<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 16 Jul 2026 19:41:13 +0000</lastBuildDate><item><title>காவல் நிலையங்களும், சிறைகளும் உயிர்ப் பறிக்கும் இடங்களாக மாறுகிறதா? - வேல்முருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/are-police-stations-and-prisons-turning-into-places-that-claim-lives-velmurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/are-police-stations-and-prisons-turning-into-places-that-claim-lives-velmurugan#comments</comments><guid isPermaLink="false">a241cde0-e049-4e9c-96ce-7f4820caa082</guid><pubDate>Thu, 16 Jul 2026 19:32:14 +0000</pubDate><atom:updated>2026-07-16T19:32:14.646Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Velmurugan,வேல்முருகன்,தமிழக வாழ்வுரிமைக் கட்சி,தி.வேல்முருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/0f5xk388/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/0f5xk388/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>உறவினர்கள் போராட்டம்</h2><p>சென்னையை அடுத்த சேலையூர் பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவர், தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை வைத்திருந்ததாகக் கூறி அண்மையில் மாநகர காவல்துறையால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பின்னர் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  </p><p>தற்போது, சிறையில் இருந்த பாலாஜி உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலாஜியின் உறவினர்கள், சிறைக் காவலர்கள் தாக்கியதால்தான் அவர் உயிரிழந்தார் என்று மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மறுபுறம், சிறை நிர்வாகம் அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளது.  </p><h2>கேள்விகள்  முன்வைப்பு</h2><p>இந்நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சி சில <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கேள்விகளை </a>முன் வைக்க விரும்புகிறது.</p><p>கைது செய்யப்பட்ட சில நாட்களிலேயே, நீதிமன்றக் காவலில் இருந்த ஒருவர் எவ்வாறு உயிரிழந்தார்?  </p><p>பாலாஜியின் உடலில் காயங்கள் இருந்தனவா? இருந்தால் அவை எவ்வாறு ஏற்பட்டன?</p><p>அவர் இருந்த சிறைப்பிரிவின் சிசிடிவி காட்சிகள் பாதுகாக்கப்பட்டுள்ளனவா? அவை நீதிமன்றத்தின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்படுமா?  </p><p>கைது செய்த காவல்துறை, சிறை நிர்வாகம் மற்றும் மருத்துவப் பதிவுகள் அனைத்தும் வெளிப்படையாக ஆய்வு செய்யப்படுமா?</p><p>இந்த மரணம் குறித்து நீதித்துறை கண்காணிப்பில் சுயாதீன விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிடுமா?</p><p>ஒருவர் குற்றம் சாட்டப்பட்டிருக்கலாம். நீதிமன்றம் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கும் வரை, அவர் ஒரு விசாரணைக் கைதிதான். அந்த நபரின் உயிருக்கு முழுப் பொறுப்பு, அரசுக்கும் சிறை நிர்வாகத்திற்குமே உள்ளது.  </p><h2>உரிய நடவடிக்கை வேண்டும்</h2><p>எனவே, உயர்நீதிமன்ற நீதிபதி அல்லது சுயாதீன அமைப்பின் கண்காணிப்பில் முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.</p><p>பிரேதப் பரிசோதனை அறிக்கை, சிசிடிவி பதிவுகள் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களும் வெளிப்படையாக வெளியிடப்பட வேண்டும்.</p><p>விசாரணை முடியும் வரை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சம்பந்தப்பட்ட </a>அதிகாரிகள் மீது உரிய நிர்வாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு யார் செய்திருந்தாலும், அவர்கள் மீது சட்டத்தின் முன் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு, தமிழ்நாடு அரசு, இது போன்ற சிறைக்காவல் மரணங்கள் அல்லது அரசின் அலட்சியத்தால் ஏற்படும் மரணங்களுக்கு, 50 லட்சம் அல்லது ஒரு கோடி ரூபாய் வரையிலான தொகையை நிர்ணயித்து வழங்க வேண்டும் என்றும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சரின் சொந்தத் தொகுதியிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையா? - வானதி சீனிவாசன் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-there-no-safety-for-women-even-in-the-chief-ministers-own-constituency-vanathi-srinivasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-there-no-safety-for-women-even-in-the-chief-ministers-own-constituency-vanathi-srinivasan#comments</comments><guid isPermaLink="false">f5d54f67-deba-4962-8813-14ffb40ce23e</guid><pubDate>Thu, 16 Jul 2026 18:08:27 +0000</pubDate><atom:updated>2026-07-16T18:08:27.766Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/nhn6235n/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/nhn6235n/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>பாதுகாப்பு இல்லை</h2><p>சென்னை பெரம்பூரில் இளம்பெண் ஒருவர் தனது முன்னாள் ஆண் நண்பர் மற்றும் 4 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த மாதமும் இதேபோல் பெரம்பூரில் இளம்பெண் ஒருவரை முன்னாள் ஆண் நண்பர் வீடு புகுந்து தாக்கியதாகச் செய்திகள் வந்தது.</p><p>மேடைகள் தோறும் பெண்களை அக்கா, தங்கை, தோழி என உணர்வுப்பூர்வமாகப் பேசும் முதல்-அமைச்சரின் சொந்தத் தொகுதியிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழலில் தமிழகப் பெண்களுக்கு முதல்-அமைச்சர் எப்படி பாதுகாப்புத் தரப் போகிறார் என்ற கேள்வி ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் எழுந்துள்ளது.</p><h2>எதற்கு தனி சிறப்புப்படை?</h2><p>சீரும் சிங்கங்களாய் ஏதோ பெரிய மாற்றம் கொண்டு வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புடன் துவங்கப்பட்ட சிங்கப் பெண் அதிரடிப் படை தற்போது சோர்ந்து வழக்கம்போல் மகளிர் காவல் நிலையங்களாக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">செயல்படுவதற்கு </a>எதற்கு தனி சிறப்புப்படை?</p><p>எனவே பெண்களை காதல் என்ற பெயரில் அத்துமீறும் ஆண்களிடமிருந்து காக்கும் வகையில் சிங்கப் பெண் படையை முடுக்கி விட்டு இரும்புக்கரம் கொண்டு செயல்பட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதன்மைத் தேர்வு தேதி மாற்றம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tnpsc-group-1-main-exam-date-changed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tnpsc-group-1-main-exam-date-changed#comments</comments><guid isPermaLink="false">b132ef10-f139-4092-8c5e-09ffce3b55a5</guid><pubDate>Thu, 16 Jul 2026 17:32:32 +0000</pubDate><atom:updated>2026-07-16T17:32:32.785Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TNPSC,TNPSC exam,டி.என்.பி.எஸ்.சி.,டி.என்.பி.எஸ்.சி. தேர்வு,குரூப்-1 முதல்நிலைத் தேர்வு,டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு,TNPSC Group-1 Exam,டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு,குரூப்-1 தேர்வு,டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு,TNPSC Announcement,TNPSC Group 1</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/vvbfvn5y/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/vvbfvn5y/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>26 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 1 முதல் நிலைத் தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 6-ந்தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்திருந்தது. இந்த தேர்வுக்கு கடந்த 30-ந்தேதி முதல் ஜூலை 29-ந்தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.</p><h2>தேர்வு தேதி மாற்றம்</h2><p>இந்த நிலையில், தமிழ்நாட்டில் அரசு உயர் பதவிகளுக்கான குரூப்-1 (Group 1 Main Exam) முதன்மைத் தேர்வு நடத்தப்படும் தேதிகளில் அதிரடியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><p>முன்னதாக, செப்டம்பர் மாதம் 6-ஆம் தேதி தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,  அத்தேர்வானது 27.09.2026 அன்று நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- </p><p>தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 23.06.2026 அன்று வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - I (தொகுதி I பணிகள்) அறிவிக்கையில் முதல்நிலைத் தேர்வானது 06.09.2026 மு.ப. நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அத்தேர்வானது 27.09.2026 மு.ப. அன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியானது!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/neet-re-exam-results-released</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/neet-re-exam-results-released#comments</comments><guid isPermaLink="false">c37ab8ac-4e28-41be-b3f7-c6fbda14cd76</guid><pubDate>Thu, 16 Jul 2026 17:09:27 +0000</pubDate><atom:updated>2026-07-16T17:09:27.641Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நீட் தேர்வு,NEET Exam,NEET,நீட்,நீட் மறு தேர்வு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/qot920ve/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/qot920ve/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நாடு முழுவதும் கடந்த 3-ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில், ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் தேர்வுக்கு முன்பாக இணையத்தில் பரவிய வினாத்தாள், நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வித் தாளுடன் ஒத்துப் போவதாக சர்ச்சை வெடித்தது. இதையடுத்து தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.</p><p>இதையடுத்து, நீட்மறுதேர்வு  கடந்த ஜூன் 21ம் தேதி நாடு முழுவதும் 550 நகரங்களில் உள்ள 5400-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றது. 22.79 லட்சம் மாணாக்காரர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், தோராயமாக 20 லட்சம் பேர் தேர்வில் கலந்து கொண்டனர்.</p><p>நீட் மறு தேர்வு முடிவுகள் வரும் 20ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது நீட் மறு தேர்வுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளது.  இதில் பஞ்சாப்பைச் சேர்ந்த ஆர்யன் குப்தா 715 மதிப்பெண்களும், ஹரியானாவைச் சேர்ந்த பான்ஷுல் பன்சால் 715 மதிப்பெண்களும் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். </p><p>மேலும், 138 மாணவர்கள் 690க்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதனை தவிர, நீர் மறுதேர்வில் 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், மாணவிகளில் 56.8 சதவீதத்தினரும், மாணவர்களில் 55.1 சதவீதத்தினரும் தேர்ச்சி பெற்றதாகவும் தேசிய தேர்வு முகமை தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>பழைய மாமல்லபுரம் சாலையில் அஸ்திவார தூண்கள் அமைக்கும் பணி நிறைவு - சென்னை மெட்ரோ நிறுவனம் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/work-on-installing-foundation-pillars-on-old-mahabalipuram-road-completed-chennai-metro-rail-limited-announces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/work-on-installing-foundation-pillars-on-old-mahabalipuram-road-completed-chennai-metro-rail-limited-announces#comments</comments><guid isPermaLink="false">0a393e2d-74df-432d-a174-03f0b391fb3c</guid><pubDate>Thu, 16 Jul 2026 16:30:55 +0000</pubDate><atom:updated>2026-07-16T16:30:55.519Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை மெட்ரோ,chennai metro</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/hsuxkk61/State-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/hsuxkk61/State-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்டத் திட்டத்தின் 3-வது வழித்தடத்தில் கட்டுமான பணியில் 2 முக்கிய மைல்கல்கள் எட்டப்பட்டுள்ளன. இப்பணியில், பழைய மாமல்லபுரம் சாலையில் நேரு நகர் முதல் சோழிங்கநல்லூர் வரை மொத்தம் 3,066 அஸ்திவார தூண்கள் அமைக்கும் பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மேலும், மொத்தம் 582 முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட யூ-வடிவ கான்கிரீட் தூண் விட்டங்கள் தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளது.</p><p>தற்போது அனைத்து அஸ்திவார தூண்கள் பணிகளும், யு-கார்டர் தயாரிப்பு பணிகளும் முழுவதுமாக நிறைவடைந்துள்ளது. இது சென்னை மெட்ரோ 2-ம் கட்டிடத்தின் 3-வது வழித்தட பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்க உதவும் ஒரு முக்கிய மைல்கல் ஆகும். இதன் மூலம் பழைய மாமல்லபுரம் சாலையில் பாதுகாப்பான போக்குவரத்து சேவை விரைவில் பொதுமக்களுக்கு கிடைக்கும்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>
