<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 12 Aug 2026 04:22:07 +0000</lastBuildDate><item><title>ஆந்திரா, கர்நாடகாவில் விமான நிலையங்கள் கட்டப்பட்டால் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பாதிக்கும் - தி.மு.க. எச்சரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-warns-airports-in-andhra-karnataka-may-hurt-tamil-nadu-industry</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-warns-airports-in-andhra-karnataka-may-hurt-tamil-nadu-industry#comments</comments><guid isPermaLink="false">49c519b6-3b0d-4c3d-93b2-ad30ca0b03af</guid><pubDate>Wed, 12 Aug 2026 04:17:15 +0000</pubDate><atom:updated>2026-08-12T04:17:15.578Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,Karnataka,Andhra,ஆந்திரா,airport,விமான நிலையம்,கர்நாடகா,தமிழக சட்டசபை,TN Assembly,தொழில் வளர்ச்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/jlhc8qt0/Untitled-4.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ விமான நிலையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/jlhc8qt0/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஆந்திரா, கர்நாடகாவில் விமான நிலையங்கள் கட்டப்பட்டால் தொழில் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.</p><p>தமிழக சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ. சீனிவாசன் (தி.மு.க.) பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-</p><h2>ஆந்திரா முயற்சி</h2><p>கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்கப்படாவிட்டால், மாவட்டத்தின் எதிர்கால வளர்ச்சிப்பணிகள் பெரிதும் பாதிக்கப்படும். ஆந்திர மாநில முதல்-மந்திரி மத்திய அரசு கூட்டணியில் இருக்கிறவர். அவரது கட்சியைச் சேர்ந்த ஒருவர் விமானப் போக்குவரத்துத்துறை மந்திரியாக இருக்கிறார். இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழிலை முடக்குவதற்காகவும், இங்குள்ள தொழிலை அங்கு கொண்டு செல்வதற்காகவும் விமான நிலையம் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது.</p><h2>தமிழகத்திற்கு பாதிப்பு</h2><p>கர்நாடக மாநில முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தரப்பிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விமான நிலையம் வராமல் தடுப்பதற்காக அவர்கள் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கான கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இரு மாநிலங்களும் தங்கள் பகுதிகளில்</p><p>விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு விமான நிலையம் கிடைக்காவிட்டால், எதிர்காலத்தில் தமிழகம் மற்றும் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.</p><h2>ஆதாரங்களோடு பேச வேண்டும்</h2><p>இதற்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, "ஆதாரங்கள் இல்லாமல் பத்திரிகைகள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களை அடிப்படையாக கொண்டு, சட்டசபையில் தவறான தகவல்களை தெரிவிக்கக்கூடாது. ஆதாரங்களை தந்துவிட்டு பேச வேண்டும்" என்று குறிப்பிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டுவந்த முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-moved-a-special-resolution-in-the-legislative-assembly-against-constituency-delimitation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-moved-a-special-resolution-in-the-legislative-assembly-against-constituency-delimitation#comments</comments><guid isPermaLink="false">3dcc8dbd-e94a-4fa5-a972-ab1d9d8c5730</guid><pubDate>Wed, 12 Aug 2026 04:13:07 +0000</pubDate><atom:updated>2026-08-12T04:13:07.415Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,விஜய்,சட்டசபை,TN Assembly,Delimitation of Constituencies,தொகுதி மறுவரையறை,Delimitation,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/3uo914ao/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/3uo914ao/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மக்களவை எம்.பி.க்களின் எண்ணிக்கை 543 என்பதை நிரந்தரமாக்க வேண்டும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தனித்தீர்மானம் கொண்டுவந்தார். </p><p>தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை தொடங்கியதும், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அரசினர் தனித் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-</p><h2>சட்ட திருத்த மசோதா தோல்வி</h2><p>தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மக்களவை/சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையானது கடந்த 50 ஆண்டுகளாக 1971-ம் ஆண்டினுடைய மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்களின்படி நிர்ணயிக்கப்பட்டு தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகிறது.</p><p>ஏப்ரல் 2026-ல் நாடாளுமன்றத்தில் கடந்த 50 ஆண்டு கால தொகுதி மறுவரையறை தடையை நீக்கவும், 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்திடவும், மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 550-ல் இருந்து 850 ஆக அதிகரிக்கவும் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா தோல்வியடைந்தது.</p><h2>மத்திய அரசின் கடமை</h2><p>இந்த நிலையில், மீளவும் மேற்குறிப்பிட்ட அரசியமைப்புச் சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்படவுள்ளது எனத் தெரிந்ததன் அடிப்படையில் 1971-ம் ஆண்டுக்கு பிறகு உள்ள எந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு தொகுதி மறுவரையறை செய்தாலும், மக்கள்தொகையை சிறப்பாகக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் நிரந்தரமாகப் பாதிக்கப்படும் என்பது நிதர்சனமான உண்மை.</p><p>மத்திய அரசு அளித்த உறுதியின்படி மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி நல்ல பொருளாதார வளர்ச்சி கண்டு, நல்ல சுகாதாரம், மக்கள் நலத் திட்டங்களை மேற்கொண்டு வரும் எந்தவொரு மாநிலமும் தொகுதி மறுவரையால் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்வது மத்திய அரசின் தலையாய கடமையாகும்.</p><h2>543 எண்ணிக்கையே தொடர வேண்டும்</h2><p>எனவே, தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையான 543 என்ற அளவிலேயே நிரந்தரமாக வைப்பதற்கும், மாநிலங்களுக்கு இடையேயான எண்ணிக்கைப் பகிர்வை நிரந்தரமாக வைக்கவும், மேலும், தற்போது மக்களவை - மாநிலங்களவையினுடைய விகிதம் 2.2:1 என்ற அளவிலேயே நிலைநிறுத்த வேண்டும் என்றும், அதே வேளையில், பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை காலதாமதமின்றி, தற்போதுள்ள 543 தொகுதிகளின் அடிப்படையிலேயே 2029-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, கீழ்க்கண்ட தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றுகிறது.</p><h2>விகிதாச்சார பிரதிநிதித்துவம்</h2><p>1.நாடாளுமன்ற மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்க வேண்டும்.</p><p>2. தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் இடங்களின் எண்ணிக்கையை மாநிலங்களுக்கிடையே அதாவது விகிதாச்சார பிரதிநிதித்துவம் தற்போதுள்ள அளவிலேயே நிரந்தரமாக்க வேண்டும்.</p><h2>மத்திய அரசுக்கு வலியுறுத்தல்</h2><p>3.வரவிருக்கும் மக்களவை பொதுத் தேர்தலிலும், அதன் பிறகு சட்டமன்றப் பொதுத் தேர்தல்களிலும் மூன்றில் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டுப் பலனைப் பெண்கள் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்தப் பகுதி: மீண்டும் தீவிரமடையுமா தென்மேற்கு பருவமழை..?</title><link>https://www.dailythanthi.com/news/weather/new-low-pressure-area-forms-in-the-bay-of-bengal-will-the-southwest-monsoon-intensify-again</link><comments>https://www.dailythanthi.com/news/weather/new-low-pressure-area-forms-in-the-bay-of-bengal-will-the-southwest-monsoon-intensify-again#comments</comments><guid isPermaLink="false">0f12cbdf-a375-4e60-ae6e-bb5d412eb0ba</guid><pubDate>Wed, 12 Aug 2026 04:00:11 +0000</pubDate><atom:updated>2026-08-12T04:00:11.145Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Rain,Weather,வானிலை,தமிழகம்,Weather News,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,weather forecast,வானிலை ஆய்வு மையம்,Low pressure area,வானிலை அறிக்கை,weather condition,காற்றழுத்த தாழ்வுப்பகுதி,Bay of Bengal,தென்மேற்கு பருவமழை,வானிலை முன்னறிவிப்பு,வங்கக் கடல்,Weather Status,வானிலை அறிவிப்பு,weather center</media:keywords><media:content height="590" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/l6mmqyln/wind.jpg" width="1063"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/l6mmqyln/wind.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. </p><h2>மிதமான மழை</h2><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது என்றும், இதன் காரணமாக இன்று (12-08-2026) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. </p> <h2>அடுத்த 48 மணி நேரத்தில்</h2><p>இந்நிலையில் வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><p>இதன்படி மேற்கு வங்கம்-வங்கதேச கடற்கரை அருகே வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்றும், காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. </p><h2>பருவமழை தீவிரமடையும்</h2><p>வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வடக்கு, வடமேற்கு மாநிலங்கள் மற்றும் கடலோரப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nia-officials-conduct-raids-at-various-locations-in-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nia-officials-conduct-raids-at-various-locations-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">c9f7113f-ca03-4de1-9c80-72621adf70e7</guid><pubDate>Wed, 12 Aug 2026 03:56:58 +0000</pubDate><atom:updated>2026-08-12T03:56:58.883Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,NIA,NIA Raid,என்.ஐ.ஏ.,என்.ஐ.ஏ. சோதனை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/n6050hkg/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ என்.ஐ.ஏ. சோதனை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/n6050hkg/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.</p><p>தமிழ்நாட்டில் சென்னை, மதுரை மற்றும் கோவை உள்பட 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் 6 இடங்கள் மற்றும் மதுரையில் 1 இடம் உட்பட பல இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.</p><h2>போதைப்பொருள் வழக்கு</h2><p>கடந்த 2024-ம் ஆண்டு அந்தமான் பகுதியில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடத்தப்படுகிறது. இந்த வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கில் பிடிபட்ட 7 பேருடன் தொடர்பில் இருந்தவர்கள் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.</p><p>பர்மாவில் இருந்து செயல்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் உள்ளவர்களின் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்படுகிறது. மியான்மரில் இருந்து செயல்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பா? என அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நடிகை திரிஷா குறித்த ஆர்.பி. உதயகுமாரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/posters-pasted-condemning-rb-udhayakumars-remarks-about-actress-trisha</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/posters-pasted-condemning-rb-udhayakumars-remarks-about-actress-trisha#comments</comments><guid isPermaLink="false">64581ec9-f180-4e05-93f9-f93c95520739</guid><pubDate>Wed, 12 Aug 2026 03:40:35 +0000</pubDate><atom:updated>2026-08-12T03:40:35.578Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,Trisha,நடிகை திரிஷா,அதிமுக,Madurai,மதுரை,ஆர்.பி. உதயகுமார்,RB Udhayakumar,Actress Trisha</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/ozegxbiz/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/ozegxbiz/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>நடிகை திரிஷா குறித்த ஆர்.பி. உதயகுமாரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து மதுரை முழுவதும் திரிஷா நற்பணி மன்றம் சார்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.</p><p>தூத்துக்குடியில் நடந்த மாவட்ட ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், ஜெயலலிதா பேரவை மாநில செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசினார்.</p><p>அவர் பேசுகையில், "அ.தி.மு.கவை நேற்று பிறந்த டவுசர் பையன் விஜய் அபகரிக்க, அழிக்க நினைக்கிறான். அ.தி.மு.க.வை யாரேனும் அழிக்க நினைத்தால், அவர்களின் வம்சமே நாசமாக போகும். மேலும் காவிரி தண்ணீரை பற்றி பேசினால், காவிரியாவது, தண்ணீராவது, எங்க அண்ணி திரிஷா பற்றி யார் பேசியது? என்று அக்கட்சியினர் கேட்கிறார்கள்" என்றார்.</p><p>இதனையடுத்து முதல்-அமைச்சர் விஜய், நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசிய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகு மார் மீது த.வெ.க. நிர்வாகி போலீசில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>கண்டன போஸ்டர்கள்</h2><p>இந்த நிலையில், நடிகை திரிஷா குறித்த ஆர்.பி. உதயகுமாரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து மதுரை முழுவதும் திரிஷா நற்பணி மன்றம் சார்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், 'இருவரின் நட்பை கொச்சைப்படுத்தும் நோக்கில் பேசியது கண்டனத்துக்குரியது. ”யாகாவா ராயினும் நாகாக்க’ வேண்டும் என்ற குறளுக்கு ஏற்றவாறு பேசுவது தமிழ் மக்களின் மாண்பு.</p><p>முன்னாள் அமைச்சரே, மாண்பு தவற வேண்டாம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ”எங்கள் அன்பு அக்கா திரிஷாவை பற்றி யார் தவறாக பேசினாலும் எங்களால் ஏற்க முடியாது. மீறினால் மாபெரும் ஆர்ப்பாட்டம் செய்ய நேரிடும்” என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>புலன் விசாரணை பெயரில் துன்புறுத்தல் கூடாது: விதிமுறை உருவாக்கி ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-harassment-under-the-guise-of-investigation-high-court-orders-formulation-of-guidelines</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-harassment-under-the-guise-of-investigation-high-court-orders-formulation-of-guidelines#comments</comments><guid isPermaLink="false">ae0b3866-ad6e-4ec0-8438-2c52a73c8a07</guid><pubDate>Wed, 12 Aug 2026 03:28:54 +0000</pubDate><atom:updated>2026-08-12T03:28:54.952Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,High Court,order,ஐகோர்ட்டு உத்தரவு,investigate,புலன் விசாரணை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/aqov2ove/chennai-highcourt.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஐகோர்ட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/aqov2ove/chennai-highcourt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>புலன் விசாரணை என்ற பெயரில் போலீசார் துன்புறுத்துவதாக கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, விசாரணைக்கு அழைக்கப்படுபவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது.</p><h2>சென்னை ஐகோர்ட்</h2><p>புலன் விசாரணை என்ற பெயரில் தன்னை போலீசார் துன்புறுத்தக்கூடாது என உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ராஜா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், “விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக்கூடாது என போலீசாருக்கு உத்தரவிடக்கோரி ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. </p><p>போலீசாரின் புலன் விசாரணையில் பொதுவாக ஐகோர்ட்டு தலையிடுவதில்லை. அதேநேரம் புலன் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">விசாரணை</a> என்ற பெயரில் துன்புறுத்துவதை கண்டுகொள்ளாமல் இருக்கவும் முடியாது.</p><h2>விதிமுறை</h2><p>எனவே, கீழ்கண்ட விதிமுறைகளை உருவாக்குகிறேன். விசாரணைக்கு அழைக்கப்படுபவருக்கு முறையாக சம்மன் அனுப்ப வேண்டும். அதில் எந்த தேதியில், எந்த நேரத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என குறிப்பிட வேண்டும்.</p><p>விசாரணை நடவடிக்கைகளை, போலீஸ் நிலைய குறிப்பேட்டில் பதிவு செய்ய வேண்டும். விசாரணைக்கு அழைக்கப்படும் யாரையும் துன்புறுத்தக்கூடாது" என்று உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் ஆதரவாளர் மீது வழக்குப்பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-registered-against-a-supporter-of-kolathur-mla-vs-babu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-registered-against-a-supporter-of-kolathur-mla-vs-babu#comments</comments><guid isPermaLink="false">d8de963f-fa64-4fa3-9343-859fd47d3b92</guid><pubDate>Wed, 12 Aug 2026 03:20:26 +0000</pubDate><atom:updated>2026-08-12T03:20:26.140Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,வழக்கு,கொளத்தூர்,Kolathur,வி.எஸ்.பாபு,VS Babu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/r87it13z/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/r87it13z/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் ஆதரவாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் ஆதரவாளர் என கூறப்படும் ஜமால் முகமது குறித்து வழக்கறிஞர் ரியாஸ் அவதூறாக பேசப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ரியாஸை தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட கும்பல் அவரை பெரம்பூரின் கே.கே.ஆர். அவென்யூ பகுதிக்கு வரவழைத்து அங்குவைத்து ரியாஸ் மீது தாக்குதல் நடத்தி உள்ளது.</p><p>இந்தத் தாக்குதலில் ரியாஸின் தலை மற்றும் உடலில் காயம் ஏற்பட்டுள்ளது. பிறகு ரியாஸ் பெரியார் நகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து தாக்குதல் குறித்து வழக்கறிஞர் ரியாஸ் திரு.வி.க. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.</p><p>புகாரின் அடிப்படையில் கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் ஆதரவாளர் ஜமால் முகமது உட்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>கட்டுக்குள் வந்த காட்டுத்தீ:  சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி</title><link>https://www.dailythanthi.com/devotional/devotees-are-permitted-to-climb-the-sathuragiri-hills-today-the-day-of-aadi-amavasai</link><comments>https://www.dailythanthi.com/devotional/devotees-are-permitted-to-climb-the-sathuragiri-hills-today-the-day-of-aadi-amavasai#comments</comments><guid isPermaLink="false">ad70eacb-a9e6-496b-84ee-37fccbe25e83</guid><pubDate>Wed, 12 Aug 2026 03:20:21 +0000</pubDate><atom:updated>2026-08-12T03:20:21.949Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிகச் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514969</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,விருதுநகர்,வனத்துறை,சதுரகிரி கோவில்,சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்,Sathuragiri Temple,sathuragiri hills,Sathuragiri,வத்திராயிருப்பு,சதுரகிரி,aadi amavasai,ஆடி அமாவாசை,ஆடி அமாவாசை விழா,Aadi Amavasai festival,ஆடி அமாவாசை திருவிழா,சதுரகிரி மலை,சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி,சதுரகிரி மலை கோவில்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/piave6hw/aadki.