<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 14 Jul 2026 11:48:33 +0000</lastBuildDate><item><title>பழனி கோவில் நில விவகாரம்: அமைச்சர் ரமேஷ் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-temple-land-issue-minister-ramesh-clarifies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-temple-land-issue-minister-ramesh-clarifies#comments</comments><guid isPermaLink="false">6662f364-0307-42ee-a099-807ac3471b2a</guid><pubDate>Tue, 14 Jul 2026 11:29:55 +0000</pubDate><atom:updated>2026-07-14T11:29:55.757Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>temple lands,கோவில் நிலங்கள்,Minister ramesh,அமைச்சர் ரமேஷ்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/i1uxi7o1/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/i1uxi7o1/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பழனி கோவில் நில விவகாரம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது;</p><p>"கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கலர் கலராக ரீல் சுத்துகின்றனர். இனாம் நிலங்களை கோவில் நிலம் என கூறி வருகின்றனர். இனாம் நிலத்துக்கும், கோவில் நிலத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசுகின்றனர். இனாம் ஒழிப்பு சட்டத்தின் மூலமாக அந்த இடங்களுக்கு ஏற்கெனவே பட்டா வழங்கப்பட்டுள்ளது. பட்டா வாங்கி 60 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.  </p><p>எனது உறவினர் ஒருவர் ரூ.100 கோடிக்கு நிலம் வாங்கியதாக பொய்ச்செய்தி பரப்புகின்றனர். அரசு மீது ஊழல் கரையை சுமத்த எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றனர். நிலத்தை பதிவு செய்த சார் பதிவாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>கரூரில் கோவில் நிலங்களை யாருக்கும் பட்டா போட்டு கொடுக்கவில்லை. எங்களுக்கு யாரைப்பற்றியும் கவலையில்லை. கோவில் நிலங்களில் ஒரு இஞ்ச் நிலங்களை யாருக்கும் கொடுக்க எங்களுக்கு விருப்பம் கிடையாது. பொய், புரட்டு பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.”</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>30 குண்டுகள் முழங்க எழுத்தாளர் பூமணியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/writer-poomanis-body-laid-to-rest-with-state-honors</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/writer-poomanis-body-laid-to-rest-with-state-honors#comments</comments><guid isPermaLink="false">ce6a6da4-80a2-4fd8-9669-d7fea81fa63a</guid><pubDate>Tue, 14 Jul 2026 11:24:24 +0000</pubDate><atom:updated>2026-07-14T11:24:24.915Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சாகித்ய அகாடமி விருது,எழுத்தாளர் பூமணி,WriterPoomani</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/7od257f0/poo33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எழுத்தாளர் பூமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/7od257f0/poo33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த தமிழ் எழுத்தாளர் பூமணி, வயோதிகம் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79. </p><p>பூமணியின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும் கரிசல் வட்டார வாசகர்களுக்கும் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகக் கருதப்படுகிறது. அவரது மறைவுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு எழுத்தாளர்களும், திரையுலகினரும், வாசகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்தனர்.</p><p>முதல்-அமைச்சர் விஜய் இரங்கல்</p><p>இந்தநிலையில் மறைந்த எழுத்தாளர் பூமணியின் இறுதி பயணத்துக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">முதல்-அமைச்சர் விஜய்</a> அறிவித்தார். மேலும், பூமணியின் மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும். உறவினர், நண்பர்களுக்கும், தமிழ் இலக்கியவாதிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்', என்றும் தெரிவித்தார்.</p><p>இந்தநிலையில்,  பூமணியின் உடல் இன்று நண்பகல் 12 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், சொந்த ஊரான  தூத்துக்குடி மாவட்டம், இளையரசனேந்தல் அருகேயுள்ள ஆண்டிபட்டி கிராமத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது.அங்கு அவரது தோட்டத்தில் பிற்பகல் 2 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடந்தது.  </p><p>பூமணி உடலுக்கு அவரது குடும்பத்தினர் இறுதிச் சடங்குகள் செய்த நிலையில், காவல்துறை அணிவகுப்புடன் 30 குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன்  அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>&quot;அரசு கல்லூரி ஆசிரியரல்லாப் பணியாளர்கள் மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்&quot; அமைச்சர் விஸ்வநாதன் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-college-non-teaching-employees-can-apply-for-transfer-counseling-minister-viswanathan-announces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-college-non-teaching-employees-can-apply-for-transfer-counseling-minister-viswanathan-announces#comments</comments><guid isPermaLink="false">4a2cc614-9011-4a32-818e-bf849fd4e278</guid><pubDate>Tue, 14 Jul 2026 11:20:01 +0000</pubDate><atom:updated>2026-07-14T11:20:01.712Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,அறிவிப்பு,Counseling,கலந்தாய்வு,announced,Government College- அரசு கல்லூரி,உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/hc05jfvb/121.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் விஸ்வநாதன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/hc05jfvb/121.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள கல்லூரிக் கல்வி இயக்ககம், அனைத்து மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்ககங்கள், அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியரல்லாப் பணியாளர்களின் (‘டி’ பிரிவு தவிர்த்து) நலன்கருதி 2026-27ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது கலந்தாய்விற்கு (General Counselling) இணைய வழியில் வரும் 15.07.2026 முதல் 24.07.2026 வரை விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D">விஸ்வநாதன்</a> தெரிவித்துள்ளார்.</p><p>இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாவது:-</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி, உயர்கல்வித் துறையின் கீழுள்ள கல்லூரிக் கல்வி இயக்ககம், அனைத்து மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்ககங்கள், அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியரல்லாப் பணியாளர்களின் நலன்கருதி 2026-27ஆம் ஆண்டு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடத்திட ஆணையிடப்பட்டுள்ளது.</p><h2>பொது கலந்தாய்வு</h2><p>அதன்படி, உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கும் கல்லூரிக் கல்வி இயக்ககம், அனைத்து மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்ககங்கள், அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள் 2026-27ஆம் ஆண்டு பணியிட மாறுதலுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்விற்கு  15.07.2026 முதல் 24.07.2026 வரை இணையவழி வாயிலாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.</p><p>இந்த பொது கலந்தாய்வில் கலந்து கொள்ள கல்லூரிக் கல்வி இயக்ககம், அனைத்து மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்ககங்கள், அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள்  www.nonteaching.dcetransfer.in என்ற இணையதள முகவரியில், விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு உயர்கல்வித்துறை அமைச்சர்  தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் இதற்கு உரிய பதில் சொல்ல வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-chief-minister-who-has-the-police-under-his-control-must-give-a-befitting-reply-udhayanidhi-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-chief-minister-who-has-the-police-under-his-control-must-give-a-befitting-reply-udhayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">cf0f56be-1725-44b6-85f1-c47e8fba62a9</guid><pubDate>Tue, 14 Jul 2026 11:06:11 +0000</pubDate><atom:updated>2026-07-14T11:06:11.605Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,police,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,காவல்துறை,முதல்-அமைச்சர்,Chief Minister,பதில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/iss5mc1r/122.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/iss5mc1r/122.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக எதிர்க்கட்சித்தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">உதயநிதி ஸ்டாலின்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரான சபரிவர்மன் காவல்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றக்காவலில் மரணம் அடைந்து இருப்பது அறிந்து அதிர்ச்சியுற்றேன். கைதானபோது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த சபரிவர்மன், விசாரணை முடிந்து சிறையில் அடைக்கப்பட்ட போது, உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார் என்று காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது.</p><h2>பதில் சொல்ல வேண்டும்</h2><p>ஆனால், மரணமடைந்த சபரிவர்மனின் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும், அவரை மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் காவல்துறையினர் அடித்தே கொலை செய்துள்ளதாகவும் சபரிவர்மனின் குடும்பத்தார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் இதற்கு உரிய பதில் சொல்ல வேண்டும்.</p><p>சபரிவர்மனின் கடையில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டதாக, அவரை கைது செய்த காவல்துறையினர், ஈரோட்டில் குட்கா விற்றதாக கைது செய்யப்பட்ட த.வெ.க. நிர்வாகி அருணை அன்றே சொந்த ஜாமினில் விடுவித்துள்ளனர். சபரிவர்மன் எனும் சாமானியருக்கு ஒரு சட்டம், த.வெ.க நிர்வாகி என்றால் வேறொரு சட்டம் என்னும் காவல்துறையின் போக்குக் கண்டிக்கத்தக்கது. </p><h2>நடவடிக்கை</h2><p>இந்தச்சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு, சபரிவர்மனின் மரணத்திற்குக் காரணமானவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும். சபரிவர்மனின் மரணத்துக்கு நீதி கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>8 கிராம மீனவர்களின் கோரிக்கைகள்: நியாயமான, சட்டபூர்வமான தீர்வு காணும் வகையில்  நடவடிக்கை
அமைச்சர் நிர்மல் குமார் உறுதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/demands-of-fishermen-from-eight-villages-minister-nirmal-kumar-assures-action-to-find-a-fair-and-legal-solution</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/demands-of-fishermen-from-eight-villages-minister-nirmal-kumar-assures-action-to-find-a-fair-and-legal-solution#comments</comments><guid isPermaLink="false">0f13b240-ef1c-4df2-b251-5045f6608a35</guid><pubDate>Tue, 14 Jul 2026 11:00:54 +0000</pubDate><atom:updated>2026-07-14T11:00:54.330Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மீனவர்கள்,fishermen,தீர்வு,நடவடிக்கை action,கோரிக்கை Request,அமைச்சர் நிர்மல் குமார்,Minister Nirmal Kumar</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/84e9ja7z/nirmal-kumar.gif" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர்  சி. டி. ஆர். நிர்மல் குமார் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/84e9ja7z/nirmal-kumar.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>எண்ணூரை சுற்றியுள்ள நெட்டுக்குப்பம், தாழங்குப்பம் உள்ளிட்ட 8 கிராம மீனவர்களின் கோரிக்கைகள் குறித்து மீனவ சங்க பிரதிநிதிகளுடன் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர்  சி. டி. ஆர். நிர்மல் குமார் கலந்துரையாடல்.</p> <h2>கலந்தாய்வு</h2><p>இன்று சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமார்  எண்ணூரை சுற்றியுள்ள நெட்டுக்குப்பம், தாழங்குப்பம் உள்ளிட்ட 8 கிராம மீனவர்களின் நீண்டகால கோரிக்கைகள் குறித்து மீனவ சங்க பிரதிநிதிகளுடன் விரிவான கலந்தாய்வு மேற்கொண்டார்.</p> <p><strong>கலந்தாய்வுக்குப்பின், அமைச்சர் அவர்கள் மீனவ சங்கப் பிரதிநிதிகளுடன் பேசுகையில்,</strong></p><p>முதலில், இன்று தங்களுடைய கருத்துகளையும் கோரிக்கைகளையும் நேரடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு அரசு மற்றும்  முதல்-அமைச்சர், வளர்ச்சி திட்டங்களும் மக்களின் வாழ்வாதாரமும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல; இரண்டையும் சமநிலையுடன் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்ற உறுதியான கொள்கையை கொண்டுள்ள மக்களுக்கான அரசு.</p><h2>சமநீதி</h2><p>இன்று நடைபெற்ற இந்த கலந்தாய்வில், குறிப்பாக வேலைவாய்ப்பு, மீனவர்களின் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மாசுகட்டுப்பாடு மற்றும் பொதுநல கோரிக்கைகள் குறித்து தாங்கள் முன்வைத்த கருத்துகள் அனைத்தையும் மிகவும் கவனமாக கேட்டறிந்துள்ளோம். வேலைவாய்ப்பு தொடர்பாக, அரசால் நடைமுறையில் செயல்படுத்தக்கூடிய, சட்டரீதியாக நிலைத்திருக்கும், அனைவருக்கும் சமநீதியை வழங்க கூடிய ஒரு நிரந்தர நடைமுறை உருவாக்கப்படும்.</p> <h2>நடவடிக்கை எடுக்கப்படும்</h2><p>இதற்காக, எட்டு மீனவ கிராமங்களின் பதிவு செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் மீனவ குடும்பங்களின் விவரங்கள், உண்மையாக மீன்பிடி தொழிலை நம்பி வாழும் குடும்பங்கள், பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, அதிகாரிகளுடன் விரிவாக ஆய்வு செய்து ஒரு செயல்பாட்டு வழிமுறையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.</p><h2>சட்டபூர்வமான தீர்வு</h2><p>இந்த நடைமுறை, தற்போதைய ஆட்சேர்ப்புகளுக்கு மட்டுமல்லாமல், எதிர்கால ஆட்சேர்ப்புகளிலும் தொடர்ச்சியாக பின்பற்ற கூடிய வகையில் இருக்கும் என்பதே அரசின் நோக்கமாகும். அதே நேரத்தில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஏற்கனவே நீண்டகாலமாக பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் உரிமைகளையும் கருத்தில் கொள்ள வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. எனவே, அனைவருக்கும் நியாயமான மற்றும் சட்டபூர்வமான தீர்வு காணும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.</p><h2>கோரிக்கை</h2><p>தாங்கள் முன்வைத்த சுற்றுச்சூழல், சாம்பல்அகற்றுதல், நீர்வழிப்பாதைகள், ஆற்று பராமரிப்பு, ஒப்பந்தப் பணிகள் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும் தனித்தனியாக பட்டியலிடப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் மூலம் ஆய்வு செய்து, உடனடியாக மேற்கொள்ளக் கூடிய பணிகள் விரைவு படுத்தப்படும்.</p> <h2>இன்றுடன் முடிவடைவதல்ல</h2><p>மேலும், நான் விரைவில் சம்பந்தப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு, நிலைமையை ஆய்வு செய்யவும் திட்டமிட்டுள்ளேன். இந்த பேச்சு வார்த்தை இன்றுடன் முடிவடைவதல்ல. இன்று, தாங்கள் அளித்த அனைத்து கோரிக்கைகளையும் அதிகாரிகள் தொகுத்து ஆய்வு செய்வார்கள். மீண்டும் ஒரு கலந்தாய்வு கூட்டம் நடத்தி, நடைமுறையில் செயல்படுத்த கூடிய தீர்வுகளை முன்வைத்து விவாதிப்போம்.</p><h2>நிரந்தர தீர்வு</h2><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">அரசின் நோக்கம்</a> வெறும் வாக்குறுதி வழங்குவது அல்ல; நடைமுறையில் செயல்படுத்த கூடிய, அனைவராலும் ஏற்று கொள்ள கூடிய நிரந்தர தீர்வை உருவாக்குவதே ஆகும். அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட்டால் மட்டுமே இந்த முயற்சி வெற்றியடையும். தேவையற்ற சட்டப் பிரச்சினைகள் அல்லது கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல், அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் ஒரு நல்ல முடிவை எட்டுவோம் என்று நான் நம்புகிறேன்.