<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 10 Sep 2026 12:21:18 +0000</lastBuildDate><item><title>நடுவானில் பயணிக்கு உடல்நலக்குறைவு... இலங்கையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/passenger-falls-ill-mid-air-plane-makes-emergency-landing-in-sri-lanka</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/passenger-falls-ill-mid-air-plane-makes-emergency-landing-in-sri-lanka#comments</comments><guid isPermaLink="false">b8862c91-b1ca-4e0d-bb47-70d2c28c8917</guid><pubDate>Thu, 10 Sep 2026 12:20:47 +0000</pubDate><atom:updated>2026-09-10T12:20:47.059Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விமானம்,திருச்சி,Sri Lanka,இலங்கை,passenger,Emergency Landing,அவசரமாக தரையிறக்கம்,நடுவானம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/lvq9dtkl/50.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விமானம்
]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/lvq9dtkl/50.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பயணிகளுடன் திருச்சி நோக்கி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்து கொண்டிருந்தது .</p><h2>விமானம்</h2><p>அப்போது நடுவானில் பயணி ஒருவருக்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த விமானம் உடனடியாக இலங்கை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியவுடன் அந்த பயணிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. </p><p>பின்னர் அந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">விமானம்</a> திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. இதனால் அந்த விமானத்தில் பயணம் செய்த 178 பயணிகளும் சற்று அவதி அடைந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>ஜனநாயகப் புரட்சியை சத்தமில்லாமல் நிகழ்த்திய விசில் சின்னம்: முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/silent-democratic-revolution-whistle-symbol-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/silent-democratic-revolution-whistle-symbol-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">f5548e90-b377-44d1-bab6-409d19f1443c</guid><pubDate>Thu, 10 Sep 2026 12:09:52 +0000</pubDate><atom:updated>2026-09-10T12:13:43.421Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக வெற்றிக் கழகம்,Tamilaga Vettri Kazhagam,விசில் சின்னம்,whistle symbol,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/3exe1dvu/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/3exe1dvu/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக வெற்றிக் கழகம் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அக்கட்சிக்கு விசில் சின்னத்தையும் ஒதுக்கியுள்ளது. இந்த நிலையில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து முதல்-அமைச்சரும், த.வெ.க. தலைவருமான விஜய் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம். முப்பதாண்டுகளுக்கும் மேலாக அளவற்ற அன்பை வாரி வழங்கி, வாழ்வில் கிடைத்தற்கரிய ஓர் உயரிய இடத்தைப் பேரன்புடன் தந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவனாக, உறவாக, மகனாக, அண்ணனாக, தம்பியாக ஒவ்வோர் இல்லத்திலும் உள்ளத்திலும் ஒரு நிரந்தர இடத்தை வழங்கி, தாயன்புடன் தாங்கி வருகின்றீர்கள்.</p><p>எல்லாவற்றையும் அளித்த ஒட்டுமொத்தத் தமிழக மக்களுக்கும் உலகத் தமிழ் உறவுகளுக்கும் என் நன்றியை எப்படித் திருப்பிச் செலுத்துவது என்று யோசித்தோம். அதன் வெளிப்பாடாகவே, உங்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே 2024-ல் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கினோம்.</p><p>மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையுடன் அரசியல் களம் கண்டே 27 மாதங்கள்தான் ஆகின்றது. ஆனால் அதற்குள், தமிழக அரசியல் வரலாற்றில் எவருக்கும் கிடைத்திராத ஒரு பேரதிசயத்தை, கடந்த சட்டமன்றத் தேர்தலில் நிகழ்த்திக் காட்டினீர்கள்.</p><p>35% வாக்குகளுடன் தனிப்பெரும் கட்சியாகத் த.வெ.க.வை உயர்த்திப் பிடித்தீர்கள். உங்கள் தீர்ப்பை மதித்த ஜனநாயக சக்திகளின் ஆதரவுடன் இதோ இன்று, தமிழக மக்களின் முதல் சேவகனாக, முதல்-அமைச்சராக உங்கள் விஜய். ஊழலற்ற, நேர்மையான நிர்வாகத்தை லட்சியமாகக் கொண்டு, மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி அமைத்து, தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆட்சியை நிறுவிக் காட்டி இருக்கிறோம்.</p><p>மக்களே… என் சொந்தங்களே…தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பேரதிசயத்தை நீங்கள் நிகழ்த்திக் காட்டினீர்கள். அதன் வெளிப்பாடாக, இந்தியத் தேர்தல் ஆணையம் உங்கள் தமிழக வெற்றிக் கழகத்தை, தமிழகம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக அறிவித்துள்ளது. ஜனநாயகப் புரட்சியை சத்தமில்லாமல் நிகழ்த்திய உங்கள் விசில் சின்னத்தையும் த.வெ.க.வின் சின்னமாக அங்கீகரித்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.</p><p>மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையுடன் நம்மை நம்புகிற ஒட்டுமொத்த மக்களுக்கான நன்றிக்கடன் பணி என்றென்றும் தொடரும். இந்த வேளையில், பேருழைப்பைத் தந்து கழகம் காக்கும் தோழர்களையும் நிர்வாகிகளையும் நெகிழ்வுடன் நினைத்துப் பார்க்கிறேன். அனைவருக்கும் நன்றி! நன்றி! நன்றி! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம்.<br><br>முப்பதாண்டுகளுக்கும் மேலாக அளவற்ற அன்பை வாரி வழங்கி, வாழ்வில் கிடைத்தற்கரிய ஓர் உயரிய இடத்தைப் பேரன்புடன் தந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவனாக, உறவாக, மகனாக, அண்ணனாக, தம்பியாக ஒவ்வோர் இல்லத்திலும் உள்ளத்திலும் ஒரு…</p>&mdash; TVK Vijay (@TVKVijayHQ) <a href="https://x.com/TVKVijayHQ/status/2098015596944244958?ref_src=twsrc%5Etfw">September 10, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>ஓவிய, சிற்பக் கலைஞர்களின் திறமையை வெளிப்படுத்த நிதியுதவி - விண்ணப்பங்கள் வரவேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/funding-to-showcase-the-talents-of-painters-and-sculptors-applications-welcome</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/funding-to-showcase-the-talents-of-painters-and-sculptors-applications-welcome#comments</comments><guid isPermaLink="false">8dad6a7e-2c28-4018-bc1e-3a686adf3954</guid><pubDate>Thu, 10 Sep 2026 12:09:21 +0000</pubDate><atom:updated>2026-09-10T12:09:21.369Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நிதியுதவி,Painter,கலைஞர்கள்,Funding,Talent,விண்ணப்பங்கள் வரவேற்பு,ஓவியக்கலை,Applications welcome</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/tbjvdcza/103.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/tbjvdcza/103.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஓவிய, சிற்பக் கலைஞர்களின் திறமையை வெளிப்படுத்த தமிழக அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>விண்ணப்பங்கள் வரவேற்பு</h2><p>தமிழ்நாடு அரசின் சார்பில், கலை பண்பாட்டுத் துறை, தமிழ்நாடு ஓவிய நுண்கலைக்குழுவின் மூலம், தமிழ்நாட்டிலுள்ள ஓவிய சிற்பக் கலைஞர்களின் கலைத் திறமைகளை வெளிப்படுத்த அவர்களது கலைப் படைப்புகள் அடங்கிய கலைக் காட்சியினை தனிநபர் கலைக் காட்சியாக நடத்திட ஒரு நபருக்கு ரூ.25,000/- வீதம் 10 கலைஞர்களுக்கும் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட கலைஞர்கள் இணைந்து கூட்டாக கூட்டுக் கலைக்காட்சியாக நடத்திட ஒரு குழுவுக்கு ரூ.50,000/- வீதம் 5 குழுக்களுக்கும் அரசின் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. தகுதி வாய்ந்த ஓவிய சிற்பக் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.</p><p>விண்ணப்பதாரர்கள் மாநில அளவிலோ அல்லது தேசிய அளவிலோ நடைபெற்ற கலைக்காட்சிகளில் பங்கு கொண்டவர்களாகவும், நுண்கலைகளில் ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருத்தல் வேண்டும். கலை பண்பாட்டுத் துறை - ஓவிய நுண்கலைக் குழுவின் கலைச்செம்மல் விருது பெற்றவர்கள் கலையமைப்புகள் பெயரில் கலைக்காட்சி நடத்த விரும்புபவர்கள், தற்போது நுண்கலை பயின்று வரும் மாணவர்கள் இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கக் கூடாது. இதற்கு முன் இத்திட்டத்தில் பயனடைந்தோர் இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கக்கூடாது.</p><p> விண்ணப்பதாரர்கள் தங்களுடைய புகைப்படத்துடன் கூடிய தன் விவரக் குறிப்பு (Bio Data), கைபேசி எண். (Cell No.) சிறந்த படைப்புகளின் புகைப்படங்கள் 5 எண்ணிக்கைகள் (A4 Size) அவரவர்கள் படைப்புத் திறன் பற்றிய செய்தித் தொகுப்புகள் அடங்கிய விவரங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு 01.10.2026 க்குள் அனுப்பி வைத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. (இணைப்புகள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்)</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மோடி அரசுக்கு எதிராக ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைவரும் பேச வேண்டும் - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/everyoneboth-the-ruling-party-and-the-oppositionmust-speak-out-against-the-modi-government-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/everyoneboth-the-ruling-party-and-the-oppositionmust-speak-out-against-the-modi-government-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">c1396a89-1636-4ae4-b0c8-124bdfa0060d</guid><pubDate>Thu, 10 Sep 2026 12:01:46 +0000</pubDate><atom:updated>2026-09-10T12:01:46.094Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Tamilnadu,தமிழகம்,காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,Opposition parties,Modi government,எதிர்கட்சிகள்,மோடி அரசு,Manickam Tagore</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/eam905zc/nit.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/eam905zc/nit.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாங்கள் யாருக்காகவும் பயப்பட போவதில்லை. யாருக்காகவும் சைலண்டாக இருக்க போவதில்லை என்று தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D">காங்கிரஸ்</a> கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். </p><h2>துணை மாப்பிள்ளை</h2><p>இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-</p><p>தமிழ்நாடு அரசியலில், மோடிக்கு எதிராக அனைவரும் திடீரென சைலண்டாக இருக்கிறார்கள். துணை மாப்பிள்ளையான எதிர்கட்சி தலைவர் அமைதியாக இருக்கிறார். மத்திய அரசு செய்யும் அநியாயங்களை சொல்லவேண்டியது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D">காங்கிரசின்</a> கடமை. நாங்கள் யாருக்காகவும் பயப்படவில்லை, சைலண்டாகவும் இல்லை. முதலில் பேசிக் கொண்டிருந்தவர்களே பேசவில்லை. ஆளும் த.வெ.க. கட்சியும் இது குறித்து பேச வேண்டும்.</p> <h2>மதவாதம்</h2><p>நான் கோவிலுக்கு செல்வேன். இதையெல்லாம் மதவாதம் என்று சொல்லிவிடமுடியாது, இன்னொரு மதத்திற்கு எதிரானது கிடையாது. நயினார் நாகேந்திரன் பேசுவது தான் மதவாதம். வன்மமாய் பார்க்கிற பார்வை நயினார் நாகேந்திரனுக்கு இருக்கிறது. இந்த வன்மம் தான் தமிழ்நாட்டில் அவரை மதவாதியாக காட்டுகிறது. கடவுளை நம்புவது எந்த ஒரு பிரச்சினையும் கிடையாது, ஆனால் இன்னொருவர் நம்பிக்கையை, மதத்தை குறித்து பிரச்சினை செய்யக்கூடாது.</p><h2>குதிரை பேரம்</h2><p>ஒவ்வொரு MLA, MPக்கும் ராஜினாமா செய்ய உரிமை இருக்கிறது, எல்லா ராஜினாமாவும் குதிரை பேரமல்ல. திமுகவுக்கு இடைத்தேர்தல் சவாலாக இருக்கும் என்பதால், அவர்கள் கலக்கமடைந்துள்ளனர். இடைத்தேர்தல் முடிவுகள் தமிழக மக்களின் மனநிலையை வெளிப்படுத்தும்</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த தறித்தொழிலாளி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/power-loom-worker-arrested-for-sexually-assaulting-a-young-girl</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/power-loom-worker-arrested-for-sexually-assaulting-a-young-girl#comments</comments><guid isPermaLink="false">3bb6a6f2-db7a-455a-bd52-72062f4cf844</guid><pubDate>Thu, 10 Sep 2026 11:53:19 +0000</pubDate><atom:updated>2026-09-10T11:53:19.836Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாலியல் வன்கொடுமை,கைது,arrest,சிறுமி,சேலம்,sexually abusing,தறித்தொழிலாளி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/7wm92a1a/262.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/7wm92a1a/262.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சங்ககிரி,</p><p>சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே எர்ணாபுரம் கிராமம் மேட்டுதெரு பகுதியை சேர்ந்தவர் மாதையன் (வயது39). தறித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். </p><p>இந்த நிலையில் மாதையனுக்கு கணவரை பிரிந்து தனியாக வசித்து வரும் 34 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மாதையன் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று வந்து உள்ளார். ஆரம்பத்தில் அந்த பெண்ணை நல்ல முறையில் கவனித்து வந்ததாகவும், பின்னர் சந்தேகப்பட்டு அவரிடம் அடிக்கடி மாதையன் தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.</p><h2>பாலியல் பலாத்காரம்</h2><p>இந்த நிலையில் அந்த பெண்ணின் மகளான 10-ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவி கடந்த 3 வாரங்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இது குறித்து தாய் விசாரித்த போது தன்னிடம் மாதையன் கடந்த 4 மாதங்களாக தவறாக பேசி வந்ததாகவும், வீட்டில் யாரும் இல்லாத போது கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறினார். மேலும் இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என்றும், வெளியே கூறினால் உனது தாயை அடித்துக்கொலை செய்து விடுவதாகவும் மாதையன் மிரட்டியதாக சிறுமி தனது தாயிடம் தெரிவித்தார்.</p> <h2>கைது</h2><p>இதையடுத்து சிறுமியின் தாய், சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரின் இன்ஸ்பெக்டர் வளர்மதி மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கலையரசி ஆகியோர் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாதையனை கைது செய்தனர். பின்னர் அவரை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a> சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>11 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-till-7-pm-in-11-districts</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-till-7-pm-in-11-districts#comments</comments><guid isPermaLink="false">7cb4eb48-0d3f-4264-9e25-daaf80d6ea14</guid><pubDate>Thu, 10 Sep 2026 11:26:12 +0000</pubDate><atom:updated>2026-09-10T11:26:12.166Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/w8d1sfqj/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/w8d1sfqj/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், சேலம், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, விருதுநகர் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பெங்களூரு - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை: 11 கிலோ குட்கா பறிமுதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/check-on-bengaluru-nagercoil-express-train-11-kg-of-gutkha-seized</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/check-on-bengaluru-nagercoil-express-train-11-kg-of-gutkha-seized#comments</comments><guid isPermaLink="false">6d274f53-3998-419a-85c6-5e78bced8c7a</guid><pubDate>Thu, 10 Sep 2026 11:17:55 +0000</pubDate><atom:updated>2026-09-10T11:17:55.734Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நாகர்கோவில்,எக்ஸ்பிரஸ் ரெயில்,train,Bangaluru,Gutkha,குட்கா பறிமுதல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/t46fh4lv/-000001-001.