<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 25 Jul 2026 06:14:01 +0000</lastBuildDate><item><title>மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி உயிரிழப்பு; தூத்துக்குடியில் பரிதாபம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/schoolgirl-dies-of-electrocution-tragedy-in-thoothukudi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/schoolgirl-dies-of-electrocution-tragedy-in-thoothukudi#comments</comments><guid isPermaLink="false">8bb1e513-f3be-4982-a2e7-d9de4e990c9a</guid><pubDate>Sat, 25 Jul 2026 06:13:37 +0000</pubDate><atom:updated>2026-07-25T06:13:37.021Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,House,வீடு,motor,பள்ளி மாணவி,மின்சாரம் தாக்கி உயிரிழப்பு,Schoolgirl,மோட்டார்,electrocuted to death</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/iyi6kj5r/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி உயிரிழப்பு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/iyi6kj5r/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடியில் மோட்டார் சுவிட்சை அணைக்க முயன்ற 11 வயது <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF">பள்ளி மாணவி</a> மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>மேல்நிலை நீர் தொட்டி நிரம்பியது</h2><p>தூத்துக்குடி காதர்மீரான் நகரைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி சுப்புலட்சுமி(41). இவர்களது இரண்டாவது மகள் பிரியதர்ஷினி(11). இவர் புதிய துறைமுகப் பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த பிரியதர்ஷினி மேல்நிலை நீர் தொட்டி நிரம்பியதை கண்டுள்ளார். </p><h2>மின்சாரம் தாக்கி 11 வயது சிறுமி உயிரிழப்பு</h2><p>இதையடுத்து வீட்டில் இயங்கிக் கொண்டிருந்த வாட்டர் மோட்டாரை அணைப்பதற்காக சென்று சுவிட்சை அணைக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த மாணவியை பதறியடித்துக் கொண்டு மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.</p><p>இதையடுத்து மாணவி பிரியதர்ஷினியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து தெர்மல்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D">மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம்</a> அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வு பற்றி பேசும் தகுதி திமுகவுக்கு இல்லை - நிர்மல்குமார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-has-no-standing-to-speak-about-the-neet-exam-nirmal-kumar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-has-no-standing-to-speak-about-the-neet-exam-nirmal-kumar#comments</comments><guid isPermaLink="false">5f84204a-4f8e-438b-baf6-9f493b1770cc</guid><pubDate>Sat, 25 Jul 2026 06:01:08 +0000</pubDate><atom:updated>2026-07-25T06:01:08.244Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>நீட் தேர்வு,NEET Exam,நிர்மல் குமார்,Nirmal Kumar</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/zmy60f1u/11.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/zmy60f1u/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;</p><p>"நம்முடைய நிலைப்பாடு நீட் தேர்வு வேண்டாம் என்பது தான். நீட் தேர்வு தேவையற்றது. மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அதிக சுமையை தான் கொடுக்கும். எந்த வித பயனும் இல்லை என்பதை நாம் தெளிவாக சொல்லி இருக்கிறோம். அரசு சார்பாக தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களுக்கு, அறவழியில் நடக்கும் போராட்டங்களுக்கு முழு அளவில் பாதுகாப்பு கொடுத்து, அவர்களுக்கு தேவையான அனுமதியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. </p><p>நீட் தேர்வு குறித்து திமுக முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் நிறைய பேசி இருக்கிறார்கள். இதை பேசக்கூடிய எந்த தகுதியும் திமுகவுக்கு கிடையாது. அவர்கள் தான் 5 வருடமாக இதனை மோசமான சூழ்நிலைக்கு கொண்டு போனார்கள். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் நீட் தேர்வை நிறுத்துவோம் என்று சொன்னார்கள். எப்படி நிறுத்துவார்கள். அது பார்லிமென்டில் மசோதா நிறைவேற்ற வேண்டும்.</p><p>சுப்ரீம்கோர்ட் உத்தரவு, எப்படி நிறுத்துவீர்கள். தவறான நம்பிக்கையை மக்களிடத்தில் கொடுத்து இரண்டு வருடம் ஓட்டினார்கள். இப்பொழுது வந்து மேடையில் பேசுகிறார்கள். பேசக்கூடிய திமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் யாருக்கும் கிடையாது. நீட் தேர்வு வேண்டாம் என்பதில் நமது நிலைப்பாடு தெளிவாக இருக்கிறது, அதற்கான காலம் வரும் போது முதல் குரலாக கொடுப்போம்.” </p><p>இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>அண்ணா பல்கலை. தொலைதூர எம்.பி.ஏ. படிப்புகளுக்கு ஆகஸ்டு 17-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anna-university-distance-mba-applications-can-be-made-till-august-17th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anna-university-distance-mba-applications-can-be-made-till-august-17th#comments</comments><guid isPermaLink="false">6746d616-a7a2-4f19-b6f8-e582b9c75c65</guid><pubDate>Sat, 25 Jul 2026 05:58:53 +0000</pubDate><atom:updated>2026-07-25T05:58:53.832Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Anna University,படிப்பு,அண்ணா பல்கலைகழகம்,எம்.பி.ஏ.,Online Application,ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/rs9af75k/anna-university.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/rs9af75k/anna-university.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>கல்வி&amp;வேலைவாய்ப்பு (Eduction and Jobs)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைதூர மற்றும் இணையவழிக் கல்வி மையம் (சி.டி.ஓ.இ.) வழங்கும் எம்.பி.ஏ. படிப்புகளுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்</h2><p>எம்.பி.ஏ. பொது மேலாண்மை, <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8F.">எம்.பி.ஏ.</a> வணிக பகுப்பாய்வு ஆகிய படிப்புகளில் சேர விண்ணப்பிக்க முடியும். onlinecde.annauniv.edu அல்லது cde.annauniv.edu என்ற ஆன்லைன் வாயிலாக அடுத்த மாதம் (ஆகஸ்டு) 17-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், இதற்கான நுழைவுத் தேர்வு அடுத்த மாதம் 23-ந்தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நுழைவுத் தேர்வு மதிப்பெண் மற்றும் டான்செட் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே தெகுதி பெற முடியும்.</p>]]></content:encoded></item><item><title>திருநெல்வேலியில் வாலிபரை அரிவாளால் தாக்கியவருக்கு 2 ஆண்டுகள் சிறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/man-who-attacked-youth-with-machete-in-tirunelveli-gets-2-years-in-prison</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/man-who-attacked-youth-with-machete-in-tirunelveli-gets-2-years-in-prison#comments</comments><guid isPermaLink="false">9391bd68-c436-4619-89cc-b00e6e8402b9</guid><pubDate>Sat, 25 Jul 2026 05:35:55 +0000</pubDate><atom:updated>2026-07-25T05:35:55.391Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தாக்குதல்,Tirunelveli,திருநெல்வேலி,Youth,வாலிபர்,Verdict,தீர்ப்பு,சிறை தண்டனை,Prison sentence,attack,Sickle,அரிவாள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/xgi06u5r/Untitled5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வாலிபருக்கு சிறை தண்டனை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/xgi06u5r/Untitled5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி , </p><p>திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்தில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D">வாலிபரை</a> அரிவாளால் தாக்கி காயம் ஏற்படுத்திய வழக்கில் குற்றவாளிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.500 அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. </p><h2>வாலிபரை அரிவாளால் தாக்கியவர் கைது</h2><p>திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு, முன்விரோதம் காரணமாக தருவை பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 32) என்பவரை, அதே பகுதியைச் சேர்ந்த காளி(எ) காளிராஜ்(29) அரிவாளால் தாக்கி காயம் ஏற்படுத்தியது தொடர்பாக, முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அப்போதைய காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் புலன் விசாரணை மேற்கொண்டு காளி(எ) காளிராஜை கைது செய்தார். </p><h2>2 ஆண்டுகள் சிறை தண்டனை</h2><p>புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, வழக்கின் விசாரணையானது திருநெல்வேலி குற்றவியல் நீதிமன்றத்தில் (எண் - V) நடைபெற்று வந்தது. இந்த நிலையில் குற்றவாளிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு நீதிபதி ராணி நேற்று குற்றவாளிக்கு பிரிவு IPC 324-ன் படி 2 ஆண்டுகள் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">சிறை தண்டனை</a> மற்றும் ரூ.500 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.</p><p>இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை நடைபெற, சிறப்பாக கண்காணிப்பு செய்த சேரன்மகாதேவி ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி. அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ், முன்னீர்பள்ளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சபாபதி, இந்த வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த அப்போதைய சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் (தற்போது ஓய்வு) மற்றும் வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த ஏட்டு மாணிக்கராஜா, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் அபிதா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி வெகுவாக பாராட்டினார்.</p>]]></content:encoded></item><item><title>திண்டுக்கல்: குடிபோதையில் ரகளை செய்த போலீஸ்காரர் கைது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dindigul-policeman-arrested-for-creating-a-ruckus-while-drunk</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dindigul-policeman-arrested-for-creating-a-ruckus-while-drunk#comments</comments><guid isPermaLink="false">9a0c7655-390f-4a8e-a402-2b100dd0ed90</guid><pubDate>Sat, 25 Jul 2026 05:35:35 +0000</pubDate><atom:updated>2026-07-25T05:35:35.687Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Dindigul,கொடைக்கானல்,Policeman arrested,மது போதை,போலீஸ்காரர் கைது,Drunkard</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/import/h-upload/2023/08/22/1463035-arrest-new-01.webp" width="750"><media:title type="html"><![CDATA[ கைது]]></media:title><media:description type="html"><![CDATA[ குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட போலீஸ்காரர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/import/h-upload/2023/08/22/1463035-arrest-new-01.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">திண்டுக்கல் மாவட்டம் </a>கொடைக்கானலில் குடிபோதையில் ரகளை செய்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.</p><p>தேனி மாவட்டம் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஆண்டிப்பட்டி </a>கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டி. அவர் கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து சென்ற அவர் மது போதையில் இருந்தார். அப்போது கொடைக்கானல் அண்ணா சாலையில் நின்றுகொண்டிருந்த வாலிபர்களை தாக்கினார். அதனால் அவருக்கும் வாலிபர்களுக்கும் இடையே தாக்குதல் ஏற்பட்டது.</p><h2>போலீஸ்காரரின் ரகளை</h2><p>இதனால் போலீஸ்காரர் தங்கப்பாண்டியின் உடலில் காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து அவர் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார். மேலும் அங்கு வேலையில் இருந்த செவிலியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தங்கப்பாண்டி அவரை தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனைத்தொடர்ந்து அங்கிருந்த உபகரணங்கள் மற்றும் வாகனங்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார்.</p><h2>கைது- தற்காலிக பணிநீக்கம்</h2><p>இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர் தங்கப்பாண்டியை உடனடியாக<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> கைது</a> செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவின் பேரில் போலீஸ்காரர் தங்கப்பாண்டி உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவர் மீது தகுந்த துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நீட் விவகாரத்தில் பிரதமரின் அறிவிப்பு வெறும் கண் துடைப்பு நாடகம் - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-prime-ministers-announcement-regarding-the-neet-issue-is-merely-an-eyewashmanickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-prime-ministers-announcement-regarding-the-neet-issue-is-merely-an-eyewashmanickam-tagore#comments</comments><guid isPermaLink="false">612b8c93-ec8f-4576-8e5d-0638c2d2cc3c</guid><pubDate>Sat, 25 Jul 2026 05:19:06 +0000</pubDate><atom:updated>2026-07-25T05:19:06.809Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணிக்கம் தாகூர்,நீட் விவகாரம்,NEET issue,Manickam Tagore</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/vcgrkdaa/10.