<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 11 Sep 2026 03:30:44 +0000</lastBuildDate><item><title>முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து 9,200 கனஅடியாக உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-inflow-to-the-mukkombu-upper-anicut-has-risen-to-9200-cubic-feet-per-second</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-inflow-to-the-mukkombu-upper-anicut-has-risen-to-9200-cubic-feet-per-second#comments</comments><guid isPermaLink="false">d6e38dc2-70f7-44f8-b330-6855a1e5cf95</guid><pubDate>Fri, 11 Sep 2026 03:27:51 +0000</pubDate><atom:updated>2026-09-11T03:27:51.395Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>நீர்வரத்து,Water inflow,முக்கொம்பு மேலணை</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/ewlcl1kc/6.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/ewlcl1kc/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>திருச்சி,  </p><p>முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து 9,200 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால் அப்பகுதி கடல் போல் காட்சி அளிக்கிறது.</p><h2>காவிரியில் தண்ணீர் திறப்பு</h2><p>மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ந் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். ஆனால் கடந்த ஜூன் மாதம் மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. பின்னர் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் கர்நாடகம் தமிழகத்துக்கு சிறிதளவு தண்ணீர் திறந்துவிட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது.</p><p>இதைத்தொடர்ந்து கடந்த 1-ந் தேதி மேட்டூர் அணையிலிருந்து சம்பா சாகுபடிக்கு முதல்-அமைச்சர் விஜய் தண்ணீர் திறந்து விட்டார். முதல் கட்டமாக வினாடிக்கு 7,000 கன அடி நீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கடந்த 3-ந்தேதி மாயனூர் கதவணைக்கு வந்தது.</p><h2>நீர்வரத்து அதிகரிப்பு</h2><p>பின்னர் மாயனூர் கதவணையில் இருந்து காவிரியில் 2,050 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கடந்த 4-ந்தேதி காலை முக்கொம்பு மேலணைக்கு வந்தடைந்தது. ஏற்கனவே முக்கொம்பு மேலணைக்கு 1,500 கன அடி நீர் வந்த நிலையில், நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. தற்போது முக்கொம்புக்கு நீர்வரத்து 9,200 கன அடியாக உயர்ந்துள்ளது. இந்த நீரும் காவிரியில் முழுமையாக திறந்து விடப்பட்டது. தண்ணீர் வரத்தால் முக்கொம்பு மேலணை கடல் போல் காட்சி அளித்தது.</p> ]]></content:encoded></item><item><title>அனைத்து விமானிகளுக்கும் போதைப்பொருள் சோதனை - டி.ஜி.சி.ஏ. உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/drug-testing-for-all-pilots-dgca-order</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/drug-testing-for-all-pilots-dgca-order#comments</comments><guid isPermaLink="false">b6ed2c72-dd88-43d1-ab39-5bde8ff29b5b</guid><pubDate>Fri, 11 Sep 2026 03:23:20 +0000</pubDate><atom:updated>2026-09-11T03:23:20.373Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விமானிகள்,Pilots,DGCA,டிஜிசிஏ,Drug Testing</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/56uw0iwl/National-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/56uw0iwl/National-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><p>ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றிய விமானி ஒருவர், கடந்த ஆகஸ்ட் மாதம் விமான பயணத்தின்போது போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நடுவானில் அந்த விமானம் சுமார் 300 அடி கீழே சரிந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக விமானம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு பத்திரமாக தரையிறக்கப்பட்டது. </p><p>இந்த விவகாரம் விமான விபத்து புலனாய்வு பணியகம் விசாரணை நடத்தியது. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட விமானி பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் விமான பயணத்தின் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், அனைத்து விமான நிறுவனங்களிலும் உள்ள விமானிகளுக்கு போதைப்பொருள் பரிசோதனை செய்ய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான டி.ஜி.சி.ஏ. உத்தரவிட்டுள்ளது. </p><p>இந்த நடைமுறையை ஜூலை 2027-க்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து சிவில் விமான போக்குவரத்துத்துறை மந்திரி ராம்மோகன் நாயுடு கூறும்போது, 'போதைப்பொருள் பரிசோதனை தொடர்பான புதிய விதிமுறைகளின் வரைவு இந்த மாதம் இறுதிக்குள் இறுதி செய்யப்படும் என்றார். தற்போது 10 சதவீத விமானிகளுக்கு மட்டும் சீரற்ற முறையில் பரிசோதனை நடக்கிறது. </p><p>இந்திய விமானங்களில் பணிபுரியும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அனைத்து விமானிகளுக்கு இந்த பரிசோதனை கட்டாயமாக்கப்படுகிறது' என்றார். கடந்த ஆகஸ்டில் தாய்லாந்தில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தின் கேப்டன், போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் அந்த விமானி பணி நீக்கம் செய்யப்பட்டார். </p>]]></content:encoded></item><item><title>எலுமிச்சை விலை கிடுகிடு உயர்வு: கிலோ ரூ.300-க்கு விற்பனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/lemon-prices-skyrocket-selling-at-rs-300-per-kg</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/lemon-prices-skyrocket-selling-at-rs-300-per-kg#comments</comments><guid isPermaLink="false">c03dda97-f521-4f58-9306-44be5f9dfbd6</guid><pubDate>Fri, 11 Sep 2026 03:20:29 +0000</pubDate><atom:updated>2026-09-11T03:20:29.368Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>lemon,எலுமிச்சை பழம்,எலுமிச்சை விலை,Lemon prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/60fxiylm/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/60fxiylm/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><p>திருப்பூர் மாவட்டம் உடுமலையில், பருவநிலை, நீர்வரத்து மற்றும் நீர்இருப்புக்கு ஏற்றவாறு குறுகிய, மத்திய, நீண்ட கால பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. அதன் படி காய்கறிகள், கீரைகள், தென்னை, வாழை, கரும்பு, எலுமிச்சை, சப்போட்டா, கொய்யா போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.</p><p>அந்த வகையில் ஒரு சில பகுதியில் எலுமிச்சை சாகுபடியும் நடைபெற்று வருகிறது. இதில், ராஜகனி என்று அழைக்கக்கூடிய எலுமிச்சையில் ஜூலை முதல் டிசம்பர் வரை அதிக மகசூல் கிடைக்கும். </p><p>இதேபோல், ஏக்கருக்கு 160 செடிகள் வரை நடவு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும். செடிவகை சமதள பரப்பிலும் கொடிவகை மலைப்பிரதேசங்களிலும் சாகுபடி செய்யப்படுகிறது. நடவு செய்த நாளில் இருந்து 3-ம் வருடம் அறுவடைக்கு தயாராகி விடும். அன்றாட உணவில் எலுமிச்சம் பழத்தின் பயன்பாடு உள்ளதால் அவற்றுக்கான தேவையும் ஆண்டு முழுவதும் இருந்து வருகிறது.</p><h2>கிலோ ரூ.300</h2><p>வைட்டமின் சி, பொட்டாசியம் உள்ளிட்ட சத்துகளை தன்னகத்தே கொண்ட எலுமிச்சை பித்தம், தலைவலி, மலச்சிக்கல், தொண்டை வலியை போக்குவதுடன் கிருமிகளை அழித்து அஜீரணப் பிரச்சினையை தீர்க்கும் வல்லமை பெற்றது. மேலும் கோடை காலத்தில் எலுமிச்சைசாறுடன் உப்பு, நாட்டு சர்க்கரை சேர்த்து தயாரிக்கும் பானகமானது உடலில் ஏற்படும் நீர் இழப்பை குறைக்கிறது. இதனால் ஏராளமான விவசாயிகள் எலுமிச்சை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>ஆனால் பருவம் தவறிய மழை மற்றும் பருவநிலை மாற்றத்தால் எலுமிச்சை விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சந்தைகளுக்கு வரத்து குறைந்து வருகிறது. இதன்காரணமாக அதன் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை ஆனது. ஆனால் தற்போது கிலோ ரூ.300-க்கு விற்பனை ஆகிறது.</p><h2>வரத்து குறைந்ததால்...</h2><p>இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், எலுமிச்சை சாகுபடி உடும்லையை காட்டிலும் கிழக்கு மாவட்டங்களில் அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் தென்காசி மாவட்டம் புளியங்குடி, திண்டுக்கல் மாவட்டம் திருமலை, ஒட்டன்சத்திரம், பழனி ஆகிய பகுதியில் இருந்து எலுமிச்சம் பழத்தை வாங்கி வந்து மொத்தமாக விற்பனை செய்து வருகின்றோம். தற்போது கிலோ ரூ.300 வரை விற்பனையாகி வருகிறது.</p><p>வரத்து குறைவாக உள்ளதால் விலையும் கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. என்றனர். இதேபோல் குமரலிங்கம் பகுதியில், எலுமிச்சை பழம் கிலோ ரூ.220 வரை விற்பனை ஆகிறது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>ராசிமணலில் புதிய அணை கோரி விவசாயிகள் 20ம் தேதி நடைபயணம்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmers-to-undertake-a-march-on-the-20th-demanding-a-new-dam-at-rasimanal</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmers-to-undertake-a-march-on-the-20th-demanding-a-new-dam-at-rasimanal#comments</comments><guid isPermaLink="false">28726be5-8832-4c6c-adfe-714488f806f1</guid><pubDate>Fri, 11 Sep 2026 03:01:32 +0000</pubDate><atom:updated>2026-09-11T03:01:32.278Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கிருஷ்ணகிரி,Krishnagiri,new dam,கிருஷ்ணகிரி செய்திகள்,Krishnagiri Districts,Rasimanal,ராசிமணல்,புதிய அனை,விவசாயிகள் நடைபயணம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/l5n8oomx/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/l5n8oomx/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காவிரியில் கிருஷ்ணகிரி மாவட்டம் ராசிமணல் பகுதியில் புதிய அணை கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் மாநிலம் தழுவிய நடைபயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.</p><p>காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கான காவிரி நீரோட்டம் பாதிக்கப்படும் என கூறி, தமிழகத்தில் அத்திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.</p><h2>ராசிமணலில் அணை கட்ட வேண்டும்</h2><p>மேகதாது அணைக்கு மாற்றாக, தமிழகப் பகுதியில் உள்ள ராசிமணலில் புதிய அணை கட்ட வேண்டும் என தமிழக விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.</p><p>இந்த கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, டெல்டா மாவட்ட விவசாயிகள் சார்பில் மாநிலம் தழுவிய நடைபயணம் நடத்தப்பட உள்ளது.</p><h2>20-ம் தேதி நடைபயணம் தொடக்கம்</h2><p>இதுகுறித்து தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறியதாவது:-</p><p>தமிழகப் பகுதியான ராசிமணலில் அணை கட்ட வேண்டும். இந்த கோரிக்கையில் தமிழக அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.</p><p>இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் 20-ம் தேதி மாநிலம் தழுவிய நடைபயணம் தொடங்க உள்ளது. காவிரி கடலில் கலக்கும் பூம்புகாரில் இருந்து நடைபயணம் தொடங்கி, டெல்டா மாவட்டங்கள் வழியாக சென்று திருவாரூரில் நிறைவு செய்யப்பட உள்ளது.</p><h2>23-ம் தேதி சென்னையில் பிரசாரக்குழு கூட்டம்</h2><p>மேலும், வரும் 23-ம் தேதி <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை </a>எழும்பூரில் பிரசாரக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p>ராசிமணல் அணை கோரிக்கைக்கு ஆதரவு திரட்டும் வகையில், த.வெ.க. பொதுச்செயலர் ஆனந்த், அ.தி.மு.க. பொதுச்செயலர் பழனிசாமி, தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரியுள்ளோம்.</p><p>இவ்வாறு பி.ஆர். பாண்டியன் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பரந்தூரில் நிலங்களை கையகப்படுத்தும் தமிழக அரசு-சிப்காட் தொழில் பூங்கா அமைக்க முடிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-to-acquire-land-in-parandur-decision-made-to-establish-sipcot-industrial-park</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-to-acquire-land-in-parandur-decision-made-to-establish-sipcot-industrial-park#comments</comments><guid isPermaLink="false">3f3fa30a-8ac1-4d95-a5c4-80f133d57689</guid><pubDate>Fri, 11 Sep 2026 02:52:33 +0000</pubDate><atom:updated>2026-09-11T02:52:33.217Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt,சிப்காட் தொழில் பூங்கா,Parandur,பரந்தூர்,தொழில் பூங்கா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/uf9paefq/Parandur.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  பரந்தூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/uf9paefq/Parandur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் ஏகனாபுரத்தில், சென்னைக்கான 2-வது விமான நிலையத்தை அமைக்க மத்திய அரசுடன் இணைந்து கடந்த தி.மு.க. அரசு திட்டம் தீட்டியது. இதற்கு அங்கிருந்த விவசாயிகள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.த.வெ.க. ஆட்சிக்கு வந்த பிறகு, பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக முதல்-அமைச்சர் விஜய், சட்டசபையில் அறிவித்தார். அப்ப டியானால் அந்த இடம் எதற்காக பயன்படுத்தப்படும்? என்ற கேள்வி எழுந்தது. இந்த சூழ்நிலையில்தான் தற்போது பரந்தூர் அருகே மதுரமங்கலத்தில் சிப்காட் தொழிற்பூங்காவுக்காக நிலங்களை கையகப்படுத்ததமிழக அரசு தயாராகி வருகிறது. தொழில் வளர்ச்சியின் காரணமாக, செமிகண்டக்டர் என்ற மின்னணு பொருளுக்கான தேவை அதிகம் ஏற்பட்டுள்ளது.</p> <h2>நில வகைப்பாடு</h2><p>செமிகண்டக்டர் துறையில் பெரிய அளவிலான முதலீடுகளை ஈர்ப்பதற்காக, மதுரமங்கலத்தில் சிப்காட் மூலம் ரூ.175 கோடி செலவில் செமிகண்டக்டர் மின்னணு உற்பத்தி பூங்காவை அமைக்க மாநில அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கான நில ஆர்ஜிதம் குறித்த சுற்றறிக்கையை நில நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ளார்.அதில், தொழில் பயன்பாட்டுக்காக 8.3820 ஹெக்டேர் நிலம் தேவைப்படு வதாக கூறப்பட்டு உள்ளது. மேலும் அதில், கையகப்படுத்தப்பட உள்ள நிலங்கள் தரிசு நிலங்களாக வகைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், அவற்றில் வேம்பு மற்றும் தென்னை மரங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார். மேலும், அந்த நிலங்களின் திட்டம் பற்றிய வரைபடங்கள், மாவட்ட வருவாய் சிறப்பு அலுவலர் மற்றும் சிறப்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன என்றும் அலுவலக வேலை நாட்களில் எந்த நேரத்திலும் அவற்றை ஆய்வு செய்யலாம் என்றும் ராஜேஷ் லக்கானி குறிப்பிட்டுள்ளார்.</p><h2>5 ஆயிரம் பேருக்கு வேலை</h2><p>சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்ட அறிவிப்பைதொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த சிப்காட் பூங்காவில் செமிகண்டக்டர் தொழிற்சாலைகளுடன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுவசதிகளும் இடம்பெறும் என்று அவர்தெரிவித்திருந்தார். இந்த திட்டத்தின் மூலம் 5 ஆயிரம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும், இது தமிழகத்தின் மின்னணு மற்றும் செமிகண்டக்டர் சூழலியலுக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மதுரமங்கலத்தில் 166.31.50 ஹெக்டேர் பட்டா நிலம் (410.80ஏக்கர்) எடுப்பு, 4.67.50 ஹெக்டேர் (11.55 ஏக்கர்) அரசு புறம்போக்கு நிலஉரிமை மாற்றம் மற்றும் அங்கு புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கும் திட்டத்திற்கு, தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நிலஎடுப்பு சட்டத்தின் கீழ் தமிழக அரசு 5.2.2024 அன்று உத்தரவிட்டு இருந்தனிநபர் பேச்சுவார்த்தை மூலம் நிலத்தை கையகப்படுத்தவும், நில எடுப் புக்கான புதிய பணியிடங்களை ஏற்படுத்துவது தொடர்பாகவும், நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கி அந்த ஆணை வெளியிடப்பட்டு இருந்தது.</p> ]]></content:encoded></item><item><title>