</p><h2> உறுதி</h2><p>முதல்-அமைச்சர் வழிகாட்டுதலின் படி, எண்ணூர் பகுதி மீனவர்களின் நலன், வாழ்வாதாரம் மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் என்பதை இந்த தருணத்தில் உறுதியுடன் தெரிவித்து கொள்கிறேன் என்று பேசினார்.</p> <h2>கலந்து கொண்டனர்</h2><p>உடன், கூடுதல் தலைமை செயலாளர்/ மின்வாரிய தலைவர் ஜெ. ராதாகிருஷ்ணன், எரிசக்தி துறை முதன்மை செயலாளர் அனில்மேஷ்ராம், மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குநர் ம. கோவிந்தராவ், பசுமை எரிசக்தி கழக மேலாண்மை இயக்குநர் பி. என். ஸ்ரீதர், மின் பகிர்மானம் மற்றும் மின் தொடரமைப்பு கழக இணை மேலாண்மை இயக்குநர் ஐ.சா. மெர்சிரம்யா, மீன்வளம், காவல்துறை, தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாய் பழுது: 810 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/boiler-tube-fault-at-mettur-thermal-power-station-810-mw-power-generation-affected</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/boiler-tube-fault-at-mettur-thermal-power-station-810-mw-power-generation-affected#comments</comments><guid isPermaLink="false">2fe225d4-a041-40ed-9f13-485f3f2d3dd0</guid><pubDate>Tue, 14 Jul 2026 10:58:54 +0000</pubDate><atom:updated>2026-07-14T10:58:54.172Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Power generation,மேட்டூர் அனல் மின் நிலையம்,மின்சார உற்பத்தி,Mettur Thermal Power Station</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/t0g5nrvp/2.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/t0g5nrvp/2.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம் மாவட்டம், மேட்டூரில் அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தலா, 210 மெகா வாட் திறனில் நான்கு அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒட்டுமொத்த மின் உற்பத்தித் திறன் 1,440 மெகாவாட் ஆகும். </p><p>இந்த நிலையில் அனல் மின் நிலையத்தின் கொதிகலன் குழாய் மற்றும் டர்பைன் திடீரென பழுதடைந்தது. இதனால் மொத்தம் 810 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கொதிகலன் குழாய் மற்றும் டர்பைனில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. </p>]]></content:encoded></item><item><title>திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-sea-suddenly-receded-at-tiruchendur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-sea-suddenly-receded-at-tiruchendur#comments</comments><guid isPermaLink="false">d9ca2a30-e46d-40ce-959b-268d3bc9dae3</guid><pubDate>Tue, 14 Jul 2026 10:47:25 +0000</pubDate><atom:updated>2026-07-14T10:47:25.544Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>கடல்,திருச்செந்தூர்,Tiruchendur</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/7wefowul/1.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/7wefowul/1.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்செந்தூர்,</p><p>திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதார பதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் வழக்கமாக அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள், அதற்கு முன்தினம், மறுநாள் கடல்நீர் உள்வாங்குவது வழக்கமான நிகழ்வாக நடைபெற்று வருகிறது.</p><p>இந்த நிலையில், அமாவாசையை முன்னிட்டு, திருச்செந்தூரில் கடல் நீர் இன்று காலை திடீரென உள்வாங்கி காணப்பட்டது. சுமார் 70 அடி தூரம் கடல் உள்வாங்கியதால் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. எனினும், ஆபத்தை உணராமல் பாறைகள் மேல் நின்று பக்தர்கள் செல்பி எடுத்தனர். கடல் உள்வாங்கிய பகுதிகளில் காவல்துறையினர் மற்றும் கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியினர் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>ஆட்சி, காட்சிகள் மாறினாலும்...தமிழகத்தில் கஞ்சா போதை  எள்ளளவு கூட குறையவில்லை - வானதி சீனிவாசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/even-as-governments-and-scenes-change-the-menace-of-cannabis-abuse-in-tamil-nadu-has-not-diminished-in-the-slightest-vanathi-srinivasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/even-as-governments-and-scenes-change-the-menace-of-cannabis-abuse-in-tamil-nadu-has-not-diminished-in-the-slightest-vanathi-srinivasan#comments</comments><guid isPermaLink="false">73485bba-db49-4b18-9fd3-702d17e295b7</guid><pubDate>Tue, 14 Jul 2026 10:30:20 +0000</pubDate><atom:updated>2026-07-14T10:30:20.475Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,Government of Tamil Nadu,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,ஆட்சி,drug eradication,கஞ்சா போதை,action நடவடிக்கை,ஒழிக்க</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/ctpk7xcw/vanathi18.gif" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/ctpk7xcw/vanathi18.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஆட்சி, காட்சிகள் மாறினாலும்...தமிழகத்தில் கஞ்சா போதை  எள்ளளவு கூட குறையவில்லை இது தொடர்பாக தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p> <h2>கொலை வெறி தாக்குதல்</h2><p>சென்னை எண்ணூரில் நள்ளிரவில் கஞ்சா போதையில் வீடு புகுந்து தம்பதியரை கொடூரமாக தாக்கியதாக கூறப்படும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே அந்த கும்பல் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்து, பயன்படுத்தி வந்ததை தட்டிக்கேட்டதால் தான் அவர்கள், தம்பதிகள் மேல் கொலை வெறி தாக்குதலை அரங்கேற்றி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.</p> <h2>ஆமை வேகம்</h2><p>ஆட்சி, காட்சிகள் மாறினாலும் கஞ்சா போதை பொருட்களின் பயன்பாடு மட்டும் தமிழகத்தில் எள்ளளவு கூட குறையவில்லை என்பதற்கு இது போன்ற சம்பவங்களே சாட்சி. மேலும் தமிழகத்தில் போதை பொருட்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளும் விழிப்புணர்வு பிரச்சாரங்களும் ஆமை வேகத்தில் நகர்வது தவெக அரசின் நிர்வாக தோல்விக்கான ஆரம்ப புள்ளி.</p><h2>தீவிர நடவடிக்கை</h2><p>எனவே குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%20">போதைப்பொருள்</a> விற்பனை நெட்வொர்க்கை முழுமையாக ஒழிக்க தமிழக அரசு உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">சென்னை எண்ணூரில் நள்ளிரவில் கஞ்சா போதையில் வீடு புகுந்து தம்பதியரை கொடூரமாக தாக்கியதாகக் கூறப்படும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே அந்த கும்பல் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்து, பயன்படுத்தி வந்ததை தட்டிக்கேட்டதால் தான் அவர்கள், தம்பதிகள் மேல் கொலை வெறி தாக்குதலை…</p>&mdash; Vanathi Srinivasan (@VanathiBJP) <a href="https://x.com/VanathiBJP/status/2076919169157898301?ref_src=twsrc%5Etfw">July 14, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>11 நவீன மாடுகள் காப்பகங்களில் 980 மாடுகள் பராமரிப்பு: சென்னை மாநகராட்சி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/980-cows-being-maintained-in-11-modern-cow-shelters-chennai-corporation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/980-cows-being-maintained-in-11-modern-cow-shelters-chennai-corporation#comments</comments><guid isPermaLink="false">1922f954-2837-402a-b0be-43f1035c49e3</guid><pubDate>Tue, 14 Jul 2026 10:23:47 +0000</pubDate><atom:updated>2026-07-14T10:23:47.858Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai Corporation,cow,மாடுகள்,காப்பகம்,சென்னை மாநகராட்சி அறிவிப்பு,maintain</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/x75tzosv/120.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாடுகள் காப்பகங்களில் 980 மாடுகள் பராமரிப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/x75tzosv/120.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கால்நடை காப்பகங்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து கால்நடை காப்பகங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.</p><h2>பொது சுகாதார சீர்கேடு</h2><p>பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் கடந்த 2024ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி, சுமார் 22,875 மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பான்மையான மாடுகள் உரிய இடவசதி இன்றி, தொழுவங்களுக்குள் வைத்து பராமரிக்கப்படாமல் சாலைகள் மற்றும் பொது இடங்களில் சுற்றித்திரிந்து வருகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு, பொது சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் சில நேரங்களில் பொதுமக்கள் மாடுகளால் தாக்கப்படும் சம்பவங்களும் ஏற்பட்டு வருகின்றன.</p><p>இவ்வாறு தெருக்களில் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு மாடு பிடிக்கும் வாகனம் ஒதுக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா 5 மாடு பிடிக்கும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பிடிக்கப்படும் மாடுகள் புதுப்பேட்டையில் உள்ள மாநகராட்சி மாட்டுத் தொழுவத்தில் அடைக்கப்பட்டு, மாட்டின் உரிமையாளர்களிடமிருந்து அபராதத் தொகை வசூலிக்கப்பட்டு மீண்டும் சாலைகளில் விடக்கூடாது என்ற நிபந்தனையுடன் அந்த மாடுகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.</p><h2>அபராதம்</h2><p>கடந்த 2 ஆண்டுகளில் சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 2,718 எண்ணிக்கையிலான மாடுகள் பிடிக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களிடமிருந்து ரூ.1,24,03,000/- அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.</p><h2>மாடுகள் காப்பகங்கள்</h2><p>இந்நிலையில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை முறையாகப் பராமரித்திடவும், பாதசாரிகள் மற்றும் வாகனத்தில் செல்வோருக்கு அச்சுறுத்தல் மற்றும் இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்கவும், பொது இடங்களில் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதைத் தவிர்த்து ஒழுங்குபடுத்தவும், கால்நடை வளர்ப்போர்களது வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகாமல் இருப்பதை ஊர்ஜிதம் செய்யும் வகையிலும் சேவை மனப்பான்மையுடன் 1 முதல் 15 வரை உள்ள மண்டலங்களில் 18 இடங்களில் மாடுகள் காப்பகங்கள் அமைக்கப்படும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் தற்போது 11 நவீன மாடுகள் காப்பகங்கள் அமைக்கப்பட்டு, அதில் 980 மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.</p><h2>பல்வேறு வசதிகள்</h2><p>இந்த கால்நடை காப்பகங்களில் கால்நடை மருத்துவர் அறை, பராமரிப்பாளர் அறை, கட்டுப்பாட்டு அறை, மருந்துகள் வைப்பு அறை, கண்காணிப்புக் கேமராக்கள், மின் வசதி, மின் விசிறி வசதி, தண்ணீர் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு கால்நடைக்கு நாளொன்றுக்கு ரூ.10/- பராமரிப்புக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p><strong>செயல்பாட்டில் உள்ள நவீன மாடுகள் காப்பகங்களின் விவரங்கள் பின்வருமாறு:-</strong></p><p>1. திருவொற்றியூர், 7 டி.பி.பி சாலை.</p><p>2. மணலி, 17 அரியலூர், தீயம்பாக்கம்.</p><p>3. மணலி, 20 காமராஜர் சாலை.</p><p>4. மாதவரம். 25 சி. எம். டி. ஏ. டெர்மினல்,</p><p>5. இராயபுரம், 53 பேசின் பிரிட்ஜ் சாலை.</p><p>6. அண்ணாநகர், 95 சிவசக்தி நகர், பாடி பிர்ட்ஜ் அருகில்.</p><p>7. தேனாம்பேட்டை, 115 பீட்டர்ஸ் சாலை,இராயப்பேட்டை.</p><p>8. ஆலந்தூர், 158 எம். ஜி. ஆர் சாலை, நந்தம்பாக்கம்.</p><p>9. ஆலந்தூர், 158 எம். ஜி. ஆர் சாலை, நந்தம்பாக்கம்.</p><p>10. பெருங்குடி, 184 வீரபாண்டிய கட்டபொம்மன் குறுக்குத் தெரு.</p><p>11. சோழிங்கநல்லூர், 194 பயோ சி.என்.ஜி. பிளான்ட் அருகில்.</p> <p><strong>கட்டப்பட்டு வரும் மாடுகள் காப்பகங்களின் விவரங்கள் பின்வருமாறு:-</strong></p><p>1. திருவொற்றியூர், 7 டி.பி.பி. சாலை.</p><p>2. இராயபுரம், 58 மூர் மார்க்கெட்.</p><p>3. அம்பத்தூர், என். ஆர். எஸ். சாலை.</p><p>4. தேனாம்பேட்டை, கிருஷ்ணாம்பேட்டை.</p><p>5. பெருங்குடி, 184 வீரபாண்டிய கட்டபொம்மன் குறுக்குத் தெரு.</p><p>6. பெருங்குடி,188 தாம்பரம்-வேளச்சேரி பிரதான சாலை.</p><p>7. சோழிங்கநல்லூர், 194 இஸ்கான் கோயில் அருகில்.</p><h2>பெருநகர சென்னை மாநகராட்சி</h2><p>எனவே, மாடுகளின் உரிமையாளர்கள் பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தங்கள் மாடுகளை சாலைகளில் சுற்றித்திரிய விடாமல், மாநகராட்சியின் சார்பில் பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கால்நடை காப்பகங்களில் தங்கள் மாடுகளை வைத்துப் பராமரித்திடவும், <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">மாநகராட்சியின்</a> சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் 18 அரசு பள்ளிகளுக்கு பெஞ்ச் டெஸ்க் வழங்கிய ஹுண்டாய் நிறுவனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/hyundai-provided-benches-and-desks-to-18-government-schools-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/hyundai-provided-benches-and-desks-to-18-government-schools-in-chennai#comments</comments><guid isPermaLink="false">c638387e-adf0-4925-9024-e719b6ea500b</guid><pubDate>Tue, 14 Jul 2026 10:18:38 +0000</pubDate><atom:updated>2026-07-14T10:18:38.349Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Aadhav Arjuna,ஆதவ் அர்ஜுனா,Government School,அரசு பள்ளிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/z8s0kyek/minister-rajmohan-adhav-ar.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ராஜ்மோகன்,அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,ஹூ மின் ஹோ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/z8s0kyek/minister-rajmohan-adhav-ar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாவட்ட கலக்டரின் சீரிய முன்னெடுப்பில் பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்பு திட்டத்தின்கீழ் ஹூண்டாய்மொபிஸ் நிறுவனத்தின் வாயிலாக சென்னை மாவட்டத்தில் உள்ள 18 அரசு பள்ளிகளுக்கு ரூ.70 லட்சம் செலவில் 900 பெஞ்ச் டெஸ்க் வழங்கும் விழா சென்னை எழும்பூர் மாகாண மகளிர் மேல்நிலை பள்ளி வளாகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.</p> <h2>அமைச்சர் ராஜ்மோகன்</h2><p>சென்னை மாவட்ட கலெக்டர் மாலதி ஹெலன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D">பள்ளிக் கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன்</a> மாணவர்களுக்கு பெஞ்ச் டெஸ்க் வழங்கி விழா பேருரை ஆற்றினார்கள். மேலும் பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். </p> <h2>கலந்து கொண்டனர்</h2><p>பள்ளி கல்வித்துறை கூடுதல் தலைமை செயலர் சந்தரமோகன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள் ஹூண்டாய்மொபிஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் ஹூ மின் ஹோ, நரசிம்மன் தலைவர் பெரு நிறுவன சமூக பொறுப்புத்துறை நிகழ்வில் கலந்து கொண்டனர் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ச.கண்ணப்பன் விழாவில் நன்றியுரை ஆற்றினார். உடன் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p> ]]></content:encoded></item><item><title>கோவை: ஒற்றைக் காட்டு யானை தாக்கி விவசாயி பலி  </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-farmer-killed-in-attack-by-lone-wild-elephant</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-farmer-killed-in-attack-by-lone-wild-elephant#comments</comments><guid isPermaLink="false">8f8660e6-f161-4f3f-acae-31f3f33d33f8</guid><pubDate>Tue, 14 Jul 2026 10:06:04 +0000</pubDate><atom:updated>2026-07-14T10:06:04.017Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,தாக்குதல்,காட்டு யானை,விவசாயி பலி,Wild elephan,Farmer death</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-06-09/mdp3wkj5/elephant-attack.