<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 17 Sep 2026 10:25:42 +0000</lastBuildDate><item><title>பேஸ்புக் தோழிக்காக கடல் கடந்து இலங்கைக்கு சென்ற இந்திய சிறுவன் கைது  </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/indian-boy-arrested-after-traveling-across-the-sea-to-sri-lanka-for-a-facebook-friend</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/indian-boy-arrested-after-traveling-across-the-sea-to-sri-lanka-for-a-facebook-friend#comments</comments><guid isPermaLink="false">54b0082b-9fe7-4db5-bfb2-33bc07b60edf</guid><pubDate>Thu, 17 Sep 2026 10:25:36 +0000</pubDate><atom:updated>2026-09-17T10:25:36.012Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,India,Sri Lanka,இலங்கை,Facebook,பேஸ்புக்,தோழி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/iwvzhsqn/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/iwvzhsqn/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கொழும்பு,</p><p>சமூக வலைதளமான பேஸ்புக் மூலம் இந்தியாவை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவருக்கு, இலங்கையை சேர்ந்த ஒரு சிறுமியுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அந்த சிறுமியை நேரில் சந்திக்க முடிவு செய்த சிறுவன், ராமேஸ்வரத்தில் இருந்து சட்ட விரோதமாக படகில் ஏறி பயணம் செய்துள்ளார். இலங்கை சென்ற சேர்ந்த அந்த சிறுவனை தலைமன்னார் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். </p><p>ராமேஸ்வரம் தனுஷ்கோடி கடற்பகுதியில் இருந்து எந்தவித பயண ஆவணங்களும் இன்றி படகில் இலங்கை சென்ற அந்த சிறுவன் பயண கட்டணத்திற்காக தனது தங்க சங்கிலியை படகோட்டியிடம் கொடுத்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தலைமன்னார் பகுதியில் வைத்து அடையாளம் காணப்பட்ட சிறுவன் பின்னர் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.</p><p>சிறுவனின் வயதை கருத்தில் கொண்டு அவரை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்க தலைமன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சிறுவனின் தோழியான இலங்கை சிறுமி யார்? இதற்கு பின்னணியில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>பக்தர்களின் வழிபாட்டு நம்பிக்கை உணர்வுகளைப் புண்படுத்திய தவெக அரசு! - வானதி சீனிவாசன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-government-has-hurt-the-religious-sentiments-of-devotees-vanathi-srinivasan-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-government-has-hurt-the-religious-sentiments-of-devotees-vanathi-srinivasan-condemns#comments</comments><guid isPermaLink="false">f9653530-b920-4392-baa2-c19f4f998983</guid><pubDate>Thu, 17 Sep 2026 10:14:54 +0000</pubDate><atom:updated>2026-09-17T10:14:54.357Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Madurai,மதுரை,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,தவெக அரசு,TVK Government</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/kc2m67w5/vanathi.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/kc2m67w5/vanathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காவல்துறையினர் புனித நீர் எனக் கூறி பிளாஸ்டிக் டப்பாவில் அடைக்கப்பட்ட நீரை வாளி நீரில் கலந்து தெளித்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்கு வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். </p><p>இது தொடர்பாக முன்னாள் பாஜக தேசிய மகளிரணி தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D">வானதி சீனிவாசன்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>குடமுழுக்கு விழா</h2><p>17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் இன்று நடைபெற்ற குடமுழுக்கு விழா, உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கப்பட்ட புனித நிகழ்வாகும். ஆனால், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க குடமுழுக்கு விழாவில், பக்தர்களின் உணர்வுகளையும் ஆன்மிக நம்பிக்கைகளையும் மதிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டனவா என்ற கேள்வி எழுகிறது.</p><p>பக்தர்களை முறையாக வழிநடத்தாமல், நீண்ட நேரம் கால் கடுக்கக் காத்திருக்கச் செய்து, கூட்ட நெரிசலுக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாக்கியதாக பக்தர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது முற்றிலும் அரைகுறையான ஏற்பாடுகளையே காட்டுகிறது.</p><h2>அலட்சிய ஏற்பாடுகளும், அவமதிப்புமே பரிசு</h2><p>மேலும் தங்கள் மீது புனித நீரின் ஒரு துளியாவது விழுந்தால் புண்ணியம் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்த பக்தர்களுக்கு, காவல்துறையினர் புனித நீர் எனக் கூறி பிளாஸ்டிக் டப்பாவில் அடைக்கப்பட்ட நீரை வாளி நீரில் கலந்து தெளித்ததாகக் கூறப்படும் சம்பவம் கண்டனத்திற்குரியதாகும்.</p><p>17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இத்தகைய புனித நிகழ்வில், ஒவ்வொரு ஏற்பாடும் பக்தர்களின் நம்பிக்கையை மனதில் கொண்டு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதை முற்றிலும் தவற விட்டிருக்கிறது தவெக அரசு. மீனாட்சி சுந்தரேஸ்வரரின் அருளைப் பெற வந்த பக்தர்களுக்கு தவெக அரசின் அலட்சிய ஏற்பாடுகளும், அவமதிப்புமே பரிசாகக் கிடைத்திருக்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பிரதமர் மோடி பிறந்தநாள் - பிரேமலதா வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pm-modis-birthday-premalatha-wishes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pm-modis-birthday-premalatha-wishes#comments</comments><guid isPermaLink="false">db8bb6ff-e78e-4be7-b3bf-37c31baa8d5a</guid><pubDate>Thu, 17 Sep 2026 10:14:29 +0000</pubDate><atom:updated>2026-09-17T10:14:29.612Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>PM Modi,birthday,பிரேமலதா,பிரதமர் மோடி பிறந்தநாள்,PremalathaVijayakanth</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/h7gupbpt/108.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/h7gupbpt/108.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 76-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><h2>பிறந்தநாள் வாழ்த்துகள்!</h2><p>பாரதப் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF">பிரதமர் நரேந்திர மோடி</a> அவர்களுக்கு எனது இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், மகிழ்ச்சியுடனும், மனவலிமையுடனும் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து, நமது நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் தொடர்ந்து சேவையாற்ற இறைவன் அருள்புரியட்டும். தங்களின் பிறந்தநாள் இனிமையும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக அமைய வாழ்த்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் 5 நாட்கள் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/5-day-gold-jewelry-appraiser-training-in-chennai-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/5-day-gold-jewelry-appraiser-training-in-chennai-2#comments</comments><guid isPermaLink="false">e017e46e-cf87-4984-bc6d-dd5933efb3bb</guid><pubDate>Thu, 17 Sep 2026 09:51:57 +0000</pubDate><atom:updated>2026-09-17T09:51:57.122Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,தங்க நகை,gold jewelry,தொழில் முனைவோர்,தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி,Training classes,நகை மதிப்பீட்டாளர் பயிற்சி,Jewelry Appraiser</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/ydkih1jo/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/ydkih1jo/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>கல்வி&amp;வேலைவாய்ப்பு (Eduction and Jobs)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னையில் “தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி” 21.09.2026 முதல் 25.09.2026 வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. </p><p>இது தொடர்பாக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழக அரசு </a>வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதவாது;-</p><p>தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் “தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி” 21.09.2026 முதல் 25.09.2026 வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இப்பயிற்சி, இந்நிறுவன வளாகத்தில் நடைபெறும்.</p><h2>பயிற்சியின் உள்ளடக்கம்</h2><p>✓ இப்பயிற்சியில் தங்கம், வெள்ளி, போன்ற உலோகங்களின் தரம் அறிதல்.</p><p>✓ கேரட் மதிப்பீடுகள்.</p><p>✓ ஆசிட் சோதனை.</p><p>✓ எடை அளவு இணைப்பான்.</p><p>✓ விலை நிர்ணயிக்கும் முறை (Board Rate).</p><p>✓ ஹால் மார்க் மற்றும் போலியான நகைகளை அடையாளம் காணும் நடைமுறைகள் போன்றவை கற்றுத்தரப்படும்.</p><p>✓ மேலும் ஆபரணக் கடனுக்கான கணக்கீட்டு முறைகள்.</p><p>✓ தங்க அணிகலன் வகைகள் பற்றிய பயிற்சியும் அளிக்கப்படும்.</p><h2>வேலைவாய்ப்பு வழிகாட்டல்</h2><p>✓ பொதுத்துறை, கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர் பணிக்கான வாய்ப்புகள், அவற்றை பெறும் நடைமுறைகள்.</p><p>✓ மத்திய / மாநில அரசுகள் அரசு கடனுதவி திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்த ஆலோசனைகளும் இந்த பயிற்சியில் வழங்கப்படும்.</p><p>இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் (ஆண்/பெண் /திருநங்கைகள்/ திருநம்பிகள்) 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். குறைந்த பட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்கு பெறும் பயனாளிக்கென குறைந்த வாடகையில் தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.</p><p>மேலும், இப்பயிற்சியின் கூடுதல் விவரங்களைப் பெறவும் மற்றும் முன்பதிவு செய்திடவும் www.editn.in என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ளவும். கைபேசி 8668100181 / 9360221280 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும். (திங்கள் முதல் வெள்ளி வரை ) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை.</p><p>தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, சிட்கோ தொழிற்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சென்னை - 600 032.</p><p>பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முன்னாள் மத்திய மந்திரி சுதர்சன நாச்சியப்பன் மறைவு - ஜோதிமணி இரங்கல் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/former-union-minister-sudarshana-nachiyappan-passes-away-jyothimani-condoles-his-death</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/former-union-minister-sudarshana-nachiyappan-passes-away-jyothimani-condoles-his-death#comments</comments><guid isPermaLink="false">0fd73463-2813-4924-9231-4e5a0fac93e5</guid><pubDate>Thu, 17 Sep 2026 09:47:52 +0000</pubDate><atom:updated>2026-09-17T09:47:52.518Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Jyothimani MP,ஜோதிமணி,passes away,மறைவு,சுதர்சன நாச்சியப்பன்,Sudarshana Nachiyappan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/wjh18qe2/107.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/wjh18qe2/107.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முன்னாள் மத்திய மந்திரி சுதர்சன நாச்சியப்பன் மறைவுக்கு ஜோதிமணி இரங்கல் காங்கிரஸ் எம்பி <a href="https://www.dailythanthi.com/topic/jothimani">ஜோதிமணி </a>இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><h2>சுதர்சன நாச்சியப்பன் மறைவு</h2><p>தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் அறங்காவலரும், முன்னாள் மத்திய இணை மந்திரியுமான மூத்த தலைவர் டாக்டர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் அளவற்ற துயரமும் அளிக்கிறது. இளம் வயதிலேயே  காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டு, தன் வாழ்நாள் முழுவதையும் காங்கிரஸ் இயக்கத்திற்காகவும் மக்களுக்காகவுமே அர்ப்பணித்தவர். </p><p> நாடாளுமன்றத்திலும் பொதுவெளியிலும் விளிம்புநிலை மக்களின் குரலாகவும், பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டு உரிமைகளின் பாதுகாவலராக அவர் ஆற்றிய பணிகள் வரலாற்றில் நிலைத்திருக்கும். அவரை நேரில் சந்திக்கும்போதெல்லாம், எந்த ஒரு இக்கட்டான சூழலிலும் முகத்தில் மாறாத புன்னகையோடு, அமைதியாகவும் நிதானமாகவும் அவர் கையாள்வதைக் கண்டு வியந்ததுண்டு. அந்தப் பக்குவமும் கனிவான பண்பும் இன்று அவர் நம்மிடையே இல்லை என்ற நினைவை தாங்க முடியாததாக்குகிறது.</p><h2>ஆழ்ந்த இரங்கல்</h2><p> இயக்கத்தின் மீது கொண்ட பற்றால் அவர் வழங்கும் ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் எப்போதும் விலைமதிப்பற்றவை. அவரது இழப்பு காங்கிரஸ் பேரியக்கத்திற்கும் எனக்கும் ஈடுசெய்ய முடியாதது. அன்னாரை இழந்து வாடும் அவரது அன்பு மகன் ஜெயசிம்மா அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், காங்கிரஸ் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஏ.ஐ. மூலம் செயலி உருவாக்குவது எப்படி? - சென்னையில் 3 நாள் பயிற்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-to-build-an-app-using-ai-3-day-training-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-to-build-an-app-using-ai-3-day-training-in-chennai#comments</comments><guid isPermaLink="false">0d2bbc8b-a21a-4f65-a7a6-9bbbc3ae8b21</guid><pubDate>Thu, 17 Sep 2026 09:35:15 +0000</pubDate><atom:updated>2026-09-17T09:35:15.762Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,AI technology,ஏ.ஐ. தொழில்நுட்பம்,பயிற்சி வகுப்புகள்,AI,Training classes,ஏ.ஐ.,AI training</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/y5elwcpd/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஏ.ஐ. மூலம் செயலி உருவாக்குவது எப்படி?]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/y5elwcpd/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>கல்வி&amp;வேலைவாய்ப்பு (Eduction and Jobs)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் “செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி செயலி உருவாக்கம்” குறித்து  மூன்று நாள் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.