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/vcgrkdaa/10.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>காங்கிரஸ் தலை மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>வினாத்தாள் கசிவு விவகாரத்தில் "விரைவு நீதிமன்றங்கள்" அமைக்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பு வெறும் கண் துடைப்பு நாடகம்! அரசு தரவுகளே உண்மையை உடைக்கின்றன:</p><p>880 விரைவு நீதிமன்றங்களில் 13.9 லட்சம் வழக்குகள் தேங்கி நிற்கின்றன!</p><p>One more court</p><p>ITSC சிறப்பு நீதிமன்றங்களில் நிலுவை வழக்குகள் 2025-ல் 2,45,579 ஆக உயர்ந்துள்ளன! </p><p>தேர்வு முறையையே ஒழுங்காக நடத்தத் தெரியாத #NTA முற்றிலும் தோல்வியடைந்த ஒரு அமைப்பு!</p><p>மாணவர்களின் கோரிக்கை</p><p>பிரதமர் மோடி அவர்களே, மாணவர்களின் கோரிக்கைகள் மிகவும் தெளிவானவை:</p><p>1. கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி நீக்கம் செய்க!</p><p>2. பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் அரசு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!</p><p>3. அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!</p><p>வெற்று வாக்குறுதிகளாலும் அடக்குமுறைகளாலும் இந்தியாவின் இளைஞர்களையும் மாணவர்களையும் மீண்டும் மீண்டும் ஏமாற்ற முடியாது!”</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>தொடரும் காவல் மரணங்கள்: முதல்-அமைச்சர் வாயைத் திறப்பது எப்போது? - மு.க.ஸ்டாலின் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/continuing-custodial-deaths-when-will-the-chief-minister-speak-mk-stalin-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/continuing-custodial-deaths-when-will-the-chief-minister-speak-mk-stalin-asks#comments</comments><guid isPermaLink="false">22b58a2b-fba2-4c43-add3-4e5f7d252aaa</guid><pubDate>Sat, 25 Jul 2026 05:15:29 +0000</pubDate><atom:updated>2026-07-25T05:16:00.161Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,MKstalin,காவல் மரணம்,தவெக அரசு,TVK Government,Lockup Death</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/q2ubnm7k/Untitled-8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/q2ubnm7k/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தொடரும் காவல் மரணங்கள். முதல்-அமைச்சர் வாயைத் திறப்பது எப்போது? எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதல்-அமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்?</p><p>Accountability, Apology - முதல்-அமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா? உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத படுபாதக த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனங்கள்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தொடரும் காவல் மரணங்கள். முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது?<br><br>எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்?<br><br>Accountability, Apology –… <a href="https://t.co/bAcbn0M5fC">pic.twitter.com/bAcbn0M5fC</a></p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2080880741148393500?ref_src=twsrc%5Etfw">July 25, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் பெண் கொடூர கொலை: மீனவர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-brutally-murdered-in-thoothukudi-fisherman-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-brutally-murdered-in-thoothukudi-fisherman-arrested#comments</comments><guid isPermaLink="false">b1efa49e-4bd7-4ea5-9334-c936ca3a1bb6</guid><pubDate>Sat, 25 Jul 2026 04:54:33 +0000</pubDate><atom:updated>2026-07-25T04:54:33.382Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,arrested,தூத்துக்குடி,பெண்,Woman,fisherman,மீனவர் கைது,கொடூர கொலை,Brutal murder</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/5l2f5cr2/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெண் கொலை, மீனவர் கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/5l2f5cr2/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடியில் வீட்டின் திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D">பெண்</a>ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று, தலையில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">சுத்தியலால் தாக்கி கொலை</a> செய்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவரை போலீசார் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். </p><h2>உயிருக்கு போராடிய பெண்</h2><p>தூத்துக்குடி இந்திராநகரை சேர்ந்தவர் முத்துலட்சுமி (வயது 56). கணவரால் கைவிடப்பட்ட இவர், தனது மகள் சத்யாவுடன் வசித்து வந்தார். தெருக்களில் கிடைக்கும் பழைய பொருட்களை சேகரித்து விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்த முத்துலட்சுமி, கடந்த 15-ம் தேதி மகள் வெளியூருக்கு சென்றதால் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அன்று இரவு வீட்டின் வெளியே உள்ள திண்ணையில் முத்துலட்சுமி தூங்கிக் கொண்டிருந்தார். மறுநாள் காலையில் அக்கம் பக்கத்தினர் பார்த்தபோது, அவர் தலையில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். </p><h2>உயிரிழப்பு, போராட்டம்</h2><p>அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முத்துலட்சுமி, சிகிச்சை பலனின்றி கடந்த 18-ம் தேதி உயிரிழந்தார். இதையறிந்த அவரது மகள் சத்யா மற்றும் உறவினர்கள், கொலையாளியை கைது செய்து உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உடலைப் பெறுவோம் என கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். </p><h2>மீனவர் கைது</h2><p>பெண் உயிரிழந்தது குறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆதராரங்களின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் கன்னியாகுமரி மாவட்டம்,  முட்டம், சகல புனிதர்கள் காலனியைச் சேர்ந்த லோபஸ் மகன், மீனவரான இன்னசென்ட் ரீகன்(34) என்பவருக்கு இச்சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த அந்த நபரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்து விசாரணை செய்தனர்.</p><h2>கொடூர கொலை</h2><p>போலீசார் விசாரணையில், கிடைத்த தகவல்கள் மற்றும் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், கைது செய்யப்பட்ட மீனவர் இன்னசென்ட்ரீகன் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து தூத்துக்குடியில் திருட்டு பைக்கில் சுற்றித் திரிந்துள்ளார். அவர் சம்பவத்தன்று திண்ணையில் தனியாக படுத்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அப்போது அந்த பெண் விழித்துக் கொண்டு கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த அந்த நபர், அப்பெண்ணை சுத்தியலால் தலையில் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து வழக்கில் அதற்குரிய சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. </p>]]></content:encoded></item><item><title>மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழா: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா? - அன்புமணி கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/manonmaniam-sundaranar-university-convocation-ceremony-is-tamil-motherland-the-3rd-place-anbumani-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/manonmaniam-sundaranar-university-convocation-ceremony-is-tamil-motherland-the-3rd-place-anbumani-condemns#comments</comments><guid isPermaLink="false">960ccaf2-162d-4766-b7a4-0c6ecaaf0e6a</guid><pubDate>Sat, 25 Jul 2026 04:46:17 +0000</pubDate><atom:updated>2026-07-25T04:46:17.822Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி,பட்டமளிப்பு விழா,Convocation Ceremony,Manonmaniam Sundaranar University,மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,Anbumani Ramadass</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/7lhdakcr/anbumani.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/7lhdakcr/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வரும்  28-ஆம் தேதி நடைபெறவுள்ள  33-வது பட்டமளிப்பு விழாவில் முதலில்    வந்தே மாதரம் தேசியப் பாடலும்,  அடுத்து ’’ஜன கண மன”  தேசிய கீதமும் பாடப்பட்ட பிறகு மூன்றாவதாகத் தான்  தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என்று அப்பல்கலைக்கழகத்தின்  துணைவேந்தர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மத்திய அரசே வழிகாட்டுதல்களை வழங்கிய பிறகும்  தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மூன்றாவது இடத்திற்கு  திட்டமிட்டு தள்ளுவது கண்டிக்கத்தக்கது.</p><h2>வழிகாட்டுதல்கள்</h2><p>நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய  துணைவேந்தர் சந்திரசேகர்,’’இது கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால், கவர்னர் மாளிகையிலிருந்து எங்களுக்குத் தெளிவான மற்றும் கண்டிப்பான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. குடியரசுத் தலைவர் மற்றும் கவர்னர் பங்கேற்கும் விழாக்களில் இந்த நடைமுறையே பின்பற்றப்பட வேண்டும் என்ற வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தான்  நடந்து கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.</p><h2>பெரும் சர்ச்சை</h2><p>குடியரசுத் தலைவர், கவர்னர் பங்கேற்கும் மாநில அரசு விழாக்களில் முதலில் தேசியப் பாடல்,  இரண்டாவதாக தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு பிறப்பித்திருந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டிருந்தது.  கடந்த மே 10-ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற தமிழக அரசு பதவியேற்கும் விழாவில் முதலில் தேசியப் பாடல், பின்னர் தேசிய கீதம் ஆகியவற்றுக்கு அடுத்து மூன்றாவதாக  தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது பெரும் சர்ச்சையை  ஏற்படுத்தியது. இந்த வரிசை முறைக்கு  தமிழ்நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன.</p><h2>மூன்றாவதாக தேசிய கீதம்</h2><p>அதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜூலை 9-ஆம் தேதி பிறப்பித்த ஆணையில்,  மாநிலப் பாடல்கள் பாடப்படும் விழாக்களில்  அது தான் முதலில் பாடப்பட வேண்டும்; அதன்பின் தேசியப் பாடல்; மூன்றாவதாக தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று தெளிவாக விளக்கம்  அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால்,  அதையும் மீறி வந்தே மாதரம் என்ற  தேசியப் பாடலைத் தான்  முதலில் பாட வேண்டும் என்று  கவர்னர் மாளிகை கட்டாயப்படுத்துவது அப்பட்டமான அதிகார வெளிப்பாடு ஆகும்.</p><p>நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்று தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவரே  மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை  அவர்கள் தான்.  அவரது  பெயர்  தான் நெல்லை பல்கலைக்கழகத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. அங்கும் கூட, மத்திய அரசின் வழிகாட்டுதல்களையும் புறக்கணித்து விட்டு, வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வேண்டும் என்று கவர்னர் மாளிகை கட்டாயப்படுத்துவதும்,   அதை பல்கலைக்கழக துணை வேந்தர்  அப்படியே  ஏற்றுக் கொள்வதும் சரியல்ல.  இதை  தமிழக அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது.</p><h2>பட்டமளிப்பு விழா</h2><p>தமிழ்நாட்டில் நடைபெறும்  கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில்  தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில் பாடப்பட வேண்டும். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஜூலை   28-ஆம் தேதி நடைபெறவுள்ள  33-வது <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE">பட்டமளிப்பு விழா</a>விலும்  தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப் படுவதை  தமிழ்நாடு அரசும்,  பல்கலைக்கழக நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ராஜினாமா செய்யுங்கள் தர்மேந்திர பிரதான்: நடிகை ஜோதிகா இன்ஸ்டாவில் பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/resign-dharmendra-pradhan-actress-jyothika-posts-on-instagram</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/resign-dharmendra-pradhan-actress-jyothika-posts-on-instagram#comments</comments><guid isPermaLink="false">df7ee35f-6f20-410a-ac74-3472dd97aba9</guid><pubDate>Sat, 25 Jul 2026 04:38:45 +0000</pubDate><atom:updated>2026-07-25T04:38:45.085Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ராஜினாமா,Jyothika,NEET,ஜோதிகா,நீட் போராட்டம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/0i5nv821/Jothika.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜோதிகா ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/0i5nv821/Jothika.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>'நீட்' தேர்வுக்கு எதிராகவும், சமீபத்தில் நடந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லி உள்பட நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. அந்தவகையில் சென்னையில் மாணவர் சங்கங்கள், அமைப்புகள் சார்பில் கடந்த சில நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இளைஞர்களின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில்,  நடிகை ஜோதிகாவும் இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டகிராமில் ஜோதிகா பதிவிட்டு இருப்பதாவது:</p><h2>பெருமைப்படுகிறோம்</h2><p>தர்மேந்திர பிரதான், பதவி விலகுங்கள்; ராஜினாமா செய்யுங்கள்; நான் மாணவர்களுடனும் நமது தேசத்தின் எதிர்காலத்துடனும் பொறுப்புணர்ச்சியுடன் ஒரு ஜனநாயக இந்தியாவிற்காக நிற்கிறேன்; ஒரு சீர்திருத்தக் கல்விக்காக நிற்கிறேன். தடையின்றி வெளிப்படையாக இருக்கும்  ஜென்சி தலைமுறையினரே, உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறோம். </p><h2>நன்றி சி.