<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 23 Jul 2026 13:52:17 +0000</lastBuildDate><item><title>முதல்-அமைச்சர் விஜய் மவுனத்தை கலைக்க வேண்டும் - தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-must-break-his-silence-dmk-leader-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-must-break-his-silence-dmk-leader-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">6a098b0c-80e6-4fe6-818b-efa637446dcc</guid><pubDate>Thu, 23 Jul 2026 13:43:13 +0000</pubDate><atom:updated>2026-07-23T13:43:13.670Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,Tamilnadu,விஜய்,Farmers,திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,M.K.Stalin,தமிழகம்,காவிரி நீர்,தமிழக அரசு,TN govt,விவசாயிகள்,Cauvery water,மேகதாது அணை,குறுவை சாகுபடி,சம்பா சாகுபடி,kuruvai cultivation,Samba Cultivation,Mekedatu Dam Issue,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,Chief Minister Vijay</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/q03gwuw4/mou.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/q03gwuw4/mou.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காவிரி நீரைப் பெறவும், மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை பிரதமரிடம் நேரில் கொடுக்கவும் ஏன் பயம்? என்று <a href="https://www.dailythanthi.com/topic/mkstalin">தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்</a>, <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a>யிடம் கேள்வி எழுப்பி உள்ளார். </p><h2>பிரதமரிடம் பேசாதது ஏன்?</h2><p>இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-</p><p><a href="https://www.dailythanthi.com/topic/vijay">தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்</a> அவர்களுக்கு சில கேள்விகள்:</p><p>1) தமிழ்நாட்டின் கோரிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்து நிராகரித்து வரும் நிலையில் இதுகுறித்து பிரதமரிடம் பேசாதது ஏன்?</p><p>2) தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் என்ன செய்துகொண்டிருக்கிறார்?</p><p>3) தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை எதிர்த்துப் பேச என்ன பயம்?</p> <h2>நிவாரணத் தொகுப்பு எங்கே?</h2><p>4) அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏன் கூட்டவில்லை?</p><p>5) மேகதாது அணைக்கு எதிரான சட்டமன்றத் தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் சென்று பிரதமரிடம் நேரில் அளிப்பது எப்போது?</p><p>6) தவிக்கும் டெல்டா விவசாயிகளுக்கான நிவாரணத் தொகுப்பு எங்கே?</p><p>காவிரி டெல்டாவின் உயிர்நாடிப் பிரச்சினையில் த.வெ.க. அரசின் அர்த்தமற்ற மவுனம் அதிர்ச்சியளிக்கிறது!</p> <h2>காவிரி டெல்டா விவசாயிகள்</h2><p>தமிழ்நாட்டின் கோரிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையம் மீண்டும் மீண்டும் நிராகரித்து - காலதாமதம் செய்து கொண்டிருக்கிறது. ஏற்கெனவே முழுக் கடன் தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை ஏமாற்றி விட்டது இந்த அரசு.</p><p>குறுவையும் பாதித்து - சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகும் பேராபத்தில் காவிரி டெல்டா விவசாயிகள் உள்ளனர்.</p><p>நெருக்கடியான இச்சூழ்நிலையில், முதல்-அமைச்சர் அவர்கள் பிரதமர் அவர்களைச் சந்தித்திருக்க வேண்டும்.</p><p>ஆனால் முதல்-அமைச்சரும் பேசவில்லை. நீர்வளத்துறை அமைச்சரும் பேசவில்லை.</p><h2>போர்க்கால நடவடிக்கை</h2><p>மேகதாது அணைக்கு எதிரான சட்டமன்றத் தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளையும் அழைத்துக் கொண்டு பிரதமரிடம் நேரில் கொடுக்க நேரமில்லாமல் இருக்கிறார் முதல்-அமைச்சர்.</p><p>தமிழ்நாட்டிற்குக் காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசையும் தட்டிக் கேட்க முடியாமல் தவிக்கிறார்.</p><p>அர்த்தமற்ற மவுனத்தைக் கலைத்து மாநில உரிமையை நிலைநாட்ட போர்க்கால நடவடிக்கையில் ஈடுபடுக!</p><p>குறுவை பாதிப்பு மற்றும் சம்பா சாகுபடி ஏமாற்றத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு "புதிய நிவாரணத் தொகுப்பினை" அறிவித்திடுக!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆகஸ்டு முதல் தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/express-trains-to-operate-from-tambaram-railway-station-from-august</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/express-trains-to-operate-from-tambaram-railway-station-from-august#comments</comments><guid isPermaLink="false">bf25d76c-dac8-4521-aafb-822ed70fcf3e</guid><pubDate>Thu, 23 Jul 2026 13:41:15 +0000</pubDate><atom:updated>2026-07-23T13:41:15.641Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,தாம்பரம்,எக்ஸ்பிரஸ் ரெயில்கள்,Express Rail,சென்னை எழும்பூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/qdxx7j6h/train33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
எக்ஸ்பிரஸ் ரெயில்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/qdxx7j6h/train33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணிகள் ரூ.840 கோடியில் நடைபெற்று வருகின்றன. விமான நிலையம் போல ரெயில் நிலையத்தை மாற்றவும் பயணிகளுக்கு கூடுதலான வசதிகள் அளிக்கவும் திட்டமிடப்பட்டு 5 கட்டங்களாக இப்பணிகள் நடந்து வருகிறது.</p><p>நடைமேடைகள், பிரமாண்ட நடை மேம்பாலங்கள், பயணிகள் காத்திருக்கும் பகுதி, ஓய்வுஅறைகள், ஓட்டல்கள், வணிகப் பகுதிகள், எஸ்கலேட்டர், லிப்ட் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்படுகிறது.</p><p>இந்த சீரமைப்பு பணிகளுக்காக அவ்வப்போது ரெயில் இயக்கத்தில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. தாம்பரத்தில் இருந்து ஒரு சில ரெயில்கள் இயக்கப்பட்டன.</p><p>இந்த நிலையில் 3-வது கட்டமாக இரும்பு நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. 500 மெட்ரிக் டன் எடைக்கும் அதிகமான கிரேன்கள் பயன்படுத்தப்பட்டு இரும்பு ராடர்கள் பாலமாக நிறுவப்படுகிறது. தற்போது காந்தி இர்வின் சாலையில் எழும்பூர் ரெயில் நிலைய தாம்பரம் வழித்தட தொடக்கத்தில் இருந்து முதல் 5 நடைமேடைகளில் இரும்பு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.</p><p>அந்தப் பாலம் 18 மீட்டர் அகலத்துடனும் 120 மீட்டர் நீளத்துடனும் அமைய உள்ளது. அதன்படி எழும்பூர் ரெயில் நிலைய 6-வது நடைமேடையில் இருந்து இரும்பு பாலம் புறநகர் மின்சார ரெயில்கள் செல்லும் 10 மற்றும் 11-வது நடைமேடை வரையிலான பணிகள் ஓரிரு வாரங்களில் தொடங்க இருக்கிறது.</p> <p>இந்தப் பணிகள் தொடங்கும்போது புறநகர் மின்சார ரெயில் சேவை பாதிக்காமல் வேறு நடைமேடைக்கு மாற்ற வேண்டி உள்ளது. புறநகர் மின்சார ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்படாமல் ரெயில்களை இயக்குவது குறித்து ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டது.</p><p>அதன்படி ஆகஸ்ட் மாதம் முதல் <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">எக்ஸ்பிரஸ் ரெயில்களில்</a> சிலவற்றை தாம்பரத்தில் இருந்து தென் மாவட்டத்திற்கு இயக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பெரும்பாலான ரெயில்கள் எழும்பூரில் இருந்து இயக்கப்படுகிறது. அவற்றில் சில ரெயில்களை மட்டும் தாம்பரத்தில் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>இந்த நிலையில் இரும்பு நடைமேம்பால பணியை சென்னை ரெயில்வே கோட்ட மேலாளர் சைலேந்திர சிங் நேற்று ஆய்வு செய்தார். அவரிடம் பணிகள் நடைபெறும் நிலை குறித்தும் அதற்காக 5 மற்றும் 6 ஆகிய நடைமேடைகளுக்கு புறநகர் மின்சார ரெயில்களை மாற்றி இயக்குவது குறித்தும் ரெயில்வே பொறியாளர்கள் விளக்கிக் கூறினார்கள்.</p><p>இந்த ஆய்வின்போது தெற்கு ரெயில்வே கூடுதல் மேலாளர் செந்தில்குமார், எழும்பூர் ரெயில் நிலைய இயக்குனர் ஜெயகாந்தன், பொறியாளர் லோகநாயகி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>சட்ட விரோத மணல் குவாரிகள் செயல்பட தடை - ஐகோர்ட்டு மதுரை கிளை அதிரடி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-illegal-sand-quarries-madurai-bench-of-the-high-court-takes-decisive-action</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-illegal-sand-quarries-madurai-bench-of-the-high-court-takes-decisive-action#comments</comments><guid isPermaLink="false">dbd4e8fe-fd45-450b-91f3-6a949d60e7da</guid><pubDate>Thu, 23 Jul 2026 13:15:56 +0000</pubDate><atom:updated>2026-07-23T13:15:56.558Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Madurai,மதுரை,Madurai High Court,மதுரை ஐகோர்ட்டு,Melur,மேலூர்,sand quarries,மணல் குவாரிகள்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/b9y0axyw/shada.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/b9y0axyw/shada.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் சட்ட விரோத மணல் குவாரிகள் செயல்பட தடை விதித்து <a href="https://www.dailythanthi.com/topic/madurai-high-court">ஐகோர்ட்டு மதுரை கிளை</a> உத்தரவிட்டுள்ளது. </p><h2>நீதிபதிகள் எச்சரிக்கை</h2><p>இதுதொடர்பாக இன்று நடந் த வழக்கு விசாரணையின்போது இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதை இனியும் கண்களை மூடி வேடிக்கை பார்க்க முடியாது என்று நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.</p><p>மேலும் சட்ட விரோத குவாரிகள் செயல்பாட்டுக்கு உடனடியாக மாவட்ட கலெக்டர் தடை விதித்து நடைவடிக்கை எடுக்க  வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். </p><p>மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் சட்ட விரோத மணல் குவாரிகள் நடைபெறுவதை தடுக்கக்கோரிய வழக்கில் <a href="https://www.dailythanthi.com/topic/madurai-high-court">ஐகோர்ட்டு மதுரை கிளை</a> அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ரூ. 2.75 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட அறிஞர் அண்ணா நீச்சல் குளம் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திறந்து வைத்தார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-2-75-kodi-mathipeettil-putuppikkappatta-arignar-anna-neechal-kulam-amanichar-athav-arjuna-thirandhu-vaithar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-2-75-kodi-mathipeettil-putuppikkappatta-arignar-anna-neechal-kulam-amanichar-athav-arjuna-thirandhu-vaithar#comments</comments><guid isPermaLink="false">f9a907af-5dce-4a1f-ad6d-abfd954a54ed</guid><pubDate>Thu, 23 Jul 2026 13:07:07 +0000</pubDate><atom:updated>2026-07-23T13:07:07.795Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Aadhav Arjuna,நீச்சல் குளம்,Swimming pool,அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/16anibry/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/16anibry/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ரூ. 2.75 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட அறிஞர் அண்ணா நீச்சல் குளத்தை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று திறந்து வைத்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் ரூ. 2.75 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட அறிஞர் அண்ணா நீச்சல் குளம், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவால் இன்று (23.07.2026) திறந்து வைக்கப்பட்டது.</p><p>இந்த நீச்சல்குளம் பொதுப்பணித்துறையால் நிறுவப்பட்டு, கல்வித்துறையால் நிர்வகிக்கப்பட்டு, தற்போது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. 50 மீட்டர் நீளமும், 25 மீட்டர் அகலமும், 4 - 12 அடி ஆழமும் கொண்ட பெரிய நீச்சல் குளமும், 25 மீட்டர் நீளமும், 15 மீட்டர் அகலமும், 2.5 - 3.5 அடி ஆழமும் கொண்ட பயிற்சி குளமும் (Warmup Pool) ரூ. 2.75 கோடி மதிப்பீட்டில் உயர்தரத்துடன் புனரமைக்கப்பட்டுள்ளது.</p><p>நீச்சல் குளங்களின் பழுதடைந்த தரை மற்றும் சுவர் டைல்ஸ்கள் மாற்றப்பட்டுள்ளன. மேலும், புதிய குழாய்கள், பம்புகள், வடிகட்டும் (Filtration) அமைப்புகள், ஸ்டார்டிங் பிளாக்குகள், ஏணிகள், கிரேட்டிங், உள்ளிட்ட உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் நீச்சல் வீரர்கள் பாதுகாப்பாகவும், தரமான சூழலிலும் பயிற்சி பெறும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 1,500 சதுர அடியில் குளிர்சாதன வசதியுடன் கூடிய உடற்பயிற்சி கூடமும் அமைக்கப்பட்டுள்ளது. நீச்சல் வீரர்களுக்கும், பொது மக்களுக்கும் பயிற்சி அளிக்க ஏதுவாக 4 பயிற்றுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><p>மேலும் மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ.12.50 கோடி மதிப்பீட்டிலும், கரூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ.6.27 கோடி மதிப்பீட்டிலும் புதிய நீச்சல் குளங்கள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிறுவிளையாட்டு வளாகத்தில் அமைந்துள்ள நீச்சல் குளம் ரூ.23 லட்சம் மதிப்பீட்டிலும், சென்னை வேளச்சேரியில் உள்ள நீச்சல் குளம் ரூ.16.35 கோடி மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகள் என தமிழ்நாட்டில் மொத்தம் ரூ.35.35 கோடி மதிப்பீட்டில் 4 நீச்சல் குளங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அவனை சும்மா விடாதீர்கள்... வீடியோ வெளியிட்டு பெண் தற்கொலை - கணவர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dont-spare-him-woman-dies-by-suicide-after-video</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dont-spare-him-woman-dies-by-suicide-after-video#comments</comments><guid isPermaLink="false">16c1e0e6-b646-400d-bcda-bbbc2ae7a9b3</guid><pubDate>Thu, 23 Jul 2026 12:54:50 +0000</pubDate><atom:updated>2026-07-23T12:54:50.376Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,பூந்தமல்லி,தற்கொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/q3uehp0b/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/q3uehp0b/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே கரையான்சாவடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் செல்வின். இவரது மனைவி ஷாலினி (33 வயது). என்ஜினீயரான இவர் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இருவரும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளார். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ஷாலினி மனவேதனையில் இருந்து வந்தார்.</p><p>இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது ஷாலினி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போலீசார் ஷாலினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே ஷாலினி தற்கொலை செய்வதற்கு முன்பு வீடியோ ஒன்றை பதிவு செய்து, உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி உள்ளார். அந்த வீடியோவில் கதறி அழுதபடி ஷாலினி கூறியிருப்பதாவது:-</p><p>என்னால் தாங்க முடியவில்லை. பிரிந்தும் வாழ விடமாட்டீர்கள். என்னால் யாருக்கும் எந்த பாரமும் வேண்டாம். இவனை யாரும் சும்மா விடாதீர்கள். நான் பொறுத்து பார்த்தும் முடியவில்லை. செல்கிறேன். நான் இந்த வீடியோவை அனுப்புகிறேன். இதனை போலீசில் கொடுங்கள். ஆவடியில் உள்ள வீடு இரண்டு பேரின் பெயரில் உள்ளது. அதனை நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள். நானே எதுவும் செய்து கொள்ள வேண்டும் என்று கொடுமைப்படுத்துகிறான். பிளீஸ் அவனை சும்மா விடாதீர்கள். நான் போகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.</p><p>இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷாலினியின் கணவர் செல்வினை கைது செய்தனர். விசாரணையில் நேற்று காலை குழந்தையை ஷாலினி அடித்ததாக கூறப்படுகிறது. இதனை கணவர் கண்டித்து ஷாலினியை தாக்கிவிட்டு உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றதாக தெரிகிறது. அதன் பின்னர் ஷாலினி தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஷாலினியின் தற்கொலை முடிவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>&apos;ஜனநாயகன்&apos; வெற்றி பெற வேண்டி அம்மன் கோவிலில் மண்சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vijay-fans-ate-man-soru-at-an-amman-temple-praying-for-the-success-of-jananayagan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vijay-fans-ate-man-soru-at-an-amman-temple-praying-for-the-success-of-jananayagan#comments</comments><guid isPermaLink="false">7d47eb99-2aba-4cf0-947f-28bcfee2a121</guid><pubDate>Thu, 23 Jul 2026 12:34:06 +0000</pubDate><atom:updated>2026-07-23T12:34:06.904Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Amman temples,மண்சோறு,விஜய் ரசிகர்கள்,Jananayagan,ஜனநாயகன் படம்</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/r8dbzgtt/8.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ மண்சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஜனநாயகம் திரைப்பட வெற்றிக்காக மண்சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/r8dbzgtt/8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>'ஜனநாயகன்' திரைப்படம் வெற்றி பெற வேண்டுமென்று விஜய் ரசிகர்கள் அம்மன் கோவிலில் மண்சோறு சாப்பிட்டு வினோத நேர்த்திகடன் செலுத்தினர்.