<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 03 Sep 2026 04:44:16 +0000</lastBuildDate><item><title>முதல் மனைவிக்கு தெரியாமல் சிறுமியுடன் திருமணம்: போலீஸ்காரருக்கு 10 ஆண்டுகள் சிறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/policeman-gets-10-years-in-prison-for-marrying-a-minor-girl-without-the-knowledge-of-his-first-wife</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/policeman-gets-10-years-in-prison-for-marrying-a-minor-girl-without-the-knowledge-of-his-first-wife#comments</comments><guid isPermaLink="false">da01e0b7-74b7-474b-8525-7946b9d69fdd</guid><pubDate>Thu, 03 Sep 2026 04:43:53 +0000</pubDate><atom:updated>2026-09-03T04:43:53.388Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Marrage,திருவண்ணாமலை,சிறை,சிறுமி,wife,Minor girl,Policeman,Prison,போலீஸ்காரர்,முதல் மனைவி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/oe6t0ggl/299.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/oe6t0ggl/299.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை,</p><p>முதல் மனைவிக்கு தெரியாமல் சிறுமியை திருமணம் செய்த போலீஸ்காரருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை மகளிர் விரைவு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.</p><p>திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் தண்டரை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 41). இவரது மனைவி விமலா. இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு மணிகண்டன், விமலாவிற்கு தெரியாமல் சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார்.</p><h2>விசாரணை</h2><p>இதுபற்றி அறிந்ததும் விமலா தண்டராம்பட்டு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. </p><h2>சிறை தண்டனை</h2><p>இந்த நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தாமோதரன் தீர்ப்பு கூறினார். அதில் மணிகண்டனுக்கு 10 ஆண்டுகள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">சிறை</a> தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.</p><p>பின்னர் அவரை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தண்டனை பெற்ற மணிகண்டன் போலீஸ்காரர் என்பதும், சிறுமியை திருமணம் செய்ததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>படிக்க சென்ற இடத்தில் மாணவருக்கு நேர்ந்த கொடுமை: போலீசார் வழக்குப்பதிவு; 9 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-subjected-to-atrocity-at-place-of-study-parents-shocked</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-subjected-to-atrocity-at-place-of-study-parents-shocked#comments</comments><guid isPermaLink="false">016f0143-939a-4e80-b84b-ac5ca71ae6b6</guid><pubDate>Thu, 03 Sep 2026 04:34:55 +0000</pubDate><atom:updated>2026-09-03T04:34:55.080Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,போக்சோ சட்டம்,POCSO act,பாலியல் தொந்தரவு,case registered,sexual abuse,போலீசார் வழக்குப்பதிவு,மாணவர்கள் கைது,students arrested</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/ymrvvobj/ster.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/ymrvvobj/ster.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த சக மாணவர்கள் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>மாணவனுக்கு மிரட்டல்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> அருகே உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவனை, சக மாணவர்கள் தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளனர். இதனை வெளியில் சொன்னால் மேலும் துன்புறத்துவோம் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவர் யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார்.</p><p>இந்த நிலையில் அந்த மாணவருக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனை அறிந்த அந்த பள்ளிக்கூட ஆசிரியர், பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோரை அழைத்து தெரிவித்தார்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>தொடர்ந்து மாணவனை துன்புறுத்திய மாணவர்களின் பெற்றோர்களையும் வரவழைத்து கவுன்சிலிங் கொடுத்து உள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர், விளாத்திகுளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.</p><h2>9 மாணவர்கள் கைது</h2><p>விசாரணையில், அந்த மாணவனை கடந்த ஆண்டு முதலே 9 மாணவர்கள் தொடர்ந்து துன்புறுத்தி தொந்தரவு கொடுத்து வந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து 9 மாணவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை தூத்துக்குடியில் உள்ள சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்தி, நெல்லையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,320 அதிரடியாக உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..?</title><link>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-jumps-rs-2320-per-sovereign-todays-rate</link><comments>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-jumps-rs-2320-per-sovereign-todays-rate#comments</comments><guid isPermaLink="false">9d42c632-7e10-4fda-b4d2-600cd4ffffcb</guid><pubDate>Thu, 03 Sep 2026 04:31:26 +0000</pubDate><atom:updated>2026-09-03T04:31:26.946Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Gold Rate,தங்கம் விலை,வெள்ளி விலை,Silver rate,Gold Price,Silver Price,விலை நிலவரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/k2m5jbz4/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/k2m5jbz4/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தங்கம் (Gold Rate)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. சென்னையில் நேற்று முன்தினம் தங்கம் ஒரு கிராம் ரூ.14,175-க்கும், சவரன் ரூ.1,13,400-க்கும் விற்பனையானது. நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,800 சரிந்து ரூ.1,11,600-க்கும், கிராமுக்கு ரூ.225 குறைந்து, ரூ.13,950-க்கும் விற்பனையானது.</p><p>இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,920-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.290 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் உயர்ந்து, வெள்ளி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை தொடக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sale-of-onions-begins-in-ration-shops-across-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sale-of-onions-begins-in-ration-shops-across-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">6c6f4e89-e1f7-47a4-a90e-29c787e302b8</guid><pubDate>Thu, 03 Sep 2026 04:09:09 +0000</pubDate><atom:updated>2026-09-03T04:09:09.303Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழகம்,ரேஷன் கடை,தொடக்கம்,ration shops,onion,In Tamil Nadu,வெங்காயம் விற்பனை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/9rz6tr12/96.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/9rz6tr12/96.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ஒரு கிலோ வெங்காயத்தை ரூ.35-க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>சமையலில் அத்தியாவசியமாக பயன்படுத்தப்படும் வெங்காயத்தின் விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வரத்து குறைந்ததன் காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை கடைகளில் அதன் விலை ரூ.80-ஐ கடந்துள்ளது.</p><p>வெங்காய விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மராட்டிய மாநிலம் நாசிக்கில் உள்ள கிடங்குகளில் இருந்து வெங்காயம் டன் கணக்கில் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஒரு கிலோ வெங்காயத்தை ரூ.35-க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை</h2><p>வெளிச்சந்தையில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்ததை அடுத்து, ஏழை, எளிய நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் நியாயவிலைக் கடைகள் மூலம் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யும் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.</p><p>இதன் ஒரு பகுதியாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்குக் குறைந்த விலையில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">வெங்காயம்</a> விற்பனை செய்யும் திட்டத்தை அமைச்சர்கள் வெங்கடரமணன் மற்றும் காந்திராஜ் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவில் 84,318 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன: 93 சதவீதம் அரசுப் பள்ளிகள் - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/84318-schools-closed-in-india-93-percent-government-schools-manickam-thakur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/84318-schools-closed-in-india-93-percent-government-schools-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">61a97509-7753-4d0f-b8f1-eda960691076</guid><pubDate>Thu, 03 Sep 2026 04:06:15 +0000</pubDate><atom:updated>2026-09-03T04:06:15.662Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,மாணிக்கம் தாகூர்,அரசுப் பள்ளிகள்,Government School,மோடி அரசு,Close,Manickam Thakur MP</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/2r6kk6as/168.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/2r6kk6as/168.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்தியாவில் 84,318 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன அதில் 93 சதவீதம் அரசுப் பள்ளிகள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>அரசு பள்ளிகள்</h2><p>மோடி அரசின் திட்டமிட்ட அலட்சியத்தாலும் தவறான கல்விக் கொள்கைகளாலும் நம் நாட்டின் அரசுப்பள்ளிக் கல்வி கட்டமைப்பு மிகக் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் 84,318 பள்ளிகள் காணாமல் போயுள்ளன. இதில் அதிர்ச்சியூட்டும் உண்மை என்னவென்றால், மூடப்பட்டவற்றில் 93 சதவீதப் பள்ளிகள் அரசுப் பள்ளிகள்தான். </p><p>சுமார் 78,502 அரசுப் பள்ளிகளுக்கு மோடி அரசு மூடுவிழா நடத்தியுள்ள அதே வேளையில், 15,461 தனியார் சுயநிதிப் பள்ளிகள் காளான்கள் போலப் பெருகியிருப்பது இவர்கள் யாருக்காக ஆட்சி நடத்துகிறார்கள் என்பதைத் தெள்ளத்தெளிவாக காட்டுகிறது. சமூக நீதியையும் பொது கல்வியையும் உயிர்மூச்சாகக் கொண்ட நமது தமிழ்நாட்டிலும் கூட, இந்த ஒன்றிய அரசின் தவறான அணுகுமுறையால் சுமார் 1,976 பள்ளிகள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. </p><h2>பிஎம் ஸ்ரீ திட்டம்</h2><p>கிராமப்புற ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட சமூகத்து மாணவர்களின் ஒரே புகலிடமாக விளங்கும் அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்துவதற்கு உரிய நிதி ஒதுக்காமல், பள்ளிக் கல்வியை திட்டமிட்டுச் சீரழிக்கும் வேலையை பாஜக அரசு தீவிரமாகச் செய்து வருகிறது. குறிப்பாக, தேசிய கல்விக் கொள்கை மற்றும் பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்கவில்லை என்பதற்காகவே, கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய மொத்தம் ரூ.5,109 கோடி கல்வி நிதியை மோடி அரசு தடுத்து நிறுத்தியுள்ளது. </p><p>நீதிமன்றம் தலையிட்டதால் வேறு வழியின்றி RTE- க்கு மட்டும் ரூ.714 கோடியை கிள்ளிப் போட்டுவிட்டு, ஒட்டுமொத்த பள்ளி கல்வி நிதியையும் தடுத்து வைத்து தமிழக மாணவர்களின் எதிர்காலத்தோடு பிளாக்மெயில் அரசியல் செய்வது கண்டனத்திற்குரியது!</p><h2>மத்திய அரசு</h2><p>"பள்ளி சீரமைப்பு மற்றும் முறைப்படுத்துதல்" என்ற போலி அறிக்கையை வைத்துக்கொண்டு, ஒற்றை ஆசிரியர் பள்ளி, குறைவான மாணவர்கள் என்ற காரணங்களைக் கூறி எளிய மக்களின் கல்வி உரிமையைப் பறிக்கப் பார்க்கிறார்கள். பள்ளிகளை ஒருங்கிணைக்கிறோம் என்ற பெயரில் அரசுப் பள்ளிகளை இழுத்து மூடி, ஒட்டுமொத்தக் கல்வியையும் கார்ப்பரேட் மற்றும் தனியார் கல்வி மாபியாக்களின் கைகளில் தாரைவார்ப்பதே மோடி அரசின் உண்மையான நோக்கம்.</p><p>அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்கி மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்குத் திறனற்றி மத்திய அரசு, மாநிலங்களுக்கான சட்டப்பூர்வ நிதிப் பங்கையும் வஞ்சகமாக மறுத்து, தனியார் முதலாளிகளுக்கு சேவை செய்யும் வகையில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF">அரசு பள்ளிகளை</a> ஒழித்துக் கட்டுவதை உடனடியாகக் கைவிட வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அரசு பஸ்சின் தானியங்கி கதவு திறந்து மாணவிகள் விழுந்து காயமடைந்த சம்பவம்: டிரைவர் சஸ்பெண்ட்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/driver-suspended-after-incident-where-female-students-fell-and-were-injured-when-a-government-buss-automatic-door-opened</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/driver-suspended-after-incident-where-female-students-fell-and-were-injured-when-a-government-buss-automatic-door-opened#comments</comments><guid isPermaLink="false">fb297d4f-2d0c-47e0-a490-0b7a74940773</guid><pubDate>Thu, 03 Sep 2026 03:58:08 +0000</pubDate><atom:updated>2026-09-03T03:58:08.788Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>புதுக்கோட்டை,Pudukottai,கீரனூர்,மாணவிகள் காயம்,அரசு பள்ளி மாணவிகள்,Govt School Students,தானியங்கி கதவு,டிரைவர் சஸ்பெண்ட்,Driver suspend</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/hqw5p35j/kler.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/hqw5p35j/kler.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுக்கோட்டை, </p><p>ஓடும் பஸ்சில் தானியங்கி கதவு திறந்ததால் கீழே விழுந்து 10 மாணவிகள் காயமடைந்தனர். டிரைவர், கண்டக்டர் கைது செய்யப்பட்டனர்.</p><h2>அரசு நகர பஸ்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/pudukkottai">புதுக்கோட்டை</a> மாவட்டம் கீரனூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கி 8-ம் எண் அரசு நகர பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று காலை 9 மணிக்கு சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் புதுக்கோட்டை-திருச்சி சாலையில் ரெங்கம்மாள் சத்திரம் பஸ் நிறுத்தத்தில் நின்றது. அப்போது புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் 9 பேர் மற்றும் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பயிலும் மாணவி என மொத்தம் 10 பேர் அந்த பஸ்சில் ஏறினர்.