<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 03 Sep 2026 07:39:12 +0000</lastBuildDate><item><title>ராமேஸ்வரம் - ஹுப்ளி சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rameswaram-hubli-special-train-service-extension</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rameswaram-hubli-special-train-service-extension#comments</comments><guid isPermaLink="false">43353c8e-5a01-4358-afda-b412454c4084</guid><pubDate>Thu, 03 Sep 2026 07:39:08 +0000</pubDate><atom:updated>2026-09-03T07:39:08.619Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,தெற்கு ரெயில்வே,Southern Railway,Special train,ராமேஸ்வரம்,Rameshwaram,ஹுப்ளி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/fmov37vp/Untitled-11.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/fmov37vp/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு ராமேஸ்வரம் - ஹுப்ளி சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>ஹுப்ளியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6.50 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண். 07355) அக்டோபர் 4, 11, 18, 25, நவம்பர் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் 9 சேவைகள் நீட்டிக்கப்படுகின்றன.</p><p>இதேபோல், ராமேஸ்வரத்தில் இருந்து ஹுப்ளிக்கு திங்கட்கிழமைகளில் இரவு 8 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (07356) அக்டோபர் 5, 12, 19, 26, நவம்பர் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் 9 சேவைகள் நீட்டிக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்ற அறிவிப்புக்கு இந்திய கம்யூ. கட்சி வரவேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/indian-communist-party-welcomes-announcement-to-withdraw-cases-against-farmers-and-teachers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/indian-communist-party-welcomes-announcement-to-withdraw-cases-against-farmers-and-teachers#comments</comments><guid isPermaLink="false">12e3af71-40e1-4281-883d-ef336865ec90</guid><pubDate>Thu, 03 Sep 2026 07:26:03 +0000</pubDate><atom:updated>2026-09-03T07:26:03.663Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,CPI,மு.வீரபாண்டியன்,M Veerapandian</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/5pfj15yg/Untitled-10.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.வீரபாண்டியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/5pfj15yg/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும் என்று தமிழ்நாடு முதல் அமைச்சர் அறிவித்துள்ளதற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>கடந்த காலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும் என தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.</p><p>அதே நேரத்தில், அவர்களின் நியாயமான கோரிக்கைகளையும் தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும். கடந்த காலத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்காக போராட்டங்களை முன்னெடுத்த அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிற் சங்கத் தலைவர்கள், தூய்மைப் பணியாளர்கள், மாணவர்கள் இளைஞர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும்.</p><p>அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு, பதவி உயர்வு கோரிக்கைகளுக்காக தொடர்ந்து போராடிவரும் அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழுவின் தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை மீது எடுக்கப்பட்டு வரும் ஒழுங்கு நடவடிக்கையையும் ரத்து செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>முதுமலையில் வாகன சவாரி செல்லும் சுற்றுலா பயணிகள் செல்போன் பயன்படுத்த தடை..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-mobile-phone-use-for-tourists-on-vehicle-safaris-in-mudumalai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-mobile-phone-use-for-tourists-on-vehicle-safaris-in-mudumalai#comments</comments><guid isPermaLink="false">206d0fab-0191-485d-8d45-97926eb1e426</guid><pubDate>Thu, 03 Sep 2026 07:19:29 +0000</pubDate><atom:updated>2026-09-03T07:19:29.378Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சுற்றுலா பயணிகள்,நீலகிரி,Nilgiri,Mudumalai,முதுமலை,Mudumalai forest,Nilgiri district,Mudumalai Tiger Reserve,முதுமலை புலிகள் காப்பகம்,நீலகிரி மாவட்டம்,முதுமலை வனப்பகுதி,mobile ban</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/yy7wo0wn/Untitled-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/yy7wo0wn/Untitled-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>முதுமலை புலிகள் காப்பகத்தின் மைய வாழ்விட சுற்றுலா பகுதிகளில் வாகன சவாரி செல்லும் சுற்றுலா பயணிகள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>688 சதுர கிலோமீட்டர் பரப்பளவு</h2><p>நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு பல்வேறு வனவிலங்குகளுடன், 260 வகையான பறவையினங்களும் உள்ளன. மேலும், ஆசியாவின் மிகப்பெரிய வளர்ப்பு யானைகள் முகாமும் இங்கு அமைந்துள்ளது.</p><h2>வாகன சவாரிக்கு குவியும் சுற்றுலா பயணிகள்</h2><p>முதுமலைக்கு வளர்ப்பு யானைகளை காணவும், வனப்பகுதிக்குள் வாகன சவாரி செல்லவும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். வனத்துறை சார்பில் ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்களில் சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.</p><h2>செல்போன் பயன்படுத்த தடை</h2><p>இந்த நிலையில், மைய வாழ்விட சுற்றுலா பகுதிகளில் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில், வாகன சவாரி செல்லும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சுற்றுலா பயணிகள்</a> செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>வாகனங்களில் ஒப்படைக்கலாம்</h2><p>இதுகுறித்து முதுமலை வனச்சரகர் யுவராஜா கூறுகையில், “உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, மைய வாழ்விட சுற்றுலா மண்டலங்களில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>சவாரி செல்லும் பார்வையாளர்கள் தங்களது செல்போன்களை சவாரி வாகனங்களில் பாதுகாப்பாக ஒப்படைத்து, பயணம் முடிந்த பின்பு பெற்றுக்கொள்ளலாம். பார்வையாளர்களின் ஒருமித்த ஆதரவே வனவிலங்குகள் பாதுகாப்புக்கு பெரும் உதவியாக இருக்கும்” என்றார்.</p>]]></content:encoded></item><item><title>காவல் துறையில் 29,108 பணியிடங்கள் உருவாக்கப்படும் - முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/29108-police-personnel-posts-to-be-created-in-the-police-department-chief-minister-vijay-announces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/29108-police-personnel-posts-to-be-created-in-the-police-department-chief-minister-vijay-announces#comments</comments><guid isPermaLink="false">369ea334-77f5-4eb3-9db7-281953636929</guid><pubDate>Thu, 03 Sep 2026 07:00:50 +0000</pubDate><atom:updated>2026-09-03T07:00:50.011Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,police,சட்டசபை,தமிழக சட்டசபை,Assembly,காவல் துறை,தமிழக காவல் துறை,Police Department,Tamil Nadu Police Department,Tamilnadu Assembly,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/34ppt77e/Untitled-15.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/34ppt77e/Untitled-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டசபையில் இன்று (வியாழக்கிழமை) காவல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது.</p><h2>மானியக் கோரிக்கை விவாதம்</h2><p>தமிழக சட்டசபையில் கடந்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 6-ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. தொடர்ந்து, ஆகஸ்டு 7, 10,11 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதமும், 12-ந் தேதி நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோரின் பதில் உரையும் இடம் பெற்றது.</p><p>இந்த நிலையில், ஆகஸ்டு 17-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதுவரை, 43 துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து முடிந்துள்ளது.</p><h2>முதல்-அமைச்சர் கையில் உள்ள துறை</h2><p>இந்த நிலையில்,  காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடந்தது. முன்னதாக, துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டு முதல்-அமைச்சர் விஜய் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>காவல் நிலையங்களில் 29,108 கூடுதல் காவல் பணியிடங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் உருவாக்கப்படும். போதைப்பொருளை ஒழிக்கும் கிராமங்களுக்கு ரூ.10 லட்சம் வீதம் 50 கிராமங்களுக்கு வழங்கப்படும். ரூ.212 கோடி ஒதுக்கீட்டில் காவல்துறை நவீனமயமாக்கப்படும்.</p><p>நடப்பாண்டில் 10,000 பணியிடங்கள் நிரப்பப்படும். பணியின்போது உயிரிழக்கும் காவலர் குடும்பத்திற்கு தரப்படும் கருணைத்தொகை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்படும். காவல்துறை சிறப்பு பிரிவுகளுக்கு எதிர்பாரா செலவீனம் உயர்த்தப்படும். வண்டலூரில் உள்ள காவலர் உயர்பயிற்சியத்தில் உள் விளையாட்டு வசதிகள் ரூ.23 கோடியில் ஏற்படுத்தப்படும்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>பள்ளி மாணவர்களை பஸ்சில் இருந்து கீழே தள்ளிவிட்டது மனிதநேயமற்ற கொடுஞ்செயல் - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pushing-school-students-off-the-bus-is-an-inhumane-and-atrocious-act-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pushing-school-students-off-the-bus-is-an-inhumane-and-atrocious-act-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">2fd6ff2b-7a3d-4512-a2b1-261d8729e355</guid><pubDate>Thu, 03 Sep 2026 06:41:50 +0000</pubDate><atom:updated>2026-09-03T06:41:50.114Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசு பஸ்,காங்கிரஸ்,Congress,புதுக்கோட்டை,மாணிக்கம் தாகூர்,Pudukottai,govt bus,அரசு பள்ளி மாணவிகள்,மாணவர்கள் காயம்,Govt School Students,Manickam Tagore</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/87a36phb/manik.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/87a36phb/manik.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பள்ளி மாணவர்களை பஸ்சில் இருந்து கீழே தள்ளிவிட்டது மனிதநேயமற்ற கொடுஞ்செயல் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/manickam-tagore">மாணிக்கம் தாகூர் எம்.பி.</a> தெரிவித்துள்ளார். </p><h2>தீண்டாமை</h2><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>புதுக்கோட்டை மாவட்டம், ரங்கம்மா சத்திரம் பகுதியைச் சேர்ந்த பழங்குடியின நரிக்குறவர் சமுதாயப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் அரசுபஸ்சில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டுப் படுகாயமடைந்த கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் உலுக்கியுள்ளது. </p><p>கல்வி பயிலச் சென்ற பெண் குழந்தைகள் மீது பஸ்சில் காட்டப்பட்ட தீண்டாமைப் புறக்கணிப்பும் அலட்சியமும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்தவுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் பென்னட் உடனடியாக அப்பகுதிக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட மாணவிகள், குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களிடம் நிலைமைகளைக் கேட்டறிந்தார்.</p><h2>ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம்</h2><p>நாட்டின் விளிம்புநிலை மக்களான பழங்குடியினர் மற்றும் பட்டியலினத்தவர்கள் மீது தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்து விடப்படும் இத்தகைய உளவியல் மற்றும் சமூக ஒடுக்குமுறைகளுக்குப் பின்னால் ஊடுருவியிருப்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நச்சுத்தனமான வெறுப்பு அரசியல் சித்தாந்தமே ஆகும். சக மனிதனை சமமாகப் பார்க்க விடாமல், எளிய மக்களைத் தீண்டத்தகாதவர்களாகவும் இரண்டாந்தரக் குடிமக்களாகவும் சித்தரிக்கும் இந்த மனுவாத வெறுப்பு அரசியலையும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தையும் நாம் முற்றிலுமாக முறியடித்தாக வேண்டும். இத்தகைய வெறுப்புணர்வை வேரறுக்காமல் சமூக நீதியையும் சமத்துவத்தையும் பாதுகாப்பது சாத்தியமில்லை.</p><h2>துறைகளின் அலட்சியம்</h2><p>பழங்குடியின மாணவிகள் தங்களின் கல்வி உரிமைக்காக நாள்தோறும் பெரும் போராட்டத்தை எதிர்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் இருந்து புதுக்கோட்டை நகருக்குப் பள்ளி, கல்லூரி செல்ல 4 முதல் 5 கிலோமீட்டர் தூரத்திற்குப் பஸ் போக்குவரத்தே ஒரே வாழ்வாதாரமாக உள்ளது. </p><p>ஆனால், குறிப்பிட்ட அந்த நிறுத்தத்தில் அரசு பஸ்கள் முறையாக நிற்பதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. பஸ்சில் ஏற முயலும் குழந்தைகளை அவமதிப்பது, கம்பிப் பிடியைத் தட்டிவிடுவது மற்றும் தானியங்கி கதவை அமுக்கி மாணவிகளை ஆபத்துக்குள்ளாக்கியது போன்ற செயல்கள் மனிதநேயமற்ற கொடுஞ்செயல்கள் ஆகும். </p><p>ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த பிரத்யேக வாகன வசதியை, பள்ளிக் கல்வித் துறையா அல்லது வருவாய்த் துறையா செலவை ஏற்பது என்ற அதிகாரத்துவப் பூசலால் நிறுத்தி வைத்துள்ளனர். துறைகளின் இந்த அலட்சியமே இன்று 10 மாணவிகள் ரத்தக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படக் காரணமாகியுள்ளது.</p><h2>வன்கொடுமை தடுப்பு சட்டம்</h2><p>அரசுத் துறைகளுக்கு இடையேயான இந்த ஒருங்கிணைப்பின்மைக்கு மாவட்ட கலெக்டரே முழுப் பொறுப்பேற்க வேண்டும். </p><p>பஸ் நிறுத்தத்தில் தற்காலிகமாக அதிகாரிகளை நிறுத்துவது நிரந்தரத் தீர்வாகாது என்பதால், பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களில் ரங்கம்மா சத்திரம் வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்கவோ அல்லது நிறுத்தப்பட்ட மாணவிகளுக்கான தனி வாகன வசதியை மீண்டும் தடையின்றித் தொடங்கவோ மாவட்ட கலெக்டர் நேரடித் தலையீடு செய்து உடனடியாகத் தீர்வு காண வேண்டும். </p><p>மேலும், இச்சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது பாரபட்சமின்றித் தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சையையும், நிவாரணத்தையும் அரசு உடனடியாக வழங்க வேண்டும்.