<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 03 Sep 2026 10:40:23 +0000</lastBuildDate><item><title>என் தோட்டத்தில் மின் வயர்கள் திருட்டு - சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/electrical-wires-stolen-from-my-garden-edappadi-palaniswamis-speech-in-the-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/electrical-wires-stolen-from-my-garden-edappadi-palaniswamis-speech-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">5c2818da-2f53-4fa6-a60f-6ffb4ce9b37a</guid><pubDate>Thu, 03 Sep 2026 10:40:20 +0000</pubDate><atom:updated>2026-09-03T10:40:20.465Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,சட்டசபை,TNAssembly,EPS,tvk govt</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/gbjf0ic1/saami33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ சட்டசபை]]></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி பேச்சு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/gbjf0ic1/saami33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் என்னுடைய தோட்டத்தில் 2 நாட்களுக்கு முன், போர்வெல் இயக்க அமைக்கப்பட்டிருந்த மின்வயர்களை திருடிச் சென்றுவிட்டனர் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.</p><p>தமிழ்நாடு சட்டசபையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது அதிமுக பொதுச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">எடப்பாடி பழனிசாமி </a>பேசியதாவது:-</p><p>காவல்துறை மாநில வளர்ச்சிக்கு முக்கியமான துறை. கொரோனா காலகட்டத்தில் காவல்துறையினர் சிறப்பாக பணியாற்றினர். அவர்களால் பல உயிர்கள் காக்கப்பட்டது. பணி ஓய்வுக்கு ஓராண்டுக்கு முன்பே பணியிடத்தை நிரப்ப நடவடிக்கை தேவை.  29,108 காவலர்கள் புதிதாக நியமனம் என்பது போதுமானது அல்ல. </p><p>625 பேருக்கு ஒர் காவலர் என்பது போதுமானது அல்ல. காவலர்கள் எண்ணிக்கை அதிகரித்தால்தான் தமிழ்நாடு பூங்காவாக திகழும்.  மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப காவலர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். </p><h2>அதிமுக ஆட்சியில் முறையாக பதவி உயர்வு </h2><p>அதிமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாக்கப்பட்டனர். சட்டம், ஒழுங்கு சீராக இருந்தது.அதிமுக ஆட்சியில் சென்னை பாதுகாப்பான நகரமாக இருந்தது. அதிமுக ஆட்சி காலத்தில் குற்றத்தை சமாளிக்க கணினி வழி புதிய பிரிவு ஏற்படுத்தினோம். அதிமுக ஆட்சியில் காவலர்களுக்கு முறையாக பதவி உயர்வு வழங்கினோம். </p><p>அதிமுக ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட்டது. </p><p>காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என தவெக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். காவல் ஆய்வாளர்கள் பலர் ஓய்வு பெற உள்ளனர். அவர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி உயர்வு வழங்க வேண்டும்.</p><h2>சிறப்பு புத்தாக்க பயிற்சி</h2><p>பெண் காவலர்களை இரவு நேரங்களில் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும்.</p><p>காவலர்களின் மன அழுத்தத்தை குறைக்க அதிமுக ஆட்சியில் அளித்தது போல தவெகவும் சிறப்பு புத்தாக்க பயிற்சி அளிக்க வேண்டும்.காவல் நிலையங்களின் உள்ளே 24 மணி நேரமும் சிசிடிவி கேமராக்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>சாலைகளில் உள்ள சிசிடிவி-களில் தூசுகள் படிந்து பதிவுகள் முறையாக கிடைப்பதில்லை, அதை பராமரிக்க வேண்டும்.சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் இடங்களை கண்டறிந்து, அதனை சரி செய்ய வேண்டும்.</p><p>மக்களிடம் ஆதாரங்கள் இருந்தாலும் போக்குவரத்து காவல்துறை அபராதம் வசூலிப்பதாக புகார் வருகிறது, அதை தடுக்க வேண்டும்.</p><h2>விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்</h2><p>எடப்பாடி தொகுதியில் ஜலகண்டபுரத்தில் புறவழிச்சாலை அமைக்க 80% நிலம் எடுப்பு பணிகள் முடிந்து விட்டது.</p><p>திமுக ஆட்சியில் கைவிட்ட புறவழிச்சாலை திட்டத்தை தவெக அரசு செயல்படுத்த வேண்டும். அதிமுக ஆட்சியை போல் விவசாயிகள் 22 மணி நேரம் மின் மோட்டாரை இயக்க அனுமதி வழங்க வேண்டும்.</p><h2>பல இடங்களில் பைக்ரேஸ்</h2><p>வாகன ஓட்டிகளிடம் வசூலித்த அபராதத்தை கருவூலத்தில் செலுத்தாமல் வட்டிக்கு விடுவதாக செய்தி வருகிறது, கண்காணிக்க வேண்டும். இன்னும் பல இடங்களில் பைக் ரேஸ் நடப்பதாக செய்திகள் வருகிறது, அதனை தடுக்க தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இணையவழி குற்றங்களை ஆரம்ப காலத்திலேயே தடுக்க தமிழக வெற்றிக் கழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது.</p><h2>என் தோட்டத்தில் திருட்டு</h2><p>தமிழகத்தில் முதியவர்கள் தனியாக வகிக்கும் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.</p><p>சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் என்னுடைய தோட்டத்தில் 2 நாட்களுக்கு முன், போர்வெல் இயக்க அமைக்கப்பட்டிருந்த மின்வயர்களை திருடிச் சென்றுவிட்டனர். இவற்றை நான் சபாநாயகரிடம் கொடுத்துவிட்டேன் என புகைப்படங்களை காட்டி  எடப்பாடி பழனிசாமி கூறினார்.</p><h2>எளிமை... கண்ணியம்... எடப்பாடி பழனிசாமிக்கு புகழாரம்</h2><p>முன்னாள் முதல்-அமைச்சர், குற்றச்சாட்டுகளையும், அறிவுரைகளையும், இடையூறு இல்லாமல் நன்றாக வழங்கியிருக்கிறார். இதை பார்க்கும் மக்கள் புரிந்து கொள்வார்கள். எளிமையாகவும், கண்ணியமாகவும், வஞ்சகம் இல்லாமல், வம்பு இழுக்காமல் பேசியதற்காக அவரை பாராட்டுகிறேன் என </p><p>முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு துணை சபாநாயகர் ரவிசங்கர் பாராட்டு தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>அரசின் திட்டங்கள் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டால் தனியாக நிதிநிலை அறிக்கை எதற்கு? சீமான் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/seeman-questions-the-need-for-a-separate-budget-statement-when-government-schemes-are-announced-under-rule-110</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/seeman-questions-the-need-for-a-separate-budget-statement-when-government-schemes-are-announced-under-rule-110#comments</comments><guid isPermaLink="false">7bf35430-3a5d-438e-9b39-815c00997e9e</guid><pubDate>Thu, 03 Sep 2026 09:45:08 +0000</pubDate><atom:updated>2026-09-03T09:45:08.067Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,Seeman,Budget,நிதிநிலை அறிக்கை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/ug0g0sii/seeman.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/ug0g0sii/seeman.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;</p><p>”தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியைப் பயன்படுத்தி அரசின் திட்டங்கள் பலவற்றை தமிழ்நாடு முதல்வர் விஜய் அறிவித்து வருவது மக்களாட்சிக்கும், அதனை நம்பி வாக்களித்த மக்களுக்கும் எதிரானதாகும்.</p><p>நடைபெற்று வரும் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 2026-27 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்த நிறை - குறைகள் குறித்து விவாதித்து முடிவெடுக்கக் கடந்த ஒரு மாத காலமாகச் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. ஆனால், 110 விதியின் கீழ் சிறப்பு அறிவிப்புகள் என்ற பெயரில், நிதிநிலை அறிக்கையில் இல்லாத புதிய திட்டங்களை ஒவ்வொரு நாளும் தமிழ்நாடு முதல்வர் அறிவித்து வருவது ஏன்? எல்லாத் திட்டங்களும் 110 விதியின் கீழே அறிவிக்கப்படும் என்றால் தனியாக நிதிநிலை அறிக்கை என்ற ஒன்று எதற்கு? அதன் மீதான விவாதங்கள்தான் எதற்கு? சட்டப்பேரவையில் முதலமைச்சர் வெளியிடுவது அனைத்தும் முக்கியத் திட்டங்கள் என்றால் அதன் நன்மை தீமைகள் குறித்து அவையில் விவாதங்கள் நடைபெற வேண்டாமா?</p><p>மக்களுக்குத் தேவையான இன்றியமையாத திட்டங்கள் என்றால் அவை ஏன் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை? பொது முக்கியத்துவம் வாய்ந்த அரசு முடிவுகள் மற்றும் புதிய திட்டங்களைப் பேரவைத்தலைவர் அனுமதியுடன் சட்டப்பேரவையில் அறிவிக்கவும், அறிவிக்கும் நேரத்தில் அதன் மீது விவாதம் நடைபெறாமல் இருக்கவும் கடந்த திமுக அதிமுக அரசுகள் விதி 110யை பயன்படுத்தினார்கள். அதை, மாற்றம் எனச் சொல்லி வந்த தவெக அரசு, விளம்பர வெற்று அறிவுப்புகளுக்குப் பயன்படுத்துவது நம்பி வாக்களித்த மக்களுக்குச் செய்யும் துரோகமல்லவா? இதுதான் மாற்றமா?</p><p>சட்டங்களை உருவாக்கவும், விவாதிக்கவும், நிறைவேற்றவும் அமைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் அவையான சட்டப்பேரவையில் இவ்விதியை பயன்படுத்தி நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாத திட்டங்களை ஒவ்வொரு நாளும் வெளியிடுவதும் அதன் மீது விவாதமில்லாமல் கடந்து போவதும் சட்டப்பேரவை உருவாக்கப்பட்டதற்கான நோக்கத்தையே சிதைக்காதா?</p><p>மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் நிறைந்திருக்கும் அவையில், மக்களுக்காக அறிவிக்கப்படும் திட்டங்கள் குறித்து, சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்தும் தெரிவிக்கும் வாய்ப்பை பறிப்பது கொடுங்கோன்மை அல்லவா?</p><p>முதலமைச்சரின் பொறுப்பிலிருந்த துறைகளையே, மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்கிவிட்ட நிலையில், மற்ற அமைச்சகம் சார்ந்த அறிவிப்புகளை வெளியிடுவதற்கு மட்டும் முதலமைச்சர் எதற்கு? அமைச்சர்கள் வெளியிட வேண்டிய அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிடுவது, அமைச்சர்களின் தனித்துவத்தைக் குறைக்காதா? இதன் மூலம் தவெக அரசு தமிழ்நாட்டு மக்களுக்குச் சொல்ல வரும் செய்தி என்ன? அனைத்து முக்கியத் திட்டங்களும் முதலமைச்சரின் மூளையில் உதித்தது என்பதையா?</p><p>கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதியிலிருந்து இன்று வரை தவெக அரசு விதி 110-ன் கீழ் வெளியிடப்பட்ட திட்டங்களுக்கான மதிப்பு மட்டும் ஏறத்தாழ ரூ.73,900 கோடி. அதற்கு மேலாக எரிகாற்று உருளை, இலவச பேருந்து, பால் கொள்முதல் உள்ளிட்டவற்றுக்கு ஆண்டுதோறும் தொடர் செலவாக 10,720 கோடி ரூபாய் வரை தேவைப்படுகிறது. இத்தனை ஆயிரம் கோடிகள் செலவிடப்படும் திட்டங்களின் வரவு செலவுகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாதது ஏன்?</p><p>நிதிநிலை அறிக்கையின்படி ஏற்கனவே இந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சத்தி எழுபத்தாறாயிரம் கோடி கடன் வாங்குவதாக அறிவித்திருக்கிறீர்கள். இப்பொழுது புதிதாக 110 விதியின் கீழ் அறிவித்திருக்கிற திட்டங்களுக்கான ரூ.73,900 கோடிக்கான நிதியை எப்படி பெறுவீர்கள்? யாரிடம் கடன் வாங்குவீர்கள்? இதுதான் கடன் சுமையை குறைக்கும் முறையா? இதுதான் தமிழ்நாட்டை முன்னேற்றுவதற்கான மாற்றமா?</p><p>மக்களாட்சிக்கு எதிரான, நிதி ஆதாரமில்லாத வெற்று விளம்பர திட்டங்களை 110 விதியின் கீழ் அறிவிப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>&quot;அனைத்து கேள்விகளுக்கும் திங்கட்கிழமை பதில்; யாரும் ஓடிவிடக்கூடாது&quot; - சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் பேச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/answers-to-all-questions-on-monday-no-one-should-run-away-chief-minister-vijay-speaks-in-the-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/answers-to-all-questions-on-monday-no-one-should-run-away-chief-minister-vijay-speaks-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">905408ed-8066-498b-8fff-9a6898a33265</guid><pubDate>Thu, 03 Sep 2026 09:38:27 +0000</pubDate><atom:updated>2026-09-03T09:38:27.760Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,TN Assembly,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/vhrnrlmm/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/vhrnrlmm/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அனைத்து கேள்விகளுக்கும் திங்கட்கிழமை பதில் அளிப்பதாகவும், யாரும் ஓடிவிடக்கூடாது என்றும் சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் பேசினார். </p><h2>மானியக் கோரிக்கை விவாதம்</h2><p>தமிழகத்தில் புதிதாக த.வெ.க. அரசு ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், கடந்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி பொது பட்ஜெட்டும், 6-ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆகஸ்டு 17-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. </p><p>அந்த வகையில், நேற்று வரை 43 துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் கையில் உள்ள காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. </p><h2>முதல்-அமைச்சர் பதில் அளிக்க வலியுறுத்தல்</h2><p>சட்டம் - ஒழுங்கு சம்பந்தப்பட்ட துறை என்பதால், விவாதத்தின்போது அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், த.வெ.க. அரசின் செயல்பாடு குறித்து அடுக்கடுக்காக குற்றம்சாட்டினார். அதற்கு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பதில் அளிக்க வேண்டும் என்றும் கூறினார். </p><p>ஆனால், உதயநிதி ஸ்டாலின் கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பதில் அளிக்கவில்லை. மாறாக, அமைச்சர்கள் பதில் அளித்து கொண்டிருந்தனர். அதற்கு தி.மு.க. உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்</p><h2>யாரும் ஓடிவிடக்கூடாது</h2><p>இதனால், சட்டசபையில் விவாதம் அனல் பறந்தது. இதற்கிடையே யாரும் எதிர்பாராத நேரத்தில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் எழுந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-  </p><p>“அனைத்து கேள்விகளுக்கும் திங்கட்கிழமை பதிலளிப்பேன். நான் இங்கு இல்லை என்றாலும், இங்கு எழுப்பப்படும் அனைத்து கேள்விகளையும் நான் அறிவேன். ஒரே ஒரு கோரிக்கை வைக்கிறேன். பதிலளிக்கும்போது யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது.”</p><p>இவ்வாறு அவர் பேசினார். </p><h2>கடும் எதிர்ப்பு</h2><p>அத்துடன், சட்டசபையை விட்டும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் வெளியேறினார். முதல்-அமைச்சரின் இந்த கருத்துக்கும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்பட தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அவரது குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன் ஆகியோர் பதில் அளித்தனர். </p>]]></content:encoded></item><item><title>ரேஷன் கடைகளில் வெங்காய விற்பனை: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sale-of-onions-at-ration-shops-ministers-inaugurate-the-initiative</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sale-of-onions-at-ration-shops-ministers-inaugurate-the-initiative#comments</comments><guid isPermaLink="false">a5b3c6e1-16a5-4d21-a5ba-2d3fb07febad</guid><pubDate>Thu, 03 Sep 2026 09:37:33 +0000</pubDate><atom:updated>2026-09-03T09:37:33.472Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>ரேஷன் கடைகள்,ration shops,வெங்காயம்,Onions</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/rewnro3l/3.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/rewnro3l/3.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மூலம் பொதுமக்களுக்கு தரமான வெங்காயம் குறைந்த விலையில் தடையின்றிக் கிடைக்கும் வகையில் சந்தை குறுக்கீட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>வெளிச்சந்தையில் அத்தியாவசியப் பொருளான வெங்காயத்தின் விலை உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்தவும், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.</p><p>இதற்காக, தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையம் (NAFED) மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) ஆகியவற்றின் மூலம், முதற்கட்டமாக 1,000 மெட்ரிக் டன் வெங்காயம் மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கிலிருந்து தமிழ்நாடு அரசால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 03.09.2026 முதல் குடும்ப அட்டை ஒன்றுக்கு ஒரு கிலோ வீதம், கிலோ ரூ.35/- என்ற மானிய விலையில் தமிழ்நாடு முழுவதும் வெங்காயம் விற்பனை செய்யப்படும்.</p><p>நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகள், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலைகள், பிரதம கூட்டுறவு பண்டகசாலைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் நடத்தப்படும் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் பண்ணை பசுமைக் கடைகள் உள்ளிட்ட மொத்தம் 8,914 கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வெங்காயம் விற்பனை செய்யப்படும்.</p><p>இதற்கான முதல் விற்பனையினை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப.வெங்கடரமணன் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் வ.காந்திராஜன் ஆகியோர் சென்னையில், திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் டி.டி.கே. சாலையில் உள்ள நியாயவிலைக் கடையில் இன்று (03.09.2026) தொடங்கி வைத்தார்கள்.</p><p>இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் செயலாளர் பி.அமுதா, மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஜி.லதா ஆகியோரும் கலந்து கொண்டனர்.</p><p>இந்நடவடிக்கையின் மூலம் பொதுமக்களுக்கு தரமான வெங்காயம் குறைந்த விலையில் தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்படும். நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அனைவரும் 03.09.26 முதல் தங்களுக்குரிய நியாயவிலைக் கடைகளை அணுகி, கிலோ ரூ.35/- என்ற மானிய விலையில் வெங்காயத்தைப் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.</p> ]]></content:encoded></item><item><title>திருநெல்வேலியில் இந்த ஆண்டு இதுவரை 100 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/100-people-arrested-under-the-detention-act-in-tirunelveli-so-far-this-year</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/100-people-arrested-under-the-detention-act-in-tirunelveli-so-far-this-year#comments</comments><guid isPermaLink="false">356206cd-9a90-4885-84b2-3d95dee662ff</guid><pubDate>Thu, 03 Sep 2026 09:16:18 +0000</pubDate><atom:updated>2026-09-03T09:16:18.197Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Tirunelveli,திருநெல்வேலி,arrests,இந்த ஆண்டு,This year,இதுவரை,so far,தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டம்,Tamil Nadu Detention Act</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/5suwkad6/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/5suwkad6/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி </a>மாவட்டம், வி.கே.புரம் காவல் நிலைய சரகத்தில் கொலை, அடிதடி மற்றும் குற்றமுறு மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்ட 2 பேர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின்</a> கீழ் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்யப்பட்டனர்.