</p><p>இது தொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழ்நாடு </a>அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>மூன்று நாள் பயிற்சி</h2><p>தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், “செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி செயலி உருவாக்கம்” எனும் மூன்று நாள் முழுநேர பயிற்சி 23.09.2026 முதல் 25.09.2026 வரை (காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை), இந்த நிறுவனத்தின் வளாகத்தில் நடைபெறவுள்ளது.</p><h2>பயிற்சி சுருக்கம்</h2><p>பங்கேற்பாளர்கள் தங்கள் யோசனைகளை செயலில் பயனடையும் வகையில் AI prototypes (செயலியாக) மாற்றக் கற்றுக்கொள்வார்கள்.</p><p>முன்னணி ஸ்டார்ட் அப்கள் பயன்படுத்தும் No-Code/ Low-Code AI கருவிகள் பற்றிய பயிற்சி.</p><p>கீழ்கண்ட பிரபலமான தளங்களை கொண்டு நேரடி பயன்பாட்டு செயலிகள் உருவாக்கம்:</p><p>✓ ChatGPT / Gemini Pro / NotebookLM</p><p>✓ Lovable</p><p>✓ Prompt Engineering முறைகள் செயல்முறை பயிற்சி வழிகாட்டியுடன் படிப்படியாக கற்றல்</p><p>✓ AI (செயற்கை நுண்ணறிவு) அடிப்படையிலான வலைத்தளங்கள் மற்றும் செயலிகள் உருவாக்கம்</p><p>✓ தனிப்பட்ட மற்றும் தொழில்துறை தேவைகளுக்கான தானியங்கி முறைகள்</p><p>✓ கல்வி, சுகாதாரம், நிதி, சில்லறை வணிகம் போன்ற துறைகளில் பயன்பாட்டு மாதிரிகள் உருவாக்கம்.</p><p>✓ தயாரிப்பு சிந்தனை மற்றும் ஸ்டார்ட்அப் மனப்பாங்கு உலகளாவியசிக்கல்களுக்கு தீர்வு காணும் AI MVP உருவாக்கம்</p><p>உங்கள் App-இன் prototype-ஐ முதன்மை வழிகாட்டிகள், முதலீட்டாளர்கள் முன் சமர்ப்பிக்கும் திறன்.</p><h2>தொழில் வளர்ச்சி வழிகள்</h2><p>மாணவர்கள், நிறுவனர்கள், ஆரம்ப நிலை தொழிலாளர்கள் ஆகியோருகேற்கு பொருத்தமானது.</p><p>✓ உங்கள் பேராசிரியர் சான்றிதழ் / போட்டிப் பதிவுகளில் காண்பிக்க AI மாதிரிகள்</p><p>✓ Product Managers, Solopreneurs பயன்படுத்தும் கருவிகள் கற்றல்.</p><p>✓ வேலை வாய்ப்பு, ஹேக்கத்தான் போட்டிகள் மற்றும் லிங்க்ட்இன் தளங்களில் செயல்படுத்தும் வாய்ப்புகள்.</p><p>தொழில் முனைவு பாதைகள்</p><p>AI (செயற்கை நுண்ணறிவு) அடிப்படையிலான வணிகம் அல்லது ஃப்ரீலான்சிங் தொடங்க அடித்தளம் அமைத்தல்.</p><p>குறைந்த செலவில், விரைவில் உங்கள் ஸ்டார்ட்அப் யோசனைகளை பரிசோதித்தல்.</p><h2>பதிவு மற்றும் தொடர்பு விவரங்கள்</h2><p>இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்பும் ஆண், பெண் மற்றும் திருநங்கைகள்/ திருநம்பிகள் 18 வயதிற்கு மேல் மற்றும் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓரளவு கணினி அனுபவம் இருத்தல் வேண்டும். தங்கும் விடுதி வசதி குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும். பயிற்சிக்கு முன்பதிவு அவசியம். மேலும் விவரங்களுக்கு மற்றும் முன்பதிவிற்கு www.editn.in அல்லது 8668100181 / 9360221280 என்ற எண்களில் அலுவலக நேரத்தில் (திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை) தொடர்புகொள்ளலாம். முகவரி: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை - 600 032.</p><p>முன்பதிவு அவசியம்: அரசு சான்றிதழ் வழங்கப்படும்</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஓமன் நாட்டில் பணிபுரிய வாய்ப்பு; ஆண்கள் விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/job-opportunity-in-oman-men-may-apply-tamil-nadu-government-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/job-opportunity-in-oman-men-may-apply-tamil-nadu-government-announcement#comments</comments><guid isPermaLink="false">01124cbc-8de3-4dda-ac6d-1842b90ad63e</guid><pubDate>Thu, 17 Sep 2026 09:28:23 +0000</pubDate><atom:updated>2026-09-17T09:28:23.432Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt,Oman,ஓமன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/hovqadsk/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/hovqadsk/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்(OMCL) மூலம் வெளிநாடுகளில் வேலை தேடும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வமான முறையில் வேலைவாய்ப்புகள் பெற்றுத் தருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஓமன் நாட்டில் பல்வேறு பணிகளுக்கு ஆண் பணியாளர்கள் தேவைப்படுவதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் (ம) நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“ஓமன் நாட்டில் பணிபுரிய Production (Exposure in Melting/ Moulding/ Process Control &amp; CNC Operator), Finishing &amp; Inspection (Exposure in Quality/ Final Inspection), மற்றும் Maintenance (Exposure in Mechanical /Electrical Maintenance) பணிக்கு ஆண் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.</p><p>ஓமன் நாட்டில் பணிபுரிய (exposure in Foundry area or Manufacturing Industries) Diploma (background) or ITI (background) தேர்ச்சி பெற்ற இரண்டு வருட பணி அனுபவத்துடன் கூடிய 22 முதல் 35 வயதிற்கு உட்பட்ட Production (Exposure in Melting/ Moulding/Process Control) &amp; CNC Operator, Finishing &amp; Inspection (Exposure in Quality/ Final Inspection) மற்றும் Maintenance (Exposure in Mechanical/Electrical Maintenance) பணிக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். இப்பணிக்கு மாதவருமானம் குறைந்தபட்சம் ரூ. 44,000/- முதல் ரூ.54,000/ வரை ஊதியமாக வழங்கப்படும்.</p><p>மேலும் உணவு, விசா, இருப்பிடம் மற்றும் விமான பயணச்சீட்டு ஆகியவை வேலை அளிப்பவரால் வழங்கப்படும். மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்த பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக ரூ.35,400/- மட்டும் செலுத்தினால் போதுமானது.</p><p>மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள் ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுயவிவரம் அடங்கிய விண்ணப்படிவம், கல்வி, பணி அனுபவ சான்றிதழ், பாஸ்போர்ட் நகல் மற்றும் புகைப்படம் (Resume, Qualification, Experience Certificate, Passport Copy &amp; Photo ஆகியவற்றை 11.10.2026 தேதிக்குள் அனுப்பவும்.</p><p>கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இணையத்தளம் www.omcmanpower.tn.gov.in மற்றும் தொலைபேசி எண்கள் (044-22502267) &amp; வாட்ஸ்ஆப்எண் (9566239685) வாயிலாக அறிந்துகொள்ளலாம்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>அடையாறில் பள்ளி மற்றும் மழைநீர் வடிகால் பணிகள்: ஆணையாளர் நேரில் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/commissioner-personally-inspects-school-and-rainwater-drainage-works-in-adyar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/commissioner-personally-inspects-school-and-rainwater-drainage-works-in-adyar#comments</comments><guid isPermaLink="false">3d36057e-6c40-46ae-a4ed-14f30d3920a6</guid><pubDate>Thu, 17 Sep 2026 09:24:57 +0000</pubDate><atom:updated>2026-09-17T09:24:57.488Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Adyar,பள்ளி,மழைநீர் வடிகால் பணிகள்,Rainwater Drainage Works,Commissioner inspection,ஆணையாளர் ஆய்வு,அடையார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/k73t2f2u/106.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/k73t2f2u/106.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அடையாறு மண்டலத்தில் சென்னை நடுநிலைப்பள்ளி மற்றும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>ஆய்வு</h2><p>பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், திருவான்மியூர், காந்திகிராமத்தில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியினை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள், இன்று (17.09.2026) பார்வையிட்டு, பள்ளியின் செயல்பாடுகள் குறித்தும், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், மாணவர்களுக்கான காலை உணவு செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார். தொடர்ந்து, கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.</p><p>இதனைத் தொடர்ந்து ஆணையாளர் அவர்கள், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இப்பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியினை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">ஆய்வு</a>களின்போது, மண்டல அலுவலர் என்.காளிதாஸ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அரியலூர் கூட்டுறவு சங்க சில்லறை விற்பனை பால் விலை லிட்டருக்கு ரூ.8 உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ariyalur-co-op-retail-milk-price-hiked-by-rs-8-per-litre</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ariyalur-co-op-retail-milk-price-hiked-by-rs-8-per-litre#comments</comments><guid isPermaLink="false">025e203c-61d9-4906-960c-7dabcfb27cbc</guid><pubDate>Thu, 17 Sep 2026 09:17:08 +0000</pubDate><atom:updated>2026-09-17T09:17:08.590Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Ariyalur,அரியலூர்,பால்,கூட்டுறவு சங்கம்,milk price hike,விலை அதிகரிப்பு,cow milk</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-08/uuera5d1/miklkerer.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ பால் விநியோகம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அரியலூர் கூட்டுறவு சங்க சில்லறை விற்பனை பால் விலை லிட்டருக்கு ரூ.8 உயர்வு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-08/uuera5d1/miklkerer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>அரியலூர்,</p><p>அரியலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் சில்லறையில் விற்பனை செய்யப்படும் பால் விலை, திடீரென லிட்டருக்கு 8 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அதிரடி விலை உயர்வுக்கு பிறகு, அரியலூரில் ஒரு லிட்டர் பால் 54 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் மாற்றத்தால் அரியலூர் மாவட்ட பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.</p><h2>விலை உயர்வுக்கான காரணம்</h2><p>தமிழக அரசு அண்மையில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88">பால் </a>உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று, பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 7 ரூபாய் உயர்த்தியது. இதற்காக அரசு அறிவித்துள்ள 7 ரூபாய் ஊக்கத்தொகையானது, ஆவின் நிறுவனத்திற்கு அனுப்பப்படும் பாலுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.</p><p>இருப்பினும், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">கூட்டுறவு சங்கங்கள் </a>மூலம் நேரடியாக உள்ளூர் நுகர்வோருக்கு சில்லறை விலையில் விற்பனை செய்யப்படும் பாலுக்கு இந்த ஊக்கத்தொகை அரசு தரப்பில் இருந்து கிடைக்கவில்லை. இதன் காரணமாக, 1 லிட்டர் பால் ரூ.46-க்கு வழங்கப்பட்ட நிலையில் இன்று (வியாழக்கிழமை) 8 ரூபாய் விலை உயர்வு அமல்படுத்தப்பட்டு லிட்டருக்கு ரூ.54-க்கு விற்பனை செய்யப்பட்டது என கூட்டுறவு சங்கங்களின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.</p><h2>விநியோக நிலவரம்</h2><p>அரியலூர் மாவட்டத்தில் தினசரி சுமார் ஒரு லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, திருச்சி மற்றும் சென்னை உள்ளிட்ட ஆவின் நிலையங்களுக்கு அனுப்பப்படுகிறது. அதே வேளையில், உள்ளூர் மக்களின் தேவைகளுக்காக குறிப்பிட்ட அளவு பால் சில்லறை விற்பனையிலும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஆவின் அல்லாத இந்த சில்லறை விற்பனை பாலின் விலை உயர்ந்துள்ளதால், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் பெரும் பொருளாதார சுமைக்கு ஆளாகியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>“முதல்-அமைச்சர் வந்துவிட்டார்… முதலீடுகள் எப்போது வரும்?” - டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-chief-minister-has-arrived-when-will-the-investments-come-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-chief-minister-has-arrived-when-will-the-investments-come-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">cd61863f-1bf8-46f7-917a-fc3535f8042e</guid><pubDate>Thu, 17 Sep 2026 09:17:06 +0000</pubDate><atom:updated>2026-09-17T09:17:06.303Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,AMMK,அமமுக</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/2g6ncqz2/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/2g6ncqz2/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>“மக்கள் வரிப்பணத்தில் அரசு முறைப் பயணமாக சென்ற முதலமைச்சர் வந்துவிட்டார். அவர் ஈர்த்த முதலீடுகள் எப்போது வரும்?” என்று டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.</p><p>அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>முதலீடுகளை ஈர்ப்பதற்கு தானா?</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்யின் அரசுமுறை வெளிநாட்டுப் பயணத்தின்போது ரூ.15,300 கோடிக்கும் அதிகமான முதலீட்டு முன்மொழிவுகள் மற்றும் உறுதிமொழிகள் பெறப்பட்டிருப்பதாகவும், அதன் மூலம் 10 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என எதிர்பார்ப்பதாகவும் தமிழக அரசு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. முதல்-அமைச்சர் பயணிகள் விமானத்தில் மக்களோடு மக்களாகப் பயணிக்கிறார், முதலீடுகளை குவித்துக்கொண்டு வரப்போகிறார் என தவெகவினர் பரப்பிய ரீல்ஸ்களுக்கும், முதல்-அமைச்சர் முன்னிலையில் முன்மொழியப்பட்ட முதலீடுகளுக்கும் இடையிலான வித்தியாசம் மலைக்கும் மடுவுக்குமானதாக அமைந்திருக்கிறது.</p><p>முதலீடுகளை ஈர்க்கச் சென்ற முதல்-அமைச்சர் விஜய்யின் அரசுமுறைப் பயணத்தில், முதலீட்டாளர்களுடனான சந்திப்புகள், தொழில் ஒப்பந்தங்கள், வேலைவாய்ப்புகள் உருவாக்கம் மற்றும் அதன் பொருளாதாரப் பயன்கள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட வேண்டிய அரசு நிர்வாகமோ அதற்கு மாறாக மோட்டார் வாகனப் பந்தயத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்; ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார் என செய்திகளை வெளியிட்டதன் மூலம், முதல்-அமைச்சரின் இந்த வெளிநாட்டுப் பயணம் உண்மையிலேயே மக்களுக்கு பயனளிக்கக்கூடிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு தானா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.</p><h2>மீதமுள்ள 5 நாட்களில் யார் யாரைச் சந்தித்தார்?</h2><p>கடந்த 10-ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்ட முதல்-அமைச்சர் விஜய்யின் அரசுமுறை வெளிநாட்டுப் பயணத்தில், 14-ஆம் தேதி ஒருநாள் மட்டுமே முதலீட்டாளர்களைச் சந்தித்ததாகவும், முதலீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகவும் அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு கூறுகிறது.