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஒற்றைக் காட்டு யானை தாக்கி விவசாயி பலி]]></media:title><media:description type="html"><![CDATA[ ஒற்றைக் காட்டு யானை தாக்கி விவசாயி பலி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-06-09/mdp3wkj5/elephant-attack.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவையில் ஒற்றைக் காட்டு யானை தாக்கியதில் விவசாயி பலியானார்.</p><h2>யானை தாக்குதல்</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கோவை மாவட்டம்</a> அருகே உள்ள சின்னாம்பதி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜ் (வயது 72) விவசாயி.  இவர் தனது விவசாய நிலத்தில் இருந்தபோது, எதிர்பாராத விதமாக காட்டை விட்டு வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை ஒன்று திடீரென்று அவரைத் தாக்கியது. </p><h2>விவசாயி பலி</h2><p>இதில் படுகாயமடைந்த விவசாயி அலறிக் கூச்சலிட்டார். எனவே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகிலுள்ள கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் விவசாயி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p>இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. மேலும் காட்டு யானைகளின் நடமாட்டம் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><h2>வனத்துறை எச்சரிக்கை-பொதுமக்கள் கோரிக்கை</h2><p>பொதுமக்கள் இரவு நேரங்களில் தனியாக வெளியே வராமல் இருக்குமாறு வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும்<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> காட்டு யானை</a>களை கண்டால் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.</p><p>காட்டு யானைகளின் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் இப்பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>மதுக்கடைகளை மூடுவதே போதைப்பொருளை ஒழிப்பதற்கான முதற்படியாகும் - சீமான்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/closing-liquor-shops-is-the-first-step-towards-eradicating-substance-abuse-seeman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/closing-liquor-shops-is-the-first-step-towards-eradicating-substance-abuse-seeman#comments</comments><guid isPermaLink="false">194f79dc-3875-449e-85bf-122cd093c2c2</guid><pubDate>Tue, 14 Jul 2026 09:53:57 +0000</pubDate><atom:updated>2026-07-14T09:53:57.306Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,Seeman,மதுக்கடைகள்,drug eradication,போதைப்பொருள் ஒழிப்பு,liquor shops</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/mkoop90f/seeman.21.06.2026.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/mkoop90f/seeman.21.06.2026.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மதுக்கடைகளை மூடுவதே போதைப்பொருளை ஒழிப்பதற்கான முதற்படியாகும். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>மதுக்கடைகளை மூடக்கோரி போராடிய மாணவிகள் மீது காவல்துறையை ஏவி கண்மூடித்தனமாக தவெக அரசு தாக்குதல் நடத்துவது கொடுங்கோன்மை என்று சீமான் தெரிவித்தார்.</p><h2>தாக்குதல்</h2><p>அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கோடாலி கிராமத்தில் பள்ளி செல்லும் வழியில் மாணவச்செல்வங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இயங்கி வந்த தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரிப் போராடிய மாணவிகளின் கையை கிழித்து தவெக அரசின் காவல்துறை கண்மூடித்தனமாக தாக்குதல் தொடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.</p> <h2>மதுக்கடைகளை மூடப்போவது எப்போது?</h2><p>ஆட்சிக்கு வந்தவுடன் கல்விக்கூடங்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் மதுக்கடைகள் அனைத்தையும் மூடிவிட்டதாக கூறும் தவெக அரசின் பட்டியலில் அரியலூர் மாவட்டம் கோடாலி கிராமத்தில் இயங்கிய மதுக்கடை இடம்பெறாமல் போனது எப்படி? தமிழ்நாடு முழுவதும் இதுபோல் இயங்கிவரும் மற்ற மதுக்கடைகளை தவெக அரசு மூடப்போவது எப்போது? பள்ளி செல்வதற்கே அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இயங்கிவரும் மதுக்கடைகளை மூடுவதில் தவெக அரசுக்கு என்ன தயக்கம்? </p><h2>பேரவலம் இல்லையா?</h2><p>கல்வி கற்பதை விட்டுவிட்டு, மதுக்கடைகளை மூட வேண்டும் என்று மாணவக் கண்மணிகளை வீதியில் இறங்கி போராடும் நிலைக்கு ஆளாக்கியது மனித பேரவலம் இல்லையா? மாணவிகள் போராடும் வரை மதுக்கடைகளை மூடாமல் என்ன செய்து கொண்டிருக்கிறது தவெக அரசு? மாணவிகள் போராடிய பிறகும், மதுக்கடைகளை மூடாமல் காவல்துறையை ஏவி தாக்குதல் நடத்தியிருப்பது கொடுங்கோன்மை இல்லையா?</p><h2>விரும்பிய மாற்றமா?</h2><p>பிஞ்சு குழந்தைகளின் சின்னஞ்சிறு கைகளைக் காயப்படுத்த தவெக காவல் துறைக்கு எப்படி மனசு வந்தது? இதுதான் மக்கள் விரும்பிய மாற்றமா? இக்கொடுமைகளை நிகழ்த்தத்தான் மக்கள் உங்களை ஆட்சியில் அமர்த்தினார்களா? பெண்கள் பாதுகாப்பிற்கு சிங்கப்பெண்கள் காவல் படையை உருவாக்கிய தவெக அரசு, காவல்துறையிடமிருந்து மாணவிகளை பாதுகாக்க என்ன படையை உருவாக்கப்போகிறது?</p><h2>புனித தீர்த்தமா?</h2><p>தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் முற்று முழுவதுமாக மூடி முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே நாம் தமிழர் கட்சியின் நீண்டகால முதன்மையான கோரிக்கையாகும். கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிப்போம் என்று கூறும் தவெக அரசு, டாஸ்மாக் கடைகளில் விற்பது போதைப்பொருள் அல்லாமல் புனித தீர்த்தமா? அதனை மூடுவதில் தவெக அரசுக்கு என்ன தயக்கம்? முந்தைய திமுக, அதிமுக அரசுகள் செய்த டாஸ்மாக் மது விற்பனையை தவெக அரசும் தொடர்வது வெட்கக்கேடானது. </p> <h2>முதற்படியாகும்</h2><p>போதைப்பொருள் ஒழிப்பு நாளில் உறுதிமொழி எடுத்தால் மட்டுமே ஒழிந்துவிடாது முதல்வர் அவர்களே! டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக மூடுவதற்கான உறுதியான நடவடிக்கையை எப்போது எடுப்பீர்கள்? சட்டம் ஒழுங்கை சீரழித்து, சமூகத்தின் அனைத்து குற்றச்செயலுக்கும் காரணமான மதுக்கடைகளை மூடுவதே போதைப்பொருளை ஒழிப்பதற்கான முதற்படியாகும்.</p><h2>சட்ட நடவடிக்கை</h2><p>ஆகவே, அரியலூர் மாவட்டம் கோடாலி கிராமத்தில் மதுக்கடைகளுக்கு எதிராக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D">போராடிய மாணவிகளை தாக்கிய காவல்துறையினர்</a> மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மாணவிகளின் அறப்போராட்டத்தை அடுத்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ள மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டுமெனவும், முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.</p><h2>பாராட்டு</h2><p>தவெக அரசின் காவல்துறை தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அன்பு பிள்ளைகள் விரைந்து நலம்பெற விழைகிறேன். கண் முன்னே நடக்கும் அநீதிக்கு எதிராக சிறிய வயதிலும் சமூக பொறுப்புணர்வோடு தீரத்துடன் போராடிய அரியலூர் மண்ணின் வீரமகள்களுக்கு என்னுடைய அன்பையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">மதுக்கடைகளை மூடக்கோரிப் போராடிய மாணவிகள் மீது காவல்துறையை ஏவி கண்மூடித்தனமாக தவெக அரசு தாக்குதல் நடத்துவது கொடுங்கோன்மை!<a href="https://x.com/CMOTamilnadu?ref_src=twsrc%5Etfw">@CMOTamilnadu</a> <a href="https://x.com/TVKVijayHQ?ref_src=twsrc%5Etfw">@TVKVijayHQ</a><br><br>அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கோடாலி கிராமத்தில் பள்ளி செல்லும் வழியில் மாணவச்செல்வங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும்… <a href="https://t.co/Epwp53AFdT">pic.twitter.com/Epwp53AFdT</a></p>&mdash; செந்தமிழன் சீமான் (@Seeman4TN) <a href="https://x.com/Seeman4TN/status/2076941774006997261?ref_src=twsrc%5Etfw">July 14, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>மேகதாது விழிப்புணர்வு பரப்புரைக்கு நன்றி: அன்புமணியை நேரில் சந்தித்து வாழ்த்திய உழவர் அமைப்புகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thank-you-for-mekedatus-awareness-campaign-farmers-organizations-met-and-congratulated-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thank-you-for-mekedatus-awareness-campaign-farmers-organizations-met-and-congratulated-anbumani#comments</comments><guid isPermaLink="false">d5ee638b-ad4c-4940-8e61-0bace0249647</guid><pubDate>Tue, 14 Jul 2026 09:47:44 +0000</pubDate><atom:updated>2026-07-14T09:47:44.847Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி,Anbumani,சென்னை,farmer,வாழ்த்து,மேகதாது,Mekedatu Dam Issue</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/1l62vvim/119.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/1l62vvim/119.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணியை சென்னையிலுள்ள அவரது அலுவலகத்தில்  தமிழ்நாடு அனைத்து விவசாயச் சங்கங்களின் கூட்டியக்க தலைவர் பி.கே. தெய்வசிகாமணி உள்ளிட்ட உழவர் அமைப்புகளின் தலைவர்கள் சந்தித்து பேசினார்கள். </p><h2>நன்றி</h2><p>அப்போது காவிரியின்  குறுக்கே மேகதாது அணை கட்டும்  கர்நாடக அரசின் சதித் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பரப்புரை பயணம் மேற்கொண்டது உள்ளிட்ட உழவர்களுக்கு ஆதரவான செயல்பாடுகளுக்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர்.</p><h2>ஆதரவு</h2><p>கூட்டுறவு சங்கங்கள் மூலம் உழவர்கள் வாங்கிய பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உழவர் அமைப்புகள் சார்பில் நடத்தப்படவிருக்கும் நடைபயணத்திற்கும் ஆதரவளிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர். அதை ஏற்றுக்கொண்ட அன்புமணி இராமதாசை, உழவர்கள் நலனுக்காக உழவர் அமைப்புகள்  மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">பாட்டாளி மக்கள் கட்சி</a> முழு ஆதரவு அளிக்கும் என்று உறுதியளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை திருடும் முதல்-அமைச்சர் விஜய் தான் களவாணி - எடப்பாடி பழனிசாமி காட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-who-poaches-aiadmk-mlas-is-a-thief-remarked-edappadi-palaniswami-sharply</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-who-poaches-aiadmk-mlas-is-a-thief-remarked-edappadi-palaniswami-sharply#comments</comments><guid isPermaLink="false">3f14501b-62be-48cf-8b4f-8a19a2370d3a</guid><pubDate>Tue, 14 Jul 2026 09:44:15 +0000</pubDate><atom:updated>2026-07-14T09:44:15.198Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,எம்.எல்.ஏ.க்கள்,thief,Edappadi Palaniswami ​,அ.தி.மு.க.,காட்டம்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,AIADMK MLAs</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/yx853w6f/sami33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/yx853w6f/sami33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம், </p><p>அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை திருடும் முதல்-அமைச்சர் விஜய் தான் களவாணி. இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- </p> <h2>விஜய் தான் களவாணி</h2><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a> கரூர் நிகழ்ச்சியில் சமீபத்தில் பேசும்போது தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டு களவாணிகள் என்று கூறினார். அவர் வகிக்கும் பதவியில் இருந்து இவ்வாறு பேசுவது அழகல்ல. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை திருடும் முதல்-அமைச்சர் விஜய் தான் களவாணி. </p><h2>இறவல் கால்</h2><p>தமிழகத்தில் 60 நாள் த.வெ.க. ஆட்சியில் செய்தது என்ன. ஒன்றும் செய்யவில்லை. 4 கால்கள் இருந்தால் தான் நாற்காலி நிற்கும். விஜய் நாற்காலியின் ஒரு கால் இறவல் கால். வேறு கூட்டணியில் வென்றவர்கள் தான் த.வெ.க.வுக்கு உறுதுணையாக உள்ளனர்.</p><h2>கட்டுக்கதை</h2><p>தி.மு.க. - அ.தி.மு.க. கூட்டணி என்பது கட்டுக்கதை. தீயசக்தி தி.மு.க. என்பதுதான் எனது நிலைப்பாடும். தி.மு.க. எதிர்ப்பில் உறுதியாக இருக்கிறோம். முதல்-அமைச்சர் விஜய் இதுவரை ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யவில்லை. </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய்யிடம் ஆட்டோகிராப் வாங்கிய பெண் டாக்டர்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/female-doctor-gets-autograph-from-cm-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/female-doctor-gets-autograph-from-cm-vijay#comments</comments><guid isPermaLink="false">e6d149f2-f21e-4cca-ba63-4862c30ea9a3</guid><pubDate>Tue, 14 Jul 2026 09:29:16 +0000</pubDate><atom:updated>2026-07-14T09:29:16.835Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,முதல்-அமைச்சர்,doctor,Appointment Order,பணி நியமன ஆணைகள்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/dsnhjvej/118.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/dsnhjvej/118.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 751 உதவி மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D">முதல்-அமைச்சர்</a> ஜோசப் விஜய் வழங்கினார். </p><h2>ஆட்டோகிராப்</h2><p>அப்போது, பெண் டாக்டர் ஒருவர் முதல்-அமைச்சரிடம் ஆர்வம் மிகுதியால் ஆட்டோகிராப் கேட்டார். அப்போது, முதல்-அமைச்சரிடம் பேனா இல்லை. உடனே அந்த பெண் டாக்டரிடமே பேனா கேட்டார். அவரும் தனது பையில் இருந்து எடுத்து கொடுக்க, பணி ஆணையின் பின்புறத்தில் ஆட்டோகிராப் போட்டு கொடுத்தார். அந்த பெண் டாக்டரும் மகிழ்ச்சியுடன் மேடையைவிட்டு கீழே இறங்கினார். </p>]]></content:encoded></item><item><title>&quot;தமிழகத்தின் உயர்கல்வித் துறையை உயர்த்தும் பிரதமர் மோடி அரசு&quot; -  நயினார் நாகேந்திரன் பாராட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/prime-minister-modis-government-is-elevating-tamil-nadus-higher-education-sector-nainar-nagendran-praises</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/prime-minister-modis-government-is-elevating-tamil-nadus-higher-education-sector-nainar-nagendran-praises#comments</comments><guid isPermaLink="false">39bfdfa2-e320-4c3c-befe-21d3759c9a5c</guid><pubDate>Tue, 14 Jul 2026 09:26:18 +0000</pubDate><atom:updated>2026-07-14T09:26:18.270Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரதமர் மோடி,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Narendra Modi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/yky9mcgg/112.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/yky9mcgg/112.