ஜே.பி</h2><p>நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்துதான் இந்தியா என்பதை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள் சோனம் வாங்சுக், அபிஜீத் தீப்கே மற்றும் சௌரவ் தாஸ், தாய்மார்களாகிய நாங்கள் எங்கள் குழந்தைகளை உங்களைப் போல வளர்க்க விரும்புகிறோம்; எங்களை அச்சமற்றவர்களாக மாற்றியதற்கு நன்றி சி.ஜே.பி" என்று பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>செல்போனுக்கு வந்த கியூ.ஆர். கோடு.. ஸ்கேன் செய்து ரூ.1.21 லட்சத்தை இழந்த வியாபாரி - அரசு உதவித்தொகை எனக் கூறி நூதன மோசடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/qr-code-sent-to-mobile-phone-merchant-loses-121-lakh-after-scanning-it-an-innovative-scam-involving-claims-of-a-government-subsidy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/qr-code-sent-to-mobile-phone-merchant-loses-121-lakh-after-scanning-it-an-innovative-scam-involving-claims-of-a-government-subsidy#comments</comments><guid isPermaLink="false">673ed219-5b4c-4d2a-94f5-348f6da0f04b</guid><pubDate>Sat, 25 Jul 2026 04:34:36 +0000</pubDate><atom:updated>2026-07-25T04:34:36.542Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மோசடி,scam,QR code,கியூஆர் கோடு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/fmg75f2n/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/fmg75f2n/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை கொடுங்கையூரில், மகனுக்கு அரசு உதவித்தொகை வந்துள்ளதாக கூறி ஊறுகாய் வியாபாரியின் வங்கிக் கணக்கில் இருந்த பணம் முழுவதையும் நூதன முறையில் மோசடி கும்பல் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>கொடுங்கையூரைச் சேர்ந்த ஊறுகாய் வியாபாரி முத்துக்காமாட்சியின் மகன் தனியார் கல்லூரியில் படித்து வரும் நிலையில், மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாணவர்களுக்கு அரசு உதவித்தொகையாக ரூ.48 ஆயிரம் வழங்கப்படுவதாக கூறியுள்ளார். அந்த தொகையைப் பெற உங்கள் செல்போனுக்கு வரும் கியூ.ஆர். கோடை ஸ்கேன் செய்யுங்கள் என்றும் அந்த நபர் கூறியிருக்கிறார்.  </p> <p>அவர் கூறியபடி முத்துக்காமாட்சியின் செல்போனுக்கு ஒரு கியூ.ஆர். கோடு வந்த நிலையில், அதை அவர் ஸ்கேன் செய்துள்ளார். இதையடுத்து சில வினாடிகளில் அவரது வங்கிக் கணக்கில் இருந்த 1 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் காணாமல் போனது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். </p> ]]></content:encoded></item><item><title>ஊருக்குள் புகுந்த குட்டி யானையை கொஞ்சி மகிழ்ந்த கிராம மக்கள் - செல்பி எடுத்து உற்சாகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/villagers-dote-on-baby-elephant-inside-village-selfies-and-joy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/villagers-dote-on-baby-elephant-inside-village-selfies-and-joy#comments</comments><guid isPermaLink="false">acbc2bc1-ef38-4ccd-8575-bceaf4452e3a</guid><pubDate>Sat, 25 Jul 2026 04:25:57 +0000</pubDate><atom:updated>2026-07-25T04:25:57.110Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கிருஷ்ணகிரி,Krishnagiri,elephant,குட்டி யானை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/a1snicoz/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/a1snicoz/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ணகிரி,</p><p>கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் அவ்வப்போது கிராம பகுதிகளுக்குள் நுழைந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள விளைபயிர்களை சேதப்படுத்தி பொதுமக்களையும் அச்சுறுத்தி வருகின்றன. இந்த காட்டு யானை கூட்டத்தில் தாயை பிரிந்த குட்டி யானை ஒன்று கடந்த ஒரு ஆண்டாக வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராம பகுதிகளில் சுற்றித்திரிந்து வருகிறது.</p><p>கிராம பகுதிகளில் சர்வ சாதாரணமாக சுற்றி வரும் இந்த குட்டி யானை கிராமத்தில் வாழும் பொதுமக்கள் யாரையும் தொந்தரவு செய்வதில்லை. கிராம மக்கள் இந்த குட்டியை பார்த்தவுடன் தங்களது செல்போன்களில் போட்டோ மற்றும் செல்பி எடுப்பது, அதற்கு உணவு கொடுத்து மகிழ்வது என வழக்கமாக நடந்து வருகிறது.</p><p>இந்த நிலையில் இந்த குட்டி யானை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கிராம பகுதிகளுக்குள் வராமல் இருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள மாரசந்திரம் என்ற கிராமத்திற்கு வந்து செல்கிறது. குட்டி யானையை பார்த்த கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, அதனுடன் போட்டோ மற்றும் செல்பி எடுப்பது, அதற்கு உணவு வழங்கி கொஞ்சி விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.</p><p>இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் குட்டி யானையை கிராமத்தில் இருந்து வனப்பகுதிக்கு விரட்டி சென்றனர். குட்டி யானையை அதன் தாயுடன் சேர்ப்பதற்கு வனத்துறையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தர்மேந்திர பிரதானை உடனடியாக பதவி நீக்கம் செய்யுங்கள் - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/immediately-remove-dharmendra-pradhan-manickam-thakur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/immediately-remove-dharmendra-pradhan-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">76775928-5bf0-4857-a55a-82fedf64114c</guid><pubDate>Sat, 25 Jul 2026 03:49:55 +0000</pubDate><atom:updated>2026-07-25T03:49:55.384Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,மத்திய அரசு,நீட் தேர்வு,NEET Exam,மாணிக்கம் தாகூர்,தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,Manickam Thakur MP</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/cco45qun/9.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/cco45qun/9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக காங்கிரஸ் தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">மாணிக்கம் தாகூர்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>NEET-UG 2026 என்பது வெறும் தேர்வு அல்ல. கோடிக்கணக்கான இந்திய மாணவர்களின் கனவு.தேர்வுக் கேள்வித்தாள்கள் கசிந்தன. மே 3 மற்றும் மே 7 நடைபெற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. நாடு முழுவதும் மீண்டும் தேர்வு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. கேள்வித்தாள் கசிவு நடந்ததை மத்திய கல்வி மந்திரியே ஒப்புக்கொண்டார். தற்போது சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த ஊழலின் மிகப் பெரிய விலை என்ன? 21 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 21 குடும்பங்களின் வாழ்க்கை என்றென்றும் சோகத்தில் மூழ்கியுள்ளது.</p><h2>மிகப்பெரிய கல்வி ஊழல்</h2><p>மாணவர்கள் கல்வி அமைப்பின் மீதான நம்பிக்கையை இழக்கும் அளவுக்கு இந்த அரசு தோல்வியடைந்துள்ளது. ஒரு தேர்வை ரத்து செய்ததால் மட்டும் பொறுப்பு முடிவடையாது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்துவது போல, மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும். இந்த மிகப்பெரிய கல்வி ஊழல் குறித்து பிரதமர் மோடியின் மௌனம் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்திய மாணவர்கள் நியாயமான, வெளிப்படையான, நம்பகமான கல்வி அமைப்பிற்கு தகுதியானவர்கள். தோல்வி, ஊழல், அலட்சியம் ஆகியவற்றிற்கு அல்ல. தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்யுங்கள். இந்தியாவின் கல்வியையும், மாணவர்களின் எதிர்காலத்தையும் காப்பாற்றுங்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>கிளாம்பாக்கம்-செங்கல்பட்டு மெட்ரோ ரெயில் திட்டம் - விரிவான அறிக்கை தயார் செய்ய டெண்டர் வெளியீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kilambakkam-chengalpattu-metro-rail-project-tender-issued-for-the-preparation-of-a-detailed-report</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kilambakkam-chengalpattu-metro-rail-project-tender-issued-for-the-preparation-of-a-detailed-report#comments</comments><guid isPermaLink="false">ea74ca22-3c16-413c-a29b-d6d3313d330d</guid><pubDate>Sat, 25 Jul 2026 03:36:33 +0000</pubDate><atom:updated>2026-07-25T03:36:33.503Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chengalpattu,செங்கல்பட்டு,கிளாம்பாக்கம்,Kilambakkam,மெட்ரோ</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/7hjrlfzq/National-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/7hjrlfzq/National-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தை பொறுத்தவரை 2 கட்டங்களாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி முதல் கட்டத்தில் சென்னை சென்ட்ரல்-விமான நிலையம், சென்னை சென்ட்ரல்-விம்கோ நகர் என 2 வழித்தடங்களில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. </p><p>அதே போல் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் மாதவரம்-சிறுசேரி சிப்கார்ட், மாதவரம்-சோலிங்கநல்லூர் மற்றும் பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் என 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. </p><p>இதனிடையே, சென்னை மெட்ரோ முதலாம் கட்ட திட்டமான சென்ட்ரல்-விமான நிலையம் வழித்தடத்தை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு செய்வது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கிளாம்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு வரையிலான மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரி சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.</p> <p>ஏற்கனவே சென்னை மெட்ரோ ரெயில் முதல் கட்டத்தின் சென்ட்ரல்-விமான நிலைய வழித்தடத்தை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பதற்கான திட்டம் மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கக்கூடிய நிலையில், இதனை மேலும் செங்கல்பட்டு வரை நீட்டிப்பதற்கான டெண்டர் தற்போது கோரப்பட்டிருக்கிறது. இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும் பட்சத்தில், அடுத்த கட்டமாக இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு மத்திய அரசிடம் ஒப்புதலுக்காக சென்னை மெட்ரோல் நிறுவனம் கோரிக்கை விடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>சிறுவனுடன் பாலியல் உறவு; கர்ப்பமான இளம்பெண் மீது போக்சோ நடவடிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-intercourse-with-a-boy-pocso-action-against-pregnant-young-woman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-intercourse-with-a-boy-pocso-action-against-pregnant-young-woman#comments</comments><guid isPermaLink="false">cf3d312a-4a40-41ec-a074-caf8636a81ac</guid><pubDate>Sat, 25 Jul 2026 03:28:51 +0000</pubDate><atom:updated>2026-07-25T03:28:51.863Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இளம்பெண்,POCSO act,கர்ப்பம்,போக்சோ,பாலியல் உறவு,pregnant woman,சிறுவன்,boy,sexual intercourse</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/1cs28vtd/73.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/1cs28vtd/73.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>குழித்துறை, </p><p>பயிற்சி நிலையத்தில் படித்த போது ஏற்பட்ட பழக்கத்தில் சிறுவனை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு கொண்டு கர்ப்பமான இளம்பெண் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p><h2>8 மாத கர்ப்பிணி</h2><p>குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள ஆற்றூர் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளம்பெண் ஒருவர் உடல்நல குறைவு காரணமாக சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்த போது இளம்பெண் 8 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து டாக்டர்கள் இளம்பெண்ணிடம் கணவர் குறித்த விவரத்தை கேட்டனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த டாக்டர்கள் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதை தொடர்ந்து மகளிர் போலீசார் மருத்துவமனைக்கு வந்து இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது இளம்பெண்ணின் கர்ப்பம் குறித்து பல தகவல்கள் தெரிய வந்தது.</p><h2>கட்டாய பாலியல் உறவு</h2><p>அதாவது அந்த இளம்பெண் விமான பணியாளர்கள் தொடர்பான ஒரு ஆண்டு பட்டய படிப்புக்காக குழித்துறையில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் சேர்ந்துள்ளார். அதே பாடப்பிரிவில் களியக்காவிளை பகுதியை சேர்ந்த 17 வயதுடைய ஒரு சிறுவனும் சேர்ந்துள்ளார். அந்த பாடப்பிரிவில் இவர்கள் 2 பேர் மட்டுமே படித்துள்ளனர்.</p><p>இதனால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நெருக்கம் அதிகரித்தது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தனர். சம்பவத்தன்று இளம்பெண் களியக்காவிளையில் உள்ள சிறுவனின் வீட்டுக்கு பெற்றோர் இல்லாத நேரத்தில் சென்றுள்ளார். அப்போது இளம் பெண்ணின் கட்டாயத்தின் பேரில் இருவரும் பாலியல் உறவு கொண்டுள்ளனர். இதேபோன்ற நிலை பலமுறை தொடர்ந்து நடந்துள்ளது.