</p><h2>ஆக்கபூர்வமான நடவடிக்கை</h2><p>தமிழ்நாடு அரசு ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களின் நலனுக்காகவும் சமத்துவத்திற்காகவும் பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது என்பதை உணர்கிறோம்;. </p><p>இருப்பினும், கள அளவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறும் இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான தீண்டாமைச் சம்பவங்களையும் நிர்வாகக் குறைபாடுகளையும் அரசு தீவிரமாகக் கவனத்தில் கொண்டு, இனி எங்கும் இத்தகைய நிகழ்வுகள் எழாத வண்ணம் கண்காணிப்பையும் தடுப்பு நடவடிக்கைகளையும் மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வலியுறுத்துகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>நாடெங்கும் அன்பு, அமைதி, மகிழ்ச்சி பெருக வேண்டும்: எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/love-peace-happiness-should-grow-across-country-edappadi-palaniswami-krishna-jayanti-greetings</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/love-peace-happiness-should-grow-across-country-edappadi-palaniswami-krishna-jayanti-greetings#comments</comments><guid isPermaLink="false">47c4d618-bdf6-45fb-b3ff-067df77981e0</guid><pubDate>Thu, 03 Sep 2026 06:28:49 +0000</pubDate><atom:updated>2026-09-03T06:28:49.326Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,எடப்பாடி பழனிசாமி,அதிமுக,Edappadi Palaniswami,Greetings,வாழ்த்து,Krishna Jayanti,கிருஷ்ண ஜெயந்தி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/2jy2baz6/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/2jy2baz6/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கிருஷ்ண ஜெயந்தி நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>உலகம் போற்றும் ஒப்பற்ற ஞான நூலாம் பகவத் கீதையை அருளிய, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த திருநாளை 'கிருஷ்ண ஜெயந்தி' என்றும்; 'கோகுலாஷ்டமி' என்றும் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும், எனது இனிய ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>'நான் எல்லா உயிர்களிடத்தும் சமமானவன்; எனக்கு பகைவனுமில்லை, நண்பனுமில்லை. என்னை அன்புடன் வணங்குவோர் உள்ளத்தில் நிறைந்திருப்பேன்' என்று கண்ணபிரான் பகவத் கீதையின் மூலம் வாழ்க்கையின் நெறிமுறையினை உலகுக்கு எடுத்துரைத்தார். ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்ததே இந்த உலகத்தில் தீமைகளை ஒழிப்பதற்காக என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடும் ஒவ்வொருவரும் அறத்தைப் போற்றி, தீமைகளை முறியடிக்க வேண்டும் என்று உறுதியேற்க வேண்டும். 'அறம் பிறழ்கின்றபோது நான் இவ்வுலகில் அவதரிப்பேன்' என்ற கண்ணபிரானின் போதனைக்கேற்ப, அறத்தை வளர்ப்பதே நமது கடமை என்ற உயரிய குறிக்கோளுடன் அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும்.</p><p>ஸ்ரீகிருஷ்ண பகவான் அவதரித்த இந்த இனிய திருநாளில், மக்கள் வாசலில் இருந்து வீட்டின் பூஜை அறை வரை அரிசி மாவு கரைசலால் குழந்தையின் பாதங்களை பதித்து, ஸ்ரீகிருஷ்ண பகவானே தங்கள் இல்லத்திற்கு வந்ததாக பாவித்து போற்றி வணங்கி மகிழ்வார்கள். இந்த இனிய நாளில் நாடெங்கும் அன்பு, அமைதி, மகிழ்ச்சி பெருக வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினைத் தெரிவித்து, மீண்டும் ஒருமுறை ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து: 2 பேர் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bus-crashes-into-lorry-on-chennai-trichy-highway-horrific-accident-2-killed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bus-crashes-into-lorry-on-chennai-trichy-highway-horrific-accident-2-killed#comments</comments><guid isPermaLink="false">1b50cb7f-6d75-4d27-ae7a-f03af84a6ddc</guid><pubDate>Thu, 03 Sep 2026 06:13:20 +0000</pubDate><atom:updated>2026-09-03T06:13:20.527Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,Chennai,சென்னை,Omni Bus,Perambalur,பெரம்பலூர்,ஆம்னி பேருந்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/7w4ezgbs/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விபத்து]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/7w4ezgbs/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பெரம்பலூர்,</p><p>சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.</p><p>முன்னதாக இன்று காலையில் சென்னையிலிருந்து மதுரை நோக்கி ஆம்னி பேருந்து ஒன்று சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து திண்டிவனத்திலிருந்து புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. நான்கு சாலை மேம்பாலத்தில் உள்ள மின்சார வாரிய (EB) அலுவலகம் அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>இந்த விபத்தில் திருப்பத்தூர் மாவட்டம், சிங்கம்புணரியைச் சேர்ந்த பொன் பாலதுரை (52 வயது) மற்றும் திருவள்ளூர் மாவட்டம், மணலியைச் சேர்ந்த திருநாவுக்கரசு (32 வயது) ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><p>பேருந்து ஓட்டுநர் மற்றும் ஒரு பெண் பயணி உட்பட ஆறு பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கோவில் அறிவிப்புப் பலகைகளில் இந்தி: தமிழக அரசு துணைபோகிறதா? - வேல்முருகன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/hindi-on-temple-notice-boards-is-the-tamil-nadu-government-supporting-it-velmurugan-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/hindi-on-temple-notice-boards-is-the-tamil-nadu-government-supporting-it-velmurugan-condemns#comments</comments><guid isPermaLink="false">f2b1a430-d8a4-4f48-a56e-5634c94fde85</guid><pubDate>Thu, 03 Sep 2026 06:07:02 +0000</pubDate><atom:updated>2026-09-03T06:07:02.298Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Government,சென்னை,Temple,Velmurugan,வேல்முருகன்,தமிழக வாழ்வுரிமை கட்சி,இந்தி,Hindi,கோவில்temple,அறிவிப்பு பலகைகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/xm80ypsm/300.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/xm80ypsm/300.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அறிவிப்புப் பலகைகளில், தமிழ், ஆங்கிலத்துடன் இந்தி மொழியும் இடம்பெற்றிருப்பது கண்டனத்திற்குரியது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். </p><h2>அறிவிப்பு் பலகைகள்</h2><p>இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் செல்போன் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்கள் தங்களது செல்போன்களை ஒப்படைக்கும் பாதுகாப்பு இடங்களில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகைகளில், தமிழ், ஆங்கிலத்துடன் இந்தி மொழியும் இடம்பெற்றிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.</p><h2>தமிழ் வெறும் ஒரு மொழியல்ல</h2><p>தமிழ்நாடு தொடர்ந்து கடைப்பிடித்து வரும் தமிழ் ஆங்கில இருமொழிக் கொள்கைக்கு மாறாக, தமிழ்நாடு அரசின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் இயங்கும் திருக்கோவில்களில் இந்திக்கு இடமளிக்க வேண்டிய அவசியம் என்ன என்பதை தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்த வேண்டும்.</p><p>தமிழ் வெறும் ஒரு மொழியல்ல. ஆயிரமாயிரம் ஆண்டுகளைக் கடந்து வாழும் ஒரு பேரினத்தின் பண்பாட்டு அடையாளம். பண்பாடு, கலை, இலக்கியம், இலக்கணம், அறிவு, வாழ்வியல் என உலகின் மிகத் தொன்மையான மொழிகளில் தனிச்சிறப்புடன் திகழ்கிறது தமிழ்.</p><p>உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு தாய்மொழி இருக்கிறது. உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாகத் தமிழைப் போற்றும் பெருமிதம் தமிழுக்கு உண்டு. அத்தகைய பெருமைமிக்க மொழி பிறந்த மண்ணில், அரசின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் அறிவிப்புப் பலகைகளில் தமிழுக்கு இணையாக இந்தி கொண்டுவரப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.</p><h2>மொழிப்போர் தியாகிகள்</h2><p>இந்தித் திணிப்புக்கு எதிரான மொழிப்போராட்டங்களில் தாளமுத்து, நடராசன், கீழப்பழுவூர் சின்னசாமி உள்ளிட்ட எண்ணற்ற மொழிப்போர்த் தியாகிகள் தங்கள் இன்னுயிரை ஈந்துள்ளனர். அவர்களின் தியாகத்தால் பாதுகாக்கப்பட்ட மொழி உரிமையை நாம் ஒருபோதும் அலட்சியப்படுத்த முடியாது.</p><p>எனவே, கோயில்களின் அறிவிப்புப் பலகைகளில் தமிழுக்கே முதலிடம், ஆங்கிலத்திற்கு இரண்டாவது இடம் என்ற நடைமுறை உறுதியாகப் பின்பற்றப்பட வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் இடம்பெறும் பெயர்ப்பலகைகளில் தமிழ் ஆங்கிலம் 5:3 என்ற விகிதத்திலும், பிற மொழிகள் இடம்பெற்றால் தமிழ் ஆங்கிலம் பிறமொழி 5:3:2 என்ற விகிதத்திலும் அமைக்க வேண்டும் என்ற நடைமுறை ஏற்கனவே பெயர்ப்பலகைகளுக்கான விதிகளில் உள்ளது.</p><p>ஆகவே, இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள அனைத்துத் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">கோவில்களிலும் </a>வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகைகளை உடனடியாக ஆய்வு செய்து, தமிழுக்கு உரிய முதன்மை இல்லாத பலகைகள், தமிழினைச் சிறிய எழுத்தில் காட்டும் பலகைகள், தேவையற்ற வகையில் இந்திக்கு முன்னுரிமை அளிக்கும் பலகைகள் அனைத்தையும் உடனடியாக அகற்றி மாற்ற வேண்டும்.</p><p>அதேபோன்று, தமிழ்நாடு முழுவதும் தமிழே இல்லாமல் பிறமொழிகளில் மட்டும் பெயர்ப்பலகைகள் வைத்துள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனைத் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் தீவிரமாகக் கண்காணித்து, விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழை மேடைகளில் புகழ்வது மட்டும் போதாது. தமிழ்நாட்டின் நிர்வாக நடைமுறைகளில் தமிழுக்கு முதலிடம் வழங்கப்பட வேண்டும்.</p><h2>வலியுறுத்தல்</h2><p>மொழிப்போர்த் தியாகிகளின் தியாகத்தையும், தமிழின் தொன்மையையும், பண்பாட்டுப் பெருமையையும், கலை இலக்கிய வளத்தையும் கருத்தில் கொண்டு, திருக்கோயில்கள் உள்ளிட்ட அரசின் அனைத்து நிர்வாகத் தளங்களிலும் தமிழுக்கு உரிய முதன்மையை நிலைநாட்டவும், இந்தி இடம்பெற்றுள்ள தேவையற்ற அறிவிப்புப் பலகைகளை அகற்றவும் தமிழ்நாடு அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. வேட்பாளர் வெற்றி பெற்றதை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-filed-by-mk-stalin-challenging-the-victory-of-the-tvk-candidate-dismissed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-filed-by-mk-stalin-challenging-the-victory-of-the-tvk-candidate-dismissed#comments</comments><guid isPermaLink="false">547205cb-dc6b-415c-89a2-8ad29c485936</guid><pubDate>Thu, 03 Sep 2026 06:05:37 +0000</pubDate><atom:updated>2026-09-03T06:05:37.093Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Tamilnadu,திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,M.K.Stalin,தமிழகம்,சென்னை ஐகோர்ட்டு,Chennai High Court,Kolathur,கொளத்தூர் தொகுதி,Kolathur Constituency,வி.எஸ்.பாபு,VS Babu</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/e3b4nq0z/koer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/e3b4nq0z/koer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>த.வெ.க. வேட்பாளர் வி.எஸ்.பாபுவின் வெற்றியை எதிர்த்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. </p><h2>45 நாட்களுக்குள்</h2><p>தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான <a href="https://www.dailythanthi.com/topic/mkstalin">மு.க.ஸ்டாலின்</a> போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த தொகுதியில் த.வெ.க. சார்பில் வி.எஸ்.பாபு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.</p><p>பொதுவாக தேர்தலில் வெற்றிப் பெற்றவர்களை எதிர்த்து தேர்தல் வழக்கு, தேர்தல் முடிவு வெளியாகி 45 நாட்களுக்குள் தாக்கல் செய்யவேண்டும். ஆனால், வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் 45 நாட்களுக்குள் தேர்தல் வழக்கு தொடரவில்லை.</p><h2>வாக்கு எந்திரங்களில் முறைகேடு</h2><p>இந்த சூழலில், கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்கு எந்திரங்களில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கை <a href="https://www.dailythanthi.com/topic/mkstalin">மு.க.ஸ்டாலின்</a> தொடர்ந்தார். 45 நாட்களுக்குள் வழக்கு தாக்கல் செய்யாததற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.</p><p>இந்த வழக்கை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் விசாரித்து தீர்ப்புக்காக தள்ளிவைத்தனர். இந்தநிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று (வியாழக்கிழமை) காலை நீதிபதிகள் பிறப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. </p><h2>வழக்கு தள்ளுபடி</h2><p>இந்நிலையில் கொளத்தூர் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து <a href="https://www.dailythanthi.com/topic/mkstalin">தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்</a> தொடர்ந்த வழக்கினை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் அமர்வு இன்று (03.09.2026) உத்தரவிட்டது.</p><p>இதன்படி கொளத்தூர் தொகுதியில் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வி வி பேடுகளை சரி பார்க்க உத்தரவிட வேண்டும் என்ற மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>“தூய்மை தேவதைகள்” எனப் புகழாரம் சூட்டினால் மட்டும் வாழ்வாதாரம் மேம்படுமா?  - டிடிவி தினகரன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-livelihoods-improve-merely-by-bestowing-the-accolade-of-angels-of-cleanliness-ttv-dhinakaran-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-livelihoods-improve-merely-by-bestowing-the-accolade-of-angels-of-cleanliness-ttv-dhinakaran-asks#comments</comments><guid isPermaLink="false">95210b52-2c81-4088-8bb3-53d414e21847</guid><pubDate>Thu, 03 Sep 2026 06:01:11 +0000</pubDate><atom:updated>2026-09-03T06:01:11.696Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,AMMK,அமமுக,தூய்மைப் பணியாளர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/8i0otcl9/ttv.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/8i0otcl9/ttv.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>15 நாட்களுக்கும் மேலாகப் போராடும் தூய்மைப் பணியாளர்கள்; Reels-க்காக “தூய்மை தேவதைகள்” எனப் புகழாரம் சூட்டினால் மட்டும் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுமா? தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல், அவர்களைத் தொடர்ந்து போராட விடுவது எந்த விதத்தில் நியாயம்? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்</h2><p>பணிநிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 15 நாட்களையும் கடந்து தொடர்ந்து நடைபெற்று வருவதால், மாநகரின் தூய்மைப் பணிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>ஐந்து ஆண்டுகள் மற்றும் அதற்கும் மேலாகப் பணியாற்றி வரும் ஒப்பந்தப் பணியாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என வாக்குறுதியளித்த தவெக, ஆட்சிக்கு வந்து நூறு நாட்களைக் கடந்தும், தூய்மைப் பணியாளர்களின் அடிப்படைக் கோரிக்கையான பணிநிரந்தரம் குறித்து விவாதிக்க மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது.</p><h2>நடவடிக்கை எடுக்காத அரசு</h2><p>15 நாட்களுக்கும் மேலாக நீடித்துவரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தைப் பேச்சுவார்த்தையின் மூலம் முடிவுக்குக் கொண்டுவர எந்தவித நடவடிக்கையும் எடுக்காத தவெக அரசு, அவர்கள் போராடுவதற்கு ரிப்பன் மாளிகை வளாகத்தில் இடம் ஒதுக்கிக் கொடுத்ததையே பெருமையாகப் பேசுவது வெட்கக்கேடானது.</p><p>ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, பணி நிரந்தரம் கோரி போராடிய தூய்மைப் பணியாளர்களை தனது பனையூர் இல்லத்திற்கு அழைத்து அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவதாக சொன்ன முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தற்போது சட்டமன்றத்திற்கு அருகேயே உள்ள ரிப்பன் மாளிகை வளாகத்தில் போராடுபவர்களை சந்திப்பதற்கு என்ன தயக்கம்?</p><h2>குறைகளைக் கேட்டறிவதில் என்ன தயக்கம்?</h2><p>சென்னை மாநகரத்தைத் தூய்மையாக வைத்திருப்பதிலும், பொதுமக்களின் சுகாதாரத்தைப் பேணிக்காப்பதிலும் அளப்பரிய பங்களிப்பை வழங்கி வரும் முன்களப் பணியாளர்களான தூய்மைப் பணியாளர்களை, குறைந்தபட்சம் அமைச்சர்களாவது நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிவதில் என்ன தயக்கம்?