. எம்.எல்.ஏ.</h2><p>தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில், விளாத்திகுளம் தி.மு.க. எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன், முதல்-அமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில், அவதூறாக பேசியதாக தூத் துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனுவை தூத்துக்குடி மாவட்ட கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் ஜாமின் கேட்டு மார்க்கண்டேயன் மனு தாக்கல் செய்தார்.</p><h2>சட்டத்துக்கு எதிரானது</h2><p>இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மார்க்கண்டேயன் தரப்பில், "சட்டசபை கதவுகள் பூட் டப்படும் எனக்கூறிய முதல்-அமைச்சருக்கு பதிலளிக்கும் வகையில்தான் எம்.எல்.ஏ. பேசினார். கைதுக்கான காரணங்களை தெரிவிக்காதது அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்ப தால், மனுதாரரை கோர்ட்டு காவலில் சிறையிலடைத்து தூத்துக்குடி கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது.</p><p>கைது செய்வதற்கு முன்பு விசாரணைக்கு வரும்படி போலீசார் நோட்டீஸ் கொடுக்கவில்லை. கடந்த 18-ந்தேதி நடந்த சம்ப வத்துக்கு 19-ந்தேதி நள்ளிரவில் புகார் அளிக்கப்பட்டு, 20-ந்தேதி அதிகாலையில் வழக்குப்பதிவு செய்து, அன்றைய தினம் மனுதாரரை போலீசார் கைது செய்துள்ளனர். எந்த ஆரம்பகட்ட விசாரணையும் நடத்தப்படவில்லை. பொது அமை திக்கு பங்கம் விளைவிக்கும் உள்நோக்கத்துடன் மனுதாரர் பேசவில்லை" என்று வாதிடப்பட்டது.</p><h2>ஜாமின் கிடைக்குமா?</h2><p>மனுதாரர் தரப்பு வாதங் கள் முடிவடையாததை அடுத்து விசாரணையை இன்று (செவ்வாய்க்கிழமை) தள்ளிவைத்து நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார். அதன்படி மார்க்கண்டேயன் ஜாமின் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இதில் அவருக்கு ஜாமின் கிடைக்குமா? அல்லது மனு தள்ளுபடி செய்யப்படுமா? என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>கொரோனா பரவுகிறது என கூறி பெண்களை மொட்டை அடிக்க வைத்த ஆசாமி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/man-forces-women-to-shave-their-heads-claiming-it-spreads-coronavirus</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/man-forces-women-to-shave-their-heads-claiming-it-spreads-coronavirus#comments</comments><guid isPermaLink="false">1faf1823-ca51-435f-b1b2-12bfb9dbd16c</guid><pubDate>Tue, 28 Jul 2026 04:07:23 +0000</pubDate><atom:updated>2026-07-28T04:07:23.133Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,சேலம்,பெண்கள்,மொட்டை,Bald</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/82y602l5/mottai33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
கொரோனா ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/82y602l5/mottai33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்:</p><p>சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி பகுதியை சேர்ந்த பெண்ணிடம் செல்போனில் பேசிய நபர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து தாம் பேசுவதாகவும், கொரோனா பரவி வரும் நிலையில் அதை தடுக்க மொட்டை அடித்துக் கொள்ளுங்கள் எனகூறியுள்ளார்.</p>  <p>மொட்டை அடித்தால் ஆண்களுக்கு 6,000 ரூபாயும், பெண்களுக்கு 15,000 ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்றும் அந்த நபர் கூறியதாக சொல்லப்படுகிறது. </p><p>பெண்கள் சிலர் <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">மொட்டை</a> அடித்தது போன்ற படங்களையும் வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார் அவர். இதை நம்பி 20 பேர் மொட்டை அடிக்க தயாரான நிலையில், 3 பெண்கள் மொட்டையும் போட்டுள்ளனர். பின்னர் அந்த நபரை தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்த நிலையில், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர்.