<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 26 Aug 2026 20:27:00 +0000</lastBuildDate><item><title>
நேபாள வெள்ளத்தில் சிக்கிய 37 தமிழர்கள்; தமிழக அரசு அவசர உதவி எண் அறிவிப்பு
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/37-tamils-stranded-in-nepal-floods-tamil-nadu-government-announces-emergency-helpline</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/37-tamils-stranded-in-nepal-floods-tamil-nadu-government-announces-emergency-helpline#comments</comments><guid isPermaLink="false">f6a1cc3e-f98b-4708-bc5e-f9d814d89849</guid><pubDate>Wed, 26 Aug 2026 20:15:51 +0000</pubDate><atom:updated>2026-08-26T20:15:51.822Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nepal,நேபாளம்,தமிழக அரசு,Flood,வெள்ளம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/6ad1fs6f/nftnp.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/6ad1fs6f/nftnp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>நேபாள வெள்ளத்தில் 37 தமிழர்கள் சிக்கிய நிலையில், தமிழக அரசு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அவசர உதவி எண்களை </a>அறிவித்துள்ளது.</p><p>நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் வடக்கே அமைந்துள்ளது ரசுவா மாவட்டம்.  இந்த மாவட்டத்தின் வடக்கு பகுதியில் உள்ள ரசுவாகடி பகுதியில், லெண்டே கோலா ஆறும், பிற சிறிய ஆறுகளும் ஒன்றிணைந்து 'போடேகோஷி' ஆறாக கீழ்நோக்கி பாய்கின்றன.</p> <h2>திடீர் வெள்ளப்பெருக்கு</h2><p>இந்த ஆற்றில் நேற்று காலை 8.30 மணியளவில் திடீரென பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ரசுவா மற்றும் அருகில் உள்ள நுவாகோட் மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஆற்றின் இருபுறமும் உள்ள வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.</p><p>வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கி இதுவரை 95 பேர் பலியாகி உள்ளனர்.  வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.  93 பேர் பல்வேறு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 30 பேர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p> <h2>தமிழர்கள் 37 பேர்</h2><p>இந்த நிலையில், நேபாள சுற்றுலா வாரியம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சுற்றுலா பயணிகள் 750 பேர் வெள்ளத்துக்கு பிறகு தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். இவர்களில் 291 பேர் வெளிநாட்டினரும். 32 பேர் பாதுகாப்பு படையினரும் அடங்குவர்.</p><p>வெளிநாட்டினரில் 133 பேர் இந்தியர்கள் என்றும், 37 பேர் வெளிநாடுவாழ் இந்தியர்கள் என்றும் தெரியவந்துள்ளது.  இந்தியர்களில் தமிழகத்தை சேர்ந்த 57 பேரும் உள்ளனர்.  இவர்களில் 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மற்ற 37 பேரின் கதி என்ன? என்று தெரியவில்லை.</p> <h2>தமிழக அரசு அவசர உதவி எண்</h2><p>அவர்களை மீட்க தமிழக அரசு அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது. தமிழர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும் வகையில், தமிழக அரசின் அயலக தமிழர் நலத்துறை 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இந்தியாவில் இருந்து 1800 309 3793 என்ற எண்ணிலும், வெளிநாடுகளில் இருந்து +91 80 6900 9900 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் மூலமும் தொடர்பு கொள்ளலாம். மேலும் +91 80 6900 9901 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பியும் உதவி பெறலாம். தமிழக அரசின் உதவி மையத்தின் வாட்ஸ்அப் எண் 9289516712 ஆகும்.</p> ]]></content:encoded></item><item><title>நேபாளத்தின் வெள்ளப்பெருக்கு; தமிழர்களை மீட்பது குறித்து மத்திய அரசுடன் தொடர்ந்து ஆலோசனை - அமைச்சர் வினோத் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/floods-in-nepal-minister-vinoth-states-that-consultations-with-the-central-government-regarding-the-rescue-of-tamils-are-ongoing</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/floods-in-nepal-minister-vinoth-states-that-consultations-with-the-central-government-regarding-the-rescue-of-tamils-are-ongoing#comments</comments><guid isPermaLink="false">587b2ed2-7b82-42fa-8b05-22f6e847a954</guid><pubDate>Wed, 26 Aug 2026 16:16:33 +0000</pubDate><atom:updated>2026-08-26T16:16:33.516Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nepal,நேபாளம்,தமிழக அரசு,TN govt,அமைச்சர் வினோத்,Minister Vinoth</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/16s7n07f/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/16s7n07f/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திபெத் எல்லை நேபாளத்தில் இன்று ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக குடியிருப்புகள், வாகனங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வெள்ள பாதிப்பு தொடர்பான சேதங்களை மதிப்பிடும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். </p><p>இதுவரை வெளியான தகவலின்படி, வெள்ள பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்பட சுமார் 300-க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. </p> <p>இதனிடையே நேபாளத்தில் சிக்கிய இந்தியர்களில் 57 பேர் தமிழர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், நேபாளத்தில் சிக்கிய தமிழகர்களை மீட்பது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் தமிழக அரசு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாக அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார். </p><p>நேபாளத்தின் ரசுவா பகுதியில் சிக்கிய 36 பெண்கள் உள்பட மொத்தம் 57 தமிழர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இது குறித்து நேபாளத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு தமிழக அரசு சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  </p>]]></content:encoded></item><item><title>‘தேர்தல் முடிவை வைத்து ஒரு கட்சியின் பலம், பலவீனத்தை தீர்மானிக்க முடியாது’ - முத்தரசன் கருத்து </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-partys-strength-or-weakness-cannot-be-determined-based-on-election-results-mutharasans-view</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-partys-strength-or-weakness-cannot-be-determined-based-on-election-results-mutharasans-view#comments</comments><guid isPermaLink="false">5d2a2c28-ef43-4fe6-bd68-21c7925717a3</guid><pubDate>Wed, 26 Aug 2026 16:03:45 +0000</pubDate><atom:updated>2026-08-26T16:03:45.525Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>முத்தரசன்,Mutharasan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/abforbg3/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/abforbg3/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் திருவாரூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“தேர்தல் முடிவு வைத்து ஒரு கட்சியின் பலம், பலவீனத்தை தீர்மானித்துவிட முடியாது. கடந்த கால சட்டமன்ற முடிவுகளை எல்லாம் பார்க்க வேண்டும். நாட்டில் அனைத்து மாநிலங்களிலும், மத்தியிலும் 1967 வரை காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி நடத்தியது. 1967-ல் 8 மாநிலங்களில் காங்கிரஸ் தோற்றது. 1977-ல் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது. </p><p>அதே போல் தமிழ்நாட்டில 1971-ல் தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பின்னர் 1977-ல் தி.மு.க. தோற்றது, அதைத் தொடர்ந்து 1989-ல் மீண்டும் வெற்றி பெற்றது. 1991-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல 234 தொகுதிகளில் திருத்திரைபூண்டி, திருவாரூர், சென்னையில் கலைஞர் போட்டியிட்ட துறைமுகம் தொகுதி, புதுக்கோட்டை மாவட்டத்தில் அரந்தாங்கி தொகுதி ஆகிய 4 தொகுதிகளை தவிர மற்ற 230 இடங்களிலும் அ.தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது.</p> <p>அத்தகைய இமாலய வெற்றியை பெற்ற அ.தி.மு.க., 1996 தேர்தலில் நான்கே இடங்களில்தான் வெற்றி பெற்றது. ஜெயலலிதா தோற்றுப் போனார். தொடர்ந்து 2001-ல் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்றது, தி.மு.க. தோற்றது. இதுபோல் கடந்த காலங்களில் வெற்றிகளும், தோல்விகளும் மாறி மாறி வந்துள்ளன. </p><p>தற்போது தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அணி தோற்றிருக்கிறது. தி.மு.க.வுடன் சேர்ந்து போட்டியிட்ட நாங்களும் தோற்றிருக்கிறோம். எங்கள் அணி தோற்றிருக்கிறது. த.வெ.க. பெற்ற வெற்றியை ஏற்கிறோம். வெற்றியை மதிக்கிறோம். ஆனால் இது நிரந்தரம் அல்ல என்பதை தோற்றவர்களும், வெற்றி பெற்றவர்களும் புரிந்து கொள்ள வேண்டும். </p><p>இது ஜனநாயக நாடு. மக்கள் தங்களது விருப்பத்தின்படி ஆட்சியை தேர்ந்தெடுப்பார்கள். இன்றைக்கு த.வெ.க.வை பெரிய நம்பிக்கையோடு தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அதை நாங்களும் ஏற்கிறோம். ஆனா இது நிரந்தரம் நிரந்தரம் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார்.  </p>]]></content:encoded></item><item><title>அதிரடிக்கு தயாராகும் தி.மு.க: எந்த மாவட்டத்தில் எந்தெந்த தொகுதிகள்..? - 2 நாட்களில் வெளியாகும் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-gears-up-for-bold-moves-which-constituencies-in-which-districts-announcement-expected-in-two-days</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-gears-up-for-bold-moves-which-constituencies-in-which-districts-announcement-expected-in-two-days#comments</comments><guid isPermaLink="false">6b6aab42-8651-4d7f-a9a4-ceced096106c</guid><pubDate>Wed, 26 Aug 2026 15:43:38 +0000</pubDate><atom:updated>2026-08-26T15:43:38.159Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,M.K.Stalin,தமிழகம்,அரசியல் களம்,District Secretaries,மாவட்ட செயலாளர்கள்,tn politics</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/862rovor/bloo.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/862rovor/bloo.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு தி.மு.க.வில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர அக்கட்சியின் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/mkstalin">மு.க.ஸ்டாலின்</a> நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். முதியவர்களை விடுவித்து, இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.</p><p>குறிப்பாக, அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இளைஞரணியை சேர்ந்தவர்களுக்கும் மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 22-ம் தேதி நடைபெற்றது. கட்சியின் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/mkstalin">மு.க.ஸ்டாலின்</a> தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.</p><h2>14 மாவட்டங்களில்</h2><p>குறிப்பாக, தி.மு.க.வின் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 75-ல் இருந்து 110 ஆக உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க.வின் அமைப்பு ரீதியான மாவட்டங்கள் 110ஆக உயரும் நிலையில், எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த தொகுதிகள் இடம்பெறலாம் என்பது குறித்து கட்சியின் மறுசீரமைப்பு குழு தரப்பில் ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை உட்பட 14 மாவட்டங்களில் மட்டும் 3 தொகுதிகளுக்கு அமைப்பு ரீதியாக மாவட்டம் என்று பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><h2>தீர்மானம்</h2><p>மாவட்டங்களின் எண்ணிக்கை 110ஆக உயர்த்தப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் மூலமாக 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற நிலை உருவாகும் என்பதோடு, மாவட்டச் செயலாளர்களுக்கு வயது வரம்பு மற்றும் 3 முறை மட்டுமே பொறுப்பில் இருக்க முடியும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.</p><h2>புதிதாக மாவட்டச் செயலாளர் பொறுப்பு</h2><p>இதற்கு தி.மு.க.வின் அடுத்த தலைமுறை தலைவர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. அதேபோல் சீனியர்களை ஒரே அடியாக ஓரம் கட்டாமல், அவர்களுக்கு மாநில அளவிலான பொறுப்புகளை கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க.வின் இந்த புதிய அறிவிப்பு காரணமாக 13 முன்னாள் அமைச்சர்கள் மாவட்டச் செயலாளர்கள் பொறுப்பை இழக்கின்றனர்.</p><p>இதனால் மொத்தமாக தி.மு.க.வில் சுமார் 50 பேர் வரை புதிதாக மாவட்டச் செயலாளர் பொறுப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தி.மு.க.வில் அமைப்பு ரீதியான மாவட்டங்கள் 110ஆக பிரிக்கப்படும் சூழலில், இதுதொடர்பாக மறுசீரமைப்பு பரிந்துரை குழு நேற்று ஸ்டாலினிடம் ஒரு அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறது.</p><h2>சென்னை, திருச்சி, சேலம்</h2><p>அந்த அறிக்கையில் எந்தெந்த தொகுதிகள் எந்தெந்த மாவட்டங்களோடு சேர்க்கலாம் என்ற தகவல் இடம்பெற்றுள்ளன. அதன்படி 14 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் செயற்குழு தீர்மானங்களின் படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 2 தொகுதிகளாக பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி, சேலம், விருதுநகர், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களை பிரிக்கும் போது தலா 3 தொகுதிகளுடன் மாவட்டம் உருவாக்கப்படுகிறது.</p><h2>110 மாவட்டங்கள் எது</h2><p>அதேபோல் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும் தலா 3 தொகுதிகளுடன் ஒரு அமைப்பு ரீதியான மாவட்டம் உருவாக்கப்படுகிறது. இந்த மாவட்டங்களின் அடிப்படையில் ஓரிரு நாட்களில் ஸ்டாலின் 110 மாவட்டங்கள் எது, எப்படி பிரிக்கப்பட்டுள்ளது என்பதை அறிவிக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.</p><p>ஏற்கனவே தேர்தல் மூலமாகவே தி.மு.க.வில் பதவிகள் நிரப்பப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இதனால் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு அறிவிக்கப்பட உடன், அடுத்தக் கட்டமாக மாவட்டச் செயலாளர்கள் மற்ற கிளை நிர்வாகங்களை பிரித்து அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு குறித்த செய்திகள் மிகுந்த கவலையளிக்கின்றன - மு.க.ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/news-of-floods-in-nepal-are-deeply-distressing-says-m-k-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/news-of-floods-in-nepal-are-deeply-distressing-says-m-k-stalin#comments</comments><guid isPermaLink="false">5581008b-367f-468a-9b1b-38e54d07d041</guid><pubDate>Wed, 26 Aug 2026 15:25:43 +0000</pubDate><atom:updated>2026-08-26T15:25:43.364Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,மு.க.ஸ்டாலின்,MKstalin,nepal flood,நேபாளம் வெள்ளம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/gh5hy15j/Untitled-10.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/gh5hy15j/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நேபாளத்தில் ரசுவா மாவட்டத்தில் உள்ள கிராமங்களை, இன்று (புதன்கிழமை) காலை போட்டேகோஷி (Bhotekoshi) ஆற்றில் ஏற்பட்ட கடும் திடீர் வெள்ளம் அடித்து சென்றதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சுமார் 350-க்கும் மேற்பட்டோர் (28 போலீசார் உள்பட) மாயமாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த நிலையில் நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு குறித்த செய்திகள் மிகுந்த கவலையளிக்கின்றன என்று திமுக தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு குறித்த செய்திகள் மிகுந்த கவலையளிக்கின்றன. பல்வேறு மனித உயிர்கள் பலியாகியிருக்கும் சூழலில் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் அங்கு சிக்கியிருக்கின்றனர்.