<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 21 Aug 2026 02:37:33 +0000</lastBuildDate><item><title>வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - முதியவர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/1100-kg-of-ration-rice-hoarded-at-home-seized-elderly-man-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/1100-kg-of-ration-rice-hoarded-at-home-seized-elderly-man-arrested#comments</comments><guid isPermaLink="false">d8610743-384c-4a31-9679-f2c8ad33f9ea</guid><pubDate>Fri, 21 Aug 2026 02:23:19 +0000</pubDate><atom:updated>2026-08-21T02:23:19.691Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தஞ்சாவூர்,தஞ்சை,ration rice,ரேஷன் அரிசி,Tanjaore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/12rvgoff/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/12rvgoff/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சை,</p><p>தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இட்லி மாவு தயாரிக்கும் தொழிலுக்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,100 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முதியவரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>ரேஷன் அரிசி கடத்தல்</h2><p>பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் ரேஷன் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தி யாவசியப் பொருட்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>இந்த நிலையில் அதிராம்பட்டினம் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தஞ்சை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக் டர் ஜெகதீஸ்வரன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் பூர்விகா மற்றும் போலீசார் அதிராம்பட் டினத்தில் உள்ள சம்சுதீன் (வயது 66) என்பவருடைய வீட்டில் சோதனை நடத்தினர்.</p><h2>இட்லி மாவு தயாரிக்க...</h2><p>அப்போது அங்கு 50 கிலோ எடை கொண்ட 22 மூட்டைகளில் மொத்தம் 1,100 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">போலீசார் </a>நடத்திய விசாரணையில், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை சேகரித்து, இட்லி மாவு தயாரிக்கும் தொழிலுக்காக அவர் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்த னர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்சுதீனை கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சேலம் செவ்வாய்பேட்டை மார்க்கெட்டில் குண்டு வெல்லம், சர்க்கரை விலை கடும் உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sharp-rise-in-prices-of-gundu-jaggery-and-sugar-at-the-salem-sevvaipet-market</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sharp-rise-in-prices-of-gundu-jaggery-and-sugar-at-the-salem-sevvaipet-market#comments</comments><guid isPermaLink="false">77048b11-4e22-427d-8750-8b4d53bbf713</guid><pubDate>Fri, 21 Aug 2026 02:19:50 +0000</pubDate><atom:updated>2026-08-21T02:19:50.476Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>வெல்லம்,Jaggery,சர்க்கரை விலை,Sugar Prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/r99mpn8s/6.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/r99mpn8s/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,   </p><h2>குண்டு வெல்லம்</h2><p>சேலம், செவ்வாய்ப் பேட்டை சந்தைக்கு, தினமும் சராசரியாக, 200 டன் உருண்டை வெல்லம் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்படுகிறது. அங்கு கடந்த மாதம், 30 கிலோ கொண்ட ஒரு மூட்டை வெல்லம், 1,400 ரூபாய் வரை விற்ற நிலையில் படிப்படியாக விலை அதிகரித்தது. இரு வாரங்களுக்கு முன், 1,650 ரூபாயாக உயர்ந்தது. </p><p>தொடர்ந்து நேற்று நடந்த ஏலத்தில், 30 கிலோ மூட்டை, 1,900 முதல், 2,000 ரூபாய் வரை விலைபோனது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:</p><p>பண்டிகைகள் அடுத்தடுத்து வர உள்ளதால், வெல்ல தேவை அதிகரிக்கும் என எதிர்பார்த்து, போட்டி போட்டு பலரும் ஏலம் எடுத்தனர். சமீபகாலமாக சர்க்கரை விலை அதிகரித்து வருவதால், பல்வேறு உணவு, தின்பண்ட தயாரிப்பு நிறுவனங்கள், நாட்டு வெல்லத்தை அதிகளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளன. இதுவும் சந்தையில் கூடுதல் தேவையை ஏற்படுத்தியுள்ளது.  </p><h2>சர்க்கரை விலை உயர்வு</h2><p>இதேபோல், சேலம் மார்க்கெட்டில் சர்க்கரை விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. அதாவது, 50 கிலோ எடை கொண்ட சர்க்கரை கடந்த வாரம் ரூ.2,130-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது மூட்டைக்கு ரூ.1,200 அதிகரித்து ரூ.3,330-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை யாக கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தநிலையில் தற்போது ரூ.67-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் குண்டு வெல்லம் மற் றும் சர்க்கரையை மொத்தமாக வாங்கும் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். </p><h2>கரும்பு விளைச்சல் குறைவு</h2><p>இது குறித்து சேலம் செவ்வாய்பேட்டை வியாபாரிகள் கூறுகையில், சேலம் மார்க்கெட்டிற்கு குண்டு வெல்லம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ஆனால் சர்க்கரையை பொறுத்தவரையில் உத்தரபிரதேசம், மராட்டியம், கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தான் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தற்போது சர்க்கரை தயாரிப்பு குறைந்துவிட்டதால் அதன் விலை அதிகரித்துள்ளது.</p><p>தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் கரும்பு விளைச்சல் குறைந்துவிட்டதால் சர்க்கரை தயாரிக்கும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் விநாயகர் சதுர்த்தி, அதன்பிறகு ஆயுதபூஜை, தீபாவளி என தொடர்ச்சியாக திருவிழா காலம் என்பதால் குண்டு வெல்லம், சர்க்கரை விலை குறைவதற்கு வாய்ப்பு இருக்காது, என்றனர்.</p>  ]]></content:encoded></item><item><title>மருத்துவ படிப்புகளை தொடங்க சென்னை ஐ.ஐ.டி. திட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/iit-madras-plans-to-launch-medical-courses</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/iit-madras-plans-to-launch-medical-courses#comments</comments><guid isPermaLink="false">358ff03f-a805-4bd0-9385-6484c7eab082</guid><pubDate>Fri, 21 Aug 2026 02:18:07 +0000</pubDate><atom:updated>2026-08-21T02:18:07.179Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Chennai IIT,சென்னை ஐஐடி,IIT Madras,மருத்துவ படிப்பு,Medical Courses,ஐஐடி மெட்ராஸ்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/qnojk78w/inida.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/qnojk78w/inida.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி, </p><p>இந்தியாவின் தரவரிசை பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. தொடர்ந்து நம்பர் ஒன் இடத்தில் இருந்து வருகிறது. சென்னை ஐ.ஐ.டி.யில் ஏற்கெனவே பொறியியல் மட்டுமின்றி பயோ டெக்னாலஜி, மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு தொடர்பான பட்டப்படிப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன.</p><p>இந்நிலையில் நோயாளிகளுக்கு நேரடியாக சிகிச்சை அளிக்கும் டாக்டர்களை உருவாக்கும் வகையில் எம்.பி.பி.எஸ். மற்றும் எம்.டி. பட்டப் படிப்புகளை தொடங்க <a href="https://www.dailythanthi.com/topic/chennai-iit">சென்னை ஐ.ஐ.டி.</a> திட்டமிட்டுள்ளது.</p><h2>பொறியியல் பயிற்சி</h2><p>இதுகுறித்து <a href="https://www.dailythanthi.com/topic/chennai-iit">சென்னை ஐ.ஐ.டி.</a>யின் இயக்குநர் காமகோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-</p><p>ஒரு நாட்டில் மருத்துவ கருவிகளை சொந்தமாக வடிவமைப்பதற்கு டாக்டர்களும், இன்ஜினியர்களும் இணைந்து செயல்பட வேண்டும். இன்ஜினியர்ககளை டாக்டர்களாக மாற்றுவதை விட டாக்டர்களுக்கு பொறியியலில் பயிற்சி அளிப்பதே எளிதான அணுகுமுறையாக இருக்கும். எதிர்காலத்தில் மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய இரண்டிலுமே மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்பதே ஐ.ஐ.டி.-யின் நோக்கம்.</p><h2>எம்.பி.பி.எஸ்., எம்.டி.</h2><p>ஏற்கெனவே ஐ.ஐ.டி. கரக்பூர் சொந்தமாக மருத்துவமனை அமைத்து, எம்.டி. படிப்பையும் வழங்கி வருகிறது . அதேபோன்று, <a href="https://www.dailythanthi.com/topic/chennai-iit">சென்னை ஐ.ஐ.டி.</a>-யும் மருத்துவமனையை உருவாக்கி, முறையான அனுமதியுடன் எதிர்காலத்தில் எம்.பி.பி.எஸ்., எம்.டி. ஆகிய படிப்புகளை வழங்க விரும்புகிறது.</p><p>இதற்காக சொந்தமாக மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி வளாகத்தை ஏற்படுத்தி, தேசிய மருத்துவ ஆணையத்தின் (NATIONAL MEDICAL COMMISSION) அனுமதியை பெறுவதற்கு சென்னை ஐ.ஐ.டி. திட்டமிட்டுள்ளது.</p><h2>ஒரே கூரையின் கீழ்</h2><p>டாக்டர்களும், இன்ஜினியர்களும் இணைந்து புதிய மருத்துவக் கருவிகளைக் கண்டுபிடிக்கவும், மருத்துவத்துறையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் இந்த திட்டம் உதவுகிறது. ஏற்கனவே <a href="https://www.dailythanthi.com/topic/chennai-iit">சென்னை ஐ.ஐ.டி.</a> மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மூலம் 4 ஆண்டு பி.எஸ். மருத்துவ அறிவியல் மற்றும் பொறியியல் படிப்பு வழங்கப்படுகிறது.</p><p>உயர்தர மருத்துவ உபகரணங்களுக்கு வெளிநாட்டையே நாம் இன்றும் சார்ந்து இருக்கிறோம். நம் நாட்டிலேயே சொந்தமாக மருத்துவ கருவிகளை வடிவமைக்க, டாக்டர்களும், இன்ஜினியர்களும் ஒரே கூரையின் கீழ் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>சேலம் அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 8 பவுன் திருட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/8-sovereigns-of-gold-stolen-from-ex-servicemans-house-near-salem</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/8-sovereigns-of-gold-stolen-from-ex-servicemans-house-near-salem#comments</comments><guid isPermaLink="false">f18e3b26-861c-46c0-8472-994757140f9d</guid><pubDate>Fri, 21 Aug 2026 02:07:32 +0000</pubDate><atom:updated>2026-08-21T02:07:32.886Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,சேலம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/yge81b7f/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/yge81b7f/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>ஓமலூர் அருகே செக்காரப்பட்டி தொப்பூர் கேன்டீன் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், முன் னாள் ராணுவ வீரர். இவர் தனது மகன் நந்தகுமார் (வயது 32) மற்றும் குடும்பத்துடன் கடந்த 17-ந் தேதி திருவண்ணாமலை கோவிலுக்கு சென்றார். இதனை அறிந்த மர்மநபர்கள் செல்வராஜின் வீட்டு கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணம், வெள்ளிப் பொருட்களை திருடி சென்றனர்.</p><h2>8 பவுன் நகை திருட்டு</h2><p>இந்தநிலையில், நேற்று காலை செல்வராஜ் வீடு திரும்பினார். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 8 பவுன் நகை, ரூ.10 ஆயிரம். 2 வெள்ளி கொலுசுகள் ஆகியவற்றை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.</p><p>இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விசாரணை </a>நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது.</p><h2>போலீசார் வலைவீச்சு</h2><p>மோப்பநாய் சம்பவம் நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் வீட்டில் தடயங்களை சேகரித்து விட்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>இடைக்கால ஊதியத்தில் அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்வு: தமிழக அரசு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dearness-allowance-on-interim-pay-hiked-to-60-tamil-nadu-government-order</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dearness-allowance-on-interim-pay-hiked-to-60-tamil-nadu-government-order#comments</comments><guid isPermaLink="false">f830f23c-d167-4778-8429-6c5832691bed</guid><pubDate>Fri, 21 Aug 2026 02:06:27 +0000</pubDate><atom:updated>2026-08-21T02:06:27.566Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu Government,தமிழக அரசு,dearness allowance,அகவிலைப்படி,இடைக்கால ஊதியம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/5bs2l6tj/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/5bs2l6tj/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணியாற்றி ஓய்வு பெற்ற அல்லது பணியில் இருக்கும்போது உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இடைக்கால மாத ஊதியத்தில் அகவிலைப்படியை 60 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.</p><p>சென்னை,</p><h2>தமிழக அரசு உத்தரவு</h2><p>பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள தகுதியான அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்போதோ அல்லது பணியில் இருக்கும்போது உயிரிழக்கும்போதோ, அவர்களுக்கு இடைக்கால மாத ஊதியம் அல்லது குடும்பத்தினருக்கு இடைக்கால மாத குடும்ப ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த இடைக்கால மாத ஊதியம், கடைசியாக பெற்ற அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது ரூ.10 ஆயிரம், இதில் எது அதிகமோ அந்தத் தொகையுடன் அகவிலைப்படி சேர்த்து வழங்கப்படுகிறது.</p><p>இந்த நிலையில், 6-வது ஊதியக்குழு ஊதிய விகிதத்தில் கடைசியாக ஊதியம் பெற்றவர்களுக்கு அகவிலைப்படி 2026 ஜனவரி 1-ந் தேதி முதல் 262 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து. இடைக்கால மாத ஊதியம் மற்றும் இடைக்கால மாத குடும்ப ஊதியத்துக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை ஒரே சீராக 60 சதவீதமாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.</p><h2>அடிப்படை ஊதியம்</h2><p>ஆனால், 6-வது ஊதியக்குழுவின் கீழ் கடைசியாக பெற்ற அடிப்படை ஊதியம் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாகவும், 7-வது ஊதியக்குழுவின் கீழ் ஊதியம் நிர்ணயிக்கப்படாமலும் இருந்தால், இடைக்கால அடிப்படையில் அவர்களின் ஊதியம் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.</p><p>மேலும், 6-வது ஊதியக்குழுவின் கீழ் கடைசியாக பெற்ற அடிப்படை ஊதியம் ரூ.10 ஆயிரம் அல்லது அதற்கு அதிக மாக இருந்தால், 7-வது ஊதியக்குழுவின் கீழ் ஊதியம் நிர்ணயிக்கப்படாத நிலையில், 2026 ஜனவரி 1-ந் தேதி முதல் அகவிலைப்படி 262 சதவீதம் வழங்கப்படும்.