<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 03 Sep 2026 17:22:39 +0000</lastBuildDate><item><title>தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி: முதல்-அமைச்சர் விஜய்க்கு நடிகர் அஜித்குமார் நன்றி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/actor-ajith-kumar-thanks-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/actor-ajith-kumar-thanks-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">636dca76-587b-4995-add2-a0166a1390ae</guid><pubDate>Thu, 03 Sep 2026 17:18:09 +0000</pubDate><atom:updated>2026-09-03T17:18:09.785Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,அஜித்குமார்,நடிகர் அஜித்குமார்,Actor Ajith Kumar,Ajith Kumar,Ajith Kumar Racing,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/9vtk92ra/CHENNAI-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/9vtk92ra/CHENNAI-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரில் இன்றைய அவை நடவடிக்கையின்போது, 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் விஜய் பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, தமிழ்நாட்டில் இளைஞர்களிடையே மோட்டார் பந்தயங்கள் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, விளையாட்டு சுற்றுலாவையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்தப் புதிய "மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்" உருவாக்கப்படும்.</p><p>பார்முலா 1, பார்முலா 2, பார்முலா 3, மற்றும் பார்முலா 4 உள்ளிட்ட பன்னாட்டுப் பந்தயங்களை நடத்தும் வகையில் சர்வதேசத் தரத்திலான பந்தயத் தடம் மற்றும் பயிற்சி மையங்கள் இங்கு அமைக்கப்படும். தேசிய மற்றும் சர்வதேச அளவிலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் வீரர்களை உருவாக்குவதோடு, தமிழ்நாட்டை உலகளாவிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் மையமாக மாற்றுவதே இதன் முக்கிய நோக்கமாகும் என்று தெரிவித்தார்.</p><p><strong>இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய்யின் இந்த அறிவிப்புக்கு நடிகரும், கார் ரேசருமான அஜித்குமார் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,</strong></p><p>“தமிழ்நாட்டின் இளைஞர்களை விளையாட்டுத் துறையின் பக்கம் ஈர்த்து, அவர்களிடம் உள்ள திறமைகளைக் கண்டறிந்து, அவற்றை முறையாக வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு முன்னெடுப்புகள் மிகுந்த பாராட்டுக்குரியவை.</p><p>குறிப்பாக, தமிழ்நாட்டில் பிரத்யேகமான மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தற்போது மோட்டார் ஸ்போர்ட்ஸில் ஈடுபட்டு வரும் ஒருவராக, விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் புகழ்பெற்ற வார்த்தைகளை சற்றே மாற்றி இவ்வாறு கூற விரும்புகிறேன்.</p><p>"One small step by the Tamil Nadu Government, one giant leap for Indian motorsports.". முதல்-அமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அனைத்து முயற்சிகளும் பெரும் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் அனைத்து விளையாட்டு முன்னெடுப்புகளும் மாபெரும் வெற்றி பெறட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இந்திய ராணுவ தென்பகுதி புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உல்லாஸ் கிர்பேகர் பொறுப்பேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/lieutenant-general-ullah-kirbekar-takes-charge-as-the-new-commander-of-the-indian-armys-southern-command</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/lieutenant-general-ullah-kirbekar-takes-charge-as-the-new-commander-of-the-indian-armys-southern-command#comments</comments><guid isPermaLink="false">82d4fc2f-b3f7-4c5a-b603-6bea12e599bb</guid><pubDate>Thu, 03 Sep 2026 16:40:10 +0000</pubDate><atom:updated>2026-09-03T16:40:10.548Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,இந்திய ராணுவம்,indian army,takes charge,பொறுப்பேற்பு,southern region,புதிய தளபதி,லெப்டினன்ட் ஜெனரல்,Lieutenant General,தென்பகுதி,உல்லாஸ் கிர்பேகர்,New Commander,Ullah Kirbekar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/1l2nylku/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்திய ராணுவ தென்பகுதி புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உல்லாஸ் கிர்பேகர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/1l2nylku/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D">இந்திய ராணுவ</a> தென்பகுதி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF">புதிய தளபதியாக</a> நியமிக்கப்பட்டுள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D">லெப்டினன்ட் ஜெனரல்</a> உல்லாஸ் கிர்பேகர் தனது பணிகளை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a> வெற்றிப் போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி தொடங்கினார். </p><h2>லெப்டினன்ட் ஜெனரல் உல்லாஸ் கிர்பேகர் பொறுப்பேற்பு</h2><p>லெப்டினன்ட் ஜெனரல் உல்லாஸ் கிர்பேகர், இந்திய ராணுவத்தின் தென்பகுதி தளபதியாக நேற்று முன்தினம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">பொறுப்பேற்றார்</a>. அவர் தனது பணிகளை சென்னை வெற்றிப் போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி தொடங்கினார்.</p><h2>1989-ல் சமிக்ஞை பிரிவில் அதிகாரி</h2><p>டிசம்பர் 1989-ல் சமிக்ஞை பிரிவில் அதிகாரியாகப் பணியில் சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் உல்லாஸ் கிர்பேகர், தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவர் ஆவார். இவர் நீலகிரி மாவட்டம் வெலிங்டனிலுள்ள பாதுகாப்பு சேவை அலுவலர் கல்லூரி, தேசிய பாதுகாப்பு கல்லூரி ஆகியவற்றில் பயிற்சிகளை முடித்துள்ளார். இவர் கான்பூர் ஐஐடி-யில் கணினி அறிவியலில் தொழில்நுட்ப முதுகலைப் பட்டமும், அமெரிக்காவின் கடற்படை முதுகலை பள்ளியில் தகவல் போர்முறை பிரிவில் அறிவியல் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.</p><h2>பல்வேறு நிலப்பரப்புகளிலும் பணியாற்றிய அனுபவம்</h2><p>பல்வேறு நிலப்பரப்புகளிலும் பணியாற்றிய அனுபவத்தை இவர் பெற்றுள்ளார். இவர் கிழக்கு மண்டலத்தில் மலைப்பகுதிப்பிரிவு சிக்னல் படைப்பிரிவு, சிறப்பு உளவுப் பிரிவு ஆகியவற்றிற்குத் தலைமை தாங்கியுள்ளார். இவர் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநரகம், தகவல் அமைப்புகளுக்கான தலைமை இயக்குநரகம் மற்றும் கிழக்கு மண்டல தலைமையகம்; திட்ட மேலாண்மை அமைப்பு, தந்திரோபாய தகவல் தொடர்பு அமைப்பு; லடாக் பிராந்தியத்தில் உள்ள படைப்பிரிவு  தலைமையகத்தின் தலைமை சிக்னல் அதிகாரி; கிழக்கு கமாண்ட் தலைமை சிக்னல் அதிகாரி; ராணுவத் தலைமையகத்தில் நிர்வாகம் மற்றும் ஒருங்கிணைப்புப் பிரிவின் கூடுதல் தலைமை இயக்குநர்; மற்றும் நிதித் திட்டமிடல் தலைமை இயக்குநர் போன்ற பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். மேலும், மௌவ் நகரில் உள்ள ராணுவத் தொலைத்தொடர்பு பொறியியல் கல்லூரி மற்றும் வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் அலுவலர் கல்லூரி ஆகியவற்றில் பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.</p><h2>2023-ல் சேனா பதக்கம்</h2><p>லெப்டினன்ட் ஜெனரல் உல்லாஸ் கிர்பேகர், அவரது சிறப்பான பணிக்காக 2023 ஜனவரி 26 அன்று 'சேனா பதக்கம்' மற்றும் 2025 ஜனவரி 26 அன்று 'அதி விசிஷ்ட சேவா பதக்கம்' ஆகியவற்றைப் பெற்றார். இவர் 2024 டிசம்பர் 1 முதல் சிக்னல் படைப்பிரிவின் 72-வது கர்னல் கமாண்டன்டாக நியமிக்கப்பட்டார். </p><p>இந்திய ராணுவ தென்பகுதி தலைவர் என்ற முறையில், லெப்டினன்ட் ஜெனரல் உல்லாஸ் கிர்பேகர், இப்பகுதியில் செயல்பாட்டு, தளவாட, நிர்வாக மற்றும் முன்னாள் வீரர்களின் நலன் சார்ந்த பொறுப்புகளை மேற்பார்வையிடுவார். அத்துடன் சிவில் நிர்வாகத்துடனும், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுடனும் ராணுவத்தின் தொடர்பை வலுப்படுத்துவதுடன், இப்பகுதியில் வளர்ந்து வரும் பாதுகாப்புத் தொழில்துறையின் நலன்களுக்கான நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவார். </p>]]></content:encoded></item><item><title>ரூ.1,200 கோடியில் புதிய தலைமை செயலகம் : சென்னையில் 3 இடங்கள் தேர்வு?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vijay-announces-new-secretariat-at-rs-1200-crore-3-locations-selected-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vijay-announces-new-secretariat-at-rs-1200-crore-3-locations-selected-in-chennai#comments</comments><guid isPermaLink="false">a66006f2-335d-4323-b3c5-6c77560085c6</guid><pubDate>Thu, 03 Sep 2026 16:26:19 +0000</pubDate><atom:updated>2026-09-03T16:26:19.752Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,Vijay,விஜய்,தமிழக சட்டசபை,Secretariat,சென்னை தலைமை செயலகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/og37woz3/cheniaian33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ புதிய தலைமை செயலகம்]]></media:title><media:description type="html"><![CDATA[ 
ரூ.1,200 கோடியில் புதிய தலைமை செயலகம் விஜய் அறிவிப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/og37woz3/cheniaian33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என சட்டசபையில்  முதல்-அமைச்சர் விஜய் இன்று  பேரவை விதி 110 -ன் கீழ் அறிவித்துள்ள நிலையில், இதற்காக  சென்னையில் மூன்று இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.</p><h2>தமிழக அரசு அடையாளம் </h2><p>இந்த மூன்று இடங்களில் இறுதியாக முடிவு செய்யப்படும் இடத்தை இம்மாத நடுப்பகுதிக்குள் அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம், பட்டினப்பாக்கத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் உருவாக்கப்பட்ட குடியிருப்புப் பகுதி, நந்தம்பாக்கத்தில் தற்போது செயல்படாத இந்தியன் டிரக்ஸ் அண்ட் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் இருந்த இடம். இந்த மூன்று இடங்களையே தமிழக அரசு அடையாளம் கண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>இந்த ஒவ்வொரு இடமும் அதற்கே உரிய சாதக, பாதகங்களைக் கொண்டுள்ளன. கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம் பகுதியானது, ஆளுநர் மாளிகையான லோக் பவனுக்கு எதிரே உள்ளது. இங்கு அகலமான சர்தார் படேல் சாலை உள்ளது. எனவே, எளிதில் செல்வதற்கு ஏற்ற இடமாக இது கருதப்படுகிறது. </p><h2>ஜெயலலிதா அடிக்கல் நாட்டிய இடம்</h2><p>இந்த பகுதியில்தான் 43 ஏக்கர் பரப்பளவில் தலைமைச் செயலகம் கட்ட முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2003-ல் அடிக்கல் நாட்டினார். எனினும், இதன் அருகில்தான் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு ஏராளமான மாணவர்கள் பயின்று வரும் நிலையில், இடத்தைத் தேர்வு செய்வதற்கு முன்பாக கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயமாக இது கருதப்படுகிறது.</p> <h2>பட்டினப்பாக்கம், நந்தம்பாக்கம்</h2><p>பட்டினப்பாக்கத்தைப் பொறுத்தவரை இப்பகுதிக்கு அகலமான சாலை வசதி இல்லை. அதோடு, நகரின் முக்கிய பகுதிகளான மயிலாப்பூர் மற்றும் அடையாறுக்கு அருகில் உள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.</p><p>மேலும்  இந்தப் பகுதி முதல்-அமைச்சர் விஜய்யின் இல்லம் மற்றும் தவெக தலைமை அலுவலகம் அமைந்துள்ள பனையூரில் இருந்து தற்போதைய தலைமைச் செயலகம் செல்லும் தூரத்தை விட குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p>இதேபோல், நந்தம்பாக்கத்தில் இந்தியன் டிரக்ஸ் அண்ட் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் செயல்பட்டு வந்த சுமார் 62 ஏக்கர் நிலம் தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலத்தின் ஒரு பகுதியில் சென்னை வர்த்தக மையம் அமைக்கப்பட்டது. எஞ்சியுள்ள இடம் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான பரிசீலனையில் உள்ளது. நந்தம்பாக்கத்துக்கு மெட்ரோ ரெயில் சேவைகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>இடத்தை இறுதி செய்வதற்கு முன்பாக, அதன் சாதக, பாதகங்கள் குறித்து ஆராயப்பட்டு முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>இளம்பெண்ணுக்கு சரமாரி அரிவாள் வெட்டு: மர்ம நபர்கள் 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-net-2-suspects-for-slashing-young-woman-with-sickle</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-net-2-suspects-for-slashing-young-woman-with-sickle#comments</comments><guid isPermaLink="false">5e969f04-8422-4b89-885f-83665824fa05</guid><pubDate>Thu, 03 Sep 2026 15:52:59 +0000</pubDate><atom:updated>2026-09-03T15:52:59.900Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,young woman,தூத்துக்குடி,இளம்பெண்,Sickle cut,அரிவாள் வெட்டு,mysterious persons,மர்ம நபர்கள்,Udangudi,உடன்குடி,போலீசார் வலைவீச்சு,police netting</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/lx9tpi4e/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மர்ம நபர்கள் 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/lx9tpi4e/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், உடன்குடி பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D">இளம்பெண்</a>ணை வழிமறித்து சரமாரியாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">அரிவாளால் வெட்டி</a>விட்டுத் தப்பியோடிய 2 <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">மர்ம நபர்களை</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81">போலீசார் தீவிரமாக வலைவீசி</a> தேடி வருகின்றனர். </p><h2>இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு</h2><p>தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி செட்டியாபத்து அருகேயுள்ள குமாரசாமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (தொழிலாளி). இவரது மனைவி சாந்தி (வயது 31). இவர் நேற்று இரவு நேரம் உடன்குடி அருகே உள்ள செட்டியாபத்து செல்வபுரம் பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கே பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், திடீரென சாந்தியை வழிமறித்தனர். கண்இமைக்கும் நேரத்தில் அந்த 2 பேர், தாங்கள் வைத்திருந்த அரிவாளால் சாந்தியை சரமாரியாக வெட்டிவிட்டு, பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். </p><h2>தீவிர சிகிச்சை</h2><p>இதில் பலத்த காயமடைந்த சாந்தி, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி சாலையில் அலறி துடித்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதியினர், அவரை உடனடியாக மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. </p><h2>மர்ம நபர்கள் 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு</h2><p>இந்த சம்பவம் குறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்கள் யார்? தாக்குதலுக்கான பின்னணி மற்றும் காரணம் என்ன? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி, தப்பியோடிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசியில் பட்டாசு ஆலை விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழப்பு: மாணிக்கம் தாகூர் எம்.பி. இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/workers-killed-in-firecracker-factory-accident-in-srivilliputhur-sivakasi-manickam-thakur-mp-condoles</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/workers-killed-in-firecracker-factory-accident-in-srivilliputhur-sivakasi-manickam-thakur-mp-condoles#comments</comments><guid isPermaLink="false">0931c4aa-65d9-4029-a122-5579749522ac</guid><pubDate>Thu, 03 Sep 2026 15:40:22 +0000</pubDate><atom:updated>2026-09-03T15:40:22.561Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,இரங்கல்,ஸ்ரீவில்லிபுத்தூர்,Srivilliputhur,Sivakasi,சிவகாசி,loss of life,workers,condolences,Firecracker Factory Accident,தொழிலாளர்கள் உயிரிழப்பு,மாணிக்கம் தாகூர் எம்.பி.,பட்டாசு ஆலையில் வெடிவிபத்து,Manickam Thakur MP</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/buqb69gg/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் மாணிக்கம் தாகூர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/buqb69gg/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">ஸ்ரீவில்லிபுத்தூர்</a> மற்றும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF">சிவகாசி</a>யில் அடுத்தடுத்து நடந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">வெடிவிபத்து</a>களில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">தொழிலாளர்கள் உயிரிழந்ததற்கு</a> மாணிக்கம் தாகூர் எம்.பி. இரங்கல் தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF">மாணிக்கம் தாகூர் எம்.பி.</a> வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: </p><p>ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சிவகாசி ஆகிய இரண்டு இடங்களில் உள்ள பட்டாசு ஆலைகளில் அடுத்தடுத்து நிகழ்ந்த கோர வெடிவிபத்துகளில் தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், சொல்லொணா வேதனையும் அடைந்தேன். </p><p>உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>நாமக்கல்: கல்லூரி பேருந்து மோதி 4 மாணவிகள் உயிரிழப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/4-students-killed-in-college-bus-crash</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/4-students-killed-in-college-bus-crash#comments</comments><guid isPermaLink="false">727641ca-dacc-46f8-bb64-1a65ca44e999</guid><pubDate>Thu, 03 Sep 2026 15:33:36 +0000</pubDate><atom:updated>2026-09-03T15:33:36.519Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Namakkal,நாமக்கல்,RoadAccident,கல்லூரி பேருந்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/1lynhbzt/bus33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