திருவொற்றியூரில் துணை நடிகர் கொல்லப்பட்ட சம்பவம்: விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/incident-involving-the-murder-of-a-supporting-actor-in-thiruvottiyur-shocking-details-revealed-during-the-investigation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/incident-involving-the-murder-of-a-supporting-actor-in-thiruvottiyur-shocking-details-revealed-during-the-investigation#comments</comments><guid isPermaLink="false">5da2b26f-e0a5-4a6d-ae85-5d03d8e99d82</guid><pubDate>Fri, 11 Sep 2026 02:38:14 +0000</pubDate><atom:updated>2026-09-11T02:38:14.007Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,Murder case,supporting actor,துணை நடிகர்,திருவொற்றியூர்,Thiruvotriyur,திடுக்கிடும் தகவல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/9h5b37th/4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/9h5b37th/4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவொற்றியூர்,</p><p>திருவொற்றியூரில் முன்விரோதம் காரணமாக துணை நடிகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை</h2><p>திருவொற்றியூர் மேற்கு மாட வீதியைச் சேர்ந்தவர் பிரதீப் ராஜ் (வயது 28). சினிமாவில் துணை நடிகராக நடித்து வந்த இவர் பட வாய்ப்புகள் இல்லாத நேரங்களில் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வந்தார். இவரது தாயார் ராணி, அதே பகுதியை சேர்ந்த நவநீதம் என்ற பெண்ணிடம் கடன் வாங்கி, அந்த பணத்தை பலருக்கு வட்டிக்கு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இருதரப்பினருக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை ஏற்பட்டது.</p> <h2>போலீசில் புகார் அளித்த பிரதீப் ராஜ் </h2><p>கடந்த ஜூலை 27-ந் தேதி நவநீதம், பிரதீப் ராஜின் வீட்டுக்கு சென்று ராணியிடம் பணத்தை கேட்டதாக தெரிகிறது. அப்போது பிரதீப் ராஜ், அவரது தாயார் ராணி மற்றும் உறவினர்கள், பணத்தை திருப்பி தர முடியாது என கூறி நவநீதத்தை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நவநீதம், தைராய்டு மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். பின்னர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்த புகாரின் பேரில் திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதீப் ராஜை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி 3 நாட்களுக்கு முன்பு பிரதீப் ராஜ் திருவொற்றியூர் போலீசிலும், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளித்தார்.</p>  <h2>பிரதீப் ராஜ் சரமாரியாக வெட்டிக்கொலை</h2><p>இதையடுத்து திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ், பிரதீப் ராஜ் மற்றும் நவநீதம் தரப்பினரை அழைத்து பேசி எச்சரித்து அனுப்பி வைத்தார். மேலும், விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலை வைப்பது தொடர்பாகவும் இருதரப்பினருக்கும் இடையே பிரச்சனை இருந்ததால், இதுகுறித்தும் போலீசார் அவர்களை எச்சரித்தனர்.இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு திருவொற்றியூர் மேற்கு மாட வீதியில் பிரதீப் ராஜ் நடந்து சென்றபோது நவநீதத்தின் மகன், நவீன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார்.</p>  <h2>கொலை தொடர்பாக 4 பேர் கைது </h2><p>இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை தொடர்பாக நவீன் (32), அரி கிருஷ்ணன் (21), ஜாபர் (24), லோகேஷ் (27) ஆகிய 4 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நவீனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், தனது தாயார் நவநீதம் டிபன் கடை நடத்தும் இடத்துக்கு அருகே பிரதீப் ராஜும், அவரது நண்பர்களும் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலை வைத்து வழிபாடு நடத்தி வந்தனர். இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டது. மேலும், உங்களது சொந்த பிரச்சினையால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் ஏற்கனவே எச்சரித்தனர். </p><h2>திடுக்கிடும் தகவல்</h2><p>பண தகராறு உள்ளிட்ட முன்விரோதம் எங்களுக்குள் இருந்து வந்ததால் நண்பர்களுடன் சேர்ந்து பிரதீப் ராஜை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். இதற்கிடையே, நேற்று திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே பிரதீப் ராஜின் உறவினர்கள், கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மேலும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக புகார் அளிக்க வந்தபோது போலீசார் தன்னை மிரட்டியதாக பிரதீப் ராஜ் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அதிகரித்த மின் தேவை; தினமும் ஒரு மணி நேரம் சுழற்சி முறையில் மின்தடை என தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/reports-indicate-increased-electricity-demand-and-a-daily-one-hour-rotational-power-cut</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/reports-indicate-increased-electricity-demand-and-a-daily-one-hour-rotational-power-cut#comments</comments><guid isPermaLink="false">23ee8066-9424-43f6-8d69-1a94f7739a78</guid><pubDate>Fri, 11 Sep 2026 02:26:17 +0000</pubDate><atom:updated>2026-09-11T02:26:17.607Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,Tamil Nadu,electricity,மின் தேவை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/ry017aqy/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/ry017aqy/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழகத்தில் கோடை காலங்களில் பொதுவாக மின் தேவை அதிகரிக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ந்தேதி, தமிழகத்தின் மின் தேவை இதுவரை இல்லாத அளவிற்கு 21,211 மெகாவாட் வரை அதிகரித்தது. கோடை காலத்திற்கு பிறகு ஜூலையில் இருந்து வெயில் குறையும்போது, மின் தேவையும் படிப்படியாக குறையும். </p><p>ஆனால், இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் முதல் முறையாக ஜூலை 14-ந்தேதி தமிழகத்தின் மின்தேவை, 21,724 மெகாவாட்டாக அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியது. அதுமட்டுமின்றி, தினந்தோறும் மாலை நேரங்களில் மின் தேவை சராசரியாக 20 ஆயிரம் மெகாவாட்டாக இருந்து வந்த நிலையில், இந்த மாதத்தில் அது 21 ஆயிரம் மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. </p><p>இவ்வாறு மின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மின் வாரியத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனிடையே சென்னை புறநகர் உட்பட, பல இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. தினமும் ஒரு மணி நேரம், குறிப்பாக இரவு நேரங்களில் முன் அறிவிப்பின்றி மின் தடை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>இது குறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், “வழக்கமாக கோடைக் காலத்துடன் ஒப்பிடும்போது, செப்டம்பரில் மின் தேவை குறையும் ஆனால் இந்த ஆண்டு மின் தேவை குறையவில்லை. மின் வாரியமும் நிதி நெருக்கடியில் உள்ளதால், வெளிச்சந்தையில் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதை, அதிகாரிகள் தவிர்த்து வருகின்றனர். சென்னை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் தினமும், ஒரு மணி நேரம் சுழற்சி முறையில் மின் தடை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது” என்று கூறினார். </p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்கிறது எச்.டி.ஹூண்டாய் நிறுவனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/hd-hyundai-is-setting-up-a-shipyard-in-thoothukudi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/hd-hyundai-is-setting-up-a-shipyard-in-thoothukudi#comments</comments><guid isPermaLink="false">48f68308-cb56-43f8-8506-baa1ccfdbcbc</guid><pubDate>Fri, 11 Sep 2026 02:05:40 +0000</pubDate><atom:updated>2026-09-11T02:05:40.790Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Shipyards,கப்பல் கட்டும் தளம்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/edaa7323/4.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/edaa7323/4.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>தூத்துக்குடி மாவட்டத்தில் வ.உ.சி., துறைமுகம் அருகில், 18,000 கோடி ரூபாய் முதலீட்டில் கப்பல் கட்டும் தளம் அமைக்க தமிழக அரசுடன், தென் கொரியா நாட்டை சேர்ந்த ஹெச். டி. ஹூண்டாய் நிறுவனம், 2025ல் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. அந்நிறுவனத்தின் எச்.டி., கே. எஸ். ஓ.இ., கப்பல் கட்டுமானம் மற்றும் கடல்சார் துறையில் ஈடுபட்டு வருகிறது. </p><p>இந்நிறுவனம், தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க உள்ளது. இதற்கிடையே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், அந் நிறுவனத்தின் முதலீட்டை ஈர்க்கும் முயற்சியில் ஆந்திர அரசு ஈடுபட்டது. எச். டி., ஹூண்டாயின் முதலீட்டை தக்க வைக்க தமிழக அதிகாரிகள் தொடர்ந்து பேச்சு நடத்தினர்.</p><p>எச்.டி., கே.எஸ்.ஓ.இ., நிறுவனத்தின் சன்ஜுன் ஹாங் தலைமையிலான மூத்த குழு, கடந்த 1ம் தேதி முதல், ஒரு வாரம் துாத்துக்குடியில் முகா மிட்டு இடங்களை ஆய்வு பார்வையிட்டு செய்தது.</p> <p>எச்.டி., கே.எஸ்.ஓ.இ., நிறுவனத்தின் சன்ஜுன் ஹாங் தலைமையிலான மூத்த குழு, கடந்த 1ம் தேதி முதல், ஒரு வாரம் துாத்துக்குடியில் முகாமிட்டு இடங்களை ஆய்வு பார்வையிட்டு செய்தது.</p> <p>அக்குழு, சென்னை தலைமை செயலகத்தில் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, செயலர் விஜயகுமார் உள்ளிட்டோருடன் நேற்று முன்தினம் பேச்சு நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து தமிழகத்தில் திட்டத்தை முன்னெடுத்து செல்வதாக அந்நிறுவனம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் 19ம் தேதி ஆட்டோ டிரைவர்கள் பேரணி..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/auto-rickshaw-drivers-rally-in-chennai-on-the-19th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/auto-rickshaw-drivers-rally-in-chennai-on-the-19th#comments</comments><guid isPermaLink="false">298b4fad-8340-4269-b432-19ad98532b17</guid><pubDate>Fri, 11 Sep 2026 01:57:11 +0000</pubDate><atom:updated>2026-09-11T01:57:11.837Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,ஆட்டோ டிரைவர்,Auto driver,Auto,ஆட்டோ,auto drivers,பேரணி,rally,ஆட்டோ டிரைவர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/qw7iu3wv/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆட்டோ டிரைவர்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/qw7iu3wv/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் ஓடும் 3.46 லட்சம் ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக, கடந்த ஜூலை 9-ம் தேதி சென்னையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றதாக அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.</p><p>இந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பயணியர் தரப்பினர் பங்கேற்று, ஆட்டோ கட்டண உயர்வு தொடர்பான கருத்துகள் பரிமாறப்பட்டன. இதன் அடிப்படையில் தமிழக அரசு இறுதி அறிக்கையையும் தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>புதிய கமிட்டி அமைப்பதற்கு எதிர்ப்பு</h2><p>இந்நிலையில், ஆட்டோ கட்டணத்தை மாற்றி அமைப்பதற்காக புதிய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருப்பது ஏற்புடையதல்ல என பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.</p><p>ஏற்கனவே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில், திருத்தப்பட்ட புதிய ஆட்டோ மீட்டர் கட்டணத்தை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><h2>கோட்டையை நோக்கி பேரணி</h2><p>மேலும், ‘பைக் டாக்ஸி’ சேவைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வரும் 19-ம் தேதி கோட்டையை நோக்கி பேரணி நடத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>இந்த பேரணியில் 9 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஏராளமான ஆட்டோ <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தொழிலாளர்கள் </a>பங்கேற்க உள்ளதாகவும் பாலசுப்பிரமணியன் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>கூடங்குளம்  அணு மின் நிலையத்தில் இருந்து தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் ஒதுக்கீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-electricity-allocated-to-tamil-nadu-from-the-kudankulam-nuclear-power-plant</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-electricity-allocated-to-tamil-nadu-from-the-kudankulam-nuclear-power-plant#comments</comments><guid isPermaLink="false">827014c0-2c44-4601-9660-b3a4d5c7e967</guid><pubDate>Fri, 11 Sep 2026 01:52:05 +0000</pubDate><atom:updated>2026-09-11T01:52:05.657Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்சாரம்,electricity,கூடங்குளம்,nuclear power plant,அணு மின் நிலையம்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/o7ajm18j/3.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/o7ajm18j/3.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,  </p><p>நெல்லை மாவட்டம், கூடங்குளம் அணு மின் நிலையத்தில், தலா, 1,000 மெகாவாட் திறன் உடைய, 3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில், மூன்றாம் அணு உலையில், 2027 டிசம்பரிலும், நான்காம் அணு உலையில், 2028 டிசம்பரிலும், மின் உற்பத்தி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>இந்த இரு அணு உலைகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, முழுமையாக தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு, தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், 1,507.51 மெகாவாட் மின்</p><p>சாரத்தை, தமிழகத்திற்கு ஒதுக்குவதாக, மத்திய மின் துறை தெரிவித்துள்ளது.</p><p>மேலும், ஆந்திராவுக்கு 226; கர்நாடகாவுக்கு, 256; புதுச்சேரிக்கு, 9 மெகா வாட் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மின் உற்பத்தி நிறுவனங்கள், எந்த மாநிலத்தில் மின் நிலையம் அமைக்கிறதோ, அந்த மாநிலத்திற்கு,</p><p>உற்பத்தியாகும் மொத்த மின்சாரத்தில், 50 சதவீதம் ஒதுக்கப்படும்.