<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 09 Sep 2026 11:27:28 +0000</lastBuildDate><item><title>பழங்குடியின மக்களின் உரிமைகளை பறிக்க முயற்சியா? - மத்திய அரசுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/an-attempt-to-strip-tribal-people-of-their-rights-selvaperunthagai-condemns-the-central-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/an-attempt-to-strip-tribal-people-of-their-rights-selvaperunthagai-condemns-the-central-government#comments</comments><guid isPermaLink="false">2d017658-37ba-4b5a-a264-bd6870c2530a</guid><pubDate>Wed, 09 Sep 2026 11:21:44 +0000</pubDate><atom:updated>2026-09-09T11:21:44.512Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,செல்வப்பெருந்தகை,கண்டனம்,மத்திய அரசு,Central Government,Selvaperunthagai,tribal people,பழங்குடி மக்கள்,உரிமை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/gav3d432/selvaperuthakai.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ செல்வபெருந்தகை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/gav3d432/selvaperuthakai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பழங்குடியின மக்களின் உரிமைகளை பறிக்கும் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%88">செல்வபெருந்தகை </a>தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>மலைவாழ் பழங்குடியின மக்கள்</h2><p>காடுகளையும், மலைகளையும் தங்களது வாழ்விடமாகவும், வாழ்வாதாரமாகவும் பல தலைமுறைகளாகப் பாதுகாத்து வரும் மலைவாழ் பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் கடும் கண்டனத்திற்குரியது.</p><p>வன நிலங்களை வனச்சாரா பயன்பாடுகளுக்கு மாற்றும்போது, அப்பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களின் கருத்தையும், கிராம சபையின் உரிமையையும் புறக்கணிக்கலாம் என்ற மத்திய அரசின் நிலைப்பாடு, பழங்குடியின மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டமும், வன உரிமைச் சட்டமும் வழங்கியுள்ள பாதுகாப்புகளுக்கு எதிரானதாகும்.</p><p>'எங்கள் நிலம்; எங்கள் காடு; எங்கள் வாழ்வாதாரம்' என்ற பழங்குடியின மக்களின் உரிமையை அதிகாரத்தின் பெயரால் பறிக்க மத்திய அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. காடுகளைப் பாதுகாத்து வந்தவர்களையே அவர்களது சொந்த நிலத்திலிருந்து அந்நியப்படுத்தும் முயற்சி ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.</p><p>கிராம சபையின் பங்களிப்பை வலுவிழக்கச் செய்வது என்பது வெறும் நிர்வாக மாற்றம் அல்ல அது பழங்குடியின மக்களின் ஜனநாயக உரிமையையும், வாழ்வுரிமையையும் கேள்விக்குள்ளாக்கும் ஆபத்தான நடவடிக்கை. தொழில் நிறுவனங்களுக்கும், பெருநிறுவனங்களுக்கும் வன நிலங்களைத் திறந்துவிடுவதற்காக பழங்குடியின மக்களின் உரிமைகளை மத்திய அரசு பறிக்க முயல்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.</p> <h2>அரசின் கடமையே</h2><p>மலைவாழ் மக்களின் நிலம், காடு, நீர் மற்றும் பாரம்பரிய வாழ்வாதாரத்தின் மீது அவர்களுக்குள்ள உரிமையை எந்த அதிகாரமும் பறிக்க முடியாது. பழங்குடியின மக்களின் ஒப்புதல் மற்றும் கிராம சபைகளின் அதிகாரத்தைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையே தவிர, அதனை நீர்த்துப்போகச் செய்வது அல்ல.</p><p>எனவே, பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பறிக்கும் இந்த நிலைப்பாட்டை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். கிராம சபைகளின் அதிகாரத்தை முழுமையாகப் பாதுகாக்க வேண்டும். வன உரிமைச் சட்டத்தின் நோக்கத்தையும், பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தையும் சிதைக்கும் எந்த நடவடிக்கையையும் உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஏய்த்துப் பிழைக்கும் தொழிலை கடந்த 4 மாதங்களாக கனகச்சிதமாக செய்யும் த.வெ.க. அரசு - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-government-has-been-flawlessly-carrying-out-the-business-of-making-a-living-through-deception-for-the-past-four-months-edappadi-palaniswamis-criticism</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-government-has-been-flawlessly-carrying-out-the-business-of-making-a-living-through-deception-for-the-past-four-months-edappadi-palaniswamis-criticism#comments</comments><guid isPermaLink="false">ab233444-d221-4edf-a642-a9e9f2f9dead</guid><pubDate>Wed, 09 Sep 2026 11:19:05 +0000</pubDate><atom:updated>2026-09-09T11:19:05.472Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,TVK,தவெக,Vijay,Tamilnadu,விஜய்,Farmers,அதிமுக,தமிழகம்,விவசாயிகள்,Edappadi Palaniasamy,எடப்பாடி  பழனிசாமி,தவெக அரசு,TVK Government,tvk govt</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/ma3pphu6/eda.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/ma3pphu6/eda.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/vijay">விஜய்</a> தலைமையிலான த.வெ.க. கூட்டணி அரசு சொல் ஒன்று, செயல் வேறு என்ற ரீதியில் அனைத்துத் தரப்பு மக்களையும் வஞ்சித்து வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். </p><h2>அனுபவமின்மை</h2><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>கடந்த ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் சீர்குலைந்துபோன சட்டம்-ஒழுங்கினை சீர்செய்வோம் என்று மார்தட்டிப் பேசிவிட்டு, தறிகெட்டு ஓடும் குதிரையைப் போல், குற்றச் சம்பவங்கள் மேலும் மேலும் பெருகி வரும் நிலையில், செய்வதறியாது திகைத்து நிற்கும் இந்த பொய்க்கால் அரசு, ஆட்சி இயந்திரத்தை முறையாக சுழற்றத் தெரியாமல், அனுபவமின்மை காரணமாக கை பிசைந்து நிற்கும் இந்த அரசுக்கு, சொல் புத்தியும் இல்லை; சுய புத்தியும் இல்லை என்பதை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள்.</p><h2>த.வெ.க. அமைச்சர்கள்</h2><p>காவிரி டெல்டா மாவட்டங்கள் உட்பட பல பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை உரிய நேரத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், கொள்முதல் செய்யாததால் அவைகள் முளைவிட்டு பாழாகி, பாடுபட்டு உழைத்த விவசாயிகளின் உழைப்பு வீணாகிறது என்று கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் விரிவாக நான் எடுத்து வைத்தேன்.</p><p>வெட்ட வெளியில் மழை வெள்ளத்தால் நெல்மணிகள் முளைத்து வீணாய் போனதையும், அதனைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்த அரசை வலியுறுத்தினேன். அந்த நேரத்தில், குறைகளைச் சொல்லும் சட்டமன்ற உறுப்பினர்களை சமாதானப்படுத்தும் நோக்கில் த.வெ.க. அமைச்சர்கள் பதில்களை சொன்னார்களே தவிர, வீணாய் போகும் நெல்மணிகளை பாதுகாப்பதற்கு முறையான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.</p><h2>விவசாயிகளுக்கு நஷ்டம்</h2><p>கடந்த சில நாட்களாக திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பெய்த திடீர் மழையினால், சுமார் 2,000 ஏக்கர் நிலத்தில் விளைவித்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.</p><p>டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர்-மானம்பாடி, நல்லிச்சேரி மற்றும் பல பகுதிகள், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் மற்றும் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில், கடந்த சில நாட்களாக விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் முழுமையாக கொள்முதல் செய்யப்படாமல் சாலை ஓரங்களில் குவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையில் நனைந்து வீணாகி, விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/1e4dko6f/dist.jpg" /></figure><h2>நெல்மணிகள்</h2><p>வானத்தை வில்லாய் வளைப்போம், விண்மீன்களை பூமிக்கு கொண்டு வந்து மக்களுக்கு வெளிச்சம் தருவோம் என்பதுபோல், முடியாத அனைத்தையும் செய்து காட்டுவோம் என்று வாய்ப்பந்தல் போடுவதை இந்த அரசு இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஏழை, எளிய மக்களின் வயிற்றுப் பசியை போக்குவது நியாய விலைக் கடைகளில் விலையில்லாமல் வழங்கப்படும் அரிசிதான். </p><p>அந்த அரிசியின் ஆதாரமாக திகழக்கூடிய நெல்மணிகள் வீணாய் போவதை வேடிக்கை பார்க்கும் இந்த அரசின் போக்கை ஏற்க முடியாது. மக்களின் வயிற்றுப் பசியோடு விளையாடும் போக்கை உடனடியாக கைவிட்டு, விவசாயிகள் விளைவித்த நெல்மணிகளை முழுமையாக கொள்முதல் செய்து, விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டுமென்று விளையாட்டு மாடல் த.வெ.க. அரசை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>28 நாட்கள்... 178 மணி நேரம்! தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரில் 1,117 அறிவிப்புகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-assembly-28-days-178-hours-1117-announcements</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-assembly-28-days-178-hours-1117-announcements#comments</comments><guid isPermaLink="false">6a0c7bb1-fc01-4c5a-b5e0-59bf2a65bd47</guid><pubDate>Wed, 09 Sep 2026 10:57:06 +0000</pubDate><atom:updated>2026-09-09T10:57:06.724Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழ்நாடு,சட்டசபை,Assembly Session,கூட்டத்தொடர்,அறிவிப்புகள்,Announcements</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/tnbn51kr/assembly.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர்]]></media:title><media:description type="html"><![CDATA[ 28 நாட்கள்... 178 மணி நேரம்! தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரில் 1,117 அறிவிப்புகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/tnbn51kr/assembly.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு சட்டப்பேரவையின் 17-வது பேரவைக்கான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D">கூட்டத்தொடர்</a> 28 நாட்கள் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. மொத்தம் 178 மணி நேரம் 31 நிமிடங்கள் நடைபெற்ற இந்தக் கூட்டத்தொடரில், முதல்-அமைச்சரின் 17 முக்கிய அறிவிப்புகள் உள்பட 51 துறைகளின் சார்பில் 1,117 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.</p><p>மேலும், 9 அரசினர் தனித் தீர்மானங்கள் மற்றும் 13 சட்ட முன்வடிவுகள் நிறைவேற்றப்பட்டன. மக்கள் நலன், வளர்ச்சி திட்டங்கள் மற்றும் மாநில உரிமைகள் தொடர்பாக பல்வேறு முக்கிய விவாதங்களும் நடைபெற்றன.</p><h2>17 அறிக்கை</h2><p>ஜனநாயக மாண்பையும், மக்கள் நலனையும் முன்னிறுத்திய தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது. விதி 110-ன் கீழ் தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D">முதல்-அமைச்சர்</a> 17 அறிக்கைகளையும், 51 துறைகளின் சார்பில் 1,117 அறிவிப்புகளையும் வெளியிட்டதோடு, 13 சட்ட முன்வடிவுகளும், 9 அரசினர் தனித் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.</p><h2>ஜனநாயக மரபுகள்</h2><p>17-வது பேரவையின் முதல் கூட்டத்தொடரின் முதல் கூட்டம் 11-5-2026 முதல் 13-5-2026 வரை மற்றும் 18-6-2026 முதல் 23-6-2026 வரையும், இரண்டாம் கூட்டம் 5-8-2026 முதல் 8-9-2026 வரையும் நடைபெற்றது. இக்கூட்டத்தொடர், மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகள், ஆக்கப்பூர்வமான விவாதங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க தனி் தீர்மானங்கள் மற்றும் ஜனநாயக மரபுகளை பேணிய அவை நடவடிக்கைகள் என பல்வேறு சிறப்புகளுடன் நிறைவடைந்தது.</p><h2>வாய்ப்புகள் வழங்கப்பட்டன</h2><p>இந்த கூட்டத்தொடரில் பேரவை மொத்தம் 28 நாட்கள், 178 மணி நேரம் 31 நிமிடங்கள் கூடியது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் தங்களது கருத்துகள், தொகுதி சார்ந்த கோரிக்கைகள் மற்றும் மக்கள் நல பிரச்சினைகளை விரிவாக எடுத்துரைப்பதற்கு உரிய வாய்ப்புகள் வழங்கப்பட்டன.</p><p><strong>விதி 110-ன் கீழ் மாண்புமிகு முதல்-அமைச்சர் அறிக்கைகள் மற்றும் அறிவிப்புகள்</strong></p><h2>18 அறிக்கைகள்</h2><p>தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி எண் 110-ன் கீழ் மொத்தம் 18 அறிக்கைகள் அளிக்கப்பட்டன. அவற்றில்,  தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் மட்டும் மக்கள் நலன், விவசாயிகள் நலன், சமூகப் பாதுகாப்பு, மருத்துவம், தொழில் வளர்ச்சி, உட்கட்டமைப்பு, போக்குவரத்து, விளையாட்டு மற்றும் நிர்வாக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக 17 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரங்கள் பின்வருமாறு:</p><p> <strong>நெல் மற்றும் கரும்புக்கான மாநில அரசின் ஊக்கத்தொகை தொடர்பான அறிவிப்பு.</strong></p><p>கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர்க்கடன்களுக்கு கூடுதல் தள்ளுபடி வழங்கும் அறிவிப்பு.</p><p> பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்கப்படும் பால் கொள்முதல் விலையை உயர்த்தும் அறிவிப்பு.</p><p>மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் மக்கள் நல அறிவிப்புகள்.</p> <p>சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் மக்கள் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், அரசு சார்பில் வாகனம், வாகனப் படி மற்றும் உதவியாளர் படி வழங்கும் அறிவிப்பு.</p><p>“வெற்றித் தமிழகம்” தொலைநோக்குத் திட்டத்தின்படி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் விலையில்லா எரிவாயு சிலிண்டர் வழங்கும் அறிவிப்பு.</p><p> பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் நடவடிக்கைகளை அரசு கைவிடும் என்ற அறிவிப்பு.</p><p> “வெற்றித் தமிழகம்” தொலைநோக்குத் திட்டத்தின் ஓர் அங்கமாக “வெற்றிப் பயணம்” திட்டத்தைச் செயல்படுத்தும் அறிவிப்பு.</p><p> பால் உற்பத்தியாளர்கள் மேலும் பயனடையும் வகையில் பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தும் அறிவிப்பு.</p><p> எரிசக்தித் துறையின் சார்பில் புதிய மின்கட்டமைப்புகளை அமைக்கும் அறிவிப்பு.</p><p>காஞ்சிபுரம் மாவட்டத்தில் செமிகண்டெக்டர் மற்றும் மின்னணுவியல் உற்பத்திப் பூங்கா, கோயம்புத்தூரில் டிஜிட்டல் நிதி மையம் மற்றும் திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் பல்முனை சரக்குப் போக்குவரத்து மையம் அமைக்கும் அறிவிப்பு.</p><p>நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு அறிவிப்புகள்.</p><p>ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் ஆகியவற்றைப் பொதுமக்கள் டிஜிட்டல் முறையில் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளும் நடைமுறையைத் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தும் அறிவிப்பு.</p><p>விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடியபோது அவர்கள்மீது கடந்த ஆட்சிக் காலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு.</p><p>சென்னையில் உலகத்தரம் வாய்ந்த “தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்” அமைக்கும் அறிவிப்பு.</p><p> தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த “மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்” அமைக்கும் அறிவிப்பு.</p><p> சென்னையில் நவீன வசதிகளுடன் சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகத்தை அமைக்கும் அறிவிப்பு.</p> <p>விவசாயிகள் முதல் தொழிலாளர்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களின் நலனையும், தமிழ்நாட்டின் நீண்டகால வளர்ச்சியையும் மையமாக கொண்டதாக இந்த அறிவிப்புகள் அமைந்தன.</p> <p><strong>வரலாற்றுச் சிறப்புமிக்க தனி தீர்மானங்கள்</strong></p><h2>9 தீர்மானங்கள்</h2><p>தமிழ்நாட்டின் நலன், உரிமைகள், மொழி மற்றும் பிரதிநிதித்துவம் சார்ந்த முக்கியப் பிரச்சனைகளில் மாநிலத்தின் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் வகையில் 9 அரசினர் தனித் தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு, 9 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.</p><p><strong>அவற்றில் குறிப்பிடத்தக்க தீர்மானங்கள்:</strong></p><h2>தமிழ்த்தாய் வாழ்த்து</h2><p> தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன் “தமிழ்த்தாய் வாழ்த்து” கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என்ற தீர்மானம்.</p><p> நாடாளுமன்ற மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்க வேண்டும்; மாநிலங்களுக்கிடையேயான தற்போதைய விகிதாச்சார பிரதிநிதித்துவம் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும்; வரவிருக்கும் மக்களவை மற்றும் சட்டமன்ற பொதுத்தேர்தல்களிலேயே மூன்றில் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டின் பலனை பெண்கள் பெறுவதை உறுதிசெய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம்.</p><h2>தமிழ்</h2><p> தமிழை சென்னை ஐகோர்ட்டு முதன்மையான நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்க வேண்டும்;  சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புரைகள், தீர்ப்பாணைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை தமிழில் வழங்குவதற்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும்; அரசியலமைப்பு சட்டப் பிரிவு 348(2) மற்றும் ஆட்சி மொழிகள் சட்டம், 1963, பிரிவு 7-ன் கீழ் மாநில கவர்னரால் அனுப்பப்படும் முன்மொழிவுகள் மீது தேவையான சட்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம்.</p><p>இத்தீர்மானங்கள் மீது சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை விரிவாக எடுத்துரைப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டு, விவாதங்களுக்குப் பின்னர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.</p><p><strong>51 துறைகளின் சார்பில் 1,117 புதிய அறிவிப்புகள்</strong></p><p>2026–2027ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களின்போது, 51 துறைகளின் சார்பில் 1,117 புதிய அறிவிப்புகள் சம்பந்தப்பட்ட மாண்புமிகு அமைச்சர் பெருமக்களால் வெளியிடப்பட்டன.</p><p>கல்வி, சுகாதாரம், வேளாண்மை, தொழில் வளர்ச்சி, சமூகநலன், ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, குடிநீர், போக்குவரத்து, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய திட்டங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் அறிவிக்கப்பட்டன.</p> <p>புதிய திட்டங்களைச் செயல்படுத்துதல், ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களை விரிவுபடுத்துதல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் பல்வேறு தரப்பினரின் தேவைகளை நிறைவேற்றுதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு துறைவாரியான அறிவிப்புகள் இடம்பெற்றன.</p><p><strong>கேள்வி நேரத்தில் விரைவான, தெளிவான மற்றும் உறுதியான பதில்கள்</strong></p><h2> 14,399 வினாக்கள்</h2><p>சட்டப்பேரவை உறுப்பினர்களிடமிருந்து மொத்தம் 14,399 வினாக்கள் வரப்பெற்றன. அவற்றில் 12,733 வினாக்கள் அனுமதிக்கப்பட்டன. இவ்வினாக்களை 170 உறுப்பினர்கள் அளித்திருந்தனர். அனுமதிக்கப்பட்ட வினாக்களில் 3,455 உடுக்குறியிட்ட வினாக்களும், 9,272 உடுக்குறியிடாத வினாக்களும், 6 குறுகிய கால வினாக்களும் இடம்பெற்றன.