விராலிமலை இடைத்தேர்தலில் துரோகிகளை வெற்றிபெற விடக்கூடாது- எடப்பாடி பழனிசாமி  </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/traitors-must-not-be-allowed-to-win-the-viralimalai-by-election-edappadi-palaniswami</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/traitors-must-not-be-allowed-to-win-the-viralimalai-by-election-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">bc3f9f54-9f25-4d47-b08b-478eb93bdd88</guid><pubDate>Thu, 16 Jul 2026 16:19:18 +0000</pubDate><atom:updated>2026-07-16T16:19:18.291Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Edappadi Palaniswami,இடைத்தேர்தல்,விராலிமலை,Viralimalai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/l0epfu11/Edappadi-palanisami.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி  ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/l0epfu11/Edappadi-palanisami.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சட்டமன்ற தேர்தலில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக, கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து  ஆலோசனை நடத்தி வருகிறர். அந்த வகையில் இன்று புதுக்கோடையை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது; </p><h2> துரோகிகள்</h2><p>தங்களின் சொத்துக்களை பாதுகாப்பதற்காக கட்சியில் இருந்து விலகி ஆளும் கட்சியான த.வெ.க. பக்கம் சென்றுள்ள துரோகிகள் பற்றி கவலைப்பட வேண்டாம். உள்ளாட்சி தேர்தலுக்காக தீவிரமாக களப்பணியாற்றுங்கள். கட்சிக்கு விசுவாசம் மிக்க இளைஞர்கள், பெண்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். </p><h2>விராலிமலை தொகுதி</h2><p>அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு அ.தி.மு.க.வின் வெற்றிக்காக உழைக்க வேண்டும். விராலிமலை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற டாக்டர் சி.விஜயபாஸ்கர் கட்சிக்கு துரோகம் இளைத்து எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்துள்ளார். விராலிமலை தொகுதி இடைத்தேர்தலிலும் நாம் தான் வெற்றி பெற வேண்டும். துரோகிகளை வெற்றிபெற விடக்கூடாது. எனவே, ஒரு நல்ல வேட்பாளரை நீங்களே தேர்வு செய்துவிட்டு வாருங்கள் என்று தெரிவித்து உள்ளார்</p>]]></content:encoded></item><item><title>ரெயில்வே கேட் பகுதியில் நடு வழியில் நின்ற பாமணி ரெயில்: வாகன ஓட்டிகள் அவதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bamani-train-stalls-midway-at-railway-crossing-motorists-face-inconvenience</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bamani-train-stalls-midway-at-railway-crossing-motorists-face-inconvenience#comments</comments><guid isPermaLink="false">dd0df660-a67e-439d-9240-fad51e9d9566</guid><pubDate>Thu, 16 Jul 2026 15:55:37 +0000</pubDate><atom:updated>2026-07-16T15:55:37.118Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,train,ரெயில்,Tiruvannamalai,ரெயில்வே கேட்,Railway Crossing</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/nuo8rx20/15.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/nuo8rx20/15.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை, </p> <p>மன்னார்குடியில் இருந்து திருவண்ணாமலை வழியாக திருப்பதி சென்ற பாமணி ரெயில், ரெயில்வே கேட் பகுதியில் நடுவழியில் நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.</p><h2>நடுவழியில் நின்ற ரெயில்</h2><p>மன்னார்குடியில் இருந்து திருவண்ணாமலை வழியாக திருப்பதி நோக்கி சென்ற பாமணி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை 11 மணியளவில் திருவண்ணாமலையில், அவலூர்பேட்டை சாலையில் உள்ள ரெயில்வே கேட் வழியாக சென்றது. இதையொட்டி ரெயில்வே கேட் இருபுறமும் சாலை இரும்பு தடுப்பால் மூடப்பட்டது.</p><p>அவலூர்பேட்டை சாலை ரெயில்வே கேட் வழியாக சென்ற ரெயில் திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவழியில் நின்றது. இதைய டுத்து ரெயில்வே துறையினர் துரித நடவடிக்கை மேற்கொண்டு தொழில் நுட்பக் கோளாறை உடனடியாக சரி செய்தனர்.</p><h2>வாகன ஓட்டிகள் அவதி</h2><p>பின்னர் சுமார் 15 நிமிடம் காலதாமதமாக அந்த இடத்தில் இருந்து பாமணி ரெயில் புறப்பட்டு சென்றது. ரெயில்வே கேட் பகுதியில் ரெயில் நின்றதால் ரெயில்வே கேட் அருகே வாகன ஓட்டிகள் அணிவகுத்து நின்ற னர். அவர்கள் அங்கிருந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். ரெயில் அங்கிருந்து சென்ற பின்னர் கேட் திறக்கப்பட்டதை தொடர்ந்து வாகன ஓட்டிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு - அமைச்சர் என்.ஆனந்த் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-challenging-election-victory-high-court-orders-minister-n-anand-to-respond</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-challenging-election-victory-high-court-orders-minister-n-anand-to-respond#comments</comments><guid isPermaLink="false">df48542d-4911-45b7-ab6f-9366fdab5524</guid><pubDate>Thu, 16 Jul 2026 15:46:45 +0000</pubDate><atom:updated>2026-07-16T15:46:45.030Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஐகோர்ட்டு,Chennai High Court,அமைச்சர் ஆனந்த்,Minister Anand</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/fnc2ipvm/State-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/fnc2ipvm/State-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டமன்ற தேர்தலில் சென்னை தி.நகர் தொகுதியில் த.வெ.க. சார்பில் போட்டியிட்ட என்.ஆனந்த், அ.தி.மு.க. வேட்பாளர் தி.நகர் சத்யாவை 13,200 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து அந்த தொகுதி வாக்காளர் பாலசுப்பிரமணிய சர்மா என்பவர் ஒரு தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார். </p><p>இதே போல், ஆலங்குளம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மனோஜ் பாண்டியனின் வெற்றியை எதிர்த்து, அந்த தொகுதியை சேர்ந்த த.வெ.க. வேட்பாளர் விபின் சக்கரவர்த்தி, வாக்காளர்கள் இசக்கி ராஜா மற்றும் பத்மநாதன் ஆகியோர் தனித்தனியாக தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளில் சில குறைபாடுகள் இருந்ததால் அதை சரி செய்வதற்கு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் அவகாசம் வழங்கியிருந்தார். </p><p>இதற்கிடையில், மானாமதுரை தொகுதியில் த.வெ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இளங்கோவனின் வெற்றியை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் தமிழரசி ஒரு தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார். இவ்வாறாக மொத்தம் 5 தேர்தல் வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தன. </p><p>இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி, இந்த தேர்தல் வழக்குகள் தொடர்பாக 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று அமைச்சர் என்.ஆனந்த், தி.மு.க. எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன், இந்திய தேர்தல் ஆணையம் ஆகிய தரப்புகளுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார். </p>]]></content:encoded></item><item><title>குழந்தைகள் பாதுகாப்பு சேவை பணியாளர்களுக்கு நிலுவை ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் - உதயநிதி ஸ்டாலின் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/child-protection-service-workers-should-be-paid-their-arrears-immediately-udhayanidhi-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/child-protection-service-workers-should-be-paid-their-arrears-immediately-udhayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">d8f73277-f551-4975-a470-9d57fa58959e</guid><pubDate>Thu, 16 Jul 2026 15:39:47 +0000</pubDate><atom:updated>2026-07-16T15:39:47.857Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,Worker,பணியாளர்கள்,குழந்தைகள்,சேவை,Child Protection</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/em4nuch0/uthayanithistalin-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/em4nuch0/uthayanithistalin-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>குழந்தைகள் நலனுக்கான(Childline)  (1098) அமைப்பின் பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. ஊதியம் இல்லாத நிலையில் குழந்தைகள் பாதுகாப்பு சேவை பணியாளர்கள் சிலர் தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க இரவு நேரங்களில் மாற்று வேலைகளுக்கு செல்லக்கூடிய அவலம் ஏற்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர். </p><h2>குழந்தைகள் பாதுகாப்பு சேவை</h2><p>இன்னும் சிலர் இந்த பணியே வேண்டாம் என விலகும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் Childline அமைப்பு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அதில் பணிபுரிவோரின் நலனும் முக்கியம்.</p><p>எனவே <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88">குழந்தைகள் பாதுகாப்பு சேவை</a> பணியாளர்களின் ஊதியப் பிரச்சினையை தீர்த்து வைத்து, அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க செயல்திட்டங்களை வகுக்க வேண்டும்: கனிமொழி எம்.பி.</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/action-plans-must-be-formulated-to-prevent-crimes-against-children-kanimozhi-mp</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/action-plans-must-be-formulated-to-prevent-crimes-against-children-kanimozhi-mp#comments</comments><guid isPermaLink="false">bc811f1e-9440-4cf2-83a2-a7c6caeeb525</guid><pubDate>Thu, 16 Jul 2026 15:38:06 +0000</pubDate><atom:updated>2026-07-16T15:38:06.288Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>கனிமொழி எம்.பி.,Kanimozhi MP,children,குழந்தைகள்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/w7wuprj6/14.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/w7wuprj6/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”கோவை -  தொண்டாமுத்தூர் அருகே அரசு பேருந்து ஓட்டுநரால் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்துவரும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கு, இந்த தவெக அரசு போதிய செயல்திட்டங்களை வகுக்க வேண்டும். ஒருபுறம் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் தொடர்கதையாக உள்ள சூழலில், குழந்தைகள் பாதுகாப்பும் கேள்விக்குறியாகவுள்ளது.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சென்னை வேளச்சேரி-பள்ளிக்கரணை சாலையில் பள்ளி பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/commotion-as-school-bus-catches-fire-on-the-velachery-pallikaranai-road-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/commotion-as-school-bus-catches-fire-on-the-velachery-pallikaranai-road-in-chennai#comments</comments><guid isPermaLink="false">0417ac5c-b622-4210-ad9b-d79588d4e60d</guid><pubDate>Thu, 16 Jul 2026 15:25:47 +0000</pubDate><atom:updated>2026-07-16T15:25:47.583Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,bus,Fire,பேருந்து,தீ</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/i7xlxdzc/State-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/i7xlxdzc/State-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் வாகன ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று வழக்கம்போல் பள்ளி முடிந்ததும் மாணவர்களை பள்ளி பேருந்தில் ஏற்றி அவர்களது வீடுகளில் இறக்கிவிட்டு, மீண்டும் அந்த பேருந்தை பள்ளிக்கு கொண்டு செல்வதற்காக வேளச்சேரி-பள்ளிக்கரணை சாலையில் சென்று கொண்டிருந்தார். </p> <p>அப்போது திடீரென பேருந்தின் முன்பக்கத்தில் புகை வந்தததால் உடனடியாக அவர் பேருந்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். இதையடுத்து ஒரு சில வினாடிகளில் பேருந்து தீப்பற்றி எரியத்தொடங்கியது. பேருந்தில் மாணவர்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், பேருந்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். </p> <p>இருப்பினும் இந்த சம்பவத்தில் வாகனம் முழுவதுமாக தீயில் எரிந்து சேதமடைந்தது. அதே சமயம், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. மின்சார கசிவினால் இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி முழுவதும் சுமார் ஒன்றரை மணி நேரமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>ஈரோடு-திருச்செந்தூர் இடையே புதிய ரெயில் சேவை தேவை: விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/demand-for-new-train-service-between-erode-and-tiruchendur-farmers-protection-association</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/demand-for-new-train-service-between-erode-and-tiruchendur-farmers-protection-association#comments</comments><guid isPermaLink="false">987d4681-ac3c-4367-ba4c-c3f55de5f3c8</guid><pubDate>Thu, 16 Jul 2026 15:20:26 +0000</pubDate><atom:updated>2026-07-16T15:20:26.204Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்செந்தூர்,ரெயில் சேவை,train service,Erode,ஈரோடு,Tiruchendur</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/da4rdxhw/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/da4rdxhw/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநிலத் தலைவர் குப்புசாமி, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் இணை மந்திரி எல்.