<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 20 Aug 2026 06:40:49 +0000</lastBuildDate><item><title>என்.எல்.சி. விவகாரம்: சட்டசபையில் காரசார விவாதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nlc-issue-heated-debate-in-the-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nlc-issue-heated-debate-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">2d587d3e-6384-4bbb-8f2d-32a940f10908</guid><pubDate>Thu, 20 Aug 2026 06:38:14 +0000</pubDate><atom:updated>2026-08-20T06:38:14.737Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,TN Assembly,NLC Company,Premalatha Vijayakanth,பிரேமலதா விஜயகாந்த்,Sowmiya Anbumani,சவுமியா அன்புமணி,என்.எல்.சி. நிறுவனம்,அமைச்சர் கீர்த்தனா,Minister Keerthana</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/6kkn01qw/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/6kkn01qw/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையில் இன்றைய நிகழ்வின்போது நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிறுவனம் குறித்து காரசார விவாதம் நடைபெற்றது.</p><h2>பாமக எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி கூறியதாவது:-</h2><p>தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாத நிறுவனம் என்றால் அது என்.எல்.சி நிறுவனம்தான். ஒரே இரவில் சி.எஸ்.ஆர்.-க்கு ஒரு சதவீதம் கொடுக்க வேண்டும்; அதை அந்த நிறுவனம் கொடுக்கிறதா? என்பதை பாருங்கள்... விளை நிலங்களை அழித்து, தண்ணீரையும் உறிஞ்சி எடுத்துவிட்டார்கள். ஆனால் அப்பகுதி மக்களுக்கு எதையும் செய்யவில்லை.</p><p>நிறுவனத்துக்காக நிலம் கொடுத்த மண்ணின்மைந்தர்களுக்கு நியாயமாக வேலை கொடுக்க வேண்டும். ஆனால் நுழைவுத்தேர்வு நடத்தி வேலைக்கு ஆட்கள் எடுக்கிறார்கள். நுழைவுத்தேர்வு நடத்த இது என்ன மருத்துவ படிப்பா?. என்.எல்.சி. நிறுவனம் கொடுக்கும் எந்த தகவலுமே உண்மைக்கு புறம்பான தகவலாக தான் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.</p><h2>இதற்கு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பதில் அளித்து கூறுகையில்,</h2><p>என்.எல்.சி. நிர்வாகம் குறித்து நிறைய பேர் கோரிக்கை வைத்துள்ளனர். விவசாயிகளுக்கு பிரச்சினை என்றால் முதல்-அமைச்சர் விஜய் விவசாயிகள் பக்கம் தான் நிற்பார்கள். என்.எல்.சி. நிறுவனம் குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கும் புகார்கள் தொடர்பாக விசாரிக்க உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.</p><p>முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதற்கான தகவல்கள் உங்களுக்கு (சவுமியா அன்புமணி) வரும். யாருக்கும் எதிராக நாங்கள் கண்டிப்பாக நடந்து கொள்ளமாட்டோம். விவசாயிகளுக்கும், மக்களுக்கும் எப்போது உறுதுணையாக இருப்போம். என்.எல்.சி. நிர்வாகம் மீது தவறு இருந்தால் உரிய நடவடிக்கையை அரசு எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.</p><h2>தொடர்ந்து தேமுதிக எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-</h2><p>என்.எல்.சி. நிறுவனத்தால் விருத்தாசலத்தில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கூட்டுக் குடிநீர் திட்டம் வேண்டும் என ஏற்கனவே சொல்லியிருக்கிறோம்; நீரில் கால்சியம் இருப்பதால் கிட்னி பாதிப்பு அதிகமாக இருக்கிறது. </p><p>அதுமட்டுமின்றி இதுவரை இழப்பீடு தொகை என்.எல்.சி. நிர்வாகத்தில் வழங்கப்படவில்லை. இன்றுவரை அப்பகுதி விவசாய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். என்.எல்.சி. மூலம் எந்த தீர்வும் விருத்தாசலம் தொகுதி மக்களுக்கு கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை என்றார். இவ்வாறு என்.எல்.சி. விவகாரம் தொடர்பாக சட்டசபையில் காரசார விவாதம் நடந்தது.</p>]]></content:encoded></item><item><title>93 நாட்களாக கேள்விகளுக்கான பதில் வரவில்லை: தி.மு.க. உறுப்பினரின் குற்றச்சாட்டுக்கு சபாநாயகர் பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-response-to-questions-for-93-days-speaker-replies-to-dmk-members-allegation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-response-to-questions-for-93-days-speaker-replies-to-dmk-members-allegation#comments</comments><guid isPermaLink="false">03973616-8cb3-4769-8709-40f89230626d</guid><pubDate>Thu, 20 Aug 2026 06:32:12 +0000</pubDate><atom:updated>2026-08-20T06:32:12.664Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,திமுக,DMK,தமிழகம்,தமிழக சட்டசபை,TN Assembly,Speaker,சபாநாயகர்,Assembly Session,சட்டசபை கூட்டத்தொடர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/dywqffyu/kielri.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/dywqffyu/kielri.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக சட்டசபையில் இன்றைய அலுவல்கள் தொடங்கியதும், நேரமில்லா நேரம் எடுத்து கொள்ளப்பட்டது. கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்படவில்லை. இதனை தொடர்ந்து, சவுதி அரேபியாவில் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக சட்டசபையில் அ.தி.மு.க. சார்பில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.</p><h2>93 நாட்களாக</h2><p>இதனிடையே <a href="https://www.dailythanthi.com/topic/dmk">திமுக</a> சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் கூறுகையில், “சட்டமன்ற உறுப்பினர்கள் வினாக்கள் கொடுத்து 42 நாட்களுக்குள் துறை சார்ந்த பதில் வந்து, வினா பட்டியலில் சேர்க்கப்படும். 93 நாட்களாக கேள்விக்கான பதில் வரவில்லை. அமைச்சர்கள், அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர். பதில் அனுப்பாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்” என்று தெரிவித்தார்.</p><p>அப்போது பேசிய சட்டமன்ற முன்னவர் செங்கோட்டையன், “துறை சார்ந்த பதில்கள் பெற அமைச்சர்கள் மும்முரம் காட்டுவோம்” என்று கூறினார். </p><p>இதனைத்தொடர்ந்து திமுக உறுப்பினருக்கு பதில் அளித்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், “2021ல் கொடுத்த கேள்விக்கு 2025ல் பதில் வராத கோப்புகள் உள்ளது. புதிய உறுப்பினர்கள் வந்துள்ளனர். பதில் தாமதமாக வருகிறது, வந்து கொண்டிருக்கிறது” என்று தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>ஒண்டிவீரன் நினைவு தினம்: டிடிவி தினகரன் புகழஞ்சலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ondiveeran-memorial-day-ttv-dinakaran-pays-tribute</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ondiveeran-memorial-day-ttv-dinakaran-pays-tribute#comments</comments><guid isPermaLink="false">2f3c0477-2466-4b14-a7d0-702f524b30d9</guid><pubDate>Thu, 20 Aug 2026 06:31:19 +0000</pubDate><atom:updated>2026-08-20T06:31:19.690Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,டிடிவி தினகரன்,Tribute,Memorial Day,நினைவு தினம்,ஒண்டிவீரன்,Ondiveeran,TTV Dinakaran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/0g1837am/286.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/0g1837am/286.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் 255-வது நினைவு தினத்தையொட்டி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><h2>புகழஞ்சலி</h2><p>இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் முன்னோடிகளில் ஒருவரும், நெற்கட்டாஞ்செவ்வலை ஆண்ட மன்னர் பூலித்தேவரின் தலைசிறந்த படைத்தளபதியாகத் திகழ்ந்து, ஆங்கிலேயப் படைகளை எதிர்த்துப் போரிட்டு வெற்றிகண்ட மாவீரருமான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%92%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">ஒண்டிவீரனின்</a> நினைவு தினம் இன்று.</p><p>ஆங்கிலேயர்களின் அடிமைத்தனத்திற்கு அடிபணியாமல், தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக இறுதிவரை துணிச்சலுடன் போராடி, தமிழினத்தின் பெருமையாகத் திகழ்ந்த மாவீரர் ஒண்டிவீரன் வீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் நினைவில் கொண்டு போற்றிடுவோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தென்மாநில முதல்வர்கள் மாநாடு: 8 கோடித் தமிழர்களின் குரல் ஒலிக்குமா? - வேல்முருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/conference-of-southern-chief-ministers-will-the-voice-of-8-crore-tamils-resonate-velmurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/conference-of-southern-chief-ministers-will-the-voice-of-8-crore-tamils-resonate-velmurugan#comments</comments><guid isPermaLink="false">a0542838-0d55-4925-8a4d-0b0c505644e4</guid><pubDate>Thu, 20 Aug 2026 05:58:13 +0000</pubDate><atom:updated>2026-08-20T05:58:13.066Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Velmurugan,வேல்முருகன்,தி.வேல்முருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/uzmlecp0/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/uzmlecp0/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில், தமிழகத்தின் உரிமைகளுக்குத் தீர்வு கிடைக்குமா? எட்டு கோடித் தமிழர்களின் குரல் ஒலிக்குமா? என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/velmurugan">வேல்முருகன் </a>தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>முதல்வர்கள் மாநாடு</h2><p>மாமல்லபுரத்தில் நடைபெறும் தென்மாநில முதல்வர்கள் மாநாடு, மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினைகளை, பேசும் கூட்டமாக மட்டும் இருக்கக் கூடாது.</p><p>காவிரி நீர் உரிமை முதல் கல்வி உரிமை வரை, தமிழகத்தின் அடிப்படை மாநில உரிமைகள் அனைத்தும் இம்மாநாட்டில் அழுத்தமாக முன்வைக்கப்பட வேண்டும்.</p><p>காவிரி நீரைத் தமிழகத்திற்கு உரிய அளவில் உறுதி செய்வதுடன், கர்நாடகத்தின் மேகதாது அணை முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க, மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>மாநிலங்களின் கல்வித் தேவைகளையும், மாணவர்களின் சமூகச் சூழலையும் புரிந்துகொள்ளாத வகையில் மத்திய அரசால் திணிக்கப்படும் ஒரே மாதிரியான தேர்வு முறைகள், தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை வீணடிக்கக் கூடாது. கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.</p><h2>அதிகாரத்தை மீட்டெடுக்க வேண்டும்</h2><p>தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் தொடர்ந்து எதிர்த்து வரும் நீட் தேர்வை ரத்து செய்து, மருத்துவக் கல்வியில் மாநிலங்களுக்கு உரிய அதிகாரத்தை மீட்டெடுக்க வேண்டும்.</p><p>நீர், கல்வி, வேலைவாய்ப்பு, மொழி, நிதி என ஒவ்வொரு துறையிலும் மாநிலங்களின் அதிகாரம் படிப்படியாகப் பறிக்கப்படும் நிலையில், கூட்டாட்சி என்ற வார்த்தை வெறும் அரசியல் அலங்காரமாக இருக்கக்கூடாது.</p><p>எனவே, இன்றைய தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் தமிழகத்தின் நீர்வள உரிமை, கல்வி உரிமை உள்ளிட்ட அனைத்து மாநில உரிமைகளையும் உறுதியுடன் முன்வைத்து, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றவும், நீட் தேர்வை ரத்து செய்யவும், காவிரி பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவும், தகுந்த தரவுகளுடன் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாட்டின் உரிமைகளை நிலை நிறுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>
த.வெ.க. ஆட்சியில் அம்பேத்கர் அயலக கல்வி திட்டத்திற்கு ரூ.135 கோடி ஒதுக்கீடு:  அமைச்சர் வன்னி அரசு
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-government-allocates-rs-135-crore-for-ambedkar-overseas-education-scheme-says-minister-vanni-arasu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-government-allocates-rs-135-crore-for-ambedkar-overseas-education-scheme-says-minister-vanni-arasu#comments</comments><guid isPermaLink="false">7de086d4-4fd4-4db6-9ba4-c44dc1420d9f</guid><pubDate>Thu, 20 Aug 2026 05:55:52 +0000</pubDate><atom:updated>2026-08-20T05:55:52.221Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,த.வெ.க.,TNAssembly,minister vanni arasu,அமைச்சர் வன்னி அரசு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/7ppn6trf/tnatat.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் வன்னி அரசு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/7ppn6trf/tnatat.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>த.வெ.க. ஆட்சியில் அம்பேத்கர் அயலக கல்வி திட்டத்திற்கு ரூ.135 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என அமைச்சர் வன்னி அரசு கூறினார்.</p><p>தமிழக சட்டசபையில் இன்றைய அலுவல்கள் தொடங்கின.  காலை 9.30 மணிக்கு கூட்டம் தொடங்கியது.  கூட்டம் தொடங்கியதும், நேரமில்லா நேரம் எடுத்து கொள்ளப்பட்டது.  அப்போது, அம்பேத்கர் அயலக உதவி திட்டத்தின் கீழ் நிதி வழங்கவில்லை என மலேசியாவில் பயின்று வரும் மாணவர் தெரிவித்த குற்றச்சாட்டிற்கு அமைச்சர் வன்னி அரசு பதில் அளித்து பேசினார்.</p>  <h2>நிலுவை தொகை</h2><p>அப்போது தி.மு.க. சார்பில் பேசிய எம்.எல்.ஏ. கோவி செழியன், மற்ற மாணவர்களுக்கு வந்து விட்டது.  தனக்கு நிலுவை தொகை வரவில்லை என்றே மாணவர் குற்றம்சாட்டி உள்ளார்.  தி.மு.க. ஆட்சியில் நிதி தரப்பட்டதை தான் அமைச்சர் தேதி வாரியாக வாசித்தார்.  குற்றச்சாட்டுக்கு பதில் தரவில்லை என்றார்.</p><p>இதுபற்றி அமைச்சர் வன்னி அரசு பதிலளித்து பேசும்போது, இதுவரை மாணவரின் கல்வி நலனுக்காக ரூ.48.22 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.  நடப்பு ஆண்டில் உதவித்தொகைக்கான உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காமல் மாணவர் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.  முதலாம் ஆண்டு கல்வி கட்டணம் வழங்கப்பட்ட ரூ.31 லட்சத்திற்கு 10 மாதங்கள் கடந்தும் ஆவணங்கள் சமர்ப்பிக்கவில்லை.</p>  <h2>3 மடங்கு உயர்வு</h2><p>மாணவனுக்கு நிதி கொடுத்தது தி.மு.க. ஆட்சியில் என ஒத்துக்கொள்கிறேன்.  கடந்த ஆட்சியில் தான் மாணவனுக்கு நிதி வழங்கப்பட்டது என சரியாக குறிப்பிட்டு தான் பேசி உள்ளேன்.  நான் சமூக நீதித்துறை அமைச்சரான பின்னர் தான் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை 3 மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது.</p><p>500 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் குறைந்த நபர்களுக்கு தான் தி.மு.