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ குட்கா புகையிலை]]></media:title><media:description type="html"><![CDATA[ பெங்களூரு - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனையின் போது 11 கிலோ குட்கா பறிமுதல்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/t46fh4lv/-000001-001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி,</p><p>பெங்களூருவில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த விரைவு ரெயிலில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 11 கிலோ தடை செய்யப்பட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">குட்கா புகையிலை</a> பொருட்களை ரெயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.</p><h2>ரெயிலில் தீவிர சோதனை</h2><p><a href="https://www.dailythanthi.com/news/india">கர்நாடக மாநிலம்</a> பெங்களூருவில் இருந்து தமிழகத்தின் நாகர்கோவில் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில், தடை செய்யப்பட்ட போதை மற்றும் புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், இன்று (வியாழக்கிழமை) ரெயில் நாகர்கோவில் சந்திப்பை நெருங்கிய போது, ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து ரெயிலின் பொதுப் பெட்டிகள் மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.</p><h2>11 கிலோ குட்கா பறிமுதல்</h2><p>இந்த சோதனையின் போது, ரெயிலின் ஒரு பகுதியில் கேட்பாரற்று மறைத்து வைக்கப்பட்டிருந்த பையை போலீசார் மீட்டனர். அதனைத் திறந்து பார்த்தபோது, அதற்குள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா போன்ற புகையிலை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அதில் இருந்த 11 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.</p><h2>போலீசார் தீவிர விசாரணை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">ரெயில்</a> நிலையங்களில் போலீசார் சோதனை நடத்துவதை முன்கூட்டியே மோப்பம் பிடித்த கடத்தல்காரர்கள், மாட்டிக் கொள்ளாமல் இருக்க குட்கா பைகளை ரெயிலிலேயே போட்டுவிட்டு தப்பியோடியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தற்போது பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.</p><p>இந்த கடத்தலின் பின்னணியில் உள்ள மர்ம நபர்கள் யார், பெங்களூருவில் இருந்து இந்த போதைப்பொருட்களை கடத்தி வந்தது யார், மற்றும் நாகர்கோவிலில் இதனைப் பெற்றுக்கொள்ளவிருந்த நபர்கள் யார்? என்பது குறித்து ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>அஞ்சல் சேவையில் குறைகளா? 18-ந் தேதி வரை கருத்துகளை தெரிவிக்கலாம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/issues-with-postal-services-you-can-share-your-feedback-until-the-18th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/issues-with-postal-services-you-can-share-your-feedback-until-the-18th#comments</comments><guid isPermaLink="false">4611dd61-000c-4d73-a4d6-5b1603222588</guid><pubDate>Thu, 10 Sep 2026 11:04:38 +0000</pubDate><atom:updated>2026-09-10T11:04:38.536Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Postal Service,அஞ்சல் சேவை,குறைதீர்ப்பு முகாம்,Post office- தபால் நிலையம்,feedback</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/7a8jy347/311.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அஞ்சல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/7a8jy347/311.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ்நாடு வட்டம் அஞ்சல் துறை சார்பில் வாடிக்கையாளர் குறைதீர்ப்பு முகாம் சென்னையில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 11,745 தபால் நிலையங்களில் சேவை பெறும் அனைத்து வாடிக்கையாளர்களும் இதில் பங்கேற்கலாம்.</p><h2>அஞ்சல் சேவைகளின் தரம்</h2><p>அஞ்சல் சேவைகளின் தரம், வாடிக்கையாளர்களின் சேவைகள் ஆகியவற்றை சிறப்பாக மேம்படுத்துவது குறித்த கருத்துகளை அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் என்ற தலைப்புடன்  ஏ. சுந்தரேஸ்வரி, உதவி இயக்குநர், முதன்மை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D">அஞ்சல்</a> துறைத் தலைவர் அலுவலகம், தமிழ்நாடு வட்டம், சென்னை-600002  என்ற முகவரிக்கு 18.09.2026 அன்று அல்லது அதற்கு முன்னர் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். </p><p>மேலும், வாடிக்கையாளர்கள் தங்கள் கருத்துக்களை  DAK ADALAT என்ற தலைப்புடன் pg.tn@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? - கம்யூனிஸ்ட் கட்சிகள் நாளை முக்கிய முடிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/who-will-communists-support-in-byelection-key-decision-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/who-will-communists-support-in-byelection-key-decision-tomorrow#comments</comments><guid isPermaLink="false">926e95ed-b453-43fd-9243-5059eaf0d32e</guid><pubDate>Thu, 10 Sep 2026 10:55:49 +0000</pubDate><atom:updated>2026-09-10T10:55:49.079Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,இடைத்தேர்தல்,By election,CPI,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,இந்திய கம்யூனிஸ்ட்,ஆதரவு,CPM</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/3lc42rz3/Untitled-4.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/3lc42rz3/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இடைத்தேர்தலில் த.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பது குறித்து நாளை நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்வோம் என்று மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.</p><h2>2 தொகுதி இடைத்தேர்தல்</h2><p>தமிழகத்தில் காலியாக உள்ள 7 தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு மட்டும் அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சிகள் களம் காண்கின்றன.</p><h2>கடும்போட்டி</h2><p>சட்டசபை தேர்தல் முடிந்து 4 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் இந்த இடைத்தேர்தல் நடைபெறுவதால் புதிதாக ஆட்சி அமைத்துள்ள த.வெ.க.வுக்கும் மற்ற கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>வேட்பாளர்கள்</h2><p>தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் சுகன்யாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். த.வெ.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்தியபாமாவும் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.</p><h2>ஆதரவு கட்சிகள்</h2><p>இந்த நிலையில் த.வெ.க. அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை அக்கட்சிக்கு ஆதரவளித்துள்ளன. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, த.வெ.க. தலைவர் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். த.வெ.க. அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் 2 கம்யூனிஸ்ட் கட்சிகளும் முதல்-அமைச்சர் விஜய் அரசின் செயல்பாட்டை அவ்வப்போது கண்டித்து வருகிறார்கள்.</p><h2>முதல்-அமைச்சருக்கு கண்டனம்</h2><p>சட்டசபை கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய்யின் பதிலுரை மற்றும் உடல்மொழி குறித்து இரு கம்யூனிஸ்ட் செயலாளர்களும் கண்டனம் தெரிவித்தனர். த.வெ.க.வின் 5 ஆண்டு ஆட்சிக்கு ஆதரவு கொடுப்பீர்களா என்ற கேள்விக்கு அவர்களது நிலைப்பாட்டை பொருத்தே அது அமையும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பெ.சண்முகம் கருத்து கூறியிருந்தார்.</p><p>இந்த நிலையில் இடைத்தேர்தலில் 2 கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் வீரபாண்டியனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-</p><h2>நாளை முடிவு</h2><p>அறிவிக்கப்பட்டுள்ள 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட்கள் அதிகம் இல்லை. தமிழகத்தில் 40 மாவட்டங்களில் இடதுசாரி கட்சிகளுக்கு வாக்குகள் உள்ளன. மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் போட்டியிடுவதா? அல்லது கூட்டணி கட்சியான த.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பதா என்பது பற்றி நாளை (வெள்ளிக்கிழமை) மாலையில் நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்வோம்.</p><p>இந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில நிர்வாகிகள், இந்திய கம்யூனிஸ்ட் மாநில நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள். 2 இடதுசாரி கட்சிகளும் ஒருங்கிணைந்து நல்ல முடிவை எடுத்து அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மானிய உரங்களை கடத்தும் கும்பல்? “பறக்க முடியாத படையாக பறக்கும் படை” - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-gang-smuggling-subsidized-fertilizers-a-flying-squad-that-cannot-fly-tamil-nadu-farmers-association</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-gang-smuggling-subsidized-fertilizers-a-flying-squad-that-cannot-fly-tamil-nadu-farmers-association#comments</comments><guid isPermaLink="false">75e14aca-cf36-48ae-9168-a7e913f2cdd6</guid><pubDate>Thu, 10 Sep 2026 10:42:50 +0000</pubDate><atom:updated>2026-09-10T10:42:50.756Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,farmer,smuggling,கடத்தல்,பறக்கும் படை,Fertilizer,உரம்,தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,பி.எஸ்.மாசிலாமணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/yfndpgd3/masilamani.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பி.எஸ்.மாசிலாமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/yfndpgd3/masilamani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>உரம்</h2><p>கரூர் மாவட்டம் செம்பிய நத்தம் ஊராட்சி, நல்லூரான் பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கிடங்கில், விவசாயிகளுக்கு  மானிய விலையில் வழங்கும்  ரசாயன உர முட்டைகளை வேறு தொழில் பயன்பாட்டிற்கு அனுப்பி கொண்டிருந்ததை, கரூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தலைமையிலான குழு, கிடைத்த ரகசிய தகவல் அறிந்து குறிப்பிட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்து, உர மூட்டைகளை கைப்பற்றி இருக்கிறார்கள் என செய்தி வந்துள்ளது.</p><p>இங்கு மொத்தம்  837 யூரியா மூட்டைகளில் 537 மூட்டைகள் டாரஸ் லாரியில் ஏற்றப்பட்ட நிலையிலும். மேலும் 300 மூட்டைகள் ஏற்ற வேண்டிய  நிலையிலும்  கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அனுப்பி வைத்த டி.ஏ.பி மூட்டைகளில் எஞ்சிய 8 மூட்டைகளும் இருந்துள்ளன. விவசாயிகளின் நாடு தழுவிய நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவாக தான் வேளாண் பயன்பாட்டிற்கான உரங்களுக்கு அரசு மானியம் வழங்கி வருகிறது.</p><h2>மத்திய பட்ஜெட்</h2><p>2026-27 ஆம் நிதி ஆண்டிற்கு மத்திய பட்ஜெட்டில் 1.75 லட்சம் கோடி ரூபாய்  இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் யூரியாவுக்கு மட்டுமே ரூ1.17 லட்சம் கோடி. றி/ரி மற்றும் பொட்டாஸ், டி.ஏ.பி.. உரங்களுக்கு ரூ 54,000 கோடி மானிய ஒதுக்கீடு ஆகும். இறக்குமதி உரம் விலை ஏறுகிற நிலையில், விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இன்றி உரிய விலையில் கிடைக்கவே இந்த ஏற்பாடு ஆகும்.</p><p>அரசின் மானிய திட்டத்தில் விவசாயிகளுக்காகவே வழங்கப்படுகிற இரசாயன உர மூட்டைகளை மஞ்சள் நிற சாக்குகளில் இருந்து மாற்றி, வேறொரு கம்பெனி பெயரில் வெள்ளை நிற சாக்கில் நிரப்பி இங்கு ஏற்றப்பட்டுள்ளது. எடை மிஷின்கள், டாக்கிங் உள்ளிட்ட தளவாடங்களும் அங்கு இருந்துள்ளன. இந்நிகழ்வுகளை பார்க்கும் பொழுது நீண்ட காலம் இப்படி இங்கு நடப்பதாக தெரிகிறது. உரம் தயாரிக்கிற ஆலைகளுக்கு  நேராக மானியத்தை அனுப்பி விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.</p><p>விற்பனை கடைகளில் உரம் வாங்குகிற பொழுது அரசின் மானியம் போக தான் இதற்கான எஞ்சிய தொகை  பெறப்படுகிறது. விவசாயிகள் உரம் வாங்குகிற பொழுது அவர்கள் விவசாயிகளுக்கான அடையாள அட்டைகளை காட்ட வேண்டும் என்று நிபந்தனை இருக்கிறது. ஆனால் போலி நிறுவனங்களுக்கு அடையாளம்  இல்லாமல் ஆயிரக்கணக்கான மூட்டைகள் எப்படி போகிறது.</p><h2>மோசடி</h2><p>மானிய உர மூட்டைகளை வேறு பயன்பாட்டிற்கு கடத்துவது, கலப்படம் செய்வது தொடர் நிகழ்வாகிறது. இவர்களுக்கு மொத்த ஏஜென்சியிலிருந்தே நேரடியாக உரங்கள் வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது. மேலும் போலியான விற்பனை நிறுவனங்களை தொடங்கி, உர மூட்டைகளை பெற்று மோசடிக்கு பயன்படுத்தப்படுத்துவதாக தெரிகிறது. இப்படியான செயல்களை தடுத்திடவே ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண் துணை இயக்குனர் தலைமையில் உர தர கட்டுப்பாட்டு கண்காணிப்பு குழு பறக்கும் படையாக உள்ளது.. விதை மற்றும் உர மோசடிகளை தடுக்கவே இதன் முக்கிய பணி. இது பலன் இல்லாத பறக்க இயலாத படை.</p><p>சேலத்தில் போலி உரங்களை தயாரித்து விற்பனைக்கு அனுப்பி இருந்த இடத்தில்  கண்டுபிடிப்பு, ட்டிரீ பாண்ட் பசை தயாரிக்க கேரளாவிற்கு லாரிகளில் அனுப்பியது, மண்ணைக் கலந்து உரம் என விற்றது. இயற்கை உரம் என போலியை விற்றது. இவர்கள் மீதான நடவடிக்கை என்னவாயிற்று வெளியே வராது. ஆனால் இது எல்லாமே பொதுமக்கள் தலையீட்டில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. பட்டினிலிருந்து மக்களை பாதுகாத்திட உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கான உரங்களில் கூட்டு மோசடிகள் தொடர்வதை உடன் தடுத்திட அரசின் கறார் நடவடிக்கை வேண்டும்.</p><h2>நடவடிக்கை</h2><p>வேறு மாவட்ட  வேளாண் துணை இயக்குனர்களை இக்குழுவில் தலைமையேற்று ஆய்வு செய்திட பொறுப்பு அளிக்க  வேண்டும். மின் திருட்டை கண்டுபிடிக்க ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை நியமித்துள்ளது போல் இக்குழுவில் இவர் ஒருவரை இணைக்க வேண்டும். மோசடியில் ஈடுபடும்  விற்பனை  கடைகளுக்கு தற்காலிக தடை விதிப்பதை நிறுத்தி, நிரந்தரமாக அந்நிறுவனத்தை மூடிடவும், இதன்உரிமையாளர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுத்து தண்டனை கிடைக்கச் செய்யவும் வேண்டும். உர கடத்தலுக்கு உதவியவர்கள், ஈடுபட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள், துணை போனவர்கள் ஆகியோரை  கைது செய்து குற்றவியல் நடவடிக்கை மூலம் கடும் தண்டனை விதித்திட உரிய சட்ட நடவடிக்கை எடுத்திடவேண்டும்.</p><h2>ஆய்வு</h2><p>உணவு கலப்படம் போல உணவை தயாரிக்கும் உரத்திலும் கலப்படம் என்கிற நிலையில் குற்றவியல் நடவடிக்கை வேண்டும். உயர்நிலை அலுவலர்களைக் கொண்ட பல குழுக்களை உடனடியாக அமைத்து மாநில அளவில் உடன் ஆய்வு செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தலில் த.வெ.க.வுக்கு எதிராக பிரசாரம்.. தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-farmers-association-announces-campaign-against-tvk-in-the-by-election</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-farmers-association-announces-campaign-against-tvk-in-the-by-election#comments</comments><guid isPermaLink="false">b67a699a-b3a7-4a07-84ce-1cd13a9da585</guid><pubDate>Thu, 10 Sep 2026 10:42:00 +0000</pubDate><atom:updated>2026-09-10T10:42:00.505Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Tamilnadu,தமிழகம்,farmers association,இடைத்தேர்தல்,Tamil Nadu Farmers Association,தமிழக விவசாயிகள் சங்கம்,byelection,பயிர்க்கடன் தள்ளுபடி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/upa85zik/kowe.