</p><h2>முதலமைச்சரின் கடைசி திரைப்படம்</h2><p>தமிழக முதலமைச்சரும், நடிகருமான விஜய் நடிப்பில் இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் '<a href="https://www.dailythanthi.com/search?q=jananayagan">ஜனநாயகன்'</a>. விஜய்யின் அரசியல் வருகைக்குப் பின், அவரது கடைசித் திரைப்படமாக திரைக்கு வந்துள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. </p><h2>வினோத வழிபாடு</h2><p>இந்நிலையில், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திரண்ட விஜய் ரசிகர்கள், படம் உலகளவில் இமாலய வெற்றி பெற வேண்டும் என வேண்டி அம்மன் கோவில் வளாகத்தில் ஒன்று கூடினர். அங்கு முட்டிப்போட்டபடி, வெறும் தரையில் சாதத்தைப் கொட்டி, மண்ணோடு பிசைந்து 'மண்சோறு' சாப்பிட்டு வினோத முறையில் தங்களது அசுர பிரார்த்தனையை நிறைவேற்றினர்.</p><h2>நெட்டிசன்கள் - பொதுமக்கள் விமர்சனம்</h2><p>திரைப்பட வெற்றிக்காகவும், தணிக்கை சான்றிதழ் தடைகளைத் தாண்டியும் ரசிகர்கள் நடத்திய இந்த வேண்டுதல் நிகழ்வு இணையத்தில் கடுமையான விவாதங்களை கிளப்பியுள்ளது."ஒரு திரைப்படத்திற்காக ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் இப்படி மண்ணில் சோறு போட்டு சாப்பிடுவது அநாகரிகமானது, தேவையற்றது" என பொதுமக்களும் நெட்டிசன்களும் தங்களது கண்டனங்களை சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.</p><p>எனினும், தளபதி விஜய் மீதான தங்களின் அலாதி அன்பின் வெளிப்பாடே இது என அவரது ரசிகர்கள், இந்த செயல் நியாயம் தான் என்று கூறி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை: பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து வடக்கு வட்டார துணை ஆணையர் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-northern-regional-deputy-commissioner-inspects-various-development-project-works</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-northern-regional-deputy-commissioner-inspects-various-development-project-works#comments</comments><guid isPermaLink="false">b807eeb5-8920-400b-b593-82a31a1ac363</guid><pubDate>Thu, 23 Jul 2026 12:29:16 +0000</pubDate><atom:updated>2026-07-23T12:29:16.964Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/03gk4xv7/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/03gk4xv7/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மணலி மற்றும் மாதவரம் மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை வடக்கு வட்டார துணை ஆணையாளர் ஸ்வேதா சுமன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>துணை ஆணையர் ஆய்வு</h2><p>இன்று (23.07.2026) வடக்கு வட்டார துணை ஆணையாளர் ஸ்வேதா சுமன் பெருநகர சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், வார்டு-16க்குட்பட்ட கடப்பாக்கம் ஏரி, வார்டு-19க்குட்பட்ட மஞ்சம்பாக்கம் பகுதியில் கட்டப்பட்டு வரும் நிவாரண மையம், தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு தயாரிக்கும் சமையல் கூடம், மாத்தூர் பகுதியில் நர்சரி பண்ணைகள் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அமைக்கப்படவுள்ள </a>இடம், தொடர்ந்து, மாதவரம் மண்டலம், வார்டு-23க்குட்பட்ட புழல் பகுதியில் உள்ள சமுதாய கூடம், வார்டு-24க்குட்பட்ட நகர்ப்புற சமுதாய நல மையம் உள்ளிட்டவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.</p><h2>அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்</h2><p>இந்த ஆய்வின்போது, வடக்கு வட்டார துணை ஆணையாளர் கடப்பாக்கம் ஏரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளையும், நிவாரண மையம் கட்டுமானப் பணிகளையும், சமையல் கூடத்தினைத் தூய்மையாகப் பராமரித்திடவும், நகர்ப்புற சமுதாய நல மையத்தில் மருத்துவர்கள், பணியாளர்கள் வருகை, பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்தும், சமுதாய கூடத்தினை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பராமரித்திடவும் </a>அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரூ.2,000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலம் - தமிழக அரசு அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-2000-crore-worth-of-bonds-auction-tamil-nadu-government-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-2000-crore-worth-of-bonds-auction-tamil-nadu-government-announcement#comments</comments><guid isPermaLink="false">68389d6e-b9b2-4e13-9efd-87a6f3c73e6e</guid><pubDate>Thu, 23 Jul 2026 12:27:04 +0000</pubDate><atom:updated>2026-07-23T12:27:04.582Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt,auction,ஏலம்,பிணையப் பத்திரங்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/t589qfv3/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/t589qfv3/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ரூ.2,000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு அரசு மொத்தம் ரூபாய் 2,000 கோடி மதிப்புள்ள, பங்குகள் வடிவிலான 7.39 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள் 2034 ரூபாய் 1,000 கோடி மறுவெளியீடு மற்றும் 7.59 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள் 2041 ரூபாய் 1,000 கோடி மறுவெளியீடு ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.</p><p>இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் ஜீலை 28, 2026 அன்று நடத்தப்படும். போட்டி ஏலக்கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.00 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் [Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System] மின்னணு படிவத்தில் (Electronic format) ஜீலை 28, 2026 அன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இனிமே சண்டை இல்லை..நாம பிரெண்ட்ஸ்.. டெலிவிரி ஊழியரை கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டு.. மன்னிப்பு கோரிய இளம்பெண் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/were-friends-young-woman-apologizes-after-cursing-delivery-worker</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/were-friends-young-woman-apologizes-after-cursing-delivery-worker#comments</comments><guid isPermaLink="false">a15dfeca-1e9c-4b56-99ae-a26fd8945945</guid><pubDate>Thu, 23 Jul 2026 12:20:19 +0000</pubDate><atom:updated>2026-07-23T12:20:19.625Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,women,delivery,delivery boy,Food delivery</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/z6jdcv0l/zemoto33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மன்னிப்பு கோரிய இளம்பெண்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/z6jdcv0l/zemoto33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>டெலிவரி ஊழியரை ஆபாசமாக பேசிய பெண்ணின் வீடியோ வெளியாகி அப்பெண்ணிற்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் அந்த இளைஞரை அழைத்து அந்த பெண் மன்னிப்பு கேட்டு வீடியோவாக வெளியிட்டுள்ளார்.</p><h2>டெலிவிரி ஊழியர்கள்</h2><p>தொழில்நுட்பங்கள் பெருகிவிட்ட இந்த காலக்கட்டத்தில் நாம் வாங்க விரும்பும் பொருட்கள் அனைத்தும் வீட்டு வாசலுக்கே வரும் வகையில் காலம் மாறி விட்டது. ஸ்விக்கி, சோமட்டோ, பிக் பாஸ்கெட், பிளிங்கிட், அமேசான், பிளிப்கார்ட், செப்டோ போன்ற பல வகையான நிறுவனங்கள் தங்கள் கீழ் டெலிவரி ஊழியர்களை கொண்டு இத்தகைய தொழிலை மேற்கொண்டு வருகிறது. உணவு, மளிகைப் பொருட்கள், ஆடைகள் என அனைத்தும் கிடைக்கிறது. இந்த தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் என அனைவரும் சென்னை போன்ற பெருநகரங்களில் பணியாற்றி வருகின்றனர். </p><p>ஒவ்வொரு ஆர்டருக்கும் குறிப்பிட்ட தொகை வழங்கப்படும் என்பதால் பலரும் நிரந்தர பணி அமையும் வரை இத்தகைய பணிகளை தங்கள் வாழ்வாதாரத்துக்காக செய்து வருகின்றனர். ஆனால் சில இடங்களில் இத்தகைய டெலிவரி ஊழியர்களை ஆர்டர் செய்யும் மக்கள்  டெலிவிரி ஊழியர்களை கொஞ்சம் கூட மதிப்பதில்லை. அடிமை போல் நடத்தி கேவலமாக பேசும் காட்சிகளும் சமூக வலைதளங்களிலும் டிரெண்டிங் ஆவதுண்டு. அப்படி ஒரு சம்பவம் தான் நேற்று சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியது. </p><h2>வசைபாடிய இளம்பெண்</h2><p>சென்னை மணலி அருகே உணவு ஒன்றை இளம்பெண் ஒருவர் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவர் தன் முகவரியை தவறாக கூறியதாக தெரிகிறது.  . கூகுள் மேப் பார்த்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D">டெலிவரி ஊழியர்கள்</a> வருவார்கள் என்பதால் அந்த முகவரி மேப்பிலும் தவறாக காட்டியுள்ளது. இதனால் உணவை டெலிவரி செய்ய தாமதமானதாக சொல்லப்படுகிறது. இதனால் அப்பெண்ணுக்கும் டெலிவரி செய்ய வந்த கிஷோர் என்ற நபருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. </p><p>இதில் கோபமடைந்த அந்த பெண் கிஷோரை கெட்ட கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்தார். காது கொடுத்து கேட்க கூடாத அளவிற்கு மிகவும் அறுவதறுக்தக்க  வகையில் வசைபாடினார். அதுமட்டுமல்லாமல் அந்த ஊழியரின் குடும்பத்தையும் இழிவாக பேசினார். மேலும் எல்லாவற்றையும் பேசிவிட்டு போலீசுக்கும் போன் போடும் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் வைரலானது. பலரும் அந்த பெண்ணை  வெளுத்து வாங்கினர். </p><h2>பகிரங்க மன்னிப்பு </h2><p>இந்த நிலையில் டெலிவரி ஊழியர் கிஷோரை தேடி கண்டுபிடித்த அந்த இளம்பெண் நடந்த தவறுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவை யாரும் பரப்ப வேண்டாம். இந்த செயல் மற்ற டெலிவரி ஊழியர்களை காயப்படுத்தியிருந்தால் மன்னியுங்கள் எனவும் அந்த பெண் தெரிவித்துள்ளார். நாங்கள் இனிமேல் நண்பர்கள்..இனிமே சண்டைலாம் இல்லை.. நாம  ப்ரெண்ஸ் சரியா என தெரிவிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மாதிரி உணவு தெருக்கள் திட்டம் - அமைச்சர் அருண்ராஜ் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/model-food-streets-scheme-for-six-districts-including-chennai-minister-arunraj-announces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/model-food-streets-scheme-for-six-districts-including-chennai-minister-arunraj-announces#comments</comments><guid isPermaLink="false">98da0d40-8961-4325-963d-db1729e98833</guid><pubDate>Thu, 23 Jul 2026 12:12:33 +0000</pubDate><atom:updated>2026-07-23T12:12:33.686Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,உணவு,விற்பனையாளர்கள்,Minister Arunraj,அமைச்சர் அருண்ராஜ்,food street</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/i77iued6/annayar.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/i77iued6/annayar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் , திருவள்ளூர் மாவட்ட சாலையோர உணவு வியாபாரிகளுக்கான சிறப்பு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாமை இன்று தொடங்கி வைத்தார்.</p> <p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை <a href="https://www.dailythanthi.com/topic/arunraj">அமைச்சர் அருண்ராஜ்</a> அவர்கள் இன்று (23.07.2026) திருவள்ளூர் மாவட்ட சாலையோர உணவு வியாபாரிகளுக்கான சிறப்பு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாமை சென்னை ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி கலையரங்கில் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.</p><p>இந்த பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாமில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர், பூண்டி, எல்லாபுரம், மீஞ்சூர், புழல், சோழவரம், கும்மிடிப்பூண்டி, வில்லிவாக்கம், ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, திருவேற்காடு, மாதவரம், திருவெற்றியூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய பகுதிகளை சார்ந்த சுமார் 1500 க்கும் மேற்பட்ட சாலையோர உணவு வியாபாரிகள் கலந்து கொண்டனர்.</p><h2>விழிப்புணர்வு கண்காட்சி</h2><p>இம்முகாமில் சாலையோர உணவு வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் சார்பில் உணவுப் பொருள் கலப்படத்தை எளிதில் கண்டறியும் முறை, பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்களை பாதுகாப்பாக மறுசுழற்சி செய்தல் மற்றும் உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. </p><p>அமைச்சர் அவர்கள் இக்கண்காட்சிகளை பார்வையிட்டு, அதன் செயல்முறைகளை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும் துருப்பிடிக்காத எக்குவால் (stainless-steel) வடிவமைக்கப்பட்டிருந்த உணவு வண்டிகளை பார்வையிட்டார்.</p><h2>உணவுப் பாதுகாப்பு பதிவு சான்றிதழ்</h2><p>இம்முகாமில் அமைச்சர் அவர்கள் தலைமையில் சாலையோர உணவு விற்பனையாளர்கள் அனைவரும் உணவுப் பாதுகாப்பு குறித்த உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து  அமைச்சர் அவர்கள் இம்முகாமில் கலந்து கொண்ட சாலையோர உணவு விற்பனையாளர்களுக்கு உணவுப் பாதுகாப்பு பதிவு சான்றிதழ், உணவுப் பாதுகாப்பு பயிற்சி சான்றிதழ், மருத்துவத் தகுதி சான்றிதழ்களை வழங்கினார்.</p><p>மேலும் Breaks India, Pan Oleo Energy Ltd, Udhayam Agro Foods, Grace Pvt Ltd ஆகிய நிறுவனங்களின் சார்பில் வழங்கப்பட்ட உணவு வண்டிகளை 5 சாலையோர உணவு விற்பனையாளர்களுக்கு அமைச்சர் அவர்கள் வழங்கினார்.</p><h2>சாலையோர உணவு விற்பனையாளர்கள்</h2><p>இந்நிகழ்ச்சியில், மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் கூறியதாவது:-</p><p>மருத்துவத்துறையில் நோய் வந்த பிறகு அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மற்றும் குணப்படுத்துவது இதைப்பற்றி மட்டுமே சிந்தித்து வந்தோம். தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு நோய் வருவதற்கு முன்பே நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. </p><p>அதில் முக்கிய பங்கு என்பது சுத்தமான, சுகாதாரமான உணவு தான். ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு அடிப்படை தேவை உணவு. உணவு இல்லாமல் பசியோடு எந்த ஒரு நபரும் இருக்கக் கூடாது என்பதுதான் நம்முடைய முதல்-அமைச்சர் அவர்களின் எண்ணம். மக்களின் பசியை போக்குவதில் சாலையோர உணவு விற்பனையாளர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. குறைந்த விலையில் சுத்தமான, சுகாதாரமான உணவினை சாலையோர உணவு விற்பனையாளர்கள் வழங்குகிறார்கள்.</p><p>தமிழ்நாடு முழுவதும் சுமார் 50,000 சாலையோர உணவு விற்பனையாளர்கள் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களிடம் ஆலோசித்த போது சாலையோர உணவகங்களில் சுத்தமான, சுகாதாரமான உணவு கிடைக்கின்றது என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் எனதெரிவித்தார். அதற்கு நாம் சமைக்கும் உணவினை சுத்தமாக குறிப்பாக உணவிற்கு பயன்படுத்தப்படும் காய்கறி மற்றும் இதர உணவுப் பொருட்களை தூய்மையாக சுகாதாரத்துடன் பயன்படுத்துகிறோம் என்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்கு சாலையோர உணவு விற்பனையாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.</p><p>ஒவ்வொருவரும் செய்யும் தொழிலே தெய்வம் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இத்தொழிலை மேற்கொள்ள வேண்டும். பிறப்பபொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதே இந்த அரசின் கொள்கை, இந்த மண்ணின் கொள்கை. மருத்துவம் எப்படி ஒரு புனிதமான தொழிலோ அதுபோன்று உணவு வழங்குவது என்பதும் ஒரு புனிதமான தொழில். சாலையோர உணவு விற்பனையாளர்கள் பல பேரின் பசியை போக்குகின்ற இடத்தில் நான் இருக்கிறேன் என்ற ஒரு கர்வத்துடன் நீங்கள் இருக்க வேண்டும். அதே நேரத்தில் சுத்தமான சுகாதாரமான உணவினை வழங்குகிறோம் என்ற பொறுப்பும் நமக்கு இருக்க வேண்டும். சாலையோர உணவு விற்பனையாளர்கள் உணவு சங்கிலி முறையில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறார்கள்.</p><h2>6 மாவட்டங்களில்</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றவுடன் உணவு பாதுகாப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்டபொழுது தமிழ்நாடு முழுவதும் மாதிரி உணவு தெருக்களை உருவாக்கலாம் என்ற ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த மாதிரி உணவு தெருக்களில் வழங்கப்படும் உணவுகள் சுத்தமாகவும், சுகாதாரத்துடன் இருக்கும். இத்தெருக்களில் வியாபாரிகளுக்கு துருப்பிடிக்காத எக்குவால் ஆன உணவு சமைக்கும் வாகனங்கள் ஒரே மாதிரியான வடிவமைப்புடன் இருக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்பொழுது இந்த நிகழ்ச்சியில் பிரேக் இந்தியா (Breaks India) போன்ற நிறுவனங்களின் சார்பில் 5 விற்பனையாளர்களுக்கு உணவு விற்பனை வண்டிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>தமிழ்நாட்டில் சென்னை, கோயம்பத்தூர், மதுரை, திருச்சி, சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் மாதிரி உணவு தெருக்கள் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த மாவட்டங்களில் முதலில் ஒரு தெரு தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு பொது மக்களுக்கு குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உணவு பாதுகாப்பு வழிமுறைகளின்படி சுத்தமான, சுகாதாரமான உணவு கிடைக்கும். இதுபோன்று திட்டத்தை செயல்படுத்தும் போது பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் பாதுகாப்பான ஒன்றாக இருக்கும். இத்திட்டம் படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும்.</p> <p>உணவுப் பொருட்களில் தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தும் உணவு தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற விதிமீறல்களை அரசு வேடிக்கை பார்க்காது என்பதை இக்கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன். சாலையோர உணவு விற்பனையாளர்கள் மற்றும் உணவு தயாரிப்பாளர்கள் தங்களுடைய உடல் நலத்திலும் கவனம் கொள்ள வேண்டும். </p><p>ஏனெனில் பலருக்கு உணவு வழங்கும் நமக்கு ஏதேனும் தொற்று நோய்கள் இருந்தால் அது பிறருக்கு பரவக்கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே அவ்வப்போது நம்முடைய உடல் நிலையை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். சாலையோர உணவு விற்பனையாளர்கள் சமுதாயத்திற்கு ஆற்றும் தொண்டு மிக முக்கியமானது. பொதுமக்களுக்கு சுத்தமான, சுகாதாரமான உணவினை வழங்குவோம், வியாபாரத்தையும் பெருக்குவோம்</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p><p>இந்நிகழ்ச்சியில், முதன்மைச் செயலாளர் / உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் லால்வேனா, இ.ஆ.ப., உணவுப் பாதுகாப்புத் துறை கூடுதல் ஆணையர் நாகராணி, உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் கதிரவன் மற்றும் சாலையோர உணவு விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ரீல்ஸ் மோகம்.. கொழுக்குமலையில் 200 அடி பள்ளத்தில் தவறி விழுந்த சென்னை வாலிபர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourist-falls-200ft-at-kolukkumala-resued</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourist-falls-200ft-at-kolukkumala-resued#comments</comments><guid isPermaLink="false">7fcfe78a-5b57-430f-9544-3bc73ed49cb4</guid><pubDate>Thu, 23 Jul 2026 11:53:31 +0000</pubDate><atom:updated>2026-07-23T11:53:31.496Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,Vellore,Reels,Forest</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/rwg6coi1/body33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