</p><p>இந்த உத்தரவை முறையாக செயல்படுத்த அனைத்து ஊதியம் மற்றும் கணக்கு அதிகாரிகள், கருவூலங்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கும்படி கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கல்பாக்கம் அதிவேக ஈனுலை பணிகள் இறுதிகட்டத்தை எட்டியது: நவம்பரில் மின் உற்பத்தி தொடக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kalpakkam-fast-breeder-reactor-work-reaches-final-stage-power-generation-to-start-in-november</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kalpakkam-fast-breeder-reactor-work-reaches-final-stage-power-generation-to-start-in-november#comments</comments><guid isPermaLink="false">62ff5863-0bac-4e46-84b5-062ae7b41851</guid><pubDate>Fri, 21 Aug 2026 01:58:31 +0000</pubDate><atom:updated>2026-08-21T01:58:31.022Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>கல்பாக்கம் அணுமின் நிலையம்,கல்பாக்கம்,Kalpakkam,Kalpakkam nuclear power plant</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/9aytsiho/4.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/9aytsiho/4.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>கல்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும் அதிவேக ஈனுலை மின் நிலையத்தில், வரும் நவம்பரில் மின் உற்பத்தி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் தமிழகத்திற்கு, 250 மெகாவாட் வழங்க வலியு றுத்தப்பட்டு உள்ளது.</p><p>செங்கல்பட்டு மாவட் டம், கல்பாக்கத்தில் மத் திய அரசின் அணு மின் நிலையம் உள்ளது. அங்கு தலா, 220 மெகாவாட் திறன் உடைய, இரு அணு உலைகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.</p><p>அதிலிருந்து தமிழகத்திற்கு தினமும், 330 மெகாவாட் ஒதுக்கப்பட்டுள்ளது. கல்பாக்கம் அணு மின் நிலையம் அருகில், அணுசக்தி துறையின் கீழ் செயல்படும், 'பாவினி' நிறுவனம், 500 மெகா வாட் திறனில், முன் மாதிரி அதிவேக ஈனுலை அமைத்து வருகிறது. இந்த மின் நிலையத்தில், நம் நாட்டில் அதிகம் கிடைக்கும் தோரியம் பயன்படுத்தப்பட உள்ளது. </p><p>தற்போது, அதிவேக ஈனுலை மின் நிலையத்தின் அனைத்து பணிகளும் இறுதி கட்டத்தை எட்டிய நிலையில், வரும் நவம்பரில் உற்பத்தி தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய மின் நிறுவனங்கள் சார்பில், அனல் மின் நிலையம், அணு மின் நிலையம் அமைக்கப்படும்போது, அதன் மொத்த மின் உற்பத்தித் திறனில், 50 சதவீத மின்சாரம், சம்பந்தப்பட்ட மாநிலத்திற்கும், மீதி பிற மாநிலங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதன் அடிப்படை யில், அதிவேக ஈனுலை மின் நிலையத்தில் இருந்து, 50 சதவீத மின்சாரம் தமிழகத்திற்கு வழங்க, மின் வாரியம் வலியுறுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கண்களை கட்டிக்கொண்டு கீபோர்டு வாசித்த மாணவன்! உலக சாதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-plays-keyboard-while-blindfolded-world-record</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-plays-keyboard-while-blindfolded-world-record#comments</comments><guid isPermaLink="false">a0a7cfae-d974-475d-9d8e-6ef6cf97adfa</guid><pubDate>Fri, 21 Aug 2026 01:48:04 +0000</pubDate><atom:updated>2026-08-21T01:48:04.410Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணவன்,student,World record,உலக சாதனை,Keyboard,கீபோர்டு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/fu010ick/124.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/fu010ick/124.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி டிலைட் பப்ளிக் பள்ளி மாணவன் ஜான் டிசோன், இவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் நடந்த உலகசாதனை நிகழ்ச்சியில் பங்கேற்று காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை கீபோர்டு வாசித்தார். இதில் காலை 11 மணி முதல் 12 மணி வரை கண்களை கட்டிக் கொண்டு கீபோர்டு வாசித்து சாதனை படைத்தார். இவரது சாதனையை நோபிள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88">உலக சாதனை</a> புத்தக அமைப்பினர் பதிவு செய்து உள்ளனர்.</p><h2>பாராட்டு</h2><p>இளம் வயதிலேயே இந்த அரிய உலக சாதனையைப் படைத்து பள்ளிக்கும், பெற்றோருக்கும். மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்த மாணவனுக்கு பள்ளி தலைவர் ஜெயசீலன், பள்ளி தாளாளர் பிரபாகரன் ஜான், பள்ளி முதல்வர் சோபியா செல்வராணி, பள்ளி டிரஸ்ட் செயலாளர் மெர்லின் பிரமிளா ஆகியோர் பாராட்டினர்.</p>]]></content:encoded></item><item><title>வருகிற 25-ந்தேதி முதல் .. கடற்கரை-தாம்பரம் இடையே இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/night-time-electric-trains-between-beach-and-tambaram-cancelled-starting-from-the-25th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/night-time-electric-trains-between-beach-and-tambaram-cancelled-starting-from-the-25th#comments</comments><guid isPermaLink="false">76b46dca-48b6-45b9-a4d0-0f2697afbe4a</guid><pubDate>Fri, 21 Aug 2026 01:43:57 +0000</pubDate><atom:updated>2026-08-21T01:43:57.066Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,தமிழகம்,Tambaram,தாம்பரம்,தெற்கு ரெயில்வே,Southern Railway,கடற்கரை,electric trains,மின்சார ரெயில்கள்,beach,electric trains cancelled,மின்சார ரெயில்கள் ரத்து</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/v6amh6uv/abn.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/v6amh6uv/abn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே வருகிற 25-ந்தேதி முதல் செப்டம்பர் 6-ந்தேதி வரையில் இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக <a href="https://www.dailythanthi.com/topic/southern-railway">தெற்கு ரெயில்வே</a> சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>பராமரிப்பு பணி</h2><p>சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.842 கோடியில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக தற்போது இரும்பு நடைமேம்பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நாளை (22-ந்தேதி) முதல் வருகிற 30-ந்தேதி வரையில் இரவு நேர மின்சார ரெயில் சேவை நிறுத்தப்பட இருப்பதாக தெற்கு ரெயில்வே சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.</p><h2>தேதியில் மாற்றம்</h2><p>இந்த நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற 25-ந்தேதி முதல் செப்டம்பர் 6-ந்தேதி வரையில் இரவு 11.15 மணி முதல் அதிகாலை 4.15 மணி (5 மணி நேரம்) வரையில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட உள்ளது.</p><h2>வாரநாட்களில்...</h2><p>அதன்படி, வருகிற 25-ந்தேதி முதல் செப்டம்பர் 5-ந்தேதி வரையில் (வாரநாட்களில் மட்டும்) ரத்து மற்றும் பகுதி நேர ரத்து செய்யப்படும் ரெயில்களின் விவரங்கள் வருமாறு:-</p><p><strong>*</strong> கடற்கரையில் இருந்து இரவு 10.20, 11.20, 11.40, 11.59 ஆகிய நேரங்களில் தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.</p><p><strong>*</strong> திருமால்பூரில் இருந்து இரவு 8 மணிக்கு கடற்கரை வரும் மின்சார ரெயிலும், கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 10.15, 11.20 ஆகிய நேரங்களில் கடற்கரை வரும் மின்சார ரெயில்களும், செங்கல்பட்டில் இருந்து இரவு 10.20, 11 ஆகிய நேரங்களில் கடற்கரை வரும் மின்சார ரெயில்களும் தாம்பரம்-கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.</p><p><strong>*</strong> கடற்கரையில் இருந்து இரவு 9.45 மணிக்கு கூடுவாஞ்சேரி செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக கடற்கரையில் இருந்து இரவு 9.50 மணிக்கு கூடுவாஞ்சேரி செல்லும். கடற்கரையில் இருந்து இரவு 10.20 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக கடற்கரையில் இருந்து இரவு 10.15 மணிக்கு செங்கல்பட்டு செல்லும்.</p><p><strong>*</strong> கடற்கரையில் இருந்து வருகிற 26-ந்தேதி முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரையில் (வாரநாட்களில்) அதிகாலை 3.50 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் கடற்கரை-தாம்பரம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.</p><h2>ஞாயிற்றுக்கிழமை</h2><p>இதேபோல, வருகிற 30 மற்றும் செப்டம்பர் 6 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) ரத்து மற்றும் பகுதிநேர ரத்து செய்யப்படும் மின்சார ரெயில்களின் விவரங்கள் வருமாறு:-</p><p><strong>* </strong>கடற்கரையில் இருந்து இரவு 10, 11.20, 11.40, 11.59 ஆகிய நேரங்களில் தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. திருமால்பூரில் இருந்து இரவு 8 மணிக்கு கடற்கரை வரும் மின்சார ரெயிலும், தாம்பரத்தில் இருந்து இரவு 11, 11.40 ஆகிய நேரங்களில் கடற்கரை வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.</p><p><strong>*</strong> கடற்கரையில் இருந்து அதிகாலை 3.50 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் கடற்கரை-தாம்பரம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டில் இருந்து இரவு 10.20, 11 ஆகிய நேரங்களில் கடற்கரை வரும் மின்சார ரெயில்கள் தாம்பரம்-கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.</p> <p><strong>*</strong> கடற்கரையில் இருந்து இரவு 9.40 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக கடற்கரையில் இருந்து இரவு 9.50 மணிக்கு செங்கல்பட்டு செல்லும். </p><p>கடற்கரையில் இருந்து இரவு 9.50 மணிக்கு கூடுவாஞ்சேரி செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக கடற்கரையில் இருந்து இரவு 10.10 மணிக்கு கூடுவாஞ்சேரி செல்லும். </p><p>மேலும், கடற்கரையில் இருந்து இரவு 10.20 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக கடற்கரையில் இருந்து இரவு 10.25 மணிக்கு தாம்பரம் செல்லும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வங்கிக்கு ரூ.3 கோடி பணத்துடன் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து; 4 பேர் காயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/van-carrying-rs-3-crore-to-bank-overturns-4-injured</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/van-carrying-rs-3-crore-to-bank-overturns-4-injured#comments</comments><guid isPermaLink="false">9e115d4f-71bf-4908-afc9-789d6e02d9da</guid><pubDate>Fri, 21 Aug 2026 01:23:30 +0000</pubDate><atom:updated>2026-08-21T01:23:30.663Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>bank,வங்கி,4 injured,4 பேர் காயம்,வேன் கவிழ்ந்து விபத்து,van overturns</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/nw9n99qn/123.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/nw9n99qn/123.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கும்பகோணம் ,</p><p>கும்பகோணம் அருகே வங்கிக்கு ரூ.3 கோடியுடன் சென்ற வேன் கவிழ்ந்ததில் காசாளர், பாதுகாவலர்கள் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.</p><p> தஞ்சையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து கும்பகோணத்தில் உள்ள வங்கி கிளைக்கு நேற்று மினி சரக்கு வேனில் ரூ.3 கோடி கொண்டு செல்லப்பட்டது. அந்த வேனில் 10 பெட்டிகளில் ரூபாய் நோட்டுகளும், நாணயங்களும் இருந்தன.</p><p>தஞ்சை-விக்கிரவாண்டி பைபாஸ் சாலையில் தாராசுரம் அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக வேனின் பின்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் வேன் சாலை தடுப்பில் மோதி. சாலையில் கவிழ்ந்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">விபத்து</a>க்குள்ளானது. இதனைக்கண்ட அக்கம், பக்கத்தினர் உடனடியாக கும்பகோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.</p><h2>4 பேர் காயம்</h2><p>இந்த விபத்தில் வேனில் வந்த தஞ்சையை சேர்ந்த வங்கி காசாளர் திவ்யகுமார்(வயது 36), பாதுகாவலர்கள் திருவையாறு பகுதியை சேர்ந்த சார்லஸ்(46), திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த சுப்பிரமணி (51), டிரைவர் நாச்சியார் கோவிலை சேர்ந்த முரளிதரன்(62) ஆகிய 4 பேரும் காயம் அடைந்தனர். அவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு முதலுதவி அளித்து, கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். முன்னதாக சம்பவ இடத்துக்கு வந்த தாலுகா போலீசார், காயம் அடைந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.</p><h2>பலத்த பாதுகாப்பு</h2><p>பணம் இருந்த வாகனம் என்பதால் போலீசார் உடனடியாக சம்பந்தப்பட்ட தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கும்பகோணம் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தகவலின் பேரில் வங்கி அலுவலர்கள் விரைந்து சென்று கவிழ்ந்து கிடந்த வாகனத்தில் இருந்த பணத்தை மற்றொரு வாகனத்துக்கு மாற்றி பத்திரமாக கொண்டு சென்றனர். இதுகுறித்து கும்பகோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக சட்டசபையில் இன்றைய நிகழ்வுகள் என்னென்ன...?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-are-the-proceedings-in-the-tamil-nadu-legislative-assembly-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-are-the-proceedings-in-the-tamil-nadu-legislative-assembly-today#comments</comments><guid isPermaLink="false">896d7d14-f2a9-4fd7-8edb-af588bb3eedf</guid><pubDate>Fri, 21 Aug 2026 01:16:36 +0000</pubDate><atom:updated>2026-08-21T01:16:36.591Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,சட்டசபை,தமிழக சட்டசபை,TN Assembly,Assembly,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/0sdwyml5/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/0sdwyml5/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, நீதி நிர்வாகம், எரிசக்தித் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை), சட்டத்துறை, இந்து சமய அறநிலையத்துறை (வணிக வரிகள், பதிவு மற்றும் அறநிலையங்கள் துறை) ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. </p><p>இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசி முடித்தவுடன் அவர்களுடைய கேள்விகளுக்கு அமைச்சர்கள் நிர்மல்குமார், ரமேஷ் ஆகியோர் பதிலுரை வழங்குவார்கள். நிறைவாக, தங்களுடைய துறை சார்பில் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள். இதில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை முதல்-அமைச்சர் விஜய்யிடம் உள்ளது. அவர் அல்லது அவரது சார்பில் அமைச்சர்கள் யாரேனும் அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பா..? வானிலை மையம் வெளியிட்ட அப்டேட்</title><link>https://www.dailythanthi.com/news/weather/is-there-a-chance-of-rain-in-tamil-nadu-today-weather-department-releases-update-2</link><comments>https://www.dailythanthi.com/news/weather/is-there-a-chance-of-rain-in-tamil-nadu-today-weather-department-releases-update-2#comments</comments><guid isPermaLink="false">73901d21-3713-42a2-b45e-57f9d8caece0</guid><pubDate>Fri, 21 Aug 2026 01:16:13 +0000</pubDate><atom:updated>2026-08-21T01:16:13.050Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,சென்னை,Rain,Weather,வானிலை,தமிழகம்,Weather News,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,வானிலை ஆய்வு மையம்,வானிலை அறிக்கை,weather condition,Weather Report,வானிலை முன்னறிவிப்பு,Weather Status,வானிலை அறிவிப்பு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/3qppq0f7/enna.