<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 11 Aug 2026 03:42:19 +0000</lastBuildDate><item><title>தலையில் முடி கொட்டியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-commits-suicide-by-hanging-herself-due-to-hair-loss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-commits-suicide-by-hanging-herself-due-to-hair-loss#comments</comments><guid isPermaLink="false">6a8cae4d-9b8f-44ae-b615-dde782a68838</guid><pubDate>Tue, 11 Aug 2026 03:19:48 +0000</pubDate><atom:updated>2026-08-11T03:19:48.312Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>young woman,இளம்பெண்,Theni,தேனி,problem,பிரச்சினை,hanging,தலைமுடி,hair,Young woman commits suicide,இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/u2ap5d90/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தற்கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/u2ap5d90/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF">தேனி </a>மாவட்டத்தில் தலையில் முடி கொட்டியதால் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D">இளம்பெண்</a> ஒருவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">தூக்குப்போட்டு தற்கொலை</a> செய்து கொண்டார். </p><h2>புழுவெட்டு நோய் பாதிப்பு</h2><p>தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே உள்ள உப்பார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா. அவருடைய மகள் அஞ்சலி (வயது 19). இவர் கடந்த ஒரு மாதமாக புழுவெட்டு நோயால் பாதிக்கப்பட்டார். </p><h2>இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை</h2><p>அப்போது அவருக்கு முடிகள் அனைத்தும் கொட்டி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அஞ்சலி நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். </p>]]></content:encoded></item><item><title>கோவையில் எச்.ஐ.வி. பாதித்தவரின் ரத்தம் சிறுமிக்கு செலுத்தப்பட்டதா? - கலெக்டரிடம் புகார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/was-hiv-infected-blood-transfused-to-a-young-girl-in-coimbatore-complaint-lodged-with-the-collector</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/was-hiv-infected-blood-transfused-to-a-young-girl-in-coimbatore-complaint-lodged-with-the-collector#comments</comments><guid isPermaLink="false">16881191-6ada-442f-85ed-c02de539bd28</guid><pubDate>Tue, 11 Aug 2026 03:15:39 +0000</pubDate><atom:updated>2026-08-11T03:15:39.251Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,சிறுமி,HIV,எச்.ஐ.வி.,small girl,எச்.ஐ.வி. ரத்தம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/1a160vm9/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/1a160vm9/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><h2>நெசவு தொழிலாளி</h2><p>கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் பவன்குமார் தலைமை யில் நடைபெற்றது. இதில் சூலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 40 வயது நெசவு தொழிலாளி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்து கலெக்டரிடம் மனு ஒன்று அளித்தார். </p><p><strong>அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-</strong></p><p>எங்களுக்கு முதலில் ஒரு மகன், மகள் என இரட்டை குழந்தைகள் பிறந்தனர். இதன்பின்னர் ஒரு மகன் பிறந்தான். இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு எனது மகளுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். அப்போது குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் ரத்தம் குறைவாக உள்ளது என்றனர்.</p><h2>எச்.ஐ.வி. பாதிப்பு</h2><p>இதன்பின்னர் எனது மகளை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தேன். அங்கு எனது மகளுக்கு ரத்தம் செலுத்தப்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினோம். இதனிடையே எனது மகளின் காது அருகே கட்டிகள் ஏற்பட்டன. இதனால் நாங்கள் டாக்டரி டம் எனது மகளை அழைத்து சென்றோம். பின்னர் எனது மகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் எச்.ஐ.வி. பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதனால் நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்.</p><p>இதையடுத்து எனக்கும், எனது மனைவிக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் எங்கள் இருவரில் யாருக்கும் எச்.ஐ.வி. பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் தான் எச்.ஐ.வி. பாதித்தவரின் ரத்தம் தவறுதலாக செலுத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து நாங்கள் ஆஸ்பத்திரிக்கு நேரிடையாக சென்று இதுகுறித்து கேட்டோம்.</p><p>அப்போது நிர்வாகம் இதுகுறித்து வெளியே யாரிடமும் கூற வேண்டாம் என்று எங்களிடம் கூறினர். ஆனால் எங்களுக்கு எவ்வித நியாயமும் இதுவரை கிடைக்கவில்லை. எனவே இதுகுறித்து கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதுடன், எங்களுக்கு உரிய இழப்பீடு அல்லது இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.</p><h2>ரத்த தானம்</h2><p>இதனிடையே கலெக்டர். பாதிக்கப்பட்ட சிறுமியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று உரிய சிகிச்சை அளிப்பதுடன், அது குறித்த அறிக்கையை அளிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் கூறும்போது, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரத்த சிவப்பு அணுக்கள் மட்டுமே செலுத்தப்பட்டது சம்பந்தப்பட்ட நபரிடம் பெறப்பட்ட ரத்தத்தை பிளாஸ்மா, ரத்த சிவப்பு அணு, வெள்ளை அணு என பிரிக்கப்பட்டு 3 நபர்களுக்கு செலுத்தப்பட்டது.</p><p>மீதம் உள்ள 2 பேருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இல்லை. இதேபோல் ரத்தத்தை தானம் வழங்கிய நபரை பரிசோதனை செய்தபோது அவருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இல்லை என தெரியவந்தது. எனவே அரசு ஆஸ்பத்திரி மூலம் அந்த சிறுமிக்கு எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்படவில்லை. அவர்கள் வேறு எங்காவது அந்த சிறுமிக்கு ஊசி போட்டு இருக்கலாம். அதன்மூலம் எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து உள்ளோம் என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ஆடி அமாவாசை: ராமேசுவரம் கோவிலில் நாளை பகல் முழுவதும் நடைதிறப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aadi-amavasai-rameswaram-temple-to-remain-open-throughout-the-day-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aadi-amavasai-rameswaram-temple-to-remain-open-throughout-the-day-tomorrow#comments</comments><guid isPermaLink="false">b2fd09a3-6752-4b09-8407-760c01002c62</guid><pubDate>Tue, 11 Aug 2026 03:10:45 +0000</pubDate><atom:updated>2026-08-11T03:10:45.043Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>ராமேசுவரம் கோவில்,Rameswaram Temple,aadi amavasai,ஆடி அமாவாசை</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/kzlbmasl/6.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/kzlbmasl/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமேசுவரம்,  </p><p>ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் நாளை பகல் முழுவதும் நடை திறந்திருக்கும்.</p><h2>ஆடி அமாவாசை</h2><p>ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆடித்திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 6-ம் நாளான நேற்று காலையில் அம்பாள் தங்கப்பல்லக்கிலும், இரவில் தங்க ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.</p><p>7-ம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு அம்பாள் தங்கக்குதிரை வாகனத்தில் திட்டக்குடி மேலதெருவில் உள்ள மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. அதனால் இன்று மாலை 5 மணி முதல் இரவு வரையிலும் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை.</p><p>ஆடி அமாவாசையான நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு தங்க கருட வாகனத்தில் அக்னிதீர்த்த கடற்கரைக்கு ராமபிரான், தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து இரவு வெள்ளி தேரோட்டம் நடைபெறுகிறது.</p><h2>நடை சாத்தப்படாது</h2><p>வழக்கமாக அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படும் கோவில் நடையானது பகல் 1 மணிக்கு சாத்தப்படும். பின்னர் 3 மணிக்கு திறக்கப்படும். ஆனால் ஆடி அமாவாசையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால், நாளை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படும் நடையானது பகல் 1 மணிக்கு சாத்தப்படாமல் இரவு 8 மணிக்குத்தான் சாத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. திருவிழாவின் 9-ம் நாளான நாளை மறுநாள் காலை 9 மணிக்கு அம்பாள் தேரோட்டம் நடக்கிறது.</p><p>விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 16-ந்தேதி இரவு 7 மணியில் இருந்து 8 மணிக்குள் ராமநாதசுவாமி- பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. ஆடி அமாவாசையன்று பக்தர்கள் கூட்டநெரிசல் இன்றி சாமி தரிசனம் செய்யவும், தீர்த்தம் நீராடவும் கோவிலின் உள்பகுதி பிரகாரங்களில் பல்வேறு இடங்களில் தடுப்புக்கம்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் பக்தர்கள் கூட்டத்தை கண்காணிக்க வசதியாக அக்னிதீர்த்த கடற்கரையில் தற்காலிக கண்காணிப்பு கோபுரமும் அமைக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மழலையர் பள்ளி வகுப்பறையில் பெண் நிர்வாகி தூக்குப்போட்டு தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/female-administrator-dies-by-suicide-in-kindergarten-classroom</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/female-administrator-dies-by-suicide-in-kindergarten-classroom#comments</comments><guid isPermaLink="false">ff62cf53-c297-4bd1-aeec-aa644ef00093</guid><pubDate>Tue, 11 Aug 2026 03:03:23 +0000</pubDate><atom:updated>2026-08-11T03:03:23.102Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,தற்கொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/7my0desk/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/7my0desk/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரை கண்ணனேந்தல் சந்தனம் நகரை சேர்ந்தவர் முகுந்தன். இவருடைய மனைவி அஜிதாகுமாரி (50 வயது). மழலையர் பள்ளி நடத்தி வந்தார். இவர்களுக்கு சுவேதா, கீர்த்தி என்ற 2 மகள்கள் உள்ளனர். இதில், மூத்த மகள் சுவேதாவுக்கு திருமணமாகி அவர் குடும்பத்துடன் தேனியில் வசித்து வருகிறார். அஜிதாகுமாரி நடத்தி வந்த பள்ளியின் மாடியில் அவரது வீடு உள்ளது. அவருடைய கணவர் முகுந்தன் இறந்துவிட்டதால், 2-வது மகளுடன் வசித்து வந்தார்.</p><p>சில நாட்களுக்கு முன்பு, மதுரையில் சுவேதாவுக்கு குழந்தை பிறந்தது. பிரசவ செலவு மற்றும் தன்னை சரியாக கவனிக்கவில்லை என தாயாரிடம் சுவேதா கோபித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நேற்று முன்தினம் இரவில் இளைய மகள் கீர்த்தி, தனது தாயாரிடம் கேட்டுள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனவருத்தம் அடைந்த அஜிதாகுமாரி வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார்.</p><p>இந்த நிலையில் நேற்று காலையில் அஜிதாகுமாரி பள்ளி வகுப்பறையில், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நீலகிரி: தொழிலாளியை கொன்ற புலியை பிடிக்கும் பணிகள் தீவிரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-efforts-to-catch-tiger-that-killed-worker-intensify</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-efforts-to-catch-tiger-that-killed-worker-intensify#comments</comments><guid isPermaLink="false">a3e09538-2222-41a9-8a83-931bc992269d</guid><pubDate>Tue, 11 Aug 2026 02:57:24 +0000</pubDate><atom:updated>2026-08-11T02:57:24.916Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Forest Department,Nilgiris,நீலகிரி,வனத்துறையினர்,Tiger,புலி</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/8lgum9cc/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/8lgum9cc/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>நீலகிரி,</p><h2>தொழிலாளி பலி</h2><p>நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட லாரஸ்டன் 4-ம் நெம்பர் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 63). தொழிலாளி. இவர் வீட்டில் இருந்த நிலையில், கடந்த 8-ந் தேதி மாயமானார். நேற்று முன்தினம் காலையில் வனத்துறையினர், பொதுமக்கள் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதி எல்லையில் பாலகிருஷ்ணன் இறந்து கிடந்தார். அவரது உடலை புலி கடித்து தின்றது தெரிய வந்தது.</p><p>இதுதொடர்பாக போலீசார், வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது ஊற்று நீரை தடுத்து குழாய் மூலம் வீட்டு தேவைக்காக தண்ணீர் கொண்டு வருவதற்கான பணியில் ஈடுபடும் போது, அப்பகுதியில் பதுங்கி இருந்த புலி பாலகிருஷ்ணனை தாக்கி கொன்றது தெரிய வந்தது. மேலும் உடலை நீண்ட தூரம் இழுத்து சென்று உடற்பாகங்களை சாப்பிட்டது தெரியவந்தது.