<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 05 Aug 2026 19:23:42 +0000</lastBuildDate><item><title>கொளத்தூர் தொகுதி  வாக்குப்பதிவு இயந்திரங்களில் நடைபெற்ற ஆய்வு நிறைவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/inspection-of-kolathur-constituency-voting-machines-completed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/inspection-of-kolathur-constituency-voting-machines-completed#comments</comments><guid isPermaLink="false">50fc812c-a5be-4b06-9bee-31552d30db73</guid><pubDate>Wed, 05 Aug 2026 17:17:54 +0000</pubDate><atom:updated>2026-08-05T17:17:54.782Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,ஆய்வு,கொளத்தூர்,Kolathur,வாக்குப்பதிவு இயந்திரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/znju822k/194.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வாக்குப்பதிவு இயந்திரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/znju822k/194.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கொளத்தூர் தொகுதி  வாக்குப்பதிவு இயந்திரங்களில் நடைபெற்ற ஆய்வு இன்று நிறைவடைந்தது.</p><h2>மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்</h2><p>2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 14 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) Burnt Memory/Microcontroller-ஐ ஆய்வு செய்து சரிபார்க்கக் கோரி, அத்தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் மு.க. ஸ்டாலின் விண்ணப்பித்திருந்தார்.</p><p>இதையடுத்து, இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த EVM மற்றும் VVPAT இயந்திரங்கள் கடந்த மாதம் 29-ஆம் தேதி திறக்கப்பட்டு, விண்ணப்பதாரர் மற்றும் பிற வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டது.</p><p>பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவன பொறியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், மாதிரி வாக்குப்பதிவு மற்றும் VVPAT சீட்டுகள் சரிபார்க்கப்பட்டதில் எந்தவித முரண்பாடும் இல்லை என்றும், அனைத்து EVM-களும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">தேர்தல் ஆணையத்தின்</a> விதிமுறைகளின்படி முறையாக செயல்பட்டன என்றும் சான்றளிக்கப்பட்டது. இந்த ஆய்வு மற்றும் சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந்ததாக சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் 1.2 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/12-kg-of-ganja-seized-in-thoothukudi-2-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/12-kg-of-ganja-seized-in-thoothukudi-2-arrested#comments</comments><guid isPermaLink="false">fc683e64-2705-4c11-8318-8e8e2b319a85</guid><pubDate>Wed, 05 Aug 2026 16:53:00 +0000</pubDate><atom:updated>2026-08-05T16:53:00.589Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,போலீஸ்,Thoothukudi,Ganja,தூத்துக்குடி,கஞ்சா,Seizure,பறிமுதல்,patrol,ரோந்து பணி,2 arrested,2 பேர் கைது</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/4suqqok2/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கஞ்சா பறிமுதல், 2 பேர் கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/4suqqok2/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a>யில் 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 2 வாலிபர்களை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர்.</p><h2>போலீசார் ரோந்து பணி</h2><p>தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெப்பக்குளம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி வந்த 2 பேரை பிடித்து விசாரித்தபோது அவர்கள் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.</p><h2>1.2 கிலோ கஞ்சா பறிமுதல், 2 பேர் கைது</h2><p>இதையடுத்து மத்தியபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சட்ட விரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த தூத்துக்குடி, நேதாஜி நகரைச் சேர்ந்தவர்களான சொர்ணபாண்டி மகன் சோலைக்குமார் (வயது 32) மற்றும் ராஜசிங் மகன் ஜெர்ரிஸ்(33) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 200 கிராம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">கஞ்சாவை பறிமுதல்</a> செய்தார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் மழைநீர் வடிகால்வாய் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-mayor-orders-speedy-completion-of-stormwater-drains</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-mayor-orders-speedy-completion-of-stormwater-drains#comments</comments><guid isPermaLink="false">58597ad0-90b6-4ee4-a064-1e5e85e6f11b</guid><pubDate>Wed, 05 Aug 2026 16:30:39 +0000</pubDate><atom:updated>2026-08-05T16:30:39.501Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மாநகராட்சி ஆணையர்,மழைநீர் வடிகால்வாய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/y0brz4az/Untitled-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/y0brz4az/Untitled-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில், இன்று (05.08.2026) ரிப்பன் கட்டட வளாக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கூறியதாவது:-</p><p>சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். தற்போது மழைநீர் வடிகால்வாய்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை கண்காணித்து தொடர்ந்து, இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து வண்டல் சேகரிப்பு தொட்டிகளிலும் வண்டல்கள் தூர்வாரி சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதுவரை 1,10,082 வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் 92,657 வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் வண்டல்கள் தூர்வாரி சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதர வண்டல் சேகரிப்புத் தொட்டிகளிலும் இப்பணியினை மேற்கொள்ள வேண்டும். மேலும், இப்பணியினை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.</p><p>மழைநீர் வடிகால்வாய் கட்டும் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும். மழைநீர் வடிகால்வாய் இணைப்பு இல்லாத இடங்களில் இணைப்பினை ஏற்படுத்திட வேண்டும். மேம்பாட்டுப் பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் 32 குளங்கள் மற்றும் ஏரிகளின் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும்.</p><p>வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பாதிப்பு ஏற்படுத்தும் நிலையில் உள்ள 28,584 மரங்களின் கிளைகள் கத்தரித்து அகற்றப்பட்டுள்ளது. மேலும், இப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.</p><p>மேலும், மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள ஓட்டேரி நல்லா கால்வாய், விருகம்பாக்கம், கேப்டன் காட்டன் கால்வாய், டிரஸ்ட்புரம் கால்வாய், ரெட்டிக் குப்பம் கால்வாய், பள்ளிக்கரணை கால்வாய், செக்ரடரியேட் காலனி கால்வாய் உள்ளிட்ட கால்வாய்களில் வண்டல்கள் தூர்வாருதல், தாங்குச் சுவர், வேலி அமைத்தல் மற்றும் தடுப்புச் சுவரினை உயர்த்திக் கட்டுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்திடவும், பணிகள் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஆணையாளர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>மழைநீர் தேங்கும் தாழ்வான பகுதிகளில் மழைநீரை வெளியேற்றும் வகையில் பல்வேறு குதிரைத் திறன்கள் கொண்ட மோட்டார் பம்புகள், டிராக்டரில் பொருத்தப்பட்ட மோட்டார் பம்புகள், மின்சார மோட்டார் பம்புகளை செயல்படும் வகையில் தயார்நிலையில் வைத்திடவும், கூடுதலாக தேவைப்படும் மோட்டார் பம்புகளை தயார்நிலையில் வைத்திடவும், சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்காமல் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடித்திடவும், முகத்துவாரங்களில் முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளவும் வேண்டும்.</p><p>மாநகராட்சியின் சார்பில் 215 நிவாரண மையங்களில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுடன் தயார்நிலையில் வைத்திருக்கவும், தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை மீட்பதற்காக மாநகராட்சியின் 36 படகுகள் மற்றும் கூடுதலாக தேவைப்படும் படகுகளை தயார்நிலையில் வைத்திடவும், மழைநீர் சேமிப்புத் தொட்டி மற்றும் மோட்டார் அறைகளை தயார்நிலையில் வைத்திடவும் அனைத்து இயந்திரங்கள் மற்றும் மோட்டார்களின் பயன்பாட்டினை சோதனை மேற்கொண்டு தயார்ப்படுத்திடவும் வேண்டும். அனைத்து அலுவலர்களும் சேவைத் துறைகளுடன் ஒருங்கிணைந்து வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.</p><p>இக்கூட்டத்தில், இணை ஆணையாளர்கள் ஸ்ரேயா பி. சிங் (சுகாதாரம்), க. கற்பகம் (கல்வி), செ.சரவணன் (பணிகள்), துணை ஆணையாளர் (வருவாய் (ம) நிதி) சித்ரா விஜயன், வட்டார துணை ஆணையாளர்கள் எச். ஆர். கௌஷிக் (மத்தியம்), ஸ்வேதா சுமன் (வடக்கு) மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் இருந்து அரியானாவுக்கு ரெயிலில் செல்லும் மின்சார கார்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/electric-cars-travelling-by-train-from-thoothukudi-to-haryana</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/electric-cars-travelling-by-train-from-thoothukudi-to-haryana#comments</comments><guid isPermaLink="false">e9ab4faa-d853-44be-95f1-5653f9a9ae46</guid><pubDate>Wed, 05 Aug 2026 16:27:02 +0000</pubDate><atom:updated>2026-08-05T16:27:02.272Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அரியானா,தூத்துக்குடி,Haryana,Tuticorin,வின்பாஸ்ட் நிறுவனம்,Electric Car,Winfast Company,சரக்கு ரெயில்,Freight train,மின்சார கார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/u9yy12l6/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரெயிலில் அனுப்பப்படும் மின்சார கார்கள் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/u9yy12l6/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> துறைமுக சரக்கு நிலையத்தில் இருந்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE">அரியானா</a> மாநிலம் பல்லப்கார் நகருக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">ரெயில்</a> மூலம் 100 மின்சார கார்கள் அனுப்பி வைக்கப்பட்டன.</p><h2>சரக்கு ரெயிலில் அனுப்பப்படும் மின்சார கார்கள்</h2><p>தூத்துக்குடி சிப்காட் அருகில் வியட்நாமை சேர்ந்த வின்பாஸ்ட் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">மின்சார கார்</a> உற்பத்தி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு மாதத்துக்கு 1,000 முதல் 2,000 கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் கார்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன. அதன்படி கார்களை ஒரே நேரத்தில் அதிக அளவில் பாதுகாப்பாக அனுப்ப ரெயில் போக்குவரத்து உகந்ததாக உள்ளது. எனவே ஒவ்வொரு மாதமும் 10 சரக்கு ரெயில்களில் மின்சார கார்களை பல்வேறு நகரங்களுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><h2>சரக்கு கட்டண வருமானம் ரூ.22.07 லட்சம்</h2><p>தூத்துக்குடி துறைமுக சரக்கு நிலையத்தில் இருந்து நேற்று முதல் அரியானா மாநிலம் பல்லப்கார் நகருக்கு ரெயில் மூலம் 100 மின்சார கார்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதற்காக கார்களை ஏற்றும் வகையில் மாற்றி அமைக்கப்பட்ட 25 சரக்கு பெட்டிகளில் இந்த கார்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதன் மூலம் மதுரை கோட்டத்துக்கு சரக்கு கட்டண வருமானமாக ரூ.22.07 லட்சம் கிடைத்துள்ளது. இந்த சரக்கு போக்குவரத்துக்கு நடவடிக்கை எடுத்த முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் கணேஷ் தலைமையிலான வர்த்தக வளர்ச்சிக் குழுவுக்கு கோட்ட ரெயில்வே மேலாளர் ஓம்பிரகாஷ் மீனா பாராட்டு தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>
ஓசூரில் இருந்து கர்நாடகா மாநிலத்துக்கு மெட்ரோ ரெயில் திட்டம்- தமிழக அரசு தீவிரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-keen-on-metro-rail-project-from-hosur-to-karnataka</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-keen-on-metro-rail-project-from-hosur-to-karnataka#comments</comments><guid isPermaLink="false">a6c78e3b-a093-42bd-a248-3f5d205065b0</guid><pubDate>Wed, 05 Aug 2026 16:18:40 +0000</pubDate><atom:updated>2026-08-05T16:18:40.121Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt,மெட்ரோ ரெயில்,Metro Rail</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/wcl8dx3f/Metro-rail.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக அரசு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/wcl8dx3f/Metro-rail.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 118.9 கி.மீ. நீளத்திலான 3 வழித்தடங்களை கொண்ட கட்டம் 2-ன் பணிகள் ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பீட்டில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு வரையிலான தடத்தை, ஏற்கெனவே உள்ள வடபழனி மெட்ரோ நிலையத்துடன் இணைக்கப்படும் வகையில் 14.64 கிமீ. நீளத்திலான, 11 மெட்ரோ ரெயில் நிலையங்களைக் கொண்ட கட்டம் 2-ன் முதல் பகுதி, விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்படவுள்ளது.</p> <p>சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம், ஆவடி வழியாக கோயம்பேடு முதல் பட்டாபிராம், ஸ்ரீபெரும்புதூர் வழியாக திருப்பெரும்புதூர் வழியாக பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரையில் மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்ட மெட்ரோ ரெயில் திட்டங்கள் மத்திய அரசின் தீவிர பரிசீலனையின் கீழ் உள்ளன.</p> <p>இந்த கூடுதல் மெட்ரோ ரெயில் வழித்தடத் திட்டங்களுக்கு மத்திய அரசு விரைவான ஒப்புதல் வழங்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலிருந்து கர்நாடகா மாநிலம் பொம்மசந்திரா வரையிலான மெட்ரோ ரெயில்திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசு ஆகிய 2 அரசுகளுடனும் இணைந்து தமிழக அரசு முன்னெடுத்து வருவதாக தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title> திருச்சி-ஜோத்பூர் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு-தெற்கு ரெயில்வே அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/southern-railway-announces-the-attachment-of-an-additional-coach-to-the-trichy-jodhpur-humsafar-express</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/southern-railway-announces-the-attachment-of-an-additional-coach-to-the-trichy-jodhpur-humsafar-express#comments</comments><guid isPermaLink="false">8985af93-e64d-4a53-8eac-5b498993952d</guid><pubDate>Wed, 05 Aug 2026 15:55:38 +0000</pubDate><atom:updated>2026-08-05T15:55:38.756Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தெற்கு ரயில்வே,ரயில்வே</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/8ckmpf9m/Train-new.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/8ckmpf9m/Train-new.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,   </p><p>தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகரில் இருந்து திருச்சி வரும் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயிலில்(வண்டி எண்.22497) வருகிற 31-ந்தேதி வரையிலும், மறுமார்க்கமாக, திருச்சியில் இருந்து ஸ்ரீ கங்காநகர் செல்லும் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயிலில்(22498) வருகிற செப்டம்பர் 4-ந்தேதி வரையிலும் தற்காலிகமாக ஒரு 3-வது வகுப்பு ஏ.சி பெட்டி இணைத்து இயக்கப்படுகிறது.</p> <p>இதேபோல, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து திருச்சி வரும் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயிலில்(20481) நாளை (6-ந்தேதி) முதல் 26-ந்தேதி வரையிலும், மறுமார்க்கமாக, திருச்சியில் இருந்து ஜோத்பூர் செல்லும் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயிலில்(20482) வருகிற 8-ந்தேதி முதல் 29-ந்தேதி வரையிலும் தற்காலிகமாக ஒரு படுக்கை வசதி பெட்டி இணைத்து இயக்கப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழக பட்ஜெட்: அரசின் முக்கிய துறைகளுக்கான நிதிகளை குறைத்தது ஏன்? - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-budget-why-cut-funds-to-key-sectors-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-budget-why-cut-funds-to-key-sectors-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">a11976ab-22cf-4753-b121-4d562bd8313b</guid><pubDate>Wed, 05 Aug 2026 15:48:22 +0000</pubDate><atom:updated>2026-08-05T15:48:22.389Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,funds,நிதி,தமிழக பட்ஜெட்,Tamil Nadu Budget,Joseph,ஜோசப் விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/xl4tdnqz/nainar-nagendran.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/xl4tdnqz/nainar-nagendran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/tamilnadu-budget">தமிழக பட்ஜெட்டில்</a> அரசின் முக்கிய துறைகளுக்கான நிதியை குறைத்தது ஏன் என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார் இது தொடர்பாக, பாஜக மாநிலத் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன்</a> தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:- பட்ஜெட்டை குறைப்பது, தரத்தில் சமரசம் செய்வதற்கு சமம்!</p> <h2>குறைவாக நிதி ஒதுக்கீடு</h2><p> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">ஜோசப் விஜய்</a> தலைமையிலான அரசு தாக்கல் செய்துள்ள 2026- 2027 ஆண்டிற்கான பட்ஜெட்டில், தமிழகத்தின் மிக முக்கிய துறைகளுக்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, அரசு இயந்திரத்தினை மழுங்கடிக்க செய்யும் முடிவாகும். </p> <p><strong>கடந்த ஆண்டின் இடைக்கால பட்ஜெட்டில்,</strong> </p><p>- ரூ. 48,534 கோடியாக இருந்த பள்ளிக்கல்வி துறைக்கான நிதி, இந்த ஆண்டு ரூ. 44,527 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. </p><p>- உயர்கல்வித் துறைக்கான நிதி ரூ. 8,505 கோடியில் இருந்து ரூ. 8,393 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. </p><p>- நீர்வளத்துறைக்கான நிதி ரூ. 10,076 கோடியில் இருந்து ரூ. 9,264 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.</p><p>- எரிசக்தி துறைக்கான நிதி ரூ. 18,091 கோடியில் இருந்து ரூ. 15,828 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. </p><p>- கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறைக்கான நிதி ரூ. 1,943 கோடியில் இருந்து ரூ. 1,678 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.