<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 13 Aug 2026 10:17:40 +0000</lastBuildDate><item><title>தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/local-holiday-for-thoothukudi-district-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/local-holiday-for-thoothukudi-district-tomorrow#comments</comments><guid isPermaLink="false">b5edbe9f-64d3-4637-9c3e-d6e1fcfcd3f0</guid><pubDate>Thu, 13 Aug 2026 09:53:56 +0000</pubDate><atom:updated>2026-08-13T09:53:56.061Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Local Holiday,Tuticorin,உள்ளூர் விடுமுறை,தூத்துக்குடி செய்திகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/5j7bwf1d/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உள்ளூர் விடுமுறை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/5j7bwf1d/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>காமநாயக்கன்பட்டி பரலோக மாதா பேராலய விண்ணேற்பு பெருவிழாவையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>மாதா பேராலயம்</h2><p>தூத்துக்குடி மாவட்டம் காமநாயக்கன்பட்டியில் புகழ்பெற்ற பரலோக மாதா பேராலயம் அமைந்துள்ளது. இந்த பேராலயத்தின் விண்ணேற்பு பெருவிழா ஆண்டுதோறும் மிக விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டுக்கான விண்ணேற்பு பெருவிழாவையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை (வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-</p><h2>உள்ளூர் விடுமுறை</h2><p>காமநாயக்கன்பட்டி பரலோக மாதா பேராலய விண்ணேற்பு பெருவிழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு (நாளை) ஆகஸ்ட் 14-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது.</p><h2>சனிக்கிழமை வேலை நாள்</h2><p>இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பின்னர் ஒரு சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாவட்ட காங்கிரஸ்  கமிட்டிகள் சீரமைக்கப்பட்டு புதிய தலைவர்கள் நியமனம் - மாணிக்கம் தாகூர் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/district-congress-committees-reorganized-and-new-presidents-appointed-manickam-tagore-announces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/district-congress-committees-reorganized-and-new-presidents-appointed-manickam-tagore-announces#comments</comments><guid isPermaLink="false">3a4d3a81-c3f8-4d78-a8bd-d66435f9025c</guid><pubDate>Thu, 13 Aug 2026 09:36:52 +0000</pubDate><atom:updated>2026-08-13T09:36:52.447Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணிக்கம் தாகூர்,Manickam Tagore MP</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/ra6vuplz/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/ra6vuplz/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் காங்கிரஸ் அமைப்புகளை சீரமைக்கும் திட்டத்தின் முதல் கட்டமாக மாவட்ட காங்கிரஸ்  கமிட்டிகள் சீரமைக்கப்பட்டு புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் நடைபெற்று அதில் தலைவர் ராகுல் காந்தி அவர்களும் கலந்து கொண்டார்.</p><p>இயக்க சீரமைப்பின் இரண்டாம் கட்டமாக தமிழகமெங்கும் உள்ள வட்டார, நகர, பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டிகளும், மாநகராட்சிகளில் உள்ள சர்க்கிள் மற்றும் வட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் முழுமையாக சீரமைக்கும் திட்டத்தை தமிழக காங்கிரஸ் துவங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஏறக்குறைய 75,000 வாக்குச்சாவடிகளை, பத்து வாக்குச்சாவடிகளுக்கு ஒரு மண்டல காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்ற அடிப்படையில் சுமார் 7,500 மண்டல காங்கிரஸ் தலைவர்களும் நியமிக்கப்பட இருக்கின்றனர். </p><p>இந்த இயக்க சீரமைப்பின் இரண்டாம் கட்ட பணிகளை ஒருங்கிணைக்க ஒரு ஒருங்கிணைப்பு குழுவினை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஏற்படுத்தி உள்ளது. அந்த ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக மூத்த காங்கிரஸ் தலைவரும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சா.பீட்டர் அல்போன்ஸ் நியமிக்கப்படுகிறார். </p><p>ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினர்களாக கே.சிரஞ்ஜீவி, கே.தணிகாசலம், என்.அருள்பெத்தையா, எஸ்.டி.நெடுஞ்செழியன், ஆர்.எம்.பழனிச்சாமி, Ex.MLA, வி.ஆர்.சிவராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். </p><p>மாவட்ட அளவில் இந்த பணிகளை மாவட்ட தலைவர்களோடு இணைந்து செயல்படுத்திட 74 கட்சி மாவட்டங்களுக்கு, இயக்கப்பணிகளில் நீண்ட அனுபவம் பெற்ற 74 முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர்களும் பார்வையாளர்களாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியால் நியமிக்கப்பட உள்ளனர்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 3 பேர் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/massive-firecracker-factory-explosion-near-sivakasi-3-dead</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/massive-firecracker-factory-explosion-near-sivakasi-3-dead#comments</comments><guid isPermaLink="false">3c69714a-36a5-41a9-8b5b-4875426420d5</guid><pubDate>Thu, 13 Aug 2026 09:36:30 +0000</pubDate><atom:updated>2026-08-13T09:36:30.348Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Virudhunagar,விருதுநகர்,Sivakasi,சிவகாசி,பட்டாசு ஆலை,firecracker factory,பட்டாசு ஆலை தீ விபத்து,firecracker factory explosion,விருதுநகர் செய்திகள்,virudhunagar news</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/1i1vkjd0/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/1i1vkjd0/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர்,</p><p>சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டியில் செயல்பட்டு வரும் கிருஷ்ணா பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.</p><h2>வெடிவிபத்தில் 3 பேர் பலி</h2><p>பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் வழக்கம் போல பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. வெடிச்சத்தம் கேட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.</p><h2>ஒருவர் மருத்துவமனையில் அனுமதி</h2><p>விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் மீட்கப்பட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.</p><h2>தீயை அணைக்கும் பணி தீவிரம்</h2><p>வெடி விபத்தைத் தொடர்ந்து பட்டாசு ஆலை தீப்பற்றி எரிந்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.</p><h2>சிக்கியுள்ளவர்களை தேடும் பணி</h2><p>வெடிவிபத்து ஏற்பட்ட ஆலையின் உள்ளே மேலும் யாரேனும் சிக்கியுள்ளார்களா என்பது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மறைமலை அடிகள் மகன் உயிரிழப்பு: இறுதிச்சடங்குக்கு உதவ கோரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/son-of-maraimalai-adigal-passes-away-after-treatment-at-government-hospital-appeal-for-assistance-with-funeral-rites</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/son-of-maraimalai-adigal-passes-away-after-treatment-at-government-hospital-appeal-for-assistance-with-funeral-rites#comments</comments><guid isPermaLink="false">b6957a71-af82-4814-b6b1-d9b65cb4c766</guid><pubDate>Thu, 13 Aug 2026 09:31:13 +0000</pubDate><atom:updated>2026-08-13T09:31:13.759Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,கோரிக்கை,சிகிச்சை,Government Hospital,அரசு மருத்துவமனை,Government Hospitals,For treatment,மறைமலை அடிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/tlujuqey/suriya11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மறைமலை அடிகள் மகன் உயிரிழப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/tlujuqey/suriya11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மறைமலை அடிகளின் மகன் மறை.பச்சையப்பன் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இறுதிச்சடங்குக்கு அரசு உதவ அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். </p><h2>மறைமலை அடிகள் மகன்</h2><p>புகழ்பெற்ற தமிழறிஞர்களில் முக்கியமானவர் மறைமலை அடிகள். 1876 - 1950 காலக்கட்டத்தில் வாழ்ந்த இவர், தமிழுக்காகவும், தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டார்.</p><p>அவருடைய மகன் மறை.பச்சையப்பன் (வயது 78) உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். எலும்பு சம்பந்தமான நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர், அங்குள்ள எலும்பியல் வார்டில் சிகிச்சை பெற்று வந்தார்.</p><h2>அரசுக்கு கோரிக்கை</h2><p>தந்தை மறைமலை அடிகள் தமிழறிஞராக புகழ்பெற்ற போதும், மறை. பச்சையப்பன் சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல், <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ராயப்பேட்டை </a>அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.</p><p>அவரை மகள் லலிதா, மகன் சிவகுமார் ஆகியோர் கவனித்து வந்தனர். இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் மறை.பச்சையப்பன் இன்று உயிரிழந்தார். ஏற்கனவே, அவரது உயர் சிகிச்சைக்கு உதவி கோரிய அவரது குடும்பத்தினர், தற்போது அவரது இறுதிச்சடங்கு செய்வதற்குகூட பணம் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். எனவே, உரிய உதவியை அரசு செய்துதர அவருடைய குடும்பத்தினரின் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: வாலிபர் கொலை வழக்கு குற்றவாளிகள் 5 பேருக்கு ஆயுள் தண்டனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-5-accused-in-youth-murder-case-sentenced-to-life-imprisonment</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-5-accused-in-youth-murder-case-sentenced-to-life-imprisonment#comments</comments><guid isPermaLink="false">1d54f53b-fe1a-4409-b70f-77258bc126af</guid><pubDate>Thu, 13 Aug 2026 09:15:01 +0000</pubDate><atom:updated>2026-08-13T09:15:01.943Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Murder case,கொலை வழக்கு,Youth,வாலிபர்,life imprisonment,ஆயுள் தண்டனை,குற்றவாளிகள்,convicts</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/y3gztffn/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கொலை வழக்கு குற்றவாளிகள் 5 பேருக்கு ஆயுள் தண்டனை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/y3gztffn/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், ஆழ்வார்திருநகரி காவல் நிலைய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">கொலை வழக்கில்</a> சம்பந்தப்பட்ட 5 குற்றவாளிகளுக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">ஆயுள் தண்டனை</a> விதித்து ADJ- II நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><h2>வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் கைது</h2><p>தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு ஆழ்வார்திருநகரி நவலெட்சுமிபுரத்தை சேர்ந்த மாரிமுத்து (வயது 33) என்ற வாலிபரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களான, அதே பகுதியைச் சேர்ந்த மரியசிலுவை என்பரவது மகன்களான அருள்ராஜ்(31), ஞானசேகர்(29) மற்றும் சந்தியப்பன் மகன் அந்தோணிராஜ்(30), குணசிங்(26), அந்தோணிமுத்து மகன் சந்தியப்பன்(50) ஆகிய 5 பேரையும் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.</p><h2>5 பேருக்கு ஆயுள் தண்டனை</h2><p>இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி ADJ- II நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், மேற்சொன்ன நீதிமன்றத்தின் நீதிபதி ப்ரீத்தா மேற்சொன்ன நபர்களான அருள்ராஜ், அந்தோணிராஜ், ஞானசேகர், குணசிங் மற்றும் சந்தியப்பன் ஆகிய  5 பேரையும் குற்றவாளிகள் என உறுதி செய்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து   தீர்ப்பு வழங்கினார். </p>]]></content:encoded></item><item><title>பிரிந்து சென்ற காதல் மனைவி... சில நாட்களில் உயிரிழந்த குழந்தை - புதைத்த இடத்தில் தோண்டிய போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/beloved-wife-had-left-child-passed-away-days-latera-shock-awaited-the-police-when-they-dug-up-the-burial-site</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/beloved-wife-had-left-child-passed-away-days-latera-shock-awaited-the-police-when-they-dug-up-the-burial-site#comments</comments><guid isPermaLink="false">fd8986d6-8ca4-4cfb-a6b9-9eff437fef21</guid><pubDate>Thu, 13 Aug 2026 09:08:14 +0000</pubDate><atom:updated>2026-08-13T09:08:14.933Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Namakkal,நாமக்கல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/thlj40jx/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/thlj40jx/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல்,</p><p>திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை சேர்ந்த தீபக் ராஜாவும் அதே பகுதியை சேர்ந்த ரூபாஸ்ரீயும் கடந்த 2025-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு ரூபாஸ்ரீயின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், தீபக் ராஜா தனது காதல் மனைவியுடன் சென்னைக்கு குடிபெயர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.</p><p>ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக ரூபாஸ்ரீ பெற்றோருடன் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பிலிப்பாகுட்டை பகுதியில் வசித்து வந்த நிலையில் கடந்த மார்ச் 16-ந்தேதி அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை தீபக் ராஜா பார்க்க சென்றபோது, ரூபாஸ்ரீயின் பெற்றோருக்கும் தீபக் ராஜாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. </p><p>இதன் பின்னர் தீபக் ராஜா கடந்த ஏப்ரல் மாதம் தனது மனைவி மற்றும் குழந்தையை அழைத்து வர சென்றுள்ளார். அப்போது குழந்தை உயிரிழந்துவிட்டதாகவும், அதனை புதைத்து விட்டதாகவும் ரூபாஸ்ரீயின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த தீபக் ராஜா, தனது மனைவியின் குடும்பத்தினர் மீது ஆயில்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.</p><p>இந்த புகாரின் அடிப்படையில், குழந்தை புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்தில் கடந்த 6-ந்தேதி போலீசார் தோண்டி பார்த்தனர். ஆனால் அங்கு உடலோ, எலும்புகளோ கிடைக்கவில்லை. இதனால் குழந்தையை வேறு யாருக்காவது விற்றுவிட்டார்களா அல்லது வேறு காரணத்தால் குழந்தை இறந்ததா என சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து ராசிபுரம் டி.எஸ்.