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/upa85zik/kowe.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாத <a href="https://www.dailythanthi.com/topic/tvk">தமிழக வெற்றிக் கழகத்திற்கு</a> எதிராக, வரவிருக்கும் இடைத்தேர்தலில் தீவிரப் பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்று உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.</p><h2>விவசாயிகளை ஏமாற்றிவிட்டது</h2><p>இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் வேலுசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது, ”தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் சிறு, குறு விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்கள் அனைத்தும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். பெரு விவசாயிகளின் கடன்களில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்” என <a href="https://www.dailythanthi.com/topic/tvk">த.வெ.க.</a> வாக்குறுதி அளித்திருந்தது.  ஆனால், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த பிறகு, பல்வேறு கடுமையான நிபந்தனைகளை விதித்து முழுமையாக கடன்களை தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை ஏமாற்றிவிட்டது.</p><h2>பெரும் அதிர்ச்சி</h2><p>தமிழ்நாட்டில் வறட்சி நிலவும் சூழலில், பாகுபாடின்றி அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும்<a href="https://www.dailythanthi.com/topic/tvk"> த.வெ.க. அரசு</a> கண்டு கொள்ளவில்லை. இது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p><h2>தீவிரப் பிரசாரம்</h2><p>எனவே, அரசின் இந்த விவசாய விரோதப் போக்கிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அடுத்த மாதம் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில், விவசாயிகளை ஒன்றுதிரட்டி <a href="https://www.dailythanthi.com/topic/tvk">த.வெ.க.வை</a> தோற்கடிக்க தீவிரப் பிரசாரம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சென்னை குடிநீர் வாரியம் சார்பில் நாளை மறுநாள் குறை தீர்க்கும் கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/grievance-redressal-meeting-to-be-held-by-the-chennai-water-board-the-day-after-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/grievance-redressal-meeting-to-be-held-by-the-chennai-water-board-the-day-after-tomorrow#comments</comments><guid isPermaLink="false">666cb47a-b045-4d78-a986-03c9d7e80469</guid><pubDate>Thu, 10 Sep 2026 10:22:16 +0000</pubDate><atom:updated>2026-09-10T10:22:16.605Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,தமிழகம்,Drinking Water Board,குடிநீர் வாரியம்,Chennai Drinking Water Board,சென்னை குடிநீர் வாரியம்,மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்,Chennai Water Board</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/37wyafg2/ch.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/37wyafg2/ch.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/chennai">சென்னை</a> குடிநீர் வாரிய குறை தீர்க்கும் கூட்டம் 12.09.2026 (சனிக்கிழமை) அன்று குடிநீர் வாரிய 15 பகுதி அலுவலகங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>குறை தீர்க்கும் கூட்டம்</h2><p>இதுதொடர்பாக <a href="https://www.dailythanthi.com/topic/chennai">சென்னை</a> குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p><a href="https://www.dailythanthi.com/topic/chennai">சென்னை</a> குடிநீர் வாரியம் சார்பில், குறை தீர்க்கும் கூட்டங்கள் இரண்டாவது சனிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதத்திற்கான குறை தீர்க்கும் கூட்டம் 12.09.2026 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை குடிநீர் வாரிய அனைத்து பகுதி அலுவலகங்களில் நடைபெறும்.</p><p>இந்த குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும் பகுதி அலுவலகங்கள் விபரம்:</p><p>பகுதி அலுவலகம்-1 - திருவொற்றியூர்</p><p>பகுதி அலுவலகம்-2 - மணலி</p><p>பகுதி அலுவலகம்-3 - மாதவரம்</p><p>பகுதி அலுவலகம்-4 - தண்டையார்பேட்டை</p><p>பகுதி அலுவலகம்-5 - இராயபுரம்</p><p>பகுதி அலுவலகம்-6 - திரு.வி.க.நகர்</p><p>பகுதி அலுவலகம்-7 - அம்பத்தூர்</p><p>பகுதி அலுவலகம்-8 - அண்ணா நகர்</p><p>பகுதி அலுவலகம்-9 - தேனாம்பேட்டை</p><p>பகுதி அலுவலகம்-10 - கோடம்பாக்கம்</p><p>பகுதி அலுவலகம்-11 - வளசரவாக்கம்</p><p>பகுதி அலுவலகம்-12 - ஆலந்தூர்</p><p>பகுதி அலுவலகம்-13 - அடையாறு</p><p>பகுதி அலுவலகம்-14 - பெருங்குடி</p><p>பகுதி அலுவலகம்-15 - சோழிங்கநல்லூர்</p><p>இந்த குறை தீர்க்கும் கூட்டங்கள் வாயிலாக பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பகுதி அலுவலகங்களிலும் ஒரு மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும். </p><h2>குடிநீர், கழிவுநீர் புதிய இணைப்புகள்</h2><p>எனவே, இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர், கழிவுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்கள், நிலுவையில் உள்ள குடிநீர், கழிவுநீர் புதிய இணைப்புகள் தொடர்பான சந்தேகங்களை நேரில் மனுக்கள் வாயிலாக தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், மழைநீர் சேகரிப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான விளக்கங்களையும் இக்கூட்டத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்-இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-plan-to-set-up-the-secretariat-in-pattinapakkam-should-be-abandoned-communist-party-of-india</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-plan-to-set-up-the-secretariat-in-pattinapakkam-should-be-abandoned-communist-party-of-india#comments</comments><guid isPermaLink="false">3571fba6-08c7-420f-8c63-9ad915e0424b</guid><pubDate>Thu, 10 Sep 2026 10:10:23 +0000</pubDate><atom:updated>2026-09-10T10:10:23.670Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Communist Party of India,பட்டினப்பாக்கம்,Pattinapakkam,இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி,M Veerapandian,மு. வீரபாண்டியன்,புதிய தலைமைச் செயலகம்,new Secretariat</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/9jadwwz2/veerapandian.gif" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு. வீரபாண்டியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/9jadwwz2/veerapandian.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை,பட்டினப்பாக்கத்தில் முன்மொழியப்பட்ட தலைமைச் செயலகத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D">மு. வீரபாண்டியன் </a>கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>புதிய தலைமைச் செயலகம்</h2><p>பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைப்பதற்கான தமிழக அரசின் முன்மொழிவு தவறானது. மீனவ மக்களின் வாழ்வாதார உரிமைகள், கடலோரச் சூழலியல், காலநிலைப் பாதிப்புகள், பொதுமக்களின் கடற்கரை அணுகல் மற்றும் அரசின் முக்கியமான நிர்வாக நிறுவனத்தின் பாதுகாப்பு ஆகியவை பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கும். தமிழ்நாடு அரசு இம்முன்மொழிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்துகிறது.</p><p>முல்லைக்குப்பம், சீனிவாசபுரம், ராஜீவ்காந்தி நகர், பவானி குப்பம், இருதயபுரம், செல்வராஜபுரம், டூமிங் குப்பம், நொச்சி நகர் மற்றும் நொச்சிக்குப்பம் உள்ளிட்ட ஒன்பது மீனவக் குடியிருப்புகள், முன்மொழியப்பட்ட இடத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அமைந்துள்ளன. சுற்றியுள்ள மீனவக் குடியிருப்புகளின் மக்கள், கடலை வெறும் குடியிருப்புப் பகுதியாக மட்டும் சார்ந்திருக்கவில்லை. அது அவர்களின் வாழ்வாதாரத்தின் அடித்தளமாகவும், பொது வளமாகவும் உள்ளது. மீன்பிடித்தல், படகுகளின் இயக்கம், மீன் இறக்குதல், வலைகள் மற்றும் மீன்களை உலர்த்துதல், மீன் விற்பனை, சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு மீன்பிடி சார்ந்த தொழில்கள் இக்கடலோரப் பகுதியைச் சார்ந்தே நடைபெறுகின்றன.</p><h2>கடலோரப் பகுதியை பாதிக்கும்</h2><p>இத்தகைய குறுகிய கடலோரப் பகுதியில் மிகப்பெரிய நிர்வாக வளாகம், அதனுடன் சாலைகள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகள் அமைக்கப்படுவது, ஏற்கனவே நெருக்கடிக்குள்ளாகியுள்ள கடலோரப் பகுதியை மேலும் பாதிக்கும். 1,500-க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் இடம்பெயர வேண்டிய நிலைக்கும், பொருளாதார ரீதியாகவும் வாழ்வாதார ரீதியாகவும் பாதிக்கப்படும் நிலைக்கும் தள்ளப்படுவர். உயர் பாதுகாப்பு கொண்ட அரசின் தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்றத்தின் வருகையால் தடுப்புகள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாகவும், முக்கியப் பிரமுகர்களின் வாகனப் போக்குவரத்து, காவல்துறை மற்றும் பாதுகாப்புப் பணியமர்த்தல் போன்றவை தவிர்க்க முடியாததாகும். இதன் விளைவாக, மக்களுக்கு பொதுவாகச் சொந்தமான கடற்கரைப் பகுதி படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்ட நிர்வாக - பாதுகாப்பு வளாகமாக மாறும் அபாயம் உள்ளது. மேலும், காலநிலை அவசரநிலை நிலவும் இன்றைய சூழலில் இத்தகைய இடத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது பொருத்தமற்றதும் ஆபத்தானதுமாகும். </p><h2>பசுமை வளாகம்</h2><p>சென்னையின் கடலோரப் பகுதிகள் புயல்கள், கடல் எழுச்சி, வெள்ளம், கடலோர அரிப்பு மற்றும் கடல் மட்ட உயர்வு போன்றவற்றால் அதிகரித்து வரும் ஆபத்தை எதிர்கொள்கின்றன. எனவே, அரசு பாதுகாப்பான மாற்று இடங்களை ஆய்வு செய்ய வேண்டும். சுற்றுச்சூழல் ஆவணங்களில், இப்பரந்த கடலோரப் பகுதி சுற்றுச்சூழல் பாதிப்புக்கு எளிதில் உள்ளாகும் பகுதிகளும் ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் முட்டையிடும் பகுதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. முன்மொழியப்படும் வளாகத்தை “பசுமை வளாகம்” என்று அழைப்பதால் மட்டும் அது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகிவிடாது. நிலையான வளர்ச்சி என்பது பசுமைக் கட்டிடத்தை உருவாக்குவதில் தொடங்குவதில்லை; சுற்றுச்சூழல் மற்றும் சமூக ரீதியாக பொருத்தமான இடத்தைத் தேர்ந்தெடுப்பதில்தான் தொடங்குகிறது. </p><p>மாநிலத்திற்கு நவீன நிர்வாகக் கட்டமைப்பு தேவைப்படலாம். ஆனால் நிர்வாக நவீனமயமாக்கல் என்ற பெயரில் உணர்திறன் மிக்க கடலோரப் பகுதியை ஆக்கிரமிப்பதும், மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதும், பொதுமக்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதும், ஜனநாயகப் பொது வெளியைச் சுருக்குவதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, தமிழ்நாடு அரசு பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் திட்டவட்டமாக வலியுறுத்துகிறது. பாதுகாப்பான, சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் சமூக ரீதியாகப் பொருத்தமான மாற்று இடங்களை அரசு பரிசீலிக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அக்டோபர் 3-ந்தேதி முதல் வேளாங்கண்ணி பேராலயம் 24 மணி நேரமும் திறந்திருக்கும்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/velankanni-basilica-to-remain-open-24-hours-from-october-3</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/velankanni-basilica-to-remain-open-24-hours-from-october-3#comments</comments><guid isPermaLink="false">b4113d95-ab74-4c6d-b1fc-d9f8d43ee353</guid><pubDate>Thu, 10 Sep 2026 10:05:15 +0000</pubDate><atom:updated>2026-09-10T10:05:15.678Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nagapattinam,நாகப்பட்டினம்,Velankanni,வேளாங்கண்ணி,வேளாங்கண்ணி பேராலயம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/63yd74l0/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ வேளாங்கண்ணி பேராலயம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/63yd74l0/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாகப்பட்டினம்,</p><p>அக்டோபர் 3-ந்தேதி முதல் வேளாங்கண்ணி பேராலயம் 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்று தஞ்சை மறை மாவட்ட ஆயர் அறிவித்துள்ளார்.</p><h2>புனித ஆரோக்கிய அன்னை பேராலயம்</h2><p>நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். மேலும் இந்த ஆலயம் ஆன்மீக தலமாகவும் விளங்குகிறது.</p><h2>10 நாள் திருவிழா</h2><p>இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த (ஆகஸ்ட்) மாதம் 29-ந்தேதி கொடியேற்றுடன் தொடங்கி செப்டம்பர் 8-ந்தேதி வரை 10 நாள் வெகு விமரிசையாக நடைபெற்றது.</p><h2>24 மணி நேரமும் திறந்திருக்கும்</h2><p>இந்த நிலையில் வருகிற அக்டோபர் 3-ந்தேதி முதல் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் பக்தர்களின் வழிபாட்டுக்காக திறந்திருக்கும் என்று தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் தெரிவித்துள்ளார். பக்தர்கள் எந்த நேரத்திலும் பேராலயத்திற்கு வந்து பிரார்த்தனை செய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக ஆயர் சகாயராஜ் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: சென்னை - நெல்லை இடையே சிறப்பு ரெயில் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-chaturthi-special-special-train-between-chennai-nellai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-chaturthi-special-special-train-between-chennai-nellai#comments</comments><guid isPermaLink="false">b9525995-a6dd-4b7c-910d-2d5edf74f0b4</guid><pubDate>Thu, 10 Sep 2026 10:04:45 +0000</pubDate><atom:updated>2026-09-10T10:04:45.324Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,நெல்லை,Nellai,தமிழகம்,சிறப்பு ரெயில்,Special Train ​,விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chathurthi</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/lpcv1o4s/train.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/lpcv1o4s/train.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை - நெல்லை இடையே <a href="https://www.dailythanthi.com/topic/special-train">சிறப்பு ரெயில்</a> இயக்கப்படுகிறது. </p><p>இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p>சென்னை எழும்பூரில் இருந்து செப்டம்பர் 12-ந் தேதி இரவு 11.50 மணிக்கு புறப்படும் <a href="https://www.dailythanthi.com/topic/special-train">சிறப்பு ரெயில்</a> (வண்டி எண் 06151) மறுநாள் காலை 11.15 மணிக்கு திருநெல்வேலியை (நெல்லை) சென்றடையும். </p><p>மறுமார்க்கத்தில், திருநெல்வேலியில் இருந்து செப்டம்பர் 14-ந் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் <a href="https://www.dailythanthi.com/topic/special-train">சிறப்பு ரெயில்</a> (06152) மறுநாள் காலை 10.15 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். </p><p>23 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், சோழவந்தான், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். </p><p>இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>புதிய தலைமைச் செயலகத் திட்டத்தை கைவிட வேண்டும் - ஜவாஹிருல்லா பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-secretariat-project-must-be-abandoned-jawahirullahs-statement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-secretariat-project-must-be-abandoned-jawahirullahs-statement#comments</comments><guid isPermaLink="false">d4447c6c-7858-4174-9801-e25f9c7499b3</guid><pubDate>Thu, 10 Sep 2026 09:57:40 +0000</pubDate><atom:updated>2026-09-10T09:57:40.353Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,Jawahirullah,ஜவாஹிருல்லா,புதிய தலைமைச் செயலகம்,new Secretariat</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/19ao01pi/kolai.