</p><h2>தானியங்கி கதவு</h2><p>பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாணவிகள் முன்பக்க படிக்கட்டில் நின்று கொண்டிருந்தனர். பின்னர் பஸ்சின் தானியங்கி கதவு மூடப்பட்டது. அங்கிருந்து பஸ் புறப்பட்டு, சுமார் 100 மீட்டர் தொலைவில் சென்றபோது, தானியங்கி கதவு திடீரென திறந்துள்ளது. இதில் படிக்கட்டில் நின்று கொண்டி ருந்த மாணவிகள் 10 பேரும் எதிர்பாராதவிதமாக ஓடும் பஸ்சில் இருந்து சாலையில் தவறி கீழே விழுந்தனர். இதைப்பார்த்த பஸ்சில் இருந்தவர்கள் அலறினர்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/4krw1f5a/stud.jpg" /></figure><p>அலறல் சத்தத்தை கேட்ட டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பின்னர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மற்றும் பஸ்சில் இருந்தவர்கள் காயமடைந்த 10 மாணவிகளையும் மீட்டு 2 ஆம்புலன்ஸ்கள் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><p>இந்த நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சண்முகம் நேரில் ஆறுதல் கூறினார். </p><p>பின்னர் அவர் கூறுகையில், 'ஓடும் பஸ்சில் இருந்து மாணவியை கண்டக்டர் கீழே தள்ளிவிட்டதாக ஒரு தரப்பினரும், டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் நிலைதடுமாறி மாணவி கீழே விழுந்ததாக மற்றொரு தரப்பினரும் கூறுகின்றனர். </p><h2>உண்மையான காரணம்</h2><p>இதுதொடர்பாக முழுமையாக விசாரித்த பின்னரே உண்மையான காரணம் தெரியவரும். விபத்து நடந்த பகுதியில் கடந்த 3, 4 மாதங்களாகவே அரசு பஸ்களில் மாணவர்களை ஏற்றுவது இல்லை, நிறுத்தங்களில் பஸ்கள் நிற்காமல் செல்வதாக புகார்கள் எழுந்துள்ளது. உடனடியாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். கூட்ட நெரிசலே இந்த விபத்துக்கு பின்னணியாக இருந்ததால், காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க மாவட்ட கலெக்டர் மூலம் மாற்று ஏற்பாடுகள் செய்யப் படும்' என்றார்.</p><h2>சாலை மறியல்</h2><p>இதற்கிடையே ரெங்கம்மாள் சத்திரம் பகுதியில் பள்ளி மாணவிகள் பஸ்சில் இருந்து கீழே விழுந்த சம்பவத்தை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள், மாணவிகளின் பெற்றோர்கள், உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.</p><p>இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.</p><p>இச்சம்பவம் குறித்து வெள்ளனூர் போலீசார் பஸ் டிரைவர் அர்ஜூனன், கண்டக்டர் மணிகண்டன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் ஜாமீனில் விடுவித்தனர்.</p><h2>டிரைவர் சஸ்பெண்ட்</h2><p>புதுக்கோட்டை மண்டல போக்குவரத்து பொது மேலாளர் கார்த்திகேயன் கூறுகையில், 'கீரனூரில் நேற்று காலை 8.30 மணிக்கு அரசு பஸ் புதுக்கோட்டை நோக்கி செல்லும்போது பஸ்சில் 90 பயணிகள் இருந்தனர். 9.05 மணிக்கு ரெங்கம்மாள் சத்திரம் பஸ் நிறுத்தத்தில் மேலும் 30 பயணிகள் மற்றும் மாணவிகளை ஏற்றிக்கொண்டு பஸ் சென்றபோது, கூட்ட நெரிசல் காரணமாக உள்ளே நின்ற பயணி ஒருவர் முன்படிக்கட்டின் அருகில் உள்ள தானியங்கி கதவு திறக்கும் பொத்தானை அழுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் முன் படிக்கட்டு கதவு திறந்ததில், படியில் நின்ற மாணவிகள் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதில் 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது' என்றார்.</p><p>இதற்கிடையே பஸ் டிரைவர் அர்ஜூனனை சஸ்பெண்ட் செய்தும், தற்காலிக ஊழியரான கண்டக்டர் மணிகண்டனை பணியில் இருந்து விடுவித்தும் புதுக்கோட்டை மண்டல போக்குவரத்து பொது மேலாளர் கார்த்திகேயன் உத்தர விட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>செங்கல்பட்டு அருகே சோகம்... பள்ளி பஸ் மோதி தாய், மகள் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-near-chengalpattu-mother-and-daughter-killed-in-school-bus-crash</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-near-chengalpattu-mother-and-daughter-killed-in-school-bus-crash#comments</comments><guid isPermaLink="false">315d21d7-6630-43a1-b989-9bb13a1dae6f</guid><pubDate>Thu, 03 Sep 2026 03:49:22 +0000</pubDate><atom:updated>2026-09-03T03:49:22.774Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chengalpattu,உயிரிழப்பு,ஆஸ்பத்திரி,வண்டலூர்,school bus,பள்ளி பஸ்,Mother and daughter</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/p82o7z55/298.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பலி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/p82o7z55/298.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வண்டலூர், </p><p>ஊரப்பாக்கம் அருகே பள்ளி பஸ் - மொபட் மோதிய விபத்தில் தாய், மகள் பலியானார்கள்.</p><p>செங்கல்பட்டு மாவட்டம் கீரப்பாக்கம் கிராமத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் தேவி (வயது 45). இவரது மகள் சுவாதி (வயது 23). நேற்று இருவரும் கீரப்பாக்கத்தில் இருந்து ஊரப்பாக்கம் நோக்கி ஒரே மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். மொபட்டை சுவாதி ஓட்டிச்சென்றார். </p><h2>விபத்து</h2><p>காரணைப்புதுச்சேரி-அருங்கால் சாலையில் முன்னால் சென்ற அரசு பஸ்சை முந்திசெல்லும் போது, ஊரப்பாக்கத்தில் இருந்து அருங்கால் நோக்கி வந்த தனியார் பள்ளி பஸ், சுவாதி ஓட்டி சென்ற மொபட் மீது மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் தேவி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சுவாதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சுவாதியும் பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இதுகுறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பலியான தாய், மகள் இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">விசாரணை</a> நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கீரப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>
தமிழக அரசு துறைகளில் வேலை: 170 காலியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/jobs-in-tamil-nadu-government-departments-tnpsc-issues-notification-to-fill-170-vacancies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/jobs-in-tamil-nadu-government-departments-tnpsc-issues-notification-to-fill-170-vacancies#comments</comments><guid isPermaLink="false">156e51ba-628c-41b0-89ba-89177994c3c8</guid><pubDate>Thu, 03 Sep 2026 03:48:25 +0000</pubDate><atom:updated>2026-09-03T03:48:25.391Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎஸ்சி,TNPSC,தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்,Job News,TNPSC Announcement,தமிழக அரசு துறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/z11dvs2c/5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/z11dvs2c/5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (<a href="https://www.dailythanthi.com/topic/tnpsc">TNPSC</a>) ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வில் அடங்கிய நேர்முகத் தேர்வு பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 170 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இது குறித்து <a href="https://www.dailythanthi.com/topic/tnpsc">டிஎன்பிஎஸ்சி</a> வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: </p> <p>ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள்) 2026. கால்நடை உதவி மருத்துவர், முதுநிலை பூச்சியியல் வல்லுநர் உள்ளிட்ட 31 பதவிகளுக்கான 170 காலிப்பணியிடங்களை நிரப்ப, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள்)-க்கான அறிவிக்கை, தேர்வாணையத்தின் ஆண்டுத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி இன்று (31.08.2026) வெளியிடப்பட்டுள்ளது.தேர்வர்கள் 07.09.2026 முதல் 06.10.2026 வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். </p> <p>தேர்வர்கள் தேர்வுக்கட்டணத்தை UPI மூலமாகவும் செலுத்தலாம். கணினி வழித் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் தேர்வாணைய இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.  பணியிடங்களுக்கு தகுந்தபடி கல்வித் தகுதி மாறுபடும். பிஇ, பிடெக், பிவிஎஸ்ஸி ஏஹெச், எம்பிஏ, எம்சிஏ, சிஏ, ஐசிடபிள்யூஏ, ஏசிஎஸ், எம்வி எஸ்சி உள்ளிட்ட படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். இந்த தேர்வு குறித்த முழு விவரங்கள் டிஎன்பிஎஸ்சி  <a href="https://tnpsc.gov.in/home.aspx">https://tnpsc.gov.in/home.aspx</a> என்ற  இணையதளத்தில்  கொடுக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பவானிசாகர் அணையில் நீர்மட்டம் கடும் சரிவு: விவசாயிகள் கவலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-level-in-bhavanisagar-dam-drops-sharply-farmers-worried</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-level-in-bhavanisagar-dam-drops-sharply-farmers-worried#comments</comments><guid isPermaLink="false">665d0594-db55-4476-9ac7-05fd1e271bb5</guid><pubDate>Thu, 03 Sep 2026 03:32:59 +0000</pubDate><atom:updated>2026-09-03T03:32:59.886Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விவசாயிகள்,Bhavanisagar Dam,பவானிசாகர் அணை,water level,நீர்மட்டம்,சரிவு,கவலை,farmers worried</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/goypejhu/bavanisagar-dam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பவானிசாகர் அணை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/goypejhu/bavanisagar-dam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பவானிசாகர்,</p><p>கடந்த ஆண்டு 101 அடியில் களை கட்டிய பவானிசாகர் அணையின் நீர் மட்டம் இந்த ஆண்டு பாதியாக குறைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.</p><h2>பவானிசாகர் அணை</h2><p>தமிழ்நாட்டின் 2-வது பெரிய அணை என்ற பெருமையை கொண்டது பவானிசாகர் அணை. நீலகிரி மலைப்பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து தெங்குமரஹாடா வழியாக வரும் மாயாறும் கலக்குமிடத்தை தேர்வு செய்து இந்த அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் மொத்த நீர் மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது. அணையின் மொத்த நீர் கொள்ளளவு 32.8 டி.எம்.சி. ஆகும். பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆறு மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படுகிறது. பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் சத்தியமங்கலம் வழியாக கொடிவேரி அணைக்கு வருகிறது. தொடர்ந்து அங்கிருந்து அரக்கன் கோட்டை-தடப்பள்ளி பாசன பகுதிக்கு பிரிந்து அதன்பின்னர் காலிங்கராயன் பாசன பகுதிக்கு வந்து சேர்ந்து அங்கிருந்து பிரிந்து பவானி கூடுதுறையில் காவிரி ஆற்றில் கலக்கிறது.</p><h2>கடந்த ஆண்டு நீர்மட்டம்</h2><p>இதனால் பவானிசாகரில் இருந்து பவானி கூடுதுறை வரை உள்ள 2 கரையோர பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான ஊராட்சிகள் மற்றும் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளின் குடிநீர் ஆதாரமாக விளங்குவதோடு சுமார் 35 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீர் ஈரோடு, கரூர் மாவட்டங் களில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந் தேதி காலை 8 மணிக்கு 101.42 அடியாக இருந்தது.</p><h2>நீர்மட்டம் சரிவு</h2><p>அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 381 கன அடியாக இருந்தது. அணையின் நீர் கொள்ளளவு 29.85 டி.எம்.சியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் அதிக அளவில் இருந்ததால் கடந்த ஆண்டு கீழ்பவானி வாய்க்கால் மற்றும் பவானி ஆற்றில் பாசனத்துக்காக முழுவதுமாக தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தென் மேற்கு பருவமழை பொய்த்துப்போனது. இதன்காரணமாக அணைக்கு நீர்வரத்து பெரிதும் குறைந்தது. இந்தநிலையில் நேற்று காலை 8 மணி அளவில் <a href="https://www.dailythanthi.com/topic/bhavanisagar-dam">பவானிசாகர் அணை</a> நீர்மட்டம் 50.65 அடியாக குறைந்தது. அணைக்கு வினாடிக்கு 933 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 105 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது அணையில் 4.59 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் அணையின் நீர்மட்டம் பாதியாக குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>களவு போன மரகத முருகர் சிலையை உடனடியாக மீட்க வேண்டும்! - நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-stolen-emerald-murugan-idol-must-be-recovered-immediately-nainar-nagendran-urges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-stolen-emerald-murugan-idol-must-be-recovered-immediately-nainar-nagendran-urges#comments</comments><guid isPermaLink="false">1ae4e3d1-ab17-4b0d-874f-72a1c617d34d</guid><pubDate>Thu, 03 Sep 2026 03:26:08 +0000</pubDate><atom:updated>2026-09-03T03:26:08.770Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Chengalpattu,செங்கல்பட்டு,Murugan Temple,முருகன் சிலை,Murugan statue,சிலை திருட்டு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/adijam3a/nainar.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/adijam3a/nainar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>ஜோசப் விஜய் அரசின் மெத்தனத்தால் களவு போன மரகத முருகர் சிலையை உடனடியாக மீட்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>முருகர் சிலை திருட்டு</h2><p>செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பெருங்கரணை தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில், விலைமதிப்பற்ற 2.5 அடி உயர மரகத முருகர் சிலை மற்றும் வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தமிழகப் பக்தர்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து இந்து ஆலயங்கள் குறிவைக்கப்படுவதும், சிலைகள் திருடப்படுவதும் தவெக அரசின் அறநிலையத் துறை மற்றும் காவல்துறையின் ஒட்டுமொத்தத் தோல்வியையே காட்டுகிறது. இவ்வாறு ஆன்மிக அடையாளங்கள் அழிக்கப்படுவதைப் பாரதிய ஜனதா கட்சி ஒருபோதும் வேடிக்கை பார்க்காது.