<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 01 Aug 2026 14:40:41 +0000</lastBuildDate><item><title>காமன்வெல்த்: தமிழக வீரர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/commonwealth-chief-minister-vijay-congratulates-tamil-nadu-players</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/commonwealth-chief-minister-vijay-congratulates-tamil-nadu-players#comments</comments><guid isPermaLink="false">29369f85-4581-4bb3-aafb-8b3c756ab149</guid><pubDate>Sat, 01 Aug 2026 14:38:48 +0000</pubDate><atom:updated>2026-08-01T14:38:48.923Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,தமிழக வீரர்கள்,காமன்வெல்த்,முதல்-அமைச்சர் விஜய்,CMVijay‌,CommonwealthGames,Medalists</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/0ex1qah1/vijayone33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  முதல்-அமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/0ex1qah1/vijayone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஒரே போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு விளையாட்டு வீரர்கள் பதக்கங்களை வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என முதல்-அமைச்சர் விஜய் கூறியுள்ளார்.</p><p>காமன்வெல்த் 2026 தொடரில் இந்தியாவின் பதக்க வேட்டை தொடர்ந்து வருகிறது. ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல் இறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இரண்டு பதக்கங்களை கைப்பற்றியுள்ளனர்.</p><p>இந்தியாவின் பிரவீன் சித்ரவேல் 16.58 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான செல்வ பிரபு திருமாறன், 16.52 மீட்டர் தாண்டி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.</p><p>இருவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு <a href="https://www.dailythanthi.com/search?q=cm%20vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக முதல்-அமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-</p><p>ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றுவரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில்,</p><p>ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. பிரவீன் சித்ரவேல் அவர்களுக்கும், வெண்கலப் பதக்கம் வென்ற மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த திரு. செல்வ பிரபு அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும்</p><p>பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வீரர்களின் சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக, வெள்ளிப் பதக்கம் வென்ற திரு. பிரவீன் சித்ரவேல் அவர்களுக்கு 30 இலட்சம் ரூபாயும், வெண்கலப் பதக்கம் வென்ற திரு. செல்வ பிரபு அவர்களுக்கு 20 இலட்சம் ரூபாயும் வழங்கப்படும்.</p><p>ஒரே போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு விளையாட்டு வீரர்கள் பதக்கங்களை வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த இருவீரர்களும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகளில் தங்கி பயின்று, முறையான பயிற்சி பெற்றவர்கள் என்பது தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறைக்குப் பெருமை சேர்ப்பதாகும்.</p><p>இவர்களின் கடின உழைப்பும், விடாமுயற்சியும், அர்ப்பணிப்பும் வெற்றியைத் தேடித்தந்ததோடு,ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை அளிக்கிறது. சர்வதேச அரங்கிலும் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற எனது வாழ்த்துகள் என அதில் பதிவிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மூலம் ஒரே வாரத்தில் 378 புகார்களுக்கு உடனடி தீர்வு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/immediate-resolution-of-378-complaints-within-a-single-week-through-the-singappenn-special-task-force</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/immediate-resolution-of-378-complaints-within-a-single-week-through-the-singappenn-special-task-force#comments</comments><guid isPermaLink="false">a66b28d8-2ff5-4361-b147-7763cb9529ef</guid><pubDate>Sat, 01 Aug 2026 14:31:23 +0000</pubDate><atom:updated>2026-08-01T14:31:23.034Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை,Singapen Special Task