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/19ao01pi/kolai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைக்கப்பட உள்ள இடம் தொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.</p><h2>ரூ.1,200 கோடி செலவில்</h2><p>கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a>, தமிழ்நாட்டுக்கு புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். இதற்காக சுமார் ரூ.1,200 கோடி செலவில் பிரம்மாண்டமான நிர்வாக வளாகம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. பட்டினப்பாக்கத்தில் அமைய உள்ள புதிய நிர்வாக வளாகம் சுமார் 20 லட்சம் சதுர அடி கட்டுமானப் பரப்பில் உருவாக்கப்பட உள்ளது. இதற்காக 26 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>ஆரம்பகட்ட நடவடிக்கைகள்</h2><p>தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சென்னை மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை தொடர்புடைய நிலங்கள் இந்தத் திட்டத்துக்காக பயன்படுத்தப்பட உள்ளன. திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளும் தொடங்கியுள்ளன. கட்டிட வடிவமைப்பு, விரிவான திட்ட அறிக்கை, கட்டுமான திட்டமிடல், சுற்றுச்சூழல் அம்சங்கள் மற்றும் போக்குவரத்து வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>புதிய நிர்வாக வளாகம்</h2><p>புதிய தலைமைச் செயலகம் எந்த இடத்தில் அமையும் என்பது தொடர்பாக நந்தம்பாக்கம், கிண்டி ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகின. தற்போது பட்டினப்பாக்கம் தேர்வு செய்யப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. கடலை ஒட்டிய முக்கியமான பகுதியில் இந்தப் புதிய நிர்வாக வளாகம் அமைய இருப்பதால், இடத் தேர்வு குறித்தும் விவாதங்கள் எழுந்துள்ளன. நிர்வாக ரீதியாக இது முக்கியமான திட்டமாக பார்க்கப்பட்டாலும், போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த அம்சங்கள் குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன.</p><h2>போக்குவரத்து நெரிசல்</h2><p>இதற்கிடையே, புதிய தலைமைச் செயலகத் திட்டத்திற்கு பட்டினப்பாக்கம் பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா பேசியதாவது:-</p><p>புதிய தலைமைச் செயலகத்தை பட்டினபாக்கத்தில் கட்டவிருப்பதாக த.வெ.க. அறிவித்திருக்கிறது. பட்டினபாக்கம் முதல்-அமைச்சர் விஜய் வீட்டிற்கு அருகில் இருக்கும் பகுதியாக இருக்கலாம், ஆனால் அப்பகுதியிலுள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை மிகவும் பாதிக்கும் செயலாக மாறிவிடும். ஜார்ஜ் கோட்டையில் தலைமைச் செயலகம், சட்டமன்றம் இயங்கி வருகிறது. அங்கு ஓரளவுக்கு போக்குவரத்து நெரிசல் இல்லை. பட்டினபாக்கத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழ்நிலை இருப்பதால் இந்தத் திட்டத்தை த.வெ.க. அரசு கைவிட வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>ஆவணி மாத அமாவாசையையொட்டி ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/devotees-thronged-rameswaram-agni-theertha-to-take-holy-dip-on-the-occasion-of-the-amavasya-of-the-month-of-avani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/devotees-thronged-rameswaram-agni-theertha-to-take-holy-dip-on-the-occasion-of-the-amavasya-of-the-month-of-avani#comments</comments><guid isPermaLink="false">f4950dd9-5600-4990-86ab-97052af5f369</guid><pubDate>Thu, 10 Sep 2026 09:46:55 +0000</pubDate><atom:updated>2026-09-10T09:46:55.585Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rameswaram,ராமேசுவரம்,amavasai,அமாவாசை,Avani month,ஆவணி மாதம்,Agni Theertha Beach,அக்னி தீர்த்த கடற்கரை,குவிந்த பக்தர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/w47p2v89/rameswaram.gif" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  ராமேசுவரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/w47p2v89/rameswaram.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>ஆன்மிகம் (Devotional)</category><content:encoded><![CDATA[ <p>ராமேசுவரம்,</p><p>தென்னகத்து காசியாக விளங்கும் ராமேசுவரத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உள்ளூர், வெளியூர், வட மாநிலங்களில் இருந்து வருகை தந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். குறிப்பாக அமாவாசை நாட்களில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும்.</p><h2>ஆவணி மாத அமாவாசை</h2><p>இக்கோவிலில் ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி மாத அமாவாசை, சர்வ அமாவாசை நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிவிட்டு, உயிரிழந்த தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் பூஜை செய்வது வழக்கம். அதன்படி ஆவணி மாத சர்வ அமாவாசையையொட்டி இன்று அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிவிட்டு சாமி தரிசனம் செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.</p><p>முன்னதாக அவர்கள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D">அக்னிதீர்த்த கடலில்</a> புனித நீராடியதை தொடர்ந்து கடற்கரையில் அமர்ந்து உயிரிழந்த தங்களது முன்னோர்களுக்கு புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பண பூஜை செய்து வழிபட்டனர். தொடர்ந்து கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளிலும் நீண்ட வரிசையில் நின்று புனித நீராடினர்.</p><h2>சாமி தரிசனம்</h2><p>பின்னர் கோவிலுக்கு சென்று சுவாமி, அம்பாளை நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும், ராமநாதசுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்ட நெரிசல் இன்றி தரிசனம் செய்திடும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்புடன் வரிசையாக சென்று சாமி தரிசனம் செய்தனர். மேலும், தனுஷ்கோடி, அரிச்சல்முனை பகுதிகளுக்கு சென்று கடல் அழகை ரசித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>மதுரைக்கு ரூ.4,899... கோவைக்கு ரூ.6,154! ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளைக்கு அன்புமணி கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-4899-to-madurai-rs-6154-to-coimbatore-anbumani-condemns-the-exorbitant-fares-charged-by-private-buses</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-4899-to-madurai-rs-6154-to-coimbatore-anbumani-condemns-the-exorbitant-fares-charged-by-private-buses#comments</comments><guid isPermaLink="false">2635437b-9bd9-4414-806b-b4b1b7e8fb1e</guid><pubDate>Thu, 10 Sep 2026 09:45:59 +0000</pubDate><atom:updated>2026-09-10T09:45:59.944Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி,Anbumani,சென்னை,ஆம்னி பஸ்,கண்டனம்,கட்டணம்,private bus,Charges,Condemn</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/chixnzu4/310.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/chixnzu4/310.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மதுரைக்கு ரூ.4,899... கோவைக்கு ரூ.6,154! ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளைக்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>தனியார் ஆம்னி பேருந்துகள்</h2><p>விநாயகர் சதுர்த்தி  தொடர் விடுமுறையையொட்டி சென்னையிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டிருக்கும் நிலையில், அதைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் ஆம்னி பேருந்துகள் வரலாறு காணாத கட்டணக் கொள்ளையில்  ஈடுப்பட்டிருக்கின்றன. அதைத் தடுக்க வேண்டிய கடமையையும், பொறுப்பையும் கொண்ட தமிழக அரசு, இந்தக் கட்டணக் கொள்ளைக்கு எதிராக இதுவரை  பெயரளவில் கூட எச்சரிக்கை  விடுக்காதது கண்டிக்கத்தக்கது.</p><h2>தொடர் விடுமுறை</h2><p>தமிழ்நாட்டில்  வரும் 14-ம் தேதி  விநாயகர்  சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளதையொட்டி அரசு விடுமுறை  விடப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய இரு நாள்களான சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் 3 நாள்கள் தொடர் விடுமுறையைக் கொண்டாடும் வகையில், வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வாழும் மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.  இதைப் பயன்படுத்திக் கொண்டு நாளை செப்டம்பர் 11-ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு சென்னையில் இருந்து புறப்படும் ஆம்னி பேருந்துகளில் திருச்சிக்கு ரூ.3,999 வரையிலும்,  மதுரைக்கு ரூ.4000 வரையிலும்,  கோவைக்கு ரூ.6154  வரையிலும் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.</p><h2>கட்டணக் கொள்ளை</h2><p>வரும் 14-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னைக்கு  திரும்ப திருச்சியிலிருந்து ரூ.4499, மதுரையிலிருந்து ரூ.4899, கோவையிலிருந்து ரூ.4799 வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னையிலிருந்து 300 கி.மீக்கும் குறைந்த தொலைவில் உள்ள கும்பகோணத்திற்கு செல்ல ரூ.3179 வரையிலும், அங்கிருந்து சென்னை திரும்ப ரூ.3419 வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  இந்த கட்டண விகிதத்தில் 4 பேர் கொண்ட குடும்பம் திருச்சிக்கு சென்று வர வேண்டும் என்றால் பேருந்துக்காக  ரூ.34 ஆயிரம் வரை செலவழிக்க வேண்டும். இது சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பும் மக்களில் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை விட  அதிக தொகையாகும்.  வரலாறு காணாத கட்டணக் கொள்ளைக்கு எடுத்துக்காட்டு இது தான்.</p><p>இந்தக் கட்டணக் கொள்ளையை தனியார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D">ஆம்னி பேருந்துகள் </a>ரகசியமாகக்கூட செய்யவில்லை.  இந்தக் கட்டண விவரங்கள் ஆன்லைன் முன்பதிவு இணைய தளங்களில்  வெளியிடப்பட்டு முன்பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன. அனைத்து ஊடகங்களிலும் இந்தக்கட்டணக் கொள்ளை தொடர்பாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனாலும் இந்தக் கட்டணக் கொள்ளையைத் தடுக்க  தவெக அரசு எதுவும் செய்யவில்லை.</p><p>திமுக ஆட்சியில் இருந்த ஐந்தாண்டுகளிலும் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் கொள்ளை கொடிகட்டி பறந்தது. இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியும், பிற கட்சிகளும் கண்டனம் தெரிவிக்கும் போது, பெயரளவுக்காகவாவது கட்டணக் கொள்ளையை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதைப் போல  திமுக அரசு காட்டிக்கொண்டது.  ஆனால், தவெக அரசு அதையும்  செய்யவில்லை. மாறாக, திமுக ஆட்சியில்  தனியார் ஆம்னி பேருந்துகளில் வசூலிக்கப்பட்டதை விட 20 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  இது தான் தவெக ஆட்சியில்  ஏற்பட்ட மாற்றமா?</p><h2>கட்டண நிர்ணயக் குழு</h2><p>தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை  ஆட்சியாளர்கள் தடுக்க வேண்டும்; அதற்காக கட்டண நிர்ணயக் குழுவை அமைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் பல முறை ஆணையிட்டிருக்கிறது. ஆனால், கடந்த காலங்களில் அந்த ஆணைகள் மதிக்கப்படவில்லை. ஆனால், தூய சக்தி என்று கூறிக் கொள்ளும் தவெக ஆட்சியிலும் அதே நிலை  தொடர்வது கவலையளிக்கிறது.  தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் இளைஞர் வெட்டிக் கொலை: இதுதான் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் அழகா? - அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-murdered-in-chennai-is-this-the-beauty-of-law-and-order-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-murdered-in-chennai-is-this-the-beauty-of-law-and-order-anbumani#comments</comments><guid isPermaLink="false">c5ed5848-6ae8-44f2-bddb-eae3c896018c</guid><pubDate>Thu, 10 Sep 2026 09:34:36 +0000</pubDate><atom:updated>2026-09-10T09:34:36.424Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,Chennai,சென்னை,murder,கொலை,கண்டனம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/y921dt64/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/y921dt64/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் கொலைகள் அதிகரித்து வருவது அச்சமும், கவலையும் அளிக்கிறது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த பிரதீப் ராஜ் என்ற துறைமுக ஒப்பந்த பணியாளர் அவரது வீட்டிற்கு அருகிலேயே கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். சென்னையில் இத்தகைய கொலைகள் அதிகரித்து வருவது அச்சமும், கவலையும் அளிக்கிறது. கொல்லப்ப்பட்ட பிரதீப் ராஜின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>பிரதீப் ராஜின் பெற்றோர் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் கடன் வாங்கியது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே பகை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் தரப்பிலிருந்து தமக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக காவல் துறையில் பிரதீப் ராஜ் புகார் செய்திருக்கிறார். சில வாரங்களுக்கு முன் இது தொடர்பாக திருவொற்றியூர் காவல் நிலையத்திலும், துணை ஆணையரிடமும் அவர் புகார் அளித்த நிலையில், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையினர், பிரதீப் ராஜையே பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.</p><p>அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் தமது உயிருக்கு அச்சுறுத்தல் விடப்படுவது குறித்து பிரதீப் ராஜ் மீண்டும் புகார் செய்துள்ளார். அப்போதும் அதன் மீது நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர், தமக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக ஊடகங்களிடம் பிரதீப் ராஜ் குற்றஞ்சாட்டியிருந்தார். அதற்கு அடுத்த நாளான நேற்றிரவு பிரதீப் ராஜ் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.</p><p>பிரதீப் ராஜ் அளித்த புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால்,  நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியவர்களுக்கு ஆதரவாக பிரதீப் ராஜையே காவல் ஆய்வாளர் மிரட்டியதுதான் எதிரிகளுக்கு துணிச்சலைக் கொடுத்துள்ளது. உயிருக்கு பாதுகாப்பு கேட்பவர்களுக்கு ஆதரவாக இல்லாமல், கொலை மிரட்டல் விடுப்பவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதுதான் காவல்துறையின் கொள்கையா? இந்த விஷயத்தில் கடமையை செய்யத் தவறிய ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>சென்னையில் கடந்த சில நாள்களுக்கு முன் ஆளும் தவெக நிர்வாகி உள்ளிட்ட இருவர் ஒரே நாளில் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அந்த பதட்டம் தணியும் முன்பே அடுத்த கொலை நிகழ்ந்துள்ளது. இதனால் அச்சமடைந்துள்ள மக்கள், இதுதான் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் அழகா? என வினா எழுப்புகின்றனர். சென்னையில் இனியும் இத்தகைய கொலைகள் நடக்காத வகையில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மக்களை உயிர் பயத்துடன் வாழும் நிலைக்குத் தள்ளியிருக்கிறார் முதல்-அமைச்சர் விஜய் - கனிமொழி தாக்கு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-has-pushed-people-to-live-in-fear-says-kanimozhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-has-pushed-people-to-live-in-fear-says-kanimozhi#comments</comments><guid isPermaLink="false">5157284f-4583-450a-8cb3-2aba2ec11530</guid><pubDate>Thu, 10 Sep 2026 09:29:32 +0000</pubDate><atom:updated>2026-09-10T09:31:01.797Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,கனிமொழி,சட்டம் ஒழுங்கு,Kanimozhi,Law and order,முதல்-அமைச்சர் விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/09hewufh/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கனிமொழி எம்.