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/piave6hw/aadki.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (Devotional)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வத்திராயிருப்பு, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF">சதுரகிரி</a> மலையில் மீண்டும் காட்டுத்தீ பரவியதால் இன்று ஆடி அமாவாசை தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டிருந்தது.</p><h2>ஆடி அமாவாசை திருவிழா</h2><p>விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF">சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில்</a> அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரசித்தி பெற்ற ஆடி அமாவாசை திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி கடந்த 10-ந் தேதி முதல் நாளை (வியாழக்கிழமை) வரை பக்தர்கள் மலை ஏறிச் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.</p><h2>சதுரகிரி மலையேற தடை</h2><p>இந்நிலையில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF">சதுரகிரி</a> அருகே சாப்டூர், வத்திராயிருப்பு ஆகிய வனப்பகுதிகளில் பற்றிய காட்டுத்தீ நேற்று முன்தினம் மாலை சதுரகிரி மலையின் கீழ் பகுதிக்கு பரவியது. இதையடுத்து பக்தர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நேற்று பக்தர்கள் சதுரகிரி மலையேற தடை விதித்து மதுரை, விருதுநகர் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் உத்தரவிடப்பட்டது.</p><h2>மீண்டும் காட்டுத்தீ</h2><p>காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டனர். நேற்று பிற்பகலில் காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து நேற்று இரவு 7 மணி அளவில் சுந்தர மகாலிங்க சுவாமி கோவிலுக்கு அருகே உள்ள தவசிப்பாறை சந்தையூர் படிவெட்டி பகுதியில் மீண்டும் காட்டுத்தீ பற்றி பரவியதால் அதனை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். </p><p>எனவே பக்தர்கள் பாதுகாப்பு கருதி இன்று (புதன்கிழமை) சதுரகிரிக்கு ஆடி அமாவாசை தரிசனத்துக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும், இயல்பு நிலை திரும்பும் வரை இதுதொடரும் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.</p><h2>பக்தர்கள் போராட்டம்</h2><p>இதற்கிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து <a href="https://www.dailythanthi.com/topic/சதுரகிரி">சதுரகிரிக்கு</a> செல்ல நேற்று ஏராளமான பக்தர்கள் வந்து, தாணிப்பாறை அடிவார பகுதிகளில் குவிந்தனர். தங்களுக்கு மலை ஏற அனுமதி வழங்க வேண்டும் என கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஏராளமான பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.</p><h2>மீண்டும் அனுமதி </h2><p>இந்நிலையில் ஆடி அமாவாசை நாளான இன்று (புதன்கிழமை) <a href="https://www.dailythanthi.com/topic/சதுரகிரி">சதுரகிரி</a> மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மலையில் பரவும் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். </p><p>அதிகாலை முதல் காத்திருந்த ஏராளமான பக்தர்கள் தற்போடு சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு மலையேறி வருகின்றனர். இன்று ஆடி அமாவாசை தினம் என்பதால் பல்லாயிரக்கணக்கானோர் மலையேறி சாமி தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>அம்பத்தூர் அருகே ஆட்டோவில் பெண் கொடூரமாக வெட்டிக்கொலை: மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-brutally-hacked-to-death-in-an-auto-rickshaw-near-ambattur-police-launch-manhunt-for-a-mysterious-gang</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-brutally-hacked-to-death-in-an-auto-rickshaw-near-ambattur-police-launch-manhunt-for-a-mysterious-gang#comments</comments><guid isPermaLink="false">9f46d32a-bf8c-45f8-b3b6-23ebfbe435a0</guid><pubDate>Wed, 12 Aug 2026 02:52:11 +0000</pubDate><atom:updated>2026-08-12T02:52:11.799Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,போலீஸ்,கொலை,Death,பெண்,ஆட்டோ,Launch,அம்பத்தூர்,A woman</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/1lnz68pf/53.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வெட்டிக்கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/1lnz68pf/53.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திரு.வி.க நகர், </p><p>அம்பத்தூர் அருகே ஆட்டோவில் வைத்து பெண்ணை வெட்டிக்கொலை செய்து மர்ம கும்பல் உடலை சாலையில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>பெண் கொலை</h2><p>அம்பத்தூர் அடுத்த கள்ளிக்குப்பம் பகுதியில் நேற்று இரவு 10 மணி அளவில் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த ஆட்டோவிற்குள்ளிருந்து ஒரு பெண்ணின் அலறல் சத்தம் திடீரென கேட்டுள்ளது. அதைக் கவனித்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். அடுத்த சில வினாடிகளில், உடல் முழுவதும் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் அந்த பெண் ஆட்டோவில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டார்.</p><p>இந்த சம்பவம் குறித்து உடனடியாக புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றபோது 40 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>போலீசார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் அந்த பெண்ணை ஆட்டோவுக்குள்ளேயே வைத்து கத்தியால் சரமாரியாக வெட்டியதும், வலி தாங்காமல் அந்த பெண் சத்தமிட்டு கதறியதால் ஆட்டோவில் இருந்து வெளியே தூக்கி வீசிவிட்டு அதே ஆட்டோவில் மர்ம கும்பல் தப்பியோடியதும் தெரியவந்துள்ளது. </p><p>நேற்று இரவு நடைபெற்ற இந்த கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது. இதனையடுத்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்ட பெண் யார்? மற்றும் கொலையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார் </a>விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>திமுக-பாஜக கூட்டணி உருவாகிறதா? - வானதி சீனிவாசன் பரபரப்பு பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-a-dmk-bjp-alliance-in-the-making-vanathi-srinivasans-sensational-response</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-a-dmk-bjp-alliance-in-the-making-vanathi-srinivasans-sensational-response#comments</comments><guid isPermaLink="false">e96b4aea-c6f1-488e-bff9-24e6a17db1e9</guid><pubDate>Wed, 12 Aug 2026 02:51:06 +0000</pubDate><atom:updated>2026-08-12T02:51:06.661Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,திமுக,DMK,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/z3l693e1/CHENNAI-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/z3l693e1/CHENNAI-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>திமுக-பாஜக கூட்டணி உருவாகிறதா? என்பது குறித்து வானதி சீனிவாசன் பரபரப்பு பதில் அளித்துள்ளார்.</p><p>கோவை,</p><p>கோவையில் பாஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள், தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி உருவாகிறதா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு மறுப்பு தெரிவிக்காத அவர், அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை. எதிரியும் இல்லை. கூட்டணி உருவாகும்போது பார்ப்போம் என்று கூறினார்.</p><p>மேலும் அவர் கூறும்போது, சட்டம்-ஒழுங்கு இன்னும் மாற வில்லை. ஆட்சி அதிகாரத்தில் இருக்கையில் இருப்பவர்கள் மட்டும் மாறி உள்ளனர். பெண்களுக்கு. விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. தமிழக அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றால், சுப்ரீம் கோர்ட்டை நாடலாமே தவிர, நீட் தேர்வு ரத்து என்பது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மீறுவது போன்றது.</p><p>இந்த நீட்தேர்வில் உள்ள பிரச்சினைகளை மத்திய அரசு சரி செய்துள்ளது. த.வெ.க. அரசு தனி கமிட்டியை அமைத்து, கோவை, மதுரை பகுதிகளுக்கு தகுதியான திட்ட அறிக்கையை கொடுத்து மெட்ரோ ரெயில் வருவதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஆடி அமாவாசை: ராமேஸ்வரத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்: முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aadi-amavasai-thousands-of-devotees-flock-to-rameswaram-perform-rituals-and-offer-prayers-for-ancestors</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aadi-amavasai-thousands-of-devotees-flock-to-rameswaram-perform-rituals-and-offer-prayers-for-ancestors#comments</comments><guid isPermaLink="false">88edbf7b-5fad-4075-83d3-717d98094718</guid><pubDate>Wed, 12 Aug 2026 02:48:12 +0000</pubDate><atom:updated>2026-08-12T02:48:12.065Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிகச் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514969</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Tenkasi,Kanyakumari,ராமேஸ்வரம்,Rameshwaram,முன்னோர்கள்,aadi amavasai,ஆடி அமாவாசை,ஆடி அமாவாசை விழா,முன்னோர்களுக்கு தர்ப்பணம்,Aadi Amavasai festival,ஆடி அமாவாசை திருவிழா,Tiruchendhur</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/usl19nvb/ramesh.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/usl19nvb/ramesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>ஆன்மிகம் (Devotional)</category><content:encoded><![CDATA[ <p>ராமேஸ்வரம், </p><p>இன்று <a href="https://www.dailythanthi.com/topic/ஆடி-அமாவாசை">ஆடி அமாவாசை</a>யை முன்னிட்டு ராமேஸ்வரம் கோவிலில் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.</p><h2>பித்ருகளுக்கு தர்ப்பணம்</h2><p>அமாவாசை என்பது முன்னோர்களுக்கான நாள். முன்னோர்களை வணங்கி ஆராதனைகள் செய்து அவர்களின் பரிபூரணமான ஆசியைப் பெறக்கூடிய அற்புத நாள். மாதந்தோறும் அமாவாசை வரும். அதுவே முன்னோர்களை வணங்குவதற்கு உண்டான நாள்தான். </p><p>குறிப்பாக ஆடி, புரட்டாசி, தை அமாவாசை நாட்களில் புனித நீர்நிலைகளில் பித்ருகளுக்கு தர்ப்பணம் கொடுத்து, தங்களது முன்னோர்களை வழிபடுவது மக்களின் வழக்கம். இந்த நாட்களில் முன்னோர்களை வழிபட்டால் அவர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை.</p><h2>ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல்</h2><p>அவ்வகையில் <a href="https://www.dailythanthi.com/topic/ஆடி-அமாவாசை">ஆடி அமாவாசை</a> நாளான இன்று புனித நீராடல் நிகழ்ச்சி அதிகாலை முதலே தொடங்கியது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள நீர்நிலைகளில் பொதுமக்கள் குவிந்தனர்.</p><p>ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர். கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வரும் நிலையில், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி இன்று அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படும் கோவில் நடையானது பகல் 1 மணிக்கு சாத்தப்படாமல் பகல் முழுவதும் திறந்திருந்து இரவு 8 மணிக்கு பின்னரே நடை சாத்தப்படும் என்று கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/kiz890u9/neer.jpg" /></figure><h2>கன்னியாகுமரி</h2><p>இதேபோல் கன்னியாகுமரியில் புனித நீராடிய பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் திரளான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். </p><p>இதேபோல் நாகை மாவட்டம் வேதாரண்யத்திலும், கோடியக்கரையிலும் ஏராளமானோர் குவிந்தனர். காலை முதலே புனித நீராடிய அவர்கள் பித்ருக்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர். ஸ்ரீரங்கம், பவானி கூடுதுறை, திருவையாறு உள்ளிட்ட ஏராளமான இடங்களில் பொதுமக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். </p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/doul0rmj/kanya.jpg" /></figure><h2>குற்றாலம் மெயின் அருவி</h2><p>தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி பகுதியில் அதிகாலை முதலிலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்தனர்.</p><p>மாமல்லபுரம் கடற்கரை மற்றும் தலசயன பெருமாள் கோயில் திருக்குளம் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் பகுதிகளில் இருந்து வந்து ஏராளமானோர் தங்கள் மூதாதையர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகம் முழுவதும் 56 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் - புதிய டெண்டர் கோர மின் வாரியம் திட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-to-install-5-6-million-smart-meters-new-tender-plan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-to-install-5-6-million-smart-meters-new-tender-plan#comments</comments><guid isPermaLink="false">53b5c9b4-acd0-4b41-b9ac-a4e7b8821a76</guid><pubDate>Wed, 12 Aug 2026 02:42:39 +0000</pubDate><atom:updated>2026-08-12T02:42:39.599Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Electricity Board,tender,டெண்டர்,மின் வாரியம்,ஸ்மார்ட் மீட்டர்,Smart Meter</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/u2m6r0nt/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/u2m6r0nt/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகம் முழுவதும் 56 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்த புதிய டெண்டர் கோர மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.</p><p>தமிழகத்தில் வீடுகளை உள்ளடக்கிய மின் இணைப்புகளில், மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த மீட்டரில் பதிவாகியுள்ள மின் பயன்பாட்டை, மின் வாரிய பணியாளர்கள், நேரில் சென்று கணக்கு எடுத்து வருகின்றனர். சிலர், நேரில் செல்லாமல் கணக்கெடுப்பதால், நுகர்வோருக்கு அதிக மின் கட்டணம் வருகிறது.</p><h2>ஸ்மார்ட் மீட்டர் திட்டம்</h2><p>இதன் காரணமாக ஆளில்லாமல் கணக்கெடுக்க, 'ஸ்மார்ட்' மீட்டர் திட்டத்தை செயல்படுத்த, மின் வாரியம் முடிவு செய்தது. இந்த ஸ்மார்ட் மீட்டரில் தொலைத்தொடர்பு வசதி ஏற்படுத்தப்பட்டு, அலுவலக 'சர்வர்' உடன் இணைக்கப்படும். மின் பயன்பாடு கணக்கெடுக்க வேண்டிய தேதி வந்ததும், தானாகவே கணக்கெடுத்து, நுகர்வோரின் மொபைல் போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.</p><h2>முடிவு எடுக்கப்படாமல் இருந்தது</h2><p>கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 20 ஆயிரம் கோடி ரூபாய் திட்ட செலவில், மாநிலம் முழுவதும், 3.04 கோடி மின் இணைப்புகளில், 'ஸ்மார்ட் 'மீட்டர் பொருத்தி, பராமரிக்கும் பணிக்கு 'டெண்டர்' கோரப்பட்டது. இந்த டெண்டரில், 50 நிறுவனங்கள் பங்கேற்றன. அவை வழங்கிய தொழில்நுட்ப புள்ளி திறக்கப்பட்ட நிலையில், அரசின் அனுமதி கிடைக்காததால், விலைப் புள்ளி திறக்கப்படாமல் இருந்தது. இதனிடையே ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், 'ஸ்மார்ட்' மீட்டர் டெண்டரில், எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருந்தது.</p><h2>டெண்டர் ரத்து</h2><p>இந்த நிலையில், 'சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும், மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள, 50 லட்சம் தொழில் மற்றும் வணிக நுகர்வோருக்கும், 'ஸ்மார்ட்' மீட்டர் பொருத்தப்படும்' என, தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. எனவே, கடந்த தி.மு.க., ஆட்சியில், 3 கோடி மின் இணைப்புகளில், ஸ்மார்ட் மீட்டர் பொருத்த கோரிய 'டெண்டர்' ரத்து செய்யப்பட உள்ளது. இது குறித்து, விரைவில் நடக்க உள்ள மின் வாரிய இயக்குநர்கள் குழு கூட்டத்தில், முடிவு எடுக்கப்பட உள்ளது.</p><h2>புதிய டெண்டர்</h2><p>ஒட்டு மொத்தமாக தமிழகம் முழுவதும் 56 லட்சம் 'ஸ்மார்ட்' மீட்டர் பொருத்த, மின் வாரியம் புதிதாக 'டெண்டர்' கோர ஆயத்தமாகி வருகிறது. முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகளில், 1.25 லட்சம் 'ஸ்மார்ட்' மீட்டர்களை, மத்திய அரசின் மறுசீரமைக்கப்பட்ட மின் வினியோக திட்டத்தின் கீழ், மின் வாரியம் பொருத்த உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் த.வெ.க.வுடன் உறவுமுறை பேச்சா..? தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை நேரில் அழைத்த மு.க.ஸ்டாலின்?!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/talks-of-an-alliance-with-tvk-in-the-assembly-mk-stalin-personally-summons-dmk-mlas</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/talks-of-an-alliance-with-tvk-in-the-assembly-mk-stalin-personally-summons-dmk-mlas#comments</comments><guid isPermaLink="false">1da3f61e-2a06-4123-aa25-79e4090a3621</guid><pubDate>Wed, 12 Aug 2026 02:19:17 +0000</pubDate><atom:updated>2026-08-12T02:19:17.714Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Tamilnadu,திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,தமிழகம்,தமிழக சட்டசபை,TN Assembly,எம்.எல்.ஏ.க்கள்,MLAs,Assembly Session,சட்டசபை கூட்டத்தொடர்,Budget,தமிழக சட்டசபை கூட்டத்தொடர்,M.K. Stalin</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/bhcoubzb/kmke.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/bhcoubzb/kmke.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/budget">தமிழக சட்டசபையில் பட்ஜெட்</a>, வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 3-வது நாளாக நேற்று நடைபெற்றது. சட்டசபை கூட்டம் தொடங்கியதும் முன்னாள் முதல்-அமைச்சரும் தி.மு.க.எம்.எல்.ஏ.வுமான ஓ.பன்னீர்செல்வம் பேசினார். </p><h2>பெயர் மாற்றப்பட்டியல்</h2><p>ஐந்தாண்டுகளாக நாங்கள் 'டென்ஷனாக' இருந்தோம். நீங்கள் 'ரிலாக்ஸ்' ஆக இருக்கிறீர்கள். கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது நாளிதழ்களை படித்து அதிகாலையிலேயே எங்களை அழைத்து கேள்வி கேட்பார்” என்று கூறினார்.</p><h2>உணர்ச்சி வேகத்தில்</h2><p>தற்கு பதிலளித்த அமைச்சர் ஆனந்த், “அதற்குதான் நாங்கள் டென்ஷனாக இருப்போம் என சொன்னேன். பயமுறுத்தும் விதமாக அதை சொல்லவில்லை. தலைவர் எப்போது நம்முடன் பேசுவார் என எங்கள் உறுப்பினர்கள் நினைத்திருந்தார்கள். இப்போது செல்போன் அழைப்பு அவரிடம் இருந்து வந்தாலே பயம் இருக்கிறது. ஏதாவது தொகுதியில் சின்ன விஷயமாக இருந்தாலும் அதை ஏன் செய்ய வில்லை என்று கேட்கக்கூடியவர் எங்கள் முதல்-அமைச்சர்” என்று கூறினார். </p><p>தொடர்ந்து கோவில்பட்டி பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுத்து பேசிய வழக்கில் கைதான தி.