<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 01 Sep 2026 17:32:33 +0000</lastBuildDate><item><title>டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள்: வரவு ரூ.54.91 கோடி... செலவு ரூ.319.50 கோடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tnpsc-exam-revenue-5491-crore-expenditure-31950-crore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tnpsc-exam-revenue-5491-crore-expenditure-31950-crore#comments</comments><guid isPermaLink="false">9cce5545-6238-455c-98e1-b385326b4079</guid><pubDate>Tue, 01 Sep 2026 17:26:11 +0000</pubDate><atom:updated>2026-09-01T17:26:11.033Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TNPSC,TNPSC exam,டி.என்.பி.எஸ்.சி.,டி.என்.பி.எஸ்.சி. தேர்வு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/su00fhg6/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/su00fhg6/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>2021 ஜன.01 முதல் 2025 அக்.31ம் தேதி வரை டி.என்.பி.எஸ்.சி. நடத்திய தேர்வுகள் மூலம் ரூ.54 கோடியே 91 லட்சத்து 56 ஆயிரத்து 915 தேர்வுக் கட்டணமாக பெறப்பட்டுள்ளது.  2020-21 முதல் 2025-26 வரையிலான 6 நிதியாண்டுகளில், தேர்வாணையத்தின் தேர்வுகள் தொடர்பான செலவினங்களை மேற்கொள்ள ரூ.319 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>இக்காலகட்டத்தில் பணி நியமனம் பெற்ற தேர்வர்கள், ஆண், பெண், திருநங்கைகள் எண்ணிக்கை மற்றும் போலி சான்றிதழ் சமர்ப்பித்துச் சிக்கியவர்கள் பற்றிய விவரங்கள் தனியாகத் தொகுத்து பராமரிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>2021 முதல் 2025-ம் ஆண்டு வரை தேர்வுக் கட்டணமாக எவ்வளவு தொகை வசூலிக்கப்பட்டது, தேர்வுகளை நடத்துவதற்காக எவ்வளவு நிதி பெறப்பட்டு செலவிடப்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பதில் அளித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எங்கள் கூட்டணிக்குள் எந்தக் குழப்பமோ பிரச்சினையோ இல்லை: அமைச்சர் நிர்மல் குமார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-no-confusion-or-problem-within-our-alliance-minister-nirmal-kumar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-no-confusion-or-problem-within-our-alliance-minister-nirmal-kumar#comments</comments><guid isPermaLink="false">69c131ab-37a6-44c9-8b8c-7d673393551f</guid><pubDate>Tue, 01 Sep 2026 17:05:10 +0000</pubDate><atom:updated>2026-09-01T17:05:10.810Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,CTR Nirmal kumar,சிடிஆர் நிர்மல் குமார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/qttqr927/CHENNAI-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/qttqr927/CHENNAI-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><p>தென்காசியில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:</p><p>தமிழகத்திலிருந்து ஒருவர் வர வேண்டும் என்பது அனைவரும் ஆசைப்படக் கூடிய ஒன்றுதான். இதில் எந்த சர்ச்சையும் இல்லை. காலக்கட்டத்துக்கு ஏற்றார்போல இயற்கையே ஒரு விஷயத்தை உருவாக்கும். இதனால் எங்கள் கூட்டணியில் எந்த முரணும் இல்லை. உங்களுக்கெல்லாம் சுவாரஸ்யம் வேண்டும் என்பதற்காக தினமும் இதை கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.</p><p>கடந்த ஆண்டு இதே நேரத்தில், தவெக ஆட்சிக்கு வரும் என்று நாங்கள் சொன்னதற்கு அனைத்து பத்திரிகைகளும், கருத்துக் கணிப்புகளும் என்ன சொன்னது? ஆனால், எங்கள் தலைவர் முதல்வராவார் என நாங்கள் ஆணித்தனமாக சொன்னோம்.</p><p>இயற்கை தானாகவே ஒன்றை உருவாக்கும். அதுவரைக்கும் இதுபற்றி நாம் பேசிக்கொண்டே இருக்க வேண்டாம். இன்னும் மூன்று, நான்கு ஆண்டுகள் உள்ளன. இவ்வாறு நீங்கள் கேள்வி கேட்பதால்தான் இது பெரிய விஷயமாக உருவாக்கப்படுகிறது. யாருக்கோ தீனி போடவெல்லாம் இதைக் கேட்க வேண்டாம். இதனால், கூட்டணிக்குள் எந்தக் குழப்பமோ பிரச்னையோ இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை: ராஜீவ்காந்தி சாலையில் போக்குவரத்து மாற்றம் - போலீசார் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-traffic-changes-on-rajiv-gandhi-salai-police-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-traffic-changes-on-rajiv-gandhi-salai-police-announcement#comments</comments><guid isPermaLink="false">ba3ddf35-6779-42d3-8878-5fdf275d666b</guid><pubDate>Tue, 01 Sep 2026 16:18:52 +0000</pubDate><atom:updated>2026-09-01T16:18:52.559Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,சாலை,Announcement,போக்குவரத்து மாற்றம்,Traffic change,ராஜீவ்காந்தி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/r7a4fx56/177.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ போக்குவரத்து மாற்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/r7a4fx56/177.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, சென்னை ராஜீவ்காந்தி சாலையில் மெட்ரோ மற்றும் கழிவுநீர் குழாய் பணிகள் நடைபெறுவதால், வரும் 5-ந்தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.</p><h2>போக்குவரத்து மாற்றம்</h2><p>சென்னை ராஜீவ்காந்தி சாலையில் மெட்ரோ ரெயில் பணிகள் ஏற்கனவே நடந்து வருகிறது. இந்த நிலையில் அதே பகுதியில் கழிவுநீர் குழாய்கள் சீரமைப்பு பணிகளும் நடைபெற உள்ளன.</p><p>இதையொட்டி அந்தப் பகுதியில் வரும் 5-ந்தேதி வரை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D">போக்குவரத்து மாற்றம்</a> செய்யப்படும் என்று போக்குவரத்து போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு வாகன ஓட்டிகளை போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><h2>போலீசார்</h2><p>இந்தப் போக்குவரத்து மாற்றத்தில் கிண்டியில் இருந்து வரும் மாநகர பஸ்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மத்திய கைலாஸ் சந்திப்பில் ராஜீவ்காந்தி சாலை நோக்கி வலது புறம் செல்ல அனுமதி இல்லை என்று அறிவித்துள்ளனர்.</p><p>ஆனால் அதே கிண்டியில் இருந்து வரும் இலகுரக வாகனங்கள் மத்திய கைலாஸ் சந்திப்பில் ராஜீவ்காந்தி சாலையில் வலது புறம் திரும்ப அனுமதிக்கப்படும் என்றும் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>மதுபோதையில் விபரீதம்: வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-strikes-while-under-the-influence-of-alcohol-youth-commits-suicide-by-hanging</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-strikes-while-under-the-influence-of-alcohol-youth-commits-suicide-by-hanging#comments</comments><guid isPermaLink="false">7206eacb-f8a4-4b37-b3c3-820175617aa2</guid><pubDate>Tue, 01 Sep 2026 16:18:28 +0000</pubDate><atom:updated>2026-09-01T16:18:28.308Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Youth,வாலிபர்,Suicide by hanging,தூக்குப்போட்டு தற்கொலை,மதுபோதை,Tragedy,alcoholism,விபரீதம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/1od5gnoe/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/1od5gnoe/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88">மதுபோதை</a>யில் தாயிடம் தகராறு செய்துவிட்டு வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>தாயாரிடம் தகராறு செய்த வாலிபர்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், நாசரேத் அருகேயுள்ள கன்னிவிளை கிராமத்தைச் சேர்ந்த வீரதுரை மகன் தங்கதுரை (வயது 23). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில், அந்த வாலிபர் தினமும் அவரது தாயாரிடம் தகராறு செய்து வந்துள்ளார். ஏற்கனவே 2 முறை தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியுள்ளார். </p><h2>மதுபோதை</h2><p>இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில், மதுபோதையில் வீட்டிற்கு வந்த அந்த வாலிபர் வழக்கம் போல அவரது அம்மாவிடம் தகராறு செய்து விட்டு, கதவை உள்புறமாக பூட்டிக் கொண்டார். நீண்ட நேரம் கதவு திறக்கப்படாமல் இருந்ததால் குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். </p><h2>தூக்குப்போட்டு தற்கொலை</h2><p>அப்போது தங்கதுரை அம்மாவின் சேலையை பயன்படுத்தி சீலிங் பேனில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">தூக்குப்போட்டு தற்கொலை</a> செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து நாசரேத் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>திருநெல்வேலி, தென்காசியில் மின்வாரிய குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள்: மேற்பார்வை பொறியாளர் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/electricity-board-grievance-redressal-day-meetings-in-tirunelveli-tenkasi-supervising-engineer-information</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/electricity-board-grievance-redressal-day-meetings-in-tirunelveli-tenkasi-supervising-engineer-information#comments</comments><guid isPermaLink="false">f2eb89eb-35c7-4895-be9d-c88e4159fa8e</guid><pubDate>Tue, 01 Sep 2026 16:06:08 +0000</pubDate><atom:updated>2026-09-01T16:06:08.742Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,Tenkasi,தென்காசி,Information,தகவல்,Engineer,Grievance Redressal Day Meeting,பொறியாளர்,குறைதீர்க்கும் நாள் கூட்டம்,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/831i0ci2/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/831i0ci2/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மற்றும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF">தென்காசி</a> மாவட்டங்களில் உள்ள மின்பகிர்மான கோட்டங்களுக்கு உள்பட்ட செயற்பொறியாளர் அலுவலகங்களில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">மின்வாரிய</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">குறைதீர்க்கும் நாள் கூட்டங்க</a>ள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>திருநெல்வேலி, தென்காசி மாவட்டம்</h2><p>திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள மின்பகிர்மான கோட்டங்களுக்கு உள்பட்ட செயற்பொறியாளர் அலுவலகங்களில் காலை 11 மணியளவில் பின்வருமாறு மின்சார வாரியம் சார்ந்த குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் நடைபெறும் என திருநெல்வேலி மின்பகிர்மான மேற்பார்வை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D">பொறியாளர்</a> தென்னரசு தெரிவித்துள்ளார். </p><h2>மின்சார வாரிய குறைதீர்க்கும் நாள் கூட்டம்</h2><p>இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: </p><p>2026-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 8.9.2026 இரண்டாவது செவ்வாய்கிழமை வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 11.9.2026 இரண்டாவது வெள்ளிக்கிழமை திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 15.9.2026 மூன்றாவது செவ்வாய்கிழமை சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 18.9.2026 மூன்றாவது வெள்ளிக்கிழமை தென்காசி கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 22.9.2026 நான்காவது செவ்வாய்கிழமை கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 25.9.2026 நான்காவது வெள்ளிக்கிழமை கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் அலுவலத்திலும், 29.9.2026 ஐந்தாவது செவ்வாய்கிழமை திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலும் காலை 11 மணியளவில் மின்சார வாரியம் சார்ந்த குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படும். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>எம்.எல்.ஏ.வாக மீண்டும் செயல்பட இசக்கி சுப்பையா கோரிக்கை: ஐகோர்ட்டு மறுப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-court-rejects-isakki-subbiahs-request-to-resume-duties-as-mla</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-court-rejects-isakki-subbiahs-request-to-resume-duties-as-mla#comments</comments><guid isPermaLink="false">109e01db-1c56-49dc-90e7-9e97ef2456c3</guid><pubDate>Tue, 01 Sep 2026 16:00:09 +0000</pubDate><atom:updated>2026-09-01T16:00:09.080Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,ஐகோர்ட்டு,Chennai High Court,மறுப்பு,எம்.எல்.ஏ,மனு,இசக்கி சுப்பையா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/j684y9le/176.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஐகோர்ட்டு மறுப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/j684y9le/176.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக மீண்டும் செயல்பட அனுமதிக்கக் கோரி முன்னாள் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா தாக்கல் செய்த மனுவை ஏற்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால், அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா, தகுதி நீக்கம் தொடர்பான விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>ராஜினாமா</h2><p>அதிமுக சார்பில் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா, பின்னர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து அவர் ஆளும் தவேகவில் இணைந்தார். இந்நிலையில், அம்பாசமுத்திரம் தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ. இல்லாததால் பொதுமக்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருவதாகக் கூறிய இசக்கி சுப்பையா, மீண்டும் தொகுதி எம்.எல்.ஏ.வாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் கடந்த 28-ம் தேதி மனு அளித்தார்.</p><p>மேலும், இடைத்தேர்தல் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வெளியாகும் வரை எம்.எல்.ஏ.வாக தொடர அனுமதிக்க வேண்டும் என்றும், ஏற்கனவே தான் அளித்த ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கிடையே, அதிமுகவில் இருந்து வெற்றி பெற்ற 6 எம்.எல்.ஏ.க்கள் ஆளும் தவேகவில் இணைந்தனர். இதையடுத்து, அவர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். அவர்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார். ஆனால், கட்சி மாறிய 6 எம்.எல்.ஏ.க்கள் மீதும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக வலியுறுத்தியது. இதுதொடர்பாக சபாநாயகரிடமும் அதிமுக சார்பில் மனுக்கள் அளிக்கப்பட்டன.</p><h2>சென்னை ஐகோர்ட்</h2><p>தகுதி நீக்கக் கோரிக்கைகள் நிலுவையில் இருந்த நிலையில், 6 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதற்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனை எதிர்த்து அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல். ரவி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஐகோர்ட்டு ஒத்திவைத்துள்ளது.</p><p>இந்த சூழலில், தேர்தல் வழக்கில் தீர்ப்பு வெளியாகும் வரை தன்னை மீண்டும் எம்.எல்.ஏ.வாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu/ambasamudram-constituency-declared-vacant">இசக்கி சுப்பையா</a> கூடுதல் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவரது கோரிக்கையை ஏற்க முடியாது என ஐகோர்ட்டு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.  