Force</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/jsoafiwk/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/jsoafiwk/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மூலம் ஒரே வாரத்தில் 378 புகார்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. </p><p>காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“தமிழ்நாடு காவல்துறையின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், மாநிலம் முழுவதும் துரிதமான நடவடிக்கைகள், சமூக பங்களிப்புடன் கூடிய காவல் பணிகள் மற்றும் விழிப்புணர்வு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. </p><p>கடந்த ஒரு வாரகாலத்தில் 24.07.2026 முதல் 30.07.2026 வரை, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மாவட்ட களப்பிரிவுகள் 378 4 புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுத்து 23 குற்றவழக்குகள் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், காணாமல்போன பெண்கள் மற்றும் 8 குழந்தைகள் கண்டறியப்பட்டு பாதுகாப்பாக அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.</p> <p>இந்த காலகட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இடையே 3,711 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும், மாநிலம் முழுவதும் அடையாளம் காணப்பட்ட 10,320 குற்றம் நடைபெற வாய்ப்புள்ள பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் தீவிர ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன.</p><p>இந்த காலகட்டத்தில், அறிவுசார் குறைபாடுடைய 9 நபர்கள் மீட்கப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. 3 குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டது. மேலும், 62 பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் மீண்டும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டனர்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சென்னை: ரேஷன் கடைகளில் நாளை கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-special-camp-for-fingerprint-registration-at-ration-shops-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-special-camp-for-fingerprint-registration-at-ration-shops-tomorrow#comments</comments><guid isPermaLink="false">46b29823-71d6-4ef7-bf84-b87bd12f8074</guid><pubDate>Sat, 01 Aug 2026 14:01:02 +0000</pubDate><atom:updated>2026-08-01T14:01:02.461Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,ரேஷன் கடை,Ration shop</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/e0zcuh9v/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/e0zcuh9v/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அனைத்து நியாயவிலைக் கடைகளில் நடைபெறும் சிறப்பு முகாமிற்கு சென்று பொதுமக்கள் தங்களது கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  </p><p>சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளில் இ-கே.ஒய்.சி. (e-kyc) பதிவு சிறப்பு முகாம் ஆகஸ்ட் 2-ந்தேதி(நாளை) நடைபெற உள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் தங்கள் குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கைவிரல் ரேகையை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். தற்போது வரை கைவிரல் ரேகையை பதிவு செய்யாதவர்கள் ஆகஸ்ட் 2-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்து நியாயவிலைக் கடைகளில் நடைபெறும் சிறப்பு முகாமிற்கு சென்று தங்களது கைவிரல் ரேகையினை பதிவு செய்திட வேண்டும். </p><p>பணி நிமித்தமாக வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசிப்பவர்கள் இப்போது வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைக்கு சென்று தங்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்யலாம்.</p><p>எனவே, அரசின் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி பொதுமக்கள் அனைவரும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் விரல் ரேகைப் பதிவை விடுதலின்றி முழுமையாக பதிவு செய்ய வேண்டும்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>காவிரி விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் திமுக அவசர மனு தாக்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-issue-dmk-files-urgent-petition-in-supreme-court</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-issue-dmk-files-urgent-petition-in-supreme-court#comments</comments><guid isPermaLink="false">6966465b-972b-4244-9d0c-610fd266520a</guid><pubDate>Sat, 01 Aug 2026 13:43:10 +0000</pubDate><atom:updated>2026-08-01T13:43:10.213Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,SupremeCourt,காவிரி விவகாரம்,KaveriIssue</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/x5kv7epy/dmk44.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