</p><h2>கண்காணிப்பு கேமராக்கள்</h2><p>இதனிடையே பாலகிருஷ்ணனை கடித்துக்கொன்ற புலியை பிடிக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இல்லையெனில், தொடர் ஆபத்து ஏற்படும் என்ற அபாயம் உள்ளதாக போலீசார், வனத்துறையினரிடம் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கூடலூர் வன அலுவலர் தேவராஜ் உத்தரவின் பேரில், உதவி வன பாதுகாவலர் சீனிவாசன், வனச்சரகர்கள் மற்றும் வனத்துறையினர் தொழிலாளியை தாக்கிய புலி நடமாட்டம் உள்ள இடத்தில் 16 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர். </p><p>தொடர்ந்து நவீன டிரோன் மூலம் புலி அப்பகுதியில் பதுங்கி உள்ளதா? என கண்காணித்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் வனத்துறையினர் ரோந்து பணியும் மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, தொழிலாளியை கொன்ற புலியை அடையாளம் காணும் பணி நடைபெற்று வரு கிறது. இதனால் 16 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தனியாக எங்கும் நடந்து செல்லக்கூடாது, என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>காட்டுத்தீ: சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/forest-fire-ban-on-devotees-visiting-sathuragiri-hill</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/forest-fire-ban-on-devotees-visiting-sathuragiri-hill#comments</comments><guid isPermaLink="false">e09a7a00-4bce-47d7-bfe4-0f70f8f962ec</guid><pubDate>Tue, 11 Aug 2026 02:42:05 +0000</pubDate><atom:updated>2026-08-11T02:42:05.637Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சதுரகிரி கோவில்,சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்,Sathuragiri Temple,sathuragiri hills,காட்டுத்தீ,forest fire,சதுரகிரி மலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/kmoym7o2/CHENNAI-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/kmoym7o2/CHENNAI-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர்,</p><h2>காட்டுத்தீ</h2><p>விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாணிப்பாறை மலைப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு மலையின் கீழ் பகுதியை நோக்கி பரவி வருகிறது. தீயை கட்டுப்படுத்தும் பணியிலும், மலையில் காற்றின் வேகம் திசை மற்றும் சூழலை கண்காணிக்கும் பணியிலும் களப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>தற்போது நிலவும் தீ பரவும் சூழல் பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படக்கூடியதை கருத்தில் கொண்டு நிலைமை பாதுகாப்பானதாகவும், இயல்பானதாகவும் மாறும் வரை இன்று (செவ்வாய்க்கிழமை) பொதுமக்கள் சதுரகிரி மலைக்கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>அனுமதி இல்லை</h2><p>மேலும் தொடர்ந்து எரியும் தீ மற்றும் களநிலவரத்தை கருத்தில் கொண்டு இன்று காலை 8 மணிக்கு முன்னதாக பக்தர்கள் அல்லது பார்வையாளர்கள் சதுரகிரி மலைப்பகுதிக்குள் நுழைய அனுமதி இல்லை. நுழைவு நேரம் மற்றும் கட்டுப்பாடுகள் ஆகியவை அப்பகுதியில் நிலவும் தீ மற்றும் பாதுகாப்பு சூழ்நிலையை பொருத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.</p><p>எனவே பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையிலும் இன்று சதுரகிரிக்கு செல்வதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். காட்டுத்தீயின் தன்மையைப் பொறுத்து நாளை ஆடி அமாவாசை அன்று பக்தர்களை அனுமதிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-guruvayur-express-train-service-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-guruvayur-express-train-service-2#comments</comments><guid isPermaLink="false">5ceae703-53e1-4ff3-afa3-664b020d44cf</guid><pubDate>Tue, 11 Aug 2026 02:40:33 +0000</pubDate><atom:updated>2026-08-11T02:40:33.194Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>ரெயில் சேவை,train service,குருவாயூர் எக்ஸ்பிரஸ்,Guruvayur Express</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/6t7fweyk/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/6t7fweyk/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>மதுரை கோட்டத்தில் தண்டவாளத்தில் பொறியியல் பணி மேற்கொள்ளப் பட இருப்பதால் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குருவாயூரில் இருந்து நாளை (புதன்கிழமை) இரவு 11.15 மணிக்கு புறப்படும் குருவாயூர்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்: 16128) விருதுநகரில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்து செல்லும். அன்று மதுரை, சோழவந் தான், கொடைக்கானல்ரோடு, திண்டுக்கல், மணப்பாறை வழியாக வராது.</p><p>அதேபோல, செங்கோட்டையில் இருந்து வருகிற 13-ந்தேதி காலை 7 மணிக்கு புறப்படும் செங்கோட்டை-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்: 16848) மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, தேவ கோட்டை சாலை, காரைக்குடி, புதுக்கோட்டை, கீரனூர் வழியாக திருச்சி வந்து மயிலாடுதுறைக்கு செல்லும். அந்த நாட்களில் கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை வழியாக வராது.</p><p>இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>விருதுநகர்: வெறிநாய்கள் கடித்து 15 ஆடுகள் பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/virudhunagar-15-sheep-die-after-being-bitten-by-rabid-dogs</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/virudhunagar-15-sheep-die-after-being-bitten-by-rabid-dogs#comments</comments><guid isPermaLink="false">97e262a4-9b87-412b-961b-722cd6f9165d</guid><pubDate>Tue, 11 Aug 2026 02:35:50 +0000</pubDate><atom:updated>2026-08-11T02:35:50.943Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Virudhunagar,விருதுநகர்,கடித்து,sheep,rabid dog,kill,bite,ஆடுகள் பலி,வெறிநாய்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/p97lwikq/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வெறிநாய்கள் கடித்து ஆடுகள் பலி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/p97lwikq/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர், </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D">விருதுநகர்</a> மாவட்டத்தில் ஒருவருடைய ஆட்டு தொழுவத்திற்குள் புகுந்த 3 <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">வெறிநாய்கள் </a>ஆடுகளை கடித்துக்குதறியதில் 15 <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF">ஆடுகள் பலி</a>யாகின. </p><h2>ஆடுகளை கடித்த வெறிநாய்கள்</h2><p>விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள ராமச்சந்திராபுரம் பகுதியில் மகாலிங்கம் என்பவர் 35-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் அவரது ஆட்டு தொழுவத்திற்குள் புகுந்த 3 வெறிநாய்கள் ஆடுகளை கடித்துக்குதறின. </p><h2>15 ஆடுகள் பலி</h2><p>இதில் 15 ஆடுகள் உயிரிழந்தன. மேலும் 10 ஆடுகள் காயம் அடைந்தன. உயிரிழந்த ஆடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மகாலிங்கம் கோரிக்கை விடுத்தார். </p>]]></content:encoded></item><item><title>அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் படிக்க ஈரோடு மாணவருக்கு ரூ.3.55 கோடி உதவித்தொகை!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-student-gets-rs-355-crore-scholarship-to-study-at-brown-university-in-the-us</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-student-gets-rs-355-crore-scholarship-to-study-at-brown-university-in-the-us#comments</comments><guid isPermaLink="false">683802d3-e085-4f63-b1c1-485f17ae9c7a</guid><pubDate>Tue, 11 Aug 2026 02:23:38 +0000</pubDate><atom:updated>2026-08-11T02:23:38.910Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,student,Erode,ஈரோடு,Scholarship,பல்கலைக்கழகம்,Study,மாணவர்,உதவித்தொகை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/ztmbe5jc/119.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரவுன் பல்கலைக்கழகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/ztmbe5jc/119.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>ஈரோடு மாவட்டம், திண்டல் பவளத்தாம்பாளையத்தைச் சேர்ந்த இளங்கோ - புவனேஸ்வரி தம்பதியின் மகன் பிரணவ் (17). இளங்கோ, குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக் கல்லூரியில் டெக்ஸ்டைல் பிராசசிங் துறை தலைவராகவும், அவரது மனைவி புவனேஸ்வரி ஈரோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் ஐ.டி. பிரிவு பேராசிரியையாகவும் பணியாற்றி வருகின்றனர்.</p><h2>உதவித்தொகை</h2><p>இவருக்கு, அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலை, நான்காண்டு இளங்கலை பட்டப்படிப்புக்கு, உதவித்தொகை மற்றும் தங்கி படிக்க வசதியாக, 3.55 கோடி ரூபாய் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF">நிதி உதவியை</a> வழங்கியுள்ளது. இதனால், பொது சுகாதாரம், பயன்பாட்டு கணிதம் குறித்து அவர் பயிலவுள்ளார். அமெரிக்காவின் மிக பழமையான பயன்பாட்டு கணித பாடத்திட்டமும், ஐவி லீக் பல்கலையில் மிக பழமையான பொறியியல் திட்டமும் இந்த பல்கலையில் உள்ளன.</p><p>ஈரோடு சி.எஸ்., அகாடமியில் க0ம் வகுப்பு வரையிலும், பிளஸ் 1, பிளஸ் 2வை, கோவை சி.எஸ்., அகாடமியிலும் பிரணவ் படித்தார். எட்டாம் வகுப்பு படித்த போது, தேசிய அமைப்பான டெக்ஸ்டிரிட்டி குளோபல் மூலம் அடையாளம் காணப்பட்டு, வழிகாட்டுதலும், பயிற்சியும் பெற்றார். </p><p>பிரணவ் கூறுகையில், "டெக்ஸ்டிரிட்டி என் சிந்தனை, கற்றல் மற்றும் தலைமைத்துவ அணுகுமுறையை மாற்றியுள்ளது. பிரவுன் பல்கலையில் படிக்கும் வாய்ப்பை பெறுவது மிகப்பெரிய கவுரவம். வரும், 27ல் அமெரிக்கா செல்கிறேன்," என்றார்.</p>]]></content:encoded></item><item><title>&apos;எல்நினோ&apos; தாக்கம் எதிரொலி: தமிழகத்தில் உச்சம் தொட்ட கருப்பட்டி விலை</title><link>https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/el-nino-impact-echoes-blackcurrant-prices-hit-record-high-in-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/el-nino-impact-echoes-blackcurrant-prices-hit-record-high-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">2a18bbb7-3c88-4ae1-b709-e598af83a736</guid><pubDate>Tue, 11 Aug 2026 01:46:34 +0000</pubDate><atom:updated>2026-08-11T01:46:34.602Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,தமிழகம்,impact,விலை உயர்வு,price hike,கருப்பட்டி,தாக்கம்,எதிரொலி,Echo,El Nino,எல் நினோ,Blackcurrant</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/32a0px77/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சாயல்குடி அருகே பூபாண்டியபுரம் கிராமத்தில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்ட கருப்பட்டிகள்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/32a0px77/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சிறப்புக் கட்டுரைகள் (Sirappukatturaigal)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>'<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B">எல்நினோ</a>' தாக்கம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">பனைத்தொழிலையும்</a> விட்டு வைக்கவில்லை. மழை குறைவால் பதநீர் குறைந்து, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF">கருப்பட்டி </a>விலை கிடுகிடுவென உயர்ந்து உச்சம் தொட்டுள்ளது. </p><h2>'எல்நினோ' தாக்கம்</h2><p>இந்த ஆண்டு பருவகால நிலையில் ஏற்பட்ட மாற்றத்தால் 'எல்நினோ' பாதிப்புகளை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் தென்மாவட்டங்களில்தான் பனைத்தொழில் அதிக அளவில் நடைபெறுகிறது. ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களை குறிப்பிட்டு கூறலாம். </p><h2>அதிக பனை மரங்களை கொண்ட ராமநாதபுரம்</h2><p>தமிழகத்தில் அதிக பனை மரங்களை கொண்ட மாவட்டமாக ராமநாதபுரம் விளங்குகிறது. அங்கு சாயல்குடி, நரிப்பையூர், மாரியூர், கன்னிராஜபுரம், மேலச்செல்வனூர், மலட்டாறு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆயிரக்கணக்கான பனைத் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆண்டுதோறும் ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் பதநீர் சீசன் தொடங்கிவிடும். பதநீரை காய்ச்சி கருப்பட்டியாக தயார் செய்கின்றனர். தொழிலாளர்களிடம் இருந்து கருப்பட்டிகளை வியாபாரிகள் மொத்தமாக வாங்கி விற்பனை செய்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தயார் செய்யப்படும் கருப்பட்டிகள் அளவில் பெரிதாக இருக்கும். இந்த ஆண்டு தயார் செய்த கருப்பட்டிகளைவிட, கடந்த ஆண்டுக்குரிய கருப்பட்டிக்கு விலையும். சுவையும் அதிகம்.</p><h2>தனி சிறப்பு பெற்ற உடன்குடி கருப்பட்டி</h2><p>இதுபோல் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி கருப்பட்டி தனி சிறப்பு பெற்றது. அளவில் சிறியதாக இருக்கும். சாயல்குடி கருப்பட்டிகளைவிட, உடன்குடி கருப்பட்டிக்கு விலை அதிகம். இதுபோல் பனங்கற்கண்டு. பனஞ்சுக்கு, சில்லுக்கருப்பட்டி உள்ளிட்டவற்றையும் பனைத் தொழிலாளர்கள் தயார் செய்கிறார்கள். மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். </p><h2>உற்பத்தி பாதிப்பு</h2><p>இந்த ஆண்டு மழை குறைவால் கருப்பட்டி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டதாக தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 'கடந்த ஆண்டு பருவமழை சீசனில் ராமநாதபுரம் மாவட்டத்தில் போதிய மழை இல்லை. அதேபோல கோடையிலும் மழை பெய்யாததால் இந்த ஆண்டு பனைகளில் பதநீர் எதிர்பார்த்த அளவில் கிடைக்கவில்லை. இதனால் கருப்பட்டி தயாரிப்பு கணிசமாக குறைந்துள்ளது. இன்னும் சில நாட்களில் இந்த ஆண்டுக்கான கருப்பட்டி சீசன் முடிவடைந்துவிடும்' என்றனர். </p><h2>போதிய மழை பெய்யவில்லை</h2><p>இதுகுறித்து கருப்பட்டி வியாபாரி ஒருவர் கூறுகையில், 'கடந்த மாதம் சாயல்குடி பகுதியில் ஒரு கிலோ கருப்பட்டி ரூ.350 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பதநீர் சீசன் முடிவடைய உள்ளதால் இன்னும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">விலை உயர வாய்ப்பு </a>உள்ளது. அதிலும் பருவமழை, குளிர்காலத்தில் விலை அதிகமாகவே இருக்கும். இந்த ஆண்டு எல்நினோ தாக்கத்தால் ஏற்பட்ட மழை குறைவு, கருப்பட்டி தொழிலையும் விட்டுவைக்கவில்லை' என்றார். </p><h2>உடன்குடி விலை விவரம்</h2><p>உடன்குடி ரக கருப்பட்டி பழையது ஒரு கிலோ ரூ.600, புதியது ரூ.500, பனங்கற்கண்டு கிலோ ரூ.800, சில்லுக்கருப்பட்டி ரூ.600 என விற்கப்பட்டு வருவதாக அப்பகுதி வியாபாரி ஒருவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>நெல்லை: இன்ஸ்டாகிராமில் பழகிய சிறுமியை கடத்திய டிரைவர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-driver-arrested-for-abducting-minor-girl-he-met-on-instagram</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-driver-arrested-for-abducting-minor-girl-he-met-on-instagram#comments</comments><guid isPermaLink="false">c1881fe3-7474-41b2-b93f-152daf814474</guid><pubDate>Tue, 11 Aug 2026 01:38:24 +0000</pubDate><atom:updated>2026-08-11T01:38:24.903Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,சிறுமி,இன்ஸ்டாகிராம்,Instagram,Minor girl</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/5mi4wnqw/2.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/5mi4wnqw/2.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,  </p><p>நெல்லையில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 17 வயது சிறுமியை கடத்திச் சென்ற டிரைவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.</p><h2>இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்</h2><p>நெல்லையில் வசித்து வரும் ஒரு தம்பதிக்கு 17 வயதில் சிறுமி இருக்கிறார். இவர் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு, ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார்.