<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 13 Sep 2026 07:26:08 +0000</lastBuildDate><item><title>விளாத்திகுளத்தில் விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் விநியோகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/free-saplings-distributed-to-farmers-in-vilathikulam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/free-saplings-distributed-to-farmers-in-vilathikulam#comments</comments><guid isPermaLink="false">1e86aa06-27a3-47d8-bab2-6cc307f43921</guid><pubDate>Sun, 13 Sep 2026 07:25:56 +0000</pubDate><atom:updated>2026-09-13T07:25:56.748Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Farmers,Thoothukudi,தூத்துக்குடி,Forest Department,வனத்துறை,விவசாயிகள்,Distribution,விநியோகம்,vilathikulam,விளாத்திகுளம்,Free,saplings,இலவச,மரக்கன்றுகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/k1bikdqy/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விளாத்திகுளத்தில் விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் விநியோகம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/k1bikdqy/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F">மாவட்ட</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">வனத்துறை</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D">அலுவலர்</a> இளையராஜா உத்தரவின்படி, விவசாய நிலங்களைச் சுற்றி வேலி மற்றும் தண்ணீர் வசதி கொண்டுள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">விவசாயிகளுக்கு</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A">இலவச</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">மரக்கன்றுகள்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">விநியோகம் </a>செய்யப்படுகின்றன. </p><h2>இலவச மரக்கன்றுகள் வழங்கல்</h2><p>இதுதொடர்பாக மாவட்ட வன அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: </p><p>விளாத்திகுளம் வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன. விளாத்திகுளம் ஆற்றுப் பாலத்திற்குக் கீழே உள்ள வனத்துறை நர்சரியில் வைத்து தேக்கு, மகாகனி, குமிழ்தேக்கு, வேங்கை, கொய்யா, வேம்பு, ஈட்டி, மலைவேம்பு, எலுமிச்சை, சந்தனமரம், செம்மரம், மாதுளை, நெல்லி, கொடிக்காய், சீத்தா, பலா மற்றும் புளி ஆகிய பல்வேறு வகையான மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. </p><h2>விவசாயிகள் நேரில் வர வேண்டும்</h2><p>மரக்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள், மரம் நடவு செய்ய உத்தேசித்துள்ள நிலத்தின் பட்டா நகல், குடும்ப உறுப்பினரின் அடையாளச் சான்று நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் நிலத்தின் உரிமையாளர் புகைப்படம் ஆகியவற்றுடன் நேரில் வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு விளாத்திகுளம் வனச்சரகர் முகைதீன் மற்றும் வனவர் பாண்டியராஜன் ஆகியோரை தொடர்புகொண்டு இலவச மரக்கன்றுகளைப் பெற்றுக் கொள்ளலாம். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>கம்யூனிஸ்டு கட்சிகள் த.வெ.க. கூட்டணிக்கு வருவார்கள்: அமைச்சர் ஷாஜகான் நம்பிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/communist-parties-will-join-the-tvk-alliance-minister-shajahan-expresses-confidence</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/communist-parties-will-join-the-tvk-alliance-minister-shajahan-expresses-confidence#comments</comments><guid isPermaLink="false">16d9b2e4-cab6-47dc-8d1c-1d434c55b436</guid><pubDate>Sun, 13 Sep 2026 07:12:28 +0000</pubDate><atom:updated>2026-09-13T07:12:28.676Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,த.வெ.க,கம்யூனிஸ்டு,Communist,அமைச்சர் ஷாஜகான்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/5o0o4na9/Shajahan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ஷாஜகான்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/5o0o4na9/Shajahan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாகர்கோவில்,  </p><p>தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் நிருபர்க ளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கம்யூனிஸ்டு கட்சிகள் த.வெ.க. ஆட்சிக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் வரக்கூடிய நாட்களில் எங்கள் கூட்டணிக்குள் வருவார்கள் என்று திடமாக நம்புகிறோம். பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகத்திற்கு வருகிற எதிர்ப்புகள் முதல்-அமைச்சருடைய கவனத்திற்கு சென்றுள்ளது. அவர் தீர ஆலோசித்து ஒரு நல்ல முடிவை எடுப்பார்.</p> <h2>புதிய தலைமை செயலகம்</h2><p>தற்போதைய தலைமைச் செயலகம் பழமையான கட்டிடமாக இருப்பதுடன், சுமார் 6 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரியும் சூழலில் நெருக்கடியாக உள்ளது. புதிய தலைமைச் செயலகம் கட்டவேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை. தற்போது ஆய்வுகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது ஓமந்தூரார் தோட்டத்தில் தலைமை செயலகம் கட்டப்பட்டு அது இப்போது அரசு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது ராணி மேரி கல்லூரியில் கட்டுவதற்கு திட்டமிட்டனர். .</p><p>அதுவும் தடைபட் டது. எந்த இடத்தில் கட்டினாலும் இதைப்போல எதிர்ப்புகள், விமர்சனங்கள் இருக்கத்தான் செய்யும். பட்டினப்பாக்கத்தில்தான் கட்டுவதாக முடிவானாலும், அந்த இடத்தில் உள்ள மக்கள் பாதிக்காத வகையில் மாற்று ஏற்பாடுகள் நிச்சயமாக செய்யப்படும். கம்யூனிஸ்டு கட்சிகள் ஜனநாயக ரீதியில் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள். இந்த எதிர்ப்புகளையும் கணக்கில் கொண்டு அரசு இறுதி முடிவு எடுக்கும்</p><h2>தொழுகை</h2><p>மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் சிறுபான்மையினருக்கான நிதியும் திட்டங்களும் போதுமானதாக இல்லை. ஏற்கனவே நடைமுறையில் இருந்து தற்போது தடைபட்டுள்ள திட்டங்களை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தி, இந்த மாத இறுதியில் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜுவை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளோம்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>நாடெங்கும் நலமும் வீடெங்கும் வளமும் பெருகட்டும்: எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/may-well-being-flourish-across-the-nation-and-prosperity-abound-in-every-home-edappadi-palaniswamis-vinayagar-chaturthi-greetings</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/may-well-being-flourish-across-the-nation-and-prosperity-abound-in-every-home-edappadi-palaniswamis-vinayagar-chaturthi-greetings#comments</comments><guid isPermaLink="false">d039a3b8-423a-433e-a118-735e2f219e8e</guid><pubDate>Sun, 13 Sep 2026 07:09:35 +0000</pubDate><atom:updated>2026-09-13T07:09:35.936Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,Edappadi Palaniswami,Vinayagar Chaturthi,விநாயகர் சதுர்த்தி</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/943iw42k/14.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/943iw42k/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி பின்வருமாறு;</p><p>”வினை தீர்க்கும் தெய்வமாகவும்; முழமுதற் கடவுளாகவும் விளங்கும். விநாயகப் பெருமான் அவதரித்த 'விநாயகர் சதுர்த்தி' திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.</p> <p>சங்கடங்களையும், தடைகளையும் நீக்கவல்ல விநாயகப் பெருமானை வணங்கிய பின்னர் எந்த செயலைத் தொடங்கினாலும் அந்தச் செயலை வெற்றியுடன் செய்வதற்குரிய உறுதியும், நம்பிக்கையும் தானாக ஏற்பட்டு அந்தக் காரியம் வெற்றியில் முடியும் என்பதை உணர்ந்து, விநாயகர் சதுர்த்தியன்று மக்கள், களிமண்ணால் செய்யப்பட்ட பிள்ளையாரை இல்லத்தில் அலங்கரித்து வைத்து அருகம்பம். எருக்கம் பூ, செம்பருத்திப் பூ, அரளி மலர் வில்வ இலை போன்றவைகளைக் கொண்டு மாலைகள் சூட்டி, கொழுக்கட்டை, கண்டல், பொரி, அவல், பழங்கள் போன்றவற்றைப் படைந்து, தொடங்கும் காரியங்களில் எல்லாம் வெற்றிபெற வேண்டி பக்திப் பரவசத்துடன் வழிபட்டு விநாயகர் சதுர்த்தி திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள்.</p><p>ஞானமே வடியான திருமேனியைக் கொண்ட விநாயகப் பெருமாளின் திருவருளால் 'நாடெங்கும் நலமும் வீடெங்கும் வளமும் பெருகட்டும்' என்று மனதார வாழ்த்தி; அனைவருக்கும் அன்பும் அமைதியும், நலமும் வளமும் நிறைந்த வாழ்வை அருள வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து. மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் எனது விநாயகர் சதூர்த்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நேற்று 33.22 டன் பழைய பொருட்கள் சேகரிக்கப்பட்டு அகற்றம்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/3322-tonnes-of-scrap-materials-collected-and-removed-in-chennai-yesterday</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/3322-tonnes-of-scrap-materials-collected-and-removed-in-chennai-yesterday#comments</comments><guid isPermaLink="false">79a5242c-0491-4e50-af4b-646aa6950d36</guid><pubDate>Sun, 13 Sep 2026 06:59:31 +0000</pubDate><atom:updated>2026-09-13T06:59:31.901Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/zbo1p43e/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/zbo1p43e/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகராட்சி சார்பில் நேற்று (12.09.2026) 66 இடங்களிலிருந்து 33.22 மெட்ரிக் டன் பழைய சோபாக்கள், மெத்தைகள் உள்ளிட்ட பழைய பொருட்கள் பெறப்பட்டு, கொடுங்கையூர் எரியூட்டும் நிலையத்திற்கு கொண்டு சென்று விஞ்ஞான முறையில் எரியூட்டி அகற்றப்பட்டது. </p><h2>பழைய பொருட்கள் சேகரிப்பு</h2><p>இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பொதுமக்கள் முன்கூட்டியே தரும் தகவலின் அடிப்படையில், அவர்களின் வீடுகளிலிருந்து பழைய சோபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகள் ஆகிய திடக்கழிவுகளை ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பெற்று அகற்றும் பணி 11.10.2025 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.</p><p>அதனடிப்படையில், நேற்று (12.09.2026) மட்டும் 66 நபர்களிடமிருந்து வரப்பெற்ற தகவலின் அடிப்படையில், 33.22 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் பெறப்பட்டு, கொடுங்கையூரில் உள்ள எரியூட்டும் நிலையத்திற்கு எடுத்துச் சென்று விஞ்ஞான முறையில் எரியூட்டி அகற்றப்பட்டது. இதற்காக 27 எண்ணிக்கையிலான வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.</p><h2>நம்ம சென்னை செயலியில் முன்பதிவு</h2><p>ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று நடைபெறும் இச்சேவையை பெறுவதற்கு, பொதுமக்கள் முன்கூட்டியே பெருநகர சென்னை மாநகராட்சியின் “<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நம்ம சென்னை</a>” செயலியில் பதிவு செய்ய வேண்டும் (அல்லது) பெருநகர சென்னை மாநகராட்சியின் 1913 என்ற எண்ணிற்கு தகவல் அளிக்கப்பட வேண்டும் (அல்லது) பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலம் பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ள 94450 61913 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவலை அனுப்ப வேண்டும்.</p><p>இதனடிப்படையில் மாநகராட்சிப் பணியாளர்கள் பதிவு செய்த நபர்களின் வீடுகளுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் நேரடியாகச் சென்று, பழைய சோபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகள் உள்ளிட்ட பொருட்களை சேகரித்து பாதுகாப்பாகவும், அறிவியல் முறையிலும் அகற்றும் பணிகளை மேற்கொள்வார்கள். இச்சேவையினை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>சதுர்த்தி விழா: மதுரை மாவட்டத்தில் 750 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chaturthi-festival-vinayagar-idols-to-install-750-locations-in-madurai-district</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chaturthi-festival-vinayagar-idols-to-install-750-locations-in-madurai-district#comments</comments><guid isPermaLink="false">7db603c7-ee1e-4a81-990e-13a4666827cb</guid><pubDate>Sun, 13 Sep 2026 06:49:02 +0000</pubDate><atom:updated>2026-09-13T06:49:02.348Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Aanmigam,Devotional,ஆன்மிகம்,Madurai,மதுரை,Vinayagar Chaturthi,விநாயகர் சதுர்த்தி விழா,விநாயகர் சிலைகள்,Vinayagar Idols,Devotional News</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/ve83yk4o/madurai-vinahagar-idols.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மதுரை சர்வேயர் காலனி சாலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள்]]></media:title><media:description type="html"><![CDATA[ மதுரையில் விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகள், விற்பனைக்கு குவிந்த விநாயகர் சிலைகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/ve83yk4o/madurai-vinahagar-idols.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் 750 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.</p><h2>விநாயகர் சதுர்த்தி விழா</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/vinayagar-chaturthi">விநாயகர் சதுர்த்தி</a> விழாவை முன்னிட்டு மதுரை மாநகரில் பா.