</p><h2>கொலை, அடிதடி வழக்குகள்</h2><p>திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை, அடிதடி மற்றும் குற்றமுறு மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட வி.கே.புரம் டாணா பகுதியைச் சேர்ந்த ரத்தினசாமி மகன் கார்த்திக்சங்கர்ராஜா (வயது 37) மற்றும் காளிமுத்து மகன் மாரியப்பன்(42) ஆகிய 2 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். </p><h2>பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்</h2><p>இந்த நிலையில், மேற்சொன்ன 2 பேரும் கொலை, அடிதடி மற்றும் குற்றமுறு மிரட்டல் போன்ற தொடர் சட்டவிரோத குற்றச்செயல்களில் ஈடுபட்டு, பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால், வி.கே.புரம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு பாஸ்கர், மேற்சொன்ன 2 பேர் மீதும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் பரிந்துரை செய்தார். </p><h2>2 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது</h2><p>அதன்பேரில், திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி பரிந்துரையின்படி, திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஆனந்த் மோகன் பிறப்பித்த தடுப்புக் காவல் உத்தரவின்பேரில், மேற்சொன்ன 2 பேரும் நேற்று தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். </p><h2>இந்த ஆண்டு இதுவரை 100 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது</h2><p>திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 100 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>’மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு தொடர் முயற்சி: ஆனால், நாம்?’ - அன்புமணி கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/karnataka-government-makes-persistent-efforts-to-build-the-mekedatu-dam-but-what-about-us-anbumani-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/karnataka-government-makes-persistent-efforts-to-build-the-mekedatu-dam-but-what-about-us-anbumani-asks#comments</comments><guid isPermaLink="false">69081c57-4f13-4c4d-92a6-1cdbc87a2be4</guid><pubDate>Thu, 03 Sep 2026 08:41:28 +0000</pubDate><atom:updated>2026-09-03T08:41:28.072Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,மேகதாது அணை,Mekedatu dam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/5emy4ffq/anbu.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/5emy4ffq/anbu.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;</p><p>”காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு விரைவாக அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய நீர்வள ஆணையத் தலைவர் அனுபம் பிரசாத் அவர்களை கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சாலுவராய சாமி அவர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார். மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகம் மேலும், மேலும் முன்னேறி வரும் நிலையில், தமிழக அரசு தொடர்ந்து அமைதி காப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.</p><p>மேகதாது அணை கட்டப்படவுள்ள இடத்தை மத்திய நீர்வள ஆணையத்தின் குழு உடனடியாக நேரில் ஆய்வு செய்ய வேண்டும்; ஆய்வுப் பணிகள் விரைந்து முடிக்கப்படுவதற்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று இந்த சந்திப்பின் போது கர்நாடக அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். மேகதாது அணை தொடர்பாக மத்திய நீர்வள ஆணையம் கோரும் கூடுதல் தொழில்நுட்பத் தகவல்களை உடனுக்குடன் வழங்கவும் கர்நாடக அரசு தயாராக இருக்கிறது என்றும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார். இதன் மூலம் மேகதாது அணை கட்டும் முயற்சிகளில் கர்நாடக அரசு மேலும் ஒரு படி முன்னேறியுள்ளது.</p><p>மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை  கடந்த 2019&amp;ஆம் ஆண்டில் மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு தாக்கல் செய்தது. அந்த அறிக்கையின் சில அம்சங்கள் காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் கூறுகளுக்கு எதிராக இருப்பதால், அதை திருத்தி வழங்கும்படி கடந்த ஜூன் 29&amp;ஆம் தேதி மத்திய நீர்வள ஆணையம் திருப்பி அனுப்பியது. அடுத்த 50 நாள்களுக்குள், அதாவது ஆகஸ்ட் 19&amp;ஆம் தேதிக்கு முன்பாக திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு தாக்கல் செய்து விட்டது. அடுத்த 10 நாள்களில், அதாவது ஆகஸ்ட் 29&amp;ஆம் தேதி மைசூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அவர்கள், மேகதாது அணை கட்டும் பணிகளை விரைவுபடுத்தும் நோக்குடன் அணைக்கு அனுமதி கோரி மத்திய நீர்வள ஆணையத்தை கர்நாடகம் அணுகும் என்று கூறியிருந்தார். அடுத்த நான்காம் நாளில் கர்நாடக அமைச்சர் மத்திய நீர்வள ஆணையத் தலைவரை சந்தித்து புதிய அணைக்கு விரைவாக அனுமதி தர வேண்டும் என்று கோரியிருக்கிறார். மேகதாது அணையை கட்டுவதில் கர்நாடகம் காட்டும் தீவிரத்தை இது உணர்த்துகிறது.</p><p>அதே நேரத்தில், மேகதாது அணை தொடர்பாக கர்நாடக அரசு ஒவ்வொரு அடியை எடுத்து வைக்கும் போதும், அதை சுட்டிக்காட்டி, கர்நாட அரசின் முயற்சிகளை முறியடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வலியுறுத்தி வருகிறேன். கடந்த ஆகஸ்ட் 30&amp;ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில்,‘‘மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டிற்கு, குறிப்பாக, காவிரி பாசன மாவட்டங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் நினைத்துப்பார்க்க முடியாதவை. மேகதாது அணையை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வரும் நிலையில், தமிழ்நாடு அமைதியாக இருப்பது நல்லதல்ல. தமிழக அரசின் அலட்சியம் காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை தாரைவார்ப்பதாக அமைந்துவிடும். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது. மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். இது குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும்’’ என்று வலியுறுத்தியிருந்தேன். ஆனால், தமிழக அரசு அதன் அலட்சிய அணுகுமுறையை மாற்றிக்கொள்ளவில்லை.</p><p>மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டுக்கு பாசனத் தேவை, குடிநீர்த் தேவை உள்ளிட்டவற்றில் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும், கர்நாடகத்தில் சுற்றுச்சூழலுக்கும், வன உயிரினங்களுக்கும் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து இதுவரை 100 முறைகளுக்கு மேல் விளக்கிக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளேன். அதன் பயனாக, மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகி விடும் என்பதையும், சென்னை உள்பட 28 மாவட்டங்களில் உள்ள 5 கோடி மக்களுக்கு குடிநீர் கிடைக்காது என்பதையும் தமிழக ஆட்சியாளர்கள் நன்கு அறிந்திருப்பார்கள். இவ்வளவுக்கும் பிறகும் மேகாதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் நகர்வுகளை கண்டும் காணததைப் போல தமிழக அரசு அமைதி காப்பதன் காரணத்தை   புரிந்து கொள்ள முடியவில்லை. இது என்ன வகையான அரசியல் உத்தி என்பதும் எங்களுக்குத் தெரியவில்லை.</p><p>மேகதாது அணை கட்ட விரைவாக அனுமதி அளிக்க வேண்டும் என்று கர்நாடக அரசின் சார்பில் மத்திய நீர்வள ஆணையத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில், மேகதாது அணை கட்டப்படுவது உச்சநீதிமன்றம்  மற்றும் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு எதிரான என்பதால், அதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று மத்திய நீர்வள ஆணையத்தை வலியுறுத்த வேண்டியது தமிழ்நாடு அரசின் அடிப்படையானக் கடமை ஆகும். அந்தக் கடமையை தமிழ்நாடு அரசு எப்போது நிறைவேற்றி, காவிரியை பாதுகாக்கப் போகிறது?</p><p>அரசியலாக இருந்தாலும், நிர்வாகமாக இருந்தாலும், மாநில உரிமைகளை பாதுகாப்பதாக இருந்தாலும் விழித்துக் கொண்டவர்கள் தான் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அலட்சியமாக இருந்தவர்கள் உரிமைகளை இழந்திருக்கிறார்கள். 1970&amp;ஆம் ஆண்டுகளில் கர்நாடகத்தில் காவிரி துணை ஆறுகளின் குறுக்கே கபினி, ஹாரங்கி, ஹேமாவதி, சுவர்ணவதி ஆகிய 4 அணைகள் கட்டப்பட்டது தான் இதற்கு சான்றாகும். அந்த அணைகளால் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை இன்று வரை நம்மால் சரி செய்ய முடியவில்லை. இத்தகைய சூழலில் இன்னும் ஒரு அணை கட்டப்பட்டால் காவிரி பாசன மாவட்டங்களின் நிலை என்னவாகும்?</p><p>தமிழக அரசிடம் மீண்டும், மீண்டும் வலியுறுத்துவதெல்லாம் காவிரி விவகாரத்தில் கடைபிடித்து வரும் அலட்சியமான அணுகுமுறையை உடனடியாக கைவிடுங்கள் என்பது தான். மத்திய நீர்வள ஆணையர், மத்திய நீர்வள அமைச்சர், பிரதமர் ஆகியோரை தமிழக முதலமைச்சர் அவர்கள் நேரில் சந்தித்து மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி தரக் கூடாது; அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்ய 2018&amp;ஆம் ஆண்டில் அளிக்கப்பட்ட அனுமதியை திரும்பப் பெறும்படி வலியுறுத்த வேண்டும்.  அவ்வாறு செய்யும் போது மேகதாது அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடத்தும் போது இதை சுட்டிக் காட்டி வாதிட முடியும் என்பதால் உடனடியாக இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>நகர்ப்புற  வேளாண் நிலங்களை அபகரிக்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்  எதிர்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-farmers-association-opposes-the-bill-amending-laws-regarding-the-acquisition-of-urban-agricultural-lands</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-farmers-association-opposes-the-bill-amending-laws-regarding-the-acquisition-of-urban-agricultural-lands#comments</comments><guid isPermaLink="false">89cd10d8-469c-4d0d-9b72-449802e4ced6</guid><pubDate>Thu, 03 Sep 2026 08:29:33 +0000</pubDate><atom:updated>2026-09-03T08:29:33.014Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,தமிழ்நாடு அரசு,விவசாயிகள் சங்கம்,தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,Agricultural Lands,சட்ட திருத்த மசோதா,வேளாண் நிலங்கள்,tamilnadu farmers,TamilNadu Farmers&apos; Association</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/2p7ds8ex/ellora.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/2p7ds8ex/ellora.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>புதிய சட்ட மசோதா, நகர் சார்ந்த, கிராமப்புற வாழ்வு நிலை  மக்களின் வாழ்வுரிமை நிலைகளை பறிப்பதாகும் என்று  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி தெரிவித்துள்ளார். </p> <h2>புதிய சட்ட மசோதா</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>02.09.2026 அன்று <a href="https://www.dailythanthi.com/topic/tn-assembly">தமிழ்நாடு சட்டமன்றத்தில்</a> நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் ஒரு புதிய சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ளார். நகர்ப்புற மேம்பாட்டிற்காக வேளாண்  நஞ்சை நிலங்களை கையகப்படுத்த, நகர ஊரக அமைப்பு இயக்குனருக்கு அனுமதி வழங்கும் ஒரு சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்துள்ளார். </p><p>இதன் மூலம், உள்ளாட்சி அமைப்புக .மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரம் பறிக்கப்பபடுகிறது. இது நகர்புற வளர்ச்சி என்பதின் பெயராலே,  வேளாண்மையை அழித்திடும் நடவடிக்கையாகும்.</p> <p>நஞ்சை நிலங்களை கையகப்படுத்த வேண்டும் என்றால் இதுவரை உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலை பெற்ற பின் தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்ற சட்ட பாதுகாப்பு 2017 ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் நகர்ப்புற வளர்ச்சி தடைபடுகிறது என்ற பேரால் இந்த மசோதா கொண்டுவரப்படுவதாக அமைச்சர் கூறுகிறார். </p> <h2>மக்களின் வாழ்வுரிமை </h2><p>இந்த சட்ட மசோதா, நகர் சார்ந்த கிராமப்புற வாழ்வு நிலை  மக்களின் வாழ்வுரிமை நிலைகளை பறிப்பதாகும். இதுவரை இதன் மீது மாவட்ட ஆட்சியருக்கு இருந்த அதிகாரத்தை பற்றி எதுவும் கூறாமல் இருந்தாலும், இந்த புதிய மசோதாவில் நகர்ப்புற வளர்ச்சி வேளாண் இயக்குனர் தலைமையில் அமைக்கப்படுகிற கமிட்டியில் ஒருவராக மாவட்ட ஆட்சியர் இருப்பாராம். மக்களின் மனசாட்சிக்கு பதில் சொல்ல வேண்டிய மாவட்ட ஆட்சியரை மடைமாற்றி நகர்ப்புற நஞ்சை மக்கள்  பலியிடப்பட உள்ளனர்.</p><p>லட்சக்கணக்கான வீட்டு மனைகள், சிப்காட், சிட்கோ பெருந்திட்டம் என்ற பெயரால் எடுக்கப்பட்ட நிலங்கள், இதை பயன்படுத்தப்படாத நிலங்கள், வேளாண் விரோத சட்டங்கள் திட்டங்களால் விளை நிலங்கள் அருகி.. அதிலிருந்து வருமானம் பெற்ற விவசாயிகள் தொழிலாளர்கள், இதை நம்பி இருந்த மக்கள் வேறு வழியின்றி தவிக்கின்றனர்.</p><h2>உள்ளாட்சியில் கைவைத்தால்</h2><p>இந்த நிலையில் முந்தைய அரசு 2023ஆம் ஆண்டு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை கொண்டு வந்து, தனியார் நிறுவனங்களுக்கு நீர்நிலைகள் உள்பட தாரை வார்க்கக் கொண்டு வந்த சட்டம் போல்.. தற்போது த.வெ.க.அரசு இந்த சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்துள்ளது</p><p>உள்ளாட்சி என்பது மக்கள் ஜனநாயகம் மலரும் அமைப்பு. உள்ளாட்சியில் கைவைத்தால் இது நல்லாட்சிக்கான எடுத்துக்காட்டு அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். உடனடியாக இந்த திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.</p><h2>வரவேற்பு..!!</h2><p>பல்வேறு ஜனநாயக உரிமை போராட்டங்களில் பங்கு கொண்டு காவல் துறையால் போடப்பட்ட வழக்குகளில் வழக்காடு மன்றங்களில் அலைந்து திரிந்து வருகிற விவசாயிகளை காத்திட... இதுவரை நிலுவையில் உள்ள வழக்குகளை  ரத்து செய்யப்படும் என தமிழக முதல்-அமைச்சர் அறிவித்துள்ளதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>பொதுமக்களிடம் எச்.ஐ.வி. விழிப்புணர்வு: தொடங்கி வைத்தார் மேயர் பிரியா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/hiv-awareness-campaign-for-the-public-mayor-priya-inaugurates-the-event</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/hiv-awareness-campaign-for-the-public-mayor-priya-inaugurates-the-event#comments</comments><guid isPermaLink="false">8ce6fa94-bdf5-4ff7-bea9-a20661e68360</guid><pubDate>Thu, 03 Sep 2026 08:20:17 +0000</pubDate><atom:updated>2026-09-03T08:20:17.886Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Mayor Priya,மேயர் பிரியா,விழிப்புணர்வு,Awareness,எச்.ஐ.வி.,சென்னை மேயர் பிரியா,Awareness Campaign,Mayor Priya Rajan,எச்.ஐ.வி தொற்று,விழிப்புணர்வு ஊர்வலம்,HIV awareness</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/ng6bn76v/Untitled-16.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/ng6bn76v/Untitled-16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் எச்.ஐ.வி./எயிட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் பிரசாரப் பேரணியினை மேயர் ஆர். பிரியா இன்று தொடங்கி வைத்தார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>எச்.ஐ.வி. - எயிட்ஸ் விழிப்புணர்வு</h2><p>சென்னை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் எச்.ஐ.வி./எயிட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் கலந்து கொண்ட தீவிர விழிப்புணர்வு பிரசாரப் பேரணியினை (Intensified IEC Campaign) மேயர் ஆர். பிரியா இன்று (03.09.2026) ரிப்பன் கட்டட வளாகத்தில் தொடங்கி வைத்தார்.</p><p>தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு முழுவதும் எச்.ஐ.வி. எயிட்ஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் எச்.ஐ.வி. எயிட்ஸ் தடுப்பு பரிசோதனை, ஆரம்பகால கண்டறிதல், சிகிச்சை மற்றும் எச்.ஐ.வியுடன் வாழும் நபர்களுக்கு எதிரான களங்கம் மற்றும் பாகுபாட்டை ஒழித்திடும் வகையிலான தீவிர எச்.ஐ.வி. மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மேயரால் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.</p><h2>மேயர் தொடங்கி வைத்தார்</h2><p>இதில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் எச்.ஐ.வி. எயிட்ஸ் நோய் குறித்த வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை 100க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் மேயர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து, எச்.ஐ.வி. எயிட்ஸ் நோய் குறித்த நாட்டுப்புற கலைநிகழ்ச்சி மற்றும் கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு திடீர் நடன நிகழ்ச்சியினைப் பார்வையிட்டார்.</p><p>பின்னர், அரசு மற்றும் தனியார் செவிலியர் கல்லூரி, அரசு கலைக்கல்லூரி மற்றும் அறிஞர் அண்ணா சித்தா கல்லூரிகளைச் சார்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரின் தீவிர விழிப்புணர்வுப் பிரச்சாரப் பேரணியினைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இப்பேரணியானது, ரிப்பன் கட்டட வளாகத்தில் தொடங்கி பெரியமேடு சாலை வழியாக சென்று நேரு உள்விளையாட்டரங்கப் பகுதியில் நிறைவுற்றது.</p><h2>பேரணி மூலம் விழிப்புணர்வு</h2><p>இப்பேரணியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் எச்.ஐ.வி. எயிட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.</p><p>இந்நிகழ்ச்சியில், <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மாநகராட்சி </a>ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன், நிலைக்குழுத் தலைவர் (பொதுசுகாதாரம்) கோ. சாந்தகுமாரி, மாவட்ட எயிட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர்/மாநகர நல அலுவலர் டாக்டர் எம். ஜெகதீசன், மாவட்ட திட்ட மேலாளர் டாக்டர் ஏ.கார்த்திகேயன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>7-வது ஆண்டாக இந்திய பொருளாதார வளர்ச்சியை வழி நடத்தும் பிரதமர் மோடி: நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pm-modi-leads-indias-economic-growth-for-7th-year-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pm-modi-leads-indias-economic-growth-for-7th-year-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">7993b156-95f6-46c5-b245-14b2e8af4f72</guid><pubDate>Thu, 03 Sep 2026 08:19:30 +0000</pubDate><atom:updated>2026-09-03T08:19:30.100Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>PM Modi,சென்னை,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,பிரதமர்,Economic Growth,பொருளாதார வளர்ச்சி,மோடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/ep0399sk/302.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/ep0399sk/302.