</p><p>இந்த நிலையில் அவர் தனது செல்போனில் இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்திருக்கும் நிலையில், அவருடன் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங் கண்ணியை சேர்ந்த முனியப்பன் மகன் டிரைவரான செல்வராஜ் (வயது 21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் அடிக்கடி சிறுமியுடன் அடிக்கடி செல்போனில் பேச தொடங்கி உள் ளார். தொடர்ந்து அந்த சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பேசி பழகி வந்ததாக கூறப்படுகிறது.</p><h2>கடத்தல்-கைது</h2><p>இதற்கிடையே சம்பவத்தன்று சிறுமி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், தச்சநல்லூர் போலீஸ் நிலையத் தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மாயம் என வழக்குப்பதிவு செய்து தேடியபோது, அந்த சிறுமியை செல்வராஜ் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது.</p><p>இதையடுத்து போலீசார் வேளாங்கண்ணிக்கு சென்று சிறுமி மற்றும் செல்வ ராஜை பிடித்து வந்தனர். பின்னர் செல்வராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் வெட்டிக் கொன்ற வாலிபர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-young-man-stabbed-his-wife-to-death-in-a-family-dispute</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-young-man-stabbed-his-wife-to-death-in-a-family-dispute#comments</comments><guid isPermaLink="false">2e76351b-4ec2-4371-ab3d-4155c5f83adc</guid><pubDate>Tue, 11 Aug 2026 01:34:34 +0000</pubDate><atom:updated>2026-08-11T01:34:34.710Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Death,wife,stabbed,குடும்பத் தகராறு,Dispute,பெரம்பூர்,கத்தியால்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/5cn7eh6e/118.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/5cn7eh6e/118.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பெரம்பூர், </p><p>குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் வெட்டிக்கொன்ற கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.</p><p>சென்னை வண்ணாரப்பேட்டை இருசப்பன் மேஸ்திரி 2-வது தெருவைச் சேர்ந்தவர் சிவா (வயது 30), காசிமேட்டில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி வெண்ணிலா (23). இவர்களுக்கு 2 மகள்கள். ஒரு மகன் என 3 குழந்தைகள் உள்ளனர்.</p><p>சிவாவுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சிவா, குடிபோதையில் தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.</p><h2>தகராறு</h2><p>கணவரின் கொடுமையை தாங்க முடியாமல் வெண்ணிலா, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தனது 3 குழந்தைகளுடன் வியாசர்பாடியில் உள்ள தனது தாய் தேவி வீட்டுக்கு சென்றார். அங்கு மூர்த்திங்கர் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார்.</p><p>இந்த நிலையில் நேற்று மதியம் வெண்ணிலா, அதே குடியிருப்பில் சி.பிளாக்கில் 3-வது மாடியில் உள்ள தனது அக்காள் மோகனா வீட்டில் இருந்தார். அப்போது மனைவியை பார்க்க சிவா அங்கு வந்தார். இருவரும் வீட்டில் பேசிக் கொண்டிருந்தபோது அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.</p><h2>உயிரிழப்பு</h2><p>இதில் ஆத்திரமடைந்த சிவா, வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியால் வெண்ணிலாவின் கழுத்தில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். வெண்ணிலாவின் அலறல் சத்தம் கேட்டு வெளியே இருந்த அவரது தாய் தேவி மற்றும் அக்காள் மோகனா ஆகியோர் வீட்டுக்குள் ஓடி சென்று பார்த்தனர். அப்போது அவர்களது கண் முன்னே ரத்த வெள்ளத்தில் வெண்ணிலா துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>போலீசார்</h2><p>இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் எம்.கே.பி. நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வெண்ணிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மனைவியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சிவாவை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a> தேடி வருகின்றனர். இந்த சம்பவம் வியாசர்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>லஞ்சப் புகாரில் தவெகவில் இருந்து நீக்கப்பட்டவரின் மனைவிக்கு பதவி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wife-of-tvk-member-expelled-over-bribery-complaint-gets-a-post</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wife-of-tvk-member-expelled-over-bribery-complaint-gets-a-post#comments</comments><guid isPermaLink="false">ae933b1d-231b-4e77-af63-c95bdfc82216</guid><pubDate>Tue, 11 Aug 2026 01:27:37 +0000</pubDate><atom:updated>2026-08-11T01:27:37.803Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,செங்கல்பட்டு,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/1zu90sd3/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/1zu90sd3/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட த.வெ.க. இணை செயலாளராகவும், மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்தவர் வீரா என்ற வீராசாமி. இவர் மீது எழுந்த லஞ்சப் புகாரால் அவரிடம் இருந்து கட்சி பொறுப்பு பறிக்கப்பட்டது. கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். இதற்கான நடவடிக்கை செங்கல்பட்டு மாவட்ட த.வெ.க. தலைமை எடுத்தது. </p><p>இந்த நிலையில்,, கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய மாவட்ட செயலாளர்களையும், நிர்வாகிகளையும் த.வெ.க. தலைவரும், முதல்-அமைச்சருமான விஜய் அறிவித்தார். இதில், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளர் பொறுப்பில் ஹேமாவதி நியமிக்கப்பட்டார். இவர் வீராசாமியின் மனைவி ஆவார்.</p><p>வீராசாமியிடம் இருந்து பறிக்கப்பட்ட அதே பதவி அவரது மனைவிக்கு தற்போது வழங்கப்பட்டு இருப்பது, செங்கல்பட்டு மாவட்ட த.வெ.க.வில் தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை கடைசியில்தான் பாடவேண்டும் என்று வலியுறுத்தவில்லை - ஐகோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/central-government-did-not-insist-tamil-thai-vazhthu-be-sung-last</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/central-government-did-not-insist-tamil-thai-vazhthu-be-sung-last#comments</comments><guid isPermaLink="false">4899a025-9eb3-473c-bcad-d9c6dd9f9294</guid><pubDate>Tue, 11 Aug 2026 01:22:05 +0000</pubDate><atom:updated>2026-08-11T01:22:05.027Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை ஐகோர்ட்டு,Chennai Highcourt,மத்திய அரசு,தமிழ்த்தாய் வாழ்த்து,TamilThai Vazhthu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/ij1fxzi4/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/ij1fxzi4/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை கடைசியில்தான் பாட வேண்டும் என்று மத்திய அரசின் அறிவிப்பாணை வலியுறுத்தவில்லை என்று ஐகோர்ட்டில் கூடுதல் சொலிசிட் டர் ஜெனரல் விளக்கம் அளித்தார்.</p><h2>தமிழ்த்தாய் வாழ்த்து</h2><p>சென்னை ஐகோர்ட்டில், அனன்யா ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகள், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி தொடங்குவதும், தேசிய கீதம் இசைத்து நிறைவு செய்வதும் பல ஆண்டுகளாக மரபாக இருந்து வருகிறது. இந்த நடைமுறையை நீர்த்துப்போகச் செய்யும் வகையில், அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரமும், தேசிய கீதமும் பாடப்பட்ட பிறகே, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படுகிறது.</p><p>அரசு நிகழ்ச்சியை வந்தே மாதரம் பாடியே தொடங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜனவரி 28-ந்தேதி சுற்றறிக்கை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. ஆனால், மாநில பாடலைப் பாடி அரசு நிகழ்ச்சியைத் தொடங்க தடை எதுவும் விதிக்கவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவது வெறும் சடங்கு அல்ல. அது தமிழர்களின் உணர்வு, கலாசாரம். அடையாளமாகும்.</p><h2>தவறான புரிதல்</h2><p>எனவே, வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வலியுறுத்தி, மத்திய அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும். எதிர்காலத்தில் அரசு நிகழ்ச்சிகளில் இந்த கலாசார மோதலை தவிர்க்கும் வகையில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை முதலில் பாடுவதற்கு தகுந்த நிர்வாக அறிவுறுத்தல்களை பிறப்பிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.</p><p>இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் பிரபாகரன் ஆஜராகி வாதிட்டார். மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, "மத்திய உள்துறை அமைச்சகம் புதிய அறிவிப்பாணையை பிறப்பித்துள்ளது. எனவே, இந்த வழக்கே விசாரணைக்கு உகந்தது அல்ல.</p><p>மேலும், மத்திய அரசின் அறிவிப்பாணையை தவறாக புரிந்துகொண்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பாணையின்படி, அரசு நிகழ்ச்சிகளில் முதலில் வந்தே மாதரம் பாடல் பாட வேண்டும். அதை தொடர்ந்து தேசிய கீதம் பாடல் பாட வேண்டும்.</p><h2>முன்னுரிமை</h2><p>இந்த 2 பாடல்களுக்கு இடையே வேறு எந்த பாடல்களும் பாடக்கூடாது. இந்த 2 பாடல்களும் அடுத்தடுத்துப் பாட வேண்டும் என்று கூறியுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலுக்கு முன்னுரிமை அளிக்கக்கூடாது என்று கூறவில்லை. கடைசியில்தான் பாட வேண்டும் என்றும் கூறவில்லை. மாநில பாடலான தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இறுதியில் பாட வேண்டும் என அறிவிப்பாணையில் வலியுறுத்தவில்லை" என்று கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>ஆர்.பி. உதயகுமாரின் பேச்சுக்கு எதிர்ப்பு: தூத்துக்குடி போலீசில் தவெக நிர்வாகி புகார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/opposition-to-rp-udayakumars-speech-tvk-executive-files-complaint-with-thoothukudi-police</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/opposition-to-rp-udayakumars-speech-tvk-executive-files-complaint-with-thoothukudi-police#comments</comments><guid isPermaLink="false">f8cd386b-7cf0-41cf-b53a-ff7ad32a71ba</guid><pubDate>Tue, 11 Aug 2026 01:17:07 +0000</pubDate><atom:updated>2026-08-11T01:17:07.437Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,தூத்துக்குடி,R.P. Udayakumar,புகார் complaint,முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்,தவெக நிர்வாகி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/1f0r56q6/uthayakumar.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆர்.பி. உதயகுமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/1f0r56q6/uthayakumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடியில் நடந்த மாவட்ட ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், ஜெயலலிதா பேரவை மாநில செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு பேசினார். </p><p>அவர் பேசுகையில், "அ.தி.மு.கவை நேற்று பிறந்த டவுசர் பையன் விஜய் அபகரிக்க, அழிக்க நினைக்கிறான். அ.தி.மு.க.வை யாரேனும் அழிக்க நினைத்தால், அவர்களின் வம்சமே நாசமாக போகும். மேலும் காவிரி தண்ணீரை பற்றி பேசினால், காவிரியாவது, தண்ணீராவது, எங்க அண்ணி திரிஷா பற்றி யார் பேசியது? என்று அக்கட்சியினர் கேட்கிறார்கள்" என்றார்.</p><h2>புகார் மனு</h2><p>இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத்திடம், த.வெ.க. புறநகர் மாவட்ட பொருளாளர் அருண்குமார் புகார் மனு அளித்தார். அதில், "கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழ்நாடு முதல்-அமைச்சர் குறித்து தரக்குறைவாகவும், ஒருமையிலும் பேசி உள்ளார். </p><p>மேலும் பெண்கள் குறித்தும் அவதூறு பரப்பி வருகிறார். இதுபோன்று எதிர்காலத்தில் பொதுவெளியில் எந்தவொரு அவதூறு கருத்துகளையும், தனிநபர் விமர்சனங்களையும் தெரிவிக்காத வகையில் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">விசாரணை</a> நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>வெளிமாநிலங்களுக்கு கனிமங்கள் கொண்டு செல்ல தடை:  தமிழக அரசுக்கு நோட்டீஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-transporting-minerals-to-foreign-states-notice-to-tamil-nadu-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-transporting-minerals-to-foreign-states-notice-to-tamil-nadu-government#comments</comments><guid isPermaLink="false">4e03dbb7-d5e5-48d9-b49f-ba56ca2a7db1</guid><pubDate>Tue, 11 Aug 2026 00:55:07 +0000</pubDate><atom:updated>2026-08-11T00:55:07.900Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Transport,ban,தடை,Notice,கனிமங்கள்,நோட்டீஸ்,தமிழக அரசின்,mineral</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/pm2ljpyb/chennai-high-court.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/pm2ljpyb/chennai-high-court.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை, </p><p>தமிழகத்தில் உள்கட்டமைப்பு, நகரமயமாக்கல் பணிகளுக்கான கருங்கல் மற்றும் ஜல்லிக்கற்கள் போன்ற கட்டுமான பொருட்களின் தடையற்ற வினியோகத்தை உறுதி செய்யவும். செயற்கை விலையேற்றத்தை தடுக்கவும் தமிழ்நாடு சட்ட விரோத கனிமச்சுரங்கம், கனிம போக்குவரத்து மற்றும் சேமிப்பு, தடுப்பு விதிகளில் கடந்த ஜூலை 9-ந்தேதி திருத்தம் செய்யப்பட்டது. </p><h2>சென்னை ஐகோர்ட்</h2><p>இதன் அடிப்படையில், காரைக்கால், புதுச்சேரி தவிர பிற மாநிலங்களுக்கு கருங்கல், ஜல்லிக்கற்களை கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், விதிகளை செல்லாது என அறிவிக்கக் கோரியும் சென்னை ஐகோர்ட்டில் மது பிரேமநாதன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.