</p><p>மத்திய அரசும், மாநில அரசும் விரைந்து செயல்பட்டு, நமது மக்கள் பத்திரமாகத் தாய்நாடு திரும்ப வேண்டுமென்று விழைகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு குறித்த செய்திகள் மிகுந்த கவலையளிக்கின்றன. பல்வேறு மனித உயிர்கள் பலியாகியிருக்கும் சூழலில் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் அங்கு சிக்கியிருக்கின்றனர். <br><br>ஒன்றிய அரசும் மாநில அரசும் விரைந்து செயல்பட்டு, நமது மக்கள் பத்திரமாகத் தாய்நாடு… <a href="https://t.co/OL2MhEkxfJ">https://t.co/OL2MhEkxfJ</a></p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2092623039594967515?ref_src=twsrc%5Etfw">August 26, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய்யின் புகைப்படம் வாங்கியதில் ஊழல்: மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த அதிரடி உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/corruption-in-purchase-of-chief-minister-vijays-photo-madurai-high-court-issues-order</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/corruption-in-purchase-of-chief-minister-vijays-photo-madurai-high-court-issues-order#comments</comments><guid isPermaLink="false">8d43fc64-bd11-4b5b-86f0-1d994240d874</guid><pubDate>Wed, 26 Aug 2026 15:16:04 +0000</pubDate><atom:updated>2026-08-26T15:16:44.433Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Corruption,ஊழல்,மதுரை ஐகோர்ட்டு,Madurai Highcourt</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/kt4labgq/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/kt4labgq/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விக்டோரியா கவுரி, "கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர், அந்தந்த பகுதிகளில் அதிகாரிகளை நியமித்து புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளார். மேலும், புகைப்படங்கள் வாங்கப்பட்டதற்கான செலவு குறித்து விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.மதுரை,</p><p>கூட்டுறவு சங்க அலுவலகங்களில் முதல்-அமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை ரூ.800-க்கு வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக ஐகோர்ட்டு மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், புகைப்படங்கள் வாங்கப்பட்டதற்கான செலவு குறித்து விசாரிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.</p><p>தமிழ்நாடு பொது விநியோகத் திட்ட ஊழியர் சங்கத்தின் மாநிலத்தலைவர் பால்ராஜ், ஐகோர்ட்டு மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>திண்டுக்கல் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளராக ராகவ் பாலாஜி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பொறுப்பேற்றதில் இருந்தே, கூட்டுறவு சங்கங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.</p><p>ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடாத அலுவலர்களையும், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களையும் மிரட்டி மாதந்தோறும் கமிஷன் பெற்று வருகிறார். தற்போது ஒவ்வொரு கூட்டுறவு கடைகளிலும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் புகைப்படம் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்துக்கு சந்தை மதிப்பை விட கூடுதலாக தொகையை குறிப்பிட்டு முறைகேடுகளை செய்து வருகிறார்.</p><p>இந்த ஊழல் குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தலைமையில் விசாரணை நடத்தக் கோரி மனு அளித்தேன். அந்த மனுவை நாங்கள் புகார் கொடுத்த அதிகாரியின் கீழ் பணியாற்றும் அதிகாரி விசாரணை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு உயரதிகாரி மீது குற்றச்சாட்டுகளை வைத்தால், அவருக்கு கீழ் பணிபுரியும் ஒரு அலுவலரை விசாரணை செய்ய உத்தரவிட்டால், அந்த விசாரணை எவ்வாறு முறையாக இருக்கும்? எனவே, கூட்டுறவுத்துறை செயலர் அல்லது கூட்டுறவு சங்கத்தின் தலைமை பதிவாளர் தலைமையில் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.</p><p>இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விக்டோரியா கவுரி, "கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர், அந்தந்த பகுதிகளில் அதிகாரிகளை நியமித்து புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளார். மேலும், புகைப்படங்கள் வாங்கப்பட்டதற்கான செலவு குறித்து விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>‘பா.ஜ.க.வை உண்மையாக எதிர்க்கும் ஒரே கட்சி த.வெ.க.தான்’ - அமைச்சர் அருண்ராஜ்  </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-is-the-only-party-that-genuinely-opposes-the-bjp-minister-arunraj</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-is-the-only-party-that-genuinely-opposes-the-bjp-minister-arunraj#comments</comments><guid isPermaLink="false">b8237e1c-0086-4a06-9ede-dd7174cb6c30</guid><pubDate>Wed, 26 Aug 2026 15:14:37 +0000</pubDate><atom:updated>2026-08-26T15:14:37.720Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,BJP,பா.ஜ.க.,த.வெ.க.,Minister Arunraj,அமைச்சர் அருண்ராஜ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/jseuzarx/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/jseuzarx/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக அரசின் மருத்துவம், மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“மத்திய பா.ஜ.க. அரசை உண்மையாக எதிர்க்கும் ஒரே கட்சி த.வெ.க.தான். தேர்தலுக்கு முன்பும், ஜனநாயகன் பட விவகாரத்தின்போது, கரூர் விவகாரத்தின்போதும் த.வெ.க.வுக்கு எந்த அளவிற்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.</p><p>த.வெ.க.வுக்கு பலம் கொடுப்பது என்னவென்றால் நாங்கள் உண்மையாக இருக்கிறோம், அச்சப்படும் அளவிற்கு எங்களிடம் எந்த குற்றமும் இல்லை என்பதுதான். தி.மு.க.வுக்கு தான் அந்த அச்சம் இருக்கிறது. அவர்களின் முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. </p><p>எனவே அவர்கள்தான் மத்திய அரசுடன் சமரசம் செய்துகொள்ள வேண்டிய சூழலில் இருக்கிறார்கள். தமிழக வெற்றிக் கழகத்தைப் பொறுத்தவரை எந்தவித சமரசமும் இல்லாமல் மாநில உரிமைகளுக்காக குரல் கொடுப்போம்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>இந்தியக் கடலோரக் காவல் படைத் தலைவர் முதல்-அமைச்சர் விஜய்யுடன் சந்திப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/indian-coast-guard-chief-meets-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/indian-coast-guard-chief-meets-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">758fbc59-2faa-4e72-b7ee-e3dc50cf879a</guid><pubDate>Wed, 26 Aug 2026 14:57:09 +0000</pubDate><atom:updated>2026-08-26T14:57:09.925Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,Indian Coast Guard,இந்திய கடலோர காவல் படை,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/h6moq0w3/Untitled-20.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/h6moq0w3/Untitled-20.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்தியக் கடலோரக் காவல் படைத் தலைவர் பரமேஷ் சிவமணி சென்னையில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யைச் சந்தித்தார். இது தொடர்பாக இந்திய அரசு பத்திரிகை தகவல் அலுவலகம், பாதுகாப்புப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>முதல்-அமைச்சரிடம் விளக்கம்</h2><p>இந்தியக் கடலோரக் காவல் படையின் தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி ஆகஸ்ட் 25 (நேற்று) அன்று சென்னையில் தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-to-release-water-from-mettur-dam-on-september-1st">முதல்-அமைச்சர்</a> சி. ஜோசப் விஜயை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். இச்சந்திப்பின்போது, கடல்சார் நலன்கள், மீனவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் (SAR), சட்டவிரோத கடல்சார் நடவடிக்கைகளைத் தடுத்தல், கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இந்தியக் கடலோரக் காவல் படையின் முன்னாள் பணியாளர்களின் நலன் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.</p><p>கடல்சார் அவசரநிலைகளின் போது கடலில் தத்தளிப்போர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்க, மீன்பிடிப் படகுகளில் 'அபாய எச்சரிக்கை ஒலிபரப்பிகள்' (Distress Alert Transmitters) மற்றும் கட்டாய உயிர் காக்கும் உபகரணங்களை அமைப்பதன் முக்கியத்துவத்தை கடலோரக் காவல் படைத் தலைமை இயக்குநர் வலியுறுத்தினார். மேலும், சமீபத்திய புயல் காலங்களில் உயிரிழப்புகள் ஏதுமின்றிப் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் இயற்கை பேரிடர்களுக்குப் பிந்தைய சூழலில் மாநில நிர்வாகத்திற்கு உதவுதல் போன்ற இந்தியக் கடலோரக் காவல் படையின் முன்முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார்; அத்துடன், தமிழக மீனவர்கள் உட்படப் பலரின் உயிர்களைக் காப்பாற்றிய வெற்றிகரமான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்தும் முதல்-அமைச்சரிடம் விளக்கினார்.</p><h2>பரஸ்பர அர்ப்பணிப்பு</h2><p>தமிழ்நாடு காவல்துறை, மாநில கடலோரக் காவல் பிரிவு (Marine Police), மீன்வளத் துறை மற்றும் மாநிலத்தின் பிற தொடர்புடைய அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதன் மூலம், உறுதியான கடலோரப் பாதுகாப்பைத் தொடர்ந்து பராமரிப்பதில் இந்தியக் கடலோரக் காவல் படை கொண்டுள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் தலைமை இயக்குநர் மீண்டும் உறுதிப்படுத்தினார். பிராந்திய கடல்சார் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதோடு, மீனவ சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் இந்தியக் கடலோரக் காவல் படை மற்றும் தமிழ்நாடு அரசுக்கு இடையிலான பரஸ்பர அர்ப்பணிப்பை இச்சந்திப்பு மீண்டும் உறுதிப்படுத்தியது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>செப்டம்பர் 1ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து நீரை திறந்து வைக்கிறார் முதல்-அமைச்சர் விஜய்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-to-release-water-from-mettur-dam-on-september-1st</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-to-release-water-from-mettur-dam-on-september-1st#comments</comments><guid isPermaLink="false">6c803f3f-c3e4-4cb2-8cb1-8a8df63c3a29</guid><pubDate>Wed, 26 Aug 2026 14:32:50 +0000</pubDate><atom:updated>2026-08-26T14:32:50.134Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,மேட்டூர் அணை,Mettur dam,Mettur,டெல்டா பாசனம்,மேட்டூர் அணை திறப்பு,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/emzqi0wi/Untitled-19.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/emzqi0wi/Untitled-19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>முதல்-அமைச்சர் திறந்து வைக்கிறார்</h2><p>மேட்டூர் அணையிலிருந்து 01.09.2026 முதல் 45 நாட்களுக்கு, அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய்யின் உத்தரவிற்கிணங்க, தென்மேற்கு பருவமழை காலத்தில் காவிரிப் படுகையில் போதிய மழைப்பொழிவு கிடைக்காத நிலையிலும், தமிழ்நாட்டின் குடிநீர் மற்றும் காவிரி டெல்டா பாசனத் தேவைகளைக் கருத்தில் கொண்டும், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்றும், சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து 01.09.2026 முதல் 45 நாட்களுக்கு, அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து நீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய், 01.09.2026 அன்று, மேட்டூர் அணையிலிருந்து, டெல்டா பாசனத்திற்காக நீரைத் திறந்து வைக்க உள்ளார்கள்.</p><p>2026–2027 பாசன ஆண்டின் தொடக்கத்தில் மேட்டூர் அணையில் பயன்பாட்டிற்குரிய நீர் இருப்பு 41.223 டி.எம்.சி. மட்டுமே இருந்தது. கர்நாடக அணைகளிலிருந்து கிடைக்க வேண்டிய நீர் போதிய அளவில் கிடைக்காததாலும், அணையின் குறைந்தபட்ச இருப்பான 10 டி.எம்.சி.யை பராமரிக்க வேண்டியிருந்ததாலும், டெல்டா பாசனத்திற்குத் தொடர்ச்சியாக நீர் வழங்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. இருப்பினும், பொதுமக்களின் அத்தியாவசிய குடிநீர்த் தேவைகளுக்காக மேட்டூர் அணையிலிருந்து தேவையான அளவு நீர் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.</p><h2>உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை</h2><p>தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரைப் பெறுவதற்காக, தமிழ்நாடு அரசு சட்ட ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் தொடர்ந்து உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டது. காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முன்பு தமிழ்நாட்டின் உரிமைகள் மற்றும் நீர்த் தேவைகள் வலியுறுத்தப்பட்டதுடன், மாண்பமை உச்ச நீதிமன்றத்திலும் தமிழ்நாட்டின் நியாயமான உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இத்தொடர் முயற்சிகளின் விளைவாக, பில்லிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய நீரை உறுதி செய்வதற்கான உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன.</p><p>தமிழ்நாடு அரசின் இத்தொடர் முயற்சிகளின் விளைவாக, வெவ்வேறு காலகட்டங்களில் தமிழ்நாட்டின் எல்லையான பில்லிகுண்டுலுவில் வினாடிக்கு 3,500 கனஅடி, 9,000 கனஅடி மற்றும் 12,000 கனஅடி நீர் கிடைப்பதை உறுதி செய்யுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டு, காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் அதனை உறுதி செய்து உத்தரவிட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரைப் பெறுவதற்கான உரிமை தொடர்ந்து நிலைநாட்டப்பட்டுள்ளது.</p><p>இதைத் தொடர்ந்து, காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் மாண்பமை உச்ச நீதிமன்றத்தை அணுகி, விகிதாசார அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு</p><h2>உரிமைகளைப் பாதுகாப்போம்</h2><p>வரவேண்டிய நீரைப் பெறுவதற்காக இந்த அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாப்போம் என்பதில் இந்த அரசு அசைக்க முடியாத உறுதியுடன் உள்ளது.</p><p>மேட்டூர் அணையின் நீர் இருப்பு படிப்படியாக உயர்ந்து வருவதையும், எதிர்பார்க்கப்படும் நீர்வரத்து மற்றும் வடகிழக்குப் பருவமழையையும் கருத்தில் கொண்டு, குடிநீர் மற்றும் டெல்டா பாசனத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் தற்போது நீர் திறக்க அரசு முடிவு செய்துள்ளது.</p><p>இதனையொட்டி, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வேளாண்மை </a>மற்றும் உழவர் நலத்துறை, காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனப் பணிகளை உடனடியாகத் தொடங்குவதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு உரிய தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கி, நிலங்களை உழுது தயார் செய்தல், நாற்றங்கால் அமைத்தல், விதைப்பு மேற்கொள்ளுதல், தரமான விதைகள், உரங்கள் மற்றும் பிற வேளாண் இடுபொருட்களை போதிய அளவில் இருப்பில் வைத்தல் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். குறுகிய கால மற்றும் நடுத்தர கால நெல் ரகங்கள் உள்ளிட்ட பொருத்தமான பயிர் ரகங்களைத் தேர்வு செய்வதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட வேண்டும்.</p><h2>நீரை சிக்கனமாக பயன்படுத்திடுக..</h2><p>விவசாயிகள், கிடைக்கும் நீரை சிக்கனமாகவும் திட்டமிட்டும் பயன்படுத்தி, வேளாண்மைத் துறையின் ஆலோசனையுடன் சாகுபடிப் பணிகளை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள், நீர்வளத்துறை மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, முறைப்பாசனத்தின் மூலம் கடைமடை வரை நீர் சென்றடைவதையும், கிடைக்கும் ஒவ்வொரு துளி நீரும் அதிகபட்ச பாசனப் பயனை அளிப்பதையும் “ஒவ்வொரு துளி நீரிலும் அதிக மகசூல்” கிடைப்பதையும் உறுதி செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு 2 உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியீடு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-issues-notification-appointing-two-members-to-the-state-human-rights-commission</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-issues-notification-appointing-two-members-to-the-state-human-rights-commission#comments</comments><guid isPermaLink="false">abc9b95c-ea3b-4de4-8f18-d87688ef9a51</guid><pubDate>Wed, 26 Aug 2026 14:26:04 +0000</pubDate><atom:updated>2026-08-26T14:26:04.141Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>State Human Rights Commission,மாநில மனித உரிமைகள் ஆணையம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/7i037k5f/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/7i037k5f/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு இரண்டு உறுப்பினர்களை நியமனம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம், 1993, பிரிவு 22(1)-ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி, தமிழ்நாடு கவர்னர், சென்னை ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி டாக்டர் ஆர்.என்.மஞ்சுளா மற்றும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஏ.சுகந்தி ஆகியோரை மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்களாக நியமித்துள்ளார். </p> <p>இப்பணியில் அவர்கள் பொறுப்பேற்கும் நாளில் இருந்து மூன்று ஆண்டுகள் அல்லது அவர்களுக்கு எழுபது வயது பூர்த்தியாகும் நாள் - இதில் எது முந்தையதோ அதுவரை - இப்பதவியை அவர்கள் வகிப்பார்கள்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>‘சோபா செட் இல்லை, லாக்கரே வந்தாலும் தே.