<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 06 Aug 2026 12:23:37 +0000</lastBuildDate><item><title>டிஜிட்டல் கைது எனக்கூறி முதியவரிடம் ரூ.46.50 லட்சம் மோசடி - சைபர் கிரைம் போலீசார் விசாரணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/digital-arrest-scam-elderly-man-loses-46-5-lakh</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/digital-arrest-scam-elderly-man-loses-46-5-lakh#comments</comments><guid isPermaLink="false">9dd0d4c5-0372-44fb-b37c-3a0ad1851964</guid><pubDate>Thu, 06 Aug 2026 12:22:43 +0000</pubDate><atom:updated>2026-08-06T12:22:43.139Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மோசடி,Digital arrest,டிஜிட்டல் கைது,சிவகங்கை,Sivagangai,Duping</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/t47x7muv/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிஜிட்டல் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/t47x7muv/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை,</p><p>டிஜிட்டல் கைது எனக்கூறி முதியவரிடம் ரூ.46.50 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டியை அடுத்த கட்டுக்குடிபட்டியை சேர்ந்தவர் சுகநந்தன் (88 வயது). சம்பவத்தன்று செல்போனில் அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் பெங்களூரு போலீஸ் அதிகாரி என்று தன்னை அறிமுகம் செய்துள்ளார். பின்னர் சுகநந்தன் ஆதார் அட்டையை சட்டவிரோத நடவடிக்கைக்கு பயன்படுத்தியதாகவும், அதனால் அவரை டிஜிட்டல் கைது செய்திருப்பதாகவும் கூறி மிரட்டி உள்ளார்.</p><p>பின்னர் அந்த மர்ம நபர் ரூ.46 லட்சத்து 50 ஆயிரத்தை அனுப்பி வைக்கும்படி கூறியுள்ளார். அதை நம்பிய சுகநந்தனும் அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு அந்த தொகையை செலுத்தியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சுகநந்தன் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>விருதுநகர் மாவட்டத்துக்கு 14-ந் தேதி உள்ளூர் விடுமுறை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/local-holiday-for-virudhunagar-district-on-the-14th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/local-holiday-for-virudhunagar-district-on-the-14th#comments</comments><guid isPermaLink="false">0497369c-9908-4cf1-849d-44caf3b79fb0</guid><pubDate>Thu, 06 Aug 2026 12:20:10 +0000</pubDate><atom:updated>2026-08-06T12:20:10.366Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Local Holiday,உள்ளூர் விடுமுறை,விருதுநகர் மாவட்டம்,Virudhunagar District</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/930j8crf/viruthunagar.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/930j8crf/viruthunagar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர்,</p><p>விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் வரும் 14-ந் தேதி நடைபெற இருப்பதால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>உள்ளூர் விடுமுறை</h2><p>ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிலையங்களுக்கு திங்கள்கிழமை (ஆகஸ்ட் 14) <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">உள்ளூர் விடுமுறை </a>அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஆகஸ்ட் 29-ந் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளில் ஏற்கெனவே தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தால் இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது. தேர்வுகள் அறிவித்தபடி நடைபெறும். இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலாவணி முறிச்சட்டத்தின்கீழ் வராது என்பதால், வங்கிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரோந்து போலீஸ் மீது தாக்குதல்: சங்கிலி பறித்துச் சென்ற மர்ம கும்பல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/attack-on-patrol-police-mysterious-gang-snatches-chain</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/attack-on-patrol-police-mysterious-gang-snatches-chain#comments</comments><guid isPermaLink="false">2b532462-5979-4a72-a67a-3af7ae65c099</guid><pubDate>Thu, 06 Aug 2026 12:03:47 +0000</pubDate><atom:updated>2026-08-06T12:03:47.265Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,தேனி,patrol,Chain,Mysterious gang,மர்ம கும்பல்,ரோந்து,போலீஸ்Police</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/vtil9mxj/199.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ போலீஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/vtil9mxj/199.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி,</p><p>பெரியகுளம் அருகே நள்ளிரவு ரோந்து சென்ற போலீஸ் ஏட்டை தாக்கி நகை பறித்துச் சென்ற கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p><h2>ரோந்து சென்ற போலீஸ்</h2><p>தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள மேலகாமாக்காப்பட்டியை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 37). இவர் தென்கரை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு திருட்டை தடுக்கும் வகையில் பெரியகுளம் அருகே கைலாசநாதர் மலைக்கோவில் பகுதியில் ஏட்டு சசிக்குமார் மோட்டார் சைக்கிளில் ரோந்து சென்றார். அப்போது கோவில் அடிவாரத்தில் சந்தேகப்படும்படியாக 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதை பார்த்த சசிக்குமார், அவர்களிடம் சென்று விசாரணை நடத்தினார். அவர்கள் கடப்பாரை மற்றும் கம்பி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருப்பது தெரியவந்தது. உடனே அவர்களை தரையில் உட்காரும்படி கூறினார்.</p><p>அப்போது அந்த பகுதியில் மறைந்திருந்த மேலும் 3 பேர் திடீரென்று வந்து கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் சசிக்குமாரை தாக்கினர். அவர்களுடன் சசிக்குமார் போராடினார். பின்னர் அனைவரும் சேர்ந்து ஆயுதங்களால் சசிக்குமாரை தாக்கினர். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தாக்குதலில் அவர் நிலைகுலைந்து போனார். இதனைத்தொடர்ந்து அந்த மர்ம கும்பல் சசிக்குமார் கழுத்தில் அணிந்திருந்த 1.5 பவுன் சங்கிலியை பறிக்க முயன்றனர். அவர் சங்கிலியை கெட்டியாக பிடித்துக் கொண்டதால் பாதி சங்கிலி மட்டும் கொள்ளையர்களின் கையில் சிக்கியது. அதனுடன் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.</p> <h2>தனிப்படையினர் வலைவீச்சு</h2><p>இதுகுறித்து தென்கரை போலீஸ் நிலையத்திற்கு சசிக்குமார் தகவல் தெரிவித்தார். உடனே அங்கு சென்ற போலீசார் சசிக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a> வழக்குப்பதிவு செய்து கொள்ளை கும்பலை தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.</p><p>திருட்டை தடுக்க ரோந்து சென்ற போலீஸ் ஏட்டுவையே தாக்கி நகை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-the-day-after-tomorrow-13</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-the-day-after-tomorrow-13#comments</comments><guid isPermaLink="false">466d9615-a13f-4688-ae3e-2c61c01a1e53</guid><pubDate>Thu, 06 Aug 2026 12:01:04 +0000</pubDate><atom:updated>2026-08-06T12:01:04.185Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,monthly maintenance work,power outage,தென்காசி,மாதாந்திர பராமரிப்பு பணி,மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/rar3xp6x/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/rar3xp6x/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p>திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF">தென்காசி</a> மாவட்டம், கடையநல்லூர் துணை மின் நிலையத்தில் உள்ள பகுதிகளில் நாளை மறுநாள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் காரணமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை</h2><p>இது தொடர்பாக கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பக விநாயக சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  </p><p>கடையநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட கடையநல்லூர் துணை மின் நிலைய பகுதிகளில்  நாளை மறுநாள் (8.8.2026, சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின் வினியோகம் தடை செய்யப்படும்.</p><p>அதன்படி கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம், பேட்டை, மாவடிக்கால், குமந்தாபுரம், முத்துச்சாமிபுரம், வலசை, கருப்பாநதி, தார்க்காடு, போகநல்லூர், கண்மணியாபுரம், பாலஅருணாச்சலபுரம், கம்பனேரி, மங்களபுரம், அச்சம்பட்டி, பொய்கை, ஊர் மேல் அழகியான், வேலாயுதபுரம், இடைகால், சிவராம்பேட்டை, கொடிக்குறிச்சி மற்றும் நயினாரகரம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திண்டுக்கல் அருகே 4 பேருடன் பள்ளத்தில் கவிழ்ந்த கார்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/car-with-4-occupants-overturns-into-a-ditch-near-dindigul-miraculously-they-survived</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/car-with-4-occupants-overturns-into-a-ditch-near-dindigul-miraculously-they-survived#comments</comments><guid isPermaLink="false">e9a061c2-3062-45be-b633-b5c5d2a31bd1</guid><pubDate>Thu, 06 Aug 2026 11:54:53 +0000</pubDate><atom:updated>2026-08-06T11:54:53.603Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,திண்டுக்கல்,Car,கார்,police enquiry,உயிர் தப்பினர்</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/pafdndf4/91.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ பள்ளத்தில் கவிழ்ந்த கார்]]></media:title><media:description type="html"><![CDATA[ வேடசந்தூர் அருகே நான்கு வழிச்சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/pafdndf4/91.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">திண்டுக்கல் மாவட்டம் </a>வேடசந்தூர் அருகே நான்கு வழிச்சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், காரில் இருந்த 4 பேரும் காயங்களின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.</p><h2>பள்ளத்தில் கவிழ்ந்த கார்</h2><p>கரூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வேடசந்தூர் அருகே உள்ள காக்காதோப்பு பிரிவு பகுதியில் தற்போது புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக சாலையின் ஒரு பகுதியில் ஆழமான பள்ளங்கள் தோண்டப்பட்டு இருந்தது.</p><p>இன்று (வியாழக்கிழமை) அந்த வழியாக வந்த கார் ஒன்று, மேம்பாலப் பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக விழுந்து தலைகுப்புற கவிழ்ந்தது. <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விபத்து </a>நடந்த இடத்தில் உரிய எச்சரிக்கைப் பலகைகளோ அல்லது பாதுகாப்புத் தடுப்பு அரண்களோ அமைக்கப்படாததே இந்த விபத்துக்கு முக்கியக் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.</p><h2>அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்</h2><p>விபத்து நடந்த சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினரும் வாகன ஓட்டிகளும், பள்ளத்தில் கவிழ்ந்த காரில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 4 பேரும் எவ்விதப் பெரிய காயங்களுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.</p><h2>பொதுமக்கள் கோரிக்கை</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">காக்காதோப்பு </a>பிரிவு பகுதி அடிக்கடி விபத்துகள் நடக்கும் பகுதியாக மாறி வருவதாகத் தெரிவிக்கும் வாகன ஓட்டிகள், தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக தலையிட்டு, கட்டுமானப் பணிகள் நடக்கும் இடங்களில் போதிய பாதுகாப்புத் தடுப்புகளையும், ஒளிரும் எச்சரிக்கை விளக்குகளையும் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இச்சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ஆன்லைனில்  மதுபானம் விற்பனை என்பது தவறானது: அமைச்சர் விக்னேஷ் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/online-sale-of-liquor-is-wrong-minister-vignesh-clarifies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/online-sale-of-liquor-is-wrong-minister-vignesh-clarifies#comments</comments><guid isPermaLink="false">cabd7f65-b036-4e27-b76c-c162381b803f</guid><pubDate>Thu, 06 Aug 2026 11:54:38 +0000</pubDate><atom:updated>2026-08-06T11:54:38.795Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tasmac,மதுபானம் விற்பனை,அமைச்சர் விக்னேஷ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/0udgdgrs/vignesh.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் விக்னேஷ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/0udgdgrs/vignesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை தலைமை செயலகத்தில் மது விலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:  ஆன்லைனில்  மதுபானம் விற்பனை என்பது தவறானது. ஆன்லைனில் மதுவை பெற முடியாது: முன்பதிவு மட்டுமே செய்ய  முடியும். கடைகளில் போய்தான் மதுபானம் வாங்க முடியும். ஆன்லைன் முன்பதிவு சோதனை நிலையில்தான் உள்ளது.எல்லா நிறுவனத்தின் மது பானங்களும்  தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. </p><p>மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 பெறுவதை தடுக்கவே புதிய திட்டம் கொண்டுவரப்படுகிறது. மதுபானம் மூலம் அரசுக்கு வருவாய் பெருக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை. மதுபானம் விலை உயராது. ஊழலை தடுத்ததால் வருமானம் அதிகரித்துள்ளது. மதுக்கூடங்களின் அவல நிலை மாற்றப்படும். இடையூறான மதுக்கடைகள் இடமாற்றப்படும். பாட்டிலுக்கு 10 ரூபாய் என்பது 2011 முதலே உள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamilaga-meenavargal-meethana-ilangai-kadarpadaiyin-kaithu-nadavaikkaigalai-thaduthu-niruththa-ven-dum-manikkam-thagur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamilaga-meenavargal-meethana-ilangai-kadarpadaiyin-kaithu-nadavaikkaigalai-thaduthu-niruththa-ven-dum-manikkam-thagur#comments</comments><guid isPermaLink="false">953de516-6bc5-4273-b472-ff6bc7fb8709</guid><pubDate>Thu, 06 Aug 2026 11:50:00 +0000</pubDate><atom:updated>2026-08-06T11:50:00.020Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>மீனவர்கள் கைது,தமிழக மீனவர்கள்,இலங்கை கடற்படை,காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,TN Fishermen,SriLanka Navy,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/qut4ra7n/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/qut4ra7n/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழக மீனவர்கள் இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது, இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டு அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து வெளியுறவுத்துறை அமைச்சகம் உரிய விளக்கம் தர வேண்டுமென கோரிக்கை விடப்பட்டுள்ளது.</p><p>சர்வதேச கடல் எல்லையை கடப்பதாக கூறி இத்தகைய நடவடிக்கைகள் எடுப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலில் மீன்பிடிப்பதை தங்களது வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். தங்களது தொழிலை செய்ய விடாமல் தடுத்து வருகிற இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களிலிருந்து தமிழக மீனவர்களை காப்பாற்ற வேண்டுமென ஒன்றிய பா.ஜ.க. அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சினையிலிருந்து தமிழக மீனவர்கள் நிரந்தரமாக பாதுகாப்பினை பெறுகிற வகையில் இந்திய - இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் இணைந்த கூட்டு நடவடிக்கைக்குழு அமைத்து இத்தகைய கைது நடவடிக்கைகளை கண்காணித்து உரிய தீர்வினை காண வேண்டுமென்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.</p><p>கடந்த 2023-ம் ஆண்டு வரை 1,306 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதோடு, 179 படகுகள் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய கைது நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தி தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பை ஒன்றிய பா.ஜ.க. அரசு அலட்சியப் போக்குடன் தட்டிக் கழித்து வருவது தமிழக மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.</p><p>எனவே, கடலில் மீன்பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கிற அப்பாவி தமிழக மீனவர்களை பாதுகாக்க, இலங்கை அரசுடன் பேசி மீனவர்களை உடனடியாக விடுவிப்பதோடு, பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் திரும்ப ஒப்படைக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஒன்றிய பா.ஜக. அரசை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வேளாண்மை பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான நிவாரண அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமளிக்கிறது - மு. வீரபாண்டியன் விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-lack-of-relief-announcement-for-farmers-in-the-agriculture-budget-is-disappointing-m-veerapandians-criticism</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-lack-of-relief-announcement-for-farmers-in-the-agriculture-budget-is-disappointing-m-veerapandians-criticism#comments</comments><guid isPermaLink="false">aff5979b-3610-4350-9764-bbe85d30051f</guid><pubDate>Thu, 06 Aug 2026 11:42:32 +0000</pubDate><atom:updated>2026-08-06T11:42:32.502Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Farmers,விவசாயிகள்,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி,CPI,agriculture budget,வேளாண்மை பட்ஜெட்,மு. வீரபாண்டியன்,M. Veerapandian</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/cn02zfon/veerapandian.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/cn02zfon/veerapandian.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இன்று சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். இதுகுறித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D">மு. வீரபாண்டியன்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில்  தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ரூ.14,984 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு இலவச மின்சார மானியத்திற்கு ரூ.7,432 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு மண்வளப் பாதுகாப்பு இயக்கம், பருத்தி மறுமலர்ச்சி இயக்கம், மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய ‘ஏஐ உழவர் செயலி’ போன்ற புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்றாலும், எல்நினோ தாக்குதல் தமிழ்நாட்டில் பாதிப்பை உருவாக்கும் என வானிலை ஆய்வுகள் கூறியுள்ள நிலையில் அதை எதிர்கொள்ள எந்த திட்ட அறிவிப்பும் இல்லை. </p><h2>பொறியியல் பயிற்சி மையங்கள்</h2><p>மழை நீர் சேமிப்பு திட்டம், தடுப்பணைகள் அமைக்கும் திட்டம் குறித்த அறிவிப்புகளும் இல்லை. குறுவை சாகுபடி பொய்த்துவிட்டது. வருமானம் இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு, விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்படவில்லை. நெல் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால், நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகளிடம் உள்ளது. அது குறித்த அறிவிப்பு ஏதும் இல்லை. ஐந்து இடங்களில் வேளாண்மை பொறியியல் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது வரவேற்பிற்குரியது.