</p><h2>தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ்</h2><p>இந்த வழக்கு தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி அருள் முருகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள திருத்த விதிகளுக்கு ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெற வேண்டும். உரிய உரிமம் பெற்று எடுக்கப்பட்ட கனிமங்கள் எங்களுக்கு சொந்தமானது. அவற்றை எங்கு விற்க வேண்டும் என் பதை முடிவெடுக்க உரிமம் பெற்றவர்களுக்கு உரிமை உள்ளது. </p><p>அதனால், வெளிமாநிலங்களுக்கு கற்களை கொண்டு செல்ல <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">தடை </a>விதித்த அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும். தடை விதிக்கவேண்டும்" என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, இந்த மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>‘நீட்&apos; தேர்வில் ஜொலித்த தமிழக மாணவர்கள்</title><link>https://www.dailythanthi.com/others/thalayangam/tamil-nadu-students-shine-in-neet-exam</link><comments>https://www.dailythanthi.com/others/thalayangam/tamil-nadu-students-shine-in-neet-exam#comments</comments><guid isPermaLink="false">7eb3befd-577a-44a3-9670-5b0541a84db3</guid><pubDate>Tue, 11 Aug 2026 00:43:21 +0000</pubDate><atom:updated>2026-08-11T00:43:21.468Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நீட் தேர்வு,NEET Exam,தமிழக மாணவர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/txv1fwea/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/txv1fwea/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலையங்கம் (Thalayangam)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பிளஸ்-2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு செல்ல வேண்டுமென்றால் தேசிய தகுதிகாண் நுழைவுத்தேர்வு என்று கூறப்படும் 'நீட்' தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும். 2016-ம் ஆண்டு முதல் இந்த தேர்வு பலத்த எதிர்ப்புகளுக்கு இடையில் இறுதியாக சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்படி நடைமுறைக்கு வந்தது. நீட் தேர்வு ரத்து என்பது கண்ணுக்கெட்டிய தூரத்தில் இல்லை. மாணவர்களும் இதை புரிந்துகொண்டு அந்த தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள தொடங்கி விட்டார்கள். அரசு பள்ளிகளில்கூட இதற்கென தனிபயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. அந்த வகையில், இந்த ஆண்டு மே மாதம் நடந்த நீட் தேர்வு வினாத்தாள்கள் ராஜஸ்தானில் கசிந்ததால், 20 லட்சத்துக்கும் மேலான மாணவர்கள் எழுதிய தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது.</p><p>இதனால் மாணவர்களுக்கு சொல்லொண்ணா துயரம் ஏற்பட்டது. கஷ்டப்பட்டு படித்து தயார்படுத்திக் கொண்டதெல்லாம் ‘விழலுக்கு இறைத்த நீராகிவிட்டதே' என்று வருந்தினர். மீண்டும் மறுதேர்வை தேர்வு கட்டணம் இல்லாமல் எழுதலாம் என்று அறிவித்தும், மாணவர்கள் மனநிறைவு அடையவில்லை. அதன்படி, ஜூன் 21-ந்தேதி மறுதேர்வும் நடந்தது. அப்போதும் மாணவர்கள் சற்றும் தளராமல் அதே ஏறத்தாழ 20 லட்சம் பேர் நீட் தேர்வை ஆர்வத்தோடு எழுதியிருந்தனர். அவ்வாறு தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு முடிவை தேசிய தேர்வு முகமை கடந்த மாதம் 16-ந்தேதி வெளியிட்டது. அதில், 11.21 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கையைவிட குறைவு ஆகும். கடந்த ஆண்டில் 22 லட்சத்து 9 ஆயிரத்து 318 பேர் எழுதினர். அவர்களில் 12 லட்சத்து 36 ஆயிரத்து 531 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>தேர்வு முடிவில் தமிழக மாணவர்கள் ஜொலித்திருக்கிறார்கள். அதிக மதிப்பெண் பெற்ற முதல் 17 பேரில், 12-வது இடத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த வெங்கடபதி வேலாயுதம் என்ற மாணவர் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். அதேபோல, நாடு முழுவதும் 720-க்கு 690-க்கு மேல் மதிப்பெண் பெற்ற 138 பேரில் தமிழ்நாட்டைச்சேர்ந்த வெங்கடபதி வேலாயுதம், ஸ்ரீநிகா, சுடர், வனிஷா சதீஷ், சபரி, ஜெய்கிருஷ்ணா, சம்விதா, நவிதானா, நிகில்சிவநாதன், ஜனனி ஸ்வேதா, ரோகித் மாத்யூ ரவீந்திரராஜன், ஜெயகிருஷ்ணா ஆகிய 12 பேர் இடம்பிடித்துள்ளனர். அதிக மதிப்பெண் எடுத்த முதல் 100 பேரில் தமிழ்நாட்டைச்சேர்ந்த 9 பேர் இடம்பெற்றிருக்கின்றனர். அவர்களில் 7 மாணவர்கள், 2 மாணவிகள் ஆவார்கள். வழக்கமாக தமிழ்நாட்டில் அதிக மதிப்பெண்கள் பெறுபவர்களின் பட்டியலில் மாணவிகள்தான் அதிகம்பேர் கோலோச்சுவார்கள். ஆனால் இந்த தேர்வு முடிவில் அந்த நிலை மாறிவிட்டது.</p><p>அகில இந்திய அளவிலான தேர்ச்சி சதவீதத்தில் மாணவிகளே சாதித்திருந்தாலும், 690-க்கு மேல் மதிப்பெண் எடுத்தவர்களில் மாணவர்களே அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர். தமிழ்நாட்டு மாணவ - மாணவிகளுக்கான மருத்துவப்படிப்பு கலந்தாய்வு நாளை மறுதினம் தொடங்க இருக்கிறது. இந்த ஆண்டு மருத்துவப்படிப்பு இடங்களின் எண்ணிக்கையும் சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆக தமிழகத்தில் இருந்து நிறைய டாக்டர்கள் சேவை மனப்பான்மையோடு வெளிவரப்போகிறார்கள். வரும் ஆண்டில் அதிகமானோர் நீட் தேர்வை எழுத வாய்ப்பு இருக்கிறது. எனவே இப்போதில் இருந்தே நீட் தேர்வுக்கான பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்க த.வெ.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எப்படியும் நீட் தேர்வு இருக்கத்தான் போகிறது. அதற்கேற்ற வகையில் மாணவர்களும் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-46</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-46#comments</comments><guid isPermaLink="false">fc1dcaac-b787-4e6a-984d-0ce553b942cc</guid><pubDate>Tue, 11 Aug 2026 00:32:05 +0000</pubDate><atom:updated>2026-08-11T00:32:05.873Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல் விலை,டீசல் விலை,Petrol and diesel prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/3qcu36zx/petrol.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/3qcu36zx/petrol.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.</p> <h2>பெட்ரோல், டீசல் விலை</h2><p>இந்நிலையில், சென்னையில் இன்று (11.08.2026 செவ்வாய்க்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ. 99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>சிவகங்கையில் 16 மழலையர் பள்ளிகளை மூட உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/order-issued-to-close-16-preschools-in-sivaganga</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/order-issued-to-close-16-preschools-in-sivaganga#comments</comments><guid isPermaLink="false">0ec94526-0241-4912-b4fe-d9cde5159023</guid><pubDate>Mon, 10 Aug 2026 22:32:45 +0000</pubDate><atom:updated>2026-08-10T22:32:45.119Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிவகங்கை,Sivagangai,மழலையர் பள்ளி,preschools</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/5e71vpzf/mala.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிவகங்கை மாவட்டத்தில் அனுமதி பெறாமல் விதிகளை மீறி செயல்பட்டு வந்த 16 தனியார் மழலையர் பள்ளிகளை மூட மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/5e71vpzf/mala.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை, </p><p>சிவகங்கை மாவட்டத்தில் அனுமதி பெறாமல் விதிகளை மீறி செயல்பட்டு வந்த 16 தனியார் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D">மழலையர் </a>பள்ளிகளை மூட மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார்.</p><h2>அனுமதியின்றி செயல்பட்ட பள்ளிகள்</h2><p>மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மழலையர் பள்ளிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், உரிய அனுமதி பெறாமல் விதிகளை மீறி 16 தனியார் மழலையர் பள்ளிகள் செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டுள்ளது.</p><h2>கடும் நடவடிக்கை எடுக்கப்படும்</h2><p>இதையடுத்து, அந்த 16 பள்ளிகளையும் உடனடியாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், உத்தரவை மீறி தொடர்ந்து பள்ளிகள் செயல்படுவது கண்டறியப்பட்டால், பள்ளி நிர்வாகத்தின் மீது சட்டப்படி கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்று தொடங்குகிறது மாபெரும் ரேபிஸ் தடுப்பூசி முகாம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-massive-rabies-vaccination-camp-begins-in-chennai-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-massive-rabies-vaccination-camp-begins-in-chennai-today#comments</comments><guid isPermaLink="false">199b6fcc-42c7-469a-9806-97d8079c5859</guid><pubDate>Mon, 10 Aug 2026 19:40:27 +0000</pubDate><atom:updated>2026-08-10T19:40:27.160Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,ரேபிஸ் தடுப்பூசி,rabies vaccination</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/1ibunr4n/re.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்க மருந்து செலுத்தும் மாபெரும் முகாம் இன்று (ஆக. 11) தொடங்குகிறது. சென்னை முழுவதும் சுமார் 2 லட்சம் தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/1ibunr4n/re.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், தெருநாய்களுக்கு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D">ரேபிஸ் </a>தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்க மருந்து செலுத்தும் மாபெரும் முகாம் இன்று (ஆக. 11) தொடங்குகிறது. </p><h2>30 குழுக்கள் நியமனம்</h2><p>மண்டலம் மற்றும் கோட்டம் வாரியாக தெருநாய்கள் பிடிக்கப்பட்டு, கால்நடை மருத்துவர்களால் ரேபிஸ் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்க மருந்து செலுத்தப்படும். பின்னர் வண்ண சாயம் மூலம் அடையாளப்படுத்தப்பட்டு, அவை பிடிக்கப்பட்ட அதே இடத்திலேயே மீண்டும் விடுவிக்கப்படும். இதற்காக 30 குழுக்கள் நியமிக்கப்பட்டு, நாள் ஒன்றுக்கு சுமார் 3,000 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2>1.47 லட்சம் நாய்களுக்கு ஏற்கனவே தடுப்பூசி</h2><p>கடந்த ஆண்டு நடைபெற்ற சிறப்பு முகாமில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் 1,47,545 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்க மருந்து செலுத்தப்பட்டது. இந்த ஆண்டும் வளர்ப்பு நாய்கள் மற்றும் பூனைகளுக்கும் இலவசமாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><h2>75 நாட்களில் 2 லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி</h2><p>இந்த ஆண்டுக்கான முகாம் முதற்கட்டமாக மண்டலம் 1, 2 மற்றும் 4-ல் தொடங்குகிறது. தொடர்ந்து அனைத்து மண்டலங்களிலும் முகாம் நடத்தப்பட்டு, 75 வேலை நாட்களுக்குள் சுமார் 2 லட்சம் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்க மருந்து செலுத்தப்பட உள்ளது.</p><h2>“ரேபிஸ் இல்லா சென்னை” இலக்கு</h2><p>தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள், Worldwide Veterinary Services (WVS) நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இம்முகாம் செயல்படுத்தப்பட உள்ளது. “வெறிநாய்க்கடிநோய் இல்லா சென்னை” என்ற இலக்கை அடைய பொதுமக்கள், செல்லப்பிராணி உரிமையாளர்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் ஒத்துழைக்குமாறு சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வுக்கு எதிராக இன்று சட்டசபையில் தனித்தீர்மானம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-resolution-against-neet-in-the-assembly-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-resolution-against-neet-in-the-assembly-today#comments</comments><guid isPermaLink="false">de017061-1ec3-4af7-85b9-28695cabdfba</guid><pubDate>Mon, 10 Aug 2026 18:31:07 +0000</pubDate><atom:updated>2026-08-10T18:31:07.983Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,நீட் தேர்வு,NEET,தனித்தீர்மானம்,CMVijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/vxpxhx72/nee.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நீட் தேர்வுக்கு எதிராக இன்று தமிழக சட்டசபையில் அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/vxpxhx72/nee.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>நீட் தேர்வுக்கு எதிராக இன்று தமிழக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">சட்டசபை</a>யில் அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. </p><h2>2 அரசினர் தனித் தீர்மானங்கள்</h2><p>இன்று சட்டசபையில் நடைபெறும் நடவடிக்கைகளில் 2 அரசினர் தனித் தீர்மானங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானமும், எப்.சி.ஆர்.ஏ. சட்டத் திருத்தத்துக்கு எதிரான தீர்மானமும் இடம்பெறுகின்றன. இந்த அரசினர் தனித் தீர்மானங்களை அமைச்சர்கள் அருண்ராஜ் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் முன்மொழிய உள்ளனர். </p><h2>வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா</h2><p>அதேபோல் மத்திய அரசின் வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை திருத்த மசோதாவுக்கு எதிராகவும் இன்று தனித் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>10 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் அருவி நாளை திறக்கப்படும் - வனத்துறை அறிவிப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kovai-kutralam-falls-closed-for-over-10-days-will-reopen-tomorrow-forest-department-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kovai-kutralam-falls-closed-for-over-10-days-will-reopen-tomorrow-forest-department-announcement#comments</comments><guid isPermaLink="false">4937ece8-8342-436c-a959-f26738484920</guid><pubDate>Mon, 10 Aug 2026 16:44:37 +0000</pubDate><atom:updated>2026-08-10T16:44:37.747Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை குற்றாலம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/mv9fniky/STate-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/mv9fniky/STate-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் கோவை குற்றாலம் அருவி உள்ளது. இங்கு கோவை மட்டுமின்றி பிற பகுதிகளை சேர்ந்த பொது மக்களும் அதிகளவு வருகின்றனர். கோவை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு கட்டணம் விதிக்கப்படுகிறது.</p><p>கோவை குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நீர்வீழ்ச்சி நுழைவு வாயில் அருகே நிறுத்தி வைக்கப்படுகிறது. அங்கிருந்து வனத்துறை வாகனத்தில் சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சிக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். அங்கு அவர்கள் குளித்து முடித்ததும், வனத்துறை வாகனத்தில் மீண்டும் நுழைவு வாயில் பகுதிக்கு அழைத்து வரப்படுகின்றனர்.