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தொடர்ந்து 7 -வது ஆண்டாக இந்தியாவின் பொருளாதாரப் புரட்சியை வழி நடத்தும் பிரதமர் மோடி என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>பொருளாதாரப் புரட்சி</h2><p>நவீன பாரதத்தின் ஒப்பற்ற சிற்பியாகத் திகழும் பிரதமர் மோடி, நிலைகுலைந்து கிடந்த இந்தியப் பொருளாதாரத்தை அசைக்க முடியாத இரும்புக் கோட்டையாக மாற்றியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) புள்ளிவிவரங்கள் அதற்கு சான்றளிக்கின்றன. </p><p>உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பெரும் பொருளாதாரமாக  தொடர்ந்து 7 -வது முறையாக இந்தியாவை அரியணையில் ஏற்றி, சுதந்திர இந்தியாவின் முந்தைய பல பிரதமர்கள் எட்ட முடியாத சாதனையை, தனது நிர்வாகத் திறமையால் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் பிரதமர் மோடி.</p><p>முந்தைய ஆட்சிகளில் 'சுழியம்' எனத் தேங்கிக்கிடந்த வளர்ச்சி, இன்று பிரதமர் மோடி ஆட்சியில் 'சிகரம்' தொட்டிருக்கிறது. வரும் 2031-ஆம் ஆண்டு வரை இந்தியாவின் இந்த அபரிமிதமான வளர்ச்சி தடையின்றித் தொடரும் என்ற IMF-ன் கணிப்பு, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF">பிரதமர் மோடி</a>  தலைமையில் 'வளர்ச்சியடைந்த பாரதம்' எனும் இலக்கை நாம் மிக விரைவில் எட்டுவோம் என்பதை உறுதிப்படுத்துகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கிருஷ்ண ஜெயந்தி திருநாள் - டிடிவி தினகரன் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/krishna-jayanti-greetings-from-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/krishna-jayanti-greetings-from-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">9dc7c8e5-2707-4d73-a664-ca303d34be71</guid><pubDate>Thu, 03 Sep 2026 08:09:09 +0000</pubDate><atom:updated>2026-09-03T08:09:09.098Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,வாழ்த்து,Krishna Jayanti Festival,கிருஷ்ண ஜெயந்தி,திருநாள்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/worim25z/ttv-dhinakaran.gif" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/worim25z/ttv-dhinakaran.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாடு முழுவதும் கிருஷ்ண ஜெய்ந்தி விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இது குறித்து அமமுக பொதுச்செயலாளர்  டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>கிருஷ்ண ஜெயந்தி திருநாள்</h2><p>பகவான் மகாவிஷ்ணு, ஸ்ரீகிருஷ்ணராக அவதரித்த திருநாளை கிருஷ்ண ஜெயந்தி நாளாக கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2>ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசம்</h2><p>வாழ்க்கையில் எத்தனை தடைகள் வந்தாலும் மனம் தளராமல், தர்மத்தின் பாதையில் உறுதியுடன் பயணிக்க வேண்டும் என்பதோடு, அன்பு, பொறுமை, தன்னம்பிக்கை மற்றும் சமநிலை ஆகிய பண்புகளுடன் வாழ்ந்தால் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள முடியும் என்ற பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசத்தைப் பின்பற்றி வாழ்ந்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.</p><h2>வாழ்வின் உயர்ந்த நெறி</h2><p>“தர்மத்தை நிலைநாட்டி, தீமையை அகற்றி, நன்மையைப் போற்றுவதே வாழ்வின் உயர்ந்த நெறி” என்ற பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் போதனையைப் பின்பற்றி, அவர் அவதரித்த இந்நாளில், அனைவரின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்திடட்டும் எனக் கூறி, மீண்டும் ஒருமுறை எனது <a href="https://dailythanthi.com/topic/krishna-jayanthi">கிருஷ்ண ஜெயந்தி</a> நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஓசூர் வனக்கோட்டத்தில் கூடுதலாக 100 இடங்களில் ஏ.ஐ. கேமராக்கள் - யானைகளை கண்காணிக்க வனத்துறை ஏற்பாடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ai-cameras-at-100-more-spots-in-hosur-forest-division</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ai-cameras-at-100-more-spots-in-hosur-forest-division#comments</comments><guid isPermaLink="false">3d4a43b0-943a-4256-b8a0-a234069c5efb</guid><pubDate>Thu, 03 Sep 2026 08:09:08 +0000</pubDate><atom:updated>2026-09-03T08:09:08.802Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வனத்துறை,Hosur,ஓசூர்,கிருஷ்ணகிரி,Krishnagiri,Elephants,யானைகள்,கண்காணிப்பு கேமராக்கள்,ஏ.ஐ. கேமராக்கள்,AI Camera</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/nvi4y4sb/Untitled-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/nvi4y4sb/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ணகிரி,</p><p>ஒசூர் வனக்கோட்டத்தில் யானைகளை கண்காணிக்க கூடுதலாக 100 இடங்களில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் பொருத்த வனத்துறை ஏற்பாடு செய்துள்ளது.</p><h2>யானை வழித்தடங்கள்</h2><p>ஒசூர் வனக்கோட்டம் 1,492 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது ஆகும். இதில் சுமார் 10,300 ஹெக்டேர் பரப்பளவை உள்ளடக்கிய 3 யானை வழித்தடங்களை அரசு முறைப்படி அறிவித்துள்ளது. இந்த வழித்தடங்கள் அனைத்தும் முழுமையாக காப்புக்காடு பகுதிகளிலேயே அமைந்துள்ளதால், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்திற்கோ அல்லது பட்டா நிலங்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது என வனத்துறை தெளிவுபடுத்தி உள்ளது.</p><p>இருப்பினும் மனித - யானை மோதல்களை குறைக்கவும், விவசாய பயிர்களைப் பாதுகாக்கவும் வனத்துறை பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறது. இரவு நேரங்களில் யானைக் கூட்டத்தின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்கும், அவை குடியிருப்பு பகுதிகளை நெருங்குவதற்கு முன்பே கண்டறிந்து மீண்டும் காட்டுக்குள் திருப்புவதற்கும் தெர்மல் கேமரா பொருத்தப்பட்ட டிரோன்கள் பெரும் உதவியாக உள்ளன. இதேபோல் இரும்பு கம்பி வடம் வேலிகள் மூலமும், யானைகள் விளைநிலங்களுக்குள் நுழைவது தடுக்கப்பட்டு வருகிறது. மேலும் யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதை தடுக்க 20-க்கும் மேற்பட்ட பயிர்சேத தடுப்புக் குழுக்கள் இரவு, பகலாக ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><h2>கண்காணிப்பு கேமராக்கள்</h2><p>குறிப்பாக ஊடேதுர்கம் வனப்பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தை யானைகள் கடக்கும்போது விபத்தில் சிக்கி இறந்து வந்தன. அதாவது 2003-ம் ஆண்டு 5 யானைகளும், 2013-ம் ஆண்டு 3 யானைகளும் ரெயில் விபத்தில் சிக்கி இறந்தன. எனவே அப்பகுதியில் வனத்துறையினர் தற்போது ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய 7 கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.</p><p>இதற்கான கட்டுப்பாட்டு அறை மாவட்ட வனக்கோட்ட அலுவலகத்தில் உள்ளது. அங்கிருந்து கண்காணித்து ரெயில்வேக்கு தகவல்களை பரிமாறி வருகின்றனர். இதன்மூலம் யானைகள் விபத்தில் சிக்குவது குறைந்து உள்ளது. இதேபோல் வனப்பகுதியில் இருந்து யானைகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைவதை தடுக்கவும் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வருகின்றனர். மேலும் பல இடங்களில் கேமராக்கள் பொருத்த திட்டமிட்டு வருகின்றனர்.</p><h2>100 இடங்களில்...</h2><p>இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஓசூர் வனக்கோட்டத்தில் யானைகள் ரெயிலில் அடிபடாமல் தடுக்கவும், குடியிருப்பு பகுதிக்குள் நுழையாமல் தடுக்கவும் 71 இடங்களில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் 100 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிட்டு உள்ளோம். இதற்கான முன்மொழிவுகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அரசின் ஒப்புதல் பெறப்பட்டவுடன் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>“த.வெ.க. ஆட்சியின் 116 நாட்களில் தமிழ்நாடு ரிவர்ஸ் கியரில் சென்றுவிட்டது..” - எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/in-the-116-days-of-the-tvk-government-tamil-nadu-has-gone-into-reverse-gear-leader-of-the-opposition-udhayanidhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/in-the-116-days-of-the-tvk-government-tamil-nadu-has-gone-into-reverse-gear-leader-of-the-opposition-udhayanidhi#comments</comments><guid isPermaLink="false">0324b043-eb6b-44bb-9a70-7ef90c40ca38</guid><pubDate>Thu, 03 Sep 2026 07:43:18 +0000</pubDate><atom:updated>2026-09-03T07:43:18.504Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,விஜய்,திமுக,DMK,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,தமிழக சட்டசபை,TN Assembly,Assembly Session,சட்டசபை கூட்டத்தொடர்,TN Assembly session,தமிழக சட்டசபை கூட்டத்தொடர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/lon3lbcv/kala.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/lon3lbcv/kala.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திராவிட மாடல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்ததாக ஒப்புக்கொண்ட தவெக அரசுக்கு நன்றி என்று எதிர்க்கட்சித் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/udhayanidhi-stalin">உதயநிதி ஸ்டாலின்</a> தெரிவித்தார்.</p><h2>மானியக் கோரிக்கை விவாதம்</h2><p>தமிழக சட்டசபையில் கடந்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி 2026-2027-ம் ஆண்டுக்கான பொது  பட்ஜெட்டும், 6-ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. தொடர்ந்து, ஆகஸ்டு 7, 10,11 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதமும், 12-ந் தேதி நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோரின் பதில் உரையும் இடம் பெற்றது. </p><p>இந்த நிலையில், ஆகஸ்டு 17-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதுவரை, 43 துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில், முதல்-அமைச்சர் கையில் உள்ள முக்கிய துறையான காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.  </p><p>காலை 9.30 மணிக்கு தமிழக சட்டசபை கூடியதும், முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. கேள்வி நேரம் முடிந்ததும், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் தொடங்கியது. </p><h2> 116 நாட்களில்</h2><p>இந்த விவாதத்தில், எதிர்க்கட்சி தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/udhayanidhi-stalin">உதயநிதி ஸ்டாலின்</a> பேசியதாவது:- </p><p>திமுக ஆட்சியில் டாப் கியரில் சென்ற தமிழ்நாடு, தவெக ஆட்சியின் 116 நாட்களில் ரிவர்ஸ் கியரில் சென்று கொண்டு இருக்கிறது. </p><p>எங்கள் ஆட்சியில் குற்றங்கள் குறைந்திருப்பதாக தற்போது வழங்கப்பட்டுள்ள கொள்கை விளக்க குறிப்பில் பக்கம் 293, 295, 296-தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாதியபாகுபாடு கொலைகள் குறைந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறீர்கள். எனவே, எங்கள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருந்ததாக ஒப்புக்கொண்டதற்கு நன்றி</p><p>116 நாள் ஆட்சியில், பெண்களுக்கு பெரிய தொல்லையாக உள்ளது. கறிக்கடையில் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் தினமும் வெட்டு குத்து நடக்கிறது. ஆட்சிக்கு வந்த பின் 10 ஆணவக்கொலை நடந்துள்ளது. அதற்கும் பெயர் மாற்றிவிட்டனர்.</p><p>116 நாட்களில் 8 சிறை மரணங்கள்; நீதியும் கிடைக்கவில்லை, குறைந்தபட்சம் Sorryயும் கிடைக்கவில்லை.</p><p>கடந்த 116 நாட்களில் 200 கொலைகள், 500 பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளன.</p> <p>த.வெ.க. ஆட்சியில் சட்டம் இருக்கு ஒழுங்கு இல்லை; கடந்த காலத்தில் குற்ற நிகழ்வுகளுக்கு அரசு காரணம் என கூறிய கட்சி, ஆட்சிக்கு வந்த பிறகு தனி நபர்கள்தான் காரணம் என மக்களுக்கு பாடமெடுக்கின்றனர். </p><p>இவர்களை வெளிப்படையாக விமர்சனம் செய்யும் பாஜகவினர் கைதாகவில்லை, ஏன் அவர்கள் மீது புகார் கூட கொடுப்பதில்லை. எங்களுக்கு வந்தால் ரத்தம், அவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா. பாஜக அடித்தாலும், வலித்தாலும் வெளியில் சொல்ல கூடாது என்கிற ஆளுங்கட்சியின் இந்த அரசியல் வியூகத்தை இதுவரை நாங்கள் கேட்டதும் இல்லை, பார்த்ததும் இல்லை. </p><h2>தங்க மோதிரம் திட்டம்</h2><p>பல்வேறு வாக்குறுதிகளை அளித்தீர்கள், நிறைவேற்றவில்லை. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் என்று சொன்னீர்கள். இந்த அரசின் திட்டங்களை தாய்மாமன் காதுகுத்தும் திட்டம் என்று சொல்லிவிடலாம். திட்டங்கள் மக்களை ரீச் ஆவதைவிட, போடும் ரீல்ஸ் ரீச் ஆனால் போதும் என நினைக்கிறார்கள்.</p><h2>குட்டி கதைகள்</h2><p>மக்கள் எங்களுக்கு கேள்வி கேட்கும் பொறுப்பை வழங்கி இருக்கிறார்கள். சரியான கேள்வியைக் கேட்டு உங்களிடம் பதில் வாங்க வேண்டிய இடத்தில் நாங்கள் இருக்கிறோம்.</p><p>எனவே, லாஜிக்கே இல்லாத குட்டி கதைகள் சொல்லாமல் முதலமைச்சர் நேரடியாகப் பதிலைச் சொல்ல வேண்டும். ரீல்ஸ் கண்டெண்டுக்காக இல்லாமல்; ரோல் கேமரா ஆக்ஷன் இல்லாமல் டேக் டைவர்ஷன் இல்லாமல் பதிலளிக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><p>தொடர்ந்து தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் நிறுத்தப்பட்டத்தை உதயநிதி ஸ்டாலின் பட்டியலிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>ராமேஸ்வரம் - ஹுப்ளி சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rameswaram-hubli-special-train-service-extension</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rameswaram-hubli-special-train-service-extension#comments</comments><guid isPermaLink="false">43353c8e-5a01-4358-afda-b412454c4084</guid><pubDate>Thu, 03 Sep 2026 07:39:08 +0000</pubDate><atom:updated>2026-09-03T07:39:08.619Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,தெற்கு ரெயில்வே,Southern Railway,Special train,ராமேஸ்வரம்,Rameshwaram,ஹுப்ளி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/fmov37vp/Untitled-11.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/fmov37vp/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு ராமேஸ்வரம் - ஹுப்ளி சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>ஹுப்ளியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6.50 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண். 07355) அக்டோபர் 4, 11, 18, 25, நவம்பர் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் 9 சேவைகள் நீட்டிக்கப்படுகின்றன.</p><p>இதேபோல், ராமேஸ்வரத்தில் இருந்து ஹுப்ளிக்கு திங்கட்கிழமைகளில் இரவு 8 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (07356) அக்டோபர் 5, 12, 19, 26, நவம்பர் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் 9 சேவைகள் நீட்டிக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்ற அறிவிப்புக்கு இந்திய கம்யூ. கட்சி வரவேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/indian-communist-party-welcomes-announcement-to-withdraw-cases-against-farmers-and-teachers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/indian-communist-party-welcomes-announcement-to-withdraw-cases-against-farmers-and-teachers#comments</comments><guid isPermaLink="false">12e3af71-40e1-4281-883d-ef336865ec90</guid><pubDate>Thu, 03 Sep 2026 07:26:03 +0000</pubDate><atom:updated>2026-09-03T07:26:03.663Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,CPI,மு.வீரபாண்டியன்,M Veerapandian</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/5pfj15yg/Untitled-10.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.வீரபாண்டியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/5pfj15yg/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும் என்று தமிழ்நாடு முதல் அமைச்சர் அறிவித்துள்ளதற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>கடந்த காலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும் என தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.</p><p>அதே நேரத்தில், அவர்களின் நியாயமான கோரிக்கைகளையும் தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும். கடந்த காலத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்காக போராட்டங்களை முன்னெடுத்த அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிற் சங்கத் தலைவர்கள், தூய்மைப் பணியாளர்கள், மாணவர்கள் இளைஞர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும்.</p><p>அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு, பதவி உயர்வு கோரிக்கைகளுக்காக தொடர்ந்து போராடிவரும் அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழுவின் தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை மீது எடுக்கப்பட்டு வரும் ஒழுங்கு நடவடிக்கையையும் ரத்து செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>முதுமலையில் வாகன சவாரி செல்லும் சுற்றுலா பயணிகள் செல்போன் பயன்படுத்த தடை..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-mobile-phone-use-for-tourists-on-vehicle-safaris-in-mudumalai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-mobile-phone-use-for-tourists-on-vehicle-safaris-in-mudumalai#comments</comments><guid isPermaLink="false">206d0fab-0191-485d-8d45-97926eb1e426</guid><pubDate>Thu, 03 Sep 2026 07:19:29 +0000</pubDate><atom:updated>2026-09-03T07:19:29.378Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சுற்றுலா பயணிகள்,நீலகிரி,Nilgiri,Mudumalai,முதுமலை,Mudumalai forest,Nilgiri district,Mudumalai Tiger Reserve,முதுமலை புலிகள் காப்பகம்,நீலகிரி மாவட்டம்,முதுமலை வனப்பகுதி,mobile ban</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/yy7wo0wn/Untitled-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/yy7wo0wn/Untitled-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>முதுமலை புலிகள் காப்பகத்தின் மைய வாழ்விட சுற்றுலா பகுதிகளில் வாகன சவாரி செல்லும் சுற்றுலா பயணிகள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>688 சதுர கிலோமீட்டர் பரப்பளவு</h2><p>நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு பல்வேறு வனவிலங்குகளுடன், 260 வகையான பறவையினங்களும் உள்ளன. மேலும், ஆசியாவின் மிகப்பெரிய வளர்ப்பு யானைகள் முகாமும் இங்கு அமைந்துள்ளது.</p><h2>வாகன சவாரிக்கு குவியும் சுற்றுலா பயணிகள்</h2><p>முதுமலைக்கு வளர்ப்பு யானைகளை காணவும், வனப்பகுதிக்குள் வாகன சவாரி செல்லவும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். வனத்துறை சார்பில் ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்களில் சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.