<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 03 Aug 2026 10:23:45 +0000</lastBuildDate><item><title>காஞ்சிபுரம் தொழில் வளாகத்தில் முதல்-அமைச்சர் விஜய் ஆய்வு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-inspects-kanchipuram-industrial-complex</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-inspects-kanchipuram-industrial-complex#comments</comments><guid isPermaLink="false">3a8f5600-917b-4fa3-a5c8-725bf16918ff</guid><pubDate>Mon, 03 Aug 2026 10:23:16 +0000</pubDate><atom:updated>2026-08-03T10:23:16.980Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,விஜய்,காஞ்சிபுரம்,Actor Vijay,தொழிற்சாலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/l4hpbk5r/vijay33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  முதல்-அமைச்சர் விஜய் ஆய்வு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/l4hpbk5r/vijay33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>ஸ்ரீபெரும்புதூர், ஒரகடத்தில் தனியார் தொழிற்சாலைகளை முதல்-அமைச்சர் விஜய்  நேரில் ஆய்வு செய்கிறார்.</p><p>காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடத்தில் அமைந்துள்ள சிப்காட் தொழிற் வளர்ச்சி மையத்தில், 'டெய்ம்லர் பஸஸ் இந்தியா' என்ற நிறுவனம் சார்பில் 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிர மாண்டமான 'டெய்ம்லர் இந்தியா வர்த்தக வாகனங்கள்' உற் பத்தி செய்யும் தொழிற்சாலை இயங்குகிறது. இந்த நிறுவனம் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.</p><h2>விஜய்</h2><p>'பாரத்பென்ஸ்' மற்றும் 'மெர்சிடிஸ்-பென்ஸ்' முத்திரையிடப் பட்ட பஸ்களையும், 'பஸ் சேஸ்'களையும் உற்பத்தி செய்கிறது. வணிக வாகன உற்பத்தியில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனத்தை இன்று <a href="https://www.dailythanthi.com/search?q=vijay">முதல்-அமைச்சர் விஜய் </a>பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.</p><h2>கண்ணாடி தொழிற்சாலை</h2><p>முன்னதாக  ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கத்தில் செயல்படும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான செயின்ட் கோபின் நிறுவனமும், தமிழக அரசுடன் இணைந்து புரிந்து ணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.</p><p>இந்த நிறுவனம் உலகத்தரத்திலான கண்ணாடி தயாரிப்பு வளாகத்தை விரிவுபடுத்தி உள்ளது. இதனை முதல்-அமைச்சர் விஜய் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து நிசான் கார் கம்பெனியையும் முதல்-அமைச்சர் விஜய் பார்வையிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக விவசாயிகளுக்கு சாகுபடி இழப்பீட்டுக்கான சிறப்பு தொகுப்பை உயர்த்தி வழங்க வேண்டும் -  ஜி.கே.வாசன் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-package-for-cultivation-compensation-should-be-increased-for-tamil-nadu-farmers-gk-vasan-insists</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-package-for-cultivation-compensation-should-be-increased-for-tamil-nadu-farmers-gk-vasan-insists#comments</comments><guid isPermaLink="false">01291ab8-a975-47b6-9da1-66f7abcc03af</guid><pubDate>Mon, 03 Aug 2026 10:18:30 +0000</pubDate><atom:updated>2026-08-03T10:18:30.024Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>G.K. Vasan,சென்னை,farmer,வலியுறுத்தல்,cultivation,ஜி.கே.வாசன்,இழப்பீடு தொகை,தமிழக விவசாயிகள்,insists</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/z8mbr1sx/168.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜி.கே.வாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/z8mbr1sx/168.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி இழப்பீட்டுக்கான சிறப்பு தொகுப்பை உயர்த்தி வழங்க வேண்டும் என்று <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9C%E0%AE%BF.%E0%AE%95%E0%AF%87.%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D">ஜி.கே.வாசன்</a> வலியுறுத்தி உள்ளார்.</p><p>இது தொடர்பாக, தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி காவிரி நீரை கர்நாடக அரசு உரிய நேரத்தில் திறக்காததால் தமிழகம் முழுவதும் சுமார் 7 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெறவில்லை, வாழ்வாதாரத்தை இழந்து வாடும் விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்த குறுவை சாகுபடி இழப்பீட்டுக்கான ரூ.134.83 கோடி சிறப்புத் தொகுப்பை உயர்த்தி வழங்க வேண்டும். தமிழக விவசாயிகளின் நியாயமான எதிர்பார்ப்பை கர்நாடகாவில் பெய்த தொடர் மழையின் மூலம் இயற்கை அண்ணையே பிரதிபலித்திருக்கிறது.</p><h2>குறுவை சாகுபடி</h2><p>நம்முடைய தண்ணீர் உரிமையை, காவிரி மேலேண்மை ஆணையத்தின் உத்தரவை மறுத்து வருகிறது கர்நாடக அரசு. கடந்த ஆண்டில் தமிழ்நாட்டில் 12.48 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நடைபெற்ற சாகுபடியானது நடப்பு ஆண்டில் தண்ணீர் பற்றாக்குறையால் 5.32 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்றுள்ளது. சுமார் 7 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்ய முடியவில்லை.</p><p>குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் 5.32 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெறும் வேளையில் நடப்பு ஆண்டில் தண்ணீர் பற்றாக்குறையால் 4.39 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்றது. சுமார் 1 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய முடியவில்லை. அதாவது காவிரி நீரை கர்நாடகா திறக்காததால், தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு குறுவை சாகுபடி சுமார் 7 லட்சம் ஏக்கர் பரப்பளவு வரை குறைந்துள்ளது.</p><h2>தமிழக விவசாயிகள்</h2><p>இதனையெல்லாம் கர்நாடக அரசு கவனத்தில் கொள்ளாமல் தன்னிச்சையாக முடிவு எடுத்து தமிழக விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது நீடிக்கக்கூடாது என்பது தான் ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. காவிரி நதிநீர் உடன்பாடு, மேகதாது அணைத்திட்டம் ஆகியவற்றில் தமிழக அரசு ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு தமிழக விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்ற வேண்டும். காவிரி நதிநீர் தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடுவது சரியான அணுகுமுறையாக அமைகிறது என த.மா.கா(மூ) கருதுகிறது.</p><p>குறுவை சாகுபடி பாதித்த விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்த ரூ.134.83 கோடி சிறப்புத் தொகுப்பை உயர்த்தி வழங்க வேண்டும் என்று<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D(%E0%AE%AE%E0%AF%82)"> தமிழ் மாநில காங்கிரஸ்(மூ)</a> சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘கிட்டப்பர்களாக இருந்தவர்கள் எட்டப்பர்களாக மாறிவிட்டார்கள்...’ - காங்கிரஸ், தி.மு.க. குறித்து தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/those-who-were-once-kittappars-have-turned-into-ettappars-tamilisai-soundararajan-criticizes-the-congress-and-dmk</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/those-who-were-once-kittappars-have-turned-into-ettappars-tamilisai-soundararajan-criticizes-the-congress-and-dmk#comments</comments><guid isPermaLink="false">3490e610-1f83-40eb-9957-57fae7bc3b53</guid><pubDate>Mon, 03 Aug 2026 10:16:40 +0000</pubDate><atom:updated>2026-08-03T10:16:40.707Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,காங்கிரஸ்,Congress,தமிழிசை சவுந்தரராஜன்,தி.மு.க.,Tamilisai Soundarajan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/biboy3bc/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/biboy3bc/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வேலூர்,</p><p>கிட்டப்பர்களாக இருந்தவர்கள் எட்டப்பர்களாக மாறி, ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருக்கிறார்கள் என தி.மு.க. மற்றும் காங்கிரஸ் குறித்து தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். </p><p>வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“தொகுதி மறுவரையறை காரணமாக தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் வராது, தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உறுதியாக சொன்ன பிறகும், காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வினர் இந்த விவகாரத்தில் தொடர்ந்து அரசியல் செய்து கொண்டிருந்தார்கள். </p><p>இன்று தி.மு.க. மற்றும் காங்கிரஸ் பிரிந்துவிட்டார்கள். கிட்டப்பர்களாக இருந்தவர்கள் எட்டப்பர்களாக மாறி, ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பிரச்சினை நமக்கு தேவையில்லை. தமிழக மக்கள் பயன்பெற வேண்டும் என்பதுதான் நமது ஆசை.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>விருதுநகர்: அரசுப் பள்ளிக்கு அடிப்படை வசதிகள் கேட்டு தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/virudhunagar-public-appeals-to-the-tamil-nadu-government-for-basic-amenities-at-a-government-school</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/virudhunagar-public-appeals-to-the-tamil-nadu-government-for-basic-amenities-at-a-government-school#comments</comments><guid isPermaLink="false">0701d778-205c-496f-b90f-ca0674a1e290</guid><pubDate>Mon, 03 Aug 2026 10:07:51 +0000</pubDate><atom:updated>2026-08-03T10:07:51.582Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Virudhunagar,விருதுநகர்,அரசுப் பள்ளி,பொதுமக்கள் கோரிக்கை,public request,the Tamil Nadu government</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/a764m2iw/61.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ ரெங்கப்பாளையம்- அரசு தொடக்கப்பள்ளி]]></media:title><media:description type="html"><![CDATA[ விருதுநகர்: அரசுப் பள்ளிக்கு அடிப்படை வசதிகள் கேட்டு தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/a764m2iw/61.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர்,</p><p>விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை என அந்தப் பகுதி பொதுமக்களும் பெற்றோர்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><h2>பள்ளியின் பாதுகாப்பின்மை</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விருதுநகர் மாவட்டம்</a> வத்திராயிருப்பு அருகே உள்ள ரெங்கப்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு ஒன்று இயங்கி வருகிறது. அந்தப் பள்ளியில் முறையான குடிநீர் வசதி, கழிவறை உள்ளிட்ட அத்தியாவசிய உள்கட்டமைப்பு வசதிகள் தற்பொழுது போதிய அளவில் இல்லை என கூறப்பட்டது. மேலும், பள்ளிக்கு பாதுகாப்பு சுற்றுச்சுவர் இல்லாததால், பள்ளி நேரங்களிலும், அதற்குப் பிறகும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.</p><h2>பொதுமக்கள் கோரிக்கை</h2><p>வசதிகள் குறைபாட்டின் காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக அப்பள்ளியில் மாணவர் சேர்க்கையும் தொடர்ந்து குறைந்து வருவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டினர். எனவே, மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகமும் பள்ளிக் கல்வித்துறையும் உடனடியாக தலையிட வேண்டும் என<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> கோரிக்கை</a> எழுந்துள்ளது.</p><p>பள்ளிக்குத் தேவையான நிதியை ஒதுக்கி, உடனடியாக சுற்றுச்சுவர் மற்றும் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் விரைவில் செய்து தர வேண்டும் என தமிழக அரசுக்கு அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>காவிரி விவகாரம்: தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய நீரைப் பெற உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-petition-in-supreme-court-over-cauvery-water-share</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-petition-in-supreme-court-over-cauvery-water-share#comments</comments><guid isPermaLink="false">72ff5bd2-9bbc-4e85-88ff-bfe85cf74a4f</guid><pubDate>Mon, 03 Aug 2026 09:50:10 +0000</pubDate><atom:updated>2026-08-03T09:50:10.491Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,உச்ச நீதிமன்றம்,தமிழ்நாடு அரசு,Tamil Nadu Government,Cauvery issue,காவிரி விவகாரம்,மனுPetition</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/8emegfdt/tamilnadu-government.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு அரசு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/8emegfdt/tamilnadu-government.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய நீரைப் பெற உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p> <h2>உச்ச நீதிமன்றத்தில் வழக்கு</h2><p>காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் உத்தரவுகளின்படி கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடாத நிலையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவுறுத்தலின் படி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.</p><h2>ஆய்வு</h2><p>28.07.2026 அன்று நடைபெற்ற 139-வது கூட்டத்தில், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு காவிரி படுகையின் நீரியல்-வானிலை சூழலை ஆய்வு செய்து, 29.07.2026 (காலை 8.00 மணி) முதல் அடுத்த 15 நாட்களுக்கு (29.07.2026 முதல் 12.08.2026 வரை) பில்லிகுண்டுலுவில் வினாடிக்கு 3500 கன அடி வீதம் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யுமாறு கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து கர்நாடக அரசு தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. </p><p>30.07.2026 அன்று நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 54-வது (அவசர) கூட்டத்திலும் காவிரி படுகையின் நீரியல்-வானிலை நிலவரம் ஆய்வு செய்யப்பட்டு, குழுவின் முடிவு உறுதி செய்யப்பட்டது.</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D">காவிரி நீர்</a> முறைப்படுத்தும் குழுவின் உத்தரவுக்கு பிறகு, பில்லிகுண்டுலுவில் 29.07.2026 முதல் 02.08.2026 வரை வரப்பெற்ற நீரின் அளவு வினாடிக்கு 158 முதல் 550 கனஅடி மட்டுமே.</p><h2>சிரமமும் இருக்காது</h2><p>3 ஆகஸ்ட் 2026 நிலவரப்படி, கர்நாடகாவின் கே.ஆர்.எஸ்-அணையில் 23.078 டி.எம்.சி, கபினியில் 18.610 டி.எம்.சி, ஹாரங்கியில் 7.827 டி.எம்.சி மற்றும் ஹேமாவதியில் 28.022 டி.எம்.சி என மொத்தம் 77.537 டி.எம்.சி மொத்த நீர் இருப்பு (பயன்பாட்டு நீர் இருப்பு 67.517 டி.எம்.சி) உள்ளது. எனவே, விகிதாச்சார அடிப்படையில் பில்லிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கு நீரை தனது அணைகளில் இருந்து திறந்து விடுவதில் கர்நாடக அரசுக்கு எந்தச் சிரமமும் இருக்காது.</p><h2>விகிதாச்சாரப்படி</h2><p>இதற்கிடையே, கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அதிக மழை பெய்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால், விகிதாச்சாரப்படி பில்லிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு கிடைக்கவேண்டிய நீரின் அளவு 26.954 டி.எம்.சி ஆகும். இதன்படி, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அளித்த உத்தரவான 4.536 டி.