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/3qppq0f7/enna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நாளை மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.</p><h2>மழை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><p><strong>21-08-2026:</strong> தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>22-08-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>23-08-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். </p><p><strong>24-08-2026 மற்றும் 25-08-2026:</strong> கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் <a href="https://www.dailythanthi.com/topic/rain">கனமழை</a> பெய்யக்கூடும்.</p><p>ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>26-08-2026:</strong> தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong><ins>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</ins></strong></p><p><strong>21-08-2026 முதல் 24-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><p><strong><ins>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</ins></strong></p><p><strong>21-08-2026 முதல் 24-08-2026 வரை:</strong> உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று (21-08-2026)</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை </a>பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>மீனவர்களுக்கான எச்சரிக்கை:</h2><p><strong><ins>தமிழக கடலோரப்பகுதிகள்:</ins></strong></p><p><strong>21-08-2026 மற்றும் 22-08-2026:</strong> தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>23-08-2026 முதல் 24-08-2026 வரை:</strong> தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong><ins>வங்கக்கடல் பகுதிகள்:</ins></strong></p><p><strong>21-08-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், மத்தியகிழக்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>22-08-2026 முதல் 23-08-2026 வரை:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>24-08-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p> <p><strong><ins>அரபிக்கடல் பகுதிகள் :</ins></strong></p><p><strong>21-08-2026 முதல் 24-08-2026 வரை:</strong> மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>திருச்சியில் இருந்து இயக்கப்படும் ரெயில் சேவைகளில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-train-services-operated-from-trichy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-train-services-operated-from-trichy#comments</comments><guid isPermaLink="false">06b77231-7b85-4270-afda-a14c37ca70c5</guid><pubDate>Fri, 21 Aug 2026 01:06:53 +0000</pubDate><atom:updated>2026-08-21T01:06:53.985Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்சி,Trichy,ரெயில் சேவை,Train Services</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/bsr3vvvm/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/bsr3vvvm/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,  </p><p>வேளாங்கண்ணி ஆலய திருவிழாவை முன்னிட்டு திருச்சியில் இருந்து இயக்கப்படும் ரெயில் சேவைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.</p><h2>வேளாங்கண்ணி திருவிழா</h2><p>வேளாங்கண்ணி ஆலயத்தில் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு பயணிக ளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வா கம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி காரைக்கால்-தஞ்சை டெமு ரெயில் (வண்டி எண் 76803) திருச்சி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் வண்டி எண் 06861 ஆக மாற்றப்பட்டு வருகிற 29, 31, செப்டம்பர் மாதம் 1 முதல் 5-ந் தேதி வரை மற்றும் 7, 8-ந் தேதிகளில் தஞ்சை யில் இருந்து இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.10 மணிக்கு திருச்சிக்கு வந்து சேரும்.</p><p>இதேபோல் திருச்சி- வேளாங்கண்ணி டெமு சிறப்பு ரெயில் (வண்டி எண் 06866) வருகிற 29-ந் தேதி முதல் செப்டம்பர் 8-ந் தேதி வரை திருச்சி ஜங் ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு அதி காலை 2.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். வண்டி எண் 06865 வேளாங்கண்ணி-திருச்சி சிறப்பு ரெயில் வருகிற 29-ந் தேதி மற்றும் செப் டம்பர் 8-ந் தேதி வேளாங்கண்ணியில் இருந்து இரவு 9.20 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.45 மணிக்கு திருச்சிக்கு வந்து சேரும்.</p><h2>சிறப்பு ரெயில்</h2><p>வண்டி எண் 06864 திருச்சி-வேளாங்கண்ணி சிறப்பு ரெயில் வருகிற 30-ந் தேதி மற்றும் செப்டம்பர் 9-ந் தேதி ஆகிய நாட்களில் திருச்சியில் இருந்து நள்ளிரவு 1 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4.25 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். வண்டி எண் 76826 திருச்சி-காரைக்கால் டெமு எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 29-ந் தேதி மற்றும் செப்டம்பர் 8-ந் தேதி திருச்சி ஜங்ஷனில் இருந்து அதிகாலை 4.45 மணிக்கு புறப்பட்டு நாகப்பட்டினம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த தகவலை திருச்சி ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ஏழை மாணவர்களுக்கு விமானப் பயணம்... முன்னாள் மாணவரின் நெகிழ்ச்சி செயல்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/air-travel-for-poor-students-a-former-students-act-of-resilience</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/air-travel-for-poor-students-a-former-students-act-of-resilience#comments</comments><guid isPermaLink="false">9e9ea269-570a-4fad-a97c-cf267a73d8a6</guid><pubDate>Fri, 21 Aug 2026 01:01:39 +0000</pubDate><atom:updated>2026-08-21T01:01:39.305Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>student,பள்ளி மாணவர்கள்,air travel,விமான பயணம்,முன்னாள் மாணவர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/iaatgp8c/122.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/iaatgp8c/122.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1996-ம் ஆண்டு படித்தவர் அசோக் பிரபாகரன். தற்போது காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் துறையில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருகிறார். தான் படித்த பள்ளி மாணவர்கள் கல்வி, ஒழுக்கத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தன்னுடன் படித்த நண்பர்கள் உச்சி மாகாளி, திருப்பதி, ராஜதுரை, முத்துக்கனி, ஜலாலுதீன், கணேசன், ராமசுப்பிரமணியன், ஆகியோரோடு சேர்ந்து, பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் துணையோடு கல்வி, பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய ஏழ்மை நிலையில் உள்ள 4 மாணவர்கள், 6 மாணவிகள் என 10 பேரை தேர்வு செய்தார்.</p><h2>கல்வி பயணம்</h2><p>கல்வித்துறை அதிகாரிகளின் அனுமதியுடன், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் 3 ஆசிரியர்களுடன் 10 மாணவ-மாணவிகளை தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் சொந்த செலவில் அழைத்து வந்தனர். இந்த கல்வி பயணம் தொடர்ந்து 3-வது ஆண்டாக நடத்தப்பட்டது.</p><p>சென்னையில் 2 நாட்கள் தங்கிய மாணவ-மாணவிகளை அசோக் பிரபாகரன் நேரில் அழைத்து சென்று அண்ணா பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி., அடையாறு புற்றுநோய் ஆஸ்பத்திரி, அண்ணா நூற்றாண்டு நூலகம், தலைமைச்செயலகம், பிர்லா கோளரங்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட இடங்களை பார்வையிட செய்தார். ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடியை சந்தித்து மாணவ - மாணவிகள் வாழ்த்து பெற்றனர்.</p><p>பயணம் முடிந்ததும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">மாணவர்கள்</a> ஆசிரியர்களுடன் வந்தே பாரத் ரெயிலில் பாதுகாப்பாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாணவர்களை ஊக்கப்படுத்தும் இந்த முயற்சிக்கு பள்ளி ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>நெல்லையில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பானை ஓடுகள் கண்டுபிடிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/3000-year-old-pottery-shards-discovered-in-nellai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/3000-year-old-pottery-shards-discovered-in-nellai#comments</comments><guid isPermaLink="false">e9258c90-b3eb-4e27-a792-84132797619c</guid><pubDate>Fri, 21 Aug 2026 00:57:57 +0000</pubDate><atom:updated>2026-08-21T00:57:57.220Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,மாணவர்கள்,students,தொல்லியல் துறை,Archaeology Department</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/s40zu2lj/3.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/s40zu2lj/3.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,  </p><p>நெல்லை அருகே தொல்லியல் மாணவர்கள் மேற்கொண்ட கள ஆய்வில் 3 ஆண்டுகள் பழமையான பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.</p><h2>தொல்லியல் மாணவர்கள்</h2><p>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தொல்லியல் துறை மாணவ-மாணவிகள் தொல்லியல் துறை தலைவர் சுதாகர் தலைமையில் நேற்று மருதூர் அணைக்கட்டு, சீவலப்பேரி, மறுகால்தலையில் உள்ள 2,100 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு, உழக்குடி அருகே உள்ள 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நெடுங்கல், நாட்டார்குளம் நடுகல், ஆதிச்சநல்லூர், கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோவில் ஆகிய இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டனர்.</p><p>உழக்குடி அருகே உள்ள நெடுங்கல்லைப் பார்த்த மாணவ, மாணவிகள் அதன் 3 ஆயிரம் ஆண்டுகள் தொன்மையையும் உயரத்தையும் கண்டு வியந்தனர்.</p><h2>பானை ஓடுகள்</h2><p>அப்போது அங்குள்ள நெடுங்கல் அருகே மாணவர் லட்சுமணன் என்பவர் பானை ஓடு ஒன்றைக் கண்டெடுத்தார். அதில், ஒரு அந்துப்பூச்சியின் உருவம் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டிருந்தது. வண்ணத்துப்பூச்சிகள் பகலில் சுறுசுறுப்பாகவும், அழகிய பல வண்ண இறக்கைகளுடனும் இருக்கும். ஆனால் அந்துப்பூச்சிகள் பெரும்பாலும் இரவில் செயல்படுபவை. மந்தமான நிற இறக்கைகளையும் உரோமம் போன்ற உடலையும் கொண்டவை. அந்துப்பூச்சிகள் செழிப்பான இடங்களிலேயே காணப்படும். </p><p>அதேபோல் மாணவி பிரியா என்பவர் அங்கு ஒரு மண்பாண்டத்தின் கலைநுட்பம் மிகுந்த அழகிய பானைமூடியின் உடைந்த துண்டு ஒன்றைக் கண்டெடுத்தார். இவை இரண்டும் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனத் தொல்லியல் உதவிப் பேராசிரியர் மதிவாணன் தெரிவித்தார்.</p><p>இந்த களப்பணியில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சந்திரசேகர் பாராட்டினார்.</p>]]></content:encoded></item><item><title>சேலம்: அரசு பள்ளியில் ஆங்கிலம் தெரியாத ஆசிரியர்கள் நியமனமா? - தகவல் நம்பகத்தன்மை பிரிவு விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-were-teachers-with-no-knowledge-of-english-appointed-in-government-schools-clarification-from-the-information-verification-wing</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-were-teachers-with-no-knowledge-of-english-appointed-in-government-schools-clarification-from-the-information-verification-wing#comments</comments><guid isPermaLink="false">ae01ee0d-6f3b-4cc7-916f-8d529bc896da</guid><pubDate>Fri, 21 Aug 2026 00:55:02 +0000</pubDate><atom:updated>2026-08-21T00:55:02.488Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,சேலம்,அரசு பள்ளி,Fact check,Government Schools,TN Fact Check,தகவல் நம்பகத்தன்மை,தகவல் நம்பகத்தன்மை பிரிவி,தகவல் நம்பகத்தன்மை பிரிவு,Information Integrity Desk</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/4krownwv/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தகவல் நம்பகத்தன்மை பிரிவு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/4krownwv/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சேலம் அரசு மாதிரிப் பள்ளியில் ஆங்கிலம் தெரியாத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக பரவும் தவறான தகவல் குறித்து தகவல் நம்பகத்தன்மை பிரிவு விளக்கம் கொடுத்துள்ளது. இது தொடர்பாக தகவல் நம்பகத்தன்மை பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>பரவும் செய்தி</h2><p>சேலம் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் (Model School) ஆங்கிலம் தெரியாத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.</p><h2>உண்மை என்ன ?</h2><p>இது தொடர்பாக பள்ளி <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நிர்வாகம் </a>அளித்துள்ள விளக்கத்தில், "சேலம் மாவட்ட அரசு மாதிரி பள்ளியின் (Model School) JEE &amp; NEET மண்டல பயிற்சி மையத்தில், NIT மற்றும் IIT போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் ஆங்கில மொழியில் பயின்ற மற்றும் JEE உள்ளிட்ட போட்டித் தேர்வு பயிற்சியில் அனுபவம் உள்ளவர்கள் மூலம் தலைமையாசிரியர் தலைமையில் மாணவர்களுக்கு ஆங்கில மொழியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சந்தேகங்களை விளக்க அரசுப் பள்ளி ஆசிரியர்களும் உள்ளனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தவறான தகவலைப் பரப்பாதீர்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகள் எவை? - பட்டியல் வெளியீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/which-717-tasmac-shops-were-closed-in-tamil-nadu-list-released</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/which-717-tasmac-shops-were-closed-in-tamil-nadu-list-released#comments</comments><guid isPermaLink="false">1c7d1082-7611-4f34-b67e-2d95a5b88fb6</guid><pubDate>Fri, 21 Aug 2026 00:50:38 +0000</pubDate><atom:updated>2026-08-21T00:50:38.549Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டாஸ்மாக்,Tasmac,Tasmac Shops,டாஸ்மாக் கடை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/3keeor4j/CHENNAI-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/3keeor4j/CHENNAI-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு, கோவில்கள், பள்ளிக்கூடங்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு அருகில் செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டன. இந்த நிலையில், மூடப்பட்ட 717 கடைகளும் எந்தெந்த பகுதிகளில் செயல்பட்டு வந்தன என்பது குறித்த முழுமையான விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.