</p><h2>நடவடிக்கைகள்</h2><p>கேள்வி நேரத்தின்போது அவையில் எடுத்துக்கொள்ளப்பட்ட 23 வினாக்கள் மற்றும் 242 துணை வினாக்களுக்கு, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் உடனுக்குடன், விரைவாகவும் தெளிவாகவும் உறுதியாகவும் பதிலளித்தனர்.</p> <p>சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய முதன்மை வினாக்கள் மட்டுமின்றி, அவற்றை தொடர்ந்து எழுப்பப்பட்ட துணை வினாக்களுக்கும் துறை சார்ந்த விவரங்கள் மற்றும் அரசால் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளை எடுத்துரைத்து விரிவான பதில்கள் அளிக்கப்பட்டன.</p><h2>பொதுமக்களின் கோரிக்கை</h2><p>தொகுதிகளின் தேவைகள், பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தொடர்பான கேள்விகளுக்கு உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டதுடன், கேள்வி நேரத்திலேயே பல முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன.</p><p><strong>சிறப்புக் கவன ஈர்ப்புகளுக்கு முக்கியத்துவம்</strong></p><h2>45 சிறப்பு கவன ஈர்ப்புகள்</h2><p>அவசரத்தன்மை வாய்ந்த மிக முக்கியப் பொருண்மைகள் தொடர்பாக 45 சிறப்பு கவன ஈர்ப்புகள் அவையில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 106 உறுப்பினர்கள் உரையாற்றினர். இதற்காக மொத்தம் 6 மணி நேரம் 48 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன.</p><p>மேலும், உறுப்பினர்களிடமிருந்து 929 கவன ஈர்ப்புகள் வரப்பெற்று, அவற்றில் 153 கவன ஈர்ப்புகள் அனுமதிக்கப்பட்டன. 7 கவன ஈர்ப்புகளுக்கு அவையில் விளக்கம் அளிக்கப்பட்டதுடன், கவன ஈர்ப்புகளில் 10 உறுப்பினர்கள் உரையாற்றினர். 45 பொருண்மைகள் சிறப்புக் கவன ஈர்ப்புகளாகவும், 59 பொருண்மைகள் தகவல் கோரலாகவும் அவையில் எடுத்துக்கொள்ளப்பட்டன.</p><h2>13 அரசினர் சட்ட முன்வடிவுகள் நிறைவேற்றம்</h2><p>பல்வேறு துறைகள் தொடர்பான முக்கிய அரசினர் சட்ட முன்வடிவுகள் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, அவற்றின் மீது உறுப்பினர்களின் கருத்துகள் பெறப்பட்டன. விரிவான விவாதங்களுக்கு பின்னர், நிர்வாகத்தை மேலும் மேம்படுத்துதல், மக்கள் நலனை உறுதிப்படுத்துதல் மற்றும் மாநிலத்தின் வளர்ச்சியை முன்னெடுத்து செல்லுதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்ட 13 அரசினர் சட்ட முன்வடிவுகள் நிறைவேற்றப்பட்டன.</p><p><strong>சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடர் நேரலை – புதிய சாதனை</strong></p><p>17-வது சட்டப்பேரவையின் அனைத்து நடவடிக்கைகளும் தொடர் நேரலையில் ஒளிபரப்பப்பட்டன.</p><p>கேள்வி நேரம், மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள், உறுப்பினர்களின் உரைகள், மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு அமைச்சர்களின் பதில்கள், முக்கிய அறிவிப்புகள் உள்ளிட்ட பேரவையின் அனைத்து நடவடிக்கைகளையும் பொதுமக்கள் நேரடியாக அறிந்துகொள்ள இது வாய்ப்பை ஏற்படுத்தியது.</p> <h2>நிதிநிலை அறிக்கை</h2><p>2026 ஆகஸ்ட் 5 முதல் செப்டம்பர் 8 வரை நடைபெற்ற சட்டமன்ற பேரவை கூட்டத்தொடரில், நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்கள் தொடர்பான பதிவுகள் மட்டும் 10,92,182 பார்வைகளைப் பெற்றுள்ளன. சட்டப்பேரவை நடவடிக்கைகளின் வெளிப்படைத்தன்மையை மேலும் வலுப்படுத்தி, பேரவையின் செயல்பாடுகளை மக்களிடம் நேரடியாகக் கொண்டுசேர்த்த புதிய சாதனையாக இந்தத் தொடர் நேரலை அமைந்தது.</p><h2>ஜனநாயக மரபுகள்</h2><p>பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் மற்றும் விவாதங்கள் நடைபெற்றபோதிலும், உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை அவையில் முழுமையாக பதிவு செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. பேரவையின் மாண்பையும் ஜனநாயக மரபுகளையும் பேணும் வகையில் கூட்டத்தொடர் முழுவதும் அவை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.</p><p><strong>எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அதிக வாய்ப்பு</strong></p><h2>வாய்ப்பு அளிக்கப்பட்டது</h2><p>இக்கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது கருத்துகள், கோரிக்கைகள் மற்றும் தொகுதி சார்ந்த பிரச்சனைகளை விரிவாக எடுத்துரைப்பதற்கு அதிக நேரமும் வாய்ப்பும் வழங்கப்பட்டது. கேள்வி நேரம், மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் மற்றும் முக்கியத் தீர்மானங்கள் மீதான விவாதங்களில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை முழுமையாக பதிவு செய்வதற்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.</p><p>ஆளுங்கட்சி உறுப்பினர்கள் 17 மணி நேரம் 43 நிமிடங்களும், திமுக உறுப்பினர்கள் 31 மணி நேரம் 21 நிமிடங்களும், அதிமுக உறுப்பினர்கள் 17 மணி நேரம் 45 நிமிடங்களும், இதர கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் 20 மணி நேரம் 24 நிமிடங்களும் உரையாற்றியுள்ளனர். சட்டப்பேரவை விவாதங்களில் அனைத்து தரப்பு உறுப்பினர்களின் கருத்துகளுக்கும் உரிய இடமளிக்கப்பட்டு, ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டது.</p> <p><strong>தொகுதி சார்ந்த பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம்</strong></p><p>சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் நிலவும் குடிநீர், சாலை, போக்குவரத்து, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சித் தேவைகள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை அவையின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட தொகுதி சார்ந்த கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதிலளித்து, ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் புதிதாக மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தனர்.</p> <p>இதன்மூலம் மாநில அளவிலான முக்கியப் பிரச்சனைகளுடன், ஒவ்வொரு தொகுதியின் தேவைகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளும் சட்டப்பேரவையில் உரிய கவனம் பெற்றன.</p><p><strong>மக்கள் நலன் சார்ந்த விரிவான விவாதங்கள்</strong></p><h2>வேலைவாய்ப்பு</h2><p>கூட்டத்தொடர் முழுவதும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை, வாழ்வாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, வேளாண்மை, தொழில் வளர்ச்சி, சமூகநலன் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொருண்மைகள் குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்றன.</p> <h2>வெளியேற்றவில்லை</h2><p>உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் விளக்கமளித்து, அரசின் நிலைப்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து பதிலளித்தனர். 28 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தொடரில் ஒரே ஒரு நாள் மட்டும் ஒரு கட்சியினரின் மோசமான நடவடிக்கையால் அவர்கள் வெளியேற்றப்பட்டனர். மற்ற நாட்களில் கடும் அமளி செய்தபோதும் அவர்களை சட்டமன்றப்பேரவை தலைவர் வெளியேற்றவில்லை.</p> <h2>1,117 அறிவிப்புகள்</h2><p>விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் முக்கிய அறிவிப்புகள், வரலாற்றுச் சிறப்புமிக்க தனித் தீர்மானங்கள், 51 துறைகளின் சார்பில் வெளியிடப்பட்ட 1,117 அறிவிப்புகள், கேள்வி நேரத்தில் அமைச்சர்களின் விரைவான மற்றும் உறுதியான பதில்கள், 13 சட்ட முன்வடிவுகள் நிறைவேற்றம், பேரவை நடவடிக்கைகளின் தொடர் நேரலை, எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்பட்ட விரிவான வாய்ப்புகள் ஆகியவற்றின் மூலம், ஜனநாயக மாண்பையும் மக்கள் நலனையும் முன்னிறுத்திய சிறப்புமிக்க சட்டப்பேரவைக் கூட்டத்தொடராக இது அமைந்தது.</p> ]]></content:encoded></item><item><title>கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் பங்கேற்காதது ஏன்? - அமைச்சர் நிர்மல்குமார் பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-did-the-communist-parties-not-participate-in-the-alliance-parties-meeting-minister-nirmal-kumar-responds</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-did-the-communist-parties-not-participate-in-the-alliance-parties-meeting-minister-nirmal-kumar-responds#comments</comments><guid isPermaLink="false">b0969a12-90ad-4c57-9482-21d0cbcc3268</guid><pubDate>Wed, 09 Sep 2026 10:50:10 +0000</pubDate><atom:updated>2026-09-09T10:50:10.421Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,CTR Nirmal kumar,கம்யூனிஸ்ட் கட்சி,Communist Parties,சி.டி.ஆர்.நிர்மல்குமார்,அமைச்சர் நிர்மல்குமார்,Minister Nirmal Kumar,Nirmal Kumar,நிர்மல்குமார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/03y2yiwn/nirmal-kumar.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/03y2yiwn/nirmal-kumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொது செயலாளர் டி.ராஜாவை அமைச்சர் நிர்மல் குமார் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். பின்னர் அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசிய்தாவது:-</p><h2>கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்காதது ஏன்?</h2><p>இன்று நடைபெற உள்ள கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் பங்கேற்காதது பற்றி கேட்கிறீர்கள். தேர்தல் நேரத்தில்தான் கட்சிகளுடன் கூட்டணி இருக்கும் தி.மு..க உடனும் அவர்கள் அப்படி தான் தொகுதி உடன்பாடு வைத்திருக்கிறார்கள். கம்யூனிஸ்டு கட்சியினர் த.வெ.க. ஆட்சிக்கு ஆதரவு தொடரும் என்று தானே கூறியிருக்கிறார்கள். இந்த அரசு மக்களுக்கான அரசாகவே இருக்கும்.</p><p>மிசா தொடர்பாக அதிக விவாதங்கள் நடந்து விட்டது. தி.மு.க. செய்த துரோகங்கள் தவறுகளில் இருந்து தமிழ்நாட்டை எப்படி மாற்றி வருகிறோம் என்று சொல்லித்தானே ஆகவேண்டும். எவ்வளவு தூரம் அரசு துறையை கெடுத்து வைத்து இருக்கிறார்கள் என்று மக்களுக்கு தெரிய வேண்டும். டாஸ்மாக்கில் வசூல் மட்டும் செய்து கொண்டு இருந்தவர்களை வைத்துதான் கடந்த தி.மு.க. ஆட்சியை நடத்தி உள்ளார்கள். இதனை மக்களிடம் தெரியப்படுத்த வேண்டாமா?</p><h2>தவறை சொல்வதில் என்ன தவறு</h2><p>தி.மு.க. ஆட்சியில் ரத்தீஷ் என்பவர் புரோக்கர் போல செயல்பட்டுள்ளார். அவர் 5 துறைகளில் வசூல் செய்யும் பணிகளை செய்து உள்ளார். அதனை எப்படி சொல்லாமல் இருக்க முடியும். இப்படி அந்தந்த காலகட்டத்தில் தி.மு.க.வில் என்ன மாதிரியான நபர்கள் இருந்தார்கள் என்பதை சொல்லத்தானே வேண்டும். மக்கள் இவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். எப்படிப்பட்ட சிஸ்டமை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அதை எப்படி மாற்ற வேண்டும் என்பதையும் மக்களிடம் சொல்ல வேண்டும்.</p><p>தமிழ்நாட்டில் புதிதாக ஒரு உயிர் கொடுத்துக் கொண்டு உள்ளோம். ஒரு செடியை வளர்த்துக் கொண்டு உள்ளோம். புரையோடிக் கொண்டிருந்த மரத்தை சாய்த்து விட்டு புது செடியை வளர்த்து வருகிறோம் அடிப்படையில் இருந்து மாற்றுகிறோம். எதை செய்ய முடியுமோ அனைத்தையும் தமிழக முதல்- அமைச்சர் செய்கிறார். ஒவ்வொரு நாளும் கண்ணும் கருத்துமாக மக்களுக்கு செய்ய வேண்டியதை செய்கிறார். எப்படி எல்லாம் அதனை அரசுக்கு குடைச்சல் கொடுக்க முடியுமோ செய்து வருகிறார்கள். கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் மீனவர்கள் பாதிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். கச்சத்தீவை தாரை வார்த்தது நீங்கள்தான். இப்படி தி.மு.க. செய்த தவறை சொல்வதில் என்ன தவறு.</p><h2>முதல்-அமைச்சரின் முடிவு</h2><p>இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா? என்பது பற்றி முதல்-அமைச்சர்தான் முடிவு செய்வார். </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பதுக்கப்படும் மானிய உர மூட்டைகள்: குற்றவாளிகளை பாதுகாக்கிறதா த.வெ.க. அரசு? நயினார் நாகேந்திரன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rajnath-singhs-sri-lanka-visit-to-boost-maritime-security-resolve-tn-fishermen-issue-bjp-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rajnath-singhs-sri-lanka-visit-to-boost-maritime-security-resolve-tn-fishermen-issue-bjp-2#comments</comments><guid isPermaLink="false">cd182fe3-30ba-462a-8466-2aa20392d46c</guid><pubDate>Wed, 09 Sep 2026 10:48:22 +0000</pubDate><atom:updated>2026-09-09T10:48:22.154Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,பாஜக,BJP,Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,உர மூட்டைகள்,தவெக அரசு,TVK Government</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/tvlt3nkh/vjijij.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/tvlt3nkh/vjijij.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க பா.ஜ.க. எந்த எல்லைக்கும் செல்லும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/நயினார்-நாகேந்திரன்">நயினார் நாகேந்திரன்</a> தெரிவித்துள்ளார். </p><h2>உர மூட்டைகள்</h2><p>இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள நல்லூரான்பட்டியில், நமது மத்திய அரசால் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் நூற்றுக்கணக்கான உர மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், அரசு மானிய உர மூட்டைகளை வேறு சாக்குப்பைகளுக்கு மாற்றி, வணிக நோக்கில் விற்பனை செய்யும் முறைகேடு நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. </p><h2>மிகப்பெரிய ஊழல்</h2><p>ஆண்டுதோறும் சுமார் 10 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறும் மத்திய அரசின் மானிய விலையில் உர மூட்டைகள் வழங்கும் திட்டத்திற்கு, 2026–27 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் ரூ.1.71 லட்சம் கோடியும், நடப்பு காரிப் பருவத்திற்கு மட்டும் தனியாக ரூ.41,534 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. </p><p>அந்த வகையில் 45 கிலோ எடை கொண்ட யூரியா மூட்டைகளின் விலை சுமார் ரூ. 250 முதல் ரூ. 300 வரை மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், இதுபோன்ற சட்டவிரோத பதுக்கல் காரணமாக, இதே உர மூட்டைகளை சுமார் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை கொடுத்து விவசாயிகள் வெளியில் வாங்க வேண்டிவரும். இந்த மிகப்பெரிய ஊழல் தமிழகத்தில் தொடர்கதையாகி வருவது, கடும் கண்டனத்திற்குரியது.   </p><h2>விவசாய அணி சார்பாக போராட்டங்கள்</h2><p>கடந்த ஜூலை மாதத்தில், கோவை திருமலையாம்பாளையம் அருகேயுள்ள குடோனில் இதே போன்ற மானிய உர மூட்டைகள், டன் கணக்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகிய போதே, தற்போதைய த.வெ.க. அரசை நாம் எச்சரித்து இருந்தோம். ஆனால், வெட்டி விளம்பரங்கள் செய்வதிலும், விதவிதமான ரீல்ஸ்கள் எடுப்பதிலும் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் இதை துளியும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. </p><p>எனவே, இனியும் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் முதல்-அமைச்சர் காலம் தாழ்த்தினால், தமிழக பா.ஜ.க.வின் விவசாய அணி சார்பாக போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாக்க பா.ஜ.க. எந்த எல்லைக்கும் செல்லும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>வங்கிகளுக்கு 4 நாள் தொடர் விடுமுறை: ஏ.டி.எம்.களில் பணம் இல்லாமல் போகும் அபாயம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/four-consecutive-days-of-bank-holidays-risk-of-atms-running-out-of-cash</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/four-consecutive-days-of-bank-holidays-risk-of-atms-running-out-of-cash#comments</comments><guid isPermaLink="false">53618b6b-f288-46b7-9ae5-23805de373e3</guid><pubDate>Wed, 09 Sep 2026 10:41:44 +0000</pubDate><atom:updated>2026-09-09T10:41:44.640Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,விடுமுறை,Holiday,பணம்,ATM,bank,வங்கிகள்,ஏ.டி.எம்,cash</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/y8ox26wr/304.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வங்கி
]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/y8ox26wr/304.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>வேலை வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் நிறுத்தம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் நடைபெறுகிறது.</p> <h2>வங்கிகள்</h2><p>பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு, கிராமிய வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள், மேலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கிறார்கள். நாடு முழுவதும் உள்ள ஒரு லட்சம் வங்கி கிளைகளை மூடி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தை கூட்டமைப்பு அறிவித்து உள்ளது.</p><p>இந்த வேலை நிறுத்தத்தையொட்டி வங்கிகள் தொடர்ந்து நாட்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. வேலை நிறுத்தம் நடக்கின்ற (வெள்ளிக்கிழமை) வங்கிகள் முழுமையாக மூடப்படுகிறது. மறுநாள் (சனிக்கிழமை) வங்கிகளுக்கு விடுமுறை நாளாகும். 13-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பொது விடுமுறையாகும். 14-ந் தேதி (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி அரசு விடுமுறையாகும். 3 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் வங்கிகள் முழுமையாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.</p><h2>பாதிப்பு</h2><p>வார இறுதி நாள் தொடங்கி வாரத்தின் முதல் நாள் வரை 4 நாட்கள் வங்கிகள் மூடப்படுகின்ற நிலை ஏற்பட்டு இருப்பதால் சேவை கடுமையாக பாதிக்கப்படும். அனைத்து வங்கிகளிலும் பணம் மற்றும் காசோலை பரிவர்த்தனை முடங்கக்கூடம். பல்லாயிரக்கணக்கான காசோலை பரிமாற்றங்கள் நடைபெறாமல் பாதிப்பு ஏற்படும்.</p><p>பணம் டெபாசிட் செய்தல், எடுத்தல், அந்நிய செலாவணி பரிமாற்றம் உள்ளிட்ட வர்த்தக பணிகள் இதனால் பாதிக்கும் சூழல் உள்ளது. மேலும் ஏ.டி. எம்.களும் முடங்கக்கூடிய நிலை உருவாகும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 4 நாட்கள் தொடர்ச்சியாக பணங்களை நிரப்புவதற்கான வாய்ப்பு இல்லை அதனால் பெரும்பாலான ஏ.டி.எம்.கள் பணம் இல்லாமல் செயல் இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. </p><h2>சனி, ஞாயிறு விடுமுறை</h2><p>இது குறித்து அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் வெங்கடாசலம் கூறியதாவது:-</p><p>நாடு முழுவதும் 7 லட்சம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF">வங்கி </a>ஊழியர்கள், அதிகாரிகள் ஒரு நாள் வேலை நிறுத்த ஈடுபடுகிறார்கள். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வங்கிகளுக்கு பிரதி மாதம் சனி, ஞாயிறு விடுமுறை விட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு அதனை அமல்படுத்த மறுத்து வருகிறது.</p><p>மேலும் வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் மற்ற கோரிக்கைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க நிர்வாகம் மற்றும் அரசு தயக்கம் காட்டுகிறது. எனவே நாளை மறுநாள் அனைத்து வங்கிகளும் மூடப்பட்டு ஊழியர்கள் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் வங்கிக் கிளைகள் செயல்படாது. சேவை கடுமையாக பாதிக்கும். ஏ.