</p><h2>செல்போன் பயன்படுத்த தடை</h2><p>இந்த நிலையில், மைய வாழ்விட சுற்றுலா பகுதிகளில் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில், வாகன சவாரி செல்லும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சுற்றுலா பயணிகள்</a> செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>வாகனங்களில் ஒப்படைக்கலாம்</h2><p>இதுகுறித்து முதுமலை வனச்சரகர் யுவராஜா கூறுகையில், “உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, மைய வாழ்விட சுற்றுலா மண்டலங்களில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>சவாரி செல்லும் பார்வையாளர்கள் தங்களது செல்போன்களை சவாரி வாகனங்களில் பாதுகாப்பாக ஒப்படைத்து, பயணம் முடிந்த பின்பு பெற்றுக்கொள்ளலாம். பார்வையாளர்களின் ஒருமித்த ஆதரவே வனவிலங்குகள் பாதுகாப்புக்கு பெரும் உதவியாக இருக்கும்” என்றார்.</p>]]></content:encoded></item><item><title>காவல் துறையில் 29,108 பணியிடங்கள் உருவாக்கப்படும் - முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/29108-police-personnel-posts-to-be-created-in-the-police-department-chief-minister-vijay-announces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/29108-police-personnel-posts-to-be-created-in-the-police-department-chief-minister-vijay-announces#comments</comments><guid isPermaLink="false">369ea334-77f5-4eb3-9db7-281953636929</guid><pubDate>Thu, 03 Sep 2026 07:00:50 +0000</pubDate><atom:updated>2026-09-03T07:00:50.011Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,police,சட்டசபை,தமிழக சட்டசபை,Assembly,காவல் துறை,தமிழக காவல் துறை,Police Department,Tamil Nadu Police Department,Tamilnadu Assembly,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/34ppt77e/Untitled-15.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/34ppt77e/Untitled-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டசபையில் இன்று (வியாழக்கிழமை) காவல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது.</p><h2>மானியக் கோரிக்கை விவாதம்</h2><p>தமிழக சட்டசபையில் கடந்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 6-ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. தொடர்ந்து, ஆகஸ்டு 7, 10,11 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதமும், 12-ந் தேதி நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோரின் பதில் உரையும் இடம் பெற்றது.</p><p>இந்த நிலையில், ஆகஸ்டு 17-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதுவரை, 43 துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து முடிந்துள்ளது.</p><h2>மானியக் கோரிக்கை தாக்கல்</h2><p>இந்த நிலையில்,  காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடந்தது. முன்னதாக, துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டு முதல்-அமைச்சர் விஜய் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><ul><li><p>மாநிலத்திலுள்ள காவல் நிலையங்களில் 29,108 கூடுதல் காவலர் பணியிடங்கள் படிப்படியாக அடுத்த 5 ஆண்டுகளில் உருவாக்கப்படும். தமிழ்நாடு காவல் படையில் இவ்வாண்டில் 5,000 பெண் காவலர்கள் உட்பட மொத்தம் 10,000 காவலர்கள் நியமிக்கப்படுவர்</p></li><li><p>போதைப் பொருள் பயன்பாட்டை கிராமம் வெற்றிகரமாக ஒழிக்கும் ஒன்றுக்கு ரூபாய் 10 இலட்சம் வீதம் 50 கிராமங்களுக்கு வழங்கப்படும்</p></li><li><p>ரூபாய் 212 கோடி ஒதுக்கீட்டில் காவல்துறை நவீனமயமாக்கப்படும்.</p></li><li><p>செயற்கை நுண்ணறிவு, நவீன டிஜிட்டல் தடயவியல், நிகழ்நேர கண்காணிப்பு அமைப்பு, நவீன தகவல் தொடர்பு மற்றும் கட்டுப்பாட்டு மையங்களை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்</p></li><li><p>லஞ்ச லாவண்யமற்ற அரசு அலுவலகங்களை உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாநிலத்திலுள்ள அனைத்து காவல் பிரிவுகளுக்கும் அனுமதித்திருந்த நி லை யங்க ளுக்கும், சிறப்புப் எதிர்பாரா செலவினம் (Contingency Fund) உயர்த்தி வழங்கப்படும்</p></li><li><p>பணியின்போது துணிச்சலுடன் பணியாற்றி உயிரிழந்த காவல் துறையினரின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூபாய் 1 கோடி வழங்கப்படும்</p></li><li><p>பணிக்காலத்தில் இறக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் கருணைத் தொகை (Ex-gratia Payment) இருபது இலட்சம் ரூபாயிலிருந்து முப்பது இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்</p></li><li><p>வண்டலூர் அருகே அமைந்துள்ள தமிழ்நாடு காவலர் உயர் பயிற்சியகத்தில் (Tamil Nadu Police Academy) உள்விளையாட்டு வெளிப்புற அரங்கம் மற்றும் விளையாட்டு வசதிகள் ரூபாய் 23 கோடி செலவில் அமைக்கப்படும்</p></li><li><p>சேலம் மற்றும் விழுப்புரம் வட்டார தடய அறிவியல் ஆய்வகத்தில் புதிய மரபணு ஆய்வுப்பிரிவுகள் (DNA TESTING FACILITY) சுமார் 14 கோடி செலவில் நிறுவப்படும்</p></li><li><p>6 இடங்களில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் 16 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும்</p></li><li><p>10 இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 131 புதிய குடியிருப்புகள் ரூபாய் 80 கோடி செலவில் கட்டப்படும்</p></li><li><p>தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் பயிற்சிக் கழகத்தின் (Fire and Rescue Services Academy) இரண்டாம் கட்டப் பணிகள் ரூபாய் 50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்</p></li><li><p>காவல் துறையின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக புதிய வாகனங்கள் ரூபாய் 200 கோடி செலவில் வாங்கப்படும்</p></li><li><p>ஆவடி ஆணையரகத்தில் உள்ள ஆவடி காவல் மாவட்டம் பிரிக்கப்பட்டு புதிய பூந்தமல்லி காவல் மாவட்டமும் மற்றும் பூந்தமல்லி காவல் சரகம் பிரிக்கப்பட்டு திருமழிசை காவல் சரகமும் உருவாக்கப்படும்</p></li><li><p>தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட சட்டம் ஒழுங்கு காவல் மாவட்டங்கள் மற்றும் சரகங்களை மறுசீரமைப்பு செய்து புதிதாக கிளாம்பாக்கம் உருவாக்கப்படும். காவல் மாவட்டம் மேலும், கூடுவாஞ்சேரி சரகத்தை இரண்டாகப் பிரித்து புதிதாக கிளாம்பாக்கம் காவல் சரகம் உருவாக்கப்படும்</p></li><li><p>காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு காவல் பிரிவுகளின் தூய்மைப் பணிகள் வெளிமுகமை (outsourcing) மூலம் ஆண்டிற்கு ரூபாய் 60 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்</p></li><li><p>கோயம்புத்தூர் மாநகரம், காந்திபுரத்தில் காட்டூர் காவல் நிலையம் மற்றும் இதர அலுவலகக் கட்டடங்கள் ரூபாய் 21 கோடி செலவில் கட்டப்படும்</p></li><li><p>நீலகிரி மாவட்டம், எமரால்டு காவல் நிலையத்திற்கு புதிய கட்டடம் ரூபாய் 4.15 கோடி செலவில் கட்டப்படும்</p></li><li><p>காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் காவல் நிலையத்திற்கு புதிய கட்டடம் ரூபாய் 3.29 கோடி செலவில் கட்டப்படும்</p></li><li><p>சேலம் மாநகரம், கருப்பூர் காவல் நிலையத்திற்கு புதிய கட்டடம் ரூபாய் 2.65 கோடி செலவில் கட்டப்படும்</p></li><li><p>தூத்துக்குடி மாவட்டம், குளத்தூரில் புதிய நகர காவல் நிலையக் கட்டடம் ரூபாய் 2.53 கோடி செலவில் கட்டப்படும்</p></li><li><p>தென்காசி மாவட்டம், அய்யாபுரத்தில் புதிய ஊரகக் காவல் நிலையக் கட்டடம் ரூபாய் 2.14 கோடி செலவில் கட்டப்படும் </p></li><li><p>ஈரோடு மாவட்டம், கடத்தூர் (ஊரக) காவல் நிலையத்திற்கு புதிய கட்டடம் ரூபாய் 1.76 கோடி செலவில் கட்டப்படும்</p></li><li><p>தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு ரூபாய் 1.9 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டப்படும்</p></li><li><p>தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் புதிய அனைத்து மகளிர் காவல் நிலையக் கட்டடம் ரூபாய் 1.95 கோடி செலவில் கட்டப்படும்</p></li><li><p>திருவாரூர் அனைத்து மாவட்டம், மன்னார்குடியில் மகளிர் காவல் நிலைய (போக்குவரத்து காவல் நிலையம் உட்பட) புதிய கட்டடம் ரூபாய் 3.66 கோடி செலவில் கட்டப்படும்</p></li><li> </li></ul><ul><li><p>செங்கல்பட்டு மாவட்டம் ஆயுதப் படைக்கான புதிய நிர்வாகக் கட்டடம், விருந்தினர் இல்லக் கட்டடம், மோப்ப நாய்ப் படை பிரிவு கட்டடம், துணைக் காவல் கண்காணிப்பாளர் /காவல் ஆளிநர்களுக்கான குடியிருப்புகள் மற்றும் இதர கட்டடங்கள் ரூபாய் 91.52 கோடி செலவில் கட்டப்படும்</p></li><li><p>தென் காசி மாவட்டம், ஆயுதப்படை வளாகத்தில் நிர்வாகக் கட்டடம், ஆயுதக் கிடங்கு (Bell of Arms), காவலர் தங்குமிடங்கள் (Barracks), வாகனங்களுக்கான கொட்ட கை (MT Shed), பயிற்சி காவலர் உணவகம் (Cadet Mess) மற்றும் கேன்டீன் ரூபாய் 37.30 கோடி செலவில் புதிதாக கட்டப்படும்</p></li><li><p>திருப்பத்தூர் மாவட்டம் ஆயுதப்படைக்கான உட்கட்டமைப்பு ரூபாய் 13 கோடி செலவில் புதிதாக ஏற்படுத்தப்படும்</p></li><li><p>மதுரையில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை, 6-ஆம் அணிக்கு (Tamil Nadu Special Police, VI Battalion) புதிய நிர்வாகக் கட்டடம் ரூபாய் 1243 கோடி செலவில் கட்டப்படும்</p></li><li><p>கோயம்புத்தூர் மாவட்டம், உப்பிலி-பாளையத்தில் மாவட்ட காவல் பணியாளர்களுக்காக ரூபாய் 68 கோடி</p></li><li><p>செலவில் புதிய குடியிருப்புகள் கட்டப்படும்</p></li><li><p>திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆயுதப்படை காவலர் பணியாளர்களுக்காக 108 புதிய குடியிருப்புகள் ரூபாய் 55 கோடி செலவில் கட்டப்படும்</p></li><li><p>புதுக்கோட்டை மாவட்ட வளாகத்தில் 124 புதிய காவலர் ஆயுதப்படை குடியிருப்புகள் ரூபாய் 39 கோடி செலவில் கட்டப்படும்</p></li><li><p>சென்னை மாநகரம், மண்ணடியில் ரூபாய் 19.89 கோடி செலவில் காவல் பணியாளர்களுக்கான புதிய குடியிருப்புகள் கட்டப்படும்</p></li><li><p>சென்னை மாநகரம், தியாகராய நகர், காமராஜர் காலனியில் 20 காவல் உதவி ஆய்வாளர் (Sub-Inspector) குடியிருப்புகள் ரூபாய் 10.36 கோடி செலவில் புதிதாக கட்டப்படும்</p></li><li><p>தமிழ்நாடு முழுவதும் உள்ள காவலர் குடியிருப்புகளில் உள்ள கழிவுநீர் மற்றும் வடிகால் அமைப்புகள் ரூபாய் 36 கோடி செலவில் புதுப்பிக்கப்படும்</p></li><li><p>சென்னை தடய அறிவியல் துறையின் ஆவணப் பிரிவிற்கு தேவையான வீடியோ ஸ்பெக்டரல் கம்பாரட்டர் (Video Spectral Comparator) என்ற புதிய அதிநவீன ஆய்வு கருவி வாங்குதல்</p></li><li><p>சேலம் மற்றும் திருநெல்வேலி வட்டார தடய அறிவியல் ஆய்வகங்களில் புதிதாக கணினி தடய அறிவியல் பிரிவுகள் அமைக்கப்படும்</p></li><li><p> மிக முக்கிய மற்றும் மிக மிக முக்கிய பிரமுகர்களின் உணவு மாதிரிகளை ஆய்வு செய்வதற்கென்றே பிரத்யேகமான ஆய்வுப் பிரிவு ஒன்றினை தடய அறிவியல் துறையின் சென்னை முதன்மை ஆய்வகத்தில் நிறுவுதல் </p></li><li><p>சென்னை தடய அறிவியல் துறையின் முதன்மை ஆய்வகத்தில் உள்ள துப்பாக்கிப் பிரிவின் ஆய்வுத் திறன் மேம்படுத்தப்படும்</p></li><li><p>3 சிப்காட் தொழிற்பூங்காக்களில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்கள் ரூபாய் 4.59 கோடி செலவில் நிறுவப்படும்</p></li><li><p>6 இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களை ரூபாய் 12.84 கோடி செலவில் தரம் உயர்த்தப்படும்</p></li><li><p>15 இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களுக்கு ரூபாய் 65.90 கோடி செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்</p></li><li><p>தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களின் பயன்பாட்டிற்காக 50 நீர் தாங்கி வண்டிகள் (Water Tenders) ரூபாய் 60 கோடி செலவில் வழங்கப்படும்</p></li><li><p>தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் பயன்பாட்டிற்கு புதிதாக 50 துரித மீட்பு ஊர்திகள் (Quick Response Vehicles) ரூபாய் 17.50 கோடி செலவில் வழங்கப்படும்</p></li><li><p>தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் பயன்பாட்டிற்கு புதிதாக இரண்டு வான்நோக்கி உயரும் ஏணி கொண்ட ஊர்திகள் (Aerial Ladder Platform vehicles) ரூபாய் 60 கோடி செலவில் வழங்கப்படும்</p></li><li><p>தீயணைப்பு மீட்புப்பணிகள் மற்றும் துறையின் பயன்பாட்டிற்கு புதிதாக 10 கனரக மீட்பு வாகனங்கள் (Heavy Duty Wreckers) ரூபாய் 8 கோடி செலவில் வழங்கப்படும்</p></li><li><p>தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களின் பயன்பாட்டிற்கு 50 ஒருங்கிணைந்த மீட்பு கருவிகள் (Combl -tools) ரூபாய் 6 கோடி செலவில் வழங்கப்படும்</p></li><li><p>தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் ஸ்கூபா வீரர்கள் துறையின் பயன்பாட்டிற்கு 50 ஸ்கூபா உடைகள் (Scuba Suits) ரூபாய் ஒரு கோடி செலவில் வழங்கப்படும்</p></li><li><p>தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் பயன்பாட்டிற்கு 25 புகை வெளியேற்றும் கருவிகள் (Smoke Exhausters) ரூபாய் 1.75 கோடி செலவில் வழங்கப்படும்</p></li><li><p>தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் பயன்பாட்டிற்கு 25 கண்காணிப்பு ட்ரோன்கள் (Surveillance Drones) ரூபாய் 2 கோடி செலவில் வழங்கப்படும்</p></li><li><p>தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் பயன்பாட்டிற்கு 10 பளுதூக்கும் ட்ரோன்கள் (Payload Drones) ரூபாய் 1.20 கோடி செலவில் வழங்கப்படும்</p></li><li><p>தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் பயன்பாட்டில் உள்ள மூச்சுக் கருவிகளுக்கு மறுநிரப்பம் செய்ய ஐந்து காற்று பிடிக்கும் கருவிகள் (Breathing Apparatus - Air Compressors) ரூபாய் 65 லட்சம் செலவில் வழங்கப்படும்</p></li><li><p>தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் உள்ள Fireman" (தீயணைப்போர்) என்ற பதவியின் பெயர் "Firefighter" (தீயணைப்பு வீரர்) என மாற்றி அழைக்கப்படும்</p></li><li><p>தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் புதியதாக பெண் தீயணைப்பு வீரர்கள் பணியமர்த்தப்படுவார்கள்</p></li><li><p>தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை பணியாளர்களுக்கான சீருடைப்படியை காவல் துறை பணியாளர்களுக்கு இணையாக ரூபாய் 3.77 கோடி செலவில் வழங்கப்படும்</p></li><li><p>தமிழ்நாடு முதலமைச்சரின் தீயணைப்புப் பணிகள் பதக்கம் பொங்கல் தினத்தன்று வழங்கப்படும் எண்ணிக்கை மற்றும் படித்தொகை உயர்த்தி வழங்கப்படும்</p></li><li><p>தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில், சென்னை மண்டலத்தில், தாம்பரம் மற்றும் ஆவடி ஆகிய இரண்டு புதிய மாவட்ட அலுவலகங்கள் ரூபாய் 2.80 கோடி செலவில் உருவாக்கப்படும்</p></li><li><p>தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் முதல் கட்டமாக இரண்டு ஸ்கூபா டைவிங் குழுக்கள் ரூபாய் 80 லட்சம் செலவில் உருவாக்கப்படும்</p></li><li><p>தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் புதிதாக ஆய்வுக்குழு பிரிவு உருவாக்கப்படும். முதற்கட்டமாக 10 குழுக்கள் ரூபாய் 3.20 கோடி செலவில் உருவாக்கப்படும்.</p></li></ul><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>பள்ளி மாணவர்களை பஸ்சில் இருந்து கீழே தள்ளிவிட்டது மனிதநேயமற்ற கொடுஞ்செயல் - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pushing-school-students-off-the-bus-is-an-inhumane-and-atrocious-act-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pushing-school-students-off-the-bus-is-an-inhumane-and-atrocious-act-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">2fd6ff2b-7a3d-4512-a2b1-261d8729e355</guid><pubDate>Thu, 03 Sep 2026 06:41:50 +0000</pubDate><atom:updated>2026-09-03T06:41:50.114Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசு பஸ்,காங்கிரஸ்,Congress,புதுக்கோட்டை,மாணிக்கம் தாகூர்,Pudukottai,govt bus,அரசு பள்ளி மாணவிகள்,மாணவர்கள் காயம்,Govt School Students,Manickam Tagore</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/87a36phb/manik.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/87a36phb/manik.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பள்ளி மாணவர்களை பஸ்சில் இருந்து கீழே தள்ளிவிட்டது மனிதநேயமற்ற கொடுஞ்செயல் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/manickam-tagore">மாணிக்கம் தாகூர் எம்.பி.</a> தெரிவித்துள்ளார். </p><h2>தீண்டாமை</h2><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>புதுக்கோட்டை மாவட்டம், ரங்கம்மா சத்திரம் பகுதியைச் சேர்ந்த பழங்குடியின நரிக்குறவர் சமுதாயப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் அரசுபஸ்சில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டுப் படுகாயமடைந்த கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் உலுக்கியுள்ளது. </p><p>கல்வி பயிலச் சென்ற பெண் குழந்தைகள் மீது பஸ்சில் காட்டப்பட்ட தீண்டாமைப் புறக்கணிப்பும் அலட்சியமும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்தவுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் பென்னட் உடனடியாக அப்பகுதிக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட மாணவிகள், குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களிடம் நிலைமைகளைக் கேட்டறிந்தார்.</p><h2>ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம்</h2><p>நாட்டின் விளிம்புநிலை மக்களான பழங்குடியினர் மற்றும் பட்டியலினத்தவர்கள் மீது தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்து விடப்படும் இத்தகைய உளவியல் மற்றும் சமூக ஒடுக்குமுறைகளுக்குப் பின்னால் ஊடுருவியிருப்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நச்சுத்தனமான வெறுப்பு அரசியல் சித்தாந்தமே ஆகும். சக மனிதனை சமமாகப் பார்க்க விடாமல், எளிய மக்களைத் தீண்டத்தகாதவர்களாகவும் இரண்டாந்தரக் குடிமக்களாகவும் சித்தரிக்கும் இந்த மனுவாத வெறுப்பு அரசியலையும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தையும் நாம் முற்றிலுமாக முறியடித்தாக வேண்டும். இத்தகைய வெறுப்புணர்வை வேரறுக்காமல் சமூக நீதியையும் சமத்துவத்தையும் பாதுகாப்பது சாத்தியமில்லை.</p><h2>துறைகளின் அலட்சியம்</h2><p>பழங்குடியின மாணவிகள் தங்களின் கல்வி உரிமைக்காக நாள்தோறும் பெரும் போராட்டத்தை எதிர்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் இருந்து புதுக்கோட்டை நகருக்குப் பள்ளி, கல்லூரி செல்ல 4 முதல் 5 கிலோமீட்டர் தூரத்திற்குப் பஸ் போக்குவரத்தே ஒரே வாழ்வாதாரமாக உள்ளது. </p><p>ஆனால், குறிப்பிட்ட அந்த நிறுத்தத்தில் அரசு பஸ்கள் முறையாக நிற்பதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. பஸ்சில் ஏற முயலும் குழந்தைகளை அவமதிப்பது, கம்பிப் பிடியைத் தட்டிவிடுவது மற்றும் தானியங்கி கதவை அமுக்கி மாணவிகளை ஆபத்துக்குள்ளாக்கியது போன்ற செயல்கள் மனிதநேயமற்ற கொடுஞ்செயல்கள் ஆகும். </p><p>ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த பிரத்யேக வாகன வசதியை, பள்ளிக் கல்வித் துறையா அல்லது வருவாய்த் துறையா செலவை ஏற்பது என்ற அதிகாரத்துவப் பூசலால் நிறுத்தி வைத்துள்ளனர். துறைகளின் இந்த அலட்சியமே இன்று 10 மாணவிகள் ரத்தக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படக் காரணமாகியுள்ளது.