</p><p>அதில், ஒவ்வொரு கடையின் மாவட்டம், பகுதி, கடை எண் மற்றும் கடை செயல்பட்டு வந்த முழுமையான முகவரி ஆகிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியல், அரசாணை எண் 129-ன் அடிப்படையில் 717 கடைகள் மூடப்பட்டதாக குறிப்பிடுகிறது.</p><p>பட்டியலில் முதல் கடை முதல் 717-வது கடை வரை வரிசை எண்ணுடன் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. முன்னதாக, நேற்று சட்டசபையில் பேசிய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ், 717 கடைகள் மூடப்பட்டது தொடர்பான முழுமையான விவரங்கள் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார். </p><p>அதன்படி, தற்போது மூடப்பட்ட அனைத்து 717 டாஸ்மாக் கடைகளின் முகவரிகளுடன் கூடிய முழுமையான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/jgdbv7go/Untitled-1.jpg" /></figure><p><strong>717 மூடப்பட்ட கடைகள் குறித்த விவரங்களை இந்த கியூ.ஆர் கோடு ஸ்கேன் செய்து தெரிந்து கொள்ளலாம்.</strong></p>]]></content:encoded></item><item><title>சிறுமி குளிப்பதை எட்டிப்பார்த்த வாலிபர்: தட்டிக்கேட்ட உறவினருக்கு கத்திக்குத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-stabs-relative-after-confrontation-over-peeping-at-girl-bathing</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-stabs-relative-after-confrontation-over-peeping-at-girl-bathing#comments</comments><guid isPermaLink="false">0bcc42da-9c91-4acf-ab17-2a2b62688810</guid><pubDate>Thu, 20 Aug 2026 16:15:13 +0000</pubDate><atom:updated>2026-08-20T16:15:13.298Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,வாலிபர் கைது,போக்சோ,POCSO,கல்லிடைக்குறிச்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/6iitx6j3/Untitled-11.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/6iitx6j3/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>நெல்லை மாவட்டம் அம்பை அருகே தெற்கு கல்லிடைக்குறிச்சியை அடுத்த செம்பத்தி மேடு தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜூ. இவரது மகன் சதீஷ் (18 வயது). மேளக்கலைஞரான இவர் அவ்வப்போது கட்டிட வேலைக்கும் சென்று வந்தார்.</p><p>சம்பவத்தன்று இவர் அருகிலுள்ள ஒரு கிராமத்திற்கு சென்றார். அங்கு ஒரு வீட்டில் உள்ள குளியலறையில் 17 வயது சிறுமி குளித்துக்கொண்டிருந்தார். இதனை கவனித்த சதீஷ், வீட்டின் பின்பக்கமாக சென்று குளியலறையில் சிறுமி குளிப்பதை எட்டி பார்த்ததாக கூறப்படுகிறது.</p><p>இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டதால் சதீஷ் அங்கிருந்து ஓடிவிட்டாராம். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவிக்கவே, அவர்கள் உடனே தங்களின் உறவினர்களுடன் சதீஷ் வீட்டுக்கு சென்று அவரது தந்தை ராஜூவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ராஜூ, சிறுமியின் சித்தப்பாவை கத்தியால் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த அவர் அம்பை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.</p><p>இதுகுறித்த புகாரின் பேரில் கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜூவை கைது செய்தனர். அதேபோல் சிறுமி குளிப்பதை எட்டிப்பார்த்ததாக சதீஷ் மீது அம்பை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தனியாக புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து சதீசை கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>ஓணம் பண்டிகை; திருவனந்தபுரத்திற்கு 3 சிறப்பு ரெயில்கள்-தெற்கு ரெயில்வே அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-festival-southern-railway-announces-3-special-trains-to-thiruvananthapuram</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-festival-southern-railway-announces-3-special-trains-to-thiruvananthapuram#comments</comments><guid isPermaLink="false">b114f95e-bd60-429b-a26e-25e3bd058242</guid><pubDate>Thu, 20 Aug 2026 16:14:01 +0000</pubDate><atom:updated>2026-08-20T16:14:01.671Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தெற்கு ரெயில்வே,Southern Railway,Onam festival,ஓணம் பண்டிகை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/qg5n1atn/Southern-railway.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தெற்கு ரெயில்வே]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/qg5n1atn/Southern-railway.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>ஓணம் பண்டிகையை முன்னிட்டு, திருவனந்தபுரத்திற்கு 3 சிறப்பு ரெயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-</p><p>* கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூரில் இருந்து இன்று (21-ந்தேதி) இரவு 8.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06573), சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக மறுநாள் மதியம் 1.30 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையம் சென்றடையும். மறுமார்க்கமாக, திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்தில் இருந்து நாளை (22-ந்தேதி) மாலை 3.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06574), மேற்கண்ட வழித்தடம் வழியாக மறுநாள் காலை 9.45 மணிக்கு யஷ்வந்த்பூர் சென்றடையும்.</p>  <p>* பெங்களூருவில் இருந்து நாளை (22-ந்தேதி) மாலை 4.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06575), சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக மறுநாள் காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையம் வந்தடையும். மறுமார்க்கமாக, திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்தில் இருந்து நாளை மறுநாள் (23-ந்தேதி) மதியம் 12.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06576), மேற்கண்ட வழித்தடம் வழியாக மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.</p> <p>* பெங்களூரு கண்டோன்மென்டில் இருந்து வருகிற 28-ந்தேதி மாலை 4.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06579), சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக மறுநாள் காலை 10.30 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையம் வந்தடையும். மறுமார்க்கமாக, திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 29-ந்தேதி மதியம் 12.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06580), மேற்கண்ட வழித்தடம் வழியாக மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட் சென்றடையும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது</p>]]></content:encoded></item><item><title>காஞ்சிபுரத்தில் பரபரப்பு; பட்டப்பகலில் பெண்ணை கட்டிப்போட்டு 8 சவரன் நகை கொள்ளை; மர்ம நபர்கள் கைவரிசை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tension-in-kanchipuram-woman-tied-up-in-broad-daylight-8-sovereigns-of-jewellery-stolen</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tension-in-kanchipuram-woman-tied-up-in-broad-daylight-8-sovereigns-of-jewellery-stolen#comments</comments><guid isPermaLink="false">0e84f46a-adae-4cdc-90af-a0cc76de80b5</guid><pubDate>Thu, 20 Aug 2026 16:02:03 +0000</pubDate><atom:updated>2026-08-20T16:02:03.867Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மர்ம நபர்கள்,நகை கொள்ளை,Crime,Kanchipuram,காஞ்சிபுரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/x1rp8wwd/kanchi33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
காஞ்சிபுரத்தில் பரபரப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/x1rp8wwd/kanchi33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>காஞ்சிபுரம்,</p><p>காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கை, கால்களைக் கட்டிப்போட்டு மர்ம நபர்கள் 2 பேர் 8 சவரனை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88">காஞ்சிபுரம் </a>அடுத்த ஓரிக்கை தணிகைவேல் நகரைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 36) இவர், ஒரகடத்தில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தீபா, 32. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.</p><p>சங்கர் வழக்கம்போல் நேற்று காலை வேலைக்கு சென்றுவிட்டார். காலை 9:00 மணியளவில் குழந்தைகளை பள்ளியில் விட்டு தீபா வீடு திரும்பினார். அப்போது, அவரை பின்தொடர்ந்து ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் வீட்டுக்குள் அத்துமீறி திடீரென நுழைந்துள்ளனர்.</p><p>அவர்கள் தீபாவின் கை, கால்களை கயிற்றால் கட்டி, வாயில் துணியை வைத்து அடைத்துள்ளனர். பின், அவரது தாலி செயின், கம்மல் உள்ளிட்ட 8 சவரன் தங்க நகைகளை பறித்துக்கொண்டனர். தொடர்ந்து, மாடி அறையில் இருந்த பீரோவை திறந்து, 10,000 ரூபாயை எடுத்து சென்று தப்பித்து ஓடிவிட்டனர்.</p><p>கொள்ளையடுத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறும்போது, மர்ம நபர்கள் கதவை வெளிப்புறமாக பூட்டிச் சென்றனர். இதையடுத்து, தீபா சிரமப்பட்டு கயிற்றை அவிழ்த்து, மாடிக்கு சென்று கூச்சலிட்டு அருகில் வசிப்போரை அழைத்தார். அவர்கள் வந்து தீபாவை மீட்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காஞ்சி தாலுகா போலீசார், மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.</p><p>ஒரிக்கை தனிகைவேல் நகர் பகுதியில் ஆட்டோவில் வந்த 2 பேர், வீட்டில் தனியாக இருந்த தீபா என்பவரின் கை, கால்களைக் கட்டிப்போட்டு 8 சவரன் நகை மற்றும் ரூ.10,000 பணத்தை கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காதலிக்கு பணம் தேவை... நகை திருடி அடகு வைத்த இளைஞர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/girlfriend-needs-money-youth-arrested-for-stealing-and-pawning-jewelry</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/girlfriend-needs-money-youth-arrested-for-stealing-and-pawning-jewelry#comments</comments><guid isPermaLink="false">d0000bd5-0668-4fec-981b-e86f8d3b0c03</guid><pubDate>Thu, 20 Aug 2026 15:51:49 +0000</pubDate><atom:updated>2026-08-20T15:51:49.847Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>jewelry theft,காதலி,girlfriend,Youth Arrest,இளைஞர் கைது,நகைகள் திருட்டு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/bkyx4ey5/arrest.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/bkyx4ey5/arrest.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கூடலூர்,</p><p>நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட சின்ன சூண்டி பகுதியை சேர்ந்தவர் ஹரிராம். இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 42). இவர் அதே பகுதியில் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் நேற்று காலை அவர் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு அடைக்கப்பட்டு. உள்ளே பொருட்கள் சிதறி கிடப்பதை பார்த்தார். பையில் வைத்திருந்த 14 பவுன் நகை, ரூ.300 பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து புவனேஸ்வரி நியூஹோப் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு கோபாலகிருஷ்ணன், கூடலூர் இன்ஸ்பெக்டர் பவுலோஸ். சப்-இன்ஸ்பெக்டர் இப்ராஹிம் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவாகிய தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.</p><h2>2 பேர் கைது</h2><p>அப்போது புவனேஸ்வரி வீட்டின் அருகே வசித்து வந்த மணிகண்டன் (21) என்பவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் தனது நண்பரான பந்தலூர் தாலுகா கொட்டாடு பகுதியை சேர்ந்த கவுதம் (19) என்பவருடன் சேர்ந்து வீடு புகுந்து நகையை திருடியதும், திருடிய நகையை பிதிர் காட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்ததும் தெரிய வந்தது. பின்னர் போலீ சார் அந்த நகையை மீட்டனர். இதுகுறித்து நியூஹோப் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டன், கவுதம் ஆகிய 2 பேரை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, <a href="https://www.dailythanthi.com/topic/arrest-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்யப்பட்ட மணிகண்டனுக்கு கோவையில் காதலி உள்ளார். அவருக்கு பணம் வழங்குவதற்காக மணிகண்டன் வீடு புகுந்து நகை திருடி தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்துள்ளார். காதலிக்காக திருட்டில் ஈடுபட்டு வழக்கில் சிக்கி விட்டார் என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ராமேசுவரம் கோவில் ஆடித்திருக்கல்யாண திருவிழா: நாளை பக்தர்களுக்கு தரிசனம், தீர்த்த நீராடல் தடை!</title><link>https://www.dailythanthi.com/devotional/rameswaram-temple-aadi-thirukalyana-festival-darshan-and-bathing-in-holy-water-prohibited-for-devotees-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/devotional/rameswaram-temple-aadi-thirukalyana-festival-darshan-and-bathing-in-holy-water-prohibited-for-devotees-tomorrow#comments</comments><guid isPermaLink="false">be79e56d-9942-4839-bb37-324ef0ff0132</guid><pubDate>Thu, 20 Aug 2026 15:35:18 +0000</pubDate><atom:updated>2026-08-20T15:35:18.552Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ராமேசுவரம் கோவில்,Rameswaram Temple,Aadi,நடை அடைப்பு,Thirukalyana festival,ஆடி திருக்கல்யாண திருவிழா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/nqpjxtp9/87.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ராமேசுவரம் கோவில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/nqpjxtp9/87.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (Devotional)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமேசுவரம்,</p><p>நாளை காலை முதல் இரவு வரையிலும் கோவிலில் தீர்த்த கிணறுகளில் நீராடவோ, சாமி தரிசனம் செய்யவோ பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><h2>ஆடித்திருக்கல்யாண திருவிழா</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/rameswaram-temple">ராமேசுவரம்</a> ராமநாதசுவாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆடித்திருக்கல்யாண திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 16-ந்தேதி ராமநாதசுவாமி- பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. </p><p>இந்த நிலையில் திருவிழாவின்  15-வது நாளான நேற்று மாலை 4 மணி அளவில் ராமநாதசுவாமி- பர்வதவர்த்தினி அம்பாள் முத்தங்கி சேவை அலங்காரத்தில் ஏக சிம்மாசனத்தில் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதேபோல மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியை தொடர்ந்து ரதவீதிகளில் சாமி வீதிஉலா வந்தார். அதற்கு முன்பாக கோவில் யானை ராமலட்சுமி மீது மஞ்சள் பூசப்பட்டு அழகாக வலம் வந்தது. இதனை பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.