நாமக்கல்]]></media:title><media:description type="html"><![CDATA[ ல்லூரி பேருந்து மோதி 4 மாணவிகள் உயிரிழப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/1lynhbzt/bus33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல்,</p><p>திருச்செங்கோடு அருகே இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றபோது தனியார் கல்லூரி பேருந்து மோதியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பள்ளி மாணவிகள், ஒரு கல்லூரி மாணவி உயிரிழந்தனர்.</p><h2>இருசக்கர வாகனத்தில் அழைத்து வருவது வழக்கம் </h2><p>நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் அருகே கொன்னையார் ஊராட்சி சக்கராம்பாளையம் போயர் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சேகர்-அமுதா தம்பதி மகள்கள் பிளஸ் 1 படிக்கும் நிவேதா(17), ஏழாவது படிக்கும் தனுஸ்ரீ(13), ஆறாம் வகுப்பு படிக்கும் அபிநயா(12).</p><p>எலச்சிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் இவர்களை ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் படித்து வரும் (சித்தப்பா ரமேஷ்பாபு மகள்) சுபிதா என்ற கலைச்செல்வி (19) தினமும் பள்ளிக்கு சென்று இருசக்கர வாகனத்தில் அழைத்து வருவது வழக்கம்.</p><h2>சாலையை கடக்க முயன்றபோது </h2><p>அந்த வகையில் இன்று மாலை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF">கல்லூரி</a> முடிந்து வீட்டிற்கு வந்த கலைச்செல்வி இரு சக்கர வாகனத்தில் மூவரையும் அழைத்து வர பிற்பகல் 4.30 மணியளவில் பள்ளிக்கு சென்றார். அங்கிருந்து வீட்டிற்கு 4 பேரும் ராசிபுரம்–திருச்செங்கோடு சாலையில் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, சக்கராம்பாளையம் தனியார் பெட்ரோல் பங்க் அருகில் பிரிவு சாலையை கடக்க முயன்றனர்.</p><p>அப்போது ராசிபுரத்தில் இருந்து சங்ககிரி நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே கலைச்செல்வி, அபிநயா உயிரிழந்தனர்.</p><p>நிவேதா, தனுஸ்ரீ உயிருக்கு போராடிய நிலையில் சாலையோரம் கிடந்தனர். இந்த விபத்தை பார்த்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து இருவரையும் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.</p><h2>விபத்தை ஏற்படுத்திய கல்லூரி பேருந்து </h2><p>ஆனால், அவர்கள் இருவரும் செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் தனியார் கல்லூரி பேருந்தில் இருந்த 30–க்கும் மேற்பட்ட மாணவிகள் இதர பேருந்துகள் வாயிலாக தங்களுடைய வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.</p><p>ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததால் சக்கராம்பாளையம் கிராமம் சோகத்தில் மூழ்கி உள்ளது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள எலச்சிபாளையம் போலீசார் தப்பியோடிய கல்லூரி பேருந்து ஓட்டுநரை தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ஜோசியக்காரர்கள் பேசுவதை சீரியஸ் ஆக எடுக்க தேவையில்லை -   மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8Dno-need-to-take-what-fortune-tellers-say-seriously-manickam-thakur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8Dno-need-to-take-what-fortune-tellers-say-seriously-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">b1169751-5969-4a3d-8511-cf5dfa14a11e</guid><pubDate>Thu, 03 Sep 2026 15:19:44 +0000</pubDate><atom:updated>2026-09-03T15:19:44.236Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,ராகுல் காந்தி,மாணிக்கம் தாகூர்,ManickamTagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/0gsed9hh/thakur33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[  மாணிக்கம் தாகூர்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/0gsed9hh/thakur33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்தான் 2029 மக்களவைத் தேர்தலில் அடுத்த பிரதமர் என்று சமூக வலைத்தளத்தில் மீம்ஸ்கள் வெளியாகி விவாதத்துக்குரியதாக மாறியிருக்கிறது.  இதனிடையே, அடுத்த பிரதமர் யார்? என்று தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">ராகுல் காந்தி</a>க்கு அடுத்த இடத்தில் முதல்-அமைச்சர் விஜய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><p>இந்தநிலையில்,  மதுரை திருப்பரங்குன்றத்தில் காங்., மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>ஜோசியக்காரர்கள் பேசுவதை சீரியஸ் ஆக எடுக்கத் தேவையில்லை. அது ஜோசியக்காரர்களின் ஆருடம். கட்சியின் நிலைப்பாடு அது இல்லை, அது தனிப்பட்ட நபர்களின் கருத்து என்று தவெக பொருளாளர் தெளிவுபடுத்திவிட்டார். </p><p>தமிழக முதல்-அமைச்சராக விஜய் இருக்க வேண்டும், நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி அரசு என்பது எங்கள் எண்ணம். விஜய் அவர்கள் முதல்-அமைச்சராகும்  முதல் இலக்கு நிறைவேறிவிட்டது, ராகுல் காந்தியை பிரதமராக்க சேர்ந்து பணியாற்றுவோம் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>மதுபோதையில் தகராறு: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கீழே தள்ளிய வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/drunk-altercation-youth-arrested-for-pushing-police-sub-inspector-down</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/drunk-altercation-youth-arrested-for-pushing-police-sub-inspector-down#comments</comments><guid isPermaLink="false">837932c1-956c-40f2-b25c-97cd5065949a</guid><pubDate>Thu, 03 Sep 2026 14:58:33 +0000</pubDate><atom:updated>2026-09-03T14:58:33.967Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>drunkenness,Thoothukudi,தூத்துக்குடி,Youth arrested,வாலிபர் கைது,மதுபோதை,காயம்,Injury,Dispute,தகராறு,Police sub-inspector,போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/a63bzol7/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வாலிபர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/a63bzol7/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், ஆத்தூர் பஜார் பகுதியில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81">மதுபோதையில் தகராறு</a> செய்த வாலிபர்களை பிடிக்கச் சென்றபோது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D">போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்</a> பலத்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">காயம்</a> அடைந்தது தொடர்பாக ஒருவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்யப்பட்டுள்ளார். </p><h2>மதுபோதையில் தகராறு செய்த வாலிபர்கள்</h2><p>தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் பரதர் தெருவைச் சேர்ந்த ஜான் மகன் ராகேஷ் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அந்தோணி மகன் எமர்சன் ஆகிய 2 பேரும் ஆத்தூர் பஜார் பகுதியில் மதுபோதையில் பொதுமக்களுக்கு இடையூறாக தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ஆத்தூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பொன் முனியசாமி (வயது 59) தலைமையிலான போலீசார், தகராறில் ஈடுபட்ட 2 பேரையும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வர முயன்றனர். </p><h2>வாலிபர்களை பிடிக்க சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு காயம்</h2><p>போலீசாரின் வாகனத்திற்கு பின்னால் தங்களது பைக்கில் வருவது போல வந்த 2 பேரும், ஆத்தூர் பஜார் சாலையில் திடீரென திரும்பி தப்பிச் செல்ல முயன்றனர். இதைக் கண்ட சப்-இன்ஸ்பெக்டர் பொன் முனியசாமி மற்றும் போலீசார், தங்களது பைக்கில் அவர்களைப் பின்தொடர்ந்து சென்று மடக்கிப் பிடிக்க முயன்றனர். அப்போது தப்பியோட முயன்ற வாலிபர்கள் 2 பேரும் சப்-இன்ஸ்பெக்டர் பொன் முனியசாமியை ஓடும் பைக்கில் இருந்து பலமாகத் தள்ளிவிட்டு தப்பினர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சப்-இன்ஸ்பெக்டர் பொன் முனியசாமிக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அவர் ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். </p><h2>வாலிபர் கைது</h2><p>இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தப்பியோடிய எமர்சனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு நபரான ராகேஷை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>குடும்பத்திற்கு பில்லி சூனியம் வைத்ததாக கூறி மூதாட்டி கொலை - அக்கா, தங்கை கைது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/elderly-woman-murdered-over-allegations-of-casting-a-black-magic-spell-on-a-family-sisters-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/elderly-woman-murdered-over-allegations-of-casting-a-black-magic-spell-on-a-family-sisters-arrested#comments</comments><guid isPermaLink="false">1f87b5af-93a5-463a-b56f-77ca912db1c0</guid><pubDate>Thu, 03 Sep 2026 14:46:15 +0000</pubDate><atom:updated>2026-09-03T14:46:15.429Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Theni,தேனி,பில்லிசூனியம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/j7i24zk1/State-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/j7i24zk1/State-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி,</p><p>தேனி மாவட்டம் வருசநாடு அருகே, தங்கம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஜக்கம்மாள் என்ற மூதாட்டி, கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.  </p><p>இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், மூதாட்டியின் அக்கா மகள்களான அய்யம்மாள் மற்றும் நாகராணி ஆகிய இருவரும் சேர்ந்து இந்த கொலையை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. அவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. </p><p>மூதாட்டி ஜக்கம்மாள் தங்கள் குடும்பத்திற்கு பில்லி சூனியம் வைத்ததாகவும், அதனால் தங்கள் குடும்பத்தினருக்கு உடல்நலக் குறைவு மற்றும் கஷ்டங்கள் ஏற்பட்டு, தங்கள் பெற்றோர் உயிரிழந்ததாகவும் அய்யம்மாள் மற்றும் நாகராணி நம்பியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சகோதரிகள் இருவரும், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி ஜக்கம்மாளை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதையடுத்து, இருவரையும் கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். </p>]]></content:encoded></item><item><title>ஊழியர்கள் சஸ்பெண்ட் எதிரொலி:  டாஸ்மாக் கடைகள் திடீர் மூடல் - மதுபிரியர்கள் ஏமாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-stores-suddenly-closed-wine-lovers-disappointed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-stores-suddenly-closed-wine-lovers-disappointed#comments</comments><guid isPermaLink="false">8d53f9f0-8da7-4899-8dcb-fa9bf8749c89</guid><pubDate>Thu, 03 Sep 2026 14:38:04 +0000</pubDate><atom:updated>2026-09-03T14:38:04.030Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,டாஸ்மாக்,மதுபிரியர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/aeysti7b/tasmac33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
ஊழியர்கள் சஸ்பெண்ட் எதிரொலி]]></media:title><media:description type="html"><![CDATA[ டாஸ்மாக் கடைகள் திடீர் மூடல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/aeysti7b/tasmac33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><p>தமிழகத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 48 டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள் உள்ளன.</p><h2>ரூ.10 வசூல்</h2><p>இந்தக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு அரசு நிர் ணயித்த அதிகபட்ச சில்லறை விலையைவிட, பாட்டிலுக்கு ரூ.10 மற்றும் அதற்கு மேலும் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக நீண்டகாலமாக புகார்கள் இருந்து வருகின்றன. இந்தக் கூடுதல் வசூல் முறைக்கு முழுமை யாக முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று த.வெ.க. அரசு அறிவித்தது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.</p><p>செயலி மூலம் முன்பதிவு செய்துவிட்டு, கடைகளில் நேரடியாக மதுபானங்களை வாங்கும் நடைமுறையும் கொண்டு வரப்பட்டது. அதனால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.</p><h2>டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு</h2><p>இதன் ஒரு பகுதியாக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D">டாஸ்மாக் </a>ஊழியர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். அதில் பெரும்பாலானவை அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதன்படி, கடந்த 1-ந்தேதி முதல் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. </p><p>செப்டம்பர் மாதம் முதல் ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட சலுகைகள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இனிமேல் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பதை அரசு எந்த வகையிலும் அனுமதிக்காது என்று அமைச்சர் விக்னேஷ் கடுமையாக எச்சரித்தார்.</p><h2>பணியிடை நீக்கம் </h2><p>அரசு நிர்ணயித்த விலையைவிட ஒரு ரூபாய் கூடுதலாக வசூலித்தால்கூட முதல் முறையில் 3 மாதங்கள் பணியிடைநீக்கம் செய்யப்படுவார்கள். அதே தவறை மீண்டும் செய்தால் நிரந்தரமாக பணியில் இருந்து நீக்கப்ப டுவார்கள் என்று சட்டப்பேரவையிலும் அமைச்சர் அறிவித்தார்.</p><p>இந்தநிலையில், டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்தும், அமைச்சரின் எச்சரிக்கையையும் மீறி பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குவது தொடர்வதாக மதுப்பிரியர்கள் வேதனை தெரிவித்தனர். இதுதொடர்பான செய்தி நேற்றைய தினத்தந்தியில் பிரசுரிக்கப்பட்டது. இது அரசின் கவனத்துக்குச் சென்றது.</p><p>மேலும், டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை வசூலிப்பது உள்ளிட்ட புகார்களை மதுபிரியர்கள் எளிதாகத் தெரிவிக்கும் வகையில் தமிழக அரசு புதிய புகார் சேவை மையத்தை தொடங்கியது. இந்த மையத்திற்கு வந்த புகார்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், 67 டாஸ் மாக் ஊழியர்கள் தவறு செய்தது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்ததாக 67 டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>அந்த வகையில், கடந்த 2 நாட்களில் மட்டும் மொத்தம் 67 ஊழியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 3 மாதங்கள் பணி வழங்கப்படாது. அரசின் நடவடிக்கை டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இந்தநிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வாங்கியதாக எழுந்த புகாரின் பேரில், 6 டாஸ்மாக் ஊழியர்கள் நேற்று முன்தினம் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.</p><h2>ஊழியர்கள் சஸ்பெண்ட் எதிரொலி</h2><p>இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் ஊழியர்கள் டாஸ்மாக் கடைகளை திறக்காமல் போராட்டத்தில் குவிந்தனர். சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி, டாஸ்மாக் அலுவலகத்தில் நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினர். இந்த பிரச்னைக்காக திண்டிவனம் நகர மற்றும் கிராமப்பகுதியிலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் நேற்று மதியம் 12:00 மணியிலிருந்து திறக்கப்பவில்லை.</p><h2>மதுபிரியர்கள் ஏமாற்றம்</h2><p>இந்தநிலையில் சென்னை புறநகர் பகுதிகளான குன்றத்தூர், திருமுடிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் திடீரென எந்த முன்னறிவிப்பின்றி மூடப்பட்டது.  பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குவதை தடுக்கும் நடவடிக்கையில் ஏற்படும் செலவினத்தை ஏற்க வலியுறுத்தியதாக தெரிகிறது. </p><p>காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டத்திலும் தங்கள் சொந்த காசை செலவிடவேண்டியதாக ஊழியர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். டாஸ்மாக் கடைகள் போராட்டம் காரணமாக மூடப்பட்டதால், டாஸ்மாக் கடைக்கு வந்திருந்த மதுப்பிரியர்கள் ஏமாற்றமடைந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>வீடு புகுந்து புதுமாப்பிள்ளைக்கு சரமாரி வெட்டு: முகமூடி கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-net-masked-gang-that-broke-into-a-house-and-attacked-a-newlywed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-net-masked-gang-that-broke-into-a-house-and-attacked-a-newlywed#comments</comments><guid isPermaLink="false">9f6b1843-c06f-4feb-859e-6d5fa71bca97</guid><pubDate>Thu, 03 Sep 2026 14:24:54 +0000</pubDate><atom:updated>2026-09-03T14:24:54.569Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Sickle cut,அரிவாள் வெட்டு,போலீஸ் வலைவீச்சு,கும்பல்,mask,newlywed,புதுமாப்பிள்ளை,முகமூடி,Gang,வீடு புகுந்து,police netting,house break-in</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/q01rq7ex/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முகமூடி கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/q01rq7ex/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a>யில் வீடுபுகுந்து வாலிபரை அவரது மனைவி கண்முன்னே சரமாரியாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">அரிவாளால் வெட்டிவிட்டு </a>தப்பியோடிய 4 பேர் கொண்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF">முகமூடி</a>க் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D">கும்பலை</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81">போலீசார் வலைவீசி </a>தேடி வருகின்றனர். </p><h2>புதுமாப்பிள்ளை</h2><p>தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் பெரிய தெப்பக்குளம் அருகேயுள்ள வடக்கு ரதவீதியைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் முத்துக்கணேசன் (வயது 29), மெக்கானிக்கல் என்ஜினீயர். இவர் எட்டயபுரம் நாவலக்கம்பட்டி சாலையில் உள்ள ஒரு தனியார் சோலார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் மகேஸ்வரி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. </p><h2>வாலிபரை அரிவாளால் வெட்டிய முகமூடி கும்பல்</h2><p>முத்துக்கணேசன் தினமும் மதியம் உணவருந்த வீட்டிற்கு வருவது வழக்கம். அந்த வகையில் நேற்று மதியம் அவர் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, மனைவி மகேஸ்வரி உணவு பரிமாறிக் கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் முகமூடி அணிந்தபடி வந்த 4 பேர் கொண்ட கும்பல், கதவு திறந்திருந்த நிலையிலிருந்த வீட்டின் உள்ளே அத்துமீறி நுழைந்தது. கண்இமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் உணவருந்திக் கொண்டிருந்த முத்துக்கணேசனை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி கதறி கூச்சலிட்டார். </p><h2>வாலிபருக்கு தீவிர சிகிச்சை</h2><p>உடல் முழுவதும் பலத்த வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் முத்துக்கணேசன் உயிருக்குப் போராடினார். அறை முழுவதும் ரத்தம் சிதறிக் கிடந்தது. அப்போது அப்பகுதியில் பாம்பு பிடிப்பதற்காக சென்ற தீயணைப்புத் துறையினர், மகேஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு வீட்டிற்குள் விரைந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த முத்துக்கணேசனை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><h2>உறவினர்கள் திடீர் சாலை மறியல்</h2><p>இந்த சம்பவத்தை அறிந்து ஆத்திரமடைந்த முத்துக்கணேசனின் உறவினர்கள், கோவில்பட்டி - விளாத்திகுளம் பிரதான சாலையில் மாலை நேரம் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி முழக்கமிட்டதால், அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.</p><h2>முகமூடி கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு</h2><p>இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பவுல் யேசுதாசன், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்தார். இதையேற்று அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இச்சம்பவம் குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முன்பகையினால் இந்தத் தாக்குதல் நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி, தப்பிய முகமூடி கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக கல்லூரி பிரதிநிதிகளுடன் மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coordination-meeting-regarding-womens-safety-in-chennai-held-with-college-representatives-chaired-by-the-corporation-commissioner</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coordination-meeting-regarding-womens-safety-in-chennai-held-with-college-representatives-chaired-by-the-corporation-commissioner#comments</comments><guid isPermaLink="false">b43d365a-2d6e-4069-b078-a5e1c5743a2e</guid><pubDate>Thu, 03 Sep 2026 14:23:42 +0000</pubDate><atom:updated>2026-09-03T14:23:42.074Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,பெண்கள் பாதுகாப்பு,Women Safety,மாநகராட்சி ஆணையாளர்,Commissioner Sameeran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/6ct32iu2/State-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/6ct32iu2/State-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் பொது இடங்கள் மற்றும் பொது போக்குவரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்வது குறித்து கல்லூரி பிரதிநிதிகளுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பொது இடங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்வது குறித்த கல்லூரி பிரதிநிதிகளுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் இன்று (03.09.2026) ரிப்பன் கட்டிட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது.</p><p>பெருநகர சென்னை மாநகராட்சியின் பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகம் சார்பில் பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் சமூக நலத்திட்டங்கள் கிடைக்கப்பெறுவது தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.</p><p>இதன் ஒரு பகுதியாக, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பெண்களுக்கு பொது இடங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து அமைப்புகளில் போதுமான அளவு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான அண்ணா ஆத்ர்ஷ் கல்லூரி, மகளிர் கிறிஸ்தவ கல்லூரி, நாசரேத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குருநானக் கல்லூரி, லயோலா கல்லூரி, எத்திராஜ் கல்லூரி, டி.ஜி. வைஷ்ணவா கல்லூரி, இராணி மேரி கல்லூரி, மெட்ராஸ் சமூகப் பணி பள்ளி, நாம் அறக்கட்டளை, குளோபல் அட்ஜஸ்ட்மென்ட் அறக்கட்டளை, பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின நீதி, சிங்கப்பெண் சிறப்புப் படை, பெண் உரிமை இயக்கம் மற்றும் மாவட்ட சமூக நலத்துறை உள்ளிட்ட கல்லூரிகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது.</p><p>இக்கூட்டத்தில், பொது இடங்கள், பேருந்து, இரயில் நிலையம், மெட்ரோ ரெயில் நிலையம், கல்லூரிகள், கால் டாக்சி உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துகளில் பெண்களுக்கு போதுமான பாதுகாப்பினை ஏற்படுத்துதல், உறுதி செய்தல், இதர தொழில்நுட்பம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், செயற்கை நுண்ணறிவு மூலம் பெண்களை தவறாகச் சித்தரிப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்திட அறிவுறுத்தப்பட்டது. </p><p>மேலும், கல்லூரிகளில் பெண்கள் பாதுகாப்பிற்கென ஒருங்கிணைப்பு அலுவலர்களை நியமித்து பாலின அடிப்படையிலான புகார்களுக்கு தீர்வு காணுதல், மாணவிகளுக்குள் மகளிர் மன்றம் ஏற்படுத்தி ஒரு கட்டமைப்பை உருவாக்குதல் அல்லது மாணவியர்களுக்கான குழுக்களை அமைத்து பாலினப் பாதுகாப்பு விழிப்புணர்வு முயற்சிகளை வலுப்படுத்துதல் தொடர்பான பணிகளை மேற்கொள்வது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.</p><p>இக்கூட்டத்தில், இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன், பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகக் குழுத் தலைவர் முனைவர் லெஜிஸ் மற்றும் அலுவலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள், கல்லூரி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தாம்பரம்-நெல்லை சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/extension-of-tambaram-nellai-special-train-service</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/extension-of-tambaram-nellai-special-train-service#comments</comments><guid isPermaLink="false">34288a2c-1310-4557-a525-0a076f001089</guid><pubDate>Thu, 03 Sep 2026 14:18:23 +0000</pubDate><atom:updated>2026-09-03T14:18:23.722Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,சிறப்பு ரெயில்,Tambaram,தாம்பரம்,Special train</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/o75avhvy/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/o75avhvy/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;</p><h2>தாம்பரம்-நெல்லை</h2><p>* நெல்லையில் இருந்து தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06166), வருகிற 6-ந்தேதி முதல் 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரையிலும், மறுமார்க்க மாக, தாம்பரத்தில் இருந்து நெல்லை செல்லும் சிறப்பு ரெயில் (06165), வருகிற 7-ந்தேதி முதல் 28-ந்தேதி (திங்கட்கிழமை) வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><p>* நெல்லையில் இருந்து தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06070), இன்று (3-ந்தேதி) முதல் அக்டோபர் 29-ந்தேதி வரையிலும், மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து நெல்லை செல்லும் சிறப்பு ரெயில் (06069), நாளை (4-ந்தேதி) முதல் அக்டோபர் 30-ந் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>கவிஞர் தமிழ்ஒளி நினைவைப் போற்றும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் - தமிழக அரசு அறிவிப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-announces-competitions-for-school-students-to-honor-the-memory-of-poet-tamiloli</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-announces-competitions-for-school-students-to-honor-the-memory-of-poet-tamiloli#comments</comments><guid isPermaLink="false">d029531f-ecfa-46b0-9ce4-e37c5b4345b3</guid><pubDate>Thu, 03 Sep 2026 14:02:28 +0000</pubDate><atom:updated>2026-09-03T14:02:28.741Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/k3ui7kkg/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/k3ui7kkg/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“கவிஞர் தமிழ்ஒளி, கடலூர்(தென்னாற்காடு மாவட்டம்), குறிஞ்சிப்பாடியை அடுத்த ஆடூர் அகரம் என்னும் சிற்றூரில் சின்னையா, செங்கேணி அம்மாள் இணையருக்குப் 21.09.1924-ல் பிறந்தார். தமிழ் ஒளி அவர்களின் இயற்பெயர் விசயரங்கம். தமது தொடக்கக் கல்வியைப் புதுவை முத்தியாலுப்பேட்டை நடுநிலைப் பள்ளியில் கற்றார். உயர்கல்வியைக் கலவைக் கல்லூரியில் படித்தார். மாணவராயிருந்தபோதே பாரதியார், பாரதிதாசன் கவிதைகளால் ஈர்க்கப்பெற்றார்.</p><p>கவிஞர் தமிழ்ஒளி பாரதியாரின் வழித்தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கி கவிதைகளைப் படைத்தவர். கவிதைகள் மட்டுமல்லாது கதைகள், கட்டுரைகள், இலக்கியத் திறனாய்வுகள், மேடை நாடகங்கள், குழந்தைப் பாடல்கள் ஆகியவற்றை இயற்றியவர். அவரின் கவிதைகள் தனித்தன்மை வாய்ந்தவை.</p><p>அவர் பொதுவுடைமைக் கொள்கைகளை உயிர்மூச்சாகக் கொண்டிருந்தவர். உலகத் தொழிலாளர்களின் உரிமை நாளான மே நாளை வரவேற்றுப் பாடியவர். தமிழ்ஒளியின் சிறுகதைகளில் வரும் பாத்திரங்கள் பெரும்பாலோர் ஒடுக்கப்பெற்றவர்கள், தொழிலாளர்கள், போராளிகள் என அடித்தட்டு மக்களாகவே இருந்தார்கள். கவிஞர் தமிழ்ஒளி சாதியத்தையும் விளிம்புநிலை மக்களின் விடுதலையையும் பாடியவர். </p><p>கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் நூற்றாண்டினை முன்னிட்டு அவரின் பெயரில் பள்ளி மாணவர்களுக்கு தமிழ்சார்ந்த போட்டிகள் நடத்திட அரசாணை வெளியிடப்பட்டது. எனவே, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆண்டுதோறும் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு கவிஞர் தமிழ்ஒளி கவிதை ஒப்பித்தல் போட்டியும், 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு பொதுவான தலைப்புகளில் பேச்சுப் போட்டி மற்றும் கவிதைப் போட்டியும் நடத்தப்பெற்று வருகிறது. </p><p>போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000/- இரண்டாம் பரிசு ரூ.7,000/- மூன்றாம் பரிசு ரூ.5,000/-மற்றும் சான்றிதழும், கேடயமும் வழங்கப்பெற்று வருகிறது. 2026 ஆம் ஆண்டிற்கு, 'கவிஞர் தமிழ்ஒளி' நினைவைப் போற்றும் வகையில் பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி மற்றும் கவிஞர் தமிழ்ஒளி கவிதை ஒப்பித்தல் ஆகிய போட்டிகள் தியாகராய நகர், ஸ்ரீ ராமகிருஷ்ணா பதின்ம மேல்நிலைப் பள்ளியில் 09.09.2026ஆம் நாளன்று நடைபெற உள்ளன.</p><p>மாணவியர் கவிஞர் தமிழ்ஒளி கவிதை ஒப்பித்தல் போட்டியில் கலந்துகொள்ளும் மாணவ, https://tamiloli.in என்ற இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள கவிதைகளைப் பதிவிறக்கம் செய்து, கவிதைகளை ஒப்பித்தல் வேண்டும். பேச்சுப்போட்டியில் பங்கேற்போர் பாரதியின் கனவும் இன்றைய இளைஞர்களும், நீர் மேலாண்மையின் அவசியத் தேவை, நட்பின் இலக்கணம், பிளாஸ்டிக் இல்லாத உலகம் என்ற தலைப்புகளில் பேச வேண்டும். கவிதைப் போட்டியில் பங்கேற்போர், கல்வி தரும் ஒளி என்ற தலைப்பில் கவிதை எழுதுதல் வேண்டும்.</p><p>இப்போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ/ மாணவியர் https://tamiloli.in என்ற இணையத்தில் உள்ள பங்கேற்புப் படிவத்தை பதிவிறக்கம் செய்து இணைப்பிலுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி நிறைவு செய்து பள்ளி தலைமையாசிரியர் பரிந்துரையுடன் தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், எழும்பூர் என்ற முகவரிக்கு நேரில் அல்லது அஞ்சல் அல்லது tvt.officiallanguage@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு வரும் 08.09.2026 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சென்னை சென்டிரல் - அரக்கோணம் வழித்தடத்தில் புதிய ஏ.சி. மின்சார ரெயில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-ac-electric-train-on-chennai-central-arakkonam-route</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-ac-electric-train-on-chennai-central-arakkonam-route#comments</comments><guid isPermaLink="false">a59c496d-8a6d-400d-b8ac-b93b64403e2b</guid><pubDate>Thu, 03 Sep 2026 13:51:43 +0000</pubDate><atom:updated>2026-09-03T13:51:43.846Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தெற்கு ரெயில்வே,மின்சார ரெயில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/o1k16doe/acrail33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ புதிய ஏ.சி. மின்சார ரெயில்]]></media:title><media:description type="html"><![CDATA[ 

சென்னை சென்டிரல் - அரக்கோணம் வழித்தடத்தில் புதிய ஏ.சி. மின்சார ரெயில்
]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/o1k16doe/acrail33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>அரக்கோணத்திற்கு புதிய ஏ.சி.மின்சார ரெயில் ஒரு வாரத்தில் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>சென்னையில் <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">ஏ.சி. மின்சார ரெயில் </a>கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கப்படுகிறது. முற்றிலும் குளிர்சாதன வசதி உள்ள ரெயிலுக்கு ஆரம்பக் கட்டத்தில் பயணிகளிடம் அதிக வரவேற்பு இல்லை. ஆனால் தற்போது இந்த ஏ.சி. ரெயிலில் பயணம் செய்ய மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.</p><p>குறிப்பாக அரசு தனியார் அலுவலகங்களில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் வேலைக்கு வரவும் அவர்கள் பணி முடிந்து வீடு செல்லவும் இந்த ரெயில் வசதியாக உள்ளது.</p><p>ஒரு மின்சார ஏசி ரெயில் பெரம்பூரில் தயாரிக்கப்பட்டு தெற்கு ரெயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ரெயில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.</p><p>புதிய ஏ.சி. மின்சார ரெயில் சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் வரை இயக்குவதற்கு திட்ட மிடப்பட்டுள்ளது அதற்கான கால அட்டவணை தயாரித்து வைத்து ரெயில்வே அனுப்பப்பட்டுள்ளது.</p><p>திருவள்ளூர், ஆவடி திருநின்றவூர், அம்பத்தூர் வழியாக இந்த ரெயில் இயக்கப்பட உள்ளன. புறநகர் பகுதி மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக அரக்கோணத்திற்கு விடப் படுகிறது. அரசுக அலுவல வேலை நேரத்தை கணக் கிட்டு இயக்கவும் அட்ட வணை தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் ஏ.சி. மின்சார ரெயில் பொதுமக்கள் பாட்டிற்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>விருதுநகர்: வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிதி உதவி - முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/virudhunagar-financial-assistance-for-families-of-those-who-died-in-the-explosion-chief-minister-vijay-announces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/virudhunagar-financial-assistance-for-families-of-those-who-died-in-the-explosion-chief-minister-vijay-announces#comments</comments><guid isPermaLink="false">e3598607-a383-4533-8f6b-f14c438fd941</guid><pubDate>Thu, 03 Sep 2026 13:32:00 +0000</pubDate><atom:updated>2026-09-03T13:32:00.888Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Virudhunagar,விருதுநகர்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/m81suwii/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/m81suwii/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டுவந்த தனியாருக்கு சொந்தமான வெடிபொருள்கள் தொழிற்சாலைகளில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், அவர்களுக்கு நிதியுதவி வழங்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், அனுப்பன்குளம் கிராமம் மற்றும் திருவில்லிபுத்தூர் வட்டம், விழுப்பனூர் கிராமம் ஆகிய பகுதிகளில் இயங்கிவந்த தனியாருக்கு சொந்தமான வெடிபொருள்கள் தொழிற்சாலைகளில் இன்று (3.9.2026) எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்துகளில் அங்கு பணியிலிருந்த வத்திராயிருப்பு வட்டம், குன்னூர் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் (வயது 56), த/பெ.குருவன் என்பவரும்; சிவகாசி வட்டம், சிலோன் காலனியைச் சேர்ந்த சக்திவேல் (வயது 55), த/பெ. சிதம்பரம் என்பவரும் பலத்த காயமுற்று உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.</p><p>மேலும், விழுப்பனூர் கிராமத்தில் நடந்த விபத்தில் பலத்த காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள காளிராஜ் (வயது 49), த/பெ.கருப்பையா மற்றும் லேசான காயமடைந்து அம்மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள கருப்பாயி (வயது 47), க/பெ.