க. வழங்கியது. நான் துறைக்கு வந்த பின் 3 மடங்கு உயர்ந்துள்ளது என்று கூறினார்.</p>  <h2>ரூ.131 கோடி</h2><p>தி.மு.க. ஆட்சியில் அம்பேத்கர் அயலக கல்வி உதவி தொகைக்கு ரூ.84 கோடி ஒதுக்கீடு.  ஆனால், த.வெ.க. ஆட்சியில் ரூ.131 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.  த.வெ.க. ஆட்சியில் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.</p><p>வெளிநாடுகளில் படிக்கும் தமிழக மாணவர்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார் என அமைச்சர் வன்னி அரசு கூறினார்.  10 மாதங்கள் ஆகியும் மாணவர் தனது ஆவணங்களை பதிவு செய்யவில்லை.  உள்நோக்கத்துடனும், அரசியல் காரணங்களுக்காகவும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன என்று கூறினார்.  மாணவருக்கு அரசு வழங்கி உள்ள நிதியை தேதி வாரியாக குறிப்பிட்டு வன்னி அரசு பதிலளித்து பேசினார்.</p> ]]></content:encoded></item><item><title>கவன ஈர்ப்பு தீர்மானம்: சபாநாயகருக்கு அமைச்சர் செங்கோட்டையன் கோரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/calling-attention-motion-minister-sengottaiyans-request-to-the-speaker</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/calling-attention-motion-minister-sengottaiyans-request-to-the-speaker#comments</comments><guid isPermaLink="false">30f4a637-7a15-4745-b43f-35f6d9ccb8fd</guid><pubDate>Thu, 20 Aug 2026 05:50:13 +0000</pubDate><atom:updated>2026-08-20T05:50:13.318Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>செங்கோட்டையன்,Sengottaiyan,சட்டசபை,TN Assembly,JCD Prabhakar,ஜே.சி.டி பிரபாகர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/2jcqm59e/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/2jcqm59e/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>கவன ஈர்ப்பு தீர்மானம் தொடர்பாக சபாநாயகருக்கு அமைச்சர் செங்கோட்டையன் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.</p><p>சென்னை,</p><h2>கவன ஈர்ப்பு தீர்மானம்</h2><p>தமிழக சட்டசபையில் இன்றைய அலுவல்கள் தொடங்கியதும், நேரமில்லா நேரம் எடுத்து கொள்ளப்பட்டது. கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்படவில்லை. இதனை தொடர்ந்து, சவுதி அரேபியாவில் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக சட்டசபையில் அ.தி.மு.க. சார்பில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.</p><h2>ஆதவ் அர்ஜுனா</h2><p>இந்த தீர்மானத்தின் மீது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், “”மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர் மாவீரன், சவுதி அரேபியாவில் மீன்பிடி தொழில் செய்து வந்தார். மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது ஈரானிய கடற்கொள்ளையர்கள் சுட்டதில் மீனவர் மாவீரன் உயிரிழந்தார். ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.</p><p>இந்த சம்பவம் தொடர்பாக சவுதி அரேபியாவில் புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் மீனவர் மாவீரன் உடலை கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மீனவர் மாவீரன் உடலை தமிழகம் கொண்டு வர தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.</p><h2>செங்கோட்டையன் கோரிக்கை</h2><p>முன்னதாக சட்டமன்ற உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரும்போது, அதற்கு அமைச்சர்களிடம் பதில் இருக்கிறதா? என்பதை முதலில் அறிந்துகொண்டு தீர்மானத்தை கொண்டுவர வேண்டும் என அவை முன்னவர் செங்கோட்டையன் கோரிக்கை வைத்தார்.</p><p>இதனை ஏற்ற சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர், நாளை முதல் அமைச்சர்களுடைய பதில்கள் கிடைக்கப்பெற்ற பிறகே சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டுவரும் கவன ஈர்ப்பு தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தார். மேலும் கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து முன்னாள் அமைச்சர் துரை முருகன் கூறிய கருத்தை சுட்டிக்காட்டி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அறிவுறுத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர் போராட்டங்களை தடுக்க முடியாது: சு.வெங்கடேசன் எம்.பி.</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-protests-cannot-be-stopped-su-venkatesan-mp</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-protests-cannot-be-stopped-su-venkatesan-mp#comments</comments><guid isPermaLink="false">60d19a9a-3073-4623-bab3-1382aaa354a6</guid><pubDate>Thu, 20 Aug 2026 05:39:24 +0000</pubDate><atom:updated>2026-08-20T05:39:24.155Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,தமிழிசை சவுந்தரராஜன்,சு.வெங்கடேசன் எம்பி,Su. Venkatesan,student protest,மாணவர் போராட்டம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/b7nq5mpp/285.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சு.வெங்கடேசன் எம்.பி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/b7nq5mpp/285.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாணவர்களைப் போராட்டங்களிலிருந்து விலக்கி வைக்கும் முயற்சிகளை எதிர்க்கும் இடதுசாரிக் கட்சிகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு.வெங்கடேசன், தமிழிசை சவுந்தரராஜனின் பதிலடி கொடுத்துள்ளார்.</p><p>இது தொடர்பாக, மதுரை நாடாளுமன்ற தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு.வெங்கடேசன் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-</p><h2>மாணவர் போராட்டம்</h2><p>மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை, போராட்டம் தேவையில்லை என்ற கரடுதட்டிப் போன பழமைவாதத்தின் குரலைச் சுதந்திரப் போராட்ட காலத்திலேயே தூக்கி குப்பையில் வீசியவர்கள் நமது மாணவர்கள். அவர்களின் அறிவார்ந்த அரசியல் பார்வையும், தீர்க்கமான போராட்டமும் தான் விடுதலை போராட்டத்தை மேலும் தீவிரமாக்கியது.</p><p>மாணவர்களின் பகுத்தறிவு மற்றும் அறிவியல் மனப்பான்மையைச் சீர்குலைக்க நீங்கள் செய்யும் பட்டவர்த்தன முயற்சிதான் புதிய கல்விக் கொள்கை, நீட் உள்ளிட்ட கல்வித் துறையின் மோசடிகள் அனைத்தும். அதற்கு எதிராக இந்திய மாணவர்கள் துணிவோடு களத்தில் நிற்கிறார்கள். </p><p>பெல்லட் குண்டுகளையும், ஆணி பொறுத்திய லத்திகளையும் துணிவோடு எதிர் கொண்டு அவர்கள் களத்தில் நின்றார்கள். ஆனால், மாணவர்களைத் தாக்க உத்தரவிட்டது யார் என்ற கேள்வியை எதிர்கொள்ள முடியாமல்  உள்துறை அமைச்சர் 20 நாளாக நாடாளுமன்றத்திற்கே வரவில்லை. இந்த உண்மையை எதிர்கொள்ள முடியாமல் வெளிப்படுவதுதான் இன்றைய கதறல்கள் எல்லாம்.</p><p>தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் நடத்திய சட்டம் ஒழுங்கு தொடர்பான கூட்டத்தின் முடிவுகளும், தமிழிசை செளந்தரராஜனின் எக்ஸ் தள பதிவும் ஒரே திசையில் மாணவர்களையும், இடது சாரிகளையும் குற்றம் சாட்டுகிறது. “திமாமி நக்சல்” என பிரதம பட்டம் சூட்டிய நபர்களின் பட்டியலைத் தயார் செய்ய துவங்குகிறீர்கள்.</p><p>சங்கமாகச் செயல்படும் மாணவர் உரிமையை சங்கிகள் கூட்டத்தால் தடுத்துவிட முடியாது. அறிவியல் மனப்பான்மை கொண்ட வகுப்பறைகளை மாட்டு மூத்திரத்தின் மேன்மையை விளக்கும் மேடையாக மாற்ற நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளையும்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"> மாணவர்கள்</a> வீழ்த்திக் காட்டுவார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை, போராட்டம் தேவையில்லை என்ற கரடுதட்டிப் போன பழமைவாதத்தின் குரலைச் சுதந்திரப் போராட்ட காலத்திலேயே தூக்கி குப்பையில் வீசியவர்கள் நமது மாணவர்கள். அவர்களின் அறிவார்ந்த அரசியல் பார்வையும், தீர்க்கமான போராட்டமும்தான் விடுதலைப் போராட்டத்தை மேலும்… <a href="https://t.co/78oOJiuqAS">https://t.co/78oOJiuqAS</a></p>&mdash; Su Venkatesan MP (@SuVe4Madurai) <a href="https://x.com/SuVe4Madurai/status/2090290445138198799?ref_src=twsrc%5Etfw">August 20, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>தெலுங்கானா: கிணற்றில் பாய்ந்த கார்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/telangana-car-plunges-into-well-4-members-of-the-same-family-killed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/telangana-car-plunges-into-well-4-members-of-the-same-family-killed#comments</comments><guid isPermaLink="false">bc97045e-6577-4558-9f8f-ebd328a777fa</guid><pubDate>Thu, 20 Aug 2026 05:38:56 +0000</pubDate><atom:updated>2026-08-20T05:38:56.643Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தெலுங்கானா,Telangana,car accident,கார் விபத்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/zpu24v99/Untitled-8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/zpu24v99/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஐதராபாத், </p><p>தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட்டை மாவட்டத்தில் சாலையோர கிணற்றில் கார் பாய்ந்த விபத்தில் தம்பதி மற்றும் அவர்களது 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><h2>கிணற்றில் பாய்ந்த கார்</h2><p>அப்பனப்பள்ளி புறநகர்ப் பகுதியில் நேற்று மாலை இந்த விபத்து நடந்தது. சுமார் 22 அடி ஆழமுள்ள சாலையோர கிணற்றில் கார் பாய்ந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.</p><p>பாலவந்தபூர் கிராமத்தைச் சேர்ந்த இந்த குடும்பத்தினர், சித்திப்பேட்டையில் நடைபெற்ற உறவினர் ஒருவரின் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் உள்ள கிணற்றுக்குள் பாய்ந்தது.</p><h2>நள்ளிரவில் கார் கண்டுபிடிப்பு</h2><p>விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவு நேரத்தில் கிணற்றுக்குள் கார் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.</p><p>இதையடுத்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று அதிகாலை காரை கிணற்றில் இருந்து மீட்டனர். காருக்குள் இருந்த தம்பதி மற்றும் அவர்களது 2 குழந்தைகளும் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் <a href="https://www.dailythanthi.com/news/india">வழக்குப்பதிவு </a>செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மதுரை: 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் கைது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-teacher-arrested-for-sexually-harassing-class-12-girl-students</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-teacher-arrested-for-sexually-harassing-class-12-girl-students#comments</comments><guid isPermaLink="false">34908f19-ce51-4b5a-b435-fec92b3706d7</guid><pubDate>Thu, 20 Aug 2026 05:14:56 +0000</pubDate><atom:updated>2026-08-20T05:14:56.349Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Madurai,மதுரை,பாலியல் தொல்லை,மாணவிகள்,Teacher Arrested,ஆசிரியர் கைது,sexual abuse,girl students</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/xyfj97hh/muthal.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/xyfj97hh/muthal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/மதுரை">மதுரை</a> அருகே தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக இயற்பியல் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><h2>பாலியல் தொந்தரவு</h2><p>12-ம் வகுப்பு மாணவிகளுக்கு நேரடியாகவும், போன் மூலமாகவும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இயற்பியல் ஆசிரியர் ராஜ்குமார் மீது மாணவிகள் சிலர் மாவட்ட கலெக்டரிடம் ரகசியமாக புகார் அளித்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><h2>போக்சோவில் வழக்குப்பதிவு</h2><p>இந்நிலையில் மாணவிகளுக்குபாலியல் தொல்லை அளித்த இயற்பியல் ஆசிரியர் ராஜ்குமார்,  ஹாஸ்டல் வார்டன் உள்ளிட்ட 4 பேர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. </p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/V7ZT6E_vpps"></iframe></figure>]]></content:encoded></item><item><title>சவுதி அரேபியாவில் தமிழக மீனவர் கொலை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fisherman-killed-in-saudi-arabia-minister-aadav-arjuna-issues-clarification</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fisherman-killed-in-saudi-arabia-minister-aadav-arjuna-issues-clarification#comments</comments><guid isPermaLink="false">341b8dc0-48b6-4bde-b381-cb37f5c9a6f5</guid><pubDate>Thu, 20 Aug 2026 05:01:03 +0000</pubDate><atom:updated>2026-08-20T05:01:03.057Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>fisherman,மீனவர்,அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,Minister Aadav Arjuna</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/wtxrgjj9/11.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/wtxrgjj9/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சவுதியில் மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அதிமுக சார்பில் சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தமிழக மீனவர் சுட்டுக்கொலை தொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் விளக்கம் அளித்து பேசியதாவது;</p><p>”மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர் மாவீரன், சவுதி அரேபியாவில் மீன்பிடி தொழில் செய்து வந்தார். மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது ஈரானிய கடற்கொள்ளையர்கள் சுட்டதில் மீனவர் மாவீரன் உயிரிழந்தார். ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சவுதி அரேபியாவில் புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் மீனவர் மாவீரன் உடலை கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மீனவர் மாவீரன் உடலை தமிழகம் கொண்டு வர தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.”</p><p>இவ்வாறு அவர் பேசினார். </p>  ]]></content:encoded></item><item><title>