இதனால், அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ. பதவி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா, தகுதி நீக்கம் தொடர்பான விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>வேலை கிடைக்காததால் விரக்தி; மனு மூட்டையுடன் வந்த நபரால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/frustrated-over-joblessness-man-with-bag-of-petitions-causes-stir-at-collector-office</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/frustrated-over-joblessness-man-with-bag-of-petitions-causes-stir-at-collector-office#comments</comments><guid isPermaLink="false">a22d42d1-dbc5-480b-b034-f30be76b0f06</guid><pubDate>Tue, 01 Sep 2026 15:54:12 +0000</pubDate><atom:updated>2026-09-01T15:54:12.196Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பரபரப்பு,கலெக்டர் அலுவலகம்,Petition,நபர்,மனுPetition,frustration,A collector- கலெக்டர்,மூட்டை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/smiz6v7o/petition.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ திருநாவுக்கரசு]]></media:title><media:description type="html"><![CDATA[ மனு மூட்டையுடன் வந்த நபரால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/smiz6v7o/petition.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி,</p><p>தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று தனது கோரிக்கை மனுக்களை மூட்டை கட்டி தலையில் தூக்கி வந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 220 முறை மனு கொடுத்தும் எவ்வித தீர்வும் கிடைக்காத விரக்தியில் அவர் இந்த வினோத போராட்டத்தை கையில் எடுத்துள்ளார்.</p><h2>யார் இந்த நபர்?</h2><p>தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே உள்ள ஜெயமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 50). ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்காக இவரது தாத்தா, அரசுக்கு 4 ஏக்கர் நிலத்தை கொடுத்துள்ளார். அதற்கு பதிலாக வாரிசுதாரருக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88">அரசு வேலை</a> வழங்குவதாக அப்போது அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.</p><h2>23 ஆண்டு கால போராட்டம்</h2><p> நிலம் கொடுத்ததற்கு பதிலாக அரசு வேலை கேட்டு திருநாவுக்கரசு கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து மனு கொடுத்து வருகிறார். இதுவரை ஒப்புகைச் சீட்டுடன் மொத்தம் 220 முறை மனு கொடுத்துள்ளார். இத்தனை முறை மனு அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், கடும் விரக்தி அடைந்த அவர், இதுவரை தான் கொடுத்த அனைத்து மனுக்களையும் ஒன்றாக சேர்த்து ஒரு பெரிய மூட்டையாக கட்டி கலெக்டர் அலுவலகத்திற்கு எடுத்து வந்துள்ளார்.</p> <h2>போலீசார் தடுப்பு</h2><p>நுழைவு வாயிலில் தலையில் மூட்டையுடன் வந்தவரை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். மூட்டையுடன் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று கூறியதையடுத்து, மூட்டை மற்றும் பையை வெளியிலேயே வைத்துவிட்டு, மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அவர் மீண்டும் ஒரு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81">மனுவை</a> அளித்தார். </p> <p>தாத்தா கொடுத்த நிலத்திற்கு வாரிசு வேலை கேட்டு 220 மனுக்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நபர் வந்த சம்பவம் அங்கு கூடியிருந்த பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.</p> ]]></content:encoded></item><item><title>பெண் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் உத்தரவு திரும்ப பெறப்பட்டுவிட்டது - ஐகோர்ட்டில் அரசு தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-order-to-dismiss-a-female-inspector-has-been-withdrawn-government-informs-the-high-court</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-order-to-dismiss-a-female-inspector-has-been-withdrawn-government-informs-the-high-court#comments</comments><guid isPermaLink="false">14b237e6-f402-4815-8f0a-23fd0d09d692</guid><pubDate>Tue, 01 Sep 2026 15:50:24 +0000</pubDate><atom:updated>2026-09-01T15:50:24.886Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை ஐகோர்ட்டு,பணியிடை நீக்கம்,High Court Bench</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/khoc9dy7/court33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
பெண் இன்ஸ்பெக்டர்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஐகோர்ட்டில் அரசு தகவல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/khoc9dy7/court33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் விமலாவின் சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டது.</p><p>சென்னை விபச்சாரத் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ராஜலட்சுமி என்பவருக்கு எதிராக ஊழல் புகாரை லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டர் விமலா விசாரித்தார். பின்னர் உயர் அதிகாரிகளின் ஒப்புதலுடன், ராஜலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்தார்.</p><p>பணியிடை நீக்கம்</p><p>இந்தநிலையில், இன்ஸ்பெக்டர் விமலா கடந்த ஜூன் 17-ந்தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%90%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D">சென்னை ஐகோர்ட்</a>டில் வழக்கு தொடர்ந்து, பணியிடை நீக்கம் செய்த உத்தரவுக்கு இன்ஸ்பெக்டர் விமலா இடைக்கால தடை உத்தரவை பெற்றார்.</p><h2>வழக்கு முடித்து வைப்பு </h2><p>இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி எம்.சுதிர்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் எஸ்.அய்யாதுரை ஆஜராகி வாதிட்டார். அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் கவுதமன் ஆஜராகி, ‘‘மனுதாரர் இன்ஸ்பெக்டர் விமலா பணியிடை நீக்க உத்தரவு திரும்ப பெறப்பட்டு விட்டது. அதனால், இந்த வழக்கை முடித்து வைக்கவேண்டும்'' என்று கூறி, பணியிடை நீக்கத்தை திரும்ப பெற்ற உத்தரவை தாக்கல் செய்தார். இதை பதிவுச் செய்துக் கொண்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>எழும்பூர் ரெயில் நிலையத்தில் புதிய நடை மேம்பாலத்திற்கான தூண்கள் அமைக்கும் பணி நிறைவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pillar-erection-work-for-new-pedestrian-overpass-at-egmore-railway-station-completed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pillar-erection-work-for-new-pedestrian-overpass-at-egmore-railway-station-completed#comments</comments><guid isPermaLink="false">8dd6d21a-ace7-43df-a655-537d9b6ab704</guid><pubDate>Tue, 01 Sep 2026 15:40:48 +0000</pubDate><atom:updated>2026-09-01T15:40:48.630Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Egmore,மின்சார ரெயில்,எழும்பூர் ரெயில் நிலையம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/9591th6f/rail33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
மின்சார ரெயில் நடைமேடை]]></media:title><media:description type="html"><![CDATA[ 
புதிய நடை மேம்பாலத்திற்கான தூண்கள் அமைக்கும் பணி நிறைவு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/9591th6f/rail33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.842 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமான மறுசீரமைப்பு பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாக, ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பார்சல் பிரிவுக்கான புதிய நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்முதல் கட்டமாக, நடைமேடை 1 முதல் 5 வரையிலான பகுதிகளில் 18 மீட்டர் அகலமும், 120 மீட்டர் நீளமும் கொண்ட புதிய இரும்பு நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டன.</p><p>இந்த கட்டுமான பணிகளின் காரணமாக, எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தற்காலிகமாக தாம்பரம் ரெயில் நிலையத்திற்கு மாற்றப்பட்டு இயக்கப்பட்டன. தற்போது அந்த நடைமேடைகளில் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டதால், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீண்டும் எழும்பூர் நிலையத்திலிருந்தே வழக்கம்போல இயக்கப்பட்டு வருகின்றன.</p><p>இதனைத் தொடர்ந்து, <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20">மின்சார ரெயில்</a> நடைமேடைகளிலும் புதிய நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த மாதம் இறுதியில் தொடங்கப்பட்டன. தற்போது இந்த நடைமேம்பாலத்திற்கான பிரம்மாண்டமான தூண்கள் மற்றும் தாங்கு சட்டங்களை அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. குறிப்பாக, நடைமேடை 1 முதல் 11 வரையில் புதிய இரும்பு நடைமேம்பாலம் அமைப்பதற்கான தூண்கள் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.எஞ்சிய கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.</p><p>ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, இந்த கட்டுமானப் பணிகள் காரணமாக இரவு நேர மின்சார ரெயில்கள் வருகிற 6-ந்தேதி வரையில் ரத்து செய்யப்பட்டுள்ளன. நிர்ணயிக்கப்பட்ட அந்த தேதிக்குள் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டு, பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>தவெக ஆட்சி 5 ஆண்டுகள் கூட நீடிக்காது - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-rule-will-not-last-even-5-years-edappadi-palaniswami-review</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-rule-will-not-last-even-5-years-edappadi-palaniswami-review#comments</comments><guid isPermaLink="false">b68d537a-021f-4819-b956-b29c0254cd1a</guid><pubDate>Tue, 01 Sep 2026 15:36:38 +0000</pubDate><atom:updated>2026-09-01T15:36:38.060Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,Edappadi Palaniswami,விமர்சனம்,Tvk  government,தவெக ஆட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/kpnrgppl/21.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/kpnrgppl/21.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p>“தமிழக வெற்றிக் கழக ஆட்சி 5 ஆண்டுகள் நிலைக்காது” என்றும் அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே தொடர்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் . </p><p>கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கடுமையாக விமர்சித்தார்.சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், கொலை, கொள்ளை, போதைப்பொருள் மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.</p><p>சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என வலியுறுத்திய அவர், அமைச்சர்கள் தங்களது துறைகள் தொடர்பான கேள்விகளுக்கு முறையாக பதிலளிப்பதில்லை என்றும் குறிப்பிட்ட சில அமைச்சர்களே அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிப்பதாக விமர்சித்தார். தமிழக அரசின் கடன் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறிய எடப்பாடி பழனிசாமி, மின்சாரத் துறையில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.</p><h2>ஊழல் அதிகரிப்பு</h2><p>போக்குவரத்துத் துறையில் பழைய பேருந்துகளையே தொடர்ந்து இயக்குவதாகவும், புதிய பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், தமிழகத்தில் ஊழல் அதிகரித்துள்ளதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி பணம் பறிமுதல் செய்யப்படுகிறது என்றால் ஊழல் நடைபெறுகிறது என்பதுதானே அர்த்தம்  ஊழலுக்கு  இதற்கு சாட்சி என்றும் குற்றம்சாட்டினார்.</p><h2>காஸ்ட்லி முதல்வர்</h2><p>முதலமைச்சரின் மேட்டூர் அணை பயணம் குறித்து தனக்கு முழுமையான தகவல் தெரியாது எனக் கூறிய அவர், முன்னாள் முதலமைச்சர்கள் எளிமையாக அணையை திறந்து வைத்த நிலையில், தற்போது ஆடம்பர செலவுகள் அதிகரித்துள்ளதாகவும். மேலும் இந்த முதல்வர் ஒரு காஸ்ட்லி முதல்வர் என விமர்சித்தார். “அடுத்த பிரதமர் விஜய்” என்ற பரப்புரை குறித்த கேள்விக்கு, விஜய் விரும்பினால் அமெரிக்க ஜனாதிபதியாகக்கூட ஆகலாம் என எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.</p><h2>5 ஆண்டுகள் நீடிக்காது</h2><p>அதிமுகவில் இருந்து மேலும் எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு செல்வார்கள் என்ற தகவலை நிராகரித்த அவர், ஏற்கனவே சென்ற எம்எல்ஏவே மீண்டும் பதவியில் தொடர வேண்டும் என நீதிமன்றத்தில் வாதாடி வருவதாக தெரிவித்தார்.மேலும், விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை, அதிகரிக்கும் கடன் மற்றும் வருவாய் பெருக்குவதற்கான ஆக்கப்பூர்வமான திட்டங்கள் இல்லாதது ஆகியவற்றை சுட்டிக்காட்டி, இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது என்பது அதன் செயல்பாடுகளைப் பார்த்தாலே தெரிகிறது என <a href="https://www.dailythanthi.com/topic/edappadi-palanisamy">எடப்பாடி பழனிசாமி </a>தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>கோயில்களில் மொபைல் போன்களை பாதுகாக்கவே ரூ.5 கட்டணம் வசூல் - அமைச்சர் ரமேஷ் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-5-fee-charged-to-protect-phones-minister-ramesh-explains</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-5-fee-charged-to-protect-phones-minister-ramesh-explains#comments</comments><guid isPermaLink="false">8c9ca84a-4d7a-480f-9a04-53d3081462db</guid><pubDate>Tue, 01 Sep 2026 15:28:58 +0000</pubDate><atom:updated>2026-09-01T15:28:58.234Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவில்கள்,செல்போன்,இந்து சமய அறநிலையத்துறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/ngivjtbc/ramesh33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ரமேஷ் விளக்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ பாதுகாக்கவே ரூ.5 கட்டணம் வசூல் - அமைச்சர் ரமேஷ் விளக்கம்