ரீல்ஸ் மோகம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/rwg6coi1/body33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த முருகன் மகன் கார்த்திக் (வயது 28). தனியார் உணவு வினியோக நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது நண்பர்கள் 5 பேருடன் சில நாட்களுக்கு முன்பு கேரளம் மாநிலம் மூணாறு பகுதிக்கு சுற்றுலா வந்தார்.</p><p>பின்னர் அவர்கள் தமிழக-கேரளம் மாநில எல்லையில், தேனி மாவட்டம் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">குரங்கணி மலை</a> உச்சியில் உள்ள கொழுக்குமலைக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். இதற்காக மூணாறு அருகே சூரியநல்லியில் இருந்து நேற்று அதிகாலை ஒரு ஜீப்பில் கொழுக்குமலைக்கு புறப்பட்டனர். அங்கு அவர்கள் சூரிய உதயத்தை பார்த்து ரசித்தனர்.</p><h2>பள்ளத்தில் விழுந்தார்</h2><p>காலை 8 மணியளவில் அங்குள்ள சிங்கப்பாறை என்ற இடத்தில் அவர்கள் புகைப்படம், வீடி யோக்கள் எடுத்துக் கொண்டு இருந்தனர். அப்போது கார்த்திக் ஆபத்தான பள்ளம் அருகில் நின்று கொண்டு இருந்தார். எதிர்பாராத விதமாக அவர் பள்ளத்தில் தவறி விழுந்தார். அது சுமார் 200 அடி பள்ளம் ஆகும்.</p><p>உடனே அவருடைய நண்பர்கள் தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் கேரளம் மாநில தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். குரங்கணி மற்றும் போடியில் இருந்து போலீசாரும் அங்கு விரைந்தனர்.</p><h2>2 மணி நேரம் போராடி மீட்பு </h2><p>பள்ளத்தில் கார்த்திக் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். சுமார் 2 மணி நேரம் போராடி கார்த்திக்கை மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர் அவரை ஆஸ் பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து குரங்கணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>சிங்கப்பாறை</h2><p>கடந்த மாதம் இதே சிங்கப்பாறை பகுதியில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் காதல் தோல்வியால் பள்ளத்தில் குதித்து தற்கொலை செய்தார். இந்த சிங்கப்பாறை பகுதி யில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், 'ரீல்ஸ்' மோகத்தால் தடையை மீறி அங்கு சுற்றுலா பயணிகள் செல்வதால் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதால் அங்கே ஆட்கள் நுழையாத வகையில் தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/places-in-chennai-that-will-experience-power-outages-the-day-after-tomorrow-14</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/places-in-chennai-that-will-experience-power-outages-the-day-after-tomorrow-14#comments</comments><guid isPermaLink="false">ecb83012-8fba-4654-9931-63fceacc4dfd</guid><pubDate>Thu, 23 Jul 2026 11:37:10 +0000</pubDate><atom:updated>2026-07-23T11:37:10.514Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மின் தடை,power cut</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/yvw9a02h/Untitled-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/yvw9a02h/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>சென்னையில் 25.07.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">முடிவடைந்தவுடன் </a>மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><h2>மின் தடை ஏற்படும் இடங்கள்</h2><p><strong>போரூர்</strong>: குமணன்சாவடி பெரியார் நகர், எஸ்.வி.நகர், கண்ணகி நகர்,பவித்ரா நகர்,சுகுந்தலா நகர், ஜீவன் பிரகாஷ் நகர், விஜிஎன் நகர், சாந்தி நகர், அட்கோ நகர்.    </p><p><strong>தாம்பரம்</strong>: எம்.ஆர்.எம். தெரு, ராஜாஜி சாலை, வெங்கடேசன் தெரு, சண்முகம் சாலை, சிவசண்முகம் தெரு, அப்துல் ரஸாக் தெரு, போலீஸ் குடியிருப்புகள், ஜி.எஸ்.டி. சாலை, துரைசாமி ரெட்டி தெரு, எம்.கே. ரெட்டி தெரு, பக்தவத்சலம் தெரு.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூரில் 29ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-protest-in-cuddalore-on-the-29th-against-the-hydrocarbon-project</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-protest-in-cuddalore-on-the-29th-against-the-hydrocarbon-project#comments</comments><guid isPermaLink="false">81fd34c8-9d90-467c-b429-3e7e51ae1126</guid><pubDate>Thu, 23 Jul 2026 11:14:21 +0000</pubDate><atom:updated>2026-07-23T11:14:21.377Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,அதிமுக,AIADMK,Cuddalore,கடலூர்,அதிமுக ஆர்ப்பாட்டம்,AIADMK protests,Edapadi Palanisamy,ஹைட்ரோ கார்பன் திட்டம்,Hydrocarbon project</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/l6o86vwx/eps.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/l6o86vwx/eps.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர்,</p><p>அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>கடலூர் மாவட்டம், சிதம்பரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பரங்கிப்பேட்டை கடற்கரையில் சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில், 4 புதிய கடல்சார் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய் எடுப்பதற்காக இந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளோரேஷன் நிறுவனம், தமிழ் நாடு அரசு மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையத்தின் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது.</p><h2>வாழ்வாதாரம் பாதிக்கப்படும்</h2><p>அம்மாவின் நல்லாசியோடு நடைபெற்ற எனது தலைமையிலான கழக ஆட்சியில், கடலூர் மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.</p><p>ஆனால் தற்போது, கடலில் இக்கிணறுகள் அமைக்க இந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளோரேஷன் நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. இதற்கு அனுமதி அளிக்கும்பட்சத்தில், இக்கிணறுகளை அமைப்பதற்கு அதிகப்படியான துளையிடுதலாலும், அதன்மூலம் ஏற்படும் அதிக சத்தத்தாலும், நச்சு ரசாயனக் கழிவுகளாலும் கடல் வாழ் உயிரினங்கள் அழியவும், இனப் பெருக்கம் குறையவும், சுற்றுச் சூழல் பாதிப்பும் ஏற்படுவதோடு, கடலையே நம்பி வாழும் மீனவ சமுதாய மக்களின் வாழ்வாதாரமும் பெருமளவில் பாதிக்கப்படும். மேலும், கடற்கரை ஓரம் உள்ள சதுப்பு நிலத்தின் தன்மையும், அங்கே வளரும் மாங்ரோவ் இன காடுகளும் அழியும் அபாய நிலையும் உருவாகும். இவைகளின் காரணமாக, மக்களின் பொருளாதார நிலை வெகுவாக சீர்கெட்டுவிடும்.</p><h2>கண்டன ஆர்ப்பாட்டம்</h2><p>இந்நிலையில், மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு, சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பரங்கிப்பேட்டை கடற்கரையில் இந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளோரேஷன் நிறுவனம், ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய் எடுப்பதற்கு த.வெ.க. அரசு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தியும்; கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் பக்கம் சேரவைத்து, குதிரைபேர ஆட்சி நடத்தி வரும் த.வெ.க. அரசைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டத்தின் சார்பில், 29.7.2026 -புதன் கிழமை காலை 10 மணியளவில், பரங்கிப்பேட்டையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.</p><p>இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான உதயகுமார் தலைமையிலும், கழக அமைப்புச் செயலாளரும், கடலூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான சொரத்தூர் ரா. ராஜேந்திரன், கடலூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தாமோதரன், கடலூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பாண்டியன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.</p><h2>எடப்பாடி பழனிசாமி அழைப்பு</h2><p>இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கடலூர் கிழக்கு, கடலூர் வடக்கு, கடலூர் தெற்கு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், கழக சட்டமன்ற உறுப்பினர்கள், கழகம் மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கலந்துகொள்ளுமாறு </a>கேட்டுக்கொள்கிறேன்.</p><p>மக்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் விசாரணை கைதி மரணம்.. என்ன நடந்தது..?  மாவட்ட காவல்துறை பரபரப்பு விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/death-of-undertrial-prisoner-arunachalam-in-thoothukudi-what-happened-district-police-issue-a-detailed-statement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/death-of-undertrial-prisoner-arunachalam-in-thoothukudi-what-happened-district-police-issue-a-detailed-statement#comments</comments><guid isPermaLink="false">8e255397-a693-4442-8360-07dd0c3ca6c4</guid><pubDate>Thu, 23 Jul 2026 11:03:26 +0000</pubDate><atom:updated>2026-07-23T11:03:26.005Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Thoothukudi,தூத்துக்குடி,மரணம்,விசாரணை கைதி,லாக் அப் மரணங்கள்,காவல்துறை விளக்கம்,Lockup Death</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/mpd286om/veLi.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/mpd286om/veLi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சட்ட விரோதமாக மது விற்றதாக விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட  அருணாசலம் என்ற வாலிபர் மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>கைதி அருணாச்சலம்</h2><p>விசாரணை என்ற பெயரில் போலீசார் நடத்திய கடுமையான தாக்குதலாலேயே அருணாச்சலம் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் இதற்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>இந்நிலையில் விசாரணை கைதி அருணாச்சலம் மரணம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.</p><h2>120 மதுபான பாட்டில்கள்</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>கடந்த 17.07.2026 அன்று, தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில், தூத்துக்குடி அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த அருணாசலம் (24) என்பவர் மதுவிலக்கு அமலாக்க சோதனையின் போது 180 மில்லிலிட்டர் அளவிலான 120 மதுபான பாட்டில்களை சட்டவிரோதமாக வைத்திருந்தது கண்டறியப்பட்டதால், தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய குற்ற எண். 751/2026 ச/பி தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் பிரிவுகள் 4(1)(A) மற்றும் 14 -ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.</p><h2>காயங்கள் இல்லை</h2><p>கைது செய்யப்பட்ட பின்னர், சட்டப்படி பின்பற்றப்பட வேண்டிய அனைத்து நடைமுறைகளும் முறையாக கடைபிடிக்கப்பட்டன. அவரது உடல் சோதனையானது, காணொளி பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட விபரம் அவரது குடும்பத்தினருக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.</p><p>அதனைத் தொடர்ந்து, 17.07.2026 அன்று மாலை சுமார் 5.50 மணியளவில், அவரை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டது. பரிசோதனை மேற்கொண்ட டாக்டர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தகுதியுடையவர் என சான்றளித்ததுடன், அவரது உடலில் எந்தவித வெளிப்புறக் காயங்களும் இல்லை என்றும் மருத்துவ சான்றிதழில் சான்றளித்தார்.</p><h2>தானாகவே மயங்கி விழுந்தார்</h2><p>சட்ட மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்காக அவர் மீண்டும் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, அப்போது காவல் நிலையத்தில் இருந்த பிற கைதிகளுடன் காவல் நிலைய லாக்-அப்பில் வைக்கப்பட்டார். லாக்-அப்பில் இருந்த போது, மற்ற கைதிகளுடன் இயல்பாக நின்று பேசிக் கொண்டிருந்த அவர், திடீரென தானாகவே மயங்கி கீழே விழுந்தார். </p><p>இச்சம்பவம் லாக்-அப்பின் முன்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து, காவல்துறையினர் உடனடியாக அவருக்கு தேவையான உதவிகளை செய்து, குடிநீர் வழங்கி, பாதுகாப்பாக அமர வைத்தனர். காவல் நிலைய வரவேற்பு பகுதியிலிருந்த அவரது தாயாரும் உடனடியாக அழைக்கப்பட்டார். </p><h2>சட்டப்படி விசாரணை</h2><p>அதன்பின்னர், அவரது உடல்நிலை இயல்பாக இருந்ததால், கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவரை ஜாமீனில் விடுவிக்கப்பட்டு, தொடர் மருத்துவப் பரிசோதனைக்காக அவரது உறவினர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.</p><p>அதன்பின்னர், மருத்துவமனை அருகே அவர் மீண்டும் மயங்கி விழுந்ததாக அவரது உறவினர்கள், காவல்துறையினருக்கு தெரிவித்தனர். தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சிகிச்சையின் போது, அவருக்கு மருத்துவ நடைமுறை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல், 23.07.2026 அன்று அவர் இறந்ததாக டாக்டர்களால் அறிவிக்கப்பட்டது.</p><p>இச்சம்பவம் தொடர்பாக, அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சட்டப்படி விசாரணை நடைபெற்று வருகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>வீடியோ வெளியீடு</h2><p>இந்த சூழலில் தென்பாகம் காவல் நிலையத்தில் அருணாச்சலம் மயங்கி விழுந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 17ஆம் தேதி இரவு 8.38க்கு காவல் நிலையத்தில் அருணாச்சலம் மயங்கி விழுந்த வீடியோவை மாவட்ட காவல்துறை வெளியிட்டது. </p>]]></content:encoded></item><item><title>கோயம்பேடு பேருந்து நிலையத்தை புனரமைத்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் - எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rebuild-koyambedu-bus-terminus-for-public-use-edappadi-palaniswami</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rebuild-koyambedu-bus-terminus-for-public-use-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">7bb969cf-f711-4631-b9d1-528c4a32702e</guid><pubDate>Thu, 23 Jul 2026 11:02:53 +0000</pubDate><atom:updated>2026-07-23T11:02:53.705Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,Edappadi Palaniswami,கோயம்பேடு பேருந்து நிலையம்,Koyambedu bus stand</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/xu3xc16i/Untitled-4.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/xu3xc16i/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சென்னை மாநகரில் பாரிஸ் கார்னரில் இயங்கி வந்த பேருந்து நிலையம் மற்றும் மொத்த காய்கறி வியாபாரத்தின் கேந்திரமாய்த் திகழ்ந்த கொத்தவால்சாவடி ஆகியவற்றின் காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து மற்றும் மக்கள் நெருக்கடியைப் போக்கவும், கோயம்பேட்டில் ஒரே நேரத்தில் 300 பேருந்துகள் நிறுத்தும் வசதியுடன், சராசரியாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பலனடையும் வகையில் சுமார் 35 ஏக்கரில் ரூ.103 கோடி மதிப்பீட்டில் ஆசியாவிலேயே மிக பிரமாண்டமான பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு 2002-ம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசால் திறந்து வைக்கப்பட்டது. மேலும், சென்னை மாநகரின் காய்கறி மொத்த வியாபார வளாகமும் கோயம்பேட்டில் அமைக்கப்பட்டது.