<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 14 Sep 2026 09:17:08 +0000</lastBuildDate><item><title>தேனியில் 4,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/4000-year-old-rock-paintings-discovered-in-theni</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/4000-year-old-rock-paintings-discovered-in-theni#comments</comments><guid isPermaLink="false">235f0183-4c21-4c09-aa02-e782ab0b92c7</guid><pubDate>Mon, 14 Sep 2026 09:16:24 +0000</pubDate><atom:updated>2026-09-14T09:16:24.173Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Theni,தேனி,பாறை ஓவியங்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/0vmg8u3b/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/0vmg8u3b/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி,</p><p>தேனி மாவட்டம் கடமலை குண்டு மலைப்பகுதியில் சுமார் 4,000 ஆண்டுகள் பழமையான வெள்ளை நிற பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சங்கிலி கரடு பகுதியில் கண்டறியப்பட்ட ஓவியங்களில் மனித உருவங்கள், வேட்டை காட்சிகள் மற்றும் சடங்கு நிகழ்வுகளை பிரதிபலிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.</p><p>மேலும் இரும்பு உருக்கு எச்சங்கள், சுடுமண் குழாய்கள் உளிட்ட தொல்பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எனவே பகுதியில் முழுமையான தொல்பொருள் ஆய்வு நடத்த வேண்டும் என்று தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>8-வது முறையாக ஆசியக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணி! - வானதி சீனிவாசன் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/indian-womens-team-wins-asia-cup-for-the-8th-time-vanathi-srinivasan-congratulations</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/indian-womens-team-wins-asia-cup-for-the-8th-time-vanathi-srinivasan-congratulations#comments</comments><guid isPermaLink="false">349412d1-aea0-43f0-9f4d-5e333fce62b5</guid><pubDate>Mon, 14 Sep 2026 09:15:48 +0000</pubDate><atom:updated>2026-09-14T09:15:48.835Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Asia Cup,இந்திய மகளிர் அணி,வாழ்த்து,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,வெற்றி,Indian Women&apos;s Team,ஆசியக் கோப்பை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/mbrg5ckk/vanathi.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/mbrg5ckk/vanathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> 8-வது முறையாக ஆசியக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு வானதி சீனிவாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><p>துபாயில் நடைபெற்ற 2026 மகளிர் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி ஆசிய கோப்பையை கைப்பற்றுவது இது 8-வது முறையாகும். இது குறித்து முன்னாள் பாஜக தேசிய மகளிரணி தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/vanathi-srinivasan">வானதி சீனிவாசன் </a>தனதி எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>மனமார்ந்த வாழ்த்துகள்</h2><p>இலங்கையை வீழ்த்தி, 8-வது முறையாக மகளிர் டி20 ஆசியக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! உங்களின் கடின உழைப்பு, தளராத உறுதி மற்றும் தேசத்திற்கான எழுச்சியூட்டும் அர்ப்பணிப்பு ஆகியவை இந்த மகத்தான வெற்றியைச் சாத்தியமாக்கியுள்ளன. உங்களைப் பற்றிப் பெருமைப்படுகிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திராவிட கழக பேரணிக்கு அனுமதி மறுப்பு - டிடிவி தினகரன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dravida-kazhagam-rally-denied-permission-ttv-dhinakaran-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dravida-kazhagam-rally-denied-permission-ttv-dhinakaran-condemns#comments</comments><guid isPermaLink="false">04c9f91a-8830-4761-8b7c-ba80a95edca1</guid><pubDate>Mon, 14 Sep 2026 08:47:54 +0000</pubDate><atom:updated>2026-09-14T08:47:54.547Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டிடிவி தினகரன்,Dravidar Kazhagam,திராவிடர் கழகம்,பேரணி,Cycle Rally,அனுமதி மறுப்பு,permission denied</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/iej9ndwu/ttv1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/iej9ndwu/ttv1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழிப்புணர்வு பேரணிக்கு அனுமதி மறுத்துள்ளதற்கு அமமுக பொதுச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/ttv-dhinakaran">டிடிவி தினகரன்</a> கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>அனுமதி மறுப்பு</h2><p>தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி, அவர் பிறந்த ஈரோட்டில் உள்ள பன்னீர்செல்வம் பூங்காவில் இருந்து பெரியார் இல்லம் வரை திராவிடர் கழகம் சார்பில் திட்டமிடப்பட்டிருந்த விழிப்புணர்வு பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>ஏற்கனவே, கடந்த ஜூலை மாதம் நீட் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகம் நடத்தவிருந்த இருசக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி மறுத்தும், பெரியார் திடலில் காவல்துறையினரைக் குவித்தும் அடக்குமுறையைக் கையாண்ட தவெக அரசு, தற்போது அவரது பிறந்தநாளை முன்னிட்டு திட்டமிடப்பட்டிருந்த விழிப்புணர்வு பேரணிக்கும் அனுமதி மறுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.</p><h2>அம்பலம்</h2><p>சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு, சாதி ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம் எனப் பல்வேறு கொள்கைகளுக்காகத் தனது வாழ்நாள் முழுவதும் போராடிய தந்தை பெரியாரின் பிறந்தநாளில், அவரது சொந்த மண்ணிலேயே அவரது கொள்கைகளை வலியுறுத்தி நடத்தப்படவிருந்த பேரணிக்கு அனுமதி மறுத்திருப்பதன் மூலம், பெரியாரை அரசியலுக்காக மட்டுமே தவெக தனது கொள்கைத் தலைவராக முன்வைத்திருப்பது அம்பலமாகியுள்ளது.</p><p>ஒவ்வொரு ஆண்டும் பெரியாரின் பிறந்தநாளையொட்டி நடைபெறும் விழிப்புணர்வு பேரணிக்கு, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை காரணம் காட்டி அனுமதி மறுத்திருப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.</p><p>எனவே, பெரியாரை கொள்கைத் தலைவராக முன்மொழிந்திருக்கும் தவெக, அவரையும் அவரது பெயரையும் வெறும் அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தும் நாடகத்தைக் கைவிட்டு, பெரியாரின் பிறந்தநாளன்று திராவிடர் கழகம் திட்டமிட்டிருந்த விழிப்புணர்வு பேரணிக்கு உடனடியாக அனுமதி வழங்கி, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்திட வேண்டும் என்று இந்நேரத்தில் வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தி: நயினார் நாகேந்திரன் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayaka-chaturthi-greetings-from-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayaka-chaturthi-greetings-from-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">778298cf-3405-4020-8a35-7a2d8f3da91b</guid><pubDate>Mon, 14 Sep 2026 08:19:46 +0000</pubDate><atom:updated>2026-09-14T08:19:46.897Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,greeting,விநாயகர் சதுர்த்தி,Vinayaka Chaturthi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/qvgata9e/332.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/qvgata9e/332.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>வாழ்த்து</h2><p>பாரத மக்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். நம் வாழ்வில் ஏற்படும் தடைகளையும் துயரங்களையும் நீக்கி, நம் வினைகள் அனைத்தையும் தீர்த்து, வெற்றி, வளம், மகிழ்ச்சி மற்றும் நிம்மதியை அருளும் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை போற்றி வணங்கும் இப்புனித நன்னாளில், அனைவரது வாழ்விலும் புதிய நம்பிக்கையும், நல்ல சிந்தனையும், மகிழ்ச்சியும் நிறைந்து, தொடங்கும் ஒவ்வொரு செயலும் வெற்றியடையவும், இல்லங்கள் அனைத்திலும் அன்பும் அமைதியும் செழிக்கவும் விநாயகப் பெருமானை பிரார்த்திப்போம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது: அமைச்சர் அருண்ராஜ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kolathur-mla-vs-babus-health-condition-is-stable-minister-arunraj</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kolathur-mla-vs-babus-health-condition-is-stable-minister-arunraj#comments</comments><guid isPermaLink="false">72c8b231-fa87-4832-b300-665165f2e65d</guid><pubDate>Mon, 14 Sep 2026 08:13:20 +0000</pubDate><atom:updated>2026-09-14T08:13:20.857Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கொளத்தூர்,Kolathur,வி.எஸ்.பாபு,VS Babu,Minister Arunraj,அமைச்சர் அருண்ராஜ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/o13u07gi/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/o13u07gi/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து த.வெ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வி.எஸ்.பாபு. இவர் தனது குடும்பத்துடன் கொளத்தூரில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். </p><p>இந்த நிலையில், வி.எஸ்.பாபுவுக்கு கடந்த 9-ம் தேதி அதிகாலை திடீரென கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே அவரை குடும்பத்தினர் அவரை சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் குழு, உடனடியாக அவரை தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்து அவசர சிகிச்சைகளை தொடங்கினர்.</p><p>சுவாசக்கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு. தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் பல்துறை நிபுணர்கள் அடங்கிய மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் உள்ளார். அவருக்கு தேவையான மருத்துவ மேலாண்மை மற்றும் சுவாச ஆதரவு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து தீவிர மருத்துவ மேற்பார்வையின் கீழ் வி.எஸ்.பாபு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.</p><p>இந்த நிலையில், உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிகப்பட்டுள்ள எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவை சுகாதரத்துறை அமைச்சர் அருண்ராஜ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.</p><p>அதன்பின்னர் அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>நுரையீரல் தொற்று காரணமாக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு சிகிச்சை பெற்று வருகிறார். வி.எஸ்.பாபு நலமுடன் உள்ளார், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். எம்.எல்.ஏ.வின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>19 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/rain-possible-till-4-pm-in-19-districts</link><comments>https://www.dailythanthi.com/news/weather/rain-possible-till-4-pm-in-19-districts#comments</comments><guid isPermaLink="false">35e53d54-ea8f-48fb-ad8a-d02d66fbdff6</guid><pubDate>Mon, 14 Sep 2026 08:12:32 +0000</pubDate><atom:updated>2026-09-14T08:12:32.543Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/m8tfygw7/Untitled-12.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/m8tfygw7/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுமார் 1.5 கி.மீ. உயரம் வரை தென்மேற்கு மத்தியப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு விதர்பா பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து மன்னார் வளைகுடா வரை மராத்வாடா, வடக்கு உள் கர்நாடகா, ராயலசீமா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், நாகப்பட்டினம், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, கடலூர், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தி.க. பேரணிக்கு அனுமதி மறுப்பு: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-rally-permission-denial-udayanidhi-stalin-criticism</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-rally-permission-denial-udayanidhi-stalin-criticism#comments</comments><guid isPermaLink="false">fa7ce0a9-baab-4f5a-8021-038f97b07fc0</guid><pubDate>Mon, 14 Sep 2026 07:57:29 +0000</pubDate><atom:updated>2026-09-14T07:57:29.252Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Dravidar Kazhagam,திராவிடர் கழகம்,பேரணி,அனுமதி மறுப்பு,Udhayanithi Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/bavuvcqg/Untitled-11.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/bavuvcqg/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெரியார் - அண்ணாவின் பிறந்தநாள் பேரணிகளுக்கு அனுமதி மறுப்பது ஏன்? என்று தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் பிறந்த ஈரோட்டு மண்ணில் தி.க. சார்பில் செப்டம்பர் 17-ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிக்கும், குடியாத்தத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.கழகம் உள்ளிட்ட கட்சிகள் நடத்தவிருந்த பேரணிக்கும், இந்த சர்க்கஸ் அரசின் காவல்துறை அனுமதி மறுத்து இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.</p><p>முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை, வலதுசாரி அமைப்புகளின் பேரணிகளுக்கு அனுமதி வழங்கிவிட்டு, தமிழ்நாட்டை செதுக்கிய பெரியார் - அண்ணாவின் பிறந்தநாள் பேரணிகளுக்கு அனுமதி மறுப்பது ஏன்?</p><p>பெரியாரையும், அண்ணாவையும் கொள்கைத்தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் முதல்-அமைச்சர், யாரை திருப்திப்படுத்த இதைச் செய்கிறார்? காவல்துறை, முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? இல்லை அவரது காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?</p><p>பெரியார் - அண்ணாவை புறக்கணிக்கும் ரீல்ஸ் முதல்-அமைச்சர், அவருடைய அடிமைத்தனத்தையும், ஆணவத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, உடனே இந்த பேரணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் பிறந்த ஈரோட்டு மண்ணில் தி.