டி.எம். மையங்களும் இயங்குவதற்கு வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.</p><p>இதற்கிடையில் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கமும் இந்த போராட் டத்தில் ஈடுபடுகிறது. இதை தவிர வருகிற 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 3 நாட்கள் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் ரோஷன் கார்க்கி தெரிவித்து உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ராஜ்நாத் சிங்கின் இலங்கை பயணம் தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும்: பா.ஜ.க.</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rajnath-singhs-sri-lanka-visit-to-boost-maritime-security-resolve-tn-fishermen-issue-bjp</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rajnath-singhs-sri-lanka-visit-to-boost-maritime-security-resolve-tn-fishermen-issue-bjp#comments</comments><guid isPermaLink="false">c7db1932-cca2-44fc-8e50-09b2054a37df</guid><pubDate>Wed, 09 Sep 2026 10:31:41 +0000</pubDate><atom:updated>2026-09-09T10:31:41.039Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Tamilnadu,தமிழகம்,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,தமிழக மீனவர்கள்,SriLanka,இலங்கை,Rajnath Singh,ராஜ்நாத் சிங்,TN Fishermen</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/2rispjyj/tala.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/2rispjyj/tala.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கின் அதிகாரப்பூர்வ இலங்கை பயணம், பிராந்திய கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன், தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான வழியையும் வகுக்கும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன்</a> தெரிவித்தார். </p><h2>ராஜ்நாத் சிங்</h2><p>ராஜ்நாத் சிங் பயணத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த நயினார் நாகேந்திரன், 1988-ல் கே.சி.பந்த் இலங்கைக்குச் சென்ற பிறகு, கடந்த 38 ஆண்டுகளில் இந்தியப் பாதுகாப்புத் துறை மந்திரி ஒருவர் அந்தத் தீவு நாட்டிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும் என்று குறிப்பிட்டார்.</p><p>இலங்கை உள்நாட்டுப் போரின்போது இந்தியாவின் கடந்தகால ராணுவ ஈடுபாடு தொடர்பான உணர்வுப்பூர்வமான சூழல் காரணமாக, நிர்வாக மற்றும் தூதரக ரீதியிலான பரிமாற்றங்கள் தொடர்ந்தபோதிலும், இந்தியப் பாதுகாப்புத் துறை மந்திரிகளின் பயணங்கள் தவிர்க்கப்பட்டு வந்தன. </p><h2>கூட்டு ராணுவப் பயிற்சிகள்</h2><p>இந்தியப் பெருங்கடலில் உள்ள முக்கிய சர்வதேச கடல் வழித்தடங்களில் இலங்கையின் முக்கிய அமைவிடத்தை கருத்தில் கொள்ளும்போது, ​​இந்தப் பயணம் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது என்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன்</a> கூறினார். </p><p>மேலும், இந்த பயணத்தின் மூலம் 'ஸ்லினெக்ஸ்' (SLINEX) மற்றும் 'மித்ரா சக்தி' (Mitra Shakti) உள்ளிட்ட கூட்டு ராணுவப் பயிற்சிகள் வலுப்படுத்தப்படும் என்றும், திருகோணமலை எண்ணெய் சேமிப்பு நிலையத்தின் பாதுகாப்பு மேம்படுத்தப்படும் என்றும், இந்திய பாதுகாப்பு நிறுவனங்களில் இலங்கை ராணுவப் படையினருக்கான பயிற்சி வாய்ப்புகள் அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>மதுரை:  பைக்கில் சேலை சிக்கி பெண் பலி; காப்பாற்ற சென்றவரும் உயிரிழந்த சோகம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-woman-dies-after-her-saree-gets-caught-in-bike-tragic-news-that-the-person-who-went-to-save-her-also-died</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-woman-dies-after-her-saree-gets-caught-in-bike-tragic-news-that-the-person-who-went-to-save-her-also-died#comments</comments><guid isPermaLink="false">3d074f6f-c684-467a-b89d-c733d90cb610</guid><pubDate>Wed, 09 Sep 2026 10:19:25 +0000</pubDate><atom:updated>2026-09-09T10:19:25.242Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/744w8agj/ncwap.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/744w8agj/ncwap.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>மதுரை</p><p>மதுரையில் பைக்கில் சேலை சிக்கி பெண் பலியான நிலையில், காப்பாற்ற சென்றவரும் உயிரிழந்த சோகம் ஏற்பட்டு உள்ளது.</p><p>மதுரை செக்கானூரணி அருகே மேம்பாலத்தில் செல்லும்போது, பைக்கில் சேலை சிக்கியதில் பெண் ஒருவர் தடுமாறி விழுந்து உள்ளார்.  இந்த நிலையில், எதிர்திசையில் இளங்கிளி என்பவர் வந்துள்ளார்.  அவர் உடனடியாக, அந்த பெண்ணை காப்பாற்றுவதற்காக, தடுப்புச்சுவரை தாண்டி குதித்துள்ளார்.</p><p>அப்போது அவர், இடைவெளி பள்ளத்தில் தடுமாறி விழுந்து காயமடைந்து உயிரிழந்து விட்டார்.  விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த அந்த பெண் காப்பாற்ற ஆளில்லாமல் அந்த இடத்திலேயே பலியாகி உள்ளார்.  அந்த பெண் தவமணி என அடையாளம் காணப்பட்டு உள்ளார்.  இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>தொழில்முனைவோருக்கான 3 நாள் மொபைல் போன் பழுது நீக்கம் மற்றும் சேவைப் பயிற்சி..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/3-day-mobile-phone-repair-and-service-training-for-entrepreneurs</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/3-day-mobile-phone-repair-and-service-training-for-entrepreneurs#comments</comments><guid isPermaLink="false">58285458-7c40-40f5-ae8e-1f3d3c32c068</guid><pubDate>Wed, 09 Sep 2026 10:10:28 +0000</pubDate><atom:updated>2026-09-09T10:10:28.360Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Entrepreneurship training,திறன் மேம்பாட்டு பயிற்சி,skill development,Skill Development Training,Self Employment,மொபைல் சர்வீஸ் பயிற்சி,தொழில்முனைவோர் பயிற்சி,சுயதொழில் வாய்ப்பு,Mobile Service Training,Mobile Service</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/ytoa2ifw/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பயிற்சி வகுப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/ytoa2ifw/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>கல்வி&amp;வேலைவாய்ப்பு (Eduction and Jobs)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ் நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் தொழில் முனைவோருக்கான ‘மொபைல் போன் பழுது நீக்கம் மற்றும் சேவைப்பயிற்சி’ வரும் 16.09.2026 முதல் 18.09.2026 வரை மூன்று நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பயிற்சி நடைபெற உள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>பயிற்சி நோக்கம்:</h2><p>இந்தப் பயிற்சி, பங்கேற்பாளர்களுக்கு மொபைல் போன் ஹார்ட்வேர் மற்றும் Chip Level Service துறையில் தொழில்துறைத் தரநிலைக்கு ஏற்ப தேவையான தொழில்நுட்ப அறிவு மற்றும் நடைமுறை திறன்களை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p>பயிற்சி முடிவில், பயிலாளர்கள் Self-Employment / Service Centre / Technician Role-க்கு தயாராக இருப்பார்கள்.</p><h2>மொபைல் சர்வீஸ் பயிற்சி - நாள் 1</h2><p>· மொபைல் போன்களின் அடிப்படை அறிமுகம்,</p><p>· தொலைபேசிகளின் வகைகள், ஆண்ட்ராய்டு மற்றும் சிப்செட் உற்பத்தியாளர்கள் பற்றிய விளக்கம்.</p><p>· சார்ஜர்கள் மற்றும் பேட்டரிகளின் வகைகள், டிஸ்ப்ளே வகைகள் மற்றும் அதற்கான தொழில்நுட்பங்கள்.</p><p>· Ear Speaker, Loud Speaker, Microphone போன்ற கூறுகள் மற்றும் சார்ஜிங் இணைப்பகங்களில் ஏற்படும் பழுதுகளை சரி செய்யும் நடைமுறைகள்.</p><p>· FFC ஸ்ட்ரிப்ஸ், கேபிள்கள், சென்சார்கள் மற்றும் சார்ஜிங் போர்டுகள் தொடர்பான பழுதுபார்த்தல்.</p><h2>மொபைல் சர்வீஸ் பயிற்சி - நாள் 2</h2><p>· Chip Level சர்வீசிங் பற்றிய அடிப்படை மற்றும் சுருக்கமான விளக்கம்.</p><p>· SMT கூறுகள், மின்தடை (Resistor), மின் தேக்கி (Capacitor), டையோடு (Diode), IC ஆகியவற்றின் செயல்முறை விளக்கம்.</p><p>· கூறுகளை அகற்றுதல், Soldering நுட்பங்கள் மற்றும் Multimeter மூலம் கூறுகளை கண்டறியும் பயிற்சி.</p><p>· மாணவர்களின் தனிப்பட்ட செயல்திறன் மேம்பாட்டுக்கான நடைமுறை பயிற்சி.</p><p>· மொபைல் மதர்போர்டில் உள்ள மின்னழுத்தப் பிரிவுகள் – CPU, EMMC, Network, Battery, CC Board, Display, Battery Section.</p><p>· மின்னழுத்தம் (Voltage), மினோட்டம் (Current), Amps &amp; Watts பற்றிய தெளிவான விளக்கம்.</p><p>· மதர்போர்டில் Voltage-களை கண்டறியும் முறைகள் மற்றும் Dead Condition மொபைல்களை சரி செய்யும் நுட்பங்கள்.</p><h2>மொபைல் சர்வீஸ் பயிற்சி - நாள் 3</h2><p>· BQ, MediaTek, Qualcomm சார்ஜிங் Tracing மற்றும் Fixing நடைமுறைகள்.</p><p>· LCD மற்றும் OLED Display பிரிவுகள், Backlight மற்றும் GFX Section பழுதுபார்த்தல்.</p><p>· VREG Line, LDO Lines Tracing, Short Killer மூலம் மொபைல் சரி செய்யும் முறை.</p><p>· Primary &amp; Secondary Power Section பழுதுபார்த்தல், 6 Amps மூலம் Port Repair.</p><p>· DC PSU Reading கொண்டு Fault Diagnosis.</p><p>· Software Unlock கருவிகள், Network Section – PA மற்றும் WTR நேரடி கண்காணிப்பு மற்றும் சரிசெய்தல்.</p><p>· FRP Unlock-க்கான நேரடி Unlocked நடைமுறை பயிற்சி.</p><p>மத்திய / மாநில அரசுகள் வழங்கும் நிதியுதவி திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்த விவரங்களும் பயிற்சியின் ஒரு பகுதியாக விளக்கப்படும்.</p><h2>பயிற்சியில் சேர தகுதியானவர்கள்:-</h2><p>18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண், திருநங்கைகள், திருநம்பிகள், தொழில்முனைவோர், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ITI/பாலிடெக்னிக் மாணவர்கள், வேலை தேடுபவர்கள், சுயதொழில் ஆர்வலர்கள் மற்றும் மொபைல் தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்து கொள்ளலாம். பயிற்சியாளர்களுக்குக் குறைந்த வாடகையில் தங்கும் விடுதி வசதி உள்ளது.</p><h2>முன்பதிவு &amp; தொடர்புக்கு:</h2><p>www.editn.in 8668100181 / 9360221280</p><p>திங்கள்-வெள்ளி | காலை 10.00 – மாலை 5.00 மணி</p><p>தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி: <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழ்நாடு </a>தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, சிட்கோ தொழிற்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சென்னை - 600 032.</p><p>பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சரின் உடல்மொழி: மனித மாண்புகளுக்கு எதிரானதாகும்! - திருமாவளவன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-chief-ministers-body-language-it-goes-against-human-dignity-thirumavalavan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-chief-ministers-body-language-it-goes-against-human-dignity-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">2cfd75f2-6d12-42ba-99c5-5a55fa8423e4</guid><pubDate>Wed, 09 Sep 2026 09:44:14 +0000</pubDate><atom:updated>2026-09-09T09:44:14.497Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,Vijay,திருமாவளவன்,Thirumavalavan,விசிக,VCK,திருமாவளவன் எம்.பி.,Thirumavalavan MP,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/d4qspamn/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருமாவளவன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/d4qspamn/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முதல்-அமைச்சரின் உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது என விசிக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D">திருமாவளவன் </a>தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>மனித மாண்புகளுக்கு எதிரானது</h2><p>காவல்துறை மானியத்தில் முதல்-அமைச்சர் ஆற்றிய பதிலுரையின்போது, திமுக தலைவரும் மேனாள் முதல்-அமைச்சருமான தளபதி ஸ்டாலினைக் கேலி செய்யும் வகையில் அவரது உடல்மொழி அமைந்திருந்ததாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், முதல்-அமைச்சர் தரப்பில் 'அது உள்நோக்கம் கொண்டதல்ல' என்று விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது. எனினும், இதுபோன்ற 'உடல்மொழிகள்' கண்ணியமான அணுகுமுறை இல்லை என்பதையும் மனித மாண்புகளுக்கு எதிரானது என்பதையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டுகிறோம்.</p><p>எந்தவொரு சூழலிலும் ஒருவரின் 'தன்மதிப்பைக்' குறைத்து மதிப்பிடுவதோ, காயப்படுத்துவதோ நாகரிகம் ஆகாது. தனிநபர் ஒருவரின் மீதான அரசியல் விமர்சனங்கள் என்பது வேறு; தனிப்பட்ட முறையில் ஒருவரின் தன்மதிப்பைக் காயப்படுத்தும் விமர்சனங்கள் என்பது வேறு. கல்வி, பொருளாதாரம், அதிகாரம் போன்ற வலிமையில்லாத எளிய மனிதரையும்கூட காயப்படுத்தும் அணுகுமுறை ஒருபோதும் ஏற்புடையதில்லை.</p><p>அகவையில் மூத்தோரை மதிப்பது மனித மாண்புகளில் மிகவும் உயர்ந்ததாகும். எனவே, மாண்பு நிறைந்த ஒரு மகத்தான பொறுப்பிலுள்ள முதல்-அமைச்சர் இனிவரும் காலத்தில் தனது உடல்மொழியில் மிகுந்த கவனமுடன் இருத்தல் நலம் பயப்பதாகும்.</p><h2>வரலாற்றுப் பிழை</h2><p>முதல்-அமைச்சரின் பதிலுரையையொட்டி அடுத்தநாள் திமுக தரப்பில் முதல்-அமைச்சரின் உரையில் சில பகுதிகளை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த விவாதத்தின் போது இடைமறித்து சட்டத்துறை அமைச்சர் கூறிய கருத்து வரலாற்றுப் பிழையாகும்.</p><p>மிசா காலத்து அரசப்பயங்கரவாதம் எத்தகையது என்பது நாடறிந்த ஒன்றாகும். அந்தக் கொடிய ஒடுக்குமுறைக்குள்ளான திமுக தலைவர் குறித்து முற்றிலும் தவறான கருத்தினைப் பதிவு செய்தது கண்டனத்துக்குரியதாகும். அமைச்சர் அதனை திரும்பப் பெறுவதாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&quot;ஆளுங்கட்சிதான் இடைத்தேர்தலில் ஜெயிக்கும் என்பது இலக்கணம் கிடையாது&quot; - துரைமுருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-not-a-rule-that-the-ruling-party-will-win-the-by-election-duraimurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-not-a-rule-that-the-ruling-party-will-win-the-by-election-duraimurugan#comments</comments><guid isPermaLink="false">cc76983f-3c70-47cc-ac11-38cdcb66d8a2</guid><pubDate>Wed, 09 Sep 2026 09:40:13 +0000</pubDate><atom:updated>2026-09-09T09:40:13.978Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,திமுக,DMK,தமிழகம்,இடைத்தேர்தல்,Duraimurugan,துரைமுருகன்,byelection</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/alv8ych5/chu.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/alv8ych5/chu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் விஜய்யின் ஆணவப் பேச்சைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் வரும் 12ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.மு.க. தலைமை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.</p><h2>விஜய் பேச்சுக்கு கண்டனம்</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில், “திராவிட முன்னேற்றக் கழகத்தையும், ஐந்து முறை இந்த நாட்டை ஆண்ட முன்னாள் முதல்-அமைச்சர் தலைவர் கலைஞரையும், இந்தியாவின் புகழை தோகா மாநாட்டில் நிலைநாட்டிய பொருளாதார மேதை முரசொலி மாறனையும், திருமணம் ஆன ஐந்தே மாதத்தில், 23 வயதில் மிசா அவசரநிலைச் சட்டத்தில் கைதாக்கப்பட்டு சிறைச்சாலை சித்திரவதைகளை அனுபவித்து, ஓராண்டு காலம் சிறையில் இருந்த தியாகத்தை செய்த தலைவர் மு.க.ஸ்டாலினின் தியாகத்தை கொச்சைப்படுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> பேசிய பேச்சு கடுமையான கண்டனத்துக்குரியது. </p><h2>மீம்ஸ், ரீல்ஸ்</h2><p>அரசியல் உலகில் இத்தகைய அருவெறுப்பான உரையை சட்டமன்றம் கண்டிருக்காது. அவரது உரை மூலமாக சட்டமன்றத்தின் மாண்பு, மரபு, வரலாறு இவை அனைத்தும் காற்றில் பறக்கிறது. படங்களாக அந்த அவையில் நிற்கிறவர்கள் தலைகவிழ்ந்து கண்ணீர் வடித்திருப்பார்கள். சில அமைச்சர்கள் சட்டமன்றத்தில் தான் பேசுவது தவறு என்று தெரிந்தே பேசி, 'மீம்ஸ்', 'ரீல்ஸ்'-ஐ வெளியிடுகிறார்கள். நேரலை மூலமாக மக்களை சென்றடைந்த பிறகு அதை ஒப்புக்கு அவைக்குறிப்பில் இருந்து நீக்கிக் கொள்கிறார்கள். இப்படியாக தந்திர மேடையாக சட்டசபையை த.வெ.க. அரசு பயன்படுத்துகிறது.</p><p>ஆட்சியின் தோல்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தப்பித்துக் கொள்ள, கொச்சையான பேச்சுகளைப் பேசும் தரமற்ற மனிதராக முதல்-அமைச்சர் விஜய் மாறியிருக்கிறார். இவரது இப்பேச்சைக் கண்டிக்கும் வகையில், தி.முக.. சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் வருகிற 12.09.2026 சனிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்” என்று கூறப்பட்டிருந்தது.</p><h2>திமுக வேட்பாளர்கள்</h2><p>இதனிடையே தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மதுராந்தகம் தொகுதியில் திமுக சட்டத்துறை இணை செயலாளராக உள்ள பரந்தாமன் மற்றும் தாராபுரம் தொகுதியில் வழக்கறிஞர் சுகன்யாவும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>எம்.ஜி.ஆர். இருந்தப்பவே</h2><p>இந்நிலையில் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்குத்தான் கூடுதல் செல்வாக்கு இருக்குமா..? என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். </p><p>அதற்கு பதில் அளித்த அவர், “எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எம்.ஜி.ஆர். இருந்தப்பவே.. எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருக்கும்போதே அண்ணா நகரிலும், மயிலாடுதுறையிலும் ஜெயிச்சிருக்கோம். ஆளுங்கட்சிதான் இடைத்தேர்தலில் ஜெயிக்கும் என்பது இலக்கணம் கிடையாது” என்று துரைமுருகன் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>2026 முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-adhav-arjuna-inaugurated-the-2026-chief-ministers-trophy-sports-competitions</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-adhav-arjuna-inaugurated-the-2026-chief-ministers-trophy-sports-competitions#comments</comments><guid isPermaLink="false">f4b40f3c-6c9e-492d-9893-d14965cec283</guid><pubDate>Wed, 09 Sep 2026 09:39:17 +0000</pubDate><atom:updated>2026-09-09T09:39:17.766Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,ஆதவ் அர்ஜுனா,Sports,முதல்-அமைச்சர் கோப்பை,inaugurated,தொடங்கி வைத்தார்,Minister Adhav Arjuna</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/mesnhmqc/303.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜுனா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/mesnhmqc/303.