ராஜேந்திரன், மகாலட்சுமி (வயது 36), க/பெ. சந்தனம், பவானி (வயது 49), க/பெ. இருளப்பன் மற்றும் இருளாயி (வயது 70), க/பெ. சக்கணன் ஆகியோருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.</p><p>இவ்விபத்துகளில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா நான்கு லட்சம் ரூபாயும், பலத்த காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நபர்களுக்குத் தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>நெய், சர்க்கரை விலை உயர்வால் கோவில்பட்டியில் ஸ்வீட்ஸ், காரம் விலை அதிகரிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/prices-of-sweets-and-sweets-increase-in-kovilpatti-due-to-rise-in-ghee-and-sugar-prices</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/prices-of-sweets-and-sweets-increase-in-kovilpatti-due-to-rise-in-ghee-and-sugar-prices#comments</comments><guid isPermaLink="false">35078782-2008-4be1-9588-488bd18b19a8</guid><pubDate>Thu, 03 Sep 2026 13:13:07 +0000</pubDate><atom:updated>2026-09-03T13:13:07.272Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>salt,Kovilpatti,கோவில்பட்டி,sweets,Sugar,சர்க்கரை,விலை உயர்வு,price rise,நெய்,ghee,Raw materials,மூலப்பொருட்கள்,ஸ்வீட்ஸ்,காரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/qntgve95/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கோவில்பட்டியில் ஸ்வீட்ஸ், காரம் விலை அதிகரிப்பு; வணிகர் சங்கம் அறிவிப்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/qntgve95/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவில்பட்டி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88">சர்க்கரை</a>, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D">நெய்</a> உள்ளிட்ட மூலப்பொருட்களின் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">விலை உயர்வு</a> காரணமாக கோவில்பட்டியில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">இனிப்பு</a>, கார வகைகள், கேக் மற்றும் பன் வகைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. </p><p>சர்க்கரை, நெய் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாகக் கோவில்பட்டியில் இனிப்பு, கார வகைகள், கேக் மற்றும் பன் வகைகளின் விலையை உயர்த்தியுள்ளதாகக் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF">கோவில்பட்டி</a> லாலா ஸ்வீட்ஸ், பேக்கரி, மிட்டாய் கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். </p><h2>இனிப்பு, கார வகைகள் விலை உயர்வு</h2><p>சர்க்கரை, நெய் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பால் உயர்த்தப்பட்டுள்ள இனிப்பு மற்றும் கார வகைகளின் புதிய விலை பட்டியல் (கிலோவில்) பின்வருமாறு: </p><p>இனிப்பு வகைகள்- ரூ.300-லிருந்து ரூ. 340-ஆக உயர்வு. </p><p>கார வகைகள்- ரூ.300-லிருந்து ரூ. 320-ஆக உயர்வு. </p><p>சிப்ஸ் மற்றும் கேக் வகைகள்- ரூ.400-லிருந்து ரூ.500-ஆக உயர்வு. </p><p>ஸ்வீட்ஸ்; பெரி வகைகள்- கிலோவுக்கு ரூ.80 உயர்வு. </p><p>ரஸ்க் வகைகள்- கிலோவுக்கு ரூ.60 உயர்வு. </p><p>பன் வகைகள்- கிலோவுக்கு ரூ.30 உயர்வு. </p><p>முந்திரி ஸ்வீட் வகைகள்- ரூ.1,000-லிருந்து ரூ.1,200-ஆக உயர்வு. </p><p>மில்க் &amp; நெய் ஸ்வீட்ஸ்- ரூ.500-லிருந்து ரூ.600-ஆக உயர்வு.</p><p>பிளாக் பாரஸ்ட் கேக்- ரூ.700-லிருந்து ரூ.800-ஆக உயர்வு. </p><p>மக்ரூன்- ரூ.1,000-லிருந்து ரூ.1,200-ஆக உயர்வு. </p><h2>மூலப்பொருட்கள் விலை உயர்வு; வணிகர் சங்கம் அறிவிப்பு</h2><p>திடீர் விலை உயர்வு குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மண்டலத் தலைவர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சர்க்கரை, நெய் உள்ளிட்ட ஸ்வீட்ஸ் மற்றும் கார வகைகள் தயாரிக்கத் தேவைப்படும் மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மற்றும் தொழிலாளர்களின் ஊதியமும் கணிசமாக அதிகரித்துவிட்டது. இதன் காரணமாகவே இனிப்பு மற்றும் கார வகைகளின் விலையை வேறு வழியின்றி உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டது" என்று கூறினார். </p><h2>விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை</h2><p>இந்தத் திடீர் விலை உயர்வு குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில், "ஏற்கெனவே சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஸ்வீட்ஸ் மற்றும் கார வகைகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை ஏற்றம் சாமானிய மற்றும் நடுத்தர மக்களைக் கடுமையாகப் பாதிக்கும். எனவே, தமிழக அரசு இப்பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு மூலப்பொருட்களின் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தினர். </p>]]></content:encoded></item><item><title>பாதியாக குறைந்த பவானிசாகர் அணை நீர்மட்டம்: விவசாயிகள் கவலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bhavanisagar-dam-water-level-drops-by-half-farmers-concerned</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bhavanisagar-dam-water-level-drops-by-half-farmers-concerned#comments</comments><guid isPermaLink="false">8dad4702-13aa-41a5-a17a-ba1562801082</guid><pubDate>Thu, 03 Sep 2026 13:04:06 +0000</pubDate><atom:updated>2026-09-03T13:04:06.722Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Bhavanisagar Dam,பவானிசாகர் அணை,water level,நீர்மட்டம்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/yy5wuk7i/10.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/yy5wuk7i/10.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>கடந்த ஆண்டு 101 அடியில் களை கட்டிய பவானிசாகர் அணையின் நீர் மட்டம் இந்த ஆண்டு பாதியாக குறைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.</p><h2>2-வது பெரிய அணை</h2><p>தமிழ்நாட்டின் 2-வது பெரிய அணை என்ற பெருமையை கொண்டது பவானிசாகர் அணை. நீலகிரி மலைப்பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து தெங்குமரஹாடா வழியாக வரும் மாயாறும் கலக்குமிடத்தை தேர்வு செய்து இந்த அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் மொத்த நீர் மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது. அணையின் மொத்த நீர் கொள்ளளவு 32.8 டி.எம்.சி. ஆகும். பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆறு மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படுகிறது. பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் சத்தியமங்கலம் வழியாக கொடிவேரி அணைக்கு வருகிறது. தொடர்ந்து அங்கிருந்து அரக்கன் கோட்டை-தடப்பள்ளி பாசன பகுதிக்கு பிரிந்து அதன்பின்னர் காலிங்கராயன் பாசன பகுதிக்கு வந்து சேர்ந்து அங்கிருந்து பிரிந்து பவானி கூடுதுறையில் காவிரி ஆற்றில் கலக்கிறது.</p><h2>2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர்</h2><p>இதனால் பவானிசாகரில் இருந்து பவானி கூடுதுறை வரை உள்ள 2 கரையோர பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான ஊராட்சிகள் மற்றும் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளின் குடிநீர் ஆதாரமாக விளங்குவதோடு சுமார் 35 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீர் ஈரோடு, கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந் தேதி காலை 8 மணிக்கு 101.42 அடியாக இருந்தது.</p><h2>பாதியாக குறைந்தது</h2><p>அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 381 கன அடியாக இருந்தது. அணையின் நீர் கொள்ளளவு 29.85 டி.எம்.சியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் அதிக அளவில் இருந்ததால் கடந்த ஆண்டு கீழ்பவானி வாய்க்கால் மற்றும் பவானி ஆற்றில் பாசனத்துக்காக முழுவதுமாக தண்ணீர் திறக்கப்பட்டது.</p><p>ஆனால் இந்த ஆண்டில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தென் மேற்கு பருவமழை பொய்த்துப்போனது. இதன்காரணமாக அணைக்கு நீர் வரத்து பெரிதும் குறைந்தது. இந்தநிலையில் நேற்று காலை 8 மணி அளவில் பவானிசாகர் அணை நீர்மட்டம் 50.65 அடியாக குறைந்தது. அணைக்கு வினாடிக்கு 933 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 105 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது அணையில் 4.59 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் அணையின் நீர்மட்டம் பாதியாக குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபைக்கு 3 நாட்கள் விடுமுறை: திங்கட்கிழமை முதல்-அமைச்சர் விஜய்யின் பதிலுரை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/3-day-holiday-for-the-assembly-chief-minister-vijays-response-on-monday</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/3-day-holiday-for-the-assembly-chief-minister-vijays-response-on-monday#comments</comments><guid isPermaLink="false">f01e1090-7b79-44ad-8bd0-a2ed31a229ad</guid><pubDate>Thu, 03 Sep 2026 12:48:01 +0000</pubDate><atom:updated>2026-09-03T12:48:01.917Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,தமிழக சட்டசபை,TNAssembly</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/zbdrm23q/vijayone33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
சட்டசபை]]></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய்யின் பதிலுரை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/zbdrm23q/vijayone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சட்டசபைக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. அடுத்து வரும் திங்கட்கிழமை (7-ந் தேதி) முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் பதிலுரையுடன் சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது. </p><p>3 நாட்கள் விடுமுறை </p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழக சட்டசபை</a>யில் இன்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. சட்டமன்ற தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை குறித்து பேசியதால், அவையில் அனல் பறந்தது. </p><p>இந்த நிலையில், நாளை (வெள்ளிக்கிழமை) கிருஷ்ண ஜெயந்தி என்பதால் அரசு விடுமுறை நாளாகும். தொடர்ந்து, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வருவதால் அன்றும் சட்டசபைக்கு விடுமுறை. இவ்வாறு 3 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்படுகிறது. அடுத்து, வரும் திங்கட்கிழமை (7-ந் தேதி) சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது. </p><p>முதல்-அமைச்சர் பதிலுரை</p><p>அன்றைய தினம், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பதில் அளிக்க இருக்கிறார். முன்னதாக, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை அவர் இன்றே வெளியிட்டுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>இ.வி.எம். குளறுபடி; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கை தொடர்ந்து எடுத்து செல்வோம் - தி.மு.க. சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/evm-irregularities-we-will-continue-to-pursue-the-case-in-the-supreme-court-dmk-legal-wing-secretary-nr-elango</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/evm-irregularities-we-will-continue-to-pursue-the-case-in-the-supreme-court-dmk-legal-wing-secretary-nr-elango#comments</comments><guid isPermaLink="false">adcc00fd-2784-4227-9338-ba4e957ee952</guid><pubDate>Thu, 03 Sep 2026 12:29:52 +0000</pubDate><atom:updated>2026-09-03T12:29:52.668Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,தி.மு.க.,EVM Machine,இவிஎம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/t784vjms/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/t784vjms/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தி.மு.க. சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்(இ.வி.எம்.) பழுதுபட்டுள்ளது தொடர்பாக ஏற்கனவே ஆதரங்களுடன் சுப்ரீம் கோர்ட்டில் எடுத்து வைத்தோம். தேர்தல் ஆணையம் மொத்தம் 19 இ.வி.எம்.களை சரிபார்த்துவிட்டு 14 இ.வி.எம்.கள் சரியாக இயங்குகின்றன என்று மட்டும் ஒரு அறிக்கையை கொடுத்துள்ளார்கள். </p><p>இது தவறு 14 மெஷின்களில் ஐந்து மெஷின்கள் சரியாக இல்லை என்றால் ஏறக்குறைய 32.33%  இ.வி.எம்.கள் பழுதடைந்திருக்கிறது என்பதை நாங்கள் ஆதாரப்பூர்வமாக நிரூபித்திருக்கிறோம். எனவே கொளத்தூர் தொகுதியினுடைய 100% இ.வி.எம்.களையும் சரி பார்க்க வேண்டும். அந்த VV பேட்டில் இருக்கக்கூடிய வாக்கு சீட்டுகளை எண்ணி பார்க்க வேண்டும் என்று ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்தோம். </p><p>இதனுடைய விளைவாக கான்சிகவன்சியல் பிரேயராக எங்களது  தலைவர் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டிருந்தோம். ஆக இரண்டு பிரேயர்கள் செய்யப்பட்டிருந்தன. இ.வி.எம். தொடர்பாக அதிக குற்றச்சாட்டுகள் எழுந்ததால் இந்த வழக்கை தொடுக்க வேண்டும் என கழக சட்டத்துறைதான் முன்னெடுத்தது. கழக தலைவரிடம் எடுத்துச் சொல்லி அவருடைய ஒப்புதலை பெற்று நாங்கள் அந்த மெஷின்களை சரிபார்த்தோம். </p><p>அதில் ஐந்து மெஷின்கள் குறைபாடு உடையவதாக இருக்கவே சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறோம். ‘ரெப்ரசென்டேஷன் ஆப் பீப்பிள் ஆக்ட்’ பிரிவு 100-ன் படி இன்னென்ன காரணங்களுக்காகத்தான் தேர்தலை தள்ளுப்படி செய்ய வேண்டும் என்று ஒரு பிரிவு இருக்கிறது. அதில் இ.வி.எம்.கள் சரியாக இல்லை என்றால் பழுதடைந்திருந்தால் தேர்தலை தள்ளுபடி செய்யலாம் என்ற காரணம் அதில் சொல்லப்படவில்லை. ஏனென்றால் அது 1951-ல் இயற்றப்பட்ட சட்டம். இ.வி.எம்.கள் அறிமுகப்படுத்தியபோது கூட அதற்கு ஏற்றவர் போல் ரெப்ரசென்டேஷன் ஆப் பீப்பிள் ஆக்ட் சட்டத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.</p><p>இரண்டாவதாக அரசியல் அமைப்பு சட்டத்தில் எல்லா தேர்தல் வழக்குகளையும் தேர்தல் குறித்த வழக்குகளையும் தேர்தல் மனுவாகத்தான் தாக்கல் செய்ய முடியும் என்று சொல்லி சொல்லியிருக்கிறது. தேர்தல் மனுவை 45 நாட்களுக்குள்ளாக தாக்கல் செய்ய வேண்டும். கொளத்தூர் தொகுதியை பொறுத்தவரை நாங்கள் தேர்தல் முடிவு வந்த மூன்றாவது தினமே 7. 5. 2026-லேயே அதற்குரிய பணத்தைக்கட்டி தேர்தல் ஆணையத்தில் எங்களுக்கு இந்த 14 இ.வி.எம்.களை சரிபார்க்க  வேண்டும் என கேட்டிருந்தோம். </p><p>ஆனால் தேர்தல் ஆணையம் 45 நாட்களுக்கு பிறகுதான், சொல்லப்போனால் மூன்று மாதங்களுக்கு பிறகுதான் அந்த இயந்திரங்களை எடுத்து பரிசோதனை செய்தார்கள். எனவே தேர்தல் மனுவை ஒரு எதிர்பார்க்கும் நோக்கில் தாக்கல் செய்ய முடியாது. இன்றைக்கு ஐகோர்ட்டு, கொளத்தூர் தொகுதியில் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்பது தேர்தல் மனுவாகத்தான் தாக்கல் செய்திருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. </p><p>எனவே அது நிலைக்கத்தக்கதுஅல்ல. இருப்பினும் கூட 100% இ.வி.எம். மெஷின்களை சரிபார்ப்பது குறித்து உரிய மனுவை உரிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்து கொள்ளக்கூடிய அனுமதியை வழங்கி இன்றைக்கு தீர்ப்பளித்திருக்கிறார்கள். எனவே இது குறித்து தலைமைக் கழகத்திடம் எடுத்துச் சொல்லி இதை சுப்ரீம் கோர்ட்டிற்கு எடுத்துச் செல்ல நாங்கள் கேட்போம். தலைமைக் கழகத்தினுடைய அறிவுறுத்தல் படி நாங்கள் செயல்படுவோம்.</p><p>இ.வி.எம்.கள் பழுதாகி இருந்தால் என்ன நிலைமை என்பதற்கு இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் கொளத்தூர் தொகுதியில்தான் இந்த சட்ட சிக்கல் எழுப்பப்பட்டிருக்கிறது. எப்படி இட ஒதுக்கீட்டை 1950-களிலே உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் செல்லாது என்று சொன்னபோது ஒரு தொடர்ச்சியான போராட்டத்தின் வழியாக அரசியலமைப்பு சட்டம் மாறியதோ அதை போலத்தான் இ.வி.எம்.கள் பழுதடைந்தது தெரிந்தால் அந்த தேர்தல் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்ற ஒரு சட்டம் வரும். உச்ச நீதிமன்றமோ அல்லது உயர் நீதிமன்றமோ வரும் காலங்களில் அதுபோன்ற ஒரு தீர்ப்பை சொல்லுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.</p> <p>இதற்கு பிறகு இந்த ஐந்து மெஷின்களில் எப்படி குறைபாடுகள் இருக்கிறது உட்பட 18 கேள்விகளை எழுப்பி நாங்கள் தேர்தல் ஆணயத்திற்கு ஐந்தாம் தேதியே கடிதம் கொடுத்திருக்கிறோம் அதற்கும் இன்னும் பதில் வரவில்லை. ஒரு கம்ப்யூட்டர் 100% சரியாக இயங்குகிறது என்றால் சிக்மா லெவல் 100% சரியாக இயங்குகிறது என்று சொல்வார்கள். ஆனால் தேர்தல் ஆணையமே தன்னுடைய இணையதளத்தில் இந்த இ.வி.