]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/ngivjtbc/ramesh33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மொபைல் போன்களை பாதுகாக்கவே ரூ.5 கட்டணம் வசூல். பக்தர்கள் காத்திருப்பதை தவிர்க்க கூடுதல் மொபைல் பாதுகாப்பு கவுன்ட்டர்கள். கூடுதல் கவுன்ட்டர்களை அமைப்பது குறித்து கோவில் நிர்வாகங்கள் முடிவெடுக்கும் என அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார்.</p><h2>இந்து சமய அறநிலையத்துறை</h2><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%20">இந்து சமய அறநிலையத்துறை</a> அமைச்சர் ரமேஷ்  இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,</p><p>தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள 52 முதுநிலைத் திருக்கோயில்களில், ஏற்கனவே உள்ள நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையிலும், திருக்கோயில்களில் பக்தர்கள் அமைதியான சூழலில் இறைவனைத் தரிசனம் செய்வதற்காகவும், இன்று (செப்.1) முதல் மொபைல் போன்களை எடுத்துச் செல்வதற்கான தடை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.</p><p>ஏற்கனவே பழனி, திருச்செந்தூர், மதுரை மற்றும் ராமேஸ்வரம் உள்ளிட்ட முக்கிய திருக்கோயில்களில் செல்போன்களுக்கு தடை நடைமுறையிலிருந்து வருகிறது. திருக்கோயில்களின் புனிதத்தன்மை மற்றும் அமைதியான வழிபாட்டுச் சூழலைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானதாகும்.</p><p>சிலர் திருக்கோயில்களில் இறைவனின் திருவுருவச் சிலைகளை புகைப்படம் எடுப்பது. வீடியோ பதிவு செய்வது, செல்ஃபி மற்றும் ரீல்ஸ் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதால், பக்தர்களின் வழிபாட்டு அனுபவமும் பாதிக்கப்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையிலும், திருக்கோயில்களின் பாரம்பரியத்தையும், புனிதத்தன்மையையும் பாதுகாக்கும் நோக்கத்திலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><h2>ரூ.5 கட்டணம் வசூல்</h2><p>செல்போன்களை எடுத்து செல்ல முடியாத பக்தர்களின் வசதிக்காக, சம்பந்தப்பட்ட திருக்கோயில்களில் செல்போன் பாதுகாப்பு கவுண்டர்கள் மற்றும் பாதுகாப்பு லாக்கர் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பாக ஒப்படைத்துவிட்டு தரிசனம் முடிந்த பின்னர் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.</p><p>இப்பாதுகாப்பு கவுண்டர்களை செயல்படுத்துவதற்காக தனி ஊழியர்கள், பாதுகாப்பு லாக்கர்கள், மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான நிர்வாக மற்றும் செயல்பாட்டு செலவுகளை ஈடுகட்டும் வகையில், செல்போன் ஒன்றுக்கு ரூ.5 என்ற குறைந்தபட்சக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த கட்டணமும் திருக்கோயில்களுக்கு வருவாய் ஈட்டுவதற்காக நிர்ணயிக்கப்பட்டதல்ல, செல்போன்களை பாதுகாப்பாகப் பெற்றுக்கொண்டு, முறையாக பராமரித்து, பக்தர்களுக்கு மீண்டும் வழங்குவதற்கான ஊழியர்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுக்கான செலவுகளை ஈடுகட்டுவதற்காக மட்டுமே இந்த குறைந்தபட்சக் கட்டணம் பெறப்படுகிறது.</p><h2>போதுமான அளவில் செல்போன் கவுண்டர்கள்</h2><p>செல்போன் தடை நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், சில திருக்கோயில்களில் செல்போன் பாதுகாப்பு கவுண்டர்களில் பக்தர்கள் அதிகளவில் வரிசையில் நிற்பதால், கூடுதல் நேரம் எடுத்துக்கொள்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தற்போது அந்தந்த திருக்கோயில்களின் தேவைக்கேற்ப போதுமான அளவில் செல்போன் கவுண்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.</p><p>பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள இடங்களில், தேவைக்கேற்ப கூடுதல் கவுண்டர்களை அமைப்பது குறித்து அந்தந்த திருக்கோயில் நிர்வாகம் முடிவெடுத்து செயல்படுத்துவதற்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.</p><p>அதேநேரத்தில் பொதுமக்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் இந்தக் காத்திருப்பு நேரத்தை பெருமளவில் தவிர்க்க முடியும். கோயிலுக்கு அருகில் வசிப்பவர்கள் தங்களது வீடுகளிலேயே செல்போன்களை வைத்துவிட்டும். வெளியூரிலிருந்து வருபவர்கள் தாங்கள் தங்கியிருக்கும் அறைகளில் செல்போன்களை வைத்துவிட்டு, நான்கு சக்கர வாகனங்களில் வருபவர்கள் தங்களது வாகனங்களில் செல்போன்களை பாதுகாப்பாக வைத்துவிட்டு திருக்கோயிலுக்குள் செல்லலாம்.</p><h2>சாதாரண கைபேசிகளுக்கு தடை இல்லை</h2><p>புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் வசதி இல்லாத சாதாரண கைப்பேசிகள் திருக்கோயிலுக்குள் எடுத்துவர எந்தவித தடையும் இல்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட திருக்கோயில் நிர்வாகத்திற்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அவசரக்கால தேவைகளின்போது பக்தர்களுக்கு உதவுவதற்காக திருக்கோயில் அலுவலர்கள் மற்றும் பாதுகாவலர்கள் மூலம் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><h2>ஒன்றிணைந்து செயல்படுவோம்</h2><p>திருக்கோயில்களில் மேற்கொள்ளப்படும் இந்த மாற்றங்கள் அனைத்தும் பக்தர்களின் ஆன்மிக அனுபவத்தை மேம்படுத்தவும், அமைதியான வழிபாட்டுச் சூழலை உருவாக்கவும், நமது திருக்கோயில்களின் பாரம்பரியம், புனிதத்தன்மை மற்றும் ஆன்மிகச் சிறப்பை பாதுகாக்கவும் மேற்கொள்ளப்படுகின்றன. அரசும், பொதுமக்களும் இணைந்துதான் இதுபோன்ற நல்ல மாற்றங்களை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும்.</p><p>எனவே, திருக்கோயில்களில் பக்தர்களின் அமைதியான வழிபாட்டிற்கும், கோயில்களின் பாரம்பரியத்தையும், புனிதத்தன்மையையும் பாதுகாப்பதற்கும், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நமது திருக்கோயில்கள் அமைதியின் மையமாகவும், ஆன்மிகத்தின் அடையாளமாகவும், நமது பாரம்பரியத்தின் பாதுகாப்பிடமாகவும் திகழ அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: பெருங்குடி மண்டலத்தில் துணை ஆணையாளர் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-preparedness-deputy-commissioner-inspects-perungudi-zone</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-preparedness-deputy-commissioner-inspects-perungudi-zone#comments</comments><guid isPermaLink="false">33b71179-429d-43e3-8bcd-b727e49ae3d8</guid><pubDate>Tue, 01 Sep 2026 15:12:50 +0000</pubDate><atom:updated>2026-09-01T15:12:50.358Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/rrrp0a4r/175.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ துணை ஆணையாளர் ஆய்வு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/rrrp0a4r/175.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துணை ஆணையாளர் அதாப் ரசூல், இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.</p><p>இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>ஆய்வு</h2><p>வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை தெற்கு வட்டார துணை ஆணையாளர் அதாப் ரசூல், இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.</p><p>பெருங்குடி மண்டலம், வார்டு-188க்குட்பட்ட மயிலை பாலாஜி நகர் 1-வது மற்றும் 4-வது பிளாக் பகுதிகளில் உள்ள கால்வாயில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>இதனைத் தொடர்ந்து, வார்டு-186க்குட்பட்ட உள்வட்டச் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி, வார்டு-188க்குட்பட்ட பெரியார் நகர் நகர் 1-வது தெருவில் சாலைகள், அப்பகுதியில் உள்ள அம்மா உணவகம், மயிலை பாலாஜி நகரில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பேனர்கள் அகற்றும் பணி, அப்பகுதியில் உள்ள இலவச ஒப்பனை அறை, லட்சுமி நகர் மற்றும் பெரியார் நகரில் பள்ளி மாணவர்களின் காலை உணவுத் திட்டத்திற்கான மைய சமையல் கூடம், வார்டு-189க்குட்பட்ட ராம் நகரில் கட்டப்பட்டு வரும் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையம் கட்டுமானப் பணி ஆகியவற்றினைப் பார்வையிட்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">ஆய்வு </a>செய்து, பணிகளை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வுகளின் போது, மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: வாய்க்காலில் வாலிபர் சடலம் மீட்பு- போலீசார் விசாரணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-body-of-a-youth-recovered-from-a-canal-police-investigating</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-body-of-a-youth-recovered-from-a-canal-police-investigating#comments</comments><guid isPermaLink="false">760810e5-1ab6-4e8d-a163-04672cef84ba</guid><pubDate>Tue, 01 Sep 2026 15:05:59 +0000</pubDate><atom:updated>2026-09-01T15:05:59.350Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Youth,வாலிபர்,வாய்க்கால்,police investigation,body recovered,சடலம் மீட்பு,போலீசார் விசாரணை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/hyrdi4ar/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வாலிபர் சடலம் மீட்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/hyrdi4ar/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், செய்துங்கநல்லூரில் டாஸ்மாக் அருகில் உள்ள வாய்காலில் கிடந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D">வாலிபர்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">சடலத்தை மீட்டு</a> போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். </p><h2>வாய்க்காலில் வாலிபர் சடலம் மீட்பு</h2><p>தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த உச்சிமாகாளி மகன் கோமு (வயது 38). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில், நேற்று அவர் டாஸ்மாக் அருகில் உள்ள வாய்காலில் நீரில் மிதந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இதுகுறித்த தவலின் பேரில் ஸ்ரீவைகுண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது நெற்றியில் ரத்த காயம், இரண்டு கால் முட்டுகளில் சிராய்ப்பு காயங்கள் இருந்தன. அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/inspection-of-stormwater-drain-and-census-related-works-in-corporation-areas</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/inspection-of-stormwater-drain-and-census-related-works-in-corporation-areas#comments</comments><guid isPermaLink="false">7339faa2-58e9-45da-815b-8e7039f4a735</guid><pubDate>Tue, 01 Sep 2026 14:54:53 +0000</pubDate><atom:updated>2026-09-01T14:54:53.739Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Corporation,மாநகராட்சி,மக்கள் தொகை கணக்கெடுப்பு,Census,ஆய்வு,inspection,பணிகள்,மழைநீர் வடிகால்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/mpjab3bo/20.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/mpjab3bo/20.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் குறித்து ஆணையாளர் கெளஷிக் ஆய்வு செய்தார்.</p><p>இது குறித்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">சென்னை மாநகராட்சி</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>வடகிழக்குப் பருவமழையினை  முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மற்றும் அண்ணாநகர் மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் ஆணையாளர் எச்.ஆர்.கெளஷிக், இ.ஆ.ப., அவர்கள் இன்று (01.09.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.</p><h2>மழைநீர் வடிகால் குறித்து ஆய்வு</h2><p>கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-127க்குட்பட்ட வி.வி.கோவில் தெருவில் புதிதாக மழைநீர் வடிகால் அமைப்பது தொடர்பாகவும், ஐயப்பன் கோவில் தெருவில் முடிவுற்ற மழைநீர் வடிகால் பணி, அண்ணாநகர் மண்டலம் வார்டு-100க்குட்பட்ட  கீழ்பாக்கம் ஆர்ம்ஸ் சாலை, வார்டு-102க்குட்பட்ட அண்ணாநகர் 'L' பிளாக் மற்றும் வார்டு-106க்குட்பட்ட நேரு தெரு ஆகிய இடங்களில் மழைநீர் வடிகால் அமைப்பது குறித்துப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.</p><h2>மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி</h2><p>இதனைத் தொடர்ந்து, வார்டு-127க்குட்பட்ட வி.வி.கோவில் தெரு, சேமத்தம்மன் கோவில் தெரு மற்றும் காளியம்மன்  கோவில் உள்ளிட்ட  பகுதிகளில் மாநகராட்சி அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி உள்ளிட்டவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். </p><p>இந்த ஆய்வுகளின்போது, மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வேலைக்கு செல்லாததை கண்டித்த மனைவி: கத்தியால் சரமாரியாக குத்திக்கொன்ற கணவர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wife-reprimanded-him-for-not-going-to-work-husband-stabbed-her-to-death-in-a-frenzied-attack</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wife-reprimanded-him-for-not-going-to-work-husband-stabbed-her-to-death-in-a-frenzied-attack#comments</comments><guid isPermaLink="false">738cc23e-af65-4289-93b7-1965e0411d47</guid><pubDate>Tue, 01 Sep 2026 14:47:04 +0000</pubDate><atom:updated>2026-09-01T14:47:04.965Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,husband,work,Death,மனைவி,கத்தி,குத்திக்கொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/0mod44ok/158.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/0mod44ok/158.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>கொளத்தூர், சத்யா நகரை சேர்ந்தவர் சரண்ராஜ் இவரது மனைவி முத்துமாரியம்மாள் (வயது38) இருவரும் கடந்த வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.இவர்க ளுக்கு குழந்தை இல்லை.கணவன்-மனைவி இருவரும் கொளத்தூரில் உள்ள ஒரே கம்பெனியில் வேலை செய்து வந்தனர்.</p><h2>மோதல்</h2><p>இந்த நிலையில் சரண்ராஜ் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வழக்கம் போல் நேற்று இரவு கணவர் வேலைக்கு செல்லாததை முத்துமாரியம்மாள் கண்டித்தார். இதில் கணவன்-மனைவிக்கு இடையே மோதல் ஏற்பட்டது. </p><p>இதில் ஆத்திரம் அடைந்த சரண்ராஜ் வீட்டில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியால் முத்து மாரியம்மாளின் மார்பில் சரமாரியாக குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் முத்து மாரியம்மாள் உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் கொளத்தூர் போலீசார் விரைந்து வந்து சரண்ராஜை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்தனர். முத்து மாரியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.</p><h2>விசாரணை</h2><p>கொலையுண்ட முத்துமாரியம்மாளின் முதல் கணவர் கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து அவர் சரண்ராஜை காதலித்து 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் முத்து மாரியம்மாள் கொலை செய்யப்பட்டு உள்ளார். கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து சரண்ராஜிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p> ]]></content:encoded></item><item><title>அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா ஏற்புக்கு எதிரான வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-against-the-acceptance-of-aiadmk-mlas-resignations-verdict-reserved-without-a-date</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-against-the-acceptance-of-aiadmk-mlas-resignations-verdict-reserved-without-a-date#comments</comments><guid isPermaLink="false">6ff367ca-b065-40eb-b429-b8a8d09cbf85</guid><pubDate>Tue, 01 Sep 2026 14:29:10 +0000</pubDate><atom:updated>2026-09-01T14:29:10.426Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை ஐகோர்ட்டு,Chennai Highcourt,Case,வழக்கு,Resignation,ராஜினாமா கடிதம்,அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்,AIADMK MLAs</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/yged4op9/highcourt.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/yged4op9/highcourt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் உள்ளதால் அதிமுக-வைச் சேர்ந்த ஆறு எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்குகளின் தீர்ப்பை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D">சென்னை ஐகோர்ட்டு</a>, தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.</p><h2>விசாரணை</h2><p>த.வெ.க. தலைவர் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்போது கொறடா உத்தரவை மீறி, த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆறு பேருக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்தபோது, அவர்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, அ.தி.மு.க. கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள், தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது, அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கிரி மற்றும் எஸ்.