<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 13 Sep 2026 19:19:30 +0000</lastBuildDate><item><title>ஆ.ராசாவின் பேச்சு அதிர்ச்சியளிக்கிறது - திருமாவளவன் விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/arazas-speech-is-shocking-thirumavalavans-criticism</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/arazas-speech-is-shocking-thirumavalavans-criticism#comments</comments><guid isPermaLink="false">baec1180-24c5-4f15-b7be-669a97541fba</guid><pubDate>Sun, 13 Sep 2026 19:06:19 +0000</pubDate><atom:updated>2026-09-13T19:06:19.744Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thirumavalavan,திருமாவளவன் எம்.பி,Pattinapakkam,ராசா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/3cxchyqd/thol44.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
ஆ.ராசாவின் பேச்சு ]]></media:title><media:description type="html"><![CDATA[ திருமாவளவன் விமர்சனம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/3cxchyqd/thol44.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திமுக போராட்டத்தில் ஆ.ராசா பேசியது அதிர்ச்சியளிப்பதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். </p><p>சிவகாசியில்  விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>மனித மாண்புடன் இருக்க வேண்டும் என<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95"> திமுக தலைவர் ஸ்டாலின்</a> சமீபத்தில் வீடியோ மூலம் அறிவுறுத்தியிருந்தார். ஆனால், திமுக போராட்டத்தில் அந்த மாண்பை கடைப்பிடித்ததாகத் தெரியவில்லை. இது தவெகவிற்கு எதிரான கருத்து என்பதைவிட, திமுகவுக்கு எதிரான கருத்தாகவே எடுத்துக்கொள்ள முடியும். நீண்ட நெடிய அரசியல் பாரம்பரியம் கொண்டவர்கள், மற்றவர்களுக்கு வழிகாட்டக்கூடியவர்கள், அவர்கள் அரசியல் நாகரிகத்துக்கு முன்னோடியாக இருக்க வேண்டும். ஆ.ராசா மற்றும் திமுகவின் முன்னணி பொறுப்பாளர்களின் பேச்சு அதிர்ச்சியளிக்கக்கூடியதாக உள்ளது.</p><h2>அவர்களின் சுதந்திரம்.. கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படாது</h2><p>இடைத்தேர்தலில் இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, </p><p>தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக இடதுசாரிகள் தொடர்ந்து சொல்லி வருகின்றனர். இப்போதும் அதில் உறுதியாக உள்ளனர். இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுகிறார்களே தவிர, தவெகவுக்கு ஆதரவான நிலைப்பாடு என்றோ, திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாடு என்றோ சொல்லவில்லை. அது அவர்களுக்கான சுதந்திரம்; அவர்களுக்கான உரிமை. இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுவதால், மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.</p><h2>பலமுனைப் போட்டி இருக்கலாம்</h2><p>இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு ஆதரவாக விசிக பங்காற்றும். இடைத்தேர்தலில் பலமுனைப் போட்டி இருக்கலாம். ஜனநாயகம் அதற்கு இடம் தருகிறது. அதை ஆரோக்கியமானதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.</p><h2>மக்களின் கருத்தில் தான்</h2><p>பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "மக்களின் இசைவு, ஒப்புதல் இல்லாமல் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த முடியாது. பரந்தூர் விமான நிலையம் இதற்கு ஓர் உதாரணம். மக்களின் கருத்தின் அடிப்படையில்தான் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது குறித்து அரசு முடிவு எடுத்துள்ளது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>விவசாயி வீட்டில் பசுமாடு திருடிய வாலிபர் கைது: சரக்கு வாகனம் பறிமுதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-stealing-cow-from-farmers-house-truck-seized</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-stealing-cow-from-farmers-house-truck-seized#comments</comments><guid isPermaLink="false">d0792692-a212-426f-8370-bb4981bde283</guid><pubDate>Sun, 13 Sep 2026 16:28:02 +0000</pubDate><atom:updated>2026-09-13T16:28:02.153Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrested,விவசாயி,பறிமுதல்,திருட்டு,வாலிபர்,stealing,Vehicle,cow,சரக்கு வாகனம்,பசு,A youth</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/mj5xud5p/cowtheif.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ தமிழ்பாரதி]]></media:title><media:description type="html"><![CDATA[ விவசாயி வீட்டில் பசுமாடு திருடிய வாலிபர் கைது: சரக்கு வாகனம் பறிமுதல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/mj5xud5p/cowtheif.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி,</p><p>கண்டமனூர் அருகே விவசாயி தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81">பசுமாட்டை</a> திருடி சென்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.</p> <h2>பசுமாடு திருட்டு</h2><p>தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே உள்ள ஜி.இராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் சதாராம் (வயது 43). இவர் எரதிமக்காள் பட்டி செல்லும் சாலையில், பாலாஜி பள்ளிக்கு எதிரே தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். அங்கு கொட்டகை அமைத்து பசுமாடுகளையும் வளர்த்து வருகிறார். </p><p>கடந்த 9-ஆம் தேதி மாலை மாடுகளில் பால் கறந்துவிட்டு, இரண்டு மாடுகளை கொட்டகையில் கட்டிப்போட்டுவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது, அதில் சுமார் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள ஒரு பசுமாடு மட்டும் காணாமல் போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.</p><h2>சிசிடிவி ஆய்வு </h2><p>மர்ம நபர்கள் யாரோ பசுமாட்டை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">திருடி</a> சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சதாராம் கண்டமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தபோது, மாட்டை சரக்கு வாகனத்தில் ஏற்றி கடத்தி  சென்றது தெரியவந்தது.</p><h2>சிறையில் அடைப்பு</h2><p>இதையடுத்து, க.விலக்கு அருகே உள்ள பாலசமுத்திரத்தை சேர்ந்த சக்திவேல் மகன் தமிழ்பாரதி (27) என்பவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். மாட்டை திருடுவதற்கு அவர் பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.கைது செய்யப்பட்ட தமிழ்பாரதியை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் முதற்கட்டமாக 401 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/401-direct-paddy-procurement-centres-opened-in-the-first-phase-in-tamil-nadu-42082-tonnes-of-paddy-procured</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/401-direct-paddy-procurement-centres-opened-in-the-first-phase-in-tamil-nadu-42082-tonnes-of-paddy-procured#comments</comments><guid isPermaLink="false">b9e52315-95d6-4b15-b565-0f94cd712edd</guid><pubDate>Sun, 13 Sep 2026 16:14:56 +0000</pubDate><atom:updated>2026-09-13T16:14:56.546Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,நெல் கொள்முதல்,விவசாயிகள்,Paddy,Paddy procurement,தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/6f0ncjrv/322.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நெல் கொள்முதல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/6f0ncjrv/322.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் 401 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 42,082 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>நெல் கொள்முதல்</h2><p>விவசாயிகளிடமிருந்து நெல்லை உரிய விலையில் கொள்முதல் செய்வது, கொள்முதல் செய்யப்பட்ட நெல்லினை பாதுகாப்பாக சேமித்து வைப்பது மற்றும் உரிய காலத்தில் அரவைக்கு அனுப்புவது ஆகிய பணிகளில் தமிழ்நாடு அரசு வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது.</p><h2>ஆதார விலை</h2><p>நடப்பு கொள்முதல் பருவம் கே.எம்.எஸ் 2026-2027-ற்கு மத்திய அரசால் சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2461/-ம் பொது ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2441/-ம் நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டு. 01.09.2026 முதல் நெல் கொள்முதல் செய்திட அனுமதி வழங்கியுள்ளது.</p><p>மேலும், தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் நெல்லுக்கான ஊக்கத் தொகையாக சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.156/-லிருந்து ரூ.289/-ஆகவும், பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.131/-லிருந்து ரூ.159/-ஆகவும் உயர்த்தி வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.</p><h2>நெல் கொள்முதல் நிலையங்கள்</h2><p>அதனடிப்படையில், நடப்பு கொள்முதல் பருவம் நிலையங்கள் கே.எம்.எஸ் மூலமாக 2026-2027- நேரடி நெல் கொள்முதல் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலையுடன், மாநில அரசின் நெல்லுக்கான ஊக்கத் தொகையுடன் சேர்த்து சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2750/- என்ற விலையிலும், பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2600/- என்ற விலையிலும் நெல் கொள்முதல் மேற்கொள்ள தமிழ்நாடு அரசால் உத்தரவு வழங்கப்பட்டதன் அடிப்படையில் 11.09.2026 வரையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், செங்கல்பட்டு, ஈரோடு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, தேனி மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் முதற்கட்டமாக 401 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 7,043 விவசாயிகளிடமிருந்து 42,082 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், நெல் வரத்தின் அடிப்படையில் தேவைக்கேற்ப மாவட்ட ஆட்சியர்களின் அனுமதி பெற்று நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்திட முதுநிலை மண்டல மேலாளர்கள் / மண்டல மேலாளர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்படும் நெல்லினை இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாத்து உடனுக்குடன் சேமிப்பு கிடங்குகளுக்கு இயக்கம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>அறிவுரைகள்</h2><p>மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் படாளம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேடப்பாளையம் மற்றும் வேடல் ஆகிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அவர்கள் 09.09.2026 அன்று கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் மணிகளை தாமதமின்றி கொள்முதல் செய்திடவும் அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மணிகளை பாதுகாப்பாக இருப்பு வைக்கவும் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களுக்கும் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.</p><p>தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குனர் 11.09.2026 அன்று ராணிப்பேட்டை மண்டலத்தில் கொள்முதல் நிலையங்களை கள ஆய்வு செய்து. விவசாயிகளிடமிருந்து உரிய காலத்தில் நெல்லினை கொள்முதல் செய்து உடனுக்குடன் கிடங்குகளுக்கு இயக்கம் செய்திடவும். பாதுகாப்பாக நெல்லினை இருப்பு வைத்திடவும். உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்கள்.</p><h2>அனுமதி</h2><p>மேலும் கடலூர். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மண்டலங்களில் நெல் கொள்முதலை துரிதப்படுத்தவும், கொள்முதல் செய்த நெல்லினை உடனடியாக இயக்கம் செய்யவும், பாதுகாப்பாக இருப்பு வைக்கும் பணிகளை கண்காணிக்கவும் அயல் மண்டல மேலாளர்கள் தலைமையில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது மேலும் விவசாயிகளின் நலனை கருதி விடுமுறை தினமான (13.09.2026 - ஞாயிற்றுக்கிழமை) இன்று நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து கொள்முதல் செய்ய கடலூர் மயிலாடுதுறை திருவாரூர் செங்கல்பட்டு ஈரோடு மற்றும் திருவள்ளூர் மண்டலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p>மேலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மண்டல மேலாளர்கள் மூலமாக கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு விவசாயிகளிடமிருந்து எவ்வித தாமதமின்றி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">நெல் கொள்முதல்</a> செய்திடவும் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லினை உரிய காலத்தில் இயக்கம் செய்திடவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், நெல் கொள்முதல் பணிகள் எவ்வித தொய்வுமின்றி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மேட்டுப்பாளையம்: காட்டு யானை தாக்கியதில் விவசாயி பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mettuppalayam-farmer-killed-by-wild-elephant</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mettuppalayam-farmer-killed-by-wild-elephant#comments</comments><guid isPermaLink="false">be37d116-138a-4c89-a649-9162253ac588</guid><pubDate>Sun, 13 Sep 2026 16:12:36 +0000</pubDate><atom:updated>2026-09-13T16:12:36.049Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தாக்குதல்,farmer,காட்டு யானை,மேட்டுப்பாளையம்,Mettupalayam,killed,விவசாயி பலி,wild elephant attack</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/u46vz37v/sucide.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ விவசாயி பலி]]></media:title><media:description type="html"><![CDATA[ மேட்டுப்பாளையம்: காட்டு யானை தாக்கியதில் விவசாயி பலி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/u46vz37v/sucide.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மேட்டுப்பாளையம்,</p><p>கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நள்ளிரவில் காட்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88">யானை</a> தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p><h2>விவசாய கூலி</h2><p>கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக எல்லைக்குட்பட்ட காலனி புதூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் ராமன். விவசாய கூலி தொழிலாளியான இவர், சீங்குழி கிராமத்தில் உள்ள தனது மூத்த சகோதரியை பார்த்துவிட்டு நேற்று மாலை மீண்டும் தனது ஊருக்கு நடந்து வந்துகொண்டிருந்தார்.</p> <h2>அதிகாலையில் மீட்கப்பட்ட சடலம்</h2><p>இரவு நீண்ட நேரமாகியும் ராமன் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த உறவினர்களும் கிராம மக்களும் விடிய விடிய காட்டுப் பகுதிக்குள் தேடி சென்றனர். இந்த நிலையில், இன்று அதிகாலை கொடுங்காரப்பள்ளம் புதூர் பகுதியில் உள்ள ஓடையில், ராமன் உடலில் படுகாயங்களுடன் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து வனத்துறைக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.</p><h2>யானை </h2><p>சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் காரமடை போலீசார், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">உயிரிழந்த</a> ராமனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். </p><p>முதற்கட்ட விசாரணையில், இப்பகுதியில் சுற்றி திரியும் ஒற்றை யானை ராமனை தாக்கி மிதித்து கொன்றிருக்கலாம் என்று வனத்துறையினர் பலத்த சந்தேகம் தெரிவித்துள்ளனர்.</p><h2>பொதுமக்கள் கோரிக்கை</h2><p>இதற்கிடையே, காடுகளிலிருந்து குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து உயிர்பலி வாங்கும் காட்டு விலங்குகளின் தாக்குதலில் இருந்து தங்களையும், தங்களது வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம்-தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் தேர்தல் பணிக்குழு நியமனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madhurantakam-tharapuram-by-election-aiadmk-appoints-election-task-force-headed-by-former-ministers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madhurantakam-tharapuram-by-election-aiadmk-appoints-election-task-force-headed-by-former-ministers#comments</comments><guid isPermaLink="false">4fd21a48-949a-4933-9de7-ebf6b2e94786</guid><pubDate>Sun, 13 Sep 2026 15:53:28 +0000</pubDate><atom:updated>2026-09-13T15:53:28.265Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அதிமுக,AIADMK,இடைத்தேர்தல்,நியமனம்,மதுராந்தகம்,தாராபுரம்,By-election,தேர்தல் பணிக்குழு,முன்னாள் அமைச்சர்கள்,Former Ministers</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/y7qxw1ii/109.