 காவிரி விவகாரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/x5kv7epy/dmk44.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காவிரி நீரை உடனடியாக தமிழ்நாட்டுக்கு விடுவிக்க கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனுத்தாக்கல் செய்தது திமுக.</p><h2>திமுக மனு</h2><p>திமுகவின் விவசாயிகள் அணி செயலாளர் விஜயன் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், கடந்த ஜூலை 28ஆம் தேதி காவிரி நீர் ஒழுங்குமுறை குழு வழங்கியதும், ஜூலை 30ஆம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணையம் உறுதிசெய்ததுமான உத்தரவை கர்நாடக அரசுஉடனடியாக முழுமையாக செயல்படுத்துமாறு உத்தரவிட வேண்டும்.</p><p>அதன்படி, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து தொடர்ந்து 15 நாட்களுக்கு தினமும் 3,500 கனஅடி தண்ணீர் பிலிகுண்டுலுவில் திறந்துவிடவும், ஜூலை 29 முதல் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையையும் ஈடு செய்யுமாறு உத்தரவிட வேண்டும்.</p><h2>கர்நாடக அரசு</h2><p>கடந்த ஜூலை 26ஆம் தேதி விகிதாச்சார (Distress Sharing) அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய 9.46 டி.எம்.சி. நீர்பற்றாக்குறையை ஈடு செய்யும் வகையில், 15 நாட்களுக்கு தினமும் சுமார் 7,000 கியூசெக்ஸ்தண்ணீர் பிலிகுண்டுலுவில் கிடைக்குமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.</p><p>கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரையும், பிலிகுண்டுலுவில் கிடைக்கும் நீரின்அளவையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தினசரி கண்காணித்து, அதன் அமலாக்கநிலையை சுப்ரீம் கோர்ட்டின் அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு உத்தரவிடவேண்டும். விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் .</p><p>வழக்கின் உண்மை நிலைகள் மற்றும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, நீதியைநிலைநாட்டுவதற்குத் தேவையான பிற உரிய உத்தரவுகளையும் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>காவிரி நீர் மேலாண்மை ஆணையம்</h2><p>அண்மையில் டெல்லியில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D">காவிரி நீர் மேலாண்மை</a> ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாட்டுக்கு ஒரு நாளைக்கு 3,500 கன அடி வீதம் 15 நாள்களுக்கு 4 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட உத்தரவிடப்பட்டது.</p><p>காவிரியில் இருந்து தமிழகத்துக்கு கர்நாடக அரசு தண்ணீர் திறப்பதில் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டுவரும் நிலையில் டெல்லியில் கூடிய காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்தது.</p>]]></content:encoded></item><item><title>திருத்தணி கோவிலுக்கு 13 நாட்கள் ஆட்டோக்கள் செல்ல தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/13-day-ban-on-autos-going-to-thiruttani-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/13-day-ban-on-autos-going-to-thiruttani-temple#comments</comments><guid isPermaLink="false">907b2b51-6997-46f5-9460-b37eecef7322</guid><pubDate>Sat, 01 Aug 2026 13:23:25 +0000</pubDate><atom:updated>2026-08-01T13:23:25.928Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>autos,ஆட்டோக்கள்,திருத்தணி கோவில்,Thiruttani Temple</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/jr34m84a/6.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/jr34m84a/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருத்தணி,</p><h2>ஆடி கிருத்திகை திருவிழா</h2><p>திருத்தணி முருகன் கோவிலில் வருகிற 4-ந் தேதி முதல் ஆடி கிருத்திகை திருவிழா தொடங்க உள்ளது. இந்நிகழ்ச்சியில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து முருகப் பெருமானை தரிசனம் செய்ய உள்ளனர்.</p><h2>பக்தர்கள் வருகை</h2><p>இந்நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை). 