பி. விஜயகுமார் மேற்பார்வையில் ரூபாஸ்ரீ மற்றும் அவரது பெற்றோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் நகை திருட்டு வழக்கில் 2 வாலிபர்களுக்கு 6 ஆண்டுகள் சிறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/2-youths-sentenced-to-6-years-in-jail-in-thoothukudi-jewellery-theft-case</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/2-youths-sentenced-to-6-years-in-jail-in-thoothukudi-jewellery-theft-case#comments</comments><guid isPermaLink="false">dcad646b-5920-453e-ad2c-69ab11c3ed77</guid><pubDate>Thu, 13 Aug 2026 09:06:32 +0000</pubDate><atom:updated>2026-08-13T09:06:32.219Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,நகை திருட்டு,சிறை தண்டனை,jail sentence,jewelry theft,2 youths,2 வாலிபர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/ckvgr6ud/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நகை திருட்டு வழக்கில் 2 வாலிபர்களுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/ckvgr6ud/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மத்தியபாகம் காவல் நிலைய பகுதியில் தங்க <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">நகைகள் திருட்டு வழக்கில்</a> சம்பந்தப்பட்ட 2 குற்றவாளிகளுக்கு தலா 6 வருட சிறைதண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. </p><h2>நகை திருட்டு வழக்கில் 2 வாலிபர்கள் கைது</h2><p>தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நகைக்கடை பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிய வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த முருகவேல் மகன் விஷ்ணு (வயது 26) மற்றும் தூத்துக்குடி மேலசண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த அந்தோணி மகன் மாரியப்பன்(31) ஆகிய 2 பேரையும் மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். </p><h2>2 பேருக்கு 6 வருட சிறை தண்டனை</h2><p>இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி JM- II நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் மேற்சொன்ன நீதிமன்ற நீதிபதி இலக்கியா நேற்று விஷ்ணு மற்றும் மாரியப்பன் ஆகிய 2 பேரையும் குற்றவாளிகள் என உறுதி செய்து அவர்களுக்கு தலா 6 வருட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">சிறைதண்டனை</a> மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.</p>]]></content:encoded></item><item><title>அதிமுக போராட்டம்;  பங்கேற்க முடியாது: எஸ்.பி.வேலுமணி தரப்பு கடிதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-protest-cannot-participate-sp-velumanis-letter</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-protest-cannot-participate-sp-velumanis-letter#comments</comments><guid isPermaLink="false">885c65ab-66a4-4e74-899d-dca3b0c8c791</guid><pubDate>Thu, 13 Aug 2026 09:05:19 +0000</pubDate><atom:updated>2026-08-13T09:05:19.074Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,எஸ்.பி.வேலுமணி,EPS,SPVelumani,Palanisamy</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/hbo96f1m/spmani33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
அதிமுக போராட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/hbo96f1m/spmani33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அதிமுக சார்பில் வேறு மாவட்டங்களில் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்க முடியாது என எஸ்.பி.வேலுமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தமிழக சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக, அதிமுக பொதுச் செயலாளர்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95"> எடப்பாடி பழனிசாமி</a>க்கு எதிராக எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ.,க்கள் பிரிந்து, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து அதிமுகவில் இபிஎஸ் அணி, எஸ்.பி. வேலுமணி அணி என இரண்டாகப் பிரிந்தது. பின்னர் பேச்சுவார்த்தைக்கு பிறகு இரு அணிகளும் ஒன்றாக இணைந்தன.</p> <p>இதில் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட முன்னாள அமைச்சர்கள் பலர் தவெகவில் இணைந்தனர். அதிமுக தோல்விக்கான காரணத்தை ஆராய வேண்டும் என்று சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி ஆகியோர் கூறி வருகின்றனர். பழைய பொறுப்புகளை மீண்டும் வழங்க வேண்டும் என இபிஎஸ்ஸுக்கு எஸ்.பி. வேலுமணி தரப்பினர் 2 முறை கடிதம் எழுதியும் இபிஎஸ் எந்த பதிலும் தரவில்லை என கூறப்படுகிறது.</p><p>சென்னை பாலவாக்கத்தில் உள்ள சி.வி. சண்முகம் இல்லத்தில் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி. அன்பழகன் உள்ளிட்டோர் நேற்று (ஆக. 12, புதன்) இரவு ஆலோசனை மேற்கொண்டனர். சுமார் 5 மணி நேரம் இந்த ஆலோசனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.</p><p>இந்தநிலையில், விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் மேகதாது விவகாரத்தில் த.வெ.க. அரசைக் கண்டித்து, ஆகஸ்ட் 14-ல் அதிமுக மாநில தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டது.</p><p>திடீர் திருப்பமாக, காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து அதிமுக அறிவித்துள்ள ஆர்ப்பாட்டத்திற்கு முழு ஆதரவு வழங்குகிறோம். ஆனால் சொந்த மாவட்டத்தை விடுத்து வேறு மாவட்டத்திற்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து​கொள்ள இயலாது. இது எங்களை புறக்கணிக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட முடிவாக தெரிகிறது. எங்களுக்கு மாநில, மாவட்ட பொறுப்புகள் மீண்டும் வழங்கப்படும் என்ற உறுதி என்னானது? ஏற்கனவே நாங்கள் வகித்து வந்த பதவிகளை வழங்க வேண்டும் என வேலுமணி தரப்பு தெரிவித்துள்ளது.</p><p>ராமநாதபுரத்தில் நத்தம் விஸ்வநாதனும் தேனியில் வேலுமணியும் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்க வேண்டும் என ஈபிஎஸ் அறிவித்திருந்த நிலையில் இருவரும் தலைமைக்கு கடிதம்  எழுதி உள்ளது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நாடாளுமன்றத்தை வெறும் சடங்காக மாற்றும் பாஜக அரசு: மாணிக்கம் தாகூர் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bjp-government-turning-parliament-into-a-mere-formality-manickam-tagore-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bjp-government-turning-parliament-into-a-mere-formality-manickam-tagore-condemns#comments</comments><guid isPermaLink="false">eff19297-290f-44b1-bc92-cfc0b1393dfc</guid><pubDate>Thu, 13 Aug 2026 08:54:20 +0000</pubDate><atom:updated>2026-08-13T08:54:20.149Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore MP,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/0qeea170/manickam-tagore.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/0qeea170/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாடாளுமன்றத்தை வெறும் சடங்காக மாற்றி, மாணவர்களின் எதிர்காலத்தையும் ஜனநாயக மரபுகளையும் சீர்குலைக்கும் பாஜக அரசின் இந்த மக்கள் விரோதப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>கூட்டத்தொடர் ஒத்திவைப்பு</h2><p>கடந்த ஜூலை 20-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மக்களவைக் கூட்டத்தொடர், இன்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.</p><p>கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் அவை நடவடிக்கைகளுக்கோ, மாணவர்கள் போராட்டம் மற்றும் வினாத்தாள் கசிவு போன்ற முக்கியப் பிரச்சினைகள் குறித்த விவாதங்களுக்கோ வராமல் புறக்கணித்துவிட்டு, கடைசி நாளில் மட்டும் பிரதமர் மோடியும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் வெறும் 'Guest Appearance' தந்துள்ளது ஜனநாயகத்தின் மீதான அவர்களின் அலட்சியத்தை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.</p><h2>மோடி-அமித் ஷா புறக்கணிப்பு</h2><p>நாடாளுமன்றத்தை முன்னின்று வழிநடத்த வேண்டிய பிரதமர் மோடியும் பதில் சொல்ல வேண்டிய அமீத் ஷாவும், ஒட்டுமொத்த கூட்டத்தொடர் முழுவதும் அவைப் பணிகளில் பங்கேற்காமல் புறக்கணித்த ஒரு நிகழ்வை, வரலாற்று ஆய்வாளர்களாலேயே தேடிப் பிடிக்க முடியாமல் திணறும் அளவுக்கு ஒரு மோசமான முன்னுதாரணம் உருவாக்கப்பட்டுள்ளது.</p><p>நாடாளுமன்றத்தை வெறும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சடங்காக </a>மாற்றி, மாணவர்களின் எதிர்காலத்தையும் ஜனநாயக மரபுகளையும் சீர்குலைக்கும் பாஜக அரசின் இந்த மக்கள் விரோதப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தென்காசி: அரசுப் பள்ளியில் மாணவிகளை பிரம்பால் கடுமையாக தாக்கியதாக ஆசிரியை மீது வழக்குப்பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tenkasi-case-registered-against-a-teacher-for-severely-beating-female-students-with-a-cane-at-a-government-school</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tenkasi-case-registered-against-a-teacher-for-severely-beating-female-students-with-a-cane-at-a-government-school#comments</comments><guid isPermaLink="false">cb6d5aa9-1bbb-4949-b36d-66a96a79f75c</guid><pubDate>Thu, 13 Aug 2026 08:46:34 +0000</pubDate><atom:updated>2026-08-13T08:46:34.817Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தாக்குதல்,தமிழகம்,Tenkasi,தென்காசி,வழக்குப்பதிவு,அரசு பள்ளி,மாணவிகள்,Case Register,Govt school,சுரண்டை,வி.கே.புதூர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/cx21jyyj/teach.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/cx21jyyj/teach.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF">தென்காசி</a> அருகே அரசுப் பள்ளியில் 10 மாணவிகளை பிரம்பால் கடுமையாக தாக்கியதாக ஆசிரியை ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. </p><h2>கைகளில் பலத்த காயம்</h2><p>தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், 10-ஆம் வகுப்பு பயிலும் 10 மாணவிகளை பிரம்பால் தாக்கியதில் அவர்களுக்கு கைகளில் பலத்த காயம் ஏற்பட்டு தேர்வெழுத முடியாத நிலை உருவானதாகக் கூறப்படும் நிலையில், 44 வயதுடைய அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். </p><h2>மருத்துவமனைகளில் சிகிச்சை</h2><p>இச்சம்பவம் தென்காசி மாவட்டம், சுரண்டை அருகிலுள்ள வி.கே.புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஜூலை 20-ஆம் தேதி நடைபெற்றது. போலீசாரின் தகவல்படி, குற்றம் சாட்டப்பட்ட தேன்மரியா சுகந்தி என்ற ஆசிரியை 11-ஆம் வகுப்புக்கு பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது, ​​அருகில் இருந்த 10-ஆம் வகுப்பு அறையிலிருந்து வந்த சத்தத்தைக் கேட்டு ஆத்திரமடைந்தார். </p><p>பின்னர் அவர் அந்த வகுப்பறைக்குள் சென்று மாணவிகளை பிரம்பால் கடுமையாகத் தாக்கினார். சுமார் 10 மாணவிகளின் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது. காயமடைந்த மாணவிகளுக்கு வி.கே.புதூர் அரசு மருத்துவமனை மற்றும் உள்ளூர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. </p> <h2>கலெக்டரிடம் புகார்</h2><p>இதில் பவித்ரா என்ற மாணவி தென்காசி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு மூன்று நாட்கள் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>கைகளில் தொடர்ந்து வீக்கம் இருந்ததால், காயமடைந்த மாணவிகளால் பள்ளிக்குச் செல்லவோ, தேர்வெழுதவோ முடியவில்லை. இதை தொடர்ந்து, பவித்ராவின் தாயார் ராஜாத்தி மாவட்ட கலெக்டரிடம் இதுதொடர்பாக புகார் அளித்தார். </p><h2>வழக்குப்பதிவு</h2><p>இந்த புகாரின் அடிப்படையில், வேண்டுமென்றே காயத்தை ஏற்படுத்தியதற்காக பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப்பிரிவு 115(2)-ன் கீழும், சிறார் நீதிச் சட்டத்தின் (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) தொடர்புடைய பிரிவுகளின் கீழும் வீரகேரளம்புதூர் போலீசார்ர் அந்த ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</p><p>இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>கீழ்மதுரை ரெயில் நிலையத்தில் நிற்காமல் சென்ற சிறப்பு ரெயில்: என்ஜின் டிரைவர்கள் உள்பட 3 பேர் மீது நடவடிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-that-went-without-stopping-at-keelmadurai-railway-station-action-against-3-people-including-engine-drivers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-that-went-without-stopping-at-keelmadurai-railway-station-action-against-3-people-including-engine-drivers#comments</comments><guid isPermaLink="false">a4951843-e6e5-4ac0-a337-b1fa78b3dfa4</guid><pubDate>Thu, 13 Aug 2026 08:24:05 +0000</pubDate><atom:updated>2026-08-13T08:24:05.159Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>train,ரெயில்,railway station,ரெயில் நிலையம்,பயணிகள்,passengers</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/sn8yeta7/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/sn8yeta7/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,  </p><p>மதுரை-ராமேசுவரத்துக்கு இயக்கிய சிறப்பு ரெயில் கீழ்மதுரை ரெயில் நிலையத்தில் நிற்காமல் சென்றது தொடர்பாக என்ஜின் டிரைவர்கள். ரெயில்வே கார்டு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க மதுரை கோட்ட மேலாளர் உத்தரவிட்டார்.</p><h2>சிறப்பு ரெயில்</h2><p>ராமேசுவரம் கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா நடந்து வருகிறது. மேலும் நேற்று ஆடி அமாவாசை என்பதால், பக்தர்களின் வசதிக்காக மதுரையில் இருந்து ராமேசுவரத்துக்கு நேற்று முன்தினம் இரவு முற்றிலும் பொதுப்பெட்டிகளை கொண்ட சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.</p><p>இந்த ரெயில் (வ.எண்.06103) மதுரையில் இருந்து நள்ளிரவு 11 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 2.30 மணிக்கு ராமேசுவரம் சென்றடைந்தது. அதே போல, மறுமார்க்கத்தில் மற்றொரு ரெயில் (வ.எண்.06104) ராமேசுவரத்தில் இருந்து இயக்கப்பட்டது. இந்த ரெயில் நேற்று அதிகாலை 3 மணிக்கு புறப்பட்டு காலை 6 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைந்தது.</p><p>இந்த ரெயில்கள் கீழ்மதுரை, திருப்புவனம், மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.</p><h2>நிற்காமல் சென்றது</h2><p>ரெயில்வே அறிவிப்பை தொடர்ந்து பயணிகள் மேற்கண்ட ரெயில் நிலையங்களில் ராமேசுவரம் செல்ல காத்திருந்தனர். இதற்கிடையே, மதுரையில் இருந்து ராமேசுவரம் புறப்பட்ட சிறப்பு ரெயில் கீழ்மதுரை ரெயில் நிலையத்தில் நிற்காமல் சென்று விட்டது. இதனால் அங்கிருந்த பயணிகள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தனர்.</p><p>கீழ்மதுரை ரெயில் நிலையத்தில் பணியில் இருந்த ஸ்டேஷன் மாஸ்டர் மதுரையில் உள்ள உயர் அதிகாரிகளிடம் பேசி, இந்த ரெயிலுக்கு டிக்கெட் வாங்கியிருந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட பயணிகளிடம் டிக்கெட்டை திரும்ப பெற்றுக்கொண்டு, அதற்கான கட்டணத்தை திரும்ப கொடுத்ததாக கூறப்படுகிறது. அத்துடன், அவர்கள் அனைவரையும் ஆட்டோ மூலம் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.