ஜனதா, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவது உண்டு. அதன்பின்னர் அந்த சிலைகள் அனைத்தும், கீழமாசிவீதி, விளக்குத்தூண், மொட்டை விநாயகர் கோவில் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு சிறப்பு பூஜை செய்து ஊர்வலமாக மாசி வீதியில் வலம் வந்து, பின்னர் சிம்மக்கல் வழியாக வைகை ஆற்றில் கரைப்பது வழக்கம்.</p><p>இதுபோல், புறநகர் பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது.</p><h2>மதுரை மாநகரில் 350 இடங்களில் சிலைகள்</h2><p>அதன்படி, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து, விநாயகர் சிலைகள் வைப்பதற்காக அந்தந்த போலீஸ் நிலையங்களில் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தனர். இதனை தொடர்ந்து, மாநகர பகுதிகளில் 350 இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கு மாநகர போலீஸ் அனுமதி அளித்துள்ளது.</p><p>அந்த இடங்களில் <a href="https://www.dailythanthi.com/topic/vinayagar-idols">விநாயகர் சிலைகள்</a> வைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. மேலும், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாநகர் பகுதி முழுவதும் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.</p><h2>புறநகரில் 400 இடங்கள்</h2><p>மதுரை புறநகர் பகுதிகளான திருமங்கலம், கள்ளிக்குடி, வாடிப்பட்டி, உசிலம்பட்டி, மேலூர், சோழவந்தான், செக்கானூரணி, ஊமச்சிகுளம், சிலைமான், கருப்பாயூரணி, ஒத்தக்கடை, சத்திரப்பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட இடங்களில் இந்து அமைப்பினர் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி கேட்கப்பட்டது. அதன்படி, புறநகரில் சுமார் 400 இடங்களில் <a href="https://www.dailythanthi.com/topic/vinayagar-idols">விநாயகர் சிலைகள்</a> வைக்க மாவட்ட காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் உத்தரவின்பேரில் 1500-க்கும் மேற்பட்ட போலீசார், புறநகர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.</p><p>இதுகுறித்து போலீசார் கூறுகையில், “விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சிலைகள் நிறுவுதல் மற்றும் ஊர்வலத்தின்போது கடைபிடிக்கப்படவேண்டிய விதிமுறைகள் குறித்து காவல்துறை சார்பில் பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு விளக்கப்பட்டு உள்ளது. </p><p>அதன்படி <a href="https://www.dailythanthi.com/topic/vinayagar-idols">விநாயகர் சிலைகள்</a> 10 அடிக்கும் குறைவான உயரம் கொண்டவையாக இருக்க வேண்டும். சிலைகள் வைக்கப்படும் இடத்திற்கான தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். தீத்தடுப்பு பொருட்கள் வைக்கப்பட வேண்டும். விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நாகர்கோவில்: சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட உணவகத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nagercoil-restaurant-operating-in-an-unhygienic-manner-fined-rs10000</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nagercoil-restaurant-operating-in-an-unhygienic-manner-fined-rs10000#comments</comments><guid isPermaLink="false">ea1c6f9c-eafe-4ec6-9bc1-90fa4b78a4b5</guid><pubDate>Sun, 13 Sep 2026 06:46:37 +0000</pubDate><atom:updated>2026-09-13T06:46:37.939Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,Nagercoil,Kanyakumari,fine,அபராதம்,உணவு பாதுகாப்புத்துறை,food safety department,உணவகம்,restaurant,சுகாதார சீர்கேடு,Health disorder,நாகர்கோவில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/uff2djii/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82.10-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட உணவகத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/uff2djii/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82.10-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி, </p><p>கன்னியாகுமரி மாவட்டம், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">நாகர்கோவில்</a> பேருந்து நிலையம் அருகே விதிமுறைகளை மீறி செயல்பட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">உணவகத்திற்கு</a> உணவு பாதுகாப்பு துறையினர் ரூ.10 ஆயிரம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">அபராதம்</a> விதித்து நோட்டீஸ் வழங்கினர்.</p><h2>உணவகத்தால் சுகாதார சீர்கேடு</h2><p>கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் உணவகம் ஒன்றில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், உணவகச் சமையலறையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதையில் வழிந்தோடி கடுமையான சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதாகவும் தகவல் பரவியது. </p><h2>ரூ.10 ஆயிரம் அபராதம்</h2><p>இதன் எதிரொலியாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று சம்மந்தப்பட்ட உணவகத்தில் நேரில் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது உணவகத்தின் உணவு தயாரிப்பு முறை, பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் மற்றும் சுகாதார நிலை குறித்து அதிகாரிகள் விரிவாக ஆய்வு செய்தனர். இதில் விதிமுறைகளை மீறியது உறுதியானதை அடுத்து, உணவகத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கினர். மேலும் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளை உடனடியாக சரிசெய்ய அதிகாரிகளால் கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காலை உணவுத் திட்டத்திற்கான பொறுப்பை ஆசிரியர்கள் மீது சுமத்துவதா? - நயினார் நாகேந்திரன் கண்டனம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/should-the-responsibility-for-the-breakfast-scheme-be-placed-on-teachers-nainar-nagendran-condemns-the-move</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/should-the-responsibility-for-the-breakfast-scheme-be-placed-on-teachers-nainar-nagendran-condemns-the-move#comments</comments><guid isPermaLink="false">c8fecbd7-6e6e-456f-83a4-ca34a6e41d15</guid><pubDate>Sun, 13 Sep 2026 06:35:25 +0000</pubDate><atom:updated>2026-09-13T06:35:25.702Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,காலை உணவுத் திட்டம்,breakfast scheme</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/f8ebj5dl/nainar.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/f8ebj5dl/nainar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காலை உணவுத் திட்ட விரிவாக்கத்திற்கான பொறுப்பைத் தலைமை ஆசிரியர்கள் மீது சுமத்துவதா? என தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். </p><p>இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>காலை உணவுத் திட்டம் நீட்டிப்பு</h2><p>பெருந்தலைவர் காமராஜரின் பெயரால் காலை உணவுத் திட்டம் 8-ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்படுவது வரவேற்கத்தக்கது என்றாலும், அதற்கான நிதித் திட்டமிடலின்றி தவெக அரசு செயல்படுவது கடும் அதிர்ச்சியளிக்கிறது. விளம்பரப் பலகை, சமையலறைச் சீரமைப்பு முதல் மாணவர்களுக்கான தட்டு, டம்ளர் வாங்குவது வரை அனைத்து ஆரம்பச் செலவுகளையும் தலைமை ஆசிரியர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனச் சுற்றறிக்கை அனுப்பி அழுத்தம் கொடுப்பது கடும் கண்டனத்திற்குரியது.</p><h2>பணம் ஒதுக்க மனமில்லையா?</h2><p>முதல்-அமைச்சர் அலுவலகத்தைத் தற்காலிகமாக இடமாற்றம் செய்ய ரூ.6 கோடி மக்கள் வரிப்பணத்தை வாரி இறைத்து ஆடம்பரம் செய்யும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்க்கு, ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்களின் அடிப்படைத் தேவைகளுக்கும், உபகரணங்களுக்கும் பணம் ஒதுக்க மனமில்லையா? குழந்தைகள், மாணவர்கள் மீது அக்கறை இல்லையா? மக்கள் மீது அக்கறை இல்லையா? ஆட்சி மேலிடத்தின் சுய விளம்பரங்களுக்கும் ஆடம்பரங்களுக்கும் நிதியை வாரி வழங்கும் தவெக அரசு, கல்வி நிலையங்களின் அடிப்படை உள்கட்டமைப்புக்குக் கூட நிதி ஒதுக்காமல் ஆசிரியர்களின் தலையில் சுமத்துவது என்ன மாதிரியான நிதி மேலாண்மை?</p><h2>திரும்பப் பெற வேண்டும்</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஆசிரியர்கள் </a>என்பவர்கள் கல்வி புகட்டும் வழிகாட்டிகளே அன்றி, அரசின் நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்டும் நிதியமைப்புகள் அல்ல. எனவே, தலைமை ஆசிரியர்களைச் சொந்த நிதியைச் செலவழிக்க நிர்ப்பந்திக்கும் இந்த எதேச்சதிகார உத்தரவுகளைப் பள்ளிக் கல்வித்துறை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். திட்டத்திற்குத் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் உபகரணங்களுக்கான முழு நிதியையும் அரசே நேரடியாகப் பள்ளிகளுக்கு முன்கூட்டியே வழங்கி, ஆசிரியர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்க வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>139 சவரன் நகைகள் மோசடி செய்த அடகுக்கடை உரிமையாளர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pawn-shop-owner-arrested-for-defrauding-139-sovereigns-of-jewels</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pawn-shop-owner-arrested-for-defrauding-139-sovereigns-of-jewels#comments</comments><guid isPermaLink="false">4efaeb5e-ad81-4ed5-952d-3ed26bfa5f0a</guid><pubDate>Sun, 13 Sep 2026 06:22:12 +0000</pubDate><atom:updated>2026-09-13T06:22:12.119Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நகைகள்,கைது,arrest,Theni,தேனி,மோசடி,fraud,jewelry,உரிமையாளர்,owner,அடகுக்கடை,pawnshop</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/uhmgzixb/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நகை மோசடி, கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/uhmgzixb/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF">தேனி</a> மாவட்டத்தில் 139 சவரன் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF">நகைகள் மோசடி</a> செய்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88">அடகுக்கடை</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D">உரிமையாளரை</a> போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர்.</p><h2>139 சவரன் நகைகள் மோசடி</h2><p>தேனி மாவட்டம், வருசநாடு தும்மக்குண்டுவைச் சேர்ந்த துரைமுருகன் (வயது 38), ஆண்டிப்பட்டியில் நகை அடகுக்கடை நடத்தி வந்தார். இவரிடம் ரமேஷ் உள்ளிட்ட 64 வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த 139 சவரன் நகைகளை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்துவிட்டு உரிமையாளர் தலைமறைவானார்.</p><h2>அடகுக்கடை உரிமையாளர் கைது</h2><p>இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த கடையின் உரிமையாளர் துரைமுருகன், அவரது தந்தை முருகேசன், ஊழியர் ஸ்ரீமதி(26) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில், ஏற்கனவே ஸ்ரீமதி கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று உரிமையாளர் துரைமுருகன் கைது செய்யப்பட்டார்.</p>]]></content:encoded></item><item><title>அநாகரிக பேச்சு: திமுகவினரை கண்டித்த கனிமொழி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/uncivilized-speech-kanimozhi-reprimands-dmk-members</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/uncivilized-speech-kanimozhi-reprimands-dmk-members#comments</comments><guid isPermaLink="false">c73c8e24-c755-48c6-ae24-e6bbe52710bd</guid><pubDate>Sun, 13 Sep 2026 06:15:15 +0000</pubDate><atom:updated>2026-09-13T06:15:15.174Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,கனிமொழி,Kanimozhi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/f6ke6863/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/f6ke6863/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் விஜய்யின் பேச்சுக்கு பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தமிழக அரசியலில் மிசா கொடுமைகள் பற்றிய விவாதமும் எழுந்துள்ளது. இந்த நிலையில், விஜய் திமுக தலைவர் ஸ்டாலினின் தியாகத்தைக் கொச்சைப்படுத்திவிட்டதாகக் கூறி, திமுகவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தினர்.</p><p>சென்னை சைதாப்பேட்டையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர். அப்போது கூட்டத்தில் ஆ.ராசா பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆ. ராசாவின் சர்ச்சை பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.</p><p>இந்த நிலையில், திமுக ஆர்ப்பாட்டத்தில் கட்சியினரின் அநாகரிக பேச்சு சர்ச்சையான நிலையில் அதற்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு” என்ற திருக்குறளை பதிவிட்டுள்ளார். எதைக் காக்கத் தவறினாலும் நாவை காக்க வேண்டும் என்பதை கண்டிக்கும் வகையில் இந்த குறளை கனிமொழி பகிர்ந்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>குற்றால சீசன் முடிவுக்கு வந்தது.. தண்ணீர் வராததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-kutralam-season-has-come-to-an-end-tourists-are-disappointed-due-to-the-lack-of-water-flow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-kutralam-season-has-come-to-an-end-tourists-are-disappointed-due-to-the-lack-of-water-flow#comments</comments><guid isPermaLink="false">b0f2fa45-070d-418b-8812-cfcdd77c91fc</guid><pubDate>Sun, 13 Sep 2026 06:14:50 +0000</pubDate><atom:updated>2026-09-13T06:14:50.854Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tourists,சுற்றுலா பயணிகள்,குற்றால அருவி,Kutralam Falls</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/f5zewhzw/14.