மு.தி.க. தன் நிலையில் இருந்து மாறாது’ - பிரேமலதா விஜயகாந்த்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/whether-it-is-a-sofa-set-or-a-locker-that-is-offered-the-dmdk-will-not-waver-from-its-stance-premalatha-vijayakanth</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/whether-it-is-a-sofa-set-or-a-locker-that-is-offered-the-dmdk-will-not-waver-from-its-stance-premalatha-vijayakanth#comments</comments><guid isPermaLink="false">9ea7aca9-7b67-415a-9dd3-6ef14e626ffa</guid><pubDate>Wed, 26 Aug 2026 14:10:45 +0000</pubDate><atom:updated>2026-08-26T14:10:45.211Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>DMDK,Premalatha Vijayakanth,பிரேமலதா விஜயகாந்த்,தே.மு.தி.க.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/8ajijc1x/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/8ajijc1x/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர்,</p><p>கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்ற தே.மு.தி.க. பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“தேர்தல் முடிந்த பிறகு சில கட்சியினர் தங்கள் கொள்கையை கூட மாற்றிக் கொண்டு த.வெ.க.வில் சென்று சேர்ந்துவிட்டார்கள். தே.மு.தி.க.வுக்கு அழைப்பு வராமல் இல்லை. இன்றைய முதல்-அமைச்சரே அழைத்தார். ஆனால், ஒரு முடிவை நாம் எடுத்துவிட்டால், அந்த கொள்கை முடிவில் எப்போதும் நாம் உறுதியாக இருப்போம். அதற்கு இதுதான் சான்று. </p> <p>சோபா செட் இல்லை, பீரோ இல்லை, லாக்கரே வந்தாலும் தே.மு.தி.க. தன் நிலையில் இருந்து மாறாது. ஏனென்றால் நமக்கு கொள்கை முக்கியம். ஒரு கூட்டணியில் இருந்து வெற்றி பெற்றுவிட்டு, தேர்தல் முடிவுகள் வந்த பிறகு கூட்டணியை மாற்றிக் கொள்ளும் நிலைப்பாடு தே.மு.தி.க.வுக்கு என்றும் கிடையாது.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>திருமணம் செய்வதாக கூறி பரிகாரம் கேட்க வந்த இளம்பெண்ணுடன் உல்லாசம் - ஜோதிடர் மீது புகார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/astrologer-accused-of-exploiting-young-woman-seeking-marriage-rituals</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/astrologer-accused-of-exploiting-young-woman-seeking-marriage-rituals#comments</comments><guid isPermaLink="false">305dd507-018f-4f49-8ca9-e05372938e48</guid><pubDate>Wed, 26 Aug 2026 14:09:29 +0000</pubDate><atom:updated>2026-08-26T14:09:29.460Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,பலாத்காரம்,உல்லாசம்,Complaint,புகார்,கோயம்புத்தூர்,ஜோதிடர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/ithql05g/Untitled-8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/ithql05g/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோயம்புத்தூர்,</p><p>பரிகாரம் செய்ய வந்த இளம்பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்ததாக ஜோதிடர் மீது திருப்பூரை சேர்ந்த இளம்பெண் புகார் தெரிவித்து உள்ளார்.</p><h2>இளம்பெண் புகார்</h2><p>திருப்பூரை சேர்ந்த 25 வயதான இளம்பெண், கோவையில் உள்ள மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதியை சந்தித்து புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-</p><p>திருப்பூரை சேர்ந்த நான், அங்கு ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். எனக்கு பெற்றோர் திருமண வரன் பார்த்து வந்தனர். எனக்கு விரைவில் திருமணமாக வேண்டி ஜோதிடர்களை அணுகி பல்வேறு கோவில்களில் வேண்டுதல் மற்றும் பரிகாரம் செய்து வந்தனர்.</p><h2>பரிகாரம் செய்ய சொன்னார்</h2><p>இந்த நிலையில் கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 32 வயது ஜோதிடர், திருமண தடை நீங்க பரிகாரங்களை தெளிவாக கூறுவார் என்று எனது நண்பர் கூறினார். இதனால் நானும், எனது தோழியும் நரசிம்மநாயக்கன்பாளையம் சென்று அந்த ஜோதிடரை சந்தித்தோம். அப்போது அவர் தொடர்ந்து 3 வாரங்கள் செவ்வாய்க்கிழமை காலையில் மட்டும் விரதம் இருந்து வழிபாடு செய்தால் கண்டிப்பாக திருமணமாகும். அந்த பரிகாரத்தை செய்துவிட்டு தன்னை தனியாக வந்து சந்திக்குமாறு கூறினார்.</p><p>அதன்படி பரிகாரங்களை செய்து விட்டு நான், அந்த ஜோதிடரை நேரில் சந்தித்தேன். அப்போது அவர் மேலும் சில பரிகாரங்களை கூறினார். அதற்கு நான் இன்னும் எவ்வளவு நாள் பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர் விரைவில் உன்னை தேடி வரன் வரும் என்றார்.</p><h2>திருமணம் செய்வதாக உறுதி</h2><p>மேலும் அவர், என்னை தேடி எத்தனை இளம்பெண்கள் வந்தாலும், நீ என்னை பார்க்க வரும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. உன்னை மிகவும் பிடித்து இருப்பதால் தான் அடிக்கடி வரச்சொன்னேன். எனவே நானே உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசைவார்த்தை கூறினார்.</p><p>அதோடு என்னை கட்டாயப்படுத்தி பலமுறை உல்லாசம் அனுபவித்தார். அத்துடன் அவசர தேவை என்று என்னிடம் ரூ.2 லட்சத்துக்கும் மேல் பணம் வாங்கினார். திடீரென்று அவருடைய நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. இதற்கிடையே அவர் ஏற்கனவே திருமணமானவர் என்பது தெரியவந்தது.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>அதுகுறித்து அவரிடம் கேட்டபோது, சரியாக பதில் அளிக்காததுடன் இனிமேல் இங்கு வரக்கூடாது என்று என்னை துரத்திவிட்டார். ஏற்கனவே திருமணமானதை மறைத்து, திருமணம் செய்து கொள்வதாக கூறி என்னை பலாத்காரம் செய்த ஜோதிடர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.</p><p>மனுவை பெற்றுக்கொண்ட ஐ.ஜி. இதுதொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை விரைந்து மீட்க நடவடிக்கை: முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-people-stranded-in-nepal-to-be-rescued-quickly-says-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-people-stranded-in-nepal-to-be-rescued-quickly-says-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">d53fd233-d557-4fe7-98cc-328a03a2ee35</guid><pubDate>Wed, 26 Aug 2026 14:01:06 +0000</pubDate><atom:updated>2026-08-26T14:01:06.171Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nepal,Flood,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,nepal flood,நேபாளம் வெள்ளம்,மீட்பு நடவடிக்கை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/0tjt525m/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/0tjt525m/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் தமிழர்கள் உள்பட இந்தியர்கள் பலர் காணாமல்  போனதாக வரும் செய்திகள் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். இந்த பேரிடரில் காணாமல் போன தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை விரைந்து மீட்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அரசு உயர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.</p><p>நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவி தேவைப்படும் நிலையில் அவர்களோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது உறவினர்களோ தொடர்பு கொள்ள ஏதுவாக அவசர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.</p><p>மேலும், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகம் ஆகியவற்றின் வாயிலாக, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் குறித்த தகவல்களைப் பெற்று, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில்  தமிழர்கள் உள்பட இந்தியர்கள் பலர் காணாமல்  போனதாக வரும் செய்திகள் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். <br><br>இந்த பேரிடரில் காணாமல் போன தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை விரைந்து மீட்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை… <a href="https://t.co/nriz60tZKy">pic.twitter.com/nriz60tZKy</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2092609050538385847?ref_src=twsrc%5Etfw">August 26, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>‘அரசாங்கத்தை ஸ்தம்பிக்க வைக்க வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள்’ - வைகோ பேச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/some-people-want-to-bring-the-government-to-a-standstill-vaikos-remarks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/some-people-want-to-bring-the-government-to-a-standstill-vaikos-remarks#comments</comments><guid isPermaLink="false">29312f3d-fe1e-43cb-b34b-2837eca4500a</guid><pubDate>Wed, 26 Aug 2026 13:55:43 +0000</pubDate><atom:updated>2026-08-26T13:55:43.281Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vaiko,வைகோ</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/1iwhlc9h/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/1iwhlc9h/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“ஊழல்தான் அரசியலுக்கு புற்றுநோய். அதை முழுவதுமாக அகற்ற வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் முயற்சி செய்து வருகிறார். அரசாங்கத்தில் நேர்மையான அதிகாரிகள் பலர் இருக்கிறார்கள். அதே சமயம், ஊழல் செய்து பணம் சேர்த்த அதிகாரிகளும் இருக்கிறார்கள். </p><p>அப்படிப்பட்ட அதிகாரிகள் சிலர் இந்த அரசாங்கத்தை ஸ்தம்பிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். எந்த கோப்புகளும் நகர்வது கிடையாது. அப்படிப்பட்டவர்களை கண்டறிந்து முக்கிய இலாகாக்களில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் விஜய்யிடம் நான் வலியுறுத்தினேன். புதிதாக வந்த அதிகாரிகளுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.”</p><p>இவ்வாறு வைகோ தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>3 தமிழர்கள் படுகொலை விவகாரம்: தவெக அரசின் அலட்சிய போக்கிற்கு சீமான் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/killing-of-three-tamils-seeman-condemns-the-tvk-governments-negligent-attitude</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/killing-of-three-tamils-seeman-condemns-the-tvk-governments-negligent-attitude#comments</comments><guid isPermaLink="false">6fa7bc9c-2090-4196-9bcd-3e2c4b62d237</guid><pubDate>Wed, 26 Aug 2026 13:37:00 +0000</pubDate><atom:updated>2026-08-26T13:37:00.400Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>படுகொலை,தமிழர்கள்,Tamils,சீமான் கண்டனம்,Killing,Seeman Speech,தவெக அரசு,TVK Government</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/a7xvc5qy/seeman.gif" width="750"><media:title type="html"><![CDATA[ சீமான் ]]></media:title><media:description type="html"><![CDATA[ நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/a7xvc5qy/seeman.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>3 தமிழர்கள் படுகொலை விவகாரத்தில் தவெக அரசின் அலட்சிய போக்கிற்கு சீமான் தனது கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">சீமான்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- </p> <h2>எங்கே சென்றார்?</h2><p>மக்களுக்கு ஒன்று என்றால் நான் முன்னால் வருவேன் என்று சொன்ன <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a>, கர்நாடகாவில் 3 தமிழர்கள் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டது உடற்கூறாய்வில் உறுதியாகியும் வராமல் எங்கே சென்றார்?</p> <h2>ஏமாற்றமளிக்கிறது</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95">கர்நாடக</a> மாநிலத்தின் வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டது திட்டமிடப்பட்ட படுகொலை என்பது உடற்கூறாய்வு அறிக்கையின் மூலம் உறுதியான பிறகும்கூட, தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் விஜய் அமைதியாக கடந்து செல்வது பெருத்த ஏமாற்றமளிக்கிறது.</p><h2>கண்டனம்</h2><p>மூன்று தமிழர்களின் படுகொலை குறித்து நீதிவிசாரணை வேண்டுமென கூறி, கர்நாடகத்தை சேர்ந்த எதிர்க்கட்சிகளே குரலெழுப்பி வரும் நிலையில், தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு அதுகுறித்த எவ்வித அக்கறையுமில்லாது அலட்சிய போக்கோடு இதுவரை எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.</p> <h2>திட்டமிடப்பட்ட படுகொலை</h2><p>சுடப்பட்ட மூன்று தமிழர்களும் 10 அடிக்கும் குறைவான தூரத்திலிருந்து சுடப்பட்டுள்ளனர் என்பதும், சுடப்பட்டவர்களில் ஒருவரான ஜான்ரோஸ் பீட்டரின் இடதுகாது பகுதியிலிருந்து நெஞ்சுப்பகுதி வரை 25 செ.மீ. நீளத்திற்கு ஆழமான காயம் கண்டறியப்பட்டுள்ளது என்றும், மற்ற இருவரின் நெஞ்சு, தொடை போன்ற பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது என்றும் உடற்கூறாய்வு அறிக்கையில் வெளியாகியிருக்கும் தகவல்கள் நடந்திருப்பது திட்டமிடப்பட்ட படுகொலை என்பதை உறுதி செய்கிறது. </p><h2>அவமானம்</h2><p>மேகதாது அணை விவகாரத்தில் இரு மாநிலங்களுக்குள் சிக்கல் உருவாகியிருக்கும் இந்நேரத்தில் இது தமிழ்த்தேசிய இனத்தின் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலை. இது தமிழ்த்தேசிய இனத்திற்கு நேர்ந்த அவமானம் .</p> <h2>அன்றைய பீகார் முதல்-மந்திரி </h2><p>2023ஆம் ஆண்டு பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக பரவிய பொய்ப்பரப்புரைக்கு பீகாரிலிருந்து அம்மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஏற்பாட்டின் பெயரில், கூட்டுக்குழு தமிழ்நாட்டுக்கு வந்து பீகாரிகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிபடுத்திவிட்டு சென்றது. உண்மைக்கு புறம்பான செய்தியென்றாலும், தனது இன மக்களின் பாதுகாப்புக்கும், நல்வாழ்வுக்கும் அவ்வளவு முக்கியத்துவம் அளித்தார் அன்றைய பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார்.</p> <h2>ஆந்திரா தொழிலாளர்கள்</h2><p> 2014ஆம் ஆண்டுச் சென்னை, மௌலிவாக்கத்தில் ஏற்பட்ட கட்டிட விபத்தில் ஆந்திராவை சேர்ந்த தொழிலாளர்கள் சிக்குண்டபோது தமிழ்நாட்டுக்கு ஓடோடி வந்தார் அன்றைய ஆந்திராவின் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு. காயம்பட்டு சிகிச்சை பெற்ற தெலுங்கு இன மக்களை மருத்துவமனையில் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறி தேற்ற முனைந்தார். </p><h2>எங்கே சென்றார் என தெரியவில்லை?</h2><p>விபத்துதானென்றாலும், தனது இன மக்களுக்கு ஒரு இன்னலென்றவுடன் தமிழ்நாட்டுக்கு விரைந்து வந்தார் அம்மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு. ஆனால் தமிழர்கள் மூன்றுபேர் கர்நாடக வனப்பகுதிக்குள் வைத்து திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டும் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் விஜய் அதனையொரு பொருட்டாகவே கருதவில்லை. மக்களுக்கு ஒன்று என்றால் நான் முன்னால் வருவேன் என்றவர் இப்பொழுது எங்கே சென்றார் என தெரியவில்லை?</p><h2>மோசடித்தனம்</h2><p>இப்படுகொலையை செய்த வனத்துறையினர் மேல் கொலைவழக்கு பதிந்து கைதுசெய்யப்பட்டு உடனடியாக சிறையில் அடைக்க  வேண்டுமென கேட்காது, விசாரணைக்குழு அமைக்க வேண்டுமென தமிழக முதல்-அமைச்சர் கோருவது மோசடித்தனம்! விசாரணைக்குழு அமைக்கப்பட்டால் அக்குழு வருடங்கள் கடந்து அறிக்கையை தாக்கல் செய்யும் முன் நீதிகேட்கும் குரல்கள் மறைக்கப்பட்டுவிடும். </p> <h2>படுபாதக செயல்</h2><p>விசாரணைக்குழு அமைக்கக்கோருவது இதிலிருந்து தப்பிக்க கர்நாடக அரசுக்கு பாதை அமைத்து கொடுக்கும் படுபாதக செயல். தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளை பெற்று வென்ற முதல்-அமைச்சர் விஜய், எதற்காக கர்நாடக அரசுக்கு ஆதரவாக நிற்கிறார்?</p><h2>எதிர்வினையையோ ஏன் ஆற்ற மறுக்கிறார்?</h2><p>தமிழர்கள் மூவரை மான் வேட்டையாடியதாக கூறி, சுட்டுக்கொன்றுவிட்டு, ‘எங்கள் மாநிலத்தின் நிர்வாகத்தில் தலையிடாதீர்கள்’ என ஆணவத்தோடும், அகம்பாவத்தோடும் கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேசிய பிறகும்கூட, முதல்-அமைச்சர் விஜய் எதிர்ப்பையோ, எதிர்வினையையோ ஏன் ஆற்ற மறுக்கிறார்?</p> <h2>ஒரு வார்த்தைகூட பேசாதது ஏன்?</h2><p> மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் தமிழ்நாட்டில் நடைபெற்ற தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாட்டில் கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை முழுமையாக நியாயப்படுத்தி பேசுகையில், தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் விஜய் மூன்று தமிழர்கள் படுகொலை குறித்தோ, மேகதாது அணை அமைக்கப்பட்டால் அதன்மூலம் தமிழ்நாட்டுக்கு விளையும் ஆபத்து குறித்தோ ஒரு வார்த்தைகூட பேசாதது ஏன்? இதுதான் தமிழர்களுக்காக நீங்கள் குரல்கொடுக்கிற முறையா முதல்வரே?