</p><p>இதனிடையே கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, பாதுகாப்பு கருதி கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இதன்படி கடந்த 10 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் அருவி 11-ந்தேதி(நாளை) முதல் திறக்கப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது. தொடர்ந்து அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>புதுக்கோட்டையில் சாலை விபத்து:  தம்பதி பலி; 2 மகள்கள் காயம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/road-accident-in-pudukkottai-couple-killed-two-daughters-injured</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/road-accident-in-pudukkottai-couple-killed-two-daughters-injured#comments</comments><guid isPermaLink="false">6fe8fac3-207c-48e0-b5dd-c02ceeff8a01</guid><pubDate>Mon, 10 Aug 2026 16:41:30 +0000</pubDate><atom:updated>2026-08-10T16:41:30.667Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சாலை விபத்து,road accident,Pudukkottai,புதுக்கோட்டை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/p4gxmsvj/tnmats.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/p4gxmsvj/tnmats.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>புதுக்கோட்டை</p><p>புதுக்கோட்டையில் நடந்த சாலை விபத்தில் தம்பதி உயிரிழந்ததுடன், அவர்களுடைய 2 மகள்கள் காயம் அடைந்தனர்.</p><p><a href="https://www.dailythanthi.com/news/india">புதுக்கோட்டை</a> மாவட்டம் மேலமுத்துடையான்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் சதீஷ்குமார்.  இவருடைய மனைவி திலக சந்திரா.  இவர்கள் இருவரும் மகள்களான தர்ஷிகா, நிரஞ்சனா ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.</p>  <h2>தம்பதி பலி</h2><p>அவர்களுடைய வாகனம் திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது.  இந்த சம்பவத்தில், அதில் பயணம் செய்த தம்பதிகள் இருவரும் உயிரிழந்தனர்.</p><p>அவர்களின் இரு மகள்களான தர்ஷிகா, நிரஞ்சனா படுகாயம் அடைந்தனர்.  இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார், அவர்கள் இருவரையும் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>சதுரகிரி மலைக்கு நாளை பக்தர்கள் செல்ல தடை... ஆடி அமாவாசைக்கு அனுமதி கிடைக்குமா?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-devotees-visiting-sathuragiri-hill-tomorrow-will-permission-be-granted-for-aadi-amavasai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-devotees-visiting-sathuragiri-hill-tomorrow-will-permission-be-granted-for-aadi-amavasai#comments</comments><guid isPermaLink="false">c9375996-f58d-4c68-b7c3-176a12f9693b</guid><pubDate>Mon, 10 Aug 2026 16:33:11 +0000</pubDate><atom:updated>2026-08-10T16:33:11.949Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>sathuragiri hills,சதுரகிரி,aadi amavasai,ஆடி அமாவாசை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/gpwmo5i9/sa.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சதுரகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து காட்டுத் தீ பரவி வருவதால், பக்தர்கள் நாளை (ஆக. 11) மலைக்கு செல்வதற்கு தடை விதித்து வனத்துறை அறிவித்துள்ளது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/gpwmo5i9/sa.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர்,</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF">சதுரகிரி </a> மலைக்கு பக்தர்கள் நாளை (ஆக. 11) செல்வதற்கு தடை விதித்து வனத்துறை அறிவித்துள்ளது.</p><h2>ஆடி அமாவாசை</h2><p>சதுரகிரி கோவில் பகுதியில் தொடர்ந்து காட்டுத்தீ பரவி வருகிறது. இதனால் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாளை மலையேற வனத்துறை தடை விதித்துள்ளது.</p><p>காட்டுத் தீயின் தன்மையை பொறுத்து, ஆடி அமாவாசை தினத்தன்று பக்தர்களை மலையேற அனுமதிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எம் தமிழ் மொழியின் ஆளுமையுடன், ஒரு மதத்தை ஒப்பிட்டு பேசுவது சரிதானா நிதி அமைச்சரே? - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-it-right-finance-minister-to-compare-a-religion-with-the-stature-of-our-tamil-language-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-it-right-finance-minister-to-compare-a-religion-with-the-stature-of-our-tamil-language-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">d28ea334-261e-4ef1-aea9-39f85f9bc870</guid><pubDate>Mon, 10 Aug 2026 15:55:46 +0000</pubDate><atom:updated>2026-08-10T15:55:46.991Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Finance Minister,நிதி அமைச்சர்,மரிய வில்சன்,அமைச்சர் மரிய வில்சன்,Minister Marie Wilson,MarieWilson</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/rbcswa24/Untitled-22.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/rbcswa24/Untitled-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>எம் தமிழ் மொழியின் ஆளுமையுடன், ஒரு மதத்தை ஒப்பிட்டு பேசுவது சரிதானா அமைச்சர் மரியவில்சனே? என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>தமிழின் மீதான தாக்குதல்</h2><p>இன்றைய சட்டமன்றத்தில் உங்கள் மொழியாற்றல் மீதான விவாதத்தின் போது, “எனது மதம் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது” என்பதோடு நீங்கள் நிறுத்தியிருந்தால் அது உங்களின் தனிப்பட்ட அனுபவம். ஆனால், “எனது மதம் எனக்கு கற்று கொடுத்ததை, எத்தனை தமிழ் படித்தாலும் தெரிந்து கொள்ள முடியாது” என்று நீங்கள் கூறுவது, தமிழின் மீதான தாக்குதலாகத் தான் தெரிகிறது. </p><p>“அன்பு” என்ற வார்த்தைக்கு பல மதங்கள் கற்பித்த பல அர்த்தங்களை, "அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்” என்ற ஒற்றை வரியில் தூக்கி சாப்பிட்ட மொழி தான் நம் தாய் மொழி தமிழ். “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலாரின் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை விட, இரக்கத்தைப் பற்றி இவ்வுலகில் வேறு யாரால் நுட்பமாக எடுத்துரைக்க முடியும்? “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற புறநானூற்றுப் பாடலை நீங்கள் சரியாக படித்து புரிந்திருந்தாலே, “அமைதி” என்ற வார்த்தைக்கு தமிழ் மொழியில் உள்ள ஆழமான அர்த்தம் உங்களுக்கு தெரிந்திருக்கும். </p><h2>மன்னிப்பு கோர வேண்டும்!</h2><p>பிறப்பால் நீங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால், உணர்வால் நாம் அனைவரும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழர்கள் </a>என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய சட்ட மன்றத்தில் கூட உங்கள் கட்சி தலைமையும் அதைத் தானே சுட்டிக்காட்டினார்? அப்படியிருக்கையில் உங்கள் மதத்தை நீங்கள் உயர்த்திப் பிடிப்பதில் தவறில்லை. ஆனால், தமிழ் மொழியை நீங்கள் தாழ்த்துவதை ஒரு போதும் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, இன்று உணர்ச்சி மிகுதியில் தமிழ் மொழி மீது வைத்த தவறான விமர்சனத்திற்கு நீங்கள் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தொடர் மழை; சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடிக்கும் 11 விமானங்கள்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/continuous-rain-11-flights-circle-in-skies-over-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/continuous-rain-11-flights-circle-in-skies-over-chennai#comments</comments><guid isPermaLink="false">16f07779-8490-449a-8e57-12b548699504</guid><pubDate>Mon, 10 Aug 2026 15:55:02 +0000</pubDate><atom:updated>2026-08-10T15:55:02.067Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,விமானங்கள்,Flights</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/foh8fyqh/cafar.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/foh8fyqh/cafar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>சென்னையில் தொடர் மழையால் 11 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடிக்கின்றன.</p><p>தமிழகத்தின் வட கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.  இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.  இந்த நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று பரவலாக மழை பெய்தது.</p>  <h2>11 விமானங்கள்</h2><p>இதன்படி,  ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, கிண்டி, மீனம்பாக்கம், பூந்தமல்லி, ஐயப்பன் தாங்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.  இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு வந்த 11 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடிக்கின்றன.</p><p>விசாகப்பட்டினம், கொழும்பு, ஐதராபாத், மைசூரு, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த விமானங்கள் தொடர் மழையால், தெளிவற்ற வானிலையால் தரையிறங்க முடியாமல் வட்டமடித்தபடி இருக்கின்றன.  இதனால், நூற்றுக்கணக்கான பயணிகளும், அவர்களுடைய உறவினர்களும் பரிதவித்து வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் - அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டார் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rank-list-for-undergraduate-medical-courses-released-by-minister-arunraj</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rank-list-for-undergraduate-medical-courses-released-by-minister-arunraj#comments</comments><guid isPermaLink="false">254a69a0-70fc-452b-829f-8b79ed79973a</guid><pubDate>Mon, 10 Aug 2026 15:43:57 +0000</pubDate><atom:updated>2026-08-10T15:43:57.007Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>MBBS,தரவரிசை பட்டியல்,மருத்துவ படிப்பு,Minister Arunraj,அமைச்சர் அருண்ராஜ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/5nvyoxbn/STate-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/5nvyoxbn/STate-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கோ.க. அருண்ராஜ் இன்று (10.08.2026) சென்னை, கீழ்பாக்கத்தில் உள்ள மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்தில் 2026-2027ம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவம் (MBBS), பல் மருத்துவம் (BDS) மற்றும் மருத்துவம் சார்ந்த (Allied &amp; Health Care Courses) பட்டப் படிப்புகளுக்கான மாணவர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டார். இதன் பின்னர் அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-</p><p>“தேர்வுகுழு, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் சார்பில் 2026-2027ம் ஆண்டின் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம், அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக மருத்துவ இடங்களில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தின் மூலம் 29.06.2026 முதல் 23.07.2026 அன்று மாலை 5.00 மணி வரையிலும், பின்னர் 26.07.2026 காலை 10.00 மணி முதல் 27.07.2026 மாலை 3.00 மணி வரையும் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இறுதிநாளாக அறிவிக்கப்பட்டது.</p><p>இதுவரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 72,633 ஆகும். இதில் 7.5% அரசு பள்ளி மாணவர்களின் உள்ஒதுக்கீட்டுக்கு 4,860 விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருக்கிறது. விளையாட்டுப் பிரிவுக்கு 468 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருக்கிறது. முன்னாள் படைவீரர் பிரிவு ஒதுக்கீட்டிற்கு 524 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருக்கிறது. </p><p>மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டு பிரிவுக்கு 212 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருக்கிறது. பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலித்து மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலும் மற்றும் 7.5% அரசு பள்ளி மாணவர்களின் உள்ஒதுக்கீட்டிற்கான பட்டியலும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.</p><p>2026-2027ம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் சேர்க்கைக்காக அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் 41,726. அதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள் 35,926. இதில் மாணவர்கள் 12,551, மாணவிகள் 23,375.</p><p>2026-2027ம் ஆண்டிற்கான 7.5% அரசு பள்ளி மாணவர்களின் உள்ஒதுக்கீட்டிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் சேர்க்கைக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர்களிடம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் 4,860. இதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் 3,625. இதில் மாணவர்கள் 981, மாணவிகள் 2644.</p><p>சுயநிதி மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டிற்கான (Management Quota) இடங்களுக்கு மாணவர்களிடமிருந்து பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை 30,907. இதில் தகுதியுள்ள விண்ணப்பங்கள் 26,956. இதில் மாணவர்கள் 9,105, மாணவிகள் 17,851.</p><h2>அரசு ஒதுக்கீடு இடங்கள்</h2><p>இளநிலை மருத்துவத்திற்கான (MBBS) மொத்த இடங்கள் 7,157. இதில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மாநில ஒதுக்கீடு (State Quota) 4473 இடங்கள். சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 2684.</p><p>சுயநிதி பல் மருத்துவக் மேலும் பல் மருத்துவத்திற்கான (BDS) மொத்த இடங்கள் 1383. இதில் அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் 213. கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்கள் 1170.</p><h2>7.5% ஒதுக்கீடு இடங்கள்</h2><p>7.5% ஒதுக்கீட்டிற்கான மொத்த மருத்துவ இடங்கள் (MBBS) 537. இதில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் 335. சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 202.</p><p>7.5% ஒதுக்கீட்டிற்கான அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த BDS இடங்கள் 104. இதில் அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 16 இடங்களும், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் 88 இடங்களும் உள்ளன.</p><h2>நிர்வாக ஒதுக்கீடு இடங்கள்</h2><p>சுயநிதி மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டிற்கான (Management Quota) இடங்களில் MBBS இடங்கள் 1966 மற்றும் பல் மருத்துவ (BDS) இடங்கள் 580 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ளன.