எம்.சி மிகக் குறைவாகும்.</p><h2>முதல்-அமைச்சர் உத்தரவு</h2><p>இச்சூழலில், விகிதாச்சார அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய நீரை கர்நாடக அரசு அளிக்க தவறியதாலும் தமிழ்நாட்டிற்கு விகிதாச்சாரப்படி கிடைக்க வேண்டிய நீர் 26.954 டி.எம்.சி என்பதாலும், மூத்த வழக்கறிஞர்களின் ஆலோசனைப்படி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D">தமிழ்நாடு முதல்-அமைச்சர்</a> இன்று உச்சநீதிமன்றத்தினை அணுகி தக்க உத்தரவை பெற அறிவுறுத்தினார்.</p><h2>மனு தாக்கல்</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின் படி இப்பிரச்சனைக்கு தீர்வு காணவும் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை குறித்த காலத்தில் பெறவும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81">உச்சநீதிமன்றத்தில் இன்று மனு</a> தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தீரன் சின்னமலை நினைவு தினம்: அமைச்சர் ராஜேஷ்குமார் மலர்தூவி மரியாதை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiran-chinnamalai-memorial-day-minister-rajesh-kumar-pays-floral-tributes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiran-chinnamalai-memorial-day-minister-rajesh-kumar-pays-floral-tributes#comments</comments><guid isPermaLink="false">b89b7eb5-1361-4f85-ab77-60a8c06062f2</guid><pubDate>Mon, 03 Aug 2026 09:43:47 +0000</pubDate><atom:updated>2026-08-03T09:43:47.318Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Memorial Day,மரியாதை,தீரன் சின்னமலை சிலை,Minister Rajesh Kumar,அமைச்சர் ராஜேஷ்குமார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/k95gssje/167.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ராஜேஷ்குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/k95gssje/167.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">அமைச்சர் ராஜேஷ்குமார்</a> மலர்தூவி மரியாதை செலுத்தினார்.</p><h2>அமைச்சர் மரியாதை</h2><p>சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் 221-வது நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேஷ்குமார் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.</p><p>இந்த நிகழ்வில் தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜோதி பொன்னம்பலம், முன்னணி அமைப்புகள், பல்வேறு துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு தீரன் சின்னமலையின் தியாகத்தையும், நாட்டிற்காக அவர் ஆற்றிய பங்களிப்பையும் நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தினர்.</p>]]></content:encoded></item><item><title>விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tdtv-dhinakaran-urges-cm-to-safeguard-farmers-livelihoods</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tdtv-dhinakaran-urges-cm-to-safeguard-farmers-livelihoods#comments</comments><guid isPermaLink="false">f6d3662c-eacf-4477-82f1-c7315b2bfb99</guid><pubDate>Mon, 03 Aug 2026 09:24:12 +0000</pubDate><atom:updated>2026-08-03T09:24:12.774Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,விவசாயிகள்,வலியுறுத்தல்,protected,Livelihood,வாழ்வாதாரம்,All farmers,Urges</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/qgexrd02/ttv-dinakaran.gif" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/qgexrd02/ttv-dinakaran.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும் என <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்க்கு</a>  வலியுறுத்துகிறேன் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார். இது தொடர்பாக, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-</p><h2> முதல்-அமைச்சர் கண்டிப்பாரா ?</h2><p>டெல்லிக்கு போராட்டம் நடத்த சென்ற <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">தமிழக விவசாயிகள்</a> நாக்பூரில் தடுத்து நிறுத்தப்பட்டு தமிழகத்திற்கு திருப்பி அனுப்பி வைப்பு  – தமிழக விவசாயிகள் மீதான மராட்டிய மாநில அரசாங்கத்தின் அடக்குமுறையையாவது தமிழக முதல்-அமைச்சர் கண்டிப்பாரா ? அல்லது காவிரி விவகாரத்தை போலவே மவுனம் காப்பாரா ?</p><h2>செய்திகள் வெளியாகியுள்ளன</h2><p>காவிரி நதிநீர் மற்றும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">மேகதாது அணை விவகாரத்தில்</a> போராட்டம் நடத்துவதற்காக ரெயில் மூலமாக டெல்லி சென்ற தமிழக காவிரி டெல்டா பாசன மாவட்டங்களை சார்ந்த விவசாயிகளை நாக்பூரில் தடுத்து நிறுத்தி வலுக்கட்டாயமாக மீண்டும் தமிழகத்திற்கே அனுப்பி வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. </p><h2>எங்கிருந்து அதிகாரம் வந்தது ? </h2><p>மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்தின் சட்டவிரோத போக்கை கண்டித்தும், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் ஜனநாயகம் தங்களுக்கு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையை பயன்படுத்தி டெல்லிக்கு போராட சென்ற தமிழக விவசாயிகளை தடுத்து நிறுத்தவும், அவர்களை திருப்பி அனுப்பவும் மராட்டிய மாநில அரசுக்கும் அங்குள்ள காவல்துறைக்கும்  எங்கிருந்து அதிகாரம் வந்தது ? </p><h2>நகைப்புக்குரியது</h2><p>கர்நாடக மாநில முதல்-மந்திரியுடன் பேச்சுவார்த்தை நடத்தி கையோடு தண்ணீரை கொண்டு வரப்போவதாக தவெக ஆச்சரியகுறிகள் பரப்பிய ரீல்ஸ்கள் அனைத்தும் அறுந்து போன நிலையில், இயற்கையின் கொடையால்  கர்நாடக நீர் பிடிப்பு  பகுதிகளில் கனமழை பொழிந்து காவிரிக்கு நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், ஏதோ தாங்களே இயற்கையிடம் மன்றாடி நீரை கொண்டுவந்ததை போல தவெகவினர் தங்கள் தலைவரை  இயற்கையின் அருளை பெற்ற தேவதூதன் எனவும், தெய்வ குழந்தை எனவும் தற்போது ரீல்ஸ் பரப்பி கொண்டு இருப்பது நகைப்புக்குரியது.</p> <h2>கும்பக்கர்ண தூக்கம்</h2><p>எனவே, டெல்லி சென்று கொண்டிருந்த விவசாயிகளை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியது தொடர்பாக மராட்டிய மாநில அரசாங்கத்திடன் உடனடியாக விளக்கம் கேட்பதோடு, தனது கும்பக்கர்ண தூக்கத்தை கலைத்து தமிழகத்தின் ஜீவாதாரமான காவிரி நதிநீர் விவகாரத்தில் மாநிலத்தின் உரிமையை எந்தவகையிலும் விட்டுக் கொடுக்காமல் உறுதியாக நின்று விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும் என முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>தீரன் சின்னமலை நினைவு தினம் - அண்ணாமலை புகழஞ்சலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/theeran-chinnamalai-memorial-day-annamalai-tribute</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/theeran-chinnamalai-memorial-day-annamalai-tribute#comments</comments><guid isPermaLink="false">1d0f242a-8200-4765-8bbd-436bc4026ad8</guid><pubDate>Mon, 03 Aug 2026 09:14:41 +0000</pubDate><atom:updated>2026-08-03T09:14:41.737Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவை,Annamalai,அண்ணாமலை,Theeran Chinnamalai,அஞ்சலி Tribute,தீரன் சின்னமலை சிலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/1flgttfg/166.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அண்ணாமலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/1flgttfg/166.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>வி த லீடர்ஸ் இயக்கத்தின் நிறுவனர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">அண்ணாமலை </a>தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>மாவீரர் தீரன் சின்னமலை</h2><p>ஆங்கிலேய ஆட்சியைத் துணிச்சலுடன் எதிர்த்து, தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக தனது உயிரையே தியாகம் செய்த, மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளில், அவருக்கு எங்கள் அஞ்சலியை செலுத்திக் கொள்கிறோம்.</p><p>அடிமைத்தனத்திற்கு ஒருபோதும் தலைவணங்காத மனஉறுதியும், தாய்நாட்டின் மீது கொண்ட அசைக்க முடியாத பற்றும், எதிரிகளை அச்சுறுத்திய போர்த்திறனும், தீரன் சின்னமலை அவர்களின் தனித்துவ அடையாளம். </p><p>தலைமுறைகள் கடந்தும் வாழும் தீரன் சின்னமலை அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம். </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">ஆங்கிலேய ஆட்சியைத் துணிச்சலுடன் எதிர்த்து, தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக தனது உயிரையே தியாகம் செய்த, மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளில், அவருக்கு எங்கள் அஞ்சலியை செலுத்திக் கொள்கிறோம்.<br><br>அடிமைத்தனத்திற்கு ஒருபோதும் தலைவணங்காத மனஉறுதியும், தாய்நாட்டின் மீது கொண்ட… <a href="https://t.co/gDMouJIORJ">pic.twitter.com/gDMouJIORJ</a></p>&mdash; K.Annamalai (@annamalai_k) <a href="https://x.com/annamalai_k/status/2084112753850208660?ref_src=twsrc%5Etfw">August 3, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>கொடைச்சிறப்பும் வீரமும் ஒருங்கே திகழ்ந்த மாமன்னர் வல்வில் ஓரிக்கு வீரவணக்கம்! - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tribute-to-king-valvil-ori-nainar-nagendran-message</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tribute-to-king-valvil-ori-nainar-nagendran-message#comments</comments><guid isPermaLink="false">a090a99d-14bc-471d-8fe1-fd993f6bb8a8</guid><pubDate>Mon, 03 Aug 2026 09:04:04 +0000</pubDate><atom:updated>2026-08-03T09:04:04.263Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,வீரம்,salute,வீரவணக்கம்,Heroic,வல்வில் ஓரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/0p9mtlgc/ori.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாமன்னர் வல்வில் ஓரி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/0p9mtlgc/ori.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கொடைச்சிறப்பும் வீரமும் ஒருங்கே திகழ்ந்த மாமன்னர் வல்வில் ஓரிக்கு வீரவணக்கம், மாமன்னரின் விழாவை முன்னிட்டு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:-</p><p>கடையெழு வள்ளல்களில் ஒருவரும், கொடைச் சிறப்பும், வீரமும் ஒருங்கே திகழ்ந்த "மாமன்னர் வல்வில் ஓரி" வீரவணக்கம்!</p> <h2>நினைவு விழா</h2><p>மாமன்னர் வல்வில் ஓரி அவர்களின் நினைவு விழாவை முன்னிட்டு, இன்று ஈரோடு மாவட்டம், கொட்டாரத்தோட்டம், அறச்சலூரில் நடைபெற்ற மரியாதை நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.</p> <p>அந்நிகழ்வில், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கலந்து கொண்டு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BF">மாமன்னர் வல்வில் ஓரி</a> திருஉருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினோம்.</p> <h2>வரவேற்பு</h2><p>அப்போது, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான  விடியல் சேகர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய நிர்வாகியான திலகபாமா அன்புடன் வரவேற்று நிகழ்வில் இணைந்தனர்.</p><h2>மரியாதை</h2><p>மேலும், இந்நிகழ்வில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், காரியகர்த்தாக்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு, மாமன்னர் வல்வில் ஓரி புகழையும் வீர வரலாற்றையும் போற்றும் வகையில் தங்களது மரியாதையை செலுத்தினர்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">கடையெழு வள்ளல்களில் ஒருவரும், கொடைச் சிறப்பும், வீரமும் ஒருங்கே திகழ்ந்த &quot;மாமன்னர் வல்வில் ஓரி&quot;அவர்களுக்கு வீரவணக்கம்!<br><br>மாமன்னர் வல்வில் ஓரி அவர்களின் நினைவு விழாவை முன்னிட்டு, இன்று ஈரோடு மாவட்டம், கொட்டாரத்தோட்டம், அறச்சலூரில் நடைபெற்ற மரியாதை நிகழ்வில் பல்வேறு அரசியல்… <a href="https://t.co/2WMNBbA3Wq">pic.twitter.com/2WMNBbA3Wq</a></p>&mdash; Nainar Nagenthran (@NainarBJP) <a href="https://x.com/NainarBJP/status/2084195364429762808?ref_src=twsrc%5Etfw">August 3, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் விளையாட்டு போட்டி: 39 பதக்கங்களுடன் இந்தியா 4-வது இடம் - வானதி சீனிவாசன் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/commonwealth-games-india-4th-with-39-medals-vanathi-srinivasan-congratulations</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/commonwealth-games-india-4th-with-39-medals-vanathi-srinivasan-congratulations#comments</comments><guid isPermaLink="false">9bee48fc-82cc-45d9-ba03-15b52e0ce0b7</guid><pubDate>Mon, 03 Aug 2026 08:58:40 +0000</pubDate><atom:updated>2026-08-03T08:58:40.975Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவை,Congratulations,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,விளையாட்டு வீரர்கள்,காமன்வெல்த்,CommonwealthGames</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/adiahahi/165.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/adiahahi/165.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p> <h2>வாழ்த்து</h2><p>கிளாஸ்கோ- 2026 <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D">காமன்வெல்த்</a> விளையாட்டு போட்டிகளில் இந்திய அணியின் அபாரமான ஆட்டத்தை வெளிபடுத்தியுள்ளது.</p><p>நமது விளையாட்டு வீரர்கள் ஈடு இணையற்ற உறுதி, மனவுறுதி மற்றும் சிறப்பை வெளிப்படுத்தி 13 தங்கம், 17 வெள்ளி மற்றும் 9 வெண்கல பதக்கங்களை வென்று, ஒட்டுமொத்தமாக 39 பதக்கங்களுடன் நான்காவது இடத்தைப் பிடித்தனர். ஒவ்வொரு பதக்கமும் வளர்ந்து வரும் இந்தியாவின் உணர்விற்குச் சான்றாகும். ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும், பயிற்சியாளருக்கும் மற்றும் துணைப் பணியாளர்களுக்கும் வாழ்த்துகள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>நூற்றாண்டு கண்ட அரசு பள்ளி: மேளதாளங்களுடன் சீர்வரிசை வழங்கி மிரளவிட்ட ஊர்மக்கள்...</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-century-old-government-school-villagers-dazzle-by-presenting-ceremonial-gifts-accompanied-by-music-and-drums</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-century-old-government-school-villagers-dazzle-by-presenting-ceremonial-gifts-accompanied-by-music-and-drums#comments</comments><guid isPermaLink="false">a6fe7057-6b09-4a8b-be66-c01e938097f2</guid><pubDate>Mon, 03 Aug 2026 08:38:51 +0000</pubDate><atom:updated>2026-08-03T08:38:51.454Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சேலம்,celebration,Government School,அரசுப்பள்ளி,Salem district,கல்வி சீர்வரிசை,ஊர்மக்கள்</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/1m66vtbl/60.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ அரசுப்பள்ளி நூற்றாண்டு விழா]]></media:title><media:description type="html"><![CDATA[ நூற்றாண்டு கண்ட அரசு பள்ளிக்கு ஊர் மக்கள் மேளதாளங்களுடன் சீர்வரிசை வழங்கி மகிழ்ந்தனர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/1m66vtbl/60.