</p><h2>பெருத்த ஏமாற்றம்</h2><p>பட்ஜெட்டில்,  விவசாய தொழிலாளர் நலன் சார்ந்த திட்டங்கள் அறிவிப்புகள் இல்லாதது அவர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும். தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, 5 ஏக்கர் நிலம் வரை உள்ள விவசாயிகள் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வது, மற்ற விவசாயிகளின் கடன்களில் 50 சதவீதம் தள்ளுபடி என்பதை வலியுறுத்தி விவசாயிகள் போராடி வரும் நிலையில், அது பற்றிய அறிவிப்பு இல்லாதது, விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருச்செந்தூர் அருகே வேன் மீது கார் மோதி ஒருவர் பலி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/one-killed-as-car-hits-van-near-tiruchendur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/one-killed-as-car-hits-van-near-tiruchendur#comments</comments><guid isPermaLink="false">719acb50-4e14-4681-a392-3f0b22289bae</guid><pubDate>Thu, 06 Aug 2026 11:37:51 +0000</pubDate><atom:updated>2026-08-06T11:37:51.005Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்செந்தூர்,van,வேன்,பலி,Tiruchendur,kill,கார்car</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/bdhurhzm/198.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கார் மோதி ஒருவர் பலி ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/bdhurhzm/198.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்செந்தூர்,</p><p>திருச்செந்தூர் அருகே வேன் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><h2>விபத்து</h2><p>காஞ்சிப்புரம் மாவட்டம், நாயக்கன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வினோத் கண்ணன் என்பவர் நேற்று குலசேகரபட்டினம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். பின்னர், ஆறுமுகநேரி பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி உள்ளார். நேற்று மாலையில் வினோத் கண்ணன், லெட்சுமணன், சுதாகர் ஆகிய மூவரும் குறும்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர் அப்போது அந்த கார் ஆறுமுகநேரியை தாண்டியதும் கட்டுபாடின்றி மின்னல் வேகத்தில் சாலையோரம் இருந்த டீக்கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் மீது மோதி விட்டு  நிற்காமல் சென்றுள்ளது. பைக்  உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் வண்டியை மடக்கி பிடிக்க பின்னாடி வீடியோ எடுத்தப்படி சென்றனர். </p><p>இதில் வேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த வேன் மீது மோதியது. இந்த சம்வத்தில் கார் ஒட்டிய லட்சுமணன் அருகில் இருந்த வினோத் கண்ணன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். </p><h2>விசாரணை</h2><p>தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a> உயிரிழந்தவரின் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த மற்ற இருவர் மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் மூவரும் மது போதையில்  இருந்தது தெரிய வந்தது. </p><p>கார் வேகமாக சென்று நின்றுக்கொண்டிருந்த பைக் மீது மோதி நிற்காமல் செல்லுவதை அந்த டீக்கடையில் உள்ள கண்கானிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது, மேலும் கார் மோதிய காட்சி மற்றும் பைக் உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் கார் பின் சென்று எடுத்த வீடியோவில் பதிவாகியுள்ளது தற்போது அது இணையத்தில் வைரலாகி வருகிறது. </p>]]></content:encoded></item><item><title>22 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-until-7-pm-in-22-districts</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-until-7-pm-in-22-districts#comments</comments><guid isPermaLink="false">48e705f9-75e1-4bd2-a832-1e9fdbcb9587</guid><pubDate>Thu, 06 Aug 2026 11:17:52 +0000</pubDate><atom:updated>2026-08-06T11:17:52.211Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/a6b4n6y5/Untitled-4.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/a6b4n6y5/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுமார் 5.8 கி.மீ. முதல் 7.6 கி.மீ. உயரம் வரை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் முதல் லட்சத்தீவு பகுதிகள் வரை தென் தமிழகம் மற்றும் கேரளா வழியாக ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. வட தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இதன் காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி, கரூர், நாமக்கல், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வேளாண் பட்ஜெட் மாற்றம் அல்ல; ஏமாற்றம் - முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/agriculture-budget-not-change-but-deception-former-minister-mrk-panneerselvam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/agriculture-budget-not-change-but-deception-former-minister-mrk-panneerselvam#comments</comments><guid isPermaLink="false">789ae7b3-c3d7-45b2-89bd-2c4dbf0eb244</guid><pubDate>Thu, 06 Aug 2026 11:09:19 +0000</pubDate><atom:updated>2026-08-06T11:09:19.940Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>MRK Panneerselvam,வேளாண் பட்ஜெட்,agriculture budget,எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/jlsexbcs/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/jlsexbcs/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>வேளாண் பட்ஜெட்டில் பல அறிவிப்புகள் வரும் என்று தமிழக விவசாயிகள் பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் எங்கள் பட்ஜெட்டை திரும்ப படித்தது போல் இருந்தது. நான் 6 முறை வேளாண் பட்ஜெட் மீது உரையாற்றியிருக்கிறேன். இன்று சட்டமன்றத்தில் உட்கார்ந்திருக்கும்போது 7-வது முறையாக படிக்கிறோமோ என்ற எண்ணம் வந்தது. </p><p>மாற்றம் என்று சொல்லி வந்தவர்கள் அளித்த பட்ஜெட்டில் மாற்றம் இல்லை. புதிய அறிவிப்புகள் ஏதாவது வரும் என்று பார்த்தால் ஒன்றும் இல்லை. நாங்கள் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் உள்ள அறிவிப்புகள் வரி பிசகாமல் அப்படியே உள்ளன. திமுக ஆட்சியில் அறிவித்த அனைத்தும் தவெக அரசின் வேளாண் பட்ஜெட்டில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>வேளாண் கருவிகளை மானிய விலையில் வழங்க திட்டமிட்டு இருந்தோம்; அதை அப்படியே அறிவித்து விட்டனர். 2 லட்சம் விசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டம் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. மானாவாரி நில விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் திட்டம் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>கரூர்: வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.1,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-vao-arrested-for-accepting-a-bribe-of-rs1000-to-issue-a-succession-certificate</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-vao-arrested-for-accepting-a-bribe-of-rs1000-to-issue-a-succession-certificate#comments</comments><guid isPermaLink="false">9514acd2-8f60-4386-82d3-24ed7f3101b4</guid><pubDate>Thu, 06 Aug 2026 11:02:29 +0000</pubDate><atom:updated>2026-08-06T11:02:29.726Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர்,Karur,லஞ்சம்,Bribery,வாரிசு சான்றிதழ்,Certificate,வி.ஏ.ஓ. கைது,VAO arrested</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/elugptrx/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரூ.1000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/elugptrx/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கரூர், </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">கரூர்</a> மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D">வாரிசு சான்றிதழ் </a>வழங்க ரூ.1,000 லஞ்சம் வாங்கிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%8F%E0%AE%93-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">வி.ஏ.ஓ. கைது</a> செய்யப்பட்டார்.</p><h2>வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.1.000 லஞ்சம் </h2><p>கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வெஞ்சமாங்கூடலுார் கிழக்கு பகுதியைச் சேர்ந்த அன்புராஜ் (வயது 36), ராஜபுரம் கிராம நிர்வாக அலுவலராக (வி.ஏ.ஓ.) உள்ளார். இவரிடம் ராஜபுரம் அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்த கோபால் மகன் விபிலன்(28) என்பவர் வாரிசு சான்றிதழ் வழங்குமாறு கேட்டுள்ளார். அதற்கு அந்த வி.ஏ.ஓ., விபிலனிடம் ரூ.1,000 <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">லஞ்சம் </a>கேட்டுள்ளார்.</p><h2>வி.ஏ.ஓ. கைது</h2><p>லஞ்சம் கொடுக்க விரும்பாத விபிலன் இதுகுறித்து கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையிலான போலீசார் ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுகளுடன் சென்று வி.ஏ.ஓ. அன்புராஜை கையும் களவுமாக பிடித்து, கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பழனி ரூ.100 கோடி நில மோசடி - சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-rs-100-crore-land-scam-sub-registrar-justin-manikandan-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-rs-100-crore-land-scam-sub-registrar-justin-manikandan-arrested#comments</comments><guid isPermaLink="false">5b7be077-836a-4dfb-b674-203a32685e82</guid><pubDate>Thu, 06 Aug 2026 11:00:27 +0000</pubDate><atom:updated>2026-08-06T11:00:27.462Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பழனி,Murugan Temple,Palani,சார்பதிவாளர்,நில மோசடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/rt51so48/justin-Manikandan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/rt51so48/justin-Manikandan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பழனி தண்டாயுத பாணி சுவாமி மடத்திற்கு சொந்தமாக 1.45 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை கடந்த மாதம் 6ஆம் தேதி தனிநபர்கள் பெயரில் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டிருந்த அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது ரூ 100 கோடி மதிப்பிலான நிலத்தை வெறும் ரூ 2 கோடிக்கு வெள்ளத்துரை, சேதுபதி ஆகியோருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக பழனி மலையடிவார போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில் பத்திரப்பதிவை நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. பழனி சார்பதிவாளர்கள் இந்த நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்ய மறுத்து அவர்கள் விடுப்பில் சென்றனர். இதனால் கொடைக்கானலில் உள்ள சார்பதிவாளர் ஜஸ்டினை பழனி அலுவலகத்திற்கு அழைத்து வந்து முறைகேடான பத்திரப்பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.</p><h2>முன் ஜாமீன் கோரி மனு</h2><p>இதையடுத்து ஜஸ்டின்  மணிகண்டன் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அவருக்கு  இடைக்கால ஜாமீன் அளித்திருந்த நிலையில்,  ஜாமீன் மனு மீதான இறுதி தீர்ப்பை நேற்று உயர் நீதிமன்றம்  வழங்கியது. அதில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் பழனி முருகன் கோவில் கட் டுப்பாட்டில் உள்ள ஒரு மடத்துக்கு சொந்தமான நிலத்தின் மதிப்பு சுமார் 100 கோடி ரூபாய் என்று கூறப்பட்டு உள்ளது. அந்த சொத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்துள்ளனர். அதன்பேரில் பதிவான வழக்கை திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்கின்றனர். இதில் இந்த சொத்தின் ஆவணங்களை போலியாக தயாரிப்பதில் அன்வர்தீன் என்பவர் தீவிரமாக ஈடுபட்டு இருந்ததும், 1998-ம் ஆண்டு முதலே சம்பந்தப்பட்ட சொத்தை அபகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்ததும் தெரியவந்தது.</p><h2>விசாரணையை பாதிக்கும்</h2><p>இந்த வழக்கில் அன்வர்தீன் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த சொத்தை முறைகேடாக பதிவு செய்வதற்கு பழனி சார்பதிவாளர் பாலசுந்தருக்கு, அன்வர்தீன் தரப்பில் இருந்து அழுத்தம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.விற்பனையாளர் அவசர, அவசரமாக அந்த சொத்தை மொத்தம் ரூ.2 கோடிக்கு விற்றுள்ளார். இதுவும் அந்த ஆவணத்தின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகத்தை எழுப்புகிறது. இதுவும் மனுதாரருக்கு எதிராக அமைகிறது.மேலும் இந்த ஆவண பதிவில் ஈடுபட்ட அதிகாரிகள், அறங்காவலர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த குற்றச்சாட்டு குறித்தும் விரிவான விசாரணை தேவைப்படுகிறது. இந்த சூழ்நிலையில் மனுதாரருக்கு முன் ஜாமீன் வழங்கினால் அது விசாரணையை பாதிக்கும்.</p><h2>அதிரடி கைது</h2><p>பழனி சார்பதிவாளர் பாலசுந்தரால் பதிவு செய்யப்பட்ட குறிப்புகளுக்கு எவ்வித மதிப்பும் அளிக்காமல் கொடைக்கானலில் இருந்து பொறுப்பு சார் பதிவாளராக வந்திருந்த ஜஸ்டின் மணிகண்டன் நேரடியாக செயல்பட்டு பதிவு நடவடிக்கையை முடித்து இருக்கிறார். இது குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுக்கு உதவும் நோக்கில், அவர் வேண்டுமென்றே அந்த ஆவணத்தை பதிவு செய்துள்ளார் என்பதை காட்டுகிறது. எனவே அவரிடம் காவலில் வைத்து விசாரணை நடத்த வேண்டியது அவசியமாகிறது.எனவே இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. ஜஸ்டின் மணி கண்டனுக்கு வழங்கிய இடைக்கால ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது.” என்று உத்தரவிட்டது.  முன் ஜாமீன் மனு நேற்று தள்ளுபடியான நிலையில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். நில மோசடி வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஜஸ்டின் மணிகண்டன் ஐந்தாவதாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் சிபிசிஐடி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. </p>]]></content:encoded></item><item><title>வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு குறைபாடுகள்; பதிலுரையில் அறிவிக்க விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/various-shortcomings-in-the-agricultural-budget-farmers-association-insists-on-announcing-them-in-the-reply</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/various-shortcomings-in-the-agricultural-budget-farmers-association-insists-on-announcing-them-in-the-reply#comments</comments><guid isPermaLink="false">e8481697-bb34-47bb-9f4c-b71d0d2f5878</guid><pubDate>Thu, 06 Aug 2026 10:50:06 +0000</pubDate><atom:updated>2026-08-06T10:50:06.942Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விவசாயிகள் சங்கம்,வேளாண் பட்ஜெட்,Agricultural Budget,குறைபாடு,Farmers&apos; Associations-விவசாயிகள் சங்கத்தினர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/5kjdv9ud/14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/5kjdv9ud/14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இன்று சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். இந்த நிலையில் பட்ஜெட் குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர்  பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-  </p><p> தமிழக வேளாண் துறை அமைச்சர் 2.30 மணி நேரத்திற்கு மேலாக வேளாண் நிதி நிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்தார். வேளாண் துறையின் உட்பிரிவுத்துறைகளையும்   எடுத்துக்கொண்டதால் இது நீண்ட உரையானதே தவிர, எங்கள் சங்கம் சார்பிலும் மற்ற சங்கங்களும்,, சென்னையில் நடந்த மாநில கருத்து கேட்பு கூட்டத்தில் பேசி மனுவாக கொடுத்த உடனடி மற்றும் தொலைநோக்கு திட்டங்கள் பல இதில் இல்லை. தற்போதைய விவசாயிகளின் எதிர்பார்ப்பு, தேவை ஆகியவற்றை முழுமையாக கவனத்தில் கொண்டு இந்த அறிக்கை இல்லை. </p><h2>அரசு பொதுத்துறை காப்பீடு  திட்டம்</h2><p>பயிர் காப்பீடு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யபபட்டுள்ளது. ஆனால் நாங்கள் கோரிய அரசு பொதுத்துறை காப்பீடு  அமல்படுத்துவதற்கான திட்டம் இல்லை. நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை அமல்படுத்த  வலியுறுத்தியது இல்லை. மேலும் தென்னக நதி இணைப்பு திட்டத்தை நாங்கள் வலியுறுத்திய சூழலில் கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்தை அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். மாநில உள்ளூர் நதி  இணைப்பு என்கிற வகையில் காவேரி குண்டாறு திட்டத்திற்கு 143 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்ததை கூடுதல் படுத்தி காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும்.</p><h2>உரிய பாதுகாப்பு நிதி</h2><p>வெங்காய சேமிப்பு கிடங்குகள் அறிவித்து இருப்பது பாராட்டுக்குரியது. சிறுதானியங்கள், குறுதானியங்கள்,, மானாவரி பயிர்களுக்கான சிறப்புத் திட்டம் நல்லது. உள்ளூர் அளவில் இதன் விற்பனைக்கான உத்தரவாதம், அரசு கொள்முதல், மானியத் திட்டங்கள் இல்லாதது ஏமாற்றமே.  மலை அடிவார வேளாண் பயிர்களை, மனித உயிர்களை காடுவாழ் உயிரினங்களிலிருந்து பாதுகாப்பதற்கு சூரிய மின்வெளி திட்டம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பயனில்லை. காடு விலங்குகளை அப்புறப்படுத்த விவசாயிகளுக்கு அதிகாரம் வழங்கிட வேண்டும். உயிரிழப்பு, பயிரிழப்பிற்கு உரிய பாதுகாப்பு நிதி வழங்கிட அறிவிப்பு வேண்டும். </p><h2>தனி சிறப்பு ஆய்வு திட்டங்கள்</h2><p>கரும்பு உயர் விளைச்சலுக்கு வீரிய கரணைகள் அரசு விவசாயிகளுக்கு வழங்கிட உள்ளதாம். ஆனால் விலை உயர்வு அறிவிக்கப்படவில்லை. கரும்பு டன்னுக்கு ரூபாய் 4500 வழங்கிட வேண்டும். மூடிய மற்றும் நலிவடைந்த ஆலைகளை செயல்படுத்துவதற்கான தனி சிறப்பு ஆய்வு  திட்டங்கள் இல்லை. வாழைக்காக, விவசாயிகளுக்கு உகந்த காப்பீடு திட்டம் இல்லை. வாழை மரங்களுக்கான முட்டு மரத்திற்கு 6 கோடி ரூபாய் ஒதுக்கீடாம். தென்னை சாகுபடி குறித்து வலியுறுத்தப்பட்டாலும், விலை உயர்வு மற்றும் தமிழக அரசே உரி தேங்காய்களாக  கொள்முதல் செய்வது மற்றும் தேங்காய் எண்ணெய் விற்பனை திட்டங்கள் அறிவிக்க இல்லை.