சவுதியில் தமிழக மீனவர் படுகொலை; சட்டசபையில் அ.தி.மு.க. கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீது விவாதம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-fisherman-killed-in-saudi-assembly-debates-aiadmk-motion</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-fisherman-killed-in-saudi-assembly-debates-aiadmk-motion#comments</comments><guid isPermaLink="false">39d07f2c-ca71-4fd0-9267-a7bfdaae4a55</guid><pubDate>Thu, 20 Aug 2026 05:00:14 +0000</pubDate><atom:updated>2026-08-20T05:00:14.697Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,AIADMK,fisherman,கவன ஈர்ப்பு தீர்மானம்,அ.தி.மு.க.,தமிழக மீனவர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/wdevp1ts/tnata.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக சட்டசபை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/wdevp1ts/tnata.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் சட்டசபையில் <a href="https://www.dailythanthi.com/">அ.தி.மு.க.</a> சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.</p><p>தமிழக சட்டசபையில் இன்றைய அலுவல்கள் தொடங்கின.  காலை 9.30 மணிக்கு கூட்டம் தொடங்கியது.  கூட்டம் தொடங்கியதும், நேரமில்லா நேரம் எடுத்து கொள்ளப்பட்டது.  கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்படவில்லை.</p>  <h2>கவன ஈர்ப்பு தீர்மானம்</h2><p>இதுபற்றி சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கூறும்போது, கேள்வி நேரத்திற்கான பதில் தயாரான பின்னரே அனுமதி அளிக்க முடியும்.  நோட்டீஸ் கொடுத்த உடனே பேச அனுமதிக்க முடியாது.  பதில் அளிக்க அமைச்சர் தயாராக இருக்கின்றனரா? என்பது பற்றி தெரிந்த பின்னரே அனுமதி அளிக்க முடியும் என கூறினார்.  அவசர, அவசியம் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு அனுமதி அளிக்கப்படுகிறது என்றார்.</p><p>இதனை தொடர்ந்து, சவுதி அரேபியாவில் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் சட்டசபையில் அ.தி.மு.க. சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.  இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் இதுதொடர்பாக அவையில் பேசி வருகின்றனர்.</p>  <h2>தமிழக மீனவர்</h2><p>அவையில் நேற்றைய நிகழ்வின்போது, சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. கவன ஈர்ப்பு கோரியிருந்தது.  எனினும், இதுபற்றி பேச அனுமதிக்கவில்லை என கூறி, அவையில் இருந்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.</p><p>  இதன்பின்னர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவைக்கு வெளியே நிருபர்களிடம் அளித்த பேட்டியின்போது, சவுதி அரேபியாவில், மயிலாடுதுறையை சேர்ந்த தமிழக மீனவர் ஒருவர் ஈரான் தாக்குதலில் உயிரிழந்த விவகாரம் குறித்து பேச அவையில் அனுமதிக்கவில்லை.  உலகின் எந்த பகுதியில் தமிழன் பாதிக்கப்பட்டாலும் அவருக்காக குரல் கொடுப்பதே நமது வழக்கம்.</p><p>தமிழருக்கு பாதிப்பு என்றால் உடனே கவன ஈர்ப்பு எடுக்க வேண்டும்.  கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்து 5 நாள்களாகியும் இதுவரை எடுக்கப்படவில்லை.  இதுவே அ.தி.மு.க., தி.மு.க. அரசாக இருந்தால் கவன ஈர்ப்பு எடுத்திருப்போம்.</p>  <h2>மானிய கோரிக்கைகள் விவாதம்</h2><p>ஒரு வாரம் ஆகியும் சவுதி அரேபியாவில் இருந்து சீர்காழி மீனவர் உடலை தமிழகம் கொண்டுவர நடவடிக்கை இல்லை.  த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் எதற்காக கத்துகிறார்கள்? என்றே தெரியவில்லை.  தமிழர்களை காப்போம் என பேச மட்டுமே செய்கின்றனர்.  ஆனால், ரீல்ஸ் வெளியிட்டு ரீல் விடுவதே நடக்கிறது என்றும் குற்றச்சாட்டாக கூறினார்.  இந்த நிலையில், இன்றைய கூட்டத்தில் இதுதொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தில் இதுபற்றி எதிர்க்கட்சியினர் ஒவ்வொருவராக பேசினர்.</p><p>இன்றைய நிகழ்வில், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவு ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் விவாதம் நடைபெறும். இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசி முடிந்தவுடன் அவர்களுடைய கேள்விகளுக்கு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமணன், கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் ஆகியோர் பதிலுரை வழங்குவார்கள். நிறைவாக, தங்களுடைய துறை சார்பில் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.</p> ]]></content:encoded></item><item><title>மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/communist-party-of-india-protests-against-the-central-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/communist-party-of-india-protests-against-the-central-government#comments</comments><guid isPermaLink="false">a19643ab-1af9-4883-8674-3d932b4849d1</guid><pubDate>Thu, 20 Aug 2026 04:49:34 +0000</pubDate><atom:updated>2026-08-20T04:49:34.181Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,Communist Party of India,protest,ஆர்ப்பாட்டம்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/vefih4ab/10.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/vefih4ab/10.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;</p><p>மத்திய பாஜக அரசு தொழிலாளர், விவசாயிகள் விரோத கொள்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.</p><p>தலித்துகள், பழங்குடியின மக்கள் சிறுபான்மையிருக்கு எதிராக செயல்படுகிறது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாமல் படு தோல்வி அடைந்துள்ளது. வேலையில்லா திண்டாட்டம் வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்துள்ளது.</p><p>சட்டபூர்வ வேலை பெறும் உரிமை அளிக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தை ரத்து செய்துவிட்டு, விபிஜி ராம் ஜி என்ற திட்டத்தை கொண்டுவந்துள்ளது.</p><p>இதன் மூலம் சட்டபூர்வ வேலை பெறும் உரிமை மறுக்கப்பட்டு, அரசின் விருப்பம் சார்ந்ததாக மாற்றப்படுகிறது. மாநில அரசுகளின் மீது நிதிச் சுமையும் ஏற்றப்படுகிறது. இது கிராமப்புற பாட்டாளிகளுக்கு வேலை வழங்கிட வேண்டும் என்பதிலிருந்து அரசு விலகிக் கொள்ளும்</p><p>வஞ்சகச் செயலாகும். </p><p>நாட்டின் அரசியலமைப்புச் சட்டம், மதச்சார்பின்மை, ஜனநாயகம் சமத்துவக் கோட்பாடுகள், சமூக நீதி மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றிற்கு எதிராக ஒன்றிய பாஜக அரசு செயல்படுகிறது. மத்திய அரசின் இத்தகைய போக்கை கண்டித்தும், கொள்கை மாற்றம் அவசியம் என்பதை வலியுறுத்தியும், “மாற்றத்திற்கான பேரணியை” டெல்லியில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நடத்துகிறது. </p><p>டெல்லி ராம்லீலா மைதானத்தில் மாபெரும் பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது.</p><p>இவற்றில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து செல்லும் ஆயிரக்கணக்கான விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில் ஏற்பாடு செய்து தருமாறு இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் கோரப்பட்டது .</p><p>அந்த வகையில் கேரளாவில் இருந்து ஒரு சிறப்பு ரயிலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.</p><p>அதைப் போலவே காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து டெல்லி செல்ல தனி சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டது.</p><p>ரயில்வே நிர்வாகமும் அதன் விதிமுறைகளை அனுசரித்து முன் பணமும் பெற்றுக் கொண்டு, தனி சிறப்பு ரயில் ஒதுக்கீடு செய்ய முதல் கட்ட ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில் நேற்றைய தினம் (19.08.2026) திடீரென அந்த முன்பணத்தை ரயில்வே நிர்வாகம் திருப்பி அளித்துள்ளது. சிறப்பு ரயிலுக்கு அனுமதி வழங்கவில்லை என தெரிவித்துள்ளது.</p><p>சங் பரிவார் அமைப்புகள் நடத்தக்கூடிய இயக்கங்களுக்கும், விழாக்களுக்கும் சிறப்பு ரயில்களை இயக்கி வருகின்ற இந்திய ரயில்வே துறை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தக்கூடிய, உழைக்கும் மக்கள் பங்கேற்கக்கூடிய இயக்கத்திற்கு சிறப்பு ரயிலை வழங்க மறுத்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி கண்டிக்கிறது.</p><p>மத்திய பாஜக அரசின் இந்த ஜனநாயக விரோதப் போக்கை கண்டித்து, டெல்டா மாவட்டங்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ,நாளை (21.08.2026) நடைபெறும்.</p><p>இதில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், தொழிலாளர்கள், உழைக்கும் மக்கள் பெருமளவில் கலந்து கொள்வர்.</p><p>இந்திய ரயில்வே நிர்வாகம் தனது நிலையை மறுபரிசீனை செய்து, சிறப்பு தனி ரயில் இயக்க மறுத்தால் திருச்சி மண்டலத்தில் தொடர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலையை உருவாக்கும் என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துக் கொள்கிறது. நாளை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்று ஆதரிக்க வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>ஐ.யூ.எம்.எல். கட்சியின் மகளிர் அணி முப்பெரும் விழா: அமைச்சர் ஷாஜஹான் பங்கேற்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/iuml-womens-wing-grand-triple-event-minister-shajahan-participates</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/iuml-womens-wing-grand-triple-event-minister-shajahan-participates#comments</comments><guid isPermaLink="false">2b8d4187-9d3f-4322-81ca-a31b9a35a7f0</guid><pubDate>Thu, 20 Aug 2026 04:42:29 +0000</pubDate><atom:updated>2026-08-20T04:42:29.194Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஐ.யூ.எம்.எல்.,IUML,ஷாஜஹான்,அமைச்சர் ஷாஜஹான்,Minister Shajahan,Shajahan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/r3qd8l9t/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/r3qd8l9t/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி சார்பில், சென்னை எழும்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மீலாது நபி கொண்டாட்டம், 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், மாநில மகளிர் அணியின் கீழ் இயங்கும் ‘அயிஷா சென்டரில்’ திறன் பயிற்சியை முடித்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. </p><h2>முப்பெரும் விழா</h2><p>இந்த முப்பெரும் விழாவில் மாற்று கட்சியை சேர்ந்த சுமார் 25-க்கும் மேற்பட்ட பெண்கள் கட்சியின் பொதுச் செயலாளர் முகமது அபூபக்கர் முன்னிலையில் தங்களை கட்சியில் இணைத்து கொண்டனர். நிகழ்ச்சியில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஐ.யூ.எம்.எல். </a>கட்சியினர் நடத்தும் இலவச ஆம்புலன்ஸ் சேவைக்கு மகளிர் அணி சார்பில் ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.</p><p>கட்சியின் மகளிர் அணி தேசியத் தலைவர் பாத்திமா முசப்பர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ஏ.எம். ஷாஜஹான், மகளிர் அணி மாநில பொதுச் செயலாளர் அயிஷா மற்றும் எம்.பி. நவாஸ்கனி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு உரையாற்றினர். இந்நிகழ்வில் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>நெல்லை அருகே காகித ஆலையில் பயங்கர தீ விபத்து: இரண்டாம் நாளாக போராடும் தீயணைப்பு வீரர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/massive-fire-breaks-out-at-paper-mill-near-nellai-firefighters-battle-for-second-day</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/massive-fire-breaks-out-at-paper-mill-near-nellai-firefighters-battle-for-second-day#comments</comments><guid isPermaLink="false">41676e33-a5bf-4a06-8039-dfaa9e5540c6</guid><pubDate>Thu, 20 Aug 2026 04:42:09 +0000</pubDate><atom:updated>2026-08-20T04:42:09.212Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,Worker,firefighters,தீயணைப்பு வீரர்கள்,ஆலை,Fire accident தீ விபத்து,paper</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/zjq5zbh3/284.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காகித ஆலையில் தீ விபத்து]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/zjq5zbh3/284.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பேட்டை,</p><p>நெல்லை அருகே காகித ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்து நாசமாகின.</p><h2>தீ விபத்து</h2><p>நெல்லையை அடுத்த கல்லூர் அருகே வடுகம்பட்டியில் தனியார் காகித ஆலை உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று மதியம் கடும் வெயில் சுட்டெரித்த நிலையில், ஆலையின் ஒரு பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பழைய காகித பண்டல்களில் திடீரென தீப்பிடித்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் தீ மளமளவென நாலாபுறமும் வேகமாக பரவியது.</p><p>இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனே மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுப்பிரியா தலைமையில் பேட்டை, நெல்லை, டவுன், மற்றும் சேரன்மாதேவி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 6 தீயணைப்பு வாகனங்களில் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்க போராடினர். இரவிலும் தீயணைக்கும் பணி நடைபெற்று வந்தது. இருப்பினும், தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியாதால் இரண்டாம் நாளாக இன்றும் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.</p><h2>சேதம்</h2><p>இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சுமார் 25 ஆயிரம் டன் பழைய காகித பண்டல்கள் எரிந்து நாசமாகின. மதிய நேரத்தில் தொழிலாளர்கள் உணவு அருந்துவதற்காக சென்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. </p><p>சம்பவ இடத்திற்கு சீதபற்பநல்லூர் போலீசார் மற்றும் நெல்லை தாசில்தார் மாரிமுத்து குமார் சென்று பார்வையிட்டனர். காகித ஆலையில் தீப்பிடித்ததால் வானுயுர எழும்பிய கரும்புகை நெல்லை, சேரன்மாதேவி உள்ளிட்ட பகுதிகளிலும் தெரிந்தது. <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">தீ விபத்துக்கான</a> காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>