</p><h2>சந்தேகங்கள்</h2><p>இப்படி முக்கியமான துறைகளுக்கெல்லாம் நிதி ஒதுக்கீட்டை குறைத்த தவெக அரசு, தமிழகத்தின் கடன் மட்டும் ரூ.1.22 லட்சம் கோடியிலிருந்து ரூ.1.73 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக கணக்கு காட்டுவது பல்வேறு சந்தேகங்களை கிளப்புகிறது. </p><h2> நிதிகளை குறைத்தது ஏன்? </h2><p>எனவே, அரசின் முக்கிய துறைகளுக்கான நிதிகளை குறைத்தது ஏன்? இதனால் உண்டாகும் பாதிப்புகளை எதிர்கொள்ள அரசு என்ன மாதிரியான செயல்திட்டங்களை வைத்துள்ளது? செலவினங்கள் குறைவாக இருக்கும் பட்சத்தில், கடன் தேவை மட்டும் அதிகரிக்க காரணம் என்ன? "பணக் கசிவு "- ஐ சரி செய்கிறோம் என்ற பேர்வழியில், "மக்கள் நலன்"-இல் அரசு சமரசம் செய்கிறதா? உள்ளிட்ட மக்களின் சந்தேகங்களுக்கு முதல்அமைச்சர் ஜோசப் விஜய் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களும் உடனடியாக மக்கள் மன்றத்தில் பதிலளிக்க வேண்டும்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>கோவை: பைக் ஓட்டிக்கொண்டே லேப்டாப்பில் வேலை பார்த்த வாலிபர் - வைரலாகும் வீடியோ</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-bike-ottikkonda-laptopil-velai-partha-valibar-vairalagum-video</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-bike-ottikkonda-laptopil-velai-partha-valibar-vairalagum-video#comments</comments><guid isPermaLink="false">caa35b80-bd19-4c59-8cff-ef3803e7fb6c</guid><pubDate>Wed, 05 Aug 2026 15:36:29 +0000</pubDate><atom:updated>2026-08-05T15:36:29.735Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,Viral Video,வைரல் வீடியோ,கோயம்புத்தூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/nwy6eo66/Untitled-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/nwy6eo66/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோயம்புத்தூர்,</p><p>கோயம்புத்தூரில் சாலையில் வாலிபர் ஒருவர் பைக் ஓட்டி சென்றார். அவர் வலது கையால் பைக்கை ஓட்டிக்கொண்டு, இடது கையால் பைக் மீது லேப்டாப்பை வைத்து வேலை பார்த்து கொண்டே சென்றார். இதை கண்ட சக வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.</p><p>இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, "எந்த நிறுவனமாக இருந்தாலும் சரி நாளுக்குநாள் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கவே செய்யும். அதற்காக இப்படி ஆபத்தான முறையில் ஒரு கையால் பைக்கை ஓட்டிக் கொண்டு, மற்றொரு கையால் லேப்டாப்பில் வேலை பார்த்து கொண்டு செல்வது அவருக்கு மட்டுமின்றி, பிற வாகன ஓட்டிக ளுக்கும் ஆபத்தில் முடியும். இதுபோன்ற நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால்தான் விபத்துகளை தடுக்க முடியும்” என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள், கார் பறிமுதல்: வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tobacco-products-worth-rs1-lakh-car-seized-2-youths-from-northern-state-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tobacco-products-worth-rs1-lakh-car-seized-2-youths-from-northern-state-arrested#comments</comments><guid isPermaLink="false">26764e2d-9e30-402f-840a-0febd6ac5202</guid><pubDate>Wed, 05 Aug 2026 15:20:22 +0000</pubDate><atom:updated>2026-08-05T15:20:22.792Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,போலீஸ்,Thoothukudi,தூத்துக்குடி,Seizure,பறிமுதல்,Car,கார்,2 arrested,2 பேர் கைது,vehicle check,வாகன சோதனை,வடமாநில வாலிபர்கள்,Tobacco products,புகையிலை பொருட்கள்,northern state youth</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/n3ty6cqx/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ புகையிலை பொருட்கள் பறிமுதல், 2 பேர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/n3ty6cqx/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a>யில் கடத்தி வரப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள், காரை பறிமுதல் செய்த போலீசார், காரில் இருந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">ராஜஸ்தான்</a> மாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்களை கைது செய்தனர். </p><h2>போலீசார் வாகன சோதனை</h2><p>தூத்துக்குடி தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகப்படும்படி வந்த ஒரு காரை மடக்கி சோதனை செய்தனர். அந்த சோதனையில் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கூல்பேட் உள்ளிட்டவை பண்டல்களாக இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.</p><h2>ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள், கார் பறிமுதல், 2 பேர் கைது</h2><p>இதில் மொத்தம் 150 கிலோ 250 கிராம் எடையுள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">புகையிலை பொருட்கள்</a> இருந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 500 ஆகும். இந்த பொருட்களை காருடன் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">பறிமுதல்</a> செய்து அதில் இருந்த இரண்டு பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர் விசாரணையில் ராஜஸ்தான் மாநிலம் காளி பல்காரா பகுதியை சேர்ந்த அட்மன் ராம் மகன் வீரேந்திர பிஸ்னெய் (24) பாரத்சிங் மகன் பிரேம் சிங் (21) ஆகிய இரண்டு பேரையும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>தொழிலதிபரிடம் ரூ.40 லட்சம் பறித்ததாக புகார்: போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/inspector-bukhari-suspended-after-complaint-of-extorting-rs-40-lakh-from-businessman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/inspector-bukhari-suspended-after-complaint-of-extorting-rs-40-lakh-from-businessman#comments</comments><guid isPermaLink="false">74b2096f-b197-4d85-a16e-831faecd9375</guid><pubDate>Wed, 05 Aug 2026 15:08:16 +0000</pubDate><atom:updated>2026-08-05T15:08:16.155Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,சஸ்பெண்ட்,இன்ஸ்பெக்டர்,Complaint,suspended,தொழிலதிபர்,businessman</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/67r71of2/193.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சஸ்பெண்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/67r71of2/193.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தொழிலதிபரிடம் ரூ.40 லட்சம் பறித்ததாக இன்ஸ்பெக்டர் புகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.</p><h2>தொழில் அதிபர் மிரட்டி</h2><p>சென்னை பரங்கிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது புகாரி ரூ.40 லட்சம் லஞ்சப் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி திருவேங்கடத்தை போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற புகாரி அதன் பிறகு சவுகார்பேட்டையை சேர்ந்த தொழில் அதிபர் அகில் என்பவரை மிரட்டி ரூ. 40 லட்சம் பறித்துள்ளார்.</p><h2>சஸ்பெண்ட்</h2><p>இது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் இன்ஸ்பெக்டர் புகாரி அதிரடியாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போலீஸ் இணை ஆணையர் ஒருவரது பெயரைச் சொல்லி கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரூ.5 லட்சம் பணத்தை பறித்த நிலையில் தொழிலதிபர் அளித்த புகாரை தொடர்ந்து மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் புகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதற்கான உத்தரவை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D">போலீஸ் கமிஷனர்</a> அமல்ராஜ் பிறப்பித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>7 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-until-10-pm-in-7-districts</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-until-10-pm-in-7-districts#comments</comments><guid isPermaLink="false">e4c3a6db-0736-44e8-bdde-553197dcd6a2</guid><pubDate>Wed, 05 Aug 2026 14:38:02 +0000</pubDate><atom:updated>2026-08-05T14:38:02.993Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு,வானிலை முன்னறிவிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/vw8saa0t/Untitled-11.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/vw8saa0t/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுமார் 5.8 கி.மீ. உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 5.8 கி.மீ. முதல் 7.6 கி.மீ. உயரம் வரை தென் தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. வட தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இதன் காரணமாக தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மக்கள் பெரிதும் எதிர்பார்த்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-election-promises-that-people-have-been-waiting-for-so-long-must-be-fulfilled-communist-party-of-india-marxist</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-election-promises-that-people-have-been-waiting-for-so-long-must-be-fulfilled-communist-party-of-india-marxist#comments</comments><guid isPermaLink="false">1f305460-d97d-432b-a6b6-727aeaec6c25</guid><pubDate>Wed, 05 Aug 2026 14:32:08 +0000</pubDate><atom:updated>2026-08-05T14:32:08.385Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Communist Party of India,பெ.சண்முகம்,பட்ஜெட்,தேர்தல் வாக்குறுதிகள்,election promises,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/xhgb8qr0/pe.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/xhgb8qr0/pe.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மக்கள் பெரிதும் எதிர்பார்த்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. </p><p>இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">பெ.சண்முகம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்</h2><p>2026-27 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள மக்கள் நலனுக்கான அறிவிப்புகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. அதே நேரத்தில் அரசு தனியார் கூட்டு வினை என்ற அடிப்படையில் நவீன தாராளமய பாதையை ஒட்டியே திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருப்பது ஏற்கத்தக்கதல்ல என்பதையும், மக்கள் பெரிதும் எதிர்பார்த்த தேர்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இடம் பெற்றிருக்க வேண்டுமென்பதையும் அழுத்தமாக சுட்டிக் காட்டுகிறது.</p><p>புதிய கட்டண உயர்வுகள் ஏதும் முன்மொழியப்படவில்லை. அதே நேரத்தில் வருவாய் கசிவை தடுப்போமென்று உறுதிபடக் கூறியிருப்பது பாராட்டத்தக்கது. ஆனால் அரசியல் உறுதியோடு இது நிறைவேற்றப்பட வேண்டும்.</p><p>பள்ளிகளின், மாணவர் விடுதிகளின் கட்டமைப்பு மேம்பாடு, 500 புதிய அங்கன்வாடி கட்டிடங்கள், போதை ஒழிப்பு, சுகாதாரத்துறையில் கருவுற்ற மகளிர் பராமரிப்பு மையங்கள், 5 மண்டலங்களில் புற்று நோய் சிகிச்சை மையங்கள், மூத்த குடிமக்களுக்கான நடமாடும் மருத்துவகங்கள் - பாதுகாப்பு இல்லங்கள், அறிதல் திறன் குறைபாடு உடையோருக்கு நம்பிக்கை இல்லங்கள், புதிய கால்நடை காப்பீடு, ஜென் இசட் மாணவர்களுக்கு நவீன மிதி வண்டிகள், திருநர்களுக்கு சமூகப் பொருளாதார அதிகாரமளிப்பு, பொது நூலகங்கள் டிஜிட்டல் மயம், கிராமிய விளையாட்டு ஊக்குவிப்பு, ஒலிம்பிக் சிறப்பு மையங்கள், நாட்டுப் புறக் கலைஞர்கள் நிகழ்ச்சிகளுக்கு வாய்ப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.</p><p>மக்கள் நல அறிவிப்புகளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் உரிமைத்தொகை உயர்த்தப்படவில்லை. முதியோர் உதவித் தொகையும் உயர்த்தப்படவில்லை. பள்ளிக்கல்வி, உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் வெட்டு விழுந்திருப்பது என்பதும் ஏமாற்றம் அளிப்பதாகும்.</p> <h2>முற்போக்கான பாடத் திட்டம்</h2><p>10,000 அரசுப் பள்ளிகளில் "சூப்பர் கிளீன் சூப்பர் கேம்பஸ்" என்ற திட்டம் அறிவிக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்க துவக்கம் ஆகும். இது நடைமுறைப்படுத்தும் போது நிரந்தர துப்புரவு பணியாளர்கள், காவலர்கள் பள்ளிகளில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒரு பள்ளிக்கு ஒரு நாளைக்கு ரூ.380/- மட்டுமே கிடைக்கிறதென்பது ஒதுக்கீட்டின் போதாமையை வெளிப்படுத்துகிறது. பகுத்தறிவு, பாலின சமத்துவம், சுற்றுச் சூழல் போன்றவற்றை உள்ளடக்கிய முற்போக்கான பாடத் திட்டத்தை உருவாக்குவது என்ற அறிவிப்பும் வரவேற்புக்குரியது. ஆனால் கல்விக்கான நிதி ஒதுக்கீடு பட்ஜெட் ஆவணம் காண்கிற கனவுக்கு ஈடு கொடுப்பதாக இல்லை என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.</p><p>இளைஞர்களிடம் வேலை வாய்ப்பு குறித்த பெரும் எதிர்பார்ப்புகள் உள்ள நேரத்தில் வேலை உருவாக்கம் குறித்த திட்டவட்டமான அறிவிப்புகள் ஏதுமில்லை. வேலையில்லா கால நிவாரணம் அறிவிக்கப்படுமென்ற எதிர்பார்ப்பும் இடம்பெறவில்லை. 20000 இளைஞர்களுக்கு பணியிடப்பயிற்சி, உதவித் தொகை என்கிற திட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு மிகக் குறைவாக உள்ளது. இது தனியார்கள் மலிவான உழைப்பை பெற்றுக் கொள்வதற்கே பயன்படும்.</p><p>அரசு - தனியார் கூட்டு வினை என்பது மாணவர் விடுதி மேம்பாடு, நகர்ப்புற மேம்பாடு, மின் பகிர்மான பாதை, போக்குவரத்தில் மொத்த செலவின ஒப்பந்தம் ஆகியவற்றில் முன்மொழியப்பட்டுள்ளது. இது நவீன தாராளமய பாதையை அடியொற்றிய நடவடிக்கையே ஆகும். தனியார்கள் லாபம் பெறவே இந்த கூட்டு வினைகள் உதவுமே தவிர சமூகப் பொறுப்புடனான செயலாக்கத்திற்கு பயன்படாது.</p><h2>கூடுதல் நிதி ஒதுக்கீடு</h2><p>விவசாயிகளின் பயிர்க்கடன் ரத்து வரம்பு அதிகரிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை இதில் இடம் பெறவில்லை. அனைத்து விவசாயிகளும் பயன்பெறத்தக்க வகையில் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட வேண்டும். விபி ஜிராம் ஜி திட்டத்தில் மத்திய அரசு அறிவித்துள்ள, 125 நாட்களை நிறைவு செய்பவர்களுக்கு கூடுதல் 25 நாட்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு சராசரி வேலை நாட்கள் 44 முதல் 59 ஆகவே இருக்கிற சூழலில் சட்டப்படியான வேலை நாட்களை உறுதி செய்வதும், அதற்கு மேலாக 25 நாட்கள் வேலை தருவதுமே பெரும் பகுதி மக்களுக்கு பயனளிக்கும். இதற்கான நிதிப் பகிர்வுக்கு மத்திய அரசின் வஞ்சனையை எதிர்த்து குரல் கொடுத்து மாநில நிதி உரிமையை உறுதி செய்ய வேண்டும். காவிரி, கொள்ளிடம் குறுக்கே தடுப்பணை கட்டுவது பற்றி நீரியல் நிபுணர்கள் ஆலோசனை பெற்று கதவணைகளை உறுதி செய்ய வேண்டும். வைகை குண்டாறு இணைப்புத்திட்டம் தாமதம் பற்றி பட்ஜெட் குறிப்பிட்டு இருப்பது சரியானது. எனவே, கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து காலவரையறை தீர்மானித்து திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.</p><p>'திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர்' அறிவிப்பு வரவேற்கத்தக்கது. டெண்டர் முறையில் வெளிப்படைத்தன்மை பற்றி பட்ஜெட் பேசி இருப்பது நடைமுறையில் அமலாக வேண்டும். கிரானைட், மணல் மற்றும் கனிம வளங்கள் அனைத்தும் அரசின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு தனியார், ஒப்பந்த முறை தடுக்கப்பட வேண்டும். அரசின் வருவாய் உயர்வதற்கான வழியாகும் இது. சுற்றுலா ஊக்குவிப்பிற்கான அறிவிப்புகள் குறிப்பிடத்தக்கவை. மாமல்லபுரத்தை போல சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த கன்னியாகுமரியும் சுற்றுலா மேம்பாட்டில் இணைக்கப்பட வேண்டும். நதி நீர் சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா, சூழல் சுற்றுலா ஆகியன அரசின் வருவாய் பெருக்கத்திற்கு உதவும். மாநிலம் முழுமைக்கான ஒருங்கிணைந்த சுற்றுலா கொள்கை உருவாக்குவதும் முக்கியம். தென்மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி பற்றி பட்ஜெட் பேசியிருப்பது முக்கியமானது.</p><p>தொழிலாளர் உரிமைகள் பற்றி பட்ஜெட் எந்தக் குறிப்பையும் கொண்டதாக இல்லை. தொழிவாளர் தொகுப்புச் சட்டங்களை ஒன்றிய அரசு உருவாக்கிய வடிவில் தமிழ்நாட்டில் அமலாக்க மாட்டோமென்றும், மாநில அரசின் அதிகார வரம்பைப் பயன்படுத்தி தொழிலாளர் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்வோமென்றும் அறிவித்திட வேண்டும்.</p><p>பழைய பென்சன் திட்டம் பரிசீலிக்கப்படுமென்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும். அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைகள் களையப்பட வேண்டும்.</p><p>ஆதிதிராவிடர், பழங்குடி சிறப்பு உட்கூறு திட்டங்களின் கோட்பாடுகள் உறுதியாக கடைப்பிடிக்கப்பட்டு மடைமாற்றம் இல்லாத, இலக்கிடப்பட்டதாக, ஒதுக்கீடுகள் முழுமையாகப் பயன்படுத்ததக்கதாக அமலாக்கப்பட வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடி மாணவர் அவல்கல்வி ஊக்குவிப்பு வரவேற்கத்தக்கது. ஜூன் இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்ற காலவரம்பு நீக்கப்பட வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடி தொழில் முனைவோர் ஊக்குவிப்பு, வட்டி மானியம் ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு போதுமான அளவில் இல்லை.</p><p>மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையில் உயர்வு இல்லை என்பதும் ஏமாற்றம் தருகிறது. பணியில்லா கால மீன்பிடித் தொகை தற்போது ரூ.8000 வழங்கப்பட்டு வருகிறது. அதைவிட குறைவாக அறிவித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல.</p><p>சிறுபான்மையினர் நலனுக்கான அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. புனித ஹஜ் மானியம், கிறித்தவ இஸ்லாமிய மகளிர் சங்கங்கள், கபர்ஸ்தான், கல்லறைத் தோட்டங்களின் உட்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு பாராட்டத்தக்கது.</p><h2>புதிய வீடு கட்டும் திட்டம்</h2><p>புதிய வீடு கட்டும் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 5 லட்சமாக அதிகரிக்கப்பட்டு இருந்தாலும் இன்றைய கட்டுமான செலவுகளின் நிலைமையை ஒப்பிடும் போது அது போதுமானதல்ல. ரூ. 10 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும்.</p><p>மொத்தத்தில் பட்ஜெட் மக்கள் நல அம்சங்கள் குறித்த அறிவிப்புகள் சார்ந்தும், அது வெளிப்படுத்தி இருக்கிற எண்ணங்கள் சார்ந்தும் வரவேற்கத்தக்கது. இருப்பினும் அவற்றின் அமலாக்கம், நிதி ஒதுக்கீடு ஆகியவற்றில் உள்ள போதாமை களையப்பட வேண்டும். நவீன தாராளமய பொருளாதாரப் பாதையில் இருந்து விலகாமல் சாதாரண எளிய மக்களை உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்ய முடியாது. நிதி கூட்டாட்சி குறித்த வலுவான குரலை மத்திய அரசை நோக்கி எழுப்ப வேண்டும். தேர்தல் வாக்குறுதிகள் சார்ந்து மக்கள் மத்தியில் உள்ள எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.</p>]]></content:encoded></item><item><title>