முருகனுக்கு மனு அனுப்பியுள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-</p><p>ஈரோடு-திருச்செந்தூர் புதிய விரைவு ரெயிலை திருப்பூர், கோவை, கிணத் துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை வழியாக இயக்க வேண்டும். இந்த புதிய ரெயில் சேவை மூலம் மேற்கு மற்றும் தென் தமிழ்நாட்டிற்கு இடையே நேரடி ரெயில் இணைப்பு கிடைக்கும். இதன் மூலம் ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, உடு மலை, பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் மற்றும் பக்தர்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேறும். முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி தண்டாயுத பாணி சாமி கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். </p><p>இப்புதிய ரெயில் சேவை தொடங்கப்பட்டால் பழனி மட்டுமின்றி, பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம் மற்றும் அறுபடை வீடு களில் ஒன்றான திருச்செந்தூர் ஆகிய முக்கிய முருகத் திருத்தலங்களுக் கும் ஒரே நேரடி ரெயில் மூலம் பக்தர்கள் எளிதாகச் சென்று வர முடி யும்.பக்தர்களுக்கு மட்டுமின்றி ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, உடுமலை, பழனி ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் வேளாண் வணிகர்களுக்கும் தென் மாவட்டங்களுடன் நேரடி போக்குவரத்து வசதி கிடைக்கும். எனவே, பொதுமக்களின் நலன் கருதி ஈரோடு-திருச்செந் தூர் விரைவு ரெயிலை விரைவில் இயக்க ரெயில்வே அமைச்சகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும். </p><p>இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘கறை படியாத அதிகாரிகளுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்’ - சென்னை ஐகோர்ட்டு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/promotions-should-be-granted-only-to-officers-with-an-unblemished-record-madras-high-court</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/promotions-should-be-granted-only-to-officers-with-an-unblemished-record-madras-high-court#comments</comments><guid isPermaLink="false">623f5815-01cc-49fa-ae83-4e6383d7409e</guid><pubDate>Thu, 16 Jul 2026 15:05:46 +0000</pubDate><atom:updated>2026-07-16T15:05:46.812Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை ஐகோர்ட்டு,Chennai High Court</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/11jyv8yt/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/11jyv8yt/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் பதிவுத்துறையில் கூடுதல் ஐ.ஜி.யாக பதவி உயர்வு வழங்குவதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்த பட்டியலில் டி.ஐ.ஜி.யாக இருப்பவர்களை கூடுதல் ஐ.ஜி.யாக பதவி உயர்த்துவதற்கு பட்டியல் தயாரிக்கப்படது. அந்த பட்டியலில் இடம் பெற்றிருந்த டி.ஐ.ஜி. ஆனந்த் என்பவருக்கு எதிராக ஒரு ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததுனால அவருக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. </p> <p>அதன் தொடர்ச்சியாக அவருக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து ஆனந்த் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, துறை ரீதியான நடவடிக்கைக்கு முன்பே தயாரிக்கப்பட்ட பதவி உயர்வு பட்டியலின் அடிப்படையில் ஆனந்துக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். </p> <p>தனி நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நீதிபதி என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பதவி உயர்வுக்கான பட்டியல்ல பெயர் இடம் பெற்றிருந்தது என்பதற்காக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பதை உரிமையாக கேட்க முடியாது என்று தெரிவித்தனர். </p><p>அதோடு, கறை படியாத அதிகாரிகளுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், பதவி உயர்வு வழங்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க தவெக அரசு முன்வர வேண்டும் - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-government-should-come-forward-to-open-navodaya-schools-in-tamil-nadu-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-government-should-come-forward-to-open-navodaya-schools-in-tamil-nadu-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">160b5639-16da-4539-a712-20f158376db9</guid><pubDate>Thu, 16 Jul 2026 15:04:45 +0000</pubDate><atom:updated>2026-07-16T15:04:45.931Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,School,பள்ளி,NainarNagendran,தவெக அரசு,Tvk  government</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/wd6i3ufi/nainar.gif" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/wd6i3ufi/nainar.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>நவோதயா பள்ளி</h2><p>தமிழகத்தில் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களுக்குத் தரமான, இலவசக் கல்வியை வழங்கும் நவோதயா பள்ளிகளை தொடங்குவது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதை வரவேற்கிறோம். புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதல்-அமைச்சர் விஜய்யின் தலைமையிலான தவெக அரசு, முந்தைய திமுக அரசின் பிடிவாத போக்கை தொடராமல், தமிழகத்தில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF">நவோதயா பள்ளிகளை</a> திறப்பதற்கான முறையான ஏற்பாடுகளை செய்ய முன்வர வேண்டும்.</p><h2>இந்தி திணிப்பு அல்ல</h2><p>மும்மொழிக் கொள்கை என்பது இந்தி திணிப்பு அல்ல என்றும், மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான எந்தவொரு மூன்றாவது மொழியையும் தேர்வு செய்யலாம் என்றும் உச்ச நீதிமன்றமே தெளிவாக விளக்கியுள்ளது. இதனை ஏற்றுக்கொண்டு, பழைய வெற்று அரசியல் காரணங்களைத் தவிர்த்துவிட்டு, மாணவர்களின் கல்வி நலனை மட்டுமே பிரதான நோக்கமாகக் கொண்டு தவெக அரசு செயல்பட வேண்டும்.</p><p>நீதிமன்ற உத்தரவின்படி, மூன்று வாரங்களுக்குள் தவெக அரசு தனது நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதோடு, நவோதயா பள்ளிகளுக்கான நிலங்களையும் உடனடியாக கண்டறிய வேண்டும். ஏழை மாணவர்களின் கல்வி உரிமையையும் அவர்களின் பிரகாசமான எதிர்காலத்தையும் முன்னிறுத்தி, இப்பள்ளிகளை தொடங்க போர்க்கால அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திருவண்ணாமலை கோவிலில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-court-orders-that-basic-amenities-be-ensured-for-devotees-at-the-tiruvannamalai-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-court-orders-that-basic-amenities-be-ensured-for-devotees-at-the-tiruvannamalai-temple#comments</comments><guid isPermaLink="false">2147ba17-956c-45f5-a46f-eef71182682a</guid><pubDate>Thu, 16 Jul 2026 14:48:54 +0000</pubDate><atom:updated>2026-07-16T14:48:54.109Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,Thiruvannamalai,ஐகோர்ட்டு,Chennai High Court</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/oxefp70k/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/oxefp70k/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை,</p><p>திருவண்ணாமலை கோவிலில் பக்தர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. திருவண்ணாமலை கோவில் நிர்வாகத்திற்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவில், கோவிலுக்கு வெளியில் கட்டுமானங்கள் கட்டுவதற்கு புராதன ஆணையத்திடம் ஒப்புதலை பெற்று அதற்கான பணிகளை தொடரலாம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். </p><p>மேலும், கிரிவல பாதையில் தற்காலிக கடைகள், சந்நியாசிகளால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதாக குறிப்பிட்ட நீதிபதிகள், காவல் துறையுடன் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர். மலையடிவாரத்தில் அனுமதி இல்லாத கட்டிடங்களுக்கு எதிரான நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 30-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>லாக்கப் மரணங்களுக்கு அரசை குறைகூற முடியாது - கார்த்தி சிதம்பரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-cannot-be-blamed-for-lakh-deaths-karti-chidambaram</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-cannot-be-blamed-for-lakh-deaths-karti-chidambaram#comments</comments><guid isPermaLink="false">5376dd24-333d-4b0e-b305-12c42b5429f0</guid><pubDate>Thu, 16 Jul 2026 14:36:04 +0000</pubDate><atom:updated>2026-07-16T14:36:04.714Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கார்த்தி சிதம்பரம்,Karti Chidambaram,Death,மரணம்,Lockup,லாக்கப்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/99agv50o/karthichidamparam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கார்த்தி சிதம்பரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/99agv50o/karthichidamparam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை,</p><p>காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் இன்று சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-</p><p>“ஒரு அரசுக்கு அவகாசம் கொடுக்கவேண்டும். பட்ஜெட், திட்டங்களை வைத்துதான் தவெக அரசு குறித்துக் கூறலாம். 5 வருடம் நிலையாக தவெக அரசு நடக்கும். அவர்களுக்கு எந்தக் கட்சி எம்.எல்.ஏக்களும் தேவையில்லை. அதிமுக எம்.எல்.ஏக்களின் ராஜினாமாக்களை நான் ஏற்கவில்லை. அது தேவையில்லாதது.</p><h2>லாக்கப் மரணம்</h2><p>லாக்கப் மரணம் என்பது ஒவ்வொரு ஆட்சியிலும் நடக்கிறது. இதில் அரசைக் குறைக்கூற முடியாது. இது காவல்துறையின் கலாசார சீரழிவு. காவல்துறையினர் இன்னும் காலனித்துவக் காவல் துறையாகவே செயல்படுகிறார்கள். காலனித்துவ மனநிலை காவல்துறைக்கு மாறவேண்டும். காவல்துறை சீர்திருத்தக் குழுவை அரசு அமைக்கவேண்டும். அனைத்து நிலை காவலர்களுக்கும் மறுபயிற்சி அளிக்கவேண்டும். ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது காவல்துறை. அதனால்தான் அவர்கள் இன்னும் இந்த மனநிலையில் இருக்கிறார்கள். இதற்கு முந்தைய அதிமுக, திமுக ஆட்சியிலும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D">லாக்கப் மரணங்கள்</a> நடந்துள்ளது.  </p><p>தவெக நிர்வாகிகள்மீது குற்றச்சாட்டு வந்தால் அரசு நடவடிக்கை எடுக்கிறது. ஊழல் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை கட்சியில் இருந்து நீக்குகிறார்கள். சமூகத்தில் நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் அரசு பொறுப்பேற்க முடியாது. அந்தக் குற்றத்தில் அரசு ஒரு அங்கம் வகிக்கிறது.</p><p>இவ்வாறு அவர் பேசியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை பூங்கா ரெயில் நிலையத்தை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/prime-minister-modi-to-inaugurate-chennai-park-railway-station-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/prime-minister-modi-to-inaugurate-chennai-park-railway-station-tomorrow#comments</comments><guid isPermaLink="false">38da3632-b993-46f1-9cce-f8a72a3170f6</guid><pubDate>Thu, 16 Jul 2026 14:29:57 +0000</pubDate><atom:updated>2026-07-16T14:29:57.282Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரதமர் மோடி,Prime Minister Modi,Railway Stations,ரெயில் நிலையங்கள்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/x6n18yj1/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/x6n18yj1/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மத்திய அரசு நாடு முழுவதும் சுமார் 3,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு மாநிலங்களில் உள்ள ரெயில் நிலையங்களை அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மறுசீரமைப்பு செய்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் அதிநவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட 75 ரெயில் நிலையங்களை நாளை பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.</p><h2>தமிழகத்தில் முக்கிய நிலையங்கள் திறப்பு:</h2><p>இந்த 75 ரெயில் நிலையங்களின் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய ரெயில் நிலையங்களும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, சென்னை பூங்கா, சின்ன சேலம், குன்னூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ரெயில் நிலையங்கள் முற்றிலும் புதுப்பொலிவுடன் மாற்றியமைக்கப்பட்டு, நாளை மறுநாள் திறக்கப்பட உள்ளன.