க. சார்பில் செப்டம்பர் 17-ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிக்கும், <br><br>குடியாத்தத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.கழகம் உள்ளிட்ட கட்சிகள் நடத்தவிருந்த பேரணிக்கும், <br><br>இந்த Circus அரசின்…</p>&mdash; Udhay (@Udhaystalin) <a href="https://x.com/Udhaystalin/status/2099402897469452489?ref_src=twsrc%5Etfw">September 14, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்திருத்தங்களை திரும்பப்பெறுக: தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/withdraw-the-town-and-country-planning-amendments-stpi-urges-tamil-nadu-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/withdraw-the-town-and-country-planning-amendments-stpi-urges-tamil-nadu-government#comments</comments><guid isPermaLink="false">06f6b8ae-79b6-4c7b-841d-2ea03896ede6</guid><pubDate>Mon, 14 Sep 2026 07:31:09 +0000</pubDate><atom:updated>2026-09-14T07:31:09.166Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,தமிழக அரசு,சட்ட திருத்தம்,வலியுறுத்தல்,Amendment,STPI Party -எஸ்.டி.பி.ஐ. கட்சி,எஸ்டிபிஐ கட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/401ykjh2/201.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முபாரக்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/401ykjh2/201.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்திருத்தங்களை திரும்பப்பெற தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><h2>சட்டத்திருத்தம்</h2><p>தமிழ்நாட்டில் 'வளர்ச்சி' என்ற போர்வையில் விவசாய நிலங்களை விவசாயமல்லாத பிற பயன்பாடுகளுக்கு மிக எளிதாக மாற்றுவதற்கு வழிவகை செய்யும் வகையில், அரசு மேற்கொண்டு வரும் சட்டத்திருத்தங்களும் அரசாணைகளும் கடும் கண்டனத்திற்குரியவை. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் செப்டம்பர் 8-ம் தேதி நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு (திருத்தச்) சட்டமுன்வடிவு மற்றும் கடந்த ஜூலை 31-ம் தேதி வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை வெளியிட்ட அரசாணை ஆகியவை வேளாண் பெருமக்களின் வாழ்வாதாரத்திற்கும், நில உரிமைக்கும் விடப்பட்ட மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.</p><h2>நன்செய் நிலங்கள்</h2><p>கூட்டாட்சித் தத்துவத்தில் மாநில உரிமைகள் எந்தளவுக்கு முக்கியமோ, அதே அளவிற்கு ஜனநாயகத்தின் அடிநாதமாக விளங்கும் உள்ளாட்சி அமைப்புகளின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால், திட்டப் பரப்பிடம் அல்லாத பகுதிகளில் உள்ள நன்செய் நிலங்களை மேம்படுத்துவதற்கும் பயன்பாடு மாற்றம் செய்வதற்கும் மாவட்ட ஆட்சியரின் முன் ஒப்புதல் பெற வேண்டும் என்ற நடைமுறையை நீக்கி, அதற்கான அனைத்து அதிகாரங்களையும் நகர் மற்றும் ஊரமைப்பு இயக்ககத்தின் (DTCP) இயக்குனரிடம் மாநில அரசு வழங்கியுள்ளது. மாநில அளவிலான ஒரே ஒரு அதிகாரியிடம் அனைத்து அதிகாரங்களும் குவிக்கப்படும்போது, உள்ளாட்சி அமைப்புகள் தங்களின் எல்லைக்குள் நடக்கும் திட்டங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை இழப்பதுடன், உள்ளூர் மக்களின் தேவைகளுக்கோ அல்லது உள்ளாட்சி மன்றங்களின் தீர்மானங்களுக்கோ சட்டப்பூர்வ மதிப்பு குறையும் அபாய நிலை ஏற்படுகிறது.</p><p>இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள 'அதிகாரப் பரவலாக்கம்' என்ற கோட்பாட்டிற்கு மாறாக, உள்ளாட்சிகளின் சுயாட்சியைக் குறைத்து மாநில அரசு அதிகாரத்தை மையப்படுத்துவது அரசமைப்புச் சட்டத்தின் நோக்கத்திற்கே முற்றிலுமாக முரணானதாகும்.  ஏற்கெனவே 2017-ல் பிறப்பிக்கப்பட்ட விதிகளின்படி, வேளாண் நிலங்களைப் பயன்பாடு மாற்றம் செய்ய வேளாண் துறை இணை இயக்குனரிடம் தடையின்மை சான்றிதழ் (NOC) பெற வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. தற்போது அதையும் தளர்த்தி, பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பெருநிறுவனங்களுக்கும் விவசாய நிலங்களைச் சிவப்புக் கம்பளம் விரித்துத் தாரைவார்க்க தவெக அரசு முயல்கிறது.</p><h2>வளர்ச்சி திட்டம்</h2><p>'வளர்ச்சித் திட்டங்களை விரைவுபடுத்துதல்' என்ற பெயரில் காலதாமதத்தைக் குறைக்க விரும்புவதாக அரசு தரப்பில் கூறப்பட்டாலும், நடைமுறையில் இது உள்ளாட்சி பிரதிநிதிகளின் சுதந்திரத்தையும், நிலத்தின் தன்மையை பரிசீலிக்கும் அடிப்படைச் சுற்றுச்சூழல் மற்றும் நிர்வாகத் தடுப்பணைகளையே அரசு தகர்த்தெறியும் ஜனநாயக விரோத செயலாகும்.</p><p>1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்டுவது என்ற பெயரில், உணவு உற்பத்திக்கு ஆதாரமாக விளங்கும் நன்செய் நிலங்களையும், நிலத்தடி நீரைச் சேமித்துச் சூழலியல் சமநிலையைப் பேணும் வேளாண் பரப்புகளையும் அரசு தியாகம் செய்யத் துணிவது எதிர்கால தலைமுறையின் உணவுப் பாதுகாப்பிற்கும் சுற்றுச்சூழல் சமநிலைக்கும் பேரழிவை உண்டாக்கும். இது உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தங்களது ஊரின் நிலங்களைப் பாதுகாக்கும் உரிமையையும் நேரடியாகப் பறிப்பதாகவே அமைகிறது.</p><h2>வலியுறுத்தல்</h2><p>எனவே, தமிழ்நாட்டின் வேளாண் எதிர்காலத்தையும், பரவலாக்கப்பட்ட ஜனநாயக அமைப்பான உள்ளாட்சிகளின் சுயாட்சியையும் சீர்குலைக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத் திருத்தங்களையும், ஜூலை 31 அரசாணையையும் தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90">எஸ்டிபிஐ கட்சி </a>சார்பில் வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பெற்ற மகனையே முறையாக வளர்க்காத மு.க.ஸ்டாலின்: அமைச்சர் ரமேஷ் சாடல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalin-failed-to-properly-raise-his-own-son-minister-ramesh-slams-him</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalin-failed-to-properly-raise-his-own-son-minister-ramesh-slams-him#comments</comments><guid isPermaLink="false">a723b061-5e1a-41d1-96bc-eeb9e5d06db5</guid><pubDate>Mon, 14 Sep 2026 07:27:58 +0000</pubDate><atom:updated>2026-09-14T07:27:58.926Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,M.K.Stalin,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,Minister ramesh,அமைச்சர் ரமேஷ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/eqpdijew/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/eqpdijew/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>திருச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>அரசியல், கருத்தியல் ரீதியான கேள்விகளுக்கு பதில் சொல்லலாம். வீட்டில் அமர்ந்துகொண்டு வாய்க்கு வந்தவற்றையெல்லாம் பேசலாம் என நினைத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் இதெல்லாம் ஒரு அரசியல் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் கிடையாது.</p><p>முதல்-அமைச்சர் விஜய் மிகத் தெளிவாக ஆட்சி நிர்வாகம் நடத்தி வருகிறார். அனைவரும் பாராட்டக் கூடிய வகையில் ஆட்சி நிர்வாகம் நடத்தி வருகிறார். உலகளவில் விளையாட்டுத் துறையில் தமிழர்கள் சாதிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் விரும்புகிறார். மற்றவர்கள் விமர்சனத்துக்காக எதை வேண்டுமானாலும் பேசுவார்கள். அதனால்தான் எதிர்க்கட்சியாகக்கூட அமர முடியாத நிலைமையில் (அதிமுகவினர்) உள்ளனர்.</p><p>ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவது என்பது ஜனநாயக உரிமை. இதனை யாரும் மறுக்கவில்லை. ஆனால், அவதூறாகவும் ஆபாசமாகவும் கீழ்த்தரமாகவும்தான் பேசுவதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். தி.மு.க.வினர் ஆபாசமாகப் பேசவில்லை என்றால்தான் ஆச்சரியப்பட வேண்டும். திமுகவின் டி.என்.ஏ.-வே அதுதான். ஆபாசமாகவும், அவதூறாகவும், கீழ்த்தரமாகவும் பேசுவதுதான் திமுகவின் டி.என்.ஏ. இப்படித்தான் திமுக முன்னாள் அமைச்சர்கள் எல்லோரும் வளர்ந்துள்ளனர்.</p><p>பெற்ற மகனையே முறையாக வளர்க்காத முன்னாள் கொளத்தூர் எம்.எல்.ஏ. (மு.க. ஸ்டாலின்), கட்சியை ஒழுங்காக வைத்திருப்பார் என எதிர்பார்க்க முடியாது. மின்வெட்டு பிரச்சினை சரிசெய்யப்பட்டுவிட்டதாக மின்துறை அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் எங்கும் மின்வெட்டு இல்லை; மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். மின்வெட்டு இருப்பதாக அரசியல் செய்வதற்காக சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர். அரசியல் ஆதாயத்திற்காக சிலர் குற்றம்சாட்டுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். இவ்வாறுய் அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய் இந்தியாவிற்கே வழிகாட்டியாக திகழ்கிறார் : அமைச்சர் செங்கோட்டையன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-stands-as-a-guiding-light-for-all-of-india-minister-sengottaiyan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-stands-as-a-guiding-light-for-all-of-india-minister-sengottaiyan#comments</comments><guid isPermaLink="false">6239680e-2d6c-444e-b6d2-703d6f7b13d7</guid><pubDate>Mon, 14 Sep 2026 07:10:11 +0000</pubDate><atom:updated>2026-09-14T07:10:11.246Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,செங்கோட்டையன்,Sengottaiyan,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/le5ejz9k/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/le5ejz9k/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>வேலூர்,</p><p>வேலூரில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>முதல்-அமைச்சரைப் பொறுத்தவரை, தொலைநோக்குச் சிந்தனையுடன் பல்வேறு திட்டங்களை உருவாக்கி வருகிறார். வரலாறு படைக்கும் தலைவராகவும், இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழும் தலைவராகவும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் விளங்கி வருகிறார்.</p><p>வெற்றித் தலைவர், தமிழகத்தின் நிரந்தர முதல்-அமைச்சர் விஜய் ஆட்சியில், அனைத்து துறைகளும் போட்டி போட்டுக்கொண்டு சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில் சுழன்று பணியாற்றி வருகின்றன. தமிழ்நாட்டில் நேர்மையான ஆட்சியை நடத்துவதற்காக முதல்-அமைச்சர் பல்வேறு திட்டங்களை உருவாக்கி வருகிறார்.</p><p>முதல்-அமைச்சர் குறிப்பிட்ட ஒரே கருத்து, 'மக்களுடைய வரிப் பணத்திலிருந்து ஒரு ரூபாய் கூட இந்த அரசின் சார்பாக சிந்தாமல், சிதறாமல் பணிகள் நடைபெறும்' என்பதுதான். உணவு உற்பத்தியைப் பொறுத்தவரை, நமக்குத் தேவையாண அளவுக்கு மட்டுமல்லாமல், கூடுதலாகவே அனைத்து உணவுப் பொருட்களும் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.</p><p>இந்தியாவின் இலக்காக, தற்போது நமக்குத் தேவையான உணவை இருமடங்கு அளவுக்கு உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் அந்தந்த சிவில் சப்ளை கார்ப்பரேஷன்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உணவைப் பொறுத்தவரை, நம்மிடம் தேவையான அளவுக்கு தானியங்கள், உணவுப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் அனைத்தும் போதுமான அளவில் உள்ளன. எனவே, உணவுப் பொருட்களுக்கு எந்தவிதத் தட்டுப்பாடும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.</p><p>லண்டன் பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கம்யூனிஸ்ட் தலைவர் கூறியது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "ஒரு தொழில் முதலீட்டாளர் இங்கு வருகிறார் என்றால், அதற்கான இடம் வேண்டும். தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் இருக்க வேண்டும். போக்குவரத்து வசதி இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். தடையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும். வெளியில் இருந்து அறிக்கை கொடுப்பது ஈஸி; கேட்பதும் ஈஸி. செயல்படுத்திப் பாருங்கள்; அப்போதுதான் தெரியும்" என்று அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார்.</p><p>"நிலவரி உயர்த்தும் திட்டம் உள்ளதா" என செய்தியாளர்கள் கேட்டதற்கு, "தமிழ்நாட்டில் நிலவரி இல்லை. சட்டமன்றக் கூட்டத்தொடரில், முதலமைச்சரின் ஆணைப்படி, அவருடைய ஒப்புதலுடன் நிலவரி ரத்து செய்யப்பட்டுள்ளது. சுமார் ரூ.28 கோடி அளவிலான நிலவரி முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. நிலவரி என்பது விவசாயிகளுக்குத் தேவையில்லாதது' என அமைச்சர் பதிலளித்தார்.</p><p>அமைச்சர் செங்கோட்டையன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது திடீரென மின்தடை ஏற்பட்டது. உடனே பத்திரிகையாளர்கள் மொபைல் போனில் டார்ச் லைட் அடித்தனர். அந்த வெளிச்சத்தில் அமைச்சர் பேட்டி அளித்தார். பின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு மின்சாரம் வந்தது.</p>]]></content:encoded></item><item><title>பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் தேரோட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chariot-procession-at-the-pillaiyarpatti-karpaga-vinayagar-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chariot-procession-at-the-pillaiyarpatti-karpaga-vinayagar-temple#comments</comments><guid isPermaLink="false">06a1b6eb-7ff8-483e-89c9-a4b6fefcbdbe</guid><pubDate>Mon, 14 Sep 2026 06:59:04 +0000</pubDate><atom:updated>2026-09-14T06:59:04.203Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Festival,Therottam,தேரோட்டம்,விநாயகர் சதுர்த்தி விழா,Pillaiyarpatti Karpaga Vinayagar,பிள்ளையார்பட்டி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/jfhbg00j/Pillaiyarpatti-Therottam.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ தேரோட்டம்]]></media:title><media:description type="html"><![CDATA[ பிள்ளையார்பட்டி விநாயகர் சதுர்த்தி விழா, தேரோட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/jfhbg00j/Pillaiyarpatti-Therottam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பத்தூர், </p><p>விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து தேர் இழுத்தனர்.</p><h2>கற்பக விநாயகர் கோவில்</h2><p>சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் <a href="https://www.dailythanthi.com/topic/விநாயகர்-சதுர்த்தி-விழா">விநாயகர் சதுர்த்தி விழா</a> 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டின் சதுர்த்தி விழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.