மோட்டார் வாகன ஆய்வாளர் பணி -  நேர்முகத்தேர்வு எப்போது? டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/motor-vehicle-inspector-post-when-is-the-interview-tnpsc-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/motor-vehicle-inspector-post-when-is-the-interview-tnpsc-announcement#comments</comments><guid isPermaLink="false">232b2ae6-a9d9-4877-93f4-368e97df3105</guid><pubDate>Thu, 20 Aug 2026 04:40:57 +0000</pubDate><atom:updated>2026-08-20T04:40:57.808Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TNPSC,Interview,டி.என்.பி.எஸ்.சி.,நேர்முகத்தேர்வு,மோட்டார் வாகன ஆய்வாளர் பணி,Motor Vehicle Inspector Post</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/ukkpoftp/6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/ukkpoftp/6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தடை தற்போது நீங்கியுள்ள நிலையில், நேர்முகத்தேர்வுக்கான தேதியை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு செப்டம்பர் 1 முதல் 3ஆம் தேதி வரை நேர்முகத் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  </p> <p>மோட்டார் வாகன ஆய்வாளர் பதவியில் காலியாக உள்ள 110 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிட்டது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த 2,176 பேரில் 785 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, தகுதியானவர்களுக்கு 2018 ஜூன் 10 அன்று எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. விதிகளின்படி 1:2 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட வேண்டும். ஆனால், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்காமல் வெறும் 33 பேர் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. </p>  <p>இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டிலும் பிறகு  சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்குகள் தொடரப்பட்டது. இதனால் நியமன நடைமுறைகளில் சுமார் 8 ஆண்டுகள் தடை நீடித்தது.  இந்த தடை தற்போது நீங்கியுள்ள நிலையில், நேர்முகத்தேர்வுக்கான தேதியை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு செப்டம்பர் 1 முதல் 3ஆம் தேதி வரை நேர்முகத் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  நேர்முகத் தேர்வில் பங்கேற்க தகுதி வாய்ந்தவர்களின் பட்டியலும் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>கும்மிடிப்பூண்டி - கூடூர் ரெயில் பாதை விரிவாக்கத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்: நயினார் நாகேந்திரன் நன்றி!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/central-government-approves-gummidipoondi-gudur-railway-line-expansion-nainar-nagendran-expresses-thanks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/central-government-approves-gummidipoondi-gudur-railway-line-expansion-nainar-nagendran-expresses-thanks#comments</comments><guid isPermaLink="false">34bcd4b1-a8d2-44d9-b9d9-8925cb341b60</guid><pubDate>Thu, 20 Aug 2026 04:33:09 +0000</pubDate><atom:updated>2026-08-20T04:33:09.936Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/b9556z9g/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/b9556z9g/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கும்மிடிப்பூண்டி - கூடூர் ரெயில் பாதை விரிவாக்கத்திற்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசுக்கு நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- </p><h2>மத்திய அமைச்சரவை ஒப்புதல்</h2><p>தமிழகத்தின் ரெயில்வே உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், கும்மிடிப்பூண்டி - கூடூர் இடையே 3-வது மற்றும் 4-வது ரெயில் பாதைகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.</p><p>சுமார் ரூ.2,229 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள இந்தத் திட்டம், <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">போக்குவரத்து </a>நெரிசலைக் குறைப்பதோடு சரக்குப் போக்குவரத்தையும் விரைவுபடுத்தும். தமிழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் பயணத்தை எளிதாக்கவும் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்துவரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழர் வரலாற்றில் ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்: முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/may-the-fame-of-ondiveeran-endure-forever-in-the-history-of-the-tamil-people-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/may-the-fame-of-ondiveeran-endure-forever-in-the-history-of-the-tamil-people-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">b785888d-63d3-470a-9575-0109b0d7ccda</guid><pubDate>Thu, 20 Aug 2026 04:30:11 +0000</pubDate><atom:updated>2026-08-20T04:30:11.771Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,ஒண்டிவீரன்,Ondiveeran,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/mpkkfgho/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/mpkkfgho/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் 255-வது நினைவு தினத்தையொட்டி முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><p>ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு அஞ்சாமல், நம் மண்ணில் சுதந்திரக் கனலை ஏற்றிய விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவுநாளில் அவரது தியாகத்தைப் போற்றி வணங்குவோம். மாவீரன் பூலித்தேவனின் படைத்தளபதியாக விளங்கி, நெற்கட்டான்செவல் போர்க்களத்தில் ஆங்கிலேயப் படைகளை ஒற்றை வீரராக எதிர்த்து நின்று, நிலைகுலையச் செய்ததோடு, </p><p>தன் ஒரு கரத்தையே இழந்தபோதிலும் பல போர்களைப் புரிந்து தாய்நாட்டு விடுதலைக்காகத் தனது இன்னுயிரை தியாகம் செய்த ஒண்டிவீரன் அவர்களின் வீரத்தையும் தேசப்பற்றையும் நெஞ்சாரப் போற்றிடுவோம் ! வீரம் செறிந்த தமிழர் வரலாற்றில் ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 82-வது பிறந்தநாள் - மாணிக்கம் தாகூர் புகழஞ்சலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/former-prime-minister-rajiv-gandhis-82nd-birth-anniversary-manickam-tagore-pays-tributes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/former-prime-minister-rajiv-gandhis-82nd-birth-anniversary-manickam-tagore-pays-tributes#comments</comments><guid isPermaLink="false">48396409-504a-4c73-b9fc-1bda0c4e26d7</guid><pubDate>Thu, 20 Aug 2026 04:14:00 +0000</pubDate><atom:updated>2026-08-20T04:14:00.163Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,ராஜீவ் காந்தி,Rajiv Gandhi,Manickam Tagore MP,முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/eymqag9o/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/eymqag9o/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தேசத்தின் ஒற்றுமை, பன்முகத்தன்மை மற்றும் நவீன வளர்ச்சிக்காகத் தன் இன்னுயிரையே தியாகம் செய்த தலைவர் ராஜீவ் காந்தியின் தியாகமும் சிந்தனைகளும் என்றென்றும் நமக்கு வழிகாட்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>82-வது பிறந்தநாள்</h2><p>21-ஆம் நூற்றாண்டு நவீன இந்தியாவின் சிற்பி, தொலைநோக்குப் பார்வை கொண்ட நமது முன்னாள் பிரதமர், பாரத ரத்னா ராஜீவ் காந்தியின் 82-வது பிறந்தநாளில் அவரது ஈடு இணையற்ற தேசப் பணிகளைப் போற்றி எனது மனமார்ந்த மரியாதையையும் புகழஞ்சலியையும் உரித்தாக்குகிறேன்.</p><p>"இந்தியா ஒரு பழமையான நாடு, ஆனால் ஓர் இளம் தேசம்; புதிய பாதைகளை அமைத்து, 21-ஆம் நூற்றாண்டில் உலகை வழிநடத்தும் வலிமையான இந்தியாவை நான் கனவு காண்கிறேன்" என்ற தனது வார்த்தைகளை வெறும் பேச்சோடு நிறுத்திவிடாமல், செயலில் காட்டிய மாபெரும் தலைவர் அவர். தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு புரட்சிக்கு வித்திட்டு, இன்றைய டிஜிட்டல் இந்தியாவின் அஸ்திவாரத்தை அமைத்த பெருமை அவரையே சாரும்.</p><h2>உன்னத மனிதர்</h2><p>நாட்டின் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஜனநாயகத்தை </a>அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்க்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பஞ்சாயத்து ராஜ் சட்டம், இளைஞர்களின் குரல் தேசத்தை வழிநடத்த வேண்டும் என்பதற்காக 18 வயதில் வாக்குரிமை, கிராமப்புற ஏழை மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த நவோதயா பள்ளிகள் என அவர் கொண்டுவந்த தொலைநோக்குத் திட்டங்கள் இன்றும் இந்தியாவின் முதுகெலும்பாக விளங்குகின்றன. உலகத் தலைவர் நெல்சன் மண்டேலா குறிப்பிட்டது போல, அமைதிக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும் உலக அரங்கில் மிக உறுதியாக நின்ற ஒரு உன்னத மனிதர் ராஜீவ். தேசத்தின் ஒற்றுமை, பன்முகத்தன்மை மற்றும் நவீன வளர்ச்சிக்காகத் தன் இன்னுயிரையே தியாகம் செய்த தலைவர் ராஜீவ் காந்தியின் தியாகமும் சிந்தனைகளும் என்றென்றும் நமக்கு வழிகாட்டும்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் வேப்பமுத்துகள்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/neem-seeds-being-exported-to-foreign-countries</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/neem-seeds-being-exported-to-foreign-countries#comments</comments><guid isPermaLink="false">d1fbb928-a22a-463d-880a-0647c27bc625</guid><pubDate>Thu, 20 Aug 2026 03:54:48 +0000</pubDate><atom:updated>2026-08-20T03:54:48.032Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,ஏற்றுமதி,Neem,வேப்பமரம்,வேப்பமுத்து,Neem seed</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/7m9xol3c/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/7m9xol3c/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>பெண்கள், சிறுவர்-சிறுமியர்கள் ஆர்வமுடன் சேகரிக் கும் வேப்பமுத்துகளை வியாபாரிகள் நல்ல விலைக்கு கொள்முதல் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.</p><h2>வேப்பமுத்து சேகரிப்பு</h2><p>மருத்துவ குணம் வாய்ந்த வேப்ப மரத்தின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு மிகுந்த பயன்களைத் தருகின்றன. தமிழகத்தில் பரவலாக அனைத்து இடங்களிலும் வேப்ப மரங்கள் உள்ளன. தற்போது வேப்ப மரங்களில் இருந்து விழும் பழங்களை சேகரித்து, அவற்றின் விதைகளான வேப்பமுத்துகளை மட்டும் பிதுக்கி காயவைத்து விற்பனை செய்து வருகின்றனர்.</p><p>நெல்லை மாவட்டம் இட்டமொழி பகுதியில் பெரும்பாலான பெண்கள், சிறுவர்-சிறுமிகள் ஓய்வு நேரங்களில் வேப்பமுத்துகளை சேகரித்து விற்பனை செய்கின்றனர். ஒருகிலோ வேப்பமுத்துகளை ரூ.65-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். அவற்றை வியாபாரிகள் இட்டமொழியில் உள்ள மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனர்.</p><h2>தேவை அதிகரிப்பு</h2><p>இங்கிருந்து நெல்லை, கோவில்பட்டி பகுதிகளுக்கு மூட்டைகளில் வேப்ப முத்துகளை அனுப்பி வைக்கின்றனர். அவற்றை கன்டெய்னர்களில் ஏற்றி தூத்துக்குடி துறைமுகம் வழியாக அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், தென்கொரியா, பிரேசில், இத்தாலி உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.</p><p>வேப்பமுத்துகளை வாங்கும் தனியார் நிறுவனங்கள் அவற்றை உடைத்து, தோடுகளை அகற்றி, பருப்புகளை எந்திரத்தில் பிழிந்து எண்ணெய் தயாரிக்கின்றனர். வேப்ப எண்ணெயை மருந்து நிறுவனங்கள் அதிக விலைக்கு கொள்முதல் செய்வதால் அவற்றின் தேவைப்பாடு அதிகரித்து வருகிறது.</p><p><strong>இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறியதாவது:-</strong></p><h2>மருத்துவ பொருட்கள்</h2><p>தற்போது வேப்பமுத்து சீசன் தொடங்கியுள்ளது. இட்டமொழியில் இருந்து தினமும் சுமார் 100 வியாபாரிகள் பல்வேறு ஊர்களுக்கும் சென்று வேப்பமுத்துகளை விலைக்கு வாங்கி வருகின்றனர். அந்தந்த ஊர்களில் வயதான மூதாட்டிகள், பெண்கள் பெரும்பாலும் வேப்பமுத்துகளை சேகரிக்கின்றனர். பள்ளி மாணவ-மாணவிகளும் விடுமுறை நாட்களில் வேப்பமுத்துகளை சேகரிக்கின்றனர்.</p><p>தற்போது வேப்பமுத்துகளை வெளிநாடுகளில் மருந்து நிறுவனங்கள் அதிக விலைக்கு கொள்முதல் செய்கின்றன. இதனால் வேப்பமுத்துகளை சேகரிப்பவர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. வேப்பமுத்துகளை ஆர்வ முடம் அதிகளவில் சேகரிக்கும் சிலர் நேரடியாகவே இங்கு அவற்றைக் கொண்டு வந்தும் விற்கின்றனர். </p><h2>இயற்கை வேளாண்..</h2><p>இங்கிருந்து நெல்லை, கோவில்பட்டி பகுதிகளில் உள்ள குடோனுக்கு கொண்டு சென்று பக்குவப்படுத்தி, கன்டெய்னர்களில் ஏற்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.</p><p>அவற்றை மருந்து நிறுவனங்கள் வாங்கி, அதன் மூலம் பல்வேறு மருத்துவ பொருட்களை தயாரிக்கின்றனர். அழகுசாதன பொருட்கள் தயாரிக்கவும், இயற்கை பூச்சிவிரட்டி, உரம் தயாரிப்பது போன்ற இயற்கை வேளாண் விவசாயத்துக்கும் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பவுர்ணமி கிரிவலம்: விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு  27-ந் தேதி சிறப்பு ரெயில் இயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pournami-girivalam-special-train-from-villupuram-to-tiruvannamalai-on-27th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pournami-girivalam-special-train-from-villupuram-to-tiruvannamalai-on-27th#comments</comments><guid isPermaLink="false">043de19f-cee8-4acb-82fe-58e5ba3a5b65</guid><pubDate>Thu, 20 Aug 2026 03:50:24 +0000</pubDate><atom:updated>2026-08-20T03:50:24.377Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,Special train,பவுர்ணமி கிரிவலம்,Pournami Girivalam,விழுப்புரம்,Villupuram,இயக்கம்,திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்,Tiruvannamalai temple</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/8blg19bk/40.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/8blg19bk/40.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விழுப்புரம், </p><p>திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வருகிற 27-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் பவுர்ணமி கிரி வலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>சிறப்பு ரெயில்</h2><p>இதனால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும், பயணிகளின் வசதிக்காகவும் தெற்கு ரெயில்வே சார்பில் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.</p><p>அதாவது வருகிற 27-ந் தேதி விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 10.10 மணிக்கு புறப்படும் விழுப்புரம்-திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (வண்டி எண் 06130) 11.45 மணிக்கு திருவண்ணாமலை ரெயில் நிலையத்துக்கு சென்றடையும். </p><p>அதேபோல் மறுமார்க்கத்தில் திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் இருந்து பகல் 12.40 மணிக்கு புறப்படும் திருவண்ணாமலை- விழுப்புரம் முன்பதிவில்லா <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">சிறப்பு ரெயில்</a> (வண்டி எண் 06129) மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் ரெயில் நிலையத்துக்கு வந்தடையும்.