</p><h2></h2><h2>உலகத்தரம் வாய்ந்த மாற்றங்கள்:</h2><p>* பயணிகளின் வசதியை மேம்படுத்தவும், அடுத்த 40 முதல் 50 ஆண்டுகால தேவையை நிறைவு செய்யும் வகையிலும் இந்த நிலையங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.</p><p>* முதியவர்கள் மற்றும் நோயாளிகளின் நலனைக் கருதி புதிய எஸ்கலேட்டர்கள் மற்றும் லிப்ட் வசதிகள் தாராளமாக நிறுவப்பட்டுள்ளன.</p><p>* மாற்றுத்திறனாளிகள் எளிதாகப் பயணிக்கும் வகையில் பிரத்யேக சாய்தளப் பாதைகள், பிரெய்லி வழித்தடங்கள் மற்றும் சிறப்பு கழிப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.</p><p>* முன்பு 4.5 மீட்டராக இருந்த நடைமேடை மேம்பாலங்கள், பயணிகளின் பாதுகாப்பான நடமாட்டத்திற்காக 12 மீட்டர் வரை அகலப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>* ரெயில் நிலையங்களின் முகப்புகள் மற்றும் உட்புறச் சுவர்கள் அந்தந்தப் பகுதியின் பாரம்பரியக் கலை மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.</p><p>* ரெயில் நிலைய வளாகங்கள் வெறும் பயண இடமாக மட்டுமில்லாமல், வணிக வளாகங்கள், உணவகங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களுடன் கூடிய 'சிட்டி சென்டர்களாக' மாற்றியமைக்கப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>ஈரோட்டில் போதை நோக்கில் வலி நிவாரண மாத்திரைகள் விற்பனையா? - போலீசார் அதிரடி சோதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sale-of-painkiller-tablets-for-recreational-drug-use-in-erode-police-conduct-surprise-raids</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sale-of-painkiller-tablets-for-recreational-drug-use-in-erode-police-conduct-surprise-raids#comments</comments><guid isPermaLink="false">903c0412-c169-480f-aec5-cafa85e2d808</guid><pubDate>Thu, 16 Jul 2026 14:16:35 +0000</pubDate><atom:updated>2026-07-16T14:16:35.900Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Erode,ஈரோடு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/eukk7qpa/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/eukk7qpa/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>ஈரோட்டில் போதை நோக்கில் பயன்படுத்தப்படும் வலி நிவாரண மாத்திரைகள் விற்கப்படுகிறதா? என்பதை அறிய டி.எஸ்.பி. தலைமையிலான போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு மருந்தகங்களில் நடைபெற்ற இந்த சோதனையில், மருந்தக ஆய்வாளர்களும் பங்கேற்று மருந்துகள் மற்றும் விற்பனை நடைமுறைகளை ஆய்வு செய்தனர். </p><p>இதையடுத்து மருந்தக உரிமையாளர்களிடம், மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் வழங்கக் கூடாது என்றும், சந்தேகத்திற்கிடமான முறையில் வலி நிவாரண மாத்திரைகள் கேட்பவர்கள் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>ஈரோடு-செங்கோட்டை ரெயில் சேவையில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-the-erode-sengottai-train-service</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-the-erode-sengottai-train-service#comments</comments><guid isPermaLink="false">0ba9fbdb-a359-4981-9b17-e3270f631096</guid><pubDate>Thu, 16 Jul 2026 14:13:01 +0000</pubDate><atom:updated>2026-07-16T14:13:01.872Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Sengottai,செங்கோட்டை,ரெயில் சேவை,train service,Erode,ஈரோடு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/4udcwfx4/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/4udcwfx4/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,  </p><p>கரூர் வழித்தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக ஈரோடு-செங்கோட்டை ரெயில் சேவை மாற்றப்பட்டு உள்ளது.</p><h2>பராமரிப்பு பணி</h2><p>ஈரோடு-கரூர் வழித்தடத்தில் ரெயில்வே பாலங்களின் பராமரிப்பு மற்றும் புனரமைப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் நாளை மறுநாள் (சனிக்கி ழமை) ஈரோடு-செங்கோட்டை உள்பட சில ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.</p><p>அதாவது, திருச்சியில் காலை 7.25 மணிக்கு புறப்பட வேண்டிய திருச்சி-ஈரோடு பயணிகள் ரெயில் (வண்டி எண்-56809) நாளை மறுநாள் கரூர் ரெயில் நிலையத்துடன் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக கரூரில் இருந்து ஈரோடு வரை அந்த ரெயில் இயக்கப்படாது.</p><h2></h2><h2>கரூர் வரை...</h2><p>இதேபோல், ஈரோட்டில் இருந்து நாளை மறுநாள் மதியம் 2 மணிக்கு புறப்பட வேண்டிய ஈரோடு-செங்கோட்டை ரெயில் (16845) கரூரில் இருந்து மதி யம் 3.05 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் ஈரோடு சந்திப்பில் இருந்து கரூர் சந்திப்பு வரை இயக்கப்படாது.</p><p>அதேபோல், மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து தினமும் காலை 5.20 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை-ஈரோடு ரெயில் (16846) கரூர் ரெயில் நிலையம் வரை இயக்கப்படும். கரூரில் இருந்து ஈரோட்டிற்கு இயக்கப்படாது என சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title> முன்னாள் அமைச்சர்களின் ராஜினாமாவை ஏற்றதை எதிர்த்து வழக்கு:-சட்டமன்ற செயலாளர் பதில் அளிக்க ஐகோர்ட்  உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-challenging-the-acceptance-of-former-ministers-resignations-high-court-orders-assembly-secretary-to-file-a-response</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-challenging-the-acceptance-of-former-ministers-resignations-high-court-orders-assembly-secretary-to-file-a-response#comments</comments><guid isPermaLink="false">83963046-6ec8-4bcc-81cd-7b5bed242a3b</guid><pubDate>Thu, 16 Jul 2026 14:07:33 +0000</pubDate><atom:updated>2026-07-16T14:07:33.055Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ராஜினாமா,சென்னை ஐகோர்ட்டு,சட்டமன்ற செயலாளர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/e4o1anco/CHennai-High-Court.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/e4o1anco/CHennai-High-Court.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p> <p>தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் விராலிமலை தொகுதியில் சி.விஜயபாஸ்கர், கரூர் தொகுதியில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றனர். பின்னர், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த இவர்கள், ஆளும் கட்சியான த.வெ.க.வில் இணைந்தனர். இவர்களது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக் கொண்டார்.இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அ.தி.மு.க., கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழக்கு தொடர்ந்துள்ளார்.அதில், ‘‘கட்சி கொறடா உத்தரவை மீறி த.வெ.க.அரசு கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர் என்பதற்காக இவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சபாநாயகரிடம் புகார் அளிக்கப்பட்டது.</p> <p>அந்த புகார் நிலுவையில் இருக்கும்போது, இருவரது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக் கொண்டது தவறானது. சபாநாயகர், மனதை செலுத்தாமல் எந்திரத்தனமாக முடிவெடுத்துள்ளதால், இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டு தலையிட வேண்டும். சபாநாயகரின் முடிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இந்த மனு மீது இறுதி முடிவு எடுக்கும் வரை விராலிமலை மற்றும் கரூர் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர், சட்டமன்ற செயலாளர், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும்.</p>  <p>ஏற்கனவே நான்கு எம் எல்.ஏக்கள் ராஜினாவை ஏற்றதை எதிர்த்த தொடரப்பட்ட வழக்குகளுடன், இந்த இரு வழக்குகளையும் சேர்த்து விசாரணைக்கு ஐகோர்ட்டு பதிவுத்துறை பட்டியலிடவேண்டும். விசாரணையை வருகிற 22-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்’’ என்று உத்தரவிட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>மாநில உரிமைகளை அடகுவைத்த ‘மற்றும் பலர்’ இன்று மக்களரசை பழிப்பது மாபெரும் நகைச்சுவை - த.வெ.க. கடும் விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-a-huge-irony-for-the-and-otherswho-mortgaged-state-rightsto-criticize-the-peoples-government-today-tvks-scathing-criticism</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-a-huge-irony-for-the-and-otherswho-mortgaged-state-rightsto-criticize-the-peoples-government-today-tvks-scathing-criticism#comments</comments><guid isPermaLink="false">0cd076d0-ac20-46a0-99d5-36ebd900d1f9</guid><pubDate>Thu, 16 Jul 2026 14:01:50 +0000</pubDate><atom:updated>2026-07-16T14:01:50.920Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,த.வெ.க.,விமர்சனம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/wouteay9/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/wouteay9/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“டேபிளுக்கு கீழே தவழ்ந்துபோய் நாற்காலியைப் பிடித்தவர்கள் எல்லாம் நம் ஆட்சியை பார்த்து பழிப்பது கண்டு கொடநாடு எஸ்டேட் மரங்களும் மண்ணும் அங்கு நடந்த மர்மங்களும்கூட பல்லைக் காட்டி சிரிக்கின்றன.</p><p>தவறு செய்தது யாராக இருந்தாலும் உடனே துரித நடவடிக்கையை முடுக்கி விடும் மனசாட்சி உள்ள மக்களாட்சியை இழித்துப் பேசும் தீர்ந்துபோன சக்தி, அதிகார வெறியில், ஆற்றாமையில் தீய்ந்துபோய் கருகிய வாசனையில் காண்டாகிக் கதறுவது ஏனோ?</p><p>பழனி விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் சிரத்தையுடன் இறங்கி உள்ளது தெரியாமல், பத்தாம்பசலித்தன அரசியல் அறிக்கை விடுவது ஏனோ?.</p><p>ஆட்சி அதிகாரத்திற்காக, பதவி சுகத்திற்காக, மாநில உரிமைகளை அடகுவைத்த ‘மற்றும் பலர்’ தலைமை, இன்று மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காத மக்களரசை பார்த்துப் பேசுவதெல்லாம் மாபெரும் நகைச்சுவை.</p><p>ஏ.ஐ. தெரிந்த ஆட்களைத் தேடி அலையும் எடப்பாடி இடர்சாமிகள் ரீல்ஸ் பற்றிப் பேசி அழுதாலும் இனி அரசியலில் அழுது புரள்வதைத் தவிர வேறு வழியில்லை.</p><p>இளைஞர்களுக்காக, பெண்களுக்காக,விவசாயிகளுக்காக என அனைத்து தரப்பு மக்களுக்காக உண்மையாக, நேர்மையாக, லஞ்ச ஊழலற்ற முறையில் உழைக்கத் தெரிந்த அரசை ஆற்றாமையில் அழுதுகொண்டே ஏச வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் ஆக. 1- 30-ந்தேதி வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/census-in-tamil-nadu-from-august-1-to-30</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/census-in-tamil-nadu-from-august-1-to-30#comments</comments><guid isPermaLink="false">84df9e82-cabf-4391-9f71-7192c2cb75ec</guid><pubDate>Thu, 16 Jul 2026 13:44:21 +0000</pubDate><atom:updated>2026-07-16T13:44:21.453Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,Tamil Nadu,மக்கள் தொகை கணக்கெடுப்பு,Census</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/1sm2s8d4/11.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/1sm2s8d4/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். 2011-ம் ஆண்டுக்குப் பிறகு 2021-ம் ஆண்டு நடத்த வேண்டிய கணக்கெடுப்பு கொரோனா தொற்றுகாரணமாக ஒத்திவைக்கப்பட்டது.</p><p>இந்தநிலையில் தற்போது 2025-2026-ம் ஆண்டுகாலகட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியுள்ளன. இந்திய வரலாற்றில், 2025-2026-ம் ஆண்டு கணக்கெடுப்பு முழுமையாக டிஜிட்ல் முறையில் நடக்கிறது. மக்கள் தங்களை பற்றிய தகவல்களை "செல்போன் செயலி மூலம்" தாங்களாகவே பதிவு செய்யும் வசதியும் இருக்கிறது.</p><p>இந்த நிலையில், ஆகஸ்ட் 1 - 30 வரை மக்கள் கணக்கெடுப்பிற்காக அலுவலவர்கள் வீடு தேடி வருவார்கள் என மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரி சுந்தரேஷ் பாபு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறி இருப்பதாவது;</p><p>”ஆகஸ்ட் 1 - 30 வரை மக்கள் கணக்கெடுப்பிற்காக அலுவலவர்கள் வீடு தேடி வருவார்கள். 33 கேள்விகள் கேட்கப்படும். நாளை முதல் ஜூலை 31 வரை https://se.census.gov.in/ என்ற இணையதளத்திலும் பொதுமக்கள் தாங்களாகவே தங்கள் விவரங்களை பதிவு செய்யலாம். இணையதளத்தில் பதிவது கட்டாயமல்ல. ஆன்லைனில் பதிவு செய்தால் அலுவலர்கள் நேரில் வரும்போது அதனை சரிபார்ப்பார்கள். இல்லையென்றால் அவர்களாகவே விவரங்களை கேட்டுப் பெறுவார்கள்.” </p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக்கில் 54 வகையான உயர் ரக மதுபானங்கள் அறிமுகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/54-varieties-of-premium-alcoholic-beverages-introduced-at-tasmac</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/54-varieties-of-premium-alcoholic-beverages-introduced-at-tasmac#comments</comments><guid isPermaLink="false">fda9c257-c36f-4b27-b693-a3d23924a52b</guid><pubDate>Thu, 16 Jul 2026 13:29:28 +0000</pubDate><atom:updated>2026-07-16T13:29:28.314Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>டாஸ்மாக்,Tasmac,மதுபானங்கள்,tasmac bar</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/94avwlen/10.