</p><p>ஆறு நாட்கள் அரசுமுறைப் பயணத்தில் முதலீட்டாளர்களைச் சந்தித்த ஒருநாள் போக, மீதமுள்ள ஐந்து நாட்களில் முதல்-அமைச்சர் யார் யாரைச் சந்தித்தார்? தொழில் முதலீட்டை தமிழகத்தை நோக்கி ஈர்க்கும் வகையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? என்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கும், முதல்-அமைச்சருக்கும் உள்ளது.</p><h2>லண்டன் செல்ல அவசியம் என்ன?</h2><p>அதோடு, உத்தரப் பிரதேச மாநிலத்தின் நொய்டாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் (Samvardhana Motherson International Limited) எனும் பன்னாட்டு நிறுவனத்தின் கூட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு லண்டன் வரை செல்ல வேண்டிய அவசியம் என்ன? இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஒரு நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தையே தனது வெளிநாட்டுப் பயணத்தின் முக்கிய சாதனையாகக் காட்டுவது கேலிக்கூத்தாக உள்ளது.</p><p>மேலும், ஐரோப்பாவின் முன்னணி வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்று ரூ.3,000 கோடி முதலீடு செய்ய விரும்புவதாகவும், அந்நிறுவனத்தின் பெயரைக்கூட குறிப்பிடாமல் தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பு, அத்தகைய முதலீடு உண்மையில் தமிழகத்திற்கு வருமா அல்லது வராதா என்ற சந்தேகத்தை எழுப்பும் வகையில் அமைந்திருக்கிறது.</p><h2>கிடைத்த பயன்கள்தான் என்ன?</h2><p>பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் எனப் பல்வேறு முக்கியமான திட்டங்களும் அரசு நிகழ்வுகளும் ஒத்திவைக்கப்படும் அளவிற்கு, முதல்-அமைச்சர் விஜய்யின் வெளிநாட்டுப் பயணத்தால் கிடைத்த பயன்கள்தான் என்ன? என்ற கேள்வியும் அனைவரின் மத்தியிலும் எழத்தொடங்கியுள்ளது.</p><p>தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களால் சந்தி சிரிக்கும் சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருட்களின் தாராளப் புழக்கம், பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் தொடர் போராட்டம், கொள்முதல் செய்யப்படாமல் மழையில் நனைந்து வீணாகும் நெல்மூட்டைகள், அடிக்கடி ஏற்படும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு, புதிய தலைமைச் செயலகம் கட்டும் முடிவுக்கு எதிர்ப்பு, மாநிலம் முழுவதும் ஆவின் பால் தட்டுப்பாடு, விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு என ஒட்டுமொத்த மாநிலமும், மக்களும் அசாதாரண சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கும் நிலையில், மாநிலத்தின் முதல்-அமைச்சர் என்ற பொறுப்பை மறந்து, எதைப் பற்றியும் கவலையில்லாமல், முதலீடுகளை ஈர்க்கிறோம் என்ற பெயரில் லண்டனுக்கு சென்று ரீல்ஸ் கன்டென்ட்களைத் தேற்றி வந்திருகிறார் என பொதுமக்கள் கொந்தளிக்கின்றனர்.</p><h2>முதலீடுகள் எப்போது வரும்?</h2><p>தவெக அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழும் ஒவ்வொரு முறையும் பழைய சம்பவங்களை திருத்தி பொய் பொய்யாக பேசி, தேவையில்லாத சர்ச்சைகளை ஏற்படுத்தி, சோதனை, ரெய்டு, கைது எனும் பெயரில் அதிகார அமைப்புகளை ஏவியும் மக்கள் பிரச்சினைகளைத் திசைதிருப்புவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கும் தவெக அரசு, முதல்-அமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் ஏமாற்றத்தில் முடிந்ததைத் திசைதிருப்ப முயன்றால், அதற்கான எதிர்வினை மிகக் கடுமையாக இருக்கும்.</p><p>எனவே, ஆட்சிக்கு வந்த நாள் முதல் எதற்கெடுத்தாலும் “வெள்ளை அறிக்கை வெளியிடுவோம், வெள்ளை அறிக்கை வெளியிடுவோம்” எனக் கூறிவரும் தவெக அரசு, முதல்-அமைச்சரின் இந்த அரசுமுறை வெளிநாட்டுப் பயணத்தில் நாள் வாரியாக எந்தெந்த முதலீட்டாளர்களை முதல்-அமைச்சர் சந்தித்தார்? அதன் மூலம் எவ்வளவு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">முதலீடுகள் </a>ஈர்க்கப்பட்டுள்ளன? எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன? எத்தனை வேலைவாய்ப்புகள் உருவாகும்? இவை அனைத்தும் எத்தனை நாட்களுக்குள் செயல்பாட்டுக்கு வரும்? என்பது தொடர்பான விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தும் இந்த நேரத்தில், முதல்-அமைச்சரிடம் நாங்கள் கேட்கும் கேள்வி ஒன்றுதான்: “மக்கள் வரிப்பணத்தில் அரசு முறைப் பயணமாக சென்ற முதல்-அமைச்சர் வந்துவிட்டார்… அவர் ஈர்த்த முதலீடுகள் எப்போது வரும்?”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் 2 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படாது  - தமிழக அரசு அறிவிப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ganesha-idols-will-not-be-immersed-in-water-at-2-places-in-chennai-tamil-nadu-government-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ganesha-idols-will-not-be-immersed-in-water-at-2-places-in-chennai-tamil-nadu-government-announcement#comments</comments><guid isPermaLink="false">6aa47486-e5bd-4d19-aa98-382af82b4976</guid><pubDate>Thu, 17 Sep 2026 09:10:43 +0000</pubDate><atom:updated>2026-09-17T09:10:43.977Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai Beach,சென்னை கடற்கரை,விநாயகர் சிலைகள்,vinayagar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/nc6nu4qw/vinagar33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ தமிழக அரசு ]]></media:title><media:description type="html"><![CDATA[  தமிழக அரசு அறிவிப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/nc6nu4qw/vinagar33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பட்டினப்பாக்கம், நீலாங்கரை கடற்கரைகளில் அடுத்தாண்டு முதல் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">விநாயகர் சிலைகள்</a> கரைக்க அனுமதி வழங்கப்படாது என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.</p><p>சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர் , அறிவிக்கப்படாத நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் கடந்த 2023-ம் ஆண்டு மனுத்தாக்கல் செய்திருந்தார்.</p><p>இந்த வழக்கில் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பட்டினப்பாக்கம், நீலாங்கரை கடற்கரைகளில் சிலைகளை கரைக்க அனுமதிக்க இயலாது என்றும், இந்த 2 இடங்களிலும் கரைக்கப்படும் சிலைகளை மற்ற 4 இடங்களுக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக அரசின் கருத்தை அறிந்து, செப்.16-ம் தேதி தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. </p><p>இந்த வழக்கு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் பிரசாந்த் கார்கவா தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், </p><p>"நீலாங்கரை, பட்டினப்பாக்கம் கடற்கரைகளில் கரைக்கப்படவுள்ள சிலைகளை, மற்ற 4 பகுதிகளுக்கு அனுப்புவதில், சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், பாலவாக்கம் கடற்கரையில் கரைக்கவுள்ள 450 சிலைகளை கோவளத்துக்கும், பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரைக்கவுள்ள 250 சிலைகளை எண்ணூருக்கும் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது" என கூறப்பட்டுள்ளது.</p><p>அப்போது குறுக்கிட்ட தீர்ப்பாய நடுவர், விநாயகர் சிலைகள் கரைப்பது தொடர்பான வழக்கில் உத்தரவு பிறப்பித்து மூன்றாண்டுகள் கடந்து விட்டன, கடந்தாண்டு விநாயகர் சதுர்த்தி முடிந்தபிறகு, நடப்பாண்டு சிலைகளைக் கரைப்பதற்காக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? என கேள்வி எழுப்பினர்.</p><p>அதற்கு தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது, அதில்,</p><p>அடுத்தாண்டு முதல் நீலாங்கரை, பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிகளில் சிலைகள் கரைக்க அனுமதி அளிக்கப்படமாட்டாது என்று அரசுத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு பிரமாணப்பத்திரத்தை நாளை (செப்.17) தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு  தள்ளிவைத்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tnpsc-group-1-main-exam-hall-ticket-release</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tnpsc-group-1-main-exam-hall-ticket-release#comments</comments><guid isPermaLink="false">d72ade1f-053a-48f9-bb61-6615c35f2df1</guid><pubDate>Thu, 17 Sep 2026 09:03:30 +0000</pubDate><atom:updated>2026-09-17T09:03:30.622Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎஸ்சி,TNPSC,Hall Ticket,குரூப்-1 முதல்நிலைத் தேர்வு,Group-1 Exam,ஹால் டிக்கெட் வெளியீடு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/crdz83s7/tnpsc.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/crdz83s7/tnpsc.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>கல்வி&amp;வேலைவாய்ப்பு (Eduction and Jobs)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் பல்வேறு போட்டி தேர்வுகளை எழுதும் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளை தேர்வாணையம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.</p><p>இந்த நிலையில், குரூப்-1,  முதல்நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் தங்கள் ஹால்டிக்கெட்டுகளை tnpscexams.in என்ற இணையத்தில் விண்ணப்ப எண் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 05/2026, நாள் 23.06.2026-ன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1 (தொகுதி- பணிகள்) பதவிகளுக்கான முதல்நிலை (கொள்குறி வகை) (ஒளிக்குறி உணரி) தேர்வு 27.09.2026 முற்பகல் நடைபெற உள்ளது.</p><p>தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு (Hall Ticket) தேர்வாணையத்தின் இணைய தளம் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவு (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பழங்குடியினர் உற்பத்தி பொருட்களுக்கு புவிசார் குறியீடு; ஆலோசகர்கள் விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/geographical-indication-for-tribal-products-consultants-may-apply-tamil-nadu-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/geographical-indication-for-tribal-products-consultants-may-apply-tamil-nadu-government#comments</comments><guid isPermaLink="false">b7314ade-88d0-41c7-b4c5-5e72e82c7544</guid><pubDate>Thu, 17 Sep 2026 08:52:48 +0000</pubDate><atom:updated>2026-09-17T08:52:48.137Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/lvovsv6i/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/lvovsv6i/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“தமிழ்நாடு அரசின் சமூக நீதித்துறையின் கீழ் செயல்படும் பழங்குடியினர் நல இயக்குநரகம் சார்பில், தமிழ்நாட்டின் பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் சமூகங்களின் தனித்துவமான உற்பத்திப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு (Geographical Indication – GI) பதிவைப் பெறுவதற்காக, புவிசார் குறியீடு தொடர்பான விண்ணப்பப் பதிவு செய்வதில் அனுபவம் பெற்ற ஆலோசகர்கள் அல்லது நிறுவனங்களிடமிருந்து விருப்பக் கோரிக்கைகள் (Expression of Interest – EoI) வரவேற்கப்படுகின்றன.</p><p>முன்மொழியப்பட்ட பணிகளின் அடிப்படையில், கள ஆய்வு மற்றும் ஆவணப்படுத்துதல், புவிசார் குறியீட்டுக்குரிய பகுதியை வரைபடமிடுதல், பொருளுக்கும் அதன் உற்பத்திப் பகுதிக்கும் இடையிலான தொடர்பை உறுதிப்படுத்தும் ஆதாரங்களைத் தொகுத்தல் மற்றும் பொருட்களின் விவரக்குறிப்புகள், ஆய்வு அமைப்பு மற்றும் தரநிலைகள் உள்ளிட்ட “Statement of Case” தயாரித்தல் ஆகியவை அடங்கும். மேலும், உற்பத்தியாளர் அமைப்பை உருவாக்குதல், அங்கீகரிக்கப்பட்ட பயனாளர்களைப் பதிவு செய்தல், பின்னர் பதிவுச் சான்றிதழ் பெற்றுத் தருதல் ஆகிய பணிகளும் இதில் அடங்கும்.</p> <p>இந்த விருப்பக் கோரிக்கை (EoI), திட்ட மதிப்பீட்டிற்கான செலவினக் கணக்கீட்டை (Price Discovery) மேற்கொள்வதற்காக மட்டுமே கோரப்படுகிறது. இதில் பங்கேற்கும் ஆலோசகர்கள் / நிறுவனங்கள் தங்களது நிதி முன்மொழிவில் உரிய செலவின விவரங்களை தெளிவாக குறிப்பிட வேண்டும்.</p><p>இதில் பங்கேற்க விருப்பமுள்ள ஆலோசகர்கள் / நிறுவனங்கள், தங்களது தகுதி, திறன் மற்றும் அனுபவ விவரங்களுடன் உரிய நிதி மதிப்பீட்டை tntribalwelfare2018@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 25.09.2026 அன்று பிற்பகல் 3.00 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p>மேலும் தகவல்களுக்கு https://www.tntribalwelfare.tn.gov.in/ என்ற இணையதளத்தைப் பார்வையிடவும். விவரங்களுக்கு பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளவும்: திரு.ச.பொன்வைத்தியநாதன் – 9489941941 / திரு. பொ. சிவக்குமார் – 8489458489.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை- போலீசார் விசாரணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-college-student-commits-suicide-by-hanging-herself-police-investigating</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-college-student-commits-suicide-by-hanging-herself-police-investigating#comments</comments><guid isPermaLink="false">96e03fe0-4155-4588-823a-37c3db110923</guid><pubDate>Thu, 17 Sep 2026 08:22:19 +0000</pubDate><atom:updated>2026-09-17T08:22:19.185Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>College student,கல்லூரி மாணவி,Thoothukudi,தூத்துக்குடி,தூக்குப்போட்டு தற்கொலை,commits suicide by hanging,Police investigating,போலீசார் விசாரணை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/udca33my/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/udca33my/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF">கல்லூரி மாணவி</a> வீட்டில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">தூக்குப்போட்டு தற்கொலை</a> செய்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். </p><h2>கல்லூரி மாணவி</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சந்தையாடி தெருவைச் சேர்ந்தவர் லாமேக் வினோத். இவரது மகள் பெல்சியா (வயது 19), பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று வழக்கம் போல் கல்லூரி முடிந்து வீட்டிற்கு திரும்பிய பெல்சியா, இரவு வீட்டின் தனி அறைக்குச் சென்றுள்ளார். </p><h2>தூக்குப்போட்டு தற்கொலை</h2><p>நீண்ட நேரமாகியும் அறைக்கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் சென்று பார்த்தபோது, அறையின் விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் அவர் சடலமாகக் கிடந்துள்ளார். </p><h2>போலீசார் விசாரணை</h2><p>இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>சுதர்சன நாச்சியப்பன் மறைவு: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/passing-of-sudarshana-nachiappan-communist-party-of-india-condoles</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/passing-of-sudarshana-nachiappan-communist-party-of-india-condoles#comments</comments><guid isPermaLink="false">85d0ddda-789d-4095-80ab-0a7fcd3c642e</guid><pubDate>Thu, 17 Sep 2026 08:21:18 +0000</pubDate><atom:updated>2026-09-17T08:21:18.664Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Communist Party of India,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி,சுதர்சன நாச்சியப்பன்,Sudarshana Nachiappan</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/lml78uup/15.