</p><p>திருக்கோவில்களில் போதிய பாதுகாப்பு வசதிகளையோ, நவீன கண்காணிப்புக் கருவிகளையோ உறுதி செய்யாமல் மெத்தனம் காட்டும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அரசின் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நடைபெறும் நிகழ்வுகளை பார்க்கும் போது தவெக அரசின் "மாற்று அரசியல்" என்பது இந்துக்களின் வழிபாட்டு உரிமைகள் பறிக்கப்படும்போது கைகட்டி வேடிக்கை பார்ப்பதுதானா? என்ற கேள்வி எழுகிறது.</p><h2>மாபெரும் அறப்போராட்டம்</h2><p>மேலும், <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">முதல்-அமைச்சர்</a> விஜய்யின் அரசு, கிறிஸ்தவ மதத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து ஒருதலைப்பட்சமாக இயங்கி வருவது அப்பட்டமாகத் தெரிகிறது. மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் சபாநாயகர் சட்டசபையில் பைபிள் வசனங்களை வாசிப்பதும், நிதியமைச்சர் சட்ட சபையில் ஜெபமாலையுடன் வலம் வருவதும் நடைபெறும் அதே வேளையில், இந்து மதத் திருக்கோவில்களில் இதுபோன்ற களவுகள் சர்வ சாதாரணமாக அரங்கேறுகின்றன. சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்தத் துடிக்கும் ஜோசப் விஜய், இந்துக்கள் வழிபடும் கோவில்களுக்குப் பாதுகாப்பு வழங்கத் தவறுவது ஏன்?</p><p>எனவே, உடனடியாகத் தனிப்படை அமைத்து, திருடப்பட்ட மரகத முருகர் சிலையை மீட்க வேண்டும். விலை மதிப்பற்ற இந்தச் சிலை கடத்தலின் பின்னணியில் இருக்கும் சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதோடு, சிதைந்து கிடக்கும் சட்டம் - ஒழுங்கைச் சீரமைக்கத் தவறினால், பக்தர்களைத் திரட்டி தமிழக பாஜக சார்பில் மாபெரும் அறப்போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தம் ஏற்றியதால் பாதிப்பு: பெண்ணுக்கு மாத உதவித்தொகையை நிலுவையுடன் வழங்க கோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/harm-caused-by-transfusion-of-hiv-infected-blood-court-orders-payment-of-monthly-allowance-with-arrears-to-woman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/harm-caused-by-transfusion-of-hiv-infected-blood-court-orders-payment-of-monthly-allowance-with-arrears-to-woman#comments</comments><guid isPermaLink="false">5b0f8859-c0df-4b52-88fb-014c260d931e</guid><pubDate>Thu, 03 Sep 2026 03:24:46 +0000</pubDate><atom:updated>2026-09-03T03:24:46.985Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Madurai,மதுரை,தமிழக அரசு,TN govt,HIV,Madurai High Court,மதுரை ஐகோர்ட்டு,கர்ப்பிணி பெண்,உதவித்தொகை,எச்.ஐ.வி. ரத்தம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/oroskpkt/ghh.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/oroskpkt/ghh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p>எச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தம் ஏற்றியதால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க வேண்டிய மாத உதவித்தொகையை நிலுவையுடன் உடனடியாக வழங்க அரசுக்கு <a href="https://www.dailythanthi.com/topic/madurai-high-court">மதுரை ஐகோர்ட்டு</a> உத்தரவிட்டது.</p><h2>எச்.ஐ.வி. தொற்று</h2><p>விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ஒரு கர்ப்பிணிக்கு 2019-ம் ஆண்டில் சிவகாசி அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்டது. இதனால் அவரது உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து பரிசோதித்ததில் அவருக்கு எச்.ஐ.வி. தொற்று இருந்த ரத்தம் ஏற்றியது தெரியவந்தது. இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p><h2>கர்ப்பிணிக்கு உரிய இழப்பீடு</h2><p>இதுகுறித்து <a href="https://www.dailythanthi.com/topic/madurai-high-court">மதுரை ஐகோர்ட்டு</a> பதிவாளர் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தார். இதேபோல மதுரையை சேர்ந்த அப்பாஸ் மந்திரி, வக்கீல் எஸ்.முத்துகுமார் உள்ளிட்டோர் கர்ப்பிணிக்கு உரிய இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கு தாக்கல் செய்தனர்.</p><p>இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கர்ப்பிணிக்கு முறையான சிகிச்சையை மதுரை அரசு மருத்துவமனையில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் அந்த பெண்ணுக்கு வீடு வழங்க வேண்டும். ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.</p><h2>விசாரணை</h2><p>பெண்ணின் உடல் ஆரோக்கிய தேவைகளுக்காக மாதந்தோறும் ரூ.7,500 உதவித்தொகை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை நிறைவேற்றும்படி அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த நிபந்தனைகளை நிறைவேற்றியது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தி இருந்தது. அதன்படி இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.</p><h2>உதவித்தொகை நிறுத்தம்</h2><p>அப்போது மனுதாரர்கள் சார்பில் வக்கீல் வெங்கடேசன் உள்ளிட்டோர் ஆஜராகி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு வேலை உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் மாத உதவித்தொகை ரூ.7,500-ஐ சில மாதங்கள் மட்டுமே வழங்கி உள்ளனர். பின்னர் அந்த தொகையை நிறுத்தி விட்டனர். இதனால் அந்த பெண் பாதிக்கப்பட்டு உள்ளார் என்றனர்.</p><h2>அரசுக்கு உத்தரவு</h2><p>இதை கேட்ட நீதிபதிகள், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதால் பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆரோக்கிய தேவைகளுக்காக வழங்க வேண்டும் என உத்தரவிட்டதை நிறைவேற்றாதது ஏன்? என கேள்வி எழுப்பி தங்களது அதிருப்தியை தெரிவித்தனர்.</p><p>முடிவில், நிலுவையில் உள்ள தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணை திட்டத்தை விரைந்து பரிசீலிக்க வேண்டும்: மத்திய நீர் ஆணையத்திடம் கர்நாடக மந்திரி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mekedadu-dam-project-should-be-considered-urgently-karnataka-minister-urges-central-water-commission</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mekedadu-dam-project-should-be-considered-urgently-karnataka-minister-urges-central-water-commission#comments</comments><guid isPermaLink="false">d22572ac-9993-4328-a0d0-e4c9a9ba2422</guid><pubDate>Thu, 03 Sep 2026 03:12:53 +0000</pubDate><atom:updated>2026-09-03T03:12:53.490Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Karnataka,பெங்களூரு,வலியுறுத்தல்,மந்திரி,minister,திட்டம்,மேகதாது அணை,Mekedadu Dam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/j7qev6x9/297.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி செலுவராயசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/j7qev6x9/297.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பெங்களூரு, </p><p>கர்நாடகத்தில் பெங்களூரு தெற்கு மாவட்டம் (ராமநகர்) கனகபுரா தாலுகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணையை கட்ட கர்நாடக அரசு தீர்மானித்துள்ளது. இந்த திட்டத்துக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. </p><h2>மேகதாது அணை</h2><p>கர்நாடக அரசு இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து மத்திய அரசின் நீர் ஆணையத்திடம் ஏற்கனவே தாக்கல் செய்தது. மேகதாது திட்ட அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்ட தமிழக அரசின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித் துவிட்டது. இதனால் இந்த திட்ட பணிகளை முன்னெடுப்பதில் கர்நாடக அரசு மேலும் தீவிரமான முனைப்பு காட்டி வருகிறது. சமீபத்தில் மத்திய நீர் ஆணைய உறுப்பினர் யோகேஷ் பய்டங்கர் கர்நாடகம் வருகை தந்து, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேகதாது அணை</a> கட்டப்படும் இடத்தை நேரில் ஆய்வு செய்துவிட்டு சென்றுள்ளார்.</p><h2>கோரிக்கை</h2><p>இந்த நிலையில் கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி செலுவராயசாமி 4 நாட்கள் பயணமாக கடந்த 31-ந் தேதி டெல்லி சென்றார். அங்கு மத்திய நீர் ஆணைய தலைவர் அனுபம் பிரசாத்தை நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவர் மேகதாது திட்ட திருத்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளதால், தொழில்நுட்ப ரீதியான ஆய்வு பணிகளை முடித்து விரைவாக பரிசீலித்து அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை சென்டிரல் -சூலூர்பேட்டை பயணிகள் ரெயில் ரத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-central-sulurpet-passenger-train-cancelled-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-central-sulurpet-passenger-train-cancelled-2#comments</comments><guid isPermaLink="false">bd5eeb76-80fb-447f-a92b-689473259b84</guid><pubDate>Thu, 03 Sep 2026 02:35:29 +0000</pubDate><atom:updated>2026-09-03T02:35:29.003Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Central,சென்னை சென்டிரல்,passenger train,பயணிகள் ரெயில்,ரத்து,cancelled,சூலூர்பேட்டை,Sulurpet</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/2tmgj98o/passanger-train.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பயணிகள் ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/2tmgj98o/passanger-train.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பராமரிப்பு காரணமாக சென்னை சென்டிரல் -சூலூர்பேட்டை பயணிகள் ரெயில் ரத்து செய்யப்படுகிறது.</p><p>இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள பெதபரியா- நாயுடு பேட்டை இடையே இன்று (வியாழக்கிழமை) மற்றும் 5 ஆகிய தேதிகளில் மதியம் 12.20 மணி முதல் மாலை 6.50 மணி வரையில் (6 மணி நேரம் 30 நிமிடம்) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-</p><h2>பயணிகள் ரெயில் ரத்து</h2><p>சென்னை சென்டிரலில் இருந்து காலை 7.45 மணிக்கு புறப்பட்டு சூலூர் பேட்டை செல்லும் பயணிகள் ரெயிலும், மறுமார்க்கமாக, சூலூர்பேட்டையில் மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் பயணிகள் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. சூலூர்பேட்டையில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு நெல்லூர் வரும் பயணிகள் ரெயிலும், மறுமார்க்கமாக, நெல்லூரில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை வரும் பயணிகள் ரெயிலும் ரத்துசெய்யப்படுகிறது. சென்னை சென்டிரலில் இருந்து இரவு 9.25 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் பயணிகள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">ரெயில் ரத்து</a> செய்யப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பக்தர்களின் எண்ணிக்கையை குறைக்கவே செல்போனுக்கு தடை? - தகவல் நம்பகத்தன்மை பிரிவு மறுப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-mobile-phones-intended-to-reduce-the-number-of-devotees-information-authenticity-division-denies-claim</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-mobile-phones-intended-to-reduce-the-number-of-devotees-information-authenticity-division-denies-claim#comments</comments><guid isPermaLink="false">7a120973-fd3f-4d16-8c8f-4cd957319ed3</guid><pubDate>Thu, 03 Sep 2026 02:33:06 +0000</pubDate><atom:updated>2026-09-03T02:33:06.187Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழ்நாடு,temples,கோவில்கள்,கோவில்,Temple,செல்போன்,இந்து சமய அறநிலையத்துறை,Fact Check Unit,Fact check,Cell phones are banned in temples,தகவல் சரிபார்ப்பகம்,TN Fact Check,தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம்,தகவல் நம்பகத்தன்மை,தகவல் நம்பகத்தன்மை பிரிவு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/bz70yaa9/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ செல்போனுக்கு தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/bz70yaa9/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கோவில்களில் செல்போனுக்கு தடை தொடர்பாக பரவும் தவறான தகவல் குறித்து தகவல் நம்பகத்தன்மை பிரிவு விளக்கம் கொடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியாக செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>பரவும் செய்தி</h2><p>“கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை குறைக்க மட்டுமே செல்போன் தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.</p><h2>உண்மை என்ன?</h2><p>மாண்பமை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை </a>உயர்நீதிமன்ற மதுரை கிளை 2022-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பின்படி, கோவில்களின் கண்ணியம் மற்றும் புனிதத்தன்மையை பேணும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்பாட்டை தடுக்க வேண்டும், செல்போன்களுக்கான பாதுகாப்பு மையங்களை (Safety Deposit Counters ) அமைக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி, முதற்கட்டமாக 52 முதுநிலைத் திருக்கோயில்களில் மட்டும் செல்போன்களை எடுத்துச் செல்வதற்கான தடை செயல்படுத்தப்பட்டுள்ளது.</p><p>தவறான தகவலைப் பரப்பாதீர்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கிருஷ்ண ஜெயந்தி, வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/krishna-jayanthi-weekend-special-buses-across-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/krishna-jayanthi-weekend-special-buses-across-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">efc35e42-811c-4034-a07e-4f032f701504</guid><pubDate>Thu, 03 Sep 2026 02:30:57 +0000</pubDate><atom:updated>2026-09-03T02:30:57.255Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>special buses,சிறப்பு பேருந்துகள்,Weekend,Krishna Jayanti,கிருஷ்ண ஜெயந்தி,வார இறுதி நாட்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/n7admu8t/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு பேருந்துகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/n7admu8t/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>இன்று, நாளை (கிருஷ்ண ஜெயந்தி), 5-ந்தேதி (சனிக்கிழமை) மற்றும் 6-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 910 பேருந்துகளும் நாளை 740 பேருந்துகளும், சனிக்கிழமை 880 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 210 பேருந்துகளும், நாளை 115 பேருந்துகளும், சனிக்கிழமை 115 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்திலிருந்து இன்று முதல் சனிக்கிழமை வரையிலான நாட்களில் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு ஒவ்வொரு நாளும் 95 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 6-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) 805 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில் இன்று 14,016 பயணிகளும், நாளை 8,688 பயணிகளும், சனிக்கிழமை 6,459 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 14,239 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் TNSTC Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p>இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருத்தணி முருகன் கோவிலுக்கு 14 நாட்கள் ஆட்டோக்கள் செல்ல தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/autos-banned-from-entering-thirutani-murugan-temple-for-14-days</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/autos-banned-from-entering-thirutani-murugan-temple-for-14-days#comments</comments><guid isPermaLink="false">7670b3de-9330-4adf-bece-b5533977a125</guid><pubDate>Thu, 03 Sep 2026 02:15:29 +0000</pubDate><atom:updated>2026-09-03T02:15:29.308Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>முருகன் கோவில்,Murugan Temple,திருத்தணி,Tirutani,banned,autos,ஆட்டோக்கள்,செல்ல தடை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/2hhom3g6/tirutani-murugan-kovil.gif" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருத்தணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/2hhom3g6/tirutani-murugan-kovil.