</p><p>விழாவையொட்டி நாள்தோறும் இரவு வாகன வீதி உலா நடைபெற்றது. மூஷிக வாகனம், சிம்ம வாகனம், பூத வாகனம், கமல வாகனம், ரிஷப வாகனம், மயில் வாகனம், குதிரை வாகனம் என தினமும் வெவ்வேறு வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் கஜமுக சூரசம்ஹாரமும் நடந்தது.</p><figure><img alt="பிள்ளையார்பட்டி விநாயகர் சதுர்த்தி விழா, தேரோட்டம்" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/dfvb0wrb/Pillaiyarpatti-Therottam2.jpg" /><figcaption>பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுத்த சண்டிகேஸ்வரர் தேர்.</figcaption></figure><h2>தேரோட்டம்</h2><p>விழாவின் 9-ம் நாளான நேற்று மாலை தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக கோவில் திருக்குளத்தின் முன்பு அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் கற்பகவிநாயகரும், சிறிய தேரில் சண்டிகேசுவரரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து தேரில் எழுந்தருளிய சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது.</p><p>தொடர்ந்து மாலை 5 மணிக்கு <a href="https://www.dailythanthi.com/topic/therottam">தேரோட்டம்</a> தொடங்கியது. பெரிய தேரை ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். பின்னால் வந்த சிறிய தேரான சண்டிகேஸ்வரர் தேரை பெண்கள் மட்டுமே இழுத்து வந்தனர். தேர் கோவிலை சுற்றி நான்கு ரத வீதி வழியாக வந்து நிலையை அடைந்தது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.</p><h2>சந்தனகாப்பு அலங்காரம்</h2><p>முன்னதாக ஆண்டிற்கு ஒரு முறை சந்தனகாப்பு அலங்காரத்தில் மூலவர் காட்சியளிக்கும் நிகழ்ச்சி நேற்று தேரோட்டத்துக்கு முன்பாக நடைபெற்றது. நேற்று மாலை 4.30 மணி முதல் மூலவருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் இரவு 10 மணி வரை பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கற்பகவிநாயகரை தரிசனம் செய்தனர்.</p><h2>விநாயகர் சதுர்த்தி</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE">விநாயகர் சதுர்த்தியான இன்று</a> (திங்கட்கிழமை) அதிகாலை கோவில் நடைதிறக்கப்பட்டு மூலவர் கற்பகவிநாயகர் தங்கஅங்கியில் எழுந்தருளி அருள்பாலித்தார். உற்சவர் தங்க மூஷிக வாகனத்தில் கோவில் திருக்குளத்தில் எழுந்தருள, அங்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து மதியம் உச்சிகால பூஜையின்போது மூலவர் கற்பகவிநாயகருக்கு முக்குறுணி கொழுக்கட்டை படைக்கப்பட்டது. இரவு பஞ்சமூர்த்தி சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியுடன் விழா நிறைவுபெறுகிறது.</p>]]></content:encoded></item><item><title>அநாகரிகமாக பேசும் திமுகவினரை மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் - திருமாவளவன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalin-must-reprimand-dmk-members-who-speak-uncivilly-thirumavalavan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalin-must-reprimand-dmk-members-who-speak-uncivilly-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">2aa61206-7fc4-4e66-8f9f-e8bca3e735ad</guid><pubDate>Mon, 14 Sep 2026 06:44:27 +0000</pubDate><atom:updated>2026-09-14T06:44:27.393Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,M.K.Stalin,திருமாவளவன்,Thirumavalavan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/jwo9k7w8/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/jwo9k7w8/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரையில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>இடைத்தேர்தலில் இடதுசாரிகள் தனித்துப் போட்டி என்றாலும் தவெக ஆட்சி தொடர ஆதரவு நீடிக்கும். இடதுசாரிகள் எடுத்துள்ள முடிவு அவர்களின் அரசியல் உரிமை. இடதுசாரிகள் இடைத்தேர்தலில் போட்டியிடுவதால் தவெக கூட்டணிக்கு பாதிப்பு இல்லை. இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து விசிக பிரசாரம் செய்யும்.</p><p>போராட்டத்தின்போது நாகரிக வரம்புகளை மீறி திமுகவினர் சிலர் அநாகரிகமாக பேசியுள்ளனர். ஈன்ற தாயைப் பழிக்கும் இழிச்சொற்களால் அரசியல் எதிரிகளை விமர்சிப்பது அழகல்ல; அமைச்சர் நிர்மல்குமாரின் தாயை பழிக்கும் வகையில் திமுக எம்.பி. ஆ.ராசா பேசியதை விசிக கண்டிக்கிறது. பக்குவப்படுத்தப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் கொச்சையாக பேசுவது கவலை அளிக்கிறது.</p><p>திமுகவினரின் அநாகரிகமான பேச்சு தவெகவிற்கு எதிராக போகும் என்பதைவிட, திமுகவிற்கு எதிராக மக்களிடத்திலே கருத்து பதிவாகும் என்பதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அநாகரிகமாக பேசும் திமுகவினரை வெளிப்படையாக, பொதுமக்கள் அறியக்கூடிய வகையில் மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தி திருநாள்: அண்ணாமலை வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-chaturthi-annamalai-wishes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-chaturthi-annamalai-wishes#comments</comments><guid isPermaLink="false">648efbd3-bdbf-4c3c-8bf3-e2ef38b7d2b8</guid><pubDate>Mon, 14 Sep 2026 05:58:18 +0000</pubDate><atom:updated>2026-09-14T05:58:18.276Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Annamalai,அண்ணாமலை,சென்னை,வாழ்த்து,Vinayagar Chaturthi,விநாயகர் சதுர்த்தி,best wishes</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/ddvxl6ka/330.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அண்ணாமலை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/ddvxl6ka/330.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு வி தி லீடர்ஸ் இயக்கத்தின் நிறுவனர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். </p><h2>வாழ்த்து</h2><p>இது தொடர்பாக, அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். விநாயகப் பெருமானின் அருளால், அனைவருக்கும் எண்ணிய காரியங்கள் அனைத்தும் இனிதே நிறைவேறட்டும். </p><p>வாழ்வில் வளமும், நலமும், மகிழ்ச்சியும் பெருகி, குடும்பத்தில் அன்பும் அமைதியும் என்றும் நிலைத்திருக்கட்டும். இனிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">விநாயகர் சதுர்த்தி</a> நல்வாழ்த்துக்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/inflow-to-mettur-dam-increases-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/inflow-to-mettur-dam-increases-2#comments</comments><guid isPermaLink="false">db83c84c-68ea-4676-996d-53fc9fcb5dfe</guid><pubDate>Mon, 14 Sep 2026 05:56:38 +0000</pubDate><atom:updated>2026-09-14T05:56:38.837Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur dam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/13w455x3/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/13w455x3/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு நேற்று முன்தினம் வினாடிக்கு 9 ஆயிரத்து 786 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதன்காரணமாக ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது.</p><p>இதன்காரணமாக ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தாலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.</p><p>இந்த நிலையில், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று 7 ஆயிரத்து 598 கனஅடியாக இருந்த நிலையில், இன்று காலை 10 மணி நிலவரப்படி 8,618 கன அடியாக அதிகரித்துள்ளது.  தற்போதைய நிலையில் அணைக்கு நீர்வரத்தானது தண்ணீர் திறப்பை விட குறைவாகவே இருப்பதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. அணையின் நீர்மட்டம் 88.21 அடியாக சரிந்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக 12000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ரூ.25 லட்சம் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர்!</title><link>https://www.dailythanthi.com/devotional/from-rs1-to-rs500-vinayagar-adorned-with-new-currency-notes</link><comments>https://www.dailythanthi.com/devotional/from-rs1-to-rs500-vinayagar-adorned-with-new-currency-notes#comments</comments><guid isPermaLink="false">05b8d872-6428-4330-91ee-2ec0f74709f2</guid><pubDate>Mon, 14 Sep 2026 05:51:18 +0000</pubDate><atom:updated>2026-09-14T05:51:18.606Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Kanchipuram,காஞ்சிபுரம்,விநாயகர் கோவில்,சிறப்பு அலங்காரம்,Vinayagar Chathurthi,புதிய ரூபாய் நோட்டுகள்,New currency notes</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/f33ez8cl/331.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விநாயகர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/f33ez8cl/331.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (Devotional)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>காஞ்சிபுரம்,</p><p>காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் சன்னதி தெருவில் ஸ்ரீ ஏலேல சிங்க விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 25-வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.</p><h2>அலங்காரம்</h2><p>இதையொட்டி, கோவில் சன்னதி முழுவதும் ரூ.1, ரூ.2, ரூ.5 மற்றும் ரூ.500 உள்ளிட்ட புதிய ரூபாய் நோட்டுகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மொத்தம் ரூ.25 லட்சம் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகள் இந்த அலங்காரத்திற்காக பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.</p><h2>தரிசனம்</h2><p>புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஏலேல சிங்க விநாயகர் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">சாமி தரிசனம்</a> செய்து வழிபட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>ஆம்னி பஸ்சில் 40 பவுன் நகைகள் கொள்ளை: மத்தியபிரதேசத்தில் பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளி கைது!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/40-sovereign-jewelry-stolen-from-omni-bus-main-culprit-hiding-in-madhya-pradesh-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/40-sovereign-jewelry-stolen-from-omni-bus-main-culprit-hiding-in-madhya-pradesh-arrested#comments</comments><guid isPermaLink="false">b1e40ac7-df4c-4475-9dac-09cb8ddb9f61</guid><pubDate>Mon, 14 Sep 2026 05:32:29 +0000</pubDate><atom:updated>2026-09-14T05:32:29.722Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,மத்தியபிரதேசம்,கைது,arrest,குற்றவாளி,jewelry,நகை,Madhya Pradesh:,பஸ் bus</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/kltvh9r1/329.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/kltvh9r1/329.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>நெல்லை மாவட்டம், பொதிகை நகரைச் சேர்ந்தவர் ஜஸ்டின் (வயது 56). இவருடைய மனைவி ஜூலியட். இவர் ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் 2 பேரும் சென்னையில் உள்ள மகன் வீட்டுக்கு செல்வதற்காக கடந்த மாதம் 27-ந் தேதி இரவில் நெல்லையில் இருந்து ஆம்னி பஸ்சில் புறப்பட்டு சென்றனர்.</p><h2>கொள்ளை</h2><p>அவர்கள் சுமார் 40 பவுன் தங்க நகைகளை கைப்பையில் வைத்திருந்தனர். அந்த பஸ், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சுங்கச்சாவடியை கடந்து கரிசல்குளம் விலக்கு அருகில் சென்ற போது, சாலையோர ஓட்டலில் பயணிகள் சாப்பிடுவதற்காக டிரைவர் பஸ்சை நிறுத்தினார்.</p><p>அப்போது அந்த கைப்பையை பஸ்சிலேயே வைத்து விட்டு ஜஸ்டினும், ஜூலியட்டும் உணவு சாப்பிட சென்றனர். சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது பஸ்சுக்குள் வைத்திருந்த கைப்பையில் இருந்த 40 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.</p><h2>தனிப்படை</h2><p>இதுகுறித்த புகாரின் பேரில் காயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பஸ்சில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் சம்பவ நேரத்தில் பதிவான செல்போன் தொடர்புகள் குறித்து ஆய்வு செய்தனர். அதில், நகை திருட்டில் ஈடுபட்டவர்கள் மத்தியபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின்படியும், கோவில்பட்டி உதவி போலீஸ் சூப்பிரண்டு நீல் சர்மா ஆலோசனையின் படியும், கோவில்பட்டி மேற்கு இன்ஸ்பெக்டர் வானமாமலை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.</p><h2>கைது</h2><p>இந்த தனிப்படை போலீசார் மத்தியபிரதேசத்துக்கு சென்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் முக்கிய குற்றவாளியான மக்சூத் கான் (35) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 40 பவுன் தங்க நகைகளும் பத்திரமாக மீட்கப்பட்டன. ஆனால் இந்த நகை கொள்ளையில் தொடர்புடைய அவரது கூட்டாளிகளான ரபிக் (40), கடுக்கான் என்ற முகதின் கான் ஆகிய 2 பேர் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. </p><p>இதையடுத்து மக்சூத்கானை தனிப்படை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார் </a>கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்திற்கு நேற்று அழைத்து வந்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தப்பி ஓடிய கூட்டாளிகள் 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தங்கம் விலை சற்று குறைந்தது... இன்றைய நிலவரம் என்ன..?</title><link>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-dips-slightly-todays-rates</link><comments>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-dips-slightly-todays-rates#comments</comments><guid isPermaLink="false">7681ca2e-ecd2-4e6c-84a6-99d2ee2a5b05</guid><pubDate>Mon, 14 Sep 2026 04:27:08 +0000</pubDate><atom:updated>2026-09-14T04:27:08.066Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Gold Rate,தங்கம் விலை,வெள்ளி விலை,Silver rate,Gold Price,Silver Price,விலை நிலவரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/4pr9our9/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/4pr9our9/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தங்கம் (Gold Rate)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.1,13,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.15 உயர்ந்து 14,170-க்கு விற்பனை செய்யப்பட்டது.