</p><p>எல்நினோ தாக்குதல் 12 மாவட்டங்களில்  சொல்லப்பட்டாலும், இதன் பாதுகாப்பு சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. மழை நீர் சேமிப்பு திட்டம், தடுப்பணைகள் அமைக்கும் திட்டம் என்பது இல்லாதது பெரிய ஏமாற்றம். நெல் பருவம் கொள்முதல்  தொடங்க உள்ள நேரத்தில் தமிழக அரசின் ஊக்கத்தொகை உயர்வு அறிவிப்பு இல்லை. குறுவை சாகுபடி வருமானம் இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு, குறுவை பயிரிட்டு காய்ந்து இழப்பிற்குள்ளான விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வலியுறுத்தி வரும் நிலையில் அதற்கான அறிவிப்புகள்  இல்லை. நெல் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால், நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆக உயர்த்த வேண்டும். இந்த நிலையில் பதிலுரை நிகழ்த்தும்  பொழுது இவைகளையும் சேர்த்து தமிழக அரசின் திட்டமாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">விவசாயிகள் சங்கம்</a> கேட்டுக்கொள்கிறது. </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முந்தைய அரசுகளின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஓட்டப்பட்டுள்ளதா? - அமைச்சர் நிர்மல் குமார் பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/have-stickers-been-pasted-over-schemes-from-previous-governments-minister-nirmal-kumar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/have-stickers-been-pasted-over-schemes-from-previous-governments-minister-nirmal-kumar#comments</comments><guid isPermaLink="false">a5286476-b5ea-4a36-ba6d-b682be3cf45c</guid><pubDate>Thu, 06 Aug 2026 10:32:17 +0000</pubDate><atom:updated>2026-08-06T10:32:17.188Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,சபாநாயகர்,நிர்மல் குமார்,Nirmal Kumar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/9tejzclm/Nirmal-kumar.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நிர்மல் குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/9tejzclm/Nirmal-kumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திமுக அரசின் திட்டங்களின் பெயர்களை மாற்றி&nbsp;விட்டு புதிய பெயரில் திட்டங்களை  தவெக அரசு அறிவிப்பதாகவும், வெறும் ஸ்டிக்கர் மட்டுமே  ஒட்டுவதாகவும்  எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், இது குறித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், . திட்டங்களுக்கு பொதுவான பெயர்கள் வைக்க வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். "ஆட்சி மாறும்போது நல்ல திட்டங்களை தொடர்வது வழக்கம்தான்; ஒவ்வொரு ஆட்சியிலும் சில திட்டங்கள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன" என்றார். </p><p>சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:  நிதி ஆதாரத்தை பெருக்க அதிமுகவும், திமுகவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நல்ல திட்டங்களை புதிய அரசு தொடர்வது வழக்கமான ஒன்றுதான். <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழக நிதி நிலமை</a> எவ்வளவு மோசமாக இருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும்.மின்சாரம், போக்குவர்த்து கழகம், ஆவின் என அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் மூடும் நிலையில்தான் இவர்கள் விட்டு சென்று இருக்கிறார்கள். புதிய ஆதாரத்திற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். அவர் என்ன செய்தார். எடப்பாடி எதுவும் செய்யவில்லை. ஸ்டாலினும் எதுவும் செய்யவில்லை. ஆனால், முதல்வர் விஜய் இதை சீரமைக்கும் எல்லா வேலைகளையும் செய்து வருகிறார்.  </p><h2>சிறப்பாக இருக்கும்</h2><p> விவசாய கடன் விவகாரத்தில் தெளிவாக கூறியுள்ளோம்.விவசாய கடன்கள் 75 ஆயிரம் ரூபாய் வரை முழுவதுமாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 14 லட்சத்திற்கும் மேற்பட்ட<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> விவசாயிகள்</a> பலன் அடைந்துள்ளனர். இருக்கிற நிதி நிலையில், இருக்கிற ஆதாரங்களை வைத்து எவ்வளவு தூரம் மக்களுக்கு பயன் அளிக்க முடியுமோ அதை முதல் அமைச்சர்  செய்துள்ளார். கண்டிப்பாக வரும் காலங்களில் மக்களுக்கான அனைத்து செயல்பாடுகளும் சிறப்பாக இருக்கும்.</p> <h2> ஆட்சேபமான கருத்துகள்</h2><p>தங்க மோதிரம். தாலிக்கு தங்க திட்டம் எல்லாம் இருக்கட்டும், இவை எல்லாம் நல்ல திட்டம். ஏழை பெண்களுக்கு பயன் அளிக்க கூடிய திட்டம். அதை மீண்டும் செயல்படுத்தி இருக்கிறோம். முதல் அமைச்சரை புகழ்ந்து பேசுவதற்கு சபாநாயகர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தேவையில்லாமல் இருந்தால் நீக்குவேன் என்று தான் சொன்னார். சபாநாயகர் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. ஆட்சேபமான கருத்துகள் இருந்தால் நீக்குகிறேன் என்று சொன்னார். ஆட்சேபமான கருத்துகள் எதுவும் இல்லை. அமைச்சர் வினோத் பேசியதில் தவறும் எதுவும் இல்லை. திட்டங்களுக்கு பொதுவான பெயர்கள் வைக்க வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். காவிரி விவகாரத்தில் தெளிவாக சொல்லியிருக்கிறோம். உரிமைகளை மீட்க எல்லா வழிகளையும் செய்வோம்" என்று கூறினார்.  </p>]]></content:encoded></item><item><title>கழிவறைக்கு சென்ற மாணவர்களை மின்சாரம் தாக்கியது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/students-were-electrocuted-while-going-to-the-restroom</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/students-were-electrocuted-while-going-to-the-restroom#comments</comments><guid isPermaLink="false">9d5fbfef-aa9c-4d92-938f-7ab079c4926b</guid><pubDate>Thu, 06 Aug 2026 10:30:11 +0000</pubDate><atom:updated>2026-08-06T10:30:11.703Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>suspend,தர்மபுரி,Dharmapuri,மாணவர்கள்,மின்சாரம் தாக்கி,காயம்,police enquiry</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/1q6z57mz/90.jpg" width="735"><media:title type="html"><![CDATA[ அரசுப் பள்ளி]]></media:title><media:description type="html"><![CDATA[ தருமபுரி அரசுப் பள்ளி ஒன்றில் கழிவறையைப் பயன்படுத்தச் சென்ற 9 மாணவர்கள் மின்சாரம் தாக்கி மயக்கமடைந்தனர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/1q6z57mz/90.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தருமபுரி,</p><p>தருமபுரி மாவட்டத்தில் உள்ள <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அரசுப் பள்ளி</a> ஒன்றில் கழிவறையைப் பயன்படுத்தச் சென்ற 9 மாணவர்கள் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மின்சாரம் தாக்கி</a> மயக்கமடைந்த அதிர்ச்சி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>விபத்து நடந்தது எப்படி?</h2><p>சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில், பணியாளர்கள் தங்குவதற்காக தருமபுரி மாவட்ட அரசுப் பள்ளியில் ஒரு வகுப்பறை ஒதுக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கு தற்காலிகமாக மின் இணைப்பு வழங்கப்பட்டது. ஆனால், தேர்தல் முடிந்த பின்னரும் அந்த தற்காலிக மின் வயர் அகற்றப்படாமல் அலட்சியமாக விடப்பட்டது.</p><p>மேலும் பலத்த காற்றின் காரணமாக அந்த மின் வயர் சேதமடைந்து, கழிவறையின் இரும்பு மின் கதவில் உரசியபடி இருந்துள்ளது. இதனால் கதவு முழுவதும் மின்சாரம் பாய்ந்திருந்த நிலையில், கழிவறையைப் பயன்படுத்த வந்த 9 மாணவர்கள் கதவைத் தொட்டபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தனர்.</p><h2>ஆஸ்பத்திரியில் அனுமதி</h2><p>மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த ஆசிரியர்கள், அவர்களை மீட்டு உடனடியாக தொப்பூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் பலத்த காயமடைந்த 2 மாணவர்கள் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மற்ற மாணவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.</p><h2>கலெக்டர் அதிரடி நடவடிக்கை</h2><p>தேர்தல் முடிந்து மூன்று மாதங்கள் ஆகியும் ஆபத்தான மின் இணைப்பை அகற்றாமல் இருந்ததே விபத்துக்குக் காரணம் என ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளி முன்பாகத் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், இந்த விபத்தை உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் மறைக்க தலைமையாசிரியர் முயன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.</p><p>இதுகுறித்து தகவல் அறிந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தருமபுரி மாவட்ட கலெக்டர்</a> சரவணன் நேரடியாக பள்ளிக்குச் சென்று தீவிர விசாரணை நடத்தினார். விசாரணையின் அடிப்படையில், கடும் அலட்சியத்துடன் செயல்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் செந்தாமரையை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும், அங்குள்ள மற்ற 3 ஆசிரியர்களிடமும் விளக்கக் கடிதம் கொடுக்குமாறு உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>அகஸ்தியர் அருவிக்கு நாளை முதல் 10 நாட்கள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-banned-from-visiting-agasthiyar-falls-for-10-days-from-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-banned-from-visiting-agasthiyar-falls-for-10-days-from-tomorrow#comments</comments><guid isPermaLink="false">29d57123-3622-468f-aa3c-1223c72314b6</guid><pubDate>Thu, 06 Aug 2026 10:28:14 +0000</pubDate><atom:updated>2026-08-06T10:28:14.276Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tourists,சுற்றுலா பயணிகள்,அகஸ்தியர் அருவி,agasthiyar falls,banned,செல்ல தடை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/2c5qqd91/agasthiyar-falls.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/2c5qqd91/agasthiyar-falls.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை</p><p>ஆடி அமாவாசையை முன்னிட்டு அகஸ்தியர் அருவிக்கு நாளை முதல் 10 நாட்கள் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர்  தடை விதித்துள்ளனர்.</p><h2>அகஸ்தியர் அருவி</h2><p>நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் தாமிரபரணி ஆறு உற்பத்தியாகி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை செழிப்படைய செய்கிறது. மேலும் சில மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் இந்த ஆறு விளங்குகிறது. இந்த ஆறு மலைகளுக்கு நடுவே தவழ்ந்து வரும் இடத்தில் அகஸ்தியர் கோவில் அருகில் அருவியாக கொட்டுகிறது. இந்த அருவி நெல்லை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும்.</p><p>குற்றாலம், மணிமுத்தாறு போன்ற அருவிகள் இருந்தாலும் அங்கு மழை பெய்யும் காலத்தில் மட்டுமே தண்ணீர் விழும். ஆனால், பாபநாசம் காரையாறு அணையில் இருந்து சீராக திறந்து விடப்படும் தண்ணீரால், அகஸ்தியர் அருவியில் ஆண்டு முழுவதும் 365 நாட்களும் தண்ணீர் விழும். இங்கு குளிக்க வருபவர்கள், தண்ணீர் இல்லை என்று திரும்பி சென்றது கிடையாது. இதே போல் பாபநாசத்தில் உள்ள கோவிலும் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இங்கு பக்தர்கள், தாமிரபரணி ஆற்றில் நீராடி பாபநாச சுவாமி உலகம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வார்கள். தங்களது பாவங்கள் போக்க வேண்டி செல்வார்கள்.</p><h2>ஆடி அமாவாசை திருவிழா</h2><p>இந்நிலையில் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் வரும் 12-ம் தேதி ஆடி அமாவாசை திருவிழா நடைபெற உள்ள நிலையில் கோவிலுக்கு  அதிகமான எண்ணிக்கையில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் பொதுமக்களின் நலன் கருதி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF">அகஸ்தியர் அருவி</a>க்கு நாளை முதல் 10 நாட்கள் சுற்றுலா பயணிகள்  செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை மெட்ரோ திட்டம் 2: 11-வது சுரங்கம் தோண்டும் பணி நிறைவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-metro-project-2-11th-tunnel-excavation-completed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-metro-project-2-11th-tunnel-excavation-completed#comments</comments><guid isPermaLink="false">4188e5b0-a5b2-4ace-adce-2930b1307f0e</guid><pubDate>Thu, 06 Aug 2026 10:22:19 +0000</pubDate><atom:updated>2026-08-06T10:22:19.541Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,chennai metro,மெட்ரோ ரயில்,tunnel,Canal Project,சுரங்கப்பாதை பணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/8rq5if03/197.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மெட்ரோ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/8rq5if03/197.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>சென்னை மெட்ரோ திட்டம் கட்டம் 2 வழித்தடத்தில் உள்ள 11-வது சுரங்கம் தோண்டும் பணி நிறைவு பெற்றது.</p><p>இது தொடர்பாக, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 3-ல் மாதவரம் பால் பண்ணை முதல் கெல்லீஸ் வரையிலான முதல் 9 கி.மீ. நீளத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணியை டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணிக்காக மொத்தம் 7 சுரங்கப்பாதை தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், 'நீலகிரி' என்று பெயரிடப்பட்ட சுரங்கப்பாதை தோண்டும் இயந்திரம், மாதவரம் நெடுஞ்சாலை ரெயில் நிலையத்திலிருந்து மூலக்கடை ரெயில் நிலையம் வரையிலான (up line) பகுதியில் சுரங்கம் தோண்டும் பணியைத் தொடங்கியது. மொத்தம் 819 மீட்டர் நீளத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணியை முடித்து மூலக்கடை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B">மெட்ரோ </a>நிலையத்தை வந்தடைந்தது. இது TU01 ஒப்பந்தத்தின் கீழ் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட 11-வது சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் வெற்றிகரமான பணி நிறைவு ஆகும்.</p><h2>”நீலகிரி”</h2><p>ஒட்டுமொத்தமாக, சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2-ல் இதுவரை 24 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் தனது பணியை முடித்து இலக்குகளை வெற்றிகரமாக எட்டியுள்ளது. இந்தத் திட்டத்தின் TU-01 ஒப்பந்தப் பிரிவின் கீழ் வரும் மாதவரம் நெடுஞ்சாலை முதல் மூலக்கடை வரையிலான <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88">சுரங்கப் பாதை</a> பகுதி பல பெரிய சவால்கள் நிறைந்ததாக அமைந்தது; குறிப்பாக, 'நீலகிரி' (S 96) என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் பக்கிங்ஹாம் கால்வாயின் அடியிலும், வாகனப் போக்குவரத்து நிறைந்த சாலையின் அடியிலும் வெற்றிகரமாகப் பாதையை அமைத்ததோடு, அப்பகுதியில் இருந்த 14-க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகளால் பொதுமக்களின் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படாதவாறு தடையின்றி மாற்று நீர் ஆதாரங்களை அமைத்துக் கொடுத்து இப்பணிகள் சிறப்பாகச் செய்து முடிக்கப்பட்டுள்ளன.</p><p>சுரங்கப்பாதை அமைக்கும் பணி முழுவதும், அனுமதிக்கப்பட்ட குறைந்தபட்ச நில அதிர்வு மற்றும் மாற்றங்களுக்குள் மிகச் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டது. மேலும், இப்பணி நடைபெற்ற காலம் முழுவதும் விரிவான கண்காணிப்புக் கருவிகள் மூலம் தொடர் கண்காணிப்பு உறுதிசெய்யப்பட்டது.</p><h2>பங்கேற்பு</h2><p>இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இணைப் பொது மேலாளர் கொள்ளி வெங்கட ரமணா (சுரங்கப் பாதை), பொது ஆலோசகர் குழுவின் முதன்மை வரைபடப் பொறியாளர் நாயுடு, டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் திட்ட மேலாளர் விஜய குமார், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் மற்றும் பொது ஆலோசகர் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருத்தணி சுப்பிரமணியசாமி கோவிலில் ஆடி கிருத்திகை விழா: பக்தர்கள் காவடி எடுத்து சுவாமி தரிசனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aadi-krithigai-festival-at-tiruttani-subramaniasamy-temple-devotees-offer-kavadi-and-have-darshan-of-the-lord</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aadi-krithigai-festival-at-tiruttani-subramaniasamy-temple-devotees-offer-kavadi-and-have-darshan-of-the-lord#comments</comments><guid isPermaLink="false">12823256-e5e2-44f4-9119-8bbe03c51ce1</guid><pubDate>Thu, 06 Aug 2026 10:16:09 +0000</pubDate><atom:updated>2026-08-06T10:16:09.569Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவள்ளூர்,பக்தர்கள்,Devotees,திருத்தணி முருகன் கோவில்,Tiruvallur,ஆடி கிருத்திகை விழா,காவடி,kavadi,Aadi Krittikai,சுவாமி தரிசனம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/z75vwhdi/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருத்தணி சுப்பிரமணியசாமி கோவிலில் ஆடி கிருத்திகை விழா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/z75vwhdi/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர், </p><p>திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF">திருத்தணி</a> சுப்பிரமணியசாமி கோவிலில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE">ஆடி கிருத்திகை விழா</a>வையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">சுவாமி தரிசனம் </a>செய்தனர்.</p><h2>ஆடி கிருத்திகை தெப்பத் திருவிழா</h2><p>திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சுப்பிரமணியசாமி கோவில், முருகப்பெருமானின் புகழ்பெற்ற ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழ்கிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி கிருத்திகை தெப்பத் திருவிழா மிகுந்த பக்தி பரவசத்துடன் தற்போது நடைபெற்று வருகிறது.</p><h2>சிறப்பு அபிஷேகம்</h2><p>விழாவின் மூன்றாம் நாளான இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். மூலவர் சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பலவித மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, வைர ஆபரணங்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற மகா தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு "அரோகரா. அரோகரா என பக்தி முழக்கமிட்டு வழிபட்டனர். </p><p>மலைக்கோவிலில் உள்ள காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமான் வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த அலங்காரத்தை தரிசிக்க நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர்.</p><figure><img alt="காவடி எடுத்து வந்த பக்தர்கள்" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/75kux1sc/Untitled-2.jpg" /></figure><h2>காவடி எடுத்து, அலகு குத்தி வந்த பக்தர்கள்</h2><p>தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் பாதயாத்திரையாகவும், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF">காவடி</a>, பால்குடம், அலகு குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியும் திருத்தணி மலைக்கோவிலுக்கு வந்திருந்தனர்.</p><h2>அரோகரா.. அரோகரா.. பக்தி கோஷத்தால் பரவசம்</h2><p>மலைக்கோவில் முழுவதும் பக்தர்களின் அரோகரா.. அரோகரா.. என்ற பக்தி கோஷம் எதிரொலித்ததால் பக்தி பரவசமான சூழல் நிலவியது. பக்தர்களின் வசதிக்காக குடிநீர், மருத்துவ வசதி, அன்னதானம், ஓய்விடம் உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.</p><h2>கண்காணிப்பு பணிகள் தீவிரம்</h2><p>பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்யும் வகையில் கோவில் நிர்வாகம், காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் இணைந்து பலத்த பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மலைப்பாதை மற்றும் கோயில் வளாகம் முழுவதும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு இருந்தன. </p><p>ஆடி கிருத்திகை விழாவையொட்டி திருத்தணி நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. பக்தர்கள் தொடர்ந்து அதிகளவில் வருகை புரிந்து வருவதால் கோயில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.