</p><p>இது தொடர்பாக மோசடி நபர் குறித்து போலீசாரிடம் பெண்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து பெண்களை மோசடி செய்த நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சப்பாத்தி கள்ளி பழம்: சுவையும் சத்தும் நிறைந்த இயற்கை வரப்பிரசாதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chapati-kalli-fruit-a-natural-boon-full-of-flavor-and-nutrients</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chapati-kalli-fruit-a-natural-boon-full-of-flavor-and-nutrients#comments</comments><guid isPermaLink="false">c6767319-3475-40fe-9035-e55a63385047</guid><pubDate>Tue, 28 Jul 2026 04:01:47 +0000</pubDate><atom:updated>2026-07-28T04:01:47.456Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இயற்கை,Natural Food,சத்து,சப்பாத்தி கள்ளி பழம்,Chapati Kalli Fruit</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/235pk6xr/68.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/235pk6xr/68.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>சிறப்புக் கட்டுரைகள் (Sirappukatturaigal)</category><content:encoded><![CDATA[ <h2>சப்பாத்தி கள்ளி பழம்</h2><p>சப்பாத்தி கள்ளி பழம் இந்தியாவின் கிவி என்று அழைக்கப்படுகிறது. இதனை நாகதாளி என்றும் சொல்வார்கள். சப்பாத்தி கள்ளிப்பழம் பார்ப்பதற்கு சிவப்பு கலரில் இருக்கும். தித்திப்பாக இருக்கும். வறண்ட நிலங்களில் ஆடு மாடு மேய்க்கும் விவசாயிகளுக்கு இந்த பழம்தான், புத்துணர்ச்சியையும், குளிர்ச்சியையும் தந்து பேருதவி புரிகிறது. பழங்குடியினர் இன்றுவரை சிறந்த உணவாக இந்த சப்பாத்தி கள்ளியை பயன்படுத்தி வருகிறார்கள். பொட்டாசியம் அதிகமாக உள்ளதால், ரத்த அழுத்தம் அதிகமாகாமல் சீராக வைத்து கொள்ள இப்பழம் உதவுகிறது.</p><h2>நிறைய முட்கள்</h2><p>இந்த பழத்தை பறிப்பதே பெரிய கஷ்டம். காரணம், குட்டி குட்டியாக நிறைய முட்கள் நிறைந்திருக்கும். அதனால், இந்தப் பழத்தின் தோலை நீக்கிவிட்டே சாப்பிட வேண்டும். அல்லது இந்த சப்பாத்தி கள்ளி பழத்திலிருந்து ஜூஸ் செய்து குடிக்கலாம். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். பிறகு, முட்களை விலக்கி, எடுக்கப்பட்ட வெறும் பழத்தை, அந்த தண்ணீரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும். இப்போது, தண்ணீரிலிருந்து சப்பாத்தி கள்ளியை வெளியே எடுத்து வைத்து, ஆறவிட்டு, அதன் தோலை நீக்கி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். இதில், எலுமிச்சை ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ், இளநீர் போன்றவற்றை சேர்த்து, மிக்ஸியில் அரைத்து, இறுதியில் வடிகட்டி குடிக்கலாம்.</p><h2>குடல் ஆரோக்கியம்</h2><p>உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், இந்த சப்பாத்தி கள்ளி பழத்தை தாராளமாக கையிலெடுக்கலாம். காரணம், மிகக்குறைந்த கலோரிகள் இதில் உள்ளன. இதனால், கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. கொழுப்பு படிவதை தடுப்பதால், இதயம் காக்கப்படுகிறது. செரிமானம் அதிமாவதால், மலச்சிக்கல் தீர்ந்து, குடல் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">ஆரோக்கியம் </a>பாதுகாக்கப்படுகிறது. அத்துடன், பெருங்குடலை சுற்றியுள்ள நச்சுக்களும் வெளியேறுகின்றன.</p><h2>அருமருந்து</h2><p>பெண்கக்கு இந்த சப்பாத்தி கள்ளி அருமருந்து என்றே சொல்லலாம். காரணம், மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் அடிவயிற்று வலியை தடுக்கிறது. அதுமட்டுமல்ல, இன்றைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு பிசிஓடி என்ற கருப்பை நீர்க்கட்டி பிரச்சினை அதிகமாகி கொண்டிருக்கிறது. இது கருமுட்டையை பலமில்லாமல் போகச்செய்து, குழந்தை பேற்றில் சிக்கலை உண்டாக்கிவிடும். </p><h2>குழந்தைப்பேறு</h2><p>சிலசமயம் கருச்சிதைவையும் உண்டு பண்ணிவிடும். இந்த சினை நீர்க்கட்டிகளை கரைப்பதற்கு உதவுவதுதான் இந்த சப்பாத்தி கள்ளி பழம். வாரம் 3 முறை சாப்பிட்டுவந்தால், கர்பப்பையில் இருக்கும் நீர்க்கட்டிகள் அழிந்து விடும். இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால், குழந்தைப்பேறு உண்டாவதுடன், கரு முட்டை வளர்ச்சியும் சீராகும். அதுவும் கர்ப்ப காலத்தில், இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால், குழந்தை சிவப்பமாக பிறக்கும் என்பார்கள். அதாவது, குங்குமப்பூவை விட, இந்த சப்பாத்திக்கள்ளி பழம் சிறந்தது என்றே சொல்லலாம்.