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/lml78uup/15.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுதர்சன நாச்சியப்பன் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இது குறித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் விடப்பட்டுள்ள இரங்கல் செய்தி பின்வருமாறு;</p><p>”இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் (வயது 78) இன்று உடல்நலக் குறைவால் சிவகங்கையில் காலமானார் என்ற செய்தி மிகுந்த துயரத்தை தருகிறது. இ.எம்.சுதர்சன நாச்சியப்பனின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் ஏரியூர் ஆகும். அவர் எம்.ஏ., பி.எல்., படித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து பிஎச்.டி. பட்டம் பெற்றுள்ளார்.</p> <p>அவர், 1999 முதல் 2004 வரை சிவகங்கை மக்களவை தொகுதி உறுப்பினராகவும், 2004 முதல் 2016ம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார். மன்மோகன் சிங் அமைச்சரவையில் 2013 முதல் 2014ம் ஆண்டு வரை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.</p><p>சுதர்சன நாச்சியப்பன் சமூக நீதியில் மிகுந்த அக்கறையும், ஈடுபாடும் கொண்டவர். இந்தியா சார்பில் ஐக்கிய நாடுகள் சபை பொதுக்கூட்டத்தில் இரண்டு முறை பேசியிருக்கிறார். ஐ.நா சபையின் அமைதிக்கான முன்னெடுப்புகள், உலகமயமாக்கல் ஆகியவை தொடர்பாக உரையை நிகழ்த்தியுள்ளார்.</p><p>அவரது மறைவிற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>விஜய் லண்டன் பயணம் இன்ப சுற்றுலாவா.. முதலீடுகள் ஈர்ப்பா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-vijays-london-trip-a-pleasure-tour-or-for-attracting-investments-edappadi-palaniswami-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-vijays-london-trip-a-pleasure-tour-or-for-attracting-investments-edappadi-palaniswami-asks#comments</comments><guid isPermaLink="false">6b450770-66aa-4327-af4f-74906a6d9580</guid><pubDate>Thu, 17 Sep 2026 08:19:30 +0000</pubDate><atom:updated>2026-09-17T08:19:30.524Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,எடப்பாடி பழனிசாமி,Edappadi Palaniswami,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/yflw19oi/CHENNAI-15.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/yflw19oi/CHENNAI-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>சம்பந்தமில்லாத அதிகாரிகளை அழைத்துச் சென்று தொழில் முதலீடுகளை ஈர்த்ததாக தவெக அரசு கூறியுள்ளது. லண்டனில் முதலீடுகளை ஈர்க்க தொழில்துறை அமைச்சர், அதிகாரிகளை அழைத்துச் செல்லாதது ஏன்?; முதல்-அமைச்சர் விஜய் லண்டன் சென்றது முதலீடுகளை ஈர்க்கவா? அல்லது இன்பச் சுற்றுலாவா?. என மக்கள் கேள்வி கேட்கும் நிலை உள்ளது. தமிழ்நாட்டில் இருக்கும் நிறுவனங்களுடன் லண்டனில் சென்று எதற்காக ஒப்பந்தம் போடுகிறீர்கள்?. </p><p>தமிழ்நாட்டில் எங்கேயும் மின்வெட்டு இல்லை என்று சொல்லிவிட்டு, மின் பற்றாக்குறை இருப்பதாகவும் வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்க இருப்பதாகவும் அந்தத் துறையின் அமைச்சர் கூறுகிறார். மின் வெட்டே இல்லை என்றால், எதற்காக வெளிச் சந்தையில் மின்சாரத்தை அரசு வாங்க வேண்டும்?. ஆனால் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேசும் நிகழ்ச்சியிலேயே மின்வெட்டு நேரிடுகிறது. தமிழக அமைச்சர் பேட்டி அளிக்கும்போதே மின்வெட்டு ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியில் மின்சார உற்பத்தியை பெருக்கி அண்டை மாநிலங்களுக்கு உபரி மின்சாரத்தை வழங்கினோம். இந்த அரசுக்கு நிர்வாகத் திறமை இல்லாததால் மின் கொள்முதலில் திட்டமிடல் இல்லாமல் இருக்கிறது.</p><p>தவெக ஆட்சிக்கு வந்த பிறகு நான்கே மாதங்களில் பல்வேறு போராட்டங்கள் நடைபெறுகின்றன. தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு பிறகு தான் அதிக ஊழல் நடைபெறுகிறது. முன்பு கொடுத்ததை வாங்கினார்கள், இப்போது டிமாண்ட் செய்து வாங்குகிறார்கள். லஞ்சம் வாங்கவில்லை என்றால் அரசு அலுவலகங்களில் சோதனை நடத்தும்போது பணம் எப்படி கைப்பற்றப்படுகிறது?.</p><p>தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது, அடியோடு சீர்குலைந்துவிட்டது. கொலை, கொள்ளை, பாலியல் சீண்டல் என குற்றம் நடக்காத நாளே இல்லை. தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்டவற்றின் விலை உயர்வை தவெக அரசு கட்டுப்படுத்தவில்லை. ரீல்ஸ் போடுவது, ரீல் விடுவது தான் த.வெ.க அரசின் சாதனையாக உள்ளது. தவெக கட்சி தொடங்கி 3 ஆண்டுகள்தான் ஆகிறது; அவர்களுக்கு எந்த அனுபவமும் கிடையாது.</p><p>தமிழக அரசுக்கு கடன் சுமை இருக்கும்போது புதிய தலைமைச் செயலகம் தேவைதானா? கடன் சுமை சீரானதும் கட்டிக் கொள்ளலாமே, அதுவும் மீனவர்கள் அதிகம் வாழும் பகுதி, குடியிருப்புகள், பள்ளிகள் இருக்கும் பகுதியில் அமையக் கூடாது. தவெக அரசு இதுவரை ரூ.40,000 கோடி கடன் வாங்கியுள்ளது. நெரிசல் இல்லாமல், அனைவரும் வந்து செல்லக்கூடிய நல்ல இடத்தில் புதிய தலைமைச் செயலகத்தை கட்ட வேண்டும். நடுநிலையாக இருப்பதாக சபாநாயகர்தான் கூறுகிறார், நேரலையில் பார்த்தால் மக்களுக்கு தெரியும்.</p><p>அதிமுக நிர்வாகிகள் இல்லத்தில் சோதனை நடத்தினால் ஒன்றும் கிடைக்காது. எங்கள் வீட்டில் எதுவும் இல்லை, அரசிடம் இருந்துதான் நாங்கள் நிவாரணம் பெற வேண்டிய நிலை உள்ளது. மிசா, சர்க்காரியா கமிஷன் பிரச்சினை பற்றி தற்போது பேசி என்ன பயன்? இதனால் மக்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது?. மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக விரைவில் ஆதரவு தருவார்கள். தவெக ஆட்சிக்கு துணை நிற்கும் இடதுசாரிகளே இடைத்தேர்தலை திணிக்கப்பட்டவை என கூறுகின்றனர். மக்கள் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர். இடைத்தேர்தலில் தவெகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்: கொசுக்களை ஒழிக்கும் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் - டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rising-dengue-fever-need-to-intensify-mosquito-control-operations-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rising-dengue-fever-need-to-intensify-mosquito-control-operations-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">2c59336d-c372-4aa8-befb-706ebd222971</guid><pubDate>Thu, 17 Sep 2026 08:18:10 +0000</pubDate><atom:updated>2026-09-17T08:18:10.923Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,டெங்கு காய்ச்சல்,Dengue Fever,முன்னெச்சரிக்கை நடவடிக்கை,Mosquito,கொசு ஒழிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/rjgopmgv/Untitled-12.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/rjgopmgv/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலுக்கு அடிப்படைக் காரணமான கொசுக்களை ஒழிக்கும் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழகத்தில் சுமார் 16 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அதில் 9 பேர் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.</p><p>டெங்கு காய்ச்சலால் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து, போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும், டெங்குவைப் பரப்பும் ஏடிஸ் (Aedes) கொசுக்களை ஒழிப்பதிலும் சுகாதாரத்துறை காட்டிய அலட்சியமே 9 பேரின் உயிரிழப்புக்குக் காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.</p><p>காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப பரவும் நோய்த்தொற்றுகளின் பாதிப்பு அதிகரித்த பின்னரே நடவடிக்கை எடுக்கும் அணுகுமுறையைக் கைவிட்டு, பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாகவே அதற்குரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு சுகாதாரத்துறைக்கு உண்டு என்பதை இனியாவது உணர்ந்து செயல்பட வேண்டும்.</p><p>எனவே, தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலுக்கு அடிப்படைக் காரணமான கொசுக்களை ஒழிக்கும் பணிகளைத் தீவிரப்படுத்துவதோடு, டெங்குவால் பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சைகளை வழங்கிட வேண்டும் என சுகாதாரத்துறையையும், தவெக அரசையும் வலியுறுத்தும் இந்நேரத்தில், பொதுமக்களும் மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருந்திட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பைக் மீது வாகனம் மோதி விபத்து: இளம்பெண் பலி; கணவர், குழந்தை படுகாயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/accident-young-woman-dies-after-vehicle-hits-bike-husband-and-child-injured</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/accident-young-woman-dies-after-vehicle-hits-bike-husband-and-child-injured#comments</comments><guid isPermaLink="false">a99980f6-4e1d-4093-bc77-3245a4e9542e</guid><pubDate>Thu, 17 Sep 2026 08:04:39 +0000</pubDate><atom:updated>2026-09-17T08:04:39.317Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,Thoothukudi,தூத்துக்குடி,bike,பைக்,Kovilpatti,கோவில்பட்டி,வாகனம்,Vehicle,படுகாயம்,seriously injured,இளம்பெண் பலி,young woman killed</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/5ei46ee7/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விபத்து, இளம்பெண் பலி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/5ei46ee7/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி - சாத்தூர் சாலையில் பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">இளம்பெண் உயிரிழந்தார்</a>. அவரது கணவர் மற்றும் ஒரு வயது குழந்தை படுகாயம் அடைந்தனர். </p><h2>தனியார் நிறுவன தொழிலாளி</h2><p>தூத்துக்குடி மாவட்டம், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF">கோவில்பட்டி </a>வேலாயுதபுரத்தைச் சேர்ந்த சிவசங்கர் (வயது 30), கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். இவரது மனைவி சுபிக்சா(27). இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது. </p><h2>பைக்கில் பயணம்</h2><p>இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்துள்ளது. இதையடுத்து குழந்தையைச் சமாதானப்படுத்துவதற்காக சிவசங்கர், மனைவியையும் குழந்தையையும் தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு கோவில்பட்டி-சாத்தூர் சாலையில் சென்றுள்ளார். </p><h2>அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து</h2><p>தனியார் கல்லூரி அருகே சென்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, கண் இமைக்கும் நேரத்தில் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்றது. இந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">விபத்தில்</a> தூக்கி வீசப்பட்ட சிவசங்கர், சுபிக்சா மற்றும் குழந்தை ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர். </p><p>அந்த வழியாக சென்றவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், ஆபத்தான நிலையில் இருந்த சுபிக்சா மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். </p><h2>இளம்பெண் உயிரிழப்பு</h2><p>அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை தீவிரமாக தேடி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம்: தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு எச்சரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/complaint-regarding-extra-charges-for-dengue-treatment-tamil-nadu-health-department-warns-private-hospitals</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/complaint-regarding-extra-charges-for-dengue-treatment-tamil-nadu-health-department-warns-private-hospitals#comments</comments><guid isPermaLink="false">aadfb7a1-0190-4f2c-a893-d243543d4f12</guid><pubDate>Thu, 17 Sep 2026 08:03:02 +0000</pubDate><atom:updated>2026-09-17T08:03:02.895Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Dengue,டெங்கு காய்ச்சல்,Dengue Fever,Treatment,சிகிச்சை,health department,கூடுதல் கட்டணம்,தனியார் மருத்துவமனை,Tamil Nadu Health Department,Private hospitals,Extra Charges,தமிழக சுகாதாரத்துறை,கூடுதல் கட்டணம் வசூல்,டெங்கு காய்ச்சல் பாதிப்பு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/19xjte5i/kler.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/19xjte5i/kler.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/dengue-fever">டெங்கு காய்ச்சல்</a> சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக வந்த புகாரை தொடர்ந்து தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. </p><h2>டெங்கு காய்ச்சல் பாதிப்பு </h2><p>தமிழ்நாட்டில் <a href="https://www.dailythanthi.com/topic/dengue-fever">டெங்கு காய்ச்சல் பாதிப்பு</a> நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு 9 பேர் பலியாகியுள்ளனர். 16 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும் வருகின்றனர்.  </p><p>இந்த நிலையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு செல்லும்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தமிழக சுகாதாரத் துறைக்கு புகார்கள் வந்தன.</p><h2>கூடுதல் கட்டணம் வசூல் புகார்</h2><p>அதாவது, சில தனியார் மருத்துவமனைகளில், <a href="https://www.dailythanthi.com/topic/dengue-fever">டெங்கு காய்ச்சல்</a> பாதிப்புக்கு சாதாரண சிகிச்சைக்கு ரூ.22 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரையும், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தால் ரூ.75 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரையும் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. </p><h2>புகார்களுக்கு 104</h2><p>இதனைத் தொடர்ந்து, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. விதிகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால், துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளது. மேலும், இதுபோன்ற புகார்களுக்கு 104 என்ற எண்ணை தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன் - மனைவி தற்கொலை... அதிர்ச்சி சம்பவம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/husband-wife-suicide-over-childlessness-shocking-incident</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/husband-wife-suicide-over-childlessness-shocking-incident#comments</comments><guid isPermaLink="false">e90b6f84-24f6-4217-8b4d-c5496ab7c612</guid><pubDate>Thu, 17 Sep 2026 07:43:00 +0000</pubDate><atom:updated>2026-09-17T07:43:00.455Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thanjavur,தஞ்சாவூர்,தற்கொலை,Suicide</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/qvlpnav1/Untitled-11.