</p>]]></content:encoded></item><item><title>ஆந்திரா கடத்தி சென்று 3 மாதங்களாக சிறுமியுடன் குடும்பம் நடத்திய லாரி டிரைவர் - போக்சோவில் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/andhra-abducted-16-year-old-girl-lorry-driver-arrested-under-pocso</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/andhra-abducted-16-year-old-girl-lorry-driver-arrested-under-pocso#comments</comments><guid isPermaLink="false">89e6904f-b5a9-4051-9220-91f752ec7208</guid><pubDate>Thu, 06 Aug 2026 09:59:46 +0000</pubDate><atom:updated>2026-08-06T09:59:46.164Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Vellore,வேலூர்,arrest,POCSO case,போக்சோ வழக்கு,காட்பாடி,katpad</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/sa7x3wnh/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/sa7x3wnh/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வேலூர்,</p><p>16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஆந்திராவுக்கு கடத்திச் சென்று 3 மாதங்களாக குடும்பம் நடத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>சிறுமியுடன் காதல்</h2><p>வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வண்டறந்தாங்கல் சொரக்கால்பேட்டையைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 31), லாரி டிரைவர். பிரகாசுக்கும் காட்பாடியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.</p><h2>3 மாதங்களாக தலைமறைவு</h2><p>இதையடுத்து பிரகாஷ், சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி அழைத்துச் சென்றார். கடந்த 3 மாதங்களாக இருவரும் தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காட்பாடி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் பிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்து 3 மாதங்களாக பிரகாஷையும், சிறுமியையும் தேடி வந்தனர்.</p><h2>ரகசிய தகவல்</h2><p>இந்த நிலையில் இருவரும் ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக காட்பாடி போலீசாருக்கு ரகசிய தகவல்கள் வந்தன. அதன்பேரில் போலீசார் ஆந்திரா சென்று தலைமறைவாக இருந்த பிரகாஷ் மற்றும் 16 வயது சிறுமியை மீட்டு காட்பாடிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.</p><h2>2 மனைவிகள்</h2><p>விசாரணையில், பிரகாஷ் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றி அழைத்துச் சென்றதும், அவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 மனைவிகளும், 5 குழந்தைகளும் இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து லாரி டிரைவர் பிரகாஷை போலீசார் கைது செய்தனர். சிறுமியை காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் ஜெபமாலையுடன் வந்த அமைச்சர்: இந்துகளுக்கு மட்டும் பாரபட்சம் ஏன்? தமிழிசை கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/legislative-assembly-religious-symbols-issue-tamilisai-criticizes-double-standards</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/legislative-assembly-religious-symbols-issue-tamilisai-criticizes-double-standards#comments</comments><guid isPermaLink="false">0617ef68-5b4f-46c8-87c8-8148214608f0</guid><pubDate>Thu, 06 Aug 2026 09:54:47 +0000</pubDate><atom:updated>2026-08-06T09:54:47.068Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,சென்னை,தமிழிசை சவுந்தரராஜன்,சட்டப்பேரவை,religion,Symbol,Dr.Tamilisai Soundararajan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/or8vv4ij/196.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழிசை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/or8vv4ij/196.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக முன்னாள் பாஜக தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%20%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D">தமிழிசை சவுந்தரராஜன்</a>, தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது ஏற்பட்ட மதச்சார்பின்மை தொடர்பான விவகாரத்தில், இரட்டை அளவுகோல் இருப்பதாக விமர்சனம் செய்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>சட்டப்பேரவை</h2><p>தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது, அதன் நகல் திருப்பதி கோவில் வெங்கடேஸ்வரப் பெருமான் திருவடியில் வைக்கப்பட்டதற்கு, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், "இந்தியா மதச்சார்பற்ற நாடு. அப்படியிருக்கையில், பட்ஜெட்டை வெங்கடேஸ்வரப் பெருமான் திருவடியில் எப்படிக் வைக்க முடியும்?" என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், இதே மதச்சார்பற்ற நாட்டில், ஜெபமாலை மற்றும் இயேசு சிலை சட்டப்பேரவைக்குள் கொண்டு வரப்பட்டபோது, அவர் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.</p><p>அதேபோல், இந்து மரபுகளுடன் தொடர்புடைய எந்த வெளிப்பாடும் மதச்சார்பின்மைக்கு எதிரானது என்று அடிக்கடி கூறிவரும் திருமாவளவன், சட்டப்பேரவைக்குள் ஜெபமாலை கொண்டு வரப்பட்டதை, "ஒவ்வொருவருக்கும் தங்கள் மதத்தை கடைப்பிடிக்கவும் வெளிப்படுத்தவும் உரிமை உள்ளது" என்று நியாயப்படுத்தினார்.</p><p>கி. வீரமணி, அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை போன்றவை நடத்தப்படுவது மதச்சார்பற்ற கொள்கைக்கு எதிரானது என்று கடந்த காலங்களில் விமர்சித்துள்ளார். ஆனால், இன்றைய இந்த நிகழ்வைப் பற்றி எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.</p><p>கடந்த காலத்தில், தங்களது மத நம்பிக்கையின்படி கையில் காப்பு கட்டிக்கொள்வது, நெற்றியில் விபூதி அல்லது குங்குமம் அணிவது, இந்து மத அடையாளங்களை வெளிப்படுத்துவது போன்றவை மதவாதம் என சித்தரிக்கப்பட்டன. மாணவர்கள் கூட இத்தகைய மத அடையாளங்களுடன் பள்ளிக்கு வரக்கூடாது என்ற வாதங்களும் முன்வைக்கப்பட்டன. ஆனால், சட்டப்பேரவைக்குள் மற்றொரு மதத்தின் அடையாளம் இடம்பெற்றபோது யாரும் கேள்வி எழுப்பவில்லை.</p><h2>அடிப்படை உரிமை</h2><p>நான் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன், நிதி அமைச்சர் தமது மத நம்பிக்கையின்படி ஜெபமாலை அணிவதையோ, சிலுவைக் குறி இடுவதையோ நான் விமர்சிக்கவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையின்படி, ஒவ்வொருவருக்கும் தங்கள் மதத்தை கடைப்பிடிக்கவும் வெளிப்படுத்தவும் முழு உரிமை உள்ளது.</p><p>ஆனால், எனது கேள்வி இதுதான்: இந்து மதத்தின் ஒவ்வொரு வெளிப்பாடும் ஏன் தொடர்ந்து மதவாதமாகவோ அல்லது மதச்சார்பின்மைக்கு எதிரானதாகவோ சித்தரிக்கப்படுகிறது, அதேசமயம் மற்ற மதங்களின் இதே போன்ற வெளிப்பாடுகள் மத சுதந்திரத்தின் விஷயங்களாகப் பாதுகாக்கப்படுகின்றன?  பல இந்துக்கள் தாங்கள் இரட்டை அளவுகோலின் அடிப்படையில் நடத்தப்படுகிறோம் என்று உணர்வதற்கான காரணத்தை சுட்டிக்காட்டுவதற்காகவே இதை நான் கூறுகிறேன். தமிழக மக்கள், இந்து பெரும்பான்மையினரின் நம்பிக்கைகள், மரபுகள் மற்றும் மத உணர்வுகள் சமமாக மதிக்கப்படுகிறதா என்பதை சிந்திக்க வேண்டும்.</p><p>இந்துக்கள் தங்கள் மத நம்பிக்கைகளை வெளிப்படுத்தினால், அவர்கள் மதவாதிகள் அல்லது பிளவுவாதிகள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். ஆனால், பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் அதையே செய்தால், அது மதச் சுதந்திரத்தின் ஓர் இயல்பான வெளிப்பாடாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு வேறுபட்ட அளவுகோல்களை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்? தமிழக மக்களே, இதைப் பற்றி சிந்தியுங்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">When a copy of the Budget was placed before Lord Venkateswara at the Tirupati Temple, Madurai <a href="https://x.com/SuVe4Madurai?ref_src=twsrc%5Etfw">@SuVe4Madurai</a> MP Su. Venkatesan strongly objected, saying that India is a secular country and questioned how the Budget could be placed at the feet of Lord Venkateswara.<br><br>Yet, in the… <a href="https://t.co/3sKGoXJnzC">pic.twitter.com/3sKGoXJnzC</a></p>&mdash; Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) <a href="https://x.com/DrTamilisai4BJP/status/2085240577973686582?ref_src=twsrc%5Etfw">August 6, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>விவசாயிகள் நலனை காற்றில் பறக்கவிட்ட வேளாண் பட்ஜெட் - வானதி சீனிவாசன் விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/agriculture-budget-that-blew-away-farmers-welfare-vanathi-srinivasans-criticism</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/agriculture-budget-that-blew-away-farmers-welfare-vanathi-srinivasans-criticism#comments</comments><guid isPermaLink="false">875cd4d0-4073-4f10-9cff-f6ad3e122a40</guid><pubDate>Thu, 06 Aug 2026 09:20:11 +0000</pubDate><atom:updated>2026-08-06T09:20:11.149Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Farmers,விவசாயிகள்,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,வேளாண் பட்ஜெட்,agriculture budget</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/5rlsmo8a/1.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/5rlsmo8a/1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இன்று சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். இந்த நிலையில் பட்ஜெட் குறித்து தேசிய பாஜக மகளிரணி தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D">வானதி சீனிவாசன்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>'கோட் சூட் போட்ட விவசாயி' முதல்-அமைச்சர் அவர்களே.. இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக வேளாண் பட்ஜெட்டில், தவெக அளித்த தேர்தல் வாக்குறுதியில் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக குவிண்டாலுக்கு ரூ. 3,500 மற்றும் கரும்பிற்கு ரூ. 4,500  வழங்கப்படும் என்று அறிவித்தது என்னாச்சு..?</p><h2>கத்தி பட வசனம்</h2><p>60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் மாதந்தோறும் ரூ. 3,000 ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு என்னாச்சு...? விவசாயி உரிமைத் தொகை விதைப்புக் கால நிதியுதவி ரூ. 15,000 என்னாச்சு? Simple - ஆ சொல்லனும்னா நீங்க நடிச்ச கத்தி பட வசனம்தான் நினைவுக்கு வருகிறது. “மூன்றுவேளை பசி எடுத்தா சாப்பாட்டை நினைக்கிறோம்..! ஆனா அந்த சாப்பாட்டை உருவாக்குற விவசாயியை மட்டும் மறந்துடுறோம்..!" அப்படித்தான் இந்த தவெக அரசு பல கவர்ச்சித் திட்டங்களை அறிவித்துவிட்டு, அதற்கு வடிவம் கொடுக்கும் விவசாயிகள் நலனை காற்றில் பறக்கவிட்டது போல் அமைந்திருக்கிறது இந்த வேளாண் பட்ஜெட்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஐ.டி. என்ஜினீயரை காரில் கடத்தி நகை-பணம் பறிப்பு: 4 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-engineer-kidnapped-in-car-jewellery-and-cash-snatched-4-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-engineer-kidnapped-in-car-jewellery-and-cash-snatched-4-arrested#comments</comments><guid isPermaLink="false">4141e36d-b5e8-4968-8bcd-a3feaefb7a78</guid><pubDate>Thu, 06 Aug 2026 09:19:23 +0000</pubDate><atom:updated>2026-08-06T09:19:23.552Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,கைது,arrest,Car,காரில் கடத்தல்,Kidnapping,என்ஜினீயர்,Engineer,நகை-பணம் பறிப்பு,jewelry-money robbery,I.T. sector,ஐ.டி.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/7scd4k2l/4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 4 பேர் கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/7scd4k2l/4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,  </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88">கோவை</a>யில் ஐ.டி. <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%80%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D">என்ஜினீயரை</a> காரில் கடத்திச் சென்று, நகை மற்றும் பணத்தை பறிப்பில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>ஐ.டி. என்ஜினீயர் காரில் கடத்தல்</h2><p>கோவையில் ஐ.டி. என்ஜினீயர் சஞ்சய் என்பவரிடம் 'கிரைண்டர்' செயலி மூலம் நெல்லையைச் சேர்ந்த ஆத்விக் என்பவர் அறிமுகமானார். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து சஞ்சய்யை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">காரில் கடத்திச்</a> சென்றுள்ளார்.</p><h2>நகை-பணம் பறிப்பு, 4 பேர் கைது</h2><p>சிறுவாணி சாலையில் வைத்து அவரை தாக்கி, அவரிடமிருந்த ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பணத்தை பறித்துவிட்டு தப்பியோடினர். இது குறித்த புகாரின்பேரில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி ஆத்விக் உள்ளிட்ட 4 பேரையும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/heavy-rain-likely-in-7-districts-of-tamil-nadu-today-5</link><comments>https://www.dailythanthi.com/news/weather/heavy-rain-likely-in-7-districts-of-tamil-nadu-today-5#comments</comments><guid isPermaLink="false">8ec515f2-e9c1-4ac1-bcf8-2a2662418314</guid><pubDate>Thu, 06 Aug 2026 09:16:02 +0000</pubDate><atom:updated>2026-08-06T09:16:02.182Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,கனமழை,வானிலை,மழை,Weather update,heavy rain,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/qb8pui1i/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/qb8pui1i/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>சுமார் 5.8 கி.மீ. முதல் 7.6 கி.மீ. உயரம் வரை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் முதல் லட்சத்தீவு பகுதிகள் வரை தென் தமிழகம் மற்றும் கேரளா வழியாக ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. வட தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><p><strong>06-08-2026:</strong> ராணிப்பேட்டை, திருவள்ளூர், நீலகிரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர், தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், ஈரோடு, திருச்சி, கரூர், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>07-08-2026:</strong> கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><h3>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</h3><p><strong>06-08-2026 மற்றும் 07-08-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று குறையக்கூடும்.</p><p><strong>08-08-2026 முதல் 10-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.</p><h3>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</h3><p>06-08-2026 முதல் 10-08-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p><strong>நாளை</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வேளாண் நிதிநிலை அறிக்கை உழவர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது – அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-agricultural-budget-report-has-disappointed-farmers-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-agricultural-budget-report-has-disappointed-farmers-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">38488efd-09ea-4ce5-800b-4c6efdbfa536</guid><pubDate>Thu, 06 Aug 2026 09:00:35 +0000</pubDate><atom:updated>2026-08-06T09:00:35.094Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,Farmers,ஏமாற்றம்,உழவர்கள்,Agricultural Budget,வேளாண் நிதிநிலை அறிக்கை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/d6dk2itt/anbumani.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/d6dk2itt/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு அரசின் சார்பின் ஆறாம் முறையாகவும், த.வெ.க. அரசின் சார்பில் முதல் முறையாகவும் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகளைப் பார்க்கும் போது எந்த நோக்கத்திற்காக வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று பாமக 13 ஆண்டுகள் போராடி வெற்றி பெற்றதோ, அந்த நோக்கத்தில் ஒரு  விழுக்காடு கூட நிறைவேறவில்லை. இந்த நிதிநிலை அறிக்கை உழவர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது.</p><h2>நிதி ஒதுக்கீடு</h2><p>சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பும், வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீடும் கணிசமாக குறைக்கப்பட்டிருக்கிறது. வேளாண்துறைக்கு மட்டும் திமுக அரசில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ரூ.15,167.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் அதை விட ரூ.470.92 கோடி குறைவாக ரூ.14,696.70 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையில் 20 துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.58,374 கோடி என்றும், இது இடைக்கால நிதிநிலை அறிக்கையின் மதிப்பான ரூ.47,248 கோடியை விட ரூ.11,126 கோடி அதிகம் என்றும் கூறப்பட்டிருக்கிறது.</p><h2>மொத்த மதிப்பு குறைப்பு</h2><p>உண்மையில் வேளாண் நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பு குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள 20 துறைகளில் ஊரக வளர்ச்சித்துறைக்கான நிதி ஒதுக்கீடு மட்டும் இடைக்கால நிதிநிலை அறிக்கையின் மதிப்பான ரூ.6,329.29 கோடியிலிருந்து ரூ.11,774 கோடி உயர்த்தி மொத்தம் ரூ.18,103.02 கோடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வரை நடைமுறையிலிருந்த 100 நாள் வேலைத் திட்டத்திற்கு பதிலாக 125 நாள் வேலைத் திட்டம் அறிமுகம் செய்யபட்டிருப்பதாகவும், இந்தத் திட்டத்திற்கான மத்திய அரசின் பங்கு குறைக்கப்பட்டு, மாநில அரசின் பங்கு உயர்த்தப்பட்டிருப்பதால் தான் இந்தக் கூடுதல்  நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் கள அளவில் எந்த மாற்றமும் ஏற்பட்டு விடப்போவதில்லை. இந்த கூடுதல்  ஒதுக்கீட்டை கழித்துப் பார்த்தால் வேளாண் நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பு ரூ.46,600 கோடி மட்டும் தான். இது இடைக்கால நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பான ரூ.47,248 கோடியை விட ரூ.648 கோடி குறைவு ஆகும்.</p><p> நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பில் 25% வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. அதன்படி நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பான ரூ.4.62 லட்சம் கோடியில் வேளாண் நிதிநிலை அறிக்கைக்காக ரூ.1.16 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதில் பாதியளவு மட்டும் தான் வேளாண்மைக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் வேளாண்மைத் துறைக்கு மட்டும் வெறும் ரூ.14,696.70 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதை ஏற்கவே முடியாது.</p><h2>மிகப்பெரிய ஏமாற்றம்</h2><p>த.வெ.