<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 01 Sep 2026 05:19:35 +0000</lastBuildDate><item><title>கேளம்பாக்கத்தில் ரவுடி கொலை: கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rowdy-murdered-in-kelambakkam-arrested-individuals-make-sensational-confession</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rowdy-murdered-in-kelambakkam-arrested-individuals-make-sensational-confession#comments</comments><guid isPermaLink="false">8d3cfffc-773e-4127-baa7-fe6676072d28</guid><pubDate>Tue, 01 Sep 2026 05:13:56 +0000</pubDate><atom:updated>2026-09-01T05:13:56.499Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Chengalpattu,செங்கல்பட்டு,police investigation,Rowdy murder,ரவுடி கொலை,போலீசார் விசாரணை,கேளம்பாக்கம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/tud1s7bh/shakul.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/tud1s7bh/shakul.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தங்களை தீர்த்துக் கட்ட திட்டமிட்டதால் நாங்கள் முந்திக்கொண்டு ரவுடியை கொலை செய்ததாக கைதான 5 பேரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.</p><h2>பல்வேறு வழக்குகள்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/chengalpattu">செங்கல்பட்டு</a> மாவட்டம் கேளம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சாகுல் அமீது (வயது 27). ரவுடியான இவர் மீது கொலை, கொலை மிரட்டல், கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இவர், கேளம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கே.எஸ்.எஸ் நகர் பகுதியையொட்டிய மயானத்தில் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.</p><h2>போலீசார் வழக்குப்பதிவு</h2><p>இதுபற்றி கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கொலை வழக்கு தொடர்பாக அருண் (31), ஸ்ரீகாந்த் (35), சூர்யா (32), அப்துல் ரகுமான் (25) ஆகிய 4 பேரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வந்தனர்.</p><p>இந்தநிலையில் இச்சம்பவம் தொடர்பாக கொளத்தூரைச் சேர்ந்த அஜய் (25) என்ற மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். கைதான 5 பேரும் போலீசாரிடம் அளித்து உள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-</p><h2>தீர்த்துக்கட்ட திட்டம்</h2><p>சாகுல் அமீதும், நாங்களும் நண்பர்களாக இருந்தோம். பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டோம். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட வாக்குவாதத்தில் சாகுல் அமீதை அரிவாளால் வெட்டியதால், எங்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.</p><p>அதன்பிறகு சாகுல் அமீது, எங்களை தீர்த்துக்கட்ட திட்டமிட்டு இருப்பதாக எங்களுக்கு தெரியவந்தது. எனவே நாங்கள் முந்திக்கொண்டு அவரை கொலை செய்ய திட்டமிட்டோம். கஞ்சா வழக்கில் சிறையில் இருந்த சாகுல் அமீது கடந்த 27-ந் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். கடந்த சனிக்கிழமை மாலை அவரை தேடி வீட்டுக்கு சென்றோம். அவர் அங்கு இல்லாததால் வழக்கமாக மது அருந்தும் இடங்களில் தேடினோம். இரவு மயானத்தில் போதையில் படுத்திருந்த சாகுல் அமீதை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொன்றோம்.</p><p>இவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.</p><h2>சிறையில் அடைப்பு</h2><p>கொலைக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார் மற்றும் 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.</p><p>சாகுல் அமீது மற்றும் அருண் தரப்பினருக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்த நிலையில், இருதரப்பினரின் நடவடிக்கைகளையும் போலீசார் தொடர்ந்து கண்காணிக்காததால், சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த 2-வது நாளிலேயே சாகுல் அமீது கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது.</p>]]></content:encoded></item><item><title>தங்கம் விலை சற்று உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..?</title><link>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/slight-rise-in-gold-prices-todays-status</link><comments>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/slight-rise-in-gold-prices-todays-status#comments</comments><guid isPermaLink="false">30a788cf-2d8e-4522-b601-e9d04363569c</guid><pubDate>Tue, 01 Sep 2026 04:30:14 +0000</pubDate><atom:updated>2026-09-01T04:30:14.536Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Gold Rate,தங்கம் விலை,வெள்ளி விலை,Silver rate,Gold Price,Silver Price,விலை நிலவரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/uu1s9qqg/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/uu1s9qqg/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தங்கம் (Gold Rate)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் தங்கம் ஒரு சவரன் ரூ.1,16,040-க்கும், ஒரு கிராம் ரூ.14,505-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ.1,14,960-க்கும், கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.14,370-க்கும் விற்பனை செய்யப்பட்டது.</p><p>இந்த நிலையில் மாதத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,15,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.15 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,385-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p>வெள்ளி விலையைப் பொறுத்த வரையில் இன்று குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து, வெள்ளி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>தாய்நாட்டு விடுதலைக்காக போராடிய மாவீரன் பூலித்தேவனின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்: முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thayinatu-viduthalaikkaga-poradiya-maveeran-poolithevanin-pugazh-endrum-nilaitheirukkattum-mudhal-amaichar-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thayinatu-viduthalaikkaga-poradiya-maveeran-poolithevanin-pugazh-endrum-nilaitheirukkattum-mudhal-amaichar-vijay#comments</comments><guid isPermaLink="false">ec33a701-7a05-4ac0-9826-a9abfbbdefeb</guid><pubDate>Tue, 01 Sep 2026 04:11:52 +0000</pubDate><atom:updated>2026-09-01T04:11:52.100Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>birthday,பிறந்தநாள்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,மாவீரன் பூலித்தேவன்,Poolithevan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/kxbypub2/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/kxbypub2/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்திய சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 311-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் பூலித்தேவன் பிறந்தநாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகத் தமிழக மண்ணில் முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு முன்னதாகவே துணிச்சலுடன் களம் கண்ட விடுதலைப் போராட்ட வீரரும், நெற்கட்டும்செவல் பாளையக்காரருமான மாவீரன் பூலித்தேவனின் பிறந்தநாளில், அவரைப் போற்றிப் பெருமிதத்துடன் நினைவுகூர்கிறேன்.</p><p>அடிமைத்தனத்தை ஏற்க மறுத்து, அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராகத் தனது இறுதி மூச்சுவரை அஞ்சாது போராடிய அவரது வீரமும், தாய்மண் மீதான பற்றும், சுயமரியாதை உணர்வும் தமிழர் வரலாற்றில் என்றும் அழியாத இடத்தைப் பெற்றுள்ளன.</p><p>தாய்நாட்டு விடுதலைக்காகத் தன்னலமின்றிப் போராடிய மாவீரன் பூலித்தேவனின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஒகேனக்கல்லில் 16வது நாளாக பரிசல் இயக்கத்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coracle-operations-suspended-at-hogenakkal-for-the-16th-consecutive-day</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coracle-operations-suspended-at-hogenakkal-for-the-16th-consecutive-day#comments</comments><guid isPermaLink="false">7e98fb72-9879-4e1f-9719-5824e49e7b94</guid><pubDate>Tue, 01 Sep 2026 04:02:14 +0000</pubDate><atom:updated>2026-09-01T04:02:14.892Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Hogenakkal,ஒகேனக்கல்,காவிரி ஆறு,Hogenakkal Cauvery,பரிசல் இயக்க தடை,Hogenakkal Cauvery river</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/ajaabd4m/kier.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/ajaabd4m/kier.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பென்னாடம், </p><p><a href="https://www.dailythanthi.com/topic/ஒகேனக்கல்">ஒகேனக்கல்லில்</a> சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து 16-வது நாளாக நீடிக்கிறது.</p><h2>கே.ஆர்.எஸ். அணை</h2><p>கர்நாடகத்தில் காவிரி படுகையில் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணை அமைந்துள்ளது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக குடகு மாவட்டம் உள்ளது. இந்த நிலையில் குடகில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதன்காரணமாக கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர் மட்டம் 110 அடியை தாண்டியது.</p><p>இந்த நிலையில் தற்போது குடகில் மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்தும் குறைந்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 6 ஆயிரத்து 377 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி 5 ஆயிரத்து 426 கனஅடியாக குறைந்தது.</p><p>124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 110.04 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரத்து 170 கனஅடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.</p><h2>கபினி அணை</h2><p>அதேபோல் வயநாட்டில் மழை பெய்யாததால் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டையில் உள்ள கபினி அணைக்கும் நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 4 ஆயிரத்து 961 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 4 ஆயிரத்து 480 கனஅடியாக குறைந்துள்ளது. ஆற்றில் இருந்து வலது, இடது கால்வாய்களில் வினாடிக்கு 3 ஆயிரத்து 260 கனஅடி நீரும், ஆற்றில் வினாடிக்கு 6 ஆயிரத்து 600 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 2,270.65 அடியாக இருந்தது.</p><p>கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் டி.நரசிப்புரா அருகே ஒன்றாக சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி செல்கிறது. அதன்படி நேற்று இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 13 ஆயிரத்து 770 கனஅடி நீர் தமிழகத்துக்கு காவிரியில் திறந்து விடப்பட்டது. </p><p>3-வது நாளாக நேற்றும் வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடிக்கு அதிகமான தண்ணீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><h2>11,000 கன அடி</h2><p>இதனால் <a href="https://www.dailythanthi.com/topic/ஒகேனக்கல்">ஒகேனக்கல்லில்</a> உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் ஆகிய அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தற்போது விநாடிக்கு 11,000 கன அடியாக நீடிக்கிறது. </p><h2>பரிசல் இயக்க தடை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/ஒகேனக்கல்">ஒகேனக்கல்</a> காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து 16-வது நாளாக நீடிக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>ஆதார், பான் கார்டை பயன்படுத்தி ரூ.2.53 கோடி ஜி.எஸ்.டி. மோசடி: 71 வயது மூதாட்டி அதிர்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/gst-of-253-crore-incurred-using-aadhaar-and-pan-card-71-year-old-woman-shocked</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/gst-of-253-crore-incurred-using-aadhaar-and-pan-card-71-year-old-woman-shocked#comments</comments><guid isPermaLink="false">d672e3bb-2188-4011-bfc7-a7c4b7c44425</guid><pubDate>Tue, 01 Sep 2026 03:26:35 +0000</pubDate><atom:updated>2026-09-01T03:26:35.437Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Aadhar card,மூதாட்டி,கிருஷ்ணகிரி,GST,tax,ஜி.எஸ்.டி.,ஆதார் எண்,பான்கார்டு,PAN card,வரி ஏய்ப்பு,Aadhaar and PAN Cards,krishnagari</media:keywords><media:content height="675" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/iqigzirk/moo.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/iqigzirk/moo.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ணகிரி, </p><p>ஊத்தங்கரையை சேர்ந்த மூதாட்டியின் ஆவணங்களை பயன்படுத்தி ரூ.2 கோடியே 53 லட்சம் ஜி.எஸ்.டி. மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.</p> <h2>சேமிப்பு கணக்கு</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/krishnagiri">கிருஷ்ணகிரி </a>மாவட்டம் ஊத்தங்கரை இந்திரா நகரை சேர்ந்தவர் லட்சுமி (வயது71). இவரது மகன் ராமகிருஷ்ணன். கூலித் தொழிலாளி. லட்சுமி ஊத்தங்கரையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையிலும், ராமகிருஷ்ணன் மற்றொரு வங்கி கிளையிலும் சேமிப்பு கணக்கு வைத்து உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு லட்சுமி தனது வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க சென்று உள்ளார்.</p><h2>ரூ.2.53 கோடி மோசடி</h2><p>அப்போது அவரது வங்கி கணக்கு வணிக வரித்துறையினரால் முடக்கப்பட்டு உள்ளதாக வங்கி மேலாளர் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக வங்கியில் விசாரித்த போது, ஆம்பூர் வணிக வரி மதிப்பீட்டு வட்டத்தின் உதவி ஆணையர் பிறப்பித்த உத்தரவில் லட்சுமியின் பெயரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று 2018-19-ம் ஆண்டிற்கான ஜி.எஸ்.டி. வரி நிலுவை தொகையாக ரூ.2 கோடியே 53 லட்சத்து 23 ஆயிரத்து 676 செலுத்த வேண்டி உள்ளதால் வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.</p><h2>போலியாக ஜி.எஸ்.டி. பதிவு</h2><p>இதையடுத்து மூதாட்டி லட்சுமி கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், வணிக வரித்துறை குறிப்பிட்ட நிறுவனத்திற்கும், எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. எங்களது ஆதார் மற்றும் பான்கார்டு ஆகிய ஆவண நகல்களை தவறாக பயன்படுத்தி, போலியாக ஜி.எஸ்.டி. பதிவு பெற்று ரூ.2.53 கோடி அளவிற்கு வரி ஏய்ப்பு செய்து மோசடி செய்து உள்ளனர்.</p><p>மேலும் எனது மகன் ராமகிருஷ்ணனின் வங்கி கணக்கும் ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகை செலுத்த வேண்டும் என முடக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த மோசடி குறித்து உரிய விசாரணை நடத்தி தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் முடக்கப்பட்ட எங்களது வங்கி கணக்குகளை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.</p><p>இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஓரினச்சேர்க்கை செயலி மூலம் அழைத்து வாலிபரிடம் ‘ஜிபே&apos; மூலம் பணம் பறித்த கும்பல் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/gang-arrested-for-extorting-money-via-gay-dating-app</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/gang-arrested-for-extorting-money-via-gay-dating-app#comments</comments><guid isPermaLink="false">a94fb353-6de2-43b0-92bd-654e56743187</guid><pubDate>Tue, 01 Sep 2026 03:09:41 +0000</pubDate><atom:updated>2026-09-01T03:09:41.415Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Vellore,வேலூர்,arrest,ஓரினச்சேர்க்கை,பணம் பறிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/klwfpmuy/Untitled-4.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/klwfpmuy/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வேலூர்,</p><p>ஓரினச்சேர்க்கை செயலி மூலம் அழைத்து வாலிபரிடம் 'ஜிபே' மூலம் பணம் பறித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>பணம் பறிப்பு</h2><p>வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (23 வயது). இவர் மூவரசம்பட்டில் தங்கி, அங்குள்ள பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். இவர் பழவந்தாங்கல் போலீசில் அளித்த புகாரில், வேனில் வந்த 5 பேர் தன்னை மிரட்டி, ரூ.25 ஆயிரத்தை 'ஜிபே' மூலம் பறித்துச் சென்றதாக தெரிவித்திருந்தார்.</p><p>இதுகுறித்து பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் உத்தரவின்பேரில், உதவி கமிஷனர் பசுபதி மற்றும் பழவந்தாங்கல் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சத்தியலிங்கம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.</p><h2>ஓரினச்சேர்க்கை செயலி</h2><p>விசாரணையில், ஏழுமலை ஓரினச்சேர்க்கைக்கான செயலி மூலம் பெருங்குடியை சேர்ந்த வேன் டிரைவர் அய்யனார் (23 வயது) என்பவரை தொடர்பு கொண்டது தெரியவந்தது. தனியாக சந்திக்கலாம் என்று அய்யனார் கூறியதை தொடர்ந்து, ஏழுமலை நேற்று முன்தினம் இரவு அவரை சந்திக்க சென்றுள்ளார்.</p><p>அப்போது வேனில் அய்யனாருடன் அவரது நண்பர்களான பெருங்குடியை சேர்ந்த பால் வியாபாரி கோகுலகிருஷ்ணன் (24 வயது), ஆன்லைன் பொருட்கள் டெலிவரி செய்யும் ஹரிஹரன் (24 வயது). வேளச்சேரியை சேர்ந்த செல்வம் (19 வயது), திருமுல்லைவாயலை சேர்ந்த பால் வியாபாரி மதன்குமார் (24 வயது) ஆகியோர் இருந்துள்ளனர்.</p><h2>பணம் பறிப்பு</h2><p>ஏழுமலையை கண்டதும், அவரது தனிப்பட்ட விஷயத்தை பெற்றோரிடம் தெரிவித்துவிடுவதாக கூறி, பணம் கொடுத்தால் விட்டுவிடுவோம் என்று 5 பேரும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன ஏழுமலை, அவர்களிடம் ரூ.25 ஆயிரத்தை 'ஜிபே' மூலம் அனுப்பினார். பணத்தை பெற்றுக்கொண்ட 5 பேரும் அவரை வேனில் இருந்து இறக்கிவிட்டு தப்பிச்சென்றது விசாரணையில் தெரியவந்தது.</p><p>இதையடுத்து ஏழுமலையை மிரட்டி பணம் பறித்ததாக வேன் டிரைவர் அய்யனார் மற்றும் அவரது நண்பர்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>