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருத்தணி,</p><p>திருத்தணி முருகன் மலைக்கோவில் மேல் 14 நாட்கள் ஆட்டோக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>14 நாட்கள்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF">திருத்தணி </a>முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.</p><p>இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை), நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் செப்டம்பர் 6, 7, 13, 14, 17, 20, 23, 24, 25, 27, 28, 30 ஆகிய நாட்களில் விழா மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, பக்தர்களின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு மேற்கண்ட 14 நாட்களிலும் மலைக்கோவிலுக்கு ஆட்டோக்கள் செல்ல கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.</p><h2>இருசக்கர வாகனங்களில் செல்ல அனுமதி </h2><p>இடவசதிக்கு ஏற்ப கார்கள் மட்டும் மலைக்கோவிலுக்கு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மலைக்கோவில் நுழைவுப் பகுதியில் இருந்து படா செட்டிகுளம் வரை பக்தர்கள் கட்டணமின்றி கோவில் பஸ்களில் பயணம் செய்யலாம். இருசக்கர வாகனங்களில் பக்தர்கள் மலைக் கோவிலுக்கு செல்ல அனுமதி உண்டு. பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு கோவில் நிர்வாகம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கியாஸ் சிலிண்டர் பதிவு செய்த 4 மணி நேரத்தில் டெலிவரி: சென்னையிலும் திட்டம் அறிமுகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/gas-cylinder-delivery-within-4-hours-of-registration-scheme-launched-in-chennai-too</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/gas-cylinder-delivery-within-4-hours-of-registration-scheme-launched-in-chennai-too#comments</comments><guid isPermaLink="false">16c1e483-cfe9-49d9-bc48-857b07e96ab6</guid><pubDate>Thu, 03 Sep 2026 02:10:28 +0000</pubDate><atom:updated>2026-09-03T02:10:28.429Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,delivery,Gas Cylinder,இந்தியன் ஆயில் நிறுவனம்,சிலிண்டர்,டெலிவரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/1yhxoadn/296.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிலிண்டர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/1yhxoadn/296.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>'இந்தியன் ஆயில்' நிறுவனத்தின், 10 கிலோ எடை உடைய, 'இண்டேன் எக்ஸ்ட்ராலைட் நவ்' சமையல் கியாஸ் சிலிண்டரை, பதிவு செய்த நான்கு மணி நேரத்தில், வினியோகம் செய்யும் திட்டம், சென்னை, செங்கல்பட்டு, மதுரை, திருச்சி, புதுச்சேரியில் தொடங்கப்பட்டுள்ளது.</p><p>இந்தியன் ஆயில் நிறுவனம், வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும், சமையல் கியாஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கிறது. வீடுகளுக்கு முன்பதிவு செய்யப்பட்டதில் இருந்து, 3 - 4 நாட்களுக்குள் வினியோகம் செய்யப்படுகிறது.</p><h2>நான்கு மணி நேரம்</h2><p>தமிழகத்தில் கோவை உட்பட நாடு முழுதும் முக்கிய நகரங்களில், இண்டேன் எக்ஸ்ட் ராலைட் நவ் என்ற பெயரில் புதிதாக, 10 கிலோ எடை உடைய, 'காம்போசிட்' சிலிண் டர் வினியோகத்திற்கு வந்துள்ளது. இந்த சிலிண்டர், பதிவு செய்த நான்கு மணி நேரத்திற்குள், வினியோகம் பாகம் செய்யப்படுகிறது. இதன் வினியோகம், கடந்த ஜூலையில் தொடங்கப்பட்டது. இந்த சிலிண்டர் தேவைப்படுவோர், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மொபைல் செயலி வாயிலாக முன்பதிவு செய்ய வேண்டும்.</p><p>தற்போது, சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, திருப்பூர், மதுரை ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், பதிவு செய்த நான்கு மணி நேரத்திற்குள் புதிய சிலிண்டர் வினியோக திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாணவர் சேர்க்கை சரிவு: 70 தனியார் பாலிடெக்னிக்குகளை மூட முடிவு..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/decline-in-student-admissions-70-private-polytechnics-decide-to-close</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/decline-in-student-admissions-70-private-polytechnics-decide-to-close#comments</comments><guid isPermaLink="false">4f62b46c-98bf-4f10-a76b-947be08039e7</guid><pubDate>Thu, 03 Sep 2026 01:56:47 +0000</pubDate><atom:updated>2026-09-03T01:56:47.798Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணவர் சேர்க்கை,Student Admission,பாலிடெக்னிக் கல்லூரி,Polytechnic College,Polytechnic,பாலிடெக்னிக்,polytechnic student,Government Polytechnic,தனியார் பாலிடெக்னிக்,கல்லூரிகள் மூடல்,polytechnics,private polytechnic</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/9bw91ibl/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/9bw91ibl/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>கல்வி&amp;வேலைவாய்ப்பு (Eduction and Jobs)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மாணவர் சேர்க்கை சரிவால், நடப்பு கல்வியாண்டில் 70 தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் தங்களது கல்வி நிறுவனங்களை மூட அனுமதி கோரி, உயர்கல்வித் துறையிடம் கடிதம் அளித்துள்ளன.</p><h2>55 அரசு பாலிடெக்னிக்குகள்</h2><p>தமிழக உயர்கல்வித் துறையின் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ், 55 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளும், 400-க்கும் அதிகமான தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன.</p><h2>டிப்ளமா படிப்பில் ஆர்வம் குறைவு</h2><p>கடந்த சில ஆண்டுகளாக டிப்ளமா படிப்பின் மீது மாணவ, மாணவியர்களின் ஆர்வம் குறைந்து வருவதால், பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கடும் சரிவை சந்தித்து வருகிறது.</p><h2>அரசு கல்லூரிகள் </h2><p>நடப்பு கல்வியாண்டில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 22,600 இடங்களில் 12,000 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.</p><h2>தனியார் கல்லூரிகள்</h2><p>தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மொத்தம் 1.30 லட்சம் இடங்கள் உள்ள நிலையில், 24,000 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.</p><h2>சேர்க்கையில் பங்கேற்காத 70 கல்லூரிகள்</h2><p>தொடர்ந்து மாணவர் சேர்க்கை சரிந்து வருவதால், நடப்பு கல்வியாண்டில் 70 தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையில் பங்கேற்கவில்லை. இக்கல்லூரிகள் தங்களது கல்வி நிறுவனங்களை மூட அனுமதி கோரி, தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்துக்கு கடிதம் எழுதியுள்ளன.</p><h2>பணியாளர்கள் நிலை குறித்து விளக்கம்</h2><p>கல்வி நிறுவனங்களை மூடினால், அங்கு பணியாற்றும் விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் நிலை என்ன என்பது குறித்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களிடம் உயர்கல்வித் துறை விளக்கம் கேட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பு ஏற்படுத்துவது தொடர்பாக கல்வி நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் கோரப்பட்டுள்ளது.</p><h2>மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடு</h2><p>மேலும், அந்த 70 கல்வி நிறுவனங்களில் பிற வகுப்புகளில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மாணவர்கள் </a>தொடர்ந்து படித்து வந்தால், அவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் மேற்கொள்ள வேண்டிய மாற்று ஏற்பாடுகள் குறித்தும் கல்வி நிறுவனங்களிடம் உயர்கல்வித் துறை விளக்கம் கேட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காவிரி நீர் கடைமடை வரை தடையின்றிச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்! - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-must-ensure-that-cauvery-water-reaches-the-tail-end-areas-without-obstruction-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-must-ensure-that-cauvery-water-reaches-the-tail-end-areas-without-obstruction-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">26123bd9-4c5b-4736-a530-35118299e91e</guid><pubDate>Thu, 03 Sep 2026 01:48:42 +0000</pubDate><atom:updated>2026-09-03T01:48:42.338Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/fw9wgyrr/Untitled-18.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/fw9wgyrr/Untitled-18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தங்களின் கூட்டணிக் கட்சியான கர்நாடக காங்கிரஸ் அரசிடம் பேசி, அறுவடை வரை தேவைப்படும் முழு நீரைப் பெற்றுத் தர வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>அரசு மெத்தனப்போக்கு</h2><p>மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதை வரவேற்கும் அதே வேளையில், தமிழக விவசாயிகளின் உயிர்நாடியான இந்த விவகாரத்தில் தவெக அரசு காட்டி வரும் மெத்தனப்போக்கு மிகுந்த கவலையளிக்கிறது.</p><p>முதல்-அமைச்சர் விஜய்யின் அரசு, அண்டை மாநிலமான கர்நாடக அரசிடம் உரிய நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி, முன்கூட்டியே தண்ணீரைப் பெற்றிருக்க வேண்டும். அதாவது மே மாத இறுதியிலேயே இதற்கான முன்னெடுப்புகளைத் தொடங்கி, ஜூன் 12-ஆம் தேதி வழக்கமான தேதியில் அணை திறக்கப்படுவதை உறுதி செய்திருக்க வேண்டும்.</p><h2>முழு நீரைப் பெற்றுத் தர வேண்டும்</h2><p>இருப்பினும் தற்போதாவது அணை திறக்கப்பட்டிருப்பது ஓரளவிற்கு ஆறுதல் அளித்தாலும், மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் தண்ணீர், எந்தவிதத் தடையுமின்றி கடைகோடி விவசாயி வரை சென்றடைவதை அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும், இந்தத் தண்ணீர் 45 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்பதால், தங்களின் கூட்டணிக் கட்சியான கர்நாடக காங்கிரஸ் அரசிடம் பேசி, அறுவடை வரை தேவைப்படும் முழு நீரைப் பெற்றுத் தர வேண்டும். அத்துடன், ஏற்கனவே விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளின்படி பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யவும், இடுபொருள் மானியங்கள் விவசாயிகளுக்கு உடனடியாகக் கிடைக்கவும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">முதல்-அமைச்சர்</a> ஜோசப் விஜய் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் இன்று காவல் துறை மானியக் கோரிக்கை விவாதம்: சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/debate-on-police-department-demands-for-grants-in-the-assembly-today-opposition-parties-plan-to-raise-law-and-order-issues</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/debate-on-police-department-demands-for-grants-in-the-assembly-today-opposition-parties-plan-to-raise-law-and-order-issues#comments</comments><guid isPermaLink="false">3aaf2704-6e2f-46dc-b62d-3001523f1d3c</guid><pubDate>Thu, 03 Sep 2026 01:34:33 +0000</pubDate><atom:updated>2026-09-03T01:34:33.869Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,தமிழ்நாடு அரசு,தமிழக சட்டசபை,TN Assembly,Assembly Session,சட்டசபை கூட்டத்தொடர்,எதிர்க்கட்சிகள்,Opposition parties,Law and order,மானிய கோரிக்கை,சட்டம் ஒழுங்கு பிரச்சனை,Tamilnadu Assembly,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,சட்டசபை கூட்டத் தொடர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/jqx4xr56/kon.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/jqx4xr56/kon.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டசபையில் இன்று (வியாழக்கிழமை) காவல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற இருக்கிறது. சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.</p><h2>மானியக் கோரிக்கை விவாதம்</h2><p>தமிழக சட்டசபையில் கடந்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி 2026-2027-ம் ஆண்டுக்கான பொது  பட்ஜெட்டும், 6-ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. தொடர்ந்து, ஆகஸ்டு 7, 10,11 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதமும், 12-ந் தேதி நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோரின் பதில் உரையும் இடம் பெற்றது. </p><p>இந்த நிலையில், ஆகஸ்டு 17-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதுவரை, 43 துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து முடிந்துள்ளது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/3452brzu/kole.jpg" /></figure><h2>முதல்-அமைச்சர் கையில் உள்ள துறை</h2><p>இந்த நிலையில், <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர்</a> கையில் உள்ள முக்கிய துறையான காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. </p><p>காலை 9.30 மணிக்கு தமிழக சட்டசபை கூடியதும், முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. கேள்வி நேரம் முடிந்ததும், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற இருக்கிறது.