க. ஆட்சிக்கு வந்தால் நெல்லுக்கான கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3500, கரும்புக்கான கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.4500 வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது குறித்து எந்த அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை. நெல் கொள்முதலை கையாளும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு திமுக ஆட்சியின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில், ரூ.14,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் ரூ.18 கோடி மட்டும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு பார்க்கும் போது நடப்பாண்டில் நெல்லுக்காக தமிழக அரசு வழங்கும் ஊக்கத்தொகை உயர்த்தப்படாது என்றே தோன்றுகிறது. இது மிகப்பெரிய ஏமாற்றம்.</p><h2>தார்ப்பாய்கள்</h2><p>கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளுடன் உழவர்கள் காத்துக் கிடப்பதைத் தடுக்கவும், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாவதைத் தடுக்கவும் கிடங்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று பாமக வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதற்கான திட்டங்களை அறிவிக்காத அரசு, 43,500 விவசாயிகளுக்கு  ரூ.10 கோடியில்  தார்ப்பாய்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. ரூ.2298 மதிப்புள்ள தார்ப்பாய்களைக் கொண்டு பல டன் எடையுள்ள நெல்லை எவ்வாறு நனையாமல் பாதுகாக்க முடியும்? என்பது தெரியவில்லை.</p><p>பயறு வகைகளின் சாகுபடியை  15.19 லட்சம் ஏக்கரில் இருந்து 24.70 லட்சம் ஏக்கராகவும், எண்ணெய் வித்துகளின் சாகுபடி பரப்பை 9.26 லட்சம் ஏக்கரில் இருந்து 14.89 லட்சம் ஏக்கராகவும் உயர்த்த சிறப்புத் திட்டம்  செயல்படுத்தப் படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்காக உழவர்களுக்கு ஊக்கத்தொகை எதுவும் அறிவிக்கப்படவில்லை. பிற பயிர்களுடன் ஒப்பிடும் போது பயறு மற்றும் எண்ணெய் வித்துகள் சாகுபடியில் லாபம் குறைவாகவே கிடைக்கும் நிலையில், அதை ஈடு செய்யும் அளவுக்கு உழவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்காத நிலையில், இந்த முயற்சி வெற்றி பெறாது. இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள பல அறிவிப்புகள்  திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் &amp; அறிவிப்புகளின் நீட்சியாகவே உள்ளன. புதிதாக எதுவும் இல்லை.</p><h2>அஞ்சலையம்மாள் விருது</h2><p>நெல் உள்ளிட்ட 10 வகையான பயிர்களில் அதிக விளைச்சல் ஈட்டும் 3 உழவர்கள் வீதம் மொத்தம் 30 பேருக்கு வழங்கப்படும் விருதுகளுக்கு கடலூர் அஞ்சலையம்மாள் பெயர் சூட்டப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">நிதிநிலை அறிக்கை </a>மீதான விவாதத்திற்கு பதிலளிக்கும் போதாவது பயனுள்ள அறிவிப்புகளை அரசு வெளியிட வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் என்னென்ன?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-governments-agriculture-budget-will-it-please-farmers-immediate-update</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-governments-agriculture-budget-will-it-please-farmers-immediate-update#comments</comments><guid isPermaLink="false">d957c9d5-df5c-429f-a09b-b1846bb7c135</guid><pubDate>Thu, 06 Aug 2026 03:57:22 +0000</pubDate><atom:updated>2026-08-06T08:49:20.041Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,தமிழக சட்டசபை,TNAssembly,சட்டசபை கூட்டத்தொடர்,வேளாண் பட்ஜெட்,TNAgricultureBudget,தமிழக வேளாண் பட்ஜெட்,தவெக அரசு,TVK Government,tvk cabinet,CMVijay‌</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/fx7b3hh9/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/fx7b3hh9/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் 5-ந்தேதி தாக் கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தேர்தல் நேரத்தில் மக்களுக்கு பல் வேறு வாக்குறுதிகளை விஜய் அளித்து இருந்தார். எனவே பட்ஜெட் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.</p><p>தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர்  மரிய வில்சன் நேற்று (05.08.2026) தாக்கல் செய்தார். இதில், ஒவ்வொரு துறைக்கும் நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு அறிவிப்புகள் வெளியானது. </p><p>இந்தநிலையில்,  த.வெ.க. அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டை  வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் இன்று (06.05.2026) தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் விவசாய பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி, குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறுமா? விவசாயிகளை மகிழ்விக்கும் வகையில் வேளாண் பட்ஜெட் இருக்குமா? என்ற வகையில் விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.</p><h3>
கருப்பு சட்டையில் வந்த திமுக எம்.எல்.ஏ-க்கள்</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/ebaiopil/udayi33.jpg" /></figure><p>தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், திமுக எம்.எல்.ஏ-க்கள் கருப்பு சட்டை அணிந்து அவைக்கு வருகை தந்தனர்.</p> <h3>
ஈபிஎஸ் வருகை</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/z7ysr5rc/sami33.jpg" /></figure><p>இன்று தவெக அரசின் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. சட்டமன்ற வேளாண் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார்.</p><p><strong>வணக்கம் தெரிவித்துக் கொண்ட முதல்-அமைசர் விஜய் – ஈபிஎஸ்</strong></p><p>சட்டப்பேரவை இன்று காலை தொடங்குவதற்கு முன்பாக, சட்டப்பேரவை வளாகத்தில்  முதல்-அமைச்சர் விஜய் - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியும் நேரில் சந்தித்துக் கொண்டனர். அப்போது இருவரும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொண்டனர். </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/uzr9q7su/vvanakam33.jpg" /></figure><h3>வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்; அமைச்சர் வினோத்
</h3><p>த.வெ.க. அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டை  வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார்.</p><h3>கோட் சூட் போட்ட விவசாயி முதல்-அமைச்சர் விஜய்: வினோத் புகழாரம் </h3><p>கோட் சூட் போட்ட விவசாயி நீங்கள். ஊழலை ஒழிக்க உங்களை விட்டால் வேறு யாரும் இல்லை. நீங்கள் கொண்டாடப்படும் வரம்.</p><h3>சபாநாயகர் அறிவுரை</h3><p>முதல்-அமைச்சரை புகழ்ந்து அமைச்சர் படித்த சில பகுதிகளுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து வேளாண் அறிக்கையில் உள்ளதை மட்டும் படிக்க அமைச்சர் வினோத்துக்கு சபாநாயகர் அறிவுறுத்தினார்.</p><h3>
விவசாயிகளின் கருத்துகளை பெற்று நிதி நிலை அறிக்கை</h3><p>"விவசாயிகள், ஏற்றுமதியாளர்களின் கருத்துக்களை பெற்று நிதிநிலை அறிக்கை. விவசாயிகளுக்கான முன்னோடி திட்டங்களுடன் நிதிநிலை அறிக்கை தயாரிப்பு.</p><p>சிஎம் வகுத்துக் கொடுத்த சீரிய தொலைநோக்கு திட்டங்களுடன் நிதிநிலை அறிக்கை. செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் தொடர்வதோடு, புதிய திட்டங்கள் அறிமுகம். வேளாண்மை பாதித்தால் எந்த துறையும் செயல்பட முடியாது என்று கூற்றுக்கு ஏற்ப பட்ஜெட் -  அமைச்சர் வினோத்  </p><h3>வளமான மண்; வளமான வருங்காலம்</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/bd3nbwkp/man33.jpg" /></figure> <p>மண்ணின் வளத்தை பாதுகாக்க” தமிழ்நாடு மணவள பாதுகாப்பு இயக்கம் -ரூ.122.51 கோடி ஒதுக்கீடு</p> <h3>தரமான விதை! வளமான விவசாயம்!
</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/ixhqxmlf/nel33.jpg" /></figure> <p>நெல் விதை உற்பத்தி மற்றும் விநியோக மானியத்திற்கான மாநில அரசின் சிறப்பு திட்டத்திற்கு ரூ.34.72 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><h3>வேளாண் தொழில் நுட்பம் உங்கள் விரல் நுனியில்!</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/sk1z2p26/uzvar33.jpg" /></figure> <p>ஒவ்வொரு உழவருக்கும் தனிப்பயன் சேவைகள் ஏஐ அடிப்படையிலான உழவர் செயலி தொடங்கப்படும். அதற்கு ரூ. 2 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p> <h3>விவசாயிகளுக்கு ரூ.4,000 சிறப்பு ஊக்கத்தொகை
</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/fa4724iu/poochi33.jpg" /></figure> <p>உயிர்ம உரப்பயன்பாட்டை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு ரூ.4,000 சிறப்பு ஊக்கத்தொகை -அமைச்சர் வினோத்.</p> <h3>
இலவச மின்சாரத்திற்காக ரூ.7,432 கோடி நிதி ஒதுக்கீடு</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/u9pyv044/water33.jpg" /></figure> <p>விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்திற்காக ரூ.7,432 கோடி நிதி ஒதுக்கீடு. உழவர் ஐடி பெற்ற 3 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.6 கோடியில் மண்வள அட்டை  - அமைச்சர் வினோத்.</p> <h3>
மக்காச்சோள உற்பத்தி - ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/pgfwx1sv/makaa33.jpg" /></figure> <p>மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டு திட்டத்திற்காக ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p> <h3>
காட்டுப்பன்றிகளால் பயிர் இழப்பு
</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/viv44ihq/panni33.jpg" /></figure><p>காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் இழப்புகளைத் தடுக்க காட்டுப்பன்றி சேதத் தடுப்புத் திட்டத்திற்காக ரூ.7.35 கோடி நிதி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத்</p> <h3>வேளாண் கண்காட்சி நடத்தப்படும்</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/pgcj2fry/veelna3.3jpg.jpg" /></figure><p>தொழில்நுட்பமும், பாரம்பரியமும் சங்கமிக்கும் திருவிழாவாக வேளாண் கண்காட்சி நடத்தப்படும். இதற்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத்</p><h3>43,500 தார்ப் பாய்கள் வாங்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு </h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/a5krmsx9/thaar33.jpg" /></figure><p>மழை வெயிலிலிருந்து விளை பொருட்களை பாதுகாக்க 43,500 தார்பாய்கள் திட்டத்திற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத் </p><h3>தமிழ்நாடு குறுதானிய இயக்கம் அமைக்கப்படும் </h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/unhltkfu/kuru33.jpg" /></figure><p>சாமை, தினை, வரகு, குதிரை வாலி, பனிவரகு போன்ற பயிர்களின் சாகுபடியை இருமடங்காக அதிகரிக்க தமிழ்நாடு குறுதானிய இயக்கம் அமைக்கப்படும். இத்திட்டதிற்காக ரூ.7.61 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்.</p><h3>கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டம் </h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/lo6azp0g/karumbi33.jpg" /></figure><p>கருப்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க கரும்பு சாகுபடி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு  -அமைச்சர் வினோத் </p><h3>3 புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள்
</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/w8ekfd6c/vithai33.jpg" /></figure><p>விதை சுத்திகரிப்பு திறனை அதிகரிக்க 3 புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ.7.1 கோடி நிதி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத்</p><h3>நம்மாழ்வார் விருது 
</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/0hpfvt63/namazavar33.jpg" /></figure><p>5 விவசாயிகளுக்கு சிறந்த உயிர்ம விவசாயிக்கான நம்மாழ்வார் விருது வழங்கப்படும். இதற்காக ரூ.11 லட்சம் நிதி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத்</p><h3>தளிர்கீரைகள் திட்டம் </h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/x73c2rno/thali33.jpg" /></figure> <p>சிறிய தளிர்..பெரிய ஆரோக்கியம் என்ற அடிப்படையில் தமிழ்நாடு தளிர்கீரைகள் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.1.20 கோடி நிதி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத்</p><h3>
மாடித்தோட்டம் ரூ.10 கோடி ஒதுக்கீடு  </h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/p4bxdx6b/madi33.jpg" /></figure><p>மாடித்தோட்டம் அமைக்க இடுபொருள் தொகுப்புகள், காய்கறி விதைத் தொகுப்புகள், பழச்செடித் தொகுப்புகள், நீரியல் தோட்டம், செங்குத்துத் தோட்டம், நிழல்வலைக் குடில்கள் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு -வேளாண் அமைச்சர் வினோத் </p> <p>வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு</p><h3>
அஞ்சலை அம்மாள் பெயரில் விருது</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/22u5sh46/anjsalai33.jpg" /></figure><p>மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டிக்காக அஞ்சலை அம்மாள் பெயரில் விருது வழங்கப்படும்.</p><p>அஞ்சலை அம்மாள் பெயரில் முதல் பரிசு ரூ.2.50 லட்சம். 2-வது பரிசு ரூ.1.50 லட்சம், 3-வது பரிசு. ரூ.1 லட்சம் வழங்கப்படும் - வேளாண் அமைச்சர் வினோத்</p><h3>
பனை பாதுகாப்பு திட்டம்
</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/21k62sx3/panai33.jpg" /></figure><p>பனை நடுவோம். பலன் பெறுவோம் என்பதன் அடிப்படையில் பனை பாதுகாப்பு இயக்கம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்.</p><h3>பருத்தி மறுமலர்ச்சி இயக்கம் 
</h3><p>தரமான பருத்தி உற்பத்தியை பெருக்கிட ஏதுவாக பருத்தி மறுமலர்ச்சி இயக்கம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.27.21 கோடி நிதி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத்.</p><h3>
தமிழ்நாடு தென்னை பதப்படுத்தும் கழகம் </h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/e8qahq6g/thennai33.jpg" /></figure><p>தென்னை சார்ந்த பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்கச் செய்ய ஏதுவாக தமிழ்நாடு தென்னை பதப்படுத்தும் கழகம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.5.30 கோடி நிதி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத் </p><h3>

வேளாண் காடுகள் திட்டம்</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/t3wz8sz9/kadu33.jpg" /></figure><p>விவசாய நிலங்களில் நிரந்தரப் பசுமைக்காக வேளாண் காடுகள் திட்டம் செயல்படுத்தப்படும்; இதற்காக ரூ.17.70 கோடி நிதி ஒதுக்கீடு -வேளாண் அமைச்சர் வினோத்</p><h3>
அரசு தோட்டக்கலைப் பண்ணைகளை மேம்படுத்த ரூ.2.3 கோடி ஒதுக்கீடு </h3><p>அரசு தோட்டக்கலைப் பண்ணைகளை மேம்படுத்த ரூ.2.3 கோடி ஒதுக்கீடு -வேளாண் அமைச்சர் வினோத்</p><h3>
நீர் மேலாண்மைக்கான துளித் துளித் தண்ணீர் திட்டம்
</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/7ubnmrjy/sottu33.jpg" /></figure><p>நீர் மேலாண்மைக்கான துளித் துளித் தண்ணீர் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.785 கோடி நிதி ஒதுக்கீடு -வேளாண் அமைச்சர் வினோத்</p><h3>
வெங்காய சேமிப்புக் கிடங்குகள் உருவாக்கப்படும்</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/baytqlwx/venkayam33.jpg" /></figure><p>வெங்காய சேமிப்புக் கிடங்குகள் அமைப்பதற்காக ரூ.22 கோடி மதிப்பீட்டில் 57 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன சேமிப்பு வசதிகள் உருவாக்கப்படும் -வேளாண் அமைச்சர் வினோத்</p><h3>
மாவட்ட அளவிலான "வெற்றி விவசாயி" விருது</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/n5eur664/farmem33.jpg" /></figure><p>நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துகள். பருத்தி உள்ளிட்ட ஒன்பது பயிர்களை இரண்டு ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டு, அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு, மாவட்ட அளவில் "வெற்றி விவசாயி விருது" வழங்கப்படும்</p><p>முதல் பரிசாக 50 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக 25 ஆயிரம் ரூபாய் என 90 பரிசுகள் வழங்கப்படும்; இதற்காக ரூ.67.50 லட்சம் மாநில நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்படும் - அமைச்சர் வினோத்</p><h3>உயர் மதிப்பு கொண்ட பழ உற்பத்தியை அதிகரிக்க திட்டம்</h3><p>புளுபெரி அவகோடா, கிவி உள்ளிட்டட உயர் மதிப்பு கொண்ட பழ உற்பத்தியை அதிகரிக்க திட்டம் செயல்படுத்தப்படும்.இதற்காக ரூ.1.87 கோடி நிதி ஒதுக்கீடு -வேளாண் அமைச்சர் வினோத்</p><h3> மருத்துவப் பயிர்கள் சாகுபடி ஊக்குவிப்பு திட்டம்
</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/87etbm1d/payir33.jpg" /></figure><p>1,720 ஏக்கரில் 1.51 கோடியில் மருத்துவப் பயிர்கள் சாகுபடி ஊக்குவிப்பு திட்டம் - வேளாண் அமைச்சர் வினோத்</p> <h3>
100% மானியத்தில் 500 பண்ணைக் குட்டைகள் உருவாக்கப்படும்</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/vrw4gh7b/kuttai33.jpg" /></figure><p>100% மானியத்தில் 500 பண்ணைக் குட்டைகள் உருவாக்குதல் மற்றும் 75% மானியத்தில் 500 பண்ணைக் குட்டைகள் தூர்வாருதல் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.8.5 கோடி நிதி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத் </p><h3>
 வேளாண் இயந்திரங்களைப் பழுது நீக்கி பராமரிக்கும் மையங்கள் அமைத்திட மானியம் </h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/391z5o33/truck33.jpg" /></figure><p>வேளாண் இயந்திரங்களைப் பழுது நீக்கி பராமரிக்கும் 15 மையங்கள் அமைத்திட 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். இதற்காக ரூ.1.12 கோடி நிதி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத்</p><h3>
வேளாண் இயந்திரங்கள், கருவிகள் கொள்முதல் </h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/twa87i0f/one33.jpg" /></figure><p>இ- வாடகை 2.0 செயலி மூலம் வேளாண்மைப் பொறியியல் துறையின் இயந்திரங்களை வாடகைக்கு வழங்கும் சேவையை வலுப்படுத்த, 463 வேளாண் இயந்திரங்கள், கருவிகள் கொள்முதல் செய்யப்படும் -வேளாண் அமைச்சர் வினோத் </p><h3>
மானியத்தில் ஆழ்துளை கிணறுகள்</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/jdlbyrny/watertwo33.jpg" /></figure><p>ஆயிரம் ஏக்கர் பாசனம் பரம்பை உருவாக்கிட பொதுப்பிரிவைச் சார்ந்த 500 விவசாயிகளுக்கு ஆழ்துளை அல்லது குழாய்க் கிணறுகள் பின்னேற்பு மானியத்தில் அமைத்தல் அதிகபட்ச மானியம் 60% ரூ.6 கோடி ஒதுக்கீடு -  -வேளாண் அமைச்சர் வினோத் </p><h3>கடலோர மாவட்டங்களில் நீலப் பசுமை தோட்டக்கலை</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/gv5mxtc5/sunclass33.jpg" /></figure><p>கடலோர மாவட்டங்களில் முன்னோடித் திட்டமாக நன்னீர் கிணறுகள் அமைத்து, மிளகாய் மற்றும் கொத்தமல்லி சாகுபடி செய்வதை ஊக்குவிக்க ரூ.49.4 லட்சம் நிதி ஒதுக்கீடு - -வேளாண் அமைச்சர் வினோத் </p><h3>1000 மெ.டன் சேமிப்பு கிடங்கு</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/ehx1xhu0/kudon33.jpg" /></figure> <p>2 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 1000 மெ.டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு வசதிகள் ரூ.4.80 கோடி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத் </p> <h3>
வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மற்றும் பயிற்சி மையங்கள்!