</p><p>வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய விரைவுப் பேருந்துகள், சென்னை மாநகருக்குள் வராமல், கோயம்பேடு பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்பட்டதாலும், அங்கிருந்து சென்னை மாநகருக்குள் போதுமான அளவு மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டதாலும், பொதுமக்கள் பெரிதும் பலன் அடைந்தனர். மேலும், 2015-ம் ஆண்டு மெட்ரோ ரெயில் போக்குவரத்தும் தொடங்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசலும் குறைந்தது. அதேபோல், ஆம்னி பேருந்துகளை இயக்கவும் கோயம்பேட்டில் தனியாக இடவசதி செய்து தரப்பட்டது.</p><p>இந்நிலையில், கோயம்பேட்டிலும் போக்குவரத்து மற்றும் மக்கள் நெரிசல் அதிகமானதைத் தொடர்ந்து பேருந்து பயணிகளுக்கு மென்மேலும் வசதிகளை ஏற்படுத்தித் தர, செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் பிரம்மாண்டமான புறநகர் பேருந்து நிலையம் எனது தலைமையிலான கழக அரசால் வடிவமைக்கப்பட்டு, 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ம் நாளன்று அடிக்கல் நாட்டி பேருந்து நிலையப் பணிகளை துவக்கி வைத்தேன்.</p><p>சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, எங்கள் ஆட்சியில் போடப்பட்ட திட்டத்தின்படி, தென் மாவட்டங்களுக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து வாகனங்கள் இயக்கப்படுவது என்றும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மேற்கு மாவட்டங்களுக்கும், வட மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுவது என்றும், மாதவரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா மற்றும் வெளி மாநிலங்களுக்கு இயக்குவது என்றும் முடிவெடுக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வந்தது.</p><p>2021-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசு, இந்தத் திட்டங்கள் அனைத்தையும் இனம் புரியாத ஒரு காரணத்திற்காக நாசப்படுத்தி, கோயம்பேடு பேருந்து நிலையத்தை முழுவதுமாக முடக்கி, 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30-ம் தேதி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அவசர கதியில் திறந்ததுடன், சென்னையில் பொது போக்குவரத்து வசதியை மேம்படுத்தாத நிலையில், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பேருந்துகளை இயக்கச் செய்ததால் சென்னை மாநகர மக்கள் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சொல்லொண்ணா துன்பங்களுக்கு உள்ளாகினர்.</p><p>கோயம்பேடு பேருந்து நிலையம் தனது பொலிவை தொலைத்து செயலிழந்தது. மேலும், கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்துள்ள நிலத்தை தனியார் ஒருவருக்கு தாரை வார்க்க திமுக அரசு முனைந்தபோது அதைக் கண்டித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அறிக்கை வெளியிட்டதுடன், பொதுவெளியிலும், பேட்டிகள் வாயிலாகவும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தேன். அதன் விளைவாக, மக்களிடம் ஏற்பட்ட எதிர்ப்புக்கு அஞ்சி அத்திட்டத்தை செயல்படுத்த முடியாமல் அன்றைய திமுக அரசு தவிர்த்தது. தங்களுடைய எண்ணம் நிறைவேறாத நிலையில் கோயம்பேடு பேருந்து நிலைய வளாகம் கேட்பாரற்று சீர்குலைந்து, சீரழிந்துவிட்டது. திமுக அரசின் இந்த அலட்சியப் போக்கின் காரணமாக, இன்றைக்கு அந்த இடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வெளி வந்துள்ளன.</p><p>தற்போது, கோயம்பேடு பேருந்து வளாகம் முழுவதும் இரவு நேரங்களில் மது அருந்துதல் மற்றும் தவறான பாலியல் தொழில்களில் ஈடுபடும் சமூக விரோதச் செயல்கள் நடைபெறுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. சாலைகள் மோசமானதாகவும், உரிய மின் விளக்குகள் வசதியில்லாமல் கோயம்பேடு பேருந்து வளாகத்தின் உட்புறம் காணப்படுகிறது. தற்போது புதிய அரசு அமைந்த பின்னரும், கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெறும் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த காவல் துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன.</p><p>கடந்த திமுக ஆட்சியில் நடந்தது போலவே, தற்போதைய த.வெ.க. ஆட்சியிலும் கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தை, வெளி மாநில கட்டுமான நிறுவனத்திடம் ஒப்படைக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. அப்படி ஒரு திட்டம் இருந்தால் உடனடியாக அம்முயற்சியைக் கைவிட வேண்டும் என்று த.வெ.க. கூட்டணி அரசை வலியுறுத்துகிறேன்.</p><p>கோயம்பேடு பேருந்து நிலையத்தைப் போர்க்கால அடிப்படையில் புனரமைத்து, அதிமுக ஆட்சியில் திட்டமிட்டதுபோல், மேற்கு மற்றும் வட மாவட்டங்களுக்குச் செல்லக்கூடிய பேருந்துகளையும், நகரப் பேருந்துகளையும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தஞ்சை பெரிய கோவிலில் வண்டுகள் கடித்ததில் ஆந்திர பக்தர்கள் 4 பேர் மயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/4-andhra-devotees-faint-after-being-bitten-by-beetles-at-thanjavurs-big-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/4-andhra-devotees-faint-after-being-bitten-by-beetles-at-thanjavurs-big-temple#comments</comments><guid isPermaLink="false">64f5aaa7-06e0-4ac5-a8ff-efaa9d1db31a</guid><pubDate>Thu, 23 Jul 2026 10:49:40 +0000</pubDate><atom:updated>2026-07-23T10:49:40.651Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பக்தர்கள்,Thanjavur,தஞ்சாவூர்,108 Ambulance,பெரிய கோவில்,Big Temple</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/rqydv9zr/7.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ தஞ்சை பெரிய கோவில்]]></media:title><media:description type="html"><![CDATA[ தஞ்சை பெரிய கோவிலில் வண்டுகள் கடித்து 4 ஆந்திர பக்தர்கள் மயக்கம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/rqydv9zr/7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர்,</p><p>தஞ்சாவூர் மாவட்டம் பெரிய கோவிலில் கதண்டு எனப்படும் பெரிய வகை வண்டு கடித்ததில் ஆந்திர பக்தர்கள் 4 பேர் மயக்கமடைந்தனர்.</p><h2>யாகப் புகை</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தஞ்சாவூர்</a> உலகப் புகழ்பெற்ற பெரிய கோயில் வளாகத்தில் இன்று விசேஷ யாகம் ஒன்று நடைபெற்றது. இந்த யாகக் குண்டத்திலிருந்து அதிகளவில் புகை வெளியேறியது. இந்த அடர்ந்த புகை அருகில் இருந்த மரத்தில் கட்டப்பட்டிருந்த வண்டுகள் கூட்டின் மீது பட்டுள்ளது. இதனால் ஆவேசமடைந்த வண்டுகள் கூட்டம் கூட்டமாக கலைந்து பறந்தன. அப்போது கோயிலில் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த பக்தர்கள் மீது கதண்டுகள் திடீரென தாக்குதல் நடத்தின.</p><h2>4 பேர் மயக்கம்</h2><p>வண்டுகள் கொட்டியதில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உட்பட 4 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தனர். இதனால் கோயில் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மயக்கமடைந்த பக்தர்களை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">108 ஆம்புலன்ஸ்</a> மூலம் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.</p><p>அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வனத்துறையினர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் கதண்டுக் கூட்டை முழுமையாக அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>குற்றவாளிகளின் கூடாரமாக மாறுகிறதா தவெக? - நயினார் நாகேந்திரன் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-tvk-becoming-a-den-of-criminals-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-tvk-becoming-a-den-of-criminals-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">6fd9c4c5-cebb-435c-bc58-40d4b71ee16e</guid><pubDate>Thu, 23 Jul 2026 10:27:18 +0000</pubDate><atom:updated>2026-07-23T10:27:18.034Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,பாஜக,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/ft1xdsb0/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/ft1xdsb0/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எகஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே, வீட்டில் தனியாக இருந்த பெண்ணைக் கட்டிப்போட்டு 21 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், தவெகவின் மாவட்ட இளைஞரணி இணை செயலாளரான சரவண குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது. அதிலும் குறிப்பாக, ஒட்டுமொத்த கொள்ளை சம்பவத்திற்கும் இந்த தவெக நிர்வாகி தான் மூளையாக செயல்பட்டுள்ளார் என்ற கூடுதல் தகவல், ஒருவித அச்சத்தை நம்முள் படரச் செய்கிறது. </p><h2>நீக்கினால் சரியாகிவிடுமா?</h2><p>ஒரு வீட்டை தொடர்ந்து நோட்டமிட்டு, அங்கு யார் வருகிறார்கள் போகிறார்கள் என்பதையெல்லாம் குறித்து வைத்து, ஒரு பெண் வீட்டில் தனியாக இருக்கும் பொழுது உள்ளே புகுந்து கொள்ளையடிக்க திட்டம் போட்டுக் கொடுக்கும் கைதேர்ந்த குற்றவாளிக்கு, தவெக கட்சி எதன் அடிப்படையில், இளைஞரணியில் பொறுப்பு கொடுத்தது? பின்புலத்தை ஆராயாமல் கட்சியில் பதவி கொடுத்து விட்டு, பின்பு குற்ற வழக்கில் சிக்கியதும் கட்சியை விட்டு நீக்கினால் எல்லாம் சரியாகிவிடுமா? “தவெகக்காரன்” என்ற முகமூடியை அணிந்து கொண்டு இன்னும் எத்தனை கொள்ளையர்கள், பாலியல் குற்றவாளிகள் மக்களிடையே உலவிக் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கொண்டிருக்கிறார்களோ </a>தெரியவில்லை.</p><h2>தண்டிக்க வேண்டும்</h2><p>எனவே, சட்டம், ஒழுங்கை தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இயக்கும் முதல்-அமைச்சர் விஜய், முதலில் தனது கட்சிக்குள் இருக்கும் குற்றவாளிகளை கண்டறிந்து, தண்டிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் குடும்பம்.. திரைப்படத்தை பார்த்து கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள் - உதயநிதி ஸ்டாலின் பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-family-shedding-tears-over-the-loss-of-their-son-rulers-shedding-tears-while-watching-the-movie-udhayanidhi-stalins-post</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-family-shedding-tears-over-the-loss-of-their-son-rulers-shedding-tears-while-watching-the-movie-udhayanidhi-stalins-post#comments</comments><guid isPermaLink="false">011c7260-b9f3-49cd-b205-0617ae803efb</guid><pubDate>Thu, 23 Jul 2026 10:26:02 +0000</pubDate><atom:updated>2026-07-23T10:26:02.000Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,திமுக,DMK,தமிழகம்,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,Thoothukudi,தூத்துக்குடி,காவல் மரணம்,Lockup Death</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/xi5l2lh8/udhaty.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/xi5l2lh8/udhaty.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/தூத்துக்குடி">தூத்துக்குடி</a> தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சட்ட விரோதமாக மது விற்றதாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p> <p>விசாரணை என்ற பெயரில் போலீசார் நடத்திய கடுமையான தாக்குதலாலேயே அருணாச்சலம் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் இதற்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>போலீஸ் அநீதி</h2><p>இந்நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-</p><p><a href="https://www.dailythanthi.com/topic/தூத்துக்குடி">தூத்துக்குடி</a>யில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்னும் இளைஞர், காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்து இருப்பது வேதனை அளிக்கிறது.</p><p>போலீஸ் தனக்கு இழைத்த அநீதியை தனது இறுதி நிமிடங்களில் அருணாச்சலமே எடுத்துச் சொன்னதைப் பார்க்கும் போது நெஞ்சம் கலங்குகிறது.</p><h2>என்ன பதில்</h2><p>காவல் மரணங்களின் போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.</p><p>மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் அருணாச்சலத்தின் குடும்பத்துக்கு, திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்து இருக்கிறார்கள்? </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>காவல் மரணங்களுக்கான காரணங்களை கண்டறிய தனி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் - டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/separate-commission-needed-to-find-causes-of-custodial-deaths-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/separate-commission-needed-to-find-causes-of-custodial-deaths-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">0f6e12c0-e0a5-4b3c-b295-c1482adb68a7</guid><pubDate>Thu, 23 Jul 2026 10:09:28 +0000</pubDate><atom:updated>2026-07-23T10:09:28.801Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,விசாரணை ஆணையம்,காவல் மரணம்,Lockup Death</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/x0qflspa/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/x0qflspa/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தூத்துக்குடி, அமுதா நகர் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாசலம் என்ற இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், காவல்துறையினர் அடித்துக் கொலை செய்துவிட்டதாகக் கூறி உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டே மாதங்களில் மட்டும் நாகர்கோவிலைச் சார்ந்த மாற்றுத்திறனாளி, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி, அதன் தொடர்ச்சியாக தற்போது தூத்துக்குடியில் அரங்கேறியிருக்கும் சம்பவம் என அடுத்தடுத்து நிகழும் காவல் மரணங்கள், ஒட்டுமொத்த காவல்துறையின் செயல்பாடுகளையும் கேள்விக்குறியாக்குகின்றன.</p><p>அதிலும், காவல்நிலையத்தில் வைத்து காவலர்கள் கடுமையாகத் தாக்கியதாக உயிரிழந்த விசாரணைக் கைதி மருத்துவமனையிலிருந்தபடி வாக்குமூலம் அளித்ததாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகளைப் பார்க்கும்போது தமிழகத்தில் இருப்பது காவல்துறையா? அல்லது காட்டுமிராண்டித்துறையா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.</p><p>சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில் முக்கிய அமைப்பாகச் செயல்படும் காவல்துறையின் காவலில் நடைபெறும் இத்தகைய உயிரிழப்புகள் அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பதைத் தாண்டி, சட்டம் மற்றும் அரசு நிர்வாகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையையும் பாதிப்படையச் செய்கிறது.</p><p>மாநிலத்தில் நடக்கும் ஒவ்வொரு காவல் படுகொலையும், அந்த மாநிலத்தை நிர்வகிக்கும் அரசு நிர்வாகத்தின் தோல்வியைக் காட்டுவதாகத் தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட தவெக, தற்போது அடுத்தடுத்து அரங்கேறும் காவல் மரணங்களுக்கு அரசு நிர்வாகத்தின் தோல்வியே காரணம் என்பதை ஒப்புக் கொள்கிறதா?</p><p>எனவே, தூத்துக்குடியில் நடைபெற்றிருக்கும் காவல் மரண வழக்கை விரிவாக விசாரித்து, குற்றம் உறுதி செய்யப்பட்டால் தொடர்புடைய அனைவரது மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தவெக ஆட்சிக்கு வந்தபின்பு அரங்கேறிய காவல் மரணங்களுக்கான காரணங்களை கண்டறிய தனி விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும் எனவும் தவெக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மத்திய அரசை கண்டித்து நாளை மறுநாள் காங்கிரஸ் கண்டன பொதுக்கூட்டம்: கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/congress-to-hold-a-public-meeting-the-day-after-tomorrow-condemning-the-central-government-leaders-of-alliance-parties-to-participate</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/congress-to-hold-a-public-meeting-the-day-after-tomorrow-condemning-the-central-government-leaders-of-alliance-parties-to-participate#comments</comments><guid isPermaLink="false">d8d73ffc-4270-4c8e-8738-7ebbe68bb976</guid><pubDate>Thu, 23 Jul 2026 10:07:56 +0000</pubDate><atom:updated>2026-07-23T10:07:56.399Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,காங்கிரஸ்,Congress,மத்திய அரசு,Central Govt,மாணிக்கம் தாகூர்,கூட்டணி கட்சிகள்,டெல்லி போராட்டம்,Alliance parties,Manickam Tagore,delhi protest</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/s8f05kb6/manik.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/s8f05kb6/manik.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/காங்கிரஸ்">தமிழ்நாடு காங்கிரஸ்</a> கமிட்டியின் துணைத் தலைவரும் ஊடகப் பிரிவு பொறுப்பாளருமான ஆ.