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>2026 முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை  அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடங்கி வைத்தார்.</p><p>இது தொடர்பாக், தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>முதல்-அமைச்சர் கோப்பை</h2><p>பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று சென்னை-ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. </p><p>2026-2027ஆம் ஆண்டிற்கான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">முதல்-அமைச்சர் கோப்பை </a>விளையாட்டுப் போட்டிகளில் பள்ளி மாணவ-மாணவியர், கல்லூரி மாணவ-மாணவியர், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளில் நடத்தப்படுகிறது. மாவட்ட மற்றும் மண்டல அளவிலான போட்டிகள் செப்டம்பர் 9 முதல் அக்டோபர் 4 வரை தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் நடைபெறுகின்றன.</p><h2>இணையதளம் வாயிலாக பதிவு</h2><p>விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் இந்த ஆண்டு முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் கலந்துக்கொள்ள, இதுவரை இல்லாத அளவிற்கு 26,38,267 வீரர், வீராங்கனைகள் இணையதளம் வாயிலாக பதிவு செய்து புதிய சாதனை படைத்துள்ளனர். கடந்த ஆண்டு 16.28 லட்சம் பேர் பதிவு செய்திருந்த நிலையில் இந்த ஆண்டு 10,09,918 பதிவுகள் அதிகமாக பதிவு செய்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் போட்டிகளில், 14,86,912 பள்ளி மாணவ மாணவியர்கள். 5,35,965 கல்லூரி மாணவ மாணவியர்கள். 38,058 மாற்றுத்திறனாளிகள், 69,890 அரசு ஊழியர்கள். 5,07,741 பொதுமக்கள் என பெருமளவில் பங்கேற்கின்றனர். </p><p>மாவட்ட மண்டல மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் மொத்தம் 1,09,633 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை வெல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். சென்னையில் 99,119 நபர்கள் பதிவு செய்துள்ளனர். நான் பொறுப்பு வகிக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழகத்திலேயே அதிக பதிவாக 1,74,462 நபர்கள் பதிவு செய்துள்ளனர்.</p><h2>நிதி உதவி</h2><p>சட்டப்பேரவையில் புதிய அறிவிப்பான ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்குகொள்ளும் விளையாட்டு வீரர்களுக்கு, விளையாட்டுகளில் பங்கு கொள்வதற்கு சிறப்பு நிதி உதவியாக ரூ.7 லட்சம் வழங்கப்படும் என அறிவித்தோம். அதன்படி இன்று ஜப்பான் நாட்டில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாட்டில் இருந்து கலந்துக்கொள்ளும் 36 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ. 2.52 கோடி வழங்கப்படுகிறது. </p><p>தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டு விடுதிகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவியர்கள் கல்விக்கு அளிக்கும் முக்கியத்துவம் போல விளையாட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நம் மாணவர்கள் கல்வியில் சாதனை படைப்பது போல விளையாட்டிலும் சாதனை படைக்க வேண்டும். ஒரு நாட்டிற்கு பெருமை சேர்ப்பது விளையாட்டுத்துறை. நம் விளையாட்டு வீரர்கள். உலக அரங்கில் விளையாட்டுத்துறையில் சாதனை படைக்க அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும். எனவே, இளைஞர்கள், மாணவ, மாணவியர்கள் விளையாட்டிலும் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.</p><h2>மகளிர் கால்பந்து போட்டி</h2><p>இந்நிகழ்ச்சியில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஸ் விளையாட்டில் பங்குகொள்ளும் தமிழக விளையாட்டு வீரர்கள் ஜோஷ்னா சின்னப்பா, வேலவன் செந்தில்குமார், ஷமினா ரியாஸ் ஆகியோருக்கு தலா ரூ.7 லட்சத்திற்கான காசோலையினை வழங்கிய அமைச்சர் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிக்கான சின்னம் மற்றும் கொடியினையும், விளையாட்டு வீரர்களுக்கான ஜெர்சியையும் அறிமுகப்படுத்தி, மகளிர் கால்பந்து போட்டியினை டாஸ் செய்து தொடங்கி வைத்தார். </p><p>நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு செயலாளர் சந்தீப் நந்தூரி மாவட்ட வருவாய் அலுவலர்/பொது மேலாளர் (நிர்வாகம்) மரு.ரெ.சுமன், பொது மேலாளர் ல.சுஜாதா, அரசு அலுவலர்கள், போட்டியில் பங்குகொள்ளும் விளையாட்டு வீரர்கள் உடனிருந்தனர். </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-today-and-tomorrow-in-western-ghat-districts</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-today-and-tomorrow-in-western-ghat-districts#comments</comments><guid isPermaLink="false">1b48682f-3a09-4fb5-af2e-6f770d9fd2d1</guid><pubDate>Wed, 09 Sep 2026 09:38:32 +0000</pubDate><atom:updated>2026-09-09T09:38:32.522Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு,வானிலை முன்னறிவிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/jjvi0pxb/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/jjvi0pxb/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>சுமார் 1.5 கி.மீ. உயரத்தில் ராயலசீமா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><p><strong>09-09-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>10-09-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><h3>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</h3><p><strong>09-09-2026 முதல் 13-09-2026 வரை:</strong> உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.</p><h3>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</h3><p><strong>09-09-2026 முதல் 13-09-2026 வரை:</strong> உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று</strong> மற்றும் <strong>நாளை</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோவில்களுக்கு யானைகளை வழங்குவது தொடர்பான ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு நயினார் நாகேந்திரன் வரவேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendran-welcomes-the-high-court-verdict-regarding-the-donation-of-elephants-to-temples</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendran-welcomes-the-high-court-verdict-regarding-the-donation-of-elephants-to-temples#comments</comments><guid isPermaLink="false">9df1eaf6-9820-4d7c-a7d1-c8ab946a6321</guid><pubDate>Wed, 09 Sep 2026 09:14:32 +0000</pubDate><atom:updated>2026-09-09T09:14:32.875Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Elephants,யானைகள்,கோவில் யானைகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/82ijkjog/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/82ijkjog/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திருக்கோவில்களுக்கு யானைகளை நன்கொடையாக வழங்குவது தொடர்பான சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை மனதார வரவேற்கிறேன் என தமிழக பாஜக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/nainar-nagendran">நயினார் நாகேந்திரன்</a> தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>கோவில்களுக்கு யானைகள் நன்கொடை</h2><p>பிற மாநிலங்களிலிருந்து தமிழகக் கோவில்களுக்கு யானைகளை நன்கொடையாக வழங்குவதைத் தமிழ்நாடு வனத்துறை தடுக்க முடியாது என்றும், அசாம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து கோவில்களுக்கு யானைகளைக் கொண்டு வர அனுமதிப்பது குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பை மனதார வரவேற்கிறேன். இது ஆன்மிகப் பெருமக்களுக்கும், பக்தர்களுக்கும் கிடைத்துள்ள பெரும் வெற்றியாகும்.</p><p>திருக்கோவில் உற்சவங்கள், பிரம்மோற்சவங்கள் மற்றும் குடமுழுக்கு நன்னாள்களில் யானைகளின் பங்கு என்பது நமது பாரம்பரிய வழிபாட்டு மரபின் பிரிக்க முடியாத அங்கமாகும். எனவே அதன் முக்கியத்துவம் கருதி மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெ. ஜெயலலிதாவால் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் வளர்ப்பு கோவில் யானைகள் மற்றும் மடங்களில் இருக்கும் யானைகளுக்காக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வந்த 48 நாள் நலவாழ்வு முகாமை முந்தைய திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நிறுத்திவிட்டது.</p><h2>யானைகள் சிறப்புப் புத்துணர்ச்சி முகாம்</h2><p>கோவில் யானைகள் என்பவை நமது ஆன்மிக அடையாளத்தின் மங்கலச் சின்னங்களாகும். எனவே, இந்து சமய அறநிலையத்துறையின் (HR&amp;CE) கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் பிரசித்தி பெற்ற திருக்கோவில்களுக்கும் யானைகள் நன்கொடையாக வழங்கப்படுவதற்குத் தேவையான நடைமுறைத் தடைகளை நீக்க வேண்டும். அதற்கான முன்முயற்சிகளை எடுப்பதோடு, நிறுத்தப்பட்ட "கோவில் யானைகள் சிறப்புப் புத்துணர்ச்சி முகாமை" இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உடனடியாக மீண்டும் தொடங்கிட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருப்பூர்: யானை தந்தத்தை பதுக்கிய வனத்துறை அதிகாரி உள்பட 3 பேர்  கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruppur-elephant-tusk-smuggling-forest-officer-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruppur-elephant-tusk-smuggling-forest-officer-arrested#comments</comments><guid isPermaLink="false">36680184-ab77-4fef-80b6-e857b0b278db</guid><pubDate>Wed, 09 Sep 2026 09:12:12 +0000</pubDate><atom:updated>2026-09-09T09:12:12.184Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்,கைது,arrest,Elephant tusks,யானை தந்தம்,வனத்துறை அதிகாரி,Forest Officer</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/aedizfb6/tuskers.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ யானை தந்தம்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருப்பூர்: யானை தந்தத்தை பதுக்கிய வனத்துறை அதிகாரி உள்பட 3 பேர்  கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/aedizfb6/tuskers.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>உடுமலைப்பேட்டை,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">திருப்பூர்</a> மாவட்டம் உடுமலைப்பேட்டை வனப்பகுதியில் பலத்த பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், யானை தந்தத்தை பதுக்கி வைத்திருந்த வனத்துறை அதிகாரி மாரிமுத்து உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>ரகசிய தகவல் </h2><p>உடுமலைப்பேட்டை வனப்பகுதியில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">யானை தந்தம்</a> பதுக்கப்பட்டு இருப்பதாக வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, ரகசிய இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த யானை தந்தத்தை பறிமுதல் செய்தனர். </p><p>இந்த கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பவத்தில் தொடர்புடைய வனத்துறை அதிகாரி மாரிமுத்து மற்றும் அவருடன் இருந்த இருவரை வனத்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.</p><h2>மர்ம மரணமா?</h2><p>வனப்பகுதியில் இயற்கையான முறையிலோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களாலோ இறந்த யானையிடம் இருந்து இந்த தந்தம் திருடி வரப்பட்டு பதுக்கப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. </p><p>கைது செய்யப்பட்டுள்ள வன அதிகாரி மாரிமுத்து மற்றும் இதர 2 கூட்டாளிகளிடமும் வனத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் பின்னணியில் பெரிய கடத்தல் கும்பல் ஏதேனும் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கூண்டு வெச்சது புலிக்கு ஆனால் சிக்கியது சிறுத்தை..! வனத்துறையினர் விடுத்த எச்சரிக்கை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-cage-was-set-for-a-tiger-but-a-leopard-got-caught-instead-forest-department-issues-a-warning</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-cage-was-set-for-a-tiger-but-a-leopard-got-caught-instead-forest-department-issues-a-warning#comments</comments><guid isPermaLink="false">af714356-5faf-499d-9659-c73a9df8e318</guid><pubDate>Wed, 09 Sep 2026 09:07:49 +0000</pubDate><atom:updated>2026-09-09T09:07:49.643Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Forest Department,வனத்துறை,நீலகிரி,leopard,சிறுத்தை,Tiger,புலி,Nilagiris,Gudalur,கூடலூர்,கூண்டு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/j45k6emh/sirutha.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/j45k6emh/sirutha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/nilgiris">நீலகிரி</a> மாவட்டம் கூடலூர் அடுத்த லாரஸ்டன் பகுதியில் தொழிலாளி, விவசாயி ஆகிய 2 பேரை அடுத்தடுத்து புலி கடித்து கொன்றது. இதனால் லாரஸ்டன் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் பீதியிலும், அச்சத்துடனும் வாழ்ந்து வருகின்றனர். </p><h2>போக்கு காட்டும் புலி</h2><p>மனிதர்களை வேட்டையாடும் அந்த புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து வன ஊழியர்கள், கால்நடை மருத்துவர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் களமிறக்கப்பட்டு புலியை தேடும் பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது. நேற்று 19-வது நாளாக புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க காடுகளுக்குள் பொருத்தப்பட்டு இருந்த தானியங்கி கேமராக்களில் வனத்துறையினர் ஆய்வு செய்தனர். </p><p>அதில் புலியின் உருவம் பதிவாகவில்லை. மேலும் நவீன டிரோன் மூலம் வான்வழியாக புலி பதுங்கியிருக்கும் இடத்தை கண்டறியும் முயற்சி முடுக்கி விடப்பட்டுள்ளது. அடர்ந்த புதர்கள் நிறைந்த பகுதிகளில் கூண்டுகள் வைக்கப்பட்டும், புலி சிக்காமல் போக்கு காட்டி வருகிறது.</p><h2>குடியிருப்புகளில் ரோந்து</h2><p>இதைத்தொடர்ந்து லாரஸ்டன் அரசு பள்ளிக்கூடம், பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். மேலும் குடியிருப்பு பகுதிக்குள் புலி நுழையலாம் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக லாரஸ்டன் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடம், குடியிருப்பு பகுதிகளில் வனத்துறையினர் ஆயுதங்களுடன் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தனியாக செல்ல வேண்டாம் என்றும், மாலை நேரங்களில் தேவை இன்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் வனத்துறையினர் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே புலியை விரைந்து பிடிக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது. </p><h2>சிக்கிய சிறுத்தை</h2><p>இந்நிலையில் கூடலூர் ஓவேலி பகுதியில் 2 பேரை கொன்ற புலியை பிடிக்க வனத்துறை வைத்த கூண்டில் சிறுத்தை ஒன்று சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. 13 இடங்களில் கூண்டு வைத்து 20-வது நாளாக புலியை தேடி வரும் வனத்துறையினர் கூண்டில் சிக்கிய சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர். புலியை பிடிக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>மதுரையில் 11-ம் வகுப்பு மாணவர் சடலமாக மீட்பு: காவல்துறை பாரபட்சமின்றி விசாரிக்க வேண்டும் - செல்வப்பெருந்தகை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/body-of-class-11-student-recovered-in-madurai-police-must-conduct-an-impartial-investigation-selvaperunthagai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/body-of-class-11-student-recovered-in-madurai-police-must-conduct-an-impartial-investigation-selvaperunthagai#comments</comments><guid isPermaLink="false">d1991dd3-30c3-4967-9f07-b2184c8c3216</guid><pubDate>Wed, 09 Sep 2026 09:05:51 +0000</pubDate><atom:updated>2026-09-09T09:05:51.875Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,செல்வப்பெருந்தகை,மதுரை,மீட்பு,Selvaperunthagai,மாணவர்student,In Madurai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/y1vyr70u/selvaperuthakai.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ செல்வப்பெருந்தகை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/y1vyr70u/selvaperuthakai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மதுரையில் 11-ம் வகுப்பு மாணவர் சடலமாக மீட்பு: காவல்துறை பாரபட்சமின்றி விசாரிக்க வேண்டும் என்று முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%88">செல்வபெருந்தகை</a> தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>11-ம் வகுப்பு மாணவர்</h2><p>மதுரை ஆனையூர் அருகே காணாமல் போன 11-ம் வகுப்பு மாணவர் கழிவுநீர் குட்டையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இக்கொடிய செயலில் ஈடுபட்டவர்களை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.</p><p>பெற்றோரும் குடும்பத்தினரும் தங்களது பிள்ளையைத் தேடி தவித்த நிலையில், மாணவர் சடலமாக மீட்கப்பட்டிருப்பது நெஞ்சை உலுக்கும் துயரமாகும். அதைவிட, உடற்கூறு ஆய்வில் மாணவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதற்கான தடயங்கள் கிடைத்துள்ளதாக வெளியாகும் தகவல்கள் மிகுந்த கவலையை ஏற்படுத்துகின்றன.</p><h2>விசாரணை</h2><p>ஒரு இளம் மாணவனின் உயிரை பறித்த இந்த கொடூர சம்பவத்தின் பின்னணி என்ன? மாணவர் எவ்வாறு உயிரிழந்தார்? அவரைத் தாக்கியது யார்? இந்த சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பன உள்ளிட்ட அனைத்து கேள்விகளுக்கும் காவல்துறை விரைந்து, பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தி உண்மையை முழுமையாக வெளிக்கொண்டு வர வேண்டும்.</p><p>மாணவரின் மரணம் தொடர்பாக எந்தவிதமான அரசியல் தலையீட்டுக்கும், செல்வாக்குக்கும் இடமளிக்காமல், அறிவியல் பூர்வமான விசாரணை மேற்கொள்ள வேண்டும். குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து, அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர வேண்டும்.</p><p>இளம் மாணவர்களின் உயிருக்கும் பாதுகாப்புக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கும், காவல்துறைக்கும் உள்ளது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நடைபெறாத வகையில், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.</p><h2>வலியுறுத்தல்</h2><p>மாணவனின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், இந்த கொடூர மரணத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தி.மு.க. வேட்பாளர்கள் பரந்தாமன், சுகன்யாவின் பின்னணி என்ன?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurantagam-dharapuram-byelection-dmk-candidates-paranthaman-suganya-background</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurantagam-dharapuram-byelection-dmk-candidates-paranthaman-suganya-background#comments</comments><guid isPermaLink="false">35a11c51-8b01-4d61-9c72-75ca0e64797a</guid><pubDate>Wed, 09 Sep 2026 08:57:34 +0000</pubDate><atom:updated>2026-09-09T08:57:34.776Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>இடைத்தேர்தல்,By election,மதுராந்தகம்,தாராபுரம்,Madhurandakam,tharapuram,பரந்தாமன்,சுகன்யா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/csaqh7c2/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/csaqh7c2/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பரந்தாமன், சுகன்யாவின் பின்னணி குறித்த தகவல்களை பார்ப்போம்.