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/qvlpnav1/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர்,</p><p>குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>குழந்தை இல்லை</h2><p>தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மகிழங்கோட்டை ஊராட்சி கீழக்காடு பகுதியை சேர்ந்தவர் சண்முகநாதன் (51 வயது). இவருடைய மனைவி வித்யா (42 வயது). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. குழந்தை இல்லாததால் இந்த தம்பதி மிகுந்த மன வேதனையில் இருந்து வந்தனர். வித்யா, மகிழங்கோட்டை மேலக்காடு பகுதியில் உள்ள தனது அக்கா வனிதா வீட்டில் வந்து தங்கி இருந்தார்.</p><h2>தீக்குளித்து தற்கொலை</h2><p>இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்ற வித்யா, திடீரென்று தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். தீயின் வேதனை தாங்காமல் அவர் சத்தம்போட்டு அலறினார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து வித்யாவை மீட்டு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.</p><p>அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வித்யா இறந்து விட்டதாக கூறினர். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.</p><h2>தூக்குப்போட்டு தற்கொலை</h2><p>இதனிடையே வித்யா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதை சண்முகநாதனிடம் தெரிவிப்பதற்காக உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் அவரது போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் இணைப்பு கிடைக்கவில்லை.</p><p>இந்த நிலையில் மதுக்கூர் அருகே பத்தாங்காடு கிராமத்தில் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்குவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் சண்முகநாதனின் அண்ணன் பரந்தாமன் அங்கு சென்று பார்த்தபோது அது சண்முகநாதன் என்பது தெரியவந்தது. அவருடைய உடலை மதுக்கூர் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>விளைச்சல் பாதிப்பால் தேங்காய் விலை உயர வாய்ப்பு... இருப்பு வைக்கும் விவசாயிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coconut-prices-likely-to-rise-due-to-impact-on-yield</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coconut-prices-likely-to-rise-due-to-impact-on-yield#comments</comments><guid isPermaLink="false">e6e812d3-ffbf-4a62-a400-addb17cab7b3</guid><pubDate>Thu, 17 Sep 2026 07:42:39 +0000</pubDate><atom:updated>2026-09-17T07:42:39.033Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coconut,தேங்காய்,தேங்காய் விலை,Coconut Price</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/xmzpz8l3/CHENNAI-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/xmzpz8l3/CHENNAI-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><h2>தேங்காய் விளைச்சல்</h2><p>திருப்பூர் மாவட்டம் உடுமலை, குடிமங்கலம் பகுதிகளில் தென்னை சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. தேங்காயை விட இளநீர் அதிக வருவாய் தருவதால் விவசாயிகள் பலரும் இளநீர் உற்பத்தியில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் கடும் வெயில், தண்ணீர் பற்றாக்குறை, நோய் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தேங்காய் விளைச்சல் குறைந்துள்ளது.</p><p>வறண்ட வானிலை தொடர்வதாலும், ஏராளமான மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாலும் விளைச்சல் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேரளம் மாநிலத்திலும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தேங்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தேங்காய் விலை மளமளவென அதிகரித்து விரைவில் புதிய உச்சத்தை தொடும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.</p><h2>இருப்பு வைப்பு</h2><p>தற்போது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தேங்காயின் விலை உயர்ந்து, ஒரு கிலோ ரூ.52 வரை விற்பனையாகிறது. ஒரு டன் தேங்காய் ரூ.52 ஆயிரம் வரை விற்பனையாகிறது. விரைவில் ஒரு கிலோ ரூ.70 என்ற நிலையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பல விவசாயிகள் பறித்த தேங்காய்களை விற்பனை செய்யாமல் விளைநிலங்களில் குவித்து வைத்து இருப்பு வைக்கின்றனர்.</p><p>தேங்காயை இருப்பு வைப்பதற்கு அதிகம் மெனக்கெடத் தேவையில்லை. கூடுதல் செலவினங்கள் எதுவும் இல்லாமல் தோப்பிலேயே குவித்து வைத்து இருப்பு வைக்க முடியும். எனவே தேங்காய்களை இருப்பு வைத்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக விவசாயிகள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>‘1033’ உதவி எண்ணை ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் மேம்படுத்த திட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/plan-to-upgrade-the-1033-helpline-with-ai-technology</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/plan-to-upgrade-the-1033-helpline-with-ai-technology#comments</comments><guid isPermaLink="false">82aefa2e-1548-4fff-a5a2-ac1d125d165a</guid><pubDate>Thu, 17 Sep 2026 07:42:06 +0000</pubDate><atom:updated>2026-09-17T07:42:06.594Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,அவசர உதவி எண்,National Highway,ஏ.ஐ. தொழில்நுட்பம்,A.I. Technology,செல்போன் செயலி,தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்,Help Center,உதவி எண்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/x2zzwc7t/loer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/x2zzwc7t/loer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>'1033' உதவி எண்ணை ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் மேம்படுத்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இது விபத்து நடந்த இடத்துக்கு 30 வினாடிகளுக்குள் ஆம்புலன்ஸ் அனுப்ப உதவும்.</p><h2>15 ஆயிரம் அழைப்புகள்</h2><p>இந்தியாவில் உள்ள மொத்த சாலை வலையமைப்பில் தேசிய நெடுஞ்சாலைகள் 2.3 சதவீதம் மட்டுமே என்றாலும், சாலை விபத்து உயிரிழப்புகளில் 36 சதவீதத்துக்கும் அதிகமானவை அவற்றிலேயே நிகழ்கின்றன.</p><p>இதனால், விபத்து நடந்த முதல் 60 நிமிடங்களுக்குள் உயிர்களை பாதுகாக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் '1033' என்ற உதவி எண் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. தற்போது 1.46 லட்சம் கிலோமீட்டர் நீள தேசிய நெடுஞ்சாலைகளில் 24 மணி நேரமும் செயல்படும் இந்த சேவைக்கு, தினமும் சராசரியாக 15 ஆயிரம் அழைப்புகள் வருகின்றன.</p><h2>அவசர உதவி எண்</h2><p>இந்தநிலையில், தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வோருக்கு விரைவான மற்றும் மேம்படுத்தப்பட்ட சேவைகளை வழங்குவதற்காக, 1033 என்ற அவசர உதவி எண்ணை செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.), நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் நவீன அவசரகால பதில் அமைப்புகளுடன் மேம்படுத்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது.</p><h2>30 வினாடிகளுக்குள்</h2><p>புதிய அமைப்பு உதவி எண்ணை அழைப்பவர்களின் இருப்பிடத்தை உடனுக்குடன் துல்லியமாக கண்டறியும். பல்வேறு இந்திய மொழிகளில் பேசப்படும் கோரிக்கைகளை புரிந்துகொண்டு, விபத்து நடந்த இடத்துக்கு 30 வினாடிகளுக்குள் அருகில் உள்ள ஆம்புலன்ஸ், கிரேன் அல்லது ரோந்து வாகனங்களை அனுப்ப உதவியாக இருக்கும்.</p><p>மேலும், போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை நிலவரங்களை நேரடியாக கண்காணித்து விரைவான பாதையில் வாகனங்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கும்.</p><h2>ராஜ்மார்க் யாத்ரா</h2><p>விபத்துக்களுக்கான உதவி மட்டுமின்றி, சுங்கச்சாவடி, பாஸ்டேக், சாலை நிலவரம் குறித்த புகார்கள் போன்ற அவசரமில்லாத கோரிக்கைகளும் குரல் வழி, 'எஸ்.எம்.எஸ்., வாட்ஸ்அப்' மற்றும் செல்போன் செயலி மூலமும் மேம்படுத்தப்பட்ட உதவி எண் நிர்வகிக்கப்படும். புதிய திட்டத்தின் கீழ், இந்த அமைப்பு அவசரகால உதவி எண் 112 மற்றும் 'ராஜ்மார்க் யாத்ரா' செயலியுடன் ஒருங்கிணைக்கப்பட உள்ளது.</p><p>தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டாலும், மனித தலையீடு தேவைப்படும் சூழல்களில் ஆபரேட்டர்கள் தொடர்ந்து செயல்படுவார்கள் என தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>19-ந்தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. முப்பெரும் விழா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmks-grand-festival-to-be-held-on-the-19th-under-the-leadership-of-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmks-grand-festival-to-be-held-on-the-19th-under-the-leadership-of-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">a3b761bc-78f1-4e8d-bc0b-e4f82321b3e8</guid><pubDate>Thu, 17 Sep 2026 07:39:34 +0000</pubDate><atom:updated>2026-09-17T07:39:34.775Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,Chennai,சென்னை,Announcement,அறிவிப்பு,முப்பெரும் விழா,தேதி மாற்றம்,Date Change,திமுக தலைவர்,DMK leader MK Stalin,Mupperum Vizha</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/culn49xq/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தி.மு.க. தலைமை கழகம், அண்ணா அறிவாலயம். ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/culn49xq/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D">தி.மு.க. தலைவர்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின்</a> தலைமையில் வரும் 19-ந்தேதி தி.மு.க. முப்பெரும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>தி.மு.க. முப்பெரும் விழா</h2><p>தி.மு.க. தொடங்கிய நாள் (செப்டம்பர் 17), தி.மு.க. நிறுவனர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் (செப்டம்பர் 15) மற்றும் தந்தை பெரியார் பிறந்தநாளான (செப்டம்பர் 17) என மூன்று முக்கிய நிகழ்வுகளையும் ஒன்றாக நடத்தும் வகையில், ஆண்டுதோறும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE">முப்பெரும் விழா</a> கொண்டாடப்பட்டு வருகிறது. </p><p>இந்த முப்பெரும் விழாவின் போது, தி.மு.க. சார்பில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது, மு.க.ஸ்டாலின் விருது ஆகியவை வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தி.மு.க. முப்பெரும் விழா கடந்த 15-ந்தேதி சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. </p><h2>மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு</h2><p>இந்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திடீர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81">உடல்நலக்குறைவு</a> ஏற்பட்டதன் காரணமாக அன்று நடைபெறவிருந்த தி.மு.க. முப்பெரும் விழா மற்றும் அன்று மாலை நடக்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது; முப்பெரும் விழாவுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார். இந்த நிலையில் தி.மு.க. முப்பெரும் விழா நடைபெறும் நாள் தொடர்பாக இன்று தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: </p><h2>19-ந்தேதி தி.மு.க. முப்பெரும் விழா</h2><p>தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 15.9.2026 அன்று நடைபெற இருந்த தி.மு.க. முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டு, தேதி பின்னர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">அறிவிக்கப்படும்</a> என்று அறிவித்ததையொட்டி, தற்போது தி.மு.க. முப்பெரும் விழா வருகிற 19.9.2026, சனிக்கிழமை அன்று மாலை 5 மணியளவில், அண்ணா அறிவாலயம், "கலைஞர் அரங்கில்" வைத்து நடைபெறும். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>உளுந்தூர்பேட்டை அருகே அதிர்ச்சி: கிரைண்டர் செயலி மூலம் இளைஞருக்கு கத்திக்குத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/shocking-incident-near-ulundurpet-youth-stabbed-using-grindr-app</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/shocking-incident-near-ulundurpet-youth-stabbed-using-grindr-app#comments</comments><guid isPermaLink="false">e468338a-68d3-45e2-9e4c-956c6b4f00a2</guid><pubDate>Thu, 17 Sep 2026 07:30:56 +0000</pubDate><atom:updated>2026-09-17T07:30:56.157Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கள்ளக்குறிச்சி,police,2 arrested,2 பேர் கைது,Kallakkurichi,கிரைண்டர் ஆப்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/09knuhzs/7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கிரைண்டர் செயலி மூலம் பழக்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/09knuhzs/7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சி,</p><p>கிரைண்டர் செயலி மூலம் இளைஞரை தனிமையான இடத்திற்கு வரவழைத்து கத்தியால் குத்தி பணம் பறித்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>மர்ம நபர்களால் கத்திக்குத்து</h2><p>விழுப்புரம் மாவட்டம் பம்பாதிரிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பச்சைமுத்து (வயது 30). இவர் <a href="https://www.dailythanthi.com/topic/கிரைண்டர்">கிரைண்டர் </a>செயலியை பயன்படுத்தி வந்துள்ளார். இதில் அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள டோல்கேட் அருகே வரும்படி கூறியுள்ளனர். இவரும் அவர்களை நம்பி சென்றுள்ளார்.</p><p>பின்னர், அவரை மதியனூர் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை கத்தியால் குத்திய மர்ம நபர்கள், அவரிடம் இருந்த ரூ.4,000-ஐ பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த பச்சைமுத்துவை அப்பகுதி மக்கள் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><h2>குற்றவாளிகள் கைது</h2><p>இதுகுறித்து தகவல் அறிந்த உளுந்தூர் பேட்டை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a>, பச்சைமுத்துவின் செல்போனில் இருந்த குறுஞ்செய்திகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். </p><p>விசாரணையில், விழுப்புரம் வழுதரெட்டி பகுதியைச் சேர்ந்த 2 பேருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ஊரமைப்புச் சட்டத்திருத்தத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் - சீமான்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-must-withdraw-urban-planning-amendment-immediately-seeman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-must-withdraw-urban-planning-amendment-immediately-seeman#comments</comments><guid isPermaLink="false">e6938137-4e70-4796-9d61-3db007dd8632</guid><pubDate>Thu, 17 Sep 2026 07:28:37 +0000</pubDate><atom:updated>2026-09-17T07:28:37.122Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,Seeman,நாம் தமிழர் கட்சி,சட்டத்திருத்தம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/omuy8ue4/Untitled-10.