</p><p>ஆனால், கூடங்குளம் விரிவாக்க மின் நிலையத்தில் இருந்து, தமிழகத் திற்கு 75.63 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு விபரம் தொடர்பாக, மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஆணை விரைவில் வெளியாக உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு சட்டப்பேரவை சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ. நியமனம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mla-kanimozhi-santhosh-appointed-as-a-member-of-the-tamil-nadu-legislative-assemblys-committee-on-subordinate-legislation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mla-kanimozhi-santhosh-appointed-as-a-member-of-the-tamil-nadu-legislative-assemblys-committee-on-subordinate-legislation#comments</comments><guid isPermaLink="false">4f21ab7a-c7dd-41c3-9ba1-9898ebbf780c</guid><pubDate>Fri, 11 Sep 2026 01:22:25 +0000</pubDate><atom:updated>2026-09-11T01:22:25.339Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கனிமொழி சந்தோஷ்,kanimozhi santhosh</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/tscasa2g/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/tscasa2g/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-</p><p>“தமிழ்நாடு சட்டப்பேரவை சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக என்னைத் தேர்வு செய்து, கூடுதல் பொறுப்பு வழங்கிய முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்க்கும், சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகருக்கும் எனது மரியாதையுடன் கூடிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>மக்கள் நலனையும், ஜனநாயகத்தின் மாண்பையும் முன்னிறுத்தி, சட்ட விதிகள் தொடர்பான இந்த முக்கியமான பொறுப்பை முழு அர்ப்பணிப்புடனும் பொறுப்புணர்வுடனும் நிறைவேற்றுவேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>திருப்பூர்-ஈரோடு இடையே தண்டவாள பராமரிப்பு பணி: ரெயில் சேவையில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/track-maintenance-work-between-tiruppur-and-erode-changes-to-train-services</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/track-maintenance-work-between-tiruppur-and-erode-changes-to-train-services#comments</comments><guid isPermaLink="false">3bd33bb5-8d16-44eb-870e-1ebbe6fce957</guid><pubDate>Fri, 11 Sep 2026 01:21:44 +0000</pubDate><atom:updated>2026-09-11T01:21:44.821Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்,எர்ணாகுளம்,Erode,ஈரோடு,தன்பாத்,Ernakulam,ஆலப்புழா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/kqamc07j/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/kqamc07j/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர், </p><p>திருப்பூர்-ஈரோடு ரெயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள ஊத்துக்குளி ரெயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இந்த பணிகளை எளிதாக்கும் வகையில், குறிப்பிட்ட ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.</p><h2>எர்ணாகுளம்-டாடாநகர்</h2><p>அதன்படி, எர்ணாகுளம்-டாடாநகர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.18190) நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை). வருகிற 16, 19 மற்றும் 20-ந்தேதிகளில் எர் ணாகுளத்தில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு வழியில் 55 நிமிடங்கள் நிறுத்தப்படும்.</p><h2>ஆலப்புழா-தன்பாத்</h2><p>ஆலப்புழா-தன்பாத் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">எக்ஸ்பிரஸ் </a>(13352) நாளை மறுநாள், வருகிற 16, 19 மற்றும் 20-ந்தேதிகளில் ஆலப்புழாவில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு வழியில் 35 நிமிடங்கள் நிறுத்தப்படும். மேற் கண்ட தகவலை ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தென்னை மரங்களை தாக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/methods-to-control-whiteflies-attacking-coconut-trees</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/methods-to-control-whiteflies-attacking-coconut-trees#comments</comments><guid isPermaLink="false">08996233-8ee0-4da9-85e4-0da59ef35c72</guid><pubDate>Fri, 11 Sep 2026 01:02:53 +0000</pubDate><atom:updated>2026-09-11T01:02:53.074Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விவசாயம்,Tanjore,தஞ்சை,Coconut,தென்னை மரங்கள்,coconut tree,தென்னை,தென்னை விவசாயம்,Coconut Farming,வெள்ளை ஈக்கள்,விவசாய செய்திகள்,agricultural news,வேளாண் செய்திகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/nr7fakbr/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தென்னை மரங்களை தாக்கும் வெள்ளை ஈக்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/nr7fakbr/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சை,</p><p>தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் தென்னை மரங்களை தாக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சாந்தி விளக்கம் அளித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-</p><h2>வெள்ளை ஈ தாக்குதல்</h2><p>தென்னையில் ரூகோஸ் சுருள் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu/how-to-control-cotton-whitefly-disease-929226">வெள்ளை ஈ தாக்குதல் </a>காணப்படுகிறது. தென்னை ஓலையில் வெள்ளை ஈக்கள், 50 முதல் 65 முட்டைகள் வரை சுருள் வடிவில் இடுகின்றன. இந்த முட்டைகள் 4 முதல் 7 நாட்களில் குஞ்சு பொறித்து, ஓலையில் சாறு உறிஞ்ச தொடங்குகின்றன. வளர்ச்சியடைந்த நிலையில், பறக்கத் தொடங்கி அருகில் உள்ள மரங்கள், தோப்புகளுக்கு பரவுகின்றன. வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த, ஏக்கருக்கு இரண்டு விளக்கு பொறிகளை இரவு 7 முதல் 11 மணி வரை எரிய விட்டு, கவர்ந்து அழிக்கலாம். ஏக்கருக்கு 10 மஞ்சள் ஒட்டுப் பொறிகளை, நிலத்தில் இருந்து 5 அடி உயரத்தில் கட்டலாம் அல்லது, மரத்தின் தண்டுப் பகுதியில், சுற்றி விடலாம். பாதிப்புள்ள மரங்களின் ஒலைகள் மீது தண்ணீரை விசைத் தெளிப்பான் வாயிலாக அதிக அழுத்தத்துடன் பீய்ச்சி அடித்து, வெள்ளை ஈக்கள் மற்றும் முட்டைகளை அழிக்கலாம்.</p><h2>ஒட்டுண்ணிகள்</h2><p>உயிரியல் முறையில் கட்டுப்படுத்த கிரைசோபெர்லா ஒட்டுண்ணிகள் ஏக்கருக்கு 500 எண்ணிக்கையில் ஓலைகளின் அடிப்பகுதியில் கட்டினால். வெள்ளை ஈக்களின் புழுக்களை உட்கொண்டு அழிக்கும். காக்ஸினெல் லிட் பொறிவண்டு மற்றும் என்கார்சியா ஒட்டுண்ணிகளை ஓலையில் வைத்தால், வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும். தெளிப்பு முறையை கையாள விரும்பினால், ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மி.லி., வேப்பெண்ணெய் அல்லது 2 மி.லி., அசாடிராக்டின் கலந்து அத்துடன், 1 மி.லி. ஒட்டு திரவம் கலந்து ஓலைகளின் அடிப்பகுதியில் தெளிக்கலாம்.</p><h2>பூச்சிகொல்லி மருந்துகள்</h2><p>மேலும், வெள்ளை ஈ பாதிப்புள்ள தோப்புகளில், பூச்சிகொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் இருந்தால், இயற்கை எதிரிகள் பெருகி, வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் தற்போது கடந்த 5 மாதங்களுக்கு மேலாக மழை இல்லாததால் வெள்ளை ஈ தாக்குதல் அதிகம் காணப்படுகிறது. எனவே அதை கட்டுப்படுத்துவது அவசியம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தி விடுமுறை: ஆம்னி பஸ்களில் 4 மடங்கு கட்டணம் உயர்வு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-chaturthi-holiday-omni-bus-fares-hiked-fourfold</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-chaturthi-holiday-omni-bus-fares-hiked-fourfold#comments</comments><guid isPermaLink="false">a1a70024-28b6-4fbf-9ca7-89710bf443df</guid><pubDate>Fri, 11 Sep 2026 00:58:26 +0000</pubDate><atom:updated>2026-09-11T00:58:26.264Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Omni Bus,ஆம்னி பஸ்,விநாயகர் சதுர்த்தி,கட்டணம் உயர்வு,Vinayagar Chathurthi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/48w4kwzu/bus.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்பு படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆம்னி பஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/48w4kwzu/bus.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p> சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள், விடுமுறை மற்றும் விழாக்காலங்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.  இதனால், தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் பஸ்,ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும்.  ரெயில்களில் இருக்கைகள் முன் கூட்டியே நிரம்பிவிடுவதாலும், முக்கியமாக விழாக்காலங்களில் சில நிமி டங்களில் டிக்கெட்டுகள் தீர்ந்துவிடுவதாலும் பெரும்பாலான மக்கள் பஸ் போக்குவரத்தையே நம்பி இருக்கிறார்கள். இதனை பயன்படுத்திக் கொள் ளும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தங்கள் பஸ் பயண டிக்கெட் விலையை விழாக்காலங்களில் கடுமையாக உயர்த்துவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.</p><h2>4 மடங்கு கட்டணம் உயர்வு</h2><p>அந்த வகையில் வருகிற 14-ந் தேதி திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி வருவதால், சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாட்கள் தொடர் விடுமுறையாகிவிடுகிறது. இதனால், பெரும்பாலான மக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட உள்ளனர். இதனால், சென்னை யில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்லும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஆம்னி பஸ்</a>களில் கட்ட ணம் 4 மடங்கு வரை அதிகரித்து உள்ளது.அதாவது, சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.4 ஆயிரத்து 13-ம், கோவைக்கு ரூ.3 ஆயிரத்து 239-ம், நெல்லைக்கு ரூ.3,499-ம், கன்னியாகு மரிக்கு ரூ.3 ஆயிரத்து 882-ம், நாகர்கோவிலுக்கு ரூ.3 ஆயிரத்து 699-ம், ஈரோட்டிற்கு ரூ.2 ஆயிரத்து 580-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><h2>திங்கட்கிழமை கட்டண விவரம்</h2><p>அதே போன்று மறுமார்க்கத்தில் வருகிற 14-ந் தேதி திங்கட்கிழமை பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு வருவதற்கான அதிகபட்ச பஸ் கட்டணம் விவரம் வருமாறு:-மதுரையில் இருந்து சென்னைக்கு ரூ.2 ஆயிரத்து 650-ம், கோவையில் இருந்து சென்னைக்கு ரூ.2 ஆயிரத்து 999-ம், நெல்லையில் இருந்து சென்னைக்கு ரூ.3 ஆயிரத்து 999-ம், கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு ரூ.3 ஆயிரத்து 831-ம், நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு ரூ.3 ஆயிரத்து 599-ம், ஈரோட்டில் இருந்து சென்னைக்கு ரூ.2 ஆயிரத்து 40-ம் தற்போதைய கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஒருவேளை இந்த கட்டணங்கள் ஞாயிறு, திங்கட்கிழமைகளில் மக்களின் தேவை அதிகரிப்பை கருத்தில் கொண்டு மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-seats-for-government-school-students-in-medical-courses</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-seats-for-government-school-students-in-medical-courses#comments</comments><guid isPermaLink="false">8e2b2f34-1b72-4a50-b22d-ad1c1be9af7f</guid><pubDate>Fri, 11 Sep 2026 00:57:34 +0000</pubDate><atom:updated>2026-09-11T00:57:34.344Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தலையங்கம்,Editorial,மருத்துவப் படிப்பு,அரசு பள்ளி மாணவர்கள்,Medical Studies,Govt School Students</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/e92p7f0s/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/e92p7f0s/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டில் பிளஸ்-2 முடித்து உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்கள் பலரின் முதல் கனவு மருத்துவப் படிப்பாகும். கடந்த 2017-ம் ஆண்டு முதல் நீட் தேர்வின் அடிப்படையில்தான் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பா.ஜ.க. தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் நிலைப்பாடும் நீட் தேர்வு ரத்து செய்யப்படவேண்டும் என்பதுதான். முதல்-அமைச்சர் விஜய்யின் நிலைப்பாடும் அதுதான். அதனால்தான், த.வெ.க. ஆட்சி அமைத்து 100 நாட்களுக்குள் சட்டசபையில் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்ற தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.</p><p>இந்த தீர்மானத்தை தாக்கல் செய்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் பேசுகையில், மருத்துவக் கல்வி என்பது வசதி படைத்தவர்களுக்கானதாக இருக்கக்கூடாது என்றும், நீட் தேர்வால் தனியார் பயிற்சி மையங்கள்தான் பயனடைகின்றன என்றும் கூறினார். மேலும், சமூகத்தில் சமநிலையான கட்டமைப்பு சீர்குலைந்துவிட்டது என்றும், நீட் தேர்வை ரத்து செய்து மாநில அரசே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதிக்கவேண்டும் என்றும் அவர் பேசினார்.</p> <p>ஆக, நீட் தேர்வு வேண்டவே வேண்டாம். பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில்தான் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோரிக்கையாக உள்ளது. என்றாலும், நீட் தேர்வு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி நடைபெறுகிறது. எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்து தனிச் சட்டம் கொண்டுவந்தால் மட்டுமே அதை ரத்து செய்ய முடியும்.</p><p>அந்த நிலைப்பாட்டை மத்திய அரசு எடுக்கும் வரை நீட் தேர்வு தொடரத்தான் செய்யும். எனவே, அதுவரை மாணவர்கள் நீட் தேர்வை எழுதவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 36 அரசு மருத்துவக் கல்லூரிகள், 25 தனியார் மருத்துவக் கல்லூரிகள் என மொத்தம் 61 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் 7,157 இடங்கள் உள்ளன.</p><p>இதுமட்டுமல்லாமல், பல் மருத்துவப் படிப்புக்கு மாநில ஒதுக்கீட்டின் கீழ் 1,383 இடங்கள் இருக்கின்றன. எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது, அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது.</p><p>இதன் பயனாக, இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் படித்த 510 மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பிலும், 104 மாணவர்களுக்கு பல் மருத்துவமான பி.டி.எஸ். படிப்பிலும் என 614 பேருக்கு இடம் கிடைத்துள்ளது. இது முதற்கட்ட கலந்தாய்வு முடிவில் கிடைத்த இடங்கள் ஆகும். தற்போது 2-வது கட்ட கலந்தாய்வில், அரசு மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகள், தனியார் பல்கலைக்கழகங்களில் 800-க்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கூடுதலாக வந்திருக்கின்றன. </p><p>அந்த இடங்களிலும் அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் மேலும் இடங்கள் கிடைக்க இருக்கின்றன. அந்தவகையில் 614 இடங்கள் முதற்கட்ட கலந்தாய்வில் கிடைத்த நிலையில், 2-வது கட்ட கலந்தாய்வு முடிவில் அதைவிட மேலும் சில இடங்களையும் அரசு பள்ளி மாணவ- மாணவிகள் அலங்கரிக்க இருக்கிறார்கள். ஆக, எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட இந்த 7.5 சதவீத இடஒதுக்கீடு, பல அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான கனவு கோட்டையின் வாசலைத் திறந்துவைத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தி: பெங்களூரு-நெல்லை இடையே சிறப்பு ரெயில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-chaturthi-special-train-between-bengaluru-and-nellai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-chaturthi-special-train-between-bengaluru-and-nellai#comments</comments><guid isPermaLink="false">80cc92fd-99eb-4121-953b-07fb80796d82</guid><pubDate>Fri, 11 Sep 2026 00:42:22 +0000</pubDate><atom:updated>2026-09-11T00:42:22.636Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,சிறப்பு ரெயில்,Special Train ​</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/ls53wgwy/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/ls53wgwy/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், ரெயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பெங்களூரு நெல்லை இடையே சேலம், நாமக்கல், கரூர் வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. </p><p>அதன்படி, கே.