</p><p>இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.360 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.45 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,125-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>தேசிய அளவில் மு.க.ஸ்டாலின் தலைமையில் 3-வது அணியை உருவாக்க திமுக முயற்சி..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-attempts-to-form-a-third-front-at-the-national-level-under-the-leadership-of-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-attempts-to-form-a-third-front-at-the-national-level-under-the-leadership-of-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">6db676c6-7139-4dcc-bdeb-600f3ae95347</guid><pubDate>Mon, 14 Sep 2026 04:00:43 +0000</pubDate><atom:updated>2026-09-14T04:00:43.845Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,M.K.Stalin,கனிமொழி எம்.பி.,Kanimozhi MP,உத்தவ் தாக்கரே,Uddav Thackeray</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/h2nvwkpq/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/h2nvwkpq/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாடாளுமன்ற மக்களவையில் தொகுதி மறுவரையறை மற்றும் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பு திருத்த மசோதா தோல்வியடைந்தது. இதனை தொடர்ந்து, 'இந்தியா' கூட்டணியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விவாதிக்க தி.மு.க. நாடாளுமன்ற குழுத்தலைவரும், எம்.பி.யுமான கனிமொழி, மும்பை பந்திராவில் உள்ள உத்தவ் தாக்கரேவின் 'மாதோஸ்ரீ' இல்லத்திற்கு நேற்று முன்தினம் சென்றார். </p><p>இல்லத்திற்கு வந்த கனிமொழி எம்.பி.யை உத்தவ் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேரில் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். இந்த சந்திப்பின் போது உத்தவ் சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனில் தேசாய் மற்றும் மிலிந்த் நர்வேக்கர் ஆகியோரும் உடன் இருந்தனர். இந்த சந்திப்பின்போது, நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா குறித்தும், அது தொடர்பாக இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலைப்பாடு என்ன என்பது குறித்தும் இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர். </p><p>மேலும், 'இந்தியா' கூட்டணியில் உள்ள பிராந்திய மற்றும் சிறிய கட்சிகளின் முக்கியத்துவம் மற்றும் வர விருக்கும் அரசியல் சவால்களில் அவர்களின் பங்கு உள்பட பல்வேறு இதர முக்கிய விஷயங்கள் குறித்தும் இந்த சந்திப்பில் ஒரு மணிநேரம் ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து சரத்பவார் மற்றும் அவரது மகளும் லோக்சபா எம்.பி.யுமான சுப்ரியா சுலே ஆகியோரை டெல்லியில் கனிமொழி சந்தித்து பேசினார்.</p><p>'இந்தியா' கூட்டணியில், காங்கிரசுடன் முரண்பாட்டில் உள்ள மாநில கட் சிகளை ஒன்றிணைத்து, தேசிய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை உருவாக்க திமுக திட்டமிட்டிருப்பதற்கு இந்த சந்திப்புகள், அச்சாரம் என்று கூறப்படுகிறது.</p><p><strong>இதுகுறித்து திமுக நிர்வாகிகள் கூறியதாவது:-</strong></p><p>உத்தவ் தாக்கரேவை, கனிமொழி சந்தித்தபோது, தென் மாநிலங்களை பாதிக்கும் தொகுதி மறுசீரமைப்பு பிரச்சினை குறித்தும் அதற்கு எதிராக மாநில கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவது குறித்தும் கனிமொழி விவாதித்து உள்ளார். மேலும், தேசிய அளவில் மூன்றாவது அணியை உருவாக்குவது குறித்தும் பேசியுள்ளார். சென்னையில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நடந்த தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்றது; திமுக, புறக்கணித்தது.</p><p>இதேபோல, மராட்டியத்தில், காங்கிரசுடன் உத்தவ் தாக்கரேக்கு கருத்து வேறுபாடு உருவாகி உள்ளது. இந்த சூழலில், மூன்றாவது அணியை உருவாக்க, மாநில கட்சிகளின் தலைவர்களை அடுத்தடுத்து சந்திக்க கனிமொழி திட்டமிட்டுள்ளார். அடுத்தகட்டமாக, ஆம்-ஆத்மி கட்சியை சேர்ந்தவரான பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவையும் கனிமொழி சந்திக்க உள்ளார்.</p><p>மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிந்ததும் மேற்கு வங்காள முன்னாள் முதல்-மந்திரி மம்தா பானர்ஜியையும் கனிமொழி சந்தித்து, தேசிய அளவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுவார். இவ்வாறு அவர்கள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை பெண்ணிடம் 26 பவுன் நகை கொள்ளை:  ரெயிலில் தம்பதி கைவரிசை; 2 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-woman-robbed-of-26-pounds-of-jewellery-couple-arrested-on-train-police-recover-it-in-2-hours</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-woman-robbed-of-26-pounds-of-jewellery-couple-arrested-on-train-police-recover-it-in-2-hours#comments</comments><guid isPermaLink="false">58f8832f-8596-4fe2-b7ec-6f42f95a852c</guid><pubDate>Mon, 14 Sep 2026 03:46:33 +0000</pubDate><atom:updated>2026-09-14T03:46:33.753Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,jewellery,நகை கொள்ளை,சென்னை பெண்,robbed</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/ulevsda2/cwirt.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ai image]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/ulevsda2/cwirt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>மதுரை</p><p>ரெயிலில் சென்னை பெண்ணிடம் கொள்ளை போன 26 பவுன் நகையை, தம்பதியிடம் இருந்து 2 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்.</p><p><a href="https://www.dailythanthi.com/">சென்னை</a> தாம்பரம் இரும்புலியூர் பாரதிதாசன் தெருவை சேர்ந்த சேது மனைவி மகாதேவி. இவர் தாம்பரம்-மதுரை கூடல் எக்ஸ்பிரசில் மானாமதுரை செல்வதற்காக சென்னையில் இருந்து வந்துள்ளார். இதற்காக சாதாரண டிக்கெட்டில் ரெயில் என்ஜினுக்கு அடுத்த பொதுப்பெட்டியில் பயணம் செய்தார்.</p> <h2>26 பவுன் நகைகள்</h2><p>இதற்கிடையே அவர் கொண்டு வந்த சுமார் 26 பவுன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் வைத்திருந்த பையை காணவில்லை என்று கூடல்நகர் ரெயில்வே ஸ்டேசன் மாஸ்டரிடம் தெரிவித்துள்ளார்.  தொடர்ந்து கூடல்நகர் ஸ்டேசன் மாஸ்டர் இதுகுறித்து மதுரை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.</p><p>ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் ஏட்டு சத்தியமூர்த்தி ரெயில் மதுரை வந்தவுடன், குறிப்பிட்ட பெட்டியில் ஏறி சோதனை செய்தபோது நகைப்பை எதுவும் கிடைக்கவில்லை. பின்னர் மதுரை ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, வயதான தம்பதி மகாதேவியின் பையுடன் சென்னை-கன்னியாகுமரி சிறப்பு ரெயிலின் பொதுப்பெட்டியில் ஏறியது தெரியவந்தது.</p> <h2>2 மணி நேரத்தில் மீட்பு</h2><p>உடனடியாக விருதுநகர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சுடலை, ஏட்டு முருகன் மற்றும் தமிழக ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் ரெயில் விருதுநகர் ரெயில் நிலையத்தை கடந்து விட்டது. பின்னர் விருதுநகர் ரெயில் நிலைய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அங்குள்ள ஆட்டோ டிரைவர்களிடம் விசாரணை நடத்தினர்.</p><p>அதில், சந்தேகத்துக்கு இடமான தம்பதி ஆட்டோவில் விருதுநகர் பஸ் நிலையம் சென்றது தெரியவந்தது.  உடனடியாக ரெயில்வே போலீசார் விருதுநகர் பஸ் நிலையம் சென்றனர். அப்போது அங்கு நின்றிருந்த வயதான தம்பதியை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் சென்னை வண்ணாரப்பேட்டை ஜெ.ஜெ.நகரை சேர்ந்த காளியப்பன் (66), அவரது மனைவி சோலையம்மாள் (62) என்பதும், மகாதேவியின் நகைப்பையை திருடியதும் தெரியவந்தது.</p><p>அவர்களிடம் இருந்து நகை மற்றும் ரொக்கப்பணம் வைத்திருந்த பையை போலீசார் 2 மணி நேரத்தில் மீட்டனர். இதுதொடர்பாக மதுரை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பதியை கைது செய்து மதுரை 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ஆனால், வயது முதிர்வு காரணமாக அவர்கள் 2 பேரையும் நீதிபதி ஜாமீனில் விடுவித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை: அரசு பஸ்களில் 2.31 லட்சம் பேர் பயணம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-chaturthi-series-holiday-231-lakh-people-travel-in-government-buses</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-chaturthi-series-holiday-231-lakh-people-travel-in-government-buses#comments</comments><guid isPermaLink="false">c3a36a2a-e02d-4da4-bb03-b3cca53a3171</guid><pubDate>Mon, 14 Sep 2026 03:32:39 +0000</pubDate><atom:updated>2026-09-14T03:32:39.496Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Government bus,Holiday,சிறப்பு பஸ்,பயணம்,Vinayagar Chaturthi,விநாயகர் சதுர்த்தி,தொடர் விடுமுறையையொட்டி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/m1woloha/327.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பயணம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/m1woloha/327.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையையொட்டி, சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசு பஸ்களில் 11, 12-ந்தேதிகளில் 2 லட்சத்து 31 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர்.</p><h2>சிறப்பு பஸ்</h2><p>தொடர் விடுமுறை முடிந்து 14 மற்றும் 16-ந் தேதிகளில் சென்னை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, பயணிகள் சிரமமின்றி சென்னை திரும்பும் வகையில் 14-ந்தேதி 2,240 சிறப்பு பஸ்களும், 15-ந்தேதி 1,325 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 3,565 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.</p><p>மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் வரும் பயணிகள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்லும் வகையில், மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">போக்குவரத்துத்துறை</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நாகர்கோவில்- தாம்பரம் இடையே இன்று இரவு சிறப்பு ரெயில் இயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-to-run-between-nagercoil-and-tambaram-tonight</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-to-run-between-nagercoil-and-tambaram-tonight#comments</comments><guid isPermaLink="false">2d8ee6e5-8745-439f-9ee8-58d6c25b499d</guid><pubDate>Mon, 14 Sep 2026 03:26:04 +0000</pubDate><atom:updated>2026-09-14T03:26:04.460Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,Nagercoil,Tambaram,தாம்பரம்,நாகர்கோவில்,Special train</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/51b1gtqd/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/51b1gtqd/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையையொட்டி பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் தென்னக ரெயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்து உள்ளது. அதன்படி நாகர்கோவி லில் இருந்து தாம்பரத்துக்கு ஒருவழி அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண் 06050) இன்று (திங்கட்கிழமை) இயக்கப்படுகிறது. </p><p>இந்த ரெயில் இன்று (திங்கட்கிழமை) இரவு 11 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படுகிறது. வள்ளியூருக்கு 11.30 மணி, நெல்லைக்கு நள்ளிரவு 12.15 மணி, கோவில்பட் டிக்கு 1.03 மணிக்கு வந்து செல்கிறது. </p><p>தொடர்ந்து இந்த ரெயில் சாத்தூர், விருதுநகர், அருப்புக் கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி. ஸ்ரீரெங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப் புரம், செங்கல்பட்டு ஆகிய நிலையங்களில் நின்று செல்கிறது.</p><p>இதில் 15 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 3 சேர் கார் பெட்டிகள், 2 லக்கேஜ் பொது பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இதற்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தி திருநாள்: எல். முருகன் வாழ்த்து!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-chaturthi-l-murugan-extends-his-greetings</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-chaturthi-l-murugan-extends-his-greetings#comments</comments><guid isPermaLink="false">671ac83a-7675-4997-bf7d-d9fe698c57fb</guid><pubDate>Mon, 14 Sep 2026 02:34:39 +0000</pubDate><atom:updated>2026-09-14T02:34:39.680Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,L. Murugan,Greetings,வாழ்த்து,விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi - விநாயகர் சதுர்த்தி,எல். முருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/zpii42rs/326.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எல். முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/zpii42rs/326.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு மத்திய இணை மந்திரி எல். முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து எல். முருகன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>வாழ்த்து</h2><p>இன்று விநாயகர் சதுர்த்தி திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாடு முழுவதும் பக்தி மற்றும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் இந்நன்னாளில், முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை மனமுருகி வழிபடுவோம்.