</p><h2>நடவடிக்கை</h2><p>நிறுத்தத்தில் ரெயில் நிற்காமல் சென்றதற்கான காரணம் குறித்து மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், மதுரையில் இருந்து செல்லும் ரெயிலுக்கு கீழ்மதுரை, திருப்புவனம் ரெயில் நிலையங்களில் நிறுத்தம் வழங்கப்பட்டு இருந்ததும், மறுமார்க்கத்தில் ராமேசுவரத்தில் இருந்து வரும் ரெயிலுக்கு அந்த நிலையங்களில் நிறுத்தங்கள் வழங்கவில்லை என்பதும் தெரியவந்தது. இதை சரிவர கவனிக்காமல் ரெயிலை இயக்கி, கீழ்மதுரையில் நிறுத்தாமல் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.</p><p>அதனை தொடர்ந்து, மதுரையில் இருந்து சிறப்பு ரெயிலை இயக்கிய என்ஜின் டிரைவர், உதவி டிரைவர் மற்றும் ரெயில் கார்டு ஆகியோர் மீது துறைரீதியான நடவடிக்கைக்கு கோட்ட மேலாளர் உத்தரவிட்டார். இந்த நடவடிக்கை தென்னக ரெயில்வே வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>பெண் சிசு என கண்டறிந்து கர்ப்பிணிக்கு கருக்கலைப்பு.. குண்டர் சட்டத்தில் நர்ஸ் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nurse-arrested-under-the-goondas-act-for-performing-an-abortion-on-a-pregnant-woman-after-determining-the-fetus-was-female</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nurse-arrested-under-the-goondas-act-for-performing-an-abortion-on-a-pregnant-woman-after-determining-the-fetus-was-female#comments</comments><guid isPermaLink="false">f2b4a86d-b4e3-45c3-997a-f6135f03b460</guid><pubDate>Thu, 13 Aug 2026 08:21:21 +0000</pubDate><atom:updated>2026-08-13T08:21:21.346Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Goondas act,குண்டர் சட்டம்,தர்மபுரி,Dharmapuri,கர்ப்பிணி,நர்ஸ்,கருக்கலைப்பு,abortion,பெண் சிசு,பாலினம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/mcu3scsc/subha.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/mcu3scsc/subha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நல்லம்பள்ளி, </p><p>சட்டவிரோதமாக பாலினம் கண்டறிந்து கர்ப்பிணிக்கு கருக்கலைப்பு செய்த நர்சு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.</p><p><a href="https://www.dailythanthi.com/topic/தர்மபுரி">தர்மபுரி</a> மாவட்டம் பாளையம்புதூர் கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மீண்டும் கர்ப்பிணியாக இருந்ததால் கருவில் உள்ள சிசுவை கண்டறிய சட் டவிரோதமாக ஸ்கேன் செய்யப்பட்டு கருவில் இருப்பது பெண் சிசு என தெரிந்ததால் அந்தப் பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது. </p><p>இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் தர்மபுரி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது தொடர்பாக விசாரணை நடத்திய தர்மபுரி மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் பாரதி மற்றும் அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்த தர்மபுரியைச் சேர்ந்த நர்ஸ் கற்பகம் (வயது 43) இடைத்தரகராக செயல்பட்ட பச்சியம்மாள் ஆகியோரை கடந்த 30-ந்தேதி அதியமான் கோட்டை போலீசார் கைது செய்தனர். </p><p>கற்பகம் கர்ப்பிணிகளுக்கு சட்டவிரோதமாக கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்து தெரிவிப்பது, கருக்கலைப்பு செய்வது ஆகிய குற்றச்செயல்களில் ஏற்கனவே ஈடுபட்டு கைது செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் உத்தரவுப்படி கற்பகத்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சரவணன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கற்பகத்தை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் மீண்டும் கைது செய்தனர். </p>]]></content:encoded></item><item><title>தாகத்தில் தவிக்கும் மக்கள்: அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/parched-people-government-must-act-on-war-footing-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/parched-people-government-must-act-on-war-footing-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">a527e35d-1e34-4214-aa74-f0122e28da38</guid><pubDate>Thu, 13 Aug 2026 08:19:07 +0000</pubDate><atom:updated>2026-08-13T08:19:07.838Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,நயினார் நாகேந்திரன்,தண்ணீர் தட்டுப்பாடு,water shortage,Nainar Nagenthran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/unfnuylj/Untitled-12.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/unfnuylj/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மக்களின் தாகம் தீர்க்க முதல்-அமைச்சர் விஜய் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் வீதியில் இறங்கிப் போராடும் அவல நிலை தொடர்வது கவலையளிக்கிறது. ஏரி, குளங்கள் வறண்டு நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்து விட்ட நிலையில், அதனை எதிர்கொள்ள தவெக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தவறியதே மக்கள் தாகத்தில் தவிக்க முக்கிய காரணமாகும்.</p><p>ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தவுடன் மக்களை மறந்துவிட்ட முதல்வர் விஜய்யின் இந்த மெத்தனப் போக்கை வன்மையாகக் கண்டிப்பதோடு, இனியாவது விழித்துக்கொண்டு மக்களின் தாகம் தீர்க்க ஆழ்துழைக் கிணறுகள் அமைப்பது மற்றும் லாரிகள் மூலம் குடிநீர் வழங்குவது போன்ற உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.</p><p>மேலும், பருவமழை தொடங்குவதற்கு முன்பே போர்க்கால அடிப்படையில் ஏரி, குளங்களைத் தூர்வாருவதோடு, தண்ணீரைச் சேமிக்கும் வகையில் ஆங்காங்கே சிறு தடுப்பணைகளையும் கட்ட இந்த அரசு முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு: 2 இளைஞர்கள் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/2-youths-arrested-for-breaking-the-lock-of-a-house-and-stealing-jewelry</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/2-youths-arrested-for-breaking-the-lock-of-a-house-and-stealing-jewelry#comments</comments><guid isPermaLink="false">520c5224-1e00-4bf2-8eda-9e5ca03b0501</guid><pubDate>Thu, 13 Aug 2026 07:59:33 +0000</pubDate><atom:updated>2026-08-13T07:59:33.798Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,கைது,திருவள்ளூர்,நகை திருட்டு,youths arrested,police enquiry</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/bu2gtktz/4.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ சஞ்சய் - ஆகாஷ்]]></media:title><media:description type="html"><![CDATA[ நகை திருடிய வழக்கில் 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/bu2gtktz/4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர்,</p><p>திருவள்ளூர் மாவட்டத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிய 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.</p><h2>நகை திருட்டு</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">திருவள்ளூர் மாவட்டம் </a>மேல்நல்லாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் குறளரசன். அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இன்று (வியாழக்கிழமை) மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த பீரோவின் கதவை உடைத்து உள்ளே வைக்கப்பட்டிருந்த 10 சவரன் தங்க நகைகளைத் திருடிக்கொண்டு தப்பியோடினர்.</p><h2>போலீஸ் விசாரணை</h2><p>வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்து நகைகள் திருடப்பட்டதைக் கண்டு குறளரசன் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து குறளரசன் திருவள்ளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.</p><p>புகாரின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட திருவள்ளூர் போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் மற்றும் தடயங்களை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், இந்த திருட்டில் ஈடுபட்ட சஞ்சய் மற்றும் ஆகாஷ் ஆகிய 2 பேர் மீது திருட்டு வழக்குப்பதிவு செய்து<a href="https://www.dailytanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81"> கைது </a>செய்தனர். மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தல்: பிரபல ரவுடி  கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ganja-smuggling-notorious-rowdy-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ganja-smuggling-notorious-rowdy-arrested#comments</comments><guid isPermaLink="false">343fbbba-2832-4772-a47d-74aaf75ab2c5</guid><pubDate>Thu, 13 Aug 2026 07:57:25 +0000</pubDate><atom:updated>2026-08-13T07:57:25.588Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,கைது,rowdy arrested,police enquiry,ganja smuggling,பிரபல ரவுடி</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/rmcllnds/3.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ ரவுடி- கார்த்திக்]]></media:title><media:description type="html"><![CDATA[ கஞ்சா கடத்திய ரவுடி கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/rmcllnds/3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஆந்திர மாநிலத்தில் இருந்து ரெயில் மூலம் சென்னைக்கு கஞ்சாவை கடத்தி வந்த மதுரை பிரபல ரவுடி வெள்ளைக்காளியின் கூட்டாளியான கார்த்திக், பெரம்பூர் ரெயில் நிலையத்தில் வைத்து அதிரடியாகக் கைது செய்யப்பட்டான்.</p><h2>ரகசிய தகவல்</h2><p>மதுரையைச் சேர்ந்த <a href="https://www.dailytanthi.com/topic/%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">பிரபல ரவுடி </a>வெள்ளைக்காளி என்பவரின் முக்கிய கூட்டாளியாகச் செயல்பட்டு வருபவன் கார்த்திக். இவன் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், ஆந்திராவிலிருந்து சென்னைக்கு தொடர்ந்து கஞ்சா கடத்தப்படுவதாகப் போதைப்பொருள் தடுப்பு மற்றும் ரெயில்வே போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.</p><h2>கைது- பறிமுதல்</h2><p>இதனைத் தொடர்ந்து சென்னை பெரம்பூர் ரெயில் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவிலிருந்து வந்த ரெயிலில் சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த கார்த்திக்கை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில், அவன் விற்பனைக்காகக் கொண்டு வந்த 4 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.</p><p>இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கைக் <a href="https://www.dailytanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். மேலும் இவருக்குப் பின்னால் உள்ள கஞ்சா கடத்தல் கும்பல் மற்றும் நெட்வொர்க் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மாநிலங்களுக்கு வரி இழப்பை ஏற்படுத்தும் கனிம சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் - கனிமொழி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-mineral-law-amendment-causing-revenue-loss-to-states-must-be-withdrawn-kanimozhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-mineral-law-amendment-causing-revenue-loss-to-states-must-be-withdrawn-kanimozhi#comments</comments><guid isPermaLink="false">e804dc75-fa63-4017-887d-05bbd4bb07e1</guid><pubDate>Thu, 13 Aug 2026 07:35:01 +0000</pubDate><atom:updated>2026-08-13T07:35:01.204Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,சட்ட திருத்தம்,கனிமொழி,வரி,revenue,Kanimozhi,கனிமங்கள்,financial,mineral</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/qo9bqgxg/33.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/qo9bqgxg/33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாநிலங்களுக்கு வரி இழப்பை ஏற்படுத்தும் கனிம சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என கனிமொழி தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>சட்ட திருத்த மசோதா</h2><p>கனிம வளங்கள் மீது மாநில அரசுகளுக்கு உள்ள செஸ் வரி உள்ளிட்ட நிதி அதிகாரங்களைப் பறிக்கும் வகையில், மக்களவையில் முறையான விவாதங்கள் ஏதுமின்றி மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள MMDR சட்டத் திருத்த மசோதா 2026, மாநில உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலாகும்.</p><p>2024 ஆம் ஆண்டு  சுப்ரீம் கோர்ட்டில் உறுதி செய்த மாநிலங்களின் கனிம வளங்கள் மீதான வரி விதிக்கும் அதிகாரத்தையே இத்திருத்தச் சட்டம் நீர்த்துப்போகச் செய்வதோடு, சுற்றுச்சூழலுக்கு பேராபத்தை விளைவித்து, மாநிலங்களின் நிதி சுயாட்சியை பறிக்கும் நோக்கத்தோடு அமைந்துள்ளது. மத்திய பாஜக அரசு இச்சட்டத் திருத்தத்தை திரும்ப பெற வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சுதந்திர தின விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரம்: சென்னை கோட்டை முன்பு போலீசார் தீவிர அணிவகுப்பு ஒத்திகை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/intensive-preparations-for-the-independence-day-celebrations-police-conduct-rigorous-parade-rehearsals-in-front-of-the-fort-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/intensive-preparations-for-the-independence-day-celebrations-police-conduct-rigorous-parade-rehearsals-in-front-of-the-fort-in-chennai#comments</comments><guid isPermaLink="false">da2b8b7f-fadb-422a-8823-5762f11431a1</guid><pubDate>Thu, 13 Aug 2026 07:33:09 +0000</pubDate><atom:updated>2026-08-13T07:33:09.922Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,Chennai,சென்னை,தமிழகம்,தமிழ்நாடு அரசு,TN govt,Independece Day,Independence Day,சுதந்திரதினம்,சுதந்திர தின விழா,national flag,தேசிய கொடி,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/inhbv0x7/tun.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/inhbv0x7/tun.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சுதந்திர தின விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், சென்னை கோட்டை முன்பு போலீசார் தீவிர அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். </p><h2>சுதந்திர தின விழா</h2><p>நாட்டின் 80-வது சுதந்திர தினம் நாளை மறுநாள் (15-ந் தேதி) கொண்டாடப்பட இருக்கிறது. அன்றைய தினம், சென்னை தலைமைச் செயலகம் செயல்பட்டு வரும் புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a> முதல் முறையாக தேசியக் கொடியை ஏற்ற இருக்கிறார். </p><p>முன்னதாக, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக்கொள்ள இருக்கிறார். இந்த ஆண்டு சுதந்திர தினத்தின்போது நடைபெறும் போலீஸ் அணிவகுப்பில் சிங்கப்பெண் அதிரடிப்படையும் இடம்பெற்றுள்ளது. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/9s3n7c04/aunty.jpg" /></figure><h2>அணிவகுப்பு ஒத்திகை</h2><p>இந்த நிலையில், சென்னை கோட்டை முன்பு சுதந்திர தின விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகையும் நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று காலை 3-வது அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில், பங்கேற்ற போலீசார், சுதந்திர நாளில் அணியும் ஆடையுடன் மிடுக்குடன் நடந்து வந்தனர். </p><p>சுதந்திர தின விழாவில், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், தமிழ்நாட்டுக்கும், தமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்த தகைசால் தமிழர் என்ற பெயரிலான விருதையும், ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழையும் வழங்க இருக்கிறார். </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/oq43u88d/yeppa.jpg" /></figure><h2>பல்வேறு விருதுகள்</h2><p>மேலும், இந்த விழாவில் அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு டாக்டர் அப்துல்கலாம் விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதல்வரின் நல் ஆளுமை விருது, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகள், மகளிர் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூகப் பணியாளருக்கான விருதுகள், சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்-அமைச்சர் விருதுகள், முதல்-அமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் உள்ளிட்டவைகளையும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் வழங்கி கவுரவிக்கிறார். </p>]]></content:encoded></item><item><title>அகல ரெயில்பாதை திட்டம்: தேனி-எருமேலி இடையே ஆய்வு பணிக்கு ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/broad-gauge-railway-project-railway-ministry-approves-survey-work-between-theni-and-erumeli</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/broad-gauge-railway-project-railway-ministry-approves-survey-work-between-theni-and-erumeli#comments</comments><guid isPermaLink="false">a0b09552-012d-4608-b104-59bf0ae47a30</guid><pubDate>Thu, 13 Aug 2026 07:31:55 +0000</pubDate><atom:updated>2026-08-13T07:31:55.228Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சபரிமலை,Sabarimala,Theni,தேனி,Railway Department,ரெயில்வே அமைச்சகம்,எருமேலி,erumeli</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/dia9j4jo/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/dia9j4jo/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>தேனி,</p><p>திண்டுக்கல்-சபரிமலை அகல ரெயில் பாதை திட்டத்தில், தேனியில் இருந்து எருமேலி வரை 95 கி.மீ. தூரம் பூர்வாங்க பணிகளுக்கான ஆய்வு மேற்கொள்ள ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.</p><h2>திண்டுக்கல்-சபரிமலை ரெயில்பாதை</h2><p>திண்டுக்கல்லில் இருந்து தேனி வழியாக சபரிமலைக்கு அகல ரெயில்பாதை அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அய்யப்ப பக்தர்கள் தேனி வழியாக சபரிமலைக்கு சென்று வருகின்றனர். கார்த் திகை, மார்கழி மாதங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தேனியை கடந்து சபரிமலைக்கு செல்வது வழக்கம்.</p><p>எனவே, திண்டுக்கல்-சபரிமலை இடையே அகல ரெயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பக்தர்கள், வணிகர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தொடர்ந்து முன்வைத்து வந்தனர். இந்த திட்டத்தை ஒரே கட்டமாக நிறைவேற்ற தாமதம் ஏற்படும் என்றால் திண்டுக்கல்-லோயர்கேம்ப், லோயர்கேம்ப்-சபரிமலை என 2 கட்டமாக பிரித்து செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. மத்திய அரசும் இந்த திட்டம் தொடர்பாக ஆய்வு செய்யப்படும் என்று அறிவித்து இருந்தது.</p><h2>ஆய்வு பணிக்கு ஒப்புதல்</h2><p>இந்தநிலையில் திண்டுக்கல்-சபரிமலை அகல ரெயில்பாதை திட்டத்தில் முதற்கட்டமாக தேனி முதல் கேரளம் மாநிலம் எருமேலி வரை அகல ரெயில் பாதை அமைக்க பூர்வாங்க பணிகளுக்கான ஆய்வுப் பணிகளை தொடங்க இந்திய ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தகவலை தேனி எம்.பி. தங்கதமிழ்ச்செல்வன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.</p><p>அந்த பதிவில், "அய்யப்ப பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையான திண்டுக்கல்-சபரிமலை இடையே ரெயில் பாதை அமைக்க நாடாளுமன்றத்தில் நான் தொடர்ந்து வலியுறுத்தினேன். இதைத்தொடர்ந்து தற்போது இந்த திட்டத்திற்கு முதற்கட்டமாக தேனி முதல் எருமேலி வரை சுமார் 95 கிலோ மீட்ட ருக்கான அகல ரெயில் பாதை அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளுக்கு ஆய்வு மேற்கொள்ள ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>மது, போதைப்பொருளுக்கு எதிராக போராட்டம்: பிராங்க்ளின் ஆசாத் காந்திக்கு அண்ணாமலை பாராட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/protest-against-alcohol-and-drugs-annamalai-commends-franklin-azad-gandhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/protest-against-alcohol-and-drugs-annamalai-commends-franklin-azad-gandhi#comments</comments><guid isPermaLink="false">3ed12a6e-b940-4fc2-a336-bfb3cfcd5164</guid><pubDate>Thu, 13 Aug 2026 07:28:07 +0000</pubDate><atom:updated>2026-08-13T07:28:07.098Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Annamalai,அண்ணாமலை,Anti-drug awareness,போதைப்பொருள் விழிப்புணர்வு</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/1zlfy7wj/14.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/1zlfy7wj/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது;</p><p>”மதுவுக்கும், போதைப்பொருள்களுக்கும் எதிராக, கடந்த மே 11 முதல் நேற்று ஆகஸ்ட் 12 வரை, 94 நாட்கள் தொடர்ந்து மௌனப் போராட்டத்தை மேற்கொண்ட, சேலத்தைச் சேர்ந்த</p><p>மூத்த காந்தியவாதியும், கல்வியாளருமாகிய, டாக்டர் சி. பிராங்க்ளின் ஆசாத் காந்தி அவர்களின் அர்ப்பணிப்பு போற்றுதலுக்குரியது.</p><p>கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மதுவிலக்கிற்காக, போராட்டம், பிரசாரம், சத்தியாகிரகம், பாதயாத்திரை என பல்வேறு அகிம்சை வழிகளில் குரல் கொடுத்து வருகிறார். சேலத்திலிருந்து சபர்மதி, சேலத்திலிருந்து மதுரை என பல நீண்ட பாதயாத்திரைகளை மேற்கொண்டு, மக்களிடையே மதுவிற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.</p><p>திருக்குறளின் 1330 குறள்களைப் போலவே, 1330 நாட்கள் தினமும் 12 மணி நேரம் காந்தி சிலை முன்பு மதுவுக்கும் போதைப்பொருள்களுக்கும் எதிராக பதாகை ஏந்தி நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார். தமது 95 வயதிலும், மது உள்ளிட்ட போதைப்பொருள்களுக்கு எதிரான அவரது மன உறுதி, இளைய தலைமுறைக்கு முன்னுதாரணம்.</p><p>ஒரு மனிதர் தனது வாழ்நாளையே சமூகத்தின் நலனுக்காக அர்ப்பணித்திருப்பது மிகப்பெரிய தியாகம். டாக்டர் பிராங்க்ளின் ஆசாத் காந்தி அவர்களின் மதுவிலக்கு போராட்டத்திற்கு தலைவணங்கி, அவரது ஐம்பது ஆண்டுகளைக் கடந்த மேலான சமூகப் பணிகளுக்கு, எங்களது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.”</p><p>இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>நேரு உள்விளையாட்டரங்கத்தில் செயற்கை இழை ஓடுதளம் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திறந்து வைத்தார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-8-crore-worth-renovated-synthetic-fiber-athletic-track-minister-athav-arjuna-inaugurates</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-8-crore-worth-renovated-synthetic-fiber-athletic-track-minister-athav-arjuna-inaugurates#comments</comments><guid isPermaLink="false">9cecf9f0-910b-4e46-ab12-08afe078f1b9</guid><pubDate>Thu, 13 Aug 2026 07:10:54 +0000</pubDate><atom:updated>2026-08-13T07:10:54.646Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Aadhav Arjuna,ஓடுதளம்,அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/z32u15jw/Untitled-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/z32u15jw/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை நேரு உள்விளையாட்டரங்கத்தில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட செயற்கை இழை தடகள ஓடுதளத்தை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று திறந்து வைத்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கம், ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகத்தில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட செயற்கை இழை தடகள ஓடுதளம் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவால் இன்று (13.08.2026) திறந்து வைக்கப்பட்டது. தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு தேசிய, பன்னாட்டு தரத்திற்கு இணையான பயிற்சி வசதிகள் கிடைக்கப்பெறும் வகையில் இந்த தடகள ஓடுதளம், செயற்கை இழை ஓடுதளமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை மாவட்டந்தோறும் விரிவுபடுத்தும் நோக்கில், செயற்கை இழை தடகள ஓடுதளங்கள் ராமநாதபுரம், சேலம், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் ரூ.38 கோடியே 24 லட்சம் மதிப்பில் புதிய செயற்கை இழை தடகள ஓடுதளங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, நீலகிரி, ஈரோடு, தஞ்சாவூர் ஆகிய 9 மாவட்டங்களில் செயற்கை இழை தடகள ஓடுதளங்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.</p><p>கடந்த 3 மாத காலங்களில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை, அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, விருதுநகர், விழுப்புரம், கடலூர், தருமபுரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தடகள எறிதல் மையம், செயற்கை இழை ஹாக்கி மைதானங்கள், பாரா விளையாட்டரங்கங்கள், முதல்-அமைச்சர் இளைஞர் விளையாட்டு அரங்கங்கள், நீச்சல் குளம் ஆகியவை ரூ.31 கோடி மதிப்பீட்டில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பக்கிங்காம் கால்வாயில் &apos;வாட்டர் மெட்ரோ&apos; : சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறையுமா..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-metro-on-buckingham-canal-will-traffic-congestion-in-chennai-decrease</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-metro-on-buckingham-canal-will-traffic-congestion-in-chennai-decrease#comments</comments><guid isPermaLink="false">7ef9bde3-93e5-4e50-9070-d7372976d569</guid><pubDate>Thu, 13 Aug 2026 06:47:37 +0000</pubDate><atom:updated>2026-08-13T06:47:37.808Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,தமிழகம்,சென்னை மெட்ரோ,chennai metro,வாட்டர் மெட்ரோ,Water Metro,படகு போக்குவரத்து,Buckingham Canal,பக்கிங்காம் கால்வாய்,Boat Transport</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/j3nteses/bum.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/j3nteses/bum.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/சென்னை">சென்னை</a>யில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், பக்கிங்காம் கால்வாயில் படகு போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. இதற்கான டெண்டரை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது. </p><h2>சென்னையில் போக்குவரத்து நெரிசல்</h2><p>தமிழ்நாட்டின் தலைநகரான <a href="https://www.dailythanthi.com/topic/சென்னை">சென்னை</a>யில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் என்பது அதிகரித்து வருகிறது. சாலை போக்குவரத்தை தாண்டி, மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் போக்குவரத்து வசதிகள் கூடுதலாக இருந்தாலும், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் என்பது குறைந்த பாடில்லை. </p><p>தமிழ்நாட்டில் வாழும் 8½ கோடி மக்களில், சுமார் 1 கோடி பேர் சென்னை மற்றும் புறநகர் பகுதியிலேயே வசித்து வருகின்றனர். வேலைவாய்ப்பு, வாழ்வாதாரத்திற்காக இப்படி ஒரே இடத்தில் லட்சக்கணக்கானோர் குவிந்து இருப்பதால், போக்குவரத்து நெரிசல் என்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. </p><h2>பக்கிங்காம் கால்வாயில் படகு போக்குவரத்து</h2><p>இந்த நிலையில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட பக்கிங்காம் கால்வாயில் படகு போக்குவரத்தை தொடங்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான டெண்டர் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. </p><p>சென்னையில் உள்ள ஆறுகளில் கூவம், அடையாறு போன்றவை இயற்கையானவை. ஆனால், பக்கிங்காம் கால்வாய் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டது. 467 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த கால்வாய், தமிழ்நாட்டில் 210 கி.மீ. தூரமும், ஆந்திராவில் 257 கி.மீ. தூரமும் பாய்கிறது. </p><p><a href="https://www.dailythanthi.com/topic/சென்னை">சென்னை</a> சென்டிரல் ரெயில் நிலையம் அருகே ஓடுவது பக்கிங்காம் கால்வாய்தான். 1935-ம் ஆண்டு வரை இதில் படகு போக்குவரத்து நடந்துள்ளது. அதற்கு ஆதாரமான நிழல் படங்கள் இன்றும் உள்ளன. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/ir90h6v8/chenai.jpg" /></figure><h2>90 ஆண்டுகளுக்கு பிறகு...</h2><p>பின்னாளில் இந்த கால்வாய் தூர்ந்துபோய் கழிவுநீர் ஓடையாகவே  மாறிவிட்டது. </p><p>இந்த நிலையில், பக்கிங்காம் கால்வாய் சீரமைக்கும் பணியை கடந்த சில ஆண்டாகவே தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது, 90 ஆண்டுகள் கடந்த நிலையில், பக்கிங்காம் கால்வாயில் மீண்டும் படகு போக்குவரத்தை தொடங்க சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் திட்டமிட்டுள்ளது. </p><p>கடந்த தி.மு.க. ஆட்சியில், முதற்கட்டமாக முட்டுக்காடு - நேப்பியர் பாலம் வரை 30 கி.மீ. தூரத்திற்கு வாட்டர் மெட்ரோ அமைக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பரிந்துரை செய்திருந்தது. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/dff907pf/cochi.jpg" /></figure><h2>டெண்டர்</h2><p>தற்போது, எண்ணூரில் இருந்து மாமல்லபுரம் வரை 53 கி.மீ. தூரத்திற்கு படகு போக்குவரத்து சேவையை தொடங்க அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதைத் தொடர்ந்து, படகு போக்குவரத்தை தொடங்குவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க மெட்ரோ ரெயில் நிறுவனம் தற்போது டெண்டர் வெளியிட்டுள்ளது.