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம் மாவட்டத்தில் 100 ஆண்டுகளைக் கடந்து கல்விப் பணியாற்றி வரும் ஒரு அரசுப் பள்ளிக்கு, கிராம மக்கள் மேளதாளங்களுடன் சீர்வரிசை கொண்டு சென்றனர். </p><h2>100 ஆண்டுகள் கடந்த அரசுப்பள்ளி</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சேலம் மாவட்டம்</a> ஓமலூர் அருகே பெரிய காடம்பட்டி அரசு தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. அந்த பள்ளியின் நூற்றாண்டு விழாவை, அந்த கிராம மக்கள் கொண்டாட விரும்பினர். அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கவும் கல்விச் சீர்வரிசை வழங்கும் வழக்கம் தமிழகத்தில் பரவலாக நடந்து வருகிறது. அந்த வகையில், 100 ஆண்டுகளைக் கடந்து கல்விப் பணியாற்றி வரும் அந்த அரசுப் பள்ளிக்கு விழா நடத்த கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டனர்.</p><h2>விழாவின் முக்கிய நிகழ்வுகள்</h2><p>கிராம மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து தட்டுக்களில் நோட்டுப் புத்தகங்கள், எழுதுபொருட்கள், மின்விசிறிகள் மற்றும் பள்ளிக்குத் தேவையான பொருட்களை கையில் ஏந்தி ஊர்வலமாக வந்தனர். மேலும், பாரம்பரிய மேளதாளங்கள் மற்றும் தாரைத் தப்பட்டை முழங்க, உற்சாக ஆட்டத்துடன் சீர்வரிசைப் பொருட்கள் ஊர்வலமாகப் பள்ளிக்கு எடுத்து வரப்பட்டன. பின்னர் பள்ளியின் நூற்றாண்டு விழா உற்சாகமாக நடைபெற்றது.</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அரசுப் பள்ளி</a> மீதும், அங்கு படிக்கும் குழந்தைகள் மீதும் கிராம மக்கள் வைத்துள்ள பற்றை இந்த நிகழ்வு பிரதிபலிப்பதாக சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். நூற்றாண்டு கண்ட பள்ளியையும், அதன் ஆசிரியர்களையும் கவுரவிக்கும் வகையில் கிராமமே திரண்டு நடத்திய இந்த விழா தற்பொழுது இணையத்தில் வைரலாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>வல்வில் ஓரியின் பெரும்புகழ் போற்றுவோம் - சீமான் பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-celebrate-the-great-renown-of-valvil-ori-seemans-post</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-celebrate-the-great-renown-of-valvil-ori-seemans-post#comments</comments><guid isPermaLink="false">1a37a84b-5cc0-4ce4-ae2f-145fab4bf781</guid><pubDate>Mon, 03 Aug 2026 08:06:56 +0000</pubDate><atom:updated>2026-08-03T08:06:56.951Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,Seeman,வல்வில் ஓரி,Valvil Ori</media:keywords><media:content height="288" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/s44ywie2/15.gif" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/s44ywie2/15.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>கடையேழு வள்ளல்களுள் ஒருவரான வல்வில் ஓரியின் விழாவையொட்டி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>“கொல்லிமலையையும் அதைச் சுற்றி அமைந்த வளப்பூர், வாழவந்தி, திண்ணனூர், சேலூர், அரியூர், குண்டூர், தேவானூர், குண்டுனி, ஆலந்தூர், திருப்புலி, எடப்புலி, சித்தூர், பைல், பெரக்கரை உள்ளிட்ட 14 மலைநாடுகளை அரசாண்ட மாவீரன்...!</p><p>புறநானூறு, நற்றிணை, அகநானூறு, குறுந்தொகை, சிறுபாணாற்றுப்படை உள்ளிட்ட  சங்கத்தமிழ் இலக்கியங்கள் போற்றி புகழும் பெருவீரன்..!</p><p>இல்லை என்று வந்த புலவர்களுக்கும், பாணர்களுக்கும், இசைவாணர்களுக்கும்</p><p>அள்ளிக்கொடுத்து தமிழ் மண்ணில் நிலைத்த வள்ளல்..! விற்போரில் சிறந்து விளங்கிய  வீரத்தமிழ்மகன் வல்வில் ஓரியின் பெரும்புகழ் போற்றுவோம்!”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>நெசவாளர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் உரிமைத்தொகை: அரசுக்கு கோரிக்கை!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/demand-to-government-for-monthly-allowance-of-5000-for-weavers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/demand-to-government-for-monthly-allowance-of-5000-for-weavers#comments</comments><guid isPermaLink="false">a4770901-83e8-43f6-9cee-62ae5d316327</guid><pubDate>Mon, 03 Aug 2026 08:03:42 +0000</pubDate><atom:updated>2026-08-03T08:03:42.672Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>உரிமைத்தொகை,Weavers,நெசவாளர்கள்,கைத்தறி நெசவாளர்கள்,demand to govt,அரசுக்கு கோரிக்கை,தமிழக அரசுக்கு கோரிக்கை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/ur8kfuca/Untitled-16.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/ur8kfuca/Untitled-16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நெசவுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காக்கும் வகையில், நெசவாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள நெசவாளர்களுக்கு மாதம் ரூ.5000 உரிமைத் தொகை வழங்க வேண்டும் என தறி ஆடையகத்தின் நிறுவனர் சி. சண்முகம் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது, அவர் கூறியதாவது;-</p><p>தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு அடுத்தபடியாக பெரும்பான்மை உழைக்கும் சமூகம் நெசவாளர்கள் தான். உழவர்கள்  உணவை உற்பத்தி செய்து  மக்களின் பசியைப் போக்குகிறார்கள் என்றால், நெசவாளர்கள் ஆடைகளை தயாரித்து  மக்களின் மானத்தைக் காப்பவர்கள் நெசவாளர்கள் தான்.  அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும்.  நெசவாளர்களின் நலன்களை காப்பதற்காக கீழ்க்கண்ட <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கோரிக்கைகளை </a>நிறைவேற்ற வேண்டும் என்று  இந்திய ஜனநாயகத்தின் நான்காம் தூண்களான பத்திரிகையாளர்கள் வாயிலாக  அரசுக்கு  கோரிக்கை விடுக்கிறோம்.</p><h2>கோரிக்கைகள்:</h2><p>1. நெசவுத் தொழில் நலிவடைந்து வரும் நிலையில் அதை மீட்டெடுப்பதற்காக பல்வேறு புதிய திட்டங்களையும், சீர்திருத்தங்களையும் செய்ய வேண்டியுள்ளது. இதை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் வேளாண்மைத் துறைக்கு தனி நிதிநிலை தாக்கல் செய்யப்படுவதைப் போல நெசவுத்துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்.</p><p>2.  நெசவுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காக்கும் வகையில், நெசவாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள நெசவாளர்களுக்கு மாதம் ரூ.5000 உரிமைத் தொகை வழங்க வேண்டும்.</p><p>3. பட்டு நெசவாளர்களுக்கும், கைத்தறி நெசவாளர்களுக்கும்  30% கூலி உயர்வு வழங்க வகை செய்ய வேண்டும். ஆண்டுக்கு 10% கூலி உயர்வு வழங்குவதை சட்டப்பூர்வமாக்க வேண்டும்.</p><p>4. கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் நெசவாளர்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.</p><p>5. சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பட்டுப்புடவைகள் இறக்குமதி செய்யப்படுவதற்கு மத்திய, மாநில அரசுகள் தடை விதிக்க வேண்டும்.</p><p>6. நெசவுத் தொழிலுக்கு தேவையான  நூல், சாயம் உள்ளிட்ட மூலப் பொருள்களுக்கு 50% மானியம் வழங்க வேண்டும்.</p><p>7. கைத்தறி வீடுகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தின் அளவு 500 யூனிட்டுகளாகவும்,  விசைத்தறி உள்ள வீடுகளுக்கான  இலவச மின்சாரத்தின் அளவு  1500 யூனிட்டுகளாகவும் அதிகரிக்கப்பட வேண்டும்.</p><p>8. 12 விசைத்தறிகள் வரை உள்ள சிறிய விசைத்தறிக் கூடங்களுக்கு  சூரிய ஒளி மின்னுற்பத்திக் கட்டமைப்பை ஏற்படுத்த 75% மானியம் வழங்க வேண்டும்.</p><p>9.  ஆடை வடிவமைப்பு ( Designs), துணி தொழில்நுட்பம் ( Textile Technology) போன்ற படிப்புகளில் நெசவாளர்கள் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு தனி இட ஒதுக்கீடும், படிக்கும் போதே உதவித் தொகையும் வழங்க வேண்டும்.</p><p>10. கைத்தறி துணிகளை விற்பனை செய்ய  அனைத்து நகரங்களிலும் விற்பனை மையங்கள் அமைக்கப்பட வேண்டும்,  ஆன்லைனில் விற்பனை செய்வதற்காக தனி பிராண்டு உருவாக்கப்பட வேண்டும். தறி என்ற எங்களின் பிராண்டை அரசு பயன்படுத்திக் கொள்ள விரும்பினால் விட்டுக் கொடுக்க தயாராக இருக்கிறோம்.</p><h2>நிறைவேற்றித்தர வேண்டும்</h2><p>எங்களின் இந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கோரிக்கையை </a>சம்பந்தப்பட்ட துறைகளின்  அமைச்சர்களையும், முதல்-அமைச்சரையும் நேரில் சந்தித்து வழங்க இருக்கிறோம்.  இந்த கோரிக்கைகள் அனைத்தையும் தமிழக  அரசு நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>நடிகர் பார்த்திபன் தொடர்ந்த வழக்கு:  தமிழக அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-filed-by-actor-parthiban-madras-high-court-orders-tamil-nadu-government-to-respond</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-filed-by-actor-parthiban-madras-high-court-orders-tamil-nadu-government-to-respond#comments</comments><guid isPermaLink="false">f3e17835-5d1a-4d97-ad7b-8bfae3442523</guid><pubDate>Mon, 03 Aug 2026 07:55:20 +0000</pubDate><atom:updated>2026-08-03T07:55:20.028Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,Chennai High Court,சென்னை ஐகோர்ட்,நடிகர் பார்த்திபன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/t6c0ov2u/Parthiban.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நடிகர் பார்த்திபன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/t6c0ov2u/Parthiban.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை ஐகோர்ட் உத்தரவின் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் சாதி, மதமற்றவர் என சான்றிதழை பெற்ற நடிகர் பார்த்திபன், நீதிபதி தண்டபாணி முன் ஆஜராகி சான்றிதழை காண்பித்தார். அப்போது, நீங்கள் மட்டும் பயனடைந்தால் போதாது, இதுபோல சான்றிதழ் விண்ணப்பிக்கும் நபர்களும் பயனடைய வேண்டும் என நீதிபதி தெரிவித்ததையடுத்து, இதுசம்பந்தமாக பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்ய இருப்பதாக பார்த்திபன் தெரிவித்திருந்தார்.</p><h2>பொது நல மனு</h2><p>இந்த நிலையில், சாதி, மதமற்றவர் என சான்று கோரி விண்ணப்பிப்பவர்கள் உடனடியாக சான்றிதழை பெறும் வகையில், சட்டம் அல்லது அரசாணை பிறப்பிக்கும் படி, தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி நடிகர் பார்த்திபன் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில், "சாதி, மதமற்றவர் என சான்று கோரிய விண்ணப்பங்களை பரிசீலிக்கும் வகையில் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கி, அரசாணைகள் பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கடந்த 2025 ம் ஆண்டு ஜூன் மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், அரசின் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் கவர்நருக்கும், அப்போதைய அரசுக்கும் இடையில் சுமூக உறவு இல்லாததால், இந்த உத்தரவு கிடப்பில் போடப்பட்டது.</p><h2>விசாரணை ஒத்திவைப்பு</h2><p>தற்போது அதுபோன்ற சூழ்நிலை இல்லை என்பதால், சட்டம் இயற்ற உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.  இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இன்று  விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவிற்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க உள்துறை, வருவாய்த்துறை, சட்டத்துறை செயலாளர்களுக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர் வன்னி அரசு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-vanniyarasu-met-actor-rajinikanth-and-received-his-best-wishes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-vanniyarasu-met-actor-rajinikanth-and-received-his-best-wishes#comments</comments><guid isPermaLink="false">1a2a170d-db6f-4640-a303-184ade437fda</guid><pubDate>Mon, 03 Aug 2026 07:46:41 +0000</pubDate><atom:updated>2026-08-03T07:46:41.681Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajinikanth,நடிகர் ரஜினிகாந்த்,வன்னி அரசு,Vanni Arasu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/h1tj1hri/vanni-arasu.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் வன்னி அரசு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/h1tj1hri/vanni-arasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு வாழ்த்து பெற்றார். இது தொடர்பான புகைப்படங்களையும் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.  வன்னியரசு தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:  “திரை உலகின் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்தை சந்தித்துஇன்று வாழ்த்து பெற்றேன். சமூகநீதித்துறை அமைச்சராக பதவி ஏற்றதும் சூப்பர் ஸ்டார் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற விரும்பினேன். இப்போது தான் அதற்கான வாய்ப்பு கிடைத்தது. “நிறைய மக்களுக்கு செய்யுங்கள் வாழ்த்துகள்” என வாழ்த்தி அனுப்பினார்.” என்று கூறியுள்ளார். </p> <h2>ரஜினியின் அடுத்த படங்கள்</h2><p>நடிகர் ரஜினிகாந்த் தற்போது,  ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து ‘தர்மன்’ படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை ‘டிராகன்’ பட இயக்குநர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கி வருகிறார்.  இந்தப் படத்தில் சிம்ரன், ராஷி கன்னா, யோகி பாபு உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.</p><p>இந்த படத்திற்கு பிறகு கமலுடன் இணைந்து ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.இதற்கு மத்தியில் ரஜினிகாந்த் தனது சுயசரிதை எழுதி முடித்துள்ளதாகவும், அதை புத்தகமாக விரைவில் வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வேளாங்கண்ணி-வாஸ்கோடகாமா இடையே சிறப்பு ரெயில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-velankanni-and-vasco-da-gama</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-velankanni-and-vasco-da-gama#comments</comments><guid isPermaLink="false">ba2de0f7-3f98-4119-9be1-0cd86a218920</guid><pubDate>Mon, 03 Aug 2026 07:40:30 +0000</pubDate><atom:updated>2026-08-03T07:40:30.278Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,Special train,Velankanni,வேளாங்கண்ணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/n87604fi/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/n87604fi/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு, வேளாங்கண்ணி-வாஸ்கோடகாமா இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-</p><p>* வாஸ்கோடகாமாவில் இருந்து வருகிற 27, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் இரவு 9.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.07361), புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் அதிகாலை 3.45 மணிக்கு வேளாங்கண்ணி வந்தடையும். மறுமார்க்கமாக, வேளாங்கண்ணியில் இருந்து வருகிற 29, செப்டம்பர் 3 ஆகிய தேதிகளில் இரவு 11.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07362), புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் அதிகாலை 3 மணிக்கு வாஸ்கோடகாமா சென்றடையும்.</p><p> * வாஸ்கோடகாமாவில் இருந்து வருகிற செப்டம்பர் 6-ந்தேதி இரவு 9.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07365), புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் அதிகாலை 3.45 மணிக்கு வேளாங்கண்ணி வந்தடையும். மறுமார்க்கமாக, வேளாங்கண்ணியில் இருந்து வருகிற செப்டம்பர் 9-ந்தேதி அதிகாலை 1 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07366), புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் அதிகாலை 3 மணிக்கு வாஸ்கோடகாமா சென்றடையும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p><p>இதேபோல, உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 8,15,22 ஆகிய தேதிகளில் காலை 10.