எம். மெஷின்கள் 4 சிக்மா லெவலில் தான் அதனுடைய நம்பகத்தன்மை இருக்கிறது என்று சொல்லியிருக்கிறது. </p><p>அதாவது ஒரு லட்சம் ஓட்டு போட்டால் அதுல ஏறக்குறைய 1600 வாக்குகள் சரியாக பதிவிடாமல் போகலாம் என்ற ஒரு நிலைதான் இருப்பதாக தேர்தல் ஆணையமே சொல்லியிருக்கிறது. இதையெல்லாம் நாங்கள் கழக தலைவர் எப்படி சொல்கிறாரோ அப்படி சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக வழக்கை தொடர்ந்து எடுத்து செல்வோம்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>தங்கக் கம்மலை நேர்மையாக ஒப்படைத்த சிறுமிக்கு பாராட்டு; அசைவ விருந்து கொடுத்து கவுரவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/praise-for-the-girl-who-honestly-handed-over-the-gold-amulet-honored-with-a-non-vegetarian-feast</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/praise-for-the-girl-who-honestly-handed-over-the-gold-amulet-honored-with-a-non-vegetarian-feast#comments</comments><guid isPermaLink="false">8d14bc0e-e1d1-439e-9450-31e1eee7a2c5</guid><pubDate>Thu, 03 Sep 2026 12:29:36 +0000</pubDate><atom:updated>2026-09-03T12:29:36.222Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,தென்காசி,சிறுமி,girl,ஒப்படைப்பு,non-vegetarian food,Appreciation,பாராட்டு,honesty,நேர்மை,அசைவ விருந்து,கம்மல்,Necklace,dedication</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/oct8ajkx/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தங்கக் கம்மலை நேர்மையாக ஒப்படைத்த சிறுமி; அசைவ விருந்து வைத்து கவுரவிப்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/oct8ajkx/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF">தென்காசி</a> மாவட்டத்தில் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட தங்கக் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D">கம்மலை </a>உரியவரிடம் நேர்மையாக ஒப்படைத்த 6-ம் வகுப்பு படிக்கும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF">சிறுமி</a> தீபிகாவிற்குப் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">பாராட்டு</a>கள் குவிந்து வருகிறது. </p><h2>தங்கக் கம்மலை உரியவரிடம் நேர்மையுடன் ஒப்படைத்த சிறுமி</h2><p>தென்காசி மாவட்டம், வெங்கடம்பட்டி ஆலமரத்தடி சுடலைமாடன் சுவாமி கோவில் கொடை விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற 6-ம் வகுப்பு படிக்கும் சிறுமி தீபிகா, அங்கு தவறி விழுந்த மற்றொரு நபரின் தங்கக் கம்மல் ஒன்றை கண்டெடுத்தார். பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல், அந்த தங்கக் கம்மலை உரியவரிடம் நேர்மையுடன் ஒப்படைத்தார். </p><h2>சிறுமிக்கு பாராட்டு</h2><p>சிறுமியின் இந்த நேர்மையான செயலைப் பாராட்டி சால்வைகள், ரொக்கப் பரிசுகள், கேடயங்கள் வழங்கி சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சியினரும் நேரில் சென்று பாராட்டி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, ஆலங்குளத்தைச் சேர்ந்த ஒரு பிரியாணி ஓட்டல் உரிமையாளர் சாம்பவர் வடகரை ஹரிஹர செல்வன், சிறுமி தீபிகா, அவரது தாய் ஜெயந்தி, தந்தை திரவியக்கனி மற்றும் அவரது சகோதரனை ஆலங்குளத்திற்கு நேரில் வரவழைத்தார்.</p><h2>அசைவ விருந்து</h2><p>அவர்களை அன்போடு வரவேற்ற அந்த பிரியாணி கடை நிர்வாகம், அந்த சிறுமியின் குடும்பத்தினர் அனைவருக்கும் பிரியாணி, சிக்கன் உள்ளிட்ட சுவையான அசைவ விருந்து அளித்து உபசரித்தது. மேலும் அந்த பிரியாணி ஓட்டல் அதிபர் ஹரி, சிறுமிக்கு ஐஸ்கிரீம் வழங்கி வாழ்த்தினார். இந்த நிகழ்வில் சமூக சேவகர் வெங்காடம்பட்டி திருமாறன், இன்ஜினியர் பார்த்திபன், மணியன் ஆகியோர் உடனிருந்து சிறுமியை வாழ்த்தினர். </p><p>நேர்மையான குணத்திற்கும், சத்திய வாழ்விற்கும் சமூகத்தில் எப்போதும் நல்மதிப்பு கிடைக்கும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். பிறர் பொருளுக்கு ஆசைப்படாத இந்தச் சிறுமியைப் போல தங்கள் குழந்தைகளையும் வளர்க்க வேண்டும் என பெற்றோர்கள் விரும்புகின்றனர். மேலும் இந்த சிறுமியின் நேர்மை குறித்த தகவல் நடிகர் ரஜினிகாந்தின் பார்வைக்கும் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>கும்பகோணம்: தெருநாய்கள் கடித்து குதறியதில் முதியவர் உயிரிழப்பு- பொதுமக்கள் அதிர்ச்சி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kumbakonam-elderly-man-dies-after-being-mauled-by-stray-dogs-public</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kumbakonam-elderly-man-dies-after-being-mauled-by-stray-dogs-public#comments</comments><guid isPermaLink="false">2b157bf6-e8d6-47b2-a252-476dcc32a014</guid><pubDate>Thu, 03 Sep 2026 12:17:47 +0000</pubDate><atom:updated>2026-09-03T12:17:47.747Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>street dogs,தெரு நாய்கள்,Elderly man,கும்பகோணம்,Kumbakonam,மக்கள் அச்சம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/2pffy4xj/6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தெருநாய் கடித்து முதியவர் உயிரிழப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/2pffy4xj/6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>கும்பகோணம்,</p><p>கும்பகோணம் அருகே 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் ஒன்றிணைந்து முதியவரை கடித்து குதறியதில் முதியவர் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p><h2>முதியவர் உயிரிழப்பு</h2><p>கும்பகோணம் மாவட்டம் பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (70). இவர் இன்று அதிகாலை நேரத்தில் அங்குள்ள சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியில் வந்த 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் அவரை சூழ்ந்து அவரை சரமாரியாக கடிக்க தொடங்கின. தப்பிக்க சூழல் இல்லாததால் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். தொடர்ந்து விடாத தெருநாய்கள் அவரை கடித்து குதறின. அவரது உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>கோரிக்கை</h2><p>இந்த சம்பவம் அதிகாலை நடந்ததால் மக்கள் யாரும் அப்பகுதியில் இல்லை. விடிந்தபிறகே <a href="https://www.dailythanthi.com/topic/முதியவர்">முதியவர்</a> இறந்த சம்பவம் தெரியவந்தது.</p><p>தெரு நாய்கள் கடித்து முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் தெருநாய்களை பிடித்து செல்ல வேண்டும் என்று பொது மக்கள் அனைவரும் சேர்ந்து நகராட்சி நிர்வாகத்திற்கு<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88"> கோரிக்கை</a> விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சிவகங்கையில் மதுக்கடைகள் 2 நாட்களுக்கு மூடல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/liquor-shops-in-sivaganga-to-remain-closed-for-two-days</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/liquor-shops-in-sivaganga-to-remain-closed-for-two-days#comments</comments><guid isPermaLink="false">f7413aa6-0c82-47be-91a9-7d868d84ae89</guid><pubDate>Thu, 03 Sep 2026 12:10:11 +0000</pubDate><atom:updated>2026-09-03T12:10:11.281Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சிவகங்கை,Sivagangai,மதுக்கடைகள்,liquor shops</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/vvrgb3m2/9.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/vvrgb3m2/9.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை,  </p><p>சிவகங்கையில் வருகிற 11-ந்தேதி தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் இயங்கிவரும் எப்.எல்.1 (அரசு சில்லறை மதுபானக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள்) எப்.எல்.2 (உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங்கள்), எப்.எல்.3 (ஓட்டல்களுடன் இணைந்த மதுக்கூடங்கள்) ஆகியவை 10-ந்தேதி (வியாழக்கிழமை) மதியம் 2 மணி முதல் 11-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை மட்டும் மூடப்பட்டிருக்கும். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>மு.வீரபாண்டியனிடம் உடல் நலம் விசாரித்த அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ministers-nanand-and-aadhav-arjuna-inquired-about-mveerapandians-health</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ministers-nanand-and-aadhav-arjuna-inquired-about-mveerapandians-health#comments</comments><guid isPermaLink="false">7466c5d6-40e0-4cbd-a954-d62a0f96c4f0</guid><pubDate>Thu, 03 Sep 2026 12:06:04 +0000</pubDate><atom:updated>2026-09-03T12:06:04.618Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,Communist Party of India,health,உடல்,Inquiry,நலம் விசாரிப்பு,மு.வீரபாண்டியன்,M.Veerapandian,அமைச்சர் ஆனந்த்,அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,Minister Anand,Minister Aadhav Arjuna</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/d71edqjx/%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.வீரபாண்டியனிடம் உடல் நலம் விசாரித்த அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா. ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/d71edqjx/%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">தமிழக அமைச்சர்கள்</a> என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a> ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியனிடம் உடல் நலம் குறித்து விசாரித்தனர். </p><h2>மு.வீரபாண்டியன்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">இந்திய கம்யூனிஸ்ட் கட்சி</a>யின் (CPI) தமிழ்நாடு மாநிலச் செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D">மு.வீரபாண்டியன்</a> லேசான உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்பொழுது நலமுடன் உள்ளார். </p><h2>அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா</h2><p>இந்த நிலையில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி, நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE">அமைச்சர் ஆதவ் அர்ஜுனா </a>ஆகியோர் மு.வீரபாண்டியனை இன்று மருத்துவமனையில் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தனர். </p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-a-power-outage-tomorrow-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-a-power-outage-tomorrow-2#comments</comments><guid isPermaLink="false">75a8612d-663c-42be-a9ab-c9a983f50a2f</guid><pubDate>Thu, 03 Sep 2026 11:57:42 +0000</pubDate><atom:updated>2026-09-03T11:57:42.433Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மின் தடை,powercut</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/2faizgug/ep.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/2faizgug/ep.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>சென்னையில் நாளை (05.09.2026) காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p><strong>கீழ்கட்டளை:</strong> சுண்ணாம்பு கொளத்தூர், ஈச்சங்காடு, கோவிலம்பாக்கம், நன்மங்கலம், , அம்பாள் நகர், அன்பு நகர், ரோஸ் நகர், மணிகண்டன் நகர், வீரமணி நகர், செல்ஃப் ஹெல்ப் இண்டஸ்ட்ரியல், பூபதி நகர், பெருமாள் நகர், இங்கிலீஷ் எலக்ட்ரிக்கல் நகர், குமரன் நகர், இன்ஜினியர்ஸ் அவென்யூ, பாக்கியலட்சுமி நகர், ராஜா நகர், பாலமுருகன் நகர்.</p><p><strong>கோட்டூர்புரம்:</strong> ஸ்ரீ நகர் காலனி, தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு மாட வீதிகள், தெற்கு அவென்யூ, கோவில் அவென்யூ, ரங்கராஜபுரம் 1வது முதல் 6வது தெருக்கள் வரை.</p><p><strong>மாங்காடு:</strong> ரகுநாதபுரம், கொழுமணிவக்கம், சிவன்தாங்கள், சிக்கராயபுரம், பட்டூர், பத்ரிமேடு, தென் காலனி, ஸ்ரீனிவாச நகர், மலையம்பாக்கம், நெல்லித்தோப்பு,மகாலட்சுமி நகர், சக்ரா நகர், காமாட்சி நகர், அட்டிசன் நகர், சாதிக் நகர், மேல்மா நகர்,சக்தி நகர், கே கே நகர்.</p><p>அதேபோல, சென்னையில் நாளை மறுநாள் (06.09.2026) காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p><strong>தாம்பரம்:</strong> மெப்ஸ் முழுவதும் . அனைத்து உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் இணைப்புகள்.</p>]]></content:encoded></item><item><title>தமிழரசன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள காவல்துறை தடை - பழ.நெடுமாறன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-ban-on-attending-the-tamilarasan-memorial-event-pazha-nedumaran-condemns-the-move</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-ban-on-attending-the-tamilarasan-memorial-event-pazha-nedumaran-condemns-the-move#comments</comments><guid isPermaLink="false">c94e2a51-1ffa-43b0-8b33-93dee4523bd1</guid><pubDate>Thu, 03 Sep 2026 11:34:03 +0000</pubDate><atom:updated>2026-09-03T11:34:03.658Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பழ.நெடுமாறன்,Pazha.Nedumaran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/029cbezy/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/029cbezy/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“தமிழ்த் தேசியப் போராளியும், காவல்துறையினால் சட்டத்திற்குப் புறம்பான முறையில் சுட்டு வீழ்த்தப்பட்டவருமான  தோழர் தமிழரசனின் 39-வது நினைவு நாளில் அவருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதகளிர் மாணிக்கம் என்னும் சிற்றூரில் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான நிலத்தில் அவருடைய கல்லறை அமைந்துள்ளது. அதற்கு அருகிலேயே அவருடைய தங்கை அன்பழகியின் வீடு உள்ளது. </p><p>அந்த வீட்டில் நடைபெற்ற தமிழரசனின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நானும், தமிழர் நீதிக்கட்சியின் தலைவர் சுபா.இளவரசன், தமிழர் தேசிய முன்னணியின் அரியலூர் மாவட்டத் தலைவர் புலவர் அரங்கநாடன் உட்பட நூற்றுக்கணக்கான தோழர்கள் மற்றும் மகளிர் உட்பட பல வாகனங்களில் அந்த ஊரை நோக்கி செப்டம்பர் முதல் நாள் மாலையில் சென்றோம். எங்களைப் போல பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான மக்கள் அவ்வூரை நோக்கித் திரண்டு வந்தனர்.</p><p>உயிர்த் தியாகம் செய்தவரை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவதும், நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்பதும் அடிப்படையான மனிதஉரிமையாகும். ஆனால், அந்த ஊருக்குள்ளேயே யாரையும் நுழையவிடாது தடுத்து நிறுத்தியதோடு, ஏராளமான காவல்படையினரும் அங்கு குவிக்கப்பட்டிருந்தார்கள்.</p><p>இதற்கிடையில் அவ்வூரை நோக்கிச் சென்ற எங்களை திருமுட்டத்திலேயே தடுத்து நிறுத்தி காவல்துறையினர் கைது செய்து அங்கிருந்த ஒரு மண்டபத்தில் கொண்டுபோய் சில மணிநேரம் வைத்திருந்து பிறகு இரவு 8 மணிக்கு எங்களை விடுதலை செய்தனர். எங்கள் மீது ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>கடந்த 39 ஆண்டு காலமாக தமிழரசனின் கல்லறைக்கு யாரும் செல்லவிடாமல் காவல்துறை இன்றளவும் தடுத்து வருவது அப்பட்டமான மனிதஉரிமை மீறலாகும். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.</p><p>இந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த தமிழர் நீதிக் கட்சித் தலைவர் சுபா.இளவரசனை பொய்க் குற்றச்சாட்டின்கீழ் காவல்துறை இன்று மீண்டும் கைது செய்திருப்பது அவர் மீது வஞ்சம் தீர்க்கும் அப்பட்டமான அநீதியாகும். அவரை உடனடியாக விடுதலை செய்வதோடு, எங்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளையும் திரும்பப் பெறுமாறு வலியுறுத்துகிறேன்.</p><p>தமிழரசனின் கல்லறைக்கு யாரும் சென்று அஞ்சல் செலுத்தவிடாமல் 39 ஆண்டு காலமாக காவல்துறை தடுத்து வரும் இந்த அநீதிக்கு முற்றுப்புள்ளி வைத்து, மறைந்த தமிழரசனின் குடும்பத்தினருக்கு நீதி வழங்க முன்வருமாறு தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யிடம் நான் வேண்டிக்கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளம்: காணாமல் போனவர்களை அடையாளம் காண தமிழக அரசு சார்பில் டி.என்.ஏ. பரிசோதனைக்கு ஏற்பாடு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nepal-floods-tamil-nadu-government-arranges-dna-testing-to-identify-the-missing</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nepal-floods-tamil-nadu-government-arranges-dna-testing-to-identify-the-missing#comments</comments><guid isPermaLink="false">bc0e2c6f-05d3-44bd-9853-12a8026abcf7</guid><pubDate>Thu, 03 Sep 2026 11:25:28 +0000</pubDate><atom:updated>2026-09-03T11:25:28.068Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt,DNA test,டி.என்.ஏ. பரிசோதனை,nepal flood,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/k5dvaxt0/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/k5dvaxt0/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நேபாள பெருவெள்ளத்தில் காணாமல் போனவர்களை அடையாளம் காண்பதற்கு ஏதுவாக, தமிழ்நாடு அரசால் சென்னை, மதுரை மற்றும் தஞ்சாவூர் ஆகிய மண்டலங்களிலுள்ள தடய அறிவியல் ஆய்வகங்களின் மூலமாக டி.என்.ஏ. பரிசோதனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“கடந்த 26.8.2026 அன்று, நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் சிக்கியதைத் தொடர்ந்து, அவர்களை விரைந்து மீட்க தமிழ்நாடு அரசு, மத்திய அரசுடனும், நேபாள அரசுடனும் இணைந்து பல்வேறு தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன்படி, சென்னையில் அயலகத் தமிழர் நலத்துறை ஆணையரகத்திலும் புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்திலும் உதவி மையம் / அவசரக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டன.</p><p>2.9.2026 நிலவரப்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த மொத்தம் 305 பேரில் 220 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர், மீதமுள்ள 85 நபர்களைத் தொடர்புகொள்ள தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு, மத்திய அரசு, நேபாள அரசு மற்றும் இந்திய தூதரகத்துடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து, நேபாள பெருவெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை பாதுகாப்பாக மீட்டு தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக தமிழ்நாடு அரசால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>இதன் தொடர்ச்சியாக, இப்பெருவெள்ளத்தில் காணாமல் போனவர்களை அடையாளம் காண்பதற்கு ஏதுவாக, நேபாள அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி, காணாமல் போனவர்களின் முதல்நிலை உறவினர்களில் (First Degree Relatives) விருப்பமுள்ளவர்கள் டி.என்.ஏ. பரிசோதனை செய்வதற்கு, தமிழ்நாடு அரசால் சென்னை, மதுரை மற்றும் தஞ்சாவூர் ஆகிய மண்டலங்களிலுள்ள தடய அறிவியல் ஆய்வகங்களின் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பெருவெள்ளத்தில் காணாமல் போனவர்களின் முதல்நிலை உறவினர்களான தாய் (அல்லது) தந்தை (அல்லது) மகன் (அல்லது) மகள் கட்டணமின்றி இச்சோதனை எடுத்துக்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன.</p> <p>டி.என்.ஏ. பரிசோதனை மண்டலங்கள் பின்வருமாறு:-</p><p><strong>சென்னை</strong></p><p>காஜா மொய்தீன்,</p><p>இயக்குநர், தடய அறிவியல் துறை,</p><p>30A, காமராஜர் சாலை, மயிலாப்பூர், சென்னை – 600 004.</p><p>கைபேசி எண் - 9941464808.</p><p><strong>மதுரை</strong></p><p>திரு. விஜயேந்திரன்,</p><p>துணை இயக்குநர், தடய அறிவியல் ஆய்வகம்,</p><p>கலெக்டர் சாலை, மதுரை மருத்துவக் கல்லூரி வளாகம்,</p><p>மதுரை – 625 020.</p><p>கைபேசி எண் - 8637674451.</p><p><strong>தஞ்சாவூர்</strong></p><p>திரு.ராஜ்மோகன்,</p><p>துணை இயக்குநர், மண்டல தடய அறிவியல் ஆய்வகம்,</p><p>பிள்ளையார்பட்டி, வல்லம் மெயின் ரோடு,</p><p>தஞ்சாவூர் -613403.</p><p>கைபேசி எண் - 9791112894.</p><p>நேபாள பெருவெள்ளத்தில் காணாமல் போனவர்களில் விருப்பமுள்ள முதல்நிலை உறவினர்களை அவர்களுக்கு அருகாமையில் உள்ள மண்டலங்களான சென்னை, தஞ்சாவூர் மற்றும் மதுரை ஆகிய ஏதாவதொரு மண்டலத்திற்கு அழைத்துச்சென்று கட்டணமின்றி டி.என்.ஏ. பரிசோதனை (இரத்த மாதிரி) எடுப்பதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யவும், அதனை நேபாள அரசின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யவும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.</p><p>மேலும், அவ்விவரங்களுடன் நேபாளத்திற்குச் செல்ல விரும்பும் உறவினர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் தமிழ்நாடு அரசால் செய்யப்பட்டு வருகின்றன. இதுகுறித்து மேலும் விபரங்களுக்கு கீழ்க்கண்ட கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:-</p><p>இயக்குநர்,</p><p>அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம்,</p><p>சேப்பாக்கம், சென்னை – 600 005.</p><p>24 X 7 உதவி எண்கள்</p><p>18003093793 / 8069009901 / 8069009900</p><p>தமிழ்நாடு இல்லம், புதுடெல்லி</p><p>கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள்:</p><p>9289516712 (Whatsapp / Call)</p><p>9868530776 (Mobile No.)”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பெண்ணுக்கு மட்டும்தான் கற்பு இருக்கா? ஆண்களுக்கு கற்பு இல்லையா? - சிபிஎம் பெண் எம்.எல்.ஏ.லதா கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dont-women-have-chastity-cpm-woman-mla-latha-questions</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dont-women-have-chastity-cpm-woman-mla-latha-questions#comments</comments><guid isPermaLink="false">b3472bd4-b61b-4332-8e4b-1f265c70ad41</guid><pubDate>Thu, 03 Sep 2026 11:10:29 +0000</pubDate><atom:updated>2026-09-03T11:10:29.908Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,Congress,சட்டசபை,EPS</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/755aoqjj/cpm33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ சிபிஎம் பெண் எம்.எல்.ஏ.லதா ]]></media:title><media:description type="html"><![CDATA[ 
பெண்ணுக்கு மட்டும்தான் கற்பு இருக்கா? ஆண்களுக்கு கற்பு இல்லையா? ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/755aoqjj/cpm33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெண்ணுக்கு மட்டும்தான் கற்பு இருக்கா? ஆண்களுக்கு கற்பு இல்லையா? என சிபிஎம் பெண் எம்.எல்.ஏ.லதா கேள்வி எழுப்பினார்.</p><p>தமிழ்நாடு சட்டசபையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, அதிமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாக்கப்பட்டனர். சட்டம், ஒழுங்கு சீராக இருந்தது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும் கற்பு என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தினார். </p><p>இதற்கு பதில் அளித்து பேசிய சிபிஎம் பெண் எம்.எல்.ஏ.லதா,</p><p>முன்னாள் முதல்-அமைச்சர் பேசும் போது கற்பு தொடர்பான ஒரு வார்த்தையை பயன்படுத்தினார். அது போன்று குறிப்பிடும் போது பாலியல் வன்முறை என்கிற வார்த்தையை பயன்படுத்தலாம். அவர் குறிப்பிடுவது போன்ற ஒரு சம்பவம் நடந்தால், பெண்ணுக்கு மட்டும் தான் கற்பு பறிபோகுதா? ஆணுக்கு இல்லையா? அது போன்ற சம்பவங்களில் முதலில் கற்பு பறிபோவது ஆணுக்கு தான். இனிமேல் அந்த வார்த்தையை பயன்படுத்தக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன் என்றார். </p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">எடப்பாடி பழனிசாமி </a>பேச்சு குறித்து  சிபிஎம் எம்எல்ஏ லதா கூற, மேஜையை தட்டி ஆதரவு தெரிவித்தார் காங்., எம்எல்ஏ தாரகை.</p>]]></content:encoded></item><item><title>வில்லிவாக்கம் இந்து மயான பூமியில் பராமரிப்புப் பணி - பொதுமக்கள் மாற்று இடங்களை பயன்படுத்த சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/maintenance-work-at-the-villivakkam-hindu-cremation-ground-chennai-corporation-advises-the-public-to-use-alternative-locations</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/maintenance-work-at-the-villivakkam-hindu-cremation-ground-chennai-corporation-advises-the-public-to-use-alternative-locations#comments</comments><guid isPermaLink="false">9f0f53a6-92bc-43d1-9352-b6257aa9c6ac</guid><pubDate>Thu, 03 Sep 2026 11:00:56 +0000</pubDate><atom:updated>2026-09-03T11:00:56.522Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை மாநகராட்சி,Villivakkam,வில்லிவாக்கம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/i8s9mh0g/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/i8s9mh0g/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட வில்லிவாக்கம் இந்து மயான பூமியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், பொதுமக்கள் வேலங்காடு, அரும்பாக்கம் மற்றும் ஜி.கே.எம். காலனி மயானபூமிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.</p><p>பெருநகர சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலம், வார்டு-94க்குட்பட்ட எம்.டி.எச். சாலையில் உள்ள வில்லிவாக்கம் இந்து மயானபூமியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், 04.09.2026 முதல் 28.09.2026 வரை மேற்கண்ட மயானபூமி இயங்காது.</p><p>எனவே, பராமரிப்புப் பணிகள் நடைபெறும் நாட்களில், பொதுமக்கள் அருகிலுள்ள நியூ ஆவடி சாலையில் உள்ள வேலங்காடு மயானபூமி, அண்ணாநகரில் உள்ள அரும்பாக்கம் மயானபூமி மற்றும் ஜம்புலிங்கம் பிரதான சாலையில் உள்ள ஜி.கே.எம். காலனி மயானபூமி ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சங்கரன்கோவிலில் திடீரென தீப்பற்றிய அரசு பேருந்து: அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-bus-suddenly-catches-fire-in-sankarankovil-passengers-escape-unharmed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-bus-suddenly-catches-fire-in-sankarankovil-passengers-escape-unharmed#comments</comments><guid isPermaLink="false">fa8f713c-9e8a-4d1a-be4e-a9fe26ca6987</guid><pubDate>Thu, 03 Sep 2026 10:56:28 +0000</pubDate><atom:updated>2026-09-03T10:56:28.833Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Fire accident,bus,பேருந்து,சங்கரன்கோவில்,தீவிபத்து,Sankarankoil</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/ih83c45b/5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தீ பிடித்த பேருந்து]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/ih83c45b/5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><p>சங்கரன் கோவில் அருகே சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் செயலால் பேருந்தில் இருந்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.</p><h2>பேருந்தில் தீ விபத்து</h2><p>விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து இன்று திருநெல்வேலிக்கு அரசு பேருந்து புறப்பட்டுச் சென்றது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ரயில்வே கேட்டை தாண்டியபோது மின் இணைப்பு கோளாறு காரணமாக பேருந்து திடீரென தீப்பிடித்தது. பேருந்தில் இருந்து புகை மற்றும் தீ வெளியேறியதை கவனித்த ஓட்டுநர் வண்டியை உடனடியாக நிறுத்தினார். இதையடுத்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் இணைந்து பேருந்தில் இருந்த 60 பயணிகளையும் கீழே இறக்கி விட்டனர். அவசரம் அவசரமாக பயணிகள் இறங்கிய சிறிது நேரத்திலேயே தீ குபுகுபுவென பேருந்து முழுவதும் பரவியது.</p><p>இதுகுறித்து தகவல் அறிந்த <a href="https://www.dailythanthi.com/topic/தீயணைப்பு">தீயணைப்பு</a> மற்றும் மீட்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் பேருந்து முழுவதும் கருகி சேதமடைந்து விட்டது. ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் துரிதமான செயலால் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.</p><p>இந்த சம்பவத்தை காண பொது மக்கள் திரண்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், இந்த தீ விபத்து காரணமாக சங்கரன்கோவில் <a href="https://www.dailythanthi.com/topic/போலீசார்">போலீசார் </a>மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக அரசு சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களை பாதுகாக்க வேண்டும்: மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-should-protect-small-blood-testing-centers-mveerapandian-insists</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-should-protect-small-blood-testing-centers-mveerapandian-insists#comments</comments><guid isPermaLink="false">352741cb-66e3-43ec-8ef5-bc5da1105165</guid><pubDate>Thu, 03 Sep 2026 10:53:24 +0000</pubDate><atom:updated>2026-09-03T10:53:24.411Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Communist Party of India,இந்திய கம்யூனிஸ்டு கட்சி,insistence,வலியுறுத்தல்,Blood,protected,பாதுகாக்க வேண்டும்,ரத்த பரிசோதனை,நிலையங்கள்,should be,மு.வீரபாண்டியன்,M.Veerapandian,Testing Centers</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/bwv63lx0/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/bwv63lx0/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக அரசு சிறிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88">ரத்தப் பரிசோதனை</a> நிலையங்களை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D">பாதுகாக்க முன்வர வேண்டும்</a> என <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">இந்திய கம்யூனிஸ்ட் கட்சி </a>வலியுறுத்தி உள்ளது. </p><p>இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D">மு.வீரபாண்டியன்</a> வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது: </p><h2>அரசாணை எண் 41</h2><p>தமிழ்நாடு அரசு சார்பில் மருத்துவ நிறுவனங்கள் ஒழுங்குமுறைச் சட்ட விதிகள் 2018-ஐ எளிமைப்படுத்தும் நோக்கத்தில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் 13.2.2026 அன்று அரசாணை எண் 41 மூலம் வெளியிடப்பட்டது. அதன்படி அடிப்படை பரிசோதனை நிலையங்கள் என்பவை ரத்த சக்கரை அளவு, ஹீமோகுளோபின் போன்ற சாதாரண, எளிமையான பரிசோதனைகளை செய்கின்ற ஒரு லேப் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. </p><h2>புதிய நிபந்தனை</h2><p>அடிப்படை லேப்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களில் லேப் டெக்னீசியன்களால் மேற்கொள்ளப்படும் பரிசோதனை முடிவுகளின் அறிக்கையில், ஒரு மருத்துவர் அல்லது மருத்துவ நோய்க்குறியியல், அல்லது மருத்துவ நுண்ணுயிரியியல் அல்லது மருத்துவ உயிர் வேதியியலில் முதுநிலை படிப்பு படித்தவர்  கையெழுத்திட வேண்டும். அதுவும் படிப்பை முடித்த பிறகு ஓராண்டு அனுபவம் உள்ளவர் தான் கையெழுத்திட வேண்டும் என புதிய நிபந்தனை இந்த அரசாணை மூலம் விதிக்கப்பட்டுள்ளது. </p><h2>சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களை ஒழித்துக் கட்டும் உள்நோக்கம்</h2><p>இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் ரத்தப் பரிசோதனை நிலையங்களை நடத்திடவும், சோதனை முடிவுகளில் கையெழுத்திட்டு வழங்குவதற்கும் கல்வித் தகுதிகள் ஏற்கனவே வரையறை செய்யப்பட்டுள்ளன. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அது நடைமுறையில் உள்ளது. அதன் அடிப்படையில், இதுவரை லேப் டெக்னீசியன்களே, பரிசோதனை முடிவுகளில் கையெழுத்திட்டு வருகின்றனர். அதற்கு மாறாக திடீரென புதிய நிபந்தனைகளை விதிப்பது சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற உள்நோக்கம் கொண்டதாகும். </p><h2>தமிழகத்தில் 80 விழுக்காடு சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்கள்</h2><p>தமிழகத்தில் உள்ள ரத்தப்பரிசோதனை நிலையங்களில் 80 விழுக்காடு பரிசோதனை நிலையங்கள் சிறிய ரத்தப்பரிசோதனை நிலையங்களாகும். இந்த சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்கள் மூலமாகவே தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான ஏழை - எளிய மக்கள் அவர்களுடைய ரத்த சர்க்கரை அளவு, ஹீமோகுளோபின், ரத்த வகைகள் மற்றும் இதர ரத்தப் பரிசோதனைகளை தங்கள் இருப்பிடங்களுக்கு அருகிலேயே குறைந்த கட்டணத்தில் எளிதாக செய்து கொள்கின்றனர். </p><h2>அரசாணையை ரத்து செய்ய வேண்டும்</h2><p>இந்த நிலையில் அரசின் புதிய அரசாணை நடைமுறைபடுத்தப்பட்டால், 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறிய ரத்தப்பரிசோதனை நிலையங்ளை மூட வேண்டிய நிலை ஏற்படும். ஏனெனில், அவற்றால் மருத்துவர்களையோ அல்லது மருத்துவ நோய்க்குறியியல் அல்லது மருத்துவ நுண்ணுயிரியியல் அல்லது மருத்துவ உயிர் வேதியியலில் படிப்புகளில் முதுநிலை படிப்பு படித்தவர்வர்களையோ ஊதியம் கொடுத்து வேலைக்கு வைத்துக் கொள்ள முடியாது. இந்த புதிய விதிமுறை, நாடு  முழுவதும் சங்கிலித் தொடர்போல் லேப்களை உருவாக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கே சாதகமாக அமையும். ஏழை, எளிய மக்களுக்கும், சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களுக்கும் எதிராக அமையும். எனவே, இந்த அரசாணை எண் 41/2026 ஐ தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். </p><p>சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களையும், அவற்றை நடத்துகின்ற லேப் டெக்னீசியன்கள் மற்றும் அவர்களின் குடும்ப வாழ்வாதாரத்தையும் காத்திட வேண்டும் என தமிழ்நாடு அரசை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>பராமரிப்புப் பணிகள்: திருச்சி வழியாக செல்லும் ரெயில் சேவைகளில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/maintenance-works-changes-to-train-services-passing-through-trichy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/maintenance-works-changes-to-train-services-passing-through-trichy#comments</comments><guid isPermaLink="false">ca6b1409-d098-4dbe-9dd8-20b4cb4fef64</guid><pubDate>Thu, 03 Sep 2026 10:50:13 +0000</pubDate><atom:updated>2026-09-03T10:50:13.821Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்சி,Trichy,ரெயில் சேவை,Train Services</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/a023u9z4/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/a023u9z4/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள பேரணி பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் திருச்சி வழியாக செல்லும் சில ரெயில்களின் சேவையில் தெற்கு ரெயில்வே மாற்றம் செய்யதுள்ளது.</p><p>அதன் விவரம் வருமாறு:-</p><p>* எழும்பூரில் இருந்து இன்று (வியாழக்கிழை), நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய நாட்களில் மாலை 3.10 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.20665), 20 நிமி டம் தாமதமாக நெல்லை சென்றடையும்.</p><p>* எழும்பூரில் இருந்து இன்று (3-ந்தேதி), நாளை (4-ந்தேதி), நாளை மறு நாள் (5-ந்தேதி) ஆகிய தேதிகளில் மதியம் 1.15 மணிக்கு புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (12635), 1 மணி நேரம் 50 நிமிடம் தாமதமாக மதுரை சென்றடையும்.</p><p>* தாம்பரத்தில் இருந்து இன்று (3-ந்தேதி) மதியம் 2 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06109), 1 மணி நேரம் 30 நிமிடம் தாமதமாக திருவனந்தபு ரம் சென்டிரல் சென்றடையும்.</p><p>* தாம்பரத்தில் இருந்து நாளை (4-ந்தேதி) இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06059), 1 மணி நேரம் 30 நிமிடம் தாமதமாக போடிநாயக்க னூர் சென்றடையும்.</p><p>இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>என் தோட்டத்தில் மின் வயர்கள் திருட்டு - சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/electrical-wires-stolen-from-my-garden-edappadi-palaniswamis-speech-in-the-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/electrical-wires-stolen-from-my-garden-edappadi-palaniswamis-speech-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">5c2818da-2f53-4fa6-a60f-6ffb4ce9b37a</guid><pubDate>Thu, 03 Sep 2026 10:40:20 +0000</pubDate><atom:updated>2026-09-03T10:40:20.465Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,சட்டசபை,TNAssembly,EPS,tvk govt</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/gbjf0ic1/saami33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ சட்டசபை]]></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி பேச்சு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/gbjf0ic1/saami33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் என்னுடைய தோட்டத்தில் 2 நாட்களுக்கு முன், போர்வெல் இயக்க அமைக்கப்பட்டிருந்த மின்வயர்களை திருடிச் சென்றுவிட்டனர் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.