<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 15 Aug 2026 22:13:31 +0000</lastBuildDate><item><title>உறக்கத்தில் சார்ஜர் வயரை பிடித்த பிளஸ் 1 மாணவன்... மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/plus-1-student-holding-charger-wire-while-asleep-dies-of-electrocution</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/plus-1-student-holding-charger-wire-while-asleep-dies-of-electrocution#comments</comments><guid isPermaLink="false">c0800bb6-1e48-42bf-abc0-e8277337232d</guid><pubDate>Sat, 15 Aug 2026 20:31:20 +0000</pubDate><atom:updated>2026-08-15T20:31:20.238Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவள்ளூர்,பிளஸ் 1</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/87ingdju/min.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருவள்ளூரில் மடிகணினி சார்ஜர் வயரில் கசிந்த மின்சாரம் தாக்கி பிளஸ் 1 மாணவன் உயிரிழந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/87ingdju/min.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர், </p><p>திருவள்ளூரில் மடிகணினி சார்ஜர் வயரில் கசிந்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">மின்சாரம் </a>தாக்கி பிளஸ் 1 மாணவன் உயிரிழந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>பள்ளி விடுமுறை</h2><p>திருவள்ளூர், பெரியகுப்பம்- கற்குழாய் தெருவைச் சேர்ந்தவர் செந்தில். பெயிண்டரான இவரது மகன் சீனிவாசன்(17), திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்நிலையில், பள்ளி விடுமுறை நாள் என்பதால் நேற்று மதியம் சீனிவாசன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்.</p><h2>மின்சாரம் தாக்கி</h2><p>அப்போது, பக்கத்து வீட்டு சிறுவன், சீனிவாசன் வீட்டில் மடிகணினிக்கு சார்ஜ் போட்டதாக கூறப்படுகிறது. உறக்கத்தில் இருந்த சீனிவாசன், சார்ஜர் போட்டிருந்ததை கவனிக்காமல் சார்ஜர் வயரை பிடித்த போது, அதில் கசிந்த மின்சாரம் தாக்கி மயங்கியதாக தெரிகிறது. </p><h2>வழக்குப் பதிவு </h2><p>இதையடுத்து, சீனிவாசன், சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே சீனிவாசன் உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து, திருவள்ளூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>80-ஆவது சுதந்திர தினம் : தேசிய கொடிக்கு துதிக்கை உயர்த்தி வீர வணக்கம் செலுத்திய கோவில் யானை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/80th-independence-day-temple-elephant-salutes-national-flag</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/80th-independence-day-temple-elephant-salutes-national-flag#comments</comments><guid isPermaLink="false">8fc28ad6-dfb7-4f29-a7ac-02176d601246</guid><pubDate>Sat, 15 Aug 2026 16:28:35 +0000</pubDate><atom:updated>2026-08-15T16:28:35.663Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>salute,வீரவணக்கம்,கோவில் யானை,சுதந்திர தினம்,Independence Day,national flag,Temple Elephant,தேசிய கொடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/1e8wxivk/flagele.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோவில் யானை]]></media:title><media:description type="html"><![CDATA[ தேசிய கொடிக்கு துதிக்கை தூக்கி வீர வணக்கம் செலுத்திய கோவில் யானை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/1e8wxivk/flagele.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கும்பகோணம், </p><p>தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் புகழ்பெற்ற ஆதி கும்பேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ‘மங்களம்’ என்ற பெண் யானை வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த யானை, தமிழகத்தின் சிறந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88">கோவில் யானைகளில் </a>ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்ற பெருமைக்குரியது ஆகும்.</p> <h2>80-ஆவது சுதந்திர தின விழா</h2><p>மூவர்ண அலங்காரம்நாட்டின் 80-ஆவது<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9"> சுதந்திர தின</a> விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, ஆதி கும்பேஸ்வரர் கோவில் வளாகத்திலும் சுதந்திர தின விழா சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. விழாவையொட்டி, மங்களம் யானைக்கும் தேசபக்தி வண்ணம் பூசப்பட்டது. அதன் உடம்பில் பிரம்மாண்ட மூவர்ண தேசிய கொடி போர்த்தப்பட்டது. மேலும், அதன் நெற்றியில் அசோக சக்கரம் மற்றும் மூவர்ண மலர்களால் ஆன சிறப்பு மாலை அணிவிக்கப்பட்டு, கம்பீரமாக அலங்கரிக்கப்பட்டது.</p><h2>கம்பீர நடை</h2><p>இதனைத் தொடர்ந்து, பாகன்கள் துணையோடு யானை மங்களம் கோவில் பிரகாரத்தில் கம்பீர நடைபோட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. அப்போது கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யானையின் அழகை கண்டு மெய்சிலிர்த்தனர். ஊர்வலத்தின் நிறைவாக, கோவில் வளாகத்தில் ஏற்றப்பட்டிருந்த தேசிய கொடி கம்பத்தின் அருகே மங்களம் யானை வந்து நின்றது.</p><h2>துதிக்கை உயர்த்தி வீர வணக்கம்</h2><p> அனைவரும் ஆச்சரியப்படும் வகையில், தனது துதிக்கையை உயர்த்தி, தேசிய கொடிக்கு கம்பீரமாக வீர வணக்கம் செலுத்தியது. இந்த அரிய காட்சியை அங்கிருந்த பொதுமக்கள் தங்களது செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்களாக பதிவு செய்து மகிழ்ந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>அண்டை மாநிலங்களில் தமிழர்களுக்கு பாதுகாப்பில்லையா? - வேல்முருகன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-there-no-safety-for-tamils-in-neighboring-states-velmurugan-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-there-no-safety-for-tamils-in-neighboring-states-velmurugan-asks#comments</comments><guid isPermaLink="false">ac83bcae-3dfc-40b7-80be-2c3feb864cf1</guid><pubDate>Sat, 15 Aug 2026 16:20:09 +0000</pubDate><atom:updated>2026-08-15T16:20:09.609Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Velmurugan,வேல்முருகன்,தி.வேல்முருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/p2cnxsiv/velmurugan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/p2cnxsiv/velmurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய கட்டாயம் உண்மையிலேயே இருந்ததா? என கர்நாடக அரசு ஆதாரங்களுடன் பதில் சொல்ல வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிடுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>ஏன் சுட்டுக்கொல்ல வேண்டும்?</h2><p>கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம், அனூர் தாலுகா வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் வனத்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டுள்ள சம்பவத்திற்கு தமிழக மக்களின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>வனத்துறை அவர்கள் வேட்டையாடச் சென்றதாகக் கூறுகிறது. அதேவேளையில், உயிரிழந்தவர்களின் உறவினர்களும் அப்பகுதி மக்களும் அவர்கள் திரும்பி வராத மாடுகளைத் தேடிக் காட்டுக்குள் சென்றவர்கள் என்று தெரிவிக்கின்றனர். இரு தரப்பின் கூற்றுகளிலும் உண்மை என்ன? என்பதை வெளிக்கொண்டு வர வேண்டிய பொறுப்பு கர்நாடக அரசுக்கு உள்ளது.</p><p>ஆனால் எத்தகைய குற்றச்சாட்டு இருந்தாலும், கைது செய்ய முடிந்தவர்களை ஏன் சுட்டுக்கொல்ல வேண்டும்?</p><p>மடக்கிப் பிடிக்க முடியாத அளவுக்கு என்ன நடந்தது?</p><p>துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய கட்டாயம் உண்மையிலேயே இருந்ததா?</p><p>இந்தக் கேள்விகளுக்கு, கர்நாடக அரசு ஆதாரங்களுடன் பதில் வேண்டும். தமிழர்களின் உயிரை துப்பாக்கிக் குண்டுகளால் தீர்மானிக்கும் நிலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.</p><h2>3 தமிழர்கள் படுகொலை</h2><p>2015 இல் ஆந்திரக் காட்டில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் காயமே இன்னும் முழுமையாக ஆறாத நிலையில், கர்நாடகாவில் மேலும் மூன்று தமிழர்களின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது.</p><p>20 தமிழர்களின் மரணத்திலிருந்து எந்தப் பாடமும் கற்கவில்லையா?</p><p>ஒரு மனிதன் குற்றவாளி என்றால் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.</p><p>குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி தண்டிக்க வேண்டும். கையில் துப்பாக்கியை வைத்திருக்கிறோம் என்பதற்காக, அதை எளிய மக்கள் மீது பயன்படுத்தக் கூடாது.</p><h2>அரசு எப்படி எதிர்கொள்ளப் போகிறது?</h2><p>தமிழ்நாடு அரசே, கர்நாடக மாநிலத்தில் மூன்று தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்கள்.</p><p>தமிழ்நாடு அரசு இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறது?</p><p>கர்நாடக அரசிடம் உடனடியாக விளக்கம் கேட்க வேண்டும்.</p><p>சம்பவத்தின் முழு உண்மையையும் கண்டறியச் சுயாதீனமான, வெளிப்படையான விசாரணை நடத்த வலியுறுத்த வேண்டும்.</p><p>விசாரணை முடியும் வரை ஆதாரங்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.</p><p>உயிரிழந்தவர்களின் குடும்பங்களைத் தமிழக அரசு நேரடியாகச் சந்தித்து, உரிய நிவாரணம் மற்றும் சட்ட உதவியை வழங்க வேண்டும்.</p><p>உயிர் பிழைத்த நபரின் வாக்குமூலம் எந்த அழுத்தமும் இல்லாமல் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.</p><h2>பாதுகாப்பு வேண்டும்</h2><p>இந்த மூன்று உயிர்களின் மரணத்திற்கு பொறுப்பானவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக அரசை, தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.</p><p>சுட்டுக்கொல்லப்பட்டு உயிரிழந்த அந்த மூன்று தமிழர்களும் வேறு யாருமல்ல. மேட்டூர் அணை உருவாக்கப்பட்டபோது தங்களின் பூர்வீக வாழ்விடங்களையும் நிலங்களையும் இழந்து, அங்கிருந்து இடம்பெயர்ந்து கர்நாடக எல்லைப் பகுதிகளில் குடியேறிய மக்களின் தலைமுறையைச் சேர்ந்தவர்கள்.</p><p>அந்த மக்களின் தலைமுறைகள் இன்று கர்நாடக மண்ணில் வாழ்கின்றன.</p><p>அவர்கள் அந்நியர்கள் அல்ல.</p><p>அவர்கள் காவிரியின் வரலாற்றோடு வாழும் தமிழர்கள்.</p><p>காவிரி நீர் விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கும் அரசியல் முரண்பாடுகள் இருக்கலாம்.</p><p>ஆனால் அந்த முரண்பாடுகள் எல்லைப் பகுதிகளில் வாழும் அப்பாவி மக்களின் உயிரைப் பறிக்கும் சூழலாக மாறக்கூடாது.</p><p>தமிழ்நாடு அரசு இதையும் தெளிவாக வலியுறுத்த வேண்டும்.</p><p>காவிரி நீருக்கான உரிமையைப் போலவே, காவிரிக் கரையில் வாழும் தமிழர்களின் உயிருக்கும் பாதுகாப்பு வேண்டும்.</p><h2>உரிய இழப்பீடு வழங்க வேண்டும்</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர், கர்நாடக முதல்-மந்தியிடம் உடனடியாகப் பேசி, இந்தத் துப்பாக்கிச்சூடு குறித்து முழுமையான, வெளிப்படையான விசாரணையை உறுதி செய்ய வேண்டும். நீதிமன்ற விசாரணையுடன் நின்றுவிடாமல், சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும். உயிரிழந்த மூன்று தமிழர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடும் சட்ட உதவியும் தமிழக அரசு வழங்க வேண்டும்.</p><p>உயிர் பிழைத்த நபரின் பாதுகாப்பையும் மருத்துவ சிகிச்சையையும் உறுதி செய்ய வேண்டும்.</p><p>சம்பவத்தில் தவறு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">செய்தவர்கள் </a>யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.</p><p>கர்நாடக எல்லைப் பகுதிகளில் வாழும் தமிழர்களின் உயிர், உடைமை, வாழ்வாதாரப் பாதுகாப்பை உறுதி செய்ய கர்நாடக அரசை வலியுறுத்த வேண்டும்.</p><p>ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தையும் கருத்தில் கொண்டு, எல்லை மாநிலங்களில் தமிழர்களுக்கு எதிரான துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் நிரந்தரமானப் பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கார் விபத்தில் கல்லூரி முதல்வர் பலி: போலீசார் விசாரணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/college-principal-killed-in-car-accident-police-conducting-intensive-investigation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/college-principal-killed-in-car-accident-police-conducting-intensive-investigation#comments</comments><guid isPermaLink="false">65309b89-4045-440c-afb9-d7da838e4031</guid><pubDate>Sat, 15 Aug 2026 16:14:04 +0000</pubDate><atom:updated>2026-08-15T16:14:04.938Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,சாலை விபத்து,road accident,தமிழகம்,Erode,ஈரோடு,car accident,கார் விபத்து,college principal,கல்லூரி முதல்வர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/xvqzivl1/vier.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/xvqzivl1/vier.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>உளுந்தூர்பேட்டை,</p><p>உளுந்தூர்பேட்டை அருகே கார் விபத்தில் கல்லூரி முதல்வர் பலியானார். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.</p><h2>கல்லூரி முதல்வர்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/erode">ஈரோடு</a> ராயல் கார்டன் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 49). இவர் குமாரபாளையத்தில் உள்ள ஒரு பிசியோதெரபி கல்லூரியில் இயன்முறை மருத்துவப்பிரிவின் முதல்வராக பணியாற்றி வந்தார். </p><p>இவரது மனைவி கிருஸ்டினா (48). இவர் பவானி அந்தியூர் அரசு மருத்துவமனையில் பிசியோதெரபி மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகன் அஸ்வின் (18). </p><p>இந்நிலையில் அஸ்வினை, சென்னையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் சேர்ப்பதற்காக அய்யப்பன், கிருஸ்டினா மற்றும் அஸ்வின் ஆகியோர் தங்களது காரில் சென்னைக்கு சென்றுவிட்டு, பின்னர் மீண்டும் சொந்த ஊர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். </p><h2>கட்டுப்பாட்டை இழந்த கார்</h2><p>காரை அய்யப்பன் ஓட்டினார். நேற்று மாலை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவே இருந்த தடுப்புக்கட்டையில் மோதியது.</p><h2>கார்கள் மோதல்</h2><p>மோதிய வேகத்தில் சாலையின் மறுமார்க்கத்தில் திருச்சி- சென்னை செல்லும் சாலையில் பாய்ந்த கார், அவ்வழியாக சென்னை நோக்கி சென்ற தனியார் ஆம்னி பஸ்சின் பக்கவாட்டில் உரசியதோடு, அதன் பின்னால் உளுந்தூர்பேட்டையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற ஒரு காரின் மீதும் நேருக்கு நேர் மோதியது. இதில் உளுந்தூர்பேட்டையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.</p><p>இந்த விபத்தில் அய்யப்பன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அஸ்வின், கிருஸ்டினா மற்றும் பள்ளத்தில் கவிழ்ந்த காரில் பயணித்த உளுந்தூர்பேட்டை சக்தி நகரை சேர்ந்த மோகனவேல் (50), அவரது மனைவி அன்பரசி (48), மகன் சதீஷ் (23) ஆகியோர் படுகாயமடைந்தனர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இதுகுறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்தில் படுகாயமடைந்த அஸ்வின் உள்பட 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மக்கள் தொகை கணக்கெடுப்பு: பிற்படுத்தப்பட்டோருக்கு தனிப் பிரிவு வேண்டும் - பிரதமருக்கு ஜோதிமணி எம்.பி. கடிதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/census-separate-category-needed-for-backward-classes-mp-jothimani-writes-to-the-prime-minister</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/census-separate-category-needed-for-backward-classes-mp-jothimani-writes-to-the-prime-minister#comments</comments><guid isPermaLink="false">d0fe17dd-1b75-4c1f-ab3b-909726841ed7</guid><pubDate>Sat, 15 Aug 2026 16:05:18 +0000</pubDate><atom:updated>2026-08-15T16:05:18.513Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜோதிமணி,ஜோதிமணி எம்.பி.,Jothimani,jothimani mp</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/jn03gmc3/jothimani.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/jn03gmc3/jothimani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>தனிப் பிரிவு வேண்டும்</h2><p>2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBC/SEBC) தெளிவான தனிப் பிரிவு உடனடியாகச் சேர்க்கப்பட வேண்டும்!</p><p>​மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும், இந்திய தேசிய காங்கிரஸும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் சாதி வாரிக் கணக்கெடுப்பின் முதன்மை நோக்கமே உண்மையான சமூக நீதியை நிலைநாட்டி, அனைவருக்குமான உள்ளடக்கிய வளர்ச்சியை (Inclusive Development) சாத்தியப்படுத்துவதுதான்.</p><h2>உரிய திருத்தம் செய்க</h2><p>​தற்போது வெளியிடப்பட்டுள்ள <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கணக்கெடுப்பு </a>படிவத்தில் OBC பிரிவினருக்குத் தனிப் பிரிவு மறுக்கப்பட்டிருப்பது சமூக நீதிக்கு எதிரானது. பிற்படுத்தப்பட்ட மக்களின் துல்லியமான எண்ணிக்கையும், அவர்களின் சமூக-பொருளாதார நிலையும் வெளிவந்தால் மட்டுமே அவர்களின் உரிமைகளும் நலத்திட்டங்களும் முழுமையாகச் சென்றடையும்.</p><p>​தெலங்கானா மாநில அரசு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய கணக்கெடுப்பு மாதிரியைப் பின்பற்றி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை மந்திரியும் உடனடியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில் உரிய திருத்தங்களைச் செய்ய வலியுறுத்திக் கடிதம் எழுதியுள்ளேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விழுப்புரம் அருகே சோகம்: லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-near-villupuram-two-private-company-employees-killed-after-being-hit-by-a-lorry</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-near-villupuram-two-private-company-employees-killed-after-being-hit-by-a-lorry#comments</comments><guid isPermaLink="false">0531802f-4af0-485a-bd4a-1900baa5e585</guid><pubDate>Sat, 15 Aug 2026 15:59:36 +0000</pubDate><atom:updated>2026-08-15T15:59:36.398Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சாலை விபத்து,road accident,விழுப்புரம்,Villupuram</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/sezj7mwh/adkie.