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>"மாணவர்களுக்கு தரமான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை உறுதி செய்யும் நமது மத்திய அரசின் PM SETU திட்டத்தின் கீழ், சுமார் ரூ.1,440 கோடி நிதிச் செலவில் அம்பத்தூர், கோயம்புத்தூர், தூத்துக்குடி, மதுரை, திருச்சி மற்றும் ஓசூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள 30 ஐடிஐ கல்லூரிகள் நவீனமயமாக்கப்பட உள்ளதாக வெளியாகியுள்ள அறிவிப்பை முழு மனதுடன் வரவேற்று மகிழ்கிறேன். </p><p>தமிழகத் தொழிற்பயிற்சி நிலையங்களில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், லாஜிஸ்டிக்ஸ் மற்றும் பிற நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த முன்னெடுப்பின் மூலம், நமது இளைய சமுதாயத்தினரின் வளமான எதிர்காலம் வலிமையாக வடிவமைக்கப்படும். தொழில்துறையில் ஓர் புது புரட்சி உண்டாகும்! மாணவர்களின் நலனையும், தொழில்துறையின் வளர்ச்சியையும் ஒருசேர முன்னேற்றும் இத்திட்டத்தினை நமக்கு வழங்கிய மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடிக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்"</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தொழிற்சாலையில் பாய்லர் வெடிப்பு: தொழிலாளர்கள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் அவசியம் - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/factory-boiler-explosion-extra-attention-needed-for-worker-safety-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/factory-boiler-explosion-extra-attention-needed-for-worker-safety-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">64911b9b-104b-42af-861f-5ff502194a96</guid><pubDate>Tue, 14 Jul 2026 09:13:52 +0000</pubDate><atom:updated>2026-07-14T09:13:52.131Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,பாதுகாப்பு,factory,safety,தொழிற்சாலை,பாய்லர் வெடிப்பு,Boiler explosion,கவனம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/qon1dwsr/nainar-nagendheran.new.gif" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/qon1dwsr/nainar-nagendheran.new.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தொழிற்சாலையில் பாய்லர் வெடிப்பு: தொழிலாளர்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இதுதொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>ராட்சத பாய்லர் </h2><p>திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள சிப்காட் தொழிற்பேட்டையில், தனியார் உலோக உருக்கு தொழிற்சாலையில் ராட்சத பாய்லர் வெடித்ததில், புலம்பெயர் தொழிலாளி ஒருவர் பலியானதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த மன வேதனையளிக்கின்றன. </p> <h2> இரங்கல்</h2><p>உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவதோடு, பாதிக்கப்பட்டவர்கள் முழு உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் விரைவில் குணமடைய தேவையான ஆதரவு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு தவெக அரசை கேட்டு கொள்கிறேன். </p><h2> கூடுதல் கவனம்</h2><p>மேலும், வேதிப்பொருட்களை அடிப்படையாக கொண்டு இயங்கும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">தொழிற்சாலைகள்</a> தங்களது தொழிலாளர்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமெனவும், இதுபோன்ற எதிர்பாரா விபத்துகளைத் தவிர்க்கும் வகையில் தொழிற்சாலைகளில் தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து தர வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள சிப்காட் தொழிற்பேட்டையில், தனியார் உலோக உருக்கு தொழிற்சாலையில் ராட்சத பாய்லர் வெடித்ததில், புலம்பெயர் தொழிலாளி ஒருவர் பலியானதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த மன வேதனையளிக்கின்றன. <br><br>உயிரிழந்தவரின்…</p>&mdash; Nainar Nagenthran (@NainarBJP) <a href="https://x.com/NainarBJP/status/2076937944863269242?ref_src=twsrc%5Etfw">July 14, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>வழிபாட்டு மற்றும் உணவு உரிமைகளை பாதுகாக்க சட்டத்திருத்தம் தேவை: தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/amendment-needed-to-protect-religious-and-food-rights-sdpi-party-demands-tamil-nadu-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/amendment-needed-to-protect-religious-and-food-rights-sdpi-party-demands-tamil-nadu-government#comments</comments><guid isPermaLink="false">df910709-858d-4996-b381-0866d71efa87</guid><pubDate>Tue, 14 Jul 2026 09:10:41 +0000</pubDate><atom:updated>2026-07-14T09:10:41.777Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,demand,உணவு,Amendment,முகம்மது முபாரக்,எஸ்டிபிஐ வலியுறுத்தல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/m7dmmwa6/117.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முகம்மது முபாரக்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/m7dmmwa6/117.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;</p><p>தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை மட்டுமன்றி, மற்ற நாட்களிலும் அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர பொது இடங்களில் எருது, காளை உள்ளிட்ட மாடுகள் மற்றும் ஆடு உள்ளிட்ட விலங்கினங்களைப் பலியிடக்கூடாது என்ற சென்னை ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சென்னை ஐகோர்ட் உத்தரவிற்கு இடைக்காலத்தடை விதித்துள்ளது. தமிழக அரசின் சட்ட ரீதியான நகர்வு மூலம் பெறப்பட்ட சுப்ரீம் கோர்ட்டில் இந்த உத்தரவை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">எஸ்டிபிஐ கட்சி</a> மனதார வரவேற்கிறது.</p><p>இந்த விவகாரத்தில் தற்போது கிடைத்துள்ளது இடைக்கால உத்தரவு மட்டுமே என்பதால், வழக்கில் முழுமையான வெற்றி பெறவும், எதிர்காலத்தில் இதுபோன்ற தடைகள் மீண்டும் ஏற்படுவதைத் தடுத்து நிறுத்தவும் தமிழக அரசு சில முக்கியமான சட்டத்திருத்த நடவடிக்கைகளில் உடனடியாகத் தீவிர கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. அப்போதுதான் இவ்விவகாரத்தில் அரசு எதிர்கொள்ளும் சட்டச் சிக்கல்களையும், மக்களின் பாரம்பரிய மத மற்றும் உணவு உரிமைகளில் ஏற்படும் நடைமுறைப் பிரச்சினைகளையும் நிரந்தரமாக களைய முடியும்.</p><h2>உடனடி திருத்தங்கள்</h2><p>இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மத வழிபாட்டு உரிமை மற்றும் மக்களின் பாரம்பரிய உணவு உரிமைகளைப் பாதுகாப்பது ஒரு மக்கள் அரசின் முதன்மைக் கடமையாகும். சென்னை ஐகோர்டின் தடை உத்தரவு போன்ற நடவடிக்கைகள், மக்களின் நீண்டகால வழிபாட்டு நடைமுறைகளில் தேவையற்ற தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, தமிழ்நாடு அரசு பின்வரும் சட்டங்களில் உடனடியாகத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்:</p><p>* தமிழ்நாடு விலங்குகள் பாதுகாப்புச் சட்டம், 1958 (Tamil Nadu Animals Preservation Act, 1958)</p><p>* தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998 மற்றும் விதிகள், 2023 (Tamil Nadu Urban Local Bodies Act, 1998 and Rules, 2023)</p><p>* தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம், 1939 (Tamil Nadu Public Health Act, 1939)</p><p>இச்சட்டங்களில் மத சடங்குகள், பண்டிகைகள் மற்றும் பாரம்பரிய வழிபாட்டு நடைமுறைகளுக்கான விலங்குப் பலிக்கு முறையான சட்டப்பூர்வ விலக்கை (Exemption) உறுதி செய்யும் வகையில் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.</p><h2>சமத்துவ நடவடிக்கை</h2><p>மேலும், ஒன்றிய அரசின் 'விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின்' (Prevention of Cruelty to Animals Act) விதிகளை மீறாத வகையிலும், சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் மத வழிபாட்டு உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும் தெளிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட வேண்டும். இது இஸ்லாமியர்களின் புனித குர்பானி திருநாள் மற்றும் இந்து உள்ளிட்ட மற்ற சமூக மக்களின் பாரம்பரிய கிராமப்புறக் கோவில் கொடை விழாக்கள் என அனைத்துத் தரப்பு மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் ஒரு சமத்துவ நடவடிக்கையாக அமையும்.</p><h2>வலியுறுத்தல்</h2><p>எனவே, மக்களின் உணர்வுகளோடும், வழிபாட்டு முறைகளோடும் கலந்த இந்த உணர்வுப்பூர்வமான விவகாரத்தில், தமிழ்நாடு அரசு எதிர்கால நலன் கருதி, தேவையான சட்டத்திருத்தங்களையும், புதிய வழிகாட்டுதல்களையும் போர்க்கால அடிப்படையில் உடனடியாக மேற்கொண்டு, அனைத்துத் தரப்பு மக்களின் மத மற்றும் உணவு உரிமைகளையும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய்யுடன் கஜகஸ்தான் தூதர் சந்திப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kazakhstan-ambassador-meets-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kazakhstan-ambassador-meets-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">ae7c4cbf-95e6-4862-9a53-be9408f02bc4</guid><pubDate>Tue, 14 Jul 2026 08:58:40 +0000</pubDate><atom:updated>2026-07-14T08:58:40.853Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சந்திப்பு,Kazakhstan,கஜகஸ்தான்,Ambassador,தூதர்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/08rkvw44/vijaywith-Kazakhstan-Ambass.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய்,கஜகஸ்தான் தூதர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/08rkvw44/vijaywith-Kazakhstan-Ambass.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> சென்னை தலைமை செயலகத்திற்கு இன்று முக்கிய சர்வதேச பிரமுகர் ஒருவர் வருகை தந்தார். இந்தியாவிற்கான கஜகஸ்தான்  தூதர் அஸமத் யெஸ்கரயேவ், இன்று சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் சி. ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்து ஆலோசித்தார். </p> <h2>வரவேற்பு</h2><p>பொன்னாடை போர்த்தி வரவேற்பு தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்-அமைச்சர் அலுவலகத்திற்கு வந்த கஜகஸ்தான் தூதரை, முதல்-அமைச்சர் விஜய் இன்முகத்தோடு வரவேற்றார். இந்த சந்திப்பின் போது கஜகஸ்தான் தூதருக்கு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF.%20%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%88">முதல்-அமைச்சர் விஜய்</a> பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து இரு நாட்டு அதிகாரிகள் முன்னிலையில் சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.</p><h2>வர்த்தக முதலீடுகள்</h2><p>மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.  தமிழகத்தில் கஜகஸ்தான் நாட்டின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் புதிய தொழில் வாய்ப்புகள் குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது.  கல்வி, தொழில்நுட்பம் மற்றும் கலாச்சாரப் பரிமாற்றங்களை இருதரப்பிலும் மேம்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. </p> <p>இருதரப்பு உறவுகள்</p><p>இந்தியா மற்றும் கஜகஸ்தான் இடையேயான நட்புறவை, தமிழக அரசு வழியே மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. தூதர்கள் வருகையால் சுறுசுறுப்படையும் தலைமை செயலகம் நடிகராக இருந்து அரசியல் கட்சி தொடங்கி, அண்மையில் தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற சி. ஜோசப் விஜய்யை, உலக நாடுகளின் தூதர்கள் அடுத்தடுத்து சந்தித்து வருவது அரசியல் அரங்கில் உற்றுநோக்கப்படுகிறது.</p><p>இந்த சந்திப்பின்போது, கஜகஸ்தான் குடியரசு தூதரகத்தின் இரண்டாம் செயலாளர் யர்மெக் ஜட்மகம்பெடோவ், இந்தியாவிற்கான கசாத் இன்வெஸ்ட் பிரதிநிதிகள் டொமினிக் சின்னப்பன் மற்றும் நந்தகுமார் மனோகரன், பேங்க் சென்டர் கிரெடிட் ஜெ.எஸ்.சி.யின் நிர்வாக இயக்குநர் அஸ்காத் சுய்னிஷேவ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்படாது - சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட முக்கிய தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sewage-pumping-stations-will-not-operate-important-information-released-by-the-chennai-water-board</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sewage-pumping-stations-will-not-operate-important-information-released-by-the-chennai-water-board#comments</comments><guid isPermaLink="false">25a2caf3-af0c-4873-b4b4-674e48deebf8</guid><pubDate>Tue, 14 Jul 2026 08:33:55 +0000</pubDate><atom:updated>2026-07-14T08:33:55.845Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,தமிழகம்,கழிவுநீர்,சென்னை குடிநீர் வாரியம்,Chennai Water Board</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/gbkc3lll/mathi.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை குடிநீர் வாரியம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/gbkc3lll/mathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/சென்னை-குடிநீர்-வாரியம்">சென்னை குடிநீர் வாரியம்</a> வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் (CMRL) சார்பில், அடையாறு மண்டலம், தரமணி சரிவு (Ramp Metro Station) மெட்ரோ ரெயில் நிலையத்தில் பிரதான கழிவுநீர் உந்துக்குழாய் மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், 16.07.2026 அன்று இரவு 10 மணி முதல் 17.07.2026 இரவு 10 மணி வரை மண்டலம் -9 மற்றும் 13- க்குட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்படாது.</p><p><strong>சென்னை குடிநீர் வாரியம் தகவல்</strong></p><p>சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் (CMRL) சார்பில், அடையாறு மண்டலம், தரமணி சரிவு (Ramp Metro Station) மெட்ரோ ரெயில் நிலையத்தில் பிரதான கழிவுநீர் உந்துக்குழாய் மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், 16.07.2026 அன்று இரவு 10 மணி முதல் 17.07.2026 இரவு 10 மணி வரை மண்டலம் -9 (தேனாம்பேட்டை) –க்குட்பட்ட வடக்கு மயிலாப்பூர் கழிவுநீர் உந்து நிலையம், தெற்கு மயிலாப்பூர் கழிவுநீர் உந்து நிலையம், ஐஸ் ஹவுஸ் கழிவுநீர் உந்து நிலையம் மற்றும் மண்டலம் - 13 (அடையாறு) - க்குட்பட்ட பட்டினப்பாக்கம் கழிவுநீர் உந்து நிலையம், ராஜா அண்ணாமலை புரம் கழிவுநீர் உந்து நிலையம், பக்தவச்சலம் நகர் கழிவுநீர் உந்து நிலையம். அடையாறு கழிவுநீர் உந்து நிலையம் தற்காலிகமாக செயல்படாது.</p><p>எனவே, தேனாம்பேட்டை மற்றும் அடையாறு மண்டலங்களுக்குட்பட்ட கீழ்கண்ட இடங்களில் கழிவுநீர் தொடர்பான புகார்களுக்கு கீழ்க்காணும் பகுதி அலுவலர்களை தொடர்பு கொள்ளவும்.</p><p><strong><ins>1. மண்டலம் - 9 (தேனாம்பேட்டை)</ins></strong></p><p><strong>கைபேசி எண்</strong></p><p>8144930909 </p><p><strong>பகுதிகள்</strong></p><p>ஐஸ்ஹவுஸ், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சாந்தோம் நெடுஞ்சாலை, ஆழ்வார்பேட்டை, சாமியர்ஸ் சாலை, ஆஸ்டின் நகர், மந்தைவெளி, சீத்தம்மாள் காலனி மற்றும் இராயப்பேட்டை</p> <p><strong><ins>2. மண்டலம் - 13 (அடையாறு)</ins></strong> </p><p><strong>கைபேசி எண்</strong></p><p>8144930913 </p><p><strong>பகுதிகள்</strong></p><p>பட்டினம்பாக்கம், சீனிவாசபுரம், ராஜா அண்ணாமலை புரம் அடையாறு, கஸ்தூரிபாய் நகர் காந்தி நகர், இந்திரா நகர், சாஸ்திரி நகர், பரமேஸ்வரி நகர், பத்மநாபன் நகர், அருணாச்சலபுரம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், ஜீவரத்தினம் நகர், லட்சுமிபுரம், பெசன்ட் நகர், ஓடை குப்பம், உரூர் குப்பம், காமராஜர் நகர், பாலகிருஷ்ணன் நகர், திருவள்ளுவர் நகர், பத்திரிகையாளர் குடியிருப்பு, பி.டி.சி காலனி மற்றும் திருவான்மியூர்</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: திருச்சியில் நாளை மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-trichy-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-trichy-tomorrow#comments</comments><guid isPermaLink="false">5a04543b-207d-4cf9-b9c2-e6a0616a3f21</guid><pubDate>Tue, 14 Jul 2026 08:31:51 +0000</pubDate><atom:updated>2026-07-14T08:31:51.303Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>monthly maintenance work,மாதாந்திர பராமரிப்பு பணி,திருச்சி,Trichy,Power outage tomorrow,நாளை மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/jskbn9bp/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாளை மின்தடை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/jskbn9bp/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி, </p><p>திருச்சி நகர்ப்புற கோட்டம் E.B. ரோடு துணை மின் நிலையத்தில் நாளை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் காரணமாக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>திருச்சி நகர்ப்புறம்</h2><p>தமிழ்நாடு மின்பகிர்மான கழகம், திருச்சி நகர்ப்புற செயற்பொறியாளர் முத்துராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>திருச்சி நகர்ப்புற கோட்டத்திற்குட்பட்ட E.B. ரோடு துணை மின் நிலையத்தில் நாளை (15.7.2026, புதன் கிழமை) காலை 9.45 மணி முதல் மணி மாலை 4 வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் பின்வரும் இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><h2>காலை 9.45 மணி முதல் மணி மாலை 4 வரை</h2><p>அதன்படி மேற்சொன்ன துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் E.B.