கோபண்ணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>தலைநகர் டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து, அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீதும், அவர்களுக்கு ஆதரவாக தங்கள் கண்டனங்களை தெரிவித்த எதிர்கட்சித் தலைவர்கள் மீதும் கொடூரமான வன்முறைகளை கட்டவிழ்த்து விட்ட மக்கள் விரோத மோடி அரசைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் வருகின்ற 25.07.2026, சனிக்கிழமை மாலை 05:30 மணியளவில் சென்னை, தியாகராய நகர் பேருந்து நிலையத்தின் பின்புறம் முத்துரங்கம் சாலையில் நடைபெறவுள்ளது.</p><h2>மாணிக்கம் தாகூர்</h2><p>தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப. மாணிக்கம் தாகூர் அவர்கள் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் அமைச்சர் ஆ.ராஜ்மோகன் அவர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்  ஆர். வன்னியரசு அவர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்புராயன், எம்.பி. அவர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  சு. வெங்கடேசன், எம்.பி. அவர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில்  நவாஸ் கனி, எம்.பி. அவர்களும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் சார்பில் முதன்மை செயலாளர் துரை வைகோ, எம்.பி. ஆகியோர் பங்கேற்று கண்டன உரை ஆற்றுகிறார்கள்.</p><h2>குலாம் அகமது மிர்</h2><p>இக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு பொறுப்பாளருமான குலாம் அகமது மிர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். சட்டமன்ற காங்கிரஸ் கட்சித்தலைவரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான  எஸ். ராஜேஷ்குமார் அவர்கள் வரவேற்புரை ஆற்றுகிறார். உயர்கல்வித்துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் அவர்களும், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்  நிவேதித் ஆல்வா அவர்களும் முன்னிலை வகிக்கின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவர் திரு எஸ். பீட்டர் அல்போன்ஸ், Ex.MP அவர்கள் விளக்க உரை ஆற்றுகிறார்.</p><h2>மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள்</h2><p>மேலும் இக்கூட்டத்தில் மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற இந்நாள்-முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், வட்டார / / சர்க்கிள், வட்ட, நகர, பேரூர் கமிட்டி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், அதன் நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அனைத்து நிலை பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்பார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>காவிரி அணைகளை கையாளும் அதிகாரத்துடன் புதிய மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் - அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-management-board-with-authority-over-cauvery-dams-needed-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-management-board-with-authority-over-cauvery-dams-needed-anbumani#comments</comments><guid isPermaLink="false">3ae35e6f-7419-440b-b78a-080037ecd09a</guid><pubDate>Thu, 23 Jul 2026 09:56:29 +0000</pubDate><atom:updated>2026-07-23T09:56:29.972Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,Karnataka,Cauvery,காவிரி,காவிரி மேலாண்மை ஆணையம்,கர்நாடகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/pkcqi64y/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/pkcqi64y/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் குறுவைப் பயிர்களைக் காப்பாற்ற காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு ஆணையிட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க காவிரி மேலாண்மை ஆணையம் மறுத்து விட்டது. கர்நாடக அணைகளில் பெங்களூர் மாநகரின் குடிநீர் தேவைக்காக மட்டும் தான் தண்ணீர் இருப்பதாக கர்நாடக அரசு கூறியதை அப்படியே மேலாண்மை ஆணையம் ஏற்றுக் கொண்டிருப்பது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகம் ஆகும். இந்த பொம்மை ஆணையத்தில் தமிழகத்திற்கு நீதி கிடைக்காது.</p><p>தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது குறித்து முடிவெடுப்பதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கடந்த ஜூன் மாதத்தில் தொடங்கி, நேற்று வரை தமிழகத்திற்கு திறக்க வேண்டிய 28.30 டி.எம்.சி நீரில் 3.44 டி.எம்.சி நீரை மட்டுமே கர்நாடகம் வழங்கியிருப்பதை சுட்டிக்காட்டிய தமிழக அதிகாரிகள், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீர் திறந்து விட ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், தங்களிடம் பெங்களூரு மாநகர குடிநீர் தேவைக்காக மட்டுமே தண்ணீர் இருப்பதாக கர்நாடக அரசு தெரிவித்தது. அதை ஏற்றுக் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையம், காவிரியில் தண்ணீர் திறப்பதில் இப்போதுள்ள நிலையே தொடரும் எனக் கூறிவிட்டது. அதனால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காது.</p><p>கர்நாடக அணைகளின் நீர் இருப்பு தொடர்பாக அம்மாநில அரசு தெரிவித்த தகவல்கள் அப்பட்டமான பொய் ஆகும். கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஹேமாவதி அணையில் 22.77 டி.எம்.சி, கே.ஆர்.எஸ் அணையில் 17.21 டி.எம்.சி, கபினி அணையில் 13.02 டி.எம்.சி, ஹாரங்கி அணையில் 7.20 டி.எம்.சி என 60.21 டி.எம்.சி நீர் இன்று மதியம் 12 மணி நிலவரப்படி உள்ளது. ஹாரங்கி அணையில் 85 சதவீதம் அளவுக்கும்,  கபினியில் 67 சதவீதம் அளவுக்கும், ஹேமாவதி அணையில் 61 டி.எம்.சி அளவுக்கும் நீர் உள்ளது. அணைகளின் குறைந்தபட்ச நீர் இருப்பான 23 டி.எம்.சி போக மீதமுள்ள 37 டி.எம்.சி நீரை தமிழகத்திற்கு திறந்து விட முடியும்.</p><p>பெங்களூரு மாநகரத்தின் குடிநீர் தேவைக்காக 5 டி.எம்.சி நீரை வைத்துக் கொண்டாலும் மீதமுள்ள 32 டி.எம்.சி நீரை தமிழ்நாட்டுக்கு திறக்க முடியும். இந்த உண்மைகள் அனைத்தும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் நன்றாகத் தெரியும். ஆனாலும், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகத்திற்கு ஆணையிட காவிரி மேலாண்மை ஆணையம் கடுமையாக உத்தரவிடாததற்கு காரணம் அம்மாநிலத்திற்கு ஆதரவான நிலைப்பாடும்,  அப்படியே ஆணையிட்டாலும் அதை செயல்படுத்த வைக்கும் அதிகாரம் ஆணையத்திற்கு இல்லாததும் தான்.</p><p>ஜூன் ஒன்றாம் தேதி முதல் இன்று வரை கர்நாடகம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரில் 26 டி.எம்.சி நீரை பாக்கி வைத்துள்ளது. இதற்காக கர்நாடக அரசின் மீது நடவடிக்கை எடுப்பதற்கான எந்த அதிகாரமும் மேலாண்மை ஆணையத்திற்கு கிடையாது. அதிகபட்சமாக கர்நாடகம் தண்ணீர் திறக்காதது குறித்து மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்து, மத்திய நீர்வளத்துறை வாயிலாக கர்நாடக அரசுக்கு கோரிக்கை வைக்க முடியும். இப்படிப்பட்ட பொம்மை ஆணையத்தை வைத்துக் கொண்டு தமிழகத்திற்கு காவிரி நீரில் உரிய பங்கை வாங்கி விட முடியும் என நினைப்பது அறியாமையாகத் தான் இருக்கும். இந்த ஆணையத்தால் தமிழகத்திற்கு பயனில்லை.</p><p>காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பது குறித்த தங்களின் தீர்ப்பை கர்நாடகம் செயல்படுத்தாது என்ற உண்மை நடுவர் மன்ற நீதிபதிகளுக்கும் நன்றாகவே தெரிந்திருக்கிறது. அதனால் தான், 2007-ம் ஆண்டில் வழங்கிய இறுதித் தீர்ப்பில் "கடந்த கால பதிவுகளில் இருந்து பார்க்கும் போது காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி கர்நாடகம் தண்ணீர் திறந்துவிடவில்லை என பெரும்பாலான ஆண்டுகளில் தமிழகம் சுப்ரீம் கோர்ட்டை அணுகியுள்ளது. அப்போதெல்லாம் போதிய அளவு மழை பெய்யாததால் தண்ணீர் திறக்க முடியவில்லை என கர்நாடகம் கூறியுள்ளது. இதை வைத்துப் பார்க்கும்போது, எத்தகைய மேலாண்மை அமைப்பு அமைக்கப்பட்டாலும் அதற்கு காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்துவதற்கு தேவையான அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட வேண்டும்" என்று நடுவர் மன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>அதுமட்டுமின்றி, கர்நாடகத்தின் தலையீடின்றி தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதற்கான தீர்வையும் நடுவர் மன்றம் வழங்கியுள்ளது. "காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்காக பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் போன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்", "காவிரியின் குறுக்கே உள்ள அனைத்து அணைகளின் இயக்கத்தையும் மேற்பார்வையிடும் அதிகாரம், அணைகளின் நீர் திறப்பை ஒழுங்குமுறை குழுவின் உதவியுடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரம் ஆகியவை காவிரி மேலாண்மை வாரியத்திற்கு வழங்கப்பட வேண்டும்" என்று நடுவர் மன்ற இறுதித்  தீர்ப்பின் ஐந்தாவது தொகுப்பில், எட்டாவது அத்தியாயத்தில் முறையே 14, 16 ஆகிய பத்திகளில் கூறப்பட்டிருக்கிறது. நடுவர் மன்றத்தின் இந்தத் தீர்ப்பை செயல்படுத்துவதில் மத்திய அரசுத் தரப்பில் தயக்கம் காட்டப்பட்டதால்தான் அணைகளை கையாளும் அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக எந்த அதிகாரமும் இல்லாத காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து 2018-ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதுதான் தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகமாகும்.</p><p>எந்த அதிகாரமும் இல்லாத காவிரி மேலாண்மை ஆணையம் நடைமுறையில் இருக்கும் வரை தமிழ்நாட்டிற்கு காவிரியில் உரிய நீர் கிடைக்காது. மழைக்காலங்களில் நிரம்பி வழியும் வெள்ள நீர் மட்டும்தான் கிடைக்கும். காவிரியில் தமிழ்நாட்டிற்கான உரிமைகளைப் பெற வேண்டுமானால், நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, காவிரியின் குறுக்கே கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் கட்டப்பட்டுள்ள அணைகளை கையாளும் அதிகாரம் கொண்ட பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் போன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதுதான் ஒரே தீர்வு ஆகும். இத்தகைய ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்கும்படி மத்திய அரசிடம் வலியுறுத்துவது மட்டுமின்றி,  இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்குத் தொடர்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>எர்ணாகுளம் - வேளாங்கண்ணி இடையே தென்காசி, காரைக்குடி வழியாக சிறப்பு ரெயில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-ernakulam-and-velankanni-via-tenkasi-and-karaikudi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-ernakulam-and-velankanni-via-tenkasi-and-karaikudi#comments</comments><guid isPermaLink="false">ed2af3d4-06bb-404a-ae10-7d6306e0ca77</guid><pubDate>Thu, 23 Jul 2026 09:42:39 +0000</pubDate><atom:updated>2026-07-23T09:42:39.906Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,சிறப்பு ரெயில்,Karaikudi,காரைக்குடி,Special train,Tenkasi,தென்காசி,எர்ணாகுளம்,Ernakulam,Velankanni,வேளாங்கண்ணி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/ob6judp8/onthe-man.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/ob6judp8/onthe-man.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>வேளாங்கண்ணி திருவிழாவையொட்டி, கேரள மாநிலம் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி இடையே தென்காசி, காரைக்குடி வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. </p><h2>சிறப்பு ரெயில்</h2><p>இது தொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/topic/தெற்கு-ரெயில்வே">தெற்கு ரெயில்வே</a> வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p>கேரள மாநிலம் எர்ணாகுளம் ஜங்ஷனில் இருந்து வேளாங்கண்ணிக்கு ஆகஸ்டு 27, செப்டம்பர் 3, 10 ஆகிய தேதிகளில் வியாழக்கிழமைகளில் மதியம் 1 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06061) மறுநாள் காலை 5.50 மணிக்கு வேளாங்கண்ணியை வந்தடையும். </p><p>மறுமார்க்கத்தில், வேளாங்கண்ணியில் இருந்து எர்ணாகுளம் ஜங்ஷனுக்கு ஆகஸ்டு 28, செப்டம்பர் 4, 11 ஆகிய தேதிகளில் வெள்ளிக்கிழமைகளில் மாலை 6.40 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06062) மறுநாள் காலை 11.50 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும். </p><h2>நாளை முன்பதிவு</h2><p>15 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில், தமிழ்நாட்டில், செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டிணம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். </p><p>இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (ஜூலை 24-ந் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>நெல்லை பயணிகள் கவனத்திற்கு.. அம்ரித் பாரத் ரெயில் நேரம் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/attention-nellai-passengers-amrit-bharat-train-timings-changed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/attention-nellai-passengers-amrit-bharat-train-timings-changed#comments</comments><guid isPermaLink="false">81e50267-b3df-434c-8418-440beb7e29fe</guid><pubDate>Thu, 23 Jul 2026 09:28:37 +0000</pubDate><atom:updated>2026-07-23T09:28:37.527Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,தெற்கு ரெயில்வே,Southern Railway,அம்ரித் பாரத் ரெயில்,Amrit Bharat Express,time change,நேரம் மாற்றம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/z8tq9ku1/nakkal.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/z8tq9ku1/nakkal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரி - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் அம்ரித் பாரத் ரெயில், நெல்லை ரெயில் நிலையம் வந்தடையும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. </p><h2>நேரம் மாற்றம்</h2><p>இது தொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/topic/தெற்கு-ரெயில்வே">தெற்கு ரெயில்வே</a> வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p>மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரி - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் அம்ரித் பாரத் ரெயில் (வண்டி எண் 20603), நெல்லை வரும் நேரம் மாற்றியடைக்கப்படுகிறது. அதாவது, ஜல்பைகுரியில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்படும் இந்த ரெயில், நெல்லையை 3-வது நாள் இரவு 10 மணிக்கு வந்தடைந்தது.</p><p>செப்டம்பர் 23-ந் தேதி முதல் இந்த ரெயில் 10 நிமிடத்திற்கு முன்னதாக நெல்லை ரெயில் நிலையத்தை வந்தடையும். அதாவது, இரவு 9.50 மணிக்கு நெல்லை ரெயில் நிலையத்திற்கு வந்து, 5 நிமிடங்கள் கழித்து அங்கிருந்து புறப்பட்டு செல்லும். நாகர்கோவில் ரெயில் நிலையத்தை இந்த ரெயில் 5 நிமிடங்கள் தாமதமாக இரவு 11.05 மணிக்கு சென்றடையும். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் காவல்துறையினர் தாக்கியதில் விசாரணைக் கைதி உயிரிழப்பு:  அன்புமணி கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-condemns-death-of-undertrial-prisoner-in-police-attack-in-thoothukudi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-condemns-death-of-undertrial-prisoner-in-police-attack-in-thoothukudi#comments</comments><guid isPermaLink="false">f3b552f7-7f40-4a75-8ec2-a2c34661b754</guid><pubDate>Thu, 23 Jul 2026 09:21:48 +0000</pubDate><atom:updated>2026-07-23T09:21:48.228Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK,அன்புமணி,Anbumani,Thoothukudi,தூத்துக்குடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/rycm4xmz/anbumani.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/rycm4xmz/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>கைதி உயிரிழப்பு</h2><p>தூத்துக்குடி நகரம் தென்பாகம் காவல்நிலையக் காவலர்களால் ,  சட்டவிரோதமாக மது வணிகம் செய்ததாக கைது செய்யப்பட்ட  தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த அருணாச்சலம் என்ற இளைஞர் தலை உள்ளிட்ட காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது  அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.  அருணாச்சலத்தை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும்,  அனுதாபங்களையும்  தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2>கொடூர தாக்குதல்</h2><p>மது வணிகம் செய்ததாக கடந்த 17-ஆம் தேதி கைது செய்யப்பட்ட அருணாச்சலம் அன்று மாலையே தலை உள்ளிட்ட இடங்களில்  காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.  காவலர்கள் மூவர் சேர்ந்து கொண்டு தம்மை கொடூரமாகத் தாக்கியதாக அவர்கள் அளித்த காணொலி  வாக்குமூலத்தையும் அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர். இவற்றை வைத்துப் பார்க்கும் போது அருணாச்சலம் குடும்பத்தினரின் குற்றச்சாட்டு உறுதியாவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.</p><h2>சிபிஐ  விசாரணை</h2><p>தூத்துக்குடி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட போது நன்றாக இருந்த அருணாச்சலம் மயங்கி விழுந்ததில் தான் அவருக்கு காயம் ஏற்பட்டதாக காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால்,  அது ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை.</p><p>ஏற்கனவே நாகர்கோயில் கிளைச் சிறையில் சபரிநாதன் என்ற விசாரணைக் கைதி <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சிறைத்துறையினரால் </a>தாக்கி கொல்லப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் பதட்டம் தீரும் முன்பே இன்னொரு விசாரணைக் கைது மர்மமான முறையில் உயிரிழந்ததை தாங்கிக் கொள்ள முடியவில்லை. கைதி அருணாச்சலத்தின் உயிரிழப்பு குறித்து சிபிஐ  விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் சட்டப்படி தண்டிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சட்டென மாறும் வானிலை.. எந்தெந்த மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rapidly-changing-weather-which-districts-are-likely-to-receive-rain-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rapidly-changing-weather-which-districts-are-likely-to-receive-rain-tomorrow#comments</comments><guid isPermaLink="false">66e76920-f255-4c6d-8a48-97cdce12f6d0</guid><pubDate>Thu, 23 Jul 2026 09:12:20 +0000</pubDate><atom:updated>2026-07-23T09:12:20.948Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Rain,Weather,வானிலை,தமிழகம்,WeatherUpdate,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,வானிலை ஆய்வு மையம்,weather condition,வானிலை முன்னறிவிப்பு,weather information,Weather Status,வானிலை அறிவிப்பு,weather center</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/1w58aoeq/vanili.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/1w58aoeq/vanili.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>வானிலை செய்திகள் (Weather)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><h2>மழை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இதன் காரணமாக <strong>இன்று (23-07-2026):</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். </p><p>ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p> <p><strong>24-07-2026 மற்றும் 25-07-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். </p><p>ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>26-07-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகம், வட உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>27-07-2026 முதல் 29-07-2026 வரை:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong><ins>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</ins></strong></p><p><strong>23-07-2026 முதல் 27-07-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.</p><p><strong><ins>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</ins></strong></p><p><strong>23-07-2026 முதல் 27-07-2026 வரை:</strong> அதிகபட்ச வெப்பநிலை ஈரோடு, கரூர், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:-</h2><p><strong>இன்று (23-07-2026)</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p><strong>நாளை (24-07-2026)</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p> <h2>மீனவர்களுக்கான எச்சரிக்கை:</h2><p><strong><ins>தமிழக கடலோரப்பகுதிகள்:</ins></strong></p><p><strong>23-07-2026 முதல் 26-07-2026 வரை:</strong> எச்சரிக்கை ஏதுமில்லை.</p><p><strong>27-07-2026:</strong> தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><h2>வங்கக்கடல் பகுதிகள்:</h2><p><strong>23-07-2026 முதல் 25-07-2026 வரை:</strong> எச்சரிக்கை ஏதுமில்லை.</p><p>26-07-2026: அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>27-07-2026:</strong> தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p> <h2>அரபிக்கடல் பகுதிகள்:</h2><p><strong>23-07-2026:</strong> மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>24-07-2026 முதல் 27-07-2026 வரை:</strong> மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ஜனநாயகன் திரைப்படம் பார்த்தபோது தேம்பி தேம்பி அழுத அமைச்சர் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-minister-burst-into-tears-while-watching-the-movie-janyayan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-minister-burst-into-tears-while-watching-the-movie-janyayan#comments</comments><guid isPermaLink="false">10654702-2aa0-4ce8-9ccf-77d597372338</guid><pubDate>Thu, 23 Jul 2026 09:10:17 +0000</pubDate><atom:updated>2026-07-23T09:10:17.723Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,Actor Vijay,அமைச்சர்,ஜனநாயகன்,Jananayagan,MinisterParvez</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/hc2b0obf/minsiter33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
ஜனநாயகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/hc2b0obf/minsiter33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழ்நாட்டின் முதல்-அமைச்சருமான விஜய் நடித்த கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ பல்வேறு பிரச்சினைகளைத் தாண்டி ஒரு வழியாக இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. முதல்-அமைச்சராக முதல் படம், சினிமாவில் கடைசி படம் என்ற சூழ்நிலையில் வெளியாகியுள்ளதால் விஜய்யின் ரசிகர்களும் தவெக தொண்டர்களும் படத்தைத் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். </p><h2>ரசிகர்கள் கொண்டாட்டம்</h2><p>வழக்கம் போல் திரையரங்கில் பேனர், பட்டாசு, டிஜே கச்சேரி என நேற்று (22.07.2026) இரவு முதலே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே முதல்-அமைச்சர் விஜய் நேற்று இரவு சென்னை அடையாறு தாகூர் திரைப்பட கல்லூரியில் படம் பார்த்து மகிழ்ந்தார். இந்நிலையில் தமிழகத்தில் ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் காட்சி இன்று காலை 09.00 மணியளவில் பெரும்பாலான திரையரங்குகளில் தொடங்கியது.</p><p>இதனையொட்டி விஜய்யின் ரசிகர்கள் இந்தத் திரைப்படத்தின் வெளியீட்டைக் கோலாகலமாகக் கொண்டாடி வரும் வேளையில், தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர் முகமது பர்வேஷும் இத்திரைப்படத்தை புதுக்கோட்டையில் உள்ள தியேட்டரில் கண்டுகளித்தார். </p><h2>கண்ணீர் விட்ட அமைச்சர்</h2><p>அச்சமயத்தில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஜனநாயகன்</a> திரைப்படத்தின் விஜய் அறிமுகம் ஆகும்  காட்சிகளைக் கண்ட அமைச்சர் முகமது பர்வேஷ், தேம்பி தேம்பி அழுது ஆனந்தக் கண்ணீர் விட்டார்.   தனது தலைவனின் கடைசி படத்தை பார்த்த அமைச்சர் பர்வேஷ், திரையரங்கில் தேம்பி தேம்பி கண்ணீர் விட்டு அழுத நிகழ்ச்சி அங்கு இருந்தவர்களையும் கண்கலங்க வைத்தது. ஜனநாயகன் படத்தின் தொடக்கத்தில், கடந்த 30 வருடங்களாக விஜய் நடித்த படங்களின் தொகுப்பானது ஒளிபரப்பபட்டது. </p><p>அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரான பர்வேஷ், அதற்கு முன்னர் விஜய் ரசிகர் மன்றத்தில் மாவட்ட மற்றும் மாநில அளவிலான பொறுப்புகளை வகித்தார்.   இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>எலி கடித்து கால் விரல் இழந்த பெண்: என்ன பதில் வைத்துள்ளது தவெக அரசு? - எடப்பாடி பழனிசாமி கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/eli-kadithu-kal-viral-izhantha-pen-enna-pathil-vaithullathu-thavega-arasu-edappadi-palanisami-kelvi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/eli-kadithu-kal-viral-izhantha-pen-enna-pathil-vaithullathu-thavega-arasu-edappadi-palanisami-kelvi#comments</comments><guid isPermaLink="false">8f58425b-5d44-4643-944d-9edc9b1a08a3</guid><pubDate>Thu, 23 Jul 2026 09:07:03 +0000</pubDate><atom:updated>2026-07-23T09:07:03.160Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,Edappadi Palaniswami,திருச்சி,Trichy,தவெக அரசு,TVK Government</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/izc5muai/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/izc5muai/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது பெண்ணின் கால் விரலை எலிகள் கடித்துக் குதறியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளை இன்றைய ஆட்சி எப்படி வைத்திருக்கிறது என்பதற்கு இந்த செய்தியே சாட்சி.</p><p>அரசை நம்பி சிகிச்சை பெற வந்து, எலி கடித்து கால் விரல் இழந்துள்ள அந்த பெண்ணிற்கு என்ன பதில் வைத்துள்ளது இன்றைய தவெக பொய்க்கால் குதிரை அரசு? இப்படி மக்கள் திண்டாடிக் கொண்டிருக்க, இத்துறையின் அமைச்சரோ, ஜனநாயகன் படத்தின் முதல் காட்சி பார்த்து கொண்டாடி Selfie பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்.</p><p>அவர் மட்டுமல்ல, இன்றைய தினம் முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் படம் பார்க்க “லீவு” போட்டிருப்பதாக வேறு செய்திகள் வருகின்றன. நாடும், நாட்டு மக்களும் எக்கேடாய்ப் போனால் என்ன? என்று “Blastu Blastu” கொண்டாட்டத்தில் திளைக்கும் புதிய Nero அரசுக்கு எனது கடும் கண்டனம்.</p><p>உடனடியாக பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதுடன், அவருக்கான இழப்பீடும் வழங்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சோழவந்தானில் ரெயில் நிலையத்தை தொடர்ந்து தபால் நிலையத்திலும் இந்தி எழுத்துகள் அழிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/hindi-script-defaced-at-the-sholavandan-post-office-following-a-similar-incident-at-the-railway-station</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/hindi-script-defaced-at-the-sholavandan-post-office-following-a-similar-incident-at-the-railway-station#comments</comments><guid isPermaLink="false">ab1dc728-d15c-4832-9079-58ad03b83ce1</guid><pubDate>Thu, 23 Jul 2026 08:57:16 +0000</pubDate><atom:updated>2026-07-23T08:57:16.578Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மதுரை,Post office,தபால் நிலையம்,இந்தி எழுத்துகள்,Hindi text,Chozhavandhan</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/2ygf12gg/4.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ தபால் நிலையம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சோழவந்தானில் தபால் நிலையத்தில் இந்தி எழுத்துகள் அழிப்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/2ygf12gg/4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரெயில் நிலையத்தை தொடர்ந்து தபால் நிலையத்திலும் இந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டன.</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மதுரை மாவட்டம் </a>சோழவந்தானின் ரெயில் நிலையத்தில் இந்தி எழுத்துகள் மர்ம நபரால் கருப்பு மை பூசி  அழிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மதுரை சோழவந்தான் தபால் நிலையத்தில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகளும் நேற்று அழிக்கப்பட்டன. நீட் தேர்வுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெறும் இந்த நிலையில் இந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டிருப்பத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>போலீஸ் விசாரணை</h2><p>ஒரே நேரத்தில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தபால் நிலையம்</a> மற்றும் ரெயில் நிலையம் ஆகிய இரண்டு மத்திய அரசு அலுவலகங்களிலும் இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்டதால், ரெயில்வே போலீசாரும் உள்ளூர் போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் விசாரணைக்கு சென்ற வாலிபர் மரணம்: உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-dies-in-thoothukudi-after-going-for-questioning-relatives-protest-stirs-up-controversy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-dies-in-thoothukudi-after-going-for-questioning-relatives-protest-stirs-up-controversy#comments</comments><guid isPermaLink="false">ee575a05-b429-49a3-aaf5-decec2b3d670</guid><pubDate>Thu, 23 Jul 2026 08:44:00 +0000</pubDate><atom:updated>2026-07-23T08:44:00.619Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,Thoothukudi,தூத்துக்குடி,போராட்டம்,police investigation,போலீஸ் விசாரணை,Excitement,பரபரப்பு,உறவினர்கள்,Relatives,youth death,வாலிபர் மரணம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/ffee7l2j/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூத்துக்குடியில் வாலிபர் மரணம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/ffee7l2j/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சட்ட விரோதமாக மது விற்றதாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D">வாலிபர்</a> மருத்துவமனையில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D">உயிரிழந்த சம்பவம்</a> பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>வாலிபர் கைது</h2><p>தூத்துக்குடி அமுதாநகர் 1-வது தெருவைச் சேர்ந்த நாகராஜ் மகன் அருணாச்சலம் (வயது 24). இவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு எப்.சி.ஐ. குடோன் அருகே சட்ட விரோதமாக மதுபான பாட்டில்களை வைத்து விற்பனை செய்ததாக தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தரண்யா தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.</p><h2>வாலிபர் உயிரிழப்பு</h2><p>அதை தொடர்ந்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணையில் இருந்தபோதே அருணாச்சலத்திற்கு திடீரென உடலநலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.</p><h2>உறவினர்கள் போராட்டம்</h2><p>வாலிபர் உயிரிழந்த செய்தி பரவியதும், அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மருத்துவமனை மற்றும் காவல் நிலையப் பகுதியில் திரண்டனர்.  விசாரணை என்ற பெயரில் போலீசார் நடத்திய கடுமையான தாக்குதலாலேயே அருணாச்சலம் உயிரிழந்துள்ளார். இதற்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும், பரப்பரப்பான சூழலும் நிலவியது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இச்சம்பவம் குறித்து, தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அருணாச்சலம் விசாரணையின் போது மயங்கியதால் மருத்துவமனையில் அனுமதித்ததாக தூத்துக்குடி டி.எஸ்.பி. சுனில் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. </p><p>இந்த நிலையில் தற்போது அருணாச்சலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, காவல் நிலையத்தில் வைத்து போலீசார் தலை உள்ளிட்ட இடங்களில் தாக்கியதாக கூறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. </p>]]></content:encoded></item><item><title>மாணவர்கள் நலனில் என்றுமே சமரசம் கிடையாது! - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-never-any-compromise-in-the-welfare-of-students-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-never-any-compromise-in-the-welfare-of-students-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">719ab172-f3ac-4d50-ba42-1f8284ec7e27</guid><pubDate>Thu, 23 Jul 2026 08:43:25 +0000</pubDate><atom:updated>2026-07-23T08:43:25.211Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/293g2ltw/Untitled-22.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/293g2ltw/Untitled-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>'நீட்' முறைகேடு தொடர்பாக மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதையடுத்து 'நீட்' விவகாரம் குறித்து விவாதிக்க தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.</p><h2>விரைவு நீதிமன்றங்களை</h2><p>இதனை தொடர்ந்து, பிரதமர் மோடி முதல் முறையாக இது தொடர்பாக கருத்து தெரிவித்தார். பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: "நமது இளைஞர்களின் நலனையும், அவர்களின் எதிர்காலத்தையும் விட முக்கியமானது வேறு எதுவும் இல்லை. வினாத்தாள் கசிவு சம்பவங்களில் தொடர்புடையவர்களுக்கு விரைவாகவும் கடுமையாகவும் தண்டனை வழங்கும் வகையில், விரைவு <a href="https://www.dailythanthi.com/news/india">நீதிமன்றங்களை </a>அமைக்க முடிவு செய்துள்ளோம்.</p><h2>யாரும் தப்ப முடியாது</h2><p>இதற்கான அனைத்து அவசியமான நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளேன்.மாணவர்களின் நலனையும் அவர்களின் எதிர்காலத்தையும் பாதுகாக்க அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நமது இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்க முயற்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் தப்பிக்க முடியாது" என்று தெரிவித்தார்</p><p>இந்த நிலையில், மாணவர்கள் நலனில் என்றுமே சமரசம் கிடையாது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>கடும் கண்டனத்திற்குரியது</h2><p>வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தொடர்புடையவர்களில் ஒருவர் கூட, சட்டத்தின் பார்வையில் இருந்து தப்ப முடியாது என நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்து விட்டார். எதிர்காலத்தில் இதுபோன்ற குளறுபடிகளைத் தடுக்க, அடுத்த ஆண்டு முதல் நடைபெறும் தேர்வுகள் அனைத்தும், முழுக்க முழுக்க “Computer-Based Test” முறையில் நடக்கும் என நமது மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். </p><p>ஆனால், கரப்பான் பூச்சி கூட்டத்துடன் இணைந்து இந்த விவகாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கலவரமாக்க முயல்வது கடும் கண்டனத்திற்குரியது. தேசப் பாதுகாப்பிற்கு ஆபத்தானது. </p><h2>அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக..</h2><p>எனவே, தங்கள் அரசியல் <a href="https://www.dailythanthi.com/news/india">காழ்ப்புணர்ச்சிக்காக</a>, தேசத்தின் இளைஞர் சக்தியை தவறான வழியில் காங்கிரஸ் கட்சி வழிநடத்தக் கூடாது! இளைஞர்களுக்கான வளமான எதிர்காலத்தை உருவாக்க, அரசியல் நிலைப்பாடுகளை தாண்டி அனைத்து அரசியல் கட்சிகளும் மத்திய அரசுடன் கைகோர்த்து செயல்பட வேண்டும்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வருகையில்லா ஆவணப்பதிவு: அமைச்சர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/document-registration-without-physical-presence-consultative-meeting-chaired-by-the-minister</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/document-registration-without-physical-presence-consultative-meeting-chaired-by-the-minister#comments</comments><guid isPermaLink="false">a317352f-b52f-4ddf-a8a1-57edbbef47bc</guid><pubDate>Thu, 23 Jul 2026 08:39:35 +0000</pubDate><atom:updated>2026-07-23T08:39:35.430Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,பத்திரப்பதிவு துறை,வணிகவரித்துறை,அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்,Minister Lokesh Tamilselvan,வருகையில்லா ஆவணப்பதிவு,Document Registration</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/04ztmwyu/five-ye.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/04ztmwyu/five-ye.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் தலைமையில் வருகையில்லா ஆவணப்பதிவு (Presenceless Registration) – சந்தேகங்களைத் தீர்க்கும் கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் செயல்முறை விளக்கம் நடைபெற்றது.</p><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் தலைமையில் இன்று (23.07.2026) ரிப்பன் கட்டட வளாக அம்மா மாளிகை கலையரங்கத்தில் வருகையில்லா ஆவணப்பதிவு நடைமுறை குறித்து கட்டடவிற்பனையாளர்கள் (Promoters), வங்கியாளர்கள் (Bankers) மற்றும் நிதி நிறுவனங்களுக்கு (Financial Institutions) ஏற்படும் சந்தேகங்களைத் தீர்க்கவும், வருகையில்லா பதிவு முறையை செயல் விளக்க காட்சி (Demo) மூலம் விளக்கவும் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.</p> <h2>வருகையில்லா ஆவணப்பதிவு</h2><p>இக்கூட்டத்தில் அமைச்சர் அவர்கள் பேசும் பொழுது தெரிவித்ததாவது:-</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து மக்களின் தேவைகளை அறிந்து செயல்படும் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. அதனை மையமாக கொண்டு, பதிவுத்துறையில். இந்த வருகையில்லா ஆவணப் பதிவு தொடர்பான செயல்முறை விளக்கம் மற்றும் கலந்தாய்வுக் கூட்டத்தினைத் தொடங்கி வைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.</p><p>அரசு சேவைகளை எளிமையாகவும், விரைவாகவும், வெளிப்படையாகவும் வழங்கும் நோக்கில் இந்த அரசு அனைத்து துறைகளிலும் தகவல் தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்தி வருகிறது. அந்த வகையில் பதிவுத் துறையில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு முன்னோடி சீர்திருத்தமாக “வருகையில்லா ஆவணப் பதிவு” நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><h2>தரம் மற்றும் செயல்திறன்</h2><p>முதற்கட்டமாக, மனை முதல் விற்பனை (First Sale of Plot) மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு முதல் விற்பனை (First Sale of Flat) ஆகிய இரண்டு வகை ஆவணங்களின் பதிவுகள் 17.08.2026 முதல் கட்டாயமாக வருகையில்லா ஆவணப் பதிவு முறையில் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் பதிவு செயல்முறை விரைவாகவும், வெளிப்படையாகவும், எளிமையாகவும் அமையும். இந்த நடைமுறையில் பதிவு செய்யப்பட்ட ஆவணம் பாதுகாப்பான முறையில் மின்னணு வடிவில் சம்பந்தப்பட்ட நபரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இதனால் பொதுமக்களின் நேரமும், பயணச் செலவும் குறைவதோடு, பதிவு செயல்முறையின் தரம் மற்றும் செயல்திறன் மேம்படும்.</p><h2>புதிய நடைமுறை</h2><p>கட்டுமான நிறுவனங்கள், மேம்பாட்டாளர்கள் மற்றும் வங்கிகள் ஆகியோர் இந்த புதிய நடைமுறையின் முக்கிய பங்குதாரர்களாக உள்ளனர். இந்த நிகழ்ச்சியின் மூலம் புதிய நடைமுறை குறித்த விளக்கம், தேவையான ஆவணங்கள், மின்னணு சமர்ப்பிப்பு முறை, பதிவு செயல்முறையின் ஒவ்வொரு கட்டம் ஆகியவைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுவதுடன், நடைமுறை சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்களும் அளிக்கப்படும். இதன்மூலம் பதிவு ஆவணங்களில் ஏற்படக்கூடிய பிழைகள் குறைந்து, பதிவு செயல்முறை மிகவும் செம்மையான முறையில் நடைபெற வழிவகுக்கும்.</p><p>இன்று வழங்கப்பட உள்ள பயிற்சியானது, புதிய நடைமுறையை முழுமையாகப் புரிந்து கொண்டு, பொதுமக்களுக்கு தரமான மற்றும் விரைவான சேவையை வழங்குவதற்கு கட்டுமான நிறுவனங்கள், மேம்பாட்டாளர்கள் மற்றும் வங்கிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். மேலும், அரசின் பதிவுத் துறைக்கும், தனியார் துறைகளுக்கும் இடையே ஒரு ஒருங்கிணைப்பை உருவாக்கும்.</p> <p>அரசின் இந்த முன்னோடியான முயற்சியை வெற்றிகரமாக செயல்படுத்த அனைவரின் முழுமையான ஒத்துழைப்பும் அவசியமாகும். இன்றைய நிகழ்ச்சியில் பெறப்படும் அறிவும், அனுபவமும் 17.08.2026 முதல் செயல்படுத்தப்பட உள்ள புதிய நடைமுறையை சிறப்பாக நடைமுறைப்படுத்த உதவும் என்று நான் நம்புகிறேன்.</p><p>தமிழ்நாடு அரசின், மக்கள் நலன் சார்ந்த இத்தகைய சீரிய முயற்சிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என  அமைச்சர் தெரிவித்தார்.</p><p>இக்கூட்டத்தில் வணிகவரி, பதிவுத்துறை மற்றும் அறநிலையங்கள் துறைச் செயலாளர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., பத்திரப் பதிவுத்துறை தலைவர் திரு.ஜி.கே.அருண் சுந்தர் தயாளன், இ.ஆ.ப., கூடுதல் பதிவுத்துறை தலைவர்கள் மற்றும் பதிவுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>இன்றைய நாள் தமிழ்நாட்டில் ‘அரசு’ என்ற ஒன்று உள்ளதா என்பதே சந்தேகம் தான்- கனிமொழி எம்.பி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-doubtful-whether-a-government-even-exists-in-tamil-nadu-today-kanimozhi-mp</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-doubtful-whether-a-government-even-exists-in-tamil-nadu-today-kanimozhi-mp#comments</comments><guid isPermaLink="false">6a2c4981-9d78-4e1f-a74e-de4960d54567</guid><pubDate>Thu, 23 Jul 2026 08:34:17 +0000</pubDate><atom:updated>2026-07-23T08:34:17.204Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,DMK,கனிமொழி,Kanimozhi,தி.மு.க,காவல் மரணம்,ஜனநாயகன் படம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/import/h-upload/2022/11/28/1006553-kanimozhi.webp" width="750"><media:title type="html"><![CDATA[ கனிமொழி எம்.பி]]></media:title><media:description type="html"><![CDATA[ கனிமொழி காவல் மரணம் குறித்து கேள்வி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/import/h-upload/2022/11/28/1006553-kanimozhi.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கனிமொழி</a> தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>நாகர்கோவிலைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் காவல்துறையின் சித்திரவதைக்கு உள்ளாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கும் செய்தி வேதனையளிக்கிறது.</p><p>காவல்துறைக்குப் பொறுப்பு(?) வகிக்கும் முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் உட்படப் பல அமைச்சர்களும் அதிகாரிகளும் திரைப்படம் பார்க்க விடுப்பில் சென்றுள்ளதால், இன்றைய நாள் தமிழ்நாட்டில் ‘அரசு’ என்ற ஒன்று உள்ளதா என்பதே சந்தேகம் தான்!</p><p>நாளை பணிக்குத் திரும்பிய பின்னாவது, இந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">காவல் மரணம் </a>குறித்து வாய் திறக்கிறார்களா என்று பார்ப்போம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘எம்.ஜி.ஆர். படத்தை முதல் நாளில் பார்த்தது போன்ற மகிழ்ச்சி இன்று எனக்கு ஏற்பட்டது’ - சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/today-i-felt-the-same-joy-i-used-to-experience-watching-an-mgr-movie-on-its-opening-day-speaker-jct-prabhakar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/today-i-felt-the-same-joy-i-used-to-experience-watching-an-mgr-movie-on-its-opening-day-speaker-jct-prabhakar#comments</comments><guid isPermaLink="false">aff57e0e-3493-4a86-9b99-b3a7d667f867</guid><pubDate>Thu, 23 Jul 2026 08:24:38 +0000</pubDate><atom:updated>2026-07-23T08:24:38.443Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜனநாயகன்,Jananayagan,சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்,J.C.T. Prabhakar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/qpi5j8a5/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/qpi5j8a5/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக முதல்-அமைச்சர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகிய ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கைப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களில் இருந்து மீண்டு இன்று(23-ந்தேதி) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் மற்றும் நரேன் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.</p><p>இந்தப் படம், விஜய்யின் திரைப்பயணத்தின் இறுதித் திரைப்படம் எனக் கூறப்படுவதாலும், தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்ற பிறகு விஜய் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் என்பதாலும் இந்த படத்தை அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். விஜய் ரசிகர்களும், த.வெ.க. கொண்டர்களும் நேற்று இரவு முதலே ஆட்டம் பாட்டத்தை தொடங்கியதால் திரையரங்குகள் திருவிழாக் கோலம் பூண்டுள்ளன. </p> <p>சென்னையில் உள்ள முக்கிய திரையரங்குகள் அனைத்தும் பிரமாண்ட கட்-அவுட்கள், வண்ணமயமான பேனர்கள், மலர் மற்றும் மின்னொளி அலங்காரங்களால் ஜொலித்தன. விஜய்யின் கட்-அவுட்களுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்து, மலர் தூவி, இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேளதாளங்கள், பட்டாசுகள், ஆட்டம்-பாட்டம் என திரையரங்குகள் முன்பு கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. </p><p>இந்நிலையில், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், சென்னையில் உள்ள திரையரங்கில் இன்று ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் காட்சியை பார்த்தார். படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்தபோது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை முதல் நாள் முதல் காட்சி நான் பார்த்தபோது எந்த அளவிற்கு மகிழ்ச்சி ஏற்பட்டதோ, அதே போன்ற மகிழ்ச்சி இன்று எனக்கு ஏற்பட்டுள்ளது. இது உலகெங்கிலும் உள்ள இந்தியர்களும், தமிழர்களும், சினிமா ரசிகர்களும் பார்த்து ரசிக்க வேண்டிய படம்” என்று தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>திருப்பத்தூரில் ரூ.50 லட்சம் செம்மரக்கட்டைகள் திருடுபோன விவகாரம்: 5 வன அலுவலர்கள் சஸ்பெண்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/theft-of-red-sanders-logs-worth-50-lakh-in-tirupathur-5-forest-officials-suspended</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/theft-of-red-sanders-logs-worth-50-lakh-in-tirupathur-5-forest-officials-suspended#comments</comments><guid isPermaLink="false">b21a9673-a603-4241-b86b-d099ca32aff6</guid><pubDate>Thu, 23 Jul 2026 08:20:17 +0000</pubDate><atom:updated>2026-07-23T08:20:17.000Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திருட்டு,திருப்பத்தூர்,Theft,Tirupathur,சஸ்பெண்டு,செம்மரக்கட்டைகள்,Red Sandalwood</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/wwr4lef0/16.gif" width="768"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/wwr4lef0/16.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பத்தூர், </p><p>ரூ.50 லட்சம் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20">செம்மரக்கட்டைகள் </a>திருடுபோன விவகாரத்தில், 5 வன அலுவலர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். </p><h2>ரூ.50 லட்சம் செம்மரக்கட்டைகள் திருட்டு</h2><p>திருபத்தூரில் தமிழ்நாடு வனத்துறைக்கு சொந்தமான அரசு சந்தன மர விற்பனை கிடங்கு ஒன்று உள்ளது. செம்மர வழக்குகளில் பிடிபடும் செம்மரக்கட்டைகளும் இங்குதான் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன. </p><p>அந்த வகையில், பல்வேறு செம்மர வழக்குகளில் பிடிபட்ட 55 செம்மரக்கட்டைகள் இங்கு வைக்கப்பட்டிருந்தன. 1,750 கிலோ எடை கொண்ட இந்த செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். </p><h2></h2><h2>5 வன அலுவலர்கள் சஸ்பெண்டு</h2><p>இந்த செம்மரக்கட்டைகள் கடந்த 18-ந் தேதி திருடு போனது. இதுகுறித்து, திருப்பத்தூர் அரசு சந்தன மர விற்பனை கிடங்கு ஒற்றைப்பூட்டு அலுவலர் நா.ஜோதிலிங்கம், திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.</p><p>இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், பணியில் அலட்சியமாக இருந்ததாக கூறி வன அலுவலர்கள் 5 பேரை திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் எம்.மகேந்திரன், சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஒற்றைப்பூட்டு அலுவலர் என்.ஜோதிலிங்கம், வனக்காப்பாளர்கள் ஆர்.மோகன்குமார், பி.ராமமூர்த்தி, சி.ரேணு, வனவர் பி.பரமகுரு ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>கேள்விகளுக்கு  பதில் கிடைக்காமல் தடியடி கிடைத்தால் நாடு தோற்றதாகவே அர்த்தம்: கமல்ஹாசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-one-receives-a-lathi-charge-instead-of-answers-to-questions-it-means-the-country-has-failed-kamal-haasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-one-receives-a-lathi-charge-instead-of-answers-to-questions-it-means-the-country-has-failed-kamal-haasan#comments</comments><guid isPermaLink="false">69f4df59-9ad3-4e1d-8833-342d98c05118</guid><pubDate>Thu, 23 Jul 2026 07:58:57 +0000</pubDate><atom:updated>2026-07-23T07:58:57.069Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,கமல்ஹாசன்,Kamalhasan,டெல்லி போராட்டம்,Delhi protests</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/7l8m963c/Kamal-hasan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கமல்ஹாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/7l8m963c/Kamal-hasan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் மாநிலங்களவை எம்பியுமான <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D">கமல்ஹாசன்</a> தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது; </p><p>குழந்தை அழும்போதே கவனிக்காமல் கேள்விகளுக்கு பதில் கிடைப்பதற்கு பதில், தடியடி கிடைத்தால் நாடு தோற்றதாகவே அர்த்தம். குழந்தை அழும்போதே கவனிக்காமல், நம் குழந்தைகள் பலர் இறக்கும் வரை காத்திருந்துவிட்டோம்; குழந்தைகள் தங்கள் கடமையைச் செய்துவிட்டார்கள்; அவர்களுக்கான கடமையை செய்வது நாட்டின் பொறுப்பு </p> <h2>மிகவும் சிறப்பானவர்</h2><p>சோனம் வாங்சுக், நீங்கள் நாட்டுக்குத் தேவைப்படுகிறீர்கள். எனவே, இந்தியாவின் மாணவர்களுக்காக உங்களுடைய உண்ணாவிரதத்தை நீங்கள் முடித்துக்கொள்ள வேண்டும். நீங்கள் எங்களுக்கு மிகவும் சிறப்பானவர். உங்களது வேலையை நீங்கள் செய்து முடித்து விட்டீர்கள். நாடு உங்களுக்குத் தன் கடமையைச் செய்ய வேண்டிய நேரம் இது. எங்களுடைய தோல்விகளை விட உங்களுடைய கனவுகள் பெரிதாக இருக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.</p><h2>டெல்லி போராட்டம்,</h2><p>நீட் தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள் மீது டெல்லி காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசியும் பேரணியைக் களைத்தனர். இதைத்தொடர்ந்து போராட்டம் மேலும் தீவிரம் அடைந்துள்ளது. டெல்லியில் தொடர்ந்து போராட்டத்தில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் போராட்டம் விரிவடைந்து வருகிறது. இந்த சூழலில், <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D">கமல்ஹாசன் </a>இந்த விவகாரத்தில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி உப்பு தொழிலை முடக்கும் குஜராத் உப்பு; என்ன காரணம்...?