</p> <h2>மருத்துவம் சார்ந்த படிப்புகள்(Allied and Health Care Courses):-</h2><p>மருத்துவம் சார்ந்த படிப்புகளில் B.Sc Nursing, B.Pharm, இணை மருத்துவ படிப்புகள், Pharm.D (6-வருடம் மற்றும் 3-வருடம்), DGNM மற்றும் DIPLOMA IN PHARMACY படிப்புகளுக்கு 21.06.2026 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேற்குறிப்பிட்ட அனைத்து பாடப்பிரிவுகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் 21.06.2026 முதல் 12.07.2026 வரை பெறப்பட்டன. பெறப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி நிறைவடைந்த நிலையில், இன்று தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/3cbs67ez/STate-07.png" /></figure><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/asody5z1/STate-07.png" /></figure><p>இந்த ஆண்டு கடந்த ஆண்டைவிட அரசு மருத்துவக் கல்லூரிகளில் MBBS-ல் கூடுதலாக 150 மாணவர்கள் சேர்க்கும் வாய்ப்பு 2021-ஆம் ஆண்டிற்கு பிறகு 2026-2027 இந்த ஆண்டு கிடைத்துள்ளது. திருப்பூர், திருவள்ளுர் மற்றும் நாமக்கல் ஆகிய 3 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 கூடுதல் இடங்கள் வீதம் கிடைத்திருக்கிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 700 இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக உள்ள MBBS இடங்கள் 9,999. BDS பல் மருத்துவத்திற்கான இடங்கள் 2,000 ஆகும்.</p><p>மேலும், விண்ணப்ப நிகழ்வில் கால நேரம் மற்றும் விண்ணப்பங்களை திருத்திக்கொள்ள கால அவகாசம் ஆகியவை வழங்கப்பட்டது. ஆனால் கலந்தாய்வை (Counselling) பொறுத்தவரையில் ஒன்றிய அரசுடன் ஒத்திசைந்து (Synchronized) நடத்த இருப்பதனால், எந்தவொரு அட்டவணை மாற்றமோ, கால நீட்டிப்போ அளிக்க இயலாது. எனவே, மாணவர்கள் தமிழ்நாட்டு மாநில தேர்வுக்குழு இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள அட்டவணைப்படி, கலந்தாய்வில் தவறாமல் கலந்துக் கொள்ள வேண்டும்.”</p><p>இவ்வாறு அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.</p>  ]]></content:encoded></item><item><title>பொறியாளர்களுக்கு உடல், மன நல பயிற்சி: மாநகராட்சி ஆணையாளர் சமீரன் தொடங்கி வைத்தார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-corporation-engineers-wellness-program-launched-by-commissioner-sameeran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-corporation-engineers-wellness-program-launched-by-commissioner-sameeran#comments</comments><guid isPermaLink="false">89f1a257-2f53-4e49-a299-18450f1533de</guid><pubDate>Mon, 10 Aug 2026 15:31:52 +0000</pubDate><atom:updated>2026-08-10T15:31:52.719Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பொறியாளர்கள்,Engineer,Training,பயிற்சி,mental health,உடல்,Corporation Commissioner,மாநகராட்சி ஆணையாளர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/m8t8229v/sameeran.10.08.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மாநகராட்சி ஆணையாளர் சமீரன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பொறியாளர்களுக்கு உடல், மன நல பயிற்சி: மாநகராட்சி ஆணையாளர் சமீரன் தொடங்கி வைத்தார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/m8t8229v/sameeran.10.08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p> சென்னை,</p><p> சென்னை மாநகராட்சியில் உள்ள உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்களுக்கு உடல், மன என முழுநலன் சார்ந்த பயிற்சியினை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D">மாநகராட்சி ஆணையாளர் </a>சமீரன், தொடங்கி வைத்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p> <p>அம்மா மாளிகை</p><p>இன்று சென்னை மாநகராட்சியில் உள்ள உதவிப் பொறியாளர்கள் மற்றும் இளநிலைப் பொறியாளர்களுக்கு உடல் நலன், மன நலன் என முழுநலன் சார்ந்த பயிற்சி பெருநகர சென்னை மாநகராட்சியுடன் கிரடாய் மற்றும் துருதி அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்தியது. இப்பயிற்சியினை மாநகராட்சி ஆணையாளர் சமீரன்,  ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் தொடங்கி வைத்து பேசினார்.</p> <p><strong>இப்பயிற்சியினை மாநகராட்சி ஆணையாளர் தொடங்கி வைத்து பேசியதாவது:-</strong></p><h2>பொறியாளர்கள் </h2><p> சென்னை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமார் ஒரு கோடி மக்களின் அடிப்படை தேவைகளுக்கான சேவைகளை சென்னை மாநகராட்சி வழங்கி வருகிறது. இத்திட்டப் பணிகளை மக்களிடம் கொண்டு சென்று சிறந்த சேவையினை வழங்கிடும் வகையில், மாநகராட்சியின் பொறியாளர்கள் சிறப்புடன் பணியாற்றி வருகின்றனர். அதிகாலை தொடங்கி இரவு வரை தங்களது பொறுப்பை உணர்ந்து பொறியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். </p><h2>முழுநலன் சார்ந்த பயிற்சி</h2><p>பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் பொறியாளர்கள் தங்களது உடல் நலனையும், மன நலனையும் ஒரு சேர பேணி பாதுகாத்து கொள்வது அத்தியாவசியமாகும். தங்களுக்கான பணிகள் காரணமாக ஏற்படும் மன இறுக்கத்தையும், சோர்வினையும் தவிர்த்து தங்களது உடல், மனம் சார்ந்த நலன்களில் தனிக்கவனம் செலுத்துவது தொடர்பாக சென்னை மாநகராட்சியின் சிறப்பு ஏற்பாட்டின் பேரில் கிரடாய் மற்றும் துருதி அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து முழுநலன் சார்ந்த பயிற்சி வழங்கப்படுகிறது. பொறியாளர்கள் தங்களது பணிகளுக்கிடையில் உடல், மனம் ஆகியவற்றில் மேம்பட்ட கவனம் செலுத்துவதற்கும், விழிப்புணர்வு பெறுவதற்கும் இப்பயிற்சி மிகவும் உதவிகரமாக அமைந்திடும் என்று பேசினார்.</p><p>இப்பயிற்சியில், இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன், சென்னை கிரடாய் நிர்வாகிகள்மெகுல் எச். தோஷி, பிரகாஷ் செல்லா, வர்கீஸ் ஜான், ஆஷா மரினா, துருதி அறக்கட்டளை நிர்வாகிகள் சுரேஷ் அருணாசலம்,  ராம்ஜி வெங்கடாச்சாரி, ஏழுமலை சிவகுமார், டாக்டர் சங்கீதா சண்முகம், ஜெயா வெங்கடேஷ், பயிற்சி வழங்குநர்கள் டாக்டர் சங்கீதா சந்தோஷ், டாக்டர் திவ்யா பிரபா, மற்றும் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை தொடங்குகிறது மாபெரும் ரேபிஸ் தடுப்பூசி முகாம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-massive-rabies-vaccination-camp-begins-in-chennai-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-massive-rabies-vaccination-camp-begins-in-chennai-tomorrow#comments</comments><guid isPermaLink="false">2706006d-6afa-4c0a-87eb-cf440a6fa1bf</guid><pubDate>Mon, 10 Aug 2026 15:11:20 +0000</pubDate><atom:updated>2026-08-10T15:11:20.684Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,Rabies Vaccination Camp,தடுப்பூசி முகாம்,மெகா தடுப்பூசி முகாம்,rabies vaccination,ரேபிஸ் தடுப்பூசி முகாம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/npa05phd/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/npa05phd/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வெறிநாய்க்கடிநோய்த் தடுப்பூசி (Anti Rabies Vaccination) மற்றும் அக, புற ஒட்டுண்ணி மருந்து செலுத்தும் மாபெரும் அளவிலான முகாம் நாளை (11.08.2026) தொடங்கப்பட்டு 2,00,000 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>ரேபிஸ் தடுப்பூசி முகாம்!</h2><p>பெருநகர சென்னை மாநகராட்சியின் 2026-2027 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை, அறிவிப்பின்படி வெறிநாய்க்கடி நோய் பாதிப்பிலிருந்து பொது மக்களை காத்திடவும், வெறிநாய்க்கடி நோய் இல்லா சென்னை மாநகரை உருவாக்கிடவும் அனைத்து தெரு நாய்களுக்கும் வெறிநாய்க்கடிநோய்த் தடுப்பூசி (Anti Rabies Vaccination) மற்றும் அக, புற ஒட்டுண்ணி மருந்து செலுத்தும் மாபெரும் அளவிலான முகாம் (Mass Anti Rabies Vaccination and Endectoparasiticidal camp) நாளை (11.08.2026) தொடங்கப்படவுள்ளது.</p><p>மண்டல வாரியாக, கோட்டம் வாரியாக தெரு நாய்களை அவை வசிக்கும் தெருக்களுக்கே சென்று நாய் பிடிக்கும் பணியாளர்கள் மூலம் வலைகளைக் கொண்டு நாய்களைப் பிடித்து கால்நடை மருத்துவரால் அவற்றிற்கு வெறிநாய்க்கடிநோய்த் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கம் மருந்து செலுத்தப்படும். பின்னர் அந்த நாய்களுக்கு வண்ண சாயம் (Vegetable dye) தெளித்து அடையாளப்படுத்தி அவை மீண்டும் அதே இடத்திலேயே விடுவிக்கப்படும்.</p><h2>30 குழுக்கள் நியமனம்</h2><p>இம்முகாமின் போது மண்டலங்களிலுள்ள அனைத்து தெருக்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் உள்ள தெருநாய்களுக்கும் வெறிநாய்க்கடிநோய்த் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தப்படும்.</p><p>ஒவ்வொரு குழுவும் நாள் ஒன்றிற்கு சுமார் 100 தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் 30 குழுக்கள் நியமிக்கப்பட்டு நாள் ஒன்றிற்கு தோராயமாக 3000 தெரு நாய்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. தலா 10 குழுக்களை பயன்படுத்தி ஒரே சமயத்தில் 3 மண்டலங்களில் இந்த சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.</p><h2>1,47,545 தெருநாய்களுக்கு தடுப்பூசி</h2><p>வளர்ப்பு நாய்கள் மற்றும் பூனைகளின் உரிமையாளர்களும் தங்களின் செல்லப்பிராணிகளுக்கு இம்முகாமினை பயன்படுத்தி இலவசமாக ரேபிஸ் நோய்த் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>கடந்த ஆண்டு, பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து தெருநாய்களுக்கும் இலவச ரேபிஸ் நோய்த் தடுப்பூசியும் மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கம் மருந்து செலுத்தும் மாபெரும் அளவிலான திட்டம் கடந்த 09.08.2025 அன்று தொடங்கப்பட்டு 1,47,545 தெருநாய்களுக்கு ரேபிஸ் நோய்த் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கம் மருந்து செலுத்தப்பட்டது.</p><h2>நாளை தொடங்கும் முகாம் </h2><p>இவ்வாண்டு தெருநாய்களுக்கு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ரேபிஸ் நோய்த் தடுப்பூசி</a> மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கம் மருந்து செலுத்தும் மாபெரும் அளவிலான முகாம் நாளை (11.08.2026) முதல் 1, 2 மற்றும் 4 ஆகிய மண்டலங்களில் தொடங்கப்படவுள்ளது.</p><p>இத்திட்டத்தை சிறப்புடன் செயல்படுத்துவது குறித்து 10.08.2026 இன்று ஆணையர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் இணை ஆணையர் (சுகாதாரம்), தலைமை கால்நடை மருத்துவ அலுவலர் மற்றும் கூடுதல் தலைமை கால்நடை மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மருத்துவர்கள்/ பயிற்சி மருத்துவர்களைப் பயன்படுத்தி Worldwide Veterinary Services (WVS) நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இம்முகாமினை தொய்வின்றி நடத்திட ஆணையர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.</p><h2>2,00,000 நாய்களுக்கு தடுப்பூசி</h2><p>இச்சிறப்பு முகாம் மண்டலம் 1ல் 14 நாட்களும் மண்டலம் 2ல் 9 நாட்களும் மற்றும் மண்டலம் 4ல் 14 நாட்களும் நடத்தப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து அனைத்து மண்டலங்களிலும் இம்முகாம் நடத்தப்பட்டு 75 வேலை நாட்களுக்குள் சுமார் 2,00,000 நாய்களுக்கு ரேபிஸ் நோய்த் தடுப்பூசியும் மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் ஊசியும் (Anti Rabies Vaccination and Endectoparasiticidal) அளிக்கப்படவுள்ளது.</p><p>இந்த சிறப்பு முகாம்கள் மூலம் “வெறிநாய்க்கடிநோய் இல்லாசென்னை” (Rabies Free Chennai) என்ற இலக்கை அடைவதற்கு பொது மக்களும், செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களும் மற்றும் விலங்கு நல ஆர்வலர்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காவிரி மேலாண்மை ஆணையத்தின் 55-வது கூட்டம் - நாளை நடைபெறுகிறது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/55th-meeting-of-the-cauvery-management-authority-to-be-held-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/55th-meeting-of-the-cauvery-management-authority-to-be-held-tomorrow#comments</comments><guid isPermaLink="false">4e94bdca-440f-4542-9a26-0df1a05c15dc</guid><pubDate>Mon, 10 Aug 2026 15:10:03 +0000</pubDate><atom:updated>2026-08-10T15:10:03.959Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காவிரி மேலாண்மை ஆணையம்,Cauvery Management Authority</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/05v1znnu/National-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/05v1znnu/National-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><p>சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையம் மாதம் ஒருமுறை கூடி வருகிறது. அதன் துணை அமைப்பான காவிரி ஒழுங்காற்றுக்குழுவுக்கு மாதம் இத்தனை முறை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்ற விதி இல்லை. எப்போது வேண்டுமானாலும் காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் நடத்தப்படும். </p><p>அந்த வகையில் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 139-வது கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது. காவிரியில் இருந்து ஆகஸ்ட் மாதத்தில் திறந்துவிடப்படும் தண்ணீர் குறித்து விவாதிப்பதற்காக இந்த கூட்டம் கூடுகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அதிகாரிகள் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.</p> <p>கர்நாடக அரசு ஆகஸ்ட் மாதம் 45.5 டி.எம்.சி. நீர் திறந்துவிட வேண்டிய நிலையில் ஒழுங்காற்று குழு கூட்டம் நடக்கிறது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் 88 டி.எம்.சி. திறக்க வேண்டிய நிலையில் 10 டி.எம்.சி. மட்டுமே திறக்கப்பட்டுள்ளது.</p><p>டெல்லியில் நாளை காலை காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டம் நடக்க இருக்கும் நிலையில், பிற்பகலில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 55-வது கூட்டம் நடைபெற உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட 10 டன் குட்கா பொருட்கள் அழிப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/10-tonnes-of-gutkha-products-seized-in-chennai-destroyed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/10-tonnes-of-gutkha-products-seized-in-chennai-destroyed#comments</comments><guid isPermaLink="false">2e84d307-a228-4484-b063-b6c07b803fa7</guid><pubDate>Mon, 10 Aug 2026 14:47:17 +0000</pubDate><atom:updated>2026-08-10T14:47:17.859Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,குட்கா,Gutka</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/m9gr4l2k/STate-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/m9gr4l2k/STate-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா போன்ற புகையிலை பொருட்கள் அரசால் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. கடைகளில் நடத்தப்படும் அதிரடி சோதனைகள் மூலம் பிடிபடும் இத்தகைய பொருட்கள், கோர்ட்டு உத்தரவு மற்றும் மாவட்ட அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி பாதுகாப்பாக அழிக்கப்படுகின்றன.