<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 19 Jul 2026 11:23:39 +0000</lastBuildDate><item><title>தமிழகத்தில் ரெஸ்ட்ரோ பார்? - அமைச்சர் விக்னேஷ் விளக்கம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/restro-bars-in-tamil-nadu-minister-vignesh-clarifies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/restro-bars-in-tamil-nadu-minister-vignesh-clarifies#comments</comments><guid isPermaLink="false">615e12e5-e16a-4647-a7a4-b92fc571b387</guid><pubDate>Sun, 19 Jul 2026 11:19:45 +0000</pubDate><atom:updated>2026-07-19T11:19:45.996Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Minister Vignesh,அமைச்சர் விக்னேஷ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/8w4q5iru/National-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/8w4q5iru/National-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் உணவகத்துடன் கூடிய மதுபானக் கூடம்(ரெஸ்ட்ரோ பார்) கொண்டு வர அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் பரவியது. இருப்பினும் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“கடந்த கால ஆட்சிகளில் டாஸ்மாக் நிர்வாகத்தை மிக மோசமான நிலையில் வைத்திருக்கிறார்கள். இன்றுகூட டாஸ்மாக் கடைகள் முன்பு சிலர் போதையில் படுத்துக்கிடப்பதும், பாட்டில்கள், கிளாஸ்களை வீசிவிட்டு செல்வதுமான செயல்களை நம்மால் பார்க்க முடிகிறது. இதை எல்லாம் மாற்றி, சீரமைக்க வேண்டும். </p><p>அதற்கு என்னனென்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம். அதில் சிலர் ரெஸ்ட்ரோ பார் குறித்து பேசினார்கள். சிலர் டாஸ்மாக் நிர்வாகத்தை தனியாருக்கு விடலாம் என்றார்கள். சிலர் அரசாங்கமே டாஸ்மாக் நிர்வாகத்தை மேம்படுத்தி தரம் உயர்த்தலாம் என்று ஆலோசனை கூறினார்கள். இதில் ரெஸ்ட்ரோ பார் என்று சொன்னது மட்டும் எப்படியே வெளியே கசிந்துவிட்டது. இதை வைத்து தவறான தகவலை பரப்பிவிட்டுள்ளனர். </p> <p>ஆனால் அரசு இதுவரை எந்த திட்டத்தையும் உறுதி செய்யவில்லை. மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறதோ, அதைத்தான் த.வெ.க. அரசு பிரதிபலிக்கும். அதேபோல், டாஸ்மாக் துறையை வைத்து அரசின் வருமானத்தை உயர்த்த நாங்கள் திட்டமிடுகிறோம் என்று யாரும் நினைக்க வேண்டாம். எதிர்க்கட்சிகள் அவ்வாறு நினைத்தால் ஏமாந்து போய்விடுவார்கள். எங்களுக்கு அந்த எண்ணம் கிடையாது.” </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>72 வது தேசிய திரைப்பட விருது: தேர்வானவர்களுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/72nd-national-film-awards-gk-vasan-congratulates-winners</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/72nd-national-film-awards-gk-vasan-congratulates-winners#comments</comments><guid isPermaLink="false">a4a8174d-954b-438e-a8b5-bad3cbfe759d</guid><pubDate>Sun, 19 Jul 2026 10:48:52 +0000</pubDate><atom:updated>2026-07-19T10:48:52.309Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வாழ்த்து,congratulates,GK Vasan,ஜி.கே.வாசன்,72nd National Film Awards,72வது தேசிய திரைப்பட விருதுகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/d8bt5azd/g.k.vasan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/d8bt5azd/g.k.vasan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>72 வது தேசிய திரைப்பட விருது பெற்ற தேர்வானவர்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- </p><h2>தேசிய விருதுகள்</h2><p>தமிழ் சினிமாவின் மூலம் தேசிய விருதுக்கு தேர்வானவர்கள் தேசிய அளவில் தமிழ் சினிமாவிற்கும், தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் பேரும் புகழும் சேர்த்திருப்பது சிறப்புக்குரியது. இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட திரைப்படத்தில் உள்ள பல துறைகளுக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.</p><h2>மகிழ்ச்சி</h2><p>கலைஞர்களின் கடின உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் தேசிய விருதுகள் அறிவிக்கப்படுவது மகிழ்ச்சிக்குரியது. 2024-ம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கான <a href="https://www.dailythanthi.com/search?q=72-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">72-வது தேசிய திரைப்பட விருதுகள்</a> (72nd National Film Awards) அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>ஜி.வி. பிரகாஷ்குமார்</h2><p>புஷ்பா 2 திரைப்படம் இரண்டு முக்கிய பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றுள்ளது. சிறந்த தமிழ் படமாக தனுஷ் இயக்கி நடித்த 'ராயன்' திரைப்படமும், 'அமரன்' படத்திற்காக ஜி.வி. பிரகாஷ்குமார் சிறந்த பின்னணி இசைக்கான விருதுக்கும் தேர்வாகியிருக்கிறது. </p> <h2>10 தேசிய விருதுகள்</h2><p>‘மகாராஜா’ படத்திற்காக சிறந்த துணை நடிகை பிரிவில் சச்சனா நமிதாஸுக்கும், சிறந்த சண்டைப் பயிற்சியாளருக்கான பிரிவில் அனல் அரசுக்கும் என 2 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் திரையுலகிற்கு மொத்தம் 10 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது போற்றுதலுக்குரியது.</p> <h2>பெருமைமிக்கவர்கள்</h2><p>3 தேசிய விருதுகளுக்கு தேர்வான இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கும், கேப்டன் மில்லர் பட நடிகர் தனுஷுக்கும், சிறந்த ஒலிக்கலவை பொறியாளரான சுரேன் ஜிக்கும், அமரன் பட படத்தொகுப்பாளர் கலைவாணனுக்கும், சிறந்த ஒலிக்கலவைக்கான விருது ப்ளூ படத்திற்காக ஹரிஹர சுதனுக்கும் உட்பட தமிழ் சினிமாவில் தேசிய விருதுக்குத் தேர்வான அனைவரும் பெருமைமிக்கவர்கள். </p><h2>கடின உழைப்பு</h2><p>காரணம், கலைத்துறையில் மிகுந்த ஈடுபாட்டோடு செயல்பட்டு, தொடர் முயற்சி செய்து, கடின உழைப்பை மேற்கொண்டு, அர்ப்பணிப்போடு பணியாற்றியதுதான்.</p><h2>பாராட்டு</h2><p>தேசிய அளவில் தமிழ் மொழி உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பணியாற்றி தேசிய விருதுக்கு தேர்வானவர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள், வாழ்த்துக்குரியவர்கள். </p><h2>வாழ்த்து</h2><p>குறிப்பாக தமிழ் சினிமாவின் மூலம் தேசிய விருது பெறும் அனைவரையும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பாராட்டி, தொடர்ந்து கலைத்துறையில் சிறந்து விளங்கி பல்வேறு உயரிய விருதுகள் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>குலசேகரன்பட்டினம் ஏவுதளப்பணிகள்  எப்போது முடியும்? இஸ்ரோ தலைவர் பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/when-will-the-work-on-the-kulasekarapattinam-launch-site-be-completed-isro-chairman-responds</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/when-will-the-work-on-the-kulasekarapattinam-launch-site-be-completed-isro-chairman-responds#comments</comments><guid isPermaLink="false">5c32e952-046a-4087-abce-5bdf3ed77372</guid><pubDate>Sun, 19 Jul 2026 10:46:54 +0000</pubDate><atom:updated>2026-07-19T10:46:54.978Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இஸ்ரோ,ISRO,குலசேகரன்பட்டினம்,ஏவுதளப்பணிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/m4q2tlx1/isro.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  இஸ்ரோ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/m4q2tlx1/isro.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்ரீஹரிகோட்டா,</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B">இஸ்ரோ</a> தலைவர் நாராயணன் பேசியதாவது:- விண்வெளி சீர்திருத்தம் அறிவிக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட முதல் ராக்கெட், அதன் முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக செயற்கைக் கோளை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது. </p> <p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B">ராக்கெட் ஏவுதல்</a> என்பது மிகவும் சவாலான விஷயம். அதை முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்றிருப்பதற்கு ஸ்கைரூட் நிறுவனத்துக்கு வாழ்த்துகள். இது ஒரு தொடக்கம் மட்டுமே, இந்த ஆண்டு ஆறு முதல் 7 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளோம். </p><p>2 ராக்கெட்டுகளின் தயாரிப்பு பணிகள் முடிந்து சோதனை அடிப்படையில் இருக்கின்றன. 5 ராக்கெட்டுகள் முடியும் தருவாயில் இருக்கிறது. குலசேகரன்பட்டினம் ஏவுதளம் அமைக்கும் பணிகள் இந்த ஆண்டு முடிவடைவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அடுத்த ஆண்டு (2027) மார்ச் மாதம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B">இஸ்ரோ </a>அமைப்பில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பணி முடிவதற்கு முன்பாகவே ஓய்வு பெற்று வெளியேறுவதால் இஸ்ரோவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது' என்றார்.</p>]]></content:encoded></item><item><title>வாகன விபத்தில் பலியான பெண் டாக்டர் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/1-crore-compensation-for-the-family-of-the-female-doctor-who-died-in-a-vehicle-accident</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/1-crore-compensation-for-the-family-of-the-female-doctor-who-died-in-a-vehicle-accident#comments</comments><guid isPermaLink="false">b18ff8bc-54ff-4891-81b2-5f50b6962d5d</guid><pubDate>Sun, 19 Jul 2026 09:12:53 +0000</pubDate><atom:updated>2026-07-19T09:12:53.776Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இழப்பீடு,road accident,Chennai,சென்னை,பெண் டாக்டர்,வாகன விபத்து,Woman Doctor</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/04ky9xh3/koer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/04ky9xh3/koer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/Chennai">சென்னை</a>யில் பல் டாக்டராக பணியாற்றிவவர் இமயவள்ளி. இவர், கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி கும்பகோணம், நெல்லத்தநல்லூர் அசுர்குளம் பகுதியில் பயணிகள் வாகனத்தில் சென்றார். இந்த வாகனத்தை அவர் கணவர் ராதாகிருஷ்ணன் ஓட்டினார். அப்போது, எதிர் திசையில் வேகமாக வந்த சரக்கு வாகனம், ஒன்று இந்த வாகனம் மீது மோதியது.</p><h2>வாகன விபத்து</h2><p>இந்த விபத்தில் டாக்டர் இமயவள்ளி மரணம் அடைந்தார். இதையடுத்து சென்னையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் கோர்ட்டில், இழப்பீடு கேட்டு இமயவள்ளியின் கணவர் ராதாகிருஷ்ணன், மகன் ஹெம்தேவ் தர்சன், தந்தை செல்வம், தாய் ஜோதி ஆகியோர் கூட்டாக வழக்கு தொடர்ந்தனர்.</p><h2>காப்பீட்டு நிறுவனம்</h2><p>இந்த வழக்கை நீதிபதி ஏ.பி.நஷீர்அலி விசாரித்தார். மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் ஏ.எஸ்.பிலால், "டாடா ஏஸ் வாகனத்தில் டாக்டர் இமயவள்ளி பின்புறம் உட்கார்ந்திருந்தார். எதிர்தரப்பில் வேகமாகவும், கவனக்குறைவாகவும் வந்த சரக்கு வாகனத்தினால் இந்த விபத்து நடந்துள்ளது. இதில் இமயவள்ளி மரணமடைந்துள்ளார்” என்று வாதிட்டார். விபத்துக்குள்ளான சரக்கு வாகனம் காப்பீடு செய்திருந்த காப்பீட்டு நிறுவனம் தரப்பில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது. </p><h2>வயது 35</h2><p>காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "விபத்தில் பலியான டாக்டர் தனியார் ஆஸ்பத்திரியில் மாதம் ரூ.55 ஆயிரத்து 200 ஊதியமாக பெற்றுள்ளார். இதுதவிர தனியாக கிளினிக்கும் நடத்தி வந்துள்ளார். இறக்கும்போது அவரது வயது 35 தான்.</p><h2>7.5 சதவீத வட்டி</h2><p>எனவே, அவரது மரணத்துக்கு ஒரு கோடியே 4 லட்சத்து 64 ஆயிரத்து 462 ரூபாய் இழப்பீடாக நிர்ணயம் செய்கிறேன். இந்த தொகையை வழக்கு தொடர்ந்த நாளில் இருந்து 7.5 சதவீத வட்டியுடன், அவரது கணவர் உள்ளிட்டோருக்கு காப்பீட்டு நிறுவனம் வழங்கவேண்டும்” என்று தீர்ப்பு அளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>மதுரை: சமணர் படுகையில் படுத்துக் கொண்டு ஆய்வு செய்த அமைச்சர் ராஜ்மோகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-rajmohan-inspects-ancient-jain-beds-madurai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-rajmohan-inspects-ancient-jain-beds-madurai#comments</comments><guid isPermaLink="false">f2d6a1e3-7a82-41d0-b56e-30542c93a53f</guid><pubDate>Sun, 19 Jul 2026 08:47:20 +0000</pubDate><atom:updated>2026-07-19T08:47:20.422Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,ஆய்வுInspection,தமிழ்Tamil,Minister Rajmohan,அமைச்சர் ராஜ்மோகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/146585ci/minister-rajmohan.17.07.202.