மு.க. எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் சட்டசபையில் பேசியபோது, 'நான் கரிசல் காட்டு மண்ணை சேர்ந்தவன். உணர்ச்சி வேகத்தில் பேசி விட்டேன். முதல்-அமைச்சரை காயப்படுத்தும் நோக்கம் இல்லை. மறந்து விடுங்கள்” என்று கூறினார். </p><h2>எம்.எல்.ஏ.க்களுக்கு கண்டிப்பு</h2><p>இதனிடையே நிதியமைச்சர் மரிய வில்சன் பேசுவதை, தி.மு.க. எம்.எல்.ஏ., ராஜேந்திரன் விமர்சித்தார். இதனால் கோபமடைந்த மரிய வில்சன், நான் தமிழ் பேசுவதில் குறைபாடு இருக்கலாம். அதற்காக என்னை கேலி செய்வது சரியல்ல. நான் இப்படித்தான் பேசுவேன். இது என் ஸ்டைல் என ஆவேசமாக பதிலளித்தார். இதற்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பதிலடி தராமல் மவுனமாகி விட்டனர். </p><p>அதேநேரத்தில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் வேலு, என் அண்ணனோட மாப்பிள்ளை மரிய வில்சன் என நிதியமைச்சருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சட்டசபையில் பேசினார். இந்த தகவல்கள் தெரிந்ததும், எம்.எல்.ஏ.க்கள் சிலரை, தி.மு.க. தலைமை அலுவலகமான அறிவாலயத்திற்கு அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அழைத்ததாக கூறப்படுகிறது. </p><p>அப்போது, சட்டசபை கூட்டத்தொடரில், சம்பந்தப்பட்ட துறை, விவாதிக்கப்படும் விஷயங்களை பற்றி மட்டும் பேசுங்கள். சப்ஜெக்டை விட்டுவிட்டு வேறு எதுவும் தேவையின்றி பேசாதீர்கள் என கண்டித்துள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>ஆக்ரோஷ அரசியல்</h2><p>முன்னதாக கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர் சட்டசபையில், த.வெ.க. அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோரை உறவுமுறையை சுட்டிக்காட்டி பேசினார். </p><p>இது குறித்து, தி.மு.க., முன்னாள் எம்.பி., செந்தில்குமார் தனது எக்ஸ் வலைதளத்தில், 'தி.மு.க., தொண்டர்கள் தொடங்கி, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி வரை கைது செய்து, கழக தொண்டர்களின் உணர்ச்சியை தூண்டும் வகையில் ஆக்ரோஷ அரசியலை கையில் எடுத்துள்ள விஜய் அரசை, நமது MLAகள், ஆளும் கட்சி அமைச்சர்களை உறவு வைத்து சட்டமன்றத்தில் பேசுவதை தவிர்க்க வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார். </p> ]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 14.31 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் கைவிரல் ரேகை பதிவு செய்யவில்லை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/in-tamil-nadu-1431-lakh-ration-cardholders-have-not-registered-their-fingerprints</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/in-tamil-nadu-1431-lakh-ration-cardholders-have-not-registered-their-fingerprints#comments</comments><guid isPermaLink="false">fd7ead96-68a1-41c8-ab12-ba6126d8923d</guid><pubDate>Wed, 12 Aug 2026 02:08:11 +0000</pubDate><atom:updated>2026-08-12T02:08:11.044Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ரேஷன் கடை,Ration shop,Ration card,ரேஷன் கார்டு,கைவிரல் ரேகை பதிவு,Fingerprint,ரேஷன் அட்டை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/27k6ksyh/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/27k6ksyh/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் 14.31 லட்சம் ரேஷன்கார்டுதாரர்கள் கைவிரல் ரேகை பதிவு செய்யவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உள்ள முன்னுரிமை ரேஷன் அட்டைகள் மற்றும் அந்தியோதயா அன்னயோ ஜனா ரேஷன் அட்டைகளில் இடம் பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதார் விவரங்களை உறுதிப்படுத்தும் வகையில் கைவிரல் ரேகை, கண் கருவிழி பதிவை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது. இதனால், இந்த வகை ரேஷன் அட்டைகளின் உறுப்பினர்களிடம் இருந்து கைவிரல் ரேகை பதிவு மற்றும் கருவிழி பதிவை ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.</p><h2>95.96 சதவீதம் பேர் பதிவு</h2><p>அதன்படி, தமிழகம் முழுவதும் 99.39 லட்சம் முன்னுரிமை ரேஷன் அட்டைகள், 18.61 லட்சம் அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் அட்டைகள் என ஒரு கோடியே 18 லட்சம் ரேஷன் அட்டைகளில் உள்ள 3 கோடியே 57 லட்சத்து 78 ஆயிரத்து 227 உறுப்பினர்கள் அனைவரின் கைவிரல் ரேகை மற்றும் கருவிழிப் பதிவை பெறுமாறு மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.</p><p>அந்த வகையில், கடந்த ஜூலை மாதம் வரை 95.4 சதவீதம் உறுப்பினர்களிடம் இருந்து கைவிரல் ரேகை பதிவு செய்யப்பட்டிருந்தது. கடந்த 2-ந்தேதி மற்றும் 8, 9-ந்தேதிகளில் கைவிரல் ரேகை பதிவு செய்வதற்காக தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இந்த சிறப்பு முகாம்களில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 985 பேர் தங்கள் கைவிரல் ரேகையை ரேஷன் கடைகளில் சென்று பதிவு செய்துள்ளனர்.</p><h2>வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள்</h2><p>மேலும், இடைப்பட்ட நாட்களில் 22 ஆயிரத்து 734 பேர் ரேஷன் கடைகளுக்கு சென்று தங்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்துள்ளனர். அந்த வகையில், 3 கோடியே 43 லட்சத்து 47 ஆயிரத்து 73 பேர் நேற்று வரை கைவிரல் ரேகை பதிவு செய்துள்ளனர். இது சதவீதத்தில் கணக்கிடும்போது 95.96 சதவீதம் ஆகும். </p><p>இன்னும் 14 லட்சத்து 31 ஆயிரத்து 154 பேர் கைவிரல் ரேகை பதிவு செய்ய வேண்டியதாக உள்ளது. அவர்களை விரைந்து கைவிரல் ரேகை பதிவு செய்யுமாறு உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். இதில், பெரும்பாலானோர் வெளிநாடுகளில் வேலை செய்பவர்களாக இருப்பதாக கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>‘நீட்’ தேர்வுக்கு எதிரான போராட்டத்தை முடக்குவது ஏன்? - தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-block-protests-against-neet-high-court-asks-tamil-nadu-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-block-protests-against-neet-high-court-asks-tamil-nadu-government#comments</comments><guid isPermaLink="false">588090b5-b362-44ee-a353-cc6c3b101393</guid><pubDate>Wed, 12 Aug 2026 01:46:30 +0000</pubDate><atom:updated>2026-08-12T01:46:30.685Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை ஐகோர்ட்டு,Chennai Highcourt,தமிழ்நாடு அரசு,TN govt,நீட் தேர்வு,NEET Exam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/9hezmhtw/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/9hezmhtw/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>'நீட்' தேர்வுக்கு எதிரான போராட்டத்தை தமிழ்நாடு அரசு ஏன் முடக்குகிறது? என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.</p><h2>வாகன பேரணி</h2><p>'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மோட்டார் சைக்கிளில் பிரசார பயணம் மேற்கொள்ள திட்டமிட்டனர். இதற்கு அனுமதி கேட்டு டி.ஜி.பி.யிடம் கொடுக்கப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, "போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்ற காரணத்தை கூறி மோட்டார் சைக்கிள் பிரசாரத்துக்கு அனுமதி வழங்க போலீசார் மறுத்து விட்டனர்” என்று வாதிட்டார்.</p><h2>போலீஸ் விளக்கம்</h2><p>போலீஸ் தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வக்கீல் ஜான் சத்யன், தமிழ்நாடு அரசு 'நீட்' தேர்வு போராட்டங்களுக்கு எதிரானது இல்லை. இது சமூக ஊடகங்களின் காலம் ஆகும். சமூக ஊடகங்களில் தகவல் பரவினால் கட்டுக்கடங்காத கூட்டம் கூடிவிடும். இதுபோன்ற போராட்டங்களால் பொதுமக்களுக்கு கடும் சிரமம் ஏற்படும்.</p><p>பேரணி தொடங்க அனுமதி கோரியுள்ள இடங்கள் அனைத்துமே மக்கள் மற்றும் வாகன நெரிசல் மிகுந்த பகுதிகளாகும். அதனால், அனுமதி மறுக்கப்பட்டது. இந்த பேரணியில் பங்கேற்க ஒருவருக்கு அனுமதி கொடுத்தால், பின்னர் இந்த எண்ணிக்கை அதிகமாகி சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். அதனால், சூழ்நிலைக்கு ஏற்ப அனுமதி வழங்கும் விதமாக அந்தந்த போலீஸ் நிலையங்களை அணுகும்படி மனுதாரருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று விளக்கம் அளித்தார்.</p><h2>ஏன் தடுக்கிறது?</h2><p>அதற்கு நீதிபதி, "கன்னியாகுமரி முதல் சென்னை வரை பேரணி வரவேண்டும் என்றால் ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் அனுமதி பெற வேண்டுமா?. 'நீட்' தேர்வு முடிந்து, முடிவும் வெளியாகி விட்டது. இருந்தாலும், 'நீட்' தேர்வுக்கு எதிராக போராட மனுதாரருக்கு உரிமை உள்ளது. பேச்சுரிமை, கருத்துரிமை போல போராட்டம் நடத்துவது, பேரணி செல்வது அடிப்படை உரிமையாகும்.</p><p>'நீட்' தேர்வுக்கு எதிரான போராட்டத்தையும், பேரணியையும் தமிழ்நாடு அரசு ஏன் முடக்குகிறது? தடுக்கிறது? இந்த மோட்டார் சைக்கிள்கள் பேரணிக்கான பெட்ரோல் செலவை அரசு ஏற்கப்போகிறதா? போக்குவரத்து நெரிசல், மக்கள் பாதுகாப்பு காரணம் கூறி பேரணிக்கு மறுத்தால், ஹெலிகாப்டரில் சென்றா போராட முடியும்? மோட்டார் சைக்கிளில் வெளியேறும் புகையினால் புற்றுநோய் வரும் என்பதற்காக மோட்டார் சைக்கிள்களை தடை செய்ய முடியுமா?" என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.</p><p>உடனே, பேரணிக்கு அனுமதி மறுத்தது குறித்து கூடுதல் விளக்கம் அளிக்க போலீஸ் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விசாரணையை வருகிற 17-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>சுங்கச்சாவடிகளில் உள்ளூர்வாசிகளுக்கு கட்டணமில்லா பயணமா? - தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/toll-free-travel-for-locals-at-toll-plazas-national-highways-authority-clarifies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/toll-free-travel-for-locals-at-toll-plazas-national-highways-authority-clarifies#comments</comments><guid isPermaLink="false">bf998b02-0c5f-4acd-9931-c43cdb0308ee</guid><pubDate>Wed, 12 Aug 2026 01:37:27 +0000</pubDate><atom:updated>2026-08-12T01:37:27.103Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,சுங்கச்சாவடி,Toll,தேசிய நெடுஞ்சாலை ஆணையம்,National Highways Authority,Local,பாஸ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/pnimui3g/260.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சுங்கச்சாவடி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/pnimui3g/260.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சுங்கச்சாவடிகளின் அருகாமையில் உள்ளவர்கள் அடையாள அட்டையை காண்பித்து கட்டணம் இன்றி பயணிக்கலாமா? என்பது குறித்து நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.</p><h2>சுங்கச்சாவடிகள்</h2><p>தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தனியார் பங்களிப்புடன் சாலைகளை சீரமைத்து, அதற்கான கட்டணத்தை வாகன ஓட்டிகளிடம் இருந்து சுங்கச்சாவடி மூலமாக வசூலித்து வருகிறது. நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 78 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இந்த சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் கார், ஜீப், ஆட்டோ, பஸ், லாரி, டெம்போ உள்பட பல்வேறு வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.</p><p>இந்தநிலையில் சுங்கச்சாவடிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள வாகன ஓட்டிகள் தங்களது அடையாள அட்டையை காண்பித்து கட்டணம் இன்றி கடந்து செல்லலாம் என்று ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் அந்த தகவலுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.</p><h2>பாஸ்</h2><p>அதில் "தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில், அடையாள அட்டையை காண்பித்தால் உள்ளூர் வாசிகள் கட்டணம் இன்றி பயணிக்கலாம் என்பது தவறான கருத்து. உள்ளூர்வாசிகளுக்கு கட்டணமில்லா பயணம் கிடையாது. ஆனால் சுங்கச்சாவடிக்கு அருகில் வசிக்கும் உள்ளூர் மக்களுக்கு கட்டண சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதற்காக உள்ளூர் மாதாந்திர பாஸ் முறை நடைமுறையில் உள்ளது.</p><p>சுங்கச்சாவடியைச் சுற்றி 20 கிலோமீட்டர் சுற்றளவில் வசிப்பவர்கள் மட்டுமே இந்த சலுகையைப் பெற தகுதியுடையவர்கள். குறிப்பிட்ட அந்த சுங்கச்சாவடிக்கென அறிவிக்கப்பட்டுள்ள விதிகளின்படியே இந்த பாஸ்கள் வழங்கப்படுகின்றன. எனவே, அடையாள அட்டையை காண்பித்து கட்டணமில்லாமல் செல்லலாம் என்று கருத வேண்டாம். சலுகை பெற விரும்புவோர் அந்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF">சுங்கச்சாவடியின் </a>விதிகளைப் பின்பற்றி முறைப்படி உள்ளூர் மாதாந்திர பாஸை பெற வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>“மு.க.ஸ்டாலின் படத்தை பாக்கெட்டில் வைத்திருப்பது ஏன்..?” - ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-keep-a-picture-of-mk-stalin-in-your-pocket-o-panneerselvam-explains</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-keep-a-picture-of-mk-stalin-in-your-pocket-o-panneerselvam-explains#comments</comments><guid isPermaLink="false">a31109fe-62bd-4f02-9bb2-aeea67eb9981</guid><pubDate>Wed, 12 Aug 2026 01:29:04 +0000</pubDate><atom:updated>2026-08-12T01:29:04.989Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Tamilnadu,திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,M.K.Stalin,ஓ.பன்னீர்செல்வம்,செங்கோட்டையன்,தமிழகம்,தமிழக சட்டசபை,TN Assembly,Assembly Session,சட்டசபை கூட்டத்தொடர்,Minister KA Senkottaiyan,O.Paneer Selvam</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/ghrw2qw7/amid.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/ghrw2qw7/amid.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சட்டைப்பையில் புகைப்படம் வைத்திருப்பது தொடர்பான விவகாரத்தில் சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் இடையே நேற்று கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. </p><p>சட்டசபையில் <a href="https://www.dailythanthi.com/topic/budget">பட்ஜெட்</a> மீதான விவாதத்தின்போது, அது ஏமாற்றம் அளிப்பதாக தி.மு.க. உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வம் சுட்டிக்காட்டி பேசிய நேரத்தில், அவை முன்னவர் செங்கோட்டையன் எழுந்து பேசினார். </p><h2>அப்போது நடந்த விவாதம் </h2><p><strong>அவை முன்னவர்:-</strong> உறுப்பினர் ஏற்கனவே நிதி அமைச்சராக இருந்தவர். ஒரு அரசு தேர்தல் நேரத்தில் அறிவிக்கும் திட்டங்கள் அனைத்தும் 5 ஆண்டு இறுதி வரை நிறைவேற்றுவோம். 3 மாதங்களில் ஒரு சரித்திரம் படைக்க இயலாது. அப்படி முடிந்தால் அதை நீங்கள் சொல்லுங்கள்.</p><p><strong>ஓ.பன்னீர்செல்வம்:-</strong> தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டவைகளை புதிய அரசு தங்களுடைய முன்னோடித் திட்டங்களாக அறிவித்திருக்கலாம். அப்படியும் அறிவிக்கவில்லை என்பதுதான் எங்களின் வாதமாக இருக்கிறது. தமிழக மக்கள் ஏமாந்து நிற்கும் எண்ணங்களின் வடிவமாக இருக்கிறது.</p> <p><strong>அவை முன்னவர்:-</strong> தமிழகமே பாராட்டிக்கொண்டிருக்கிற தூய ஆட்சியை, ஏமாற்றத்தை உருவாக்கும் ஆட்சி என்று குறிப்பிடுவது வேடிக்கையாக இருக்கிறது. நீங்கள் இடம் மாறியிருக்கிறீர்கள். அதற்காக துதிபாட வேண்டிய அவசியம் இல்லை.</p><h2>சட்டைப்பையில் புகைப்படம்</h2><p><strong>ஓ.பன்னீர்செல்வம்:-</strong> அந்த இடத்தை முதலில் மாற்றியவர் அவர்தான் (செங்கோட்டையன்) என்பதை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.</p><p><strong>அமைச்சர் ராஜ்மோகன்:-</strong> இடத்தை முதலில் மாற்றியவர் நம்முடைய அமைச்சர் (செங்கோட்டையன்) என்றார். இடத்தை மாற்றியபோதும் இதயத்தின் அருகில் இருந்த நிழற்படத்தை மாற்றவே வேண்டாம் என்று சொன்னவர் எங்கள் தலைவர். ஆனால் நீங்கள் இடமும் மாறியிருக்கிறீர்கள். உங்கள் இதயமும் மாறியுள்ளது.</p><p><strong>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா:-</strong> செங்கோட்டையன் இடம் மாறியிருக்கலாம். ஜெயலலிதாவை இன்னும் இதயத்தில், சட்டப்பையில் வைத்திருக்கிறார்கள். ஜெயலலிதாவால், முதல்-அமைச்சர் ஆக்கப்பட்டவர் இன்று சட்டப்பையில் யாருடைய புகைப்படம் இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும்.</p><p><strong>ஓ.பன்னீர்செல்வம்:-</strong> அமைச்சர்களுக்கு பதில் சொல்ல நேரம், காலம் இருக்கிறது. நான் பேசி முடித்தவுடன் நீங்கள் பேசலாம். திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை இதயங்களில் என்றும் கடைசி காலம் வரை வைத்திருப்போம் படத்தை காட்டி ஏமாற்றும் பழக்கம் எங்களுக்கு இல்லை.</p><p>இதனையடுத்து அவை முன்னவர் எழுந்து ஒரு கருத்தை முன்வைத்தார். அப்போது தி.மு.க.வினர் எழுந்து அதை நீக்கச் சொல்லி அமளியில் ஈடுபட்டனர். அதனையடுத்து சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், 'இந்த பிரச்சினையை இதனோடு விட்டுவிட்டு தொடர்ந்து பேசலாம்' என்றார்.</p><p><strong>ஓ.பன்னீர்செல்வம்:-</strong> என்னோடு நீங்களும், உங்களும் நானும் பயணித்திருக்கிறேன். நான் எப்படிப்பட்டவன் என்று உங்களுக்கு 100-க்கு 200 சதவீதம் நன்றாக தெரியும். எந்த நிலையிலும் மாற மாட்டேன். திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியாகத்தான் என்னுடைய நிலை சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கும். அமைச்சர்கள் படத்தை வைத்திருக்கிறீர்களே என்று சொல்வதெல்லாம் தவறு.</p><p><strong>அவை முன்னவர்:-</strong> என்னை பொறுத்தவரையில் படத்தை வைத்திருப்பதை பற்றி நான் பேசவில்லை. படத்தை வைத்துக்கொண்டு ஏமாற்றாதீர்கள் என்று நீங்கள் சொல்வதுதான் கொச்சையாக இருக்கிறது. வேடிக்கையாகவும் உள்ளது. நான் ஏமாற்றுகிறேன் என்றால், நீங்களும் ஏமாற்றுகிறீர்கள் என்று அர்த் தமா?.</p><p><strong>சபாநாயகர்:-</strong> தனிப்பட்ட விவாதம் வேண்டாம். இருபக்கமும் சொல்லப்பட்ட கருத்துக்களை நகைச்சுவையாகவும், நயமானதாகவும் ஏற்றுக்கொள்ளுங்கள். அதை விட்டுவிடுங்கள்.</p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/iqc8rhvw/yaro.jpg" /></figure><h2>“மு.க.ஸ்டாலின் படத்தை பாக்கெட்டில் வைத்திருப்பது ஏன்..?”</h2><p>தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், சட்டைப்பையில் மு.க.ஸ்டாலின் படத்தை வைத்திருப்பதற்கு என்பதற்கு விளக்கம் அளித்தார்.</p><p>இது தொடர்பாக அவர் கூறியதாவது:- </p><p>சட்டமன்ற உறுப்பினராக நின்றுகொண்டிருப்பதற்கு காரணம், திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக இன்று வீற்றிருக்கிற கடந்த 5 ஆண்டுகாலம் தமிழகத்தின் உரிமைகளை எந்நாளும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று ஆட்சியிலும், கட்சியிலும் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிற முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கத்தான் அவருடைய புகைப்படத்தை இதயப்பக்கத்தில் இருக்கும் பாக்கெட்டில் வைத்திருக்கிறேன்.</p><h2>உரிமைத்தொகை உயரவில்லை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/budget">பட்ஜெட்</a> ஏமாற்றத்தின் வடிவமாக இருக்கிறது. திருப்புகின்ற பக்கமெல்லாம் திராவிட மாடல் அரசின் சாதனை திட்டங்கள்தான் ஜொலித்து கொண்டிருக்கிறது. மக்கள் மன தில் நிலைகொண்டுள்ள மு.