எஸ்.ஆர். பெங்களூரு நெல்லை சிறப்பு ரெயில் (06527) இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 11.35 மணிக்கு கே.எஸ்.ஆர். பெங்களூருவில் இருந்து புறப்படுகிறது. இந்த ரெயில் பெங்களூரு கன்டோன்மென்ட், கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக நாளை (சனிக்கிழமை) காலை 4.30 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் 4.40 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக மதியம் 1.15 மணிக்கு நெல்லை சென்றடையும்.</p><p>மறு மார்க்கத்தில் நெல்லை - பெங்களூரு கன்டோன்மென்ட் சிறப்பு ரெயில் (06528), நாளை (சனிக்கிழமை) பிற்பகல் 3.45 மணிக்கு நெல்லையில் இருந்து இருந்து புறப்படும். இந்த ரெயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல் வழியாக இரவு 9.45 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர், இரவு 9.55 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு, பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3.30 மணிக்கு பெங்களூரு கன்டோன் மென்ட் சென்றடையும் என்று சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>விபத்தில் காயமடைந்தவருக்கு ‘செல்போன் டார்ச்’ வெளிச்சத்தில் சிகிச்சை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/accident-victim-treated-with-cell-phone-torch-light</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/accident-victim-treated-with-cell-phone-torch-light#comments</comments><guid isPermaLink="false">ec7f3142-4ce4-45b8-8607-35bb872dcaad</guid><pubDate>Fri, 11 Sep 2026 00:40:06 +0000</pubDate><atom:updated>2026-09-11T00:40:06.140Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Accident,மருத்துவமனை,புதுகோட்டை,மின்வெட்டு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/j528cu8i/hosipital33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ செல்போன்]]></media:title><media:description type="html"><![CDATA[ ‘செல்போன் டார்ச்’ வெளிச்சத்தில் சிகிச்சை
]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/j528cu8i/hosipital33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுக்கோட்டை, </p><p>மின்வெட்டு காரணமாக கீரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் விபத்தில் காயமடைந்தவ ருக்கு 'செல்போன் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.</p><h2>தொடர் மின்வெட்டு</h2><p>புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.</p><p>இதேபோல் இரவிலும் மின்வெட்டு தொடர்கிறது. இந்த அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள், குழந்தைகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள சிறு, குறு தொழில்களும் முடங்கி உள்ளது.</p><h2>செல்போன் டார்ச் வெளிச்சத்தில்...</h2><p>இந்த நிலையில் கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த ஒருவரை சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் அழைத்து வந்தனர். அப்போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின்சாரம் இல்லை. இதனால் அங்கிருந்தவர்கள் சிகிச்சை அளிக்க என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தனர். இதையடுத்து காயமடைந்த வருக்கு நர்சுகள் '<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D">செல்போன் டார்ச்</a>' வெளிச்சத்தில் சிகிச்சை அளித்தனர். </p><p>இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து ஆலங்குடி பகுதியில் மின் வெட்டை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/current-petrol-and-diesel-prices-in-chennai-5</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/current-petrol-and-diesel-prices-in-chennai-5#comments</comments><guid isPermaLink="false">2b9f6504-97b0-43bc-b259-4b6b16dca25a</guid><pubDate>Fri, 11 Sep 2026 00:31:01 +0000</pubDate><atom:updated>2026-09-11T00:31:01.738Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல் விலை,டீசல் விலை,Petrol and diesel prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/oj9avc3y/petrol.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/oj9avc3y/petrol.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.</p> <h2>பெட்ரோல், டீசல் விலை</h2><p>இந்நிலையில், சென்னையில் இன்று (11.09.2026 வெள்ளிக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ. 99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>புதிய தலைமைச்செயலகத்துக்கு எதிர்ப்பு: 12 மீனவ கிராம மக்கள் போராட முடிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/opposition-to-the-new-headquarters</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/opposition-to-the-new-headquarters#comments</comments><guid isPermaLink="false">8413b16b-0f04-480b-8a89-9a6505edd7d9</guid><pubDate>Thu, 10 Sep 2026 22:26:55 +0000</pubDate><atom:updated>2026-09-10T22:26:55.855Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,Vijay,விஜய்,பட்டினப்பாக்கம்,தலைமைச்செயலகம்,மீனவர்கள் போராட்டம்,புதிய தலைமைச்செயலகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/byp6meqr/tngovt33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
புதிய தலைமைச்செயலகத்துக்கு எதிர்ப்பு]]></media:title><media:description type="html"><![CDATA[  12 மீனவ கிராம மக்கள் போராட முடிவு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/byp6meqr/tngovt33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>புதிய தலைமைச்செயலகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 12 மீனவ கிராம மக்கள் போராட முடிவு செய்துள்ளனர். இது தொடர்பான ஆலோசனை கூட்டம் 15-ந்தேதி பட்டினப்பாக்கத்தில் நடக்க உள்ளது.</p><h2>புதிய தலைமைச்செயலகம்</h2><p>தமிழக அரசின் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">புதிய தலைமைச்செயலக கட்டிடம்</a> சென்னை பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு அரசியல் கட்சி தலைவர்களும், மீனவ அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.</p><p>கடலும், கடல் சார்ந்த நெய்தல் இடமான அந்த இடத்தில் புதிய தலைமைச்செயலகம் கட்டி னால் அது மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களுக்கான வாழ்வியலையும் பாதிக்கும் என்பதால் பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு பூதாகரமாக கிளம்பியுள்ளது. இது சம்பந்த மாக போராட்டக்களத்துக்கு செல்லவும் மீனவ அமைப்புகள் முடிவு செய்துள்ளது.</p><p>ஆமைகள் முட்டையிடும் பகுதிகளில் கட்டிடங்கள் கட்டக்கூடாது என்று கோர்ட்டு உத்தரவு இருந்தும், அரசு பட்டினப்பாக்கத்தை குறி வைத்து இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்று மீனவ அமைப்புகள் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.</p><h2>மீனவர்களுக்கான இடம்</h2><p>இதுகுறித்து மயிலை பகுதி அனைத்து மீனவ கிராம சபை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவ ரான பாரதி கூறியதாவது:-</p><p>புதிய தலைமைச்செயலகம் கட்டுவதற்கு அரசு முடிவு செய்துள்ள இடமே காலம். காலமாக மீனவர்களுக்கானதுதான். இது கடல்சார் நிலம். அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் அனை வருக்கும் இது தெரியும். எங்களது பூர்வீக இடத்தில் மீனவர்களுக்கான குடியிருப்புகள் தான் கட்டி தர வேண்டும்.</p><p>எங்கள் இடத்தை திருப்பி தர வேண்டும். மாற்றாக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்க வைக்கும் வகையில் புதிய தலைமை செயலகம் கட்டுவது எந்தவிதத்தில் நியாயம்?.</p><p>பொதுவாக கோட்டையில் சுதந்திர தினத்தில் கொடியேற்றும் நிகழ்வு நடக்கும்போதே எங்களை கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல விட மாட்டார்கள். இப்போது புதிய தலைமைச்செயலகம் வேறு கட்டி விட்டால், நாங்கள் வீட்டை விட்டு கூட வர முடியாது. ஆங்காங்கே தடுப்பு வேலிகள் அமைத்து எங்களை சுதந்திரமாக நடமாட கூட விட மாட்டார்கள். மீன்பிடிக்கவும் செல்ல முடியாது.</p><h2>12 மீனவ கிராமங்கள் எதிர்ப்பு</h2><p>ஏற்கனவே சாந்தோம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் இருக்கிறது. 2023-ம் ஆண்டில் இருந்தே எங்கள் பூர்வீக இடத்தில் குடியிருப்பு வேண்டும் என்று சொல்லி வருகிறோம். தற்போது அமைச்சராக இருக்கும் வெங்கடரமணன் கூட, தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதி கொடுத்தார். எங்களுக்கு சொந்தமான இடத்தை பெற்று தருவோம் என்று தெரிவித்தார். இப் போது அது குறித்து பேச மறுக்கிறார்.</p><p>புதிய தலைமைச்செயலக திட்டத்தால் நேரடியாக பாதிக்கப்படுவது முள்ளிகுப்பம், முள்ளிமாந கர்தான். பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம், ராஜீவ்காந்தி நகர், பவானி குப்பம். இருதயபுரம், செல்வராஜபுரம், டூமிங் குப்பம். நொச்சி நகர் உள்பட 12 மீனவ கிராம மக்கள் பாதிக்கப்படு வார்கள். அவர்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகும்.</p><p>முள்ளிகுப்பம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட மீனவக்குடும் பங்களின் வாழ்வாதாரமும், படகுகளை நிறுத்தவும், வலைகளை பின்னவும் பயன்படுத்தும் கடற்கரை நிலங்களும் பாதிக்கப்படும்.</p><h2>போராட்டம் நடத்த முடிவு</h2><p>அரசின் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், எங்களின் நிலை குறித்து ஆலோசனை செய்ய வருகிற 15-ந்தேதி பட்டினப்பாக்கத்தில் ஆலோசனைக்கூட்டம் நடத்த இருக்கிறோம்.</p>]]></content:encoded></item><item><title>அரசு பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை; ஜி.எஸ்.டி. ஆய்வாளர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-female-government-official-gst-inspector-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-female-government-official-gst-inspector-arrested#comments</comments><guid isPermaLink="false">12b8f61a-7682-462f-8d74-8d5234996d16</guid><pubDate>Thu, 10 Sep 2026 21:56:13 +0000</pubDate><atom:updated>2026-09-10T21:56:13.840Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrest,பாலியல் தொல்லை,அரசு ஊழியர்,பெண் அதிகாரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/7nnlz5w5/arrest33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பாலியல் தொல்லை]]></media:title><media:description type="html"><![CDATA[  ஜி.எஸ்.டி. ஆய்வாளர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/7nnlz5w5/arrest33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திரு.வி.க நகர், </p><p>அரசு பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜி.எஸ்.டி. ஆய்வாளர் கைது செய்யப் பட்டார்.</p><h2>அரசு பெண் அதிகாரி</h2><p>சென்னை முகப்பேர் 2-வது பிரதான சாலையில் ஜி.எஸ்.டி. அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் ஆந்திராவை சேர்ந்த 32 வயதுள்ள இளம்பெண் ஒருவர் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இதே அலுவலகத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சவுரவ் (வயது 28) என்பவரும் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.</p><p>இந்நிலையில், சவுரவ் கடந்த சில நாட்களாக பெண் ஆய்வாளரிடம் பாலியல் ரீதியாகவும், இரட்டை அர்த்தத்திலும் பேசி தொடர்ந்து தொந்தரவு அளித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அந்த பெண் ஆய்வாளரின் புகைப்படங்களை மார்பிங் செய்து சமூக வலைத்தளங் களில் பதிவிட்டதுடன், உயர் அதிகாரிகளுடன் அவரை தொடர்புபடுத்தி தகாத வாசகங்களையும் பதிவிட்டு வந்ததாகவும் தெரிகிறது.</p><h2>ஜி.எஸ்.டி. ஆய்வாளர் கைது</h2><p>இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் ஆய்வாளர், சம்பவம் குறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் விசாரணை மேற் கொண்டனர். விசாரணையில், பெண் ஆய்வாளருக்கு சவுரவ் தொடர்ந்து<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%20"> பாலியல் தொந்தரவு </a>அளித்து வந்தது தெரியவந்தது.</p><p>இதையடுத்து ஜி.எஸ்.டி. ஆய்வாளர் சவுரவ் மீது பெண் வன்முறை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார். அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நாடு முழுவதும் 8½ லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/8-lakh-bank-employees-across-the-country-to-go-on-strike-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/8-lakh-bank-employees-across-the-country-to-go-on-strike-today#comments</comments><guid isPermaLink="false">89cdc488-3b01-4e9f-b5b6-4b28d81552d2</guid><pubDate>Thu, 10 Sep 2026 21:24:14 +0000</pubDate><atom:updated>2026-09-10T21:24:14.165Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விடுமுறை,Holiday,வங்கி ஊழியர்கள்,Bank staff strike</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/e09llwc0/work33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வங்கி ஊழியர்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ இன்று வேலை நிறுத்தம்|]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/e09llwc0/work33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சனி, ஞாயிறு விடுமுறை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 8% லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய முன்னணி அறிவித்துள்ளது.</p><p>சனி, ஞாயிறு விடுமுறை</p><p>சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய முன்னணி ஒருங் கிணைப்பாளரும். அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான எச்.வெங் கடாசலம் நிருபர்களிடம் கூறியதாவது:-</p><p>வங்கி ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையான அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு தொடர்ந்து காலதாமதப்படுத்தி வருகிறது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்கினால், அதற்கு ஈடாக வாடிக்கையாளர்களுக்கான <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88">வணிக சேவை</a> நேரத்தை கூடுதலாக 40 நிமிடங்கள் அதிகரித்து பணியாற்ற வங்கி ஊழியர்கள் தயாராக இருப்பதாக மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ஆனால், 2% ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த விவகாரம் நிதி அமைச்சகத்திடம் நிலுவையில் உள்ளது. இந்த பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமுகமான தீர்வு காண வேண்டி அர சுக்கு நோட்டீஸ் வழங்கியும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. இதனால், வேறு வழியின்றி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.</p><p>இதுதவிர, வங்கிகளில் எழுத்தர் மற்றும் துணை ஊழியர்களை போதுமான அளவில் பணிய மர்த்துதல், தேசிய ஓய்வூதியத் திட்டத்தை பழைய ஓய்வூதியத் திட்டமாக மாற்றுதல், பணிக் கொடை உச்சவரம்பை அதிகரித்தல், வங்கிகளில் தொழிலாளர் மற்றும் அதிகாரி இயக்குனர் பதவிகளை வேண்டும் என்றே நிரப்பாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி நாடு முழுவதும் சுமார் 8 லட்சம் வங்கி ஊழியர்கள் நாளை (இன்று) வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>தனுஷ்கோடியில் உயிருடன் 200 கிலோ டால்பின் கரை ஒதுங்கியது; மீண்டும் ஆழ்கடலில் விட வனத்துறையினர் முயற்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/200-kg-dolphin-washed-ashore-alive-in-dhanushkodi-forest-department-tries-to-release-it-back-into-the-deep-sea</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/200-kg-dolphin-washed-ashore-alive-in-dhanushkodi-forest-department-tries-to-release-it-back-into-the-deep-sea#comments</comments><guid isPermaLink="false">709f1baf-ac8a-436f-bdc4-5ef59a3bbbfd</guid><pubDate>Thu, 10 Sep 2026 21:17:45 +0000</pubDate><atom:updated>2026-09-10T21:17:45.525Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வனத்துறை,தனுஷ்கோடி,Dolphin,டால்பின்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/8k3lqlab/dalfin33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