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ராஜ்மோகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/146585ci/minister-rajmohan.17.07.202.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரை அருகே மீனாட்சிபுரம் (மாங்குளம்) கிராமத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சமணர் படுகைகளுக்கு தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D">அமைச்சர் ராஜ்மோகன்</a> நேரில் சென்று ஆய்வு நடத்தினார். </p> <h2>ஆய்வு</h2><p>அங்குள்ள சங்க கால தமிழ் பிராமி  கல்வெட்டுகள் மற்றும் சமண முனிவர்களின் படுக்கை அமைப்பை துல்லியமாக ஆராய்வதற்காக, அமைச்சர் ராஜ்மோகன் அவரே அந்த கற்படுகையில் படுத்துக்கொண்டு வரலாற்று எழுத்துக்களை உற்று நோக்கி ஆய்வு செய்தார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. </p><h2>அதிகாரிகளுக்கு உத்தரவு</h2><p>தொல்லியல் துறை அதிகாரிகளுடன் இணைந்து இந்த வரலாற்று பொக்கிஷத்தை பாதுகாக்கவும், உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா தலமாக மாற்றவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனே எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-the-day-after-tomorrow-16</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-the-day-after-tomorrow-16#comments</comments><guid isPermaLink="false">bbd64c7d-f2fe-4458-9c23-edf6aac6a27b</guid><pubDate>Sun, 19 Jul 2026 08:25:06 +0000</pubDate><atom:updated>2026-07-19T08:25:06.981Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,monthly maintenance work,power outage,மாதாந்திர பராமரிப்பு பணி,மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/j769a4ls/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/j769a4ls/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர், கல்லிடைக்குறிச்சி மின் கோட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட இடங்களில் நாளை மறுநாள் (21.7.2026, செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மின்தடை</a> செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>வள்ளியூர் கோட்டம்</h2><p>வள்ளியூர் மின்கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>வள்ளியூர் மற்றும் விஜயாபதி துணை மின் நிலையங்களில்  நாளை மறுநாள் (21.7.2026,  செவ்வாய்கிழமை) அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணை மின் நிலையங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும். இதன் காரணமாக பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் பின்வரும் நேரங்களில் மின்விநியோகம் இருக்காது.</p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>வள்ளியூர், செம்பாடு, கிழவனேரி, சமாதானபுரம், வடலிவிளை, தெற்கு வள்ளியூர், ஏர்வாடி, திருக்குறுங்குடி. </p><p>கூத்தன்குழி, முருகானந்தபுரம், உதயத்தூர், சிதம்பரபுரம், பரமேஸ்வரபுரம், இளையநயினார்குளம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p><h2>கல்லிடைக்குறிச்சி கோட்டம்</h2><p>கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும்பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>கல்லிடைக்குறிச்சி கோட்டம் கரிசல்பட்டி மற்றும் சேரன்மகாதேவி துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (21.7.2026, செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம், பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும். </p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>அதன்படி கரிசல்பட்டி, பிள்ளைகுளம், மணிமுத்தான்குளம், புலவன்குடியிருப்பு, கோவிந்தபேரி, தெய்வநாயகபேரி, மீனவன்குளம், பட்டன்காடு, இடையான்குளம், கங்கணாங்குளம், சடையமான்குளம், வெங்கட்ரங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லுர், காடுவெட்டி, சேரன்மகாதேவி, பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், கரிசூழ்ந்தமங்கலம், கேசவசமுத்திரம், மலையடி, மேல்கரை ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>பெற்றோர் கண்டித்ததால் விபரீதம்.. கல்லூரி மாணவி தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragic-outcome-after-scolding-by-parents-college-student-commits-suicide</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragic-outcome-after-scolding-by-parents-college-student-commits-suicide#comments</comments><guid isPermaLink="false">8c28de7f-9c42-4363-b7d6-836a655c5415</guid><pubDate>Sun, 19 Jul 2026 08:23:38 +0000</pubDate><atom:updated>2026-07-19T08:23:38.385Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>College student,கல்லூரி மாணவி,Erode,ஈரோடு,தற்கொலை,Suicide,சத்தியமங்கலம்,Sathyamangalam</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/8820kcp6/colleg.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/8820kcp6/colleg.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சத்தியமங்கலம்,</p><p>பெற்றோர் திட்டியதால் சத்தியமங்கலத்தில் கல்லூரி மாணவி <a href="https://www.dailythanthi.com/topic/suicide">தற்கொலை</a> செய்துகொண்டார்.</p><h2>கல்லூரி மாணவி</h2><p>ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் குள்ளங்கரடு பகுதியை சேர்ந்தவர் ராஜா. கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி நீலாவதி. மகள்கள் சஞ்சனா (வயது 21). சோனியா (19). ஈரோட்டில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் சஞ்சனா இறுதி ஆண்டு படித்து வருகிறார். சோனியா தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.</p><p>நேற்று மதியம் வீட்டில் இருந்த சோனியா வேலைகள் எதுவும் செய்யாமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் ராஜாவும், நீலாவதியும் வீட்டில் ஒரு வேலை செய்யாமல் இருக்கிறாயே என்று கண்டித்துள்ளனர்.</p><p>இந்தநிலையில் பெற்றோர் திட்டியதால், ஆத்திரமடைந்த சோனியா வீட்டில் இருந்த அறைக்குள் சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார்.</p><h2>தூக்கில் தொங்கினார்</h2><p>பெற்றோர் நீண்ட நேரம் கதவை தட்டிப்பார்த்தும் சோனியா கதவை திறக்க வில்லை. இதனால் அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.</p><p>அப்போது வீட்டின் விட்டத்தில் சேலையால் சோனியா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிந்தது. அதைப்பார்த்து பெற்றோர் கதறி துடித்தனர். இதுகுறித்து உடனே சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. </p><p>அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>கோவை: இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-police-constable-arrested-for-sexually-harassing-a-young-woman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-police-constable-arrested-for-sexually-harassing-a-young-woman#comments</comments><guid isPermaLink="false">41573c74-a34b-41bd-b2be-fab63503feed</guid><pubDate>Sun, 19 Jul 2026 08:09:30 +0000</pubDate><atom:updated>2026-07-19T08:09:30.467Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,police,போலீஸ்காரர்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/e17s3pcn/15.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/e17s3pcn/15.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவையில் ஆண் நண்பருடன் நின்ற போது விசாரிப்பதாக அழைத்துச் சென்று இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.</p><p>கோவை துடியலூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் போலீஸ்காரர் வினோத்குமார் (வயது 35) மற்றும் போலீசார் கடந்த 15-ந் தேதி வெள்ளக் கிணறு பகுதியில் வீட்டுவசதி வாரிய 2-ம் கட்ட வளைவு அருகே ரோந்து சென்றனர். அங்கு 23 வயது இளம்பெண், தனது ஆண் நண்பருடன் நின்று கொண்டு இருந்தனர். </p><p>உடனே போலீசார் அந்த 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது போலீஸ்காரர் வினோத்குமார், அந்த இளம்பெண்ணை தனியாக அழைத் துச்சென்று விசாரணை நடத்தினார். அதன்பிறகு அவர் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அந்த இளம்பெண்ணை அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.</p><p>இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண், தனது ஆண் நண்பரிடம் ஓடிச்சென்று தனக்கு நடந்ததை கூறி அழுதார். இது தொடர்பாக அந்த இளம்பெண்ணின் ஆண் நண்பர் போலீஸ் உயர் அதிகாரிகளை சந்தித்து புகார் தெரிவித்தார். </p><p>அதன்பேரில் போலீஸ்காரர் வினோத்குமார் மீது துடியலூர் போலீஸ் நிலை யத்தில் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நேற்று போலீஸ்காரர் வினோத்குமாரை போலீசார் கைது செய்தனர்.</p><p>இதுகுறித்து போலீசார் கூறும்போது. சம்பவம் நடந்த அன்று போலீஸ்காரர் வினோத்குமாருடன் ரோந்து சென்ற போலீசார் மீதும் துறைரீதியான நடவ டிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-under-pocso-for-sexually-harassing-girl</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-under-pocso-for-sexually-harassing-girl#comments</comments><guid isPermaLink="false">06dadf94-254f-47e9-b647-4f2ffbe704c7</guid><pubDate>Sun, 19 Jul 2026 07:56:04 +0000</pubDate><atom:updated>2026-07-19T07:56:04.573Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Thoothukudi,தூத்துக்குடி,arrest,Sexual harassment,பாலியல் தொல்லை,Youth,வாலிபர்,சிறுமி,போக்சோ,Kovilpatti,கோவில்பட்டி,POCSO,minor</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/pqbe2w1e/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறுமிக்கு பாலியல் தொல்லை, வாலிபர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/pqbe2w1e/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சிறுமிக்கு பாலியல் தொல்லை</a> கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.</p><h2>சிறுமிக்கு பாலியல் தொல்லை</h2><p>தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வள்ளுவர்நகரைச் சேர்ந்த ராஜபாண்டி மகன் கருப்பசாமி (வயது 20). இவர் அப்பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.</p><h2>போக்சோவில் வாலிபர் கைது</h2><p>இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, தலைமறைவாக இருந்த கருப்பசாமியை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். </p>]]></content:encoded></item><item><title>தேசிய விருது வென்ற அனைவருக்கும் வாழ்த்துகள் - பிரேமலதா விஜயகாந்த்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/congratulations-to-all-the-national-award-winners-premalatha-vijayakanth</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/congratulations-to-all-the-national-award-winners-premalatha-vijayakanth#comments</comments><guid isPermaLink="false">95b06ebc-95eb-4c81-bb07-355a4054b8f7</guid><pubDate>Sun, 19 Jul 2026 07:50:11 +0000</pubDate><atom:updated>2026-07-19T07:50:11.784Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தேசிய விருதுகள்,வாழ்த்து,Congratulations,Premalatha Vijayakanth,பிரேமலதா விஜயகாந்த்,National Award</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/tazglpzv/premalatha.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரேமலதா விஜயகாந்த்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/tazglpzv/premalatha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்திய திரையுலகின் உயரிய அங்கீகாரமாக கருதப்படும் தேசிய திரைப்பட விருதுகள், கடந்த 1954-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர். இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.</p><p>அந்த வகையில், 72-வது <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81">தேசிய திரைப்பட விருதுகள்</a> டெல்லியில் நேற்று மாலை அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தனது  எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>வாழ்த்துகள்</h2><p>72-வது தேசிய திரைப்பட விருதுகளில் விருது பெற்ற அனைத்து கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுக்கும் எனது இதயப்பூர்வமான பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய சினிமாவின் பன்முகத் திறமையை உலக அரங்கில் உயர்த்தும் ஒவ்வொரு படைப்பும் நமது கலாசாரத்தின் பெருமையைப் பறைசாற்றுகிறது. உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு தொடர்ந்து பல புதிய உச்சங்களைத் தொடட்டும் என வாழ்த்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கடப்பாரையால் மனைவி அடித்துக்கொலை: வியாபாரி வெறிச்செயல்..