</p><h2>விந்து உயிரணுக்கள்</h2><p>பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் இந்த சப்பாத்தி கள்ளி தரும் நன்மைகள் ஏராளம். விந்து உயிரணுக்கள் ஆரோக்கியமாக இல்லாமல் இருந்தால், இந்த பழம் அவர்களுக்கு கை கொடுக்கும். ஆனால், குழந்தை பேறுக்காக இந்த பழத்தை சாப்பிடுபவர்கள், டீ, காபி சாப்பிடக்கூடாது என்பார்கள். எனினும் இதுகுறித்து மருத்துவர்களின் ஆலோசனையை கட்டாயம் பெற்றே சாப்பிட வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>நெல்லையில் நாய் கடித்த ஆத்திரத்தில் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/petrol-bomb-thrown-at-house-in-anger-over-dog-bite-in-nellai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/petrol-bomb-thrown-at-house-in-anger-over-dog-bite-in-nellai#comments</comments><guid isPermaLink="false">401bedaa-47d2-4704-8612-bc1f3fc4f9a9</guid><pubDate>Tue, 28 Jul 2026 04:00:26 +0000</pubDate><atom:updated>2026-07-28T04:00:26.495Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,போலீஸ் வலைவீச்சு,House,வீடு,Dog bite,நாய்க்கடி,petrol bomb attack,பெட்ரோல் குண்டு வீச்சு,Anger,ஆத்திரம்,police net sweep</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/a5gkvtc5/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல் குண்டு வீச்சு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/a5gkvtc5/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை, </p><p>நெல்லை மேலப்பாளையம் பகுதியில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF">நாய் கடி</a>த்த ஆத்திரத்தில் வீடு மீது <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81">பெட்ரோல் குண்டு வீசிய </a>வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p><h2>நாய் கடித்த ஆத்திரத்தில் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு</h2><p>நெல்லை மேலப்பாளையம், வீரமாணிக்கபுரத்தை சேர்ந்தவர் அந்தோணி சகாயசேவியர் (வயது 55). இவர் தனது வீட்டோடு சேர்த்து பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மகன் வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த வழியாக சென்ற வாலிபரை ஒரு நாய் கடித்தது. </p><p>நேற்று முன்தினம் இரவு அங்கு வந்த வாலிபர், அந்தோணி சகாய சேவியர் வீட்டில் உள்ள நாய் தான் தன்னை கடித்ததாக நினைத்து, அங்கு சென்று தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் முற்றியதால் ரோட்டில் கிடந்த கற்களை எடுத்து அந்தோணி சகாயசேவியரின் வீட்டுக்குள் வீசிச் சென்றுள்ளார். மேலும் ஆத்திரம் அடங்காத அந்த வாலிபர் நேற்று அதிகாலையில் ஒரு பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி எடுத்து வந்துள்ளார். அந்தோணி சகாய சேவியர் வீட்டின் சுவரில் அந்த பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பிச்சென்றுவிட்டார். </p><h2>வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு</h2><p>இதில் சுவரில் தீப்பிடித்து கரும்புகை படிந்தது. பயங்கர சத்தம் கேட்டு எழுந்த அந்தோணி சகாயசேவியர் மற்றும் குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் அந்த பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டனர். இதில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி மாரித்தங்கம் (வயது 32) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை பிடிக்க போலீசார் பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>அரசு பேருந்தில் செல்லும் பயணிகள் கவனத்திற்கு... வெளியான முக்கிய அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/important-announcement-for-the-attention-of-passengers-traveling-in-government-buses</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/important-announcement-for-the-attention-of-passengers-traveling-in-government-buses#comments</comments><guid