<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 24 Jul 2026 09:09:01 +0000</lastBuildDate><item><title>கீழடியில்  மீன் உருவம் பொறித்த பானை கண்டெடுப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-pot-engraved-with-a-fish-image-was-discovered-in-keezhadi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-pot-engraved-with-a-fish-image-was-discovered-in-keezhadi#comments</comments><guid isPermaLink="false">3610112a-5201-4aa4-8872-fbe0c303e0d8</guid><pubDate>Fri, 24 Jul 2026 09:02:26 +0000</pubDate><atom:updated>2026-07-24T09:02:26.409Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கீழடி,Keeladi,Keezhadi Museum,keezhadi excavation,பானை,கீழடி அகழ்வாராய்ச்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/selpt7e5/pot33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
கீழடி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/selpt7e5/pot33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்புவனம்,</p><p>சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடி பகுதியில் மத்திய-மாநில அரசுகள் சார்பில் ஏற்கனவே 10 கட்ட அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளது. 2,600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழங்கால மக்கள் பயன்படுத்திய பொருட்கள் கிடைக்கப்பெற்று கீழடியில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.</p><p>பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், பள்ளி மாணவ-மாணவி கள் என தினமும் ஏராளமானோர் வந்து பார்வையிட்டும், 'செல்பி' எடுத்தும் மகிழ்கின்றனர். இதேபோல் கீழடியில் அகழாய்வு நடைபெற்ற இடத்திலேயே திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திறந்தவெளி அருங்காட்சியகத்தை தினமும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், மாணவ, மாணவிகள், வெளிநாட்டினர் என பார்வையிட்டு வருகின்றனர்.</p><h2>11-வது கட்ட அகழாய்வு </h2><p><a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%9F%E0%AE%BF%20">கீழடி</a> 11ஆம் கட்ட அகழாய்வில் மீன் உருவம் பொறித்த பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p>இதுவரை 9 குழிகள் தோண்டப்பட்டு உறை கிணறுகள், சுடுமண பானைகள், சுருள வடிவ, பீப்பாய் வடிவ, மூடிய நிலையில், திறந்த நிலையில் வடிகால் அமைப்புகள், செங்கல் கட்டுமானங்கள் உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.</p> <h2>கல்வியில் சிறந்து விளங்கிய சமுதாயம்</h2><p>முதன் முதலில் தோண்டப்பட்ட குழியில் 160 செ.மீ., ஆழத்தில் 20 செ.மீ., விட்டமும், ஒரு அடி உயரமும் கொண்ட இரு நிற சுடுமண் பானை முழுமையாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. பானையின் மேற்பகுதியில் மீன் உருவம் கோட்டு சித்திரமாக வரையப்பட்டுள்ளது. ஏற்கனவே கீழடியில் மீன் உருவம் பதித்த உறை கிணறு, பானை ஓடு உள்ளிட்ட பொருட்கள் கிடைத்தன.</p><p>2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன் கல்வியில் சிறந்து விளங்கிய சமுதாயமாக கீழடி மக்கள் விளங்கி இருக்க கூடும் என்பதற்கு சான்றாக இவை கருதப்படுகின்றன.</p>]]></content:encoded></item><item><title>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-moderate-rain-in-western-ghats-districts-today</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-moderate-rain-in-western-ghats-districts-today#comments</comments><guid isPermaLink="false">71da8af0-06e4-40c8-b780-bddd2a01e3fd</guid><pubDate>Fri, 24 Jul 2026 09:01:15 +0000</pubDate><atom:updated>2026-07-24T09:01:15.408Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/yxp3di9n/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/yxp3di9n/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சராசரி கடல் மட்டத்தில் குஜராத்திலிருந்து கர்நாடகா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><p><strong>24-07-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.</p><p><strong>25-07-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><h3>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</h3><p><strong>24-07-2026 முதல் 28-07-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.</p><h3>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</h3><p><strong>24-07-2026 முதல் 28-07-2026 வரை:</strong> அதிகபட்ச வெப்பநிலை வேலூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று மற்றும் நாளை</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: ஆக., 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/disproportionate-assets-case-against-former-minister-c-vijayabaskar-adjourned-to-august-24</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/disproportionate-assets-case-against-former-minister-c-vijayabaskar-adjourned-to-august-24#comments</comments><guid isPermaLink="false">622d99f0-b682-46fc-bf02-5e451a6a0db9</guid><pubDate>Fri, 24 Jul 2026 08:50:25 +0000</pubDate><atom:updated>2026-07-24T08:50:25.623Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,புதுக்கோட்டை,Pudukottai,சொத்துக்குவிப்பு வழக்கு,சி.விஜயபாஸ்கர்,Assets,C.Vijayabaskar</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/4soy8ft3/kaval.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/4soy8ft3/kaval.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுக்கோட்டை, </p><p>புதுக்​கோட்டை மாவட்​டம் விராலிமலை சட்​டமன்ற தொகு​தி​யில் வெற்றி பெற்ற முன்​னாள் அமைச்​சர் சி.​விஜய​பாஸ்​கர், 2016-ல் இருந்து 2021 வரை அமைச்​ச​ராக இருந்த காலக்​கட்​டத்​தில் தனது மனைவி ரம்யா பெயரிலும், தனது பெயரிலும் வரு​மானத்​துக்கு அதி​க​மாக சொத்து சேர்த்​த​தாக, புதுக்​கோட்டை மாவட்ட ஊழல் தடுப்பு மற்​றும் கண்​காணிப்பு பிரிவு போலீ​சார் கடந்த 2021-ல் வழக்​குப் பதிவு செய்​தனர்.</p><p>மறு​நாள் விஜய​பாஸ்​கருக்கு சொந்​த​மான வீடு, கல்​கு​வாரி, அலு​வல​கம் உள்பட தமிழகம் முழு​வதும் 56 இடங்​களில் ஊழல் தடுப்பு போலீ​சார் சோதனை நடத்​தினர். இந்த வழக்கு புதுக்​கோட்டை மாவட்ட முதன்மை நீதி​மன்​றத்​தில் விசா​ரிக்​கப்​பட்டு வந்​தது. வழக்கு விசா​ரணை​யின்​போது, விஜய​பாஸ்​கர், ரம்யா ஆகியோர் அவ்​வப்​போது நீதி​மன்​றத்​தில் ஆஜராகி வந்​தனர்.</p><p>இதன்படி சி.விஜயபாஸ்கர் மற்றும் அவர் மனைவி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்துவரும் நிலையில், இன்றைக்கு வழக்கு விசாரணையில் இருவரும் ஆஜராகவில்லை. இதனை அடுத்து வழக்கு விசாரணை அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. </p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் இளைஞர்கள் மீதான தாக்குதல்: மன்னார்குடியில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/attack-on-youths-in-delhi-college-students-in-mannargudi-boycott-classes-and-stage-a-protest</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/attack-on-youths-in-delhi-college-students-in-mannargudi-boycott-classes-and-stage-a-protest#comments</comments><guid isPermaLink="false">62e31f40-4f2d-4126-9c86-ed9ae872e074</guid><pubDate>Fri, 24 Jul 2026 08:25:46 +0000</pubDate><atom:updated>2026-07-24T08:25:46.063Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Delhi,போராட்டம்,கல்லூரி மாணவர்கள்,மன்னார்குடி,Mannargudi,College students protest</media:keywords><media:content height="300" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/import/Images/Article/201701122034172160_Jallikattu-seeking-permissionRain-is-trying-to-stirWe_SECVPF.gif" width="375"><media:title type="html"><![CDATA[ மாணவர்கள் போராட்டம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மன்னார்குடியில் மாணவர்கள் போராட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/import/Images/Article/201701122034172160_Jallikattu-seeking-permissionRain-is-trying-to-stirWe_SECVPF.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவாரூர்,</p><p>டெல்லியில் இளைஞர்கள் மீதான தாக்குதலை கண்டித்து <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">திருவாரூர் மாவட்டம் </a>மன்னார்குடியில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.</p><h2>டெல்லி வன்முறை</h2><p>டெல்லியில் நீட் தேர்வு முறைகேடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகள் மற்றும் தடியடி போன்ற தாக்குதல்கள் நடத்தினர். </p><p>இதனைக் கண்டிக்கும் விதமாக பல்வேறு இடங்களில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மாணவர்கள் போராட்டம் </a>நடத்தி வருகின்றனர். இதையடுத்து மத்திய அரசின் செயலுக்கு மன்னார்குடி மாணவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.</p><h2>வகுப்புகள் புறக்கணிப்பு- போராட்டம்</h2><p>மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் வகுப்புகளைப் புறக்கணித்தனர். மேலும் கல்லூரி வளாகத்திற்கு வெளியே திரண்ட மாணவர்கள், டெல்லி போலீசாருக்கு எதிராகவும், மாணவர் நலனைப் பாதுகாக்கக் கோரியும் கோஷங்களை எழுப்பினர்.</p><h2>நாடு தழுவிய ஆதரவு</h2><p>பல்வேறு மாணவர் அமைப்புகள் விடுத்துள்ள நாடு தழுவிய போராட்ட அழைப்பின் ஒரு பகுதியாகவே மன்னார்குடியில் இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் மன்னார்குடி கல்வி நிறுவனப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை: அரசு மனநல காப்பகத்தில் மாற்றுத்திறனாளி கைதிக்கு நேர்ந்த கொடூரம்..</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-atrocity-faced-by-a-prisoner-treated-at-the-government-institute-of-mental-health-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-atrocity-faced-by-a-prisoner-treated-at-the-government-institute-of-mental-health-in-chennai#comments</comments><guid isPermaLink="false">bda168b1-df67-45a9-bffb-7d12b019ee16</guid><pubDate>Fri, 24 Jul 2026 08:23:59 +0000</pubDate><atom:updated>2026-07-24T08:23:59.380Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,படுகொலை,மனநலம் பாதிக்கப்பட்டவர்,prisoner death,மாற்றுத்திறனாளி கைதி,Mental Health hospital</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/f6041zvo/10.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ கீழ்ப்பாக்கம் மனநல ஆஸ்பத்திரி]]></media:title><media:description type="html"><![CDATA[ கீழ்ப்பாக்கம் மனநல ஆஸ்பத்திரியில் கைதி படுகொலை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/f6041zvo/10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கொலை வழக்கில் கைதாகி <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை கீழ்ப்பாக்கம்</a> அரசு மனநலக் காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்த மாற்றுத்திறனாளி கைதி படுகொலை செய்யப்பட்டார்.</p><p>கோவையை அடுத்த ஆழியார் பகுதியில் கடந்த 2024-ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் ஜாகீர் (வயது 27) என்ற இளைஞர் கைதானார். வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவர், மனநலமும் பாதிக்கப்பட்டிருந்ததால் நீதிமன்ற உத்தரவுப்படி பொள்ளாச்சி கிளைச் சிறையிலிருந்து மாற்றப்பட்டு, சென்னை கீழ்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.</p><h2>காப்பகத்தில் நடந்த கொடூரம்</h2><p>கடந்த ஜூலை 20-ந்தேதி, அதே காப்பகத்தில் மற்றொரு குற்றவழக்கில் கைதாகி அரவிந்தசாமி என்ற <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மனநலன் பாதிக்கப்பட்ட கைதி </a>சிகிச்சை பெற்று வந்தார். </p><p>அவர் ஜாகீரை திடீரென கைகளால் கொடூரமாகத் தாக்கினார். மேலும் கண்ணில் குத்தி, காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தினார். இதில் ஜாகீர் படுகாயமடைந்து உயிருக்கு போராடினார்.</p><h2>கைதி உயிரிழப்பு</h2><p>பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய ஜாகீரை, காப்பக ஊழியர்கள்  மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஜாகீர் பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p>அரசு காப்பகத்திற்குள் பாதுகாப்பில் இருந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கைதி</a>, சக கைதியால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் சென்னை வட்டாரத்தில் பெரும் சட்டம் ஒழுங்கு கேள்வியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து கீழ்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சிவந்தாகுளம் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி சி.பி.எம். காத்திருப்பு போராட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cpm-holds-protest-demanding-relocation-of-sivanthakulam-tasmac-shop</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cpm-holds-protest-demanding-relocation-of-sivanthakulam-tasmac-shop#comments</comments><guid isPermaLink="false">fdb51194-4569-4e7c-86cf-07f4ac20bb55</guid><pubDate>Fri, 24 Jul 2026 08:17:53 +0000</pubDate><atom:updated>2026-07-24T08:17:53.442Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Relocation,இடமாற்றம்,insistence,வலியுறுத்தல்,டாஸ்மாக் கடை,Tasmac shop,காத்திருப்பு போராட்டம்,சிபிஎம்,CPM,waiting protest</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/th53lbw8/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூத்துக்குடியில் சி.பி.எம். காத்திருப்பு போராட்டம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/th53lbw8/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி சிவந்தாகுளம் குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88">டாஸ்மாக் கடை</a>யை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடை முன்பு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%20">காத்திருப்பு போராட்டம் </a>நடந்தது.