</p><h2>வன்கொடுமை தடுப்பு சட்டம்</h2><p>அரசுத் துறைகளுக்கு இடையேயான இந்த ஒருங்கிணைப்பின்மைக்கு மாவட்ட கலெக்டரே முழுப் பொறுப்பேற்க வேண்டும். </p><p>பஸ் நிறுத்தத்தில் தற்காலிகமாக அதிகாரிகளை நிறுத்துவது நிரந்தரத் தீர்வாகாது என்பதால், பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களில் ரங்கம்மா சத்திரம் வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்கவோ அல்லது நிறுத்தப்பட்ட மாணவிகளுக்கான தனி வாகன வசதியை மீண்டும் தடையின்றித் தொடங்கவோ மாவட்ட கலெக்டர் நேரடித் தலையீடு செய்து உடனடியாகத் தீர்வு காண வேண்டும். </p><p>மேலும், இச்சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது பாரபட்சமின்றித் தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சையையும், நிவாரணத்தையும் அரசு உடனடியாக வழங்க வேண்டும்.</p><h2>ஆக்கபூர்வமான நடவடிக்கை</h2><p>தமிழ்நாடு அரசு ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களின் நலனுக்காகவும் சமத்துவத்திற்காகவும் பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது என்பதை உணர்கிறோம்;. </p><p>இருப்பினும், கள அளவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறும் இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான தீண்டாமைச் சம்பவங்களையும் நிர்வாகக் குறைபாடுகளையும் அரசு தீவிரமாகக் கவனத்தில் கொண்டு, இனி எங்கும் இத்தகைய நிகழ்வுகள் எழாத வண்ணம் கண்காணிப்பையும் தடுப்பு நடவடிக்கைகளையும் மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வலியுறுத்துகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>நாடெங்கும் அன்பு, அமைதி, மகிழ்ச்சி பெருக வேண்டும்: எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/love-peace-happiness-should-grow-across-country-edappadi-palaniswami-krishna-jayanti-greetings</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/love-peace-happiness-should-grow-across-country-edappadi-palaniswami-krishna-jayanti-greetings#comments</comments><guid isPermaLink="false">47c4d618-bdf6-45fb-b3ff-067df77981e0</guid><pubDate>Thu, 03 Sep 2026 06:28:49 +0000</pubDate><atom:updated>2026-09-03T06:28:49.326Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,எடப்பாடி பழனிசாமி,அதிமுக,Edappadi Palaniswami,Greetings,வாழ்த்து,Krishna Jayanti,கிருஷ்ண ஜெயந்தி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/2jy2baz6/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/2jy2baz6/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கிருஷ்ண ஜெயந்தி நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>உலகம் போற்றும் ஒப்பற்ற ஞான நூலாம் பகவத் கீதையை அருளிய, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த திருநாளை 'கிருஷ்ண ஜெயந்தி' என்றும்; 'கோகுலாஷ்டமி' என்றும் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும், எனது இனிய ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>'நான் எல்லா உயிர்களிடத்தும் சமமானவன்; எனக்கு பகைவனுமில்லை, நண்பனுமில்லை. என்னை அன்புடன் வணங்குவோர் உள்ளத்தில் நிறைந்திருப்பேன்' என்று கண்ணபிரான் பகவத் கீதையின் மூலம் வாழ்க்கையின் நெறிமுறையினை உலகுக்கு எடுத்துரைத்தார். ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்ததே இந்த உலகத்தில் தீமைகளை ஒழிப்பதற்காக என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடும் ஒவ்வொருவரும் அறத்தைப் போற்றி, தீமைகளை முறியடிக்க வேண்டும் என்று உறுதியேற்க வேண்டும். 'அறம் பிறழ்கின்றபோது நான் இவ்வுலகில் அவதரிப்பேன்' என்ற கண்ணபிரானின் போதனைக்கேற்ப, அறத்தை வளர்ப்பதே நமது கடமை என்ற உயரிய குறிக்கோளுடன் அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும்.</p><p>ஸ்ரீகிருஷ்ண பகவான் அவதரித்த இந்த இனிய திருநாளில், மக்கள் வாசலில் இருந்து வீட்டின் பூஜை அறை வரை அரிசி மாவு கரைசலால் குழந்தையின் பாதங்களை பதித்து, ஸ்ரீகிருஷ்ண பகவானே தங்கள் இல்லத்திற்கு வந்ததாக பாவித்து போற்றி வணங்கி மகிழ்வார்கள். இந்த இனிய நாளில் நாடெங்கும் அன்பு, அமைதி, மகிழ்ச்சி பெருக வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினைத் தெரிவித்து, மீண்டும் ஒருமுறை ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து: 2 பேர் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bus-crashes-into-lorry-on-chennai-trichy-highway-horrific-accident-2-killed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bus-crashes-into-lorry-on-chennai-trichy-highway-horrific-accident-2-killed#comments</comments><guid isPermaLink="false">1b50cb7f-6d75-4d27-ae7a-f03af84a6ddc</guid><pubDate>Thu, 03 Sep 2026 06:13:20 +0000</pubDate><atom:updated>2026-09-03T06:13:20.527Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,Chennai,சென்னை,Omni Bus,Perambalur,பெரம்பலூர்,ஆம்னி பேருந்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/7w4ezgbs/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விபத்து]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/7w4ezgbs/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பெரம்பலூர்,</p><p>சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.</p><p>முன்னதாக இன்று காலையில் சென்னையிலிருந்து மதுரை நோக்கி ஆம்னி பேருந்து ஒன்று சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து திண்டிவனத்திலிருந்து புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. நான்கு சாலை மேம்பாலத்தில் உள்ள மின்சார வாரிய (EB) அலுவலகம் அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>இந்த விபத்தில் திருப்பத்தூர் மாவட்டம், சிங்கம்புணரியைச் சேர்ந்த பொன் பாலதுரை (52 வயது) மற்றும் திருவள்ளூர் மாவட்டம், மணலியைச் சேர்ந்த திருநாவுக்கரசு (32 வயது) ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><p>பேருந்து ஓட்டுநர் மற்றும் ஒரு பெண் பயணி உட்பட ஆறு பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கோவில் அறிவிப்புப் பலகைகளில் இந்தி: தமிழக அரசு துணைபோகிறதா? - வேல்முருகன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/hindi-on-temple-notice-boards-is-the-tamil-nadu-government-supporting-it-velmurugan-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/hindi-on-temple-notice-boards-is-the-tamil-nadu-government-supporting-it-velmurugan-condemns#comments</comments><guid isPermaLink="false">f2b1a430-d8a4-4f48-a56e-5634c94fde85</guid><pubDate>Thu, 03 Sep 2026 06:07:02 +0000</pubDate><atom:updated>2026-09-03T06:07:02.298Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Government,சென்னை,Temple,Velmurugan,வேல்முருகன்,தமிழக வாழ்வுரிமை கட்சி,இந்தி,Hindi,கோவில்temple,அறிவிப்பு பலகைகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/xm80ypsm/300.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/xm80ypsm/300.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அறிவிப்புப் பலகைகளில், தமிழ், ஆங்கிலத்துடன் இந்தி மொழியும் இடம்பெற்றிருப்பது கண்டனத்திற்குரியது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். </p><h2>அறிவிப்பு் பலகைகள்</h2><p>இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் செல்போன் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்கள் தங்களது செல்போன்களை ஒப்படைக்கும் பாதுகாப்பு இடங்களில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகைகளில், தமிழ், ஆங்கிலத்துடன் இந்தி மொழியும் இடம்பெற்றிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.</p><h2>தமிழ் வெறும் ஒரு மொழியல்ல</h2><p>தமிழ்நாடு தொடர்ந்து கடைப்பிடித்து வரும் தமிழ் ஆங்கில இருமொழிக் கொள்கைக்கு மாறாக, தமிழ்நாடு அரசின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் இயங்கும் திருக்கோவில்களில் இந்திக்கு இடமளிக்க வேண்டிய அவசியம் என்ன என்பதை தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்த வேண்டும்.</p><p>தமிழ் வெறும் ஒரு மொழியல்ல. ஆயிரமாயிரம் ஆண்டுகளைக் கடந்து வாழும் ஒரு பேரினத்தின் பண்பாட்டு அடையாளம். பண்பாடு, கலை, இலக்கியம், இலக்கணம், அறிவு, வாழ்வியல் என உலகின் மிகத் தொன்மையான மொழிகளில் தனிச்சிறப்புடன் திகழ்கிறது தமிழ்.</p><p>உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு தாய்மொழி இருக்கிறது. உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாகத் தமிழைப் போற்றும் பெருமிதம் தமிழுக்கு உண்டு. அத்தகைய பெருமைமிக்க மொழி பிறந்த மண்ணில், அரசின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் அறிவிப்புப் பலகைகளில் தமிழுக்கு இணையாக இந்தி கொண்டுவரப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.</p><h2>மொழிப்போர் தியாகிகள்</h2><p>இந்தித் திணிப்புக்கு எதிரான மொழிப்போராட்டங்களில் தாளமுத்து, நடராசன், கீழப்பழுவூர் சின்னசாமி உள்ளிட்ட எண்ணற்ற மொழிப்போர்த் தியாகிகள் தங்கள் இன்னுயிரை ஈந்துள்ளனர். அவர்களின் தியாகத்தால் பாதுகாக்கப்பட்ட மொழி உரிமையை நாம் ஒருபோதும் அலட்சியப்படுத்த முடியாது.</p><p>எனவே, கோயில்களின் அறிவிப்புப் பலகைகளில் தமிழுக்கே முதலிடம், ஆங்கிலத்திற்கு இரண்டாவது இடம் என்ற நடைமுறை உறுதியாகப் பின்பற்றப்பட வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் இடம்பெறும் பெயர்ப்பலகைகளில் தமிழ் ஆங்கிலம் 5:3 என்ற விகிதத்திலும், பிற மொழிகள் இடம்பெற்றால் தமிழ் ஆங்கிலம் பிறமொழி 5:3:2 என்ற விகிதத்திலும் அமைக்க வேண்டும் என்ற நடைமுறை ஏற்கனவே பெயர்ப்பலகைகளுக்கான விதிகளில் உள்ளது.</p><p>ஆகவே, இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள அனைத்துத் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">கோவில்களிலும் </a>வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகைகளை உடனடியாக ஆய்வு செய்து, தமிழுக்கு உரிய முதன்மை இல்லாத பலகைகள், தமிழினைச் சிறிய எழுத்தில் காட்டும் பலகைகள், தேவையற்ற வகையில் இந்திக்கு முன்னுரிமை அளிக்கும் பலகைகள் அனைத்தையும் உடனடியாக அகற்றி மாற்ற வேண்டும்.</p><p>அதேபோன்று, தமிழ்நாடு முழுவதும் தமிழே இல்லாமல் பிறமொழிகளில் மட்டும் பெயர்ப்பலகைகள் வைத்துள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனைத் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் தீவிரமாகக் கண்காணித்து, விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழை மேடைகளில் புகழ்வது மட்டும் போதாது. தமிழ்நாட்டின் நிர்வாக நடைமுறைகளில் தமிழுக்கு முதலிடம் வழங்கப்பட வேண்டும்.</p><h2>வலியுறுத்தல்</h2><p>மொழிப்போர்த் தியாகிகளின் தியாகத்தையும், தமிழின் தொன்மையையும், பண்பாட்டுப் பெருமையையும், கலை இலக்கிய வளத்தையும் கருத்தில் கொண்டு, திருக்கோயில்கள் உள்ளிட்ட அரசின் அனைத்து நிர்வாகத் தளங்களிலும் தமிழுக்கு உரிய முதன்மையை நிலைநாட்டவும், இந்தி இடம்பெற்றுள்ள தேவையற்ற அறிவிப்புப் பலகைகளை அகற்றவும் தமிழ்நாடு அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. வேட்பாளர் வெற்றி பெற்றதை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-filed-by-mk-stalin-challenging-the-victory-of-the-tvk-candidate-dismissed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-filed-by-mk-stalin-challenging-the-victory-of-the-tvk-candidate-dismissed#comments</comments><guid isPermaLink="false">547205cb-dc6b-415c-89a2-8ad29c485936</guid><pubDate>Thu, 03 Sep 2026 06:05:37 +0000</pubDate><atom:updated>2026-09-03T06:05:37.093Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Tamilnadu,திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,M.K.Stalin,தமிழகம்,சென்னை ஐகோர்ட்டு,Chennai High Court,Kolathur,கொளத்தூர் தொகுதி,Kolathur Constituency,வி.எஸ்.பாபு,VS Babu</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/e3b4nq0z/koer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/e3b4nq0z/koer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>த.வெ.க. வேட்பாளர் வி.எஸ்.பாபுவின் வெற்றியை எதிர்த்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. </p><h2>45 நாட்களுக்குள்</h2><p>தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான <a href="https://www.dailythanthi.com/topic/mkstalin">மு.க.ஸ்டாலின்</a> போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த தொகுதியில் த.வெ.க. சார்பில் வி.எஸ்.பாபு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.</p><p>பொதுவாக தேர்தலில் வெற்றிப் பெற்றவர்களை எதிர்த்து தேர்தல் வழக்கு, தேர்தல் முடிவு வெளியாகி 45 நாட்களுக்குள் தாக்கல் செய்யவேண்டும். ஆனால், வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் 45 நாட்களுக்குள் தேர்தல் வழக்கு தொடரவில்லை.</p><h2>வாக்கு எந்திரங்களில் முறைகேடு</h2><p>இந்த சூழலில், கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்கு எந்திரங்களில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கை <a href="https://www.dailythanthi.com/topic/mkstalin">மு.க.ஸ்டாலின்</a> தொடர்ந்தார். 45 நாட்களுக்குள் வழக்கு தாக்கல் செய்யாததற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.</p><p>இந்த வழக்கை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் விசாரித்து தீர்ப்புக்காக தள்ளிவைத்தனர். இந்தநிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று (வியாழக்கிழமை) காலை நீதிபதிகள் பிறப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. </p><h2>வழக்கு தள்ளுபடி</h2><p>இந்நிலையில் கொளத்தூர் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து <a href="https://www.dailythanthi.com/topic/mkstalin">தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்</a> தொடர்ந்த வழக்கினை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் அமர்வு இன்று (03.09.2026) உத்தரவிட்டது.</p><p>இதன்படி கொளத்தூர் தொகுதியில் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வி வி பேடுகளை சரி பார்க்க உத்தரவிட வேண்டும் என்ற மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>“தூய்மை தேவதைகள்” எனப் புகழாரம் சூட்டினால் மட்டும் வாழ்வாதாரம் மேம்படுமா?  - டிடிவி தினகரன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-livelihoods-improve-merely-by-bestowing-the-accolade-of-angels-of-cleanliness-ttv-dhinakaran-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-livelihoods-improve-merely-by-bestowing-the-accolade-of-angels-of-cleanliness-ttv-dhinakaran-asks#comments</comments><guid isPermaLink="false">95210b52-2c81-4088-8bb3-53d414e21847</guid><pubDate>Thu, 03 Sep 2026 06:01:11 +0000</pubDate><atom:updated>2026-09-03T06:01:11.696Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,AMMK,அமமுக,தூய்மைப் பணியாளர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/8i0otcl9/ttv.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/8i0otcl9/ttv.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>15 நாட்களுக்கும் மேலாகப் போராடும் தூய்மைப் பணியாளர்கள்; Reels-க்காக “தூய்மை தேவதைகள்” எனப் புகழாரம் சூட்டினால் மட்டும் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுமா? தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல், அவர்களைத் தொடர்ந்து போராட விடுவது எந்த விதத்தில் நியாயம்? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்</h2><p>பணிநிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 15 நாட்களையும் கடந்து தொடர்ந்து நடைபெற்று வருவதால், மாநகரின் தூய்மைப் பணிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>ஐந்து ஆண்டுகள் மற்றும் அதற்கும் மேலாகப் பணியாற்றி வரும் ஒப்பந்தப் பணியாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என வாக்குறுதியளித்த தவெக, ஆட்சிக்கு வந்து நூறு நாட்களைக் கடந்தும், தூய்மைப் பணியாளர்களின் அடிப்படைக் கோரிக்கையான பணிநிரந்தரம் குறித்து விவாதிக்க மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது.</p><h2>நடவடிக்கை எடுக்காத அரசு</h2><p>15 நாட்களுக்கும் மேலாக நீடித்துவரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தைப் பேச்சுவார்த்தையின் மூலம் முடிவுக்குக் கொண்டுவர எந்தவித நடவடிக்கையும் எடுக்காத தவெக அரசு, அவர்கள் போராடுவதற்கு ரிப்பன் மாளிகை வளாகத்தில் இடம் ஒதுக்கிக் கொடுத்ததையே பெருமையாகப் பேசுவது வெட்கக்கேடானது.</p><p>ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, பணி நிரந்தரம் கோரி போராடிய தூய்மைப் பணியாளர்களை தனது பனையூர் இல்லத்திற்கு அழைத்து அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவதாக சொன்ன முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தற்போது சட்டமன்றத்திற்கு அருகேயே உள்ள ரிப்பன் மாளிகை வளாகத்தில் போராடுபவர்களை சந்திப்பதற்கு என்ன தயக்கம்?</p><h2>குறைகளைக் கேட்டறிவதில் என்ன தயக்கம்?</h2><p>சென்னை மாநகரத்தைத் தூய்மையாக வைத்திருப்பதிலும், பொதுமக்களின் சுகாதாரத்தைப் பேணிக்காப்பதிலும் அளப்பரிய பங்களிப்பை வழங்கி வரும் முன்களப் பணியாளர்களான தூய்மைப் பணியாளர்களை, குறைந்தபட்சம் அமைச்சர்களாவது நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிவதில் என்ன தயக்கம்?</p><p>எனவே, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை </a>ரிப்பன் மாளிகை வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதோடு, தவெக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, ஐந்து ஆண்டுகள் மற்றும் அதற்கும் மேலாகப் பணியாற்றி வரும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்திட வேண்டும் எனவும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருச்செந்தூர் கோவிலில் மீண்டும் ஒலிக்கப்போகும் வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய மணி!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-bell-donated-by-veera-pandiya-kattabomman-will-ring-again-at-the-tiruchendur-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-bell-donated-by-veera-pandiya-kattabomman-will-ring-again-at-the-tiruchendur-temple#comments</comments><guid isPermaLink="false">c80f2721-e5d2-4c70-ad6d-d0a839f76e68</guid><pubDate>Thu, 03 Sep 2026 05:55:44 +0000</pubDate><atom:updated>2026-09-03T05:55:44.357Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்செந்தூர்,சுப்பிரமணிய சுவாமி கோவில்,Tiruchendur Subramania Swamy Temple,Bell,மணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/urj5a3o0/99.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/urj5a3o0/99.