</p><h2>கோவில் நடை அடைப்பு</h2><p>திருவிழாவின் 16-வது நாளான இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு சுவாமி - அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து திருவிழாவின் கடைசி நாளான நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு சுவாமி, அம்பாள், பெருமாள் தங்க கேடயத்தில் ராமர்பாதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி நாளை காலை 6 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். இரவு வரையிலும் கோவிலில் தீர்த்த கிணறுகளில் நீராடவோ, சாமி தரிசனம் செய்யவோ பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. 10 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெறாது என சவால்: மீசையை எடுத்துக்கொண்ட அ.தி.மு.க. செயலாளர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-will-not-win-more-than-10-seats-challenge-moustache-removed-by-aiadmk-secretary</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-will-not-win-more-than-10-seats-challenge-moustache-removed-by-aiadmk-secretary#comments</comments><guid isPermaLink="false">8dd5e9e3-e604-44c2-b651-659cf68db82c</guid><pubDate>Thu, 20 Aug 2026 15:27:42 +0000</pubDate><atom:updated>2026-08-20T15:27:42.183Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,TVK,தவெக,அதிமுக,மாவட்ட செயலாளர்,சவால்,Challenge</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/7kxvznws/Untitled-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/7kxvznws/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>நீலகிரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக பால நந்தகுமார் உள்ளார். வக்கீலான இவருக்கு, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மாவட்ட செயலாளர் பதவி வழங்கினார். பின்னர் அடுத்த சில நாட்களில் அவரிடம் இருந்து பதவி பறிக்கப்பட்டது. இதற்கிடையே நீலகிரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்த கப்பச்சி வினோத் த.வெ.க.வில் இணைந்ததால், பால நந்தகுமார் 2-வது முறையாக மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார்.</p><p>இந்த நிலையில் அவர் திடீரென தனது மீசையை எடுத்துக்கொண்டார். இதற்கான காரணம் மற்றும் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டு உள்ளார். அதில், சட்டமன்ற தேர்தல் நேரத்தில் பிரசார மேடைகளில் த.வெ.க. 10 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்றால் மீசையை எடுத்துக்கொள்கிறேன் என சவால் விட்டிருந்தேன்.</p><p>மாயாஜாலம் ஏதோ செய்து, 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியும் அமைத்துவிட்டார்கள். 100 நாள் ஆட்சி நிறைவுற்ற பிறகு நண்பர்கள் சிலர் நினைவுபடுத்தியதை தொடர்ந்து, தற்போது மீசையை எடுத்துக்கொண்டேன் என குறிப்பிட்டு உள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சட்டமன்ற உறுப்பினர்கள் ‘கன்னிப் பேச்சு’ என்று குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் - வானதி சீனிவாசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mlas-should-avoid-calling-first-speech-kanni-speech-vanathi-srinivasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mlas-should-avoid-calling-first-speech-kanni-speech-vanathi-srinivasan#comments</comments><guid isPermaLink="false">f19be581-36ee-480a-8f37-712bc2077c6a</guid><pubDate>Thu, 20 Aug 2026 15:11:47 +0000</pubDate><atom:updated>2026-08-20T15:11:47.857Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,தமிழக சட்டசபை,TN Assembly,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/5ahd27rn/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/5ahd27rn/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டமன்ற உறுப்பினர்கள் ‘கன்னிப் பேச்சு’ என்று குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு சட்டமன்ற நடவடிக்கைகள் நேரலையாக ஒளிபரப்பப்படுவதால், அவ்வப்போது அவற்றைக் கவனித்து வருகிறேன். இந்த சட்டமன்றத்தில் முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனவர்கள் அதிகம் உள்ளனர். அவர்கள் பேசும்போது, “எனது கன்னிப் பேச்சைத் தொடங்குகிறேன்” என்று குறிப்பிடுகின்றனர். இன்று (20.8.2026) திருவள்ளூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் அருண்குமார் பேசும்போதும், தனது கன்னிப் பேச்சைத் தொடங்குவதாகக் குறிப்பிட்டார்.</p><p>பொதுவாக, திருமணமாகாத பெண்களை ‘கன்னி’ என்று சொல்வார்கள். சமஸ்கிருதத்தில், ‘கன்யா’ என்பது இளம் வயதுப் பெண்ணைக் குறிக்கும் சொல். ‘கன்னி’ என்ற சொல் கற்பு ஒழுக்கத்தின் அடிப்படையிலும் பயன்படுத்தப்படுகிறது. கடந்த 2021-ல் கோவை தெற்கு தொகுதியில் வென்று, முதல் முறையாக நான் எம்.எல்.ஏ. ஆனபோது, இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உட்பட பலரும் அதை ‘கன்னிப் பேச்சு’ என்று குறிப்பிட்டனர்.</p><p>சட்டமன்றத்தில் முதல் முறையாக எனக்குப் பேச வாய்ப்பு கிடைத்தபோது, “வழக்கமாக சட்டமன்றத்தில் முதல் உரையை ‘கன்னிப் பேச்சு’ என்று குறிப்பிடுகிறீர்கள். ‘கன்னி’ என்ற வார்த்தை இளம் வயதுப் பெண்ணைக் குறிக்கும் வார்த்தை. என்னைப் பொறுத்தவரை, இந்த முதல் பேச்சை ‘கன்னிப் பேச்சு’ என்று குறிப்பிடாமல், ‘அறிமுகப் பேச்சு’, ‘முதல் பேச்சு’ என்று குறிப்பிட்டால் நாகரிகமாக இருக்கும்” என்றேன்.</p><p>அதற்குப் பதிலளித்த அன்றைய சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, எனது ஆலோசனையை ஏற்றுக்கொள்வதாகக் கூறினார். ஆனால், இப்போது புதிதாக அமைந்துள்ள தவெக ஆட்சியிலும் ‘கன்னிப் பேச்சு’ என்றே குறிப்பிடுகின்றனர். இது வருத்தம் அளிக்கிறது.</p><p>இப்போது சட்டப்பேரவைத் தலைவராக இருக்கும் ஜே.சி.டி. பிரபாகர், இதைக் கவனத்தில் கொண்டு, ‘கன்னிப் பேச்சு’ என்று உறுப்பினர்கள் கூறுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்த வேண்டும். இனி உரையாற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் ‘கன்னிப் பேச்சு’ என்று குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>காங்கிரஸ் கட்சி ஒரு நாளும் யாரையும் முதுகில் குத்தாது:  கேசி வேணுகோபால்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/congress-party-will-never-stab-anyone-in-the-back-kc-venugopal</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/congress-party-will-never-stab-anyone-in-the-back-kc-venugopal#comments</comments><guid isPermaLink="false">56ebf0db-09a5-4be7-b418-cfdd90e272c9</guid><pubDate>Thu, 20 Aug 2026 15:04:15 +0000</pubDate><atom:updated>2026-08-20T15:04:15.356Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,Rahul Gandhi,ராகுல்காந்தி,கேசி வேணுகோபால்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/jjckjbnr/KC-venugopal.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கேசி வேணுகோபால்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/jjckjbnr/KC-venugopal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னையில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில்  அகில இந்திய காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: 2029 நாடாளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி பிரதமராவது உறுது. ராகுல் காந்தியை பிரதமராக ஏற்றுக் கொள்ள இந்தியாவே தயாராக இருக்கிறது. தமிழ்நாடும் தயாராகி இருக்கிறது. ஆனால், காங்கிரஸ்காரர்களாகிய நாம் தயாராக இருக்கிறோமா என்பது தான் கேள்வி?நிர்வாகத்தில் பல புதிய மாற்றங்கள் கொண்டு வந்துள்ளோம். சிலர் பணியாற்ற அலட்சியம் காட்டி வருகிறார்கள். வரும் காலங்களில் வேலை செய்யும் உறுப்பினர்களுக்கு மட்டும் தான் பொறுப்பும் பதவிகளும் வழங்கப்படும்.</p> <p>ஆட்சியிலும், அதிகாரத்திலும் கூட்டணி அரசோடு இருக்கிறோம். நம்மைப் பார்த்து சிலர் சொல்கிறார்கள், நம்மை முதுகில் குத்து விட்டார்கள், நம்மை ஏமாற்றி விட்டார்கள் என குற்றம் சாட்டுகிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்றே ஒன்று சொல்வேன். காங்கிரஸ் கட்சி ஒருபோதும் ஒரு நாளும் யாரையும் ஏமாற்றாது. ஒரு நாளும் யாரையும் முதுகில் குத்தாது, முதுகில் குத்தும் பழக்கம் காங்கிரசுக்கு இல்லை.</p><p>தேர்தலுக்கு முன்பு தமிழக வெற்றி கழகத்திடம் இருந்து பல சலுகைகள் தரப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்களா, ராஜ்யசபாவா, ஊராட்சி உள்ளாட்சியா என எதுவானாலும் அதிகாரத்தில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள் என்றனர். கூட்டாட்சி தத்துவத்திற்காக, சமூக நீதிக்காக நாம் தி.மு.க. உடன் இருக்க வேண்டும் என நினைத்தோம்.ஆனால் தேர்தலுக்குப் பிறகு நிலைமை வேறு. தமிழ்நாட்டில் முன் வாசல் வழியாகவோ, பின் வாசல் வழியாகவோ பா.ஜனதா வந்துவிடக்கூடாது என்பதற்காகவே நாம் இந்த நிலைபாட்டை எடுத்தோம். லஞ்சம் ஊழலுக்கு எதிரான ஒரு ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. அதற்கு ஆதரவாக நாமும் இருக்கிறோம் என நினைத்துப் பார்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளது” என்றார். </p> ]]></content:encoded></item><item><title>ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் டி.கே.சிவக்குமார் மரியாதை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dk-shivakumar-pays-tribute-at-the-rajiv-gandhi-memorial-in-sriperumbudur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dk-shivakumar-pays-tribute-at-the-rajiv-gandhi-memorial-in-sriperumbudur#comments</comments><guid isPermaLink="false">4d28baea-8182-4806-86a0-cf5bf9e72cc2</guid><pubDate>Thu, 20 Aug 2026 14:41:30 +0000</pubDate><atom:updated>2026-08-20T14:41:30.546Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டி.கே.சிவக்குமார்,ராஜீவ் காந்தி,Rajiv Gandhi,D.K. Shivakumar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/cjum3vuo/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/cjum3vuo/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மத்திய மந்திரி அமித்ஷா தலைமையில் 31-வது தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு சென்னை மாமல்லபுரத்தை அடுத்துள்ள கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் இன்று தமிழகத்திற்கு வருகை தந்தார். </p><p>இதையடுத்து, மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு சென்று டி.கே.சிவக்குமார் மரியாதை செலுத்தினார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-</p><p>“இன்று 'சத்பாவனா திவாஸ்' (நல்லிணக்க நாள்) அன்று, தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு சென்று, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்தினேன்.</p><p>இங்கு வந்தது எனக்கு நெகிழ்ச்சியான உணர்வை அளித்தது. எனது அரசியல் பயணத்தின் ஆரம்பக் கட்டத்தில் அவர் என் மீது கொண்டிருந்த நம்பிக்கையையும், அன்பையும் நினைவுகூரச் செய்தது. இளம் தலைவர்கள் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கைதான், மக்களுக்கும், நாட்டிற்கும் சேவை செய்ய முன்வருவதற்கான துணிச்சலை என்னைப் போன்ற பலருக்கும் அளித்தது.</p><p>இந்த நினைவிடம் எனக்கும் கர்நாடக மக்களுக்கும் இடையே ஒரு சிறப்பான பிணைப்பைக் கொண்டுள்ளது. கர்நாடகத்துடனான அவரது பிணைப்பின் நீடித்த அடையாளமாக, கனகபுராவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒற்றைக் கல் கிரானைட் பாறையில் அவரது உருவம் பதிக்கப்பட்டு இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதனை சாத்தியமாக்குவதில் முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் அளித்த ஆதரவை நான் நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.</p><p>ராஜீவ் காந்தியின் கொள்கைகளும், தொலைநோக்குப் பார்வையும் தொடர்ந்து எனக்கு வழிகாட்டுகின்றன. மக்களுக்கும், நாட்டிற்கும் அர்ப்பணிப்புடன் சேவை செய்வதன் மூலம் அவரது லட்சியங்களை முன்னெடுத்துச் செல்ல நான் உறுதியுடன் உள்ளேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>ரேஷன் பொருள் வாங்க கார்டு தேவையல்ல -அமைச்சர் வெங்கடரமணன் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/card-is-not-required-to-buy-ration-items-minister-venkataramanan-announced</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/card-is-not-required-to-buy-ration-items-minister-venkataramanan-announced#comments</comments><guid isPermaLink="false">dd87b65f-1d76-4454-a3a3-b202eb6c839b</guid><pubDate>Thu, 20 Aug 2026 14:33:05 +0000</pubDate><atom:updated>2026-08-20T14:33:05.443Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TNAssembly,ரேஷன் கார்டு,TNGovernment,அமைச்சர் வெங்கடரமணன்,RationCard</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/s6xi3dl0/rastion33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