</p><h2>சிவந்தாகுளம் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய கோரிக்கை</h2><p>தூத்துக்குடி சிவந்தாகுளம் 5-வது தெருவில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானக் கடையால், அப்பகுதியில் சென்று வரும் பள்ளி மாணவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்களுக்குத் தொடர்ச்சியாக பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதால், அந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். </p><h2>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போராட்டம்</h2><p>இந்த கோரிக்கையை வலியுறுத்தி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி</a>யின் சார்பில் டாஸ்மாக் கடை முன்பு நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி நகரக் குழு உறுப்பினர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் முத்து கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அர்ச்சுனன், ராஜா, மூத்த நிர்வாகிகள் பொன்ராஜ், மணவாளன் உள்ளிட்ட திரளான கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோசங்களை எழுப்பினர். </p><h2>அதிகாரிகள் பேச்சுவார்த்தை</h2><p>போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வருவாய்த்துறையினர் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் போது, இந்த பிரச்சினை தொடர்பாக வரும் 27-ம் தேதி உதவி கலெக்டர் தலைமையில் சமாதான கூட்டம் நடத்தி, உரிய தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதிகாரிகளின் இந்த உறுதியை ஏற்றுக்கொண்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்களது காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தர்மேந்திர பிரதானை நீக்கினால் அரசு கவிழ்ந்துவிடுமா? - பிரதமருக்கு பெ. சண்முகம் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-government-fall-if-dharmendra-pradhan-is-removed-p-shanmugam-questions-the-prime-minister</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-government-fall-if-dharmendra-pradhan-is-removed-p-shanmugam-questions-the-prime-minister#comments</comments><guid isPermaLink="false">4980b59a-4764-4009-8ac5-c43336cad8a1</guid><pubDate>Fri, 24 Jul 2026 08:03:57 +0000</pubDate><atom:updated>2026-07-24T08:03:57.329Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Modi,P. Shanmugam,தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,மோடி,பெ. சண்முகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/mavzomi6/67.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/mavzomi6/67.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் பெ. சண்முகம் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>பிரதமர் மோடி அவர்களே, மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, பல்லாயிரக்கணக்கான காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினரைக் கொண்டு கொலைவெறித் தாக்குதல் நடத்துவது, இணையதள இணைப்பைத் துண்டிப்பது, மெட்ரோ ரயில் நிலையங்களை மூடுவது எனத் வேண்டாத வேலைகளையெல்லாம் செய்துகொண்டிருக்கிறீர்கள்.</p><h2>தண்டனை</h2><p>தர்மேந்திர பிரதான் என்கிற ஓர் மந்திரியை நீக்குவதால் உங்கள் அரசு கவிழ்ந்துவிட போகிறதா என்ன? “உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் தீரவேண்டும்” என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81"> நீட் தேர்வு</a> குளறுபடிகளுக்கும் மாணவர்களின் தற்கொலைகளுக்கும் காரணமானவர் அதற்குரிய தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும். எனவே, தர்மேந்திர பிரதானைப் பதவியிலிருந்து நீக்கிப் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர முடிவெடுங்கள் பிரதமரே!</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மன்னார்குடி எம்.எல்.ஏ காமராஜை தகுதி நீக்கம் செய்க: சபாநாயகரிடம் அமமுக மனு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ammk-petitions-speaker-to-disqualify-mannargudi-mla-kamaraj</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ammk-petitions-speaker-to-disqualify-mannargudi-mla-kamaraj#comments</comments><guid isPermaLink="false">38b529ff-f375-416b-b5c1-8ce122800de6</guid><pubDate>Fri, 24 Jul 2026 07:54:00 +0000</pubDate><atom:updated>2026-07-24T07:54:00.732Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>AMMK,அமமுக,மன்னார்குடி,Mannargudi,காமராஜ் எம்.எல்.ஏ,Kamaraj MLA</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/q0qlhg42/15.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/q0qlhg42/15.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் காமராஜ். மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். அமமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஒரே எம்.எல்.ஏ. இவர்தான்.</p><p>தவெக ஆட்சி அமைக்க பல்வேறு கட்சிகளிடம் ஆதரவு கோரி இருந்த நிலையில், மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ், விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு கடிதம் எழுதி இருந்தார். அதன் பின்னர், கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில், தனது ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்துவிட்டு, மீண்டும், தவெகவுக்கு ஆதரவு அளித்தார். </p><p>சட்டப்பேரவையில் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்ததால் அதிருப்தியடைந்த டிடிவி தினகரன், அமமுகவிலிருந்து காமராஜை நீக்கம் செய்வதாக அதிரடியாக அறிவித்தார். தற்போது வரை தவெக அரசுக்கு காமராஜ் எம்.எல்.ஏ. ஆதரவு தெரிவித்து வருகிறார். </p><p>இந்த நிலையில், மன்னார்குடி எம்.எல்.ஏ காமராஜை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக்கோரி அமமுக சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது. காமராஜை தகுதி நீக்கம் செய்யக்கோரி அம‌முக பொருளாளர் கரிகாலன் சபாநாயகரிடம் நேரில் சென்று மனு அளித்துள்ளார். தங்கள் கட்சிக்கு எதிராக செயல்பட்டதுடன், கட்சி விதிகளை மீறியதால் அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அந்த மனுவில் கரிகாலன் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: கடைகளில் 240 கிலோ தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்- ரூ.13 ஆயிரம் அபராதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-240-kg-of-banned-plastic-products-seized-from-shops-rs-13-thousand-fine-imposed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-240-kg-of-banned-plastic-products-seized-from-shops-rs-13-thousand-fine-imposed#comments</comments><guid isPermaLink="false">c0021893-464b-4389-bb52-1d5d361f793f</guid><pubDate>Fri, 24 Jul 2026 07:43:39 +0000</pubDate><atom:updated>2026-07-24T07:43:39.584Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Corporation,மாநகராட்சி,Seizure,fine,அபராதம்,inspection,warning,எச்சரிக்கை,அதிகாரிகள்,plastic items,சோதனை,officials,பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/zmmv7f1d/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/zmmv7f1d/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி கிழக்கு மண்டலப் பகுதி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88">கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய சோதனை</a>யில் 240 கிலோ தடை செய்யப்பட்ட <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்</a> செய்யப்பட்டு ரூ.13 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. </p><h2>கடைகளில் சோதனை</h2><p>சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனரின் உத்தரவின் பேரில், கிழக்கு மண்டல சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அடங்கிய குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.</p><h2>240 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்</h2><p>குறிப்பாக வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் அதிகம் நிறைந்த மட்டக்கடை, டபிள்யூ.ஜி.சி. சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது, விதிகளை மீறி பயன்படுத்த வைக்கப்பட்டிருந்த 240 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.</p><h2>ரூ.13 ஆயிரம் அபராதம்</h2><p>மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களை பயன்படுத்திய வணிகர்களுக்கு மொத்தம் ரூ.13,000 அபராதம் விதிக்கப்பட்டு உடனடியாக வசூலிக்கப்பட்டது. பொதுமக்களும், வணிகர்களும் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்த்து, சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பு அளிக்கும் துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்றும், விதிகளை மீறினால் கடுமையான நடவடிக்கை தொடரும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>தென் மாவட்டங்களில் கடற்கரை தூய்மைப்படுத்தும் இயக்கம் - அண்ணாமலை தொடங்கி வைக்கிறார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/beach-cleanup-drive-in-southern-districts-annamalai-to-inaugurate-it</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/beach-cleanup-drive-in-southern-districts-annamalai-to-inaugurate-it#comments</comments><guid isPermaLink="false">a0c352f6-50f8-48d5-9041-5df9d0db221a</guid><pubDate>Fri, 24 Jul 2026 07:31:28 +0000</pubDate><atom:updated>2026-07-24T07:31:28.809Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Annamalai,அண்ணாமலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/ve1yo53w/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/ve1yo53w/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி,</p><p>தமிழக பா.ஜனதா தலைவராக இருந்த அண்ணாமலை கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு அந்த பதவியில் இருந்து விலக்கப்பட்டார். சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. பா.ஜனதா கூட்டணி தேர்தல் பிரசாரத்தில் பெரிய அளவில் அண்ணாமலை தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. இந்தநிலையில், கடந்த மாதம் பா.ஜனதாவில் இருந்து அண்ணாமலை விலகினார்.</p><p>தொடர்ந்து, அவர் ஏற்கனவே நடத்தி வந்த 'வீ த லீடர்ஸ்' என்ற அமைப்பை அரசியல் களத்தில் இறக்கினார். அந்த அமைப்பில் ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கையும் நடத்தினார். முதல் நாளில் சுமார் 10 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்தனர். தொடர்ந்து முகாம் மூலம் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது.</p><p>இதற்கிடையே, பொள்ளாச்சியில் கடந்த 12-ந்தேதி அண்ணாமலை நடத்திய மாநாட்டில் திரளான இளைஞர்கள் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து, தூத்துக்குடியில் 2-வது மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. இதற்கிடையே, உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் புதிய கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்க அண்ணாமலை திட்டமிட்டு இருக்கிறார். இதற்கான பணிகளில் அவர் முழு வீச்சில் இறங்கியுள்ளார். </p><p>இந்த நிலையில், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடற்கரை தூய்மைப்படுத்தும் இயக்கத்தை அண்ணாமலை தொடங்கி வைக்க உள்ளார். மாநிலம் தழுவிய இந்த முன்னெடுப்பை வரும் ஆகஸ்ட் 2-ந்தேதி கன்னியாகுமரியில் அண்ணாமலை தொடங்கி வைக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரியை தொடர்ந்து நெல்லை மாவட்டம் உவரி, மணப்பாடு மற்றும் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஆகிய கடற்கரைகளிலும் இந்த தூய்மைப்படுத்தும் இயக்கத்தை அண்ணாமலை தொடங்கி வைக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. </p> ]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் கொடூரம்: குடிபோதை தகராறில் தொழிலாளி வெட்டிக்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/brutal-incident-in-thoothukudi-worker-hacked-to-death-in-a-drunken-argument</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/brutal-incident-in-thoothukudi-worker-hacked-to-death-in-a-drunken-argument#comments</comments><guid isPermaLink="false">d7745911-f751-48ec-b488-f466032b73f3</guid><pubDate>Fri, 24 Jul 2026 07:13:44 +0000</pubDate><atom:updated>2026-07-24T07:13:44.187Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>குடிபோதை,drunkenness,stabbing,Thoothukudi,தூத்துக்குடி,Worker,தொழிலாளி,வெட்டிக்கொலை,Dispute,தகராறு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/tgxsxzwi/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தொழிலாளி வெட்டிக்கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/tgxsxzwi/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் பகுதியில் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில், டைல்ஸ் ஒட்டும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">தொழிலாளி வெட்டிப் படுகொலை</a> செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>மது அருந்தும்போது தகராறு</h2><p>தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே உள்ள கச்சேரி தளவாய்புரம் கிராமம், மேற்கு தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மலைராஜ் (வயது 30). திருமணம் ஆகாத இவர், டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வந்தார். நேற்று இரவு மலைராஜ், கச்சேரி தளவாய்புரம் கிராமத்தின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறாக மாறியுள்ளது. </p><h2>தொழிலாளி வெட்டிக்கொலை</h2><p>அந்த தகராறின்போது ஆத்திரமடைந்த 3 பேரும், தங்களிடம் இருந்த அரிவாளால் மலைராஜை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மலைராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கொலையாளிகள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். </p><p>இதற்கிடையே, இரவில் வீட்டிற்கு வராத மகனைத் தேடி இன்று காலை தந்தை மாரியப்பன் சென்றுள்ளார். அப்போது காட்டுப்பகுதியில் மலைராஜ் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். உடனடியாக இதுகுறித்து ஒட்டப்பிடாரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.</p><h2>3 பேருக்கு போலீசார் வலைவீச்சு</h2><p>இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார், மலைராஜின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஒட்டப்பிடாரம் போலீசார், தப்பி ஓடிய 3 பேரையும் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘படித்த இளைஞர்களின் கனவுகளை நனவாக்க ஓராண்டில் 1.5 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்’ - அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/to-realize-the-dreams-of-educated-youth-the-government-must-provide-jobs-to-15-lakh-people-within-a-year-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/to-realize-the-dreams-of-educated-youth-the-government-must-provide-jobs-to-15-lakh-people-within-a-year-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">7169f552-cdbf-40d9-95d9-7e8fb39bd296</guid><pubDate>Fri, 24 Jul 2026 07:11:08 +0000</pubDate><atom:updated>2026-07-24T07:11:08.402Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/oslmfg24/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/oslmfg24/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“கர்நாடக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 72,186 பணியிடங்களை 6 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும் என்று அம்மாநில முதல்-அமைச்சர் ஆணையிட்டிருப்பதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் போர்க்கால வேகத்தில் ஆள்தேர்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் அனைத்து காலி இடங்களும் நிரப்பப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த த.வெ.