க.ஸ்டாலின் உருவாக்கிய திட்டங்களே புது உருக்கொண்டு நிற்கின்றன. தேர்தல் அறிக்கையில் சொன்னபடி, உரிமைத்தொகை உயரவில்லை. ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர் வரும் என நம்பிய மகளிர் ஏமாந்து நிற்கிறார்கள். நாடே திரும்பி பார்த்த விடியல் பயணம் திட்டத்தை விரிவுபடுத்தி எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம் என்றநிலையை ஏற்படுத்துவீர்கள் என்பதையும் ஏமாற்றிவிட்டீர்கள்.</p><h2>மக்கள் நலனில் மு.க.ஸ்டாலின்</h2><p>நிதி, அதிகாரப்பகிர்வு தி.மு.க. தொடர்ந்து முன்வைக்கும் உயிர் கொள்கைகள். அதைத்தான் மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்று அண்ணா விதைத்தார், கலைஞர் ஆழமாக வளர்த்தார். மு.க.ஸ்டாலின் சமரசம் இல்லாமல் போராடிக் கொண்டு வருகிறார். தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். ஆனால் நிதி பகிர்வு போதுமானதாக இல்லை என்ற உண்மையை கூட பட்ஜெட்டில் சுட்டிக்காட்டவில்லை. பட்ஜெட்டில் அறிவிப்புகள் அதிகம், ஆனால் செயலாக்கத்துக்கான முதலீடுகள் குறைவு என்பதே பட்ஜெட்டின் உண்மை முகம்.</p><p>திராவிட மாடல் திட்டங்களை கடக்க முடியாது. மக்கள் நலனில் மு.க.ஸ்டாலினை மிஞ்சி யாரும் சிந்திக்க முடியாது என்பதுதான் பட்ஜெட்டில் புலப்படும் உண்மைத் தன்மை. திராவிட மாடல் திட்டங்களின் மறுபதிப்புதான் இந்த அரசின் முதல் <a href="https://www.dailythanthi.com/topic/budget">பட்ஜெட்</a>.</p><p>இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ரேஷன் கடை வேலை நேரம் மாற்றம்?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/change-in-ration-shop-working-hours-in-chennai-and-kanchipuram-districts</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/change-in-ration-shop-working-hours-in-chennai-and-kanchipuram-districts#comments</comments><guid isPermaLink="false">2cc3abf3-4c41-45d0-9598-ed234a41a4e2</guid><pubDate>Wed, 12 Aug 2026 01:24:42 +0000</pubDate><atom:updated>2026-08-12T01:24:42.515Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,ரேஷன் கடை,Ration shop,காஞ்சிபுரம்,Kancheepuram</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/qsce87ji/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/qsce87ji/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ரேஷன் கடை வேலை நேரத்தை மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டிருந்தது. அதில், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தற்போது ரேஷன் கடைகள் காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மீண்டும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 7 மணி வரையிலும் செயல்பட்டு வருகிறது.</p><p>அதன்படி, மதிய இடைவேளை நேரம் நீட்டிக்கப்பட்டு, பணி நேரம் சுமார் 12 மணி நேரமாக உள்ளது. இதனால் பணியாளர்கள் மனச்சோர்வுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்களுக்கு வெள்ளிக்கிழமை வேலை நாளாகவும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகவும் உள்ளது.</p><p>ஆனால், ரேஷன் கடை பணியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறையாகவும், ஞாயிற்றுக்கிழமை வேலை நாளாகவும் இருப்பதால், விடுமுறை நாட்கள் யாருக்கும் பயனுள்ளதாக இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ரேஷன் கடை வேலை நேரத்தை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் மாற்றி அமைக்க வேண்டும்.</p><p>மாதத்தின் முதல் 2 வெள்ளிக்கிழமைகளை வேலை நாட்களாகவும், முதல் 2 ஞாயிற்றுக்கிழமைகளை விடுமுறை நாட்களாகவும் அறிவிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை மனுவின்படி, மாற்றங்களைச் செயல்படுத்தினால் கள அளவில் ஏற்படும் சாதக, பாதகங்களை ஆய்வு செய்து, அது குறித்த அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட துணைப்பதிவாளர்களுக்கு பொது வினியோகத் திட்டத்தின் இணைப்பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>குன்னூரில் வீட்டு மாடியில் உலா வந்த கரடி.. பொதுமக்கள் அச்சம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bear-wanders-onto-house-terrace-in-coonoor-residents-alarmed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bear-wanders-onto-house-terrace-in-coonoor-residents-alarmed#comments</comments><guid isPermaLink="false">6c83663d-a91b-4b2a-a22c-bf4767faabdd</guid><pubDate>Wed, 12 Aug 2026 01:10:04 +0000</pubDate><atom:updated>2026-08-12T01:10:04.240Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நீலகிரி,bear,தேயிலை,குன்னூர்,கரடி உலா,அச்சம்,வீட்டு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/zdbv12aj/259.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கரடி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/zdbv12aj/259.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வெலிங்டன்,</p><p>நீலகிரி மாவட்டம், குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சமீபக லமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கரடி கள் பகல் நேரங்களில் நகரப்பகுதியில் சர்வ சாதாரணமாக உலா வருகின்றன. இதை கண்டு குன்னூர் பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.</p> <h2>கரடி</h2><p>இந்த நிலையில் நேற்று வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி ஒன்று குன்னூர் அருகே கரிமரா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்துக்குள் புகுந்தது. தேயிலைச்செடிகளுக்கு இடையே கரடி நடமாடுவதை கண்ட தொழிலாளர்கள் பீதி அடைந்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் அந்த கரடி பிரதான சாலை வழியாக சென்றது.</p><p>குன்னூர் ஒட்டுப்பட்டறை என்ற இடத்தில் வீட்டின் மொட்டை மாடியில் ஏறிய கரடி சாவகாசமாக நடந்து சென்றது. இதை வீடியோ பதிவு செய்தவர், அந்த வீட்டில் இருப்பவர்களை நோக்கி கரடி வருகிறது. கதவை மூடி கொள்ளுங்கள் என்று சத்தம் போட்டார். அந்த கரடி மொட்டை மாடியில் நடந்து சென்று இரும்பு படிக்கட்டு வழியாக இறங்கி, வீட்டின் முன் சிறிது நேரம் நின்றது.</p><h2>பொதுமக்கள் அச்சம்</h2><p>பின்னர் வீடியோ எடுத்த நபர் கரடி, கரடி என்று சத்தம் போடவே அங்கிருந்து அந்த கரடி பக்கத்து ஓட்டு வீட்டின் மீது தாவி குதித்து ஓடியது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது வீட்டின் மொட்டை மாடியில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF">கரடி</a> உலா வந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள பொது மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தெருக்களுக்கு சாதி பெயர் இல்லை என்பதை அரசு உறுதி செய்யவேண்டும் - ஐகோர்ட்டு நீதிபதி கருத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-must-ensure-streets-have-no-caste-names-high-court-judge</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-must-ensure-streets-have-no-caste-names-high-court-judge#comments</comments><guid isPermaLink="false">54c62894-f99d-4042-9ede-28ee28f2733b</guid><pubDate>Wed, 12 Aug 2026 00:59:28 +0000</pubDate><atom:updated>2026-08-12T00:59:28.698Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை ஐகோர்ட்டு,Chennai Highcourt,சாதி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/6kreuwv6/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/6kreuwv6/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டில் தெருக்களுக்கு சாதி பெயர் இல்லை என்பதை அரசு உறுதி செய்யவேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதி என்.ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.</p><h2>நீதிபதி அதிர்ச்சி</h2><p>நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் போலீசார் பதிவு செய்த குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி என்.ரமேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முதல் தகவல் அறிக்கையில் ஒரு குறிப்பிட்ட சாதி பெயரை கொண்ட தெரு என்று குறிப்பிட்டு இருந்தது. இதை படித்து பார்த்த நீதிபதி அதிர்ச்சி அடைந்தார்.</p><h2>அரசு உறுதி செய்யவேண்டும்</h2><p>"2026-ம் ஆண்டிலும் இப்படி சாதி பெயரை குறிப்பிட்ட தெரு உள்ளதா? தெருக்கள், சாலைகளில் உள்ள சாதிப் பெயர் களை நீக்கவேண்டும் என்று 1998-ம் ஆண்டே தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக பல உத்தரவுகளை ஐகோர்ட்டும் பிறப்பித்துள்ளன. அப்படியிருந்தும், ஒரு தெருவுக்கு குறிப்பிட்ட சாதி பெயரை வைத்து எப்படி அழைக்க முடியும்? இதனால்தான் அண்மையில், ஆதி திராவிடர் நலத்துறையை, சமூக நீதித்துறை என்று தமிழ்நாடு அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. எனவே, தமிழ்நாட்டில் தெருக்களுக்கு சாதி பெயர் இல்லை என்பதை அரசு உறுதி செய்யவேண்டும்" என்று கருத்து கூறினார்.</p><h2>தாமாக முன்வந்து வழக்கு</h2><p>பின்னர், "தமிழ்நாடு முழுவதும் தெருப் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குவது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்கிறேன். இந்த வழக்கை தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு பட்டியலிடும்படி ஐகோர்ட்டு பதிவாளருக்கு பரிந்துரைக்கிறேன்” என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் இன்று எந்தெந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு..? வானிலை மையம் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/weather/which-areas-in-tamil-nadu-are-likely-to-receive-rain-today-meteorological-department-provides-details</link><comments>https://www.dailythanthi.com/news/weather/which-areas-in-tamil-nadu-are-likely-to-receive-rain-today-meteorological-department-provides-details#comments</comments><guid isPermaLink="false">cfd80121-ea8b-4d14-be76-1bba11f8bb97</guid><pubDate>Wed, 12 Aug 2026 00:51:09 +0000</pubDate><atom:updated>2026-08-12T00:51:09.465Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,Rain,Weather,வானிலை,தமிழகம்,WeatherUpdate,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,வானிலை ஆய்வு மையம்,வானிலை அறிக்கை,weather condition,Weather Report,Weather Status,weather center</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/yx7b7yd3/umai-baba.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மழை, rain]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/yx7b7yd3/umai-baba.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><h2>மிதமான மழை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இதன் காரணமாக <strong>இன்று (12-08-2026)</strong> மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><h2>பலத்த காற்றுடன் கூடிய மழை</h2><p><strong>நாளை (13-08-2026):</strong> மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>14-08-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான<a href="https://www.dailythanthi.com/topic/rain"> மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>15-08-2026 முதல் 17-08-2026 வரை:</strong> மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை </a>பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை </a>பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong><ins>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</ins></strong></p><p><strong>12-08-2026 முதல் 14-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் வட உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><p><strong>15-08-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.</p><p><strong><ins>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</ins></strong></p><p><strong>12-08-2026 முதல் 14-08-2026 வரை:</strong> வட உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட சற்று அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p><strong>15-08-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:-</h2><p><strong>இன்று (12-08-2026)</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய <a href="https://www.dailythanthi.com/topic/rain">லேசான/மிதமான மழை</a> பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தொகுதிகள் மறுவரையறைக்கு எதிராக... இன்று சட்டசபையில் தனித் தீர்மானம் கொண்டு வரும் முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-to-move-a-special-resolution-in-the-assembly-today-against-the-delimitation-of-constituencies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-to-move-a-special-resolution-in-the-assembly-today-against-the-delimitation-of-constituencies#comments</comments><guid isPermaLink="false">b15decc2-725c-476b-b14d-41a3c99283d6</guid><pubDate>Tue, 11 Aug 2026 20:07:34 +0000</pubDate><atom:updated>2026-08-11T20:07:34.546Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,Assembly,தொகுதிகள் மறுவரையறை,தனித் தீர்மானம்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/a7d7oipw/vj.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தொகுதிகள் மறுவரையறைக்கு எதிராக இன்று (புதன் கிழமை) சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் தனித் தீர்மானம் கொண்டு வருகிறார். ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/a7d7oipw/vj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தொகுதிகள் மறுவரையறைக்கு எதிராக இன்று (புதன் கிழமை) சட்டசபையில் முதல்-அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">விஜய் </a>தனித் தீர்மானம் கொண்டு வருகிறார். </p><h2>ஆலோசனைக் கூட்டம்</h2><p>தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரம் தொடர்பாக கடந்த 8ம் தேதி தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் சென்னையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாகத் தக்க வைக்க வேண்டும் என்றும், தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.</p><p>இந்நிலையில் தொகுதிகள் மறுவரையறைக்கு எதிராக இன்று (12.08.2026) சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் தனித் தீர்மானம் கொண்டு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>தனித் தீர்மானம்</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சட்டமன்ற பேரவை நிகழ்ச்சி நிரலில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>2026 ஆகஸ்டு 12ம் தேதி, புதன்கிழமை காலை 9.30 மணி </p><p><strong>1. அரசினர் தனித் தீர்மானம்</strong></p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் கீழ்க்காணும் தீர்மானத்தை முன்மொழிவார்:-</p><p>"தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மக்களவை / சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையானது கடந்த 50 ஆண்டுகளாக 1971-ஆம் ஆண்டினுடைய மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்களின்படி நிர்ணயிக்கப்பட்டு தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகிறது. </p><p>ஏப்ரல் 2026-இல் நாடாளுமன்றத்தில் கடந்த 50 ஆண்டு கால தொகுதி மறுவரையறை தடையை நீக்கவும், 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்திடவும், மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 550-லிருந்து 850 ஆக அதிகரிக்கவும் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா தோல்வியடைந்தது.</p><h2>அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா</h2><p>இந்நிலையில் மீளவும் மேற்குறிப்பிட்ட அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்படவுள்ளது எனத் தெரிந்ததன் அடிப்படையில் 1971-க்கு பிறகு உள்ள எந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு தொகுதி மறுவரையறை செய்தாலும், மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் நிரந்தரமாகப் பாதிக்கப்படும் என்பது நிதர்சனமான உண்மை. </p><p>ஒன்றிய அரசு அளித்த உறுதியின்படி மக்கள்தொகை கட்டுப்பாட்டு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி நல்ல பொருளாதார வளர்ச்சி கண்டு, நல்ல சுகாதாரம், மக்கள் நலத் திட்டங்களை மேற்கொண்டு வரும் எந்த ஒரு மாநிலமும் தொகுதி மறுவரையால் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்வது ஒன்றிய அரசின் தலையாய கடமையாகும்.</p><h2>33 சதவீத இடஒதுக்கீடு</h2><p>எனவே, தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையான 543 என்ற அளவிலேயே நிரந்தரமாக வைப்பதற்கும். மாநிலங்களுக்கு இடையேயான எண்ணிக்கை பகிர்வை நிரந்தரமாக வைக்கவும், மேலும், தற்போது மக்களவை மாநிலங்களவையினுடைய விகிதம் 2.2:1 என்ற அளவிலேயே நிலைநிறுத்த வேண்டும் என்றும், அதேவேளையில், பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை காலதாமதமின்றி, தற்போதுள்ள 543 தொகுதிகளின் அடிப்படையிலேயே 2029-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஒன்றிய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, கீழ்க்கண்ட தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றுகிறது. </p><h2>விகிதாச்சார பிரதிநிதித்துவம்</h2><p>i) நாடாளுமன்ற மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்க வேண்டும்.</p><p>ii) தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் இடங்களின் எண்ணிக்கையை மாநிலங்களுக்கிடையே அதாவது விகிதாச்சார பிரதிநிதித்துவம் தற்போதுள்ள அளவிலேயே நிரந்தரமாக்க வேண்டும்.</p><p>iii) வரவிருக்கும் மக்களவை பொதுத்தேர்தலிலும், அதன் பிறகு சட்டமன்ற பொதுத்தேர்தல்களிலும் மூன்றில் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டு பலனை பெண்கள் பெறுவதை உறுதி செய்யவேண்டும் என ஒன்றிய அரசை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.</p><h2>வேளாண்மை திருத்திய நிதிநிலை அறிக்கை</h2><p>2. 2026-2027-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் 2026-2027-ம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை</p><p>2026-2027-ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை மற்றும் 2026-2027-ம் ஆண்டுக்கான வேளாண்மை திருத்திய நிதிநிலை அறிக்கை ஆகியவற்றின் மீதான பொது விவாதத்திற்கு பதிலுரை.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>கோவை: டெங்கு கொசுவை ஒழிக்க மருந்து தெளித்தபோது விபரீதம்... மூச்சுத்திணறி இருவர் பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-tragedy-strikes-during-anti-dengue-mosquito-spraying-two-die-of-suffocation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-tragedy-strikes-during-anti-dengue-mosquito-spraying-two-die-of-suffocation#comments</comments><guid isPermaLink="false">c086f898-e1ba-48f7-84d4-f0c6d78c7cd0</guid><pubDate>Tue, 11 Aug 2026 18:32:54 +0000</pubDate><atom:updated>2026-08-11T18:32:54.997Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,டெங்கு,Dengue</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/mw4sscp6/KO.