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/y7qxw1ii/109.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மதுராந்தகம்-தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">அதிமுக</a>வில் முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் தேர்தல் பணிக்குழு நியமனம் செய்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்,</p><p>இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் 6.10.2026 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்கு, (35) மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு, கழக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி அவர்கள் தலைமையிலும்; (101) தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு, கழகப் பொருளாளரும். திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் தலைமையிலும், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.</p><h2>தேர்தல் பணிக்குழு</h2><p>விரைவில் அறிவிக்கப்பட உள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு கழக நிர்வாகிகளும், மதுராந்தகம் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும் கழக உடன்பிறப்புகளும் முழு ஒத்துழைப்பு நல்கி, சிறப்பான முறையில் தேர்தல் பணிகளை ஆற்றி கழக வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோருக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-buses-to-operate-for-those-returning-to-chennai-after-the-vinayagar-chaturthi-holiday</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-buses-to-operate-for-those-returning-to-chennai-after-the-vinayagar-chaturthi-holiday#comments</comments><guid isPermaLink="false">dc998a5a-6784-435c-a93f-c0a2667ff5b2</guid><pubDate>Sun, 13 Sep 2026 14:32:20 +0000</pubDate><atom:updated>2026-09-13T14:32:20.551Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,special buses,Holiday,தொடர் விடுமுறை,சிறப்பு பேருந்துகள் இயக்கம்,Vinayagar Chaturthi,விநாயகர் சதுர்த்தி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/c3yahnyy/bus.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/c3yahnyy/bus.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோருக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழகம் (MTC) சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன</p><p>இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கடந்த 11.09.2026 முதல் 12.09.2026 வரை சென்னையிலிருந்து அரசு போக்குவரத்து கழக பேருந்துகளின் மூலமாக சுமார் 2,31,450 எண்ணிக்கையிலான பொதுமக்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.</p><p>தொடர் விடுமுறை முடிந்து 14.09.2026 மற்றும் 15.09.2026 ஆகிய நாட்களில் திருச்சி, மதுரை, திண்டுக்கல், வேலூர், சேலம், கிருஷ்ணகிரி, ஓசூர், கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் சென்னை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இதனைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி சென்னை திரும்புவதற்காக, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 14.09.2026 அன்று 2,240 சிறப்புப் பேருந்துகள் (திருச்சி- 255, மதுரை&amp;திண்டுக்கல்-300, சேலம்-200, கிருஷ்ணகிரி,ஓசூர்&amp;வேலூர்-195, கோயம்புத்தூர்-50, திருநெல்வேலி-50 ,நாகர்கோவில்-50, தூத்துக்குடி-50, தென்காசி-50, கும்பகோணம்–225, திருவண்ணாமலை-325 விழுப்புரம்-185 மற்றும் இதர ஊர்களிலிருந்து - 305) 15.09.2026 அன்று 1,325 சிறப்புப் பேருந்துகள் (திருச்சி-105, மதுரை&amp;திண்டுக்கல்-75, சேலம்-75, கிருஷ்ணகிரி,ஓசூர்&amp;வேலூர்-200, கோயம்புத்தூர்-20, திருநெல்வேலி-10 ,நாகர்கோவில்-10, தூத்துக்குடி-15, தென்காசி-10, கும்பகோணம்–125, திருவண்ணாமலை-175 விழுப்புரம்-85 மற்றும் இதர ஊர்களிலிருந்து - 420) என கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு மட்டும் மொத்தம் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மாதவரம் பேருந்து முனையத்திற்கு 160 சிறப்புப் பேருந்துகளும், கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு 370 சிறப்புப் பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2>சிறப்புப் பேருந்துகள்</h2><p>பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில், அந்தந்த பேருந்து நிலையங்களில் பணியில் உள்ள அலுவலர்கள் பயணிகளின் வருகை மற்றும் தேவையை நேரடியாகக் கண்காணித்து, மேற்கண்ட எண்ணிக்கையையும் தாண்டி தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளை உடனுக்குடன் இயக்கவும் சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">சிறப்புப் பேருந்துகளின்</a> இயக்கத்தை ஒருங்கிணைத்து கண்காணிப்பதற்காக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) மற்றும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) ஆகியவற்றின் பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க பொது மேலாளர் நிலையிலான அதிகாரி பணியமர்த்தப்பட்டுள்ளனர்.</p><p>அதேபோன்று, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (மதுரை), திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர் ஆகியவற்றின் பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க துணை மேலாளர் / உதவி மேலாளர் நிலையிலான அதிகாரிகள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பயணிகளின் வருகையை தொடர்ந்து கண்காணித்து, தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளை உடனடியாக இயக்குவதற்காக சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழகங்களின் ஒருங்கிணைப்பு அலுவலர்களும் (Nodal Officers) தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட  போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>சிறப்பு ஏற்பாடுகள்</h2><p>சென்னை வந்தடையும் பயணிகள் தங்கள் இருப்பிடங்களுக்கு செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகம் (MTC) சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு வரும் பொதுமக்கள், அங்கிருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு எளிதாகவும் விரைவாகவும் செல்லும் வகையில் மாநகர் போக்குவரத்துக் கழகம் (MTC) சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><h2>கூடுதல் பயண நடை</h2><p>கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து வழக்கமாக 47 வழித்தடங்களில் 508 பேருந்துகள் மூலம் 2,107 பயண நடைகளும், (Trip) கிளாம்பாக்கம் வழியாக 9 வழித்தடங்களில் 130 பேருந்துகள் மூலம் 1,362 பயண நடைகளும் (Trip) இயக்கப்பட்டு வருகின்றன. இதனுடன் கூடுதலாக, 14.09.2026 மாலை மற்றும் இரவு நேரங்களில் 50 சிறப்புப் பேருந்துகள் மூலம் 400 கூடுதல் பயண நடைகளும் (Trip), 15.09.2026 அதிகாலை முதல் மேலும் 150 கூடுதல் பயண நடைகளும் (Trip) இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>இந்தப் பேருந்துகள் கோயம்பேடு, இராயபுரம், தீவுத்திடல், திருவான்மியூர், மாதவரம், செங்குன்றம், ஆவடி, பூந்தமல்லி, தாம்பரம், விமான நிலையம், கிண்டி, வேளச்சேரி, சோழிங்கநல்லூர், தண்டையார்பேட்டை, பாரிமுனை, பட்டாபிராம், கேளம்பாக்கம், திருப்போரூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட சென்னையின் முக்கிய பகுதிகளுக்கு இயக்கப்பட உள்ளன. ரெயில் மூலம் சென்னை திரும்பும் பயணிகளுக்கும் கூடுதல் பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.</p><h2>கூடுதல் பேருந்துகள்</h2><p>தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ரெயில் மூலம் சென்னை திரும்பும் பொதுமக்களின் வசதிக்காக, சென்னை சென்ட்ரல், எழும்பூர் மற்றும் தாம்பரம் இரயில் நிலையங்களிலிருந்தும் சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளுக்கு கூடுதல் மாநகரப் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் அதிகமாகக் கூடும் இடங்களில், அவர்களின் தேவைக்கேற்ப மாற்று வழித்தடங்களிலும் கூடுதல் பேருந்துகள் உடனடியாக இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>எனவே, தொடர் விடுமுறை முடிந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னை திரும்பும் பொதுமக்கள், தங்கள் ஊர்களிலிருந்து சென்னை வந்து சேருவது முதல், சென்னையில் தங்களது இருப்பிடங்களுக்குச் சென்று சேருவது வரை தடையற்ற பொதுப் போக்குவரத்து வசதி கிடைக்கும் வகையில் போக்குவரத்துத் துறை சார்பில் விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பெண் காவல் ஆய்வாளரை தாக்கிய இளைஞர் சுட்டுப்பிடிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-who-attacked-female-police-inspector-shot-and-apprehended</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-who-attacked-female-police-inspector-shot-and-apprehended#comments</comments><guid isPermaLink="false">cb455c15-06d4-4d0f-a125-cba8033c1ca9</guid><pubDate>Sun, 13 Sep 2026 14:23:03 +0000</pubDate><atom:updated>2026-09-13T14:23:03.214Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,சுட்டுப்பிடிப்பு,பாலியல் வன்கொடுமை,இளைஞர்,Police inspector,Kovai</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/2x2appnz/poli.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/2x2appnz/poli.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p>கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தவசி என்ற இளைஞரை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.</p><p>முன்னதாக <a href="https://www.dailythanthi.com/topic/coimbatore">கோவை</a> போத்தனூர் அருகே 14 வயது சிறுமியை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக சந்தோஷ், தவசி என்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்திருந்தனர். </p><p>இந்நிலையில் சிறுமியை மிரட்ட பயன்படுத்திய அரிவாளை பறிமுதல் செய்ய இளைஞர் தவசியை போலீசார் அந்த பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளி தலைமையிலான போலீசார் அழைத்துச் சென்ற நிலையில் தவசி திடீரென தாக்குதல் நடத்தினார்.</p><p>தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தவசி தாக்கியதில் காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளி காயமடைந்தார். </p><p>பலமுறை எச்சரித்தும் அரிவாளை கீழே போடாததால் தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் இளைஞர் தவசி காயமடைந்தநிலையில் தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்; சாத்தியக் கூறுகளை பரிசீலிக்க மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/online-classes-for-government-school-students-madurai-bench-of-the-high-court-orders-examination-of-feasibility</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/online-classes-for-government-school-students-madurai-bench-of-the-high-court-orders-examination-of-feasibility#comments</comments><guid isPermaLink="false">1a2d58c9-c395-44f6-847b-8413423e3994</guid><pubDate>Sun, 13 Sep 2026 14:21:00 +0000</pubDate><atom:updated>2026-09-13T14:21:00.908Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai High Court Branch,மதுரை ஐகோர்ட்டு கிளை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/xhgajtpd/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/xhgajtpd/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் மணிபாரதி என்பவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொருளாதாரம், வணிகவியல், கணக்கு பதிவியல் பாடங்களை கற்பிக்க தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். </p><p>வணிகவியல் பாடப்பிரிவு தொடர்ந்து செயல்பட தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். பிளஸ் ஒன் மாணவர்களை வேறு பள்ளிக்கு மாறும்படி கட்டாயப்படுத்த கூடாது. மேலும் சாயல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சுற்றிலும் சுற்றுச்சூவர் அமைக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். நாப்கின் இயந்திரங்கள் நிறுவன வேண்டும். காலியாக உள்ள காவலர், தூய்மை பணியாளர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார். </p><p>இந்த வழக்கு மதுரை ஐகோர்ட்டில் நீதிபதி சி.வி.கார்த்திகேயன், நீதிபதி சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது அவர்கள் பிறப்பித்த உத்தரவில், “அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதற்கான சாத்தியக் கூறுகளை அரசு பரிசீலிக்கலாம். ஏனென்றால் ஆசிரியர்கள் மாற்றுப்பணியில் நியமிக்கப்பட்டு வாரத்தில் சில நாட்கள் மட்டுமே பள்ளிக்கு பள்ளிக்கு வந்து வகுப்புகளை நடத்த முடிகிறது. </p><p>இதனால் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறுவதில் இடையூறுகள் ஏற்படுகின்றன. வகுப்புகளை தொடர்ந்து நடத்துவதை உறுதி செய்யும் வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இணையவழி கல்விக்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும். இதன் மூலம் ஆசிரியர்கள் மாற்றுப்பணியில் இருந்து வாரத்தில் சில நாட்கள் மட்டுமே நேரடியாக வகுப்புகளை நடத்த இயலும் என்ற நிலை ஏற்பட்டாலும் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்ய முடியும்” என உத்தரவு பிறப்பித்துள்ளனர். </p><p>அதே போல், “காணொளி மூலம் வகுப்புகளை நடத்துவதற்கான பிற மாற்று வழிகளையும் ஆராயலாம். அது நடைமுறைக்கு சாத்தியமாக இருந்தால் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவுறுத்தல்களை வழங்கலாம்”  என்று தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக அரசு தரப்பு வரும் 17-ந்தேதி நீதிமன்றத்தில் கருத்துகளை தெரிவிக்க வேண்டும்” எனக் கூறி வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். </p>]]></content:encoded></item><item><title>ஆண்டிபட்டி அருகே பைக் மீது சரக்கு வாகனம் மோதி 2 பேர் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-killed-after-a-goods-vehicle-collided-with-a-motorcycle-near-andipatti</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-killed-after-a-goods-vehicle-collided-with-a-motorcycle-near-andipatti#comments</comments><guid isPermaLink="false">0fba0fb3-22c0-4d79-a2c2-0f04f6c5bca8</guid><pubDate>Sun, 13 Sep 2026 14:19:56 +0000</pubDate><atom:updated>2026-09-13T14:19:56.568Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Theni,தேனி,பைக்,உயிரிழப்பு,Vehicle accident,kill,Aandipatti</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/7a4wuoob/26.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உயிரிழப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/7a4wuoob/26.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி,</p><p>தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தெற்கு மூனாண்டி பட்டியைச் சேர்ந்தவர் முத்து முருகன் மனைவி முருகேஸ்வரி (34). இவரது கணவர் முத்து முருகன் நேற்று சொந்த வேலை காரணமாக ஆண்டிபட்டிக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு, வடக்கு மூனாண்டிபட்டியைச் சேர்ந்த தினகரன் மகன் சுபாஷ் (36) என்பவரின் பைக்கில் பின்னால் அமர்ந்து, புள்ளிமான் கோம்பை ரோட்டில் ஆண்டிபட்டியை நோக்கி புறப்பட்டுச் சென்றனர்.</p><h2>விபத்து</h2><p>அப்போது அணைக்கரைபட்டி அருகே செல்லும் வழியில் எதிரே சரக்கு வாகனத்தை ஓட்டி வந்தவர், வாகனத்தை அதிவேகமாகவும், கவனகுறைவாகவும் ஓட்டி வந்து பைக் மீது மோதியதில் பைக்கில் இருந்து கீழே விழுந்தவர்கள் பலத்த காயங்கள் ஏற்பட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.