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/sezj7mwh/adkie.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விழுப்புரம், </p><p>விழுப்புரம் அருகே லாரி மோதியதில் தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேர் பரிதாபமாக பலியாகினர்.</p><h2>நண்பர்கள்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/villupuram">விழுப்புரம்</a> அருகே உள்ள சிந்தாமணி மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் தர்மன் மகன் நரேஷ் (வயது 22). இவரும் சிந்தாமணி கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குமார் மகன் அருண்குமார் (23) என்பவரும் நண்பர்கள் ஆவர். இவர்கள் இருவரும் முண்டியம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வந்தனர். </p><h2>லாரி மோதியது</h2><p>இந்நிலையில் அவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு ஒரு மோட்டார் சைக்கிளில் முத்தாம்பாளையம் புறவழிச்சாலையில் இருந்து சிந்தாமணி நோக்கி புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை அருண்குமார் ஓட்டிச்சென்றார்.</p><p>முத்தாம்பாளையம் முருகன் கோவில் பாலம் அருகே சென்றபோது பின்னால் சென்னை மார்க்கத்தில் இருந்து திருச்சி நோக்கி இரும்பு பிளேட்டுகளை ஏற்றிக் கொண்டு சென்ற லாரி, அவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட நரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அருண்குமார் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.</p><h2>சிகிச்சை</h2><p>இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் காயமடைந்த அருண்குமாரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். </p><h2>வழக்குப்பதிவு</h2><p>விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரான அரியலூர் மாவட்டம் கல்லூர் பகுதியை சேர்ந்த வினோத் (35) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>வீட்டில் தனியாக இருந்த பெண்ணை அடித்து கொன்ற சிறுவன் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/boy-arrested-for-beating-a-woman-to-death-while-she-was-alone-at-home</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/boy-arrested-for-beating-a-woman-to-death-while-she-was-alone-at-home#comments</comments><guid isPermaLink="false">6601daee-690c-4fff-93e5-c57a02114f4a</guid><pubDate>Sat, 15 Aug 2026 15:47:43 +0000</pubDate><atom:updated>2026-08-15T15:47:43.397Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,Crime News,கிரைம் செய்திகள்,பெண் கொலை,சிறுவன் கைது,woman murder,boy arrested</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/7ik7lj90/divya.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/7ik7lj90/divya.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/coimbatore">கோவை</a>யில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை அடித்து கொன்ற வழக்கில் சிறுவனை போலீசார் கைது செய்தனர்.</p><h2>பெண் கொலை</h2><p>கோவை பாப்பநாயக்கன்பாளையம் கருப்பக்கல் தோட்டத்தை சேர்ந்தவர் சாந்தி (வயது 58). இவருக்கு ராஜா (35) என்ற மகனும், அமுதா (30) என்ற மகளும் உள்ளனர். அமுதா தனது குடும்பத்துடன் பாலக்காட்டில் வசித்து வருகிறார். ராஜா மட்டும் சாந்தியுடன் வசித்து வருகிறார்.</p><p>சாந்தி அங்குள்ள ஒரு டாக்டர் வீட்டில் சமையல் செய்து வந்தார். அவர், கடந்த 11-ந் தேதி இரவில் வீட்டில் தனியாக இருந்த போது அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். </p><h2>கேமராக்களில் பதிவான காட்சி</h2><p>சாந்தியை கொலை செய்த நபர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள், சாந்தி வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில் ஒரு நபர் மட்டும் சாந்தி வீட்டிற்குள் சென்று திரும்பி வரும் காட்சி பதிவாகி இருந்தது. உடனே அந்த நபர் குறித்து விசாரித்தனர். இதில் அவர் அதே பகுதியில் சுற்றித்திரியும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.</p><h2>சிறுவன் கைது</h2><p>உடனே தனிப்படை போலீசார் அந்த சிறுவனை பிடித்து விசாரித்தனர். இதில் அந்த சிறுவன்தான் சாந்தியை கட்டையால் அடித்து கொலை செய்து விட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த சிறுவனை கைது செய்தனர்.</p><p>இது குறித்து போலீசார் கூறும்போது, பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் சுற்றித்திரிந்த 17 வயது சிறுவன் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர். அவர் சாந்தி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து உள்ளே சென்று செல்போனை திருடி உள்ளார். அதை சாந்தி பார்த்ததால் கட்டையால் அடித்துவிட்டு பாலியல் தொல்லை கொடுத்து விட்டு தப்பிச்சென்றார். அதில் அவர் உயிரிழந்து உள்ளார் என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பயணிகள் கவனத்திற்கு.. ரெயில் சேவைகளின் இயக்கத்தில் முக்கிய மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/attention-passengers-major-changes-to-train-services</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/attention-passengers-major-changes-to-train-services#comments</comments><guid isPermaLink="false">828c1f16-cb4c-4a08-9bea-a6e9bcddd4fe</guid><pubDate>Sat, 15 Aug 2026 15:36:36 +0000</pubDate><atom:updated>2026-08-15T15:36:36.393Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,தெற்கு ரெயில்வே,Southern Railway,ரெயில் சேவை,train service</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/8sd0oyob/kuu.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/8sd0oyob/kuu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மாலூர் (Malur) நிலையத்தில் 'எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங்' (Electronic Interlocking) வசதியை ஏற்படுத்துவதற்கான 'நான்-இன்டர்லாக்கிங்' (Non-Interlocking) பணிகள் நடைபெறவுள்ளதால், ரெயில் சேவைகளில் பின்வருமாறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்று தென்மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.</p><p>I. ரெயில் சேவையின் பகுதி ரத்து / பயணப் பாதை குறைப்பு:</p><p>18 ஆகஸ்ட் 2026 அன்று அதிகாலை 4.30 மணிக்கு ஜோலார்பேட்டையிலிருந்து புறப்பட வேண்டிய ரெயில் எண் 16519 ஜோலார்பேட்டை - KSR பெங்களூரு MEMU ரெயில், பங்காரப்பேட்டை மற்றும் KSR பெங்களூரு இடையே பகுதி அளவில் ரத்து செய்யப்படுகிறது. இவ்வண்டி பங்காரப்பேட்டையுடனேயே தனது பயணத்தை முடித்துக்கொள்ளும் (அதாவது, KSR பெங்களூரு வரை செல்லாது).</p><p>II. ரெயில் சேவையின் பகுதி ரத்து / புறப்படும் இடத்தில் மாற்றம்:</p><p>18 ஆகஸ்ட் 2026 அன்று காலை 8.45 மணிக்கு கே.எஸ்.ஆர். பெங்களூருவிலிருந்து புறப்பட வேண்டிய ரெயில் எண் 66550 கே.எஸ்.ஆர். பெங்களூரு - ஜோலார்பேட்டை MEMU ரெயில், கே.எஸ்.ஆர். பெங்களூரு மற்றும் பங்காரப்பேட்டை இடையே பகுதி அளவில் ரத்து செய்யப்படுகிறது. இவ்வண்டி பங்காரப்பேட்டையிலிருந்து அதன் திட்டமிடப்பட்ட புறப்படும் நேரமான காலை 10.05 மணிக்கு தனது பயணத்தைத் தொடங்கும்.</p> <p>III. ரெயில் சேவைகளின் திசைதிருப்பல்:</p><p>ஆகஸ்ட் 17, 2026 அன்று கொல்லத்தில் இருந்து 17.00 மணிக்கு புறப்படும் ரெயில் எண். 07314 கொல்லம் - ஹூப்பள்ளி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில், சேலம், ஓமலூர், தர்மபுரி, ஓசூர், பையப்பனஹள்ளி கேபின், யஷ்வந்த்பூர் ஏ கேபின் மற்றும் துமகுரு ஸ்கிப்பிங் ஸ்டாப், கிருஷ்ணாராஜாபுரம், கிருஷ்ணாராஜபுரம் வழியாக இயக்கப்படும்.</p><p>17 ஆகஸ்ட் 2026 அன்று இரவு 8:00 மணிக்கு மங்களூரு சென்ட்ரல் நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய ரெயில் எண் 16566 மங்களூரு சென்ட்ரல் - யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ், குப்பம், பங்காரப்பேட்டை மற்றும் கிருஷ்ணராஜபுரம் ஆகிய நிலையங்களில் நிற்காமல், சேலம், ஓமலூர், ஓசூர், பெலந்தூர் ரோடு மற்றும் பனஸ்வாடி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.</p> <p>ஆகஸ்ட் 16, 2026 அன்று டானாபூரில் இருந்து 15.00 மணிக்கு புறப்படும் ரயில் எண். 03251 டானாபூர் - எஸ்எம்விடி பெங்களூரு சிறப்பு ரயில் விஜயவாடா, குண்டூர், தோன், தர்மாவரம், யெலஹங்கா மற்றும் எஸ்எம்விடி பெங்களூரு வழியாக இயக்கப்படும். ஓங்கோல், கூடூர், பெரம்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை, பங்காரப்பேட்டை மற்றும் ஒயிட்பீல்டு ஆகிய இடங்களில் நிறுத்தங்களை தவிர்க்கிறது.</p><p>ரெயில் எண். 05073 KSR பெங்களூரு - லக்னோ சிறப்பு ரெயில் 18 ஆகஸ்ட், 2026 அன்று KSR பெங்களூரில் இருந்து 07.15 மணிக்குப் புறப்படும். SMVT பெங்களூரு, பெங்களூரு கண்டோன்மென்ட், யெலஹங்கா, தர்மாவரம், தோன், குண்டூர் மற்றும் விஜயவாடா ஆகிய இடங்களில் நிறுத்தங்கள். கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, குப்பம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல் மற்றும் தெனாலி ஆகிய இடங்களில் நிறுத்தங்களை தவிர்க்கின்றன. </p><p>03252 SMVT பெங்களூரு - டானாபூர் சிறப்பு ரெயில் SMVT பெங்களூருவில் இருந்து ஆகஸ்ட் 18, 2026 அன்று 23.50 மணிக்குப் புறப்பட்டு SMVT பெங்களூரு, யெலஹங்கா, தர்மாவரம், தோன், குண்டூர் மற்றும் விஜயவாடா வழியாக இயக்கப்படும். ஒயிட்பீல்டு, பங்காரப்பேட்டை, ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், கூடூர் மற்றும் ஓங்கோல் ஆகிய இடங்களில் நிறுத்தங்களை தவிர்க்கின்றன.</p><p>IV. ரெயில் சேவைகள் ஒழுங்குபடுத்தப்படுதல்:</p><p>18 ஆகஸ்ட் 2026 அன்று 20:40 மணிக்கு அசோகபுரத்திலிருந்து புறப்படத் திட்டமிடப்பட்டுள்ள ரெயில் எண் 16022 அசோகபுரம் - டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் காவேரி எக்ஸ்பிரஸ், பயண வழியில் 2 மணி நேரம் தாமதப்படுத்தப்படும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நயினார் நாகேந்திரன் சர்ச்சை பேச்சு: அமைச்சர் ரமேஷ் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-ramesh-condemns-nainar-nagendran-remarks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-ramesh-condemns-nainar-nagendran-remarks#comments</comments><guid isPermaLink="false">0201c2e7-6df8-44c6-a205-a889ae94bbae</guid><pubDate>Sat, 15 Aug 2026 15:34:19 +0000</pubDate><atom:updated>2026-08-15T15:34:19.930Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,கண்டனம்,பேச்சு,condemns,முகம்,Nainaar Nagendran,Minister ramesh,அமைச்சர் ரமேஷ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/2opubhen/minister-ramesh.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ரமேஷ்]]></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன் சர்ச்சை பேச்சு: அமைச்சர் ரமேஷ் கண்டனம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/2opubhen/minister-ramesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தாய்மார்களும் பெண்களும் முகம் சுளிக்கும் வகையில் நயினார் நாகேந்திரன் பேசியிருப்பதற்கு <a href="https://www.dailythanthi.com/topic/minister-ramesh">அமைச்சர் ரமேஷ்</a> கண்டனம். இது தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p> <h2>அருவருப்பின் உச்சம்</h2><p>பெண்களின் பெருமையையும், தாயின் அருமையையும் அறியாத மூன்றாம் தர நபரை போல இன்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியிருப்பது அருவருப்பின் உச்சம்!</p><h2>கண்டனம்</h2><p>ஒரு அரசியல் கட்சியின் மாநில தலைவராக மட்டுமல்ல, குறைந்தபட்சம் ஒரு சாதாரண மனிதரிடம் இருக்க வேண்டிய நாகரிகம் கூட இல்லாமல், தாய்மார்களும் பெண்களும் முகம் சுளிக்கும் வகையில் அவர் பேசியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.</p><h2>தவறான பார்வை</h2><p>பெண்கள் மீதான அவரது தவறான பார்வை அவரது பேச்சில் தெளிவாக வெளிப்படுகிறது. அவர் சார்ந்த அரசியல் கட்சியும் பெண்களை இப்படித்தான் பார்க்கிறதா என்ற கேள்விக்கு, அக்கட்சியின் தேசிய தலைவர்கள் தான் விளக்கம் அளிக்க வேண்டும்.</p><p>தரக்குறைவான பேச்சுக்காக தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன்</a> அவர்களே!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>போதிய மழை இல்லை: வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைவு - சென்னைக்கு தண்ணீர் அனுப்புவதில் சிக்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/not-enough-rain-veeranam-lake-water-level-low-problem-in-sending-water-to-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/not-enough-rain-veeranam-lake-water-level-low-problem-in-sending-water-to-chennai#comments</comments><guid isPermaLink="false">cfcf2ef1-1fef-42a8-a3e3-6c83ebe0403d</guid><pubDate>Sat, 15 Aug 2026 15:18:06 +0000</pubDate><atom:updated>2026-08-15T15:18:06.923Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Rain,water,வீராணம் ஏரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/bob6kxi2/veeranam33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைவு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/bob6kxi2/veeranam33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>காட்டுமன்னார்கோவில், </p><p>போதிய மழை இல்லாததால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் சரிந்து வருகிறது இதனால் சென்னைக்கு தண்ணீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.</p><p>கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே வீராணம் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு, கொள்ளிடம் கீழணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வடவாறு வழியாக 24 கி.மீ தூரம் பயணம் செய்து தண்ணீர் ஏரியை வந்தடைகிறது.</p><h2>மேட்டூர் தண்ணீர்</h2><p>ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் தண்ணீர் திறந்து விடுவதால் அதனை கொண்டு சென்னைக்கு தேவையான குடிநீரை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF">வீராணம் ஏரி</a>யில் இருந்து அனுப்பி வந்தனர். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு குறைவாக இருந்ததால் தண்ணீர் திறக்கப்படவில்லை. அதனால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. </p><p>எனவே சிறப்பு கவனம் செலுத்தி கடந்த மாதம் ஆயிரம் கன அடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் அனுப்பப்பட்டது. இதனால் சென்னைக்கு தண்ணீர் அனுப்புவது தடைப்படாமல் நடைபெற்றது.</p><h2>வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைவு</h2><p>தற்போது ஏரியில் 41.25 அடி மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. தினமும் வினாடிக்கு 73கன அடி தண்ணீர் சென்னைக்கு குடிநீருக்காக அனுப்பப்பட்டு வருகிறது. தொடர்ந்து வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. ஏரியில் தண்ணீர் குறைந்து ஆங்காங்கே திட்டுகளாக திட்டுகளாக காணப்படுகிறது. காணப்படுகிறது. </p><p>இதனால் ஏரியில் இருந்து தண்ணீரை நீரேற்றும் நிலையத்திற்கு கொண்டு செல்வதில் சிரமமாக உள்ளது. அந்த தண்ணீரும் போது முடியும் தருவாயில் உள்ளது. இதனால் சென்னைக்கு தண்ணீர் அனுப்புவதில் சிக்கலாகும் நிலை ஏற்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சிவகங்கை: வ.உ.சி வேடத்தில் 17 கி.மீ சைக்கிள் பயணம் செய்த ஆசிரியர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sivagangai-teacher-cycles-17-km-dressed-as-voc</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sivagangai-teacher-cycles-17-km-dressed-as-voc#comments</comments><guid isPermaLink="false">7cbda25b-d52f-4182-80b9-e55560a93206</guid><pubDate>Sat, 15 Aug 2026 15:11:18 +0000</pubDate><atom:updated>2026-08-15T15:11:18.569Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிவகங்கை,Sivagangai,ஆசிரியர்,வ.உ.சிதம்பரனார்,Cycle Rally,Government school teacher,சைக்கிள் பயணம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/5c8m5zfh/cycle-journey.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஆசிரியர்]]></media:title><media:description type="html"><![CDATA[ வ.உ.சிதம்பரனார் வேடமணிந்த சைக்கிள் பயணம் செய்த ஆசிரியர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/5c8m5zfh/cycle-journey.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை,</p><p>நாடு முழுவதும் 80-ஆவது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">சுதந்திர தினம்</a> கொண்டாடப்பட்டு வரும் வேளையில், சிவகங்கை மண்ணில் ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பி பார்க்க வைக்கும் ஒரு  நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.</p> <h2> கப்பலோட்டிய தமிழனாக மாறிய ஆசிரியர்</h2><p>இளைய தலைமுறையினரின் நெஞ்சங்களில் தேசப்பற்றை விதைக்க, ஒரு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D">அரசு பள்ளி ஆசிரியர்</a> தலைப்பாகை, கம்பீர மீசை என அச்சு அசல் வ.உ.சிதம்பரனார் வேடமணிந்து வலம் வந்துள்ளார் அந்த தேசப்பற்று மிக்க ஆசிரியர் 17 கிலோமீட்டர் தூரம் இடைவிடாத மிதிவண்டி பயணம்.