என்ன காரணம்..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wife-beaten-to-death-with-a-crowbar-merchants-brutal-actwhat-was-the-reason</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wife-beaten-to-death-with-a-crowbar-merchants-brutal-actwhat-was-the-reason#comments</comments><guid isPermaLink="false">7dbd3f04-249e-4b3a-bec1-bbff129f749e</guid><pubDate>Sun, 19 Jul 2026 07:49:52 +0000</pubDate><atom:updated>2026-07-19T07:49:52.409Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,Erode,ஈரோடு,கிரைம் செய்திகள்,police investigation,போலீசார் விசாரணை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/55vin3zh/koli.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/55vin3zh/koli.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சோலார், </p><p>ஈரோடு அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு கடப்பாரையால் மனைவியை அடித்துக்கொன்ற பழ வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.</p><h2>நடத்தையில் சந்தேகம்</h2><p>ஈரோடு அருகே உள்ள லக்காபுரம் ஊராட்சிக்குட்பட்ட சோலார் செல்லகிருஷ்ணா நகரை சேர்ந்தவர் சேட்டு தனபால். இவருடைய மனைவி புஷ்பா (வயது 48). இருவரும் தள்ளுவண்டியில் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தனர். இவர்களுக்கு 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர்.</p><p>இந்தநிலையில் சேட்டு தனபால் தன்னுடைய தந்தை ஆறுமுகத்துக்கும், புஷ்பாவுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். கடந்த 14-ந் தேதி இரவு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. </p><h2>கடப்பாரையால் தாக்குதல்</h2><p>அதன்பின்னர் அன்று நள்ளிரவு 1 மணி அளவில் புஷ்பா கழிப்பறைக்கு சென்று வந்துள்ளார். அப்போது தூக்கம் கலைந்து எழுந்த சேட்டு தனபால் சந்தேகப்பட்டு நீ உயிரோடு இருந்தால்தானே இப்படி செய்கிறாய் என்று கூறி வீட்டில் இருந்த கடப்பாரையை எடுத்து புஷ்பாவை தாக்கியதாக கூறப்படுகிறது.</p><h2>டாக்டர்கள் சிகிச்சை</h2><p>கணவன் தாக்கியதில் படுகாயம் அடைந்த புஷ்பா ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.</p><h2>கைது</h2><p>இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மனைவியை தாக்கியதாக சேட்டு தனபாலை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கோபி சிறையில் அடைக்கப்பட்டார்.</p><h2>சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு</h2><p>இந்தநிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த புஷ்பா சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மாலை இறந்துவிட்டார். இதையடுத்து மொடக்குறிச்சி போலீசார் சேட்டு தனபால் மீது தாக்குதல் வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p> ]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-the-day-after-tomorrow-10</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-the-day-after-tomorrow-10#comments</comments><guid isPermaLink="false">0524cf0f-080e-4d7c-8f6c-361616e8c903</guid><pubDate>Sun, 19 Jul 2026 07:40:42 +0000</pubDate><atom:updated>2026-07-19T07:40:42.110Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,monthly maintenance work,power outage,தென்காசி,மாதாந்திர பராமரிப்பு பணி,மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/cbuct9ux/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/cbuct9ux/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p>திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், தென்காசி கோட்டம், கீழப்பாவூர், அச்சன்புதூர் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட இடங்களில் நாளை மறுநாள் (21.7.2026, செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மின்தடை</a> செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>தென்காசி கோட்ட செயற்பொறியாளர் ஸ்ரீ வனஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>கீழப்பாவூர் மற்றும் அச்சன்புதூர் துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (21.7.2026, செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் பின்வரும் ஊர்கள் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. </p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>அதன்படி பாவூர்சத்திரம், கீழப்பாவூர், மேலப்பாவூர், குலசேகரப்பட்டி, குறும்பலாப்பேரி, நாட்டார்பட்டி, ஆவுடையானூர், வெய்காலிப்பட்டி, சின்னநாடானூர், திப்பணம்பட்டி, செட்டியூர், பெத்தநாடார்பட்டி, கரிசலூர், செல்லத்தாயார்புரம், மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கலப்பட்டினம் வடக்கு, சாலைப்புதூர். </p><p>வடகரை, அச்சன்புதூர், நெடுவயல், வாவா நகரம், காசி தர்மம், பண்பொழி, மேக்கரை, கரிசல் குடியிருப்பு ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>ஆய்வு மேற்கொண்ட விடுதியில் மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிய முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-fulfilled-the-demands-of-the-students-in-the-hostel-he-inspected</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-fulfilled-the-demands-of-the-students-in-the-hostel-he-inspected#comments</comments><guid isPermaLink="false">42f14b12-db98-4c58-ab0a-ac98f42d28de</guid><pubDate>Sun, 19 Jul 2026 07:28:25 +0000</pubDate><atom:updated>2026-07-19T07:28:25.797Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,மாணவர் விடுதி,முதல்-அமைச்சர் விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/axo2lyma/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/axo2lyma/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்​னை, சைதாப்​பேட்​டை​யில் உள்ள எம்​.சி. ராஜா சமூகநீதி மாணவர் விடுதியில் நேற்​று ​முன்​தினம் முதல்​-அமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்​கொண்​டார். மேலும், மாணவர்​களிடம் குறை​கள் மற்​றும் தேவை​களை கேட்டறிந்​தார். அப்​போது, விடு​தி​யில் இருக்​கும் குறை​கள் மற்​றும் தேவை​களை முதல்-அமைச்சரிடம் வேதனை​யுடன் மாணவர்​கள் எடுத்துரைத்​தனர். </p><p>குறிப்​பாக, உடற்​கல்வி ஆசிரியரை நியமிக்க வேண்​டும். நவீன உடற்​ப​யிற்சி கூடம் அமைக்க வேண்​டும். உணவின் தரத்தை மேம்​படுத்த வேண்​டும் உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்​கைகள் அடங்​கிய மனுக்​களை​யும் முதல்-அமைச்சரிடம் மாணவர்கள் வழங்​கினர். மாணவர்​களின் கோரிக்​கைகளை உடனடி​யாக நிறைவேற்ற வேண்​டும் என அமைச்​சர் மற்​றும் அதி​காரி​களுக்கு முதல்-அமைச்சர் உத்தர​விட்​டார்.</p><p>இதையடுத்​து, பல மாற்​றங்​கள் விடு​தி​யில் செய்யப்​பட்​டுள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்ளன. இதுகுறித்​து, சமூகநீ​தித் துறை​யின் மூத்த அதி​காரி ஒரு​வர் கூறுகையில், மாணவர்​களுக்கு தரமான உணவு வழங்​கும் வகை​யில் விடு​தி​யின் உணவுப் பட்​டியல் திருத்தி அமைக்கப்பட்டுள்​ளது. இட்​லி, சப்​பாத்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்​ளது.</p><p>மாணவர்​களுக்கு தரமான உணவு வழங்​கப்​படு​வதை உறுதி செய்ய கண்​காணிப்பு குழு​வும் அமைக்​கப்​பட்​டுள்​ளது. அத்​துடன், மூடப்​பட்​டிருந்த வாலி​பால் மைதானம் மாணவர்​கள் பயன்​படுத்த திறக்​கப்​பட்​டுள்​ளது. மாணவர்​கள் இரவு 12 மணி வரை விடுதிக்குள் நுழைய அனு​மதி வழங்​கப்​பட்​டுள்​ளது. இவ்வாறு அவர் கூறி​னார். முதல்​-அமைச்சர் விஜய்​யின் ஆய்​வுக்கு அடுத்த நாளே மாணவர்​கள் முன்​வைத்த கோரிக்​கை​களில் சில​வற்​றுக்கு உடனடி தீர்வு காணப்​பட்​டிருப்​பது, மாணவர்​களிடையே வரவேற்​பை பெற்றுள்​ளது.</p>]]></content:encoded></item><item><title>யு.பி.ஐ. மூலம் மாதந்தோறும் 2 ஆயிரம் கோடி யு.பி.ஐ. பரிவர்த்தனைகள்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/2000-crore-upi-transactions-per-month-via-upi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/2000-crore-upi-transactions-per-month-via-upi#comments</comments><guid isPermaLink="false">51d6bd7e-5651-4318-866a-524e5cfca3b0</guid><pubDate>Sun, 19 Jul 2026 07:09:10 +0000</pubDate><atom:updated>2026-07-19T07:09:10.874Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,யு.பி.ஐ. பரிவர்த்தனை,UPI transactions,நிர்மலா சீதாராமன்,UPI,மத்திய மந்திரி,UPI Service,யு.பி.ஐ.,யு.பி.ஐ. பண பரிவர்த்தனை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/xv7d3h13/woe.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/xv7d3h13/woe.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p>மதுரையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசினார். </p><p>அப்போது அவர் பேசியதாவது:-</p><p>உலகளாவிய போர்ப்பதற்றங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு சிக்கல்கள், உரங்களின் விலை உயர்வு போன்ற பல்வேறு உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும், இந்தியா உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடாக திகழ்கிறது.</p><p>நமது டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு சர்வதேச அளவில் ஒரு முன்மாதிரியாக மாறியுள்ளது. இந்தியாவில் யு.பி.ஐ. தளம் மூலம் ஒவ்வொரு மாதமும் 2 ஆயிரம் கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை கையாள்கிறது. </p> <p>இந்தியாவில் தற்போது 2,100 உலகளாவிய திறன் மையங்கள் உள்ளன. இவை பெரு நகரங்களை தாண்டி 2-ம் மற்றும் 3-ம் கட்ட நகரங்களுக்கும் விரிவடைந்து வருகின்றன. </p><p>நாட்டில் பின்தங்கிய 114 மாவட்டங்களை கண்டறிந்து, அவற்றை ‘லட்சிய மாவட்டங்கள்' என்று அழைத்து, அனைத்து அரசுத்திட்டங்களையும் ஒருங்கிணைத்து மேம்படுத்தி வருகிறோம். அதன்படி, தமிழகத்தில் விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 2 மாவட்டங்கள் இதில் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு முன்னிலையில் உள்ளன.</p><h2>தவிர்க்க முடியாத சக்தி</h2><p>உள்ளூர் தயாரிப்புகளின் உலகளாவிய சந்தை சிட்பி (எஸ்.ஐ.டி.பி.ஐ.) வங்கி விருதுநகரில் ஒரு பிரிவை தொடங்கி, அங்குள்ள புகழ்பெற்ற 'விருதுநகர் வத்தல்' (மிளகாய்) வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இப்பகுதி விவசாயிகள் மாப்பிள்ளை சம்பா, கருப்புக்கவுனி போன்ற பாரம்பரிய, ஊட்டச்சத்துமிக்க நெல் ரகங்களை மீட்டெடுத்து சர்வதேச அளவிற்கு ஏற்றுமதி செய்ய தொடங்கி உள்ளனர். </p><p>பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மதுரை, எப்போதும் அழியாத மீளெழுச்சியின் அடையாளமாக உள்ளது. பல்வேறு சாதனைகள் மூலம் உலக அரங்கில் இந்தியாவின் சாதனைகள் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக நிமிர்ந்து நிற்கிறது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பத்திரப்பதிவு துறையில் லஞ்சம் தவிர்க்கப்பட்டுள்ளது; ப.சிதம்பரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bribery-has-been-avoided-in-the-securities-registration-sector-p-chidambaram</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bribery-has-been-avoided-in-the-securities-registration-sector-p-chidambaram#comments</comments><guid isPermaLink="false">6a23e61b-83d2-49b5-ae42-cf1db78f0c2c</guid><pubDate>Sun, 19 Jul 2026 07:04:50 +0000</pubDate><atom:updated>2026-07-19T07:04:50.693Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/kj2cpobq/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/kj2cpobq/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- </p><p>காமராஜரின் 9 ஆண்டு கால ஆட்சியில் லஞ்சம் என்பதே இருந்ததில்லை. அதேபோல், தற்போது தமிழகத்தில் அமைந்துள்ள தவெகவின் 2 மாத கால ஆட்சியில் பத்திரப்பதிவு துறையில் லஞ்சம் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த நேர்மையான நிர்வாக மாற்றத்திற்கு தனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>ஈரோடு: லாரியை மறித்து கரும்பை சுவைத்த காட்டு யானை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-wild-elephant-intercepts-lorry-and-feasts-on-sugarcane</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-wild-elephant-intercepts-lorry-and-feasts-on-sugarcane#comments</comments><guid isPermaLink="false">6aa549df-93b4-46d2-b3e4-702a2f02e1cb</guid><pubDate>Sun, 19 Jul 2026 07:02:53 +0000</pubDate><atom:updated>2026-07-19T07:02:53.138Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>lorry,லாரி,காட்டு யானை,wild elephant,sugarcane,கரும்பு</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/j0pmjnje/14.