<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 16 Sep 2026 02:22:07 +0000</lastBuildDate><item><title>5 ரூபாய் குறைந்தது ஒசைரி நுால் விலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/osairi-yarn-price-dropped-by-5-rupees</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/osairi-yarn-price-dropped-by-5-rupees#comments</comments><guid isPermaLink="false">d13b18ee-af6a-47df-b00f-4be1d8aa65b7</guid><pubDate>Wed, 16 Sep 2026 02:19:42 +0000</pubDate><atom:updated>2026-09-16T02:19:42.615Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்,உற்பத்தியாளர்கள்,நூல் விலை,Manufacturers,Yarn price</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/bxrwfsxb/sairi.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/bxrwfsxb/sairi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர், </p><p>பஞ்சு விலை குறைய வாய்ப்புள்ளதால், ஒசைரி நுால் விலை கிலோவுக்கு ரூ.5 குறைக்கப்பட்டுள்ளதாக நுாற்பாலைகள் அறிவித்துள்ளன.</p><h2>புதிய பஞ்சு வரத்து</h2><p>பருத்தி ஆண்டு (2025 அக்டோபர் முதல் 2026 செப்டம்பர் வரை) நிறைவடைய 15 நாள் மட்டுமே உள்ள நிலையில் இருப்பு வைத்திருந்த பஞ்சு விற்பனைக்கு வருவது சற்று அதிகரித்துள்ளது. சில மாநிலங்களில் முன்கூட்டியே அறுவடை நடந்ததால், புதிய பஞ்சு வரத்தும் துவங்கி விட்டது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், தினசரி பஞ்சு வரத்து, 2,200 'பேல்'களாக (ஒரு பேல் 170 கிலோ) குறைந்திருந்தது. நேற்றைய நிலவரப்படி 10 ஆயிரம் 'பேல்'களை தொட்டுவிட்டது.</p><h2>ஒசைரி நுால் விலை</h2><p>மார்க்கெட்டில் வரத்து துவங்கியதால், பஞ்சு விலை சற்று குறைந்துள்ளது. புதிய பஞ்சு வரத்து துவங்கும் போது, மேலும் விலை குறைய வாய்ப்புள்ளது. கடந்த 1ம் தேதி, பஞ்சு விலை உயர்வால், பின்னலாடை உற்பத்திக்கு பயன்படுத்தும் ஒசைரி நுால் விலை, கிலோவுக்கு ஐந்து ரூபாய் உயர்ந்தது. </p><p>பஞ்சு விலை குறைய துவங்கியுள்ளதால் நுால் விலை, கிலோவுக்கு ரூ.5 குறைக்கப்படுவதாக நுாற்பாலைகள் அறிவித்துள்ளன. அடுத்தடுத்த விலை உயர்வுக்கு பிறகு, நுால் விலை குறைக்கப்பட்டதால், உற்பத்தியாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>டெங்கு காய்ச்சலுக்கு 9 பேர் பலி; பரவல் அதிகரிப்பு: முகக்கவசம் அணிய அமைச்சர் அறிவுறுத்தல்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nine-dead-as-dengue-cases-surge-minister-urges-masks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nine-dead-as-dengue-cases-surge-minister-urges-masks#comments</comments><guid isPermaLink="false">ad5b0d15-2ec3-4f6a-985d-e249b55b5d6d</guid><pubDate>Wed, 16 Sep 2026 02:19:08 +0000</pubDate><atom:updated>2026-09-16T02:19:08.210Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டெங்கு காய்ச்சல்,Dengue Fever,minister,அமைச்சர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/z4f772bq/tndfr.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டெங்கு காய்ச்சல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/z4f772bq/tndfr.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 9 பேர் பலியாகி, பரவல் அதிகரித்துள்ள சூழலில், முகக்கவசம் அணிய அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.</p><p>சென்னை மருத்துவக்கல்லூரியில், 192-வது மருத்துவ இளநிலை மாணவர் சேர்க்கை வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் நிருபர்களிடம் கூறும்போது, தற்போது, சுவாசத்தொற்று பரவல் அதிகமாக உள்ளது. அரசு தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுமக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.</p> <h2>9 பேர் பலி</h2><p>காய்ச்சல் போன்ற பாதிப்புகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள். பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும். டெங்கு காய்ச்சல் பரவலும் உள்ளது. இந்த ஆண்டில் இதுவரை, தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால், 15,933 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்குவுக்கு முறையான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>பள்ளிகளில், காலை உணவு விரிவாக்க திட்டம் முதல்-அமைச்சர் 22-ந்தேதி தொடங்கி வைக்கிறார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cm-vijay-to-launch-school-breakfast-expansion-scheme-on-22nd</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cm-vijay-to-launch-school-breakfast-expansion-scheme-on-22nd#comments</comments><guid isPermaLink="false">979f8dcf-1da0-4f28-8f74-413b0b838fd2</guid><pubDate>Wed, 16 Sep 2026 02:08:20 +0000</pubDate><atom:updated>2026-09-16T02:08:20.067Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Breakfast,Launch,பள்ளிschool,காலை உணவு திட்டம் விரிவாக்கம்,Expansion,முதல்-அமைச்சர்Chief Minister</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/8i2xezn3/346.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/8i2xezn3/346.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>த.வெ.க. தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதும் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் என்ற பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம் என மாற்றப்பட்டது. </p><h2>முதல்-அமைச்சர்</h2><p>அதன்படி, 6 முதல் 8-ம் வகுப்பு வரை விரிவுப்படுத்தப்பட உள்ள பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டத்தை பெரியாரின் பிறந்தநாளான நாளை (வியாழக்கிழமை) தொடங்கி வைக்கப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியது. இதனை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைப்பார் என சொல்லப்பட்டது. ஆனால் அவர், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றுள்ளதால், அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே முதல்-அமைச்சர் விஜய் வருகிற 22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். </p><p>இதுதொடர்பாக சமூக நலத்துறை செயலாளர் பல்லவி பல்தேவ் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">இடைத்தேர்தல்</a> நடைபெறும் செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும். என்று கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.5 வரை உயர்வு... தனியார் பேருந்துகளில் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்திய உரிமையாளர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fare-hike-up-to-rs-5-private-bus-owners-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fare-hike-up-to-rs-5-private-bus-owners-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">3159d476-44dc-4b3e-8325-22bb71f80d3a</guid><pubDate>Wed, 16 Sep 2026 02:02:50 +0000</pubDate><atom:updated>2026-09-16T02:02:50.596Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டிக்கெட் கட்டணம்,price hike,private bus,கட்டணம் உயர்வு,ticket price,தனியார் பேருந்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/1nmz0n2q/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/1nmz0n2q/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தின் சில மாவட்டங்களில் தனியார் பேருந்து உரிமையாளர்கள், ரூ.5 வரை தன்னிச்சையாக பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்.</p><h2>தனியார் பேருந்துகள்</h2><p>தமிழகத்தில் சென்னை, மதுரை, நாகர்கோவில், ஊட்டி தவிரத்து பிற இடங்களில் 4,600 தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2018-ம் ஆண்டுக்கு பின்னர் தனியார் பேருந்துகளின் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை. எரிபொருள் மற்றும் உதிரி பாகங்கள் விலை பல மடங்கு உயர்ந்த நிலையில், தனியார் பேருந்து தொழிலில், பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.</p><h2>தன்னிச்சையாக உயர்வு</h2><p>இதையடுத்து டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப, தனியார் பேருந்துகளின் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என, தனியார் பேருந்து உரிமையாளர்கள், அரசிடம் கடந்த சில ஆண்டுகளாக, கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், தமிழக அரசு தொடர்ந்து, மவுனம் காத்து வருகிறது. இந்த நிலையில் சில மாவட்டங்களில் தனியார் பேருந்து உரிமையாளர்கள், தன்னிச்சையாக டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர்.</p><h2>ரூ.2 முதல் ரூ.5 வரை...</h2><p>வேலூர், கடலுார், சேலம், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில், சில தனியார் பேருந்து நிறுவனங்கள், ரூ.2 முதல் ரூ.5 வரை, டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி உள்ளன. இதுகுறித்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் சிலர் கூறும்போது, "கட்டண உயர்வு தொடர்பாக, கோர்ட்டு உத்தரவின்படி அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை, தமிழக அரசு தாமதம் செய்து வருவது கவலை அளிக்கிறது. வேறு வழியில்லாமல், ஒரு சில பேருந்துகளில் கட்டணம் உயர்த்தியதாக தகவல் வந்தது.</p><h2>உரிய நடவடிக்கை</h2><p>அவர்களை தொடர்பு கொண்டு, 'தமிழக அரசுடன் பேச்சு நடந்து வருகிறது. விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும்' எனக் கூறினோம். அதை ஏற்று அவர்களும் வழக்கமான கட்டணத்தையே வசூலிக்கின்றனர்" என்று தெரிவித்தனர். இதுதொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>லண்​டன் பயணத்தை முடித்​துக் கொண்டு நாளை சென்னை திரும்பு​கிறார் முதல்​-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-is-returning-to-chennai-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-is-returning-to-chennai-tomorrow#comments</comments><guid isPermaLink="false">662fcc86-27b3-4234-b48a-acf684ac0192</guid><pubDate>Wed, 16 Sep 2026 01:59:28 +0000</pubDate><atom:updated>2026-09-16T01:59:28.529Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Chennai,சென்னை,London,CM Vijay,லண்​டன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/dfz5dgiu/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/dfz5dgiu/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>லண்டன் பயணம்</h2><p>தமிழகத்தின் பொருளாதாரத்தை 2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்துவதற்கான இலக்கை முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். அதன் ஒரு பங்காக, தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்துக்கு முதல்-அமைச்சர் விஜய் பயணம் மேற்கொண்டுள்ளார். </p><p>அங்கு தமிழகத்​தில் உற்​பத்தி ஆலைகள், உலகளா​விய திறன் மையங்​கள் மற்​றும் ஆய்வு மேம்​பாட்டு வசதி​களை நிறு​வுவதற்​காக, தமிழக அரசின் வழி​காட்டி நிறு​வனத்​துக்​கும், பல்​வேறு பன்​னாட்டு நிறு​வனங்​களுக்​கும் இடையே கடந்த 14-ம் தேதி ஒப்​பந்​தங்​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன.</p><h2>ரூ.11,000 கோடி முதலீடு</h2><p>அதன்​படி 45-க்​கும் மேற்​பட்ட நாடு​களில் செயல்​படும் முன்​னணி பன்​னாட்டு நிறு​வன​மான ‘சம்​வர்​தனா மதர்​சன் இன்​டர்​நேஷனல் லிமிடெட்’, தனது பிரிட்​டன் மற்​றும் ஐரோப்​பிய கூட்டு நிறு​வனங்​களு​டன் இணைந்து தமிழகத்​தில் ரூ.11,000 கோடி முதலீடு செய்ய திட்​ட​மிட்​டுள்​ளது. இதன்​மூலம் சுமார் 7,000 பேருக்கு வேலை​வாய்ப்பு கிடைக்​கும். இது சர்​வ​தேச வாகன உற்​பத்தி சங்​கி​லி​யில் தமிழகத்​தின் இடத்தை அடுத்​தகட்​டத்​துக்கு கொண்டு செல்​லும்.</p><p>ஐரோப்​பாவைச் சேர்ந்த முன்​னணி வாகன உதிரி​பாகங்​கள் தயாரிப்பு நிறு​வன​ம், இந்​தி​யா​வில் தனது முதல் புதிய உற்​பத்தி ஆலையை அமைக்க தமிழகத்​தை தேர்வு செய்​துள்​ளது. இதற்​கான ரூ.3,000 கோடி முதலீட்​டுக்​கான விருப்​பக் கடிதத்தை முதல்​-அமைச்சரிடம் அந்​நிறு​வனம் சமர்ப்​பித்​தது. இதுத​விர, இங்கு உலகளாவிய திறன் மையத்தை அமைக்க ஏர்ன்​ஸ்ட் &amp; யங் (Ernst &amp; Young) நிறு​வனம் ஒப்​பந்​தம் செய்​துள்​ளது. இந்த மையம், சுமார் ரூ.1,000 கோடி முதலீட்​டில், சென்னை மவுண்ட் - பூந்​தமல்லி சாலைப் பகு​தி​யில் அமைய​வுள்ளது. இதில் 2 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட வேலை​வாய்ப்​பு​கள் உரு​வாக்​கப்​படும்.</p><p>ஸ்வீடனைச் சேர்ந்த சிக்மா டெக்​னாலஜி குழு​மம், எம்​பெடட் சிஸ்​டம்ஸ் மற்​றும் டிஜிட்​டல்​மய​மாக்​கல் துறை​களில் 600 வேலை​வாய்ப்​பு​களை உரு​வாக்​கும் நோக்​கில், சென்னை மற்​றும் திருச்​சி​யில் உள்ள தனது திறன் மையங்​களை விரிவுபடுத்​து​வதற்​கான ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட்​டுள்​ளது. பிரிட்​டனைத் தலை​மை​யிட​மாக கொண்ட வில்​சன் பவர் சொல்​யூஷன்ஸ் நிறு​வனம், மேம்​பட்ட மின்​மாற்​றி களை தயாரிப்​ப​தற்​காக திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் ரூ.300 கோடியை முதலீடு செய்​கிறது. இதனால் 400 புதிய வேலை​வாய்ப்​பு​கள் உரு​வாகும்.</p><h2>தமிழக இளைஞர்​களின் லட்​சியம்...</h2><p>இதுத​விர அசோக் லேலண்ட் நிர்​வாகத் தலை​வர் தீரஜ் இந்​துஜா, பினோலெக்ஸ் இண்​டஸ்ட்​ரீஸ் நிர்​வாகத் தலை​வர் பிர​காஷ் பி.​சாப்ரி உள்​ளிட்​டோரும் முதல்​-அமைச்சர் விஜய்யை சந்​தித்​தனர். அப்போது கடந்த ஆகஸ்ட் மாதம் நடை​பெற்ற ‘வெற்​றி’ முதலீட்​டாளர்​கள் மாநாட்​டில் செய்​யப்​பட்ட ரூ.2,500 கோடி முதலீட்​டின் முன்​னேற்​றம் குறித்து அவர்​கள் விளக்​கினர். மேலும், தமிழகத்​தில் காற்​றாலை உள்​ளிட்ட புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்​தித் துறை​யில் முதலீடு​களை அதி​கரிப்​பது குறித்​தும், இந்த சந்​திப்​பில் ஆலோ​சிக்​கப்​பட்​டது.</p><p>தொடர்ந்து முதல்-அமைச்சர் விஜய் பேசுகையில், இந்த முதலீடு​கள் தமிழக இளைஞர்​களின் லட்சியங்​களை பிர​திபலிப்பதாகவும் பிரிட்​டன்​-இந்​தியா பொருளா​தார மற்​றும் வர்த்தக ஒப்​பந்​தம் வாயி​லாக உரு​வாகும் வாய்ப்​பு​களைப் பயன்​படுத்​தி, தமிழகத்​தில் முதலீடு செய்ய இங்​கிலாந்து மற்றும் ஐரோப்​பிய நிறு​வனங்​களுக்கு அழைப்பு விடுத்​தார்.</p><h2>நாளை சென்னை திரும்புகிறார்</h2><p>இதன் விளை​வாக பிரிட்​டன் வர்த்தக நிறு​வனங்​களுக்​கும், தமிழக ஜவுளி உற்​பத்​தி​யாளர்​களுக்​கும் இடையே கொள்​முதல் ஒப்​பந்​தங்​கள், ஓசூருக்கு இங்​கிலாந்து விண்​வெளி மற்​றும் பாது​காப்​புத் துறை பிர​தி​நி​தி​கள் வரு​கை, அக்​டோபரில் இங்​கிலாந்து மேயர் ஆணை​யத்​தின் பிர​தி​நி​தி​கள் சென்னை வரு​கை உள்​ளிட்ட பல்வேறு நடவடிக்​கைகள்​ முன்​னெடுக்​கப்​பட உள்​ளன. இந்த நிலையில், லண்​டன் பயணத்தை முடித்​துக் கொண்டு முதல்​-அமைச்சர் விஜய் நாளை (வியாழக்கிழமை) சென்னை திரும்​பு​கிறார்.</p>]]></content:encoded></item><item><title>திருப்பூரில் 53-வது ஐ.கே.எப். பின்னலாடை கண்காட்சி இன்று தொடக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/53rd-ikf-knitwear-exhibition-begins-today-in-tiruppur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/53rd-ikf-knitwear-exhibition-begins-today-in-tiruppur#comments</comments><guid isPermaLink="false">34abefb9-1f52-4cc9-9917-5ec8627d341d</guid><pubDate>Wed, 16 Sep 2026 01:54:18 +0000</pubDate><atom:updated>2026-09-16T01:54:18.401Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்,today,தொடக்கம்,Exhibition,கண்காட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/lz063m6j/345.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பின்னலாடை கண்காட்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/lz063m6j/345.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்</p><p>இந்திய பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், திருப்பூரில் ஆண்டுதோறும் ஐ.கே.எப். எனப்படும் ‘இந்தியா நிட்பேர்’ கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.</p><h2>கண்காட்சி</h2><p>அந்த வகையில், 53-வது ஐ.கே.எப். கண்காட்சி, அவினாசி அருகே உள்ள ஐ.கே.எப். வளாகத்தில் இன்று தொடங்கி தொடர்ந்து 18-ந் தேதி வரை 3 நாட்கள் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில், நாட்டின் பல்வேறு ஆடை உற்பத்தி மையங்களைச் சேர்ந்த ஏற்றுமதி நிறுவனங்கள் பங்கேற்று, புதுமையான ஆயத்த ஆடை ரகங்களை காட்சிப்படுத்துகின்றன.</p><p>மேலும், அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் மற்றும் வர்த்தக முகமைகளின் பிரதிநிதிகள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">கண்காட்சியில்</a> பங்கேற்க உள்ளனர். அவர்கள் காட்சிப்படுத்தப்படும் ஆயத்த ஆடை ரகங்களை பார்வையிட்டு, வர்த்தக விசாரணைகளை மேற்கொள்ள உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-heavy-rain-in-6-districts-today-weather-department-update</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-heavy-rain-in-6-districts-today-weather-department-update#comments</comments><guid isPermaLink="false">77b760f1-7e2a-4410-bcd9-9bb2c0ca1361</guid><pubDate>Wed, 16 Sep 2026 01:49:36 +0000</pubDate><atom:updated>2026-09-16T01:49:36.679Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Rain,Weather,கனமழை,வானிலை,தமிழகம்,Weather News,WeatherUpdate,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,வானிலை ஆய்வு மையம்,கன மழை,heavy rain,வானிலை அறிக்கை,TN Rains,வானிலை தகவல்,Weather Report,வானிலை முன்னறிவிப்பு,Weather Status,வானிலை அறிவிப்பு,weather center,வானிலை அப்டேட்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/jlyqhz8k/van.