தனுஷ்கோடி]]></media:title><media:description type="html"><![CDATA[ டால்பின் கரை ஒதுங்கியது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/8k3lqlab/dalfin33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமேசுவரம், </p><p>ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள 21 தீவுகளை சுற்றிய கடல் பகுதியில் சுமார் 3,600 வகையான கடல்வாழ் உயிரினங்கள் உள்ளன. குறிப்பாக தனுஷ்கோடி முதல் பாம்பன், மண்டபம் வரையிலான கடல் பகுதியில் டால்பின்கள் அதிகம் உள்ளன. </p><p>இந்த நிலையில் தனுஷ்கோடி தெற்கு கடற்கரை பகுதியில் நேற்று <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20">டால்பின் </a>ஒன்று உயிருடன் கரை ஒதுங்கி கிடப்பதாக வனத்துறையினருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற வனத்துறையினர், அந்த டால்பினை பார்வையிட்டனர். அது உயிருக்கு போராடிய நிலையில் துடித்து கொண்டிருந்தது. </p><p>உடனடியாக வனத்துறையினர் கால்நடை டாக்டருக்கு தகவல் தெரிவித்தனர். கரை ஒதுங்கி கிடந்தது பெண் டால்பின் ஆகும். சுமார் 7 அடி நீளமும், 200 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது. வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் டால்பினை அதில் இருந்து பாதுகாக்க வனத்துறையினர் அதன்மேல் சிறிய தார்ப்பாயை பிடித்தபடி நிழல் அமைத்து கொடுத்தனர். தொடர்ந்து அங்கு வந்த கால்நடை டாக்டர், டால்பினுக்கு சிகிச்சை அளித்தார். அந்த டால் பினை மீண்டும் ஆழ்கடலில் கொண்டு சென்று விடும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.</p><p>இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, "கடலுக்குள் பெரும்பாலும் டால்பின்கள் கூட்டமாகவே திரியும். மீன்களை வேட்டையாடியபோது காயம் ஏற்பட்டு தொடர்ந்து நீந்த முடியாமல் இந்த டால்பின் கரை ஒதுங்கி இருக்கலாம்" என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிக்கப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-mettur-dam-water-release-be-increased-minister-sengottaiyan-responds</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-mettur-dam-water-release-be-increased-minister-sengottaiyan-responds#comments</comments><guid isPermaLink="false">a41c4f12-109b-4623-8a7f-75c42eb9b876</guid><pubDate>Thu, 10 Sep 2026 17:55:25 +0000</pubDate><atom:updated>2026-09-10T17:55:25.952Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,மேட்டூர் அணை,அமைச்சர் செங்கோட்டையன்,KA Sengottaiyan,tvk govt</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/wocl618m/kottiayan33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 

மேட்டூர் அணை]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் செங்கோட்டையன் பதில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/wocl618m/kottiayan33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவாரூர், </p><p>திருவாரூர், கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில்,</p><p>புதிய தலைமை செயலகம் குறித்து, முதல்-அமைச்சர் என்ன முடிவு செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மேட்டூர் அணையில் இருக்கின்ற தண்ணீரை எவ்வளவு பாசனத்திற்கு கொடுக்கலாம் என, துறை ரீதியாக ஆய்வு செய்த பிறகு தான் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.</p><p>நிச்சயம் மழை மற்றும் வெள்ளம் வரும் சூழ்நிலை உருவாகும். விவசாயிகளுக்கு <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D">புதிய பயிர் கடன்</a> வழங்குவதில் எந்த தடையும் இருக்காது. முதல்-அமைச்சர் அறிவித்த பயிர்கடன் தள்ளுபடி மானிய தொகை, விரைவில் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு வந்து சேரும்.</p><p>கூட்டுறவு சங்கங்களில் மாநில அரசின் நிதி உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்பது அரசின் நோக்கம். இதற்கு முன்பு கூட்டுறவு சங்க கடன்களை தள்ளுபடி செய்துவிட்டு, ஐந்தாண்டு காலத்துக்கு அரசின் நிதிக்கு ஏற்ப பணத்தை ஒதுக்குவது வழக்கம். தற்போது அந்த முறைகள் மாற்றப்பட்டுள்ளன.</p><p> இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>இங்கிலாந்து புறப்பட்டார் முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-leaves-for-england</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-leaves-for-england#comments</comments><guid isPermaLink="false">6bb57107-1d60-4ae4-b200-d652a8a360c0</guid><pubDate>Thu, 10 Sep 2026 17:43:40 +0000</pubDate><atom:updated>2026-09-10T17:43:40.074Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,இங்கிலாந்து,England,தமிழக அரசு,தொழில் முதலீடுகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/6jt3cf4u/vijay33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/6jt3cf4u/vijay33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்டார் முதல்-அமைச்சர் விஜய்.</p><h2>உற்சாக வரவேற்பு</h2><p>தமிழகத்திற்கு முதலீட்டர்களை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக லண்டன் செல்ல சென்னை விமானநிலையம் வந்தடைந்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a>, அங்கு கூடியிருந்த மக்களை நோக்கி கையசைத்தும் கைகூப்பியும் மக்களது வரவேற்பை பெற்றுக்கொண்டார்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/7h5k7rfa/two33.jpg" /></figure><h2>நெஞ்சில் குடியிருக்கும்!</h2><p>தமிழகத்திற்கு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக லண்டன் செல்ல சென்னை விமானநிலையம் வந்தடைந்த முதல்-அமைச்சர் விஜய், அங்கு கூடியிருந்த மக்களை நோக்கி ஹெர்டின் சைகையை காட்டினார்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/jt6v4f7z/one33.jpg" /></figure><h2>அஜித்தை சந்திக்கும் விஜய்</h2><p>செப்டம்பர் 12ம் தேதி லண்டனில் நடைபெறும் சில்வர்ஸ்டோன் கார் பந்தய போட்டியை</p><p>கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்முதல்-அமைச்சர் விஜய். மேலும் கார் ரேஸ் பந்தயக் களத்தில் நடிகர் அஜித்தை முதல்-அமைச்சர் விஜய் சந்திக்கிறார்.</p><p>முதல்-அமைச்சர் பயணம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்,</p><p>முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பு ஏற்று 100 நாட்களுக்குள் முதலீட்டாளர் மாநாடு வாயிலாக 1 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் 8491 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு திட்டங்களை முன்வைத்துள்ளன. இதனால் 5,690 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனங்கள் நீண்ட காலமாக தமிழகத்தில் உற்பத்தி ஆலைகளையும், உலகளாவிய திறன் மையங்களையும் நிறுவி செயல்பட்டு வருகின்றன. இத்தகைய உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், ஏற்கனவே உள்ள நிறுவனங்களின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்கும் மம்பட்ட உற்பத்தி, வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்கள் மின்னணு சாதனங்கள் ஆகிய துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பது முதல்வர் விஜயின் இங்கிலாந்து பயணத்தின் முக்கிய நோக்கமாகும். இதனால், தமிழகத்தில் வேலைவாய்ப்பு உருவாகும்.</p><p>தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகர திட்டத்தை முன்னெடுத்து செல்லும் வகையில் உலகின் முன்னணி மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிட்டு அவற்றின் சிறந்த நடைமுறைகளை அறிந்து கொள்வதும் பயனுள்ளதாக இருக்கும். இதன் ஒரு பகுதியாக சில்வர் ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட் பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>இதனால், அங்குள்ள சுற்றுப்பாதை வடிவமைப்பு, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் இத்தகைய வளாகங்களை சிறப்பாகவும், வணிக ரீதியாகவும் செயல்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகள் குறித்து விரிவாக அறிந்து கொள்வதுடன், மோட்டர்ர ஸ்போர்ட்ஸ் விளையாட்டுஉள்கட்டமைப்பு விளையாட்டு சுற்றுலாமற்றும் அதனுடன் தொடர்புடைய சிறப்பு வாகன தொழில்கள் ஆகியவற்றில் உள்ள வாய்ப்புகளையும் அறிந்து கொள்ள இயலும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தலில் போட்டி; தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற வேட்பாளர்கள்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ruling-parties-dmk-aiadmk-nam-tamizhar-four-way-contest-emerges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ruling-parties-dmk-aiadmk-nam-tamizhar-four-way-contest-emerges#comments</comments><guid isPermaLink="false">e74e0ea6-141c-4213-89e2-2505048c07d0</guid><pubDate>Thu, 10 Sep 2026 17:10:53 +0000</pubDate><atom:updated>2026-09-10T17:10:53.513Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>M.K.Stalin,இடைத்தேர்தல்,மு.க. ஸ்டாலின்,By-election,தி.மு.க. தலைவர்,DMK President M.K.Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/w7hp7vg0/cwtgw.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/w7hp7vg0/cwtgw.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>தமிழக சட்டசபைக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பரந்தாமன், சுகன்யா ஆகியோர் <a href="https://www.dailythanthi.com/">தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை</a> நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.</p><p>தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க. ஆட்சியமைத்து உள்ளது. இதில். அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற 6 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க.வில் இணைந்தனர். இதனால், காலியாக உள்ள 6 தொகுதிகளில், மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) தொகுதிகளுக்கு மட்டும் அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் 9-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p>  <p>இந்த 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் களம் காண அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதன்படி, ஆளும் கட்சியான த.வெ.க. மற்றும் தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.</p><p>இதில், மற்ற கட்சிகளை முந்திக்கொண்டு தி.மு.க. முதல் கட்சியாக 2 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நேற்று அறிவித்தது. அதன்படி மதுராந்தகத்தில் பரந்தாமனும், தாராபுரத்தில் சுகன்யாவும் போட்டியிடுகிறார்கள் என அறிவிக்கப்பட்டது.</p><p>இந்த நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான பரந்தாமன், சுகன்யா ஆகிய இருவரும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>
ஆதவ் அர்ஜுனா ஆட்சியை கவிழ்த்து விடுவார் என்ற அச்சத்திலா... முன்னாள் சபாநாயகர் பரபரப்பு பதிவு
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-it-fear-that-adhav-arjuna-will-topple-the-government-former-speaker-sensation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-it-fear-that-adhav-arjuna-will-topple-the-government-former-speaker-sensation#comments</comments><guid isPermaLink="false">1aeb8c29-a64b-4e86-8830-7b3190a57fc7</guid><pubDate>Thu, 10 Sep 2026 16:41:46 +0000</pubDate><atom:updated>2026-09-10T16:41:46.096Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Aadhav Arjuna,ஆதவ் அர்ஜுனா,Speaker,சபாநாயகர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/du8rwb8n/tnfsa.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/du8rwb8n/tnfsa.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><p>ஆதவ் அர்ஜுனா ஆட்சியை கவிழ்த்து விடுவார் என்ற அச்சத்தில் அவரை லண்டன் அழைத்து செல்கிறீர்களா? என முன்னாள் சபாநாயகர் அப்பாவு பரபரப்பு பதிவிட்டு உள்ளார்.</p><p>தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/">முதல்-அமைச்சர் விஜய் </a>இங்கிலாந்து நாட்டுக்கு பயணம் மேற்கொள்கிறார்.  தமிழ்நாட்டை ஆசியாவிலேயே முதலீட்டுக்கு உகந்த முதன்மை மையமாக உருவாக்குவதை தமிழ்நாடு அரசு தனது முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்யின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 100 நாட்களுக்குள், வெற்றித்தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026-ன் வாயிலாக ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p>  <h2>இங்கிலாந்தில் சுற்றுப்பயணம்</h2><p>முதல்-அமைச்சர் தலைமையிலான குழு இன்று முதல் 6 நாட்களுக்கு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து முதலீ்டுகளை ஈர்த்து விட்டு, 17-ந்தேதி அன்று சென்னை திரும்பும்.  இக்குழுவில் பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, தொழில் துறை வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் தீபக் ஜேக்கப் மற்றும் அரசு அலுவலர்கள் இடம் பெறுகின்றனர்.