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கோவை மாவட்டம் அன்னூர் அருகே டெங்கு கொசுக்களை ஒழிப்பதற்காக மருந்து தெளித்தபோது,  இருவர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/mw4sscp6/KO.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p>கோவை மாவட்டம் அன்னூர் அருகே <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">டெங்கு </a>கொசுக்களை ஒழிப்பதற்காக மருந்து தெளித்தபோது,  இருவர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>வீட்டுக்குள் பரவிய கொசு மருந்து</h2><p>அன்னூர் பகுதியில் கொசுக்களை ஒழிப்பதற்காக பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டது. அப்போது வீட்டுக்குள் மருந்து பரவிய நிலையில், வீட்டில் இருந்த மோகன் (65), ராணி (75) ஆகியோருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது.</p><p>இதையடுத்து இருவரும் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில், உயிரிழந்ததாக கூறப்படுகிறது.</p><h2>அதிகளவில் பூச்சிக்கொல்லி </h2><p>கொசு ஒழிப்பு பணியில் பயன்படுத்தப்பட்ட மருந்தில் ‘Pyrephrum’ என்ற பூச்சிக்கொல்லி அதிகளவில் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாகவே வீட்டுக்குள் இருந்த இருவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.</p><h2>போலீஸ் விசாரணை</h2><p>இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொசு ஒழிப்பு பணியில் பயன்படுத்தப்பட்ட மருந்தின் தன்மை, அதன் அளவு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>நாளை மலையேற தடை... சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல மீண்டும் அனுமதி மறுப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-devotees-climbing-the-hill-tomorrow-permission-to-visit-sundara-mahalingam-temple-denied-again</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-devotees-climbing-the-hill-tomorrow-permission-to-visit-sundara-mahalingam-temple-denied-again#comments</comments><guid isPermaLink="false">d3fde334-da20-49e4-8f2c-4c9a4f2eb5e4</guid><pubDate>Tue, 11 Aug 2026 18:10:51 +0000</pubDate><atom:updated>2026-08-11T18:10:51.044Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சதுரகிரி,Sundara Mahalingam Temple,சுந்தர மகாலிங்கம் கோவில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/767nip3y/sun.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு நாளை பக்தர்கள் மலையேறி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/767nip3y/sun.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF">சதுரகிரி </a>சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு நாளை பக்தர்கள் மலையேறி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. </p><h2>மீண்டும் பரவிய காட்டுத்தீ</h2><p>காட்டுத்தீ காரணமாக ஏற்கனவே பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மாலை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இரவு 7 மணியளவில் காட்டுத்தீ மீண்டும் பரவுவதை வனத்துறையினர் கண்டறிந்தனர். இதையடுத்து, பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாளையும் சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.</p><h2>நிலைமை சீரான பிறகே அனுமதி</h2><p>காட்டுத்தீ பரவல் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். “நிலைமை சீரான பிறகு பக்தர்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து அறிவிக்கப்படும்” என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>போலீஸார் லஞ்சம் கேட்டால் இனி தப்ப முடியாது! தனிப்பிரிவு தொடக்கம்... இந்த எண்ணில் புகார் கொடுங்க</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-escaping-if-police-demand-a-bribe-special-wing-launched-lodge-complaints-at-this-number</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-escaping-if-police-demand-a-bribe-special-wing-launched-lodge-complaints-at-this-number#comments</comments><guid isPermaLink="false">e5ff3f54-45d0-463e-bee7-01781b7e7a71</guid><pubDate>Tue, 11 Aug 2026 17:05:50 +0000</pubDate><atom:updated>2026-08-11T17:05:50.993Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,லஞ்சம்,Special wing,சென்னை காவல் ஆணையாளர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/riyjl3nu/la.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை பெருநகர காவல் துறையில் ‘ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு’ புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/riyjl3nu/la.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை பெருநகர காவல் துறையில் ‘ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு’ புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. காவல் துறையினர் தங்களது பணிகளை மேற்கொள்வதற்காக பொதுமக்களிடம் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">லஞ்சம் </a>கேட்டாலோ அல்லது லஞ்சம் வழங்குமாறு நிர்பந்தித்தாலோ, உடனடியாக தகவல் தெரிவிக்கலாம் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.</p><h2>தனிப்பிரிவு தொடக்கம்</h2><p>இதுதொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை பெரும்பாலானோர் நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.</p><p>இருப்பினும், ஒரு சிலரின் தவறான செயல்பாடுகளால் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் அவப்பெயர் ஏற்படுவதாகவும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ‘ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு’ தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>லஞ்சம் கேட்டால்</h2><p>இந்த தனிப்பிரிவு மூலம் காவல்துறையில் லஞ்சம் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்களை உடனுக்குடன் பெற்று, அவற்றை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸார் தங்களது பணிகளை செய்வதற்காக லஞ்சம் கேட்டாலோ அல்லது லஞ்சம் வழங்குமாறு நிர்பந்தித்தாலோ, பொதுமக்கள் <strong>78717-23000</strong> என்ற கைப்பேசி எண்ணில் நேரடியாக தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம்.</p><p>மேலும், இதே எண்ணில் வாட்ஸ்அப் மூலமாகவும் புகார்களை தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>ரகசியமாக வைக்கப்படும்</h2><p>பொதுமக்கள் வழங்கும் தகவல்கள் மற்றும் புகார்கள் ரகசியமாக வைக்கப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், பெறப்படும் அனைத்து தகவல்களும் முறையாக விசாரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திண்டுக்கல்: 30 அடி உயர கூரையில் ஏறி பெற்றோரை கதறவிட்ட 7-ம் வகுப்பு மாணவன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dindigul-boy-sits-on-30-foot-roof-to-avoid-school</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dindigul-boy-sits-on-30-foot-roof-to-avoid-school#comments</comments><guid isPermaLink="false">86239c18-3e4a-453e-8c9c-9ab0e96bab8a</guid><pubDate>Tue, 11 Aug 2026 16:24:01 +0000</pubDate><atom:updated>2026-08-11T16:24:01.420Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Dindigul,திண்டுக்கல்,மாணவன்,student,பெற்றோர்,Parents,fire service,தீயணைப்பு படையினர்,கூரை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/mu2hp7ls/school-student.jpg" width="793"><media:title type="html"><![CDATA[ 7-ம் வகுப்பு மாணவன்]]></media:title><media:description type="html"><![CDATA[ 30 அடி உயர கூரையில் ஏறி பெற்றோரை கதறவிட்ட 7-ம் வகுப்பு மாணவன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/mu2hp7ls/school-student.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>செம்பட்டி, </p><p>பள்ளிக்கு செல்ல மறுத்து 30 அடி உயர வீட்டின் மேற்கூரையில் ஏறி அமர்ந்து 3 மணி நேரத்திற்கும் மேலாக அடம் பிடித்த 7-ம் வகுப்பு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D">மாணவனை</a> தீயணைப்பு துறையினர் சாதுர்யமாக பேசி மீட்டனர்.</p> <h2>பள்ளிக்கு போக மாட்டேன்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D">திண்டுக்கல்</a> மாவட்டம் செம்பட்டி அடுத்த எஸ்.பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் ராமபாலாஜி. கூலித்தொழிலாளி. இவரது மகன் சஞ்சய்ராம் (வயது 12). இவன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று காலை வழக்கம் போல் சஞ்சய்ராமை பள்ளிக்குச் செல்லும்படி அவனது பெற்றோர் வற்புறுத்தியுள்ளனர். ஆனால் படிப்பில் நாட்டமில்லாத அந்த சிறுவன், தான் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று கூறி அடம் பிடித்துள்ளான். அவனுக்கு பெற்றோர் அறிவுரை கூறி சமாதானம் செய்ய முயன்றனர்.</p><h2>கூரை மீது ஏறினான்</h2><p>பெற்றோர் தொடர்ந்து வற்புறுத்தியதால் ஆத்திரமடைந்த சிறுவன் சஞ்சய்ராம், திடீரென ஓடி சென்று தனது வீட்டின் 30 அடி உயர மேற்கூரையின்  மீது ஏறி அமர்ந்து கொண்டான். மேலே ஏறியவன் கீழே இறங்கி வர மறுத்து அடம் பிடித்தான்.இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவனிடம் கீழே இறங்கி வரும்படி கெஞ்சினர். ஆனால் சிறுவன் யாரின் பேச்சையும் கேட்காமல் அங்கேயே பிடிவாதமாக அமர்ந்திருந்தான். </p><h2> 3 மணி நேரம்</h2><p>சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக இந்த இழுபறி நீடித்ததால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உடனடியாக செம்பட்டி போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.அங்கு கூரையின் மீது ஆபத்தான முறையில் அமர்ந்திருந்த சிறுவனை மீட்க, தீயணைப்பு வீரர் அந்த சிறுவனிடம் சாதுர்யமாக பேச்சுவார்த்தை நடத்தினார்.</p><h2>சிறுவனின் மனம் மாறியது</h2><p>சுமார் ஒரு மணி நேர தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு சிறுவனின் மனம் மாறியது. தீயணைப்பு படையினர் சிறுவனை பத்திரமாக கீழே இறக்கினர். சஞ்சய்ராமை தீயணைப்புத்துறையினர் அவனது  பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.</p> <p>பள்ளிக்கு செல்ல மறுத்து 30 அடி உயரக் கூரையில் ஏறி சிறுவன் அடம் பிடித்த சம்பவம் செம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p> ]]></content:encoded></item><item><title>தொகுதிகள் மறுவரையறைக்கு எதிராக.. நாளை சட்டசபையில் தனித் தீர்மானம் கொண்டு வருகிறார் முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-to-move-a-special-resolution-in-the-assembly-tomorrow-against-the-delimitation-of-constituencies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-to-move-a-special-resolution-in-the-assembly-tomorrow-against-the-delimitation-of-constituencies#comments</comments><guid isPermaLink="false">88e93151-b0d6-4278-a580-03634ff5d4be</guid><pubDate>Tue, 11 Aug 2026 16:06:31 +0000</pubDate><atom:updated>2026-08-11T16:06:31.446Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,தமிழ்நாடு அரசு,தமிழக சட்டசபை,TN Assembly,TN government,Assembly Session,சட்டசபை கூட்டத்தொடர்,தொகுதிகள் மறுவரையறை,Delimitation of Constituencies,தனித்தீர்மானம்,தமிழக சட்டசபை கூட்டத்தொடர்,Delimitation,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,Chief Minister Vijay</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/mxe5bjmp/jivae.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சட்டசபையில் தனித் தீர்மானம் கொண்டு வருகிறார் முதல்-அமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/mxe5bjmp/jivae.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தொகுதிகள் மறுவரையறைக்கு எதிராக நாளை (புதன் கிழமை) சட்டசபையில் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> தனித் தீர்மானம் கொண்டு வருகிறார். </p><p>தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரம் தொடர்பாக ஆகஸ்டு 8ம் தேதி அன்று <a href="https://www.dailythanthi.com/topic/vijay">தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்</a> தலைமையில் சென்னையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாகத் தக்க வைக்க வேண்டும் என்றும், தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.</p><p>இந்நிலையில் தொகுதிகள் மறுவரையறைக்கு எதிராக நாளை (12.08.2026) சட்டசபையில் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> தனித் தீர்மானம் கொண்டு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>தனித் தீர்மானம்</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சட்டமன்ற பேரவை நிகழ்ச்சி நிரலில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>2026 ஆகஸ்டு 12ம் தேதி, புதன்கிழமை காலை 9.30 மணி </p><p>1. அரசினர் தனித் தீர்மானம்</p><p><a href="https://www.dailythanthi.com/topic/vijay">தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் </a>அவர்கள் கீழ்க்காணும் தீர்மானத்தை முன்மொழிவார்:-</p><p>"தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மக்களவை / சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையானது கடந்த 50 ஆண்டுகளாக 1971-ஆம் ஆண்டினுடைய மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்களின்படி நிர்ணயிக்கப்பட்டு தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகிறது. </p><p>ஏப்ரல் 2026-இல் நாடாளுமன்றத்தில் கடந்த 50 ஆண்டு கால தொகுதி மறுவரையறை தடையை நீக்கவும், 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்திடவும், மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 550-லிருந்து 850 ஆக அதிகரிக்கவும் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா தோல்வியடைந்தது.</p> <h2>அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா</h2><p>இந்நிலையில் மீளவும் மேற்குறிப்பிட்ட அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்படவுள்ளது எனத் தெரிந்ததன் அடிப்படையில் 1971-க்கு பிறகு உள்ள எந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு தொகுதி மறுவரையறை செய்தாலும், மக்கள் தொகையை சிறப்பாகக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் நிரந்தரமாகப் பாதிக்கப்படும் என்பது நிதர்சனமான உண்மை. </p><p>ஒன்றிய அரசு அளித்த உறுதியின்படி மக்கள்தொகை கட்டுப்பாட்டு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி நல்ல பொருளாதார வளர்ச்சி கண்டு, நல்ல சுகாதாரம், மக்கள் நலத் திட்டங்களை மேற்கொண்டு வரும் எந்த ஒரு மாநிலமும் தொகுதி மறுவரையால் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்வது ஒன்றிய அரசின் தலையாய கடமையாகும்.</p> <h2>33 சதவீத இடஒதுக்கீடு</h2><p>எனவே, தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையான 543 என்ற அளவிலேயே நிரந்தரமாக வைப்பதற்கும். மாநிலங்களுக்கு இடையேயான எண்ணிக்கைப் பகிர்வை நிரந்தரமாக வைக்கவும், மேலும், தற்போது மக்களவை மாநிலங்களவையினுடைய விகிதம் 2.2:1 என்ற அளவிலேயே நிலைநிறுத்த வேண்டும் என்றும், அதேவேளையில்,பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை காலதாமதமின்றி, தற்போதுள்ள 543 தொகுதிகளின் அடிப்படையிலேயே 2029-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஒன்றிய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, கீழ்க்கண்ட தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றுகிறது. </p><h2>விகிதாச்சார பிரதிநிதித்துவம்</h2><p>i) நாடாளுமன்ற மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்க வேண்டும்.</p><p>ii) தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் இடங்களின் எண்ணிக்கையை மாநிலங்களுக்கிடையே அதாவது விகிதாச்சார பிரதிநிதித்துவம் தற்போதுள்ள அளவிலேயே நிரந்தரமாக்க வேண்டும்.</p><p>iii) வரவிருக்கும் மக்களவை பொதுத்தேர்தலிலும், அதன் பிறகு சட்டமன்றப் பொதுத்தேர்தல்களிலும் மூன்றில் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டுப் பலனைப் பெண்கள் பெறுவதை உறுதி செய்யவேண்டும் என ஒன்றிய அரசை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.</p><h2>வேளாண்மை திருத்திய நிதிநிலை அறிக்கை</h2><p>2. 2026-2027-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் 2026-2027-ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை</p><p>2026-2027-ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை மற்றும் 2026-2027-ஆம் ஆண்டுக்கான வேளாண்மை திருத்திய நிதிநிலை அறிக்கை ஆகியவற்றின் மீதான பொது விவாதத்திற்குப் பதிலுரை.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title> அதிகாரிகள் நியமனங்களில் நடப்பு நிலையே தொடர வேண்டும் - மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/marxist-party-urges-continuation-of-current-officer-appointment-policy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/marxist-party-urges-continuation-of-current-officer-appointment-policy#comments</comments><guid isPermaLink="false">2c8c9781-cd0c-48a2-a9bf-1f1b17830c61</guid><pubDate>Tue, 11 Aug 2026 15:54:06 +0000</pubDate><atom:updated>2026-08-11T15:54:06.789Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வலியுறுத்தல்,Marxist Communist Party,Appointment,officials,அதிகாரிகள் நியமனம்,insists,மார்க்சிஸ்ட் கம்ப்யூனிஸ்ட் கட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/khua9g39/shunmugam.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பெ.சண்முகம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/khua9g39/shunmugam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்துசமய அறநிலையத் துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் மருத்துவத்துறை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">அதிகாரிகள்</a> நியமனங்களில் நடப்பு நிலையே தொடர மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல். இது தொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D">மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்</a> தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>சட்டம் படித்தவர்கள்</h2><p>இந்து சமய அறநிலைய துறையில் இதுவரை கிரேடு 1 செயல் அலுவலர் மற்றும் உதவி ஆணையர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்தில் சட்டம் படித்தவர்கள் மட்டுமே தேர்வெழுதி அலுவலர்களாக முடியும் என்ற நிலை இருக்கிறது. கோவில் சொத்துக்கள் சம்பந்தமான வழக்குகளை நிர்வகிக்க சட்ட அறிவு அவசியமானதாக இருக்கிறது என்பதால், துறையின் இணை ஆணையர் பதவிக்கு சட்டம் படித்து இருப்பது அவசியமானதாகும்.