</p> <h2>இரட்டை விழிப்புணர்வு முழக்கம்</h2><p>சிவகங்கையின் முக்கிய சாலைகள் வழியாக 17 கிலோ மீட்டர் தூரத்திற்கு இடைவிடாமல் மிதிவண்டியை மிதித்து, பொதுமக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். நாட்டின் சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரின் வீர வரலாற்றையும், இன்றைய காலகட்டத்திற்கு மிக அவசியமான சுற்றுச்சூழல் விழிப்புணர்வையும் ஒரே நேர்கோட்டில் இணைத்து, ஒட்டுமொத்த மக்கள் மத்தியிலும் கொண்டு சேர்த்துள்ளார். அதில், அத்தியாவசியத் தேவைகளுக்கு எரிபொருள் வாகனங்களைத் தவிர்த்து, உடலுக்கும் இயற்கைக்கும் நன்மை பயக்கும் மிதிவண்டியை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.</p> <h2>உன்னத நோக்கம்</h2><p>சாலையில் அவர் கம்பீரமாக வ.உ.சி தோற்றத்தில் சைக்கிள் ஓட்டி சென்ற காட்சிகளை, பொதுமக்கள் தங்களது செல்போன்களில் பிடித்தனர். இந்த விடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில்  பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.</p> <p>ஆசிரியரின் இந்த முயற்சிக்கு சிவகங்கை மாவட்ட மக்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த சமூக வலைத்தளமும் ஆசிரியரை பாராட்டி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>நெல்லையில் கோர விபத்து: ஸ்கூட்டி மீது லாரி மோதி 2 பெண்கள் பலி..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/horrific-accident-in-nellai-lorry-hits-scooter-two-women-killed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/horrific-accident-in-nellai-lorry-hits-scooter-two-women-killed#comments</comments><guid isPermaLink="false">caca3bdc-fdd2-4e36-bbcf-1c1142f445fe</guid><pubDate>Sat, 15 Aug 2026 15:11:07 +0000</pubDate><atom:updated>2026-08-15T15:11:07.670Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/c55cd1yr/Untitled-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/c55cd1yr/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,  </p><p>பணகுடி அருகே நான்குவழிச்சாலையில் ஸ்கூட்டி மீது லாரி மோதிய விபத்தில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மற்றொரு பெண்ணுக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><h2>கோழிப்பண்ணைக்கு சென்றபோது விபத்து</h2><p>நெல்லை மாவட்டம் பணகுடி புஷ்பவனம் ரோடு காமராஜர் நகரைச் சேர்ந்த வெங்கடேஷ்குமாரின் மனைவி ஜெகதா (42). பணகுடி நெரிஞ்சிகாலனி அன்னை நகரைச் சேர்ந்த அறிவழகனின் மனைவி மரிய விஜயா (42), பாப்பா (50).</p><p>இவர்கள் 3 பேரும் கோழிப்பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு ஊசி போடும் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில், இன்று அதிகாலை பணகுடி அருகே பாம்பன்குளம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் செயல்பட்டு வரும் கோழிப்பண்ணைக்கு 3 பேரும் ஸ்கூட்டியில் புறப்பட்டுச் சென்றனர். ஜெகதா ஸ்கூட்டியை ஓட்ட, மரிய விஜயா மற்றும் பாப்பா ஆகியோர் பின்னால் அமர்ந்திருந்தனர்.</p><h2>ஸ்கூட்டி மீது லாரி மோதல்</h2><p>பாம்பன்குளம் அருகே நெல்லை-குமரி நான்குவழிச்சாலையில் ஸ்கூட்டி சென்று கொண்டிருந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த லாரி, ஸ்கூட்டியின் பின்புறத்தில் மோதியது.</p><p>மோதிய வேகத்தில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அப்போது சாலையில் விழுந்த மரிய விஜயா மீது லாரி ஏறி இறங்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ஜெகதா மற்றும் பாப்பா ஆகியோர் உயிருக்கு போராடினர்.</p><h2>மற்றொரு பெண் பலி</h2><p>விபத்து குறித்து தகவல் அறிந்த பணகுடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, படுகாயம் அடைந்த ஜெகதா மற்றும் பாப்பாவை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><p>ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பாப்பா பரிதாபமாக உயிரிழந்தார். ஜெகதா நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இந்த விபத்து குறித்து பணகுடி <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">போலீசார் </a>வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், லாரி டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டு விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பெங்களூரு - திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-trains-to-run-between-bengaluru-and-thiruvananthapuram</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-trains-to-run-between-bengaluru-and-thiruvananthapuram#comments</comments><guid isPermaLink="false">78d9c365-5054-45d0-af22-c3ba173be33f</guid><pubDate>Sat, 15 Aug 2026 14:57:32 +0000</pubDate><atom:updated>2026-08-15T14:57:32.239Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,தெற்கு ரெயில்வே,Southern Railway,பெங்களூரு,Bengaluru,Special train,Thiruvananthapuram,திருவனந்தபுரம்,சிறப்பு ரெயில்கள்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/eiqd9t46/cas.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/eiqd9t46/cas.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பெங்களூரு - திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.</p><h2>எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில்கள்</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p>பயணிகளின் கூடுதல் நெரிசலைக் குறைப்பதற்காக, தென்மேற்கு ரெயில்வே கீழ்க்கண்டவாறு சிறப்பு ரெயில்களை (தேவைக்கேற்ப இயக்கப்படும் ரெயில்கள்) அறிவித்துள்ளது.</p><p>ரெயில் எண் 06569/06570 SMVT பெங்களூரு - திருவனந்தபுரம் வடக்கு - SMVT பெங்களூரு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில்கள்:</p><p>ரெயில் எண் 06569 SMVT பெங்களூரு - திருவனந்தபுரம் வடக்கு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில், 20 ஆகஸ்ட் 2026 (வியாழன்) அன்று 17.10 மணிக்கு SMVT பெங்களூருவிலிருந்து புறப்பட்டு, மறுநாள் 10 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கைச் சென்றடையும் (1 சேவை).</p><p>மறுமார்க்கத்தில், ரெயில் எண் 06570 திருவனந்தபுரம் வடக்கு - SMVT பெங்களூரு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில், 22 ஆகஸ்ட் 2026 (சனிக்கிழமை) அன்று 12.40 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கிலிருந்து புறப்பட்டு, மறுநாள் 6 மணிக்கு SMVT பெங்களூருவைச் சென்றடையும் (1 சேவை).</p><p>பெட்டிகளின் அமைப்பு: 1- ஏசி இரு அடுக்கு (AC Two Tier) பெட்டி, 3- ஏசி மூன்று அடுக்கு (AC Three Tier) பெட்டிகள், 10- ஸ்லீப்பர் வகுப்புப் பெட்டிகள், 4- பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் &amp; 2- சரக்கு மற்றும் பிரேக் வேன்கள்.</p><p>ரெயில் எண் 06569/06570 SMVT பெங்களூரு - திருவனந்தபுரம் வடக்கு - SMVT பெங்களூரு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில்களின் நேரம் மற்றும் நிறுத்தங்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு (நேரங்கள் 24-மணிநேர அடிப்படையில்):-</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/ap606j3p/atta.jpg" /></figure><h2>நாளை முன்பதிவு</h2><p>மேற்கூறிய சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு, 16.08.2026 (நாளை) அன்று காலை 8 மணிக்கு தென் ரெயில்வே தரப்பிலிருந்து தொடங்கப்படும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அரசியல் விளையாட்டில் பெண்கள் பகடைக்காய்கள் அல்ல: நயினார் நாகேந்திரனுக்கு குஷ்பு கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/women-are-not-pawns-khushbu-condemns-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/women-are-not-pawns-khushbu-condemns-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">4d3b1690-b31f-43df-a05c-5d0d0cf9ebc6</guid><pubDate>Sat, 15 Aug 2026 14:17:44 +0000</pubDate><atom:updated>2026-08-15T14:17:44.315Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Tamilnadu,தமிழகம்,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,குஷ்பு,Kushboo</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/9mlrpzt5/koee.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/9mlrpzt5/koee.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> மற்றும் அவரது தாயார் குறித்து அநாகரீகமாக பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனால் புதிய சர்ச்சை</p><p>எழுந்துள்ளது. 'அப்பாவை காணோம்' என்ற முதல்-அமைச்சர் பேச்சுக்கு எதிர்வினையாக அவர் அநாகரீகமாக பேசியதாக கண்டனங்கள் எழுந்துள்ளது.</p><h2>தரக்குறைவான கருத்து</h2><p>இந்நிலையில் நடிகையும், பா.ஜ.க. மாநில துணைத் தலைவருமான குஷ்பு, நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழக முதல்-அமைச்சரின் தாயார் குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் தெரிவித்த தரக்குறைவான கருத்து அருவருப்பானது. எந்தவொரு தளத்திலும் இத்தகைய கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.</p><h2>அதிர்ச்சியும், ஏமாற்றமும்</h2><p>எனது தலைவரும் பிரதமருமான நரேந்திர மோடி அவர்கள் எப்போதும் 'நாரி சக்தி' (பெண் சக்தி) குறித்தே பேசி வருகிறார். பெண்களை மிகுந்த மரியாதையுடன் நடத்தி வருகிறார். இத்தகைய கருத்துகள் மிகவும் கீழ்த்தரமானவை.</p><p>பெண்களின் கண்ணியம் மற்றும் நேர்மையை அவமதிப்பதையோ அல்லது கேள்விக்குள்ளாக்குவதையோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதவள் நான். எப்போதும் என் கருத்துகளைத் துணிச்சலுடன் வெளிப்படுத்தி வந்துள்ளேன். இதைக் கேட்டு நான் இன்று அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளேன். </p><h2>பெண்கள் பகடைக்காய்கள் அல்ல</h2><p>கட்சியை விமர்சியுங்கள், மக்களுக்காகக் குரல் கொடுங்கள், அரசு செயல்படத் தவறினால் அதைத் தாக்குங்கள். ஆனால் உங்கள் கருத்தை முன்வைக்க ஒருபோதும் ஒரு பெண்ணைப் பயன்படுத்தாதீர்கள். அரசியல் விளையாட்டில் பெண்கள் பகடைக்காய்கள் அல்ல.</p><p>ஒவ்வொரு கட்சியும், அக்கட்சியின் உறுப்பினர்களும், ஒவ்வொரு ஆணும் ஒரு பெண்ணை அவமதிக்கும் முன் சிந்திக்க வேண்டும். நினைவில் கொள்ளுங்கள், ஒரு பெண்ணின் - ஒரு தாயின் - காரணமாகவே நீங்கள் இந்த உலகில் இருக்கிறீர்கள். ஒரு தாய்க்கு இழைக்கப்படும் இத்தகைய அவமரியாதை மிகுந்த வேதனையையும் மனக்காயத்தையும் ஏற்படுத்துகிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ஈரோடு அருகே சிறுத்தை ஆட்டை தூக்கி சென்றதால் பரபரப்பு! - விவசாயிகள் பீதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sensation-near-erode-as-leopard-carries-off-a-goat-farmers-in-a-state-of-panic</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sensation-near-erode-as-leopard-carries-off-a-goat-farmers-in-a-state-of-panic#comments</comments><guid isPermaLink="false">3de1cd51-a672-4aea-8b9e-72c2bf29f1d6</guid><pubDate>Sat, 15 Aug 2026 14:12:28 +0000</pubDate><atom:updated>2026-08-15T14:12:28.598Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Erode,ஈரோடு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/blhoksmb/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/blhoksmb/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இப்பகுதிகளில் யானை, சிறுத்தை, புலி, கரடி, செந்நாய், மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.</p><p>வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது வெளியேறும் வனவிலங்குகள் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதுடன், கால்நடைகளையும் வேட்டையாடி வருகின்றன. இதனால் வனப்பகுதியையொட்டி வசிக்கும் கிராம மக்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.</p><h2>கல்குவாரியில் பதுங்கும் சிறுத்தை</h2><p>குறிப்பாக புலி மற்றும் சிறுத்தைகள் மறைவான பகுதிகளில் பதுங்கி கால்நடைகளை வேட்டையாடி வருவதாக கூறப்படுகிறது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட சூசைபுரம், தொட்டகாஜனூர், பீம்ராஜ்நகர், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளாக கல்குவாரி பகுதியில் பதுங்கியிருக்கும் சிறுத்தை, ஆடு, மாடு, காவல் நாய்கள் உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.</p><p>இரவு நேரங்களில் கல்குவாரியில் இருந்து வெளியே வரும் சிறுத்தை, கிராமங்களுக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடிவிட்டு மீண்டும் கல்குவாரியில் பதுங்கிக் கொள்வது தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.</p><h2>விவசாயியின் ஆடு மாயம்</h2><p>இந்த நிலையில் சூசைபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாதேவன் (48), வழக்கம்போல் தனது ஆடு, மாடுகளை மாட்டு கொட்டகையில் கட்டி வைத்துவிட்டு தூங்கச் சென்றார்.</p><p>மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது ஒரு ஆடு காணாமல் போனது. அப்பகுதியில் சிறுத்தையின் கால்தடம் பதிவாகி இருந்ததால், சிறுத்தை ஆட்டை தூக்கிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.</p><h2>கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை</h2><p>கல்குவாரியில் பதுங்கி வரும் சிறுத்தை, இரவு நேரங்களில் வெளியே வந்து காவல் நாய்கள், ஆடு, மாடு, கன்றுக்குட்டி உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடி வருவதால் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விவசாயிகள் </a>மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.</p><p>எனவே, தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து உடனடியாக பிடித்து, பொதுமக்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>உள்நோக்கத்துடன் யாரையும் குறிப்பிடவில்லை; நயினார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/didnt-mention-anyone-with-intent-nainar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/didnt-mention-anyone-with-intent-nainar#comments</comments><guid isPermaLink="false">6d93c1d9-bb7c-4b07-9d4b-31179a0e25d9</guid><pubDate>Sat, 15 Aug 2026 14:10:33 +0000</pubDate><atom:updated>2026-08-15T14:10:33.536Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Mother,தாய்,தாய்மொழி,Mother Tongue,அப்பா,தமிழிசை சௌந்தரராஜன்,கமலாலயம்,நோக்கம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/ll4opmjz/nainar-nagendheran.new.gif" width="752"><media:title type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/ll4opmjz/nainar-nagendheran.new.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>உள்நோக்கத்துடன் யாரையும் குறிப்பிடவில்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.</p><h2>வெளியிட்டு விழா</h2><p>பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் 'ஒரே நாடு' மாத இதழின் டிஜிட்டல் பதிப்பின் வெளியிட்டு விழா இன்று நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் <a href="https://www.dailythanthi.com/topic/nainar-nagendran">நயினார் நாகேந்திரன்</a>, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.</p><h2>அப்பா யார்? </h2><p>நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் பேசுகையில், சட்டமன்றத்திற்கு சென்று அப்பா எங்கே, அப்பா எங்கே என்று சிலர் தேடுகிறார்கள். வீட்டுக்கு சென்று அம்மாவிடம் கேட்டால் தானே அப்பா யார்? என்று சொல்வார்கள். அதை விட்டுவிட்டு, சட்டமன்றத்திற்கு சென்று அப்பாவை தேடினால் யாருக்கு தெரியும்? இப்படிப்பட்ட நபர்களின் ஆட்சிதான் இன்று தமிழகத்தில் நடைபெற்று வருகிறது" என பேசினார்.</p><h2>அப்பாவை காணோம்</h2><p>முன்னதாக, கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a>, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை குறிப்படும் வகையில் "அப்பாவை காணோம்" என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நயினார் நாகேந்திரனின் இந்த பேச்சு தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. அவரது இந்த பேச்சு அடங்கிய வீடியோவும் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. </p><p>இதையடுத்து, நயினார் நாகேந்திரனை கண்டித்து அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், எக்ஸ் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-</p> <h2>அரசியல் ஆதாயம் </h2><p>ஒரே நாடு 2.0 பத்திரிக்கை வெளியீட்டு விழாவின் போது நான் மேடையில் பேசிய பேச்சை திரித்து சித்தரித்து, அரசியல் ஆதாயம் தேட நினைப்பவர்களுக்கு நான் தெரிவிப்பது என்னவென்றால், எந்தவிதமான உள்நோக்கத்துடனும் யாரையும் குறிப்பிட்டு  பேசவில்லை. தாய் மீதும், தாய் நாட்டின் மீதும், தாய்மொழி மீதும் மிகுந்த அக்கறை கொண்டவன் நான்.</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு காங்கிரசில் 77 கட்சி மாவட்டங்களுக்கென பார்வையாளர்கள் நியமனம் செய்து தலைமை உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-congress-appoints-observers-for-77-party-districts</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-congress-appoints-observers-for-77-party-districts#comments</comments><guid isPermaLink="false">c44de10e-5f8a-4833-9641-c36695b0ff31</guid><pubDate>Sat, 15 Aug 2026 13:33:41 +0000</pubDate><atom:updated>2026-08-15T13:33:41.947Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Appointment,நியமனம்,Tamil Nadu Congress,தமிழ்நாடு காங்கிரஸ்,பார்வையாளர்கள்,ordered,Leadership</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/3iqmjoio/peter.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பீட்டர் அல்போன்ஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ மாநில இயக்க சீரமைப்பு திட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பீட்டர் அல்போன்ஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/3iqmjoio/peter.