</p><p>இந்நிலையில், முன்னாள் சபாநாயகர் அப்பாவு எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்டு உள்ள செய்தியில், #தவெக ஆட்சி அமைந்த 100 நாட்களுக்குள் மக்களின் கோபம், இளைஞர்களின் அதிருப்தி, பெண்களின் சாபம், விவசாயிகளின் கண்ணீர், அரசு ஊழியர்களின் ஆவேசம் ஆகியவற்றால் செல்வாக்கு சரிந்து வருவதை உணர்ந்து இடைத்தேர்தலில் பழைய பருப்பு வேகாது என்பதற்காக உங்களால் "#கல்லாப்பெட்டிகூட்டணி" என்று வர்ணிக்கப்பட்ட கட்சிகளை அழைத்து "மதச்சார்பற்ற சமூகநீதி #வெற்றிக்கூட்டணி" என்று பெயர் மாற்றம் செய்ததாலேயே மக்களின்  செல்வாக்கை பெற்றுவிடலாம் என்று கனவு காணாதீர்கள் CM sir ? </p>  <h2>பிரதமர் வேட்பாளர்</h2><p>நேற்று தங்கள் தலைமையில் நடைபெற்ற #கூட்டணிகட்சிகளின் கூட்டம் முடிந்த பின்பு கூட்டத்தின்  நோக்கம் குறித்தோ, பிரதமர் வேட்பாளர் குறித்தோ, இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்தோ பத்திரிகையாளர்களை சந்தித்து பேச துணிவில்லாமல், கூட்டணி கட்சித்தலைவர்கள் தங்கள் விருப்பப்படி கருத்து சொல்லி கொள்ளுங்கள் என்று அவர்களை அவமதித்திருப்பது, உங்கள் "#நரித்தனத்தின் வெளிப்பாடு" என்பது  நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும் CM sir ? </p><p>இந்தியாவில் அரசியல் அமைப்புச்சட்டம், பத்திரிகை சுதந்திரம், கருத்து சுதந்திரம் மக்களின் உரிமைகளுக்கு எதிராக அன்னை #இந்திரா அவர்களால் கொண்டு வரப்பட்ட நெருக்கடி நிலையை அன்றைய முதல்வர் #கலைஞர் எதிர்த்து குரல் கொடுத்ததால் முன்னாள் முதல்வர் #முகஸ்டாலின் கைது செய்யப்பட்டு சிறையில் சித்திரவதை அனுபவித்த தியாக வரலாற்றை #சட்டமன்றத்தில் கேலி செய்து கூத்தடிக்கும் பண்பில்லா, அறிவில்லா, நாகரிகமில்லா,  #கூத்தாடிக்கு முதல்வர் பதவி ஒரு கேடா?</p>  <h2>வெளிநாடு பயணம்</h2><p>ஒருமுறை ஆந்திர முன்னாள் முதல்வர் மறைந்த என்.டி.#இராமராவ் வெளிநாடு பயணம் சென்று திரும்புவதற்குள் #சந்திரபாபுநாயுடு ஆட்சியை கவிழ்த்து முதல்வரானது போல் #ஆதவ்அர்ஜூனா முதல்வராகி விடக்கூடாது என்ற பயத்தில் உங்களோடு #லண்டன் அழைத்து செல்கிறீர்களா #CMsir ? என தெரிவித்து உள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>நாடாளுமன்றமே ரூ.900 கோடி; தலைமைச் செயலகத்திற்கு ரூ.1,200 கோடியா? - நயினார் நாகேந்திரன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/parliament-900-crore-secretariat-1200-crore-nainar-nagendran-question</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/parliament-900-crore-secretariat-1200-crore-nainar-nagendran-question#comments</comments><guid isPermaLink="false">0237ad6e-c34c-4fed-8cca-ac79315da8f6</guid><pubDate>Thu, 10 Sep 2026 16:28:51 +0000</pubDate><atom:updated>2026-09-10T16:28:51.959Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,நயினார் நாகேந்திரன்,நாடாளுமன்றம்,தலைமைச் செயலகம்,Nainar Nagenthran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/4th1sw3h/Untitled-12.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/4th1sw3h/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்ற தவெக அரசின் அறிவிப்பு, கள நிலவரத்திற்கு பொருந்தாதது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடியில் 20 லட்சம் சதுர அடியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்ற தவெக அரசின் அறிவிப்பு, கள நிலவரத்திற்கு (யதார்த்தத்திற்கு) சற்றும் பொருந்தாததாகவே உள்ளது. நாட்டின் புதிய நாடாளுமன்றமே ரூ.900 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், முறையான வரைபடமோ திட்டமிடலோ இன்றி ரூ.1,200 கோடி என அறிவிக்கப்பட்டிருப்பது வெறும் கற்பனையே அன்றி வேறில்லை.</p><p>குறிப்பாக, 20 லட்சம் சதுர அடி கட்டடத்திற்கு உள்கட்டமைப்புடன் சேர்த்து 45 ஏக்கர் தேவைப்படும் சூழலில், அங்கு இருப்பதோ வெறும் 25 ஏக்கர் மட்டுமே. கிண்டியில் 35 ஏக்கர் மாற்று நிலம் இருந்தும், முதல்வர் விஜய்யின் வீட்டிற்கு அருகில் கட்ட வேண்டும் என்பதற்காக அறிவிக்கப்பட்ட இந்த நடைமுறைச் சாத்தியமற்ற திட்டம், சட்டத்தின் முன் ஒருபோதும் நிற்காத வெறும் மணல் கோட்டையே ஆகும்.</p><p>அதனை மீறி இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், முள்ளிக்குப்பம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 1,500-க்கும் மேற்பட்ட பூர்வீக மீனவக் குடும்பங்களின் நிலங்கள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேர்தலின்போது பட்டா தருவதாக வாக்குறுதியளித்துவிட்டு, தற்போது தங்களை தவெக அரசு அப்புறப்படுத்த முயல்வதாக மீனவர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றனர். மேலும் ஆழிப்பேரலையால் (சுனாமி) பாதிக்கப்பட்ட இக்கடற்கரைப் பகுதியானது, அடையாறு சூழலியல் முகத்துவார மண்டலத்தையும், அரிய வகை ஆலிவ் ரிட்லி ஆமைகளின் முக்கிய இனப்பெருக்க வாழ்விடத்தையும் கொண்டிருப்பதால், கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) விதிகளுக்கு முரணாகக் கட்ட முயலும் இக்கட்டடம் சட்டத்தின் முன் நிற்காத 'மணல்' கோட்டையாகும்.</p><p>மேலும் இத்திட்டத்தால் சாந்தோம், பட்டினப்பாக்கம், ராஜா அண்ணாமலைபுரம், அடையாறு வழியே நாள்தோறும் பயணிக்கும் பல்லாயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையான போக்குவரத்து முடக்கத்தால் பாதிக்கப்படும் அபாயமும் எழுந்துள்ளது. இப்படி அனைத்துத் தரப்பு மக்களும் எதிர்ப்புத் தெரிவிக்கும் சூழலில், முதல்வரின் தனிப்பட்ட சௌகரியத்திற்காக மக்கள் நலனைப் பலிகடா ஆக்கும் இந்த "துக்ளக் தர்பார்" திட்டத்தை முதல்வர் ஜோசப் விஜய் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். இல்லையெனில், இத்திட்டத்தை எதிர்த்து மீனவ மக்களுடன் இணைந்து தீவிரப் போராட்டங்களை முன்னெடுக்கவும் தமிழக பாஜக தயங்காது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அனைத்து மதங்களின் மீதும் எனக்கு மரியாதை உண்டு -  நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-have-respect-for-all-religions-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-have-respect-for-all-religions-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">5ff23094-c48d-49b2-8e06-835013aeb97f</guid><pubDate>Thu, 10 Sep 2026 16:08:59 +0000</pubDate><atom:updated>2026-09-10T16:08:59.180Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/gr9hmgso/nainar.gif" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/gr9hmgso/nainar.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன் </a>தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>மாணிக்கம் தாகூர் அவர்களுக்கு மலிவான அரசியல் ஆதாயத்திற்காகவும், ஊடக வெளிச்சத்திற்காகவும் என் மீது மதவாதி என்ற முத்திரையைக் குத்த நீங்கள் மேற்கொண்டிருக்கும் முயற்சிக்கு எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் பேசியதை முழுமையாகப் புரிந்துகொள்ளாமலோ. அல்லது அரசியல் லாபத்திற்காக வேண்டுமென்றே திரித்துப் பேசி தமிழக மக்கள் மத்தியில் நஞ்சை விதைக்கப் பார்ப்பது உங்களின் இயலாமையையே காட்டுகிறது.</p><h2>தார்மீக உரிமை</h2><p>கிறிஸ்தவ மதத்தின் புனிதத் தலங்களாகப் போற்றப்படும் பெத்லகேம் (Bethlehem). ஜெருசலேம் (Jerusalem) மற்றும் இஸ்ரேல் (Israel) ஆகிய புனித பூமிக்கு நான் நேரில் சென்று வந்தவன், அதேபோலவே, இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்காவுக்கு மாற்று மதத்தினர் செல்ல அனுமதிக்கப்பட்ட எல்லை வரை நேரில் சென்று பார்த்து வந்தவன் நான். எல்லா மதங்களின் மீதும் எனக்குள்ள உளப்பூர்வமான மதிப்பும் மரியாதையும் தான் வாழ்நாளில் அந்தப் புனிதத் தலங்களைத் தரிசிக்க வேண்டும் என்ற என் எண்ணத்திற்குக் காரணம், நான் தம்பி  மாணிக்கம் தாகூர் அவர்களைக் கேட்கிறேன். மதச்சார்பற்ற வேடமிட்டுத் திரியும் நீங்கள். உங்கள் வாழ்நாளில் இதுபோன்ற பிற மதப் புனிதத் தலங்களுக்குச் சென்று உண்மையான நல்லிணக்கத்தை உணர்ந்தது உண்டா?மதச்சார்பற்ற அரசு' என்று வாய்கிழியப் பேசும் நீங்களும் உங்கள் கூட்டணிக் கட்சியினரும். உண்மையில் ஒரு குறிப்பிட்ட மதத்தைத் திருப்திப்படுத்துவதற்காக மட்டுமே அரசியல் செய்து வருகிறீர்கள். அதற்கு சமீப காலமாகச் சட்டமன்றத்தில் நடைபெற்ற சம்பவங்களே சான்றாகும். இந்து மதத்தின் நம்பிக்கைகளையும். சடங்குகளையும் இழிவுபடுத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ள கும்பலுடன் கைகோர்த்துக் கொண்டு, என்னை மதவாதி என்று சொல்வதற்கு உங்களுக்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது. நான் கோவிலுக்குச் செல்வது எப்படி மதவாதமாகாதோ, அதேபோல்தான் எனது மத நம்பிக்கைகளைப் போற்றுவதும், தமிழக மக்களின் நலன்களைப் பாதுகாத்துப் பேசுவதும் ஆகும். என் பேச்சில் ஒருபோதும் வன்மம் இருந்ததில்லை.</p> <p>தமிழகத்தின் ஆன்மிகப் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் காக்கும் உணர்வு மட்டுமே எப்போதும் உண்டு, ஆனால், உண்மையான மதவாதம் என்பது உங்கள் காங்கிரஸ் கட்சியின் ரத்தத்திலேயே ஊறிப்போன ஓட்டு வங்கி அரசியல்தான். நான் பேசியதன் அர்த்தம் புரியாமல், பொதுவெளியில் வாய்க்கு வந்தபடி பொய்களைப் பேசி மக்களை ஏமாற்றலாம் என்று தம்பி மாணிக்கம் தாகூர் தப்புக் கணக்குப் போட வேண்டாம். பிரித்தாளும் சூழ்ச்சியால் காலத்தை ஓட்டிவிட்ட காங்கிரஸ் கட்சியின் போலி முகமூடி இன்று தமிழக மக்கள் முன்னிலையில் முற்றிலுமாகக் கிழிந்து தொங்குகிறது. மக்களை மதத்தின் பெயரால் பிளவுபடுத்தி. அதில் குளிர்காய நினைக்கும் உங்களின் அரசியல் நாடகங்கள் தமிழக மக்களிடம் இனியும் எடுபடாது. பொய்ப் பிரசாரங்களை விட்டுவிட்டு, மக்கள் நலப் பணிகளிலும் உண்மையான தேசப்பற்றிலும் கவனம் செலுத்துங்கள் என உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வேலூர்:  தேவாலய விபத்து; 3 பேர் பலி
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vellore-church-accident-3-killed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vellore-church-accident-3-killed#comments</comments><guid isPermaLink="false">76001e60-df0f-4fd8-9fa1-453c606cd030</guid><pubDate>Thu, 10 Sep 2026 16:08:37 +0000</pubDate><atom:updated>2026-09-10T16:08:37.602Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vellore,வேலூர்,தேவாலயம்,church</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/n6ou15ny/kcocts.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/n6ou15ny/kcocts.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>வேலூர்</p><p>வேலூரில் தேவாலய கட்டுமானத்தின்போது மேல்தளம் இடிந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியாகி உள்ளனர்.</p><p><a href="https://www.dailythanthi.com/news/india">வேலூர்</a> மாவட்டம் காட்பாடி நகரில் திருவலம் அருகே மஞ்சு கிருஷ்ணாபுரம் என்ற பகுதியில் தேவாலயம் கட்டும் பணி நடந்து வருகிறது.  இதில் இன்று மாலை கட்டுமானத்தின் முதல் தளம் இடிந்து விபத்து ஏற்பட்டது.  இதில், பலர் சிக்கி கொண்டனர்.</p> <h2>4 பேர் மீட்பு</h2><p>இந்த தகவல் அறிந்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.  இதில், 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.  மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமடைந்து உள்ளது.  இதுவரை 4 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு சேர்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.</p>  <h2>மீட்பு பணி</h2><p>சம்பவ இடத்தில் வேலூர் மாவட்ட கலெக்டர் லீலா அலெக்ஸ், காட்பாடி எம்.எல்.ஏ. சுதாகர் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.  அதிநவீன மீட்பு உபகரணங்கள் உடன் சம்பவ இடத்திற்கு 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவும் விரைந்துள்ளது.  இந்த நிலையில் தேவாலய விபத்தில் இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.</p><p>முதல்கட்ட விசாரணையில், கட்டிடத்தின் சாரம் சரிந்து விழுந்துள்ளது என தெரிய வந்துள்ளது.  எனினும், கட்டிடம் இடிந்ததற்கான காரணம் பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.  தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>லண்டனில் அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை தொடங்கி வைக்கிறார் முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-to-flag-off-the-car-race-in-london-featuring-ajith</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-to-flag-off-the-car-race-in-london-featuring-ajith#comments</comments><guid isPermaLink="false">6a934f4e-c9e9-4609-be54-cced43e45ae6</guid><pubDate>Thu, 10 Sep 2026 15:54:08 +0000</pubDate><atom:updated>2026-09-10T15:54:08.518Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,தமிழகம்,அஜித்,நடிகர் அஜித்குமார்,கார் பந்தயம்,அஜித் குமார்,லண்டன்,முதல்-அமைச்சர் விஜய்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/2h8ioc1w/dhill.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/2h8ioc1w/dhill.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>லண்டனில் நடைபெறும் சில்வர்ஸ்டோன் கார் பந்தய போட்டியை <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a> கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். </p><h2>தொழில் முதலீடுகளை ஈர்க்க</h2><p>உலகளாவிய முதலீட்டாளர்களை சந்திக்கவும், முக்கிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவும் தமிழ்நாட்டின் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a>, இன்று இங்கிலாந்து நாட்டுக்கு புறப்பட்டுள்ளார். </p><p>முதல்-அமைச்சராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்ளும் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">விஜய்</a>, செப். 16ம் தேதிவரை பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களின் தலைவர்களை சந்திக்கவுள்ளார்.</p><h2>ஒலிம்பிக் நகரம்</h2><p>இந்த சூழலில், நாளை மறுநாள் (செப். 11) மற்றும் 12 ஆகிய தேதிகளில் சில்வர்ஸ்டோனில் நடைபெறும் மிச்செலின் லெ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் போட்டியிடுவதை <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> நேரில் பார்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.</p><p>இந்த கார் பந்தயத்தில் போட்டியில் பங்கேற்க உள்ள அஜித்குமார், ஏற்கெனவே லண்டனில் தனது குழுவுடன் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். முன்னதாக, தமிழ்நாடு சட்டசபையின் 110 விதியின் கீழ், அறிவிப்புகளை வெளியிட்ட <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a>, தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி மற்றும் ஒலிம்பிக் நகரம் உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.</p><h2>மிகுந்த மகிழ்ச்சி</h2><p>இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்ட அஜித் குமார்,“தமிழ்நாட்டின் இளைஞர்களை விளையாட்டுத் துறையின் பக்கம் ஈர்த்து, அவர்களிடம் உள்ள திறமைகளை கண்டறிந்து, அவற்றை முறையாக வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு முன்னெடுப்புகள் மிகுந்த பாராட்டுக்குரியவை.</p><p>குறிப்பாக, தமிழ்நாட்டில் பிரத்யேகமான மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.</p><h2>மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி</h2><p>இந்நிலையில் லண்டனில் நடைபெறும் சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> தொடங்கி வைக்க உள்ளதாக லே மான்ஸ் கோப்பை (LE MANS CUP) நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. </p><p>உலகத்தரம் வாய்ந்த ஒரு 'மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி' அமைக்கப்படும் என அறிவித்ததை தொடர்ந்து, உலகின் முன்னணி மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிட உள்ளார் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a>.