ரோடு, மணிமண்டப சாலை, காந்தி மார்கெட், கல்மர்ந்தை, வெள்ளை வெற்றிலைக்காரத் தெரு, ராணித்தெரு, பூலோகநாதர் கோவில் தெரு, பெரிய சொராஷ்டிரா தெரு, ஜின்னா தெரு, கிருஷ்ணபுரம் ரோடு, சின்னகடைவீதி, பெரிய கடைவீதி, மதுரம் மைதானம், பாரதியார் தெரு, பட்டவர்த் ரோடு, கீழ ஆண்டார் வீதி, மலைக்கோட்டை, மேலபுலிவார் ரோடு, பாபுரோடு, குறிஞ்சி கல்லூரி, டவுன் ஸ்டேசன், வில்வாஸ் நகர், வேதாத்திரி நகர், A.P.நகர், லட்சுமிபுரம் மற்றும் உக்கடை ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>பட்டமளிப்பு விழா: பேரன் இன்பநிதியை கட்டியணைத்து வாழ்த்திய மு.க.ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/graduation-ceremony-mkstalin-hugs-grandson-inbanidhi-and-congratulates-him</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/graduation-ceremony-mkstalin-hugs-grandson-inbanidhi-and-congratulates-him#comments</comments><guid isPermaLink="false">5010cafd-cd52-4d6f-9f70-baac86ecd631</guid><pubDate>Tue, 14 Jul 2026 08:26:55 +0000</pubDate><atom:updated>2026-07-14T08:26:55.076Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,M.K.Stalin,பட்டமளிப்பு விழா,Graduation Ceremony,இன்பநிதி,Inbanidhi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/1vrjr3x2/CHENNAI-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/1vrjr3x2/CHENNAI-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் பேரனும், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி, லண்டன் மான்செஸ்டர் நகரில் உள்ள கல்லூரியில் விளையாட்டு மேம்பாடு தொடர்பான உயர் படிப்பை முடித்துள்ளார்.</p><p>இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்னையில் இருந்து விமானம் மூலம் கடந்த 4-ம் தேதி லண்டன் புறப்பட்டு சென்றார். லண்டனில் 15 நாட்கள் தங்கி ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ள அவர், அங்கு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவும் திட்டமிட்டுள்ளார். பேரனின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட பிறகு, 18-ந்தேதி அவர் சென்னை திரும்புவார் என தெரிவிக்கப்பட்டது.</p><p>இந்த நிலையில், இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடந்த இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது இன்பநிதியை மு.க.ஸ்டாலின் கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைபோல தந்தை உதயநிதி ஸ்டாலினும் மகன் இன்பநிதியை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/9a5l7uo4/Untitled-1.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் முற்றுகை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/villagers-blockade-demanding-arrest-of-culprits-in-attempted-murder-case</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/villagers-blockade-demanding-arrest-of-culprits-in-attempted-murder-case#comments</comments><guid isPermaLink="false">1ae727b4-36e2-45b1-84ea-cd2cb83af9c8</guid><pubDate>Tue, 14 Jul 2026 08:12:45 +0000</pubDate><atom:updated>2026-07-14T08:12:45.842Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பொதுமக்கள்,Thoothukudi,தூத்துக்குடி,Attempt to murder case,கொலை முயற்சி வழக்கு,Public,முற்றுகை,Collector&apos;s Office,கலெக்டர் அலுவலகம்,Petition,Siege</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/v8eyg1ry/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முற்றுகை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/v8eyg1ry/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய அனைத்து நபர்களையும் கைது செய்யக் கோரி ஆழ்வார்கற்குளம் கிராம மக்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">முற்றுகையிட்டு கலெக்டரிடம் மனு</a> அளித்தனர்.</p><h2>கிராம மக்கள் குற்றச்சாட்டு</h2><p>தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்கற்குளம் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பா என்பவரை 9.7.2026 அன்று கொலை செய்ய முயன்ற சம்பவம் நடைபெற்றது. இந்த கொலை முயற்சி வழக்கில், ஸ்ரீவைகுண்டம் காவல்துறையினர் 2 பேரை கைது செய்துள்ளனர். எனினும், இந்த வழக்கில் தொடர்புடைய பிற நபர்களை குற்றப் பட்டியலில் சேர்க்காமல் காவல்துறையினர் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.</p><h2>கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு</h2><p>இந்த கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களையும் உடனடியாக கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆழ்வார்கற்குளம் பகுதியில் மீண்டும் ஜாதி மோதல்கள் ஏதும் நிகழாத வண்ணம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கிராம மக்கள் சார்பில் மாவட்ட கலெக்டடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>கரூர் கோவில் நிலத்தை பத்திரப்பதிவு செய்யலாம் என்ற உத்தரவுக்கு தடைவிதிக்க மதுரை ஐகோர்ட்டு மறுப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-high-court-refuses-to-stay-the-order-allowing-the-registration-of-karur-temple-land</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-high-court-refuses-to-stay-the-order-allowing-the-registration-of-karur-temple-land#comments</comments><guid isPermaLink="false">7a71c5e2-28d9-49ca-9e85-a150a8b85d00</guid><pubDate>Tue, 14 Jul 2026 08:12:06 +0000</pubDate><atom:updated>2026-07-14T08:12:06.404Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர்,temples,கோவில்கள்,Karur,Madurai High Court,மதுரை ஐகோர்ட்டு,பத்திரப்பதிவு,Registration,கோவில் நிலம்,temple land</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/ndldfq9l/vino.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மதுரை ஐகோர்ட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/ndldfq9l/vino.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p>கோவில்களின் 3,084 ஏக்கர் நிலத்தை பத்திர பதிவு செய்ய அனுமதி அளித்த கலெக்டரின் உத்தரவை ரத்து செய்யும்படி மதுரை ஐகோர்ட்டில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று விசாரணை நடைபெற்றது.</p><h2>3,084 ஏக்கர் நிலங்கள்</h2><p>திருத்தொண்டர் சபை அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-</p><p>கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், குப்புச்சிபாளையம் ரவீஸ்வரர் கோவில், வெஞ்சமாங்கூடலூர் விக்ருதீஸ்வரர் கோவில்களுக்கு கரூர் மாவட்டத்தில் 15 கிராமங்களில் 3,084 ஏக்கர் நிலங்கள் உள்பட ஏராளமான நிலங்கள் உள்ளன. இவை பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு உடையவை.</p><h2>அரசாணை</h2><p>இந்த நிலங்களை ஆக்கிரமித்த தனிநபர்கள் 3,390 பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டு இருந்தன. இதுதொடர்பாக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து இருந்தது.</p><p>அதன்விளைவாக மேற்கண்ட 3,084 ஏக்கர் நிலங்களையும் பத்திரப்பதிவு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு சுமார் 10 ஆண்டுக்கு முன்பே அரசாணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளது.</p><h2>தடை நீக்கம்</h2><p>இந்தநிலையில் மேற்கண்ட கோவில்களுக்கு சொந்தமான 3,084 ஏக்கர் நிலங்களை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்கி கரூர் மாவட்ட கலெக்டர் கடந்த 9-ந்தேதி உத்தரவிட்டு இருக்கிறார். இந்த உத்தரவின் மூலம் அறநிலையத்துறையும் தடை உத்தரவுகளை நீக்குவதற்கான நட வடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளது.</p><p>உயர் அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் கோவில் நிலங்கள் பெருமளவில் ஆக்கிரமிக்கப்படும் அபாயம் உள்ளது. இது தவறான முன் உதாரணமாக அமைந்துவிடும். எனவே மேற்கண்ட நிலங்களை பத்திரப்பதிவு செய்ய ஏற்கனவே விதித்த தடையை நீக்கிய கலெக்டர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.</p><p>இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.</p><h2>அவசர வழக்கு</h2><p>இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் முன்பு நேற்று ஆஜரான ராதாகிருஷ்ணன் முறையிட்டார்.அதை ஏற்ற நீதிபதிகள், இந்த வழக்கு நாளை (அதாவது இன்று) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தனர்.</p><h2>உத்தரவுக்கு தடை</h2><p>இந்நிலையில் இன்று நடந்த வழக்கு விசாரணையின்போது, கரூர் கோவில் நிலத்தை பத்திரப்பதிவு செய்யலாம் என்ற உத்தரவுக்கு தடைவிதிக்க ஐகோர்ட்டு மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் எந்த விதியின் அடிப்படையில் தடை நீக்கப்பட்டது என இந்துசமய அறநிலையத்துறை பதில் அளிக்க வேண்டும் என்றும் ஆணையிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் குதிரை பேரம் நடக்கிறது: மு.வீரபாண்டியன் பரபரப்பு குற்றச்சாட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/horse-trading-is-taking-place-in-tamil-nadu-m-veerapandian-alleges-sensationalism</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/horse-trading-is-taking-place-in-tamil-nadu-m-veerapandian-alleges-sensationalism#comments</comments><guid isPermaLink="false">7cd60211-db28-45e4-b2c8-bd1126969725</guid><pubDate>Tue, 14 Jul 2026 07:55:56 +0000</pubDate><atom:updated>2026-07-14T07:55:56.311Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,Communist Party of India,குதிரை பேரம்,மு.வீரபாண்டியன்,M.Veerapandian,horse trading</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/tthjrcl1/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/tthjrcl1/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>உள்ளாட்சித் தேர்தல்</h2><p>சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுமா என்பதை, தேர்தலின் போதே முடிவு செய்வோம். இப்போது இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சிபிஎம்எல் ஆகிய கட்சிகள் இணைந்து ஒரு இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கியுள்ளோம். அது தேர்தலுக்கான குழு அல்ல. தமிழக நலனுக்காக போராடுவதற்காக உருவாக்கப்பட்ட குழு. தேர்தல் வருகிற நேரங்களில் இடதுசாரி கட்சிகள் அவரவர் கட்சியில் கூடி முடிவெடுப்போம். தேவை ஏற்படுகிறபோது ஒருங்கிணைந்து முடிவெடுப்போம். </p><p>நாட்டை இடதுசாரிகள் பக்கம் திருப்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த ஒருங்கிணைப்புக் குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தல்களின் போது, அப்போதைய சூழலுக்கு ஏற்ப முடிவு எடுப்போம். ஒரு வேளை தனித்துப் போட்டியிடக் கூடிய சூழல் உருவாகும் எனில், தனித்துக்கூட கம்யூனிஸ்டுகளால் நிற்க முடியும்.</p><h2>குதிரை பேரம்</h2><p>கம்யூனிஸ்டுகளுக்கு நாடு முழுவதும் அமைப்பு இருக்கிறது, எங்களின் பணியை மக்கள் அறிந்துள்ளனர். எனவே அத்தகைய சூழல் ஏற்பட்டால் நாங்கள் உள்ளாட்சித் தேர்தலில் தனித்தே நிற்போம். அதனை கட்சியே முடிவு செய்யும். தமிழ்நாட்டில் இடதுசாரி கட்சிகளின் பலத்தை அறிய வேண்டியது அவசியம்.</p><p>தமிழ்நாட்டில் எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேரம் நடக்கிறது. இதனைத் தடுப்பது தமிழ்நாட்டின் நலனுக்கு நல்லது. இந்த கலாசாரம் வட மாநிலங்களிலிருந்து இங்குப் பரவியுள்ளது. கட்சித் தாவல் மற்றும் குதிரை பேரம் ஏற்புடையதல்ல. அது நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் பல கட்சிகள் இயங்குமுறையை நெருக்கடிக்கு உள்ளாக்கும். அரசியல் மீதே ஒரு வெறுப்புணர்வை உருவாக்கும். அவரவர் கொள்கைவழி நின்று அரசியல் செய்வதே கடமை என கருதுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-the-day-after-tomorrow-8</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-the-day-after-tomorrow-8#comments</comments><guid isPermaLink="false">977c2932-b759-43fe-9919-628cab1cdff3</guid><pubDate>Tue, 14 Jul 2026 07:46:06 +0000</pubDate><atom:updated>2026-07-14T07:46:06.098Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,monthly maintenance work,power outage,தென்காசி,மாதாந்திர பராமரிப்பு பணி,மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/4vm42zkw/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாளை மறுநாள் மின்தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/4vm42zkw/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p>திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், தென்காசி மாவட்டம், கடையநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட கடைநல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் காரணாக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>கடையநல்லூர் கோட்டம்</h2><p>கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பக விநாயகர சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>கடையநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட கடையநல்லூர் துணை மின் நிலைய பகுதிகளில்  நாளை மறுநாள் (16.7.2026, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பின்வரும் இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.</p><h2>காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை</h2><p>அதன்படி கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், பேட்டை, மாவடிக்கால், குமந்தாபுரம், முத்துச்சாமிபுரம், வலசை, கருப்பாநதி, தார்க்காடு, போகநல்லூர், கண்மணியாபுரம், பாலஅருணாச்சலபுரம், கம்பனேரி, மங்களபுரம், அச்சம்பட்டி, பொய்கை, ஊர் மேல் அழகியான், வேலாயுதபுரம், இடைகால், சிவராம்பேட்டை, கொடிக்குறிச்சி மற்றும் நயினாரகரம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>பெண் வெட்டிக்கொலை; 10 சவரன் நகை கொள்ளை: கபடி வீரர் அதிரடி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-hacked-to-death-10-sovereigns-of-jewellery-stolen-kabaddi-player-arrested-in-action</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-hacked-to-death-10-sovereigns-of-jewellery-stolen-kabaddi-player-arrested-in-action#comments</comments><guid isPermaLink="false">57d2985d-54de-4078-89de-d5d521957921</guid><pubDate>Tue, 14 Jul 2026 07:20:10 +0000</pubDate><atom:updated>2026-07-14T07:20:10.406Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கபடி வீரர்,கைது,Thoothukudi,தூத்துக்குடி,arrest,murder,பெண்,Woman,Kabaddi player,வெட்டிக்கொலை,நகை கொள்ளை,Jewelry robbery,vilathikulam,விளாத்திகுளம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/qduq41sd/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கபடி வீரர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/qduq41sd/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே பெண்ணைக் கொலை செய்து 10 சவரன் நகைகளை கொள்ளையடித்த வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த கபடி வீரரை போலீசார் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அதிரடியாக கைது</a> செய்தனர்.