</p><p>இந்த ரெயில்கள் வெங்கடேசபுரம். மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த தகவல் திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மங்களூரு-சென்னை எழும்பூர் ரெயில் சேவையில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-mangaluru-chennai-egmore-train-service</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-mangaluru-chennai-egmore-train-service#comments</comments><guid isPermaLink="false">4d046f48-3a61-4885-acb8-ba98773594b2</guid><pubDate>Thu, 20 Aug 2026 03:48:45 +0000</pubDate><atom:updated>2026-08-20T03:48:45.992Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>ரெயில் சேவை,train service,Chennai Egmore,சென்னை எழும்பூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/xggp8l3f/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/xggp8l3f/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,  </p><p>சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை மறுசீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மங்களூரு சென்ட்ரல் சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16160) இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 24-ந்தேதி வரை மங்களூரு சென்ட்ரல் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கோவை, ஈரோடு, கரூர், திருச்சி வழியாக தாம்பரம் ரெயில் நிலையம் வரை இயக்கப்படும்.</p><p>இதேபோல் சென்னை எழும்பூர் - மங்களூரு சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16159) நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 25-ந் தேதி வரை தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து நள்ளிரவு 11.40 மணிக்கு புறப்பட்டு திருச்சி, கரூர், ஈரோடு, கோவை வழியாகமங்களூரு சென்ட்ரலை சென்றடையும் என்று சேலம் ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>அமித்ஷா வருகை எதிரொலி: மாமல்லபுரத்தில் இன்று சுற்றுலா வாகனங்களுக்கு தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/amit-shahs-visit-ban-on-tourist-vehicles-in-mamallapuram-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/amit-shahs-visit-ban-on-tourist-vehicles-in-mamallapuram-today#comments</comments><guid isPermaLink="false">52b94c96-d88c-4485-b35d-d0f4118028f8</guid><pubDate>Thu, 20 Aug 2026 03:38:52 +0000</pubDate><atom:updated>2026-08-20T03:38:52.858Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,அமித்ஷா,தமிழகம்,Amit Shah,சுற்றுலா வாகனங்கள்,Mamallapuram,மாமல்லபுரம்,amitshah,tourist vehicles</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/yt6llavc/irukku.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/yt6llavc/irukku.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மாமல்லபுரம், </p><p>காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மாமல்லபுரத்திற்குள் வெளியூர் மற்றும் சுற்றுலா வாகனங்கள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. </p><h2>சுற்றுலா பயணிகளுக்கு தடை</h2><p>தென் மாநில முதல்-அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்கும் <a href="https://www.dailythanthi.com/topic/amit-shah">மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா</a>, அதன்பிறகு மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால புராதன சின்னங்களை பார்வையிட உள்ளார். இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மாமல்லபுரம் கடற்கரை கோவில் உள்ளிட்ட புராதன சின்னங்களை கண்டுகளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. </p><h2>அறிவிப்பு நோட்டீஸ்</h2><p>இந்த குறிப்பிட்ட நேரங்களில் சுற்றுலா பயணிகள் யாரும் மாமல்லபுரம் வரவேண்டாம் என தொல்லியல் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த தடை குறித்து மாமல்லபுரம் புராதன சின்ன நுழைவு வாயில்களில் தொல்லியல் துறை அறிவிப்பு நோட்டீசும் ஒட்டி உள்ளது.</p><p>முன்னதாக அமித்ஷா வருகையை முன்னிட்டு பாதுகாப்பு முன் ஏற்பாடுகள், சுகாதார பணிகள், அவர் சுற்றி பார்க்கும் இடம், அவர் புகைப்படம் எடுக்கும் புராதன சின்னங்கள், பாரம்பரிய நினைவு சின்னங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அய்மன்ஜமால், மாவட்ட கலெக்டர் வீரப்பன் மற்றும் புதுடெல்லி உள்துறை அமைச்சக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். </p><p>அப்போது செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. பாலாஜி, மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், மாமல்லபுரம் நகராட்சி கமிஷனர் அபர்ணா, தொல்லியல் துறை அலுவலர் ஸ்ரீதர், மாமல்லபுரம் வருவாய் அலுவலர் கோவிந்தராஜ், மாமல்லபுரம் நகராட்சி என் ஜினீயர் சுபாஷினி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title> பள்ளி வகுப்பறைக்குள் புகுந்த 7 அடி நீள சாரைப்பாம்பு: மாணவர்கள் அலறியடித்து ஓட்டம்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/7-foot-long-rat-snake-enters-school-classroom-students-scatter-in-panic</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/7-foot-long-rat-snake-enters-school-classroom-students-scatter-in-panic#comments</comments><guid isPermaLink="false">d105e7d6-127b-4726-8f53-f0fb06ea1c86</guid><pubDate>Thu, 20 Aug 2026 03:29:20 +0000</pubDate><atom:updated>2026-08-20T03:29:20.437Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thiruvallur,திருவள்ளூர்,திருத்தணி,Thiruthani</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/upvse3ou/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/upvse3ou/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருத்தணி, </p><p>திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஜெ.ஜெ. ரவி நகர் பகுதியில் அரசு உதவிபெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.</p><h2> மேஜைக்கு அடியில் பதுங்கிய பாம்பு</h2><p>நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவர்கள் வகுப்பறைகளுக்குச் சென்றனர். அப்போது 6-ம் வகுப்பு மாணவர்கள் வகுப்பறைக்குள் சென்றபோது, மேஜையின் அடியில் பாம்பு ஒன்று பதுங்கியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.</p><p>இதையடுத்து மாணவர்கள் அலறியடித்துக்கொண்டு வகுப்பறையை விட்டு வெளியே ஓடினர். இதனால் பள்ளி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.</p><h2>7 அடி நீள சாரைப்பாம்பு பிடிபட்டது</h2><p>இதுகுறித்து ஆசிரியர்கள் உடனடியாக திருத்தணி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், வகுப்பறையில் பதுங்கியிருந்த சுமார் 7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை லாவகமாக பிடித்தனர்.</p><p>பின்னர் அந்தப் பாம்பு அருகிலுள்ள வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, பாதுகாப்பாக விடப்பட்டது.</p><h2>கழிவுநீர் கால்வாயை தூர்வார கோரிக்கை</h2><p>பள்ளி அருகே உள்ள கழிவுநீர் கால்வாயை திருத்தணி நகராட்சி நிர்வாகம் முறையாக தூர்வாராமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.</p><p>இதனால் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் பள்ளி வளாகத்திற்குள் வருவதாகவும், <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மாணவர்களின் </a>பாதுகாப்பை கருத்தில் கொண்டு கழிவுநீர் கால்வாயை உடனடியாக தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>கள்ளக்கடல் நிகழ்வு: கன்னியாகுமரி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kallakadal-phenomenon-in-kanyakumari-fishermen-do-not-venture-out-to-sea</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kallakadal-phenomenon-in-kanyakumari-fishermen-do-not-venture-out-to-sea#comments</comments><guid isPermaLink="false">a2970be7-1028-491a-83d4-627a2fd56525</guid><pubDate>Thu, 20 Aug 2026 03:21:31 +0000</pubDate><atom:updated>2026-08-20T03:21:31.220Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,Kanyakumari,கள்ளக்கடல் நிகழ்வு</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/sntv680y/8.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/sntv680y/8.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி,</p><p>தென் இந்திய கடற்கரை பகுதிகளுக்கு இந்திய தேசிய கடல்சார் தகவல் சேவை மையம் 'கள்ளக்கடல்' எச்சரிக்கை விடுத்துள்ளது.  கேரளா, தென் தமிழ்நாடு (கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம்) மற்றும் லட்சத்தீவு ஆகிய பகுதிகளை தாக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>கள்ளக்கடல் என்றால் என்ன?</h2><p>'கள்ளக்கடல்' என்பது திடீரென கரைக்கு வரும் கடல் அலைகளை குறிக்கிறது. சாதாரணமாக கடல் அலைகள் காற்றால் அருகிலேயே உருவாகும். ஆனால் கள்ளக்கடல் அப்படி இல்லை, நம்மிடம் இருந்து 5,000 முதல் 10,000 கி.மீ. தொலைவில், அண்டார்டிகாவில் தென் பெருங்கடலில், பெரும்புயல் அல்லது குறைந்த காற்றழுத்தம் உருவாகும். அந்த நீண்ட அலைகள், காற்று இல்லாமலேயே சக்தியை இழக்காமல் பல நாட்கள் பயணித்து இந்திய கடற்கரைக்கு வரும்.</p><p>இந்த அலைகளின் இடைவெளி 18 முதல் 22 வினாடிகள் இருக்கும். சாதாரண அலைகளின் இடைவெளி 8 முதல் 10 வினாடிகள் தான். இந்த கள்ளக்கடல் உருவாகும் போது, கடல் பார்க்க அமைதியாக இருக்கும். வானிலை நன்றாக இருக்கும். எந்த மழையும், காற்றும் இருக்காது. திடீரென ஒரு பெரிய அலை வந்து கரையை தாண்டி, சாலை, வீடுகளுக்குள் புகுந்துவிடும். அதனால் தான் இதற்கு கள்ளக்கடல் என்று பெயர் வைத்தனர்.</p><h2>படகுகளை உடைத்துவிடும்</h2><p>முன் அறிவிப்பு இல்லாமல் வருவது போல தெரியும். சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்கும்போது உள்ளே இழுத்துச் சென்றுவிடும். கரையில் நிற்கும் படகுகளை ஒன்றோடு ஒன்று மோதச் செய்து உடைத்துவிடும். கடல் ஏற்ற நேரத்துடன் சேர்ந்தால், கடல் நீர் ஊருக்குள் புகுந்து வெள்ளம் வரும். இதற்கு முன்பு கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் கன்னியாகுமரி, கோள கடற்கரையில் இதேபோல கள்ளக்கடல் வந்து பல வீடுகள், படகுகள் சேதமானது குறிப்பிடத்தக்கது.</p><p>கள்ளக்கடல் எச்சரிக்கை காரணமாக கடலுக்குள் சிறு படகுகள் செல்ல வேண்டாம் என்றும், கரையில் நிறுத்தப்பட்டுள்ள படகுகளை இடைவெளி விட்டு நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடற்கரை சுற்றுலா, விளையாட்டு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா மையங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.</p><h2>கன்னியாகுமரி</h2><p>கன்னியாகுமரியில் கள்ளக்கடல் நிகழ்வால் 1.9 முதல் 2.1 மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் எழும்புகின்றன. காற்றின் வேகம் அதிகரிப்பால் அலைகள்  வேகமாக எழுகின்றன. கள்ளக்கடல் எச்சரிக்கை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 8 ஆயிரம் விசைப்படகுகள், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் இன்று கடலுக்கு செல்லவில்லை. </p>  ]]></content:encoded></item><item><title>வீட்டில் இருந்து நகையை தோழிக்கு கொடுத்து உதவிய பள்ளி மாணவி; பெற்றோர் கண்டிப்பால் தற்கொலை
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/schoolgirl-dies-by-suicide-after-helping-friend-with-jewellery</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/schoolgirl-dies-by-suicide-after-helping-friend-with-jewellery#comments</comments><guid isPermaLink="false">62be7b21-af4f-4c48-b796-3835152aac34</guid><pubDate>Thu, 20 Aug 2026 03:12:22 +0000</pubDate><atom:updated>2026-08-20T03:12:22.157Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>school student,பள்ளி மாணவி,நாகை,Nagai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/2gzzwe41/nptsp.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/2gzzwe41/nptsp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>நாகை</p><p>வீட்டில் இருந்து நகையை எடுத்து, தோழிக்கு கொடுத்து உதவிய பள்ளி மாணவி, பெற்றோரின் கண்டிப்பால் தற்கொலை செய்து கொண்டார்.</p><p>நாகை அந்தணப்பேட்டை புடவைக்கடை தெருவை சேர்ந்தவர் அசோக். இவரது மனைவி வாசுகி. இவர்களது மகள் மஹதி (வயது 16). இவர், நாகையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.  மஹதியின் தோழி ஒருவர் மஹதியிடம், தனது உறவினர் கடன் பிரச்சினையில் இருக்கிறார் என்றும் அவர்களுக்கு பணம் அல்லது நகை கொடுத்து உதவும்படியும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேட்டுள்ளார்.</p> <h2>தோழிக்கு உதவி</h2><p>இதனால் மஹதி தனது பெற்றோருக்கு தெரியாமல் வீட்டில் இருந்த 3 பவுன் நகையை எடுத்து தனது தோழிக்கு கொடுத்துள்ளார்.  இந்த தகவல் மஹதியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து தனது மகள் அவரது தோழிக்கு கொடுத்த நகையை மீட்டுத்தரும்படி மஹதியின் பெற்றோர், நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.</p><p>புகாரின் பேரில் போலீசார், மஹதியின் தோழியிடம் இருந்து அந்த நகையை மீட்டு மஹதியின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோருக்கும், மஹதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.</p> <h2>தற்கொலை</h2><p>இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மஹதி நேற்று முன்தினம் வீட்டின் அறையில் இருந்த மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இதுகுறித்த தகவலின் பேரில் நாகை நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மஹதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து வாசுகி கொடுத்த புகாரின் பேரில் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>தோழிக்கு நகை கொடுத்ததால் பெற்றோர் இடையே ஏற்பட்ட தகராறில் மன உளைச்சலால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.</p> ]]></content:encoded></item><item><title>அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு: 614 பேருக்கு மருத்துவ இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/75-percent-internal-quota-for-government-school-students-614-medical-seats</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/75-percent-internal-quota-for-government-school-students-614-medical-seats#comments</comments><guid isPermaLink="false">a5c02151-18f5-43bb-93c1-a0db2e4c611d</guid><pubDate>Thu, 20 Aug 2026 03:08:32 +0000</pubDate><atom:updated>2026-08-20T03:08:32.152Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,student,அரசு பள்ளி,மாணவர்கள்,Government School,மருத்துவ இடங்கள்,quota,7.5 சதவீத இடஒதுக்கீடு,Medical seat</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/3hh151pk/283.