ஆர். ராஜகோபால் ஆகியோர், இந்த வழக்கில் சபாநாயகர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ராஜினாமா செய்தவர்களிடம் சுயமாக பதவி விலகினார்களா என விசாரணை நடத்தி, திருப்தியடைந்த பின், ஏற்றுக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>குதிரை பேரம்</h2><p>ஆனால், இந்த விசாரணை என்பது வெறும் சம்பிரதாயம் அல்ல. அரசியல் சாசன கடமை. அர்த்தமுள்ள எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை எனக் குறிப்பிட்டனர். ராஜினாமா கடிதங்களை அளித்த சில நிமிடங்களில், தலைமைச் செயலகத்தில் அமைச்சரை சந்தித்து தவெக-வில் இணைந்திருக்கின்றனர். ஆனால் இது சம்பந்தமாக சபாநாயகர் முழுமையான விசாரணை நடத்தாமல், ராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ளார். ராஜினாமாவை ஏற்கும் முன், தகுதி நீக்க புகார் அளித்த மனுதாரரான அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு எந்த நோட்டீசும் அனுப்பப்படவில்லை. குதிரை பேரம் நடந்துள்ளது குறித்து ஆளுநருக்கும் புகார் அளிக்கப்பட்டது எனச் சுட்டிக்காட்டினர்.</p><p>சபாநாயகர் தரப்பில் ஆஜரான சி.எஸ். வைத்தியநாதன் ராஜினாமா ஏற்றுக் கொண்டதால் தகுதி நீக்க நடவடிக்கை இல்லாமல் ஆகிவிடாது. ராஜினாமாவை ஏற்றது சட்டப்படி செல்லுபடியானதுதான். ஒரு எம்.எல்.ஏ. ராஜினாமா செய்ய விரும்பினால், பதவியில் நீடிக்கும்படி நிர்பந்திக்க முடியாது. உறுப்பினர்களின் ராஜினாமாவை ஏற்காவிட்டால் அது அரசியல் சாசன கடமையை செய்யத் தவறியதாகி விடும் எனக் குறிப்பிட்டார்.</p><h2>தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு</h2><p>சுய விருப்பப்படி ராஜினாமா செய்தாரா என்பதை மட்டும்தான் விசாரிக்க முடியும். அமைச்சர் பதவி, பணத்துக்காக ராஜினாமா செய்தார்களா, குதிரைபேரம் நடந்ததா என்பதை தகுதி நீக்க நடவடிக்கையில்தான் விசாரிக்க முடியும். ராஜினாமாவின் நோக்கம் என்ன என்பதை, ராஜினாமாவை ஏற்கும்போது விசாரிக்க முடியாது. சபாநாயகர் எந்த விதிமீறலும் செய்யவில்லை. இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார். இருதரப்பு வாக்குவாதம் மற்றும் ராஜினாமா செய்த எம்.எல்.ஏ. தரப்பிலான வாக்குவாதம் ஆகியவற்றிக்குப் பிறகு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.</p>]]></content:encoded></item><item><title>ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை உடனடியாக கைவிட கோரி நெல்லையில் ஆர்ப்பாட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/protest-in-nellai-demanding-immediate-cancellation-of-smart-meter-project</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/protest-in-nellai-demanding-immediate-cancellation-of-smart-meter-project#comments</comments><guid isPermaLink="false">820b01f1-62c3-4793-b516-208d758f642f</guid><pubDate>Tue, 01 Sep 2026 14:06:25 +0000</pubDate><atom:updated>2026-09-01T14:06:25.250Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,protest,ஆர்ப்பாட்டம்,demand,Project,CITU,சிஐடியு தொழிற்சங்கத்தினர்,திட்டம்,ஸ்மார்ட் மீட்டர்,Smart Meter,கைவிட வேண்டும்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/v52dgh0b/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை உடனடியாக கைவிட கோரி நெல்லையில் ஆர்ப்பாட்டம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/v52dgh0b/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>​திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D">ஸ்மார்ட் மீட்டர்</a> திட்டத்தை உடனடியாக கைவிட கோரி நெல்லையில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.) சார்பில் கவன ஈர்ப்பு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">ஆர்ப்பாட்டம் </a>நடைபெற்றது.</p><h2>தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம்</h2><p>தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.) சார்பில், நெல்லை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ​திட்டத் தலைவர் நாகையன் தலைமை வகித்தார். <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81">சி.ஐ.டி.யு.</a> மாவட்ட தலைவர் முருகன் ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து பேசினார். </p><h2>ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட கோரிக்கை</h2><p>​இந்த ஆர்ப்பாட்டத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். 5 ஆண்டு ஒப்பந்தம் மூலம் ஒப்பந்தப் பணியாளர் நியமனம் செய்யப்படும் என்ற அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. </p><h2>பகுதி நேர ஊழியர்கள் நிரந்தரம்</h2><p>​மேலும் கேங்மேன் பணியாளர்களுக்கு கள உதவியாளர் பதவி வழங்குவது, ஊதியம் இல்லாமல் பணிபுரிந்து வரும் பகுதி நேர ஊழியர்களை நிரந்தரம் செய்வது, கணக்கீட்டுப் பிரிவில் பணிபுரியும் R.S. மற்றும் IA பணியாளர்களை கீழ்நிலை பணிகளைச் செய்ய நிர்பந்திக்கக் கூடாது, நெல்லை மின் திட்டத்தில் பணிபுரியும் களப் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பதவி உயர்வுகளை உடனடியாக வழங்குவது போன்ற கோரிக்கைகளும் எழுப்பப்பட்டன. </p><p>இந்த ஆர்ப்பாட்டத்தில் திட்ட துணை தலைவர் பூலுடையார், திட்ட துணைச் செயலாளர் தளபதி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் சுவாமிதாசன் மற்றும் கோமதி, கோட்டச் செயலாளர்கள் முருகேசன், வேல்முருகன், அய்யாத்துரை, ஜார்ஜ், திட்டப் பொருளாளர் பாலசுப்பிரமணியன், காற்றாலை பிரிவு துணைச் செயலாளர் அந்தோனி கிளமென்ட் உள்ளிட்டோர் பேசினர். ​திட்டச் செயலாளர் கந்தசாமி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார். மத்திய அலுவலகத் தலைவர் அழகர் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் திரளான மின் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். </p>]]></content:encoded></item><item><title>ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு : அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை; தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sterlite-shooting-action-needed-against-officials</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sterlite-shooting-action-needed-against-officials#comments</comments><guid isPermaLink="false">8003250b-59ed-4622-9dab-cbcc350a56d8</guid><pubDate>Tue, 01 Sep 2026 14:05:36 +0000</pubDate><atom:updated>2026-09-01T14:05:36.160Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>துப்பாக்கி சூடு,நடவடிக்கை,வலியுறுத்தல்,அதிகாரிகள்,ஸ்டெர்லைட்,CPI(M),Sterlite firing,Urges,மார்க்சிஸ்ட் கட்சி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/yu8z5zb9/34.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ பெ. சண்முகம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/yu8z5zb9/34.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது உறுதியான நடவடிக்கை தேவை !தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல். இது தொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் </a>மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><h2>துப்பாக்கிச்சூடு</h2><p>2018 ஆம் ஆண்டு<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D"> ஸ்டெர்லைட்டை</a> எதிர்த்த போராட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் பொறுப்பற்ற தன்மை, அத்துமீறல் காரணமாக கொல்லப்பட வேண்டுமென்ற நோக்கத்தோடு நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இதற்கென அமைக்கப்பட்ட நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை நடத்தி தனது பரிந்துரையை அரசுக்கு அளித்தது. </p><h2>அறிக்கை</h2><p>3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உட்பட 17 காவல்துறையினர், மாவட்ட கலெக்டர் மற்றும் 3 வட்டாட்சியர்கள் இதற்கு காரணமானவர்கள் என்று அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். அவர்கள் மீது துறைவாரியான நடவடிக்கையும், குற்ற வழக்கு பதிவு செய்து விசாரிக்கவும் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது.</p> <h2> நீதிமன்ற நிகழ்வு</h2><p>நேற்று  சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ள கருத்துக்கள் கொலைக்கு காரணமான அதிகாரிகளை பாதுகாக்கும் நோக்கத்தை கொண்டதாக உள்ளது. இவர்களில் யாரும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்பதுதான் நேற்றைய நீதிமன்ற நிகழ்வின் வெளிப்பாடாகும்.</p><h2>அடக்குமுறை கருவி</h2><p>இது ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறை கருவியாக அரசு அமைப்புகள் செயல்படும் என்பதற்கான மிக வெளிப்படையான நிகழ்வாகும். அந்த வகையில் திமுகவும் தவெகவும் அதிகாரிகளுக்கு ஆதரவான நிலைபாட்டையே எடுத்துள்ளன.</p> <h2>பன்னாட்டு முதலாளி</h2><p> சுற்றுச்சூழல் சீர்கேடுகள் குறித்து மக்கள் சுட்டிக்காட்டியபோதே, ஸ்டெர்லைட் நிர்வாகமோ அல்லது அரசு அமைப்புகளோ நடவடிக்கை எடுத்திருந்தால் இத்தகைய கொடூரம் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. பன்னாட்டு முதலாளி ஒருவரின் நலனை பாதுகாப்பதற்காகவே ஆளும் வர்க்கத்தின் அடியாளாக செயல்பட்ட இந்த அதிகாரிகள் பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை. </p> <h2>எந்த நியாயமும் கிடைக்காது</h2><p>இத்தகைய நிலைமை நீடிப்பது நிர்வாகத்தாலும், நீதித்துறையாலும், அரசாங்கத்தாலும் தங்களுக்கு எந்த நியாயமும் கிடைக்காது என்று குடிமக்களை நிராதாவாக நிற்க வைக்கும். ஜனநாயக நாட்டில் இத்தகைய நிலையை அரசாங்கம் எடுத்திருப்பது முற்றிலும் ஏற்க தக்கதல்ல.</p> <h2>குற்ற வழக்கு பதிவு</h2><p>எனவே, தமிழ்நாடு அரசு முந்தைய திமுக அரசு மேற்கொண்ட நிலையை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி, 13 பேர் கொலைக்கு காரணமான அனைத்து அதிகாரிகள் மீதும் உரிய துறைவாரியான நடவடிக்கை மற்றும் குற்ற வழக்கு பதிவு செய்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், உயிரிழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் ஆணையம் பரிந்துரைத்த இழப்பீட்டுத் தொகையை முழுவதுமாக வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நெல்லையில் பெண்ணை மிரட்டி ஆபாச படம் எடுத்து நகை, செல்போன் பறிப்பு - 3 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-threatened-stripped-filmed-robbed-in-nellai-three-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-threatened-stripped-filmed-robbed-in-nellai-three-arrested#comments</comments><guid isPermaLink="false">2fcab83e-768c-456c-9556-de5b9edb617a</guid><pubDate>Tue, 01 Sep 2026 13:41:47 +0000</pubDate><atom:updated>2026-09-01T13:41:47.001Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,கைது,arrested,பெண்,Woman,மிரட்டி நகை பறிப்பு,In Nellai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/uubg00co/manikandan.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மணிகண்டன்,சிவா]]></media:title><media:description type="html"><![CDATA[ நெல்லையில் பெண்ணை மிரட்டி ஆபாச படம் எடுத்து நகை, செல்போன் பறிப்பு - 3 பேர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/uubg00co/manikandan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி,</p><p>நெல்லையில் பெண் ஒருவரை மர்ம கும்பல் காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று, அவரை பலவந்தமாக நிர்வாணமாக்கி செல்போனில் படம் பிடித்து, நகை மற்றும் செல்போனை கொள்ளையடித்த சம்பவம் மாவட்டத்தையே உலுக்கியுள்ளது.</p><h2>காட்டுப்பகுதிக்கு கடத்தல்</h2><p>திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்து பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் சிவா ஆகியோர், 40 வயதுடைய பெண் ஒருவரை ஆள் நடமாட்டமில்லாத தனிமையான காட்டுப்பகுதிக்கு அழைத்து் சென்றனர். அங்கு வைத்து அந்தப் பெண்ணைச் சூழ்ந்து கொண்ட கும்பல், அவரை மிரட்டி ஆடை இன்றி நிர்வாணமாக்கியுள்ளது.</p><h2>படம் பிடித்து மிரட்டல்</h2><p>தொடர்ந்து, தங்களது செல்போன்கள் மூலம் அந்த பெண்ணை ஆபாசமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளனர். "நாங்கள் சொல்வதை கேட்காவிட்டால் இந்த ஆபாச படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அசிங்கப்படுத்திவிடுவோம்" என அந்த பெண்ணை மிரட்டி, அவர் அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.</p><h2>3 பேர் கைது</h2><p>இந்த அதிர்ச்சி சம்பவத்தால் நிலைகுலைந்த அந்த பெண், இதுகுறித்து உடனடியாக போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் நெல்லை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில், பெண்ணை மிரட்டி ஆபாச படம் எடுத்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88">கொள்ளையடித்த</a> கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81"> கைது </a>செய்தனர். கைதானவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகை மற்றும் குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருநெல்வேலி: இந்த ஆண்டு இதுவரை 98 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirunelveli-98-people-arrested-under-the-detention-act-so-far-this-year</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirunelveli-98-people-arrested-under-the-detention-act-so-far-this-year#comments</comments><guid isPermaLink="false">521be4af-3897-44d6-bb58-2f10fe56fa61</guid><pubDate>Tue, 01 Sep 2026 13:26:57 +0000</pubDate><atom:updated>2026-09-01T13:26:57.278Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Tirunelveli,திருநெல்வேலி,arrests,இந்த ஆண்டு,This year,இதுவரை,so far,தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டம்,Tamil Nadu Detention Act</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/yytkl02a/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/yytkl02a/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 98 பேர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின்</a> கீழ் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.</p><h2>போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கை</h2><p>திருநெல்வேலி மாவட்டத்தில் போதைப்பொருட்களின் புழக்கத்தை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில், மாவட்ட எஸ்.பி. விஸ்வேஸ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி உத்தரவின் பேரில், கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது போலீசார் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். </p><h2>கஞ்சா விற்பனை</h2><p>அதன் ஒரு பகுதியாக, மூலைக்கரைப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த சின்ன மூலைக்கரைப்பட்டியைச் சேர்ந்த ரவி (வயது 25), சூர்யா(24), பேச்சிமுத்து(33) மற்றும் நாங்குநேரி வட்டம், பெருமாள்நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(19) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். </p><p>இதேபோல், திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சேர்ந்த மாரிமுத்து(25) என்பவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். </p><h2>5 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது</h2><p>மேற்சொன்ன 5 பேரும் கஞ்சா விற்பனை போன்ற சட்டவிரோத குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், மூலைக்கரைப்பட்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாடசாமி மற்றும் திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் ஆகியோர், மேற்சொன்ன நபர்கள் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் பரிந்துரை செய்தனர். </p><p>அதன்பேரில் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஸ்வேஸ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி பரிந்துரையின் பேரில், திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஆனந்த் மோகன் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பித்தார். அதைத் தொடர்ந்து, மேற்சொன்ன 5 பேரும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். </p><h2>இந்த ஆண்டு இதுவரை 98 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது</h2><p>மேலும், திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 98 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றாமல் கட்டண உயர்வா? -  வேல்முருகன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/toll-hike-without-removing-expired-toll-plazas-velmurugan-condemns-the-move</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/toll-hike-without-removing-expired-toll-plazas-velmurugan-condemns-the-move#comments</comments><guid isPermaLink="false">4944c6be-8c94-44fe-9e46-c6a07c192bc6</guid><pubDate>Tue, 01 Sep 2026 13:23:19 +0000</pubDate><atom:updated>2026-09-01T13:23:19.997Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,சுங்கச்சாவடி,Velmurugan,வேல்முருகன்,கட்டணம்,Toll,Condemn</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/1awi3jby/174.