50 ஆண்டுகளுக்கு கடனை குறைக்க முடியாது: நிதித்துறை செயலர் சித்திக் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/debt-cannot-be-reduced-for-50-years-finance-secretary-siddique-explains</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/debt-cannot-be-reduced-for-50-years-finance-secretary-siddique-explains#comments</comments><guid isPermaLink="false">2922a279-6d80-4a12-ba33-c1fcc7c4e766</guid><pubDate>Wed, 05 Aug 2026 14:30:40 +0000</pubDate><atom:updated>2026-08-05T14:30:40.015Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,தமிழக அரசு,பட்ஜெட்,Budget,தவெக அரசு,நிதித்துறை,vijay Govt</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/ix72j3f9/Finance.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நிதித்துறை செயலர் சித்திக்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/ix72j3f9/Finance.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><p>தமிழக பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு நிதித்துறை செயலாளர் சித்திக் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>தமிழ்நாட்டின் நிதி நிலைமை இக்கட்டான சூழலில் உள்ளது. வரவுகளை அதிகரிக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள. பெட்ரோல், டீசல் விலை ஏற்கனவே உயர்ந்துள்ளதால், மேலும் விலையேற்றும் திட்டம் இல்லை. கடந்த முறை ரூ.10 லட்சம் கோடியாக அரசின் கடன் சுமை இருந்தது. மாநில அரசின் கடன் சுமை கடந்த முறை 3.4% இருந்தது. இந்த ஆண்டு கடனை அதிகமாக உயர்த்தாததால் 3.17%ஆக குறையும். வருவாயை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டின் கடன் அடுத்த 50 ஆண்டுகளுக்கு குறைக்க முடியாது. தமிழக அரசின் கடன் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே செல்லும். மத்திய அரசின் அனுமதியோடு தான் கடன் வாங்குகிறோம்” என்றார். </p><h2>கடன் அளவு எவ்வளவு?</h2><p>பட்ஜெட்டில் நிதி அமைச்சர் மரியவில்சன் கடன் அளவு பற்றிய தகவலை வெளியிட்டார். அதில் கூறிய்தாவது; மாநிலத்தின் ஒட்டுமொத்த நிலுவைக் கடன் பொறுப்புகள், 2026-27-ம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மதிப்பிடப்பட்டிருந்த ரூ.10 லட்சத்து 99 ஆயிரத்து 458 கோடியுடன் ஒப்பிடுகையில், 2026-27-ம் ஆண்டு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ.10 லட்சத்து 98 ஆயிரத்து 768 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலுவைப் பொறுப்புகளில் மாநிலத்தின் பொதுக் கடன் மற்றும் பொதுக் கணக்குப் பொறுப்புகள் ஆகியவை அடங்கியுள்ளன.</p><h2>நிலைப் பெறுப்புகள்</h2><p>மேலும், சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்திற்காக பெறப்பட்ட ரூ.9,523 கோடியும் இந்நிலுவைப் பொறுப்புகளில் அடங்கியுள்ளது. இத்திட்டம், மத்திய அரசுத் துறைத் திட்டமாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசின் கணக்குகளில் உரிய கணக்கு சரிகட்டல்கள் மேற்கொள்ளப்படும்போது, நிலைப் பெறுப்புகள் 9,523 கோடி ரூபாய் குறையும்.</p><h2>வரவு-செலவுத் திட்டம்</h2><p>மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் (ஜி.எஸ்.டி.பி.) நிலுவைப் பொறுப்புகளின் விகிதம், 2026-27-ம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில் மதிப்பிடப்பட்டிருந்த 27.03 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், 2026-27-,ம் ஆண்டு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 27.01 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பொதுக்கடனை பொறுத்த அளவில் 2026-27-ம் ஆண்டில் ரூ.1 லட்சத்து 73 ஆயிரத்து 445கோடி கடன் பெறவும், ரூ.51,971 கோடியை திருப்பி செலுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டு இருந்த நிகர பொதுக்கடன், ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 653 கோடியாகவும், திருத்தப்பட்ட பட்ஜெட்டில் அது ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்து 964 கோடியாகவும் உள்ளது” என்றார்.</p>]]></content:encoded></item><item><title>மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தை தானா?- கனிமொழி எம்.பி. விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/did-the-change-mean-a-change-in-name-kanimozhi-mps-criticism</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/did-the-change-mean-a-change-in-name-kanimozhi-mps-criticism#comments</comments><guid isPermaLink="false">d013e359-6e3a-44d0-bd27-4f93a885b550</guid><pubDate>Wed, 05 Aug 2026 14:26:54 +0000</pubDate><atom:updated>2026-08-05T14:26:54.795Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,Chennai,சென்னை,X Page,Review,விமர்சனம்,Kanimozhi MP,தி.மு.க.,எக்ஸ் பக்கம்,தமிழக பட்ஜெட்,Tamil Nadu Budget,கனிமொழி எம்.பி.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/m8jet1m9/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கனிமொழி எம்.பி. ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/m8jet1m9/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? மக்கள் நலத்திட்டங்கள் எல்லாம் தி.மு.க. செயல்படுத்தியதாகவே உள்ளது என்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF">கனிமொழி எம்.பி.</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D">தமிழக பட்ஜெட்</a> குறித்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">விமர்சனம்</a> செய்துள்ளார்.</p><p>தமிழக சட்டசபையில் இன்று 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி, த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் தொடர்பாக வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: </p><p>த.வெ.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளாக அளித்த எதையும் செயல்படுத்தப் போவதில்லை என்பதையே இந்த நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கு உணர்த்தியுள்ளது.</p><p>இந்த அரசின் முக்கிய திட்டமான பெயர் மாற்றத் திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடாதது ஏமாற்றம் அளிக்கிறது. </p><p>மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? மக்கள் நலத்திட்டங்கள் எல்லாம் தி.மு.க. செயல்படுத்தியதாகவே உள்ளது!. </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: போலீஸ்காரர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/policeman-arrested-for-sexual-harassment-of-college-girl-on-bus</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/policeman-arrested-for-sexual-harassment-of-college-girl-on-bus#comments</comments><guid isPermaLink="false">f2c303bc-fb6a-4d4f-ab35-9bef69c0c4ce</guid><pubDate>Wed, 05 Aug 2026 14:19:36 +0000</pubDate><atom:updated>2026-08-05T14:19:36.989Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>College student,கல்லூரி மாணவி,கைது,arrested,பாலியல் தொல்லை,பேருந்து,sexually harassed,போலீஸ்காரர்,The policeman</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/mk7bek8z/police-abuse.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ போலீஸ்காரர்]]></media:title><media:description type="html"><![CDATA[ கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: போலீஸ்காரர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/mk7bek8z/police-abuse.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு வந்த பேருந்தில், கல்லூரி மாணவி ஒருவருக்கு<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88"> பாலியல் தொல்லை</a> கொடுத்த புகாரில் போத்தனூர் குற்றப்பிரிவு காவலர் மணிவேந்தன் (32) என்பவரை போலீஸ்காரர் கைது செய்துள்ளனர்.</p> <h2>பேருந்தில் அட்டூழியம்</h2><p>கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF">கல்லூரி மாணவி</a> ஒருவர் பயணம் செய்தார். அதே பேருந்தில் கோவை போத்தனூர் குற்றப்பிரிவில் காவலராக பணியாற்றி வரும் மணிவேந்தன் என்பவரும் வந்துள்ளார். பேருந்து சென்று கொண்டிருந்தபோது, மணிவேந்தன் அந்த கல்லூரி மாணவிக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, பேருந்துக்குள்ளேயே கூச்சலிட்டார்.</p><h2>மன்னிப்பு</h2><p>மாணவி கூச்சலிட்டதால் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் திரண்டனர். இதனால் பயந்துபோன காவலர் மணிவேந்தன், பேருந்து ஈச்சனேரி அருகே வந்தபோது உடனடியாக கீழே இறங்கினார். மேலும், தான் செய்த தவறுக்காக அந்த மாணவியிடம் அங்கேயே மன்னிப்பும் கேட்டுள்ளார்.</p> <h2>போலீஸ்காரர் கைது</h2><p>இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி இந்த சம்பவம் குறித்து பேரூர் காவல் நிலையத்தில்  புகார் அளித்தார். மாணவியின் புகாரை அடுத்து, போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து, போத்தனூர் குற்றப்பிரிவு காவலர் மணிவேந்தனை கைது செய்தனர். </p><p>இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் கடைகளில் முன்பதிவு செய்து மதுபானங்களை பெறும் நடைமுறையை கைவிட வேண்டும் - டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-shops-online-liquor-booking-must-be-scrapped-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-shops-online-liquor-booking-must-be-scrapped-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">52500d1e-e0f3-4623-aa3a-e51f34b87618</guid><pubDate>Wed, 05 Aug 2026 14:07:52 +0000</pubDate><atom:updated>2026-08-05T14:07:52.927Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,ஆன்லைன் முன்பதிவு,டாஸ்மாக்,Tasmac,மது விற்பனை,Online Booking</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/n3rk4g08/Untitled-10.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/n3rk4g08/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>டாஸ்மாக் கடைகளில் முன்பதிவு செய்து மதுபானங்களை பெறும் நடைமுறையை உடனடியாக கைவிடுமாறு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்  வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் தங்களுக்கு தேவையான மதுபானங்களை ஆன்லைனில் புக்கிங் செய்து நேரில் சென்று வாங்கிக் கொள்ளும் நடைமுறையை டாஸ்மாக் நிர்வாகம் நாளை முதல் அறிமுகப்படுத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>ஏற்கனவே, உணவகங்களுடன் கூடிய மதுபானக் கூடங்கள், டாஸ்மாக் கடைகளை தனியார் மயமாக்குதல் ஆகிய முடிவுகளை ஊடகங்களின் மூலம் கசியவிட்டு, பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பையடுத்து பின்வாங்கிய தவெக அரசு, தற்போது ஆன்லைன் மூலமாக மதுபானங்கள் முன்பதிவு என்ற மேலும் ஒரு தவறான முடிவை எடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. </p><p>மதுப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அரசு நிர்வாகம், மது வாங்குவதற்கான நடைமுறையை எளிமைப்படுத்தி ஊக்குவிப்பதும் அதன் மூலம் அரசின் வருவாயைப் பெருக்க நினைப்பதும் சமூக நலனுக்கு முற்றிலும் எதிரான நடவடிக்கையாகும்.</p><p>எனவே, அரசு நிர்வாகத்திற்கு மதுபானங்கள் மூலமாக கிடைக்கும் வருவாயை விட மக்களின் நலனே முக்கியம் என்பதை உணர்ந்து, டாஸ்மாக் கடைகளில் முன்பதிவு செய்து மதுபானங்களை பெறும் நடைமுறையை உடனடியாக கைவிடுமாறு டாஸ்மாக் நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.125 கோடியில் காமராஜர் சிறப்பு பள்ளிகள்: மாணிக்கம் தாகூர் எம்.பி. வரவேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kamaraj-special-schools-at-rs125-crore-manickam-thakur-mp-welcome</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kamaraj-special-schools-at-rs125-crore-manickam-thakur-mp-welcome#comments</comments><guid isPermaLink="false">207347ed-dd04-4382-a508-fae91ac0e906</guid><pubDate>Wed, 05 Aug 2026 13:48:37 +0000</pubDate><atom:updated>2026-08-05T13:48:37.613Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மாணிக்கம் தாகூர்,Reception,வரவேற்பு,தமிழக பட்ஜெட்,Tamil Nadu Budget,Congress leader,காங்கிரஸ் தலைவர்,Manickam Thakur MP</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/2gnykilx/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/2gnykilx/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>நகர்ப்புறங்களில் கிடைக்கும் தரமான கல்வி, கிராமப்புறங்களிலும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ரூ.125 கோடியில் பெருந்தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D">காமராஜர்</a> சிறப்புப் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பள்ளிகள்</a> அமைக்கப்படுவதை வரவேற்கிறேன் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">மாணிக்கம் தாகூர்</a> தெரிவித்துள்ளார்.</p><p>த.வெ.க. அரசின் முதல் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D">பட்ஜெட்</a> தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ப. மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: </p><p>தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் 60 ஆண்டுகளில் காணாத ஒரு சரித்திர நிகழ்வை மக்கள் பேராதரவோடு நிகழ்த்தி 2026-2027-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு சமர்ப்பித்திருக்கிறது. ஆட்சிப் பொறுப்பேற்கும்போது கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் கடன் சுமை இருமடங்காக உயர்ந்து 10 லட்சம் கோடி ரூபாய் அளவில் இருக்கிறது. நிதி ஆதாரம் மிகக்குறைவான நிலையில் தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிதி நிலை அறிக்கையை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன். </p><h2>நிதி ஆதாரங்களை பெருக்க முயற்சி</h2><p>மத்திய திட்ட ஆணையத்தின் முன்னாள் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் 5 உறுப்பினர்களை கொண்ட வருவாய் மேம்பாட்டுக்குழு அமைக்கப்பட்டு, மாநிலத்தின் நிதி ஆதாரங்களை பெருக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><h2>ரூ.125 கோடியில் காமராஜர் சிறப்பு பள்ளிகள்</h2><p>நகர்ப்புறங்களில் கிடைக்கும் தரமான கல்வி, கிராமப்புறங்களிலும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பெருந்தலைவர் காமராஜர் சிறப்புப் பள்ளிகள் ரூபாய் 125 கோடி செலவில் அமைக்கப்படுவதை வரவேற்கிறேன். இது ஒரு நவீன உண்டு, உறைவிடப் பள்ளி ஆகும். வெற்றி மடிக்கணினி திட்டத்தின் மூலம் கல்லூரி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த ரூபாய் 2,000 கோடி ஒதுக்கீட்டில் வெற்றி மடிக்கணினி திட்டம் தொடங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.</p><h2>அயோத்திதாசப் பண்டிதர் வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.300 கோடி</h2><p>நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் முழுமையான சமூக பொருளாதார வளர்ச்சியை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் அயோத்திதாசப் பண்டிதர் வாழ்விட மேம்பாட்டுத் திட்டம் ரூபாய் 300 கோடி ஒதுக்கீட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.</p><h2>இலவச ஆன்மீக சுற்றுலா</h2><p>முதல்முறையாக புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு தற்போது வழங்கப்பட்ட ரூ.25,000 உயர்த்தப்பட்டு ரூ.35,000ஆக வழங்கப்படும். அதேபோல, மூத்த குடிமக்களுக்கு இலவச ஆன்மீக சுற்றுலா மேற்கொள்ள வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.</p><h2>வெற்றி வீடு திட்டத்தில் ஒரு வீட்டிற்கு ரூ.5 லட்சம்</h2><p>உலக தரத்தில், சென்னை நதிகளான கூவம், அடையாறு ஆறுகள் தூய்மைபடுத்த தீவிரத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெற்றி வீடு திட்டத்தின் மூலமாக கூரை வீடுகளில் வசிப்பவர்களுக்கு காண்கிரீட் வீடுகள் கட்டுவதற்காக வீடு ஒன்றிற்கு தற்போது வழங்கப்படும் ரூ.3.10 லட்சத்திலிருந்து, ரூ.5 லட்சமாக உயர்த்த முடிவு செய்திருப்பதை வரவேற்கிறேன்.</p><h2>நெல்லை, தூத்துக்குடியில் விண்வெளி தொழில் மண்டலம் தொடக்கம்</h2><p>உலகத் தமிழர்களின் முதலீட்டுப் பிரிவின் மூலம் முதலீடுகளை ஈர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விண்வெளி தொழில் மண்டலம் நெல்லை, தூத்துக்குடியில் தொடங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒரு லட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி வழங்க பல்கலைக்கழகம் தொடங்கப்பட உள்ளது. சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் தொடங்க ரூ.2,142 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு விலையில்லா மின்சாரம் 100 யூனிட்டிலிருந்து, 200 ஆக உயர்த்த ரூ.1,545 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>த.வெ.க. அரசின் நிதி நிலை அறிக்கை, தமிழ்நாட்டின் வளர்ச்சியையும், வேலை வாய்ப்புகளையும் பெருக்குகிற நோக்கத்தில் அமைந்திருப்பதை வரவேற்கிறேன், பாராட்டுகிறேன். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அனைத்து மதுபானங்களுக்கும் ரசீது வழங்க வேண்டும் - டாஸ்மாக் நிர்வாகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/all-liquor-sales-must-include-receipts-high-court-orders-tasmac</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/all-liquor-sales-must-include-receipts-high-court-orders-tasmac#comments</comments><guid isPermaLink="false">7b1ab698-0454-41c5-b8f3-894f5e77ed35</guid><pubDate>Wed, 05 Aug 2026 13:35:13 +0000</pubDate><atom:updated>2026-08-05T13:35:13.697Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை ஐகோர்ட்டு,Chennai Highcourt,டாஸ்மாக்,Tasmac</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/p9dxrcdt/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/p9dxrcdt/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விற்கப்படும் மதுபானங்களுக்கு ரசீது வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.</p><p>சென்னையில் பெரம்பூர், கொளத்தூர், மாதவரம் உள்ளிட்ட 30 இடங்களில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்த ஊழியர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை செம்பியத்தைச் சேர்ந்த ஜி.தேவராஜன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.</p><p>அதுபோல, 2022-ம் ஆண்டு முதல் 2026-ம் ஆண்டு வரை கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை சம்பந்தப்பட்ட பணியாளர்களிடமிருந்து வசூலித்து அரசுக்கு செலுத்த வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு எதிராக பணி நீக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.</p><p>இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, டாஸ்மாக் நிர்வாகத்தின் தரப்பில் மனுதாரர் சுட்டிக்காட்டிய கடைகளில் 5 கடைகள் மூடப்பட்டுவிட்டது என்று தெரிவிக்கப்பட்டு, மீதமுள்ள கடைகளுக்கான இருப்பு மற்றும் விற்பனை பதிவேடு குறித்து கடை வாரியாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.</p><p>இந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதி, டாஸ்மாக் கடைகளில் ரசீது புத்தகங்கள் பராமரிக்கப்படாததையும், நுகர்வோருக்கு ரசீதுகள் வழங்கப்படாததையும் சுட்டிக்காட்டி தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும், ரசீது புத்தகங்களை பராமரிக்க வேண்டும் என்றும் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.</p><p>மேலும், நுகர்வோர் வாங்கும் ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரசீது கொடுக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்த அறிக்கையை டாஸ்மாக் நிர்வாகம் தாக்கல் செய்வதற்காக, வழக்கை ஆகஸ்ட் 7-ம் தேதி தள்ளிவைத்து உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக பட்ஜெட் : வெற்றி எனும் பெயரை மட்டுமே கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-budget-a-blank-report-named-success-seeman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-budget-a-blank-report-named-success-seeman#comments</comments><guid isPermaLink="false">7168afb8-7352-4d03-8173-1a9c874e5a15</guid><pubDate>Wed, 05 Aug 2026 13:02:39 +0000</pubDate><atom:updated>2026-08-05T13:02:39.334Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,Seeman,Higher Education Department,வெற்றி,தமிழக பட்ஜெட்,Tamil Nadu Budget,உயர் கல்வித்துறை அமைச்சர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/2kckqbyc/seeman.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ சீமான்]]></media:title><media:description type="html"><![CDATA[ நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/2kckqbyc/seeman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D">தமிழக பட்ஜெட்</a> வெற்றி எனும் பெயரை மட்டுமே கொண்டுள்ள வெற்று அறிக்கை என்று சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் <a href="https://www.dailythanthi.com/topic/seeman">சீமான்</a> தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-</p><h2>நிதிநிலை அறிக்கை</h2><p>மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் ஆக்கப்பூர்வ திட்டங்களோ, மாநிலத்தின் நிதிச்சுமையை குறைக்கும் மாற்றுப்பொருளாதார பெருக்கத்திற்கான நடவடிக்கைகளோ எதுவுமற்று, வெற்றி எனும் பெயரை மட்டுமே கொண்டுள்ள வெற்று அறிக்கைதான் தவெக அரசின் நிதிநிலை அறிக்கை!</p><h2>வெற்று அறிக்கை</h2><p>தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026-27ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை பெரும் ஏமாற்றமளிக்கிறது. மாநிலத்தின் வருவாய் பெருக்கத்திற்கோ, புதிய திட்டங்களை முன்னெடுத்து செல்வதற்கோ, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கோ, மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கோ என எந்த ஆக்கப்பூர்வ நோக்கங்களும், திட்டங்களும் இல்லாத வெற்று அறிக்கையாக நிதிநிலை அறிக்கையை தயாரித்திருப்பது தவெக அரசின் நிதி நிர்வாக மேலாண்மையின்மையையே காட்டுகிறது. தேர்தல் சமயத்தில் வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதிகளாக அள்ளி வீசிவிட்டு, இப்போது அவற்றைத் திட்டமும், நோக்கமுமின்றி தறிகெட்டு நிற்பது வெட்கக்கேடானது. </p><h2>பள்ளிக்கல்வித்துறை</h2><p>முந்தைய 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டதைவிட 2,240 கோடி ரூபாய் குறைவான நிதியை ஒதுக்கியிருக்கிறது தவெக அரசு. இத்தோடு, உயர் கல்வித்துறைக்கு 100 கோடி ரூபாய் குறைவாகவும் ஒதுக்கீடு செய்திருக்கிறது. தொழில்வளர்ச்சி துறைக்கு 1,419 கோடி ரூபாயும், கைத்தறி துறைக்கு 302 கோடி ரூபாயும், நீர்வளத்துறைக்கு 196 கோடி ரூபாயும் குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மின்துறைக்கான நிதியையும்கூட 5,350 கோடி ரூபாய் அளவுக்குக்குக் குறைத்துள்ளது. </p> <h2>போதுமானதல்ல!