பி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/09hewufh/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மக்களை உயிர் பயத்துடன் வாழும் நிலைக்குத் தள்ளியிருக்கிறார் முதல்-அமைச்சர் விஜய் என்று திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>அம்பாசமுத்திரத்தில் திருமண மண்டப உரிமையாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள மற்றுமொரு அதிர்ச்சிச் செய்தி வந்திருக்கிறது.</p><p>முந்தைய ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று மக்களிடம் வாக்கு கேட்டு ஆட்சிக்கு வந்துவிட்டு, இன்று மக்களை உயிர் பயத்துடன் வாழும் நிலைக்குத் தள்ளியிருக்கிறார் முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய்.</p><p>முதல்-அமைச்சருக்கு காவல்துறையை கையாளத் திறனில்லை என்றால், அதைத் திறம்பட கையாளக்கூடிய வேறு யாரிடமாவது ஒப்படைத்துவிட்டுப் போகட்டும். மக்களின் உயிருடன் விளையாட வேண்டாம்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>என்ஜினீயரிங் துணை கலந்தாய்வு நிறைவு.. 8,985 இடங்கள் நிரப்பப்பட்டன!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/engineering-supplementary-counseling-concludes-8985-seats-filled</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/engineering-supplementary-counseling-concludes-8985-seats-filled#comments</comments><guid isPermaLink="false">e469022b-6811-4190-a858-8934113016c7</guid><pubDate>Thu, 10 Sep 2026 09:27:19 +0000</pubDate><atom:updated>2026-09-10T09:27:19.686Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Counseling,கலந்தாய்வு,என்ஜினீயரிங்,Engineering,Seats,நிறைவு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/45qgp9is/309.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ துணை கலந்தாய்வு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/45qgp9is/309.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு கடந்த ஜூலை மாதம் 13-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடந்தது. அதனை தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த ஜூலை மாதம் 20-ந்தேதி தொடங்கியது. 3 சுற்றுகளாக பொதுப்பிரிவு மற்றும் அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு பிரிவு ஆகியோர்களுக்கு கலந்தாய்வு கடந்த மாதம் (ஆகஸ்டு) 31-ந் தேதியுடன் நிறைவு பெற்றது.</p><h2>கலந்தாய்வு</h2><p>பொது பிரிவு கலந்தாய்வு 3 சுற்றுகளாக நடத்தப்பட்டதில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 167 இடங்கள் நிரப்பப்பட்டன. இது தவிர சிறப்பு பிரிவிலும் சில இடங்கள் நிரப்பப்பட்டன. இந்த சூழலில், துணை கலந்தாய்வு கடந்த 3-ந்தேதி தொடங்கி. 7-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த கலந்தாய்வு மூலம் 8 ஆயிரத்து 985 இடங்கள் நிரப்பப்பட்டதாகவும், அந்த வகையில் இந்த ஆண்டில் இதுவரை 1 லட்சத்து 53 ஆயிரத்து 280 பேருக்கு என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டிருப்பதாகவும் கலந்தாய்வை நடத்தும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.</p><h2>தொடக்கம்</h2><p>இதனைத் தொடர்ந்து எஸ்.சி.ஏ.-ல் இருந்து எஸ்.சி. ஆக மாற்றுவதற்கான கலந்தாய்வு நேற்று தொடங்குவதாக இருந்த நிலையில், அந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%80%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">கலந்தாய்வு </a>சில காரணங்களால் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. முதலில் விருப்ப இடங்களை தேர்வு செய்வதற்கு அவகாசம் வழங்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதா: ‘சமூக நீதிக்கு எதிரானது’-மு. வீரபாண்டியன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/private-universities-amendment-bill-against-social-justice-m-veerapandian-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/private-universities-amendment-bill-against-social-justice-m-veerapandian-condemns#comments</comments><guid isPermaLink="false">4b2bac7f-344d-4c11-bcad-b5a7d42588c5</guid><pubDate>Thu, 10 Sep 2026 09:27:17 +0000</pubDate><atom:updated>2026-09-10T09:27:17.898Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Private University,தனியார் பல்கலைக்கழகம்,Amendment Bill,திருத்த மசோதா,மு. வீரபாண்டியன்,M. Veerapandian</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/378jmp0m/veerapandian.gif" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு. வீரபாண்டியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/378jmp0m/veerapandian.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுளதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D">மு. வீரபாண்டியன்</a> கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>திருத்த மசோதா</h2><p>தமிழகச் சட்டப்பேரவையில் தனியார் பல்கலைக்கழகங்கள் தொடங்குவதற்கான குறைந்தபட்ச நிலம் மற்றும் வைப்புநிதி தேவைகளைக் குறைக்கும் வகையில் தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது உயர் கல்வியை தனியார் மயமாக்கும் முயற்சியாகும். தனியார் பல்கலைக் கழகங்களையும், வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களையும் ஊக்கப்படுத்தும் நடவடிக்கையாகும். ஏற்கனவே, தவெக அரசு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் சென்னையில் தனது புதிய சர்வதேச கிளை வளாகத்தை நிறுவ உள்ளது. இதற்கு தவெக அரசு அனுமதி வழங்கியுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தனியார் பல்கலைக் கழகங்களில் இட ஒதுக்கீடு நடைமுறை படுத்தப்படுவதில்லை.</p><h2>நிலத் தேவை குறைப்பு</h2><p>எனவே இது சமூக நீதிக்கும், அடித்தட்டு சமூக மாணவர்களுக்கும் எதிராக அமையும். வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மருத்துவப் பல்கலைக் கழகங்களை திறந்திட வசதியாக, நிலத் தேவை என்பது இம்மசோதா மூலம் குறைக்கப்பட்டுள்ளது. தனியார் பல்கலைக்கழகங்களைத்&nbsp;தொடங்க, குறைந்தது 100 ஏக்கர் தொடர்ச்சியான நிலம் வேண்டும் என்பது மாற்றப்பட்டுள்ளது. சென்னை பெருநகரப் பகுதிக்கு 12 ஏக்கரும், இதர மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு 18 ஏக்கரும், இதரப் பகுதிகளுக்கு 25 ஏக்கரும் என நிலத் தேவை குறைக்கப்பட்டுள்ளது.</p><p>தனியார் பல்கலைக் கழகங்களை நிறுவுவதற்கான&nbsp;நிரந்தர அறக்கட்டளை நிதி தேவையும் குறைக்கப்பட்டுள்ளது. உயர் கல்வித்துறையில் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்க்கும் நோக்குடன்&nbsp;இத்தகைய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நமது நாட்டில் உயர்கல்வி பயில தகுதியுள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, நமது வேலை வாய்ப்புகள், அறிவியல் தொழில்நுட்பத் தேவைகள்&nbsp;மற்றும் பொருளாதார வளர்ச்சி, பல்துறை உழைப்பு சக்திகளின் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு அரசே போதிய உயர் கல்வி நிறுவனங்களையும், கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் துவக்குவது தான் சரியாக இருக்கும்.</p><p>அதை விடுத்து தனியார் பல்கலைக்கழகங்களையும், வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களையும் அதிக அளவில் துவங்குவது கல்வியை தனியார்மயமாக்கிவிடும், வணிகமயமாக்கிவிடும், கார்ப்பரேட் மயமாக்கிவிடும்.&nbsp;மத்திய அரசில் பாஜக நீடிக்கும் இன்றைய நிலைமைகளில் கல்வியை காவி மயமாக்கிவிடும். இத்தகையப் போக்கு, அடித்தட்டு மாணவர்களின் நலன்களுக்கு எதிராக அமைந்துவிடும்.&nbsp;&nbsp;எனவே, மாணவர்களுக்கு எதிரான இந்தச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரச்சை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மடப்புரம் காவலாளி அஜித்குமார் வழக்கில் 4 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/murder-case-registered-against-four-police-personnel-in-the-madapuram-watchman-ajithkumar-case</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/murder-case-registered-against-four-police-personnel-in-the-madapuram-watchman-ajithkumar-case#comments</comments><guid isPermaLink="false">66d20e6c-552e-46ba-88c4-0ce8660aec59</guid><pubDate>Thu, 10 Sep 2026 09:24:27 +0000</pubDate><atom:updated>2026-09-10T09:24:27.106Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,அஜித்குமார்,AjithKumar,தமிழகம்,Madurai,மதுரை,காவலாளி,கொலை வழக்குப்பதிவு,மடப்புரம் அஜித்குமார்,Madapuram Ajithkumar</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/vu9adm5z/ajith.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/vu9adm5z/ajith.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா மடப்புரம் காளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.</p><h2>குற்றப்பத்திரிகை</h2><p>இந்த சம்பவத்தின்போது மானாமதுரை டி.எஸ்.பி.யாக இருந்த சண்முகசுந்தரம், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார், போலீஸ்காரர் இளையராஜா ஆகியோருக்கும் இந்த கொலையில் தொடர்பு இருப்பதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><h2>கொலை வழக்குப்பதிவு</h2><p>இந்நிலையில் இந்த வழக்கு <a href="https://www.dailythanthi.com/topic/madurai">மதுரை</a> மாவட்ட 5-வது கூடுதல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மானாமதுரை சரக டி.எஸ்.பி. சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார், சார்பு ஆய்வாளர் சிவக்குமார், தலைமை காவலர் இளையராஜா ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய மதுரை மாவட்ட 5-வது கூடுதல்  நீதிமன்ற நீதிபதி  தாமோதரன் உத்தரவிட்டார். </p><p>நீதிபதி  உத்தரவிட்ட நிலையில் டி.எஸ்.பி., ஆய்வாளர், சார்பு ஆய்வாளர், காவலர் ஆகிய 4 பேரும் நீதிமன்றத்தில் அமரவைக்கப்பட்டனர். சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையின்படி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content:encoded></item><item><title>கடன் விவகாரத்தில் கர்ப்பிணி, குழந்தை உயிரிழப்பு: முழுமையான விசாரணை நடத்த வேண்டும் - பிரேமலதா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pregnant-woman-child-die-in-loan-case-a-thorough-investigation-should-be-conducted-premalatha</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pregnant-woman-child-die-in-loan-case-a-thorough-investigation-should-be-conducted-premalatha#comments</comments><guid isPermaLink="false">936ab920-6dac-4861-aab9-4e499c0deb54</guid><pubDate>Thu, 10 Sep 2026 09:10:56 +0000</pubDate><atom:updated>2026-09-10T09:10:56.587Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>pregnant woman,பிரேமலதா விஜயகாந்த்,கர்ப்பிணி உயிரிழப்பு,PremalathaVijayakanth</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/l7elpjuz/premalatha1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரேமலதா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/l7elpjuz/premalatha1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கடன் விவகாரத்தில் கர்ப்பிணி, குழந்தை உயிரிழப்பு: முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D">பிரேமலதா விஜயகாந்த்</a> கூறியுள்ளார்.</p><p>இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>காஞ்சீபுரம் அருகே சிங்காடிவாக்கம் பழங்குடியினர் (இருளர்) காலனியைச் சேர்ந்த தேன்மொழி என்ற ஒன்பது மாத கர்ப்பிணிப் பெண்ணும், அவரது பச்சிளம் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மிருந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. தார்ப்பாய் கொட்டகையில் வசித்து வந்த தேன்மொழிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், மருத்துவமனைக்குச் செல்ல முயன்றபோது, அவர் மற்றும் அவரது கணவர் ஆனந்தன் ஆகியோர் விறகு வியாபாரி ஆறுமுகத்திடம் பெற்றிருந்த ரூ. 20,000 முன்பணக் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் மருத்துவமனைக்குச் செல்லக்கூடாது என தடுத்து நிறுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. </p><h2>கண்டனம்</h2><p>பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணை மருத்துவமனைக்குச் செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படும் இந்தச் செயல் மனிதாபிமானத்தையே கேள்விக்குறியாக்குகிறது. கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதற்காக, ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் உயிரைக் கூட பொருட்படுத்தாமல் தடுத்ததாகக் கூறப்படும் இந்தக் கொடூரமான செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். </p><h2>ஆழ்ந்த இரங்கல்</h2><p>இந்த சம்பவம் தொடர்பாக உரிய முறையில் முழுமையான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து, உட்சபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும். மேலும், உயிரிழந்த தேன்மொழி மற்றும் அவரது பச்சிளம் குழந்தையின் குடும்பத்திற்கு உரிய நிவாரணமும், இழப்பீடும் விறகு வியாபாரி ஆறுமுகம் வழங்க வேண்டும். உயிரிழந்த தேன்மொழி மற்றும் அவரது பச்சிளம் குழந்தையின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தேமுதிக சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சட்டென மாறும் வானிலை..! சென்னை உட்பட 17 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-in-17-districts-including-chennai-today</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-in-17-districts-including-chennai-today#comments</comments><guid isPermaLink="false">3c218aba-0617-480b-ba8a-906326e520e6</guid><pubDate>Thu, 10 Sep 2026 09:02:03 +0000</pubDate><atom:updated>2026-09-10T09:02:03.377Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,Rain,Weather,கனமழை,வானிலை,தமிழகம்,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,Weather update,வானிலை ஆய்வு மையம்,கன மழை,heavy rain,வானிலை அறிக்கை,weather condition,வானிலை தகவல்,வானிலை முன்னறிவிப்பு,Weather Status,வானிலை அறிவிப்பு,weather center,weather center information,வானிலை அப்டேட்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/bws6o6p3/rree.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/bws6o6p3/rree.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை உட்பட 17 மாவட்டங்களில் இன்று (வியாழன்) மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><h2>கனமழை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>சுமார் 0.9 கிமீ உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><p><strong>10-09-2026:</strong> தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">கன மழை</a></strong> பெய்யக்கூடும்.</p><p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p> <p><strong>11-09-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். </p><p>கடலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். </p><p>ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><h2>மழை</h2><p><strong>12-09-2026:</strong> மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தென் கடலோர தமிழகத்தில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>13-09-2026 மற்றும் 14-09-2026:</strong> தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>15-09-2026:</strong> விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>16-09-2026:</strong> தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p> <h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong><ins>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</ins></strong></p><p><strong>10-09-2026 முதல் 14-09-2026 வரை:</strong> உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.