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>ஆன்மிகம் (Devotional)</category><content:encoded><![CDATA[ <p>திருச்செந்தூர், </p><p>திருச்செந்தூர் கோவிலில், 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய மணி மீண்டும் ஒலிக்கப் போகிறது. </p><h2>வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய மணி </h2><p>தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூரில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலில், 137 அடி உயரம், 9 நிலைகள் கொண்ட ராஜகோபுரம், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 7-ந் தேதி நடைபெற்ற கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது. </p><p>கோபுரத்தின் ஒரு சிறப்பு என்னவென்றால், அதன் 9-வது நிலையில் கி.பி. 18-ம் நூற்றாண்டில் பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய பித்தளையால் ஆன பிரமாண்ட மணி பொறுத்தப்பட்டுள்ளது. </p><h2>உச்சிக்கால பூஜையில் ஒலித்தது</h2><p>சிறந்த முருக பக்தரான வீரபாண்டிய கட்டபொம்மனால் கொடுக்கப்பட்ட இந்த மணி, அவர் வாழ்ந்த காலக்கட்டத்தில் (1760-1799) மதியம் 12 மணிக்கு நடைபெறும் உச்சிக்கால பூஜையின்போது ஒலிக்கப்படும். ஆனால், திருச்செந்தூரில் ஒலிக்கும் இந்த மணியின் ஓசை 58 கி.மீ. தொலைவில் உள்ள பாஞ்சாலங்குறிச்சி வரை கேட்பதில்லை. </p><p>திருச்செந்தூர் கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு உச்சிக்கால பூஜை நடைபெற்ற பிறகே, பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன், சுப்பிரமணிய சுவாமி, வீரசக்கதேவி ஆகியோரை பூஜை செய்து வணங்கிவிட்டு மதிய உணவு சாப்பிட நினைத்தாராம். </p><h2>40 இடங்களில் மணி மண்டபம் அமைப்பு</h2><p>அதனால், திருச்செந்தூர் முதல் பாஞ்சாலங்குறிச்சி வரை வரிசையாக 40 இடங்களில் மணி மண்டபங்களை அமைத்து பிரமாண்ட மணிகளை தொங்கவிடச் செய்தார். சரியாக மதியம் 12 மணிக்கு திருச்செந்தூர் கோவிலில் உச்சிக்கால பூஜை தொடங்கும்போது, அங்குள்ள மணி ஒலிக்கப்படும். </p><p>அந்த ஒலி திருச்செந்தூர் அருகே உள்ள மணி மண்டபத்துக்கு கேட்கும். உடனே, அங்குள்ள பணியாளர், மணி மண்டபத்தில் உள்ள மணியை ஒலிக்கச் செய்வார். இப்படியே, வரிசையாக 39 இடங்களில் உள்ள மணி மண்டபங்களில் மணிகள் ஒலிக்கப்படும். நிறைவாக இந்த ஒலி பாஞ்சாலங்குறிச்சி வரை எட்டும். </p><h2>பக்தர்கள் கோரிக்கை </h2><p>மணி ஓசையை கேட்ட பிறகே, வீரபாண்டிய கட்டப்பொம்மன், சுப்பிரமணிய சுவாமி, வீரசக்கதேவி ஆகியோருக்கு பூஜை செய்துவிட்டு மதிய உணவு அருந்துவார். அந்த வகையில் சிறப்பு பெற்ற, 200 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட மணி பல ஆண்டுகள் ஒலிக்காமல் இருந்துவந்தது. </p><p>பக்தர்களுக்கு இந்த மணி குறித்த வரலாறு தெரியத் தொடங்கிய பின்னர், வீரபாண்டிய கட்டபொம்மனின் ஆசைக்கு இணைக்க உச்சிக்கால பூஜையின்போது மணியை ஒலிக்கச் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.  </p><h2>ஆவணி திருவிழாவில் மணி ஒலிக்குமா? </h2><p>பக்தர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு (2025), வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய ராட்சத பித்தளை மணி புதுப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், ஆவணித் திருவிழாவை முன்னிட்டு, உச்சிக்கால (மதியம் 12 மணி) பூஜையின்போது இந்த ராட்சத மணியை ஒலிக்கச் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அந்த மணியில் உள்ள கயிற்றை 3 பணியாளர்கள் சேர்ந்து இழுத்து மணியை அசைத்தால்தான் ஒலியை எழுப்ப முடியும். அதற்கான சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. உச்சிக்கால பூஜை முடியும் வரை 5 நிமிடங்கள் இந்த மணி ஒலிக்கப்படும். </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">திருச்செந்தூர் </a>கோவிலில் விரைவில் வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய மணி ஒலிக்கப்பட உள்ள நிலையில், இந்த ஆவணி மாத திருவிழா காலத்திலேயே கோவில் மணி ஒலிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இனி அதற்கான நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை தான் எடுக்க வேண்டும். </p>]]></content:encoded></item><item><title>ஆந்திராவில் இருந்து சென்னைக்கு பைக்கில் கஞ்சா கடத்தல்; 3 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ganja-smuggled-from-andhra-to-chennai-by-bike-3-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ganja-smuggled-from-andhra-to-chennai-by-bike-3-arrested#comments</comments><guid isPermaLink="false">dedbaa82-aa7d-495e-b9d9-fc4032b1ea33</guid><pubDate>Thu, 03 Sep 2026 05:43:18 +0000</pubDate><atom:updated>2026-09-03T05:43:18.761Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,arrest,3 பேர் கைது,கஞ்சா கடத்தல்,police enquiry,ganja smuggled</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/luxlxgws/07.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ அருள்ராஜ், ராஜா, கார்த்திக்]]></media:title><media:description type="html"><![CDATA[ கஞ்சா கடத்திய 3 பேர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/luxlxgws/07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>ஆந்திர மாநிலத்திலிருந்து சென்னைக்கு பைக் மூலம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">கஞ்சா கடத்தி </a>வந்த3 பேரை தமிழக போலீசார் கைது செய்துள்ளனர்.</p><h2>ரகசிய தகவல் -வாகன சோதனை</h2><p>ஆந்திரா-தமிழக எல்லைப் பகுதியிலிருந்து சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளை இலக்காகக் கொண்டு, பைக்கில் பெரிய அளவில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், இன்று (வியாழக்கிழமை) சென்னை எல்லைகளில் உள்ள முக்கிய சோதனைச் சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.</p><h2>3 பேர் கைது</h2><p>சோதனையின் போது, சந்தேகத்திற்குரிய வகையில் பைக்கில் வந்த அருள்ராஜ், ராஜா, கார்த்திக் ஆகிய 3 நபர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்கள் வைத்திருந்த உடமைகளைச் சோதித்தபோது, 8 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கண்டறியப்பட்டன. இதையடுத்து, கஞ்சாவைக் கடத்தி வந்த 3 பேரையும் போலீசார் உடனடியாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட பைக், 2 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டன.</p><h2>தீவிர விசாரணை</h2><p>இந்த கடத்தலின் பின்னணியில் உள்ள முக்கிய நபர்கள் யார், சென்னையில் இந்த போதைப்பொருட்களை யாரிடம் விநியோகம் செய்ய திட்டமிட்டிருந்தார்கள் என்பது குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/one-person-killed-in-firecracker-factory-explosion-near-srivilliputhur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/one-person-killed-in-firecracker-factory-explosion-near-srivilliputhur#comments</comments><guid isPermaLink="false">98b244d7-ba55-44cd-9612-75af2656a37e</guid><pubDate>Thu, 03 Sep 2026 05:37:39 +0000</pubDate><atom:updated>2026-09-03T05:37:39.526Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Virudhunagar,விருதுநகர்,ஸ்ரீவில்லிபுத்தூர்,Srivilliputhur,வெடி விபத்து,பட்டாசு ஆலை,firecracker factory,Firecracker Factory Accident</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/m4nby0xm/patta.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/m4nby0xm/patta.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர், </p><p>ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p>விருதுநகர் மாவட்டம் <a href="https://www.dailythanthi.com/topic/srivilliputhur">ஸ்ரீவில்லிபுத்தூர் </a>அருகே பட்டாசு ஆலையில் மருந்து கலவை செய்யும்போது ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி ஆண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. </p><p>மேலும் ஒருவர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p>இந்நிலையில் பட்டாசு ஆலையில் பலர் சிக்கி இருக்க வாய்ப்புள்ளதால் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம்: 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-1200-crore-new-secretariat-tn-cm-vijay-announces-under-rule-110</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-1200-crore-new-secretariat-tn-cm-vijay-announces-under-rule-110#comments</comments><guid isPermaLink="false">93e027fa-4613-4dc6-9351-3d5ade1699b3</guid><pubDate>Thu, 03 Sep 2026 05:28:33 +0000</pubDate><atom:updated>2026-09-03T05:30:15.968Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN Assembly,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,புதிய தலைமைச் செயலகம்,ஒலிம்பிக் நகரம்,Olympic City</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/t3vefrmd/Untitled-7-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/t3vefrmd/Untitled-7-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும் என்று சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.</p><p>தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று காவல்துறை-தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ், முதல்-அமைச்சர் விஜய் பல்வேறு திட்டங்களை அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:-</p><h2>தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்</h2><p>தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் (Tamil Nadu Olympic City) அமைக்கப்படும்.</p><p>உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு அரங்கங்கள், அதிநவீன விளையாட்டு உபகரணங்கள், உயர்தர செயல்திறன் பயிற்சி மையம் (High Performance Training Centre), அறிவியல் மற்றும் விளையாட்டு மருத்துவ மையங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான தங்குமிட வசதிகள் உள்ளிட்ட நவீன உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்படும்.</p><p>தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் பிற சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் அதிக எண்ணிக்கையிலான பதக்கங்களை வெல்லவும், ஒலிம்பிக் பதக்கங்களை வெல்லக்கூடிய திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கும் உலகத்தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த விளையாட்டு மையமாகத் திகழும்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/3zwyp47s/Untitled-7.jpg" /></figure><h2>மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்</h2><p>தமிழ்நாட்டில் ஒரு புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் (Motor Sports City) உருவாக்கப்படும். இந்த நகரத்தில் சர்வதேச தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் பந்தயத்தடம், அதற்கான நவீன உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பயிற்சி வசதிகள் ஏற்படுத்தப்படும். Formula 1, Formula 2, Formula 3, Formula 4 போன்ற சர்வதேச தரத்திலான போட்டிகள் நடத்துவதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.</p><p>இளைஞர்களின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் திறமைகளைக் கண்டறிந்து, பயிற்சி மற்றும் போட்டி வாய்ப்புகள் வழங்கி, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான வீரர்கள் உருவாக்கப்படுவார்கள். உலகத்தரம் வாய்ந்த மோட்டார் வாகன கார் பந்தய அரங்குகளை அமைப்பதன்மூலம், சுற்றுலா, சிறப்பு வாகன உற்பத்தித் தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம் மேம்பட வாய்ப்புகள் உள்ளது.</p><h2>புதிய தலைமைச் செயலகம்</h2><p>சென்னையில் நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும். தீயணைப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகள் சென்றுவர வசதிகள் மற்றும் பசுமைக் கட்டட தரநிலைகளுக்கு உட்பட்டு நவீன நிர்வாக வளாகம் உருவாக்கப்படும். போதுமான வாகன நிறுத்துமிடங்கள், மாநாட்டு அரங்குகள், பொதுமக்கள் சேவை மையங்கள் மற்றும் அலுவலர்களுக்கான நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும். அனைத்து அரசுத் துறைகளையும் ஒரே நிர்வாக வளாகத்தில் கொண்டுவந்து ஒருங்கிணைக்கப்படும்.</p>]]></content:encoded></item><item><title>கிருஷ்ண ஜெயந்தி திருநாள் - அன்புமணி ராமதாஸ் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/krishna-jayanti-greetings-from-anbumani-ramdas</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/krishna-jayanti-greetings-from-anbumani-ramdas#comments</comments><guid isPermaLink="false">7fa99ba7-fbfd-49fa-81a9-01cd53c58f8d</guid><pubDate>Thu, 03 Sep 2026 05:14:47 +0000</pubDate><atom:updated>2026-09-03T05:14:47.814Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Krishna Jayanti Festival,கிருஷ்ண ஜெயந்தி,திருநாள்,Anbumani Ramdas</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/9t3zgy46/98.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/9t3zgy46/98.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாடு முழுவதும் கிருஷ்ண ஜெய்ந்தி விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>அநீதியை ஒழிப்பதற்காகவும், நீதியை நிலை நிறுத்துவதற்காகவும்  கிருஷ்ண பரமாத்மா பூமியில் அவதாரம் எடுத்த நாளான கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2>கிருஷ்ண ஜெயந்தி திருநாள்</h2><p>அநீதி எங்கு தலைதூக்கினாலும் அதை அழிக்க கிருஷ்ண பகவான் அவதாரம் எடுப்பார் என்பார்கள்.  இப்போது தமிழ்நாட்டில் எங்கு அநீதி நிகழ்ந்தாலும்  அதற்கு எதிராக போராட நாமும் கிருஷ்ண பகவானாக  உருவெடுக்க வேண்டும். அது தான் நமது முதல் கடமையாக இருக்க வேண்டும்.</p><p>தமிழ்நாட்டில் அமைதி, வளம், மகிழ்ச்சி, சகோதரத்துவம், அன்பு, அறம் உள்ளிட்ட அனைத்தும் செழிக்க வேண்டும் என்று  கூறி, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை <a href="https://www.dailythanthi.com/topic/krishna-jayanti">கிருஷ்ண ஜெயந்தி </a>திருநாள் வாழ்த்துகளைத்  தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திண்டுக்கல்லில் 50 பவுன் நகைகள் திருட்டு: ஒருவர் கைது; முழு நகைகளையும் மீட்ட போலீசார்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/50-sovereigns-of-gold-jewelry-stolen-in-dindigul-one-person-arrested-police-recover-the-entire-haul</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/50-sovereigns-of-gold-jewelry-stolen-in-dindigul-one-person-arrested-police-recover-the-entire-haul#comments</comments><guid isPermaLink="false">d2ca8dd4-971a-4299-957e-65bdb1acda69</guid><pubDate>Thu, 03 Sep 2026 05:06:35 +0000</pubDate><atom:updated>2026-09-03T05:06:35.776Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Dindigul,திண்டுக்கல்,நகை திருட்டு,gold jewelery,Dindigul district,திண்டுக்கல் மாவட்டம்,நகைகள் திருட்டு,திண்டுக்கல் செய்திகள்,Dindigul news</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/owfcouxh/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/owfcouxh/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><p>திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலையச் சரகத்துக்குட்பட்ட இந்திராநகர் முருகபவனத்தில் வசித்து வரும் செல்வராஜ் மகன் அருண்குமார், கடந்த 30.08.2026 அன்று உசிலம்பட்டியில் நடைபெறும் தனது உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு மனைவி மற்றும் குழந்தையுடன் செல்வதற்காக தயாரானார்.</p><p>அப்போது, மனைவி காரில் ஏறியதைத் தொடர்ந்து, குழந்தையை காருக்குள் உட்கார வைக்கும் போது தனது கையில் வைத்திருந்த 50 பவுன் தங்க நகைகள் இருந்த அட்டை பெட்டியை காரின் மேற்கூரையில் வைத்துவிட்டு மறந்துள்ளார். பின்னர் காரில் ஏறி பயணம் செய்துள்ளனர்.</p><h2>நகைகள் மாயம்</h2><p>கார் செம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது, நகைகள் இருந்த அட்டை பெட்டி திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து அருண்குமார் அளித்த புகாரின் பேரில், திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.</p><h2>சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் விசாரணை</h2><p>திருடு போன நகைகளை கண்டுபிடிக்கும் பொருட்டு, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவின்பேரில், திண்டுக்கல் நகர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் கார்த்திக் மேற்பார்வையில், திண்டுக்கல் நகர் மேற்கு காவல் ஆய்வாளர் மீனாட்சி மற்றும் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் ரெய்கானா தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.</p><p>சம்பவ இடத்திலிருந்து அருண்குமார் சென்ற வழித்தடத்தில் உள்ள அனைத்து சி.சி.டி.வி. பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.</p><h2>ஒருவர் கைது</h2><p>சி.சி.டி.வி. பதிவுகளின் அடிப்படையில், பொன்மாந்துரை புதுப்பட்டி தெற்குத்தெருவைச் சேர்ந்த சவரியப்பன் மகன் குழந்தைராஜ் (54) என்பவர் 50 பவுன் தங்க நகைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.</p><h2>வங்கியில் 30 பவுன் நகைகள் அடகு</h2><p>விசாரணையில், திருடிய நகைகளில் 30 பவுன் தங்க நகைகளை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">திண்டுக்கல்லில் </a>உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்ததாக குழந்தைராஜ் ஒப்புக்கொண்டார்.</p><h2>50 பவுன் நகைகளும் மீட்பு</h2><p>வாக்குமூலத்தின் பேரில், திருடு போன 50 பவுன் தங்க நகைகளையும் தனிப்படையினர் மீட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்களிடம் தமிழ், இனப்பற்றை வளர்த்தவர் லக்குவனார் - சீமான் புகழாரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/lakkuvanar-who-instilled-tamil-and-ethnic-love-in-students-seeman-pugazharam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/lakkuvanar-who-instilled-tamil-and-ethnic-love-in-students-seeman-pugazharam#comments</comments><guid isPermaLink="false">c0a5af22-565f-426d-9b64-be83f7dc0c9d</guid><pubDate>Thu, 03 Sep 2026 04:53:39 +0000</pubDate><atom:updated>2026-09-03T04:53:39.209Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,Seeman,நாம் தமிழர் கட்சி,Nam Tamilar party</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/8enjuam4/97.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சீமான்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/8enjuam4/97.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பேராசிரியர் சி.