</p><h2>2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்</h2><p>தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. வேட்புமனு தாக்கல் இன்று (புதன்கிழமை) தொடங்கியுள்ள நிலையில், தி.மு.க. சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்களை அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.</p><p>மதுராந்தகம் தொகுதியில் வக்கீல் ஐ.பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் எஸ்.சுகன்யாவும் போட்டியிடுகின்றனர். இவர்கள் பின்னணி குறித்து தொடர்ந்து பார்ப்போம்.</p><h2>மதுராந்தகம் வேட்பாளர் பரந்தாமன்</h2><p>மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் ஐ.பரந்தாமன், பி.ஏ. பி.எல். படித்தவர். கட்சியின் சட்டத்துறை மாநில இணைச் செயலாளராக இருந்து வருகிறார். தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளிலும் தி.மு.க. சார்பில் பங்கேற்று கருத்துகளை முன்வைத்து வருகிறார். இவர் ஏற்கனவே, கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் எழும்பூர் (தனி) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதற்கு முந்தைய தேர்தலில் (2016) பூந்தமல்லி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தாலும், சுமார் 92 ஆயிரம் வாக்குகள் பெற்றார்.</p><h2>மீண்டும் வாய்ப்பு</h2><p>இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலின்போது, எழும்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட அவர் வாய்ப்பு கேட்டும் முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலையீட்டின் காரணமாக இவருக்கு  கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதற்கு பதிலாக தமிழன் பிரசன்னா களம் இறக்கப்பட்டு, அவர் த.வெ.க. வேட்பாளரும், தற்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான ராஜ்மோகனிடம் தோல்வி அடைந்தார். இந்த நிலையில்தான், மதுராந்தகம் இடைத்தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. </p><h2>தாராபுரம் வேட்பாளர் சுகன்யா</h2><p>தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் எஸ்.சுகன்யா, வக்கீலாக பணியாற்றி வருகிறார். கட்சியில் ஒன்றிய அணி செயலாளராக உள்ள இவர், தொகுதியை சேர்ந்தவர். உள்ளூர் அமைப்புகளிலும் தீவிரமாக செயல்பட்டு வருபவர். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலின்போதும், தாராபுரம் தொகுதியில் போட்டியிட இவர் விருப்பம் தெரிவித்து இருந்தபோதும் அப்போது அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இப்போது இடைத்தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தல் எதிரொலி.. மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும்படை தீவிர கண்காணிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/by-election-fallout-intensive-surveillance-in-maduranthakam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/by-election-fallout-intensive-surveillance-in-maduranthakam#comments</comments><guid isPermaLink="false">c7e76a34-28a9-4682-b383-c17c8d527bde</guid><pubDate>Wed, 09 Sep 2026 08:49:02 +0000</pubDate><atom:updated>2026-09-09T08:49:02.674Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,இடைத்தேர்தல்,மதுராந்தகம்,தாராபுரம்,Madurantakam,tharapuram,பறக்கும்படை,byelection,தேர்தல் பறக்கும்படை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/vlrtfa7j/pp.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/vlrtfa7j/pp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திருச்சி கிழக்கு, புதுக்கோட்டை, கரூர், பெருந்துறை, விராலிமலை ஆகிய 5 தொகுதிகளின் தேர்தல் முடிவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இந்த 5 தொகுதிகளுக்கு <a href="https://www.dailythanthi.com/topic/இடைத்தேர்தல்">இடைத்தேர்தல்</a> நடத்த தடை உத்தரவு பிறப்பித்தது.</p><h2>வேட்புமனுத்தாக்கல்</h2><p>ஒரு சட்டமன்ற தொகுதி காலியானால் 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறை ஆகும். தற்போது ஐகோர்ட்டு உத்தரவைத் தொடர்ந்து 5 தொகுதிகளைத் தவிர்த்து, மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.</p><p>இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத்தாக்கல்  இன்று (9-ந்தேதி) தொடங்கியது. வாக்குப்பதிவு அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 9-ந்தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.</p><h2>திமுக வேட்பாளர்கள்</h2><p>இந்நிலையில் தாராபுரம், மதுரந்தகம் தொகுதி <a href="https://www.dailythanthi.com/topic/இடைத்தேர்தல்">இடைத்தேர்தலில்</a> போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மதுராந்தகம் தொகுதியில் திமுக சட்டத்துறை இணை செயலாளராக உள்ள பரந்தாமன் மற்றும் தாராபுரம் தொகுதியில் வழக்கறிஞர் சுகன்யாவும் போட்டியிட்டுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>மதுராந்தகம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பரந்தாமன், கடந்த தேர்தலில் சென்னை எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ஆளும் தவெக இன்னும் வேட்பாளர் அறிவிக்கவில்லை. அதேபோல, அதிமுகவும் வேட்பாளர் அறிவிக்காத நிலையில், முதல் கட்சியாக திமுக வேட்பாளரை அறிவித்துள்ளது. இடைத்தேர்தலில் தமிழகத்தில் பிரதானமாக உள்ள மூன்று கட்சிகளும் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளதால், தேர்தல் களம் அனல் பறக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><h2>மதுராந்தகம் தொகுதி</h2><p>கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் மதுராந்தம் (தனி) தொகுதியில் தி.மு.க. சார்பில் அமுலு பொன்மலர் போட்டியிட்டார். அ.தி.மு.க. சார்பில் மரகதம் குமரவேல், த.வெ.க. சார்பில் எழில் கேத்தரின், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் ஆகியோர் போட்டியிட்டனர்.</p><p>மொத்தம் பதிவான 1 லட்சத்து 96 ஆயிரத்து 268 வாக்குகளில், அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் 69,284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்டவர்களில், த.வெ.க. வேட்பாளர் எழில் கேத்தரின் 62,090 வாக்குகள் பெற்று 2-வது இடம்பிடித்தார். இருவருக்குமான வித்தியாசம் 7,194 வாக்குகள் ஆகும். தி.மு.க. வேட்பாளர் அமுலு பொன்மலர் 59,838 வாக்குகள் பெற்று 3-வது இடம் பிடித்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகி ராமன் 4,950 வாக்குகள் பெற்றார்.</p><h2>பறக்கும் படையினர்</h2><p>மதுராந்தகம் தொகுதியில் <a href="https://www.dailythanthi.com/topic/இடைத்தேர்தல்">இடைத்தேர்தல்</a> நடைபெற உள்ளதையொட்டி, தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்கும் வகையில் 9 பறக்கும் படையினர் மற்றும் 9 நிலையான கண்காணிப்பு குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர். </p><p>வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்கும் வகையில் கண்காணிப்பு மற்றும் வாகனச் சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தகவல்  தெரிவித்துள்ளனர். </p><p>பொதுவாக தேர்தல் காலத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் சென்றால், அதற்குரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். அந்த நடைமுறை இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது.  </p>]]></content:encoded></item><item><title>ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளை: அரசுக்கும், அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா? - வேல்முருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/exorbitant-fares-charged-by-private-buses-are-the-government-and-officials-involved-velmurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/exorbitant-fares-charged-by-private-buses-are-the-government-and-officials-involved-velmurugan#comments</comments><guid isPermaLink="false">d53ca8e5-8591-44ce-8c83-a2eac59e9758</guid><pubDate>Wed, 09 Sep 2026 08:48:12 +0000</pubDate><atom:updated>2026-09-09T08:48:12.379Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Velmurugan,வேல்முருகன்,தமிழக வாழ்வுரிமைக் கட்சி,தி.வேல்முருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/7bzgl0b9/velmurugan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/7bzgl0b9/velmurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையில் அரசுக்கும், அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா? என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>தொடர் விடுமுறை</h2><p>தொடர் விடுமுறை மற்றும் பண்டிகைக் காலங்களில் வெளியூர்களுக்குப் பயணிக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை இயல்பாகவே பன்மடங்கு அதிகரிக்கிறது. இத்தகைய சூழலில், அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் முன்பதிவு விரைவாக முடிந்துவிடுவதால், கணிசமான பயணிகள் தனியார் ஆம்னி பேருந்துகளையே சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.</p><p>இக்காலகட்டங்களில் இணையவழி முன்பதிவுத் தளங்களில் பேருந்துக் கட்டணங்கள் வழக்கத்தை விடப் பெருமளவில் உயர்த்தப்படுவதாகப் பயணிகள் முன்வைக்கும் தொடர் புகார்கள் கவலைகளை ஏற்படுத்துகின்றன. தேவை அதிகரிக்கும் போது கட்டணம் உயர்த்தப்படுவது இயல்பு எனக் கூறப்பட்டாலும், இது சாமானிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் பயணச் செலவைக் கடுமையாகப் பாதிக்கிறது.</p><p>பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசும் போக்குவரத்துத் துறையும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை அமல்படுத்த வேண்டும்.</p><h2>கூடுதல் கட்டணம்</h2><p>வழித்தடங்களின் தூரம் மற்றும் பேருந்து வசதிகளுக்கு ஏற்ப (Seater, Sleeper, AC) அரசு நிர்ணயித்த அதிகாரப்பூர்வ அதிகபட்சக் கட்டணப் பட்டியலை இணையதளம் மற்றும் பேருந்து நிலையங்களில் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். தனியார் பயண முன்பதிவு செயலிகள் மற்றும் இணையதளங்களில் நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பை விடக் கூடுதல் கட்டணம் பட்டியலிடப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய டிஜிட்டல் கண்காணிப்பு முறையை உருவாக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் பயணிகள் பயணச்சீட்டு ஆதாரத்துடன் உடனடியாகத் தெரிவிக்க எளிமையான வாட்ஸ்அப் எண், தனிச் செயலி அல்லது 24 மணி நேரக் கட்டணமில்லா உதவி மையத்தை வலுப்படுத்த வேண்டும். விடுமுறை தினங்களில் முக்கிய சுங்கச்சாவடிகள் மற்றும் புறப்படும் இடங்களில் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு, விதிமீறல் நிரூபிக்கப்படும் பட்சத்தில் உரிய சட்டரீதியான அபராதங்கள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளைத் தாமதமின்றி எடுக்க வேண்டும்.</p><p>தனியார் பேருந்துகளின் மீதான அதீதச் சார்பைக் குறைக்க, அதிகத் தேவையுள்ள வழித்தடங்களில் தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதல் சிறப்புப் பேருந்துகளை முன்கூட்டியே திட்டமிட்டு இயக்குகிறது என்றாலும், அந்த வகையான பேருந்துகளில் உள்ள வசதி குறைபாடுகள் முற்றிலும் சரி செய்யப்பட வேண்டும்.</p><p>பயணிகளின் நியாயமான பயண உரிமையையும், தனியார் பேருந்து உரிமையாளர்களின் தொழில் நடைமுறைகளையும் சமநிலையில் பேணும் வகையில் அரசு ஒரு நிரந்தர ஒழுங்குமுறை கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழக </a>வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/karnataka-must-implement-cauvery-water-management-authority-order-immediately-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/karnataka-must-implement-cauvery-water-management-authority-order-immediately-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">e245426d-0315-4284-8a15-a3f28c737fb2</guid><pubDate>Wed, 09 Sep 2026 08:39:50 +0000</pubDate><atom:updated>2026-09-09T08:39:50.643Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடக அரசு,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,order,உத்தரவு,Cauvery Water Management Authority,Karnataka government,காவிரி நீர் மேலாண்மை ஆணையம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/gov70w34/nainar-nagendran.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/gov70w34/nainar-nagendran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன்</a> தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p> <h2>காவிரி நீர் மேலாண்மை ஆணையம்</h2><p>ஒரே நாளில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழுவின் 142-வது கூட்டம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 57-வது கூட்டம் ஆகியவற்றில், இன்று காலை 8 மணி முதல் அடுத்த 15 நாட்களுக்கு, வினாடிக்கு 6000 கன அடி வீதம் 7.776 டிஎம்சி தண்ணீரை கர்நாடக காங்கிரஸ் அரசு தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டுமென பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை வரவேற்று மகிழ்கிறேன். </p><h2>குறுவை சாகுபடி</h2><p>கடந்த ஜூலை மாதம் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை கர்நாடக காங்கிரஸ் அரசு குறித்த நேரத்திற்கு முறையாக அமல்படுத்தாததால், தமிழகத்தின் குறுவை சாகுபடி பெருமளவில் பாதிக்கப்பட்டதோடு, விவசாயிகளின் வாழ்வாதாரமும் நலிவடைந்தது. </p><h2>மேட்டூர் அணை நீர்</h2><p>கர்நாடக காங்கிரஸ் அரசின் இந்த அலட்சிய போக்கால், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">டெல்டா பாசனத்திற்காக</a> ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதமே திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை நீர், இந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் தான் திறக்கப்பட்டது. இதனால் குறுவை மற்றும் இதர சாகுபடி பயிர்கள் காய்ந்து போகும் தருவாயில் உள்ளன.</p><h2>வாழ்வாதாரமே முக்கியம்</h2><p>எனவே, தமிழக விவசாயிகளுக்கும், விளைப் பயிர்களுக்கும் புத்துணர்வு அளிக்கும் வகையிலான காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின்தற்போதைய உத்தரவையாவது கர்நாடக காங்கிரஸ் அரசு காலம் தாழ்த்தாமல் அமல்படுத்துவதை, முதல்-அமைச்சர் விஜய் உறுதி செய்ய வேண்டும்! கர்நாடக காங்கிரஸ் அரசால் தமிழக விவசாயிகள் மீண்டுமொரு முறை வஞ்சிக்கப்படுவதை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் வேடிக்கை பார்க்க கூடாது! கூட்டணி பாசத்தை விட, விவசாயிகளின் வாழ்வாதாரமே முக்கியம்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்று தருவதாக ரூ.100 கோடி மோசடி; இதுவரை 177 புகார்கள் - ஐகோர்ட்டில் அதிர்ச்சி தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-100-crore-fraud-involving-promises-to-secure-permanent-recognition-for-private-schools-177-complaints-received-so-far-shocking-details-revealed-in-high-court</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-100-crore-fraud-involving-promises-to-secure-permanent-recognition-for-private-schools-177-complaints-received-so-far-shocking-details-revealed-in-high-court#comments</comments><guid isPermaLink="false">9a313003-6b36-4028-bf53-6e8cc0334dc4</guid><pubDate>Wed, 09 Sep 2026 08:32:02 +0000</pubDate><atom:updated>2026-09-09T08:32:02.906Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,ஐகோர்ட்டு,தனியார் பள்ளி,Chennai High Court</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/c92144xl/State-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/c92144xl/State-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், சி.எம்.டி. அனுமதி உள்ளிட்ட சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்று தருவதாக கூறி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தனியார் பள்ளிகளின் நிர்வாகிகளிடம் 100 கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்ததாக எழுந்த புகாரில், தனியார் பள்ளிகள் சங்க தலைவர் அரசகுமார் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.