</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/fvj863ei/velan33.jpg" /></figure><p>திருக்கோவிலூர், முசிறி, காரைக்குடி, தாராபுரம் மற்றும் கும்பகோணம் ஆகிய இடங்களில் ரூ.4.6 கோடி மதிப்பில் புதிய வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மற்றும் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளது -  வேளாண் அமைச்சர் வினோத்</p><h3>உழவர் சந்தை புனரமைப்பு
</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/v8va4df7/uvazavar33.jpg" /></figure><p>உழவர் சந்தைகள் புனரமைக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு விவசாயிகளுக்கு நேரடி விற்பனை மற்றும் நிறைவான வருமானத்தை உறுதி செய்ய ஏற்பாடு -  வேளாண் அமைச்சர் வினோத் </p><h3>
கியூ ஆர் கோடுடன் விதைச் சான்றிதழ் வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/7wfcdi2u/nut33.jpg" /></figure><p>கியூ ஆர் கோடுடன் விதைச் சான்றிதழ் வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு -வேளாண் அமைச்சர் வினோத்</p><h3>
சாக்கோட்டையில் உயிர்ம வேளாண்மை பட்டயப் படிப்புக் கல்லூரி</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/i4gc13s7/education33.jpg" /></figure><p>தஞ்சை மாவட்டம், சாக்கோட்டையில் 'நம்மாழ்வார்' பெயரில் ஒரு புதிய உயிர்ம வேளாண்மை பட்டயப் படிப்புக் கல்லூரி அமைக்கப்படும். இதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத்</p><h3>
கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு புதிய பேருந்துகள்</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/jignpwwo/coimbator33.jpg" /></figure><p>கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களின் களப் பயிற்சிக்காக 6 புதிய பேருந்துகள் வாங்கப்படும். இதற்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு- வேளாண் அமைச்சர் வினோத்</p><h3>ஊட்டியில் புதிய வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் </h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/vwdi2en9/pasumai33.jpg" /></figure><p>நஞ்சில்லா வேளாண் முறைகளை ஊக்குவித்து விவசாயிகளின் விளைபொருட்களுக்கு சந்தை வாய்ப்புகளை உருவாக்க நீலகிரி மாவட்டம் ஊட்டியில் புதிய வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் செயல்படுத்தப்படும்; இதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு -வேளாண் அமைச்சர் வினோத்</p><h3>
தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் தரம் உயர்த்தப்படும்</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/ssbhafgz/neelagiri33.jpg" /></figure><p>நீலகிரி விவசாயிகளுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்த தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் தரம் உயர்த்தப்படும். இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத் </p><h3>
சிறு பால்பண்ணை அமைக்க ரூ.4.19 கோடி ஒதுக்கீடு </h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/kqmpwetp/milk33.jpg" /></figure><p>சிறு பால்பண்ணை அமைக்க ரூ.4.19 கோடி ஒதுக்கீடு -வேளாண் அமைச்சர் வினோத்</p><h3>மிளகாய், கொத்தமல்லி சாகுபடிக்கு ரூ.49.4 லட்சம் ஒதுக்கீடு</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/4yh4e5cd/milagai33.jpg" /></figure> <p>கடலோர மாவட்டங்களில் முன்னோடித் திட்டமாக நன்னீர் கிணறுகள் அமைத்து மிளகாய் மற்றும் கொத்தமல்லி சாகுபடிக்கு ரூ.49.4 லட்சம் ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத்</p> <h3>
காளான் உற்பத்திக் கூடங்கள் ரூ.50 லட்சம் நிதியில் அமைக்கப்படும் </h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/8v5zy111/kalan33.jpg" /></figure><p>காளான் வளர்ப்பினை ஊக்குவிக்க கிராமப்புற இளைஞர்கள், பெண்களுக்கு 50 சிறிய அளவிலான காளான் உற்பத்திக் கூடங்கள் ரூ.50 லட்சம் நிதியில் அமைக்கப்படும் -வேளாண் அமைச்சர் வினோத் -</p><h3>
"சிதம்பர ரகசியம் போல இருந்த சட்டமன்றம், இன்று சாமானிய மக்களும் விரும்பிப் பார்க்கும் செய்தி போலாகிவிட்டது" -பட்ஜெட் வாசிப்பின் போது அமைச்சர் வினோத்  
</h3><h3>
இன்று காலை 9.30 மணிக்கு வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசத் தொடங்கிய அமைச்சர் வினோத், கிட்டத்தட்ட 130 நிமிடங்கள் உரையாற்றினார்.

முன்னதாக, நேற்று 2026 -27ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் மரிய வில்சன், சுமார் 150 நிமிடங்கள் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.
</h3><h3>
அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டியது இருந்தால்... -சபாநாயகர்   
</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/pap1ne0i/brabha33.jpg" /></figure> <p>``வேளாண்  பட்ஜெட் அறிக்கையில் இருப்பது மட்டுமே அவை குறிப்பில் இருக்கும். அறிக்கையில் இல்லாத கருத்துகள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்படும்''  நாளை காலை 9 மணிக்கு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் -  சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்</p>]]></content:encoded></item><item><title>தென்னை சாகுபடிக்கு ரூ.16 கோடி சிறப்புத் திட்டம்: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-16-crore-special-scheme-for-coconut-cultivation-announcement-in-the-agriculture-budget</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-16-crore-special-scheme-for-coconut-cultivation-announcement-in-the-agriculture-budget#comments</comments><guid isPermaLink="false">bc0661e7-b508-47c6-8007-61e9cb200ba8</guid><pubDate>Thu, 06 Aug 2026 08:49:16 +0000</pubDate><atom:updated>2026-08-06T08:49:16.722Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,த.வெ.க,cultivation,Coconut,agriculture budget,தமிழக வேளாண் பட்ஜெட்,அமைச்சர் வினோத்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/2t2477r1/195.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் வினோத்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/2t2477r1/195.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார்.</p><p>அப்போது, தென்னைக்கான சிறப்புத் திட்டம் குறித்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D">அமைச்சர் வினோத்</a> கூறியதாவது:-</p><p>"வேர் முதல் நுனி வரை பயன்தரும்- தென்னை என்றும் மனிதனின் உற்ற துணை"</p><h2>தென்னை சாகுபடி</h2><p>தமிழ்நாட்டில் சுமார் 5 லட்சம் எக்டரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு சுமார் 670 கோடி தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தென்னை சாகுபடியிலும் சந்தைப்படுத்துவதிலும் தற்போது விவசாயிகள் சந்தித்து வரும் சவால்களைக் கருத்தில் கொண்டு பூச்சி நோய்த்தாக்குதல்களுக்குத் தீர்வளித்தல், உற்பத்தித்திறனை அதிகரித்தல், மதிப்புக்கூட்டலை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கான இனங்களைக் கொண்டு "தென்னைக்கான சிறப்புத் திட்டம்" மொத்தம் 16 கோடி ரூபாய் மாநில நிதியில் செயல்படுத்தப்படும்.</p><p><strong>i.</strong> தென்னை டானிக் பயன்படுத்துவதால் மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்கள் திறம்பட உறிஞ்சப்படுவதுடன், மரங்களின் வளர்ச்சித் திறன் மேம்பட்டு, பூக்கள் மற்றும் காய் பிடித்தல் அதிகரிக்கும். எனவே, தென்னை விவசாயிகளின் கோரிக்கைக்கு இணங்க, தென்னை மரங்களின் நலத்தையும் உற்பத்தித்திறனையும் மேம்படுத்தும் நோக்கில், 2026-27ஆம் ஆண்டில், 86 ஆயிரம் ஏக்கரிலான தென்னை மரங்களுக்கு "தென்னை டானிக்" வழங்குவதற்காக 6 கோடியே 20 லட்சம் ரூபாய் மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p><p><strong>ii.</strong> தென்னையைத் தாக்கும் வேர்வாடல் நோய் மற்றும் சுருள் வெள்ளை FF 80 ஆகியவற்றின் பாதிப்பால், 35 முதல் விழுக்காடு வரை மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இப்பாதிப்பைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகளுடன் நீடித்த, நிலையான உயிரி கட்டுப்பாட்டு முறைகளைத் தென்னை விவசாயிகளிடையே பெருமளவில் பரவலாக்கம் செய்திட 1,350 ஏக்கர் பரப்பளவில் 'அபெர்டோகிரைசா' என்ற இரைவிழுங்கிப் பூச்சிகள் மற்றும் 'கோகோகான்' நுண்ணுயிர்க் கலவை ஆகியவை 75 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இத்திட்டத்திற்காக ஒரு கோடி ரூபாய் மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p><p><strong>iii.</strong> தென்னையைத் தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈயைத் திறம்படக் கட்டுப்படுத்த கிரைசோபெர்லா இரைவிழுங்கி, ஐசாரியா ஃபுமோசோரோசியா பூஞ்சை ஆகிய உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகளைப் பெருமளவில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்குமாறு பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், புதிதாக 5 தென்னை ஒட்டுண்ணி உற்பத்தி மையங்கள் 3 கோடி ரூபாய் நிதியில் அமைக்கப்படும். கோயம்புத்தூர் மாவட்டம் ஆழியார் நகர், கண்ணம்பாளையம், தேனி மாவட்டம் வைகை அணை, விருதுநகர் மாவட்டம் தேவதானம் ஆகிய இடங்களில் புதிய கிரைசோபெர்லா உற்பத்தி மையங்களும், கன்னியாகுமரி மாவட்டம் புத்தளத்தில், ஐசாரியா ஃபுமோசோரோசியா உற்பத்தி மையமும் அமைக்கப்படும்.</p><p><strong>iv.</strong> தரமான தென்னங்கன்றுகள் கிடைப்பதை உறுதி விவசாயிகளுக்குக் செய்ய கரூர் முதலைப்பட்டி அரசு தோட்டக்கலைப் பண்ணையில் 15 ஏக்கர் பரப்பளவில் "புதிய தென்னை நாற்றுப்பண்ணை" ரூபாய் 48 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.</p><p><strong>V.</strong> தமிழ்நாடு தென்னைப் பதப்படுத்தும் கழகம் தென்னை விவசாயிகளின் வருமானத்தை நீடித்த நிலையான முறையில் பெருக்குவதற்கும், மதிப்புக் கூட்டுவதால், தென்னை மற்றும் தென்னை சார்ந்த பொருட்களுக்கு இலாபகரமான விலை கிடைக்கச்செய்யவும், நிலையான சந்தை வாய் வாய்ப்பினை உருவாக்கவும், <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">தென்னை</a> விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையினை செயல்படுத்தும் விதமாகவும் "தமிழ்நாடு தென்னைப் பதப்படுத்தும் கழகம்" வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையால் 22 கோடியே 30 லட்சம் ரூபாய் மாநில நிதி ஒதுக்கீட்டில் புதிதாக அமைக்கப்படும். இக்கழகத்தின் வாயிலாக, அறுவடைக்குப்பின் தேவைப்படும் கட்டமைப்பு வசதிகள், பதப்படுத்துதல், தரக்குறியீடு இடுதல், சிப்பம் கட்டுதல், ஏற்றுமதி ஆகியவை குறித்த ஆலோசனைகள் வழங்கப்படும். மேலும், விரிவான சேவைகளை வழங்க ஏதுவாக, தென்னை வளர்ச்சி வாரியம், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தோட்டக்கலைத் துறையுடன் ஒருங்கிணைந்து இக்கழகம் செயல்படும். நடப்பாண்டில், இதற்கென 5 கோடியே 30 லட்சம் ரூபாய் மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p><p><strong>vi.</strong> கொப்பரை விலை வீழ்ச்சியினைத் தடுத்து விலையினை நிலைப்படுத்த, குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொப்பரை கொள்முதல் செய்வதற்கான "விலை ஆதரவுத் திட்டம்" உரிய நேரத்தில் அறிவிக்கை செய்யப்பட்டு செயல்படுத்தப்படும் என அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>உதயநிதி ஸ்டாலின் காரில் ஏறச் சென்ற எடப்பாடி பழனிசாமி: சட்டசபை வளாகத்தில் ருசிகரம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/edappadi-palaniswami-moves-to-get-into-udhayanidhi-stalins-car-an-interesting-incident-at-the-assembly-complex-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/edappadi-palaniswami-moves-to-get-into-udhayanidhi-stalins-car-an-interesting-incident-at-the-assembly-complex-2#comments</comments><guid isPermaLink="false">c65cf039-c1bd-457d-b11d-2dafccff527c</guid><pubDate>Thu, 06 Aug 2026 08:41:32 +0000</pubDate><atom:updated>2026-08-06T08:41:32.413Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,Car,கார்,தமிழக சட்டசபை,TMK,எடப்பாடி கே.பழனிசாமி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/xs7yihoe/100.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:title><media:description type="html"><![CDATA[ எதிர்க்கட்சி தலைவர் காரில் ஏற முயன்ற பழனிசாமி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/xs7yihoe/100.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக சட்டசபையில் இன்று 2026-27-ம் ஆண்டுக்கான <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வேளாண் பட்ஜெட் தாக்கல்</a> செய்யப்பட்டது. மதியம் 12.30 மணியளவில் கூட்டம் முடிந்ததும் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் புறப்பட்டு சென்றனர். </p><h2>காரால் ஏற்பட்ட குழப்பம்</h2><p>சட்டமன்ற அதிமுக தலைவர் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">எடப்பாடி பழனிசாமி</a>, சட்டசபை வளாகத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்து விட்டு, அங்கு நின்ற இனோவா காரில் ஏற முயன்றார். அப்போது, அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார், சார் இது உங்கள் கார் இல்லை. <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">எதிர்க்கட்சி தலைவர் </a>உதயநிதி ஸ்டாலினுடையது என்று தெரிவித்தனர். உடனே சிரித்துக்கொண்டு காரில் ஏறுவதை எடப்பாடி பழனிசாமி தவிர்த்தார். அதன்பிறகு, அவருடைய காரில் புறப்பட்டு சென்றார்.</p><h2>மீண்டும் மீண்டும்</h2><p>எடப்பாடி பழனிசாமியின் காரும், உதயநிதி ஸ்டாலினின் காரும் ஒரே நிறத்தில் உள்ளதால், கடந்த 2022-ம் ஆண்டும் இதேபோன்ற சம்பவம் நடந்தது. 2022-ம் ஆண்டு ஏப்ரல் 12-ந் தேதி சட்டசபை நிகழ்ச்சிகள் முடிந்ததும், எதிர்க்கட்சி தலைவராக இருந்த எடப்பாடி பழனிசாமி, வெளியே வந்து காரில் ஏற முயன்றார். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார், சார் இது உங்கள் கார் இல்லை என்று தெரிவித்தனர். அவரும் ஓ.. சாரி என்று சிரித்துக் கொண்டே தனது காரை நோக்கி நடந்து சென்றார். தற்போது, அதுபோன்ற சம்பவம் மீண்டும் நடந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அரசு பேருந்து பெயர் பலகையில் ஓடிய வாசகம்; தக்காளி வெற்றிக்கழகம்: எம்.டி.சி விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-slogan-on-the-government-bus-nameplate</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-slogan-on-the-government-bus-nameplate#comments</comments><guid isPermaLink="false">af4b1798-0a63-4117-b5a1-77b0560037ce</guid><pubDate>Thu, 06 Aug 2026 08:32:32 +0000</pubDate><atom:updated>2026-08-06T08:32:32.277Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,சென்னை,bus,tngovt,அரசு பேருந்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/5cf2ayv0/taklai33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தக்காளி வெற்றிக்கழகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/5cf2ayv0/taklai33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசுப் பேருந்தின் டிஜிட்டல் பலகையில் ஒளிபரப்பான ‘தக்காளி வெற்றிக் கழகம்’ என்ற வாசகத்தால் தவெகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">சென்னை மாநகரப் பேருந்து </a>ஒன்றின் டிஜிட்டல் பெயர் பலகையில் “தக்காளி வெற்றி கழகம்” என இடம்பெற்றிருந்த வாசகம் சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாய் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) உடனடியாக விளக்கம் அளித்துள்ளது.</p><p>கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களின் கைவரிசையால் டிஜிட்டல் பெயர் பலகை மாற்றப்பட்டதாகவும், இது குறித்து தகவல் அறிந்தவுடன் சம்பந்தப்பட்ட பணிமனை அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டு உடனடியாக பெயர் பலகை சரிசெய்யப்பட்டதாகவும் எம்.டி.சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: இன்று முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-ministers-trophy-sports-tournaments-online-registration-begins-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-ministers-trophy-sports-tournaments-online-registration-begins-today#comments</comments><guid isPermaLink="false">f98c2cdc-9edb-4856-ba18-188c2b43fee2</guid><pubDate>Thu, 06 Aug 2026 08:23:56 +0000</pubDate><atom:updated>2026-08-06T08:23:56.513Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chief Minister Cup Sports Tournament,முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/v5zlc0ql/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/v5zlc0ql/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க 6-ந்தேதி(இன்று) முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆண்டுதோறும் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை தமிழ்நாடு முழுவதும் மாவட்ட மண்டல மாநில அளவில் நடத்தி வருகிறது. விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியானது, அனைத்து தரப்பினரையும் விளையாட்டில் ஈடுபட செய்யும் மிகச்சிறந்த முயற்சியாகும். இதன் மூலம் திறமையான விளையாட்டு வீரர்களை பாராட்டி, அவர்களை ஊக்குவித்து, உரிய அங்கீகாரம் மற்றும் பரிசுகளை வழங்குவது, இந்த போட்டிகளில் முக்கிய நோக்கமாகும்.