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/f5zewhzw/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><p>தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் பொதுவாக ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மிகச்சிறப்பாகவும் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும்படியும் இருக்கும். மழை தொடர்ந்து பெய்யும் பட்சத்தில் சீசன் மேலும் சில நாட்கள் வரை இருக்கும்.</p> <p>எல் நினோ காரணமாக இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாகவே பெய்தது. இதனால் பல குற்றால அருவிகளில் பல நாட்களில் குறைந்த அளவே நீர்வரத்து இருந்தது. இதற்கிடையே தற்போது அருவிகளில் நீர் வரத்து இன்றி முற்றிலும் வறண்டு காணப்பட்டது. அத்துடன், குற்றால சீசன் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதனால் அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>விழுப்புரம்: வீட்டிற்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் நகை திருட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/villupuram-jewelry-stolen-from-a-woman-sleeping-outside-her-house</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/villupuram-jewelry-stolen-from-a-woman-sleeping-outside-her-house#comments</comments><guid isPermaLink="false">e2fb0744-1610-4da5-b8f5-ada985b7e279</guid><pubDate>Sun, 13 Sep 2026 05:53:57 +0000</pubDate><atom:updated>2026-09-13T05:53:57.471Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>நகை திருட்டு,விழுப்புரம்,Villupuram,jewelry theft</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/spexm7s0/chainsnatching.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/spexm7s0/chainsnatching.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விழுப்புரம்,</p><p>விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியை சேர்ந்தவர் சேட்டு மனைவி செல்வி (வயது 45). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டிற்கு வெளியே படுத்து தூங்கினார். மறுநாள் காலை எழுந்தபோது கழுத்தில் அணிந்திருந்த 3.25 பவுன் தாலி சங்கிலியை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். </p><p>வீட்டிற்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்ததை நோட்டமிட்ட யாரோ மர்மநபர் நைசாக கழுத்தில் அணிந்திருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகையை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செல்வி சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிச் சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு; மருத்துவர்கள் அறிவுறுத்தல்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-fever-cases-in-chennai-and-suburbs-doctors-advisory</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-fever-cases-in-chennai-and-suburbs-doctors-advisory#comments</comments><guid isPermaLink="false">66f70f98-fc99-4590-8da3-856c9b193653</guid><pubDate>Sun, 13 Sep 2026 05:29:59 +0000</pubDate><atom:updated>2026-09-13T05:29:59.542Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Fever,காய்ச்சல் பாதிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/8nbs1gjb/dfcic.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/8nbs1gjb/dfcic.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் <a href="https://www.dailythanthi.com/">காய்ச்சல் பாதிப்புகள் </a>அதிகரித்து காணப்படுகின்றன.</p><p>சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் சமீப நாட்களாக காய்ச்சல் பாதிப்புகளால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.  கடந்த ஆகஸ்டு மாதத்தில் காய்ச்சல் ஏற்பட்ட 4,500 பேரில் 160 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.</p> <h2>டெங்கு பாதிப்பு</h2><p>இந்த நிலையில், கடந்த 10 நாட்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  காய்ச்சல் ஏற்பட்ட 2 ஆயிரம் பேரில் 140 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  கடந்த ஆகஸ்டு மாதத்துடன் ஒப்பிடும்போது, இது சற்று அதிகம் ஆகும்.  அடையாறு, அண்ணா நகர், வளசரவாக்கம் மண்டலங்களில் பாதிப்பு அதிக அளவில் பதிவாகியுள்ளது.</p> <h2>மருத்துவர்கள் அறிவுறுத்தல்</h2><p>இதனையடுத்து, இன்புளூயன்சா ஏ, ரைனோ வைரஸ், ஆர்.எஸ்.வி. உள்ளிட்ட வைரஸ்கள் பரவி வருகின்றன என மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.  குடும்பத்தில் ஒருவருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டால், அது மற்றவர்களுக்கும் விரைவாக பரவக்கூடும்.  அதனால், மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும், காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.</p><p>கொசுக்கள் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், வீடுகளில் தண்ணீர் தேங்கவிடாமல், சுற்றுப்புற தூய்மையை பேணும்படியும், வீடுகள், கட்டிடங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குப்பைகள், கழிவுகளை அகற்றி தூய்மையாக வைத்திருக்கவும் மருத்துவர்கள் தீவிர அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>ரெயில்வேயில் தொழில் பழகுனர் நியமனம்: பிற மாநிலத்தவருக்கு வாய்ப்பு வழங்கும் முயற்சி - அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/railway-apprenticeship-recruitment-move-to-offer-opportunities-to-candidates-from-other-states-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/railway-apprenticeship-recruitment-move-to-offer-opportunities-to-candidates-from-other-states-anbumani#comments</comments><guid isPermaLink="false">a6951e30-305d-4ef3-872e-4a18634cd5a7</guid><pubDate>Sun, 13 Sep 2026 05:29:16 +0000</pubDate><atom:updated>2026-09-13T05:29:16.453Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK,அன்புமணி,Anbumani</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/8r3wwam4/anbumani.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/8r3wwam4/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தெற்கு ரெயில்வேயில் தொழில் பழகுனர் நியமனம் தமிழர்களின் வாய்ப்புகளை பிற மாநிலத்தவர்க்கு தாரைவார்க்கும்  சதியை  முறியடிக்க வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளார். </p><h2>தொழில் பழகுனர்கள் நியமனம்</h2><p>இது தொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>தெற்கு ரெயில்வேயின் தமிழக எல்லைக்குபட்பட்ட பணிமனைகளில் தொழில் பழகுனர்கள் (Apprenticeship) பயிற்சிக்காக 6,171 தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமான விதிகளை புறந்தள்ளிவிட்டு, வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிக்கையின் முலம் தமிழகத்தில் உள்ள தொழில் பழகுனர் பயிற்சி இடங்களை பிற மாநிலத்தவருக்கு தாரை வார்க்க தெற்கு ரெயில்வே முயற்சி செய்வது கண்டிக்கத்தக்கது.</p><p>தெற்கு ரெயில்வேயில் சென்னை, மதுரை, திருச்சி பொன்மலை மத்திய பணிமனை, சேலம், பெரம்பூர் கேரஜ் மற்றும் வேகன் ஒர்க்ஸ், பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ், கோவை, அரக்கோணம் பொறியியல் பணிமனை, கோவை போத்தனூர் சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பணிமனை ஆகிய இடங்களில் 6,171 தொழில் பழகுனர் பயிற்சி இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்கு இம்மாதம் 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிக்கையில் தான் விதிமீறல்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன.</p><h2>பணி தாரைவார்ப்பு</h2><p>22.07.2002 தேதியிட்ட ரெயில்வே வாரிய சுற்றறிக்கை மற்றும் 05.05.1984- தேதியிட்ட தொழில் பழகுனர் தேர்வு வழிகாட்டி விதிமுறைகளின்படி பணி இடங்களில் இருந்து100 கி.மீ சுற்றளவில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆனால், இந்த விதியை மீறி வட இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் தெற்கு ரெயில்வேயில் நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு எழுந்ததையடுத்து, தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இருப்பவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என 2019-ஆம் ஆண்டில் விதிகள் மாற்றப்பட்டன.</p><p>ஆனால், இந்த விதியும் இப்போது மீறப்பட்டுள்ளது. தொழில் பழகுனர் நியமன அறிவிக்கையில், தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருக்க வேண்டும் என்ற பிரிவு நீக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தட்சிண கன்னடா பகுதி, ஆந்திராவின் நெல்லூர், சித்தூர் பகுதி மற்றும் கேரளாவில் இருப்பவர்களும், அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவு போன்ற பிற மாநிலங்களில் இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழக இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய தொழில் பழகுனர் பணி பிற மாநிலத்தவருக்கு தாரைவார்க்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதை அனுமதிக்க முடியாது.</p><h2>உரிமைக்கு மீண்டும் ஆபத்து</h2><p>கால் நூற்றாண்டுக்கும் கூடுதலாகவே தெற்கு தொடர்வண்டித்துறையில் உள்ள பணிகளை பிற மாநிலத்தவர் பறித்துக் கொள்கின்றனர். தொழில் பழகுனர் வாய்ப்புகளும் அதே போல் பறிக்கப்பட்டு வந்த நிலையில் தான், நீண்ட போராட்டத்தின் மூலம் 2019-ஆம் ஆண்டில் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு உரிமை மீட்டெடுக்கப்பட்டது. அந்த உரிமைக்கு தான் இப்போது மீண்டும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.</p><p>தமிழக இளைஞர்களின் தொழில் பழகுனர் வாய்ப்புகளை பறிக்கும் நோக்கம் கொண்ட அறிவிக்கையை தெற்கு ரெயில்வே உடனடியாக ரத்து செய்ய வேண்டும். <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழக வேலைவாய்ப்பு</a> அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள் மட்டும் தான் இந்தப் பொறுப்புக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற விதியை சேர்த்து புதிய ஆள்தேர்வு அறிவிக்கையை தெற்கு ரெயில்வே புதிதாக வெளியிட வேண்டும். இதற்காக ரெயில்வே வாரியத்திற்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சிலை ஊர்வலம்: திருச்சியில் 16-ந்தேதி போக்குவரத்து மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-idol-procession-traffic-diversions-in-trichy-on-the-16th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-idol-procession-traffic-diversions-in-trichy-on-the-16th#comments</comments><guid isPermaLink="false">7a5e0c9c-cdf9-49f4-a4aa-d854d87c054e</guid><pubDate>Sun, 13 Sep 2026 05:25:28 +0000</pubDate><atom:updated>2026-09-13T05:25:28.903Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>போக்குவரத்து மாற்றம்,ஊர்வலம்,Ganesha procession,change of traffic</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/qh6uyhzq/traffic.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/qh6uyhzq/traffic.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>திருச்சி,  </p><p>விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி திருச்சியில் வருகிற 16-ந்தேதி போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.</p><h2>நகர பஸ்கள்</h2><p>திருச்சி காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் வருகிற 16-ந்தேதி கரைக்கப்பட உள்ளது. இதையொட்டி அன்று மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-</p><p>திருச்சி நெ.1 டோல்கேட்டில் இருந்து வரும் அனைத்து நகரப் பஸ்களும், மாம்பழச்சாலையில் பயணிகளை இறக்கிவிட்டு, அம்மா மண்டபம், ஸ்ரீரங்கம் பெரிய கோபுரம், திருவானைக்காவல் வழியாக மீண்டும் நெ.1 டோல் கேட் செல்ல வேண்டும். இதேபோல், மத்திய பஸ் நிலையத்தில் இருந்து வரும் அனைத்து நகரப் பஸ்களும் சத்திரம் பஸ் நிலையத்துடன் தற்காலி கமாக நிறுத்த வேண்டும். </p><p>திருவெறும்பூரில் இருந்து சத்திரம் பஸ் நிலையத்திற்கு செல்லும் அனைத்து நகர பஸ்களும் தேவைப்பட்டால் மாலை 6 மணிக்குமேல் டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் நிலையம் வழியாக மத்திய பஸ் நிலையம் வழியாக செல்ல வேண்டும். பஞ்சப்பூர் மற்றும் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சத்திரம் பஸ் நிலையத்திற்கு பாலக்கரை வழியாக செல்லும் அனைத்து நகர பஸ்களும் மாலை 6 மணிக்குமேல் எம்.ஜி.ஆர். சிலை, மாணவர்கள் சாலை, சாஸ்திரி ரோடு மார்க்கமாக செல்ல வேண்டும்.</p><h2></h2><h2>புறநகர் பஸ்கள்</h2><p>மேலும், துறையூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் பகுதிகளில் இருந்து வரும் அனைத்து புறநகர் பஸ்களும் புறவழிச்சாலை வழியாக பால்பண்ணை டி.வி.எஸ். டோல்கேட் சென்று, மத்திய பஸ் நிலையம் வந்தடைய வேண்டும். அங்கிருந்து மீண்டும் தங்களது வழித்த டத்தில் இயக்கப்பட வேண்டும். அண்ணாசிலை முதல் ஓடத்துறை, சஞ் சீவி நகர் வழியாகவும், மாம்பழச்சாலையில் இருந்து அண்ணாசிலை வழி யாகவும் எந்த விதமான வாகன போக்குவரத்திற்கும் அனுமதி இல்லை.</p><h2>சிலைகள் கரைக்க செல்ல வேண்டிய வழித்தடம்</h2><p>பெரம்பலூர், அரியலூர், மண்ணச்சநல்லூர், லால்குடி சாலைகளின் வழி யாக வரும் விநாயகர் சிலைகள் நெ.1 டோல்கேட், திருவானைக்காவல், மாம்பழச்சாலை வழியாக காவிரி ஆற்றின் இடதுபுறமும், திருவெறும்பூர் சாலை வழியாக வரும் சிலைகள் பாலக்கரை, காந்திமார்க்கெட் வளைவு, பெரியகடை வீதி, அண்ணாசிலை வழியாக காவிரி பாலத்தின் வலதுபுற மும் கரைத்து செல்ல வேண்டும்.