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 6 மாவட்டங்களில் இன்று கனமழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/jlyqhz8k/van.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>16 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><h2>கனமழை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>சுமார் 1.5 கிமீ உயரம் வரை தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இதன்காரணமாக <strong>இன்று (16-09-2026):</strong> நீலகிரி, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">கனமழை</a></strong><a href="https://www.dailythanthi.com/topic/rain"> </a>பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong><a href="https://www.dailythanthi.com/topic/rain"> </a>பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்யக்கூடும்.</p><h2>மழை</h2><p><strong>17-09-2026:</strong> நீலகிரி, கோயம்புத்தூர், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <strong>கனமழை</strong> பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், திருப்பூர்,</p><p>ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>18-09-2026:</strong> நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <strong>கனமழை</strong> பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>19-09-2026:</strong> நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் ஏனைய வட தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>20-09-2026 மற்றும் 21-09-2026:</strong> நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.</p><p>ஏனைய வட தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong><ins>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</ins></strong></p><p><strong>16-09-2026 முதல் 19-09-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.</p><p><strong><ins>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</ins></strong></p><p><strong>16-09-2026 முதல் 19-09-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>(16-09-2026):</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>மீனவர்களுக்கான எச்சரிக்கை: </h2><p><strong><ins>வங்கக்கடல் பகுதிகள்:</ins></strong></p><p><strong>16-09-2026 மற்றும் 17-09-2026:</strong> தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள், இதர தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>18-09-2026:</strong> தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>19-09-2026:</strong> அந்தமான் கடலின் அநேக பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், இதர அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p><strong>தமிழக கடலோரப்பகுதிகள் &amp; அரபிக்கடல் பகுதிகள்:</strong> எச்சரிக்கை ஏதுமில்லை.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>இனி பெண்களும் பனை மரம் ஏறலாம்! புதிய எந்திரத்தை அறிமுகம் செய்த வேளாண் கல்லூரி</title><link>https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/now-women-can-climb-palm-trees-too-agricultural-college-introduces-new-machine</link><comments>https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/now-women-can-climb-palm-trees-too-agricultural-college-introduces-new-machine#comments</comments><guid isPermaLink="false">1e2558c8-b610-46d8-abc0-f35201447994</guid><pubDate>Wed, 16 Sep 2026 01:41:02 +0000</pubDate><atom:updated>2026-09-16T01:41:02.664Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Introduction,அறிமுகம்,பனை மரம்,வேளாண்மை கல்லூரி,VOC,palm tree,வ.உ.சி.,புதிய எந்திரம்,கிள்ளிகுளம்,Killikulam,Agriculture College,New Machine</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/0scncb4d/1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ [பனை மரம் ஏற புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட எந்திரம். (உள்படம்: புதிய எந்திரத்தில் ஏறி பனை மர உச்சிக்கு சென்ற பெண்கள்.)] ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/0scncb4d/1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சிறப்புக் கட்டுரைகள் (Sirappukatturaigal)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>இனி பெண்களும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">பனை மரம்</a> ஏறும் வகையில், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், கிள்ளிகுளத்தில் உள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%89%E0%AE%9A%E0%AE%BF">வ.உ.சி. </a><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF">வேளாண்மை கல்லூரி</a>யில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">புதிய எந்திரம்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">அறிமுகப்படுத்தப்பட்டு</a> உள்ளது.</p><h2>பனை மரம்</h2><p>தமிழகத்தின் மாநில மரமான பனையின் அடி முதல் நுனி வரையிலும் மக்களுக்கு பயன்படுவதால் 'கற்பகத்தரு' என்று போற்றப்படுகிறது. பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர், நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு சிறந்த இயற்கை உணவாகவும், பனை ஓலை, பனை நார் கூரை வேயவும், கூடை, கட்டில், முறம் போன்றவை தயாரிக்கவும் பயன்படுகிறது. </p><h2>உயரம் அதிகம்</h2><p>பனை மரம் செங்குத்தாக அதிக உயரமாக இருப்பதால், அதில் ஏறுவது கடினமானது. பல ஆண்டுகளாக பனைத்தொழிலாளர்கள் தங்களது உடல் வலிமையையும், அனுபவத்தையும் பயன்படுத்தியே மரங்களில் ஏறி வருகின்றனர். பனை மரத்தின் உயரம் அதிகமாக இருக்கும்போது, ஏறும் தொழிலாளர்களுக்கு உடல் சோர்வு ஏற்படுவதுடன், பாதுகாப்பு குறித்த அச்சமும் உள்ளது. இதனால் இளம் தலைமுறையினர் பனை மரம் ஏறும் தொழிலில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டாத நிலையே உள்ளது. </p><h2>புதிய எந்திரம் கண்டுபிடிப்பு</h2><p>இதனை கருத்தில் கொண்டு பனை மரத்தில் எளிதாகவும், பாதுகாப்பாகவும் ஏறும் வகையில் தூத்துக்குடி மாவட்டம், கிள்ளிகுளம் வ.உ.சி. வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள பனை ஆராய்ச்சி நிலையத்தில் புதிய எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஹைட்ராலிக் முறையை பயன்படுத்தி இயங்கும் நவீன எந்திரத்தை டிராக்டருடன் இணைத்து பனை மரங்களின் அருகில் எடுத்துச் சென்று, மேலும் கீழும் செல்லுமாறு இயக்கலாம். </p><h2>45 அடி உயர பனை மரத்தில் ஏறலாம்</h2><p>இதை பயன்படுத்தி ஒருவர் எளிதாக பனை மரத்தின் உச்சி வரை சென்று விடலாம். மரம் ஏறத்தெரியாதவர்களும் எளிதில் இதை பயன்படுத்தலாம். இந்த எந்திரத்தை ஒரு மணி நேரத்திற்கு இயக்க 3 முதல் 4 லிட்டர் டீசல் செலவாகும். இந்த எந்திரம் மூலம் சுமார் 45 அடி உயரம் வரையிலான பனை மரத்தில் பாதுகாப்பாக ஏறலாம். </p><h2>பெண்களுக்கு வேலைவாய்ப்பு</h2><p>இதன் மூலம் இனி பெண்களும் பாதுகாப்பாக பனை மரங்களில் ஏறலாம். பனை சார்ந்த தொழிலில் பெண்களுக்கான வேலைவாய்ப்பும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த எந்திரத்தின் செயல்திறன் விளக்கம் குறித்து கிள்ளிகுளம் பனை ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. </p><h2>நவீன எந்திரம் குறித்து செயல்விளக்க பயிற்சி</h2><p>வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் தேரடிமணி தலைமையில், பனை மரம் ஏறும் நவீன எந்திரம் குறித்து செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற பெண்கள் உள்பட ஏராளமான விவசாயிகள் ஆர்வமுடன் நவீன எந்திரத்தில் பனை மரம் ஏறினர். </p><h2>புதிய அத்தியாயம்</h2><p>இதுகுறித்து கிள்ளிகுளம் பனை ஆராய்ச்சி நிலைய தலைவர் மணிவண்ணன் கூறுகையில், "பனை மரம் ஏறுவது ஆண்களுக்கு மட்டுமே என்ற நிலையை மாற்றி, முறையான பயிற்சியுடன் பெண்களும் பனை சார்ந்த பணிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை உருவாக்கும் வகையில் புதிய எந்திரம் தயாரிக்கப்பட்டு உள்ளது. பனை மரத்தையும், பனைத் தொழிலையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் முயற்சியில் கிள்ளிக்குளம் வேளாண் கல்லூரியின் இந்த தொழில்நுட்ப முயற்சி புதிய அத்தியாயமாக அமையும்” என்றார். </p>]]></content:encoded></item><item><title>பைக்கில் சென்ற இளம்பெண் மீது கார் மோதல் - ராஜஸ்தானில் டிரைவர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-young-woman-on-a-bike-was-hit-by-a-car-the-driver-was-arrested-in-rajasthan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-young-woman-on-a-bike-was-hit-by-a-car-the-driver-was-arrested-in-rajasthan#comments</comments><guid isPermaLink="false">55e41567-3622-44a4-9ff6-fb39a957c677</guid><pubDate>Wed, 16 Sep 2026 01:37:41 +0000</pubDate><atom:updated>2026-09-16T01:37:41.996Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ராஜஸ்தான்,Rajasthan,கைது,Car,கார்,பைக்,புதுடெல்லி,driver,Woman</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/q6hb25lr/344.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/q6hb25lr/344.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி, </p><p>சிவானி மீது காரை மோதிய டிரைவர் கல்யாண் பைஸ்லாவை ராஜஸ்தானில் நேற்று போலீசார் கைது செய்தனர்.</p><p>டெல்லியைச் சேர்ந்த சிவானி சவுகான் என்ற இளம்பெண், சம்பவத்தன்று தன் நண்பர்களடன் குருகிராமுக்கு பைக் சவாரி சென்றார். திரும்பும் வழியில் கோல்ப் கோர்ஸ் சாலையில் வந்தபோது, காரில் வந்த ஒருவர் அவரை தள்ளிப்போகும்படி சொல்லிக்கொண்டே பைக்கை இடித்து தள்ளிவிட்டு சென்றார். இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த சிவானிக்கு காயம் ஏற்பட்டது.</p> <h2>வழக்குப்பதிவு</h2><p>இதை கவனித்த அவரது தோழி ஒருவர் அந்த காரை விரட்டிச் சென்று நிறுத்தினார். அப்போதும் அந்த நபர் வாக்குவாதம் செய்துவிட்டு காரை வேகமாக ஓட்டிச் சென்றார். பைக்கில் பொருத்தியிருந்த கேமராவில் இந்த காட்சிகள் பதிவானதால், சிவானி சமூக வலைத்தளத்தில் வீடியோவை வெளியிட்டார். இதை கவனித்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a> தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.</p><h2>கைது</h2><p>இந்த நிலையில், ராஜஸ்தானில் நேற்று, சிவானி மீது காரை மோதிய டிரைவர் கல்யாண் பைஸ்லாவை கைது செய்தனர். அவர் உடற்பயிற்சி கூடம் நடத்துபவர் என்று தெரியவந்துள்ளது. கார் ராணுவ அதிகாரி ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருந்தது. விபத்து எதிர்பாராமல் நடந்ததாகவும், வேண்டுமென்றே மோதவில்லை என்றும் டிரைவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>செயற்கை சூரியனை உருவாக்கும் முயற்சியில் இந்தியா: விஞ்ஞானிகள் பெருமிதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/indias-effort-to-create-an-artificial-sun-scientists-express-pride</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/indias-effort-to-create-an-artificial-sun-scientists-express-pride#comments</comments><guid isPermaLink="false">67b5422f-e495-4356-9d01-437341c159d0</guid><pubDate>Wed, 16 Sep 2026 01:26:23 +0000</pubDate><atom:updated>2026-09-16T01:26:23.459Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,India,Scientists,விஞ்ஞானிகள்,Sun,சூரியன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/drjin0pq/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/drjin0pq/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>'செயற்கை சூரியனை உருவாக்கும் இந்திய விஞ்ஞானிகளின் இந்த முயற்சி முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது' என்று விஞ்ஞானிகள் கூறினர்.</p><h2>செயற்கை சூரியன்</h2><p>குஜராத் மாநிலம் காந்திநகரில் இயற்பியல் துறைக்கான 'பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனம்' செயல்பட்டு வருகிறது. இங்கு அணுக்கரு இணைவு ஆற்றலை உற்பத்தி செய்வதற்காக காந்தப்புலங்களை பயன்படுத்தும் 'டோகாமாக்கில்' ஒரு 'உயர் சக்தி வெற்றிட மின்னணு சாதனம்' மூலம் பரிசோதனைக்குரிய பிளாஸ்மா கட்டுப்பாட்டுக்கருவி அல்லது 'செயற்கை சூரியன்' உருவாக்கப்பட்டு வருகிறது. இது 82.6 ஜிகாஹெர்ட்ஸ்' மற்றும் 400 கிலோ வாட் சக்தி வாய்ந்ததாகும். இந்தியாவின் இந்த முயற்சி மற்றொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.</p><h2>மின்சாரம் உற்பத்தி?</h2><p>இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், செயற்கை சூரியன் மின்சாரம் உற்பத்தி செய்வதில்லை. எஸ்.எஸ்.டி-1 என்பது ஒரு சோதனை அணுக்கரு இணைவு ஆராய்ச்சி எந்திரம். அது ஒரு வணிக மின் உற்பத்தி நிலையம் அல்ல. இந்த புதிய ‘கைரோட்ரான் பிளாஸ்மா'வை சூடாக்கி ஆய்வு செய்வதற்கான ஒரு கருவியாகும். இந்தியா ஏற்கனவே அணுக்கரு இணைவில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. தொடர்ந்து அணுக்கரு இணைவு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.</p><p>உண்மையான நட்சத்திரங்களுக்கு ஆற்றல் அளிக்கும் அணுக்கரு இணைவை பிரதிபலிப்பதே இதன் நோக்கமாகும். இது இலகுவான அணுக்கருக்களை மிகக்கடுமையான வெப்பநிலை மற்றும் அழுத்தத்தின் கீழ் ஒன்றிணைய செய்கிறது. இந்திய இணைவு சோதனைகள் ஏற்கனவே 200 மில்லியன் டிகிரி செல்சியசுக்கும் அதிகமான பிளாஸ்மா வெப்பநிலையை எட்டியுள்ளன. உயர் அதிர்வெண் மைக்ரோ அலைகளைப் பயன்படுத்தி கைரோட்ரான் பிளாஸ்மாவை வெப்பப்படுத்துகிறது</p><h2>எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும்</h2><p>இது உலைக்குள் உள்ள பொருட்களை சூடாகவும் நிலையாகவும் வைத்திருக்க உதவுகிறது. நட்சத்திரங்கள் புவியீர்ப்பு விசையை கொண்டு இதை செய்கின்றன, ஆனால் பூமியில் நமக்கு காந்தங்கள் தேவைப்படுகின்றன. நாம் இதன் மூலம் இன்னும் போதிய அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்யவில்லை என்றாலும், இந்த மேம்பாடு தூய்மையான, நீடித்த ஆற்றலை நோக்கிய ஒரு பெரிய நகர்வா கும். எதிர்காலத்தில் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை குறைக்கவும் இது உதவும். இந்த முயற்சி மற்றொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>பொய்யான சாதிச் சான்றிதழ் கொடுத்து தனித் தொகுதியில் போட்டி: தேர்தல் ஆணையம் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fake-caste-certificate-reserved-constituency-contest-high-court-order-to-ec</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fake-caste-certificate-reserved-constituency-contest-high-court-order-to-ec#comments</comments><guid isPermaLink="false">1dff6fa3-19ba-4ca3-bacb-32e08f96c89a</guid><pubDate>Wed, 16 Sep 2026 01:16:08 +0000</pubDate><atom:updated>2026-09-16T01:16:08.713Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தேர்தல் ஆணையம்,Election Commission,சென்னை ஐகோர்ட்டு,Chennai Highcourt,வால்பாறை,Valparai,தேர்தல் வழக்கு,election case</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/cohasy40/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/cohasy40/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பொய்யான சாதிச் சான்றிதழ் கொடுத்து தனித் தொகுதியில் போட்டியிட்டுள்ளதாக வால்பாறை தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு எதிரான தேர்தல் வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.</p><h2>தேர்தல் வழக்கு</h2><p>தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் வால்பாறை தனித் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட குட்டி என்ற சுதாகர் வெற்றி பெற்றார். இவரது வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், த.வெ.க. வேட்பாளர் ஸ்ரீதரன் என்பவர் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார்.</p><h2>தேவாலயத்தில் திருமணம்</h2><p>அந்த மனுவில், "கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றி வரும் சுதாகர், தன்னை இந்து பட்டியலினத்தவர் என பொய்யான சாதிச் சான்றிதழ் வழங்கி தேர்தல் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். ஆனால், அவருக்கு கிறிஸ்தவ தேவாலயத்தில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது. அவரது மறைந்த தந்தை ஆரோக்கியத்தின் உடல் தேவாலய மயானத்தில்தான் கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டுள்ளது.</p><h2>சட்டவிரோதம்</h2><p>கிறிஸ்தவ மதத்தைத் தீவிரமாகப் பின்பற்றும் ஒருவர், இடஒதுக்கீட்டுத் தொகுதியில் போட்டியிடப் பொய்யான சாதிச் சான்றிதழைப் பயன்படுத்தியது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது. எனவே, வால்பாறை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சுதாகரின் விவரங்களை மாநில அளவிலான சாதிச் சான்றிதழ் சரிபார்ப்பு குழு மற்றும் தேர்தல் ஆணையம் உரிய காலக்கெடுவுக்குள் விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.</p><h2>பதில் அளிக்க வேண்டும்</h2><p>அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் வெண்ணிலா ஆஜராகி, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி இந்து, சீக்கிய அல்லது பவுத்த மதங்களைத் தவிர வேறு மதத்தைப் பின்பற்றுபவர்கள் யாரும் பட்டியல் சாதியினராகக் கருதப்பட மாட்டார்கள். எனவே பொய்யான தகவல்களை வழங்கி தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. எம்.எம்.ஏ. சுதாகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாதிட்டார்.