</p><p>ஆகவே, மூன்று தமிழர்களை படுகொலை செய்த வனத்துறையினர் மீது கொலைவழக்கு தொடுத்து, அவர்களை கைது செய்து சிறைபடுத்தவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா 1 கோடி ரூபாய் துயர்துடைப்புத்தொகையை பெற்று தரவும் தமிழ்நாடு அரசு கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன்.</p> ]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ள அனைவரும் நலமுடன் திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன்! - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-pray-to-the-almighty-for-the-safe-return-of-everyone-stranded-in-the-nepal-floods-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-pray-to-the-almighty-for-the-safe-return-of-everyone-stranded-in-the-nepal-floods-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">71e4adfb-f006-46a2-93c2-fdbc1d8330d5</guid><pubDate>Wed, 26 Aug 2026 12:52:57 +0000</pubDate><atom:updated>2026-08-26T12:52:57.051Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nepal,நேபாளம்,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,nepal flood</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/bb0zb272/Untitled-18.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/bb0zb272/Untitled-18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற 57 தமிழகப் பயணிகளில், 37 பேரின் நிலை என்னவென்று இதுவரை தெரியாமல் இருப்பது அதிர்ச்சியளிப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>அச்சம் நீடிக்கிறது</h2><p><a href="https://www.dailythanthi.com/news/world/flash-floods-in-nepal-57-tamils-stranded">நேபாளத்தின் </a>ரசுவா பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 105 இந்தியர்கள் மாயமாகியுள்ள செய்தி மிகுந்த கவலையளிக்கிறது. குறிப்பாக, கும்பகோணத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் மூலம் சுற்றுலா சென்ற 57 தமிழகப் பயணிகளில், 37 பேரின் நிலை என்னவென்று இதுவரை தெரியாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. எஞ்சிய 20 பேர் பாதுகாப்பாக இருப்பதாக வந்த செய்தி ஓரளவிற்கு ஆறுதல் அளித்தாலும், மற்றவர்களின் நிலை குறித்த அச்சம் நீடிக்கிறது.</p><p>மாயமான 105 இந்தியர்களும், எவ்வித பாதிப்புமின்றி நலமுடன் மீட்கப்பட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். தவிப்பில் இருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கு இந்த இக்கட்டான நேரத்தில் மன தைரியத்தை அளிக்கவும் வேண்டுகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலய திருவிழா 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/besant-nagar-annai-velankanni-church-festival-begins-on-the-29th-with-the-flag-hoisting-ceremony</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/besant-nagar-annai-velankanni-church-festival-begins-on-the-29th-with-the-flag-hoisting-ceremony#comments</comments><guid isPermaLink="false">3f3f3eb5-133c-47ef-a6bb-314febecad7a</guid><pubDate>Wed, 26 Aug 2026 12:49:13 +0000</pubDate><atom:updated>2026-08-26T12:49:13.871Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,தமிழகம்,Besant Nagar,Velankanni Church,பெசன்ட்நகர்,வேளாங்கண்ணி பேராலயம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/2p7oxpkc/rama.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/2p7oxpkc/rama.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>ஆன்மிகம் (Devotional)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலய திருவிழா வரும் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.</p><h2>வேளாங்கண்ணி தேவாலயம்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/chennai">சென்னை</a> பெசன்ட்நகரில் பிரசித்தி பெற்ற அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தின் 54-ம் ஆண்டு திருவிழா வரும் 29-ந் தேதி தொடங்கி 11 நாட்கள் நடைபெற இருக்கிறது. </p><h2>கொடி பவனி</h2><p>இது தொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/topic/chennai">சென்னை</a> பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலய பாதிரியார் அருளப்பா நிருபர்களிடம் கூறியதாவது:- </p><p>சென்னை பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலய 54-ம் ஆண்டு திருவிழா ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 8-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. ஆகஸ்டு 29-ந் தேதி மாலை 4.30 மணிக்கு கொடி பவனி தொடங்கும். மாலை 5.45 மணிக்கு சென்னை மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி கொடியேற்றுகிறார். அதன்பிறகு, திருப்பலி நடைபெறும். 30-ந் தேதி நற்கருணை பெருவிழா நடைபெறும். </p><h2>கொடியிறக்கும் திருப்பலி</h2><p>செப்டம்பர் 7-ந் தேதி அன்னை மரியாவினுடைய திருத்தேர் திருவிழா நடைபெறும். அன்று மாலை 5.30 மணிக்கு தேர் பவனி தொடங்கும். பிறகு, ஆடம்பர கூட்டு திருப்பலி சென்னை மயிலை பேராயரால் நடத்தப்படும். செப்டம்பர் 8-ந் தேதி அன்னையினுடைய பிறப்பு பெருவிழா. காலை 2 மணி முதல் திருப்பலிகள் தொடர்ந்து நடைபெறும். அன்று மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை மற்றும் கொடியிறக்கும் திருப்பலி நடைபெறும். </p><p>அத்துடன் விழா முடிவடையும். இந்த ஆண்டு அமைதி என்ற மையக்கருத்தை வைத்து விழா நடைபெறுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் வழக்கம் போல் வருவார்கள் என்பதால், சென்னையின் முக்கிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>26 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/26-districts-chance-of-rain-till-7-pm</link><comments>https://www.dailythanthi.com/news/weather/26-districts-chance-of-rain-till-7-pm#comments</comments><guid isPermaLink="false">fda94517-442d-46a0-a6dd-85302de87d8c</guid><pubDate>Wed, 26 Aug 2026 12:42:04 +0000</pubDate><atom:updated>2026-08-26T12:42:04.375Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/jq6295lu/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/jq6295lu/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி அரியலூர், கடலூர், திண்டுக்கல், கரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, விழுப்புரம், மதுரை, சென்னை, நீலகிரி, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, தென்காசி, வேலூர், கோயம்புத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை பாதுகாப்பாக மீட்டு வர வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nepal-vellathil-sikkiya-tamilarai-paathukaappaga-meettu-varavendum-ttv-dhinakaran-vali-uruthal</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nepal-vellathil-sikkiya-tamilarai-paathukaappaga-meettu-varavendum-ttv-dhinakaran-vali-uruthal#comments</comments><guid isPermaLink="false">08a69c0a-9207-4d6f-a88e-2b4a592dc976</guid><pubDate>Wed, 26 Aug 2026 12:30:14 +0000</pubDate><atom:updated>2026-08-26T12:30:14.001Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Nepal,நேபாளம்,TTV Dhinakaran,டிடிவி தினகரன்,Flood,வெள்ளம்,nepal flood,நேபாளம் வெள்ளம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/co0i2c6y/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/co0i2c6y/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நேபாளத்தில் வடக்கு ராசுவா பகுதியில் இன்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், கிராமத்திற்குள் புகுந்த வெள்ள நீரால் வீடுகள் அடியோடு அடித்துச் செல்லப்பட்டன. சாலைகள் மற்றும் பாலங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதில், ஏராளமான பொதுமக்களும் இழுத்துச் செல்லப்பட்டனர். இதுவரையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>தொடர்ந்து மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளான சியாப்ரு மற்றும் திமுரே ஆகிய இடங்களில் மீட்பு ஹெலிகாப்டர்கள் தரையிறங்க முடியாததால் மீட்பு பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் தமிழர்கள் உட்பட 105 இந்தியர்கள் மாயமாகி உள்ளனர்.</p><p>இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை பாதுகாப்பாக மீட்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டின் கும்பகோணத்திலிருந்து 50-க்கும் அதிகமான பயணிகள் நேபாளத்திற்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், அங்கு வடக்கு ராசுவா பகுதியில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியதில், அவர்களில் 37-க்கும் மேற்பட்டோரின் நிலை என்ன என்பது தெரியவில்லை என ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன.</p><p>நேபாளத்தில் உள்ள மத்திய அரசின் வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் தமிழக அரசின் அதிகாரிகளும் இணைந்து, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியுள்ள தமிழர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு, விரைவில் தாயகம் அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நேபாளத்துடன் இணைந்து மீட்புப் பணிகளை  மத்திய அரசு துரிதப்படுத்திட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rescue-operations-must-be-expedited-in-coordination-with-the-government-of-nepal-edappadi-palaniswami</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rescue-operations-must-be-expedited-in-coordination-with-the-government-of-nepal-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">59939739-8f34-4966-a405-66f9bf3d43a4</guid><pubDate>Wed, 26 Aug 2026 12:28:44 +0000</pubDate><atom:updated>2026-08-26T12:28:44.600Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,எடப்பாடி பழனிசாமி,அதிமுக,Edappadi Palaniswami,Nepal,நேபாளம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/0bvkhsvl/Untitled-17.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/0bvkhsvl/Untitled-17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனதாக தேடப்படும் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு பத்திரமாக தாயகம் திரும்பிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>வேதனை அளிக்கிறது</h2><p><a href="https://www.dailythanthi.com/news/world/flash-floods-in-nepal-57-tamils-stranded">நேபாளத்தில் </a>ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தால் சுமார் 60 தமிழர்கள் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் காணாமல் போயுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையையும் அளிக்கிறது.</p><p>நேபாள நாட்டு அரசுடன் இணைந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்திட மத்திய அரசையும், அப்பணிகளுக்கான ஒருங்கிணைப்பையும் , முறையான தகவல் பரிமாற்றத்தையும் உறுதி செய்திட மாநில அரசையும் வலியுறுத்துகிறேன்.</p><p>காணாமல் போனதாக தேடப்படும் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு பத்திரமாக தாயகம் திரும்பிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மோடி அரசின் பிற்படுத்தப்பட்டோர் விரோத முகமூடி மீண்டும் கிழிந்துவிட்டது - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-modi-governments-anti-backward-classes-mask-has-been-torn-off-once-again-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-modi-governments-anti-backward-classes-mask-has-been-torn-off-once-again-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">f8d87e04-63ed-4720-9c19-3f82211cd56c</guid><pubDate>Wed, 26 Aug 2026 11:53:32 +0000</pubDate><atom:updated>2026-08-26T11:53:32.935Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Tamilnadu,RSS,தமிழகம்,Modi,காங்கிரஸ்,Congress,ஆர்.எஸ்.எஸ்.,மாணிக்கம் தாகூர்,Modi government,மோடி அரசு,Manickam Tagore</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/eb0jhnv6/koere.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/eb0jhnv6/koere.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>OBC-NCL சான்றிதழ்களை நிராகரிப்பது மாநிலங்களின் கூட்டாட்சி அதிகாரத்தை அவமதிக்கும் செயலாகும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/மாணிக்கம்-தாகூர்">ப.மாணிக்கம் தாகூர்</a>, எம்.பி. தெரிவித்துள்ளார்.</p><h2>ஆர்.எஸ்.எஸ். பின்புலம்</h2><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்ட மோடி அரசின் பிற்படுத்தப்பட்டோர் (OBC) விரோத முகமூடி மீண்டும் கிழிந்துவிட்டது.</p><p>11 மார்ச் 2026 அன்று சுப்ரீம்கோர்ட்டு வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை (UoI v. Rohith Nathan) முடக்க, மறுஆய்வு/விளக்கம் கேட்டு சுப்ரீம்கோர்ட்டை நாடியுள்ள மோடி அரசு, சமூக நீதியை சீர்குலைத்து OBC இளைஞர்களுக்கு வெளிப்படையான துரோகம் இழைக்கிறது.  </p><h2>6 மாத காலத்திற்குள்</h2><p>சுப்ரீம்கோர்ட்டு மிகத் தெளிவாக தீர்ப்பளித்துள்ளது:</p><p>- 1993 OM விதிகளின்படி கிரீமிலேயர் கணக்கீட்டில் பெற்றோரின் ஊதியம் சேர்க்கப்படக் கூடாது; DoPT-யின் 2004 கடிதம் பொதுத்துறை/தனியார் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு எதிரான சட்டவிரோத பாகுபாடாகும்.  </p><p>- பாதிக்கப்பட்ட தகுதியான தேர்வர்களுக்கு கூடுதல் பணியிடங்களை உருவாக்கி, 6 மாத காலத்திற்குள் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும்.  </p><p>ஆனால், மோடி அரசோ இத்தீர்ப்பை அமல்படுத்தாமல் நழுவ சிறப்பு அமர்வை நாடுகிறது.</p><h2>மாணவர்களிடம் மன்னிப்பு</h2><p>ஒன்றிய அரசுக்கு எங்களின் கோரிக்கைகள்:</p><p>1. மறுஆய்வு மனுவை உடனடியாகத் திரும்பப் பெற்று, சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுப்படி கூடுதல் பணியிடங்கள் மூலம் நிலுவையில் உள்ள தேர்வர்களுக்கு உடனே பணி ஒதுக்கீடு செய்க.</p><p>2. சாக்குப்போக்குகள் கூறாமல், சுப்ரீம்கோர்ட்டு விதித்த 6 மாத காலக்கெடுவை முழுமையாகப் பின்பற்றுக.</p><p>3. இத்தீர்ப்புக்கு முன் OBC பிரிவில் விண்ணப்பிக்க முடியாமல் பொதுப் பிரிவில் தள்ளப்பட்ட தேர்வர்களுக்கு UPSC CSE உள்ளிட்ட அனைத்து தேர்வுகளிலும் கூடுதல் வாய்ப்புகளை வழங்குக.</p><p>4. ஏழை எளிய OBC மாணவர்களுக்கும் EWS போன்ற பொருளாதார ரீதியிலான சலுகைகளை விரிவுபடுத்துக.</p><p>5. செல்லுபடியாகும் OBC-NCL சான்றிதழ்களை அடிப்படையாகக் கொண்டு பாதிக்கப்பட்ட மாணவர்களின் பணி/சேர்க்கை நிலையை உயர்த்துக.</p><p>6. மாநில வருவாய்த் துறையால் வழங்கப்பட்ட OBC-NCL சான்றிதழ்களை நிராகரிப்பது மாநிலங்களின் கூட்டாட்சி அதிகாரத்தை அவமதிக்கும் செயலாகும்; சான்றிதழ்களை ஏற்றுக்கொண்டு மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். </p> <h2>எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசுகள்</h2><p>மாநிலங்களின் சுயாட்சியையும், இந்தியா முழுவதும் உள்ள OBC மாணவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளையும் பாதுகாக்க அனைத்து எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசுகளும் இவ்வழக்கில் சுப்ரீம்கோர்ட்டில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அரசு கேபிளை முடக்க முயலும் தவெக..- நயினார் நாகேந்திரன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-attempts-to-disrupt-government-cable-service-nainar-nagendran-condemns-the-move</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-attempts-to-disrupt-government-cable-service-nainar-nagendran-condemns-the-move#comments</comments><guid isPermaLink="false">11df3b4e-35d1-4981-93aa-a028bac5d863</guid><pubDate>Wed, 26 Aug 2026 11:46:11 +0000</pubDate><atom:updated>2026-08-26T11:46:11.428Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/3ittqwq8/Untitled-22.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/3ittqwq8/Untitled-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசு கேபிளை முடக்க தவெக அரசு முயல்வதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>அரசு கேபிள் டிவி சேவை</h2><p>தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே, அரசு கேபிள் டிவி சேவை முற்றிலும் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. தனியார் மென்பொருள் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை, அரசு முறையாகச் செலுத்தாத காரணத்தால், கடந்த ஒரு வாரமாக சர்வர் முடக்கப்பட்டு செட்டாப் பாக்ஸ்களை (Set-top boxes) ரீசார்ஜ் செய்ய முடியாமலும், புதிய இணைப்புகளைப் பெற இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது.</p><p>ஏழை எளிய மக்கள் குறைந்த கட்டணத்தில் பயன்பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெ. ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அரசு கேபிள் நிறுவனத்தை, தவெக அரசு தனது மெத்தனப் போக்கால் அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கிறது. அரசு நிறுவனத்தைச் சீரழிப்பதன் மூலம், அதிகக் கட்டணம் வசூலிக்கும் பிற தனியார் நிறுவனங்களுக்குத் தவெக அரசு மறைமுகமாகத் துணை போகிறதோ என்ற ஐயம் எழுகிறது.</p><h2>சேவையை சீரமைக்க வேண்டும்</h2><p>ஏழை, எளிய மக்கள் பயன்பெறும்படியான திட்டத்தை யார் கொண்டு வந்திருந்தாலும் அதனைத் தங்குதடையின்றித் தொடர <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நடவடிக்கை </a>எடுக்க வேண்டும். எனவே, உடனடியாக முதல்-அமைச்சர் விஜய் இப்பிரச்சினையில் தலையிட்டு, நிலுவைத் தொகையைச் செலுத்தி அரசு கேபிள் டிவி சேவையைச் சீரமைத்து, 12 லட்சம் சந்தாதாரர்களின் உரிமையையும், சிறு ஆபரேட்டர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பயிற்சி மருத்துவர்களின் உதவி ஊதியத்தை உயர்த்திட வேண்டும்: தமிழக அரசுக்கு சி.பி.ஐ வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/communist-party-presses-tamil-nadu-to-hike-medical-trainees-stipend</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/communist-party-presses-tamil-nadu-to-hike-medical-trainees-stipend#comments</comments><guid isPermaLink="false">7792b30a-5ebd-47fc-a994-7c460ebe3ecd</guid><pubDate>Wed, 26 Aug 2026 11:28:14 +0000</pubDate><atom:updated>2026-08-26T11:28:14.645Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சி.பி.ஐ,தமிழக அரசு,வலியுறுத்தல்,Salary,CPI,ஊதியம்,பயிற்சி மருத்துவர்கள்,In Tamil Nadu,Urges</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/scbpg960/veerapandiyan.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மு.வீரபாண்டியன்]]></media:title><media:description type="html"><![CDATA[ இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/scbpg960/veerapandiyan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பயிற்சி மருத்துவர்கள்</a> பட்ட மேற்படிப்பு மாணவர்களின் பயிற்சி கால உதவி ஊதியத்தை உயர்த்திட வேண்டும்- என்று தமிழ்நாடு அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள். இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>உதவி ஊதியம்</h2><p>தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள், உயர் சிறப்பு மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சி கால உதவி ஊதியத்தை தமிழ்நாடு அரசு உயர்த்திட வேண்டும். பல்வேறு மாநிலங்களை ஒப்பிடும் பொழுது தமிழ்நாட்டில் தான் இவர்களுக்கான பயிற்சிக்கால உதவி ஊதியம் குறைவாக உள்ளது. </p> <p>2021 ஆம் ஆண்டிற்கு பிறகு பயிற்சிக்கால உதவி ஊதியம் உயர்த்தப்படவில்லை. தற்பொழுது பயிற்சி மருத்துவர்களுக்கு ரூ 27,319 வழங்கப்படுகிறது. இவ்வூதியம் மேற்கு வங்கத்தில் ரூ 44,000, ஒடிசாவில் ரூ 40,000, அசாமில் ரூ 36,000 ஆக உள்ளது. முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு ரூ 52,451 முதல் ரூ 56,275 வரை வழங்கப்படுகிறது. இதுவே <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D">மராட்டிய</a> மாநிலத்தில் ரூ 93,559 முதல் ரூ 95,257 வரை வழங்கப்படுகிறது.</p><p>உயர் சிறப்பு மருத்துவ படிப்பிற்கு ரூ 54,636 முதல் ரூ 60,101 வரை வழங்கப்படுகிறது. இதுவே மராட்டிய மாநிலத்தில் ரூபாய் 85,000 முதல் ரூபாய் 99,000 வரை வழங்கப்படுகிறது.</p><h2>தமிழ்நாடு அரசு</h2><p>பல்வேறு மாநிலங்களில் தமிழ்நாட்டைவிட அதிகமாக பயிற்சிகால உதவி ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே, இன்றைய பணவீக்கம், விலைவாசி உயர்வு, போக்குவரத்து கட்டண உயர்வு, விடுதி மற்றும் உணவுக் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு, இவர்களுக்கான பயிற்சிக்கால உதவி ஊதியத்தை  உடனடியாக தமிழ்நாடு அரசு உயர்த்தி வழங்கிட  வேண்டும்.</p><h2>உழைப்பு சுரண்டல்</h2><p>பல்வேறு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில், பயிற்சி மருத்துவர்களுக்கும், முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கும், உயர் சிறப்பு மருத்துவ மாணவர்களுக்கும் தொடர்ச்சியாக 36 மணி நேரம் வரை வேலை வழங்கப்படுகிறது. அவர்களின் பயிற்சிக்கு தொடர்பில்லாத வேலைகளும், மருத்துவக் காப்பீட்டு வேலைகளும் வழங்கப்படுகின்றன.  இது அப்பட்டமான உழைப்பு சுரண்டலாகும்.</p><h2>8 மணி நேரம் வேலை</h2><p>இத்தகைய உழைப்பு சுரண்டலை எதிர்த்து, 8 மணி நேரம் மட்டுமே வேலை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வழக்கை தொடர்ந்தது. இவ்வழக்கில்  சென்னை உயர் நீதிமன்றம்  8.00  மணி நேரத்திற்கு மேல் தொடர்ச்சியாக வேலை வழங்கக்கூடாது என தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆனாலும் அத்தீர்ப்பை  தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தவில்லை.</p> <h2>மன மற்றும் உடல் உளைச்சல்</h2><p>இதன் காரணமாக பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மற்றும் உயர்சிறப்பு மருத்துவ மாணவர்கள் கடுமையான மன மற்றும் உடல் உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். பலர் படிப்பை விட்டு விலகிவிடுகிறார்கள். ஒரு சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். எனவே, இத்தகைய அவல நிலையை போக்கிட, எட்டு மணி நேரம் மட்டுமே தொடர்ச்சியாக வேலை வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை உறுதியிடன் தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்த வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு: மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் உதவிகளை வழங்க வேண்டும் - மாணிக்கம் தாகூர் எம்.பி. </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/floods-in-nepal-central-government-must-provide-assistance-on-a-war-footing-mp-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/floods-in-nepal-central-government-must-provide-assistance-on-a-war-footing-mp-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">f95771ce-cf2f-48ae-9b97-f4326fac599c</guid><pubDate>Wed, 26 Aug 2026 11:12:34 +0000</pubDate><atom:updated>2026-08-26T11:12:34.961Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nepal,நேபாளம்,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/4fqv6ygg/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/4fqv6ygg/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-</p><p>“நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கில் இந்தியர்கள், வெளிநாட்டினர் என நூற்றுக்கணக்கானோர் சிக்கித் தவிப்பது மிகுந்த கவலையளிக்கிறது.</p><p>​குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பலர் அங்குச் சிக்கியுள்ளனர். இதில் தமிழ்நாட்டின் கும்பகோணம், தஞ்சை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட தமிழர்களும் அடங்குவர்.</p><p>​வெள்ளத்தில் சிக்கியுள்ள அனைத்து இந்தியர்களையும், உலக நாட்டு மக்களையும் போர்க்கால அடிப்படையில் மீட்க நேபாள அரசுடன் இணைந்து </p><p>பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விரைந்து அனைத்து உதவிகளையும் வழங்கிட வேண்டும்.</p><p>​அவசர உதவி எண்கள் (Emergency Contacts):</p><p>​கட்டணமில்லா அவசர எண் (Toll-free): 1234</p><p>​ஹாட்லைன் (Hotline): 1144</p><p>​சுற்றுலா காவல்துறை (Tourist Police): 9851289445”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்டு வர நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/action-needed-to-rescue-tamils-stranded-in-nepal-floods-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/action-needed-to-rescue-tamils-stranded-in-nepal-floods-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">4a6f8043-ff12-4e03-9559-0856ba6b8cba</guid><pubDate>Wed, 26 Aug 2026 11:07:26 +0000</pubDate><atom:updated>2026-08-26T11:07:26.401Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,Nepal,நேபாளம்,Flood,வெள்ளம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/6szeeww6/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/6szeeww6/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் தமிழர்கள் உள்பட 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீர்மட்டம் அதிகமாக இருப்பதால் சில பகுதிகளில் ஹெலிகாப்டர்களை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.</p><p>தமிழகத்தைச் சேர்ந்த 57 பேர் ராசுவா மாவட்டத்தின் திமுர் பகுதியில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 22 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு நேபாள ராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளர். இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களையும் மீட்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில்  இன்று காலை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் தமிழ்நாட்டின்  கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த 57 பேர் உள்பட 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கித் தவிப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கின்றன.</p><p>வெள்ளத்தில் சிக்கியவர்களில் 57 பேர் தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்றவர்கள் ஆவர். அவர்களில் 22 பேர் மீட்கப்பட்டிருப்பதாகவும், மற்றவர்களைப் பற்றிய தகவல் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.</p><p>நேபாள அரசுடன்  தொடர்பு கொண்டு, வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களையும் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அழைத்து வர மத்திய அரசும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் நேபாள அரசுக்கு தேவையான மீட்பு மற்றும் பிற மனிதநேய உதவிகளையும் மத்திய அரசு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தேர்தல் விழிப்புணர்வு: நாளை மாணவர்களிடையே உரையாற்றுகிறார் தலைமைத் தேர்தல் ஆணையர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/election-awareness-chief-election-commissioner-to-address-students-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/election-awareness-chief-election-commissioner-to-address-students-tomorrow#comments</comments><guid isPermaLink="false">9a982da5-d890-4bdd-a11f-92a084cbbbfe</guid><pubDate>Wed, 26 Aug 2026 10:48:03 +0000</pubDate><atom:updated>2026-08-26T10:48:03.413Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,தமிழகம்,Chief Election Commissioner,Chief Election Commissioner of India,தேர்தல் ஆணையர்,தலைமை தேர்தல் அதிகாரி,தேர்தல் விழிப்புணர்வு,election Awareness</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/cjwcoys4/kumar.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/cjwcoys4/kumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/chennai">சென்னையில்</a> நடைபெறும் மண்டல மாநாட்டில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மாணவர்களிடையே உரையாற்றவும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் (BLOs) கலந்துரையாடவும் உள்ளார்.</p><h2>தலைமைத் தேர்தல் ஆணையர்</h2><p>இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், வரும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 27, 2026) <a href="https://www.dailythanthi.com/topic/chennai">சென்னைக்கு</a> வருகை தந்து, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ள "தேர்தல் விழிப்புணர்வு மன்றங்கள் (ELC) மற்றும் ECINET" குறித்த மண்டல மாநாட்டிற்குத் தலைமை தாங்கி, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் (BLOs) நேரடிக் கலந்துரையாடல் நடத்தவுள்ளார்.</p> <h2>அரசியலமைப்பு விழிப்புணர்வு</h2><p>இந்திய தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியுடன் (CEO) ஒருங்கிணைந்து "ஜனநாயகத்தைக் கற்போம், ஜனநாயகத்தை வழிநடத்துவோம்" ("Learn Democracy, Lead Democracy") என்ற கருப்பொருளின் கீழ் நடத்தப்படும் இந்த முன்னெடுப்பானது, வாக்காளர் விழிப்புணர்வை வலுப்படுத்துதல், வருங்கால வாக்காளர்களிடையே அரசியலமைப்பு விழிப்புணர்வை வளர்த்தல் மற்றும் தேர்தல் பணிகளுக்கு டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.</p><p>நாள் முழுவதும் நடைபெறும் இந்நிகழ்வில் துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு, தலைமை இயக்குநர் (ஊடகம்) ஆஷிஷ் கோயல் மற்றும் தலைமை இயக்குநர் (தகவல் தொழில்நுட்பம்) சீமா கண்ணா உள்ளிட்ட இந்திய தேர்தல் ஆணையத்தின் உயர்மட்டக் குழுவினர் பங்கேற்கின்றனர்.</p> <h2>300 பள்ளிகள், 75 கல்லூரிகள்</h2><p>இம்மாநாட்டில் தமிழ்நாடு (~900 பிரதிநிதிகள்) மற்றும் புதுச்சேரியைச் (~100 பிரதிநிதிகள்) சேர்ந்த 300 பள்ளிகள், 75 கல்லூரிகள் மற்றும் 25 பல்கலைக்கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் என சுமார் 1,000 பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர். மேலும் துணை மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் , மாவட்டக் கல்வி அதிகாரிகள் மற்றும் துறைசார் மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலர்களும் இதில் பங்கேற்பர்.</p><p>ஆகஸ்ட் 27, காலை அமர்வில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சுமார் 500 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் கலந்துரையாடி, கள அளவிலான வாக்காளர் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் களப்பணி சார்ந்த கருத்துக்களைக் கேட்டறிவார்.</p> <h2>கேள்வி-பதில்</h2><p>மதிய அமர்வில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் ஜனநாயகப் பங்களிப்பு மற்றும் தேர்தல் விழிப்புணர்வு குறித்து உரையாற்றி, அதைத் தொடர்ந்து நடைபெறும் கேள்வி-பதில் அமர்வில் பங்கேற்பார். மேலும், இம்மாநாட்டில் வாக்காளர் பதிவு, வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைமுறைகளின் நேரடிச் செயல்விளக்கங்கள், கலந்துரையாடல் கண்காட்சிப் பலகைகள், தேர்தல் வினாடி வினாக்கள் மற்றும் ELC 2.0, ஒருங்கிணைந்த ECINet செயலி போன்ற தொழில்நுட்பத் தளங்களின் பயன்பாடுகளும் இடம்பெறும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து திடீர் சரிவு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sudden-drop-in-water-inflow-in-the-cauvery-river-at-hogenakkal</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sudden-drop-in-water-inflow-in-the-cauvery-river-at-hogenakkal#comments</comments><guid isPermaLink="false">62791183-399a-49b0-963b-06dc8f7100e1</guid><pubDate>Wed, 26 Aug 2026 10:27:24 +0000</pubDate><atom:updated>2026-08-26T10:27:24.174Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Hogenakkal,ஒகேனக்கல்,Hogenakkal Cauvery,Hogenakkal Cauvery river,பரிசல்,நீர்வரத்து சரிவு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/m7ktlujc/hoge.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/m7ktlujc/hoge.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பென்னாகரம், </p><p>ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக நீடித்து வந்தநிலையில், திடீரென நீர்வரத்து சரிந்துள்ளது. </p><h2>ஒகேனக்கல்</h2><p>கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவைப் பொறுத்து <a href="https://www.dailythanthi.com/topic/ஒகேனக்கல்">ஒகேனக்கல்</a> காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதும் வழக்கம். நேற்று முன்தினம் காலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக இருந்தது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி இந்த நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக நீடித்தது.</p><h2>நீர்வளத்துறை அதிகாரிகள்</h2><p>இதனால் <a href="https://www.dailythanthi.com/topic/ஒகேனக்கல்">ஒகேனக்கல்லில்</a> உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் ஆகிய அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.</p><p>காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.</p><h2>பரிசல் இயக்க தடை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/ஒகேனக்கல்">ஒகேனக்கல்</a> காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து 11-வது நாளாக நீடிக்கிறது.