</p><p>புதுக்கோட்டை சாலை வழியாக வரும் சிலைகள் டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் நிலையம், பிரபாத் ஜங்ஷன். அஞ்சுமன் சாலை, காந்தி மார்க்கெட் வளைவு, பெரியகடை வீதி, அண்ணாசிலை வழியாக காவிரி ஆற்றின் வலதுபுறமும், திண்டுக்கல் சாலை வழியாக வரும் சிலைகள் பொன்னகர், பெரியமிளகுபாறை, கலெக்டர் அலுவலகம், வெஸ்ட்ரி ரவுண்டனா, எம்.ஜி.ஆர். சிலை, ஸ்டூடன்ஸ் சாலை, சாஸ்திரி ரோடு, கரூர் பைபாஸ் ரோடு,அண்ணாசிலை வழியாக காவிரியின் வலதுபுறமும், வய லூர் சாலை வழியாக வரும் சிலைகள் புத்தூர் 4 ரோடு, தெற்கு ஆர்ச். வடக்கு ஆர்ச், கே.டி. ஜங்ஷன், கரூர் பைபாஸ் ரோடு, அண்ணாசிலை வழியாக காவிரியின் வலதுபுறமும், குழுமணி சாலை வழியாக வரும் சிலைகள் வெக்காளியம்மன் நகர், ஜங்ஷன் சாலைரோடு தெற்கு ஆர்ச், கே.டி. ஜங்ஷன், கரூர் பைபாஸ் ரோடு, அண்ணாசிலை வழியாக காவிரி யின் வலதுபுறம் சிலைகளை கரைத்து செல்ல வேண்டும்.</p><h2></h2><h2>கனரக வாகனங்கள்</h2><p>மதுரையில் இருந்து சென்னைக்கு செல்லும் கனரக வாகனங்கள் துவரங்குறிச்சி லஞ்சமேடு வழியாக மணப்பாறை, குளித்தலை, முசிறி, பெரம்பலூர் வழியாக செல்ல வேண்டும். சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் வாகனங்கள் பெரம்பலூர் ரோவர் கல்லூரி பைபாஸ், முசிறி, குளித்தலை, மணப்பாறை, துவரங்குறிச்சி வழியாக செல்ல வேண்டும்.</p><p>திண்டுக்கலில் இருந்து சென்னைக்கு மணப்பாறை ஆண்டவர் கோவில், குளித்தலை, முசிறி, பெரம்பலூர் வழியாக செல்ல வேண்டும்., சென்னையில் இருந்து திண்டுக்கல்லுக்கு பெரம்பலூர் ரோவர் கல்லூரி பைபாஸ், முசிறி, குளித்தலை, மணப்பாறை வழியாக செல்ல வேண்டும்.</p><p>கரூரில் இருந்து தஞ்சாவூருக்கு குளித்தலை சுங்கேட், முசிறி, பெரம்ப லூர், அரியலூர், திருவையாறு வழியாக செல்ல வேண்டும். தஞ்சாவூரில் இருந்து கரூருக்கு தஞ்சாவூர் பெஸ்ட் பள்ளி சந்திப்பு, திருவையாறு. அரி யலூர், பெரம்பலூர், முசிறி, குளித்தலை வழியாக செல்ல வேண்டும். நாமக்கல்லில் இருந்து தஞ்சாவூருக்கு முசிறி பெரியார்பாலம் பூங்கா, பெரம்பலூர், அரியலூர், திருவையாறு வழியாக செல்ல வேண்டும். தஞ்சாவூரில் இருந்து நாமக்கல்லுக்கு தஞ்சாவூர் பெஸ்ட் பள்ளி சந்திப்பு, திருவையாறு, அரியலூர், பெரம்பலூர், முசிறி வழியாக செல்ல வேண்டும். புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு புதுக்கோட்டை சிப்காட் ரெங்கம்மாள் சத்திரம், தஞ்சாவூர், திருவையாறு, அரியலூர், பெரம்பலூர் வழி யாக செல்ல வேண்டும். சென்னையில் இருந்து புதுக்கோட்டைக்கு பெரம்பலூர் ரோவர் கல்லூரி பைபாஸ், அரியலூர், திருவையாறு, தஞ்சாவூர் வழியாக புதுக்கோட்டைக்கும் செல்ல வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>மளிகை கடைக்காரரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம்: போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs50-thousand-bribe-from-grocery-shopkeeper-police-report-dismissal</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs50-thousand-bribe-from-grocery-shopkeeper-police-report-dismissal#comments</comments><guid isPermaLink="false">3ded4ebb-b517-4830-9666-5ee59d612ed2</guid><pubDate>Sun, 13 Sep 2026 05:25:01 +0000</pubDate><atom:updated>2026-09-13T05:25:01.438Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Mayiladuthurai,லஞ்சம்,Bribery,மயிலாடுதுறை,பணியிடை நீக்கம்,Dismissal,Head Constable,போலீஸ் ஏட்டு,Grocery shopkeeper,மளிகை கடைக்காரர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/d8u96aol/%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82.50-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மளிகை கடைக்காரரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம்: போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/d8u96aol/%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82.50-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மயிலாடுதுறை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">மயிலாடுதுறை</a> மாவட்டத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">புகையிலை பொருட்கள் பறிமுதல்</a> செய்யப்பட்ட வழக்கில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D">மளிகை கடைக்காரரிடம்</a> ரூ.50 ஆயிரம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">லஞ்சம்</a> வாங்கிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">போலீஸ் ஏட்டு</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">பணியிடை நீக்கம்</a> செய்யப்பட்டார்.</p><h2>மளிகை கடைக்காரரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்ட போலீஸ் ஏட்டு</h2><p>மயிலாடுதுறை மாவட்டம், பொறையாறு அருகே மளிகை கடையில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், கடை உரிமையாளரை ஜாமீனில் விடுவிக்க இடைத்தரகர் மூலம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பொறையாறு போலீஸ் ஏட்டு அன்பரசன்(45) பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். </p><h2>பணியிடை நீக்கம்</h2><p>புகையிலை பொருட்கள் பறிமுதல் குறித்து கடை உரிமையாளர், வக்கீல் சங்கமித்திரனிடம் தெரிவித்தபோது லஞ்சம் கைமாறியது தெரியவந்தது. இதுகுறித்து முதல்-அமைச்சர் தனிப்பிரிவு மற்றும் எஸ்.பி.யிடம் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, எஸ்.பி. சினேகாபிரியா, ஏட்டு அன்பரசனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். </p>]]></content:encoded></item><item><title>திராணி இல்லாமல் ஆபாசமாக பேச வைப்பதுதான் உங்களின் ஆயுதமா? - மு.க.ஸ்டாலினுக்கு நிர்மல்குமார் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-staging-a-platform-to-make-people-speak-obscenely-your-only-weapon-nirmal-kumar-questions-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-staging-a-platform-to-make-people-speak-obscenely-your-only-weapon-nirmal-kumar-questions-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">4bda7489-0a68-4336-b7e3-ea2c1be923e5</guid><pubDate>Sun, 13 Sep 2026 05:22:58 +0000</pubDate><atom:updated>2026-09-13T05:22:58.282Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,M.K.Stalin,CTR Nirmal kumar,சி.டி.ஆர்.நிர்மல்குமார்,நிர்மல்குமார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/8dzdiind/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/8dzdiind/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>சர்ச்சை பேச்சு</h2><p>சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் விஜய்யின் பேச்சுக்கு பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தமிழக அரசியலில் மிசா கொடுமைகள் பற்றிய விவாதமும் எழுந்துள்ளது. இந்த நிலையில், விஜய் திமுக தலைவர் ஸ்டாலினின் தியாகத்தைக் கொச்சைப்படுத்திவிட்டதாகக் கூறி, திமுகவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தினர்.</p><p>சென்னை சைதாப்பேட்டையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர். அப்போது கூட்டத்தில் ஆ.ராசா பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆ. ராசாவின் சர்ச்சை பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வந்தனர்.</p><h2>அதிர்ச்சியில் பெண்கள்...</h2><p>இந்த நிலையில், ஆ.ராசா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><p>மேடைபோட்டு என்னை பற்றியும் எங்கள் தலைவர் குறித்தும் ஆபாசமாக பேச வைப்பதுதான் உங்களின் கடைசி ஆயுதமா திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்?. நேற்று ஆர்பாட்டம் என்ற பெயரில் உங்கள் கட்சியினர் நடத்திய ஆபாச நாடகம் தமிழக மக்கள் குறிப்பாக பெண்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது என்பதை என்று உணர்வீர்கள்?.</p><p>எப்போதெல்லாம் திமுகவை நோக்கி ஊழல், துரோகம், உங்களின் பொய்கள் பற்றி கேள்வி எழுகிறதோ அன்று திமுக எடுக்கும் ஆயுதம் வன்முறை அல்லது ஆபாச பேச்சு. தரமற்ற திமுகவினரின் பேச்சுக்களை அவர்களின் இல்லத்தில் உள்ள பெண்கள், குழந்தைகளிடம் காட்ட முடிகிறதா மு.க.ஸ்டாலின்?.</p><h2>திராணி இல்லாமல்...</h2><p>திமுகவால் அரசியலை விட்டு ஒதுங்கிய மக்கள் இன்று தளபதியால் மீண்டும் அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளனர் அரசியலில் ஒவ்வொரு அசைவும் மக்களால் தணிக்கை செய்யப்படுகிறது என்பதை உணர்கிறீர்களா மு.க.ஸ்டாலின்?. குழந்தைகள், பெண்களில் முகமாக இருக்கும் தளபதியின் தவெகவை எதிர்கொள்ள திராணி இல்லாமல் தெருவில் இறங்கி திமுகவினர் செய்யும் அட்டூழியங்களை என்றும் நேர்மையாக மட்டுமே எதிர்கொள்வோம்.</p><p>நீங்கள் திருந்துவதற்கு வாய்பில்லை, அதேநேரம் தமிழக அரசியலில் இருந்து திமுகவின் முடிவுரையை விரைவில் மக்கள் எழுதுவார்கள் என்பது மட்டும் நிச்சயம். புரட்சி தலைவர் கூறியதை தான் மீண்டும் … மீண்டும் நினைவு படுத்த விரும்புகிறேன் “தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தி:  ஞாயிறு அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரெயில் இயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-chaturthi-metro-rail-services-to-operate-tomorrow-according-to-the-sunday-schedule</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-chaturthi-metro-rail-services-to-operate-tomorrow-according-to-the-sunday-schedule#comments</comments><guid isPermaLink="false">f62f3ec6-f3bb-4033-a290-2bc8f9cf9177</guid><pubDate>Sun, 13 Sep 2026 05:09:23 +0000</pubDate><atom:updated>2026-09-13T05:09:23.382Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மெட்ரோ ரெயில்,Chennai Metro Train,Metro train,விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chathurthi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/n7hdil3o/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/n7hdil3o/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாடுமுழுவதும் விநாயகர் சதுர்த்தி நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நாளை அரசு விடுமுறை தினம் என்பதால், மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியையொட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p><strong>இதுதொடர்பாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில்,</strong></p><p>காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை பின்வரும் நேர இடைவெளிகளில் இயக்கப்படும்.</p><p>* காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.</p><p>* நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.</p><p>* இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.</p><p>* இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தென்காசி அருகே ஆற்றுக்குள் கவிழ்ந்த அரசுப்பேருந்து; 30 பயணிகள் படுகாயம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-bus-overturns-in-river-near-tenkasi-30-passengers-injured</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-bus-overturns-in-river-near-tenkasi-30-passengers-injured#comments</comments><guid isPermaLink="false">e754e2c6-2c8f-4351-8b6d-f1f35c0d2a96</guid><pubDate>Sun, 13 Sep 2026 04:59:05 +0000</pubDate><atom:updated>2026-09-13T04:59:05.772Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Government bus,Tenkasi,தென்காசி,அரசுப்பேருந்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/j9jkt4xk/tdtip.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/j9jkt4xk/tdtip.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>தென்காசி</p><p>தென்காசி அருகே ஆற்றுக்குள் அரசுப்பேருந்து கவிழ்ந்ததில் 30 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.</p><p>தென்காசி அருகே வேட்டைக்காரன் குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த அரசுப்பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த ஆற்றுக்குள் கவிழ்ந்தது.</p> <h2>30 பயணிகள்</h2><p>இந்த விபத்தில் சிக்கிய பேருந்தில் இருந்த பயணிகள் பலர் அலறி கூச்சலிட்டனர்.  பேருந்து தலைகுப்புற கவிழ்ந்ததில் 30 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.  இதனை தொடர்ந்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.</p><p>இந்த சம்பவத்தில், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  விபத்துக்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரிய வரவில்லை.  அதுபற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>சுபமுகூர்த்த நாள், விநாயகர் சதுர்த்தி: பூக்கள் விலை கிடுகிடு உயர்வு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/auspicious-day-and-vinayagar-chaturthi-flower-prices-skyrocket</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/auspicious-day-and-vinayagar-chaturthi-flower-prices-skyrocket#comments</comments><guid isPermaLink="false">7afe4596-2f15-4a2f-adc8-7b2fbe17ac13</guid><pubDate>Sun, 13 Sep 2026 04:48:07 +0000</pubDate><atom:updated>2026-09-13T04:48:07.901Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Vinayagar Chaturthi,விநாயகர் சதுர்த்தி,பூக்கள் விலை,flower prices</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/ex04wj5f/10.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/ex04wj5f/10.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சேலம்,  </p><p>சுபமுகூர்த்த நாள் மற்றும் விநாயகர் சதுர்த்தியையொட்டி சேலத்தில் நேற்று பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது. குண்டுமல்லி கிலோ ரூ1,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.</p><h2>பூக்கள் விலை உயர்வு</h2><p>சேலம் கடைவீதி பகுதியில் வ.உ.