</p><h2>பூசல்களை தீர்க்கும்</h2><p>நீதிபதியாக இருந்து வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்டு பூசல்களை தீர்க்கும் இடமாக இணை ஆணையர் பொறுப்பு நீதித்துறை சார்ந்து முக்கியமானதாக இருக்கிறது. இந்நிலையில் சட்டம் பயிலாதவர்களும் நேரடி நியமனத்தின் மூலம் உதவி ஆணையர்களாக, கிரேடு 1 செயல் அலுவலர்களாக நியமிப்பதற்கும், மேலும், அவ்விடங்களை வருவாய் துறையினரை வைத்து நிரப்புவதற்கும் தற்போதுள்ள இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் 9வது சட்டப் பிரிவை திருத்தி பிரிவு 2ஐ ரத்து செய்ய உள்ளதாக அறிகிறோம்.</p><h2>அரசு கைவிட வேண்டும்</h2><p> இது பொருத்தமற்றதும், அறநிலையத்துறை செயல்பாடுகளை முடக்குவதுமாகும். எனவே, இந்த சட்டத்திருத்தத்தை அரசு கைவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.</p><h2>பழைய நிலையே தொடர வேண்டும்</h2><p>இதேபோன்று, ஊரக வளர்ச்சித் துறையில் இதுகாரும் திட்ட இயக்குநர் பொறுப்புகள் பதவி உயர்வு மூலமாகவோ அல்லது ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்டோ நிரப்பப்பட்டு கொண்டிருக்கின்றன. தற்போது அந்த பணியிடங்களில் தேனி மற்றும் சுன்னியாகுமரி மாவட்ட திட்ட இயக்குநர்களாக ஐஎப்எஸ் அதிகாரிகளை நியமிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p> <p>இந்த பொறுப்புகளோடு எவ்வித தொடர்பும் இல்லாத அதிகாரிகளை இப்படி நியமிப்பது தங்கள் பொறுப்புகளை சரிவர நிறைவேற்றுவதற்கு உதவாது. எனவே, இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண் 2731 நாள் 28.07.2026ஐ ரத்து செய்து பழைய நிலையே தொடர வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.</p><h2>நிர்வகிக்க வாய்ப்பில்லை</h2><p>இதேபோன்று, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி, ஊரசு மருத்துவ நலத்துறை மற்றும் பொது மருத்துவம் மற்றும் நோய் தடுப்பு துறை ஆகிய துறைகளின் இயக்குநர் பொறுப்புகளுக்கு தற்போதுவரை பதவி உயர்வின் மூலம் மருத்துவர்களால் நிரப்பப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. தற்போது, இந்த பொறுப்புகளுக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை நேரடியாக நியமனம் செய்ய ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. </p><p>இது மருத்துவத்துறையை சார்ந்த பணிகளை வேறு துறையில் பயின்றவர்களால் திறம்பட நிர்வகிக்க வாய்ப்பில்லை. எனவே, மேற்கண்ட 3 துறைகளிலும் தற்போதைய நிலையையே தொடர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சென்னை: முதல்-அமைச்சர் தலைமையில் மாணவர்கள் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-chief-minister-leads-students-anti-drug-pledge</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-chief-minister-leads-students-anti-drug-pledge#comments</comments><guid isPermaLink="false">675a20c5-8753-4f47-8cfb-e030cb23e734</guid><pubDate>Tue, 11 Aug 2026 15:20:43 +0000</pubDate><atom:updated>2026-08-11T15:20:43.461Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,முதல்-அமைச்சர்,உறுதிமொழி ஏற்பு,Chief Minister,மாணவர்கள்,Pledge,போதைப்பொருள் ஒழிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/qhf6ng5g/cm-pledge.jpg" width="793"><media:title type="html"><![CDATA[ முதல்-அமைச்சர்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் தலைமையில் மாணவர்கள் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/qhf6ng5g/cm-pledge.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/topic/chief-minister-vijay">முதல்-அமைச்சர்</a> தலைமையில் இன்று மாநில அளவிலான போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு. இது தொடர்பாக, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p> <h2>பிரசிடென்சி கல்லூரி</h2><p> தமிழ்நாடு முதல்-அமைச்சர் சி. ஜோசப் விஜய். சென்னை பிரசிடென்சி கல்லூரி அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில், 73 கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 2,000 மாணவர்களுக்கு போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்க செய்தார்.</p><h2>போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி</h2><p> இந்நிகழ்ச்சி யூடியூப் இணைப்பு மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதே நேரத்தில், தமிழ்நாடு முழுவதும் 14.000 பள்ளிகள் மற்றும் 4.900 கல்லூரிகளை சேர்ந்த 1 கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது கல்வி நிறுவனங்களில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்றனர்.</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் 'போதைப்பொருள் மற்றும் புகையிலை இல்லா வளாகம்' என்ற முன்னெடுப்பையும் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:</p> <h2>அறிமுக பயிற்சி</h2><p>i) அனைத்து புதிய மாணவர்களுக்கும் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் அபாயங்கள். என்.டி.பி.எஸ். சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் தண்டனைகள். கல்வி நிறுவனங்களின் ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் ஆலோசனை அளிப்பது குறித்த அறிமுக பயிற்சி வழங்கப்படும். மேலும். போதைப்பொருளை பயன்படுத்துவதில்லை என உறுதியளிக்கும் தன்னார்வ உறுதிமொழிப் பத்திரத்திலும் அவர்கள் கையெழுத்திடுவார்கள்.</p><h2>போதைப்பொருள் எதிர்ப்பு மன்றம்</h2><p>ii) கல்வி நிறுவனங்கள் ஆண்டுதோறும் உறுதிமொழி ஏற்பு. தெருக்கூத்து. பல்வேறு போட்டிகள், பேரணிகள் மற்றும் போதைப்பொருள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையங்களுக்கு நேரில் சென்று பார்வையிடுதல் போன்ற போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை, போதைப்பொருள் எதிர்ப்பு மன்றம் கையேட்டின்படி ஏற்பாடு செய்யும்.</p><h2>சக மாணவர் தூதர்கள்</h2><p>iii) <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">போதைப்பொருள் எதிர்ப்பு</a> மன்றங்கள் அதன் உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்குவதன் மூலம் வலுப்படுத்தப்படும். மேலும், மாணவர்களிடையே ஏற்படும் ஆரம்பகட்ட நடத்தை மாற்றங்களை கண்டறிந்து, சக மாணவர் மட்டத்தில் ஆதரவு வழங்குவதற்காக சக மாணவர் தூதர்கள் நியமிக்கப்படுவார்கள்.</p> <h2>சுயாதீன ஆலோசகர் உதவி</h2><p>iv) கல்வி நிறுவனங்கள் ஆண்டுதோறும் மாணவர்களின் உடல்நலம் மற்றும் உளவியல் நிலை தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொள்ளும். போதைப்பொருள் பயன்பாட்டின் ஆரம்ப அறிகுறிகள் காணப்படும் மாணவர்களுக்கு ரகசியமான, பாதிப்பில்லாத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சுயாதீன ஆலோசகர்களின் உதவியும் வழங்கப்படும்.</p><h2>புகையிலை இல்லா மண்டலங்கள்</h2><p>v) கல்வி நிறுவனங்களின் வளாகங்களைச் சுற்றி 100 மீட்டர் வரையிலான பகுதிகள் "புகையிலை இல்லா மண்டலங்கள்" எனக் குறிக்கப்படும். காவல்துறை. உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள் இணைந்து கடைகளில் ஆய்வு மேற்கொண்டு, புகையிலை பொருட்களை விற்பனை செய்வதைத் தவிர்க்குமாறு விற்பனையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள்.</p><h2>சிசிடிவி கேமரா</h2><p>vi) அனைத்து கல்வி நிறுவனங்களின் வளாகங்களுக்குள்ளும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளிலும் போதுமான எண்ணிக்கையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.</p> <h2>போதைப்பொருள் இல்லாத TN செயலி</h2><p>vii) போதைப்பொருள் கடத்தல் தொடர்பான புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதற்காக, காவல்துறை தொடர்பு அலுவலர்கள் கல்வி நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள். மேலும், மாணவர்கள் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான தகவல்களை போதைப்பொருள் இல்லாத TN செயலி மூலம் தெரிவிக்க ஊக்குவிக்கப்படுவார்கள்.</p> <h2>போதைப்பொருள் இல்லா வளாகம்</h2><p>viii) தேவையான அனைத்து போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் செயல்படுத்த கல்வி நிறுவனங்கள் தீவிரமாக ஊக்குவிக்கப்படுவதுடன். தங்களை அதிகாரப்பூர்வமாக "போதைப்பொருள் இல்லா வளாகம்"</p><p> என அறிவிக்கவும் ஊக்குவிக்கப்படும்.</p><h2>1 லட்சம் கிலோ கஞ்சா</h2><p>இந்நிகழ்வின்போது. செங்கல்பட்டு, தஞ்சாவூர், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய நான்கு இடங்களில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டதையும் முதல்-அமைச்சர் காணொலி வாயிலாக பார்வையிட்டார். மொத்தம் 1 லட்சம் கிலோ கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் அழிக்கப்பட்டன.</p><h2>முதல்-அமைச்சரின் காவல் பதக்கம்</h2><p>நடப்பு 2026 ஆம் ஆண்டில் மாநிலத்தில் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோத கடத்தலை தடுப்பதில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய 15 காவல்துறை அதிகாரிகள் / பணியாளர்களுக்கு. அவர்களின் சிறப்பான பணியை பாராட்டும் வகையில் 'தமிழ்நாடு முதல்-அமைச்சரின் காவல் பதக்கம்'  முதல்-அமைச்சரால்  வழங்கப்பட்டது.</p><h2>விருதுகளை வழங்கினார்</h2><p>பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சிறப்பாக செயல்பட்ட மாநில அளவிலான சிறந்த போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள் மற்றும் தன்னார்வ குழுக்களுக்கு முதல்-அமைச்சர் விருதுகளை வழங்கினார். முதல் பரிசாக ரூ. 1,00,000, இரண்டாம் பரிசாக ரூ. 75,000, மூன்றாம் பரிசாக ரூ. 50,000 மற்றும் கோப்பைகள். சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.</p><h2>முதல் பரிசு</h2><p> போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவதில் அவர்களின் சிறப்பான அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில் இவ்விருதுகள் வழங்கப்பட்டன. பள்ளிகளில் சிறந்த போதைப்பொருள் எதிர்ப்பு மன்றத்திற்கான முதல் பரிசை ஈரோடு மாவட்டம் செங்கோட்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றது. கல்லூரிகளில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல் பரிசை பெற்றது. </p><p>அதேபோல், பள்ளிகளில் சிறந்த தன்னார்வ குழுவிற்கான முதல் பரிசை நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பெற்றது. கல்லூரிகளில் ஈரோடு நஞ்சனாபுரம் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல் பரிசை பெற்றது.</p><h2>10,040 வழக்குகள் பதிவு </h2><p>மாநிலத்தில் போதைப்பொருட்களின் விநியோகத்தை தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் தீவிரமான சட்ட அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நடப்பு ஆண்டில் 10.08.2026 வரை. மொத்தம் 10,040 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு. 14,400 குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 17,500 கிலோ உலர் கஞ்சா, 8.9 லட்சம் மாத்திரைகள் மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள். மெத்தாம்பெட்டமைன், ஆம்பெட்டமைன். மெத்தாகுவாலோன் உள்ளிட்ட 200 கிலோ பிற போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p> <h2>13,150 வழக்குகள் பதிவு</h2><p>இதேபோல், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தொடர்பாக மொத்தம் 13,150 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1.61 லட்சம் கிலோ புகையிலைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், ரூ. 8.3 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டதுடன், 2,744 வணிக நிறுவனங்கள் / வளாகங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன.</p><p>இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மு. சாய் குமார். ஐஏஎஸ், உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் கே. மணிவாசன், ஐஏஎஸ், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் காவல்படைத்தலைவர் மகேஷ் குமார் அகர்வால், ஐபிஎஸ். அமலாக்கப் பிரிவு சிஐடி கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் கே. சங்கர், ஐபிஎஸ், சென்னை காவல்துறை ஆணையர்  ஏ. அமல்ராஜ், ஐபிஎஸ். சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன்.ஐஏஎஸ் மற்றும் மூத்த அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.</p><h2>பூஜ்ஜிய சகிப்புத்தன்மை</h2><p>போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக 'பூஜ்ஜிய சகிப்புத்தன்மை'  கொள்கையை செயல்படுத்துவதில் தமிழ்நாடு அரசு தனது அசைக்க முடியாத உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது. மேலும், போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான போராட்டத்தில் இளைஞர்களும் பொதுமக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு அழைப்பு விடுக்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>குரூப்-2 மற்றும் குரூப்-2A தேர்வுகள் எப்போது..? தேதியை அறிவித்த டி.என்.பி.எஸ்.சி. </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/when-will-the-group-2-and-group-2a-exams-be-held-tnpsc-has-announced-the-dates</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/when-will-the-group-2-and-group-2a-exams-be-held-tnpsc-has-announced-the-dates#comments</comments><guid isPermaLink="false">32ea7e53-daec-4552-8a22-e03eaadbe297</guid><pubDate>Tue, 11 Aug 2026 15:20:39 +0000</pubDate><atom:updated>2026-08-11T15:20:39.088Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,டிஎன்பிஎஸ்சி,TNPSC,TNPSC Group 2,TNPSC exam,குரூப் 2,டி.என்.பி.எஸ்.சி.,குரூப் 2ஏ,தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/ug7174h7/fkiere.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/ug7174h7/fkiere.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>கல்வி&amp;வேலைவாய்ப்பு (Eduction and Jobs)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகள் வரும் நவம்பர் 1ம் தேதி நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி. (<a href="https://www.dailythanthi.com/topic/tnpsc">TNPSC</a>) அறிவித்துள்ளது. </p><h2>குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகள்</h2><p>சார்பதிவாளர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், நகராட்சி ஆணையர் (கிரேடு2), தொழிலாளர் நல உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், முதுநிலை வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர், பல்வேறு அரசு துறைகளின் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளை நிரப்ப ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2ஏ தேர்வை <a href="https://www.dailythanthi.com/topic/tnpsc">டி.என்.பி.எஸ்.சி.</a> நடத்தி வருகிறது.</p><h2>நவம்பர் 1ம் தேதி</h2><p>வருடாந்திர தேர்வு அட்ட வணையில் குறிப்பிட்டுள்ளவாறு அனைத்து தேர்வுகளுக்கும் குறித்த தேதியில் அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வுகள் நடத்தப்படும் என <a href="https://www.dailythanthi.com/topic/tnpsc">டி.என். பி.ஸ்.சி.</a> தலைவர் எஸ். கே.பிரபாகர் ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதன்படி, ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுக்கான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. </p><p>இந்நிலையில் குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகள் வரும் நவம்பர் 1ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணயம் (டி.என்.பி.எஸ்.சி.) (<a href="https://www.dailythanthi.com/topic/tnpsc">TNPSC</a>) அறிவித்துள்ளது.</p><h2>UPI மூலமாக தேர்வு கட்டணம்</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு II (தொகுதி II மற்றும் IIΑ பணிகள்) க்கான அறிவிக்கை தேர்வாணையத்தின் ஆண்டுத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி இன்று (11.08.2026) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் 11.08.2026 முதல் 09.09.2026 பி.ப. வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தேர்வர்கள் தேர்வு கட்டணத்தை UPI மூலமாகவும் செலுத்தலாம். ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - II (தொகுதி II மற்றும் IIA பணிகள்) க்கான முதல் நிலைத் தேர்வு 01.11.2026 அன்று நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p><h2>புதிய அரசு</h2><p>அரசுதுறைகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இருந்து வரும் நிலையில், த.வெ.க. தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றிருப்பதால் காலிப்பணியிடங்கள் அதிக எண்ணிக்கையில் நிரப்பப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தேர்வர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் போட்டித்தேர்வுகளில் குரூப்-4, குரூப்-2 தேர்வுகளுக்குத்தான் அதிகமானோர் விண்ணப்பிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/68dcgku4/pani.jpg" /></figure><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Link:<a href="https://t.co/i6gXh6Z5zR">https://t.co/i6gXh6Z5zR</a> <a href="https://t.co/ngDRQP6G1K">pic.twitter.com/ngDRQP6G1K</a></p>&mdash; TNPSC (@TNPSC_Office) <a href="https://x.com/TNPSC_Office/status/2087192238027845951?ref_src=twsrc%5Etfw">August 11, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் என்.ஆனந்த் தலைமையில் ஆய்வுக் கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/review-meeting-chaired-by-minister-n-anand-regarding-monsoon-preparedness-measures</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/review-meeting-chaired-by-minister-n-anand-regarding-monsoon-preparedness-measures#comments</comments><guid isPermaLink="false">689bf331-eda0-44e2-8ad1-8e759b271faa</guid><pubDate>Tue, 11 Aug 2026 14:56:35 +0000</pubDate><atom:updated>2026-08-11T14:56:35.068Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,தமிழகம்,தமிழ்நாடு அரசு,வடகிழக்கு பருவமழை,ஆய்வுக்கூட்டம்,முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்,முதல்-அமைச்சர் விஜய்,அமைச்சர் என். ஆனந்த்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/a6z41dbu/anand.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/a6z41dbu/anand.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/vijay">தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்</a>யின் உத்தரவின்படி, வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.</p><h2>அமைச்சர் என்.ஆனந்த்</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p><a href="https://www.dailythanthi.com/topic/vijay">தமிழ்நாடு முதல்-அமைச்சர்</a> அவர்களின் உத்தரவின்படி, இன்று (11.08.2026) செவ்வாய்க்கிழமை, சென்னை தியாகராய நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் தலைமையில், வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.</p><h2>குடிநீர் விநியோகம்</h2><p>இக்கூட்டத்தில், வடகிழக்குப் பருவமழையின்போது பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.</p><p>குறிப்பாக, மழைநீர் தேங்கக்கூடிய பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து, மழைநீர் வடிகால்களை தூர்வாரி சீரமைத்தல், நீர்வழித்தடங்களில் ஏற்படும் அடைப்புகளை அகற்றுதல், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காமல் விரைந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், மழைக்காலங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்காத வகையில் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.</p><h2>பாதுகாப்பு நடவடிக்கைகள்</h2><p>மேலும், மழைக்காலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பேரிடர் காலங்களில் துரிதமாக செயல்படுவதற்கான மீட்புப் பணிகள் மற்றும் தேவையான உபகரணங்கள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்தல், மின்கம்பிகள் மற்றும் மின்சார சாதனங்கள் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், சாலைகளில் ஏற்படும் பள்ளங்களை உடனடியாக சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.</p><p>இக்கூட்டத்தில் சென்னை மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையர் எச்.ஆர்.கௌஷிக், இ.ஆ.ப.. அவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>