</p><p>எனவே, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை </a>ரிப்பன் மாளிகை வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதோடு, தவெக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, ஐந்து ஆண்டுகள் மற்றும் அதற்கும் மேலாகப் பணியாற்றி வரும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்திட வேண்டும் எனவும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருச்செந்தூர் கோவிலில் மீண்டும் ஒலிக்கப்போகும் வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய மணி!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-bell-donated-by-veera-pandiya-kattabomman-will-ring-again-at-the-tiruchendur-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-bell-donated-by-veera-pandiya-kattabomman-will-ring-again-at-the-tiruchendur-temple#comments</comments><guid isPermaLink="false">c80f2721-e5d2-4c70-ad6d-d0a839f76e68</guid><pubDate>Thu, 03 Sep 2026 05:55:44 +0000</pubDate><atom:updated>2026-09-03T05:55:44.357Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்செந்தூர்,சுப்பிரமணிய சுவாமி கோவில்,Tiruchendur Subramania Swamy Temple,Bell,மணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/urj5a3o0/99.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/urj5a3o0/99.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>ஆன்மிகம் (Devotional)</category><content:encoded><![CDATA[ <p>திருச்செந்தூர், </p><p>திருச்செந்தூர் கோவிலில், 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய மணி மீண்டும் ஒலிக்கப் போகிறது. </p><h2>வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய மணி </h2><p>தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூரில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலில், 137 அடி உயரம், 9 நிலைகள் கொண்ட ராஜகோபுரம், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 7-ந் தேதி நடைபெற்ற கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது. </p><p>கோபுரத்தின் ஒரு சிறப்பு என்னவென்றால், அதன் 9-வது நிலையில் கி.பி. 18-ம் நூற்றாண்டில் பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய பித்தளையால் ஆன பிரமாண்ட மணி பொறுத்தப்பட்டுள்ளது. </p><h2>உச்சிக்கால பூஜையில் ஒலித்தது</h2><p>சிறந்த முருக பக்தரான வீரபாண்டிய கட்டபொம்மனால் கொடுக்கப்பட்ட இந்த மணி, அவர் வாழ்ந்த காலக்கட்டத்தில் (1760-1799) மதியம் 12 மணிக்கு நடைபெறும் உச்சிக்கால பூஜையின்போது ஒலிக்கப்படும். ஆனால், திருச்செந்தூரில் ஒலிக்கும் இந்த மணியின் ஓசை 58 கி.மீ. தொலைவில் உள்ள பாஞ்சாலங்குறிச்சி வரை கேட்பதில்லை. </p><p>திருச்செந்தூர் கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு உச்சிக்கால பூஜை நடைபெற்ற பிறகே, பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன், சுப்பிரமணிய சுவாமி, வீரசக்கதேவி ஆகியோரை பூஜை செய்து வணங்கிவிட்டு மதிய உணவு சாப்பிட நினைத்தாராம். </p><h2>40 இடங்களில் மணி மண்டபம் அமைப்பு</h2><p>அதனால், திருச்செந்தூர் முதல் பாஞ்சாலங்குறிச்சி வரை வரிசையாக 40 இடங்களில் மணி மண்டபங்களை அமைத்து பிரமாண்ட மணிகளை தொங்கவிடச் செய்தார். சரியாக மதியம் 12 மணிக்கு திருச்செந்தூர் கோவிலில் உச்சிக்கால பூஜை தொடங்கும்போது, அங்குள்ள மணி ஒலிக்கப்படும். </p><p>அந்த ஒலி திருச்செந்தூர் அருகே உள்ள மணி மண்டபத்துக்கு கேட்கும். உடனே, அங்குள்ள பணியாளர், மணி மண்டபத்தில் உள்ள மணியை ஒலிக்கச் செய்வார். இப்படியே, வரிசையாக 39 இடங்களில் உள்ள மணி மண்டபங்களில் மணிகள் ஒலிக்கப்படும். நிறைவாக இந்த ஒலி பாஞ்சாலங்குறிச்சி வரை எட்டும். </p><h2>பக்தர்கள் கோரிக்கை </h2><p>மணி ஓசையை கேட்ட பிறகே, வீரபாண்டிய கட்டப்பொம்மன், சுப்பிரமணிய சுவாமி, வீரசக்கதேவி ஆகியோருக்கு பூஜை செய்துவிட்டு மதிய உணவு அருந்துவார். அந்த வகையில் சிறப்பு பெற்ற, 200 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட மணி பல ஆண்டுகள் ஒலிக்காமல் இருந்துவந்தது. </p><p>பக்தர்களுக்கு இந்த மணி குறித்த வரலாறு தெரியத் தொடங்கிய பின்னர், வீரபாண்டிய கட்டபொம்மனின் ஆசைக்கு இணைக்க உச்சிக்கால பூஜையின்போது மணியை ஒலிக்கச் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.  </p><h2>ஆவணி திருவிழாவில் மணி ஒலிக்குமா? </h2><p>பக்தர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு (2025), வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய ராட்சத பித்தளை மணி புதுப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், ஆவணித் திருவிழாவை முன்னிட்டு, உச்சிக்கால (மதியம் 12 மணி) பூஜையின்போது இந்த ராட்சத மணியை ஒலிக்கச் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அந்த மணியில் உள்ள கயிற்றை 3 பணியாளர்கள் சேர்ந்து இழுத்து மணியை அசைத்தால்தான் ஒலியை எழுப்ப முடியும். அதற்கான சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. உச்சிக்கால பூஜை முடியும் வரை 5 நிமிடங்கள் இந்த மணி ஒலிக்கப்படும். </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">திருச்செந்தூர் </a>கோவிலில் விரைவில் வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய மணி ஒலிக்கப்பட உள்ள நிலையில், இந்த ஆவணி மாத திருவிழா காலத்திலேயே கோவில் மணி ஒலிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இனி அதற்கான நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை தான் எடுக்க வேண்டும். </p>]]></content:encoded></item><item><title>ஆந்திராவில் இருந்து சென்னைக்கு பைக்கில் கஞ்சா கடத்தல்; 3 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ganja-smuggled-from-andhra-to-chennai-by-bike-3-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ganja-smuggled-from-andhra-to-chennai-by-bike-3-arrested#comments</comments><guid isPermaLink="false">dedbaa82-aa7d-495e-b9d9-fc4032b1ea33</guid><pubDate>Thu, 03 Sep 2026 05:43:18 +0000</pubDate><atom:updated>2026-09-03T05:43:18.761Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,arrest,3 பேர் கைது,கஞ்சா கடத்தல்,police enquiry,ganja smuggled</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/luxlxgws/07.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ அருள்ராஜ், ராஜா, கார்த்திக்]]></media:title><media:description type="html"><![CDATA[ கஞ்சா கடத்திய 3 பேர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/luxlxgws/07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>ஆந்திர மாநிலத்திலிருந்து சென்னைக்கு பைக் மூலம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">கஞ்சா கடத்தி </a>வந்த3 பேரை தமிழக போலீசார் கைது செய்துள்ளனர்.</p><h2>ரகசிய தகவல் -வாகன சோதனை</h2><p>ஆந்திரா-தமிழக எல்லைப் பகுதியிலிருந்து சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளை இலக்காகக் கொண்டு, பைக்கில் பெரிய அளவில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், இன்று (வியாழக்கிழமை) சென்னை எல்லைகளில் உள்ள முக்கிய சோதனைச் சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.</p><h2>3 பேர் கைது</h2><p>சோதனையின் போது, சந்தேகத்திற்குரிய வகையில் பைக்கில் வந்த அருள்ராஜ், ராஜா, கார்த்திக் ஆகிய 3 நபர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்கள் வைத்திருந்த உடமைகளைச் சோதித்தபோது, 8 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கண்டறியப்பட்டன. இதையடுத்து, கஞ்சாவைக் கடத்தி வந்த 3 பேரையும் போலீசார் உடனடியாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட பைக், 2 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டன.</p><h2>தீவிர விசாரணை</h2><p>இந்த கடத்தலின் பின்னணியில் உள்ள முக்கிய நபர்கள் யார், சென்னையில் இந்த போதைப்பொருட்களை யாரிடம் விநியோகம் செய்ய திட்டமிட்டிருந்தார்கள் என்பது குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/one-person-killed-in-firecracker-factory-explosion-near-srivilliputhur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/one-person-killed-in-firecracker-factory-explosion-near-srivilliputhur#comments</comments><guid isPermaLink="false">98b244d7-ba55-44cd-9612-75af2656a37e</guid><pubDate>Thu, 03 Sep 2026 05:37:39 +0000</pubDate><atom:updated>2026-09-03T05:37:39.526Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Virudhunagar,விருதுநகர்,ஸ்ரீவில்லிபுத்தூர்,Srivilliputhur,வெடி விபத்து,பட்டாசு ஆலை,firecracker factory,Firecracker Factory Accident</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/m4nby0xm/patta.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/m4nby0xm/patta.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர், </p><p>ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p>விருதுநகர் மாவட்டம் <a href="https://www.dailythanthi.com/topic/srivilliputhur">ஸ்ரீவில்லிபுத்தூர் </a>அருகே பட்டாசு ஆலையில் மருந்து கலவை செய்யும்போது ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி ஆண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. </p><p>மேலும் ஒருவர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p>இந்நிலையில் பட்டாசு ஆலையில் பலர் சிக்கி இருக்க வாய்ப்புள்ளதால் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம்: 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-1200-crore-new-secretariat-tn-cm-vijay-announces-under-rule-110</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-1200-crore-new-secretariat-tn-cm-vijay-announces-under-rule-110#comments</comments><guid isPermaLink="false">93e027fa-4613-4dc6-9351-3d5ade1699b3</guid><pubDate>Thu, 03 Sep 2026 05:28:33 +0000</pubDate><atom:updated>2026-09-03T05:30:15.968Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN Assembly,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,புதிய தலைமைச் செயலகம்,ஒலிம்பிக் நகரம்,Olympic City</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/t3vefrmd/Untitled-7-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/t3vefrmd/Untitled-7-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும் என்று சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.</p><p>தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று காவல்துறை-தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ், முதல்-அமைச்சர் விஜய் பல்வேறு திட்டங்களை அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:-</p><h2>தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்</h2><p>தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் (Tamil Nadu Olympic City) அமைக்கப்படும்.</p><p>உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு அரங்கங்கள், அதிநவீன விளையாட்டு உபகரணங்கள், உயர்தர செயல்திறன் பயிற்சி மையம் (High Performance Training Centre), அறிவியல் மற்றும் விளையாட்டு மருத்துவ மையங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான தங்குமிட வசதிகள் உள்ளிட்ட நவீன உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்படும்.</p><p>தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் பிற சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் அதிக எண்ணிக்கையிலான பதக்கங்களை வெல்லவும், ஒலிம்பிக் பதக்கங்களை வெல்லக்கூடிய திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கும் உலகத்தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த விளையாட்டு மையமாகத் திகழும்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/3zwyp47s/Untitled-7.jpg" /></figure><h2>மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்</h2><p>தமிழ்நாட்டில் ஒரு புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் (Motor Sports City) உருவாக்கப்படும். இந்த நகரத்தில் சர்வதேச தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் பந்தயத்தடம், அதற்கான நவீன உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பயிற்சி வசதிகள் ஏற்படுத்தப்படும். Formula 1, Formula 2, Formula 3, Formula 4 போன்ற சர்வதேச தரத்திலான போட்டிகள் நடத்துவதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.</p><p>இளைஞர்களின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் திறமைகளைக் கண்டறிந்து, பயிற்சி மற்றும் போட்டி வாய்ப்புகள் வழங்கி, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான வீரர்கள் உருவாக்கப்படுவார்கள். உலகத்தரம் வாய்ந்த மோட்டார் வாகன கார் பந்தய அரங்குகளை அமைப்பதன்மூலம், சுற்றுலா, சிறப்பு வாகன உற்பத்தித் தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம் மேம்பட வாய்ப்புகள் உள்ளது.</p><h2>புதிய தலைமைச் செயலகம்</h2><p>சென்னையில் நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும். தீயணைப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகள் சென்றுவர வசதிகள் மற்றும் பசுமைக் கட்டட தரநிலைகளுக்கு உட்பட்டு நவீன நிர்வாக வளாகம் உருவாக்கப்படும். போதுமான வாகன நிறுத்துமிடங்கள், மாநாட்டு அரங்குகள், பொதுமக்கள் சேவை மையங்கள் மற்றும் அலுவலர்களுக்கான நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும். அனைத்து அரசுத் துறைகளையும் ஒரே நிர்வாக வளாகத்தில் கொண்டுவந்து ஒருங்கிணைக்கப்படும்.</p>]]></content:encoded></item><item><title>கிருஷ்ண ஜெயந்தி திருநாள் - அன்புமணி ராமதாஸ் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/krishna-jayanti-greetings-from-anbumani-ramdas</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/krishna-jayanti-greetings-from-anbumani-ramdas#comments</comments><guid isPermaLink="false">7fa99ba7-fbfd-49fa-81a9-01cd53c58f8d</guid><pubDate>Thu, 03 Sep 2026 05:14:47 +0000</pubDate><atom:updated>2026-09-03T05:14:47.814Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Krishna Jayanti Festival,கிருஷ்ண ஜெயந்தி,திருநாள்,Anbumani Ramdas</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/9t3zgy46/98.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/9t3zgy46/98.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாடு முழுவதும் கிருஷ்ண ஜெய்ந்தி விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>அநீதியை ஒழிப்பதற்காகவும், நீதியை நிலை நிறுத்துவதற்காகவும்  கிருஷ்ண பரமாத்மா பூமியில் அவதாரம் எடுத்த நாளான கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2>கிருஷ்ண ஜெயந்தி திருநாள்</h2><p>அநீதி எங்கு தலைதூக்கினாலும் அதை அழிக்க கிருஷ்ண பகவான் அவதாரம் எடுப்பார் என்பார்கள்.  இப்போது தமிழ்நாட்டில் எங்கு அநீதி நிகழ்ந்தாலும்  அதற்கு எதிராக போராட நாமும் கிருஷ்ண பகவானாக  உருவெடுக்க வேண்டும். அது தான் நமது முதல் கடமையாக இருக்க வேண்டும்.