</p><p>பக்கிங்காம் கால்வாயில் படகு போக்குவரத்து தொடங்கும்பட்சத்தில் சென்னையில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>திருவாரூரில் காவலரை தாக்கிய தவெக நிர்வாகி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-executive-arrested-for-assaulting-police-officer-in-thiruvarur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-executive-arrested-for-assaulting-police-officer-in-thiruvarur#comments</comments><guid isPermaLink="false">676077a3-65d4-4f12-b599-81af80fb51c1</guid><pubDate>Thu, 13 Aug 2026 06:41:50 +0000</pubDate><atom:updated>2026-08-13T06:41:50.065Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thiruvarur,திருவாரூர்,கைது,arrested,கலெக்டர் அலுவலகம்,assaulting,தவெக நிர்வாகி</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/wsus8sp8/1.jpg" width="753"><media:title type="html"><![CDATA[  தவெக நிர்வாகி ராஜேஷ்]]></media:title><media:description type="html"><![CDATA[ போலீசாரை தாக்கிய தவெக நிர்வாகி ராஜேஷ் கைது செய்யப்பட்டார்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/wsus8sp8/1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவாரூர்,</p><p>திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் டீ குடித்துக் கொண்டிருந்த போலீசார் ஒருவரை தாக்கிய தவெக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.</p><h2>திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம்</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">திருவாரூர் மாவட்டம் </a>கலெக்டர் அலுவலகத்தில் டீக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலையில் போலீஸ்காரர் வினோத் தனது வேலை முடிந்து அங்கு ஓய்வில் இருந்தார். பின்னர் அவர் அங்குள்ள டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது, தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகி ராஜேஷ் என்பவர் அளவுக்கு அதிகமான மதுபோதையில் அங்கு வந்தார்.</p><h2>சண்டை- தாக்குதல்</h2><p>மதுபோதையில் இருந்த ராஜேஷ், அங்கு அமைதியாக நின்று டீ குடித்துக் கொண்டிருந்த போலீஸ்காரர் வினோத்திடம் பேச்சு கொடுத்து தகராாறு செய்தார். போலீஸ்காரர் எவ்விதப் பிரச்சினையிலும் ஈடுபடாமல் இருந்தபோதிலும், ராஜேஷ் போதையின் உச்சத்தில் ஆபாசமாகவும் திமிராகவும் பேசி வாக்குவாதத்தை வளர்த்தார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ராஜேஷ் திடீரென போலீஸ்காரர் வினோத் மீது தாக்கினார். இதனையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.</p><h2>தவெக நிர்வாகி கைது</h2><p>அங்கிருந்த மற்ற போலீஸ்காரர்கள் உடனடியாகச் செயல்பட்டு தவெக நிர்வாகி ராஜேஷை <a href="https://www.dailytanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்தனர். மேலும், திருவாரூர் நகர போலீஸ் நிலையத்தில் ராஜேஷ் மீது, அரசுப் பணியில் உள்ள காவலரைத் தாக்கியது, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தது மற்றும் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டது போன்ற சட்டப்பிரிவுகளின் கீழ் முறையான வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ராஜேஷை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, கோர்ட் காவலில் வைக்கத் தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>குரூப் 2, 2ஏ காலி பணியிடங்களின் எண்ணிக்கையை 3,000 ஆக உயர்த்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-urges-increasing-the-number-of-group-2-and-2a-vacancies-to-3000</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-urges-increasing-the-number-of-group-2-and-2a-vacancies-to-3000#comments</comments><guid isPermaLink="false">5c23bb7c-a9ec-4085-9b57-6a3d904825c0</guid><pubDate>Thu, 13 Aug 2026 06:36:15 +0000</pubDate><atom:updated>2026-08-13T06:36:15.265Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,காலி பணியிடங்கள்,Vacancies,Group 2 and 2A,குரூப் 2, 2ஏ</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/tov2azgb/anbu.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/tov2azgb/anbu.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;</p><p>”தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள தொகுதி 2 மற்றும் 2ஏ பணியிடங்களை நிரப்புவதற்காக 821 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருக்கிறது. குறைந்தது 3000 பணிகளுக்கு ஆள்தேர்வு நடைபெறும் என இளைஞர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அதில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே காலியிடங்களாக அறிவிக்கப்பட்டிருப்பது அவர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.</p><p>தொகுதி 2 மற்றும் 2ஏ பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு &amp;2க்கான போட்டித் தேர்வு அறிவிக்கையை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. அதன்படி  அரசுத் துறைகளிலுள்ள சார்பதிவாளர், சிறப்பு உதவியாளர், தனிப்பிரிவு உதவியாளர் உள்ளிட்ட தொகுதி 2 பணிகளுக்கு 41 பேரும், தணிக்கை ஆய்வாளர், உதவியாளர்கள், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட தொகுதி 2ஏ பணிகளுக்கு 780 பேரும் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பணிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு நவம்பர் ஒன்றாம் தேதி நடைபெறும் என்றும் டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.</p><p>தமிழ்நாடு அரசுத் துறைகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  2 மற்றும் 2ஏ பணியிடங்கள் காலியாக உள்ளதாக அரசு ஊழியர் அமைப்புகள் தெரிவித்துள்ளன. பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் மறைக்கப்பட்ட இடங்களையும் சேர்த்தால் காலியிடங்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் கூடுதலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இவ்வளவு பணியிடங்களை வைத்துக் கொண்டு வெறும் 821 பேரை மட்டும் தேர்ந்தெடுப்பது போதுமானதல்ல.</p><p>இரண்டாம் தொகுதி பணிகளுக்கு வெறும் 41 பேர் காலியிடங்கள் மட்டுமே இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.  அவற்றிலும் கூட 4 பணியிடங்கள் கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்டு நிரப்பப்படாததால் ஏற்பட்ட பின்னடைவு பணியிடங்கள் ஆகும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வரலாற்றிலேயே இரண்டாம் தொகுதி பணியிடங்கள் இவ்வளவு குறைவாக நிரப்பப்படுவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் கடந்த ஆண்டு 50 பேர் இந்த பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், திமுக அரசின் அந்த வேதனையான சாதனையை இப்போதைய தவெக அரசு முறியடித்திருக்கிறது. இதைவிட மோசமாக இளைஞர்களை ஏமாற்ற முடியாது.</p><p>2011&amp;ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போது வரையிலான 16 ஆண்டுகளில் 2021, 2021 ஆகிய ஆண்டுகளைத் தவிர மீதமுள்ள அனைத்து ஆண்டுகளிலும் தொகுதி 2 மற்றும் 2ஏ பணிகளுக்கு ஆள்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறன்றனர். மிக அதிகமாக 2022&amp;ஆம் ஆண்டில் 6500 பேரும், 2011&amp;ஆம் ஆண்டில் 6241 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள ஆண்டுகளில் 2025&amp;ஆம் ஆண்டைத் தவிர மற்றவற்றில் குறைந்தது 1086 பேர் முதல் 3842 பேர் வரையிலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு இருக்கும் போது நடப்பாண்டில் மட்டும்  வெறும் 821 பேரை தேர்ந்தெடுப்பதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.</p><p>தொகுதி 2 மற்றும் 2 ஏ பணிகளுக்கான அடிப்படைக் கல்வித் தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு ஆகும். இந்தப் படிப்பை முடித்து விட்டு, அரசு வேலை கிடைக்காதா? என்ற ஏக்கத்தில் காத்திருக்கும் இளைஞர்கள் எண்ணிக்கை மட்டும் 60 லட்சத்திற்கும் அதிகமாகும். ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 4 முதல் 5 லட்சம் பேர் இந்த எண்ணிக்கையில் இணைந்து கொண்டிருக்கின்றனர். அவ்வாறு இருக்கும் போது ஒவ்வொரு ஆண்டும் அவர்களில் ஒரு விழுக்காட்டினருக்குக் கூட அரசு வேலைகள் வழங்கப்படாதது அரசின் தோல்வி ஆகும்.</p><p>2026&amp;ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசுத் துறைகளில் இன்றைய நிலையில் 6 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக வைத்துக் கொண்டால், அடுத்த ஐந்தாண்டுகளில் குறைந்தது 2 லட்சம் பணியிடங்கள் காலியாகக் கூடும். அவற்றையும் சேர்த்தால் புதிய அரசு ஐந்தாண்டுகளில் 8 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டியிருக்கும். அதற்கான ஆண்டுக்கு 1.50 லட்சம் பேருக்காவது அரசு வேலைகள் வழங்கப்பட வேண்டும்.</p><p>ஆனால்,  பட்டப்படிப்பை தகுதியாகக் கொண்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் 461, பட்டயப்படிப்பை தகுதியாகக் கொண்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் 839, தொகுதி 1 பணிகள் 26, தொகுதி 2 மற்றும் 2ஏ பணியிடங்கள் 821 என 2147 பணியிடங்களுக்கு மட்டும் தான் 4 ஆள்தேர்வு அறிவிக்கைகள் வெளியிடப் பட்டிருக்கின்றன. இவையும் கூட முந்தைய திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டவை தான். இதே நிலை தொடர்ந்தால், அடுத்த ஐந்தாண்டுகளில் அதிகபட்சமாக 50,000 பேருக்கு கூட அரசு வேலைகளை வழங்க முடியாது;  அரசுத்துறை காலிப் பணியிடங்களையும் நிரப்ப முடியாது. வாக்குறுதியை நிறைவேற்றுவதிலும் தவெக தோல்வியடையும்.</p><p>2026&amp;ஆம் ஆண்டில் தவெக ஆட்சிக்கு வருவதற்கு காரணம் இளைஞர்கள் தான். அவர்களுக்கு தவெக  அளித்த வாக்குறுதிகளில் முதன்மையானவை அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்; வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4000 உதவித் தொகை வழங்கப்படும்; தனியார் தொழில் வணிக நிறுவனங்களில் 75% வேலைகள் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்யும் சட்டம் இயற்றப்படும் என்பன தான். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுப்பது இளைஞர்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகம் ஆகும். அதை செய்யாமல் இருப்பதை தவிர்க்க டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்பப்படவுள்ள தொகுதி 2 மற்றும் 2ஏ பணிகளுக்கான காலியிடங்களின் எண்ணிக்கையை 3000 ஆக உயர்த்த வேண்டும். இது தவிர, வேலையில்லாத இளைஞர்களுக்கு   உதவித் தொகை வழங்குதல், தனியார் வேலைவாய்ப்புகளில் தமிழக இளைஞர்களுக்கு 75% இட ஒதுக்கீடு  வழங்கும் சட்டத்தை இயற்றுதல் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளையும் விரைந்து நிறைவேற்ற வேண்டும்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/continuing-murders-in-coimbatore-vanathi-srinivasan-urges-police-to-take-stern-action</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/continuing-murders-in-coimbatore-vanathi-srinivasan-urges-police-to-take-stern-action#comments</comments><guid isPermaLink="false">8f952fd0-5f4b-454c-879c-ac5aae6dd997</guid><pubDate>Thu, 13 Aug 2026 06:13:28 +0000</pubDate><atom:updated>2026-08-13T06:13:28.890Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,murder,கொலை,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,வலியுறுத்தல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/7hc897op/vanathi.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/7hc897op/vanathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவையில் தொடரும் கொலை சம்பவங்களுக்கு காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.</p><p>இது தொடர்பாக, பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>கொலை சம்பவங்கள்</h2><p>தொழில் நகரம் என்ற பெருமைக்குரிய கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடரும் கொடூர கொலை சம்பவங்களால் பொது மக்களின் பாதுகாப்பு முற்றிலும் கேள்விக்குறியாகி உள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் நான்கு கொடூர கொலை குற்ற சம்பவங்கள் அரங்கேறி கோவை மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.</p><p>குறிப்பாக வீட்டில் தனியாக இருக்கும் பெண்களும், போதைப்பொருள் பயன்பாட்டால் மாணவர்களுக்குள் ஏற்படும் மோதல்கள் கொலை வரை செல்வது தவெக அரசில் சட்டம் ஒழுங்கின் திறனற்ற செயலையே காட்டுகிறது. சிறைக்காவலில் இருக்கும் கைதிகளுக்கே இந்த ஆட்சியில் பாதுகாப்பற்ற சூழல் இருக்கும் பட்சத்தில் காவல் துறையிடமிருந்து பொதுமக்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியே.</p><h2>வலியுறுத்தல்</h2><p>இந்நிலை தொடர்ந்தால் கோவை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்திலும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து சட்டம் ஒழுங்கு காற்றில் பறந்து பாதுகாப்பற்ற மாநிலம் என்ற சூழல் உருவாகும். எனவே <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">காவல்துறை</a> இனியும் காலம் தாழ்த்தாமல் குற்றவாளிகளை உனடியாகக் கைது செய்து, கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>2036-க்குள் 1.5 லட்சம் கோடி பொருளாதார இலக்கு: அமைச்சர் கீர்த்தனா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/economic-target-of-15-lakh-crore-by-2036-minister-keerthana</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/economic-target-of-15-lakh-crore-by-2036-minister-keerthana#comments</comments><guid isPermaLink="false">8603fdc1-0106-40f8-a819-ba10733df71c</guid><pubDate>Thu, 13 Aug 2026 06:13:02 +0000</pubDate><atom:updated>2026-08-13T06:13:02.719Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Investors Conference,முதலீட்டாளர்கள் மாநாடு,தொழில்துறை,Industry Department,CM Vijay,அமைச்சர் கீர்த்தனா,Minister Keerthana,பொருளாதார இலக்கு,economic target</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/ygiqfsy6/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/ygiqfsy6/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு 2026 முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் பல்வேறு தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்மூலம் 1,06,998 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன.</p><p><strong>மாநாட்டில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பேசியதாவது:-</strong></p><p>மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகம் முதலீட்டுக்கான நம்பகமான மாநிலமாக முதல் இடத்தில் உள்ளது. 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகியுள்ளன. ஒரு நாளைக்கு ஆயிரம் கோடி என்ற அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு ஒரு லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.</p><p>தவெக ஆட்சியமைத்த 100 நாட்களில் 1 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு. தொழில் வளர்ச்சிக்கு தேவையான அனைத்தும் தமிழ்நாட்டில் உள்ளன. 2036-ம் ஆண்டுக்குள் 1.5 அமெரிக்க டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை முதல்-அமைச்சர் நிர்ணயம் செய்துள்ளார். வேலைக்காக யாரும் சொந்த ஊரை விட்டு செல்லக்கூடாது என்பதே இலக்கு.