</p><p>நாடி வருவோரின் வினைகள் தீர்த்து, தடைகளை நீக்கி, அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, வளம் மற்றும் வெற்றியை விநாயகப் பெருமான் அருளிட பிரார்த்திக்கிறேன். <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">விநாயகர் சதுர்த்தி</a> நல்வாழ்த்துகள்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விநாயகப் பெருமானின் அருளால் மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும்: முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/may-happiness-and-prosperity-grow-by-lord-vinayakas-grace-cm-vijays-greetings</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/may-happiness-and-prosperity-grow-by-lord-vinayakas-grace-cm-vijays-greetings#comments</comments><guid isPermaLink="false">ea6f29ff-0218-4bb5-99f2-c1b0a3b2f2ff</guid><pubDate>Mon, 14 Sep 2026 02:28:05 +0000</pubDate><atom:updated>2026-09-14T02:28:05.740Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Greetings,வாழ்த்து,விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chathurthi,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/7gtyc6px/Untitled-4.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/7gtyc6px/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விநாயகர் பெருமானின் அவதார திருநாளான விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.</p><p>இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "விநாயகர் சதுர்த்தி திருநாளில், அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இத்திருநாளில் தொடங்கும் அனைத்து நற்செயல்களும் விநாயகப் பெருமானின் அருளால் இனிதே நிறைவேறி, புதிய நம்பிக்கைகள் மலர்ந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பெருகட்டும்! மக்களின் எண்ணங்கள் ஈடேறி, அனைத்து முயற்சிகளும் வெற்றியின் பாதையில் பயணிக்கட்டும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">விநாயகர் சதுர்த்தி திருநாளில், அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். <br><br>இத்திருநாளில் தொடங்கும் அனைத்து நற்செயல்களும் விநாயகப் பெருமானின் அருளால் இனிதே நிறைவேறி, புதிய நம்பிக்கைகள் மலர்ந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும்…</p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2099317519693799546?ref_src=twsrc%5Etfw">September 14, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>
முதல்முறையாக திருட முயன்று சிக்கி... போலீசிடம் அதிர்ச்சிகர காரணம் கூறிய சாப்ட்வேர் என்ஜினீயர்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/for-the-first-time-he-tried-to-steal-and-got-caught-the-shocking-reason-given-to-the-police-by-the-software-engineer</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/for-the-first-time-he-tried-to-steal-and-got-caught-the-shocking-reason-given-to-the-police-by-the-software-engineer#comments</comments><guid isPermaLink="false">b5dc7c20-694c-4540-9f8b-b60a9af474f1</guid><pubDate>Mon, 14 Sep 2026 02:04:33 +0000</pubDate><atom:updated>2026-09-14T02:04:33.717Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>என்ஜினீயர்,Engineer,அடகு கடை,pawn shop</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/1dng7zgc/setps.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ai image]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/1dng7zgc/setps.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>முதல்முறையாக திருட முயன்று சிக்கிய சாப்ட்வேர் என்ஜினீயர் போலீசிடம் அதிர்ச்சி அளிக்கும் காரணம் ஒன்றை கூறியுள்ளார்.</p><p>சென்னை திருவான்மியூர், கெனால் சாலை பகுதியில் வசிப்பவர் மங்கள்சந்த் (வயது 63). இவர், சென்னை இந்திராநகர் 17-வது குறுக்குத்தெருவில் நகை அடகு கடையை நடத்தி வருகிறார். கடந்த 11-ந்தேதி இவரது கடைக்கு அருகில் வசிப்பவர்கள், அதிர்ச்சி தகவல் ஒன்றை செல்போன் மூலம் பேசி தெரிவித்தனர். அடகு கடையின் பூட்டை, மர்மநபர் ஒருவர் உடைத்து கொண்டிருப்பதாக அந்த தகவலில் கூறினார்கள்.</p><p>உடனடியாக மங்கள்சந்த், தனது கடைக்கு ஓடிவந்தார். அக்கம் பக்கத்து பொதுமக்களையும் உதவிக்கு அழைத்தார். அனைவரும் அங்கு கூடினார்கள். கூட்டத்தை பார்த்ததும், அடகு கடையின் பூட்டை உடைத்துக்கொண்டிருந்த மர்ம நபர் தப்பி ஓடினார். அவரை மடக்கி பிடித்து திருவான்மியூர் போலீசில் ஒப்படைத்தனர்.</p>  <h2>சாப்ட்வேர் என்ஜினீயர்</h2><p>போலீசார் அந்த மர்ம நபரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவரது பெயர் ஸ்ரீராம் ஸ்ரீனு பாபு (வயது 25) என்று தெரியவந்தது. ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த அவர், 'சாப்ட்வேர்' என்ஜினீயர் ஆவார். சென்னை பெருங்குடியில், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அங்கேயே வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார்.</p>  <h2>ரூ.25 ஆயிரம் சம்பளம்</h2><p>அடகு கடையை உடைத்து திருட முயற்சித்தது ஏன்? என்று போலீசார் அவரிடம் கேட்டபோது, அவர் சொன்ன தகவல் போலீசாருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. 'கம்ப்யூட்டர்' நிறுவன வேலையில் மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் கிடைப்பதாகவும், 'ஆன்லைன்' முதலீட்டில் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டதால், கடனில் சிக்கியுள்ளதாகவும், கடனை அடைப்பதற்காக திருட்டு தொழிலில் இறங்கியதாகவும் அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.</p><p>முதல்முறையாக திருட்டை செய்ததால், போதிய அனுபவம் இல்லாமல் மாட்டிக்கொண்டதாகவும் அவர் போலீஸ் விசாரணையில் கூறினார். நீதிமன்ற காவலில் அவர் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>11 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-till-10-am-in-11-districts</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-till-10-am-in-11-districts#comments</comments><guid isPermaLink="false">4bc281bf-fb9c-4731-b38a-c35db7e85d2a</guid><pubDate>Mon, 14 Sep 2026 02:02:29 +0000</pubDate><atom:updated>2026-09-14T02:02:29.158Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/h4ftqk0g/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/h4ftqk0g/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுமார் 1.5 கி.மீ. உயரம் வரை தென்மேற்கு மத்தியப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு விதர்பா பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து மன்னார் வளைகுடா வரை மராத்வாடா, வடக்கு உள் கர்நாடகா, ராயலசீமா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தி திருநாள்: மாணிக்கம் தாகூர் வாழ்த்து!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-chaturthi-manickam-tagore-extends-his-greetings</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-chaturthi-manickam-tagore-extends-his-greetings#comments</comments><guid isPermaLink="false">5dd439b4-53ce-4d46-8bcb-12ed189e0908</guid><pubDate>Mon, 14 Sep 2026 01:59:43 +0000</pubDate><atom:updated>2026-09-14T01:59:43.299Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,வாழ்த்து,greeting,மாணிக்கம் தாகூர்,Vinayagar Chaturthi,விநாயகர் சதுர்த்தி,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/op9tztb8/325.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/op9tztb8/325.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விநாயகர் சதுர்த்தி திருநாள் மாணிக்கம் தாகூர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>வாழ்த்து</h2><p>இடையூறுகளை நீக்கி, ஞானத்தையும் செல்வத்தையும் அருளும் விநாயகப் பெருமான், தமிழக மக்கள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், வெற்றியையும் வழங்க வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.</p><p>அனைவருக்கும் இனிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">விநாயகர் சதுர்த்தி</a> நல்வாழ்த்துக்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அம்மாபேட்டை பகுதியில் சூறைக்காற்றுடன் மழை: 10 ஆயிரம் வாழைகள் சேதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rain-accompanied-by-gale-force-winds-in-the-ammapettai-area-10000-banana-plants-damaged</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rain-accompanied-by-gale-force-winds-in-the-ammapettai-area-10000-banana-plants-damaged#comments</comments><guid isPermaLink="false">b959532a-0154-4c40-8735-f3ff32c4f1f5</guid><pubDate>Mon, 14 Sep 2026 01:53:18 +0000</pubDate><atom:updated>2026-09-14T01:53:18.942Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஈரோடு,Banana plantation-வாழை தோட்டம்,சேதம்,வாழைகள்,சூறைக்காற்றுடன் மழை,Ammapettai,Heavy winds</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/5g4vdid8/324.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வாழைகள் சேதம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/5g4vdid8/324.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>அம்மாபேட்டை, </p><p>ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலையில் இருந்து நள்ளிரவு வரை சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக அம்மாபேட்டை அடுத்த பூதப்பாடி கிராமம் அண்ணா நகர், பூனாச்சி, கெம்மியம் பட்டி, பட்லூர், முளியனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வாழைத்தோட்டங்கள் உள்ளன. </p><h2>வாழை மரங்கள்</h2><p>சூறைக்காற்று வீசியபோது மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த செந்தில்குமார் (வயது 43), வேலுச்சாமி(73), காவிரி(76), பரிமளா(56), மூர்த்தி(62), பூனாச்சி ஈசன் உள்பட பல்வேறு விவசாயிகளின் தோட்டங்களில் இருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.</p><p>இதுகுறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறியதாவது:-</p><p>7 மாதங்கள் வளர்ந்திருந்த நேந்திரன் வாழைகள் குலை தள்ளும் நிலையில் இருந்தன. உரம், மருந்து, தொழிலாளர்களின் கூலி என அதிக தொகை சாகுபடிக்கு செலவு செய்துள்ளோம். இந்த நிலையில் நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">வாழைகள்</a> அடியோடு சாய்ந்து நாசமாகின. இதனால் எங்களுக்கு சுமார் ரூ.50 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.</p><p>இவ்வாறு அவர்கள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக கோவில்களுக்கு 5 யானைகள்: அசாமில் இருந்து கொண்டு வரப்படுகின்றன</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/5-elephants-for-tamil-nadu-temples-being-brought-from-assam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/5-elephants-for-tamil-nadu-temples-being-brought-from-assam#comments</comments><guid isPermaLink="false">4aae26e9-6e6a-4712-b7cc-235e1d0cf3d9</guid><pubDate>Mon, 14 Sep 2026 01:52:49 +0000</pubDate><atom:updated>2026-09-14T01:52:49.902Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,அசாம்,Assam,யானை,கோவில் யானை,Elephants,Temple Elephant</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/pdo94b0e/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/pdo94b0e/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அசாமில் இருந்து தமிழக கோவில்களுக்கு 5 யானைகள் கொண்டு வரப்படுகின்றன. அதன்படி துர்கா, ஹிராலால், சிவா, ரூப்சிங் மற்றும் பிஜூலி ஆகிய 5 யானைகளை அசாமில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வர வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>இதுகுறித்து தலைமை வனவிலங்கு காப்பாளரிடம் கேட்டபோது, யானைகளின் உரிமையாளர் மற்றும் பிற ஆவணங்கள் போன்றவை அசாம் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், யானைகளை இடமாற்றம் செய்வதற்கான 2024-ம் ஆண்டு விதிகளின்படி இந்த இடமாற்றம் நடைபெறுவதாக வனத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.</p><p>ஆனால் அதிலும் ஒரு சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. துர்கா என்ற 5 வயது யானைக்கான ஆய்வு மற்றும் இடமாற்றம் குறித்த பரிந்துரை, ஒரே நாளில் முடிக்கப்பட்டது குறித்து எல்சா அறக்கட்டளையை சேர்ந்த பிரகாஷ் சாஷா கேள்வி எழுப்பியுள் ளார். செப்டம்பர் 4-ந் தேதி மதியம் 1.30 மணிக்கு ஆய்வு தொடங்கப்பட்டு, அதே நாள் இரவு 9 மணிக்கு இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>இந்த நிலையில் துர்கா யானை 3 ஆயிரம் கி.மீ. பயணத்தை மேற்கொண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இன்று வரவுள்ளதாக தெரிகிறது. இது அசாம் மாநிலத்தை சேர்ந்த புன்யா பெகு என்பவருக்கு சொந்தமான யானையாகும்.</p>]]></content:encoded></item><item><title>சட்டத்தை இயற்றும் இடத்தில் பெண்கள்</title><link>https://www.dailythanthi.com/others/thalayangam/women-in-law-making-bodies</link><comments>https://www.dailythanthi.com/others/thalayangam/women-in-law-making-bodies#comments</comments><guid isPermaLink="false">7ea322da-802c-4689-a0d8-1f6711054d4e</guid><pubDate>Mon, 14 Sep 2026 01:39:36 +0000</pubDate><atom:updated>2026-09-14T01:39:36.039Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தலையங்கம்,Thalayangam,தமிழக சட்டசபை,TN Assembly,Reservation,இட ஒதுக்கீடு,தீர்மானம்,ஜெயலலிதா,Jayalalitha</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/l1oqpsw1/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/l1oqpsw1/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலையங்கம் (Thalayangam)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்தியாவிலேயே பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் தமிழ்நாடுதான் முன்னோடி. முதலில் அரசுப் பணிகளில் கலைஞர் கருணாநிதி 1989-ல் 30 சதவீத இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார். அதனை 2021-ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் 40 சதவீதமாக உயர்த்தினார். அதுபோல, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்யும் சட்டத்தை 1994-ம் ஆண்டு ஜெயலலிதா கொண்டு வந்தார். அதனை கலைஞர் கருணாநிதி, 1996-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் நடைமுறைப்படுத்தினார். பின்னர், 2016-ம் ஆண்டு ஜெயலலிதா அதனை 50 சதவீதமாக உயர்த்தினார். ஆனால், சட்டங்களை இயற்றும் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்றுவதில் பல முட்டுக்கட்டைகள் இருக்கின்றன.