க., இன்று வரை ஒரே ஒரு புதிய ஆள்தேர்வு அறிவிக்கையைக் கூட வெளியிடாதது இளைஞர்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>கர்நாடகத்தில் அரசுத் துறைகளில் காலியிடங்கள் அதிகரித்து வந்ததைத் தொடர்ந்து பல்வேறு துறைகளில்  மொத்தம் 72,186 பணியிடங்களை அடுத்த 6 மாதங்களில் நிரப்ப வேண்டும் என்று அம்மாநில முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆணையிட்டுள்ளார். அதற்கான நிதித்துறை ஒப்புதல்  சில நாள்களுக்கு முன் வழங்கப்பட்ட நிலையில், 15 ஆள்தேர்வு அறிவிக்கைகள் கடந்த சில நாள்களில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளன. இதனால் அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருந்த கர்நாடக இளைஞர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அதேபோன்ற மகிழ்ச்சி தங்களுக்கு எப்போது கிடைக்கும்? என்பது தான் தமிழக இளைஞர்களின் வினாவாக உள்ளது.</p> <p>இந்தியாவில் அரசுத்துறைகளில் அதிக காலி பணியிடங்களைக் கொண்டுள்ள மாநிலங்களில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தரவுகளை தமிழகத்தை அடுத்தடுத்து ஆட்சி செய்த எந்த அரசும்  வெளியிடாத நிலையில், அரசுத்துறை, பொதுத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் ஆகிய  3 பிரிவுகளிலும் சேர்த்து குறைந்தபட்சம் 6 லட்சம் பணியிடங்கள் காலியாக இருக்கும் என்று அரசு பணியாளர் அமைப்புகள் தெரிவித்திருக்கின்றன. இதற்கு காரணம் அரசு பணிகளுக்கு ஆள்தேர்வு நடத்தப்படாதது தான்.</p><p>2021&amp;ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள மூன்றரை லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்; 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும்; அதன் மூலம் ஐந்தரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், 5 ஆண்டுகளில் 50 ஆயிரத்திற்கும் குறைவானவர்களுக்கு மட்டும் தான் நிரந்தர அரசுப் பணிகள் வழங்கப்பட்டன. உறுதியளிக்கப்பட்ட 2 லட்சம் புதிய பணியிடங்களில் ஒரே ஒரு  பணியிடம் கூட ஏற்படுத்தப்படவில்லை. அதுமட்டுமின்றி, ஐந்தாண்டுகளில் ஒன்றரை முதல் 2 லட்சம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற நிலையில், அதனால் ஏற்பட்ட காலியிடங்களும் கூட முழுமையாக நிரப்பப்படவில்லை. அதன் விளைவு தான் அரசுத் துறைகளில் காலியிடங்களின் எண்ணிக்கை இந்த அளவுக்கு அதிகரித்துள்ளது.</p><p>தி.மு.க. ஆட்சியில் உறுதியளிக்கப்பட்டவாறு அரசு வேலைகள் வழங்கப்படாததால், திமுக அரசுக்கு எதிராக இளைஞர்களிடம் மிகப்பெரிய கொந்தளிப்பு நிலவியது. அதைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்குடன், தவெக ஆட்சிக்கு வந்தால், அரசுத் துறைகளில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களும் விரைந்து நிரப்பப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி (எண்: பொருள்/4/ஏ/3)  அளிக்கப்பட்டிருந்தது. அதை நம்பி இளைஞர்கள் வாக்களித்த நிலையில், அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய கடமை த.வெ.க. அரசுக்கு உண்டு.</p><p>ஆனால், த.வெ.க. ஆட்சிக்கு வந்த இரண்டரை மாதங்களில் அரசுத்துறை காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக ஒரே ஒரு புதிய ஆள்தேர்வு அறிவிக்கை கூட வெளியிடப்படவில்லை. டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு வெளியிட்ட 2026-க்கான ஆண்டு திட்டத்தின்படி, பட்டப்படிப்பை தகுதியாகக் கொண்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் - 461 இடங்கள், பட்டயப்படிப்பை தகுதியாகக் கொண்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் - 839 இடங்கள்,  தொகுதி 1 பணிகள் - 26 என 1326 பணியிடங்களுக்கு மட்டும் தான் மூன்று ஆள்தேர்வு அறிவிக்கைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.</p><p>தமிழக அரசுத் துறைகளில் இன்றைய நிலையில் 6 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக வைத்துக் கொண்டால், அடுத்த ஐந்தாண்டுகளில் குறைந்தது 2 லட்சம் பணியிடங்கள் காலியாகக் கூடும். அவற்றையும் சேர்த்தால் புதிய அரசு ஐந்தாண்டுகளில் 8 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டியிருக்கும். தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து 31.38 லட்சம் பேரும், பதிவு செய்யாமல் ஒரு கோடி பேரும் அரசு வேலைக்காக காத்திருக்கும் நிலையில், இது தவிர்க்க முடியாதது ஆகும். அதன்படி பார்த்தால் ஆண்டுக்கு சராசரியாக ஒன்றரை லட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட வேண்டியிருக்கும்.</p><p>இதைக் கருத்தில் கொண்டு, அடுத்த ஓராண்டில் 1.50 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அதற்கான அறிவிப்பை வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ள 2026-27ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு வெளியிட வேண்டும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>இலங்கை கடற்படையினர் பிடித்து சென்ற மீனவர்களை மீட்டுத் தருக - முதல்-அமைச்சருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/communist-party-of-india-appeals-to-the-chief-minister-to-release-the-fishermen-captured-by-the-sri-lankan-navy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/communist-party-of-india-appeals-to-the-chief-minister-to-release-the-fishermen-captured-by-the-sri-lankan-navy#comments</comments><guid isPermaLink="false">7baccec4-9cc1-4f2e-8587-621e1e1c7d17</guid><pubDate>Fri, 24 Jul 2026 07:00:38 +0000</pubDate><atom:updated>2026-07-24T07:00:38.630Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Sri Lankan Navy,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி,இலங்கை கடற்படையினர்,கைது Arrest,fishermen- மீனவர்கள்,மு. வீரபாண்டியன்,M. Veerapandian</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/v23gsdq8/m-veerapandian.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/v23gsdq8/m-veerapandian.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>இராமேஸ்வரம்  துறைமுகத்தில் இருந்து 469 விசைப்படகுகளில், மீனவர்கள் நேற்று முன்தினம் (22.07.2026) கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். இவர்களில் 9 <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20">மீனவர்கள் </a>கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர் 9 மீனவர்களையும் கைது செய்து, அவர்களது உடைமைகளையும் பறிமுதல் செய்து கொண்டு சென்றுள்ளனர்.</p><h2>மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும்</h2><p>இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மாலிக்தினார், கயாஸ், செந்தில், கிரித்திசன், பிரவீன், அருள்லயோலா, சவுரி வினோத்வின், தேவசகாயம், இன்பென்ட்  பிரசாத் ஆகிய 9 மீனவர்களையும் விடுவித்து, அவர்களது உடைமைகளையும் மீட்டு தர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தை வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதுடன், தமிழ்நாடு முதல்-அமைச்சர், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மீனவர்களை விடுதலை செய்ய உதவ வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணை விவகாரம்: 3-ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mekedatu-dam-issue-chief-minister-vijay-to-visit-karnataka-on-the-3rd</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mekedatu-dam-issue-chief-minister-vijay-to-visit-karnataka-on-the-3rd#comments</comments><guid isPermaLink="false">9bcd6d7d-d643-4122-83cf-3cbc264f3d5b</guid><pubDate>Fri, 24 Jul 2026 06:42:56 +0000</pubDate><atom:updated>2026-07-24T06:42:56.191Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Karnataka,கர்நாடகா,மேகதாது அணை,மேகதாது,Mekedatu dam,Mekedatu Dam Issue,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/9iimo8u4/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/9iimo8u4/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>மேகதாது அணை</h2><p>காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகம் எடுக்கும் முயற்சிகளுக்கு தமிழ்நாடு அரசு எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யவில்லை. </p><p>இதனால் கே.ஆர்.எஸ். அணை உள்ளிட்ட காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள அணைகள் நிரம்பவில்லை. குடிநீர் தேவைக்கு மட்டுமே நீரை பயன்படுத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அணைகளுக்கு நீர்வரத்து இல்லாததால், காவிரியில் தமிழகத்துக்கு தேவையான நீரை திறந்து விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்திலும், 'பாசனத்திற்காக தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது' என கர்நாடக அரசு தெரிவித்துவிட்டது.</p><h2>அழைப்பு</h2><p>இந்த நிலையில், கர்நா டகா - தமிழகம் இடையில் உள்ள நீண்ட கால பிரச்சினையான காவிரி நதி நீர் பங்கீடு பற்றியும்; மேகதாதுவில் அணை கட்டுவது பற்றியும் விவாதிக்க கர்நாடக அரசின் நீர்ப்பாசன துறை அதிகாரிகள், தமிழக அரசின் நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.</p><p>அதில், ‘நதிநீர் பங்கீடு, மேகதாது அணை பற்றி பெங்களூரில் வருகிற 3-ம் தேதி, கர்நாடக - தமிழக முதல்-மந்திரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தலாம்' என, அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாகவும் இதற்கு தமிழக அரசிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்றும் கூறப்பட்டது.</p><h2>கர்நாடகம் செல்லும் விஜய்</h2><p>இந்த நிலையில், மேகதாது அணை விவகராம் தொடர்பாக முதல்-அமைச்சர் விஜய் வருகிற 3-ம் தேதி கர்நாடகம் செல்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வேளாண்துறை அமைச்சர் வினோத் கூறுகையில், “கர்நாடகாவில் 3 -ம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்கிறார். கூட்டத்தில் தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீரை காவிரியில் திறக்க வலியுறுத்தப்படும் மேகதாது அணையை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம், அது நமது உரிமை.</p><p>மழை பெய்யவில்லை. அதனால், காவிரியில் தண்ணீர் திறக்கவில்லை என்று கர்நாடகா தரப்பில் சொல்கிறார்கள்; இருந்தாலும், நமது உரிமைக்காக முதல்-அமைச்சர் விஜய் காவிரி தண்ணீரை கேட்டு பெறுவார் என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>‘காவல் மரணங்கள் தொடர்வதை அரசு அனுமதிக்கக் கூடாது’ - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-government-must-not-allow-custodial-deaths-to-continue-communist-party-of-india</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-government-must-not-allow-custodial-deaths-to-continue-communist-party-of-india#comments</comments><guid isPermaLink="false">74c46278-9378-49bc-ac11-23b6467c9b54</guid><pubDate>Fri, 24 Jul 2026 06:38:20 +0000</pubDate><atom:updated>2026-07-24T06:38:20.662Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Communist Party of India,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி,காவல் மரணம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/ijn66a3b/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/ijn66a3b/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“சில வாரங்களுக்கு முன்பு  கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளி சபரிவர்மன், காவல் துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட அதிர்வலைகள் இன்னும் அடங்கவில்லை. அதற்குள் தூத்துக்குடி காவல்துறையினர் கடந்த 17.07.2026 ஆம் தேதி விசாரணைக்கு அழைத்துச் சென்ற அருணாசலம் என்பவரின் காவல் மரணம் நிகழ்ந்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. </p><p>காவல்துறையினர் விசாரணைக்கு ஒருவரை அழைத்துச் செல்ல வேண்டும் எனில், என்னென்ன விதிமுறைகள் கடைப்பிடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டும், ஐகோர்ட்டுகளும் பல தீர்ப்புகளில் வலியுறுத்தியுள்ளன. பி.என்.எஸ்.எஸ்.  சட்டத்தின் சில பிரிவுகளும் விசாரணை நடைமுறை குறித்து வழிகாட்டியுள்ளன.  </p><p>இவைகள் எதனையும் கருத்தில் கொள்ளாமல், காவல் துறையினர் அதிகார அத்துமீறலில் தொடர்ந்து  ஈடுபடுவதும், இதில் மனித உயிர்கள் பலியாவதுமான கொடூர சம்பவங்கள் நிகழ்ந்து வருவதும் கவலையளிக்கிறது. அது, தமிழ்நாடு காவல்துறை தனது துறையை வழிநடத்தும் நிர்வாகத் திறனை இழந்து விட்டதோ? என்ற ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. </p><p>சாத்தான்குளம் காவல் துறையினரால் தந்தையும், மகனும் கொல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பு காவல்துறையின் மனப் போக்கிலும், நடைமுறையிலும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதையே கன்னியாகுமரி, தூத்துக்குடி சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன. விசாரணைக்கு அழைத்துச் செல்வோர் உயிருக்கும், கண்ணியத்திற்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் காவல்துறையினருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க வேண்டும். </p> <p>தவறு செய்த காவல் துறையினர் மீது மேலும் கடுமையான நடவடிக்கை எடுத்து, தண்டனையும் விதிக்க தக்க விதிமுறைகள் உருவாக்க வேண்டும். </p><p>காவல் மரணங்களை முற்றிலுமாக தடுக்கும் வகையில் காவல்துறை நிர்வாகத்தை சீரமைக்க தமிழ்நாடு முதல்-அமைச்சர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதுடன், தூத்துக்குடி காவல் மரணத்தில் பலியான அருணாசலம் குடும்பத்திற்கு இழப்பீடும், நீதியும் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறது.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்த வழக்கு: மேலும் இருவர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/private-school-administrators-defrauded-of-rs-100-crore-two-more-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/private-school-administrators-defrauded-of-rs-100-crore-two-more-arrested#comments</comments><guid isPermaLink="false">92eff580-b502-4758-9ad9-6d1ce6b080b7</guid><pubDate>Fri, 24 Jul 2026 06:28:47 +0000</pubDate><atom:updated>2026-07-24T06:28:47.525Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>fraud case,தனியார் பள்ளி,private school,மோசடி வழக்கு</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/neck3ysg/13.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/neck3ysg/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>’பி.டி.அரசகுமார் மற்றும் அவருடன் சேர்ந்த சிலர் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்' என்ற பெயரில் பதிவு செய்யப்படாத சங்கத்தை நடத்தி வந்துள்ளனர். இவர்கள் தனியார் பள்ளிகளில் நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தர உயர்வு, டிடிசிபி மற்றும் சிஎம்டிஏ ஒப்புதல், ஆர்டிஇ உள்ளிட்ட அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பள்ளி நிர்வாகிகளிடம் சுமார் ரூ.100 கோடி வசூலித்து மோசடி செய்ததாக கூறி தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலர் டி.சி.இளங்கோவன் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.</p><p>இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட திமுக பிரமுகரான பி.டி.