4-ந்தேதி ஆடி அஸ்வினி, 5-ந்தேதி ஆடி பரணி, 6-ந்தேதிஆடி கிருத்திகை, 7-ந்தேதி 2-ம் தெப்பல், 8-ந்தேதி 3-ம் தெப்பல், 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை), 14-ந்தேதி ஆடிப்பூரம், 15-ந்தேதி சுதந்திர தினம், 16, 23, 30-ந்தேதி ஞாயிற்றுக்கிழமைகள் ஆகிய 13 நாட்களில் நடைபெறும் விழாக்களில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் முருகன் கோவிலுக்கு வருவார்கள்.</p><h2>ஆட்டோக்கள் செல்ல தடை</h2><p>இதனால் இந்த நாட்களில் மலைக்கோவிலுக்கு ஆட்டோக்கள் செல்ல கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இட வசதிக்கேற்ப கார்கள் இயக்கப்படும்.</p><p>மலைக்கோவில் நுழைவுப் பகுதியில் இருந்து படா செட்டிகுளம் வரை பக்தர்கள் கட்டணமின்றி கோவில் பஸ்களில் பயணம் செய்யலாம். இருசக்கர வாகனங்களில் பக்தர்கள் மலைக்கோவில் மேல் செல்ல அனுமதிக்கப்படும். இதர பஸ்கள் கோவில் வாகன நிறுத்தும் இடங்களில் இலவசமாக நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம்: ஜே.சி. டி.பிரபாகர் திறந்து வைத்தார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/integrated-service-centre-for-persons-with-disabilities-jcd-prabhakar-inaugurates</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/integrated-service-centre-for-persons-with-disabilities-jcd-prabhakar-inaugurates#comments</comments><guid isPermaLink="false">a2daabd0-339b-403f-ad87-1b80e8b46f34</guid><pubDate>Sat, 01 Aug 2026 13:16:18 +0000</pubDate><atom:updated>2026-08-01T13:16:18.707Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சேவை மையம்,ஜே.சி.டி.பிரபாகர்,Service Centre,J.C.D. Prabhakar</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/3o96kmss/1.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/3o96kmss/1.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி பிரபாகர், இன்று ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேனாம்பேட்டை மாதிரி பள்ளி சாலையில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான வட்டார ஒருங்கிணைந்த சேவை மையத்தினை (One Stop Cnetre) திறந்து வைத்தார். </p><p>தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் (TN Rights Project) கீழ் உலக வங்கி நிதி உதவியுடன், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரே இடத்தில் ஆலோசனை, மறுவாழ்வுக்கான வழிகாட்டுதல், அரசு நலத்திட்டங்கள் குறித்த தகவல் வழங்குதல், குறைதீர் சேவைகள் வழங்குதல், தேனாம்பேட்டை மண்டலத்தில் உள்ள பயனாளிகளுக்கு முன்கூட்டியே ஒதுக்கப்பட்ட நேர அட்டவணையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் தரமான மற்றும் தொடர்ச்சியான சிகிச்சை அளிக்த்தல் ஆகியவற்றிற்காக மாற்றுத்திறனாளிகளுக்கான வட்டார ஒருங்கிணைந்த சேவை மையம் இன்று (01.08.2026) திறந்து வைக்கப்பட்டுள்ளது.</p><p>தென் சென்னையில் வளசரவாக்கம், பெருங்குடி மற்றும் ஈஞ்சம்பாக்கம் ஆகிய மூன்று இடங்களிலும் வட சென்னையில் இரயபுரத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கான வட்டார ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேலும் தென்சென்னையில் சாந்தோம் மற்றும் கண்ணகி நகரில் துணைக் கோட்ட அளவில் இரண்டு ஒருங்கிணைந்த சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தேனாம்பேட்டையில் புதிதாக மாற்றுத்திறனாளிகளுக்கான வட்டார ஒருங்கிணைந்த சேவை மையம் இன்று (01.08.2026) திறந்து வைக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>அகமதாபாத்-திருச்சி சிறப்பு ரெயில் மாற்றுப்பாதையில் இயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ahmedabad-trichy-special-train-operating-on-diversion</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ahmedabad-trichy-special-train-operating-on-diversion#comments</comments><guid isPermaLink="false">7fd337b2-3f83-4274-b07c-cec71eb886ff</guid><pubDate>Sat, 01 Aug 2026 13:09:17 +0000</pubDate><atom:updated>2026-08-01T13:09:17.043Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,திருச்சி,Trichy,Special Train ​</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/h05q9g2n/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/h05q9g2n/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் காரணமாக ஆமதாபாத்தில் இருந்து