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (04171), காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக் கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் மதியம் 1.15 மணிக்கு நெல்லை வந்தடையும். </p><p>மறுமார்க்கமாக, நெல்லையில் இருந்து இன்று (3-ந்தேதி), 10,17,24 ஆகிய தேதிகளில் இரவு 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (04172), மேற்கண்ட வழித்தடம் வழியாக புறப்பட்டதில் இருந்து 4-வது நாள் அதிகாலை 3.30 மணிக்கு பிரயாக்ராஜ் ரெயில் நிலையம் சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>உழவர் பெருமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் பெருகும்! - மு.க. ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-the-demands-of-the-farmers-are-not-met-the-struggle-will-intensify-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-the-demands-of-the-farmers-are-not-met-the-struggle-will-intensify-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">de07df43-227b-4eb7-ba22-c04ca9fbc69a</guid><pubDate>Mon, 03 Aug 2026 07:33:13 +0000</pubDate><atom:updated>2026-08-03T07:33:13.918Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Farmers,கோரிக்கை,போராட்டம்,demands,மு.க. ஸ்டாலின்,உழவர்கள்,M.K. Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/ksabbq79/stalin.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/ksabbq79/stalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தி.மு.க. தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க. ஸ்டாலின்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>காவிரி விவசாயிகளுக்காக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தஞ்சையில் திரண்ட கழகம்! உழவர் பெருமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் பெருகும். காவிரி பெருக்கெடுக்க வேண்டிய ஆடிப்பெருக்கு நாளில் டெல்டா விவசாயிகள் ஆதங்கம் பெருக்கெடுக்கப் போராடி வருகின்றனர். விவசாயப் பெருங்குடி மக்களின் உணர்வுகளை உரக்கச் சொல்லும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தோழமைக் கட்சித் தலைவர்கள் ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி, நெல்லை முபாரக் ஆகியோருக்கும், அக்கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட தோழர்களுக்கும், பல்வேறு விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2>விவசாய விரோதி</h2><p>ஜூன் 12 வந்து சேர்ந்திருக்க வேண்டிய காவிரி நீர் ஆகஸ்ட் பிறந்தும் வரவில்லை. ஆடி பதினெட்டில் பொங்கி வரும் புதுப்புனலை வரவேற்ற காவிரிக்கரையின் மைந்தர்கள்  விவசாய விரோதி விஜய் ஆட்சியின் சோம்பேறித்தனத்தால் சோகத்தில் மூழ்கியுள்ளனர். தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து ஒரு வார்த்தை கூட பேசாத முதல்-அமைச்சரைத் தமிழ்நாடு இப்போதுதான் பார்க்கிறது. அண்டை மாநிலத்தில் திரைப்படம் ஓடுவதற்காக நம் விவசாயிகளின் வாழ்க்கையையா அடகு வைப்பீர்கள்?</p><h2>மோசடி ஆட்சி</h2><p>முழுக் கடன் தள்ளுபடி என வாழைப்பழம் போல வாக்குறுதி தந்து வெற்றி பெற்றுவிட்டு, விவசாயிகளை ஏமாற்றிய மோசடி ஆட்சியாக இந்தத் த.வெ.க. ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. மேகதாது அணை கட்டியே தீருவோம் என அடம் பிடிக்கும் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தைக்குச் செல்லத் துடியாய்த் துடிக்கும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் நேற்று கர்நாடகத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் பற்றிய செய்திகளைப் பார்த்தாரா? இங்கு அதேபோல் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட முதல்-அமைச்சருக்கு நேரமில்லையா?</p><h2>கள்ள மவுனம்</h2><p>விவசாயிகளைச் சந்திக்காமல் புறக்கணித்துவிட்டு, வேளாண் பட்ஜெட்டைத் திருப்பதிக்குத் தூக்கிக் கொண்டு சென்றால் உங்கள் பாவங்கள் போய்விடுமா? நாக்பூரில் நம் விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்குக் கூட கண்டனம் தெரிவிக்காமல், கள்ள மவுனம் காக்கிறார் திரையில் தன்னூத்து விவசாயியாக வேடம் தரித்தவர்.</p><h2>முழு கடன் தள்ளுபடி</h2><p>விவசாயிகளை இனியும் வஞ்சிக்காமல் த.வெ.க. அரசு வாக்குறுதியளித்தபடி முழு கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். குறுவை சிறப்பு நிவாரணத் தொகுப்பு வழங்கி, டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்திட வேண்டும். காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையைக் காற்றில் பறக்க விடாமல் தீவிரமாகச் செயல்பட வேண்டும். அதுவரை கழகத்தின் போராட்டம் தொடரும்!</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>டம்மி முதல்-அமைச்சர்... ஜோக்கர் அமைச்சர்கள்... உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dummy-chief-minister-joker-ministers-udhayanidhi-stalins-strong-criticism</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dummy-chief-minister-joker-ministers-udhayanidhi-stalins-strong-criticism#comments</comments><guid isPermaLink="false">95829373-3006-4f63-a263-156e916ca1cb</guid><pubDate>Mon, 03 Aug 2026 07:21:27 +0000</pubDate><atom:updated>2026-08-03T07:21:27.071Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,திமுக,DMK,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/pkt70alw/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/pkt70alw/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர்,</p><p>மேகதாது அணை கட்டுவதை தடுக்க தவறிய த.வெ.க. அரசை கண்டித்தும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட் டங்களாக அறிவிக்க வேண்டியும் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தி.மு.க. சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். முதன்மை செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவருமான கே.என்.நேரு வரவேற்று பேசினார்.</p><p>ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-</p><h2>டம்மி முதல்-அமைச்சர்</h2><p>குறுவை பாதிக்கப்பட்டதற்கு டம்மி முதல்-அமைச்சர்தான் காரணம். விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்-அமைச்சர் விஜய் இதுபற்றி வாய்திறந்து பேசவில்லை. ஆடி 18-ம் நாள் இன்று, ஆடிப்பெருக்கில் ஆறு முழுவதும் தண்ணீர் வழிந்து ஓடும். ஆனால், இப்போது டெல்டா நீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. "திமுக ஆட்சி இருந்திருந்தல் இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா?" நிர்வாகத் திறனற்ற ஒரு டம்மி முதல்-அமைச்சரால் இந்த நிலைமை தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது.</p><p>கர்நாடகா முதல்-அமைச்சர பாக்குறது இருக்கட்டும்.. நம்ம ஊரு விவசாயிகள முதல்-அமைச்சர் விஜய் சந்தித்தாரா?. தயவு செய்து இந்த பக்கம் வந்து விடாதீர்கள் என முதல்-அமைச்சர் விஜயிடம் கர்நாடக முதல்-மந்திரி கூறி விட்டார். ஆட்சி அமைத்து 3 மாதங்கள் ஆகியும் பாஜக என்ற சொல்லைக் கூட உச்சரிக்காத தைரியசாலி நமது முதல்-அமைச்சர் விஜய். கர்நாடகாவில் உள்ள காங்கிரஸை எதிர்த்துப் பேச முதல்-அமைச்சருக்கு திராணி இல்லை.</p><h2>சினிமாவிற்கு சென்று கண்ணீர்..</h2><p>காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்ல. விவசாயிகள் கண்ணீர் வடிக்கக்கூடிய நிலையில் அமைச்சர்கள் சினிமாவிற்கு சென்று கண்ணீர் வடிக்கிறார்கள். ஏதாவது ஒரு பிரச்சினை வந்தால் அதை எப்படி திசைதிருப்புவது என்ற வேலையில் ஈடுபடுகின்றனர்; தினமும் மாலை 4 மணி ஆனால் போதும்; ஏதாவது ஒரு ரீல்ஸ் போட்டு திசைதிருப்புகிறார் முதல்-அமைச்சர் விஜய்.</p><p>தண்ணீர் திறப்பது குறித்து ஆட்சியாளர்களுக்கு கவலை இல்லாமல் இருக்கலாம்; ஆனால் திமுக மக்கள் மன்றத்தில் போராடுகிறது. காவிரி விவகாரத்தில் திமுக சட்டப் போராட்டத்தை தொடங்கியுள்ளது; உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழக வேளாண் பட்ஜெட்டை திருப்பதி கோவிலில் வைத்து பூஜை செய்துள்ளார் வேளாண்துறை அமைச்சர் வினோத்.</p><h2>ஜோக்கர் கூட்டம்..</h2><p>தமிழக அமைச்சர்கள் அனைவரும் ரீல்ஸ் போடுவதிலேயே குறியாக உள்ளனர். நிருபர்களை பார்த்தால் திருடன் போல் ஓடுகிறார் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த். "திருட்டு லாட்டரி விற்ற அமைச்சர், திருட்டு விசிடி, பிளாக் டிக்கெட் விற்ற அமைச்சர், போதைப்பொருளுடன் சுற்றும் அமைச்சர் என ஒட்டுமொத்த ஜோக்கர் கூட்டமும் அமைச்சரவையில் உள்ளது. அமைச்சரின் அண்ணன், தம்பி எல்லாம் ஆய்வுக்கு செல்கிறார்கள். யார் அமைச்சர் என அதிகாரிகளுக்கே தெரியவில்லை. யார் யார் அமைச்சர் என முதல்-அமைச்சருக்கே தெரியாது.</p><p>முதல்-அமைச்சர் ரீல்ஸ், அமைச்சர்கள் ரீல்ஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் ரீல்ஸ் என அனைவரும் ரீல்ஸ் போட்டுக்கொண்டு சுற்றுகின்றனர். கழிவறையக் கூட விட்டுவைக்காமல் ரீல்ஸ் போடுகின்றனர். இந்த அரசிற்கு ரீல்ஸ் வெறி முத்திப்போய் உள்ளது. இதுபோன்ற ஒரு ரீல்ஸ் போடும் கேடு கெட்ட அரசை தமிழ்நாடு இதுவரைக் கண்டதில்லை.</p><h2>வாயைத் திறங்க.. வாயைத் திறங்க..</h2><p>திமுக ஆட்சியில் கட்டப்பட்ட மெட்ரோ ரெயில் பாலத்திற்கு சென்று முதல்-அமைச்சர் விஜய் ஆய்வு செய்கிறார். மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து ரீல்ஸ் போடுகிறார். திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் தொடர்பாகவே முதல்-அமைச்சர் விஜய் தொடர்ந்து ஆய்வு செய்கிறார். காவிரி பிரச்சினை உச்சத்தில் உள்ள நிலையில் ரீல்ஸ் கண்டென்ட் கொடுத்துக் கொண்டிருக்கிறார் விஜய். ஊரார் வீட்டு நெய்யில் ஸ்வீட் செய்து கொண்டிருக்கிறார்.</p><p>அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் விவசாயியாக பிறக்க வேண்டும் என்கிறார் விஜய்; இப்போதே அதை செய்யலாமே?. தவெக ஆட்சியில் அதிகம் பாதிக்கப்படுவது விவசாயிகள் தான். திமுகவின் தூண்டுதலின் விவசாயிகள் போராடுவதாக கூறி கொச்சைப்படுத்தியவர் முதல்-அமைச்சர் விஜய். தமிழகத்தில் பலவினமான ஆட்சி நடக்கிறது; இதை புரிந்து கொண்டு மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா முயற்சி செய்கிறது.</p><p>“வாயைத் திறங்க.. வாயைத் திறங்க.. மேகதாது பிரச்சினையில் தூங்கி வழியும் முதல்-அமைச்சரே வாயைத் திறங்க.. வாயைத் திறங்க.. புரியலையா.. புரியலையா.. விவசாயிகளின் வேதனைகள்.. புரியலையா.. புரியலையா..”. இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>மதுரை: வைகை ஆற்றை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்ட அண்ணாமலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-annamalai-engaged-in-the-task-of-cleaning-the-vaigai-river</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-annamalai-engaged-in-the-task-of-cleaning-the-vaigai-river#comments</comments><guid isPermaLink="false">f9dc21b0-d6f4-4d1f-a57b-e8e3fc348cd9</guid><pubDate>Mon, 03 Aug 2026 07:10:27 +0000</pubDate><atom:updated>2026-08-03T07:10:27.332Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Annamalai,அண்ணாமலை,Madurai,மதுரை,cleaning work,Vaigai River,வைகை ஆறு,தூய்மை பணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/7xd6etc3/75.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/7xd6etc3/75.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>‘வி த லீடர்ஸ்’ இயக்கத்தின் நிறுவனர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">அண்ணாமலை</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>இன்றைய தினம் காலை, நமது மதுரையின் அடையாளமாகவும், நம் வாழ்வியலோடும், பண்பாட்டோடும் ஒன்றிணைந்த, புனிதமான வைகை நதிக்கரையில், நமது வி த லீடர்ஸ் அமைப்பின் சார்பில் "சுத்தமான, வளமான தமிழகம்" இயக்கத்தின் கீழ் தூய்மைப் பணியிலும், மரக்கன்றுகள் நடும் நிகழ்விலும் பங்கேற்றதில் பெரும் மகிழ்ச்சி. </p><h2>மனமார்ந்த பாராட்டு</h2><p>திங்கள்கிழமை காலை என்றாலும், பெருந்திரளாகக் கூடி, முழு அர்ப்பணிப்புடன் உழைத்த தன்னார்வலர்கள், இளைஞர்கள் மற்றும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் சமூக அக்கறையே நமது இயக்கத்தின் மிகப்பெரிய பலம்.</p><h2>மதுரை மாநகரின் உயிர்நாடி</h2><p>வைகை நதி என்பது வெறும் நதி மட்டும் அல்ல. மதுரை மாநகரின் உயிர்நாடி. பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த மண்ணின் நாகரிகத்தையும், விவசாயத்தையும், ஆன்மிகப் பாரம்பரியத்தையும் தாங்கி நிற்கும் தாய். வைகை அன்னையைத் தூய்மையாகப் பாதுகாப்பது, நம் ஒவ்வொருவரின் தார்மீகப் பொறுப்பு. ஒரு நதியைப் பாதுகாப்பது என்பது வெறும் சுற்றுச்சூழலைக் காப்பதல்ல, நமது பண்பாடு, வரலாறு, வாழ்வாதாரம் அனைத்தையும் பாதுகாப்பதாகும்.</p><h2>"சுத்தமான, வளமான தமிழகம்"</h2><p>வைகையை மாசுபடுத்தாமல் காப்போம். பிளாஸ்டிக் மற்றும் கழிவுகளை நதியில் கொட்டாமல் இருப்போம். நம் குழந்தைகளுக்கும், வருங்கால தலைமுறைக்கும் தூய்மையான வைகையை விட்டுச் செல்வோம். "சுத்தமான, வளமான தமிழகம்" என்ற இலக்கை மக்கள் இயக்கமாக மாற்றி, பசுமையும் தூய்மையும் நிறைந்த தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்குவோம் என்ற அன்பான வேண்டுகோளை, மதுரை மக்களுக்கு வைத்துக் கொள்கிறேன். </p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நடிகை திரிஷாவை அரசியலுக்கு வரவேற்கும் விதமாக ஒட்டப்பட்ட போஸ்டர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/posters-were-put-up-to-welcome-actress-trisha-to-politics</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/posters-were-put-up-to-welcome-actress-trisha-to-politics#comments</comments><guid isPermaLink="false">6575a494-fcdf-4930-b7fb-9c7d0287f545</guid><pubDate>Mon, 03 Aug 2026 06:42:35 +0000</pubDate><atom:updated>2026-08-03T06:42:35.795Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Trisha,நடிகை திரிஷா,Madurai,மதுரை,அரசியல்,politics,திரிஷா,Actress Trisha,Trisha Krishnan,போஸ்டர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/3whgz568/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/3whgz568/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>நடிகை திரிஷா</h2><p>தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. 22 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் கொடிகட்டி பறந்து வரும் திரிஷா குறித்து சமீபகாலமாக சர்ச்சைகள் அதிகரித்துள்ளன. திரிஷாவின் தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமின்றி திரையுலக வாழ்க்கை குறித்தும் அவ்வப்போது பரபரப்பு கிளம்பி வருகிறது. </p><p>சமீபத்தில் தவெக தலைவரும், முதல்-அமைச்சருமான விஜய்யின் பிறந்தநாளையொட்டி அவருக்கு திரிஷா வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் நடிகை திரிஷா அரசியலில் ஈடுபட தயாராகி வருவதாகவும் இணையதளங்களில் தகவல் பரவியது. இதற்கு அவர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.