</p><p>21 நாட்களில் தொழில் நிறுவனங்களுக்கான அனுமதிகள் வழங்கப்படுகிறது. தமிழகத்தின் தொழில் பரிமாணங்கள் இந்த முதலீட்டாளர் மாநாட்டின் மூலமாக மாற்றப்பட உள்ளது. திறமையும் மனித வளமும் தமிழகத்தில் குவிந்துள்ளது. இன்றைய முதலீடுகள் அடுத்த 10 ஆண்டுகளுக்கு எங்களுடைய பாதையை காட்டுகிறது. ‘வெற்றி தமிழ்நாடு 2026’ ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>அரசு மருத்துவமனை என்றாலே மக்கள் அச்சம் கொள்ளும் சூழல் நீங்குவது எப்போது? - டிடிவி தினகரன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/when-will-fear-of-government-hospitals-end-ttv-dhinakaran-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/when-will-fear-of-government-hospitals-end-ttv-dhinakaran-asks#comments</comments><guid isPermaLink="false">8b5629f0-380b-4d82-9b0a-e5718cd9c97c</guid><pubDate>Thu, 13 Aug 2026 06:11:35 +0000</pubDate><atom:updated>2026-08-13T06:11:35.182Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,AMMK,அமமுக,அரசு மருத்துவமனை,Govt Hospitals</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/lvojjpyo/Untitled-8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/lvojjpyo/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசு ஊழியர்களின் தொடர்ச்சியான அலட்சியப் போக்கு அரசு மருத்துவமனை என்றாலே மக்கள் அச்சப்படும் அளவிற்கு ஒரு மோசமான சூழலை உருவாக்கியுள்ளன என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளின் ஊட்டச்சத்திற்காக வழங்க வேண்டிய முட்டைகளை அவர்களின் படுக்கையிலும், கால்களுக்கு அருகிலும் ஊழியர்கள் அலட்சியமாக வீசிச் செல்வது போல வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன.</p><p>தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள மிகப்பெரிய அரசு மருத்துவமனைகளில் ஒன்றான ஸ்டான்லி மருத்துவமனையிலேயே, நோயாளிகளை இவ்வளவு மோசமான நிலையில் நடத்தப்படும் நிலையில், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளின் நிலையை நினைத்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது. </p><p>அதே போல, நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டைகள் கெட்டுப்போய் அழுகிய நிலையில் இருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.</p><p>அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக வழங்கப்படும் முட்டைகள் தொடங்கி, அரசு உயர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் முட்டைகள் வரை அனைத்தும் தரமற்றதாக இருப்பதோடு, அரசு ஊழியர்களின் தொடர்ச்சியான அலட்சியப் போக்கும், அரசின் மெத்தனமான செயல்பாடுகளும், அரசு மருத்துவமனை என்றாலே மக்கள் அச்சப்படும் அளவிற்கு ஒரு மோசமான சூழலை உருவாக்கியுள்ளன.</p><p>எனவே, அங்கன்வாடி மையங்களுக்குத் தரமற்ற முட்டைகளை வழங்கிய ஒப்பந்ததாரர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, அரசு மருத்துவமனைகளை நாடி வரும் ஏழை, எளிய நோயாளிகளைக் கண்ணியத்துடன் நடத்திட முன்வர வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் மோதி, குட்டியுடன் தாய் யானை உயிரிழந்த சோகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-mother-elephant-and-her-calf-were-killed-after-being-struck-by-a-train-while-crossing-the-tracks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-mother-elephant-and-her-calf-were-killed-after-being-struck-by-a-train-while-crossing-the-tracks#comments</comments><guid isPermaLink="false">538e31c5-3c53-453f-94be-989227b613c5</guid><pubDate>Thu, 13 Aug 2026 05:43:47 +0000</pubDate><atom:updated>2026-08-13T05:43:47.617Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>கேரளா,Kerala,train,ரெயில்,Elephants,யானைகள்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/55nk981b/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/55nk981b/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பாலக்காடு,</p><p>கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வாளையார் சாவடிப்பாரா புதுப்பதி வனப்பகுதியில் நேற்றி நள்ளிரவு 11.45 மணியளவில் 4 யானைகள் கொண்ட கூட்டம் ரெயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றது. அப்போது அவ்வழியாக வந்த மங்களூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் யானைகள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. </p><h2>தாய் யானை, குட்டி யானை பலி</h2><p>இந்த விபத்தில் சிக்கிய தாய் யானை மற்றும் குட்டி யானை ஆகிய இரண்டும் ரெயில் என்ஜின் சக்கரங்களில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகின. இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த வாளையார் வனத்துறையினர் மற்றும் பாலக்காடு ரெயில்வே அதிகாரிகள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் இயந்திரங்கள் மூலம் யானைகளின் உடல்கள் தண்டவாளத்தில் இருந்து மீட்கப்பட்டது. இதன் பின்னர், பழுதான என்ஜின் சரிசெய்யப்பட்டு, ரெயில் அங்கிருந்து புறப்பட்டது.</p><h2>வளைவான பாதை</h2><p>விபத்து நிகழ்ந்த இடம் தமிழக எல்லையிலிருந்து சுமார் 300 முதல் 400 மீட்டர் தொலைவில் கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. வளைவான பாதையில் ரெயில் வந்தபோது யானைகள் தண்டவாளத்தை கடந்ததாக கூறப்படுகிறது. இதனால் லோகோ பைலட்டால் யானைகளை முன்கூட்டியே பார்த்து ரெயிலின் வேகத்தை குறைக்க முடியாமல் போனதே விபத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. ரெயில் வேகமாக இயக்கப்பட்டதா? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>உலக யானைகள் தினத்தன்று தமிழக-கேரள எல்லைப் பகுதியில் ரெயில் மோதி தாய் யானை மற்றும் குட்டி யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>வாணியம்பாடியில் ஜீவானந்தம் சிலை குப்பையில் வீச்சு: அதே இடத்தில் புதிய சிலை நிறுவ வேண்டும் - சீமான்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/jeevanandams-statue-dumped-in-the-trash-in-vaniyambadi-a-new-statue-must-be-installed-at-the-same-spot-seeman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/jeevanandams-statue-dumped-in-the-trash-in-vaniyambadi-a-new-statue-must-be-installed-at-the-same-spot-seeman#comments</comments><guid isPermaLink="false">81d65cbf-50af-4c55-af9d-41772a390975</guid><pubDate>Thu, 13 Aug 2026 05:38:34 +0000</pubDate><atom:updated>2026-08-13T05:38:34.355Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,Seeman,சென்னை,தமிழ்நாடு அரசு,சிலை,statue,வாணியம்பாடி,Vaniyambadi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/qc5fjos8/272.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சீமான்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/qc5fjos8/272.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வாணியம்பாடியில் ஜீவானந்தம் சிலை குப்பையில் வீசப்பட்டுள்ளது, புதிய சிலையை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறுவ வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-</p><h2>ஜீவானந்தம்</h2><p>வாணியம்பாடியில் பொதுவுடைமை பிதாமகன் ஐயா ஜீவானந்தம் மார்பளவு சிலை குப்பையில் வீசப்பட்டுள்ளது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. வாழ்நாள் முழுவதும் மண்ணுக்கும் மக்களுக்குமாக வாழ்ந்து மறைந்த மகத்தான தலைவரின் சிலையை அலட்சியமாக குப்பையில் வீசியுள்ள செயல் வன்மையான கண்டனத்துக்குரியது. </p><p>நாட்டு விடுதலைக்கு போராடி சிறையில் வதைப்பட்ட வீரர், பொதுவுடைமை தத்துவத்தை தமிழ்நாடு முழுவதும் விதைத்த போற்றுதற்குரிய பெருமகன் நம்முடைய ஐயா ஜீவானந்தம். தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்று முதன்முதலில் குரல் கொடுத்த பெருந்தகை. சுடுகாட்டில் கூரையமைத்து, இடுப்பில் கட்டிய ஒற்றை வேட்டியோடு, ஒழுகும் குடிசையில் புத்தகங்களின் நடுவே உண்மையும், எளிமையும், நேர்மையுமாக வாழ்ந்து மக்கள் தொண்டாற்றிய பெருந்தமிழர். அப்பழுக்கற்ற பொதுவாழ்விற்கும், தூய அரசியல் மாண்பிற்கும் மறுவடிவமாக வாழ்ந்து மறைந்த ஐயா ஜீவானந்தம் சிலையை குப்பையில் வீசியுள்ளது ஏற்க முடியாத பெருங்கொடுமையாகும். </p><p>தமிழ்நாடு அரசு இதனை வேடிக்கைப் பார்ப்பது வெட்கக்கேடானது. இதுதான் நாட்டிற்கு உழைத்த மாபெரும் தலைவருக்கு தவெக அரசு காட்டும் நன்றியா? செலுத்தும் மரியாதையா?</p><h2>புதிய சிலை</h2><p>நாட்டின் போற்றுதற்குரிய தலைவர் பெருமக்களில் ஒருவரான ஐயா ஜீவானந்தம் அவர்களின் 119வது பிறந்த நாள் வருகின்ற 21.08.2026 அன்று கொண்டாடப்படவுள்ள நிலையில், அவருடைய சிலையைக் குப்பையில் வீசியவர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதோடு, புதிய சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">நாம் தமிழர் கட்சி</a> சார்பாக வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>   ]]></content:encoded></item><item><title>மூன்று மாதங்களுக்கு பிறகு 80 அடியை எட்டிய மேட்டூர் அணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mettur-dam-water-level-reaches-80-feet-after-three-months</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mettur-dam-water-level-reaches-80-feet-after-three-months#comments</comments><guid isPermaLink="false">00ed7686-838a-44be-b937-0ade6ec1e8a5</guid><pubDate>Thu, 13 Aug 2026 05:11:47 +0000</pubDate><atom:updated>2026-08-13T05:11:47.855Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Mettur dam,மழை,water,உயர்வு,மேட்டூர்,நீர்,மேட்டூர் அணையின் நீர்மட்டம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/e6ruwxrc/271.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மேட்டூர் அணை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/e6ruwxrc/271.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மேட்டூர், </p><p>மூன்று மாதங்களுக்கு பிறகு 80 அடியை எட்டியது மேட்டூர் அணை.</p><h2>காவிரி</h2><p>கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பியது. இதையடுத்து கடந்த 1-ந் தேதியில் இருந்து கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் திறந்து விடப்பட்டு வருகிறது.</p><p>அதிகபட்சமாக கபினி அணையில் இருந்து வினாடிக்கு 27 ஆயிரம் கனஅடி வரை திறக்கப்பட்டது. அதே நேரம் கிருஷ்ண ராஜ சாகர் அணையில் இருந்தும் வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வீதம் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது.</p> <h2>அணையின் நீர்மட்டம்</h2><p>மேட்டூர் அணையின் நீர்மட்டம் மூன்று மாதங்களுக்கு பிறகு இன்று 80 அடியை எட்டியுள்ளது. இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 80.31 அடியாக உள்ளது.</p><p>அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது வினாடிக்கு 7,833 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.</p><p>நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் 80 அடியை கடந்துள்ளதால், <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேட்டூர் அணையை</a> நம்பியுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து மத்திய அரசுக்கு மாணிக்கம் தாகூர் யோசனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/manickam-tagore-suggests-that-the-central-government-conduct-a-caste-based-census</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/manickam-tagore-suggests-that-the-central-government-conduct-a-caste-based-census#comments</comments><guid isPermaLink="false">c9ac9718-ec84-44ce-97a7-8f133ece0814</guid><pubDate>Thu, 13 Aug 2026 05:10:28 +0000</pubDate><atom:updated>2026-08-13T05:10:28.660Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,ஜாதிவாரி கணக்கெடுப்,Caste-based Census</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/0rst58en/10.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/0rst58en/10.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;</p><p>ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு தெலுங்கானா காங்கிரஸ் அரசு மாதிரியை, மத்திய அரசு பின்பற்ற வேண்டும்</p><p>நாடு முழுவதும் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளை ஒன்றிய அரசு தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக, வீடுகளின் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதைத் தொடர்ந்து, வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கவுள்ளது. அதற்கான படிவத்தில், ‘ஜாதி” என்ற கேள்விக்கு, மக்கள் குறிப்பிடும் ஜாதியின் பெயரை அப்படியே பதிவு செய்வது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.</p><p>மக்களிடம், ‘உங்கள் ஜாதி என்ன?” என்று கேட்டால், பெரும்பாலும் உட்ஜாதி பெயர்களையே குறிப்பிடுவார்கள். அந்தப் பெயர்கள் அரசின் பட்டியலில் இருக்காது. அவற்றை அப்படியே பதிவு செய்தால், பெரும் குழப்பங்கள் ஏற்படும். இதனால், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியதன் நோக்கமே நிறைவேறாமல் போய்விடும்.</p><p>எனவே, மக்கள்தொகை கணக்கெடுப்புப் படிவத்திலேயே ஜாதிகளின் பட்டியலை வழங்கி, அதில் அவரவர் ஜாதியைத் தேர்ந்தெடுக்கச் சொல்ல வேண்டும். கடந்த 2021ஆம் ஆண்டு, தெலுங்கானா மாநில காங்கிரஸ் அரசு மிகச் சிறப்பாக ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடித்தது. அது நாடு முழுவதும் பெரும் பாராட்டைப் பெற்றது. தெலுங்கானா காங்கிரஸ் அரசின் மாதிரியை மத்திய அரசு பின்பற்ற வேண்டும். அப்போதுதான் துல்லியமான, உண்மையான தரவுகள் கிடைக்கும்.</p><p>துல்லியமான, உண்மையான தகவல்கள் கிடைத்தால்தான், உண்மையிலேயே சமூக மற்றும் பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களைக் கண்டறிந்து, அவர்களுக்கான இடஒதுக்கீட்டை வழங்க முடியும். அவர்களுக்கான தனித்திட்டங்களைச் செயல்படுத்த முடியும். அதன் வாயிலாக, சமூக நீதியை நிலைநாட்ட முடியும்.</p><p>எனவே, ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை பெயரளவுக்கு நடத்தாமல், அறிவியல் ரீதியாகவும், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும் மிகச் சிறப்பாக நடத்த வேண்டும். இதற்கு தெலுங்கானா காங்கிரஸ் அரசின் மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நான் கடிதம் எழுதியிருக்கிறேன்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் இப்படி ஒரு கிராமமா..? திருமணமாகாத இளைஞர்கள் மது அருந்தினால் ரூ.5,000 அபராதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-5000-fine-for-unmarried-youths-who-consume-alcohol</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-5000-fine-for-unmarried-youths-who-consume-alcohol#comments</comments><guid isPermaLink="false">be937256-56fb-4a19-b206-cf0ef1ac1438</guid><pubDate>Thu, 13 Aug 2026 05:09:11 +0000</pubDate><atom:updated>2026-08-13T05:09:11.863Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Nagapattinam,நாகப்பட்டினம்,மதுபானம்,Liquor,இளைஞர்கள்,Velankanni,வேளாங்கண்ணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/sr8j84qc/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/sr8j84qc/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>நாகை,</p><p>திருமணமாகாத இளைஞர்கள் மது அருந்தினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று விழுந்தமாவடி ஊர் பஞ்சாயத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது.</p><h2>விழுந்தமாவடி ஊர்</h2><p>போதைப் பொருள் இல்லாத பாதுகாப்பான தமிழ்நாட்டை உருவாக்க அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய் வலியுறுத்தி வருகிறார். அந்த வகையில், போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கான உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி மற்றும் போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.</p><p>இந்த நிலையில், மது பழக்கத்தால் சீரழியும் இளைஞர்களின் எதிர்காலத்தைக் காக்கவும், பொது அமைதியைப் பேணவும், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடி ஊர் பஞ்சாயத்து சார்பில் மதுவை ஒழிப்போம், மக்களைக் காப்போம் என்ற முழக்கத்துடன் விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டுள்ளது.</p><h2>ரூ.5,000/- அபராதம்</h2><p>அதில், பொதுமக்கள் கவனத்திற்கு... நமது கிராமத்தின் பொது அமைதி, இளைஞர்களின் நலன் பொதுசுகாதாரம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு 02.08.2026 முதல் ஊரில் திருமணம் ஆகாதவர்கள் (இளைஞர்கள்) மது அருந்த முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.</p><p>மேலும் திருமணம் ஆகாதவர்கள் மது அருந்துவதை ஆதாரத்துடன் நீரூபிக்கப்பட்டால் ரூ.5,000/- அபராதம் வசூலிக்கப்படும். இதனுடன் திருமணம் ஆனவர்கள் குடிபோதையில் வீட்டிலோ அல்லது பொது இடத்திலோ பிரச்சினைகள் ஏற்பட்டு நமது ஊருக்கு வரும் பட்சத்தில் ரூ.5,000/-அபராதம் வசூலிக்கப்படும். “இந்த நல்ல முயற்சிக்கு ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்”.</p><p>இன்றைய சரியான முடிவு நாளைய சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் மதுவை தவிர்போம், நம் எதிர்கால வாழ்கையையும், நம் சமூகத்தையும் பாதுகாப்போம்... ‘மதுவை ஒழிப்போம்! மக்களை காப்போம்!!” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. போதைப்பொருளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வரும் நிலையில், விழுந்தமாவடி ஊர் மக்களின் இத்தகைய முடிவு மக்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வார விடுமுறை: தமிழகம் முழுவதும் 2,120 சிறப்பு பஸ்கள் இயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/weekend-2120-special-buses-to-operate-across-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/weekend-2120-special-buses-to-operate-across-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">edd12f8e-0dfd-4503-ad51-cfad36abedff</guid><pubDate>Thu, 13 Aug 2026 05:02:05 +0000</pubDate><atom:updated>2026-08-13T05:02:05.604Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு பஸ்கள்,special buses,Weekend,வார விடுமுறை</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/9o5moq3p/9.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/9o5moq3p/9.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காகச் சென்னையில் உள்ள முக்கியப் பேருந்து முனையங்கள் மற்றும் பிற நகரங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு:-</p><p>கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 505 சிறப்புப் பேருந்துகள், 15-ந் தேதி (சனிக்கிழமை) 570 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.</p><p>கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 110 சிறப்புப் பேருந்துகள், 15-ந் தேதி (சனிக்கிழமை) 110 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.</p><p>மாதவரத்திலிருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, போளூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு 14 மற்றும் 15-ந் தேதிகளில் நாள் ஒன்றுக்கு தலா 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. </p><p>வெளி மாவட்டங்கள் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய முக்கிய நகரங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.</p> <p>வார விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து பயணிகள் சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக, 16-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேவைகேற்ப பல்வேறு இடங்களில் இருந்து 465 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>படிக்காமல் செல்போன் பார்த்ததை கண்டித்த தாய்: கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mother-scolds-daughter-for-phone-college-student-takes-extreme-step</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mother-scolds-daughter-for-phone-college-student-takes-extreme-step#comments</comments><guid isPermaLink="false">a3fa8242-7967-4d3e-a48e-ef2d917a0fd1</guid><pubDate>Thu, 13 Aug 2026 05:00:29 +0000</pubDate><atom:updated>2026-08-13T05:00:29.082Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தூத்துக்குடி,Srivaikundam,ஸ்ரீவைகுண்டம்,Thoothukkudi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/43s47m1c/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/43s47m1c/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>புத்தகத்தை படிக்காமல் செல்போன் பார்த்ததை தாயார் கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.</p><h2>கல்லூரி மாணவி</h2><p>தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள திருப்புளியங்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் சந்திரமோகன். விவசாயி. இவரது மகள் இலக்கிய ஸ்ரீநிதி (22 வயது). இவர் நாசரேத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.</p><p>இவர், கடந்த 5-ந்தேதி வீட்டில் செல்போனை பார்த்துக் கொண்டிருந்துள்ளார். இதை கவனித்த அவரது தாயார் ஜான்சிராணி, புத்தகத்தை படிக்காமல் செல்போனை பார்த்துக் கொண்டிருக்கிறாயே என்று கண்டித்துள்ளார்.</p><h2>விஷம் குடித்தார்</h2><p>இதனால் மனமுடைந்த மாணவி, வீட்டில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p>இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சமூக நீதிக்கு துல்லியமான தரவுகள் அவசியம்: பிரதமரிடம் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/precise-data-is-essential-for-social-justice-manickam-tagore-urges-the-prime-minister</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/precise-data-is-essential-for-social-justice-manickam-tagore-urges-the-prime-minister#comments</comments><guid isPermaLink="false">4f1668b9-d25e-4057-a1eb-9303e3ceb54d</guid><pubDate>Thu, 13 Aug 2026 04:39:11 +0000</pubDate><atom:updated>2026-08-13T04:39:11.815Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,மக்கள் தொகை கணக்கெடுப்பு,Social justice,வலியுறுத்தல்,மாணிக்கம் தாகூர்,மோடி,Data,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/0d98ioy5/270.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/0d98ioy5/270.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சமூக நீதிக்கு துல்லியமான தரவுகள் அவசியம் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.</p><h2>மக்கள் தொகை கணக்கெடுப்பு</h2><p>இதுதொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>9 ஆகஸ்ட் 2026 அன்று, 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">மக்கள் தொகைக் கணக்கெடுப்பில்</a> சாதிவாரி கணக்கெடுப்பிற்கான முறையியல் குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன்.</p><h2>சாதிப் பதிவுகள்</h2><p>SECC 2011-ல் பின்பற்றப்பட்ட “திறந்த வகை” (Open Column) அணுகுமுறையின் காரணமாக, 1931ஆம் ஆண்டு பதிவான 4,147 சாதிப் பதிவுகளுடன் ஒப்பிடுகையில், 46 லட்சம் சாதிப் பதிவுகள் உருவாகின. இவ்வளவு துண்டு துண்டான தரவுகள் உருவானதால், அவற்றை பயன்படுத்த முடியாதவை என அரசே குறிப்பிட்டது.</p><p>இதை நாம் மீண்டும் செய்யக்கூடாது. 2027ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில்:-</p><p><strong>* </strong>முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு, குறியீடுகளுடன் கூடிய சாதிப் பட்டியல்கள்</p><p><strong>*</strong> எழுத்துப்பிழை மற்றும் உச்சரிப்பு வேறுபாடுகளால் ஏற்படும் பிழைகளைத் தவிர்க்க ஒவ்வொரு சாதிக்கும் தனித்துவமான குறியீடுகள்</p><p><strong>*</strong> அரிதாகப் பதிவாகும் சாதிப் பெயர்களுக்கு டிஜிட்டல் சரிபார்ப்பு</p><p>ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும்.</p><p>தெலங்கானாவின் SEEEPC மாதிரியிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். சமூக நீதிக்கு அறிவியல் ரீதியாகத் துல்லியமான, நம்பகமான தரவுகள் அவசியம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">9 ஆகஸ்ட் 2026 அன்று, 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பிற்கான முறையியல் குறித்து பிரதமர் <a href="https://x.com/narendramodi?ref_src=twsrc%5Etfw">@narendramodi</a> அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.<br><br>SECC 2011-ல் பின்பற்றப்பட்ட “திறந்த வகை” (Open Column) அணுகுமுறையின் காரணமாக, 1931ஆம் ஆண்டு பதிவான… <a href="https://t.co/tOScdwoYBS">https://t.co/tOScdwoYBS</a></p>&mdash; Manickam Tagore .Bமாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) <a href="https://x.com/manickamtagore/status/2087742311786750098?ref_src=twsrc%5Etfw">August 13, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>தமிழக காடுகளில் 3,170 யானைகள் - அரசு தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/3170-elephants-in-tamil-nadu-forests-government-data</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/3170-elephants-in-tamil-nadu-forests-government-data#comments</comments><guid isPermaLink="false">09bc206a-576d-4218-9e18-94fc604478cf</guid><pubDate>Thu, 13 Aug 2026 04:36:05 +0000</pubDate><atom:updated>2026-08-13T04:36:05.186Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt,Elephants,யானைகள்,யானைகள் தினம்,International Elephant Day,World Elephant Day</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/4csd0l6v/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ யானைகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/4csd0l6v/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>உலக யானைகள் தினத்தையொட்டி அவற்றை பாதுகாக்க உறுதி ஏற்போம் என்றும் தமிழக காடுகளில் 3,170 யானைகள் இருப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது.</p><p><strong>தமிழக வனத்துறை அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-</strong></p><p>ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 12-ந் தேதி உலகம் முழுவதும் உலக யானைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழகத் தில் யானைகள் பாதுகாப்பு, அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாத்து மேம்படுத்துதல், மனிதயானை மோதலைத் தணித்தல் ஆகியவற்றிற்கு நவீன தொழில்நுட்பம் உள்ளிட்ட அணுகுமுறைகள் மூலம் அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.</p><p>இந்தியாவில் யானைகள் வாழும் முக்கிய மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் யானை வாழ்விடங்கள், அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகத்தின் வனப்பகுதிகளுடன் இயற்கையாகத் தொடர்ச்சியடைந்து, பரந்த மாநிலங்களுக்கு இடையேயான யானை வாழ்விட நிலப்பரப்பாக அமைந்துள்ளன.</p><h2>3,170 யானைகள்</h2><p>2025-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட யானைகள் கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 3,170 காட்டு யானைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 9.1 லட்சம் எக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் 5 யானைகள் காப்பகங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகரித்து வரும் மனிதவனவிலங்கு மோதல்களை தடுக்க இந்த ஆண்டு ரூ.20 கோடி நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது.</p><p>யானைகளைப் பாதுகாப்பது அரசு மற்றும் வனத்துறையின் பொறுப்பு மட்டுமல்ல. பொதுமக்கள், இளைஞர்கள், விவசாயிகளின் ஒத்துழைப்பு அவசியமானதாகும். பாதுகாப்போம் யானைகளை, காடுகளைப் பாதுகாப்போம். வனத்துறையுடன் இணைந்து மனிதயானை நல்லிணக்கத்தை உருவாக்குவோம் என்ற உறுதியை அனைவரும் ஏற்போம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தங்கம் விலை மேலும் உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..?</title><link>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-rises-again-todays-status</link><comments>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-rises-again-todays-status#comments</comments><guid isPermaLink="false">e9cd7b8b-118d-4118-8bea-0c107eb86cb7</guid><pubDate>Thu, 13 Aug 2026 04:31:37 +0000</pubDate><atom:updated>2026-08-13T04:32:09.944Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Gold Rate,தங்கம் விலை,வெள்ளி விலை,Silver rate,Gold Price,Silver Price,விலை நிலவரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/vfhya8bh/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/vfhya8bh/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தங்கம் (Gold Rate)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த 3-ந்தேதி தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,06,500 ஆக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து நேற்று முன்தினம் ஒரு சவரன் ரூ.1,13,200-க்கும், ஒரு கிராம் ரூ.14,150-க்கும் விற்பனை செய்யப்பட்டது.</p><p>இதன் தொடர்ச்சியாக நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.400-ம், கிராமுக்கு ரூ.50-ம் அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,13,600-க்கும், ஒரு கிராம் ரூ.14,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.</p><p>அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>வெள்ளி விலையில் 2-வது நாளாக மாற்றமில்லை. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.260-க்கும், கிலோ ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை.. சென்னையில் வாட்டர் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த முனைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/from-ennore-to-mamallapuram-push-to-implement-the-water-metro-project-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/from-ennore-to-mamallapuram-push-to-implement-the-water-metro-project-in-chennai#comments</comments><guid isPermaLink="false">b6d6c17c-a4a9-498f-bac3-139668dd9b97</guid><pubDate>Thu, 13 Aug 2026 04:21:21 +0000</pubDate><atom:updated>2026-08-13T04:21:21.765Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழ்நாடு,Chennai,சென்னை,Mamallapuram,மாமல்லபுரம்,சென்னை மெட்ரோ,chennai metro,எண்ணூர்,வாட்டர் மெட்ரோ,Water Metro,Chennai Metropolitan Corporation,Ennoor,சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/y0n0116b/metr.