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/94avwlen/10.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கடைகளில் விற்பனைசெய்யப்படும் மதுபானங்களின் எண்ணிக்கையை அதிகரிக் கும் வகையில், புதிதாக 54 வகை உயர் ரக மதுபான பிராண்டுகளை அறிமுகப்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>இதற்காக பிற மாநிலங்களைச் சேர்ந்த மதுபான உற் பத்தியாளர்களிடம் இருந்தும் இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளி நாட்டு மதுபானங்கள் மற்றும் பீர் வகைகளை கொள் முதல் செய்ய டாஸ்மாக் நிர்வாகக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்ட அதே வேளையில் குடிமகன்களின் கோரிக்கையை ஏற்று டாஸ்மாக் கடைகளை மறுசீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் தரமானதாக இல்லை என்று நீண்ட காலமாக மது பிரியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். பல தரம் குறைந்த மதுவகைகள் கெமிக்கல் கலவையாகவே இருக்கிறது என விமர்சனமும் உள்ளது.</p><p>இந்நிலையில், மதுபிரி யர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை ஏற்றுடாஸ்மாக் கடைகளில் உயர்ரக மதுபானங்களை விற்பனை செய்வதற்கான நடவடிக்கையை டாஸ்மாக் நிர்வாகம் தீவிரப்படுத்தி வருகிறது.</p><p>அதன்படி, மதுபானம் வாங்குபவர்களுக்கு இனி டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் அதிகளவில் தரமான இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி, ஸ்காட்ச் விஸ்கி, ஒயின், வோட்கா, ஜின், ரம் மற்றும் பிரீமியம் பீர் போன்ற வெளிமாநில மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்கள் டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக விற்பனை செய்யப்படவுள்ளன.</p><p>பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் இந்த உயர்ரக மதுபானங்கள் நுகர்வோரின் நிதி நிலைக்கு ஏற்ற விலையில் விற்பனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் தற்போது தமிழ்நாட்டில் இதுவரை கிடைக்காத பல்வேறு பிரபலமான பீர் மற்றும் மதுபான பிராண்டுகள் விரைவில் டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.</p><p>புதிய பிராண்டுகளின் இறுதிப்பட்டியல் விரை வில் வெளியிடப்படும் என்றும், அதன்பிறகு படிப்படியாக மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்றும் கூறப்படுகிறது. தமிழகத்தில் தற்போது டாஸ்மாக் மூலம் 100 க்கும் மேற்பட்ட மதுபான பிராண்டுகள் விற்பனை செய்யப்பட்டுவருகின்றன.</p><p>இருப்பினும், அவற்றில் குறிப்பிட்ட சில பிராண்டுகளுக்கு மட்டுமே நுகர்வோர் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. அதே நேரத்தில், பிற மாநிலங்களில் விற்பனையாகும் பல பிரபலமான பீர் மற்றும் மதுபான வகைகள் தமிழ் நாட்டில் கிடைக்காததால், அவற்றை வாங்குவதற்காக புதுச்சேரி, கர்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு பலரும் செல்வதாக கூறப்படுகிறது.</p><p>இந்த நிலையை மாற்றும் வகையில், சந்தை தேவையை ஆய்வு செய்ததுடன், நுகர்வோரின் விருப்பங்களையும் கருத்தில் கொண்டு கூடுதலாக 54 புதிய பிராண்டுகளை அறிமுகப்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக பிரபலமான பீர் பிராண்டுகளான பீரா பிளாண்ட், பீரா ஒயிட், பீரா கோல்டு, லோன் வுல்ப் உள்ளிட்ட பல்வேறு பிராண்டுகள் அறிமுகப்படுத்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>இருப்பினும், இறுதி ஒப்புதல் பெற்ற பிராண்டுகளின் பட்டியல் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என கூறப்படுகிறது. இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், புதிய பிராண்டுகள் அறிமுகம் செய்வதன் மூலம் நுகர்வோருக்கு அவர்கள் விரும்பும் வகையிலான மதுபானங்கள் பலவற்றை தேர்வு செய்ய வாய்ப்பு கிடைக்கிறது. மதுபான சந்தையில் போட்டியை அதிகரிப்பதும் இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.</p><p>மேலும், உள்ளூர் உற்பத்தியாளர்களுடன் சேர்த்து பிற மாநிலங்களைச் சேர்ந்த மதுபான உற்பத்தியாளர்களும் தமிழ்நாட்டிற்கு மதுபானங்களை விநியோகிக்க அனுமதிக்கப்பட உள்ளனர்.</p><p>இதன் மூலம் இதுநாள் வரை ஆதாயம் பெற்றுவந்த சில நிறுவனங்களின் ஆதிக்கம் குறைவதுடன், தரமான பொருட்கள் கிடைக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும் என்று தெரிவித்தனர். மேலும், புதிய பிராண்டுகள் உடனடியாக விற்பனைக்கு வராது என்றும், உற்பத்தி, விநியோகம் மற்றும் தேவையான நிர்வாக அனுமதிகள் நிறைவடைந்த பிறகே படிப்படியாக டாஸ்மாக் கடைகளில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>இதனிடையே, மதுபானங்களுக்கான வரியை உயர்த்துவது தொடர்பாக அரசுக்கு எந்தத் திட்டமும் இல்லை என்று துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேபோல், சில்லறை விற்பனை விலையை உயர்த்தும் முடிவும் தற்போது பரிசீலனையில் இல்லை என்று மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் எஸ். விக்னேஷ் ஏற்கனவே தெரிவித்துள்ளார். </p><p>இதனிடையே, தமிழ்நாட்டில் பீர் விற்பனைக்கு லிட்டருக்கு ரூ.15 மொத்த விற்பனை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கர்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இந்த கட்டணம் குறைவாக இருப்பதுடன், வாட் உள்ளிட்ட வரி விதிப்பிலும் வித்தியாசம் இருப்பதால், சில வெளிமாநில நிறுவனங்கள் தமிழக சந்தையில் நுழைவதில் தயக்கம் காட்டி வருகின்றன.</p><p>எனினும், கலால் வரி விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட தயாராக உள்ள நிறுவனங்களின் புதிய மதுபான பிராண்டுகளை படிப்படியாக டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் அறிமுகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  </p>]]></content:encoded></item><item><title>சைதாப்பேட்டை எரிவாயு தகனமேடையில் பராமரிப்பு பணிகள்: பொதுமக்களுக்கு மாநகராட்சி முக்கிய அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/maintenance-work-at-saidapet-gas-crematorium-important-announcement-from-the-corporation-to-the-public</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/maintenance-work-at-saidapet-gas-crematorium-important-announcement-from-the-corporation-to-the-public#comments</comments><guid isPermaLink="false">c73b4ebf-acfe-4a23-845a-f713973df467</guid><pubDate>Thu, 16 Jul 2026 13:14:04 +0000</pubDate><atom:updated>2026-07-16T13:14:04.716Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Corporation,சென்னை மாநகராட்சி,maintenance work,பராமரிப்பு பணிகள்,எரிவாயு தகன மேடை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/6dfxrnll/chennai.gif" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/6dfxrnll/chennai.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட சைதாப்பேட்டை மயானபூமியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், பொதுமக்கள் அன்னை சத்யா நகர் மற்றும் கண்ணம்மாபேட்டை மயானபூமியினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.</p><h2>எரிவாயு தகனமேடை</h2><p>பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-139க்குட்பட்ட சைதாப்பேட்டை மயானபூமியில்<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88"> எரிவாயு தகனமேடையில்</a> பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள உள்ளதால், 17.07.2026 முதல் 05.08.2026 வரை 20 நாட்கள் மேற்கண்ட மயானபூமி இயங்காது.</p><p>எனவே, பராமரிப்புப் பணிகள் நடைபெறும் நாட்களில், பொதுமக்கள் அருகிலுள்ள வார்டு-138க்குட்பட்ட அன்னை சத்யா நகர் மயானபூமி மற்றும் வார்டு-141க்குட்பட்ட கண்ணம்மாபேட்டை மயானபூமியினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மின்வாரிய அதிகாரிகள் நாளை முதல் தலைமையகத்தில் ஆஜராக வேண்டும் - மின்சார வாரியம் உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/electricity-board-officials-must-report-to-headquarters-starting-tomorrow-electricity-board-order</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/electricity-board-officials-must-report-to-headquarters-starting-tomorrow-electricity-board-order#comments</comments><guid isPermaLink="false">030f1660-781b-475a-8c86-8be3db2cc01b</guid><pubDate>Thu, 16 Jul 2026 13:04:40 +0000</pubDate><atom:updated>2026-07-16T13:04:40.407Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு மின்சார வாரியம்,TNEB</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/36004haq/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/36004haq/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக பொது மக்களுக்கான மின்சார விநியோகத்தில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற நோக்கில், மின்வாரிய ஊழியர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. </p><p>அனைத்து கண்காணிப்பு பொறியாளர்கள், செயல் பொறியாளர்கள் நாளை முதல் அந்தந்த தலைமையக அலுவலகங்களில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அவசர சூழ்நிலைகளை தவிர, வாரிய பணியாளர்களுக்கு விடுப்பு வழங்கப்படாது எனவும், ஏற்கனவே விடுப்பில் சென்ற ஊழியர்கள் உடனடியாக பணிகளுக்கு திரும்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>தடையற்ற, தொடர்ச்சியான மின் உற்பத்தியை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும், மின்சார வாரியத்தின் பிரதான நுழைவாயிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>மேலும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆலை வளாகத்தில் கூடுவதற்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது. வாரிய பணியாளர்கள் அனைவரும் ஆலையை 24 மணி நேரமும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>திமுக எம்பிக்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalin-holds-consultations-with-dmk-mp</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalin-holds-consultations-with-dmk-mp#comments</comments><guid isPermaLink="false">ba53bd6f-4563-4efd-8ad2-c9d329b4ec12</guid><pubDate>Thu, 16 Jul 2026 12:52:33 +0000</pubDate><atom:updated>2026-07-16T12:52:33.598Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,எம்பிக்கள்,MP</media:keywords><media:content height="542" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/hd41dxgu/MK-STALIN-NEW12.jpg" width="794"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/hd41dxgu/MK-STALIN-NEW12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 20 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தக் கூட்டத்தில் தொகுதி மறுவரையறை மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த  மசோதக்களை நிறைவேற்ற மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை அவசியம் என்பதால், எதிர்க்கட்சி எம்பிக்களின் ஆதரவை பெற பாஜக  முயற்சிப்பதாக கூறப்படுகிறது. </p><p>இந்த நிலையில்,  திமுக எம்பிக்களுடன் முக ஸ்டாலின்  ஆலோசனை மேற்கொண்டுள்ளார். லண்டன் சென்றுள்ள ஸ்டாலின் அங்கிருந்து காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துவதாக சொல்லப்படுகிறது.  விரைவில் நாடாளுமன்றம் தொடங்க உள்ள நிலையில், இந்த ஆலோசனை முக்கியத்துவம் பெற்றுள்ளது.</p><p>இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: </p><p>மேகதாது அணை கட்டும் முயற்சிகளுக்கு எதிராகவும், காவிரியில் தமிழ்நாட்டுக்குள்ள நியாயமான உரிமையைக் காக்கவும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரத்துக் குரலெழுப்புவார்கள். </p><p>ஒன்றிய அரசு கொண்டு வரும் எந்தப் புதிய சட்டமாக இருந்தாலும் மாநில உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டத்தினையும் பாதுகாத்திடும் வகையிலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு இருக்கும். தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியாய் ஒவ்வொரு DMK MP-யும் செயல்படுவார்கள்!' என்று பதிவிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>நீலகிரியில் தொடங்கியது பேரிக்காய் சீசன்! கிலோ ரூ.150-க்கு விற்பனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pear-season-has-begun-in-the-nilgiris-selling-for-rs-150-per-kg</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pear-season-has-begun-in-the-nilgiris-selling-for-rs-150-per-kg#comments</comments><guid isPermaLink="false">50258b1e-df7b-494a-b759-fc4535b4f524</guid><pubDate>Thu, 16 Jul 2026 12:51:12 +0000</pubDate><atom:updated>2026-07-16T12:51:12.714Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nilgiris,நீலகிரி,சீசன்,Season,Pears,பேரிக்காய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/ri1wzku4/69.