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மருத்துவர்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/3hh151pk/283.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் எம்.பி.பி. எஸ்., பி.டி.எஸ்., மருத்துவ படிப்புக்கான மாணவ சேர்க்கை கலந்தாய்வு நடந்து வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில், 614 மாணவ மாணவியருக்கு, மருத்துவ படிப்பு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.</p><p>இது குறித்து, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>படிப்புக்கான மருத்துவ கலந்தாய்வில், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில், 510 மாணவர்களுக்கு எம். பி.பி.எஸ். இடம், 104 மாணவர்களுக்கு பி.டி. எஸ்., இடம் என, மொத்தம் 614 இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.</p><h2>மருத்துவ கல்லுாரிகள்</h2><p>எம்.பி.பி.எஸ்., படிப்பை பொறுத்தவரை, 323 மாணவர்களுக்கு அரசு கல்லுாரிகள், 12 பேருக்கு இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரிகள், 166 பேருக்கு தனியார் மருத்துவ கல்லுாரிகள், 9 பேருக்கு நிகர் நிலை பல்கலையில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பி.டி.எஸ்., பொறுத்தவரை படிப்பை 16 பேருக்கு அரசு கல்லுாரிகளிலும் 88 பேருக்கு தனியார் மருத்துவ கல்லுாரிகளிலும் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.</p><p>பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய சிறந்த மாணவர்கள், மருத்துவ கல்வி பெறுவதற்கு, 7.5 சதவீத உள் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81">ஒதுக்கீடு</a> ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தரமான கல்வி வழிகாட்டுதல் மற்றும் போட்டித் தேர்வுக்கான பயிற்சி ஆகியவற்றை வழங்குவதன் வழியே, பள்ளிக்கல்வித்துறை அரசு பள்ளிகளை தொடர்ந்து வலுப்படுத்தும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சேலம் அருகே அரசு பள்ளியில் வடமாநில ஆசிரியர்கள் நியமனத்தால் சர்ச்சை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/controversy-over-the-appointment-of-teachers-from-north-india-at-a-government-school-near-salem</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/controversy-over-the-appointment-of-teachers-from-north-india-at-a-government-school-near-salem#comments</comments><guid isPermaLink="false">fa7bc5fa-d19e-43a1-a913-dc97dd7434cc</guid><pubDate>Thu, 20 Aug 2026 03:05:55 +0000</pubDate><atom:updated>2026-08-20T03:05:55.870Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,சேலம்,அரசு பள்ளி,ஆசிரியர்கள்,Teachers,Govt Schools</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/rz695srl/CHENNAI-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/rz695srl/CHENNAI-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம் அருகே அரசு மாதிரிப்பள்ளியில் வடமாநில ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.</p><h2>அரசு மாதிரிப்பள்ளி</h2><p>சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சிக்கனம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குப்பூரில் அரசு மாதிரிப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 6 முதல் பிளஸ்-2 வரை விடுதி வசதியுடன் செயல்படும் இந்த மாதிரிப்பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.</p><p>குறிப்பாக பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நீட், ஜெ.இ.இ. மற்றும் பிற தேசிய அளவிலான நுழைவு தேர்வுக ளுக்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் இந்த பள்ளியில் மாணவ, மாணவிகளை சேர்க்க பெற்றோர் அதிக மாக ஆர்வம் காட்டி வருகின்றனர். சமீபத்தில் நடந்த நீட் மறு தேர்வில் குப்பூர் அரசு மாதிரிப்பள்ளியில் படித்த 5 மாணவ, மாணவிகள் 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.</p><h2>வடமாநில ஆசிரியர்கள் நியமனம்</h2><p>இந்த நிலையில், குப்பூர் அரசு மாதிரிப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நீட், ஜெ.இ.இ. நுழைவு தேர்வு அளிப்பதற்காக தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர்களை தவிர வட மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் சில மாநிலங்களை சேர்ந்த 5 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p>இது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தமிழ் மொழி தெரியாத இந்தி தெரிந்த ஆசிரியர்களை வைத்து தமிழக மாணவர்களுக்கு எப்படி பாடம் கற்பித்து கொடுக்க முடியும்? என்றும், இதனால் அந்த பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் உளவியல் ரீதியாக மிகவும் பாதிப்பு அடைந்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.</p><h2>விசாரணை</h2><p>இதுகுறித்து சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பனிடம் கேட்டபோது, 'குப்பூரில் உள்ள அரசு மாதிரிப்பள்ளியில் வெளிமாநிலத்தை சேர்ந்த ஆசிரியர்கள் நியமனம் செய்திருப்பது தொடர்பாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலமுருகனிடம் விசாரித்து வருகிறோம். அவர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு மூலம் சம்பளம் வழங்கப்படுகிறதா? என்பது தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது' என்றார்.</p><p>சேலத்தில் அரசு மாதிரிப்பள்ளியில் வடமாநிலத்தை சேர்ந்த ஆசிரியர்களை நியமனம் செய்திருப்பது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் கண்டன பதிவு வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>பீடி கேட்டு தகராறு: கூலித்தொழிலாளி மீது பீர் பாட்டிலால் தாக்குதல்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/altercation-over-a-beedi-daily-wage-worker-attacked-with-a-beer-bottle</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/altercation-over-a-beedi-daily-wage-worker-attacked-with-a-beer-bottle#comments</comments><guid isPermaLink="false">296dd571-15f0-4944-8900-4cf90ea586e3</guid><pubDate>Thu, 20 Aug 2026 02:58:44 +0000</pubDate><atom:updated>2026-08-20T02:58:44.757Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருப்பூர்,Tirupur</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/2fu4x9z0/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/2fu4x9z0/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><p>குமரலிங்கம் சின்னகருப்பணசாமி கோவில் வீதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (29), கூலித்தொழிலாளி. இவர் குமரலிங்கம் பகுதியில் உள்ள ஓட்டல் அருகே நின்றுகொண்டிருந்தார்.</p><h2>பீடி கேட்டு தகராறு</h2><p>அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த கர்ணன், சபரி, குணாப் ஆகிய 3 பேரும் சதீஷ்குமாரிடம் பீடி கேட்டுள்ளனர். அதற்கு அவர், தன்னிடம் பீடி இல்லை எனக் கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.</p><h2>பீர் பாட்டிலால் தாக்குதல்</h2><p>வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து சதீஷ்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், அங்கு கிடந்த பீர் பாட்டிலால் அவரது தலையில் தாக்கியதாகவும் தெரிகிறது. இதில் சதீஷ்குமார் படுகாயம் அடைந்தார்.</p><h2>மருத்துவமனையில் சிகிச்சை</h2><p>சம்பவத்தையடுத்து கர்ணன், சபரி, குணாப் ஆகிய 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">காயமடைந்த </a>சதீஷ்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு குமரலிங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.</p><h2>3 பேருக்கு போலீசார் வலை</h2><p>இதுகுறித்த புகாரின் பேரில் குமரலிங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கர்ணன், சபரி, குணாப் ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து: 3 பேர் படுகாயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-bus-overturns-on-trichy-chennai-national-highway-3-injured</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-bus-overturns-on-trichy-chennai-national-highway-3-injured#comments</comments><guid isPermaLink="false">3d79332d-c808-47ba-887c-27c334a9a18b</guid><pubDate>Thu, 20 Aug 2026 02:47:22 +0000</pubDate><atom:updated>2026-08-20T02:47:22.885Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,சென்னை,பஸ்,Government bus,injured,Highway</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/uomwwgkh/282.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பஸ் விபத்து]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/uomwwgkh/282.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மார்த்தாண்டத்தில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவு பஸ் ஒன்று நேற்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. செங்கல்பட்டு மாவட்டம், புலிப்பாக்கம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்த பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.</p><h2>சிகிச்சை</h2><p>இந்த விபத்தில் பஸ் டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். </p><p>மேலும், பஸ்சில் பயணித்த மற்ற பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, மாற்று அரசு பஸ் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.</p> <p>அரசு பஸ் சாலையின் நடுவே கவிழ்ந்ததால், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. செங்கல்பட்டு தாலுகா <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D">போலீசார் </a>மற்றும் நெடுஞ்சாலை துறையினர், விபத்துக்குள்ளான பஸ்சை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்: ஒவ்வொரு எம்.எல்.ஏ.விற்கும் மாதம் இனி எவ்வளவு தொகை கிடைக்கும்..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/key-announcements-made-by-chief-minister-vijay-how-much-monthly-allowance-will-each-mla-receive-from-now-on</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/key-announcements-made-by-chief-minister-vijay-how-much-monthly-allowance-will-each-mla-receive-from-now-on#comments</comments><guid isPermaLink="false">b48674a3-34a5-4a66-b712-aab248970639</guid><pubDate>Thu, 20 Aug 2026 02:28:11 +0000</pubDate><atom:updated>2026-08-20T02:28:11.847Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,தமிழக சட்டசபை,TN Assembly,எம்.எல்.ஏ.க்கள்,MLAs,Assembly Session,தமிழக சட்டசபை கூட்டத்தொடர்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,சட்டசபை கூட்டத் தொடர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/1nreckev/mklk.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/1nreckev/mklk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மக்கள் பணியை தடையின்றி செய்திட ஏதுவாக அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும். வாகனத்துக்கு எரிபொருள், ஓட்டுநர் உள்ளிட்ட பராமரிப்புச் செலவுகளுக்காக மாதந்தோறும் ரூ.75 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்தார். </p><h2>110 விதியின் கீழ் அறிவிப்பு</h2><p>தமிழக சட்டசபை நேற்று தொடங்கியதும், பேரவை விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் சில அறிவிப்புகளை செய்ய இருப்பதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார்.</p><p>இதையடுத்து <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> எழுந்து, 110 விதியின் கீழ் 3 அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியிட்டார். </p><p>இதுதொடர்பாக அவர் கூறுகையில், “கடந்த 12-ந்தேதியன்று காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ. ஜோதிமணி பேசும் போது, எந்தவொரு பொருளாதார பலம் இல்லாமல் சட்டமன்ற உறுப்பினர்க ளாக பணியாற்றி கொண்டிருப்பவர்கள் தங்களின் தொகுதிப்பணிகளை செய்ய சொந்த வாகனங்களோ அல்லது உதவியாளர்களையோ வைத்துக்கொள்ள முடிவதில்லை என்று தெரிவித்தார்.</p><p>தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில், எளிய பின்னணியில் இருந்து பணபலமோ, அரசியல் பின்னணியோ இன்றி மக்களின் பேராதரவோடு முதன்முறையாக சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் தலைமுறை சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைக் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.</p><h2>அரசு சார்பில் வாகனம்</h2><p>தங்களது தொகுதி மக்களின் குறைகளைக் கேட்டறியவும், அரசுத் திட்டங்கள் மக்களை சென்றடைவதை கண்காணிக்கவும், தங்களின் தொகுதி முழுவதும் தொடர் பயணங்களை சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டியுள் ளது.</p><p>பொருளாதார பலமில்லாமல் சட்டமன்ற உறுப்பினர்களாக பணியாற்றும் மற்றும் முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தங்களது மக்கள் பணியை தொய்வின்றி தொடருவதற்கு வசதியாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும்.</p><h2>குறைகளுக்கு தீர்வு காண வழிவகுக்கும்</h2><p>இந்த அறிவிப்பு, சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களின் பயணத்தேவைகளுக் காக பிறரை சார்ந்து இருப்பதை தடுத்து, அவர்கள் எவ்வித சமரசமும் இன்றி சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தங்களின் தொகுதிக்குட்பட்ட கிராமப்புற மற்றும் தொலைதூரப்பகுதிகளுக்கு எளிதாக பயணம் செய்து, தொகுதி முழு வதும் உள்ள மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளுக்கு தீர்வு காண வழிவகுக்கும்.</p><p>அதோடு மட்டுமின்றி, சட்டமன்ற உறுப்பினர்களின் பொருளாதார சுமையை குறைத்து, கடைகோடி மக்களுக்கு லஞ்ச லாவண்யமற்ற, நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை அளிக்கவும் உதவும்.