</p><p>பின்னர் தகவல் அறிந்து வந்த ஆண்டி பட்டி போலீசார், உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், பின்னர், இது குறித்து சரக்கு வாகன ஓட்டுநர் வடக்கு மூனாண்டிபட்டியைச் சேர்ந்த ஆயிரம் மகன் பெருமாள் மீது வழக்கு பதிவு செய்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">விசாரணை</a> நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>விஐபி தரிசனம் ஏமாற்றம்: திருவண்ணாமலையில் பொதுவரிசையில் நின்று சேகர்பாபு தரிசனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vip-darshan-disappointment-sekar-babu-stood-in-the-general-queue-in-tiruvannamalai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vip-darshan-disappointment-sekar-babu-stood-in-the-general-queue-in-tiruvannamalai#comments</comments><guid isPermaLink="false">e27005f2-78c2-445a-a284-f3ca88fb1e54</guid><pubDate>Sun, 13 Sep 2026 14:14:21 +0000</pubDate><atom:updated>2026-09-13T14:14:21.181Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Sekar Babu,சேகர்பாபு,VIP Darshan,விஐபி தரிசனம்,இலவச தரிசனம்,திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்,Tiruvannamalai temple</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/152775ou/107.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/152775ou/107.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை:</p><p>திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவுக்கு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் விஐபி தரிசனம் மறுக்கப்பட்டதாகக் கூறப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.</p><h2>பொது தரிசன வரிசை</h2><p>திமுக முன்னாள் அமைச்சர் நேற்று  சேகர்பாபு தனது துணைவியாருடன் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்றார். வடக்கு கோபுரம் வழியாக கோவிலுக்குள் சென்ற அவர், சம்பந்த விநாயகரை தரிசித்துவிட்டு சிறப்பு தரிசனத்துக்காக காத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் நீண்ட நேரமாகியும் கோவில் அதிகாரிகள் யாரும் அவரை அழைத்துச் செல்ல வரவில்லை. இதையடுத்து, நீண்ட நேரம் காத்திருந்த சேகர்பாபு, பொது தரிசன வரிசையில் சென்று உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்தார். பின்னர் அர்ச்சகர்கள் அவர்களுக்கு பிரசாதம் வழங்கி மாலை அணிவித்தனர்.</p><h2>குற்றச்சாட்டு</h2><p>திருவண்ணாமலை கோவிலுக்கு தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலர் வருகை தரும் நிலையில், அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டு சிறப்பு தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், சேகர்பாபுவை வேண்டுமென்றே காத்திருக்க வைத்ததாக திமுகவினர் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.</p><p>இதனிடையே, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தரப்பில் வேறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விஐபி தரிசனம் தொடர்பாக முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சேகர்பாபு கோவிலுக்கு வருவது குறித்து அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படாமல், திடீரென வந்ததால் சிறப்பு தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>மேலும், முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தால் சேகர்பாபுவுக்கு சிறப்பு தரிசனத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால், திருவண்ணாமலை கோவிலில் <a href="https://www.dailythanthi.com/Topic/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81">சேகர்பாபு</a>வுக்கு விஐபி தரிசனம் மறுக்கப்பட்ட விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆபாச அரசியல் திமுகவிற்குப் புதிதல்ல - தவெக ஐ.டி. விங் விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/obscene-politics-is-not-new-to-dmk-thaveka-it-wing-criticism</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/obscene-politics-is-not-new-to-dmk-thaveka-it-wing-criticism#comments</comments><guid isPermaLink="false">c502effa-cd94-4bca-9498-539e930bf9ed</guid><pubDate>Sun, 13 Sep 2026 13:44:05 +0000</pubDate><atom:updated>2026-09-13T13:44:05.981Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,திமுக,DMK,politics,அரசியல் கட்சி,ஆபாசம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/vlxsxsk1/cmvijay-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/vlxsxsk1/cmvijay-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஆபாச அரசியல் திமுகவிற்குப் புதிதல்ல என தவெக ஐ.டி. விங் விமர்சனம் செய்துள்ளது.</p><p>இது தொடர்பாக <a href="https://www.dailythanthi.com/topic/tvk">தவெக</a> ஐ.டி. விங் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாதபோதுதான் கோழைகள் ஆபாசத்தையும் அவதூறையும் ஆயுதமாக்குவார்கள். ஆபாச அரசியல் திமுகவிற்குப் புதிதல்ல என்றாலும், அதனால் அம்பலப்படுவது அவர்கள்தான். முதலமைச்சரின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம், தொண்டர்கள் குறித்து எப்போது கொத்தடிமைகள் ஆபாச வசைபாடத் தொடங்கினார்களோ, அப்போதே அவர்களின் அரசியல் தரம் எவ்வளவு கேவலமானது என்பதை உலகுக்குப் பறைசாற்றிவிட்டார்கள்.</p><h2>கீழ்த்தரமான அரசியல்</h2><p>கடமை, கண்ணியம், கட்டுப்பாடு பற்றி கொத்தடிமைகளுக்கு வகுப்பெடுக்காத கொத்து பரோட்டாவின் இயலாமை, பவளவிழா பாப்பாவின் பகுமானத்தைப் பல் இளிக்க வைக்கிறது. ஆபாசநதியையும் வன்மநதியையும் வகைதொகையில்லாமல் ஓடவிட்டு, கீழ்த்தரமான அரசியலைப் பிழைப்பாகக் கொண்டிருப்பதற்கு எதற்கு அரசியலில் இருக்க வேண்டும்?</p><p>அமைதியாக இருக்கிறார்கள், ஆபாசத்தையும் அவதூறையும் வீசி இவர்களை வீழ்த்திவிடலாம் என்று எண்ணினால், மக்கள் மன்றத்தில் மதிப்பிழந்து நிற்கும் பவளவிழா பாப்பா என்பதை எச்சரிக்கையாக அல்ல... ரொம்ப டீசென்ட்டா, ரொம்ப அன்பா, ரொம்ப க்யூட்டா, ரொம்ப லவ்வபிள்லா சொல்லிக்கிறோம்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&apos;ஆம்னி பேருந்துகளில் 16-ந்தேதி வரை சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்படும்&apos; - போக்குவரத்துத் துறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-inspections-to-be-conducted-on-omni-buses-until-the-16th-transport-department</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-inspections-to-be-conducted-on-omni-buses-until-the-16th-transport-department#comments</comments><guid isPermaLink="false">0489e0cd-f07d-42ce-80ff-a76574a86905</guid><pubDate>Sun, 13 Sep 2026 13:41:39 +0000</pubDate><atom:updated>2026-09-13T13:41:39.206Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Omni Bus,transport department,ஆம்னி பேருந்துகள்,போக்குவரத்துத் துறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/x4xjp9v4/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/x4xjp9v4/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் 14-ந்தேதி (நாளை) கொண்டாடப்பட உள்ளது. பண்டிகைக்கான ஏற்பாடுகள் களைகட்டி வரும் நிலையில், சனி, ஞாயிறு வார விடுமுறையையொட்டி வெளியூர்களில் வசிப்பவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் விடுமுறையை கழிப்பதற்காக சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர்.</p><p>இதனிடையே ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க, வரும் 16-ந்தேதி வரை சிறப்பு தணிக்க மேற்கொள்ளப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“தமிழ்நாட்டில் சுமார் 4,900 ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. வெளி மாநிலங்களில் இருந்து சுமார் 1,000 ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டிற்குள் இயக்கப்பட்டு வருகிறது. பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து சுமார் 3,000 ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வதற்காக இயக்கப்பட்டு வருகின்றன. </p><p>சுமார் ஒரு லட்சம் பயணிகள் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள். இவ்வாறு செல்லும் பயணிகளின் நலன் கருதி சீரிய முறையிலும், சரியான கட்டணத்திலும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகளில் பொதுமக்கள் மற்றும் பயணிகளிடம் இருந்து நடைமுறையில் உள்ள கட்டணத்தை விட அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் பெறப்பட்டதை தொடர்ந்து, கடந்த மூன்று தினங்களாக, தமிழ்நாடு முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய குழு அமைத்து ஆம்னி பேருந்துகளில் சிறப்பு வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p> <p>அதன்படி, கடந்த மூன்று தினங்களில் தமிழ்நாடு முழுவதும் 3,512 ஆம்னி பேருந்துகள் தணிக்கை செய்யப்பட்டன. இதில் விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 639 ஆம்னி பேருந்துகளுக்கு தணிக்கை அறிக்கை மற்றும் இ-சலான் வழங்கப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.</p><p>இந்த சிறப்பு தணிக்கையின்போது, விதிமீறல்களுக்காக இணக்கம் ரூ.14,39,100/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு தமிழ்நாட்டில் இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளிடமிருந்து தமிழ்நாட்டிற்கு செலுத்த வேண்டிய வரியாக ரூ.27,58,243/- வசூலிக்கப்பட்டது. மேலும் அபராதமாக ரூ.3,19,000 /- வசூலிக்கப்பட்டது.</p><p>இதன் மூலம், கடந்த மூன்று தினங்களில் மட்டும் ஆம்னி பேருந்துகள் தொடர்பாக வரி மற்றும் இணக்கக் கட்டணமாக மொத்தம் ரூ.30,77,243/-வசூலிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தணிக்கையின் போது, 12.09.2026 அன்று, அதிக கட்டணம் வசூலித்ததாக கண்டறியப்பட்ட 11 ஆம்னி பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>ஆம்னி பேருந்துகளில் ஆன்லைன் மூலம் பயணிகளால் பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டை வாகன உரிமையாளர் ரத்து செய்யும் நேர்வில் அந்த பயணிகளுக்கு மாற்றுப்பேருந்தில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்படவேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்து அனுமதிச்சான்று ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். </p> <p>பொதுமக்கள் மற்றும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, பண்டிகைக் காலங்களில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும், விதிமீறல்களை கட்டுப்படுத்தவும் இந்த சிறப்பு வாகனத் தணிக்கை தொடர்ந்து தீவிரமாக 16.09.2026 வரை மேற்கொள்ளப்படும்.</p><p>எதிர்வரும் நாட்களில், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வரும் பட்சத்தில், அனுமதி ரத்து போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>புகார் தெரிவிக்க வேண்டிய கைப்பேசி எண் : 9384808333.</p><p>புகார் தெரிவிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி: tc.tn@nic.in”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>5 முனைபோட்டியால் சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/by-election-arena-heats-up-with-a-five-cornered-contest</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/by-election-arena-heats-up-with-a-five-cornered-contest#comments</comments><guid isPermaLink="false">89b78963-e78a-4830-a1aa-125192f192cf</guid><pubDate>Sun, 13 Sep 2026 13:11:34 +0000</pubDate><atom:updated>2026-09-13T13:11:34.592Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,TVK,தவெக,Vijay,Tamilnadu,அதிமுக,திமுக,DMK,நாதக,NTK,இடைத்தேர்தல்,அரசியல் களம்,மதுராந்தகம்,தாராபுரம்,கம்யூனிஸ்ட் கட்சி,Communist Parties,Madhurandakam,தமிழக அரசியல்,byelection,Dharapuram,tn politics,CM Vijay</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/g5jbde8w/thara.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/g5jbde8w/thara.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி <a href="https://dailythanthi.com/topic/byelection">இடைத்தேர்தல்</a> நடக்கிறது. அன்று நடைபெறும் வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 9ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.</p><h2>இடைத்தேர்தல்</h2><p>அதில் த.வெ.க. சார்பில், மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல், தாராபுரத்தில் சத்யபாமா, அ.தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத். தாராபுரம் தொகுதியில் பானுமதி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் வக்கீல் பரந்தாமன், தாராபுரத்தில் (தனி) வக்கீல் சுகன்யா போட்டியிடுகின்றனர்.</p><p>தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 16-ந்தேதி முடிவடைகிறது. இதுவரையில் முக்கிய கட்சிகள் யாரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்யவில்லை. சுயேச்சைகள் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை), நாளை (விநாயகர் சதுர்த்தி) விடுமுறை நாட்களாகும். எனவே வேட்புமனு தாக்கல் செய்ய செவ்வாய் மற்றும் புதன் கிழமை மட்டுமே உள்ளது. கடைசி நாளான புதன்கிழமை அன்று த.வெ.க., தி.மு.க. அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.</p><h2>வேட்புமனு தாக்கல்</h2><p><a href="https://dailythanthi.com/topic/byelection">இடைத்தேர்தலில்</a> நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர். இதன்படி மதுராந்தகத்தில் ஜானகிராமனும், தாராபுரத்தில் கார்த்திகாவும் போட்டியிடுகின்றனர். </p><p>தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 16-ந்தேதி முடிவடைகிறது. இதுவரையில் முக்கிய கட்சிகள் யாரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்யவில்லை. சுயேச்சைகள் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை), நாளை (விநாயகர் சதுர்த்தி) விடுமுறை நாட்களாகும். எனவே வேட்புமனு தாக்கல் செய்ய செவ்வாய் மற்றும் புதன் கிழமை மட்டுமே உள்ளது. கடைசி நாளான புதன்கிழமை அன்று த.வெ.க., தி.மு.க. அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.</p><h2>விஜய் பிரசாரம்</h2><p>வேட்புமனு தாக்கல் செய்த பிறகு தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கும். முதல்-அமைச்சர் விஜய் 2 கட்டமாக பிரசாரம் செய்ய இருக்கிறார். இந்த மாதம் 25-ந்தேதி மதுராந்தகத்தில் இருந்து அவர் பிரசாரத்தை தொடங்க உள்ளார். 27-ந்தேதி தாராபுரத்தில் பிரசாரம் மேற்கொள்வார். பின்னர் அக்டோபர் 2, 3-ந்தேதிகளில் மதுராந்தகம், தாராபுரத்தில் பிரசாரம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.</p><p>இந்நிலையில் இந்த <a href="https://dailythanthi.com/topic/byelection">இடைத்தேர்தலில்</a> வெற்றி பெற வேண்டும் என தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க., நா.த.க. உள்ளிட்ட கட்சிகள் தீவிர முனைப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், திமுக, அதிமுக, தவெக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. கூட்டணி கட்சிகளும் தங்களது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றன.</p><h2>5 முனை போட்டி</h2><p>இதற்கிடையில், இடதுசாரி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடைத்தேர்தலில் இரு தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, மதுராந்தகம் தொகுதி <a href="https://dailythanthi.com/topic/byelection">இடைத்தேர்தலில்</a> மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்) போட்டியிடும் என்றும், தாராபுரம் இடைத்தேர்தலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) போட்டியிடும் என்றும், இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நாளை மறுதினம் (15-ந்தேதி) அறிவிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ஏற்கெனவே த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க. என 4 முனை போட்டி இருந்த நிலையில், இடதுசாரிகளின் இந்த அறிவிப்பால் இடைத்தேர்தலில் 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>கூடுதல் டிக்கெட் கட்டணம் வசூலித்த 639 ஆம்னி பேருந்துகள்; ரூ.30.77 லட்சம் அபராதம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/639-omni-buses-charged-excess-fares-3077-lakh-in-fines-imposed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/639-omni-buses-charged-excess-fares-3077-lakh-in-fines-imposed#comments</comments><guid isPermaLink="false">2d988c0e-e3e2-4a45-a13e-ab9cc484e196</guid><pubDate>Sun, 13 Sep 2026 13:07:20 +0000</pubDate><atom:updated>2026-09-13T13:07:20.740Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Omni Bus,டிக்கெட்,Ticket,அபராதம்,ஆம்னி பேருந்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/mhybeypv/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/mhybeypv/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் 14-ந்தேதி (திங்கள்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. பண்டிகைக்கான ஏற்பாடுகள் களைகட்டி வரும் நிலையில், சனி, ஞாயிறு வார விடுமுறையையொட்டி வெளியூர்களில் வசிப்பவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் விடுமுறையை கழிப்பதற்காக சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர்.