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு காங்கிரசில் 77 கட்சி மாவட்டங்களுக்கென பார்வையாளர்கள் நியமனம் செய்து தலைமை உத்தரவு என்று மாநில இயக்க சீரமைப்பு திட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>புதிய மாவட்ட தலைவர்கள்</h2><p>அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் காங்கிரஸ் அமைப்புகளை சீரமைக்கும் திட்டத்தின் முதல் கட்டமாக மாவட்ட காங்கிரஸ்  கமிட்டிகள் சீரமைக்கப்பட்டு புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் நடைபெற்று தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">ராகுல் காந்தி</a> கலந்து கொண்டார்.</p> <h2>7500 மண்டல காங்கிரஸ் தலைவர்</h2><p>இயக்க சீரமைப்பின் இரண்டாம் கட்டமாக தமிழகமெங்கும் உள்ள வட்டார, நகர, பேரூராட்சி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D">காங்கிரஸ்</a> கமிட்டிகளும், மாநகராட்சிகளில் உள்ள சர்க்கிள் காங்கிரஸ் கமிட்டிகளும் முழுமையாக சீரமைக்கும் திட்டத்தை தமிழக காங்கிரஸ் துவங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஏறக்குறைய 75000 வாக்குச்சாவடிகளை, பத்து வாக்குச்சாவடிகளுக்கு ஒரு மண்டல காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்ற அடிப்படையில் சுமார் 7500 மண்டல காங்கிரஸ் தலைவர்களும் நியமிக்கப்பட இருக்கின்றனர். </p><h2>முன்னால் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள்</h2><p>மாவட்ட அளவில் இந்த பணிகளை மாவட்ட தலைவர்களோடு இணைந்து செயல்படுத்திட 77 கட்சி மாவட்டங்களுக்கு, இயக்கப்பணிகளில் நீண்ட அனுபவம் பெற்ற கீழ்க்கண்ட 77 முன்னால் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப. மாணிக்கம் தாகூர், எம்.பி. ஒப்புதலோடு பார்வையாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.</p> <h2>மாவட்டம்	பார்வையாளர்</h2><p> 1. வடசென்னை கிழக்கு	       வி.எம்.சி. மனோகரன்</p><p> 2. வடசென்னை மேற்கு	        என்.கே. பகவதி</p><p> 3. மத்தியசென்னை கிழக்கு	 ஈ.பி. ரவி</p><p> 4. மத்தியசென்னை மேற்கு	 ஏ. ரெங்கசாமி</p><p> 5. தென்சென்னை கிழக்கு	        ஆர். கிருஷ்ணன்</p><p> 6. தென்சென்னை மத்தி	         கே. சங்கரபாண்டியன்</p><p> 7. தென்சென்னை மேற்கு	          வீ. கார்த்திகேயன்</p><p> 8. திருவள்ளுர் வடக்கு	                 எஸ்.வி. சரவணன்</p><p> 9. திருவள்ளுர் தெற்கு	                 வி. முருகேசன்</p><p>10. ஆவடி	                                        ஆர்.என். அமிர்தராஜா</p><p>11. செங்கல்பட்டு வடக்கு	    கே. தென்னரசு</p><p>12. செங்கல்பட்டு தெற்கு	     மக்கள் ஜி. ராஜன்</p><p>13. காஞ்சிபுரம்	                             டி.டி.கே. சித்திக்</p><p>14. விழுப்புரம் வடக்கு	             மோகன் குமாரராஜா</p><p>15. விழுப்புரம் மத்தி	              சி.எஸ். ஜெயக்குமார்</p><p>16. கள்ளக்குறிச்சி	                       டி. ரவிச்சந்திரன்</p><p>17. கடலூர் தெற்கு	                       கே.டி. உதயம்</p><p>18. கடலூர் மத்தி	                       என். ரங்கபாஷ்யம்</p><p>19. கடலூர் மேற்கு	                       காஞ்ஜி ஜி.வி. மதியழகன்</p><p>20. திருவண்ணாமலை வடக்கு	 பேங்க் கே. சுப்பிரமணியன்</p><p>21. திருவண்ணாமலை தெற்கு	 எஸ்.எம்.பி. துரைவேலன்</p><p>22. ராணிப்பேட்டை	                  அம்மாபேட்டை எம். பாண்டியன்</p><p>23. திருப்பத்தூர்	                         எம். ராஜரத்தினம்</p><p>24. வேலூர் மத்தி	                         பி.ஏ. சித்திக்</p><p>25. வேலூர் மாநகர்	                         ஏ.பி. பாஸ்கர்</p><p>26. கிருஷ்ணகிரி கிழக்கு	  ஆர்.டி.வி. சீனிவாசகுமார்</p><p>27. கிருஷ்ணகிரி மேற்கு	  ஆர். சுந்தரமூர்த்தி</p><p>28. தருமபுரி	                           எம்.பி. ரஞ்சன்குமார்</p><p>29. சேலம் மாநகர்	                    சிவ ராஜசேகரன்,</p><p>30. சேலம் கிழக்கு	                    எஸ். திலகர்</p><p>31. சேலம் மேற்கு	                     பி. சத்தியமூர்த்தி</p><p>32. நாமக்கல் கிழக்கு	            ஆர். ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ</p><p>33. நாமக்கல் மேற்கு	             என்.வி. செந்தில்நாதன்</p><p>34. ஈரோடு மாநகர்	                     டி. தமிழ்செல்வன்</p><p>35. ஈரோடு வடக்கு	                      எஸ். மகீந்திரன்</p><p>36. ஈரோடு தெற்கு	                      ஆர்.பி. ரமேஷ்</p><p>37. திருப்பூர் மாநகர்	                  டி.வி. துரைராஜ்</p><p>38. திருப்பூர் வடக்கு	                  பி.எஸ். ஜெய்கணேஷ்</p><p>39. திருப்பூர் தெற்கு	                  ஏ. சங்கர்</p><p>40. நீலகிரி	                                         அசோகன் சாலமன்</p><p>41. கோவை மாநகர்	                 எஸ். ராஜ்குமார்,முன்னாள் எம்.எல்.ஏ</p><p>42. கோவை வடக்கு	                         டி.ஆர். லோகநாதன்</p><p>43. கோவை தெற்கு	                         கூடலூர் எம்.பி. முருகேசன்</p><p>44. திண்டுக்கல் மாநகர்                எஸ். தளவாய் பாண்டியன்</p><p>45. திண்டுக்கல் கிழக்கு                 சிறுவை டி. ராமமூர்த்தி</p><p>46. திண்டுக்கல் மேற்கு               ஆர்.வி.ஜே. சுரேஷ்</p><p>47. கரூர்	                                      முகமது குலாம் மொய்தீன்</p><p>48. திருச்சி மாநகர்	                      எம்.எஸ். திரவியம், </p><p>49. திருச்சி வடக்கு	                      இல. பாஸ்கரன்</p><p>50. திருச்சி தெற்கு	                       பி. சிவசுப்பிரமணியன்</p><p>51. பெரம்பலூர்	                               ஜெ. நவீன்குமார்</p><p>52. அரியலூர்	                               எஸ். பிரசாத்</p><p>53. மயிலாடுதுறை	                       வி.எம். பினுலால் சிங்</p><p>54. நாகப்பட்டினம்	                       இராமசுப்புராம்,முன்னாள் எம்.எல்.ஏ</p><p>55. திருவாரூர்	                               எம். தெய்வேந்திரன்</p><p>56. தஞ்சாவூர் மாநகர்                  வி.பி. அண்ணாமலை</p><p>57. தஞ்சாவூர் வடக்கு	                கே. வீரபாண்டியன்</p><p>58. தஞ்சாவூர் தெற்கு	                ஜி.ஆர். சுப்பிரமணியன்</p><p>59. புதுக்கோட்டை வடக்கு           இளையராஜா</p><p>60. புதுக்கோட்டை தெற்கு           என். தனபால்</p><p>61. சிவகங்கை	                               துரை சந்திரசேகர், முன்னாள் எம்.எல்.ஏ</p><p>62. மதுரை மாநகர்	                        ஏ. தமிழ்செல்வன்</p><p>63. மதுரை வடக்கு	                       பி.ஜி. ராஜேந்திரன்</p><p>64. மதுரை தெற்கு	                       என். ஜெயபிரகாஷ்</p><p>65. தேனி	                                      எம்.என். விஜயசுந்தரம்</p> <p>66. விருதுநகர் கிழக்கு                மன்னை மதியழகன்</p><p>67. விருதுநகர் மேற்கு	              பி. செல்வகுமார்</p><p>68. இராமநாதபுரம்	                     ஜி. ராஜேந்திரன்</p><p>69. தூத்துக்குடி மாநகர்              சி. பஞ்சாட்சரம்</p><p>70. தூத்துக்குடி வடக்கு               பூவை ஜேம்ஸ்</p><p>71. தூத்துக்குடி தெற்கு               எம்.ஏ. முத்தழகன்</p><p>72. திருநெல்வேலி மாநகர்        ஆர். கலைச்செல்வன்</p><p>73. திருநெல்வேலி கிழக்கு         பி. டீக்காராமன்</p><p>74. தென்காசி	                              எஸ். பிரபு</p><p>75. கன்னியாகுமரி கிழக்கு       எஸ்.கே. அர்த்தனாரி</p><p>76. கன்னியாகுமரி மேற்கு         எம். வசந்தராஜ்</p><p>77. நாகர்கோவில் மாநகர்           டி. திருச்செல்வம்</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திருவொற்றியூரில் அரசுப்பள்ளி மாணவன் அடித்து படுகொலை! - மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-school-student-beaten-to-death-in-thiruvottiyur-marxist-party-condemns-the-incident</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-school-student-beaten-to-death-in-thiruvottiyur-marxist-party-condemns-the-incident#comments</comments><guid isPermaLink="false">ee22423f-9e99-4936-ab3d-c6cbcb937f05</guid><pubDate>Sat, 15 Aug 2026 12:51:39 +0000</pubDate><atom:updated>2026-08-15T12:51:39.538Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவொற்றியூர்,பெ.சண்முகம்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி,Thiruvottiyur,Communist Party of India (Marxist),p shanmugam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/awi542zg/shanmugam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/awi542zg/shanmugam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>திருவொற்றியூரில் அரசுப்பள்ளி மாணவன் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>மாணவன் படுகொலை</h2><p>திருவொற்றியூரில் அரசுப்பள்ளியில் போதைப் பொருள் உட்கொண்டதை தட்டிக்கேட்ட மாணவர்களில் தனுஷ் (வயது 17) என்ற +2 மாணவனை அதே பள்ளியைச் சார்ந்த மாணவர்கள் கும்பலாக சேர்ந்துகொண்டு கொடூரமாக தாக்கியதில் மாணவன் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. இந்த கொடூரமான படுகொலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.</p><p>படுகொலை செய்யப்பட்டுள்ள மாணவரின் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.</p><h2>ஆசிரியரிடம் புகார்</h2><p>திருவொற்றியூர் வசந்தா நகர் 1வது தெருவில் வசிக்கும் பட்டியலின வகுப்பைச் சார்ந்த மாணவன் தனுஷ் அப்பகுதியில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளியில் +2 படித்து வந்தார். வழக்கம் போல ஆகஸ்ட் 12 அன்று பள்ளிக்குச் சென்ற போது, ஆசிரியர் பள்ளியில் மேல்மாடியில் உள்ள அறையிலிருந்து நோட் புத்தகம் எடுத்து வரச் சொல்லியுள்ளார். மாணவன் தனுஷ் மற்றும் அவருடன் மற்றொரு மாணவனும் மேல்மாடிக்குச் சென்றுள்ளனர். அங்கு கஞ்சா போதையில் இருந்த சில மாணவர்கள் புகையை மாணவர்கள் மீது ஊதியுள்ளனர். இதை தனுசுடன் சென்ற மாணவர் தட்டிக் கேட்டுள்ளார். இருவரும் ஆசிரியரிடமும் புகார் தெரிவித்துள்ளனர். ஆசிரியர்களும் சம்பந்தப்பட்ட மாணவர்களை கண்டித்துள்ளனர்.</p><p>இதை மனதில் வைத்துக் கொண்டு பள்ளியில் போதைப்பொருளை உட்கொண்ட <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மாணவர்கள் </a>மற்றும் சிலர் கும்பலாக ஒன்றுசேர்ந்து ஆகஸ்ட் 14, 2026 அன்று மாணவன் தனுஷை கடுமையாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே தனுஷ் உயிரிழந்துள்ளார். இதுவரை 12 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் மூன்று பேர் மட்டுமே 18 வயதுடையவர்கள், மற்றவர்கள் 17 வயதுடையவர்கள்.</p><h2>கல்லூரி மாணவன் படுகொலை</h2><p>சமீபத்தில், கோவை, தனியார் கல்லூரியில் கஞ்சா மற்றும் போதைப் பொருள் புழக்கத்தின் காரணமாக கல்லூரி மாணவன் கும்பல் தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் இன்னும் மக்கள் மனதிலிருந்து நீங்காத நிலையில், தற்போது திருவொற்றியூரில் பள்ளி மாணவர் போதைப் பொருளினால் கும்பல் படுகொலை செய்யப்பட்டுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இப்படுகொலை போதைப் பொருளினால் ஏற்பட்டுள்ள கொலை என வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென்று கோரி பெற்றோர்கள் தங்களது மகனின் உடலை வாங்க மறுத்து போராடி வருகின்றனர்.</p><h2>அனைவரையும் கைது செய்க</h2><p>எனவே, இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டுமெனவும், மகனை பறி கொடுத்துவிட்டு தவிக்கும் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று உரிய முறையில் வழக்கு பதிவு செய்ய வேண்டுமெனவும், மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள், விடுதிகள் உள்ளிட்டு சட்டவிரோத போதைப் பொருள் புழக்கத்தை அறவே ஒழிக்க வேண்டுமெனவும், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடும் சமூக விரோதிகளையும் அதற்கு உடந்தையாக உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எடப்பாடி தவெக வேட்பாளர்: பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/edappadi-tvk-candidate-joins-aiadmk-in-palaniswamis-presence</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/edappadi-tvk-candidate-joins-aiadmk-in-palaniswamis-presence#comments</comments><guid isPermaLink="false">8903f9fd-d2de-4e08-a595-3fc98048396c</guid><pubDate>Sat, 15 Aug 2026 12:50:20 +0000</pubDate><atom:updated>2026-08-15T12:50:20.986Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அதிமுக,AIADMK,எடப்பாடி,Edappadi K Palaniswami,இணைந்தார்,joins,Edappadi,எடப்பாடி கே பழனிசாமி,தவெக வேட்பாளர்,TVK Candidate</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/bq360c5h/tvksalem.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ எடப்பாடி தவெக வேட்பாளர்]]></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி தவெக வேட்பாளர் எம். அருண்குமார், எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/bq360c5h/tvksalem.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>கடந்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, பின்னர் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட அருண்குமார், இன்று அதிமுக பொதுச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">எடப்பாடி பழனிசாமி </a>முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். </p> <h2>பரபரப்பு பின்னணி</h2><p>கடந்த 2026 சட்டமன்ற தேர்தலின் போது<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF"> எடப்பாடி தொகுதியில்</a> தவெக சார்பில் களமிறக்கப்பட்டவர் அருண்குமார். வேட்புமனு பரிசீலனையின் போது, இவரது மனு மற்றும் இவரது மனைவியின் மாற்று வேட்புமனு ஆகிய இரண்டுமே மனுக்களும் போதிய ஆவணங்கள் மற்றும் முறைப்படி பூர்த்தி செய்யப்படாத காரணங்களால் நிராகரிக்கப்பட்டன. மனு நிராகரிக்கப்பட்ட சமயத்தில் அருண்குமார் திடீரென தலைமறைவானது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியது.</p><h2>அதிமுகவில் இணைந்தார்</h2><p>தேர்தல் முடிவடைந்து சில மாதங்கள் ஆகியுள்ள நிலையில், இன்று எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த அருண்குமார், தனக்கு அதிமுகவிலேயே தொடர விருப்பம் தெரிவித்து அக்கட்சியில் இணைந்தார். பழைய அதிமுக நிர்வாகியான அருண்குமார், மீண்டும் தனது 'தாய் கழகத்திற்கே' திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>தவெக குற்றச்சாட்டு</h2><p>அருண்குமாரின் இந்த திடீர் கட்சி மாற்றத்தை தொடர்ந்து தவெக தரப்பில் கடும் அதிருப்தி கிளம்பியுள்ளது. தேர்தலின் போதே திட்டமிட்டு, சூழ்ச்சி செய்து தான் அருண்குமார் தனது வேட்புமனுவை நிராகரிக்க செய்தார் என்றும், தற்போது அது அம்பலமாகிவிட்டது என்றும் தவெகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த சம்பவம் சேலம் மாவட்ட அரசியலில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை பள்ளி மாணவர் கொலை வழக்கில் 6 பேரை கைது செய்த போலீசார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-arrest-six-people-in-the-chennai-school-student-murder-case</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-arrest-six-people-in-the-chennai-school-student-murder-case#comments</comments><guid isPermaLink="false">73d92b3f-269a-4786-a88e-348e9c2b1b5c</guid><pubDate>Sat, 15 Aug 2026 12:11:38 +0000</pubDate><atom:updated>2026-08-15T12:11:38.712Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Crime News,Chennai,சென்னை,தமிழகம்,கிரைம் செய்திகள்,student murder,மாணவர் கொலை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/d3h34ahe/danju.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/d3h34ahe/danju.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னையில் பிளஸ்-2 மாணவர் கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். </p><h2>பிளஸ்-2 மாணவர்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/chennai">சென்னை</a> திருவொற்றியூர் தாங்கல் வசந்த் நகர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷின் மகன் தனுஷ் (வயது 16). இவர் விம்கோ நகரில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். </p><p>இந்நிலையில், நேற்று மாலை சுமார் 4.30 மணியளவில் பள்ளி அருகே உள்ள அஜாக்ஸ் பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள காலி மைதானத்தில் தனுஷ் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்தார்.</p><p>இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தனுஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.</p><h2>தகராறு</h2><p>தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் பாஸ்கரன், திருவொற்றியூர் உதவி கமிஷனர் பால்ராஜ், இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் உள்ளிட்ட போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், 2 நாட்களுக்கு முன்பு அதே பள்ளியில் பிளஸ்-2 மாணவர் ஒருவருக்கும், பிளஸ்-1 மாணவர் ஒருவருக்கும் யார் சீனியர் என்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.