</p><p><strong><ins>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</ins></strong></p><p><strong>10-09-2026 முதல் 14-09-2026 வரை:</strong> உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று (10-09-2026):</strong> வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p><strong>நாளை (11-09-2026)</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>மீனவர்களுக்கான எச்சரிக்கை:</h2><p><strong><ins>வங்கக்கடல் பகுதிகள்:</ins></strong></p><p><strong>10-09-2026:</strong> அந்தமான் கடல் பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>11-09-2026:</strong> வடக்கு ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>12-09-2026 முதல் 14-09-2026 வரை:</strong> எச்சரிக்கை ஏதுமில்லை.</p><p>மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p><strong><ins>தமிழக கடலோரப்பகுதிகள் &amp; அரபிக்கடல் பகுதிகள்:</ins></strong> எச்சரிக்கை ஏதுமில்லை.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவுக்கு சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை: மருத்துவமனை அறிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-mla-vs-babu-undergoing-treatment-with-ventilator-support-hospital-statement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-mla-vs-babu-undergoing-treatment-with-ventilator-support-hospital-statement#comments</comments><guid isPermaLink="false">51a45a28-e138-4818-a1c7-5a17f79b532c</guid><pubDate>Thu, 10 Sep 2026 08:37:25 +0000</pubDate><atom:updated>2026-09-10T08:37:25.710Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Tamilnadu,தமிழகம்,hospital,மருத்துவமனை,உடல்நலக்குறைவு,வி.எஸ்.பாபு,tvk mla,தவெக எம்.எல்.ஏ.,V.S.Babu</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/fg0heptc/babu.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/fg0heptc/babu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>கொளத்தூர் த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவுக்கு சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><h2>உடல்நலக்குறைவு</h2><p>கொளத்தூர் தொகுதி <a href="https://www.dailythanthi.com/topic/tvk">த.வெ.க.</a> எம்.எல்.ஏ வி.எஸ். பாபு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்த வி.எஸ். பாபுக்கு இன்று அதிகாலை உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுதிணறல் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் வி.எஸ்.பாபு அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.</p><p>அமைந்தகரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வி.எஸ். பாபு உடல் நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.</p><h2>தீவிர சிகிச்சைப் பிரிவில்</h2><p>இந்நிலையில் அவரின் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.</p><p>அதில், “தமிழ்நாடு சட்டசபை உறுப்பினர் வி.எஸ்.பாபு, மூச்சுத் திணரல் காரணமாக செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் (Critical Care Unit), பல்வேறு மருத்துவத்துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய குழுவின் கண்காணிப்பில் உள்ளார்.</p><p>மருத்துவத் தேவைக்கேற்ப அவருக்கு உரிய சிகிச்சைகளும் சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவர் தொடர்ந்து தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>பட்ஜெட் கூட்டத்தொடர்</h2><p>தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினை எதிர்த்து <a href="https://www.dailythanthi.com/topic/tvk">த.வெ.க</a>. வேட்பாளராக போட்டியிட்ட வி.எஸ்.பாபு, 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அண்மையில் முடிந்த தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரிலும் வி.எஸ்.பாபு பங்கேற்றிருந்தார். </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/evdh44r3/mgm.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தலில் அதிமுகவை வெற்றி பெற வைப்போம் - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-ensure-aiadmks-victory-in-the-by-election-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-ensure-aiadmks-victory-in-the-by-election-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">3e67f3bb-717c-4f1e-a461-30c729069d02</guid><pubDate>Thu, 10 Sep 2026 08:37:08 +0000</pubDate><atom:updated>2026-09-10T08:37:08.269Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/syhef5wz/Untitled-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/syhef5wz/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் காலியாகவுள்ள 7 சட்டசபை தொகுதிகளில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 தொகுதிகளிலும் வருகிற அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், அக்டோபர் 9-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் களம் காண அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதன்படி, ஆளும் கட்சியாக த.வெ.க. மற்றும் தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.</p><h2>திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு</h2><p>இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடுமா? அல்லது புறக்கணிக்குமா? என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக, மற்ற கட்சிகளை முந்திக்கொண்டு தி.மு.க. முதல் கட்சியாக 2 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நேற்று அறிவித்தது. அதன்படி மதுராந்தகத்தில் பரந்தாமனும், தாராபுரத்தில் சுகன்யாவும் போட்டியிடுகிறார்கள்.</p><h2>தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு</h2><p>இந்த நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி மதுராந்தகத்தில் மரகதம் குமாரவேலும், தாராபுரத்தில் சத்தியபாமாவும் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.</p><h2>நயினார் நாகேந்திரன் பேட்டி</h2><p>இந்த நிலையில், இது குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது;-</p><p>“தவெகவின் குதிரை பேரத்தால் இந்த தேர்தல் மீண்டும் வந்துள்ளது. அதே வேட்பாளர்கள் மூன்று மாதத்திற்கு முன்பு வெற்றி பெற்று பின்னர் வெளியேறி தவெகவில் சேர்ந்து மீண்டும் அவர்களே வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிபெற வேண்டும். அதற்காக பாஜக முழு முனைப்பாக செயல்பட்டு அவர்களை வெற்றி பெற வைக்கும். அதிமுக வெற்றி பெற பாஜகவினர் முழுமனதுடன் பாடுபடுவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஆட்சியை ஒழுங்காக நடத்தட்டும்; அதன்பிறகு புதிய சட்டமன்றம் பற்றி தவெக சிந்திக்கலாம்: கனிமொழி எம்.பி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-the-government-run-the-administration-properly-only-then-can-tvk-consider-the-matter-of-a-new-legislative-assembly-kanimozhi-mp</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-the-government-run-the-administration-properly-only-then-can-tvk-consider-the-matter-of-a-new-legislative-assembly-kanimozhi-mp#comments</comments><guid isPermaLink="false">34d2213f-343c-415e-afc8-99a18a1a661b</guid><pubDate>Thu, 10 Sep 2026 08:26:58 +0000</pubDate><atom:updated>2026-09-10T08:26:58.162Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>கனிமொழி எம்.பி,Kanimozhi MP,Legislative Assembly,சட்டமன்றம்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/ihjvkqqd/15.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/ihjvkqqd/15.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி இன்று காலை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு நேரில் சென்று டி.ராஜாவை சந்தித்து நலம் விசாரித்தார். </p><p>தொடர்ந்து பத்திரிகையாளரை சந்தித்த கனிமொழி பேசியதாவது; ”ஒரு ஜனநாயக முறையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்களை தவெக ஆட்சி ராஜினாமா செய்ய வைத்தது. இந்த குதிரை பேரம் நடைபெற்றதன் விளைவாக, இன்று மீண்டும் ஒரு தேர்தல் வரக்கூடிய நிலையை உருவாக்கியுள்ளது. இவர்கள்தான் மக்களுக்கு நேர்மையான அரசியலைத் தரப்போகிறோம் என்று கூறிக்கொள்கிறார்கள். உண்மையில், இந்த இடைத்தேர்தல் என்பது முற்றிலும் அவசியமற்ற ஒரு தேர்தல்.</p><p>முன்னதாக மக்களின் மீதும், மக்களின் வரிப்பணத்தின் மீதும் கேடு விளைவிக்கும் அளவிற்கு, தேவையற்ற இந்த இடைத்தேர்தலை மக்கள் சந்திக்க வேண்டிய சூழலை தவெக தான் உருவாக்கியுள்ளனர். ஏற்கனவே ஒரு கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களை ராஜினாமா செய்ய வைத்து, இன்று மீண்டும் தேர்தல் நடத்த வேண்டிய நிலையை உருவாக்கியிருப்பது ஜனநாயகத்திற்கு எதிரான செயலாகும்.</p><p>தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் கொலைக் குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என பல்வேறு குற்றங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், முதலமைச்சர் சட்டமன்றத்தில் இதற்கு உரிய பதில் அளிப்பார் என்று எதிர்பார்த்தால், அவர் சினிமாவில் பேசுவதுபோல பஞ்ச் டயலாக்குகளைப் பேசுவதும், பழைய கதைகளைச் சொல்வதும், இல்லாத பொய்களை சட்டமன்றத்தில் அரங்கேற்றுவதுமாக இருக்கிறார். மக்களின் தேவைகள் மற்றும் மக்களின் பாதுகாப்பு குறித்து எந்தவித அக்கறையும் இல்லாமல் இந்த அரசு இயங்கி வருகிறது.</p><p>அதேபோல் தவெக இருக்கின்ற சட்டமன்றத்தில் ஆட்சியை ஒழுங்காக நடத்தட்டும். அதன்பிறகு புதிய சட்டமன்றத்தைப் பற்றி அவர்கள் சிந்திக்கலாம். கண்டிப்பாக சட்டமன்றத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றால், தலைவர் கலைஞர் கட்டிய சட்டமன்றக் கட்டிடம் ஏற்கனவே உள்ளது. பின்னர் அது மருத்துவமனையாக மாற்றப்பட்டிருந்தாலும், அந்த இடம் சட்டமன்றத்திற்காகவே கட்டப்பட்ட இடம். எனவே, அதைக்கூட மீண்டும் பயன்படுத்தலாம்.</p><p>எதை கேட்டாலும் நிதி இல்லை, நிதி இல்லை என்று கூறும் தவெக ஆட்சியாளர்கள், மக்களின் வரிப்பணத்தை வீணாக்குவதற்கான அனைத்து வழிகளையும் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இனிமேலாவது மக்களின் வரிப்பணத்தை வீணாக்காமல், அதை மக்களின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்.”</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>&apos;இனி டீசல் ரெயில் என்ஜின்களுக்கு &apos;குட்பை&apos;: 5,068 கி.மீ. நீள ரெயில் பாதைகள் 100 சதவீதம் மின்மயமாக்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/goodbye-to-diesel-train-engines-100-electrification-of-5068-km-of-railway-lines</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/goodbye-to-diesel-train-engines-100-electrification-of-5068-km-of-railway-lines#comments</comments><guid isPermaLink="false">30173ca1-59f3-448d-89c5-60446880ba29</guid><pubDate>Thu, 10 Sep 2026 08:26:29 +0000</pubDate><atom:updated>2026-09-10T08:26:29.223Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தெற்கு ரெயில்வே,Southern Railway,ரெயில்வே,ரெயில் என்ஜின்,train engine,Railway Lines,டீசல் ரெயில் என்ஜின்,மின்சார ரெயில் என்ஜின்,diesel train engine</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/7s3yihi8/CHENNAI-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/7s3yihi8/CHENNAI-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தெற்கு ரெயில்வே கட்டுப்பாட்டில் உள்ள 5,068 கி.மீ. நீளமுள்ள ரெயில் பாதைகள் 100 சதவீதம் மின்மயமாக்கப்பட்டுள்ளன. </p><h2>அனைத்து தரப்பினரும் விரும்பும் ரெயில்கள்</h2><p>ஏழை முதல் செல்வந்தர் வரை அனைவரும் பயணிக்க விரும்புவது ரெயில்களில் தான் என்றால் மிகையாகாது. முன்பதிவில்லாத ரெயில் பெட்டிகள் முதல், முதல் வகுப்பு ஏ.சி. பெட்டிகள் வரை பல்வேறு கட்டணங்களுடன் விதவிதமான வசதிகள் கொண்ட பெட்டிகள் ஒரே ரெயிலில் அடங்கியிருப்பது அதன் சிறப்பு.</p><p>அதுவும் ஒரே நேரத்தில் 1,500 பயணிகளுக்கும் அதிகமானவர்களை அழைத்து செல்லும் மிகச்சிறந்த போக்குவரத்து சாதனம் ரெயில்கள்தான். ஆரம்ப காலத்தில் நீராவி என்ஜின்களைக் கொண்டு ரெயில்கள் இயக்கப்பட்டன. பின்னர், தொழில்நுட்ப வளர்ச்சியில் நீராவி என்ஜின் டீசல் என்ஜினாக மாறியது.</p><h2>மின்சார என்ஜின்களாக உருமாற்றம்</h2><p>தற்போதைய அதிவேக தொழில்நுட்ப வளர்ச்சியில், டீசல் என்ஜின்கள் எல்லாம் மின்சார என்ஜின்களாக உருமாற்றம் பெற்றன. அதற்கு ஏற்ற வகையில், தமிழகம் உள்பட தெற்கு ரெயில்வே கட்டுப்பாட்டில் உள்ள ரெயில் பாதைகள் அனைத்தும் மின்மயமாக்கப்பட்டு வந்தன. அதாவது, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தெற்கு ரெயில்வேயில், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள ரெயில் பாதைகள் முழுவதும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளும் இடம்பெற்றுள்ளன.</p><h2>100 சதவீதம் மின்மயமாக்கல் நிறைவு</h2><p>அந்த வகையில், 5,068 கி.மீ. நீளமுள்ள ரெயில் பாதைகள் தெற்கு ரெயில்வே கட்டுப்பாட்டில் உள்ளன. தற்போது, இந்த பாதைகள் அனைத்தும் 100 சதவீதம் மின்மயமாக்கப்பட்டுள்ளன. இது தெற்கு ரெயில்வே வரலாற்றில் முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.</p><p>கடைசியாக, மின்மயமாக்கல் பணி தமிழகத்தில் உள்ள பட்டுக்கோட்டை - காரைக்குடி இடையிலான 71 கி.மீ. தூரத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. தெற்கு ரெயில்வேயின் முதன்மை தலைமை மின் பொறியாளர் கணேஷ், புதிதாக மின்மயமாக்கப்பட்ட பட்டுக்கோட்டை-காரைக்குடி பிரிவின் சட்டப்பூர்வ ஆய்வு பணிகளை நேற்று (செப்டம்பர் 9) வெற்றிகரமாக நடத்தி முடித்தார்.</p><h2>டீசல் என்ஜின்களுக்கு குட்பை</h2><p>தெற்கு ரெயில்வே கட்டுப்பாட்டில் உள்ள 5,068 கி.மீ. நீள ரெயில் பாதை வழித்தடமும் மின்மயமாக்கப்பட்டுள்ளதால், இனி டீசல் என்ஜின்களுக்கு வேலையே இல்லாத நிலை உருவாகியுள்ளது. மேலும், ரெயில் என்ஜின்கள் மாற்ற வேண்டிய சூழ்நிலை இனி இல்லாததால், பயண நேரமும் குறையும், ரெயில்களின் வேகத்தையும் அதிகரிக்க முடியும்.</p><p>இந்தியாவில், தெற்கு ரெயில்வே கட்டுப்பாட்டில் உள்ள ரெயில் பாதைகள் மின்மயம் ஆக்கும் பணிகள் 1931-ம் ஆண்டு மே 11-ம் தேதி தொடங்கியது. அன்றைய பம்பாயில் (மும்பை) இருந்த மின்சார ரெயில் சேவை சென்னைக்கும் வந்தது. சென்னையில் 1968-ம் ஆண்டு கடற்கரை - தாம்பரம் இடையே ரெயில்பாதை மின்மயம் ஆக்கப்பட்டு, புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>418 கிலோ புகையிலை பொருட்கள் காரில் கடத்தல்- வடமாநிலத்தவர்கள் உள்பட 3 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-418-kg-of-tobacco-products-smuggled-in-a-car-3-people-including-those-from-the-northern-states-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-418-kg-of-tobacco-products-smuggled-in-a-car-3-people-including-those-from-the-northern-states-arrested#comments</comments><guid isPermaLink="false">43b92179-957a-4cc8-8078-d61f98ad903d</guid><pubDate>Thu, 10 Sep 2026 08:25:07 +0000</pubDate><atom:updated>2026-09-10T08:25:07.378Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Seizure,பறிமுதல்,Car,கார்,smuggling,கடத்தல்,Kovilpatti,கோவில்பட்டி,3 arrested,3 பேர் கைது,Tobacco products,புகையிலை பொருட்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/wf9kejp9/418-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 418 கிலோ புகையிலை பொருட்கள் காரில் கடத்தல்- வடமாநிலத்தவர்கள் உள்பட 3 பேர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/wf9kejp9/418-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் 418 கிலோ தடை செய்யப்பட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">புகையிலை பொருட்களைக்</a> காரில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">கடத்தி</a> வந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">வடமாநிலத்தவர்கள்</a> உள்பட 3 பேரை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர்.