வருகிற 6-ந்தேதி, 13-ந்தேதி காலை 9.30 மணிக்கு புறப்படும் அகமதாபாத்-திருச்சி வாராந்திர சிறப்பு ரெயில் (எண்:09419) ரேணிகுண்டா, திருத்தணி, மேலபாக்கம், காஞ்சீபுரம், செங்கல்பட்டு வழியாக திருச்சிக்கு வரும். அந்த நாட்களில் அரக்கோணம், பெரம்பூர், சென்னை எழும்பூர், தாம்பரம் செல்லாது. </p><p>அதேபோல் திருச்சியில் இருந்து வருகிற 9-ந்தேதி, 16-ந்தேதி காலை 5.45 மணிக்கு புறப்படும் திருச்சி-ஆமதாபாத் வாராந்திர சிறப்பு ரெயில் (எண்:09420) செங்கல்பட்டு, காஞ்சீபுரம், மேல பாக்கம், திருத்தணி, ரேணிகுண்டா வழியாக அகமதாபாத் செல்லும். அந்த நாட்களில் தாம்பரம், சென்னை எழும்பூர், பெரம்பூர், அரக்கோணம் வழியாக செல்லாது.</p> ]]></content:encoded></item><item><title>பொய் சொல்வதில் நிர்மல்குமார் கின்னஸ் சாதனை -ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nirmal-kumar-guinness-record-for-lying-rp-udayakumar-review</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nirmal-kumar-guinness-record-for-lying-rp-udayakumar-review#comments</comments><guid isPermaLink="false">9a6a30bf-c579-4dd7-ba8e-0d0da0f7501f</guid><pubDate>Sat, 01 Aug 2026 13:01:01 +0000</pubDate><atom:updated>2026-08-01T13:01:01.781Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,தவெக,விஜய்,அதிமுக,EPS,காவிரி விவகாரம்,CMVijay,RBUdhayakumar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/gaug3fip/uday33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆர்.பி.உதயகுமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/gaug3fip/uday33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>பழனிசாமிக்கு மக்கள் மனதைப் படிக்க தெரிந்தது; எங்களுக்கு விஜய்போல நடிக்கத் தெரியவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.</p><p>அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>பழனிசாமிக்கு மக்கள் மனதை படிக்க தெரிந்தது. ஆனால் எங்களுக்கு விஜய் போல நடிக்க தெரியவில்லை. வலைதளங்களில் ரீல்ஸ் போடுவது அரசியல் அல்ல, கர்நாடக வரவேண்டாம் என அம்மாநில முதல்-மந்திரியே கூறும்படி, ஒரு முதல்-அமைச்சரை நாம் பெற்றுள்ளோம். எதுவுமே தெரியாத விஜய் முதல்-அமைச்சராகும்போது, இபிஎஸ் மீண்டும் முதல்-அமைச்சராகமாட்டாரா? ஊழல் ஒழிந்ததாக மாயையை கட்டமைக்கிறார்கள். ஆனால் ஊழல் ஒழியவில்லை. அரைவேக்காட்டுத்தனமான அணுகுமுறைதான் தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கிறது. காவிரி விவகாரத்தில் வாதத்தை எடுத்து வைக்க தவெக அரசு தவறிவிட்டது. </p><h2>நிர்மல்குமார் கின்னஸ் சாதனை</h2><p>பொய் சொல்வதில் அமைச்சர் நிர்மல்குமார் கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். மின்சாரத்துறையில் என்ன நடக்கிறது என்பதே அமைச்சருக்கு தெரியவில்லை. 200 யூனிட் மின்சாரம் இலவசம் என அறிவித்தார்கள், அதுவும் முழுமை அடையவில்லை. மின் கட்டணம் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 40%-60% உயர்ந்துள்ளது. மின்வெட்டு நாடு முழுவதும் இருக்கிறது, மக்கள் போராடுகிறார்கள். ஆனால் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95">தவெக மின்வாரியத்துறை </a>அமைச்சர் ஒப்புக்கொள்ள தயாராக இல்லை.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>காவிரி விவகாரம்: அனைத்துக்கட்சி கூட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் கூட்ட வேண்டும் - திருமாவளவன்

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-issue-cm-vijay-must-convene-all-party-meet-thirumavalavan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-issue-cm-vijay-must-convene-all-party-meet-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">5cdb21c9-5a83-4131-a1a5-afdc5321c539</guid><pubDate>Sat, 01 Aug 2026 13:00:12 +0000</pubDate><atom:updated>2026-08-01T13:00:12.914Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,காவிரி நீர்,Thirumavalavan,Cauvery River,Cauvery,காவிரி,காவிரி பிரச்சினை,காவிரி நீர் திறப்பு,Cauvery dispute,Cauvery affair</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/03nivj4c/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/03nivj4c/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>காவிரி விவகாரத்தில் முதல்-அமைச்சர் விஜய் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். </p><p><a href="https://www.dailythanthi.com/">காவிரி</a>யில் இருந்து  தமிழகத்திற்கு   வினாடிக்கு 3,500 கனஅடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி நீர் முறைப்படுத்தும் குழு உத்தரவிட்டது. </p><p> இந்த உத்தரவை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு முறையீடு செய்தது. ஆனால், அந்த முறையீட்டை நிராகரித்த காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிட உத்தவிட்டது. ஆனால், தமிழகத்திற்கு காவிரியில் இருந்து கர்நாடக அரசு தண்ணீரை திறந்துவிடவில்லை.