</p><p>பொதுமக்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள முதல்-அமைச்சர் விளையாட்டு போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் 4-ந்தேதி மாவட்ட அளவில் தொடங்கப்பட உள்ளது. விளையாட்டு போட்டிகளில் பங்குகொள்ள ஆர்வமுள்ளோர் 06.08.2026 முதல் 31.08.2026 வரை tncmtrophy.sdat.in என்ற இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.</p><p>மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் நடத்தப்படவுள்ள போட்டிகளில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட 38 வகையான விளையாட்டுப் போட்டிகளுடன், இந்த ஆண்டு முதல் வில்வித்தை, வுஷூ (Wushu), துப்பாக்கிச் சுடுதல், யோகா, மல்லர்கம்பம், ஸ்பீடு ஸ்கேட்டிங், நீர்விளையாட்டுக்களான கயாக்யிங் (Kayaking) மற்றும் கேனோயிங் (Canoeing) போன்ற புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு மொத்தம் 45 வகையான விளையாட்டு போட்டிகள் வரும் செப்டம்பர் முதல் அக்டோபர் மாதம் வரை நடத்தப்பட உள்ளது.</p><p>இந்த போட்டிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் 19 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியர்கள் மட்டும் (01.01.2008 அன்று அல்லது அதற்குப் பின் பிறந்தவர்கள் மட்டும்), இளங்கலை முதலாம் ஆண்டு முதல் முதுகலை இரண்டாம் ஆண்டு வரை மற்றும் பாலிடெக்னிக் படிக்கும் மாணவ, மாணவியர்களும் (01.07.2001 அன்று அல்லது அதற்குப் பின் பிறந்தவர்கள் மட்டும்), 15 முதல் 35 வயது வரை உள்ள பொதுப் பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.</p><p>மாவட்டம் மற்றும் மண்டல அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.2 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூபாய் ஆயிரமும் வழங்கப்படும். மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். குழு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ.50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக தலா ரூ.25 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட உள்ளது.</p><p>எனவே விளையாட்டில் ஆர்வம் உள்ள அனைவரும் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்குகொள்ள tncmtrophy.sdat.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. தாங்களாகவோ, தங்கள் பள்ளி, கல்லூரி மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட விளையாட்டு அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். ‘’ஆடுகளம்’’ தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம்."</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>ஒகேனக்கல்லில் சீறிப்பாயும் காவிரி - குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-raging-at-hogenakkal-inflow-of-20000-cubic-feet-for-the-second-consecutive-day-ban-on-bathing-and-coracle-rides</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-raging-at-hogenakkal-inflow-of-20000-cubic-feet-for-the-second-consecutive-day-ban-on-bathing-and-coracle-rides#comments</comments><guid isPermaLink="false">abb73a8d-0d45-493c-8229-6a0a89ae56b2</guid><pubDate>Thu, 06 Aug 2026 08:16:56 +0000</pubDate><atom:updated>2026-08-06T08:16:56.490Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Dharmapuri,Cauvery,ban,பரிசல் இயக்க தடை,சுற்றுலா பயணிகள் குளிக்க தடை,ஒகேனக்கல் காவிரி ஆறு,நீர் வரத்து அதிகரிப்பு</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/puo9hnt7/84.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ ஒகேனக்கல் அருவி]]></media:title><media:description type="html"><![CDATA[ ஒகேனக்கல் காவிரியில் 2வது நாளாக 20,000 கன அடி நீர் சீறிப்பாய்கிறது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/puo9hnt7/84.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தருமபுரி,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஒகேனக்கல்</a> காவிரியில் 2வது நாளாக 20,000 கன அடி நீர் சீறிப்பாய்வதால், சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>ஒகேனக்கல் அருவி</h2><p>தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று (புதன் கிழமை) வினாடிக்கு 20,000 கன அடியாக உயர்ந்த நீர்வரத்து, இன்று (வியாழக்கிழமை) 2வது நாளாகவும் அதே அளவில் நீடிக்கிறது. இதனால் ஒகேனக்கல் முதன்மை அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து நீர்வீழ்ச்சிகளிலும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வெள்ளம்</a> கரைபுரண்டு சீறிப்பாய்ந்து ஓடுகிறது.</p><h2>பாதுகாப்பு நடவடிக்கைகள்</h2><p>ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தருமபுரி மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஒகேனக்கல் அருவிகள் மற்றும் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சுற்றுலா பயணிகள் </a>குளிப்பதற்கு இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், நீர்வரத்து அபாய கட்டத்தை எட்டியுள்ளதால், ஆற்றில் பரிசல்களை இயக்கவும் மாவட்ட நிர்வாகம் முழுமையாக தடை விதித்துள்ளது.</p><h2>தீவிர கண்காணிப்பு</h2><p>அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க, ஆற்றின் கரையோரப் பகுதிகளில் போலீசாரும், வருவாய்த் துறையினரும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.கர்நாடக கபினி அணையிலிருந்து தொடர்ந்து நீர் திறந்து விடப்பட்டு வருவதால், ஒகேனக்கல்லுக்கான நீர்வரத்து வரும் நாட்களிலும் மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரண்ட்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/arrest-warrant-issued-for-former-dmk-minister-ponmudi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/arrest-warrant-issued-for-former-dmk-minister-ponmudi#comments</comments><guid isPermaLink="false">92c945bc-ab11-46a2-a8fd-832708492eba</guid><pubDate>Thu, 06 Aug 2026 07:54:24 +0000</pubDate><atom:updated>2026-08-06T07:54:24.455Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,பொன்முடி,DMK,சென்னை ஐகோர்ட்டு,arrest,Court,Arrestwarrant</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/b4n0x4kf/ponmudi33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பொன்முடிக்கு பிடிவாரண்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/b4n0x4kf/ponmudi33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சைவ, வைணவ சமயங்கள், பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><h2>சர்ச்சை பேச்சு</h2><p>சென்னையில் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய <a href="https://www.dailythanthi.com/search?q=ponmudi">முன்னாள் அமைச்சர் பொன்முடி</a>, சைவ, வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.</p><p>இதுசம்பந்தமாக சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன், சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், வெறுப்பு பேச்சு பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான இந்த புகாரை விசாரித்து, மதரீதியாக வெறுப்புணர்வை ஏற்படுத்துதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவரை தண்டிக்க வேண்டும் என கோரப்பட்டது.</p><p> இந்த புகார் மனு,  எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றமான ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு மாற்றபட்டு  நிலுவையில் உள்ளது. </p><h2>வழக்கு தள்ளுபடி</h2><p>தனக்கு எதிரான புகாரை விசாரணைக்கு ஏற்று ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் அனுப்பிய சம்மன் மற்றும் வழக்கை ரத்து செய்யக் கோரி பொன்முடி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p>இந்த வழக்கை விசாரித்த  சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் , திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் வழக்கை ஆறு மாதத்தில் முடிக்க உத்தரவிட்டார்.</p><p>இந்த வழக்கு இன்று சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் உமா ஆனந்த தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை  சென்னை ஐகோர்ட்டு நீக்கி இருப்பதாகவும் ஆறு மாதத்தில் விசாரணை முடிக்க  சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டதாகவும் தெரிவித்தார்.</p><h2>பொன்முடிக்கு பிடிவாரண்ட்</h2><p>பொன்முடி தரப்பில் ஆஜராக இருந்த வழக்கறிஞர் வழக்கில் இன்று ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது ஆனால் வழக்கில் இன்று ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரி பொன்முடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரிப்பதாக உத்தரவிட்ட நீதிபதி</p><p>சைவ, வைணவ சமயங்கள், பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படுகிறது.  பொன்முடியை செப்டம்பர் 2ஆம் தேதிக்குள் கைது செய்து ஆஜர்படுத்த காவல் துறைக்கு சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டு உத்தரவிடுகிறது என கூறி வழக்கு விசாரணையை செப்டம்பர் 2 தேதிக்கு தள்ளிவைத்தார்.</p>]]></content:encoded></item><item><title>‘பழைய திட்டங்களின் பெயர்களை மட்டுமே மாற்றியுள்ளனர்’ - வேளாண் பட்ஜெட் குறித்து பிரேமலதா விஜயகாந்த்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/they-have-merely-changed-the-names-of-old-schemes-premalatha-vijayakanth-on-the-agriculture-budget</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/they-have-merely-changed-the-names-of-old-schemes-premalatha-vijayakanth-on-the-agriculture-budget#comments</comments><guid isPermaLink="false">e4845c04-7f0a-4760-ba20-b524dc8d6850</guid><pubDate>Thu, 06 Aug 2026 07:52:53 +0000</pubDate><atom:updated>2026-08-06T07:52:53.746Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Premalatha Vijayakanth,பிரேமலதா விஜயகாந்த்,வேளாண் பட்ஜெட்,agriculture budget</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/i2yffzy6/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/i2yffzy6/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>2026-27ஆம் நிதியாண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட், சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசின் வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்நிலையில், வேளாண் பட்ஜெட்டில் பழைய திட்டங்களின் பெயர்களை மட்டுமே மாற்றியுள்ளனர் என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ. விமர்சித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-</p><p>“இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டில், பல்வேறு துறைகளுக்குப் பல கோடி ரூபாய் மதிப்பிலான நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டன. இருப்பினும், மிகவும் முக்கியமானதாக கருதப்படும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு எந்தவிதமான ஒதுக்கீடும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. </p><p>தற்போது விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல், திறந்தவெளிகளில் சேமித்து வைக்கப்படுகிறது. முறையான சேமிப்புக் கிடங்கு வசதிகள் எதுவும் இல்லை. தரிசு நிலங்களை சாகுபடிக்கு ஏற்ற நிலங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. பழைய திட்டங்களின் பெயர்களை மட்டுமே மாற்றியுள்ளனர்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>வெற்று பட்ஜெட்டாக இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது - மு.க.ஸ்டாலின் விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/this-agricultural-budget-is-an-empty-one-mk-stalins-criticism</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/this-agricultural-budget-is-an-empty-one-mk-stalins-criticism#comments</comments><guid isPermaLink="false">aa2dce38-bdb9-4abd-a4a1-b1d3f3c8d85f</guid><pubDate>Thu, 06 Aug 2026 07:50:04 +0000</pubDate><atom:updated>2026-08-06T07:50:04.477Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,பட்ஜெட்,Budget,வேளாண் பட்ஜெட்,Agricultural Budget,mk stalin,தமிழக வேளாண் பட்ஜெட்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/vt0xzi40/Untitled-20.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/vt0xzi40/Untitled-20.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இன்று சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். இந்த நிலையில் பட்ஜெட் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- </p><h2>பெயர்மாற்ற நிகழ்வு</h2><p>வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதல்-அமைச்சரின் உச்சிகுளிர பாராட்டுமழை பொழியப் பயன்பட்டதுதான் தமிழக வேளாண் பட்ஜெட். மற்றுமொரு பெயர்மாற்ற நிகழ்வாக மட்டுமே நடந்து முடிந்துள்ளது.</p><p>திராவிட மாடல் அரசின் திட்டங்களின் மேல் 'வெற்றி' என்ற லேபிளை ஒட்டினால் வேலை முடிந்தது என்று இந்த அரசு நினைக்கிறதா?</p><h2>வெற்று பட்ஜெட்</h2><p>குறுவை சாகுபடி பாதித்து அரசின் உதவிக்கரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் டெல்டா உழவர்களுக்கு எதுவுமில்லாத, வெற்று பட்ஜெட்டாக இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.</p><p>உழவர் பெருமக்களின் கோரிக்கைகளை உரத்த குரலில் இந்தக் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கூட்டத்தொடர் </a>முழுவதும் கழக உறுப்பினர்கள் எழுப்புவார்கள். உறக்கத்தில் இருக்கும் அரசு விழித்துக் கொண்டு பதில் சொல்லியாக வேண்டும். தீர்வு கிடைக்க வேண்டும்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணி: முக்கிய ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/maintenance-work-in-madurai-division-major-trains-diverted</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/maintenance-work-in-madurai-division-major-trains-diverted#comments</comments><guid isPermaLink="false">27268352-345b-4d31-8e08-1e4678709f5a</guid><pubDate>Thu, 06 Aug 2026 07:44:17 +0000</pubDate><atom:updated>2026-08-06T07:44:17.956Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>maintenance work,பராமரிப்பு பணி,முக்கிய ரெயில்கள்,major trains</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/d27eawmy/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/d27eawmy/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மதுரை கோட்டத்தில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதால், முக்கிய ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p>”கன்னியாகுமரியில் இருந்து ஹவுராவுக்கு ஆகஸ்டு 8-ந் தேதி காலை 5.50 மணிக்கு புறப்படும் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12666) கொடை ரோடு, திண்டுக்கலை தவிர்த்து, மாற்றுப்பாதையில் மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படுகிறது. அவ்வாறு செல்லும்போது, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும். </p><p>இதேபோல், நாகர்கோவிலில் இருந்து - மும்பை லோக்மான்ய திலக்குக்கு ஆகஸ்டு 9, 13, 20, 27 ஆகிய தேதிகளில் காலை 6.15 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16352) திண்டுக்கல்லை தவிர்த்து, மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படுகிறது. அவ்வாறு செல்லும்போது மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். </p><p>மேலும், குருவாயூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஆகஸ்டு 12-ந் தேதி இரவு 11.15 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128) மதுரை, சோழவந்தான், கொடை ரோடு, திண்டுக்கல், மணப்பாறை ஆகிய ரெயில் நிலையங்களை தவிர்த்து, மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படுகிறது. அவ்வாறு செல்லும்போது, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். </p><p>இதேபோல், நாகர்கோவிலில் இருந்து கச்சிக்குடாவுக்கு ஆகஸ்டு 22, 29 ஆகிய தேதிகளில் காலை 9.25 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16354) மதுரை, திண்டுக்கல் ரெயில் நிலையங்களை தவிர்த்து, மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படுகிறது. அவ்வாறு செல்லும்போது, மானாமதுரை, காரைக்குடி ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>