</p><p>இந்த வாதத்தை கேட்ட நீதிபதி, தேர்தல் ஆணையம், மாநில அளவிலான சாதிச் சான்றிதழ் சரிபார்ப்பு குழு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வருகிற அக்டோபர் 6-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.dailythanthi.com/business/todays-petrol-and-diesel-price-status-in-chennai-41</link><comments>https://www.dailythanthi.com/business/todays-petrol-and-diesel-price-status-in-chennai-41#comments</comments><guid isPermaLink="false">3d512f4e-9b21-4c2d-b6ee-9ae2bf324012</guid><pubDate>Wed, 16 Sep 2026 00:47:44 +0000</pubDate><atom:updated>2026-09-16T00:47:44.005Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Petrol and Diesel price,கச்சா எண்ணெய்,பெட்ரோல் மற்றும் டீசல் விலை,from today</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/ugei2f13/177.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல் மற்றும் டீசல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/ugei2f13/177.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் <a href="https://www.dailythanthi.com/topic/petrol-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D">பெட்ரோல்</a> மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.</p><h2>பெட்ரோல், டீசல் விலை</h2><p>இந்நிலையில், சென்னையில் இன்று (16.09.2026 புதன் கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ. 99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.97.50 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்:  வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-assembly-by-elections-today-is-the-last-day-to-file-nomination-papers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-assembly-by-elections-today-is-the-last-day-to-file-nomination-papers#comments</comments><guid isPermaLink="false">437de9d5-8670-4d68-9a47-cbfb1a5e9f7c</guid><pubDate>Wed, 16 Sep 2026 00:14:19 +0000</pubDate><atom:updated>2026-09-16T00:14:19.387Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இடைத்தேர்தல்,By election,மதுராந்தகம்,தாராபுரம்,வேட்பு மனு,Madurantakam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/a9muchao/nomination.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/a9muchao/nomination.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2>இடைத்தேர்தல்</h2><p>செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் த.வெ.க., தி.மு.க. அ.தி.மு.க., நாம் தமிழர், கம்யூனிஸ்டு கட்சிகள் என 5 முனைப் போட்டி நிலவுகிறது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அந்தந்த கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) அலுவலகங்களில் கடந்த 9-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 12, 13, 14-ந் தேதி தொடர் விடுமுறை முடிந்து நேற்று மீண்டும் வேட்புமனு தாக்கல் நடந்தது. இதில் மதுராந்தகம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 14 பேர் வேட் புமனு தாக்கல் செய்தனர். இதன் மூலம் இதுவரை மொத்தம் 18 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.</p><h2>த.வெ.க., தி.மு.க. வேட்பாளர்கள் மனு</h2><p>தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மரகதம் குமரவேல், த.வெ.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்துடன் சென்று தனது மனுவை தாக்கல் செய்தார்.தி.மு.க. வேட்பாளர் பரந்தாமன், முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தர் மற்றும் முக்கிய கட்சி நிர்வாகிகளுடன் வந்து மனு தாக்கல் செய்தார். நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் மனு தாக்கல் செய்தார். மேலும், பனைமரம் ஏறும் தொழிலாளி சதீஷ்குமார் என்பவர் தனது தொழிலைக் குறிக்கும் வகையில் பனைமரம் ஏறும் உபகரணங்களுடன் வந்து சுயேச்சையாக மனு தாக்கல் செய்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.</p><h2>இன்று கடைசி நாள்</h2><p>தாராபுரம் தொகுதியில் நேற்று ஒரே நாளில் 15 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் மொத்த வேட்புமனுக்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.இதில் நேற்று தளவாய்பட்டினத்தைச் சேர்ந்த வக்கீல் சுகன்யா தி.மு.க. வேட்பாளராக 4 மனுக்களைத் தாக்கல் செய்தார். முன்னதாக அண்ணா படத்துக்கு மாலை அணிவித்துவிட்டு, முன்னாள் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி உள்ளிட்டோருடன் ஆர்.டி.ஓ. பெலிக்ஸ் ராஜாவிடம் மனு அளித்தார். மேலும் இவரது கணவர் மணிவாசகமும் ஒரு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலுக்கு இன்று (புதன்கிழமை) கடைசி நாள் என்பதால், தாராபுரம் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் சத்தயபாமா, அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி மற்றும் இந்திய கம்யூனிஸ்டு, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும், மதுராந்தகத்தில் அ.தி.மு.க.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.</p> <p>வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெற நாளை மறுநாள் கடைசி நாள் ஆகும். வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 6 ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கை 09 ஆம் தேதியும் நடைபெறும். </p>]]></content:encoded></item><item><title>டெண்டர் முறைகேடு புகார்:தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்- தமிழக அரசு அதிரடி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tender-irregularity-allegations-tambaram-corporation-commissioner-moved-to-the-waiting-list-tamil-nadu-government-takes-swift-action</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tender-irregularity-allegations-tambaram-corporation-commissioner-moved-to-the-waiting-list-tamil-nadu-government-takes-swift-action#comments</comments><guid isPermaLink="false">d2ea9fa8-5ec3-4fea-a5fd-5c2e19381db9</guid><pubDate>Tue, 15 Sep 2026 20:59:33 +0000</pubDate><atom:updated>2026-09-15T20:59:33.750Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tambaram,தாம்பரம்,மாநகராட்சி,தமிழக அரசு,TN govt,டெண்டர் முறைகேடு,Tenders</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/2sghxhsl/TBM.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/2sghxhsl/TBM.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை, </p><p>தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் சட்ட விதிகளை அப்பட்டமாக மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டுச்சதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா நடத்தியதாக மாநகராட்சி கமிஷனர் எஸ்.பாலச்சந்தர் மற்றும் அதிகாரிகள் மீது அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு முதல்-அமைச்சர், தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாக இயக்குனர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் ஆகியோருக்கு விரிவான புகார் மனு அனுப்பப்பட்டு உள்ளது.</p> <h2>டெண்டருக்கு முன்பே திறப்புவிழா</h2><p>அதில் கூறியிருப்பதாவது:-</p><p>சுமார் ரூ.45 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான 2 பணிகளை, டெண்டர் செயல்முறை முடிவதற்கு முன்பே அதிகாரிகள் முடித்துள்ளனர். பெருங்க ளத்தூர் பாலம் ரவுண்டானாவில் அசோகத் தூண் அமைத்தல் மற்றும் அழகுபடுத்தும் பணிக்காக ரூ.27 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான டெண்டர் கடந்த ஆகஸ்டு 6-ந் தேதி வெளியிடப்பட்டது. இதன் டெண்டர் திறப்பு தேதி ஆகஸ்டு 24-ந் தேதி ஆகும். ஆனால், டெண்டர் அறிவிப் புக்கு 8 நாட்களுக்கு முன்பாகவே, ஜூலை 29-ந் தேதியே இப்பணி முடிக்கப்பட்டு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் டி.சரத்குமார் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் திறப்பு விழா நடத்தப்பட்டு உள்ளது.</p><p>போலி டெண்டர்களை இணையதளத்தில்...</p><p>இதேபோல், சிட்லபாக்கம் ரவுண்டானாவில் தண்ணீர் சேமிப்பு விழிப்பு ணர்வு சிலை மற்றும் அழகுபடுத்தும் பணிக்காக ரூ.18 லட்சத்து 60 ஆயி ரம் மதிப்பிலான டெண்டர் ஆகஸ்டு 6-ந் தேதி வெளியிடப்பட்டது. இதற் கான டெண்டர் திறப்பு தேதி ஆகஸ்டு 24-ந் தேதி என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்டு 10-ந் தேதி சிலை திறக்கப்பட்டுள்ளது.இந்த சட்டவிரோத ஒதுக்கீட்டை முறைப்படுத்தவும், பணிகளை முன்கூட் டியே முடித்த ஒப்பந்ததாரருக்கு பணப்பட்டுவாடா செய்யவும் கமிஷனர் எஸ்.பாலச்சந்தர் கண்துடைப்பிற்காக போலி டெண்டர்களை tntenders.gov.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளதாக அறப் போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.</p><p>மேலும், கடந்த 4 மாதங்களில் தாம்பரம் மாநகராட்சி வெளியிட்ட 565 டெண்டர்களில் 309 டெண்டர்கள் (54.69 சதவீதம்) இணையதளத்தில் திறக்கப்படாமல் "To-be-opened" என்ற நிலையிலேயே நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன. ஒரே ஒரு டெண்டர் மட்டுமே இறுதி நிலையை அடைந்துள் ளது. இது நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையின்மையை காட்டுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> <h2>தமிழக அரசு உத்தரவு</h2><p>இந்த நிலையில் தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் எஸ்.பாலச்சந்தரை தமி ழக அரசு அதிரடியாக இடமாற்றம் செய்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது. தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் பதவி,</p><p>கூடுதல் பொறுப்பாக ஆவடி மாநகராட்சி கமிஷனர் சரண்யாவிடம் வழங்</p><p>கப்பட்டு உள்ளக</p> ]]></content:encoded></item><item><title>காய்ச்சல் பரவல் அதிகரிப்பு:பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும்- அமைச்சர் அருண்ராஜ் பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rise-in-fever-cases-face-masks-must-be-worn-in-public-places-minister-arunrajs-statement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rise-in-fever-cases-face-masks-must-be-worn-in-public-places-minister-arunrajs-statement#comments</comments><guid isPermaLink="false">d9e79321-a69f-4aca-aca1-89714e0b0c54</guid><pubDate>Tue, 15 Sep 2026 20:50:00 +0000</pubDate><atom:updated>2026-09-15T20:50:00.472Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Fever,முகக்கவசம்,காய்ச்சல்,அருண்ராஜ்,Arun Raj</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/0yi5q6fo/arun-raj.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/0yi5q6fo/arun-raj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மருத்துவக்கல்லூரியில், 192-வது மருத்துவ இளநிலை மாணவர் சேர்க்கை வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் தொடர்பாக மீனவர்களிடம் பேசி, அதன் நோக்கம் குறித்து புரிய வைப்போம்.தற்போது, சுவாசத்தொற்று பரவல் அதிகமாக உள்ளது. அரசு தடுப்பு நடவ டிக்கை எடுத்து வருகிறது. </p><p>பொதுமக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண் டும். காய்ச்சல் போன்ற பாதிப்புகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள். பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும். டெங்கு காய்ச்சல் பரவலும் உள்ளது. இந்த ஆண்டில் இது வரை, தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால், 15,933 பேர் பாதிக்கப்பட்டுள்ள னர். 9 பேர் உயிரிழந்துள்ளனர். அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் டெங் குவுக்கு முறையான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தல்: அ.தி.மு.க.வில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/by-election-aiadmk-appoints-election-task-force-coordinators</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/by-election-aiadmk-appoints-election-task-force-coordinators#comments</comments><guid isPermaLink="false">8bd895bc-7ec9-4214-8897-c99177e5a148</guid><pubDate>Tue, 15 Sep 2026 18:39:03 +0000</pubDate><atom:updated>2026-09-15T18:39:03.997Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,இடைத்தேர்தல்,By election,அ.தி.மு.க,தேர்தல் பணிக்குழு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/8mv9oet5/ADMK.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அ.தி.மு.க]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/8mv9oet5/ADMK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக செங்கல்பட்டு கிழக்கு, மேற்கு, வடசென்னை வடக்கு(கிழக்கு), (மேற்கு), தெற்கு(கிழக்கு), (மேற்கு), தென்சென்னை வடக்கு(கிழக்கு),(மேற்கு), தெற்கு(கிழக்கு), (மேற்கு), திருவண்ணாமலை வடக்கு, தெற்கு, கிழக்கு, மத்தியம், கடலூர் கிழக்கு, வடக்கு, தெற்கு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி கிழக்கு, சென்னை புறநகர், காஞ்சிபுரம், திருவள்ளூர் வடக்கு, மத்தியம், தெற்கு, கிழக்கு, மேற்கு, கிருஷ்ணகிரி மேற்கு, தர்மபுரி கிழக்கு, மேற்கு, நாகப்பட்டினம், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகின்றனர்.</p> <p>தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக திருப்பூர் மாநகர், புறநகர் கிழக்கு, மேற்கு, சேலம் மாநகர், புறநகர், நாமக்கல், ஈரோடு மாநகர், புறநகர் கிழக்கு, மேற்கு, கோவை மாநகர், புறநகர் வடக்கு, தெற்கு, மத்தியம், நீலகிரி, திருச்சி மாநகர், திருச்சி புறநகர் வடக்கு, தெற்கு, கிழக்கு, கரூர், திருவாரூர், திண்டுக்கல் கிழக்கு, மேற்கு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகின்றனர்.</p><p>மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, சிறப்பான முறையில் தேர்தல் பணிகளை ஆற்றி, அ.தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்திட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட கட்டுப்பாடு-தேர்தல் கமிஷன் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/restriction-on-publishing-by-election-opinion-poll-results-election-commission-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/restriction-on-publishing-by-election-opinion-poll-results-election-commission-announcement#comments</comments><guid isPermaLink="false">955aa05f-9645-43db-8c07-b73782790158</guid><pubDate>Tue, 15 Sep 2026 18:14:25 +0000</pubDate><atom:updated>2026-09-15T18:14:25.745Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தேர்தல் அதிகாரி,தேர்தல் கமிஷன்,By election,election campaign,அர்ச்சனா பட்நாயக்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/b8jl625p/Election-comission.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/b8jl625p/Election-comission.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் 06.10.2026 அன்று நடக்கிறது. அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இந்த இடைத்தேர்தலின்போது, வாக்குப்பதிவுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடுவதற்கும், பரப்புவதற்கும் இந்திய தேர்தல் கமிஷன் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பொதுத்தேர்தல் அல்லது இடைத்தேர்தல்களின் போது, வாக்குப்பதிவு தொடங்கும் நேரம் முதல் வாக்குப்பதிவு முடிவடைந்து அரை மணி நேரம் வரை இந்த தடை அமலில் இருக்கும்.</p> <p>அதன்படி, வாக்குப்பதிவு நாளான 6.10.2026 காலை 7 மணி முதல் மாலை 6.30 மணி வரை, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை (எக்சிட் போல்) நடத்துவது மற்றும் அதை அச்சு அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவது தடை செய்யப்படுகிறது</p> <p>வாக்குப்பதிவு முடிவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்துடன் முடிவடைகிற 48 மணி நேர கால அளவில், (அதாவது, அக்டோபர் 6-ந் தேதி மாலை 6 மணிக்கு, 48 மணிநேரத்திற்கு முன்பு) எந்தவொரு கருத்துக்கணிப்பு அல்லது பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உள்பட தேர்தல் விவகாரங்களை மின்னணு ஊடகங்களில் காட்சிப்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. அரசு மாநில உரிமைகள் குறித்து பேச பயப்படுகிறது-உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-is-afraid-to-speak-about-state-rights-udhayanidhi-stalin-criticizes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-is-afraid-to-speak-about-state-rights-udhayanidhi-stalin-criticizes#comments</comments><guid isPermaLink="false">8e874d1d-6010-428d-b268-a420948de674</guid><pubDate>Tue, 15 Sep 2026 17:47:31 +0000</pubDate><atom:updated>2026-09-15T17:47:31.037Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,த.வெ.க,மாநில உரிமைகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/rvaowaea/udhayanidithi-stalin.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/rvaowaea/udhayanidithi-stalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p> சென்னை,  </p><p>தமிழக எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:- ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் மத்திய– மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகள் குறித்து ஆராய்வதற்காக நம் தலைவர் (மு.க.ஸ்டாலின்) தலைமையிலான அரசால் அமைக்கப்பட்ட உயர்நிலைக்குழுவை முடக்கும் வேலைகளில் ஆளுங்கட்சி இறங்கி இருப்பது கண்டிக்கத்தக்கது.