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/j0pmjnje/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு, </p><p>ஈரோடு மாவட்டம் தாளவாடியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலம் நோக்கி ஒரு லாரி மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மதியம் வந்துகொண்டு இருந்தது. ஆசனூர் வந்தபோது, சாலை யோரம் நின்றுகொண்டு இருந்த ஒரு காட்டு யானை கரும்பு பாரம் ஏற்றிய லாரியை மறித்தது.</p><p>இதனால் டிரைவர் லாரியை நிறுத்திக்கொண்டார்.  </p><p>இதையடுத்து யானை லாரியின் மீது போடப்பட்டு இருந்த தார்பாயை விலக்கிவிட்டு கரும்புகளை எடுத்து சுவைத்தது. இதைப்பார்த்த மற்ற வாகன ஓட்டிகளும் வாகனங்களை நிறுத்திக்கொண்டனர். சுமார் 15 நிமிடம் யானை கரும்பை சுவைத்துவிட்டு, அதன்பின்னர் காட்டுக்குள் சென்றுவிட்டது. </p><p>வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் அடிக்கடி தேசிய நெடுஞ்சாலையோரம் வந்து நின்றுவிடுகின்றன. அவ்வாறு நிற்கும் யானைகள் தாள வாடியில் இருந்து ஆசனூர் வழியாக கரும்பு, காய்கறி ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலம் மற்றும் கோவைக்கு செல்லும் வாகனங்களை மறித்து அவற்றை தின்று நாசப்படுத்துகின்றன. எனவே தேசிய நெடுஞ்சாலையோரம் நிற்கும் யானைகளை வனத்துறையினர் தொடர்ந்து ரோந்து சென்று விரட்டவேண்டும் என்று வாகன ஓட்டிகள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>அலோபதி சிகிச்சை அளித்த வடமாநில டாக்டர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/northern-state-doctor-arrested-for-providing-allopathic-treatment</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/northern-state-doctor-arrested-for-providing-allopathic-treatment#comments</comments><guid isPermaLink="false">64c9fd15-0f28-438c-aefb-5ae08dbeea37</guid><pubDate>Sun, 19 Jul 2026 06:54:45 +0000</pubDate><atom:updated>2026-07-19T06:54:45.419Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>arrest,Dindugal,போலி டாக்டர் கைது,Dindugal - திண்டுக்கல்,அலோபதி சிகிச்சை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/5k9ee6s3/arrest33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டாக்டர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/5k9ee6s3/arrest33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்</p><p>திண்டுக்கல்லில் ராமர்கோவில் சந்து பகுதியில் சித்த மருத்துவத்தில் டிப்ளமோ படித்துவிட்டு, அலோபதி மருத்துவ சிகிச்சை அளித்து வந்த அமித் குமார் டிக்காதர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>திண்டுக்கல் மாவட்டம், பழனி ராமர்கோவில் தெரு பகுதியில் முறையான மருத்துவம் படிக்காமல் கிளினிக் நடத்தி சிகிச்சை அளிப்பதாக மாவட்ட சுகாதாரத்துறைக்கு புகார் வந்தது.</p><p>அதன்பேரில் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் பாரதி உத்தரவின்பேரில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சுகாதாரத்துறை</a> அதிகாரிகள் பழனியில் உள்ள சம்பந்தப்பட்ட கிளினிக்கிற்கு சென்று ஆய்வு செய்தனர்.</p> <h2>டாக்டர் கைது</h2><p>பின்பு அங்கிருந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பழனி சேரன்ஜீவாநகரில் குடியிருந்து வரும், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அமித்குமார் டிக்காதர் (வயது 51) என்பதும், டிப்ளமோ சித்தா படித்துவிட்டு அலோபதி முறையில் ஊசி போடுவது, சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது.</p><p>அதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அமித்குமார் டிக்காதரை பிடித்து பழனி டவுன் போலீசில் ஒப்படைத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து அமித்குமார் டிக்காதரை கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தேசிய விருது வென்ற அனைவருக்கும் வாழ்த்துகள்: எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/congratulations-to-all-national-award-winners-edappadi-palaniswami</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/congratulations-to-all-national-award-winners-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">3756a626-dab1-4f93-8322-d6c77d64d2a7</guid><pubDate>Sun, 19 Jul 2026 06:52:10 +0000</pubDate><atom:updated>2026-07-19T06:52:10.912Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,Edappadi Palaniswami,தேசிய விருது,National Award</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/andfj9c0/13.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/andfj9c0/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>72-வது  தேசிய விருது பெறுவோர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள தனுஷ் இயக்கி நடித்து வெளியான ராயன் திரைப்படக் குழுவினருக்கும்,</p><p>தேசிய, சமூக மற்றும் சுற்றுசூழல் கருத்துகள் கூறும் சிறந்த திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள </p><p>சத்யஜோதி தயாரிப்பில், அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படக்குழுவினருக்கும், கேப்டன் மில்லர் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள தனுசுக்கும், </p><p>அமரன் திரைப்படத்திற்காக பின்னணி இசைக்கான சிறந்த இசையமைப்பாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ள ஜி.வி.பிரகாஷ்குமாருக்கும், அமரன் திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனர் விருது அறிவிக்கப்பட்டுள்ள திரு. </p><p>ராஜ்குமாருக்கும், அமரன் திரைப்படத்திற்காக சிறந்த படத்தொகுப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ள கலைவாணனுக்கும், மகாராஜா திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகை விருது அறிவிக்கப்பட்டுள்ள சாச்சனா நமிதாஸ் அவர்களுக்கும்,</p><p>மகாராஜா திரைப்படத்திற்காக சிறந்த சண்டைப் பயிற்சியாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ள அனல் அரசுக்கும், மெய்யழகன் திரைப்படத்திற்காக சிறந்த ஒலிக்கலவை விருது அறிவிக்கப்பட்டுள்ள சுரேன் G.க்கும், புளூ படத்திற்காக சிறந்த ஒலி வடிவமைப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ள TS ஹரிஹரசுதனுக்கும், விருது அறிவிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>தங்களின் கலைச் சேவை மக்களை மென்மேலும் மகிழ்வித்து, தாங்கள் இன்னும் பல அங்கீகாரங்களைப் பெற வாழ்த்துகிறேன்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தனியார் வேலைவாய்ப்பில் 75% இடஒதுக்கீடு: தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/75-reservation-in-private-employment-tamil-nadu-government-should-enact-a-law-anbumani-insists</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/75-reservation-in-private-employment-tamil-nadu-government-should-enact-a-law-anbumani-insists#comments</comments><guid isPermaLink="false">0f48e3b4-8b17-4284-9bfe-b96b9ead234a</guid><pubDate>Sun, 19 Jul 2026 06:41:14 +0000</pubDate><atom:updated>2026-07-19T06:41:14.266Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி,Anbumani,private,இளைஞர்கள்,employment,தனியார் வேலைவாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/aulqslx6/anbumani.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/aulqslx6/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு அரசின் புதிய தொழிற்கொள்கையை உருவாக்குவதற்கான கலந்தாய்வுகளை தொழிற்துறை அதிகாரிகள் தொடங்கியிருப்பதாகவும், அதில் தனியார் தொழில், வணிக நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் செய்திகள்  வெளியாகியுள்ளன. இந்த செய்திகள் உண்மையாக இருந்தால், அது சமூகநீதிக்கு செய்யப்படும் துரோகமாகும்.</p><h2>த.வெ.க. அரசு வாக்குறுதி</h2><p>தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் தேர்தல் அறிக்கையில், தமிழ்நாட்டு இளைஞர்களை தங்கள் நிறுவனங்களில் 75% அளவுக்கு பணியமர்த்தும் தனியார் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி வரியில் 2.5%, மின்சாரக் கட்டணத்தில் 5% மானியம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த உறுதியை த.வெ.க. அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வரும் நிலையில் தான், தனியார் தொழில், வணிக நிறுவனங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வழங்கும் திட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிய சதி நடக்கிறது; அதற்கு அதிகாரிகளும், முதலீட்டாளர்களும் உதவி செய்கின்றனர்.</p><h2>தொழில் முதலீடுகள்</h2><p>தனியார் தொழில், வணிக நிறுவனங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதை கட்டாயம் ஆக்கினால் தொழில் முதலீடுகள் வராது என்பதே அபத்தமான வாதமாகும். இந்த வாதத்தை ஆந்திர மாநில அரசு தகர்த்திருக்கிறது. கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் அனைத்தும்   ஆந்திராவில் பெருமளவில் முதலீடு செய்திருக்கின்றன. தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட பல நிறுவனங்களும், அவற்றின் முடிவை மாற்றிக் கொண்டு ஆந்திராவுக்கு சென்றுள்ளன. இப்படியாக முதலீடுகளை ஈர்ப்பதில் முதலிடத்தில் இருக்கும் ஆந்திராவில் தொடங்கப்படும் தொழில் &amp; வணிக நிறுவனங்களில்   75% பணியிடங்களை அம்மாநில இளைஞர்களுக்கு மட்டும் தான் வழங்க வேண்டும் என 2019-ஆம் ஆண்டில் சட்டம் இயற்றப்பட்டு, இன்று வரை நடைமுறையில் உள்ளது. இதனால் ஆந்திராவில் முதலீடுகள் தடைபடவில்லை.</p><h2>தமிழக இளைஞர்களுக்கு துரோகம்</h2><p>குஜராத், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் 80% பணிகளும், ஹரியானா மற்றும் ராஜஸ்தானில் 75% பணிகளும், மத்திய பிரதேசத்தில் 70% பணிகளும் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தெலுங்கானாவிலும் இத்தகைய சட்டம் நடைமுறையில் இருக்கிறது. கர்நாடகத்தில் இதே போன்ற சட்டம் தயாரிக்கப்பட்டு, அரசின் சட்ட ஆய்வில் உள்ளது. தமிழ்நாட்டை சுற்றியுள்ள மாநிலங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு மட்டும் வேலை வழங்கும் சட்டம் இயற்றப்பட்டிருப்பதால், அந்த மாநிலங்களில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">வேலைவாய்ப்பு</a> மறுக்கப்படுகிறது. அதேநேரத்தில் தமிழகத்தின் தனியார் துறை வேலைவாய்ப்புகளை மட்டும் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்தவர்களுக்கு திருப்பி விடுவது தமிழக இளைஞர்களுக்கு செய்யப்படும் துரோகமாகும்.</p><h2>75 விழுக்காடு</h2><p>தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு அமைவதற்கு முதன்மை காரணமாக இருந்தவர்கள் இளைஞர்கள் தான். அவர்களின் எதிர்பார்ப்பு தங்களுக்கு கண்ணியமான வேலை கிடைக்க வேண்டும் என்பது தான். அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கான அதிகாரமும், அதற்கு வசதியாக சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதியும் இருக்கும் போது அதை நிறைவேற்றுவதில் தாமதம் செய்யக் கூடாது. தமிழ்நாட்டு இளைஞர்களின் நலனுக்கு எதிரான அனைத்துக் கருத்துகளையும்  ஒதுக்கித் தள்ளி விட்டு, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாட்டில்  தொடங்கப்படும் தனியார் தொழில் மற்றும் நிறுவன வேலைவாய்ப்புகளில் 75 விழுக்காட்டை தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வழங்குவதை கட்டாயமாக்கும் சட்டத்தை வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் அரசு நிறைவேற்ற வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.5 லட்சம் பணத்தை திரும்ப கேட்டதால் ஆத்திரம்.. அக்கா மகளுக்கு ஆபாச புகைப்படம் அனுப்பிய டாக்டர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/man-stabs-estranged-live-in-partner-to-death-ends-own-life</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/man-stabs-estranged-live-in-partner-to-death-ends-own-life#comments</comments><guid isPermaLink="false">8095543f-8d45-4eb1-973f-bb78b2685443</guid><pubDate>Sun, 19 Jul 2026 06:26:08 +0000</pubDate><atom:updated>2026-07-19T06:26:08.725Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,தமிழகம்,கைது,arrest,doctor,டாக்டர்,ஆபாச புகைப்படம் வெளியீடு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/do8u8d34/takier.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/do8u8d34/takier.