</p><h2>போலீசார் வாகன சோதனை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF">கோவில்பட்டி</a> உட்கோட்டம், கொப்பம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈராச்சி-துறையூர் செல்லும் ரோடு பகுதியில் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் தலைமையிலான போலீசார் இன்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.</p><h2>418 கிலோ புகையிலை பொருட்கள்; கார் பறிமுதல்</h2><p>அந்த சோதனையில் காரில் சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்ட, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. காரில் இருந்த 418 கிலோ 464 கிராம் புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். </p><h2>வடமாநிலத்தவர்கள் உள்பட 3 பேர் கைது</h2><p>இந்த கடத்தலில் ஈடுபட்டது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த செல்லக்கனி மகன் கண்ணன் (வயது 40), குஜராத் மாநிலம், பனாஸ்காந்தா மாவட்டம், தீசா தாலுகாவைச் சேர்ந்த நர்ஷிபாய் மகன் கமலேஷ்சவுத்ரி(25), ராஜஸ்தான் மாநிலம், பாலி மாவட்டத்தைச் சேர்ந்த பலவன்சிங் மகன் ரவீந்திரசிங்(20) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>மிசா என்பது பஞ்சு மெத்தையில் உருள்வதல்ல; சிறையில் ரத்தம் சிந்திய நிஜம்: திமுக பதிலடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/misa-was-not-about-rolling-on-a-cotton-mattress-it-was-a-reality-involving-bloodshed-in-prison-dmk</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/misa-was-not-about-rolling-on-a-cotton-mattress-it-was-a-reality-involving-bloodshed-in-prison-dmk#comments</comments><guid isPermaLink="false">dc9bcd8c-b943-4357-b4b7-750e512ac821</guid><pubDate>Thu, 10 Sep 2026 07:58:31 +0000</pubDate><atom:updated>2026-09-10T07:58:31.644Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,M.K.Stalin,MISA,CM Vijay,மிசா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/9hrxkzew/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/9hrxkzew/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டசபையில் மிசா குறித்து முதல்-அமைச்சர் விஜய் பேசியதற்கு திமுகவினர் மற்றும் பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் வலுத்து வருகின்றனர். இன்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா நடவடிக்கையின்போது சிறையில் நடந்தது குறித்து வீடியோ வெளியிட்டு விளக்கமாக பேசினார்.</p><p>இதற்கு பதில் அளித்த தவெக ஐடி விங், “பல ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்ட “சிறை சென்ற தியாகி” என்ற போலி பிம்பம் உடைந்ததில் பதற்றம் பற்றிக்கொண்டதோ? என விமர்சித்தது. இந்த நிலையில், தவெக ஐடி விங்கிற்கு பதில் அளிக்கும் விதமாக திமுக ஐடி விங் காட்டமான பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளது.</p><p><strong>அதில் கூறப்பட்டிருப்பதாவது:-</strong></p><p>எச்சில் பழம் பொறுக்கும் அணில்கள் கண்ணை மூடிக்கொண்டால், உழைப்பாலும் தியாகத்தாலும் கட்டமைக்கப்பட்ட திமுகவின் வரலாறு இருண்டு போய்விடாது! ஊர் முழுவதும் பொய்யைப் பரப்பும் சாக்கடைக் கூட்டத்தை அம்பலப்படுத்த அரசியல் நாகரிகத்தோடு எங்கள் தலைவர் அளித்த விளக்கம், அந்தத் தற்குறிகளுக்கானது அல்ல; அவர்களின் பொய்யை நம்பி அப்பாவி மக்கள் மீண்டும் ஒருமுறை ஏமாந்து விடக் கூடாது என்பதற்காகத்தான்.</p><p>வரலாறு, தியாகம் என்றால் என்னவென்றே தெரியாமல், சமூக வலைதளங்களில் பொய்யையும் அவதூறையும் வாந்தியெடுக்கும் Abuser பொறுக்கிகள் நடத்தும் கட்சிதான் தவெக என்பதை மறுபடியும் தாங்கள் எடுத்த வாந்தியால் நிரூபித்து இருக்கிறார்கள். மூளையும் மூஞ்சியும் இல்லாமல், தந்தையின் தயவால் சினிமாவில் வளர்ந்து, ஏசி கேரவனுக்குள் பவுடர் பூசி, 'டூப்' வைத்துச் சண்டை போட்ட இந்தத் தற்குறிக்கு, சிறைக் கொட்டடியில் மிசா கைதிகள் போலீசாரின் பூட்ஸ் காலால் மிதிபட்டுச் சிந்திய ரத்தத்தின் மதிப்பு எப்படித் தெரியும்?</p><p>பத்திரிகையாளர்களை நேருக்கு நேர் சந்திக்கத் துப்பில்லாமல், சட்டமன்றத்தில் கேட்ட கேள்விக்கான பதிலுரைக்கு மூன்று நாட்கள் மனப்பாடம் செய்து, கேமரா முன்னால் கத்தி, கதறி நடிக்கும் தற்குறிக்கு நிஜ வலிகளின் உணர்வு எப்படிப் புரியும்? மிசா தியாகம் என்பது, சினிமாவில் நடிப்பது போல, பின்னாடி கையை வைத்து தடவிக்கொண்டு பஞ்சு மெத்தையில் உருள்வதல்ல; அது கொள்கை உறுதி மாறாமல், சிறைச்சாலையின் இரும்புக் கம்பிகளுக்கிடையே ரத்தம் சிந்திய நிஜம்!</p><p>Call sheet காப்பியையும், வருமானத்தை மறைத்து வாங்கிய 'IT Raid' காப்பியையும், வசனகர்த்தாக்கள் எழுதிக்கொடுக்கும் Script பேப்பரையும் மட்டுமே பார்த்துப் பழகிய மூளையே! உனக்கு எமர்ஜென்சி காலத்தில் நடந்த மிசா கொடூரங்களை ஆவணப்படுத்திய இஸ்மாயில் கமிஷன் அறிக்கை எனும் வரலாற்று ஆவணத்தைப் படித்துப் புரிந்துகொள்ளும் வக்கு எங்கே இருக்கப் போகிறது?</p><p>முத்தமிழறிஞர் கலைஞர் அணிந்திருந்த 'மஞ்சள் துண்டு', இந்த மாநிலத்தின் சமூகநீதியைக் காத்த சுயமரியாதைக் குறியீடு! ஆனால், இந்த 'டம்மி' முதல்-அமைச்சரின் மேக்கப்பை கலைத்துவிட்டால், உள்ளே மிஞ்சுவது வெற்று அரசியல் சூனியமும், நிர்வாகத் திறமையின்மையும்தான். நீங்கள் விமர்சிக்கும் அந்த 'கட்டுமரம்', இந்தியாவின் பல அரசியல் சுனாமிகளையே நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொண்டு தமிழ்நாட்டைக் காத்தது மாபெரும் வரலாறு! அதில் ஒன்றுதான் எங்கள் தலைவரும் கழக உடன்பிறப்புகளும் மிசா சிறைவாசத்தை எதிர்கொண்ட எமர்ஜென்சி எனும் நெருக்கடி நெருப்பாறு.</p><p>கொள்கை, சித்தாந்தம் எதுவும் இல்லாமல், தியாகிகளைக் கொச்சைப்படுத்தி அரசியல் செய்ய நினைக்கும் உங்கள் அநாகரிகச் சாக்கடையிலேயே, தவெக எனும் காகிதக் கப்பல் மூழ்கும்.</p><p>இதோ அந்த எமர்ஜென்சி காலத்து மிசா சிறைவாசம் தொடர்பான வராலற்று ஆதாரங்கள். குரைக்கும் விலங்குகளே கவ்விக் கொண்டு ஓடுங்கள். வரலாற்றில் நிலைத்து நிற்கும் மாபெரும் தியாகத்தை உருவ கேலி செய்த உங்களின் கேடுகெட்ட அற்பத்தனத்தை தமிழ்நாட்டு மக்கள் காரித் துப்புகிறார்கள். காரணம், இந்த ஆவணங்களில் உள்ள பதிவுகளை அவர்கள் தங்கள் நெஞ்சில் பதிய வைத்திருக்கிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வீரவசனம் பேசுவது மட்டும் போதாது..வீதியில் நடக்கும் படுகொலைகளைத் தடுத்து நிறுத்துங்கள்! - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/merely-mouthing-brave-words-is-not-enoughput-a-stop-to-the-murders-taking-place-on-the-streets-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/merely-mouthing-brave-words-is-not-enoughput-a-stop-to-the-murders-taking-place-on-the-streets-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">1c309664-a8d9-4aee-ab6f-04f45a40b8ce</guid><pubDate>Thu, 10 Sep 2026 07:53:45 +0000</pubDate><atom:updated>2026-09-10T07:53:45.725Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Chennai,சென்னை,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/od08kxas/nainar.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/od08kxas/nainar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டசபையில் வீரவசனம் பேசுவது மட்டும் போதாது ஜோசப் விஜய்யே; வீதியில் நடக்கும் படுகொலைகளைத் தடுத்து நிறுத்துங்கள் என தமிழக பாஜக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன்</a> தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>கந்துவட்டிக் கொடுமை</h2><p>தலைநகர் சென்னையில் சட்டம் - ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்து, கந்துவட்டி மாபியாக்களின் கூடாரமாகத் தமிழகம் மாறிவிட்டதற்குத் திருவொற்றியூரில் நிகழ்ந்த இளைஞர் பிரதீப்பின் கொடூரப் படுகொலையே அப்பட்டமான சாட்சியாக இருக்கிறது. "என்னை ரவுடிகள் கொல்லப் பார்க்கிறார்கள், காப்பாற்றுங்கள்" என்று காவல் நிலையத்தின் வாசலிலேயே நின்று ஊடகங்களிடம் கதறிய பிரதீப், அடுத்த நாளே நடுரோட்டில் விரட்டி விரட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது ஒட்டுமொத்த தமிழகத்தையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.</p><p>கந்துவட்டிக் கொடுமையால் தவித்து, உயிருக்கு அஞ்சிக் காவல் நிலையத்திற்குப் பாதுகாப்பு தேடிச் சென்ற இளைஞரைக் காப்பாற்ற முடியாத இந்த ஆட்சிக்கு எதற்கு ஒரு காவல்துறை? உதவி கேட்டுச் சென்றவரைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, காவல் ஆய்வாளரே கந்துவட்டிக் கும்பலுக்கு ஆதரவாக நின்று மிரட்டியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அதிர்ச்சியளிக்கிறது.</p><h2>படுகொலைக்கு பொறுப்பேற்க வேண்டும்</h2><p>ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே சமூக விரோதிகளிடம் அமைதியைத் தாரைவார்த்த தவெக அரசே இந்தப் படுகொலைக்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும். நடுரோட்டில் கதறும் அந்த ஏழைத் தாய்க்கு நீதி கிடைக்க, குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்வதுடன், ரவுடிகளுக்குத் துணைபோன காவல் ஆய்வாளர் மீதும் பணிநீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், சட்டசபையில் வீரவசனம் பேசுவதை விடுத்து, வீதியில் நடக்கும் கொலைவெறியாட்டங்களைத் தடுத்து மக்களின் உயிரைக் காப்பதில்தான் ஓர் ஆட்சியாளரின் உண்மையான நிர்வாகத் திறமை அடங்கியிருக்கிறது என்பதை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உணர வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தவெக வேட்பாளர்களின் வெற்றிக்கு விசிக ஆதரவு அளிக்கும்: திருமாவளவன் பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vck-will-extend-support-to-tvk-candidates-victory-thirumavalavan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vck-will-extend-support-to-tvk-candidates-victory-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">0318ab70-81ce-4ef7-b5f5-380f4d817cca</guid><pubDate>Thu, 10 Sep 2026 07:37:09 +0000</pubDate><atom:updated>2026-09-10T07:37:09.652Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,திருமாவளவன்,Thirumavalavan,இடைத்தேர்தல்,By-election</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/35aw3lgw/14.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/35aw3lgw/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;</p><p>"புதிதாக அமைந்துள்ள மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக்கூட்டணிக்கு இடதுசாரிகள் ஆதரவு உண்டு. தவெக வேட்பாளர்களின் வெற்றிக்கு விசிக ஆதரவு அளிக்கும். இடைத்தேர்தலில் யார் போட்டியிடுவது என முடிவுசெய்யும் அதிகாரம் தவெகவுக்கு உண்டு. அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. யாரை ஆதரிப்பது, வெற்றிபெற வைப்பது என அந்தந்த தொகுதி மக்கள் முடிவுசெய்வார்கள். </p><p>புதிய தலைமைச்செயலகம் அமையவுள்ள இடத்தில் வசிக்கும் மக்களின் கருத்து என்ன என்பது தெரியவில்லை. அந்த வட்டார மக்களின் கருத்தையும் அறிந்து தமிழக அரசு ஒரு முடிவுக்கு வரும் என நம்புகிறேன். </p><p>மிசா ஒடுக்குமுறைக்கு ஆளானவர் மு.க.ஸ்டாலின். அவர் கைதுசெய்யப்பட்டு கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார் என்பதை யாரும் மறுக்க இயலாது. முதல்-அமைச்சரின் பேச்சுக்கு எனது கருத்தை எனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளே. ’இதுபற்றி தான் பேசிய கருத்து உள்நோக்கத்தோடு சொல்லப்பட்டது அல்ல, இதனால் யார் மனதும் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக முதல்-அமைச்சர் செல்லி இருக்கிறார்.’ </p><p>தவெக தலைமையிலான கூட்டணி அறம் சார்ந்து இயங்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தின்  விழுமியங்களை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் கைகோர்த்து இருக்கிறோம். அதில் நாங்கள் கவனமுடம் இருக்கிறோம். தவெகவுக்கு ஆதரவு மட்டும் அளிக்காமல், அனுபவத்தின் அடிப்படையில் வழிகாட்டுதல் தருவோம் வழங்குவோம். ”</p><p>இவ்வாறு அவர் பேசினார். </p>]]></content:encoded></item><item><title>தவெகவை அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக அறிவித்தது தேர்தல் ஆணையம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/election-commission-has-recognized-tvk-as-a-state-party</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/election-commission-has-recognized-tvk-as-a-state-party#comments</comments><guid isPermaLink="false">f8145607-e4db-4595-bc48-16daadc71336</guid><pubDate>Thu, 10 Sep 2026 07:33:12 +0000</pubDate><atom:updated>2026-09-10T07:33:12.953Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,தமிழ்நாடு,தேர்தல் ஆணையம்,Election Commission of India</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/ynwjk25m/TVK.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/ynwjk25m/TVK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><p>தமிழக வெற்றிக்கழகம் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அக்கட்சிக்கு விசில் சின்னத்தையும் ஒதுக்கியுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு தவெக கட்சியை விஜய் தொடங்கினார். கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் தவெக 35 சதவீத வாக்குகள் பெற்று ஆட்சியையும் பிடித்தது. சந்தித்த முதல் தேர்தலிலேயே 1.8 கோடி வாக்குகளை பெற்று வியக்க வைத்த தவெக இரண்டே ஆண்டுகளில் மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது.</p><h2>8 சதவீதம் கட்டாயம்</h2><p>தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி ஒரு கட்சி மாநில கட்சியாக அங்கீகாரம் பெற குறைந்தபட்சம் 8 சதவீத வாக்குகளை பெறுவது அவசியம். தேசிய கட்சியாக அங்கீகாரம் பெற வேண்டும் என்றால், நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் பதிவான மொத்த வாக்குகளில் குறைந்தது 6% வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். இதனுடன் சேர்த்து, ஏதேனும் ஒரு மாநிலம் அல்லது மாநிலங்களில் இருந்து குறைந்தது 4 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.</p><h2>விசில் சின்னம் உறுதி</h2><p> தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 6 இல் இருந்து 7-ஆக உயர்ந்துள்ளது. திமுக, அதிமுக, சிபிஐ, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர், தேமுதிக ஆகிய 6 கட்சிகள் மாநில அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆகும். அந்த பட்டியலில் த.வெ.கவும் இணைந்துள்ளது. மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்று இருப்பதால், இந்த இடைத்தேர்தலில் த.வெ.