</p><p>பணியாளர்கள் பற்றாக்குறையால் இந்தக்குழு தொடர்ந்து செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால், மாநில சுயாட்சி குறித்த குழுவின் 2-ஆவது ஆய்வு அறிக்கையை தயார் செய்து வந்த ஆய்வாளர்களும் – ஆராய்ச்சி மாணவர்களும் தொடர்ந்து செயல்பட முடியாத சூழலை இந்த டம்மி அரசு உருவாக்கி இருக்கிறது.மாநில உரிமைகள் குறித்து பேசுவதற்கும், போராடுவதற்கும் பயப்படும் த.வெ.க அரசு, அது குறித்து ஆய்வு செய்யவே பயந்து நடுங்கி ஆணையத்தை முடக்குவது வெட்கக்கேடானது.</p><p>ரீல்ஸ் போட்டால் மட்டும் மாநில சுயாட்சியை நிலைநாட்ட முடியாது என்பதை உணர்ந்து, மத்திய – மாநில அரசுகளின் உறவு பற்றி ஆய்வு செய்யும் உயர்நிலைக்குழு, தொய்வின்றி செயல்படுவதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு: தமிழில் வேள்வி நடத்த அனுமதி கோரி மேல்முறையீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/meenakshi-amman-temple-consecration-appeal-seeking-permission-to-conduct-the-sacrifice-in-tamil</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/meenakshi-amman-temple-consecration-appeal-seeking-permission-to-conduct-the-sacrifice-in-tamil#comments</comments><guid isPermaLink="false">b07344bb-c447-448a-961f-34777a3474da</guid><pubDate>Tue, 15 Sep 2026 16:15:05 +0000</pubDate><atom:updated>2026-09-15T16:15:05.273Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Meenakshi Amman Temple,தமிழ்,மீனாட்சி அம்மன் கோவில்,குடமுழுக்கு,Appeal,Consecration,வேள்வி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/zq6zc51w/madurai-court.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/zq6zc51w/madurai-court.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p>மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் குடமுழுக்கு நிகழ்வுகளில் சமஸ்கிருத யாகசாலைகளுக்கு இணையாகத் தமிழிலும் வேள்வி நடத்த அனுமதிக்கக் கோரி, தெய்வத் தமிழ் வழிபாட்டு ஆசிரியர் த.சுரேஷ்பாபு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.</p><p>குடமுழுக்குக்கு முன்பும், குடமுழுக்கின்போதும், அதற்குப் பிந்தைய மண்டல பூஜையிலும் தமிழ் மந்திரங்கள் மற்றும் திருமுறைகளைக் கொண்டு வேள்விக் குண்ட வழிபாடு நடத்தத் தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று அவர் ஏற்கெனவே கோரிக்கை வைத்திருந்தார். இதனை கோவில் நிர்வாகம் கடந்த மார்ச் 11-ஆம் தேதி நிராகரித்தது.</p><h2>மேல்முறையீடு</h2><p>அந்த உத்தரவை எதிர்த்து சுரேஷ்பாபு தாக்கல் செய்த ரிட் மனுவை, தொடர்புடைய விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகக் கூறி தனி நீதிபதி கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி தள்ளுபடி செய்தார். அந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தற்போது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81">மேல்முறையீடு</a> செய்யப்பட்டுள்ளது.</p><p>தமிழில் மந்திரங்கள் ஓதுவதற்கு ஆகமங்களிலோ, சமய நூல்களிலோ தடை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்திருப்பதைத் தனி நீதிபதி உரிய முறையில் பரிசீலிக்கவில்லை என்று மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டுள்ளது.</p><h2>சாதி அடிப்படையிலான பாகுபாடு</h2><p>கோவில் பணியாளர்கள் அல்லாத சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகளில் அனுமதிக்கப்படும் நிலையில், தமிழ் வேள்விப் பயிற்சி பெற்ற தனக்கு மட்டும் வாய்ப்பு மறுக்கப்படுவது மொழி மற்றும் சாதி அடிப்படையிலான பாகுபாடு என்றும் மனுதாரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p>மேலும், ஓதுவார்கள் தனியாகத் தேவாரப் பாடல்களைப் பாட அனுமதிப்பது மட்டும் தமிழுக்கு வழங்கப்படும் சம உரிமையாகாது; வேள்விக் குண்டங்களிலேயே தமிழ் மந்திரங்களைப் பயன்படுத்த வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>எனவே, தனது கோரிக்கையை நிராகரித்த கோவில் நிர்வாகத்தின் உத்தரவையும், அதனை எதிர்த்த ரிட் மனுவைத் தள்ளுபடி செய்த தனி நீதிபதியின் உத்தரவையும் ரத்து செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று மேல்முறையீட்டில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வரவிருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>தாம்பரம்: ரெயிலில் ஏற முயன்றபோது பிளாட்பார இடையே சிக்கிய நபரால் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tambaram-man-trapped-between-platforms-causes-panic</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tambaram-man-trapped-between-platforms-causes-panic#comments</comments><guid isPermaLink="false">d5c67d92-1846-4f1a-873e-b8abddabd610</guid><pubDate>Tue, 15 Sep 2026 15:22:53 +0000</pubDate><atom:updated>2026-09-15T15:22:53.083Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tambaram,தாம்பரம்,train,ரெயில்,நபர்,man,stuck,பிளாட்பாரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/vrwmqnse/tabaram-train.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வாலிபர்]]></media:title><media:description type="html"><![CDATA[ தாம்பரம்: ரெயிலில் ஏற முயன்றபோது பிளாட்பார இடையே சிக்கிய நபரால் பரபரப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/vrwmqnse/tabaram-train.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">தாம்பரம் ரெயில் நிலையத்தில்</a>, ரெயிலில் ஏற முயன்றபோது கால் தவறி தண்டவாள இடுக்கில் விழுந்த பயணியை, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் பத்திரமாக மீட்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>நெரிசலில் சிக்கிய ரெயில் நிலையம்</h2><p>தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் லட்சக்கணக்கான மக்கள் ரெயில்கள் மூலம் பயணித்து வருகின்றனர். இதனால் சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரம் ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. ரெயில்களில் இடம் பிடிப்பதற்காக பயணிகள் கடும் போட்டி போட்டு வருகின்றனர்.</p><h2>தண்டவாள இடையே சிக்கிய நபர்</h2><p>தாம்பரத்தில் இருந்து அசாம் மாநிலத்தின் சில்காட் டவுன் வரை செல்லும் நாகோன் விரைவு ரெயில் மேற்கு வங்க மாநிலம் வழியாக வாரந்தோறும் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த போது ஏராளமான வட மாநிலத்தினர் ரெயிலில் இடம். பிடிப்பதற்காக முண்டியடித்து ஏறினர்.</p> <p>அப்போது வடமாநில தொழிலாளி ஒருவர் கூட்டநெரிசலில் ரெயில் இருந்து தவறி நடைமேடைக்கும். ரெயிலுக்கும் இடையே இருந்த மிக குறுகிய தண்டவாள பகுதியில் விழுந்தார். இதை பார்த்த சக பயணிகள் அலறினர்.</p><h2>பயணியை மீட்ட போலீஸ்</h2><p>அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே பாதுகாப்புப் படை போலீஸ்காரர், ரெயிலின் அடியில் இருந்த அந்த பயணியின் கைகளை இறுக்கமாக பற்றி கொண்டு, அவரை முழு பலத்துடன் பிளாட்பாரத்தின் மேல் நோக்கி இழுத்து தூக்கினார். </p> <h2>பாராட்டு மழை</h2><p>மரணத்தின் விளிம்பிற்கு சென்ற பயணியை காப்பாற்றிய போலீஸ்காரரின் இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. போலீசாரின் இந்த மனிதநேயமிக்க செயலுக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>“21-ம் நூற்றாண்டிலும் சாதி தகராறா?” - சிதம்பரம் அருகே மோதலால் கிராம மக்கள் வேதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-caste-conflict-still-present-in-the-21st-century-villagers-anguished-by-clash-near-chidambaram</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-caste-conflict-still-present-in-the-21st-century-villagers-anguished-by-clash-near-chidambaram#comments</comments><guid isPermaLink="false">3cfef5f4-8e2c-4880-b841-ca4ec45d18b0</guid><pubDate>Tue, 15 Sep 2026 14:58:27 +0000</pubDate><atom:updated>2026-09-15T14:58:27.634Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chidambaram,Caste,clash,மோதல்,சிதம்பரம்,சாதி பாகுபாடு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/0egukc76/123.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/0egukc76/123.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர்,</p><p>21-ம் நூற்றாண்டிலும் சாதி ரீதியாக தகராறு செய்த மக்களால் மற்றொரு தரப்பினர் கடும் வேதனையில் உள்ளனர். </p><p>கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கரிக்குப்பம் கிராமத்தில் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை ஊர்வலம் நடைபெற்றது. அப்போது ஊர்வலத்தில் ஆடல், பாடல் நடத்தக்கூடாது என மற்றொரு சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, விநாயகர் சிலையை அந்த வழியாகத்தான் கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி, பரங்கிப்பேட்டை - புதுச்சத்திரம் சாலையில் ஒரு தரப்பினர் 3 மணி நேரத்துக்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>தகவல் அறிந்து வந்த போலீசார் இரு தரப்பினரிடமும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. இந்த நிலையில், இன்று பள்ளிக்கு சென்ற மாணவர்களை ஒரு தரப்பினர் தடுத்து நிறுத்தி அவர்கள்   “தலை மீது செருப்பு வைத்து” செல்லுமாறும் இந்த பாதை வழியே சென்றால் ”சாணியால் அடிப்போம்” என்று கூறியதாக மற்றொரு தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், 5 வீடுகளுக்குள் புகுந்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">தாக்குதல் </a>நடத்தி, வீடுகளை அடித்து நொறுக்கியதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.</p><h2>21-ம் நூற்றாண்டிலும் சாதி தகராறு...</h2><p>இதில் ஒரு தரப்பை சேர்ந்த 4 பேர் தாக்கப்பட்டு காயமடைந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு சமுதாயத்தினரிடையே ஏற்பட்ட மோதலால் கரிக்குப்பம் கிராமத்தில் பதற்றம் நிலவி வருகிறது. மேலும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும் வகையில், கடலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோடீஸ்வரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, “21-ம் நூற்றாண்டிலும் இதுபோன்ற சாதி தகராறு எதற்காக?” என அப்பகுதி பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>மான நஷ்டஈடு வழக்கு: மு.க.ஸ்டாலின் பதில் அளிக்க 21-ந்தேதி வரை அவகாசம்- ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalin-response-deadline-extended-to-21st</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalin-response-deadline-extended-to-21st#comments</comments><guid isPermaLink="false">5d9a1d5f-7eff-4f02-8dcf-169a4bd4179b</guid><pubDate>Tue, 15 Sep 2026 14:34:52 +0000</pubDate><atom:updated>2026-09-15T14:34:52.877Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,மு.க.ஸ்டாலின்,ஐகோர்ட்டு,வழக்கு,Defamation case,அவகாசம்,Chennai High Court order,DMK leader MK Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/1mjj22j1/chennaihighcourt.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஐகோர்ட்டு ]]></media:title><media:description type="html"><![CDATA[ மானநஷ்டஈடு வழக்கு: மு.க.ஸ்டாலின் பதில் அளிக்க 21-ந்தேதி வரை அவகாசம்- ஐகோர்ட்டு உத்தரவு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/1mjj22j1/chennaihighcourt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜான் பிரிட்டோ என்பவருடன் தொடர்புபடுத்தி அவதூறு பரப்பியதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில்  பதில் அளிக்க 21-ந்தேதி வரை அவகாசம்கொடுத்து சென்னை ஐகோர்ட்டு  உத்தரவை பிறப்பித்துள்ளது.</p><h2>அவதூறு பதிவு</h2><p>மத்திய அமலாக்கத்துறை அண்மையில் வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டி,  <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D">திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் </a>தனது 'எக்ஸ்' தள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்ட ஜான் பிரிட்டோ என்பவர், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியுமான ஆதவ் அர்ஜூனாவின் நெருங்கிய உறவினர் என்ற உண்மை அம்பலமாகியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.</p><h2>ரூ.1 கோடி மான நஷ்டஈடு</h2><p>அமலாக்கத்துறை குறிப்பிட்டிருந்த கொடுங்கையூரை சேர்ந்த ஜான் பிரிட்டோவிற்கும், தனக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா திட்டவட்டமாக மறுத்தார். பெயர் குழப்பத்தை சாதகமாக்கி கொண்டு, அரசியல் பழிவாங்கும் நோக்குடன் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் மு.க.ஸ்டாலின் இந்த அவதூறு பதிவை வெளியிட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். இதையடுத்து, தனது பெயருக்கு ஏற்பட்ட அவதூறுக்காக ரூ.1 கோடி மான நஷ்டஈடு கோரியும், அந்த பதிவுகளை உடனடியாக சமூக வலைதளங்களில் இருந்து நீக்க உத்தரவிட கோரியும் சென்னை ஐகோர்ட்டில் ஆதவ் அர்ஜூனா மனு ஒன்றை தாக்கல் செய்தார்.</p> <h2>கோரிக்கை</h2><p>இந்த வழக்கு, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">சென்னை ஐகோர்ட்டு</a> நீதிபதி கே. கோவிந்தராஜன் திலகவதி முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி. வில்சன், நீதிமன்றத்தில் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். </p> <h2>உத்தரவு</h2><p>இந்த அவதூறு வழக்கில் தங்களது தரப்பு விளக்கத்தை விரிவாக தாக்கல் செய்ய வேண்டியுள்ளதால், பதில் மனு தாக்கல் செய்ய 21-ம் தேதி வரை அவகாசம் வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இதை எற்றுக்கொண்ட நீதிபதி அவகாசம் வழங்கி விசாரணையை செப்டம்பர் 21-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான நண்பர்... ரஷியா சென்ற வாலிபருக்கு நேர்ந்த அதிர்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-friend-he-met-through-instagram-the-shock-that-befell-a-young-man-who-went-to-russia</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-friend-he-met-through-instagram-the-shock-that-befell-a-young-man-who-went-to-russia#comments</comments><guid isPermaLink="false">caf8b795-7245-41fd-a7ca-dbc5c2ebb18d</guid><pubDate>Tue, 15 Sep 2026 14:05:13 +0000</pubDate><atom:updated>2026-09-15T14:05:13.831Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இன்ஸ்டாகிராம்,Instagram,young man,வாலிபருக்கு,அதிர்ச்சி,நண்பர்,friend</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/mfn7cnxt/122.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/mfn7cnxt/122.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>அருப்புக்கோட்டை, </p><p>விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சேதுராஜ். கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி லலிதா என்ற மனைவியும், விக்னேஷ் (வயது 32), அபினேஷ் குமார் (28) என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். அவர்கள் இருவரும் பட்டப்படிப்பு படித்துள்ளனர்.</p><h2>இன்ஸ்டாகிராம் நண்பர்</h2><p>இதில் அபினேஷ் குமாருக்கு இன்ஸ்டாகிராம், முகநூல் போன்ற சமூக வலைதள பக்கங்களில் அதிக ஆர்வம் உண்டு. அதன் மூலம் ஏராளமான நண்பர்களை சேர்த்து வைத்திருந்தார். அந்த வகையில், பகிரதன் என்பவர் நெருங்கிய நண்பராக கடந்த சில மாதங்களாக இருந்து வந்துள்ளார்.</p><p>இதற்கிடையே சமீபத்தில் அவர் அறிவியலை ஒரு பாடமாக படித்திருந்தால் போதும், ரஷ்யாவில் மருத்துவ படிப்புக்கு சேர விண்ணப்பிக்கலாம் என்றும், அதற்காக தான் ஏஜெண்டாக செயல்படுவதாகவும் பகிரதன் பொதுவான ஒரு தகவலை தெரிவித்து இருந்தார். இதைப் பார்த்த அபினேஷ் குமாருக்கு மருத்துவம் படிக்கும் ஆர்வம் வந்தது.</p><h2>பெற்றோர் கவலை</h2><p>மேலும் இன்ஸ்டாகிராமில் அவரது நண்பர் அனுப்பியிருந்த விளம்பரத்தை அபினேஷ் குமார் தனது பெற்றோரிடம் கூறினார். அவர்களும் மகனின் ஆசையை நிறைவேற்ற தயாராகினர். இதையடுத்து அபினேஷ் குமார் ரஷியாவில் மருத்துவம் படிப்பதற்கு விண்ணப்பித்து தனது நண்பர் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் 13-ந்தேதி மாணவர் விசா எடுத்து ரஷியாவிற்கு மருத்துவம் படிக்க சென்றுள்ளார். மூன்று மாதங்கள் வரை குடும்பத்தாருடன் பேசி வந்த நிலையில் அதன் பின்னர் எந்தவித தொடர்பும் இல்லாமல் போனதால் அபினேஷ் குமாரின் பெற்றோர் கவலை அடைந்தனர். பல்வேறு இடங்களில் பேசி தன்னுடையை மகனின் நிலை குறித்து கேட்டு வந்தனர்.</p><p>இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஷியா ராணுவத்தில் தான் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டது குறித்து அபினேஷ் குமார் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வந்துள்ளது. இதற்கிடையே மருத்துவ படிப்புக்கு ரஷியா சென்ற என் மகன் அங்கு ராணுவத்தில் சேர்த்து விடப்பட்டதாக அவருடைய நண்பர்கள் கூறுகின்றனர். என் மகனை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரை தமிழக முதல்-அமைச்சர் மீட்டுத் தர வேண்டும் என அவரது தாய் லலிதா தமிழக அரசுக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">கோரிக்கை </a>விடுத்துள்ளார். ரஷியா-உக்ரைன் இடையே 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வரும் நிலையில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைன் மற்றும் ரஷியாவிற்கு படிக்க சென்றவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.