</p><h2>போஸ்டர்கள்</h2><p>இந்த நிலையில், மதுரையில் நடிகை திரிஷாவை அரசியலுக்கு வரவேற்கும் விதமாக நகரின் பல்வேறு பகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் “எந்தவொரு அரசியல் கட்சியும் ஆரம்பிக்கும் முதல் மண் எங்கள் மதுரை... என்றும் மதுரை மீனாட்சி தாய் ஆசிர்வாதத்தால் தமிழக சங்க வரலாற்றில் முதல் முறையாக எங்கள் அக்க திரிஷாவிற்கு தமிழக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் சங்கம். மதுரை மாவட்டம் திரிஷா நற்பணி மன்றம்” என்று அதில் எழுதப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>தீரன் சின்னமலையை இளைஞர்கள் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்- அன்புமணி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-should-look-up-to-theeran-chinnamalai-as-a-role-model-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-should-look-up-to-theeran-chinnamalai-as-a-role-model-anbumani#comments</comments><guid isPermaLink="false">c7e8c88d-3419-4d89-96bc-00b30cfb6d9b</guid><pubDate>Mon, 03 Aug 2026 06:32:17 +0000</pubDate><atom:updated>2026-08-03T06:32:17.281Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ராமதாஸ்,Erode,ஈரோடு,Anbumani Ramadas,தீரன் சின்னமலை,Theeran Chinnamalai</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/import/h-upload/2025/08/03/44436963-9.webp" width="750"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ தீரன் சின்னமலையை இளைஞர்கள் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்- அன்புமணி ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/import/h-upload/2025/08/03/44436963-9.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>யாருக்கும் அஞ்சாத தீரன் சின்னமலையின் 222-ஆம் நினைவு நாளை முன்னிட்டு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அன்புமணி இராமதாஸ்</a>  அறிக்கையில் கூறியதாவது:-</p><p>உலகமே ஆங்கிலேயர்களைக் கண்டு அஞ்சி நடுங்கிய நிலையில், இந்திய விடுதலைப் போராட்டத்தில் அவர்களை அலற வைத்த வீரத்திற்கும், தீரத்திற்கும் சொந்தக்காரரான கொங்கு நாட்டு மன்னர் தீரன் சின்னமலையின் 222-ஆம் நினைவுநாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் அவருக்கு வீர வணக்கத்தை செலுத்துவோம்; மரியாதையை செலுத்துவோம்.</p><p>ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகிலுள்ள செ.மேலப்பாளையம் எனும் சிற்றூரில் 1756 ஆம் ஆண்டில் பிறந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தீரன் சின்னமலை</a>, இளம் வயதிலேயே ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு எதிராக போராடத் தொடங்கினார். இன்றைய கேரளத்திலும் கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனிப்படை ஒன்று சேராவண்ணம் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை விளங்கினார். மைசூர் ஸ்ரீரங்கப் பட்டணத்தை ஆட்சி செய்து வந்த திப்பு சுல்தானுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் இடையில் நடந்த போரில் திப்பு சுல்தான் வெற்றி பெறுவதற்கு பெருமளவில் உதவிகளை செய்தார்.</p><p>1801-இல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-இல் ஓடாநிலையிலும், 1804-இல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார். போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்பதை அறிந்த ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி மூலம், சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று தூக்கிலிட்டனர். ஒரு தீரன் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட நாள் இன்று.</p><p>நாட்டைக் காப்பதில் தீரன் சின்னமலையின் வீரத்தையும், தேசப்பற்றையும் இன்றைய இளைஞர்கள் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும். தீரன் சின்னமலையில் வீர வரலாறு மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும். தீரன் சின்னமலையின் வரலாற்றை அடுத்த தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் பாடப்புத்தகத்தில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தீரன் சின்னமலையின் நினைவு நாளில் அவரது வீரத்தையும், தீரத்தையும் போற்றுவோம்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தீரன் சின்னமலையின் துணிச்சலையும் தியாகத்தையும் நினைவில் வைத்து வணங்கிடுவோம்: டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-remember-and-pay-tribute-to-the-courage-and-sacrifice-of-theeran-chinnamalai-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-remember-and-pay-tribute-to-the-courage-and-sacrifice-of-theeran-chinnamalai-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">bb192819-ca8d-490a-b461-d55ef4204727</guid><pubDate>Mon, 03 Aug 2026 06:20:49 +0000</pubDate><atom:updated>2026-08-03T06:20:49.267Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,தீரன் சின்னமலை,Theeran Chinnamalai</media:keywords><media:content height="288" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/x0q3enmd/12.gif" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/x0q3enmd/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தீரன் சின்னமலையின் 221-வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தனது உயிரையே தியாகம் செய்த விடுதலைப் போராட்ட வீரரும், தனது வீரத்தாலும் அசாத்தியமான போர்த் திறமையாலும் ஆங்கிலேயப் படைகளை விரட்டியடித்த பெருமைமிக்க மாவீரருமான தீரன் சின்னமலையின் நினைவுதினம் இன்று..</p><p>போர்க்களத்தில் ஆங்கிலேயப் படைகளால் வீழ்த்தவே முடியாத மாவீரராக வலம் வந்ததோடு , கொங்கு மண்ணின் பெருமையாகவும், தமிழர்களின் வீரத்தின் அடையாளமாகவும் திகழ்ந்த மாவீரன் தீரன் சின்னமலையின் துணிச்சலையும் தியாகத்தையும் நினைவில் வைத்து வணங்கிடுவோம்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>பணக்காரர்களுக்கான ஆட்சி நடத்தும் மோடி அரசு - மாணிக்கம் தாகூர் விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/modi-government-runs-for-the-rich-manickam-thakur-criticizes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/modi-government-runs-for-the-rich-manickam-thakur-criticizes#comments</comments><guid isPermaLink="false">69d6748d-c718-4870-993b-d6efcabb5224</guid><pubDate>Mon, 03 Aug 2026 06:12:44 +0000</pubDate><atom:updated>2026-08-03T06:12:44.498Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விமர்சனம்,Modi government,மோடி அரசு,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Thakur MP,பணக்காரர்கள்,rich people</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/u9w4wmzc/manikamtakore.gif" width="753"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/u9w4wmzc/manikamtakore.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி என்பது மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.</p><p>தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் <a href="http://dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">மாணிக்கம் தாகூர்</a> எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>பொருளாதார சமத்துவமின்மை</h2><p>'உலக சமத்துவமின்மை ஆய்வகம்' என்ற அமைப்பு வெளியிட்ட, '2026 உலக சமத்துவமின்மை' அறிக்கையில், 'இந்தியாவின் மொத்த செல்வத்தில், 40 சதவீதம், ஒரு சதவீதம் பேரிடம் குவிந்துள்ளது. உலகிலேயே பொருளாதார சமத்துவமின்மை அதிகம் உள்ள நாடு இந்தியா' என்பது ஆதாரங்களுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'நாட்டின் மொத்த வருமானத்தில் 58 சதவீதம், 10 சதவீதம் பேருக்கு செல்கிறது. 50 சதவீத மக்களுக்கு, 15 சதவீத வருமானமே செல்கிறது. இந்தியாவில் 'வருமானம், செல்வம், பாலினம்' ஆகிய மூன்று பரிமாணங்களிலும் சமத்துவமின்மை ஆழமாக வேரூன்றியுள்ளது' என்று, அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சமத்துவம், சமூக நீதியை விரும்பும் அனைவருக்கும், இது இதயத்தில் ஈட்டியைப் பாய்ச்சியது போல உள்ளது.</p><h2>300 சதவீதம் அதிகரிப்பு</h2><p>'இந்தியாவில் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டியவர்களின் எண்ணிக்கை 2025 - 2026ஆம் ஆண்டில், 576 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2021-2022ஆம் ஆண்டில் 142 பேராக இருந்த நிலையில், ஐந்து ஆண்டுகளில் 300 சதவீதம் அதிகரித்துள்ளது' என நாடாளுமன்றத்தில் மோடி அரசே ஒப்புக் கொண்டுள்ளது. கடந்த 12 ஆண்டுகால மோடி ஆட்சி என்பது, அதானி, அம்பானி போன்ற பெரும் பணக்காரர்களுக்கான ஆட்சிதான் என்பது மீண்டுமொரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. மோடி ஆட்சியில் பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்களாக உயர்ந்து கொண்டே செல்கிறார்கள்; ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாகி வருகிறார்கள்; நடுத்தர மக்கள் வாங்கும் சக்தியை இழந்து கீழே சென்று கொண்டிருக்கிறார்கள்.</p><h2>அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு உயர்வு</h2><p>2014ஆம் ஆண்டில், சுமார் 44,000 கோடி ரூபாயாக இருந்த, அதானி குழுமத்தின் மொத்த சொத்து மதிப்பு, இப்போது சுமார் 7.85 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. சொத்து குவிப்பில், அதானி குழுமம் கின்னஸ் சாதனை படைக்க உதவியதுதான், கடந்த 12 ஆண்டுகளில் மோடி அரசு நிகழ்த்திய ஒரே சாதனை. பல்வேறு மதங்கள், ஜாதிகள், மொழிகள், இனங்கள், கலாசாரங்கள் கொண்ட இந்தியாவில், பொருளாதார வளர்ச்சி என்பது சமச்சீராக இருக்க வேண்டும். மாறாக, ஒரு சதவீதம் பேரிடம், 40 சதவீத செல்வம் குவிந்திருப்பது மிகப்பெரிய சமூக அநீதி. ஆட்சி நிர்வாகத்தின் மிகப்பெரிய தோல்வி. இதற்காக மோடி அரசு வெட்கப்பட வேண்டும். இந்த அவலத்திற்கு ஏழைகள் நலனில் அக்கறை இல்லாத,  வலதுசாரி மனப்பான்மையே காரணம்.</p><p>பொருளாதார சமத்துவமின்மை என்பது, சிலிண்டருக்குள் அடைக்கப்பட்ட எரிவாயு போன்றது. அளவுக்கு அதிகமானால் வெடித்து சிதறிவிடும். பொருளாதார சமத்துவமின்மை தொடர்ந்தால், மக்கள் வீதியில் இறங்கி போராடும் நிலை வரும். அதானி, அம்பானிக்காக ஆட்சி நடத்தும் மோடி அரசை, விரைவில் மக்கள் தூக்கி எறிவார்கள். இந்தியாவில் சமச்சீரான வளர்ச்சி சாத்தியமாக, நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும். விரைவில் அது நடக்கும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தவெகவுக்கு எதுவுமே தெரியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-knows-nothing-edappadi-palaniswamis-criticism</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-knows-nothing-edappadi-palaniswamis-criticism#comments</comments><guid isPermaLink="false">798279eb-3ffc-43e6-95fd-6dddb61e27da</guid><pubDate>Mon, 03 Aug 2026 05:48:23 +0000</pubDate><atom:updated>2026-08-03T05:48:23.775Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,TVK,தவெக,எடப்பாடி பழனிசாமி,அதிமுக,Edappadi Palaniswami</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/xcfubf3v/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/xcfubf3v/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாளையொட்டி கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.</p><p><strong>அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-</strong></p><p>கட்சி தொடங்கி இரண்டரை ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்த தவெகவுக்கு காவிரி பிரச்சினை பற்றி முழுமையாக எதுவுமே தெரியாது; அனுபவம் இல்லாததால் மற்ற கட்சிகளின் கருத்துகளை தவெக அரசு கேட்டிருக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை பெற இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்றே தெரியவில்லை.</p><h2>காவிரி பிரச்சினை</h2><p>உச்சநீதிமன்றத்தில் பெற்ற தீர்ப்பை கூட காப்பாற்ற கூட முடியாத அரசாக தவெக அரசு உள்ளது. மூத்த சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து காவிரி பிரச்சினை, மேகதாது அணை விவகாரத்திற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி பிரச்சினையில் அரசியல் கட்சி தலைவர்கள் கூறுவதை தவெக அரசு கேட்கவில்லை. கர்நாடக அரசு அரசியல் கட்சி தலைவர்கள், விவசாயிகளை மதித்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியது.</p><p>காவிரி நீர் விவகாரத்தில் அதிமுக, திமுக ஆட்சியில் எவ்வளவு போராட்டம் நடந்தது என மக்களுக்கு தெரியும். அதிமுக, திமுக என எந்த ஆட்சியாக இருந்தாலும் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்கப்பட்டது. அதைபோல காவிரி நீர் விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை தவெக அரசு கூட்ட வேண்டும். விவசாய பிரதிநிதிகளையும் அழைத்து கருத்துக்களை பெற வேண்டும். அதிமுக பொதுக்குழு கூட்டம் விரைவில் கூட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>வல்வில் ஓரி திருவிழா கொண்டாடும் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள் - அண்ணாமலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/best-wishes-to-everyone-celebrating-the-valvil-ori-festival-annamalai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/best-wishes-to-everyone-celebrating-the-valvil-ori-festival-annamalai#comments</comments><guid isPermaLink="false">53ebfa7e-1f81-4e5b-b476-a3fd290ebea4</guid><pubDate>Mon, 03 Aug 2026 05:43:34 +0000</pubDate><atom:updated>2026-08-03T05:43:34.045Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Annamalai,அண்ணாமலை,வள்ளல் ஓரி விழா,Vallal Oori Festival</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/ttqgn64w/74.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/ttqgn64w/74.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>வி த லீடர்ஸ் இயக்கத்தின் நிறுவனர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">அண்ணாமலை</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>வல்வில் ஓரி திருவிழா</h2><p>எட்டுத்தொகை, பத்துப்பாட்டு உள்ளிட்ட தமிழின் பழம்பெரும் இலக்கியங்களில் பாடப்பட்ட மன்னரும், 14 நாடுகளை உள்ளடக்கிய கொல்லிமலையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த மாவீரருமான வல்வில் ஓரி அவர்களின் திருவிழாவைக் கொண்டாடும் அனைவருக்கும், இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2>பெரும் கொடையாளி</h2><p>பெரும் கொடையாளியாகவும், இணையற்ற வீரராகவும் விளங்கிய அவரது வாழ்க்கை, தமிழரின் வீரத்திற்கும் அறத்திற்கும் எடுத்துக்காட்டாகும். வீரம், கொடை, நீதி ஆகிய உயரிய பண்புகள் கொண்ட மாவீரர் வல்வில் ஓரி அவர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.