சி. பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க் கெட்டுக்கு ஓமலூர், காடையாம்பட்டி, வீராணம், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குண்டுமல்லி, சன்னமல்லி, சாமந்தி, அரளி உள் ளிட்ட பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இன்று (ஞாயிற் றுக்கிழமை) சுபமுகூர்த்த நாள் மற்றும் நாளை (திங்கட்கிழமை) விநாய கர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.</p><p>இதையொட்டி நேற்று குண்டுமல்லி, சன்னமல்லி உள்ளிட்ட பூக்கள் விலை கடுமையாக உயர்ந்தது. அதாவது கடந்த வாரம் கிலோ ரூ.600 வரை விற்ற குண்டுமல்லி நேற்று ரூ.1,600-க்கு விற்பனையானது. கடந்த வாரம் ரூ.400 வரை விற்பனையான சன்னமல்லி நேற்று ரூ.1,300-க்கும், கடந்த வாரம் ரூ.280 வரை விற்கப்பட்ட ஜாதிமல்லி நேற்று ரூ.600-க்கும் விற்பனை செய்யப்பட்டன.</p><h2></h2><h2>வெள்ளை அரளி, காக்கட்டான்</h2><p>இதேபோல் காக்கட்டான், கலர் காக்கட்டான், மலை காக்கட்டான் ஆகியவை கிலோ ரூ.400-க்கும், அரளி 240-க்கும், வெள்ளை அரளி, மஞ்சள் அரளி, ஐ.செவ்வரளி ஆகியவை தலா ரூ.300-க்கும், நந்தியா வட்டம் ரூ.450-க்கும், சிந்தியா வட்டம் ரூ.800-க்கும், சாமந்தி ரூ.500-க்கும், சாதா சம்பங்கி ரூ.600-க்கும் விற்கப்பட்டன.</p><p>வ.உ.சி. பூ மார்க்கெட்டில் நேற்று மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதி கமாக இருந்தது. விலை உயர்வால் அவர்கள் பூக்களை குறைவாக வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது. விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் சுப முகூர்த்த நாட்கள் வர உள்ளதால் இந்த விலை உயர்வு இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>மகளுக்கு இன்று திருமணம்: மின்சாரம் தாக்கி தந்தை பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/daughters-wedding-today-father-dies-of-electrocution</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/daughters-wedding-today-father-dies-of-electrocution#comments</comments><guid isPermaLink="false">ddf4618b-c18a-4fc8-af81-58132ea92fa7</guid><pubDate>Sun, 13 Sep 2026 04:40:14 +0000</pubDate><atom:updated>2026-09-13T04:40:14.287Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமணம்,Marriage,ராமநாதபுரம்,Ramanathapuram,Father,மின்சாரம் தாக்கி பலி,தந்தை,மகள்,daughter,electrocuted to death</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/s4eddnvp/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்சாரம் தாக்கி பலி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/s4eddnvp/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமநாதபுரம், </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">ராமநாதபுரம்</a> மாவட்டத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">மகளுக்கு</a> இன்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D">திருமணம்</a> நடக்க இருந்த நிலையில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF">மின்சாரம் தாக்கி</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF">தந்தை பலி</a>யான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. </p><h2>மகளுக்கு இன்று திருமணம்</h2><p>ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணியை அடுத்த ரெகுநாதபுரம் அருகே உள்ள கொல்லந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 58). இவரது இளைய மகள் முனீசுவரிக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. </p><h2>மட்டை வேலியை கம்பியால் கட்டும் பணி</h2><p>இந்த நிலையில் கருப்பையா வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது வீட்டைச்சுற்றி அமைக்கப்பட்டிருந்த மட்டை வேலி சரிந்து கிடந்ததால் அதனை கம்பியால் கட்டி ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டார். </p><h2>மின்சாரம் தாக்கி பலி</h2><p>அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டின் மின் இணைப்பு மீட்டர் பெட்டி மீது கம்பி உரசியதாக தெரிகிறது. அப்போது கருப்பையாவை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.</p>]]></content:encoded></item><item><title>நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள் - ஆ.ராசா </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-you-do-not-mend-your-ways-you-will-be-set-right-a-raja</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-you-do-not-mend-your-ways-you-will-be-set-right-a-raja#comments</comments><guid isPermaLink="false">ee963de9-9ab4-4b73-8f99-e91110bd9670</guid><pubDate>Sun, 13 Sep 2026 04:38:51 +0000</pubDate><atom:updated>2026-09-13T04:38:51.743Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,ஆ.ராசா,A.Raja,ஆ.ராசா எம்.பி.,ஆ.ராசா பேச்சு,A. Raja</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/gm3rwn68/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆ.ராசா ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/gm3rwn68/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் விஜய்யின் பேச்சுக்கு பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தமிழக அரசியலில் மிசா கொடுமைகள் பற்றிய விவாதமும் எழுந்துள்ளது. இந்த நிலையில், விஜய் திமுக தலைவர் ஸ்டாலினின் தியாகத்தைக் கொச்சைப்படுத்திவிட்டதாகக் கூறி, திமுகவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தினர்.</p><h2>ஆ.ராசா பேச்சுக்கு கண்டனம்</h2><p>சென்னை சைதாப்பேட்டையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர். அப்போது கூட்டத்தில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu/a-rajas-controversial-speech-minister-vanni-arasu-condemns-it">ஆ.ராசா </a>பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.</p><p>ஆ. ராசாவின் சர்ச்சை பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வந்தனர். இந்த நிலையில், ஆ.ராசா இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்</h2><p>தியாகத்தில் விளைந்த ஒரு தலைவனின் ‘அடையாளத்தை’ - உண்மை’யை வேண்டுமென்றே திட்டமிட்டு உள்நோக்கத்தோடு மீண்டும் மீண்டும் ‘பொய்’ என்று கொச்சைப்படுத்தி ‘ஏளனம்’ செய்ததால் ஏற்பட்ட ‘வலியை’ உணர்த்த ஏளனம் செய்தவரின் ‘அடையாளத்தை’ ‘உண்மையை’ உணர்ச்சி உந்துதலில் கேள்விக்குள்ளாக்கியதில் எனக்கும் வருத்தம்தான்;</p><p>என் வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் எனக்குத்தயக்கமில்லை.</p><p>நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோவில் திருவிழாவில் மனைவிக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி: 200 தம்பதிகள் பங்கேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/event-honoring-wives-at-temple-festival-200-couples-participate</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/event-honoring-wives-at-temple-festival-200-couples-participate#comments</comments><guid isPermaLink="false">79318853-b439-48fe-9f5e-c0499f43bc5c</guid><pubDate>Sun, 13 Sep 2026 04:24:44 +0000</pubDate><atom:updated>2026-09-13T04:24:44.004Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கணவர்,husband,wife,மனைவி,ஆலங்குளம்,Temple festival,கோவில் திருவிழா,Alangulam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/o0uny1i8/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/o0uny1i8/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>ஆலங்குளம்,</p><p>தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் ஸ்ரீமன் ராமசாமி மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பெண்களின் பெருமையை போற்றும் வகையில் ஆலங்குளம் மனவளக்கலை மன்றம் சார்பில் மனைவிக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி, மனைவி நல வேட்பு விழா நடைபெற்றது. </p><p>விழாவில் ஒவ்வொரு கணவரும் தங்கள் மனைவிக்கு ரோஜா மலர் கொடுத்து தலையில் சூட்டிவிட்டு அன்பை வெளிப்படுத்தினர். தம்பதிகள் கையில் மஞ்சள் கயிறு கட்டி ஒருவருக்கு ஒருவர் மாலை மாற்றிக் கொண்டனர். வாழ்க்கையில் இன்ப துன்பங்களில் பிரியாமல் துணை நிற்கும் மனைவிகளின் கரங்களை பற்றிக்கொண்டு கணவர்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.</p><p>மனைவிகள் தங்கள் கணவர்களுக்கு வாழைப்பழம் கொடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். இல்லற வாழ்க்கையில் என்றும் மகிழ்ச்சியும், அமைதியும் நிலைத்திருக்க அதற்கான வழிமுறைக்கான சொற்பொழிவு நடைபெற்றது. இதில் மருதம்புத்தூர் பகுதியை சேர்ந்த 200 தம்பதிகள் பங்கேற்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பிரிக்ஸ் மாநாடு: ராமேஸ்வரம் கோவில் புகழை உலகறியச் செய்த பிரதமருக்கு நன்றி - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/brics-summit-thanks-to-the-prime-minister-for-showcasing-the-fame-of-the-rameswaram-temple-to-the-world-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/brics-summit-thanks-to-the-prime-minister-for-showcasing-the-fame-of-the-rameswaram-temple-to-the-world-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">7dd967a1-ec7f-43f1-adf1-e367b901843c</guid><pubDate>Sun, 13 Sep 2026 04:14:34 +0000</pubDate><atom:updated>2026-09-13T04:14:34.081Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,பிரதமர் மோடி,PM Modi,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Rameswaram,Modi,ராமேஸ்வரம்,Rameswaram Temple,ராமேஸ்வரம் கோவில்,BRICS Summit,பிரிக்ஸ் மாநாடு,மோடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/1cj4li9t/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/1cj4li9t/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ராமேஸ்வரம் கோவில் பிரகாரத்தை முன்னிறுத்தி அதன் புகழை உலகறியச் செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.</p><h2>ராமேஸ்வரம் கோவில்</h2><p>இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>தலைநகர் புதுடெல்லியில் உலகப் பொருளாதாரத்தின் முன்னணி நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் (BRICS) அமைப்பின் உச்சி மாநாடு வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் தொடங்கியுள்ளது. சர்வதேச அரங்கில் பாரதத்தின் பெருமையும் செல்வாக்கும் விண்ணைத் தொட்டு நிற்கும் இவ்வேளையில், உலகத் தலைவர்களை வரவேற்கும் முதன்மை நுழைவு வாயிலில், தமிழகத்தின் வரலாற்றுப் புகழ்பெற்ற ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவில் பிரகாரத்தின் பிரம்மாண்டப் பின்னணியை அமைத்து, தமிழர்களின் கட்டிடக்கலையையும் ஆன்மிகப் பெருமையையும் உலக நாடுகளை வியந்து நோக்கச் செய்துள்ளார் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி.</p><p>ராமேஸ்வரம் திருக்கோவிலின் பிரகாரங்கள், உலகளவில் கட்டிடக்கலையின் ஈடுஇணையற்ற சாதனையாகப் போற்றப்படுபவை. சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட உலகின் மிக முக்கிய வல்லரசுத் தலைவர்களை இந்தப் பிரம்மாண்டப் பின்னணியில் நின்று கைகுலுக்கி வரவேற்றதோடு மட்டுமல்லாமல், அந்தப் பிரகாரத்தின் வரலாற்று மகத்துவத்தை அவர்களுக்குத் தாமே ஆர்வத்துடன் பிரதமர் மோடி விளக்கிய காட்சி, உலகெங்கும் வாழும் ஒவ்வொரு தமிழனையும் பெருமிதத்தில் திளைக்கச் செய்துள்ளது.</p><h2>பிரதமருக்கு மனமார்ந்த நன்றி</h2><p>தமிழ் மொழி, தமிழ்ப் பண்பாடு, தமிழகக் கலாசாரத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி கொண்டுள்ள அளப்பரிய பற்றும் பாசமும் வாய்வார்த்தைக்கானது அல்ல; அது ஒவ்வொரு செயலிலும் பிரதிபலிக்கும் உண்மையான அன்பு என்பதை இச்சம்பவம் மீண்டும் நிரூபித்துள்ளது. இவ்வாறு தமிழகக் கலாசாரத்தையும், பெருமையையும் உலகத் தலைவர்களின் கண்களுக்குக் கொண்டு சேர்த்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு உலகத் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழர்களின் </a>சார்பிலும், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பிலும் எங்களது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-by-elections-naam-tamilar-katchi-candidates-to-be-announced-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-by-elections-naam-tamilar-katchi-candidates-to-be-announced-today#comments</comments><guid isPermaLink="false">f8711b5c-ccfd-4fba-81c4-28c53cbdba52</guid><pubDate>Sun, 13 Sep 2026 04:10:43 +0000</pubDate><atom:updated>2026-09-13T04:10:43.935Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நாம் தமிழர் கட்சி,இடைத்தேர்தல்,By election,மதுராந்தகம்,தாராபுரம்,Maduranthakam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/egpj79w9/Semman.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/egpj79w9/Semman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் த.வெ.க. சார்பில், மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல், தாராபுரத்தில் சத்யபாமா, அ.தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத். தாராபுரம் தொகுதியில் பானுமதி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் வக்கீல் பரந்தாமன், தாராபுரத்தில் (தனி) வக்கீல் சுகன்யா போட்டியிடுகின்றனர்.  </p><p>இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. பொதுத்தேர்தலின் போது நிறுத்தப்பட்ட வேட்பாளர்களே மீண்டும் நாம் தமிழர் கட்சி சார்பில் களமிறங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் 4 முனை போட்டி நிலவுவதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.