</p><p>இந்த வழக்கில் அரசகுமார் கைது செய்யப்பட்டு, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், தனியார் பள்ளிகள் சங்க பொருளாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முத்துக்குமார் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி லட்சுமி நாராயணன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. </p><p>அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக இதுவரை 117 புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்கள் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. எனவே மனுதாரரின் முன்ஜாமின் மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தார். </p>]]></content:encoded></item><item><title>தென்காசி: சுடுகாட்டில் தொழிலாளி அடித்துக்கொலை- மதுபோதையில் 2 நண்பர்கள் வெறிச்செயல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tenkasi-worker-beaten-to-death-in-crematorium-2-friends-commit-a-violent-act-while-intoxicated</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tenkasi-worker-beaten-to-death-in-crematorium-2-friends-commit-a-violent-act-while-intoxicated#comments</comments><guid isPermaLink="false">1b71df56-3dbe-442d-b0f2-32271fc2797b</guid><pubDate>Wed, 09 Sep 2026 08:25:47 +0000</pubDate><atom:updated>2026-09-09T08:25:47.216Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,தென்காசி,Worker,friends,மதுபோதை,alcoholism,நண்பர்கள்,beating,சுடுகாடு,வெறிச்செயல்,Crematorium,தொழிலாளி அடித்து கொலை,madness</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/idqk79jj/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தொழிலாளி கொலை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/idqk79jj/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF">தென்காசி</a> மாவட்டம், சுரண்டை அருகே <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">மதுபோதையில்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">சுடுகாட்டில்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">தொழிலாளியை அடித்துக்கொலை</a> செய்த, அவரது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">நண்பர்கள்</a> 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். </p><h2>நண்பர்கள்</h2><p>தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே உள்ள சாம்பவர்வடகரை இல்லத்தார் தெருவைச் சேர்ந்தவர் சத்தியன் (வயது 35). இவரது நண்பர்கள் அதே பகுதி மாதாகோவில் தெருவை சேர்ந்த கருப்பசாமி(35), உலைக்கூட தெருவை சேர்ந்த சுப்பிரமணியன்(35). இதில் சத்தியன், சுப்பிரமணியன் ஆகியோர் கேரளத்தில் கூலித்தொழிலாளர்களாகவும், கருப்பசாமி உள்ளூரில் சமையல் மாஸ்டராகவும் வேலை பார்த்தனர். </p><h2>மதுகுடித்தனர்</h2><p>கடந்த 2 நாட்களுக்கு முன் சத்தியன், சுப்பிரமணியன் ஆகியோர் ஒருவரின் திருமணத்திற்காக சொந்த ஊருக்கு வந்தனர். நேற்று மாலையில் சத்தியன், சுப்பிரமணியன், கருப்பசாமி ஆகியோர் ஒரே மோட்டார் சைக்கிளில் சாம்பவர்வடகரை மெயின் ரோட்டில் உள்ள சுடுகாட்டு நிழல்தாங்கலில் அமர்ந்து மதுக்குடித்தனர். </p><h2>அடித்துக்கொலை</h2><p>அப்போது, மதுபோதையில் அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றியதில் சுப்பிரமணியன், கருப்பசாமி ஆகியோர் சேர்ந்து சத்தியனை கைகளால் சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட சுப்பிரமணியன், கருப்பசாமி ஆகியோர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். </p><h2>போலீசார் விசாரணை</h2><p>இதுகுறித்து உடனடியாக சாம்பவர்வடகரை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சத்தியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சுப்பிரமணியன், கருப்பசாமி ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். சுரண்டை அருகே சுடுகாட்டில் தொழிலாளியை அவரது நண்பர்களே அடித்துக்கொலை செய்த பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய் பேச்சை கண்டித்து 12-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-to-hold-protest-on-the-12th-condemning-vijays-remarks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-to-hold-protest-on-the-12th-condemning-vijays-remarks#comments</comments><guid isPermaLink="false">c76aba54-7aed-4849-8479-b122abc09087</guid><pubDate>Wed, 09 Sep 2026 08:23:09 +0000</pubDate><atom:updated>2026-09-09T08:23:09.775Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,திமுக,DMK,சட்டசபை,TN Assembly,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/tp51dgkt/CHENNAI-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/tp51dgkt/CHENNAI-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><p>திராவிட முன்னேற்றக் கழகத்தையும், ஐந்து முறை இந்த நாட்டை ஆண்ட முன்னாள் முதல்-அமைச்சர் தலைவர் கலைஞரையும், இந்தியாவின் புகழை தோகா மாநாட்டில் நிலைநாட்டிய பொருளாதார மேதை முரசொலி மாறனையும், திருமணம் ஆன ஐந்தே மாதத்தில், 23 வயதில் மிசா அவசரநிலைச் சட்டத்தில் கைதாக்கப்பட்டு சிறைச்சாலை சித்திரவதைகளை அனுபவித்து, ஓராண்டு காலம் சிறையில் இருந்த தியாகத்தைச் செய்த தலைவர் மு.க.ஸ்டாலினின் தியாகத்தை  கொச்சைப்படுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் விஜய் பேசிய பேச்சு கடுமையான கண்டனத்துக்குரியது. அரசியல் உலகில் இத்தகைய அருவெறுப்பான உரையை சட்டமன்றம் கண்டிருக்காது.</p><p>அவரது உரை மூலமாக சட்டமன்றத்தின் மாண்பு, மரபு, வரலாறு இவை அனைத்தும் காற்றில் பறக்கிறது. படங்களாக அந்த அவையில் நிற்கிறவர்கள் தலைகவிழ்ந்து கண்ணீர் வடித்திருப்பார்கள். சில அமைச்சர்கள் சட்டமன்றத்தில் தான் பேசுவது தவறு என்று தெரிந்தே பேசி, 'மீம்ஸ்', 'ரீல்ஸ்'-ஐ வெளியிடுகிறார்கள். நேரலை மூலமாக மக்களை சென்றடைந்த பிறகு அதை ஒப்புக்கு அவைக்குறிப்பில் இருந்து நீக்கிக் கொள்கிறார்கள். இப்படியாக தந்திர மேடையாக சட்டசபையை த.வெ.க. அரசு பயன்படுத்துகிறது.</p><p>ஆட்சியின் தோல்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தப்பித்துக் கொள்ள, கொச்சையான பேச்சுகளைப் பேசும் தரமற்ற மனிதராக முதலமைச்சர் விஜய் மாறியிருக்கிறார். இவரது இப்பேச்சைக் கண்டிக்கும் வகையில், தி.முக.. சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் வருகிற 12.09.2026 சனிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்.</p><p>இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் - நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் - மாநில - மாவட்ட நிர்வாகிகள் - ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழகச் செயலாளர்கள் - நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளில் உள்ள நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொண்டு முதலமைச்சரின் ஆணவப் பேச்சைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&quot;த.வெ.க. அரசின் அலட்சியப் போக்கால் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகப் போகின்றன?&quot; - தி.மு.க. எம்.பி. கனிமொழி கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-many-more-lives-will-be-lost-due-to-the-tvk-governments-negligent-attitude-dmk-mp-kanimozhi-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-many-more-lives-will-be-lost-due-to-the-tvk-governments-negligent-attitude-dmk-mp-kanimozhi-asks#comments</comments><guid isPermaLink="false">f4cc99b7-a448-479f-abd2-f6232cc6d19a</guid><pubDate>Wed, 09 Sep 2026 08:22:17 +0000</pubDate><atom:updated>2026-09-09T08:22:17.420Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,திமுக,DMK,Kanimozhi M.P.,கனிமொழி எம்.பி.,Kanimozhi,தவெக அரசு,TVK Government,tvk govt</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/d6ug69ti/jai.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/d6ug69ti/jai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மதுரை மாணவனின் மரணம் தொடர்பாக சமரசமற்ற விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று <a href="https://www.dailythanthi.com/topic/kanimozhi">தி.மு.க. எம்.பி. கனிமொழி</a> தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>மதுரை ஆனையூர் அருகே காணாமல் போன 11ஆம் வகுப்பு மாணவன் கழிவுநீர் குட்டையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், உடற்கூறு ஆய்வில் அவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது.</p><p>சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் தவெக அரசின் அலட்சியப் போக்கால் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகப் போகின்றன என்ற கேள்வி எழுகிறது.</p><p>மாணவனின் மரணம் தொடர்பாக சமரசமற்ற விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: மாமனாரை வெட்டிக்கொன்ற டிரைவர் உள்பட 6 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-6-people-including-driver-arrested-for-stabbing-father-in-law-to-death</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-6-people-including-driver-arrested-for-stabbing-father-in-law-to-death#comments</comments><guid isPermaLink="false">1cb852be-9c31-42bc-9478-1f668e1defae</guid><pubDate>Wed, 09 Sep 2026 07:47:43 +0000</pubDate><atom:updated>2026-09-09T07:47:43.732Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,வெட்டிக்கொலை,ஆட்டோ டிரைவர்,Auto driver,father-in-law,மாமனார்,6 பேர் கைது,hacked to death,6 arrested</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/b5casy8w/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கொலையுண்ட முனியசாமி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/b5casy8w/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> அருகே <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">மாமனாரை</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">வெட்டிக் கொன்ற</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D">ஆட்டோ டிரைவர்</a> உள்பட <a href="https://www.dailythanthi.com/topic/6-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">6 பேர் கைது</a> செய்யப்பட்டனர்.</p><h2>குடும்பத் தகராறு</h2><p>தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் வேலாயுதநகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் முனியசாமி (வயது 45). இவரது மகள் வைஷ்ணவிக்கும், மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரான முருகன்(27) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 1 மாதத்திற்கு முன் முனியசாமி தனது மகளை பார்க்க மதுரைக்கு சென்றார். அப்போது, முருகன் தனது மாமனாரான முனியசாமியை தாக்கியதாக கூறப்படுகிறது. </p><h2>மாமனார் வெட்டிக்கொலை</h2><p>அதைத் தொடர்ந்து முனியசாமி தனது மகள் வைஷ்ணவியை தூத்துக்குடிக்கு அழைத்து வந்து விட்டார். இந்த சம்பவங்களை தொடர்ந்து முருகன் மதுரையில் இருந்து தனது நண்பர்கள் 5 பேருடன் முனியசாமியின் வீட்டிற்கு வந்தார். அங்கு தனது மனைவியை குடும்பம் நடத்த மதுரைக்கு அனுப்புமாறு மாமனாரிடம் கூறினார். ஆனால் முனியசாமி மறுக்கவே ஆத்திரம் அடைந்த முருகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து அரிவாளால் அவரை வெட்டிக்கொலை செய்ததாக கூறப்படுகிறது. </p><h2>6 பேர் கைது</h2><p>இந்த கொலை குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 6 பேரையும் தேடி வந்தனர். போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் முருகன், அவரது நண்பர்களான சாயல்குடியை சேர்ந்த திருமுருகன்(23), மதுரை நல்லமன்னன்(24), அரவிந்த்(25), தீனதயாளன்(22), பெருமாள்(26) ஆகிய 6 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>அரசு மருத்துவமனைகளில் பார்வையாளர்களுக்கு நேரக் கட்டுப்பாடு கட்டாயம்: அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/time-restrictions-for-visitors-mandatory-in-government-hospitals-minister-arunraj</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/time-restrictions-for-visitors-mandatory-in-government-hospitals-minister-arunraj#comments</comments><guid isPermaLink="false">ba0fa3f4-0b85-4cb6-ab1d-b776812d04f0</guid><pubDate>Wed, 09 Sep 2026 07:47:42 +0000</pubDate><atom:updated>2026-09-09T07:47:42.107Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசு மருத்துவமனை,Government Hospitals,Minister Arunraj,அமைச்சர் அருண்ராஜ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/xa57886i/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/xa57886i/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் பார்வையாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நேரக் கட்டுப்பாடு கட்டாயமாக பின்பற்றப்படும். மதியம் 1-2 மணி, மாலை 4-6 மணி வரை மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும். நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்கப்படும். கடைகளில் இருந்து உணவு வாங்கி வரும்போது பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்படும்.</p><p>வீட்டில் இருந்து உணவு கொண்டு வந்தால் பாத்திரத்தில் எடுத்து வாருங்கள், பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம். மருத்துவமனையில் அதிக கூட்டம் இருப்பதால், அதை கட்டுபடுத்த நடவடிக்கை எடுத்தால் மக்களிடம் இருந்து எதிர்ப்புகள் வருகிறது. அரசு மருத்துவமனை எல்லாம் தனியார் மருத்துவமனையின் தரத்திற்கு மேல் இருக்க வேண்டும் என்பது தான் முதல்-அமைச்சரின் எதிர்பார்ப்பு. அனைவரின் ஒத்துழைப்புடன் முதல்-அமைச்சரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவோம்.</p><p>சுகாதாரத் துறையின் முதல் நோக்கம், மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும். இரண்டாவது தான் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது; ஆரோக்கியம் சார்ந்த அனைத்து செய்திகளும் ஏழை, பணக்காரர் பாகுபாடு இல்லாம் அனைவருக்கும் சென்று சேர வேண்டும்; மக்கள் எடுத்துக்கொள்ளும் உப்பின் அளவை குறைக்க வேண்டும்.</p><p>முதல்-அமைச்சர் விஜய்யின் வெளிநாடு பயணம் காரணமாக மதுரை உசிலம்பட்டியில் நடைபெறவிருந்த தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட துவக்கம் தள்ளிப்போகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். இந்த திட்டத்தில் வழங்கப்படும் மோதிரங்கள் 100 சதவீதம் தரமானவை. அனைத்து மோதிரங்களிலும் 916 ஹால்மார்க் முத்திரை இடம்பெறும். தங்கத்தின் தரத்தில் எந்தவித சமரசமும் இருக்காது.</p><p>பருவமழை துவங்க உள்ள நிலையில் டெங்கு சீசன் ஆரம்பிக்க போகிறது. படிப்படியாக ஒவ்வொரு நாட்களும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டு தான் இருக்கிறது. டெங்கு கொசு ஒழிப்பு பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கொசு ஒழிப்பு பணியாளர்களிடம் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று மழைநீர் தேங்காத வகையில் பணிகளை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம். வீடு உட்பட எல்லா இடங்களிலும் கொசு மருந்து அடிக்கும் பணிகளும் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>கள்ளச்சாராய மரணங்கள்: குற்றவாளிகள் அனைவரையும் கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - மாணிக்கம் தாகூர் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/illicit-liquor-deaths-all-the-culprits-must-be-identified-and-strict-action-taken-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/illicit-liquor-deaths-all-the-culprits-must-be-identified-and-strict-action-taken-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">77c70354-9eba-4433-8e2c-34b05abe6d62</guid><pubDate>Wed, 09 Sep 2026 07:30:41 +0000</pubDate><atom:updated>2026-09-09T07:30:41.706Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கள்ளக்குறிச்சி,Kallakurichi,மாணிக்கம் தாகூர்,கள்ளச்சாராய மரணம்,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/gl1ckeo2/State-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/gl1ckeo2/State-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் 17 முதல் 20 தேதிகளில் கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 70 பேர் பலியானதற்கு அதிகாரிகள் தங்கள் கடமையை முறையாக செய்யாததே காரணம்.  அதனால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் நீதியரசர் பி. கோகுல்தாஸ் தலைமையில் கடந்த தி.மு.க. ஆட்சியில் அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் பரிந்துரை செய்திருக்கிறது. </p><p>இந்த அறிக்கை சட்டப்பேரவையிலும் வைக்கப்பட்டிருக்கிறது. கள்ளச் சாராய விற்பனையில் சம்மந்தப்பட்ட 433 பேரிடம் விசாரணை நடத்தி இந்த அறிக்கையை ஆணையம் சமர்ப்பித்திருக்கிறது. 1971 ஆம் ஆண்டு முதல் மதுவிலக்கு கொள்கையை கடந்த கால அரசுகள் செயல்படுத்தாததால் பெரும்பான்மையான மக்கள் மது பிரியர்களாக மாறி விட்டனர். டாஸ்மாக் மதுவை விட குறைந்த விலையில் கிடைக்கும் கள்ளச்சாராயத்தை ஏழை, எளியவர்கள் நாடுகிற நிலை ஏற்பட்டதால்தான் இத்தகைய இழப்பு ஏற்பட்டிருக்கிறது. </p><p>கள்ளக்குறிச்சியை சுற்றியுள்ள பகுதிகளில் கள்ளச் சாராய விற்பனைக்காக சட்டவிரோதமாக பகிரங்க ஏலம் நடத்தியுள்ளனர். அதில் வெற்றி பெற்ற ஏலதாரருக்கு அதை விற்க எந்த இடையூறும் இருக்காது. அந்த ஏலதாரர் ரூபாய் 5 லட்சம் கொடுத்ததும் அதற்கான உரிமமும் அவருக்கு கொடுக்கப்படுகிறது. இவையெல்லாம் தெரிந்திருந்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காதது வேதனையளிக்கிறது என்று நீதியரசர் அறிக்கையில் கூறியிருக்கிறார். </p> <p>காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த விஷச் சாராய விற்பனை நடந்திருக்காது. கள்ளச் சாராய வியாபாரிகளுக்கும், காவல்துறை, ஆயத்தீர்வைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் இடையே கேடான கூட்டணி இருந்தது தெளிவாக தெரிகிறது. இதுபோன்ற கூட்டணி உடைக்கப்பட வேண்டும். கடமையை செய்யத் தவறிய அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று நீதியரசர் கோகுல்தாஸ் பரிந்துரை செய்திருக்கிறார். </p><p>கள்ளச் சாராயத்தை குடித்து 70 பேர் பலியான உடனேயே மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல்துறை அதிகாரி மற்றும் அந்த பகுதியில் இருந்த சில அதிகாரிகள் கடந்த ஆட்சியில் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். நீதியரசரின் அறிக்கையின்படி, கள்ளக்குறிச்சி பேரழிவிற்கு காரணமானவர்கள் அனைவர் மீதும் கடுமையான தண்டனை விதிப்பதற்கும், இந்த கொடூர சம்பவம் வெறும் அதிகாரிகள் அளவில் நடைபெற்றதா ? அல்லது இதற்குப் பின்னால் அரசியல் பின்னணி இருக்கிறதா? என்பது குறித்தும் தமிழக முதல்-அமைச்சர் சி.ஜோசப் விஜய் உரிய விசாரணையின் மூலம் அறிய வேணடும். அதனடிப்படையில் குற்றவாளிகள் அனைவரையும் கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுப்பதன் மூலமே கள்ளச் சாராயத்தினால் ஏற்படும் பேரழிவுகளை தடுக்க முடியும். </p> <p>கள்ளச் சாராயத்தினால் பலியானவர்களுக்கு கடந்த அரசு தலா ரூபாய் 10 லட்சம் வழங்கியிருந்தாலும் அதில் தந்தையை இழந்த குழந்தைகளுக்கு உணவு, குடியிருப்பு வசதி, கல்வி உதவி, அரசு வேலை போன்றவற்றை தமிழக அரசு வழங்க வேண்டுமென்று நீதியரசர் பரிந்துரை செய்திருக்கிறார். இந்த பரிந்துரையை மனிதாபிமான உணர்வோடு தமிழக முதல்-அமைச்சர் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டை மதுவின் பிடியில் இருந்து எவ்வளவு விரைவாக மீட்கிறோமோ அப்பொழுது தான் தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையில் விமோசனம் ஏற்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்: திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dharapuram-and-maduranthakam-by-elections-dmk-candidates-announced</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dharapuram-and-maduranthakam-by-elections-dmk-candidates-announced#comments</comments><guid isPermaLink="false">7133a130-21ae-4ba8-b94e-345f0c56ce95</guid><pubDate>Wed, 09 Sep 2026 07:17:33 +0000</pubDate><atom:updated>2026-09-09T07:17:33.404Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,TVK,தவெக,அதிமுக,திமுக,DMK,இடைத்தேர்தல்,மதுராந்தகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/a40477bf/dmk-candidates.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/a40477bf/dmk-candidates.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மதுராந்தகம் தொகுதியில் திமுக சட்டத்துறை இணை செயலாளராக உள்ள  பரந்தாமன் மற்றும்  தாராபுரம் தொகுதியில் வழக்கறிஞர் சுகன்யாவும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பரந்தாமன், கடந்த தேர்தலில் சென்னை எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  தமிழகத்தில் ஆளும் தவெக  இன்னும் வேட்பாளர் அறிவிக்கவில்லை. அதேபோல, அதிமுகவும் வேட்பாளர் அறிவிக்காத நிலையில், முதல் கட்சியாக திமுக வேட்பாளரை அறிவித்துள்ளது. இடைத்தேர்தலில் தமிழகத்தில் பிரதானமாக உள்ள  மூன்று கட்சிகளும் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளதால், தேர்தல் களம் அனல் பறக்கும்  என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><h2>மதுராந்தகம் தொகுதி</h2><p>கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் மதுராந்தகம் (தனி) தொகுதியில் தி.