</p><p>தமிழ்நாட்டில் அமைதி, வளம், மகிழ்ச்சி, சகோதரத்துவம், அன்பு, அறம் உள்ளிட்ட அனைத்தும் செழிக்க வேண்டும் என்று  கூறி, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை <a href="https://www.dailythanthi.com/topic/krishna-jayanti">கிருஷ்ண ஜெயந்தி </a>திருநாள் வாழ்த்துகளைத்  தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திண்டுக்கல்லில் 50 பவுன் நகைகள் திருட்டு: ஒருவர் கைது; முழு நகைகளையும் மீட்ட போலீசார்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/50-sovereigns-of-gold-jewelry-stolen-in-dindigul-one-person-arrested-police-recover-the-entire-haul</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/50-sovereigns-of-gold-jewelry-stolen-in-dindigul-one-person-arrested-police-recover-the-entire-haul#comments</comments><guid isPermaLink="false">d2ca8dd4-971a-4299-957e-65bdb1acda69</guid><pubDate>Thu, 03 Sep 2026 05:06:35 +0000</pubDate><atom:updated>2026-09-03T05:06:35.776Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Dindigul,திண்டுக்கல்,நகை திருட்டு,gold jewelery,Dindigul district,திண்டுக்கல் மாவட்டம்,நகைகள் திருட்டு,திண்டுக்கல் செய்திகள்,Dindigul news</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/owfcouxh/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/owfcouxh/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><p>திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலையச் சரகத்துக்குட்பட்ட இந்திராநகர் முருகபவனத்தில் வசித்து வரும் செல்வராஜ் மகன் அருண்குமார், கடந்த 30.08.2026 அன்று உசிலம்பட்டியில் நடைபெறும் தனது உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு மனைவி மற்றும் குழந்தையுடன் செல்வதற்காக தயாரானார்.</p><p>அப்போது, மனைவி காரில் ஏறியதைத் தொடர்ந்து, குழந்தையை காருக்குள் உட்கார வைக்கும் போது தனது கையில் வைத்திருந்த 50 பவுன் தங்க நகைகள் இருந்த அட்டை பெட்டியை காரின் மேற்கூரையில் வைத்துவிட்டு மறந்துள்ளார். பின்னர் காரில் ஏறி பயணம் செய்துள்ளனர்.</p><h2>நகைகள் மாயம்</h2><p>கார் செம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது, நகைகள் இருந்த அட்டை பெட்டி திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து அருண்குமார் அளித்த புகாரின் பேரில், திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.</p><h2>சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் விசாரணை</h2><p>திருடு போன நகைகளை கண்டுபிடிக்கும் பொருட்டு, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவின்பேரில், திண்டுக்கல் நகர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் கார்த்திக் மேற்பார்வையில், திண்டுக்கல் நகர் மேற்கு காவல் ஆய்வாளர் மீனாட்சி மற்றும் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் ரெய்கானா தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.</p><p>சம்பவ இடத்திலிருந்து அருண்குமார் சென்ற வழித்தடத்தில் உள்ள அனைத்து சி.சி.டி.வி. பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.</p><h2>ஒருவர் கைது</h2><p>சி.சி.டி.வி. பதிவுகளின் அடிப்படையில், பொன்மாந்துரை புதுப்பட்டி தெற்குத்தெருவைச் சேர்ந்த சவரியப்பன் மகன் குழந்தைராஜ் (54) என்பவர் 50 பவுன் தங்க நகைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.</p><h2>வங்கியில் 30 பவுன் நகைகள் அடகு</h2><p>விசாரணையில், திருடிய நகைகளில் 30 பவுன் தங்க நகைகளை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">திண்டுக்கல்லில் </a>உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்ததாக குழந்தைராஜ் ஒப்புக்கொண்டார்.</p><h2>50 பவுன் நகைகளும் மீட்பு</h2><p>வாக்குமூலத்தின் பேரில், திருடு போன 50 பவுன் தங்க நகைகளையும் தனிப்படையினர் மீட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்களிடம் தமிழ், இனப்பற்றை வளர்த்தவர் லக்குவனார் - சீமான் புகழாரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/lakkuvanar-who-instilled-tamil-and-ethnic-love-in-students-seeman-pugazharam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/lakkuvanar-who-instilled-tamil-and-ethnic-love-in-students-seeman-pugazharam#comments</comments><guid isPermaLink="false">c0a5af22-565f-426d-9b64-be83f7dc0c9d</guid><pubDate>Thu, 03 Sep 2026 04:53:39 +0000</pubDate><atom:updated>2026-09-03T04:53:39.209Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,Seeman,நாம் தமிழர் கட்சி,Nam Tamilar party</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/8enjuam4/97.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சீமான்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/8enjuam4/97.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பேராசிரியர் சி.லக்குவனாரின் பிறந்தநாளையொட்டி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் <a href="https://www.dailythanthi.com/topic/seeman">சீமான்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- </p><p>தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து முனைவர் பட்டம் பெற்ற முத்தமிழ்ப் பேரறிஞர்! அதுநாள்வரை தமிழ்நாடெங்கும் ‘மாணவர்கள் ஆங்கிலத்தில் கூறிவந்த வருகைப்பதிவை அன்னைத்தமிழில் 'உளேன் ஐயா!' என்று உரக்கச் சொல்லவைத்த பெருமகன்! சங்கப்பாடல்களை முதன்முதலாக சிறுகதை, நாடகங்கள் வடிவில் உலகத்தமிழர் உள்ளங்களில் சேர்ப்பித்த இதழியல் முன்னோடி!</p><h2>புரட்சியாளர்</h2><p>தான் வகுப்பெடுத்த கல்லூரிகளில் எல்லாம் மாணவர்களுக்கு இனப்பற்றும், மொழிப்பற்றும் ஊட்டி தன்னந்தனியனாக ஒரு தலைமுறையையே மானத்தமிழர்களாக வளர்த்தெடுத்த பெருந்தகை! மாணவர்களிடம் தாய்த்தமிழ்ப் பற்றை ஊட்டுகிறார் என்ற காரணத்திற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு பணியிடம் மாற்றி அலைக்கழித்தது அன்றைய காங்கிரசு அரசு! ஆனால், அதையே வாய்ப்பாக்கிக்கொண்டு, செல்லும் இடமெல்லாம் இந்தி திணிப்புக்கு எதிராக இளந்தமிழ் தலைமுறையினரிடம் தமிழ்ப்நெருப்பைப் பற்ற வைத்த புரட்சியாளர்!</p><h2>விழியென காப்போம்</h2><p>நா.காமராசன், க.காளிமுத்து, கவிஞர் இன்குலாப், பா.செயப்பிரகாசம் என 1965ஆம் ஆண்டு நிகழ்ந்த மூன்றாம் மொழிப்போரின் முதன்மை தளபதிகளாக முன்னின்றவர்கள் பலரும் ஐயா லக்குவனார் மூட்டிய புரட்சித்தீயில் பூத்த அவரின் மாணவச்செல்வங்களே! அன்னைத்தமிழைப் பயிற்சி மொழியாக்க மறுத்து ஆங்கிலத்திற்குத் துணைநின்ற திமுக கல்வி அமைச்சரைக் கண்டித்து, அன்றைய முதல்-அமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களால் வழங்கப்பட்ட மாநிலக்கல்லூரி தலைமைத் தமிழ்ப்பேராசிரியர் பணியினை, தன்மானத்துடன் தூக்கி எறிந்த தமிழ்மறவர் நம்முடைய ஐயா லக்குவனார் அவர்கள்! மொழிப்போரை முன்னின்று நடத்தியதற்காகச் சிறையேகிய ஈகி, பெரும்புலவர் ஐயா லக்குவனார் அவர்களின் புரட்சிகரப் பெருவாழ்வினை போற்றுகின்ற இந்நாளில் அவர் கற்பித்த வழிநின்று ‘தமிழ் மொழியையும், மண்ணையும் விழியென காப்போம்’ என உறுதியேற்போம்!‘மொழி காத்த தமிழ் மறவர்’  ஐயா லக்குவனார் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கோவில்களில் ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுவது ஏன்? - அமைச்சர் ரமேஷ் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-is-a-5-fee-charged-at-temples-minister-ramesh-explains</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-is-a-5-fee-charged-at-temples-minister-ramesh-explains#comments</comments><guid isPermaLink="false">e0796ddb-c10f-480b-b4e4-5b7f8c6d87dc</guid><pubDate>Thu, 03 Sep 2026 04:46:44 +0000</pubDate><atom:updated>2026-09-03T04:46:44.336Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவில்கள்,இந்து சமய அறநிலையத்துறை,ரமேஷ்,Ramesh,Minister ramesh,அமைச்சர் ரமேஷ்,அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்,செல்போனுக்கு தடை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/8m0rehdu/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ரமேஷ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/8m0rehdu/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டில் உள்ள 52 முக்கிய கோவில்களில் செல்போன் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டு, அதனைப் பாதுகாப்பாக லாக்கரில் வைக்க ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.</p><h2>புதிய நடைமுறை இல்லை</h2><p>இந்த நிலையில், கோவில்களில் ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுவது ஏன்? என்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் விளக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-</p><p>இது புதிய நடைமுறை கிடையாது. மதுரை ஐகோர்ட்டில் திருச்செந்தூர் கோவிலில் செல்போன்கள் கொண்டு செல்லத் தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. 2022-ம் ஆண்டு டிசம்பரில் தமிழ்நாடு முழுக்க உள்ள கோவில்களில் செல்போன்கள் கொண்டு செல்லத் தடை விதிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><p>இதனையடுத்து அதிக கோவில்களில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதியளிக்கப்படவில்லை. அப்போதிலிருந்து செல்போன் கவுண்டர்கள் அமைக்கப்பட்டு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்பட்டது. கோவில்களில் செல்போன்கள் தடை என்பது முன்பே இருந்தது. அதற்கான கவுண்டர்கள் 52 முக்கிய கோவில்களில் இல்லாததால் அதனை கொண்டு வந்துள்ளோம். </p><h2>கட்டுப்பாடு பொருந்தாதவர்கள் யார்?</h2><p>மக்கள் வெகுநேரம் வரிசையில் நிற்கவைக்கும் சூழல் உருவாகிவிடக் கூடாது. மக்களுக்கு இது பாரமாக மாறிவிடக் கூடாது என்பதைப் பார்த்துவிட்டு, அதற்குத் தகுந்தாற்போல் முடிவுகளை எடுங்கள் என்று கோவில்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். கர்ப்பிணிகள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன் கட்டுப்பாடு பொருந்தாது.</p><p>இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கோவில்கள் இருக்கக் கூடாது என நினைப்பவர்களே தவறாக தகவல்களைப் பரப்புகின்றனர். கோவில்களின் நிதிநிலையை கருத்தில் கொண்டு ரூ.5 வாங்கலாமா, வேண்டாமா என கோவில்களே முடிவெடுக்கலாம் என அறிவுறுத்தியுள்ளோம். கோவில் அரசியல் செய்வதற்கான இடம் கிடையாது.</p><p>பக்தர்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுப்பதற்காகத்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்களுக்குள் செல்லும்போது தமிழ் கல்வெட்டுகள், எழுத்துகள் நிறைய இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இதனை பக்தர்கள் பார்க்க வேண்டும். செல்போன் கொண்டு செல்வதால் இது தடைபடும் என்பதால் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தினோம்.</p><h2>கூட்டம் அதிகம் கூடும்போது..</h2><p>பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள கோவில்களிலும் செல்போன்கள் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. இதனை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். இதனால் பக்தர்களுக்கு சிரமங்கள் இருந்தால் நிச்சயமாக மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.</p><p>மேலும், கோவில்களில் கூட்டம் அதிகம் கூடும் நாட்களில் செல்போன்களை வாங்க வேண்டாம் எனவும் கோவில்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திருச்சி மாவட்டத்தில் அதிகரிக்கும் இளம் வயது கர்ப்பம்... பாலியல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rising-teen-pregnancies-in-tiruchirappalli-district-will-sex-education-be-prioritized</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rising-teen-pregnancies-in-tiruchirappalli-district-will-sex-education-be-prioritized#comments</comments><guid isPermaLink="false">34f7eab3-eb41-4de2-b0e5-c59b2de76ae1</guid><pubDate>Thu, 03 Sep 2026 04:46:37 +0000</pubDate><atom:updated>2026-09-03T04:46:37.787Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்சி,Trichy,Awareness,இளம் வயது கர்ப்பம்,பாலியல் விழிப்புணர்வு,Teen Pregnancy</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/p387h7d8/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ இளம் வயது கர்ப்பம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/p387h7d8/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>இளம் வயது கர்ப்பம் என்பது உலகம் முழுவதும் உள்ள மக்களை பாதிக்கும் ஒரு சமூக பிரச்சினையாகும். இது தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியத்தில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்துகிறது. குறிப்பாக சுகாதார பராமரிப்பு அவ்வளவாக மேம்பட்டிராத வளர்ச்சியடையாத நாடுகளில் இந்த பிரச்சினை அதிகமாக உள்ளது.</p><h2>பொது சுகாதார பிரச்சினை</h2><p>இந்தியாவில் பெண் திருமணத்திற்கான சட்டப்பூர்வ குறைந்தபட்ச வயது 18 ஆக உயர்த்தப்பட்ட போதிலும், வளர் இளம் வயது கர்ப்பங்கள் இந்தியாவில் ஒரு குறிப்பிடத்தக்க பொது சுகாதார பிரச்சினையாக உள்ளது. வளர் இளம் வயது சிறுமிகளின் கர்ப்பம் மற்றும் பிரசவம் அதிகரித்துள்ளதாக, சமீபத்தில் வெளியான அறிக்கை திடுக்கிட வைத்துள்ளது. குழந்தை திருமணம், திருமண வயதை எட்டும் முன்னரே காதல் உறவு போன்ற காரணங்களால் இளம் வயது கர்ப்பம் தரித்தல் மற்றும் பிரசவங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளன.</p><p>தேசிய குடும்ப சுகாதார ஆய்வு 6 (NFIIS-6) -ன் தரவுகளின்படி, இந்தியாவில் 15 முதல் 19 வயதுக்குட்பட்ட பெண்களில் 6.7 சதவீதம் பேர் ஏற்கனவே குழந்தைகளை பெற்றெடுக்க தொடங்கியுள்ளனர். இது தமிழகத்தில் 4.1 சதவீதமாகவும், திருச்சியில் 1 சதவீதமாகவும் இருக்கிறது. திருச்சி மாவட்டத்தில் தாய் இறப்பு மற்றும் சிசு இறப்பு போன்ற முக்கிய சுகாதாரக் குறியீடுகளில் முன்னேற்றம் காணப்பட்டாலும், வளர் இளம் வயது கர்ப்பங்கள் தொடர்ந்து கவலையளிக்கும் விஷயமாகவே உள்ளன.</p><h2>இளம்பெண்கள் பிரசவிப்பு</h2><p>திருச்சி மாவட்டத்தில் 2025-ம் ஆண்டு 479 வளர் இளம் பெண்கள் பிரசவித்துள்ளனர். 2026-ம் ஆண்டில் கடந்த ஆகஸ்ட் வரை மட்டும் 296 வளர் இளம் பெண்கள் பிரசவித்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல்கள் கூறுகின்றன. இளம்வயது கர்ப்பம், சுகாதார வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும் என்பதோடு, தாய்மார்கள் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளில் 50 சதவீதம் உயிரிழப்பு ஏற்படுகிறது.</p><p>திருச்சி மாவட்டத்தில் சராசரியாக தினமும் 3 முதல் 4 வளர் இளம் பெண்கள் கர்ப்பம் அடையும் சம்பவங்கள் பதிவாகி வருவதாகவும், ஒரு மாதத்திற்கு சுமார் 100 சம்பவங்கள் நடப்பதாகவும் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. 2024-25 நிதியாண்டில் மட்டும் 1,234 சம்பவங்கள் பதிவானது குறிப்பிடத்தக்கது.</p><h2>கல்லூரி, பள்ளியில் பிரசவம்</h2><p>சமயபுரம் அருகே கடந்த சில மாதங்களுக்கு முன் கல்லூரி கழிவறையில் மாணவி ஒருவர் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் நடந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருச்சியில் விடுதியில் தங்கி படிக்கும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமி பள்ளி வளாகத்திலேயே குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.</p><h2>விழிப்புணர்வு</h2><p>வளர் இளம் வயதில் குழந்தைகள் வயிற்றில் குழந்தையை சுமக்க முக்கிய காரணம், இளம் வயது திருமணம், பாலியல் வன்முறை, பெண்களுக்கு பாலியல் குறித்த விழிப்புணர்வு இல்லாதது போன்றவைதான். மேலும் குழந்தை திருமணத்தை தவிர, சமூக ஊடக தொடர்புகள் மூலம் உருவாகும் உறவுகளும் வளர் இளம் வயது கர்ப்பங்கள் அதிகரிப்பதற்கு பிரதான காரணம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். எனவே, பள்ளிகளிலும், பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, இளம் வயது பெண்கள் கர்ப்பம் அடைவதை தடுக்க வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>முதல் மனைவிக்கு தெரியாமல் சிறுமியுடன் திருமணம்: போலீஸ்காரருக்கு 10 ஆண்டுகள் சிறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/policeman-gets-10-years-in-prison-for-marrying-a-minor-girl-without-the-knowledge-of-his-first-wife</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/policeman-gets-10-years-in-prison-for-marrying-a-minor-girl-without-the-knowledge-of-his-first-wife#comments</comments><guid isPermaLink="false">da01e0b7-74b7-474b-8525-7946b9d69fdd</guid><pubDate>Thu, 03 Sep 2026 04:43:53 +0000</pubDate><atom:updated>2026-09-03T04:43:53.388Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Marrage,திருவண்ணாமலை,சிறை,சிறுமி,wife,Minor girl,Policeman,Prison,போலீஸ்காரர்,முதல் மனைவி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/oe6t0ggl/299.