ரேஷன் பொருள் வாங்க கார்டு தேவையல்ல]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/s6xi3dl0/rastion33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ரேசன் கடையில் பொருட்கள் வாங்க அசல் ரேசன் அட்டையை கையில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சர் வெங்கடரமணன் கூறியுள்ளார்.</p><p>தமிழக சட்டசபையில் இன்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நிறைவடைந்த பிறகு, புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அத்துறையின் அமைச்சர் ப.வெங்கடரமணன் பேசியதாவது:- </p><p>தமிழகம் முழுவதும் 38,438 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.  அதிகபட்சமாகத் திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 1,495 கடைகள் இயங்கி வருகிறது. இதற்கு, அடுத்தபடியாகச் சேலம் மாவட்டத்தில் அதிக அளவிலான ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது.</p><p>ரேஷன் பொருள் வாங்க, அந்த கடைக்கு தான் போக வேண்டும் என்று இல்லை. அருகில் இருக்கும் எந்த கடையிலும் வாங்கிக் கொள்ளலாம். சிலர் கடை வரை வந்து, <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">ரேஷன் கார்டு</a> மறந்து விட்டோம் என்று சென்று விடுகின்றனர். கார்டு soft copy இருந்தால் போதும், அட்டை நம்பர் இருந்தால் கூட போதும்.</p><p>வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூர் செல்பவர்கள் மற்றும் வாடகை வீடு மாறிச் செல்பவர்களுக்கு அரசின் இந்த நடைமுறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், எந்தக் கடையில் வேண்டுமானாலும் பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம் என்ற இந்த வசதி குறித்து இன்னும் பலருக்கும் முழுமையாகத் தெரியவில்லை. எனவே, இந்தச் சட்டப்பேரவையின் வாயிலாக இதனை மக்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை: ஒரு மாதத்தில் கால்வாய்கள், நீர்நிலைகளில் 11,790 டன் வண்டல்கள், ஆகாயத்தாமரைகள் அகற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-11790-tonnes-weeds-water-hyacinths-removed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-11790-tonnes-weeds-water-hyacinths-removed#comments</comments><guid isPermaLink="false">5426b96f-f6bd-40fe-ac16-fb3a8b7b2637</guid><pubDate>Thu, 20 Aug 2026 14:32:16 +0000</pubDate><atom:updated>2026-08-20T14:32:16.168Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,வடகிழக்கு பருவமழை,North East Monsoon,முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/xs94bh2k/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/xs94bh2k/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் சார்பில் 1,671.39 கிலோமீட்டர் நீளத்திலான மழைநீர் வடிகால்களிலும், 1,10,082 வண்டல் வடிகட்டித் தொட்டிகளிலும் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில் 11,790 மெட்ரிக் டன் வண்டல்கள் மற்றும் ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மாநகராட்சி, நீர்வளத்துறை, சென்னை குடிநீர் வாரியம், நெடுஞ்சாலைத்துறை, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மின்சாரத்துறை உள்ளிட்ட சேவைத்துறைகளுடன் ஒருங்கிணைந்து வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p>சென்னை மாநகராட்சியின் சார்பில் மழைநீர் வடிகால்கள் கட்டுதல், மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் தூர்வாருதல், கால்வாய்களில் தூர்வாருதல் மற்றும் வெள்ளத் தடுப்புச் சுவர் உயர்த்திக் கட்டுதல், குளங்கள் மற்றும் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் ஆகாயத்தாமரைகளை அகற்றி தூர்வாரி மேம்படுத்துதல், அபாயகரமான மரக்கிளைகளை கத்தரித்தல், அனைத்து மோட்டார் பம்புகள், வாகனங்கள், இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் தயார்நிலையில் வைத்திருத்தல், சுரங்கப்பாதை பராமரிப்பு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் முடித்திட தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p>இதன் ஒரு பகுதியாக, மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன், அண்ணாநகர் மண்டலம், வார்டு-102க்குட்பட்ட 3-வது அவென்யூவில் உள்ள மழைநீர் வடிகால்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை இன்று (20.08.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>இதேபோல, மாநகராட்சியின் வடக்கு வட்டாரம், மத்திய வட்டாரம், தெற்கு வட்டாரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகளை இணை ஆணையாளர்கள், வட்டார துணை ஆணையாளர்கள், மண்டல அலுவலர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தினர்.</p><p>மாநகராட்சிப் பகுதியில் சுமார் 1,671.39 கிலோமீட்டர் நீளத்திலான மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் 1,10,082 வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் (Silt Catch Pit) மழைநீர் சீராகச் செல்லும் வகையில் வண்டல்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 1,08,041 வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கால்வாய்கள், குளங்கள் மற்றும் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் 11,790 டன் வண்டல்கள் மற்றும் ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில், சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாநகர சாலைகள் முழுவதும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடையற்ற நீர் ஓட்டத்தை உறுதி செய்வது, மழைநீர் தேங்குவதைத் தடுப்பது மற்றும் முக்கிய நகர்ப்புற உள்கட்டமைப்புகளை பாதுகாக்கும் நோக்கத்தை கொண்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.</p><p>அதனடிப்படையில், நெடுஞ்சாலைத்துறையின் பராமரிப்பில் உள்ள 430 கி.மீ. நீளத்திலான மழைநீர் வடிகால்கள் மற்றும் 18,000 வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் தேங்கியுள்ள வண்டல்கள் மற்றும் திடக்கழிவுகள் முழுமையாக அகற்றுதல், 815 சிறுபாலங்கள் மற்றும் 16 பெரிய பாலங்கள் உள்ளிட்ட குறுக்கு வடிகால் அமைப்புகளை முழுமையாக சுத்தம் செய்தல், தாழ்வான போக்குவரத்துப் பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கைத் தடுக்க 7 வாகனச் சுரங்கப்பாதைகள் மற்றும் 12 பாதசாரி சுரங்கப்பாதைகள் உள்ளிட்ட அனைத்து சுரங்கப்பாதைகளிலும் உள்ள நீர் சேகரிப்பு கிணறுகள் மற்றும் நீரேற்று அமைப்புகளை சுத்தம் செய்வதற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் 30.09.2026 முன்னதாகவே முடிக்கப்படவுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>
சகோதரரின் வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சனின் சமரச முயற்சி தோல்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-involving-attack-on-brothers-house-minister-maria-wilsons-mediation-attempt-fails</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-involving-attack-on-brothers-house-minister-maria-wilsons-mediation-attempt-fails#comments</comments><guid isPermaLink="false">747efbd7-b312-4ac2-8d6c-2cea1348fb68</guid><pubDate>Thu, 20 Aug 2026 14:25:15 +0000</pubDate><atom:updated>2026-08-20T14:25:15.521Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வழக்கு,minister,மரிய வில்சன்,Mariawilson</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/7ihijvin/maria.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மரிய வில்சன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/7ihijvin/maria.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன், கடந்த 2022-ம் ஆண்டு புதுச்சேரி யில் வசித்து வரும் தனது சகோதரர் மரிய குலோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மரிய குலோத், அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாக லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தி ருந்தனர்.புதுச்சேரி குற்றவியல் கோர்ட்டில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த வழக்கில் சமரச தீர்வு மையத்தை அணுகி தீர்வு காண சென்னை ஐகோர்ட்டு உத் தரவிட்டது. இதன்படி, 4 முறை சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த மனு, நீதி பதி லட்சுமி நாராயணன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.</p><h2>விசாரணை</h2><p>அப்போது, வழக்கில் புகார்தாரரான மரிய வில்சனின் சகோதரர் மனைவி கெரோலின் நேரில் ஆஜராகினார். அவர் தரப்பில் ஆஜரான வக்கீல், "வழக்கில் சமரச பேச்சுவார்த்தை நடத்த புகார்தாரருக்கு விருப்பமில்லை. முன்பு நீதிபதியே சமரச தீர்வு மையத்தை அணுக கூறியதால் அதை மறுக்க முடியவில்லை” என விளக்கம் அளித்தார். அமைச்சர் மரியவில்சன் தரப்பில், "ஒரு பிரச்சினை தவிர மற்ற அனைத் துக்கும் தீர்வு எட்டப்பட்டு விட்டது” என தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து நீதிபதி, "புகார்தாரர் சமரசத்துக்கு விரும்பாத நிலையில், சமரச தீர்வு மையத்தில் தீர்வு காணும்படி நிர்பந்திக்க முடியாது. எனவே வழக்கை ரத்து செய்யக்கோரிய மனு மீது விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.</p><h2>வழக்கை ரத்து செய்யக்கோரி மனு</h2><p>அப்போது அமைச்சர் மரிய வில்சன் தரப்பில், "சட்டசபை நடவடிக்கை களில் பங்கேற்க வேண்டியுள்ளதால், நாளை வழக்கு விசாரணைக்காக புதுச்சேரி கோர்ட்டில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும்” என கேட்டுக்கொள்ளப்பட்டது.</p><p>இதை ஏற்று,  விசாரணைக்கு ஆஜராக மரியவில்சனுக்கு விலக்கு அளித்த நீதிபதி, பேச்சுவார்த்தைக்கு புகார்தாரர் விரும்பாததால், சமரச பேச்சுவார்த்தையை நீட்டிக்க அனுமதி கோரிய சமரச தீர்வு மைய கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.மேலும், வழக்கை ரத்து செய்யக் கோரிய மரிய வில்சனின் மனு மீதான விசாரணையை வரும் 28-ந் தேதி தேதிக்கு நீதிபதி லட்சுமி நாராயணன் தள்ளிவைத்தார்.</p>]]></content:encoded></item><item><title>கடல்சார் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த இந்தியா-ஜப்பான் ஒப்பந்தம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/india-japan-agreement-to-strengthen-maritime-security-ties</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/india-japan-agreement-to-strengthen-maritime-security-ties#comments</comments><guid isPermaLink="false">40897cc8-f730-4ec5-b51a-d5a83ef1af7f</guid><pubDate>Thu, 20 Aug 2026 14:09:24 +0000</pubDate><atom:updated>2026-08-20T14:09:24.064Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,India,ஜப்பான்,Japan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/ugot5kqd/National-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/ugot5kqd/National-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><p>டெல்லியில் இன்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் ஜப்பான் பாதுகாப்புத்துறை மந்திரி ஷின்ஜிரோ கொய்சுமி ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின்போது, இந்தியா-ஜப்பான் இடையிலான கடல்வழி, வான்வழிப் போக்குவரத்தின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பிற்கு தடையாக இருக்கும் நடவடிக்கைகளுக்கு இருதரப்பினரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இது சீன கடற்படையின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிரான நிலைப்பாடாக பார்க்கப்படுகிறது. </p><p>இதைத் தொடர்ந்து இந்தியாவும், ஜப்பானும் தங்கள் கடல்சார் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அத்துடன், சுதந்திரமான மற்றும் திறந்தவெளி இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்கும் நோக்கில் ராணுவ ஒத்துழைப்பை ஒருங்கிணைக்க இருநாடுகளும் உறுதியளித்தன. இந்த பிராந்தியத்தில் சீனாவின் ராணுவ ஆதிக்க நடவடிக்கைகள் அதிகரித்து வரும் சூழலில் இத்தகைய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. </p> ]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய் ஒரு கார் பிரியர் - பிரேமலதா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-is-a-car-enthusiast-premalatha</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-is-a-car-enthusiast-premalatha#comments</comments><guid isPermaLink="false">5f1cca46-260b-423c-8a46-8a9186570f4f</guid><pubDate>Thu, 20 Aug 2026 13:54:07 +0000</pubDate><atom:updated>2026-08-20T13:54:07.007Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Actor Vijay,விஜய் 69,தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்,PremalathaVijayakanth</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/kmyz4md4/lathaa33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
முதல்-அமைச்சர் விஜய் ஒரு கார் பிரியர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/kmyz4md4/lathaa33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பொருளாதார பலமில்லாமல் சட்டசபை உறுப்பினர்களாக பணியாற்றும் மற்றும் முதல் முதலாக சட்டசபை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தங்களது மக்கள் பணியை தொய்வின்றித் தொடர்வதற்கும், அவர்கள் தங்களின் தொகுதிப் பணிகளைத் திறம்பட மேற்கொள்வதற்கும் வசதியாக அனைத்து  உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும்.</p><p>சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அரசு வாங்கி வழங்கும் வாகனத்தை பராமரிக்கும் விதமாக, வாகனத்திற்கு ஓட்டுநர், எரிபொருள், வாகனப் பராமரிப்பு உள்ளிட்ட செலவினங்களுக்காக மாதந்தோறும் ரூ. 75,000 வாகனப் படியாகவும், அலுவலகப் பணிகளில் உதவிசெய்ய ஓர் உதவியாளரை நியமித்துக் கொள்ள மாதந்தோறும் ரூ. 25000 உதவியாளர் படியாகவும் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர்  ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்தார்.</p><p>இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE">தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா</a>, அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கார் வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார்கள். இது முதல்முறை, எந்த முதல்-அமைச்சரும் செய்யாதது. அதை நாங்கள் வரவேற்கிறோம். கார் இல்லாத எம்.எல்.ஏக்களுக்கு வழங்கலாம்.</p> <p>இதற்கு அரசுக்கு ரூ. 150 கோடிக்கு மேல் செலவாகும். என்னுடைய மனதில் இருப்பதைச் சொல்கிறேன். தமிழ்நாட்டில் ஏராளமான பிரச்சினைகள் இருக்கின்றன. தற்போதுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு 90% அளவில் வாகனம் இருக்கின்றது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தவெக உறுப்பினர்களுக்கும் ஒரு சிலருக்கும் வாகனம் இல்லை.</p> <p>ரூ. 150 கோடியை விவசாயிகளின் முழுக்கடன் தள்ளுபடிக்கு ஒதுக்கிருந்தால், நன்றாக இருந்து இருக்கும். மக்கள்தேவையே நிறைய இருக்கிறது, அதிலெல்லாம் கவனம் செலுத்த வேண்டும். </p><p>குடும்ப அட்டைதாரர்கள் இருக்கும் இடத்தில் புதிய ரேஷன் கடைகளை திறக்க வேண்டும். ரேஷன் பொருட்கள் தட்டுபாடின்றி கிடைக்க வேண்டும். மக்காசோளாம், கேழ்வரகு, கம்பு, நவதானிய பொருட்களை வினியோகம் செய்ய வேண்டும். பயோ மெட்ரிக் ஒழுங்காக வேலை செய்ய வேண்டும், நெல்  உடனடியாக கொள்முதல் செய்யப்பட்டு அதை உரிய கிடங்குகளில் பாதுகாக்கப்பட்டு உரிய நேரத்தில் அதனை மக்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும். ரேஷன் பொருட்களில் இன்றும் கூட எடை பிரச்சினை உள்ளது. </p><p>பால்கொள்முதல் விலையில் ரூ.3 உயர்த்தி இருக்கிறார்கள் அதனை இன்னும் உயர்த்தி இருக்கலாம்.  ஏழை மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கலாம்.</p><p>இந்தியாவில் யாரும் செய்யாததை முதல்-அமைச்சர் செய்து உள்ளார். அதனை தேமுதிக வரவேற்கிறது. முதல் -அமைச்சர் விஜய் ஒரு கார் பிரியர். தவெகவில் எல்லாரும் கார் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதால் அதனை நிறைவேற்றி உள்ளார். </p><p>திருநெல்வேலியில் கங்கைகொண்டானில் 4 பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியாருக்கு தூக்கு தண்டனை வழங்கி இருக்கிறது நீதிமன்றம். அந்த நீதியரசர்களுக்கு தலைவணங்கி வாழ்த்துகளை பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>4 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு: பாதிரியாருக்கு தூக்கு தண்டனை - வானதி சீனிவாசன் வரவேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/4-minors-sexually-assaulted-priest-sentenced-to-death-vanathi-srinivasan-welcomes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/4-minors-sexually-assaulted-priest-sentenced-to-death-vanathi-srinivasan-welcomes#comments</comments><guid isPermaLink="false">70a71b49-e003-4f15-815b-915000d45255</guid><pubDate>Thu, 20 Aug 2026 13:28:24 +0000</pubDate><atom:updated>2026-08-20T13:28:24.511Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தூக்கு தண்டனை,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,பாலியல் வன்கொடுமை வழக்கு,வரவேற்பு,priest,பாதிரியார்,sexually assaulted,சிறுமிகள்,minors,sentenced to death</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/rliaoc8j/vanathi-srinivasan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/rliaoc8j/vanathi-srinivasan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>4 சிறுமிகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட பாதிரியார் ஆபிரகாமுக்கு நெல்லை போக்சோ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துதீர்ப்பளித்துள்ளது. இதுகுறித்து தேசிய பாஜக முன்னாள் மகளிரணி தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/vanathi-srinivasan">வானதி சீனிவாசன் </a>தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>தூக்கு தண்டனை விதிப்பு</h2><p>நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பாதிரியார் ஆபிரகாமுக்கு நெல்லை போக்சோ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது வரவேற்கத்தக்கது.