</p><p>தமிழக சட்டசபை வரலாற்றிலேயே 1991-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த காலத்தில்தான் அதிகபட்சமாக 32 பெண் எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். இதில் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் மட்டுமே 27 பேர். அந்தச் சமயத்தில் ராதாபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த ரமணி நல்லதம்பி, ஜெயலலிதாவிடம், "பெண் உறுப்பினர்களான நாம் அனைவரும் ஒரே நிறச் சேலை அணிந்தால் நன்றாக இருக்குமே" என்று கூறினார். அவ்வளவுதான்! ஜெயலலிதா அடுத்த நாளே அனைத்துப் பெண் உறுப்பினர்களுக்கும் பச்சை நிறச் சேலைகளை வாங்கிக் கொடுத்தார். இதையடுத்து, கவர்னர் மாளிகையில் நடந்த ஒரு விழாவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்பட அனைத்துப் பெண் உறுப்பினர்களும் பச்சைச் சேலை அணிந்து வந்தது வரலாற்றில் முக்கியப் பதிவாக அமைந்தது.</p><p>தற்போதைய சட்டசபையில் த.வெ.க.வைச் சேர்ந்த 13 பேர், அ.தி.மு.க.வைச் சேர்ந்த 6 பேர் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 4 பேர் என மொத்தம் 23 பெண்கள் எம்.எல்.ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால், இதில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த 2 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்துவிட்டனர். தி.மு.க.வில் இருந்து ஒரு பெண் உறுப்பினர் கூட இல்லை. தமிழக அமைச்சரவையை எடுத்துக்கொண்டால், இதுவரை இல்லாத அளவுக்கு 4 பெண் அமைச்சர்கள் இருந்தாலும், மொத்தமுள்ள 35 அமைச்சர்களில் இது வெறும் 11.43 சதவீதம் மட்டுமே. ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் மத்திய, மாநில அமைச்சர்களாக 679 பேர் இருக்கும் நிலையில், அதில் 66 பேர் மட்டுமே பெண் அமைச்சர்கள். அதாவது, 10 அமைச்சர்களுக்கு ஒரு பெண் அமைச்சர் என்ற அளவில்தான் உள்ளனர்.</p><p>இந்தக் கணக்குகளையெல்லாம் பார்த்துத்தான் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை அனைவரும் வலியுறுத்துகிறார்கள். இந்தக் கருத்தை வலியுறுத்தி, முதல்-அமைச்சர் விஜய் தமிழக சட்டசபையில் அரசின் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். அது அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது. மொத்த வாக்காளர்களில் 49 சதவீதம் பெண் வாக்காளர்களாக இருக்கும் நிலையில், சட்டம் வந்தால்தான் பெண்களின் எண்ணிக்கை உயர வேண்டும் என்பதில்லை.</p><p>சட்டம் இல்லாமலேயே 1991-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜெயலலிதா தனது கட்சி சார்பில் பெண்களுக்கு வாய்ப்பளித்து, 27 பேரை வெற்றி பெறச் செய்ததை அனைத்துக் கட்சிகளும் பின்பற்றினால், "சட்டங்கள் செய்வதும், பட்டங்கள் ஆள்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்" என்று பெண்கள் ஆனந்தக் கும்மி அடிக்க முடியும்.</p>]]></content:encoded></item><item><title>தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்ப 4 ஆயிரத்து 95 சிறப்பு பஸ்கள் இயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/4095-special-buses-operated-for-the-return-to-chennai-after-the-long-holiday</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/4095-special-buses-operated-for-the-return-to-chennai-after-the-long-holiday#comments</comments><guid isPermaLink="false">9f06ae3e-cebf-4b2e-8ece-6e023e453233</guid><pubDate>Mon, 14 Sep 2026 01:21:49 +0000</pubDate><atom:updated>2026-09-14T01:21:49.136Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Special Bus,சிறப்பு பஸ்,விநாயகர் சதுர்த்தி,TNSTC,Vinayagar Chathurthi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/u87qoeu4/CHENNAI-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/u87qoeu4/CHENNAI-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-</p><p>விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கடந்த 11 மற்றும் 12-தேதிகளில் அரசு போக்குவரத்து கழக பஸ்களின் மூலமாக சுமார் 2 லட்சத்து 31 ஆயிரத்து 450 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். தொடர் விடுமுறை முடிந்து 14 மற்றும் 15-ந் தேதிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் சென்னை திரும்புவார்கள் என எதிர்பார்க் கப்படுகிறது.</p><p>இதனைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி சென்னை திரும்புவதற்காக, வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 14-ந் தேதி (இன்று) 2,240 சிறப்புப் பஸ்கள் (திருச்சி- 255, மதுரை மற்றும் திண்டுக்கல்-300, சேலம்-200, கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் வேலூர்-195, கோயம்புத்தூர்-50, திருநெல்வேலி-50, நாகர்கோவில்-50, தூத்துக்குடி-50, தென்காசி-50, கும்பகோணம்-225, திருவண்ணாமலை-325 விழுப்புரம்-185 மற்றும் இதர ஊர்களிலிருந்து 305) இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>அதே போன்று, 15-ந் தேதி (நாளை) 1,325 சிறப்புப் பஸ்கள் (திருச்சி-105, மதுரை மற்றும் திண்டுக்கல்-75, சேலம்-75, கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் வேலூர்-200, கோயம்புத்தூர்-20, திருநெல்வேலி-10, நாகர்கோவில்-10, தூத்துக்குடி-15, தென்காசி-10, கும்பகோணம் 125, திருவண்ணாமலை-175 விழுப்புரம்-85 மற்றும் இதர ஊர்களிலிருந்து -420) என கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு மட்டும் மொத்தம் 3 ஆயிரத்து 565 சிறப்புப் பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>மேலும், மாதவரம் பேருந்து நிலையத்திற்கு 160 சிறப்பு பஸ்களும், கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு 370 சிறப்பு பஸ்களும் என ஒட்டுமொத் தமாக 4,095 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள், அங்கிருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு எளிதாகவும் விரைவாகவும் செல்லும் வகையில் மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><p>அதன்படி, கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு 14-ந் தேதி மாலை மற்றும் இரவு நேரங்களில் 50 சிறப்புப் பஸ்கள் மூலம் 400 கூடுதல் பயண நடைகளும், 15-ந் தேதி அதிகாலை முதல் மேலும் 150 கூடுதல் பயண நடைகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று, சென்னை சென்டிரல், எழும்பூர் மற்றும் தாம்பரம் ரெயில் நிலையங்களிலிருந்தும் சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளுக்கு கூடுதல் மாநகரப் பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.dailythanthi.com/business/todays-petrol-and-diesel-prices-in-chennai-57</link><comments>https://www.dailythanthi.com/business/todays-petrol-and-diesel-prices-in-chennai-57#comments</comments><guid isPermaLink="false">ddeea39b-c27c-4db9-bd75-a8001efe76f9</guid><pubDate>Mon, 14 Sep 2026 00:56:26 +0000</pubDate><atom:updated>2026-09-14T00:56:26.269Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,diesel,டீசல்,Price,Petrol - பெட்ரோல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/4106vgnr/441.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல், டீசல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/4106vgnr/441.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.</p><h2>பெட்ரோல், டீசல் விலை</h2><p>இந்நிலையில், சென்னையில் இன்று (14.09.2026 திங்கட்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.76-க்கும், டீசல் ரூ. 99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.97.50 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/election-flying-squad-officers-conduct-intensive-vehicle-checks-in-maduranthakam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/election-flying-squad-officers-conduct-intensive-vehicle-checks-in-maduranthakam#comments</comments><guid isPermaLink="false">15a7849d-99b1-46bc-bab6-da38c101cf1a</guid><pubDate>Mon, 14 Sep 2026 00:14:50 +0000</pubDate><atom:updated>2026-09-14T00:14:50.532Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இடைத்தேர்தல்,மதுராந்தகம்,தேர்தல் பறக்கும் படை,byelection</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/ddqq5hw3/police33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[  தேர்தல் பறக்கும் படை]]></media:title><media:description type="html"><![CDATA[ அதிகாரிகள் தீவிர வாகன சோதனை
]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/ddqq5hw3/police33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுராந்தகம்,</p><p>மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். அப்போது கார்களில் பொருத்தப்பட்டு இருந்த கட்சி கொடிகளை அகற்றினர்.</p><p>செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 6-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரண மாக மதுராந்தகம் தொகுதியில் சுவரொட்டிகள், பேனர்கள், சுவர் விளம்ப ரங்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டு வருகின்றன. மேலும், கட்சி கொடி கள் மற்றும் கொடிகம்பங்களும் அகற்றப்பட்டுள்ளன.</p><p>தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்படுவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><h2>வாகனங்களில் சோதனை</h2><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">மதுராந்தகம்</a> பகுதிக்குள் நுழையும் கார். வேன் உள்ளிட்ட வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். வாகனங்களில் பணம், பரிசுப்பொருட்கள் மற்றும் தேர்தல் விதிமுறை களை மீறும் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பது குறித்து சோதனை நடத்தப்படுகிறது.</p><p>சோதனையின்போது கார்களில் பொருத்தப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் கொடிகள் அகற்றப்பட்டன. பின்னர் அந்த வாகனங்கள் மது ராந்தகம் பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டன. தேர்தல் விதிமுறைகள் முறை யாக கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் மது ராந்தகம் தொகுதி முழுவதும் தொடர்ந்து வாகன சோதனை மற்றும் கண் காணிப்பு பணிகள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தாலி கட்டும் நேரத்தில்.. மணப்பெண் செய்த அதிர்ச்சி செயல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-shocking-act-of-the-bride-while-tying-the-thali</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-shocking-act-of-the-bride-while-tying-the-thali#comments</comments><guid isPermaLink="false">93915222-9f08-4ab0-8d2f-ef774d7a071d</guid><pubDate>Sun, 13 Sep 2026 21:07:52 +0000</pubDate><atom:updated>2026-09-13T21:07:52.662Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,போலீஸ்,Marriage,மணப்பெண்,women</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/9teqf0l6/women33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
தாலி கட்டும் நேரத்தில்]]></media:title><media:description type="html"><![CDATA[ மணப்பெண் செய்த அதிர்ச்சி செயல்
]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/9teqf0l6/women33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மீஞ்சூர்,</p><p>தாலி கட்டும் நேரத்தில் போலீசுக்கு போன் செய்து மணப்பெண் திருமணத்தை நிறுத்தினார். இதனால் உறவினர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.</p><p>திருமண வரவேற்பு</p><p>திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒரு வருக்கும், ஊத்துக்கோட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கும் பெற்றோர் திருமண நிச்சயதார்த்தம் செய்தனர். நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந் தது. இதில் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். நேற்று அதி காலையில் முகூர்த்த ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்தது.</p><p>அப்போது மணப்பெண்ணின் பெற்றோர் தூங்கிக்கொண்டிருந்த மணப் பெண்ணை தட்டி எழுப்பி திருமணத்துக்கு தயாராக இருக்க சொன்னார்கள். ஆனால் மணப்பெண் அடம் பிடித்து மேக்கப் போட வேண்டாம், எனவும் மணவறைக்கு வரமாட்டேன். தாலி கட்டி கொள்ள விருப்பம் இல்லை என்று பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்தார்.</p><p>இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. காலை 5.30 மணி அளவில் மணப் பெண் போலீஸ் அவசர உதவி எண் 100-க்கு போன் செய்து தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்க உள்ளதாக தெரிவித்தார்.</p><h2>காப்பகத்தில் ஒப்படைப்பு</h2><p>இதைத்தொடர்ந்து மீஞ்சூர் போலீசார், பொன்னேரி அனைத்து மகளிர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணப்பெண்ணிடம் விசா ரணை நடத்தினர். <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D">மணப்பெண் </a>திருமணத்துக்கு ஒத்துக்கொள்ளாமல் பிடி வாதமாக இருந்தார்.</p><p>பின்னர் பெற்றோர் திருமண மண்டபத்தில் மணப்பெண்ணை விட்டு விட்டு சென்று விட்டனர். தனியாக இருந்த மணப்பெண்ணை போலீசார் பொன்னேரியை அடுத்த சோழவரம் ஒன்றியம் அலமாதி கிராமத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.</p><p>திருமணம் நின்றதால் திருமணத்திற்கு வந்த உறவினர்கள் ஏமாற்றத்து டன் திரும்பினர். திருமண மண்டபத்தின் அருகே வைக்கப்பட்டிருந்த திருமண வரவேற்பு பேனர்கள் உடனடியாக அகற்றப்பட்டது. மணப்பெண் வேறு ஏதாவது நபரை காதலிக்கிறாரா? அல்லது உறவினர்களுக்கிடையே பிரச்சினை உள்ளதா? என்பது குறித்து மீஞ்சூர் போலீசார் விசாரித்து வரு கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகம் முழுவதும் அதிகரிக்கும் மின்வெட்டு: சென்னையில் 8 மணி நேரம் மின்சாரம் இல்லை - மக்கள் அவதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/power-cuts-increasing-across-tamil-nadu-chennai-without-electricity-for-8-hours</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/power-cuts-increasing-across-tamil-nadu-chennai-without-electricity-for-8-hours#comments</comments><guid isPermaLink="false">1d919a1a-1aa3-499c-817f-af5004e70b4c</guid><pubDate>Sun, 13 Sep 2026 19:35:45 +0000</pubDate><atom:updated>2026-09-13T19:35:45.223Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,Chennai,சென்னை,power cut,மின்வெட்டு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/rmsa46re/powwercut33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[  மின்வெட்டு]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னையில் 8 மணி நேரம் மின்சாரம் இல்லை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/rmsa46re/powwercut33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழகம் முழுவதும் மின்வெட்டு அதிகரித்து வருகிறது. சென்னை அமைந்தகரை பகுதியில் 8 மணி நேரத்திற்கு மேல் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.