</p><h2>மயங்கி விழுந்து உயிரிழப்பு</h2><p>இந்த நிலையில் அந்த பள்ளியின் பிளஸ்-1 மாணவர், அதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோருடன் சேர்ந்து தனுஷை அஜாக்ஸ் பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள காலி மைதானத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. </p><p>இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த தனுஷ், சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த பிளஸ்-1 மாணவர் உள்பட 10-க்கும் மேற்பட்டோரை தேடி வந்தனர். </p> <h2>6 பேர் கைது</h2><p>இந்நிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக 12 பேரிடம் விசாரணை நடத்தி வந்த போலீசார் 6 பேரை கைது செய்துள்ளதாகவும், அவர்களை பொன்னேரி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. </p><p>இதனிடையே மாணவர் தனுஷ் உடலை பெற இரண்டாவது நாளாக அவரது பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>கனிமங்கள் திருத்த மசோதா அமலுக்கு வந்தால், தமிழகத்தின் வருவாய் ஆதாரம் பாதிக்கப்படும் - துரை வைகோ</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-minerals-amendment-bill-comes-into-force-tamil-nadus-revenue-source-will-be-affected-thurai-vaiko</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-minerals-amendment-bill-comes-into-force-tamil-nadus-revenue-source-will-be-affected-thurai-vaiko#comments</comments><guid isPermaLink="false">ed3168af-c6e5-486e-ac55-6d6bdd98ea1f</guid><pubDate>Sat, 15 Aug 2026 11:29:13 +0000</pubDate><atom:updated>2026-08-15T11:29:13.035Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழகம்,Durai Vaiko,துரை வைகோ,Amendment Bill,revenue,வருவாய்,கனிமங்கள்,Natural resources,affect,ஆதாரம்,Effects</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/zgd1w8g9/mariya-wilson.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ துரை வைகோ,நிதிஅமைச்சர்  மரிய வில்சனை]]></media:title><media:description type="html"><![CDATA[ கனிமங்கள் திருத்த மசோதா அமலுக்கு வந்தால், தமிழகத்தின் வருவாய் ஆதாரம் பாதிக்கப்படும் - துரை வைகோ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/zgd1w8g9/mariya-wilson.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கனிமங்கள் திருத்த மசோதா அமலுக்கு வந்தால், தமிழகத்தின் வருவாய் ஆதாரம் பாதிக்கப்படும் என்று மக்களவை எம்.பி.யுமான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B">துரை வைகோ </a>தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- இன்று காலை, தமிழக நிதிஅமைச்சர்  மரிய வில்சனை சந்தித்தேன்.</p><h2>திருத்த மசோதா</h2><p>அப்போது, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE">திருத்த மசோதா</a>, 2026 தொடர்பாக, மாநிலங்களின் அதிகாரங்களையும் நிதி ஆதாரங்களையும் பாதிக்கும் அம்சங்கள் குறித்து அமைச்சரிடம்  விரிவாக எடுத்துரைத்தேன். இம்மசோதா 12.08.2026 அன்று மக்களவையிலும், 13.08.2026 அன்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.</p><h2>நாடாளுமன்ற உறுப்பினர்கள்</h2><p>இம்மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பி விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை மந்திரி கிஷன் ரெட்டியை நேரில் சந்தித்து, நான் உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினோம்.</p> <h2>மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது</h2><p>மேலும், மாநிலங்களின் வரி விதிக்கும் அதிகாரத்தைப் பாதுகாக்கும் வகையில், பிரிவு 9D-ஐ நீக்கும் திருத்த முன்மொழிவையும் நான் தனிப்பட்ட முறையில் மக்களவை சபாநாயகர்  ஓம் பிர்லாவிடம் சமர்ப்பித்திருந்தேன். ஆனால், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை ஏற்காமல், எவ்வித விரிவான விவாதமுமின்றி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இம்மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.</p><h2>கனிம வளங்கள் மீதான உரிமை</h2><p>இம்மசோதாவில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பிரிவு 9D, “கனிம வளங்கள் மீதான உரிமை” மற்றும் “கனிமங்கள் தாங்கிய நிலங்கள்” மீது மாநில அரசுகள் வரி விதிப்பதற்கு கட்டுப்பாடுகளை ஏற்படுத்துகிறது. மாநில அரசுகளால் ஏற்கனவே விதிக்கப்பட்டு, இதுவரை வசூலிக்கப்படாமல் நிலுவையில் உள்ள லட்சக்கணக்கான கோடி ரூபாய் வருவாயையும் இனி வசூலிக்க முடியாத நிலையை இந்தத் திருத்தம் ஏற்படுத்துகிறது. இதனால் மாநிலங்களின் முக்கியமான நிதி ஆதாரங்கள் பாதிக்கப்பட்டு, அவற்றின் நிதிசார் தன்னாட்சிக்கு கடுமையான சவால் ஏற்படும்.</p><p> சுப்ரீம் கோர்ட் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு 2024-ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில், கனிமங்கள் தாங்கிய நிலங்கள் மீது வரி விதிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு இருப்பதை தெளிவுபடுத்தியுள்ளது.</p><h2> ரூ.4,395.68 கோடி வருவாய்</h2><p>இந்த தீர்ப்பின் அடிப்படையில்தான் தமிழக அரசு தமிழ்நாடு கனிம வளம் கொண்ட நிலங்கள் மீதான வரி சட்டம், 2024 மற்றும் தமிழ்நாடு கனிம வளம் கொண்ட நில வரி விதிகள், 2025 ஆகியவற்றை இயற்றியது. 04.04.2025 முதல் இவ்வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. 2025–26ஆம் ஆண்டில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை மூலம் கிடைத்த ரூ.4,395.68 கோடி வருவாயில், ரூ.2,265 கோடி கனிம வளம் கொண்ட நிலத்திற்கான வரி மூலம் கிடைத்துள்ளது. இந்த சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தால், தமிழகத்தின் இந்த முக்கியமான வருவாய் ஆதாரம் பாதிக்கப்படும்.</p> <h2>கூட்டாட்சி தத்துவம்</h2><p>எனவே, இது வெறும் வருவாய் இழப்பு பிரச்சினை அல்ல; மாநிலங்களின் அதிகாரம், நிதிசார் தன்னாட்சி மற்றும் இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை பாதிக்கும் பிரச்சினையாகும். இந்த விவரங்களை நிதிஅமைச்சர்  மரிய வில்சன் அவர்களிடம் எடுத்துரைத்து, தமிழகத்தின் நிதி உரிமைகளை பாதுகாக்க மத்திய அரசிடம் வலுவாக வலியுறுத்த வேண்டும் என்றும், தேவையான சட்டரீதியான முன்னெடுப்புகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன்.</p><p> நடவடிக்கை</p><p>எனது கோரிக்கையை கவனத்துடன் கேட்டறிந்த நிதிஅமைச்சர், தமிழக அரசின் சார்பில் எனக்கு நன்றி தெரிவித்ததுடன், இந்த விவகாரத்தில் தமிழக முதல்-அமைச்சர் அன்பு சகோதரர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று உறுதியளித்தார்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சேலம் விமான நிலையத்தின் சேவைகள் குறித்து விமான போக்குவரத்துத்துறை மந்திரிக்கு அன்புமணி கடிதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-writes-to-the-civil-aviation-minister-regarding-salem-airport-services</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-writes-to-the-civil-aviation-minister-regarding-salem-airport-services#comments</comments><guid isPermaLink="false">e6cd3118-4334-45f5-8e93-b6b82ef7bdf1</guid><pubDate>Sat, 15 Aug 2026 11:03:13 +0000</pubDate><atom:updated>2026-08-15T11:03:13.273Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,அன்புமணி,Anbumani,Salem,சேலம்,மத்திய மந்திரி,Ministry of Civil Aviation,விமான போக்குவரத்து துறை,Civil Aviation,Civil Aviation Minister,சேலம் விமான நிலையம்,Salem Airport</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/bte8snt4/anbumani.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/bte8snt4/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சேலம்  விமான நிலையத்தில்  இருந்து  கொச்சி, ஐதராபாத், பெங்களூர் ஆகிய நகரங்களுக்கான விமான சேவை  தொடர்வதை உறுதி செய்வதற்காக, அந்த விமான நிலையத்திற்கான  உடான் 5.2 திட்டத்தை மேலும் 7 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.</p><h2>அன்புமணி கடிதம்</h2><p>இது தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்துத்துறை மந்திரி கே. ராம் மோகன் நாயுடுவுக்கு  மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம் வருமாறு:</p><p>விமானப் போக்குவரத்து மந்திரி கே. ராம்மோகன் நாயுடுவுக்கு,</p><p>வணக்கம்!</p><p>பொருள்: சேலத்தில் இருந்து கொச்சி, ஹைதராபாத், பெங்களூர் ஆகிய நகரங்களுக்கான விமான சேவை தொடர்வதை உறுதி செய்யும் வகையில் உடான் 5.2 திட்டத்தை மேலும் 7 ஆண்டுகளுக்கு நீட்டிக்க கோரிக்கை விடுப்பது தொடர்பாக</p><p>தமிழ்நாட்டின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றான சேலத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு தொடர்ந்து விமானங்கள் இயக்கப்படுவதை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன்.</p><h2>சில மாதங்களில் சேவைகள் நிறுத்தம்</h2><p>சேலம் கமலாபுரத்தில் உள்ள சேலம் விமான நிலையம் 33 ஆண்டுகளுக்கு முன் 1993-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது என்றாலும், அங்கிருந்து வணிகரீதியிலான விமானப்போக்குவரத்து சேவை அவ்வளவு எளிதில் சாத்தியமாகிவிடவில்லை. சேலத்திலிருந்து சென்னைக்கு விமான சேவை அதே ஆண்டில் தொடங்கப்பட்டாலும் கூட அது நீடிக்கவில்லை. அதன்பிறகும் பல முறை விமான சேவை தொடங்கப்பட்ட போதிலும், அவை போதிய ஆதரவின்றி அடுத்த சில மாதங்களில் நிறுத்தப்படுவதே வாடிக்கையானது.</p><p>எளிய மக்களும் விமானத்தில் பறப்பதை சாத்தியமாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட உடான் ((UDAN-Ude Desh ka Aam Naagrik) ) திட்டத்தின் கீழ் 2018-ஆம் ஆண்டில் சேலம் - சென்னை இடையே விமான சேவை தொடங்கப்பட்டாலும் 2021-ஆம் ஆண்டில் மீண்டும் நிறுத்தப்பட்டது.</p><p>அதன்பின்னர் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்த உடான் 5.2 திட்டத்தின் படி 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி முதல் சேலம் விமான நிலையத்திலிருந்து பெங்களூர், கொச்சி, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இவை தவிர உடான் திட்டத்தில் இல்லாமல் சென்னைக்கு விமான சேவை நடைபெற்று வருகிறது.</p><h2>இதுவே முதல் முறை</h2><p>சேலத்திலிருந்து பெங்களூருக்கு வாரத்தில் 11 முறையும், சென்னை மற்றும் கொச்சிக்கு வாரத்தில் 7 முறையும், ஐதராபாத்துக்கு வாரத்தில் 4 முறையும் தனியார் விமானங்கள் இயக்கப்படுகின்றன. சேலம் விமான நிலைய வரலாற்றில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் பல நகரங்களுக்கு விமான போக்குவரத்து நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். இதற்கு காரணம் உடான் 5.2 திட்டத்தின் கீழ் விமான நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நிதி உள்ளிட்ட சலுகைகள் தான்.</p><p>சேலம் போன்ற நகரங்களில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்படும் போது தொடக்க நிலையிலேயே அதற்கு பெரிய அளவில் ஆதரவு இருக்காது. காலப்போக்கில் தான் அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் பயணிக்கத் தொடங்குவார்கள். அதுவரை தனியார் விமான நிறுவனங்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளை ஈடு செய்வதற்காக நிதி உதவி உள்ளிட்ட சலுகைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. அதனால் தான் குறைந்த எண்ணிக்கையில் பயணிகள் பயணம் செய்தாலும் தனியார் விமான நிறுவனங்கள் தொடர்ந்து விமானங்களை இயக்கி வருகின்றன.</p><h2>சேவையை நிறுத்த முடிவு</h2><p>உடான் 5.2 திட்டம் வரும் அக்டோபர் 25-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், பெங்களூர், கொச்சி, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கான சேவையை நிறுத்த தனியார் விமான நிறுவனங்கள் முடிவு செய்திருக்கின்றன. அந்த சேவைகள் நிறுத்தப்பட்டால் சேலத்திலிருந்து சென்னைக்கு மட்டுமே விமான சேவை இயக்கப்படும். அது சேலம் விமான நிலையத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும்.</p><p>இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இருந்து விமானங்களை இயக்குவதற்கான உடான் திட்டம் மிகவும் பயனுள்ளதாகும். ஆனால், அந்தத் திட்டத்தின் காலவரையறை தான் அதன் நோக்கம் முழுமையாக நிறைவேற்றப்படுவதை தடுக்கிறது. உடான் திட்டம் 3 ஆண்டுகளுக்கு மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. ஒரு இரண்டாம் நிலை நகரத்திலிருந்து தொடங்கப்படும் விமான சேவை தற்சார்பு நிலையை அடைய 5 முதல் 7 ஆண்டுகள் வரை ஆகலாம். அவ்வாறு இருக்கும் போது 3 ஆண்டுக்கு மட்டுமே உடான் திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்படுவது எந்த வகையிலும் நியாயமல்ல.</p><p>சேலத்திலிருந்து கொச்சி, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன் விமான சேவை தொடங்கப்பட்ட போது ஒவ்வொரு விமானத்திலும் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை, இப்போது 30% முதல் 40% வரை உயர்ந்திருக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் இது 60% முதல் 70% என்ற அளவுக்கு உயரும் போது விமான நிறுவனங்கள் அரசின் நிதி உதவியின்றி விமானங்களை இயக்க முடியும். சேலம் - சென்னை சேவை அப்படித் தான் நடைபெற்று வருகிறது.</p><h2>மேலும் நீட்டிக்க வேண்டும்</h2><p>உடான் 5.2 சேவை நிறுத்தப்படுவதால் சேலம் விமான நிலையம் மட்டுமின்றி நாட்டின் பல மாநிலங்களின் சிறிய விமான நிலையங்களும் பாதிக்கப்படும். கர்நாடகத்தில் கல்புர்கி, சிவமோகா ஆகிய நகரங்களின் விமான நிலையங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த உடான் திட்ட சலுகைகள் அக்டோபர் மாதம் கைவிடப்பட இருப்பதற்கு அம்மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இப்போதுள்ள உடான் 5.2 திட்டத்தை இப்போதுள்ள நிலையிலேயே மேலும் இரு ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும்; அதன்பின் மேலும் 5 ஆண்டுகள் இத்திட்டம் நீட்டிக்கப்பட்டால், அதற்காக ஆகும் செலவில் பாதியை மாநில அரசே ஏற்றுக் கொள்ளும் என்றும் மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளது.</p><p>தமிழ்நாட்டிலும் சேலத்திலிருந்து <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">இயக்கப்படும் </a>விமான சேவைகள் மேலும் தொடர்வதை உறுதி செய்வதற்காக உடான் 5.2 திட்டத்தை 2028-ஆம் ஆண்டு வரை இரு ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும். கர்நாடக அரசு முன்வைத்துள்ள மாதிரியின் அடிப்படையில், 2028-ஆம் ஆண்டுக்கு பிறகு மாநில அரசின் உதவியுடன் உடான் திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பது குறித்தும் ஆராய வேண்டும்; சேலம் நகரிலிருந்து மும்பை, தில்லி உள்ளிட்ட நகரங்களுக்கும் விமான சேவைகளை தொடங்குவதற்கு தனியார் விமான நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.</p><p>மிக்க நன்றி!</p>]]></content:encoded></item><item><title>வலுவான மாற்றத்திற்கு தயாராகும் தி.மு.க.: இளைஞர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி; மு.க.ஸ்டாலின் அதிரடி முடிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/gearing-up-for-a-major-shift-district-secretary-posts-for-the-youth-mk-stalins-bold-decision</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/gearing-up-for-a-major-shift-district-secretary-posts-for-the-youth-mk-stalins-bold-decision#comments</comments><guid isPermaLink="false">c54d3da0-31b7-472b-9f0b-f3e9ee00df7b</guid><pubDate>Sat, 15 Aug 2026 10:33:16 +0000</pubDate><atom:updated>2026-08-15T10:33:16.121Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,M.K.Stalin,தமிழகம்,youths,District Secretary,இளைஞர்கள்,மாவட்ட செயலாளர்கள்,தமிழக அரசியல்,tn politics</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/yuuwb2eg/dmk.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/yuuwb2eg/dmk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தேர்தல் தோல்விக்கு பின்னர் கட்சியில் அதிரடி மாற்றங்களை செய்ய தி.மு.க. தயாராகி வருகிறது. இதுதொடர்பாக வருகிற 22-ந் தேதி நடைபெறும் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக தெரிகிறது.</p><h2>தொண்டர்களிடம் கருத்துகள்</h2><p>சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தோல்வி அடைந்தது. இதையடுத்து தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்தும், கட்சியின் நிர்வாக கட்டமைப்புகளை மாற்றுவது குறித்தும், மாவட்டம் வாரியாக கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் குழு அமைத்து கட்சியில் நிர்வாகிகள், தொண்டர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.</p><p>அவைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு, அறிக்கையாக தயாரித்து, <a href="https://www.dailythanthi.com/topic/mkstalin">கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினிடம்</a> வழங்கப்பட்டது. அதில் பல்வேறு பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டு இருந்தன. அதன் அடிப்படையில் கட்சியில் நிர்வாக கட்டமைப்புகளை மறுசீரமைப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டு வருகிறது.</p><h2>புதிய மாவட்ட செயலாளர்கள்</h2><p>தி.மு.க.வில் கட்சியில் அமைப்பு ரீதியாக 78 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். இதில் சரியாக செயல்படாத சிலரது பதவி பறிக்கப்படலாம் என பரபரப்பாக பேசப்படுகிறது. </p><p>தற்போது இருக்கும் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, புதிய மாவட்ட செயலாளர்களை நியமிப்பது, மாற்று கட்சியில் இருந்து தி.மு.க.வில் இணைந்தவர்களுக்கு பதவி வழங்குவது தொடர்பாக வருகிற 22-ந்தேதி நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு பின் தி.மு.க.வில் அதிரடி மாற்றங்களும், அதிரடி நடவடிக்கையும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>புது முகங்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி</h2><p>இதனிடையே கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்படி, 70 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இருந்து மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஒரே பதவியில் மூன்று முறைக்கு மேல் இருப்பவர்களும் மாற்றப்படுவர் என்றும், ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளாக 60 வயது வரை இருக்கலாம் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதனால், முன்னாள் அமைச்சர்களின் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. </p><p>தற்போது, எம்.எல்.