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/oe6t0ggl/299.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை,</p><p>முதல் மனைவிக்கு தெரியாமல் சிறுமியை திருமணம் செய்த போலீஸ்காரருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை மகளிர் விரைவு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.</p><p>திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் தண்டரை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 41). இவரது மனைவி விமலா. இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு மணிகண்டன், விமலாவிற்கு தெரியாமல் சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார்.</p><h2>விசாரணை</h2><p>இதுபற்றி அறிந்ததும் விமலா தண்டராம்பட்டு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. </p><h2>சிறை தண்டனை</h2><p>இந்த நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தாமோதரன் தீர்ப்பு கூறினார். அதில் மணிகண்டனுக்கு 10 ஆண்டுகள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">சிறை</a> தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.</p><p>பின்னர் அவரை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தண்டனை பெற்ற மணிகண்டன் போலீஸ்காரர் என்பதும், சிறுமியை திருமணம் செய்ததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>படிக்க சென்ற இடத்தில் மாணவருக்கு நேர்ந்த கொடுமை: போலீசார் வழக்குப்பதிவு; 9 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-subjected-to-atrocity-at-place-of-study-parents-shocked</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-subjected-to-atrocity-at-place-of-study-parents-shocked#comments</comments><guid isPermaLink="false">016f0143-939a-4e80-b84b-ac5ca71ae6b6</guid><pubDate>Thu, 03 Sep 2026 04:34:55 +0000</pubDate><atom:updated>2026-09-03T04:34:55.080Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,போக்சோ சட்டம்,POCSO act,பாலியல் தொந்தரவு,case registered,sexual abuse,போலீசார் வழக்குப்பதிவு,மாணவர்கள் கைது,students arrested</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/ymrvvobj/ster.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/ymrvvobj/ster.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த சக மாணவர்கள் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>மாணவனுக்கு மிரட்டல்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> அருகே உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவனை, சக மாணவர்கள் தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளனர். இதனை வெளியில் சொன்னால் மேலும் துன்புறத்துவோம் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவர் யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார்.</p><p>இந்த நிலையில் அந்த மாணவருக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனை அறிந்த அந்த பள்ளிக்கூட ஆசிரியர், பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோரை அழைத்து தெரிவித்தார்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>தொடர்ந்து மாணவனை துன்புறுத்திய மாணவர்களின் பெற்றோர்களையும் வரவழைத்து கவுன்சிலிங் கொடுத்து உள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர், விளாத்திகுளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.</p><h2>9 மாணவர்கள் கைது</h2><p>விசாரணையில், அந்த மாணவனை கடந்த ஆண்டு முதலே 9 மாணவர்கள் தொடர்ந்து துன்புறுத்தி தொந்தரவு கொடுத்து வந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து 9 மாணவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை தூத்துக்குடியில் உள்ள சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்தி, நெல்லையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,320 அதிரடியாக உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..?</title><link>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-jumps-rs-2320-per-sovereign-todays-rate</link><comments>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-jumps-rs-2320-per-sovereign-todays-rate#comments</comments><guid isPermaLink="false">9d42c632-7e10-4fda-b4d2-600cd4ffffcb</guid><pubDate>Thu, 03 Sep 2026 04:31:26 +0000</pubDate><atom:updated>2026-09-03T04:31:26.946Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Gold Rate,தங்கம் விலை,வெள்ளி விலை,Silver rate,Gold Price,Silver Price,விலை நிலவரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/k2m5jbz4/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/k2m5jbz4/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தங்கம் (Gold Rate)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. சென்னையில் நேற்று முன்தினம் தங்கம் ஒரு கிராம் ரூ.14,175-க்கும், சவரன் ரூ.1,13,400-க்கும் விற்பனையானது. நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,800 சரிந்து ரூ.1,11,600-க்கும், கிராமுக்கு ரூ.225 குறைந்து, ரூ.13,950-க்கும் விற்பனையானது.</p><p>இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,920-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.290 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் உயர்ந்து, வெள்ளி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை தொடக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sale-of-onions-begins-in-ration-shops-across-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sale-of-onions-begins-in-ration-shops-across-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">6c6f4e89-e1f7-47a4-a90e-29c787e302b8</guid><pubDate>Thu, 03 Sep 2026 04:09:09 +0000</pubDate><atom:updated>2026-09-03T04:09:09.303Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழகம்,ரேஷன் கடை,தொடக்கம்,ration shops,onion,In Tamil Nadu,வெங்காயம் விற்பனை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/9rz6tr12/96.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/9rz6tr12/96.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ஒரு கிலோ வெங்காயத்தை ரூ.35-க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>சமையலில் அத்தியாவசியமாக பயன்படுத்தப்படும் வெங்காயத்தின் விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வரத்து குறைந்ததன் காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை கடைகளில் அதன் விலை ரூ.80-ஐ கடந்துள்ளது.</p><p>வெங்காய விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மராட்டிய மாநிலம் நாசிக்கில் உள்ள கிடங்குகளில் இருந்து வெங்காயம் டன் கணக்கில் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஒரு கிலோ வெங்காயத்தை ரூ.35-க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை</h2><p>வெளிச்சந்தையில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்ததை அடுத்து, ஏழை, எளிய நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் நியாயவிலைக் கடைகள் மூலம் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யும் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.</p><p>இதன் ஒரு பகுதியாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்குக் குறைந்த விலையில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">வெங்காயம்</a> விற்பனை செய்யும் திட்டத்தை அமைச்சர்கள் வெங்கடரமணன் மற்றும் காந்திராஜ் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவில் 84,318 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன: 93 சதவீதம் அரசுப் பள்ளிகள் - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/84318-schools-closed-in-india-93-percent-government-schools-manickam-thakur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/84318-schools-closed-in-india-93-percent-government-schools-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">61a97509-7753-4d0f-b8f1-eda960691076</guid><pubDate>Thu, 03 Sep 2026 04:06:15 +0000</pubDate><atom:updated>2026-09-03T04:06:15.662Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,மாணிக்கம் தாகூர்,அரசுப் பள்ளிகள்,Government School,மோடி அரசு,Close,Manickam Thakur MP</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/2r6kk6as/168.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/2r6kk6as/168.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்தியாவில் 84,318 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன அதில் 93 சதவீதம் அரசுப் பள்ளிகள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>அரசு பள்ளிகள்</h2><p>மோடி அரசின் திட்டமிட்ட அலட்சியத்தாலும் தவறான கல்விக் கொள்கைகளாலும் நம் நாட்டின் அரசுப்பள்ளிக் கல்வி கட்டமைப்பு மிகக் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் 84,318 பள்ளிகள் காணாமல் போயுள்ளன. இதில் அதிர்ச்சியூட்டும் உண்மை என்னவென்றால், மூடப்பட்டவற்றில் 93 சதவீதப் பள்ளிகள் அரசுப் பள்ளிகள்தான். </p><p>சுமார் 78,502 அரசுப் பள்ளிகளுக்கு மோடி அரசு மூடுவிழா நடத்தியுள்ள அதே வேளையில், 15,461 தனியார் சுயநிதிப் பள்ளிகள் காளான்கள் போலப் பெருகியிருப்பது இவர்கள் யாருக்காக ஆட்சி நடத்துகிறார்கள் என்பதைத் தெள்ளத்தெளிவாக காட்டுகிறது. சமூக நீதியையும் பொது கல்வியையும் உயிர்மூச்சாகக் கொண்ட நமது தமிழ்நாட்டிலும் கூட, இந்த ஒன்றிய அரசின் தவறான அணுகுமுறையால் சுமார் 1,976 பள்ளிகள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. </p><h2>பிஎம் ஸ்ரீ திட்டம்</h2><p>கிராமப்புற ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட சமூகத்து மாணவர்களின் ஒரே புகலிடமாக விளங்கும் அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்துவதற்கு உரிய நிதி ஒதுக்காமல், பள்ளிக் கல்வியை திட்டமிட்டுச் சீரழிக்கும் வேலையை பாஜக அரசு தீவிரமாகச் செய்து வருகிறது. குறிப்பாக, தேசிய கல்விக் கொள்கை மற்றும் பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்கவில்லை என்பதற்காகவே, கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய மொத்தம் ரூ.5,109 கோடி கல்வி நிதியை மோடி அரசு தடுத்து நிறுத்தியுள்ளது. </p><p>நீதிமன்றம் தலையிட்டதால் வேறு வழியின்றி RTE- க்கு மட்டும் ரூ.714 கோடியை கிள்ளிப் போட்டுவிட்டு, ஒட்டுமொத்த பள்ளி கல்வி நிதியையும் தடுத்து வைத்து தமிழக மாணவர்களின் எதிர்காலத்தோடு பிளாக்மெயில் அரசியல் செய்வது கண்டனத்திற்குரியது!</p><h2>மத்திய அரசு</h2><p>"பள்ளி சீரமைப்பு மற்றும் முறைப்படுத்துதல்" என்ற போலி அறிக்கையை வைத்துக்கொண்டு, ஒற்றை ஆசிரியர் பள்ளி, குறைவான மாணவர்கள் என்ற காரணங்களைக் கூறி எளிய மக்களின் கல்வி உரிமையைப் பறிக்கப் பார்க்கிறார்கள். பள்ளிகளை ஒருங்கிணைக்கிறோம் என்ற பெயரில் அரசுப் பள்ளிகளை இழுத்து மூடி, ஒட்டுமொத்தக் கல்வியையும் கார்ப்பரேட் மற்றும் தனியார் கல்வி மாபியாக்களின் கைகளில் தாரைவார்ப்பதே மோடி அரசின் உண்மையான நோக்கம்.</p><p>அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்கி மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்குத் திறனற்றி மத்திய அரசு, மாநிலங்களுக்கான சட்டப்பூர்வ நிதிப் பங்கையும் வஞ்சகமாக மறுத்து, தனியார் முதலாளிகளுக்கு சேவை செய்யும் வகையில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF">அரசு பள்ளிகளை</a> ஒழித்துக் கட்டுவதை உடனடியாகக் கைவிட வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அரசு பஸ்சின் தானியங்கி கதவு திறந்து மாணவிகள் விழுந்து காயமடைந்த சம்பவம்: டிரைவர் சஸ்பெண்ட்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/driver-suspended-after-incident-where-female-students-fell-and-were-injured-when-a-government-buss-automatic-door-opened</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/driver-suspended-after-incident-where-female-students-fell-and-were-injured-when-a-government-buss-automatic-door-opened#comments</comments><guid isPermaLink="false">fb297d4f-2d0c-47e0-a490-0b7a74940773</guid><pubDate>Thu, 03 Sep 2026 03:58:08 +0000</pubDate><atom:updated>2026-09-03T03:58:08.788Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>புதுக்கோட்டை,Pudukottai,கீரனூர்,மாணவிகள் காயம்,அரசு பள்ளி மாணவிகள்,Govt School Students,தானியங்கி கதவு,டிரைவர் சஸ்பெண்ட்,Driver suspend</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/hqw5p35j/kler.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/hqw5p35j/kler.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுக்கோட்டை, </p><p>ஓடும் பஸ்சில் தானியங்கி கதவு திறந்ததால் கீழே விழுந்து 10 மாணவிகள் காயமடைந்தனர். டிரைவர், கண்டக்டர் கைது செய்யப்பட்டனர்.</p><h2>அரசு நகர பஸ்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/pudukkottai">புதுக்கோட்டை</a> மாவட்டம் கீரனூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கி 8-ம் எண் அரசு நகர பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று காலை 9 மணிக்கு சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் புதுக்கோட்டை-திருச்சி சாலையில் ரெங்கம்மாள் சத்திரம் பஸ் நிறுத்தத்தில் நின்றது. அப்போது புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் 9 பேர் மற்றும் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பயிலும் மாணவி என மொத்தம் 10 பேர் அந்த பஸ்சில் ஏறினர்.</p><h2>தானியங்கி கதவு</h2><p>பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாணவிகள் முன்பக்க படிக்கட்டில் நின்று கொண்டிருந்தனர். பின்னர் பஸ்சின் தானியங்கி கதவு மூடப்பட்டது. அங்கிருந்து பஸ் புறப்பட்டு, சுமார் 100 மீட்டர் தொலைவில் சென்றபோது, தானியங்கி கதவு திடீரென திறந்துள்ளது. இதில் படிக்கட்டில் நின்று கொண்டி ருந்த மாணவிகள் 10 பேரும் எதிர்பாராதவிதமாக ஓடும் பஸ்சில் இருந்து சாலையில் தவறி கீழே விழுந்தனர். இதைப்பார்த்த பஸ்சில் இருந்தவர்கள் அலறினர்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/4krw1f5a/stud.jpg" /></figure><p>அலறல் சத்தத்தை கேட்ட டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பின்னர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மற்றும் பஸ்சில் இருந்தவர்கள் காயமடைந்த 10 மாணவிகளையும் மீட்டு 2 ஆம்புலன்ஸ்கள் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><p>இந்த நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சண்முகம் நேரில் ஆறுதல் கூறினார். </p><p>பின்னர் அவர் கூறுகையில், 'ஓடும் பஸ்சில் இருந்து மாணவியை கண்டக்டர் கீழே தள்ளிவிட்டதாக ஒரு தரப்பினரும், டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் நிலைதடுமாறி மாணவி கீழே விழுந்ததாக மற்றொரு தரப்பினரும் கூறுகின்றனர். </p><h2>உண்மையான காரணம்</h2><p>இதுதொடர்பாக முழுமையாக விசாரித்த பின்னரே உண்மையான காரணம் தெரியவரும். விபத்து நடந்த பகுதியில் கடந்த 3, 4 மாதங்களாகவே அரசு பஸ்களில் மாணவர்களை ஏற்றுவது இல்லை, நிறுத்தங்களில் பஸ்கள் நிற்காமல் செல்வதாக புகார்கள் எழுந்துள்ளது. உடனடியாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். கூட்ட நெரிசலே இந்த விபத்துக்கு பின்னணியாக இருந்ததால், காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க மாவட்ட கலெக்டர் மூலம் மாற்று ஏற்பாடுகள் செய்யப் படும்' என்றார்.