</p><h2>போக்சோ வழக்கு</h2><p>இதன் காரணமாக இளம்பெண் கர்ப்பமானார். எனினும் கர்ப்பமானதை அவர் பெற்றோரிடம் கூறாமல் இருந்து வந்தார். இதை தொடர்ந்து 8 மாதங்கள் கடந்த நிலையில் இளம்பெண் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போதுதான் அவர் கர்ப்பமானது தெரிய வந்தது. இதையடுத்து சிறுவனின் வீட்டுக்கு சென்று அவனை கட்டாயப்படுத்தி பாலியல் உறவில் ஈடுபட்டதாக சிறுவனின் தாயார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் இளம்பெண் மீது போலீசார் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B">போக்சோ</a> வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இளம்பெண் 8 மாத கர்ப்பிணியாக இருப்பதால் அவர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திருநெல்வேலியில் மோப்ப நாய் சீஸருக்கு 24 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/24-gunshots-fired-in-tirunelveli-to-pay-last-respects-to-sniffer-dog-caesar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/24-gunshots-fired-in-tirunelveli-to-pay-last-respects-to-sniffer-dog-caesar#comments</comments><guid isPermaLink="false">fdfe6a0f-a35e-40b7-82a6-c565da8df2cc</guid><pubDate>Sat, 25 Jul 2026 02:58:52 +0000</pubDate><atom:updated>2026-07-25T02:58:52.235Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,Tirunelveli,திருநெல்வேலி,காவல்துறை,இறுதி மரியாதை,மோப்ப நாய்,sniffer dog,24 குண்டுகள்,சீஸர்,Caesar,24 bullets fired,last respect</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/pfjuixah/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மோப்ப நாய் சீஸருக்கு 24 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/pfjuixah/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>திருநெல்வேலியில் உடல்நலக் குறைவால் உயிரிழந்த மோப்ப நாய் சீஸருக்கு காவல்துறை மரபின்படி 24 குண்டுகள் முழங்க மாவட்ட காவல் துறை சார்பில் அரசு மரியாதையுடன் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. </p><h2>மோப்ப நாய் "சீஸர்" உயிரிழந்தது</h2><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%20">திருநெல்வேலி </a>மாவட்ட காவல்துறையின் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D">மோப்ப நாய்</a> படைப்பிரிவில் பணியாற்றி வந்த "சீஸர்" என்ற மோப்ப நாய் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தது. </p><p>நீண்ட காலமாக திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் மோப்ப நாய் படைப்பிரிவில் சிறப்பாகப் பணியாற்றி வந்த சீஸர் (Caesar), பல்வேறு குற்றவியல் விசாரணைகள், தடயங்களை கண்டறிதல், வெடிபொருட்கள் மற்றும் போதைப்பொருட்களை கண்டறிதல் உள்ளிட்ட முக்கிய காவல் பணிகளில் திறம்பட செயல்பட்டு காவல்துறைக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கி வந்தது. உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சீஸர் உயிரிழந்தது காவல்துறையினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. </p><h2>24 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை</h2><p>சீஸரின் சேவையைப் போற்றும் வகையில், அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. காவல்துறை மரபின்படி <a href="https://www.dailythanthi.com/search?q=24%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95">24 குண்டுகள் முழங்க</a> அரசு மரியாதையுடன் சீஸருக்கு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88">இறுதி மரியாதை</a> செலுத்தப்பட்டு, பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது. </p><h2>மலர் வளையம் வைத்து அஞ்சலி</h2><p>இந்த நிகழ்ச்சியில் காவல் அமலாக்கப் பிரிவு (PEW) டி.எஸ்.பி. சந்திரன், மோப்ப நாய் படைப்பிரிவு காவலர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, சீஸரின் அர்ப்பணிப்பு மிக்க சேவையை நினைவுகூர்ந்தனர். </p>]]></content:encoded></item><item><title>கோத்தகிரி கடைவீதியில் கரடி நடமாட்டம் அதிகரிப்பு; கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bear-activity-increases-on-kotagiri-shopping-street-public-demands-to-trap-them-in-cages</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bear-activity-increases-on-kotagiri-shopping-street-public-demands-to-trap-them-in-cages#comments</comments><guid isPermaLink="false">deb62e80-b8fb-464e-8116-18c0cf7d1662</guid><pubDate>Sat, 25 Jul 2026 02:52:53 +0000</pubDate><atom:updated>2026-07-25T02:52:53.195Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>bear,கரடி நடமாட்டம்,கோத்தகிரி,Kotagiri</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/errcroxx/72.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/errcroxx/72.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோத்தகிரி,</p><p>கோத்தகிரி கடைவீதி பகுதியில் கரடி நடமாட்டம் அதிகரித்து வருவதால், கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>கரடி நடமாட்டம்</p><p>கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரடி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் வன விலங்குகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விடுவது வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக பஸ் நிலையத்தில் இருந்து கடைவீதி செல்லும் சாலையில் போலீஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரி, பள்ளிவாசல் மற்றும் நெருக்கமான  குடியிருப்புக்கள் உள்ள பகுதிகளில் இரவு 8 மணி முதல் கரடிகள் தொடர்ந்து நடமாடி வருகின்றன. கடந்த 2 மாதங்களுக்கு முன் அரசு மருத்துவமனை சாலையில் இரவு நேரத்தில் தனது தாயாருடன் சென்ற சிறுமியை கரடி துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல கடந்த வாரம் அங்குள்ள பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு சென்றவர்களையும், பொதுமக்களையும் கரடி துரத்தியது. மேலும் கடைவீதி மாரியம்மன் கோவில் முன்புறம் கரடி உலா வந்தது.</p><h2>பொதுமக்கள் அச்சம்</h2><p>இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7.45 மணிக்கு மாரியம்மன் கோவில் அருகே உள்ள நடைபாதை மற்றும் குடியிருப்பு பகுதியில் கரடி ஒன்று உலா வந்தது. இதைக்கண்டு அவ்வழியாக நடந்து சென்றவர்கள் அச்சமடைந்தனர். இந்த நிலையில் கோத்தகிரி ஆரோக்கிய மாதா ஆலய நுழைவு வாயில் சாலையில் கரடி அமர்ந்து இருந்தது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.</p><p>இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கோத்தகிரி கடைவீதி பகுதிகளில் இரவு நேரங்களில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">கரடி நடமாட்டம்</a> அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தனியாக வெளியே செல்ல மிகவும் அச்சமாக உள்ளது. எனவே வனத்துறையினர் கரடியின் நடமாட்டத்தை கண்காணித்து, அதை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>மனைப்பிரிவு திட்டங்களுக்கு 30 நாட்களில் அனுமதி - மாநகராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/approval-for-housing-layout-plans-within-30-days-municipal-corporation-administrations-take-action</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/approval-for-housing-layout-plans-within-30-days-municipal-corporation-administrations-take-action#comments</comments><guid isPermaLink="false">f2ce508f-f454-492f-b9b4-be6c605b1574</guid><pubDate>Sat, 25 Jul 2026 01:59:08 +0000</pubDate><atom:updated>2026-07-25T01:59:08.590Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Municipal Corporation,மாநகராட்சி நிர்வாகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/5jskqihi/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/5jskqihi/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் கட்டுமான திட்டங்கள் போன்று, மனைப்பிரிவு திட்டங்களுக்கு, விரைவாக ஒப்புதல் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, புதிய மனைப்பிரிவு திட்டங்களை செயல்படுத்த, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி.,யில் விண்ணப்பிக்கின்றன. அவற்றை பரிசீலித்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில், அதிக தாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுகின்றன.</p><p>புதிய மனைப்பிரிவு திட்டங்களை பொறுத்தவரை, அடிப்படை விவரங்களை ஆய்வு செய்து, டி.டி.சி.பி., தொழில்நுட்ப அனுமதி வழங்கும். இதன் அடிப்படையில், உள்ளாட்சி அமைப்புகள் முறையான, இறுதி ஒப்புதலை அளிக்க வேண்டும். இதற்காக வரும் மனுக்கள் மீது, விரைவாக நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு மாநகராட்சி நிர்வாகங்கள், சில வழி காட்டுதல்களை வழங்கி உள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>* டி.டி.சி.பி., தொழில் நுட்ப அனுமதி வழங்கியதும், ஓ.எஸ்.ஆர்., நிலதான ஒப்படைப்புக்கான, பத்திரத்துடன், விண்ணப்பதாரர் மாநகராட்சியை அணுக வேண்டும்</p><p>* மனைப்பிரிவில் அடிப்படை வசதிகள் பராமரிப்புக்கு, ஒரு லட்சம் ரூபாய் வைப்பு தொகையாக பெற வேண்டும்.</p><p>* மனைப்பிரிவு ஒப்புதல் தொடர்பான அனைத்து பணிகளையும், 'ஆன்லைன்' வாயிலாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும்</p><p>* அடிப்படை வசதிகளுக்கான முழுத் தொகையையும், மனுதாரர் செலுத்தும் நிலையில், 30 நாட்களுக்குள் இறுதி ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும்</p><p>* மனுதாரரே அடிப்படை வசதி பணிகளை மேற்கொள்ளும் நிலையில், 60 நாட்களுக்குள் மனைப்பிரிவு ஒப்புதல் வழங்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>உலகின் வாழ சிறந்த நகரங்கள் பட்டியல்: சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/worlds-best-cities-to-live-where-does-chennai-rank</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/worlds-best-cities-to-live-where-does-chennai-rank#comments</comments><guid isPermaLink="false">df54f320-4b99-4cc5-8b7e-841728178e02</guid><pubDate>Sat, 25 Jul 2026 01:51:42 +0000</pubDate><atom:updated>2026-07-25T01:51:42.134Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,பாதுகாப்பு,உலகின் சிறந்த நகரங்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/7mtv7rn7/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை மாநகராட்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/7mtv7rn7/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>வாழ சிறந்த நகரங்கள்</h2><p>பொருளாதார நிபுணர் புலனாய்வுப்பிரிவு (எக்கனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட்) என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலகின் வாழ சிறந்த நகரங்கள் எவை? என்ற பட்டியலை வெளியிட்டு வருகிறது. நகரங்களின் அரசியல் சூழல், பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் தரவரிசையில் மாற்றங்கள் நிகழுகிறது.</p><p>குற்றங்களின் விகிதம், போர்கள் மற்றும் உள்நாட்டு கலவரங்கள் இல்லாத பாதுகாப்பான சூழல், தரமான மருத்துவ வசதிகள், தூய்மையான சூழல், காலநிலை, பொழுதுபோக்கு, கலாசார சுதந்திரம், சிறந்த கல்விக்கூடங்கள், உயர்கல்வி வாய்ப்புகள், சிறந்த போக்குவரத்து, குடிநீர், மின்சாரம், தொலைத்தொடர்பு வசதிகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து 100 புள்ளிகளுக்கு (பாயிண்ட்) எவ்வளவு புள்ளிகள் பெற்றுள்ளன என்ற அடிப்படையில் இந்த பட்டியல் தயாராகிறது.</p><h2>டெல்லி, சென்னை</h2><p>அந்த வகையில் 2026-ம் ஆண்டுக்கான உலகின் வாழ சிறந்த நகரங்கள் பட்டியலை, பொருளாதார நிபுணர் புலனாய்வுப் பிரிவு அமைப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 173 நகரங்களை கணக்கிட்டு அதில் சிறந்த நகரங்களை பட்டியலிட்டிருக்கிறது. டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரம் முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக ஆஸ்திரியாவின் வியன்னா, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், சிட்னி, சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரங்கள் உள்ளன.</p><p>இந்த பட்டியலில் இந்தியாவின் நகரங்களும் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் மிகவும் பின்தங்கியே இருக்கின்றன. டெல்லிக்கு 120-வது இடம், மும்பைக்கு 121-வது இடம், சென்னைக்கு 123-வது இடம், பெங்களூருவுக்கு 127-வது இடமே கிடைத்துள்ளன.</p><h2>பின்தங்கியதற்கு காரணம் என்ன?</h2><p>இந்திய நகரங்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் நல்ல முன்னேற்றம் கண்டிருந்தாலும், சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசுபாடு, அடிப்படை உள்கட்டமைப்பு நெரிசல், சுகாதார சேவை அழுத்தம் போன்றவற்றால் பட்டியலில் பின்தங்கியிருக்கின்றன. இந்திய நகரங்கள் உலகின் முக்கிய பொருளாதார மையங்களாக வளர்ந்து வரும் அதே வேளையில், வாழ தகுதியான உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளை மேம்படுத்துவது அவசியம் என்பதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.