ஏ,க்களாக உள்ள சீனியர் மாவட்ட செயலாளர்களுக்கு தலைமை நிர்வாகத்தில் முக்கிய பதவிகள் வழங்கப்பட உள்ளன என்றும், துணை பொதுச்செயலாளர்கள், வழிகாட்டுதல் குழு உறுப்பினர்கள், அரசியல் விவகாரக்குழு உறுப்பினர்கள் என நியமிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><p>மேலும் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் வாயிலாக 40க்கும் மேற்பட்ட புது முகங்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும் என்றும், இது குறித்து வரும் 22ம் தேதி நடக்கும் தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><h2>செயற்குழு கூட்டம்</h2><p>இதனிடையே தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் வருகிற 22-ந்தேதி காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங் கில் நடைபெற உள்ளது. கூட்டத்துக்கு <a href="https://www.dailythanthi.com/topic/mkstalin">தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்</a> தலைமை தாங்குகிறார். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. </p><p>தேர்தல் தோல்விக்கு பின்னர் நடைபெறக்கூடிய முதல் செயற்குழு கூட்டம் இது என்பதாலும், புதிய மாற்றங்கள் ஏற்படலாம் என்பதாலும் கட்சியினர் மத்தியில் இந்த செயற்குழு கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மக்களுக்கு சேவை செய்வதே உண்மையான சுதந்திர தினக் கடமை:  கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F#comments</comments><guid isPermaLink="false">9872d180-105e-4eb5-aa6f-769a594b8efd</guid><pubDate>Sat, 15 Aug 2026 10:30:21 +0000</pubDate><atom:updated>2026-08-15T10:30:21.737Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,Independence Day,சுதந்திர தின விழா,கவுண்டம்பாளையம்,கனிமொழி சந்தோஷ்,Kanimozhi Santosh</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/m25nii63/mla33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/m25nii63/mla33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p>நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, தியாகிகளுக்கு மரியாதை செலுத்தி, தொகுதி மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D">கனிமொழி சந்தோஷ்</a> தெரிவித்தார்.</p><p>அப்போது அவர் பேசியதாவது:</p><p>“பல கோடி தியாகிகளின் தியாகத்தாலும், அர்ப்பணிப்பாலும் நாம் இன்று சுதந்திரக் காற்றை சுவாசித்து வருகிறோம். அண்ணல் காந்தியடிகளின் அகிம்சை, நேதாஜியின் வீரம், பகத் சிங்கின் துணிச்சல் உள்ளிட்ட எண்ணற்ற தலைவர்களின் போராட்டங்களை இந்நாளில் நெஞ்சார நினைவு கூர வேண்டும்.</p><p>தமிழக மண்ணில் இருந்து நாட்டின் விடுதலைக்காகப் போராடிய மாவீரன் பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதியார், திருப்பூர் குமரன் உள்ளிட்ட விடுதலைப் போராட்டத் தியாகிகளையும் நாம் போற்றி வணங்க வேண்டும்.</p><p>தியாகிகள் நமக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்துள்ளனர். அந்தச் சுதந்திரத்தைப் பாதுகாத்து, நாட்டையும் சமூகத்தையும் முன்னேற்ற வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது.</p><p>கவுண்டம்பாளையம் தொகுதி மக்களின் நம்பிக்கைக்குரிய பிரதிநிதியாக, சாதி, மதம், கட்சி என எந்தப் பாகுபாடுமின்றி, ஒவ்வொரு குடிமகனின் குறைகளையும் கேட்டு, அவர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண்பதே எனது முக்கியக் கடமை.</p><p>நமது அலுவலகத்தை நாடி தினந்தோறும் ஏராளமான மக்கள் தங்களது கோரிக்கைகளுடன் வருகின்றனர். குறிப்பாக ஏழை, எளிய மக்கள், உழைப்பாளர்கள், விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் குரலாக தொடர்ந்து செயல்படுவோம்.</p><p>அரசின் நலத்திட்டங்கள்  அனைவருக்கும் நேர்மையாகச் சென்றடைவதை உறுதி செய்வதும், மக்களின் அடிப்படைத் தேவைகளுக்குத் தீர்வு காண்பதும் நாம் நாட்டிற்கு ஆற்றும் உண்மையான சேவையாகும்.</p><p>‘மக்களே நமது முதலாளி; நாம் அவர்களின் பணியாளர்கள்’ என்ற எண்ணத்துடன், கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் மக்கள் சேவையை தங்களது முதன்மை லட்சியமாகக் கொண்டு செயல்பட வேண்டும்.</p><p>இந்த தேசியக் கொடியின் கீழ், கவுண்டம்பாளையம் தொகுதியை தமிழகத்திலேயே ஒரு முன்மாதிரித் தொகுதியாக மாற்றுவதற்கு ஒன்றிணைந்து உழைப்போம் என உறுதியேற்போம்.</p><p>தமிழ் உணர்வோடும், தேசப்பற்றோடும், மக்கள் நலனையே முன்னிறுத்தி தொடர்ந்து பயணிப்போம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தமது அநாகரிகமான பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் மன்னிப்பு கேட்க வேண்டும் - அமைச்சர் வன்னி அரசு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendran-must-apologize-for-his-uncivilized-remarks-minister-vanni-arasu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendran-must-apologize-for-his-uncivilized-remarks-minister-vanni-arasu#comments</comments><guid isPermaLink="false">f84e6f82-0955-40c4-984a-dadf75c960ee</guid><pubDate>Sat, 15 Aug 2026 09:58:17 +0000</pubDate><atom:updated>2026-08-15T09:58:17.383Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,பாஜக,BJP,Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,விசிக,VCK,முதல்-அமைச்சர் விஜய்,minister vanni arasu,அமைச்சர் வன்னி அரசு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/v47kzxq8/var.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/v47kzxq8/var.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> குறித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச்செயலாளரும், அமைச்சருமான வன்னி அரசு கண்டனம் தெரிவித்துள்ளார். </p><h2>அநாகரிகமான பேச்சு</h2><p>இது தொடர்பாக அவர் தண்நு எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- </p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் குறித்தும், அவரது குடும்பம் குறித்தும் மிக மோசமான அருவருக்கத்தக்க வகையில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களின் பேசிய அநாகரிகமான பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.</p><h2>கூட்டு பாலியல் வன்கொடுமை</h2><p>பாஜக சனாதனிகளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?</p><p>காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி குறித்து இந்திய தலைமை அமைச்சர் மோடி பேசாத அவதூறா?</p><p>காஷ்மீரில் 8 வயது ஆசிபாவை கூட்டு பாலியல்  வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்தி, 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல்  வன்கொடுமை செய்த குற்றவாளிகளை விடுதலை செய்து, வரவேற்பு அளித்தவர்கள் தான் பா.ஜ.க.வினர்.</p><h2>நடிகை ஒருவர்</h2><p>பெண்களுக்கு எதிரான வெறுப்பும், அவதூறும் தான் அவர்கள் பேசும் அரசியலின் அடிப்படை. இதற்கு முன்னரும் நடிகை ஒருவர் குறித்தும் நயினார் அவர்களின் பேச்சு தரம் தாழ்ந்து அமைந்திருந்தது.</p><p>நயினார் நாகேந்திரன் அவர்கள் தமது அநாகரிகமான பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை மக்களின் குடிநீருக்கு ஆபத்தா? - வேல்முருகன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/velmurugan-questions-safety-of-chennai-drinking-water</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/velmurugan-questions-safety-of-chennai-drinking-water#comments</comments><guid isPermaLink="false">2b5fd9af-f277-49ec-ba2c-367a56086f28</guid><pubDate>Sat, 15 Aug 2026 09:58:00 +0000</pubDate><atom:updated>2026-08-15T09:58:00.599Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,குடிநீர்,drinking water,Velmurugan,வேல்முருகன்,கேள்வி,பொதுமக்களின்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/keqqz3pb/velmurugan.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வேல்முருகன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை மக்களின் குடிநீருக்கு ஆபத்தா? - வேல்முருகன் கேள்வி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/keqqz3pb/velmurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மக்களின் குடிநீருக்கு ஆபத்தா? புழல் ஏரியில் கழிவுநீரா? ஏன்? என்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D">வேல்முருகன்</a> கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>புழல் ஏரி</h2><p>சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF">புழல் ஏரி</a> இன்று நேற்றல்ல.பல ஆண்டுகளாகவே மாசுபாட்டின் ஆபத்தை சுமந்து கொண்டிருக்கிறது. அதிகாரிகளின் ஆய்வுகள், நீதிமன்ற நடவடிக்கைகள், சுற்றுச்சூழல் எச்சரிக்கைகள் என அனைத்தும் இருந்தும், அதன் அடிப்படை பிரச்சினைக்கு இன்னும் நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை என்பது வேதனைக்குரியது.</p><h2>பசுமை தீர்ப்பாயம்</h2><p>2017-ஆம் ஆண்டிலேயே புழல் ஏரியில் மருத்துவ கழிவுகள் மற்றும் பிற கழிவுகள் கொட்டப்படுவதாக வெளியான செய்தியை தொடர்ந்து தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை எடுத்தது. விசாரணையில் ஏரியில் குப்பைகள் கொட்டப்பட்டிருந்தது பதிவானதுடன், ஒரு நிறுவனத்துக்கு ரூ.17.71 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுச்சூழல் இழப்பீடும் விதிக்கப்பட்டது.</p><h2>ஆய்வு அறிக்கை </h2><p>2021-ஆம் ஆண்டு நீதித்துறை ஆவணத்தில் இடம்பெற்ற தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வு அறிக்கை இன்னும் அதிர்ச்சியூட்டுகிறது. புழல் ஏரியில் சேகரிக்கப்பட்ட நீர் மாதிரியில் 100 மில்லிலிட்டருக்கு 93 என்ற அளவில் மலக்கழிவு கோலைபார்ம் பதிவாகியிருந்தது. அப்போது அருகிலுள்ள சடையங்குப்பம் பகுதியில் நிலவிய திறந்தவெளி மலம் கழிக்கும் நடைமுறையால் இந்த மாசுபாடு ஏற்பட்டிருக்கலாம் என அறிக்கை சுட்டிக்காட்டியது.</p><h2>சுத்திகரிக்கப்படாத கழிவுநீர்</h2><p>இப்போது 2026 பிப்ரவரியிலும் அதே புழல் ஏரியில் மீண்டும் மலக்கழிவு கோலைபார்ம் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், வெங்கடேஷ்வரா நகர், புதூர், பானு நகர், கள்ளிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மழைநீர் வடிகால்கள் வழியாக ஏரியை சென்றடைவதாகவும், சக்தி நகர் பகுதியில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நேரடியாக ஏரிக்குள் விடப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.</p> <h2> எங்கே போயின?</h2><p>2017-ல் புகார். 2021-ல் மலக்கழிவு மாசுபாடு பதிவாகிறது. 2026-ல் மீண்டும் அதே எச்சரிக்கை. அப்படியானால் கடந்த ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எங்கே போயின? இது ஒரு சாதாரண ஏரி பாதுகாப்பு பிரச்சினையல்ல. சென்னை மக்களின் குடிநீரின் பாதுகாப்பு, பொது சுகாதாரம், வருங்கால தலைமுறையின் வாழ்வுரிமை ஆகியவற்றை தொடும் பிரச்சினை ஆகும்.</p> <h2>நோய்கள் பரவும் அபாயம்</h2><p>மலக்கழிவால் மாசுபட்ட நீர் மூலம் வயிற்றுப்போக்கு, காலரா, சீதபேதி, வயிற்றுக்குடல் தொற்றுகள், டைபாய்டு, கல்லீரல் அழற்சி ‘ஏ’ உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. குறிப்பாக குழந்தைகள் கடுமையான வயிற்றுப்போக்கால் நீரிழப்பு உள்ளிட்ட ஆபத்துகளுக்கு உள்ளாகக்கூடும்.</p> <h2>எச்சரிக்கை</h2><p>இன்று ஏரியில் கண்டறியப்பட்ட மாசுபாடு, நாளை மக்களின் உடல்நல பேராபத்தாக மாறிவிடக்கூடாது. ஏரி நீர் சுத்திகரிக்கப்பட்ட பிறகே குடிநீராக வழங்கப்படுகிறது என்பதால், தற்போதே சென்னை மக்களின் குடிநீரில் நோய் பரவுகிறது என்று கூறவில்லை. ஆனால், குடிநீரின் மூல ஆதாரத்திலேயே மலக்கழிவு மாசுபாடு தொடர்ந்து கண்டறியப்படுவது மிகத் தீவிரமான எச்சரிக்கை ஆகும்.</p> <h2>சென்னை மக்கள்</h2><p>மேலும், ஒரு புறம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கழிவுநீர் ஏரியைச் சென்றடைவதாக தெரிவிக்கிறது. மறுபுறம் சென்னை குடிநீர் வாரியம் அதனை மறுக்கிறது. இந்த முரண்பாட்டில் சிக்கி தவிப்பது அதிகாரிகள் அல்ல. சென்னை மக்கள். எனவே, புழல் ஏரிக்குள் கழிவுநீர் செல்லும் ஒவ்வொரு வழித்தடத்தையும் உடனடியாக கண்டறிந்து நிரந்தரமாக தடுக்க வேண்டும்.</p><h2>வெளியிட வேண்டும்</h2><p>பாதாளச் சாக்கடை வசதி இல்லாத அனைத்து குடியிருப்புகளுக்கும் உடனடியாக இணைப்பு வழங்க வேண்டும். புழல் ஏரியின் நீரை தொடர்ந்து அறிவியல் முறையில் பரிசோதித்து, அதன் முழுமையான முடிவுகளை மக்களுக்கு வெளிப்படையாக வெளியிட வேண்டும்.</p><h2>வெள்ளை அறிக்கை</h2><p>2017 முதல் இதுவரை ஏரியை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?, செலவிடப்பட்ட நிதி எவ்வளவு?, நிறைவேற்றப்படாத பணிகள் எவை? என்பதைத் தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள அனைத்து சட்டவிரோதக் கழிவுநீர் வெளியேற்றங்களையும் கண்டறிந்து உடனடியாகத் தடுக்க வேண்டும். புழல் ஏரியை சுற்றி நிரந்தர கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்தி, கழிவுநீர் கலக்கும் இடங்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.</p><h2>இதற்கு யார் பொறுப்பு?</h2><p>பல ஆண்டுகளாக எச்சரிக்கைகள் எழுந்தும் புழல் ஏரி இன்னும் பாதுகாப்பாகவில்லை என்றால், இதற்கு யார் பொறுப்பு? சென்னையின் உயிர்நாடியான புழல் ஏரியை கழிவுநீர் கால்வாயாக மாற்ற அனுமதிக்க முடியாது.</p><p>மக்களுக்கு நோய் வந்த பிறகு தீர்வு காண்பது சரியல்ல. வருமுன் காப்பதே சரியாகும். எனவே, புழல் ஏரியை பாதுகாக்க தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நயினார் நாகேந்திரன் சர்ச்சை பேச்சு: எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது - அண்ணாமலை கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendrans-controversial-remarks-unacceptable-in-any-way-annamalai-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendrans-controversial-remarks-unacceptable-in-any-way-annamalai-condemns#comments</comments><guid isPermaLink="false">92df01f8-7edc-4cb8-9203-fb2a96f6c882</guid><pubDate>Sat, 15 Aug 2026 09:40:16 +0000</pubDate><atom:updated>2026-08-15T09:40:16.834Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Annamalai,அண்ணாமலை,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/uur4myzi/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/uur4myzi/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசியல் நாகரிகத்தின் எல்லைகளை மீறி, தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் தாய் குறித்து நயினார் நாகேந்திரன் கருத்து கூறியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். </p><h2>சர்ச்சை பேச்சு</h2><p>முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து அநாகரீகமாக பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. 'அப்பாவை காணோம்' என்ற முதல்-அமைச்சர் பேச்சுக்கு எதிர்வினையாக அவர் அநாகரீகமாக பேசியதாக கண்டனங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் முதல்-அமைச்சர் விஜய் குறித்த நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு, வி த லீடர்ஸ் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>கேள்வி கேட்கலாம். ஆனால்..</h2><p>தமிழ்நாட்டின் அரசியல் களத்தை அநாகரிகமாக்கும் பேச்சுகள் தொடர்ந்து அரங்கேறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. திமுகவின் உதயநிதி ஸ்டாலினைத் தொடர்ந்து, தற்போது தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும், அரசியல் நாகரிகத்தின் எல்லைகளை மீறி, தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் தாய் குறித்துக் கருத்து கூறியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.</p><p>அரசியலில் இருப்பவர்கள் தங்கள் வார்த்தைகளுக்கும், செயல்களுக்கும் பொறுப்புடன் இருக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கொள்கைகளை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விமர்சிக்கலாம்</a>. ஆட்சியின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்கலாம். ஆனால், ஒருவரின் குடும்பத்தினரை, குறிப்பாக அவர்களின் தாயாரை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.</p><h2>காலாவதியாகிப் போன அரசியல்</h2><p>இந்த வகையிலான தரக்குறைவான கருத்துக்கள், முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே காலாவதியாகிப் போன அரசியல். இன்றைய தமிழக இளைஞர்களுக்கும், வளரும் நமது குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டியது இத்தகைய மூன்றாந்தர அரசியல் அல்ல.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு..! வானிலை மையம் வெளியிட்ட அப்டேட்</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-heavy-rain-in-tamil-nadu-weather-department-issues-update</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-heavy-rain-in-tamil-nadu-weather-department-issues-update#comments</comments><guid isPermaLink="false">99b7baf4-51db-41d5-8db6-0606adecd77e</guid><pubDate>Sat, 15 Aug 2026 09:37:29 +0000</pubDate><atom:updated>2026-08-15T09:37:29.544Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Rain,Weather,கனமழை,வானிலை,தமிழகம்,Weather News,WeatherUpdate,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,வானிலை ஆய்வு மையம்,கன மழை,heavy rain,வானிலை அறிக்கை,weather condition,வானிலை முன்னறிவிப்பு,Weather Status,Rain Alert,வானிலை அறிவிப்பு,weather center</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/0923zewz/wather.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழகத்தில் கனமழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/0923zewz/wather.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><h2>மழை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><p><strong>இன்று (15-08-2026):</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p>ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>நாளை (16-08-2026):</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை </a>பெய்யக்கூடும்.