</p><h2>மின்தடை</h2><p>தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கடுமையான <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%20">மின்தடை </a>நிலவுகிறது. அறிவிக்கப்படாமல் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். நீடிக்கும் கோடை வெப்பத்தால் ஏற்படும் மின் தேவையை சமாளிக்க கூடுதலாக 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.</p><p>இரவில் ஏற்படும் மின்தடையால் காலாண்டு தேர்வுக்கு படிக்கும் மாண வர்கள் சிரமப்படுகின்றனர். மின்விசிறிகள் இயங்காததால் கொசுக்கடியால் முதியோர், குழந்தைகள், நோயாளிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.</p><p>இரவில் ஏற்படும் மின்தடையால் காலாண்டு தேர்வுக்கு படிக்கும் மாண வர்கள் சிரமப்படுகின்றனர். மின்விசிறிகள் இயங்காததால் கொசுக்கடியால் முதியோர், குழந்தைகள், நோயாளிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.</p><p>இதுதவிர வீடுகளில் இருந்து பணி செய்யும் தகவல் தொழில்நுட்ப பணி யாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.</p><p>தமிழகம் முழுவதும் சீரற்ற மின்சாரத்தால் டி.வி., பிரிட்ஜ். பேன், மிக்சி போன்ற பொருட்கள் வெடித்து சிதறும் நிலை உருவாகியுள்ளது. சென் னையில் பரபரப்பான பகுதியான அமைந்தகரை முனிரத்தினம் தெருவில் கடந்த சில நாட்களாக அடிக்கடி அதிக மின்அழுத்த மின்சாரம் இருந்து வந்தது.</p><h2>8 மணி நேரத்திற்கு மேலாக...</h2><p>இதனால் 'செல்போன் அடாப்டர்', 'வைபை அடாப்டர்'. மிக்சி உள்ளிட்ட பல மின்சாதனங்கள் வெடித்து, கருகி செயலிழந்து போனது. நேற்று காலையில் இருந்தே மின்தடை ஏற்பட்டது. உடனடியாக 2 மின் ஊழியர் கள் வந்து வேலை செய்தனர். ஆனால் பூமிக்கடியில் உள்ள புதைவட கம்பிகள் எரிந்து போனதால் அதனை சரி செய்ய அதிக நேரம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டது.</p><p>8 மணி நேரம் அவர்கள் பணி செய்தும் அவர்களால் சரி செய்ய முடிய வில்லை. இது போன்ற பணிகளை 2 ஊழியர்களை கொண்டு செய்ய முடியாது. குறைந்தபட்சம் 10 ஊழியர்களை கொண்டு பணி செய்தால் தான் பணிகள் விரைவாக முடியும். இதுபோன்ற நேரங்களில் பொது மக் களின் குறைகளுக்குச் செவிமடுத்து பணிகளை விரைவுபடுத்த மின்வாரிய துறை சார்ந்த அதிகாரிகள் உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><h2>அவதி</h2><p>தொடர்ந்து 8 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் இல்லாததால் பல் வேறு தரப்பினரும் அவதிக்கு உள்ளாகினர். கடும் வெப்பத்தால் விடு முறை நாளில் வெளியே செல்ல முடியாமல், வீட்டில் குடும்பத்துடன் இருந்தவர்களுக்கு மின்சாரம் சொல்ல முடியாத அவதியை தந்து விட்டது. அவர்கள் புழுக்கத்தால் பெரும் அவதிக்கு உள்ளாகி போனார்கள்.</p>]]></content:encoded></item><item><title>ஆ.ராசாவின் பேச்சு அதிர்ச்சியளிக்கிறது - திருமாவளவன் விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/arazas-speech-is-shocking-thirumavalavans-criticism</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/arazas-speech-is-shocking-thirumavalavans-criticism#comments</comments><guid isPermaLink="false">baec1180-24c5-4f15-b7be-669a97541fba</guid><pubDate>Sun, 13 Sep 2026 19:06:19 +0000</pubDate><atom:updated>2026-09-13T19:06:19.744Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thirumavalavan,திருமாவளவன் எம்.பி,Pattinapakkam,ராசா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/3cxchyqd/thol44.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
ஆ.ராசாவின் பேச்சு ]]></media:title><media:description type="html"><![CDATA[ திருமாவளவன் விமர்சனம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/3cxchyqd/thol44.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திமுக போராட்டத்தில் ஆ.ராசா பேசியது அதிர்ச்சியளிப்பதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். </p><p>சிவகாசியில்  விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>மனித மாண்புடன் இருக்க வேண்டும் என<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95"> திமுக தலைவர் ஸ்டாலின்</a> சமீபத்தில் வீடியோ மூலம் அறிவுறுத்தியிருந்தார். ஆனால், திமுக போராட்டத்தில் அந்த மாண்பை கடைப்பிடித்ததாகத் தெரியவில்லை. இது தவெகவிற்கு எதிரான கருத்து என்பதைவிட, திமுகவுக்கு எதிரான கருத்தாகவே எடுத்துக்கொள்ள முடியும். நீண்ட நெடிய அரசியல் பாரம்பரியம் கொண்டவர்கள், மற்றவர்களுக்கு வழிகாட்டக்கூடியவர்கள், அவர்கள் அரசியல் நாகரிகத்துக்கு முன்னோடியாக இருக்க வேண்டும். ஆ.ராசா மற்றும் திமுகவின் முன்னணி பொறுப்பாளர்களின் பேச்சு அதிர்ச்சியளிக்கக்கூடியதாக உள்ளது.</p><h2>அவர்களின் சுதந்திரம்.. கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படாது</h2><p>இடைத்தேர்தலில் இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, </p><p>தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக இடதுசாரிகள் தொடர்ந்து சொல்லி வருகின்றனர். இப்போதும் அதில் உறுதியாக உள்ளனர். இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுகிறார்களே தவிர, தவெகவுக்கு ஆதரவான நிலைப்பாடு என்றோ, திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாடு என்றோ சொல்லவில்லை. அது அவர்களுக்கான சுதந்திரம்; அவர்களுக்கான உரிமை. இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுவதால், மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.</p><h2>பலமுனைப் போட்டி இருக்கலாம்</h2><p>இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு ஆதரவாக விசிக பங்காற்றும். இடைத்தேர்தலில் பலமுனைப் போட்டி இருக்கலாம். ஜனநாயகம் அதற்கு இடம் தருகிறது. அதை ஆரோக்கியமானதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.</p><h2>மக்களின் கருத்தில் தான்</h2><p>பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "மக்களின் இசைவு, ஒப்புதல் இல்லாமல் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த முடியாது. பரந்தூர் விமான நிலையம் இதற்கு ஓர் உதாரணம். மக்களின் கருத்தின் அடிப்படையில்தான் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது குறித்து அரசு முடிவு எடுத்துள்ளது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>விவசாயி வீட்டில் பசுமாடு திருடிய வாலிபர் கைது: சரக்கு வாகனம் பறிமுதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-stealing-cow-from-farmers-house-truck-seized</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-stealing-cow-from-farmers-house-truck-seized#comments</comments><guid isPermaLink="false">d0792692-a212-426f-8370-bb4981bde283</guid><pubDate>Sun, 13 Sep 2026 16:28:02 +0000</pubDate><atom:updated>2026-09-13T16:28:02.153Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrested,விவசாயி,பறிமுதல்,திருட்டு,வாலிபர்,stealing,Vehicle,cow,சரக்கு வாகனம்,பசு,A youth</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/mj5xud5p/cowtheif.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ தமிழ்பாரதி]]></media:title><media:description type="html"><![CDATA[ விவசாயி வீட்டில் பசுமாடு திருடிய வாலிபர் கைது: சரக்கு வாகனம் பறிமுதல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/mj5xud5p/cowtheif.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி,</p><p>கண்டமனூர் அருகே விவசாயி தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81">பசுமாட்டை</a> திருடி சென்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.</p> <h2>பசுமாடு திருட்டு</h2><p>தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே உள்ள ஜி.இராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் சதாராம் (வயது 43). இவர் எரதிமக்காள் பட்டி செல்லும் சாலையில், பாலாஜி பள்ளிக்கு எதிரே தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். அங்கு கொட்டகை அமைத்து பசுமாடுகளையும் வளர்த்து வருகிறார். </p><p>கடந்த 9-ஆம் தேதி மாலை மாடுகளில் பால் கறந்துவிட்டு, இரண்டு மாடுகளை கொட்டகையில் கட்டிப்போட்டுவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது, அதில் சுமார் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள ஒரு பசுமாடு மட்டும் காணாமல் போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.</p><h2>சிசிடிவி ஆய்வு </h2><p>மர்ம நபர்கள் யாரோ பசுமாட்டை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">திருடி</a> சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சதாராம் கண்டமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தபோது, மாட்டை சரக்கு வாகனத்தில் ஏற்றி கடத்தி  சென்றது தெரியவந்தது.</p><h2>சிறையில் அடைப்பு</h2><p>இதையடுத்து, க.விலக்கு அருகே உள்ள பாலசமுத்திரத்தை சேர்ந்த சக்திவேல் மகன் தமிழ்பாரதி (27) என்பவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். மாட்டை திருடுவதற்கு அவர் பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.கைது செய்யப்பட்ட தமிழ்பாரதியை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் முதற்கட்டமாக 401 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/401-direct-paddy-procurement-centres-opened-in-the-first-phase-in-tamil-nadu-42082-tonnes-of-paddy-procured</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/401-direct-paddy-procurement-centres-opened-in-the-first-phase-in-tamil-nadu-42082-tonnes-of-paddy-procured#comments</comments><guid isPermaLink="false">b9e52315-95d6-4b15-b565-0f94cd712edd</guid><pubDate>Sun, 13 Sep 2026 16:14:56 +0000</pubDate><atom:updated>2026-09-13T16:14:56.546Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,நெல் கொள்முதல்,விவசாயிகள்,Paddy,Paddy procurement,தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/6f0ncjrv/322.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நெல் கொள்முதல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/6f0ncjrv/322.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் 401 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 42,082 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>நெல் கொள்முதல்</h2><p>விவசாயிகளிடமிருந்து நெல்லை உரிய விலையில் கொள்முதல் செய்வது, கொள்முதல் செய்யப்பட்ட நெல்லினை பாதுகாப்பாக சேமித்து வைப்பது மற்றும் உரிய காலத்தில் அரவைக்கு அனுப்புவது ஆகிய பணிகளில் தமிழ்நாடு அரசு வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது.</p><h2>ஆதார விலை</h2><p>நடப்பு கொள்முதல் பருவம் கே.எம்.எஸ் 2026-2027-ற்கு மத்திய அரசால் சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2461/-ம் பொது ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2441/-ம் நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டு. 01.09.2026 முதல் நெல் கொள்முதல் செய்திட அனுமதி வழங்கியுள்ளது.</p><p>மேலும், தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் நெல்லுக்கான ஊக்கத் தொகையாக சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.156/-லிருந்து ரூ.289/-ஆகவும், பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.131/-லிருந்து ரூ.159/-ஆகவும் உயர்த்தி வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.</p><h2>நெல் கொள்முதல் நிலையங்கள்</h2><p>அதனடிப்படையில், நடப்பு கொள்முதல் பருவம் நிலையங்கள் கே.எம்.எஸ் மூலமாக 2026-2027- நேரடி நெல் கொள்முதல் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலையுடன், மாநில அரசின் நெல்லுக்கான ஊக்கத் தொகையுடன் சேர்த்து சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2750/- என்ற விலையிலும், பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2600/- என்ற விலையிலும் நெல் கொள்முதல் மேற்கொள்ள தமிழ்நாடு அரசால் உத்தரவு வழங்கப்பட்டதன் அடிப்படையில் 11.09.2026 வரையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், செங்கல்பட்டு, ஈரோடு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, தேனி மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் முதற்கட்டமாக 401 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 7,043 விவசாயிகளிடமிருந்து 42,082 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், நெல் வரத்தின் அடிப்படையில் தேவைக்கேற்ப மாவட்ட ஆட்சியர்களின் அனுமதி பெற்று நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்திட முதுநிலை மண்டல மேலாளர்கள் / மண்டல மேலாளர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்படும் நெல்லினை இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாத்து உடனுக்குடன் சேமிப்பு கிடங்குகளுக்கு இயக்கம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>அறிவுரைகள்</h2><p>மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் படாளம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேடப்பாளையம் மற்றும் வேடல் ஆகிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அவர்கள் 09.09.2026 அன்று கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் மணிகளை தாமதமின்றி கொள்முதல் செய்திடவும் அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மணிகளை பாதுகாப்பாக இருப்பு வைக்கவும் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களுக்கும் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.