</p>]]></content:encoded></item><item><title>திருப்பூர் வழியாக கொல்லத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-to-kollam-via-tiruppur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-to-kollam-via-tiruppur#comments</comments><guid isPermaLink="false">d77ef7d7-5017-40fe-8d0f-dca2b3005115</guid><pubDate>Sat, 25 Jul 2026 01:36:21 +0000</pubDate><atom:updated>2026-07-25T01:36:21.004Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்,சிறப்பு ரெயில்,Special Train ​</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/paad9o4v/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/paad9o4v/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,  </p><p>தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே சார்லப்பள்ளி ரெயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு போத்தனூர் வழித்தடத்தில் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இது குறித்து சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:- </p><p>”அடுத்த மாதம் (ஆகஸ்டு) 14-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 4-ந் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில், சார்லப்பள்ளியில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்படும் சார்லப்பள்ளி கொல்லம் வாராந்திரச் சிறப்பு ரெயில் (எண்: 07195) சனிக்கிழமைகளில் பிற்பகல் 2 மணிக்கு கொல்லம் ரெயில் நிலையத்தைச் சென்றடையும்.</p><p>மறுமார்க்கமாக அடுத்த மாதம் 15-ந் தேதி முதல் செப்டம்பர் 5-ந் தேதி வரை சனிக்கிழமைகளில், கொல்லத்தில் இருந்து மாலை 5.20 மணிக்கு புறப்படும் கொல்லம் - சார்லப்பள்ளி வாராந்திர சிறப்பு ரெயில் (எண்: 07196) திங்கட்கிழமைகளில் மதியம் 12 மணிக்கு சார்லப்பள்ளி நிலையத்தை சென்றடையும். </p><p>இந்த ரெயில் கருநாகப்பள்ளி, காயன்குளம், மாவேலிக்கரை, செங்கண்ணூர், திருவல்லா, சங்கணாச்சேரி, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, நெல்லூர், ஓங்கோல், பாப்ட்லா, தெனாலி, குண்டூர், நால்கொண்டா உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.” </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>குடும்பத் தகராறால் விபரீதம்; விஷம் கொடுத்து 8 மாத குழந்தை கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/family-dispute-turns-tragic-8-month-old-baby-killed-by-poisoning</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/family-dispute-turns-tragic-8-month-old-baby-killed-by-poisoning#comments</comments><guid isPermaLink="false">96297438-1982-4611-bf82-c760b79adf0d</guid><pubDate>Sat, 25 Jul 2026 01:35:35 +0000</pubDate><atom:updated>2026-07-25T01:35:35.764Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Family dispute,குடும்ப தகராறு,குழந்தை கொலை,baby death</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/rjag0uq1/69.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/rjag0uq1/69.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள அலங்கம்பட்டியை சேர்ந்தவர் வாசு என்ற அடைக்கன். எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி புனிதா (வயது 22). இவர்களுடைய 8 மாத பெண் குழந்தை ரியா. இந்தநிலையில் கணவன், மனைவி இடையே அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 3 நாட்களுக்கு முன்பும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மனவருத்தம் அடைந்த புனிதா, தற்கொலை செய்துகொள்ளும் விபரீத முடிவு எடுத்துள்ளார்.</p><h2>தீவிர சிகிச்சை</h2><p>சம்பவத்தன்று புனிதா, தனது 8 மாத குழந்தைக்கு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D%20">விஷம் </a>கொடுத்தார். அவரும் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் இருவரும் வாயில் நுரைதள்ளி மயங்கி கிடந்தனர். இதற்கிடையே உறவினர்கள் இதை கவனித்து இருவரையும் மீட்டு உடனடியாக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை ரியா பரிதாபமாக இறந்தது. தாய் புனிதாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 2 பேர் கைது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-female-students-two-people-including-a-government-school-headmaster-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-female-students-two-people-including-a-government-school-headmaster-arrested#comments</comments><guid isPermaLink="false">80e7cdb2-2def-4da4-a07a-6969b3b2bc37</guid><pubDate>Sat, 25 Jul 2026 01:31:55 +0000</pubDate><atom:updated>2026-07-25T01:31:55.810Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,Tiruvannamalai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/hjggpusp/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/hjggpusp/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை,</p><p>திருவண்ணாமலை அருகே உள்ள கிராமத்தில் ஒரு அரசுப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியர் உள்பட 5 ஆசிரி யர்கள் பணியாற்றி வருகின்றனர்.</p><p>இந்த பள்ளியை சேர்ந்த தலைமை ஆசிரியர் மங்கலம் கிராமத்தை சேர்ந்த ரவி(வயது 58), இடைநிலை ஆசிரியர் திருவண்ணாமலை தென்றல் நகரை சேர்ந்த முரளிதரன்(42) ஆகியோர் பள்ளியில் மாணவிகளை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.</p><p>இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் 1098 என்ற உதவி எண்ணிற்கு புகார் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து மாவட்ட குழந்தைகள் நலத்துறை அலுவலர்கள், பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் மங்கலம் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.</p><p>தொடர்ந்து இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் நேற்று முன்தினம் மாலை விசாரணைக்காக தலைமை ஆசிரியர் ரவி, இடைநிலை ஆசிரியர் முரளிதரன் ஆகியோரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்து, திருவண்ணாமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள், லோடு வாகனம் பறிமுதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/beedi-leaves-worth-rs50-lakhs-loaded-vehicle-seized-while-trying-to-smuggle-them-to-sri-lanka</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/beedi-leaves-worth-rs50-lakhs-loaded-vehicle-seized-while-trying-to-smuggle-them-to-sri-lanka#comments</comments><guid isPermaLink="false">3d2ef4b8-dc63-4180-8b3e-18263a9d7661</guid><pubDate>Sat, 25 Jul 2026 01:21:12 +0000</pubDate><atom:updated>2026-07-25T01:21:12.625Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>போலீஸ்,Thoothukudi,தூத்துக்குடி,Seizure,பறிமுதல்,ரோந்து பணி,Sri Lanka,beedi leaves,smuggling,இலங்கை,பீடி இலைகள்,கடத்தல்,Police patrol,லோடு வாகனம்,Load vehicle</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/ks6qxzar/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பீடி இலைகள், லோடு வாகனம் பறிமுதல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/ks6qxzar/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடற்கரை பகுதி வழியாக கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்புள்ள <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பீடி இலைகள்</a> மற்றும் லோடு வாகனத்தை தூத்துக்குடி கியூ பிரிவு போலீசார் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">பறிமுதல் </a>செய்தனர். </p><h2>போலீசார் ரோந்து பணி</h2><p>தூத்துக்குடி மாவட்டம், தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இனிக்கோநகர் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தபடுவதாக கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், ஏட்டுகள் இருதயராஜகுமார், இசக்கிமுத்து, போலீசார் பழனி, பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோர் ரோந்து பணிக்கு சென்றனர்.</p><h2>ரூ.50 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள், லோடு வாகனம் பறிமுதல்</h2><p>அப்போது இனிக்கோநகர் கடற்கரைக்கு செல்லும் வழியில் இன்று அதிகாலையில் இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்காக ஒரு லோடு வேனில் கொண்டுவரப்பட்ட 35 கிலோ எடை கொண்ட 36 மூட்டைகள் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. போலீசார் வருவதைக் கண்டதும் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் தப்பி ஓடி விட்டார்கள். எனவே அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். </p><p>அதைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள் மற்றும் லோடு வாகனம், சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட உள்ளது. கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் சர்வதேச மதிப்பு ரூ.50 லட்சம் என்று கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>”ஒரு படம் பார்த்தா ஜோக்கரா? மைக்கை பிடுங்கிட்டு துரத்திட்டாங்க”-  நடிகை சனம் ஷெட்டி  கோபம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/does-watching-a-movie-make-me-a-joker-they-snatched-the-mic-and-chased-me-away-actress-sanam-shetty</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/does-watching-a-movie-make-me-a-joker-they-snatched-the-mic-and-chased-me-away-actress-sanam-shetty#comments</comments><guid isPermaLink="false">21692a22-c314-40be-b586-2acde13d763a</guid><pubDate>Sat, 25 Jul 2026 01:17:10 +0000</pubDate><atom:updated>2026-07-25T01:17:10.924Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நடிகை சனம் ஷெட்டி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/zb4uj9u2/Shanam-shetti.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நடிகை சனம் ஷெட்டி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/zb4uj9u2/Shanam-shetti.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>நீட் தேர்வில் நடைபெற்றத முறைகேடு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலன் இல்லத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.</p> <h2>விஜய்யின் தீவிர ரசிகை</h2><p>இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படம் வியாழக்கிழமை வெளியானது. அந்தப் படத்தை முதலமைச்சர் விஜய், தவெக அமைச்சர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் பார்த்து கொண்டாடியிருப்பது அரசியல் வட்டாரங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. அதே நேரத்தில், மாணவர் போராட்டத்துக்கு அரசியல் கட்சியினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, நடிகை சனம் ஷெட்டி வெள்ளிக்கிழமை இரவு போராட்டத்தில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். மேடையில் பேசிய அவர், "இது மாணவர்களின் போராட்டம். இங்கு சிலர் பேசிய கருத்துகளுடன் எனக்கு உடன்பாடு இல்லை. இந்த மேடையை அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்துபவர்கள்தான் ஜோக்கர்கள்; நாங்கள் அல்ல. நான் விஜய்யின் தீவிர ரசிகை. நேற்று 'ஜனநாயகன்' படம் பார்த்துவிட்டு வந்தேன்" என்று கூறினார்.</p> <h2>சனம் ஷெட்டி அதிருப்தி</h2><p>அவரது பேச்சுக்கு போராட்டத்தில் இருந்த சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். பேச்சை நிறுத்துமாறு வலியுறுத்திய நிலையில், "நான் பேசவா, போகவா?" என்று சனம் ஷெட்டி கேட்க, "போய்விடுங்கள்" என்று போராட்டக்காரர்கள் பதிலளித்தனர். இதனால் அதிருப்தி அடைந்த சனம் ஷெட்டி, "இது பேச்சுரிமையை பறிக்கும் செயல். யாரும் சொல்லி நான் இங்கு வரவில்லை. மாணவர்களுக்காக பேசவே வந்துள்ளேன்" என்று கூறினார். </p><h2>இதுதான் ஜனநாயகமா?</h2><p>தொடர்ந்து எதிர்ப்பு நீடித்ததால் அவர் அங்கிருந்து வெளியேறினார். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சனம் ஷெட்டி, "நான் பேசிக்கொண்டிருக்கும்போதே மைக்கை பிடுங்கிவிட்டு என்னை வெளியேறச் சொன்னார்கள். இதுதான் ஜனநாயகமா? இது ஒரு போலியான போராட்டம். வெற்றி மாறன் உட்கார்ந்து இருக்கிறாரே.. அவர் எத்தனை படங்கள் எடுத்துள்ளார். அவரையும் ஜோக்கர் என்றுதான் சொல்கிறீர்களா? இந்த மேடையை அரசியல் அஜெண்டாவுக்காக பயன்படுத்த  யாராக இருந்தாலும் நான்  அனுமதிக்க மாட்டேன். ஆயிரம் பேர் இருந்தாலும் எனக்கு கவலை இல்லை. ஜனநாயகத்திற்காக  அவர்கள் போராடவில்லை. அவுங்க ஏஜெண்டா வைத்துதான் போராடுகிறார்கள். இந்த வலையில் வீழ்ந்து விடாதீர்கள். என்னோட தனிப்பட்ட கருத்துதான் நான் பேசுவேன்.நான்  இவர்களுடைய கைப்பாவையா... பேசுவதற்கு சுதந்திரம் கொடுக்காத இவர்கள் சுதந்திரத்திற்காக போராடுகிறார்கள்” என ஆவேசமாக பேசினார். </p>]]></content:encoded></item><item><title>மருத்துவ சேர்க்கைக்கு 70 ஆயிரம் விண்ணப்பங்கள்; கடந்த ஆண்டைவிட எண்ணிக்கை குறைவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/70000-applications-for-medical-admission-number-lower-than-last-year</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/70000-applications-for-medical-admission-number-lower-than-last-year#comments</comments><guid isPermaLink="false">bfaf1f51-f6ed-42ad-a6cb-d648741fe622</guid><pubDate>Sat, 25 Jul 2026 01:01:56 +0000</pubDate><atom:updated>2026-07-25T01:01:56.279Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>குறைவு,விண்ணப்பங்கள்,Medical Student Admission,மருத்துவ சேர்க்கை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/9i5n8sll/68.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/9i5n8sll/68.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>கல்வி&amp;வேலைவாய்ப்பு (Eduction and Jobs)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளங்கலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து, கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவை மருத்துவ கல்வி இயக்குனரகம் கடந்த மாதம் (ஜூன்) 29-ந்தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் விண்ணப்பப்பதிவு நிறைவு பெற்றது. அதன்படி, இளங்கலை எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 40 ஆயிரத்து 760 விண்ணப்பங்களும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 29 ஆயி ரத்து 726 விண்ணப்பங்களும் என மொத்தம் 70 ஆயிரத்து 486 விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு தெரிவித்திருக்கிறது.