</p><p>ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2>கனமழை</h2><p><strong>17-08-2026:</strong> செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <strong><ins><a href="https://www.dailythanthi.com/topic/rain">கனமழை</a></ins></strong> பெய்யக்கூடும்.</p><p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், பெரம்பலூர், சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். </p><p>ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>18-08-2026:</strong> செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <strong><ins><a href="https://www.dailythanthi.com/topic/rain">கனமழை</a></ins></strong> பெய்யக்கூடும்.</p><p>சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2>பலத்த காற்றுடன் கனமழை</h2><p><strong>19-08-2026:</strong> நீலகிரி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <strong><ins><a href="https://www.dailythanthi.com/topic/rain">கனமழை</a></ins></strong> பெய்யக்கூடும். </p><p>மேற்கு தொடர்ச்சி திருச்சிராப்பள்ளி, சேலம், கள்ளக்குறிச்சி, மலை மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>20-08-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, வேலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் புதுவையிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>21-08-2026:</strong> ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong><ins>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</ins></strong></p><p><strong>15-08-2026 முதல் 19-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் வட உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><p><strong><ins>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</ins></strong></p><p><strong>15-08-2026 முதல் 19-08-2026 வரை:</strong> வட உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று (15-08-2026)</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p><strong>நாளை (16-08-2026)</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>மீனவர்களுக்கான எச்சரிக்கை:</h2><p><strong><ins>தமிழக கடலோரப்பகுதிகள்:</ins></strong></p><p><strong>15-08-2026 முதல் 19-08-2026 வரை:</strong> தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடலின் ஒரு சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><h2>வங்கக்கடல் பகுதிகள்:</h2><p><strong>15-08-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடலை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>16-08-2026 மற்றும் 17-08-2026 வரை:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய வங்கக்கடலை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>18-08-2026 மற்றும் 19-08-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><h2>அரபிக்கடல் பகுதிகள் :</h2><p><strong>15-08-2026:</strong> எச்சரிக்கை ஏதுமில்லை.</p><p><strong>16-08-2026 முதல் 19-08-2026 வரை:</strong> மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோவையின் 1947 சுதந்திர தின அழைப்பிதழை வெளியிட்ட கே.சி.பழனிசாமி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/1947-coimbatore-independence-day-invitation-released-by-kc-palanisami</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/1947-coimbatore-independence-day-invitation-released-by-kc-palanisami#comments</comments><guid isPermaLink="false">feb9e32d-ba12-4c47-94b8-c1a4d2153d4a</guid><pubDate>Sat, 15 Aug 2026 09:25:58 +0000</pubDate><atom:updated>2026-08-15T09:25:58.152Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவை,Invitation,அழைப்பிதழ்,Independence Day,Kovai,Released,கே.சி.பழனிசாமி,சுதந்திர தின</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/j5cnioif/invitation.jpg" width="573"><media:title type="html"><![CDATA[ கே.சி.பழனிசாமி ]]></media:title><media:description type="html"><![CDATA[ கோவையின் 1947 சுதந்திர தின அழைப்பிதழை வெளியிட்ட கே.சி.பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/j5cnioif/invitation.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>இந்தியாவின் முதல் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9">சுதந்திர தின</a> விழா அழைப்பிதழை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி வெளியிட்டு, வரலாற்று நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.</p> <h2>வரலாற்று பொக்கிஷம்</h2><p>இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியிடம் இருந்து கடந்த 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி விடுதலை பெற்றது. அன்று நாடு முழுவதும் சுதந்திர திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், 1947 ஆகஸ்ட் 15 அன்று கோயம்புத்தூரில் நடைபெற்ற முதல் சுதந்திர தின விழாவின் அதிகாரப்பூர்வ அழைப்பிதழ் மற்றும் நிகழ்ச்சி குறிப்பை வரலாற்று பொக்கிஷமாக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.</p><p><strong>இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-</strong></p><h2>நெகிழ்ச்சியான நினைவு</h2><p>"காலங்கள் பல கடந்தாலும், 79 ஆண்டுகளுக்கு முந்தைய இந்த அரிய ஆவணம், அன்று நமது முன்னோர்கள் சுவாசித்த சுதந்திர காற்றின் உணர்வை இன்றும் நமக்கு கடத்துகிறது.</p> <h2>சுதந்திர தின வாழ்த்து</h2><p>இந்த அரிய வரலாற்று பதிவை வெளியிட்டதோடு, தமிழக மக்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த சுதந்திர தின நல்வாழ்த்துகளையும் கே.சி.பழனிசாமி தெரிவித்து கொண்டுள்ளார்.</p><p>இவ்வாறு அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நயினார் நாகேந்திரன் சர்ச்சை பேச்சு:  உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்! - மாணிக்கம் தாகூர் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendrans-controversial-remarks-he-must-offer-an-immediate-public-apology-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendrans-controversial-remarks-he-must-offer-an-immediate-public-apology-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">7cb74422-e31d-440d-8a5f-b64df1f4700a</guid><pubDate>Sat, 15 Aug 2026 09:19:10 +0000</pubDate><atom:updated>2026-08-15T09:19:10.233Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore MP,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Tagore,தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/dapzzewj/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/dapzzewj/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நயினார் நாகேந்திரன் தமிழ்நாட்டு மக்களிடமும் முதல்-அமைச்சரிடமும் உடனடியாக நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். </p><h2>சர்ச்சை பேச்சு</h2><p>முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து அநாகரீகமாக பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. 'அப்பாவை காணோம்' என்ற முதல்-அமைச்சர் பேச்சுக்கு எதிர்வினையாக அவர் அநாகரீகமாக பேசியதாக கண்டனங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் முதல்-அமைச்சர் விஜய் குறித்த நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>இது முதல் முறையல்ல</h2><p>அரசியல் விரக்தியின் உச்சத்தில் முதல்-அமைச்சர் விஜய்யையும் அவரது தாயாரையும் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இழிவாகப் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசியல் நாகரிகமற்ற முறையில் தரம் தாழ்ந்து பேசுவது இவருக்கு இது முதல் முறையல்ல; தொடர் வாடிக்கையாகிவிட்டது.</p><p>பொதுவெளியில் கவனத்தைப் பெற பெண்களை இழிவுபடுத்தும் , தனது அருவருக்கத்தக்க பேச்சுக்குத் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழ்நாட்டு </a>மக்களிடமும் முதல்-அமைச்சரிடமும் உடனடியாக நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் மீது டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/complaint-filed-against-tamil-nadu-bjp-leader-nainar-nagendran-at-the-dgps-office</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/complaint-filed-against-tamil-nadu-bjp-leader-nainar-nagendran-at-the-dgps-office#comments</comments><guid isPermaLink="false">051a67a4-508e-4da2-a471-a117d8b74c4d</guid><pubDate>Sat, 15 Aug 2026 09:14:14 +0000</pubDate><atom:updated>2026-08-15T09:14:14.100Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,DGP Office,டிஜிபி அலுவலகம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/63vez9cd/koe.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/63vez9cd/koe.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. </p><h2>புதிய சர்ச்சை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> மற்றும் அவரது தாயார் குறித்து அநாகரீகமாக பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. 'அப்பாவை காணோம்' என்ற முதல்-அமைச்சர் பேச்சுக்கு எதிர்வினையாக அவர் அநாகரீகமாக பேசியதாக கண்டனங்கள் எழுந்துள்ளது.</p><h2>ஆன்லைன் வாயிலாக புகார்</h2><p>இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மீது வழக்கறிஞர் வர்த்தினி என்பவர் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் ஆன்லைன் வாயிலாக புகார் அளித்துள்ளார். முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து அவதூறு கருத்துகளை பேசியதாக நயினார் நாகேந்திரன் மீது அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>தனிப்பட்ட முறையில்</h2><p>மேலும் அரசியல் விமர்சனங்களை மீறி, குடும்ப உறுப்பினரை தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்துவது கவலைக்குரியது எனவும், நயினாரின் பேச்சுகள் மக்கள் மத்தியில் அவதூறு, வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும்,  நயினார் நாகேந்திரன் பேச்சால் ஒரு பெண்ணாகவும், தாயாகவும் வேதனை அடைவதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2>பகிரங்க மன்னிப்பு</h2><p>இதனிடையே முதல்-அமைச்சர் பற்றிய அநாகரிக பேச்சுக்கு முதல்-அமைச்சரிடமும், தமிழ்நாட்டு மக்களிடமும் நயினார் நாகேந்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அரசியலில் எதிரியாக இருக்கலாம்; அதற்காக நாகரிகத்தை எதிரியாக்கிக் கொள்ளக் கூடாது என்று அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>முருகப்பெருமானை இழிவுபடுத்திய தவெக ஆதரவாளரை கைது செய்க! - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/arrest-the-tvk-supporter-who-insulted-lord-murugan-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/arrest-the-tvk-supporter-who-insulted-lord-murugan-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">7582d4d5-ce27-4cea-b09d-2ccbb05be3c2</guid><pubDate>Sat, 15 Aug 2026 09:02:57 +0000</pubDate><atom:updated>2026-08-15T09:02:57.789Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,முருகப்பெருமான்,Lord Murugan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/8r5ek3hl/Untitled-22.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/8r5ek3hl/Untitled-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்க்கடவுள் முருகப்பெருமானை இழிவுபடுத்திய தவெக ஆதரவாளரை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் காப்பாற்றுகிறாரா? என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>கைது செய்யாமல் இருப்பது ஏன்?</h2><p>ஆட்சிக்கு வந்த நாள் முதலே தான் சார்ந்த ஒரு மதத்தைப் பற்றி பெருமையாக பேசுவதும், மற்ற மதங்களையும், அன்னைத் தமிழை இழிவுபடுத்தி பேசுவதையும் வழக்கமாக வைத்துள்ள தவெக அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர், இவர்களைப் பின்பற்றி தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர் ஒருவர், சமூக வலைத்தளங்களில் எங்கள் தமிழ்க் கடவுள் முருகப் பெருமானையும், இந்து மத நம்பிக்கைகளையும் மிகக் கீழ்த்தரமான முறையில் இழிவுபடுத்தி வருவது கடும் கண்டனத்திற்குரியது. இதனை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது.</p><p>'மதநல்லிணக்கம்' என்று வசனம் பேசும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தலைவர் </a>ஜோசப் விஜய், தனது கட்சியின் ஆதரவாளர் இந்து கடவுள்களை இவ்வளவு ஆபாசமாகச் சித்தரிப்பதைக் கண்டும் காணாமல் மௌனம் காப்பது ஏன்? வழக்கு பதிவு செய்த பிறகும் கைது செய்யாமல் இருப்பது ஏன்?</p><h2>காப்பாற்ற நினைக்கிறாரோ?</h2><p>அவரின் இந்த மவுனம், 'ஜோசப் விஜய்' எனும் அதிகார நிழலில் ஒளிந்துகொண்டு, இந்து மதத்தின் மீது நஞ்சைக் கக்கி வரும் இத்தகைய நபர்களை அவர் காப்பாற்ற நினைக்கிறாரோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.</p><p>முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யே, கோடிக்கணக்கான மக்களின் ஆராதனைக்குரிய முருகப் பெருமானை இழிவுபடுத்திய இந்த நபர் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுத்து அவரைக் கைது செய்ய வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில், தவெக அரசு பெரும் போராட்டங்களை எதிர்கொள்ள நேரிடும். எங்களின் பொறுமையைச் சோதிக்க வேண்டாம் என தவெக அரசையும், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யையும் எச்சரிக்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நயினார் நாகேந்திரன் சர்ச்சை பேச்சு: விரைவில் தி.மு.க. - பா.ஜ.க. உறவு வெளிச்சத்துக்கு வரும் - அமைச்சர் ராஜ்மோகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendrans-controversial-remarks-the-relationship-between-dmk-and-bjp-will-soon-come-to-light-minister-rajmohan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendrans-controversial-remarks-the-relationship-between-dmk-and-bjp-will-soon-come-to-light-minister-rajmohan#comments</comments><guid isPermaLink="false">7d50e7dd-9781-4542-a4dd-aa1a901c0c1e</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:43:38 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:43:38.376Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,பாஜக,BJP,Vijay,Tamilnadu,தமிழ்நாடு,விஜய்,நயினார் நாகேந்திரன்,CM Vijay,Minister Rajmohan,அமைச்சர் ராஜ்மோகன்,Nainar Nagenthran</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/lv4ozeho/market.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/lv4ozeho/market.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> குறித்த நயினார் பேச்சுக்கு அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம் தெரிவித்துள்ளார். </p><h2>சர்ச்சை பேச்சு</h2><p>முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து அநாகரீகமாக பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. 'அப்பாவை காணோம்' என்ற முதல்-அமைச்சர் பேச்சுக்கு எதிர்வினையாக அவர் அநாகரீகமாக பேசியதாக கண்டனங்கள் எழுந்துள்ளது.</p><p>இந்நிலையில் முதல்-அமைச்சர் விஜய் குறித்த நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு, அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம் தெரிவித்துள்ளார். </p><h2>திமுக - பாஜக உறவு</h2><p>இதுதொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு அநாகரீகமானது. அவர் நாகரிகமாக பேச வேண்டும். தமிழக அரசியலில் மறைமுக நட்பெல்லாம் வெளிப்படும் நேரம் இது; விரைவில் திமுக - பாஜக இடையேயான உறவு வெளிச்சத்துக்கு வரும்.</p><p>திமுகவினர் போல பாஜகவினரும் அவதூறாக பேசி வருகின்றனர். சத்தம் இன்றி சாதனைகளை நிகழ்த்தும் முதல்-அமைச்சர் விஜய். மாற்றம் வேண்டும் என ரீல்ஸ் போட்டது மக்கள்தான். தவெகவினர் அல்ல.</p><p>சத்தமில்லாமல் ஒவ்வொரு நாளும் சாதனைகளை செய்து வருகிறார் முதல்-அமைச்சர் விஜய். ஊழலை ஒழிப்போம் என்ற நம்பிக்கையை மக்களின் மனதில் அறுவடை செய்திருக்கிறோம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><h2>இனிதான் நல்வாழ்வு</h2><p>இதனைத்தொடர்ந்து வாக்காளர்களுக்கு நல்ல சாவு வராது என்ற ஆர்.எஸ்.பாரதியின் விமர்சனத்துக்கு பதில் அளித்த அமைச்சர் ராஜ்மோகன், “வாக்காளர்களுக்கு நல்ல சாவு வராது என பேசுவதா? சைதாப்பேட்டை தொகுதி மக்களுக்கு இனிதான் நல்வாழ்வு வரப்போகிறது” என்று தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>‘2047-ல் வளர்ச்சி பாரதம் என்ற இலக்கை அடைய தொடர்ந்து முன்னேறுவோம்’ - வானதி சீனிவாசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-continue-to-move-forward-to-achieve-the-goal-of-a-developed-india-by-2047-vanathi-srinivasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-continue-to-move-forward-to-achieve-the-goal-of-a-developed-india-by-2047-vanathi-srinivasan#comments</comments><guid isPermaLink="false">1c4962ea-f0d4-4cc2-bdf5-2e86e4dfc228</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:37:25 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:37:25.521Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,சுதந்திர தினம்,Independence Day</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/7w2xhbvc/State-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/7w2xhbvc/State-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். தமிழகத்தில் த.வெ.க. அரசு அமைந்த பிறகு, சுதந்திர தினத்தில் முதல் முறையாக முதல்-அமைச்சர் விஜய் கோட்டை கொத்தளத்தில் இன்று தேசியக்கொடியை ஏற்றினார். </p><p>இந்நிலையில், பா.ஜ.க. எம்.எல்.