</p><p>இவ்வாரு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு மின்வாரியத்தில் மேலும் ஒரு சாதனை: 700 உதவிப் பொறியாளர்களுக்கு பதவி உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/another-milestone-for-the-tamil-nadu-electricity-board-promotion-for-700-assistant-engineers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/another-milestone-for-the-tamil-nadu-electricity-board-promotion-for-700-assistant-engineers#comments</comments><guid isPermaLink="false">08158426-e12c-411e-a39e-27cdaa352b9a</guid><pubDate>Mon, 03 Aug 2026 05:32:06 +0000</pubDate><atom:updated>2026-08-03T05:32:06.833Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,மின்வாரியம்,Electricity Board,பொறியாளர்கள்,பதவி உயர்வு,Promotion,தமிழ்நாடு மின்வாரியம்,TamilNadu Goverment,Tamilnadu Electricity Board</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/bnel1nub/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/bnel1nub/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றி வந்த 700 உதவிப் பொறியாளர்கள் (மின்னியல்), இன்று ( 03.08.2026 ) உதவி செயற்பொறியாளர்கள் (மின்னியல்) ஆக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>பொறியாளர்களுக்கு பதவி உயர்வு</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய்யின் வழிகாட்டுதலின்படியும், எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாரின் அறிவுறுத்தல் மற்றும் தொடர் கண்காணிப்பின் அடிப்படையிலும், தமிழ்நாடு மின்வாரியத்தில் வெளிப்படையான, மூப்பு மற்றும் தகுதி அடிப்படையிலான நிர்வாக நடைமுறைகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய அளவில் பொறியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p>இந்த பதவி உயர்வின் மூலம், மின்வாரியத்தின் களப்பணிகள் மேலும் வலுப்பெறுவதுடன், எதிர்வரும் பருவ மழைக்காலங்களில் மின் விநியோகம், பராமரிப்பு, புதிய மின் இணைப்புகள், துணை மின் நிலையங்களின் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் கூடுதல் திறனுடனும், விரைவாகவும் மேற்கொள்ள இயலும் .</p><h2>முக்கியமான மைல்கல்</h2><p>இப்பதவி உயர்வு பெற்றுள்ள பொறியாளர்கள், தமிழ்நாட்டின் மின்கட்டமைப்பை மேலும் மேம்படுத்துவதிலும், பொதுமக்களுக்கு தடையற்ற மற்றும் தரமான மின் விநியோக சேவையை வழங்குவதிலும் முக்கியப் பங்காற்றுவார்கள் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.</p><p>மின்வாரிய ஊழியர்களின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருவதாகவும், நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பதவி உயர்வு மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வெளிப்படையான </a>முறையில் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p>இந்நடவடிக்கை, தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றும் பொறியாளர்களின் தொழில் முன்னேற்றத்தை உறுதி செய்வதோடு, ஊழியர்களின் மன உறுதியையும், பணித் திறனையும் மேலும் உயர்த்தும் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்யும் அரசு மருத்துவமனை நர்சுகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-hospital-nurses-working-wearing-request-cards</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-hospital-nurses-working-wearing-request-cards#comments</comments><guid isPermaLink="false">40a3dc58-ab6c-428d-a463-50e6713cb1e0</guid><pubDate>Mon, 03 Aug 2026 05:25:43 +0000</pubDate><atom:updated>2026-08-03T05:25:43.054Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசு மருத்துவமனை,Nurse,Govt Hospitals,நர்சுகள்,நர்சுகள் போராட்டம்,Nurse protest</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/dccdpokv/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/dccdpokv/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>கோரிக்கை அட்டை</h2><p>தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிடக் கோரி தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கம் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரசாணை 204-ஐ ரத்து செய்யவும், ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிடவும் கோரி கடந்த 29.7.2026 முதல் 30.7.2026 வரை 3 நாட்கள் நர்சுகள் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்தனர். </p><p>இந்நிலையில் அரசாணை 204-ஐ ரத்து செய்வது தொடர்பாகவோ, ஆட்குறைப்பு நடவடிக்கையை கைவிடுவது தொடர்பாகவோ அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த திட்டமும் செயல்பாடோ இல்லாத காரணத்தால் ஏற்கனவே அறிவித்திருந்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கோரிக்கை கடிதம் வழங்கும் இயக்கத்துடன் சேர்த்து  கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்யும் இயக்கத்தையும் இன்று முதல் 5-ம் தேதி வரை 3 நாட்கள் தொடர முடிவு செய்யப்பட்டது. </p><h2>அரசுக்கு வேண்டுகோள்</h2><p>அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் நர்சுகள், மீண்டும் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். தங்களுடைய கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>காவல்துறையினரின் தீர்க்கப்படாத குறைகளை களைய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/unresolved-grievances-of-police-personnel-must-be-addressed-anbumani-urges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/unresolved-grievances-of-police-personnel-must-be-addressed-anbumani-urges#comments</comments><guid isPermaLink="false">692dc9db-e895-4117-806c-22910ac2b5b0</guid><pubDate>Mon, 03 Aug 2026 05:22:51 +0000</pubDate><atom:updated>2026-08-03T05:22:51.909Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,police,காவல்துறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/hrewskif/anbu.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/hrewskif/anbu.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;</p><p>காவல்துறையினரின் பதவி உயர்வு தொடர்பாக நியாயத்தின் அடிப்படையில் கொள்கை முடிவு எடுப்பதற்கு  பதிலாக, அனைத்து சிக்கல்களையும் நீதிமன்ற வழக்குகள் மூலம் எதிர்கொள்வதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருவதால், பல்லாயிரக்கணக்கான காவல்துறையினருக்கு பதவி உயர்வு கிடைக்காத நிலை உருவாகி உள்ளது. காவல்துறையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதியும், நிவாரணமும் வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த த.வெ.க.  அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவது  நியாயமல்ல.</p><p>கொள்கை முடிவுகளை எடுப்பதில் கடந்த ஆட்சியாளர்களும், இன்றைய ஆட்சியாளர்களும் இழைத்த தவறுகளாலும், தவறுகளை சரி செய்வதில் ஆர்வம் காட்டாததாலும் ஏற்பட்ட அநீதியின் வரலாறு 1994&amp;ஆம்  ஆண்டில் தொடங்கி 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன் பாதிக்கப்பட்ட காவல் ஆய்வாளர்களுக்கு நீதி வழங்கப்படாததால், அதன்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட காவல்துறையினருக்கும் நீதி கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. அவர்களுக்கு நீதி வழங்குவதில் அரசுகளும் ஆர்வம் காட்டவில்லை.</p><p>தமிழக காவல்துறைக்கு 1198 சார் ஆய்வாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை 1994&amp;95ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டு, போட்டித் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் 500 பேருக்கு 1996&amp;ஆம் ஆண்டிலும், 600 பேருக்கு 1997&amp;ஆம் ஆண்டிலும் பணி ஆணைகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள 98 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்படாத நிலையில், அடுத்த ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டு 1998&amp;99ஆம் ஆண்டில் 968 சார் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், 1994&amp;95 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 98 சார் ஆய்வாளர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படாததை சட்டப்பேரவையில் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து அவர்களுக்கு 22.05.2000&amp;ஆம் நாளில் நியமன ஆணை  வழங்கப் பட்டது. ஆனால், அவர்களுக்கு 1994&amp;95ஆம் ஆண்டின் பணி மூப்பு வழங்கப்படாதது தான் சிக்கல் ஆகும்.</p><p>அதைவிட பெரிய அநீதி என்னவென்றால், 1994&amp;95ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டு 2000&amp;ஆம் ஆண்டில்  நியமிக்கப்பட்ட 98 சார் ஆய்வாளர்களில் இருவருக்கு மட்டும் 1995&amp;ஆம் ஆண்டின் பணிமூப்பு வழங்கப்பட்டு    காவல் ஆய்வாளராகவும், காவல் துணை கண்காணிப்பாளராகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டது. மீதமுள்ள  96 பேர் காவல் ஆய்வாளர் என்ற நிலைக்கு மட்டுமே உயர்ந்துள்ளனர். அவர்களின் 46 பேர் ஓய்வு பெற்று விட்ட நிலையில், மீதமுள்ள 50 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். அவர்களும் 3 ஆண்டுகளில் ஓய்வு பெறுவார்கள்.</p><p>இவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி அவர்களுடன் நிற்கவில்லை. அவர்களுக்குப் பிறகு இன்று வரை பணியில் சேர்ந்த அனைத்து காவல் சார் ஆய்வாளர்களுக்கும் அநீதி தொடர்கிறது. இவர்களுக்குப் பிறகு 1998&amp;99ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட 968 காவல் சார் ஆய்வாளர்களுக்கு 2008&amp;ஆம் ஆண்டில் ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில், 2020&amp;21ஆம் ஆண்டில் துணை கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதேபோல், 2004&amp;ஆம் ஆண்டில் சார் ஆய்வாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு இப்போது துணை கண்காணிப்பாளர்களாகவும், 2016&amp;ஆம் ஆண்டில் தேர்வான ஆய்வாளர்களுக்கு இப்போது  ஆய்வாளர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பதவி உயர்வு வழங்கப்படவில்லை.</p><p>அதற்கான காரணம், 1994&amp;95ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டு 2000&amp;ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டவர்களில் மணிமாறன் உள்ளிட்ட சிலர், தங்களுக்கு 1995-ஆம் ஆண்டு பணிமூப்பு வழங்க ஆணையிடக் கோரி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடை தான். இந்தத் தடை வரும் 10&amp;ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கிடைக்காததற்கு காரணம் அவர்கள் செய்த தவறு அல்ல... மாறாக அரசு செய்த தவறு தான். 1994&amp;95ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1198 காவல் சார் ஆய்வாளர்களுக்கு ஒரே கட்டமாக பணி ஆணை வழங்கப்பட்டிருந்தாலோ அல்லது ஒரே பணி மூப்பு வழங்கப் பட்டிருந்தாலோ இந்த சிக்கல் எழுந்திருக்காது; இரு தலைமுறை அதிகாரிகள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.</p><p>காவல்துறை பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 6 ஆண்டுகள் கழித்து பணியில் சேருவதும், 6 முதல்  9 ஆண்டுகளாக பதவி உயர்வு கிடைக்காமல் எத்தகைய மனவலியை ஏற்படுத்தும் என்பது அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும். இந்தத் தவறை அரசு தான் சரி செய்ய வேண்டும். 1994&amp;95ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டு 2000&amp;ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்தவர்களுக்கு உரிய பணிமூப்பும், பதவி உயர்வும் வழங்குவது தான் இந்த சிக்கலுக்குத் தீர்வு ஆகும். அதை செய்வதுடன் 1998&amp;99, 2004, 2016 ஆகிய ஆண்டுகளில் காவல் சார்&amp;ஆய்வாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும் உரிய பணிமூப்பும், பதவி உயர்வும் வழங்கப்பட வேண்டும். இந்த நிலைப்பாட்டை இது குறித்த வழக்கு வரும் 10&amp;ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது அரசு தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் 30 ஆண்டு கால சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும்.</p><p>அதேபோல், காவல்துறை பணிகளில் சேருவதற்கு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், காவல் சார் ஆய்வாளர் பணிக்கான தேர்வில் பணியில் உள்ள காவலர்களுக்கு  ஒதுக்கப்பட்டுள்ள 20% இடங்களில் போட்டியிடும் தமிழ்வழிக் கல்வியில் படித்த காவலர்களுக்கு அதற்கான இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. ஏற்கனவே ஒருமுறை தமிழ்வழிக் கல்விக்கான இட ஒதுக்கீட்டைப் பெற்றவர்கள், அதே துறையின் பதவி உயர்வு பெறுவதற்கான தேர்வில் மீண்டும் அனுபபிக்க முடியாது என்று கூறப்படுகிறது. இந்த சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் கடந்த ஜனவரி 23&amp;ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்காததாலும், சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவுக்கு வந்து விட்டதாலும் அந்த சட்டம் காலாவதியாகி விட்டதாகக் கூறப்படுகிறது. இச்சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில், அந்த சட்டத்தை மீண்டும் இயற்றி காவல் சார் ஆய்வாளர் பணிக்கான தேர்வில் துறை சார்ந்த ஒதுக்கீட்டில் போட்டியிடும் தமிழ்வழியில் கற்ற காவலர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.</p><p>காவல்துறையினருக்கு படி வழங்குவதிலும் பாகுபாடு காட்டப்படுகிறது. காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரையிலான நிலையில் உள்ளவர்களுக்கு சிறப்பு ஊதியம், இரவு நேரப் பணிக்கான படிகள், பணி ஆபத்து படிகள் ஆகியவை அதே துறையில் பணியாற்றும் விரல் ரேகை வல்லுனர்களுக்கு வழங்கப்ப்படுவதில்லை. சென்னை, ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகங்களில் பணியாற்றும் விரல்ரேகை பிரிவினருக்கு உணவுப்படி கூட வழங்கப்படுவதில்லை. இந்த பாகுபாடு உடனடியாக களையப்பட வேண்டும்.</p><p>தமிழக அரசு நினைத்தால் காவல் துறையினரின் இந்தக் குறைகள் அனைத்தையும் ஒரே நாளில் தீர்க்க முடியும். இதற்காக சிறப்புக் குழு ஒன்றை அமைத்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை பெற்று காவல்துறையினரின் பதவி உயர்வு உள்ளிட்ட அனைத்துக் குறைகளையும் தமிழக அரசு தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/conditional-bail-for-vilathikulam-dmk-mla-markandeyan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/conditional-bail-for-vilathikulam-dmk-mla-markandeyan#comments</comments><guid isPermaLink="false">dc0333c1-f311-4228-b361-e1248536449f</guid><pubDate>Mon, 03 Aug 2026 05:22:32 +0000</pubDate><atom:updated>2026-08-03T05:22:32.014Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,vilathikulam,விளாத்திகுளம்,நிபந்தனை ஜாமீன்,மார்க்கண்டேயன்,Markandeyan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/llp4wnk9/Markandeyan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மார்க்க்ண்டேயன் எம்.எல்.ஏ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/llp4wnk9/Markandeyan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p> தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த 18-ந் தேதி தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், அவதூறாகவும் பேசினார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை போலீசார் கடந்த 20ம் தேதி கைது செய்தனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மார்க்கண்டேயனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் நெல்லை பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.</p><p>இதையடுத்து, தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தாக்கல் செய்த மனுவை தூத்துக்குடி கோர்ட்டு கடந்த 22ம் தேதி தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தூத்துக்குடி </a>கோர்ட்டில் 2வது முறையாக மார்க்கண்டேயன் மீண்டும் மனு தாக்கல் செய்தார். அந்த  ஜாமீன் மனுவும்   தள்ளுபடி செய்தது.   இதையடுத்து,  திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். </p><h2>நிபந்தனை ஜாமீன்</h2><p>இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட், மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இனிமேல் இதுபோன்று பேசமாட்டேன் என்று உத்தரவாதம் அளிக்க  வேண்டும்: தூத்துக்குடி காவல் நிலையத்தில் நாள்தோறும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். சட்டமன்றம் நடைபெறும் நாளில் மட்டும் கையெழுத்திடுவதில் விலக்கு அளிக்கப்படுகிறது” என்று கூறியுள்ளது.