3,500 மெகாவாட்டாக  குறைந்த மத்திய தொகுப்பு மின்சாரம்... அதிகரிக்கும் தேவையால் தமிழகத்திற்கு நெருக்கடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/central-pool-power-supply-drops-to-3500-mw-tamil-nadu-faces-a-crisis-due-to-rising-electricity-demand</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/central-pool-power-supply-drops-to-3500-mw-tamil-nadu-faces-a-crisis-due-to-rising-electricity-demand#comments</comments><guid isPermaLink="false">0642ff4d-cc57-4539-a81a-095ebabb853c</guid><pubDate>Tue, 01 Sep 2026 02:49:14 +0000</pubDate><atom:updated>2026-09-01T02:49:14.596Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,மின்சாரம்,electricity,கூடங்குளம்,நெய்வேலி,மெகாவாட்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/938lb337/min.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்சாரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/938lb337/min.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்திற்கு மத்திய தொகுப்பு மின் நிலையங்களில் இருந்து தினமும் சராசரியாக 5,000 மெகாவாட் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20">மின்சாரம் </a>வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அது 3,400 முதல் 3,500 மெகாவாட்டாக குறைந்துள்ளது. இதனால், அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்வதில் தமிழக மின் வாரியத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.</p><h2>7,000 மெகாவாட் </h2><p>நெய்வேலி, திருவள்ளூர் வல்லூர், தூத்துக்குடி, கூடங்குளம், கல்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மத்திய அரசின் அனல் மற்றும் அணுமின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதேபோல் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களிலும் மத்திய அரசுக்கு சொந்தமான மின் நிலையங்கள் உள்ளன.</p><p>இந்த மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் இருந்து தமிழகத்திற்கு தினமும் 7,000 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மின் நிலையங்களில் ஏற்படும் பழுது உள்ளிட்ட காரணங்களால், சராசரியாக 5,000 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தமிழகத்திற்கு கிடைத்து வந்தது.</p><h2>மின்சாரம் குறைவு</h2><p>இந்த நிலையில், தெலுங்கானாவில் உள்ள ராமகுண்டம் மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. மேலும், நெய்வேலி மின் நிலையத்தின் 3 அலகுகளில் பழுது ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு வழங்கப்படும் மின்சாரம் கடந்த சில நாட்களாக 3,400 முதல் 3,500 மெகாவாட்டாக குறைந்துள்ளது.</p><h2>நெருக்கடி</h2><p>தற்போது வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், தமிழகத்தின் மின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே மத்திய தொகுப்பில் இருந்தும் மின்சாரம் குறைந்துள்ளதால், மின் தேவையை சமாளிப்பதில் தமிழக மின் வாரியத்திற்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தொழில் முதலீடுகளை ஈர்க்க பிரிட்டன் செல்கிறார் முதல்-அமைச்சர் விஜய்? </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-chief-minister-vijay-visiting-britain-to-attract-industrial-investments</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-chief-minister-vijay-visiting-britain-to-attract-industrial-investments#comments</comments><guid isPermaLink="false">8399c8ce-8a6b-419a-b1ed-8c1c3aed00f0</guid><pubDate>Tue, 01 Sep 2026 02:18:36 +0000</pubDate><atom:updated>2026-09-01T02:18:36.056Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,தமிழ்நாடு அரசு,TN government,தொழில் முதலீடுகள்,பிரிட்டன்,Britain,Industrial Investments,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/1w6nr8l2/kier.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/1w6nr8l2/kier.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், <a href="https://www.dailythanthi.com/topic/vijay">தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்</a> வருகிற 10-ம் தேதியன்று பிரிட்டனுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.</p><h2>தொழில் முதலீடுகள்</h2><p>தென் மாநிலங்களில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா இடையில் கடும் போட்டி நிலவுகிறது. எனவே, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு முடுக்கி விட்டுள்ளது.</p><h2>அமைச்சர் கீர்த்தனா</h2><p>'செமிகண்டக்டர், ஏ.ஐ., சிப்' உள்ளிட்ட தொழில் துறைகளில் ஈடுபட்டுள்ள பல நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்கும் 'செமிகான் மாநாடு, இந்த வாரம் தைவானில் நடக்கிறது. அந்நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா மற்றும் வழிகாட்டி நிறுவன அதிகாரிகள் அடங்கிய குழு, தைவானில் வரும் 4ம் தேதி நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.</p><h2>முதல் முறையாக</h2><p>இந்நிலையில் தொழில் துறை அதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட குழுவினருடன் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> வரும் 10ம் தேதி பிரிட்டன் செல்ல உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்குழுவினர் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் 16ம் தேதி வரை சுற்றுப் பயணம் செய்து அந்நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுக்க உள்ளனர்.</p><p>இதன்படி தமிழ்நாடு முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின், <a href="https://www.dailythanthi.com/topic/vijay">விஜய்</a> முதல் முறையாக வெளிநாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>
தேங்காய் ஏற்றுமதி 62 சதவீதம் அதிகரிப்பு: ரூ.7,038 கோடியை எட்டிய வர்த்தகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coconut-exports-up-by-62-trade-reaches-7038-crore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coconut-exports-up-by-62-trade-reaches-7038-crore#comments</comments><guid isPermaLink="false">5ded2ea7-d8c2-408b-af2d-178a3a5a03ad</guid><pubDate>Tue, 01 Sep 2026 02:10:38 +0000</pubDate><atom:updated>2026-09-01T02:10:38.925Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வர்த்தகம்,ஏற்றுமதி,exports,Coconut,தேங்காய்,தேங்காய் சிரட்டைக்கரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/vmce9z4q/3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ Image Credits : AI]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/vmce9z4q/3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கொச்சி,</p><p>கடந்த நிதியாண்டில் <a href="https://www.dailythanthi.com/topic/coconut">தேங்காய்</a> மற்றும் தேங்காய் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி 62 சதவீதம் அதிகரித்து, ரூ.7,038 கோடியை எட்டியுள்ளதாக தென்னை வளர்ச்சி வாரியம் தெரிவித்துள்ளது.</p>  <p><strong>இதுகுறித்து வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:</strong></p><p>தென்னை சார்ந்த பொருட்களின் ஏற்றுமதியில் தேங்காய் சிரட்டைக்கரி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.4,688.89 கோடி மதிப்பிலான தேங்காய் சிரட்டைக்கரி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கயிறு உள்ளிட்ட பொருட்களைத் தவிர்த்து, தேங்காய் சார்ந்த பொருட்களின் மொத்த ஏற்றுமதி மதிப்பில் தேங்காய் சிரட்டைக்கரியின் பங்கு 67 சதவீதமாக உள்ளது. இதன் ஏற்றுமதி அளவு 1.80 லட்சம் டன்னாகும். தேங்காய் சார்ந்த பொருட்களுக்கான சர்வதேச தேவை அதிகரிப்பு, பதப்படுத்தும் திறன் மேம்பாடு, பல்வேறு நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் தாவர அடிப்படையிலான உணவுப் பொருட்களுக்கான தேவை அதிகரிப்பு ஆகியவை ஏற்றுமதி வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.</p> <h2>தேங்காய் ஏற்றுமதியின் முக்கியத்துவம்</h2><p>தேங்காய் மற்றும் அதை சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி, இந்தியாவின் வேளாண் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. தேங்காய் எண்ணெய், சிரட்டைக்கரி, நார், கயிறு, தேங்காய் பால் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதுடன், பதப்படுத்துதல், உற்பத்தி மற்றும் ஏற்றுமதி துறைகளில் வேலைவாய்ப்புகளும் உருவாகின்றன. சர்வதேச சந்தையில் இயற்கை மற்றும் தாவர அடிப்படையிலான பொருட்களுக்கான தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>ரேஷன் கடைகளில் கோதுமை மாவு கிலோ ரூ.15-க்கு விற்க தமிழக அரசு முடிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-to-sell-wheat-flour-at-rs15-per-kg-in-ration-shops</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-to-sell-wheat-flour-at-rs15-per-kg-in-ration-shops#comments</comments><guid isPermaLink="false">029e3f3a-a44f-49f2-8491-da73c657950a</guid><pubDate>Tue, 01 Sep 2026 01:56:13 +0000</pubDate><atom:updated>2026-09-01T01:56:13.435Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ரேஷன் கடை,Ration shop,தமிழக அரசு,TN govt,கோதுமை மாவு,Wheat flour</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/xqwfa5y0/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/xqwfa5y0/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ரேஷன் கடைகளில், குடும்ப அட்டைதாரர்களுக்கு கோதுமை மாவு, கிலோ ரூ.15-க்கு வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.</p><h2>பாரத் ஆட்டா</h2><p>வெளிச்சந்தையில், கோதுமை மாவு விலை சராசரியாக, ரூ.60 வரை உள்ளது. விலை உயர்வை கட்டுப்படுத்த, இரு ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு, 'பாரத் ஆட்டா' என்ற பெயரில், கிலோ, ரூ.27.50-க்கு கோதுமை மாவு விற்கும் திட்டத்தை தொடங்கியது. இத்திட்டத்தில், தமிழகத்தில் முக்கிய இடங்களில் உள்ள கூட்டுறவு அங்காடிகளில், கோதுமை மாவு விற்கப்பட்டது.</p><h2>முன்னோடி திட்டம்</h2><p>இந்த நிலையில் கடந்த மாதம் 5-ந்தேதி தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில், 'பொது வினியோக திட்டத்தில் பாக்கெட்டில் கோதுமை வழங்கும் முன்னோடி திட்டம் செயல்படுத்தப்படும்' என, தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கோதுமை மாவு, கிலோ ரூ.15-க்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, "மத்திய அரசிடம் இருந்து கோதுமை வாங்கி, ஆலைகளில் மாவாக அரைத்து, பாக்கெட்டில் வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் கோதுமை மாவு என்ன விலைக்கு வழங்கப்படுகிறது என்று, ஆய்வு செய்யப்படுகிறது. அதை விட குறைவாக, கிலோ ரூ.15-க்கு வழங்க திட்டமிட்டுள்ளோம்" என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>
சிமெண்ட் விலை திடீர் உயர்வு.. கட்டுமானத்துறையினர் அதிர்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sudden-hike-in-cement-prices-construction-sector-shocked</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sudden-hike-in-cement-prices-construction-sector-shocked#comments</comments><guid isPermaLink="false">db420140-1e1f-4f07-98de-7ef8f9bf8c12</guid><pubDate>Tue, 01 Sep 2026 01:53:08 +0000</pubDate><atom:updated>2026-09-01T01:53:08.814Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பருவமழை,விலை உயர்வு,price hike,Cement,சிமெண்ட்,கட்டுமானத்துறை,Construction sector</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/ik4s0phs/2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ Image credits: AI]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/ik4s0phs/2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கட்டுமானப் பணிகள் தற்காலிகமாகக் குறைந்துள்ளன. இதனால் <a href="https://www.dailythanthi.com/topic/cement">சிமெண்ட்</a> விற்பனை குறையக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு, உற்பத்தியாளர்கள் சிமெண்ட் விலையை உயர்த்தியுள்ளனர்.</p>  <h2>மூட்டைக்கு ரூ.10 உயர்வு</h2><p>கட்டுமானப் பணிகளுக்கு அத்தியாவசியமான மூலப்பொருளான சிமெண்ட் , மூட்டைக்கு ரூ.10 உயர்ந்துள்ளதாக கட்டுமானத் துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சில மாதங்களுக்கு முன்பு சிமெண்ட் விலை மூட்டைக்கு ரூ.330 என்ற அளவில் இருந்தது. வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட பிரச்சினைகளால் எரிபொருள் வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிமெண்ட் விலை மூட்டைக்கு ரூ.40 வரை உயர்ந்தது.அந்த நேரத்தில் கட்டுமானப் பணிகளுக்கான சிமெண்ட் தேவை அதிகமாக இருந்ததால், விலை உயர்வை மக்கள் ஏற்றுக்கொண்டனர். இதனிடையே, வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் ஓரளவு தணிந்ததைத் தொடர்ந்து, சில சிமெண்ட் உற்பத்தியாளர்கள் விலையைக் குறைக்கத் தொடங்கினர். இதனால், நாடு முழுவதும் சிமெண்ட் விலை மூட்டைக்கு ரூ.342 என்ற அளவுக்கு குறைந்தது.இந்நிலையில், தற்போது மீண்டும் சிமெண்ட் விலை மூட்டைக்கு ரூ.10 உயர்ந்துள்ளது.</p> <h2>பருவமழை காரணமாக விலை உயர்வு</h2><p>இதுகுறித்து கட்டுமானத் துறையினர் கூறியதாவது:</p><p>நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கட்டுமானப் பணிகள் தற்காலிகமாகக் குறைந்துள்ளன. இதனால் சிமெண்ட் விற்பனை குறையக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு, உற்பத்தியாளர்கள் சிமெண்ட் விலையை உயர்த்தியுள்ளனர். இதன் விளைவாக, தற்போது சிமெண்ட் விலை மூட்டைக்கு ரூ.10 அதிகரித்துள்ளது’ இவ்வாறு கட்டுமானத் துறையினர் தெரிவித்தனர்.