</p><h2>சட்டம் - ஒழுங்கு பிரச்சினை</h2><p>இந்த விவாதத்தில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேச இருக்கிறார்கள். </p><p>காவல் துறை மானியம் என்பதால், தமிழகத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a> பேச இருக்கிறார்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/goi3qviu/ramkka.jpg" /></figure><h2>திங்கட்கிழமை பதிலுரை </h2><p>நாளை (4-ந் தேதி) கிருஷ்ண ஜெயந்தி அரசு விடுமுறை நாள் என்பதால், சட்டசபை நிகழ்வுகள் கிடையாது. தொடர்ந்து 2 நாட்கள் சனி, ஞாயிற்றுக்கிழமை வருவதால், சட்டசபைக்கு விடுமுறை நாளாகும். </p><p>அடுத்து, 7-ந் தேதி (திங்கட்கிழமை) சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது. அன்றைய தினம் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a> பேச இருக்கிறார். நிறைவாக, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>எழும்பூர்-கன்னியாகுமரி உள்பட 7 சிறப்பு ரெயில்கள் நீட்டிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/7-special-trains-extended-including-egmore-kanyakumari</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/7-special-trains-extended-including-egmore-kanyakumari#comments</comments><guid isPermaLink="false">d5da6e00-4e5f-44a0-ae60-6835b735aa17</guid><pubDate>Thu, 03 Sep 2026 01:29:59 +0000</pubDate><atom:updated>2026-09-03T01:29:59.240Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,சென்னை,நெல்லை,தாம்பரம்,Special train,Kanyakumari,சிறப்பு ரெயில்கள்,Egmore,போத்தனூர்,போடிநாயக்கனூர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/g15t9ovf/40.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு ரெயில்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/g15t9ovf/40.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>எழும்பூர்-கன்னியாகுமரி உள்பட 7 சிறப்பு ரெயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><h2>தாம்பரம் - போடிநாயக்கனூர்</h2><p>தாம்பரத்தில் இருந்து போடிநாயக்கனூர் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06059), வருகிற 12-ந்தேதி முதல் அக்டோபர் 24-ந்தேதி (சனிக்கிழமை மட்டும்) வரையிலும், மறுமார்க்கமாக, போடிநாயக்கனூரில் இருந்து தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06060), வருகிற 13-ந் தேதி முதல் அக்டோபர் 25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><h2>எழும்பூர்-கன்னியாகுமரி</h2><p>எழும்பூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் சிறப்பு ரெயில் (06045), நாளை (4-ந்தேதி) முதல் 25-ந்தேதி (வெள்ளிக் கிழமை) வரையிலும், மறுமார்க்கமாக, கன்னியாகுமரியில் இருந்து எழும்பூர் வரும் சிறப்பு ரெயில் (06046), வருகிற 6-ந்தேதி முதல் 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><h2>சென்னை சென்டிரல்-போத்தனூர்</h2><p>மங்களூரு சென்டிரலில் இருந்து எழும்பூர் செல்லும் சிறப்பு ரெயில் (06126), வருகிற 7-ந்தேதி முதல் அக்டோபர் 26-ந் தேதி வரையிலும், மறுமார்க்கமாக, எழும்பூரில் இருந்து மங்களூரு சென்டிரல் செல்லும் சிறப்பு ரெயில் (06125), வருகிற 8-ந்தேதி முதல் அக்டோபர் 27-ந்தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><p>போத்தனூரில் இருந்து சென்னை சென்டிரல் வரும் சிறப்பு ரெயில் (06028), நாளை (4-ந்தேதி) முதல் வருகிற நவம்பர் 29-ந்தேதி (வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) வரையிலும், மறுமார்க்கமாக, சென்னை சென்டிரலில் இருந்து போத்தனூர் செல்லும் சிறப்பு ரெயில் (06027), நாளை (4-ந்தேதி) முதல் வருகிற நவம்பர் 29-ந்தேதி (வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.</p> <h2>தாம்பரம்-நெல்லை</h2><p>நெல்லையில் இருந்து தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06166), வருகிற 6-ந்தேதி முதல் 27-ந்தேதி (ஞாயிற்றுக்கி ழமை) வரையிலும், மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து நெல்லை செல்லும் சிறப்பு ரெயில் (06165), வருகிற 7-ந்தேதி முதல் 28-ந்தேதி (திங்கட்கிழமை) வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><p>நெல்லையில் இருந்து தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06070). இன்று (3-ந்தேதி) முதல் அக்டோபர் 29-ந்தேதி வரை யிலும், மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து நெல்லை செல்லும் சிறப்பு ரெயில் (06069), நாளை (4-ந்தேதி) முதல் அக்டோபர் 30-ந் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><p>நெல்லையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">சிறப்பு ரெயில்</a> (06030), வருகிற 6-ந்தேதி முதல் நவம்பர் 29-ந்தேதி வரையிலும், மறுமார்க்கமாக, மேட்டுப்பாளையத்தில் இருந்து நெல்லை செல்லும் சிறப்பு ரெயில் (06029), வருகிற 7-ந்தேதி முதல் நவம்பர் 30-ந்தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நேபாளத்தில் மாயமானவர்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-court-orders-centre-state-governments-to-file-report-on-missing-persons-in-nepal</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-court-orders-centre-state-governments-to-file-report-on-missing-persons-in-nepal#comments</comments><guid isPermaLink="false">52500638-1e08-4456-a857-4edb795c84ca</guid><pubDate>Thu, 03 Sep 2026 01:19:25 +0000</pubDate><atom:updated>2026-09-03T01:19:25.582Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>report,அறிக்கை,தமிழர்கள்,high court order,ஐகோர்ட்டு உத்தரவு,மாயமான,missing person,nepal flood,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/d6br1zs5/highcourt.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஐகோர்ட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/d6br1zs5/highcourt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நேபாள வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களை மீட்க எடுத்த நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.</p><h2>நீதிபதி வி.சிவஞானம்</h2><p>ஐகோர்ட்டு மதுரை கிளையில், திண்டுக்கலைச் சேர்ந்த வக்கீல் பர்வேஷ் முஷ்ரப் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், "கும்பகோணத்தைச் சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் நிறுவனம் மூலம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 57 பேர் ஆகஸ்டு 23-ந்தேதி கும்பகோணத்தில் இருந்து நேபாளத்திற்கு புனித யாத்திரை சென்றனர். ஆகஸ்டு 26-ந் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியுள்ளனர்.</p><p>இவர்களில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%90%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">சென்னை ஐகோர்ட்டு</a> ஓய்வுபெற்ற நீதிபதி வி.சிவஞானம் உள்ளிட்டோர் காணாமல் போயுள்ளனர். நேபாளம் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 57 பேரில் மீட்கப்பட்டவர்கள், சிகிச்சை பெற்று வருபவர்கள். காணாமல் போனவர்கள் குறித்த விவரங்களை, அவர்களின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கவும், மீட்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவும். மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.</p><h2>அறிக்கை</h2><p>இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், “தமிழ்நாட்டில் இருந்து கைலாசத்துக்கு யாத்திரை சென்ற 305 பேரில், 220 பேர் மீட்கப்பட்டு, அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 85 பேரை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் உள்பட காணாமல் போனவர்களின் குடும்பத்தினர், அரசு செலவில் காத்மாண்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்” என்று கூறினார்.</p><p>இதையடுத்து, நேபாள வெள்ளத்தில் சிக்கி, காணாமல் போனவர்களை மீட்க எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>9 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-in-9-districts-today-weather-department-update</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-in-9-districts-today-weather-department-update#comments</comments><guid isPermaLink="false">db1b6e38-6fcd-4594-86bd-23d2c468e5fc</guid><pubDate>Thu, 03 Sep 2026 01:17:50 +0000</pubDate><atom:updated>2026-09-03T01:17:50.626Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Rain,Weather,வானிலை,தமிழகம்,Weather News,WeatherUpdate,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,வானிலை ஆய்வு மையம்,வானிலை அறிக்கை,weather condition,வானிலை தகவல்,Weather Report,வானிலை முன்னறிவிப்பு,Weather Status,வானிலை அறிவிப்பு,weather center,வானிலை அப்டேட்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/yehmhp4n/ille.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மழை, rain]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/yehmhp4n/ille.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><h2>மழை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><p><strong>03-09-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை </a>பெய்யக்கூடும். </p><p>ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>04-09-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>05-09-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>06-09-2026 முதல் 08-09-2026 வரை:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong><ins>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</ins></strong></p><p><strong>03-09-2026 முதல் 06-09-2026 வரை:</strong> கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><p><strong><ins>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</ins></strong></p><p><strong>03-09-2026 முதல் 06-09-2026 வரை:</strong> உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று (03-09-2026):</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>மீனவர்களுக்கான எச்சரிக்கை:</h2><p><strong><ins>தமிழக கடலோரப்பகுதிகள்:</ins></strong></p><p><strong>03-09-2026:</strong> தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>04-09-2026 முதல் 06-09-2026 வரை:</strong> எச்சரிக்கை ஏதுமில்லை.</p><p><strong><ins>வங்கக்கடல் பகுதிகள்:</ins></strong></p><p><strong>03-09-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>04-09-2026 முதல் 06-09-2026 வரை:</strong> எச்சரிக்கை ஏதுமில்லை.</p><p>மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் பராமரிப்புப் பணிகள்: ரெயில்கள் சேவையில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/maintenance-work-on-egmore-villupuram-route-train-services-altered</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/maintenance-work-on-egmore-villupuram-route-train-services-altered#comments</comments><guid isPermaLink="false">e897de22-4e89-422e-b788-5a96f858caa8</guid><pubDate>Thu, 03 Sep 2026 01:09:48 +0000</pubDate><atom:updated>2026-09-03T01:09:48.335Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தெற்கு ரெயில்வே,Southern Railway,ரெயில் சேவை,train service,பராமரிப்பு பணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/aij4b7g9/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில் சேவை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/aij4b7g9/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள பேரணி பணிமனையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் சில ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-</p><ul><li><p>எழும்பூரில் இருந்து இன்று (3-ந்தேதி), நாளை (4-ந்தேதி), நாளை மறுநாள் (5-ந்தேதி) ஆகிய தேதிகளில் மாலை 3.10 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.20665), 20 நிமிடம் தாமதமாக நெல்லை சென்றடையும்.</p></li><li><p>எழும்பூரில் இருந்து இன்று (3-ந்தேதி), நாளை (4-ந்தேதி), நாளை மறுநாள் (5-ந்தேதி) ஆகிய தேதிகளில் மதியம் 1.15 மணிக்கு புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (12635), 1 மணி நேரம் 50 நிமிடம் தாமதமாக மதுரை சென்றடையும்.</p></li></ul><ul><li><p>தாம்பரத்தில் இருந்து இன்று (3-ந்தேதி) மதியம் 2 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06109), 1 மணி நேரம் 30 நிமிடம் தாமதமாக திருவனந்தபுரம் சென்டிரல் சென்றடையும்.</p></li><li><p>தாம்பரத்தில் இருந்து நாளை (4-ந்தேதி) இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06059), 1 மணி நேரம் 30 நிமிடம் தாமதமாக போடிநாயக்கனூர் சென்றடையும்.</p></li></ul><ul><li><p>புதுச்சேரியில் இருந்து நாளை (4-ந்தேதி) மற்றும் 6 ஆகிய தேதிகளில் மதியம் 12.45 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (17654), 2 மணி நேரம் 20 நிமிடம் தாமதமாக தெலுங்கானா மாநிலம் காச்சிகுடா சென்றடையும்.</p></li><li><p>புதுச்சேரியில் இருந்து வருகிற 6-ந்தேதி மதியம் 2.20 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில் (16112), 30 நிமிடம் தாமதமாக திருப்பதி சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p></li></ul>]]></content:encoded></item><item><title>500-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.300 கோடி முதலீடு பெற்று மோசடி: வர்த்தக நிறுவன இயக்குனர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/trading-company-director-arrested-for-defrauding-over-500-people-of-rs-300-crore-in-investment</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/trading-company-director-arrested-for-defrauding-over-500-people-of-rs-300-crore-in-investment#comments</comments><guid isPermaLink="false">dabe2494-493f-4745-9600-d4329d06d175</guid><pubDate>Thu, 03 Sep 2026 01:03:05 +0000</pubDate><atom:updated>2026-09-03T01:03:05.719Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrest,மோசடி,investment,முதலீடு,சேலம்,Stock trading</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/se3aio8i/295.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/se3aio8i/295.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம், </p><p>500-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.300 கோடி முதலீடு பெற்று மோசடி செய்த வர்த்தக நிறுவன இயக்குனர் கைது போலீசார் கைது செய்தனர்.