அரசகுமார் கடந்த ஜூன் 27-இல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. விசாரணையில், 2024 முதல் பள்ளி நிர்வாகிகளைச் சந்தித்து பணம் வசூலித்தது தெரிய வந்தது. இதையடுத்து, இந்த வழக்கில் தொடர்புடைய 61 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதுவரை பாதிக்கப்பட்ட 120 பள்ளி நிர்வாகிகள் உள்பட 190 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. </p><p>தொடர் விசாரணையில், மதுரை, சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் (எ) ராஜா (39), திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த சுரேஷ் (49) ஆகியோர் அரசகுமாருக்கு உடந்தையாக இருந்து, பள்ளி நிர்வாகிகளிடம் பணம் வசூலித்தது தெரிய வந்தது. இருவரையும் போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த மோசடியில் தொடர்புடைய மேலும் சிலரைத் தேடும் பணியில் போலீஸார் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>இறுதி வடிவம் பெறும் தமிழக பட்ஜெட் - தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெறுமா...?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-budget-taking-final-shape-will-election-promises-be-fulfilled</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-budget-taking-final-shape-will-election-promises-be-fulfilled#comments</comments><guid isPermaLink="false">326e9e73-a508-4793-b86a-e1c5813fbb89</guid><pubDate>Fri, 24 Jul 2026 06:02:33 +0000</pubDate><atom:updated>2026-07-24T06:02:33.609Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,விஜய்,தமிழக சட்டசபை,TN Assembly,பட்ஜெட் தாக்கல்,தேர்தல் வாக்குறுதி,தமிழக பட்ஜெட்,TN Budget,பட்ஜெட் 2026,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,Chief Minister Vijay,தவெக அரசு,TVK Government,Budget 2026</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/2k8wwjjj/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/2k8wwjjj/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><h2>தவெக அரசு மீது எதிர்பார்ப்பு</h2><p>தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று த.வெ.க. அரசு ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. 59 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து புதிதாக ஆட்சி அரியணை ஏறியுள்ள த.வெ.க. அரசு மீது பல்வேறு எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது. </p><p>இந்த நிலையில், 2026-2027-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் ஆகஸ்டு 5-ந் தேதி (புதன்கிழமை) சட்டசபையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இதுவென்பதால், பொதுமக்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. </p><h2>தேர்தல் அறிக்கை</h2><p>தேர்தலுக்கு முன்பு வெளியிடப்பட்ட த.வெ.க. தேர்தல் அறிக்கையில், "குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்.ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு ஒரு பவுன் தங்கம் மற்றும் உதவி வழங்கப்படும். விலையில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும். ரேஷன் பொருட்கள் வீடு தேடி விநியோகிக்கப்படும். வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.4 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்" என்பது உள்பட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.</p><h2>துறை வாரியாக ஆலோசனை</h2><p>இந்த நிலையில், முதல் பட்ஜெட்டை முத்தான பட்ஜெட்டாக தாக்கல் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில், கடந்த 20 நாட்களுக்கு மேலாக, துறை வாரியாக ஆலோசனை கூட்டங்களை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் நடத்தினார். ஒவ்வொரு துறை சார்பிலும் பட்ஜெட்டில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்பது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்பட்டது.</p><p>தற்போது, இந்த ஆலோசனை கூட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 2026-2027-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இறுதி வடிவம் பெற்று வருகிறது. இந்தப் பணி முடிவடைந்ததும், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யிடம் ஒப்புதல் பெறப்படும்.</p><h2>இறுதிக்கட்ட பணிகள் மும்முரம்</h2><p>பட்ஜெட் தாக்கல் செய்ய இன்னும் 11 நாட்களே இடைவெளி இருப்பதால், இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றது. நிதித்துறை அதிகாரிகள் அந்தப் பணியில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளனர். தற்போதைய அரசுக்கு கடன் சுமை தான் பெரிய தலைவலியாக உள்ளது. ரூ.13 லட்சம் கோடிக்கு மேல் கடன் இருக்கும் சூழ்நிலையில், கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியிலேயே பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.</p><h2>பட்ஜெட் எப்படி இருக்கும்?</h2><p>கடந்த ஆண்டு (2025-26) தி.மு.க. ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், அரசின் மொத்த செலவினம் ரூ.4,39,293 கோடியாகவும், வருவாய் வரவுகள் ரூ.3,31,569 கோடியாகவும் இருந்தது. அதாவது, நிதி பற்றாக்குறை ரூ.1,06,968 கோடி என்ற அளவில் இருந்தது.</p><p>இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட 2026-27-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில், மொத்த செலவினம் ரூ. 4,67,264 கோடியாகவும், வருவாய் வரவுகள் ரூ.3,44,575 கோடியாகவும் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு இருந்தது. நிதி பற்றாக்குறை ரூ.1.21 லட்சம் கோடியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.</p><p>எனவே, இந்த கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் த.வெ.க. அரசு எப்படி சிறப்பான பட்ஜெட்டை தாக்கல் செய்யப்போகிறது என்று ஆண்ட கட்சிகள் மட்டுமல்லாது, நாட்டு மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>திருப்பூர்: காவலர் குடியிருப்பில் பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruppur-female-police-officer-commits-suicide-by-hanging-herself-in-police-quarters</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruppur-female-police-officer-commits-suicide-by-hanging-herself-in-police-quarters#comments</comments><guid isPermaLink="false">186763c6-8d8c-4207-89ee-fea0e86d3660</guid><pubDate>Fri, 24 Jul 2026 06:01:49 +0000</pubDate><atom:updated>2026-07-24T06:01:49.706Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்,பெண் போலீஸ்,female police officer,police station,Suicide by hanging,தூக்குப்போட்டு தற்கொலை,police investigation,போலீசார் விசாரணை,காவலர் குடியிருப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/i7lx0bxd/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெண் போலீஸ் ரஞ்சனி ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/i7lx0bxd/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர், </p><p>திருப்பூர் ஆயுதப்படையில் பணிபுரிந்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D">பெண் போலீஸ்</a>, காவலர் குடியிருப்பில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">தூக்குப்போட்டு தற்கொலை</a> செய்துகொண்டதற்கு பணிச்சுமை காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>பெண் போலீஸ்</h2><p>திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தைச் சேர்ந்த ராஜாவின் மகள் ரஞ்சனி (வயது24). கடந்த 2022-ம் ஆண்டு போலீஸ் வேலையில் சேர்ந்தார். கடந்த 4 ஆண்டுகளாக திருப்பூர் ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார். அங்குள்ள நல்லூர் காவலர் குடியிருப்பில் தங்கி பணிபுரிந்து வந்த ரஞ்சனி, நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு சென்றார். பின்னர் 10.30 மணியளவில் வீட்டுக்கு வந்த அவர் திடீரென சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். </p><h2>ஆவேசமாக பேசினார்</h2><p>அதற்கு முன்னதாக, குடியிருப்புக்கு திரும்பிய ரஞ்சனி, யாருடனோ செல்போனில் ஆவேசமாகப் பேசியபடி வந்துள்ளார். பின்னர், தன் அறைக்குச் சென்று கதவை உள்புறமாகப் பூட்டிக்கொண்டவர், முன் பழகிய பெண் போலீஸ் ஒருவருக்குத் தொடர்பு கொண்டு தற்கொலை செய்யப்போவதாகக் கூறியுள்ளார். இதனால் பதறிய அந்த பெண் போலீஸ், குடியிருப்புவாசிகளுக்குத் தகவல் தெரிவித்தார். அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ரஞ்சனி தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். </p><h2>பணிச்சுமை காரணமா?</h2><p>இந்த சம்பவம் குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரஞ்சனியின் அறை அலங்கோலமாகக் கிடந்தது. அங்கிருந்த பொம்மைகள் மற்றும் பொருட்கள் உடைக்கப்பட்டிருந்தன. இதனால் அவர் கடும் மன உளைச்சலில் இருந்தது தெரியவந்தது.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>ரஞ்சனியின் செல்போன் பூட்டப்பட்டுள்ளதால், அதை ஆய்வு செய்ய நிபுணர்களின் உதவி நாடப்பட்டுள்ளது. அவருடன் ஒரே ஆண்டில் பணியில் சேர்ந்த ஒரு காவலருடன் அவருக்குப் பழக்கம் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், காதல் தகராறு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதா? அல்லது பணிச்சுமையா? என்ற கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்  ரமேஷ் உத்தரவின் பேரில் கோவில் ஊழியர்கள் இருவர் சஸ்பெண்ட்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-temple-employees-suspended-on-orders-of-hindu-religious-endowments-minister-ramesh</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-temple-employees-suspended-on-orders-of-hindu-religious-endowments-minister-ramesh#comments</comments><guid isPermaLink="false">a25a7555-62db-4b3b-9aac-a5f8e0a511cb</guid><pubDate>Fri, 24 Jul 2026 05:42:51 +0000</pubDate><atom:updated>2026-07-24T05:42:51.729Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சஸ்பெண்ட்,கோவில்,Temple,employees,suspended,ஊழியர்கள்,Minister ramesh,அமைச்சர் ரமேஷ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/qscn263g/minister-ramesh.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/qscn263g/minister-ramesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் உத்தரவின்பேரில் சமயபுரம் கோவில் அலுவலர், வடபழனி கோவில் இளநிலை உதவியாளர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.</p><p>இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக ரமேஷ் பொறுப்பேற்றதில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கோவிலுக்கும் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் வடபழனி கோவில் இளநிலை உதவியாளர், சில நிர்வாக ஒழுங்கின்மைகளில் ஈடுபட்டதாகவும் சமயபுரம் கோவில் அலுவலர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் வாங்கியதாகவும் புகார்கள் எழுந்தது.</p><h2>சஸ்பெண்ட்</h2><p>இதனையடுத்து  இந்துசமய அறநிலையத்துறை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D">அமைச்சர் ரமேஷ்</a>  உத்தரவின் பேரில் அவர்கள் இருவரையும் சஸ்பெண்ட் செய்துள்ளனர். கோவில்களில் முறைகேடுகளைத் தடுத்து, பக்தர்களுக்கான அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்களை மேம்படுத்த இந்த நடவடிக்கைகள் தொடர்கின்றன.</p>]]></content:encoded></item><item><title>கள்ளக்குறிச்சி: மின்சாரம் தாக்கி விவசாயி பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kallakurichi-farmer-dies-of-electrocution</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kallakurichi-farmer-dies-of-electrocution#comments</comments><guid isPermaLink="false">dc446218-d694-483c-b081-d1aa6992c2ab</guid><pubDate>Fri, 24 Jul 2026 05:42:21 +0000</pubDate><atom:updated>2026-07-24T05:42:21.486Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கள்ளக்குறிச்சி,Kallakurichi,மின்சாரம் தாக்கி,Farmer dies,விவசாயி பலி,electrocution</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-06-14/b1tzt8gp/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ மின்சாரம் தாக்கி பலி]]></media:title><media:description type="html"><![CDATA[ மின்சாரம் தாக்கி விவசாயி பலி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-06-14/b1tzt8gp/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சி,</p><p>கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலியானார்.</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கள்ளக்குறிச்சி மாவட்டம்</a> சங்கராபுரம் அருகே உள்ள மேலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு. விவசாயியான இவர், இன்று (வெள்ளிக்கிழமை) காலை வழக்கம்போல் தனது விவசாய நிலத்திற்கு வேலை செய்வதற்காகச் சென்றார். அப்போது, வயல்வெளியில் உயர் அழுத்த மின்சாரக் கம்பி ஒன்று எதிர்பாராத விதமாக அறுந்து கிடந்தது. </p><h2>விவசாயி பலி</h2><p>அதனை அறியாத <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விவசாயி </a>நிலத்தில் நடந்து சென்றபோது தரையில் கிடந்த அந்த மின்சாரக் கம்பியை எதிர்பாராமல் மிதித்தார். இதனால் பயங்கரமான உயர் மின்னழுத்த மின்சாரம் அவர் மீது பாய்ந்ததில், தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அந்த வழியாகச் சென்ற மற்ற விவசாயிகள், ராமு உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.</p><p>இதையடுத்து உடனடியாக மின்வாரியத்திற்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அப்பகுதியில் மின் இணைப்பு உடனடியாகத் துண்டிக்கப்பட்டது. மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்த சங்கராபுரம் போலீசார், உயிரிழந்த ராமுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விவசாய நிலத்தில் மின்கம்பி அறுந்து கிடந்தது, மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் மேலப்பட்டு கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜி நீதிமன்றம் வருகை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/horse-trading-case-senthil-balaji-arrives-at-court</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/horse-trading-case-senthil-balaji-arrives-at-court#comments</comments><guid isPermaLink="false">e00ef719-1941-42b3-a84a-6c510150a650</guid><pubDate>Fri, 24 Jul 2026 05:39:31 +0000</pubDate><atom:updated>2026-07-24T05:39:31.730Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Senthil Balaji,செந்தில் பாலாஜி,குதிரை பேர வழக்கு,Horse-trading case</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/pcj9d221/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/pcj9d221/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தவெக எம்.எல்.ஏ வை பேரம் பேசி ஆட்சி கவிழ்க்க முயன்றதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமாருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியது. 25 ஆயிரம் ரூபாய் சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான இருநபர் ஜாமீனும் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. மேலும், மறு உத்தரவு வரும் வரை காலையும், மாலையும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராக நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.