</p>]]></content:encoded></item><item><title>அண்ணா பிறந்தநாளையொட்டி அதிரடி சலுகை... கைத்தறி துணிகளுக்கு 30 சதவீத தள்ளுபடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-offer-on-annas-birthday-30-percent-discount-on-handloom-fabrics</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-offer-on-annas-birthday-30-percent-discount-on-handloom-fabrics#comments</comments><guid isPermaLink="false">12b49a3d-8cc4-4194-9da1-52551cb14631</guid><pubDate>Thu, 10 Sep 2026 15:24:00 +0000</pubDate><atom:updated>2026-09-10T15:24:00.554Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Offer,சலுகை,Handloom,கைத்தறி,அண்ணா பிறந்தநாள்,Anna&apos;s birthday,துணிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/weand74d/105.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/weand74d/105.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அண்ணா பிறந்தநாளையொட்டி பருத்தி ரகங்களுக்கு மொத்தம் 30 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என கூட்டுறவு சங்கம் அறிவித்துள்ளது. </p><p>இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க கைத்தறித் தொழிலைப் பாதுகாத்து, நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, தொடக்கக் கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களை வலுப்படுத்தி, அவற்றைத் தன்னிறைவுபெற்ற அமைப்புகளாக உருவாக்கும் நோக்கில், தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. கைத்தறித் துணிகளின் விற்பனையை ஊக்குவித்து, நெசவாளர்களின் உற்பத்திக்கு நிலையான சந்தை வாய்ப்பை ஏற்படுத்துவதுடன், வெளிச்சந்தை போட்டியைச் சமாளிக்கும் வகையில் ரூ. 210 கோடி  திட்டச் செலவில் தள்ளுபடி மானியத் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.</p><p>இந்தத் திட்டத்தின் கீழ், கைத்தறித் துணி விற்பனைக்கு ஆண்டு முழுவதும் 20 விழுக்காடு தள்ளுபடி மானியம், நிர்ணயிக்கப்பட்ட உச்ச வரம்பிற்குட்பட்டு வழங்கப்படுகிறது. பருத்தி ரகங்களுக்கு, ஒரு உருப்படிக்கு 20 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.100 என நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகையில், இதில் எது குறைவோ அந்தத் தொகை தள்ளுபடி மானியமாக வழங்கப்படும். அதேபோல், பட்டு ரகங்களுக்கு, ஒரு உருப்படிக்கு 20 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 200 என நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகையில், இதில் எது குறைவோ அந்தத் தொகை தள்ளுபடி மானியமாக வழங்கப்படும்.</p><h2>30 சதவீத தள்ளுபடி</h2><p>தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, பேரறிஞர் அண்ணா அவர்களின் 117-வது பிறந்தநாளை சிறப்புடன் கொண்டாடும் வகையில், செப்டம்பர் 15, 2026 முதல் ஜனவரி 31, 2027 வரையிலான 139 நாட்களுக்கு பட்டு மற்றும் பருத்தி ரகங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது. இதன்மூலம் மேற்குறிப்பிட்ட 139 நாட்களில் பட்டு மற்றும் பருத்தி ரகங்களுக்கு மொத்தம் 30 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். </p><p>இந்தச் சிறப்புத் தள்ளுபடி திட்டத்தின் மூலம் பொதுமக்கள் பயன்பெறுவதோடு, தமிழகமெங்கும் செயல்பட்டுவரும் தொடக்கக் கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் பயன்பெறும். பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு, தரமான பட்டு மற்றும் பருத்தி கைத்தறித் துணிகளைச் சிறப்புத் தள்ளுபடி விலையில் வாங்கி, கைத்தறிப் பொருட்களுக்கு ஆதரவளிக்குமாறும், நமது பாரம்பரியமிக்க கைத்தறி நெசவுத் தொழிலின் தனித்துவத்தைப் பாதுகாப்பதுடன், கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பும் நிலையான வருமானமும் கிடைத்திடத் தங்களது ஆதரவை வழங்குமாறும் கைத்தறித் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வேலூர்: தேவாலயத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்த சோகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vellore-tragedy-as-two-die-after-church-roof-collapses</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vellore-tragedy-as-two-die-after-church-roof-collapses#comments</comments><guid isPermaLink="false">dbb9094e-5996-42e9-96bb-8fd7878b19f9</guid><pubDate>Thu, 10 Sep 2026 15:15:46 +0000</pubDate><atom:updated>2026-09-10T15:15:46.626Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Vellore,வேலூர்,தேவாலயம்,church,building collapse,கட்டிட விபத்து,Katpadi,காட்பாடி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/dugk34lu/thee.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/dugk34lu/thee.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வேலூர்,</p><p>வேலூரில் தேவாலய கட்டுமானத்தின்போது மேல்தளம் இடிந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். </p><p>வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே மஞ்சு கிருஷ்ணாபுரம் பகுதியருகே தேவாலயம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் கட்டுமானத்தின் முதல் தளம் இடிந்து விபத்து ஏற்பட்டது. இதில், 6 பேர் சிக்கி கொண்டனர்.இந்த தகவல் அறிந்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். </p><p>இந்நிலையில் இடிபாடுகளில் சிக்கிய 10க்கும் மேற்பட்டோரில் 8 பேர் காயங்களுடன் மீட்டநிலையில் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் 6-க்கும் மேற்பட்ட கட்டடத் தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/6p54iv7g/perer.jpg" /></figure><p>காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் சேர்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் வேலூர் மாவட்ட கலெக்டர் லீலா அலெக்ஸ், காட்பாடி எம்.எல்.ஏ. சுதாகர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு நடத்தி வருகின்றனர். </p><p>முதல்கட்ட விசாரணையில், கட்டிடத்தின் சாரம் சரிந்து விழுந்துள்ளது என தெரிய வந்துள்ளது. எனினும், கட்டிடம் இடிந்ததற்கான காரணம் பற்றி தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/X1i05J21Smo"></iframe></figure>]]></content:encoded></item><item><title>தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் விஜய் இங்கிலாந்து பயணம் - தமிழக அரசு விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-chief-minister-vijay-uk-trip-investments-explained</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-chief-minister-vijay-uk-trip-investments-explained#comments</comments><guid isPermaLink="false">de3b294b-f38c-417c-8707-25d61d4612f9</guid><pubDate>Thu, 10 Sep 2026 15:15:10 +0000</pubDate><atom:updated>2026-09-10T15:15:10.018Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இங்கிலாந்து,England,investment,தமிழக அரசு,TN govt,பயணம்,தொழில் முதலீடுகள்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/k3un8dd6/Untitled-10.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/k3un8dd6/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் இங்கிலாந்து பயணம் மேற்கொள்வதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டை ஆசியாவிலேயே முதலீட்டுக்கு உகந்த முதன்மை மையமாக உருவாக்குவதை தமிழ்நாடு அரசு தனது முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய்யின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 100 நாட்களுக்குள், வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026-ன் வாயிலாக ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p><p>பல்வேறு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் சுமார் 8,491 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்களை முன்வைத்துள்ளதுடன், அவற்றின்மூலம் சுமார் 5,690 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது, முதலீட்டுச் சந்தைகளில், தமிழ்நாட்டின் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வமும், நம்பிக்கையும் அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுகிறது.</p><p>15.07.2026 அன்று நடைமுறைக்கு வந்த இந்தியா-பிரிட்டன் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (CETA), இந்த முன்னெடுப்புகளுக்கு மேலும் வலுசேர்த்துள்ளது. CETA ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த முதல் நாளிலேயே, சென்னையிலிருந்து ஏற்றுமதிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதன் வாயிலாக, இந்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்திய முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு திகழ்கிறது.</p><p>பல்வேறு உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் தமிழ்நாடு வலுவான தொழில்துறைத் திறன்களைக் கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இத்துறைகளில் பல்வேறு புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன. குறிப்பாக, ஜவுளி மற்றும் ஆடைகள், தோல் மற்றும் காலணிகள், வாகன உதிரிபாகங்கள், பொறியியல் பொருட்கள் மற்றும் மின்னணுவியல் ஆகிய துறைகள், பிரிட்டன் சந்தையில் அதிகரித்துவரும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் சிறப்பான நிலையில் உள்ளன. மேலும், கூட்டு நிறுவன பங்குதாரர்களைப் பெறுவதற்கும், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் முதலீடுகளுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.</p><p>பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனங்கள் நீண்டகாலமாகவே தமிழ்நாட்டில் பொறியியல், நிதிச் சேவைகள் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் குறிப்பிடத்தக்க அளவில் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி ஆலைகளையும், உலகளாவிய திறன் மையங்களையும் (GCCs) நிறுவி செயல்பட்டு வருகின்றன. இத்தகைய உறவுகளை மேலும் வலுப்படுத்துவதும், ஏற்கனவே உள்ள நிறுவனங்களின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதும், மேம்பட்ட உற்பத்தி, வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்கள், மின்னணுவியல் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் (GCCs) ஆகிய துறைகளில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதும் முதல்-அமைச்சர் தற்போது மேற்கொள்ளும் இங்கிலாந்து பயணத்தின் முக்கிய நோக்கங்களாகும். இதன்மூலம் தமிழ்நாட்டில் உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வாய்ப்புகள் ஏற்படும்.</p><p>மேலும், தமிழ்நாட்டில் ஏற்கெனவே வலுவாக நிலைபெற்றுள்ள வாகன மற்றும் மின்சார வாகன உற்பத்திச் சூழலை அடிப்படையாகக் கொண்டு, உலகத்தரம் வாய்ந்த ஒரு ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்’ (Motor Sports City) மாநிலத்தில் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் சட்டப்பேரவை விதி எண்.110-ன் கீழ் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை முன்னெடுத்துச் செல்லும் வகையில், உலகின் முன்னணி மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிட்டு, அவற்றின் சிறந்த நடைமுறைகளை அறிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும். இதன் ஒரு பகுதியாக, புகழ்பெற்ற ‘சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்’-ஐ பார்வையிடத் திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>இதன்மூலம், அங்குள்ள சுற்றுப்பாதை வடிவமைப்பு, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் இத்தகைய வளாகங்களைச் சிறப்பாகவும் வணிக ரீதியாகவும் செயல்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகள் குறித்து விரிவாக அறிந்துகொள்வதுடன், மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு, விளையாட்டுச் சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புடைய சிறப்பு வாகனத் தொழில்கள் ஆகியவைகளில் உள்ள வாய்ப்புகளையும் அறிந்து கொள்ள இயலும்.</p><p>முதல்-அமைச்சர் தலைமையிலான குழு இன்று (10.9.2026) சென்னையிலிருந்து புறப்பட்டு, 17.9.2026 அன்று சென்னை திரும்பும். இக்குழுவில் பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, தொழில் துறை வழிகாட்டி நிறுவனத்தின் (Guidance) மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் தீபக் ஜேக்கப், மற்றும் அரசு அலுவலர்கள் இடம்பெறுகின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை மாநகராட்சியில் பள்ளிக்குச் செல்லாத மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சிறப்பு முகாம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-camp-for-out-of-school-children-with-disabilities-in-chennai-corporation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-camp-for-out-of-school-children-with-disabilities-in-chennai-corporation#comments</comments><guid isPermaLink="false">31ddc4a7-228a-4553-a7a1-c9a73eebaf16</guid><pubDate>Thu, 10 Sep 2026 14:48:08 +0000</pubDate><atom:updated>2026-09-10T14:48:08.326Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Corporation,சென்னை மாநகராட்சி,children,குழந்தைகள்,Special camp,சிறப்பு முகாம்,disabilities- மாற்றுத்திறனாளிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/gqtdon9k/104.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/gqtdon9k/104.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பள்ளிக்குச் செல்லாத மாற்றுத்திறன் மற்றும் சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளின் கல்வி, மறுவாழ்வு மற்றும் ஆதரவு சார்ந்த தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒருங்கிணைப்புக் கூட்டம் மற்றும் ஆதரவு முகாம் இணை ஆணையாளர் (கல்வி)  க. கற்பகம், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (10.09.2026) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது.</p><p>இக்கூட்டத்தில், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் (OoSC) தொடர்பான முன்னெடுப்பின் ஆய்வில் 7,302 குழந்தைகள் கண்டறியப்பட்டு, 2,106 குழந்தைகள் முதற்கட்டமாக சரிபார்க்கப்பட்டனர். சரிபார்ப்பு நடவடிக்கையின் முதற்கட்டத்தைத் தொடர்ந்து, 509 குழந்தைகள் பள்ளிகளிலும், 263 குழந்தைகள் தொழிற்பயிற்சி நிலையங்களிலும் (ITIs) சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் மாற்றுத்திறன் மற்றும் சிறப்புத் தேவைகள் கொண்ட 28 குழந்தைகளுக்கு கூடுதல் கவனம் மற்றும் சிறப்பு ஆதரவு தேவைப்படுவதும் கண்டறியப்பட்டது.</p><h2>சிறப்பு முகாம்</h2><p>இவர்களின் கல்வி, மறுவாழ்வு மற்றும் ஆதரவு சார்ந்த குறிப்பிட்ட தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக, மாநகராட்சி ஆணையாளர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இன்று பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வித்துறை, சமூக நலம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தமிழ்நாடு உரிமைகள் திட்டம் (TN Rights Project) உள்ளிட்ட துறைகளின் சிறப்பு ஒருங்கிணைப்பு மற்றும் ஆதரவு முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில் மாற்றுத்திறன் மற்றும் சிறப்புத் தேவைகள் கொண்ட 28 குழந்தைகளும், அவர்களின் பெற்றோரும் பங்கேற்றனர். இம்முகாமில் மாற்றுத்திறன் மற்றும் சிறப்புத் தேவைகள் கொண்ட குழந்தைகளுக்கு கிடைக்கக்கூடிய நலத்திட்டங்கள், கல்வி வாய்ப்புகள், உரிமைகள், திறன் மேம்பாட்டு வழிகள் மற்றும் மறுவாழ்வு உதவிகள் குறித்தும், சைகை மொழி உதவி மற்றும் பார்வை குறைபாடுள்ள குழந்தைகளுக்கான கண்ணாடிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.