</h2><p>இவ்வாறாக, கல்வி, மின்துறை, தொழில் வளர்ச்சி, கைத்தறி, நீர்வளத்துறை உள்ளிட்ட அதிமுக்கிய துறைகளுக்கான நிதியை குறைத்திருப்பது பெரும் நிர்வாக வீழ்ச்சியை நோக்கி தமிழ்நாட்டை கொண்டு செல்லுமென்பது தெளிவாகிறது. தொழிலாளர் நலத்துறைக்கு கூடுதலாக 30 கோடி ரூபாயும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு கூடுதலாக 50 கோடி ரூபாயும், சமூகநீதித்துறைக்கு கூடுதலாக 13 கோடி ரூபாயும் எனக் குறைவான அளவாக நிதியை கூட்டி ஒதுக்கீடு செய்திருப்பது போதுமானதல்ல!</p><h2>ஏமாற்று வேலையாகும்</h2><p>தவெக தனது தேர்தல் அறிக்கையில் வழங்கிய வாக்குறுதிகளான 2,500 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை, ஆண்டுக்கு 6 எரிகாற்று உருளைக்கான பணத்தை வங்கிக்கணக்கில் செலுத்துதல், வேலை இல்லாத இளைஞர்களுக்கு 4,000 ரூபாய் நிதியளிப்பு, பெண்களுக்கான இலவசப் போக்குவரத்துப்பயணம் உள்ளிட்டவை குறித்து எந்தவொரு அறிவிப்பையும் இந்நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடாததன் மூலம் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்களை முற்றாக ஏமாற்றியிருக்கிறது தவெக அரசு. மீன்பிடி தடைக்காலத்தில் 20,000 உதவித்தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்த தவெக, தற்போது 7,000 ரூபாய் மட்டுமே வழங்கப்படும் எனக் கூறியிருப்பது ஏமாற்று வேலையாகும்.</p> <h2>பயிர்க்கடன் தள்ளுபடி</h2><p>சமூகநீதியை உணர்வுப்பூர்வமாக ஏற்றிருக்கிறோம் எனக் கூறிவிட்டு, மாநில அரசின் சார்பில் சாதிவாரிக்கணக்கெடுப்பு எடுப்பது குறித்து எந்தவொரு அறிவிப்பையும் அளிக்காதது மோசடித்தனமாகும். பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாது ஏமாற்றிய நிலையில், குறுவை சாகுபடி பொய்த்துப் போனதால் பாதிக்கப்பட்ட காவிரிப்படுகை விவசாயிகள் ஏக்கருக்கு 25,000 ரூபாய் இழப்பீடு கேட்டு நிற்கும் நிலையில், அதனைப் பற்றிப் பேசாது கடந்துபோவது உழவர் பெருங்குடி மக்களுக்குச் செய்யும் துரோகமாகும்.</p><h2>நிதியை குறைத்தது ஏன்?</h2><p> பதிவுத்துறையில் தவெக அரசு செய்த சீர்திருத்தங்கள் மூலம் ஆண்டுக்கு கூடுதலாக 15,000 கோடி வருவாய் கிடைக்கும் என அரசுத்தரப்பில் கூறப்படுவது உண்மையென்றால், அதிமுக்கிய துறைகளுக்கு நிதியை குறைத்தது ஏன்? எனும் கேள்வி எழுகிறது. பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில்  பிரசவத்தின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அரசு கூறுவது அவமானகரமானது. மருத்துவமனையின் தரத்தை உயர்த்தி, மக்களை அரசு மருத்துவமனைகளின் பக்கம் திருப்பாது, தங்க மோதிரம் மூலம் நாட செய்வதாக கூறுவது அவல நிலையின் உச்சம்.</p> <h2>25,000 கோடி ரூபாய் கடன் </h2><p>மூன்று மாதத்தைக்கூட நிறைவுசெய்யா தவெகவின் ஆட்சியில் ஏறக்குறைய 25,000 கோடி ரூபாய்வரை கடனை வாங்கி வைத்திருப்பதுதான் இவ்வாட்சியின் நிதிநிர்வாக மேலாண்மையின் இலட்சணமாகும். தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2031ஆம் ஆண்டிற்குள் 1.5 ட்ரில்லியன் டாலராக உயர்த்துவோம் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ள தவெக அரசு, அந்த இலக்கை எப்படி அடைவோம்? என்பது குறித்து எவ்வித தெளிவான வழிமுறையையும் குறிப்பிடவில்லை. நிதியமைச்சர் மரிய வில்சன் நிதிநிலை அறிக்கையை தங்கு தடையின்றி வாசிக்கத்தான் தடுமாறுகிறாரென்று பார்த்தால், நிதிநிலை அறிக்கையின் உள்ளடக்கம் அதனைவிடத் தடுமாற்றமாக இருக்கிறது. </p><h2>பெயரில் மட்டுமே வெற்றி</h2><p>மொத்தத்தில், தமிழ்நாட்டை முன்னேற்றி கொண்டு செல்வதற்கான ஆக்கப்பூர்வமான திட்டங்கள் ஏதும் இல்லாது, அரசின் வருவாயை அதிகரிப்பதற்கோ, மாற்றுப்பொருளாதார பெருக்கத்திற்கோ, நிதிப்பற்றாக்குறையை குறைப்பதற்கோ, கடன் சுமையை குறைப்பதற்கோ பொருளாதாரச் சீர்திருத்தத் திட்டங்கள், நடவடிக்கைகள் ஏதும் இல்லாது, பெயரில் மட்டுமே வெற்றியை கொண்டுள்ள வெற்று நிதிநிலை அறிக்கைதான் தவெக அரசின் நிதிநிலை அறிக்கையாகும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் 19 மண்டலங்களில் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம்: 8-ந்தேதி நடக்கிறது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/public-distribution-system-grievance-redressal-camp-to-be-held-in-19-zones-of-chennai-on-the-8th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/public-distribution-system-grievance-redressal-camp-to-be-held-in-19-zones-of-chennai-on-the-8th#comments</comments><guid isPermaLink="false">61ffeb69-6022-49d3-bd9f-df8826ed7915</guid><pubDate>Wed, 05 Aug 2026 12:43:51 +0000</pubDate><atom:updated>2026-08-05T12:43:51.746Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Distribution,பொது விநியோக திட்ட சிறப்பு முகாம்,Ration card,குடும்ப அட்டை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-08/q3jnzur5/STate-09.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னையில் உள்ள 19 மண்டலங்களில் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் வரும் 8-ந்தேதி நடைபெற உள்ளது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-08/q3jnzur5/STate-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் உள்ள 19 மண்டலங்களில் பொது விநியோகத் திட்ட <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மக்கள் குறைதீர் முகாம்</a> வரும் 8-ந்தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் பிரதி மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் 2026 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் வரும் சனிக்கிழமை 08.08.2026 அன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.</p><p>குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும்.</p><p>பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பொதுமக்கள்</a> இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சேவைகள் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்களில் பெறப்படும் கடவுச்சொல் வழியாக (OTP) மட்டுமே மேற்கொள்ளப்படும் என்பதால் குடும்ப அட்டைதாரர்கள் பதிவு செய்யப்பட்ட கைபேசியுடன் மண்டல அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.</p><p>சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">குடும்ப அட்டைதாரர்கள் </a>இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழக பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு நிதி குறைப்பா? - அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-there-a-funding-cut-for-school-education-in-tamil-nadu-budget-minister-rajmohan-explains</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-there-a-funding-cut-for-school-education-in-tamil-nadu-budget-minister-rajmohan-explains#comments</comments><guid isPermaLink="false">f39acec4-2675-41dc-9d7f-7b96aa18070c</guid><pubDate>Wed, 05 Aug 2026 12:38:43 +0000</pubDate><atom:updated>2026-08-05T12:38:43.924Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>School Education Department,பள்ளிக் கல்வித் துறை,தமிழக பட்ஜெட்,TN Budget,Minister Rajmohan,அமைச்சர் ராஜ்மோகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/3qt3nus8/Untitled-8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ராஜ்மோகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/3qt3nus8/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>2025-26 திமுக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு செலவிடப்பட்டதைவிட சுமார் 2,176 கோடி ரூபாய் தவெக அரசின் பட்ஜெட்டில் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>வெற்றிக்கழக பட்ஜெட்டே பள்ளிக்கல்விக்கு உண்மையான நிதி உயர்வை தந்துள்ளது! 2025-26 திமுக பட்ஜெட்டில் பள்ளிக்கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதி 46,767 கோடி ரூபாய். இதில், இடைக்கால பட்ஜெட்டுக்கு முன்பு வரை செலவிடப்பட்ட தொகை 42,351 கோடி ரூபாய் மட்டும்தான்.</p><p>இடைக்கால பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், பல ஊதிய வரம்புகளையும், செலவினங்களையும் மிகை மதிப்பீடு செய்து திமுகவின் கடைசி பட்ஜெட்டான 2026-27 இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு 48,534 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டது.</p><p>அதாவது, 2025-26 முழுமையான ஆண்டு பட்ஜெட்டில் உண்மையாக செலவு செய்யப்பட்டதைவிட சுமார் 6,003 கோடி ரூபாய் காரணமே இல்லாமல் உயர்த்தப்பட்டது. காரணமற்ற இந்த உயர்வுக்கு பின்னால் இருந்தது தவறான கணக்கீடுகளும், தேவையற்ற நிதி உயர்வுகளும் மட்டுமே.</p><p>வெற்றிக்கழக ஆட்சி அமைந்ததும் அதை முறையாக சரிசெய்து, காரணமற்ற நிதி உயர்வுகளை குறைத்து, 2025-26 திமுக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு செலவிடப்பட்டதைவிட சுமார் 2,176 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதைக்குறித்து நிதித்துறை செயலாளர் தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.</p><p>வெற்றிக்கழக அரசால் ஒதுக்கப்பட்டுள்ள இந்த 44,527 கோடி ரூபாயை முதல்-அமைச்சரின் வழிகாட்டுதல்படி திறம்பட கையாண்டு, முழுமையான பலன்கள் மாணவர்களையும், ஆசிரியர்களையும், பள்ளிக்கல்வி நிர்வாகத்தையும் சென்று சேரும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.</p><p>இந்த உண்மையான கூடுதல் ஒதுக்கீடு, பள்ளிக்கல்வித்துறையின் மேன்மையான லட்சியங்களை முழுமையாக நிறைவேற்றும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">வெற்றிக்கழக பட்ஜெட்டே பள்ளிக்கல்விக்கு உண்மையான நிதி உயர்வை தந்துள்ளது!<br><br>2025-26 திமுக பட்ஜெட்டில் பள்ளிக்கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதி 46,767 கோடி ரூபாய். இதில், இடைக்கால பட்ஜெட்டுக்கு முன்பு வரை செலவிடப்பட்ட தொகை 42,351 கோடி ரூபாய் மட்டும் தான்.<br><br>இடைக்கால பட்ஜெட்டில் புதிய… <a href="https://t.co/VDcjutpXo9">pic.twitter.com/VDcjutpXo9</a></p>&mdash; Rajmohan (@imrajmohan) <a href="https://x.com/imrajmohan/status/2084928730917445787?ref_src=twsrc%5Etfw">August 5, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>நிதி மேலாண்மையில் தீவிர கவனம் செலுத்தினால் மட்டும் தான் தமிழகத்தில் வளர்ச்சி தொடரும் - ஈ.ஆர். ஈஸ்வரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/only-if-we-pay-serious-attention-to-financial-management-will-development-continue-in-tamil-nadu-er-easwaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/only-if-we-pay-serious-attention-to-financial-management-will-development-continue-in-tamil-nadu-er-easwaran#comments</comments><guid isPermaLink="false">008d5083-0165-4551-baac-a02385970e10</guid><pubDate>Wed, 05 Aug 2026 12:33:35 +0000</pubDate><atom:updated>2026-08-05T12:33:35.077Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Development,வளர்ச்சி,நிதி மேலாண்மை,Financial management,ஈ.ஆர்.ஈஸ்வரன்,E.R. Easwaran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/0u4n5nka/191.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஈ.ஆர். ஈஸ்வரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/0u4n5nka/191.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நிதி மேலாண்மையில் தீவிர கவனம் செலுத்தினால் மட்டும் தான் தமிழகத்தில் வளர்ச்சி தொடரும் என்று ஈ.ஆர். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%88.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">ஈ.ஆர். ஈஸ்வரன்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>முதல் நிதிநிலை அறிக்கை</h2><p>தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை மக்கள் எதிர்பார்த்த திட்டங்கள் இல்லாமல் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. பள்ளியில் படிக்கின்ற வயதிலேயே தனிமனித ஒழுக்கத்தை மேம்படுத்தினால் தான் மது இல்லா தமிழகம் என்ற கனவு நனவாகும் குற்றங்கள் குறையும். ஆனால் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பில் அதற்கான முன்னெடுப்பு ஏதுமில்லை. </p><p>மாநிலத்தில் இருக்கின்ற நதிகளை இணைப்பதற்கான அறிவிப்பு உள்ளது. தேவையான நிதி இல்லை. ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் பற்றிய அறிவிப்பை வரவேற்கின்றோம். ஆனால் அதை சாத்தியப்படுத்துவதற்கான விளக்கங்கள் இல்லை. பாண்டியாறு - புன்னம்புழா திட்டம், திருமணிமுத்தாறு திட்டம், காவிரி உபரி நீரை வசிஷ்ட நதிக்கு கொண்டு போகும் திட்டம், மேட்டூர் உபரி நீர் திட்டம் போன்ற திட்டங்களின் பெயரே நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. கொங்கு மண்டல மக்கள் பெரிதும் எதிர்பார்த்த அவிநாசி அத்திக்கடவு திட்ட விரிவாக்கம் பற்றி குறிப்பு ஏதும் இல்லை.</p><h2>சுற்றுலா</h2><p>சுற்றுலா வளர்ச்சி என்பது தமிழகத்தின் வளர்ச்சிக்கு உதவக் கூடியதாகும். நிதிநிலை அறிக்கையில் சுற்றுலாத் துறையை பற்றி நிறைய பேசப்பட்டிருக்கிறது. ஆனால் வளர்ச்சிக்கான திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. குறிப்பாக மருத்துவ கட்டமைப்பில் தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்த மாநிலமாக இருக்கிறது. சிகிச்சைக்காக பல வெளிநாட்டினரும் இங்கே வருவதை விரிவாக்க மருத்துவ சுற்றுலா ஆரம்பித்தால் வருமானம் பெருகும். ஆனால் அதைப் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை.</p><h2>தொழில் முதலீடுகள்</h2><p>கொடைக்கானல், வால்பாறை போன்ற மலைகளுக்கு ரோப் கார் வசதி செய்தால் சுற்றுலா பயணிகள் வருவது அதிகரிக்கும். புதிதாக காவிரி, வைகை, தாமிரபரணியில் நதி சுற்றுலா என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் 53 கோடி நிதியை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும். 2035-ல் 1.5 டிரில்லியன் பொருளாதாரம் என்று ஆசை காட்டப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்கான முன்னெடுப்பு இல்லை. </p><p>புதிய தொழில் முதலீடுகள் வந்தால் தான் அது சாத்தியம். அது நிறைவேற வேண்டுமென்றால் பரந்தூர் விமான நிலையம் அவசியம். சென்ற அரசாங்கத்தில் பரந்தூர் விமான நிலையத்தை அடிப்படையாகக் கொண்டு சுங்குவார்சத்திரம் வரை மெட்ரோ ரயில் விரிவாக்கம் அறிவிக்கப்பட்டது. சுங்குவார்சத்திரம் மெட்ரோ ரயில் பற்றி பேசிய நிதிநிலை அறிக்கை பரந்தூர் விமான நிலையத்தை பற்றி பேசவே இல்லை. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை பற்றி இந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.</p><p>கிராமப்புறங்களில் கூரை வீடுகளை மாற்றி கான்கிரீட் வீடுகளை கட்ட மாநில அரசின் மானியமாக 5 லட்சம் கொடுக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. தொழில்நுட்ப ஜவுளிக்கான வளர்ச்சியை பற்றி அறிவித்திருப்பது ஜவுளி தொழில் வளர்ச்சிக்கு உதவும். திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் சென்டர் அறிவிப்பும் ஜவுளித்துறை வளர்ச்சிக்கு உதவும்.</p><h2>டாஸ்மாக் வருமானம்</h2><p>போதையில்லா தமிழகத்தை நோக்கி வெற்றி தமிழகம் வீரநடை போடும் என்று அறிவித்துவிட்டு 51,000 கோடியாக இருந்த டாஸ்மாக் வருமானத்தை 55,000 கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்திருப்பது முரண்பாடாக இருக்கிறது. பள்ளி கட்டமைப்பு வளர்ச்சிக்காக அறிவிக்கப்பட்டிருக்கின்ற 2.132 கோடி போதிய அளவாக இல்லை. விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்த முழு விவசாய கடன் தள்ளுபடி அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது. தமிழ்நாட்டின் நிர்வாக தேவைகளுக்கே கடன் வாங்குகின்ற நிலையை இந்த நிதி நிலை அறிக்கை காட்டுகிறது. இந்த சூழலில் தமிழகம் எப்படி வளர்ச்சி பெறும். அரசு துறைகளில் செயற்கை தொழில்நுட்பம் புகுத்தப்பட்டு அதிகாரிகளின் வேலைப்பளு குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது அரசு துறைகளில் ஆட்குறைப்புக்கான நடவடிக்கையாகும். இது ஆட்குறைப்பு நடவடிக்கைகளுக்கான முன்னெடுப்பா!</p><p>சமர்ப்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை புதிய அறிவிப்புகள் ஏதும் இல்லாமல் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. தமிழ்நாடு முதல்-அமைச்சர் நிதி மேலாண்மையில் தீவிர கவனம் செலுத்தினால் மட்டும்தான் தமிழகத்தில் வளர்ச்சி தொடரும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அடையாறு கோட்டத்தில் நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/consumer-grievance-meeting-in-adayar-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/consumer-grievance-meeting-in-adayar-tomorrow#comments</comments><guid isPermaLink="false">3ee4f716-a4f1-4438-83fa-bface59b7f55</guid><pubDate>Wed, 05 Aug 2026 12:24:26 +0000</pubDate><atom:updated>2026-08-05T12:24:26.401Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அடையாறு,Adyar,electricity consumers,மின்நுகர்வோர்,குறைதீர்க்கும் கூட்டம்,Meet</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/5xly9xrl/eb.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மின்நுகர்வோர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/5xly9xrl/eb.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அடையாறு கோட்டத்தில் வரும் நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம். இது தொடர்பாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>காலை 10.30 மணிக்கு</h2><p>அடையாறு கோட்ட <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்</a> நாளை காலை 10.30 மணிக்கு செயற் பொறியாளர்/இ&amp;ப/அடையாறு, தரைதளம், 110/33-11 கி.வோ, வேளச்சேரி துணை மின் நிலைய வளாகம், வேளச்சேரி மெயின் ரோடு, வேளச்சேரி, சென்னை-42 அமைந்துள்ள விலாசத்தில் நடைபெற உள்ளது.</p><h2>நிவாரணம்</h2><p>பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் மின்சாரத்துறை சார்ந்த குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என மேற்பார்வை பொறியாளர்/ சென்னை மின்பகிர்மான வட்டம்/ அடையாறு (தெற்கு-II)கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்படுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு அரசின் கடன் தொகை ரூ.20 லட்சம் கோடியாக உயரும் - தங்கம் தென்னரசு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-governments-debt-will-rise-to-20-lakh-crore-thangam-thennarasu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-governments-debt-will-rise-to-20-lakh-crore-thangam-thennarasu#comments</comments><guid isPermaLink="false">0eb81dea-24cf-4ba9-8168-d8a97e3b88ae</guid><pubDate>Wed, 05 Aug 2026 12:20:26 +0000</pubDate><atom:updated>2026-08-05T12:20:26.957Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,Tamil Nadu,TN govt,தங்கம் தென்னரசு,Thangam Thenarasu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/5gjobvdw/Thangam-thennarasu.