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/1awi3jby/174.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றாமல் கட்டண உயர்வா என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>சுங்கச்சாவடி</h2><p>தமிழ்நாட்டின் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டண உயர்வு என வெளியாகியுள்ள செய்திகள் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளன.</p><p>சாலை அமைப்பதற்காக விதிக்கப்பட்ட சுங்கக் கட்டணம், சாலை அமைத்த செலவைத் தாண்டியும் பல ஆண்டுகளாக வசூலிக்கப்பட்டு வருகிறது. ஒப்பந்தக் காலமே முடிவடைந்த சுங்கச்சாவடிகள் கூட இன்னும் தொடர்ந்து கட்டணம் வசூலிப்பது எந்த வகையில் நியாயம்?</p><h2>கட்டணம்</h2><p>ஒப்பந்தக் காலம் முடிவடைந்த சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி பலமுறை ஒன்றிய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தியுள்ளது.  ஆனால், மக்களின் கோரிக்கைகளைப் புறக்கணித்துவிட்டு, காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றாமல் ஆண்டுதோறும் கட்டணத்தை மட்டும் உயர்த்துவது மக்கள் மீது நடத்தப்படும் பொருளாதாரத் தாக்குதல் அல்லவா?</p><p>பெட்ரோல், டீசல், அத்தியாவசியப் பொருட்கள் என அனைத்தின் விலையும் உயர்ந்துள்ள நிலையில், சுங்கக் கட்டண உயர்வு என்பது நேரடியாகவே பொதுமக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் மற்றும் சரக்கு வாகன உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும்.</p><h2>ஒப்பந்தக்காலம்</h2><p>மக்களிடம் வசூலிப்பதில் மட்டும் வேகம் காட்டும் மத்திய அரசு, காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றுவதில் ஏன் தயக்கம் காட்டுகிறது? தமிழ்நாட்டு மக்கள் மீது திணிக்கப்படும் இந்த சுங்கக் கொள்ளைக்கு மாநில அரசு எப்போது முற்றுப்புள்ளி வைக்கப் போகிறது? எனவே, சுங்கச்சாவடி கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுவதுடன், ஒப்பந்தக்காலம் முடிவடைந்த அனைத்து சுங்கச்சாவடிகளையும் உடனடியாக அகற்ற வேண்டும்.</p><p>இக்கோரிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் தொடர்ந்து புறக்கணித்தால், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">தமிழக வாழ்வுரிமைக் கட்சி</a> தமிழ்நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு, மக்கள் பங்கேற்கும் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதை எச்சரிக்கையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோவில்களில் செல்போன் வைக்க ரூ.5 கட்டணம் வசூல்; தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-5-fee-charged-for-mobile-phone-storage-at-temples-tamilisai-soundararajan-condemns-the-move</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-5-fee-charged-for-mobile-phone-storage-at-temples-tamilisai-soundararajan-condemns-the-move#comments</comments><guid isPermaLink="false">09c47569-be2e-4a0f-ae24-c6343e60fe88</guid><pubDate>Tue, 01 Sep 2026 13:21:17 +0000</pubDate><atom:updated>2026-09-01T13:21:17.263Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழிசை சவுந்தரராஜன்,Tamilisai Soundararajan,கோவில்,Temple,செல்போன்,கட்டணம்,mobile phone</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/y5u5oupp/tamilisai.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழிசை சவுந்தரராஜன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/y5u5oupp/tamilisai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கோவில்களில் செல்போன் வைக்க ரூ.5 கட்டணம் வசூல் செய்வதற்கு பாஜக மூத்த தலைவர்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88"> தமிழிசை </a>சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>இறைவனை தரிசிக்கச் செல்லும் பக்தர்களுக்கு ஏன் இத்தனை கட்டுப்பாடுகள்?கோவிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்லக்கூடாது என்பதற்காக, அதனை வைப்பதற்கே ரூ.5 கட்டணம் செலுத்த வேண்டும் என்பது கண்டிக்கத்தக்கது.</p><h2>செல்போன் வைக்க தனியாக வரிசை</h2><p>ஏற்கனவே இறைவனை தரிசிக்க வரிசையில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. இப்போது குடும்பத்தோடு வரும் பக்தர்கள், தங்களது செல்போனை வைப்பதற்காகவும் தனியாக வரிசையில் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பது மிகவும் வருந்தத்தக்கது.</p><h2>அரசின் கடமை</h2><p>கோவிலுக்கு செல்வதே ஒரு சவாலான அனுபவமாக மாறிவிடக் கூடாது. பக்தர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும், மனநிம்மதியுடனும் இறைவனை தரிசிக்க வழிவகை செய்வதே அரசின் கடமையாகும். இன்று இந்த தவெக அரசு கோவில்களிலும் பக்தர்களிடமும் விதித்து வரும் தொடர்ச்சியான கட்டுப்பாடுகள், இந்து மதத்தையும் பக்தர்களின் உணர்வுகளையும் பாதிக்கும் நடவடிக்கைகள் ஆகவும் அவர்கள் மீது தொடுக்கப்படும் மறைமுக மன தாக்குதல்களாகுமே பார்க்கப்படுகிறது </p><p>பக்தர்கள் குடும்பத்துடன் கோவிலுக்குச் சென்று, இறைவனை மனநிறைவுடன் தரிசித்து, நமது பாரம்பரியக் கலைச்சிற்பங்களை ரசித்து, கோவில் பிரசாதத்தைப் பெற்று, இறைவனின் ஆசீர்வாதத்துடன் மகிழ்ச்சியாக வீடு திரும்பும் சூழலை ஏற்படுத்த வேண்டும். கோவில் என்பது பக்தர்களுக்கு நிம்மதியும் ஆன்மிக மகிழ்ச்சியும் தரும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, கட்டுப்பாடுகளும் சிரமங்களும் நிறைந்த இடமாக மாறிவிடக் கூடாது.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் 3.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/35-kg-of-ganja-seized-in-thoothukudi-3-people-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/35-kg-of-ganja-seized-in-thoothukudi-3-people-arrested#comments</comments><guid isPermaLink="false">d519c2b8-7870-46c3-b8e3-b27b397c2a54</guid><pubDate>Tue, 01 Sep 2026 12:55:40 +0000</pubDate><atom:updated>2026-09-01T12:55:40.625Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,Thoothukudi,தூத்துக்குடி,patrol,ரோந்து பணி,3 arrested,3 பேர் கைது,கஞ்சா பறிமுதல்,போலீசார்,seized ganja</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/bxu4ym8p/3.5-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 3.5 கிலோ கஞ்சா பறிமுதல்; 3 பேர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/bxu4ym8p/3.5-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடியில் 3 கிலோ 500 கிராம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">கஞ்சாவை பறிமுதல்</a> செய்த தாளமுத்துநகர் போலீசார், இது தொடர்பாக <a href="https://www.dailythanthi.com/topic/3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">3 பேரை கைது </a>செய்தனர்.</p><h2>போலீசார் ரோந்து பணி</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> டேவிஸ்புரம் ஜங்ஷன் பகுதியில் தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே சந்தேகப்படும்படியான நபர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது, அவர்கள் சட்ட விரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. </p><h2>3.5 கிலோ கஞ்சா பறிமுதல், 3 பேர் கைது</h2><p>இது தொடர்பாக தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் வழக்குப்பதிவு செய்து சட்ட விரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த தூத்துக்குடி முத்தம்மாள்காலனி பகுதியைச் சேர்ந்த முத்துமாணிக்கம் மகன் கலைமணி (வயது 24), கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த முனியசாமி மகன் இசக்கிராஜா(22) மற்றும்  ஓம்சக்தி நகரைச் சேர்ந்த தங்கராஜ் மகன் முத்துராஜ்(எ) கார்த்திக்(34) ஆகிய 3 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 3 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தார்.</p>]]></content:encoded></item><item><title>பெண்ணை கொலை செய்து தண்ணீர் தொட்டியில் வீசிய சம்பவம்.. சமையல்காரர் கைது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-murdered-and-dumped-in-water-tank-cook-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-murdered-and-dumped-in-water-tank-cook-arrested#comments</comments><guid isPermaLink="false">e74a15f7-41f4-4ddd-b3e6-2dcf9a462ddd</guid><pubDate>Tue, 01 Sep 2026 12:51:27 +0000</pubDate><atom:updated>2026-09-01T12:51:27.799Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrest,பெண் கொலை,woman murder,Cook,சமையல்காரர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/7t7inrc1/arrest.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/7t7inrc1/arrest.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>பெண்ணை கொலை செய்து உடலை 7 துண்டுகளாக வெட்டி தண்ணீர் தொட்டியில் மூட்டை கட்டி வீசிய சம்பவம் தொடர்பாக சமையல்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>கொலை</h2><p>சேலம் மாவட்டம் அரிசிபாளையம் பகுதியில் உள்ள குணபாலன் ராமசாமி தெருவில் ரமேஷ் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் ஊருக்கு சென்றார். பின்னர் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டிற்கு திரும்பினார். மறுநாள் காலையில் வீட்டில் உள்ள குடிநீர் குழாயை திறந்தபோது துர்நாற்றம் வீசியதாக தெரிகிறது. இதனால் ரமேஷ் வீட்டின் மேல்புறம் உள்ள குடிநீர் தொட்டியை திறந்து பார்த்தார். அப்போது தண்ணீரில் 3 மூட்டைகள் கிடந்தன. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரமேஷ் உடனடியாக பள்ளபட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். </p><p>சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்து, அந்த 3 மூட்டைகளையும் பிரித்து பார்த்தனர். மூட்டைகளை பிரித்து பார்த்தபோது அதில் பெண்ணின் உடல் பாகங்கள் இருந்தன. பெண்ணின் உடல் 7 துண்டுகளாக வெட்டி மூட்டைகளில் கட்டி சின்டெக்ஸ் டேங்கில் போட்டுள்ளது தெரியவந்தது. உடல்பாகங்களை பிரேத பரிசோதனைக்காக  சேலம் மோகன் குமார மங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இந்த கொடூர கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட பெண்ணின் கையில் கணபதி என பச்சை குத்தப்பட்டிருந்தது. இதனை அறிந்து வந்த அவரது கணவர் ஜீவானந்தம், அவரது மகள் மற்றும் உறவினர் சேர்ந்து அந்த சடலத்தை அடையாளம் காட்டினர். கொலை செய்யப்பட்ட பெண், சேலம் மேட்டுப்பட்டி தாதனூர் பாலாஜி காலனியை சேர்ந்த தங்கமணி (50) என்பது தெரியவந்தது. </p><p>இவர் கடந்த ஆகஸ்ட் 22-ந்தேதி சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள டாக்டர் ஒருவரின் வீட்டில் வீட்டு வேலை செய்துவிட்டு வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது கணவர் ஆகஸ்ட் 28-ந்தேதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அளித்ததை தொடர்ந்து தங்க மணியை தேடி வந்த நிலையில் அவரது உடல் தண்ணீர் தொட்டியில் மீட்கப்பட்டார்.</p><h2>சமையல்காரர் கைது</h2><p>இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தீவிரமாக தேடி வந்த நிலையில், சமையல்காரர் செல்லத்துரை என்பவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தப்பட்டது. சமையல்காரரின் தங்கையும் தங்கமணியும் நண்பர்களாக பழகி வந்தனர். அவரின் மூலமாக சமையல்காரர் தங்கமணியிடம் அறிமுகமானார். இந்த நிலையில் தங்கமணி கொலை செய்யப்பட்ட நாளில் இருந்து சமையல்காரரின் தங்கை மொபைல் சுவிட்ச் ஆப் ஆனதால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. கொலையில் அவருக்கும் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். தீவிர விசாரணைக்குப் பிறகு சமையல்காரர் செல்லத்துரையை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்தனர். அவர் தங்கமணியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/toll-rates-hiked-at-25-toll-plazas-in-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/toll-rates-hiked-at-25-toll-plazas-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">976c998e-3ade-4811-9cca-1d65a1b24d07</guid><pubDate>Tue, 01 Sep 2026 12:43:19 +0000</pubDate><atom:updated>2026-09-01T12:43:19.266Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/63k8depo/173.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சுங்கச்சாவடி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/63k8depo/173.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 77 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் ஆண்டுக்கு 2 முறை கட்டணத்தை மாற்றி அமைப்பது வழக்கம்.</p><p>அதன்படி நேற்று நள்ளிரவு முதல் 25 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. வாகனங்களுக்கு ஏற்ப ரூ.5 முதல் ரூ.30 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.</p><h2>விக்கிரவாண்டி</h2><p>விழுப்புரம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF">சுங்கச்சாவடி </a>அமைந்துள்ளது. இந்த சுங்கச்சாவடி வழியாக செல்லும் கார், ஜீப், பயணிகள் வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கான ஒரு வழி கட்டணம் ரூ.105-ல் இருந்து ரூ.110 ஆகவும், பலமுறை பயனணிக்க ரூ.160-ல் இருந்து ரூ.165 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.</p><p>இலகுரக சரக்கு வாகனங்களுக்கு ஒரு வழி கட்டணம் ரூ.185-ல் இருந்து ரூ.190 ஆகவும், பல முறை பயணிக்க ரூ.275-ல் இருந்து 290 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஒரு வழி கட்டணம் ரூ.370-ல் இருந்து ரூ.385 ஆகவும், பல முறை பயணிக்க ரூ.555-ல் இருந்து ரூ.575 ஆகவும், உயர்த்தப்பட்டுள்ளது.</p><h2>செங்குறிச்சி</h2><p>உளுந்தூர்பேட்டையை அடுத்த செங்குறிச்சி சுங்கச்சாவடியில் கார், ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஒருமுறை பயணம் செய்வதற்கான கட்டணம் மாற்றமின்றி ரூ.70 ஆக தொடருகிறது. பலமுறை சென்று வருவதற்கான கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.105 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.</p><p>இலகுரக வணிக வாகனங்களுக்கான ஒருமுறை ஆயண கட்டணம் ரூ.125 (பழைய கட்டணம் ரூ.120), பலமுறை பயண கட்டணம் ரூ.185 (பழைய கட்டணம் ரூ.180) ஆக உயர்த்தப்பட்டுள்ளது. லாரி மற்றும் பஸ்களுக்கான ஒருமுறை பயண கட்டணம் ரூ.240-ல் இருந்து ரூ.250 ஆகவும், பலமுறை கட்டணம் ரூ.355-ல் இருந்து ரூ.375 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.