</p><h2>கடந்த ஆண்டை விட குறைவு</h2><p>இது கடந்த ஆண்டுகளுடனான விண்ணப்பங்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது, குறைவு ஆகும். கடந்த ஆண்டில் 72 ஆயிரத்து 743 விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியான விண்ணப்பங்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட இருக்கின்றன. அதனைத் தொடர்ந்து கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டு, அதன் அடிப்படையில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20">மாணவர் சேர்க்கை </a>இடங்கள் நிரப்பப்பட உள்ளன.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-price-situation-in-chennai-119</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-price-situation-in-chennai-119#comments</comments><guid isPermaLink="false">2cbee873-7a43-4d58-a434-bf973ba17cf6</guid><pubDate>Sat, 25 Jul 2026 00:44:07 +0000</pubDate><atom:updated>2026-07-25T00:44:07.561Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>petrol and diesel,பெட்ரோல் விலை,டீசல் விலை</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/s52lthzt/2.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/s52lthzt/2.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.</p><p>பெட்ரோல், டீசல் விலை</p><p>இந்நிலையில், சென்னையில் இன்று (25.07.2026 சனிக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ. 99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>சேலம்: மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-5-pounds-chain-snatched-from-old-lady</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-5-pounds-chain-snatched-from-old-lady#comments</comments><guid isPermaLink="false">5cce9df5-786b-482b-8a54-e6679474cf3b</guid><pubDate>Sat, 25 Jul 2026 00:38:26 +0000</pubDate><atom:updated>2026-07-25T00:38:26.021Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,நகை பறிப்பு,chain snatching,சேலம்</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/x7n2f6u8/chainsnatching.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/x7n2f6u8/chainsnatching.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த ஆலசம்பாளையம் அருகே மோலாணி முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் அதேபகுதியை சேர்ந்த ராமாயி (வயது 65) மற்றும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்று இருந்தனர். </p><p>அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றார். சாமி தரிசனம் முடிந்து வெளியே வந்த மூதாட்டி கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலி திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் எடப்பாடி போலீஸ் மற்றும் கோவில் நிர்வாகத்திடம் புகார் செய்தார். அதன்பேரில் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ஈரோடு: வாய்க்கால் மதகில் சிக்கி விவசாயி பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmer-drowns-in-kalingarayan-canal-erode</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmer-drowns-in-kalingarayan-canal-erode#comments</comments><guid isPermaLink="false">cb95aee6-b511-4cd8-99db-3ea9273761f3</guid><pubDate>Fri, 24 Jul 2026 23:05:37 +0000</pubDate><atom:updated>2026-07-24T23:05:37.814Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Erode,ஈரோடு,gate,Farmer dies,விவசாயி பலி,சிக்கி,மதகு,were trapped</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/g3xwcmcc/farmer.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விவசாயி பலி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/g3xwcmcc/farmer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2>ஈரோடு,</h2><p>ஈரோடு அருகே காலிங்கராயன் வாய்க்கால் மதகில் சிக்கி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF">விவசாயி </a>ஒருவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நெஞ்சை உருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விவசாய நிலத்திற்கு தண்ணீர் ஈரோடு மாவட்டம் மலையம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 52). விவசாயி. </p><p>இவருக்கு காலிங்கராயன் வாய்க்கால் பாசனப் பகுதியில் விவசாய நிலம் உள்ளது. தற்போது வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.</p><h2>மதகில் சிக்கினார்</h2><p>இந்த நிலையில், நேற்று தனது விளைநிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக பழனிசாமி வாய்க்கால் பகுதிக்கு சென்றார். அங்குள்ள மதகு வழியாக தனது நிலத்திற்கு தண்ணீரை திருப்புவதற்கான பணியில் அவர் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருந்தார். மதகில் சிக்கினார் அப்போது, எதிர்பாராதவிதமாக பழனிசாமியின் கால் நழுவி, அவர் வாய்க்கால் மதகின் இடுக்கில் சிக்கிக்கொண்டார். </p> <h2>மீட்க முயன்றனர்</h2><p>அந்த சமயத்தில் வாய்க்காலில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால், அவரால் மதகில் இருந்து வெளியே வர முடியவில்லை. சுழன்றடித்த தண்ணீரின் வேகத்தில் அவர் வாய்க்கால் வெள்ளத்திற்குள் மூழ்கி தத்தளித்தார். அருகில் இருந்த மற்ற விவசாயிகள் ஓடிவந்து அவரை மீட்க முயன்றனர். </p> <h2>போலீசார் விசாரணை</h2><p>இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கொடுமுடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p><p>இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>

கூடுதல் விலைக்கு மது விற்றால் ரூ.10 ஆயிரம் அபராதம்... டாஸ்மாக் அதிரடி!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-10000-fine-for-selling-liquor-at-a-higher-price-tasmacs-strict-move</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-10000-fine-for-selling-liquor-at-a-higher-price-tasmacs-strict-move#comments</comments><guid isPermaLink="false">e369e4f7-46fc-45cf-a2cc-8758479af774</guid><pubDate>Fri, 24 Jul 2026 23:00:00 +0000</pubDate><atom:updated>2026-07-24T23:00:00.000Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அபராதம்,டாஸ்மாக்,Tasmac,fine collection,மது,கூடுதல் விலை,டாஸ்மாக் மதுபான கடை,Tasmac employees</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/0ubdv0ck/9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/0ubdv0ck/9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>டாஸ்மாக்கில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.</p><h2>மேலாளர்களுக்கு சுற்றறிக்கை</h2><p>டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபானங்களை அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை (எம்.ஆர்.பி) விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் டாஸ்மாக் நிர்வாகம் சுற்றிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>டாஸ்மாக் மதுபான கடைகளில் எம்.ஆர்.பி.யைவிட கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்ததாக நுகர்வோரிடமிருந்து புகார் பெறப்பட்டாலோ அல்லது டாஸ்மாக் அலுவலர்களின் திடீர் ஆய்வின்போது கண்டறியப்பட்டாலோ, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது உறுதிசெய்யப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட கடையின் பணியாளர்கள் (மேற்பார்வையாளர், விற்பனையாளர் மற்றும் உதவி விற்பனையாளர்) மீது கீழ்க்கண்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.</p> <h2>முதல் முறை</h2><p>* முதல் முறை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது கண்டறியப்பட்டால், ஒருமாத காலம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட பணியாளரிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட வேண்டும். தற்காலிக பணியிடை நீக்க காலமான ஒரு மாதத்திற்கு தொகுப்பூதியம் வழங்கப்படாது. ஒரு மாத பணியிடை நீக்கம் முடிந்த பின், இனி மேல் இதுபோன்ற தவறு செய்யமாட்டேன் என்ற உறுதிமொழி பெற்றுக் கொண்டு, தலைமையக ஒப்புதலுடன், அவர் மீண்டும் பணியில் அமர்த்தப்பட வேண்டும்.</p><h2>3 மாத பணியிடை நீக்கம்</h2><p>* 2-வது முறையாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது கண்டறியப்பட்டால், 3 மாத காலம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும். பணியாளரிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட வேண்டும். 3 மாத தற்காலிக பணியிடை நீக்க காலத்திற்கு தொகுப்பூதியம் வழங்கப்படாது. 3 மாத பணியிடை நீக்கம் முடிந்த பின், இனிமேல் இதுபோன்ற தவறு செய்யமாட்டேன் என்ற உறுதிமொழி பெற்றுக்கொண்டு, தலைமையக ஒப்புதலுடன், அவர் பணிபுரியும் கடையில் இருந்து அதே மாவட்டத்தில் உள்ள மதுபானக் கிடங்கிற்கு பணிமாற்றம் செய்யப்பட்டு, குறைந்தது 3 மாதங்கள் அங்கு பணியாற்ற வேண்டும்.</p><p>* 3-வது முறை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது கண்டறியப்பட் டால், சம்பந்தப்பட்ட பணியாளர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, குற்றக் குறிப்பாணை வழங்கி உள்விசாரணை நடத்த வேண்டும். உள்விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்.</p><h2>ரூ.10 ஆயிரம் அபராதம்</h2><p>ரூ.1 முதல் 9 வரை கூடுதலாக வசூல் செய்தால், ரூ.1-க்கு ரூ.1,000 வீதம் அதிகபட்சமாக ரூ.9,000 என்ற வீதத்தில் அபராதம் விதிக்க வேண்டும். ரூ.10 மற்றும் அதற்கு மேல் கூடுதலாக வசூல் செய்தால் ரூ.10 ஆயிரம் மட்டும் விதிக்க வேண்டும். அபராத தொகையில் 60 சதவீதத்தை விற்பனை செய்த பணியாளரும், 40 சதவீதத்தை அப்போது கடையில் உடன் இருந்த மேற்பார்வையாளரும் (மேற்பார்வையாளர் ஆஜரில் இல்லாத பட்சத்தில் விற்பனை செய்த பணியாளர் அபராத தொகையினை முழுவதுமாக) செலுத்த வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title> ஓமலூர் அருகே ஏரியில் வண்டல் மண் அள்ளியதால் பனை மரங்கள் சாய்ந்து விழும் அபாயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/illegal-soil-mining-near-omalur-puts-century-old-palms-at-risk</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/illegal-soil-mining-near-omalur-puts-century-old-palms-at-risk#comments</comments><guid isPermaLink="false">3270c37d-fbb9-4d6d-81b2-456f56c2dd9f</guid><pubDate>Fri, 24 Jul 2026 22:35:24 +0000</pubDate><atom:updated>2026-07-24T22:35:24.077Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஏரி,lake,Palm trees,பனை மரங்கள்,அபாயம்,Soil collection,வண்டல் மண்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/zdigl8gw/palm-tree.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பனை மரங்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/zdigl8gw/palm-tree.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பனங்காட்டூர் கிராமத்து ஏரியில், விவசாய பயன்பாட்டிற்காக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D">வண்டல் மண்</a> எடுக்க அரசு சார்பில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த அனுமதியைத் தவறாகப் பயன்படுத்திய சில சமூக விரோதிகள், ஏரியின் இயற்கை அரணாக விளங்கும் பனை மரங்களின் வேர்களை ஒட்டியே ஆபத்தான முறையில் விதிகளை மீறி நள்ளிரவிலும், பகலிலும் மண் அள்ளி கடத்தி வந்துள்ளனர். இதனால் நூற்றாண்டு பழமையான பனை மரங்கள் வேரிழந்து, பலத்த காற்று வீசினால் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளது. </p><h2>அதிர்ச்சி பின்னணி</h2><p>வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்பட்ட அளவை விட, பாக்லைன் மற்றும் ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் மிக ஆழமாக மண் அள்ளப்பட்டுள்ளது. கரையை ஒட்டி ராட்சத பள்ளங்கள் தோண்டப்பட்டதால், பனை மரங்களை தாங்கி நிற்கும் மண் முழுமையாக அரிக்கப்பட்டு, வேர்கள் அந்தரத்தில் தொங்குகின்றன. ஏரியின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் இந்த சட்டவிரோத மண் கடத்தல் குறித்து, அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினருக்கு அவசரப் புகார் அனுப்பினர்.</p><h2>மக்கள் புகார்</h2><p>பொதுமக்களின் புகாரை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த ஓமலூர் போலீசார் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அனுமதியை மீறி, பனை மரங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் எல்லையைத் தாண்டி மண் அள்ளி கடத்தியது முதற்கட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. </p><h2>தீவிர விசாரணை</h2><p>இதையடுத்து, விதிகளை மீறி செயல்பட்ட நபர்கள் மீது போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்யவும், இதில் தொடர்புடைய மர்ம நபர்களைக் கைது செய்யவும் தனிப்படை அமைத்து போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.</p><h2>மண் அள்ளி கடத்தல் </h2><p>இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், விவசாய நிலங்களுக்கு மண் அள்ளுவதாக அனுமதி பெற்று கொண்டு சிலர் செங்கல் சூளைகளுக்கு மண் அள்ளி கடத்தி செல்கின்றனர். இதனால் ஏரியில் உள்ள பனை மரங்கள், மின் கம்பங்கள் அந்தரத்தில் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து மண் அள்ளி கடத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மரங்களை பாதுகாக்க வேண்டும் என்று கூறினர்.