</p><h2>மார்க்கண்டேயன் பேசியது என்ன?</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மார்க்கண்டேயன்</a> பேசியது என்ன? மானங்கெட்ட தமிழ்நாட்டினுடைய முதல் அமைச்சர்.. உன்னைய சட்டமன்றத்திற்குள் வைத்து பார்த்துகுறோம்.. நாங்க என்ன கோமாளி பயல்கள்னு நினைக்கிறீங்களா.. சட்டமன்றத்தை பூட்டுவாராம்.. பூட்டினால் எலும்பு இருக்காது உடைத்துவிட்டுதான் உன்னை அனுப்பி விடுவோம். இவ்வளவு ஒரு கேவலமான ஒரு முதல்வரை தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய வரலாறே பெற்றது இல்லை. என மார்க்கண்டேயன் பேசியிருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>உரிமைகளையும், அரசியலமைப்பையும் காக்க சூழ்ச்சிகளை வீழ்த்தி உறுதியோடு போராடுவோம்! - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-fight-with-determination-to-safeguard-our-rights-and-the-constitution-by-defeating-conspiracies-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-fight-with-determination-to-safeguard-our-rights-and-the-constitution-by-defeating-conspiracies-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">b138a8c7-f724-4d22-a010-f3c3e62c4ee7</guid><pubDate>Mon, 03 Aug 2026 05:19:37 +0000</pubDate><atom:updated>2026-08-03T05:19:37.281Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore MP,தமிழ்நாடு காங்கிரஸ்,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Tagore,tamilnadu congress</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/zzvuaogn/manikam-tagore.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/zzvuaogn/manikam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டின் உரிமைகளையும் இந்திய அரசியலமைப்பையும் காக்க சூழ்ச்சிகளை வீழ்த்தி உறுதியோடு போராடுவோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>மசோதா தோற்கடிப்பு</h2><p>​கடந்த ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில், அவைக்கு வந்திருந்த 528 உறுப்பினர்களில் ஆதரவாக 298 வாக்குகளும் (56.44%), எதிராக 230 வாக்குகளும் பதிவாகின. அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்குத் தேவையான 66.67% (மூன்றில் இரண்டு பங்கு) பெரும்பான்மை கிடைக்காமல், வெறும் 56.44% வாக்குகளை மட்டுமே பாஜக கூட்டணி பெற்றதால், 131-வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவைத் தோற்கடித்து இந்திய ஜனநாயகத்தையும் தமிழ்நாட்டின் உரிமைகளையும் நாம் வெற்றிபெறச் செய்தோம். அன்றைய தினத்தில் அவைக்கு உறுப்பினர்கள் அனைவரும் நேரில் வருகை தந்து வாக்கெடுப்பில் பங்கேற்றதும், எதிர்க்கட்சிகளின் உறுதியான ஒற்றுமையும்தான் அந்தச் சூழ்ச்சியை முறியடித்தது. ஏனெனில், இந்த மசோதாவைத் தோற்கடிக்க நாடாளுமன்ற அவைக்கு உறுப்பினர்கள் நேரில் வருகை தருவது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும்.</p><p>ஆனால், சமீபகாலமாகப் பாஜக தனது அத்துமீறிய ஜனநாயக விரோத முறைகள் மூலம் சிவசேனா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மக்களவையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 540 ஆக உள்ளது. இதில் 66.7% (2/3) பெரும்பான்மைக்கு 360 வாக்குகள் தேவை என்ற நிலையில், மோடி தலைமையிலான NDA கூட்டணிக்கு 318 (58.89%) உறுப்பினர்களும்,  காங்கிரஸ் (98), சமாஜ்வாதி (37), திரிணாமுல் (8) உள்ளிட்ட ஜனநாயகச் சக்திகளைக் கொண்ட INDIA கூட்டணிக்கு 184 உறுப்பினர்களும் உள்ளனர். </p><h2>துணைபோகப் போகிறீர்களா?</h2><p>இங்கு எஞ்சியுள்ள 38 உறுப்பினர்களின் நிலைப்பாடுதான் இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகிறது.</p><p>​இந்த முக்கியமான கட்டத்தில், எஞ்சியுள்ள பிரிவினர் எதிர்த்து வாக்களிப்பதோ அல்லது வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்து விலகியிருப்பதோ மோடி அரசுக்கு மறைமுகமாக 2/3 பெரும்பான்மையைப் பெற்றுத் தரவே வழிவகுக்கும். தமிழ்நாட்டு மக்களும் இந்திய தேசமும் உங்களை உற்றுநோக்கிக் கொண்டிருக்கின்றன. மக்களுக்கு அளித்த வாக்கையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் காக்க கொள்கைப் பிடிப்போடு நிற்கப்போகிறீர்களா? அல்லது மோடியின் அரசியலமைப்புத் தாக்குதலுக்குத் துணைபோகப் போகிறீர்களா?</p><h2>தப்பிக்கவே முடியாது</h2><p>​வரலாற்றில் துரோகத்தின் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அடையாளமாக </a>"எட்டப்பன்" எப்படி நூற்றாண்டு கடந்தும் நினைவுகூரப்படுகிறானோ, அதேபோலத் தமிழ்நாட்டின் உரிமைகளையும் இந்திய அரசியலமைப்பையும் அடகுவைத்து மோடி அரசுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவும் எவரும் வரலாற்றுப் பிழையிலிருந்து தப்பிக்கவே முடியாது. தமிழ்நாட்டின் குரலாய், மக்களாட்சியின் காவலனாய் நாம் இறுதிவரை களத்தில் நிற்போம்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள்; அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/freedom-fighter-dheeran-chinnamalai-remembrance-day</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/freedom-fighter-dheeran-chinnamalai-remembrance-day#comments</comments><guid isPermaLink="false">1ec3614c-5ae0-456f-9cf7-a9d011d029ea</guid><pubDate>Mon, 03 Aug 2026 05:16:17 +0000</pubDate><atom:updated>2026-08-03T05:16:17.371Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நினைவு நாள்,Memorial Day,தீரன் சின்னமலை,Theeran Chinnamalai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/t8k0m0vh/tntsa.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/t8k0m0vh/tntsa.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளை முன்னிட்டு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.</p><p>சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.  இதனையொட்டி, தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்யின் உத்தரவின்படி, சென்னையின் கிண்டி பகுதியில் திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் இன்று மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.</p><p>இந்நிகழ்வில் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி (ம) விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் ரா.குமார், சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார், சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அருள் பிரகாசம், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.</p> ]]></content:encoded></item><item><title>சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-allowed-to-bathe-at-suruli-falls</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-allowed-to-bathe-at-suruli-falls#comments</comments><guid isPermaLink="false">7ab0f9ed-ee1f-4858-8e69-7d8c884c7d89</guid><pubDate>Mon, 03 Aug 2026 05:08:13 +0000</pubDate><atom:updated>2026-08-03T05:08:13.681Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tourists,சுற்றுலா பயணிகள்,Suruli Falls,சுருளி அருவி,குளிக்க அனுமதி,allowed to bathe</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/zplntm5q/suruli-falls.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/zplntm5q/suruli-falls.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>உத்தமபாளையம்,</p><p>ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள தூவானம் ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் சுமார் 9 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதி வழியாக வந்து கம்பம் அருகே சுருளி அருவியாக கொட்டும். சுருளி அருவிக்கு தினந்தோறும் தேனி மற்றும் திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.</p><h2>சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி</h2><p>ஹைவேவிஸ் மலைப்பகுதியில் சமீபத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF">சுருளி அருவி</a>யில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் கடந்த 2 நாட்களாக தடைவிதித்து இருந்தனர். இந்நிலையில் தற்போது அருவியில் நீர்வரத்து சீரானதை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு பின் இன்று(திங்கள்கிழமை) காலையில் இருந்து அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலில் ஈடுபட்டனர். </p>]]></content:encoded></item><item><title>அரசியல் சூட்டை தணித்து அள்ளித்தந்த வானம்: தமிழகம் நோக்கி பொங்கி வரும் காவிரி நீர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-sky-that-calmed-the-political-heat-cauvery-water-flowing-towards-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-sky-that-calmed-the-political-heat-cauvery-water-flowing-towards-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">e45affa6-8d80-42b3-82d0-02a5432e66dd</guid><pubDate>Mon, 03 Aug 2026 05:01:19 +0000</pubDate><atom:updated>2026-08-03T05:01:19.374Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,மேட்டூர் அணை,Mettur dam,காவிரி நீர்,Karnataka,கர்நாடகா,காவிரி மேலாண்மை ஆணையம்,Cauvery water,Cauvery Management Authority,கபினி அணை,குறுவை சாகுபடி,kuruvai cultivation,Kabini Dam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/q6w5xjpb/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/q6w5xjpb/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் தமிழகம் நோக்கி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.</p><h2>குறுவை சாகுபடி பாதிப்பு</h2><p>தமிழகத்தில் முக்கிய அணைகளில் ஒன்றான மேட்டூர் அணையில் 79 அடிக்கும் குறைவாக தண்ணீர் இருந்த காரணத்தால், இந்த ஆண்டு ஜூன் 12-ந் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. </p><p>இதனால், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி முழுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், கர்நாடகம் தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி நீரை தமிழகம் கேட்டது. ஆனால், வழக்கம் போல் கர்நாடகம் மறுத்துவிட்டது. </p><h2>கர்நாடகம் மறுப்பு </h2><p>இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 28-ந் தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் தமிழக அரசு காவிரியில் கர்நாடகம் அரசு தண்ணீர் திறந்துவிட தனது வாதங்களை அழுத்தமாக முன்வைத்தது. இதனைத் தொடர்ந்து, 15 நாட்களுக்கு காவிரியில் வினாடிக்கு 3,500 கனஅடி வீதம், அதாவது 4½ டி.எம்.சி. தண்ணீரை தமிழ்நாட்டிற்கு திறந்துவிட கர்நாடகத்தை காவிரி ஒழுங்காற்றுக்குழு அறிவுறுத்தியது. ஆனால், அதற்கும் கர்நாடகம் மறுத்துவிட்டது. </p><h2>காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு</h2><p>அதுமட்டுமல்லாமல், காவிரி மேலாண்மை ஆணையத்தில் இதுகுறித்து முறையிடுவோம் என்றுகூறி, கர்நாடக அரசு முறையிட்டது. இந்த முறையீட்டின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த மாதம் (ஜூலை) 24-ந் தேதி மீண்டும் கூடியது. அப்போது கர்நாடகத்தின் வாதத்தை நிராகரித்த ஆணையம், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி நடந்துகொள்ள கர்நாடக அரசை வலியுறுத்தியதுடன், காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்த அளவில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடவும் கர்நாடகத்துக்கு உத்தரவிட்டது.</p><h2>இருமாநில முதல்-மந்திரிகள் சந்திப்புக்கு எதிர்ப்பு</h2><p>இந்த உத்தரவுக்கு கர்நாடக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தன. இதற்கிடையே, தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் - கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் ஆகியோர் இன்று பெங்களூருவில் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டது. இதுகுறித்து, இரு மாநில முதல்-மந்திரிகளும், தங்கள் மாநில நீர்வளத்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். இதற்கு மத்தியில், தமிழக எதிர்க்கட்சிகள் இருமாநில முதல்-மந்திரிகள் சந்திப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தன.</p><h2>அரசியல் சூட்டை தணித்த மழை</h2><p>கர்நாடகத்திலும் எதிர்ப்பு வலுத்ததால், கர்நாடக மாநில முதல்-மந்திரி டி.கே.சிவகுமார், தமிழக முதல்-அமைச்சர் இப்போது வரவேண்டாம் என்று கூறிவிட்டார். இப்படி, இருமாநில அரசியலில் அனல் பறந்து கொண்டிருந்த நேரத்தில், அரசியல் சூட்டை தணிக்கும் வகையில் கடந்த மாதம் (ஜூலை) 31-ந் தேதி, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.</p><p>இதனால், பாதுகாப்பு கருதி கபினி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தற்போதைய நிலையில், தமிழகத்திற்கு 28 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பொங்கி வந்த காவிரி இப்போது எல்லையை கடந்து தமிழக மண்ணை முத்தமிட்டு இருக்கிறது. இதனால்,டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.</p><h2>நீர்வரத்து அதிகரிக்கும்</h2><p>தற்போதைய நிலையில், கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜசாகரில் 91.8 அடியும் (மொத்த கொள்ளளவு 124.8 அடி), கபினியில் 56.28 அடியும் (65 அடி), ஹேரங்கியில் 127.55 அடியும் (129 அடி), ஹேமாவதியில் 100.98 அடியும் (117 அடி) தண்ணீர் உள்ளது.</p><p>கர்நாடக அணைகள் வேகமாக நிரம்புவதால், தமிழகத்திற்கான தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில், மேட்டூர் அணையில் 73.82 அடி கொள்ளளவு தண்ணீர் உள்ளது. காவிரியில் திறந்துவிடப்பட்ட நீர் மேட்டூர் அணையை அடையும்போது, தண்ணீர் அளவு வேகமாக உயரும். டெல்டா பாசன பகுதியில், குறுவை சாகுபடி தப்பினாலும் அடுத்து வரும் சம்பா சாகுபடிக்காவது மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட முடியும்.</p>]]></content:encoded></item><item><title>சேலம்:  தனியார் ஆலையில் தீ விபத்து, வாயுக்கசிவு; 11 பேர் மருத்துவமனையில் அனுமதி