</p> <h2>கட்டுமானத் துறையினர் கவலை</h2><p>சிமெண்ட் விலை உயர்வு, ஏற்கனவே அதிகரித்துள்ள கட்டுமானச் செலவுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, வீடு கட்டும் பொதுமக்கள் மற்றும் சிறிய அளவிலான கட்டுமானப் பணிகளை மேற்கொள்பவர்கள் இதனால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. விலை தொடர்ந்து உயர்ந்தால், கட்டுமானப் பணிகளுக்கான மொத்த செலவும் மேலும் அதிகரிக்கும் என கட்டுமானத் துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>கரிவலம்வந்தநல்லூர், சோழபுரம் ரெயில் நிலையங்களுக்கு மத்திய அரசு அதிகாரப்பூர்வ ஒப்புதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/central-government-grants-official-approval-for-karivalamvandanallur-and-chozhapuram-railway-stations</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/central-government-grants-official-approval-for-karivalamvandanallur-and-chozhapuram-railway-stations#comments</comments><guid isPermaLink="false">65c6ddc1-4abe-4bbc-ada1-613cf8713bc8</guid><pubDate>Tue, 01 Sep 2026 01:51:24 +0000</pubDate><atom:updated>2026-09-01T01:51:24.618Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Tenkasi,தென்காசி,மத்திய அரசு,railway station,ரெயில் நிலையம்,Central Govt,கரிவலம்வந்தநல்லூர்,Karivalamvandanallur,சோழபுரம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/15hxbymf/shi.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/15hxbymf/shi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><p>தெற்கு ரெயில்வேயின் கீழ் வரும் சோழபுரம் மற்றும் கரிவலம்வந்தநல்லூர் ஆகிய பகுதிகளில் ரெயில் நிலையங்கள் அமைக்க அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.</p><h2>அகல ரெயில் பாதை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/மதுரை">மதுரை</a>-செங்கோட்டை ரெயில் வழித்தடத்தில் மீட்டர் கேஜ் காலத்தில் செயல்பட்டு வந்த கரிவலம்வந்தநல்லூர் மற்றும் சோழபுரம் ரெயில் நிலையங்களும் அகல ரெயில் பாதை மாற்றத்தின்போது அகற்றப்பட்டன. </p><h2>மகிழ்ச்சி</h2><p>இந்நிலையில் கரிவலம்வந்தநல்லூர் மற்றும் சோழபுரம் ரெயில் நிலையங்களை அமைக்க மத்திய ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. நீண்ட நாட்களாகப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் விடுத்த தொடர் கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதால் அப்பகுதி மக்கள் மற்றும் ரெயில் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.</p><h2>உள்கட்டமைப்பு வளர்ச்சி</h2><p>இந்த நிலையங்கள் செயல்பாட்டுக்கு வரும்போது, உள்ளூர் மக்களின் போக்குவரத்து வசதி மேம்படுவதோடு, சுற்றியுள்ள கிராம மக்களுக்கான நேரடி ரெயில் இணைப்பும் எளிதாகும். புதிய ரெயில் நிலையங்கள் அப்பகுதியின் வணிகம் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு - எவ்வளவு தெரியுமா..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/commercial-cylinder-price-hike-how-much-you-know</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/commercial-cylinder-price-hike-how-much-you-know#comments</comments><guid isPermaLink="false">5d315b65-3907-48fa-8525-93912e68d01e</guid><pubDate>Tue, 01 Sep 2026 01:39:14 +0000</pubDate><atom:updated>2026-09-01T01:39:14.654Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,சிலிண்டர் விலை,எண்ணெய் நிறுவனங்கள்,விலை உயர்வு,price hike,cylinder</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/acurdi8v/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிலிண்டர் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/acurdi8v/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இன்று மாதத்தின் முதல் நாள் என்பதால், சிலிண்டர் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது.</p><h2>எண்ணெய் நிறுவனங்கள்</h2><p>பாரத், இந்துஸ்தான், இந்தியன் ஆயில் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும், சமையல் கியாஸ் சிலிண்டர்களை நாடு முழுவதும் வினியோகம் செய்து வருகின்றன.</p><h2>விலை நிர்ணயம்</h2><p>சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலைகளை நிர்ணயித்து வருகின்றன. இதில் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலைகளை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைத்து வருகின்றன.</p><h2>விலை உயர்வு</h2><p>இந்த நிலையில், இன்று மாதத்தின் முதல் நாள் என்பதால், சிலிண்டர் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.10.50 உயர்ந்து, ரூ.2,916.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமுமின்றி ரூ.957.50-க்கு விற்பனையாகிறது.</p>]]></content:encoded></item><item><title>வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு: தீர்ப்பை தள்ளி வைத்து ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vs-babu-victory-challenged-mk-stalin-case-high-court-defers-verdict</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vs-babu-victory-challenged-mk-stalin-case-high-court-defers-verdict#comments</comments><guid isPermaLink="false">2a41772c-71e7-4cea-97ac-4ec8f9c60ad3</guid><pubDate>Tue, 01 Sep 2026 01:20:37 +0000</pubDate><atom:updated>2026-09-01T01:20:37.862Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,சென்னை ஐகோர்ட்டு,Chennai Highcourt,கொளத்தூர் தொகுதி,Kolathur Constituency,MKstalin,வி.எஸ்.பாபு,VS Babu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/sbfpvl55/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/sbfpvl55/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை கொளத்தூர் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.</p><h2>தேர்தல் வழக்கு</h2><p>தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். த.வெ.க. சார்பில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த நிலையில், கொளத்தூர் தொகுதியில் 14 வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன. அப்போது வாக்குப்பதிவில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி, வி.எஸ்.பாபுவின் வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார்.</p><p>அதேபோல, வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்ப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்து மற்றொரு வழக்கையும் மு.க.ஸ்டாலின் தொடர்ந்தார்.</p><h2>வாக்குப்பதிவில் முறைகேடு</h2><p>தேர்தல் வழக்கு மனுவில், "கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களில், சரிபார்ப்புக்காக சில எந்திரங்கள் எடுக்கப்பட்டன. அதில் சில எந்திரங்கள் திடீரென கோளாறாகி நின்றுவிட்டன. 6 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் ஒப்புகைச் சீட்டு எந்திரங்களான வி.வி.பேடுகளை ஒப்பிட்டுப் பார்த்ததில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டன.</p><p>வாக்குப்பதிவில் முறைகேடுகள் நடந்துள்ளதால் அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வி.வி.பேடுகளை சரிபார்க்க உத்தரவிட வேண்டும். த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும். என்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.</p><h2>தீர்ப்பு தள்ளிவைப்பு</h2><p>இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி. நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மு.க.ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், வாக்குப்பதிவு எந்திரங்கள், ஒப்புகைச் சீட்டு எந்திரங்களை சரிபார்க்கக் கோரி தேர்தல் முடிவுகள் வெளியான 3 நாட்களில், அதாவது மே 7-ந்தேதியே விண்ணப்பித்துள்ளோம். ஆனால், தேர்தல் வழக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவான 45 நாட்களுக்கு பிறகே வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்க அனுமதிக்கப்பட்டது.</p><p>எனவே, காலதாமதமாக தாக்கல் செய்துள்ள இந்த தேர்தல் வழக்கை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த தேர்தல் வழக்கை தாக்கல் செய்வதை தவிர வேறு நிவாரணம் இல்லை” என வாதிட்டார். தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேஷாத்திரி நாயுடு, "இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை" என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மு.க.ஸ்டாலின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.</p><h2>திரும்ப பெற அனுமதி</h2><p>அதேபோல, வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்ப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது, வழிகாட்டு நெறிமுறைகளில் புதிதாக கடந்த 2025-ம் ஆண்டு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை திரும்பப் பெற்று, புதிய மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை திரும்ப பெற அனுமதித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டப்போகும் மழை..! வானிலை மையம் அப்டேட் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/heavy-rain-set-to-lash-14-districts-including-chennai-today-weather-department-update</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/heavy-rain-set-to-lash-14-districts-including-chennai-today-weather-department-update#comments</comments><guid isPermaLink="false">f8fa9b85-c035-455a-a390-9465edf60892</guid><pubDate>Tue, 01 Sep 2026 01:20:30 +0000</pubDate><atom:updated>2026-09-01T01:20:30.512Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,Rain,Weather,வானிலை,தமிழகம்,Weather News,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,Weather update,வானிலை ஆய்வு மையம்,வானிலை அறிக்கை,TN Rains,Weather Report,வானிலை முன்னறிவிப்பு,வானிலை அறிவிப்பு,weather center,TN Rain,வானிலை அப்டேட்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/fmvgez4w/mega.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rain , மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/fmvgez4w/mega.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>வானிலை செய்திகள் (Weather)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழகத்தின் 10 மாவட்டங்களில் நாளை (02.09.2026) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. </p><h2>மழை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><p>இதன் காரணமாக <strong>இன்று (01-09-2026) மற்றும் நாளை (02-09-2026):</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்யக்கூடும். </p><p>சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்யக்கூடும். </p><p>ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்யக்கூடும்.</p><p><strong>நாளை மறுநாள் (03-09-2026):</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் லேசானது முதல் மிதமான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்யக்கூடும்.</p><p><strong>04-09-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழையும்</a></strong>, ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்யக்கூடும்.</p><p><strong>05-09-2026 மற்றும் 06-09-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong><a href="https://www.dailythanthi.com/topic/rain"> </a>பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong><ins>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</ins></strong></p><p><strong>01-09-2026 முதல் 04-09-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும்.</p><p><strong><ins>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</ins></strong></p><p><strong>01-09-2026 முதல் 04-09-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகத்தில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று (01-09-2026):</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/ மிதமான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>மீனவர்களுக்கான எச்சரிக்கை:</h2><p><strong><ins>தமிழக கடலோரப்பகுதிகள்:</ins></strong></p><p><strong>01-09-2026 முதல் 04-09-2026 வரை:</strong> தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong><ins>வங்கக்கடல் பகுதிகள்:</ins></strong></p><p><strong>01-09-2026 மற்றும் 02-09-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>03-09-2026 மற்றும் 04-09-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong><ins>அரபிக்கடல் பகுதிகள் :</ins></strong></p><p><strong>01-09-2026:</strong> மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>02-09-2026 முதல் 04-09-2026 வரை:</strong> எச்சரிக்கை ஏதுமில்லை.</p><p>மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி புதிய அனல் மின் நிலைய திட்டத்தை அரசு கைவிட வேண்டும்: பெ.சண்முகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-government-must-abandon-the-new-thermal-power-plant-project-in-thoothukudi-p-shanmugam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-government-must-abandon-the-new-thermal-power-plant-project-in-thoothukudi-p-shanmugam#comments</comments><guid isPermaLink="false">bdf8a776-e39a-426b-bb38-3ce44f394496</guid><pubDate>Tue, 01 Sep 2026 00:07:17 +0000</pubDate><atom:updated>2026-09-01T00:07:17.724Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,பெ.சண்முகம்,P. Shanmugam,அனல் மின் நிலையம்,Thermal Power Plants</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/rtl4io3o/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/rtl4io3o/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>ஈரோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-</p><p>தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய், பாலுக்கான கொள்முதல் விலையை மேலும் ரூ.3 உயர்த்தி, ஒரு லிட்டர் ரூ.44 கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். அதேநேரத்தில் மாட்டுத்தீவனம் விலை உய ராமல் அரசு பார்த்து கொள்ள வேண்டும். தூத்துக்குடியில் புதிதாக ஒரு அனல்மின் நிலையம் உருவாக்கப்படும் என்றும் சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலக்கரி பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் ஏற்கனவே உள்ள அனல்மின் நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில் தனியார் முதலீட்டில் அனல்மின் நிலையம் என்பது மின்சார கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும். எனவே தூக்குத்துகுடியில் அனல்மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். மேலும் அனல்மின் நிலையங்களுக்கு பதிலாக மாற்று வழிகளை பயன்படுத்தி மின்சார தேவையைப் பூர்த்தி செய்யவேண்டும்.</p><p>டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முதல் அமைச்சர் விஜய், இன்று தண்ணீர் திறந்து வைக்கிறார். இந்த ஆண்டு குறுவை சாகுபடி என்பது முற்றிலும் இல்லாமல் போய், ஒருபோக சாகுபடியா வது முழுமையாக நடைபெற வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் விவசாயிகள் இருக்கிறார்கள். எனவே கோர்ட்டு உத்தரவின்படி கர்நாடக அரசு நமக்கு வழங்க வேண்டிய 18 டி.எம்.சி. தண்ணீரை வழங்குவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இல்லையென்றால் சாகுபடி நிறைவு பெறாமல் விவசாயிக ளுக்கு நஷ்டம் தான் ஏற்படும். மேலும் தரமான விதை, உரம் உள்ளிட்டவைகள் தேவையான அளவுக்கு இருப்பு இருப்பதை அரசு உறுத்திப்படுத்த வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா விலை உயர்வு இன்று முதல் அமல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/srivilliputhur-palkova-price-hike-comes-into-effect-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/srivilliputhur-palkova-price-hike-comes-into-effect-today#comments</comments><guid isPermaLink="false">b4c69e81-15cf-4b2d-9d59-c2f36e7afc13</guid><pubDate>Mon, 31 Aug 2026 23:26:50 +0000</pubDate><atom:updated>2026-08-31T23:26:50.390Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஸ்ரீவில்லிபுத்தூர்,Srivilliputhur,பால்கோவா,ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா,Srivilliputhur palkova</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/drkbma42/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/drkbma42/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>ஸ்ரீவில்லிபுத்தூர்,</p><h2>ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா</h2><p>விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரானது ஆண்டாள் பிறந்த பூமி ஆகும். இதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கும் பிரசித்தி பெற்றது. தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.