</p><h2>தனியார் நிதி நிறுவனம்</h2><p>சேலம் களரம்பட்டியை சேர்ந்தவர் மோகன்முரளி. இவர் அதே பகுதியில் உள்ள பெயிண்டு கம்பெனியில் கணக்காளராக வேலை செய்து வருகிறார். சேலம் தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணத்தை இரட்டிப்பாக்கலாம் என்ற விளம்பரத்தை நம்பி அழகாபுரத்தில் பிராபிட் எவர் டிரேடர்ஸ் என்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் ரூ.28 லட்சத்தை 4 தவணையாக கடந்த ஆண்டு முதலீடு செய்தார். ஆனால் அவர் முதலீடு செய்ததற்கான முதிர்வு காலம் முடிந்தும் பணத்தை திரும்பதரவில்லை.</p><p>இதனால் மோகன்முரளி சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். போலீஸ் விசாரணையில் பலரிடம் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியது. அதில், சேலம் அழகாபுரத்தை சேர்ந்தவர் விஜயராகவன். அவருடைய மனைவி ராகினி. மதுரை கே.புதூர் அருகே உள்ள அழகர் நகரை சேர்ந்த செண்பகபாண் டியன் (வயது 45) ஆகியோர் அழகாபுரத்தில் கடந்த 2024-ம் ஆண்டு பிராபிட் எவர் டிரேடர்ஸ் என்ற பெயரில் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தை தொடங்கினர். இவர்கள் தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் அந்த பணத்தை பங்குச்சந்தை மூலம் இரட்டிப்பாக்கி கொடுக்கப்படும் என்ற பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தனர்.</p><p>இதை உண்மை என்று நம்பி, சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் ரூ.300 கோடி வரை முதலீடு செய்துள்ளனர். இந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF">மோசடி </a>தொடர்பாக மோகன்முரளி புகாரின் பேரில் போலீசார் ரூ.250 கோடி மோசடியில் ஈடுபட்ட பிராபிட் எவர் டிரேடர்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் ராகினி, செண்பகபாண்டியன், விஜயராகவன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.</p><h2>கைது</h2><p>இந்த நிலையில் மதுரையில் பதுங்கி இருந்த செண்பகபாண்டியனை போலீசார் நேற்று முன்தினம் இரவு சுற்றிவளைத்து கைது செய்தனர். மேலும் இந்த மோசடியில் தொடர்புடைய ராகினி, விஜயராகவன் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>அடையாறு கோட்டத்தில் இன்று மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்..!
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/electricity-consumer-grievance-redressal-meeting-in-adyar-division-today-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/electricity-consumer-grievance-redressal-meeting-in-adyar-division-today-2#comments</comments><guid isPermaLink="false">7837caea-917e-4110-80c8-948968fdbf40</guid><pubDate>Thu, 03 Sep 2026 00:46:48 +0000</pubDate><atom:updated>2026-09-03T00:46:48.762Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,அடையாறு,Adyar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/nd66ebc4/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/nd66ebc4/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>அடையாறு கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 03.09.2026 (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு செயற்பொறியாளர்/இ&amp;ப/அடையாறு, தரைதளம், 110/33-11 கி.வோ, வேளச்சேரி துணை மின் நிலைய வளாகம், வேளச்சேரி மெயின் ரோடு, வேளச்சேரி, சென்னை-42 அமைந்துள்ள விலாசத்தில் நடைபெற உள்ளது.</p><h2>நிவாரணம் பெற்றுக் கொள்ளலா</h2><p>பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் மின்சாரத் துறை சார்ந்த குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என மேற்பார்வை பொறியாளர்/ சென்னை மின்பகிர்மான வட்டம்/ <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அடையாறு </a>(தெற்கு-II) கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கபட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆவின் பால் விலை உயர்வா? - அமைச்சர் பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aavin-milk-price-hike-ministers-reply</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aavin-milk-price-hike-ministers-reply#comments</comments><guid isPermaLink="false">0f0c2e84-ad93-408f-8942-41f322eff77c</guid><pubDate>Wed, 02 Sep 2026 23:53:27 +0000</pubDate><atom:updated>2026-09-02T23:53:27.200Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Aavin Milk,ஆவின் பால்,அமைச்சர் விஜயலட்சுமி,Minister Vijayalakshmi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/zzflbpex/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/zzflbpex/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டசபையில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்தின் இடையே பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி பேசியதாவது:-</p><p>சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் பால் விற்பனை விலை உயர்வு குறித்து கோரிக்கை கொடுத்துள்ளனர். நம்முடைய முதல்-அமைச்சர் விவசாயிகளுக்கு நன்மை செய்வதில் கண்ணும், கருத்துமாக இருக்கிறார். அதனால்தான் பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை ஆட்சிக்கு வந்த 100 நாளில் 2 முறை உயர்த்தி கொடுத்துள்ளார்.</p><p>பால் உற்பத்தியாளர்கள் நலனுக்காக முதல்-அமைச்சர் எடுத்த இந்த முடிவை பாராட்ட மனம் இல்லாத சில பேர் பால் விற்பனை விலையை உயர்த்துவீர்களா? என்று கேட்கிறார்கள். இது எப்படிப்பட்ட மனநிலை?. மக்கள் பால் விலை உயர்வால் சிரமப்பட வேண்டுமா?.</p><p>கடந்த ஆட்சியில் ஒருமுறைதான் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது. நம்முடைய முதல்-அமைச்சர் பால் உற்பத்தியாளர்கள், ஆவின் துறை மற்றும் நுகர்வோர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதில் மிகவும் அக்கறையுடன் செயல்படுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>நாளை விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி. எப்-17 ராக்கெட்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/gslv-f-17-rocket-to-soar-into-the-sky-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/gslv-f-17-rocket-to-soar-into-the-sky-tomorrow#comments</comments><guid isPermaLink="false">2cb0e35f-42ec-419d-b857-e2317c78fb1a</guid><pubDate>Wed, 02 Sep 2026 23:22:39 +0000</pubDate><atom:updated>2026-09-02T23:22:39.322Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இஸ்ரோ,ISRO,ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்,GSLV Rocket</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/4f19azta/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/4f19azta/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது மிகவும் லட்சியமிக்க 'ஜூசாட்-1 ஏ' என்று அழைக்கப்பட்ட 'இ.ஓ.எஸ். 5' என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை, 'ஜி.எஸ்.எல்.வி. எப்-17' ராக்கெட்டில் பொருத்தி நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2.55 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவுகிறது</p><p>இந்த ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்து. தொடர்ந்து ராக்கெட்டுக்கான இறுதிக்கட்ட பணியான 'கவுண்ட்டவுன்' நேற்று இரவு தொடங்கியது. தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.</p><p>இந்தியாவின் எல்லைப் பகுதிகளை தொடர்ச்சியாக கண்காணித்து, நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளுக்குத் தேவையான முக்கியத் தரவுகளை வழங்கும். இது புவிசார் சுற்றுப்பாதையில் இருந்து இந்தியாவைக் கண்காணிக்கும் நாட்டின் முதல் இமே ஜிங் செயற்கைக்கோள் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>கொளத்தூர் தோல்விக்கு எதிராக மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/verdict-today-in-the-case-filed-by-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/verdict-today-in-the-case-filed-by-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">7de43d8f-7b50-4179-bac2-5325faeeb6cf</guid><pubDate>Wed, 02 Sep 2026 19:57:22 +0000</pubDate><atom:updated>2026-09-02T19:57:22.873Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,M.K.Stalin,கொளத்தூர்,Kolathur,கொளத்தூர் தொகுதி,Kolathur Constituency,வி.எஸ்.பாபு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/e0bj4j29/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/e0bj4j29/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>கொளத்தூர் தொகுதி</h2><p>தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த தொகுதியில் த.வெ.க. சார்பில் வி.எஸ்.பாபு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.</p><p>பொதுவாக தேர்தலில் வெற்றிப் பெற்றவர்களை எதிர்த்து தேர்தல் வழக்கு, தேர்தல் முடிவு வெளியாகி 45 நாட்களுக்குள் தாக் கல் செய்யவேண்டும். ஆனால், வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் 45 நாட்களுக்குள் தேர்தல் வழக்கு தொடரவில்லை. </p><h2>இன்று தீர்ப்பு</h2><p>இந்தநிலையில், கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்கு எந்திரங்களில் முறைகேடு நடந்திருப் பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கை மு.க.ஸ்டாலின் தொடர்ந்தார். 45 நாட்களுக்குள் வழக்கு தாக்கல் செய்யாததற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.</p><p>இந்த வழக்கை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் விசாரித்து தீர்ப்புக் காக தள்ளிவைத்தனர். இந்தநிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் பிறப்பிக்க உள்ளனர். இதனால் திமுகவினரிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோவில் யானைகளை மறுவாழ்வு முகாம்களுக்கு அனுப்பும் உத்தரவு ரத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/order-to-send-temple-elephants-to-rehabilitation-camps-cancelled</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/order-to-send-temple-elephants-to-rehabilitation-camps-cancelled#comments</comments><guid isPermaLink="false">e1ea5d0d-8058-478d-8210-4322c8cd023c</guid><pubDate>Wed, 02 Sep 2026 19:26:38 +0000</pubDate><atom:updated>2026-09-02T19:26:38.804Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை ஐகோர்ட்டு,Chennai High Court,Temple Elephant,கோவில் யானைகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/ugbghdki/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/ugbghdki/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>யானை</p><p>தேனியைச் சேர்ந்த ஷேக் முகமது என்பவர், கடந்த 2000-ம் ஆண்டு தான் வாங்கிய லலிதா என்ற பெண் யானைக்கு உரிமைதாரர் சான்று வழங்கக்கோரி முதன்மை தலைமை வனப் பாதுகாவலருக்கு விண்ணப்பித்திருந்தார். அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து. ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தார். அதேநேரம், யானையைத் தொடர்ந்து ஷேக் முகமதுவின் கட் டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்று உத்தரவிட்டார்.</p><p>ஒப்படைக்கவேண்டும்</p><p>இந்தநிலையில், யானை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்த தனி நீதிபதி, யானையை மாவட்ட வன அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள கோவில்கள், தனிநபர்கள் ஆகியோரிடம் உள்ள யானைகளை அரசு யானைகள் மறுவாழ்வு முகாம்களுக்கு மாற்றவேண்டும் என்று கடந்த 2023-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து இந்து சமய அறநிலையத்துறை செயலாளர், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் நிர்வாகம் ஆகியோர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.</p><p>ரத்து</p><p>இந்த மேல்முறையீட்டை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி. நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர், "மனுதாரர் அறநிலையத்துறைக்கு உத்தரவிடக்கோரி எந்த ஒரு கோரிக்கையையும் முன்வைக்காத நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள கோவில் யானைகளை, மறுவாழ்வு முகாம்களுக்கு அனுப்பும்படி உத்தரவிட முடியாது.</p><p>அப்படி ஒரு உத்தரவு பிறப்பிக்கும் முன்பு கோவில்கள் தரப்பு வாதங்களைக் கேட்கவில்லை. தமிழ்நாடு வளர்ப்பு யானைகள் பராமரிப்பு விதிகள், கோவில்களில் யானைகளைப் வளர்க்கவும், பராமரிக்கவும் அனுமதித்துள்ளது. விதிகளுக்கு முரணாக தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே, கோவில் யானைகளை அரசு மறுவாழ்வு முகாம்களுக்கு அனுப்பும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம்” என்று உத்தரவிட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை ஐகோர்ட்டில்