</p><h2>பெண் கொலை, 10 சவரன் நகை கொள்ளை</h2><p>தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே காடல்குடி மிட்டா வடமலாபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த திருக்கண்ணன் மனைவி கலாவதி (வயது 62). ஓய்வு பெற்ற சத்துணவு மேற்பார்வையாளரான இவர், ஜூலை 6-ம் தேதி இரவு காற்றுக்காக வீட்டுக் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கியுள்ளார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர், கலாவதியை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த 10 சவரன் தங்க செயின் மற்றும் பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>காலையில் எழுந்த கணவர் திருக்கண்ணன், மனைவி கொலையுண்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் சிலரிடம் விசாரணை நடத்தியும் துப்பு கிடைக்காத நிலையில், அப்பகுதி சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து உள்ளூர் நபர்தான் இந்த கொலையைச் செய்துள்ளார் என்பதை உறுதிப்படுத்தினர். </p><p>அதன் அடிப்படையில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த கபடி வீரர் திருமணிமுருகன்(26) என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், திருமணிமுருகன் கலாவதியை கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்த பின், தன் வீட்டின் முன் கட்டிலில் சர்வ சாதாரணமாகத் தூங்கியுள்ளார்.</p><h2>கபடி வீரர் கைது</h2><p>காலையில் கலாவதியின் உடலை பார்த்து அழுது நாடகமாடியதுடன், இறப்பு குறித்து போலீசாருக்கு&nbsp; தகவல் தெரிவித்து, உடல் அடக்கம் முடியும் வரை கூடவே இருந்துள்ளார். போலீசார் அவரது வங்கி கணக்கை ஆய்வு செய்ததில், திருடப்பட்ட தங்க நகைகளை வங்கியில் அடகு வைத்து லட்சக்கணக்கில் பணம் பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கைதான கபடி வீரர் திருமணிமுருகன் விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில்அடைக்கப்பட்டார்.</p>]]></content:encoded></item><item><title>12 மணல் குவாரிகளை திறக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-should-drop-plan-to-open-12-sand-quarries-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-should-drop-plan-to-open-12-sand-quarries-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">c54198d2-8d8f-4cd3-b3ee-ad3605bad76c</guid><pubDate>Tue, 14 Jul 2026 07:16:57 +0000</pubDate><atom:updated>2026-07-14T07:16:57.029Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,மணல் குவாரிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/203rbkw5/Untitled-11.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/203rbkw5/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டில் ஏற்கனவே செயல்பட்டு, அமலாக்கத்துறை சோதனையைத் தொடர்ந்து மூடப்பட்ட மணல் குவாரிகளில் 10 முதல் 12 குவாரிகளை மீண்டும் திறக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதாகவும், இது  குறித்த அறிவிப்பு வெகுவிரைவில் வெளியாகும் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. சுற்றுச்சூழலை சீர்குலைப்பது, மணல் கொள்ளையை ஊக்குவிப்பது என இரட்டைத் தீமைகளை இழைப்பவை மணல் குவாரிகள் என்பதை அறிந்தும் அவற்றைத் திறக்க அரசு முடிவு செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.</p><p>தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு முன் 48 மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தன. பெருந்தொற்று காலத்தில் அனைத்து மணல் குவாரிகளும் மூடப்பட்டன. அதன்பின் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2023-ம் ஆண்டு மே மாதத்தில் காவிரி, கொள்ளிடம், வைப்பாறு, வெள்ளாறு உள்ளிட்ட 9 ஆறுகளில் மொத்தம் 25 மணல் குவாரிகள் திறக்கப்பட்டன. அவற்றில் 23 குவாரிகள் மட்டுமே செயல்பட்டு வந்தன. அடுத்த ஓராண்டுக்குள்ளாகவே மணல் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டதாகவும், அதன் மூலம் கிடைத்த பணம் சட்டவிரோதமாக பரிமாற்றப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், 10-க்கும் மேற்பட்ட குவாரிகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதன்பின் அனைத்து குவாரிகளும் மூடப்பட்டன.</p><p>திமுக ஆட்சியின் பல்வேறு காலகட்டங்களில் மூடப்பட்ட மணல் குவாரிகளை மீண்டும் திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் கூட, பாட்டாளி மக்கள் கட்சியின் கடும் எதிர்ப்பு காரணமாக அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. இத்தகைய சூழலில்தான் 10 முதல் 12 மணல் குவாரிகளை திறக்க அரசு தீர்மானித்து இருப்பதாகவும், அவை பெரும்பாலும் காவிரி பாசன மாவட்டங்களிலும், அதையொட்டிய பகுதிகளிலும் அமையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.</p><p>தமிழ்நாடு முழுவதும் கட்டுமான மணலுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், அதை சமாளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அளவுக்கு அதிகமாக மணல் வெட்டி எடுக்கப்படுவதை தடுக்கும் வகையில், குஜராத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான பாஸ்கராச்சாரியா தேசிய விண்வெளி பயன்பாடுகள் மற்றும் ஜியோ இன்பார்மாடிக்ஸ் நிறுவனத்தின் (Bhaskaracharya National Institute for Space Applications and Geo-informatics) மூலம்  செயற்கைக்கோள் வாயிலாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது. ஆனால், மணல் குவாரிகளை திறக்க வேண்டும் என்பதற்காக கூறப்படும் இந்த சாக்குகளை ஏற்க முடியாது.</p><p>முதலாவதாக கட்டுமான மணலுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டைப் போக்க காவிரி பாசன மாவட்டங்களில்  மணல் குவாரிகளை திறப்பதுதான் ஒரே வாய்ப்பு அல்ல. வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்வது உள்ளிட்ட ஏராளமான மாற்றுவழிகள் உள்ளன. இரண்டாவதாக செயற்கைக்கோள் வாயிலாக கண்காணிப்பதன் மூலம் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவது தடுக்கப்படும் என்பது சாத்தியமல்ல.</p><p>தமிழ்நாடு அரசே தெரிவித்துள்ள புள்ளிவிவரங்களின்படி, தமிழ்நாட்டில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தினமும் 60 ஆயிரம் சரக்குந்து மணல் தேவைப்படுகிறது. அதில் செயற்கை மணல் ஆதாரங்கள் மூலம் 35 ஆயிரம் சரக்குந்து மணல் பெறப்படும் நிலையில், மீதமுள்ள மணல், குவாரிகள் மூலம் பெறப்படும். ஒவ்வொரு சரக்குந்திலும் தலா 100 கனஅடி கொண்ட 3 யூனிட் மணலை சராசரியாக ஏற்ற முடியும். அதன்படி   புதிதாக திறக்கப்படும் ஒவ்வொரு மணல் குவாரியிலிருந்தும் ஒரு நாளைக்கு சராசரியாக 2,083 சரக்குந்துகளில் மணல் அள்ளப்படும். ஓராண்டுக்கு சுமார் 2.74 கோடி யூனிட் மணல் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>2023-ம் ஆண்டில் 25 புதிய மணல் குவாரிகளைத் திறக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்தபோது, அவற்றிலிருந்து அதிகபட்சமாக 7.51 லட்சம் யூனிட்டுகள் மட்டுமே மணல் வெட்டி  எடுக்கப்பட வேண்டும் என்றும், அதன்பின் மணல் குவாரிகள் மூடப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.  ஆனால், வெறும் இரு ஆண்டுகளில் 10-க்கும் மேற்பட்ட குவாரிகளில் மட்டுமே 27.70 லட்சம் யூனிட் மணல் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை ஆய்வில் தெரியவந்ததுதான் பெரும் சர்ச்சையை  ஏற்படுத்தியது. ஆனால், தமிழ்நாடு அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால், தமிழகத்தின் ஆற்று மணல் தேவையை சமாளிக்க, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதித்த அளவை விட 36.40 மடங்கு மணலும், திமுக ஆட்சியில் இரு ஆண்டுகளில் நடந்த மணல் கொள்ளையை விட கிட்டத்தட்ட 10 மடங்கு மணலும் ஒரே ஆண்டில் கொள்ளையடிக்கப்படும் நிலை உருவாகும். அதிகாரபூர்வமாகவே இவ்வளவு மணல் எடுக்கப்பட்டால் காவிரி, கொள்ளிடம், வெள்ளாறு உள்ளிட்ட ஆறுகள் வறண்டு, ஒட்டுமொத்த காவிரி பாசன மாவட்டங்களும் பாலைவனமாகி விடும். இந்த சூழலியல் சீரழிவை சரி செய்யவே முடியாது.</p><p>காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவதன் மூலம் தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் கிடைப்பதைத் தடுத்து காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக மாற்ற கர்நாடக அரசு துடிக்கிறது. தமிழக அரசு திட்டமிட்டுள்ள மணல் குவாரிகள் திறக்கப்பட்டாலும் காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாப்பதற்கு பதிலாக அதை பாலைவனமாக்குவதில் கர்நாடக அரசுடன்  தமிழக அரசு போட்டி போடக் கூடாது. 12 மணல் குவாரிகளை திறக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். அதுமட்டுமின்றி, காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் குறைந்தது 5 கி.மீட்டருக்கு ஓரிடத்தில் தடுப்பணைகளைக் கட்டவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>2 குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு கொன்று தந்தை தற்கொலை: சேலத்தில் பயங்கரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/father-commits-suicide-by-hanging-2-children-horror-in-salem</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/father-commits-suicide-by-hanging-2-children-horror-in-salem#comments</comments><guid isPermaLink="false">9f1174ed-5b3d-4cd2-9f0b-36478b4b5409</guid><pubDate>Tue, 14 Jul 2026 07:14:35 +0000</pubDate><atom:updated>2026-07-14T07:14:35.044Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,Salem,கிரைம் செய்திகள்,தற்கொலை,Suicide,சேலம்,Father,தந்தை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/xx6duxvz/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/xx6duxvz/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள ஆண்டிக்கரையைச் சேர்ந்தவர் வல்லரசு (26) கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி ஸ்ரீபிரியா (22). இவர்களுக்கு மைவிழி (4) தர்ஷன் (2) என்ற குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் ஸ்ரீபிரியாவுக்கும் அவரது மாமியாருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்தாக கூறப்படுகிறது. இதனால் ஸ்ரீபிரியா கணவருக்கு நடந்த சம்பவத்தை தெரிவித்துவிட்டு மேட்டூர் ராஜகணபதி நகரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.</p><p>இதனையடுத்து வேலை முடிந்து வீட்டிற்கு வந்த வல்லரசு மனைவியை சமாதானம் செய்து அழைத்து வர தனது மாமியார் வீட்டிற்கு நேற்று சென்றார். அங்கு ஸ்ரீபிரியாவிடம் வல்லரசு சமாதானம் பேசியுள்ளார். இருப்பினும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் வல்லரசு தனது இரு குழந்தைகளுடன் தனி அறையில் தூங்க சென்றார். </p><p>இன்று காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் மனைவி ஸ்ரீபிரியா மற்றும் அவரின் தாயார் வெண்ணிலா ஆகியோர் கதவை பலமாக தட்டிப் பார்த்தனர். அப்போதும் கதவு திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்துப் பார்த்தனர். அப்போது இரண்டு குழந்தைகளும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தனர்.</p><p>வல்லரசு தனது மனைவியின் சேலையில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். 3 பேரின் சடலங்களை பார்த்து ஸ்ரீபிரியா கதறி துடித்தார். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேட்டூர் காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் மூன்று சடலங்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><p>இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் 2 குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு கொன்று தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திமுக அரசு தொடங்கிய அகழாய்வுப் பணிகளைப் தவெக அரசும் தொடர வேண்டும் - மு.க.ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tvk-government-should-continue-the-excavation-work-started-by-the-dmk-government-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tvk-government-should-continue-the-excavation-work-started-by-the-dmk-government-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">76fca6c9-2d0b-48f2-88a4-df50cc600242</guid><pubDate>Tue, 14 Jul 2026 07:04:30 +0000</pubDate><atom:updated>2026-07-14T07:04:30.184Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,Excavation,அகழாய்வு,mk stalin,தவெக அரசு,TVK Government</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/9f30eq3i/Untitled-10.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/9f30eq3i/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திமுக தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தொடர்ந்து வெளிப்படும் தமிழர் தொன்மையின் தடங்களைப் பாதுகாப்போம்! தடங்கல் எதுவரினும், வரலாற்று உண்மையை நிறுவுவோம்! திராவிட மாடல் அரசு தொடங்கிய அகழாய்வுப் பணிகளைப் புதிய அரசும் தொடர்ந்து மேற்கொண்டு, தமிழர் வரலாற்றுத் தடங்களை உலகறியச் செய்ய வேண்டும்.</p><p>தமிழரின் வரலாற்றையும் நமது பண்பாட்டையும் குறைத்துக் கூறியும், சிதைத்து எழுதியும் வருவதோடு, வரலாற்றைத் திரிபுவாதங்களால் திசைதிருப்பும் சூழ்ச்சிகளும் அரங்கேறும் காலத்தில், தமிழ்த்தொன்மை உண்மைச் சான்றுகளோடு வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுதான் கீழடி, பொருநை, இரும்பின் தொன்மை!</p><p>மண்ணுக்குள்ளும் ஆழ்கடலுக்குள்ளும் மறைந்திருக்கும் இன்னும் பல கீழடிகளை மேலே கொண்டு வருவோம். இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றினைத் தெற்கிலிருந்து தொடங்கி எழுதுவோம்! வரலாற்றில் பெருமிதம் கொள்வதோடு, புதிய வரலாற்றைப் படைத்திடவும் பலம் பெறுவோம்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை மாநகராட்சி ஆணையருக்கு முதல்-அமைச்சர் விஜய் கடிதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-writes-to-the-chennai-corporation-commissioner</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-writes-to-the-chennai-corporation-commissioner#comments</comments><guid isPermaLink="false">e4b879bd-1e0b-4929-a957-a03044bca4d3</guid><pubDate>Tue, 14 Jul 2026 06:47:12 +0000</pubDate><atom:updated>2026-07-14T06:47:12.121Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,தமிழக அரசு,TN govt,கடிதம்,letter,Tamilnadu government,மாநகராட்சி ஆணையர்,Chennai Corporation Commissioner,பெரம்பூர் தொகுதி,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,Chief Minister Vijay,Tamil Nadu Chief Minister Vijay,Perambur constituency</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/dwbnfxtz/jk-viiaj.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய் கடிதம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/dwbnfxtz/jk-viiaj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரனுக்கு முதல்-அமைச்சரும், பெரம்பூர் எம்.எல்.ஏ.வுமான விஜய் கடிதம் எழுதி உள்ளார்.</p><h2>முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</h2><p>பெரம்பூர் பகுதி மக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் திட்டங்களுக்காக, தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.3 கோடியை ஒதுக்கீடு செய்யுமாறு, <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a>, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரனுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.</p><h2>விளையாட்டு வளாகம்</h2><p>அதில்,</p><p>* எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, சிட்கோ நகர், எஸ்.எம். நகர், எம்.கே.பி. நகர் மற்றும் வியாசர்பாடி மேம்பாலச் சந்திப்பு உள்ளிட்ட முக்கிய இடங்களில், சிசிடிவி (CCTV), வைபை (Wi-Fi) மற்றும் 24 மணி நேரக் கண்காணிப்பு வசதிகளுடன் கூடிய 6 நவீன பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்படுவதன் மூலம் பெண்களின் பாதுகாப்பு வலுப்படுத்தப்படுகிறது.</p><p>* மேயர் கிருஷ்ணமூர்த்தி நகரில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் விளையாட்டு வளாகம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.