</p><p>தமிழ்நாடு சட்டசபையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது அதிமுக பொதுச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">எடப்பாடி பழனிசாமி </a>பேசியதாவது:-</p><p>காவல்துறை மாநில வளர்ச்சிக்கு முக்கியமான துறை. கொரோனா காலகட்டத்தில் காவல்துறையினர் சிறப்பாக பணியாற்றினர். அவர்களால் பல உயிர்கள் காக்கப்பட்டது. பணி ஓய்வுக்கு ஓராண்டுக்கு முன்பே பணியிடத்தை நிரப்ப நடவடிக்கை தேவை.  29,108 காவலர்கள் புதிதாக நியமனம் என்பது போதுமானது அல்ல. </p><p>625 பேருக்கு ஒரு காவலர் என்பது போதுமானது அல்ல. காவலர்கள் எண்ணிக்கையை அதிகரித்தால்தான் தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழும்.  மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப காவலர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். </p><h2>அதிமுக ஆட்சியில் முறையாக பதவி உயர்வு </h2><p>அதிமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாக்கப்பட்டனர். சட்டம், ஒழுங்கு சீராக இருந்தது.அதிமுக ஆட்சியில் சென்னை பாதுகாப்பான நகரமாக இருந்தது. அதிமுக ஆட்சி காலத்தில் குற்றத்தை சமாளிக்க கணினி வழி புதிய பிரிவு ஏற்படுத்தினோம். அதிமுக ஆட்சியில் காவலர்களுக்கு முறையாக பதவி உயர்வு வழங்கினோம். </p><p>அதிமுக ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட்டது. </p><p>காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என தவெக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். காவல் ஆய்வாளர்கள் பலர் ஓய்வு பெற உள்ளனர். அவர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி உயர்வு வழங்க வேண்டும்.</p><h2>சிறப்பு புத்தாக்க பயிற்சி</h2><p>பெண் காவலர்களை இரவு நேரங்களில் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும்.</p><p>காவலர்களின் மன அழுத்தத்தை குறைக்க அதிமுக ஆட்சியில் அளித்தது போல தவெகவும் சிறப்பு புத்தாக்க பயிற்சி அளிக்க வேண்டும்.காவல் நிலையங்களின் உள்ளே 24 மணி நேரமும் சிசிடிவி கேமராக்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>சாலைகளில் உள்ள சிசிடிவி-களில் தூசுகள் படிந்து பதிவுகள் முறையாக கிடைப்பதில்லை, அதை பராமரிக்க வேண்டும்.சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் இடங்களை கண்டறிந்து, அதனை சரி செய்ய வேண்டும்.</p><p>மக்களிடம் ஆதாரங்கள் இருந்தாலும் போக்குவரத்து காவல்துறை அபராதம் வசூலிப்பதாக புகார் வருகிறது, அதை தடுக்க வேண்டும்.</p><h2>விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்</h2><p>எடப்பாடி தொகுதியில் ஜலகண்டபுரத்தில் புறவழிச்சாலை அமைக்க 80% நிலம் எடுப்பு பணிகள் முடிந்து விட்டது.</p><p>திமுக ஆட்சியில் கைவிட்ட புறவழிச்சாலை திட்டத்தை தவெக அரசு செயல்படுத்த வேண்டும். அதிமுக ஆட்சியை போல் விவசாயிகள் 22 மணி நேரம் மின் மோட்டாரை இயக்க அனுமதி வழங்க வேண்டும்.</p><h2>பல இடங்களில் பைக்ரேஸ்</h2><p>வாகன ஓட்டிகளிடம் வசூலித்த அபராதத்தை கருவூலத்தில் செலுத்தாமல் வட்டிக்கு விடுவதாக செய்தி வருகிறது, கண்காணிக்க வேண்டும். இன்னும் பல இடங்களில் பைக் ரேஸ் நடப்பதாக செய்திகள் வருகிறது, அதனை தடுக்க தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இணையவழி குற்றங்களை ஆரம்ப காலத்திலேயே தடுக்க தமிழக வெற்றிக் கழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது.</p><h2>என் தோட்டத்தில் திருட்டு</h2><p>தமிழகத்தில் முதியவர்கள் தனியாக வசிக்கும் வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.</p><p>சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் என்னுடைய தோட்டத்தில் 2 நாட்களுக்கு முன், போர்வெல் இயக்க அமைக்கப்பட்டிருந்த மின்வயர்களை திருடிச் சென்றுவிட்டனர். இவற்றை நான் சபாநாயகரிடம் கொடுத்துவிட்டேன் என புகைப்படங்களை காட்டி  எடப்பாடி பழனிசாமி கூறினார்.</p><h2>எளிமை... கண்ணியம்... எடப்பாடி பழனிசாமிக்கு புகழாரம்</h2><p>முன்னாள் முதல்-அமைச்சர், குற்றச்சாட்டுகளையும், அறிவுரைகளையும், இடையூறு இல்லாமல் நன்றாக வழங்கியிருக்கிறார். இதை பார்க்கும் மக்கள் புரிந்து கொள்வார்கள். எளிமையாகவும், கண்ணியமாகவும், வஞ்சகம் இல்லாமல், வம்பு இழுக்காமல் பேசியதற்காக அவரை பாராட்டுகிறேன் என </p><p>முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு துணை சபாநாயகர் ரவிசங்கர் பாராட்டு தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>அரசின் திட்டங்கள் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டால் தனியாக நிதிநிலை அறிக்கை எதற்கு? சீமான் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/seeman-questions-the-need-for-a-separate-budget-statement-when-government-schemes-are-announced-under-rule-110</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/seeman-questions-the-need-for-a-separate-budget-statement-when-government-schemes-are-announced-under-rule-110#comments</comments><guid isPermaLink="false">7bf35430-3a5d-438e-9b39-815c00997e9e</guid><pubDate>Thu, 03 Sep 2026 09:45:08 +0000</pubDate><atom:updated>2026-09-03T09:45:08.067Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,Seeman,Budget,நிதிநிலை அறிக்கை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/ug0g0sii/seeman.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/ug0g0sii/seeman.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;</p><p>”தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியைப் பயன்படுத்தி அரசின் திட்டங்கள் பலவற்றை தமிழ்நாடு முதல்வர் விஜய் அறிவித்து வருவது மக்களாட்சிக்கும், அதனை நம்பி வாக்களித்த மக்களுக்கும் எதிரானதாகும்.</p><p>நடைபெற்று வரும் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 2026-27 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்த நிறை - குறைகள் குறித்து விவாதித்து முடிவெடுக்கக் கடந்த ஒரு மாத காலமாகச் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. ஆனால், 110 விதியின் கீழ் சிறப்பு அறிவிப்புகள் என்ற பெயரில், நிதிநிலை அறிக்கையில் இல்லாத புதிய திட்டங்களை ஒவ்வொரு நாளும் தமிழ்நாடு முதல்வர் அறிவித்து வருவது ஏன்? எல்லாத் திட்டங்களும் 110 விதியின் கீழே அறிவிக்கப்படும் என்றால் தனியாக நிதிநிலை அறிக்கை என்ற ஒன்று எதற்கு? அதன் மீதான விவாதங்கள்தான் எதற்கு? சட்டப்பேரவையில் முதலமைச்சர் வெளியிடுவது அனைத்தும் முக்கியத் திட்டங்கள் என்றால் அதன் நன்மை தீமைகள் குறித்து அவையில் விவாதங்கள் நடைபெற வேண்டாமா?</p><p>மக்களுக்குத் தேவையான இன்றியமையாத திட்டங்கள் என்றால் அவை ஏன் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை? பொது முக்கியத்துவம் வாய்ந்த அரசு முடிவுகள் மற்றும் புதிய திட்டங்களைப் பேரவைத்தலைவர் அனுமதியுடன் சட்டப்பேரவையில் அறிவிக்கவும், அறிவிக்கும் நேரத்தில் அதன் மீது விவாதம் நடைபெறாமல் இருக்கவும் கடந்த திமுக அதிமுக அரசுகள் விதி 110யை பயன்படுத்தினார்கள். அதை, மாற்றம் எனச் சொல்லி வந்த தவெக அரசு, விளம்பர வெற்று அறிவுப்புகளுக்குப் பயன்படுத்துவது நம்பி வாக்களித்த மக்களுக்குச் செய்யும் துரோகமல்லவா? இதுதான் மாற்றமா?</p><p>சட்டங்களை உருவாக்கவும், விவாதிக்கவும், நிறைவேற்றவும் அமைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் அவையான சட்டப்பேரவையில் இவ்விதியை பயன்படுத்தி நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாத திட்டங்களை ஒவ்வொரு நாளும் வெளியிடுவதும் அதன் மீது விவாதமில்லாமல் கடந்து போவதும் சட்டப்பேரவை உருவாக்கப்பட்டதற்கான நோக்கத்தையே சிதைக்காதா?</p><p>மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் நிறைந்திருக்கும் அவையில், மக்களுக்காக அறிவிக்கப்படும் திட்டங்கள் குறித்து, சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்தும் தெரிவிக்கும் வாய்ப்பை பறிப்பது கொடுங்கோன்மை அல்லவா?</p><p>முதலமைச்சரின் பொறுப்பிலிருந்த துறைகளையே, மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்கிவிட்ட நிலையில், மற்ற அமைச்சகம் சார்ந்த அறிவிப்புகளை வெளியிடுவதற்கு மட்டும் முதலமைச்சர் எதற்கு? அமைச்சர்கள் வெளியிட வேண்டிய அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிடுவது, அமைச்சர்களின் தனித்துவத்தைக் குறைக்காதா? இதன் மூலம் தவெக அரசு தமிழ்நாட்டு மக்களுக்குச் சொல்ல வரும் செய்தி என்ன? அனைத்து முக்கியத் திட்டங்களும் முதலமைச்சரின் மூளையில் உதித்தது என்பதையா?</p><p>கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதியிலிருந்து இன்று வரை தவெக அரசு விதி 110-ன் கீழ் வெளியிடப்பட்ட திட்டங்களுக்கான மதிப்பு மட்டும் ஏறத்தாழ ரூ.73,900 கோடி. அதற்கு மேலாக எரிகாற்று உருளை, இலவச பேருந்து, பால் கொள்முதல் உள்ளிட்டவற்றுக்கு ஆண்டுதோறும் தொடர் செலவாக 10,720 கோடி ரூபாய் வரை தேவைப்படுகிறது. இத்தனை ஆயிரம் கோடிகள் செலவிடப்படும் திட்டங்களின் வரவு செலவுகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாதது ஏன்?</p><p>நிதிநிலை அறிக்கையின்படி ஏற்கனவே இந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சத்தி எழுபத்தாறாயிரம் கோடி கடன் வாங்குவதாக அறிவித்திருக்கிறீர்கள். இப்பொழுது புதிதாக 110 விதியின் கீழ் அறிவித்திருக்கிற திட்டங்களுக்கான ரூ.73,900 கோடிக்கான நிதியை எப்படி பெறுவீர்கள்? யாரிடம் கடன் வாங்குவீர்கள்? இதுதான் கடன் சுமையை குறைக்கும் முறையா? இதுதான் தமிழ்நாட்டை முன்னேற்றுவதற்கான மாற்றமா?</p><p>மக்களாட்சிக்கு எதிரான, நிதி ஆதாரமில்லாத வெற்று விளம்பர திட்டங்களை 110 விதியின் கீழ் அறிவிப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>&quot;அனைத்து கேள்விகளுக்கும் திங்கட்கிழமை பதில்; யாரும் ஓடிவிடக்கூடாது&quot; - சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் பேச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/answers-to-all-questions-on-monday-no-one-should-run-away-chief-minister-vijay-speaks-in-the-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/answers-to-all-questions-on-monday-no-one-should-run-away-chief-minister-vijay-speaks-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">905408ed-8066-498b-8fff-9a6898a33265</guid><pubDate>Thu, 03 Sep 2026 09:38:27 +0000</pubDate><atom:updated>2026-09-03T09:38:27.760Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,TN Assembly,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/vhrnrlmm/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/vhrnrlmm/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அனைத்து கேள்விகளுக்கும் திங்கட்கிழமை பதில் அளிப்பதாகவும், யாரும் ஓடிவிடக்கூடாது என்றும் சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் பேசினார். </p><h2>மானியக் கோரிக்கை விவாதம்</h2><p>தமிழகத்தில் புதிதாக த.வெ.க. அரசு ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், கடந்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி பொது பட்ஜெட்டும், 6-ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆகஸ்டு 17-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. </p><p>அந்த வகையில், நேற்று வரை 43 துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் கையில் உள்ள காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. </p><h2>முதல்-அமைச்சர் பதில் அளிக்க வலியுறுத்தல்</h2><p>சட்டம் - ஒழுங்கு சம்பந்தப்பட்ட துறை என்பதால், விவாதத்தின்போது அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், த.வெ.க. அரசின் செயல்பாடு குறித்து அடுக்கடுக்காக குற்றம்சாட்டினார். அதற்கு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பதில் அளிக்க வேண்டும் என்றும் கூறினார். </p><p>ஆனால், உதயநிதி ஸ்டாலின் கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பதில் அளிக்கவில்லை. மாறாக, அமைச்சர்கள் பதில் அளித்து கொண்டிருந்தனர். அதற்கு தி.மு.க. உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்</p><h2>யாரும் ஓடிவிடக்கூடாது</h2><p>இதனால், சட்டசபையில் விவாதம் அனல் பறந்தது. இதற்கிடையே யாரும் எதிர்பாராத நேரத்தில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் எழுந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-  </p><p>“அனைத்து கேள்விகளுக்கும் திங்கட்கிழமை பதிலளிப்பேன். நான் இங்கு இல்லை என்றாலும், இங்கு எழுப்பப்படும் அனைத்து கேள்விகளையும் நான் அறிவேன். ஒரே ஒரு கோரிக்கை வைக்கிறேன். பதிலளிக்கும்போது யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது.”</p><p>இவ்வாறு அவர் பேசினார். </p><h2>கடும் எதிர்ப்பு</h2><p>அத்துடன், சட்டசபையை விட்டும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் வெளியேறினார். முதல்-அமைச்சரின் இந்த கருத்துக்கும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்பட தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அவரது குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன் ஆகியோர் பதில் அளித்தனர். </p>]]></content:encoded></item><item><title>ரேஷன் கடைகளில் வெங்காய விற்பனை: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sale-of-onions-at-ration-shops-ministers-inaugurate-the-initiative</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sale-of-onions-at-ration-shops-ministers-inaugurate-the-initiative#comments</comments><guid isPermaLink="false">a5b3c6e1-16a5-4d21-a5ba-2d3fb07febad</guid><pubDate>Thu, 03 Sep 2026 09:37:33 +0000</pubDate><atom:updated>2026-09-03T09:37:33.472Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>ரேஷன் கடைகள்,ration shops,வெங்காயம்,Onions</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/rewnro3l/3.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/rewnro3l/3.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மூலம் பொதுமக்களுக்கு தரமான வெங்காயம் குறைந்த விலையில் தடையின்றிக் கிடைக்கும் வகையில் சந்தை குறுக்கீட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>வெளிச்சந்தையில் அத்தியாவசியப் பொருளான வெங்காயத்தின் விலை உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்தவும், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.</p><p>இதற்காக, தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையம் (NAFED) மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) ஆகியவற்றின் மூலம், முதற்கட்டமாக 1,000 மெட்ரிக் டன் வெங்காயம் மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கிலிருந்து தமிழ்நாடு அரசால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 03.09.2026 முதல் குடும்ப அட்டை ஒன்றுக்கு ஒரு கிலோ வீதம், கிலோ ரூ.35/- என்ற மானிய விலையில் தமிழ்நாடு முழுவதும் வெங்காயம் விற்பனை செய்யப்படும்.</p><p>நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகள், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலைகள், பிரதம கூட்டுறவு பண்டகசாலைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் நடத்தப்படும் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் பண்ணை பசுமைக் கடைகள் உள்ளிட்ட மொத்தம் 8,914 கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வெங்காயம் விற்பனை செய்யப்படும்.</p><p>இதற்கான முதல் விற்பனையினை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப.வெங்கடரமணன் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் வ.காந்திராஜன் ஆகியோர் சென்னையில், திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் டி.டி.கே. சாலையில் உள்ள நியாயவிலைக் கடையில் இன்று (03.09.2026) தொடங்கி வைத்தார்கள்.</p><p>இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் செயலாளர் பி.அமுதா, மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஜி.லதா ஆகியோரும் கலந்து கொண்டனர்.</p><p>இந்நடவடிக்கையின் மூலம் பொதுமக்களுக்கு தரமான வெங்காயம் குறைந்த விலையில் தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்படும். நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அனைவரும் 03.09.26 முதல் தங்களுக்குரிய நியாயவிலைக் கடைகளை அணுகி, கிலோ ரூ.35/- என்ற மானிய விலையில் வெங்காயத்தைப் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.</p> ]]></content:encoded></item><item><title>திருநெல்வேலியில் இந்த ஆண்டு இதுவரை 100 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/100-people-arrested-under-the-detention-act-in-tirunelveli-so-far-this-year</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/100-people-arrested-under-the-detention-act-in-tirunelveli-so-far-this-year#comments</comments><guid isPermaLink="false">356206cd-9a90-4885-84b2-3d95dee662ff</guid><pubDate>Thu, 03 Sep 2026 09:16:18 +0000</pubDate><atom:updated>2026-09-03T09:16:18.197Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Tirunelveli,திருநெல்வேலி,arrests,இந்த ஆண்டு,This year,இதுவரை,so far,தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டம்,Tamil Nadu Detention Act</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/5suwkad6/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/5suwkad6/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி </a>மாவட்டம், வி.கே.புரம் காவல் நிலைய சரகத்தில் கொலை, அடிதடி மற்றும் குற்றமுறு மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்ட 2 பேர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின்</a> கீழ் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்யப்பட்டனர்.