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சீமான்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/omuy8ue4/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நிலங்களின் மீதான ஊராட்சி அமைப்புகளின் அதிகாரத்தை முழுவதுமாகப் பறித்து, அவற்றை நேரடியாக மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வகையில் நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்திருத்தத்தை தவெக அரசு நிறைவேற்றியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>நடைபெற்று முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின் இறுதிநாளில் வளர்ச்சி, நில மேம்பாடு என்ற பெயரில் வேளாண் விளைநிலங்களைப் பறித்து தனியார் பெருமுதலாளிகளுக்குத் தாரைவார்க்கும் வகையில் நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்திருத்தத்தைத் தவெக அரசு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியுள்ளது.</p><p>தற்போது நடைமுறையில் உள்ள நில கையகப்படுத்தல் சட்டத்தின்படி, தமிழ்நாடு அரசு தொழிற்சாலைகளுக்காக ஓர் ஊராட்சிக்கு உட்பட்ட நிலங்களைக் கையகப்படுத்தும்போது அந்த ஊராட்சியில் அதற்காகத் தீர்மானம் போட வேண்டும். ஊர் மக்கள் அதை ஏற்று ஒப்புதல் அளிக்க வேண்டும். தவெக அரசு நிறைவேற்றியுள்ள புதிய சட்டத்திருத்தம் உள்ளாட்சிகளிடம் அனுமதி பெற்ற பின்னரே எந்த ஒரு தொழிற்சாலையும் கொண்டுவர முடியும் என்ற குறைந்தபட்ச ஜனநாயக வழிமுறையையும் துடைத்தெறிந்துள்ளது. இப்புதிய திருத்த வரைவின்படி, விளைநிலங்கள் மற்றும் நீர்நிலைகளைக் கையகப்படுத்த இனி ஊராட்சி அமைப்புகளிடமோ, மாவட்ட ஆட்சியரிடமோ, தொடர்புடைய விவசாயிகளிடமோ, கருத்துக்கேட்கவோ, ஒப்புதல் பெறவோ தேவையில்லை. மேலும், விளைநிலங்களை, வேறு பணிகளுக்காக அரசு கையகப்படுத்தும்போது முடிவெடுக்கும் அதிகாரம் இதுவரை மாவட்ட ஆட்சியரிடம் இருந்து வந்தது. அதில் காலதாமதம் ஏற்படுகிறது என்றுகூறி, நிலத்தை விரைந்து கையகப்படுத்த வசதியாக, நகரத் திட்ட இயக்குநரே இனி நேரடியாக முடிவெடுத்து ஒப்புதல் அளிக்கலாம் என்று அதிகாரத்தை மாற்றி வரையறுக்கிறது இப்புதியச் சட்டத்திருத்தம்.</p><p>அரசு நினைத்தால் எந்த இடத்திலும் யாருடைய நிலத்தையும் கையகப்படுத்தி, தொழிற்சாலைகள் தொடங்க தனியார் முதலாளிகளுக்குத் தாரைவார்க்கலாம் என்பது கொடுங்கோன்மை இல்லையா? விளைநிலங்களை அழித்து, விவசாயிகளை நிலமற்ற அகதிகளாக்கும் இப்படியொரு எதேச்சதிகார சட்டத்திருத்தத்தை தவெக நிறைவேற்றியது ஏன்? தமிழ்நாட்டு விவசாயிகளை விடவும், தனியார் பெருமுதலாளிகளின் நலன் மட்டும்தான் தவெக அரசுக்கு முதன்மையானதா? பரந்தூரில் விவசாயிகளிடமிருந்து விளைநிலங்களை வலுக்கட்டாயமாகப் பறிப்பதை, தடுத்து நிறுத்துவோம், வேளாண்மையைக் காப்பாற்றுவோம் என்று வாக்குறுதியளித்த முதல்-அமைச்சர் விஜய், தமிழ்நாடு முழுவதும் நிலங்களை உள்ளாட்சி அமைப்புகள் ஒப்புதலின்றி அபகரிக்கும் சட்டத்திருத்தத்தை கொண்டுவர எப்படி அனுமதித்தார்? பட்டினப்பாக்கத்தில் 9 மீனவ கிராம மக்களின் ஒப்புதல் இன்றித் தலைமைச்செயலகம் கட்டுவதற்காகவா? இதுதான் ஜனநாயகமா? இதற்குப் பெயர்தான் ஜனநாயகன் ஆட்சியா? எத்தனை சட்டங்கள் கொண்டுவந்து வந்து எம் மக்களை அச்சுறுத்தினாலும் நாம் தமிழர் கட்சி இந்த மண்ணில் இருக்கும்வரை ஏழை எளிய மக்களின் நிலங்களை, அவர்களின் விருப்பமின்றி வலுக்கட்டாயமாகப் பறிக்க ஒருபோதும் அனுமதிக்காது.</p><p>நிலங்களின் மீதான உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தைப் பறிக்கும் நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்திருத்தத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கூட்டமாக பறந்து வந்த கதண்டுகள்.. தம்பதிக்கு நேர்ந்த சோகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/swarm-of-hornets-attacks-tragedy-strikes-a-couple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/swarm-of-hornets-attacks-tragedy-strikes-a-couple#comments</comments><guid isPermaLink="false">4e051650-f8be-44d4-818a-51e01b47e7a5</guid><pubDate>Thu, 17 Sep 2026 07:11:29 +0000</pubDate><atom:updated>2026-09-17T07:11:29.454Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Ariyalur,அரியலூர்,தம்பதி பலி,கதண்டுகள்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/zfpp923i/sinna.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/zfpp923i/sinna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>அரியலூர், </p><p>கதண்டுகள் கடித்து வயதான தம்பதி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.</p><h2>கூட்டமாக பறந்து வந்த கதண்டுகள்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/ariyalur">அரியலூர்</a> மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள கோவிந்த புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னையன் (வயது 85), விவசாயி. இவரது மனைவி கனகவள்ளி (75). இவர்கள் குமணந்துறை பகுதியில் உள்ள தோட்டத்தில் வீடு கட்டி தனியாக வசித்து வந்தனர். </p><p>நேற்று முன்தினம் சின்னையனும், அவரது மனைவியும் அருகே உள்ள காட்டுப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு பனை மரத்தில் கூடுகட்டி இருந்த கதண்டுகள் கூட்டமாக பறந்து வந்து சின்னையன் மற்றும் கனகவள்ளியை கை, கால், முகம் போன்ற இடங்களில் கடித்தன. இதில் சிறிது நேரத்தில் தம்பதி மயக்கம் அடைந்தனர்.</p><h2>தீவிர சிகிச்சை</h2><p>இதையடுத்து, அப்பகுதி மக்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சின்னையன் நேற்று முன்தினம் மாலை பரிதாபமாக இறந்தார். </p><h2>விசாரணை</h2><p>பின்னர் மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கனகவள்ளி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கனகவள்ளி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார்.</p><p>இந்த சம்பவம் தொடர்பாக விக்கிரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>2 தொகுதி இடைத்தேர்தல்: தவெக, திமுக, அதிமுக, சிபிஎம், நாதக கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/by-elections-for-two-constituencies-nomination-papers-accepted-of-candidates-from-tvk-dmk-aiadmk-cpm-and-ntk</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/by-elections-for-two-constituencies-nomination-papers-accepted-of-candidates-from-tvk-dmk-aiadmk-cpm-and-ntk#comments</comments><guid isPermaLink="false">53e2647a-8442-4165-9a9e-0e33b1ce304a</guid><pubDate>Thu, 17 Sep 2026 07:07:02 +0000</pubDate><atom:updated>2026-09-17T07:07:02.518Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,TVK,தவெக,அதிமுக,திமுக,DMK,நாதக,NTK,இடைத்தேர்தல்,By election,மதுராந்தகம்,தாராபுரம்,சிபிஎம்,CPM,Madhuranthakam,Dharapuram</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/j1u0zasa/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/j1u0zasa/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>இடைத்தேர்தல்</h2><p>தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் (தனி) மற்றும் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில் ஆளும் த.வெ.க., பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர், கம்யூனிஸ்டு கட்சிகள் தனித்தனியாக களம் காண்கின்றன. இதனால் 5 முனைப் போட்டி நிலவுகிறது.</p><h2>வேட்புமனு பரிசீலனை</h2><p>இடைத்தேர்தலுக்கன வேட்புமனு தாக்கல் நேற்று மாலை 3 மணியுடன் மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், பிரதான கட்சிகள், மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் உள்பட 39 வேட்பாளர்கள் மொத்தம் 51 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். மதுராந்தகம் மற்றும் தாராபுரம் என இரு தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 99 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.</p><p>இந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்றது. இதில், மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக, திமுக, சிபிஎம், நாதக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.</p><h2>வேட்புமனுக்கள் ஏற்பு</h2><p>மதுராந்தகத்தில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேல், தி.மு.க. வேட்பாளர் பரந்தாமன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமன், அ.தி.மு.க. வேட்பாளர் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சுகந்தி ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.</p><p>இதைபோல தாராபுரத்தில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமா, திமுக வேட்பாளர் சுகன்யா, அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் லட்சுமணன் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.</p><p>மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் 48 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 32 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு 16 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதைபோல தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட 51 வேட்புமனுக்களில் 22 மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும் 29  மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>
தே.மு.தி.க.வை பார்த்து திருமாவளவன் பயப்படுகிறாரா? பிரேமலதா ஆவேசம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-thirumavalavan-afraid-of-dmdk-premalatha-slams</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-thirumavalavan-afraid-of-dmdk-premalatha-slams#comments</comments><guid isPermaLink="false">136ab149-0a04-4e08-85fe-bbe707d1606a</guid><pubDate>Thu, 17 Sep 2026 07:01:11 +0000</pubDate><atom:updated>2026-09-17T07:01:11.176Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>DMDK,திருமாவளவன்,Thirumavalavan,பிரேமலதா,தே.மு.தி.க.,Premalatha</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/jcym3upd/dpgsp.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரேமலதா, தே.மு.தி.க.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/jcym3upd/dpgsp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>தே.மு.தி.க.வை கண்டு திருமாவளவன் பயப்படுகிறாரா எனவும், அமைச்சர் பதவி வேண்டும் என்பதற்காக கூட்டணி மாறிவிட்டார்கள் எனவும் பிரேமலதா தெரிவித்துள்ளார்.</p><p>சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் 22-வது ஆண்டு தொடக்கவிழா கடந்த 14-ந்தேதி நடைபெற்றது. விழாவில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு கட்சியின் கொடியை ஏற்றி வைத்ததுடன், விஜயகாந்த் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.</p> <h2>இடைத்தேர்தலில் வெற்றி</h2><p>இதன்பின்னர், அவர் நிருபர்களிடம் கூறும்போது, நாங்கள் அங்கம் வகிக்கும் தி.மு.க., இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறும் என நம்புகிறோம்.  அதற்காக நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து உழைப்போம். மு.க.ஸ்டாலின் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இடைத்தேர்தலில் வேட்பாளர்களை அறிவிக்க இருக்கிறோம். உங்களுடைய ஆதரவு வேண்டும் என கேட்டுக்கொண்டார்.</p><p>அப்போது தே.மு.தி.க., தி.மு.க.வுடன்தான் கூட்டணியில் இருக்கும். எங்களின் ஒத்துழைப்பு 100 சதவீதம் உங்களுக்கு இருக்கும் என நான் தெரிவித்தேன். இடைத்தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் தி.மு.க.வுக்கு முழு ஒத்துழைப்பு இருக்கும் என்றார்.</p> <h2>ஆலோசனை கூட்டம்</h2><p>தொடர்ந்து பிரேமலதா கூறுகையில், தி.மு.க.வில் தொடர்ந்து கூட்டணியில் இருந்த எங்களுக்கு தொகுதியை குறைத்துவிட்டு, புதிதாக வந்த தே.மு.தி.க.வுக்கு அதிகமான தொகுதி (சீட்) ஒதுக்கப்பட்டது என திருமாவளவன் கூறிய கருத்துக்கு, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின்னர் பதிலை கூறுகிறேன் என்றார்.</p><p>இந்த நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமை தாங்கினார். இதில் அவைத்தலைவர் இளங்கோவன், பொருளாளர் எல்.கே.சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி உள்பட பலரும் கலந்து கொண்டனர்.</p> <h2>முதல்-அமைச்சர் வேட்பாளர்</h2><p>கூட்டத்தில் விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை சரிசெய்ய வேண்டும். விஜயகாந்திற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்பன உள்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.</p><p>இதன்பின்னர், பிரேமலதா நிருபர்களிடம் கூறும்போது, மக்கள் நல கூட்டணியில் இருந்தபோது விஜயகாந்தை முதல்-அமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொண்ட திருமாவளவன், தற்போது தே.மு.தி.க.வுக்கு 10 சீட்டு கொடுத்ததால்தான் கூட்டணியை விட்டு செல்கிறோம் என்று கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?.</p> <h2>அமைச்சர் பதவி</h2><p>தி.மு.க. கூட்டணியில் இருந்தபோது எனக்காக திருமாவளவனும், கனிமொழியும் மட்டுமே பிரசாரம் செய்தனர். தற்போது ஒரு அமைச்சர் பதவி கிடைத்ததால், தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு வேறொரு கூட்டணிக்கு திருமாவளவன் சென்றுவிட்டார்.</p> <h2>என்ன பயம்?</h2><p>கம்யூனிஸ்டுகள் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது போல, நீங்களும் வெளியில் இருந்து ஆதரவு அளித்திருக்கலாமே?. நீங்கள் ஒரு நிலைப்பாடு எடுத்துவிட்டு, மற்றவர்கள் மீது குற்றம் சுமத்துவது தவறு. பல கட்சிகள் இருக்கும் நிலையில், தே.மு.தி.க. மீது மட்டும் ஏன் இவ்வளவு காழ்ப்புணர்ச்சி?.</p><p>தே.மு.தி.க.வை கண்டு என்ன பயம்? எங்களால்தான் நீங்கள் கூட்டணியை விட்டு சென்றீர்கள் என்பது உண்மைக்கு புறம்பான பதில் என மக்களுக்கு தெரியும் என அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vs-babus-condition-is-stable-hospital-administration-statement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vs-babus-condition-is-stable-hospital-administration-statement#comments</comments><guid isPermaLink="false">de847146-70e5-4f92-bb0e-06ff2c0741f4</guid><pubDate>Thu, 17 Sep 2026 06:59:24 +0000</pubDate><atom:updated>2026-09-17T06:59:24.709Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>hospital,மருத்துவமனை,வி.