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம் தென்னரசு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/5gjobvdw/Thangam-thennarasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: </p><p>தவெக அரசின் நிதி நிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது. தவெகவின் தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் பட்ஜெட்டில் இல்லை. நிதி அமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கை தொடர்பாக நான் அப்போது தந்த விளக்கம் இப்போதும் சரியாக உள்ளது. அரசின் கடன் உயரும் என்று கூறினேன்;</p><p>தித் துறை செயலர் தனது விளக்கத்திலும் அதையே கூறியுள்ளார் திமுக அரசு என்ன தந்ததோ அதையேதான் தவெக பட்ஜெட்டில் தந்துள்ளது. "மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்குவது குறித்து பட்ஜெட்டில் குறிப்பிடவே இல்லை. தவெக அரசு 3 மாதங்களில் ரூ.22,000 கோடியை கடனாக வாங்கிய நிலையில், 5 ஆண்டுகள் முடியும்போது ஒட்டுமொத்த கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.  "மக்கள் எதிர்பார்ப்பை பட்ஜெட் பொய்யாக்கி விட்டது. </p><p>ரூ.48,000 கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை ரூ.55,000 கோடியாக உயர்ந்துள்ளது.  திமுக ஆட்சியில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ.2.29 லட்சம் கோடி. தற்போது வரி வருவாய் ரூ.2.26 லட்சம் கோடியாக சரிவு. தமிழ் வளர்ச்சித்துறைக்கு வெறும் 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றார். </p>]]></content:encoded></item><item><title>நெல்லையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோவில் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/man-arrested-for-sexually-harassing-girl-in-nellai-under-pocso</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/man-arrested-for-sexually-harassing-girl-in-nellai-under-pocso#comments</comments><guid isPermaLink="false">a0210219-ee33-4d4d-a54c-9fe2a5868032</guid><pubDate>Wed, 05 Aug 2026 12:07:11 +0000</pubDate><atom:updated>2026-08-05T12:07:11.659Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Tirunelveli,திருநெல்வேலி,arrested,Sexual harassment,பாலியல் தொல்லை,சிறுமி,girl,போக்சோ,POCSO,நபர்,Person</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/4lmd4a61/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறுமிக்கு பாலியல் தொல்லை, கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/4lmd4a61/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88">சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை</a>யினர் நடத்திய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">விழிப்புணர்வு நிகழ்ச்சி</a>யில் வெளிச்சத்துக்கு வந்த பாலியல் அத்துமீறல் தொடர்பாக போக்சோ வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை</h2><p>திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் நிலைய எல்லையில் உள்ள வி.கே.புரம், செயின்ட் அசிசி பொதுப்பள்ளியில் நேற்று சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது, 12 வயது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF">சிறுமி</a> தனக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88">பாலியல் தொல்லை</a> ஏற்பட்டதாக தெரிவித்தார்.</p><h2>போக்சோவில் வழக்குப்பதிவு</h2><p>இதையடுத்து, சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணையில், சிறுமிக்கு நீச்சல் கற்றுத் தருவதாகக் கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெற்கு அகஸ்தியர்புரத்தைச் சேர்ந்த ஜார்ஜ் (வயது 50) என்பவர் மீது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B">போக்சோ</a> சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.</p><h2>கைது</h2><p>இதனை தொடர்ந்து, அம்பாசமுத்திரம் காவல் நிலைய போலீசார் ஜார்ஜ் என்பவரை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். மேலும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>காவிரி தண்ணீருக்காக அல்ல..  ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் திரிஷாவிற்காக சண்டை போடுகிறது -  ஆர்.பி. உதயகுமார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/not-for-cauvery-water-the-ruling-party-and-the-opposition-are-fighting-for-trisha-rp-udayakumar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/not-for-cauvery-water-the-ruling-party-and-the-opposition-are-fighting-for-trisha-rp-udayakumar#comments</comments><guid isPermaLink="false">8e3e51f8-15fd-4435-adc4-8b928211a7c9</guid><pubDate>Wed, 05 Aug 2026 11:59:14 +0000</pubDate><atom:updated>2026-08-05T11:59:14.545Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Trisha,காவிரி நீர்,மதுரை,ஆர்.பி. உதயகுமார்,Cauvery water,R.P. Udayakumar,திரிஷா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/dqjog3rk/190.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆர்.பி. உதயகுமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/dqjog3rk/190.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>காவிரி தண்ணீருக்காக அல்ல, ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் திரிஷாவிற்காக சண்டை போடுகிறது என்று ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.</p><p>இது தொடர்பாக, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BF.%20%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">ஆர்.பி.உதயகுமார்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடும்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும், கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட மறுத்துள்ளது. இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சரிடம் உங்கள் நிலைப்பாடு என்ன என்ன செய்ய போகிறீர்கள் என்ற கேள்விகளுக்கு அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பதில் அளிக்காமல் சிரித்துக் கொண்டே சென்று விடுகிறார். இது தான் த.வெ.க அமைச்சரிகளின் பலரது நிலையாக உள்ளது.</p><p>தென்மேற்கு பருவமழை இயல்பை விட 14 சதவீதம் குறைவாக 108.4 மில்லிமீட்டர் மட்டுமே பெய்துள்ளது. மாநில முழுமைக்கான அணைகளின் கொள்ளளவு இந்த ஆண்டு 31.4 சதவீதம் குறைந்துள்ளது. ஓட்டு மொத்த அளவான 2 லட்சத்து 24 ஆயிரம் கன அடியில் தற்போது, வெறும் 70 ஆயிரத்து 439 கன அடி மட்டுமே உள்ளது.</p> <h2>உதயநிதி ஸ்டாலின் கைது</h2><p>விஜய்க்கு கோபம் வராது, வந்தால் என்ன நடக்கும் என்பதைத்தான் நேற்று தமிழ்நாடும், இந்தியாவும் பார்த்தது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்து அவரை சென்னையில் இருந்து தஞ்சாவூர் வரை தேர்தல் பிரசார பவனி போல அழைத்துக்கொண்டு சென்றனர். </p><p>இங்கு அணை நீர்மட்டம் குறைந்து கொண்டு வருகிறது, அரிசி விலை உயர்ந்து வருகிறது, காவிரியில் தண்ணீர் கொடுக்கவில்லை, முதல்-அமைச்சர் வேகமாக நடவடிக்கை எடுப்பாரா என்பது தான் தமிழ்நாடு மக்களின் எதிர்பார்ப்பு. ஆனால் அதை விடுத்து ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் காவிரி தண்ணீருக்காக சண்டை போடவில்லை, நடிகை திரிஷாவுக்காக சண்டை போடுகிறது என்பது தமிழ்நாட்டு மக்களின் சாபக்கேடு,</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகத்தில் குடிநீர் தட்டுப்பாடு: காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்!  </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/drinking-water-shortage-in-maduranthakam-public-stage-road-blockade-with-empty-pots</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/drinking-water-shortage-in-maduranthakam-public-stage-road-blockade-with-empty-pots#comments</comments><guid isPermaLink="false">4df99e09-4089-40a8-bfc3-886c5eadcd73</guid><pubDate>Wed, 05 Aug 2026 11:48:54 +0000</pubDate><atom:updated>2026-08-05T11:48:54.390Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>செங்கல்பட்டு,drinking water,road blockade,police enquiry,குடிநீர் தட்டுப்பாடு,பொதுமக்கள் சாலை மறியல்</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/88g2zmiq/80.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மதுராந்தகம் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/88g2zmiq/80.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>செங்கல்பட்டு,</p><p>மதுராந்தகம் அருகே உள்ள அபிராமிபுரம் பகுதியில், கடந்த 15 நாட்களாக குடிநீர் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் இறங்கி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><h2>துயரத்தில் பொதுமக்கள்</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">செங்கல்பட்டு மாவட்டம் </a>அபிராமிபுரம் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக குடிநீர் சரியாக வழங்கப்படவில்லை. பொதுமக்கள் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அன்றாட தேவைகளுக்கு கூட தண்ணீர் இன்றி <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பொதுமக்கள்</a>, குறிப்பாக பெண்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.</p><h2>போக்குவரத்து பாதிப்பு</h2><p>அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்து, இன்று (புதன்கிழமை) காலை அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் காலி குடங்களை சாலையில் வரிசையாக அடுக்கி வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தங்களுக்கு உடனடியாக சீரான குடிநீர் வழங்க வேண்டும் என கோரி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">போக்குவரத்து</a> சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.</p><h2>அதிகாரிகள் உறுதி</h2><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள், மறியலில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் பற்றாக்குறையை போக்க தற்காலிகமாக லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கவும், குழாய்களில் குடிநீர் விநியோகத்தை உடனடியாக சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.</p>]]></content:encoded></item><item><title>9 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/rain-possible-till-7-pm-in-9-districts</link><comments>https://www.dailythanthi.com/news/weather/rain-possible-till-7-pm-in-9-districts#comments</comments><guid isPermaLink="false">745bde1b-10fd-420b-a6a1-e481f0d606e6</guid><pubDate>Wed, 05 Aug 2026 11:38:08 +0000</pubDate><atom:updated>2026-08-05T11:38:08.829Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு,வானிலை முன்னறிவிப்பு,TN weather</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/v9e8uzn6/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/v9e8uzn6/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுமார் 5.8 கிமீ உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 5.8 கிமீ முதல் 7.6 கிமீ உயரம் வரை தென் தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. வட தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இதன் காரணமாக தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>செப்.8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் - சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அறிவிப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-governments-first-budget-2026-live</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-governments-first-budget-2026-live#comments</comments><guid isPermaLink="false">07b1d6e3-6ab8-4030-a6a8-0ee2266a96fc</guid><pubDate>Wed, 05 Aug 2026 03:56:56 +0000</pubDate><atom:updated>2026-08-05T11:26:07.633Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,விஜய்,தமிழக சட்டசபை,TNAssembly,பட்ஜெட் கூட்டத்தொடர்,CMVijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/jsci65ou/Untitled-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/jsci65ou/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h3>தவெக அரசின் முதல் பட்ஜெட்  தாக்கல்</h3><p>முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. சட்டசபையில் பட்ஜெட் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. 2026-2027-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்ய உள்ளார்.</p><h3>
பலத்த பாதுகாப்பு
</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/ou2byp9l/police33.jpg" /></figure><p>பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், இன்று சட்டப்பேரவையில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அதனை முன்னிட்டு தலைமைச் செயலகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.</p><h2>பட்ஜெட் தாக்கல் - எதிர்க்கட்சி தலைவர் வருகை</h2><p>2026-27 நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவைக்கு வருகை தந்துள்ளார்.</p><h2>பட்ஜெட் தாக்கல் - தமிழக முதல்-அமைச்சர் விஜய் வருகை</h2><p>தனது தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் சட்டசபைக்கு வருகை தந்துள்ளார்.</p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/5uj40573/tncea.jpg" /></figure><h2>பட்ஜெட் தாக்கல் - அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை</h2><p>2026-27 நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவைக்கு வருகை தந்துள்ளார்.</p> <h3>
முண்டகக்கண்ணி அம்மன் கோவிலில் அமைச்சர் என்.ஆனந்த்
</h3><p>தவெக அரசின் முதல் பட்ஜெட் சற்று நேரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், சென்னையில் உள்ள முண்டகக்கண்ணி அம்மன் கோவிலில் அமைச்சர் என்.ஆனந்த் உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்தார்.</p><p>2026-27 நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை முன்னிட்டு, தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், தமிழக முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.</p> <h3>சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது</h3><p>சபாநாயகர் குறிப்பிட்ட திருக்குறள்!</p><p>குறள்:</p><p>வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை</p><p>விளக்கம்:</p><p>வருவாய் வரும் வழிகளைப் பெருக்கி, வந்த செல்வத்தை வளர்த்து, அதற்குக் வரக்கூடிய இடையூறுகளை ஆராய்ந்து நீக்க வல்லவனிடம் ஒரு செயலைச் செய்யச் கொடுக்க வேண்டும்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/ob72t0gl/sabaa33.jpg" /></figure><p>2026-27 நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் தாக்கலையொட்டி சட்டசபை கூட்டம் தொடங்கியது</p><p>2026-27-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். </p><h3>சூழ்ச்சிகளை எதிர்த்து வெற்றி கொண்ட ஜனநாயகன் - மரிய வில்சன்</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/anu0vjv7/wilson33.jpg" /></figure><p>பல்வேறு சூழ்ச்சிகளை வெற்றி கண்டு ஜனநாயகனாக இந்த அவையில் அமர்ந்திருக்கிறார் முதல்-அமைச்சர். அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியே அரசின் லட்சியம்.3 மாதங்களில் ஏராளமான சாதனைகளை செய்துள்ளது விஜய் அரசு.</p><p>எல்லாம் கொடுத்த மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்த மட்டுமே அரசியலுக்கு வந்தவர் முதல்-அமைச்சர் விஜய். சமூகநீதி, சமத்துவம், வறுமை ஒழிப்பு பெண்கள் பாதுகாப்பு ஆகிய கோட்பாடுகளும் ஆட்சி நடக்கிறது என்றார்.</p><p>வறுமை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க, 2026ம் ஆண்டுக்குள் 1.5 ட்ரில்லியன் டாலர் பொளாதாரம் உள்ள மாநிலமாக மாற்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது" - நிதியமைச்சர் மரிய வில்சன்</p><h3>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/tqpgnzf6/mama33.jpg" /></figure><p>தமிழக அரசின் 2026-27-ம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, ஆட்சிப் பொறுப்பில் இருந்த தி.மு.க. அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் வருவாய் வரவுகள் சுமார் ரூ.3 லட்சத்து 44 ஆயிரத்து 575 கோடி என்றும், நிதிப் பற்றாக்குறை சுமார் ரூ.1 லட்சத்து 21 ஆயிரம் கோடி என்றும், வருவாய் பற்றாக்குறை ரூ.48 ஆயிரத்து 696 கோடியே 32 லட்சம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. </p><p>இந்த நிலையில், தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2026-2027-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். </p><p>பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-</p><p>அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு.</p><h3>
மாநிலத்தின் வருவாயை அதிகரிக்க வருவாய் மேம்பாட்டுக் குழு</h3><p>மதுபான உற்பத்தி ஆலைகளுக்கான சிறப்புக் கட்டணம் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.1,000 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் பல்வேறு நடவடிக்கை மூலம் அரசுக்கு ரூ.15,000 கோடி கூடுதலாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தின் வருவாயை அதிகரிக்க வருவாய் மேம்பாட்டுக் குழுவை விரைவில் அரசு அமைக்கவுள்ளது  - நிதியமைச்சர் மரிய வில்சன் </p><h3>காமராஜர் சிறப்பு பள்ளிகள் அமைக்க நிதி ஒதுக்கீடு </h3><p>நவீன உண்டு உறைவிட பள்ளிகள் நிறுவப்படும்</p><p>அரசு பள்ளிகளில் சூப்பர் கிளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம் செயல்படுத்தப்படும். </p><p>10 ஆயிரம் பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ள திட்டத்திற்காக ரூ.139 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. </p><p>தினசரி தூய்மை பணிகள், குடிநீர், கழிப்பறை பராமரிப்பு, 24 மணி நேர பாதுகாப்புக்கு திட்டம்</p><p>குழந்தைகள் படிக்க பள்ளிகளில் தரமான உட்கட்டமைப்பு வசதிகள் அவசியம் என்பதை உணர்ந்து முடிவு. </p><p>3,734 பள்ளிகளில் ரூ.2,132 கோடி செலவில் அரசு பள்ளிகள் நவீனமயமாக்கப்படும்.</p><p>போதைப்பொருள் புழக்கம் குறித்த தகவல்களை தெரிவிக்க சிறப்பு செயலி.</p><h3>
தமிழ்நாடு மாணவர் தங்கும் விடுதி மற்றும் உட்கட்டமைப்பு நிறுவனம் </h3><p>மாநிலம் முழுவதும் மாணவர் தங்கும் வசதிகளை மேம்படுத்திட சிறப்பு நோக்கு நிறுவனம் (Special Purpose Vehicle) அமைக்கப்படும்.</p> <p>12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் அடிப்படையில் நீட் தேர்வு முறையினை உடனடியாக ரத்து செய்து பொதுத்தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கல்விக்கான சேர்க்கையைத் தொடர்ந்திட  மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.</p><h3>மடிக்கணினி திட்டத்தின் பெயர் மாற்றம்
</h3><p>திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட உலகம் உங்கள் கையில் திட்டத்தின் பெயர், வெற்றி மடிக்கணினி திட்டம் என மாற்றி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.  இத்திட்டத்திற்கு ரூ.2,000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><h3>மதுரையில் புதிய சட்டக்கல்லூரி</h3><p>மதுரையில் 300 மாணவர்களின் சேர்க்கையுடன் சட்டக்கல்லூரி தொடங்கப்படும். </p> <h3>
5 தொழிற்பயிற்சி நிலையங்கள்</h3><p>அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் செயற்கை நுண்ணறிவு இயந்திர வழி கற்றல் புதிய தொழிற்பிரிவு தொடக்கம்.  ரூ.90 கோடி மதிப்பீட்டில் 5 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் நிறுவப்படும்.  22,500 மெக்கானிக்குகளுக்கு மின்சார வாகனங்கள் மற்றும் மின்கலம் பராமரிப்பு பயிற்சி அளிக்க ரூ.3 கோடி ஒதுக்கீடு. </p><h3>
 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் உருவாக்கப்படும் - நிதியமைச்சர் மரிய வில்சன்
</h3><p>ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்வதை நோக்கமாகக் கொண்டு, மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் உருவாக்கப்படும். இதற்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு - நிதியமைச்சர் மரிய வில்சன்</p><h3>தொழிலாளர் நலனுக்கு ரூ.2,022 கோடி ஒதுக்கீடு </h3><p>தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறைக்கு ரூ2,022 கோடி ஒதுக்கீடு </p><h3>
பள்ளி நிறைவுத் திட்டம்