</p><p>ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா தயாரிப்பு தொழிலில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். முறையாக தயாரிக்கப்படும் பால்கோவா 10 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். தற்போது சீனி விலை அதிகரித்து உள்ளது. இதனால் பால் கோவா விலையை உயர்த்த வியாபாரிகள் முடிவு செய்தனர்.</p><h2>கிலோவுக்கு ரூ.40 வரை உயர்வு</h2><p>அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 1 கிலோ பால் கோவா ரூ.360-ல் இருந்து ரூ.400 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. ஒரு கிலோவுக்கு ரூ.40 விலை உயருகிறது. மேலும் பால் அல்வா ரூ.400-ல் இருந்து ரூ.450 ஆக விலை உயர்த்தப்பட்டு உள்ளது.</p><p>பால்கோவாவில் இருந்து தயாரிக்கப்படும் பால் கேக் மற்றும் திரட்டி பால் போன்றவை விலையும் கிலோவுக்கு ரூ.50 வரை உயர்த்தப்பட்டு இருப்பதாகவும், இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தாய்மாமன் தங்க மோதிர திட்டம்: கோவையில் கணக்கெடுக்கும் பணி தீவிரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thai-maman-gold-ring-scheme-survey-work-intensifies-in-coimbatore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thai-maman-gold-ring-scheme-survey-work-intensifies-in-coimbatore#comments</comments><guid isPermaLink="false">0e49b124-64a5-4e53-9f15-fe06cac3414b</guid><pubDate>Mon, 31 Aug 2026 21:52:57 +0000</pubDate><atom:updated>2026-08-31T21:52:57.091Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்,Thai Maman Gold Ring Scheme</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/n58e9anu/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/n58e9anu/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><h2>தாய்மாமன் தங்க மோதிரம்</h2><p>தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை வருகிற 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. அரசு ஆஸ்பத்திரிகளில் பிரசவத்தை ஊக்குவிப்பதும், தாய்மாமன் சீராக குழந்தைகளுக்கு தங்கம் வழங்கும் பாரம்பரிய பண்பாட்டை போற்றும் வகையிலும் செயல்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. </p><p>இதில் அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு 22 கேரட் 916 தரத்துடன் கூடிய 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்காக அரசு ரூ.755.83 கோடி ஒதுக்கீடு செய் துள்ளது. டெண்டரும் 2 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்காக ஆண்டுக்கு 4 லட்சத்து 41 ஆயிரத்து 667 தங்க மோதிரங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>கணக்கெடுப்பு பணி தீவிரம்</h2><p>இதுதொடர்பாக கோவை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, கோவை மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 22-ந் தேதி முதல் பிறந்த குழந்தைகள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளன. கோவை மாநகர் மற்றும் புறநகர் என அனைத்து பகுதிகளிலும் கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகிறது. தற்போது வரை 1,200 குழந்தைகள் இந்த திட்டத்தில் பயன்பெற உள்ளனர்.</p><p>வருகிற 15-ந் தேதி திட்டம் தொடங்கும்போது, கோவை அரசு ஆஸ்பத்திரி, பொள்ளாச்சி மற்றும் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிகளில் இந்த திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைக்க உள்ளனர். முதற்கட்டமாக வருகிற 14-ந் தேதி தொடர்ந்து கணக்கெடுக்கப்பட்டு, திட்டம் தொடங்கிய பிறகு அனைத்து பயனாளர்களுக்கும் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 52 கோவில்களில் செல்போனுக்கு இன்று முதல் தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-mobile-phones-in-52-temples-across-tamil-nadu-comes-into-effect-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-mobile-phones-in-52-temples-across-tamil-nadu-comes-into-effect-today#comments</comments><guid isPermaLink="false">a634b469-0c42-40fb-b6c5-5f12462ca22c</guid><pubDate>Mon, 31 Aug 2026 21:12:25 +0000</pubDate><atom:updated>2026-08-31T21:12:25.165Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,temples,கோவில்கள்,தமிழகம்,cell phone,செல்போன்,mobile phone</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/vt8eic00/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/vt8eic00/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டில் முதல் கட்டமாக 52 பெரிய கோவில்களில் செல்போன் கொண்டு செல்ல இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தடை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள கோவில் களில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><h2>கோவில்களில் செல்போனுக்கு தடை</h2><p>தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் புனிதத் தன்மை மற்றும் ஆன்மிகச் சூழலைப் பாதுகாக்கும் வகையில், கோவிலுக்குள் செல்போன் பயன்படுத்துவதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் பல கோவில்களில் பக்தர்கள் செல்போன்கள் மூலம் புகைப்படம், வீடியோ, செல்பி எடுக்கிறார்கள்.</p><p>ரீல்ஸ் உள்ளிட்ட வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்வதாகவும் இந்து சமய அறநிலையத்துறைக்கு புகார்கள் வந்தன. அதனடிப்படையில் இன்று (செப்டம்பர்-1) முதல் 52 கோவில்களில் செல்போன் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் செல்போன்களைப் பாதுகாக்க கோவில்களில் கட்டணத்துடன் பாதுகாக்கும் பெட்டக வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.</p><h2>பார்த்தசாரதி- வடபழனி</h2><p>சென்னையில் வடபழனி முருகன் கோவில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில், குன்றத்தூர் முருகன் கோவில், மாங்காடு காமாட்சி அம்மன், பெரியபாளையம் பவானி அம்மன் கோவில், வல்லக்கோட்டை சுப்பிரமணிய சாமி கோவில், காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், ஏகாம்பரநாதர் கோவில், திருவள்ளூர் வீரராகவர் கோவில், திருத்தணி முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் இன்று முதல் செல்போன் கொண்டு செல்லத் தடை விதிக்கப்படுகிறது.</p><p><strong>இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரி கள் கூறியதாவது:-</strong></p><h2><strong>பாதுகாப்பு பெட்டகம்</strong></h2><p>தமிழகத்தில் உள்ள பெரிய கோவில்களில் நாளை (இன்று) முதல் செல்போன்கள் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள திருச்செந்தூர், பழனி, திருப்பரங்குன்றம், திருவண்ணாமலை, சமயபுரம், ஸ்ரீரங்கம், நெல்லையப்பர், சுசீந்திரம், மதுரை அழகர் கோவில், கோவை கோணியம்மன் கோவில், சேலம் கோட்டை மாரியம்மன் கோவில், ராமேசுவரம் உள்ளிட்ட 52 கோவில்களில் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோவில்களில் செல்போன் பாதுகாப்பு பெட்டகம் அமைக்கப்பட்டுள்ளது.</p><p>இதுகுறித்து பக்தர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெரிய கோவில்களில் 20 ஆயிரம் செல்போன்கள் வைக்கும் வகையில் பாதுகாப்பு பெட்டக வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவிழா காலங்களிலும், முக்கிய நாட்களிலும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தால் அவர்கள் செல்போன்களை வைக்க இடமில்லாமல் தவிக்க நேரிடும். இதனால் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்படும்.</p><h2>அதிகாரிகள் மீது நடவடிக்கை</h2><p>இதனைத் தவிர்க்க வீடுகள் மற்றும் வெளியூர் பக்தர்கள் விடு திகள் அல்லது கார்களில் வைத்துவிட்டு வருவது நல்லது. கோவில்களில் புகைப்படம், வீடியோ எடுத்து வலைதளங்களில் வெளியிடப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றால் அதற்கு பொறுப்பான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னைக்கு வந்த 850 டன் வெங்காயம்... ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அனுப்பி வைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/850-tonnes-of-onions-arrived-in-chennai-dispatched-to-every-district</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/850-tonnes-of-onions-arrived-in-chennai-dispatched-to-every-district#comments</comments><guid isPermaLink="false">7742f00f-abfb-4a09-bcfd-71c07fd4b491</guid><pubDate>Mon, 31 Aug 2026 20:23:24 +0000</pubDate><atom:updated>2026-08-31T20:23:24.233Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,onion,வெங்காயம்,வெங்காயம் விலை,Onion price</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/s9nn4sa3/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/s9nn4sa3/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாசிக்கில் இருந்து சென்னைக்கு 'காந்தா எக்ஸ்பிரஸ்' சரக்கு ரெயில் மூலம் 850 டன் வெங்காயம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வெங்காயம் பொதுமக்களுக்கு கிலோ ரூ.35-க்கு வழங் கப்பட உள்ளது.</p><h2>வெங்காய விலை உயர்வு</h2><p>பருவமழை குறைவால் விளைச்சல் பாதிக்கப்பட்டு டெல்லி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் வெங்காய விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல நகரங்களில் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.50 முதல் ரூ.65 வரை விற்பனை செய்யப்படும் நிலையில், விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு கையிருப்பு வெங்காயத்தை சந்தைகளுக்கு வினியோகிக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.</p><h2>850 டன் வெங்காயம்</h2><p>அந்தவகையில், 'காந்தா எக்ஸ்பிரஸ்' சரக்கு ரெயில்கள் மூலம் முக்கிய நகரங்களுக்கு வெங்காயத்தை மத்திய அரசு அனுப்பி வருகிறது. சமீபத்தில் டெல்லிக்கு 500 டன் வெங்காயம் அனுப்பப்பட்ட நிலையில், தற்போது சென்னைக்கு 848.50 டன் வெங்காயம் வந்துள்ளது. கடந்த 29-ந்தேதி மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் மன்மாட் பகுதியில் இருந்து இந்த வெங்காயம் சரக்கு ரெயிலில் ஏற்றி அனுப்பப்பட்டது. அந்த ரெயில் நேற்று காலை தண்டையார்பேட்டை பணிமனைக்கு வந்து சேர்ந்தது.</p><p>இதனைத்தொடர்ந்து, சரக்கு ரெயிலில் கொண்டுவரப்பட்ட வெங்காயத்தை பிரித்து தமிழ்நாட்டில் உள்ள 21 மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி மாலை 5 மணிக்கு தொடங்கியது. சரக்கு ரெயிலின் 21 பெட்டிகளில் மலைபோல் குவித்து வெங்காயம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒரு லாரியில் 25 டன் வீதம் ஏற்றி, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அனுப்பப்பட்டு வருகிறது. இவை ஓரிரு நாட்களுக்குள் கூட்டுறவு அங்காடிகள், ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு தமிழக அரசால் வினியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h2>1 கிலோ வெங்காயம்</h2><p>இதுகுறித்து, தேசிய கூட்டுறவு சந்தையியல் சம்மேளனத்தின் மாநில தலைமை அதிகாரி பிரகாஷ் ராவ் கூறியதாவது:- தற்போது ரெயிலில் கொண்டுவரப்பட்ட வெங்காயத்தை தமிழக அரசு, லாரிகள் மூலம் அந்தந்த மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு அங்காடி மற்றும் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கும். மாநில அரசு 1 கிலோ வெங்காயத்தை ரூ.35 என்ற அடிப்படையில் நுகர்வோருக்கு விற்பனை செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கிறார் முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-is-releasing-water-from-the-mettur-dam-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-is-releasing-water-from-the-mettur-dam-today#comments</comments><guid isPermaLink="false">2b1f4b4d-417a-406a-9511-f4893984875f</guid><pubDate>Mon, 31 Aug 2026 19:39:16 +0000</pubDate><atom:updated>2026-08-31T19:39:16.328Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,மேட்டூர் அணை,Mettur dam,மேட்டூர்,Mettur,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/yl5bl646/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/yl5bl646/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை முதல்-அமைச்சர் விஜய் இன்று (செவ்வாய்க்கிழமை) திறந்து வைக்கிறார்.</p><h2>மேட்டூர் அணை</h2><p>டெல்டா விவசாயிகளின் உயிர் மூச்சான மேட்டூர் அணை மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர் போன்ற 13 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.</p><p>ஆனால் இந்தாண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சரிவர மழை பெய்யாத காரணத்தால் குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்படவில்லை. ஆனால் கடந்த 2 வாரங்களாக கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.</p><p>இதையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 90 அடியை தாண்டியதை தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து செப் டம்பர் 1-ந் தேதி (அதாவது இன்று) தண்ணீர் திறந்துவிடப்படும் என்றும், அந்த தண்ணீர் 45 நாட்கள் திறந்துவிடப்படும் தமிழக அரசு அறிவித்தது.</p><h2>முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைக்கிறார்</h2><p>அதன்படி, மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதற்காக முதல்-அமைச்சர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை 10.30 மணிக்கு சேலம் வருகிறார். ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வரும் அவர், அங்கிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக மேட்டூர் செல்கிறார்.</p><p>பின்னர் அவர் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீரை திறந்து வைக்கிறார். பின்னர் பாசனத்தின் தேவைக்கு ஏற்றவாறு திறக்கப்படும் தண்ணீரின் அளவானது படிப்படியாக அதிகரிக்கப்படும். முதல்-அமைச்சரை வரவேற்கும் விதமாக விமான நிலையத்தில் இருந்து மேட்டூர் வரை சாலையில் இருபுறமும் கட்சி கொடிகள் கட்டப்பட்டுள்ளன.</p><h2>போலீஸ் பாதுகாப்பு தீவிரம்</h2><p>முதல்-அமைச்சர் விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் பொதுமக்கள் அதிகளவில் வரக்கூடும் என்பதால் அவர் செல்லும் வழி யில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், ஓமலூரில் இருந்து மேச்சேரி, மேட்டூர் வரை சாலையின் இருபுறங்களிலும் இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல்-அமைச்சர் விஜய் சேலம் வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோவையில் இருந்து நேபாளம் சென்ற 8 பேரின் நிலை என்ன...?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-is-the-status-of-the-eight-people-who-traveled-from-coimbatore-to-nepal</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-is-the-status-of-the-eight-people-who-traveled-from-coimbatore-to-nepal#comments</comments><guid isPermaLink="false">ca2503a7-1710-49a7-b961-60da04639286</guid><pubDate>Mon, 31 Aug 2026 18:24:50 +0000</pubDate><atom:updated>2026-08-31T18:24:50.163Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,Nepal,நேபாளம்,nepal flood,நேபாளம் வெள்ளம்,Nepal Floods</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/fztqwvtu/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/fztqwvtu/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><h2>வெள்ளப்பெருக்கு</h2><p>நேபாளம் சென்று அங்கிருந்து திபெத் வழியாக கயிலாய மலைக்கு பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். இதுதவிர பல்வேறு நாடுகளை சேர்ந்த மலையேற்ற சாகச வீரர்களும் இந்த பகுதிக்கு செல்கின்றனர். இந்த நிலையில் நேபாளத்தில் உள்ள ரசுவா மாவட்டம் போடேகோஷி நதியில் கடந்த 26-ந் தேதி பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப் பெருக்கில் இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளை சேர்ந்த ஏராளமானோர் சிக்கி கொண்டனர்.