</p><p>இதற்கிடையே, போலீசார் தங்களை துன்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் இருவரும் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணையின்போது, “முன் ஜாமின் வழங்கப்பட்டு இதுவரை இருவரும் சரணடையவில்லை; சரணடையாத பட்சத்தில் துன்புறுத்தக்கூடாது என எப்படி கோர முடியும்? என நீதிபதி கேள்வி எழுப்பியதுடன், இருவரது மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். </p><p>இந்த நிலையில், நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், பிணைத்தொகை செலுத்துவதற்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு இன்று வருகை தந்தார். தனது வழக்கறிஞர்களுடன் செந்தில்பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கு தொடர்பான அடுத்தகட்ட நடைமுறைகள் நடைபெற்று வருகின்றன. </p> ]]></content:encoded></item><item><title>பிரேத பரிசோதனை நிறைவு: தூத்துக்குடி வாலிபரின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/postmortem-completed-arunachalams-body-handed-over-to-family</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/postmortem-completed-arunachalams-body-handed-over-to-family#comments</comments><guid isPermaLink="false">262d4631-d58c-4f0b-bcb5-d99b8879c1b8</guid><pubDate>Fri, 24 Jul 2026 05:33:27 +0000</pubDate><atom:updated>2026-07-24T05:33:27.639Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,Thoothukudi,தூத்துக்குடி,police station,போலீஸ் நிலையம்,கிரைம் செய்திகள்,பிரேத பரிசோதனை,post mortem</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/vx80ktq6/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/vx80ktq6/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><h2>பிரேத பரிசோதனை</h2><p>தூத்துக்குடியில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த வாலிபர் அருணாசலத்தின் உடலுக்கு இன்று பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் விஜய ராஜசேகர் முன்னிலையில், காலை 7.10 மணியளவில் அருணாசலத்தின் உடலுக்கு பிரேத பரிசோதனை தொடங்கியது. 3 மாவட்ட சிறப்பு மருத்துவர்கள் பிரேத பரிசோதனையை மேற்கொண்டனர்.</p><p>சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் நடந்த பிரேதப் பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. இதனை தொடந்து பிரேதப் பரிசோதனை நிறைவடைந்ததையடுத்து குற்றவியல் நீதிமன்ற நடுவரின் விசாரணைக்குப் பிறகு உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும் தனது மகன்&nbsp;கொடுத்த வாக்குமூலத்தின்படி 4 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாஜிஸ்திரேட்டிடம் அருணாசலத்தின் தாயார் பரமேஸ்வரி எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். இதுகுறித்து குற்றவியல் நீதித்துறை நடுவர் விஜய ராஜசேகர் விசாரணை நடத்தி வருகிறார்.</p><h2>வழக்கின் முழுவிவரம்:-</h2><p><strong>மது விற்பனை</strong></p><p>தூத்துக்குடி அமுதா நகரை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகன் அருணாச்சலம் (வயது 24). இவர், தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வந்தார். கடந்த 17-ந் தேதி தூத்துக்குடி 3-ம் மைல் பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக அருணாச்சலத்தை தனிப்பிரிவு போலீசார் பிடித்து தென்பாகம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.</p><p>அங்கு அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 120 மதுப்பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அருணாச்சலத்தை போலீஸ் நிலைய 'லாக் - அப்'பில் அடைத்து வைத்து இருந்தனர். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அருணாச்சலத்தை போலீசார் மீட்டு அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.</p><h2><strong>வாலிபர் சாவு</strong></h2><p>சிறிது நேரத்தில் அவரது குடும்பத்தினர் தென்பாகம் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அப்போது அருணாச்சலம் போலீஸ் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அங்கிருந்து அருணாச்சலத்தை அவரது பெற்றோர் அழைத்துச்சென்று தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அதிகாலையில் அருணாச்சலம் பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p>அவரது உடலை உடனடியாக போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இதையறிந்த அருணாச்சலத்தின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறை அருகே திரண்டனர். அருணாச்சலம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, இறப்பதற்கு முன்பு தன்னை 4 போலீசார் தாக்கியதாக அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தியது.</p><h2>உறவினர்கள் போராட்டம்</h2><p>இதனைக்கண்ட குடும்பத்தினர், போலீசார் தாக்கியதில் தான் அருணாச்சலம் இறந்துவிட்டார். இதில் சம்பந்தப்பட்ட போலீ சார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.முறையாக விசாரணை நடத்த வேண்டும். மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்ற உடலை உடனே மருத்துவமனைக்கு திரும்ப கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு அருணாச்சலம் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் மீண்டும் பிணவறைக்கு கொண்டுவர போலீசார் சம்மதித்தனர். இதனால் சுமார் 30 நிமிடங்கள் நடந்த போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்ட அருணாச் லத்தின் உடல் மீண்டும் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>காஞ்சீபுரத்தில் 22 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/22-kg-of-ganja-seized-in-kancheepuram-youth-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/22-kg-of-ganja-seized-in-kancheepuram-youth-arrested#comments</comments><guid isPermaLink="false">8f42f803-ce12-4186-8bf7-c4fcfc892e6c</guid><pubDate>Fri, 24 Jul 2026 05:30:17 +0000</pubDate><atom:updated>2026-07-24T05:30:17.569Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Youth arrested,வாலிபர் கைது,Seizure,பறிமுதல்,Police raid,sale of ganja,கஞ்சா விற்பனை,Kancheepuram,காஞ்சீபுரம்,போலீசார் சோதனை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/7wek8h9l/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கஞ்சா விற்ற வாலிபர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/7wek8h9l/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>காஞ்சீபுரம், </p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E2%80%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">​காஞ்சீபுரம்</a> பழைய ரெயில் நிலையம் அருகே <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88">கஞ்சா விற்பனை</a> செய்த சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த வாலிபரை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.</p><h2>காஞ்சீபுரத்தில் கஞ்சா விற்பனை</h2><p>​​ஆன்மிக நகராகவும், பட்டு நெசவுத் தொழிலின் மையமாகவும் விளங்கும் காஞ்சீபுரத்தில், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், தொழிற்சாலை தொழிலாளர்களும் வந்து செல்கின்றனர். இதனால் இங்குள்ள ரெயில் நிலையங்களில் எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். </p><h2>சென்னை வாலிபர் கைது</h2><p>​இந்த நிலையில், காஞ்சீபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பழைய ரெயில் நிலையம் அருகே வாலிபர் ஒருவர் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், அங்குள்ள புதர் பகுதியில் மறைந்திருந்த வாலிபரை மடக்கிப் பிடித்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்தனர். பிடிபட்ட வாலிபரை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், அவர் சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த கிரீஸ் (வயது 19) என்பது தெரியவந்தது.</p><h2>22 கிலோ கஞ்சா பறிமுதல்</h2><p>மேலும் போலீசார் மேற்கொண்ட ​​விசாரணையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வரும் கிரீஸ், காஞ்சிபுரம் ரெயில் நிலையப் பகுதிகளில் மறைந்திருந்து, அங்கு வரும் தொழிற்சாலை ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்ததை அந்த வாலிபர் ஒப்புக்கொண்டார். அதை தொடர்ந்து, அந்த வாலிபரிடம் இருந்த 22 கிலோ எடையுள்ள கஞ்சா கைப்பற்றப்பட்டது.</p><h2>போலீசார் தீவிர விசாரணை</h2><p>கைது செய்யப்பட்ட கிரீஸ், காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். காஞ்சீபுரத்தில் ஒரே நேரத்தில் 22 கிலோ கஞ்சா பிடிபட்டது இதுவே முதல்முறை ​​என்பதால் இந்த சம்பவத்தில் கிரீஸுக்கு கஞ்சா சப்ளை செய்த ஆந்திராவைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகள் யார்? இதன் பின்னணியில் செயல்படும் நெட்வொர்க் என்ன? என்பது குறித்து சைபர் கிரைம் மற்றும் தனிப்படை போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>திருப்பத்தூர்: குடும்பத் தகராறில் மனைவி அடித்துக் கொலை; கணவர் தலைமறைவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirupathur-wife-beaten-to-death-amidst-family-dispute-husband-absconding</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirupathur-wife-beaten-to-death-amidst-family-dispute-husband-absconding#comments</comments><guid isPermaLink="false">1bc6e6e9-630e-4076-8751-7cadbbf78124</guid><pubDate>Fri, 24 Jul 2026 05:07:45 +0000</pubDate><atom:updated>2026-07-24T05:07:45.068Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>குடும்ப தகராறு,wife murder,மனைவி கொலை,Tirupathur,கணவர் தலைமறைவு,husband absconding</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/by7ha3af/9.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ போலீசார் விசாரணை]]></media:title><media:description type="html"><![CDATA[ திருப்பத்தூரில் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவர் தலைமறைவு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/by7ha3af/9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பத்தூர்,</p><p>திருப்பத்தூர் மாவட்டத்தில் குடும்பத் தகராறில் மனைவியை கணவன் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">திருப்பத்தூர் மாவட்டம்</a>, ஆம்பூரை அடுத்த உடையராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவருடைய மனைவி ஸ்ரீதேவி. இவர்களுக்குள் கடந்த சில நாட்களாக கடுமையான<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> குடும்பத் தகராறு </a>ஏற்பட்டு வந்ததது. </p><h2>மனைவி அடித்துக் கொலை</h2><p>இந்நிலையில், நேற்று இரவு இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்த பாபு, தனது மனைவி ஸ்ரீதேவியை கொடூரமாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த ஸ்ரீதேவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி இறந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாபு, உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகினார்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இக்கொலை சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் ஆம்பூர் கிராமிய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஸ்ரீதேவியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.</p><p>மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள பாபுவைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இக்கொலை சம்பவம் உடையராஜபாளையம் பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை போக்குவரத்து சிக்னல்களில் அடிக்கடி கோளாறு: சாலைகளில் நெரிசல் - என்ன காரணம்.?  </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/frequent-malfunctions-in-chennais-traffic-signals-road-congestion-what-is-the-reason</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/frequent-malfunctions-in-chennais-traffic-signals-road-congestion-what-is-the-reason#comments</comments><guid isPermaLink="false">f2fcc537-f12e-48fc-a760-1dcddfcb11cc</guid><pubDate>Fri, 24 Jul 2026 05:05:49 +0000</pubDate><atom:updated>2026-07-24T05:05:49.244Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சிக்னல்கள்,சென்னை போக்குவரத்து,signals,Chennai Traffic</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/l333410e/11.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/l333410e/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தலைநகர் சென்னையில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து சிக்னல் முடக்கத்தால், சாலைகளில் நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்தில் இடியாப்ப சிக்கல் ஏற்படுகிறது. </p><h2>300 சிக்னல்கள்</h2><p>சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு உள்பட்ட சாலை சந்திப்புகளில் 300 சிக்னல்கள் உள்ளன. தானியங்கி முறையில் இயங்கும் இந்த சிக்னல்கள், வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் செல்வதற்கு ஏற்ப, குறிப்பிட்ட வினாடிகள் இடைவெளியில் தானாகவே இயங்கி, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகின்றன. </p><p>ஆனால், தற்போது பல இடங்களில் உள்ள சிக்னல்கள் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, தானியங்கி முறையில் இயங்குவதில்லை. இதனால், அங்குள்ள போக்குவரத்து போலீசாரே குறிப்பிட்ட நேர இடைவெளியில் சிக்னல்களை தனிப்பட்ட முறையில் இயக்கும் நிலை உள்ளது. </p><h2>பராமரிப்பு ஒப்பந்தம் முடிவு</h2><p>இதுபோன்ற நேரங்களில், சிக்னல்களில் காத்திருக்க வேண்டிய வினாடிகளை காட்டும் டிஜிட்டல் பலகையும் இயங்குவதில்லை. இதனால், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். </p><p>நெரிசல் மிகுந்த காலை மற்றும் மாலை நேரங்களில் பல முக்கிய சிக்னல்களில் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நிற்கும் நிலை உள்ளது. தானியங்கி முறையில் சிக்னல்கள் இயங்காமல் போனதற்கு பராமரிப்பு ஒப்பந்தம் முடிந்து போனதே காரணம் என்று சொல்லப்படுகிறது. </p><h2>விரைவில் பயன்பாட்டுக்கு வரும்</h2><p>இதுகுறித்து, போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "ஏ.எம்.சி. எனும் ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தம் கோருவதில் காலதாமதம் ஏற்பட்டுவிட்டது. தற்போது, ஒவ்வொரு சிக்னலிலும் உள்ள டிஜிட்டல் வினாடிகள் பாதகையில் பராமரிப்பு பணி நடந்து வருகிறது. விரைவில் இந்த பணிகள் முடிந்து, அனைத்து பாதகைகளும் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்" என்றார். </p> ]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 2 மின்னணு உற்பத்தி தொகுப்புகளுக்கு ஒப்புதல்: பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த நயினார் நாகேந்திரன் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/approval-for-2-electronics-manufacturing-complexes-in-tamil-nadu-nainar-nagendran-thanks-prime-minister-modi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/approval-for-2-electronics-manufacturing-complexes-in-tamil-nadu-nainar-nagendran-thanks-prime-minister-modi#comments</comments><guid isPermaLink="false">0b864f7a-3faf-4c4d-9c29-2c86a5c6ff5e</guid><pubDate>Fri, 24 Jul 2026 04:58:16 +0000</pubDate><atom:updated>2026-07-24T04:58:16.955Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Modi,மின்னணு,Electronics,Manufacturing,உற்பத்தி,மோடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/e5lbvzpj/59.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/e5lbvzpj/59.