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/y0n0116b/metr.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரையிலான பக்கிங்ஹாம் கால்வாயில் 'வாட்டர் மெட்ரோ' (நீர்வழிப் போக்குவரத்து) திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க டெண்டர் கோரியது சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம்.</p><h2>சென்னை</h2><p>தமிழ்நாட்டின் தலைநகரான <a href="https://www.dailythanthi.com/topic/chennai">சென்னை</a>யை இந்தியாவின் சிறந்த நகரமாக மாற்றும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி சென்னையில் பஸ், ரெயில், விமானம், கப்பல் என 4 வகையான போக்குவரத்து சாதனங்கள் செயல்பட்டு வருகிறது. அதேசமயம் சென்னைக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.</p><h2>மெட்ரோ ரெயில்கள்</h2><p>தற்சமயம் சென்னை விமான நிலையம் முதல் விம்கோ நகர் பணிமனை வரையும், பரங்கிமலை முதல் சென்னை சென்டிரல் வரையும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. </p><p>இரண்டாவது கட்ட திட்ட பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. மாதவரம் தொடங்கி  சிறுசேரி சிப்காட் வரையும், பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரையிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேசமயம் செங்கல்பட்டு வரை மெட்ரோ ரெயில் சேவையை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது. </p><h2>விரிவான திட்ட அறிக்கை</h2><p>இந்நிலையில் சென்னையில் வாட்டர் மெட்ரோ திட்டம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரையிலான பக்கிங்ஹாம் கால்வாயில் 'வாட்டர் மெட்ரோ' (நீர்வழிப் போக்குவரத்து) திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் டெண்டர் கோரி உள்ளது.  </p> <h2>கொச்சி வாட்டர் மெட்ரோ திட்டம்</h2><p>வரலாற்றுச் சிறப்புமிக்க பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக இச்சேவை திட்டமிடப்பட்டுள்ள நிலையில் சென்னை எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரையிலான 53 கிலோ மீட்டர் தூரத்துக்கு அதிநவீன படகுப் போக்குவரத்து அமைக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக நேப்பியர் பாலம் முதல் கோவளம் வரை படகுகளை இயக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. </p><p>முன்னதாக இந்தியாவின் முதலாவது வாட்டர் மெட்ரோ திட்டம் கேரள மாநிலம் கொச்சியில் வெற்றிகரமாக தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. </p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/hxj55zas/cochi.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>ரூ.67,452 கோடி மதிப்பிலான 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்:
முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vetri-tamil-nadu-investors-meet-held-in-chennai-today-chief-minister-vijay-participates</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vetri-tamil-nadu-investors-meet-held-in-chennai-today-chief-minister-vijay-participates#comments</comments><guid isPermaLink="false">25eb1504-69e6-4a8f-be24-59107910806a</guid><pubDate>Thu, 13 Aug 2026 04:18:45 +0000</pubDate><atom:updated>2026-08-13T04:18:45.199Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Chennai,சென்னை,Investors Conference,முதலீட்டாளர்கள் மாநாடு,CM Vijay,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/2acc4hhk/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/2acc4hhk/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ரூ.1 லட்சம் கோடி தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், சென்னையில் இன்று (வியாழக்கிழமை) வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.</p><h2>வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு</h2><p>தமிழகத்தில் நடந்து முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று த.வெ.க. ஆட்சி அமைத்துள்ளது. கடந்த மே 10-ந் தேதி தமிழகத்தின் 12-வது முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார்.</p><p>அரசு நடைமுறையில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வரும் த.வெ.க. அரசு, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் 96 நாட்கள் நிறைவடையும் நிலையில், வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் இன்று நடந்தது.</p><h2>97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து</h2><p>கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற மாநாட்டிற்கு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தலைமை தாங்கினார். இந்த மாநாட்டில், 97 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.</p><p>இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு ரூ.67,452 கோடி தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட உள்ளன. 1 லட்சத்து 6 ஆயிரத்து 998 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக இருக்கின்றன. ஏற்கனவே, கடந்த 3 மாதங்களில் போடப்பட்ட தொழில் முதலீடுகளையும் சேர்த்து, த.வெ.க. அரசு பதவியேற்ற 100 நாட்களில் 104 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.</p><h2>ரூ.1 லட்சம் கோடி ஈர்ப்பு</h2><p>தொடர்ந்து, ரூ.4,4 கோடியில் 8 புதிய திட்டங்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.2,676 கோடியில் 5 திட்டங்களைத் தொடங்கி வைத்தும், ரூ.777.74 கோடியில் புதிய கட்டடங்களைத் திறந்து வைத்தும், 9 நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வான 20 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கியும் சிறப்பித்தார்.</p><p>இதன் மூலம் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 514 கோடி முதலீடுகள் ஈர்க்கப்படும். 1 லட்சத்து 21 ஆயிரத்து 788 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன.</p><h2>எந்தெந்த நிறுவனம் எவ்வளவு முதலீடு</h2><p>* தமிழ்நாட்டில் ஹிந்துஜா குழுமம் ரூ.2,500 கோடி முதலீடு செய்கிறது. இதன்மூலம் 500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.</p><p>* அல்ட்ராவயோலெட் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.779 கோடி முதலீடு செய்கிறது. ல்ட்ராவயோலெட் EV ஆலை கிருஷ்ணகிரியில் அமைகிறது. இதனால் 4,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.</p><p>* டெய்ம்லர் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.4,000 கோடி முதலீடு செய்கிறது. டெய்ம்லர் நிறுவனத்தின் ஆலை காஞ்சிபுரத்தில் அமைக்கப்பட இருக்கிறது. </p><p>* ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் ரூ.250 கோடி முதலீடு செய்கிறது</p><p>* லூகாஸ் டிவிஎஸ் நிறுவனம் ரூ.2,500 கோடி முதலீடு செய்கிறது</p><p>* தமிழ்நாட்டில் ரூ.1,000 கோடி முதலீடு செய்கிறது டைட்டன்</p><p>* செயின்ட் கோபைன் நிறுவனம் ரூ.2,000 கோடி முதலீடு செய்கிறது</p><p>* ரூ.5,000 கோடி முதலீடு செய்கிறது ஜே.கே. டயர்ஸ் நிறுவனம்</p><p>* பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனம் ரூ.1,000 கோடி முதலீடு</p><h2>ஒரகடம் டைம்லர் ஆலை விரிவாக்கம்</h2><p>சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாடு 2026-ல் ஜெர்மனியை சேர்ந்த டைம்லர் (Daimler) நிறுவனத்துடன் மிக முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது</p><p>காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் இயங்கி வரும் தனது 400 ஏக்கர் பரப்பிலான உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி மையத்தை ரூ.4,000 கோடி முதலீட்டில் மேம்படுத்தவுள்ளது. இதன் மூலம் வணிக வாகனங்களின் வடிவமைப்பு, ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் உற்பத்திப் பணிகள் விரிவுபடுத்தப்படுவதோடு, 400 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட உள்ளன</p><h2>திருவள்ளூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வேலைவாய்ப்பு</h2><p>சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாடு 2026-ல், ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆவிட் குழுமம் முக்கியப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. அடுத்த 5 ஆண்டுகளில் நகர்ப்புற உள்கட்டமைப்பு, சுற்றுலா, சுகாதாரம் மற்றும் சுரங்க உபகரண உற்பத்தித் துறைகளில் களமிறங்கும் இந்நிறுவனம், முதற்கட்டமாக ரூ.7,000 கோடி முதலீட்டில் திருவள்ளூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் திட்டங்களை செயல்படுத்தி 12,000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கவுள்ளது.</p><h2>YKK ஜப்பான் நிறுவனம்</h2><p>அக்னிகுல் காஸ்மோஸ் ரூ.400 கோடி முதலீடு - 1,500 பேருக்கு வேலை வாய்ப்பு</p><p>ஷைலி இன்ஜினீயரிங் ப்ளாஸ்டிக்ஸ் - ரூ.500 கோடி முதலீடு, 'அல்ட்ரா வெயலட்' நிறுவனம் ரூ.779 கோடி முதலீடு - 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு</p><p>சூப்பர் மைக்ரே நிறுவனம் ரூ.477 கோடி முதலீடு - 150 பேருக்கு வேலை வாய்ப்பு. YKK ஜப்பான் நிறுவனம் ரூ.1,651 கோடி முதலீடு - 4,316 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகவுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தரையிறங்கும் நேரத்தில் என்ஜினில் கோளாறு... சென்னையில் வானில் வட்டமடித்த விமானம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/engine-malfunction-during-landing-plane-circles-over-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/engine-malfunction-during-landing-plane-circles-over-chennai#comments</comments><guid isPermaLink="false">cf0aabc2-07e2-4ec1-8149-dfed16f356ad</guid><pubDate>Thu, 13 Aug 2026 04:14:53 +0000</pubDate><atom:updated>2026-08-13T04:14:53.994Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விமானம்,Chennai,Circle,Engine,மீனம்பாக்கம்,சென்னை விமான நிலையத்தில்,என்ஜினில் கோளாறு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/9794btkz/269.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விமானம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/9794btkz/269.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மீனம்பாக்கம், </p><p>கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் திடீர் எந்திர கோளாறு ஏற்பட்டது, தரை இறங்காமல் வானில் தொடர்ந்து வட்டமடித்து கொண்டிருந்தது. </p><h2>எந்திர கோளாறு</h2><p>சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்துக்கு கொல்கத்தாவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் வந்து கொண்டிருந்தது. அந்த விமானத்தில் பயணிகள், விமான ஊழியர்கள் என 224 பேர் இருந்தனர். விமானம் சென்னையில் தரை இறங்க முயன்றபோது, விமானத்தின் இடதுபக்க எந்திரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. மேலும். எண்ணெய் கசிவும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.அதே நிலையில் விமானத்தை சென்னையில் சாதாரணமாக தரை இறக்குவது ஆபத்தானது என்பதை உணர்ந்த விமானி, இதுபற்றி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.</p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>இதையடுத்து, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், விமான நிலைய ஓடுபாதை பகுதியில் அவசர நிலையை அறிவித்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள், மருத்துவக் குழுவினர், அதிரடிப்படையினர் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் துரிதமாக செய்யப்பட்டன.அதுவரை விமானம், தரை இறங்காமல் வானில் தொடர்ந்து வட்டமடித்து கொண்டிருந்தது. இதனால் விமான பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.</p><p>விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்ட பின்னர், விமானம் தரை இறங்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, விமானம் இரவு 11.37 மணிக்கு பத்திரமாக சென்னையில் தரை இறங்கியது. இதனால் விமானத்தில் இருந்த பயணி கள், ஊழியர்கள் என 224 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.</p><p>பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறங்கி சென்ற பின்னர், விமான என்ஜினீயர்கள் குழுவினர் விமானத்துக்குள் ஏறி, விமானத்தை பழுதுபார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நள்ளிரவு 12 மணி அளவில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">விமானம்</a> இயங்க முடியாத நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.</p><h2>விசாரணை</h2><p>இதையடுத்து, விமானத்தை 'ரிமோட் பே' எனப்படும் ஒதுக்குப்புறமான இடத்துக்கு கொண்டு சென்று நிறுத்தினர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்துவதற்கு டெல்லி விமான போக்குவரத்து ஆணையக பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: தாயாரின் கள்ளக்காதலன் மீது போக்சோ வழக்கு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-class-10-student-pocso-case-filed-against-mothers-paramour</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-class-10-student-pocso-case-filed-against-mothers-paramour#comments</comments><guid isPermaLink="false">8a7da6e8-9bab-4f3c-b01f-3f731a1434c3</guid><pubDate>Thu, 13 Aug 2026 04:06:39 +0000</pubDate><atom:updated>2026-08-13T04:06:39.417Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,மாணவி,பாலியல் தொல்லை,Salem,கிரைம் செய்திகள்,சேலம்,school student,கள்ளக்காதலன்,sexual harrasement</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/v5kb4g93/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/v5kb4g93/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம் மாவட்டம் புத்திரகவுண்டம்பாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறாள். சிறுமியின் தந்தை, தாய் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சிறுமி தனது தாயாருடன் வளர்ந்து வருகிறாள்.</p><p>இதனிடையே, சிறுமியின் தாயாருக்கு அதேபகுதியை சேர்ந்த வீரமணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் வீரமணி, சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது அவர் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.</p><p>இந்நிலையில், கடந்த 10-ந் தேதி சிறுமிக்கு பள்ளியில் பாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அப்போது, அந்த சிறுமி, பள்ளி தலைமை ஆசிரியையிடம் சென்று தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவித்துள்ளாள். இதுகு றித்து ஏத்தாப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வீரமணி மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>