</p><h2>கொலை, அடிதடி வழக்குகள்</h2><p>திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை, அடிதடி மற்றும் குற்றமுறு மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட வி.கே.புரம் டாணா பகுதியைச் சேர்ந்த ரத்தினசாமி மகன் கார்த்திக்சங்கர்ராஜா (வயது 37) மற்றும் காளிமுத்து மகன் மாரியப்பன்(42) ஆகிய 2 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். </p><h2>பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்</h2><p>இந்த நிலையில், மேற்சொன்ன 2 பேரும் கொலை, அடிதடி மற்றும் குற்றமுறு மிரட்டல் போன்ற தொடர் சட்டவிரோத குற்றச்செயல்களில் ஈடுபட்டு, பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால், வி.கே.புரம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு பாஸ்கர், மேற்சொன்ன 2 பேர் மீதும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் பரிந்துரை செய்தார். </p><h2>2 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது</h2><p>அதன்பேரில், திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி பரிந்துரையின்படி, திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஆனந்த் மோகன் பிறப்பித்த தடுப்புக் காவல் உத்தரவின்பேரில், மேற்சொன்ன 2 பேரும் நேற்று தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். </p><h2>இந்த ஆண்டு இதுவரை 100 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது</h2><p>திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 100 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>’மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு தொடர் முயற்சி: ஆனால், நாம்?’ - அன்புமணி கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/karnataka-government-makes-persistent-efforts-to-build-the-mekedatu-dam-but-what-about-us-anbumani-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/karnataka-government-makes-persistent-efforts-to-build-the-mekedatu-dam-but-what-about-us-anbumani-asks#comments</comments><guid isPermaLink="false">69081c57-4f13-4c4d-92a6-1cdbc87a2be4</guid><pubDate>Thu, 03 Sep 2026 08:41:28 +0000</pubDate><atom:updated>2026-09-03T08:41:28.072Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,மேகதாது அணை,Mekedatu dam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/5emy4ffq/anbu.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/5emy4ffq/anbu.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;</p><p>”காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு விரைவாக அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய நீர்வள ஆணையத் தலைவர் அனுபம் பிரசாத் அவர்களை கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சாலுவராய சாமி அவர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார். மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகம் மேலும், மேலும் முன்னேறி வரும் நிலையில், தமிழக அரசு தொடர்ந்து அமைதி காப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.</p><p>மேகதாது அணை கட்டப்படவுள்ள இடத்தை மத்திய நீர்வள ஆணையத்தின் குழு உடனடியாக நேரில் ஆய்வு செய்ய வேண்டும்; ஆய்வுப் பணிகள் விரைந்து முடிக்கப்படுவதற்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று இந்த சந்திப்பின் போது கர்நாடக அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். மேகதாது அணை தொடர்பாக மத்திய நீர்வள ஆணையம் கோரும் கூடுதல் தொழில்நுட்பத் தகவல்களை உடனுக்குடன் வழங்கவும் கர்நாடக அரசு தயாராக இருக்கிறது என்றும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார். இதன் மூலம் மேகதாது அணை கட்டும் முயற்சிகளில் கர்நாடக அரசு மேலும் ஒரு படி முன்னேறியுள்ளது.</p><p>மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை  கடந்த 2019&amp;ஆம் ஆண்டில் மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு தாக்கல் செய்தது. அந்த அறிக்கையின் சில அம்சங்கள் காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் கூறுகளுக்கு எதிராக இருப்பதால், அதை திருத்தி வழங்கும்படி கடந்த ஜூன் 29&amp;ஆம் தேதி மத்திய நீர்வள ஆணையம் திருப்பி அனுப்பியது. அடுத்த 50 நாள்களுக்குள், அதாவது ஆகஸ்ட் 19&amp;ஆம் தேதிக்கு முன்பாக திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு தாக்கல் செய்து விட்டது. அடுத்த 10 நாள்களில், அதாவது ஆகஸ்ட் 29&amp;ஆம் தேதி மைசூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அவர்கள், மேகதாது அணை கட்டும் பணிகளை விரைவுபடுத்தும் நோக்குடன் அணைக்கு அனுமதி கோரி மத்திய நீர்வள ஆணையத்தை கர்நாடகம் அணுகும் என்று கூறியிருந்தார். அடுத்த நான்காம் நாளில் கர்நாடக அமைச்சர் மத்திய நீர்வள ஆணையத் தலைவரை சந்தித்து புதிய அணைக்கு விரைவாக அனுமதி தர வேண்டும் என்று கோரியிருக்கிறார். மேகதாது அணையை கட்டுவதில் கர்நாடகம் காட்டும் தீவிரத்தை இது உணர்த்துகிறது.</p><p>அதே நேரத்தில், மேகதாது அணை தொடர்பாக கர்நாடக அரசு ஒவ்வொரு அடியை எடுத்து வைக்கும் போதும், அதை சுட்டிக்காட்டி, கர்நாட அரசின் முயற்சிகளை முறியடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வலியுறுத்தி வருகிறேன். கடந்த ஆகஸ்ட் 30&amp;ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில்,‘‘மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டிற்கு, குறிப்பாக, காவிரி பாசன மாவட்டங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் நினைத்துப்பார்க்க முடியாதவை. மேகதாது அணையை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வரும் நிலையில், தமிழ்நாடு அமைதியாக இருப்பது நல்லதல்ல. தமிழக அரசின் அலட்சியம் காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை தாரைவார்ப்பதாக அமைந்துவிடும். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது. மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். இது குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும்’’ என்று வலியுறுத்தியிருந்தேன். ஆனால், தமிழக அரசு அதன் அலட்சிய அணுகுமுறையை மாற்றிக்கொள்ளவில்லை.</p><p>மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டுக்கு பாசனத் தேவை, குடிநீர்த் தேவை உள்ளிட்டவற்றில் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும், கர்நாடகத்தில் சுற்றுச்சூழலுக்கும், வன உயிரினங்களுக்கும் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து இதுவரை 100 முறைகளுக்கு மேல் விளக்கிக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளேன். அதன் பயனாக, மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகி விடும் என்பதையும், சென்னை உள்பட 28 மாவட்டங்களில் உள்ள 5 கோடி மக்களுக்கு குடிநீர் கிடைக்காது என்பதையும் தமிழக ஆட்சியாளர்கள் நன்கு அறிந்திருப்பார்கள். இவ்வளவுக்கும் பிறகும் மேகாதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் நகர்வுகளை கண்டும் காணததைப் போல தமிழக அரசு அமைதி காப்பதன் காரணத்தை   புரிந்து கொள்ள முடியவில்லை. இது என்ன வகையான அரசியல் உத்தி என்பதும் எங்களுக்குத் தெரியவில்லை.</p><p>மேகதாது அணை கட்ட விரைவாக அனுமதி அளிக்க வேண்டும் என்று கர்நாடக அரசின் சார்பில் மத்திய நீர்வள ஆணையத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில், மேகதாது அணை கட்டப்படுவது உச்சநீதிமன்றம்  மற்றும் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு எதிரான என்பதால், அதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று மத்திய நீர்வள ஆணையத்தை வலியுறுத்த வேண்டியது தமிழ்நாடு அரசின் அடிப்படையானக் கடமை ஆகும். அந்தக் கடமையை தமிழ்நாடு அரசு எப்போது நிறைவேற்றி, காவிரியை பாதுகாக்கப் போகிறது?</p><p>அரசியலாக இருந்தாலும், நிர்வாகமாக இருந்தாலும், மாநில உரிமைகளை பாதுகாப்பதாக இருந்தாலும் விழித்துக் கொண்டவர்கள் தான் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அலட்சியமாக இருந்தவர்கள் உரிமைகளை இழந்திருக்கிறார்கள். 1970&amp;ஆம் ஆண்டுகளில் கர்நாடகத்தில் காவிரி துணை ஆறுகளின் குறுக்கே கபினி, ஹாரங்கி, ஹேமாவதி, சுவர்ணவதி ஆகிய 4 அணைகள் கட்டப்பட்டது தான் இதற்கு சான்றாகும். அந்த அணைகளால் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை இன்று வரை நம்மால் சரி செய்ய முடியவில்லை. இத்தகைய சூழலில் இன்னும் ஒரு அணை கட்டப்பட்டால் காவிரி பாசன மாவட்டங்களின் நிலை என்னவாகும்?</p><p>தமிழக அரசிடம் மீண்டும், மீண்டும் வலியுறுத்துவதெல்லாம் காவிரி விவகாரத்தில் கடைபிடித்து வரும் அலட்சியமான அணுகுமுறையை உடனடியாக கைவிடுங்கள் என்பது தான். மத்திய நீர்வள ஆணையர், மத்திய நீர்வள அமைச்சர், பிரதமர் ஆகியோரை தமிழக முதலமைச்சர் அவர்கள் நேரில் சந்தித்து மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி தரக் கூடாது; அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்ய 2018&amp;ஆம் ஆண்டில் அளிக்கப்பட்ட அனுமதியை திரும்பப் பெறும்படி வலியுறுத்த வேண்டும்.  அவ்வாறு செய்யும் போது மேகதாது அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடத்தும் போது இதை சுட்டிக் காட்டி வாதிட முடியும் என்பதால் உடனடியாக இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>நகர்ப்புற  வேளாண் நிலங்களை அபகரிக்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்  எதிர்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-farmers-association-opposes-the-bill-amending-laws-regarding-the-acquisition-of-urban-agricultural-lands</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-farmers-association-opposes-the-bill-amending-laws-regarding-the-acquisition-of-urban-agricultural-lands#comments</comments><guid isPermaLink="false">89cd10d8-469c-4d0d-9b72-449802e4ced6</guid><pubDate>Thu, 03 Sep 2026 08:29:33 +0000</pubDate><atom:updated>2026-09-03T08:29:33.014Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,தமிழ்நாடு அரசு,விவசாயிகள் சங்கம்,தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,Agricultural Lands,சட்ட திருத்த மசோதா,வேளாண் நிலங்கள்,tamilnadu farmers,TamilNadu Farmers&apos; Association</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/2p7ds8ex/ellora.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/2p7ds8ex/ellora.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>புதிய சட்ட மசோதா, நகர் சார்ந்த, கிராமப்புற வாழ்வு நிலை  மக்களின் வாழ்வுரிமை நிலைகளை பறிப்பதாகும் என்று  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி தெரிவித்துள்ளார். </p><h2>புதிய சட்ட மசோதா</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>02.09.2026 அன்று <a href="https://www.dailythanthi.com/topic/tn-assembly">தமிழ்நாடு சட்டமன்றத்தில்</a> நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் ஒரு புதிய சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ளார். நகர்ப்புற மேம்பாட்டிற்காக வேளாண்  நஞ்சை நிலங்களை கையகப்படுத்த, நகர ஊரக அமைப்பு இயக்குனருக்கு அனுமதி வழங்கும் ஒரு சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்துள்ளார். </p><p>இதன் மூலம், உள்ளாட்சி அமைப்புக .மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரம் பறிக்கப்பபடுகிறது. இது நகர்புற வளர்ச்சி என்பதின் பெயராலே,  வேளாண்மையை அழித்திடும் நடவடிக்கையாகும்.</p> <p>நஞ்சை நிலங்களை கையகப்படுத்த வேண்டும் என்றால் இதுவரை உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலை பெற்ற பின் தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்ற சட்ட பாதுகாப்பு 2017 ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் நகர்ப்புற வளர்ச்சி தடைபடுகிறது என்ற பேரால் இந்த மசோதா கொண்டுவரப்படுவதாக அமைச்சர் கூறுகிறார். </p> <h2>மக்களின் வாழ்வுரிமை </h2><p>இந்த சட்ட மசோதா, நகர் சார்ந்த கிராமப்புற வாழ்வு நிலை  மக்களின் வாழ்வுரிமை நிலைகளை பறிப்பதாகும். இதுவரை இதன் மீது மாவட்ட ஆட்சியருக்கு இருந்த அதிகாரத்தை பற்றி எதுவும் கூறாமல் இருந்தாலும், இந்த புதிய மசோதாவில் நகர்ப்புற வளர்ச்சி வேளாண் இயக்குனர் தலைமையில் அமைக்கப்படுகிற கமிட்டியில் ஒருவராக மாவட்ட ஆட்சியர் இருப்பாராம். மக்களின் மனசாட்சிக்கு பதில் சொல்ல வேண்டிய மாவட்ட ஆட்சியரை மடைமாற்றி நகர்ப்புற நஞ்சை மக்கள்  பலியிடப்பட உள்ளனர்.</p><p>லட்சக்கணக்கான வீட்டு மனைகள், சிப்காட், சிட்கோ பெருந்திட்டம் என்ற பெயரால் எடுக்கப்பட்ட நிலங்கள், இதை பயன்படுத்தப்படாத நிலங்கள், வேளாண் விரோத சட்டங்கள் திட்டங்களால் விளை நிலங்கள் அருகி.. அதிலிருந்து வருமானம் பெற்ற விவசாயிகள் தொழிலாளர்கள், இதை நம்பி இருந்த மக்கள் வேறு வழியின்றி தவிக்கின்றனர்.</p><h2>உள்ளாட்சியில் கைவைத்தால்</h2><p>இந்த நிலையில் முந்தைய அரசு 2023ஆம் ஆண்டு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை கொண்டு வந்து, தனியார் நிறுவனங்களுக்கு நீர்நிலைகள் உள்பட தாரை வார்க்கக் கொண்டு வந்த சட்டம் போல்.. தற்போது த.வெ.க.அரசு இந்த சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்துள்ளது</p><p>உள்ளாட்சி என்பது மக்கள் ஜனநாயகம் மலரும் அமைப்பு. உள்ளாட்சியில் கைவைத்தால் இது நல்லாட்சிக்கான எடுத்துக்காட்டு அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். உடனடியாக இந்த திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.</p><h2>வரவேற்பு..!!</h2><p>பல்வேறு ஜனநாயக உரிமை போராட்டங்களில் பங்கு கொண்டு காவல் துறையால் போடப்பட்ட வழக்குகளில் வழக்காடு மன்றங்களில் அலைந்து திரிந்து வருகிற விவசாயிகளை காத்திட... இதுவரை நிலுவையில் உள்ள வழக்குகள்  ரத்து செய்யப்படும் என தமிழக முதல்-அமைச்சர் அறிவித்துள்ளதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>பொதுமக்களிடம் எச்.ஐ.வி. விழிப்புணர்வு: தொடங்கி வைத்தார் மேயர் பிரியா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/hiv-awareness-campaign-for-the-public-mayor-priya-inaugurates-the-event</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/hiv-awareness-campaign-for-the-public-mayor-priya-inaugurates-the-event#comments</comments><guid isPermaLink="false">8ce6fa94-bdf5-4ff7-bea9-a20661e68360</guid><pubDate>Thu, 03 Sep 2026 08:20:17 +0000</pubDate><atom:updated>2026-09-03T08:20:17.886Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Mayor Priya,மேயர் பிரியா,விழிப்புணர்வு,Awareness,எச்.ஐ.வி.,சென்னை மேயர் பிரியா,Awareness Campaign,Mayor Priya Rajan,எச்.ஐ.வி தொற்று,விழிப்புணர்வு ஊர்வலம்,HIV awareness</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/ng6bn76v/Untitled-16.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/ng6bn76v/Untitled-16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் எச்.ஐ.வி./எயிட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் பிரசாரப் பேரணியினை மேயர் ஆர். பிரியா இன்று தொடங்கி வைத்தார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>எச்.ஐ.வி. - எயிட்ஸ் விழிப்புணர்வு</h2><p>சென்னை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் எச்.ஐ.வி./எயிட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் கலந்து கொண்ட தீவிர விழிப்புணர்வு பிரசாரப் பேரணியினை (Intensified IEC Campaign) மேயர் ஆர். பிரியா இன்று (03.09.2026) ரிப்பன் கட்டட வளாகத்தில் தொடங்கி வைத்தார்.</p><p>தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு முழுவதும் எச்.ஐ.வி. எயிட்ஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் எச்.ஐ.வி. எயிட்ஸ் தடுப்பு பரிசோதனை, ஆரம்பகால கண்டறிதல், சிகிச்சை மற்றும் எச்.ஐ.வியுடன் வாழும் நபர்களுக்கு எதிரான களங்கம் மற்றும் பாகுபாட்டை ஒழித்திடும் வகையிலான தீவிர எச்.ஐ.வி. மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மேயரால் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.</p><h2>மேயர் தொடங்கி வைத்தார்</h2><p>இதில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் எச்.ஐ.வி. எயிட்ஸ் நோய் குறித்த வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை 100க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் மேயர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து, எச்.ஐ.வி. எயிட்ஸ் நோய் குறித்த நாட்டுப்புற கலைநிகழ்ச்சி மற்றும் கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு திடீர் நடன நிகழ்ச்சியினைப் பார்வையிட்டார்.</p><p>பின்னர், அரசு மற்றும் தனியார் செவிலியர் கல்லூரி, அரசு கலைக்கல்லூரி மற்றும் அறிஞர் அண்ணா சித்தா கல்லூரிகளைச் சார்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரின் தீவிர விழிப்புணர்வுப் பிரச்சாரப் பேரணியினைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இப்பேரணியானது, ரிப்பன் கட்டட வளாகத்தில் தொடங்கி பெரியமேடு சாலை வழியாக சென்று நேரு உள்விளையாட்டரங்கப் பகுதியில் நிறைவுற்றது.</p><h2>பேரணி மூலம் விழிப்புணர்வு</h2><p>இப்பேரணியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் எச்.ஐ.வி. எயிட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.</p><p>இந்நிகழ்ச்சியில், <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மாநகராட்சி </a>ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன், நிலைக்குழுத் தலைவர் (பொதுசுகாதாரம்) கோ. சாந்தகுமாரி, மாவட்ட எயிட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர்/மாநகர நல அலுவலர் டாக்டர் எம். ஜெகதீசன், மாவட்ட திட்ட மேலாளர் டாக்டர் ஏ.கார்த்திகேயன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>