</p> <p> அரசு அனுமதியின் பெயரால் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்ட இந்த சம்பவம் ஓமலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>ஈரோடு: விவசாய தோட்டத்திற்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-wild-elephant-rampage-in-farm</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-wild-elephant-rampage-in-farm#comments</comments><guid isPermaLink="false">ca68e86f-a71f-4525-8f10-f146e01c40da</guid><pubDate>Fri, 24 Jul 2026 21:25:27 +0000</pubDate><atom:updated>2026-07-24T21:25:27.546Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Erode,ஈரோடு,தோட்டம்,காட்டு யானை அட்டகாசம்,farmlands,A wild elephant</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/qmtdo2di/elephant.25.07.2026.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காட்டு யானை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/qmtdo2di/elephant.25.07.2026.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு, </p><p>ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் புகுந்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88">காட்டு யானை</a>, விவசாய பயிர்களை துவம்சம் செய்தது. வனத்துறையினர் சைரன் ஒலி எழுப்பி, நீண்ட போராட்டத்திற்குப் பின் யானையை அடர்ந்த காட்டுக்குள் விரட்டியடித்தனர்.</p><h2>தோட்டத்திற்குள் புகுந்த யானை</h2><p>ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. இதனால், வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு எருமைகள், சிறுத்தைகள் மற்றும் காட்டு யானைகள் அடிக்கடி விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகி வருகிறது. </p><h2>அதிர்ச்சி</h2><p>இந்த நிலையில், நேற்று நள்ளிரவு கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் தோட்டத்திற்குள் திடீரென ஒரு காட்டு யானை புகுந்தது. தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழை, கரும்பு மற்றும் காய்கறி பயிர்களை அந்த யானை கால்களால் மிதித்தும், தின்றும் பயங்கரமாக சேதப்படுத்தியது. யானையின் பிளிறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த விவசாயிகள், உயிருக்கு பயந்து பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். </p><h2>சைரன் ஒலி</h2><p>இதுகுறித்து உடனடியாக ஜீராகள்ளி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வனச்சரகர் தலைமையிலான வனக்காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் பட்டாசுகளை வெடித்தும், தங்களது வாகனங்களின் 'சைரன்' ஒலியை அலறவிட்டும் யானையை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.</p><h2>2 மணி நேரம்</h2><p>சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த கடும் போராட்டத்திற்குப் பிறகு, பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானை மெல்ல நகர்ந்து மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னரே அப்பகுதி விவசாயிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>
உடன்குடியில் இருதரப்பினர் மோதல்: நடிகர் ஜி.பி.முத்துவின் தம்பி மனைவி உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/clash-between-two-groups-in-udangudi-two-people-including-actor-gp-muthus-younger-brothers-wife-hacked-with-sickles</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/clash-between-two-groups-in-udangudi-two-people-including-actor-gp-muthus-younger-brothers-wife-hacked-with-sickles#comments</comments><guid isPermaLink="false">8612b97a-3ba6-486b-8249-38a56b04bd8b</guid><pubDate>Fri, 24 Jul 2026 19:27:16 +0000</pubDate><atom:updated>2026-07-24T19:27:16.611Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அரிவாள் வெட்டு,Tuticorin,உடன்குடி,Kulasekaranpattinam,GP Muthu,ஜி.பி.முத்து,நடிகர் ஜி.பி.முத்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/o2118qsd/4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/o2118qsd/4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>குலசேகரன்பட்டினம்,</p><p>தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பெருமாள்புரத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபரும், சினிமா நடிகருமான ஜி.பி.முத்துவின் வீட்டின் அருகே கோவில் கட்டுவது தொடர்பாக இரு தரப்பினரிடையே முன்விரோதம் இருந்தது. கடந்த 20-ந் தேதி நள்ளிரவில் ஜி.பி.முத்து வீட்டின் முன்பு எதிர் தரப்பினர் கோழியை அறுத்து பலி கொடுத்துப் பூஜை செய்ததாகக் கூறப்படுகிறது. </p>  <p>இதைத் தட்டிக்கேட்டபோது ஏற்பட்ட மோதலில், இரும்பு கம்பி மற்றும் அரிவாளால் தாக்கியதில் ஜி.பி.முத்துவின் தம்பி மனைவி அனிதா, உறவினர் இளையபெருமாள் ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. படுகாயமடைந்த இருவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். </p> <p>இதுகுறித்து ஜி.பி.முத்து அளித்த புகாரின்பேரில், அப்பகுதியைச் சேர்ந்த பரமசிவன், மாடசாமி, ஆத்திசெல்வம், வேம்புநாதன், முத்துகிருஷ்ணன், மகேஷ், சுந்தரவேல், சுடலையாண்டி ஆகிய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோன்று எதிர் தரப்பை சேர்ந்த முத்து மகேஷ், சுந்தரவேல், மாடசாமி, ஆத்திசெல்வம் ஆகியோரை ஜி.பி.முத்து, அவருடைய தந்தை கணேசன், ஜி.பி.முத்துவின் மனைவி அஜிதா, ஜி.பி.முத்துவின் தம்பி மனைவி அனிதா, இளையபெருமாள், வேல்முருகன் மற்றும் ஜி.பி.முத்து குழந்தைகள் சேர்ந்து பிளாஸ்டிக் நாற்காலிகளால் தாக்கினர். இதுகுறித்த புகாரின்பேரில், ஜி.பி.முத்து உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>காரியாபட்டி:  சோலார் ஆலைக்கு நிலம் அளக்க வந்த அதிகாரிகள் மீது கல்வீச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/stone-pelting-on-officials-during-solar-plant-land-survey</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/stone-pelting-on-officials-during-solar-plant-land-survey#comments</comments><guid isPermaLink="false">8a32f38c-ab3a-42a8-8e75-1c3e914cb3b4</guid><pubDate>Fri, 24 Jul 2026 19:25:52 +0000</pubDate><atom:updated>2026-07-24T19:25:52.397Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அதிகாரிகள்,government officials,கல்வீச்சு,காரியாபட்டி,attacked with stones,Solar Power Plants,சோலார் நிறுவனம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/ddya1ur2/crowd.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கிராம மக்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/ddya1ur2/crowd.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர்,</p><p>காரியாபட்டி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">விருதுநகர் மாவட்டம்</a> காரியாபட்டி அருகே சூரனூரில் தனியார் சோலார் மின் உற்பத்தி ஆலை அமைக்க 41 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தை அளவீடு செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. </p><h2>நில அளவீடு</h2><p>நீதிமன்ற உத்தரவின்படி, காரியாபட்டி துணை தாசில்தார் ஜெயராஜ் தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகளும், தனியார் நிறுவன அதிகாரிகளும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நிலத்தை அளவீடு செய்ய சம்பவ இடத்திற்கு வந்தனர். </p><h2>முற்றுகை</h2><p>அப்போது, கோவிலாங்குளம், உடுப்புகுளம், ஆவரம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அங்கு திரண்டனர். சோலார் திட்டம் அமைக்க உள்ள பகுதி தங்களின் விவசாய நிலம் என்றும், கண்மாய் நீர்வரத்து பாதையை தனியார் நிறுவனத்திற்கு வழங்கக் கூடாது என்றும் கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். </p><h2>விவசாயிகள் எதிர்ப்பு</h2><p>இந்த சோலார் திட்டம் செயல்படுத்தப்பட்டால் கண்மாய்க்கு நீர்வரத்து தடைபடும் என்றும், விவசாய நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் கூறி நிலத்தை அளக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.</p><h2>கல்வீச்சு</h2><p>ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த கிராம மக்கள் நில அளவை செய்ய வந்த அதிகாரிகள் மீது திடீரென கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.</p><h2>பாதுகாப்பு பணி</h2><p>பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், கல்வீச்சில் ஈடுபட்ட கிராம மக்களை தடுத்து நிறுத்தி, அதிகாரிகளை பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் சூரனூர் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞரிடம் ரூ.1.54 லட்சம் மோசடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-cheated-of-rs-154-lakhs-on-the-pretext-of-getting-a-job</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-cheated-of-rs-154-lakhs-on-the-pretext-of-getting-a-job#comments</comments><guid isPermaLink="false">5061056b-4ba5-46a4-8441-6518ebd31884</guid><pubDate>Fri, 24 Jul 2026 16:24:27 +0000</pubDate><atom:updated>2026-07-24T16:24:27.343Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்சி,Tiruchy</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/v32omf1i/Untitled-13.jpg" width="753"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/v32omf1i/Untitled-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி, </p><p>திருச்சி பருப்புக்காரத் தெரு, ஆரோக்கிய மாதா கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த ராஜ பிரபாகரனின் மகன் அந்தோணி (22), வேலை தேடி வந்த நிலையில், ஆன்லைன் வேலைவாய்ப்பு தளத்தில் தனது விவரங்களை பதிவு செய்துள்ளார்.</p><h2>பணம் மோசடி</h2><p>இதையடுத்து, வேலைவாய்ப்பு நிறுவனம் எனக் கூறி இ-மெயில் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், அவரது புகைப்படம், ஆதார் அட்டை நகல் மற்றும் கையெழுத்து உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுள்ளனர். பின்னர் வேலை தயாராகிவிட்டதாகக் கூறி, அவர் வழங்கிய ஆவணங்களை பயன்படுத்தி போலியான ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.</p><p>அதன்பின், அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டுமெனில் பணம் செலுத்த வேண்டும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த அந்தோணி, அவர்கள் குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்து 980-ஐ அனுப்பியுள்ளார்.</p><h2>விசாரணை </h2><p>பின்னர் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், திருச்சி மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆன்லைன் மூலம் புகார் அளித்தார். புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப்பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட நபர்களை கண்டறியும் பணியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.</p> ]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையராக சிவஞானம் நியமனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sivagnanam-appointed-as-tamil-nadu-disaster-management-commissioner</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sivagnanam-appointed-as-tamil-nadu-disaster-management-commissioner#comments</comments><guid isPermaLink="false">15827dec-37fc-4269-99c4-b62e242bcdd3</guid><pubDate>Fri, 24 Jul 2026 16:02:56 +0000</pubDate><atom:updated>2026-07-24T16:02:56.397Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,tngovt,பேரிடர் மேலாண்மை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/mdb3joof/siva33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிவஞானம் நியமனம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/mdb3joof/siva33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு அரசின் பேரிடர் மேலாண்மை துறை ஆணையராக சிவஞானம் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>2010 தமிழ்நாடு கேடர் ஐஏஎஸ் அதிகாரியான சிவஞானம், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக பதவி வகித்து வந்தார். இந்நிலையில், <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF">சிவஞானம் ஐஏஎஸ்</a>-ஸை பேரிடர் மேலாண்மை துறை ஆணையராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.</p><p>அதற்கு முன்னதாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (CMDA) தலைமைச் செயல் அதிகாரியாகப் பணியாற்றி வந்த இவர், தேர்தல் சமயத்தில் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலின் போதும் இணை தலைமை தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. </p><p>அதேபோல, மத்திய அரசு பணியில் இருந்து தமிழ்நாடு பணிக்கு திரும்பியுள்ள ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் புதிதாக உருவாக்கப்பட்ட நில நிர்வாக கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>குழந்தைகள் பள்ளி இடைநிற்றலைத் தடுக்க சென்னை மாநகராட்சியில் ஆலோசனைக் கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-corporation-holds-consultative-meeting-to-prevent-school-dropout-of-children</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-corporation-holds-consultative-meeting-to-prevent-school-dropout-of-children#comments</comments><guid isPermaLink="false">f8e9a35d-6cfb-4bc7-af8b-16d7c583a42d</guid><pubDate>Fri, 24 Jul 2026 15:18:26 +0000</pubDate><atom:updated>2026-07-24T15:18:26.078Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,சென்னை மாநகராட்சி கமிஷனர்,சென்னை மாநகராட்சி ஆணையர்,Chennai Corporation Commissioner,Greater Chennai Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/b5vybyfe/Untitled-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/b5vybyfe/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகராட்சியில் குழந்தைகள் பள்ளி இடைநிற்றலைத் தடுத்தல் தொடர்பாக அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய பங்குதாரர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>ஆலோசனைக் கூட்டம்</h2><p>பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி. எஸ். சமீரன் தலைமையில், குழந்தைகள் பள்ளி இடைநிற்றலைத் தடுத்தல், பள்ளிக்கு செல்லாமல் உள்ள குழந்தைகளை (Out-of-School Children), பள்ளியில் சேர்த்து பாதுகாத்தல் தொடர்பாக அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய பங்குதாரர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் இன்று (24.07.2026) நடைபெற்றது.