மு.க. சார்பில்  அமுலு பொன்மலர் போட்டியிட்டார். அ.தி.மு.க. சார்பில் மரகதம் குமரவேல், த.வெ.க. சார்பில் எழில் கேத்தரின், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் ஆகியோர் போட்டியிட்டனர்.</p><p>மொத்தம் பதிவான 1 லட்சத்து 96 ஆயிரத்து 268 வாக்குகளில், அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் 69,284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்டவர்களில், த.வெ.க. வேட்பாளர் எழில் கேத்தரின் 62,090 வாக்குகள் பெற்று 2-வது இடம்பிடித்தார். இருவருக்குமான வித்தியாசம் 7,194 வாக்குகள் ஆகும். தி.மு.க. வேட்பாளர் அமுலு பொன்மலர் 59,838 வாக்குகள் பெற்று 3-வது இடம் பிடித்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகி ராமன் 4,950 வாக்குகள் பெற்றார்.</p><h2>தாராபுரம் (தனி) தொகுதி</h2><p>தாராபுரம் (தனி) தொகுதியில் தி.மு.க. சார்பில் இந்திராணி, அ.தி.மு.க. சார்பில் சத்யபாமா, த.வெ.க. சார்பில் கவுரி சித்ரா, நாம் தமிழர் கட்சி சார்பில் திவ்யா ஆகியோர் போட்டியிட்டனர். மொத்தம் பதிவான 1 லட்சத்து 99 ஆயிரத்து 944 வாக்குகளில், அ.தி.மு.க. வேட்பாளர் சத்யபாமா 81,100 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்டவர்களில், தி.மு.க. வேட்பாளர் இந்திராணி 64,373 வாக்குகள் பெற்று 2-வது இடம்பிடித்தார். இருவருக்குமான வித்தியாசம் 16,727 வாக்குகள் ஆகும். த.வெ.க. வேட்பாளர் கவுரி சித்ரா 46,438 வாக்குகள் பெற்று 3-வது இடம் பிடித்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திவ்யா 6,026 வாக்குகள் பெற்றிருந்தார்.</p> ]]></content:encoded></item><item><title>தாராபுரம் இடைத்தேர்தல்: முதல் ஆளாக வேட்புமனு தாக்கல் செய்த தேர்தல் மன்னன் பத்மராஜன்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dharapuram-by-election-election-king-padmarajan-files-nomination-first</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dharapuram-by-election-election-king-padmarajan-files-nomination-first#comments</comments><guid isPermaLink="false">081c3f5f-977c-4f6a-b8ea-a34460b4cf2b</guid><pubDate>Wed, 09 Sep 2026 07:09:58 +0000</pubDate><atom:updated>2026-09-09T07:09:58.496Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இடைத்தேர்தல்,தாராபுரம்,வேட்புமனு,By-election,Dharapuram,தேர்தல் மன்னன்,Election king,பத்மராஜன்,Padmarajan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/5u1aqdy7/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/5u1aqdy7/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் பத்மராஜன் (65). இவர் அதே பகுதியில் பழைய லாரி மற்றும் பஸ் டயர்களை புதுப்பிக்கும் கடை நடத்தி வருகிறார். இவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு தேர்தலிலும் வேட்புமனுத் தாக்கல் செய்து வருகிறார். இவர் 1988-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 38 ஆண்டுகளுக்கு மேலாக அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்.</p><p>இந்திய அளவில் தலைவர்களை எதிர்த்தும் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்து வருகிறார் இதனால் இவர் தேர்தல் மன்னன் என்ற அடைமொழியோடு வலம் வருகிறார். இதுவரை கருணாநிதி, ஜெயலலிதா, வாஜ்பாய், நரேந்திர மோடி, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல தலைவர்களை எதிர்த்து போட்டியிட்டு இருக்கிறார். கூட்டுறவு சங்க தேர்தல் முதல் ஜனாதிபதி தேர்தல் வரை வேட்புமனு தாக்கல் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இவரது சாதனைகள் லிம்கா புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.</p><p>இந்த நிலையில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த 2 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (புதன்கிழமை) தொடங்கி உள்ள நிலையில், இடைத்தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன.</p><p>இந்நிலையில், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 'தேர்தல் மன்னன்' பத்மராஜன் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். 256-வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்யும் இவர் இதற்காக இதுவரை ரூ.1 கோடி வரை செலவழித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணி திருவிழா தேரோட்டம்: பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruchendur-murugan-temple-avani-festival-chariot-devotees-held-the-rope-and-pulled-it</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruchendur-murugan-temple-avani-festival-chariot-devotees-held-the-rope-and-pulled-it#comments</comments><guid isPermaLink="false">d9876a39-a9ff-4593-964d-bc575c39d676</guid><pubDate>Wed, 09 Sep 2026 07:05:32 +0000</pubDate><atom:updated>2026-09-09T07:05:32.492Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பக்தர்கள்,Devotees,Thoothukudi,தூத்துக்குடி,தேரோட்டம்,திருச்செந்தூர் முருகன் கோவில்,Thiruchendur Murugan Temple,Avani Festival,ஆவணி திருவிழா,chariot,rope,வடம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/0fajamla/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணி திருவிழா தேரோட்டம்: பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/0fajamla/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">திருச்செந்தூர் முருகன் கோவில்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE">ஆவணி திருவிழா</a> தேரோட்டத்தின்போது தேரில் எழுந்தருளிய குமரவிடங்க பெருமான், வள்ளி-தெய்வானை அம்பாள் தேரை பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வடம் பிடித்து இழுத்தனர். </p><h2>திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணி திருவிழா</h2><p>முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஆவணி திருவிழா திருச்செந்தூரில் ஆகஸ்ட் 31-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் சுவாமியும், அம்பாளும் காலை மற்றும் மாலையில் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்கள் காட்சி கொடுத்தனர்.</p><figure><img alt="திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணி திருவிழா தேரோட்டம்." src="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/q9msufgf/திருச்செந்தூர்-முருகன்-கோவில்-ஆவணி-திருவிழா-தேரோட்டம்.jpg" /></figure><h2>தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்</h2><p>இந்த நிலையில் 10-ம் நாளான இன்று காலையில் இத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">தேரோட்டம்</a> வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்று வழிபாடு செய்தனர். இந்த திருவிழாவின் சிகர நிகழ்வாக குமரவிடங்க பெருமான் வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். </p><h2>பக்தர்கள் வழிபாடு</h2><p>தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்துள்ள பக்தர்கள் கடலில் நீராடி நீண்ட வரிசையில் நின்று பெருமானைத் தரிசனம் செய்து வழிபாடு செய்தனர். தேரோட்ட திருவிழாவையொட்டி போலீசாரின் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு இருந்ததோடு, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகத்தின் மூலம் செய்யப்பட்டு இருந்தன. </p>]]></content:encoded></item><item><title>நெல்லையில் இஸ்லாமியர்களை காவல் நிலையத்திற்கு வரவழைத்து பயோமெட்ரிக் பதிவு - எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/biometric-registration-of-muslims-summoned-to-the-police-station-in-nellai-sdpi-party-condemns-the-move</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/biometric-registration-of-muslims-summoned-to-the-police-station-in-nellai-sdpi-party-condemns-the-move#comments</comments><guid isPermaLink="false">a8236efa-ec1a-4052-8a7a-c991b28f4fb8</guid><pubDate>Wed, 09 Sep 2026 06:40:35 +0000</pubDate><atom:updated>2026-09-09T06:40:35.441Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Tirunelveli,நெல்லை முபாரக்,sdpi,எஸ்.டி.பி.ஐ.,Nellai Mubarak</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/bw83xvro/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/bw83xvro/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் பகுதியில் இஸ்லாமிய மக்களைக் காவல் நிலையத்திற்கு வரவழைத்து கைரேகை, கண் கருவிழி  பதிவு மற்றும் பல கோணங்களில் புகைப்படங்களை எடுக்கும் நெல்லை மாநகரக் காவல்துறையின் அடக்குமுறை நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிப்பதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>“பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் குறிப்பிட்ட சில சமூக மக்களைப் பிறப்பாலேயே குற்றவாளிகளாக சித்தரித்து, அவர்களின் கைரேகைகளைப் பதிவு செய்து, சுதந்திர நடமாட்டத்தைக் கட்டுப்படுத்திய கொடூரமான 'குற்றப்பரம்பரைச் சட்டம்' நடைமுறையில் இருந்தது. பல தியாகப் போராட்டங்களுக்குப் பிறகு சுதந்திர இந்தியாவில் ஒழிக்கப்பட்ட அந்தப் பாசிச நடைமுறையை, தற்காலத்தில் நெல்லை மேலப்பாளையத்தில் காவல்துறை கையில் எடுத்திருப்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது.</p><p>லட்சக்கணக்கான இஸ்லாமிய மக்கள் அமைதியுடன் வசித்து வரும் மேலப்பாளையம் பகுதியில், எவ்வித சட்டப்பூர்வ அழைப்பாணையோ  முறையான காரணமோ இன்றி அப்பகுதி மக்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கண் ரேகை, கைரேகைகளைப் பதிவு செய்வது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். 20 ஆண்டுகளுக்கு முன்பு முடிந்துபோன சிறிய சமுதாய வழக்குகளை காரணம் காட்டி, குறிப்பிட்ட ஒரு சமூக மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியை மட்டுமே குறிவைத்து இத்தகைய அடக்குமுறையை ஏவுவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.</p><p>குறிப்பாக, காவல்துறைக்கு வரம்பற்ற அதிகாரங்களை வழங்கும் இத்தகைய நடைமுறைகளை முற்றிலும் கைவிட வேண்டும். 'சரித்திரப் பதிவேடு'  என்ற பெயரில் குற்றவாளிகளை கண்காணிக்கிறோம் எனக் கூறி, அப்பாவிகளையும் பொதுமக்களையும் தொடர்ந்து அச்சுறுத்துவதும், அவர்களின் சுதந்திரமான வாழ்வுரிமையைப் பறிப்பதும் மனித உரிமைக்கு எதிரானது. இத்தகைய சரித்திரப் பதிவேடு நடைமுறையால் பல அப்பாவி மக்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டு வரும் சூழலில், இந்த அடக்குமுறை நடைமுறைகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.</p><p>சிறுபான்மை மக்கள் வாழும் பகுதிகளைத் தொடர்ச்சியாகச் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதும், தேவையற்ற பதற்றத்தை உருவாக்குவதும் சமூக நல்லிணக்கத்திற்குப் பேராபத்தை விளைவிக்கும். அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழகத்தில், சில காவல்துறை அதிகாரிகளின் இத்தகைய ஒருதலைப்பட்சமான அதிகார துஷ்பிரயோகம் மாநில அரசுக்குத் தான் களங்கத்தை ஏற்படுத்தும்.</p><p>எனவே, தமிழக முதல்வர் அவர்கள் இந்த விவகாரத்தில் உடனடியாக நேரடியாகத் தலையிட்டு, மேலப்பாளையத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடத்தப்படும் பயோமெட்ரிக் பதிவு நடவடிக்கைகளையும், சரித்திரப் பதிவேடு என்ற பெயரிலான அடக்குமுறைகளையும் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். சட்டத்திற்குப் புறம்பாக பொதுமக்களிடம் அச்சத்தை விதைக்கும் காவல்துறை அதிகாரிகள் மீது துறைரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட  திமுக முடிவு?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-decides-to-contest-by-elections-in-maduranthakam-and-dharapuram-constituencies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-decides-to-contest-by-elections-in-maduranthakam-and-dharapuram-constituencies#comments</comments><guid isPermaLink="false">f259b9d9-9045-4308-a810-c52277eadb6e</guid><pubDate>Wed, 09 Sep 2026 06:40:22 +0000</pubDate><atom:updated>2026-09-09T06:40:22.815Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இடைத்தேர்தல்,Kanchipuram,மதுராந்தகம்,தாராபுரம்,Maduranthakam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/7iyopju8/MK-Stalin.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முக ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/7iyopju8/MK-Stalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை, </p><p>மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப் படும் என்ற அறிவிப்பை தேர்தல் கமிஷன் நேற்று முன்தினம் வெளியிட்டது. இந்த 2 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (புதன்கிழமை) தொடங்க உள்ள நிலையில், இடைத்தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன.</p> <h2>ராஜினாமா</h2><p>த.வெ.க. ஆட்சி அமைந்த சில மாதங்களிலேயே நடைபெற உள்ள இடைத்தேர்தல் என்பதால் ஆட்சியையும், அவர்களின் கொள்கை கோட்பாடுகளையும் அவர்கள் எவ்வாறு செயல்படுத்துகின்றனர் என்பதை மக்கள் எவ்வாறு ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதை நிரூபிக்கும் களமாக பார்க்கப்படுகிறது. இதனால், இந்த இடைத்தேர்தலில் எப்படியும் வெற்றிபெற்றாக வேண்டும் என்பதில் த.வெ.க. தீவிரமாக களப்பணியாற்றி இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளையும் தனதாக்கிக்கொள்ள தீவிரமாக களமாடும். அதேநேரத்தில், அ.தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ.க்களாக தேர்வானவர்கள் ராஜினாமா செய்ததால் ஏற்பட்ட இடைத்தேர்தல் என்பதால் அந்தந்த தொகுதியில் உள்ள அ.தி.மு.க.வின் செல்வாக்கை இழக்கக்கூடாது என்ப தில் அ.தி.மு.க. தீவிரமாக உள்ளது.</p><h2>ஸ்டாலின் ஆலோசனை</h2><p>அதேபோன்று, தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.க. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுமா? அல்லது புறக்கணிக்குமா? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.  இது தொடர்பாக முடிவு செய்ய இன்று  முக ஸ்டாலின் வீட்டில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, இடைத்தேர்தலில்  போட்டியிடுவது என திமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாராபுரம் தொகுதியில் கடந்த தேர்தலில், திமுக 2ம் பிடித்து தோல்வி அடைந்தது. மதுராந்தகம் தொகுதியில் திமுக 3-ம் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது. </p><h2>திமுக வேட்பாளர்கள் பட்டியல்</h2><p>இடைத்தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணித்தால் கட்சி நிர்வாகிகள் சோர்வடைந்துவிடுவார்கள் எனவும் திமுகவை கடுமையாக விமர்சிக்கும் விஜய்க்கு தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனால், தேர்தலில் போட்டியிடும் முடிவை திமுக தலைமை எடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. நாளை அல்லது நாளை மறுநாள் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் எனத்தகவல்கள் வெளியாகியுள்ளன.</p> ]]></content:encoded></item><item><title>நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து 11-ந்தேதி வரை ரத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nagapattinam-sri-lanka-boat-service-cancelled-until-the-11th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nagapattinam-sri-lanka-boat-service-cancelled-until-the-11th#comments</comments><guid isPermaLink="false">762b81c7-3fb9-4895-a449-b7aa1415b92e</guid><pubDate>Wed, 09 Sep 2026 06:23:50 +0000</pubDate><atom:updated>2026-09-09T06:23:50.151Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nagapattinam,SriLanka,இலங்கை,நாகை,கப்பல் போக்குவரத்து,Boat Service</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/zeoacc8c/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/zeoacc8c/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>நாகை,</p><p>நாகை - இலங்கை காங்கேசன்துறை இடையே வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கப்பல் போக்குவரத்து தொடர்பான பாதுகாப்பு, ஆய்வு சான்றிதழ்கள் மற்றும் விதிமுறை குறித்து ஆய்வு செய்யும் வணிக கடல்சார் துறை அதிகாரிகள் சென்னையில் இருந்து நாகை வந்து நாகை -இலங்கை இடையே இயக்கப்படும் கப்பல்களை ஆய்வு செய்தனர்.</p><p>இந்த ஆய்வில் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டதாகவும், இந்த குறைபாடுகளை சரிசெய்யும் வரை கப்பல் சேவையை ரத்து செய்ய சென்னை வணிக கடல் சார்துறை சார்பில் கடிதம் வழங்கப்பட்டதாகவும் தெரிகிறது. இதனையடுத்து கப்பல்களில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.</p><p>இந்த பணிகள் நிறைவு பெற்றவுடன் 11-ந்தேதிக்கு பின்னர் பயணிகள் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை நாகை-இலங்கை காங்கேசன் துறை இடையே திட்டமிடப்பட்ட பயணங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>எல் நினோ தாக்கம்: ஊட்டியில் முன்கூட்டியே தொடங்கிய நீர் பனிப்பொழிவு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/el-ni%C3%B1o-impact-early-frost-in-ooty</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/el-ni%C3%B1o-impact-early-frost-in-ooty#comments</comments><guid isPermaLink="false">f2bd081a-8d80-44e1-a52d-bdf0fc7fdc48</guid><pubDate>Wed, 09 Sep 2026 06:18:52 +0000</pubDate><atom:updated>2026-09-09T06:18:52.339Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Ooty,El Nino,எல் நினோ</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/vbuvz2yj/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/vbuvz2yj/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் நீர் பனிப்பொழிவு தொடங்கும். இந்த நீர் பனிப்பொழிவானது படிப்படியாக உறை பனிப்பொழிவாக மாறி, ஜனவரி மாதம் வரை ஊட்டியில் உறைபனி தொடர்ந்து நீடிக்கும். </p><p>ஆனால் நடப்பாண்டில் எல் நினோ தாக்கம் மற்றும் மழை இல்லாத காரணத்தினால் காலநிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக ஊட்டியில் செப்டம்பர் மாதத்திலேயே நீர் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. </p><p>இதன் காரணமாக காலை நேரங்களில் புல்வெளிகளில் நீர் பனிப்பொழிவால், முத்துமுத்தாக தண்ணீர் துளிகள் காட்சி அளிக்கின்றன. குறிப்பாக ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, காந்தல் உள்ளிட்ட சமவெளி பகுதிகளில் இந்த நீர் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. </p><p>இனிவரும் நாட்களில் இந்த நீர் பனிப்பொழி அதிகமாகி விரைவில் உறை பனிப்பொழிவு தொடங்குவதற்கு வாய்ப்புள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த நீர் பனிப்பொழிவு காரணமாக ஊட்டில் தற்போது கடும் குளிர் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>மணப்பாறை அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-dies-after-being-electrocuted-near-manapparai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-dies-after-being-electrocuted-near-manapparai#comments</comments><guid isPermaLink="false">f46b7cf4-03b9-4bd0-847f-a108376d4c99</guid><pubDate>Wed, 09 Sep 2026 06:13:17 +0000</pubDate><atom:updated>2026-09-09T06:13:17.718Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்சி,Youth,மின்சாரம் தாக்கி,வாலிபர் உயிரிழப்பு,police enquiry,Death by electrocution</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/hd2j2hsa/-02.