</p><p>தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 16-ந்தேதி முடிவடைகிறது. இதுவரையில் முக்கிய கட்சிகள் யாரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்யவில்லை. சுயேச்சைகள் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை), நாளை (விநாயகர் சதுர்த்தி) விடுமுறை நாட்களாகும். எனவே வேட்புமனு தாக்கல் செய்ய செவ்வாய் மற்றும் புதன் கிழமை மட்டுமே உள்ளது. கடைசி நாளான புதன்கிழமை அன்று த.வெ.க., தி.மு.க. அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.</p> <p>வேட்புமனு தாக்கல் செய்த பிறகு தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்க உள்ளது. முதல்-அமைச்சர் விஜய் 2 கட்டமாக பிரசாரம் செய்ய இருக்கிறார். இந்த மாதம் 25-ந்தேதி மதுராந்தகத்தில் இருந்து அவர் பிரசாரத்தை தொடங்க உள்ளார். 27-ந்தேதி தாராபுரத்தில் பிரசாரம் மேற்கொள்வார். பின்னர் அக்டோபர் 2, 3-ந்தேதிகளில் மதுராந்தகம், தாராபுரத்தில் பிரசாரம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-the-nagercoil-coimbatore-express-train-service</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-the-nagercoil-coimbatore-express-train-service#comments</comments><guid isPermaLink="false">1835fa85-3682-4f7d-a2bb-ea35435442aa</guid><pubDate>Sun, 13 Sep 2026 03:51:31 +0000</pubDate><atom:updated>2026-09-13T03:51:31.606Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,Nagercoil,நாகர்கோவில்,ரெயில் சேவை,train service</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/zilhp92q/7.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/zilhp92q/7.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>பராமரிப்புப் பணிகள் காரணமாக நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாகர்கோவிலில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் (எண்:16321) வருகிற 19-ந்தேதி, 21-ந்தேதி, 22-ந்தேதி ஆகிய 3 நாட்கள் விருதுநகரில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக கரூர் சென்று கோவைக்கு புறப்படும். அன்று இந்த ரெயில் திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல்ரோடு, அம்பாத்துறை, திண்டுக்கல், எரியோடு, பாளையம் வழியாக செல்லாது.</p><p>இதுபோல் நாகர்கோவிலில் இருந்து வருகிற 19-ந்தேதி காலை 9.25 மணிக்கு புறப்படும் நாகர்கோவில்-கச்சிக்குடா வாராந்திர ரெயில் (எண்:16354) விருதுநகரில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்து மும்பை செல்லும். இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>கோவில் வளாகத்தில் காருக்குள் 2 மணிநேரம்... கல்லூரி மாணவியுடன் இருந்த காதலன் செயலால் பரபரப்பு
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-hours-in-car-at-temple-campus-boyfriend-with-college-girl</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-hours-in-car-at-temple-campus-boyfriend-with-college-girl#comments</comments><guid isPermaLink="false">569bc0b7-db9c-4923-a1b9-37f67a5c17b2</guid><pubDate>Sun, 13 Sep 2026 03:45:50 +0000</pubDate><atom:updated>2026-09-13T03:45:50.993Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/sq1yo2vv/csalt.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ai image]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/sq1yo2vv/csalt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>திருப்பூர்</p><p>கோவில் வளாகத்தில் காருக்குள் கல்லூரி மாணவியுடன் 2 மணிநேரம் இருந்த காதலன் செய்த செயலால் பரபரப்பு ஏற்பட்டது.</p><p>திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள ஆண்டவர் உத்தரவு பெட்டி உலகப்புகழ் பெற்றது ஆகும். இந்த நிலையில் நேற்று மதியம், சிவன்மலை மேல் ஒதுக்குப்புறமான இடத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு கார் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தது.</p> <h2>2 மணி நேரம்</h2><p>அந்த காரில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபரும், இளம்பெண் ஒருவரும் இருந்தனர். சுமார் 2 மணி நேரமாக அவர்கள் காருக்குள்ளேயே இருந்து கொண்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கோவில் பணியாளர்கள், காரின் அருகில் பார்க்க சென்றனர்.</p> <h2>கார் மோதல்</h2><p>அப்போது காரில் இருந்த வாலிபர், அந்த பணியாளர்கள் மீது காரை ஏற்றுவது போல் அதிவேகமாக ஓட்டி வந்தார். பின்னர் கோவில் அடிவார நுழைவாயிலுக்கு கார் வந்தது. அப்போது அங்கு இருந்த தடுப்பில் கார் லேசாக மோதி நின்றது. இதைத்தொடர்ந்து அங்கு பணியில் இருந்த கோவில் பணியாளர்கள் அந்த காரை சுற்றிவளைத்தனர்.</p><p>இதன் பின்னர் வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், அந்த இளம்பெண் கல்லூரி மாணவி என்பதும், இவர்கள் 2 பேரும் காதலர்கள் என்று தெரிவித்தனர்.  கோவில் புனிதத்துக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட காதல் ஜோடிக்கு பணியாளர்கள் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.  எனினும், கோவில் வளாகத்தில் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது, பக்தர்களை முகம் சுளிக்க வைத்தது.</p> ]]></content:encoded></item><item><title>கள்ளக்குறிச்சி: புதுப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kallakurichi-newlywed-commits-suicide-by-jumping-into-well</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kallakurichi-newlywed-commits-suicide-by-jumping-into-well#comments</comments><guid isPermaLink="false">5003552c-685a-430a-b56e-07323dba2dcd</guid><pubDate>Sun, 13 Sep 2026 03:38:44 +0000</pubDate><atom:updated>2026-09-13T03:38:44.409Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கள்ளக்குறிச்சி,Kallakurichi,புதுப்பெண்,தற்கொலை,Suicide,well,கிணறு,new girl,குதித்து,Jumping</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/fhd5wmdo/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ புதுப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/fhd5wmdo/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">கள்ளக்குறிச்சி</a> மாவட்டத்தில் சமீபத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D">திருமணமான</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D">புதுப்பெண்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%81">கிணற்றில்</a> குதித்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">தற்கொலை</a> செய்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  </p><h2>கடந்த 7-ந்தேதி திருமணம்</h2><p>கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த மூங்கில்பாடி கிராமத்தைச் சேர்ந்த சுஜிதா (வயது 25), பி.எஸ்.சி., பி.எட். பட்டதாரி. இவர் சின்னசேலம் அருகே வாசுதேவனூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த தினேஷ்(27) என்பவருக்கும் கடந்த 7-ந்தேதி திருமணம் நடைபெற்றது. </p><h2>புதுப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை</h2><p>இந்த நிலையில் நேற்று முன்தினம் சுஜிதா வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது அருகே உள்ள விவசாய நிலத்தில் இருந்த கிணற்றில் குதித்து சுஜிதா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து சம்மந்தப்பட்ட போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு- பரிசல் இயக்க மீண்டும் தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/increased-water-inflow-to-hogenakkal-coracle-operations-suspended-again</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/increased-water-inflow-to-hogenakkal-coracle-operations-suspended-again#comments</comments><guid isPermaLink="false">88a8d0a8-6d8d-4764-adce-54ef8a3bb20f</guid><pubDate>Sun, 13 Sep 2026 03:27:29 +0000</pubDate><atom:updated>2026-09-13T03:27:29.329Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஒகேனக்கல்,நீர்வரத்து,பரிசல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/xtc1eg2h/Hoganekkal.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஒகேனக்கல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/xtc1eg2h/Hoganekkal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஒகேனக்கல்</p><p>கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை பொறுத்து, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறை வதுமாக இருந்து வருகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து குறைந்தது. குறிப்பாக நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இந்த நிலையில் கர்நாடக அணைகளான கபினியில் இருந்து வினாடிக்கு 1,600 கனஅடியும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 8 ஆயிரத்து 186 கனஅடியும் என மொத்தம் தமிழகத்துக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 786 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.</p><h2>7 ஆயிரம் கனஅடி</h2><p>இதனால் நேற்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதன்காரணமாக ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.</p> <h2>பரிசல் இயக்க மீண்டும் தடை</h2><p>நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளதால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பரிசல் இயக்க வழங்கப்பட்ட அனுமதியை, நேற்று மீண்டும் மாவட்ட நிர்வாகம் ரத்து செய்தது.இருப்பினும் அருவிகள் மற்றும் ஆற்றில் குளிக்க எந்தவித கட்டுப்பாடும் இல்லை என்பதால் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>கிருஷ்ணகிரி: கருவின் பாலினம் கண்டறிந்து கூறிய 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/krishnagiri-2-people-arrested-for-identifying-and-revealing-the-sex-of-a-fetus</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/krishnagiri-2-people-arrested-for-identifying-and-revealing-the-sex-of-a-fetus#comments</comments><guid isPermaLink="false">55287da8-a507-4c6c-af89-a079cff16b01</guid><pubDate>Sun, 13 Sep 2026 03:10:51 +0000</pubDate><atom:updated>2026-09-13T03:10:51.683Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>2 பேர் கைது,கிருஷ்ணகிரி,Krishnagiri,பாலினம்,2 people arrested,கரு,detection,கண்டறிதல்,Fetus,Gender</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/y0f2wr3v/2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 2 பேர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/y0f2wr3v/2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ணகிரி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF">கிருஷ்ணகிரி</a> மாவட்டத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81">கரு</a>வின் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">பாலினம்</a> கண்டறிந்து கூறிய 2 பேரை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர்.</p><h2>கருவின் பாலினம் கண்டறிதல்</h2><p>கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா?, பெண்ணா? என பாலினம் கண்டறிந்து கூறுபவர்கள், கருக்கலைப்பு செய்பவர்கள், போலி டாக்டர்களை கண்டறிய மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர், நர்சு கிருத்திகாவை வைத்து நடத்திய சோதனையில், போச்சம்பள்ளியைச் சேர்ந்த எஸ்தர் (வயது 32) என்பவர் சட்டவிரோதமாக பாலினம் கண்டறிவது தெரியவந்தது. </p><h2>2 பேர் கைது</h2><p>இதற்காக ராயக்கோட்டைக்கு ஸ்கேன் எந்திரத்துடன் வந்த எஸ்தரை, மருத்துவக்குழுவினர் அங்கு மறைந்திருந்து சினிமா பாணியில் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் எஸ்தர் மருத்துவம் படிக்காமல் பாலினம் கண்டறிந்ததுடன், அவருக்கு உதவியாக திருப்பத்தூரைச் சேர்ந்த குருமூர்த்தி(32) என்பவரும் வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>அரசியலில் நாங்கள் மலை விழுங்கி மகாதேவன்கள்: துரைமுருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-are-political-giants-duraimurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-are-political-giants-duraimurugan#comments</comments><guid isPermaLink="false">c9ebf83e-a407-40d7-8dad-50776d126078</guid><pubDate>Sun, 13 Sep 2026 02:56:36 +0000</pubDate><atom:updated>2026-09-13T02:56:36.168Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,Duraimurugan,துரைமுருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/ewhdo5n5/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/ewhdo5n5/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>வேலூர்,</p><p><strong>வேலூர் காட்பாடி காந்திநகரில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</strong></p><p>சட்டசபையில் போலீஸ் மானிய கோரிக்கையின்போது மாநிலத்தில் நிலவும் சட்டம், ஒழுங்கு பிரச்சினை குறித்து பேசாமல், சர்க்காரியா கமிஷன், மிசா உள்ளிட்ட விவகாரங்களை முதல்-அமைச்சர் விஜய் பேசியிருக்கிறார். அவர் குறிப்பிட்ட வழக்குகளில் பலரும் குற்றவாளிகள் அல்ல என்று கோர்ட்டில் விடுதலை செய்த பிறகு தான் அரசியல் செய்து வருகிறோம். இதையெல்லாம் படிக்க அவருக்கு நேரம் கிடையாது.</p><p>அதோடு எங்கள் தலைவர் குறித்த பேச்சுக்கு, அனைத்து கட் சிகளும் கண்டனம் தெரிவித்திருப்பது இதுவே முதல் முறை. சட்டசபையில் மரபையும் விதியையும் மீறி நடந்து கொண்டி ருக்கிறார் முதல்-அமைச்சர். அதை சபாநாயகரும் தடுக்க தவறி விட்டார். இதை காரணம் காட்டி முதல்-அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தலாம்.