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>தமிழகத்தின் மின்னணு உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மணலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிள்ளைப்பாக்கம் ஆகிய இரண்டு பகுதிகளில் சுமார் ரூ. 1,012 கோடி நிதிச் செலவில் மேலும் இரண்டு மின்னணு உற்பத்தி தொகுப்புகள் (EMCs) அமைக்க ஒப்புதல் அளித்துள்ள நமது   பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். இந்த முன்னெடுப்பின் மூலம், இந்தியாவின் மிக முக்கிய மின்னணு உற்பத்தி மையங்களில் ஒன்றாக நமது தமிழகம் வலுப்பெற்றுள்ளது. </p><h2>மின்னணு உற்பத்தி</h2><p>உலகளவில் பெரும் புரட்சி செய்து வரும் இந்தியாவின் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AF%81">மின்னணு </a>பொருட்கள் உற்பத்தி திட்டத்தின் மூலம், லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதோடு, நமது பாரதமும் தொழில்நுட்ப வளர்ச்சியில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறும். “Make in India” மற்றும் “Digital India” உள்ளிட்ட நமது பாரதப் பிரதமரின் தொலைநோக்கு சிந்தனைகளுக்கு, உயிர் கொடுக்கும் இத்திட்டங்கள் நமது தமிழகத்தில் அமையப் பெறுவது அளவற்ற மகிழ்ச்சியளிக்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை: ரவுடி வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீச்சு- 4 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-petrol-bombs-thrown-at-rowdys-house-4-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-petrol-bombs-thrown-at-rowdys-house-4-arrested#comments</comments><guid isPermaLink="false">4b48152e-8739-4df7-9a4a-974f1838f34b</guid><pubDate>Fri, 24 Jul 2026 04:54:56 +0000</pubDate><atom:updated>2026-07-24T04:54:56.381Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,House,வீட்டில்,4 arrested,4 பேர் கைது,Rowdy,ரவுடி,முன்விரோதம்,petrol bomb,பெட்ரோல் குண்டு வீச்சு,previous enmity</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/8a9jzlhc/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல் குண்டு வீச்சு, 4 பேர் கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/8a9jzlhc/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை வானகரத்தில் ரவுடி வீட்டில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81">பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம்</a> பரபரப்பை ஏற்படுத்தியது. கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.</p><h2>பெட்ரோல் குண்டுகள் வீச்சு</h2><p>சென்னை வானகரம் அடுத்த துண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் என்ற ராஜி (வயது 26). ரவுடியான இவர், ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன. வானகரம் காவல் நிலையத்தில் சரித்திரப்பதிவேடு குற்றவாளியாகவும் இருந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 2 பைக்குகளில் வந்த 4 மர்ம நபர்கள், பெட்ரோல் நிரப்பப்பட்ட 2 பாட்டில்களில் தீ வைத்து, ராஜ்குமார் வீட்டின் வாசலில் அடுத்தடுத்து வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.</p><p>2 பெட்ரோல் குண்டுகளும் பலத்த சத்தத்துடன் வெடித்து தீப்பிடித்து எரிந்தன. வெடிச்சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பகுதியில் தீப்பிடித்து எரிவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வானகரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. </p><h2>முன்விரோதம்</h2><p>இதுதொடர்பாக வானகரம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ராஜ்குமார் அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும், மற்றொரு தரப்பினரும் அதே பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரியவந்துள்ளது. இதனால் இருதரப்புக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த முன்விரோதம் காரணமாக ராஜ்குமாரை அச்சுறுத்தும் நோக்கில் அவரது வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் வானகரம் போலீசார் விசாரித்து வந்தனர்.</p><h2>4 பேர் கைது</h2><p>இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அய்யப்பன்தாங்கலைச் சேர்ந்த ஜீவா(20), ராகுல்(21), கோகுல்(23) உள்பட 4 பேரை போலீசார் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்தனர். தலைமறைவாக உள்ள பரத் உள்ளிட்ட மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>பயணிகள் கவனத்திற்கு... தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரெயில் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/attention-passengers-day-time-special-train-between-tambaram-tenkasi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/attention-passengers-day-time-special-train-between-tambaram-tenkasi#comments</comments><guid isPermaLink="false">72fc9886-f747-4da0-a670-953337c755af</guid><pubDate>Fri, 24 Jul 2026 04:48:06 +0000</pubDate><atom:updated>2026-07-24T04:48:06.318Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,Tambaram,தாம்பரம்,Special train,Tenkasi,தென்காசி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/8mxgottu/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/8mxgottu/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பயணிகளுக்கான கூடுதல் தேவையை கருத்தில் கொண்டு தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><h2>பகல் நேர சிறப்பு ரெயில்</h2><p>”தாம்பரத்தில் இருந்து ஜூலை 30, ஆகஸ்டு 1, 6, 8, 13, 15 ஆகிய தேதிகளில், காலை 5 மணிக்கு வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் வாரம் இருமுறை இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06135) அன்று மாலை 3.30 மணிக்கு தென்காசியை சென்றடைகிறது.  </p><p>மறுமார்க்கத்தில், தென்காசியில் இருந்து ஜூலை 31, ஆகஸ்டு 2, 7, 9, 14, 16 ஆகிய தேதிகளில், காலை 5 மணிக்கு வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06136) அன்று மாலை 3.15 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். </p><h2>முன்பதிவு  தொடக்கம்</h2><p>23 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>அணைகளில் வேகமாக குறையும் தண்ணீர்: தமிழகத்தில் வறட்சி பாதிக்கும் அபாயம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rapidly-depleting-water-levels-in-dams-risk-of-drought-in-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rapidly-depleting-water-levels-in-dams-risk-of-drought-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">f0522908-9177-498e-952f-6b1cadf3fa81</guid><pubDate>Fri, 24 Jul 2026 04:33:05 +0000</pubDate><atom:updated>2026-07-24T04:33:05.145Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,Tamil Nadu,அணைகள்,dams,Drought,வறட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/jlvche1l/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/jlvche1l/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>அணைகளில் வேகமாக தண்ணீர் குறைந்து வருவதால், தமிழகத்தில் இந்த ஆண்டு வறட்சி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. </p><h2>10 ஆண்டுகளில் இல்லாத அளவு தண்ணீர் குறைவு</h2><p>தமிழகத்தில் 90 அணைகளும், 14 ஆயிரத்து 141 பாசன ஏரிகளும் உள்ளன. நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அவை அனைத்திலும் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு தண்ணீர் குறைந்து காணப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 90 அணைகளின் மொத்த கொள்ளளவு 224 டி.எம்.சி. ஆகும். ஆனால், தற்போதைய நிலையில் 71.2 டி.எம்.சி. அளவு தண்ணீரே உள்ளது. 14 ஆயிரத்து 141 பாசன ஏரிகளில் ஏற்கனவே, 3,483 ஏரிகள் தண்ணீர் இல்லாமல் வறண்டுவிட்டன. 6,127 ஏரிகளில் சொற்ப அளவு தண்ணீரே உள்ளதால், அவைகளும் வறண்டுவிடும் நிலையில் இருக்கின்றன.</p><h2>விவசாயிகள் கவலை</h2><p>ஏற்கனவே, இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் குறைவான அளவே பெய்துள்ளது. அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவிலும் இது குறைவு என்பதால், காவிரி தண்ணீர் திறந்துவிட முடியாத நிலை கர்நாடக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த ஆண்டு மேட்டூர் அணை, குறிப்பிட்ட நாளான ஜூன் 12-ந் தேதி திறக்க முடியாமல் போய்விட்டது. டெல்டா மாவட்டங்களிலும் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கவலையில் உள்ளனர். </p><h2>வறட்சி ஏற்படும் அபாயம்</h2><p>தமிழகத்தில் அக்டோபர் மாதம் இறுதியில்தான் வடகிழக்கு பருவமழை தொடங்கும். அதற்கு இன்னும் 3 மாதங்கள் இடைவெளி இருக்கிறது. அதுவரை, தமிழக அணை மற்றும் ஏரிகளில் உள்ள தண்ணீர் போதாது என்றே நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வடகிழக்கு பருவமழையும் எந்த அளவுக்கு பெய்யும் என்று உறுதியாக சொல்ல முடியவில்லை. இதனால், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதைப்போல, தமிழ்நாட்டில் இந்த ஆண்டு தண்ணீர் இல்லாமல் கடுமையான அளவில் வறட்சி ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>‘நீட்’ குறித்து முழுமையாக அறியாமல் எதிர்க்க வேண்டாம் – தமிழிசை சவுந்தரராஜன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dont-oppose-neet-without-fully-understanding-it-tamilisai-soundararajan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dont-oppose-neet-without-fully-understanding-it-tamilisai-soundararajan#comments</comments><guid isPermaLink="false">cb3ec874-8920-430f-9437-203ec2f703da</guid><pubDate>Fri, 24 Jul 2026 04:27:01 +0000</pubDate><atom:updated>2026-07-24T04:27:01.545Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,தமிழிசை சவுந்தரராஜன்,Tamilisai Soundararajan,நீட் தேர்வு,NEET Exam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/5xq4pm5m/tamilisai.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/5xq4pm5m/tamilisai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>நேற்று நீட் தேர்வை எதிர்த்து கலைத்துறையினர் சிலர் பேசுவதை கேட்டேன். மருத்துவ படிப்பை பற்றிய அடிப்படை புரிதல் இல்லாமலும், இந்த மருத்துவ படிப்பை மேம்படுத்துவதற்கு பாரத பிரதமர் நரேந்திரமோடி எவ்வளவு  நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்பதை பற்றிய தகவல் எதுவும் அறியாமலேயே அவர்கள் பேச்சுகள் இருந்தது. எவ்வளவு எதிர் விமர்சனங்கள் வந்தாலும் என்னை போன்றவர்கள் NEET ஐ ஆதரிப்பது, நான் அரசாங்க மருத்துவமனையும் பார்த்திருக்கிறேன் தனியார் மருத்துவமனையையும் பார்த்திருக்கிறேன். நான் புதுவை துணைநிலை கவர்னராக இருந்தபோது அரசு பள்ளி மாணவர்களுக்காக 10% இட ஒதுக்கீடை நீட் மாணவர்களுக்காக பெற்றோம். அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை நான் மக்கள் பவனத்தில் சந்தித்தேன். மருத்துவக் கல்வி யாரிடம் உண்மையாக செல்ல வேண்டும் என்று நாங்கள் எல்லாம் நினைத்துக் கொண்டிருந்தோமோ, அவர்களிடம் உண்மையாக அந்த மருத்துவக் கல்வி சென்று அடைந்து கொண்டிருப்பதை கண்டு அகமகிழ்ந்து போனோம். நாங்கள் இந்தத் துறையைச் சார்ந்தவர்களாக இருப்பதனால் இதை உறுதியாக சொல்ல முடியும். திரைத் துறையினருக்கு இதைப் பற்றி தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.</p><h2>வசதி படைத்த மாணவர்கள்</h2><p>மிக மிக சாமானிய குடும்பத்தை சார்ந்தவர்கள் மருத்துவராகும் வாய்ப்பை பெற்றிருப்பதை கண்டு வருங்கால மருத்துவ உலகம் மிகச் சிறப்பாக நடைபோட இருக்கிறது என்பதை கண்டு பெருமை பெற்றேன். இன்று போராடுபவர்கள் நீட் இல்லாமல் இருக்கும் பொழுது ஏதோ அதிகமாக அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து கொண்டிருந்ததைப் போல பேசுகிறார்கள். அப்பொழுதும் வசதி படைத்த மாணவர்கள் டியூஷன் என்ற பெயரில் பிளஸ் ஒன் பாடங்களை முற்றிலுமாக புறந்தள்ளி, அதற்காக நாமக்கல் போன்ற இடங்களில் தனியாக அதிக செலவில் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைத்து கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து வசதியானவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேரும் ஒரு வாய்ப்பாகத்தான் நீட்டிற்கு முந்தைய காலம் இருந்தது.</p><h2>தார்மீக உரிமை</h2><p>அதனால் 2014 க்கு முன்பு மிக அதிகமாக தனியார் மருத்துவக் கல்லூரிகள் பல பெருகின. இன்று பல கோடி பணம் செலவு செய்து மருத்துவமனை கட்டி வைத்திருப்பவர்கள் தங்கள் குழந்தைகளை நீட் இல்லாமல் மருத்துவராக முடியாது. ஆனால் இதற்கு முன்னால் தங்கள் மருத்துவமனைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக குறைந்த மதிப்பெண் பெற்றவர்களை கூட கோடிக்கணக்கில் பணம் செலுத்தி தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்த்ததையும். அவர்கள் படிப்பதற்கு தடுமாறியதையும் நேரடியாகவே பார்த்திருக்கிறேன். இன்று பாரத பிரதமரை விமர்சிக்கும் தார்மீக உரிமை இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு இருக்கும் யாருக்கும் இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து ஏனென்றால் இன்று மருத்துவ துறையை அந்த அளவிற்கு விரிவுபடுத்தி இருக்கிறார். </p><h2>நுழைவு தேர்வு</h2><p>அரசாங்க மருத்துவக் கல்லூரிகள் 145 இல் இருந்து 441 ஆக அதாவது 300 சதவீதம் மருத்துவக் கல்லூரிகள் அதிகரித்து இருக்கின்றன. அதே நேரத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் 242 இல் இருந்து 382 ஆக அதிகரித்து இருக்கின்றன. அதன் வளர்ச்சி விகிதம் 158 சதவீதம்.. மருத்துவ படிப்பிற்கான இடங்கள் 51 ஆயிரம் இலிருந்து 1,36,000 இடங்களாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதாவது 267 சதவீதம் அதிகரித்திருக்கிறது தனியார் மருத்துவக் கல்லூரியில் வாங்கப்படும் கட்டணம் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. உலக அளவில் எல்லா பதவிகளுக்கும் படிப்புகளுக்கும் நுழைவு தேர்வு இருக்கும் பொழுது மனிதனின் உயிர் காக்கும் மருத்துவத்துறை இன்று பல சவாலான முன்னேற்றங்களை பெற்றுக் கொண்டிருக்கின்ற நேரத்தில் அதற்கு நுழைவுத் தேர்வு தேவையில்லை என்று சொல்வது எந்த விதத்திலும் நியாயமாக இல்லை. தெலுங்கானா ராஜ்பவனுக்கு  கோரிக்கை ஒன்று வந்திருந்தது மிக சாமானிய டெய்லராக பணியாற்றிய ஒரு இஸ்லாமிய சகோதரியின் மகள் எந்தவித கோச்சிங் சென்டரும் போகாமல் முழுமையாக படித்து நீட்டில் தேர்வு ஆகி அவருக்கான புத்தகங்கள் தேவை என்ற ஒரு கோரிக்கை வந்தவுடன் அவருக்கான முழு உதவியும் ராஜ்பவனிலிருந்து நான் செய்தேன. </p><p>அதேபோல புதுவையில் அரசு மருத்துவப் பள்ளியில் படித்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%20">நீட் </a>மூலமாக மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த 37 மாணவ மாணவிகளுக்கு என் சொந்த செலவில் மருத்துவ புத்தகங்களும் கோட்டும் ஸ்டெதஸ்கோப்பும் பரிசளித்து அவர்களை பாராட்டினேன். எனது தாழ்மையான வேண்டுகோள் மருத்துவக் கல்வியை பற்றி அறியாதவர்கள் மருத்துவக் கல்விக்கான இடங்கள் எவ்வளவு விரிவாக்கப்பட்டு சாமானிய மக்கள் கூட படிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் வாய்ப்பையும் NEET அதற்கு வழி வகுக்கிறது என்பதை முழுவதுமாக தெரிந்து கொள்ளாமல் எதிர்க்காதீர்கள்.இந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் கூட இதன் தேவையை முழுமையாக உறுதி செய்து இருக்கிறது..