</p><p>பெண்களையும், குழந்தைகளையும் தவறான நோக்கில் அணுக நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இந்தத் தண்டனை நினைவுக்கு வரவேண்டும். திறமையாக வாதாடி குற்றத்தை நிரூபித்து தண்டனை பெற்றுக் கொடுத்து நீதியை நிலைநாட்டிய அரசு வழக்கறிஞருக்கும், நீதித்துறைக்கும் மனமார்ந்த நன்றி..</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>விஷம் குடித்துவிட்டு பள்ளிக்கு சென்ற மாணவி - வகுப்பறையில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/girl-drinks-poison-goes-to-school-faints-in-classroom</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/girl-drinks-poison-goes-to-school-faints-in-classroom#comments</comments><guid isPermaLink="false">65c325ac-7dcf-4a05-9c6a-947be2e823df</guid><pubDate>Thu, 20 Aug 2026 13:16:18 +0000</pubDate><atom:updated>2026-08-20T13:16:18.803Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vellore,வேலூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/putc39ah/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/putc39ah/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வேலூர்,</p><p>வேலூரில் விஷம் குடித்துவிட்டு பள்ளிக்கு சென்ற பிளஸ்-1 மாணவி, வகுப்பறையில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.</p><h2>விஷம் குடித்தார்</h2><p>வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள மேலரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவர் நேற்று காலை 5 மணியளவில் வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து குடித்துள்ளார். பின்னர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார். 10.30 மணியளவில் பள்ளி வகுப்பறையில் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.</p><h2>மருத்துவமனையில் அனுமதி</h2><p>இதனை பார்த்த சக மாணவிகள் கத்தி கூச்சலிட்டுள்ளனர். உடனடியாக அவரை ஆசிரியர்கள் மீட்டு அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாணவி விஷம் குடித்துள்ளதாக தெரிவித்தனர். இதனையடுத்து உடனடியாக மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இதுகுறித்து தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் மாணவியின் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து அவருடைய பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி ஒருவர் விஷம் குடித்து விட்டு பள்ளியில் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘மாணவர்களின் உரிமைகளை தமிழக அரசு மதிக்கிறது’ - உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tamil-nadu-government-respects-students-rights-higher-education-minister-viswanathan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tamil-nadu-government-respects-students-rights-higher-education-minister-viswanathan#comments</comments><guid isPermaLink="false">9021d172-3b79-4215-91f3-646c86a025f7</guid><pubDate>Thu, 20 Aug 2026 13:14:32 +0000</pubDate><atom:updated>2026-08-20T13:14:32.722Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன்,Minister Viswanathan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/2tosy49x/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/2tosy49x/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது, தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் பேசுகையில், குறிப்பிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் குறித்த தவறான குறிப்புகளைக் கொண்டிருந்த, அரசு கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்ட சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டதாக தெரிவித்தார். மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நியாயமான உரிமைகளை பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றும் அவர் கூறினார். </p><p>இடதுசாரி கட்சிகள் மற்றும் 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) ஆகியவை ஏற்பாடு செய்யும் போராட்டங்களில் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்குமாறும், இதற்காகப் பள்ளி மற்றும் உயர்கல்வித் துறைகள், காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறும் கல்லூரித் தலைவர்களுக்கு ஆகஸ்ட் 17 அன்று ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது; அத்துடன் இதுகுறித்த உடனடி நடவடிக்கை அறிக்கைகளும் முதல்-அமைச்சர்களிடம் இருந்து கோரப்பட்டன.</p><p>சட்டப்பேரவையில் இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) உறுப்பினர் கே.மாரிமுத்து சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டுவந்தபோது, ​​மாணவர் போராட்டங்கள் தொடர்பான நடவடிக்கைகள் உடனடியாக முதல்-அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாக அமைச்சர் விஸ்வநாதன் பதிலளித்தார்.</p><p>அரசு கல்லூரிகளில் சட்டம்-ஒழுங்கு மற்றும் அமைதியான கல்விச் சூழலை உறுதி செய்வதற்காக, வளாக ஒழுக்கம் குறித்த அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு முதல்-அமைச்சர்களுக்கு ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டதாக குறிப்பிட்ட விஸ்வநாதன், "இருப்பினும், அந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் பெயர்கள் தவறுதலாக இடம்பெற்றுவிட்டன" என்று கூறினார்.</p><p>தவறான வாசகங்கள் இடம்பெற்றிருப்பது கவனத்திற்கு வந்தவுடன், கல்லூரி கல்வி இயக்ககம் அந்தச் சுற்றறிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற்றதைச் சுட்டிக்காட்டிய அவர், அந்தச் சுற்றறிக்கைக்குப் பின்னால் எந்த உள்நோக்கமும் இல்லை என்று தெரிவித்தார். மேலும், மாணவர் மற்றும் இளைஞர்களின் உரிமைகளை ஒடுக்குவதற்குப் பதிலாக, தமிழக அரசு அவற்றை மதிக்கிறது மற்றும் பாதுகாக்கிறது என்று அமைச்சர் விஸ்வநாதன் உறுதிப்படுத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல் வங்கிகளில் இருந்து பணம் எடுத்தால் கட்டணம் வசூலிப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fees-charged-if-you-withdraw-money-from-banks-more-than-4-times-in-a-month</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fees-charged-if-you-withdraw-money-from-banks-more-than-4-times-in-a-month#comments</comments><guid isPermaLink="false">2c74bc85-6b34-41e9-b3af-16a9133d5e39</guid><pubDate>Thu, 20 Aug 2026 13:10:10 +0000</pubDate><atom:updated>2026-08-20T13:10:10.675Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>money,ஏடிஎம்,ATM,SBI,எஸ்பிஐ,வங்கி பரிவர்த்தனை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/6mxoshps/money33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பணம் எடுத்தால் கட்டணம் வசூலிப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/6mxoshps/money33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%90">எஸ்.பி.ஐ., </a>அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்கு (BSBD) வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கான சேவைக் கட்டண விதிகளில் மாற்றம் செய்துள்ளது. இந்த புதிய விதிகள் 2026 அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.</p><p>சேமிப்பு வங்கி வைப்பு கணக்கு (BSBD) வைத்திருப்பவர்கள் ஒரு மாதத்தில் முதல் 4 பணப் பரிவர்த்தனைகளை இலவசமாக மேற்கொள்ளலாம்.</p><p>அதற்கு மேல் பணம் எடுத்தால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.15 மற்றும் அதற்கான சரக்கு மற்றும் சேவை வரி கட்டணமாக வசூலிக்கப்படும்.</p><p>எஸ்.பி.ஐ.யின் அடிப்படை சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள், குறிப்பாக அடிக்கடி ஏ.டி.எம். அல்லது வங்கி கிளை மூலம் பணம் எடுப்பவர்கள், அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய கட்டண விதியை கவனத்தில் கொள்ள வேண்டும் என வாடிக்கையாளர்களுக்கு எஸ்.பி.ஐ. வலியுறுத்தி உள்ளது</p>]]></content:encoded></item><item><title>உணவு தானியங்களை சேமிக்க ரூ.81 கோடியில் 15 கிடங்குகள் - அமைச்சர் வெங்கடரமணன் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/15-warehouses-to-be-built-at-a-cost-of-rs-81-crore-for-storing-food-grains-minister-venkataramanan-announces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/15-warehouses-to-be-built-at-a-cost-of-rs-81-crore-for-storing-food-grains-minister-venkataramanan-announces#comments</comments><guid isPermaLink="false">148c398d-9c01-4525-936f-d2c9a41ee551</guid><pubDate>Thu, 20 Aug 2026 12:45:20 +0000</pubDate><atom:updated>2026-08-20T12:45:20.894Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அமைச்சர் வெங்கடரமணன்,Minister Venkataramanan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/nqu0s9lx/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/nqu0s9lx/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக சட்டசபையில் இன்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நிறைவடைந்த பிறகு, புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அத்துறையின் அமைச்சர் ப.வெங்கடரமணன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- </p><p>“உணவு தானியங்கள் சேமிப்பதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு 13 மாவட்டங்களின் மொத்தம் 31 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட 15 சேமிப்பு கிடங்குகள் ரூ.81 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும். அரியலூர், நாமக்கல் மற்றும் மேட்டுப்பாளையம் சேமிப்பு கிடங்கு வளாகங்களில் தலா 3400 டன் கொள்ளளவு கொண்ட 3 நவீன சேமிப்பு கிடங்குகள் ரூ.13 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும். </p> <p>தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் 10 சேமிப்பு கிடங்கு வளாகங்களில், தொழிலாளர் ஓய்வறை வசதி, ரூ.1 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும். தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் 17 சேமிப்பு கிடங்கு வளாகங்களில் பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் ரூ.12 கோடியே 61 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். </p><p>தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் 18 சேமிப்பு கிடங்கு வளாகங்களில் வைக்கப்படும் தானியங்களின் முழு நேர கண்காணிப்பினை உறுதி செய்திட கண்காணிப்பு கேமராக்கள் ரூ.1.25 கோடியில் பொருத்தப்படும். உணவு தானியங்களின் தரத்தினை உறுதி செய்திடும் பொருட்டு, அவற்றினை அடுக்கி அட்டிகளாக வைக்கும்போது தரை வழி ஈரப்பதம் தாக்காமல் இருக்கவும், காற்றோட்ட வசதிக்காகவும், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் 12 சேமிப்பு கிடங்குகளுக்கு 6 ஆயிரம் எண்ணிக்கை அட்டிக் கட்டைகள் ரூ.1.44 கோடியில் வழங்கப்படும்.”</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>சிவகாசி அரசு மருத்துவமனையில் புதிய தீக்காய சிகிச்சை மையம் - அமைச்சர் கீர்த்தனா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-burn-treatment-center-at-sivakasi-government-hospital-minister-keerthana</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-burn-treatment-center-at-sivakasi-government-hospital-minister-keerthana#comments</comments><guid isPermaLink="false">cca19c14-ad7c-4072-9111-295226c0e309</guid><pubDate>Thu, 20 Aug 2026 12:40:10 +0000</pubDate><atom:updated>2026-08-20T12:40:10.197Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Government Hospital,அரசு மருத்துவமனை,Sivakasi,சிவகாசி,தீக்காயம்,Treatment Center,சிகிச்சை மையம்,burn,அமைச்சர் கீர்த்தனா,Minister Keerthana</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/0vc31p3j/minister-keerthana.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் கீர்த்தனா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/0vc31p3j/minister-keerthana.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE">அமைச்சர் கீர்த்தனா</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>தீக்காய சிறப்பு சிகிச்சை மையம்</h2><p>சிவகாசி அரசு மருத்துவமனையில் தீக்காய சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்படுவதுடன், தீக்காயங்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு தேவையான தோல் சிகிச்சை மற்றும் மாற்று சிகிச்சை வசதிகளை மேம்படுத்தும் வகையில் தோல் வங்கி (SKIN BANK) அமைக்கப்படும் என்ற அறிவிப்பு, சிவகாசி மக்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.</p><h2>விரைவான சிகிச்சை</h2><p>பட்டாசுத் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு அவசர காலங்களில் தரமான மற்றும் விரைவான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த முக்கியமான மருத்துவ வசதிகள் உருவாக்கப்படுகின்றன.</p><h2>முதல்-அமைச்சருக்கு நன்றி</h2><p>சிவகாசி மக்களின் நீண்ட நாள் மருத்துவத் தேவையை உணர்ந்து, தீக்காய சிறப்பு சிகிச்சை மையம் மற்றும் தோல் வங்கி போன்ற உயிர்காக்கும் வசதிகளை ஏற்படுத்த முன்வந்த தமிழ்நாடு முதல்-அமைச்சர் அண்ணன் விஜய் அவர்களுக்கு, சிவகாசி தொகுதி மக்களின் சார்பாகவும், பட்டாசுத் தொழிலாளர்களின் சார்பாகவும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>மக்களின் உயிர், பாதுகாப்பு, நலன் ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டு செயல்படும் இந்த மக்கள் நல அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் சிவகாசியின் பாதுகாப்பான எதிர்காலத்திற்கான ஒரு முக்கியமான முன்னெடுப்பு! மக்கள் நலனே முதன்மை! சிவகாசியின் பாதுகாப்பே எங்கள் பொறுப்பு!</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அதிமுக எம்.எல்.