லக்குவனாரின் பிறந்தநாளையொட்டி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் <a href="https://www.dailythanthi.com/topic/seeman">சீமான்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- </p><p>தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து முனைவர் பட்டம் பெற்ற முத்தமிழ்ப் பேரறிஞர்! அதுநாள்வரை தமிழ்நாடெங்கும் ‘மாணவர்கள் ஆங்கிலத்தில் கூறிவந்த வருகைப்பதிவை அன்னைத்தமிழில் 'உளேன் ஐயா!' என்று உரக்கச் சொல்லவைத்த பெருமகன்! சங்கப்பாடல்களை முதன்முதலாக சிறுகதை, நாடகங்கள் வடிவில் உலகத்தமிழர் உள்ளங்களில் சேர்ப்பித்த இதழியல் முன்னோடி!</p><h2>புரட்சியாளர்</h2><p>தான் வகுப்பெடுத்த கல்லூரிகளில் எல்லாம் மாணவர்களுக்கு இனப்பற்றும், மொழிப்பற்றும் ஊட்டி தன்னந்தனியனாக ஒரு தலைமுறையையே மானத்தமிழர்களாக வளர்த்தெடுத்த பெருந்தகை! மாணவர்களிடம் தாய்த்தமிழ்ப் பற்றை ஊட்டுகிறார் என்ற காரணத்திற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு பணியிடம் மாற்றி அலைக்கழித்தது அன்றைய காங்கிரசு அரசு! ஆனால், அதையே வாய்ப்பாக்கிக்கொண்டு, செல்லும் இடமெல்லாம் இந்தி திணிப்புக்கு எதிராக இளந்தமிழ் தலைமுறையினரிடம் தமிழ்ப்நெருப்பைப் பற்ற வைத்த புரட்சியாளர்!</p><h2>விழியென காப்போம்</h2><p>நா.காமராசன், க.காளிமுத்து, கவிஞர் இன்குலாப், பா.செயப்பிரகாசம் என 1965ஆம் ஆண்டு நிகழ்ந்த மூன்றாம் மொழிப்போரின் முதன்மை தளபதிகளாக முன்னின்றவர்கள் பலரும் ஐயா லக்குவனார் மூட்டிய புரட்சித்தீயில் பூத்த அவரின் மாணவச்செல்வங்களே! அன்னைத்தமிழைப் பயிற்சி மொழியாக்க மறுத்து ஆங்கிலத்திற்குத் துணைநின்ற திமுக கல்வி அமைச்சரைக் கண்டித்து, அன்றைய முதல்-அமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களால் வழங்கப்பட்ட மாநிலக்கல்லூரி தலைமைத் தமிழ்ப்பேராசிரியர் பணியினை, தன்மானத்துடன் தூக்கி எறிந்த தமிழ்மறவர் நம்முடைய ஐயா லக்குவனார் அவர்கள்! மொழிப்போரை முன்னின்று நடத்தியதற்காகச் சிறையேகிய ஈகி, பெரும்புலவர் ஐயா லக்குவனார் அவர்களின் புரட்சிகரப் பெருவாழ்வினை போற்றுகின்ற இந்நாளில் அவர் கற்பித்த வழிநின்று ‘தமிழ் மொழியையும், மண்ணையும் விழியென காப்போம்’ என உறுதியேற்போம்!‘மொழி காத்த தமிழ் மறவர்’  ஐயா லக்குவனார் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கோவில்களில் ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுவது ஏன்? - அமைச்சர் ரமேஷ் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-is-a-5-fee-charged-at-temples-minister-ramesh-explains</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-is-a-5-fee-charged-at-temples-minister-ramesh-explains#comments</comments><guid isPermaLink="false">e0796ddb-c10f-480b-b4e4-5b7f8c6d87dc</guid><pubDate>Thu, 03 Sep 2026 04:46:44 +0000</pubDate><atom:updated>2026-09-03T04:46:44.336Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவில்கள்,இந்து சமய அறநிலையத்துறை,ரமேஷ்,Ramesh,Minister ramesh,அமைச்சர் ரமேஷ்,அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்,செல்போனுக்கு தடை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/8m0rehdu/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ரமேஷ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/8m0rehdu/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டில் உள்ள 52 முக்கிய கோவில்களில் செல்போன் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டு, அதனைப் பாதுகாப்பாக லாக்கரில் வைக்க ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.</p><h2>புதிய நடைமுறை இல்லை</h2><p>இந்த நிலையில், கோவில்களில் ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுவது ஏன்? என்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் விளக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-</p><p>இது புதிய நடைமுறை கிடையாது. மதுரை ஐகோர்ட்டில் திருச்செந்தூர் கோவிலில் செல்போன்கள் கொண்டு செல்லத் தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. 2022-ம் ஆண்டு டிசம்பரில் தமிழ்நாடு முழுக்க உள்ள கோவில்களில் செல்போன்கள் கொண்டு செல்லத் தடை விதிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><p>இதனையடுத்து அதிக கோவில்களில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதியளிக்கப்படவில்லை. அப்போதிலிருந்து செல்போன் கவுண்டர்கள் அமைக்கப்பட்டு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்பட்டது. கோவில்களில் செல்போன்கள் தடை என்பது முன்பே இருந்தது. அதற்கான கவுண்டர்கள் 52 முக்கிய கோவில்களில் இல்லாததால் அதனை கொண்டு வந்துள்ளோம். </p><h2>கட்டுப்பாடு பொருந்தாதவர்கள் யார்?</h2><p>மக்கள் வெகுநேரம் வரிசையில் நிற்கவைக்கும் சூழல் உருவாகிவிடக் கூடாது. மக்களுக்கு இது பாரமாக மாறிவிடக் கூடாது என்பதைப் பார்த்துவிட்டு, அதற்குத் தகுந்தாற்போல் முடிவுகளை எடுங்கள் என்று கோவில்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். கர்ப்பிணிகள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன் கட்டுப்பாடு பொருந்தாது.</p><p>இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கோவில்கள் இருக்கக் கூடாது என நினைப்பவர்களே தவறாக தகவல்களைப் பரப்புகின்றனர். கோவில்களின் நிதிநிலையை கருத்தில் கொண்டு ரூ.5 வாங்கலாமா, வேண்டாமா என கோவில்களே முடிவெடுக்கலாம் என அறிவுறுத்தியுள்ளோம். கோவில் அரசியல் செய்வதற்கான இடம் கிடையாது.</p><p>பக்தர்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுப்பதற்காகத்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்களுக்குள் செல்லும்போது தமிழ் கல்வெட்டுகள், எழுத்துகள் நிறைய இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இதனை பக்தர்கள் பார்க்க வேண்டும். செல்போன் கொண்டு செல்வதால் இது தடைபடும் என்பதால் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தினோம்.</p><h2>கூட்டம் அதிகம் கூடும்போது..</h2><p>பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள கோவில்களிலும் செல்போன்கள் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. இதனை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். இதனால் பக்தர்களுக்கு சிரமங்கள் இருந்தால் நிச்சயமாக மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.</p><p>மேலும், கோவில்களில் கூட்டம் அதிகம் கூடும் நாட்களில் செல்போன்களை வாங்க வேண்டாம் எனவும் கோவில்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திருச்சி மாவட்டத்தில் அதிகரிக்கும் இளம் வயது கர்ப்பம்... பாலியல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rising-teen-pregnancies-in-tiruchirappalli-district-will-sex-education-be-prioritized</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rising-teen-pregnancies-in-tiruchirappalli-district-will-sex-education-be-prioritized#comments</comments><guid isPermaLink="false">34f7eab3-eb41-4de2-b0e5-c59b2de76ae1</guid><pubDate>Thu, 03 Sep 2026 04:46:37 +0000</pubDate><atom:updated>2026-09-03T04:46:37.787Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்சி,Trichy,Awareness,இளம் வயது கர்ப்பம்,பாலியல் விழிப்புணர்வு,Teen Pregnancy</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/p387h7d8/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ இளம் வயது கர்ப்பம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/p387h7d8/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>இளம் வயது கர்ப்பம் என்பது உலகம் முழுவதும் உள்ள மக்களை பாதிக்கும் ஒரு சமூக பிரச்சினையாகும். இது தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியத்தில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்துகிறது. குறிப்பாக சுகாதார பராமரிப்பு அவ்வளவாக மேம்பட்டிராத வளர்ச்சியடையாத நாடுகளில் இந்த பிரச்சினை அதிகமாக உள்ளது.</p><h2>பொது சுகாதார பிரச்சினை</h2><p>இந்தியாவில் பெண் திருமணத்திற்கான சட்டப்பூர்வ குறைந்தபட்ச வயது 18 ஆக உயர்த்தப்பட்ட போதிலும், வளர் இளம் வயது கர்ப்பங்கள் இந்தியாவில் ஒரு குறிப்பிடத்தக்க பொது சுகாதார பிரச்சினையாக உள்ளது. வளர் இளம் வயது சிறுமிகளின் கர்ப்பம் மற்றும் பிரசவம் அதிகரித்துள்ளதாக, சமீபத்தில் வெளியான அறிக்கை திடுக்கிட வைத்துள்ளது. குழந்தை திருமணம், திருமண வயதை எட்டும் முன்னரே காதல் உறவு போன்ற காரணங்களால் இளம் வயது கர்ப்பம் தரித்தல் மற்றும் பிரசவங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளன.</p><p>தேசிய குடும்ப சுகாதார ஆய்வு 6 (NFIIS-6) -ன் தரவுகளின்படி, இந்தியாவில் 15 முதல் 19 வயதுக்குட்பட்ட பெண்களில் 6.7 சதவீதம் பேர் ஏற்கனவே குழந்தைகளை பெற்றெடுக்க தொடங்கியுள்ளனர். இது தமிழகத்தில் 4.1 சதவீதமாகவும், திருச்சியில் 1 சதவீதமாகவும் இருக்கிறது. திருச்சி மாவட்டத்தில் தாய் இறப்பு மற்றும் சிசு இறப்பு போன்ற முக்கிய சுகாதாரக் குறியீடுகளில் முன்னேற்றம் காணப்பட்டாலும், வளர் இளம் வயது கர்ப்பங்கள் தொடர்ந்து கவலையளிக்கும் விஷயமாகவே உள்ளன.</p><h2>இளம்பெண்கள் பிரசவிப்பு</h2><p>திருச்சி மாவட்டத்தில் 2025-ம் ஆண்டு 479 வளர் இளம் பெண்கள் பிரசவித்துள்ளனர். 2026-ம் ஆண்டில் கடந்த ஆகஸ்ட் வரை மட்டும் 296 வளர் இளம் பெண்கள் பிரசவித்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல்கள் கூறுகின்றன. இளம்வயது கர்ப்பம், சுகாதார வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும் என்பதோடு, தாய்மார்கள் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளில் 50 சதவீதம் உயிரிழப்பு ஏற்படுகிறது.</p><p>திருச்சி மாவட்டத்தில் சராசரியாக தினமும் 3 முதல் 4 வளர் இளம் பெண்கள் கர்ப்பம் அடையும் சம்பவங்கள் பதிவாகி வருவதாகவும், ஒரு மாதத்திற்கு சுமார் 100 சம்பவங்கள் நடப்பதாகவும் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. 2024-25 நிதியாண்டில் மட்டும் 1,234 சம்பவங்கள் பதிவானது குறிப்பிடத்தக்கது.</p><h2>கல்லூரி, பள்ளியில் பிரசவம்</h2><p>சமயபுரம் அருகே கடந்த சில மாதங்களுக்கு முன் கல்லூரி கழிவறையில் மாணவி ஒருவர் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் நடந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருச்சியில் விடுதியில் தங்கி படிக்கும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமி பள்ளி வளாகத்திலேயே குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.</p><h2>விழிப்புணர்வு</h2><p>வளர் இளம் வயதில் குழந்தைகள் வயிற்றில் குழந்தையை சுமக்க முக்கிய காரணம், இளம் வயது திருமணம், பாலியல் வன்முறை, பெண்களுக்கு பாலியல் குறித்த விழிப்புணர்வு இல்லாதது போன்றவைதான். மேலும் குழந்தை திருமணத்தை தவிர, சமூக ஊடக தொடர்புகள் மூலம் உருவாகும் உறவுகளும் வளர் இளம் வயது கர்ப்பங்கள் அதிகரிப்பதற்கு பிரதான காரணம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். எனவே, பள்ளிகளிலும், பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, இளம் வயது பெண்கள் கர்ப்பம் அடைவதை தடுக்க வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>முதல் மனைவிக்கு தெரியாமல் சிறுமியுடன் திருமணம்: போலீஸ்காரருக்கு 10 ஆண்டுகள் சிறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/policeman-gets-10-years-in-prison-for-marrying-a-minor-girl-without-the-knowledge-of-his-first-wife</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/policeman-gets-10-years-in-prison-for-marrying-a-minor-girl-without-the-knowledge-of-his-first-wife#comments</comments><guid isPermaLink="false">da01e0b7-74b7-474b-8525-7946b9d69fdd</guid><pubDate>Thu, 03 Sep 2026 04:43:53 +0000</pubDate><atom:updated>2026-09-03T04:43:53.388Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Marrage,திருவண்ணாமலை,சிறை,சிறுமி,wife,Minor girl,Policeman,Prison,போலீஸ்காரர்,முதல் மனைவி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/oe6t0ggl/299.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/oe6t0ggl/299.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை,</p><p>முதல் மனைவிக்கு தெரியாமல் சிறுமியை திருமணம் செய்த போலீஸ்காரருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை மகளிர் விரைவு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.</p><p>திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் தண்டரை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 41). இவரது மனைவி விமலா. இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு மணிகண்டன், விமலாவிற்கு தெரியாமல் சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார்.</p><h2>விசாரணை</h2><p>இதுபற்றி அறிந்ததும் விமலா தண்டராம்பட்டு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. </p><h2>சிறை தண்டனை</h2><p>இந்த நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தாமோதரன் தீர்ப்பு கூறினார். அதில் மணிகண்டனுக்கு 10 ஆண்டுகள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">சிறை</a> தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.</p><p>பின்னர் அவரை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தண்டனை பெற்ற மணிகண்டன் போலீஸ்காரர் என்பதும், சிறுமியை திருமணம் செய்ததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>படிக்க சென்ற இடத்தில் மாணவருக்கு நேர்ந்த கொடுமை: போலீசார் வழக்குப்பதிவு; 9 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-subjected-to-atrocity-at-place-of-study-parents-shocked</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-subjected-to-atrocity-at-place-of-study-parents-shocked#comments</comments><guid isPermaLink="false">016f0143-939a-4e80-b84b-ac5ca71ae6b6</guid><pubDate>Thu, 03 Sep 2026 04:34:55 +0000</pubDate><atom:updated>2026-09-03T04:34:55.080Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,போக்சோ சட்டம்,POCSO act,பாலியல் தொந்தரவு,case registered,sexual abuse,போலீசார் வழக்குப்பதிவு,மாணவர்கள் கைது,students arrested</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/ymrvvobj/ster.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/ymrvvobj/ster.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த சக மாணவர்கள் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>மாணவனுக்கு மிரட்டல்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> அருகே உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவனை, சக மாணவர்கள் தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளனர். இதனை வெளியில் சொன்னால் மேலும் துன்புறத்துவோம் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவர் யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார்.</p><p>இந்த நிலையில் அந்த மாணவருக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனை அறிந்த அந்த பள்ளிக்கூட ஆசிரியர், பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோரை அழைத்து தெரிவித்தார்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>தொடர்ந்து மாணவனை துன்புறுத்திய மாணவர்களின் பெற்றோர்களையும் வரவழைத்து கவுன்சிலிங் கொடுத்து உள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர், விளாத்திகுளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.</p><h2>9 மாணவர்கள் கைது</h2><p>விசாரணையில், அந்த மாணவனை கடந்த ஆண்டு முதலே 9 மாணவர்கள் தொடர்ந்து துன்புறுத்தி தொந்தரவு கொடுத்து வந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து 9 மாணவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை தூத்துக்குடியில் உள்ள சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்தி, நெல்லையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,320 அதிரடியாக உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..?</title><link>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-jumps-rs-2320-per-sovereign-todays-rate</link><comments>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-jumps-rs-2320-per-sovereign-todays-rate#comments</comments><guid isPermaLink="false">9d42c632-7e10-4fda-b4d2-600cd4ffffcb</guid><pubDate>Thu, 03 Sep 2026 04:31:26 +0000</pubDate><atom:updated>2026-09-03T04:31:26.946Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Gold Rate,தங்கம் விலை,வெள்ளி விலை,Silver rate,Gold Price,Silver Price,விலை நிலவரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/k2m5jbz4/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/k2m5jbz4/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தங்கம் (Gold Rate)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. சென்னையில் நேற்று முன்தினம் தங்கம் ஒரு கிராம் ரூ.14,175-க்கும், சவரன் ரூ.1,13,400-க்கும் விற்பனையானது. நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,800 சரிந்து ரூ.1,11,600-க்கும், கிராமுக்கு ரூ.225 குறைந்து, ரூ.13,950-க்கும் விற்பனையானது.</p><p>இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,920-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.290 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் உயர்ந்து, வெள்ளி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை தொடக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sale-of-onions-begins-in-ration-shops-across-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sale-of-onions-begins-in-ration-shops-across-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">6c6f4e89-e1f7-47a4-a90e-29c787e302b8</guid><pubDate>Thu, 03 Sep 2026 04:09:09 +0000</pubDate><atom:updated>2026-09-03T04:09:09.303Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழகம்,ரேஷன் கடை,தொடக்கம்,ration shops,onion,In Tamil Nadu,வெங்காயம் விற்பனை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/u8j5bu4m/102.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/u8j5bu4m/102.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ஒரு கிலோ வெங்காயத்தை ரூ.35-க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>சமையலில் அத்தியாவசியமாக பயன்படுத்தப்படும் வெங்காயத்தின் விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வரத்து குறைந்ததன் காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை கடைகளில் அதன் விலை ரூ.80-ஐ கடந்துள்ளது.</p><p>வெங்காய விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மராட்டிய மாநிலம் நாசிக்கில் உள்ள கிடங்குகளில் இருந்து வெங்காயம் டன் கணக்கில் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஒரு கிலோ வெங்காயத்தை ரூ.35-க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை</h2><p>வெளிச்சந்தையில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்ததை அடுத்து, ஏழை, எளிய நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் நியாயவிலைக் கடைகள் மூலம் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யும் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.