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மருத்துவபடிப்பு செலவுக்காக கொடுத்த ரூ.5 லட்சம் பணத்தை திரும்ப கேட்டதால் அக்காள் மகளுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பிய அரசு டாக்டர் கைது செய்யப்பட்டார்.</p><h2>உதவிக்கு கிடைத்த அவலம்</h2><p>சென்னை தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தார். </p><p>அதில் அவர் கூறியிருந்ததாவது:-</p><p>எனது சகோதரர் பெயர் செல்வவேல். அவர் மருத்துவ படிப்பு செலவுக்காக ரூ.5 லட்சம் செலவு செய்தேன். அவர் படித்து டாக்டரானவுடன் எனது மகளை திருமணம் செய்து கொள்கிறேன் என்று அளித்த வாக்குறுதியின் அடிப்படையில்தான் இந்த கடன் உதவியை செய்தேன். ஆனால் அவர் டாக்டர் படிப்பை முடித்தவுடன், இந்த வாக்குறுதியை மீறி விட்டார். இதனால் நான் கொடுத்த ரூ.5 லட்சம் பணத்தை திரும்ப தருமாறு தொடர்ந்து வலியுறுத்தியும் அவர் தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்தார்.</p><h2>ரூ.5 லட்சம் பணம்</h2><p>இந்த நிலையில் அவர், எனது மகளின் செல்போன் எண்ணுக்கு ஆபாசமாக புகைப்படம், அவதூறான குறுஞ்செய்திகள் அனுப்பினார். மேலும் 'வாட்ஸ் அப் வீடியோ கால்' மூலம் என்னிடமும், எனது மகளிடமும் தகாத முறையில் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் எனது மகளின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டினார். எனவே அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து, நான் கொடுத்த ரூ.5 லட்சம் பணத்தை மீட்டு தர வேண்டும்.</p><p>இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.</p><h2>தஞ்சையில் கைது</h2><p>இந்த புகார் மனு அடிப்படையில் செல்வவேல் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.</p><p>விசாரணையில் செல்வவேல் (வயது 40) சமீபத்தில்தான் அரசு டாக்டராக பணி நியமன ஆணை பெற்று தஞ்சை மாவட்டம் நாஞ்சிக்கோட்டை சாலையில் அமைந்துள்ள மருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வருவது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவரை தேனாம்பேட்டை தனிப்படை போலீசார் தஞ்சை சென்று கைது செய்தனர். பின்னர் அவர், சென்னை அழைத்து வரப்பட்டார். விசாரணையில் இவர் மீது தஞ்சை போலீசில் ஒரு குற்ற வழக்கு இருப்பதும் தெரியவந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-enjoying-a-delightful-bath-at-the-courtallam-falls</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-enjoying-a-delightful-bath-at-the-courtallam-falls#comments</comments><guid isPermaLink="false">b1918f76-2f89-43bd-b9a2-728c465ea687</guid><pubDate>Sun, 19 Jul 2026 06:20:45 +0000</pubDate><atom:updated>2026-07-19T06:20:45.562Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tourists,சுற்றுலா பயணிகள்,குற்றால அருவி,Courtallam Falls</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/8x9mz8xa/11.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/8x9mz8xa/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><p>கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. தற்போது தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுந்து வரும் நிலையில் அருவிகளில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. </p><p>இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் காலை முதலே மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது. வெளியூர்களில் இருந்து கார், வேன், ஆட்டோ, பஸ் உள்ளிட்ட வாகனங்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குடும்பமாக வருகை புரிந்தனர். அவர்கள் அருவிகளில் உற்சாகமாக குளித்துவிட்டு குற்றாலத்தில் உள்ள பூங்கா பகுதி மற்றும் அருவி கரைகளுக்கு செல்லும் சாலை ஓரப் பகுதிகளில் உள்ள மர நிழல்களில் அமர்ந்து குடும்பமாக உணவு உண்டு மகிழ்ந்து நேரத்தை செலவிட்டனர்.</p> <p>மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை இல்லை. இதனால் அருவிகளுக்கு வரும் நீரின் அளவும் கனிசமாக குறைந்துள்ளது. எனினும், சுற்றுலா பயணிகள் குறைவாக வரும் தண்ணீரில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>திமுக ஆட்சியில் கோவில் நிலங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை: முன்னாள் அமைச்சர் மூர்த்தி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-temple-lands-were-registered-during-the-dmk-regime-former-minister-murthy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-temple-lands-were-registered-during-the-dmk-regime-former-minister-murthy#comments</comments><guid isPermaLink="false">c8106a74-d2fa-4332-8e98-60310c753f2d</guid><pubDate>Sun, 19 Jul 2026 06:17:04 +0000</pubDate><atom:updated>2026-07-19T06:17:04.395Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,மூர்த்தி,Murthy</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/xeiyw81k/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/xeiyw81k/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>பழனி கோவில் நிலமோசடி தொடர்பாக அமைச்சர் நிர்மல் குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலில், "திமுக ஆட்சியில் பத்திரப்பதிவு துறை ஊழலில் திளைத்திருந்தது. அத்துறை அமைச்சராக இருந்த மூர்த்தி மினிஸ்டர் கட்டிங் என பணம் வாங்கினார். அதனை வசூலிக்க ஒவ்வொரு அலுவலகத்திற்கு 2 பேர் இருந்தனர். போலி பத்திரப்பதிவு குறித்து புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். ’ என்று கூறினார்.</p><p>இந்த நிலையில், கட்டிங் வாங்கியவர் என அமைச்சர் நிர்மல்குமார் தன்னை விமர்சித்ததற்கு, முன்னாள் அமைச்சர் மூர்த்தி பதில் அளித்து கூறியதாவது:-</p><p>அமைச்சர் நிர்மல்குமார் என் மீது பொத்தாம் பொதுவாக குற்றம்சாட்டுகிறார். ஆதாரமின்றி எதையும் சொல்லக் கூடாது. ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா?. நிர்மல்குமார் பொறுப்பு வகிக்கும் சட்டத்துறையிலேயே பிரச்சனை உள்ளது. 200 யூனிட் மின்கட்டணம் இலவசம் என்று கூறினார்கள்; ஆனால் தற்போது மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளார்கள்; அமைச்சர் நிர்மல்குமார் தினந்தோறும் செய்தியாளர்களை மட்டுமே சந்தித்துக் கொண்டிருக்கிறார்</p><p>கோயிலுக்குச் சொந்தமான 1 சென்ட் நிலத்தைகூட பதிவு செய்யக்கூடாது என பதிவேட்டில் இருக்கும். திமுக ஆட்சியில் கோயில் நிலங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. தெரியாம பத்திரப்பதிவு நடந்துச்சு.. எதார்த்தமா நடந்ததுனு சொன்னா ஏத்துக்க முடியாது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநில கும்பல் - 4 பேர் கைது

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/north-indian-gang-arrested-for-ganja-sale-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/north-indian-gang-arrested-for-ganja-sale-in-chennai#comments</comments><guid isPermaLink="false">bc8da768-1883-4a7b-8cb2-c38d6a72fc6a</guid><pubDate>Sun, 19 Jul 2026 05:39:14 +0000</pubDate><atom:updated>2026-07-19T05:39:14.318Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,கஞ்சா,Gang</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/jtvm9uho/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/jtvm9uho/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தலைநகர் <a href="https://www.dailythanthi.com/">சென்னை </a>உள்பட தமிழகம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். </p><h2>4 பேர் கைது</h2><p>இந்நிலையில், சென்னை கோவிலம்பாக்கத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் போலீசார் இன்று சோதனை நடத்தினர்</p><p>சோதனையில் வடமாநிலத்தை சேர்ந்த கும்பல் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சபியுல் இஸ்லாம் (வயது 18) என்ற இளைஞர் உள்பட திரிபுராவை சேர்ந்த 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட கும்பலிடமிருந்து 15 கிலோ கஞ்சா மற்றும் 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், கஞ்சா சப்ளை செய்த துஷார் உசேன் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில்  ஜூலை 22 வரை  இயல்பைவிட வெயில் அதிகமாக இருக்கும் - வானிலை ஆய்வு மையம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-will-experience-above-normal-temperatures-till-july-22</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-will-experience-above-normal-temperatures-till-july-22#comments</comments><guid isPermaLink="false">14d4b103-e8ed-415c-8ceb-44bf41c5a225</guid><pubDate>Sun, 19 Jul 2026 05:36:41 +0000</pubDate><atom:updated>2026-07-19T05:36:41.246Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,வானிலை மையம்,heat,heatwave,கோடை வெப்பம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/k27c8dov/veyil33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/k27c8dov/veyil33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்குப் பருவமழைக்காலம் தொடங்கும். தென்மேற்கு பருவமழைக்காலங்களில் மிதமான மழைப்பொழிவு இருக்கும். காற்றின் தாக்கமும் அதிகம் இருக்கும். மேலும் சாரல்மழை அதிகளவு பெய்தபடி இருக்கும். இதனால் ஜூன், ஜூலை உள்ளிட்ட மாதங்களில் வெயிலின் தாக்கம் சற்று குறைவாகவே இருக்கும்.</p><p>இந்த நிலையில்  தேனி,திண்டுக்கல், நாகர்கோவில் உள்ளிட்ட மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழைக்காலம் தொடங்கி மழை வெளுத்து வாங்கும் என எதிர்பார்த்த விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. </p><p>தமிழகம் முழுவதும் கடுமையான வெயில் கொளுத்துவதால்  <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கோடைகாலம் </a>போல பொதுமக்கள் குடைபிடித்தபடியும், தலையை துணியால் மூடியபடியும் நடந்து செல்கின்றனர். </p><p>ஏராளமானோர் இளநீர், நுங்கு, சர்பத் மற்றும் குளிர்பானங்களை வாங்கி பருகுகின்றனர். இதனால் இளநீரின் விலை ரூ.40-ல் இருந்து ரூ.60 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மழைஇன்றி நீர் நிலைகள் வறண்டு விட்டன. இதனால் ஆடுகள், மாடுகள் குடிப்பதற்கு கூட குளங்களில் தண்ணீர் இல்லாமல் கால்நடை வளர்ப்போர் கண்ணீர் வடிக்கின்றனர். இதனால் கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.</p><p>இந்தநிலையில், தமிழ்நாட்டில்  ஜூலை 22 வரை  இயல்பைவிட வெயில் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தஞ்சை அருகே பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொத்தனார் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bricklayer-arrested-for-sexually-harassing-daughter-near-thanjavur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bricklayer-arrested-for-sexually-harassing-daughter-near-thanjavur#comments</comments><guid isPermaLink="false">2dda86dc-60a3-4912-bf81-f1a21923520b</guid><pubDate>Sun, 19 Jul 2026 05:26:35 +0000</pubDate><atom:updated>2026-07-19T05:26:35.797Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,Thanjavur,Sexual harassment,பாலியல் தொல்லை,தஞ்சாவூர்,கிரைம் செய்திகள்,Father,கொத்தனார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/brobrwyj/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/brobrwyj/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சை,</p><p>தஞ்சை அருகே உள்ள ஒரு கிராமப்பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 44).(பெயர் மாற்றப்பட்டு உள்ளது). கொத்தனார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது. இந்த நிலையில் இவருடைய தம்பி இறந்து விட்டதால் அவரது மனைவியையும் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 10 வயதில் பெண் குழந்தை உள்ளது. தனது 10 வயது மகளுக்கு ராஜா கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.</p><p>மிகுந்த மனஉளைச்சலுக்குள்ளான சிறுமி இது குறித்து தனது தாயிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், தனது கணவர் ராஜாவிடம் இதுகு றித்து கேட்டார். அப்போது ராஜா தனது மனைவியை தாக்கி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ராஜாவின் மனைவி வல்லம் போலீசில் புகார் அளித்தார்.</p><p>புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கனிமொழி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ராஜா தனது 10 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரிய வந்தது.