</p><p>இவ்வாறு அதில் கூறியுள்ளார்,</p>]]></content:encoded></item><item><title>காதலன் வேறொரு பெண்ணை திருமணம் செய்த விரக்தியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-commits-suicide-by-hanging-herself-in-despair-after-boyfriend-marries-another-woman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-commits-suicide-by-hanging-herself-in-despair-after-boyfriend-marries-another-woman#comments</comments><guid isPermaLink="false">5117dc5e-c17f-4500-b0c3-83f5511de7d0</guid><pubDate>Fri, 24 Jul 2026 04:15:17 +0000</pubDate><atom:updated>2026-07-24T04:15:17.809Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமணம்,Chennai,சென்னை,Cuddalore,கடலூர்,young woman,இளம்பெண்,Marriage,Suicide by hanging,தூக்குப்போட்டு தற்கொலை,boyfriend,காதலன்,விரக்தி,Despair</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/uqfe2t3u/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/uqfe2t3u/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>காதலன் வேறொரு பெண்ணை திருமணம் செய்த விரக்தியில் சென்னை புரசைவாக்கத்தில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை</a> செய்து கொண்டார். </p><h2>இளம்பெண் தற்கொலை</h2><p>கடலூர் மாவட்டம், ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுகாஷினி (வயது 28). இவர், சென்னை புரசைவாக்கம் பகுதியில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். புரசைவாக்கத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று தான் தங்கி இருந்த வீட்டின் மின்விசிறியில் சுகாஷினி துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்ப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று. சுகாஷினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். </p><h2>உருக்கமான கடிதம் சிக்கியது</h2><p>மேலும் சுகாஷினி தங்கி இருந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்திய போது, அவர் எழுதிய உருக்கமான <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81">கடிதம் சிக்கியது</a>. அந்த கடிதத்தில், 2023-ம் ஆண்டு முதல் புரசைவாக்கத்தில் உள்ள அழகு நிலையத்தில் வேலை பார்த்து வருகிறேன். பெரியமேட்டைச் சேர்ந்த ஒருவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. </p><h2>வேறொரு பெண்ணை திருமணம் செய்த காதலன்</h2><p>பெற்றோருக்கு தெரியாமல் அவருடன் வாடகை வீட்டில் கணவன்-மனைவி போல வாழ்ந்து வந்தேன். இதற்கிடையில் அவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதை அறிந்து மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானேன். இதனால் வாழ பிடிக்காமல் தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் அவரது காதலனை பிடித்து விசாரித்து வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>நீலகிரி: அங்கன்வாடி மையத்தை சூறையாடிய கரடி - மக்கள் அச்சம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-bear-ransacks-anganwadi-centre-residents-alarmed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-bear-ransacks-anganwadi-centre-residents-alarmed#comments</comments><guid isPermaLink="false">51aa7b2f-09f3-4a5b-976a-b98c189bddd7</guid><pubDate>Fri, 24 Jul 2026 04:06:56 +0000</pubDate><atom:updated>2026-07-24T04:06:56.426Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nilgiris,நீலகிரி,கரடி,bear</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/6sqrpn7l/8.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/6sqrpn7l/8.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி, </p><p>ஊட்டி அருகே அதிகரட்டி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தை கரடி சேதப்படுத்தி சென்றதால் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர்.</p><h2>கரடி அட்டகாசம்</h2><p>நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரம் மற்றும் கிராமப்பகுதிகளில் சமீப காலமாக கரடி, காட்டுமாடு, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட் டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வரும் கரடிகள் கடைகள் மற்றும் அங்கன்வாடிகளில் முட்டைகளை தேடி சாப்பிடுகின்றன. இதற்கு அடிமையாகி விட்ட கரடிகள் மீண்டும் வனப்பகுதிக்குள் செல்லாமல் ஊரை ஒட்டிய பகுதிக்குள் பதுங்கிக் கொள்கின்றன. இதனால் அவ்வப்போது மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு வருகிறது.</p><p>இந்தநிலையில் ஊட்டி அருகே அதிகரட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி ஒன்று உணவு தேடி அருகில் இருந்த ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்குள் புகுந்தது.</p><h2>பெற்றோர் அச்சம்</h2><p>அங்குள்ள அங்கன்வாடி மைய கதவை உடைத்து உள்ளே சென்று அங்குள்ள உணவு பொருட்களை எடுத்து கீழே கொட்டி சாப்பிட்டது. பின்னர் சிறிது நேரத்திற்கு பின் அங்கிருந்து வெளியேறி உள்ளது. இதனிடையே நேற்று காலை பள்ளிக்கு ஆசிரியர்கள் வந்து பார்த்த போது கரடி சேதப்படுத்தி இருந்தது தெரியவந்தது.</p><p>இதுதொடர்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். அதிகரட்டி பகுதியில் கரடி நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.</p><p>இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், அதிகரட்டி பகுதியை சுற்றி தேயிலை தோட்டங்கள் அதிக அளவு இருப்பதால் ஏற்கனவே கரடி நட மாட்டம் அதிகரித்துள்ளது. தினசரி தோட்டங்களுக்கு மட்டும் வந்த கரடிகள் தற்போது அங்கன்வாடிக்கு வந்து விட்டது. இதனால் குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப பயமாக இருக்கிறது. இரவு நேரங்களில் கிராமப்புறங்களில் உலா வரும் கரடியை அடர்ந்த வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்ட வேண்டும். இல்லாவிட்டால் பொதுமக்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பழனி கோவில் ரூ.100 கோடி நிலம் மோசடி விவகாரம்: பத்திரப்பதிவு ரத்தை எதிர்த்து  சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-temple-rs-100-crore-land-fraud-case-appeal-filed-in-supreme-court-against-the-cancellation-of-the-property-registration</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-temple-rs-100-crore-land-fraud-case-appeal-filed-in-supreme-court-against-the-cancellation-of-the-property-registration#comments</comments><guid isPermaLink="false">81c92de0-ffa2-4060-8cee-4bb4033df15e</guid><pubDate>Fri, 24 Jul 2026 03:56:23 +0000</pubDate><atom:updated>2026-07-24T03:56:23.620Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சுப்ரீம் கோர்ட்,பழனி கோவில்,நிலம் மோசடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/39sazuf6/Palani-temple.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பழனி கோவில் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/39sazuf6/Palani-temple.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி, </p><p> திண்டுக்கல் மாவட்டம் பழனி மலை அடிவாரத்தில் தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்கு சொந்தமான 1.35 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த சொத்துகளை பழனி கோவில் நிர்வாகம் நிர்வகித்து வருகிறது. ஆனால், மேற்கண்ட 1.35 ஏக்கர் நிலத்துக்கு சேதுபதி, வெள்ளத்துரை தாங்கள்தான் உரிமையாளர்கள் என்றும், அந்த நிலத்தை பழனி சார்பதிவாளர் கிரையம் செய்ய மறுக்கிறார் எனவும் கூறி அவர்கள் இருவரும் மதுரை ஐகோர்ட்டில் கடந்த ஏப்ரல் மாதம் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஹேமந்த் சந்தன் கவுடர், மேற்கண்ட சொத்து தொடர்பாக நடந்த சிவில் வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், வேறு எந்த பிரச்சினையும் அந்த சொத்தில் இல்லை எனவும் மனுதாரர்கள் தெரிவிக்கின்றனர். எனவே அந்த சொத்தை பதிவு செய்ய மறுத்த சார்பதிவாளரின் நடவடிக்கை தன்னிச்சையானது என மனுதாரர்கள் சார்பில் தெரிவிக்கும் கருத்து ஏற்கப்படுகிறது. சார்பதிவாள ரின் நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது என கடந்த ஏப்ரல் 10-ம் தேதி தீர்ப்பளித்தார்.</p> <h2>செல்லாது</h2><p>இதையடுத்து சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ளதாக கூறப்படும் அந்த 1.35 ஏக்கர் நிலத்தை சேதுபதி, வெள்ளத்துரை ஆகியோர் சேர்ந்து வேறு நபர் களுக்கு கடந்த 6-ந் தேதி கிரையம் செய்து உள்ளனர். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும். அந்த <a href="https://www.dailythanthi.com/news/india">பத்திரப்பதிவை</a> ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி பழனி முருகன் கோவில் செயல் அலுவலர் தாக்கல் செய்த மேல்முறை யீடு மனுவை மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் விசாரித்து, மத நிறுவ னங்களின் சொத்துகளை பதிவு செய்யும்போது சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் பதிவுத்துறை சார்பில் கேட்டு நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் தனிநீதிபதியிடம் உண்மைகளை மறைத்து உத்தரவுகள் பெறப்பட்டு இருப்பதால், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து மேற்கண்ட மடத்தின் சொத்தை பத்திரப்பதிவு செய்தது செல்லாது என்று உத்தரவிட்டது.இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டதை தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த நில முறைகேடு வழக்கு தொடர்பான புலன்விசாரணையை தொடங்கியுள்ளனர்.</p><h2>சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு</h2><p>இந்நிலையில், ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து <a href="https://www.dailythanthi.com/news/india">சுப்ரீம் கோர்ட்டில் </a>சேதுபதி, வெள்ளத்துரை சார்பில் வக்கீல் ஷ்யாம் கோபால் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். அனைத்து அம்சங்களையும் ஆராயாமல் பிறப்பித்துள்ள ஐகோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கோரியுள்ளார். இதனிடையே, இந்த மேல்முறையீடு மனுவை விசாரிக்கும்போது தங்களது தரப்பு கருத்தை கேட்க கோரி பழனிமுருகன் கோவில் சார்பில் தமிழ்நாடு அரசின் வக்கீல் பி.கருணாகரன் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>காரைக்குடி: ரூ.100 கோடி கோவில் நிலத்தை தனிநபர் பத்திரப்பதிவு செய்ததாக கிராம மக்கள் புகார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/karaikudi-villagers-complain-that-an-individual-has-deeded-a-temple-land-worth-rs-100-crore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/karaikudi-villagers-complain-that-an-individual-has-deeded-a-temple-land-worth-rs-100-crore#comments</comments><guid isPermaLink="false">e9df3cd1-7d49-4731-84a6-d433aefb2c5d</guid><pubDate>Fri, 24 Jul 2026 03:52:44 +0000</pubDate><atom:updated>2026-07-24T03:52:44.574Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Karaikudi,காரைக்குடி,சிவகங்கை,Sivagangai,பத்திரப்பதிவு,Deed registration,கோவில் நிலம்,temple land</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/nql9tg92/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/nql9tg92/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>காரைக்குடி,</p><p>சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே இலுப்பைக்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள சுயம்பிரகாச ஈஸ்வர் கோவிலுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த இடத்தை அப்பகுதியை சேர்ந்த தனி நபர் ஒருவர் போலியான ஆவணங்களை தயாரித்து அதன் மூலம் பத்திரப்பதிவு செய்ததாக அப்பகுதி மக்கள் மற்றும் கோவில் அறங்காவலர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் காரைக்குடி தாசில்தார் ராஜாவிடம் புகார் தெரிவித்தனர்.</p><p>மேலும் அந்த இடத்தில் அமைக்கப்பட்ட முள்வேலியை அந்த தனிநபர் அகற்றிவிட்டு சுத்தம் செய்வதாகவும் புகார் தெரிவித்ததையடுத்து தாசில்தார் ராஜா மற்றும் காரைக்குடி வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளையராஜா ஆகியோர் தலைமையிலான போலீசார் அங்கு சென்று அந்த நபர்களை சுத்தம் செய்யக்கூடாது எனவும் எச்சரித்து, அங்கு சுத்தம் செய்ய பயன்படுத்தப்பட்ட எந்திரங்களை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.</p><p>அதன் பின்னர் இந்த இடத்தை போலியாக ஆவணம் தயாரித்து மோசடி செய்த அந்த நபர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் காரைக்குடி போலீசில் புகார் செய்ய குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த இடத்திற்குரிய உண்மையான ஆதாரங்களை கோர்ட்டில் சமர்பித்து கோர்ட்டு உத்தரவை பெற்று வாருங்கள் என கூறியதையடுத்து தனிநபர் தரப்பினர் மற்றும் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.</p><p>இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறியதாவது:-</p><p>காரைக்குடி புதிய பஸ் நிலையம் அருகே முடியரசன் சாலையில் இக்கோவிலுக்கு சொந்தமான அந்த இடம் உள்ளது. சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள 2 ஏக்கர் 27 சென்ட் அளவுள்ள இந்த நிலத்தை அந்த தனிநபர் போலியான ஆவணம் தயார் செய்து, அதில் கோவில் அறங்காவலர்களை சேர்க்காமல் கடந்த 2011-ம் ஆண்டு கோர்ட்டு உத்தரவை பெற்று பத்திரப்பதிவு செய்த பின்னர் கடந்த ஜூன் மாதம் அந்த நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்ய வருவாய் அலுவலரிடம் மனு கொடுத்துள்ளார்.</p><p>மேலும் கோவில் நிலம் என்று இருந்த நிலையில், தாசில்தாரிடம் தடையில்லா சான்றிதழும் பெற்றுள்ளார். இதன் அடிப்படையில் இந்த கோவில் நிலத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் அனுமதியின்றி அந்த நிலத்தை யாருக்கும் கிரையம் செய்ய முடியாது. இதுகுறித்து கோர்ட்டை நாட உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>ஆடி அமாவாசை: சதுரகிரி கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aadi-amavasai-permission-to-visit-sathuragiri-temple-for-4-days</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aadi-amavasai-permission-to-visit-sathuragiri-temple-for-4-days#comments</comments><guid isPermaLink="false">dee95abb-caea-4312-a01a-32d889abf4b0</guid><pubDate>Fri, 24 Jul 2026 03:27:46 +0000</pubDate><atom:updated>2026-07-24T03:27:46.538Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சதுரகிரி கோவில்,சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்,Sathuragiri Temple,sathuragiri hills,Sathuragiri,aadi amavasai,ஆடி அமாவாசை,சதுரகிரி மலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/r65a6e70/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/r65a6e70/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர்,</p><h2>ஆடி அமாவாசை</h2><p>சதுரகிரி மலையில் அமைந்துள்ள சுந்தர மகாலிங்க சுவாமி கோவிலில் அடுத்த மாதம் 12-ந் தேதி ஆடி அமாவாசை திருவிழா கொண்டாடப்பட உள்ளது. விழா முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் அன்பழகன் தலைமையில் நடந்தது. இதில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.</p><p>அதன்படி, சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி அடுத்த மாதம் 10 முதல் 13-ந் தேதி வரை பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த நாட்களில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் தினமும் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே மலை மீது ஏறி இறங்க அனுமதிக்கப்படுவார்கள்.