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/ri1wzku4/69.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி</p><p>நீலகிரி மாவட்டத்தில் பேரிக்காய் சீசன் துவங்கியுள்ளது. இது தற்போது மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது.கிலோ ரூ. 150 வரை விற்கிறது.</p><p>பேரிக்காய் சுவை, சத்து மற்றும் உடல்நல நன்மைகள் நிறைந்த பழமாக விளங்குகிறது. இதை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை விரும்பி சாப்பிடுகிறார். இதில் நார்ச்சத்து, வைட்டமின் மற்றும் பொட்டாசியம், தாமிரம் உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் தேயிலை பிரதான தொழிலாக உள்ளது. இது தவிர மாவட்டம் முழுவதிலும் மலைக்காய்கறி அதிகளவு பயிரிடப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாகவே கோத்தகிரி. அரவேணு, பேரார் மற்றும் குன்னூர் போன்ற பகுதிகளில் தேயிலை செடிகளின் நடுவே ஊடு பயிராக பழ மரங்கள் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பேரிக்காய், வால் பேரிக்காய், ஆரஞ்சு ஆகிய பழ மரங்கள் வைக்கப்பட்டுள்ளன.</p><h2>பேரிக்காய் சீசன்</h2><p>தற்போது குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் பேரிக்காய் சீசன் துவங்கியுள்ளதால் மார்க்கெட் பகுதிகளுக்கும் விற்பனைக்கு அதிகளவில் வர துவங்கி உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும், ஜூன், ஜூலை, ஆகஸ்டு, மாதங்களில் பேரிக்காய் சீசன் களை கட்டுகிறது. அதில், 'சாம்பல் பேரி, சட்டிபேரி, வால்பேரி, கத்திபேரி,'உட்பட பல வகையான பேரிக்காய்களை, விவசாயிகள், தோட்டக்கலை துறையினர் சாகுபடி செய்கின்றனர். </p><p>சிம்ஸ் பூங்கா அருகே பழ பண்ணையில் பேரி சீசன் களைகட்டிய நிலையில் சட்டி பேரி, வால் பேரி உள்ளிட்டவற்றிற்கு மகசூல் அதிகரித்துள்ளது.இவற்றை விற்பனைக்காக பணியாளர்கள் பறித்து சேகரித்து வருகின்றனர். ஒரு கிலோ <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D">பேரிக்காய்</a> ரூ.150 என சுற்றுலா பயணிகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>வடசென்னையில் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம் - மத்திய இணை மந்திரி எல்.முருகன் திறந்து வைத்தார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/post-office-passport-seva-kendra-in-north-chennai-inaugurated-by-union-minister-of-state-l-murugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/post-office-passport-seva-kendra-in-north-chennai-inaugurated-by-union-minister-of-state-l-murugan#comments</comments><guid isPermaLink="false">0be08f83-5e42-4249-9fc9-816ebc0ce2d3</guid><pubDate>Thu, 16 Jul 2026 12:44:35 +0000</pubDate><atom:updated>2026-07-16T12:44:35.192Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எல்.முருகன்,L.Murugan,Chennai,passport,பாஸ்போர்ட்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/4lwez6v4/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/4lwez6v4/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை கொளத்தூரில் உள்ள பெரியார் நகர் துணை அஞ்சல் அலுவலகத்தில் புதிதாக அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய தகவல், ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி எல்.முருகன் இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் வட சென்னை மக்களவை தொகுதி உறுப்பினர் கலாநிதி வீராசாமி, கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p><p>இந்த பாஸ்போர்ட் மையம் மூலம் வடசென்னை மற்றும் சுற்றுவட்டார மக்கள், இனி அண்ணாசாலையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் செல்லாமல், தங்கள் பகுதிக்குள்ளேயே பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை எளிதாக பெற முடியும். இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணை மந்திரி எல்.முருகன், அரசின் திட்டங்கள் கடைநிலை மக்கள் வரை சென்றடையும் வகையில் அஞ்சலகங்களின் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>கள்ளக்குறிச்சி: பள்ளியில் விளையாடியபோது மயங்கி விழுந்து 7-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு  </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sankarapuram-7th-grade-student-dies-after-collapsing-while-playing-at-school</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sankarapuram-7th-grade-student-dies-after-collapsing-while-playing-at-school#comments</comments><guid isPermaLink="false">473144eb-663f-4efd-ad3d-dc233a212114</guid><pubDate>Thu, 16 Jul 2026 12:39:58 +0000</pubDate><atom:updated>2026-07-16T12:39:58.319Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கள்ளக்குறிச்சி,Kallakkurichi,அரசு பள்ளி,Student death,மாணவர் உயிரிழப்பு,Government School</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-06-27/yo8wei02/death.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மாணவன் உயிரிழப்பு]]></media:title><media:description type="html"><![CDATA[ சங்கராபுரம் அரசு பள்ளியில் மயங்கி விழுந்து மாணவன் உயிரிழப்பு. ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-06-27/yo8wei02/death.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சி,</p><p>கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசு பள்ளியில் விளையாடியபோது 7- ஆம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்தார். </p><h2>அரசு பள்ளி</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கள்ளக்குறிச்சி மாவட்டம்</a> சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவன் புவின்குமார் (வயது 13). இந்த மாணவன் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவன் வழக்கம் போல் இன்று (வியாழக்கிழமை) காலை பள்ளிக்கு வந்துள்ளார். மதிய உணவு இடைவேளையின் போது, அவர் பள்ளியின் மைதானத்தில் சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். </p><h2>திடீர் மயக்கம்</h2><p>விளையாடிக் கொண்டிருக்கும் போதே <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மாணவன்</a> புவின்குமார் திடீரென நிலைதடுமாறி தரையில் மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த சக மாணவர்களும் ஆசிரியர்களும் அதிர்ச்சியடைந்து, அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.</p><h2>மாணவன் உயிரிழப்பு</h2><p>மாணவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். காலையில் துள்ளிக் குதித்து பள்ளிக்கு வந்த தங்களது மகன் மதியத்திற்குள் பிணமாகக் கிடப்பதைக் கண்டு, பெற்றோர்களும் உறவினர்களும் ஆஸ்பத்திரியில் கதறி அழுதது பார்ப்போரைக் கண் கலங்க வைத்தது .</p><h2>போலீஸ் விசாரணை</h2><p>இந்தத் துயரச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த சங்கராபுரம் போலீசார், மாணவனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவனின் உயிரிழப்புக்கான உண்மையான காரணம் என்ன, விளையாடும்போது மாரடைப்பு ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் உடல்நலக் குறைபாடு காரணமா என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>பள்ளி வளாகத்திற்குள் மாணவன் உயிரிழந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை: முன்னாள் காதலியை வெட்ட முயன்ற இளைஞர் கைது  </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-five-people-including-a-young-man-who-attempted-to-hack-his-ex-girlfriend-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-five-people-including-a-young-man-who-attempted-to-hack-his-ex-girlfriend-arrested#comments</comments><guid isPermaLink="false">7cb957b2-1479-438b-872d-e3677dba49fa</guid><pubDate>Thu, 16 Jul 2026 12:38:11 +0000</pubDate><atom:updated>2026-07-16T12:38:11.827Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,arrest,கொலை முயற்சி,5 பேர் கைது,முன்னாள் காதலி,ex- girl friend</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/s30wowhk/ex-girl-friend-killa-plan.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ கொலை முயற்சியில் கைதான 5 இளைஞர்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ முன்னாள் காதலியை கொலை செய்ய முயன்ற இளைஞர் உட்பட 5 பேர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/s30wowhk/ex-girl-friend-killa-plan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையை அடுத்த பெரம்பூரில், முன்னாள் காதலியை கத்தியால் வெட்ட முயன்ற இளைஞர் உட்பட 4 பேரை போலீசார்  அதிரடியாக கைது செய்தனர்.</p><h2>இன்ஸ்டாகிராம் புகைப்படத்தால் ஆத்திரம்</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை பெரம்பூர் </a>பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும், இமான் (வயது 22) என்ற இளைஞரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் தனிப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். எனவே அந்தப் பெண் வேறொரு இளைஞரை காதலிக்கத் தொடங்கினார். மேலும், தனது புதிய காதலனுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் அந்தப் பெண் பதிவிட்டுள்ளார்.</p><h2>நடுரோட்டில் தாக்குதல் முயற்சி</h2><p>அதைப்பார்த்து ஆத்திரமடைந்த இமான், தனது நண்பர்களான பரத் (வயது 24), ராகுல் (வயது 19), பிலிப்ஸ் (வயது 20) மற்றும் சிஜன் (வயது 23) ஆகியோருடன் சேர்ந்து அந்தப் பெண்ணை பின்தொடர்ந்தார். பெரம்பூர் பகுதியில் அப்பெண் தனது புதிய காதலனுடன் பேசிக் கொண்டிருந்தபோது, மதுபோதையில் இருந்த இமான் மற்றும் அவரது நண்பர்கள் திடீரென கத்தியைக் காட்டி அவர்களை மிரட்டி, வெட்ட முயன்றனர்.</p><h2>5 பேர் கைது</h2><p>இதையடுத்து அந்த காதல் ஜோடி அலறிக் கூச்சலிட்டனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தடுத்ததால், அந்தப் பெண்ணும் அவரது காதலனும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பொதுமக்கள் கூடுவதைக் கண்டு இமான் மற்றும் அவரது நண்பர்கள் கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.</p><p>இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், திருவிக்கா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும் தலைமறைவாக இருந்த முதன்மை குற்றவாளி இமான் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் உட்பட மொத்தம் 5 பேரையும் போலீசார் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கைது</a> செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>கோவை: 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பஸ் ஓட்டுநர் கைது  </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-government-bus-driver-arrested-for-sexually-harassing-a-4-year-old-girl</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-government-bus-driver-arrested-for-sexually-harassing-a-4-year-old-girl#comments</comments><guid isPermaLink="false">e8711e12-e0b5-48b7-93e0-321a91a831ac</guid><pubDate>Thu, 16 Jul 2026 12:34:01 +0000</pubDate><atom:updated>2026-07-16T12:34:01.904Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,பாலியல் தொல்லை,சிறுமி,driver arrested,4 year old girl,ஓட்டுநர் கைது</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/sinczevf/sex-abuse-koovai-driver.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ கைது செய்யப்பட்ட சங்கர்]]></media:title><media:description type="html"><![CDATA[ கோவையில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பஸ் ஓட்டுநர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/sinczevf/sex-abuse-koovai-driver.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கோவை மாவட்டம்</a> அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பஸ் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>சிறுமிக்கு பாலியல் தொல்லை</h2><p>கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை அடுத்த வஞ்சியம்மன் திருமுருகன் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 36). இவர் அரசு போக்குவரத்து கழக பஸ்சில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பக்கத்து ஊரில் உள்ள தனது உறவினரின் வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார். </p><p>அப்போது, பக்கத்து வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுமியை, வீட்டிற்குள் அழைத்து <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பாலியல் தொல்லை </a>கொடுத்தார். </p><h2>பஸ் ஓட்டுநர் கைது</h2><p>இந்த சிறுமி, பெற்றோரிடம் நடந்ததைக் கூறினார். இதையடுத்து பெற்றோர் பேரூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சங்கரை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.