</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/6lorr96e/schools33.jpg" /></figure><p>தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் ‘பள்ளி நிறைவுத் திட்டம்' அறிவிக்கப்படும்.</p><p>இத்திட்டத்தின் கீழ் 3,734 அரசுப் பள்ளிகள் ரூ.2,132 கோடி மதிப்பில் நவீனமயமாக்கப்பட உள்ளன.</p><p>மேலும் 2,514 தொடக்கப் பள்ளிகள் மேம்படுத்தப்படவுள்ளன. 855 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இத்திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. நடப்பாண்டிற்கு இத்திட்டத்திற்காக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. </p> <h3>

 பள்ளி நேரத்திற்கு பிறகு தினமும் ஒரு மணி நேரம் விளையாட்டு</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/wmm5xkjw/sports33.jpg" /></figure><p>பள்ளி நேரத்திற்கு பிறகு தினமும் ஒரு மணி நேரம் முறைப்படுத்தப்பட்டு விளையாட்டுப் பயிற்சி வழங்கப்படும்.</p><p>விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி வழங்க கூடுதலாக ரூ.22 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தி</p><h3>மாணவர்களுக்கு சைக்கிள் - ரூ.277 கோடி ஒதுக்கீடு</h3><p>“அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் +1 படிக்கும் மாணவர்களுக்கு ரூ.277 கோடியில் ஹெல்மெட், வாட்டர் பாட்டில் வசதிகளுடன் நவீன BRANDED சைக்கிள் வழங்கப்படும்”</p><h3>அண்ணன் சீர் திட்டம் - ரூ.812 கோடி ஒதுக்கீடு</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/fc9occm8/annansrr33.jpg" /></figure><p>பெண்களுக்கு திருமணத்தின் போது அரசு சார்பில் 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை வழங்கும் 'அண்ணன் சீர்' திட்டத்துக்கு ரூ.812 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு. அனைத்து பெண்களுக்கும் பொருந்துமா? அல்லது யாருக்கெல்லாம் பொருந்தும்? எனக் குறிப்பிடப்படவில்லை.</p><h3>கருவுற்ற பெண்களுக்கான சேவை மற்றும் உதவி மையம்</h3><p>கருவுற்ற பெண்களுக்கான சேவை மற்றும் உதவி மையங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்படும்</p><p>மகப்பேறு நாள் நெருங்கும் வேளையில் தங்கியிருந்து பயன் பெறலாம்; கட்டணமில்லாமல் உணவு மற்றும் மருத்துவ உதவிகள், தொடர் மருத்துவக் கண்காணிப்பு உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும்; ரூ.23 கோடி நிதி ஒதுக்கீடு -நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><h3>
12 மாவட்டங்களில் 12 முதியோர் இல்லங்கள் நிறுவப்படும்</h3><p>12 மாவட்டங்களில் 12 முதியோர் இல்லங்கள் நிறுவப்படும். இதற்காக ரூ.6.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><h3>
5 லட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி</h3><p>2031-ஆம் ஆண்டிற்குள் பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் 5 லட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்கப்படும் - நிதியமைச்சர் மரிய வில்சன்</p><h3>
அரசு நூலகங்களை டிஜிட்டல் நூலகங்களாக மறுவடிவமைக்க 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

</h3><h3>
தமிழ்நாடு கிராமிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் 
</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/60wjiwtn/maadu33.jpg" /></figure><p>தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல தமிழ்நாடு கிராமிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் இதற்காக ரூ.42 கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர் மரிய வில்சன்</p> <h3>
 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள்</h3><p>மூத்த குடிமக்களுக்காக தமிழ்நாடு முழுவதும் 1000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும்</p><p>கிராமப் பஞ்சாயத்துகளுக்கே நேரில் சென்று இலவச உடல் பரிசோதனை மற்றும் மருந்துகள் வழங்கப்படும். 1 மருத்துவர், 1 செவிலியர், 1 இயன்முறை மருத்துவருடன் இந்தச் சேவை வழங்கப்படும். இதற்காக ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு</p><h3>
வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்- ரூ.110 கோடி ஒதுக்கீடு </h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/wvkl0y1e/adu33.jpg" /></figure><p>கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 100% மானியத்தில் 5 ஆடுகள் வழங்கப்படும்; ரூ.110 கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர் மரிய வில்சன்</p><h3>
மூத்த குடிமக்களுக்காக பொழுதுபோக்கு மையங்கள் </h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/0pxf8rur/thathaa33.jpg" /></figure> <p>மூத்த குடிமக்களுக்காக பொழுதுபோக்கு மையங்கள் அமைக்கப்படும். நூலகம், யோகா, தியானம், உள்ளரங்க விளையாட்டு வசதிகளுடன் கூடிய மையங்கள் முதற்கட்டமாக 5 மாவட்டங்களில் நிறுவப்படும் - நிதியமைச்சர் மரிய வில்சன்</p> <h3>
கறவை மாடுகள் வழங்கும் திட்டம் - ரூ.57 கோடி ஒதுக்கீடு
</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/kl5wwhyh/madu33.jpg" /></figure><p>ஒவ்வொரு ஆண்டும் 10,000 தகுதி வாய்ந்த பெண்களுக்கு கறவை மாடுகள் விலையில்லாமல்</p><p>வழங்கப்படும்; ரூ.57 கோடி நிதி ஒதுக்கீடு - நிதியமைச்சர் மரிய வில்சன்</p><h3>
ஆழ்கடல் மீன்பிடித் தொழில் ஊக்குவிப்பு: ரூ. 12 கோடி நிதி ஒதுக்கீடு</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/t3yvv7wi/azaakadal33.jpg" /></figure><p>தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2026-27-ன் கீழ் மீனவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 'ஆழ்கடல் மீன்பிடித் தொழில் ஊக்குவிப்பு' திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>நவீன ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் வாங்க விரும்பும் மீனவர்களுக்கு வட்டி மானிய உதவி வழங்கப்படும். பாரம்பரிய மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படும். </p> <h3>
 புதிய கால்நடை காப்பீட்டுத் திட்டம்
</h3><p>புதிய கால்நடை காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். எதிர்பாராத இழப்புகளில் இருந்து விவசாயிகளுக்கு நிதிப் பாதுகாப்பு வழங்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.31 கோடி நிதி ஒதுக்கீடு - நிதியமைச்சர் மரிய வில்சன்</p><h3>
 மீனவர்களுக்கு உதவித்தொகை உயர்வு</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/s7wypk61/fisherss33.jpg" /></figure> <p>மீன் பிடித் தடைக் காலங்களில் மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000 ஆக உயர்த்தப்படும். 1.93 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ரூ.135 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. </p> <h3>
சென்னையில் அனைவருக்கும் ஸ்மார்ட் மீட்டர்</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/vneoqjl0/meetr33.jpg" /></figure><p>சென்னை மாநகரின் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.  மாநிலத்தில் பிற பகுதிகளில் 50 லட்சம் தொழில் மற்றும் வணிக நுகர்வோருக்கும் விரிவாக்கம் செய்யப்படும். </p><h3>வீட்டுக் கூரை சூரிய மின் மானியத் திட்டம் - ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/6dnv4ojv/murukku33.jpg" /></figure> <p>*வீட்டுக் கூரை சூரிய மின் மானியத் திட்டம் அறிமுகம் செய்யப்படும்</p><p>*சூரிய மின்பலகைக்கு ரூ.1 இலட்சம் வரை மானியம்</p><p>* ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். </p> <h3>கைத்தறி துறைக்கு ரூ.1,678 கோடி ஒதுக்கீடு
</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/6slql0yj/kaithari33.jpg" /></figure><p>கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை - ரூ.1,678 கோடி ஒதுக்கீடு. திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர் - ரூ.10 கோடி ஒதுக்கீடு. தமிழ்நாடு ஆடை வடிவமைப்பு நிறுவனம் - ரூ.60 கோடி ஒதுக்கீடு - நிதி அமைச்சர் மரிய வில்சன்</p> <h3>விண்வெளித் தொழில் முதலீட்டு மண்டலம்: தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் புதிய திட்டம்</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/g04vqw2z/vinivmeli33.jpg" /></figure><p>தமிழ்நாட்டில் விண்வெளித் துறையை ஊக்குவிக்கவும், தொழில் வளர்ச்சியைப் பெருக்கவும் "விண்வெளித் தொழில் முதலீட்டு மண்டலம்" அமைக்கப்படும்.</p><p>தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இந்த விண்வெளித் தொழில் முதலீட்டு மண்டலம் அமைக்கப்படுகிறது.</p><p>இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அனுமதி மையமான (IN-SPACE) இணைந்து விண்கலப் பொதுத் தொழில்நுட்ப வசதி உருவாக்கப்படுகிறது.</p><p>விண்வெளி ஏவுதளத்தின் புவியியல் முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த முதலீட்டு மண்டலம் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்படவுள்ளது - நிதி அமைச்சர் மரிய வில்சன்</p> <h3>இந்தியாவின் முதல்  ஏஐ நகரம் - சாத்தியக்கூறு ஆய்விற்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு</h3><p>இந்தியாவின் முதல் பிரத்யேக செயற்கை நுண்ணறிவு (AI) நகரமாக 'அறிவகம்'</p><p>AI பல்கலைக்கழகம், சர்வதேச திறன் மேம்பாட்டு மையம் &amp; குறைகடத்தி சோதனை ஆய்வகம்</p><p>AI, குவாண்டம் தொழில்நுட்பம் &amp; ஆராய்ச்சிக்கான ஒருங்கிணைந்த மையம்</p><p>சாத்தியக்கூறு ஆய்விற்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு   - நிதி அமைச்சர் மரிய வில்சன்</p> <h3>
திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர்</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/cudz48ef/thirupur33.jpg" /></figure><p>சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை ஆடை உற்பத்திக்கு ஊக்குவிக்க பல கட்டங்களில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்</p><p>&gt; ‘திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர்' அமைக்கப்படும்  இதற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு -நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><h3>
அங்கன்வாடி மேம்பாடு: குழந்தைகளின் எதிர்காலத்தை வளமாக்கும் புதிய திட்டங்கள்</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/4y3gqcsr/angapawadi33.jpg" /></figure><p>தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2026-27 இன் கீழ், குழந்தைகளின் நலன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் அங்கன்வாடி மையங்களை மேம்படுத்தும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது/</p><p>சிதலமடைந்த 500 அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படவுள்ளன.</p><p>அங்கன்வாடி மையங்களில் பாதுகாப்பான குடிநீர், கழிப்பறை மற்றும் மின்சார வசதிகள் உறுதி செய்யப்படுகின்றன.</p><p>குழந்தைகளின் பாதுகாப்பும் ஆரோக்கியமும் முழுமையாக உறுதி செய்யப்படும் வகையில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது - -நிதி அமைச்சர் மரிய வில்சன்</p> <h3>
அனைவருக்கும் தரமான வீடு</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/4tya1vjd/bulidings33.jpg" /></figure><p>தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2026-27 இன் கீழ், பொதுமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான தங்குமிடங்களை வழங்கும் நோக்கில் "அனைவருக்கும் தரமான வீடு" திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக ரூ.1,253 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>இவ்வாண்டில் 24,313 அடுக்குமாடிக் குடியிருப்புகள் முழுமையாகக் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வரவுள்ளன பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினரின் நலனுக்காக 14,194 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. அனைத்துக் குடியிருப்புகளும் அவசியமான அடிப்படை வசதிகளுடன் தரமான முறையில் அமைக்கப்படுகின்றன -நிதி அமைச்சர் மரிய வில்சன்</p> <h3>
சென்னை கூவம் நதியில் படகு சவாரி 
</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/3b7j9ny4/padaku33.jpg" /></figure><p>கூவம் மற்றும் அடையாறு ஆறுகளில் பொதுமக்கள் படகு சவாரி செய்வதையும், குழந்தைகள் ஆனந்தக் குளியல் போடுவதையும் அரசு உறுதி செய்யும். சியோல் நகரத்தின் சென்சியான் நதி, சிங்கப்பூரின் தலாங் நதி போல சென்னையின் அடையாளமாக கூவம் மாற்றப்படும் - நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><h3>விரைவில்  பூந்தமல்லி - போரூர் - வடபழனி மெட்ரோ ரெயில் சேவை </h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/4yjoecdf/metro33.jpg" /></figure><p>பூந்தமல்லி பைபாஸ்-போரூர்-வடபழனி  மெட்ரோ ரெயில் சேவை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படும் - நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><h3>1,000 புதிய ஏசி மின்சாரப் பேருந்துகள் வாங்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/j6thrpp4/bus33.jpg" /></figure><p>சென்னைக்கு 1,000 புதிய ஏசி மின்சாரப் பேருந்துகள் மற்றும் பணிமனை கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு  நிதி அமைச்சர் மரிய வில்சன்</p> <h3>பனை மேம்பாட்டுக் கழகம் நிறுவப்படும்</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/i4jo1kjk/panai33.jpg" /></figure><p>பனை விவசாயிகளின் வாழ்வாதார பாதுகாப்பையும், வருவாயையும் உறுதி செய்யும் வகையில் ரூ.16 கோடி நிதியுடன் தமிழ்நாடு பனை மேம்பாட்டுக் கழகம் நிறுவப்படும் -  நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><h3>
வீட்டு அலகுத் தொகை உயர்வு</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/2mxldtzv/home33.jpg" /></figure> <p>புதிய மாநில வீட்டுவசதித் திட்டமான வெற்றி வீடு திட்டம் அறிமுகம்; வீட்டு அலகுத் தொகை ரூ.3.10 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்வு; ரூ.3,500 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும் -  நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><h3> போதைப்பொருள் இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவது நமது இலக்கு 
</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/cso14cfn/ottam33.jpg" /></figure> <p>SAY NO TO DRUGS சொன்னவர், என்றென்றும் அதைச் சொல்பவர் முதல்-அமைச்சர் விஜய்</p><p>போதைப்பொருள் இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவது நமது இலக்கு. பள்ளிகளில் போதைப்பொருள் எதிர்ப்பு அமைப்புகளும், தன்னார்வ குழுக்களும் அமைக்கப்படும். இது குறித்த விழிப்புணர்வுக்காக 10581 என்ற உதவி எண் பள்ளி வளாகங்களில் தெளிவாக காட்சிப்படுத்தப்படும். இத்திட்டத்தை செயல்படுத்த 7 கோடி ரூபாய் ஒதுக்கீடு - நிதி அமைச்சர் மரிய வில்சன்</p> <h3> 3 புதிய மெட்ரோ வழித்தடங்கள் அமைக்க பரிந்துரை</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/7nz402vn/metro33.jpg" /></figure><p>3 புதிய மெட்ரோ வழித்தடங்கள் அமைக்க மத்திய அரசிடம் மாநில அரசு பரிந்துரைத்துள்ளது.</p><p>விமான நிலையம்-கிளாம்பாக்கம், கோயம்பேடு-பட்டாபிராம், பூந்தமல்லி-சுங்குவார்சத்திரம் இடையே மெட்ரோ - நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/v8238nbh/singapen33.jpg" /></figure><h3>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை மேம்படுத்த ரூ.354 கோடி ஒதுக்கீடு
</h3><h3>காவல்துறையினருக்கு புதிய குடியிருப்பு வளாகங்கள்</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/s8r28uv9/build33.jpg" /></figure><p>காவல்துறையினருக்கு புதிய குடியிருப்பு வளாகங்கள் அமைக்கப்படும். 5000 காவலர் குடும்பங்கள் இதனால் பயன்பெறுவர். இதற்காக ரூ.431 கோடி நிதி ஒதுக்கீடு - நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><h3>

புதிய சாலை பாதுகாப்பு கொள்கை</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/cqfn6h35/road33.jpg" /></figure><p>நிறுவன அமைப்புகள், சாலை வடிவமைப்பு மற்றும் பொறியியல், போக்குவரத்து சட்ட அமலாக்கம், அவசரகால ஆசிகிச்சை மற்றும் விழிப்புணர்வுக் கல்வி ஆகிய 5 முக்கியத் தூண்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும்.</p><p>* முதலமைச்சர் விபத்து நிவாரண நிதிக்கு ரூ.200 கோடி</p><p>* சாலைப் பாதுகாப்புப் பணிகளுக்கு ரூ.130 கோடி</p><p>மொத்தம் ரூ.330 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது - நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><h3>
காயிதே மில்லத் விருது</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/unxxyey1/kayithee33.jpg" /></figure><p>திருவள்ளுவர் திருநாளன்று ஆண்டுதோறும் 'காயிதே மில்லத்’ விருது வழங்கப்படும். காயிதே மில்லத் அவர்களின் வரலாற்றுப் பெருமைக்கு சிறப்பு மரியாதை. தமிழ்மொழி மீதான அவரின் ஆழ்ந்த பற்றை போற்றும் அரசு இதுவாகும் -  - நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><h3>
வெற்றி 150’ திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/0zcs9ma1/work33.jpg" /></figure><p>VB-G RAM G திட்டத்தின் துணை திட்டமாக 'வெற்றி 150' திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு -</p><p>125 நாட்கள் பணி செய்யும் குடும்பங்களுக்கு கூடுதலாக 25 நாட்கள் பணி வழங்க ஏற்பாடு செய்யப்படும் -  நிதி அமைச்சர் மரிய வில்சன்</p> <h3>தரமான கோதுமை மாவு  விநியோகம்</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/udrw83rs/kothumai33.jpg" /></figure> <p>பொட்டலமிடப்பட்ட கோதுமை மாவு வழங்கும் முன்னோடி திட்டம் செயல்படுத்தப்படும். தரமான மற்றும் அளவான அத்தியவசியம் பொருட்கள் விநியோகம் செய்யப்படும். படிப்படியாக மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும். இதற்காக ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது -  நிதி அமைச்சர் மரிய வில்சன்</p> <h3>
அமலில் உள்ள பொதுநலத் திட்டங்கள் தொடரத் திட்டம் </h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/u6qwgibu/freee33.jpg" /></figure> <p>கடந்த 30 ஆண்டுகளாக அமலில் உள்ள பொதுநலத் திட்டங்களில் பெரும்பாலானவற்றை இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்துவதுடன்,அவற்றை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது - நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><h3>
மாநில அரசின் மொத்தக்கடன் ரூ.10.98 லட்சம் கோடி</h3><p>மாநில அரசின் மொத்த கடன் ரூ.10.98 லட்சம் கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது  நிதி அமைச்சர் மரிய வில்சன்.</p><h3>
உள்துறை, மதுவிலக்குத் துறைக்கு நிதி ரூ.17,290 கோடி ஒதுக்கீடு</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/vtmx42xb/wilson33.jpg" /></figure><p>உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைக்கு ரூ.17,290 கோடி ஒதுக்கீடு -  நிதி அமைச்சர் மரிய வில்சன்</p> <h3>
இரண்டரை மணி நேரம் உரையாற்றிய நிதி அமைச்சர் மரிய வில்சன்</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/rv91akjm/three33.jpg" /></figure><p>நிதிநிலை அறிக்கையை தாக்கல்செய்த நிதியமைச்சர் மரிய வில்சன் இரண்டரை மணி நேரம் உரையாற்றினார்</p><p>காலை 10.01 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கிய மரிய வில்சன் 12.31க்கு உரையை நிறைவு செய்தார்.</p><h3>
20,000 பொது இ.வி சார்ஜிங் நிலையங்கள் </h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/v0rpw700/charage33.jpg" /></figure> <p>5 ஆண்டுகளில் 20,000 பொது EV சார்ஜிங் நிலையங்கள் உருவாக்கப்படும். இதற்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>குடியிருப்புகளில் EV சார்ஜிங் நிலையங்களுக்கு அரசு மானியம் வழங்கப்படும். இதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு - நிதி அமைச்சர் மரிய வில்சன்</p> <h3>மூத்த குடிமக்களுக்கு புனிதப் பயணம் திட்டத்திற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு
</h3><p>மூத்த குடிமக்களுக்கு புனிதப் பயணம் திட்டத்திற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது - நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><h3>நாட்டுப்புறக் கலைஞர்கள் வாழ்வாதாரப் பாதுகாப்புத் திட்டம்</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/kdeivnhw/dancer33.jpg" /></figure><p>200 சிறந்த கலைக் குழுக்களுக்கு ஆண்டுதோறும் 100 நாட்கள் நிகழ்ச்சி வாய்ப்பு</p><p>நாட்டுப்புறக் கலைகளும் கலைஞர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும் - ரூ.23 கோடி நிதி ஒதுக்கீடு - நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><h3>
மின் பகிர்மான கட்டமைப்பு மேம்பாடு</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/8papaee2/power33.jpg" /></figure> <p>கோயம்புத்தூர் - அரியலூர் 765 கே.வி. மின் பகிர்மானப் பாதை: ரூ. 4,000 கோடியில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>கோயம்புத்தூர் - அரியலூர் 765 கே.வி. மின் பகிர்மானப் பாதைத் திட்டம் ரூ.4,000 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.</p><p>எதிர்கால மின் தேவைக்கேற்ப மாநிலத்தின் பகிர்மான கட்டமைப்பை வலுப்படுத்தும் முக்கிய திட்டம் அமல்படுத்தப்படும் -  நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><h3>
நதிகள் மீட்புக்கு ரூ.25 கோடி</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/rb7kr26s/river33.jpg" /></figure><p>* காவிரி, வைகை &amp; தாமிரபரணி நதிகள் மறுசீரமைப்பு</p><p>*மாசுபாட்டைத் தடுக்க விரிவான திட்டம்</p><p>* கழிவுநீர் சுத்திகரிப்பு &amp; திடக்கழிவு மேலாண்மை</p><p><strong>நதிச் சுற்றுலா ரூ.53 கோடி நிதி ஒதுக்கீடு</strong></p><p>காவிரி, வைகை &amp; தாமிரபரணி நதிகளில் நதிச் சுற்றுலா</p><p>* சுற்றுலா வளர்ச்சி மற்றும் உள்ளூர் வேலைவாய்ப்புக்கு ஊக்கம்</p><p>* ஓகேனக்கல் திருவரங்கம், மதுரை &amp; பாபநாசம்-திருநெல்வேலி வழித்தடங்கள்</p><p>* நதிக்கரை மேம்பாடு &amp; நதி மேற்பரப்பு சுத்தம் சாத்தியக்கூறு ஆய்விற்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு -  நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><h3>
எல்-நினோ ஆபத்து - ரூ.340 கோடி ஒதுக்கீடு'</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/tmvce7wh/nino33.jpg" /></figure><p>சூப்பர் எல்-நினோ பாதிப்பை சமாளிக்க சிறப்பு நடவடிக்கைகளாக குடிநீர் வழங்கல் &amp; நீர் ஆதாரங்களை பலப்படுத்துதல், கால்நடைகளுக்கான தீவன சேமிப்பு போன்றவற்றுக்கு மாநிலப் பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ரூ.340 கோடி ஒதுக்கீடு - நிதி அமைச்சர் மரிய வில்சன்</p> <h3>
திருக்கோவில் திருப்பணிகள்</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/l2xztz1c/temple33.jpg" /></figure><p>5 ஆண்டுகளில் 3,000 திருக்கோவில்களுக்கு திருப்பணி மற்றும் திருக்குடமுழுக்கு</p><p>250 திருக்குளங்கள் &amp; 75 மரத் தேர்கள் சீரமைப்பு</p><p>பக்தர்களுக்கு குடிநீர், கழிவறை, தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்பாடு</p><p>1,000 ஆண்டுகள் பழமையான 213 திருக்கோயில்கள் புனரமைப்பு - நிதி அமைச்சர் மரிய வில்சன்</p> <h3>

நிலைமை சரி செய்ய 2 ஆண்டுகள் தேவைப்படும் - அமைச்சர் மரிய வில்சன் </h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/ct2i3ki9/three33.jpg" /></figure> <p>நேர்மையான, திறமையான, நல்லாட்சி வழங்க உள்ளோம். நிலைமை சரி செய்ய குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் தேவைபடும். ரூ.15,000 கோடி கூடுதல் வருவாயை அரசால் திரட்ட முடியும் என சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் மரிய வில்சன் கூறினார்</p><h3>2026-27ம் ஆண்டில் 1.73 லட்சம் கோடி கடன் பெற தவெக அரசு திட்டம்
</h3><p>2026-27ம் ஆண்டில் 1.73 லட்சம் கோடி கடன் பெற திட்டம் என தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h3>
செப்.8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர்</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/v0rm07vt/brabaha33.jpg" /></figure><p>தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்தபின் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்  செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>2026-27 நிதிநிலை அறிக்கை மிக அமைதியாக நடந்தது. ஒத்துழைப்பு தந்த உறுப்பினர்களுக்கு நன்றி. </p><p>நாளை வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். செப் 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.  </p><p>ஆகஸ்ட் 7-ல் இரங்கற் குறிப்புகள், இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு பொது விவாதம் தொடங்கும். ஆகஸ்ட் 10,11-ல் நிதிநிலை அறிக்கை, வேளாண் அறிக்கை மீது பொது விவாதம் நடத்தப்படும். ஆகஸ்ட் 12- தேதி பொது விவாதத்துக்கு பதிலுரை அளிக்கப்படும். ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை பேரவை விடுமுறை. ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் மானிய கோரிக்கை, சட்டமன்றம் காலை 9.30 மணிக்கு தொடங்கும். தேவைப்பட்டால் மாலை 6 மணி வரை சட்டசபை கூட்டம் நடைபெறும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தவெக அரசின் தெளிவான திசையை அறிமுகம் காட்டும் பட்ஜெட் - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/budget-introduces-clear-direction-of-tvk-government-manickam-thakur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/budget-introduces-clear-direction-of-tvk-government-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">49e4a68e-aa85-47c6-98c6-7d00df52bc02</guid><pubDate>Wed, 05 Aug 2026 11:24:42 +0000</pubDate><atom:updated>2026-08-05T11:24:42.534Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,மாணிக்கம் தாகூர்,பட்ஜெட்,Budget,Manickam Thakur MP</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/j20v7tes/manickam-tagore.jpg" width="768"><media:title type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:title><media:description type="html"><![CDATA[ பட்ஜெட், மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/j20v7tes/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டின் வறுமையை ஒழித்து, 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவதற்கான தெளிவான திசையை இந்த தமிழ்நாடு அறிமுக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D">பட்ஜெட்</a> காட்டுகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20">மாணிக்கம் தாகூர்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p> <h2>தொலைநோக்கு முதலீடுகள்</h2><p> காமராசர் காலை உணவுத் திட்டம் (ரூ.710 கோடி) மற்றும் மாதிரிப் பள்ளிகள் (ரூ.125 கோடி) மூலம் கல்வியிலும், கல்லூரி மாணவர்களுக்கான 'வெற்றி மடிக்கணினி' (ரூ.2,000 கோடி) திட்டம் மூலம் டிஜிட்டல் கற்றலிலும், பெண்களுக்கு 'அண்ணன் சீர்' (ரூ.812 கோடி) மற்றும் சிங்கப்பெண் படை மூலம் மகளிர் நலனிலும் தொலைநோக்கு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. </p><h2>தென் தமிழ்நாட்டு வளர்ச்சி</h2><p>விவசாயிகள், இளைஞர் நலன், போதைப்பொருள் ஒழிப்பு ஆகியவற்றுடன் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) நகரம் 'அறிவகம்' மற்றும் திருநெல்வேலி-தூத்துக்குடி 'விண்வெளி தொழில் முதலீட்டு மண்டலம்' போன்ற அறிவிப்புகள் மனிதவள மேம்பாட்டிற்கும் தென் தமிழ்நாட்டு வளர்ச்சிக்கும் வலு சேர்க்கின்றன.</p><h2>கவனிக்கத்தக்க அளவு</h2><p>உயர்கல்வி துறைக்கான ஒதுக்கீடு (ரூ.8,393 கோடி), 'வெற்றி மடிக்கணினி' (ரூ.2,000 கோடி) திட்டம் மற்றும் சுற்றுலாத் துறைக்கான நிதி ஒதுக்கீடு போன்றவை மாநிலத்தின் ஒட்டுமொத்த தேவைகளுடன் ஒப்பிடுகையில் கவனிக்கத்தக்க அளவிலேயே உள்ளன.</p> <h2>கால அவகாசம்</h2><p>வருவாய் கசிவுகளை தடுத்து, நிதி நிர்வாகத்தை சீரமைத்து, ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தின் மூலம் மனிதவளத்தில் நீண்டகால முதலீடுகளை செய்ய தமிழ்நாடு அரசுக்கு தேவையான கால அவகாசம் வழங்கி, இத்திட்டங்கள் களத்தில் முழுமையாக செயல்படுத்தப்படுவதை எதிர்நோக்குவோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆட்சிக்கு வந்து 28 மாதங்களுக்கு பிறகு மகளிர் உரிமைத்தொகை அறிவித்தது மறந்து போனதா?  திமுகவுக்கு தவெக பதிலடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/have-they-forgotten-that-the-womens-entitlement-allowance-was-announced-28-months-after-coming-to-power-tvk-hits-back-at-dmk</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/have-they-forgotten-that-the-womens-entitlement-allowance-was-announced-28-months-after-coming-to-power-tvk-hits-back-at-dmk#comments</comments><guid isPermaLink="false">a35f23b0-ccd7-48e6-8e65-fc6e053f7d6b</guid><pubDate>Wed, 05 Aug 2026 11:21:40 +0000</pubDate><atom:updated>2026-08-05T11:21:40.089Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,திமுக,DMK,மகளிர் உரிமை தொகை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/3plvihjk/Stalin.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/3plvihjk/Stalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் வேஸ்ட்..வேஸ்ட் என்று முன்னாள் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள தவெக  கூறியிருப்பதாவது: </p><p>அரசு வாங்கிய கடன் எல்லாம் எங்கே போனது என்று தெரியாமல் அருமையான நிர்வாகத் திறன் ஆட்சி நடத்திய ஸ்டாலின் சார்  தன் ஆட்சியை வேஸ்ட் வேஸ்ட் என்று ஆட்சி போன பிறகு அறிக்கை விட்டுள்ளார்மகளிர் உரிமைத்தொகையை ஆட்சிக்கு வந்த 28 மாதங்கள் வரை தூங்கிவிட்டு அறிவித்ததை மறந்துவிட்டு ஸ்பீட் முதலமைச்சர் போல ஃபேக் நரேட்டிவ் செய்ய முற்படுகிறார்</p><p>.ஆட்சி முடியும்போது அவசர அவசரமாக ஓட்டுக்காக லேப்டாப் வழங்கிய ஸ்டாலின் சார் ஆட்சிக்கு வந்ததும் லேப்டாப் வழங்கப்படப் போவதைப்பொறுக்காமல் சொந்தமாக யோசிக்கத் தெரியாத அரசு தன் அரசு என்பதை சுரத்தே இல்லாமல் ஒரு சூப்பர் சொதப்பல் அறிக்கை விட்டிருக்கிறார்.</p> <p>எங்கே தான் நடத்திய ஊழல் மாடல் உதார் ஆட்சியின் ஊழல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தங்கிலீஷ் மாடல் அறிக்கை விட்டு தடுமாறி இருக்கிறார்.</p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-presents-cash-incentives-to-tamil-nadu-athletes-who-won-medals-at-the-commonwealth-games</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-presents-cash-incentives-to-tamil-nadu-athletes-who-won-medals-at-the-commonwealth-games#comments</comments><guid isPermaLink="false">7f85e786-5c63-42ae-923a-787b8deae49d</guid><pubDate>Wed, 05 Aug 2026 11:21:12 +0000</pubDate><atom:updated>2026-08-05T11:21:12.596Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காமன்வெல்த்,Commonwealth,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/o18kvp9e/vj.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காமன்வெல்த் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/o18kvp9e/vj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>பிற விளையாட்டு (Other sports)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D">காமன்வெல்த் </a>விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த தமிழக வீரர்களை, சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய் நேரில் சந்தித்து பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார்.</p><h2>பதக்கம் வென்ற வீரர்களுக்கு ஊக்கத்தொகை</h2><p>காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டி மற்றும் பிரவீன் ஆகியோருக்கும், வெண்கலப் பதக்கம் வென்ற செல்வபிரபுவுக்கும் முதல்-அமைச்சர்  விஜய் ஊக்கத்தொகை வழங்கினார்.</p><p>அதன்படி, வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டி மற்றும் பிரவீனுக்கு தலா ரூ.30 லட்சமும், வெண்கலப் பதக்கம் வென்ற செல்வபிரபுவுக்கு ரூ.20 லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.</p><h2>வீரர்களுக்கு பாராட்டு</h2><p>சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த வீரர்களின் சாதனையை பாராட்டிய முதல்-அமைச்சர் விஜய், எதிர்காலத்திலும் இதேபோன்ற சாதனைகளை தொடர வாழ்த்துகளை தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் மது வகைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் திட்டம் ஆபத்தானது: அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-liquor-online-prebooking-plan-dangerous-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-liquor-online-prebooking-plan-dangerous-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">1e2f68fc-8fb3-492d-920c-e47fe202bba1</guid><pubDate>Wed, 05 Aug 2026 11:19:47 +0000</pubDate><atom:updated>2026-08-05T11:19:47.810Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,ஆன்லைன் முன்பதிவு,டாஸ்மாக்,Tasmac,Online Booking</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/q3w86ff1/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/q3w86ff1/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுவகைகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் முறை நாளை முதல் நடைமுறைக்கு வரவிருப்பதாகவும், அதற்காக தனி இணையதளம் தொடங்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. மதுவை ஒழிப்பதற்கு பதிலாக மது வாங்குவதை மிகவும் எளிதானதாக மாற்றும் முயற்சி மிகவும் பிற்போக்கானது ஆகும்.</p><p>மதுவகைகளை முன்பதிவு செய்வதற்காக டாஸ்மாக் நிறுவனத்தின் சார்பில்  https://tasmace2e.in/ என்ற இணையதளம் நாளை முதல் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இந்த இணையதளத்தின் வாயிலாக தமிழ்நாட்டின் எந்த மூலையிலிருந்தும் மொத்தமுள்ள 4,048 மதுக்கடைகளிலும் என்னென்ன மதுவகைகள் உள்ளன? அவற்றின் விலை எவ்வளவு என்பதைக் கண்டறிந்து முன்பதிவு செய்ய முடியும். அவ்வாறு முன்பதிவு செய்து பணம் செலுத்தியவர்களுக்கு கியூ.ஆர் கோடுடன் கூடிய கூடிய ரசீது வழங்கப்படும். எந்தக் கடையில் மது வாங்க முன்பதிவு செய்தார்களோ, அந்த கடைக்கு செல்வதற்கான வழிகாட்டும் வரைபடமும் அவர்களுக்கு வழங்கப்படும். அதன்பின் அந்தக் கடைக்கு சென்று கியூ.ஆர் கோடுடன் கூடிய கூடிய ரசீதைக் காட்டி மதுபாட்டிலை பெற்றுக்கொள்ள முடியும்.</p><p>மதுக்கடைகளில் வாடிக்கையாளர்கள் அதிக நேரம் வரிசையில் நிற்பதைத் தவிர்க்கும் வகையிலும், சில்லறை விற்பனைக் கடைகளில் அதிகபட்ச விற்பனை விலைக்கும் கூடுதலாக மது விற்கப்படுவதைத் தடுக்கும் வகையிலும் இந்த புதிய முறை அறிமுகம் செய்யப்படுவதாக டாஸ்மாக் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஓசையின்றி நாளை முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டம் மிகவும் ஆபத்தானது ஆகும். இது மது வணிகத்தையும், மதுப் புழக்கத்தையும் அதிகரிக்கச் செய்யும்.</p><p>தமிழ்நாட்டில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டிய துறைகள் ஏராளமாக உள்ளன. கல்வி, மருத்துவம், வேளாண்மை, உணவுப் பொருள் வழங்கல், மின்சாரம் போன்ற துறைகள் சீர்திருத்தத்திற்காக ஏங்குகின்றன. ஆனால், அவற்றில் அக்கறை காட்டுவதற்கு பதிலாக மது வணிகத்தில் மட்டும் சீர்திருத்தம் என்ற பெயரில் சீரழிவுகளை செய்யத் துடிப்பது சரியல்ல.</p><p>மது மனிதனுக்கு அடிப்படைத் தேவை அல்ல. மது வாங்குவதற்கு எளிதானதாக இருக்கக் கூடாது. அப்போதுதான் மது வணிகம் குறையும்.  ஆனால், மதுவை ஆன்லைனில் முன்பதிவு செய்து மதுக்கடைகளுக்கு சென்று வரிசையில் நிற்காமல் வாங்க வசதி செய்து கொடுப்பது மது வணிகம் அதிகரிப்பதற்குதான் வழிவகுக்கும். தமிழ்நாட்டில் 35,039  நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அந்தக் கடைகள் ஒவ்வொன்றிலும், ஒவ்வொரு நாளும் ஏராளமான மக்கள், குறிப்பாக பெண்கள்  உணவுப் பொருள்களை வாங்குவதற்காக நீண்ட வரிசைகளில் நிற்கிறார்கள். அவர்களின் வாட்டத்தைப் போக்குவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு, மது குடிப்பவர்களின் வசதிக்காக இத்தகைய திட்டங்களை செயல்படுத்துவது சமூகச் சீரழிவுக்குதான் வகை செய்யும்.</p><p>டாஸ்மாக் இணையதளத்தில் பதிவு செய்வதற்கு 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும் என்பதால், அதற்கும் குறைவான வயதுப் பிரிவினர் மது வாங்குவது தடுக்கப்படும் என்றும் டாஸ்மாக் தரப்பில் கூறப்படுகிறது. இதுவும் ஏற்க முடியாத வாதம். 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்கக் கூடாது என்பது விதி. இது குறித்த அறிவிப்பு பலகைகளும் மதுக்கடைகளில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அதையும் மீறி அவர்களுக்கு மது விற்கப்படுகிறது. இப்போது ஆன்லைனில் முன்பதிவு செய்யும் முறை நடைமுறைக்கு வந்தால் ஒருவரின் கணக்கில் முன்பதிவு செய்து பலரும் மது வாங்கிச் செல்லும் நிலை உருவாகும்.</p><p>மாணவர்கள், இளம்பெண்கள் உள்ளிட்ட பலரும் குடிப்பழக்கத்திற்கு ஆளாவதை தடுத்து வருவது  மதுக்கடைகளில் வரிசையில் நின்று மது வாங்கினால் பார்ப்பவர்கள் தவறாக நினைப்பார்கள் என்ற அச்சம்தான். அதுதான் அவர்களை மதுக்கடைகளுக்கு செல்வதைத் தடுக்கிறது. இப்போது ஆன்லைனில் மதுவை முன்பதிவு செய்து மதுக்கடைகளில் சில வினாடிகள் மட்டுமே நின்று மதுவை வாங்கிச் செல்லலாம் என்ற நிலை உருவானால் அவர்கள் மதுப்பழக்கத்திற்கு எளிதில் அடிமையாகி விடுவார்கள்.</p><p>மதுக்கடைகளில் அதிக விலைக்கு மது விற்கப்படுவதைத் தடுக்கவே இந்தத் திட்டம் என்பதும் தவறான வாதம் ஆகும். மதுக்கடைகளில் ஊழலை ஒழிக்க முடியவில்லை என்ற அரசின் தோல்வியையே இது காட்டுகிறது. கள்ளச்சாராய வணிகத்தைத் தடுப்பதற்காகத்தான் மதுக்கடைகளை நடத்துகிறோம் என்று ஆட்சியாளர்கள் கூறுவது எந்த அளவுக்கு அபத்தமானதோ, அதே அளவுக்கு இந்த வாதமும் அபத்தமானது.</p><p>தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்ற சில நாள்களிலேயே தமிழ்நாட்டில் 717 மதுக்கடைகளை மூடுவதற்கு ஆணையிட்டார். அது மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், அதை சிதைக்கும் வகையில் மதுக்கடைகளை தனியார் மயமாக்குதல், ரெஸ்டோ பார்களை அனுமதித்தல் போன்ற செய்திகள் வெளிவருவதும், ஆன்லைனில் மதுவை முன்பதிவு செய்வதை அனுமதிப்பதும் அரசுக்கு பெருமை சேர்க்காது. எனவே, மதுப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்யும் மது முன்பதிவு திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>‘புதுப் பானையில் பழைய சோறு&apos; - தமிழக பட்ஜெட்டை விமர்சித்த எஸ்டிபிஐ</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/old-rice-in-a-new-pot-stbi-criticizes-tamil-nadu-budget</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/old-rice-in-a-new-pot-stbi-criticizes-tamil-nadu-budget#comments</comments><guid isPermaLink="false">8b8b71fe-dfd4-4062-8f6f-e1cc497747fa</guid><pubDate>Wed, 05 Aug 2026 11:13:16 +0000</pubDate><atom:updated>2026-08-05T11:13:16.536Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,சென்னை,STPI,நெல்லை முபாரக்,Tamil Nadu Budget,எஸ்டிபிஐ கட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/da9dsixf/189.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எஸ்டிபிஐ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/da9dsixf/189.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> ‘புதுப் பானையில் பழைய சோறு' என்று தமிழக பட்ஜெட்டை எஸ்டிபிஐ கட்சி விமர்சித்துள்ளது.</p><p>இது தொடர்பாக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90">எஸ்டிபிஐ </a>கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:</p><p>தமிழக முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான முதல் மாநில பட்ஜெட்டை, நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார். புதிய அரசு அமைந்த பிறகு தாக்கல் செய்யப்பட்டுள்ள முதல் பட்ஜெட் என்பதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இருப்பினும், இந்த நிதிநிலை அறிக்கை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது ஏமாற்றத்தையே அளிக்கிறது.