இதனால் ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அதே நேரத்தில் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>நீர்வரத்து சரிவு</h2><p>இந்நிலையில் <a href="https://www.dailythanthi.com/topic/ஒகேனக்கல்">ஒகேனக்கல்</a> காவிரி ஆற்றில் இன்று காலை 10,000 கன அடியாக இருந்து நீர் வரத்து, இன்று பிற்பகல் நிலவரப்படி 6,500 கன அடியாக சரிந்துள்ளது. இதனால், பரிசல் சவாரிக்கு அனுமதி அளிப்பது குறித்து ஆய்வு செய்து முடிவெடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. </p>]]></content:encoded></item><item><title>சென்னை மாநகராட்சி: குப்பைகளை தரம் பிரிக்க 40 நாட்கள் சிறப்பு விழிப்புணர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-municipality-40-day-campaign-to-segregate-garbage</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-municipality-40-day-campaign-to-segregate-garbage#comments</comments><guid isPermaLink="false">d8d94930-def6-4615-82df-5c38d817be3f</guid><pubDate>Wed, 26 Aug 2026 10:21:04 +0000</pubDate><atom:updated>2026-08-26T10:21:04.870Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Corporation,சென்னை மாநகராட்சி,விழிப்புணர்வு,waste,Awareness Campaign,குப்பைகள்,தரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/o90jjc78/cor.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ துணை ஆணையர்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை மாநகராட்சி: குப்பைகளை தரம் பிரிக்க 40 நாட்கள் சிறப்பு விழிப்புணர்வு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/o90jjc78/cor.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p> சென்னை ,</p><p> "குப்பையை பிரிப்போம் நாளையை காப்போம்" என்ற 40 நாள் வீடுகளுக்கான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அடையாறு மண்டலம், வார்டு-179க்குட்பட்ட குப்பம் கடற்கரை சாலையில் இன்று நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் தெற்கு வட்டார துணை ஆணையர் கலந்துகொண்டார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>குப்பம் கடற்கரை சாலை</h2><p>சென்னை மாநகராட்சியின் சார்பில், பொதுமக்களிடையே குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை உருவாக்கும் நோக்கில் தெற்கு வட்டாரத்தில் தொடங்கப்பட்ட "குப்பையை பிரிப்போம் நாளையை காப்போம்" என்ற 40 நாள் வீடுகளுக்கான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அடையாறு மண்டலம், வார்டு-179க்குட்பட்ட குப்பம் கடற்கரை சாலையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் தெற்கு வட்டார துணை ஆணையர் அதாப் ரசூல்,அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மக்காத குப்பைகளை தனியாக சேகரித்து வழங்குவதற்கான பிரத்யேகப் பை மற்றும் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கியும் வீடுகளின் சுவற்றில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.</p><h2>முதல்-அமைச்சர் அறிவுறுத்தல்</h2><p> தமிழ்நாடு முதல்-அமைச்சர், தமிழ்நாட்டில் திடக்கழிவுகளை மேலாண்மை பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்கு ஏதுவாக, திடக்கழிவுகள் உருவாகும் இடத்திலேயே முறையாக மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதார கழிவுகள் மற்றும் அபாயகரமான கழிவுகள் என தரம் பிரித்து பெற்று அகற்றிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.</p> <h2>மக்களிடையே விழிப்புணர்வு</h2><p>அதனடிப்படையில், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">சென்னை மாநகராட்சி</a> முழுவதும் அறிவியல் முறையிலான திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்தும் நோக்கில், தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டும், மக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டும் வருகிறது.</p> <h2>விழிப்புணர்வு நிகழ்ச்சி</h2><p>இதன் தொடர்ச்சியாக,  சென்னை மாநகராட்சியில் பொதுமக்களிடையே குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை உருவாக்கும் நோக்கில் “குப்பையைப் பிரிப்போம் - நாளையை காப்போம்” என்ற 40 நாள் வீடுகளுக்கான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">விழிப்புணர்வு</a> நிகழ்ச்சி கடந்த 22.08.2026 அன்று தெற்கு வட்டாரத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.</p><h2>விழிப்புணர்வு</h2><p>அடையாறு மண்டலம், வார்டு-179க்குட்பட்ட குப்பம் கடற்கரை சாலையில் தெற்கு வட்டார துணை ஆணையர் அதாப் ரசூல், இன்று பங்கேற்று அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வீடுவீடாக சென்று மக்காத குப்பைகளை தனியாக சேகரித்து வழங்குவதற்கான பிரத்யேகப் பை மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் வீடுகளின் சுவற்றில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.</p> <h2>50,000 வீடுகள்</h2><p>இத்திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக தென் சென்னை மண்டலங்களான வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் மொத்தம் 50,000 வீடுகளை சென்றடையும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திலும் 10,000 வீடுகள் தேர்வு செய்யப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.</p> <h2>கலந்துரையாடல் கூட்டம்</h2><p>பெருமளவு குப்பைகளை உருவாக்குபவர்களிடத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், அவர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பெருமளவு குப்பைகளை உருவாக்குபவர்கள் வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கட்டாயம் குப்பைகளை தரம் பிரித்து வழங்கிட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. இந்நிகழ்வில், அடையாறு மண்டல அலுவலர் காளிதாஸ், செயற்பொறியாளர் ரங்கநாதன், மற்றும் மாநகராட்சி, உர்பேசர் அலுவலர்கள், பணியாளர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருத்தணி முருகன் கோவிலில் நாளை 4 மணி நேரம் நடை அடைப்பு..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/temple-doors-at-tiruttani-murugan-temple-to-remain-closed-for-4-hours-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/temple-doors-at-tiruttani-murugan-temple-to-remain-closed-for-4-hours-tomorrow#comments</comments><guid isPermaLink="false">cea08a7b-3273-46f7-b108-4113b08ab3d6</guid><pubDate>Wed, 26 Aug 2026 10:14:56 +0000</pubDate><atom:updated>2026-08-26T10:14:56.497Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruttani Murugan temple,திருத்தணி முருகன் கோவில்,திருத்தணி,திருத்தணி முருகன்,tiruttani,Tiruttani Murugan,நடை அடைப்பு,Thiruttani Temple</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/60osygp5/Untitled-16.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருத்தணி முருகன் கோவில் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/60osygp5/Untitled-16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருத்தணி,</p><p>திருத்தணி முருகன் கோவிலில், நாளை ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><h2>கோவில் நடை அடைப்பு</h2><p>திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8.45 மணி வரை தொடர்ந்து பக்தர்கள் மூலவரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு வரும் 27-ம் தேதி (நாளை) மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை கோவில் நடை சாத்தப்பட்டு, பக்தர்கள் தரிசனம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. இந்த நேரத்தில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பூஜைகள் </a>நடைபெற உள்ளன.</p><p>சிறப்பு பூஜைகள் நிறைவடைந்த பின்னர், மாலை 4 மணிக்கு மேல் கோவில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் வழக்கம்போல் மூலவரை தரிசிக்க அனுமதிக்கப்படுவர். எனவே, நாளை மதியம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இதனை கருத்தில் கொண்டு தங்களது தரிசன நேரத்தை திட்டமிட்டுக் கொள்ளலாம் என இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் க.ரமணி தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பேரிடர் காலங்களில் நிவாரண பணிகளை மேற்கொள்ள மண்டல அளவில் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/appointment-of-zonal-ministers-for-relief-work-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/appointment-of-zonal-ministers-for-relief-work-in-chennai#comments</comments><guid isPermaLink="false">8b6c52a6-2e47-442c-9490-cbbacb66b380</guid><pubDate>Wed, 26 Aug 2026 10:08:49 +0000</pubDate><atom:updated>2026-08-26T10:08:49.965Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,monsoon,பருவமழை,நிவாரண பணிகள்,பொறுப்பு அமைச்சர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/slose6dn/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பருவமழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/slose6dn/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பேரிடர் காலங்களில் நிவாரண பணிகள் போன்ற அவசரகால பணிகளை மேற்கொள்ளவும் 7 அமைச்சர்கள் மண்டல அளவில் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அரசாணையை தலைமைச் செயலாளர் சாய்குமார் வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><h2>பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்</h2><p>முன்னதாக வெளியிடப்பட்ட அரசாணையில் அமைச்சர்கள் மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டனர். தற்போது முதல்-அமைச்சரின் ஆணையின்படி, மேற்கண்ட மாவட்ட பணிகளோடு கூடுதலாக அமைச்சர் பெருமக்களில் சிலருக்கு சென்னை மாநகராட்சியில் உள்ள மண்டலங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>அவசரகால பணிகளை மேற்கொள்ள...</h2><p>அதன் பேரில் மண்டல வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும் மற்றும் பேரிடர் காலங்களில் நிவாரண பணிகள் போன்ற அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும், அமைச்சர்கள் மண்டல அளவில் பொறுப்பு அமைச்சர்களாக பின்வருமாறு நியமனம் செய்யப்படுகின்றனர்.</p><p>மண்டலம் 1 (திருவொற்றியூர்), மண்டலம் 2 (மணலி) - <strong>இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் ரமேஷ்</strong></p><p>மண்டலம் 3 (மாதவரம்), மண்டலம் 4 (தண்டையார்பேட்டை) - <strong>வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் த. லோகேஷ் தமிழ்செல்வன்</strong></p><p>மண்டலம் 5 (ராயபுரம்), மண்டலம் 6 (திரு.விகநகர்) - <strong>மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ்</strong></p><p>மண்டலம் 7 (அம்பத்தூர்), மண்டலம் 8 (அண்ணாநகர்), மண்டலம் 9 (தேனாம்பேட்டை) - <strong>கைத்தறி துணி நூல் மற்றும் காதித் துறை அமைச்சர் விஜய் பாலாஜி</strong></p><p>மண்டலம் 10 (கோடம்பாக்கம்), மண்டலம் 11 (வளசரவாக்கம்) - <strong>இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே. பிரபு</strong></p><p>மண்டலம் 12 (ஆலந்தூர்), மண்டலம் 13 (அடையார்) - <strong>போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்</strong></p><p>மண்டலம் 14 (பெருங்குடி), மண்டலம் 15 (சோழிங்கநல்லூர்) - <strong>மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ்</strong></p><p><strong>பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</strong> சென்னை மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற முறையில் சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் உள்ள பணிகளை ஒருங்கிணைப்பார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>லஞ்சத்திற்கு எதிரான முதல்-அமைச்சரின் முழக்கம் வெறும் சினிமா வசனம் தானா..? - டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-chief-ministers-slogan-against-corruption-merely-a-movie-dialogue-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-chief-ministers-slogan-against-corruption-merely-a-movie-dialogue-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">1cf84300-a647-45b2-99cd-005cf25c7d8c</guid><pubDate>Wed, 26 Aug 2026 10:02:03 +0000</pubDate><atom:updated>2026-08-26T10:02:03.409Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Tamilnadu,தமிழகம்,TTV Dhinakaran,டிடிவி தினகரன்,தமிழக அரசு,TN govt,நெல் மூட்டைகள்,AMMK,அமமுக</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/8ujm91ue/vasamam.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/8ujm91ue/vasamam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நெல் கொள்முதல் நிலையங்களில் தொடரும் லஞ்ச வசூல் - லஞ்சத்திற்கு எதிரான முதல்-அமைச்சரின் முழக்கம் நடைமுறைக்கு உதவாத வெறும் சினிமா வசனம் தானா? என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் <a href="https://dailythanthi.com/topic/ttv-dhinakaran">டிடிவி தினகரன்</a> கேள்வி எழுப்பி உள்ளார். </p><h2>ரூ.50 வரை லஞ்சம்</h2><p>இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையத்தில், மூட்டை ஒன்றுக்கு ரூ.50 வரை லஞ்சம் கொடுத்தால் மட்டுமே நெல்லைக் கொள்முதல் செய்ய முடியும் என அங்குள்ள அதிகாரிகள் தெரிவிப்பதாக விவசாயிகள் தங்களது வேதனையையும் ஆதங்கத்தையும் பதிவு செய்துள்ளனர்.</p><h2>பயிர்க்கடன் தள்ளுபடி</h2><p>ஏற்கனவே, தவெக அரசு அறிவித்த முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடியை நம்பி ஏமாந்து கடனாளிகளாகியுள்ள விவசாயிகள், மேலும் கடன் பெற்று விளைவித்த நெல்லை கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு வந்த நிலையில், லஞ்சம் கேட்டு உரிய நேரத்தில் கொள்முதல் செய்ய மறுக்கும் அதிகாரிகளால், கடந்த 15 நாட்களாக ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.</p><h2>விவசாயிகள் கண்ணீர்</h2><p>விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க வேண்டிய அரசு நிர்வாகம், நெல் மூட்டைகளோடு அவர்களின் உழைப்பையும் வீணாக்கிக் கொண்டிருப்பதோடு, விவசாயிகள் விளைவித்த நெல்லுக்கு விலை நிர்ணயிக்கப்படுவதற்கு முன்பாகவே லஞ்சத்திற்கான தொகையை நிர்ணயிக்கும் நிலையை உருவாக்கியிருப்பது மிகுந்த வேதனைக்குரியதாகும்.</p><p>இதே கடலூர் மாவட்டத்திலுள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த மாதம் ஆய்வுக்கு வந்த உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் அவர்கள், லஞ்ச வசூலில் ஈடுபட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், மீண்டும் இதுபோன்ற லஞ்ச வசூல் தொடர்ந்து நடைபெற்று வருவது, த.வெ.க. அரசின் மீதான  விவசாயிகளின் நம்பிக்கையை முற்றிலுமாக இழக்கச் செய்துள்ளது.</p><h2>லஞ்ச வசூல் இன்றி</h2><p>எனவே, கடுமையான கண்காணிப்பும், உடனடி நடவடிக்கைகளுமே ஊழலை ஒழிக்குமே தவிர, மேடைகளில் பேசப்படும் வீர வசனங்களால் ஊழலை ஒருபோதும் ஒழிக்க முடியாது என்பதை இனியாவது உணர்ந்து, விவசாயிகள் விளைவித்த நெல்லை எவ்வித லஞ்ச வசூலும் இன்றி உடனடியாகக் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என த.வெ.க. அரசை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: ஒரு கிராம் ரூ.0.01-க்கு வழங்கப்படுகிறதா? - தகவல் நம்பகத்தன்மை பிரிவு விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thaimaman-gold-ring-scheme-is-one-gram-being-provided-for-001-clarification-from-the-information-verification-wing</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thaimaman-gold-ring-scheme-is-one-gram-being-provided-for-001-clarification-from-the-information-verification-wing#comments</comments><guid isPermaLink="false">d8dbd79c-c8e5-4e3c-bc66-37da15c7a2c5</guid><pubDate>Wed, 26 Aug 2026 09:42:54 +0000</pubDate><atom:updated>2026-08-26T09:42:54.392Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Fact Check Unit,Fact check,gold ring,தகவல் சரிபார்ப்பகம்,தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம்,Thaimaman Gold Ring Project,தகவல் நம்பகத்தன்மை பிரிவு,gold scheme</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/vojen1xm/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/vojen1xm/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடர்பாக பரப்பப்படும் தவறான தகவல் குறித்து தகவல் நம்பகத்தன்மை பிரிவு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியான பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>பரவும் செய்தி</h2><p>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் ஒரு கிராம் தங்கம், ஒரு பைசாவுக்கு வழங்கப்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் தொடர்ந்து பேசி வருகிறார்.</p><h2>உண்மை என்ன?</h2><p>இது முற்றிலும் தவறான தகவல்.