</p><h2>சாலை மறியல்</h2><p>இதற்கிடையே ரெங்கம்மாள் சத்திரம் பகுதியில் பள்ளி மாணவிகள் பஸ்சில் இருந்து கீழே விழுந்த சம்பவத்தை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள், மாணவிகளின் பெற்றோர்கள், உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.</p><p>இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.</p><p>இச்சம்பவம் குறித்து வெள்ளனூர் போலீசார் பஸ் டிரைவர் அர்ஜூனன், கண்டக்டர் மணிகண்டன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் ஜாமீனில் விடுவித்தனர்.</p><h2>டிரைவர் சஸ்பெண்ட்</h2><p>புதுக்கோட்டை மண்டல போக்குவரத்து பொது மேலாளர் கார்த்திகேயன் கூறுகையில், 'கீரனூரில் நேற்று காலை 8.30 மணிக்கு அரசு பஸ் புதுக்கோட்டை நோக்கி செல்லும்போது பஸ்சில் 90 பயணிகள் இருந்தனர். 9.05 மணிக்கு ரெங்கம்மாள் சத்திரம் பஸ் நிறுத்தத்தில் மேலும் 30 பயணிகள் மற்றும் மாணவிகளை ஏற்றிக்கொண்டு பஸ் சென்றபோது, கூட்ட நெரிசல் காரணமாக உள்ளே நின்ற பயணி ஒருவர் முன்படிக்கட்டின் அருகில் உள்ள தானியங்கி கதவு திறக்கும் பொத்தானை அழுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் முன் படிக்கட்டு கதவு திறந்ததில், படியில் நின்ற மாணவிகள் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதில் 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது' என்றார்.</p><p>இதற்கிடையே பஸ் டிரைவர் அர்ஜூனனை சஸ்பெண்ட் செய்தும், தற்காலிக ஊழியரான கண்டக்டர் மணிகண்டனை பணியில் இருந்து விடுவித்தும் புதுக்கோட்டை மண்டல போக்குவரத்து பொது மேலாளர் கார்த்திகேயன் உத்தர விட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>செங்கல்பட்டு அருகே சோகம்... பள்ளி பஸ் மோதி தாய், மகள் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-near-chengalpattu-mother-and-daughter-killed-in-school-bus-crash</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-near-chengalpattu-mother-and-daughter-killed-in-school-bus-crash#comments</comments><guid isPermaLink="false">315d21d7-6630-43a1-b989-9bb13a1dae6f</guid><pubDate>Thu, 03 Sep 2026 03:49:22 +0000</pubDate><atom:updated>2026-09-03T03:49:22.774Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chengalpattu,உயிரிழப்பு,ஆஸ்பத்திரி,வண்டலூர்,school bus,பள்ளி பஸ்,Mother and daughter</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/p82o7z55/298.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பலி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/p82o7z55/298.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வண்டலூர், </p><p>ஊரப்பாக்கம் அருகே பள்ளி பஸ் - மொபட் மோதிய விபத்தில் தாய், மகள் பலியானார்கள்.</p><p>செங்கல்பட்டு மாவட்டம் கீரப்பாக்கம் கிராமத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் தேவி (வயது 45). இவரது மகள் சுவாதி (வயது 23). நேற்று இருவரும் கீரப்பாக்கத்தில் இருந்து ஊரப்பாக்கம் நோக்கி ஒரே மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். மொபட்டை சுவாதி ஓட்டிச்சென்றார். </p><h2>விபத்து</h2><p>காரணைப்புதுச்சேரி-அருங்கால் சாலையில் முன்னால் சென்ற அரசு பஸ்சை முந்திசெல்லும் போது, ஊரப்பாக்கத்தில் இருந்து அருங்கால் நோக்கி வந்த தனியார் பள்ளி பஸ், சுவாதி ஓட்டி சென்ற மொபட் மீது மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் தேவி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சுவாதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சுவாதியும் பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இதுகுறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பலியான தாய், மகள் இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">விசாரணை</a> நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கீரப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>
தமிழக அரசு துறைகளில் வேலை: 170 காலியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/jobs-in-tamil-nadu-government-departments-tnpsc-issues-notification-to-fill-170-vacancies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/jobs-in-tamil-nadu-government-departments-tnpsc-issues-notification-to-fill-170-vacancies#comments</comments><guid isPermaLink="false">156e51ba-628c-41b0-89ba-89177994c3c8</guid><pubDate>Thu, 03 Sep 2026 03:48:25 +0000</pubDate><atom:updated>2026-09-03T03:48:25.391Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎஸ்சி,TNPSC,தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்,Job News,TNPSC Announcement,தமிழக அரசு துறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/z11dvs2c/5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/z11dvs2c/5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (<a href="https://www.dailythanthi.com/topic/tnpsc">TNPSC</a>) ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வில் அடங்கிய நேர்முகத் தேர்வு பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 170 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இது குறித்து <a href="https://www.dailythanthi.com/topic/tnpsc">டிஎன்பிஎஸ்சி</a> வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: </p> <p>ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள்) 2026. கால்நடை உதவி மருத்துவர், முதுநிலை பூச்சியியல் வல்லுநர் உள்ளிட்ட 31 பதவிகளுக்கான 170 காலிப்பணியிடங்களை நிரப்ப, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள்)-க்கான அறிவிக்கை, தேர்வாணையத்தின் ஆண்டுத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி இன்று (31.08.2026) வெளியிடப்பட்டுள்ளது.தேர்வர்கள் 07.09.2026 முதல் 06.10.2026 வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். </p> <p>தேர்வர்கள் தேர்வுக்கட்டணத்தை UPI மூலமாகவும் செலுத்தலாம். கணினி வழித் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் தேர்வாணைய இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.  பணியிடங்களுக்கு தகுந்தபடி கல்வித் தகுதி மாறுபடும். பிஇ, பிடெக், பிவிஎஸ்ஸி ஏஹெச், எம்பிஏ, எம்சிஏ, சிஏ, ஐசிடபிள்யூஏ, ஏசிஎஸ், எம்வி எஸ்சி உள்ளிட்ட படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். இந்த தேர்வு குறித்த முழு விவரங்கள் டிஎன்பிஎஸ்சி  <a href="https://tnpsc.gov.in/home.aspx">https://tnpsc.gov.in/home.aspx</a> என்ற  இணையதளத்தில்  கொடுக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பவானிசாகர் அணையில் நீர்மட்டம் கடும் சரிவு: விவசாயிகள் கவலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-level-in-bhavanisagar-dam-drops-sharply-farmers-worried</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-level-in-bhavanisagar-dam-drops-sharply-farmers-worried#comments</comments><guid isPermaLink="false">665d0594-db55-4476-9ac7-05fd1e271bb5</guid><pubDate>Thu, 03 Sep 2026 03:32:59 +0000</pubDate><atom:updated>2026-09-03T03:32:59.886Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விவசாயிகள்,Bhavanisagar Dam,பவானிசாகர் அணை,water level,நீர்மட்டம்,சரிவு,கவலை,farmers worried</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/goypejhu/bavanisagar-dam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பவானிசாகர் அணை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/goypejhu/bavanisagar-dam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பவானிசாகர்,</p><p>கடந்த ஆண்டு 101 அடியில் களை கட்டிய பவானிசாகர் அணையின் நீர் மட்டம் இந்த ஆண்டு பாதியாக குறைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.</p><h2>பவானிசாகர் அணை</h2><p>தமிழ்நாட்டின் 2-வது பெரிய அணை என்ற பெருமையை கொண்டது பவானிசாகர் அணை. நீலகிரி மலைப்பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து தெங்குமரஹாடா வழியாக வரும் மாயாறும் கலக்குமிடத்தை தேர்வு செய்து இந்த அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் மொத்த நீர் மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது. அணையின் மொத்த நீர் கொள்ளளவு 32.8 டி.எம்.சி. ஆகும். பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆறு மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படுகிறது. பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் சத்தியமங்கலம் வழியாக கொடிவேரி அணைக்கு வருகிறது. தொடர்ந்து அங்கிருந்து அரக்கன் கோட்டை-தடப்பள்ளி பாசன பகுதிக்கு பிரிந்து அதன்பின்னர் காலிங்கராயன் பாசன பகுதிக்கு வந்து சேர்ந்து அங்கிருந்து பிரிந்து பவானி கூடுதுறையில் காவிரி ஆற்றில் கலக்கிறது.</p><h2>கடந்த ஆண்டு நீர்மட்டம்</h2><p>இதனால் பவானிசாகரில் இருந்து பவானி கூடுதுறை வரை உள்ள 2 கரையோர பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான ஊராட்சிகள் மற்றும் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளின் குடிநீர் ஆதாரமாக விளங்குவதோடு சுமார் 35 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீர் ஈரோடு, கரூர் மாவட்டங் களில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந் தேதி காலை 8 மணிக்கு 101.42 அடியாக இருந்தது.</p><h2>நீர்மட்டம் சரிவு</h2><p>அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 381 கன அடியாக இருந்தது. அணையின் நீர் கொள்ளளவு 29.85 டி.எம்.சியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் அதிக அளவில் இருந்ததால் கடந்த ஆண்டு கீழ்பவானி வாய்க்கால் மற்றும் பவானி ஆற்றில் பாசனத்துக்காக முழுவதுமாக தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தென் மேற்கு பருவமழை பொய்த்துப்போனது. இதன்காரணமாக அணைக்கு நீர்வரத்து பெரிதும் குறைந்தது. இந்தநிலையில் நேற்று காலை 8 மணி அளவில் <a href="https://www.dailythanthi.com/topic/bhavanisagar-dam">பவானிசாகர் அணை</a> நீர்மட்டம் 50.65 அடியாக குறைந்தது. அணைக்கு வினாடிக்கு 933 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 105 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது அணையில் 4.59 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் அணையின் நீர்மட்டம் பாதியாக குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>களவு போன மரகத முருகர் சிலையை உடனடியாக மீட்க வேண்டும்! - நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-stolen-emerald-murugan-idol-must-be-recovered-immediately-nainar-nagendran-urges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-stolen-emerald-murugan-idol-must-be-recovered-immediately-nainar-nagendran-urges#comments</comments><guid isPermaLink="false">1ae4e3d1-ab17-4b0d-874f-72a1c617d34d</guid><pubDate>Thu, 03 Sep 2026 03:26:08 +0000</pubDate><atom:updated>2026-09-03T03:26:08.770Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Chengalpattu,செங்கல்பட்டு,Murugan Temple,முருகன் சிலை,Murugan statue,சிலை திருட்டு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/adijam3a/nainar.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/adijam3a/nainar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>ஜோசப் விஜய் அரசின் மெத்தனத்தால் களவு போன மரகத முருகர் சிலையை உடனடியாக மீட்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>முருகர் சிலை திருட்டு</h2><p>செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பெருங்கரணை தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில், விலைமதிப்பற்ற 2.5 அடி உயர மரகத முருகர் சிலை மற்றும் வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தமிழகப் பக்தர்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து இந்து ஆலயங்கள் குறிவைக்கப்படுவதும், சிலைகள் திருடப்படுவதும் தவெக அரசின் அறநிலையத் துறை மற்றும் காவல்துறையின் ஒட்டுமொத்தத் தோல்வியையே காட்டுகிறது. இவ்வாறு ஆன்மிக அடையாளங்கள் அழிக்கப்படுவதைப் பாரதிய ஜனதா கட்சி ஒருபோதும் வேடிக்கை பார்க்காது.</p><p>திருக்கோவில்களில் போதிய பாதுகாப்பு வசதிகளையோ, நவீன கண்காணிப்புக் கருவிகளையோ உறுதி செய்யாமல் மெத்தனம் காட்டும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அரசின் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நடைபெறும் நிகழ்வுகளை பார்க்கும் போது தவெக அரசின் "மாற்று அரசியல்" என்பது இந்துக்களின் வழிபாட்டு உரிமைகள் பறிக்கப்படும்போது கைகட்டி வேடிக்கை பார்ப்பதுதானா? என்ற கேள்வி எழுகிறது.</p><h2>மாபெரும் அறப்போராட்டம்</h2><p>மேலும், <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">முதல்-அமைச்சர்</a> விஜய்யின் அரசு, கிறிஸ்தவ மதத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து ஒருதலைப்பட்சமாக இயங்கி வருவது அப்பட்டமாகத் தெரிகிறது. மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் சபாநாயகர் சட்டசபையில் பைபிள் வசனங்களை வாசிப்பதும், நிதியமைச்சர் சட்ட சபையில் ஜெபமாலையுடன் வலம் வருவதும் நடைபெறும் அதே வேளையில், இந்து மதத் திருக்கோவில்களில் இதுபோன்ற களவுகள் சர்வ சாதாரணமாக அரங்கேறுகின்றன. சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்தத் துடிக்கும் ஜோசப் விஜய், இந்துக்கள் வழிபடும் கோவில்களுக்குப் பாதுகாப்பு வழங்கத் தவறுவது ஏன்?</p><p>எனவே, உடனடியாகத் தனிப்படை அமைத்து, திருடப்பட்ட மரகத முருகர் சிலையை மீட்க வேண்டும். விலை மதிப்பற்ற இந்தச் சிலை கடத்தலின் பின்னணியில் இருக்கும் சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதோடு, சிதைந்து கிடக்கும் சட்டம் - ஒழுங்கைச் சீரமைக்கத் தவறினால், பக்தர்களைத் திரட்டி தமிழக பாஜக சார்பில் மாபெரும் அறப்போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தம் ஏற்றியதால் பாதிப்பு: பெண்ணுக்கு மாத உதவித்தொகையை நிலுவையுடன் வழங்க கோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/harm-caused-by-transfusion-of-hiv-infected-blood-court-orders-payment-of-monthly-allowance-with-arrears-to-woman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/harm-caused-by-transfusion-of-hiv-infected-blood-court-orders-payment-of-monthly-allowance-with-arrears-to-woman#comments</comments><guid isPermaLink="false">5b0f8859-c0df-4b52-88fb-014c260d931e</guid><pubDate>Thu, 03 Sep 2026 03:24:46 +0000</pubDate><atom:updated>2026-09-03T03:24:46.985Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Madurai,மதுரை,தமிழக அரசு,TN govt,HIV,Madurai High Court,மதுரை ஐகோர்ட்டு,கர்ப்பிணி பெண்,உதவித்தொகை,எச்.ஐ.வி. ரத்தம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/oroskpkt/ghh.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/oroskpkt/ghh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p>எச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தம் ஏற்றியதால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க வேண்டிய மாத உதவித்தொகையை நிலுவையுடன் உடனடியாக வழங்க அரசுக்கு <a href="https://www.dailythanthi.com/topic/madurai-high-court">மதுரை ஐகோர்ட்டு</a> உத்தரவிட்டது.</p><h2>எச்.ஐ.