</p><p>இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>காவலர் நியமனத்தை தாமதிப்பது, சட்டம் ஒழுங்கில் அரசு சமரசம் செய்வதற்கு சமம் - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/delaying-the-appointment-of-police-officers-is-tantamount-to-the-government-compromising-on-law-and-order-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/delaying-the-appointment-of-police-officers-is-tantamount-to-the-government-compromising-on-law-and-order-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">013b945b-1b07-4d9a-904d-5e54aa733255</guid><pubDate>Thu, 16 Jul 2026 12:25:24 +0000</pubDate><atom:updated>2026-07-16T12:25:24.048Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,காவலர்,police officers,Appointment,நியமனம்,தாமதம்,delay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/fit2q2ye/nainarnagendran-twitter.gif" width="753"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/fit2q2ye/nainarnagendran-twitter.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருபப்தாவது:-</p><p>தமிழகத்தில் கொலை, கொள்ளை, போதைப் பொருட்கள், பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், இந்த ஆண்டிற்கான காவலர் நியமனத்தை அடுத்த ஆண்டிற்கு தள்ளி வைப்பதாக தமிழக சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது.</p><h2>அதிக பணிச்சுமை</h2><p>அரசு வேலையை நம்பி உடலளவிலும், மனதளவிலும் இரவு பகலாக தங்களை தயார்படுத்தி வரும் லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவுகளை இப்படி தவிடு பொடியாக்குவது தான், முதல்-அமைச்சர் விஜய்யின் மாற்று அரசியலா? அரசின் இந்த நடவடிக்கையால், வயது வரம்பின் காரணமாக நூற்றுக்கணக்கான படித்த பட்டதாரிகள் காவலர் வேலைக்கான தகுதியிழப்பார்கள் என்பதை அரசு உணரவில்லையா? அல்லது குறிப்பிட்ட விகிதத்தினரை இப்படி தகுதி நீக்கம் செய்வது தான் அரசின் திட்டமா? ஆள் பற்றாக்குறையால் ஏற்கனவே அதிக பணிச்சுமையில் தவிக்கும்<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D"> காவலர்களுக்கு</a> மேலும் ஒரு வருடத்திற்கு பளுவை கூட்டி, அவர்களை மன உளைச்சலுக்குள் தள்ளுவது தான் “அனைவருக்குமான” அரசா? </p><h2>பணியாளர் பற்றாக்குறை</h2><p>எனவே, காவலர் நியமனத்தை அடுத்த ஆண்டிற்கு ஒத்தி வைக்கும் அறிவிப்பினை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமெனவும், தமிழகக் காவல்நிலையங்களின் அனைத்துப் பிரிவுகளிலும் உள்ள பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் முதல்-அமைச்சரை வலியுறுத்துகிறேன். </p><p>அதுமட்டுமன்றி தமிழக காவல்துறையில் ஆய்வாளர்கள் (Inspectors) பலர், துணைக் காவல் கண்காணிப்பாளர் (Deputy Superintendent of Police) பதவிக்கு தகுதி பெற்றும் கூட, நீண்ட காலமாக பதவி உயர்வு பெறாமல் காத்திருக்கின்றனர். அவர்களின் பதவி உயர்விற்கும் விரைவில் வழிவகை செய்யுமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பெங்களூருவில் கர்ப்பிணியை கொலை செய்து கணவர் தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/husband-kills-pregnant-wife-and-commits-suicide-in-bengaluru</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/husband-kills-pregnant-wife-and-commits-suicide-in-bengaluru#comments</comments><guid isPermaLink="false">9d8c23c8-5746-4964-bcfe-d841229fa95f</guid><pubDate>Thu, 16 Jul 2026 12:21:29 +0000</pubDate><atom:updated>2026-07-16T12:21:29.935Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பெங்களூரு,Bengaluru</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/4ndedov3/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/4ndedov3/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பெங்களூரு,</p><p>உத்தர பிரதேச மாநிலம் அசாம்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் மனோஜ் விஸ்வகர்மா. இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு சப்னா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு தனது மனைவியுடன் பெங்களூருவில் குடியேறிய மனோஜ், அங்கு வாடகை வீட்டில் தங்கியிருந்து தச்சு வேலைகள் செய்து வந்தார். </p><p>இந்த நிலையில், மனோஜ் சமீப காலமாக வேலையில் கவனம் செலுத்தாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இன்று காலை 11.30 மணியளவில் மனோஜ் வீட்டில் இருந்து கணவன், மனைவி இருவரும் கடுமையாக வாக்குவாதம் செய்யும் சத்தம் கேட்டுள்ளது. சிறிது நேரம் கழித்து அக்கம்பக்கத்தின் மனோஜின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்து. கதவை தட்டிப் பார்த்தபோது எந்த பதிலும் இல்லை. </p><p>இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கதவை உடைத்து வீட்டிற்குள் நுழைந்தனர். அங்கே மனோஜ் தூக்கில் தொடங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது மனைவி சப்னா கீழே விழுந்து கிடந்தார். அவரை சோதித்து பார்த்தபோது அவரும் உயிரிழந்துவிட்டார் என்பது தெரியவந்தது. இருவரது உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><p>முதற்கட்ட விசாரணையில், மனோஜின் மனைவி சப்னா 4 மாதங்கள் கர்ப்பிணியாக இருந்தார் என்பது தெரியவந்துள்ளது. மனோஜ் தனது மனைவியின் கழுத்தை நைலான் கயிற்றை வைத்து இறுக்கி கொலை செய்துவிட்டு, பின்னர் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர். கர்ப்பிணியான தனது மனைவியை மனோஜ் ஏன் கொலை செய்தார்? கணவன், மனைவிக்குள் என்ன பிரச்சினை ஏற்பட்டது? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>காவலர் தேர்வுக்கான வயது தகுதியில் ஓராண்டு தளர்வு அறிவிக்க வேண்டும் - திருமாவளவன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-one-year-age-relaxation-must-be-announced-for-police-recruitment-thirumavalavan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-one-year-age-relaxation-must-be-announced-for-police-recruitment-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">82eed257-57a6-4b08-af7f-34f9e04a4be6</guid><pubDate>Thu, 16 Jul 2026 11:16:12 +0000</pubDate><atom:updated>2026-07-16T11:16:12.031Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமாவளவன்,Thirumavalavan,காவலர் தேர்வு,Police Recruitment</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/c9yisdx4/8.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/c9yisdx4/8.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>விசிக தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;</p><p>தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) வெளியிட்டுள்ள Revised Annual Planner 2026–2027-இன் படி, 2026ஆம் ஆண்டில் நடைபெற வேண்டிய துணைக் காவல் ஆய்வாளர் (SI), இரண்டாம் நிலைக் காவலர் (Grade-II Police Constable), சிறைக்காவலர் உள்ளிட்ட எந்தவொரு சீருடைப் பணியாளர் தேர்வும் நடத்தப்படாமல், அனைத்துத் தேர்வுகளும் 2027ஆம் ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பு, காவல்துறையில் பணியாற்றும் இலக்குடன் பல ஆண்டுகளாகத் தீவிரமாகித் தயாராகி வரும் ஆயிரக்கணக்கான போட்டித் தேர்வர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் மனவேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, அவர்களுக்குக் குறைந்தது ஓராண்டுக்காவது தளர்வு வழங்கவேண்டும் எனத் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறோம். </p><p>TNUSRB விதிகளின்படி, காவலர் தேர்வுகளுக்கான அதிகபட்ச வயது தகுதி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. 2026ஆம் ஆண்டு ஜூலை 1 அன்று வயது தகுதியுடன் இருந்த ஏராளமான தேர்வர்கள், தேர்வு 2027ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதால், 2027ஆம் ஆண்டு ஜூலை 1 அன்று வயது வரம்பைத் தாண்டி தகுதியை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து உழைத்து தேர்வுக்குத் தயாராகி வந்த இளைஞர்கள், தேர்வை எழுதும் வாய்ப்பையே இழக்கும் நிலை உருவாகியுள்ளது.</p><p>மேலும், 2025ஆம் ஆண்டு முதல் தேர்வுக்குத் தயாராகி வரும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் நீண்டகால உழைப்பு வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதோடு, 2026ஆம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால், அடுத்த ஆண்டில் போட்டி மேலும் அதிகரித்து, வேலைவாய்ப்பு பெறுவதிலும் கூடுதல் தாமதம் ஏற்படும். </p><p>எனவே, இந்தப் பிரச்சினையின் தீவிரத்தைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கருத்தில் கொண்டு, 2026ஆம் ஆண்டு ஜூலை 1 அன்று வயது தகுதியுடன் இருந்த அனைவருக்கும் 2027ஆம் ஆண்டு நடைபெறும் TNUSRB தேர்வுகளுக்குக் குறைந்தபட்சம் ஓராண்டு வயது தளர்வு வழங்க வேண்டும். தேவையெனில் இரண்டு ஆண்டுகள் வரை வயது தளர்வு வழங்குவதையும் பரிசீலிக்க வேண்டும்.</p><p>அத்துடன், தேர்வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, குறைந்தபட்சம் 2026ஆம் ஆண்டிலேயே இரண்டாம் நிலைக் காவலர் (Grade-II Police Constable) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு, அவர்களின் நம்பிக்கையைப் பாதுகாக்கத் தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை வளர்ச்சிக்கான தொழில்துறை ஆலோசகர்களை நியமிக்க டெண்டர் கோரியது தமிழக அரசு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tamil-nadu-government-has-invited-tenders-to-appoint-industrial-consultants-for-the-growth-of-the-micro-small-and-medium-enterprises-msme-sector</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tamil-nadu-government-has-invited-tenders-to-appoint-industrial-consultants-for-the-growth-of-the-micro-small-and-medium-enterprises-msme-sector#comments</comments><guid isPermaLink="false">b8ece6ed-6442-4526-8ecc-55323d43f679</guid><pubDate>Thu, 16 Jul 2026 11:05:30 +0000</pubDate><atom:updated>2026-07-16T11:05:30.986Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt,tender,டெண்டர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/p9ug6r2p/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/p9ug6r2p/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ்நாட்டில சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் எதிர்கால வளர்ச்சிக்கான நீண்ட கால செயல் திட்டத்தை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் தொழில்துறை ஆலோசகரை நியமிப்பதற்கான டெண்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. </p><p>இந்த திட்டத்தின் கீழ் உணவு பதப்படுத்துதல், மின்னணு, தோல், ஜவுளி, ஆட்டோமொபைல், மின்சார வாகனங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளின் செயல்பாடு மற்றும் எதிர்கால வளர்ச்சி குறித்து தொழில்துறை ஆலோசகர் மூலம் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்படும். </p><p>தொழில் துறையின் உற்பத்தி திறனை உயர்த்துவது, தொழிலாளர்களின் திறனை மேம்படுத்துவது, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, ஆராய்ச்சி மற்றும் புதுமையை ஊக்குவிப்பது, டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதோடு,  தமிழ்நாடு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை உலகளாவிய போட்டிக்கு தயார்படுத்துவது, முதலீடுகள், வேலை வாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. </p><p>இதற்காக ஒரு ஆலோசகர் நியமிக்கப்பட்டு சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறையை மேம்படுத்துவதற்கான திட்டமிடல்களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை வளர்ச்சிக்கான தொழில்துறை ஆலோசகர்களை நியமிக்க தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>சேலம்: அரசு பஸ் முன் படுத்து போதை ஆசாமி அராஜகம் – பயணிகள் அவதி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-drunk-man-causes-chaos-by-lying-down-in-front-of-a-government-bus-passengers-inconvenienced-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-drunk-man-causes-chaos-by-lying-down-in-front-of-a-government-bus-passengers-inconvenienced-2#comments</comments><guid isPermaLink="false">5a9fb217-332b-401b-afb7-46f92f5bdc3e</guid><pubDate>Thu, 16 Jul 2026 10:46:26 +0000</pubDate><atom:updated>2026-07-16T10:46:26.893Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசு பஸ்,Government bus,Salem,சேலம்,பயணிகள் அவதி,Drunk Man,போதை ஆசாமி</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/pezr6gzf/poothai-aasaami.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ போதை ஆசாமி]]></media:title><media:description type="html"><![CDATA[ சேலத்தில் போதை ஆசாமியின் அராஜகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/pezr6gzf/poothai-aasaami.