</p><p>இதற்கிடையே அவ்வாறு படிக்கவும், வேலைக்காகவும் சென்றவர்கள் ரஷியாவின் ராணுவத்தில் சேர்த்து விடப்படுவதாக தகவல் வந்தது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு பலரை மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வந்தது. இந்தநிலையில் இன்ஸ்டாகிராம் நண்பரை நம்பி ரஷியாவுக்கு மருத்துவம் படிக்க சென்றவர் ராணுவத்தில் சேர்த்து விடப்பட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கடற்பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகள் அமைக்க அனுமதி மறுக்க வேண்டும் - எஸ்டிபிஐ வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-approval-for-oil-gas-wells-in-mayiladuthurai-sea</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-approval-for-oil-gas-wells-in-mayiladuthurai-sea#comments</comments><guid isPermaLink="false">93638444-0961-4d03-ba82-b002b9897867</guid><pubDate>Tue, 15 Sep 2026 13:51:16 +0000</pubDate><atom:updated>2026-09-15T13:51:16.440Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>sea,Oil,எண்ணெய்,Gas,insists,wells,அனுமதி அளிக்கக்கூடாது,கடற்பகுதி,SDPI Party,கிணறுகள்,எஸ்டிபிஐ வலியுறுத்தல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/jwhj4ypx/sdpi.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ நெல்லை முபாரக் ]]></media:title><media:description type="html"><![CDATA[ எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/jwhj4ypx/sdpi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மயிலாடுதுறை கடற்பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகள் அமைக்க அனுமதி மறுக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல். இது தொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">எஸ்டிபிஐ</a> கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><h2>தனியார் நிறுவனம்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">மயிலாடுதுறைக்கு</a> கிழக்கே வங்கக்கடலில் 81 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ‘ஹார்டி எக்ஸ்ப்ளோரேஷன் அண்ட் புரொடக்‌ஷன் இந்தியா’ என்ற தனியார் நிறுவனம் 5 புதிய எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகளை அமைக்க மத்திய அரசிடம் சுற்றுச்சூழல் மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி கோரியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. </p> <h2>மீனவர்களை வஞ்சிக்கும் செயல்</h2><p>ஏற்கனவே தமிழக கடற்கரையில் வேதாந்தா மற்றும் ஓஎன்ஜிசி ஆகிய நிறுவனங்களுக்கு பல்லாயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் பரப்பளவு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது மயிலாடுதுறை கடற்பரப்பிலும் கிணறுகள் அமைக்க முயல்வது மீனவர்களை வஞ்சிக்கும் செயலாகும்.</p><h2>மீனவ குடும்பங்களின் உயிர்நாடி</h2><p>கடல் என்பது வெறும் கச்சா எண்ணெய் எடுக்கும் களம் அல்ல; அது லட்சக்கணக்கான மீனவ குடும்பங்களின் உயிர்நாடியாகும். கடலுக்குள் தொடர்ந்து கிணறுகள் தோண்டுவதால் கடல் சூழலியல், பவளப்பாறைகள் மற்றும் மீன்வளம் கடுமையாக பாதிக்கப்பட்டு, மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கவே முடியாத சூழல் உருவாகும்.</p> <p>பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள காவிரி பாசன மாவட்டங்களின் சூழலை கெடுக்கும் நோக்கில், அதன் எல்லைக்கு மிக அருகில் இத்திட்டத்தை செயல்படுத்த எண்ணெய் நிறுவனங்கள் சதி செய்கின்றன.</p><h2>பேரபாயம் ஏற்படும்</h2><p> எண்ணெய் மற்றும் எரிவாயுவை உறிஞ்சும்போது நிலத்தடி நீரும் உறிஞ்சப்பட்டு நிலமட்டம் தாழ்ந்துபோகும் ஆபத்து உள்ளது. தற்போது கடல் மட்டத்திற்கும் காவிரி படுகையின் நிலமட்டத்திற்கும் இடையே வெறும் 1 மீட்டர் மட்டுமே வேறுபாடு உள்ள நிலையில், இத்தகைய ஆய்வுகளால் வரும் காலத்தில் காவிரி படுகையின் பெரும்பகுதியே கடலுக்குள் காணாமல் போகும் பேரபாயம் ஏற்படும்.</p><p>எனவே, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கோரப்பட்டுள்ள இந்த அனுமதி விண்ணப்பத்தை நிராகரிக்க தேவையான உறுதியான அழுத்தத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை ஆணையத்திடம் இந்நிறுவனம் அனுமதி கோரும்போது, அந்த விண்ணப்பத்தை ஆணையம் உடனடியாக நிராகரிக்க வேண்டும். தமிழக அரசு இத்திட்டத்திற்கு எவ்வித இசைவும் தராமல், கடல் சூழலியலையும் மீனவர்-விவசாயிகளின் வாழ்வுரிமையையும் பாதுகாக்க உடனடியாக தலையிட்டு இத்திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>தமிழக கட்சிகள் தங்களின் பிரசார தலைவர்கள் பட்டியலை சமர்ப்பிக்க நாளை இறுதி நாள்; தேர்தல் ஆணையம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-parties-face-deadline-to-submit-campaign-leader-lists</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-parties-face-deadline-to-submit-campaign-leader-lists#comments</comments><guid isPermaLink="false">87e1e3b3-ab83-43c5-b5cb-903d240f379f</guid><pubDate>Tue, 15 Sep 2026 13:31:17 +0000</pubDate><atom:updated>2026-09-15T13:31:17.062Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>campaign,தேர்தல் ஆணையம்,Election Commission,பட்டியல்,பிரசாரம்,தமிழக,political leaders,அரசியல் கட்சி தலைவர்கள்,கட்சிகள்,All Parties,In Tamil Nadu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/uiv5n44z/election-comission.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ தேர்தல் ஆணையம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக கட்சிகள் தங்களின் பிரசார தலைவர்கள் பட்டியலை சமர்ப்பிக்க நாளை இறுதி நாள்; தேர்தல் ஆணையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/uiv5n44z/election-comission.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக கட்சிகள் தங்களின் பிரசார தலைவர்கள் பட்டியலை சமர்ப்பிக்க நாளை இறுதி நாள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">தேர்தல் ஆணையம் </a>வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><h2>தேர்தல் ஆணையம்</h2><p>மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951, பிரிவு 77-ல் செய்யப்பட்ட வழிவகைகளின்படி, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">பிரசாரம்</a> செய்யும்போது, விமானம் உள்ளிட்ட போக்குவரத்து செலவுகள் கட்சியின் வேட்பாளர் மற்றும் முகவர்கள் கணக்கில் சேராது. இந்த சலுகையை பெற, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 40 பேரின் பெயர் பட்டியலையும், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் 20 பேரின் பெயர் பட்டியலையும் ,தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும். </p><h2>தலைவர்கள் பட்டியல்</h2><p>தேர்தல் செலவினத்தில் இருந்து விலக்கு பெறவேண்டிய இந்த தலைவர்கள் பட்டியலை, மேற்கண்ட சட்டப்பிரிவின் விளக்கம் 2-ன் உட்பிரிவு 1-ன்படி, தேர்தல் அறிவிக்கை வெளியிட்டதிலிருந்து 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 35. மதுராந்தகம் (தனி) மற்றும் 101. தாராபுரம் (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கை 09.09.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது.</p><h2>விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்</h2><p> செலவு தொகையிலிருந்து விலக்கு பெற விரும்பும் கட்சிகள் தங்கள் கட்சியின் சார்பில் பிரசாரம் செய்யும் தலைவர்களின் பெயர் பட்டியலை தெரிவித்து இந்திய தேர்தல் ஆணையம் / தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு 16.09.2026-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். </p><h2>நட்சத்திர தலைவர்</h2><p>இந்த பட்டியலில் உள்ளவர்களின் பயண செலவுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும். இதுதவிர மற்ற செலவினங்கள் அனைத்தும் வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும். அதே நேரம், வேட்பாளருக்கு வேறு கட்சியின் நட்சத்திர தலைவர் பிரசாரம் செய்தால், அதில் விலக்கு கோர இயலாது.</p><h2>தகவல்</h2><p>இது தொடர்பாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய அரசியல் கட்சிகள், மாநில அரசியல் கட்சிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட/ அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு, இவ்வலுவலகத்தின் 08.09.2026 தேதியிட்ட கடிதத்தின் வாயிலாக ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>ஆம்னி பேருந்துகளில் விதிமீறல் - 5 நாட்களில் ரூ.59.02 லட்சம் வசூல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/omni-bus-violations-rs5902-lakh-collected-in-5-days</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/omni-bus-violations-rs5902-lakh-collected-in-5-days#comments</comments><guid isPermaLink="false">7cdc81c4-ef34-445e-83ef-0482322291b1</guid><pubDate>Tue, 15 Sep 2026 13:30:24 +0000</pubDate><atom:updated>2026-09-15T13:30:24.339Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வசூல்,Omni buses,ஆம்னி பேருந்து,Violations,collected,விதிமீறல்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/l8xl6pe5/omni-bus.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/l8xl6pe5/omni-bus.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 1169 ஆம்னி பேருந்துகளுக்கு தணிக்கை அறிக்கை மற்றும் இ-சலான் வழங்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>பண்டிகைக் காலங்களில் சென்னையிலிருந்து சுமார் 3000 <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">ஆம்னி பேருந்துகள் </a>தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வதற்காக இயக்கப்பட்டு வருகின்றன.</p><p>விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகளில் பொதுமக்கள் மற்றும் பயணிகளிடமிருந்து நடைமுறையில் உள்ள கட்டணத்தை விட அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் பெறப்பட்டதை தொடர்ந்து, கடந்த ஐந்து தினங்களாக, தமிழ்நாடு முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய குழு அமைத்து ஆம்னி பேருந்துகளில் சிறப்பு வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><h2>உரிய நடவடிக்கை</h2><p>அதன்படி, கடந்த ஐந்து தினங்களில் தமிழ்நாடு முழுவதும் ஆம்னி பேருந்துகள் தணிக்கை செய்யப்பட்டன. இதில் விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 1169 ஆம்னி பேருந்துகளுக்கு தணிக்கை அறிக்கை மற்றும் இ-சலான் வழங்கப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.</p><h2>அபராதம் வசூல்</h2><p>இந்த சிறப்பு தணிக்கையின் போது, விதிமீறல்களுக்காக இணக்க கட்டணம் (Compounding fee) ரூ.24,44,100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் அபராதமாக வாகன உரிமையாளாரிடமிருந்து உடனடியாக (Spot fine) ரூ.5,40,000  வசூலிக்கப்பட்டது. மேலும், பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு தமிழ்நாட்டில் இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளிடமிருந்து தமிழ்நாட்டிற்கு செலுத்த வேண்டிய வரியாக ரூ.53,62,074 வசூலிக்கப்பட்டது. இதன் மூலம், கடந்த ஐந்து தினங்களில் மட்டும் ஆம்னி பேருந்துகள் தொடர்பாக வரி மற்றும் இணக்கக் கட்டணமாக மொத்தம் ரூ.59,02,074 வசூலிக்கப்பட்டுள்ளது.</p><p>மேற்கண்ட தணிக்கையின் போது, 15.09.2026 வரை, அதிக கட்டணம் வசூலித்ததாக கண்டறியப்பட்ட 11 ஆம்னி பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தகுதிச்சான்று புதுப்பிக்கப்படாமல் (Fitness Certificate) மற்றும் உரிய சாலை வரி செலுத்தப்படாமல் இயக்கப்பட்ட 6 பேருந்துகள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளில் ஆன்லைன் மூலம் பயணிகளால் பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டை வாகன உரிமையாளர் ரத்து செய்யும் நேர்வில், அந்த பயணிகளுக்கு மாற்றுப்பேருந்தில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்படவேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்து அனுமதிச்சான்று ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.</p><h2>40 சிறப்பு தணிக்கை குழுக்கள்</h2><p>பொதுமக்கள் மற்றும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, பண்டிகைக் காலங்களில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும், விதிமீறல்களை கட்டுப்படுத்தவும் இந்த சிறப்பு வாகனத் தணிக்கை தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்படும். இதனை உறுதிசெய்வதற்காக தமிழ்நாட்டில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய சுமார் 40 சிறப்பு தணிக்கை குழுக்கள் அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புகார் தெரிவிக்க வேண்டிய கைப்பேசி எண் : 9384808333. புகார் தெரிவிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி: tc.tn@nic.in</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அரசியல் பாகுபாடுகளை மறந்து... அண்ணா பிறந்தநாளில் இனிப்பு பரிமாறிய தி.மு.க.-அ.தி.மு.க. நிர்வாகிகள்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/forgetting-political-differences-dmk-aiadmk-executives-served-sweets-on-annas-birthday</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/forgetting-political-differences-dmk-aiadmk-executives-served-sweets-on-annas-birthday#comments</comments><guid isPermaLink="false">719a35d9-3707-461f-9123-982f71793a62</guid><pubDate>Tue, 15 Sep 2026 12:50:10 +0000</pubDate><atom:updated>2026-09-15T12:50:10.612Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,DMK,தி.மு.க,அ.தி.மு.க.,அண்ணா பிறந்தநாள்,Anna&apos;s birthday,இனிப்பு வழங்கி கொண்டாட்டம்,Celebration with sweets</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/077rv95c/121.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/077rv95c/121.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><p>பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, திருப்பூரில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒருவருக்கொருவர் இனிப்பு ஊட்டி மகிழ்ந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.</p><p>திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்டச் செயலாளர் செல்வராஜ் தலைமையில் நிர்வாகிகள், ரெயில் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்தனர்.</p><h2>மாலை அணிவித்து மரியாதை</h2><p>அதே நேரத்தில், ரெயில் நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப்படத்திற்கு திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்டச் செயலாளர் வேல்குமார் சாமிநாதன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.</p><p>இரு நிகழ்ச்சிகளும் ஒரே நேரத்தில், அருகருகே நடைபெற்றதால் தி.மு.க., அ.தி.மு.க. நிர்வாகிகள் ஒரே இடத்தில் திரண்டனர். இரு தரப்பினரும் போட்டிப்போட்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.</p><h2>இனிப்பு பரிமாற்றம்</h2><p>அப்போது எதிர்பாராத விதமாக, இரு கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்ததுடன், நேருக்கு நேர் கை கொடுத்து வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். தொடர்ந்து தாங்கள் வைத்திருந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">இனிப்பு</a>களையும் ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்தனர்.</p><h2>பொதுமக்கள் நெகிழ்ச்சி</h2><p>பொதுவாக அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக செயல்படும் தி.மு.க., அ.தி.மு.க. நிர்வாகிகள், அண்ணாவின் பிறந்தநாளில் அரசியல் வேறுபாடுகளை மறந்து இனிப்பு பரிமாறிக் கொண்ட இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சுவாரஸ்யத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title> பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-precautionary-measures-meeting-led-by-minister-vijay-tamilan-parthiban</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-precautionary-measures-meeting-led-by-minister-vijay-tamilan-parthiban#comments</comments><guid isPermaLink="false">725883eb-df70-4624-9b94-b06808194966</guid><pubDate>Tue, 15 Sep 2026 12:23:10 +0000</pubDate><atom:updated>2026-09-15T12:23:10.643Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>monsoon,முன்னெச்சரிக்கை நடவடிக்கை,Consultative meeting,பருவமழை,ஆலோசனைக் கூட்டம்,அமைச்சர் தமிழன் பார்த்திபன்,Minister Tamilan Parthiban</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/1yl1svr4/minister-partiban.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்]]></media:title><media:description type="html"><![CDATA[  பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/1yl1svr4/minister-partiban.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில், ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p> <h2>கண்காணிப்பு நடவடிக்கை</h2><p> தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, சென்னை மாநகராட்சியில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88">வடகிழக்கு பருவமழையினை </a>முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணித்திட மண்டல வாரியாக  அமைச்சர் பெருமக்களும், மண்டல கண்காணிப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><h2>ஆலோசனைக் கூட்டம்</h2><p>இதன் ஒரு பகுதியாக, சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களுக்கான பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில், ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">ஆலோசனைக் கூட்டம்</a> தலைமைச் செயலகத்தில் இன்று  நடைபெற்றது.