</p><p>இதனிடையே ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆம்னி பேருந்துகளில் சோதனை நடத்தினர். இதில் கூடுதல் டிக்கெட் கட்டணம் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்ட 639 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>அந்த வகையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் இருந்து ரூ.30.77 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதிக கட்டணம் வசூலித்த புகார் தொடர்பாக 11 ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>‘சட்டமன்றத்தில் மதம் சார்ந்த சபாநாயகர், அமைச்சர்கள்... நான் சொன்னால் தவறாக பார்க்கிறார்கள்’ - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-speaker-and-ministers-in-the-assembly-who-are-driven-by-religious-affiliation-people-view-it-negatively-when-i-point-this-out-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-speaker-and-ministers-in-the-assembly-who-are-driven-by-religious-affiliation-people-view-it-negatively-when-i-point-this-out-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">a4634fb9-c68a-4d9b-b8f8-535a27030e39</guid><pubDate>Sun, 13 Sep 2026 12:40:10 +0000</pubDate><atom:updated>2026-09-13T12:40:10.738Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/l9biorz4/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/l9biorz4/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழக சட்டமன்ற நடவடிக்கைகள் குறித்து விமர்சனம் செய்த அவர், சட்டமன்றத்தில் மதம் சார்ந்த சபாநாயகர், அமைச்சர்களை பார்க்கும் நிலை உருவாகி இருப்பதாக குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் கூறியதாவது;-</p><p>“பல இனங்களையும், மதங்களையும் சேர்ந்தவர்கள் சபாநாயகராக பணியாற்றிய காலமெல்லாம் போய், இன்றைக்கு ஒரு மதம் சார்ந்த சபாநாயகர், ஒரு மதம் சார்ந்த அமைச்சர்களை சட்டமன்றத்தில் பார்க்க முடிகிறது. இதை நயினார் நாகேந்திரன் சொன்னால் எல்லோரும் தவறாக பார்க்கிறார்கள். இதனை பொதுமக்களின் பார்வைக்கே நான் விட்டுவிடுகிறேன். </p><p>சட்டமன்றத்தில் என்னெல்லாம் நடந்தது என்பதை இன்றைக்கு நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பலர் அதனை ரசிக்கிறார்கள், ஆதரவு தருகிறார்கள். ஆனால் அதே சமயம், நிறைய பேர் எதிர்ப்பும் தெரிவித்திருக்கிறார்கள். </p><p>சட்டமன்றத்தில் பேசும்போதும் எம்.எல்.ஏ.க்கள் மாறி மாறி ஒருவர் குடும்பத்தைப் பற்றி ஒருவர் பேசுவதும், மாமாவிடம் போய் கேள், அப்பாவிடம் போய் கேள் என்று சொல்வதும், பைபிளில் உள்ள வசனங்களை சொல்வதும், இதெல்லாம் ஏற்புடையதா என்பதை நாட்டு மக்கள்தான் சிந்தித்து பார்க்க வேண்டும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p> ]]></content:encoded></item><item><title>நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்: பாதுகாப்பு பணியில் தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-chaturthi-celebrations-tomorrow-1-lakh-police-personnel-deployed-for-security-across-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-chaturthi-celebrations-tomorrow-1-lakh-police-personnel-deployed-for-security-across-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">7e6b6078-16ae-4187-978c-1ea29d3d22bf</guid><pubDate>Sun, 13 Sep 2026 12:27:14 +0000</pubDate><atom:updated>2026-09-13T12:27:14.855Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,தமிழக அரசு,TN govt,பாதுகாப்பு பணி,TN Police,Security Arrangements,விநாயகர் சதுர்த்தி,security alert,போலீசார்,Vinayagar Chathurthi</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/x4uk9bcc/booost.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/x4uk9bcc/booost.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழகம் முழுவதும் நாளை (திங்கள் கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். </p><h2>போலீஸ் பாதுகாப்பு</h2><p>தமிழகத்தில் நாளை <a href="https://www.dailythanthi.com/topic/vinayagar-chaturthi">விநாயகர் சதுர்த்தி</a> விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களான சென்னை, திருச்சி, கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட நகரங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. பல்வேறு இந்து அமைப்பினரும், பக்தர்களும் தங்களது பகுதியில் விநாயகர் சிலைகளை நிறுவியுள்ளனர். </p><p>இதையொட்டி நகரங்களில் உள்ள போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்.பி. உள்ளிட்டோர் சில தினங்களுக்கு முன்பு தனித்தனியாக ஆலோசனை நடத்தினர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.</p><h2>கடும் கட்டுபாடுகள்</h2><p>மேலும் மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் 17-ஆம் தேதி நடைபெற உள்ளதால் அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.</p><p>இது தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் பணிகளை நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதேபோல் நகருக்குள் வந்து செல்லும் வாகனங்கள், விநாயகர் ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் போலீசார் கடும் கட்டுபாடுகள் விதித்துள்ளனர். நிகழ்ச்சிகள் அனைத்தும் அமைதியாகவும், சுமூகமாகவும் நடைபெறுவதை அதிகாரிகள், சமூக அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன.</p><h2>பசுமைதீர்ப்பாயம் தடை</h2><p>அதேபோல் சென்னையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் மற்றும் சிலைகளை கரைப்பதற்கும் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அரியவகை ஆமைகள் பாதிக்கப்படும் என்பதால் பட்டினப்பாக்கம், பனையூர் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்கப் பசுமைதீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. </p><h2>சென்னையில் மட்டும்</h2><p>சென்னையில் மட்டும் 20 ஆயிரம் போலீசார், ஊர்க்காவல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல இந்தாண்டு சென்னையில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க கூடுதல் சோதனைச் சாவடிகளும், கூடுதலாக 2 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். </p><p>விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சென்னையில் கூடுதலாக 14 இடங்களில் புதிய சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், கூடுதலாக 2 ஆயிரம் போலீசார் சனிக்கிழமை இரவு முதலே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன்படி தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தேசிய லோக் அதாலத்: தமிழகத்தில் 1.02 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு - பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.982.18 கோடி இழப்பீடு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/national-lok-adalat-102-lakh-cases-settled-in-tamil-nadu-rs-98218-crore-compensation-for-affected-parties</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/national-lok-adalat-102-lakh-cases-settled-in-tamil-nadu-rs-98218-crore-compensation-for-affected-parties#comments</comments><guid isPermaLink="false">c4282a10-22b1-4e62-a1d5-78d870ab1e93</guid><pubDate>Sun, 13 Sep 2026 12:21:32 +0000</pubDate><atom:updated>2026-09-13T12:21:32.456Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>National Lok Adalat,தேசிய லோக் அதாலத்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/qfdmt1qd/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/qfdmt1qd/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க, தேசிய அளவில் லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படுகிறது. அந்த வகையில் தேசிய அளவில் நேற்று லோக் அதாலத் நடத்தப்பட்டது. தமிழகத்தில் தேசிய லோக் அதாலத்தை தமிழ்நாடு மாநில சட்டப் பணி ஆணைக் குழு நடத்தியது. </p><p>இந்த லோக் அதாலத், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி வழிகாட்டுதலின் பேரிலும், மாநில சட்டப்பணி ஆணைக்குழு நிர்வாகத் தலைவரும், ஐகோர்ட்டு மூத்த நீதிபதியுமான எஸ்.எம். சுப்பிரமணியம் மேற்பார்வையிலும் நடந்தது.</p><p>சென்னை ஐகோர்ட்டில், நீதிபதிகள் பி.பி.பாலாஜி, கே.ராஜசேகர், ஜி.அருள்முருகன், மதுரை ஐகோர்ட்டு கிளையில் நீதிபதிகள் எம்.டி.சுமதி,</p><p>என். குணசேகரன், மாவட்ட அளவில் நீதிபதிகள், சார் நீதிபதிகள், மாஜிஸ்தி ரேட் டுகள் தலைமையில் மொத்தம் 524 அமர்வுகள், வழக்குகளை விசாரித்தன. </p><p>மோட்டார் வாகன விபத்து வழக்குகள், செக் மோசடி வழக்குகள், சிவில் வழக்குகள் என்று பலதரப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. வழக்கில் தொடர்புடைய இருதரப்பினர்களிடம் நீதிபதிகள் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களது முழு சம்மதத்துடன் வழக்குகளை சமரசத்துக்கு கொண்டு வந்து முடித்து வைத்தனர். </p><p>இதில், இருதரப்பினர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் முழு சம்மதத்துடன், 1.02 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. இதன்மூலம், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.982.18 கோடி இழப்பீடு கிடைத்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>காங்கிரசில் இருந்து தான் பிரதமர் வேட்பாளர் வருவார்; ப.சிதம்பரம்

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/prime-minister-candidate-will-come-from-congress-says-p-chidambaram</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/prime-minister-candidate-will-come-from-congress-says-p-chidambaram#comments</comments><guid isPermaLink="false">93a32af5-70a9-4b32-b009-b4c740e71b12</guid><pubDate>Sun, 13 Sep 2026 12:16:11 +0000</pubDate><atom:updated>2026-09-13T12:16:11.289Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,காங்கிரஸ்,Congress,ப.சிதம்பரம்,P.Chidambaram</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/c1ksayml/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/c1ksayml/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தவெகவுடன் எந்த சர்ச்சையும் இல்லை, காங்கிரஸ் கட்சியில் இருந்து தான் பிரதமர் வேட்பாளர் வருவார் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.  </p> <h2>தவெக - காங்கிரஸ் கூட்டணி</h2><p>கடந்த சட்டசபைத்தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் தற்போது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95">தவெக </a>கூட்டணி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளது. தவெக அமைச்சரவையில் காங்கிரசுக்கு 2 அமைச்சர்கள் பதவி வழங்கப்பட்டுள்ளன.</p><p>இதனிடையே, 2029ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக முதல்-அமைச்சர் விஜய்-ஐ முன்னிறுத்துவோம் என தவெகவினர் கூறி வருகின்றனர். அதே கருத்தையே தவெக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கூறி வருகின்றனர். இதனால் தவெக - காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டது.</p><p>நாடாளுமன்ற தேர்தலின் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D">காங்கிரஸ் </a>கூட்டணியில் ராகுல்காந்தி நான் பிரதமர் வேட்பாளர், ஆர்வம் மிகுதியின் காரணமாக தவெகவினர் முதல்-அமைச்சர் விஜய்-ஐ பிரதமர் வேட்பாளர் என்று கூறி வருகின்றனர். அவர்கள் இன்னும் ரசிகர் மன்ற மன நிலையில் தான் உள்ளனர் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கூறினார். இதே கருத்தைத்தான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மற்ற தலைவர்களும் கூறி வருகின்றனர்.</p> <h2>ப.சிதம்பரம் பேட்டி</h2><p>இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">ப.சிதம்பரம்</a> தனியார் செய்தி நிறுவனத்திற்கு இன்று சிறப்பு பேட்டி அளித்தார்.</p><h2>அப்போது அவர் கூறியதாவது</h2><p>முதல் 100 நாள் தவெக ஆட்சியில் லஞ்சம் மற்றும் ஊழல் எதுவும் இல்லை. தமிழ்நாட்டில் நல்லாட்சி நடந்து வருகிறது. பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் தவெகவுக்கும், காங்கிரசுக்கும் இடையே எந்த வித சர்ச்சையும் இல்லை. காங்கிரஸ் கட்சியில் இருந்து தான் பிரதமர் வேட்பாளர் வருவார். மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்காக நடைபெறும் இடைத்தேர்தலில் தவெக வெற்றிபெறும்</p><p>என்றார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பூனை விஷம் வைத்து கொலை? -  போலீஸ் விசாரணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/six-month-kitten-poisoning-case-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/six-month-kitten-poisoning-case-chennai#comments</comments><guid isPermaLink="false">d323e757-5219-4317-bffc-cec587324c62</guid><pubDate>Sun, 13 Sep 2026 12:10:47 +0000</pubDate><atom:updated>2026-09-13T12:10:47.250Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,போலீஸ்,விசாரணை,Death,investigation,விஷம்,poisoned,பூனைக்குட்டி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/kc0rk658/cat.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பூனை]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னையில் 6 மாத பூனைக்குட்டிக்கு விஷம் வைத்துக்கொலை? -  போலீஸ் விசாரணை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/kc0rk658/cat.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை ஜாபர்கான்பேட்டையில் 6 மாதமே ஆன வளர்ப்பு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%88">பூனை</a> மர்ம நபர்கள் உணவில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து எம்.ஜி.ஆர். நகர் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p> <h2>வளர்ப்பு பூனை மர்ம மரணம்</h2><p>சென்னை ஜாபர்கான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி. பிராணிகள் வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட இவர், தனது வீட்டில் பிறந்து 6 மாதங்களே ஆன அழகான பூனை ஒன்றை ஆசையாக வளர்த்து வந்தார். இந்த நிலையில், நேற்று அந்த பூனை திடீரென மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பார்த்தசாரதி கதறி அழுதார். ஆரோக்கியமாக இருந்த பூனை திடீரென இறந்தது அவருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.</p><h2>போலீசில் புகார்</h2><p>இதையடுத்து, தனது பூனைக்கு அந்த பகுதியை சேர்ந்த மர்ம நபர்கள் யாரோ திட்டமிட்டு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொன்றுவிட்டதாக பார்த்தசாரதி குற்றம் சாட்டினார். மேலும், வாயில்லா ஜீவனை கொன்றவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்தில் அவர் பரபரப்பு புகார் அளித்தார்.