வி. தொற்று</h2><p>விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ஒரு கர்ப்பிணிக்கு 2019-ம் ஆண்டில் சிவகாசி அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்டது. இதனால் அவரது உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து பரிசோதித்ததில் அவருக்கு எச்.ஐ.வி. தொற்று இருந்த ரத்தம் ஏற்றியது தெரியவந்தது. இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p><h2>கர்ப்பிணிக்கு உரிய இழப்பீடு</h2><p>இதுகுறித்து <a href="https://www.dailythanthi.com/topic/madurai-high-court">மதுரை ஐகோர்ட்டு</a> பதிவாளர் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தார். இதேபோல மதுரையை சேர்ந்த அப்பாஸ் மந்திரி, வக்கீல் எஸ்.முத்துகுமார் உள்ளிட்டோர் கர்ப்பிணிக்கு உரிய இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கு தாக்கல் செய்தனர்.</p><p>இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கர்ப்பிணிக்கு முறையான சிகிச்சையை மதுரை அரசு மருத்துவமனையில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் அந்த பெண்ணுக்கு வீடு வழங்க வேண்டும். ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.</p><h2>விசாரணை</h2><p>பெண்ணின் உடல் ஆரோக்கிய தேவைகளுக்காக மாதந்தோறும் ரூ.7,500 உதவித்தொகை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை நிறைவேற்றும்படி அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த நிபந்தனைகளை நிறைவேற்றியது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தி இருந்தது. அதன்படி இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.</p><h2>உதவித்தொகை நிறுத்தம்</h2><p>அப்போது மனுதாரர்கள் சார்பில் வக்கீல் வெங்கடேசன் உள்ளிட்டோர் ஆஜராகி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு வேலை உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் மாத உதவித்தொகை ரூ.7,500-ஐ சில மாதங்கள் மட்டுமே வழங்கி உள்ளனர். பின்னர் அந்த தொகையை நிறுத்தி விட்டனர். இதனால் அந்த பெண் பாதிக்கப்பட்டு உள்ளார் என்றனர்.</p><h2>அரசுக்கு உத்தரவு</h2><p>இதை கேட்ட நீதிபதிகள், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதால் பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆரோக்கிய தேவைகளுக்காக வழங்க வேண்டும் என உத்தரவிட்டதை நிறைவேற்றாதது ஏன்? என கேள்வி எழுப்பி தங்களது அதிருப்தியை தெரிவித்தனர்.</p><p>முடிவில், நிலுவையில் உள்ள தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை சென்டிரல் -சூலூர்பேட்டை பயணிகள் ரெயில் ரத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-central-sulurpet-passenger-train-cancelled-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-central-sulurpet-passenger-train-cancelled-2#comments</comments><guid isPermaLink="false">bd5eeb76-80fb-447f-a92b-689473259b84</guid><pubDate>Thu, 03 Sep 2026 02:35:29 +0000</pubDate><atom:updated>2026-09-03T02:35:29.003Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Central,சென்னை சென்டிரல்,passenger train,பயணிகள் ரெயில்,ரத்து,cancelled,சூலூர்பேட்டை,Sulurpet</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/2tmgj98o/passanger-train.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பயணிகள் ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/2tmgj98o/passanger-train.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பராமரிப்பு காரணமாக சென்னை சென்டிரல் -சூலூர்பேட்டை பயணிகள் ரெயில் ரத்து செய்யப்படுகிறது.</p><p>இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள பெதபரியா- நாயுடு பேட்டை இடையே இன்று (வியாழக்கிழமை) மற்றும் 5 ஆகிய தேதிகளில் மதியம் 12.20 மணி முதல் மாலை 6.50 மணி வரையில் (6 மணி நேரம் 30 நிமிடம்) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-</p><h2>பயணிகள் ரெயில் ரத்து</h2><p>சென்னை சென்டிரலில் இருந்து காலை 7.45 மணிக்கு புறப்பட்டு சூலூர் பேட்டை செல்லும் பயணிகள் ரெயிலும், மறுமார்க்கமாக, சூலூர்பேட்டையில் மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் பயணிகள் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. சூலூர்பேட்டையில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு நெல்லூர் வரும் பயணிகள் ரெயிலும், மறுமார்க்கமாக, நெல்லூரில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை வரும் பயணிகள் ரெயிலும் ரத்துசெய்யப்படுகிறது. சென்னை சென்டிரலில் இருந்து இரவு 9.25 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் பயணிகள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">ரெயில் ரத்து</a> செய்யப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பக்தர்களின் எண்ணிக்கையை குறைக்கவே செல்போனுக்கு தடை? - தகவல் நம்பகத்தன்மை பிரிவு மறுப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-mobile-phones-intended-to-reduce-the-number-of-devotees-information-authenticity-division-denies-claim</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-mobile-phones-intended-to-reduce-the-number-of-devotees-information-authenticity-division-denies-claim#comments</comments><guid isPermaLink="false">7a120973-fd3f-4d16-8c8f-4cd957319ed3</guid><pubDate>Thu, 03 Sep 2026 02:33:06 +0000</pubDate><atom:updated>2026-09-03T02:33:06.187Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழ்நாடு,temples,கோவில்கள்,கோவில்,Temple,செல்போன்,இந்து சமய அறநிலையத்துறை,Fact Check Unit,Fact check,Cell phones are banned in temples,தகவல் சரிபார்ப்பகம்,TN Fact Check,தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம்,தகவல் நம்பகத்தன்மை,தகவல் நம்பகத்தன்மை பிரிவு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/bz70yaa9/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ செல்போனுக்கு தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/bz70yaa9/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கோவில்களில் செல்போனுக்கு தடை தொடர்பாக பரவும் தவறான தகவல் குறித்து தகவல் நம்பகத்தன்மை பிரிவு விளக்கம் கொடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியாக செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>பரவும் செய்தி</h2><p>“கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை குறைக்க மட்டுமே செல்போன் தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.</p><h2>உண்மை என்ன?</h2><p>மாண்பமை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை </a>உயர்நீதிமன்ற மதுரை கிளை 2022-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பின்படி, கோவில்களின் கண்ணியம் மற்றும் புனிதத்தன்மையை பேணும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்பாட்டை தடுக்க வேண்டும், செல்போன்களுக்கான பாதுகாப்பு மையங்களை (Safety Deposit Counters ) அமைக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி, முதற்கட்டமாக 52 முதுநிலைத் திருக்கோயில்களில் மட்டும் செல்போன்களை எடுத்துச் செல்வதற்கான தடை செயல்படுத்தப்பட்டுள்ளது.</p><p>தவறான தகவலைப் பரப்பாதீர்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கிருஷ்ண ஜெயந்தி, வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/krishna-jayanthi-weekend-special-buses-across-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/krishna-jayanthi-weekend-special-buses-across-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">efc35e42-811c-4034-a07e-4f032f701504</guid><pubDate>Thu, 03 Sep 2026 02:30:57 +0000</pubDate><atom:updated>2026-09-03T02:30:57.255Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>special buses,சிறப்பு பேருந்துகள்,Weekend,Krishna Jayanti,கிருஷ்ண ஜெயந்தி,வார இறுதி நாட்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/n7admu8t/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு பேருந்துகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/n7admu8t/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>இன்று, நாளை (கிருஷ்ண ஜெயந்தி), 5-ந்தேதி (சனிக்கிழமை) மற்றும் 6-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 910 பேருந்துகளும் நாளை 740 பேருந்துகளும், சனிக்கிழமை 880 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 210 பேருந்துகளும், நாளை 115 பேருந்துகளும், சனிக்கிழமை 115 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்திலிருந்து இன்று முதல் சனிக்கிழமை வரையிலான நாட்களில் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு ஒவ்வொரு நாளும் 95 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 6-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) 805 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில் இன்று 14,016 பயணிகளும், நாளை 8,688 பயணிகளும், சனிக்கிழமை 6,459 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 14,239 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் TNSTC Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p>இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருத்தணி முருகன் கோவிலுக்கு 14 நாட்கள் ஆட்டோக்கள் செல்ல தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/autos-banned-from-entering-thirutani-murugan-temple-for-14-days</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/autos-banned-from-entering-thirutani-murugan-temple-for-14-days#comments</comments><guid isPermaLink="false">7670b3de-9330-4adf-bece-b5533977a125</guid><pubDate>Thu, 03 Sep 2026 02:15:29 +0000</pubDate><atom:updated>2026-09-03T02:15:29.308Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>முருகன் கோவில்,Murugan Temple,திருத்தணி,Tirutani,banned,autos,ஆட்டோக்கள்,செல்ல தடை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/2hhom3g6/tirutani-murugan-kovil.gif" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருத்தணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/2hhom3g6/tirutani-murugan-kovil.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருத்தணி,</p><p>திருத்தணி முருகன் மலைக்கோவில் மேல் 14 நாட்கள் ஆட்டோக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>14 நாட்கள்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF">திருத்தணி </a>முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.</p><p>இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை), நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் செப்டம்பர் 6, 7, 13, 14, 17, 20, 23, 24, 25, 27, 28, 30 ஆகிய நாட்களில் விழா மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, பக்தர்களின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு மேற்கண்ட 14 நாட்களிலும் மலைக்கோவிலுக்கு ஆட்டோக்கள் செல்ல கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.</p><h2>இருசக்கர வாகனங்களில் செல்ல அனுமதி </h2><p>இடவசதிக்கு ஏற்ப கார்கள் மட்டும் மலைக்கோவிலுக்கு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மலைக்கோவில் நுழைவுப் பகுதியில் இருந்து படா செட்டிகுளம் வரை பக்தர்கள் கட்டணமின்றி கோவில் பஸ்களில் பயணம் செய்யலாம். இருசக்கர வாகனங்களில் பக்தர்கள் மலைக் கோவிலுக்கு செல்ல அனுமதி உண்டு. பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு கோவில் நிர்வாகம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கியாஸ் சிலிண்டர் பதிவு செய்த 4 மணி நேரத்தில் டெலிவரி: சென்னையிலும் திட்டம் அறிமுகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/gas-cylinder-delivery-within-4-hours-of-registration-scheme-launched-in-chennai-too</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/gas-cylinder-delivery-within-4-hours-of-registration-scheme-launched-in-chennai-too#comments</comments><guid isPermaLink="false">16c1e483-cfe9-49d9-bc48-857b07e96ab6</guid><pubDate>Thu, 03 Sep 2026 02:10:28 +0000</pubDate><atom:updated>2026-09-03T02:10:28.429Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,delivery,Gas Cylinder,இந்தியன் ஆயில் நிறுவனம்,சிலிண்டர்,டெலிவரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/1yhxoadn/296.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிலிண்டர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/1yhxoadn/296.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>'இந்தியன் ஆயில்' நிறுவனத்தின், 10 கிலோ எடை உடைய, 'இண்டேன் எக்ஸ்ட்ராலைட் நவ்' சமையல் கியாஸ் சிலிண்டரை, பதிவு செய்த நான்கு மணி நேரத்தில், வினியோகம் செய்யும் திட்டம், சென்னை, செங்கல்பட்டு, மதுரை, திருச்சி, புதுச்சேரியில் தொடங்கப்பட்டுள்ளது.</p><p>இந்தியன் ஆயில் நிறுவனம், வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும், சமையல் கியாஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கிறது. வீடுகளுக்கு முன்பதிவு செய்யப்பட்டதில் இருந்து, 3 - 4 நாட்களுக்குள் வினியோகம் செய்யப்படுகிறது.</p><h2>நான்கு மணி நேரம்</h2><p>தமிழகத்தில் கோவை உட்பட நாடு முழுதும் முக்கிய நகரங்களில், இண்டேன் எக்ஸ்ட் ராலைட் நவ் என்ற பெயரில் புதிதாக, 10 கிலோ எடை உடைய, 'காம்போசிட்' சிலிண் டர் வினியோகத்திற்கு வந்துள்ளது. இந்த சிலிண்டர், பதிவு செய்த நான்கு மணி நேரத்திற்குள், வினியோகம் பாகம் செய்யப்படுகிறது. இதன் வினியோகம், கடந்த ஜூலையில் தொடங்கப்பட்டது. இந்த சிலிண்டர் தேவைப்படுவோர், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மொபைல் செயலி வாயிலாக முன்பதிவு செய்ய வேண்டும்.</p><p>தற்போது, சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, திருப்பூர், மதுரை ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், பதிவு செய்த நான்கு மணி நேரத்திற்குள் புதிய சிலிண்டர் வினியோக திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாணவர் சேர்க்கை சரிவு: 70 தனியார் பாலிடெக்னிக்குகளை மூட முடிவு..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/decline-in-student-admissions-70-private-polytechnics-decide-to-close</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/decline-in-student-admissions-70-private-polytechnics-decide-to-close#comments</comments><guid isPermaLink="false">4f62b46c-98bf-4f10-a76b-947be08039e7</guid><pubDate>Thu, 03 Sep 2026 01:56:47 +0000</pubDate><atom:updated>2026-09-03T01:56:47.798Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணவர் சேர்க்கை,Student Admission,பாலிடெக்னிக் கல்லூரி,Polytechnic College,Polytechnic,பாலிடெக்னிக்,polytechnic student,Government Polytechnic,தனியார் பாலிடெக்னிக்,கல்லூரிகள் மூடல்,polytechnics,private polytechnic</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/9bw91ibl/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/9bw91ibl/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>கல்வி&amp;வேலைவாய்ப்பு (Eduction and Jobs)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மாணவர் சேர்க்கை சரிவால், நடப்பு கல்வியாண்டில் 70 தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் தங்களது கல்வி நிறுவனங்களை மூட அனுமதி கோரி, உயர்கல்வித் துறையிடம் கடிதம் அளித்துள்ளன.