</p><p>இதைத்தொடர்ந்து வல்லம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>செல்போனை திருடியதாக வாலிபர் அடித்துக்கொலை: போலீசில் நண்பர்கள் 4 பேர் சரண்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-beaten-to-death-for-stealing-cell-phone-4-friends-surrender-to-police</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-beaten-to-death-for-stealing-cell-phone-4-friends-surrender-to-police#comments</comments><guid isPermaLink="false">e3f26dbe-88a1-4146-a025-6e7be58e20eb</guid><pubDate>Sun, 19 Jul 2026 05:20:30 +0000</pubDate><atom:updated>2026-07-19T05:20:30.017Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tambaram,தாம்பரம்,Chengalpattu,செங்கல்பட்டு,friends,நண்பர்கள்,Surrender to police,போலீசில் சரண்,செல்போன் திருட்டு,cell phone theft,வாலிபர் அடித்துக்கொலை,4 பேர்,4 people,youth beaten to death</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/9zfy5dxc/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அடித்துக்கொலை செய்யப்பட்ட வாலிபர் சக்தி ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/9zfy5dxc/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>செங்கல்பட்டு, </p><p>செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அருகே செல்போனை திருடியதாக வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, அந்த வாலிபரின் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நண்பர்கள் 4 பேர் போலீசில் சரண்</a> அடைந்தனர். </p><h2>நண்பர்கள்</h2><p>செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த சேலையூர், சித்தாலபாக்கம் பகுதியில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சக்தி (வயது 23), அருள், காந்தி, குணசேகரன், பாலு ஆகிய 5 பேரும் தங்கி, கூலி வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. நண்பர்களான இவர்கள் 5 பேரும் நேற்று முன்தினம் மாடம்பாக்கம் ஏரிக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது அவர்கள் மது போதையில் இருந்தனர்.</p><h2>அடித்துக்கொலை</h2><p>இதற்கிடையே குணசேகரனின் செல்போன் காணாமல் போனது. அந்த செல்போனை சக்திதான் திருடி இருப்பார் என நினைத்த குணசேகரன், அருள், காந்தி, பாலு ஆகிய 4 பேரும் சேர்ந்து சக்தியை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரை அங்கேயே விட்டுவிட்டு இவர்கள் மட்டும் தாங்கள் தங்கி இருந்த அறைக்கு வந்து விட்டனர். மது போதை தெளிந்த பிறகு மீண்டும் நேற்று காலை சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். அங்கு சக்தி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.</p><h2>4 பேர் போலீசில் சரண்</h2><p>இதையடுத்து குணசேகரன், காந்தி, அருள், பாலு ஆகிய 4 பேரும் சேலையூர் காவல் நிலையத்தில் நடந்த விவரங்களை கூறி சரணடைந்தனர். சேலையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கொலையான சக்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>மின் கட்டணம் சத்தமில்லாமல் உயர்த்தப்பட்டுள்ளது - கீதாஜீவன் குற்றச்சாட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/electricity-charges-have-been-hiked-quietly-geetha-jeevan-alleges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/electricity-charges-have-been-hiked-quietly-geetha-jeevan-alleges#comments</comments><guid isPermaLink="false">5379a91c-b7df-4c49-ad5d-59aa2f1569a4</guid><pubDate>Sun, 19 Jul 2026 05:09:39 +0000</pubDate><atom:updated>2026-07-19T05:09:39.161Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>மின் கட்டணம்,geetha jeevan,Electricity Charges,கீதாஜீவன்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/ba6fvtxg/9.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/ba6fvtxg/9.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியதாவது;</p><p>மு.க. ஸ்டாலின் ஆட்சியில் 100 யூனிட் குறைக்கப்பட்டபோது கட்டணம் எவ்வளவு இருந்தது. இப்போது எவ்வளவு இருந்தது என்று பாருங்கள்? சத்தமில்லாமல் மின்சார கட்டணம் ஒரு யூனிட்டிற்கு இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இன்று 4 ரூபாய் 50 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. ஆகவே, அவர்கள் எந்த அளவிற்கு பொய்யான செய்திகளை பரப்புகிறார்கள் என்ற அறிந்து கொள்ள முடியும்.</p><p>விலைவாசி ஏறுகிறது. எல்லா இடங்களிலும் மின்வெட்டு தொடர்ச்சியாக இருக்கிறது. பல இடங்களில் யாரும் கேள்வி கேட்க முடியவில்லை. புகார் செய்ய முடியல. எதற்கு மின்தடை ஏற்படுகிறது என்பது தெரியவில்லை. தவெக ஆட்சிக்கு வந்தபிறகு மின்தடை என்பது சாதாரண ஒரு நிகழ்வாகிவிட்டது.</p><p>பஞ்ச் டயலாக் ஆட்சிக்கு முடிவு கொடுக்கணும்.  </p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>‘அன்று மக்கள் பணம் மக்களுக்கே; இன்று கார்ப்பரேட்களுக்கே’ – மாணிக்கம் தாகூர் விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/back-then-peoples-money-was-for-the-people-today-its-for-corporates-manickam-tagores-criticism</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/back-then-peoples-money-was-for-the-people-today-its-for-corporates-manickam-tagores-criticism#comments</comments><guid isPermaLink="false">80da1998-41c7-4efc-950f-f8d01b5ed41a</guid><pubDate>Sun, 19 Jul 2026 05:01:37 +0000</pubDate><atom:updated>2026-07-19T05:01:37.848Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manikam Thakur MP</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/sbf43lmm/manikam-takore.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/sbf43lmm/manikam-takore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>வரலாற்றுச் சிறப்புமிக்க தினம்! (ஜூலை 19, 1969)</p><p>கார்ப்பரேட்களின் பிடியில் இருந்த 14 முக்கிய தனியார் வங்கிகளை, ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் துணிச்சலுடன் தேசியமயமாக்கியது அன்னை இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு!</p><h2>அன்று vs இன்று: </h2><p>அன்று: பொதுமக்களின் பணத்தைப் பாதுகாக்க தனியார் வங்கிகளை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88">அரசுடமையாக்கிய</a> தொலைநோக்கு பார்வை!</p><p>இன்று: பாஜகவின் "Double Engine" ஆட்சியில், மக்களின் பொதுத்துறை வங்கிகளை இணைத்து சுருக்கியும், பொதுச்சொத்துக்களை தனியார் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்த்தும் வருகின்றனர்.அன்று மக்கள் பணம் மக்களுக்கே; இன்று மக்கள் பணம் கார்ப்பரேட்களுக்கே! </p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தேசிய விருது வென்ற தமிழ் திரைப்பட குழுவினர்களுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ttv-dhinakaran-congratulates-the-teams-behind-the-national-award-winning-tamil-films</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ttv-dhinakaran-congratulates-the-teams-behind-the-national-award-winning-tamil-films#comments</comments><guid isPermaLink="false">a42442b4-1d3b-41b8-9fa7-fb781bce06af</guid><pubDate>Sun, 19 Jul 2026 05:00:34 +0000</pubDate><atom:updated>2026-07-19T05:00:34.558Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>தேசிய விருதுகள்,TTV Dhinakaran,டிடிவி தினகரன்,National Awards</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/o9nmt4sc/8.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/o9nmt4sc/8.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>“2024 ஆம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கான 72 வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலிருந்து அவ்விருதுகளுக்கு தேர்வாகியிருக்கும் திரைப்படக் குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். </p><p>சிறந்த தமிழ்த் திரைப்படமாக தேர்வாகியிருக்கும் ராயன் படத்தை இயக்கி நடித்த நடிகர் தனுஷ் உட்பட படக்குழுவினர், மகராஜா திரைப்படத்தின் மூலம் சிறந்த துணை நடிகையாக தேர்வாகியிருக்கும் சஞ்சனா, சிறந்த சண்டைப் பயிற்சிக்கான விருதைப் பெறும் அனல் அரசு, அமரன் திரைப்படத்தின் மூலம் சிறந்த இயக்குனராக தேர்வாகியிருக்கும் ராஜ்குமார் பெரியசாமி, சிறந்த பின்னணி இசைக்காக தேர்வாகியிருக்கும்  ஜி.வி.பிரகாஷ்குமார், சிறந்த படத்தொகுப்பிற்கான விருதைப் பெறும் கலைவாணன், சிறந்த ஒலிக்கலவையாக ( Best Sound Mixing )  தேர்வாகியிருக்கும் மெய்யழகன் திரைப்படக் குழுவினர்,  தேசிய நலனை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படத்திற்கான விருதுக்கு தேர்வாகியிருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படக் குழுவினர் மற்றும், தமிழ் ஆவணப்படமான ப்ளூ படத்திற்கான சிறந்த ஒலி வடிவமைப்புக்காக தேர்வாகியிருக்கும் ஹரிஹரசுதன் உள்ளிட்ட தேசிய விருதுகளுக்கு தேர்வாகி தமிழ்நாட்டிற்கும், தமிழ்த் திரையுலகத்திற்கும் பெருமையைத் தேடித்தந்த அனைவரின் திரைப்பயணமும் மென்மேலும் சிறக்கவும், விருதுகள் பல குவிக்கவும் மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தேசிய திரைப்பட விருதுகள்: தமிழ் திரையுலக கலைஞர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/national-film-awards-annamalai-congratulates-tamil-film-industry-artists</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/national-film-awards-annamalai-congratulates-tamil-film-industry-artists#comments</comments><guid isPermaLink="false">ad3dfbe5-4efc-4758-b14a-5ec1d477ef83</guid><pubDate>Sun, 19 Jul 2026 04:50:32 +0000</pubDate><atom:updated>2026-07-19T04:50:32.789Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Annamalai,அண்ணாமலை,National Film Awards,தேசிய திரைப்பட விருதுகள்,Tamil Film,தமிழ் திரைப்படங்கள்,தேசிய திரைப்பட விருது,வி தி லீடர்ஸ்,we the leaders</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/4aqnopb3/kloere.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ் திரையுலக கலைஞர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/4aqnopb3/kloere.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தேசிய விருதுகள் வென்ற தமிழ் சினிமா கலைஞர்களுக்கு வீ தி லீடர் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>அறிவிக்கப்பட்டுள்ள 72 ஆவது தேசிய விருதுகளில், தமிழகத் திரைத்துறையில் இருந்து, சிறந்த தமிழ்த் திரைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராயன் திரைப்படக் குழுவினர் மற்றும் சமூக மற்றும் தேசிய நலன் பிரிவில் சிறப்பு விருது வென்றுள்ள கேப்டன் மில்லர் திரைப்படக் குழுவினருக்கும், சிறப்பு விருது வென்றுள்ள தனுஷ் அவர்களுக்கும், அமரன் திரைப்படத்துக்காக தமிழ் மொழியில் சிறந்த இயக்குநர் விருது வென்றுள்ள ராஜ்குமார் பெரியசாமி, சிறந்த பின்னணி இசையமைப்பாளர் விருது வென்றுள்ள ஜி.வி.பிரகாஷ் குமார், சிறந்த படத்தொகுப்பு விருது வென்றுள்ள கலைவாணன் ஆகியோருக்கும், மகாராஜா திரைப்படத்துக்காக சிறந்த சண்டை பயிற்சியாளருக்கான விருது வென்றுள்ள அனல் அரசு, சிறந்த துணை நடிகை விருது வென்றுள்ள செல்வி. சச்சனா நமிதாஸ் ஆகியோருக்கும், மெய்யழகன் திரைப்படத்துக்காக சிறந்த ஒலிக்கலவை விருது வென்றுள்ள சுரேன் ஜி உள்ளிட்ட அனைவருக்கும், மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். </p><p>மேலும், “BLUE” (non feature) படத்துக்காக சிறந்த ஒலி வடிவமைப்பு தேசிய விருது பெற்ற டி.எஸ். ஹரிஹரசுதன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்த் திரையுலகின் பெருமையை உயர்த்திய உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தேசிய  விருதுகளை வென்றுள்ள தமிழ்த் திரையுலக கலைஞர்களுக்கு  முதல்-அமைச்சர்  விஜய் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-congratulates-tamil-film-industry-artists-who-have-won-national-awards</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-congratulates-tamil-film-industry-artists-who-have-won-national-awards#comments</comments><guid isPermaLink="false">dd53b251-3650-4158-aac3-14ddd6af174b</guid><pubDate>Sun, 19 Jul 2026 04:46:56 +0000</pubDate><atom:updated>2026-07-19T04:46:56.959Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தேசிய விருதுகள்,National Award,திரையுலகம்,Tamil Film Industry,Artists,கலைஞர்கள்,Chief Minister Vijay,முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/s3ijx9g6/cm-vijay.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/s3ijx9g6/cm-vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் பல்வேறு பிரிவுகளில் 10 தேசிய திரைப்பட விருதுகளை வென்று சாதனை படைத்துள்ள தமிழ்த் திரையுலகக் கலைஞர்களுக்கு தனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.