</p><h2>நிதிநிலை அறிக்கை</h2><p>அதேவேளையில், இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில சாதகமான அம்சங்களை எஸ்டிபிஐ கட்சி வரவேற்கிறது. குறிப்பாக, புதுமணப் பெண்களுக்கு 8 கிராம் (1 பவுன்) தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை வழங்கும் 'அண்ணன் சீர்' திட்டம், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டம், ரூ.3,200 கோடி மதிப்பீட்டில் 1 லட்சம் படுக்கை வசதிகளுடன் கூடிய 'TN சுடர்' ஒருங்கிணைந்த நவீன மாணவர் விடுதிகள் அமைக்கும் திட்டம், ரூ.50 கோடியில் 10 சிறப்பு ஒலிம்பிக் மையங்கள் மற்றும் பொதுமக்களுக்கான 'சேவை உரிமைச் சட்டம்' போன்ற அறிவிப்புகள் பாராட்டத்தக்கவை.</p><p>இருப்பினும், இந்த பட்ஜெட்டில் கவனிக்கப்பட வேண்டிய பெருமளவிலான குறைகளும் ஏமாற்றங்களும் நிறைந்துள்ளன. குறிப்பாக, சிறுபான்மை சமூக மக்களுக்கான சிறப்பான அறிவிப்புகள் எதுவும் இதில் இடம்பெறவில்லை. சிறுபான்மை மக்களின் கல்வி, பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக நலனுக்கான தனிப்பட்ட திட்டங்களோ, சிறப்பு நிதி ஒதுக்கீடுகளோ அறிவிக்கப்படாமல் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.</p><p>மேலும், தவெகவின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட இந்த பட்ஜெட் அறிவிப்பில் இடம் பெறவில்லை. மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.2,500, ஆண்டுக்கு 6 இலவச எரிவாயு சிலிண்டர்கள், முதியோர் உரிமைத்தொகை ரூ.3,000 மற்றும் முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி போன்ற எந்தவொரு முக்கிய வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.</p><h2>மீன்பிடித் தடைக்கால நிவாரணம்</h2><p>இது தவிர, பள்ளிக்கல்வித் துறைக்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.4,007 கோடி நிதி குறைக்கப்பட்டு, ரூ.44,527 கோடியாக அறிவிக்கப்பட்டிருப்பது அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பைப் பெருமளவில் பாதிக்கும். மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ஏற்கனவே ரூ.8,000 ஆக உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது பட்ஜெட்டில் ரூ.7,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, கர்ப்பிணிப் பெண்களின் குழந்தைகளுக்கான தங்க மோதிரத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.560 கோடி நிதியானது, மாநிலத்தின் தற்போதைய அரசு மருத்துவமனை பிறப்பு விகிதக் கணக்கீட்டின்படி போதுமானதாக இல்லை.</p><p>அரசுத்துறைகளில் காலியாக உள்ள சுமார் 6 லட்சம் பணியிடங்களை நிரப்புவது குறித்தோ, புதிய தொழிற்சாலைகளைத் தொடங்கி வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்தோ எந்தவொரு தெளிவான திட்டமும் இதில் இல்லை. 'புதுப் பானையில் பழைய சோறு' என்பது போல, முந்தைய அரசின் திட்டங்களுக்குப் புதிய பெயர்களைச் சூட்டி விளம்பரம் செய்வதால் மட்டுமே மக்களின் பசி ஆறிவிடாது.</p><h2>வலியுறுத்தல்</h2><p>ஆகவே, வெறும் 3 மாத கால ஆட்சியில் சாதனைகள் செய்துவிட்டதாகக் கூறும் தவெக அரசு, பட்ஜெட்டில் வெறும் பெயர் மாற்றங்களாலும் கவர்ச்சி அறிவிப்புகளாலும் மட்டுமே மக்களைத் திருப்திப்படுத்திவிட முடியாது என்பதை உணர வேண்டும். சிறுபான்மை மக்கள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பு ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், அரசு உடனடியாகத் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் - உதயநிதி பரஸ்பர வணக்கம் தெரிவித்தனர் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-and-udhayanidhi-exchanged-greetings-in-the-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-and-udhayanidhi-exchanged-greetings-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">c9d61f2d-d994-48ec-956d-2e319dfb8c3f</guid><pubDate>Wed, 05 Aug 2026 11:10:18 +0000</pubDate><atom:updated>2026-08-05T11:10:18.303Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,DMK,உதயநிதி ஸ்டாலின்,சட்டசபை,UdhayanidhiStalin,முதல்-அமைச்சர் விஜய்,TNBudget</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/3febj6x1/vijaytwo33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/3febj6x1/vijaytwo33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் - உதயநிதி பரஸ்பர வணக்கம் தெரிவித்துக்கொண்ட சம்பவம் உறுப்பினர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.</p><p>முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று காலையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. </p><p>முன்னதாக முதல்-அமைச்சர் விஜய் காலை 9.57 மணிக்கு சட்டசபைக்குள் வந்தார். அப்போது அவர் உறுப்பினர்களுக்கு வணக்கம் தெரிவித்தார். காலை 9.58 மணிக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சபைக்கு வந்து தனது இருக்கையில் அமர்ந்தார். </p><p>அப்போது<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D"> முதல்-அமைச்சர் விஜய்</a>யும், எதிர்கட்சி தலைவர் உதயநிதியும் ஒருவொருக்கொருவர் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக்கொண்டனர். </p><p>உதயநிதி ஸ்டாலின் நேற்று கைதாகி விடுதலையான நிலையில் இன்று சட்டசபைக்குள் வந்ததும் எப்போதும் போல இருவரும் ஒருவொருக்கொருவர் வணக்கம் தெரிவித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர்கள் 24 பேர் கைது: ரூ.1.3 கோடி பறிமுதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/24-government-employees-arrested-for-accepting-bribe-in-tamil-nadu-rs-13-crore-seized</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/24-government-employees-arrested-for-accepting-bribe-in-tamil-nadu-rs-13-crore-seized#comments</comments><guid isPermaLink="false">8eb62b27-4034-4879-98ca-00d700d15d6c</guid><pubDate>Wed, 05 Aug 2026 11:01:28 +0000</pubDate><atom:updated>2026-08-05T11:01:28.746Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,Chennai,சென்னை,தமிழகம்,கைது,Action,arrest,நடவடிக்கை,அரசு ஊழியர்கள்,Government Employees,பணம் பறிமுதல்,Anti-Corruption Department,money seizure,லஞ்ச ஒழிப்பு துறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/am5wnp5g/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ லஞ்சம் வாங்கி அரசு ஊழியர்கள் கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/am5wnp5g/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">தமிழகத்தில்</a> கடந்த ஒரு மாதத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">லஞ்சம்</a> வாங்கிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">அரசு ஊழியர்கள்</a> 24 பேரை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவர்களிடமிருந்து ரூ.1.3 கோடி பறிமுதல் செய்துள்ளனர்.</p><h2>24 பொறிவைப்பு நடவடிக்கைகள்</h2><p>தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>தமிழகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையால் கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையில் 24 பொறிவைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அலுவல் ரீதியான பணிகளைச் செய்வதற்காக ரூ.500 முதல் ரூ.1 லட்சம் வரை லஞ்சம் கேட்டு பெற்ற அரசு ஊழியர்கள் (இணை ஆணையாளர் அறநிலையத்துறை, வட்டாட்சியர், இளநிலை உதவியாளர், உதவி மின் பொறியாளர், மின்வாரிய வணிக ஆய்வாளர், சமூகநல விரிவாக்க அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், இரண்டாம் நிலை காவலர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட் டோர்) 24 பேர் கைது செய்யப்பட்டனர்.</p><h2>'ஜி-பே' மூலம் ரூ.94 லட்சம்</h2><p>மேலும் கிருஷ்ணகிரி, திருவள்ளூர், தேனி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தஞ்சை, ராணிப்பேட்டை, சென்னை மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் 13 அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட ஊழல் தடுப்பு சோதனையில் கணக்கில் வராத ரொக்கம் ரூ.13 லட்சத்து 39 ஆயிரத்து 80 கைப்பற்றப்பட்டது. மேலும் மாநில எல்லைகளில் அமைந்துள்ள 6 வாகன சோதனை சாவடிகளில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் கணக்கில் வராத ரொக்கம் ரூ.9 லட்சத்து 87 ஆயிரத்து 890 கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><h2>மொத்தம் ரூ.1.31 கோடி பறிமுதல்</h2><p>மேலும் கடந்த மாதம் 17-ந்தேதி தமிழகம் முழுவதும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலர்கள், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர்களுடன் இணைந்து தமிழகத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ரூ.13 லட்சத்து 88 ஆயிரத்து 750 கைப்பற்றப்பட்டது. சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் 'ஜி-பே' பரிவர்த்தனைகள் ரூ.94 லட்சத்து 69 ஆயிரத்து 887 என மொத்தம் ரூ.1 கோடியே 31 லட்சத்து 85 ஆயிரத்து 607 <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">பணம் பறிமுதல்</a> செய்யப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாற்றத்திற்கான பட்ஜெட்டாக இருக்குமா? மக்களின் கடன் சுமை குறையுமா? -வேல்முருகன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-it-be-a-budget-for-change-will-peoples-debt-burden-be-reduced-velmurugan-question</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-it-be-a-budget-for-change-will-peoples-debt-burden-be-reduced-velmurugan-question#comments</comments><guid isPermaLink="false">63a14542-cf8a-4662-ba22-ab8a18dd8de4</guid><pubDate>Wed, 05 Aug 2026 10:57:32 +0000</pubDate><atom:updated>2026-08-05T10:57:32.401Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Velmurugan,பட்ஜெட்,கேள்வி,Budget,தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்,அமைச்சர் மரிய வில்சன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/ijie2j3f/Untitled-4.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வேல்முருகன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ வேல்முருகன் கேள்வி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/ijie2j3f/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாற்றத்திற்கான பட்ஜெட்டாக. இருக்குமா? மக்களின் கடன் சுமை குறையுமா? என்று வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழக வாழ்வுரிமைக் கட்சி</a> தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நிதியமைச்சர்</a> திரு. மரிய வில்சன் அவர்கள் தாக்கல் செய்துள்ள 2026–27 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்றும் ஆவணமாக இல்லை.</p><p>இந்த நிதிநிலை அறிக்கையில் பல புதிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தாலும், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைய வேண்டிய வேலைவாய்ப்பு உருவாக்கம், உற்பத்தித் துறை விரிவாக்கம், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களை மீட்டெடுக்கும் திட்டங்கள், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் உறுதியான நடவடிக்கைகள் ஆகியவற்றில் தெளிவான செயல்திட்டம் காணப்படவில்லை.</p><p>மக்களின் வரிப்பணத்தில் செயல்படும் அரசு, புதிய திட்டங்களை அறிவிப்பது மட்டுமே போதாது. அந்தத் திட்டங்களுக்கு தேவையான நிதி ஆதாரம் என்ன? அவை எப்போது நடைமுறைக்கு வரும்? எந்தக் காலக்கெடுவில் நிறைவேற்றப்படும்? என்பதற்கானத் தெளிவான விளக்கமும் இருக்க வேண்டும்.</p><p>தமிழ்நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் கடன் சுமையை எதிர்கொண்டு வரும் நிலையில், அரசின் வருவாயை உயர்த்தும் உற்பத்தி சார்ந்தப் பொருளாதாரக் கொள்கைகள், புதிய முதலீடுகள், நிரந்தர வேலைவாய்ப்புகள் மற்றும் மாவட்ட வாரியான சமச்சீர் வளர்ச்சிக்கான வலுவான திட்டங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் எதிர்பார்த்த அளவில் இடம்பெறவில்லை.</p><p>விவசாயம், மீன்வளம், கைத்தறி, சிறு தொழில்கள் போன்ற வாழ்வாதாரத் துறைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்காமல், அறிவிப்புகளால் மட்டுமே வளர்ச்சியை உருவாக்க முடியாது.மக்கள் எதிர்பார்ப்பது விளம்பரங்களை அல்ல. வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் செயல்பாடுகளையே.</p><p>எனவே, இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை, அரசு உரியக் காலக்கெடுவுக்குள் முழுமையாக நிறைவேற்றுவதுடன், வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி, விவசாயம் மற்றும் பொருளாதாரத் தன்னிறைவு ஆகிய துறைகளில் தனித்துவமான செயல் திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நாகை நீலாயதாட்சி அம்மன் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா தொடங்கியது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aadi-pooram-festival-begins-at-neelayadakshi-amman-temple-in-nagai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aadi-pooram-festival-begins-at-neelayadakshi-amman-temple-in-nagai#comments</comments><guid isPermaLink="false">effec3db-6a96-49a4-b18d-ea4160ee0b0d</guid><pubDate>Wed, 05 Aug 2026 10:52:44 +0000</pubDate><atom:updated>2026-08-05T10:52:44.087Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Aanmigam,Devotional,ஆன்மிகம்,Nagapattinam,நாகப்பட்டினம்,Aadi Pooram Festival,ஆடிப்பூர திருவிழா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/5kot2jh2/nagai-aadi-puram-festival.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றம், சிறப்பு அலங்காரத்தில் அம்மன்]]></media:title><media:description type="html"><![CDATA[ நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/5kot2jh2/nagai-aadi-puram-festival.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாகப்பட்டினம்,</p><p>நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.</p><p>நாகப்பட்டினத்தில் அருள்மிகு காயாரோகணேஸ்வரர் உடனுறை நீலாயதாட்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு எழுந்தருளியிருக்கும் அம்மன், பெண்மையின் ஐந்து முக்கிய வளர்ச்சி நிலைகளில் 15 வயது "பருவ மங்கை"  வடிவமாக அருள்பாலிக்கிறார். இந்து சமய வழிபாட்டில் பெண் தெய்வங்களின் வாழ்க்கை நிலைகளை விளக்கும் ஐந்து முக்கிய ஆட்சி பீடங்களில் இத்தலமும் ஒன்றாகும்.</p><p>இக்கோவிலில் ஒவ்வொரு ஆடி மாதமும் <a href="https://www.dailythanthi.com/topic/aadi-pooram-festival">ஆடிப்பூரம் விழா</a> வெகு விமரிசையாக நடைபெறும். பூரம் நட்சத்திர நாளில் சீப்பு, கண்ணாடி, வளையல், குங்குமம், முளைப்பயிர் உள்பட பொருட்களை வைத்து ஆகம முறைப்படி பூஜை செய்து பக்தர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். </p><h2>ஆடிப்பூர விழா கொடியேற்றம்</h2><p>அவ்வகையில் இந்த ஆண்டின் <a href="https://www.dailythanthi.com/topic/aadi-pooram-festival">ஆடிப்பூர விழா</a> இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிறப்பு பூஜைகளுக்கு பின், அம்மன் சன்னதியில் உள்ள கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. கொடிமரத்திற்கு மஞ்சள், திரவியம், மாப்பொடி, பச்சரிசி, இளநீர், தேன், பால் தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு <a href="https://www.dailythanthi.com/topic/worship">மகா தீபாரதனை</a> காண்பிக்கப்பட்டது. </p><p>இதில் கோவில் செயல் அலுவலர் தனலட்சுமி மற்றும் கோயில் பணியாளர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். </p><p>விழா நாட்களில் பூத வாகனம், மகாலட்சுமி அவதாரம், சிம்ம வாகனம், கிளி வாகனம், வேணுகோபால் அவதாரம், சிவலிங்க பூஜை என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் ஆடிப்பூர அம்மன் வீதியுலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான பூரம் கழித்தல் 14-ம் தேதியும், ஊஞ்சல் உற்சவம் 15-ம் தேதியும் நடைபெறும்.</p>]]></content:encoded></item><item><title>வாணியம்பாடி அருகே ஏரியில் அனுமதியின்றி மண் கடத்தல்: 9 டிராக்டர்கள், 2 ஜே.சி.பி. இயந்திரங்கள் பறிமுதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/illegal-soil-smuggling-in-a-lake-near-vaniyambadi-9-tractors-2-jcb-machines-seized</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/illegal-soil-smuggling-in-a-lake-near-vaniyambadi-9-tractors-2-jcb-machines-seized#comments</comments><guid isPermaLink="false">60dfc7b0-236c-4f03-85ec-cb1c74cfad38</guid><pubDate>Wed, 05 Aug 2026 10:52:40 +0000</pubDate><atom:updated>2026-08-05T10:52:40.526Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருப்பத்தூர்,tractor,டிராக்டர்,Vaniyambadi,பறிமுதல்seized,Soil smuggling,மண் கடத்தல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/xkq5rgqz/188.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/xkq5rgqz/188.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பத்தூர்,</p><p>திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள சின்ன வேப்பம்பட்டு ஏரியில் அனுமதியின்றி மண் கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் வருவாய்த் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.</p><h2>பறிமுதல்</h2><p>சோதனையின் போது, உரிய அனுமதியின்றி ஏரியில் இருந்து மண் எடுத்து கடத்தியது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்தில் இருந்த 9 டிராக்டர்கள் மற்றும் 2 ஜே.சி.பி. இயந்திரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.</p><p>வாணியம்பாடி வட்டாட்சியர் சுதாகர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், சட்டவிரோதமாக மண் கடத்தியவர்களிடம் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">விசாரணை </a>நடத்தப்பட்டு வருகிறது. மேலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தங்கம் விலை ஒரே நாளில் 2-வது முறையாக உயர்வு... நிலவரம் என்ன..?</title><link>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-rises-second-time-in-a-day-whats-the-status</link><comments>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-rises-second-time-in-a-day-whats-the-status#comments</comments><guid isPermaLink="false">fab4e169-ec97-463c-83a6-fbe1da046133</guid><pubDate>Wed, 05 Aug 2026 10:47:14 +0000</pubDate><atom:updated>2026-08-05T10:48:18.925Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Gold Rate,தங்கம் விலை,வெள்ளி விலை,Gold Price,Silver Price,விலை நிலவரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/y2w69hjn/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/y2w69hjn/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தங்கம் (Gold Rate)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்த நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,05,600-க்கும், ஒரு கிராம் ரூ.13,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.</p><p>இந்த நிலையில் இன்று காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280-ம், கிராமுக்கு ரூ.160-ம் அதிரடியாக உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,06,880-க்கும் ஒரு கிராம் ரூ.13,360-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை 2-வது முறையாக ஏற்றம் கண்டுள்ளது.</p><p>அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்று மாலையில் சவரனுக்கு ரூ.960 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,07,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,240 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p>வெள்ளி விலை இன்று காலையில் கிராமுக்கு ரூ.5 உயர்ந்த நிலையில், மாலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.240-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item></channel></rss>