ஏக்கள் விவகாரம்: சபாநாயகர் நடவடிக்கை சரிதான் - சென்னை ஐகோர்ட்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-mlas-issue-speakers-action-was-correct-madras-high-court</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-mlas-issue-speakers-action-was-correct-madras-high-court#comments</comments><guid isPermaLink="false">45706a3a-79b7-4f11-8ace-5b0790b17d13</guid><pubDate>Thu, 20 Aug 2026 12:39:54 +0000</pubDate><atom:updated>2026-08-20T12:39:54.045Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,Chennai High Court,சபாநாயகர்,சென்னை ஐகோர்ட்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/b3jvrntn/High-court.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/b3jvrntn/High-court.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் கடந்த  மே 13ம் தேதி  தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை தீர்மானம் கொண்டு  வந்தது. இதில், அதிமுக கொறடா உத்தரவை மீறி, அரசுக்கு ஆதரவாக, அக்கட்சியின் 25 எம்எல்ஏக்கள் ஓட்டளித்தனர். அவர்களுக்கு எதிராக, தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி  கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில், சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது. 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததையடுத்து, மீதமுள்ள 21 எம்எல்ஏக்கள் மன்னிப்பு கோரி கடிதம் அளித்து உள்ளதால், அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை மனுவை திரும்பப் பெற்று கொள்வதாக, சபாநாயகருக்கு இபிஎஸ் கடிதம் அளித்தார்</p><p>இதை ஏற்று சபாநாயகர், 21 எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கைகளை கைவிடுவதாக உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.வி.செல்வகுமார் என்பவர் வழக்கு தாக்கல் செய்தார்.  </p><p>இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது, அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கையை சபாநாயகர் கைவிட்டது சரிதான். சட்டப்படி 15 நாட்களுக்குள் எம்.எல்.ஏக்களை மன்னித்து கடிதம் அளித்துவிட்டதால் தகுதி நீக்கம் என்ற கேள்வியே எழாது எனவும் தெரிவித்த ஐகோர்ட் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரூ.7,015 கோடியில் சிங்கப்பெண் கடன் திட்டம் - அமைச்சர் காந்திராஜ் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-7015-crore-singappen-loan-scheme-minister-gandhiraj-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-7015-crore-singappen-loan-scheme-minister-gandhiraj-announcement#comments</comments><guid isPermaLink="false">42661808-41fb-43b9-802b-7d262ee37893</guid><pubDate>Thu, 20 Aug 2026 12:31:53 +0000</pubDate><atom:updated>2026-08-20T12:31:53.840Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN Assembly,அமைச்சர் காந்திராஜ்,கடன் திட்டம்,Minister Gandhiraj</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/nx8dtdsi/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் காந்திராஜ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/nx8dtdsi/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சிங்கப்பெண் கடன் திட்டம் ரூ.7,015 கோடி மதிப்பீட்டில் கூட்டுறவு நிறுவனங்களால் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் காந்திராஜ் அறிவித்துள்ளார்.</p><p>தமிழக சட்டசபையில் இன்று கூட்டுறவுத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நிறைவடைந்த பிறகு, புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அத்துறையின் அமைச்சர் வ.காந்திராஜ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-</p><h2>சிங்கப்பெண்கள் கடன் திட்டம்</h2><p>பெண்களை தொழில் முனைவோராக்க புதிதாக சிங்கப்பெண்கள் கடன் திட்டம் ரூ.7,015 கோடி மதிப்பீட்டில் கூட்டுறவு நிறுவனங்களால் செயல்படுத்தப்படும். விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பில் ஊரகத் தொழில் கடன் 9 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படும். கூட்டுறவு நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தரத்தை மேம்படுத்தி, சந்தைப் பங்கை அதிகரித்து, லாபத்தை உயர்த்த வெற்றி என்ற பொதுவான வணிகச் சின்னம் (லோகோ) அறிமுகப்படுத்தப்படும்.</p><p>மாநில கூட்டுறவுக் கொள்கை உருவாக்கப்படும். அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும் குறைந்தபட்சம் 5 சேவைகள் வழங்கும் சங்கங்களாக ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும். ரூ.6.90 கோடி மதிப்பீட்டில், 3,452 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களில் நுண் தானியங்கி சாதனங்கள் நிறுவப்படும். கூட்டுறவு இயக்கத்தினை அமைப்பு ரீதியாக வலுப்படுத்த, பெருமளவிலான உறுப்பினர் சேர்க்கை ரூ.25 லட்சம் மதிப்பீட்டில், இணைய உறுப்பினர் சேர்க்கை வலைத்தளம் மூலம் மேற்கொள்ளப்படும்.</p><h2>ரேஷன் கடைகளில் யு.பி.ஐ. பணப்பரிவர்த்தனை</h2><p>விவசாயிகள் விளைபொருட்களை சந்தைப்படுத்திட ரூ.50 கோடி மதிப்பீட்டில் பண்ணைக் கொள்முதல் முறை அறிமுகப்படுத்தப்படும்.  மஞ்சள், முருங்கை மற்றும் மிளகு ஆகிய விளைபொருட்கள் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் ரூ.5 கோடி மதிப்பீட்டில் ஏற்றுமதி செய்யப்படும். தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் மூலம் புதிய இணையவழி கொள்முதல் நடைமுறைகள் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்படும். 10 ஆயிரம் ரேஷன் கடைகளுக்கு யு.பி.ஐ. பணப்பரிவர்த்தனை நடைமுறைகள் விரிவுபடுத்தப்படும்.</p><h2>நீண்டகால கடன்</h2><p>கூட்டுறவுத்துறையின் அனைத்து சேவைகளையும் பொதுமக்கள் அறிந்துகொள்வதற்கு வலைத்தளம் மற்றும் கூட்டுறவு செயலி உருவாக்கப்படும். தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் விவசாயிகளுக்கு, நீண்டகால கடன் வழங்கும் திட்டம் ரூ.50 கோடி அளவிற்கு மீண்டும் தொடங்கப்படும். டான்பெட் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரங்கள் மற்றும் விதைகள் விற்பனை ரூ.2,500 கோடி அளவிற்கு அதிகரிக்கப்படும். </p><p>புதிதாக 150 ரேஷன் கடை பணியாளர் நியமனத்தில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில் புதிய பாதுகாப்புப் பெட்டகங்கள் ரூ.1.85 கோடி மதிப்பீட்டில் 82 கூட்டுறவு நிறுவனங்களில் நிறுவப்படும். கூட்டுறவு கடன் அமைப்புகளின் மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் குறித்து விரிவான ஆய்வறிக்கை தயார் செய்யப்படும். வேளாண் விளைபொருள் ஈட்டுக் கடன் ரூ.115 கோடியில் இருந்து ரூ.300 கோடியாக அதிகரித்து வழங்கப்படும்.</p><h2>உயிரி உரங்கள் விற்பனை</h2><p>தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணையம் வாயிலாக புதிய ஏலக்கூடம் ரூ.53 லட்சம் மதிப்பீட்டில் திருவாரூர் மாவட்டம் ஆய்க்குடியில் அமைக்கப்படும். 50 வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் மின்னணு ஏலமுறை விரிவுபடுத்தப்படும். இயற்கை வேளாண் விளைபொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை முதற்கட்டமாக 2 மாவட்டங்களில் கொள்முதல் செய்து மாநிலம் முழுவதும் விற்பனை செய்யப்படும். மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் தயாரிக்கும் உயிரி உரங்கள் டான்பெட் மூலம் கொள்முதல் செய்து விற்பனை செய்யப்படும்.</p><h2>நெல் உலர்த்தும் கருவி</h2><p>நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக நெல் உலர்த்தும் கருவியுடன் கூடிய வசதி மையங்கள் நடத்திட கூட்டுறவுத் துறை மூலம் கடன் வழங்கப்படும். நேரடி நெல் கொள்முதல் நிலையம் முதல், ரேஷன் கடைகள் வரை அனைத்து செயல்பாடுகளையும் பரீட்சார்த்த முறையில் ஒரே முகமை வாயிலாக நடத்த திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.</p><p>கூட்டுறவு நிறுவனங்களின் சேவைகளை ஒருங்கிணைத்து, வழங்கல் தொடர் மேலாண்மை ஏற்படுத்த ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் ஆய்வறிக்கை தயாரிக்கப்படும். புதிய சேமிப்புக் கிடங்குகளின் தேவை, சேமிப்புக் கிடங்குகளை புதுப்பித்தல் மற்றும் மேம்படுத்துதல் குறித்த திட்ட அறிக்கை ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் தயாரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>திருமுல்லைவாயலில் நீண்ட நாட்களாக நடைபெறும் பாதாள சாக்கடை பணிகள்.. பொதுமக்கள் அவதி
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/underground-sewerage-works-have-been-going-on-in-thirumullaivayal-for-a-long-time-public-is-suffering</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/underground-sewerage-works-have-been-going-on-in-thirumullaivayal-for-a-long-time-public-is-suffering#comments</comments><guid isPermaLink="false">9d3118e2-ebbd-4fa9-b512-10aac68e3a1f</guid><pubDate>Thu, 20 Aug 2026 12:28:46 +0000</pubDate><atom:updated>2026-08-20T12:28:46.655Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,மழை,மாநகராட்சி,பாதாள சாக்கடை,Avadi Corporation,Underground Sewer</media:keywords><media:content height="410" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/tvbbq11x/5.jpg" width="710"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நீர் தேங்கிய ரோடு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/tvbbq11x/5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர்,</p><p>திருமுல்லைவாயலில் நீண்ட நாட்களாக பாதாள சாக்கடை தோண்டும் பணிகள் நடைபெறுவதால் அப்பகுதி மக்கள் சாலையில் நடப்பதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். </p><h2>பாதாள சாக்கடை பணி</h2><p>ஆவடி மாநகராட்சி அருகே திருமுல்லைவாயல் மணிகண்டபுரம் பகுதியில் பாதாள சாக்கடை பணிகளுக்காக  சில மாதங்களுக்கு முன்பு பல குழிகள் தோண்டப்பட்டன. பணிகள் தாமதமாக நடைபெறுவதால் குழிகள் இதுவரை முழுமையாக மூடப்படவில்லை. இதனால் சாலைகள் குண்டும் குழியுமாக மாறி பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுகிறது.</p><p>சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் வீடுகளில் கழிவு நீர் செல்வதோடு, சாலையில் நீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் சிரமத்தில் சாலையில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் தேங்கிய நீர்களால் பல்வேறு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பிரச்சனைகள் </a>உடல் நிலை பாதிப்புகள் ஏற்படும் என தெரிவித்துள்ளனர். நீண்ட நாட்களாக நடைபெறும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88">பாதாள சாக்கடை</a> பணிகளை பருவமழைக்கு முன்பாக முடிக்க வேண்டும் என மண்டலக்குழுத் தலைவரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>மழை நீர் தேங்குதல் மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் பணிகள் முடிக்கப்படும் என மண்டலக்குழுத் தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு சார்பில் கார் : தலைமைச் செயலகத்தில் டெஸ்ட் டிரைவ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-provided-cars-for-mlas-test-drive-at-the-secretariat</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-provided-cars-for-mlas-test-drive-at-the-secretariat#comments</comments><guid isPermaLink="false">62d9dcc1-30d2-428a-b82f-126c60f3ae9d</guid><pubDate>Thu, 20 Aug 2026 12:21:15 +0000</pubDate><atom:updated>2026-08-20T12:21:15.312Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,சட்டசபை,கார்கள்,சென்னை தலைமை செயலகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/0b8ker3i/Car.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/0b8ker3i/Car.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>எம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கப்படும் என்று தமிழக முதல் அமைச்சர் விஜய் அறிவித்தார். விஜய் நேற்று வெளியிட்ட இந்த அறிவிப்பு எம்.எல்.ஏக்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.  விஜய் அறிவித்த உடனேயே அரசு சார்பில் என்ன கார் வழங்கப்படும் என்றும்  எம்.எல்.ஏக்கள்   தங்களுக்குள் ஆர்வத்துடன் பேசிக்கொண்டனர். இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்திற்கு மகேந்திர நிறுவனத்தின் ஸ்கார்பியோ, பொலிரோ நியோ, எக்ஸ்யூவி 7 எக்ஸ் ஓ, உள்ளிட்ட 6 வகையான மாடல் கார்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. டெஸ்ட் டிரைவிற்காக தலைமை செயலகத்திற்கு இந்த கார்கள் கொண்டு வரப்பட்ட நிலையில் அதிகாரிகள் அதை சோதனை செய்து, ஏதாவது ஒரு காரை தேர்வு செய்து பரிந்துரைப்பார்கள் என்று தெரிகிறது. </p><h2>சட்டசபை</h2><p>தமிழக சட்டமன்றத்தில் கடந்த 12-ந்தேதியன்று காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ. ஜோதிமணி பேசும்போது, எந்தவொரு பொருளாதார பலம் இல்லாமல் சட்டமன்ற உறுப்பினர்களாக பணியாற்றி கொண்டிருப்பவர்கள் தங்களின் தொகுதிப் பணிகளை செய்ய சொந்த வாகனங்களோ அல்லது உதவியாளர்களையோ வைத்துக்கொள்ள முடிவதில்லை என்று தெரிவித்தார்.  அவரது கோரிக்கையை ஏற்று எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் கார் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தமிழக முதல் அமைச்சர் விஜய் சட்டசபையில் விதி எண் 110-கீழ் அறிவித்தார். விஜய் அறிவித்தாவது: </p> <h2>அரசு சார்பில் வாகனம்</h2><p> எம்.எல்.ஏக்கள் தங்களது தொகுதி மக்களின் குறைகளைக் கேட்டறியவும், அரசுத் திட்டங்கள் மக்களை சென்றடைவதை கண்காணிக்கவும், தங்களின் தொகுதி முழுவதும் தொடர் பயணங்களை சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. பொருளாதார பலமில்லாமல் சட்டமன்ற உறுப்பினர்களாக பணியாற்றும் மற்றும் முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தங்களது மக்கள் பணியை தொய்வின்றி தொடருவதற்கு வசதியாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும்.</p> <h2>குறைகளுக்கு தீர்வுகாண</h2><p>இந்த அறிவிப்பு, சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களின் பயணத்தேவைகளுக்காக பிறரை சார்ந்து இருப்பதை தடுத்து, அவர்கள் எவ்வித சமரசமும் இன்றி சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தங்களின் தொகுதிக்குட்பட்ட கிராமப்புற மற்றும் தொலைதூரப்பகுதிகளுக்கு எளிதாக பயணம் செய்து, தொகுதி முழுவதும் உள்ள மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளுக்கு தீர்வுகாண வழிவகுக்கும்.</p> <h2>மாதந்தோறும் ரூ.75 ஆயிரம்</h2><p>அதோடு மட்டுமின்றி, சட்டமன்ற உறுப்பினர்களின் பொருளாதார சுமையை குறைத்து, கடைகோடி மக்களுக்கு லஞ்சலாவண்யமற்ற, நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை அளிக்கவும் உதவும். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு வழங்கும் வாகனத்தை பராமரிக்கும் விதமாக, வாகனத்துக்கு டிரைவர், எரிபொருள், வாகன பராமரிப்பு உள்ளிட்ட செலவினங்களுக்காக மாதந்தோறும் ரூ.75 ஆயிரம் வாகனப்படியாகவும், அலுவலகப்பணிகளில் உதவி செய்ய ஒரு உதவியாளரை நியமித்துக்கொள்ள மாதந்தோறும் ரூ.25 ஆயிரம் உதவியாளர் படியாகவும் வழங் கப்படும். இதற்காக உரிய சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொண்டு ஆணைகள் வெளியிடப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறினார்</p>]]></content:encoded></item></channel></rss>