</p><p>2024-ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படங்களுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், நடிகர் தனுஷ்  இயக்கி நடித்துள்ள “ராயன்” திரைப்படத்திற்குச் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதும், “கேப்டன் மில்லர்” திரைப்படத்திற்கு தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் விழுமியங்களை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படத்திற்கான விருது மற்றும் அப்படத்தில் நடித்த தனுஷ்-க்கு சிறப்புப் பிரிவில் சிறந்த நடிகருக்கான விருதும், “அமரன்” திரைப்படத்திற்காக ராஜ்குமார் பெரியசாமிக்கு சிறந்த இயக்குநருக்கான விருது, ஆர். கலைவாணனுக்கு சிறந்த படத்தொகுப்புக்கான விருது மற்றும் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு சிறந்த பின்னணி இசைக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>10 தேசிய விருதுகள்</h2><p>மேலும், “மகாராஜா” திரைப்படத்திற்காக அனல் அரசுக்கு சிறந்த சண்டைப் பயிற்சிக்கான விருது மற்றும் அப்படத்தில் நடித்த சாச்சனா நமிதாஸ்-க்கு சிறந்த துணை நடிகை விருதும், “மெய்யழகன்“ திரைப்படத்திற்காக சுரேன் ஜிக்கு சிறப்புப் பிரிவில் சிறந்த ஒலிக்கலவைக்கான விருதும், "ப்ளூ" குறும்படத்திற்காக டி. எஸ். ஹரிஹர சுதனுக்கு சிறந்த ஒலி வடிவமைப்புக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. 10 <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81">தேசிய திரைப்பட விருதுகளை</a> தமிழ்த் திரையுலகம் வென்றுள்ளதை பெருமைக்குரியதாக குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு முதல்-அமைச்சர்  வருங்காலங்களில் தமிழ்த் திரையுலகம் மேலும் பல விருதுகளைப் பெற்றிடவும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>410 பேருக்கு உடனே  ஆசிரியர் பணி வழங்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-urges-immediate-appointment-of-410-individuals-to-teaching-posts</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-urges-immediate-appointment-of-410-individuals-to-teaching-posts#comments</comments><guid isPermaLink="false">d266ad11-a726-4f7d-8a4b-93df4820b627</guid><pubDate>Sun, 19 Jul 2026 04:44:32 +0000</pubDate><atom:updated>2026-07-19T04:44:32.976Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,ஆசிரியர் பணி,Teaching Positions</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/jo97bsdg/anbu.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/jo97bsdg/anbu.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; </p><p>”தமிழ்நாட்டில்  13 ஆண்டுகளுக்கு முன் 2013-ஆம் ஆண்டில்  ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்று,  ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பையும்  நிறைவு செய்த  410 பேருக்கு இன்று வரை ஆசிரியர் பணி வழங்கப்படவில்லை.  அவர்கள் அனைவருக்கும் உடனடியாக  ஆசிரியர் பணி வழங்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டும் கூட அதை முந்தைய திமுக அரசும்,  இப்போதைய தவெக அரசும் செயல்படுத்த மறுப்பது பெரும் அநீதி ஆகும்.</p><p>தமிழ்நாட்டில் ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது 2012-ஆம் ஆண்டில் கட்டாயமாக்கப்பட்ட நிலையில், அதன் பின் வந்த அரசுகள் இந்த விவகாரத்தில் தங்களில் நிலைப்பாட்டையும், கொள்கைகளையும் முன்னுக்குப் பின் முரணாக மாற்றியது தான்  410 ஆசிரியர்களின்  எதிர்காலம் கேள்விக்குறியாகியிருப்பதற்கு காரணம் ஆகும்.</p><p>தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 2012-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும்  அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி வழங்கப்பட்டது.  அதன் பின் 2013-ஆம் ஆண்டு தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 410 பேர் தவிர  மீதமுள்ள அனைவருக்கும் ஆசிரியர் பணி வழங்கப்பட்டுவிட்டது. 410 பேருக்கு ஆசிரியர் பணி வழங்கப்படாததற்கு  அரசின் தடுமாற்றம் தான் காரணம் ஆகும்.</p><p>2012 ஆம் ஆண்டு தகுதித் தேர்வு வென்றவர்கள் மற்றும்  2013-ஆம் ஆண்டு தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில்  ஒரு பிரிவினருக்கு  தகுதித் தேர்வில் தேர்ச்சியை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வேலை வழங்கப்பட்டது. ஒரு கட்டத்தில் தகுதித் தேர்வு தேர்ச்சியுடன் வெயிட்டேஜ் மதிப்பெண்ணும் கட்டாயமாக்கப்பட்டது. அதனால் தான்  தகுதித் தேர்வில் வென்றவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதன்பின் 2018-ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 149-இன் படி தகுதித் தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும், போட்டித் தேர்வில் வென்றால் தான் ஆசிரியர் பணி என அறிவிக்கப்பட்டது. இதனால் 410 பேரின் ஆசிரியர் பணி காணல் நீராகி விட்டது.</p><p>ஒரு பணிக்கு இரு தேர்வுகள் நடத்தப்படுவதை எதிர்த்து  410 பேரும் தொடர்ந்த வழக்கை விசாரித்து 2024-ஆம் ஆண்டில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம்,  அவர்களுக்கு உடனடியாக ஆசிரியர் பணி வழங்க ஆணையிட்டது. ஆனால்,  அதை செயல்படுத்த மறுத்துவிட்ட  திமுக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு  செய்தது. அதை விசாரித்த நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தின்  லோக் அதாலத் வாயிலாக தீர்வு காண ஆணையிட்டது. அதன்படி கடந்த ஜூலை 14-ஆம் நாள் நடைபெற்ற சமரசத் தீர்வு விசாரணையில் அரசுத் தரப்பில்  ஆஜரான வழக்கறிஞர்  ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிராகரித்து விட்டு  உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்தார். இது பெரும் அநீதியாகும்.</p><p>உச்சநீதிமன்றமே லோக் அதாலத் மூலம் இந்த சிக்கலை கருணை அடிப்படையில் தீர்க்க ஆணையிட்ட பிறகு  மீண்டும் மேல்முறையீடு செய்யப் போவதாக  அரசு வழக்கறிஞர் கூறுவது பெரும்  சமூக அநீதியாகும். ஆசிரியர்  தகுதித் தேர்வில்  வெற்றி பெற்றால்  ஆசிரியர் பணி என்ற அடிப்படையில் தான் 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித்  தேர்வுகள் நடததப்பட்டன. அவ்வாறு இருக்கும் போது அவர்களுக்கு வேலை வழங்க மறுப்பதையும்,  மேல்முறையீடு செய்யப் போவதாகவும் கூறுவதை  ஏற்க முடியாது.</p><p>எனவே, சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும்  ஆணையிட்டவாறு 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் வெற்றி பெற்று இதுவரை ஆசிரியர் பணி கிடைக்காத 410 பேருக்கும் உடனடியாக  ஆசிரியர் பணி வழங்கப்பட வேண்டும்.   2018-ஆம் ஆண்டுக்கு முன்பாக ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்று பெற்றவர்களை பெருமளவில் பாதிக்கும் அரசாணை எண் 149-ஐ ரத்து செய்யவும் அரசு முன்வர வேண்டும்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>‘பைல் போலா’ திருவிழாவுக்கு தயாராகும் காளை சிலைகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bull-statues-being-prepared-for-the-phil-bhola-festival</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bull-statues-being-prepared-for-the-phil-bhola-festival#comments</comments><guid isPermaLink="false">c8802bcc-40b9-439c-b85b-11fc4ed2900a</guid><pubDate>Sun, 19 Jul 2026 04:43:32 +0000</pubDate><atom:updated>2026-07-19T04:43:32.800Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மராட்டியம்,திருவிழா,பூஜை,bull,காளை,poojai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/s0p5ra6b/madu33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/s0p5ra6b/madu33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மும்பை, </p><p>விவசாயத்திற்கு வாழ்நாள் முழுவதும் உழைக்கும் காளைகளுக்கும், பசுக்களுக்கும் நன்றி செலுத்தும் விதமாக மராட்டியத்தில் ஆண்டுதோறும் 'பைல் போலா' திருவிழா வெகுவிமரிசை யாக நடைபெறுவது வழக்கம். குறிப்பாக விதர்பா பகுதியில் இந்த பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.</p><p>அன்றைய தினம் நிஜ காளைகளை வைத்து வழிபட முடியாதவர்கள். களிமண்ணால் செய்யப்பட்ட காளை சிலைகளுக்கு பொட்டு வைத்து மாலை அணிவித்து பூஜை செய்வார்கள். இந்த ஆண்டு செப்டம்பர் 10, 11-ந் தேதிகளில் இந்த திருவிழா நடைபெறுகிறது. </p><p>விழாவை விவசாயிகள் வரவேற்க காத்திருக்கிறார்கள். திருவிழா நெருங்கும் நிலையில் சத்தாரா மாவட்டம் காரத் உள்ளிட்ட பல பகுதிகளில் <a href="https://www.dailythanthi.com/news/india">காளை மாடு</a> சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கண்களை கவரும் வகையில் கலைஞர்கள் காளை சிலைகளை வடிவமைத்து வருகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>பழனி முருகன் கோவிலில் நாளை முதல் ரோப் கார் சேவை நிறுத்தம்

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-murugan-temple-rope-car-service-suspended-from-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-murugan-temple-rope-car-service-suspended-from-tomorrow#comments</comments><guid isPermaLink="false">28f30adf-4494-4b5b-8e2e-881211c76b41</guid><pubDate>Sun, 19 Jul 2026 04:40:37 +0000</pubDate><atom:updated>2026-07-19T04:40:37.945Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Palani Murugan Temple,பழனி முருகன் கோவில்,ரோப் கார் சேவை,Rope Car Service</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/j08takyw/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/j08takyw/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><p><a href="https://www.dailythanthi.com/">முருகனின்</a> அறுபடை வீடுகளில் 3ம் படை வீடு பழனி. உலகப்புகழ்பெற்ற பழனி முருகன் கோவில் மலை மீது அமைந்துள்ளது. அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை பிரதான வழிகளாக உள்ளன. இதுதவிர பக்தர்கள் மலைக்கோவிலுக்கு எளிதில் சென்றுவர ரோப் கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகள் பயன்பாட்டில் உள்ளது. </p><h2>ரோப் கார்</h2><p>இதில் ரோப் கார் வழியாக விரைவாகவும், பழனி மலையின் இயற்கை அழகை பார்த்து ரசித்த படியும் செல்லலாம் என்பதால் பெரும்பாலானோர் ரோப் காரில் செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் இந்த ரோப் கார் சேவை பக்தர்களுக்கு சிறந்த சுற்றுலா அனுபவத்தை கொடுக்கிறது. </p><p>இதனிடையே, பழனி ரோப் கார் நிலையத்தில் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாதாந்திர, வருடாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவது வழக்கம். அப்போது ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டு பணி மேற்கொள்ளப்படும். </p><p>அதன்படி, பழனி முருகன் கோவில் ரோப் கார் நிலையத்தில், வருடாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை முதல் ரோப் கார் சேவை நிறுத்தப்படுகிறது. நாளை முதல் 45 நாட்களுக்கு ரோப் கார் சேவை இயங்காது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. </p><p>பக்தர்கள் மின்இழுவை ரெயில், படிப்பாதையை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்ததால்.. பட்டதாரி பெண் எடுத்த விபரீத முடிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/graduate-woman-takes-drastic-step-after-lover-refuses-to-marry-her</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/graduate-woman-takes-drastic-step-after-lover-refuses-to-marry-her#comments</comments><guid isPermaLink="false">3d6643b8-0449-40d8-a179-a8e374c8faa6</guid><pubDate>Sun, 19 Jul 2026 04:29:24 +0000</pubDate><atom:updated>2026-07-19T04:29:24.866Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமணம்,Marriage,Love,காதல்,பெண் தற்கொலை,woman suicide,திருக்கானூர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/mcbxc6pn/thioll.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/mcbxc6pn/thioll.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருக்கனூர், </p><p>திருக்கனூர் அருகே காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்ததால் தூக்குப்போட்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">பட்டதாரி பெண் தற்கொலை</a> செய்து கொண்டார். வாலிபரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.</p><h2>தூக்குப்போட்டு தற்கொலை</h2><p>திருக்கனூர் அருகே உள்ள மண்ணாடிப்பட்டு பெரியபேட் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். விவசாய கூலித்தொழிலாளி. அவரது மகள் ஸ்ரீலேகா (வயது 23). பி.