</p><h2>போக்குவரத்து துறை அமைச்சர் ஆய்வு</h2><p>இக்கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர், ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை விரிவாக ஆய்வு மேற்கொண்டு, நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடித்திடவும், நீர்நிலைகள், கால்வாய்கள், மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டி தொட்டிகளில் ஆகாயத்தாமரைகள் அகற்றுதல் மற்றும் தூர்வாரும் பணிகளை முழுமையாக மேற்கொண்டு, மழைநீர் சீராக செல்லும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மழைநீர் தேங்கும் தாழ்வான பகுதிகளில் மழைநீரை உடனுக்குடன் வெளியேற்றிடும் வகையில் மோட்டார் பம்புகளை தயார்நிலையில் வைத்திடவும் மழைக்காலத்தில் பொதுமக்களை தங்க வைப்பதற்கான நிவாரண முகாம்களில் அடிப்படை வசதிகள் மற்றும் மைய சமையலறைகளில் உணவு பொருட்களின் இருப்பு ஆகியவற்றினை உறுதி செய்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><h2>அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்</h2><p> சென்னை மாநகராட்சி, நீர்வளத்துறை, சென்னை குடிநீர் வாரியம், மின்சாரத்துறை, நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட சேவைத்துறைகள் ஒருங்கிணைந்து முன்னெச்சரிக்கை பணிகளை சிறப்பாக மேற்கொண்டு, இம்மாத இறுதிக்குள் முடித்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>இக்கூட்டத்தில், மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் வாகே சங்கேத் பல்வந்த், (ஆலந்தூர்), செந்தில் ராஜ், (அடையாறு), மண்டல அலுவலர்கள், மாநகராட்சி உள்ளிட்ட சேவைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மதுராந்தகம் - தாராபுரம் இடைத்தேர்தல்: சிபிஎம், சிபிஐ வேட்பாளர்கள் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madhurantakam-tarapuram-by-election-cpm-cpi-candidates-announced</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madhurantakam-tarapuram-by-election-cpm-cpi-candidates-announced#comments</comments><guid isPermaLink="false">ec30b8bf-9701-42b9-abcb-763886d3f889</guid><pubDate>Tue, 15 Sep 2026 12:06:04 +0000</pubDate><atom:updated>2026-09-15T12:06:04.299Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,இடைத்தேர்தல்,CPI,மதுராந்தகம்,Tarapuram,தாராபுரம்,சிபிஎம்,CPM,By-election,Madhurandakam,வேட்பாளர்கள் அறிவிப்பு,Candidates notice - வேட்பாளர்கள் அறிவிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/hslzypd4/120.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/hslzypd4/120.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மதுராந்தகம் - தாராபுரம் தொகுதியின் இடைத்தேர்தலில் சிபிஎம், சிபிஐ சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை பெ.சண்முகம் மற்றும் மு. வீரபாண்டியன் அறிவித்துள்ளனர்</p><h2>5 முனை போட்டி</h2><p>மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது. த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க.. நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.</p><p>இந்த நிலையில், தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்து வரும் கம்யூனிஸ்டு கட்சிகள் இணைந்து இடைத்தேர்தலில் தனியாக போட்டியிடுகின்றனர். மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் போட்டியிடுகிறது.</p><h2>வேட்பாளர்கள் அறிவிப்பு</h2><p>சென்னை தியாகராயநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் இன்று மாலை 5 மணியளவில் வேட்பாளர்களை சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மற்றும் சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் கூட்டாக அறிவித்துள்ளனர். அதன்படி தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக ப. லட்சுமணனும், மதுராந்தகம் தொகுதி வேட்பாளராக  மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளராக சுகந்தியும்  போட்டியிடுவார் என தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பழனி மலைகளில் வரலாற்றுப் பொக்கிஷம்! 2,000 ஆண்டுகள் பழமையான இடுகாட்டில் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/historical-treasure-in-palani-hills-2000-year-old-burial-ground-under-investigation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/historical-treasure-in-palani-hills-2000-year-old-burial-ground-under-investigation#comments</comments><guid isPermaLink="false">da772f8c-f992-4be9-9a70-84a38f89827f</guid><pubDate>Tue, 15 Sep 2026 11:54:45 +0000</pubDate><atom:updated>2026-09-15T11:54:45.133Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பழனி,Palani,சுடுகாடு,பழமை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/s2ort7tn/118.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/s2ort7tn/118.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><p>திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைப்பகுதியில் உள்ள குண்டாடி (மாச்சூர்) என்ற இடத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான இடுகாடு அமைந்துள்ளது. இந்த இடத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">அகழாய்வு </a>செய்து ஆராய்ச்சி மேற்கொள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி.) மும்பை சார்பில் இந்திய தொல்லியல் ஆய்வகத்திடம் அனுமதி கோரப்பட்டது.</p><p>இதனைத் தொடர்ந்து, நிபுணர் குழுவின் ஆய்வுக்குப் பிறகு கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி அகழாய்வுக்கு அனுமதி வழங்கப்பட்டது.</p><h2>25 சதுர மீட்டரில் ஆய்வு</h2><p>இதன்படி, ஐ.ஐ.டி. மும்பை சார்பில் 5 மீட்டர் நீளம், 5 மீட்டர் அகலம் கொண்ட மொத்தம் 25 சதுர மீட்டர் பரப்பளவில் மட்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஆய்வுக்கு ‘தென்னிந்திய இடுகாடுகளின் நிலப்பரப்பு’ என பெயரிடப்பட்டுள்ளது.</p><p>இந்த ஆய்வின் மூலம் தென்னிந்திய மக்கள் இறந்தவர்களை எவ்வாறு அடக்கம் செய்தனர், அவர்களின் நம்பிக்கைகள் மற்றும் இறுதிச்சடங்குகள், கலாசாரம், சமூக வாழ்க்கை உள்ளிட்ட பல்வேறு வரலாற்றுத் தகவல்களை அறிந்துகொள்ள முடியும் என ஆய்வின் தலைவர் ஸ்மிரிதி ஹரிச்சரன் தெரிவித்துள்ளார். இவர், ஐ.ஐ.டி. மும்பையின் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் துறையில் இணை பேராசிரியராக உள்ளார்.</p><h2>ஆய்வுப் பொருட்களை முறையாக ஒப்படைக்க உத்தரவு</h2><p>இந்த ஆய்வின்போது, ஆய்வுத் தலைவர் ஸ்மிரிதி ஹரிச்சரன் ஆய்வு நடைபெறும் நாட்களில் சம்பந்தப்பட்ட இடத்தில் நேரில் இருக்க வேண்டும் என இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் தலைவர் ஹேமசாகர் நாயக் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், அகழாய்வில் கிடைக்கும் அனைத்து பொருட்களும் முறையாகப் பட்டியலிடப்பட்டு, தொல்லியல் ஆய்வகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், திருச்சி சரக தொல்லியல் கண்காணிப்பாளர் ஆய்வு நடைபெறும் இடத்துக்கு அவ்வப்போது நேரில் சென்று ஆய்வுப் பணிகளை மேற்பார்வையிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மகளைக் கேலி செய்ததால் ஆத்திரம்.. வாலிபரை கொலை செய்து தண்ணீர் தொட்டியில் வீசிய தந்தை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/angry-at-being-made-fun-of-by-his-daughter-father-kills-youth-and-throws-him-into-a-water-tank</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/angry-at-being-made-fun-of-by-his-daughter-father-kills-youth-and-throws-him-into-a-water-tank#comments</comments><guid isPermaLink="false">8ad31d6c-57fc-4389-943c-1a43c4991cc0</guid><pubDate>Tue, 15 Sep 2026 11:49:55 +0000</pubDate><atom:updated>2026-09-15T11:49:55.665Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Dindigul,திண்டுக்கல்,police,போலீஸ்,murder,கொலை,தண்ணீர் தொட்டி,water tank</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/wxhrkdt9/10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/wxhrkdt9/10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><p>மகளை கேலி செய்த வாலிபரை கொலை செய்து தண்ணீர் தொட்டியில் வீசிய தந்தையின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p><h2>கொலை</h2><p>திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் சங்கிலி முருகன் (38). கடந்த 10-ந்தேதி சங்கிலி முருகன் காணாமல் போனதாக செம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையின் ஒரு பகுதியாக, சங்கிலி முருகனின் உறவினர்கள் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்தவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், சங்கிலி முருகன் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் மறைக்கப்பட்டிருப்பது தொடர்பான அதிர்ச்சி தகவல் போலீசாருக்கு கிடைத்தது.</p><h2>குற்றவாளிகளிடம் விசாரணை</h2><p>இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், திண்டுக்கல் சாலையில் சங்கிலி முருகனை காரில் அழைத்துச் சென்று அவரது கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு, உடலை மதுரை திருமங்கலம் அருகே உள்ள உச்சப்பட்டியில் அமைந்துள்ள வீட்டு வசதி வாரிய குடிநீர் தொட்டியில் வீசியதாக தெரியவந்தது.</p><p>இந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">கொலை</a>யை செய்ததாக ஒப்புக்கொண்ட அதே பகுதியைச் சேர்ந்த பாக்கிய செல்வம், முருகன், மருதுபாண்டி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், குடிநீர் தொட்டியில் இருந்து சங்கிலி முருகனின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.</p><p>தொடர்ந்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a> நடத்திய விசாரணையில், பாக்கிய செல்வத்தின் மகளை சங்கிலி முருகன் கேலி செய்ததும், இதுதொடர்பாக இரு குடும்பங்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் விளைவாக இந்த கொலை நடந்திருப்பதும் தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழக கோவில்களில் செல்போன் கொண்டு செல்ல பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamilnadu-temples-mobile-ban-relaxation-talks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamilnadu-temples-mobile-ban-relaxation-talks#comments</comments><guid isPermaLink="false">217a330a-6408-475b-9d3c-b16e6ca72e7f</guid><pubDate>Tue, 15 Sep 2026 11:41:36 +0000</pubDate><atom:updated>2026-09-15T11:41:36.406Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பக்தர்கள்,Devotees,செல்போன்,அனுமதி,தமிழக கோவில்கள்,Tamil Nadu temples,Mobile Phones Ban</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/8a8j28x6/cell-phone-ban.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ செல்போன்]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக கோவில்களில் செல்போன் கொண்டு செல்ல பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி?]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/8a8j28x6/cell-phone-ban.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் உள்ள முக்கிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">கோவில்களில்</a> ஆன்மிக புனிதத்தன்மையை பாதுகாக்கும் நோக்கில்,  செல்போன்களை எடுத்து செல்ல இந்து சமய அறநிலையத் துறை தடை விதித்திருந்தது. இதற்காக கோவில் வாசல்களில் செல்போன்லாக்கர்கள் அமைக்கப்பட்டு, கட்டணமும் வசூலிக்கப்பட்டு வந்தது. </p><p>ஆனால், இத்திட்டம் அமலுக்கு வந்த நாளில் இருந்தே பல்வேறு கோவில்களில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D">செல்போன்</a> தடை திட்டம் சத்தமில்லாமல் முடங்கி வருகிறதா? என்ற பலத்த கேள்வி தற்போது ஆன்மிக பக்தர்களிடையே எழுந்துள்ளது.</p><h2>பக்தர்கள் கடும் அவதி</h2><p> கோவிலுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் தங்களது விலையுயர்ந்த செல்போன்களை பாதுகாப்பாக ஒப்படைக்கவும், தரிசனம் முடிந்து மீண்டும் அவற்றை பெற்றுக்கொள்ளவும் டோக்கன் பெற்றுக்கொண்டு பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. அவசர தேவைகளுக்கு குடும்பத்தினரை தொடர்புகொள்ள முடியாமல் முதியவர்களும், பெண்களும் கடும் அவதிக்குள்ளாகினர்.</p><h2>தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள்?</h2><p>இதன் காரணமாக, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், நெல்லையப்பர் கோவில் உள்ளிட்ட சில முக்கிய தலங்களில் பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், தீவிர கண்காணிப்பும் சற்றே தளர்த்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைப்பறை செயல்படாததால், வழக்கம்போல பக்தர்கள் எவ்வித தடையுமின்றி தங்களது செல்போன்களை கோவிலுக்குள் எடுத்து செல்லும் நிலையும் அரங்கேறி வருகிறது.</p><h2>அதிகாரிகள் ஆலோசனை</h2><p>இதுகுறித்து அறநிலைய துறை வட்டாரங்கள் கூறுகையில், "பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் அவசர தேவைகளை கருத்தில்கொண்டு, போன்களை 'சுவிட்ச் ஆப்' அல்லது 'சைலண்ட்' செய்த நிலையில் உள்ளே எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இதனால் இத்திட்டத்தை தொடர்ந்து தீவிரமாக அமல்படுத்துவதா அல்லது சில தளர்வுகளை அறிவிப்பதா என்பது குறித்து உயர் அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்" என்று தெரிவித்துள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>முதல் - அமைச்சர் விஜய் முன்னிலையில் ரூ.15,300 கோடி முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/investment-agreements-worth-rs-15300-crore-signed-in-the-presence-of-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/investment-agreements-worth-rs-15300-crore-signed-in-the-presence-of-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">26f87952-6658-4120-b927-1e14e46589e0</guid><pubDate>Tue, 15 Sep 2026 10:53:15 +0000</pubDate><atom:updated>2026-09-15T10:53:15.344Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கையெழுத்து,புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்,MoU signed,Chief Minister Vijay,முதல் - அமைச்சர் விஜய்,Investment Agreement</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/lo1e7wra/111.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/lo1e7wra/111.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>லண்டனில் முதல் - அமைச்சர் விஜய் முன்னிலையில்  ரூ.15,300 கோடி முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.</p><p>இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில், தமிழ்நாட்டில் உற்பத்தி ஆலைகள், உலகளாவிய திறன் மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகளை நிறுவி விரிவுபடுத்துவதற்காக, தமிழ்நாடு அரசுக்கும் முன்னணி உலகளாவிய நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.</p><h2>ரூ.15,300 கோடி முதலீடு</h2><p>ரூ.15,300 கோடிக்கும் அதிகமான முதலீட்டு முன்மொழிவுகள் மற்றும் உறுதிமொழிகள் மூலம் மாநிலத்தில் 10,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு முதல-அமைச்சர் விஜய் முன்னிலையில் (14.9.2026) நேற்று  இங்கிலாந்து, லண்டனில், தமிழ்நாடு அரசின் முதலீட்டு மேம்பாட்டு முகமையான வழிகாட்டி (Guidance TamilNadu) நிறுவனத்திற்கும், முன்னணி உலகளாவிய நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், ஒரு உலகளாவிய வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம், இந்தியாவில் தனது முதல் புதிய உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டில் நிறுவுவதற்கான விருப்பக் கடிதத்தை வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் ஹிந்துஜா குழும முதலீடுகளின் தற்போதைய முன்னேற்ற நிலை குறித்து அக்குழுமத்தினர் தமிழ்நாடு முதல்-அமைச்சரை சந்தித்து விளக்கிக் கூறினர்.</p><p>45-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டுவரும் முன்னணி பன்னாட்டு நிறுவனமான 'சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட்' (Samvardhana Motherson International Limited), தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, ஒருங்கிணைப்பு மற்றும் தளவாடங்கள் (D.E.M.A.L.) சார்ந்த வசதிகளை நிறுவுவதன்மூலம் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.</p><h2>ரூ.11,000 கோடி முதலீடு</h2><p>இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், மதர்சன் குழுமம் சுமார் ரூ.11,000 கோடி மதிப்பிலான புதிய முதலீட்டு வாய்ப்புகள் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 7,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த முதலீடுகள், மதர்சன் குழுமத்தின் பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பக் கூட்டாண்மையர்களுடன் (Joint Venture &amp; Technical Partners) இணைந்து மேற்கொள்ளப்படவுள்ளன.</p><h2>ரூ.300 கோடி முதலீடு</h2><p>பிரிட்டனைத் (UK) தலைமையிடமாகக் கொண்ட, திறன்மிக்க மின்மாற்றிகளைத் தயாரிக்கும் வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனம், திருவள்ளூர் மாவட்டத்தில் தனது மின்மாற்றி உற்பத்திப் பணிகளின் அடுத்தகட்டத்திற்காக ரூ.300 கோடி முதலீடு செய்யவுள்ளது. இதன்மூலம் 400 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இந்த ஆலை, மேம்பட்ட மின் மற்றும் விநியோக மின்மாற்றி உற்பத்தியில் தமிழ்நாட்டின் உற்பத்தித் திறன்களை மேம்படுத்துவதோடு, உள்ளூர் மதிப்புக் கூட்டலையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விரிவாக்கம், தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் மின்கட்டமைப்பு உபகரணங்கள் உற்பத்திக்கான ஒரு முன்னணி மையமாகத் தமிழ்நாட்டின் நிலையை வலுப்படுத்தும்.