</p><p>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் தங்கத்தின் விலை தனியாகக் கணக்கிடப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலையைத் தவிர்த்து, செய்கூலி, சேதாரம், காப்பீடு, போக்குவரத்து, பேக்கிங் மற்றும் BIS தரமுத்திரை போன்ற அனைத்து கூடுதல் கட்டணங்களும் சேர்த்து ரூ.0.01 என நிறுவனங்கள் குறைந்த விலைப்புள்ளியினை அளித்ததால் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.0.01 என்பது தவறான தகவலாகும்.</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தவறான தகவலைப் பரப்பாதீர்</a> !</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>‘டாஸ்மாக் பணியாளார்கள் கோரிக்கைகள் மீது  முதல்-அமைச்சர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்’ - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-chief-minister-must-intervene-and-resolve-the-demands-of-tasmac-employees-communist-party-of-india</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-chief-minister-must-intervene-and-resolve-the-demands-of-tasmac-employees-communist-party-of-india#comments</comments><guid isPermaLink="false">31e3673d-4284-488e-a11c-5aa81af666ce</guid><pubDate>Wed, 26 Aug 2026 09:40:39 +0000</pubDate><atom:updated>2026-08-26T09:40:39.315Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Communist Party of India,டாஸ்மாக்,Tasmac,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/g2d1b716/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/g2d1b716/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“அரசு நிறுவனமான தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) கடந்த 23 ஆண்டுகளாக சில்லரை மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறது. ரூ.15 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது அரசுக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடிக்கும் மேல் கலால் வரி மற்றும் மதிப்புக் கூட்டு வரி செலுத்தி வருகிறது. </p><p>அரசின் வரி வருவாயில் மூன்றில் ஒரு பங்கு அளவில் பங்களிப்பு செலுத்தும் இந்த டாஸ்மாக் நிறுவனத்தின் பணியாளர்கள் 23 ஆண்டுகளாக தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் பகுதி நேர ஒப்பந்தப் பணியாளர்களாக வகைப்படுத்தப்பட்டிருப்பது, தொழிலாளர் நலச் சட்டங்களுக்கும், தொழிலாளர் நலன் சார்ந்த கொள்கைகளுக்கும் எதிரானதாகும்.</p><p>தமிழ்நாட்டில் 1981 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட பணி நிரந்தரத் தகுதி வழங்கல் சட்டத்திற்கு முரணாக அரசு நிறுவனம் செயல்படுவது சரியல்ல. மேலும், நிலையாணை சட்டப்படி, டாஸ்மாக் நிறுவனம் இதுவரை நிலையாணை உருவாக்காமல், பணி வரன்முறை ஏதுமின்றி பணியாளர்களை பாதுகாப்பற்ற அசாதாரண பணிச் சூழலுக்கு நெட்டித் தள்ளியுள்ளது.</p><p>கொள்முதல் முனையில் ஏற்பட்டு வந்த நிதிக் கசிவு தடுக்கப்பட்டு கூடுதல் வருவாய் ஈட்டும் வரவேற்கத்தக்க நடவடிக்கையை மேற்கொண்ட தமிழ்நாடு அரசு, பணியாளர்களுக்கு பாதுகாப்பான பணிச் சூழலை உருவாக்கி தருவதில் அக்கறை காட்ட வேண்டும்.</p><p>டாஸ்மாக் பணியாளர்களுக்கு தமிழ்நாடு கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சட்டம் பொருந்தும் என மாண்பமை சென்னை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பை இதுவரை டாஸ்மாக் நிர்வாகம் மதிக்கவில்லை என்ற புகாரும் உள்ளது.</p> <p>இந்த நிலையில் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் மற்றும் காலிப்பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்திற்கு கூடுதல் பணியாளர் நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 28.08.2026 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக ஏஐடியூசி, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. </p><p>டாஸ்மாக் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகள் மீது தமிழ்நாடு அரசின் முதல்-அமைச்சர் தலையிட்டு, பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, சுமூகத் தீர்வு காண வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>இந்தியாவின் சிறந்த முதல்-அமைச்சர்கள் யார்? தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் - சி.ஜே.பி. நிறுவனர் அபிஜீத் திப்கே பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/who-are-indias-best-chief-ministers-mk-stalin-in-tamil-nadu-cjp-founder-abhijit-dipke-answers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/who-are-indias-best-chief-ministers-mk-stalin-in-tamil-nadu-cjp-founder-abhijit-dipke-answers#comments</comments><guid isPermaLink="false">197ac1e7-5277-4533-8c22-a7b1d189a2a9</guid><pubDate>Wed, 26 Aug 2026 09:32:17 +0000</pubDate><atom:updated>2026-08-26T09:32:17.753Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,மு.க.ஸ்டாலின்,M.K.Stalin,இந்தியா,India,தமிழகம்,முதல்-அமைச்சர்,Cheif Minister,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,cockroach janata party,அபிஜீத் திப்கே,சி.ஜே.பி.,cjp</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/smyy05rn/jiji.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/smyy05rn/jiji.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><p>தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி சிறந்த முதல்-அமைச்சராக <a href="https://www.dailythanthi.com/topic/mkstalin">மு.க.ஸ்டாலின்</a> செயல்பட்டுள்ளார் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜீத் திப்கே தெரிவித்துள்ளார்.</p><p>கடந்த மாதம் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் நடந்த போராட்டம் நாடு முழுக்க எதிரொலித்தது. இந்த போராட்டம் மத்திய அரசையே பின்வாங்க வைத்த நிலையில், கல்வித்துறை மந்திரியாக இருந்த தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். அந்த போராட்டத்தின் வெற்றியை தொடர்ந்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தொடர்ந்து பல்வேறு செயல்பாடுகளில் களமிறங்கி உள்ளது. </p><p>இதற்கிடையே பிரபல ஊடகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் அபிஜீத் தீப்கே மற்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது இந்தியாவின் சிறந்த முதல்-அமைச்சர்கள் யார் என்பது தொடர்பாக நெறியாளர் கேள்வி எழுப்பினார். சில நொடிகள் யோசித்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே, முன்னாள் முதல்-அமைச்சர்களான <a href="https://www.dailythanthi.com/topic/mkstalin">மு.க. ஸ்டாலின்</a> (தமிழ்நாடு), பினராயி விஜயன் (கேரளம்), அரவிந்த் கெஜ்ரிவால் (டெல்லி) ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டார்.</p><p>அதில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் நிர்வாகத் திறனை குறிப்பிட்ட அபிஜீத் திப்கே, மாநிலத்தின் பொருளாதாரத்தை மு.க.ஸ்டாலின் மிக சிறப்பாக மேம்படுத்தியதாக குறிப்பிட்டார். </p><p>மேலும், கேரள முன்னாள் முதல்-மந் திரி பினராயி விஜயனின் ஆட்சியில் கல்வி மற்றும் சுகாதார துறைகளில் வலுவான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் பாராட்டினார். </p><p>டெல்லியின் முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், அரசு பள்ளிகள் மற்றும் சுகாதார கட்டமைப்பில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்ததாக பாராட்டினார். இப்படி மூன்று முதல்வர்களின் நிர்வாக அணுகுமுறைகளை குறிப்பிட்டு, அவர்கள் சிறந்த முதல்வர்களாக இருந்ததாக அபிஜீத் தீப்கே குறிப்பிட்டார்.</p><p>இந்நிலையில் அபிஜீத் தீப்கேவின் இந்த கருத்துகளை பல்வேறு அரசியல் தலைவர்களும் கடுமையாக விமர்சித்துள்ளனர். குறிப்பாக சமீபத்தில் பா.ஜ.க.வில் இருந்து விலகிய ஷெஹ்சாத் பூனாவாலா, வீடியோ வெளியிட்டு கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை சாடியுள்ளார். அந்த மூன்று தலைவர்களும் தங்கள் மாநில மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்று கூறிய அவர், இதுபோன்ற தலைவர்களை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைமை சிறந்த முதல்-அமைச்சர்களாக தேர்வு செய்திருப்பதை விமர்சித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஆசிரியர்கள் தகுதித்தேர்வு விலக்கு தீர்மானம்: கண்துடைப்பு நாடகமாக இருக்கக் கூடாது - அன்பில் மகேஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aasiriyargal-thakudhi-thervu-vilakku-theermanam-kanthudaippu-naadagamaga-irukka-koodathu-anbil-mahaes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aasiriyargal-thakudhi-thervu-vilakku-theermanam-kanthudaippu-naadagamaga-irukka-koodathu-anbil-mahaes#comments</comments><guid isPermaLink="false">1ea13cb9-612c-479b-84a3-34efa15a1deb</guid><pubDate>Wed, 26 Aug 2026 09:19:21 +0000</pubDate><atom:updated>2026-08-26T09:19:21.625Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,Anbil Mahesh,ஆசிரியர் தகுதித்தேர்வு,Teacher Eligibility Test,அன்பில் மகேஸ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/sgibt3vd/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்பில் மகேஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/sgibt3vd/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தவெக அரசு ஆசிரியர்கள் நலனில் இரட்டைவேடம் போடுகிறதா எனும் சந்தேகம் எழுந்துள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>‘ஆசிரியர்கள் தகுதித்தேர்வு விலக்கு தீர்மானம்’ தொடர்பாக த.வெ.க. அரசு கொண்டுவந்துள்ள தீர்மானத்திற்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் சங்கங்களிடம் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. இந்த அரசு ஆசிரியர்கள் நலனில் இரட்டைவேடம் போடுகிறதா எனும் சந்தேகம் எழுந்துள்ளது. தீர்மானம் நிறைவேற்றியதற்கு முதல்நாள் சென்னை ஐகோர்ட்டில் ‘ஆசிரியர் தகுதித்தேர்விற்கான மதிப்பெண்களை குறைக்க முடியாது! அப்படி குறைத்தால் தேர்விற்கான மதிப்பு குறைந்துவிடும்’ என ஆசிரியர்களுக்கு எதிராக வாதாடியுள்ளது த.வெ.க. அரசு. ஆனால் அதற்கு மறுநாள் தீர்மானம் எனும் பெயரில் நாடகம் ஆடியுள்ளதா எனும் கேள்வி ஆசிரியப் பெருமக்களிடம் எழுந்துள்ளது.</p><p>2025 செப்டம்பர் 1 அன்று ‘அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் கட்டாயம் தேர்ச்சிப் பெற வேண்டும்’ என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. உடனடியாக அதே நாளில் செய்தியாளர்களைச் சந்தித்து ‘இத்தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும்’ என திராவிட மாடல் அரசின் அன்றைய முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க அறிவித்தோம். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தோம். ‘மேல்முறையீடு செய்யப்படும்’ என்ற தலைவரின் அறிவிப்பை ஆசிரியர் சங்கங்கள் வரவேற்றார்கள். அதற்காக என்னை நேரில் சந்தித்து நன்றியும் தெரிவித்தார்கள்.</p><p>2025 செம்படம்பர் 11 அன்று தமிழ்நாடு அரசின் சார்பாக சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து கழகமும், திராவிட மாடல் அரசும் ஆசிரியர்களின் மனமறிந்து அவர்களை காக்கும் பணிகளில் இறங்கியது. சீராய்வு மனு மீதான தீர்ப்பு வெளியான அடுத்த நாளே ஆசிரியர் சங்க பிரதிநிதிகளை பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் சந்தித்து ஆசிரியர்களின் கருத்துகளையும் கேட்டறிந்தோம். இரண்டு முறை கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தினோம். அதற்கு அடுத்த நாளே 2025 நவம்பர் 22 அன்று அன்றைய முதல்-அமைச்சரை பாராளுமன்ற உறுப்பினர் மூத்த வழக்கறிஞர் வில்சனோடு இணைந்து சந்தித்து ஆசிரியர்கள் தெரிவித்த கருத்துகளை எடுத்துக் கூறினோம். ஆசிரியர்களின் கருத்துகளை அடிப்படையாக கொண்டு நவம்பர் 25 அன்று இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதினார் அன்றைய முதல்-அமைச்சர். அக்கடிதத்தில் ‘ஆசிரியர்களை பாதுகாப்பதுடன் குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்படக்கூடாது என்றால் சட்டத்தில் தேவையான திருத்தம் செய்ய வேண்டும்’ என்பதை வலியுறுத்தினார்.</p><p>தொடர்ந்து, அன்றைய தமிழ்நாடு முதல்-அமைச்சரோடு நானும் பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரிகளும் உடனடியாக ஆலோசனை நடத்தினோம். மூத்த ஆசிரியர்கள் ஒருவர் கூட பாதிக்கப்படாமல் தமிழ்நாடு அரசு தொடர்ந்து பாதுகாக்கும் என்றும், ஆசிரியர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கத் திராவிட மாடல் அரசு துணை நிற்கும் என்றும் அன்றைய முதல்-அமைச்சர் விரிவான அறிக்கையின் மூலம் தெரிவித்தார்.</p><p>நவம்பர் 29 அன்று கழகத் தலைவரின் தலைமையில் நடைபெற்ற கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ‘பணி நியமனம் பெற்று தற்போது ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களின் பணி மற்றும் பதவி உயர்வினை மத்திய அரசு பாதுகாத்திடுக’ என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.</p><p>“இந்தியா முழுவதும் உள்ள ஆசிரியர்களைப் பாதுகாக்கப் பாராளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவர வலியுறுத்த வேண்டும்” என்கிற கழகத் தலைவரின் அறிவுரைப்படி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி நேரத்தில் சட்டத்திருத்தம் குறித்து வலியுறுத்தினார்கள். கழக மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் 2025 டிசம்பர் 12 அன்று ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த கழகத் தலைவரின் குரலை நாடாளுமன்றத்தில் பதிவு செய்து, ஆசிரியர்களுக்காக சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.</p><p>இதற்கிடையில் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று திராவிட மாடல் அரசின் சிறப்பு முயற்சியால் “ஆசிரியர்களைப் பாதுகாப்பதற்காக சிறப்பு தகுதித் தேர்வு நடத்தப்படும்” என்று அரசாணை: 231, நாள் 25.10.2025 அன்று வெளியிடப்பட்டது. தொடர்ந்து வந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் ஆசிரியர்களின் நலன் கருதி, தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்ணில் 5 சதவீதத் தளர்வும் வழங்கப்பட்டது. இதனால் ஏராளமான ஆசிரியர்கள் பயன்பெற்றுள்ளார்கள். 2026 ஜனவரி 28 அன்று ஆசிரியர் தகுதித்தேர்வில் தகுதி மதிப்பெண்களை குறைத்து அரசாணை வெளியிட்டார் அன்றைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு 55 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகவும், பிற்படுத்தப்பட்டோர் - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகிய பிரிவினருக்கு 55 சதவீதத்திலிருந்து, 50 சதவீதமாகவும் மாற்றி அரசாணை வெளியிடப்பட்டது. மாற்றுத்திறன் கொண்ட தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று பிப்ரவரி 25 அன்று குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 40 சதவீதம் எனவும் நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டது.</p><p>மேலும், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் அனைத்து ஆசிரியர்களுக்கும் உதவிடும் வகையில், அதற்கான பயிற்சிக் கட்டகங்கள்(Training Modules) தயாரிக்கும் பணி மற்றும் இணையவழிப் பயிற்சி வழங்கும் பணியானது, ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திடம்(SCERT) ஒப்படைக்கப்பட்டது. இச்சூழலில்தான் 2026 மே 29-ம் தேதி சீராய்வு மனு மீது தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டு ‘தகுதித்தேர்வில் இருந்து விலக்களிக்க மறுத்துவிட்டது’. இதன் பிறகான சட்டப்போராட்டத்தை புதிதாக வந்த த.வெ.க அரசு மேற்கொள்ளவில்லை என்பதே உண்மை!</p><p>முந்தைய நமது திராவிட மாடல் அரசு ஆசிரியர்களுக்காக செய்த சிறப்பு செயல்பாடுகளையும் முடக்கும் வேகத்தில்தான் இந்த அரசு செயலாற்றியது. சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வர்களுக்காக பயிற்சி கையேடுகள் வழங்குவதிலேயே தாமதம் ஏற்படுத்திய அரசுதான் இவ்வரசு. அதோடு நில்லாமல் ஐகோர்ட்டில் ‘தகுதித்தேர்விற்கான மதிப்பெண்களை குறைக்க முடியாது’ என்று ஆணவமாகவும் வாதாடி உள்ளது என்பது மாற்றத்தை அல்லாமல் ஆசிரியர்கள் மத்தியில் ஏமாற்றத்தைதான் கொடுத்துள்ளது.</p><p>இந்த புதிய அரசின் செயல்பாடுகளை என்னவாக விளங்கிக்கொள்ள வேண்டும்? கோர்ட்டில் வாதாடிய அரசின் முகம்தான் உண்மை முகமா? சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய அரசின் முகம்தான் உண்மை முகமா? இரட்டை நிலைப்பாட்டை எடுத்துக் கூறுவதுடன் கழகத் தலைவரின் வழிகாட்டுதலின்படி ஆசிரியப் பெருமக்களின் நலனுக்காக என்றும் குரல் கொடுப்போம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>50 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி மீண்டும் போலீஸ் சைக்கிள் ரோந்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/after-50-years-police-cycle-patrol-around-madurai-meenakshi-amman-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/after-50-years-police-cycle-patrol-around-madurai-meenakshi-amman-temple#comments</comments><guid isPermaLink="false">9ed851d3-0974-4491-a592-9502ece8e972</guid><pubDate>Wed, 26 Aug 2026 09:09:39 +0000</pubDate><atom:updated>2026-08-26T09:09:39.086Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>போலீஸ்,Madurai,மதுரை,patrol,Meenakshi Amman Temple,சைக்கிள்,மீனாட்சி அம்மன் கோவில்,Bicycle,ரோந்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/kxumieem/police-cycle-patrol.