க. வேட்பாளர்களுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்படுவது உறுதியாகி உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பிரசாதங்கள் விலை உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/price-hike-for-prasadam-at-thiruparankundram-murugan-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/price-hike-for-prasadam-at-thiruparankundram-murugan-temple#comments</comments><guid isPermaLink="false">a851c45f-e933-4a37-9fb7-1e2a008079e3</guid><pubDate>Thu, 10 Sep 2026 07:29:36 +0000</pubDate><atom:updated>2026-09-10T07:29:36.044Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thiruparankundram,திருப்பரங்குன்றம்,திருப்பரங்குன்றம் முருகன் கோவில்,பிரசாதம்,Thiruparankundram Murugan Temple,prasadam traditions</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/v4185vkr/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/v4185vkr/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>திருப்பரங்குன்றம்,</p><h2>திருப்பரங்குன்றம் கோவில்</h2><p>திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்களுக்காக கோவில் நிர்வாகத்தின் கீழ் நேரடியாக தயார் செய்து சர்க்கரை பொங்கல் (100 கிராம்), புளியோதரை (100 கிராம்), ஒரு வடை (50 கிராம்), ஒரு அப்பம் (50 கிராம்), ஒரு லட்டு (50 கிராம்) ஒரு முறுக்கு (50 கிராம்) ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. </p><p>இதற்காக கோவிலுக்குள் 3 இடங்களில் பிரசாதம் விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பிரசாதங்கள் கடந்த பல ஆண்டுகளாக தலா ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தன.</p><h2>திடீர் விலை உயர்வு</h2><p>இந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) முதல் பிரசாதங்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது வழக்கம் போல 50 கிராம் எடை கொண்ட ஒரு லட்டு ரூ.10-ல் இருந்து ரூ.20 ஆகவும், 50 கிராம் முறுக்கு ரூ.10-ல் இருந்து ரூ.25 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இது தவிர 50 கிராம் எடை கொண்ட மெதுவடை முதல் முறையாக மிளகு வடையாக தயாரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.10-ல் இருந்து ரூ.20 ஆக விலை உயருகிறது.</p><p>கடந்த காலங்களில் 100 கிராம் எடைகொண்ட புளியோதரையை 150 கிராமாக உயர்த்தி ரூ.10-ல் இருந்து ரூ.20 ஆக வும், 100 கிராம் பொங்கலை 150 கிராமாக உயர்த்தி ரூ.10-ல் இருந்து ரூ.20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில் துணை கமிஷனர் செல்வி கூறும்போது, தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் பிரசாதங்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பிரசாதங்களில் எள், ஓமம் சேர்க்கப்பட்டு தரமாகவும், ருசியாகவும், எடையின் அளவு சரியாகவும் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் என்றார்.</p><p><strong>இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது,</strong> கோவிலுக்கு வந்து சென்றதற்கு அடையாளமாகவும், கோவிலில் செய்யக்கூடிய பிரசாதம் ருசியாகவும், தரமாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையால் தான் வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு கோவிலில் இருந்து பிரசாதங்கள் வாங்குகிறோம். அதுவும் மிக குறைந்த விலை என்பதால் கூடுதலாக பிரசாதங்கள் வாங்கி செல்கிறோம். ஆனால் பிரசாதத்திற்கு விலை உயர்த்தப்படுகிறது என்பதை கேட்கும்போது வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>திருமண மண்டப உரிமையாளர் வெட்டிக்கொலை: மகள் கண்முன்னே 4 பேர் கும்பல் வெறிச்செயல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wedding-hall-owner-hacked-to-death-gang-of-4-commits-brutal-act-in-front-of-daughter</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wedding-hall-owner-hacked-to-death-gang-of-4-commits-brutal-act-in-front-of-daughter#comments</comments><guid isPermaLink="false">e05ead3e-f723-401b-b556-784aa1680881</guid><pubDate>Thu, 10 Sep 2026 07:23:31 +0000</pubDate><atom:updated>2026-09-10T07:23:31.544Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Tirunelveli,திருநெல்வேலி,arrested,வெட்டிக்கொலை,உரிமையாளர்,murdered,owner,kallidaikurichi,கல்லிடைக்குறிச்சி,மகள்,daughter,Wedding Hall,திருமண மண்டபம்,முன்னர்,in front</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/x75bpjef/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருமண மண்டப உரிமையாளர் வெட்டிக்கொலை, 2 பேர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/x75bpjef/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>டியூஷன் சென்டருக்கு மகளை அழைக்கச் சென்ற <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D">திருமண மண்டப</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D">உரிமையாளர்</a>, மகள் கண்முன்னே 4 பேர் கொண்ட மர்ம கும்பலால் சரமாரியாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">வெட்டிக்கொலை</a> செய்யப்பட்ட சம்பவம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">கல்லிடைக்குறிச்சி</a>யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><h2>திருமண மண்டப உரிமையாளர்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் கண்ணன் (வயது 52). இவர் அம்பாசமுத்திரத்தில் திருமண மண்டபம் நடத்தி வந்தார். தற்போது மனைவி சாந்தி மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மகளுடன் கல்லிடைக்குறிச்சி அகஸ்தியர் கோவில் சன்னதி தெரு பகுதியில் வசித்து வந்தார். இவரது மகள் அருகில் உள்ள ஒரு தெருவில் இயங்கி வரும் டியூஷன் சென்டரில் படித்து வருகிறார். </p><h2>மகள் கண்முன்னே தந்தை வெட்டிக்கொலை</h2><p>நேற்று இரவில் தனது மோட்டார் சைக்கிளில் மகளை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக கண்ணன் சென்றுள்ளார். டியூஷன் சென்டர் வாசலில் நின்று கொண்டிருந்த மகளை அவர் அழைத்தபோது, அங்கு மறைந்திருந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென கண்ணனை சூழ்ந்து கொண்டு, தாங்கள் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த வெட்டுக்காயமடைந்த கண்ணன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தந்தை தனது கண்முன்னே கொல்லப்பட்டதைக் கண்டு அவரது மகள் அலறித் துடித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அக்கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது.</p><h2>போலீசார் ஆய்வு</h2><p>இதுகுறித்த தகவலறிந்து திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஸ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி மற்றும் கல்லிடைக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குற்றவாளிகளைக் கண்டறிய, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். </p><h2>2 பேர் கைது</h2><p>இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இருப்பினும் முன்விரோதம், இடப்பிரச்சினை, சொத்து தகராறு அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பிச் சென்ற 4 பேர் கொண்ட மர்ம கும்பலை தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக தற்போது வெங்கடேஷ், சூர்யா இசக்கி ஆகிய 2 பேரை, 10 மணி நேரத்திற்குள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>பேரறிஞர் அண்ணா 118-வது பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/perarignar-annas-118th-birth-anniversary-mk-stalin-pays-tribute-by-garlanding-the-statue</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/perarignar-annas-118th-birth-anniversary-mk-stalin-pays-tribute-by-garlanding-the-statue#comments</comments><guid isPermaLink="false">64b73dcf-a171-4618-a47d-a3528b850ebf</guid><pubDate>Thu, 10 Sep 2026 07:06:35 +0000</pubDate><atom:updated>2026-09-10T07:06:35.611Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,Arignar Anna,பேரறிஞர் அண்ணா,M.K. Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/qmzga3cp/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/qmzga3cp/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பேரறிஞர் அண்ணா 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளதாக சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>மாலை அணிவித்து மரியாதை</h2><p>பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணாவின் 118வது ஆண்டு பிறந்த நாளான 15.9.2026 அன்று காலை 9.00 மணி அளவில் சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவச் சிலைக்கு கழகத் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின்</a> மற்றும் கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட கழக முன்னணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.</p><h2>நிர்வாகிகளுக்கு அழைப்பு</h2><p>கழக முன்னாள் அமைச்சர் பெருமக்கள், முன்னாள் - இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழக, பகுதிக் கழக, வட்டக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, இலக்கிய அணி, மாற்றுத் திறனாளிகள் அணி, தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, தொண்டர் அணி, விவசாய அணி, விவசாயத் தொழிலாளர் அணி, மீனவர் அணி, ஆதிதிராவிடர் நலக்குழு, மகளிர் தொண்டர் அணி, கலை,இலக்கிய பகுத்தறிவு பேரவை, மருத்துவர் அணி, பொறியாளர் அணி, சிறுபான்மையினர் நலஉரிமைப் பிரிவு, வர்த்தகர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, சுற்றுச்சூழல் அணி, அயலக அணி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி, கல்வியாளர்கள் அணி ஆகிய அனைத்து அணி நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஈரோடு: வாகனங்களை துரத்தி காட்டு யானை அட்டகாசம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-wild-elephant-rampages-chasing-vehicles</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-wild-elephant-rampages-chasing-vehicles#comments</comments><guid isPermaLink="false">4d895125-ba65-4f2a-9eef-2310d2694110</guid><pubDate>Thu, 10 Sep 2026 07:04:44 +0000</pubDate><atom:updated>2026-09-10T07:04:44.675Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Erode,ஈரோடு,காட்டு யானை,wild elephant</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/oh2j2tib/13.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/oh2j2tib/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>ஈரோடு,</p><p>ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானைகள், சிறுத்தைப்புலிகள், கரடிகள், காட்டெருமைகள், புலிகள் போன்ற விலங்குகள் உள்ளன. இதில் யானைகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகே உள்ள சாலையில் உலா வருவதும் வாகனங்களை வழிமறித்து உணவு ஏதாவது உள்ளதா என தேடுவதும் தொடர்கதையாகி வருகிறது.</p><p>இந்த நிலையில் நேற்று காலை ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை சாலையில் சுற்றித்திரிந்தது. மேலும் அந்த வழியாக வந்த வாகனங்களை துரத்தியது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை பின்னோக்கி இயக்கி அங்கிருந்து சென்றனர். அதன்பின்னர் யானை அங்கிருந்து காட்டுக்குள் சென்றது. </p> ]]></content:encoded></item><item><title>சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தனியார் கேண்டீன் உரிமம் ரத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/private-canteen-license-cancelled-at-rajiv-gandhi-government-hospital-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/private-canteen-license-cancelled-at-rajiv-gandhi-government-hospital-chennai#comments</comments><guid isPermaLink="false">ed434a0f-a735-4dfe-8f27-a1b013f7196e</guid><pubDate>Thu, 10 Sep 2026 07:03:33 +0000</pubDate><atom:updated>2026-09-10T07:03:33.442Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,canteen,கேண்டீன்,ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி,Rajiv Gandhi Hospital</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/ud39kami/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/ud39kami/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் செயல்பட்டு வரும் தனியார் கேண்டீன் மற்றும் டீ கடைகளில் உணவின் தரம் குறித்து புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி டாக்டர் தமிழ்ச்செல்வன் தலைமை யில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.</p><p>கேண்டீன் சமையலறை துர்நாற்றத்துடனும், சுகாதாரமின்றியும் இருந்தது. உடைந்த பாத்திரங்களில் உணவு சமைக்கப்பட்டதுடன், சுவர்கள் மற்றும் தரைப்பகுதிகளும் அசுத்தமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கேண்டீனின் உணவு உரிமம் ரத்து செய்யப்பட்டது. மேலும் உணவு வினியோகிக்கவும் தடை விதிக்கப்பட்டது.</p><p>இதேபோல் டீ கடையில் சர்க்கரையில் ஈக்கள், எறும்புகள் மொய்த்திருந்தன. பிரெட், சாண்ட்விச் உள்ளிட்டவற்றில் தயாரிப்பு, காலாவதி தேதிகள் குறிப்பிடப்படவில்லை. குறைந்த தரப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து டீ கடைக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. குறைகளை உடனடியாக சரிசெய்யாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சர்வதேச சந்தையில் இந்திய ஏலக்காய் ஏற்றுமதி 16,399 டன்னாக அதிகரிப்பு: விலை உயர வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/indian-cardamom-exports-to-the-international-market-increased-to-16399-tonnes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/indian-cardamom-exports-to-the-international-market-increased-to-16399-tonnes#comments</comments><guid isPermaLink="false">e1398c6c-12c3-42b4-9806-6e94ffb33d8f</guid><pubDate>Thu, 10 Sep 2026 06:37:48 +0000</pubDate><atom:updated>2026-09-10T06:37:48.216Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,India,cardamom,ஏலக்காய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/70do44c5/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/70do44c5/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>ஏலக்காய் ஏற்றுமதி</h2><p>இந்தியாவில் ஏலக்காய் சாகுபடியில் கேரளம் மாநிலம் சுமார் 70 சதவீத உற்பத்தியை வழங்கி வருகிறது. கேரளாவில் இடுக்கி, வயநாடு, பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களில் ஏலக்காய் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் சாகுபடி நடைபெற்று வருகிறது. </p><p>இந்திய ஏலக்காய்க்கு சர்வதேச சந்தையில் தொடர்ந்து நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஏனென்றால் இந்திய ஏலக்காயின் அளவு, நிறம், மணம் மற்றும் தரம் ஆகியவை பிற நாடுகளில் விளையும் ஏலக்காயை விட சிறப்பாக இருப்பதே காரணம் ஆகும். சர்வதேச சந்தையில் இந்திய ஏலக்காய்க்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஏற்றுமதியும் கணிசமாக உயர்ந்துள்ளது.</p><h2>விலை உயர வாய்ப்பு</h2><p>கடந்த 2023-24-ம் ஆண்டில் 7,083 டன்னாக இருந்த இந்திய ஏலக்காய் ஏற்றுமதி, 2025-26-ம் ஆண்டில் 16,399 டன்னாக உயர்ந்துள்ளது. இந்திய ஏலக்காயை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா ஆகியவை முன்னிலையில் உள்ளன. ஐக்கிய அரபு அமீரகம் 135.22 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலும், சவுதி அரேபியா 125.16 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலும் இந்திய ஏலக்காயை இறக்குமதி செய்துள்ளன.</p><p>இதுதவிர வங்காளதேசம், ஈராக், குவைத், மலேசியா உள்ளிட்ட நாடுகளும் இந்திய ஏலக்காயை இறக்குமதி செய்து வருகின்றன. இந்திய ஏலக்காய் ஏற்றுமதி புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ள வரவேற்பு காரணமாக உள்ளூர் சந்தையிலும் ஏலக்காய் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது ஏலக்காய் சராசரி விலை கிலோ ரூ.3 ஆயிரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item></channel></rss>