</p><h2>பிரேத பரிசோதனை</h2><p>புகாரை பெற்று கொண்ட போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான பூனையின் உடலை கைப்பற்றினர். பின்னர், பூனையின் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D">மரணத்திற்கான </a>உண்மையான காரணத்தை கண்டறிய, அதன் உடலை பிரேத பரிசோதனை சைதாப்பேட்டையில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். </p><p>பூனைக்கு விஷம் வைத்த மர்ம நபர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க, அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>அரசு மருத்துவமனைகளில் 4,724 செவிலியர் பணியிடங்கள்: செப்.25-க்குள் விண்ணப்பிக்கலாம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/4724-nursing-posts-in-government-hospitals-applications-accepted-until-september-25</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/4724-nursing-posts-in-government-hospitals-applications-accepted-until-september-25#comments</comments><guid isPermaLink="false">b04b4c32-566b-4570-bf23-e87d6a0e5764</guid><pubDate>Sun, 13 Sep 2026 12:03:39 +0000</pubDate><atom:updated>2026-09-13T12:03:39.638Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Application,Government Hospital,அரசு மருத்துவமனை,பணியிடங்கள்,செவிலியர்,Nursing</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/hssz0hrm/321.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ செவிலியர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/hssz0hrm/321.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை, </p><p>தமிழகம் முழுவதும் அரசுமருத்துவமனைகளில் தற்காலிகமாக நிரப்பப்படவுள்ள 4,724 செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.</p><h2>செவிலியர் பணியிடங்கள்</h2><p>தேசிய நலவாழ்வு இயக்கத்தின் கீழ் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார பணிகள், மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம், சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் கீழ் உள்ள மருத்துவமனைகளில் உள்ள செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.</p><p>தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் திருப்பூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர இதர மாவட்டங்களில், மாவட்ட நல வாழ்வு சங்கங்களின் கீழ் செயல்படும் அனைத்து சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில்  உள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D">செவிலியர்</a> பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.</p><p>தற்காலிக அடிப்படையில் ஒப்பந்த முறையில் நிரப்பப்படவுள்ள 4,724 காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பம் மற்றும் மாவட்ட வாரியாக காலிப் பணியிடங்களின் விவரம் ஆகியவற்றை https://nhm. tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வித் தகுதி, அடையாளச்சான்று, புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து, அந்தந்த மாவட்ட சுகாதார அலுவலருக்கு செப்.25 -ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>அமைச்சர் நிர்மல் குமார் குறித்து சர்ச்சை பேச்சு: தி.மு.க. எம்.பி., ஆ.ராசா மீது புகார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/controversial-remarks-about-minister-nirmal-kumar-complaint-filed-against-dmk-mp-a-raja</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/controversial-remarks-about-minister-nirmal-kumar-complaint-filed-against-dmk-mp-a-raja#comments</comments><guid isPermaLink="false">fb84f8e7-c16d-4186-a036-98c58b2a6858</guid><pubDate>Sun, 13 Sep 2026 11:50:07 +0000</pubDate><atom:updated>2026-09-13T11:50:07.439Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,Tamilnadu,விஜய்,திமுக,DMK,தமிழகம்,புகார்,ஆ.ராசா,A.Rasa,அமைச்சர் நிர்மல் குமார்,Minister Nirmal Kumar</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/sb4dbbrr/raja.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/sb4dbbrr/raja.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> சட்டமன்றத்தில் பேசியதை கண்டித்து சென்னையில் தி.மு.க.வினர் நேற்று 2 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</p><h2>ஆர்ப்பாட்டம்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> சட்டமன்றத்தில், முன்னாள் முதல்-அமைச்சர்கள் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் பற்றி பேசியதை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. </p><p>அந்தவகையில், சென்னை தெற்கு, தென்மேற்கு, மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p><p>ஆர்ப்பாட்டத்திற்கு துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மு.க.தமிழரசு, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் பூங்கோதை ஆலடி அருணா, பெஞ்சமின், வர்த்தக அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், மாவட்ட செயலாளர்கள் மயிலை த.வேலு, சிற்றரசு உள்பட தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, முதல்-அமைச்சர் விஜய்க்கு எதிராக கையில் பதாகைகள் ஏந்தியவாறு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.</p><h2>அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்</h2><p>ஆர்ப்பாட்டத்தில், ஆ.ராசா பேசியதாவது:-</p><p>தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் ஒரு கருப்பு நாளை குறிக்கும் இன்னொரு கருப்பு நாள் இது. தமிழகத்தில் தற்போது நிலவி வரும் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து எதிர்க்கட்சித்தலைவர் சட்டமன்றத்தில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஆனால், முதல்-அமைச்சர், சட்டம் ஒழுங்கு குறித்துப் பேசும் போது 'மூன்று நாள் கழித்து வருவேன், ஓடிவிடாதீர்கள்' என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.</p><p>தகுதியற்ற ஒருவரை தேர்ந்தெடுத்து விட்டோமோ என்று மக்கள் அஞ்சுகிறார்கள். எங்கள் ஆட்சியில் சிறு தவறுகள் நடந்தால் கூட அது சட்டம்- ஒழுங்கு பிரச்சினையாக பார்க்கப்பட்டது. ஆனால் உங்கள் ஆட்சியில் நடக்கும் கொடூரங்கள் தனிப்பட்ட பிரச்சினைகளாக சித்தரிக்கப்படுகின்றன. 7 கட்சி மாறிய ஒரு அமைச்சர். அவருக்கு ஒரு தலைவர். கை-காலை ஆட்ட ரூ.250 கோடி சம்பளம் வாங்கினீர்களே நடிப்பது என்றால் சினிமாவிலேயே இருந்திருக்கலாம். இந்த ஆட்டம் நீண்ட நாள் நீடிக்காது. விரைவில் ஆட்சி மாறும், அதிகாரம் மாறும். தமிழ்நாடு மக்களுக்கு விரைவில் ஒரு விடிவுகாலம் பிறக்கும்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p><p>தொடர்ந்து ஆ.ராசா உரையாற்றும் போது, தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் குறித்து பேசியது  தமிழக அரசியல் வட்டாரத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.</p><p>அமைச்சர் நிர்மல் குமார், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை, என்றும் அவர் வேறொரு சம்பவத்திற்காக கைதாகினார் என்றும் கூறி வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய எம்.பி. ஆ. ராசா, அமைச்சர் நிர்மல் குமார் குறித்து பேசியது சர்ச்சைகுள்ளானது.</p><p>இந்நிலையில் அமைச்சர் நிர்மல் குமார் குறித்து சர்ச்சையக பேசிய விவகாரத்தில், திமுக எம்.பி., ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வீடியோக்களை ஆதாரமாக இணைத்து கும்மிடிப்பூண்டி துணை காவல் கண்காணிப்பாளரிடம் தவெக எம்எல்ஏ விஜயகுமார் புகார் அளித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>திருப்போரூர் முருகன் கோவிலில் ஒரே நாளில் 70-க்கும் மேற்பட்ட திருமணங்கள் - கடும் போக்குவரத்து நெரிசல்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/over-70-weddings-in-a-single-day-at-thiruporur-murugan-temple-heavy-traffic-jam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/over-70-weddings-in-a-single-day-at-thiruporur-murugan-temple-heavy-traffic-jam#comments</comments><guid isPermaLink="false">f0f07639-4d8f-406b-9cef-d4f694080f34</guid><pubDate>Sun, 13 Sep 2026 11:46:10 +0000</pubDate><atom:updated>2026-09-13T11:46:10.064Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>போக்குவரத்து நெரிசல்,Weddings,திருமணங்கள்,Thiruporur Murugan Temple,திருப்போரூர் முருகன் கோவில்,கடும் போக்குவரத்து நெரிசல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/rnpdkz21/tiruporur-murugan-temple.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/rnpdkz21/tiruporur-murugan-temple.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்போரூர், </p><p>திருப்போரூர் முருகன் கோவிலில் ஒரே நாளில் 70-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றுள்ளது.</p><p>திருப்போரூரில் உள்ள முருகன் கோவிலில் கிருத்திகை, விசேஷ தினங்கள். செவ்வாய்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து முருகப்பெருமானை தரிசனம் செய்து செல்கின்றனர். மேலும் முகூர்த்த நாட்களில் கடந்த சில ஆண்டுகளாக ஏராளமான திருமணங்கள் நடைபெற்று வருகிறது.</p><h2>70-க்கும் மேற்பட்ட திருமணங்கள்</h2><p>இந்த நிலையில் இன்று முகூர்த்த நாள் என்பதால் திருப்போரூர் முருகன் கோவிலில் 70-க்கும் மேற்பட்ட திருமணங்கள் மற்றும் மாடவீதிகளில் 15-க்கும் மேற்பட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D">திருமணங்கள்</a> நடைபெற்றன. திருமணத்துக்கு கார், வேன், மோட்டார் சைக்கிள் என வருகை தந்தவர்கள் தங்களது வாகனங்களை வழியிலேயே நிறுத்தி விட்டு சென்றதால் மாடவீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதிகளில் வசிப்பவர்கள் அவசர தேவைக்காக வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் கோவில் வளாகத்தில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றதால் கோவிலுக்கு உள்ளே செல்லும் வழி மற்றும் கோவில் வெளிப்புற வளாக பகுதிகளில் கடும் நெரிசல் ஏற்பட்டது.</p><p>இது ஒருபுறம் இருக்க மாடவீதிகளில் உள்ள பல திருமண மண்டபங்களில் வாகன நிறுத்துமிடம் இல்லாததால் சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது. முகூர்த்த நாட்களில் மாட வீதிகளில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலை தீர்க்க நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும், கோவிலுக்கு சொந்தமான வாகன நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம்: திருடப்பட்ட மரகத சிலை மீட்பு - 3 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/maduranthakam-stolen-emerald-idol-recovered-3-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/maduranthakam-stolen-emerald-idol-recovered-3-arrested#comments</comments><guid isPermaLink="false">bf66608d-13ec-4baf-b310-519b4a85ace4</guid><pubDate>Sun, 13 Sep 2026 11:36:37 +0000</pubDate><atom:updated>2026-09-13T11:36:37.366Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,கைது,arrest,Recovered,மதுராந்தகம்,Maduranthakam,சிலை மீட்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/5xxzp7sd/320.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருடப்பட்ட மரகத சிலை மீட்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/5xxzp7sd/320.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மதுராந்தகத்தில் திருடப்பட்ட மரகத பாலமுருகன் தண்டாயுதபாணி சுவாமி சிலை மீட்கப்பட்டது. இது குறித்து, தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>சுவாமி சிலை திருட்டு</h2><p>செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் உட்கோட்டம், சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருங்கரணை கிராமத்தில் உள்ள நடுபழனி பாலமுருகன் மரகத தண்டாயுதபாணி திருக்கோவிலில். 01.09.2026 அன்று இரவு மர்ம நபர்களால் 2.5 அடி உயரமுள்ள மரகத பாலமுருகன் தண்டாயுதபாணி சுவாமி சிலை மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்டன.</p><p>மேற்படி சம்பவம் தொடர்பாக, உடனடியாக சித்தாமூர் காவல் நிலைய குற்ற 6.245/2026 u/s 331(4), 305(d) BNS ல் வழக்கு பதிவு செய்யப்பட்டு. ஆதாரங்களின் அடிப்படையில், குற்றவாளிகளை விரைந்து கண்டறிந்து கைது செய்ய செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், மேற்பார்வையில், மதுராந்தகம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தீபக் ரஜினி தலைமையில் 6 காவல் ஆய்வாளர்களை கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு. 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும். </p><h2>மீட்பு</h2><p>வழக்கமாக இவ்வகையான குற்ற செயல்களில் ஈடுபடும் பழங்குற்றவாளிகள் மேற்பட்ட 20-க்கும் பழங்குற்றவாளிகளை விசாரித்தும், குற்றவாளிகளை அடையாளம் கண்டு இன்று சித்தாமூர் காவல் ஆய்வாளர் மகாலிங்கம்  தலைமையில் 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு திருடப்பட்ட மரகத பாலமுருகன் தண்டாயுதபாணி சுவாமி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88">சிலை </a>மீட்கப்பட்டுள்ளது. </p><h2>பாராட்டு</h2><p>மேலும், இவ்வழக்கின் சட்டப்படியான புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும், மகேஷ் குமார் அகர்வால், காவல்துறை தலைமை இயக்குநர்/ படைத்தலைவர், தனிப்படை காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை வெகுவாக பாராட்டினார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தி: சென்னையில் 1,562 சிலைகள் வைத்து வழிபட காவல்துறை அனுமதி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-chaturthi-police-grant-permission-to-install-and-worship-1562-idols-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-chaturthi-police-grant-permission-to-install-and-worship-1562-idols-in-chennai#comments</comments><guid isPermaLink="false">75e86006-d645-4a53-877e-67034742ad43</guid><pubDate>Sun, 13 Sep 2026 11:33:12 +0000</pubDate><atom:updated>2026-09-13T11:33:12.419Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chathurthi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/tn2hkbne/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/tn2hkbne/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் 14-ந்தேதி(திங்கள்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பண்டிகைக்கான ஏற்பாடுகள் களைகட்டி வருகின்றன. விநாயகர் சிலை வழிபாடுகள், ஊர்வலத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. </p><p>தமிழகத்தைப் பொறுத்தவரை பொது மக்களுக்கு இடையூறின்றி விழாக்கள் நடத்தவும், சிலைகள் கரைப்பு ஊர்வலத்துக்கான ஏற்பாடுகள் குறித்தும், அந்தந்த மாவட்ட அமைப்பாளர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலை பாதிக்கும் ரசாயனப் பொருட்களைத் தவிர்த்து முற்றிலும் இயற்கை பொருட்களால் செய்யப்பட்ட சிலைகளையே வழிபாட்டிற்கு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.</p><p>இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை காவல் எல்லைக்குள் 1,562 சிலைகளை வைத்து வழிபட போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். பாதுகாப்பு பணியில் 16,500 போலீசார் ஈடுபட உள்ளனர். உரிய அனுமதி இல்லாத இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபட அனுமதி இல்லை எனவும், கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>நெல்லையில் பிரபல ரவுடியின் பிறந்தநாள் கொண்டாட அரிவாளுடன் கூடிய 8 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/birthday-celebration-of-history-sheeter-rowdy-in-jail-8-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/birthday-celebration-of-history-sheeter-rowdy-in-jail-8-arrested#comments</comments><guid isPermaLink="false">76341f0b-0f8d-45d8-8af3-4e9fd34b51d3</guid><pubDate>Sun, 13 Sep 2026 11:04:03 +0000</pubDate><atom:updated>2026-09-13T11:04:03.428Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrest,சிறை,Rowdy,birthday celebration,பிறந்த நாள் கொண்டாட்டம்,சரித்திர பதிவேடு குற்றவாளி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/3vv1y2kv/rowdy.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ரவுடிகள் ]]></media:title><media:description type="html"><![CDATA[ சிறையில் இருக்கும் சரித்திர பதிவேடு ரவுடியின் பிறந்த நாள் கொண்டாட்டம்: 8 பேர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/3vv1y2kv/rowdy.