எஸ்.பாபு,V.S. Babu MLA</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/edvb1oto/14.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/edvb1oto/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து த.வெ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வி.எஸ்.பாபு. இவர் தனது குடும்பத்துடன் கொளத்தூரில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார்.</p><p>கடந்த 9-ம் தேதி அதிகாலை அவருக்கு திடீரென கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அவரை குடும்பத்தினர் அவரை சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் குழு, உடனடியாக அவரை தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்து அவசர சிகிச்சைகளை தொடங்கினர்.</p> <p>எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு. தற்போது மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் உள்ளார். அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.</p><p>இந்த நிலையில் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை தற்போது சீராகவும் திருப்திகரமாகவும் உள்ளது. அவரது உடல்நிலையை பல்துறை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைக்கு அவரது உடல் நல்ல முறையில் ஒத்துழைப்பு வழங்குகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: வியாபார அபிவிருத்தி விநாயகர் சிலை கிரேன் மூலம் கடலில் கரைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-business-development-ganesha-statue-immersed-in-the-sea-by-crane</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-business-development-ganesha-statue-immersed-in-the-sea-by-crane#comments</comments><guid isPermaLink="false">b14435f3-4fc7-4dfb-9a65-cfec38590ee8</guid><pubDate>Thu, 17 Sep 2026 06:47:56 +0000</pubDate><atom:updated>2026-09-17T06:47:56.023Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>sea,Thoothukudi,தூத்துக்குடி,Procession,ஊர்வலம்,விநாயகர் சிலை,Dissolution,Ganesha idol,கடலில் கரைப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/gu4fouji/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வியாபார அபிவிருத்தி விநாயகர் சிலை கிரேன் மூலம் கடலில் கரைப்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/gu4fouji/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த பிரம்மாண்ட வியாபார அபிவிருத்தி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88">விநாயகர் சிலை</a> மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது. </p><h2>வியாபார அபிவிருத்தி விநாயகர் சிலை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாநகர பழைய இரும்பு மற்றும் மோட்டார் பார்ட்ஸ் வியாபாரிகள் சங்கம் சார்பில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மார்க்கெட் பகுதியில் பிரம்மாண்ட வியாபார அபிவிருத்தி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. தினமும் காலை, மாலை வேளைகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன. </p><h2>ஊர்வலம்</h2><p>இந்த நிலையில், நேற்று காலையில் இறுதிப் பூஜைகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, விநாயகர் சிலையை கடலில் கரைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மினி வேனில் ஏற்றப்பட்ட விநாயகர் சிலை, மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. </p><h2>கடலில் கரைப்பு</h2><p>தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையம் பின்புறம் உள்ள கடற்கரைக்கு சிலை கொண்டு வரப்பட்டு, அங்கு மீண்டும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், கிரேன் மூலம் விநாயகர் சிலை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">கடலில்</a> இறக்கப்பட்டு பாதுகாப்பாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">கரைக்கப்பட்டது</a>. இந்த நிகழ்ச்சியில் அமைப்பின் நிர்வாகிகள் உள்பட திரளான வியாபாரிகள் கலந்துகொண்டனர். </p>]]></content:encoded></item><item><title>எத்தனையோ அடக்குமுறைகள்; ஏவப்பட்ட நெருக்கடிகள்: உதயநிதி ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/countless-acts-of-oppression-pressures-unleashed-udhayanidhi-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/countless-acts-of-oppression-pressures-unleashed-udhayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">0efc69f8-ed9e-4b5c-9368-257787d84b1d</guid><pubDate>Thu, 17 Sep 2026 06:40:47 +0000</pubDate><atom:updated>2026-09-17T06:40:47.414Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/83igglj3/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/83igglj3/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><p>ஜமீன்களிலும் - பண்ணைகளிலும் அடைபட்டிருந்த அரசியலை பாமரர்களின் கரங்களுக்குக் கொண்டு சேர்த்த நம் திராவிட முன்னேற்றக் கழகம் உருவான நாள் இன்று. நாற்பதுகளில் இருந்த பேறிஞர் அண்ணா, இருபதுகளில் இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்ட தன் தம்பிமார்களுடன் கொட்டும் மழையில் தொடங்கிய தி.மு.க. இன்று 78-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. </p><p>ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இந்த 78 ஆண்டுகளில் பல எட்டாத உயரங்களுக்குத் தமிழ்ச்சமுதாயத்தை ஏற்றிவிட்ட பெருமை கழகத்துக்கு உண்டு. சமூக நீதி - மாநில உரிமை - பெண் விடுதலை - தொழில் வளர்ச்சி என கொள்கை அடித்தளத்தில், தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது முதல், தன்னிகரற்ற மாநிலமாக்கியது வரை கழகம் ஆற்றிய பணிகள் ஏராளம்.</p><p>எத்தனையோ அடக்குமுறைகள் - ஏவப்பட்ட நெருக்கடிகள் - புதிய புதிய எதிரிகள், இத்தனைக்குப் பிறகும் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துடிப்போடு நடைபோடுகிறது தி.மு.க. நூற்றாண்டை நோக்கிச் செல்லும் நம் கழகத்தின் மேன்மைக்கு அயராது உழைப்போம். கருப்பு - சிவப்பு வெறும் நிறமல்ல - நம் உயிர் என்று முழங்குவோம்! வாழ்க திராவிட முன்னேற்றக் கழகம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>செங்கல்பட்டு அருகே அடுக்குமாடி குடியிருப்பில் பிரிட்ஜ் வெடித்து பயங்கர தீ விபத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/massive-fire-breaks-out-after-bridge-explodes-in-apartment-building-near-chengalpattu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/massive-fire-breaks-out-after-bridge-explodes-in-apartment-building-near-chengalpattu#comments</comments><guid isPermaLink="false">fda345d9-abe3-4983-9851-12557e02e374</guid><pubDate>Thu, 17 Sep 2026 06:31:39 +0000</pubDate><atom:updated>2026-09-17T06:31:39.941Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,Chengalpattu,செங்கல்பட்டு,apartment building,போலீசார்,அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/qz5qf49h/6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/qz5qf49h/6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>செங்கல்பட்டு,</p><p>தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பிரிட்ஜ் வெடித்து திடீரென தீப்பற்றியது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><h2>திடீர் தீ விபத்து</h2><p>செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே தையூரில் உள்ள 15 அடுக்குகளை கொண்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு சுமார் 10 மணியளவில் 11-வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் பிரிட்ஜ் வெடித்து திடீரென தீப்பற்றியது.</p><p>அப்போது அந்த வீட்டில் குழந்தை உள்பட 4 பேர் இருந்துள்ளனர். தீப்பற்றியதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக ஒன்றுகூடி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், வீட்டிற்குள் சிக்கியிருந்த 4 பேரையும் பொதுமக்கள் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். சிறிது நேரத்தில் தீ 13 மற்றும் 14 வது மாடிகளில் பரவ தொடங்கியது.</p><p>இதுகுறித்து தகவல் அறிந்த சிறுசேரி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">தீயணைப்புத் துறை</a>யினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீயை முற்றிலும் அணைத்தனர்.</p><h2>ஒருவர் காயம் </h2><p>இந்த தீ விபத்தில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாகவும், அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D"> போலீசார்</a> குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. நிர்வாகியை இரும்பு கம்பியால் தாக்கிய 6 பேர் மீது வழக்குப்பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-registered-against-6-people-who-attacked-trp-executive-with-iron-rod</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-registered-against-6-people-who-attacked-trp-executive-with-iron-rod#comments</comments><guid isPermaLink="false">ef0ee383-efeb-4304-b6c2-0cdd757267e3</guid><pubDate>Thu, 17 Sep 2026 06:20:10 +0000</pubDate><atom:updated>2026-09-17T06:20:10.971Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தாக்குதல்,Thoothukudi,தூத்துக்குடி,T.V.K.,attack,வழக்குப்பதிவு,case registered,administrator,iron rod,இரும்பு கம்பி,6 பேர்,6 people,த.வெ.க. நிர்வாகி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/khn32kg5/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ த.வெ.க. நிர்வாகி மீது இரும்பு கம்பியால் தாக்குதல்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/khn32kg5/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், குரும்பூர் பகுதியில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF">த.வெ.க. நிர்வாகி</a>யை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF">இரும்புக் கம்பி</a>யால் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">தாக்கிய</a> சம்பவம் தொடர்பாக முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் உள்பட <a href="https://www.dailythanthi.com/topic/6-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D">6 பேர்</a> மீது போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81">வழக்குப்பதிவு</a> செய்துள்ளனர். </p><h2>த.வெ.க. நிர்வாகிக்கும் முன்னாள் பஞ்சாயத்து தலைவருக்கும் தகராறு</h2><p>தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகிலுள்ள அம்மன்புரம், கீழப்புதுக்குடியைச் சேர்ந்த பீட்டர் (வயது 48), த.வெ.க. நிர்வாகி ஆவார். இவர் அம்மன்புரம் பகுதியில் புதிய வீடு கட்டி வருகிறார். அந்த இடத்தில் உள்ள பொதுப்பாதை தொடர்பாக பீட்டருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்துத் தலைவரான ஞானராஜ்(65) என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. </p><h2>இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல்</h2><p>இந்த நிலையில் சம்பவத்தன்று, அம்மன்புரம் தேவாலயம் அருகே பீட்டர் தனது பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது ஞானராஜின் தம்பி மகன் ஆல்வின்(25) உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல் திடீரென பீட்டரை வழிமறித்தது. அவர்கள் தாங்கள் வைத்திருந்த தடி மற்றும் இரும்புக் கம்பிகளால் பீட்டரை சரமாரியாக தாக்கி கீழே தள்ளி மிதித்தனர். மேலும் அவரது இருசக்கர வாகனத்தையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்திவிட்டு, கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றனர். </p><h2>6 பேருக்கு போலீசார் வலைவீச்சு</h2><p>இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த பீட்டரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து குரும்பூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள ஆல்வின், ஞானராஜ் உள்ளிட்ட 6 பேரையும் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். </p><p>இதனிடையே, பீட்டர் தாக்கப்பட்ட அதிர்ச்சி காட்சிகள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி வருகிறது. </p>]]></content:encoded></item><item><title>பெரியார் பொதுவாழ்வை நினைவு கூர்ந்து வணங்குகிறோம் - அண்ணாமலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-pay-tribute-to-periyar-remembering-his-life-of-public-service-annamalai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-pay-tribute-to-periyar-remembering-his-life-of-public-service-annamalai#comments</comments><guid isPermaLink="false">409dcdc8-4319-4e7e-977a-44620371ca9d</guid><pubDate>Thu, 17 Sep 2026 06:07:51 +0000</pubDate><atom:updated>2026-09-17T06:07:51.241Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Annamalai,அண்ணாமலை,பெரியார்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/iunopp1w/13.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/iunopp1w/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெரியாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, வி தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>“செப்டம்பர் 2026: சமூக சீர்திருத்தப் போராட்டங்களில் முக்கியப் பங்காற்றி, தமிழகத்தின் சமூக மற்றும் அரசியல் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பெரியார் அவர்களின் பிறந்த தினம் இன்று.</p><p>சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக, தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைச் செலவிட்ட, பெரியார் அவர்களின் பொதுவாழ்வை நினைவு கூர்ந்து வணங்குகிறோம்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>நுகர்வோர் கூட்டுறவு நிறுவனங்களுக்கான புதிய இணையவழி கொள்முதல் : அமைச்சர் காந்திராஜ் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-online-procurement-for-consumer-cooperative-societies-minister-gandhiraj-reviews-the-initiative</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-online-procurement-for-consumer-cooperative-societies-minister-gandhiraj-reviews-the-initiative#comments</comments><guid isPermaLink="false">cd2e2908-ef85-4c3b-86a2-434cc68a514e</guid><pubDate>Thu, 17 Sep 2026 06:04:39 +0000</pubDate><atom:updated>2026-09-17T06:04:39.408Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Online,கொள்முதல்,இணையவழி,Cooperative Societies,அமைச்சர் காந்திராஜ்,Minister Gandhiraj,கூட்டுறவு நிறுவனம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/s1l8a47x/gandhi.