</p><h2>சோதனை சாவடி</h2><p>பக்தர்கள் அனைவரும் விருதுநகர் மாவட்டம் தாணிப்பாறை வழித்தடத்தையே பயன்படுத்த வேண்டும். அதிக செங்குத்தான மதுரை மாவட்டம் வாழைத்தோப்பு பாதை மற்றும் தேனி மாவட்டம் வருசநாடு ஆகிய ஆபத்தான வழிகளை முற்றிலும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். வனப்பகுதியை பாதுகாக்கும் நோக்கில் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், மதுபானங்கள் ஆகியவற்றை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>மலையடிவார சோதனை சாவடிகளில் போலீசார், வனத்துறையினர் மூலம் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்படும். பக்தர்களின் வசதிக்காக 5 கி.மீ. மலைப்பாதையில் அரை கி.மீ. இடைவெளியில் குடிநீர் தொட்டிகளும், இரவு நேர வெளிச்சத்திற்காக 750-க்கும் மேற்பட்ட சோலார் மற்றும் ஜெனரேட்டர் விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. அன்னதானம் வழங்குவதற்கு தரச்சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.</p><p>மேலும் கோணப்பாறை, கோரக்கர் பாறை, சங்கிலிப்பாறை உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்கள், விஷக்கடி மருந்துகளுடன் கூடிய மருத்துவ முகாம்களும், மலையடிவாரத்தில் அவசர ஆம்புலன்ஸ் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.</p><h2>சிறப்பு பஸ்கள்</h2><p>கூட்ட நெரிசலின்றி சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக பக்தர் கள் வெள்ளைப்பாறை வழியாக சுந்தரமூர்த்தி சன்னதி சென்று சுந்தரமகாலிங்க சுவாமியை தரிசிக்க வேண்டும். பின்னர் புதிய பாதை வழியாக சந்தனமகாலிங்க சுவாமியை தரிசித்து இரும்பு பாலத்தின் வலதுபுறமாக வெளியேறும் வகையில் ஒருவழிப்பாதை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.</p><p>பக்தர்களின் வசதிக்காக மதுரை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, டி.கல்லுப்பட்டி உள்ளிட்ட இடங்களில் இருந்து தாணிப்பாறை வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இரவு நேரங்களில் மலையில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதியில்லை. இவ்வாறு கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டன.</p>]]></content:encoded></item><item><title>மீன்வள பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான தரவரிசை வெளியீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ranking-list-released-for-the-current-academic-year-at-the-fisheries-university</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ranking-list-released-for-the-current-academic-year-at-the-fisheries-university#comments</comments><guid isPermaLink="false">feb39758-e08e-496e-84ab-f8bee0292557</guid><pubDate>Fri, 24 Jul 2026 03:23:06 +0000</pubDate><atom:updated>2026-07-24T03:23:06.658Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>University,தரவரிசை பட்டியல்,Ranking list,மீன்வள பல்கலைக்கழகம்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/graafaof/6.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/graafaof/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>மீன்வள பல்கலையில், நடப்பு கல்வியாண்டுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.</p><p>தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா, மீன்வள பல்கலையின் கீழ், 10 உறுப்பு கல்லுாரிகள், ஒரு தனியார் கல்லுாரி இயங்கி வருகிறது. இதில், மீன்வள அறிவியல் படிப்பில் 187; மீன்வள இன்ஜி., 50; மீன்வள 43; உணவு உயிர்தொழில்நுட்பம் தொழில்நுட்பம் 42; பி.பி.ஏ., 2; இள நிலை தொழிற்கல்வி 78 இடங்கள் உள்ளன.</p><p>இவற்றில் சேர, 15,585 பேர் விண்ணப்பித்தனர். இந்நிலையில், மீன்வள படிப்புக்கான தரவரிசை பட்டியலை, நேற்று நாகப்பட்டினத்தில் உள்ள பல்கலை வளாகத்தில், பல்கலை துணை வேந்தர் பெலிக்ஸ் வெளியிட்டார்.</p><p>கடலுார் மாவட்டத்தை சேர்ந்த அனிஷ்குமார், அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த சேதுராஜன், கடலுார் மாவட்டத்தை சேர்ந்த பிரியவதனா ஆகியோயார் 200க்கு 199.50 கட் - ஆப் மதிப்பெண்ணுடன் முதலிடம் பிடித்தனர்.</p><p>மாணவி அக்ஷயா, 198.89 மதிப் பெண்களுடன் இரண்டாம் இடம் பிடித்தார். மாணவர் சேர்க்கை முதல் கட்ட கலந்தாய்வு, ஆகஸ்ட் முதல் வாரத்தில், நாகையில் உள்ள பல்கலை வளாகத்தில் நடக்க உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>300 கிலோ ரேஷன் அரிசி குறைந்த விலைக்கு வாங்கி பதுக்கல்: 3 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/3-people-arrested-for-buying-and-hoarding-300-kg-of-ration-rice-at-a-low-price</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/3-people-arrested-for-buying-and-hoarding-300-kg-of-ration-rice-at-a-low-price#comments</comments><guid isPermaLink="false">a90b5ba5-b408-424b-a4aa-eab007e00403</guid><pubDate>Fri, 24 Jul 2026 03:17:55 +0000</pubDate><atom:updated>2026-07-24T03:17:55.090Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,police,பறிமுதல்,seized,3 arrested,3 பேர் கைது,ration rice,ரேஷன் அரிசி,போலீசார்,சிவில் சப்ளை,Civil Supply</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/xunke835/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரேஷன் அரிசி பறிமுதல், 3 பேர் கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/xunke835/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னையில் 300 கிலோ ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி பதுக்கி வைத்திருந்த 3 பேர் சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.</p><h2>போலீசார் சோதனை</h2><p>சென்னை வியாசர்பாடி, புதுநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF">ரேஷன் அரிசி</a>யை குறைந்த விலைக்கு வாங்கி, வெளியில் அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைத்திருப்பதாக சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. டி.எஸ்.பி. கோபாலகுரு தலைமையில், சிவில் சப்ளை சி.ஐ.டி. தனிப்படை போலீசார் குறிப்பிட்ட வீட்டில் சோதனை நடத்தினார்கள்.</p><h2>300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல், 3 பேர் கைது</h2><p>அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 300 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசி மூட்டைகள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக ரேஷன் கடை விற்பனையாளர் செந்தில்முருகன், உதவியாளர் சியாம் மூர்த்தி, அரிசியை வாங்கி பதுக்கிய முகமது அலியார் ஆகிய 3 பேர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்யப்பட்டதாக போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரூ.1,500 லஞ்சம் வாங்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு 2 ஆண்டு சிறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/female-sub-inspector-gets-2-years-in-jail-for-accepting-rs-1500-bribe</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/female-sub-inspector-gets-2-years-in-jail-for-accepting-rs-1500-bribe#comments</comments><guid isPermaLink="false">7115af3b-fec8-4ea3-8e44-a12bd11c2f3e</guid><pubDate>Fri, 24 Jul 2026 02:59:12 +0000</pubDate><atom:updated>2026-07-24T02:59:12.229Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்சி,Trichy,லஞ்சம்,Female sub-inspector,பெண் சப்-இன்ஸ்பெக்டர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/bqma3td0/CHENNAI-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/bqma3td0/CHENNAI-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>கோவை மாவட்டம் உருமண்டம் பாளையத்தில் வசித்து வந்தவர் ஆறுமுகம். இவருடைய இருசக்கர வாகனம் திருச்சி மாவட்டம் மணப்பாறை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வடுகப்பட்டிக்கும், பொய்கைப்பட்டிக்கும் இடையே விபத்துக்குள்ளானது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின்பேரில் ஆறுமுகம் மீது மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். </p><p>இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த 28.10.2009 அன்று மணப்பாறை போலீஸ் நிலையத்துக்கு சென்ற ஆறுமுகம், அங்கு பணியில் இருந்த அப்போதைய பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாத்தியை சந்தித்துள்ளார். அவர் ஆறுமுகத்திடம், உன் மீது விபத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உன்னை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். சிறையில் அடைக்காமல், காவல்நிலைய ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.1,500 லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.</p><p>லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆறுமுகம், மறுநாள் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் செய்தார். அதன்பேரில் 30.10.2009 அன்று காலை ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஆறுமுகத்திடம் போலீசார் கொடுத்து அனுப்பினர். லஞ்சப்பணம் ரூ.1.500-ஐ சப்-இன்ஸ்பெக்டர் ராஜாத்தி வாங்கியபோது, அவரை கையும், களவுமாக பிடித்து போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு வழக்குகள் சிறப்பு கோர்ட்டில் நீதிபதி புவியரசு முன்னிலையில் நடை பெற்று வந்தது.</p><p>போலீசார் தரப்பில் அரசு வக்கீல் கோபிக்கிருஷ்ணன் ஆஜரானார். இந்த வழக்கில் சாட்சி விசாரணைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ராஜாத்தி மீதான குற்றம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: கைதான இளைஞர் உயிரிழந்த விவகாரம் - உடல் பிரேத பரிசோதனை தொடக்கம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-death-of-arrested-youth-post-mortem-examination-begins</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-death-of-arrested-youth-post-mortem-examination-begins#comments</comments><guid isPermaLink="false">ac15b7bc-83ba-4a7b-b33b-fd04fcc10543</guid><pubDate>Fri, 24 Jul 2026 02:57:34 +0000</pubDate><atom:updated>2026-07-24T02:57:34.444Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தூத்துக்குடி,இளைஞர்,Tuticorin,பிரேத பரிசோதனை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/66ei3c0x/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/66ei3c0x/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>கடந்த 17.07.2026 அன்று, தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில், தூத்துக்குடி அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த அருணாசலம் (24) என்பவர் மதுவிலக்கு அமலாக்க சோதனையின் போது 180 மில்லிலிட்டர் அளவிலான 120 மதுபான பாட்டில்களை சட்டவிரோதமாக வைத்திருந்தது கண்டறியப்பட்டதால், தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய குற்ற எண். 751/2026 ச/பி தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் பிரிவுகள் 4(1)(A) மற்றும் 14 -ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.</p><h2>வெளிப்புற காயங்கள் இல்லை</h2><p>அதனைத் தொடர்ந்து, 17.07.2026 அன்று மாலை சுமார் 5.50 மணியளவில், அவரை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, மருத்துவ பரிசோதனைக்காக காவல் துறையினர் அழைத்துச் சென்றனர். பரிசோதனை மேற்கொண்ட டாக்டர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தகுதியுடையவர் என சான்றளித்ததுடன், அவரது உடலில் எந்தவித வெளிப்புறக் காயங்களும் இல்லை என்றும் மருத்துவ சான்றிதழில் சான்றளித்தார்.</p><h2>லாக்-அப்</h2><p>சட்ட மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்காக அவர் மீண்டும் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, அப்போது காவல் நிலையத்தில் இருந்த பிற கைதிகளுடன் காவல் நிலைய லாக்-அப்பில் வைக்கப்பட்டார். லாக்-அப்பில் இருந்த போது, மற்ற கைதிகளுடன் இயல்பாக நின்று பேசிக் கொண்டிருந்த அவர், திடீரென தானாகவே மயங்கி கீழே விழுந்தார்.</p><p>இச்சம்பவம் லாக்-அப்பின் முன்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சிகிச்சையின்போது, அவருக்கு மருத்துவ நடைமுறை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல், கடந்த 23-ந்தேதி அவர் உயிரிழந்தார் என டாக்டர்கள் தெரிவித்தனர். </p><h2>இளைஞர் மரணம்</h2><p>இச்சம்பவம் தொடர்பாக, அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சட்டப்படி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் தென்பாகம் காவல் நிலையத்தில் அருணாச்சலம் மயங்கி விழுந்த வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி இளைஞர் மரணம் தொடர்பாக அவரது குடும்பத்தினரிடம் மாஜிஸ்திரேட் விஜயராஜ் நேரில் விசாரணை நடத்தினார்.</p><h2>பிரேத பரிசோதனை</h2><p>இதையடுத்து இளைஞர் அருணாசலத்தின் உடலுக்கு 24-ந்தேதி(இன்று) தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்த மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதன்படி அருணாசலத்தின் உடல் பிரேத பரிசோதனை இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 3 மருத்துவர்கள், குற்றவியல் நடுவர் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடைபெறுகிறது. கோர்ட்டு உத்தரவின்படி பிரேத பரிசோதனை முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்படுகிறது. </p> ]]></content:encoded></item><item><title>த.வெ.க. அரசை கண்டித்து பழனியில் அ.தி.மு.க. நாளை ஆர்ப்பாட்டம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-to-stage-protest-in-palani-tomorrow-condemning-the-tvk-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-to-stage-protest-in-palani-tomorrow-condemning-the-tvk-government#comments</comments><guid isPermaLink="false">cfd00937-b2ff-41bf-95ff-f2547e8049eb</guid><pubDate>Fri, 24 Jul 2026 02:42:27 +0000</pubDate><atom:updated>2026-07-24T02:42:27.512Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,TVK,பழனி,த.வெ.க.,Palani,அ.தி.மு.க.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/e6x7ird9/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/e6x7ird9/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>“பழனி தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த த.வெ.க. அரசைக் கண்டித்தும், இந்த வழக்கை உடனடியாக சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வலியுறுத்தியும், அ.தி.மு.க. திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தின் சார்பில், 25-ந்தேதி (நாளை) காலை 9.30 மணியளவில் பழனியில் - மயில் ரவுண்டானா, மத்திய பஸ் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். </p><p>இந்த கண்டன ஆர்ப்பாட்டம், கட்சியின் பொருளாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் செயலாளருமான திண்டுக்கல் சீனிவாசன் தலைமையிலும், இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் பரமசிவம், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் ரவி மனோகரன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>