</p><h2>ஈரோடு</h2><p>ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சுங்கச்சாவடியில் கார், பயணிகள் வேன் மற்றும் ஜீப் ஆகியவை ஒரு முறை பயணத்திற்கு ரூ.70-ல் இருந்து ரூ.75ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பல முறை பயணிக்க ரூ.105-ல் இருந்து ரூ.110 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இலகுரக வணிக வாகனம் ஒருமுறை பயணத்திற்கு கட்டண மாற்றமின்றி ரூ.125 ஆக உள்ளது. பலமுறை பயணிக்க ரூ.165-ல் இருந்து ரூ.190 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பஸ், லாரி ஒரு முறை பயணத்திற்கு ரூ.345-ல் இருந்து ரூ.255 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பல முறை பயணிக்க ரூ.370-ல் இருந்து ரூ.380 ஆக  உயர்த்தப்பட்டுள்ளது.</p><h2>கொழிஞ்சிபட்டி</h2><p>திண்டுக்கல் - மதுரை 4 வழிச்சாலையில் கொடை ரோடு கொழிஞ்சிபட்டியில் வேன் ஆகிய வாகனங்களுக்கான சுங்கச்சாவடியில் கார், ஜீப், ஒருமுறை பயண கட்டணம் ரூ75-ல் இருந்து ரூ.80 ஆகவும். இருமுறை பயண கட்டணம் ரூ.115-ல் இருந்து ரூ.120 ஆகவும் உயர்ந்தது.</p><p>இலகுரக வணிக வாகனங்களுக்கான ஒருமுறை கட்டணம் ரூ.135-ல் இருந்து ரூ.140 ஆகவும், இருமுறை பயண கட்டணம் ரூ.200-ல் இருந்து ரூ.310 ஆகவும் அதிகரிந்தது. பஸ், லாரிக்கு ஒருமுறை பயன கட்டணம் ரூ.270-ல் இருந்து ரூ.280 ஆகவும், இருமுறை பயண கட்டணம் ரூ.405-ல் இருந்து ரூ. 470 ஆகவும் உயர்ந்தது.</p>]]></content:encoded></item><item><title>பிராட்வே பேருந்து நிலைய பணிகள் தீவிரம்; அதிகாரிகளுக்கு ஆணையாளர் முக்கிய உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/work-at-broadway-bus-terminus-intensifies-commissioner-issues-key-directive-to-officials</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/work-at-broadway-bus-terminus-intensifies-commissioner-issues-key-directive-to-officials#comments</comments><guid isPermaLink="false">a09a9044-1457-4775-b4d7-af2ad6c57f76</guid><pubDate>Tue, 01 Sep 2026 12:39:40 +0000</pubDate><atom:updated>2026-09-01T12:39:40.581Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Commissioner,பணிகள் தீவிரம்,ஆணையாளர்,பிராட்வே பேருந்து நிலையம்,Broadway Bus Terminal</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/rb1obxdi/18.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/rb1obxdi/18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வடகிழக்குப் பருவமழை முடியும் வரை மழைநீர் வடிகாலை அகற்ற வேண்டாம் என ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.</p><p>சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>பெருநகர <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">சென்னை மாநகராட்சி</a>, இராயபுரம் மண்டலத்தில் உள்ள பிராட்வே பேருந்து நிலையத்தில் ரூ.822.70 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணியினை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (01.09.2026) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இப்பணிகளை உரிய தொழில்நுட்ப வழிகாட்டுதலின்படி, மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><h2>உரிய நடவடிக்கை</h2><p>இந்த பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகளை முன்னிட்டு, இவ்விடத்தில் அமையப்பெற்றுள்ள இரண்டு கட்டடங்களை அகற்றி, அதற்கு மாற்று ஏற்பாடு செய்திடவும், இப்பகுதியில் உள்ள 20 குடும்பத்தினருக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்து வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், இந்தகட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியில் ஏற்கனவே அமையப்பெற்றுள்ள மழைநீர் வடிகாலினை வடகிழக்குப் பருமழையினை முன்னிட்டு தற்சமயம் அதனை அகற்றாமல், வடகிழக்குப் பருவமழை முடிவுற்றதற்குப் பின்னர் அதனை அகற்றி அதற்கு பதிலாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் ஆணையாளர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>இந்த ஆய்வின்போது, வடக்கு வட்டார துணை ஆணையாளர் ஸ்வேதா சுமன், இ.ஆ.ப., சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் அலுவலர்கள் (CMAML) மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சமூக வலைதளத்தில் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட முன்னாள் காதலன்: திருமணம் நின்றதால் இளம்பெண் தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ex-boyfriend-posts-intimate-photo-on-social-media-young-woman-commits-suicide-after-wedding-is-called-off</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ex-boyfriend-posts-intimate-photo-on-social-media-young-woman-commits-suicide-after-wedding-is-called-off#comments</comments><guid isPermaLink="false">eb9f8113-a838-4a3b-97a6-fe0c9f5ac2f5</guid><pubDate>Tue, 01 Sep 2026 12:36:22 +0000</pubDate><atom:updated>2026-09-01T12:36:22.535Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>social media,உறவினர்கள் போராட்டம்,wedding,பெண் தற்கொலை,ex-boyfriend,திருமணம் ரத்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/shz1ih1b/-.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ சரிதா- திருமண பத்திரிக்கை]]></media:title><media:description type="html"><![CDATA[ திருமணம் ரத்து செய்யப்பட்டதால் இளம்பெண் தற்கொலை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/shz1ih1b/-.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமநாதபுரம்,</p><p>திருமணத்திற்கு சில மணி நேரங்களே இருந்த நிலையில், முன்னாள் காதலன் ஜோடியாக எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D">திருமணம்</a> நின்றுபோன அதிர்ச்சியில், மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ராமநாதபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>காதல் முறிவு</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ராமநாதபுரம் மாவட்டம் </a>உச்சிப்புளி அருகே உள்ள மூப்பன்வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் சரிதா (வயது 22). அவரும், பிரம்பன்வலசை கிராமத்தைச் சேர்ந்த லோகேஷ் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் லோகேஷின் குணம் மற்றும் செயல்பாடுகள் பிடிக்காததால், சரிதா அவரிடமிருந்து விலகியுள்ளார். அதனைத் தொடர்ந்து, சரிதாவின் பெற்றோர் அவருக்கு வேறு ஒரு மாப்பிள்ளையுடன் திருமண நிச்சயம் செய்தனர்.</p><h2>இன்ஸ்டாவில் வெளியான புகைப்படங்கள்</h2><p>அவர்களின் திருமணம் கடந்த 30-ந்தேதி நடைபெறவிருந்தது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில், சரிதாவுக்குத் திருமணம் நடப்பதை அறிந்த லோகேஷ் கடும் ஆத்திரமடைந்தார். எனவே பழிவாங்கும் நோக்கில், சரிதாவுடன் முன்பு எடுத்த நெருக்கமான புகைப்படங்களை தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் சமூக வலைதளங்களில் லோகேஷ் பதிவிட்டார்.</p><h2>நின்ற திருமணம் - பெண் தற்கொலை</h2><p>அந்த புகைப்படங்கள் மணமகன் வீட்டாருக்கு தெரியவந்ததை அடுத்து, அவர்கள் அதிர்ச்சியடைந்து திருமணத்தை அதிரடியாக நிறுத்தினர். உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் முன்னிலையில் திருமணம் நின்றதால், சரிதா கடுமையான அவமானத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளானார். அதனால் விரக்தியடைந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">தூக்கிட்டுத் தற்கொலை </a>செய்து கொண்டார்.</p><h2>உறவினர்கள் போராட்டம்</h2><p>தகவலறிந்து வந்த உச்சிப்புளி போலீசார், சரிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்ப முயன்றனர். ஆனால், சரிதாவின் தற்கொலைக்கு காரணமான லோகேஷை உடனடியாக கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. தலைமறைவாக உள்ள லோகேஷை தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">காதலன் வெளியிட்ட புகைப்படம் - நின்ற திருமணம் - பெண் தற்கொலை <a href="https://t.co/2RbAueAQyz">https://t.co/2RbAueAQyz</a> <a href="https://x.com/hashtag/love?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#love</a> <a href="https://x.com/hashtag/photo?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#photo</a> <a href="https://x.com/hashtag/death?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#death</a> <a href="https://x.com/hashtag/marriage?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#marriage</a> <a href="https://x.com/hashtag/thanthitv?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#thanthitv</a></p>&mdash; Thanthi TV (@ThanthiTV) <a href="https://x.com/ThanthiTV/status/2094738641235141067?ref_src=twsrc%5Etfw">September 1, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>நிதி நிறுவனத்தில் போலி நகைகள் அடகுவைத்து பணம் மோசடி: ஒருவர் கைது; 2 பேருக்கு வலைவீச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/one-arrested-for-defrauding-financial-institution-by-pawning-fake-jewelry-2-others-nabbed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/one-arrested-for-defrauding-financial-institution-by-pawning-fake-jewelry-2-others-nabbed#comments</comments><guid isPermaLink="false">255c291a-7cb3-4599-a3ce-46ddeb308afa</guid><pubDate>Tue, 01 Sep 2026 12:25:25 +0000</pubDate><atom:updated>2026-09-01T12:25:25.477Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Thoothukudi,தூத்துக்குடி,பணம் மோசடி,Tenkasi,தென்காசி,arrest,money laundering,நிதி நிறுவனம்,fake jewelry,financial institution,போலி நகைகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/lrfhsg7x/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நகைகள் அடகுவைத்து பணம் மோசடி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/lrfhsg7x/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் தனியார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">நிதி நிறுவனத்தில்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">போலி நகைகளை</a> அடகு வைத்து பல லட்சம் ரூபாய் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF">பணம் மோசடியில்</a> ஈடுபட்ட ஒருவரை கைது செய்த போலீசார் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.</p><h2>நிதி நிறுவனம்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF">தென்காசி</a> மாவட்டம், கீழப்பாவூரைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 35) என்பவர் பாவூர்சத்திரத்தில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் நிதி நிறுவனங்களில் அடகு வைத்து திருப்ப முடியாமல் இருக்கும் நகைகளை மீட்டுத் தரும் தொழிலையும் செய்து வருகிறார்.</p><h2>போலி நகைகள் மூலம் பணம் மோசடி</h2><p>ஸ்ரீவைகுண்டம் அருகே சாமியாத்து பராக்கிரம பாண்டியபுரத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம்(42) என்பவர் ராஜ்குமாரை அணுகி, பேய்க்குளம் தனியார் நிதி நிறுவனத்தில் தான் அடகு வைத்துள்ள நகைகளை மீட்டுத் தருமாறு கேட்டுள்ளார். அதனை நம்பிய ராஜ்குமார், ரூ. 4.14 லட்சம் செலுத்தி நகையை மீட்டு, முத்துராமலிங்கத்திடம் ரூ.1.78 லட்சத்தைக் கொடுத்துவிட்டு நகைகளை வாங்கியுள்ளார். மேலும், முத்துராமலிங்கத்தின் நண்பரான முக்கூடலைச் சேர்ந்த கார்த்திகேயனிடம் 4 கிராம் மோதிரத்தை வாங்கி ரூ. 45 ஆயிரம் கொடுத்துள்ளார். தான் வாங்கிய 53 கிராம் நகைகளை தென்காசியில் உருக்கிப் பார்த்தபோது, அவை மாற்றுக்குறைந்த போலி நகைகள் என்பது ராஜ்குமாருக்கு தெரியவந்தது. இதுகுறித்து முத்துராமலிங்கத்திடம் கேட்டபோது அவர் முறையான பதில் அளிக்கவில்லை. </p><p>ஏற்கெனவே கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் பேய்க்குளம் நிதி நிறுவன ஆய்வின்போது, முத்துராமலிங்கம் அடகு வைத்த நகை போலி என கண்டறியப்பட்டு, அதைத் திருப்புமாறு அறிவுறுத்தப்பட்டும், அவர் நகையை மீட்காமல் ஏமாற்றி வந்தது விசாரணையில் தெரியவந்தது.</p><h2>ஒருவர் கைது; 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு</h2><p>பாதிக்கப்பட்ட ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில், சாத்தான்குளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மருதுபாண்டியன் வழக்குப்பதிவு செய்து முத்துராமலிங்கத்தை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அவரது நண்பர்களான கார்த்திகேயன் மற்றும் மகேஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பின்னலாடை தயாரிப்பு நூல் விலை கிலோவுக்கு ரூ.7 உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/price-of-yarn-for-knitwear-manufacturing-rises-by-rs-7-per-kg</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/price-of-yarn-for-knitwear-manufacturing-rises-by-rs-7-per-kg#comments</comments><guid isPermaLink="false">734ba2c3-9625-41d7-8227-e3594ee2f38f</guid><pubDate>Tue, 01 Sep 2026 12:18:07 +0000</pubDate><atom:updated>2026-09-01T12:18:07.722Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருப்பூர்,பின்னலாடை உற்பத்தியாளர்கள்,Rise,நூல் விலை உயர்வு,Yarn price</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/9dmvoj2e/172.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நூல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/9dmvoj2e/172.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><p>திருப்பூரில் பின்னலாடை தயாரிப்புக்கான நூல் விலை கிலோவுக்கு ரூ.7 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அதிரடி விலை உயர்வு ஜவுளி மற்றும் பின்னலாடை தொழில்துறையினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>பஞ்சு விலை உயர்வு</h2><p>பருத்தி விலை அதிகரிப்பு காரணமாக பஞ்சு விலை உயர்ந்துள்ளது. ரூ.60 ஆயிரமாக இருந்த ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு, ரூ.74 ஆயிரமாக விலை உயர்ந்துள்ளது. அதேபோல், பின்னலாடை தயாரிப்புக்கான நூலும் கிலோவுக்கு ரூ.7 அதிகரித்துள்ளது. </p><p>10-ம் நம்பர் கோல்டு நூல் கிலோ ரூ.265-க்கும் 16-ம் நம்பர் நூல் கிலோ ரூ.274-க்கும், 20ஆம் நம்பர் கோல்டு நூல் ரூ.333-க்கும் 40-ம் நம்பர் நூல் கிலோ ரூ.383-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>நேபாளம் வெள்ளத்தை அன்றே சொன்னேன் - சீமான் பேச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-told-you-about-the-nepal-floods-the-same-day-seemans-speech</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-told-you-about-the-nepal-floods-the-same-day-seemans-speech#comments</comments><guid isPermaLink="false">6577047f-7da4-40cb-ac51-82001f949ed6</guid><pubDate>Tue, 01 Sep 2026 12:06:32 +0000</pubDate><atom:updated>2026-09-01T12:06:32.942Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,NTK,Seeman,நேபாளம்,மதுரை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/cj1bi932/seeman33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ சீமான் பேச்சு]]></media:title><media:description type="html"><![CDATA[ 