தமிழை முதன்மை மொழியாக அங்கீகரிக்க வேண்டும்: முதல்-அமைச்சர் விஜய் இன்று தனித் தீர்மானம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-as-a-language-of-proceedings-in-the-madras-high-court-chief-minister-vijay-to-move-a-special-resolution-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-as-a-language-of-proceedings-in-the-madras-high-court-chief-minister-vijay-to-move-a-special-resolution-today#comments</comments><guid isPermaLink="false">f893589d-6702-49b6-a7a3-59f03615866a</guid><pubDate>Wed, 02 Sep 2026 19:12:13 +0000</pubDate><atom:updated>2026-09-02T19:12:13.580Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,சட்டசபை,TN Assembly,தமிழ்,tamil,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/ao2r2667/CHENNAI-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/ao2r2667/CHENNAI-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை ஐகோர்ட்டில் வழக்காடு மொழியாக தமிழ் வேண்டும் எனக்கோரி சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் விஜய் தனித் தீர்மானம் கொண்டு வருகிறார்.</p><h2>தனித்தீர்மானம்</h2><p>தமிழக சட்டசபையில் கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 6-ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 7, 10,11 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதமும், 12-ந் தேதி நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோரின் பதில் உரையும் இடம் பெற்றது.</p><p>கடந்த மாதம் 17-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சட்டசபையில் வினாக்கள்- விடைகள் நேரம் இன்று (வியாழக்கிழமை) முடிந்தவுடன் முதல்-அமைச்சர் விஜய் அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வருகிறார். </p><p>அதில், தமிழை சென்னை ஐகோர்ட்டின் முதன்மையான நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்க வேண்டும். தமிழில் தாக்கல் செய்யப்படும் மனுக்கள், ஆவணங்கள் மற்றும் வாதங்களுக்கு உரிய நடைமுறையை உருவாக்க வேண்டும். </p><h2>குரல் வாக்கெடுப்பு</h2><p>ஐகோர்ட்டில் வழங்கப்படும் தீர்ப்புரைகள், தீர்ப்பாணைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் அனைத்தும் தமிழில் வழங்கும் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பது உள்பட அம்சங்களுடன் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானத்தை முன்மொழிகிறார். </p><p>முதல்-அமைச்சர் கொண்டு வரும் இந்த தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசுவார்கள். அதன்பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி சட்டமன்றத்தில் ஏற்கனவே 6.12.2006 அன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத் திய அரசுக்கு அனுப்பப்பட்டது நினைவுக்கூரத்தக்கது.</p><h2>மானியக்கோரிக்கை</h2><p>அதனை தொடர்ந்து சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் வசமுள்ள காவல் (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை), தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. சட்டசபையில் அமைச்சர்கள் பதிலுரைக்கு முன்பாக அறிவிப்புகளை வெளியிடும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.</p><p>அந்த வகையில் முதல்-அமைச்சர் விஜய் முதலில் துறைசார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படு கிறது. அதன்பின்னர் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற அ.தி.மு.க. தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அந்தந்த கட்சி தலைவர்கள் வரிசையாக இன்று பேசுவார்கள். அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) தனது பதிலுரையை வழங்குவார்.</p>]]></content:encoded></item><item><title>வேளாங்கண்ணி கடலில் மக்கள் குளிக்க தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-bathing-in-the-sea-at-velankanni</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-bathing-in-the-sea-at-velankanni#comments</comments><guid isPermaLink="false">080c9dd4-dbc5-4659-aee0-daa40717ae3a</guid><pubDate>Wed, 02 Sep 2026 18:27:09 +0000</pubDate><atom:updated>2026-09-02T18:27:09.224Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>sea,கடல்,Velankanni,Velankanni Matha Temple,வேளாங்கண்ணி,வேளாங்கண்ணி மாதா பேராலயம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/21om15to/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/21om15to/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>நாகை,</p><h2>ஆண்டுத்திருவிழா</h2><p>நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்து டன் தொடங்கி நடந்து வருகிறது. இந்த விழா வருகிற 8-ந்தேதி வரை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.</p><p>நவ நாட்களில் தினமும் மதியம் 12 மணிக்கு கொடியேற்றப்படுகிறது. இதை காண எராளமானோர் கொடிமரம் அருகே குவிந்து வந்து பிரார்த்தனை செய்தனர். ஆண்டு பெருவிழாவின் 5-வது நாளையொட்டி வேளாங்கண்ணியில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.</p><h2>கடலில் குளிக்கத்தடை</h2><p>அதிக அளவில் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக வந்து கொண்டு இருக்கின்றனர். இதில் சிலர் ஆபத்து தெரியாமல் கடலில் இறங்கி நீண்ட தூரம் சென்று குளித்து வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு உயிர் சேதம் ஏற்படாத வண்ணம் மாவட்ட நிர்வாகமும் பேராலய நிர்வாகமும் பல்வேறு முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.</p><p>அதன் ஒரு பகுதியாக போலீஸ் சூப்பிரண்டு கேழ்கர் சுப்பிரமணிய பாலச்சந்திரா பரிந்துரையின் பேரில் வருகிற 8-ந்தேதி வரை கடலில் மக்கள் குளிக்க தடை விதித்து கலெக்டர் பிரவீன் குமார் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக வேளாங்கண்ணி கடற்கரை வெறிச்சோடி காணப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த சிங்கை ராமசந்திரனுக்கு அரசுப் பதவி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-post-for-singai-ramachandran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-post-for-singai-ramachandran#comments</comments><guid isPermaLink="false">c7c8833e-1009-40c0-aa13-8e9edd0ad7d9</guid><pubDate>Wed, 02 Sep 2026 17:46:23 +0000</pubDate><atom:updated>2026-09-02T17:46:23.644Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,சிங்கை ராமசந்திரன்,Singai Ramachandran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/iief1lqj/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/iief1lqj/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அ.தி.மு.க.வில் மாணவர் அணிச் செயலாளர், தகவல் தொழில் நுட்பப் பிரிவு மாநில செயலாளராக இருந்தவரான சிங்கை ராமச்சந்திரன் கடந்த ஜூன் மாதம் அ.தி.மு.க.வில் இருந்து வெளியேறினார். இதனையடுத்து கடந்த மாதம் 11-ம் தேதி முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து, சிங்கை ராமச்சந்திரன் தன்னை த.வெ.க.வில் இணைத்துக் கொண்டார்.</p><p>இந்த நிலையில், தவெகவில் இணைந்த மூன்று வாரங்களில் சிங்கை ராமசந்திரனுக்கு அரசுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்க (TANSIM) தலைவராக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/8ihm4nvv/Untitled-1.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>ஜி.எஸ்.டி. வசூல் குறைவு: தவெக அரசு விழித்துக்கொள்ளுமா? - டி.ஆர்.பி. ராஜா கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/drop-in-gst-will-the-tvk-government-wake-up-trb-rajaa-question</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/drop-in-gst-will-the-tvk-government-wake-up-trb-rajaa-question#comments</comments><guid isPermaLink="false">7e5ea89d-502a-4e71-89a3-8ce015efac1b</guid><pubDate>Wed, 02 Sep 2026 16:59:10 +0000</pubDate><atom:updated>2026-09-02T16:59:10.351Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,GST Collection,GST,ஜி.எஸ்.டி.,டி.ஆர்.பி. ராஜா,TRB Rajaa,தவெக அரசு,Tvk  government</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/vjpeenbq/CHENNAI-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/vjpeenbq/CHENNAI-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><strong>முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-</strong></p><p>தமிழகத்தின் வருவாய் இயந்திரம் சிவப்பு எச்சரிக்கை காட்டுகிறது. இதே நிலை தொடர்ந்தால், செலவுகளைக் குறைப்பதா, மேலும் கடன் வாங்குவதா என்ற கடினமான நிலைக்கு தமிழக அரசு விரைவில் தள்ளப்படலாம்.</p><p>ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி புள்ளிவிவரங்கள் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியவை. 2025 ஆகஸ்டில் ரூ.10,329 கோடியாக இருந்த தமிழகத்தின் ஜிஎஸ்டி வசூல், 2026 ஆகஸ்டில் ரூ.10,189 கோடியாகக் குறைந்துள்ளது. அதாவது -1% (மைனஸ் 1) சரிவு. ஆனால் இதே காலகட்டத்தில், இந்தியா +9%, கர்நாடகா +13%, குஜராத் +15%, தெலங்கானா +16%, உத்தரபிரதேசம் +19%, மராட்டியம் +8%, தமிழகம் மட்டும் -1%.</p><p>சாதாரண மக்களுக்கு இந்த ஜிஎஸ்டி எண்ணைப் பற்றி ஏன் கவலை இருக்க வேண்டும். ஏனென்றால், தமிழக அரசின் சொந்த வரி வருவாயில் சுமார் 38% எஸ்ஜிஎஸ்டி மூலமாக மட்டுமே வருகிறது. வளர்ச்சிப் பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கவேண்டும். ஆனால், அதே நேரத்தில் கடன் சுமையையும் கட்டுப்படுத்த வேண்டும்.</p><p>இந்தக் கணக்கு சரியாக வர வேண்டுமென்றால் அரசின் வருவாய் கட்டாயம் வளர வேண்டும். ஆனால் ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி காட்டுவதோ அதற்கு நேர் எதிரான -1% சரிவு. ‘ஒரு மாத புள்ளிவிவரத்தை வைத்து ஒரு வருடத்துக்கான போக்கைத் தீர்மானிக்க முடியாது’ என்று சிலர் சொல்லலாம்.</p><p>உண்மைதான். ஆனால் இந்தியா +9% வளரும்போது, நம்மோடு போட்டியிடும் முக்கிய மாநிலங்கள் அனைத்தும் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்யும்போது, தமிழகம் மட்டும் மைனஸ் 1%-ல் இருப்பதை சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாது.</p><p>இது நிச்சயம் ஒரு முக்கிய எச்சரிக்கை. இந்த நிலை தொடர்ந்தால், பற்றாக்குறையாகும் பணத்தை எங்கிருந்து கொண்டு வரப் போகிறார்கள்? மேலும் கடன் வாங்கப் போகிறார்களா? வேறு வரிகளை உயர்த்தப் போகிறார்களா?. அல்லது சாலைகள், உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கான செலவுகளைக் குறைக்கப் போகிறார்களா? வருவாய் இல்லாமல் பட்ஜெட் வெறும் காகிதக் கணக்குதான்.</p><p>இந்த -1% ஜிஎஸ்டி சரிவு ஒரு தொடர்கதையாக மாறுவதை தமிழகம் தாங்க முடியாது. இது கட்டுப்படுத்த முடியாத சரிவாக மாறுவதற்கு முன்பாவது இன்றைய தவெக அரசு விழித்துக்கொள்ளுமா? இந்த சரிவுக்கு என்ன காரணம் என்று அரசு தெளிவாக சொல்லவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கில் தமிழ் திருமுறைகள் ஒலிக்க வேண்டும்: சீமான்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-thirumurais-must-be-recited-during-the-consecration-ceremony-of-the-madurai-meenakshi-amman-temple-seeman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-thirumurais-must-be-recited-during-the-consecration-ceremony-of-the-madurai-meenakshi-amman-temple-seeman#comments</comments><guid isPermaLink="false">7dc0388e-2c56-4b92-b32f-5efbd117fd31</guid><pubDate>Wed, 02 Sep 2026 16:52:00 +0000</pubDate><atom:updated>2026-09-02T16:52:00.021Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,Seeman,சென்னை,Madurai Meenakshi Amman Temple,மதுரை மீனாட்சி அம்மன் கோவில்,குடமுழுக்கு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/nds4j9nn/186.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சீமான்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/nds4j9nn/186.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கில் தமிழ் திருமுறைகள் ஒலிக்க வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>மதுரை மீனாட்சி அம்மன் கோவில்</h2><p>சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியர்களின் தலைநகராம் மதுரையில், உலகப்புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் - சொக்கநாதர் திருக்கோயிலின் குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா வருகின்ற செப்டம்பர் -17ஆம் நாள் நடைபெறவிருப்பது பெருமகிழ்ச்சிக்குரியதாகும்.</p><p>தமிழரின் தொன்மை, கலை, பண்பாடு, இறைநெறி, கட்டடக்கலை, சிற்பக்கலை ஆகிய அனைத்திற்கும் பெரும் அடையாளமாகத் திகழும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் என்பது வெறுமனே ஒரு வழிபாட்டுத்தலம் மட்டுமன்று; அது தமிழர் நாகரிகத்தின் வரலாற்றுச் சான்றாகும்.அத்தகைய பெருமைக்குரிய திருக்கோயிலின் குடமுழுக்கு விழாவில் தமிழ் ஒதுக்கப்படுவதையோ, தமிழ்த் திருமுறைகளுக்கும் தமிழ் வேத மந்திரங்களுக்கும் உரிய இடம் மறுக்கப்படுவதையோ ஒருபோதும் ஏற்க முடியாது.</p><p>தமிழ்வேத ஆகம பாடசாலை நிறுவனரும், தெய்வத்தமிழ் பேரவை செயற்குழு உறுப்பினருமான சிம்மம் சத்தியபாமா , மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் குடமுழுக்கின்போது கோபுரக்கலச நன்னீராட்டு, கருவறைப் பூசை, வேள்விச்சாலை ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகளிலும் தமிழ் திருமுறைகளையும் தமிழ் வேத மந்திரங்களையும் ஓதுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று ஐகோர்ட் நாடியுள்ளார். அவ்வழக்கில் 24.08.2026 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் கோபுரக் கலசம், கருவறைப் பூசை, வேள்விச்சாலை ஆகிய இடங்களில் சமஸ்கிருத வேத மந்திரங்கள் ஓதப்படும் அதேவேளையில், தமிழ் திருமுறைகளையும் தமிழ் மந்திரங்களையும் ஓதுவதற்கு உரிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.</p><p>நீதிமன்ற உத்தரவை வெறும் கடமைக்காக நிறைவேற்றாமல், அதன் உண்மையான நோக்கத்தையும் உணர்வையும் முழுமையாகச் செயல்படுத்த வேண்டும்.</p><p> தமிழர்களின் இறைவனுக்கு தமிழில் வழிபடுவதற்கு நீதிமன்றம் வரை சென்று அனுமதி வாங்க வேண்டிய நிலையே தமிழினத்திற்கு நேர்ந்துள்ள மிகப்பெரிய அவலம் அல்லவா?</p><p>தேவாரம், திருவாசகம், திருமந்திரம், திருப்புகழ், திருமுறைகள் என நாயன்மார்களும் ஆழ்வார்களும் இறைவனைப் பாடிப் பரவியது தமிழில்தானே?அப்படியிருக்க, தமிழர் மண்ணில், தமிழர் கட்டிய திருக்கோயிலில், தமிழர் வணங்குகின்ற இறைவனிடம் தமிழில் பாடுவதற்கும், தமிழில் மந்திரம் ஓதுவதற்கும் இடமில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? தமிழ் இறைவனுக்கு ஆகாத மொழியா? தமிழில் இறைவன் கேட்டமாட்டாரா?  தமிழில் வழிபட்டால் இறைவன் ஏற்றுக்கொள்ளமாட்டாரா? என்ற கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு பதில் சொல்ல வேண்டும்.</p><p>அத்தகைய தமிழ் மரபின் அடையாளமாக விளங்கும் மீனாட்சி அம்மனின் திருக்கோயிலில் நடைபெறும் குடமுழுக்கில் தமிழுக்கு உரிய முதன்மையும் மரியாதையும் வழங்கப்பட வேண்டியது சலுகை அல்ல; தமிழர்களுக்குரிய மொழி மற்றும் வழிபாட்டு உரிமையாகும். எனவே, ஐகோர்ட் வழங்கியுள்ள உத்தரவின்படி கோபுரக் கலச நன்னீராட்டு, கருவறைப் பூசை, வேள்விச்சாலை உள்ளிட்ட அனைத்து முக்கிய நிகழ்வுகளிலும் தமிழ் திருமுறைகளும் தமிழ் வேத மந்திரங்களும் தெளிவாக ஒலிப்பதை தமிழ்நாடு அரசும் இந்து சமய அறநிலையத்துறையும் உறுதிசெய்ய வேண்டும்.</p><p>மேலும், இவ்வளவு வரலாற்றுச் சிறப்புமிக்க குடமுழுக்கு விழாவுக்கான அழைப்பிதழில், காலங்காலமாக மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் உரிய மரபு மரியாதை பெற்றவர்களையும், திருக்கோயிலோடு தலைமுறைத் தொடர்புடையவர்களையும் புறக்கணிக்கும் வகையில் செயல்பட்டிருப்பது ஏற்புடையதல்ல. கோயில் என்பது எந்த ஓர் ஆட்சிக்கும், எந்த ஓர் அரசியல் கட்சிக்கும் சொந்தமானதன்று. அது மக்களுடையது; இறைநம்பிக்கையாளர்களுடையது; தலைமுறை தலைமுறையாக அதனைப் பேணிக்காத்த மரபுடையவர்களுடையது. ஆட்சி மாறலாம்; அமைச்சர்கள் மாறலாம்; அதிகாரிகள் மாறலாம்; ஆனால் நூற்றாண்டுகளாகத் தொடரும் திருக்கோயில் மரபையும் மாண்பையும் விட்டுவிட முடியாது. எனவே, மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் ஆண்டாண்டு காலமாக உரிய மரியாதை பெற்றவர்களையும், அறங்காவல் மற்றும் திருக்கோயில் மரபோடு தொடர்புடையவர்களையும் முறையாக அழைத்து, அவர்களுக்குரிய மரியாதையை வழங்கி, எவ்வித அரசியல் வேறுபாடும் பாரபட்சமும் இன்றி குடமுழுக்கு விழாவை அனைவரும் போற்றும் வகையில் சிறப்பாக நடத்த வேண்டும்.