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ போலீஸ் சைக்கிள் ரோந்து]]></media:title><media:description type="html"><![CDATA[ 50 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி மீண்டும் போலீஸ் சைக்கிள் ரோந்து]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/kxumieem/police-cycle-patrol.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">மதுரை மீனாட்சி அம்மன் கோவில்</a> சித்திரை வீதிகளில், 50 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் மீண்டும் சைக்கிளில்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81"> ரோந்து </a>பணியை தொடங்கியுள்ளனர்.</p><h2>மதுரை மீனாட்சி அம்மன் கோவில்</h2><p>உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலை சுற்றியுள்ள கிழக்கு, மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு ஆகிய 4 சித்திரை வீதிகளிலும் மக்கள் நடமாட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும்.</p> <h2>வாகனங்கள் செல்ல தடை</h2><p>இங்குள்ள சித்திரை வீதிகளுக்குள் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை தீவிரமாக கண்காணிக்கவும், கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கவும் காவல் துறை சார்பில் பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><h2>சைக்கிள் ரோந்து</h2><p>இதன் ஒரு பகுதியாக, சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறையில் இருந்த சைக்கிள் ரோந்து முறையை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a> மீண்டும் கையில் எடுத்துள்ளனர். இதற்காக முதற்கட்டமாக 5-க்கும் மேற்பட்ட சைக்கிள்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு, காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><h2>வரவேற்பு</h2><p>சைக்கிளில் சென்று பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் இடையூறு இல்லாத வகையில் அறிவுரைகளை வழங்கி வரும் போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு அப்பகுதி மக்களிடையே வரவேற்பு எழுந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘த.வெ.க. அரசு கொடுத்த சுதந்திரம்... இதனால்தான் விஜய் முதல்-அமைச்சர் ஆனார்’ - அமைச்சர் ஷாஜகான் நெகிழ்ச்சி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-freedom-granted-by-the-tvk-government-this-is-why-vijay-became-chief-minister-minister-shahjahan-expresses-emotion</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-freedom-granted-by-the-tvk-government-this-is-why-vijay-became-chief-minister-minister-shahjahan-expresses-emotion#comments</comments><guid isPermaLink="false">d9fed697-3f2c-463c-9237-f8dc2e71d405</guid><pubDate>Wed, 26 Aug 2026 08:58:44 +0000</pubDate><atom:updated>2026-08-26T08:58:44.490Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,த.வெ.க.,அமைச்சர் ஷாஜகான்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,Minister Shahjahan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/vq0ay90i/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/vq0ay90i/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(ஐ.யூ.எம்.எல்.) கட்சியின் பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ.வும், தமிழக அரசின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான ஷாஜகான், சென்னையில் இன்று நடைபெற்ற மிலாதுன் நபி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;-</p><p>“2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பி வாக்களித்தனர். அதனால்தான் த.வெ.க. தலைவர் விஜய், இன்று முதல்-அமைச்சராக பதவியில் அமர்ந்துள்ளார். ஐ.யூ.எம்.எல். கட்சி வேறு அணியில் போட்டியிட்டிருந்தாலும், காலத்தின் சூழ்நிலை கருதி, த.வெ.க. அமைச்சரவையில் பங்கேற்றோம். இன்று உங்களில் ஒருவனாக, சமுதாயத்தின் பிரதிநிதியாக, அமைச்சர் என்ற உயர்ந்த பொறுப்பை எல்லாம் வல்ல இறைவன் எனக்கு வழங்கியுள்ளார். </p><p>கடந்த 3 மாத காலமாக முதல்-அமைச்சரிடமும், பல்வேறு மூத்த அமைச்சர்களிடமும் சமுதாயத்தின் நலன் நாடி பல கட்டங்களாக பேசியுள்ளோம். தற்போது நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டபோது, முதல்-அமைச்சர் விஜய்யும், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரும், ‘சமுதாயத்தின் பிரதிநிதியாக உங்களை தேர்ந்தெடுத்துள்ளோம். சமுதாயத்திற்கு வேண்டியதை நீங்களே முடிவு செய்யுங்கள்’ என்று சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக நமக்கு த.வெ.க. அரசு இத்தகைய சுதந்திரத்தைக் கொடுத்துள்ளது. </p><p>பட்ஜெட் உரையில் தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன், இதுவரை இல்லாத அளவிற்கு ஹஜ் பயணத்திற்கான மானியம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். முஸ்லிம் உதவும் சங்கங்களை மீண்டும் அதிக அளவில் தொடங்குவதற்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்லறை தோட்டங்களை பராமரிப்பதற்கு, சுற்றுச்சுவர் கட்டுவதற்கு, சாலை வசதிகள் ஏற்படுத்துவதற்கு ரூ.34 கோடி ரூபாயை இந்த அரசு வழங்கியிருக்கிறது. </p><p>அதோடு, நமது மகத்தான தலைவர் கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் பெயரால் திருவள்ளுவர் தினத்தன்று தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கப்படும் என்ற மகத்தான அறிவிப்பை இந்த அரசு வெளியிட்டுள்ளது.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>பருவமழை முன்னெச்சரிக்கை: சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களிலும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monsoon-precaution-monitoring-officers-appointed-for-all-15-zones-of-the-chennai-corporation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monsoon-precaution-monitoring-officers-appointed-for-all-15-zones-of-the-chennai-corporation#comments</comments><guid isPermaLink="false">08a16409-5eca-4296-93aa-d0035f2b26fa</guid><pubDate>Wed, 26 Aug 2026 08:51:37 +0000</pubDate><atom:updated>2026-08-26T08:51:37.378Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,தமிழகம்,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,அதிகாரிகள் நியமனம்,பருவமழை முன்னெச்சரிக்கை,Monsoon Precautions</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/9128wpkn/adhi.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/9128wpkn/adhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள வசதியாக <a href="https://www.dailythanthi.com/topic/சென்னை-மாநகராட்சி">சென்னை மாநகராட்சி</a>யில் உள்ள 15 மண்டலங்களிலும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்  செய்யப்பட்டுள்ளனர். </p><h2>தமிழக அரசு</h2><p>வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னையின் 15 மண்டலங்களிலும் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா 1 ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்காணிப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.</p><p>மண்டலம் வாரியாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள்:-</p><p>மண்டலம் 1. திருவொற்றியூர்      - கே. பாலசுப்ரமணியம், IAS</p><p>மண்டலம் 2. மணலி              - பி. குமரவேல் பாண்டியன், IAS</p><p>மண்டலம் 3. மாதவரம்          -  எஸ். அருண்ராஜ், IAS</p><p>மண்டலம் 4. தண்டையார்பேட்டை - ஆர். கண்ணன், IAS</p><p>மண்டலம் 5. ராயபுரம்          - ஆஷா அஜித், IAS</p><p>மண்டலம் 6. திரு.வி.க. நகர்      -     பி. கணேசன், IAS</p><p>மண்டலம் 7. அம்பத்தூர்          - கே. விவேகானந்தன், IAS</p> <p>மண்டலம் 8. அண்ணாநகர்        -   பி. காயத்ரி கிருஷ்ணன், IAS</p><p>மண்டலம் 9. தேனாம்பேட்டை      - டி. கிறிஸ்துராஜ், IAS</p><p>மண்டலம் 10. கோடம்பாக்கம்       - எஸ். கோபால சுந்தர ராஜ், IAS</p><p>மண்டலம் 11. வளசரவாக்கம்        - டாக்டர் ஜெ. விஜயா ராணி, IAS</p><p>மண்டலம் 12. ஆலந்தூர்             - வாகே சங்கெத் பால்வந்த், IAS</p><p>மண்டலம் 13. அடையாறு            - டாக்டர் கே. செந்தில் ராஜ், IAS</p><p>மண்டலம் 14. பெருங்குடி           -  மகேஸ்வரி ரவிக்குமார், IAS</p><p>மண்டலம் 15. சோழிங்கநல்லூர் -டி. பாஸ்கர பாண்டியன், IAS</p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/emz9wzmm/scree1111.jpg" /></figure><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/58rhxy66/tow2222.jpg" /></figure><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/bciwdb2l/three-333.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>ஈரோடு: கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; வாலிபருக்கு 4 ஆண்டு சிறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-college-student-sexually-harassed-youth-gets-4-years-in-prison</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-college-student-sexually-harassed-youth-gets-4-years-in-prison#comments</comments><guid isPermaLink="false">ee5404a4-b8b5-4320-a337-b0adbfac3dbb</guid><pubDate>Wed, 26 Aug 2026 08:36:26 +0000</pubDate><atom:updated>2026-08-26T08:36:26.539Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>College student,கல்லூரி மாணவி,Sexual harassment,பாலியல் தொல்லை,Youth,வாலிபர்,Erode,ஈரோடு,சிறை தண்டனை,Prison sentence</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/geh9kn0j/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணவிககு பாலியல் தொல்லை, சிறை தண்டனை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/geh9kn0j/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81">ஈரோடு</a> மாவட்டத்தில் கல்லூரி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88">மாணவிக்கு பாலியல் தொல்லை</a> கொடுத்த வழக்கில் தொடர்புடைய வாலிபருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.  </p><h2>கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை</h2><p>ஈரோடு மாவட்டம், கோபி பகுதியில் கடந்த 14-10-2023 அன்று தியேட்டரில் திரைப்படத்தின் இடைவேளையின்போது கல்லூரி மாணவிக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D">வாலிபர்</a> ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். </p><h2>வாலிபருக்கு 4 ஆண்டு சிறை</h2><p>இதுதொடர்பான வழக்கில், கவுந்தப்பாடியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் (வயது 27) என்பவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.சொர்ணகுமார், குற்றவாளிக்கு 4 ஆண்டுகள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">சிறை தண்டனை</a>யும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். </p>]]></content:encoded></item><item><title>அரசு கலைக் கல்லூரிகளில் 6 ஆயிரம் உதவிப் பேராசிரியர்கள் நியமனம் - தமிழக அரசின் முடிவுக்கு சி.பி.ஐ. வரவேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/appointment-of-6000-assistant-professors-in-government-arts-colleges-cpi-welcomes-the-tamil-nadu-governments-move</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/appointment-of-6000-assistant-professors-in-government-arts-colleges-cpi-welcomes-the-tamil-nadu-governments-move#comments</comments><guid isPermaLink="false">58d09427-7344-4877-83a8-7f664b33baa8</guid><pubDate>Wed, 26 Aug 2026 08:26:11 +0000</pubDate><atom:updated>2026-08-26T08:26:11.390Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,Tamilnadu,தமிழகம்,தமிழக அரசு,TN govt,CPI,உதவி பேராசிரியர்கள்,Assistant Professors,அரசு கலைக்கல்லூரி,Govt Arts College,மு.வீரபாண்டியன்,M.Veerapandian</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/j2olxo9h/veera.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/j2olxo9h/veera.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசு கலைக் கல்லூரிகளில் 6 ஆயிரம் உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படுவர், கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்புகள் வரவேற்பிற்குரியது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D">மு.வீரபாண்டியன்</a> தெரிவித்துள்ளார்.</p><h2>வரவேற்பிற்குரியது</h2><p>இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளிலும் புதிதாக 6 ஆயிரம் உதவிப் பேராசிரியர்கள் மூன்று கட்டங்களாக நியமிக்கப்பட உள்ளனர் என உயர்கல்வித்துறை அமைச்சர் பி.விஸ்வநாதன் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளது வரவேற்புக்குரியது. அந்த நியமனங்களை மாணவர்கள் நலன் கருதி விரைவாக செய்திட வேண்டும்.</p><p>அரசு கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும்  கவுரவ விரிவுரையாளர்களின் மாதாந்திர தொகுப்பூதியம்  ரூபாய் 30 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 35 ஆயிரமாகவும், பல வகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் பணிபுரியும் பகுதி நேர விரிவுரையாளர்களின் தொகுப்பூதியம் ரூபாய் 25 ஆயிரத்திலிருந்து ரூபாய் 30 ஆயிரமாகவும் உயர்த்தப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளதும் வரவேற்பிற்குரியது.</p><h2>12 மாதங்களுக்கும் ஊதியம்</h2><p>இவ்வூதிய உயர்வை மேலும் அதிகரித்து வழங்க வேண்டும். வெறும் 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஊதிய உயர்வு என்பது இன்றைய வாழ்க்கை நிலைமைகளில் போதுமானதாக இருக்காது.</p><p>அடுத்து இந்த ஊதிய உயர்வு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ மற்றும் பகுதிநேர விரிவுரையாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். பகுதிநேர விரிவுரையாளர்களுக்கும் பல்வேறு கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களாக பணிபுரிபவர்களுக்கும் ஆண்டுக்கு 7 முதல் 8 மாதங்கள் மட்டுமே ஊதியம் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.</p><p>எனவே 12 மாதங்களுக்கும் ஊதியத்தை வழங்கிட வேண்டும். பெண் விரிவுரையாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய பேறு கால விடுப்பும் வழங்கப்பட வேண்டும்.</p><h2>2,771 உடற்கல்வி ஆசிரியர்கள்</h2><p>அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் பேரவை தேர்தலை நடத்திட வேண்டும். உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு கல்வி உத்தரவாத திட்டத்தின்படி ரூபாய் 20 லட்சம் வரை பிணையற்ற கல்வி கடன் நடப்பாண்டு முதல் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்பிற்குரியது. எந்த விதமான தடைகளும் இல்லாமல், வட்டியில்லாத கடனாக இதை வழங்கிட வேண்டும்.</p><p>ஆறாம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு கல்வி வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்  அறிவித்திருப்பதும், 2,771 உடற்கல்வி ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவர் என்ற அறிவிப்பும் வரவேற்பிற்குரியன. அரசுப் பள்ளிகளில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் உடனடியாக நிரப்பிட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.</p><p>2010-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-க்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து முழுமையான மற்றும் நிரந்தர விலக்கு அளிக்கக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது வரவேற்பிற்குரியது.</p><h2>தேசிய ஆசிரியர் கல்விப் பேரவை</h2><p>இதனால் சுமார் 3 லட்சத்து 28 ஆயிரத்து 701 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பயன் பெறுவார்கள். 15 முதல் 20 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவமிக்க ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு இதனால் உறுதி செய்யப்படும்.</p><p>கட்டாய கல்வி உரிமைச் சட்டம், 2009-ன் பிரிவு 23-ல் உரிய திருத்தம் மேற்கொள்ளவும், தேசிய ஆசிரியர் கல்விப் பேரவை  மூலம் சுற்றறிக்கை வெளியிடவும் மத்திய அரசை இத்தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.</p><p>இத்தீர்மானத்தை நடைமுறை படுத்த உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு  ஒன்றிய பா.ஜ.க. அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>