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-fire-accident-gas-leak-11-hospitalised</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-fire-accident-gas-leak-11-hospitalised#comments</comments><guid isPermaLink="false">85abb6bf-c92a-4bf0-a6fe-f3f8d2d71533</guid><pubDate>Mon, 03 Aug 2026 04:42:13 +0000</pubDate><atom:updated>2026-08-03T04:42:13.723Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,சேலம்,gas leak,வாயுக்கசிவு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/o0ly5u5j/tnsaf.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ai image]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/o0ly5u5j/tnsaf.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சேலம்</p><p>சேலத்தில் தனியார் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து, வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><p>சேலம் ஆத்தூரில் தனியார் ஜவ்வரிசி ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது.  இதில் மரவள்ளி கிழங்குகளை அரவை செய்து ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவு உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்படுகிறது.  இந்த நிலையில், நேற்று மாலை 6 மணியளவில் ஆலையில் மின் கசிவு ஏற்பட்டது.  இதில், சாக்கு பைகள் எரிந்து, தீ விபத்து ஏற்பட்டது.</p>  <h2>தீ விபத்து</h2><p>கிழங்குகளை சுத்தம் செய்வதற்கு, மூட்டைகளில் குளோரின் பவுடர் வைக்கப்பட்டிருந்தது. தீ விபத்து தொடர்ச்சியாக குளோரின் பவுடர் பகுதியில் இருந்து புகை எழுந்தது.  இதனால், அதிர்ச்சியான தொழிலாளர்கள், அதனை தணிக்க தண்ணீரை ஊற்றியுள்ளனர்.</p>  <h2>வாயுக்கசிவு</h2><p>அபபோது, குளோரின் பவுடர், புகையுடன் சேர்ந்து வாயுக்கசிவாக மாறியது.  இதுபற்றி தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சென்று, தீ மற்றும் வாயுக்கசிவை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  வாயுக்கசிவு பாதிப்பால், 11 பேருக்கு மூச்சுத்திணறல், சுவாச பாதிப்பு, மயக்கம் போன்றவை ஏற்பட்டன.</p><p>அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  2 மணிநேரம் வரை போராடி தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.</p> ]]></content:encoded></item><item><title>தீரன் சின்னமலையின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம் - முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-pay-tribute-to-the-bravery-and-sacrifice-of-theeran-chinnamalai-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-pay-tribute-to-the-bravery-and-sacrifice-of-theeran-chinnamalai-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">cb8e6b84-477e-47f1-87da-48a489142d5b</guid><pubDate>Mon, 03 Aug 2026 04:32:25 +0000</pubDate><atom:updated>2026-08-03T04:32:25.047Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Memorial Day,நினைவு தினம்,தீரன் சின்னமலை,Theeran Chinnamalai,புகழஞ்சலி,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/w6b4bl4a/73.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/w6b4bl4a/73.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முதல்-அமைச்சர் விஜய் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>தீரன் சின்னமலை நினைவு நாள்</h2><p>ஆங்கிலேயரின் அடக்குமுறையை எதிர்த்து, விடுதலை முழக்கமிட்ட சுதந்திரப் போராட்ட வீரர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">தீரன் சின்னமலை </a>அவர்களின் நினைவு நாளில் அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.</p><h2>தியாக உணர்வு</h2><p>கிழக்கிந்திய கம்பெனியின் வரி வசூலையும், அந்நிய ஆதிக்கத்தையும் எதிர்த்ததோடு, தாய்நாட்டின் விடுதலைக்காக தனது இன்னுயிரைத் தியாகம் செய்த தீரன் சின்னமலையின் வீரம், தன்னம்பிக்கை, தேசப்பற்று மற்றும் தியாக உணர்வு காலம் கடந்தும் நம் தலைமுறைகளை ஊக்குவித்து வருகிறது. </p><p>சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தன் உயிர் மூச்சைக் கொடையாகக் கொடுத்த மாவீரனின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்!</p><p>இவ்வாறு அதில் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மாவீரர் தீரன் சின்னமலையின் புகழ் காலம் கடந்தும் நிலைத்திருக்கும்: நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/famous-hero-dheeran-chinnamalai-will-remain-forever-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/famous-hero-dheeran-chinnamalai-will-remain-forever-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">72c23737-0738-479f-99aa-99fa12f75969</guid><pubDate>Mon, 03 Aug 2026 04:28:14 +0000</pubDate><atom:updated>2026-08-03T04:28:14.601Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,தீரன் சின்னமலை,Dheeran Chinnamalai</media:keywords><media:content height="288" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/023h7zjp/9.gif" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/023h7zjp/9.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தீரன் சின்னமலையின் 221-வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”தமிழ் மண்ணின் வீர வரலாற்றில் அழியாத முத்திரை பதித்த மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளில், அந்நிய ஆட்சியின் அடக்குமுறைக்கு அடிபணியாமல், ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் பேராதிக்கத்தை துணிச்சலுடன் எதிர்த்து, தாய்நாட்டின் விடுதலைக்காகத் தம் உயிரையே அர்ப்பணித்த அவரது ஒப்பற்ற வீரத்தையும் தியாகத்தையும் மரியாதையுடன் நினைவுகூர்கிறோம்.</p><p>மக்களின் உரிமைகளையும், சுயமரியாதையையும் காக்க போராடிய அவரது அசைக்க முடியாத மன உறுதியும், தாயகத்தின் மீது கொண்ட அளப்பரிய பற்றும், தலைமுறைகள் தோறும் விடுதலை உணர்வை விதைக்கும் ஒளிவிளக்காகத் திகழ்கின்றன.</p><p>மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் புகழ் காலம் கடந்தும் நிலைத்திருக்கும்; அவரது விடுதலைச் சிந்தனையும் வீர மரபும் தமிழர் நெஞ்சங்களில் என்றும் உயிர்ப்புடன் வாழும்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-a-power-outage-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-a-power-outage-tomorrow#comments</comments><guid isPermaLink="false">6ab0df42-1c32-409a-95d3-e1ca8b976336</guid><pubDate>Mon, 03 Aug 2026 04:10:10 +0000</pubDate><atom:updated>2026-08-03T04:10:10.524Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மின் தடை,power cut</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/hhpvxwa9/ep.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/hhpvxwa9/ep.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னையில் 04.08.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். </p><h2>வேளச்சேரி</h2><p>சாரதி நகர், தாம்பரம் வேளச்சேரி பிரதான சாலை, மாதவமணி அவென்யூ, சீதாராம் நகர்.</p><h2>அடையாறு</h2><p>காந்தி மண்டபம் சாலை, சர்தார் பட்டேல் சாலை, கோட்டூர்புரம், ஸ்ரீ நகர் காலனி, வெங்கடாபுரம், சின்னமலை, தரமணி, எல்லையம்மன் கோயில் தெரு, காணகம், கலிகுன்றம், பள்ளிப்பட்டு, ஸ்ரீராம் நகர், நேரு நகர் 1வது முதல் 4வது தெருக்கள் வரை, கே.பி. நகர் 1 வது முதல் 5வது பிரதான சாலைகள், அடையாறு 6வது பிரதான சாலை, கோவிந்தராஜபுரம், பக்தவத்சலம் நகர் 1வது முதல் 5வது சாலைகள்.</p><h2>முடிச்சூர்</h2><p>அஷ்டலட்சுமி நகர், மகாலட்சுமி நகர், குமரன் நகர், ஏ.என். காலனி, மணிமங்கலம் பிரதான சாலை, சாஸ்திரி நகர், கணேசபுரம் பிரதான சாலை.</p><h2>மேடவாக்கம்</h2><p>பெரும்பாக்கம் சேகரன் மால், கைலாஷ் நகர், ஸ்ரீ பெருமாள் நகர், அந்தோணி நகர், பஜனை கோயில் தெரு, நுக்கம்பாளையம் சாலை, மாடம்பாக்கம் கண்ணதாசன் தெரு, கருணாநிதி 1வது முதல் 7வது தெருக்கள் வரை, விசாலாட்சி நகர், ஜான் தெரு, தாமஸ் தெரு, விக்னராஜபுரம் 6வது தெரு, கோபாலபுரம் நகர், விக்னராஜபுரம் மோஹி ப்ளோரன்ஸ், குரு கணேஷ் நகர், பார்த்தசாரதி நகர், பள்ளிக்கரணை, ராஜலட்சுமி நகர், வள்ளல் பாரி நகர், சாய் பாலாஜி நகர்,கிருஷ்ணா நகர், துளுக்காத்தம்மன் கோயில் பிரதான சாலை, அருண் நகர், வெங்கடேஸ்வரா நகர், ஜெயபால் நகர், மல்லிகேஸ்வரன் நகர், ஆதிசாமி நகர்.</p><h2>செயின்ட் தாமஸ் மவுண்ட்</h2><p>ராமர் கோயில் தெரு, மவுண்ட் பூந்தமல்லி சாலை, நசரத்புரம், கணபதி காலனி, வசந்தம் நகர், கலைஞர் நகர், தண்டுமா நகர், போலீஸ் குடியிருப்பு, செவன் ஹில்ஸ் தெரு, மீனம்பாக்கம், பாண்டியன் தெரு, மாரிசன் 1வது முதல் 6வது தெரு வரை, திருவள்ளுவர் நகர், எம்.கே.என் சாலை, குமரன் நகர், குளத்துமேடு, மாங்காளியம்மன் கோயில் தெரு, டிபன்ஸ் காலனி, பர்மா காலனி, கரையார் கோயில் தெரு, நார்த் பரேட் சாலை, இந்திரா நகர், அதிகாரி பயிற்சி அகாடமி, நேவி ரெசிடென்சி பகுதி, வுட்கிரீக் கன்ட்ரி, துளசிங்கபுரம், மாரியாபுரம், மாத்தியாஸ் நகர், ஐரோப்பியன் லைன், பஜார் சாலை, மேட்டு தெரு, ஆர்காட் பேட்டை, ஹாப்மேன் 1வது மற்றும் 2வது தெரு, வி.ஜி.பி முர்பி சதுக்கம், நோபல் தெரு, கண்ணன் காலனி, ஆசிரியர் காலனி, எம்.ஜி.ஆர் நகர்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சாலையோர வியாபாரியின் உழைப்பை பாராட்டிய பிரதமர் மோடி; நயினார் நாகேந்திரன் பெருமிதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pm-modi-praises-street-vendors-hard-work-nainar-nagendran-expresses-pride</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pm-modi-praises-street-vendors-hard-work-nainar-nagendran-expresses-pride#comments</comments><guid isPermaLink="false">3cabeffc-b44b-470a-8cfd-42c87e74085a</guid><pubDate>Mon, 03 Aug 2026 04:05:03 +0000</pubDate><atom:updated>2026-08-03T04:05:03.926Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,பிரதமர் மோடி,PM Modi,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/ciyz8t9x/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/ciyz8t9x/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மத்திய அரசின் திட்டம் மூலம் தொழிலை வெற்றிகரமாக விரிவுபடுத்தியுள்ள தேசியமணியின் கடிதத்திற்கு பிரதமர் மோடி நேரடியாகப் பாராட்டுக்கடிதம் அனுப்பிக் கவுரவித்திருப்பது, சாமானிய மக்கள் மீது அவர் கொண்டுள்ள எல்லையற்ற அன்பையும், அக்கறையையும் காட்டுகிறது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>கடனுதவி திட்டம்</h2><p>நாட்டில் உள்ள சாலையோர வியாபாரிகள் எவ்விதப் பிணையமும் இன்றி எளிய முறையில் கடனுதவி பெற்றுத் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடியால் “ஸ்வநிதி" (PM SVANidhi) திட்டம் கொண்டு வரப்பட்டது. கொரோனா போன்ற இக்கட்டான காலகட்டத்தில் நலிவடைந்த சிறு வியாபாரிகளுக்குப் பொருளாதார ரீதியாகப் பேருதவியாக அமைந்த இத்திட்டம், இன்று லட்சக்கணக்கான மக்களின் சுயதொழில் கனவை நனவாக்கி, அவர்களைத் தற்சார்புடையவர்களாக மாற்றி வெற்றியடையச் செய்துள்ளது.</p><h2>பிரதமர் பாராட்டு கடிதம்</h2><p>ஸ்வநிதித் திட்டத்தின் கீழ் பெற்ற கடனைத் தனது கடின உழைப்பின் மூலம் நேர்மையுடன் உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்தி, தனது தொழிலை வெற்றிகரமாக விரிவுபடுத்தியுள்ள தேசியமணியின் கடிதத்திற்கு பாரதப் பிரதமர் மோடி நேரடியாகப் பாராட்டுக்கடிதம் அனுப்பிக் கவுரவித்திருப்பது, சாமானிய மக்கள் மீது அவர் கொண்டுள்ள எல்லையற்ற அன்பையும், அக்கறையையும் காட்டுகிறது.</p><h2>நயினார் நாகேந்திரன் பாராட்டு</h2><p>இவ்வாறு தனது கடின உழைப்பாலும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நேர்மையாலும் </a>முன்னேறியுள்ள தேசியமணிக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் இந்த அர்ப்பணிப்பும் கடமை உணர்வும் மற்றவர்களுக்கும் சிறந்த வழிகாட்டியாக அமையும் என்பதில் ஐயமில்லை. அவர் மேலும் பல வெற்றிகளைப் பெற்று, வளமான வாழ்வு வாழ மனதார வாழ்த்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>அதிக கனிமங்களுக்கு கூடுதல் கட்டணம் செலுத்தி விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-allows-sale-of-more-minerals-at-additional-cost</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-allows-sale-of-more-minerals-at-additional-cost#comments</comments><guid isPermaLink="false">7256fde6-97b3-4a74-aefd-7a33871d8057</guid><pubDate>Mon, 03 Aug 2026 04:00:26 +0000</pubDate><atom:updated>2026-08-03T04:00:26.376Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt,கனிமங்கள்,ஜல்லி,கிரானைட்,Granite Quarry,Mines,jalli</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/qrdnuwfp/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/qrdnuwfp/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>கனிமங்கள்</h2><p>தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட கனிமத்துடன் அதிக மதிப்புள்ள வேறு கனிமங்கள் இருப்பது கண்டறியப்பட்டால், அதற்கான கூடுதல் கட்டணத்தை செலுத்தி அவற்றையும் விற்பனை செய்ய அனுமதி அளிக்கும் வகையில் இந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் இயற்கை வளங்கள் துறை வெளியிட்டுள்ள அரசிதழ் அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-</p><h2>சிறு கனிம விதிகளில் திருத்தம்</h2><p>சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்கு முறை) சட்டம், 1957-ன் கீழ் தமிழக சிறு கனிம சலுகை விதிகள், 1959-ல் தமிழக அரசு திருத்தம் செய்துள்ளது. அதன்படி, கட்டிடம் மற்றும் சாலை அமைக்கும் பொருட்களுக்கான கற்கள் தொடர்பான பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை இடம் பெற்றிருந்த 'கிரானைட் அல்லாத கற்கள்' என்ற வகைப்பாட்டுக்கு பதிலாக, இயற்கையாக சிதைந்த கருங்கல், கல் துண்டுகள், பெரிய பாறைக்கற்கள், உடைக்கப்பட்ட மற்றும் நொறுக்கப்பட்ட கற்கள், மெட்டல் ஜல்லி, சாலை அமைப்பதற்கான கற்கள் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளன.</p><h2>ஆய்வக பரிசோதனை</h2><p>சுரங்க குத்தகைதாரர் ஒருவர் தனது அனுமதிக்கப்பட்ட சுரங்க பகுதியில் கிடைக்கும் இயற்கையாக சிதைந்த கருங்கல்லை விற்பனை செய்ய விரும்பினால், அதுகுறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அந்த கல்லில் என்னென்ன கனிமங்கள் உள்ளன என்பதை கண்டறிய புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குனரகத்தின் ஆய்வகத்தில் மாதிரி பரிசோதனை செய்யப்பட வேண்டும். அந்த ஆய்வில் அதிக மதிப்புள்ள கனிமங்கள் இருப்பது கண் டறியப்பட்டால், சட்டம் மற்றும் விதிகளின்படி அந்த கனிமங்களை விற்பனை செய்ய வேண்டும்.</p><h2>கூடுதல் கட்டணம்</h2><p>அதேபோன்று, அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட வேறு கனிமங்கள் அந்தக் கல்லில் இருப்பது கண்டறியப்பட்டால், அவற்றுக்கான கூடுதல் கட்டணத்தை செலுத்திய பின்னர், இயற்கையாக சிதைந்த கருங்கல்லாகவே அதனை விற்பனை செய்ய வும் அனுமதி வழங்கப்படும். இதற்கான திருத்தத்தை தமிழக அரசு கடந்த ஜூலை 23-ந் தேதி அமல்படுத்தி அரசிதழில் வெளியிட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தீரன் சின்னமலை நினைவு தினம் - வானதி சீனிவாசன் புகழஞ்சலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tribute-to-theeran-chinnamalai-on-his-death-anniversary-vanathi-srinivasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tribute-to-theeran-chinnamalai-on-his-death-anniversary-vanathi-srinivasan#comments</comments><guid isPermaLink="false">216f35b7-2db8-4f2f-8401-b8cd40097f33</guid><pubDate>Mon, 03 Aug 2026 03:55:09 +0000</pubDate><atom:updated>2026-08-03T03:55:09.033Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,Memorial Day,நினைவு தினம்,தீரன் சின்னமலை,Theeran Chinnamalai,புகழஞ்சலி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/xvqh9vim/72.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/xvqh9vim/72.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>தீரன் சின்னமலை நினைவு தினம்</h2><p>கொங்கு மண்ணின் வீரமகனும், ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதிக்கத்திற்கு அஞ்சாமல் எதிர்த்து நின்ற மாமன்னரான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">தீரன் சின்னமலை</a> அவர்களின் நினைவு தினத்தில், நாட்டின் விடுதலைக்காக அவர் ஆற்றிய ஒப்பற்ற தியாகங்களையும், மக்கள் நலப் பணிகளையும் நினைவுகூர்ந்து போற்றுவோம்.</p><p>இளைஞர்களின் மனதில் வீரம் விதைத்து, விடுதலை வேட்கையைத் தூண்டிய தீரன் சின்னமலை அவர்களின் வீரமும், தியாகமும், தேசப்பற்றும் என்றும் நம் வரலாற்றில் அழியாப் புகழாக நிலைத்திருக்கும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>