2 பெண் அமைச்சர்களுக்கு பிறந்த நாள்: சட்டசபையில் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/birthdays-of-two-female-ministers-greetings-in-the-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/birthdays-of-two-female-ministers-greetings-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">35759dc9-71c9-4b08-a4ca-c47675cd3210</guid><pubDate>Thu, 06 Aug 2026 07:37:31 +0000</pubDate><atom:updated>2026-08-06T07:37:31.495Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,Legislative Assembly,Assembly,சபாநாயகர்,பிறந்த நாள்,Agricultural Budget,தமிழக வேளாண் பட்ஜெட்,கால்நடைத்துறை அமைச்சர் கமலி,பால்வளத் துறை அமைச்சர் விஜயலட்சுமி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/29lvxyzw/10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/29lvxyzw/10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக சட்டசபையில் இன்று 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கூட்டத்தை திருக்குறள் வாசித்து தொடங்கிவைத்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது, கால்நடைத் துறை அமைச்சர் கமலி, பால்வளத் துறை அமைச்சர் விஜயலட்சுமி ஆகியோருக்கு இன்று பிறந்த நாள் என்று குறிப்பிட்ட் அவர், இருவருக்கும பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யும் அவர்கள் இருக்கை நோக்கி திரும்பி பார்த்து வாழ்த்து தெரிவித்தார். </p><p>இதேபோல், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலரும் அமைச்சர்கள் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களும் எழுந்து நின்று தங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.</p> ]]></content:encoded></item><item><title>
தமிழக அரசியலில் பரபரப்பு; அமைச்சர் ஆனந்த் உடன் சி.வி. சண்முகம், வேலுமணி சந்திப்பு
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-politics-row-minister-anand-cv-shanmugam-velumani-meet</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-politics-row-minister-anand-cv-shanmugam-velumani-meet#comments</comments><guid isPermaLink="false">7e4a5d2d-e12c-4bac-a968-56aa919dadb5</guid><pubDate>Thu, 06 Aug 2026 07:35:30 +0000</pubDate><atom:updated>2026-08-06T07:35:30.092Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>SP Velumani,சி.வி. சண்முகம்,வேலுமணி,C.V. Shanmugam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/2c36ibdz/spasa.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/2c36ibdz/spasa.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>தமிழக அமைச்சர் ஆனந்த் உடன், அ.தி.மு.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி இன்று சந்தித்து பேசியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.</p><p>தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த த.வெ.க. ஆட்சியமைத்தது.  அக்கட்சியின் தலைவர் விஜய் முதல்-அமைச்சகராக கடந்த மே மாதம் 10-ந்தேதி பொறுப்பேற்று கொண்டார்.  இதனை தொடர்ந்து பெரும்பான்மையை நிரூபிக்க அவையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.</p>  <h2>நம்பிக்கை வாக்கெடுப்பு</h2><p>அப்போது, தேர்தலில் 47 இடங்களை வென்றிருந்த அ.தி.மு.க.வில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஓர் அணியும், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் மற்றோர் அணியும் என 2 ஆக பிரிந்து செயல்பட்டது.</p><p>சட்டசபையில் த.வெ.க. ஆட்சி அமைக்க பெரும்பான்மையை நிரூபிக்க நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பு அணியில் 25 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர். எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு அணியில் 22 எம்.எல்.ஏ.க்கள் வாக்கெடுப்பில் பங்கேற்றனர்.</p>  <h2>கட்சி பதவி பறிப்பு</h2><p>த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் கட்சி பதவியை பறித்து எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தார். மேலும் கட்சி கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சபாநாயகரிடம் மனு அளித்தனர். இதேபோல எஸ்.பி.வேலுமணி தரப்பிலும் கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை கோரி சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது.</p><p>அதன் பின்னர் இரு தரப்பிற்கும் இடையே சமாதானம் ஏற்பட்டு, கடந்த ஜூன் 25 அன்று எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணியை கட்சியின் துணை பொதுச்செயலாளராக நியமித்து உத்தரவிட்டார்.</p><p>இந்த சூழலில் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் அ.தி.மு.க. கொடிகள், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் படங்கள் ஏதுமின்றி தனது ஆதரவாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டார்.</p>  <h2>கட்சி பதவியை ஏற்க போவதில்லை</h2><p>அப்போது தனது ஆதரவாளர்களிடம் பேசிய வேலுமணி, “தேர்தல் முடிந்து அடுத்த 25 நாட்கள் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியும். என்னை நம்பி 30 மாவட்ட செயலாளர்கள் போர்க்கொடி தூக்கி வந்த நிலையில், அவர்களுக்கு எந்த பொறுப்பும் வழங்காமல் தனக்கு மட்டும் பதவி கொடுப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.</p><p>சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர், தங்கமணி மற்றும் வீரமணி போன்ற கட்சியின் வளர்ச்சிக்கு உழைத்த மூத்த தலைவர்களை புறக்கணித்துவிட்டு தமக்கு மட்டும் பதவி தருவது அநீதியானது. எனவே எடப்பாடி பழனிசாமி கொடுத்த துணை பொதுச்செயலாளர் பதவியை ஏற்கப்போவதில்லை.  அ.தி.மு.க.வை, தி.மு.க.வுடன் இணைப்பது அல்லது கூட்டணி வைப்பது போன்ற பேச்சுகள் எழுந்ததாலேயே உள்கட்சி பூசல் வெடித்தது. எம்.ஜி.ஆர். தி.மு.க.வை எதிர்ப்பதற்காகவே கட்சியை தொடங்கினார் என்பதால் தி.மு.க.வுடன் சமரசம் ஆவதை ஒருபோதும் ஏற்க முடியாது. அதேநேரம், தான் அ.தி.மு.க.விலேயே நீடித்து தி.மு.க.வை தொடர்ந்து எதிர்ப்பேன்” என்றும் தெளிவுபடுத்தினார்.</p><p>இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>  <h2>புதிய பதவிகள் புறக்கணிப்பு</h2><p>இதனிடையே, பழனியில் எம்.எல்.ஏ. அலுவலக திறப்பு விழாவில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து புதிய பதவிகளை புறக்கணிப்பதாக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சி.வி. சண்முகம் கூட்டாக பேட்டி அளித்தனர்.</p><p>எஸ்.பி. வேலுமணி கூறுகையில், எங்களுக்கு வழங்கப்பட்ட துணை பொதுச்செயலாளர் உள்ளிட்ட புதிய பொறுப்புகளை ஏற்க முடியாது. கட்சியை விட்டு நீக்கப்பட்ட சசிகலா, டி.டி.வி. தினகரனை சேர்த்து கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றார்.</p>  <h2>அமைச்சர் ஆனந்த் உடன் சந்திப்பு</h2><p>இந்த சூழலில், சென்னை தலைமை செயலகத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் உடன் அ.தி.மு.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களான சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி, கே.பி. அன்பழகன் இன்று சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><p>அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.  இதனால், தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.</p>  <h2>செய்தியாளர் சந்திப்பு</h2><p>இதுபற்றி எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடர்பாக அமைச்சர் ஆனந்தை சந்தித்து பேசினோம்.  அதுதொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தோம் என்றார்.  நாங்கள் எப்போதும் அ.தி.மு.க.வினர்தான் என்று கூறினார்.</p><p>இதேபோன்று, சி.வி. சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசுவீர்களா? என கேட்கப்பட்டது.  அதற்கு பதிலளித்த அவர், நான் ஏன் அவரை சந்திக்க வேண்டும்.  அவருக்கும், எனக்கும் என்ன உள்ளது? தேவையற்ற கேள்விகளுக்கு பதில் கூற விரும்பவில்லை என கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>தொலைநோக்கு பார்வையுடன் கூடிய வேளாண் பட்ஜெட்: முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/agriculture-budget-with-vision-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/agriculture-budget-with-vision-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">07c659ab-0267-40e4-9275-6495f35755e1</guid><pubDate>Thu, 06 Aug 2026 07:27:45 +0000</pubDate><atom:updated>2026-08-06T07:27:45.673Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,வேளாண் பட்ஜெட்,agriculture budget,தமிழக வேளாண் பட்ஜெட்,CMVijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/lb25tzmx/cmone33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
தொலைநோக்கு பார்வையுடன் கூடிய வேளாண் பட்ஜெட்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/lb25tzmx/cmone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அனைவரும் பாராட்டும் வகையில் திருத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன், வேளாண்மை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் என முதல்-அமைச்சர் விஜய் கூறியுள்ளார். </p><h2>தமிழக வேளாண் பட்ஜெட்</h2><p>2026-27ஆம் நிதியாண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட், பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் அமைச்சர் வினோத் தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.</p><p>வேளாண் நிதி அறிக்கையை தாக்கல் செய்த வேளாண் அமைச்சர் வினோத் சுமார் இரண்டு மணி நேரம் உரையாற்றினார். காலை 9.31 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கிய அமைச்சர் வினோத் 11.38க்கு உரையை நிறைவு செய்தார்.</p><h2>தொலைநோக்கு பார்வை</h2><p>இந்தநிலையில்,  <a href="https://www.dailythanthi.com/search?q=vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழ்நாட்டின் வளர்ச்சியை இலக்காகவும், மக்கள் நலனை மையமாகவும் கொண்டு, ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றே மாதங்களில் அனைவரும் பாராட்டும் வகையில் 2026 - 27ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள  நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் மரிய வில்சன் வேளாண்மை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள  வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.</p><p>தொலைநோக்குப் பார்வையுடன்கூடிய திருத்திய நிதிநிலை அறிக்கையானது மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், திருநர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழில்முனைவோர், அரசுப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்கும் புதிய நம்பிக்கையை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.</p><h2>வெற்றிப் பயணம் தொடரட்டும்</h2><p>வேளாண்மை நிதிநிலை அறிக்கையானது, தமிழ்நாட்டின் வேளாண் வளர்ச்சியோடு, அதன் தொழில்சார்ந்த கால்நடை மற்றும் மீன் வளர்ப்பு, பால்வளம், உணவுப் பொருட்களைப் பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டுதல் போன்ற தொழில்களையும் மேம்படுத்துவதோடு, அனைத்துத் தரப்பு விவசாயிகளின் நலனையும் வாழ்வாதாரத்தையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p>வளமான தமிழ்நாட்டை நோக்கிய நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&apos;வேளாண் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை&apos; - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-new-announcements-in-the-agriculture-budget-udhayanidhi-stalins-criticism</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-new-announcements-in-the-agriculture-budget-udhayanidhi-stalins-criticism#comments</comments><guid isPermaLink="false">81c08266-4df8-4f7b-9910-df8c6f67fd93</guid><pubDate>Thu, 06 Aug 2026 07:18:53 +0000</pubDate><atom:updated>2026-08-06T07:18:53.440Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,வேளாண் பட்ஜெட்,agriculture budget</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/5surtkfn/14.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/5surtkfn/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தவெக அரசின் வேளான் பட்ஜெட்டில் உருப்படியாக எதுவும் இல்லை என எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இது தொடர்பாக பேசியதாவது;</p><p>தவெக ஆட்சி அமைந்து கடைசி 3 மாதங்களில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் விவசாயிகள். அவர்களுக்கு ஆதரவாகவும், அவர்களுடைய உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் விதமாகவும், இந்த அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் தான் இன்று எங்களின் தலைவரின் உத்தரவின் பேரில் திமுகவின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கருப்பு சட்டை அணிந்து எங்களின் எதிர்ப்பை தெரிவித்தோம். </p><p>"தவெக அரசின் வேளாண் பட்ஜெட் என்று சொல்வதை விட, முதல்-அமைச்சருக்கு ஜால்ரா அடித்த புகழுரை என்று சொல்லலாம். தவெக அரசின் வேளாண் பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க விஷயங்கள் எதுவுமில்லை. புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை. தேர்தல் நேரத்தில் பல வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றினர். கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. மேகதாது, பயிர்க்கடன் தள்ளுபடி, குறுவை சகுபடி பிரச்சினை என பல பிரச்சினைகள் தமிழகத்தில் உள்ளன.</p><p>எந்த விதமான கோரிக்கைகளுக்கும், கேள்விகளுக்கும் முதல்-அமைச்சர் வாய் திறந்து பதில் தரவில்லை. காவிரி விவகாரம் குறித்துப் பேச நாளை ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வர கடிதம் வழங்கியுள்ளோம். அப்போது நிறைய கேள்விகள் கேட்போம். முடிஞ்சா, தைரியம் இருந்தா முதல்-அமைச்சர் வாயை திறந்து பதில் சொல்லட்டும்.”</p><p>இவ்வாறு அவர் பேசினார். </p>  ]]></content:encoded></item><item><title>பி.எப். பணம் முறைகேடு புகார்: கோட்டக்குப்பம் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் திடீர் போராட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/allegation-of-pf-fund-misappropriation-kottakuppam-municipality-sanitation-workers-stage-a-sudden-protest</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/allegation-of-pf-fund-misappropriation-kottakuppam-municipality-sanitation-workers-stage-a-sudden-protest#comments</comments><guid isPermaLink="false">d9a994c2-8557-456a-8bb7-92270dc09563</guid><pubDate>Thu, 06 Aug 2026 07:09:45 +0000</pubDate><atom:updated>2026-08-06T07:09:45.178Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,விழுப்புரம்,போராட்டம்,தூய்மைப் பணியாளர்கள்,PF Amount,ESI</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/qh6iqyv2/83.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ தூய்மைப் பணியாளர்கள்- போராட்டம்]]></media:title><media:description type="html"><![CDATA[ விழுப்புரம் தூய்மைப் பணியாளர்கள்- போராட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/qh6iqyv2/83.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விழுப்புரம்,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விழுப்புரம் மாவட்டம்</a> கோட்டக்குப்பம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தூய்மைப் பணியாளர்கள்</a>, தங்களது ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பி.எப் மற்றும் இ.எஸ்.ஐ தொகையை உரிய கணக்குகளில் செலுத்தாத ஒப்பந்த நிறுவனத்தைக் கண்டித்து திடீர் பணிப்புறக்கணிப்பு மற்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p><h2>பி.எப். பணம் முறைகேடு புகார்</h2><p>விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சிப் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த முறையில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் மாதாந்திர ஊதியத்திலிருந்து குறிப்பிட்ட தொகை, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வருங்கால வைப்பு நிதி (பி.எப்) </a>மற்றும் மருத்துவக் காப்பீடு (இ.எஸ்.ஐ)-க்காகத் தொடர்ந்து பிடித்தம் செய்யப்பட்டு வந்தது. எனினும், அவ்வாறு பிடித்தம் செய்யப்பட்ட பல மாதங்களுக்கான நிதி, பணியாளர்களின் தனிநபர் கணக்குகளில் முறையாகச் செலுத்தப்படாமல் ஒப்பந்த நிறுவனங்களால் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகப் பணியாளர்கள் குற்றம் சாட்டினர்.</p><h2>கோரிக்கைகள்</h2><p>பணியாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட முழுமையான பி.எப் மற்றும் இ.எஸ்.ஐ நிலுவைத் தொகையை உடனடியாகச் சம்பந்தப்பட்ட கணக்குகளில் வரவு வைக்க வேண்டும். தொழிலாளர் நல விதிமுறைகளை மீறிச் செயல்படும் ஒப்பந்த நிறுவனங்கள் மீதும், அதனை முறையாகக் கண்காணிக்கத் தவறிய நகராட்சி நிர்வாகத்தின் மீதும் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலுவையில் உள்ள இதர ஊதியப் பலன்களைத் தாமதமின்றி வழங்க வேண்டும்.</p><p>ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்களின் இந்தத் தொடர் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் காரணமாக, கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகள் தேங்கிச் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. நகராட்சி அதிகாரிகள் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்திப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item></channel></rss>