நேபாளம் வெள்ளத்தை அன்றே சொன்னேன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/cj1bi932/seeman33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>நேபாளம் வெள்ளத்தை அன்றே சொன்னேன் என மதுரையில் மூவர் நினைவேந்தல் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.</p><p>மதுரையில் மூவர் நினைவேந்தல் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">சீமான்</a> பேசியதாவது:-</p><p>கிறிஸ்தவம், இஸ்லாம், இந்து இப்போது வந்தது இப்போது தான் வந்தது கிறிஸ்தவம், இப்போது தான்</p><p>வந்தது இஸ்லாம், எப்போது வந்தது இந்து? எப்போது வந்தது பௌத்தம்? நாம் யார்? உலகின் முதல் மொழி தமிழ், முதல் மாந்தன் தமிழன்.</p><h2>சர்க்கார் போஸ்டர் தான் பிரச்சினையா?</h2><p>நாங்கள் நீண்ட நாட்களாக பல்வேறு பிரச்சினைகளுக்கு களத்தில் போராடியிருக்கிறோம். சர்க்கார் படத்தின் போஸ்டர் கிழித்தது தான், சர்வதேச பிரச்சினையாகியுள்ளது. அதனால் தான் ஆட்சிக்கு வரவில்லை என அமைச்சர், அதை சபையில் பேசுகிறார். தமிழ்நாட்டில் அவ்வளவு பிரச்சனை நடந்திருக்கிறது, அதெல்லாம் பிரச்சினை இல்லையாம், சர்க்கார் போஸ்டர் தான் பிரச்சினையாம்.</p><h2>ரூல் இல்லை ரீல் தான் நடக்குது</h2><p>எங்கள் மக்கள் கொஞ்சம் மயக்கத்திலும், பெருங்காதலிலும் இருக்கிறார்கள். 5 ஆண்டு ஆட்சி நடக்கப் போவதில்லை, காட்சி தான் நடக்கும். ரூல் நடக்காது, ஒன்லி ரீல் தான்.</p><p>"அமெரிக்காவில் என்னிடம் விசாரணை நடத்திய போது, ‘உன்னை எப்படி உன் நாட்டில் உயிரோடு விட்டுள்ளார்கள்?’ என்று கேட்டனர். பாஸ் என்று தான் என்னை அழைத்தார்கள். 'நாம் தமிழர் கட்சியின் கொள்கை என்ன என்று கேட்டார்கள்', சொன்னால் என் கட்சியில் சேர்வீர்களா என்று கேட்டேன், சிரித்துவிட்டனர்.</p><h2>நேபாள் வெள்ளத்தை அன்றே சொன்னேன்</h2><p>நான் போதிக்கும் போது உனக்கு தெரியாது, பாதிக்கும் போது தான் தெரியும் என்று பலமுறை கூறியிருக்கிறேன். நேபாளில் வெள்ளம் வந்து இறந்த பிறகு, நான் பேசியதை வெட்டி இப்போது போடுகிறார்கள். அமெரிக்க விஞ்ஞானி சொல்வதற்கு முன்பே,அரணையூர் விஞ்ஞானி நான் சொன்னதை யாரும் கேட்கவில்லை. நம்மாழ்வார் எழுதியதை படித்து தான், தெரு தெருவாக கத்தினேன்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை மெட்ரோ ரெயில்களில் கடந்த மாதம் 1.04 கோடி பேர் பயணம்

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-metro-rail-last-month-1-04-crore-passengers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-metro-rail-last-month-1-04-crore-passengers#comments</comments><guid isPermaLink="false">c3db6b14-b591-4e36-9fcc-3423592ba400</guid><pubDate>Tue, 01 Sep 2026 11:29:37 +0000</pubDate><atom:updated>2026-09-01T11:29:37.907Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,மெட்ரோ ரெயில்,சென்னை மெட்ரோ,Chennai Metro Train,chennai metro,சென்னை மெட்ரோ ரெயில்,Metro train</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/j10dz363/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/j10dz363/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த மாதம் 1.04 கோடி பேர் பயணம் செய்துள்ளனர்.</p> <p>சென்னையில் மக்களின் போக்குவரத்தில் பஸ்கள், புறநகர் ரெயில்கள், மெட்ரோ ரெயில்கள் முக்கிய பங்காற்றுகின்றன. குறிப்பாக, மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல், புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்க மெட்ரோ நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.</p> <h2>1.04 கோடி பேர் பயணம்</h2><p>இந்நிலையில், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B">சென்னை மெட்ரோ</a> ரெயில்களில் கடந்த மாதம் (ஆகஸ்ட்) 1 கோடியே 4 லட்சத்து 4 ஆயிரத்து 98 பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதில் அதிகபட்சமாக 14.08.2026 அன்று 4 லட்சத்து 1 ஆயிரத்து 607 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளனர்.</p><p>சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி 52 லட்சத்து 84 ஆயிரத்து 196 பேரும், க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 20 லட்சத்து 20 ஆயிரத்து 687 பேரும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p> <h2>இது தொடர்பாக சென்னை மெட்ரோ வெளியிட்ட எக்ஸ் பதிவில்,</h2><p>சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 1,04,04,098 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p> <p>அதிகபட்சமாக 14.08.2026 அன்று 4,01,607 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.</p> <p>2026, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 52,84,196 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி (Single Journey Paper QR 20,20,687; Online QR – 1,56,385; Static QR 2,28,732; Whatsapp - 4,69,198; Paytm 3,09,569; ONDC – 12,47,168; PhonePe – 2,73,438; CMRL Mobile App (SVP) 1,04,251; Chennai One App – 3,10,474) பயணிகளும் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.</p> <p>சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், Digital SVP, க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, Whatsapp - (+91 83000 86000), Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு 20% கட்டணத் தள்ளுபடியை வழங்குகிறது. மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு கவுண்டர்களில் வாங்கப்படும் ஒற்றைப் பயணத்துக்கான காகித QR பயணச்சீட்டுகளுக்கு (Single Journey Paper QR tickets) இந்தத் தள்ளுபடி கிடையாது.</p><p>மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.</p><p>இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனை ரத்து: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/six-month-prison-sentence-imposed-on-h-raja-set-aside-madras-high-court-order</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/six-month-prison-sentence-imposed-on-h-raja-set-aside-madras-high-court-order#comments</comments><guid isPermaLink="false">904c9060-ca79-4e3b-8de7-69420f6e54ed</guid><pubDate>Tue, 01 Sep 2026 11:24:00 +0000</pubDate><atom:updated>2026-09-01T11:24:00.015Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,ஐகோர்ட்டு,சிறை தண்டனை,ரத்து,எச்.ராஜா,H. Raja,Prison,Madras High Court</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/uxf87clg/171.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எச்.ராஜா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/uxf87clg/171.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பெரியார் சிலை உடைப்பு தொடர்பான கருந்து தெரிவித்தது, தி.மு.க. எம்.பி. கனிமொழியை விமர்சனம் செய்ததாக தமிழக பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜாவுக்கு எதிரான இரு வழக்குகளில் தலா 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு விதித்த தீர்ப்பை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.</p><p>பாரதிய ஜனதா கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா, கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் தனது எக்ஸ் தளத்தில் திரிபுராவில் லெனின் சிலை உடைக்கபட்டது போல், தமிழகத்தில் பெரியார் சிலையை அகற்றுவோம் என பதிவிட்டிருந்தார். இதே போல் 2018-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் தி.மு.க, எம்.பி. கனிமொழிக்கு எதிராக எக்ஸ் தளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டிருந்தார். </p><h2>புகார்</h2><p>இது தொடர்பாக தந்தை பெரியர் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், ஈரோடு போலீசார் எச். ராஜாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர். இந்த இரு வழக்குகளையும் விசாரித்த சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு, எச். ராஜாவுக்கு தலா 6 மாதம் சிறை தண்டனை விதித்து, கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். </p><h2>உத்தரவு</h2><p>இந்த வழக்கில் நீதிபதி வி. லட்சுமி நாராயணன் இன்று பிறப்பித்த தீர்ப்பில், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE">எச். ராஜாவின்</a> பதிவுகளால் சமூகத்தில் இடையூறுகள் ஏற்பட்டது என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனக்கூறி, இரு வழக்குகளிலும் தண்டனை விதித்து பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>ரேஷன் கடையில் கிலோ ரூ.35க்கு வெங்காயம் விற்பனை; அமைச்சர் வெங்கடரமணன் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/onions-sold-at-ration-shops-for-rs-35-per-kg-minister-venkataramanan-informs</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/onions-sold-at-ration-shops-for-rs-35-per-kg-minister-venkataramanan-informs#comments</comments><guid isPermaLink="false">fc9e9622-bb1d-41d1-8c14-a6fb7572ab27</guid><pubDate>Tue, 01 Sep 2026 10:59:58 +0000</pubDate><atom:updated>2026-09-01T10:59:58.219Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,Vijay,விஜய்,வெங்காயம்,Onion price,அமைச்சர் வெங்கடரமணன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/q5cceokh/vengkayam33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
ரேஷன் கடை]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் வெங்கடரமணன் தகவல்
]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/q5cceokh/vengkayam33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வருகிற 3-ந் தேதி முதல் 1 கிலோ வெங்காயம் ரூ. 35க்கு வழங்கப்படும் என அமைச்சர் வெங்கடரமணன் கூறியுள்ளார்.</p><p>உணவுப்பொருள் பாதுகாப்புத்துறை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D%20">அமைச்சர் வெங்கடரமணன் </a>சட்டசபையில் பேசியதாவது:-</p><p>ஈரான் போர் காரணமாக வாகன எரிவாயு விலை ஏற்றத்தால் போக்குவரத்து செலவு உயர்வு, அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள் போன்றவற்றின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக, அதிகளவில் வெங்காய உற்பத்தி செய்யக்கூடிய மத்திய பிரதேசம் மற்றும் மராட்டிய மாநிலத்தில் இருந்து வெங்காய வரத்து குறைந்ததன் காரணமாக வெளிச்சந்தையில் வெங்காயம் கிலோ 56 முதல் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. </p><p>ஏழை எளிய நடுத்தர மக்களின் நலனை கருத்தில்கொண்டு, வெங்காய விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை நிலையம், தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலமாக முதற்கட்டமாக 1000 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு நியாயமாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>முதற்கட்டமாக நகர்ப்பகுதியில் ஒரு கிலோ வெங்காயம் 35 ரூபாய்க்கு கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பிரதான விற்பனை பண்டகசாலைகள் வழியாக அமுதம் அங்காடிகள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் அமைந்துள்ள நியாயவிலை கடைகள் மூலமாக விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. நியாயவிலை கடைகளில், </p><p>வருகிற 3-ந் தேதி முதல் 1 கிலோ வெங்காயம் ரூ. 35க்கு வழங்கப்படும். </p><p>இவ்வாறு அவர் பேசினார்</p>]]></content:encoded></item><item><title>விவசாயி வீட்டிற்கு சென்று பாட்டிக்கு கூலிங்கிளாஸ்  பரிசளித்த முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-visited-a-farmers-house-and-gifted-a-pair-of-sunglasses-to-the-grandmother</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-visited-a-farmers-house-and-gifted-a-pair-of-sunglasses-to-the-grandmother#comments</comments><guid isPermaLink="false">d2373df9-755a-4014-bb65-fd9838924a68</guid><pubDate>Tue, 01 Sep 2026 10:58:40 +0000</pubDate><atom:updated>2026-09-01T10:58:40.411Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>farmer,விவசாயி,பரிசு,gift,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/s1fjzp1t/17.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/s1fjzp1t/17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மேட்டூர்,</p><p>மேட்டூர் அணையைத் திறந்து வைத்த முதல்-அமைச்சர் விஜய், அங்கிருந்து சேலம் நோக்கி திரும்பியபோது சின்னக்காவூர் பகுதியில் பொதுமக்களை சந்தித்துப் பேசினார். அப்போது அப்பகுதியில் உள்ள விவசாயி ஒருவரின் வீட்டிற்கும் அவர் நேரில் சென்று குடும்பத்தினருடன் கலந்துரையாடினார்.</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a>யை வரவேற்க சின்னக்காவூர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர். அவர்களை சந்தித்து பேசிய விஜய், பின்னர் அங்கிருந்த விவசாயி ஒருவரின் வீட்டிற்குச் சென்றார். அவரது வருகையால் அந்தப் பகுதியே உற்சாகமடைந்தது.</p><h2>பாட்டிக்கு கூலிங்கிளாஸ்   பரிசு</h2><p>விவசாய குடும்பத்தினரை சந்தித்த விஜய், அவர்கள் மேற்கொண்டு வரும் விவசாயம், அதன் மூலம் கிடைக்கும் வருமானம் உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார். அதற்கு, வீட்டின் பின்புறம் வாழை மரங்களை வளர்த்து வருவதாகவும், அதுவே தங்களது முக்கிய வாழ்வாதாரம் என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும், தங்களது குடும்பத்திற்கு என்னென்ன உதவிகள் தேவை என்பது குறித்தும் விஜய் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். இதையடுத்து, விஜய்யை வழியனுப்ப விவசாய குடும்பத்தைச் சேர்ந்த பாட்டியும் அவருடன் கைகோர்த்தபடி வந்தார். அப்போது அவருக்கு பிரியாவிடை கொடுத்த விஜய், தான் அணிந்திருந்த கூலிங்கிளாஸ்-ஐ அந்தப் பாட்டிக்கு அணிவித்து மகிழ்ந்தார்.</p><p>விஜய்யுடன் கைகோர்த்தபடி வந்த பாட்டியைப் பார்த்து அங்கு கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சியுடன் கையசைத்தனர். அப்போது விஜய்யும் மக்களை நோக்கி கையசைத்ததுடன், பாட்டியையும் மக்களை நோக்கி கையசைக்குமாறு கூறினார். இதையடுத்து பாட்டியும் விஜய்யுடன் சேர்ந்து மக்களை நோக்கி கையசைத்தார்.</p><h2>மக்களிடையே நெகிழ்ச்சி</h2><p>விஜய் அணிந்திருந்த கூலிங்கிளாஸ்-ஐ அணிந்துகொண்ட பாட்டிக்கு மகிழ்ச்சியும் வெட்கமும் கலந்த உணர்வு ஏற்பட்டது. அந்தக் கண்ணாடியை அணிந்திருப்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதற்கிடையில், விஜய் அணிந்திருந்த கண்ணாடியை பாட்டி அணிந்திருந்ததைப் பார்த்த அப்பகுதி இளைஞர்களும் ஆர்வம் காட்டினர். பின்னர் அவர்கள் பாட்டியிடம் நெருங்கி வந்து அந்தக் கண்ணாடியை அணிந்து பார்த்ததுடன், அதனை அணிந்தபடி புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டனர். விஜய்–பாட்டி இடையேயான இந்த அன்பான சந்திப்பு, அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>பூலித்தேவனின் 311-வது பிறந்தநாள்: சீமான் புகழாரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/puli-thevars-311th-birth-anniversary-seeman-pays-tribute</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/puli-thevars-311th-birth-anniversary-seeman-pays-tribute#comments</comments><guid isPermaLink="false">8c177ca2-5d1f-44be-9f98-fe81f629c4db</guid><pubDate>Tue, 01 Sep 2026 10:57:09 +0000</pubDate><atom:updated>2026-09-01T10:57:09.754Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,Seeman,தென்காசி,நாம் தமிழர் கட்சி,Tribute,பூலித்தேவர் பிறந்த நாள்,Puli Thevar,birth anniversary</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/i4t7bdpw/170.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சீமான் புகழாரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/i4t7bdpw/170.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><p>மாமன்னர் பூலித்தேவனின் 311-வது பிறந்தநாளையொட்டி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">சீமான்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>புகழாரம்</h2><p>நம் பரம்பரை வீரத்தை பாருக்கு காட்டிய தென்னவன்..! பரங்கியரை போரிட்டு விரட்டிய மன்னவன்..! </p><p>தமிழ்ப்பேரினத்தின் வீரப்பெரும் பாட்டன் மாமன்னர் பூலித்தேவன் புகழைப்போற்றும் திருநாள் இன்று!</p><p>அன்னைத்தமிழ் நிலம் ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் அடிமைப்பட்டு கிடந்தபோது  அதன் விடுதலைக்குக் கிளர்ந்தெழுந்த மாவீரர்களில் முதன்மையான பெருமகனார் நம்முடைய பாட்டன் மாமன்னன் பூலித்தேவன்.</p><p>'நெற்கட்டான் செவ்வயலில் யாரோ பூலித்தேவனாமே' என ஏளனமாக எண்ணி படையைத்திரட்டி வந்த ஆங்கிலேயர்களை, வெறும் வாளும், வேலும் கொண்ட வீரத்தமிழ் மறவர் படை நடத்தி, களத்தில் நேருக்கு நேர் எதிர்கொண்டு போரிட்டு வென்ற மாவீரன்! </p><p>எந்த இடத்திலிருந்து ஆங்கிலேயர் படைதிரட்டி வந்தனரோ அதுவரை திருப்பி அடித்து விரட்டிய வீரத்திருமகன் பூலித்தேவன். அவர் போரிட்டுக் காட்டிய பிறகுதான் பல மன்னர்கள் தாங்களும் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட முடியும் என்ற பெருநம்பிக்கை கொண்டனர்.</p><p>பீரங்கி குண்டுகளால் கூடத் துளைக்க முடியாத கோட்டையைக் கட்டி ஆண்ட பேரரசன் பூலித்தேவன் அவர்களின் வீரத்தைப் போற்றுவதில் வழிவழியே வருகின்ற மானத்தமிழ்ப் பிள்ளைகள் பெருமிதமடைகிறோம்! நம்முடைய வீரப்பெரும்பாட்டன் மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் வீரப்புகழ் போற்றுவோம்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்க ஜனாதிபதியாக கூட விஜய் ஆகலாம் - எடப்பாடி பழனிசாமி கிண்டல் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ministers-do-not-answer-departmental-questions-edappadi-palaniswami-alleges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ministers-do-not-answer-departmental-questions-edappadi-palaniswami-alleges#comments</comments><guid isPermaLink="false">beecdbda-8c43-4bfb-afc0-c7fd87cc6299</guid><pubDate>Tue, 01 Sep 2026 10:48:32 +0000</pubDate><atom:updated>2026-09-01T10:48:32.572Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,எடப்பாடி பழனிசாமி,கோயம்புத்தூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/605f8oye/saami33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[  எடப்பாடி பழனிசாமி ]]></media:title><media:description type="html"><![CDATA[ 