சட்டப்பேரவையை மாலை நேரத்தில் நடத்த முடிவா? சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பதில்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/can-assembly-be-held-in-evening-speaker-jct-prabhakar-answers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/can-assembly-be-held-in-evening-speaker-jct-prabhakar-answers#comments</comments><guid isPermaLink="false">37a03311-1112-4830-9226-eaffba267a24</guid><pubDate>Tue, 11 Aug 2026 14:38:22 +0000</pubDate><atom:updated>2026-08-11T14:38:22.031Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Speaker,சபாநாயகர்,Speaker J.C.D. Prabhakar,ஜே.சி.டி. பிரபாகர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/zcpa9zzv/spatna.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/zcpa9zzv/spatna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>தமிழக சட்டப்பேரவையை மாலை நேரத்தில் நடத்துவது பற்றி சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பதில் அளித்துள்ளார்.</p><p>தமிழக சட்டசபையில் 2026-2027-ம் ஆண்டுக்கான <a href="https://www.dailythanthi.com/news/india">பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்</a> மீதான 3-வது நாள் விவாதம் இன்று நடந்தது.  இதில், உறுப்பினர்கள், பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்கள் உள்ளிட்டோர் பேசினர்.</p><p>அப்போது, மருத்துவம், மருத்துவக்கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் கோ.க. அருண்ராஜ், அரசினர் தனித்தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து பேசினார்.</p>  <h2>நீட் நுழைவுத்தேர்வு</h2><p>இதன்படி, நீட் நுழைவுத்தேர்வு முறையை ரத்து செய்யும் வகையில், தமிழக சட்டசபையில் அரசினர் தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது.</p><p>இந்த தனித்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. எம்.எல்.ஏ. வெளிநடப்பு செய்தார். மற்ற கட்சிகள் இந்த அரசினர் தனித்தீர்மானத்துக்கு வரவேற்பு தெரிவித்தனர். இதையடுத்து நீட் தேர்வுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட அரசினர் தனித்தீர்மானம் சட்டசபையின் முடிவுக்கு விடப்பட்டது. மறுப்போரே இல்லை என்பதால் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தார்.</p> <h2>10 நிமிடங்கள்</h2><p>இந்த நிலையில், அவையில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கூறும்போது, சட்டப்பேரவையை தேவைப்பட்டால் மாலை நேரத்தில் கூட நடத்தலாம் என முடிவு எடுத்தோம். ஆனால், மாலை நேரத்தில் அவையை நடத்தினால் சிலருக்கு சிரமம் இருக்கிறது என்பதால், ஒரே அமர்வாக கூட்டம் நடத்தப்படுகிறது என்றார்.</p><p>வரும் திங்கள் முதல் உறுப்பினர்களுக்கு 10 நிமிடங்கள் மட்டுமே அனுமதி வழங்குவேன். நேரம் கடந்தால் அடுத்த உறுப்பினர்களை பேச அழைத்து விடுவேன். அதற்காக யாரும் கோபித்து கொள்ள வேண்டாம் என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>‘போதைப் பொருள் இல்லா தமிழகம்‘ என்று மேடையில் உறுதிமொழி எடுத்துக்கொள்வது மட்டும் தீர்வாகாது - வானதி சீனிவாசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/drug-free-tamil-nadu-pledge-alone-not-the-solution-vanathi-srinivasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/drug-free-tamil-nadu-pledge-alone-not-the-solution-vanathi-srinivasan#comments</comments><guid isPermaLink="false">5b0d6f17-879a-4202-8408-70c7576e85e2</guid><pubDate>Tue, 11 Aug 2026 14:36:34 +0000</pubDate><atom:updated>2026-08-11T14:36:34.242Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>முதல்-அமைச்சர்,drug,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,Pledge,உறுதிமொழி,போதைப் பொருள்,Cheif Minister</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/t2gboqk5/vanathi-srinivasan.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:title><media:description type="html"><![CDATA[ பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/t2gboqk5/vanathi-srinivasan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>போதைப் பொருள் இல்லா தமிழகம்‘ என்று மேடையில் உறுதிமொழி எடுத்துக்கொள்வது மட்டும் தீர்வாகாது என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார். இது தொடர்பாக, பாஜக தேசிய மகளிரணி தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/vanathi-srinivasan">வானதி சீனிவாசன்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>கல்லூரி மாணவர் உயிரிழப்பு</h2><p>போதை இல்லா தமிழகம்’ என்ற முழக்கம் மட்டும் போதாது தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்று முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் ‘<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">போதைப் பொருட்கள்</a> இல்லா தமிழகம்’ என்ற இயக்கத்தை தொடங்கி வைத்த அடுத்த சில மணிநேரங்களிலேயே, கோவையில் 19 வயது பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் என்பவர் போதை பொருள் பழக்கத்திற்கு அடிமையான 20 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக கூறப்படும் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.</p> <h2>போதைப்பொருள் பயன்பாடு</h2><p>மாணவரின் மரணமானது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ள நிலையில், கல்லூரியில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனை தொடர்பாக அவர் தகவல் அளித்ததன் காரணமாகவே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளதாக செய்திகள் தெரிப்பது இன்னும் வருத்தத்திற்குரியது.</p><h2>கொடிய முகம்</h2><p>தமிழக இளைஞர்கள், குறிப்பாக கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து இதுபோன்று போதைப்பொருள் பிடியில் சிக்கி தங்களது எதிர்காலத்தையே பாழாக்கி கொண்டிருப்பது மட்டுமல்லாமல் சமூக விரோதிகளாகவும் மாறிவருவது போதைப்பொருள் பழக்கத்தின் கொடிய முகம்.</p><h2>கடும் நடவடிக்கைகள் மட்டுமே தீர்வு</h2><p>‘போதைப் பொருள் இல்லா தமிழகம்‘ என்று மேடையில் உறுதிமொழி எடுத்துக்கொள்வது மட்டும் தீர்வாகாது. தீவிர பிரச்சாரங்களும், போதைப் பொருள் தடுப்புத் துறையின் கடும் நடவடிக்கைகள் மட்டுமே இதற்குத் தீர்வு.</p><h2>பாதுகாப்பு உறுதி</h2><p>திட்டம் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே இப்படியொரு சம்பவம் நடந்திருக்கிறது என்றால், தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் விழித்துக்கொள்ள வேண்டும். மேலும் போதைப் பொருள்கள் பயன்பாடு, கடத்தல் குறித்து புகார் அளிப்பவர்களுக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை மாநகராட்சியில் திருத்தப்பட்ட சொத்துவரி மதிப்பீடு தொடர்பாக ஆட்சேபனைகளை தெரிவிக்க சிறப்பு ஏற்பாடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-arrangement-to-submit-objections-regarding-the-revised-property-tax-assessment</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-arrangement-to-submit-objections-regarding-the-revised-property-tax-assessment#comments</comments><guid isPermaLink="false">a2403d22-4a34-460b-8a91-15a1a8b1e115</guid><pubDate>Tue, 11 Aug 2026 14:30:23 +0000</pubDate><atom:updated>2026-08-11T14:30:23.926Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,தமிழகம்,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,Property Tax,சொத்துவரி,மாநகராட்சி ஆணையர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/ae1hnb1u/chh.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/ae1hnb1u/chh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பெருநகர சென்னை மாநகராட்சியில் திருத்தப்பட்ட சொத்துவரி மதிப்பீடு தொடர்பாக ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்கான சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><h2><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">சென்னை மாநகராட்சி</a> ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன்</h2><p>சொத்துவரி மதிப்பீட்டு திருத்தம் குறித்து ஏதேனும் குறைபாடுகள் அல்லது ஆட்சேபனைகள் இருப்பின், சொத்து உரிமையாளர்கள் திருத்தப்பட்ட வரிமதிப்பீட்டு ஆணையினை பெற்ற தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வட்டார துணை ஆணையரிடம் தங்கள் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கலாம் என்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">சென்னை மாநகராட்சி</a> ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>பெருநகர <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">சென்னை மாநகராட்சி</a>யின் சொந்த வருவாயின் ஒரு முக்கிய ஆதாரமாக சொத்துவரி உள்ளது. மேலும், இது சென்னை மாநகரின் பல்வேறு குடிமை சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான நிதியளிப்பில் குறிப்பிடத்தக்க பங்காற்றுகிறது.</p><h2>சொத்து வரி மதிப்பீடு</h2><p>கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சுய-அறிவிப்பு (Self-Declaration) நடவடிக்கையின்போது, சொத்து உரிமையாளர்கள் தங்கள் சொத்துக்களின் பயன்பாடு மற்றும் கட்டிடப் பரப்பு குறித்த விவரங்களை வழங்கியதன் அடிப்படையில், சொத்துவரி மதிப்பீட்டில் திருத்தம் செய்யும் பணிகள் ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்டது. கொரோனா பெருந்தொற்று காரணமாக மறுமதிப்பீடு செய்யும் பணிகள் கைவிடப்பட்டது.</p><p>சொத்து உரிமையாளர்கள் வழங்கிய விவரங்கள் மற்றும் கிடைக்கப்பெற்ற மறுஅளவீடு புவிசார் தகவல் அமைப்பு / செயற்கைக்கோள் படத் தரவுகளின் அடிப்படையில் சொத்து வரி மதிப்பீடுகளைத் திருத்தும் பணியை தற்போது பெருநகர சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. அதனடிப்படையில் சொத்து வரி மதிப்பீடானது, சொத்தின் சரியான பயன்பாடு மற்றும் கட்டி பரப்பளவை உறுதி செய்வதற்கும், அனைத்து சொத்துக்களிலும் நியாயமான மற்றும் சரியான மதிப்பீட்டை உறுதி செய்வதற்கும் இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p> <h2>15 நாட்களுக்குள்</h2><p>சொத்து உரிமையாளர்களுக்கு ஏற்படக்கூடிய நிதிச் சுமையை குறைக்கும் முகமாக, கட்டிடமானது கட்டப்பட்ட காலத்தினை கருத்தில் 'கொள்ளாமல் சொத்துவரி மறுமதிப்பீடு கணக்கீடானது 2025-26 ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>சொத்து உரிமையாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் திருத்தப்பட்ட சொத்துவரி மதிப்பீடு தொடர்பாக ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்கான சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சொத்துவரி மதிப்பீட்டு திருத்தம் குறித்து ஏதேனும் குறைபாடுகள் அல்லது ஆட்சேபனைகள் இருப்பின், சொத்து உரிமையாளர்கள் திருத்தப்பட்ட வரிமதிப்பீட்டு ஆணையினை பெற்ற தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வட்டார துணை ஆணையரிடம் (RDC) தங்கள் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கலாம். </p> <h2>துல்லியமான சொத்துவரி மதிப்பீடு</h2><p>அவற்றை பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) பரிசீலினை செய்து, ஆட்சேபனைகள் பெறப்பட்ட தேதியிலிருந்து. ஒருமாத காலத்திற்குள் அவற்றைத் தீர்ப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும். சொத்து உரிமையாளர்கள். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, திருத்தப்பட்ட சொத்துவரி மதிப்பீட்டினை சரிபார்த்து, ஏதேனும் நியாயமான ஆட்சேபனைகளாக இருப்பின், அவற்றை உரிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களுடன் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p>பெருநகர சென்னை மாநகராட்சி தனது சொந்த வருவாய் வலுப்படுத்தி சென்னை மக்களுக்கு திறம்படக் குடிமை சேவைகளை வழங்குவதற்காக, நியாயமான, வெளிப்படையான மற்றும் துல்லியமான சொத்துவரி மதிப்பீட்டை மேற்கொள்வதில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">பெருநகர சென்னை மாநகராட்சி</a> உறுதியுடன் உள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>சென்னை விமான நிலையத்தில் உடலுக்குள் தங்கத்தை  மறைத்து கடத்தி வந்த பெண் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-arrested-for-smuggling-gold-inside-body-at-chennai-airport</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-arrested-for-smuggling-gold-inside-body-at-chennai-airport#comments</comments><guid isPermaLink="false">66e6f3ac-f1cb-426c-b20e-bc0199b1e48c</guid><pubDate>Tue, 11 Aug 2026 14:10:15 +0000</pubDate><atom:updated>2026-08-11T14:10:15.459Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Airport,சென்னை விமான நிலையம்,arrested,Smuggling Gold,கடத்தல்,தங்கம்,பெண் பயணி,A woman</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/qdwcbxs8/gold-smugle.jpg" width="793"><media:title type="html"><![CDATA[ தங்கம் பறிமுதல்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை விமான நிலையத்தில் உடலுக்குள் தங்கத்தை  மறைத்து கடத்தி வந்த பெண் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/qdwcbxs8/gold-smugle.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>துபாயில் இருந்து சென்னைக்கு உடலுக்குள் ரூ.1.38 கோடி மதிப்பிலான 1.08 கிலோ<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D"> தங்கத்தை மறைத்து கடத்தி</a> வந்த பெண் பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.</p><h2>சென்னை விமான நிலையம்</h2><p>துபாயில் இருந்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு</a> விமானம் ஒன்று வந்திறங்கியது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது ஒரு பெண் பயணியின் மீது அதிகாரிகளுக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டது.</p><h2> உடலுக்குள் 'முட்டை' வடிவ காப்ஸ்யூல்கள்</h2><p>அந்த பெண்ணை தனியறைக்கு அழைத்து சென்று சுங்கத்துறை நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது எக்ஸ்ரே சோதனையில் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பெண் தன் உடலுக்குள் ரகசியமாக 3 முட்டை வடிவ காப்ஸ்யூல்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.</p> <h2> 24 காரட் தங்கம்</h2><p>உடனடியாக அவரது உடம்பில் இருந்து அந்த காப்ஸ்யூல்கள் பத்திரமாக வெளியே எடுக்கப்பட்டன. பின்னர் நவீன தொழில்நுட்ப முறையில் அவை பிரிக்கப்பட்டன. அதில் இருந்து 1.08 கிலோ எடையுள்ள தூய 24 காரட் தங்கக்கட்டி கிடைத்தது. பறிமுதல் செய்யப்பட்ட இந்த தங்கத்தின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.1.38 கோடி ஆகும்.</p><h2>பெண் பயணி கைது</h2><p>இதனை தொடர்ந்து, 1962-ம் ஆண்டு சுங்க சட்ட விதிகளின்படி கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட அந்த பெண்ணை அதிகாரிகள் உடனடியாக கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், தற்போது பலத்த காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.</p> <h2>விசாரணை</h2><p>இந்த கடத்தல் கும்பலின் பின்னணியில் உள்ள சர்வதேச கடத்தல் புள்ளிகள் யார், தங்கம் யாருக்காக கடத்தி வரப்பட்டது, என்பது குறித்து சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>சட்ட நடவடிக்கை</h2><p>சட்ட விரோதமாக தங்கம் அல்லது பிற கடத்தல் பொருட்களை தங்களது உடலிலோ, பயண பைகளிலோ மறைத்து எடுத்து வர வேண்டாம் என்று சென்னை சுங்கத்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. இவ்வாறு பொருட்களை கடத்தினால் சுங்க சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனையையும், நீண்டகால சட்ட நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள நேரிடும் என்றும் சுங்கத்துறை தெரிவித்துள்ளது.</p><p> இந்த சம்பவம் விமான நிலைய வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வேளாங்கண்ணி திருவிழா: சிறப்பு ரெயில்களை அறிவித்த தெற்கு ரெயில்வே </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/velankanni-festival-southern-railway-announces-special-trains</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/velankanni-festival-southern-railway-announces-special-trains#comments</comments><guid isPermaLink="false">1b6aae02-ea71-445a-8e6a-f4bfa3ca5ba9</guid><pubDate>Tue, 11 Aug 2026 13:59:09 +0000</pubDate><atom:updated>2026-08-11T13:59:09.265Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,சிறப்பு ரெயில்,தெற்கு ரெயில்வே,Southern Railway,Special train,Velankanni Church,Velankanni,வேளாங்கண்ணி,வேளாங்கண்ணி திருவிழா,Velankanni festival,சிறப்பு ரெயில்கள் இயக்கம்,Charlapalli,சார்லபள்ளி,வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரெயில்,Velankanni Express Train</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/ypbvt0am/karer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/ypbvt0am/karer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வேளாங்கண்ணி திருவிழாவிற்காக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87">தெற்கு மத்திய ரெயில்வே</a> விரைவு சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது.</p><h2>ரெயில் எண் 07125/07126</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>வேளாங்கண்ணி திருவிழாவின் போது ஏற்படும் கூடுதல் பயணிகள் நெரிசலை கருத்தில் கொண்டு, தெற்கு மத்திய ரெயில்வே கீழ்க்கண்டவாறு விரைவு சிறப்பு ரெயில்களை (தேவைக்கேற்ப இயக்கப்படும் ரெயில்கள்) அறிவித்துள்ளது.</p><p>1. ரெயில் எண் 07125/07126 சார்லபள்ளி - வேளாங்கண்ணி – சார்லாபள்ளி விரைவு சிறப்பு ரெயில்கள்:</p><p>ரெயில் எண் 07125 சார்லபள்ளி - வேளாங்கண்ணி விரைவு சிறப்பு ரெயில், 2026 ஆகஸ்ட் 28 மற்றும் செப்டம்பர் 4 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) காலை 7.40 மணிக்கு சார்லபள்ளியிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 9.10 மணிக்கு வேளாங்கண்ணியைச் சென்றடையும் (2 சேவைகள்).