</p><p>தமிழ்த்தாய் வளர்த்த மதுரையில் நடைபெறும் மீனாட்சி அம்மன் குடமுழுக்கில் தமிழே புறக்கணிக்கப்படக்கூடாது!</p><p>சங்கம் வளர்த்த தமிழின் தலைநகரில்,மீனாட்சி அன்னையின் திருக்கோயிலில், தேவாரம் ஒலிக்கட்டும்! திருவாசகம் முழங்கட்டும்! திருமுறைகள் இசைக்கட்டும்! மதுரை மீனாட்சி அன்னையின் திருக்குடமுழுக்கில் தமிழ்மறை முழங்கி, தமிழின் பெருமை விண்ணதிரட்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கன்னியாகுமரி: வாலிபரை அரிவாளால் வெட்டிய 4 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kanyakumari-4-arrested-for-slashing-youth-with-sickle</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kanyakumari-4-arrested-for-slashing-youth-with-sickle#comments</comments><guid isPermaLink="false">58c525e5-549f-4edb-8db2-0a0d0e0f58b8</guid><pubDate>Wed, 02 Sep 2026 16:32:28 +0000</pubDate><atom:updated>2026-09-02T16:32:28.802Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,Kanyakumari,அரிவாள் வெட்டு,Youth,வாலிபர்,4 arrested,4 பேர் கைது,slashed with sickle</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/kjs8f4oq/4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 4 பேர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/kjs8f4oq/4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF">கன்னியாகுமரி</a> மாவட்டத்தில் ஒரு வாலிபரை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">அரிவாளால் வெட்டிய</a> 4 பேரை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர்.</p><h2>வாலிபருக்கு அரிவாள் வெட்டு</h2><p>கன்னியாகுமரி மாவட்டம், மருங்கூர் பகுதியை சேர்ந்த பகவதிகுமார் (வயது 34), டிரைவர். இவர் சம்பவத்தன்று மயிலாடியில் உள்ள ஒரு ஓட்டல் அருகே வந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மயிலாடியைச் சேர்ந்த நிதின், சுஜித், மயிலாடிபுதூரைச் சேர்ந்த ராஜகுமார், சாலைப்புதூரைச் சேர்ந்த பிரசாந்த் ஆகியோர் பகவதிக்குமாரை பார்த்து தகாத வார்த்தையால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த நிதின் உள்பட 4 பேரும் சேர்ந்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் பகவதிகுமாரை சரமாரியாக வெட்டி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றனர். </p><h2>4 பேர் கைது</h2><p>இதில் படுகாயமடைந்த பகவதிகுமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து பகவதிகுமார் கொடுத்த புகாரின் பேரில் அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிதின் உள்பட 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மாநகராட்சி பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய ‘காலை உணவு’ பொங்கல் ஓட்டலுக்கு விற்பனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/breakfast-meal-for-municipal-school-children-sold-to-hotel</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/breakfast-meal-for-municipal-school-children-sold-to-hotel#comments</comments><guid isPermaLink="false">ce9247fa-b819-46f4-b749-7bf9af5c17b5</guid><pubDate>Wed, 02 Sep 2026 16:31:16 +0000</pubDate><atom:updated>2026-09-02T16:31:16.392Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Breakfast,காலை உணவு,ஓட்டல்,விற்பனை,குழந்தைகள்,Pongal,காலை உணவு திட்டம்,பொங்கல்,restaurant,Corporation School,மாநகராட்சி பள்ளி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/019eejx9/morning-food.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ காலை உணவு]]></media:title><media:description type="html"><![CDATA[ மாநகராட்சி பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய ‘காலை உணவு’ பொங்கல் ஓட்டலுக்கு விற்பனை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/019eejx9/morning-food.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாநகராட்சி பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய ‘காலை உணவு’ பொங்கல் ஓட்டலுக்கு விற்பனை செய்யப்படுவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.</p><h2>சிற்றுண்டிகள்</h2><p>சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள ஒரு மாநகராட்சி பள்ளியில், ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில், அரசு பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட  <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">காலை உணவு திட்டத்தின்</a>’ கீழ், இங்கு தினமும் சுடச்சுட சிற்றுண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. </p> <h2>காலை உணவு</h2><p>பள்ளி தொடங்குவதற்கு முன்பு காலை 8.30 மணிக்கு குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. பொங்கல், கிச்சடி, உப்புமா போன்ற சத்துள்ள உணவு வகைகள் இதில் இடம் பெற்றுள்ளன.</p><h2>தொடக்க பள்ளிகள்</h2><p>சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் 200-க்கும் மேற்பட்ட மாநகராட்சி தொடக்க பள்ளியில் காலை உணவு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திலும் சிலர் முறை கேடு செய்வது தெரியவந்து உள்ளது.</p> <h2>250 மாணவர்கள்</h2><p>புளியந்தோப்பு பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 250 மாணவர்கள் படித்து வருகிறார்கள்.  இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 150 குழந்தைகள் காலை உணவு திட்டத்திற்கு தகுதியானவர்கள். ஆனால் 60 பேர் மட்டுமே காலை உணவு சாப்பிடுவதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு சுடச்சுட சுவையான பொங்கல் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு கொண்டுவரப்பட்டது. </p> <h2> 4 குழந்தைகள்</h2><p>8.30 மணிக்கு காலை உணவு வழங்கப்பட்டது. 4 குழந்தைகள் மட்டுமே பொங்கல் வாங்கி சாப்பிட்டார்கள். வேறு யாரும் சாப்பிடவில்லை. 9 மணிக்கு வகுப்பு தொடங்கியது. 9.05 மணிக்கு மீதமுள்ள மொத்த பொங்கலையும் ஒரு கூடையில் வைத்து ஒரு பெண் வெளியே கொண்டு சென்றார்.</p> <h2>உணவு விற்பனை</h2><p>  ஓட்டலில் உணவு விற்பனை மூலம் கிடைக்கும் தொகையைப் பள்ளியில் உள்ள சிலர் பங்கிட்டு கொள்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பள்ளி பிள்ளைகளுக்கு வழங்க வேண்டிய காலை உணவை ஒவ்வொரு நாளும் ஓட்டலில் விற்று முறைகேடு செய்வது வெட்டவெளிச்சமாகியுள்ளது.</p><h2>தலைமை ஆசிரியர்</h2><p>பள்ளி குழந்தைகளின் பசி தீர்க்க வேண்டிய உணவு, ஓட்டல்களில் விற்கப்பட்டு வியாபாரமாகி கொண்டிருப்பதை அப்பகுதி மக்கள் தினமும் பார்த்து வேதனை அடைந்தனர். ஒவ்வொரு நாளும் காலை 9 மணிக்கு பள்ளியிலிருந்து காலை உணவை அந்த பெண் ஓட்டலுக்கு கொண்டு செல்வதை கண்காணித்துள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியருக்கு தெரியாமல் இந்த முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என்று அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர். </p> <h2>கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு</h2><p>பள்ளியின் தலைமையாசிரியர் கொடுக்கும் மாணவர்கள் பட்டியல் அடிப்படையில் உணவு வழங்கப்பட்டாலும் அது முறையாக குழந்தைகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறதா என்பதை கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று மக்கள் தெரிவித்தனர். </p> <p>இச்சம்பவம் சென்னை புளியந்தோப்பு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரெயில்வே பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் - சென்னை மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monsoon-preparedness-works-in-railway-areas-review-meeting-chaired-by-chennai-corporation-commissioner</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monsoon-preparedness-works-in-railway-areas-review-meeting-chaired-by-chennai-corporation-commissioner#comments</comments><guid isPermaLink="false">3fa4f744-aebf-406a-b1a1-ad6c0ce870d1</guid><pubDate>Wed, 02 Sep 2026 16:27:40 +0000</pubDate><atom:updated>2026-09-02T16:27:40.105Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Corporation,சென்னை மாநகராட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/jv6utayz/State-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/jv6utayz/State-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“இன்று (02.09.2026) மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், கோட்ட ரெயில்வே மேலாளர் சைலேந்திர சிங் தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தெற்கு ரெயில்வே சார்பில், வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு ரெயில்வே பகுதிகளில் தூர் வாருதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கைப் பணிகள் மற்றும் கணேசபுரத்தில் கட்டப்பட்டு வரும் உயர்மட்டப் பாலம் உள்ளிட்ட ரெயில்வே பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக ஆய்வுக்கூட்டம், தென்னக கோட்ட ரெயில்வே மேலாளர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. </p><p>இக்கூட்டத்தில், மாநகராட்சி இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன், கூடுதல் கோட்ட ரெயில்வே மேலாளர் ஆங்குர் சவுகான், முதுநிலை கோட்டப் பொறியாளர் (ஒருங்கிணைப்பு) நந்தகோபால், மாநகராட்சி தலைமைப் பொறியாளர்கள் பி.சங்கரவேலு, பாலமுரளி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கு: நாளை தீர்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kolathur-constituency-election-case-verdict-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kolathur-constituency-election-case-verdict-tomorrow#comments</comments><guid isPermaLink="false">50a5b61b-a894-420a-ac4c-4c84a84d9fd5</guid><pubDate>Wed, 02 Sep 2026 16:13:20 +0000</pubDate><atom:updated>2026-09-02T16:13:20.758Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,DMK,சென்னை,சென்னை ஐகோர்ட்டு,Madrashighcourt,MKstalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/8yl7lnwz/dmkstalin33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
கொளத்தூர் தொகுதி]]></media:title><media:description type="html"><![CDATA[ 
கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/8yl7lnwz/dmkstalin33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கொளத்தூரில் தவெக வேட்பாளர் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கில் நாளை (செப்.03) தீர்ப்பளிக்கிறது சென்னை ஐகோர்ட்டு.</p><p>தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம், முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என்றும் மீண்டும் சோதனை செய்ய வேண்டும் என்றும் திமுக சார்பில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D">சென்னை ஐகோர்ட்டில் வழக்கு </a>தொடரப்பட்டது.</p><p>தவெக எம்.எல் ஏ - வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும். தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.</p><p>இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது. இந்நிலையில் இந்த வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு, நாளை காலை 10:30 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘கோவில்களில் செல்போனுக்கு முழுமையாக தடை விதிக்காமல் கட்டுப்பாடுகள் விதிக்கலாம்’ - வானதி சீனிவாசன் யோசனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/instead-of-a-complete-ban-on-mobile-phones-in-temples-restrictions-could-be-imposed-vanathi-srinivasans-suggestion</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/instead-of-a-complete-ban-on-mobile-phones-in-temples-restrictions-could-be-imposed-vanathi-srinivasans-suggestion#comments</comments><guid isPermaLink="false">4cba0d21-7d2e-46f9-91cb-2be227447b5b</guid><pubDate>Wed, 02 Sep 2026 16:09:03 +0000</pubDate><atom:updated>2026-09-02T16:09:03.893Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/4lq634fj/State-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/4lq634fj/State-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முன்னாள் பா.ஜ.க. தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-</p><p>“தமிழ்நாட்டில் உள்ள 52 முக்கியமான இந்து திருக்கோவில்களில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் செல்போன் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்போனைப் பாதுகாக்க, அதற்கென வைக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் பெட்டகத்தில் ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.</p><p>கோவில்களில் சினிமா பாடல்களுக்கு ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது தடை செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், முற்றிலும் செல்போன்களுக்குத் தடை விதிப்பது பக்தர்களுக்குப் பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தும். இந்து கோவில்கள் பரந்து விரிந்தவை. கோவிலில் சுவாமி தரிசனம் முடித்த பிறகு, அங்குள்ள மண்டபங்கள், வளாகங்களில் அமர்ந்து பேசுவது, பிரசாதம் சாப்பிடுவது பக்தர்களின் வழக்கம்.</p><p>கோவிலுக்கு குடும்பமாக, உறவினர்களுடன், நண்பர்களாக வருபவர்கள், கோவிலுக்குள் வெவ்வேறு இடங்களில் இருந்தால், அவர்களைத் தொடர்புகொள்ள செல்போன் அவசியம். செல்போன் தடையில் குழுவாக, அதுவும் வயதானவர்களுடன் செல்பவர்களுக்கு சிரமம் ஏற்படும். கோவிலின் கட்டடக் கலை அம்சங்கள், சிற்பங்கள் முன்பு புகைப்படம் எடுப்பார்கள். அது அவர்களுக்கு நினைவாக இருக்கும். சமூக ஊடகங்களிலும் பதிவிடுவார்கள். அதன் மூலம் அக்கோவிலின் கலை அம்சத்தையும், ஆன்மிகச் சிறப்புகளையும் மற்றவர்கள் அறிந்து கொள்ள முடியும். செல்போன் தடையில் இவை அனைத்தும் தடுக்கப்படுகின்றன.</p><p>எனவே, கோவில்களில் முழுமையாக செல்போனுக்குத் தடை விதிக்காமல், மூலஸ்தானத்தில் மட்டும் தடை விதிப்பது, மூலஸ்தானத்தை மட்டும் படம் எடுக்கத் தடை விதிப்பது போன்ற கட்டுப்பாடுகளை விதிக்கலாம். மாறாக, செல்போன் கொண்டு செல்லவே தடை விதிப்பது பக்தர்களுக்கு தேவையற்ற மனஉளைச்சலை ஏற்படுத்தும். இதைக் கவனத்தில் கொண்டு இந்து சமய அறநிலையத்துறை செயல்பட வேண்டும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item></channel></rss>