காம் பட்டதாரி. இவர் நேற்று முன் தினம் தனது வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது பெற்றோர் திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.</p><p>அந்த புகாரில் 'மண்ணாடிப்பட்டு சின்னப்பேட் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் ஸ்ரீலேகாவை பல ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், ஸ்ரீலேகாவை திருமணம் செய்ய மறுத்ததால் அவர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனவே தற்கொலைக்கு காரணமான வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>சாலை மறியல்</h2><p>இந்தநிலையில் நேற்று காலை பெண்ணின் உறவினர்கள் வாலிபரை கைது செய்யக்கோரி மண்ணாடிப்பட்டு பஸ் நிறுத்தம் பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் திருக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக் டர் ராஜகுமார், சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். </p><h2>போராட்டம்</h2><p>அப்போது ஸ்ரீலேகாவின் தற்கொலைக்கு காரணமான வாலிபரை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>இதையடுத்து சம்பந்தப்பட்ட வாலிபரை கைது செய்வதாக போலீசார் உறுதி கூறினர். இதை ஏற்று அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.</p> ]]></content:encoded></item><item><title>ஞாயிற்றுக்கிழமை: காசிமேட்டில் களைகட்டிய மீன்சந்தை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sunday-the-kasimedu-fish-market-was-bustling-with-activity</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sunday-the-kasimedu-fish-market-was-bustling-with-activity#comments</comments><guid isPermaLink="false">1e84e40d-7942-4c8d-9957-6aac4cf2fac9</guid><pubDate>Sun, 19 Jul 2026 03:54:23 +0000</pubDate><atom:updated>2026-07-19T03:54:23.175Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>காசிமேடு,Kasimedu,Fish Market,மீன்சந்தை</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/rudtxmba/7.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/rudtxmba/7.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>காசிமேடு மீன்பிடி சந்தையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் திருவிழா போன்று கூட்டம் அலை மோதுவது வழக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காசிமேடு மீன் பிடித்துறைமுகம் சந்தை மக்கள் கூட்டத்தால் களைகட்டியது. சந்தைக்கு மீன்களின் வரத்தும் அதிகரித்துள்ளது.</p> <p>வஞ்சிரம், சங்கரா, நண்டு, இறால் உள்ளிட்ட மீன் வகைகள் அதிகளவில் விற்பனையானதால், சந்தையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. மீன் பிரியர்கள், தங்களுக்கு தேவையான மீன்களை போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச்சென்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தனுஷ்கோடி அரிச்சல் முனையில் சாலையை மூடிய மணலால் சுற்றுலா பயணிகள் அவதி
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-face-difficulties-as-sand-covers-the-road-at-dhanushkodis-arichal-munai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-face-difficulties-as-sand-covers-the-road-at-dhanushkodis-arichal-munai#comments</comments><guid isPermaLink="false">5b489594-266c-4c7f-b0e7-ea38392fab5d</guid><pubDate>Sun, 19 Jul 2026 03:27:53 +0000</pubDate><atom:updated>2026-07-19T03:27:53.353Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>தனுஷ்கோடி,Dhanushkodi,அரிச்சல் முனை,Arichal Munai</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/5u1bt901/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/5u1bt901/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமேசுவரம்,  </p><p>ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி கடற்கரை உள்ளது. தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை சாலை அமைக்கப்பட்ட பின்னர் ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்தநிலையில் ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி பகுதியில் கடந்த 2 நாட்களாக வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது. </p><p>குறிப்பாக தனுஷ்கோடி தென்கடல் பகுதியில் கடல் பயங்கர சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தனுஷ்கோடி அரிச்சல்முனை அருகே தடுப்புச்சுவர் மீது கடல் அலை மோதி சாலை வரை தண்ணீர் சீறிப்பாய்கின்றன. ஆக்ரோஷமாக சீறிஎழும் கடல் அலைகளை தடுப்புச்சுவர் கற்கள் மீது ஏறி நின்று, சுற்றுலா பயணிகள் ஆபத்தான முறையில் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.</p><p>அதேபோல பலத்த சூறாவளி காற்று காரணமாக தனுஷ்கோடி அரிச்சல் முனை செல்லும் சாலையில் பல்வேறு இடங்களில் நேற்று கடற்கரை மணல் மூடியுள்ளது. மேலும் தனுஷ்கோடி பகுதியில் புழுதி காற்றும் வீசி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இதேபோல் சாலையை மணல் மூடியது குறிப்பிடத்தக்கது.</p><p>அரிச்சல்முனை சாலைகளில் மூடப்பட்ட மணலை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணியும் நடந்து வந்தது. இருப்பினும் தொடர்ந்து காற்று வீசி வருவதால் மணல் மீண்டும் சாலைகளை மூடிவருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>குதிரை பேர வழக்கில் மேலும் 2 பேர் அதிரடி கைது: ரூ.2.80 கோடி பறிமுதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/2-more-people-arrested-in-horse-trading-case</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/2-more-people-arrested-in-horse-trading-case#comments</comments><guid isPermaLink="false">8f145afd-1b75-4517-976d-115e48682a35</guid><pubDate>Sun, 19 Jul 2026 03:23:32 +0000</pubDate><atom:updated>2026-07-19T03:23:32.484Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,police,போலீசார்,குதிரை பேரம்,horse trading</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/7pwd49eo/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/7pwd49eo/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>குதிரை பேர வழக்கு</h2><p>தவெக ஆட்சியை கவிழ்ப்பதற்காக 15 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க 'மேகாலயா பிராஜக்ட்' என்ற பெயரில் அரங்கேறிய சதித்திட்டம் ஊத்தங்கரை த.வெ.க. எம்.எல்.ஏ. டாக்டர் இளையராஜா சென்னை போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகார் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. </p><p>அவரிடம் ரூ.35 கோடி பேரம் பேசி த.வெ.க. ஆட்சிக்கு எதிராக செயல்பட வேண்டும் என்று மிரட்டல் விடுத்த வழக்கை திருவல்லிக்கேணி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் இதுவரையில் 12 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.</p><h2>2 பேர் அதிரடி கைது</h2><p>இந்த நிலையில் இந்த வழக்கில் கைதானவர்களை அடுத்தடுத்து காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் அளித்த தகவல் அடிப்படையில் இந்த வழக்கில் கொரட்டூரை சேர்ந்த கருணாநிதி (வயது 52), சாலிகிராமம் பகுதியை சேர்ந்த சரவணன் (49), பள்ளிக்கர ணையை சேர்ந்த வினோத் வெங்கடேசன் (51) ஆகிய 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.</p><p>இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரின் வீடுகளுக்கு திருவல்லிக்கேணி போலீசார் சென்றனர். 3 பேரையும் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அவர்களுடைய வீடுகள், அலுவலகங்களும் சோதனை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது. விசாரணை முடிவில் கருணாநிதி, சரவணன் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். வினோத் வெங்கடேசனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.</p><h2>தீவிர விசாரணை</h2><p>த.வெ.க. ஆட்சியை கவிழ்க்கும் முயற்சிக்கு அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளிக்க முன்வந்தால் அவர்களுக்கு முன்பணமாக இந்த தொகையை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த வழக்கில் ஏற்கனவே ரூ.70 லட்சத்துக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது ரூ.2.80 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது எண்ணிக்கையும் 14 ஆக அதிகரித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் குன்னூர் சிம்ஸ் பூங்கா வெறிச்சோடியது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coonoor-sims-park-deserted-due-to-low-tourist-arrivals</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coonoor-sims-park-deserted-due-to-low-tourist-arrivals#comments</comments><guid isPermaLink="false">37ee989e-384a-43ab-8aae-54e342388e66</guid><pubDate>Sun, 19 Jul 2026 03:18:43 +0000</pubDate><atom:updated>2026-07-19T03:18:43.344Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சுற்றுலா பயணிகள்,park,பூங்கா,tourist,குன்னூர்,Coonoor</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/zp4qzhez/11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/zp4qzhez/11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>குன்னூர்,</p><p>சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் குன்னூர் சிம்ஸ் பூங்கா வெறிச்சோடியது. இதனால் நடைபாதை வியாபாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.</p><h2>சுற்றுலா பயணிகள் வருகை குறைவு</h2><p>நீலகிரி மாவட்டம் குன்னூர், ஊட்டி பகுதிகளில் கடந்த மாதம் நடைபெற்ற கோடை விழாவில் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர். இதில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடைபெற்ற பழக்கண்காட்சியில் தமிழகத்தில் உள்ள தோட்டக்கலைத்துறையினர் அரங்குகள் அமைத்து அப்பகுதியில் விளையும் பழங்களைக் கொண்டு விலங்குகளின் உருவங்கள் உருவாக்கப்பட்டு இருந்தது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துச் சென்றனர். மேலும் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணிக ளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. மேலும் தற்போது தொடர் சாரல் மழை பெய்து வருவதாலும் சுற்றுலா பயணிகளின் வரத்து வெகுவாக குறைந்து வருகிறது.</p><h2>பூங்கா வெறிச்சோடியது</h2><p>இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள சிம்ஸ் பூங்காவில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">சுற்றுலா பயணிகளின் </a>வருகை வெகுவாக குறைந்து காணப்பட்டது. இதனால் பூங்கா வெறிச்சோடி காட்சியளித்தது. மேலும் தற்போது பூங்காவில் விதைகள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது மேலும் படகு இல்லம், கண்ணாடி மாளிகை, சிறுவர் பூங்கா, புல்வெளி மைதானம் போன்ற பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் வேர்க்கடலை, சுண்டல், மக்காச்சோளம் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் சிறுவியாபாரிகள் வியாபாரம் நடக்காததால் வேதனை அடைந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>கன்னியாகுமரியில் சூரிய உதயம் காண குவிந்த சுற்றுலா பயணிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-flock-to-kanyakumari-to-witness-the-sunrise</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-flock-to-kanyakumari-to-witness-the-sunrise#comments</comments><guid isPermaLink="false">88c6b287-fea9-421c-844b-017b277c357a</guid><pubDate>Sun, 19 Jul 2026 03:03:19 +0000</pubDate><atom:updated>2026-07-19T03:03:19.818Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,Tourists,சுற்றுலா பயணிகள்,Kanyakumari</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/s3pd3fn5/6.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/s3pd3fn5/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி,</p><p>சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள்.</p><p>இந்தநிலையில் இன்று ஞாயிறு விடுமுறையையொட்டி காலையில் இருந்தே கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை, சன்ரைஸ் பாயின்ட் போன்ற பகுதிகளில் நள்ளிரவு முதல் காத்திருந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். </p><p>அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். படகுத்துறையில் இருந்து சுற்றுலா பயணிகள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்த்து ரசித்து வருகின்றனர். காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள தமிழன்னை பூங்கா, சன்செட் பாயிண்ட், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. </p>]]></content:encoded></item></channel></rss>