</p><p>உணவு பாதுகாப்புத்துறை, காவல் துறை மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து கடைகளில் சோதனை நடத்தி குட்காவை கைப்பற்றுகின்றனர். அந்த வகையில், சென்னையில் தடையை மீறி விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 10 டன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அவற்றை கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் மாநகராட்சி அதிகாரிகள் குழி தோண்டி புதைத்து அழித்தனர். </p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை மசோதா: தி.மு.க.வை சமாதானப்படுத்த மத்திய அரசு புதிய வியூகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/constituency-delimitation-bill-central-governments-new-strategy-to-pacify-the-dmk</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/constituency-delimitation-bill-central-governments-new-strategy-to-pacify-the-dmk#comments</comments><guid isPermaLink="false">664b2c1f-d8d4-460a-b3e9-b8a4b3f010bc</guid><pubDate>Mon, 10 Aug 2026 14:14:35 +0000</pubDate><atom:updated>2026-08-10T14:14:35.367Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,திமுக,DMK,தொகுதி மறுவரையறை,Delimitation,Fair Delimitation,தொகுதி மறுவரையறை மசோதா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/qzjnyo0v/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/qzjnyo0v/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>சிறப்புக் கட்டுரைகள் (Sirappukatturaigal)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தொகுதி மறுவரையறை சட்டத்தை நிறைவேற்றுவதற்குத் தேவையான ஆதரவைப் பெறும் நோக்கில், தி.மு.க. மற்றும் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சமாதானப்படுத்தும் வகையில், வெளிநாட்டு நிதியுதவி ஒழுங்குமுறை மசோதாவை தற்காலிகமாக ஒத்திவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு</h2><p>நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை தற்போதுள்ள 543-ல் இருந்து 810 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p>இதற்கான அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவு தேவைப்படுகிறது.</p><h2>தொகுதி மறுவரையறைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு</h2><p>தொகுதி மறுவரையறையையும், பெண்களுக்கான இடஒதுக்கீட்டையும் ஒன்றாக இணைக்கக் கூடாது என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. தற்போதுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் கோரி வருகின்றனர்.</p><p>மேலும், மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென்மாநிலங்கள் தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் என்ற அச்சமும் எதிர்க்கட்சிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.</p><h2>அனைத்து மாநிலங்களிலும் தொகுதிகள் அதிகரிக்கும்</h2><p>தொகுதி மறுவரையறை மூலம் அனைத்து மாநிலங்களிலும் தொகுதிகளின் எண்ணிக்கை சுமார் 50 சதவீதம் அதிகரிக்கும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த நிலைப்பாட்டை எழுத்துப்பூர்வமாக உறுதி செய்தால் தொகுதி மறுவரையறை தொடர்பான நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கத் தயாராக இருப்பதாக தி.மு.க. உள்ளிட்ட சில கட்சிகள் தெரிவித்துள்ளது.</p><h2>தி.மு.க. விதித்துள்ள நிபந்தனைகள்</h2><p>தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தி.மு.க. தரப்பில் 3 முக்கிய நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. அவற்றை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் மசோதாவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து அக்கட்சி முடிவு செய்யும் எனத் தெரிகிறது.</p><p>கடந்த ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலுக்குப் பிறகு அகில இந்திய அரசியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. இதனால் நாடாளுமன்றத்தில் பா.ஜ.க.வுக்கான ஆதரவு அதிகரித்துள்ளது.  இதனிடையே, தி.மு.க. மற்றும் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை தங்களது நிபந்தனைகளின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2>வெளிநாட்டு நிதியுதவி மசோதா தற்காலிக ஒத்திவைப்பு</h2><p>இந்தநிலையில் இந்த கட்சிகளை சமாதானப்படுத்தும் வகையில் பா.ஜ.க. புதிய ஏற்பாட்டையும் செய்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் கூட்டத் தொடரிலேயே வெளிநாட்டு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நிதியுதவி </a>ஒழுங்குமுறை மசோதாவையும் நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்தது.</p><p>இந்த மசோதாவுக்கு கிறிஸ்தவ, இஸ்லாமிய சிறு பான்மை மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இவர்களுக்கு தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ஆதரவாக உள்ளன. ஆகவே இந்த மசோதாவை தற்காலிகமாக மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>  உண்மை என்னவென்று தெரிந்தே  தயாநிதி மாறன் திரித்து பேசுவது அரசியல் தர்மம் அல்ல -மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dayanidhi-maran-distorting-truth-is-not-political-ethics-says-manickam-thakur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dayanidhi-maran-distorting-truth-is-not-political-ethics-says-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">9d18bfc4-af4a-441f-811e-40537031cf32</guid><pubDate>Mon, 10 Aug 2026 13:29:25 +0000</pubDate><atom:updated>2026-08-10T13:29:25.778Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசியல்,மாணிக்கம் தாகூர்,political,தயாநிதி மாறன்,Dayanidhi Maran,உண்மை,Manickam Thakur MP</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/nda24k2n/manickam-tagore.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:title><media:description type="html"><![CDATA[ காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/nda24k2n/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- அண்ணன் தயாநிதி மாறன் உண்மை என்னவென்று தெரியாமல் அல்லது தெரிந்தே திரித்துப் பேசுவது அரசியல் தர்மம் அல்ல. </p><h2>மறுவரையறை அல்ல</h2><p> தெலங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி முன்வைத்தது பாஜகவின் மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை அல்ல! "வளர்ச்சி அடைந்த, குடும்பக் கட்டுப்பாட்டைச் சிறப்பாக நடைமுறைப்படுத்திய தென்னிந்திய மாநிலங்கள் தங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இழக்கக் கூடாது" என்பதற்காக மாநிலத்தின் பொருளாதாரப் பங்களிப்பு மற்றும் வளர்ச்சியையும் 50:50 கணக்கில் கொள்ள வேண்டும் என்ற கலப்பினம் மாடலைத்’ தான் வலியுறுத்தினார். இது தென்னிந்திய மாநிலங்களின் உரிமையைப் பாதுகாக்கும் குரல்!</p><p>https://x.com/the_hindu/status/2043882148588106152?s=42</p><h2>துரோகம்</h2><p>ஒட்டுமொத்த தென்னிந்தியாவையும் வஞ்சித்து, வடமாநிலங்களுக்கு சாதகமாக பாஜக கொண்டுவர துடிக்கும் மக்கள்தொகை அடிப்படையிலான ஒருதலைப்பட்ச தொகுதி மறுவரையறையை தான் நாங்கள் "தென்னிந்தியாவிற்கு இழைக்கப்படும் துரோகம்" என்று எதிர்க்கிறோம்.</p> <h2>தண்டிக்கப்படக்கூடாது</h2><p>தெலங்கானாவாக இருந்தாலும் சரி, தமிழ்நாடாக இருந்தாலும் சரி — குடும்ப கட்டுப்பாட்டை வெற்றிகரமாக செயல்படுத்திய தென்னக மாநிலங்கள் ஒருபோதும் தண்டிக்கப்படக்கூடாது என்பதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது.</p><h2>அரசியல் லாபம்</h2><p>அரசியல் லாபத்திற்காக அரைகுறை தகவல்களை பரப்பி அற்ப அரசியல் செய்வதை விட்டுவிட்டு, தென்னக மாநிலங்களின் உரிமைகளுக்காகவும், தமிழ்நாட்டின் குரலாகவும் ஒட்டுமொத்தமாக இணைந்து பாஜகவின் சதியை வீழ்த்த வரமாட்டேன் என்று முடிவெடுத்து விட்டீர்களா? </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.&nbsp;</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">அண்ணன் <a href="https://x.com/Dayanidhi_Maran?ref_src=twsrc%5Etfw">@Dayanidhi_Maran</a> அவர்களே! <br>உண்மை என்னவென்று தெரியாமல் அல்லது தெரிந்தே திரித்துப் பேசுவது அரசியல் தர்மம் அல்ல.<br><br>மாண்புமிகு தெலங்கானா முதலமைச்சர் <a href="https://x.com/revanth_anumula?ref_src=twsrc%5Etfw">@revanth_anumula</a> முன்வைத்தது பாஜகவின் மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை அல்ல! &quot;வளர்ச்சி அடைந்த, குடும்பக் கட்டுப்பாட்டைச்… <a href="https://t.co/F9TrdJkPKg">https://t.co/F9TrdJkPKg</a></p>&mdash; Manickam Tagore .Bமாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) <a href="https://x.com/manickamtagore/status/2086783968108855734?ref_src=twsrc%5Etfw">August 10, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>பெரம்பூர் தொகுதியில் மேற்கொள்ளப்படும் பணிகள் - மாநகராட்சி இணை ஆணையாளர் சரவணன் ஆய்வு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/works-being-carried-out-in-perambur-constituency-corporation-joint-commissioner-saravanan-inspects</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/works-being-carried-out-in-perambur-constituency-corporation-joint-commissioner-saravanan-inspects#comments</comments><guid isPermaLink="false">c90b7136-4627-4663-ac07-429e5efded5f</guid><pubDate>Mon, 10 Aug 2026 13:16:36 +0000</pubDate><atom:updated>2026-08-10T13:16:36.385Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பெரம்பூர்,Perambur</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/n99zj3d9/STate-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/n99zj3d9/STate-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை பெரம்பூர் தொகுதியில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து மாநகராட்சி இணை ஆணையாளர்(பணிகள்) சரவணன் இன்று ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“பெருநகர சென்னை மாநகராட்சி, பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து மாநகராட்சி இணை ஆணையாளர்(பணிகள்) சரவணன் இன்று (10.08.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.</p><p>இணை ஆணையாளர், பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தினைப் பார்வையிட்டு, அங்கு செயல்பட்டு வரும் இ-சேவை மையத்தில் மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அங்கு மனு அளிக்க வருகைத் தரும் மக்களிடம் கலந்துரையாடி, மக்களுக்கான தேவைகளை விரைந்து வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>தொடர்ந்து, வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் கலை கல்லூரியில் நிர்வாகக் கட்டிடம், கலையரங்கம், நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையம், கிரிக்கெட் பயிற்சி வலை, கைப்பந்து உள்ளிட்ட ஒருங்கிணைந்த விளையாட்டு வசதிகள் அமைப்பது குறித்துப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.</p><p>பின்னர், பிவி காலனியில் உள்ள காலி இடத்தினைப் பார்வையிட்டு, அங்கு பொதுமக்களுக்கு பயன்படும் வகையிலான கட்டிடங்கள் கட்டுவது தொடர்பாகவும், வார்டு-46க்குட்பட்ட குட் செட் குளத்தில் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்வது தொடர்பாகவும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.</p><p>தொடர்ச்சியாக, வார்டு-37க்குட்பட்ட சத்தியமூர்த்தி நகர் பிரதான சாலையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் முல்லை மற்றும் வசந்தம் காம்ப்ளெக்ஸ் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடம் சிதிலமடைந்துள்ளதைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடாக விபத்துகள் ஏற்படாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>திருச்சி, நாகப்பட்டினத்தில் நடைபெறவிருந்த அதிமுக ஆர்ப்பாட்டத்தின் தேதி மாற்றம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-protest-in-trichy-nagapattinam-rescheduled-to-august-22-2026</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-protest-in-trichy-nagapattinam-rescheduled-to-august-22-2026#comments</comments><guid isPermaLink="false">cf7f31ea-75b5-456d-8e8e-6423316d997e</guid><pubDate>Mon, 10 Aug 2026 12:50:47 +0000</pubDate><atom:updated>2026-08-10T12:50:47.639Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அதிமுக,AIADMK,ஆர்ப்பாட்டம்,Nagapattinam,திருச்சி,Trichy,நாகப்பட்டினம்,Demonstration,date,changed,தேதி மாற்றம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/rllhydke/eps.gif" width="750"><media:title type="html"><![CDATA[ அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி]]></media:title><media:description type="html"><![CDATA[ அதிமுக ஆர்ப்பாட்டத்தின் தேதி மாற்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/rllhydke/eps.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அ.தி.மு.க. பொதுச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">எடப்பாடி பழனிசாமி </a>வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- த.வெ.க. அரசை கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் : 14.8.2026 கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு கூடுதல் தலைமையேற்போர் விபரம்; திருச்சி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் 14.8.2026 அன்று நடைபெறுவதாக இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் மாற்றியமைக்கப்பட்டு 22.8.2026 அன்று நடைபெறும்!</p> <h2>மெத்தனம் காட்டி வரும் த.வெ.க. அரசு</h2><p>விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் அவர்களை வஞ்சித்து வருவதோடு; மேகதாது பிரச்சனையில் மெத்தனம் காட்டி வரும் த.வெ.க. அரசைக் கண்டித்தும்; காவிரியில் நமக்குரிய பங்கு நீரை உரிய முறையில் பெறுவதற்கு முயற்சி எடுக்காத த.வெ.க. அரசை கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், வருகின்ற 14.8.2026 - வெள்ளிக் கிழமை காலை 9.30 மணியளவில், தமிழகம் முழுவதும் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">ஆர்ப்பாட்டம்</a> நடைபெறும்.</p><p> இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமையேற்போர் பட்டியலும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 14.8.2026 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள பின்வரும் வருவாய் மாவட்டங்களில், கீழ்க்கண்ட நிர்வாகிகள் கூடுதலாக தலைமை ஏற்பார்கள்.</p> <p><strong>தலைமை ஏற்போர் (கூடுதல்) மாவட்டம்</strong></p><h2>மயிலாடுதுறை</h2><p> கே. கோபால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், கழக அமைப்புச் செயலாளர்</p><h2>கடலூர்</h2><p> சிவா. ராஜமாணிக்கம் கழக அமைப்புச் செயலாளர்</p> <h2>தேதி மாற்றம்</h2><p>திருச்சி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் 14.8.2026 அன்று நடைபெறுவதாக இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் மாற்றியமைக்கப்பட்டு, வருகின்ற 22.8.2026 சனிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறும். </p><p>ஆகவே, வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட, கழக அமைப்பு ரீதியான மாவட்டக் கழக செயலாளர்கள் ஒன்றிணைந்து, இந்த கண்டன ஆர்ப்பாட்டங்களை மிக சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து நடத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்காக ரூ. 264 கோடி ஒதுக்கீடு; தமிழக அரசு 