அமைச்சர்கள் துறைசார்ந்த கேள்விகளுக்கு பதில் அளிப்பதில்லை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/605f8oye/saami33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>தமிழக சட்டசபை சினிமாவில் வருவது போல் நடைபெறுகிறது. நேரலையாக பேரவை நடவடிக்கைகள் ஒளிப்பரப்பினால்தான் மக்களுக்கு என்ன நடக்கிறது என தெரியும். பேரவையை 24 மணி நேரம் கூட சபாநாயகர் நடத்துவார்.</p><p>பெரும்பாலான அமைச்சர்கள் துறை சார்ந்த கேள்விகளுக்கு பதிலளிப்பது இல்லை.  <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95">தவெக</a> ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது.  அரசிடம் நிதி இல்லாத நிலையில் அதிக அறிவிப்புகள் ஏன்?</p><p>இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது. அப்படியே நீடித்தாலும் ரூ.10 லட்சம் கோடி கடன் வாங்குவார்கள்.  கடனை அதிகம் வாங்கும் தவெக அரசு வருவாயை பெருக்குவதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை. </p><p>எங்கு பார்த்தாலும் ஊழல், ஊழல் என்கிறார்கள். அது அதிகமாக இருப்பதே தவெக ஆட்சியில்தான்.  தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தொடர்கிறது.</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p><h2>அமெரிக்க ஜனாதிபதியாக கூட விஜய் ஆகலாம் </h2><p>“டிரம்புக்கு பதிலாக அமெரிக்க ஜனாதிபதியாக கூட அவர் ஆகலாம். தவறில்லை. அது அவரின் விருப்பம்”</p><p>அடுத்த பிரதமர் விஜய் என தவெகவினர் பேசிவருவது குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>முன்விரோதத்தில் வீட்டின் மீது பெட்ரோல் நிரப்பிய பாட்டில் வீச்சு: வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-throwing-petrol-bottle-at-house-over-enmity</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-throwing-petrol-bottle-at-house-over-enmity#comments</comments><guid isPermaLink="false">4b485b6a-24a6-4752-9665-7fbe87f9c811</guid><pubDate>Tue, 01 Sep 2026 10:40:06 +0000</pubDate><atom:updated>2026-09-01T10:40:06.945Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>petrol,பெட்ரோல்,Tirunelveli,திருநெல்வேலி,Youth arrested,வாலிபர் கைது,முன்விரோதம்,previous enmity,பாட்டில் வீச்சு,bottle throwing</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/qib4u4t6/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வீட்டின் மீது பெட்ரோல் நிரப்பிய பாட்டில் வீச்சு; வாலிபர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/qib4u4t6/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொட்டல் காலனி பகுதியில், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">முன்விரோதம்</a> காரணமாக வீட்டின் மீது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D">பெட்ரோல்</a> நிரப்பிய பாட்டில் வீசி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை முக்கூடல் போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். </p><h2>பெட்ரோல் நிரப்பிய பாட்டில் வீச்சு</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டம், முக்கூடல் அருகே பொட்டல் காலனியைச் சேர்ந்த பால்துரை (வயது 25) என்பவருக்கும், அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த மணி(25) என்பவருக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, மணி என்பவர் பதிவு எண் இல்லாத பைக்கில் வந்து, பால்துரையின் வீட்டின் மீது பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீசியதுடன், பால்துரையை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.</p><h2>வாலிபர் கைது</h2><p>இதுகுறித்து முக்கூடல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து, முக்கூடல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, தலைமறைவாக இருந்த அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த வேம்பு மகன் மணியை இன்று கைது செய்தனர். பின்னர் மேற்சொன்ன வாலிபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, சட்டப்படி நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>பூலித்தேவர் பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி புகழாரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/puli-thevars-birth-anniversary-edappadi-palaniswami-pays-tribute</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/puli-thevars-birth-anniversary-edappadi-palaniswami-pays-tribute#comments</comments><guid isPermaLink="false">a7df3919-4479-4660-a3db-0107d7823e00</guid><pubDate>Tue, 01 Sep 2026 10:28:56 +0000</pubDate><atom:updated>2026-09-01T10:28:56.782Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தென்காசி,Tribute,பிறந்தநாள்,பூலித்தேவர்,Puli Thevar,Edappadi Palanisamy எடப்பாடி பழனிசாமி,birth anniversary</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/mmuo1bu3/169.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  பழனிசாமி புகழாரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/mmuo1bu3/169.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><p>பூலித்தேவனின் 311-ஆவது பிறந்த நாளையொட்டி தென்காசி மாவட்டம், நெற்கட்டும்செவலில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. </p><p>இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>புகழாரம்</h2><p>இந்திய விடுதலைக்காகத் தெற்கிலிருந்து வீறுகொண்டு எழுந்த நெற்கட்டான் செவலின் மாவீரர், இளம் வயதிலேயே துணிச்சலோடு “வெள்ளையனே வெளியேறு”என வீர முழக்கமிட்டதோடு, </p><p>போர்க்களத்தில் வீழ்த்தவே முடியாத தீரராகத் திகழ்ந்து, வீரத்தில் மட்டுமல்லாமல் இறைபணியிலும் சிறந்து விளங்கிய மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் பிறந்தநாளில், அவர்தம் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன். </p><p>தென்காசி மாவட்டம், 'நெற்கட்டும்செவல்' என்ற இடத்தில் அமைந்துள்ள மாமன்னர் பூலித்தேவன் அவர்களுடைய திருஉருவச்சிலைக்கு, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">அதிமுக </a>சார்பில் தலைமைக் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சட்டமன்ற நேரத்தை சரியாக பயன்படுத்தும் சவுமியா அன்புமணி; கமல்ஹாசன் பாராட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kamal-haasan-praises-soumya-anbumani-for-using-assembly-time-wisely</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kamal-haasan-praises-soumya-anbumani-for-using-assembly-time-wisely#comments</comments><guid isPermaLink="false">6a94e1a0-758f-4376-9ee7-a4acfeb01d77</guid><pubDate>Tue, 01 Sep 2026 10:10:54 +0000</pubDate><atom:updated>2026-09-01T10:10:54.475Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கமல்ஹாசன்,Kamalhasan,தமிழக சட்டசபை,TNAssembly,Sowmiya Anbumani,சவுமியா அன்புமணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/nes4b31y/savmiyaa33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ சவுமியா அன்புமணி]]></media:title><media:description type="html"><![CDATA[ சவுமியா அன்புமணிக்கு  கமல்ஹாசன் பாராட்டு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/nes4b31y/savmiyaa33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு சட்டசபையில் பாமக எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணியின் நடவடிக்கைகளுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் எம்.பி.யுமான கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.</p><p>தமிழக சட்டசபை தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த நிர்வாகி சவுமியா அன்புமணி, முதல்முறையாக எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றுள்ளார்.</p><p>பாமக சார்பில் 4 பேர் சட்டசபை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலையில், கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக சவுமியா அன்புமணி செயல்பட்டு வருகிறார்.</p><p>தற்போது தமிழ்நாடு சட்டசபையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நடைபெறும் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள், கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் உள்ளிட்டவற்றில் பங்கேற்று <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF">சவுமியா அன்புமணி</a> முன்வைக்கும் கருத்துகள் கட்சி கடந்து பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளைப் பெற்று வருகின்றன.</p><p>இந்த நிலையில், சட்டசபையில் உரையாற்றும் சவுமியா அன்புமணியின் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ள கமல்ஹாசன், அவருக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் கமல்ஹாசன் தெரிவித்திருப்பதாவது:</p><p>அருமை. சட்டமன்றத்தில் தனக்குக் கிடைக்கும் நேரத்தை மிகச் சரியாகவும், துல்லியமான தகவல்களோடும் மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தும் சகோதரி சவுமியா அன்புமணியைப் பாராட்டுகிறேன் என அதில் பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: வடமாநில வாலிபர் அதிரடி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/northern-state-youth-arrested-for-sexually-harassing-9-year-old-girl</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/northern-state-youth-arrested-for-sexually-harassing-9-year-old-girl#comments</comments><guid isPermaLink="false">bffd915d-e2a7-4de7-915a-d73e0cfcf358</guid><pubDate>Tue, 01 Sep 2026 10:03:03 +0000</pubDate><atom:updated>2026-09-01T10:03:03.726Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,arrested,பாலியல் தொந்தரவு,சிறுமி,Minor girl,sexually harassed,வடமாநில வாலிபர் கைது,northern state youth</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/fa7fyym4/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வடமாநில வாலிபர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/fa7fyym4/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>திருநெல்வேலி மாவட்டத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81">சிறுமிக்கு பாலியல் தொந்தரவு</a> அளித்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D">வடமாநில வாலிபர்</a> சி.சி.டி.வி. கேமரா மூலம் அதிரடியாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்யப்பட்டார்.</p><h2>சிறுமிக்கு பாலியல் தொந்தரவு</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி </a>மாவட்டம், வள்ளியூர் உட்கோட்டம், ராதாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 25.8.2026 அன்று அதிகாலை வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில், வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.</p><h2>புகார்</h2><p>சம்பவத்தன்று அதிகாலை சிறுமி அழுததையடுத்து, பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தபோது, வீட்டிற்குள் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நுழைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.  பின்னர் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேற்சொன்ன சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.</p><h2>முதற்கட்ட விசாரணை</h2><p>வழக்கின் ஆரம்ப கட்டத்தில் எதிரியின் அடையாளம் தெரியாத நிலையில், வள்ளியூர் உட்கோட்ட டி.எஸ்.பி. வெங்கடேஷ், ராதாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர், வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் பணகுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் தலைமையில் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அப்பகுதி பொதுமக்களிடம் முதற்கட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டது.</p><h2>சி.சி.டி.வி. கேமரா பதிவுகள்</h2><p>மேலும், சம்பவம் நடைபெற்ற இடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சி.சி.டிவி. (CCTV) கேமரா பதிவுகள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டன. அதில், சம்பவம் நடைபெற்ற நேரத்தில் வீட்டின் பின்புறம் வழியாக சுமார் 25 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சென்றது தெரியவந்தது. சி.சி.டி.வி. பதிவுகள் மற்றும் காவல்துறையினரின் தொடர் விசாரணையின் அடிப்படையில், குற்றவாளியின் அடையாளம் கண்டறியப்பட்டது.</p><h2>வடமாநில வாலிபர் கைது</h2><p>அதைத் தொடர்ந்து, மேற்சொன்ன வழக்கின் குற்றவாளியான மேற்கு வங்காள மாநிலம், கூச் பெஹார் மாவட்டம், பக்சிகஞ்ச் பகுதியைச் சேர்ந்த கௌரங்கா ராய் மகன் சூரஜ்தேவ்ராய் (வயது 27) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.</p><h2>எஸ்.பி. பாராட்டு</h2><p>மேற்சொன்ன வழக்கில் துரிதமாக செயல்பட்டு சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை தொடர்ந்து ஆய்வு செய்து, குற்றவாளியின் அடையாளத்தை கண்டறிந்து குற்றவாளியை  கைது செய்த வள்ளியூர் உட்கோட்ட டி.எஸ்.பி. வெங்கடேஷ், ராதாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர், வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை, திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஸ்வேஸ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி பாராட்டினார். மேற்சொன்ன வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item></channel></rss>