</p><h2>கண்காணிப்பு நடவடிக்கை</h2><p>மேலும், ஒவ்வொரு குழந்தையின் கல்வி, குடும்பம், உள-சமூக மற்றும் ஆதரவு சார்ந்த தேவைகளைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ற பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக உளவியலாளர்கள் மூலம் குழந்தைகளுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் தனிப்பட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு குழந்தையின் தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையில் மறுவாழ்வு ஆதரவு, நலத்திட்டங்களுக்கான இணைப்பு, மீண்டும் பள்ளியில் சேர்ப்பது, அடையாளம் காணப்பட்ட ஒவ்வொரு குழந்தையும் தங்கள் கல்வி மற்றும் வளர்ச்சி சார்ந்த திறன்களை முழுமையாக வெளிக்கொணர்வதை உறுதிசெய்யும் வகையில் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் இம்முகாம் நடைபெற்றது.</p><p>இக்கூட்டத்தில் மாநகர நல அலுவலர் டாக்டர் எம். ஜெகதீசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் சீனிவாசன் (தெற்கு), சரவண குமார் (வடக்கு), பாலின மற்றும் கொள்கை ஆய்வகத்தின் தலைவர் முனைவர் லெஜிஸ், கல்வி அலுவலர் ஜெ.வசந்தி, தலைமை சமூக மேம்பாட்டு அலுவலர் ராஜ்குமார், சமூக பொருளாதார மேம்பாட்டுப் பிரிவு மற்றும் தமிழ்நாடு உரிமைகள் திட்ட அலுவலர்கள், சமூக அமைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலம் - தமிழக அரசு அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-announces-auction-of-securities-worth-6000-crore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-announces-auction-of-securities-worth-6000-crore#comments</comments><guid isPermaLink="false">59a95414-1032-47f3-8471-3edc711842a9</guid><pubDate>Thu, 10 Sep 2026 14:41:02 +0000</pubDate><atom:updated>2026-09-10T14:41:02.008Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Mumbai,ஏலம்,Reserve Bank of India,இந்திய ரிசர்வ் வங்கி,announces,பிணையப் பத்திரங்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/42hv5xay/thalamai.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தலைமைச்செயலகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/42hv5xay/thalamai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><h2>அரசு பிணையப் பத்திரங்கள்</h2><p>தமிழ்நாடு அரசு மொத்தம் ரூபாய் 6000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 7.49 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள் 2036 ரூபாய் 2000 கோடி மறுவெளியீடு, 7.62 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள் 2041 ரூபாய் 2000 கோடி மறுவெளியீடு மற்றும் 7.70 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள் 2051 ரூபாய் 2000 கோடி மறுவெளியீடு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D">ஏலத்தின்</a> மூலம் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. </p><h2>ஏலம்</h2><p>இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் செப்டம்பர் 15, 2026 அன்று நடத்தப்படும். போட்டி ஏலக்கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.00 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் (Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System) 1 1 (Electronic format) செப்டம்பர் 15, 2026 அன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சேலம் அருகே பரபரப்பு... பொதுமக்களின் தாக்குதலுக்கு பயந்து திருடனே போலீசுக்கு போன் செய்த சம்பவம்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thief-calls-police-fearing-public-attack-near-salem</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thief-calls-police-fearing-public-attack-near-salem#comments</comments><guid isPermaLink="false">93fd1baf-0f0e-4e93-b905-90ab06297d15</guid><pubDate>Thu, 10 Sep 2026 14:34:16 +0000</pubDate><atom:updated>2026-09-10T14:34:16.386Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrest,திருட்டு,Salem,சேலம்,Theft,திருடன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/rairw053/Untitled-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/rairw053/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சேலம் அருகே திருடச் சென்ற இடத்தில் மக்களின் தாக்குதலுக்கு பயந்து திருடனே போலீசாரை அழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>திறந்து கிடந்த வீடு</h2><p>சேலம் அருகே எம். புதுப்பாளையம் சிவசக்தி அவென்யூவில் வசித்து வருபவர் சிவகுமார் (32 வயது). அவரது மனைவி ஷர்மிளா தேவி (28 வயது). இருவரும் வெளியூர் சென்றுவிட்டு, கடந்த 7-ம்தேதி இரவு சுமார் 10.45 மணியளவில் வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் முன்கதவு திறந்திருந்ததையும், மாடியில் விளக்குகள் எரிந்து கொண்டிருந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.</p><h2>தப்பிக்க முயற்சி</h2><p>வீட்டிற்கு உள்ளே யாரோ இருப்பதை அறிந்த ஷர்மிளா தேவி கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். அந்த சமயத்தில் வீட்டிலிருந்து ஒரு நபர் வெளியேறி தயாராக வெளியில் நிறுத்தியிருந்த தனது பைக்கை எடுத்துக்கொண்டு தப்பிக்க முயன்றார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை விரட்டிச் சென்றனர்.</p><h2>போலீசுக்கு தகவல்</h2><p>இதனால் பயந்த அவர் கூட்டத்திலிருந்து தப்பிப்பதற்காக அங்கிருந்த ஒரு வீட்டுக்குள் சென்று ஒளிந்து கொண்டார். பின்னர் தப்பிக்க வேறு வழியில்லை என்பதை உணர்ந்த அந்த நபர், பொதுமக்களின் தாக்குதலுக்கு பயந்து, போலீசுக்கு போன் செய்து அழைத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அவரை பொதுமக்களின் பிடியிலிருந்து காப்பாற்றி கைது செய்தனர். மேலும் அவரது பைக்கை பறிமுதல் செய்தனர்.</p><h2>கட்டிடத் தொழிலாளி</h2><p>தொடர்ந்து அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. புதுக்கோட்டை மாவட்டம், ராஜபட்டியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (35 வயது). கட்டிடத் தொழிலாளி. இவர் தற்போது சேலம், கரிப்பட்டியில் வசித்து வருகிறார். சம்பவம் நடந்த அன்று, அவர் பைக்கில் கோயம்புத்தூருக்குச் சென்றுவிட்டு சேலம் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தார்.</p><h2>நகைகள் மீட்பு</h2><p>அப்போது பூட்டியிருந்த ஒரு வீட்டை கவனித்து, அதை உடைத்து திருட முயன்றுள்ளார். வீட்டில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருடிக் கொண்டிருந்த சமயத்தில் வீட்டு உரிமையாளர்கள் வந்துள்ளனர். தப்ப முயன்றபோது மாட்டிக்கொண்டது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் விஜயகுமாரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த நகைகளை மீட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>ஆவணி மாத அமாவாசையையொட்டி சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/devotees-throng-chathuragiri-on-the-occasion-of-the-amavasya-of-the-month-of-avani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/devotees-throng-chathuragiri-on-the-occasion-of-the-amavasya-of-the-month-of-avani#comments</comments><guid isPermaLink="false">0088b880-75e1-464e-9548-cfbd118b5c39</guid><pubDate>Thu, 10 Sep 2026 14:18:27 +0000</pubDate><atom:updated>2026-09-10T14:18:27.295Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Devotees,amavasai,அமாவாசை,சதுரகிரி,Chathuragiri,Avani month,ஆவணி மாதம்,குவிந்த பக்தர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/e15xefco/saduragiri.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சதுரகிரி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/e15xefco/saduragiri.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>ஆன்மிகம் (Devotional)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர்,</p><p>மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF">சதுரகிரி</a> சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம், பவுர்ணமி மற்றும் அமாவாசையையொட்டி பக்தர்கள் மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுவது வழக்கம். ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு செப். 8 முதல் 11 வரை மலையேறி பக்தர்கள் தரிசனம் செய்ய வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளது.</p><h2>சாமி தரிசனம்</h2><p>காலை நடை திறக்கப்பட்ட நிலையில், பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் இரவில் கோவிலில் தங்குவதற்கு அனுமதி கிடையாது என்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு செல்லவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். சிறப்பு பூஜைக்கான முன்னேற்பாடு மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>10 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-until-10-pm-in-10-districts</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-until-10-pm-in-10-districts#comments</comments><guid isPermaLink="false">077ae0fd-1de2-4c34-bc3f-4d281756eb2c</guid><pubDate>Thu, 10 Sep 2026 13:52:23 +0000</pubDate><atom:updated>2026-09-10T13:52:23.498Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/w881v0sa/Untitled-8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/w881v0sa/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், சேலம், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, விருதுநகர் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அரசு ஏற்றுக் கொண்ட அதிகபட்ச கட்டணத்திற்கு மிகாமல் வசூல்: ஆம்னி பஸ் உரிமையாளர்கள் முடிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/omni-bus-owners-decide-not-to-exceed-the-maximum-fare-approved-by-the-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/omni-bus-owners-decide-not-to-exceed-the-maximum-fare-approved-by-the-government#comments</comments><guid isPermaLink="false">8b0bbbc9-2b2f-46d4-9769-77e3fc628798</guid><pubDate>Thu, 10 Sep 2026 13:28:09 +0000</pubDate><atom:updated>2026-09-10T13:28:09.982Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Omni Bus,ஆம்னி பஸ்,தமிழகம்,தமிழக அரசு,TN govt,கட்டணம் வசூல்,Fare hike,கட்டணம் நிர்ணயம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/e1neyz9r/koer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/e1neyz9r/koer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>விழாக்காலங்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சரியான நடைமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. </p><h2>ஆம்னி பஸ் உரிமையாளர்கள்</h2><p>இதுதொடர்பாக அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>அன்புடையீர், வணக்கம்.</p><p>தமிழ்நாட்டில் பொதுமக்களின் போக்குவரத்துத் தேவையைப் பூர்த்தி செய்வதில் ஆம்னி பஸ்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன.</p><p>2024 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது, அன்றைய போக்குவரத்துத் துறை அமைச்சர் மற்றும் போக்குவரத்துத்துறை ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனையின் அடிப்படையில், நமது சங்கம் நிர்ணயம் செய்திருந்த அதிகபட்ச ஆம்னி பஸ் பயணக் கட்டணத்திலிருந்து 10 சதவீதம் குறைத்து வசூலிக்க அரசு அறிவுறுத்தலின்படி பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. </p><h2>கட்டண விவரங்கள்</h2><p>மேற்கண்ட கட்டண விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், நமது சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.aoboa.co.in-உம் கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.</p><p>அதே நடைமுறையை எதிர்வரும் அனைத்து விழாக்காலங்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களிலும் நமது ஆம்னி பஸ் உரிமையாளர்கள் முழுமையாகப் பின்பற்றுமாறு சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.</p><p>விழாக்காலங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்களிடையே புகார்கள் ஏற்படாத வகையிலும் ஆம்னி பஸ் துறையின் நற்பெயர் பாதுகாக்கப்படும் வகையிலும், அனைத்து உரிமையாளர்களும் சங்கத்தின் இந்த அறிவுறுத்தலுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் தொடரும் பாலியல் தொல்லை சம்பவங்கள் - வானதி சீனிவாசன் விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/continuing-incidents-of-sexual-harassment-in-tamil-nadu-vanathi-srinivasans-review</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/continuing-incidents-of-sexual-harassment-in-tamil-nadu-vanathi-srinivasans-review#comments</comments><guid isPermaLink="false">d510637c-bbf4-4d8a-8d0e-93aa6ec3a8c5</guid><pubDate>Thu, 10 Sep 2026 13:26:16 +0000</pubDate><atom:updated>2026-09-10T13:26:16.829Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Sexual harassment,பாலியல் தொல்லை,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,incident,சம்பவங்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/miuag78a/vanathi-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/miuag78a/vanathi-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாணவிகள் முதல் பெண்கள் வரை, தமிழகத்தில் தொடர்ந்து பாலியல் தொல்லை சம்பவங்கள் நடக்கிறது என முன்னாள் பாஜக தேசிய மகளிரணி தலைவர் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu/constituency-redelineation-will-be-a-joy-for-the-people-of-tamil-nadu-vanathi-srinivasan">வானதி சீனிவாசன் </a>கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>பாலியல் தொல்லை சம்பவங்கள்</h2><p>கள்ளக்குறிச்சி தெங்கியாநத்தம் அரசுப் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை. கிருஷ்ணகிரி ஊத்தங்கரை ஓடும் பேருந்தில் அரசுப் பேருந்து நடத்துனர் மாணவிக்கு பாலியல் தொல்லை. சிவகங்கை மாவட்டம் சாக்கோடை அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை. சென்னை அரும்பாக்கத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் உடற்கல்வி ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை திருப்பூர் வெள்ளக்கோவில் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த வட மாநில இளைஞர். சென்னையில் ஜிஎஸ்டி பெண் ஆய்வாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜிஎஸ்டி காவல் ஆய்வாளர். ராமநாதபுரம், கீழக்கரை இளைஞர் கஞ்சா இளைஞர்களால் பாலியல் வன்கொடுமையால் உயிரை மாய்த்துக் கொண்ட சோகம். திண்டுக்கல்லில் தனியார் பஸ் டிரைவர் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.</p><h2>பெண்களின் பாதுகாப்பு</h2><p>இவை வழக்குகளாகப் பதிவாகி செய்திகளில் வந்தவை மட்டுமே. இன்னும் எத்தனை பாலியல் குற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறதோ? ஏன். இந்தப் பதிவினை போஸ்ட் செய்யும் போது கூட தமிழகத்தில் ஏதேனும் ஒரு மூலையில் பெண் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும். பெருமையாக ஆரம்பிக்கப்பட்ட சிங்கப் பெண்படையின் தற்போதைய நிலை என்ன? இத்தனை செய்திகளைப் பார்த்த பின்னும் சொல்வதற்கு ஒன்றுமில்லை..! தவெக அரசில் பெண்களின் பாதுகாப்பு எப்படி உள்ளது என்பதை மக்கள் இப்போது புரிந்து கொண்டிருப்பார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>