</p> <h2>வேளாங்கண்ணி - சார்லாபள்ளி</h2><p>மறுமார்க்கத்தில், ரெயில் எண் 07126 வேளாங்கண்ணி - சார்லபள்ளி விரைவு சிறப்பு ரெயில், 2026 ஆகஸ்ட் 29 மற்றும் செப்டம்பர் 5 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை) மாலை 19.30 மணிக்கு வேளாங்கண்ணியிலிருந்து புறப்பட்டு, மறுநாள் இரவு 22.00 மணிக்கு சார்லபள்ளியை சென்றடையும் (2 சேவைகள்).</p><p>பெட்டிகளின் அமைப்பு: 3 - குளிர்சாதன வசதி கொண்ட இரு அடுக்கு (AC Two Tier) பெட்டிகள், 5 - குளிர்சாதன வசதி கொண்ட மூன்று அடுக்கு (AC Three Tier) பெட்டிகள், 10 - படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் (Sleeper Class), 4 - பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் மற்றும் 2 - சரக்கு மற்றும் பிரேக் வேன்கள்(Luggage cum Brake Vans).</p><p>ரெயில் எண் 07125/07126 சார்லபள்ளி - வேளாங்கண்ணி - சார்லாபள்ளி விரைவு சிறப்பு ரெயில்களின் நேரம் மற்றும் நிறுத்தங்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு (நேரங்கள் 24 மணிநேர அடிப்படையில்):</p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/4ppxys8c/train.jpg" /></figure><h2>ரெயில் எண் 07127/07128</h2><p>2. ரெயில் எண் 07127/07128 சார்லபள்ளி - வேளாங்கண்ணி - சார்லாபள்ளி விரைவுச் சிறப்பு ரெயில்கள்:</p><p>ரெயில் எண் 07127 சார்லபள்ளி - வேளாங்கண்ணி விரைவுச் சிறப்பு ரெயில், 2026 செப்டம்பர் 8 அன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7.40 மணிக்கு சார்லபள்ளியிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 9.10 மணிக்கு வேளாங்கண்ணியைச் சென்றடையும் (1 சேவை).</p><p>மறுமார்க்கத்தில், ரெயில் எண் 07128 வேளாங்கண்ணி - சார்லபள்ளி விரைவுச் சிறப்பு ரெயில், 2026 செப்டம்பர் 9 அன்று (புதன்கிழமை) இரவு 23.00 மணிக்கு வேளாங்கண்ணியிலிருந்து புறப்பட்டு, மறுநாள் இரவு 22.15 மணிக்கு சார்லபள்ளியை சென்றடையும் (1 சேவை).</p> <h2>சார்லபள்ளி - வேளாங்கண்ணி</h2><p>பெட்டிகளின் அமைப்பு: 3 - குளிர்சாதன வசதி கொண்ட இரு அடுக்கு (AC Two-Tier) பெட்டிகள், 5 - குளிர்சாதன வசதி கொண்ட மூன்று அடுக்கு (AC Three-Tier) பெட்டிகள், 10 - படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் (Sleeper Class), 4 - பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் மற்றும் 2 - சரக்கு மற்றும் பிரேக் வேன்கள்.</p><p>ரெயில் எண் 07127/07128 சார்லபள்ளி - வேளாங்கண்ணி - சார்லபள்ளி விரைவு சிறப்பு ரெயில்களின் நேரம் மற்றும் நிறுத்தங்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு (நேரங்கள் 24 மணிநேர அடிப்படையில்):</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/2b1fw7vq/2222.jpg" /></figure><p>மேற்கூறிய சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு, தெற்கு ரெயில்வே தரப்பில் 13.08.2026 (வியாழக்கிழமை) அன்று காலை 8.00 மணிக்குத் தொடங்கும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>
சுதந்திர தின விழா:  முதல்-அமைச்சர் விஜய் செல்லும் வழித்தடம் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு; டிரோன்களுக்கு தடை
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/independence-day-event-chief-minister-vijay-route-declared-red-zone-drone-ban</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/independence-day-event-chief-minister-vijay-route-declared-red-zone-drone-ban#comments</comments><guid isPermaLink="false">5126c384-a364-4ac3-8ab0-385c111beb47</guid><pubDate>Tue, 11 Aug 2026 13:46:50 +0000</pubDate><atom:updated>2026-08-11T13:46:50.840Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சுதந்திர தின விழா,Independence Day celebrations,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/rznk2851/tncrz.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/rznk2851/tncrz.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>சுதந்திர தின விழாவை முன்னிட்டு தலைமை செயலகம், முதல்-அமைச்சர் செல்லும் வழித்தடம் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.</p><p>இந்திய நாடு, 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றது.  அந்த நாளை நினைவுகூரும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் <a href="https://www.dailythanthi.com/">சுதந்திர தினம் </a>கொண்டாடப்பட்டு வருகிறது.  அதையொட்டி, சென்னை தலைமைச்செயலகம் செயல்பட்டு வரும் புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தேசிய கொடியை ஏற்ற இருக்கிறார்.</p>  <h2>அணிவகுப்பு ஒத்திகை</h2><p>இதனையொட்டி, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக்கொள்கிறார்.  தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், சுதந்திர தின விழாவுக்கான அணிவகுப்பு ஒத்திகை மெரினா கடற்கரையில் நடைபெற்று வருகிறது.</p>  <h2>டிரோன்களுக்கு தடை</h2><p>இந்த நிலையில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு தலைமை செயலகம், முதல்-அமைச்சர் விஜய் செல்லும் வழித்தடம் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  இதன்படி, நீலாங்கரை முதல் தலைமை செயலகம் வரை பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.  ஆகஸ்டு 14, 15 ஆகிய நாட்களில் டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.</p>  <h2>விருது</h2><p>சுதந்திர தின விழாவில், முதல்-அமைச்சர் விஜய், தமிழ்நாட்டுக்கும், தமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த தகைசால் தமிழர் என்ற பெயரிலான விருதும், ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழையும் வழங்க இருக்கிறார்.</p><p>அதேபோல், அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு டாக்டர் அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதல்வரின் நல் ஆளுமை விருது, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகள், மகளிர் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூக பணியாளருக்கான விருதுகள், சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்-அமைச்சர் விருதுகள், முதல்-அமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் உள்ளிட்ட விருதுகளையும் முதல்-அமைச்சர் விஜய் வழங்கி கவுரவிக்க உள்ளார்.</p><p>இதற்கு முன்பு சென்னை கோட்டை கொத்தளத்தில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் சுதந்திர தின நாளில் தேசிய கொடியை ஏற்றி வைத்துள்ளனர். அந்த வகையில், 7-வது முதல்-அமைச்சராக விஜய் தேசிய கொடியை ஏற்றிவைக்க இருக்கிறார்.</p> ]]></content:encoded></item><item><title>ஆடி அமாவாசை: சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aadi-amavasai-devotees-permitted-to-visit-sathuragiri-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aadi-amavasai-devotees-permitted-to-visit-sathuragiri-temple#comments</comments><guid isPermaLink="false">9cdd5130-f59a-46cc-b0fc-f150540c3a45</guid><pubDate>Tue, 11 Aug 2026 13:03:58 +0000</pubDate><atom:updated>2026-08-11T13:03:58.785Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Virudhunagar,விருதுநகர்,சதுரகிரி கோவில்,Sathuragiri Temple,sathuragiri hills,Sathuragiri,சதுரகிரி,Chathuragiri,aadi amavasai,ஆடி அமாவாசை,Aadi Amavasai festival,Sundara Mahalingam Temple,சுந்தரமகாலிங்கம் கோவில்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/h66ylwqx/sathu.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/h66ylwqx/sathu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர்,</p><p>விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாணிப்பாறை மலைப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு மலையின் கீழ் பகுதியை நோக்கி பரவி வருகிறது. தீயை கட்டுப்படுத்தும் பணியிலும், மலையில் காற்றின் வேகம் திசை மற்றும் சூழலை கண்காணிக்கும் பணியிலும் களப்பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.</p><h2>தடை</h2><p>தற்போது நிலவும் தீ பரவும் சூழல் பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படக்கூடியதை கருத்தில் கொண்டு நிலைமை பாதுகாப்பானதாகவும், இயல்பானதாகவும் மாறும் வரை இன்று (செவ்வாய்க்கிழமை) பொதுமக்கள் <a href="https://www.dailythanthi.com/topic/sathuragiri">சதுரகிரி</a> மலைக்கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.</p><h2>அனுமதி இல்லை</h2><p>மேலும் தொடர்ந்து எரியும் தீ மற்றும் களநிலவரத்தை கருத்தில் கொண்டு இன்று காலை 8 மணிக்கு முன்னதாக பக்தர்கள் அல்லது பார்வையாளர்கள் <a href="https://www.dailythanthi.com/topic/sathuragiri">சதுரகிரி</a> மலைப்பகுதிக்குள் நுழைய அனுமதி இல்லை. நுழைவு நேரம் மற்றும் கட்டுப்பாடுகள் ஆகியவை அப்பகுதியில் நிலவும் தீ மற்றும் பாதுகாப்பு சூழ்நிலையை பொருத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/pg30fs4n/shivo.jpg" /></figure><h2>ஆடி அமாவாசை</h2><p>எனவே பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையிலும் சதுரகிரிக்கு செல்வதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்திருந்தனர். மேலும் காட்டுத்தீயின் தன்மையைப் பொறுத்து நாளை (புதன்கிழமை) ஆடி அமாவாசை அன்று பக்தர்களை அனுமதிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது.</p><h2>பக்தர்களுக்கு அனுமதி</h2><p>இந்நிலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு <a href="https://www.dailythanthi.com/topic/sathuragiri">சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில்</a> பக்தர்கள் மலையேற நாளையும் (ஆக.12), நாளை மறுநாளும் (ஆக.13) அனுமதி அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னதாக காட்டுத்தீ காரணமாக நேற்றும், இன்றும் சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி தரப்படவில்லை.  </p>]]></content:encoded></item><item><title>நீட்டை ரத்து செய்யக்கோரும் தமிழ்நாடு அரசின் தீர்மானம் மிகவும் வருத்தமளிக்கிறது – தமிழிசை சவுந்தரராஜன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/neet-abolition-move-tamilnadu-government-distressing-says-tamilisai-soundararajan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/neet-abolition-move-tamilnadu-government-distressing-says-tamilisai-soundararajan#comments</comments><guid isPermaLink="false">da80e41a-7112-4e9b-8cd7-00a0f10dbfdc</guid><pubDate>Tue, 11 Aug 2026 13:01:25 +0000</pubDate><atom:updated>2026-08-11T13:01:25.203Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழிசை சவுந்தரராஜன்,Tamilisai Soundararajan,தமிழ்நாடு அரசு,Tamil Nadu Government,ரத்து,Resolution,தீர்மானம்,NEET,நீட்,Abolition,வருத்தமளிக்கிறது</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/e2moeaha/tamilisai-soundarajan.gif" width="768"><media:title type="html"><![CDATA[ தமிழிசை சவுந்தரராஜன்]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/e2moeaha/tamilisai-soundarajan.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நீட்டை ரத்து செய்யக்கோரும் தமிழ்நாடு அரசின் தீர்மானம் மிகவும் வருத்தமளிக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். இது தொடர்பாக, தமிழக முன்னாள் பாஜக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D">தமிழிசை சவுந்தரராஜன்</a> தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>தேசிய நுழைவுத்தேர்வு</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D">நீட்</a> சமூகநீதிக்கு தடையல்ல. தரமான கல்விக்கான சமமற்ற அணுகல்தான் உண்மையான சவால் - அதை சரி செய்ய அரசாங்கம் முயற்சி செய்ய வேண்டும். பல்வேறு பள்ளிகள், கல்வி வாரியங்கள், மாவட்டங்கள் மற்றும் சமூக-பொருளாதார பின்னணிகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு ஒரே தேசிய நுழைவுத்தேர்வு ஒரு பொதுவான அளவுகோலை வழங்குகிறது.</p><h2> நீட் பயிற்சி</h2><p>பயிற்சி குறித்த கவலை இருந்தால், அதற்கான தீர்வு அரசு பள்ளி மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு இலவசமான, தரமான நீட் பயிற்சி வழங்குவதாக இருக்க வேண்டும். தேர்வுத்தாள் கசிவு குறித்த கவலை இருந்தால், பிரதமர் மோடி தேர்வு முறையை மேலும் வலுப்படுத்தி, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்.</p><p>மாணவர்களின் மன அழுத்தம் குறித்த கவலை இருந்தால், ஆலோசனை, வழிகாட்டுதல் மற்றும் கல்வி ஆதரவை வழங்க வேண்டும். ஆனால் நீட்டை ரத்து செய்வது தீர்வல்ல.</p> <h2>மருத்துவ கல்வி</h2><p>தமிழ்நாட்டில் மருத்துவ கல்வி குறிப்பிடத்தக்க அளவில் விரிவடைந்துள்ளது. பல மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளும் எம்.பி.பி.எஸ். இடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. தேசிய மருத்துவ ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தரவுகளும் இந்த மருத்துவ கல்வி விரிவாக்கத்தின் அளவை வெளிப்படுத்துகின்றன.</p> <h2>எப்படி ஒப்பிட முடியும்?</h2><p>இந்நிலையில், இந்த வாய்ப்புகளுக்கான பொதுவான தேசிய நுழைவு தேர்வை ஏன் ரத்து செய்ய வேண்டும்? தமிழ்நாடு அரசு மீண்டும் 12ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ சேர்க்கையை கொண்டு வர முன்வருகிறது. ஆனால் பல்வேறு கல்வி வாரியங்கள், மாறுபட்ட மதிப்பீட்டு முறைகள் மற்றும் கல்வி தரநிலைகளில் பெறப்படும் மதிப்பெண்களை ஒரே அளவுகோலில் நியாயமாக எப்படி ஒப்பிட முடியும்?</p><h2>மாணவர்களின் தேவை</h2><p>நமது கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பு வேண்டும். நமது ஏழை மாணவர்களுக்கு வாய்ப்பு வேண்டும். ஒவ்வொரு மாணவருக்கும் நியாயமான மற்றும் வெளிப்படையான போட்டிக்கான வாய்ப்பு வேண்டும். அரசியல் காரணங்களுக்காக ஒரு தேர்வை நீக்குவதை விட, மாணவர்களின் தேவைகள் மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும்.</p><h2>இலவச நீட் பயிற்சி</h2><p>அவர்களுக்கு சிறந்த பள்ளிகளை வழங்குங்கள். இலவச நீட் பயிற்சி வழங்குங்கள்.உதவித்தொகைகள் வழங்குங்கள். நம்பிக்கையை வழங்குங்கள். ஆனால் நீட் என்ற பொதுவான தேசிய வாய்ப்பை அவர்களிடமிருந்து பறிக்காதீர்கள். தமிழ்நாடு சட்டமன்றம், நமது குழந்தைகளை போட்டியிட தயார்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்; போட்டியிலிருந்து அவர்களை விலக்குவதில் அல்ல.</p><h2>பாராட்டுகிறேன்</h2><p>நீட்டை ரத்து செய்ய வேண்டாம். நீட்டை சீர்திருத்தி, வலுப்படுத்தி, அனைவருக்கும் எளிதில் அணுகக்கூடியதாக மாற்றுவோம். கல்வி நமது குழந்தைகளை நாட்டுடன் போட்டியிட வலிமைப்படுத்த வேண்டும்; அவர்களை நாட்டிலிருந்து தனிமைப்படுத்த கூடாது. தொடர்ந்து அரசியல் கட்சிகளால் ஊக்கமிழக்க செய்யப்படும் சூழலிலும், தமிழ்நாட்டின் மாணவர்கள் நீட் தேர்வில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் என்பதை நான் பாராட்டுகிறேன்.</p> <p><strong>தமிழ்நாட்டு மாணவர்களின் சாதனைகள்:</strong></p><p> அதிகபட்ச மதிப்பெண் பெற்ற 17 மாணவர்களில், 12ஆம் இடத்தை தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடபதி வேலாயுதம் பெற்றுள்ளார்.</p><p> நாடு முழுவதும் 138 மாணவர்கள் 720-க்கு 690 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அவர்களில் 12 மாணவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.</p> <p> அகில இந்திய அளவில் முதல் 100 இடங்களுக்குள் 9 மாணவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.</p><p>இவை வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல — தமிழ்நாட்டு மாணவர்களின் திறமை, உழைப்பு மற்றும் தேசிய அளவில் போட்டியிடும் திறனுக்கான சான்றுகள்.</p><h2>எதிர்கால லட்சியங்கள்</h2><p>தமிழ்நாட்டு மாணவர்கள் நீட்டை சிறப்பாக செயல்பட்டு, தேசிய அளவில் போட்டியிடும் திறன் தங்களுக்கு இருப்பதை நிரூபித்து வருகின்றனர். அவர்களின் எதிர்கால லட்சியங்களை அரசியல் கருத்துகளால் மறைத்துவிடாமல், அவர்களின் சாதனைகளை கொண்டாடுவோம். அவர்களின் வெற்றி கதைகளை அடுத்த தலைமுறைக்கு முன்மாதிரியாக காட்டுவோம்.</p><h2>சிறந்த பயிற்சி</h2><p>சவால்கள் இருந்தால் அவற்றை சிறந்த பயிற்சி, வழிகாட்டுதல் மற்றும் ஆதரவின் மூலம் எதிர்கொள்வோம்; நமது மாணவர்களின் கனவுகளையும் இலட்சியங்களையும் பலவீனப்படுத்த வேண்டாம். நமது குழந்தைகளை அவர்களின் சாதனைகள் ஊக்குவிக்கட்டும், அரசியல் கருத்துகள் அவர்களை ஊக்கமிழக்கச் செய்ய வேண்டாம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>40 ஆண்டுகளாக அரசு புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் மக்களுக்கு பட்டா: த.வெ.க. பெண் எம்.எல்.ஏ. கோரிக்கை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-woman-mla-urges-issuance-of-land-titles-to-people-living-on-government-poramboke-land-for-40-years</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-woman-mla-urges-issuance-of-land-titles-to-people-living-on-government-poramboke-land-for-40-years#comments</comments><guid isPermaLink="false">096406cb-6e5e-4eaf-a51f-10eec3197f31</guid><pubDate>Tue, 11 Aug 2026 12:41:37 +0000</pubDate><atom:updated>2026-08-11T12:41:37.616Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Tamilnadu,எம்.எல்.ஏ.,MLA,தமிழகம்,தமிழக சட்டசபை,TN Assembly,Assembly Session,சட்டசபை கூட்டத்தொடர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/prr2p527/veet.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/prr2p527/veet.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>40 ஆண்டுகளாக அரசு புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று <a href="https://www.dailythanthi.com/topic/tvk">த.வெ.க.</a> பெண் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.</p><h2>கனிமொழி சந்தோஷ்</h2><p>தமிழக சட்டசபையில் இன்று 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று த.வெ.க. உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் (கவுண்டம்பாளையம்) பேசினார். அப்போது, அவர் தொகுதி சார்ந்த பிரச்சினைகளை முன்வைத்து பேசியதாவது:- </p><p> அரசு புறம்போக்கு நிலங்களில் கடந்த 40–50 ஆண்டுகளாக வசித்து வரும் மக்கள், மின் கட்டண ரசீதுகள் உள்ளிட்ட ஆவணங்களை முறையாக வைத்திருந்தும் இதுவரை வீட்டு மனைப் பட்டா கிடைக்காமல் உள்ளனர். பட்டா இல்லாததால் வங்கிக் கடன் பெற முடியாமலும், தாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து வெளியேற்றப்படுவோம் என்ற அச்சத்துடனும் வாழ்ந்து வருகின்றனர்.</p><h2>வீட்டு மனைப் பட்டா</h2><p>எனவே, நீண்டகாலமாக வசித்து வரும் தகுதியான மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கி, அவர்களின் வாழ்வுரிமையையும் பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்பையும் உறுதி செய்ய வேண்டும். </p><p>மேலும், பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையை மேம்படுத்தி, அறுவை சிகிச்சை மையம், விபத்து சிகிச்சை மையம், அவசர சிகிச்சை மையம் ஆகியவற்றை ஏற்படுத்துவதுடன், தேவையான நவீன மருத்துவ உபகரணங்களையும் வழங்க வேண்டும். </p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item></channel></rss>