</p> <h2>வாகனப்படியாக ரூ.75 ஆயிரம்</h2><p>சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு வழங்கும் வாகனத்தை பராமரிக்கும் விதமாக, வாகனத்துக்கு டிரைவர், எரிபொருள், வாகன பராமரிப்பு உள்ளிட்ட செலவினங்களுக்காக மாதந்தோறும் ரூ.75 ஆயிரம் வாகனப்படியாகவும், அலுவலகப்பணிகளில் உதவி செய்ய ஒரு உதவியாளரை நியமித்துக்கொள்ள மாதந்தோறும் ரூ.25 ஆயிரம் உதவியாளர் படியாகவும் வழங்கப்படும். இதற்காக உரிய சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொண்டு ஆணைகள் வெளியிடப்படும்” என்று முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்தார்.</p><p>இந்நிலையில் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> வெளியிட்ட அறிவிப்பால், எம்.எல்.ஏ.,க்களுக்கு மாதந்தோறும் 2.05 லட்சம் ரூபாய் கிடைக்க உள்ளது.</p><p>தமிழகத்தில் 234 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சபாநாயகருக்கு, அரசு சார்பில், 'இன்னோவா' கார் வழங்கப்பட்டு உள்ளது. இவர்களை தவிர்த்து, 199 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இவர்களுக்கு கார் வாங்க தலா, 15 லட்சம் ரூபாய் வரை அரசு ஒதுக்கவுள்ளது. </p><p>இதனால், 30 கோடி ருபாய் வரை செலவாகும். எரிபொருள், உதவியாளர் சம்பளம், டிரைவர் சம்பளம், பராமரிப்பு செலவு என, 199 பேருக்கு மாதம் 2 கோடி ருபாய் வரை செலவிடப்பட உள்ளது. இதனால், ஆண்டுக்கு 24 கோடி ருபாய் செலவாகும்.</p><p>தற்போது, </p><p>எம்.எல்.ஏ.,க்களுக்கு அடிப்படை ஊதியம்: ரூ.30 ஆயிரம்</p><p>மாதாந்திர ஈட்டுப்படி ரூ.10,000</p><p>தொகுதிப்படி ரூ.25,000</p><p>அஞ்சல் படி ரூ.2500</p><p>தொலைபேசிப்படி ரூ.7500</p><p>தொகுப்புப்படி ரூ.5000</p><p>வாகனப்படி ரூ.25,000 என மொத்தம் 1,05,000 ரூபாய் வழங்கப்படுகிறது.</p><p>இது தவிர, மருத்துவச் செலவிற்கு மாதம் 5,000 ரூபாய்; சட்டசபை நடக்கும் நாட்களில் தனியாக படி; மாலை நேரங்களில் நடக்கும் சட்டசபை கூட்டத்திற்கு கூடுதல் படி என வழங்கப்படுகிறது. மேலும், சட்டசபை கேன்டீனில் சைவ, அவைச உணவுகள், டீ, காபி, சிற்றுண்டி ஆகியவை இலவசமாக வழங்கப்படுகின்றன. சென்னையில் உள்ள எம்.எல்.ஏ., விடுதியில் இருந்து சட்டசபைக்கு வர, இலவச 'ஏசி' பஸ்களும் இயக்கப்படுகின்றன.</p><p>தற்போது டிரைவர், உதவியாளர், எரிபொருள் செலவு என கூடுதலாக 1 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. இதனால்,ஒரு எம்.எல்.ஏ., வுக்கு மாதம் 2.05 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும்.</p><p>அதே நேரத்தில், ஏற்கனவே உள்ள ஊதியத்தில் வாகனப்படியாக 25,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அந்த பணம் தொடர்ந்து வழங்கப்படுமா என்பதை நிதித்துறை முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>சேது எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் புதிய பெட்டிகளுடன் இயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sethu-express-to-operate-with-new-coaches-from-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sethu-express-to-operate-with-new-coaches-from-today#comments</comments><guid isPermaLink="false">369cde5a-bb98-490c-924b-8e733f4ac7f1</guid><pubDate>Thu, 20 Aug 2026 02:22:34 +0000</pubDate><atom:updated>2026-08-20T02:22:34.448Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சேது எக்ஸ்பிரஸ் ரெயில்,Sethu Express Train,புதிய பெட்டிகள்,New Coaches</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/6oxz1t0l/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/6oxz1t0l/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,  </p><p>மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு தினசரி இயக்கப்படும் சேது எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஐ.சி.எப். ரெயில் பெட்டிக்கு பதிலாக எல்.எச்.பி. ரெயில் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. இந்த ரெயில் பெட்டிகள் இன்று (வியாழக்கிழமை) முதல் ராமேசுவரத்தில் இருந்தும் வருகிற 22-ந் தேதி முதல் சென்னையில் இருந்து இணைக்கப்படுகின்றன. </p><p>இந்த ரெயிலுக்கு இணை ரெயிலாக இருக்கும் திருச்செந்தூர்-சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் (வ.எண்.20605/20606) ரெயிலில் சென்னையில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் எல்.எச்.பி. பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. அதனை தொடர்ந்து இந்த ரெயில்களில் ஒரு முதல் வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டி, 2 இரண்டடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 3 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பொதுப்பெட்டி இணைக்கப்பட்டிருக்கும். </p> ]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் கடந்த 7 மாதங்களில் ஏற்பட்ட விபத்துகளில் இத்தனை பேர் பலியா..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/have-this-many-people-lost-their-lives-in-accidents-in-tamil-nadu-over-the-past-seven-months</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/have-this-many-people-lost-their-lives-in-accidents-in-tamil-nadu-over-the-past-seven-months#comments</comments><guid isPermaLink="false">439efbc5-2488-41ab-a3e9-e178b8a4f433</guid><pubDate>Thu, 20 Aug 2026 02:11:54 +0000</pubDate><atom:updated>2026-08-20T02:11:54.070Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழ்நாடு,Chennai,சென்னை,accidents,road accidents,சாலை விபத்துகள்,விபத்துகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/m08s0f5p/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/m08s0f5p/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் இந்தாண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 39,716 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ள நிலையில், இதில் 10,309 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டிலேயே அதிக சாலை விபத்துகள் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>71,000 சாலை விபத்துகள்</h2><p>கடந்த ஆண்டு தமிழகத்தில் சுமார் 71,000 சாலை விபத்துகள் நிகழ்ந்ததில், 18,000 பேர் உயிரிழந்தனர். இந்தாண்டு முதல் ஏழு மாதங்களிலேயே 39,716 விபத்துகள் பதிவாகியுள்ளன.</p><p>சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்க, போக்குவரத்துத் துறை, காவல்துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் இணைந்து தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சாலை மேம்பாட்டுப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதுடன், போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.</p><h2>விபத்துகளின் எண்ணிக்கை</h2><p>நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக வாகனம் ஓட்டுவோரைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதற்காக ஒருங்கிணைந்த கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையமும் அமைக்கப்பட உள்ளது என தமிழக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><strong>ஆண்டு - உயிரிழப்புகள்</strong></p><p><strong>2022 - 17,884</strong></p><p><strong>2023 - 18,347</strong></p><p><strong>2024 - 18,007</strong></p><p><strong>2025 - 18,000</strong></p><p><strong>2026 (ஜூலை வரை) - 10,309</strong></p><p>சாலை விபத்துகளை கட்டுப்படுத்த தொழில்நுட்பக் கண்காணிப்பை அதிகரிப்பதுடன், சாலை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பாதுகாப்பு </a>விதிகளை கடுமையாக அமல்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பெண் பயணியிடம் அத்துமீற முயன்ற டிரைவர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/driver-arrested-for-trying-to-molest-female-passenger-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/driver-arrested-for-trying-to-molest-female-passenger-in-chennai#comments</comments><guid isPermaLink="false">8dfae1ed-0fcf-4500-a453-cf17bec91ad2</guid><pubDate>Thu, 20 Aug 2026 02:05:40 +0000</pubDate><atom:updated>2026-08-20T02:05:40.559Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,கைது,arrested,டிரைவர்,பெண் பயணி,female passenger,அத்துமீறல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/a36xbqpw/226.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/a36xbqpw/226.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>டெல்லியை சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை வந்தார். நுங்கம்பாக்கத்தில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்த அவர், நேற்று முன்தினம் அங்கிருந்து அரும்பாக்கம் செல்வதற்காக ஆன்லைன் மூலம் காரை முன்பதிவு செய்தார். </p><h2>அத்துமீறல்</h2><p>அந்த பெண். காரில் சென்று கொண்டிருந்தபோது, டிரைவர் அரும்பாக்கம் செல்லாமல் மதுரவாயல் மேம்பாலம் அருகே காரை நிறுத்தி, அந்த பெண்ணை மிரட்டி, அவரது பர்சில் இருந்த பணத்தை பறித்ததுடன், அவரிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சத்தம் போட்டார். உடனே டிரைவர் அவரை காரில் இருந்து கீழே இறக்கி விட்டு, அங்கிருந்து காரில் தப்பிச்சென்றார். </p><h2>வழக்குப்பதிவு</h2><p>பின்னர் அந்த பெண் தனது நண்பரின் உதவியுடன் நுங்கம்பாக்கத்தில் தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்றார். இதுகுறித்து வானகரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.</p><p>பின்னர் சம்பவம் தொடர்பாக பீர்க்கன்கரணை பகுதியை சேர்ந்த கார் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D">டிரைவர் </a>கோபிநாத் (வயது 21) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக சட்டசபையில் இன்று எந்தெந்த துறைகள் மீது விவாதம்...?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/which-departments-are-up-for-discussion-in-the-tamil-nadu-legislative-assembly-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/which-departments-are-up-for-discussion-in-the-tamil-nadu-legislative-assembly-today#comments</comments><guid isPermaLink="false">5c63faa3-4c5f-44dc-a7f9-80de2aafd8f5</guid><pubDate>Thu, 20 Aug 2026 02:05:19 +0000</pubDate><atom:updated>2026-08-20T02:05:19.948Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,தமிழக சட்டசபை,TN Assembly</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/u5zvffqa/CHENNAI-0r.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/u5zvffqa/CHENNAI-0r.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. கூட்டம் தொடங்கியதும் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, கூட்டுறவு துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளுக்கு தேவையான கோரிக்கைகளை முன்வைத்து பேசுவார்கள்.</p><p>அனைவரும் பேசி முடிந்தவுடன் அவர்களுடைய கேள்விகளுக்கு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமணன், கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் ஆகியோர் பதிலுரை வழங்குவார்கள். நிறைவாக, தங்களுடைய துறை சார்பில் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.</p>]]></content:encoded></item><item><title>தென் மண்டல கவுன்சில் கூட்டம்: அருகருகே அமர்ந்திருந்த விஜய் - டி.கே.சிவக்குமார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-conference-of-chief-ministers-from-southern-states-is-being-held-in-chennai-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-conference-of-chief-ministers-from-southern-states-is-being-held-in-chennai-today#comments</comments><guid isPermaLink="false">a1c96170-cb21-4e91-b9e6-31f34cc1a7c5</guid><pubDate>Thu, 20 Aug 2026 01:48:57 +0000</pubDate><atom:updated>2026-08-20T01:48:57.049Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,அமித்ஷா,Amitsha,Chennai,சென்னை,CM Vijay,முதல்-மந்திரிகள் மாநாடு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/o4cpluz1/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/o4cpluz1/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மத்திய மந்திரி அமித்ஷா தலைமையில் 31-வது தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு சென்னை மாமல்லபுரத்தை அடுத்துள்ள கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தென் மண்டல குழுவின் தலைவராக அமித்ஷாவும், துணை தலைவராக முதல்-அமைச்சர் விஜய்யும் உள்ளனர். மதியம் 1.30 மணி வரை தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு மற்றும் தென் மண்டல குழு கூட்டம் நடைபெறுகிறது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/zwe82o5i/Untitled-1.jpg" /></figure><p>இந்த மாநாட்டில் மாநிலங்களுக்கிடையே ஒத்துழைப்பு, பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள், நீர் பங்கீடு, கல்வி, சுகாதாரம், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைவாக விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுகிறது.</p><p>நாட்டின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, பிரதமர் மோடியின் கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் பாரத குழு' என்ற தொலைநோக்குப் பார்வையுடன் அமைக்கப்பட் டுள்ள மண்டல குழு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறது. மேலும் மத்திய-மாநில அரசுகளின் உறவை மேம்படுத்தும் வகையிலும் இம்மாநாடு நடைபெறுகிறது.</p><p>மாநாட்டில் தொகுதி மறுசீரமைப்பு, காவிரி நதிநீர் பங்கீடு, மேகதாது அணை விவகாரம், 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப் பட்ட விவகாரத்தில் கர்நாடகாவிடம் தமிழக அரசு தரப்பில் பேசி விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இந்த மாநாட்டில், முதல்-அமைச்சர் விஜய், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் அருகருகே அமர்ந்துள்ளனர். மேலும் , ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா துணை முதல்-மந்திரி மல்லுப்பட்டி விக் ரமர்கா, கேரளம் முதல்-மந்திரி சதீசன், புதுச்சேரி மாநில கவர்னர் கைலாஷ்நாதன், அந்தமான்-நிக்கோபர் தீவுகள் துணை நிலை கவர்னர், லட்சத்தீவு அதிகாரிகள் மற்றும் அந்தந்த மாநில உயர்அ திகாரிகள் பங்கேற்றுள்ளனர்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/ik2kzvze/Untitled-3.