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம் மாவட்டம் எடப்பாடியில் அரசு பஸ் முன் படுத்து அராஜகம் செய்த போதை ஆசாமியால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.</p><h2>போதை ஆசாமி</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சேலம் மாவட்டம்</a> எடப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து அரசுப் பேருந்து ஒன்று புறப்படத் தயாரானது. அப்போது, மது போதையில் இருந்த பயணி ஒருவர், பேருந்தின் படிக்கட்டில் அமர்ந்து கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்ய முயன்றார்.</p><p>அதனைக் கண்ட பஸ்சின் நடத்துனர், விபத்து அபாயத்தைத் தவிர்க்கும் பொருட்டு, அவரைப் படிக்கட்டில் அமரக் கூடாது என எச்சரித்துக் கண்டித்தார். மேலும், பஸ்சின் தானியங்கி கதவும் மூடப்பட்டது.</p><h2>பஸ் முன் படுத்து ரகளை</h2><p>நடத்துனரின் கண்டிப்பால் ஆத்திரமடைந்த அந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">போதை ஆசாமி</a>, பஸ்சில் இருந்து இறங்கி, "படிக்கட்டுல உட்காந்தா தப்பா? ரூல்ஸ் இருக்கா இல்லையா?" எனக் கூச்சலிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதோடு நிறுத்தாமல், பேருந்தை செல்ல விடாமல் அதன் முன்பக்கச் சக்கரத்தின் அருகே சாலையில் நேராகப் படுத்துக்கொண்டு அடம் பிடித்தார்.</p><h2>பயணிகள் கடும் அவதி</h2><p>போதை ஆசாமியின் இந்த  அராஜகத்தால் பஸ் நிலையத்திற்குள் பிற வாகனங்கள் வந்து செல்வதில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பஸ்சில் இருந்த பயணிகள் மற்றும் பஸ் நிலையத்திற்கு வந்த பொதுமக்கள் அனைவரும் அவரது செயலால் அவதிக்குள்ளாகினர்.</p>]]></content:encoded></item><item><title>கோயம்பேடு மலர் சந்தையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/flower-prices-at-the-koyambedu-flower-market-have-skyrocketed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/flower-prices-at-the-koyambedu-flower-market-have-skyrocketed#comments</comments><guid isPermaLink="false">d62eca64-f873-406a-a8f2-c19456dc0c90</guid><pubDate>Thu, 16 Jul 2026 10:44:22 +0000</pubDate><atom:updated>2026-07-16T10:44:22.291Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Koyambedu,கோயம்பேடு,flower prices,பூக்கள்  விலை</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/3ua9sdsk/4.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/3ua9sdsk/4.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>”ஆடி மாதம் நாளை பிறக்கிறது. இதையொட்டி அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றுதல், பொங்கல் வைப்பது, தீமிதி திருவிழா உள்ளிட்டவை வெகு விமர்சையாக நடக்கும். இதை முன்னிட்டு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அதிகாலை முதலே சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வரத்து அதிகரித்து காணப்பட்டு பூ விற்பனையும் விறுவிறுப்பாக நடந்தது. வரத்து குறைவால் கடந்த சில நாட்களாகவே சாமந்தி பூ ஒரு கிலோ ரூ.180 முதல் ரூ.240வரை விற்கப்பட்டது.</p><p>மேலும் படிக்க:</p> <p>இந்த நிலையில் அதன் விலை மேலும் அதிகரித்து உள்ளது. இன்று ஒரு கிலோ சாமந்தி பூ ரூ. 350 வரை விற்கப்பட்டு வருகிறது. அதேபோல் பன்னீர் ரோஜா ஒரு கிலோ ரூ.120 க்கும், சாக்லேட் ரோஜா ஒரு கிலோ ரூ.160-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெளி மார்கெட்டில் உள்ள பூக்கடைகளில் சாமந்தி பூ ஒரு கிலோ ரூ.500வரை விற்கப்படுகிறது.</p><p>பூ மொத்த வியாபாரி ஒருவர் கூறும்போது:</p><p>ஆடி மாதம் கோவில் திருவிழாக்கள் அதிகளவில் நடக்கும். மேலும் ஆடி பூரம், ஆடி பெருக்கு என அடுத்தடுத்து விஷேச நாட்கள் வருவதால் இனி வரும் நாட்களில் பூ விற்பனை சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.</p><p>கோயம்பேடு மார்க்கெட்டில் பூ விற்பனை விபரம் (கிலோவில்) வருமாறு :-</p><p>மல்லிகை ரூ.600,</p><p>கனகாம்பரம்- ரூ.700,</p><p>அரளி - 5.250,</p><p>செவ்வரளி- ரூ.400,</p><p>முல்லை- ரூ.500,</p><p>ஜாதி - 5.500,</p><p>சம்பங்கி-ரூ.100.</p> ]]></content:encoded></item><item><title>ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சி.பி.ஐ. விரைவில் விசாரணை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cbi-to-investigate-armstrong-murder-case-soon</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cbi-to-investigate-armstrong-murder-case-soon#comments</comments><guid isPermaLink="false">4c865648-4b35-42fe-a4d6-16b8dff99f67</guid><pubDate>Thu, 16 Jul 2026 10:43:48 +0000</pubDate><atom:updated>2026-07-16T10:43:48.424Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>CBI,சி.பி.ஐ.,விசாரணை,Murder case,Armstrong,ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/ywaxl3on/amstronk.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆம்ஸ்ட்ராங்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/ywaxl3on/amstronk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><p>பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.</p><p>சென்னை பெரம்பூர் பகுதியில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து 27 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த பிரபல வடசென்னை தாதா நாகேந்திரன் உடல் நலக்குறைவால் காலமானார். இதைத் தொடர்ந்து மற்றவர்கள் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கும், அரசியல் பிரபலங்களுக்கும் தொடர்பு இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.</p><h2>காலதாமதம் </h2><p>இதைத்தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டுமென சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்து ஐகோர்ட்டு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. ஆனால் சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து கடந்த தி.மு.க. ஆட்சியில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்தது. இதனால் சி.பி.ஐ. விசாரணை நடைபெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது.</p><h2>தடை நீங்கியது</h2><p>இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ஆட்சி மாற்றத்துக்கு பிறகு தற்போதைய த.வெ.க. அரசு திரும்பப் பெற்றுள்ளது. இதனால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கான தடை நீங்கி இருக்கிறது. இதன் காரணமாக விரைவில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை கையில் எடுத்து தீவிர விசாரணையில் ஈடுபட இருக்கிறார்கள். இது தொடர்பான ஆவணங்களை செம்பியம் போலீசாரிடம் இருந்து பெற்று இந்த வழக்கில் முழு பின்னணி குறித்தும் விசாரிக்க உள்ளனர். </p><h2>சி.பி.ஐ. விசாரணை</h2><p>ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் அரசியல் பிரமுகர்கள் சிலருக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ள நிலையில் சி.பி.ஐ. இந்த வழக்கை கையில் எடுக்க இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சி.பி.ஐ. விசாரணை தீவிரமடையும் போது <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%20">ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் </a>தொடர்புடைய மேலும் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 2 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை எதிர்த்த வழக்கு - ஐகோர்ட்டில் 22-ந்தேதி விசாரணை  </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-challenging-the-resignation-of-aiadmk-mlas-high-court-hearing-on-the-22nd</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-challenging-the-resignation-of-aiadmk-mlas-high-court-hearing-on-the-22nd#comments</comments><guid isPermaLink="false">f9ddc1bd-9832-4bbc-984b-749235127024</guid><pubDate>Thu, 16 Jul 2026 10:27:56 +0000</pubDate><atom:updated>2026-07-16T10:27:56.192Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை ஐகோர்ட்டு,Chennai High Court</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/6b34wcrw/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/6b34wcrw/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சட்டமன்ற தேர்தலில் விராலிமலை, கரூர் தொகுதிகளில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தனர். அவர்களுடைய ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதை எதிர்த்து அ.தி.மு.க. &nbsp;கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். </p><p>அந்த மனுவில், தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருக்கும் நிலையில், இருவருடைய ராஜினாமாவை &nbsp;சபாநாயகர் ஏற்றுக்கொண்டது தவறு என்றும், இந்த விவகாரத்தில் கோர்ட்டு தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. சபாநாயகரின் முடிவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் விராலிமலை, கரூர் தொகுதிகள் காலியானதாக அறிவித்த விவகாரத்தில் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.</p> <p>இந்த மனு இன்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, இந்த மனு குறித்து பதிலளிக்கும்படி சட்டமன்ற செயலாளர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் ஆகியோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், ஏற்கனவே 4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவை ஏற்றதை எதிர்த்த வழக்குகளோடு சேர்த்து இந்த வழக்குகளையும் ஜூலை 22-தேதி விசாரணைக்கு பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>அதிமுகவுடன் திமுக கூட்டணி அமைக்குமா? முன்னாள் அமைச்சர் ரகுபதி  விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-dmk-form-an-alliance-with-the-aiadmk-former-minister-raghupathy-clarifies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-dmk-form-an-alliance-with-the-aiadmk-former-minister-raghupathy-clarifies#comments</comments><guid isPermaLink="false">0479d437-0de6-458f-8087-424866ad39a1</guid><pubDate>Thu, 16 Jul 2026 10:23:41 +0000</pubDate><atom:updated>2026-07-16T10:23:41.579Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,திமுக,DMK,ரகுபதி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/cwx0zt1h/Ragupati.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரகுபதி ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/cwx0zt1h/Ragupati.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் வீழ்த்தி தவெக ஆட்சியைப் பிடித்தது. திமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்ற விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் இணைந்து தவெக ஆட்சி அமைத்துள்ளது. முன்னதாக பெரும்பான்மை கிடைக்காமல் தவெக ஆட்சியை அமைக்க தடுமாறிக்கொண்டு இருந்த நேரத்தில் திமுகவும் அதிமுகவும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதிமுக ஆட்சி அமைக்க திமுக வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கலாமா என்று ஆலோசிக்கப்பட்டதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது.</p><h2>சக்திவாய்ந்த இயக்கமாக</h2><p>எலியும் பூனையுமாக தேர்தல் களத்தில் இருந்த இரு கட்சிகளும் கூட்டணி அமைக்க ஆலோசனை நடத்தியதாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது. இந்த நிலையில் முன்னாள் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அமைச்சர் ரகுபதி</a> இது தொடர்பாக பேசியதாவது: "தமிழ்நாட்டில் நிரந்தர கூட்டணியும் கிடையாது. நிரந்தர எதிரிகளும் கிடையாது. அதே நேரத்தில் அதிமுக பக்கம் போகமாட்டோம். தனித்து நின்று வெல்லக்கூடிய அளவிற்கு சக்திவாய்ந்த இயக்கமாக திமுகவை உருவாக்கிக் காட்டுவோம் </p> <h2>கொத்து பரோட்டா போட்டிருப்பார்கள் </h2><p>தமிழக மக்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லை. விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எங்கு சென்றாலும் தவெகவினர் கஞ்சா விற்பனை செய்கிறார்கள். திருமயம் தொகுதியில் தவெகவில் இருக்கக்கூடிய பலர் மணல் கடத்துகிறார்கள்.</p><p> எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என எங்களுக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருக்கிறது என அதிகாரிகள் சொல்கின்றனர். லஞ்சம் வாங்காத விஜய் சார், சிறுவர்களை ஏமாற்றி ஓட்டு வாங்கிய விஜய் சார், அந்த மேலிடம் யார்? . உங்கள் ஆட்சியில்தான் இவை அனைத்தும் நடந்து கொண்டிருக்கிறது. <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">முதல்வரே</a> கொஞ்சம் கண்களை விழித்துப்பாருங்கள்.  நான் கொளத்தூரில் 5 நிமிடம் பேசியதற்கே கொத்துப் பரோட்டா போட்டுவிட்டனர் என சொல்லியிருக்கிறார். நீங்கள் 10 நிமிடம் பேசியிருந்தால், உங்களை கொத்து பரோட்டா போட்டிருப்பார்கள். எழுதிக் கொடுத்த 5 நிமிட வசனத்தை தான் நீங்கள் பேசுனீர்கள்; 6-வது நிமிடம் பேசியிருந்தால், உங்களுக்கா ஓட்டு என மக்கள் ஓடியிருப்பார்கள்”என்றார். </p> ]]></content:encoded></item></channel></rss>