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/gujarat-salt-is-paralyzing-the-thoothukudi-salt-industry</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/gujarat-salt-is-paralyzing-the-thoothukudi-salt-industry#comments</comments><guid isPermaLink="false">42e35025-96e4-4ed1-902a-df8f8ba4016f</guid><pubDate>Thu, 23 Jul 2026 07:44:53 +0000</pubDate><atom:updated>2026-07-23T07:44:53.813Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>குஜராத்,Gujarat,Thoothukudi,தூத்துக்குடி,உப்பு உற்பத்தி,Salt production,தூத்துக்குடி உப்பு,குஜராத் உப்பு,Thoothukudi salt,Gujarat salt</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/dqbdpf6w/CHENNAI-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூத்துக்குடி உப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/dqbdpf6w/CHENNAI-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>தூத்துக்குடி உப்பு</h2><p>தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. இவைகளில் சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.</p><p>நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் உள்ளது. இங்கு ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக்கான பணிகள் தொடங்கும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 6 மாதங்கள் தான் உப்பு உற்பத்திக்கான உச்சகட்ட காலங்கள் ஆகும். அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் உப்பு சீசன் முடிவடையும்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/1puexbqv/CHENNAI-13.jpg" /></figure><h2>போதிய விலை இல்லை</h2><p>நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்ய வில்லை. இதனால் ஜனவரி மாதம் முதல் உப்பு உற்பத்தி பணிகள் தொடங்கின. தொடர்ந்து புதிய உப்பு உற்பத்தியாகி வந்தது. இடையிடையே பெய்த லேசான மழையால் உற்பத்தி சிறிது பாதிக்கப்பட்டாலும், தொடர்ச்சியாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் உப்பு உற்பத்தி வேகம் எடுத்துள்ளது. இதுவரை சுமார் 50 சதவீதம் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.</p><p>அதே நேரத்தில் உப்பு உற்பத்தி அதிகரித்தாலும் போதிய விலை கிடைக்காமல் உற்பத்தியாளர்கள் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். கடந்த ஆண்டு உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டபோது, பல நிறுவனங்கள் குஜராத்தில் இருந்து உப்பை வாங்கி விற்பனை செய்தனர். அதன்பிறகு உற்பத்தி அதிகரித்தபோது, போதிய விலை கிடைக்கவில்லை. இதனால் பெரும்பாலான உற்பத்தியாளர்கள் உப்பை குறைந்த விலைக்கு விற்பனை செய்யாமல் இருப்பு வைத்தனர். அந்த உப்புக் குவியல்களை இன்றும் பார்க்க முடிகிறது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/8xto0u55/Untitled-1.jpg" /></figure><h2>குஜராத் உப்பு வருகை</h2><p>இந்த நிலையில் புதிய உப்பும் அதிகளவில் உற்பத்தியாகி வருகிறது. தென்மேற்கு பருவமழையின் தாக்கம் எதுவும் இல்லாததால் உப்பு உற்பத்திக்கு உகந்த காலநிலை நீடித்து வருகிறது. இதனால் உப்பு விலை கடுமையாக சரிந்து உள்ளது. இந்த நிலையில் குஜராத்தில் இருந்து தொடர்ந்து தூத்துக்குடியை நோக்கி உப்பை ஏற்றிக் கொண்டு கப்பல்கள் வந்த வண்ணம் உள்ளன. தற்போது மேட்டூரில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு குஜராத் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து 34 ஆயிரத்து 427 டன் உப்பு கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு வந்து உள்ளது.</p><p>அதே நேரத்தில் தூத்துக்குடியில் உப்பு அதிகளவில் உற்பத்தியானதால் விலை குறைவாக உள்ளது. அதைவிடவும் குறைந்த விலையில் குஜராத்தில் இருந்து உப்பு விற்பனைக்கு வருவதால் தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். தூத்துக்குடியில் உப்பள தொழிலாளர்களின் கூலி உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு ஆகியவற்றால் உப்பு விலையை ஓரளவுக்கு மேல் குறைக்க முடியாத நிலையில் உள்ளனர். இதனை சாதகமாக்கி, குஜராத் உப்பு தொடர்ச்சியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வந்து கொண்டிருக்கிறது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/nywxjsl5/Untitled-2.jpg" /></figure><h2>நலிவடையும் தொழில்</h2><p>இதுகுறித்து உப்பு வியாபாரி ஒருவர் கூறும்போது, "தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட உப்பு இன்னும் விற்பனை செய்யப்படாமல் உள்ளது. கடந்த ஆண்டு உப்பு பற்றாக்குறை காரணமாக குஜராத்தில் இருந்து உப்பு கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டது. தூத்துக்குடியில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளம் ஆகிய மாநிலங்களுக்கு நேரடி யாக உப்பு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த மார்க்கெட்டை தூத்துக்குடி வியாபாரிகள் இழந்து உள்ளனர்.</p><p>குஜராத்தில் இருந்து நேரடியாக ரெயில் மூலம் கர்நாடகா, ஆந்திராவுக்கும், கன்டெய்னர்களில் கொச்சி துறைமுகம் மூலம் கேரளாவுக்கும் உப்பு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். தற்போது தமிழகத்தின் மார்க்கெட்டையும் தூத்துக்குடி உப்பு குறி வைத்து வருகிறது. தூத்துக்குடியில் தற்போது ஒரு டன் முதல் ரக உப்பு ரூ.1,200 முதல் ரூ.1,400 வரையும், 2-வது ரக உப்பு ரூ.900 முதல் ரூ.1,000 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/g8krfph7/Untitled-3.jpg" /></figure><h2>மார்க்கெட்டை இழந்துள்ளது</h2><p>தூத்துக்குடி உப்புக்கு தனிப்பெருமை உண்டு. இந்த உப்பு பால் வெண்மையாகவும், எளிதில் கரையக்கூடியதாகவும் இருக்கும். இதனால் சிறப்பிடம் பெற்று இருந்த உப்பு தற்போது விற்பனை வாய்ப்பை இழந்து வருகிறது. குஜராத்தில் ஒரு டன் முதல்தர உப்பு ரூ.400 முதல் ரூ.700 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் உப்பை கப்பல் மூலம் கொண்டு வந்து விற்பனை செய்தாலும், குறைந்த விலையிலேயே கொடுக்க முடிகிறது.</p><p>இதனால் தொழிற்சாலைகள் போன்ற பெரிய நிறுவன வாடிக்கையாளர்கள் குஜராத் உப்பை வாங்கத் தொடங்கி விட்டனர். இதன்காரணமாக தூத்துக்குடி உப்பு, மார்க்கெட்டை இழந்துள்ளது. உப்பு உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் உப்புத்தொழில் நலிவடைந்து வருகிறது. எனவே, அரசு சலுகைகளை வழங்கி உப்புத் தொழிலை பாதுகாக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/vzhw4079/Untitled-4.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>சென்னையில் 12 கிலோ கஞ்சா சாக்லேட்கள் பறிமுதல்: வாலிபர் கைது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/12-kg-of-cannabis-chocolates-seized-in-chennai-youth-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/12-kg-of-cannabis-chocolates-seized-in-chennai-youth-arrested#comments</comments><guid isPermaLink="false">1a76f190-2273-453a-ab6a-facfc2b04451</guid><pubDate>Thu, 23 Jul 2026 07:41:58 +0000</pubDate><atom:updated>2026-07-23T07:41:58.859Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Youth arrested,வாலிபர் கைது,கடத்தல்,கஞ்சா சாக்லேட்,cannabis chocolates</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/d0twpzzl/ganja-chacolate.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா சாக்லேட் ]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னையில் 12 கிலோ கஞ்சா சாக்லேட்டை போலீசார் பறிமுதல் செய்து, வாலிபரை கைது செய்தனர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/d0twpzzl/ganja-chacolate.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 12 கிலோ கஞ்சா சாக்லேட்களை போலீசார் பறிமுதல் செய்து, இது தொடர்பாக ஒரு வாலிபரைக் கைது செய்தனர்.</p><h2>பார்சல் சர்வீஸ் மூலம் கடத்தல்</h2><p>சென்னைக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பெங்களூருவிலிருந்து சென்னைக்கு தனியார் பார்சல் சர்வீஸ் மூலமாகப் போதை சாக்லேட்கள் கடத்தி வரப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.</p><h2>அதிரடி சோதனை- பறிமுதல்</h2><p>அந்தத் தகவலின் அடிப்படையில், போலீசார் குறிப்பிட்ட பார்சல் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு வந்த பார்சல்களை ஆய்வு செய்தபோது, அவற்றில் 12 கிலோ எடையுள்ள கஞ்சா சாக்லேட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தனர்.</p><h2>வாலிபர் கைது</h2><p>இந்த போதை பார்சலை வாங்க வந்த சென்னையின் சௌகார் பேட்டை பகுதியைச் சேர்ந்த ராகுல் என்ற வாலிபரைப் போலீசார் உடனடியாகக் கைது செய்தனர். </p><p>மேலும், சென்னை சூளைப் பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு சோதனையில், தர்மேந்தர் என்பவரிடமிருந்து 726 கஞ்சா சாக்லேட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நெட்வொர்க்கின் பின்னணியில் உள்ள மற்ற நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ரெயிலில் 3 கிலோ கஞ்சா கடத்தல்: வடமாநில வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/northern-state-youth-arrested-for-smuggling-3-kg-of-ganja-in-train</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/northern-state-youth-arrested-for-smuggling-3-kg-of-ganja-in-train#comments</comments><guid isPermaLink="false">02f4dc38-cecd-4b08-b542-cdf3a355422a</guid><pubDate>Thu, 23 Jul 2026 07:39:50 +0000</pubDate><atom:updated>2026-07-23T07:39:50.158Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Express train,எக்ஸ்பிரஸ் ரெயில்,Thoothukudi,arrested,தூத்துக்குடி,Police raid,கஞ்சா பறிமுதல்,Ganja seized,வடமாநில வாலிபர் கைது,போலீசார் சோதனை,northern state youth</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/u09evvjb/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கஞ்சா பறிமுதல், வடமாநில வாலிபர் கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/u09evvjb/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 3 கிலோ <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE">கஞ்சா</a>வை கடத்தி வந்த வடமாநில வாலிபரை ரெயில்வே போலீசார் மடக்கி பிடித்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர்.</p><h2>சோதனை</h2><p>சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் கடந்த 20-ந்தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு வந்தது. இந்த ரெயில் மதுரையை கடந்து வந்தபோது, நெல்லை ரெயில்வே போலீசார் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, முன்பதிவு இல்லாத பெட்டியில் சந்தேகப்படும்படியாக இருந்த வடமாநில வாலிபரின் பையை சோதனை செய்தனர்.</p><h2>3 கிலோ கஞ்சா பறிமுதல்</h2><p>ரெயில்வே போலீசார் மேற்கொண்ட சோதனையின்போது, அந்த பையில் 3 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் அந்த வாலிபரை பிடித்து தூத்துக்குடி ரெயில்வே போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பீகார் மாநிலம், பஹால்பூரை சேர்ந்த கவுதம்குமார் (வயது 20) என்பதும், அவர் பீகாரில் இருந்து, தூத்துக்குடியில் தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேருவதற்காக வந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து பிடிபட்ட கவுதம்குமார் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை தூத்துக்குடி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>தேசத்தின் பொது அமைதியை குலைக்க முயலும் காங்கிரஸ்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/congress-attempting-to-disrupt-the-nations-public-peace-nainar-nagendrans-allegation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/congress-attempting-to-disrupt-the-nations-public-peace-nainar-nagendrans-allegation#comments</comments><guid isPermaLink="false">d4bd1977-8a7f-4c1c-a4f3-146ee094c7de</guid><pubDate>Thu, 23 Jul 2026 07:16:49 +0000</pubDate><atom:updated>2026-07-23T07:16:49.397Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,காங்கிரஸ்,Congress</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/6nj5e5rg/14.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/6nj5e5rg/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>டெல்லியில் இளைஞர்களுடன் சேர்ந்து சேர்ந்து போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சினர் மற்றும் ராகுல் காந்தியைக் கண்டித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் சென்னையில் போராட்டம் நடத்தப்பட்டது. இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>"வினாத்தாள் முறைகேட்டிற்கு எதிராகப் போராடுகிறோம்" என்ற போர்வையில், தேச ஒற்றுமையை சீர்குலைக்க முயலும் சமூக விரோதிகளுடன் கைகோர்த்துக் கொண்டு, தேசத்தின் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியைக் கண்டித்து, தமிழக பாஜக சார்பாக இன்று தமிழகக் காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிடும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. </p><p>மாணவர்களின் நலன் என்று வந்து விட்டால், அனைத்து அரசியல் வேறுபாடுகளையும் ஓரம்கட்டி வைத்து விட்டு, களத்தில் இறங்கி பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் துடிக்கும் ஒரே கட்சி பாஜக மட்டுமே. நாட்டின் தூண்களாகிய இளைஞர்களின் எதிர்காலத்தை வைத்து அரசியல் செய்யுமளவிற்கு நாங்கள் தரம் தாழ்ந்து போகவில்லை. ஆனால், அரசியலில் “Field Out” ஆன காங்கிரஸ் போன்ற கட்சிகள், மாணவர்கள் போராட்டத்தை கலவரமாக மாற்ற நினைப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மாணவர்கள் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவுவதை ஆதரிக்கும் காங்கிரசின் வெறுப்பரசியலை ஊக்குவிப்பது பேராபத்தானது என்பதை உணர்த்தும் குறியீடு தான், தமிழக பாஜகவின் இன்றைய முற்றுகைப் போராட்டம்.</p><p>இப்போராட்டத்தில் பெருந்திரளாகக் கலந்து கொண்டு, காங்கிரசாரை கதிகலங்க வைத்த தமிழக பாஜகவின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் எனது நன்றிகள்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>அங்கன்வாடி மையத்தில் குழந்தைக்கு வழங்கிய முட்டையில் கோழிக்குஞ்சு: பெற்றோர் அதிர்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/parents-shocked-after-finding-chick-in-egg-given-to-child-at-anganwadi-center</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/parents-shocked-after-finding-chick-in-egg-given-to-child-at-anganwadi-center#comments</comments><guid isPermaLink="false">17dc922c-2e17-45ff-a306-4e2a01a899cb</guid><pubDate>Thu, 23 Jul 2026 07:01:09 +0000</pubDate><atom:updated>2026-07-23T07:01:09.097Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,children,குழந்தைகள்,அதிர்ச்சி,பெற்றோர்,Parents,Chicken,முட்டை,egg,Anganwadi center,அங்கன்வாடி மையம்,Shocked,கோழிக்குஞ்சு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/7oe24hmj/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அங்கன்வாடி மையத்தில் குழந்தைக்கு வழங்கிய முட்டையில் கோழிக்குஞ்சு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/7oe24hmj/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டத்தில் ரெகுராமபுரம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைக்கு வழங்கிய <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88">முட்டை</a>யில் அழுகிய நிலையில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81">கோழிக்குஞ்சு</a> இருந்த விவகாரம் தொடர்பாக நேற்று சமூக குழந்தைகள் நலத்திட்ட அலுவலர் விசாரணை நடத்தினார்.</p><h2>அங்கன்வாடி மையம்</h2><p>தூத்துக்குடி மாவட்டத்தில் புதூர் அருகே உள்ள ரெகுராமபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் 20 குழந்தைகள் படித்து வருகின்றனர். இங்கு சொர்ணமாரி என்பவர் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த மையத்தில் குழந்தைகளுக்கு வாரத்தில் திங்கள், புதன், வியாழன் ஆகிய 3 நாட்களுக்கு முட்டை வழங்கப்படுகிறது. இதில், மையத்துக்கு வரும் 1 வயதிலிருந்து 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பெற்றோரிடம் வாரத்துக்கு 3 முட்டைகள் வழங்கப்படும். மற்ற குழந்தைகளுக்கு மையத்திலேயே முட்டையை வேக வைத்து, உணவுடன் சேர்த்து வழங்கப்படுகிறது.</p><h2>முட்டையில் இறந்த நிலையில் கோழிக்குஞ்சு</h2><p>இந்த நிலையில் கடந்த 20-ந்தேதி இந்த மையத்தில் 1 வயது குழந்தையின் பெற்றோரிடம் 3 முட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. அதனை வீட்டுக்கு கொண்டு சென்ற பெற்றோர். நேற்று முன்தினம் (செவ்வாய்கிழமை) ஒரு முட்டையை வேக வைத்தனர். சிறிது நேரத்தில் அந்த முட்டையை உடைத்தபோது, அதில் கோழிகுஞ்சு இறந்து அழுகிய நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த முட்டையை மையத்துக்கு எடுத்து சென்று ஊழியரிடம் காண்பித்துள்ளனர். அதற்கு அவர் சரிவர பதில் சொல்லவில்லை என கூறப்படுகிறது. இது மற்ற பெற்றோருக்கும் தெரியவந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.</p><h2>அதிகாரி விசாரணை</h2><p>இதை தொடர்ந்து நேற்று சமூக குழந்தைகள் நலத்திட்ட அலுவலர் பத்மா அந்த அங்கன்வாடி மையத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். அவர் கூறுகையில், "பிரச்சினைக்குரிய முட்டையின் ஓடுகளை பரிசோதித்து, அவை அரசு சார்பில் வழங்கப்பட்டதா? அல்லது வெளியே இருந்து வாங்கி பயன்படுத்திய முட்டையா? என்பது குறித்து அறிந்த பின்னர் மேல்நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item></channel></rss>