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ முருகன்]]></media:title><media:description type="html"><![CDATA[ மின்சாரம் தாக்கி வாலிபர் பலி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/hd2j2hsa/-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தண்ணீர் தொட்டியில் குளித்துவிட்டு மின் மோட்டாரை நிறுத்த சென்ற வாலிபர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF">மின்சாரம் தாக்கி </a>சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>மின்சாரம் தாக்கி வாலிபர் பலி</h2><p>திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 29). இவர் இன்று (புதன்கிழமை) தனது வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் குளித்தார். குளித்து முடித்தவுடன், ஓடிக்கொண்டிருந்த மின் மோட்டாரை நிறுத்துவதற்காக ஈரமான உடலுடன் சுவிட்சைத் தொட்டுள்ளார்.</p><p>அப்போது, எதிர்பாராதவிதமாக முருகன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81"> உயிரிழந்தார்</a>. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர், உடனடியாக இதுகுறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உள்ளூர் போலீசார், முருகனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குளித்துவிட்டு மின் மோட்டாரை நிறுத்தச் சென்ற வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எல்நினோவால் சாதகம்: தூத்துக்குடியில் 80 சதவீதத்தை எட்டிய உப்பு உற்பத்தி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/boost-from-el-ni%C3%B1o-salt-production-in-thoothukudi-reaches-80-percent</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/boost-from-el-ni%C3%B1o-salt-production-in-thoothukudi-reaches-80-percent#comments</comments><guid isPermaLink="false">781cd788-3c73-435f-88ec-29ad377de819</guid><pubDate>Wed, 09 Sep 2026 05:59:59 +0000</pubDate><atom:updated>2026-09-09T05:59:59.833Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,உப்பு உற்பத்தி,Salt production,எல் நினோ,El Niño,தூத்துக்குடி உப்பு,Thoothukudi salt,சூப்பர் எல் நினோ,Super El Niño</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/h6kpsjmz/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/h6kpsjmz/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>தூத்துக்குடி மாவட்டத்தில் எல்நினோவால் சாதகமான சூழல் உருவானதால், 80 சதவீதம் உப்பு உற்பத்தியாகி உள்ளது. அதேசமயம் விலை வீழ்ச்சியால் உற்பத்தியாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.</p><h2>உப்பு உற்பத்தி</h2><p>தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையா புரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்து உள்ளன. இவைகளில் சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.</p><p>நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தப்படியாக தூத்துக்குடி மாவட்டம் உள்ளது. இங்கு ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக்கான பணிகள் தொடங்கும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 6 மாதங்கள் உப்பு உற்பத்திக்கான உச்சகட்ட காலங்கள் ஆகும். அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் உப்பு சீசன் முடிவடையும்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/dusetbki/CHENNAI-10.jpg" /></figure><h2>சாதகமான சூழல்</h2><p>நடப்பு ஆண்டில் ஜனவரி மாதம் முதல் உப்பு உற்பத்தி பணிகள் தொடங்கின. தொடர்ந்து புதிய உப்பு உற்பத்தியாகி வந்தது. தொடர்ச்சியாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் உப்பு உற்பத்தி வேகம் எடுத்து உள்ளது. வழக்கமாக ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்து உப்பு உற்பத்தியை பாதிக்கும். இதனால் உப்பு விலை ஓரளவு உயர்ந்து இருக்கும்.</p><p>இந்த ஆண்டு 'எல்நினோ' போன்ற இயற்கை மாற்றங்களால் உப்பு உற்பத்திக்கு சாதகமான சூழல் நிலவி வருகிறது. மேற்கு பகுதியில் இருந்து வீசும் மேல்காற்றும், கொளுத்தும் வெயிலும் சேர்ந்து இருந் தால் 'கோடை' என்று உப்பு உற்பத்தியாளர்கள் அழைப்பார்கள். அந்த கோடை இந்த ஆண்டு சிறப்பாக அமைந்து இருப்பதால் உப்பு உற்பத்தியை அதிகரித்து உள்ளது. இதனால் இதுவரை சுமார் 80 சதவீதம் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் உப்பளங்களில் எங்கு பார்த்தாலும் உப்புக்குவியல்கள் வெள்ளை நிற குன்றுகள் போன்று காட்சி அளிக்கின்றன.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/1wvauh0o/Untitled-4.jpg" /></figure><h2>விலை சரிவு</h2><p>அதே நேரத்தில் உப்பு உற்பத்தி அதிகரித்தாலும் போதிய விலை கிடைக்காமல் உற்பத்தியாளர்கள் கலக்கத்திற்கு ஆளாகி உள்ளனர். தூத்துக்குடியில் தற்போது தரமான உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் முதல் தர உப்பு ரூ.1,000 முதல் ரூ.1,200 வரையும், 2-வது தர உப்பு ரூ.800 முதல் ரூ.1,000 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p>ஆனாலும் கேரளம், கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு குஜராத் உப்பு அதிக அளவில் விற்பனைக்கு வருவதால் தூத்துக்குடி உப்பு மார்க்கெட்டை இழந்து உள்ளது. இதனால் உப்பு விற்பனையும் மந்தமாக உள்ளது. இது உப்பளத் தொழிலை தொடர்ந்து நலிவடைய செய்வதாக உள்ளது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/92cq9p16/Untitled-2.jpg" /></figure><h2>உற்பத்தியாளர் கவலை</h2><p>இது குறித்து உப்பு உற்பத்தியாளர் ஒருவர் கூறும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி சுமார் 80 சதவீதம் வரை அதிகரித்து உள்ளது. அதாவது 20 லட்சம் டன் வரை உப்பு உற்பத்தியாகி உள்ளது. உப்பு உற்பத்திக்கு சாதகமான சூழல் நிலவுவதால் இந்த ஆண்டு 100 சதவீதம் உப்பு உற்பத்தியை எட்டுவதற்கான வாய்ப்பு உள்ளது.</p><p>கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட உப்பு இன்னும் விற்பனை செய்யப்படாமல் உள்ளது. அதே நேரத்தில் விற்பனைக்கான வாய்ப்புகளும் குறைந்து உள்ளன. தூத்துக்குடியில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் உப்பு மார்க்கெட்டை தூத்துக்குடி வியாபாரிகள் இழந்து உள்ளனர். அங்கு குஜராத்தில் இருந்து நேரடியாக உப்பு விற்பனைக்கு வருகிறது.</p><p>இதனால் உப்பு விலை மிகவும் குறைந்து உள் ளது. இதே நிலை நீடித்தால் உப்புத் தொழில் மிகவும் நலிவடைந்துவிடும். ஆகையால் அரசு உப்புத் தொழிலை பாது காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/5edohma2/Untitled-3.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>‘பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்’ - அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-law-banning-smoking-in-public-places-must-be-strictly-enforced-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-law-banning-smoking-in-public-places-must-be-strictly-enforced-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">9b6448d6-1d05-4ec7-b050-d6e14e352264</guid><pubDate>Wed, 09 Sep 2026 05:30:44 +0000</pubDate><atom:updated>2026-09-09T05:30:44.898Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/91421sao/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/91421sao/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“இந்தியாவில் பிறர் புகைத்து விடும் சிகரெட் புகையை சுவாசிப்பதால் கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் 3.25 லட்சம் பேர் உயிரிழந்ததாக உலக அளவில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது. நாட்டில் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகும் கூட,  சிகரெட் புகையை சுவாசிப்பதால் ஏற்படும் உயிரிழப்புகள் மிகப்பெரிய அளவில் அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது.</p><p>இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் லான்செட் குழுமத்தின் ஆன்லைன் மருத்துவ இதழான The Lancet Public Health-இல் வெளியாகியுள்ள ஆய்வுக்கட்டுரையில் பிறர் புகைத்து விடும் சிகரெட் புகையை சுவாசிப்பதால் 2023 ஆம் ஆண்டில் மட்டும் 3 லட்சத்து 25,600 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 1990 ஆம் ஆண்டில் இதே முறையில் ஏற்பட்ட 2 லட்சத்து 17,700 உயிரிழப்புகளுடன் ஒப்பிடும் போது இது 49.56% அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதில் ஆண்களின் உயிரிழப்பு விகிதல் 61.74 விழுக்காடும், பெண்களின் உயிரிழப்பு  38.35 விழுக்காடும் அதிகரித்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதே காலக்கட்டத்தில் பிறர் புகைத்து விடும் புகையை சுவாசிக்கும் நிலைக்கு தள்ளப்படுவோரின் எண்ணிக்கை 37.50 கோடியில் இருந்து 44.40 கோடியாக வெறும் 18.40% மட்டுமே அதிகரித்துள்ள நிலையில், உயிரிழப்போரின் எண்ணிக்கை மட்டும் சுமார் 50% அளவுக்கு அதிகரித்திருப்பதுதான் இந்த விவகாரத்தின் தீவிரத்தையும், ஆபத்தையும் உணர்த்தியுள்ளது.</p><p>இந்தியாவில் இந்த அளவுக்கு நிலைமை மோசமடைந்திருப்பதற்கு மிக முக்கியக் காரணம் பொது இடங்களில் புகை பிடிப்பது கட்டுப்படுத்தப்படாததுதான். சமூக அக்கறை சிறிதும் இல்லாமல் பொது இடங்களில் புகைப்பிடிக்கும் வழக்கம் இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அவ்வாறு புகைப்பவர்கள் வெளியிடும் புகையை சுவாசிக்கும் அப்பாவி மக்கள், குறிப்பாக குழந்தைகளும், பெண்களும் மிகக்கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். </p><p>இந்தக் கொடுமைக்கு முடிவு கட்டும் நோக்கத்துடன் தான், 2004-09 காலத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகித்த போது,  பொது இடங்களில் புகைப்பிடிப்பதை  தடை செய்யும் சட்டத்தைக் கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையில் நிறைவேற்றி 2008 ஆம் ஆண்டு தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தினேன். அதன்பிறகு தான் திரையரங்குகள், உணவகங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் பெண்களும், குழந்தைகளும்  பிறர் புகைத்து வெளியிடும் புகையை சுவாசிக்காமல் நடமாடும் ஆரோக்கியமான சூழ்நிலை உருவானது.</p><p>பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை இயற்றியது மத்திய அரசு என்றாலும் கூட , அதை நடைமுறைப்படுத்தும் கடமையும், பொறுப்பும் மாநில அரசுகளுக்குத் தான் இருக்கிறது. ஆனால், எந்த மாநிலத்திலும் இந்தச் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதையே இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.</p><p>எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட 02.10.2008 முதல் கடந்த 2024 மார்ச் 31 ஆம் நாள் வரையிலான பதினைந்தரை ஆண்டுகளில் 3.89 லட்சம் பேர் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டு, ரூ.6.83 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு வெறும் 68 பேர் மட்டும் தான் பொது இடங்களில் புகைப்பிடித்ததாகக் கூறி அவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது; அவர்களில் ஒவ்வொருவரிடமிருந்து சராசரியாக ரூ.177 மட்டும் தான் தண்டமாக வசூலிக்கப்பட்டிருக்கிறது என்பதிலிருந்தே இந்தச் சட்டம்  எவ்வளவு அலட்சியமாக செயல்படுத்தப்படுகிறது என்பதை உணரலாம்.</p><p>2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இப்போது வரையிலான காலத்தில் இந்த சட்டத்தின்படி எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரங்கள் நடப்பாண்டுக்கான மருத்துவத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் சேர்க்கப்படவில்லை. இதனால், இந்த சட்டத்தின் அடிப்படையில், பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புதிய அரசு விரும்பவில்லையோ என்று தோன்றுகிறது.</p> <p>நேரடியாக புகைப்பிடிப்பதால்  என்னென்ன தீமைகள் ஏற்படுமோ, அவை அனைத்தும் பிறர் புகைத்து விடும் சிகரெட் புகையை சுவாசிப்பவர்களுக்கும் ஏற்படும் என்று மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். சிகரெட்  புகையில் கலந்துள்ள நிகோட்டின் என்ற வேதிப்பொருளை உள்ளிழுக்கும் போது, அது மூளைக்கும், இதயத்திற்கும் செல்லும் இரத்த நாளங்களில் படிந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. அதனால், இதய நோய், பக்கவாதம், நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (Chronic Obstructive Pulmonary Disease - COPD), ஆஸ்துமா, நுரையீரல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், நீரிழிவு நோய் உள்ளிட்ட நோய்களும் சிகரெட் புகையை மக்கள் சுவாசிப்பதால் ஏற்படுகின்றன. இந்த நோய்களால் அதிகம் பாதிக்கப்படுவோர் பெண்களும், குழந்தைகளும் தான்.</p><p>பெண்களும், குழந்தைகளும் எந்தத் தவறும் செய்யாதவர்கள். பொதுவெளிகளில் யாரோ சிலர் சட்டவிரோதமாக சிகரெட் புகைத்து வெளியிடும் புகையை சுவாசித்த ஒரே பாவத்திற்காக ஆண்டுக்கு ஒரு லட்சத்து 56,900 பெண்கள் உயிரிழக்கும் கொடுமையை மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கக் கூடாது. எனவே, பொது இடங்களில் புகைப் பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் இன்னும் தீவிரமாகவும், கடுமையாகவும் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் கள் இறக்க உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/immediate-permission-must-be-granted-for-palm-wine-in-tamil-nadu-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/immediate-permission-must-be-granted-for-palm-wine-in-tamil-nadu-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">cee65a05-6e92-4b9c-8386-93676ada0b44</guid><pubDate>Wed, 09 Sep 2026 05:26:39 +0000</pubDate><atom:updated>2026-09-09T05:26:39.394Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,palm tree,wine,கள் விற்பனை,கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/0gl1xz0s/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/0gl1xz0s/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><p>மண்ணின் மணம் மாறாத மாண்பினைத் தழுவி, இயற்கை அன்னை தந்த கொடையான 'கள்' இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் பரிந்துரையைத் தமிழக பாஜக சார்பில் மனமுவந்து வரவேற்கிறேன். மண்ணின் மைந்தர்களான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தவும், கிராமப்புறப் பொருளாதாரத்தில் புதிய ஒளியேற்றவும் இந்தப் பரிந்துரை ஒரு நல்வாய்ப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.</p><p>ரசாயனக் கலப்புள்ள மது அரக்கனுக்கு எதிராக தமிழக பாஜக தொடுத்த அறப்போர்களில், "மக்களின் உயிரைக் குடிக்கும் நச்சு மதுவை ஒழித்து, மண்ணின் பானமான கள்ளை அனுமதிக்க வேண்டும்" என்ற முழக்கம் எப்போதும் ஓங்கி ஒலித்துள்ளது. கள்ளுக்கு ஆதரவாக நான் தொடர்ந்து வாதிட்டும் வந்துள்ளேன். இந்நிலையில் இன்றைய ஆணையத்தின் பரிந்துரை மூலம் பாஜகவின் நீண்டகாலப் போராட்டத்திற்கு ஒரு தார்மீக வெற்றி கிடைத்துள்ளது.</p><p>எனவே, விவசாயிகளின் வாடிய முகத்தில் புன்னகை பூக்கவும், கள்ளச்சாராய மரணங்கள் என்னும் கருநிழல் தமிழகத்தை விட்டு விலகவும், தவெக அரசு இந்தப் பரிந்துரையை வெறும் காகிதத்தோடு நிறுத்திவிடக் கூடாது. காலம் தாழ்த்தாமல், உரிய பாதுகாப்பு விதிகளுடன் கள் இறக்கவும், சந்தைப்படுத்தவும் உடனடியாக அனுமதி வழங்கி, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் 'வசந்தத்தை' ஏற்படுத்த வேண்டும் எனத் முதல்-அமைச்சர் விஜய்யை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி விசைப்படகுடன் 9 மீனவர்கள் சிறைபிடிப்பு: லட்சத்தீவு தீவு அருகே பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/9-fishermen-captured-with-tuticorin-fishing-boat-tension-near-lakshadweep-island</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/9-fishermen-captured-with-tuticorin-fishing-boat-tension-near-lakshadweep-island#comments</comments><guid isPermaLink="false">567e0a2f-02a2-41d6-948b-030607e75fcb</guid><pubDate>Wed, 09 Sep 2026 05:22:25 +0000</pubDate><atom:updated>2026-09-09T05:22:25.377Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மீனவர்கள்,fishermen,Thoothukudi,தூத்துக்குடி,விசைப்படகு,navy,Lakshadweep,லட்சத்தீவு,captivity,சிறைபிடிப்பு,கடற்படையினர்,motorboat</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/h4zcgxbp/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-9-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விசைப்படகுடன் 9 மீனவர்கள் சிறைபிடிப்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/h4zcgxbp/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-9-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81">லட்சத்தீவு</a> நோக்கி மீன்பிடிக்கச் சென்ற <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a>யைச் சேர்ந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81">விசைப்படகையும்</a>, அதில் இருந்த 9 <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">மீனவர்களையும்</a> கவராத்தி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D">கடற்படையினர்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4">சிறைபிடித்த</a> சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><h2>தூத்துக்குடியைச் சேர்ந்த விசைப்படகு; 9 மீனவர்கள்</h2><p>தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தைச் சேர்ந்த நட்டார்(எ) மிக்கேல்ராஜ் என்பவருக்குச் சொந்தமான செவுள் வலை விசைப்படகில், கடந்த செப்டம்பர் 4-ம் தேதி கேரள மாநிலம் கொச்சின் துறைமுகத்திலிருந்து 9 மீனவர்கள் லட்சத்தீவுகள் நோக்கி மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். </p><h2>விசைப்படகு, 9 மீனவர்கள் சிறைபிடிப்பு</h2><p>நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் கவராத்தி தீவுப் பகுதியில் விசைப்படகு சென்று கொண்டிருந்தபோது, பாதுகாப்பு காரணங்களுக்காக தடை செய்யப்பட்ட கடல் பகுதிக்குள் நுழைய முயன்றதாகக் கூறி கவராத்தி கடற்படையினர் அந்த விசைப்படகைக் கைப்பற்றிச் சிறைபிடித்தனர். </p><p>படகு உரிமையாளர் நட்டார் என்ற மிக்கேல்ராஜ் உள்பட படகிலிருந்த 9 மீனவர்களும் கவராத்தி தீவில் கடற்படையினரின் விசாரணைக்காக விசைப்படகிலேயே சிறை வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தருவைகுளம் பகுதி கடலோர மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. </p>]]></content:encoded></item></channel></rss>