</p><p>இதன் ஒரு பகுதியாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்குக் குறைந்த விலையில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">வெங்காயம்</a> விற்பனை செய்யும் திட்டத்தை அமைச்சர்கள் வெங்கடரமணன் மற்றும் காந்திராஜ் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவில் 84,318 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன: 93 சதவீதம் அரசுப் பள்ளிகள் - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/84318-schools-closed-in-india-93-percent-government-schools-manickam-thakur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/84318-schools-closed-in-india-93-percent-government-schools-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">61a97509-7753-4d0f-b8f1-eda960691076</guid><pubDate>Thu, 03 Sep 2026 04:06:15 +0000</pubDate><atom:updated>2026-09-03T04:06:15.662Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,மாணிக்கம் தாகூர்,அரசுப் பள்ளிகள்,Government School,மோடி அரசு,Close,Manickam Thakur MP</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/2r6kk6as/168.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/2r6kk6as/168.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்தியாவில் 84,318 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன அதில் 93 சதவீதம் அரசுப் பள்ளிகள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>அரசு பள்ளிகள்</h2><p>மோடி அரசின் திட்டமிட்ட அலட்சியத்தாலும் தவறான கல்விக் கொள்கைகளாலும் நம் நாட்டின் அரசுப்பள்ளிக் கல்வி கட்டமைப்பு மிகக் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் 84,318 பள்ளிகள் காணாமல் போயுள்ளன. இதில் அதிர்ச்சியூட்டும் உண்மை என்னவென்றால், மூடப்பட்டவற்றில் 93 சதவீதப் பள்ளிகள் அரசுப் பள்ளிகள்தான். </p><p>சுமார் 78,502 அரசுப் பள்ளிகளுக்கு மோடி அரசு மூடுவிழா நடத்தியுள்ள அதே வேளையில், 15,461 தனியார் சுயநிதிப் பள்ளிகள் காளான்கள் போலப் பெருகியிருப்பது இவர்கள் யாருக்காக ஆட்சி நடத்துகிறார்கள் என்பதைத் தெள்ளத்தெளிவாக காட்டுகிறது. சமூக நீதியையும் பொது கல்வியையும் உயிர்மூச்சாகக் கொண்ட நமது தமிழ்நாட்டிலும் கூட, இந்த ஒன்றிய அரசின் தவறான அணுகுமுறையால் சுமார் 1,976 பள்ளிகள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. </p><h2>பிஎம் ஸ்ரீ திட்டம்</h2><p>கிராமப்புற ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட சமூகத்து மாணவர்களின் ஒரே புகலிடமாக விளங்கும் அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்துவதற்கு உரிய நிதி ஒதுக்காமல், பள்ளிக் கல்வியை திட்டமிட்டுச் சீரழிக்கும் வேலையை பாஜக அரசு தீவிரமாகச் செய்து வருகிறது. குறிப்பாக, தேசிய கல்விக் கொள்கை மற்றும் பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்கவில்லை என்பதற்காகவே, கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய மொத்தம் ரூ.5,109 கோடி கல்வி நிதியை மோடி அரசு தடுத்து நிறுத்தியுள்ளது. </p><p>நீதிமன்றம் தலையிட்டதால் வேறு வழியின்றி RTE- க்கு மட்டும் ரூ.714 கோடியை கிள்ளிப் போட்டுவிட்டு, ஒட்டுமொத்த பள்ளி கல்வி நிதியையும் தடுத்து வைத்து தமிழக மாணவர்களின் எதிர்காலத்தோடு பிளாக்மெயில் அரசியல் செய்வது கண்டனத்திற்குரியது!</p><h2>மத்திய அரசு</h2><p>"பள்ளி சீரமைப்பு மற்றும் முறைப்படுத்துதல்" என்ற போலி அறிக்கையை வைத்துக்கொண்டு, ஒற்றை ஆசிரியர் பள்ளி, குறைவான மாணவர்கள் என்ற காரணங்களைக் கூறி எளிய மக்களின் கல்வி உரிமையைப் பறிக்கப் பார்க்கிறார்கள். பள்ளிகளை ஒருங்கிணைக்கிறோம் என்ற பெயரில் அரசுப் பள்ளிகளை இழுத்து மூடி, ஒட்டுமொத்தக் கல்வியையும் கார்ப்பரேட் மற்றும் தனியார் கல்வி மாபியாக்களின் கைகளில் தாரைவார்ப்பதே மோடி அரசின் உண்மையான நோக்கம்.</p><p>அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்கி மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்குத் திறனற்றி மத்திய அரசு, மாநிலங்களுக்கான சட்டப்பூர்வ நிதிப் பங்கையும் வஞ்சகமாக மறுத்து, தனியார் முதலாளிகளுக்கு சேவை செய்யும் வகையில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF">அரசு பள்ளிகளை</a> ஒழித்துக் கட்டுவதை உடனடியாகக் கைவிட வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அரசு பஸ்சின் தானியங்கி கதவு திறந்து மாணவிகள் விழுந்து காயமடைந்த சம்பவம்: டிரைவர் சஸ்பெண்ட்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/driver-suspended-after-incident-where-female-students-fell-and-were-injured-when-a-government-buss-automatic-door-opened</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/driver-suspended-after-incident-where-female-students-fell-and-were-injured-when-a-government-buss-automatic-door-opened#comments</comments><guid isPermaLink="false">fb297d4f-2d0c-47e0-a490-0b7a74940773</guid><pubDate>Thu, 03 Sep 2026 03:58:08 +0000</pubDate><atom:updated>2026-09-03T03:58:08.788Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>புதுக்கோட்டை,Pudukottai,கீரனூர்,மாணவிகள் காயம்,அரசு பள்ளி மாணவிகள்,Govt School Students,தானியங்கி கதவு,டிரைவர் சஸ்பெண்ட்,Driver suspend</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/hqw5p35j/kler.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/hqw5p35j/kler.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுக்கோட்டை, </p><p>ஓடும் பஸ்சில் தானியங்கி கதவு திறந்ததால் கீழே விழுந்து 10 மாணவிகள் காயமடைந்தனர். டிரைவர், கண்டக்டர் கைது செய்யப்பட்டனர்.</p><h2>அரசு நகர பஸ்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/pudukkottai">புதுக்கோட்டை</a> மாவட்டம் கீரனூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கி 8-ம் எண் அரசு நகர பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று காலை 9 மணிக்கு சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் புதுக்கோட்டை-திருச்சி சாலையில் ரெங்கம்மாள் சத்திரம் பஸ் நிறுத்தத்தில் நின்றது. அப்போது புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் 9 பேர் மற்றும் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பயிலும் மாணவி என மொத்தம் 10 பேர் அந்த பஸ்சில் ஏறினர்.</p><h2>தானியங்கி கதவு</h2><p>பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாணவிகள் முன்பக்க படிக்கட்டில் நின்று கொண்டிருந்தனர். பின்னர் பஸ்சின் தானியங்கி கதவு மூடப்பட்டது. அங்கிருந்து பஸ் புறப்பட்டு, சுமார் 100 மீட்டர் தொலைவில் சென்றபோது, தானியங்கி கதவு திடீரென திறந்துள்ளது. இதில் படிக்கட்டில் நின்று கொண்டி ருந்த மாணவிகள் 10 பேரும் எதிர்பாராதவிதமாக ஓடும் பஸ்சில் இருந்து சாலையில் தவறி கீழே விழுந்தனர். இதைப்பார்த்த பஸ்சில் இருந்தவர்கள் அலறினர்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/4krw1f5a/stud.jpg" /></figure><p>அலறல் சத்தத்தை கேட்ட டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பின்னர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மற்றும் பஸ்சில் இருந்தவர்கள் காயமடைந்த 10 மாணவிகளையும் மீட்டு 2 ஆம்புலன்ஸ்கள் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><p>இந்த நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சண்முகம் நேரில் ஆறுதல் கூறினார். </p><p>பின்னர் அவர் கூறுகையில், 'ஓடும் பஸ்சில் இருந்து மாணவியை கண்டக்டர் கீழே தள்ளிவிட்டதாக ஒரு தரப்பினரும், டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் நிலைதடுமாறி மாணவி கீழே விழுந்ததாக மற்றொரு தரப்பினரும் கூறுகின்றனர். </p><h2>உண்மையான காரணம்</h2><p>இதுதொடர்பாக முழுமையாக விசாரித்த பின்னரே உண்மையான காரணம் தெரியவரும். விபத்து நடந்த பகுதியில் கடந்த 3, 4 மாதங்களாகவே அரசு பஸ்களில் மாணவர்களை ஏற்றுவது இல்லை, நிறுத்தங்களில் பஸ்கள் நிற்காமல் செல்வதாக புகார்கள் எழுந்துள்ளது. உடனடியாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். கூட்ட நெரிசலே இந்த விபத்துக்கு பின்னணியாக இருந்ததால், காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க மாவட்ட கலெக்டர் மூலம் மாற்று ஏற்பாடுகள் செய்யப் படும்' என்றார்.</p><h2>சாலை மறியல்</h2><p>இதற்கிடையே ரெங்கம்மாள் சத்திரம் பகுதியில் பள்ளி மாணவிகள் பஸ்சில் இருந்து கீழே விழுந்த சம்பவத்தை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள், மாணவிகளின் பெற்றோர்கள், உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.</p><p>இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.</p><p>இச்சம்பவம் குறித்து வெள்ளனூர் போலீசார் பஸ் டிரைவர் அர்ஜூனன், கண்டக்டர் மணிகண்டன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் ஜாமீனில் விடுவித்தனர்.</p><h2>டிரைவர் சஸ்பெண்ட்</h2><p>புதுக்கோட்டை மண்டல போக்குவரத்து பொது மேலாளர் கார்த்திகேயன் கூறுகையில், 'கீரனூரில் நேற்று காலை 8.30 மணிக்கு அரசு பஸ் புதுக்கோட்டை நோக்கி செல்லும்போது பஸ்சில் 90 பயணிகள் இருந்தனர். 9.05 மணிக்கு ரெங்கம்மாள் சத்திரம் பஸ் நிறுத்தத்தில் மேலும் 30 பயணிகள் மற்றும் மாணவிகளை ஏற்றிக்கொண்டு பஸ் சென்றபோது, கூட்ட நெரிசல் காரணமாக உள்ளே நின்ற பயணி ஒருவர் முன்படிக்கட்டின் அருகில் உள்ள தானியங்கி கதவு திறக்கும் பொத்தானை அழுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் முன் படிக்கட்டு கதவு திறந்ததில், படியில் நின்ற மாணவிகள் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதில் 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது' என்றார்.</p><p>இதற்கிடையே பஸ் டிரைவர் அர்ஜூனனை சஸ்பெண்ட் செய்தும், தற்காலிக ஊழியரான கண்டக்டர் மணிகண்டனை பணியில் இருந்து விடுவித்தும் புதுக்கோட்டை மண்டல போக்குவரத்து பொது மேலாளர் கார்த்திகேயன் உத்தர விட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>செங்கல்பட்டு அருகே சோகம்... பள்ளி பஸ் மோதி தாய், மகள் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-near-chengalpattu-mother-and-daughter-killed-in-school-bus-crash</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-near-chengalpattu-mother-and-daughter-killed-in-school-bus-crash#comments</comments><guid isPermaLink="false">315d21d7-6630-43a1-b989-9bb13a1dae6f</guid><pubDate>Thu, 03 Sep 2026 03:49:22 +0000</pubDate><atom:updated>2026-09-03T03:49:22.774Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chengalpattu,உயிரிழப்பு,ஆஸ்பத்திரி,வண்டலூர்,school bus,பள்ளி பஸ்,Mother and daughter</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/p82o7z55/298.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பலி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/p82o7z55/298.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வண்டலூர், </p><p>ஊரப்பாக்கம் அருகே பள்ளி பஸ் - மொபட் மோதிய விபத்தில் தாய், மகள் பலியானார்கள்.</p><p>செங்கல்பட்டு மாவட்டம் கீரப்பாக்கம் கிராமத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் தேவி (வயது 45). இவரது மகள் சுவாதி (வயது 23). நேற்று இருவரும் கீரப்பாக்கத்தில் இருந்து ஊரப்பாக்கம் நோக்கி ஒரே மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். மொபட்டை சுவாதி ஓட்டிச்சென்றார். </p><h2>விபத்து</h2><p>காரணைப்புதுச்சேரி-அருங்கால் சாலையில் முன்னால் சென்ற அரசு பஸ்சை முந்திசெல்லும் போது, ஊரப்பாக்கத்தில் இருந்து அருங்கால் நோக்கி வந்த தனியார் பள்ளி பஸ், சுவாதி ஓட்டி சென்ற மொபட் மீது மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் தேவி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சுவாதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சுவாதியும் பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இதுகுறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பலியான தாய், மகள் இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">விசாரணை</a> நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கீரப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>
தமிழக அரசு துறைகளில் வேலை: 170 காலியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/jobs-in-tamil-nadu-government-departments-tnpsc-issues-notification-to-fill-170-vacancies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/jobs-in-tamil-nadu-government-departments-tnpsc-issues-notification-to-fill-170-vacancies#comments</comments><guid isPermaLink="false">156e51ba-628c-41b0-89ba-89177994c3c8</guid><pubDate>Thu, 03 Sep 2026 03:48:25 +0000</pubDate><atom:updated>2026-09-03T03:48:25.391Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎஸ்சி,TNPSC,தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்,Job News,TNPSC Announcement,தமிழக அரசு துறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/z11dvs2c/5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/z11dvs2c/5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (<a href="https://www.dailythanthi.com/topic/tnpsc">TNPSC</a>) ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வில் அடங்கிய நேர்முகத் தேர்வு பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 170 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இது குறித்து <a href="https://www.dailythanthi.com/topic/tnpsc">டிஎன்பிஎஸ்சி</a> வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: </p> <p>ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள்) 2026. கால்நடை உதவி மருத்துவர், முதுநிலை பூச்சியியல் வல்லுநர் உள்ளிட்ட 31 பதவிகளுக்கான 170 காலிப்பணியிடங்களை நிரப்ப, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள்)-க்கான அறிவிக்கை, தேர்வாணையத்தின் ஆண்டுத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி இன்று (31.08.2026) வெளியிடப்பட்டுள்ளது.தேர்வர்கள் 07.09.2026 முதல் 06.10.2026 வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். </p> <p>தேர்வர்கள் தேர்வுக்கட்டணத்தை UPI மூலமாகவும் செலுத்தலாம். கணினி வழித் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் தேர்வாணைய இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.  பணியிடங்களுக்கு தகுந்தபடி கல்வித் தகுதி மாறுபடும். பிஇ, பிடெக், பிவிஎஸ்ஸி ஏஹெச், எம்பிஏ, எம்சிஏ, சிஏ, ஐசிடபிள்யூஏ, ஏசிஎஸ், எம்வி எஸ்சி உள்ளிட்ட படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். இந்த தேர்வு குறித்த முழு விவரங்கள் டிஎன்பிஎஸ்சி  <a href="https://tnpsc.gov.in/home.aspx">https://tnpsc.gov.in/home.aspx</a> என்ற  இணையதளத்தில்  கொடுக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பவானிசாகர் அணையில் நீர்மட்டம் கடும் சரிவு: விவசாயிகள் கவலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-level-in-bhavanisagar-dam-drops-sharply-farmers-worried</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-level-in-bhavanisagar-dam-drops-sharply-farmers-worried#comments</comments><guid isPermaLink="false">665d0594-db55-4476-9ac7-05fd1e271bb5</guid><pubDate>Thu, 03 Sep 2026 03:32:59 +0000</pubDate><atom:updated>2026-09-03T03:32:59.886Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விவசாயிகள்,Bhavanisagar Dam,பவானிசாகர் அணை,water level,நீர்மட்டம்,சரிவு,கவலை,farmers worried</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/goypejhu/bavanisagar-dam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பவானிசாகர் அணை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-03/goypejhu/bavanisagar-dam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பவானிசாகர்,</p><p>கடந்த ஆண்டு 101 அடியில் களை கட்டிய பவானிசாகர் அணையின் நீர் மட்டம் இந்த ஆண்டு பாதியாக குறைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.</p><h2>பவானிசாகர் அணை</h2><p>தமிழ்நாட்டின் 2-வது பெரிய அணை என்ற பெருமையை கொண்டது பவானிசாகர் அணை. நீலகிரி மலைப்பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து தெங்குமரஹாடா வழியாக வரும் மாயாறும் கலக்குமிடத்தை தேர்வு செய்து இந்த அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் மொத்த நீர் மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது. அணையின் மொத்த நீர் கொள்ளளவு 32.8 டி.எம்.சி. ஆகும். பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆறு மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படுகிறது. பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் சத்தியமங்கலம் வழியாக கொடிவேரி அணைக்கு வருகிறது. தொடர்ந்து அங்கிருந்து அரக்கன் கோட்டை-தடப்பள்ளி பாசன பகுதிக்கு பிரிந்து அதன்பின்னர் காலிங்கராயன் பாசன பகுதிக்கு வந்து சேர்ந்து அங்கிருந்து பிரிந்து பவானி கூடுதுறையில் காவிரி ஆற்றில் கலக்கிறது.</p><h2>கடந்த ஆண்டு நீர்மட்டம்</h2><p>இதனால் பவானிசாகரில் இருந்து பவானி கூடுதுறை வரை உள்ள 2 கரையோர பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான ஊராட்சிகள் மற்றும் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளின் குடிநீர் ஆதாரமாக விளங்குவதோடு சுமார் 35 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீர் ஈரோடு, கரூர் மாவட்டங் களில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந் தேதி காலை 8 மணிக்கு 101.42 அடியாக இருந்தது.</p><h2>நீர்மட்டம் சரிவு</h2><p>அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 381 கன அடியாக இருந்தது. அணையின் நீர் கொள்ளளவு 29.85 டி.எம்.சியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் அதிக அளவில் இருந்ததால் கடந்த ஆண்டு கீழ்பவானி வாய்க்கால் மற்றும் பவானி ஆற்றில் பாசனத்துக்காக முழுவதுமாக தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தென் மேற்கு பருவமழை பொய்த்துப்போனது. இதன்காரணமாக அணைக்கு நீர்வரத்து பெரிதும் குறைந்தது. இந்தநிலையில் நேற்று காலை 8 மணி அளவில் <a href="https://www.dailythanthi.com/topic/bhavanisagar-dam">பவானிசாகர் அணை</a> நீர்மட்டம் 50.65 அடியாக குறைந்தது. அணைக்கு வினாடிக்கு 933 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 105 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது அணையில் 4.59 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் அணையின் நீர்மட்டம் பாதியாக குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.</p>]]></content:encoded></item></channel></rss>