</p><p>தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குனர் 11.09.2026 அன்று ராணிப்பேட்டை மண்டலத்தில் கொள்முதல் நிலையங்களை கள ஆய்வு செய்து. விவசாயிகளிடமிருந்து உரிய காலத்தில் நெல்லினை கொள்முதல் செய்து உடனுக்குடன் கிடங்குகளுக்கு இயக்கம் செய்திடவும். பாதுகாப்பாக நெல்லினை இருப்பு வைத்திடவும். உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்கள்.</p><h2>அனுமதி</h2><p>மேலும் கடலூர். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மண்டலங்களில் நெல் கொள்முதலை துரிதப்படுத்தவும், கொள்முதல் செய்த நெல்லினை உடனடியாக இயக்கம் செய்யவும், பாதுகாப்பாக இருப்பு வைக்கும் பணிகளை கண்காணிக்கவும் அயல் மண்டல மேலாளர்கள் தலைமையில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது மேலும் விவசாயிகளின் நலனை கருதி விடுமுறை தினமான (13.09.2026 - ஞாயிற்றுக்கிழமை) இன்று நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து கொள்முதல் செய்ய கடலூர் மயிலாடுதுறை திருவாரூர் செங்கல்பட்டு ஈரோடு மற்றும் திருவள்ளூர் மண்டலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p>மேலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மண்டல மேலாளர்கள் மூலமாக கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு விவசாயிகளிடமிருந்து எவ்வித தாமதமின்றி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">நெல் கொள்முதல்</a> செய்திடவும் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லினை உரிய காலத்தில் இயக்கம் செய்திடவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், நெல் கொள்முதல் பணிகள் எவ்வித தொய்வுமின்றி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மேட்டுப்பாளையம்: காட்டு யானை தாக்கியதில் விவசாயி பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mettuppalayam-farmer-killed-by-wild-elephant</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mettuppalayam-farmer-killed-by-wild-elephant#comments</comments><guid isPermaLink="false">be37d116-138a-4c89-a649-9162253ac588</guid><pubDate>Sun, 13 Sep 2026 16:12:36 +0000</pubDate><atom:updated>2026-09-13T16:12:36.049Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தாக்குதல்,farmer,காட்டு யானை,மேட்டுப்பாளையம்,Mettupalayam,killed,விவசாயி பலி,wild elephant attack</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/u46vz37v/sucide.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ விவசாயி பலி]]></media:title><media:description type="html"><![CDATA[ மேட்டுப்பாளையம்: காட்டு யானை தாக்கியதில் விவசாயி பலி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/u46vz37v/sucide.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மேட்டுப்பாளையம்,</p><p>கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நள்ளிரவில் காட்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88">யானை</a> தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p><h2>விவசாய கூலி</h2><p>கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக எல்லைக்குட்பட்ட காலனி புதூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் ராமன். விவசாய கூலி தொழிலாளியான இவர், சீங்குழி கிராமத்தில் உள்ள தனது மூத்த சகோதரியை பார்த்துவிட்டு நேற்று மாலை மீண்டும் தனது ஊருக்கு நடந்து வந்துகொண்டிருந்தார்.</p> <h2>அதிகாலையில் மீட்கப்பட்ட சடலம்</h2><p>இரவு நீண்ட நேரமாகியும் ராமன் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த உறவினர்களும் கிராம மக்களும் விடிய விடிய காட்டுப் பகுதிக்குள் தேடி சென்றனர். இந்த நிலையில், இன்று அதிகாலை கொடுங்காரப்பள்ளம் புதூர் பகுதியில் உள்ள ஓடையில், ராமன் உடலில் படுகாயங்களுடன் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து வனத்துறைக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.</p><h2>யானை </h2><p>சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் காரமடை போலீசார், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">உயிரிழந்த</a> ராமனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். </p><p>முதற்கட்ட விசாரணையில், இப்பகுதியில் சுற்றி திரியும் ஒற்றை யானை ராமனை தாக்கி மிதித்து கொன்றிருக்கலாம் என்று வனத்துறையினர் பலத்த சந்தேகம் தெரிவித்துள்ளனர்.</p><h2>பொதுமக்கள் கோரிக்கை</h2><p>இதற்கிடையே, காடுகளிலிருந்து குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து உயிர்பலி வாங்கும் காட்டு விலங்குகளின் தாக்குதலில் இருந்து தங்களையும், தங்களது வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம்-தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் தேர்தல் பணிக்குழு நியமனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madhurantakam-tharapuram-by-election-aiadmk-appoints-election-task-force-headed-by-former-ministers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madhurantakam-tharapuram-by-election-aiadmk-appoints-election-task-force-headed-by-former-ministers#comments</comments><guid isPermaLink="false">4fd21a48-949a-4933-9de7-ebf6b2e94786</guid><pubDate>Sun, 13 Sep 2026 15:53:28 +0000</pubDate><atom:updated>2026-09-13T15:53:28.265Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அதிமுக,AIADMK,இடைத்தேர்தல்,நியமனம்,மதுராந்தகம்,தாராபுரம்,By-election,தேர்தல் பணிக்குழு,முன்னாள் அமைச்சர்கள்,Former Ministers</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/y7qxw1ii/109.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/y7qxw1ii/109.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மதுராந்தகம்-தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">அதிமுக</a>வில் முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் தேர்தல் பணிக்குழு நியமனம் செய்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்,</p><p>இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் 6.10.2026 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்கு, (35) மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு, கழக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி அவர்கள் தலைமையிலும்; (101) தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு, கழகப் பொருளாளரும். திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் தலைமையிலும், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.</p><h2>தேர்தல் பணிக்குழு</h2><p>விரைவில் அறிவிக்கப்பட உள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு கழக நிர்வாகிகளும், மதுராந்தகம் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும் கழக உடன்பிறப்புகளும் முழு ஒத்துழைப்பு நல்கி, சிறப்பான முறையில் தேர்தல் பணிகளை ஆற்றி கழக வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோருக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-buses-to-operate-for-those-returning-to-chennai-after-the-vinayagar-chaturthi-holiday</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-buses-to-operate-for-those-returning-to-chennai-after-the-vinayagar-chaturthi-holiday#comments</comments><guid isPermaLink="false">dc998a5a-6784-435c-a93f-c0a2667ff5b2</guid><pubDate>Sun, 13 Sep 2026 14:32:20 +0000</pubDate><atom:updated>2026-09-13T14:32:20.551Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,special buses,Holiday,தொடர் விடுமுறை,சிறப்பு பேருந்துகள் இயக்கம்,Vinayagar Chaturthi,விநாயகர் சதுர்த்தி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/c3yahnyy/bus.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/c3yahnyy/bus.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோருக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழகம் (MTC) சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன</p><p>இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கடந்த 11.09.2026 முதல் 12.09.2026 வரை சென்னையிலிருந்து அரசு போக்குவரத்து கழக பேருந்துகளின் மூலமாக சுமார் 2,31,450 எண்ணிக்கையிலான பொதுமக்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.</p><p>தொடர் விடுமுறை முடிந்து 14.09.2026 மற்றும் 15.09.2026 ஆகிய நாட்களில் திருச்சி, மதுரை, திண்டுக்கல், வேலூர், சேலம், கிருஷ்ணகிரி, ஓசூர், கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் சென்னை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இதனைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி சென்னை திரும்புவதற்காக, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 14.09.2026 அன்று 2,240 சிறப்புப் பேருந்துகள் (திருச்சி- 255, மதுரை&amp;திண்டுக்கல்-300, சேலம்-200, கிருஷ்ணகிரி,ஓசூர்&amp;வேலூர்-195, கோயம்புத்தூர்-50, திருநெல்வேலி-50 ,நாகர்கோவில்-50, தூத்துக்குடி-50, தென்காசி-50, கும்பகோணம்–225, திருவண்ணாமலை-325 விழுப்புரம்-185 மற்றும் இதர ஊர்களிலிருந்து - 305) 15.09.2026 அன்று 1,325 சிறப்புப் பேருந்துகள் (திருச்சி-105, மதுரை&amp;திண்டுக்கல்-75, சேலம்-75, கிருஷ்ணகிரி,ஓசூர்&amp;வேலூர்-200, கோயம்புத்தூர்-20, திருநெல்வேலி-10 ,நாகர்கோவில்-10, தூத்துக்குடி-15, தென்காசி-10, கும்பகோணம்–125, திருவண்ணாமலை-175 விழுப்புரம்-85 மற்றும் இதர ஊர்களிலிருந்து - 420) என கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு மட்டும் மொத்தம் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மாதவரம் பேருந்து முனையத்திற்கு 160 சிறப்புப் பேருந்துகளும், கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு 370 சிறப்புப் பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2>சிறப்புப் பேருந்துகள்</h2><p>பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில், அந்தந்த பேருந்து நிலையங்களில் பணியில் உள்ள அலுவலர்கள் பயணிகளின் வருகை மற்றும் தேவையை நேரடியாகக் கண்காணித்து, மேற்கண்ட எண்ணிக்கையையும் தாண்டி தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளை உடனுக்குடன் இயக்கவும் சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">சிறப்புப் பேருந்துகளின்</a> இயக்கத்தை ஒருங்கிணைத்து கண்காணிப்பதற்காக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) மற்றும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) ஆகியவற்றின் பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க பொது மேலாளர் நிலையிலான அதிகாரி பணியமர்த்தப்பட்டுள்ளனர்.</p><p>அதேபோன்று, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (மதுரை), திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர் ஆகியவற்றின் பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க துணை மேலாளர் / உதவி மேலாளர் நிலையிலான அதிகாரிகள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பயணிகளின் வருகையை தொடர்ந்து கண்காணித்து, தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளை உடனடியாக இயக்குவதற்காக சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழகங்களின் ஒருங்கிணைப்பு அலுவலர்களும் (Nodal Officers) தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட  போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>சிறப்பு ஏற்பாடுகள்</h2><p>சென்னை வந்தடையும் பயணிகள் தங்கள் இருப்பிடங்களுக்கு செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகம் (MTC) சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு வரும் பொதுமக்கள், அங்கிருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு எளிதாகவும் விரைவாகவும் செல்லும் வகையில் மாநகர் போக்குவரத்துக் கழகம் (MTC) சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><h2>கூடுதல் பயண நடை</h2><p>கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து வழக்கமாக 47 வழித்தடங்களில் 508 பேருந்துகள் மூலம் 2,107 பயண நடைகளும், (Trip) கிளாம்பாக்கம் வழியாக 9 வழித்தடங்களில் 130 பேருந்துகள் மூலம் 1,362 பயண நடைகளும் (Trip) இயக்கப்பட்டு வருகின்றன. இதனுடன் கூடுதலாக, 14.09.2026 மாலை மற்றும் இரவு நேரங்களில் 50 சிறப்புப் பேருந்துகள் மூலம் 400 கூடுதல் பயண நடைகளும் (Trip), 15.09.2026 அதிகாலை முதல் மேலும் 150 கூடுதல் பயண நடைகளும் (Trip) இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>இந்தப் பேருந்துகள் கோயம்பேடு, இராயபுரம், தீவுத்திடல், திருவான்மியூர், மாதவரம், செங்குன்றம், ஆவடி, பூந்தமல்லி, தாம்பரம், விமான நிலையம், கிண்டி, வேளச்சேரி, சோழிங்கநல்லூர், தண்டையார்பேட்டை, பாரிமுனை, பட்டாபிராம், கேளம்பாக்கம், திருப்போரூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட சென்னையின் முக்கிய பகுதிகளுக்கு இயக்கப்பட உள்ளன. ரெயில் மூலம் சென்னை திரும்பும் பயணிகளுக்கும் கூடுதல் பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.</p><h2>கூடுதல் பேருந்துகள்</h2><p>தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ரெயில் மூலம் சென்னை திரும்பும் பொதுமக்களின் வசதிக்காக, சென்னை சென்ட்ரல், எழும்பூர் மற்றும் தாம்பரம் இரயில் நிலையங்களிலிருந்தும் சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளுக்கு கூடுதல் மாநகரப் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் அதிகமாகக் கூடும் இடங்களில், அவர்களின் தேவைக்கேற்ப மாற்று வழித்தடங்களிலும் கூடுதல் பேருந்துகள் உடனடியாக இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>எனவே, தொடர் விடுமுறை முடிந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னை திரும்பும் பொதுமக்கள், தங்கள் ஊர்களிலிருந்து சென்னை வந்து சேருவது முதல், சென்னையில் தங்களது இருப்பிடங்களுக்குச் சென்று சேருவது வரை தடையற்ற பொதுப் போக்குவரத்து வசதி கிடைக்கும் வகையில் போக்குவரத்துத் துறை சார்பில் விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>