ஏ. நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-</p><p>“தாய்த் திருநாட்டின் 80-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள். அடிமைத்தளையில் இருந்து விடுபட்டு இன்று சுதந்திரக்காற்றை சுவாசிக்க குருதி சிந்தி, தன்னுயிரை துச்சமென மதித்து உயிர்த்தியாகம் செய்து, சிறைக் கொடுமைகளை அனுபவித்து சுதந்திரம் பெற்றுக் கொடுத்த விடுதலைப் போராட்ட வீர்களையும், தேசத் தலைவர்களையும் மனதில் நிறுத்தி அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தி போற்றி வணங்குவோம். </p><p>தேசத்தின் வளங்களை போற்றிப் பாதுகாப்போம்..! 2047-ல் வளர்ச்சி பாரதம் ( Viksit Bharat ) என்ற இலக்கை அடைய தொடர்ந்து முன்னேறுவோம்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.   </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தாய்த் திருநாட்டின் 80-வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். அடிமைத்தளையிலிருந்து விடுபட்டு இன்று சுதந்திரக்காற்றைச் சுவாசிக்க குருதி சிந்தி, தன்னுயிரை துச்சமென மதித்து உயிர்த்தியாகம் செய்து, சிறைக் கொடுமைகளை அனுபவித்து சுதந்திரம் பெற்றுக் கொடுத்த விடுதலைப் போராட்ட வீர்களையும்,… <a href="https://t.co/xpANLIuuO9">pic.twitter.com/xpANLIuuO9</a></p>&mdash; Vanathi Srinivasan (@VanathiBJP) <a href="https://x.com/VanathiBJP/status/2088443616129859736?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>இளம்பெண்ணை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பகிர்வு: வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-arrested-for-sharing-obscene-depictions-of-a-young-woman-on-social-media</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-arrested-for-sharing-obscene-depictions-of-a-young-woman-on-social-media#comments</comments><guid isPermaLink="false">2859934e-8161-42f7-9e0c-91aa6ad91414</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:36:52 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:36:52.919Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,young woman,தூத்துக்குடி,இளம்பெண்,வாலிபர் கைது,social media,சமூக வலைதளங்கள்,Young man arrested,ஆபாசம்,பகிர்வு,Sharing,Obscenity</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/srmu3zx0/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/srmu3zx0/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டத்தில் ஒரு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D">இளம்பெண்</a>ணை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதோடு, அதைத் தட்டிக்கேட்ட அப்பெண்ணையும், அவரது தந்தையையும் மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். </p><h2>இளம்பெண்ணை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவு</h2><p>தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் காயிதே மில்லத் நகரைச் சேர்ந்த சிந்தா மதார் சாகிப் மகன் முகமது ரிச்வி (வயது 25). இவர் 25 வயது பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ்அப் உள்ளிட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">சமூக வலைதளங்களில் </a>பகிர்ந்ததாக கூறப்படுகிறது. </p><h2>வாலிபர் கைது</h2><p>இந்த செயலைப் பற்றி அறிந்த அந்த இளம்பெண்ணும், அவரது தந்தை சுலைமானும் முகமது ரிச்வியின் வீட்டிற்கு சென்று தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது, அவர்கள் 2 பேரையும் முகமது ரிச்வி அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், ஆறுமுகனேரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது ரிச்வியை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ரீல்ஸ்  போட்டதும்  ரீல்  விட்டதுமே  சாதனை: தவெக  அரசு மீது எடப்பாடி பழனிசாமி  விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/posting-reels-and-spinning-yarnsthats-the-only-achievement-edappadi-palaniswami-criticizes-the-tvk-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/posting-reels-and-spinning-yarnsthats-the-only-achievement-edappadi-palaniswami-criticizes-the-tvk-government#comments</comments><guid isPermaLink="false">000b3d9a-8469-45b2-9b30-f62b3118b305</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:32:48 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:32:48.691Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,எடப்பாடி பழனிசாமி,Edappadi K Palaniswami</media:keywords><media:content height="542" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/uu4x2esy/EPS.jpg" width="794"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/uu4x2esy/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>கோவை கல்லூரி மாணவர் கொலை தொடர்பாக சட்டமன்றத்தில் கேள்வி எழுப்புவோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ரீல்ஸ் போட்டதும் ரீல் விட்டதுமே தவெக அரசின் சாதனை. மக்களின் பிரச்சனைக்காக எந்த போராட்டத்தில் விஜய் பங்கேற்றார் என கேள்வி எழுப்பியுள்ளார். போதைப்பொருள் புழக்கத்தால் கல்லூரி மாணவர் கொலை நடந்ததா என்று விசாரிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது;   தவெக அட்சிக்கு வந்த பிறகு, சிறு குறு விவசாயிகளுக்கு 75 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி என்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு 35 ஆயிரம் தள்ளுபடி என்கிறார்கள். </p><p>இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். விவசாயிகள் வருமானம் இல்லமால் இருக்கிறரார்கள். மேகதாது விவகாரத்தில் மெத்தனம் இல்லாமல், அணை கட்டுவதை தடுத்து நிறுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கட்சி ஆரம்பித்தே மூன்று ஆண்டுக்ள்தான் ஆகிறது. எந்த போராட்டத்தில் அவர் கலந்து கொண்டார். எதோ கட்சி ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு ஒரு வாய்ப்பை கொடுத்துவிட்டார்கள். வாய்ப்பு கிடைத்த பிறகு மற்ற கட்சிகள் சொல்வதை கேக்க வேண்டும். காவிரி பிரச்சினை பற்றி இவருக்கு ஒன்னுமே தெரியவில்லை. </p><p>கர்நாடக அரசு தண்ணீர் திறக்கவில்லை என்றால் அதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆனால் காலம் தாழ்த்திதான் நடவடிக்கை எடுக்கிறார்கள். கர்நாடகா உபரி நீரைத்தான் திறக்கிறது. தவெகவிற்கு எதைப்பற்றியுமே தெரியவில்லை. மக்கள் சொல்வதையாவது கேக்க வேண்டும். எதையுமே செயல்படுத்தாத முதல்வராக மவுன முதல்வராக விஜய் உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>‘தமிழ்நாடே மகிழ்ச்சியாக இருக்கிறது’ - நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் பேட்டி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/all-of-tamil-nadu-is-happy-finance-minister-maria-wilsons-interview</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/all-of-tamil-nadu-is-happy-finance-minister-maria-wilsons-interview#comments</comments><guid isPermaLink="false">280d6445-4d1d-4107-861c-796401d9a9e1</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:30:11 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:30:11.772Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,Tamil Nadu,சுதந்திர தினம்,Independence Day,அமைச்சர் மரிய வில்சன்,Minister Maria Wilson</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/zjsabfdc/State-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/zjsabfdc/State-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் த.வெ.க. அரசு அமைந்த பிறகு, முதல் முறையாக சுதந்திர தினத்தில் முதல்-அமைச்சர் விஜய் கோட்டை கொத்தளத்தில் இன்று தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக தமிழ்நாடு காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்-அமைச்சர் விஜய் ஏற்றுக்கொண்டார்.</p><p>தேசியக்கொடியை ஏற்றிய பிறகு முதல்-அமைச்சர் விஜய் தனது முதல் சுதந்திர தின உரையை நிகழ்த்தினார். இதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் சுதந்திர தின சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவிற்கு பின்னர் தமிழக நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் செய்தியாளர்களிடம் பேசியபோது, “தமிழக முதல்-அமைச்சர் விஜய் முதல்-முறையாக சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்துள்ளார். மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. </p><p>தமிழ்நாடே மகிழ்ச்சியாக இருக்கிறது. இது நீண்ட காலத்திற்கு தொடரும். முதல்-அமைச்சர் தனது உரையில் மிகத் தெளிவாக எல்லாவற்றையும் கூறிவிட்டார். மக்கள் தன்னுடன் நிற்க வேண்டும் என்பதே அவரது விருப்பமாகும்” என்று தெரிவித்தார். </p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/dDpSpABr1xU"></iframe></figure>]]></content:encoded></item><item><title>காதல் தொல்லை கொடுத்ததை கண்டித்ததால் ஆத்திரம்: மாணவியின் தந்தையை குத்திக்கொன்ற வாலிபர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-stabs-girls-father-to-death-over-love-harassment</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-stabs-girls-father-to-death-over-love-harassment#comments</comments><guid isPermaLink="false">fded8ec0-f34b-4321-8ff4-9baff49e7a4d</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:26:32 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:26:32.717Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Virudhunagar,விருதுநகர்,murder,காதல் தொல்லை,குத்திக்கொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/7v6tgyhr/Untitled-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/7v6tgyhr/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர்,</p><p>பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்ததை கண்டித்ததால், மாணவியின் தந்தையை தெருவில் வழிமறித்து வாலிபர் குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>காதல் தொல்லை</h2><p>விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கோட்டையூர் கிழக்கு காலனியை சேர்ந்தவர் அய்யனார் (38 வயது). இவரது மகள் பள்ளிக்கு செல்லும்போது அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி (21 வயது) என்பவர் காதலிப்பதாக கூறி தினமும் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது தந்தையிடம் கூறியுள்ளார். எனவே பெரியசாமியை அய்யனார் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு குடும்பத்தினருக்கு இடையே விரோதம் ஏற்பட்டது.</p><h2>குத்திக்கொலை</h2><p>இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தெருவில் நடந்து சென்ற அய்யனாரிடம் பெரியசாமி, அவருடைய அண்ணன் அழகுராஜா (24 வயது), அவருடைய மனைவி பேச்சியம்மாள் (23 வயது), உறவினர் கருப்பசாமி (19 வயது) ஆகியோர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பெரியசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அய்யனாரை குத்தினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>கைது</h2><p>இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியசாமி, அழகுராஜா, கருப்பசாமி ஆகிய 3 பேரை கைது செய்தனர். பெரியசாமியின் வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது அங்கு விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தும் 17 நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>மேட்டூர் அணையில் பாதுகாப்பு குழுவினர் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/safety-team-inspects-mettur-dam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/safety-team-inspects-mettur-dam#comments</comments><guid isPermaLink="false">0df442aa-b5cc-4e02-a3bb-4be619c84bb1</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:24:02 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:24:02.164Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur dam,ஆய்வு,inspection</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/y3ntjzg0/15.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/y3ntjzg0/15.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,  </p><p>அணைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அணைகள் பாதுகாப்பினை மேற்கொள்வதற்காக விரிவான திட்ட மதிப்பீடு மேற்கொள்வதற்கு ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய நீர்வள ஆணையத்தின் ஓய்வு பெற்ற தலைவர் சந்திரசேகர் அய்யர் தலைமையில் இந்த நிபுணர் குழு அமைக் கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தமிழக நீர்வளத்துறையின் ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் செல்வம், திருச்சி என்.ஐ.டி. கல்லூரியின் புவியியல் தொழில்நுட்ப வல்லுனர் முத்துக்குமரன், நீரியல் வல்லுனர் மஞ்சுளா ஆகி யோர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். </p><p>இந்த குழுவினர் நேற்று மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து நிபுணர் குழு வின் தலைவர் சந்திரசேகர் அய்யர் நிருபர்களிடம் கூறுகையில், அணைகள் பாதுகாப்பிற்காக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்காக மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்டோம். அணையின் கட்டுமானம், நீர் வெளி யேற்ற மதகுகள், அணையின் முக்கிய பகுதிகள் மற்றும் அணையின் பாது காப்புக்காக அமைக்கப்பட்டுள்ள கருவிகளை ஆய்வு செய்தோம்.மேலும் அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகு பாலத்தை ஆய்வு செய் தோம். அவசரகால நீர் போக்கியான அணையின் மண் கரையையும் ஆய்வு மேற்கொண்டோம். இதுகுறித்து விரிவான திட்ட அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்வோம் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>முதல் முறை எம்எல்ஏக்களுக்கு கார், உதவியாளர் வழங்க முதல் அமைச்சர் விஜய் முடிவு?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/reports-indicate-that-chief-minister-vijay-has-decided-to-provide-cars-and-assistants-to-first-time-mlas</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/reports-indicate-that-chief-minister-vijay-has-decided-to-provide-cars-and-assistants-to-first-time-mlas#comments</comments><guid isPermaLink="false">d7a6b4b9-803d-4f2d-aead-2bcd1194d099</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:22:01 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:22:01.700Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,முதல் அமைச்சர்,எம்எல்ஏ,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/mzjbg2lo/vijay-PTI.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/mzjbg2lo/vijay-PTI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p> சட்டசபையில் விசிகவின் காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ ஜோதிமணி  சபாநாயகருக்கு கோரிக்கை ஒன்றை விடுத்தார்.  ஜோதிமணி பேசுகையில்,  "அய்யா.. இது என் சொந்த கோரிக்கை. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தேவையான கோரிக்கை. இதைப்பற்றி உங்களிடம் ஏற்கனவே கடிதமாக கொடுத்துள்ளேன். நான் 280 கி.மீ தொலைவில் இருந்துதான் சட்டமன்றம் வருகிறேன். பஸ் அல்லது ரயிலில் வருவதற்கு அலவென்ஸ் கொடுக்கறீர்கள். சட்டமன்றத்தின் தனி வண்டியில் வருவதற்கு என்னிடம் சொந்தமாக வண்டி இல்லை. வாடகை வண்டியில் தான் சட்டமன்றம் வருகிறேன். என்னுடைய தொகுதி 40 கி.மீ சுற்றளவில் உள்ளது. மக்களின் பிரச்சனை தொடர்பாக தொகுதிக்குள் பயணித்து, குறைகளை கேட்பதற்கு வாகன வசதி இல்லை. உடன் ஒரு செயலாளர் வைத்து கொண்டு அவருக்கு ஊதியம் கொடுப்பதற்கும் என்னிடம் வசதி இல்லை. இப்படித்தான் இன்றைக்குள்ள முக்கால்வாசி சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அதில் எந்த மாற்றமும் இல்லை. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் உள்ளிட்ட மற்ற வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.</p><h2> சபாநாயகர் பதில்</h2><p>காலணி கூட அணிய முடியாத சட்டமன்ற உறுப்பினர் இங்கே உள்ளனர். காலணி வாங்குவதற்கு கூட வசதி வாய்ப்பு இல்லாத எம்எல்ஏ பணியாற்றுகிறார்கள். இந்த சூழலில் லஞ்சம், லாவாண்யம் இல்லாத அரசாங்கத்தை கொடுப்பதாக கூறியுள்ளோம். அதற்கு நம்முடைய உறுப்பினர்களை நலமுடன் பார்த்துக் கொள்ளுமாறு உண்மையுடன், அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.  உடனே சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அளித்த பதிலில், " சட்டமன்ற உறுப்பினராக நேர்மையுடன், உண்மையாக பணியாற்றும் போது ஏற்படும் சிரமங்களை சொல்லியிருப்பதாக கருதுகிறேன்.  </p> <h2>கார் வாங்கித்தர முடிவு?</h2><p>முதலமைச்சர் இந்த அவையில் உள்ளார். நேரடியாகவே அவரின் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன். அவரின் கரங்கள் அள்ளி கொடுக்கும் கரங்கள். அந்த வகையில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் கொடுத்துள்ள கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறேன்" என்றார்.   இந்த நிலையில்,  ஜோதிமணியின் கோரிக்கையை ஏற்று எம்எல்ஏக்களுக்கு கார் வாங்கி கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>இதுகுறித்து தலைமை செயலக வட்டாரங்கள் கூறுகையில், "முதல்முறை எம்எல்ஏ ஆனவர்களுக்கு கார் வழங்க முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளார். தொகுதி அலுவலகத்துக்கு ஒரு கார் என்கிற அடிப்படையில் கார் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதை எம்எல்ஏவாக இருப்போர் பயன்படுத்தலாம். இதேபோல முதல்முறை எம்எல்ஏக்களுக்கு உதவியாளர் நியமனம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்” என்றனர்.</p>]]></content:encoded></item></channel></rss>