</p><p>இதில் தற்போது வரை வெள்ளத்தில் சிக்கி இறந்த 700-க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 2,500-க்கும் மேற்பட்டவர்கள் காணவில்லை என நேபாள அரசு தெரிவித்து உள்ளது. மீட்பு பணிகளில் நேபாள நாட்டின் ராணுவம் உள்பட ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் ஒவ்வொரு பகுதியாக சென்று மீட்பு பணிகள் மற்றும் இறந்தவர்க ளின் உடல்களை மீட்டு வருகின்றனர்.</p><h2>தமிழக பயணிகள்</h2><p>நேபாளத்துக்கு சென்றிருந்த தமிழகத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி கொண்ட னர். இதில் 250 பேர் வரை மீட்கப்பட்டு உள்ளனர். மீதம் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களை மீட்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இதற்காக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் டெல்லியில் முகாமிட்டு உள்ளனர்.</p><p>பேரிடர் ஏற்பட்டு 5 நாட்களை கடந்த பின்னரும் கோவையில் இருந்து சுற்றுலா சென்ற 8 பேர் குறித்து எந்த தகவலும் இதுவரை கிடைக்காமல் உள்ளது. அதேபோன்று ஈஷா யோகா மையம் மூலம் நேபாளம் சுற்றுலா சென்றதில் 80 பேர் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் அவர்களது உறவினர்கள் கவலை அடைந்து உள்ளனர்.</p><h2>டெல்லிக்கு சென்ற உறவினர்கள்</h2><p>கயிலாய மலை யாத்திரைக்கு கோவையில் இருந்து ஏராளமானவர்கள் சென்றனர். இதில் 40 பேரின் காத்மாண்டுவில் பத்திரமாக இருப்பது தெரியவந்தது. அதேநேரத்தில் வடவள்ளி, சாய்பாபாகாலனி, நஞ்சுண்டாபுரம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்ற 8 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. அவர்கள் இதுவரை யாரையும் தொடர்பு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து உறவினர்களில் சிலர் டெல்லி சென்று உள்ளனர்.</p><p>டெல்லியில் உள்ள தமிழக அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இதில் நேபாள நாட்டின் நிலவரம் பற்றி உடனடியாக அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது. தங்கள் உறவினர்களை மீட்கவும், மீட்பதற்கு தேவையான தகவல்கள், உதவிகளை அளிக்கவும் சிலர் டெல்லி சென்று உள்ளனர். 5 நாட்கள் ஆகியுள்ள நிலையில் கோவை குடும்பத்தினர் பற்றி எந்த தகவலும் இதுவரை கிடைக்காமல் உள்ளது. எனவே மாயமானவர்கள் பற்றி தகவல்களை பெறுவதற்காக தீவிர முயற்சியில் உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>அமைச்சர் மரியவில்சன் மீதான வழக்கு விசாரணை 4-ம் தேதிக்கு தள்ளிவைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/hearing-of-the-case-against-minister-maria-wilson-adjourned-to-the-4th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/hearing-of-the-case-against-minister-maria-wilson-adjourned-to-the-4th#comments</comments><guid isPermaLink="false">52a21c7b-0162-45b1-9184-72954aac3d80</guid><pubDate>Mon, 31 Aug 2026 17:12:58 +0000</pubDate><atom:updated>2026-08-31T17:12:58.363Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை ஐகோர்ட்டு,Chennai High Court,maria wilson,அமைச்சர் மரிய வில்சன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/yq8g5btn/CHENNAI-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/yq8g5btn/CHENNAI-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நிதி அமைச்சர் மரியவில்சன், கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ம் தேதி புதுச்சேரி, எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குளோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மரியகுளோத், அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாக லாஸ்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். </p><p>புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் (ஜேஎம் 1) விசாரணையில் உள்ள இந்த வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் பெற ஆஜராக உத்தரவிட்ட போதும், மரிய வில்சன் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்த வழக்கை புதுச்சேரி கோர்ட்டில் ஆஜராவதில் விலக்கு அளிக்கவும், ரத்து செய்ய கோரியும் மரிய வில்சன் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.</p><p>அதற்கு, “நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டேன் எனக் கூற நிதி அமைச்சர் மரிய வில்சன் இங்கிலாந்து அரசரா” என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியதுடன் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராகவும் அறிவுறுத்தியது. அதையடுத்து ஆக.31-ம் தேதிக்குப் பிறகு அமைச்சர் மரிய வில்சன் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவார் என உறுதியளிக்கப்பட்டது.</p><p>அதைத் தொடர்ந்து புதுச்சேரி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற அனுமதித்து, தள்ளுபடி செய்யப்பட்டது.இவ்வழக்கை விசாரித்து வந்த புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் சேரலாதன் கடந்த வாரம் மாஹேவுக்கு மாற்றப்பட்டார். இச்சூழலில், இன்று முதலாவது குற்றவியல் நடுவர் மன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.</p><p>அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகவில்லை. இரண்டாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் சந்திரசேகர் முதலாவது குற்றவியல் நடுவர் மன்றத்துக்கு பொறுப்பு வகித்ததால் அவர் விசாரித்தார். அப்போது அமைச்சரின் சகோதரர் தரப்பு வழக்கறிஞர் பிரவீன் இவ்வழக்கை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி விரைந்து விசாரிக்க அறிவுறுத்தினார். அதைத்தொடர்ந்து இவ்வழக்கை வரும் 4-ம் தேதிக்கு குற்றவியல் நீதித்துறை நடுவர் தள்ளிவைத்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஜிடிபி வளர்ச்சி 7.8 சதவீதம் ஆக உயர்வு; பிரதமர் மோடியின் வலுவான பொருளாதார கொள்கை - வானதி சீனிவாசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/gdp-growth-rises-to-7-8-percent-vanathi-srinivasan-on-modi-economic-policy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/gdp-growth-rises-to-7-8-percent-vanathi-srinivasan-on-modi-economic-policy#comments</comments><guid isPermaLink="false">b355a107-0743-4ff2-b294-f849e3b91e0c</guid><pubDate>Mon, 31 Aug 2026 16:34:08 +0000</pubDate><atom:updated>2026-08-31T16:34:08.181Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரதமர் மோடி,Prime Minister Modi,வானதி சீனிவாசன்,economic,GDP,கொள்கை,பொருளாதார,Strong</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/tipr2rkr/vanathi-srinivasan.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:title><media:description type="html"><![CDATA[ முன்னாள் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/tipr2rkr/vanathi-srinivasan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பிரதமர் மோடியின் வலுவான பொருளாதார கொள்கை: 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் 7.8 சதவிதம் ஜிடிபி வளர்ச்சியடைந்துள்ளது என்று <a href="https://www.dailythanthi.com/topic/vanathi-srinivasan">வானதி சீனிவாசன்</a> தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, முன்னாள் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p> <h2>பொருளாதார மந்தநிலை</h2><p>தேசிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி  கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் (2025-2026) வரையிலான முதல் காலாண்டில் 6.5% மட்டுமே ஜிடிபி வளர்ச்சி பெற்றிருந்தது. தொடர்ந்து உலகளவில் பொருளாதார மந்தநிலை நிலவிய சூழல், தங்கம் விலை உயர்வு, அமெரிக்கா- ஈரான் போர், அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு சர்வதேச மற்றும் உள்நாட்டு காரணிகள் போன்றவை நாட்டின் பொருளாதாரத்திற்கு அழுத்தத்தை ஏற்படுத்தியது</p> <h2>ஜிடிபி வளர்ச்சி</h2><p>இந்த நிலையிலும், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF">பிரதமர் மோடி</a> தலைமையிலான மத்திய பாஜக அரசின் வலிமையான பொருளாதார கொள்கைகளால் முந்தைய ஆண்டு காலாண்டை காட்டிலும் 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் உண்மையான ஜிடிபி வளர்ச்சி 7.8 சதவிதம்  ஆக உயர்ந்துள்ளது. </p><h2>சான்றாகும்</h2><p>இந்த மகத்தான சாதனை எத்தனை சவால்கள் வந்தாலும்  நாட்டின் பொருளாதாரம் வலிமையாகவும், தொடர்ந்து முன்னேறி வருவதை பிரதிபலிக்கிறது. இந்திய பொருளாதாரம் மேலும் வலுப்பெற்று வருவதற்கு இது மகத்தான சான்றாகும்.  </p>]]></content:encoded></item><item><title>ஈளாடா தடுப்பணையில் வேகமாக குறைந்து வரும் தண்ணீர்; கோத்தகிரியில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-level-falls-fast-in-ealada-dam-kothagiri-faces-drinking-water-crisis-risk</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-level-falls-fast-in-ealada-dam-kothagiri-faces-drinking-water-crisis-risk#comments</comments><guid isPermaLink="false">66f277ea-66b7-4c72-a875-2b5f2f830a47</guid><pubDate>Mon, 31 Aug 2026 15:47:50 +0000</pubDate><atom:updated>2026-08-31T15:47:50.531Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Risk,drinking water,தண்ணீர்,Dam,கோத்தகிரி,Kotagiri,தடுப்பணை,குடிநீர் தட்டுப்பாடு,அபாயம்,low water level</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/bup2og2b/dam-water.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஈளாடா தடுப்பணை]]></media:title><media:description type="html"><![CDATA[ ஈளாடா தடுப்பணையில் வேகமாக குறைந்து வரும் தண்ணீர்; கோத்தகிரியில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/bup2og2b/dam-water.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோத்தகிரி, </p><p>ஈளாடா தடுப்பணையில் வேகமாக குறைந்து வரும் தண்ணீரினால் கோத்தகிரியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.</p><h2>மலைப்பகுதி ஊற்று </h2><p>நீர்நீலகிரி மாவட்டம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF">கோத்தகிரி</a> நகராட்சிக்கு சொந்தமான முக்கிய தடுப்பணை, கோடநாடு அருகே உள்ள ஈளாடா கிராம பகுதியில் அமைந்துள்ளது. இந்த தடுப்பணையானது சுமார் 90 மீட்டர் நீளமும், 60 மீட்டர் அகலமும் கொண்டது. மேலும், இதன் ஆழம் சராசரியாக 8 அடி முதல் 12 அடி வரை இருக்கும். </p><h2>சுத்திகரிப்பு நிலையம்</h2><p>இங்கு தேக்கப்படும் தண்ணீரானது, குழாய்கள் மூலம் சக்திமலை பகுதியில் அமைந்துள்ள நகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு தண்ணீர் முழுமையாக சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.பின்னர், இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கோத்தகிரி நேரு பூங்கா அருகே அமைந்துள்ள நீர் உந்து நிலைய தொட்டிகளுக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு தேக்கி வைக்கப்படுகிறது. அங்கிருந்து குழாய்கள் மூலமாக நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு சுழற்சி முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.</p><h2>ரூ.43 கோடியில் அம்ருத் 2.0 திட்டம்</h2><p> ஈளாடா மற்றும் அளக்கரை கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ், ‘அம்ருத் 2.0’குடிநீர் விநியோக மேம்பாட்டுத் திட்டம் தயார் செய்யப்பட்டது. தற்போது இந்த திட்டத்திற்காக மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் ரூ.43 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான குழாய்கள் பதிக்கும் பணிகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p> <h2>விவசாயிகள் கவலை</h2><p>இந்த தடுப்பணை நீரை நம்பி அப்பகுதி விவசாயத்திற்கும் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.இங்குள்ள தண்ணீரை நம்பி, சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கேரட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ் உள்ளிட்ட மலைக்காய்கறிகளை பயிரிட்டு தீவிரமாக விவசாயம் செய்து வருகின்றனர்.</p><h2>நீர்மட்டம் மளமளவென சரிந்தது</h2><p>கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோடநாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்தது. இதனால் தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அது முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. உபரிநீரும் பெருக்கெடுத்து வெளியேறியது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், கடந்த சில மாதங்களாக தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாமல் ஏமாற்றியது. </p><p>இதனால் தடுப்பணைக்கு வரும் நீர்வரத்து வெகுவாக குறைந்தது. அதேநேரம், தடுப்பணையில் இருந்து குடிநீர் விநியோகத்திற்காக தொடர்ந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வந்ததால், நீர்மட்டம் மளமளவென சரிந்து தற்போது வெறும் 7 அடியாக குறைந்து விட்டது.</p><h2>அளக்கரை குடிநீர் திட்டம்</h2><p>இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, கோத்தகிரி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஈளாடா தடுப்பணை நீரை மட்டும் நம்பி இருக்காமல், அளக்கரை திட்டத்தின் கீழும் குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் குடிநீர் தட்டுபாடு ஏற்படாது என்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் பணியாளர்களுக்கான நல அறிவிப்புகள்.. தொழிலாளர் வாழ்வுரிமைச் சங்கம் வரவேற்பு!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/welfare-announcements-for-tasmac-employees-workers-rights-association-welcomes-the-move</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/welfare-announcements-for-tasmac-employees-workers-rights-association-welcomes-the-move#comments</comments><guid isPermaLink="false">950f9ace-e188-465a-9550-ed694094ec28</guid><pubDate>Mon, 31 Aug 2026 15:38:17 +0000</pubDate><atom:updated>2026-08-31T15:38:17.542Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டாஸ்மாக்,Tasmac,Velmurugan,வேல்முருகன்,தி.வேல்முருகன்,டாஸ்மாக் ஊழியர்கள்,Tasmac employees</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/oppmo6ql/velmurugan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/oppmo6ql/velmurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>தொழிலாளர் வாழ்வுரிமைச் சங்கம் வரவேற்பு</h2><p>இன்று (31.08.2026) தமிழ்நாடு சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் க. விக்னேஷ் வெளியிட்ட டாஸ்மாக் பணியாளர்களுக்கான பல்வேறு நல அறிவிப்புகளைத் தொழிலாளர் வாழ்வுரிமைச் சங்கம் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது. டாஸ்மாக் பணியாளர்கள் நீண்டகாலமாகப் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். </p><p>இந்நிலையில், தொழிற்சங்கங்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாகப் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புகள் முக்கியமான முன்னேற்றமாகும்.</p><p>அதன்படி, 01.09.2026 முதல் டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் பணியாற்றி வரும் மேற்பார்வையாளர்களுக்கு ரூ.33,023, விற்பனையாளர்களுக்கு ரூ.30,284, உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.28,680 என ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என்றும், இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.486.90 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>வரவேற்கத்தக்கவை</h2><p>மேலும், பணியாளர்களுக்கு ரூ.20,000 பண்டிகை முன்பணம், ஆண்டுதோறும் மூன்று சீருடைகளுக்கான துணி மற்றும் தையல் செலவாக ரூ.6,000, சுழற்சி முறையில் 8 மணி நேரப் பணி, வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை, மாதத்திற்கு இரண்டு நாட்கள் ஊதியத்துடன் கூடிய தற்செயல் விடுப்பு ஆகிய அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.