</p><p>சட்டசபையில் நடந்ததையும், கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காததையும் திசை திருப்பவே கே.என்.நேரு வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. எங்களின் பெயர்களும் பட்டியலில் இருக்கிறதாம். நாங்கள் அரசியலில் மலை விழுங்கி மகாதேவன்கள். எத்தனையோ வழக்கை சந்தித்தவர்கள். முதல்-அமைச்சருக்கு தியாகம் என்றால் என்னவென்று தெரியாது.</p><p>15 நாட்கள் கூட சிறைக்கு சென்றது கிடையாது. அடித்த காற்றில் ஒரு இலை கோபுரத்துக்கு சென்றதன் விளைவு தான், இப்படி எல்லாம் அவர் பேசி வருகிறார். தியாகம் புரிந்தவர்களுக்கு தான் தியாகம் தெரியும். கம்யூனிஸ்டு கட்சியினர் தியாகம் புரிந்தவர்கள். என்றைக்கும் தியாகம் செய்து கொண்டிருப்பவர்கள் கம்யூனிஸ்டு கட்சியினர்.</p><p>இந்த ஆட்சி கூத்துக்காரன் போன்று, ஜோதிடர் சொல்வதற்கு ஏற்றவாறு செயல்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் சிறைக்கு செல்ல வாய்ப்புள்ளது என்பதால், முன்கூட்டியே சிறைக்கு சென்று வாருங்கள் என்று ஜோதிடர் கூறியதால், புழல் சிறைக்கு சென்று வந்துள்ளார். தமிழகத்தில் நடக்கும் 2 தொகுதிகளின் இடைத்தேர்தல்களிலும், தி.மு.க.வுக்கு வெற்றி சிறகடித்து வரும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>விடுமுறை தினம்: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-tourists-flock-to-kanyakumari-16</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-tourists-flock-to-kanyakumari-16#comments</comments><guid isPermaLink="false">d4b0b9e0-06f1-495c-8bcd-3620ccf0cf43</guid><pubDate>Sun, 13 Sep 2026 02:51:20 +0000</pubDate><atom:updated>2026-09-13T02:51:20.359Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,Tourists,சுற்றுலா பயணிகள்,Kanyakumari</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/zyo1sbc0/7.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/zyo1sbc0/7.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி, </p><p>சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள். </p><p>இந்தநிலையில் இன்று ஞாயிறு விடுமுறையையொட்டி காலையில் இருந்தே கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை, சன்ரைஸ் பாயின்ட் போன்ற பகுதிகளில் நள்ளிரவு முதல் காத்திருந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். </p><p>அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். படகுத்துறையில் இருந்து சுற்றுலா பயணிகள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்த்து ரசித்து வருகின்றனர். காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள தமிழன்னை பூங்கா, சன்செட் பாயிண்ட், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.   </p>]]></content:encoded></item><item><title>திருப்பூரில் 300 ஆண்டுகள் பழமையான புடைப்புச் சிற்பம் கண்டெடுப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/300-year-old-relief-sculpture-unearthed-in-tiruppur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/300-year-old-relief-sculpture-unearthed-in-tiruppur#comments</comments><guid isPermaLink="false">d73f4ab2-c81d-48f5-b9fa-1a5ab2c8fdf9</guid><pubDate>Sun, 13 Sep 2026 02:40:13 +0000</pubDate><atom:updated>2026-09-13T02:40:13.510Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்,sculpture,சிற்பம்</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/xr7ez3ax/6.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/xr7ez3ax/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>உடுமலை,  </p><p>திருப்பூர் மாவட்டம், உடுமலை, மரிக்கந்தை கிராமத்தில், கால்நடை மட்டுமே புடைப்புச்சிற்பமாக இருக்கும் கல்துாண், 2 அடி அகலத்தில், 1 அடி உயரத்தில் மண்ணுக்குள் புதையுண்ட நிலையில் உள்ளது.</p><p>அழகான வேலைப்பாடுகளுடனும், அலங்கரித்த நிலையில் மாடு சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதோடு, கல்வெட்டு எழுத்துகளும் காணப்படுகின்றன. இது குறித்து வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கூறுகையில், 'இந்த கல்வெட்டு, பாளையக்காரங்கள் ஆட்சி காலத்தில், 300 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டிருக்கலாம். பாரம்பரியமாக கால்நடைகளை தெய்வமாக வழிபடும் முறை இருந்துள்ளதை இது உறுதிப்படுத்தியுள்ளது.” என்று அவர்கள் கூறினர். </p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம் தொகுதிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் லாரி மூலம் அனுப்பி வைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/voting-machines-dispatched-to-maduranthakam-constituency-by-lorry</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/voting-machines-dispatched-to-maduranthakam-constituency-by-lorry#comments</comments><guid isPermaLink="false">943cfc39-d9ae-4763-ba8c-90a708966bba</guid><pubDate>Sun, 13 Sep 2026 02:38:23 +0000</pubDate><atom:updated>2026-09-13T02:38:23.755Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இடைத்தேர்தல்,By election,voting machine,மதுராந்தகம்,Maduranthakam,வாக்குப்பதிவு எந்திரங்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/5k2y3gto/CHENNAI-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/5k2y3gto/CHENNAI-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>மதுராந்தகம் தொகுதி</h2><p>செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அந்த தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.</p><p>இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய 16-ந்தேதி கடைசி நாளாகும். தமிழக வெற்றிக் கழகம், தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மதுராந்தகம் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.</p><h2>வாக்குப்பதிவு எந்திரங்கள்</h2><p>இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வி.வி.பேட் எந்திரங்கள் மற்றும் கண்ட்ரோல் யூனிட்டுகள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான வீரப்பன் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன.</p><p>ஒதுக்கீடு செய்யப்பட்ட எந்திரங்களின் விவரங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டன. பின்னர் மறைமலைநகரில் இருந்து பாதுகாப்பாக லாரிகளில் ஏற்றப்பட்டு மதுராந்தகம் வேளாண்மை துறை அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த பின்னர் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்படும். அதை தொடர்ந்து வாக்குப் பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்களை பொருத்தும் பணிகள் நடைபெறும்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் காங்கிரஸ் நிர்வாகியின் கார் அடித்து உடைப்பு: வடக்கு மாவட்ட தலைவர் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/congress-executives-car-vandalized-in-thoothukudi-northern-district-president-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/congress-executives-car-vandalized-in-thoothukudi-northern-district-president-condemns#comments</comments><guid isPermaLink="false">cd159aef-653b-44fa-b7f2-8927ad208ded</guid><pubDate>Sun, 13 Sep 2026 02:37:24 +0000</pubDate><atom:updated>2026-09-13T02:37:24.209Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,Thoothukudi,தூத்துக்குடி,உடைப்பு,Car,கார்,condemnation,கண்டனம்,Executive,நிர்வாகி,breakage,மாவட்ட தலைவர்,District President</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/0d5jlf1t/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூத்துக்குடியில் காங்கிரஸ் நிர்வாகியின் கார் அடித்து உடைப்பு: வடக்கு மாவட்ட தலைவர் கண்டனம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/0d5jlf1t/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடியில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF">காங்கிரஸ் நிர்வாகி</a>யின் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">கார்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">உடைக்கப்பட்ட </a>சம்பவத்திற்கு வடக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F">மாவட்ட</a>த் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D">தலைவர்</a> பெருமாள்சாமி கதில்வேல் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">கண்டனம்</a> தெரிவித்துள்ளார்.</p><h2>காங்கிரஸ் நிர்வாகியின் கார் அடித்து உடைப்பு</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> கக்கன்ஜி நகரில் வசித்து வருபவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமுவேல் ஞானதுரை. இவரது வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றை, நேற்று இரவு அங்கே வந்த மர்ம நபர்கள் சிலர் கொடூரமாக அடித்து நொறுக்கி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><h2>வடக்கு மாவட்ட தலைவர் பெருமாள்சாமி கதிர்வேல் கண்டனம்</h2><p>தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவர் பெருமாள்சாமி கதிர்வேல் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், "தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் துணை தலைவர் சாமுவேல் ஞானதுரை வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவருடைய நான்கு சக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்து இருக்கிறார்கள். இது அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக நடைபெற்றதா அல்லது வேறு ஏதும் காரணமா என்பதை காவல்துறை கண்டுபிடித்து, குற்றம் செய்தவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.</p><h2>மாநகர் மாவட்ட தலைவர் சகாயராஜ்</h2><p>இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்.எம்.சகாயராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காங்கிரஸ் நிர்வாகியின் கார் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இத்தகைய வன்முறை குற்றச் செயலில் ஈடுபட்ட நபர்களை காவல் துறையினர் உடனடியாக கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும், வன்முறையில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு முதல்-அமைச்சரிடம் நேரடியாக புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்" அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>சேலம் சரகத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்த 37 ஆம்னி பஸ்களுக்கு ரூ.3½ லட்சம் அபராதம்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-35-lakh-fine-imposed-on-37-omni-buses-for-charging-excess-fares-in-the-salem-zone</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-35-lakh-fine-imposed-on-37-omni-buses-for-charging-excess-fares-in-the-salem-zone#comments</comments><guid isPermaLink="false">8399b195-0c4f-4baf-b4ee-e4c83698b798</guid><pubDate>Sun, 13 Sep 2026 02:32:48 +0000</pubDate><atom:updated>2026-09-13T02:32:48.560Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Omni Bus,ஆம்னி பஸ்,Salem,சேலம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/qzzhwec6/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  ஆம்னி பஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/qzzhwec6/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம் சரகத்தில் விதிமுறைகளை மீறி இயக்கிய 37 ஆம்னி பஸ்களுக்கு ரூ.32 லட்சம் அபராதம் விதித்து போக்குவரத்துதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.</p><h2>கூடுதல் கட்டணம்</h2><p>விநாயகர் சதுர்த்தி விழா நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் வெளியூர்களில் தங்கி வேலை செய்யும் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வரு கின்றனர். இதையொட்டி சேலம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பொதுமக்களின் வசதிக்காக 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் விதிமுறைகளை மீறி ஆம்னி பஸ்களில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வருகின்றன.</p><p>இந்த நிலையில், சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கோகிலா, கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவ லர் தியாகராஜன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நேற்று சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் சென்னை, பெங்க ளூரூக்கு சென்ற ஆம்னி பஸ்களில் ஆய்வு செய்தனர். அப்போது, சில பஸ்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயக்கியது தெரியவந்தது.</p><h2>ரூ.3½ லட்சம் அபராதம்</h2><p>இதேபோல், நாமக்கல், தர்மபுரி, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கிருஷ்ணகிரி </a>மாவட்டங்களிலும் ஆம்னி பஸ்களில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சோதனை மேற்கொண்ட னர். சேலம், நாமக்கல்லில் 23 ஆம்னி பஸ்களும், தர்மபுரி, கிருஷ்ணகிரி யில் 14 ஆம்னி பஸ்களும் என மொத்தம் 37 ஆம்னி பஸ்களுக்கு ரூ.3½ லட்சம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். விநா யகர் சதுர்த்தி தொடர் விடுமுறையை பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆம்னி பஸ்க ளின் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள் ளனர்.