</p><h2>55 அரசு பாலிடெக்னிக்குகள்</h2><p>தமிழக உயர்கல்வித் துறையின் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ், 55 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளும், 400-க்கும் அதிகமான தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன.</p><h2>டிப்ளமா படிப்பில் ஆர்வம் குறைவு</h2><p>கடந்த சில ஆண்டுகளாக டிப்ளமா படிப்பின் மீது மாணவ, மாணவியர்களின் ஆர்வம் குறைந்து வருவதால், பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கடும் சரிவை சந்தித்து வருகிறது.</p><h2>அரசு கல்லூரிகள் </h2><p>நடப்பு கல்வியாண்டில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 22,600 இடங்களில் 12,000 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.</p><h2>தனியார் கல்லூரிகள்</h2><p>தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மொத்தம் 1.30 லட்சம் இடங்கள் உள்ள நிலையில், 24,000 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.</p><h2>சேர்க்கையில் பங்கேற்காத 70 கல்லூரிகள்</h2><p>தொடர்ந்து மாணவர் சேர்க்கை சரிந்து வருவதால், நடப்பு கல்வியாண்டில் 70 தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையில் பங்கேற்கவில்லை. இக்கல்லூரிகள் தங்களது கல்வி நிறுவனங்களை மூட அனுமதி கோரி, தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்துக்கு கடிதம் எழுதியுள்ளன.</p><h2>பணியாளர்கள் நிலை குறித்து விளக்கம்</h2><p>கல்வி நிறுவனங்களை மூடினால், அங்கு பணியாற்றும் விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் நிலை என்ன என்பது குறித்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களிடம் உயர்கல்வித் துறை விளக்கம் கேட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பு ஏற்படுத்துவது தொடர்பாக கல்வி நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் கோரப்பட்டுள்ளது.</p><h2>மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடு</h2><p>மேலும், அந்த 70 கல்வி நிறுவனங்களில் பிற வகுப்புகளில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மாணவர்கள் </a>தொடர்ந்து படித்து வந்தால், அவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் மேற்கொள்ள வேண்டிய மாற்று ஏற்பாடுகள் குறித்தும் கல்வி நிறுவனங்களிடம் உயர்கல்வித் துறை விளக்கம் கேட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காவிரி நீர் கடைமடை வரை தடையின்றிச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்! - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-must-ensure-that-cauvery-water-reaches-the-tail-end-areas-without-obstruction-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-must-ensure-that-cauvery-water-reaches-the-tail-end-areas-without-obstruction-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">26123bd9-4c5b-4736-a530-35118299e91e</guid><pubDate>Thu, 03 Sep 2026 01:48:42 +0000</pubDate><atom:updated>2026-09-03T01:48:42.338Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/fw9wgyrr/Untitled-18.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/fw9wgyrr/Untitled-18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தங்களின் கூட்டணிக் கட்சியான கர்நாடக காங்கிரஸ் அரசிடம் பேசி, அறுவடை வரை தேவைப்படும் முழு நீரைப் பெற்றுத் தர வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>அரசு மெத்தனப்போக்கு</h2><p>மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதை வரவேற்கும் அதே வேளையில், தமிழக விவசாயிகளின் உயிர்நாடியான இந்த விவகாரத்தில் தவெக அரசு காட்டி வரும் மெத்தனப்போக்கு மிகுந்த கவலையளிக்கிறது.</p><p>முதல்-அமைச்சர் விஜய்யின் அரசு, அண்டை மாநிலமான கர்நாடக அரசிடம் உரிய நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி, முன்கூட்டியே தண்ணீரைப் பெற்றிருக்க வேண்டும். அதாவது மே மாத இறுதியிலேயே இதற்கான முன்னெடுப்புகளைத் தொடங்கி, ஜூன் 12-ஆம் தேதி வழக்கமான தேதியில் அணை திறக்கப்படுவதை உறுதி செய்திருக்க வேண்டும்.</p><h2>முழு நீரைப் பெற்றுத் தர வேண்டும்</h2><p>இருப்பினும் தற்போதாவது அணை திறக்கப்பட்டிருப்பது ஓரளவிற்கு ஆறுதல் அளித்தாலும், மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் தண்ணீர், எந்தவிதத் தடையுமின்றி கடைகோடி விவசாயி வரை சென்றடைவதை அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும், இந்தத் தண்ணீர் 45 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்பதால், தங்களின் கூட்டணிக் கட்சியான கர்நாடக காங்கிரஸ் அரசிடம் பேசி, அறுவடை வரை தேவைப்படும் முழு நீரைப் பெற்றுத் தர வேண்டும். அத்துடன், ஏற்கனவே விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளின்படி பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யவும், இடுபொருள் மானியங்கள் விவசாயிகளுக்கு உடனடியாகக் கிடைக்கவும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">முதல்-அமைச்சர்</a> ஜோசப் விஜய் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் இன்று காவல் துறை மானியக் கோரிக்கை விவாதம்: சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/debate-on-police-department-demands-for-grants-in-the-assembly-today-opposition-parties-plan-to-raise-law-and-order-issues</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/debate-on-police-department-demands-for-grants-in-the-assembly-today-opposition-parties-plan-to-raise-law-and-order-issues#comments</comments><guid isPermaLink="false">3aaf2704-6e2f-46dc-b62d-3001523f1d3c</guid><pubDate>Thu, 03 Sep 2026 01:34:33 +0000</pubDate><atom:updated>2026-09-03T01:34:33.869Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,தமிழ்நாடு அரசு,தமிழக சட்டசபை,TN Assembly,Assembly Session,சட்டசபை கூட்டத்தொடர்,எதிர்க்கட்சிகள்,Opposition parties,Law and order,மானிய கோரிக்கை,சட்டம் ஒழுங்கு பிரச்சனை,Tamilnadu Assembly,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,சட்டசபை கூட்டத் தொடர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/jqx4xr56/kon.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/jqx4xr56/kon.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டசபையில் இன்று (வியாழக்கிழமை) காவல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற இருக்கிறது. சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.</p><h2>மானியக் கோரிக்கை விவாதம்</h2><p>தமிழக சட்டசபையில் கடந்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி 2026-2027-ம் ஆண்டுக்கான பொது  பட்ஜெட்டும், 6-ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. தொடர்ந்து, ஆகஸ்டு 7, 10,11 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதமும், 12-ந் தேதி நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோரின் பதில் உரையும் இடம் பெற்றது. </p><p>இந்த நிலையில், ஆகஸ்டு 17-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதுவரை, 43 துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து முடிந்துள்ளது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/3452brzu/kole.jpg" /></figure><h2>முதல்-அமைச்சர் கையில் உள்ள துறை</h2><p>இந்த நிலையில், <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர்</a> கையில் உள்ள முக்கிய துறையான காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. </p><p>காலை 9.30 மணிக்கு தமிழக சட்டசபை கூடியதும், முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. கேள்வி நேரம் முடிந்ததும், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற இருக்கிறது.</p><h2>சட்டம் - ஒழுங்கு பிரச்சினை</h2><p>இந்த விவாதத்தில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேச இருக்கிறார்கள். </p><p>காவல் துறை மானியம் என்பதால், தமிழகத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a> பேச இருக்கிறார்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/goi3qviu/ramkka.jpg" /></figure><h2>திங்கட்கிழமை பதிலுரை </h2><p>நாளை (4-ந் தேதி) கிருஷ்ண ஜெயந்தி அரசு விடுமுறை நாள் என்பதால், சட்டசபை நிகழ்வுகள் கிடையாது. தொடர்ந்து 2 நாட்கள் சனி, ஞாயிற்றுக்கிழமை வருவதால், சட்டசபைக்கு விடுமுறை நாளாகும். </p><p>அடுத்து, 7-ந் தேதி (திங்கட்கிழமை) சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது. அன்றைய தினம் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a> பேச இருக்கிறார். நிறைவாக, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>எழும்பூர்-கன்னியாகுமரி உள்பட 7 சிறப்பு ரெயில்கள் நீட்டிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/7-special-trains-extended-including-egmore-kanyakumari</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/7-special-trains-extended-including-egmore-kanyakumari#comments</comments><guid isPermaLink="false">d5da6e00-4e5f-44a0-ae60-6835b735aa17</guid><pubDate>Thu, 03 Sep 2026 01:29:59 +0000</pubDate><atom:updated>2026-09-03T01:29:59.240Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,சென்னை,நெல்லை,தாம்பரம்,Special train,Kanyakumari,சிறப்பு ரெயில்கள்,Egmore,போத்தனூர்,போடிநாயக்கனூர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/g15t9ovf/40.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு ரெயில்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/g15t9ovf/40.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>எழும்பூர்-கன்னியாகுமரி உள்பட 7 சிறப்பு ரெயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><h2>தாம்பரம் - போடிநாயக்கனூர்</h2><p>தாம்பரத்தில் இருந்து போடிநாயக்கனூர் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06059), வருகிற 12-ந்தேதி முதல் அக்டோபர் 24-ந்தேதி (சனிக்கிழமை மட்டும்) வரையிலும், மறுமார்க்கமாக, போடிநாயக்கனூரில் இருந்து தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06060), வருகிற 13-ந் தேதி முதல் அக்டோபர் 25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><h2>எழும்பூர்-கன்னியாகுமரி</h2><p>எழும்பூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் சிறப்பு ரெயில் (06045), நாளை (4-ந்தேதி) முதல் 25-ந்தேதி (வெள்ளிக் கிழமை) வரையிலும், மறுமார்க்கமாக, கன்னியாகுமரியில் இருந்து எழும்பூர் வரும் சிறப்பு ரெயில் (06046), வருகிற 6-ந்தேதி முதல் 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><h2>சென்னை சென்டிரல்-போத்தனூர்</h2><p>மங்களூரு சென்டிரலில் இருந்து எழும்பூர் செல்லும் சிறப்பு ரெயில் (06126), வருகிற 7-ந்தேதி முதல் அக்டோபர் 26-ந் தேதி வரையிலும், மறுமார்க்கமாக, எழும்பூரில் இருந்து மங்களூரு சென்டிரல் செல்லும் சிறப்பு ரெயில் (06125), வருகிற 8-ந்தேதி முதல் அக்டோபர் 27-ந்தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><p>போத்தனூரில் இருந்து சென்னை சென்டிரல் வரும் சிறப்பு ரெயில் (06028), நாளை (4-ந்தேதி) முதல் வருகிற நவம்பர் 29-ந்தேதி (வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) வரையிலும், மறுமார்க்கமாக, சென்னை சென்டிரலில் இருந்து போத்தனூர் செல்லும் சிறப்பு ரெயில் (06027), நாளை (4-ந்தேதி) முதல் வருகிற நவம்பர் 29-ந்தேதி (வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.</p> <h2>தாம்பரம்-நெல்லை</h2><p>நெல்லையில் இருந்து தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06166), வருகிற 6-ந்தேதி முதல் 27-ந்தேதி (ஞாயிற்றுக்கி ழமை) வரையிலும், மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து நெல்லை செல்லும் சிறப்பு ரெயில் (06165), வருகிற 7-ந்தேதி முதல் 28-ந்தேதி (திங்கட்கிழமை) வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><p>நெல்லையில் இருந்து தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06070). இன்று (3-ந்தேதி) முதல் அக்டோபர் 29-ந்தேதி வரை யிலும், மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து நெல்லை செல்லும் சிறப்பு ரெயில் (06069), நாளை (4-ந்தேதி) முதல் அக்டோபர் 30-ந் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><p>நெல்லையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">சிறப்பு ரெயில்</a> (06030), வருகிற 6-ந்தேதி முதல் நவம்பர் 29-ந்தேதி வரையிலும், மறுமார்க்கமாக, மேட்டுப்பாளையத்தில் இருந்து நெல்லை செல்லும் சிறப்பு ரெயில் (06029), வருகிற 7-ந்தேதி முதல் நவம்பர் 30-ந்தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நேபாளத்தில் மாயமானவர்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-court-orders-centre-state-governments-to-file-report-on-missing-persons-in-nepal</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-court-orders-centre-state-governments-to-file-report-on-missing-persons-in-nepal#comments</comments><guid isPermaLink="false">52500638-1e08-4456-a857-4edb795c84ca</guid><pubDate>Thu, 03 Sep 2026 01:19:25 +0000</pubDate><atom:updated>2026-09-03T01:19:25.582Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>report,அறிக்கை,தமிழர்கள்,high court order,ஐகோர்ட்டு உத்தரவு,மாயமான,missing person,nepal flood,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/d6br1zs5/highcourt.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஐகோர்ட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/d6br1zs5/highcourt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நேபாள வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களை மீட்க எடுத்த நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.</p><h2>நீதிபதி வி.சிவஞானம்</h2><p>ஐகோர்ட்டு மதுரை கிளையில், திண்டுக்கலைச் சேர்ந்த வக்கீல் பர்வேஷ் முஷ்ரப் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், "கும்பகோணத்தைச் சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் நிறுவனம் மூலம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 57 பேர் ஆகஸ்டு 23-ந்தேதி கும்பகோணத்தில் இருந்து நேபாளத்திற்கு புனித யாத்திரை சென்றனர். ஆகஸ்டு 26-ந் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியுள்ளனர்.</p><p>இவர்களில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%90%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">சென்னை ஐகோர்ட்டு</a> ஓய்வுபெற்ற நீதிபதி வி.சிவஞானம் உள்ளிட்டோர் காணாமல் போயுள்ளனர். நேபாளம் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 57 பேரில் மீட்கப்பட்டவர்கள், சிகிச்சை பெற்று வருபவர்கள். காணாமல் போனவர்கள் குறித்த விவரங்களை, அவர்களின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கவும், மீட்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவும். மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.</p><h2>அறிக்கை</h2><p>இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், “தமிழ்நாட்டில் இருந்து கைலாசத்துக்கு யாத்திரை சென்ற 305 பேரில், 220 பேர் மீட்கப்பட்டு, அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 85 பேரை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் உள்பட காணாமல் போனவர்களின் குடும்பத்தினர், அரசு செலவில் காத்மாண்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்” என்று கூறினார்.</p><p>இதையடுத்து, நேபாள வெள்ளத்தில் சிக்கி, காணாமல் போனவர்களை மீட்க எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.</p>]]></content:encoded></item></channel></rss>