</p><p>* கூடைப்பந்து, கிரிக்கெட், கபடி விளையாட்டு வசதிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை மேம்படுத்த அம்பேத்கர் கலைக் கல்லூரிக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்கப்படும்.</p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/cqzr3am7/peram.jpg" /></figure><h2>டயாலிசிஸ் மையம்</h2><p>* சத்தியமூர்த்தி நகரில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் டயாலிசிஸ் (சிறுநீரகச் சுத்திகரிப்பு) மையம் அமைக்கப்படும்.</p><p>* எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் 'தற்காலிகப் பணியாளர்களுக்கான' (Gig Workers) ஓய்வறை அமைக்கப்படும்.</p><p>* அம்பேத்கர் கல்லூரியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நூலகம் மற்றும் பயிலரங்கம் (Study Centre) உருவாக்கப்படும்.</p> <h2>அங்கன்வாடி மையங்கள்</h2><p>* அங்கன்வாடி மையங்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய உபகரணங்கள் வழங்கப்படும்.</p><p>மேற்கூறிய அனைத்துப் பணிகளையும் உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய் பரிந்துரைத்துள்ளார்.</p><p>இந்ததிட்டங்கள் அனைத்தும் உடனடியாக தொடங்கப்பட உள்ளநிலையில், பெரம்பூர் பகுதி விரைவான வளர்ச்சியையும், மேம்பட்ட பொது வசதிகளையும் பெறும்.</p> ]]></content:encoded></item><item><title>பழனி கோவில் விடுதிக் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் - டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-temple-accommodation-fee-hike-should-be-withdrawn-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-temple-accommodation-fee-hike-should-be-withdrawn-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">51e20166-1c01-4261-9c3a-406a04765efa</guid><pubDate>Tue, 14 Jul 2026 06:42:30 +0000</pubDate><atom:updated>2026-07-14T06:42:30.866Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,Palani Murugan Temple,பழனி கோவில்,விடுதிக் கட்டணம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/rnc4nd5o/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/rnc4nd5o/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழகத்தின் முக்கியமான ஆன்மீகத் தலங்களில் ஒன்றாக திகழும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள விடுதிகளின் கட்டணம் 600 ரூபாய் முதல் 2,500 ரூபாய் வரை உயர்த்தப்பட்டிருப்பதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>தொலைதூரங்களில் இருந்து பழனி முருகனை தரிசிக்க வரும் ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினர் குறைந்த செலவிலும், பாதுகாப்பாக தங்குவதற்காகவும், கோவில் நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்ட விடுதிகளின் கட்டணம், தனியார் விடுதிகளுக்கு இணையாக திடீரென பெருமளவு உயர்த்தப்பட்டிருப்பது அவ்விடுதிகள் கட்டப்பட்ட அடிப்படை நோக்கத்தையே அடியோடு சிதைக்கும் வகையில் அமைந்திருக்கிறது. </p><p>எனவே, பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களை வருவாய் ஈட்டும் கருவியாக பார்க்கும் இத்தகைய விடுதிக் கட்டணங்களின் உயர்வை உடனடியாக திரும்பப்பெறுவதோடு, பக்தர்களுக்கு சிரமத்தை உண்டாக்கும் எத்தகைய முடிவுகளையும் இதுபோன்று அவசரகதியில் எடுக்கக் கூடாது என இந்து சமய அறநிலையத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வேகமாக பைக் ஓட்டியதை கண்டித்த பன்றி இறைச்சி வியாபாரி வெட்டிக்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pork-vendor-hacked-to-death-after-being-criticized-for-speeding-on-a-bike</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pork-vendor-hacked-to-death-after-being-criticized-for-speeding-on-a-bike#comments</comments><guid isPermaLink="false">f85cf9a4-2d71-493d-9cdc-95bba0def8cb</guid><pubDate>Tue, 14 Jul 2026 06:41:17 +0000</pubDate><atom:updated>2026-07-14T06:41:17.119Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,bike,பைக்,murder,வெட்டிக்கொலை,youths,வாலிபர்கள்,கண்டிப்பு,meat,Speed,வேகம்,Pig,பன்றி,இறைச்சி வியாபாரி,vendor,strictness</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/jf9phnj7/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பன்றி இறைச்சி வியாபாரி வெட்டிக்கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/jf9phnj7/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடியில் தெருவுக்குள் வேகமாக பைக் ஓட்டியதை கண்டித்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பன்றி இறைச்சி வியாபாரியை வெட்டிக்கொலை</a> செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p><h2>வேகமாக பைக் ஓட்டியதை கண்டித்த பன்றி இறைச்சி வியாபாரி</h2><p>தூத்துக்குடி தாளமுத்துநகர் திரேஸ்நகரைச் சேர்ந்த மணி மகன் சேகர் (வயது 40), மாதாநகர் பகுதியில் பன்றி இறைச்சி கடை நடத்தி வந்தார். நேற்று இரவு மாதாநகர் பத்திரகாளியம்மன் கோவில் அருகே தனது நண்பர்கள் 2 பேருடன் சேகர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரே பைக்கில் 3 வாலிபர்கள் மதுபோதையில் அதிவேகமாக வந்துள்ளனர். சேகர் அவர்களை வழிமறித்து, குழந்தைகள் நடமாடும் சிறிய தெருவுக்குள் ஏன் இவ்வளவு வேகமாகச் செல்கிறீர்கள் எனக் கண்டித்துள்ளார். </p><h2>வியாபாரிக்கு அரிவாள் வெட்டு</h2><p>இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், சேகர் அந்த வாலிபர்களில் ஒருவரை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அந்த 3 பேரையும் அனுப்பி வைத்தனர். சிறிது நேரத்தில், தாக்குதலுக்குள்ளான வாலிபர் தனது நண்பர் ஒருவருடன் பைக்கில் மீண்டும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். அங்கு நின்று கொண்டிருந்த சேகரை 2 பேரும் சேர்ந்து அரிவாளால் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.</p><h2>வியாபாரி உயிரிழப்பு</h2><p>இதில் பலத்த காயமடைந்த சேகர், 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய 2 வாலிபர்களையும் போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தவெக எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசிய வழக்கு: விசாரணையை கையில் எடுத்த அமலாக்கத்துறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-mlas-bargaining-case-enforcement-directorate-takes-over-investigation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-mlas-bargaining-case-enforcement-directorate-takes-over-investigation#comments</comments><guid isPermaLink="false">c0f9d315-a27a-4202-8cb9-505ab367bdc7</guid><pubDate>Tue, 14 Jul 2026 06:17:14 +0000</pubDate><atom:updated>2026-07-14T06:17:14.032Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Enforcement Directorate,அமலாக்கத்துறை,Enforcement Directorate Investigation,CM Vijay,tvk mla,தவெக எம்.எல்.ஏ.க்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/jlzmxmop/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/jlzmxmop/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்</h2><p>முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசை கவிழ்ப்பதற்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. இளையராஜாவிடம், ரூ.35 கோடி பேரம் பேசப்பட்ட விவகாரம் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக எம்.எல்.ஏ. இளையராஜா கொடுத்த புகாரின்பேரில், திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.</p><p>முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த திருநாவுக்கரசு, மேடவாக்கத்தை சேர்ந்த தியா கராஜன், பெசன்ட் நகரை சேர்ந்த நரேஷ், கரூரை சேர்ந்த தி.மு.க. பிரமுகர்களான ரமேஷ் மற்றும் கார்த்திக் ஆகிய 5 பேர் இந்த வழக்கில் மிக முக்கியமான குற்றவாளிகளாக கருதப்பட்டனர். அவர்கள் 5 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>சிங்கப்பூர் தொழில் அதிபர்</h2><p>கைதானவர்களுடன் சிங்கப்பூரை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர், அடிக்கடி செல்போனில் பேசியதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் சட்டவிரோத ஹவாலா பண பரிமாற்றமும் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த சிங்கப்பூர் தொழில் அதிபர் யார் என்று தெரியவந்துள்ளது. அவரது பெயர் லட்சுமண பெருமாள். சிங்கப்பூரில் நீண்ட காலமாக வசித்து வரும் இவர், சென்னையில் உள்ள அரசியல் பிரமுகர்கள் பலருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார்.</p><p>இந்த தொடர்பின் மூலமாகவே குறிப்பிட்ட அரசியல் கட்சியை சேர்ந்த சிலர், லட்சுமண பெருமாளை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அவர்களது ஆலோசனையின் பேரிலேயே த.வெ.க. எம்.எல்.ஏ.க்களை இழுப்பதற்காக சிங்கப்பூரில் இருந்தபடியே லட்சுமண பெருமாள் சென்னையை சேர்ந்த நபர்களோடு போனில் பேசி இருக்கிறார். இவர் சென்னையில் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு பினாமியாக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.</p><p>லட்சுமண பெருமாள் சிங்கப்பூரில் இருந்தபடியே இந்த வழக்கு தொடர்பான முக்கியமான ஆதாரங்களை அழிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு மீது ஐகோர்ட்டில் விசாரணை நடந்தபோது அரசு வக்கீல் தெரிவித்துள்ளார். இந்த சிங்கப்பூர் தொழில் அதிபரை கைது செய்ய போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவரை பற்றி 'லுக்-அவுட்' நோட்டீஸ் கொடுத்து, விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.</p><h2>செந்தில்பாலாஜி ஆஜராவாரா..?</h2><p>இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும், அவரது தம்பி அசோக்குமா ருக்கும் சென்னை ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியுள்ளது. அவருக்கு பல்வேறு நிபந்தனைகளையும், சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்துள்ளது. அவர்கள் இருவரும் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் தினமும் காலையும், மாலையும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும், போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் செந்தில்பாலாஜியும், அவரது தம்பியும் இன்று வரை திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடவில்லை என கூறப்படுகிறது.</p><h2>அமலாக்கத்துறை விசாரணை</h2><p>இந்த நிலையில், தவெக எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசிய வழக்கில் ஹவாலா பணம் கைமாறி இருப்பதாகக் காவல்துறை தெரிவித்ததைத் தொடர்ந்து, இவ்வழக்கை அமலாக்கத்துறை தாமாக முன்வந்து விசாரணையைக் கையில் எடுத்துள்ளது. இந்த வழக்கில் கணக்கில் காட்டப்படாத ரூ.50 லட்சத்திற்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்தும் அமலாக்கத்துறை விசாரணை நடத்த உள்ளது.</p><p>மேலும், இந்த வழக்கில் செந்தில் பாலாஜி அவரது சகோதரர் இருவரும் முன் ஜாமின் பெற்றுள்ள நிலையில் அமலாக்கத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. தவெக எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசிய வழக்கு விசாரணையை அமலாக்கத்துறை கையில் எடுத்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய விவகாரத்தில் மதுரையை சேர்ந்த 4 பேரிடம் திருவல்லிக்கேணி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ஆர்.என்.ரவி காட்டிய பாதையிலேயே அர்லேகரும் செல்வது சரியல்ல - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-not-right-for-arlekar-to-follow-the-same-path-as-rn-ravi-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-not-right-for-arlekar-to-follow-the-same-path-as-rn-ravi-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">a3e336a4-de75-420f-a4aa-9f4acd53885f</guid><pubDate>Tue, 14 Jul 2026 06:07:53 +0000</pubDate><atom:updated>2026-07-14T06:07:53.346Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Tamilnadu,தமிழகம்,காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,R.N.Ravi,ஆர்.என்.ரவி,Manickam Tagore,கவர்னர் அர்லேகர்,Governor Arlekar</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/myga6txq/gover.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/myga6txq/gover.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>ஆர்.எஸ்.எஸ்.-ன் வெறுப்பு அரசியலை திணிக்கும் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது என்பதை கவர்னர் உணர வேண்டும் என்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்</a> தெரிவித்துள்ளார்.</p><h2>தேசிய கல்விக் கொள்கை</h2><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேசிய, தமிழ்நாடு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், ‘தேசிய கல்விக் கொள்கை என்பது காலனித்துவ சிந்தனையில் இருந்து, இந்திய கல்வியை விடுவிக்கும் முயற்சி. இதில் திருத்தங்கள் கோரலாம். செயல்படுத்தாமல் இருப்பது சரியல்ல" என கூறியுள்ளார்.</p><h2>பாகுபாடும், பாசிசமும்</h2><p>அதுமட்டுமல்லாது, ‘பாரம்பரிய குருகுலக் கல்வி முறையை செயல்படுத்த முடியவில்லை" என தனது ஆதங்கத்தையும்  வெளிப்படுத்தியுள்ளார். மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது முதல், பண்டிட் நேரு காலம் முதல் காங்கிரஸ் ஆட்சியில் கட்டமைக்கப்பட்ட கல்வி முறையை சிதைத்து, சின்னாபின்னமாக்கி வருகிறது.</p><p>'அனைவருக்கும் கல்வி” என்பதே காங்கிரஸ் அரசின் நோக்கமாக இருந்தது. ஆனால், பாஜக ஆட்சியில், 'தகுதி, தரம், தேசியம், தேசபக்தி” என்ற பெயரில் ஒருசாராருக்கு மட்டுமே கல்வியை சொந்தமாக்க நினைக்கிறது. 'பாகுபாடும், பாசிசமும்” பாஜகவின் அடிப்படை கொள்கையாக இருப்பதே இதற்கு காரணம்.</p><h2>கவர்னர் அர்லேகர்</h2><p>கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ளது. மாநில அரசுகள் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை வெற்றிகரமாக நடத்தி வருகின்றன. ஆனால், மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக தனது வெறுப்பையும் அடிப்படைவாதத்தை திணிக்கும் நோக்கில் தேசிய கல்விக் கொள்கையையும் உருவாக்கியுள்ளது.</p><p>இதை தமிழ்நாடு ஏற்க வேண்டும் என கவர்னர் அர்லேகர் பேசுவது கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டின் கல்வி உரிமையில் மூக்கை நுழைப்பதை கவர்னர் நிறுத்திக் கொள்ள வேண்டும். கவர்னர் என்பவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் கொள்கைகளைத் தான் பேச வேண்டும்.</p><h2>அதிகார அத்துமீறல்</h2><p>முந்தைய கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கு எதிராக செயல்பட்டு சுப்ரீம்கோர்ட்டு வரை 'குட்டு” வாங்கியவர். அதிலிருந்து பாடம் கற்காமல் ஆர்.என்.ரவி காட்டிய பாதையிலேயே அர்லேகரும் செல்வது சரியல்ல. அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்துவது, சந்தடி சாக்கில் தேசிய கல்விக் கொள்கையை திணிக்கப் பார்ப்பது போன்ற 'அதிகார அத்துமீறல்களை” கவர்னர் நிறுத்திக் கொள்ள வேண்டும். </p><h2>மன்னிப்பு கோர வேண்டும்</h2><p>தமிழ்நாட்டிற்கு எந்த கல்விக் கொள்கை தேவையோ அதை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசு பார்த்துக் கொள்ளும். அதுபற்றி கவர்னரும், தமிழ்நாடு மக்களால் விரட்டியடிக்கப்பட்ட பா.ஜ.க.வும் கவலைப்படத் தேவையில்லை.