isPermaLink="false">69b75c22-432a-49ce-ad71-11e65fa7391c</guid><pubDate>Tue, 28 Jul 2026 03:48:38 +0000</pubDate><atom:updated>2026-07-28T03:48:38.031Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசு பேருந்து,அரசு போக்குவரத்துறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/77rusig7/bus33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ போக்குவரத்துறை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/77rusig7/bus33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கடந்த சில காலங்களாகவே, அரசுப் பேருந்துகளில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிக்க விடுவதாகவும், இதனால் பேருந்திற்குள் ஒருவித இரைச்சல் சூழல் நிலவுவதாகவும் பயணிகளிடமிருந்து புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன. குறிப்பாக, நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ளும் மூத்த குடிமக்கள், தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் மற்றும் உடல்நலக் குறைபாடுகளால் அவதிப்படுவோருக்கு இந்த அதிகப்படியான சத்தம் பெரும் மன உளைச்சலைத் தருவதாகத் போக்குவரத்துறை அமைச்சருக்கு புகார்கள் வந்தன. </p><p>இந்தநிலையில், அரசு போக்குவரத்துத்துறை செயலாளர் நிர்மல் ராஜ்  தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அரசு பேருந்துகளில் பயணிகள் செல்போன் பயன்பாட்டுக்கு புதிய நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், </p><p>* சக பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் செல்போன் பயன்படுத்தவும் ஸ்பீக்கர் போனில் பேசுவது, வீடியோ பார்ப்பது தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>* பேருந்தில் பயணிகள் இயர்போன், ஹெட்போன் பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. </p><p>* <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20">ஓட்டுநர்கள் </a>பேருந்துகளில் சத்தமான பாடல்களை ஒலிக்க விடக்கூடாது. அனைத்து பேருந்துகளிலும் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்ட உத்தரவு பிறப்பிக்கவேண்டும். </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-mlas-meeting-today-under-the-leadership-of-udhayanidhi-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-mlas-meeting-today-under-the-leadership-of-udhayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">c3140c93-d70f-4168-89f2-0a4bb544c13b</guid><pubDate>Tue, 28 Jul 2026 03:37:44 +0000</pubDate><atom:updated>2026-07-28T03:37:44.832Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,தி.மு.க.</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/f97jk8f4/8.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/f97jk8f4/8.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை, </p><p>2026-2027-ம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட் ஆகஸ்டு 5-ந் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அதற்கு அடுத்த நாள் (6-ந் தேதி) வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆகிறது. த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் என்பதால் எதிர்பார்ப்பு அதிகம் நிலவுகிறது. </p><p>இந்த நிலையில், பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. உறுப்பினர்கள், பட்ஜெட் கூட்டத் தொடரில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவுரை வழங்க இருக்கிறார். இதற்காக, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று (ஜூலை 28) மாலை 5 மணிக்கு காணொலிக்காட்சி வழியாக நடைபெற இருக்கிறது. </p><p>கூட்டத்திற்கு தலைமை தாங்கும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டசபை கூட்டத் தொடரில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், எந்தப் பிரச்சினைகளை முன்னெடுக்க வேண்டும், விவாதத்தின்போது யார் யார் பேச வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகள் வழங்க இருக்கிறார். </p>]]></content:encoded></item><item><title>காமராஜர் காலை உணவு திட்டம்: டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு நிபந்தனைகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kamaraj-breakfast-scheme-conditions-for-companies-participating-in-the-tender</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kamaraj-breakfast-scheme-conditions-for-companies-participating-in-the-tender#comments</comments><guid isPermaLink="false">22d88890-9df5-452f-860c-28e74fa3ff87</guid><pubDate>Tue, 28 Jul 2026 03:23:14 +0000</pubDate><atom:updated>2026-07-28T03:23:14.638Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt,Kamarajar,காமராஜர்,காலை உணவு திட்டம்,Kaalai Unavu Thittam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/h3zrmq7u/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/h3zrmq7u/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 6-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட் டம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 17-ந்தேதி முதல் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. காலை உணவு திட்டம் 'பெருந்தலைவர் காம ராஜர் காலை உணவு திட்டம்' என பெயர் மாற்றம் செய்யப்பட் டுள்ளது.</p><p>இந்த நிலையில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு காலை உணவு வினியோகம் செய்வது தொடர்பாக டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு நிபந்தனைகளை தமிழக அரசு வெளி யிட்டுள்ளது. அதில், ரவா உப்புமாவுடன் சாம்பார் உள்ளிட்ட 13 வகை உணவுகளில் இருந்து நாள்தோறும் ஏதேனும் ஒரு உணவு மாணவர்களுக்கு காலை உணவாக வழங்கப்படவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>காலை உணவு 150 முதல் 200 கிராம் எடையுடன் 294 கலோரி ஆற்றல் வழங்கும் விதமாக இருக்கவேண்டும். காலை 7.30 மணிக்குள் பள்ளிகளுக்கு சூடான உணவு (இன்சுலேட்டட் ஹாட் பாக்ஸ்களில் எடுத்து சென்று) வினியோகிக்கவேண்டும். தலைமை ஆசிரியரின் சான்று கிடைத்த பிறகே ஒப்பந்ததாரருக்கு மாதாந்திர பணம் வழங்கப்படும். உணவின் தரத்தை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மூன்றாம் தரப்பு ஆய்வு மூலம் கண்காணிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.17 சரிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/broiler-chicken-price-drops-by-rs-17-per-kg</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/broiler-chicken-price-drops-by-rs-17-per-kg#comments</comments><guid isPermaLink="false">11c23df7-3e52-4cb2-b7ac-6e69d403cdfb</guid><pubDate>Tue, 28 Jul 2026 03:15:19 +0000</pubDate><atom:updated>2026-07-28T03:15:19.261Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Namakkal,நாமக்கல்,கறிக்கோழி விலை,Broiler Chicken Prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/vx9dg71q/6.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/vx9dg71q/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல்,</p><p>நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.127-க்கு விற்பனை செய்யப் பட்டுவந்தது. இதற்கிடையே நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங் கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.17 குறைக்க முடிவு செய்தனர். அதன்படி கறிக்கோழி விலை கிலோ ரூ.110 ஆக குறைந்து உள்ளது. </p><p>முட்டைக்கோழி விலை கிலோ ரூ.115 ஆக இருந்தது. நேற்று நடந்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை ரூ.5 குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் முட்டைக்கோழி விலை கிலோ ரூ.110 ஆக குறைந்து உள்ளது. முட்டை கொள்முதல் விலை ரூ.630 காசுக ளாக உள்ளது. விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையா ளர்கள் தெரிவித்தனர்.</p> ]]></content:encoded></item></channel></rss>