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>போலீசார் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம்.. செல்போன் எண்கள் வெளியீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/complaints-can-be-lodged-if-police-demand-a-bribe-mobile-numbers-released</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/complaints-can-be-lodged-if-police-demand-a-bribe-mobile-numbers-released#comments</comments><guid isPermaLink="false">defc6a01-b18b-4cf7-8314-e766a56f7b6a</guid><pubDate>Thu, 20 Aug 2026 01:46:36 +0000</pubDate><atom:updated>2026-08-20T01:46:36.263Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,போலீஸ்,தமிழகம்,லஞ்சம்,TN Police,bribe,DGP Office,cellphone,டி.ஜி.பி. அலுவலகம்,செல்போன் எண்,வாட்ஸ்அப் எண்,WhatsApp number</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/t702svq4/poli.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/t702svq4/poli.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>போலீசார் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்க தனிப்பிரிவை தொடங்கி டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.</p><h2>தனிப்பிரிவு</h2><p>இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:-</p><p>எனது அறிவுறுத்தலின்படி, <a href="https://www.dailythanthi.com/topic/tn-police">தமிழக காவல்துறையின்</a> அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகர கமிஷனரகங்களிலும் 'உள்நாட்டு விஜிலென்ஸ் குழுக்கள்' (அதாவது லஞ்சஒழிப்பு குழுக்கள்) அமைக்கப்பட்டுள்ளன. போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ்காரர்களுக்கு எதிரான ஊழல், முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பிற ஒழுங்கீனமான செயல்களை தடுப்பது, கண்காணிப்பது மற்றும் இதுதொடர்பான புகார்களை விசாரணை செய்வது இந்த குழுக்களின் முக்கிய நோக்கமாகும்.</p><h2>' செல்போன், 'வாட்ஸ்அப்' எண்கள்</h2><p>இதுபோன்ற புகார்களை பொதுமக்கள் எளிதில் தெரிவிக்கும் வகையில், மாவட்டம் மற்றும் மாநகரம் வாரியாக 'உள்நாட்டு விஜிலென்ஸ் குழுக்களுக்கு' செல்போன் மற்றும் 'வாட்ஸ்அப்' எண்கள் கீழ்க்கண்டவாறு வழங்கப்பட்டுள்ளன.</p><p>பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்தி தங்களது முழுமையான ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.</p><h2>ரகசியம்</h2><p>புகார்தாரர்கள் மற்றும் சாட்சிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் அவர்களது அடையாளங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். புகார் அளித்ததற்காக எந்தவொரு புகார்தாரரும் எவ்வித துன்புறுத்தல், அச்சுறுத்தல் அல்லது பழிவாங்கும் நடவடிக்கைக்கும் உட்படுத்தப்படமாட்டார்கள் என்று புகார்தாரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு 'உள்நாட்டு விஜிலென்ஸ் குழுக்கள்' உறுதியளிக்கிறது.</p><p>பெறப்படும் அனைத்து புகார்களும் நியாயமான, பாரபட்சமற்ற மற்றும் உரிய காலக்கெடுவுக்குள் விசாரிக்கப்பட்டு, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன்.</p><h2>கண்காணிப்பு</h2><p>'உள்நாட்டு விஜிலென்ஸ் குழுக்களின்' செயல்பாடுகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், சரக டி.ஐ.ஜி.க்கள், மண்டல ஐ.ஜி.க்கள் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர்கள், கூடுதல் டி.ஜி.பி.க்கள் ஆகியோரால் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.</p><p>என்னுடைய நேரடி கண்காணிப்பும் இந்த குழுக்கள் மீது இருக்கும். பொதுமக்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் புகார்களை தெரிவிக்கலாம்.</p><h2>செல்போன் எண்கள்</h2><p><strong><ins>செல்போன் மற்றும் வாட்ஸ்அப் எண்கள் விவரம் வருமாறு:-</ins></strong></p><p>1. சென்னை கமிஷனரகம் - <strong>7871723000</strong></p><p>2.தாம்பரம் கமிஷனரகம் - <strong>6374514428</strong></p><p>3. ஆவடி கமிஷனரகம் - <strong>9840018110</strong></p><p>4. காஞ்சிபுரம் மாவட்டம் - <strong>9940031700</strong></p><p>5. செங்கல்பட்டு - <strong>9500779100</strong></p><p>6. திருவள்ளூர் - <strong>9498181359</strong></p><p>இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/change-in-malaikottai-express-train-service</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/change-in-malaikottai-express-train-service#comments</comments><guid isPermaLink="false">b03d1b62-ca77-4a08-8bbc-37e87e899ef2</guid><pubDate>Thu, 20 Aug 2026 01:46:34 +0000</pubDate><atom:updated>2026-08-20T01:46:34.776Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்சி,Trichy,மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ்,Malaikottai Express</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/r8gbw6us/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/r8gbw6us/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,  </p><p>சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக, திருச்சி-சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் (எண்:12653/12654) ரெயில் சேவையில் 5 நாட்கள் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி-சென்னை எழும்பூர் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் (எண்:12654), இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 24-ந்தேதி வரை சென்னை எழும்பூருக்கு பதிலாக மாம்பலம் ரெயில் நிலையத்தில் தனது சேவையை நிறைவு செய்யும். </p><p>அதேபோல், சென்னை எழும்பூர்- திருச்சி மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் (எண்:12653) நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 25-ந்தேதி வரை சென்னை எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து இரவு 12.05 மணிக்கு புறப்படும் என்று திருச்சி கோட்ட தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. பயணிகள் இந்த மாற்றத்தை கவனத்தில் கொண்டு தங்க ளது பயணத்தை திட்டமிடுமாறு ரெயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>கூட்ட நெரிசலால் விபரீதம்: அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி 9-ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-due-to-crowd-9th-grade-student-dies-after-being-hit-by-government-bus</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-due-to-crowd-9th-grade-student-dies-after-being-hit-by-government-bus#comments</comments><guid isPermaLink="false">697669a7-9a8f-48b6-bbf9-eec7f00f838f</guid><pubDate>Thu, 20 Aug 2026 01:29:25 +0000</pubDate><atom:updated>2026-08-20T01:29:25.643Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசு பஸ்,Government bus,student,மாமல்லபுரம்,உயிரிழப்பு,மாணவர்,Crowd,Die</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/l6z2oeke/281.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணவர் உயிரிழப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/l6z2oeke/281.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மாமல்லபுரம், </p><p>படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த 9-ம் வகுப்பு மாணவர், நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பலியானார்.</p><p>செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த குன்னப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் என்ற பேரம்பலம். இவரது மகன் தீனா (வயது 13). இவர், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு செல்ல காரணை பஸ் நிறுத்தத்தில் இருந்து தடம் எண் 508 என்ற அரசு பஸ்சில் ஏறினார். பஸ்சில் கூட்டம் நிரம்பி வழிந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவர் தீனா, பஸ்சின் முன்பக்க படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததாக தெரிகிறது.</p><h2>விபத்து</h2><p>வடகடம்பாடி என்ற இடத்தில் பஸ் சென்றுகொண்டிருந்தபோது மாணவர் தீனா, நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். பஸ்சின் பின்பக்க டயர் அவரது காலில் ஏறி இறங்கியது. இதில் அவரது கால் முறிந்து எலும்பு வெளியே வந்தது. உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பூஞ்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். </p><p>பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மாணவர் தீனா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.</p><p>மாணவர் பலியான சம்பவத்தால் அவர் படித்து வந்த அரசு மேல்நிலைப் பள்ளியே கடும் சோகத்தில் மூழ்கியது. இப்பகுதியில் பள்ளி நேரங்களில் குறைவான பஸ்களே இயக்கப்படுவதால் கூட்ட நெரிசல் ஏற்படுவதாகவும், இதனால் மாணவர்கள் படிக்கட்டிலேயே தொங்கியபடி பயணம் செய்வ தால் தற்போது ஒரு உயிர் பலி ஏற்பட்டு உள்ளதாகவும் அந்த பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.</p><h2>வீசாரணை</h2><p>இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் பரசுராமன் மற்றும் போலீசார் வீசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>
தமிழக சட்டசபையில் இன்றைய கூட்ட நிகழ்வுகள் என்னென்ன..?

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-proceedings-in-tamil-nadu-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-proceedings-in-tamil-nadu-assembly#comments</comments><guid isPermaLink="false">c43bb788-4b7b-42a2-b6f2-a8598f768666</guid><pubDate>Thu, 20 Aug 2026 01:11:19 +0000</pubDate><atom:updated>2026-08-20T01:11:19.109Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu Assembly,தமிழக சட்டசபை,minister,அமைச்சர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/eiv94uwo/tnaet.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/eiv94uwo/tnaet.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>தமிழக சட்டசபையில் துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.</p><p>தமிழக சட்டசபையில் இன்றைய கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.  கூட்டம் தொடங்கியதும், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவு ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசி முடிந்தவுடன் அவர்களுடைய கேள்விகளுக்கு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமணன், கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் ஆகியோர் பதிலுரை வழங்குவார்கள். நிறைவாக, தங்களுடைய துறை சார்பில் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.</p> ]]></content:encoded></item><item><title>சம்பா பருவத்துக்கு உகந்த நெல் விதைகளை மட்டுமே விற்க வேண்டும் - விதை ஆய்வு துணை இயக்குனர் அறிவுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/only-paddy-seeds-suitable-for-the-samba-season-should-be-sold-instruction-from-the-deputy-director-of-seed-inspection</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/only-paddy-seeds-suitable-for-the-samba-season-should-be-sold-instruction-from-the-deputy-director-of-seed-inspection#comments</comments><guid isPermaLink="false">5d2a492c-d78f-4583-a8c1-a8d25b6abd55</guid><pubDate>Thu, 20 Aug 2026 01:09:54 +0000</pubDate><atom:updated>2026-08-20T01:09:54.809Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thanjavur,தஞ்சாவூர்,சம்பா நெற்பயிர்,தஞ்சாவூர் செய்திகள்,சம்பா பயிர்கள்,Samba Crops</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/y3qadqc7/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/y3qadqc7/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர்,</p><p>சம்பா பருவத்துக்கு உகந்த நெல் விதைகளை மட்டுமே விற்க வேண்டும் என தஞ்சை மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதா அறிவுறுத்தியுள்ளார்.</p><p>இது தொடர்பாக அவர், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><h2>சம்பா பருவம்</h2><p>தஞ்சை மாவட்டத்தில் சம்பா பருவ நெற்பயிர் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தற்போது தயாராகி வருகின்றனர். தனியார் விதை விற்பனையாளர்கள், சான்று விதைகளில் இரு அட்டைகள் (வெள்ளை அல்லது நீல நிறம்) முறையே சான்று அட்டை மற்றும் விவர அட்டை பொருத்தப்பட்ட விதைகளை மட்டுமே விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். விவர அட்டையில் பயிர், ரகம், குவியல் எண். காலாவதி நாள், பயிர் செய்ய ஏற்ற பருவம் உள்பட 14 வகையான விவரங்கள் விதைச் சட்ட விதிகளின்படி கட்டாயம் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.</p><p>அனைத்து தனியார் விதை விற்பனையாளர்களும் விதை இருப்பு பதிவேடு மற்றும் முளைப்பு அறிக்கை ஆகியவற்றை கட்டாயம் பராமரிக்க வேண்டும். குவியல் வாரியாக தனித்தனி பக்கங்களில் விதை இருப்பு விவரங்களை பதிவிட வேண்டும். நடப்பு சம்பா பருவத்தில் 150 முதல் 160 நாட்கள் வயதுடைய நீண்டகால நெல் ரகங்களே ஏற்றவை. நீண்டகால ரகங்களான சாவித்திரி (சிஆர் 1009), சி.ஆர். 1009 சப்-1 மற்றும் ஏ.டி.டி. 51 போன்ற ரகங்களை முதலில் விற்பனை செய்ய வேண்டும்.</p><h2>2,750 டன் விதைநெல்</h2><p>அதனைத் தொடர்ந்து மத்தியகால நெல் ரகங்களான ஏ.டி.டி.38, 39, 42, 46, வெள்ளைப் பொன்னி, ஐ.ஆர். 20, கோ 43, 46, 50 மற்றும் மேம்படுத்தப்பட்ட வெள்ளைப்பொன்னி போன்ற ரகங்களை விற்பனை செய்ய வேண்டும். வெளிமாநில ரகங்களான பி.பி.டி. 5204, எம்.டி.யூ. 7029, என்.எல்.ஆர். 34449, கே.என்.எம்.1638 போன்ற விதைகளை விற்பனை செய்யும்போது விற்பனையாளர்கள் படிவம் 2-ஐ கட்டாயம் வைத்திருக்க வேண்டும். விதைகளை விற்பனை செய்யும்போது விவசாயிகளுக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும்.</p><p>நீண்டகால மற்றும் மத்தியகால நெல் ரகங்களில் சுமார் 2,750 டன் விதைநெல் தனியார் விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவற்றின் முளைப்புத்திறனை உறுதி செய்யும் வகையில் கும்பகோணம், தஞ்சை மற்றும் பட்டுக் கோட்டை விதை ஆய்வாளர்களால் அலுவலக விதை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, தஞ்சை விதை பரிசோதனை நிலையத்திற்கு முளைப்புத்திறன் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது.</p><h2>உரிய நடவடிக்கை</h2><p>எனவே சம்பா பருவத்துக்கு ஏற்ற நெல் ரகங்களை மட்டுமே விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். சம்பா பருவத்துக்கு உகந்தது அல்லாத <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நெல் ரகங்களை</a> விற்பனை செய்தாலோ அல்லது விதைச் சட்ட விதிகளை பின்பற்றாமல் விற்பனை செய்தாலோ, விதைச் சட்டம்-1966, விதை விதிகள்-1968 மற்றும் விதை கட்டுப்பாட்டு ஆணை-1983 ஆகியவற்றின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>மேற்கண்டவாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>