</p><p>டாஸ்மாக் கடைகளில் தூய்மைப் பணி மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்வதற்காக மாநகரப் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு மாதம் ரூ.5,000, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் ரூ.4,000, கிராமப்புறங்களில் ரூ.3,000 வழங்கப்படும் என்பதும், தகுதியுடைய 250 டாஸ்மாக் பணியாளர்களைச் சிறப்புத் தேர்வு மூலம் இளநிலை உதவியாளர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கவை.</p><p>பணியாளர்களின் நீண்டகாலக் கோரிக்கைகளில் சிலவற்றிற்குத் தீர்வு காணும் வகையில் இன்றைய அறிவிப்புகள் வெளியாகியிருப்பது பாராட்டுக்குரியது. இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட முதல்-அமைச்சர் விஜய்க்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் க. விக்னேஷுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் தொழிலாளர் வாழ்வுரிமைச் சங்கம் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.</p><h2>ஓய்வு வயதை உயர்த்த வேண்டும்</h2><p>அதேவேளையில், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் மற்றும் டாஸ்மாக் பணியாளர்களின் ஓய்வுபெறும் வயதை 60-ஆக உயர்த்துதல் உள்ளிட்ட இன்னும் நிலுவையில் உள்ள கோரிக்கைகளையும் அரசு பரிசீலித்து விரைந்து நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.</p><p>காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் உள்ளிட்ட நடைமுறைகளால் பணியாளர்களுக்குக் கூடுதல் பணிச்சுமையோ செலவினச் சுமையோ ஏற்படாத வகையில், தேவையான நிர்வாக நடவடிக்கைகளை டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் தொழிலாளர் வாழ்வுரிமைச் சங்கம் வலியுறுத்துகிறது.</p><p>தொழிலாளர்களின் உரிமை மற்றும் நலனைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஆதரிப்பதுடன், நிலுவையில் உள்ள கோரிக்கைகளுக்கும் அரசு விரைந்து தீர்வு காண வேண்டும் எனத் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தொழிலாளர் </a>வாழ்வுரிமைச் சங்கம் கேட்டுக்கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 15 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/15-ips-officers-transferred-in-tamil-nadu-tamil-nadu-government-orders</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/15-ips-officers-transferred-in-tamil-nadu-tamil-nadu-government-orders#comments</comments><guid isPermaLink="false">b096e5f2-832f-4a5c-8cf3-1316384dcb3e</guid><pubDate>Mon, 31 Aug 2026 15:38:09 +0000</pubDate><atom:updated>2026-08-31T15:38:09.074Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இடமாற்றம்,ஐ.பி.எஸ். அதிகாரிகள்,IPS Officers,transferred,தமிழக அரசு உத்தரவு,Tamil Nadu government orders</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/34iuu2ba/tamilnadu.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக அரசு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/34iuu2ba/tamilnadu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை:</p><p>தமிழ்நாட்டில் 15 ஐ.பி.எஸ். அதிகாரிகளை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D">பணியிட மாற்றம் </a>செய்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>பணியிட மாற்றம்</h2><p>அதன்படி, தூத்துக்குடி ஊரக உதவி காவல் கண்காணிப்பாளராக ஏ.நாயர், பட்டுக்கோட்டை உதவி காவல் கண்காணிப்பாளராக பி.அங்கிதா, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு உதவி காவல் கண்காணிப்பாளராக எஸ்.அஸ்வினி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><p>திருநெல்வேலி ஊரக உதவி காவல் கண்காணிப்பாளராக பிஸ்வாஜித் பண்டா, சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளராக டி.ஜே.சத்ரிய கவின், திருவெறும்பூர் உதவி காவல் கண்காணிப்பாளராக எஸ்.இன்பா நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><p>திண்டுக்கல் உதவி காவல் கண்காணிப்பாளராக பி.மஞ்சுமா, ராசிபுரம் உதவி காவல் கண்காணிப்பாளராக மண்ணம் சுஜித் சம்பத், கோவில்பட்டி உதவி காவல் கண்காணிப்பாளராக நீல் சர்மா, ராமநாதபுரம் உதவி காவல் கண்காணிப்பாளராக கே.நேகா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.</p><p>நாகப்பட்டினம் உதவி காவல் கண்காணிப்பாளராக பிரியங்கா பார்கவ், திருவண்ணாமலை ஊரக உதவி காவல் கண்காணிப்பாளராக ராகுல் வி.கோபால், ராஜபாளையம் உதவி காவல் கண்காணிப்பாளராக சைந்தானே ஸ்வப்னிலா அனில் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><p>மேலும், மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் உதவி காவல் கண்காணிப்பாளராக தனூ சிங், மதுரை மாநகரம் அண்ணாநகர் சரக உதவி காவல் கண்காணிப்பாளராக ஆஷிஷ் புனியா நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கடலூர் அருகே மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்; ஓட்டுநர்கள் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/2-trucks-carrying-sand-seized-near-cuddalore-drivers-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/2-trucks-carrying-sand-seized-near-cuddalore-drivers-arrested#comments</comments><guid isPermaLink="false">c2773540-899e-470d-8292-72e13454a6ce</guid><pubDate>Mon, 31 Aug 2026 15:31:17 +0000</pubDate><atom:updated>2026-08-31T15:31:17.355Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Cuddalore,கடலூர்,arrest,மணல்,லாரிகள் பறிமுதல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/zipe6gdn/areest33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/zipe6gdn/areest33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர்,</p><p>கடலூர் அருகே எம். சேன்டு உட்பட கிராவல் மண் கடத்திய 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை ஒட்டி வந்த 2 ஒட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர்.</p><p>இது குறித்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">கடலூர்</a> மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்தாவது:</p><p>கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உரிய ஆவணமின்றி யூனிட் கிராவல் மண் மற்றும் யூனிட் எம். சேன்ட் ஆகியவற்றை  லாரிகளில் கடத்தி வந்த லாரிகளையும் பறிமுதல் செய்ததுடன் அதன் ஓட்டுநரை கைது செய்தனர்.</p><p>இதுகுறித்து நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து பாலூர் பகுதியைச் சேர்ந்த புஷ்பநாதன் மகன் கணேசமூர்த்தி (26). மற்றும் குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்த நாகப்பன் மகன் கோபி (25), ஆகிய ஓட்டுநர்களை கைது செய்தும், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சவால்களை தகர்த்த பிரதமர் மோடியின் ராஜதந்திரம் - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/prime-minister-modis-diplomacy-shatters-challenges-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/prime-minister-modis-diplomacy-shatters-challenges-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">2480fa08-8e3b-464b-ae5d-8bcd9ef1b45c</guid><pubDate>Mon, 31 Aug 2026 15:09:25 +0000</pubDate><atom:updated>2026-08-31T15:09:25.327Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரதமர் மோடி,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Prime Minister Modi,சவால்கள்,Challenges,Diplomacy</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/h6jn9xi3/nainar.31.08.2026.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன் ]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/h6jn9xi3/nainar.31.08.2026.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சவால்களை தகர்த்த பிரதமர் மோடியின் ராஜதந்திரம்: பொருளாதார வளர்ச்சியில் புதிய சகாப்தம் படைக்கும் பாரதம் என்று தமிழக பாஜக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன்</a> தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>ஜிடிபி  வளர்ச்சி</h2><p>2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் 7.8% என்ற மகத்தான ஜிடிபி  வளர்ச்சியை இந்தியா எட்டியிருப்பது ஒரு வரலாற்று சாதனையாகும். நமது பாரத நாடு படைத்துள்ள இந்த அசுர வளர்ச்சி,  பிரதமர் மோடி தொலைநோக்கு பார்வைக்கும், நமது நாட்டின் வலிமையான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">பொருளாதார</a> அடிப்படைகளுக்கும் சான்றாகும்.</p> <h2>உலகளாவிய சவால்கள்</h2><p>சர்வதேச அளவில் நிலவும் புவிசார் அரசியல் குழப்பங்கள், எண்ணெய் விலை உயர்வு என பல உலகளாவிய சவால்களை நாம் எதிர்கொண்ட போதிலும், நமது பிரதமர் மோடியின் ராஜதந்திர நடவடிக்கைகளும், 140 கோடி மக்களின் கூட்டு முயற்சியும் இணைந்து இந்த சவால்களை தகர்த்தெறிந்து, நாட்டை அசுர வேகத்தில் வளர்ச்சி பாதையில் அழைத்து சென்றுள்ளன. இது ஒவ்வொரு இந்தியனும் பெருமிதம் கொள்ள வேண்டிய தருணமாகும்.</p> <h2>நமது பயணம் எப்போதும் தொடரும்</h2><p>இந்தியா முன்னேறாது என்று அவநம்பிக்கையை விதைத்தவர்களின் கணிப்புகள் மீண்டும் பொய்த்து போயுள்ளன. சவால்களை சாதனைகளாக மாற்றி, பாரதத்தின் பொருளாதாரத்தை உலக அரங்கில் அசைக்க முடியாத சக்தியாக உயர்த்தும் நமது பயணம் எப்போதும் தொடரும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் மீண்டும் அமைச்சர்கள் இருக்கை அருகில் அமர்ந்த முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-again-sits-near-the-ministerial-bench-in-the-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-again-sits-near-the-ministerial-bench-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">14216094-9e1c-47ea-a01e-c2714a6f17c4</guid><pubDate>Mon, 31 Aug 2026 14:48:40 +0000</pubDate><atom:updated>2026-08-31T14:48:40.972Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,Vijay,சட்டசபை,TNAssembly,முதல்-அமைச்சர் விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/qq74k57f/assamblyone33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
சட்டசபை]]></media:title><media:description type="html"><![CDATA[  முதல்-அமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/qq74k57f/assamblyone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டமன்றத்தில் முதல் -அமைச்சர் விஜய் அமைச்சர்கள் இருக்கை அருகில் மாறி அமர்ந்தார். </p><p>தமிழக சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் விஜய், அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் எங்கு இருக்க வேண்டுமென முடிவு செய்வது சபாநாயகர்.</p><p>அந்த வரிசைப்படி தான் அமரவேண்டும். சில சமயங்களில் சட்டமன்ற உறுப்பினர்கள் மாறி அமர்ந்தால் சபாநாயகர் உறுப்பினர்களை தங்கள் இருக்கைக்கு செல்லுங்கள் எனகூறுவது உண்டு.</p><p>முதல்-அமைச்சருக்கு தனி இருக்கை அமைக்கப்பட்டிருக்கும் அதில் வெறு யாரும் அமரமாட்டார்கள்.  </p><p>கடந்த வாரம் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a>, அமைச்சர்கள் இருக்கைக்கு பக்கத்தில் அமர்ந்து அமைச்சர் செங்கோட்டையனுடன் ஆலோசனை மேற்கொண்டார். இன்று அதே போல் அமைச்சர்கள் இருக்கையில் அமர்ந்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் ஆலோசனைமேற்கொண்டு அவை நடவடிக்கைகளைபார்த்துக் கொண்டிருந்தார்.<br></p>]]></content:encoded></item><item><title>சென்னையில் சாலை விபத்துகள் குறைந்தும் உயிரிழப்புகள் அதிகரிப்பு!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/road-accidents-down-in-chennai-yet-fatalities-rise</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/road-accidents-down-in-chennai-yet-fatalities-rise#comments</comments><guid isPermaLink="false">99426192-336d-4431-86eb-4efd58cac961</guid><pubDate>Mon, 31 Aug 2026 14:47:44 +0000</pubDate><atom:updated>2026-08-31T14:47:44.532Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சாலை விபத்து,road accident,Chennai,சென்னை,road accidents,சாலை விபத்துகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/dfqjwg0u/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/dfqjwg0u/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் 2026-ம் ஆண்டின் முதல் பாதியில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் சற்றே குறைந்துள்ள நிலையில், விபத்துகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை கவலை அளிக்கும் வகையில் அதிகரித்துள்ளது.</p><p>2025-ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான முதல் 6 மாதங்களில் சென்னையில் 2,051 சாலை விபத்துகள் பதிவாகியிருந்தன. 2026-ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 2.68 சதவீதம் குறைந்து 1,996 ஆக பதிவாகியுள்ளது.</p><p>ஆனால், விபத்துகளின் எண்ணிக்கை குறைந்தபோதிலும், உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.</p><h2>உயிரிழப்புகள் 8.44 சதவீதம் அதிகரிப்பு</h2><p>கடந்த ஆண்டு முதல் பாதியில் சாலை விபத்துகளில் 237 பேர் உயிரிழந்திருந்தனர். இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8.44 சதவீதம் அதிகரித்து 257 ஆக உயர்ந்துள்ளது.</p><p>இதன் மூலம், விபத்துகளின் எண்ணிக்கை குறைந்தாலும், நிகழும் விபத்துகள் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வகையில் தீவிரமாகி வருவது தெரியவந்துள்ளது.</p><h2>தமிழகத்தின் நிலவரம் வேறுபட்டது</h2><p>சென்னையின் நிலவரம் தமிழகத்தின் ஒட்டுமொத்த சாலை விபத்து புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போது மாறுபட்டதாக உள்ளது.</p><p>தமிழகம் முழுவதும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை 5.86 சதவீதம் அதிகரித்து 37,292 ஆக பதிவாகியுள்ளது. அதே நேரத்தில், மாநில அளவில் சாலை விபத்துகளில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 0.39 சதவீதம் குறைந்து 9,461 ஆக பதிவாகியுள்ளது.</p><h2>மாநகர பகுதிகளில் சென்னை முதலிடம்</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை </a>பெருநகரப் பகுதியைச் சேர்ந்த மாநகர காவல் ஆணையரக பகுதிகளை ஒப்பிடும்போது, அதிக விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் பதிவான பகுதியாக சென்னை ஆணையரகம் முதலிடத்தில் உள்ளது.</p><p>தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 1,027 விபத்துகளில் 256 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 729 விபத்துகளில் 118 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><h2>கோவை மாவட்டத்தில் அதிக பாதிப்பு</h2><p>மாவட்ட வாரியாக பார்க்கும்போது, கோயம்புத்தூர் மாவட்டம் சாலை விபத்துகளால் அதிக பாதிப்பை சந்தித்த மாவட்டமாக உள்ளது.</p><p>அங்கு 2,078 சாலை விபத்துகள் பதிவாகியுள்ள நிலையில், 494 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><h2>அதிவேகம் முக்கிய காரணம்</h2><p>வாகனங்களை அதிவேகமாக இயக்குவது, இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாதது, கார்களில் சீட் பெல்ட் அணியாமல் செல்வது உள்ளிட்ட அலட்சியங்கள் சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.