</p><h2>புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்</h2><p>தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை (GCCs) விரிவுபடுத்துவதற்கும், நிறுவுவதற்கும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஸ்வீடனின் சிக்மா டெக்னாலஜி குழுமம், எம்பெடட் சிஸ்டம்ஸ், மின்மயமாக்கல் மற்றும் தொழில்துறை டிஜிட்டல்மயமாக்கல் ஆகிய துறைகளில் 600 உயர் மதிப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னையில் உள்ள தனது உலகளாவிய திறன் மையங்களை (Global Capability Centres), தனது இந்திய நிறுவனமான ஸ்ரியா சொல்யூஷன்ஸ் மூலம் விரிவாக்குவதற்கு தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் (Guidance TamilNadu) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.</p><p>தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் ஏர்ன்ஸ்ட் &amp; யங் நிறுவனம் (Ernst &amp; Young) ஒரு சர்வதேச நிறுவனத்திற்காக, தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையத்தை (Global Capability Centre) அமைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. 'கட்டு-இயக்கு-மாற்றியமை-மாற்று' (Build-Operate-Transform-Transfer - BOTT) ஏற்பாட்டின் கீழ், இந்த மையத்தை நிறுவுவதற்கும், அதன் ஆரம்பகட்ட செயல்பாடுகளுக்கும் ஏர்ன்ஸ்ட் &amp; யங் (Ernst &amp; Young) நிறுவனம் ஆதரவளிக்கும். பின்னர், அம்மையம் அச்சர்வதேச நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். இந்த உலகளாவிய திறன் மையம் (GCC) சுமார் 1,000 கோடி ரூபாய் முதலீட்டுடன், 2,000-க்கும் மேற்பட்ட உயர் மதிப்புள்ள புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மையம், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சென்னையில் உள்ள மவுண்ட்- பூந்தமல்லி சாலைப் பகுதியிலுள்ள GCC வழித்தடத்தில் அமையும்.</p><h2>ரூ.3,000 கோடி முதலீடு செய்திட விருப்பக் கடிதம்</h2><p>ஐரோப்பாவின் முன்னணி வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்று, இந்தியாவில், தான் மேற்கொள்ளவிருக்கும் ரூ.3,000 கோடி முதலீட்டிற்கு தமிழ்நாட்டையே விரும்பத்தக்க இடமாகக் கருதுவதாகத் தனது விருப்பத்தைத் தெரிவித்து,  தமிழ்நாடு முதல்-அமைச்சர் முன்னிலையில், தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரிடம் தனது விருப்பக் கடிதத்தை சமர்ப்பித்தது. முன்மொழியப்பட்ட இந்த முதலீட்டைச் சாத்தியமாக்கவும், மாநிலத்தில் அதன் செயல்பாடுகளை வெற்றிகரமாக நிறுவவும் தேவையான அனைத்து ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்குவதாகத் தமிழ்நாடு அரசு அந்நிறுவனத்திற்கு உறுதியளித்தது.</p><h2>ஹிந்துஜா குழுமத்தின் தலைமை நிர்வாகிகளுடன் சந்திப்பு</h2><p>அசோக் லேலண்ட் (Ashok Leyland) நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் தீரஜ் ஹிந்துஜா, ஃபினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Finolex Industries Limited) நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் பிரகாஷ் பி. சாப்ரியா, இயக்குநர் ரீட்டா ஹிந்துஜா சாப்ரியா, ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் ஆகியோர் லண்டனில் தமிழ்நாடு முதல்-அமைச்சரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர்.</p><p>இச்சந்திப்பின்போது, ஆகஸ்ட் 2026-ல் நடைபெற்ற 'வெற்றி' (VETTRI) தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது மேற்கொள்ளப்பட்ட ரூ.2,500 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) அடிப்படையில், எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் உட்பட, தமிழ்நாட்டில் ஹிந்துஜா குழுமம் மேற்கொண்டுள்ள முதலீடுகளின் முன்னேற்றம் குறித்து ஹிந்துஜா அவர்கள், தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களிடம் விளக்கினார். தமிழ்நாட்டில் தொடர்ந்து முதலீடு செய்வதிலும், வணிகத்தை விரிவுபடுத்துவதிலும் ஹிந்துஜா குழுமத்திற்கு உள்ள உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.</p><h2>அரசின் முழு ஆதரவு</h2><p>பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்யவும், தமிழ்நாட்டுடன் வர்த்தக மற்றும் வணிகத் தொடர்புகளை ஆழப்படுத்தவும் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய முன்னணி நிறுவனங்களுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் அழைப்பு விடுத்ததோடு, முதலீடுகளை எளிதாக்குவதிலும், மாநிலத்தில் அவர்களின் வணிகங்களை வெற்றிகரமாக நிறுவி இயக்குவதற்குத் தேவையான தமிழ்நாடு அரசின் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் முதலீட்டாளர்களுக்கு உறுதியளித்தார்.</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களின் சந்திப்புகளுடன், தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம் (Guidance TamilNadu) மற்றும் அரசு உயர் அலுவலர்கள், விண்வெளி மற்றும் பாதுகாப்பு, இரசாயனங்கள், தளவாடங்கள், கட்டுமானம், நிதிச் சேவைகள், சில்லறை வர்த்தகம் மற்றும் சட்ட சேவைகள் ஆகிய துறைகளைச் சேர்ந்த 10 முன்னணி நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்களுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்தினர். இந்தக் கலந்துரையாடல்களின் சாத்தியமான விளைவுகளில், பிரிட்டன் வர்த்தக நிறுவனங்களுக்கும், தமிழ்நாட்டின் ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தியாளர்களுக்கும் இடையேயான மூலப்பொருட்கள் கொள்முதல் ஒப்பந்தங்கள்; ஓசூருக்கு இங்கிலாந்து விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை பிரதிநிதிகள் குழு வருகை புரிவதற்கான வாய்ப்பு; அக்டோபர் மாதம் சென்னைக்கு இங்கிலாந்து மேயர் ஆணையத்தின் (NEMSA) பிரதிநிதிகள் குழுவின் வருகை; நிதிச் சேவைத் துறைக்கான திறன் மேம்பாட்டுக் கூட்டாண்மைகள்; இந்த ஆண்டின் பிற்பகுதியில் பிரிட்டனுடன் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதிப் பயிலரங்கம்; பிரிட்டன் - இந்தியா விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு உருவாகும் வாய்ப்புகளை அடையாளம் காட்டும் அறிக்கை தயாரித்தல் ஆகியவை அடங்கும்.</p><p>இந்நிகழ்வுகளில், இங்கிலாந்து நாட்டிற்கான இந்தியத் தூதர் குமரன் பெரியசாமி, I.F.S., நிதி மணி திரிபாதி, இ.ஆ.ப., Minister (Economic), High Commission of India, London, நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>
ஆவின் பால் விற்பனை 10 சதவீதம் குறைப்பு: பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aavin-milk-sales-down-by-10-milk-agents-association-alleges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aavin-milk-sales-down-by-10-milk-agents-association-alleges#comments</comments><guid isPermaLink="false">f0159adc-d22f-4226-a6ca-be019290771b</guid><pubDate>Tue, 15 Sep 2026 10:34:21 +0000</pubDate><atom:updated>2026-09-15T10:34:21.769Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Aavin,ஆவின்,Aavin Milk,ஆவின் பால்,பால் விற்பனை,Milk Distribution,பால் முகவர்கள் சங்கம்,சு.ஆ.பொன்னுசாமி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/u5uzc5hj/5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆவின் பால்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/u5uzc5hj/5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/aavin">ஆவின்</a> பால் விற்பனை 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக பால் முகவர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனரும், மாநில தலைவருமான சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- </p>  <p>தமிழ்நாடு அரசு ஆவினுக்கான பால் கொள்முதல் விலையை கடந்த வாரம் உயர்த்திய நிலையில், அதற்கேற்ற வகையில் விற்பனை விலையை உயர்த்தாமல் கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் திமுக செய்த அதே தவறை தற்போதைய தவெக அரசும் செய்திருப்பதால் ஆவினுக்கான நிதியிழப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. காரணம் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டும் ஆவினுக்கான பால் வரத்து அதிகரிக்காததால் அண்டை மாநில கூட்டுறவு பால் நிறுவனமான நந்தினியிடமிருந்து கூடுதல் விலை கொடுத்து பால் கொள்முதல் செய்தும், வடமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் வெண்ணெய், பால் பவுடர் கொண்டு பால் பாக்கெட் உற்பத்தி செய்யும் நிலை தொடர்வதாலும் ஆவின் நிறுவனத்திற்கு ஏற்படும் கடுமையான நிதியிழப்பை கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் விற்பனையை குறைக்க இணையத்தில் நிர்வாக இயக்குநரும், மாவட்ட ஒன்றியங்களில் பொது மேலாளர்களும் வாய்மொழி உத்தரவுகளை பிறப்பித்து ஆவின் பாலுக்கு செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி, அரசுக்கு அவப்பெயரை உருவாக்கி வருகின்றனர்.</p><p>குறிப்பாக குமரி மாவட்டத்தில் ஆவின் நிறை கொழுப்பு பால் (Full Gream Milk) உற்பத்தி மற்றும் விற்பனை கடந்த சில வாரங்களுக்கு முன் முற்றிலுமாக நிறுத்தப்பட்டதோடு, ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி, தஞ்சை, கோவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே ஆவின் பால் விநியோகம் பலமடங்கு திட்டமிட்டு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பால் முகவர்கள் பொதுமக்களுக்கு தேவையான பாலினை தொடர்ந்து விநியோகம் செய்ய முடியாமல் திணறி வருவதோடு, குறைந்த வருவாயில் வாழ்க்கையை ஓட்டி வரும் பால் முகவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து, பால் விநியோகத்திற்கான வாகன எரிபொருள், பணியாளர்கள் சம்பளம், கடை வாடகை, மின்சார கட்டணம் உள்ளிட்ட செலவினங்களை கட்டுப்படுத்த முடியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.</p> <p>மேலும் சென்னை பெருநகரில் தினசரி ஆவின் பால் விற்பனை சுமார் 16.5 லட்சம் லிட்டருக்கு மேல் இருந்த நிலையில் பால் முகவர்களுக்கான ஆவின் பால் விநியோகத்தை கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 25% க்கும் மேல் ஆவின் நிர்வாகத்தால் குறைக்கப்பட்ட சூழலில் இன்று (15.09.2026) 10% வரை ஆவின் பால் விநியோகத்தை குறைக்க ஆவின் நிர்வாகத்தால் மீண்டும் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சென்னை பெருநகர் முழுவதும் அந்த உத்தரவு இன்று (15.09.2026) அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னை பெருநகரில் பொதுமக்களுக்கு தேவையான ஆவின் பால் பாக்கெட் விநியோகத்தை செய்ய முடியாமல் பால் முகவர்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். ஆவின் நிர்வாகத்தின் இந்த செயல்பாடுகள் என்பது "உடலுக்கேற்ற வகையில் ஆடைகளை வடிவமைத்து வெட்டி, தைக்காமல், ஆடைகளுக்கேற்ற வகையில் உடலை வெட்டி, காயப்படுத்துவதைப் போல் உள்ளது.”</p><p>ஏற்கனவே கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள் இதுவரை ஆவினை வெறும் வாக்கு வங்கி அரசியலுக்கான ஆயுதமாக மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில் புதிதாக ஆட்சியமைத்த ஜோசப் விஜய் அவர்களாவது ஆவினில் மாற்றத்தை கொண்டு வருவார் என்கிற எண்ணத்தில் ஆவினை மீட்டெடுப்பதற்கான பல்வேறு ஆலோசனைகளை செயல்படுத்த பால்வளத்துறை அமைச்சர் சி.விஜயலட்சுமி அவர்களை கடந்த மாதம் தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து அதற்கான தரவுகளை அளித்து பேசியும், முதலமைச்சர் அவர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக பலமுறை கடிதங்கள் அனுப்பியும் கூட எந்த ஒரு மாற்றத்திற்கான முயற்சியும் இதுவரை முன்னெடுக்கப்படாததோடு, "கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போல நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக ஆவினை அழிவை நோக்கி கொண்டு செல்வது பால் முகவர்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.”</p> <p>மேலும், சுமார் 4 ஆண்டுகள் கழித்து ஆவினுக்கான பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 6.00 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் பல்லாயிரம் கோடி ருபாய் ஆவின் நிறுவனம் நிதி இழப்பில் சென்றாலும் அந்த இழப்பு ஆவினை முடக்கி விடாது. காரணம் மாநில அரசின் நிதி பங்களிப்போடு செயல்படும் கூட்டுறவு நிறுவனம் என்பதால் அந்த இழப்பு பொதுமக்கள் தலையில் வேறு வகை வரியாக திணிக்கப்படும். அதே சமயம் ஆவினுக்கான பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 6.00 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளதால் தற்போது தனியார் பால் நிறுவனங்களும் விவசாய பெருமக்களுக்கான கொள்முதல் விலையை அதே அளவு உயர்த்தி வழங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. ஆனால் அவ்வாறு தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கினால் அந்நிறுவனங்களுக்கு ஏற்படும் கடுமையான நிதியிழப்பை அந்நிறுவனங்களே ஈடுசெய்து கொள்ள வேண்டும் என்பதால் வேறு வழியின்றி அந்த பால் கொள்முதல் விலை உயர்விற்கேற்ப "தனியார் பால் நிறுவனங்களும் விற்பனை விலையை உயர்த்தும்” வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே ஆவின் மற்றும் தனியார் பாலுக்குமான விற்பனை விலை என்பது மலைக்கும், மடுவிற்குமானதாக இருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக குறைந்தபட்சம் லிட்டருக்கு 19.00 ரூபாய் முதல் 24.00 ரூபாய் வரை விற்பனை வித்தியாசம் இருக்கும் நிலையில் தனியார் நிறுவனங்களின் பால் விற்பனை விலை மேலும் உயர்த்தப்படும்பட்சத்தில் பொதுமக்கள் விற்பனை விலை குறைவாக உள்ள ஆவினை நோக்கி திரும்பும் நிலை ஏற்படும், ஆனால் ஏற்கனவே ஆவினில் கடுமையான பால் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் ஆவின் பாலுக்கு கூடுதல் தட்டுப்பாடு ஏற்பட்டு புதிய அரசுக்கு அவப்பெயரே பரிசாக கிடைக்கும்.</p> <p>எனவே, தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் காப்பற்றப்பட வேண்டும், பொதுமக்களுக்கு தங்குதடையற்ற பால் விநியோகம் தொடர வேண்டுமானால் ஆவினுக்கான பால் கொள்முதல் விலை உயர்விற்கேற்ற வகையில் விற்பனை விலையை உடனடியாக மாற்றியமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். ஆனால் ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்தினால் மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியதிருக்கும் என்பதை விட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியதிருக்கும் என்பதை மனதில் கொண்டு ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்தாமல் காலம் தாழ்த்துவது என்பது பொதுமக்கள் மத்தியில் தவெக அரசுக்கு மேலும், மேலும் அவப்பெயரையே ஏற்படுத்தும் என்பதால் இனியும் காலம் தாழ்த்தாமல் ஆவின் பால் விற்பனை விலையை மற்ற மாநில கூட்டுறவு பால் நிறுவனங்களைப் போல விற்பனை விலையில் சீர்திருத்தம் செய்து தட்டுப்பாடற்ற பால் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் எனவும், அமுல், நந்தினி போன்று அரசியல் தலையீடற்ற, சுயசார்போடு இயங்குகின்ற வகையில் ஆவின் நிறுவனத்தை தன்னாட்சி பெற்ற நிறுவனமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் எனவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மரியாதைக்குரிய ச.ஜோசப் விஜய் அவர்களையும், மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர்  சி.விஜயலட்சுமி அவர்களையும் மற்றும் தமிழ்நாடு அரசையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அமைச்சர் நிர்மல் குமாருக்கு எதிராக உரிமை மீறல் புகார் - சபாநாயகரை சந்தித்த திமுக எம்.எல்.ஏ.க்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/complaint-of-violation-of-rights-against-minister-nirmal-kumar-dmk-mlas-who-met-the-speaker</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/complaint-of-violation-of-rights-against-minister-nirmal-kumar-dmk-mlas-who-met-the-speaker#comments</comments><guid isPermaLink="false">0c6534fd-0326-4489-b650-982a9511c6b9</guid><pubDate>Tue, 15 Sep 2026 10:21:15 +0000</pubDate><atom:updated>2026-09-15T10:21:15.729Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>rights,உரிமை,மீறல்,DMK MLAs,திமுக எம்.எல்.ஏக்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/epis97t5/117.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/epis97t5/117.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தலைமைச்செயலகத்தில் சட்டசபை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை திமுக சட்டமன்ற கொறடா எ.வ.வேலு உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர்.</p><h2>உரிமை மீறல் புகார்</h2><p>மிசா தொடர்பாக முதல்-அமைச்சர் பேசிய கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக் கோரி ஏற்கனவே அளிக்கப்பட்ட மனுவின் நிலை குறித்து அவர்கள் சபாநாயகரிடம் கேட்டறிந்தனர். மேலும், சட்டசபையில் உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்ததாகக் கூறி சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாருக்கு எதிராக திமுக சார்பில் சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் அளிக்கப்பட்டது.</p><p>பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">திமுக எம்.எல்.ஏ.க்கள்</a>, சட்டசபையில் முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமானவரை அவதூறாக பேசுவது விதிமீறல் என்றும், சட்டசபையில் இல்லாதவர்கள் குறித்து பேசுவதும் விதிப்படி தவறு என்றும் தெரிவித்தனர். மிசா தொடர்பான முதல்-அமைச்சரின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக் கோரி ஏற்கனவே மனு அளித்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.