</p><p>குருகுல கல்வி என்பது வர்ணாசிரம தர்மத்தின் ஓர் அங்கம். அதை வலியுறுத்தி கவர்னர் பேசியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதற்காக தமிழ்நாட்டு மக்களிடம் அவர் மன்னிப்பு கோர வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>வேலைக்கு செல்லாமல் இருந்ததை கண்டித்த மனைவி: மதுவில் திராவகத்தை கலந்து குடித்து டிரைவர் தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wife-scolds-him-for-not-going-to-work-driver-commits-suicide-by-mixing-alcohol-with-liquor</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wife-scolds-him-for-not-going-to-work-driver-commits-suicide-by-mixing-alcohol-with-liquor#comments</comments><guid isPermaLink="false">da704376-6eb5-4bec-b9cc-029c8d0a0e42</guid><pubDate>Tue, 14 Jul 2026 05:55:37 +0000</pubDate><atom:updated>2026-07-14T05:55:37.879Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Cuddalore,கடலூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/v8wd4db1/Untitled-8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/v8wd4db1/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர்,</p><p>கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள சந்தைதோப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வகணபதி (53 வயது). இவரது மனைவி சாந்தி (42 வயது). டிரைவரான செல்வகணபதி, சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். கடந்த 2 மாதமாக அவர், சரிவர ஆட்டோ ஓட்டாமல், மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சாந்தி, வேலைக்கு செல்லாமல் இருந்தால் மகன் படிப்பு செலவுக்கு என்ன செய்வது என்று கேட்டு, அவருடன் சண்டை போட்டுள்ளார்.</p><p>இதனால் மனமுடைந்த செல்வகணபதி, மதுவில் திராவகத்தை கலந்து குடித்து விட்டார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று செல்வகணபதி பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p>இதுகுறித்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலைக்கு செல்லாமல் இருந்ததை மனைவி கண்டித்ததால் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பயிர்க்கடன் தள்ளுபடியில் முறைகேடு: கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பணியிடை நீக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/irregularities-in-crop-loan-waiver-cooperative-credit-union-secretary-dismissed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/irregularities-in-crop-loan-waiver-cooperative-credit-union-secretary-dismissed#comments</comments><guid isPermaLink="false">86053011-5849-47ca-90c3-f04001cec550</guid><pubDate>Tue, 14 Jul 2026 05:45:59 +0000</pubDate><atom:updated>2026-07-14T05:45:59.720Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Dindigul,திண்டுக்கல்,Cooperative Society,கூட்டுறவு சங்கம்,Crop loan,crop insurance,Cooperative Department,பயிர்க்கடன்,பயிர்க்கடன் தள்ளுபடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/duysd6e1/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/duysd6e1/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><h2>ரூ.83 லட்சம்...</h2><p>திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வி.அம்மாபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளராக பணியாற்றியவர் சண்முகவேலு. இவர் கடந்த மாதம் 30-ந் தேதி வயது முதிர்வு காரணமாக பணி ஓய்வு பெற இருந்தார். இதையொட்டி பொதுப்பணி நிலைத்திறன் அடிப்படையில் அவர் பணியாற்றிய சங்கத்தின் கணக்குகள், மேலும் அவர் செயலாளராக கூடுதல் பொறுப்பு வகித்த நாகையகோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கணக்குகள் ஆகியவற்றை சரிபார்க்க முடிவு செய்யப்பட்டது.</p><p>தொடர்ந்து வேடசந்தூர் வட்டார கள அலுவலர், எரியோடு சரக மேற்பார்வையாளர், வடமதுரை கள மேலாளர் மற்றும் அதிகாரிகள் அந்த கணக்குகளை சரிபார்த்து ஆய்வு செய்தனர். அப்போது அவர் பணியாற்றிய 2 சங்கங்களிலும் கடந்த 2021-ம் ஆண்டு 55 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்ததில் ரூ.83 லட்சத்து 13 ஆயிரத்து 342 வரை முறைகேடு செய்திருப்பது தெரியவந்தது.</p><h2>பணியிடை நீக்கம்</h2><p>இதையடுத்து முறைகேடு தொடர்பான அறிக்கையை பழனி கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் கனகராஜிடம் அதிகாரிகள் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையை ஆய்வு செய்த துணை பதிவாளர், மேல்நடவடிக்கைக்காக திண்டுக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ஸ்ரீ ராகவ் பாலாஜிக்கு அனுப்பி வைத்தார்.</p><p>அதன் அடிப்படையில் மண்டல இணை பதிவாளர் விசாரணை நடத்தினார். விசாரணையில் வி.அம்மாபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் சண்முகவேலு பயிர்க்கடன் தள்ளுபடி செய்ததில் முறைகேடு செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு பணி ஓய்வு வழங்காமல் பணியிடை நீக்கம் செய்து மண்டல இணை பதிவாளர் உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>விவசாயிகள் உரச் செலவை குறைத்து மகசூலை அதிகரிக்க மண் பரிசோதனை அவசியம்</title><link>https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/soil-testing-is-essential-for-farmers-to-reduce-fertilizer-costs-and-increase-yields</link><comments>https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/soil-testing-is-essential-for-farmers-to-reduce-fertilizer-costs-and-increase-yields#comments</comments><guid isPermaLink="false">65625c4d-1acc-4004-b09c-e4adf7578e94</guid><pubDate>Tue, 14 Jul 2026 05:28:55 +0000</pubDate><atom:updated>2026-07-14T05:28:55.417Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Farmers,Tirunelveli,திருநெல்வேலி,விவசாயிகள்,Information,தகவல்,crops,Fertilizer,உரம்,பயன்பாடு,High yield,பயிர்கள்,வேளாண்மை இணை இயக்குனர்,Soil testing,மண் பரிசோதனை,Joint Director of Agriculture,use,அதிக மகசூல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/1ks6gby4/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நெல்-கோப்புப்படம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/1ks6gby4/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சிறப்புக் கட்டுரைகள் (Sirappukatturaigal)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>விவசாயிகள் உரச் செலவை குறைத்து <a href="https://www.dailythanthi.com/news/sirappukatturaigal">பயிர்களின் மகசூலை அதிகரிக்க மண் பரிசோதனை மிகவும் அவசியம்</a> என்று திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பூவண்ணன் தெரிவித்துள்ளார்.</p><p>திருநெல்வேலி மாவட்டத்தில் வேளாண்மைத்துறையின் கீழ் மண் பரிசோதனை ஆய்வகம் பாளையங்கோட்டை, அண்ணாநகரில் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக மாடியில் இயங்கி வருகிறது. இங்கு விவசாய நிலங்களின் மண் மற்றும் நீர் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு மண்வள அட்டை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.</p><h2>மண்வள அட்டை</h2><p>மண்வள அட்டையில் மண் பரிசோதனைக்கு கொடுக்கக்கூடிய விவசாயி குறித்த தகவல்கள், அந்த விவசாயி கொடுத்த மண் மாதிரியில் உள்ள பேரூட்டச் சத்துக்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள் குறித்த தகவல்கள், மண்ணின் தன்மைக்கேற்ப தேவைப்படக்கூடிய விவசாயத்துறை அதிகாரிகள் மூலம் பரிந்துரை செய்யக்கூடிய உரங்கள் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கும் அட்டையே மண்வள அட்டை ஆகும்.</p><figure><img alt="மண் பரிசோதனை" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/wbz6bkv2/Untitled-1.jpg" /></figure><h2>மண் பரிசோதனை</h2><p>மண்ணில் உள்ள சத்துக்கள் மற்றும் தன்மைகளை ஆய்வகத்தில் அதற்குரிய முறைகளில் கண்டறிவதை மண் பரிசோதனை என்கிறோம். பயிர் விளைச்சலைப் பெருக்க பல்வேறு தொழில் நுட்பங்களைப் பின்பற்றினாலும் அவற்றின் வெற்றி மண்வளத்தைப் பொறுத்ததாகும். மனிதனின் உடல்நலம் அறிய ரத்தப் பரிசோதனை செய்வது போல மண்வளம் அறிய மண் பரிசோதனை செய்ய வேண்டும். சாகுபடிச் செலவைக் குறைத்து, மகசூலை அதிகரிக்க மண் பரிசோதனை ஒரு எளிய அறிவியல் தொழில் நுட்பமாகும்.</p><h2>மண் பரிசோதனையின் அவசியம்</h2><p>மண்ணின் தன்மைகளை ஆய்வு செய்து அதற்கேற்றவாறு பயிர்களைத் தேர்ந்தெடுத்து பயிரிடலாம். பயிருக்கு தீங்கு விளைவிக்கும் களர், உவர், அமிலத்தன்மை போன்ற பிரச்சினைகளைக் கண்டறிந்து நிலத்தை சீர்திருத்தம் செய்யலாம். மண்ணிலுள்ள தழை, மணி, சாம்பல் ஆகிய பேரூட்டச் சத்துக்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களின் அளவைத் துல்லியமாக அறிந்து அதற்கேற்றவாறு சமச்சீராக உரமிட்டு அதிக மகசூல் பெறலாம். மண்ணின் தன்மைக்கு ஏற்ற உரங்களை, பயிருக்குத் தேவையான அளவு மட்டும் இட்டு, உரச் செலவை குறைத்திட மண் பரிசோதனை மிகவும் அவசியம் ஆகும்.</p><h2>மண் மாதிரி எடுக்கும் முறை</h2><p>ஒரு பயிர் அறுவடை செய்த பின்பும், அடுத்த பயிருக்கு நிலத்தை தயார் செய்வதற்கு முன்பும் உள்ள இடைப்பட்ட காலத்தில் மண் மாதிரி எடுக்க வேண்டும். ஒரு வயலுக்கு ஒரு மண் மாதிரி எடுக்கவும், ஒரே நிலத்தில் மண்ணின் தன்மை மாறுபட்டால் தனித்தனியாக மாதிரி எடுக்கலாம். ஒரே நிலத்தில் இரண்டு அல்லது மூன்று பயிர்கள் பயிரிட்டிருந்தால் ஒவ்வொரு பயிர் செய்த இடத்திலும் தனித்தனியாக மண் மாதிரி எடுக்க வேண்டும்.  வரப்பு, வாய்க்கால் அருகில், எரு குவித்த இடம் மற்றும் மர நிழலிலும் மண் மாதிரி எடுக்கக் கூடாது.</p><p>மண் வெட்டி மூலம் ‘V’ போன்ற வடிவத்தில் பயிருக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட ஆழத்திற்கு வெட்டி இருபக்க சரிவுகளிலும் ஒரு செ.மீ கனத்திற்கு மண்ணை செதுக்கி எடுக்க வேண்டும். நெல், சோளம் போன்ற தானியப் பயிர்களுக்கு சுமார் ½ அடி ஆழம் தோண்டி மண் மாதிரி எடுக்க வேண்டும். ஆழமாக வேர்விடும் பருத்தி, கரும்பு, வாழை, கிழங்கு மற்றும் காய்கறி பயிர்களுக்கு சுமார் ¾ அடி ஆழத்தில் மண் மாதிரிகள் எடுக்க வேண்டும். இவ்வாறு ஒரு ஏக்கருக்கு 10 முதல் 15 இடங்களில் பரவலாக மண் மாதிரிகள் எடுத்து நன்றாக கலந்து நிழலில் உலர்த்த வேண்டும். பரிசோதனைக்கு சுமார் ½ கிலோ முதல் 1 கிலோ மண் போதுமானது.</p><p>மண் மாதிரியை சுத்தமான பிளாஸ்டிக் பை அல்லது துணிப்பையில் போட்டு, அதில் விவசாயியின் பெயர் மற்றும் முகவரி, வயலுக்கான அடையாளம், அல்லது சர்வே எண், பாசன வசதி மற்றும் அடுத்து பயிரிடப்போகும் பயிர் முதலிய விபரங்களைக் குறித்து அனுப்ப வேண்டும். தென்னை, மா, கொய்யா, போன்ற மரப்பயிர்களுக்கு ( 3x3x3)  அடி நீள, அகல ஆழ குழி எடுத்து, அதில் ஒரு அடிக்கு ஒரு மண்மாதிரி வீதம் 3 மண் மாதிரிகள் தனித்தனியாக எடுக்க வேண்டும்.</p><h2>மண் மாதிரி ஆய்வுக் கட்டணம்</h2><p>மண் மாதிரி எடுத்திட உகந்த தருணமான இச்சமயத்தில் விவசாயிகள் தங்களது மண் மற்றும் நீர் மாதிரிகளை ஆய்வகதத்தில் நேரடியாக கொடுத்து ஆய்வறிக்கை 3 நாட்களுக்குள் பெற்றிடலாம். மண் மாதிரி ஒன்றிற்கு ரூ.30 மற்றும் தண்ணீர் மாதிரி ஒன்றிற்கு ரூ.30 என்ற அளவில் ஆய்வு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.</p><h2>மண் வளம்</h2><p>மண்ணில் உள்ள சத்துக்களின் அடிப்படையில் பயிருக்கு உரமிடுவது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். விவசாயிகள் பயிரின் தேவைக்கு அதிகமாக உரம் பயன்படுத்தும்போது பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு வழிவகுப்பதுடன் பயிரினால் எடுத்துக் கொண்ட உரம் போக மீதமுள்ளவை மண்ணின் வளத்தை பாதிக்கிறது. எனவே விவசாயிகள் மண் மாதிரி பரிசோதனை செய்வது மட்டுமல்லாமல் மண்வள அட்டையின் உர பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே ரசாயன உரங்களை பயன்படுத்தி பயிர் விளைச்சல் செய்வதனால் அதிக மகசூல் பெறுவதுடன் மண்வளத்தையும் பாதுகாத்திடலாம்.</p><h2>உரச் செலவை குறைத்து அதிக மகசூல் பெறலாம்</h2><p>நேரடியாகவோ அல்லது நடமாடும் மண் பரிசோதனை வாகனம் மூலமாகவோ மண் மற்றும் நீர் மாதிரிகளை கொடுத்து பரிசோதனை முடிவுகளை பெற்று அதன் பிறகு உரிய முறையில் விவசாயம் செய்வதன் மூலம் உரச் செலவை குறைத்து அதிக மகசூலைப் பெற்று விவசாயிகள் பயனடையலாம் என்கிறார் திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பூவண்ணன்.</p>]]></content:encoded></item><item><title>ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/stanley-government-hospital-should-be-provided-with-basic-facilities-nainar-nagenthran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/stanley-government-hospital-should-be-provided-with-basic-facilities-nainar-nagenthran#comments</comments><guid isPermaLink="false">baa73b28-83c2-4d37-a6f6-98240a78ec50</guid><pubDate>Tue, 14 Jul 2026 05:04:59 +0000</pubDate><atom:updated>2026-07-14T05:04:59.705Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,ஸ்டான்லி மருத்துவமனை,Stanley Hospital,Nainar Nagenthran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/gsjl8u7v/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/gsjl8u7v/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழகத்தின் மிக முக்கியமான அரசு மருத்துவமனையான சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில், இடநெருக்கடியின் காரணமாக ஒரே படுக்கையில் கிட்டத்தட்ட 3 நோயாளிகள் வரை அனுமதிக்கப்படுவதாக வெளியாகியுள்ள செய்தி கடும் கண்டனத்திற்குரியது.</p><p>மருத்துவமனையில் நடைபெறும் புனரமைப்பு பணிகளின் காரணமாக, நோயாளிகள் அனைவரையும் ஒரே பிளாக்கில் இடம் மாற்றியதன் விளைவு தான், இந்த இட நெருக்கடிக்கு காரணம் என்று சொல்லப்படுவது , தமிழக சுகாதாரத் துறை அமைச்சகத்தின் நிர்வாகக் குளறுபடிக்கான சான்று. தலைமைச் செயலகத்தில் ஏதாவது புனரமைப்பு பணிகள் நடந்தால், அரசு அமைச்சர்களை எல்லாம் இப்படித்தான் ஒரே அறையில் அடைத்து, ஒரே சீட்டில் இடித்துக் கொண்டு அமர வைப்பார்களா? </p><p>உடல் நலக்குறைவு ஏற்பட்டவர்களுக்கு நல்ல காற்றோட்டமான, வசதியான படுக்கைகளை ஏற்பாடு செய்ய வேண்டுமென்ற அடிப்படை கூட  ஜோசப் விஜய் அரசுக்கு தெரியவில்லையா? அல்லது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் எல்லாம் விளிம்புநிலை மக்கள் தானே என்ற இளக்காரமா? முந்தைய திமுக அரசைப் போலவே, தற்போதைய தவெக அரசும், அரசு மருத்துவமனைகளையும், அதை நம்பியிருக்கும் ஏழை மக்களையும் அலட்சியப்படுத்துவதை அனுமதிக்க முடியாது. </p><p>எனவே, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு தரமான படுக்கைகள், கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை போதிய அளவில் ஏற்பாடு செய்து தர வேண்டுமென சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜையும், முதல்வர் விஜய்யையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>‘நலம் TN’ புதிய இணையதளம்: முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nalam-tn-new-website-chief-minister-vijay-launches-it</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nalam-tn-new-website-chief-minister-vijay-launches-it#comments</comments><guid isPermaLink="false">81357cb8-0595-45e5-a905-c0b8d7da2fbf</guid><pubDate>Tue, 14 Jul 2026 05:03:18 +0000</pubDate><atom:updated>2026-07-14T05:03:18.523Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,சுகாதாரத்துறை,மருத்துவத்துறை,Tamil Nadu Health Department,CM Vijay,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/cav0gwsg/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/cav0gwsg/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை சார்பில், நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 139 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மருத்துவக் கட்டிடங்களை முதல்-அமைச்சர் விஜய் இன்று திறந்து வைத்தார். </p><p>அதனை தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்வு செய்யப்பட்ட 751 உதவி மருத்துவ அலுவலர்கள் மற்றும் 1, 393 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆனைகளை முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார்.</p><p>தொடர்ந்து அனைத்து சுகாதார சேவைகளையும் ஒரே இடத்தில் பெற உதவும் வகையில் ‘நலம் TN’ (Nalam TN) புதிய ஒருங்கிணைந்த இணையதளம் மற்றும் ‘நலம் ஏ.ஐ.’ வாட்ஸ்-அப் செயலியை  முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். இந்த இணையதளம் மூலம் கார்ப்பரேட்கள் முதல் பொதுமக்கள் என நன்கொடையாளர்கள் தங்களது பங்களிப்பை&nbsp;மருத்துவமனைகளுக்கு&nbsp;எளிமையாக வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>