</p><p>விபத்துகளின் மொத்த எண்ணிக்கை குறைந்தாலும், நிகழும் விபத்துகள் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் அபாயகரமானதாக மாறி வருவதாக சாலை பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p>எனவே, சாலை விதிகளை முறையாக பின்பற்றுவதுடன், அதிவேக பயணத்தை கட்டுப்படுத்தவும், தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக கடைப்பிடிக்கவும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் தேசிய நெடுஞ்சாலைகளில் அங்கீகரிக்கப்படாத பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 350 வாகனங்கள் அகற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-removes-around-350-vehicles-illegally-parked-on-national-highways</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-removes-around-350-vehicles-illegally-parked-on-national-highways#comments</comments><guid isPermaLink="false">cb13189a-3fea-46d9-a1a2-2e603cf9625d</guid><pubDate>Mon, 31 Aug 2026 14:40:29 +0000</pubDate><atom:updated>2026-08-31T14:40:29.081Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,தேசிய நெடுஞ்சாலை,Vehicles,Traffic,National Highways,வாகனங்கள் பறிமுதல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/jrhon4aq/highways.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வாகனங்கள் அகற்றம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னையில் தேசிய நெடுஞ்சாலைகளில் அங்கீகரிக்கப்படாத பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 350 வாகனங்கள் அகற்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/jrhon4aq/highways.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88"> தேசிய நெடுஞ்சாலைகளில் </a>அங்கீகரிக்கப்படாத பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 350 வாகனங்கள் அகற்றம். இது தொடர்பாக, மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-</p> <h2> தேசிய நெடுஞ்சாலை ஆணையம்</h2><p>சாலை பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், தடையற்ற போக்குவரத்தை பராமரிப்பதற்கும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட செயலாக்க பிரிவு, சென்னையில் நெடுஞ்சாலையோரங்களில் உள்ள அனுமதியற்ற வாகன நிறுத்தம், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">ஆக்கிரமிப்புகளுக்கு</a> எதிரான தனது நடவடிக்கையை தொடங்கியுள்ளது. </p> <h2>சுமார் 350 வாகனங்கள் அகற்றம்</h2><p>இந்நடவடிக்கையில் தமது எல்லைக்குட்பட்ட வரம்பிற்குள் உள்ள தேசிய நெடுஞ்சாலையோரங்களில் அனுமதியின்றி நிறுத்தப்பட்டிருந்த சுமார் 350 லாரிகள், வேன்கள், வர்த்தக வாகனங்களை கண்டறிந்து, அவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தது.</p><h2>ஆய்வு</h2><p>வாகன ஓட்டுநர் ஓய்வெடுக்கும்போதும், சாலையோர உணவகங்களுக்கு செல்லும்போதும், சரக்குகளை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் காத்திருக்கும்போதும், அல்லது போக்குவரத்து காவல்துறையினரால் அமல்படுத்தப்பட்ட சென்னை நகருக்குள் நுழைவதற்கான கட்டுப்பாட்டு நேரத்திற்காக காத்திருக்கும்போதும் வாகனங்கள் சட்டவிரோதமாக நிறுத்தப்பட்டிருந்தது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. </p><h2>போக்குவரத்து நெரிசல்</h2><p>எண்ணூர் - மணலி சாலை மேம்பாட்டு திட்ட வழித்தடத்தில் அதிகபட்ச போக்குவரத்து நெரிசல் பதிவாகியுள்ளது. அங்கு மணலி, எலந்தனூர், இடையஞ்சாவடி, மாதவரம், மாத்தூர், கோசாப்பூர், ரெட் ஹில்ஸ் சுங்கச்சாவடி, திருவொற்றியூர், வடபெரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் 198 வாகனங்கள் அடையாளம் காணப்பட்டு அகற்றப்பட்டன. </p><p>மேலும், தேசிய நெடுஞ்சாலை-5 சாலையில் 142 வாகனங்களும், தேசிய நெடுஞ்சாலை-48 சாலையில் 8 வாகனங்களும், சென்னை துறைமுகம் - மதுரவாயல் பிரிவில் 4 வாகனங்களும் அகற்றப்பட்டன.</p> <h2>எச்சரிக்கை</h2><p>விதிமுறைகளை கடுமையாக பின்பற்றுவதை உறுதிசெய்ய, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சென்னை போக்குவரத்து புலனாய்வு பிரிவு, மண்டல போக்குவரத்து அலுவலர்கள், உள்ளூர் காவல்துறை, மாவட்ட நிர்வாகங்களுக்கு முறையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>3-வது குழந்தை பெறும் பெண் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் ஓராண்டு விடுப்பு - அரசாணை வெளியீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/one-year-paid-leave-for-female-government-employees-who-have-their-third-child</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/one-year-paid-leave-for-female-government-employees-who-have-their-third-child#comments</comments><guid isPermaLink="false">7614dfb9-9e1c-45b0-9974-049389bcd34d</guid><pubDate>Mon, 31 Aug 2026 14:33:42 +0000</pubDate><atom:updated>2026-08-31T14:33:42.127Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,அரசு ஊழியர்கள்,tngovt,மகப்பேறு விடுப்பு,MaternityLeave</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/ocfb905c/tngovt33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 

பெண் அரசு ஊழியர்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/ocfb905c/tngovt33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>3-வது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பை 12 வாரங்களிலிருந்து 365 நாள்களாக (ஓராண்டு) உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.</p><p>இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசின் மனிதவளத்துறை முதன்மைச் செயலாளர் சமயமூர்த்தி இன்று (31-ம் தேதி) அரசாணை வெளியிட்டுள்ளார்.</p><p> அதில், 'தமிழ்நாட்டில் அரசுப் பணியில் உள்ள, <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">திருமணமான பெண் அரசு ஊழியர்களுக்கு </a>இரண்டு குழந்தைகளுக்கு மகப்பேறு விடுப்பு என்ற விதிமுறை முன்பு நடைமுறையில் இருந்தது. .</p><p>அதனைத் தொடர்ந்து 2021ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாணையில், இரண்டு குழந்தைகளைக் கொண்ட திருமணமான பெண் அரசு ஊழியர்களுக்கு, முழு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பை 9 மாதங்களிலிருந்து (270 நாட்கள்) 12 மாதங்களாக (365 நாட்கள்) உயர்த்தி உத்தரவு வெளியிடப்பட்டது.</p><p>அதனைத் தொடர்ந்து 2026 மார்ச் மாதம் வெளியிடப்பட்ட அரசாணையில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட திருமணமான பெண் அரசு ஊழியர்களுக்கு, 12 வாரங்களுக்கு மிகாமல் முழு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கி ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.</p><p>இந்த நிலையில், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர், 2026-2027-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின்போது, 18.8.2026 அன்று சட்டமன்றத்தில் அறிவிப்பை வெளியிட்டார். அதில் அவர், 'தமிழ்நாடு அரசில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு, அவர்களது மூன்றாவது குழந்தைக்கு தற்போது வழங்கப்படும் மகப்பேறு விடுப்புக்காலம், 12 வாரங்களிலிருந்து 365 நாட்களாக உயர்த்தப்படும்' என அறிவித்தார்.</p><p>தற்போது ​​அரசு பெண் ஊழியர்களுக்கு, அவர்களின் மூன்றாவது குழந்தைக்கு 12 வாரங்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சரின் அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், நிரந்தர அல்லது நிரந்தரமற்ற பணியில் உள்ள திருமணமான பெண் அரசு ஊழியர்களுக்கு, அவர்களது மூன்றாவது குழந்தைக்கு அனுமதிக்கப்படும் 12 வார மகப்பேறு விடுப்பை, முழு ஊதியத்துடன் கூடிய 365 நாட்களாக உயர்த்தி அரசு ஆணையிடுகிறது.</p><p>இந்த விடுப்புக் காலத்தை, பிரசவத்திற்கு முந்தைய ஓய்வு மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய காலம் எனப் பிரித்துக்கொள்ளும் வசதி சம்பந்தப்பட்ட பெண் அரசு ஊழியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வழங்கப்படும். இந்த ஆணை 2026 ஆகஸ்ட் 25 ந் தேதி முதல் அமல்படுத்தப்படும். ஆனால் ஆகஸ்ட் 25ஆம் தேதிக்கு முன்னதாகவே 3வது குழந்தைக்கான மகப்பேறு விடுப்பில் சென்றிருந்து, அத்தேதியிலோ அல்லது அதற்குப் பின்னரோ தொடர்ந்து விடுப்பில் இருக்கும் பெண் அரசு ஊழியர்களும், மொத்தம் 12 மாதங்கள் (365 நாட்கள்) வரையிலான மகப்பேறு விடுப்பைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/yikivry6/certicakte33.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>செப்டம்பர் 6- ந் தேதி அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-district-secretaries-meeting-on-september-6</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-district-secretaries-meeting-on-september-6#comments</comments><guid isPermaLink="false">b145a96b-6ff7-4514-835d-182b077cae0e</guid><pubDate>Mon, 31 Aug 2026 14:31:53 +0000</pubDate><atom:updated>2026-08-31T14:31:53.791Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>AIADMK,District Secretaries Meeting,மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்,அ.தி.மு.க</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/ctehw1zh/56.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அ.தி.மு.க.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/ctehw1zh/56.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>செப்டம்பர் 6- ந் தேதி அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. </p><p>இது குறித்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">அதிமுக </a>தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி  தலைமையில், சென்னை, இராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், </p><h2>ஆலோசனைக் கூட்டம்</h2><p>6.9.2026 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் ஆய்வு..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monsoon-preparedness-measures-in-chennai-zonal-monitoring-officers-conduct-inspections</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monsoon-preparedness-measures-in-chennai-zonal-monitoring-officers-conduct-inspections#comments</comments><guid isPermaLink="false">ebe99fdf-4bcf-4376-86a8-c963f2b12a27</guid><pubDate>Mon, 31 Aug 2026 14:21:57 +0000</pubDate><atom:updated>2026-08-31T14:21:57.755Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/xiki5ty8/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கண்காணிப்பு அலுவலர்கள் ஆய்வு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/xiki5ty8/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>கண்காணிப்பு அலுவலர்கள் கள ஆய்வு</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர், பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணித்து உரிய மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மண்டல அளவில் அமைச்சர் பெருமக்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.</p><p>இதனைத் தொடர்ந்து, மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் தங்களது மண்டலங்களில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு நடைபெற்று வரும் முன்னெச்சரிக்கை பணிகளை கள ஆய்வு செய்து, பணிகளை விரைவுப்படுத்தி வருகின்றனர்.</p><h2>பல்வேறு இடங்களில் தூர்வாரும் பணி</h2><p>இதன் ஒரு பகுதியாக, இன்று (31.08.2026) தேனாம்பேட்டை மண்டல கண்காணிப்பு அலுவலர்/நில அளவை மற்றும் தீர்வாயத்தின் இயக்குநர் டி. கிறிஸ்துராஜ், தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-122க்குட்பட்ட வெங்கட நாராயண சாலையில் உள்ள மாம்பலம் கால்வாயில் மேற்கொள்ளப்படும் தூர்வாரும் பணி, வார்டு-117க்குட்பட்ட தியாகராய சாலையில் உள்ள மாம்பலம் கால்வாயில் மேற்கொள்ளப்படும் தூர்வாரும் பணி, வார்டு-122க்குட்பட்ட நந்தனம் கால்வாயில் நீர் வெளியேறும் இடம், வார்டு-121க்குட்பட்ட சிவசாமி சாலை சந்திப்புப் பகுதியில் உள்ள மழைநீர் வடிகால்களின் திசைமாற்றுப் பகுதி, வார்டு-116, டாக்டர் பெசன்ட் சாலையில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் மழைநீர் வடிகால் வெளியேறும் இடம், லயோலா கல்லூரி அருகில் உள்ள மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வண்டல்கள் தூர்வாரும் பணி, வார்டு-109க்குட்பட்ட நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள டிரஸ்ட்புரம் கால்வாயில் நீர் வெளியேறும் இடம், வார்டு-110க்குட்பட்ட நுங்கம்பாக்கம் மயானபூமியில் உள்ள நீர் வெளியேறும் இடம், வார்டு-112க்குட்பட்ட புலியூர் 2ஆவது பிரதான சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.</p><p>பெருங்குடி மண்டல கண்காணிப்பு அலுவலர்/கலை மற்றும் கலாச்சாரத் துறை இயக்குநர் மகேஸ்வரி ரவிக்குமார், பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட ரேடியல் சாலையில் உள்ள பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகத்தின் கசிவுநீர் வெளியேறும் இடத்தில் குறுக்குக் கால்வாய் கட்டி நீர் வெளியேற்றப்படுவதையும், நாராயணபுரம் ஏரியில் நீர் வெளியேறும் இடம், வார்டு-191ல் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்வது தொடர்பாகவும், ரேடியல் சாலையில் உள்ள குழாய் பாலங்களின் கீழ் சதுப்பு நில நீர்வழியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வண்டல்கள் தூர்வாரும் பணி, ரேடியல் சாலையில் உள்ள 17 மதகுகளின் முகப்புப் பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணி, எம்.ஜி.ஆர். சாலை சந்திப்பில் மாற்று வடிகால் அமைப்பது தொடர்பாகவும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வார்டு-191, ஜல்லடியான்பேட்டை, பெரிய ஏரியினை பார்வையிட்டு ஆய்வு செய்து, உபரிநீர் வெளியேறும் இடத்தில் மதகு அமைத்து நீரினை வெளியேற்றுவது குறித்து நீர்வளத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><h2>மழைநீர் வடிகால் கட்டும் பணி</h2><p>மணலி மண்டல கண்காணிப்பு அலுவலர்/தமிழ்நாடு மாநில திட்டக் குழு உறுப்பினர்/செயலர் பி.குமரவேல் பாண்டியன், மணலி மண்டலம், வார்டு-18க்குட்பட்ட ஆமுல்லவாயல் பாலத்தின் புழல் உபரிநீர் கால்வாய் மற்றும் மணலி விரைவுச் சாலையின் பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கோடம்பாக்கம் </a>மண்டல கண்காணிப்பு அலுவலர்/நில நிர்வாக ஆணையரகத்தின் கூடுதல் ஆணையர் எஸ். கோபால சுந்தர ராஜ், கோடம்பாக்கம் மண்டலம், மாசி தெருவில் உள்ள விருகம்பாக்கம் கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணி மற்றும் காளியம்மன் கோயில் தெருவில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் கட்டும் பணி ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.</p><h2>அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்</h2><p>சோழிங்கநல்லூர் மண்டல கண்காணிப்பு அலுவலர்/அருங்காட்சியக இயக்குநர் டி. பாஸ்கர பாண்டியன், சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு.193, துரைப்பாக்கம் பகுதியில் நடைபெற்று வரும் மூடிய வடிகால் கட்டும் பணியினையும், ஆலந்தூர் மண்டல கண்காணிப்பு அலுவலர்/தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வாகே சங்கேத் பல்வந்த், ஆலந்தூர் மண்டலம், வார்டு-158, சென்னை வர்த்தக நிறுவனம் அருகில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சார்பில் நடைபெற்று வரும் விடுபட்ட மழைநீர் வடிகால் கட்டும் பணியினையும், ராயபுரம் மண்டல கண்காணிப்பு அலுவலர்/இயற்கை சூழல் மற்றும் பருவமநிலை மாற்றத்துறை இயக்குநர் ஆஷா அஜித், ராயபுரம் மண்டலம், வார்டு-57, யானைக் கவுனி பால கால்வாயினையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, நடைபெற்று வரும் பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.</p><p>மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் ஆகியவற்றை பருவமழைக் காலத்திற்கு முன்னதாக முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.</p><p>இந்த ஆய்வுகளின் போது, மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எப்.கியூ.எல் முதலீட்டு மோசடி வழக்குகள் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fql-investment-fraud-cases-transferred-to-economic-crimes-division</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fql-investment-fraud-cases-transferred-to-economic-crimes-division#comments</comments><guid isPermaLink="false">a57aed60-baa2-4f39-8f4e-b5b355802473</guid><pubDate>Mon, 31 Aug 2026 14:19:14 +0000</pubDate><atom:updated>2026-08-31T14:19:14.251Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>fraud case,மோசடி வழக்கு,மாற்றம்,பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்,முதலீட்டு தொகை,Investment in business,Economic Crimes Division</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/8i86cd9x/55.