</p><p>இக்கூட்டத்தில் இணை ஆணையாளர்கள் செ.சரவணன், க.கற்பகம் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் உள்ளிட்ட பங்குதாரர்கள் கலந்து கொண்டனர்.</p><h2>முன்கூட்டியே கண்டறிய ஆலோசனை</h2><p>இக்கூட்டத்தில், பெற்றோர் பராமரிப்பின்றி உள்ள குழந்தைகளின் பள்ளி இடைநிற்றலைத் தடுத்தல், குழந்தைகளின் மறுவாழ்வு ஆலோசனை சேவைகள், பாதுகாப்பு இல்லங்கள், மறுகுடியமர்வு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு உளவியல் ஆலோசகர்கள் நியமித்தல், ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், உடல் மற்றும் மனநல விழிப்புணர்வு, பள்ளிகளுக்கு அருகிலுள்ள போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கும் நடவடிக்கைகள், ஆதார் மற்றும் பிறப்புச் சான்றிதழ் போன்ற ஆவணங்களுக்கான சிறப்பு முகாம்கள் நடத்துதல், குடிநீர் வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் பள்ளி இடைநிற்றலை முன்கூட்டியே கண்டறிய துறைகளுக்கிடையேயான தரவு பகிர்வு ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.</p><p>அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளை முன்கூட்டியே அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு, கல்வி மற்றும் மறுவாழ்வு சேவைகளை காலதாமதமின்றி வழங்கி, பள்ளியில் தொடர்ந்து கல்வி கற்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள ஆணையாளர் அறிவுறுத்தினார்.</p><p>இதனைத் தொடர்ந்து, ஆணையாளர் மாநகராட்சியின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் செயல்பாடுகள் குறித்து, ஆய்வு செய்து, சமூக நலத் திட்டங்கள் மற்றும் இரவுநேர தங்குமிடங்களின் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">செயல்பாடுகளை </a>மேலும் திறம்பட செயல்படுத்த தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரீல் ஹீரோ, ரியல் ஹீரோ ஆக சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/reel-hero-must-fulfil-promises-to-be-real-hero-premalatha-vijayakanth</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/reel-hero-must-fulfil-promises-to-be-real-hero-premalatha-vijayakanth#comments</comments><guid isPermaLink="false">18c0792e-c157-49cb-b54b-89a9454f36e9</guid><pubDate>Fri, 24 Jul 2026 15:14:43 +0000</pubDate><atom:updated>2026-07-24T15:14:43.778Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Premalatha Vijayakanth,பிரேமலதா விஜயகாந்த்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/jgbupwb3/Untitled-11.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரேமலதா விஜயகாந்த்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/jgbupwb3/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர்,</p><p>தமிழகத்தில் ஒரு மாற்றமும் பார்க்க முடியவில்லை; அதே கண்துடைப்பு தான் நிகழ்கிறது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-</p><p>அரிசி விலை அதிகரித்துள்ளது; நேற்று மட்டும் ஒரு டன் அரசி ரூ.15 ஆயிரம் உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வு குறித்து அரசு சிந்திக்க வேண்டும். சும்மா சினிமா பாத்துக்கொண்டு, தியேட்டரில் உட்கார்ந்து அழுதுவிட்டு, சீன் போடுவது கிடையாது. இவை மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை. எல் நினோ பிரச்சினையால் தமிழகம் வறட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் பஞ்சம், வறட்சி, விலைவாசி உயர்வு ஆகியவை இல்லாமல் மக்களை பாதுகாக்க வேண்டும்.</p><p>தூத்துக்குடியில் மீண்டும் காவல் மரணம் நிகழ்ந்துள்ளது. இவை தடுக்கப்பட வேண்டும். எந்த காவல்துறைக்கும் ஒருவரை அடித்துக் கொல்லும் உரிமை, எந்தச் சட்டத்திலும் கிடையாது. ஒருவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றால், விசாரித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துங்கள். தவறு இருப்பின் நீதிமன்றம் தண்டனை வழங்கும். காவல் மரணம் தொடரக் கூடாது. </p><p>மக்கள் விரும்புவதை தான் சட்டங்களாக கொண்டுவர வேண்டும். நீட் தேர்வை ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்க்கையில், அதை நீக்கிவிட வேண்டும். மக்களுக்காக தான் சட்டங்களும், திட்டங்களும். மக்களின் கோரிக்கையை தான் அரசுகள் கேட்க வேண்டும்.</p><p>தமிழகத்தில் ஒரு மாற்றமும் பார்க்க முடியவில்லை; அதே கண்துடைப்பு தான் நிகழ்கிறது. இது சினிமா கிடையாது. ரீல் ஹீரோ, ரியல் ஹீரோ ஆக வேண்டும் என்றால் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நாளை மீண்டும் ‘ஜனநாயகன்’ படம் பார்க்கிறார் முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-will-watch-the-film-jananayagan-again-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-will-watch-the-film-jananayagan-again-tomorrow#comments</comments><guid isPermaLink="false">0ca3ba63-d7c4-461b-b06c-780f6ed8890a</guid><pubDate>Fri, 24 Jul 2026 15:05:53 +0000</pubDate><atom:updated>2026-07-24T15:05:53.987Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,Vijay,விஜய்,ஜனநாயகன்,Jananayagan,முதல்-அமைச்சர் விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/4zfc6yxp/janangayan33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘ஜனநாயகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/4zfc6yxp/janangayan33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>எச்.வினோத் இயக்கத்தில் முதல்-அமைச்சர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம், தணிக்கை சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை கடந்து உலகம் முழுவதும் நேற்று (வியாழக்கிழமை) வெளியானது. இந்தப்படம் ஏற்கனவே சட்டவிரோதமாக இணையத்தில் வெளியாகி இருந்தாலும், விஜய் ரசிகர்கள் இந்தப்படத்தை பார்க்க பெரும் ஆவலுடன் இருந்தனர். இதனால் நேற்று முன்தினம் இரவு முதலே கொண்டாட்டத்தில் களமிறங்கினர்.</p><p>சென்னையில் இந்த படம் வெளியான திரையரங்குகள் அனைத்தும் திருவிழாக்கோலம் கண்டிருந்தன. பல அடி உயர பிரமாண்ட கட்-அவுட்கள், பேனர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. தியேட்டர்கள் முன்பு குவிந்த ரசிகர்கள், விஜய்யின் புகைப்படங்களுக்கு மலர் தூவி, கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.</p><p>சட்டமன்றத்தில் விஜய் காட்டும் சைகையை மையப்படுத்தி பெரும்பாலான தியேட்டர்களில் கட்-அவுட் வைக்கப்பட்டிருந்தது. படம் திரையிடப்பட்டிருந்த அண்ணாநகர், வடபழனி, வேளச் சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் இருக்கும் மால்களிலும் ரசிகர்கள் கூட்டம் நிறைந்திருந்தது.</p><h2>அமைச்சர்கள்-பிரபலங்கள்</h2><p>சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் தியேட்டரில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் 'ஜன நாயகன்' படத்தை பார்த்தார். கோயம்பேட்டில் உள்ள ரோகிணி தியேட்டரில் அமைச்சர்கள் என்.ஆனந்த், அருண்ராஜ் ஆகியோர் படத்தை பார்த்து ரசித்தனர்.</p><p>இது விஜய்யின் கடைசி படம் என்பதால், படத்தின் இறுதியில் விஜய்யின் திரையுலக பயணம் பற்றிய சிறுகுறிப்பு காட்டப்பட்டது. இந்த காட்சியை பார்த்து அமைச்சர் என்.ஆனந்த் உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார். அதேபோல படம் பார்த்த ரசிகர்கள் அத்தனை பேரும் உணர்ச்சி வசப்பட்டனர்.</p><p>இதே தியேட்டரில் நடிகை திரிஷா, தனது தாயார் உமாவுடன் ‘<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D">ஜனநாயகன்</a>' படம் பார்த்தார். நடிகைகள் சனம் ஷெட்டி, சஞ்சனா உள்ளிட்டோரும் அங்கு படம் பார்த்தனர். குரோம்பேட் டையில் உள்ள வெற்றி தியேட்டரில் நடிகைகள் கீர்த்தி சுரேஷ், மமிதா பைஜூ, இசையமைப் பாளர் அனிருத் உள்ளிட்டோர் படம் பார்த்தனர். இதுபோல சினிமா பிரபலங்கள் பலரும் ஆங்காங்கே தியேட்டர்களில் 'ஜனநாயகன்' படத்தை பார்த்து ரசித்தனர்.</p><p>'ஜனநாயகன்' படத்தின் தொடக்கத்திலேயே 'மாண்புமிகு தமிழக முதல்-அமைச்சர் தளபதி விஜய்' என்று டைட்டில் கார்டு போடும்போதே ரசிகர்களின் உற்சாகம் பறக்க தொடங்கி விடு கிறது. அதே நேரம் இந்த படம் விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் கண்ணீர் சிந்தினர்.</p><p>இந்தநிலையில், ‘ஜனநாயகன்' படக்குழுவுடன் நாளை (ஜூலை 25) காலை 11.30 மணியளவில் மீண்டும் படத்தைப் பார்த்து ரசிக்கவுள்ளார் முதல்-அமைச்சர் விஜய். ஏற்கனவே அரசு அதிகாரிகளுடன் சிறப்புக் காட்சி பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை வார விடுமுறையொட்டி சினிமா தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>இதனிடையே  உலகம் முழுவதும் 'ஜனநாயகன்' திரைப்படம் 7,400 தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. இந்தியாவில் மட்டும் 5,300 தியேட்டர்களில் வெளிவந்தது. குறிப்பாக, தமிழகத்தில் 1,250 தியேட்டர்களில், 2,700 திரைகளில் வெளியிடப்பட்டது. ஆக்சன் அதிரடியில் ரசிகர்களை திருப்திபடுத்திய 'ஜனநாயகன்' திரைப்படம், முதல் நாளில் உலக அளவில் ரூ.78 கோடி முதல் ரூ.80 கோடி வரை வசூல் சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>இந்தியாவில் மட்டும் ரூ.41 கோடியை வாரி குவித்துள்ளது. தமிழ்நாட்டில், ரூ.36.50 கோடி வசூலித்துள்ள இப்படம், தெலுங்கில் ரூ.2.75 கோடியும், இந்தியில் ரூ.1.75 கோடியும் ஈட்டியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை சரிவு: இன்றைய நிலவரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/egg-price-drop-in-namakkal-zone-todays-status</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/egg-price-drop-in-namakkal-zone-todays-status#comments</comments><guid isPermaLink="false">039c0de0-a50b-4a76-af8b-3ffdb69abab1</guid><pubDate>Fri, 24 Jul 2026 14:06:39 +0000</pubDate><atom:updated>2026-07-24T14:06:39.888Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Namakkal,நாமக்கல்,முட்டை விலை,egg price</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/8r7grxiz/egg.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/8r7grxiz/egg.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல்,</p><p>நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 30 காசுகள் சரிந்து ரூ.6.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 16ஆம் தேதி முதல் ரூ.6.80-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், 8 நாட்களுக்கு பிறகு சற்று குறைந்துள்ளது. சென்னையில் ஒரு முட்டை ரூ.7.30 வரை விற்கப்படுகிறது. </p><p>சத்துணவு முட்டை வினியோகம், முட்டை நுகர்வு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை விலை கடுமையாக உயர்ந்து வந்தது. தற்போது சற்று குறைந்துள்ளதால், நுகர்வோர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>மாணவர்கள் போராட்டத்திற்கு தவெக அரசு துணை நிற்கும் - ஆதவ் அர்ஜுனா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/overnment-will-support-students-protest-aadhav-arjuna</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/overnment-will-support-students-protest-aadhav-arjuna#comments</comments><guid isPermaLink="false">153f48f0-f6db-49ae-9b2c-ce228a4d6c6f</guid><pubDate>Fri, 24 Jul 2026 14:04:35 +0000</pubDate><atom:updated>2026-07-24T14:04:35.878Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,டெல்லி,ஆதவ் அர்ஜுனா,மாணவர்கள் போராட்டம்,தவெக அரசு,NEETProtest</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/fjalgms4/athav33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆதவ் அர்ஜுனா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/fjalgms4/athav33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தர் பகுதியில் கடந்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.போராட்டத்துக்கு பல்வேறு அமைப்பினரும், கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.</p><h2>தவெக அரசு துணை </h2><p>இந்தநிலையில்,  சென்னையில் உள்ள் எஸ்.ஆர்.எம். பல்கலை.யில் விளையாட்டு வீரர்கள் விடுதியை திறந்துவைத்த பின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:-</p><p> நீட் தொடர்பாக போராடுபவர்களுக்கு எங்களின் ஆதரவு எப்போதும் உள்ளது. அனிதா உள்ளிட்ட பல சகோதர, சகோதரிகளை தமிழகம் இழந்து உள்ளது. நீட்டை தடை செய்ய வேண்டும். <a href="https://www.dailythanthi.com/search?q=%20%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%20">டெல்லி</a>யின் குரலுக்கும் தமிழகத்தின் குரலுக்கும் வித்தியாசம் உள்ளது. </p><p>கிராமப்புற மாணவர்களின் சிரமம் என்ன என்பது எங்களுக்கு தெரியும். நீட்டை உறுதியாக எதிர்க்கிறோம், வெறும் அரசியலுக்காக அல்ல. ஒருநாள் நீட்டை தடை செய்ய எங்களுடைய குரல் முக்கியமானதாக இருக்கும். அரசியல் லாபத்திற்காக அல்லாமல் நீட்டை உறுதியாக எதிர்க்கிறோம். </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item></channel></rss>