</p>]]></content:encoded></item><item><title>&apos;குடி&apos;மகன்களுக்கு குட் நியூஸ்: டாஸ்மாக் கடையில் விரைவில் 25 புது ரகம் அறிமுகம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/good-news-for-tipplers-25-new-varieties-to-be-introduced-soon-at-tasmac-shops</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/good-news-for-tipplers-25-new-varieties-to-be-introduced-soon-at-tasmac-shops#comments</comments><guid isPermaLink="false">731c0067-4e60-434f-b5d3-150e947af782</guid><pubDate>Sun, 13 Sep 2026 02:29:30 +0000</pubDate><atom:updated>2026-09-13T02:29:30.768Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>டாஸ்மாக்,Tasmac,மதுபானம்,Liquor</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/8iq0wnxy/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/8iq0wnxy/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>'டாஸ்மாக்' கடைகளில், 25 புதிய மது வகைகள் விற்பனைக்கு வர உள்ளன. அவற்றுக்கு விலை நிர்ணயம் செய்ய, மதுபான நிறுவனங்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.</p><p>தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 11 மதுபான ஆலைகளிடம் இருந்து மது வகைகள், ஏழு ஆலைகளிடம் இருந்து பீர் வகைகள், ஒரு ஆலை யிடம் இருந்து ஒயின் கொள்முதல் செய்கிறது.</p><p>தமிழகத்தில் தயாரிக்கப்படும், 174 மது வகைகள், 40 பீர் வகைகள், நான்கு ஒயின்கள் மற்றும் பிற மாநில மதுபானங்களில் ஆறு மது வகைகள், ஐந்து பீர், ஐந்து ஓயின்கள் விற்கப்படுகின்றன. மேலும், 538 மது வகைகளை டாஸ்மாக் இறக் குமதி செய்து, வணிக வளாகங்களில் உள்ள மது கடைகளில் விற்கிறது.</p><p>கடந்த தி.மு.க., ஆட்சி யில், அக்கட்சிக்கு வேண்டியவர்கள் நடத்தும் சில ஆலைகளில் இருந்து தான் அதிகளவில் மது வகைகள் வாங்கப்பட்டன. இதனால், மது பிரியர்கள் விரும்பும் மது வகைகள் கிடைக்கவில்லை.</p><p>தற்போது, ஆட்சி மாற் றம் ஏற்பட்டுள்ள நிலை யில், புதிய, 'பிராண்டு' மது வகைகளை அதிகளவில் விற்க, டாஸ்மாக் முடிவு செய்துள்ளது. இதற்காக, மதுபான தயாரிப்பு ஆலை களிடம் அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர். அதில், 25 மது வகைகள் தேர்வாகியுள்ளன. இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:</p><p>புதிய பிராண்டு மதுபானம், பீர் விற்பது தொடர்பாக, 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படை யில், 25 புதிய பிராண்டுகள் தேர்வு செய்யப்பட்டு, விலை நிர்ணயம் 'செய்யும் பணி நடந்து வருகிறது. இதற்கு, டாஸ்மாக் இயக்குநர்கள் குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு, விரைவில் மது கடைகளில் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>இவ்வாறு அவர்கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இன்று முடிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/whom-to-support-in-the-by-election-cpim-to-decide-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/whom-to-support-in-the-by-election-cpim-to-decide-today#comments</comments><guid isPermaLink="false">a3545ae4-f155-4f53-9011-b2d8d35d309f</guid><pubDate>Sun, 13 Sep 2026 02:23:13 +0000</pubDate><atom:updated>2026-09-13T02:23:13.971Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இடைத்தேர்தல்,By election,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு,CPIM,Communist Party of India (Marxist)</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/ntnelt68/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/ntnelt68/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் த.வெ.க. தலைமையில் நடைபெறும் கூட்டணி ஆட்சிக்கு மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகின்றன. இந்த நிலையில், மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அக்டோபர் 6-ந் தேதி நடைபெற உள்ளது.</p><p>இந்த இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் மாநில செயற்குழு கூட்டம் நேற்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி உள்ளிட்ட மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.</p><p><strong>அதன்பின்னர் பெ.சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-</strong></p><p>தமிழ்நாட்டில் சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவித்ததன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இடைத் தேர்தலை அறிவித்து உள்ளது. அந்த வகையில், இந்த இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு பிறகு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை நாளை (அதாவது இன்று) மதியம் தெரிவிப்போம்.</p><p>அதாவது, நாளை (இன்று) மதியம் 2 மணிக்கு திருச்சியில் நடைபெற உள்ள எங்கள் கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தில் இது குறித்து விவாதிக்க உள்ளோம். இந்த கூட்டம் முடிந்த பிறகு இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்த எங்களின் இறுதி நிலைப்பாட்டை தெரிவிப்போம். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தபோதே இது ஒரு ஆரோக்கியமற்ற அரசியல்.</p><p>சந்தர்ப்பவாத நிலை என்பதை நாங்கள் ஏற்கனவே தெளிவாக விமர்சித்திருக்கிறோம். அந்த விமர்சனத் தில் எந்தவிதமான மாறுபாடும் கிடையாது. ஆளும் த.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பீர்களா? கூட்டணியில் சேர்வீர்களா? என்று கேட்கிறீர்கள். இடைத்தேர்தல் தொடர்பான அனைத்து அம்சங்களும் மாநில குழு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும். இடைத்தேர்தலை புறக்கணிப்பது அல்லது வேறு ஏதேனும் முடிவுகள் எடுப்பது குறித்து அந்த கூட்டத்திற்கு பிறகு எங்களுடைய இறுதியான மற்றும் உறுதியான முடிவை நாங்கள் முறைப்படி அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>திமுகவினரின் பேச்சை சகிக்க முடியவில்லை - மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cannot-tolerate-the-remarks-made-by-dmk-members-marxist-party-condemns-it</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cannot-tolerate-the-remarks-made-by-dmk-members-marxist-party-condemns-it#comments</comments><guid isPermaLink="false">2b0f9177-a2db-4c7d-887d-fd0a399363d9</guid><pubDate>Sun, 13 Sep 2026 01:37:36 +0000</pubDate><atom:updated>2026-09-13T01:37:36.345Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,பெ.சண்முகம்,Communist Party of India (Marxist),மார்க்சிஸ்ட் கம்ப்யூனிஸ்ட் கட்சி,p shanmugam,Marxist Party,மார்க்சிஸ்ட் கட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/fs81bng2/shanmugam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெ.சண்முகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/fs81bng2/shanmugam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நிர்மல் குமார் தாயாரை இழிவு படுத்துவதை எப்படி திமுக தலைவர் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் என பெ.சண்முகம் கேள்வி எழுப்பி உள்ளார்.</p><h2>சகிக்க முடியவில்லை</h2><p>இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது. திமுக தலைவர்களில் சிலர் தொடர்ந்து பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவதும் அதைக் கேட்டு தொண்டர்கள் ஆர்ப்பரிப்பதும் சகிக்க முடியவில்லை. அமைச்சர் நிர்மல் குமார் பேசியதை கண்டியுங்கள். அவருடைய தாயாரை இழிவு படுத்துவதை எப்படி திமுக தலைவர் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.</p><h2>கண்ணியம் தவறுவது தொடர்கிறது</h2><p>பொதுவெளியில் பெண்களை இழிவு படுத்தி பேசுபவர் யாராக இருந்தாலும் அந்தந்த கட்சி தலைமை கண்டிக்கவும், ஒழுங்குபடுத்தவும் முன்வர வேண்டும்.</p><p>சில <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu/stalin-brought-liquor-home-dmk-functionary-remark-sparks-row">திமுகவினர் </a>"கண்ணியம்" தவறுவது தொடர்கிறது. "கட்டுப்பாடு" நிலை நிறுத்தும் "கடமை"யை திமுக. தலைவர் செய்வார் என்று நம்புகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்குக் கெடு:  அக்.31-க்குள் சொத்து, கடன் விவரங்களை இணையத்தில் தாக்கல் செய்ய உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/deadline-for-tamil-nadu-government-employees-order-to-file-asset-and-liability-details-online-by-october-31</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/deadline-for-tamil-nadu-government-employees-order-to-file-asset-and-liability-details-online-by-october-31#comments</comments><guid isPermaLink="false">3bfbd33a-1558-4f55-9c0d-a2690c23a26f</guid><pubDate>Sun, 13 Sep 2026 01:28:47 +0000</pubDate><atom:updated>2026-09-13T01:28:47.485Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,Tamil Nadu Government,Government Employees,அரசு  ஊழியர்கள்</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/gqayovsq/Untitled-1.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/gqayovsq/Untitled-1.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு</p><p>சென்னை, செப்.12 தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் தங்களின் சொத்து மற்றும் கடன் விவரங்களை வரும் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><p>கடந்த ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தத்தின் தொடர்ச்சியாக, இந்த விவரங்களை தாக்கல் செய் வதற்கான காலக்கெடு மற்றும் நடைமுறைகள் தற்போது முறைப் படி அறிவிக்கப்பட்டுள்ளன.</p> <p>2025-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி நிலவரப்படி அரசு ஊழியர்களிடம் உள்ள சொத்து மற்றும் கடன் விவரங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படும். சொத்து விவரங்களை அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது காகித வடிவிலோ வழங்க வேண்டிய அவசிய மில்லை. தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பு (IFHRMS) இணையதளம் வழியாகவே முழுமையாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.</p><p>சொந்தப் பெயரில் அல்லது குடும்பத்தினர் பெயரில் உள்ள வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட விவரங்கள். நகைகள், வாகனங்கள், வங்கியில் உள்ள வைப்புத் தொகை மற்றும் பிற முதலீடுகள்.</p><p>அரசு ஊழியர்கள் பெற்றுள்ள அனைத்து விதமான கடன் தொடர்பான தகவல்களையும் தவறாமல் குறிப்பிட வேண் டும் அரசு நிர்வாகத்தில் வெளிப் படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆ. ராசாவின் சர்ச்சை பேச்சு: அமைச்சர் வன்னி அரசு கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-rajas-controversial-speech-minister-vanni-arasu-condemns-it</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-rajas-controversial-speech-minister-vanni-arasu-condemns-it#comments</comments><guid isPermaLink="false">84aebe04-b896-4931-8cf8-69bcd52b8ea2</guid><pubDate>Sun, 13 Sep 2026 01:19:06 +0000</pubDate><atom:updated>2026-09-13T01:19:06.492Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,ஆ.ராசா,வன்னி அரசு,Vanni Arasu,ஆ.ராசா எம்.பி.,A. Raja,minister vanni arasu,அமைச்சர் வன்னி அரசு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/0ze0h7i5/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வன்னி அரசு கண்டனம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/0ze0h7i5/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு ஆ. ராசாவின் சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><h2>ஆ.ராசா சர்ச்சை பேச்சு</h2><p>சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் விஜய்யின் பேச்சுக்கு பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தமிழக அரசியலில் மிசா கொடுமைகள் பற்றிய விவாதமும் எழுந்துள்ளது. இந்த நிலையில், விஜய் திமுக தலைவர் ஸ்டாலினின் தியாகத்தைக் கொச்சைப்படுத்திவிட்டதாகக் கூறி, திமுகவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தினர்.</p><p>சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர். அப்போது கூட்டத்தில் ஆ.ராசா பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.</p><p>இந்த நிலையில், சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு ஆ. ராசாவின் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu/stalin-brought-liquor-home-dmk-functionary-remark-sparks-row">சர்ச்சை </a>பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>உரையை கேட்டால்..</h2><p>கடமை,கண்ணியம், கட்டுப்பாடு முழக்கத்தை முன் வைத்த திமுக இப்போது வன்மம், வெறுப்பு மற்றும் ஆற்றாமையால் நிரம்பிக்கொண்டு இருக்கிறதோ என அய்யம் எழுகிறது.</p><p>திமுகவின் துணைப்பொதுச்செயலாளர் மட்டுமல்ல; முன்னாள் மத்திய அமைச்சராகவும் பணி ஆற்றியவர் அண்ணன் ஆ.ராசா. இந்து அறநிலையத்துறை முன்னாள் அமைச்சர் அண்ணன் சேகர் பாபு ஆகிய இருவரின் இந்த உரையை கேட்டால் அந்த ஆற்றாமை புரியும்.</p><p>“எனக்கு சந்தேகம் இருக்கு நீ யாருக்கு பிறந்த?” என கேட்பது பெண்களை இழிவுபடுத்துவது ஆகாதா?</p><p>அதனால் தான் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணியார் தமிழச்சி, ஆ.ராசா அந்த கேள்வி எழுப்பும் போது எந்தவித அசைவும் இல்லாமல் தலை கவிழ்ந்தவாறு இருப்பார்.</p><h2>என்ன வித்தியாசம்?</h2><p>முதல்-அமைச்சரை ஓடுகாலி என சேகர்பாபு உளறியதை ‘பீப்’போட்டு அவமானத்தை மறைக்கிறது கலைஞர் தொலைக்காட்சி. திமுகவின் துணைப்பொதுச்செயலாளர் கவிஞர் கனிமொழி குறித்து பாஜகவை சார்ந்த எச்.ராஜாவும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமானும் மிக இழிவாக பேசிய போது, கண்டித்த விடுதலைச்சிறுத்தைகள் இப்போது, திமுக பேச்சாளர்களின் இந்த இழிவான உரையை கண்டிக்கிறது.</p><p>திமுக ஆ. ராசா, பாஜக எச்.ராஜா, என்ன வித்தியாசம் இருக்கிறது?</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>