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பொருளாதார குற்றப்பிரிவு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/8i86cd9x/55.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கிரிப்டோ முதலீட்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">மோசடி வழக்கு</a>கள் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>கடந்த ஏழு மாதங்களாக மதுரை, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில்  "FQL Investment Trading", "FQL Exchange App" "VG Investment Group Syndicate" ஆகிய பெயர்களில் பல்நிலை சந்தைப்படுத்தல் (MLM)-உடன் கூடிய கிரிப்டோகரன்சி வர்த்தக மோசடி நடைபெற்றுவந்தது தொடர்பாக புகார்கள் எழுந்தன. இத்திட்டத்துடன் தொடர்புடைய முகவர்கள், பொதுமக்களிடம் பணத்தை முதலீடு செய்யுமாறு கூறி, அசாதாரணமான தினசரி வெகுமதிகள் கிடைக்கும் என்றும், கிரிப்டோகரன்சி வர்த்தகம் மூலம் முதலீடு செய்த தொகை 40-45 நாட்களில் இரட்டிப்பாகும் என்றும் தவறான தகவல்களைத் தெரிவித்து. பொதுமக்களை முதலீடு செய்யத் தூண்டியதாகக் கூறப்படுகிறது.</p><h2>விசாரணை</h2><p>மேற்கண்ட நான்கு மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடமிருந்து மனுக்கள்/புகார்கள் பெறப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் செயல்பாடுகள் தொடர்பாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில், மதுரை மாவட்ட காவல்துறையினர். சம்பந்தப்பட்ட முகவர்கள் மற்றும் பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டு, கூறப்படும் கிரிப்டோகரன்சி வர்த்தக நடவடிக்கையின் தன்மை மற்றும் செயல்படும் விதம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.</p><h2>வங்கிக் கணக்குகள் முடக்கம்</h2><p>குறிப்பிட்ட புகார்கள் பெறப்பட்டு, ஆரம்பகட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கண்ட மோசடி தொடர்பாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 3 வழக்குகள் மதுரை மாவட்டத்திலும், திண்டுக்கல், விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் தலா 1 வழக்கும் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை 17 குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் தொடர்புடைய 13 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.</p><p>முதற்கட்ட விசாரணையில், உள்ளூர் முகவர்கள் மூலம் பொதுமக்களிடம் ரொக்கம் மற்றும் G-Pay/UPI பரிவர்த்தனைகள் வழியாக கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் முதலீடு செய்யத் தூண்டப்பட்டுள்ளனர். பெறப்பட்ட தொகையின் ஒரு பகுதி Tether (USDT) உள்ளிட்ட கிரிப்டோகரன்சியாக மாற்றப்பட்டு, FQL/VG செயலிகள் மூலம் பராமரிக்கப்பட்டதாகக் கூறப்படும் வாலெட்டுகளில் வரவு வைக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. பின்னர் பணத்தைத் திரும்பப் பெறும் பரிவர்த்தனைகள் தோல்வியடைந்ததுடன். கணக்கில் காட்டப்பட்ட தொகைகள் எடுக்க முடியாமலும், கூடுதல் தொகை செலுத்துமாறு கோரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம்</h2><p>பின்னர் செயலி முடக்கப்பட்டதால், முதலீட்டாளர்கள் தங்களது கணக்குகளில் காட்டப்பட்டிருந்ததாகக் கூறப்படும் தொகைகளை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவரின் பங்கு, பரந்து விரிந்த மோசடி கும்பலின் தொடர்பு. பல மாவட்டங்களில் நடைபெற்றுள்ள மோசடிகள், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, அதிகமான நிதியிழப்பு. USDT. Binance வாலெட்டுகள் உள்ளிட்ட கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள் மற்றும் சந்தேகிக்கப்படும் சர்வதேச தொடர்புகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, முறையான, தீவிர விசாரணையின் தேவை மற்றும் பொதுநலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, காவல்துறை தலைமை இயக்குநர்/ படைத்தலைவர். முனைவர் மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் இன்று மேற்சொன்ன 6 வழக்குகளையும் பொருளாதார குற்றப்பிரிவுக்கு  (Economic Offences Wing- EOW) மாற்றி உத்தரவிட்டுள்ளார்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மேட்டூர் அணை திறப்பு: முதல்-அமைச்சர் விஜய் நாளை சேலம் வருகை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mettur-dam-opening-chief-minister-vijay-to-visit-salem-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mettur-dam-opening-chief-minister-vijay-to-visit-salem-tomorrow#comments</comments><guid isPermaLink="false">36f98c8d-13a9-42d3-85fb-072d1a7dd815</guid><pubDate>Mon, 31 Aug 2026 13:35:03 +0000</pubDate><atom:updated>2026-08-31T13:35:03.130Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,மேட்டூர் அணை,Mettur dam,முதல்-அமைச்சர் விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/5c4br2a7/vijay33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
மேட்டூர் அணை திறப்பு]]></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/5c4br2a7/vijay33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மேட்டூர், </p><p>மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்காக நாளை (செவ்வாய்க்கிழமை) முதல்-அமைச்சர் விஜய் சேலம் வருகிறார். இதையொட்டி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை சரிவர பெய்யாத காரணத்தால் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேட்டூர் அணை</a>க்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறைந்தது.</p><h2>முதல்-அமைச்சர் விஜய்</h2><p>இதனால் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லாததால் குறிப்பிட்ட நாளான ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட வில்லை. இதனிடையே, கர்நாடக மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழை காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு பரவலாக தண்ணீர் வருவதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.</p><p>இந்தநிலையில், மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதற்காக முதல்-அமைச்சர் விஜய் நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வருகிறார். ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வரும் அவர், அங்கிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக மேட்டூர் செல்கிறார். பின்னர் அவர் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைக்கிறார்.</p><h2>பாதுகாப்பு ஏற்பாடுகள்</h2><p>முதல்-அமைச்சர் விஜய் சேலம் வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் போலீஸ் பாது காப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மேட்டூர் அணையில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து முதல்-அமைச்சர் விஜய் வரும் வழிநெடுகிலும் சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதாவது முதல்-அமைச்சர் விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் பொதுமக்கள் அதிகளவு வருவார்கள் என்பதால் அவர் செல்லும் வழியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அணையின் வலது கரையில் விழாவுக்காக பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.</p><p>மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தண்ணீர் திறக்க உள்ள நிலையில் அணை முழுவதும் காவல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. மேட்டூர் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட காவலர்கள் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><h2>திறந்து வைக்கும் நேரம் அறிவிப்பு</h2><p>இந்த நிலையில், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் நாளை(செப். 1) மதியம் 12 மணிக்கு மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைக்கிறார்.</p><p>இதனைத் தொடர்ந்து, மேட்டூர் அணையில் நீர்வளத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மேட்டூர் அணை குறித்த விளக்கப் புகைப்படக் கண்காட்சியை முதல்-அமைச்சர் விஜய் பார்வையிடுகிறார்.</p><p>தொடர்ந்து, மேட்டூர் அணை மின் நிலையத்தைப் பார்வையிடும் முதல்-அமைச்சர் விஜய், அங்கிருந்து சேலம். காமலாபுரம் விமான நிலையம் புறப்படுகிறார். அங்கிருந்து, விமானம் மூலம் சென்னை வந்தடைகிறார்.</p> ]]></content:encoded></item><item><title>அனந்தபுரி எக்ஸ்பிரஸ் இனி பெண்ணாடம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-ananthapuri-express-will-now-halt-at-pennadam-railway-station</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-ananthapuri-express-will-now-halt-at-pennadam-railway-station#comments</comments><guid isPermaLink="false">35c99bd2-ba0a-4127-a016-775c8ceaba66</guid><pubDate>Mon, 31 Aug 2026 13:31:56 +0000</pubDate><atom:updated>2026-08-31T13:31:56.254Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Cuddalore,கடலூர்,Kollam-Chennai,Chennai - Kollam,கொல்லம்-சென்னை,கொல்லம்,Ananthapuri Express,பெண்ணாடம்,Ananthapuri,Pennadam,Pennadam Railway Station,சென்னை-கொல்லம்,பெண்ணாடம் ரெயில் நிலையம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/afjlsh5w/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெண்ணாடம் ரெயில் நிலையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/afjlsh5w/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை எழும்பூர்-கொல்லம்-சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் அனந்தபுரி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில், பெண்ணாடம் ரெயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்ல ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.</p><p>இதன்படி, 20635/20636 என்ற எண் கொண்ட அனந்தபுரி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு பெண்ணாடம் நிலையத்தில் சோதனை அடிப்படையில் ஒரு நிமிட தற்காலிக நிறுத்தம் வழங்கப்படுகிறது.</p><h2>செப்டம்பர் 2-ந் தேதி முதல் அமல்</h2><p>20635 சென்னை எழும்பூர்-கொல்லம் அனந்தபுரி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் பெண்ணாடம் நிலையத்தில் இரவு 11.23 மணிக்கு வந்து, 11.24 மணிக்கு புறப்படும். இந்த புதிய நிறுத்தம் 2.9.2026 முதல் அமலுக்கு வருகிறது.</p><p>அதேபோல், 20636 கொல்லம்-சென்னை எழும்பூர் அனந்தபுரி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் பெண்ணாடம் நிலையத்தில் காலை 1.07 மணிக்கு வந்து, 1.08 மணிக்கு புறப்படும். இந்த நிறுத்தம் 2.9.2026 முதல் நடைமுறைக்கு வருகிறது.</p><p>பெண்ணாடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பயணிகளின் வசதிக்காக, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அனந்தபுரி எக்ஸ்பிரஸ்</a> ரெயிலுக்கு இந்த ஒரு நிமிட தற்காலிக நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மார்த்தாண்டத்தில் பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-plus-one-student-in-marthandam-youth-gets-10-years-jail</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-plus-one-student-in-marthandam-youth-gets-10-years-jail#comments</comments><guid isPermaLink="false">d63e7ed2-024e-4a17-a1b8-8ae3bfac89c6</guid><pubDate>Mon, 31 Aug 2026 13:31:56 +0000</pubDate><atom:updated>2026-08-31T13:31:56.219Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Sexual harassment,பாலியல் தொல்லை,வாலிபர்,பிளஸ்-1 மாணவி,Marthandam,மார்த்தாண்டம்,10 ஆண்டு சிறை,10 years in prison</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/ybkog83l/jeslin-rajkumar.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஜெஸ்லின் ராஜ்குமார்]]></media:title><media:description type="html"><![CDATA[ மார்த்தாண்டத்தில் பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/ybkog83l/jeslin-rajkumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாகர்கோவில், </p><p>குற்றவாளி ஜெஸ்லின் ராஜ்குமாருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.மேலும், அவருக்கு ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது.</p> <h2>பாலியல் தொல்லை</h2><p>கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கடந்த 2019-ஆம் ஆண்டு 11-ம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி ஒருவருக்கு, அதே பகுதியை சேர்ந்த ஜெஸ்லின் ராஜ்குமார் என்பவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88">பாலியல் தொல்லை</a> கொடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.</p><h2>போக்சோ</h2><p>போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஜெஸ்லின் ராஜ்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நாகர்கோவிலில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி சுந்தரையா இன்று தீர்ப்பு வழங்கினார்.</p> <h2>சிறை தண்டனை</h2><p>மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளி ஜெஸ்லின் ராஜ்குமாருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">சிறை தண்டனை</a> விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.மேலும், அவருக்கு ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குற்றவாளி ஜெஸ்லின் ராஜ்குமார் சிறையில் அடைக்கப்பட்டார்.</p> ]]></content:encoded></item><item><title>திருக்குறளின் சிறப்பை உலக அரங்கில் எடுத்துரைத்த பிரதமர் மோடி – எல்.முருகன் பாராட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pm-modi-highlights-the-importance-of-thirukkural-on-the-world-stage-l-murugan-praises</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pm-modi-highlights-the-importance-of-thirukkural-on-the-world-stage-l-murugan-praises#comments</comments><guid isPermaLink="false">688923aa-e4ab-4f2c-97ac-81bf7acde607</guid><pubDate>Mon, 31 Aug 2026 13:31:55 +0000</pubDate><atom:updated>2026-08-31T13:31:55.705Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எல்.முருகன்,பிரதமர் மோடி,PM Modi,L. Murugan ​</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/n0472uu1/54.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எல்.முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/n0472uu1/54.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திருக்குறளின் சிறப்பை உலக அரங்கில் எடுத்துரைத்த பிரதமர் மோடிக்கு மத்திய இணை மந்திரி <a href="https://www.dailythanthi.com/topic/l-murugan">எல்.முருகன் </a>பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்  தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>பாரதப் பிரதமர் மோடிஜி அவர்கள் தாஷ்கண்ட், உஸ்பெகிஸ்தானில் திருக்குறளின் சிறப்பையும், அதன் உலகளாவிய முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தது ஒவ்வொரு தமிழருக்கும் பெருமை தரும் தருணம்.</p><p>“பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழில் எழுதப்பட்ட திருக்குறள், இன்றும் ஆன்மிகம், தத்துவம் மற்றும் நடைமுறை வாழ்க்கை என அனைத்து துறைகளிலும் ஆழ்ந்த உத்வேகத்தை அளிக்கிறது” என்று பிரதமர் அவர்கள் குறிப்பிட்டார்.</p><h2>மகத்தான முயற்சி</h2><p>மேலும், திருக்குறளை உஸ்பெக் மொழியில் மொழிபெயர்க்கும் பணியை முன்னெடுக்க வேண்டும் என்ற பிரதமரின் அழைப்பு, உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழின் செழுமையையும், திருவள்ளுவரின் பேரறிவையும் உலகெங்கும் கொண்டு செல்லும் மகத்தான முயற்சியாகும். திருக்குறள் உலகப் பொதுமறை என்பதை பிரதமரின் இந்த வார்த்தைகள் மீண்டும் உலகிற்கு எடுத்துரைக்கின்றன.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>