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேரன்மகாதேவி,</p><p>திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே, சிறையில் இருக்கும் ஏ-பிளஸ் பிரிவு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF">சரித்திர பதிவேடு குற்றவாளியின் </a>பிறந்த நாளை கொண்டாட அரிவாளுடன் கூடிய 8 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர்  கைது செய்தனர். அவரிடம் இருந்து 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.</p><h2>பாலத்தின் கீழ் ரகசிய கும்பல்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டம், நாங்குநேரி பகுதியை சேர்ந்தவர் நவீன். இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், காவல்துறையின் ஏ-பிளஸ் பிரிவு சரித்திர பதிவேடு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். </p> <p>இந்த நிலையில், நேற்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு, சேரன்மகாதேவியில் இருந்து கூனியூர் செல்லும் சாலையில் உள்ள ஒரு பாலத்தின் கீழ் நேற்று இரவு 8.50 மணியளவில் ஒரு கும்பல் ரகசியமாக கூடியது.</p><h2>குற்ற செயல்</h2><p>சிறையில் இருக்கும் ரவுடி நவீனின் பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடவும், அதேசமயம் அங்கு அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஏதோ குற்ற செயலில் ஈடுபடவும் அவர்கள் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இவர்களில் 5 பேர் ஏற்கனவே சரித்திர பதிவேடு குற்றவாளிகள் ஆவர்.</p><h2>போலீசாரை கண்டு ஓட்டம் </h2><p>இதுகுறித்து சேரன்மகாதேவி காவல் நிலைய ரோந்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலறிந்தவுடன் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காவல்துறையினர் வருவதை கண்டதும் பாலத்தின் கீழ் கூடியிருந்த ரவுடி கும்பல் நாலாபுறமும் சிதறி ஓடியது. </p><p>இருப்பினும், உஷாரான போலீசார் துரிதமாக செயல்பட்டு, தப்பியோட முயன்ற கும்பலை வளைத்து பிடித்தனர். இதில் சம்பவ இடத்திலேயே 8 பேரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>12 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்</h2><p>கைது செய்யப்பட்ட 8 பேர் மீதும் சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து சட்டப்பூர்வமான கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், அவர்கள்  பயன்படுத்திய 12 இருசக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><figure><img alt="ரவுடிகள் பயன்படுத்திய 12 இருசக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல்" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/ulr1kcyr/bikeseized.jpg" /><figcaption>12 மோட்டார் சைக்கிள்கள்</figcaption></figure><h2>காவல்துறை எச்சரிக்கை</h2><p>மேலும், போலீசாரை கண்டு தப்பியோடிய மற்ற நபர்களை அடையாளம் கண்டு, அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் சமூக விரோதிகள் மற்றும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">ரவுடிகள்</a> மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தேனி: வாடிக்கையாளர்களின் 139 பவுன் நகைகளை மோசடி செய்ததாக புகார் - அடகுக்கடை உரிமையாளர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/theni-pawnshop-owner-arrested-following-complaint-of-defrauding-customers-of-139-sovereigns-of-jewelry</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/theni-pawnshop-owner-arrested-following-complaint-of-defrauding-customers-of-139-sovereigns-of-jewelry#comments</comments><guid isPermaLink="false">c68ecb2d-db6f-4606-9811-8985d363e49d</guid><pubDate>Sun, 13 Sep 2026 11:00:31 +0000</pubDate><atom:updated>2026-09-13T11:00:31.782Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Theni,தேனி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/2hzmf9n8/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/2hzmf9n8/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி,</p><p>தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நகை அடகுக்கடை நடத்தி வருபவர் துரைமுருகன். இவர் வாடிக்கையாளர்கள் அடகுவைத்த 139 பவுன் நகைகளை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்து தலைமறைவானதாக கூறப்படுகிறது. </p><p>இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருந்த துரைமுருகனை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். </p><p>இந்நிலையில் கேரள மாநிலம் திருச்சூரில் துரைமுருகன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று துரைமுருகனை சுற்றிவளைத்து அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து அவரை தேனிக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் “எங்கு பார்த்தாலும் மின்வெட்டு” - உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/power-cuts-everywhere-in-tamil-nadu-udhayanidhi-stalins-allegation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/power-cuts-everywhere-in-tamil-nadu-udhayanidhi-stalins-allegation#comments</comments><guid isPermaLink="false">373ac8d7-30b4-4b1d-be5f-25b1a0cdac44</guid><pubDate>Sun, 13 Sep 2026 10:48:52 +0000</pubDate><atom:updated>2026-09-13T10:48:52.259Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,Tamilnadu,DMK,தமிழகம்,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,power cut,மின்வெட்டு,மின்வெட்டு பிரச்சினை,TVK Government</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/gszsf0kc/uday.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/gszsf0kc/uday.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தி.மு.க. அரசு கொண்டுவந்த திட்டங்களின் பெயரை மாற்றி த.வெ.க. அரசு அறிவித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/udhayanidhi-stalin">உதயநிதி ஸ்டாலின்</a> தெரிவித்துள்ளார்.</p><h2>டம்மி ஆட்சியாளர்கள்</h2><p>இதுதொடர்பாக அவர் பேசியதாவது:-</p><p>தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் மின்வெட்டு ஏற்படுகிறது. டம்மி ஆட்சியாளர்களால் மக்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். திமுகவின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாததால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்புகின்றனர். வெற்றி, தோல்விகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு, என்றுமே மக்களோடு நிற்கின்ற இயக்கம் தி.மு.க. </p><h2>த.வெ.க. அரசு</h2><p>த.வெ.க. ஆட்சியில் விலைவாசியும் அவற்றின் பற்றாக்குறையும் ஏறிக்கொண்டே இருக்கின்றன. பல்வேறு வாக்குறுதிகளைச் சொல்லி ஆட்சிக்கு வந்தனர். ஆனால் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. தி.மு.க. அரசு கொண்டுவந்த திட்டங்களின் பெயரை மாற்றி த.வெ.க. அரசு அறிவித்து வருகிறது</p><h2>தி.மு.க.வின் வெற்றி</h2><p>திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி த.வெ.க. கொண்டு வந்தது போன்று பொய்யைப் பரப்புகின்றனர். சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்படுகிறோம். த.வெ.க. ஆட்சியின் வீழ்ச்சிக்கு இரு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி தொடக்கமாக இருக்க வேண்டும்</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>கொடைக்கானல் அருகே சட்டவிரோத கல்குவாரி: அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளாதது ஏன்? - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/illegal-stone-quarry-near-kodaikanal-why-are-government-officials-turning-a-blind-eye-nainar-nagendran-questions</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/illegal-stone-quarry-near-kodaikanal-why-are-government-officials-turning-a-blind-eye-nainar-nagendran-questions#comments</comments><guid isPermaLink="false">8c550181-34ca-4463-8f34-ddc7fe07b25d</guid><pubDate>Sun, 13 Sep 2026 10:48:21 +0000</pubDate><atom:updated>2026-09-13T10:48:21.902Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,கல்குவாரி,கொடைக்கானல்,Kodaikanal,Stone Quarry</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/sokkoyvf/38.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/sokkoyvf/38.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கொடைக்கானல் அருகே சட்டவிரோதமாக இயங்கி வரும் கல்குவாரியினை அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளாதது ஏன் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக, நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>கல்குவாரி</h2><p>சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் கொடைக்கானல் அருகேயுள்ள நாயுடுபுரம் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வரும் கல்குவாரியில், அதிபயங்கர வெடிபொருட்கள் மற்றும் கனரக வாகனங்களைப் பயன்படுத்தி பாறைகள் தகர்க்கப்படுவதை நேரடியாக களத்திற்கே சென்று படம் பிடித்துக் காட்டியுள்ளார் தமிழக பாஜகவின் திண்டுக்கல் மேற்கு மாவட்டத் துணைத் தலைவர் மதன். மலைப்பிரதேசங்களை இப்படி சட்டவிரோதமாக துண்டு துண்டாக வெட்டி எடுப்பது கடுமையான நிலச்சரிவிற்கு வழிவகுக்கும் என்பதை முதல்-அமைச்சர் விஜய் உடனடியாக கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். </p><p>தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள் 1959- ன் படி, தேசிய பூங்கா, வனவிலங்கு சரணாலயங்கள், புலிகள் காப்பகம், யானை வழித்தடங்கள் மற்றும் காப்புக் காடுகள் உள்ளிட்டவைகளுக்கு அருகில் இதுபோன்ற கல்குவாரிகள் அமைய கடும் கெடுபிடிகள் நிலவும் நிலையில், நாயுடுபுரத்தில் எதன் அடிப்படையில் இந்த கல்குவாரி இயங்கி வருகிறது? மாநில அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA-TN) உள்ளிட்ட அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுக்களிடம் இருந்து குறிப்பிட்ட கல்குவாரி முறையாக அனுமதி வாங்கியதா?.</p><h2>அரசு அதிகாரிகள்</h2><p>புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான நாயுடுபுரத்தில் சட்டவிரோதமாக இயங்கி வரும் இந்த கல்குவாரி குறித்து திண்டுக்கல் மாவட்டத்தின் அரசு அதிகாரிகள் எதுவும் கண்டுகொள்ளாதது ஏன்? அதிலும் தமிழக பாஜகவின் மேற்கு மாவட்டத் தலைவர் மதன் இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் கூட, இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்? குறிப்பிட்ட கல்குவாரிக்குப் பின்னணியில் ஏதேனும் மிகப்பெரிய அரசியல் புள்ளியின் தலையீடு இருக்கிறதா? உள்ளிட்ட மக்களின் கேள்விகளுக்கு ஆளும் அரசு தகுந்த ஆதாரங்களுடன் உடனடியாக பதிலளிக்க வேண்டுமென தமிழக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95">பாஜக</a> சார்பாக வலியுறுத்துகிறேன்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">சுமார் 200–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் கொடைக்கானல் அருகேயுள்ள நாயுடுபுரம் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வரும் கல்குவாரியில், அதிபயங்கர வெடிபொருட்கள் மற்றும் கனரக வாகனங்களைப் பயன்படுத்தி பாறைகள் தகர்க்கப்படுவதை நேரடியாக களத்திற்கே சென்று படம் பிடித்துக் காட்டியுள்ளார்… <a href="https://t.co/DXfRMKhjUo">pic.twitter.com/DXfRMKhjUo</a></p>&mdash; Nainar Nagenthran (@NainarBJP) <a href="https://x.com/NainarBJP/status/2099078428947333628?ref_src=twsrc%5Etfw">September 13, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>மக்களின் வரிப்பணத்தில் முதல் - அமைச்சர் விஜய் லண்டனுக்கு சொகுசுப் பயணம்; திமுக விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijays-luxury-trip-to-london-on-peoples-tax-money-dmk-criticizes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijays-luxury-trip-to-london-on-peoples-tax-money-dmk-criticizes#comments</comments><guid isPermaLink="false">49bc0458-0dd4-47ec-89d8-c672955481a0</guid><pubDate>Sun, 13 Sep 2026 10:46:53 +0000</pubDate><atom:updated>2026-09-13T10:46:53.321Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,Chief Minister Vijay,முதல் - அமைச்சர் விஜய்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/l5qil8rp/stalin.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/l5qil8rp/stalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மக்களின் வரிப்பணத்தில் முதல் -அமைச்சர் விஜய் லண்டனுக்கு சொகுசுப் பயணம் என <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">திமுக</a> ஐடி விங் விமர்சனம் செய்துள்ளது.</p><p>இது தொடபாக திமுக ஐடி விங் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>மாநிலம் முழுதும் மின்வெட்டு, படுகொலைகள், பாலியல் அத்துமீறல்கள், தண்ணீர் பற்றாக்குறை, விவசாயிகள் போராட்டம் அதற்கு எதிராக மக்கள் வீதியில் நின்று "தவெக ஆட்சி ஒழிக" எனத் தீப்பந்தம் ஏந்திப் போராடும்போது, தமிழ்நாட்டை ஆளத் துப்பில்லாத ‘டம்மி' முதல்-அமைச்சர் தம்பி விஜய், மக்களின் வரிப்பணத்தில் லண்டனுக்குச் சொகுசுப் பயணம் சென்று, நண்பா நண்பிகளுடன் கார் ரேஸ் பார்த்து ஜாலியாகக் கையசைத்துக் கொண்டிருக்கிறார். அதாவது ஊரான்வீட்டு நெய்யில் தனியார் ரேசில் ஸ்வீட் செய்துகொண்டிருக்கிறார்.</p><p>மின்வெட்டு எல்லா மாநிலத்திலும் இயல்புதான்" என வெட்கமில்லாமல் பேசுகிறார் மின்சாரத் துறை அமைச்சர்! "மின்வெட்டே இல்லை, இதெல்லாம் 'Fake News'" என அப்பட்டமாகப் பொய் பேசுகிறார் துணை சபாநாயகர்! பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள், ஊதியம் குறித்து செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் என அவர்கள் போராட்டத்திற்கும் என்னவென்று காது குடுத்து கேட்டகாத அகங்காரம் கொண்ட தவெக அரசு.</p><h2>பொறுப்பற்ற அரசு</h2><p>தனியாருக்கு உதவ அத்தியாவசியத் தேவையான ஆவின் பாலுக்குக் கூட தட்டுப்பாட்டை உருவாக்கியது மட்டுமில்லாமல், பண்டிகைக் காலத்தில் ஏழை, எளிய மக்களிடம் பல்லாயிரம் ரூபாய் வழிப்பறி செய்யும் ஆம்னி பேருந்து மாஃபியாக்களிடம் 'Party Fund' வாங்கிக்கொண்டு வாய மூடி வேடிக்கை பார்க்கிறது தவெக! இதைவிட ஒரு கேடுகெட்ட, ஈவிரக்கமற்ற, பொறுப்பற்ற அரசு உலகத்தில் எங்காவது இருக்க முடியுமா? இதுதான் மாற்றமா?</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் யார்..யார்..? </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madhuranthakam-and-dharapuram-by-elections-who-are-the-naam-tamilar-katchi-candidates</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madhuranthakam-and-dharapuram-by-elections-who-are-the-naam-tamilar-katchi-candidates#comments</comments><guid isPermaLink="false">c34f0ed8-8cb8-43db-a05d-2c841c555a01</guid><pubDate>Sun, 13 Sep 2026 10:23:33 +0000</pubDate><atom:updated>2026-09-13T10:23:33.111Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,NTK,Seeman,தமிழகம்,புதுச்சேரி,puducherry,நாம் தமிழர் கட்சி,இடைத்தேர்தல்,மதுராந்தகம்,தாராபுரம்,Madhurandakam,தட்டாஞ்சாவடி,byelection,Dharapuram</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/d9j34a20/madu.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/d9j34a20/madu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி <a href="https://www.dailythanthi.com/topic/byelection">இடைத்தேர்தல்</a> நடக்கிறது. </p><p>இதில் த.வெ.க. சார்பில், மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல், தாராபுரத்தில் சத்யபாமா, அ.தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத். தாராபுரம் தொகுதியில் பானுமதி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் வக்கீல் பரந்தாமன், தாராபுரத்தில் (தனி) வக்கீல் சுகன்யா போட்டியிடுகின்றனர்.</p><h2>நாம் தமிழர் கட்சி</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/byelection">இடைத்தேர்தலில்</a> நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன்படி மதுராந்தகத்தில் ஜானகிராமனும், தாராபுரத்தில் கார்த்திகாவும் போட்டியிடுகின்றனர். புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் கார்த்திக் குமாரி  என்பவர் போட்டியிடுகிறார். </p><p>இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று தனது எக்ஸ்வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.  </p><h2>வேட்புமனு தாக்கல்</h2><p>இரண்டு தொகுதி <a href="https://www.dailythanthi.com/topic/byelection">இடைத்தேர்தலில்</a> 4 முனை போட்டி நிலவுவதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 16-ந்தேதி முடிவடைகிறது. இதுவரையில் முக்கிய கட்சிகள் யாரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்யவில்லை. </p><p>சுயேச்சைகள் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை), நாளை (விநாயகர் சதுர்த்தி) விடுமுறை நாட்களாகும். எனவே வேட்புமனு தாக்கல் செய்ய செவ்வாய் மற்றும் புதன் கிழமை மட்டுமே உள்ளது. கடைசி நாளான புதன்கிழமை அன்று த.வெ.க., தி.மு.க. அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">சட்டமன்ற இடைத்தேர்தல் – 2026<br>நாம் தமிழர் கட்சி<br>வேட்பாளர்கள் அறிவிப்பு<br><br>வருகின்ற புரட்டாசி 19ஆம் நாள் 06-10-2026 அன்று நடைபெறவிருக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்குட்பட்ட மதுராந்தகம், தாராபுரம், தட்டாஞ்சாவடி(புதுச்சேரி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர்… <a href="https://t.co/WP7fa0ymW2">pic.twitter.com/WP7fa0ymW2</a></p>&mdash; செந்தமிழன் சீமான் (@Seeman4TN) <a href="https://x.com/Seeman4TN/status/2099077160283803977?ref_src=twsrc%5Etfw">September 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் 512 செவிலியர் பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/512-nursing-posts-in-chennai-corporation-hospitals-applications-welcome</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/512-nursing-posts-in-chennai-corporation-hospitals-applications-welcome#comments</comments><guid isPermaLink="false">b6e80277-6ab8-4f5c-b4fd-69c786367477</guid><pubDate>Sun, 13 Sep 2026 10:22:01 +0000</pubDate><atom:updated>2026-09-13T10:22:01.074Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Corporation,சென்னை மாநகராட்சி,செவிலியர்கள்,பணியிடங்கள்,விண்ணப்பங்கள் வரவேற்பு,Applications welcome,Nursing Jobs</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/x9d5bcin/nurse.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/x9d5bcin/nurse.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு: 512 செவிலியர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்</p><p>இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>தற்காலிக செவிலியர் பணியிடங்கள்</h2><p>பெருநகர சென்னை மாநகராட்சி சென்னை மாநகர நலச் சங்கம் மூலமாக சென்னையில் உள்ள மாநகராட்சி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 512 தற்காலிக செவிலியர் பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தமிழ்நாடு அரசால் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதலின்படி தற்காலிக செவிலியர் காலிப்பணியிடங்களுக்கு 50 வயதிற்கும் மிகாமல் கீழ்காணும் கல்வித் தகுதியுள்ள செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்.</p><h2>விண்ணப்பப் படிவங்கள்</h2><p>செவிலியர் பட்டயப் படிப்பு (GNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc Nursing) – அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் செவிலியர் கல்லூரி (இந்திய செவிலியர் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்டது). தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் பதிவு கட்டாயம். இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளம் (www.chennaicorporation.gov.in) மற்றும் தேசிய நலக் குழுமம் / தமிழ்நாடு இணையதளம் (https://nhm.tn.gov.in/) ஆகியவற்றிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.</p><p>முறையான படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் சுய கையொப்பமிட்ட சான்று ஆவணங்களுடன் மாநகர நல அலுவலர் / உறுப்பினர் செயலர், சென்னை மாநகர நலச் சங்கம், பொது சுகாதாரத்துறை, ரிப்பன் கட்டடம், 3ஆம் தளம், அம்மா மாளிகை, EVR பெரியார் சாலை, சென்னை-600 003 என்ற முகவரிக்கு 25.09.2026 மாலை 5 மணிக்குள் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.</p><p>பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள் நேரிலோ / தபாலிலோ அளிக்கலாம். இது குறித்து கூடுதல் விளக்கங்கள் / விவரங்கள் தேவைப்படின் 044 – 2561 9330, 94451 90744, 94459 10934, என்ற எண்களுக்கு அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம். இந்தப் பணிக்குத் தகுதியுள்ளவர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட தகவலை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நள்ளிரவில் வீடுகள் மற்றும் வாகனங்களை அடித்து நொறுக்கி மர்ம கும்பல் அட்டகாசம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-mysterious-gang-is-wreaking-havoc-by-smashing-houses-and-vehicles-in-the-middle-of-the-night</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-mysterious-gang-is-wreaking-havoc-by-smashing-houses-and-vehicles-in-the-middle-of-the-night#comments</comments><guid isPermaLink="false">bb3a0a31-1234-4f99-9fba-9d282ab9b2d4</guid><pubDate>Sun, 13 Sep 2026 10:20:57 +0000</pubDate><atom:updated>2026-09-13T10:20:57.143Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,மானாமதுரை,Manamadurai,two wheeler,போலீசார்,மர்ம கும்பலுக்கு வலைவீச்சு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/9ckrwdea/12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வாகனங்கள் சேதம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/9ckrwdea/12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மானாமதுரை,</p><p>நள்ளிரவில் புகுந்த மர்ம கும்பல் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி அட்டகாசம் செய்தனர்.</p><h2>மர்ம கும்பல் அட்டகாசம்</h2><p>சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் புகுந்த<a href="https://www.dailythanthi.com/topic/மர்மகும்பல்"> மர்ம கும்பல்</a> அப்பகுதியில் உள்ள வீடுகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் கண்ணாடிகளை கைகளில் வைத்திருந்த ஆயுதங்களால் தாக்கி சேதப்படுத்தினர். இந்த சத்தம் கேட்டு கண் விழித்த பொது மக்களை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், அப்பகுதியில் சென்ற பெண் ஒருவரை கீழே தள்ளியதில் அவர் கால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளது.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இது குறித்து தகவல் அறிந்த மானாமதுரை <a href="https://www.dailythanthi.com/topic/போலீசார்">போலீசார்</a> சம்பவ இடத்திற்கு விரைந்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>திருப்பதி திருக்குடை ஊர்வலம் - சென்னையில் கோலாகலமாக தொடங்கியது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirupati-sacred-umbrella-procession-grandly-flagged-off-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirupati-sacred-umbrella-procession-grandly-flagged-off-in-chennai#comments</comments><guid isPermaLink="false">67bd6141-53a3-46c7-bd77-6c868b643f06</guid><pubDate>Sun, 13 Sep 2026 10:20:28 +0000</pubDate><atom:updated>2026-09-13T10:20:28.633Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,திருப்பதி,Tirupathi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/awjlp8z1/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/awjlp8z1/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பதி,</p><p>திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ காலத்தில் கருடசேவைக்காக தமிழகத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மலர்மாலை, வெண்பட்டு திருக்குடைகள் பல்வேறு பகுதிகளில் இருந்து சமர்ப்பிக்கப்படுவது வழக்கம். இதில் சென்னை பூக்கடையில் உள்ள சென்னகேசவ பெருமாள் கோவிலில் இருந்து 11 வெண்பட்டு திருக்குடைகளை திருப்பதி ஏழுமலையானுக்கு எடுத்துச் செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.</p><p>இதன்படி திருப்பதி திருக்குடை ஊர்வலம் சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து இன்று தொடங்கியுள்ளது. பாரிமுனையில் தொடங்கிய திருக்குடை ஊர்வலம், என்.எஸ்.சி போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு, பைராகி மண்டபம், வால்டாக்ஸ் சாலை வழியாக செல்கிறது. மாலை 4 மணிக்கு பிரசித்தி பெற்ற அந்த கவுனி தாண்டுதல் நிகழ்வு என்பது நடைபெற இருக்கிறது. </p><p>இரவு அயனாவரம் காசி விஸ்வநாதர் கோவிலில் இந்த திருக்குடைகள் அனைத்தும் காத்திருப்பில் வைக்கப்பட்டு, அங்கிருந்து வில்லிவாக்கம், திருமுல்லைவாயல், பட்டாபிராம், திருவள்ளூர் வழியாக திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன. பின்னர் 18-ந்தேதி காலை திருமலை சென்றடையக்கூடிய வகையில் பயண நிகழ்வு வரையறுக்கப்பட்டுள்ளது. </p><p>18-ந்தேதி காலை திருமலை சென்ற பிறகு அங்கு மாடவீதியில் வலம் வந்து வஸ்திரம் மற்றும் மங்கள பொருட்களோடு, திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில தேவஸ்தான அதிகாரிகளிடம் திருக்குடைகள் சமர்ப்பிக்கப்பட இருக்கின்றன. சென்னையை பொறுத்தவரை திருக்குடை ஊர்வலம் என்பது ஒரு பிரசித்தி பெற்ற நிகழ்வாக பார்க்கப்படுகிறது. புரட்டாசி பிரம்மோற்சவத்திற்கு முன்னதாக இந்த திருக்குடை ஊர்வல நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கமாகும். </p><p>திருப்பதி திருக்குடை ஊர்வலத்தையொட்டி வால்டாக்ஸ்&nbsp;சாலை, என்.எஸ்.சி.போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வழி நெடுகிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>சென்னை உதவி கமிஷனர்கள் உள்பட 46 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அதிரடி மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/46-deputy-superintendents-of-police-dspsincluding-assistant-commissioners-in-chennaihave-been-transferred-in-a-major-reshuffle</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/46-deputy-superintendents-of-police-dspsincluding-assistant-commissioners-in-chennaihave-been-transferred-in-a-major-reshuffle#comments</comments><guid isPermaLink="false">8a23818b-4461-440e-a04d-353bcc0a28bc</guid><pubDate>Sun, 13 Sep 2026 10:17:32 +0000</pubDate><atom:updated>2026-09-13T10:17:32.282Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Transfer,மாற்றம்,போலீஸ் சூப்பிரண்டு,Assistant Commissioner of Police,போலீஸ் உதவி கமிஷனர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/d9ay8lah/dgp.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/d9ay8lah/dgp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ்நாடு முழுவதும் 46 துணை போலீஸ் சூப்பிரண்டுகளை பணியிட மாற்றம் செய்து. டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். அவர் பிறப்பித்த மாறுதல் பட்டியலில், சென்னை உதவி கமிஷனர்கள் சிலரும் இடம்பெற்றுள்ளனர்.</p><h2>பணியிட மாற்றம்</h2><p>தாம்பரம் மற்றும் ஆவடி கமிஷனரகத்திலும் உதவி கமிஷனர்கள் மாற்றப்பட்டுள்ளனர். சென்னை வண்ணாரப்பேட்டை உதவி கமிஷனர் மகேந்திரன், கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார். ஆவடி கமிஷனரகத்தில் குற்ற ஆவண காப்பகத்தில் உதவி கமிஷனராக பணியாற்றி வரும் முத்துராஜா, லஞ்சஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்பார்.</p><p>ஆவடி கமிஷனரகத்தில் உளவுப்பிரிவு உதவி கமிஷனராக பணியாற்றி வந்த மணிவண்ணன், காஞ்சீபுரம் டி.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆவடி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D">போலீஸ்</a> கமிஷனரகத்தில், பொன்னேரி உதவி கமிஷனராக தமிழ்வாணன் பொறுப்பேற்பார்.</p><p>காத்திருப்போர் பட்டியலில் இருந்த முகமது நாசர். சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் டி.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் டி.ஜி.பி. அலுவலகத்தில் தேர்தல் பிரிவு டி.எஸ்.பி. பொறுப்பை கவனிப்பார்.</p><p>சென்னை ஐகோர்ட்டு உதவி கமிஷனராக பாலாஜி பதவியேற்பார். சென்னை தாம்பரம் கமிஷனரகத்தில் மக்கள் தொடர்பு உதவி கமிஷனராக மகேஷ் பொறுப்பேற்பார். ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் நலப்பிரிவு உதவி கமிஷனராக சஞ்சீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>ஆவடி உதவி போலீஸ் கமிஷனராக சம்பத் பதவியேற்பார். சென்னை அயனாவரம் உதவி கமிஷனராக பணியாற்றும் வேலு, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார். சி.பி.சி.ஐ.டி. 'சைபர் கிரைம்' பிரிவில் டி.எஸ்.பி.யாக ராஜலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். தாம்பரம் கமிஷனரகத்தில் நலப்பிரிவு உதவி கமிஷனராக ஹரிசங்கரி பொறுப்பேற்பார்.</p> ]]></content:encoded></item><item><title>கோத்தகிரியில் பரவலாக மழை: உயிலட்டி நீர்வீழ்ச்சியில் வெள்ளம்  - சுற்றுலா பயணிகள் குளிக்க  தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/heavy-rains-in-kotagiri-floods-swell-uyilatti-waterfalls-forest-department-bans-tourist-bathing</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/heavy-rains-in-kotagiri-floods-swell-uyilatti-waterfalls-forest-department-bans-tourist-bathing#comments</comments><guid isPermaLink="false">8ceb2b22-1be2-4628-835c-39226cac31ce</guid><pubDate>Sun, 13 Sep 2026 10:13:11 +0000</pubDate><atom:updated>2026-09-13T10:13:11.843Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மழை,சுற்றுலா பயணிகள்,வெள்ளம்,தடை,bathing prohibited,நீர்வீழ்ச்சி,கோத்தகிரி,Kotagiri,Heavy rains and floods</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/f1gsys3d/kothagiri-falls.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ உயிலட்டி நீர்வீழ்ச்சி]]></media:title><media:description type="html"><![CDATA[ கோத்தகிரியில் பரவலாக மழை: உயிலட்டி நீர்வீழ்ச்சியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது - சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/f1gsys3d/kothagiri-falls.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோத்தகிரி, </p><p>நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அப்பகுதியில் உள்ள உயிலட்டி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.</p><h2>வறண்ட நீர்வீழ்ச்சி</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF">கோத்தகிரியில் </a>இருந்து கூக்கல்தொரை செல்லும் சாலையில் உயிலட்டி கிராமப்பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் நீர்வீழ்ச்சி ஒன்று அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சி நீரை நம்பி, இப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் மலைக்காய்கறிகள் மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த காய்கறிகளை பயிரிட்டுள்ளனர். </p><h2>நீர்வரத்து வெகுவாக குறைந்தது</h2><p>இந்த நிலையில், கோத்தகிரி பகுதியில் கடந்த சில மாதங்களாக பருவமழை பொய்த்ததால் நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு காணப்பட்டன. இதனால் உயிலட்டி நீர்வீழ்ச்சிக்கும் நீர்வரத்து வெகுவாக குறைந்து, பாறைகளாக காட்சியளித்தது.</p> <h2>விவசாயிகள்</h2><p> இதனால் கவலையடைந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">விவசாயிகள்</a> போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால், தங்களது விளைநிலங்களில் புதிய கிணறுகள் அமைத்தும், லாரிகள் மூலம் பணம் கொடுத்து தண்ணீரை விலைக்கு வாங்கியும் பயிர்களுக்கு பாய்ச்சி வந்தனர்.</p><h2></h2><h2>வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது</h2><p> இந்நிலையில், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் மிதமான மழை பெய்தது. அதேபோல, கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமார் 1½ மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது.</p><h2>நீர்வரத்து உயர்வு</h2><p>இந்த தொடர் மழையின் காரணமாக, நீர்வீழ்ச்சிக்கு வரும் நீர்வரத்து உயர்ந்து, தற்போது வெள்ளம் பெருக்கெடுத்து ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. வறண்டு கிடந்த நீர்வீழ்ச்சியில் தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவது காண்போரின் கண்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ளது.</p><h2>சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை</h2><p>வார இறுதி விடுமுறை நாட்களைக் கழிக்க கோத்தகிரி பகுதிக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் தொலைவில் நின்றபடி நீர்வீழ்ச்சியின் அழகை கண்டு களித்து, ஆர்வத்துடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து செல்கின்றனர். </p> <p>இருப்பினும், இந்த நீர்வீழ்ச்சி பகுதியில் போதிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாததாலும், பாறைகளில் வழுக்கல் ஏற்படும் அபாயம் இருப்பதாலும், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">சுற்றுலா பயணிகள்</a> யாரும் நீர்வீழ்ச்சிக்கு அருகே சென்று குளிக்கவோ, இறங்கவோ முயற்சிக்கக் கூடாது என வனத்துறையினர் பலத்த எச்சரிக்கை விடுத்து, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணிக்குழுவை அமைத்தது காங்கிரஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/congress-has-formed-an-election-campaign-committee-to-support-tvk-alliance-candidates</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/congress-has-formed-an-election-campaign-committee-to-support-tvk-alliance-candidates#comments</comments><guid isPermaLink="false">f676629d-9cfe-41bd-882e-c92c6da29c73</guid><pubDate>Sun, 13 Sep 2026 10:05:55 +0000</pubDate><atom:updated>2026-09-13T10:05:55.570Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Tamilnadu,தமிழகம்,காங்கிரஸ்,Congress,இடைத்தேர்தல்,மதுராந்தகம்,தாராபுரம்,Madhurandakam,தேர்தல் பணிக்குழு,தமிழக அரசியல்,byelection,Dharapuram,tn politics</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/g81d6nab/congr.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/g81d6nab/congr.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. </p><p>இதில் த.வெ.க. சார்பில், மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல், தாராபுரத்தில் சத்யபாமா, அ.தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத். தாராபுரம் தொகுதியில் பானுமதி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் வக்கீல் பரந்தாமன், தாராபுரத்தில் (தனி) வக்கீல் சுகன்யா போட்டியிடுகின்றனர்.</p><h2>வேட்புமனு தாக்கல்</h2><p>தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 16-ந்தேதி முடிவடைகிறது. இதுவரையில் முக்கிய கட்சிகள் யாரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்யவில்லை. சுயேச்சைகள் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை), நாளை (விநாயகர் சதுர்த்தி) விடுமுறை நாட்களாகும். எனவே வேட்புமனு தாக்கல் செய்ய செவ்வாய் மற்றும் புதன் கிழமை மட்டுமே உள்ளது. கடைசி நாளான புதன்கிழமை அன்று த.வெ.க., தி.மு.க. அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.</p><p>வேட்புமனு தாக்கல் செய்த பிறகு தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கும். முதல்-அமைச்சர் விஜய் 2 கட்டமாக பிரசாரம் செய்ய இருக்கிறார். இந்த மாதம் 25-ந்தேதி மதுராந்தகத்தில் இருந்து அவர் பிரசாரத்தை தொடங்க உள்ளார். 27-ந்தேதி தாராபுரத்தில் பிரசாரம் மேற்கொள்வார். பின்னர் அக்டோபர் 2, 3-ந்தேதிகளில் மதுராந்தகம், தாராபுரத்தில் பிரசாரம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.</p><h2>தேர்தல் பணிக்குழு</h2><p>இந்நிலையில் தமிழகத்தில் நடைபெறவுள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களுக்காக அதிகாரப்பூர்வ தேர்தல் பணிக்குழுக்களை த.வெ.க.வின் கூட்டணி கட்சியான தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/topic/காங்கிரஸ்">காங்கிரஸ்</a> கமிட்டி அமைத்துள்ளது. </p><p>கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து தேர்தல் களப் பணிகளை ஒருங்கிணைப்பது, வாக்குச் சாவடி வாரியாக வியூகங்களை வகுப்பது மற்றும் பிரச்சாரங்களை மேற்கொள்வது ஆகிய முக்கியப் பொறுப்புகளை இந்தத் தேர்தல் பணிக்குழுக்கள் கவனிக்கும் என்று கூறப்படுகிறது. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/0u26e1ei/madhu.jpg" /></figure><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/d1kjdhwd/dhara.jpg" /></figure><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">101 - தாராபுரம் (தனி) சட்டமன்ற இடைத்தேர்தல் 2026<br>தேர்தல் பணிக்குழு அறிவிப்பு<br><br>நடைபெறவுள்ள 101 - தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியின் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் திருமதி பி. சத்யபாமா அவர்களின் வெற்றிக்காக தமிழ்நாடு… <a href="https://t.co/kmPPnzLkKq">pic.twitter.com/kmPPnzLkKq</a></p>&mdash; Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) <a href="https://x.com/INCTamilNadu/status/2099049722623259088?ref_src=twsrc%5Etfw">September 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>“முதல் - அமைச்சர் விஜய் மீது நம்பிக்கை உள்ளது!”; நடிகை கஸ்தூரி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/first-i-have-faith-in-minister-vijay-actress-kasthuri</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/first-i-have-faith-in-minister-vijay-actress-kasthuri#comments</comments><guid isPermaLink="false">27234e5f-6df5-4cb5-a3f4-f7debe24ea02</guid><pubDate>Sun, 13 Sep 2026 10:04:34 +0000</pubDate><atom:updated>2026-09-13T10:04:34.912Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நடிகை கஸ்தூரி,Actress Kasthuri,CM Vijay,முதல் - அமைச்சர் விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/uk8ha1gn/actress-kasturi.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நடிகை கஸ்தூரி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/uk8ha1gn/actress-kasturi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><p>"முதல்-அமைச்சர் விஜய் மீது நம்பிக்கை உள்ளது!" என்று <a href="https://www.dailythanthi.com/topic/actress-kasturi">நடிகை கஸ்தூரி </a>தெரிவித்துள்ளார்.</p><p>'ஆஃப் தி ரெக்கார்ட்' திரைப்படத்தின் முன்னோட்ட விழாவில்  நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார் அப்போது அவர் பேசியதாவது:- </p><p>தமிழ்நாட்டை பொறுத்தவரை சினிமாவையும் அரசியலையும் பிரிக்கமுடியாது, இரண்டும் சேர்ந்து தான் பயணம் செய்யும். அதில் இன்னொரு ஜனநாயக புரட்சியை சினிமா பயணம் உருவாக்கி கொடுத்திருக்கிறது.</p><h2>நம்பிக்கை</h2><p>"தவறு செய்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்போம் என்ற நம்பிக்கையை முதல்-அமைச்சர் விஜய் கொடுத்துள்ளார். அதை நான் வரவேற்கிறேன்" அதே வேளையில், அரசியல் பழிவாங்கல்களுக்காகவோ அல்லது பிற காரணங்களுக்காகவோ யாரோ ஒருவர் மீது பொய்யான எஃப்.ஐ.ஆர் (FIR) போடும் நிலைக்கு அரசு சென்றுவிடக்கூடாது என்றும் அவர் பேசியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பள்ளிக்கூடத்தில் முட்டிப்போட வைத்து மாணவரை கம்பால் தாக்கிய ஆசிரியர்: போலீசில் தந்தை புகார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/teacher-makes-student-kneel-and-beats-him-with-a-cane-father-files-police-complaint</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/teacher-makes-student-kneel-and-beats-him-with-a-cane-father-files-police-complaint#comments</comments><guid isPermaLink="false">e7145bd8-85de-4bbe-af8f-2d5b42adf457</guid><pubDate>Sun, 13 Sep 2026 09:17:37 +0000</pubDate><atom:updated>2026-09-13T09:17:37.878Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,ஆசிரியர்,Teacher,புகார்,ஸ்ரீவைகுண்டம்,மாணவர்,போலீசார்,பள்ளிக்கூடம்,Complain</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/m4bpl2te/319.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பள்ளிக்கூடம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/m4bpl2te/319.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>ஸ்ரீவைகுண்டம், </p><p>நெல்லை அருகே பள்ளிக்கூடத்தில் மாணவரை முட்டிப்போட வைத்து வேப்பங்கம்பால் சரமாரியாக ஆசிரியர் தாக்கினார். இதில் காயமடைந்த மாணவரின் தந்தை போலீசில் புகார் செய்தார்.</p><h2>அரசு உயர்நிலைப்பள்ளி</h2><p>நெல்லை அடுத்த முறப்பநாடு அருகே உள்ள அனவரதநல்லூர் மேலத்தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் பவின்(வயது 12). இவர் அதே ஊரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.</p><p>நேற்று முன்தினம் மதியம் பள்ளியில் வகுப்பறை நடைபெற்றபோது பவின் இயற்கை உபாதை கழிக்க ஆசிரியரிடம் அனுமதி கேட்டார். ஆனால் அவர் அனுமதி கொடுக்க மறுத்து விட்டார். பின்னர் வகுப்பு முடிந்ததும் பவின் அவசரமாக கழிவறைக்கு புறப்பட்டார்.</p><h2>போலீஸ் நிலையம்</h2><p>இதனை பார்த்த ஆசிரியர், மாணவனை அழைத்து முட்டிப்போட வைத்ததுடன் வேப்பங்கம்பால் பின்னங்கால், கை மற்றும் முதுகு உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மாணவனுக்கு உடலின் பல்வேறு பகுதிகளில் வீக்கம் உருவாகி வலி ஏற்பட்டது. பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற மாணவன், நடந்த சம்பவம் குறித்து தனது தந்தையிடம் கூறினார். இதையடுத்து அவர், முறப்பநாடு போலீஸ் நிலையத்தில் ஆசிரியர் மீது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">புகார்</a> அளித்தார். பின்னர் காயமடைந்த தனது மகனை நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகிறார்.</p><p>இதுகுறித்து மாரியப்பன் கூறியதாவது:-</p><p>பள்ளிக்கூடத்தில் இயற்கை உபாதை கழிக்க செல்வது குற்றமா? எனது மகன் வகுப்பறை முடிந்த பிறகுதான் கழிவறைக்கு சென்றார். இருந்தபோதும் ஆசிரியர் அனைத்து மாணவர்கள் முன்னிலையில், முட்டிப்போட வைத்து கடுமையாக தாக்கி உள்ளார். இதனால் கை, கால், தொடை உள்ளிட்ட பகுதிகளில் வீக்கம் ஏற்பட்டு வலி தாங்க முடியாமல் எனது மகன் அவதிப்பட்டு வருகிறார். </p><p>மேலும், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் சில ஆசிரியர்கள் மருத்துவமனைக்கு வந்து புகாரை வாபஸ் பெறுமாறு வற்புறுத்துகின்றனர். ஆனால் நான் புகாரை வாபஸ் பெறப்போவதில்லை. எனது மகனை தாக்கிய ஆசிரியர் மீதும், சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க தவறிய தலைமை ஆசிரியர் மீதும் கல்வித்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>கவர்னர் அர்லேகருடன் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் சந்திப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/speaker-jcd-prabhakar-meets-governor-arlekar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/speaker-jcd-prabhakar-meets-governor-arlekar#comments</comments><guid isPermaLink="false">71afc420-1b6e-4c05-855e-3a43ec4d9b41</guid><pubDate>Sun, 13 Sep 2026 09:12:56 +0000</pubDate><atom:updated>2026-09-13T09:12:56.099Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கவர்னர் அர்லேகர்,Governor Arlekar,JCD Prabhakar,சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/zjqobfer/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/zjqobfer/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 28 நாட்கள் நடந்து முடிந்துள்ளது. 17-வது தமிழக சட்டமன்றத்தின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று நடந்து முடிந்துள்ளன. தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. </p><p>இந்த நிலையில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தமிழக கவர்னர் அர்லேகரை சென்னை கிண்டியில் உள்ள லோக் பவனில் இன்று சந்தித்து பேசினார். கவர்னர் உரையுடன் தமிழக சட்டப்பரவை கூட்டத்தொடர் தொடங்கி, அதன் பிறகு பட்ஜெட் கூட்டத்தொடரும் நடந்து முடிந்த நிலையில், மரியாதை நிமித்தமாக கவர்னர் அர்லேகரை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் இன்று சந்தித்துள்ளார். </p><p>இந்த சந்திப்பின்போது தமிழக சட்டமன்றத்தின் செயல்பாடுகள் எவ்வாறு அமைந்தது என்பது குறித்தும், ஜனநாயக செயல்முறைகள் குறித்தும் இருவரும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். </p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவு தொடருமா..? - என்ன சொல்கிறது சி.பி.எம்..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-support-extended-to-the-tvk-government-continue-what-does-the-cpm-say</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-support-extended-to-the-tvk-government-continue-what-does-the-cpm-say#comments</comments><guid isPermaLink="false">aaa37a36-de7f-4db8-9fed-029c9b70d6fa</guid><pubDate>Sun, 13 Sep 2026 09:10:59 +0000</pubDate><atom:updated>2026-09-13T09:10:59.147Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,தவெக,Tamilnadu,திமுக,தமிழகம்,இந்திய கம்யூனிஸ்டு கட்சி,இடைத்தேர்தல்,Marxist Communist,CPI,மதுராந்தகம்,தாராபுரம்,சிபிஎம்,CPM,Madhurandakam,byelection,Dharapuram,மார்க்சிஸ்டு மார்க்சிஸ்டு கட்சி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/3fuxuvyq/tomoer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/3fuxuvyq/tomoer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/tvk">த.வெ.க.</a> தலைமையில் நடைபெறும் கூட்டணி ஆட்சிக்கு மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகின்றன. இந்த நிலையில், மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அக்டோபர் 6-ந் தேதி நடைபெற உள்ளது.</p><h2>சிபிஎம், சிபிஐ போட்டி</h2><p>இந்த இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சிகள் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து அக்கட்சிகளின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.</p><p>பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>இடைத்தேர்தலில் இடதுசாரிகள் போட்டியிட முடிவு செய்துள்ளது. அதன்படி, மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்) போட்டியிடும். தாராபுரம் இடைத்தேர்தலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) போட்டியிடும். இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நாளை மறுதினம் (15-ந்தேதி) அறிவிக்கப்படுவார்கள்.</p><p>இந்த இடைத்தேர்தல் இயல்பானது அல்ல; திணிக்கப்பட்ட ஒன்று. நாங்கள் யாருடைய கூட்டணியிலும் இல்லை; கவர்னர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக, தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்தோம். மதச்சார்பின்மைக்கு எதிராக தவெக அரசு உறுதியாக இருக்க வேண்டும். தவெக ஆட்சிக்கான ஆதரவு தொடரும். </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><h2>பாதிப்பு வராது</h2><p>இந்நிலையில் <a href="https://www.dailythanthi.com/topic/tvk">த.வெ.க.</a> ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவு தொடருமா..? என்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>இடதுசாரிகள் இணைந்து இடைத்தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளோம். இதன்படி இடைத்தேர்தலில் இடதுசாரிகள் தனித்து போட்டியிட உள்ளது. மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி போட்டியிடும். தாராபுரத்தில் இந்திய கம்யூ. கட்சி போட்டியிடும். த.வெ.க.வுக்கு ஆதரவு இல்லை என்பதால் தி.மு.க.வுக்கு ஆதரவு என்று அர்த்தம் இல்லை. இடைத்தேர்தலில் இடதுசாரிகளுக்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும். வேட்பாளர்கள் குறித்து நாளை மறுநாள் அறிவிக்கப்படும்</p><p>த.வெ.க. ஆட்சிக்கு வெளியில் இருந்து அளித்து வரும் ஆதரவு தொடரும். தனித்து போட்டி என்ற எங்கள் முடிவால் த.வெ.க. ஆட்சிக்கு பாதிப்பு வராது.</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>]]></content:encoded></item></channel></rss>