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-264-crore-allocation-for-anti-drug-operations-tamil-nadu-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-264-crore-allocation-for-anti-drug-operations-tamil-nadu-government#comments</comments><guid isPermaLink="false">66027010-6e20-4e27-b598-a9f99d8f8d5d</guid><pubDate>Mon, 10 Aug 2026 12:50:41 +0000</pubDate><atom:updated>2026-08-10T12:50:41.072Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN government,Narcotics,போதைப்பொருள் தடுப்பு பிரிவு,போதைப்பொருள் தடுப்பு,Task Force</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/wc5zar38/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/wc5zar38/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தி வருகிறது. <a href="https://www.dailythanthi.com/">போதைப்பொருள் </a>ஒழிப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அரசு சார்பில் நடைபெற்று வருகின்றன. மேலும், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.</p><h2>சிறப்பு அதிரடிப்படைகள்</h2><p>இந்நிலையில், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்காக ரூ. 264 கோடியை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக 65 சிறப்பு அதிரடிப்படைகள் உருவாக்கப்பட்டுள்ளன. </p><p>தமிழகத்தில் மொத்தமுள்ள 37 மாவட்டங்களில் தலா ஒரு சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டுள்ளது. இது தவிர கூடுதலாக 12 சிறப்பு அதிரடிப்படைகளும், ஆவடி, தாம்பரம், சேலம், கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை, நெல்லைக்கு தலா 2 கூடுதல் சிறப்பு அதிரடிப்படைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.</p><p>இந்த சிறப்பு அதிரடிப்படைப்பிரிவுகளில் 65 இன்ஸ்பெக்டர்கள் ( தலா ஒரு சப் இன்ஸ்பெக்டர்), 260 சப் இன்ஸ்பெக்டர்கள் (ஒரு சிறப்பு அதிரடிப்படைப்பிரிவுக்கு தலா 4 சப் இன்ஸ்பெக்டர்கள்), 1,300 போலீசார் (ஒரு சிறப்பு அதிரடிப்படைப்பிரிவுக்கு தலா 20 போலீசார்) பணியாற்ற உள்ளனர். </p><p>இந்த சிறப்பு அதிரடிப்படைப்பிரிவு போலீசாருக்கு போதைப்பொருள் தடுப்பு மற்றும் அது சார்ந்த பணிகள் தவிர வேறு பணிகள் ஒதுக்கப்படாது என அர்சு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வாரத்தில் 2 நாட்கள் கட்டாய விடுப்பு வழங்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/public-interest-litigation-filed-in-the-madras-high-court-seeking-mandatory-leave-of-2-days-a-week</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/public-interest-litigation-filed-in-the-madras-high-court-seeking-mandatory-leave-of-2-days-a-week#comments</comments><guid isPermaLink="false">f03b8375-0d52-46ba-abe0-2f78ded161bb</guid><pubDate>Mon, 10 Aug 2026 12:30:45 +0000</pubDate><atom:updated>2026-08-10T12:30:45.137Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Public Interest Litigation,நீதிமன்றம்,பொதுநல வழக்கு,Petition filed,In Tamil Nadu</media:keywords><media:content height="542" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/import/Articles/2019/Jan/201901021124247981_Demanding-to-keep-the-Thiruvarur-bypoll-appealed-to-HC_SECVPF.gif" width="794"><media:title type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/import/Articles/2019/Jan/201901021124247981_Demanding-to-keep-the-Thiruvarur-bypoll-appealed-to-HC_SECVPF.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் வாரத்தில் 2 நாட்கள் விடுப்பு வழங்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தாக்கல் </a>செய்யப்பட்டது.</p><h2>மன அழுத்தம்- பணிச்சுமை</h2><p>தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் வாரத்தில் 2 நாட்கள் கட்டாய வாராந்திர விடுப்பு வழங்க உத்தரவிடக் கோரி இன்று (திங்கட்கிழமை) சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பொதுநல வழக்கு</a> ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.</p><p>பொதுமக்கள் நலன் கருதி தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், தற்போதைய நவீன வாழ்வியலில் தொழிலாளர்கள் கடுமையான வேலைப்பளு மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருவதாகக் குறிப்பிடப்பட்டது. ஊழியர்களின் உடல்நலம், மனநலம் மற்றும் குடும்ப உறவுகளை மேம்படுத்த வாரத்தில் 2 நாட்கள் ஓய்வு என்பது அத்தியாவசியமானது என மனுதாரர் சுட்டிக்காட்டினார்.</p><h2>சுழற்சி முறை பரிந்துரை</h2><p>தொடர் சேவை தேவைப்படும்<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> அரசு மற்றும் தனியார் </a>துறைகளில், பொதுமக்களுக்கான பணிகள் பாதிக்கப்படாத வண்ணம் ஊழியர்களைச் சுழற்சி முறையில் பணியமர்த்தி இந்த 2 நாட்கள் விடுமுறையைச் செயல்படுத்தலாம் என்றும் மனுவில் வழிவகை கூறப்பட்டது. தற்போதைய தொழிலாளர் சட்டங்களின்படி வாரத்தில் ஒரு நாள் மட்டுமே கட்டாய விடுமுறையாக உள்ள நிலையில், இந்த வழக்கு ஊழியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மனு விரைவில் நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வரவுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கடலூர் அருகே பயங்கரம்:  நாட்டு வெடிகுண்டு வீசி கார் டிரைவர் கொடூரக் கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/horror-near-cuddalore-car-driver-brutally-murdered-by-country-made-bomb-attack</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/horror-near-cuddalore-car-driver-brutally-murdered-by-country-made-bomb-attack#comments</comments><guid isPermaLink="false">86340dc4-3777-441b-806c-dd156cdfebc5</guid><pubDate>Mon, 10 Aug 2026 12:27:31 +0000</pubDate><atom:updated>2026-08-10T12:27:31.685Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Cuddalore,கடலூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/hoo7rq53/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/hoo7rq53/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர்,</p><p>கடலூர் அருகே பெரிய காட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 31). இவர் கார் டிரைவராக பணி புரிந்து வருகிறார். </p><h2>வெட்டிக் கொலை</h2><p>இவர் இன்று கடலூர் ரங்காரெட்டிப்பாளையம் அருகே கார் ஓட்டி வந்தார். புதுச்சேரி எல்லை அருகே உள்ள இரட்டைசாவடி அருகே தனது காரை நிறுத்தி சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சசிக்குமார் மீது நாட்டு வெடிகுண்டை வீசினர். இதனை தொடர்ந்து அந்த மர்ம நபர்கள் அவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு, தப்பி ஓடினர். </p><p>இதில் பலத்த காயமடைந்த சசிக்குமார் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சசிகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமவனைக்கு அனுப்பி வைத்தனர். </p><h2>போலீசார் வலைவீச்சு</h2><p>இந்த சம்பவம் குறித்து <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வழக்குப்பதிவு </a>செய்த போலீசார் சசிகுமாரை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதனிடையே அவர் கொலை செய்யப்பட்ட காரணம் குறித்தும் புதுச்சேரி மற்றும் கடலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விசாரணைக்கு அழைக்கப்படுபவர்களை துன்புறுத்தக்கூடாது: போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு! </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/court-orders-the-police-not-to-harass-those-called-for-investigation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/court-orders-the-police-not-to-harass-those-called-for-investigation#comments</comments><guid isPermaLink="false">02bd35d7-4575-49c7-bc1b-ed85a0a6e03a</guid><pubDate>Mon, 10 Aug 2026 12:21:43 +0000</pubDate><atom:updated>2026-08-10T12:21:43.536Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,விசாரணை,High Court,investigation,ஐகோர்ட் உத்தரவு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-05-06/sssf5k58/high-court.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்]]></media:title><media:description type="html"><![CDATA[ விசாரணைக்கு அழைக்கும் நபர்களை போலீசார் துன்புறுத்தக் கூடாது என ஐகோர்ட் உத்தரவு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-05-06/sssf5k58/high-court.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விசாரணைக்கு அழைக்கும் நபர்களை போலீசார் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">துன்புறுத்தக் கூடாது </a>என ஐகோர்ட் கடுமையான விதிகள் உத்தரவிட்டது.</p><h2>ஐகோர்ட் உத்தரவு</h2><p>விசாரணை என்ற பெயரில் போலீஸ் நிலையங்களுக்கு வரவழைக்கப்படும் நபர்களைக் போலீசார் எக்காரணம் கொண்டும் உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ துன்புறுத்தக் கூடாது என <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை ஐகோர்ட்</a> அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><p>சென்னையைச் சேர்ந்த ராஜா என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், தமிழக போலீசார் விசாரணைக்காகப் பொதுமக்களை அழைக்கும்போது பின்பற்ற வேண்டிய முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து இந்த உத்தரவை வழங்கியுள்ளார். ஐகோர்ட்டின் முக்கிய வழிகாட்டுதல்கள் பின்வருமாறு:-</p><p>விசாரணைக்கு அழைக்கப்படும் சந்தேகத்திற்குரிய நபர்களையோ அல்லது சாட்சிகளையோ போலீசார் எவ்வித சித்திரவதைக்கும் ஆளாக்கக் கூடாது. ஒருவரை விசாரணைக்கு அழைக்க வேண்டுமானால், பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (செக்சன் 179) விதிகளின் கீழ் எழுத்துப்பூர்வமான சம்மன் அனுப்பப்பட வேண்டும். அந்தச் சம்மனில் சம்பந்தப்பட்ட நபர் எந்தத் தேதியில், எந்தத் துல்லியமான நேரத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற விவரங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.</p><p>விசாரணைக்கு வரும் நபரிடம் நடத்தப்படும் விசாரணையின் நிமிடங்களை போலீஸ் நிலையத்தின் பொது நாட்குறிப்பில் முறையாகப் பதிவு செய்ய வேண்டும்.<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> விசாரணை</a> என்ற பெயரில் பொதுமக்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்கவே இந்த விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட் தெளிவுபடுத்தி உள்ளது. இந்த விதிகளை மீறிச் செயல்படும் போலீஸ் அதிகாரிகள் மீது துறை ரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஐகோர்ட் எச்சரித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சபாநாயகர்: சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? - நயினார் நாகேந்திரன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/speaker-guardian-of-law-or-representative-of-religion-nainar-nagendran-question</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/speaker-guardian-of-law-or-representative-of-religion-nainar-nagendran-question#comments</comments><guid isPermaLink="false">ac116586-df86-422a-b2e2-80b8864cc3a4</guid><pubDate>Mon, 10 Aug 2026 12:21:22 +0000</pubDate><atom:updated>2026-08-10T12:21:22.441Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Question,Speaker,சபாநாயகர்,கேள்வி,religion</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/ygpoi23o/nainar-nagendheran.new.gif" width="752"><media:title type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ சபாநாயகர்: சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? - நயினார் நாகேந்திரன் கேள்வி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/ygpoi23o/nainar-nagendheran.new.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன்</a> எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- சபாநாயகர்: சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? </p><h2>கருக்கலைப்பு ஒரு கொலை</h2><p>உச்ச நீதிமன்றமே கருக்கலைப்பு என்பது பெண்களின் அடிப்படை உரிமை என்பதையும், தனது உடல் குறித்து முடிவெடுக்கும் உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் மிக முக்கியமானது என்பதையும் பல வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளில் உறுதிப்படுத்தியுள்ளது. இத்தகைய சூழலில், 'கருக்கலைப்பு ஒரு கொலை' என முழக்கமிடும் மத ரீதியான ஊர்வலத்தில்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D"> சபாநாயகர்</a> ஜே. சி. டி. பிரபாகர் பங்கேற்பது, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களுக்கும் நாட்டின் சட்டங்களுக்கும் சவால் விடுவதற்குச் சமமாகும்.</p><h2>அரசியல் சாசனம்</h2><p>சட்டமன்றத்தின் சபாநாயகர் என்பவர் அரசியல் சாசனத்தை பாதுகாப்பவராகவும், சட்டத்தின் ஆட்சி நடப்பதை உறுதி செய்பவராகவும் இருக்க வேண்டும். ஆனால், ஏற்கனவே சட்டமன்றத்தில் பைபிள் வசனங்களை போதித்து, மதச்சார்பின்மைக்கு எதிராக செயல்பட்டதாக கடும் விமர்சனத்திற்குள்ளான ஜே.சி.டி பிரபாகர், தற்போது மீண்டும் ஒரு மதவாத நிலைப்பாட்டை வெளிப்படையாக ஆதரிப்பது அவர் வகிக்கும் பதவியின் மாண்பை குலைப்பதாக உள்ளது.</p> <h2>மத அடையாளம்</h2><p>மத அடையாளத்திற்காக பெண்களின் உரிமைகளுடன் விளையாடும் இத்தகைய பிற்போக்குத்தனமான போராட்டங்கள் நவீன சமூகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாகும். நாட்டின் சட்டத்தை விட தனிப்பட்ட மதக் கோட்பாடுகளுக்கே முக்கியத்துவம் அளிக்கும் சபாநாயகரின் செயல், தமிழகத்தின் முற்போக்கு சிந்தனை மற்றும் சமூக நீதி பாரம்பரியத்திற்கு விடப்பட்ட சவாலாகும். சமூக முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் இத்தகைய செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியவை.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>