</p><h2>அடுத்தகட்ட நடவடிக்கை</h2><p>உரிமை மீறல் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், புகார் குறித்து ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என தெரிவித்த அவர்கள், சட்டசபையில் தவறான தகவல்களை பகிர்ந்துகொள்வது விதிமீறல் என்றும் குற்றம்சாட்டினர். மேலும், “இல்லாதது பொல்லாதவற்றை பேசி திசை திருப்பும் அரசியலில் தவெக அமைச்சரவை ஈடுபடுகிறது” என்றும் திமுக எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>பெட்ரோல் பங்கில் பயங்கரம்... வாலிபர் வெட்டிக்கொலை - மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/terror-at-petrol-station-youth-hacked-to-death-police-launch-net-to-nab-mysterious-gang</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/terror-at-petrol-station-youth-hacked-to-death-police-launch-net-to-nab-mysterious-gang#comments</comments><guid isPermaLink="false">ef6ccb2f-9c03-4016-a964-8ac7ce7bab3c</guid><pubDate>Tue, 15 Sep 2026 10:18:08 +0000</pubDate><atom:updated>2026-09-15T10:18:08.693Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,விசாரணை,Chengalpattu,செங்கல்பட்டு,murder,கொலை,investigation,போலீசார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/asu39ooo/9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/asu39ooo/9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>செங்கல்பட்டு,</p><p>பெட்ரோல் போட வந்த இளைஞரை வழிமறித்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி சென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p><h2>வெட்டிக் கொலை</h2><p>செங்கல்பட்டு சிங்கபெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த வீரா என்ற வீரமுத்துகிருஷ்ணன் (வயது 26). இவர் அப்பகுதியில் பாஸ்ட் புட் கடை நடத்தி வருகிறார். <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">கொலை</a> வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது திருச்சி - சென்னை பைபாஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்காக தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார்.</p><p>அப்போது 2 பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், வீரமுத்துகிருஷ்ணனை வழிமறித்து கையில் வைத்திருந்த ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் பலத்த காயமடைந்த வீரமுத்து ரத்த வெள்ளத்தில் மிதந்து துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>மர்ம கும்பலுக்கு வலைவீச்சு</h2><p>இது குறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a> சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சிங்கபெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ஆகாஷ் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் வீரமுத்துகிருஷ்ணன் முக்கிய குற்றவாளியாக இருந்ததாக கூறப்படுகிறது.</p><p>இதனால், முன்விரோதம் காரணமாக பழிவாங்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மதுரை காவல் ஆணையர் அலுவலகம் முன் போராடியவர்கள் மீது தாக்குதல் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/attack-on-protesters-in-front-of-madurai-police-commissioners-office-communist-party-of-india-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/attack-on-protesters-in-front-of-madurai-police-commissioners-office-communist-party-of-india-condemns#comments</comments><guid isPermaLink="false">38fe82b9-5892-421f-ae00-9811b93459ec</guid><pubDate>Tue, 15 Sep 2026 10:00:23 +0000</pubDate><atom:updated>2026-09-15T10:00:23.895Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தாக்குதல்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,Communist Party of India,Madurai,மதுரை,attack,M Veerapandian,மு. வீரபாண்டியன்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/f7qc0dyt/veerapandian.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு. வீரபாண்டியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/f7qc0dyt/veerapandian.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரை காவல் துறை ஆணையர் அலுவலகம் முன் போராடியவர்கள் மீது காவல் துறையினர் கொடூர தாக்குதல் நடத்தியதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.</p><p>இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D">மு. வீரபாண்டியன் </a>வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-</p><p>மதுரை ஆனையூர் கூடல் புதூரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற மாணவர் கடந்த ஏழாம் தேதி மர்மமான முறையில் இறந்துள்ளார். 11 ஆம் வகுப்பு படித்து வந்த அந்த  மாணவரின் உடல்  முட்புதர்கள் நிறைந்த குட்டை பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மாணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அது கொலையாக இருக்கலாம் எனவும் உறவினர்கள் கூறிவருகின்றனர். மாணவர் இறந்து ஒரு வார காலம் ஆகியும், அவரது உடலை வாங்க தாயார் யோகலட்சுமி மறுத்து வருகிறார். அவரது மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும், மகன் மரணத்திற்குக் காரணமான குற்றவாளிகளை கண்டறிந்து, சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.</p><h2>கொடூரமான காட்சி</h2><p>இது தொடர்பாக காவல்துறை எந்த நடவடிக்கையையும் இதுவரை எடுக்காத நிலையில், மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகம் முன்பாக  போராட்டம் உறவினர்களால் நடத்தப்பட்டுள்ளது. போராட்டத்தில் பங்கேற்ற பெண்களை காவல்துறையினர் மிக மோசமான முறையில் தாக்கியுள்ளனர். சாலையில் தவறி விழுந்த பெண்ணின் கழுத்தை பெண் காவலர்கள்  காலால் மிதிக்கின்ற கொடூரமான காட்சி பல்வேறு ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது.</p><h2>நடவடிக்கை</h2><p>காவல்துறையினரின் இத்தகைய கொடூரமான தாக்குதல் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அதுவும் முதல்-அமைச்சர் பொறுப்பில் உள்ள காவல் துறையைச் சேர்ந்த அதிகாரிகளே, மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது மிகுந்த கவலை அளிக்கிறது. இது கடும் கண்டனத்திற்குரியது. போராடிய  மக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய காவல் துறையினர்  மீது நடவடிக்கை எடுப்பதோடு, மாணவரின் மரணத்தை கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>5 ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கு அரசு அனுமதிக்க கூடாது - வைகோ</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-should-not-approve-5-hydrocarbon-wells-vaiko</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-should-not-approve-5-hydrocarbon-wells-vaiko#comments</comments><guid isPermaLink="false">202f7584-da18-407a-b4e2-f116927ce484</guid><pubDate>Tue, 15 Sep 2026 09:52:17 +0000</pubDate><atom:updated>2026-09-15T09:52:17.843Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vaiko,வைகோ,அரசு,Hydro Carbon,TamilNadu Goverment,ஹைட்ரோ கார்பன் கிணறுகள்,அனுமதிக்க கூடாது,wells</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/vja4nuyn/vaiko.gif" width="768"><media:title type="html"><![CDATA[  வைகோ]]></media:title><media:description type="html"><![CDATA[ ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/vja4nuyn/vaiko.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காவிரி படுகையில் புதிதாக 5 ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதிக்க கூடாது என்று வைகோ தெரிவித்தார். இது தொடர்பாக, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B">வைகோ </a>வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><h2>இந்தியா நிறுவனம்</h2><p>தமிழகத்தின் கடலோர பகுதியில் உள்ள காவிரி படுகையில் CY-OS/90/1 என்ற பிளாக்கில் PY-3 என்ற எண்ணெய் பகுதியின் ஆபரேட்டராக ஹார்டி எக்புளோரேஷன் அண்ட் புரொடக்ஷன் இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது.</p> <h2>ஒப்பந்தம்</h2><p>CY-OS/90/1 பிளாக் சுமார் 81 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இவை அனைத்தும் மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் பிஎஸ்சி எனப்படும் உற்பத்தி பகிர்வு ஒப்பந்தத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.</p><h2>5 கிணறுகள்</h2><p>இந்நிலையில் ,ஹார்டி எக்புளோரேஷன் அண்ட் புரொடக்ஷன் இந்தியா நிறுவனம்  மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சகத்திற்கு எழுதி உள்ள கடிதத்தில், PY-3 பகுதியில் தற்போது முழு வீச்சில் எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஹைட்ரோ கார்பன் உற்பத்தியை பெருக்குவதற்கு புதிதாக 5 கிணறுகள் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும்.</p> <h2>கடல்வழி குழாய்கள்</h2><p>இவற்றில் உற்பத்தி செய்யப்படும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D">ஹைட்ரோ கார்பன்</a> கடல்வழி குழாய்கள் மூலம் FPSOக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சுத்திகரிப்பு, சேகரிப்பு ஆகியவற்றை தொடர்ந்து  கப்பல் மூலம் பயன்பாட்டிற்கு கொண்டு செல்லப்படும்.</p><h2>நிராகரிக்க வேண்டும் </h2><p>இந்த திட்டத்திற்காக புதிதாக எந்த ஒரு நிலத்தையும் கையகப்படுத்த வேண்டியது இல்லை. கடற்கரையோர வசதிகள் தேவைப்படாது” என்று குறிப்பிட்டிருக்கிறது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான காவிரி படுகையில், ஹார்டி எக்புளோரேஷன் அண்ட் புரொடக்ஷன் இந்தியா நிறுவனம் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க கேட்டுள்ள அனுமதியை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.</p><h2>மத்திய அரசு உரிமம்</h2><p>தமிழ்நாட்டை ஒட்டிய கடலோர பகுதிகளிலும், கடல் பகுதிகளிலும், வேளாண் நிலங்களிலும் ஏராளமான ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு உரிமம் வழங்கியும் கூட மறுமலர்ச்சி திமுக  உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களின் எதிர்ப்பால் அத்திட்டங்களுக்கு கடந்த காலத்தில் மாநில அரசு அனுமதி அளிக்கவில்லை. </p><p>அதே நிலையே தொடர வேண்டும். சுற்றுச்சூழலையும், கடல் வளத்தையும், மீனவர்களின் வாழ்வாதாரங்களையும் அழிக்கும் எந்தத் திட்டங்களையும் தமிழக அரசு அனுமதிக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கடல்வளத்தை சீரழிக்கும் திட்டங்களுக்கு அரசு அனுமதிக்க கூடாது - டி.டி.வி. தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-should-not-allow-projects-that-degrade-marine-resources-ttv-dinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-should-not-allow-projects-that-degrade-marine-resources-ttv-dinakaran#comments</comments><guid isPermaLink="false">f7757309-aea4-48a2-b242-5ebf0dd5eb8d</guid><pubDate>Tue, 15 Sep 2026 09:39:33 +0000</pubDate><atom:updated>2026-09-15T09:39:33.509Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,Mayiladuthurai,மயிலாடுதுறை,டி.டி.வி. தினகரன்,Oil well,எண்ணெய் கிணறு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/nqrkbx8d/ttv1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டி.டி.வி. தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/nqrkbx8d/ttv1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மயிலாடுதுறை,</p><p>மயிலாடுதுறை மாவட்டத்தை ஒட்டிய கடல் பகுதியில் 5 புதிய எண்ணெய் கிணறுகள் அமைக்க அமமுக பொதுச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">டி.டி.வி. தினகரன்</a> கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>எண்ணெய் கிணறுகள்</h2><p>மயிலாடுதுறை மாவட்டத்தை ஒட்டிய கடற்பகுதியில் புதிய எண்ணெய் கிணறுகளை அமைக்க தனியார் நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. கடல்வளத்தையும், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கும் இத்திட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் ஒருபோதும் அனுமதி வழங்கக் கூடாது.</p><p>மயிலாடுதுறை மாவட்டத்தை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் புதிதாக 5 எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகளை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி Hardy Exploration &amp; Production India Limited என்ற நிறுவனம் மத்திய அரசிடம் விண்ணப்பித்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.</p><h2>சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை</h2><p>கடலோரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்தைத் தாங்கி நிற்கும் இயற்கை வளம் நிறைந்த கடல் பகுதிகளில் ஏற்கனவே செயல்பட்டு வரும் எண்ணெய் கிணறுகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கே இதுவரை உரிய தீர்வு கிடைக்காத நிலையில், தற்போது கூடுதலாக எண்ணெய் கிணறுகளை அமைக்க முயற்சிப்பது மீனவ மக்களின் பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கும் சூழலை உருவாக்கக்கூடும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.</p><h2>அனுமதிக்க முடியாது...</h2><p>காவிரி டெல்டா மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகள் ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதிகளில் செயல்படுத்த முடியாத எண்ணெய் கிணறு அமைக்கும் திட்டங்களை அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் செயல்படுத்த முயற்சிக்கும் தனியார் நிறுவனங்களின் நடவடிக்கைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.</p><p>எனவே, கடல் வளத்தையும், மீன்வளத்தையும், மீனவ சமுதாய மக்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கும் வகையில் எண்ணெய் கிணறுகளை அமைக்கக் கோரி அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவதோடு இத்திட்டத்திற்கு தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் பரிந்துரை உள்ளிட்ட எவ்வித அனுமதிகளையும் மாநில அரசு வழங்கக் கூடாது என்றும் வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை எம்.ஜி.ஆர். பல்கலை. பட்டமளிப்பு விழாவில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் - நயினார் நாகேந்திரன் மகிழ்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-mgr-university-convocation-nirmala-sitharaman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-mgr-university-convocation-nirmala-sitharaman#comments</comments><guid isPermaLink="false">14a3b34c-a0be-45aa-970e-dc414221219b</guid><pubDate>Tue, 15 Sep 2026 09:18:59 +0000</pubDate><atom:updated>2026-09-15T09:18:59.306Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,பட்டமளிப்பு விழா,ceremony,மகிழ்ச்சி,convocation,மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்,Union Minister Nirmala Sitharaman</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/ny69n8wr/n.nwithniramla.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ நிர்மலா சீதாராமன், நயினார் நாகேந்திரன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் - நயினார் நாகேந்திரன் மகிழச்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/ny69n8wr/n.nwithniramla.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D">மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்</a> கலந்து கொண்டது மகிழ்ச்சி என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக, தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்ததாவது:-</p> <h2>பட்டமளிப்பு விழா</h2><p>இன்றைய தினம் சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 36-ஆவது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D">பட்டமளிப்பு விழாவில்</a>, மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சிதாராமன் கலந்து கொண்டு, பட்டம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கியதில் பெரும் மகிழ்ச்சியும் மனநிறைவும் அடைந்தேன்.</p><h2>பாராட்டுகள்</h2><p>இந்நிறுவனத்தின் தலைவரும், புதிய நீதிக் கட்சியின் நிறுவன தலைவருமான ஏ.சி. சண்முகம், தொடர்ந்து பல ஆண்டுகளாக கல்வி சேவையில் ஈடுபட்டு, எளிய குடும்பங்களை சேர்ந்த பல மாணவர்களின் கல்வி கனவுகளை நனவாக்கி வருவதற்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2>புதிய பொறுப்பு</h2><p>தங்களது கல்வி பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டி, பட்டம் பெற்றுள்ள அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன். இன்று அவர்கள் பெற்றுள்ள இந்த பட்டம், தங்களது அறிவையும் திறமையையும் சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயனுள்ள வகையில் அர்ப்பணிக்கும் புதிய பொறுப்பிற்கான தொடக்கமாக அமையட்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">இன்றைய தினம் சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 36-ஆவது பட்டமளிப்பு விழாவில், மாண்புமிகு மத்திய நிதித்துறை அமைச்சர் திருமதி. <a href="https://x.com/nsitharaman?ref_src=twsrc%5Etfw">@nsitharaman</a> அவர்களுடன் கலந்து கொண்டு, பட்டம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கியதில் பெரும்… <a href="https://t.co/7aHtIbRDLX">pic.twitter.com/7aHtIbRDLX</a></p>&mdash; Nainar Nagenthran (@NainarBJP) <a href="https://x.com/NainarBJP/status/2099771089245413720?ref_src=twsrc%5Etfw">September 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item></channel></rss>