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/s1l8a47x/gandhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நுகர்வோர் கூட்டுறவு நிறுவனங்களுக்கான புதிய இணையவழி கொள்முதல் நடைமுறைகள் குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் வ.காந்திராஜ் ஆய்வு நடத்தினார். </p><h2>நுகர்வோர் கூட்டுறவு நிறுவனங்கள்</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>நுகர்வோர் கூட்டுறவு நிறுவனங்களுக்கான பழைய கூட்டு கொள்முதல் குழு முறை கலைக்கப்பட்டு, கூட்டுறவு நிறுவனங்களுக்கு தேவையான நுகர்வுப் பொருட்களை வெளிப்படைத்தன்மையுடன், தரமாகவும் நியாயமான விலையிலும் கொள்முதல் செய்வதற்காக புதிய இணையவழி (Online) கொள்முதல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்புதிய கொள்முதல் நடைமுறைகள் குறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் வ.காந்திராஜ் அவர்கள் இன்று (17.09.2026) தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.</p> <h2>இணையவழி கொள்முதல்</h2><p>இணையவழி கொள்முதல் முறையின் செயல்முறை, வழங்குநர் பதிவு, விலை நிர்ணயம், தரப் பரிசோதனை மற்றும் பொருட்கள் கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும் நடைமுறைகள் குறித்து விரிவாக பரிசீலிக்கப்பட்டது. இம்முறையை மேலும் பயனுள்ளதாக செயல்படுத்த தேவையான பல்வேறு அறிவுரைகளை அமைச்சர் அவர்கள் அதிகாரிகளுக்கு வழங்கினார்.</p><p>கூட்டுறவு சங்கங்கள், சுயஉதவிக் குழுக்கள் (SHGs), விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் (FPOs) ஆகியவற்றுடன், உற்பத்தியாளர்கள் (Manufacturers) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வழங்குநர் (Authorised Dealers) ஆகியோரும் அதிக அளவில் பங்கேற்கும் வகையில் விரிவான விளம்பர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் உற்பத்தியாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வழங்குநர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு புதிய இணையவழி கொள்முதல் முறை, வழங்குநர் பதிவு மற்றும் இணையதள பயன்பாடு தொடர்பாக பல கட்ட பயிற்சிகள் வழங்கி, அதிக எண்ணிக்கையிலான வழங்குநர்களை இம்முறையில் இணைக்க நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.</p><h2>தரமான பொருட்கள்</h2><p>இணையவழி கொள்முதல் முறையின் மூலம் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்து, தரமான பொருட்களை போட்டித்தன்மையுள்ள மற்றும் நியாயமான விலையில் கொள்முதல் செய்து நுகர்வோருக்கு வழங்க வேண்டும் என அமைச்சர் அவர்கள் வலியுறுத்தினார். கொள்முதல் செய்யும் நிலையிலும், பொருட்கள் கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கு வந்து சேரும் நிலையிலும் உரிய தரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, நுகர்வோருக்கு தரமான பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.</p><h2>அதிகாரிகளுக்கு உத்தரவு</h2><p>மேலும், கூட்டுறவுச் சங்கங்கள், சுயஉதவிக் குழுக்கள் மற்றும் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் தயாரிக்கும் பொருட்களுக்கு அதிக சந்தை வாய்ப்பும் தொடர்ச்சியான கொள்முதல் ஆணைகளும் கிடைக்கும் வகையில் இம்முறையை செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் அவர்களின் உற்பத்தி மற்றும் வருமானம் அதிகரிப்பதுடன், பொதுமக்களுக்கு தரமான நுகர்வுப் பொருட்கள் நியாயமான விலையில் எளிதாக கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் அவர்கள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.</p><p>இந்நிகழ்வில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர், கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) மற்றும் கூடுதல் பதிவாளர் / மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>வேலூர் அருகே சோகம்: கணவர் இறந்த சோகத்தில் கர்ப்பிணி தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-near-vellore-pregnant-woman-dies-by-suicide-after-husbands-death</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-near-vellore-pregnant-woman-dies-by-suicide-after-husbands-death#comments</comments><guid isPermaLink="false">661248e1-7e6f-439d-aabd-1089321aa322</guid><pubDate>Thu, 17 Sep 2026 06:03:56 +0000</pubDate><atom:updated>2026-09-17T06:03:56.041Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vellore,வேலூர்,தற்கொலை,pregnant,கர்ப்பிணி,கே.வி.குப்பம்,KV Kuppam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/de4lf41d/Untitled-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/de4lf41d/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வேலூர்,</p><p>வேலூர் அருகே கணவர் இறந்த சோகத்தில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.</p><p>வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த கவசம்பட்டு கிராமம் யாதவர் வீதியைச் சேர்ந்த தம்பதி பூபாலன் - கலா. இவர்களின் மகன் சரத்குமார் (34 வயது). இவர் ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மோனிஷா (28 வயது) என்பவருடன் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.</p><p>இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளார். தற்போது மோனிஷா 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதனிடையே கடந்த 13-ந்தேதி சரத்குமார் திடீரென இறந்து விட்டார். கணவர் இறந்த சோகத்தில் இருந்து மீளமுடியாத மோனிஷா தொடர்ந்து அழுது கொண்டே இருந்தார்.</p><p>இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சுதர்சன நாச்சியப்பன் மறைவு: “காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு” - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sudarshana-nachiyappans-demise-an-irreparable-loss-to-the-congress-movement-manickam-thakur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sudarshana-nachiyappans-demise-an-irreparable-loss-to-the-congress-movement-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">7495cab6-0c04-431e-b682-c9b0e64bbfb0</guid><pubDate>Thu, 17 Sep 2026 06:01:55 +0000</pubDate><atom:updated>2026-09-17T06:01:55.670Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,காங்கிரஸ்,Congress,இரங்கல்,மாணிக்கம் தாகூர்,மறைவு,Manickam Thakur MP,Sudarshana Nachiyappan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/8r3bkndw/361.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/8r3bkndw/361.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் அறங்காவலராகவும், மத்திய அமைச்சராகவும் பணியாற்றிய மூத்த காங்கிரஸ் தலைவர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் மறைவுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. இரங்கல் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>இ.எம். சுதர்சன நாச்சியப்பன்</h2><p>தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் அறங்காவலராகவும், மத்திய அமைச்சராகவும் பணியாற்றிய மூத்த காங்கிரஸ் தலைவர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். </p><p>தமது இளமை பருவத்தில் அன்னை இந்திரா காந்தி தலைமையை ஏற்று இளைஞர் காங்கிரஸ் இணைந்து , காங்கிரஸ் கட்சியில் மிகுந்த ஈடுபாட்டோடு செயல்பட்டார். தொடக்கத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவராகவும், பிறகு சிவகங்கை மக்களவை உறுப்பினராகவும், மத்திய அரசின் அரசு நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் தலைவராகவும் சிறப்பாக பணியாற்றியவர். 2013 ஆண்டில் மத்திய இணை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.</p><h2>இரங்கல்</h2><p>பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாக்க உரிமைக் குரல் எழுப்பியவர். காங்கிரஸ் இயக்கத்தில் பல்வேறு பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு ஆக்கப்பூர்வமான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த ஆலோசனைகளை வழங்கியவர். இ.எம். சுதர்சன நாச்சியப்பன் திடீர் மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2>இறுதி சடங்குகள்</h2><p>இ.எம். சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் மறைவையொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு இரங்கல் கூட்டம் நடைபெறும். இதில் முன்னணி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D">காங்கிரஸ் </a>தலைவர்கள் பங்கேற்பார்கள். நாளை (18.09.2026) சிவகங்கை மாவட்டம், ஏரியூரில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கட்டிட தொழிலாளி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/construction-worker-arrested-for-sexually-harassing-disabled-woman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/construction-worker-arrested-for-sexually-harassing-disabled-woman#comments</comments><guid isPermaLink="false">5fce1979-35b5-47e9-8486-84adab05c97a</guid><pubDate>Thu, 17 Sep 2026 05:35:45 +0000</pubDate><atom:updated>2026-09-17T05:35:45.122Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Thoothukudi,தூத்துக்குடி,arrest,Sexual harassment,பெண்,Woman,பாலியல் தொந்தரவு,மாற்றுத்திறனாளி,Construction worker,கட்டிட தொழிலாளி,Thuthukudi,differently-abled</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/01yvr9rv/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை, கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/01yvr9rv/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> அருகே வீட்டில் தனியாக இருந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D">மாற்றுத்திறனாளி பெண்</a>ணுக்குப் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88">பாலியல் தொல்லை</a> அளித்த கேரளத்தைச் சேர்ந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF">கட்டிடத் தொழிலாளி</a>யை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.</p><h2>கட்டிட தொழிலாளி</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D">கேரள மாநிலம்</a>, கோட்டயம் பகுதியைச் சேர்ந்த சுனில் (வயது 57), கட்டிட தொழிலாளி. இவர் தூத்துக்குடி, தாளமுத்துநகர் அருகிலுள்ள சோட்டையன்தோப்பு பகுதியில் தங்கியிருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் சக தொழிலாளர்களுடன் கட்டிட வேலைக்கு சென்றுள்ளார். </p><h2>மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை</h2><p>அப்போது, அங்குள்ள ஒரு வீட்டில் 35 வயதுடைய திருமணமாகாத மாற்றுத்திறனாளி பெண் தனியாக இருந்ததை நோட்டமிட்ட சுனில், வீட்டிற்குள் புகுந்து அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் சத்தம் போடவே, அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் சுனிலை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவரை தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். </p><h2>கைது</h2><p>இந்த சம்பவம் குறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுனிலை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>
முன்னாள் மத்திய மந்திரி சுதர்சன நாச்சியப்பன் காலமானார்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/former-union-minister-sudharsan-nachiyappan-passes-away</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/former-union-minister-sudharsan-nachiyappan-passes-away#comments</comments><guid isPermaLink="false">66ec61fb-fdee-4283-8554-6751435ae6f2</guid><pubDate>Thu, 17 Sep 2026 05:34:18 +0000</pubDate><atom:updated>2026-09-17T05:34:18.380Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>passes away,முன்னாள் மத்திய மந்திரி,Former Union Minister,சுதர்சன நாச்சியப்பன்,Sudharsana Nachiappan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/vz6h8k6g/eusnp.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/vz6h8k6g/eusnp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை</p><p>முன்னாள் மத்திய மந்திரி சுதர்சன நாச்சியப்பன் உடல்நல குறைவால் இன்று காலமானார்.</p><p>காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய மந்திரியான சுதர்சன நாச்சியப்பன் உடல்நல குறைவால் இன்று காலமானார்.  அவருக்கு வயது 78.</p> <h2>மத்திய இணை மந்திரி</h2><p>சிவகங்கையில் எரியூர் பகுதியில் வசித்து வந்த அவர் வீட்டில் இருந்தபோது, திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது.  இந்த நிலையில், வீட்டில் அவருடைய உயிர் பிரிந்தது.  அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p><p>அவர், 2013-ம் ஆண்டில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் வணிகம் மற்றும் தொழில்துறைக்கான மத்திய இணை மந்திரியாக பதவி வகித்த அனுபவம் கொண்டவர் ஆவார்.</p> ]]></content:encoded></item><item><title>பெரியார் சிலைக்கு மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மரியாதை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalin-and-udhayanidhi-stalin-pay-tribute-to-the-periyar-statue</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalin-and-udhayanidhi-stalin-pay-tribute-to-the-periyar-statue#comments</comments><guid isPermaLink="false">caff055c-d4f7-4646-b7d2-89f876173aad</guid><pubDate>Thu, 17 Sep 2026 05:29:03 +0000</pubDate><atom:updated>2026-09-17T05:29:03.033Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,M.K.Stalin,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,பெரியார்,Periyar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/zy4mqvzg/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/zy4mqvzg/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணா சாலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டம் அருகே உள்ள அவரது சிலைக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் டி.ஆர்.பாலு, எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.</p><p>அதனை தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியார் உருவப் படத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு விழா நடைபெற்றது.</p><p>தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்மொழிய திமுக உடன்பிறப்புகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும் - யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற பண்பு நெறியும் எனது வாழ்வியல் வழிமுறையாக கடைப்பிடிப்பேன்” என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.</p>]]></content:encoded></item></channel></rss>