</p><p>அதேவேளை, காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்ய உள்ளது.</p><h2>திருமாவளவன் வலியுறுத்தல்</h2><p>இந்நிலையில், காவிரி நீர் விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் விஜய் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.</p><p>மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் கூறியதாவது,</p><p>காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் விஜய் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.  குறுவை சாகுபடியை பாதுகாக்க மத்திய அரசு மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு முன் தமிழக அரசு தனது வாதத்தை முன்வைக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதற்காக  அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட வேண்டும்</p><p>என்றார். </p>]]></content:encoded></item><item><title>கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்தும் தண்ணீர் திறக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-must-be-released-from-the-krishnaraja-sagar-dam-as-well-anbumani-urges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-must-be-released-from-the-krishnaraja-sagar-dam-as-well-anbumani-urges#comments</comments><guid isPermaLink="false">c1e6fed0-7756-4add-b1ba-89e2f3d98761</guid><pubDate>Sat, 01 Aug 2026 12:36:45 +0000</pubDate><atom:updated>2026-08-01T12:36:45.373Z</atom:updated><atom:author><atom:name>Muthu Pandian K</atom:name><atom:uri>/api/author/2401539</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/dmiyibhf/anbu.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/dmiyibhf/anbu.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;</p><p>“கர்நாடகத்தில் காவிரியின் துணை ஆறுகளில் ஒன்றான கபிணியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை நிரம்பி வழிவதையடுத்து அங்கிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம்  தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.  இந்த நீர் இன்னும் எவ்வளவு காலத்திற்கு திறக்கப்படும், தமிழகத்தின் தேவைக்கு போதுமானதாக இருக்குமா? என்பதெல்லாம்  அடுத்த சில வாரங்களுக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் எவ்வளவு மழை பெய்யும் என்பதைப் பொறுத்தே அமையும்.  எனினும் இயற்கையின் கொடையால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது நிம்மதியளிக்கிறது.</p><p>கபினி அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 2281 அடியாகவும்,  நீர் இருப்பு 17.50  டி.எம்.சியாகவும் இருந்தது. அணை நிரம்புவதற்கு இன்னும் 3 அடியும்,  2 டி.எம்.சி நீருமே தேவை என்ற நிலையில், வினாடிக்கு 11747 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பிற்பகலில் நீர்வரத்து அதிகரித்த நிலையில்  நாளைக்குள் அணை நிரம்பி விடும் என்பதால் முன்னெச்சரிக்கையாகவே  நீர் திறந்து விடப்பட்டுள்ளது.  இது இயற்கையின் கொடையே தவிர கர்நாடக அரசின் விருப்பம் அல்ல.</p><p>காவிரி பாசன மாவட்டங்களுக்கு குறைந்த பட்சம் சம்பா பருவத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்றால் இன்னும் குறைந்தது  40 முதல் 45 டிஎம்சி  தண்ணீர் தேவை. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்தால் கபினி அணையிலிருந்து தண்ணீர் வருவதும் நிறுத்தப்பட்டு விடும். அதனால் தமிழகத்திற்கு பயன் கிடைக்காது. இன்னொரு அணையான ஹாரங்கி நிரம்பி வழிவதால் அதிலிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.  அடுத்த சில நாள்களில் நீர்வரத்து அதிகரிக்கும் என்று தெரிகிறது.</p><p>எனவே, வெள்ளம் போல் வரும் கூடுதல் நீரை சேமித்து வைக்க வசதியாக கிருஷ்ணராஜசாகர்  அணையிலிருந்தும் தமிழ்கத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும். அதை இன்னும் ஒரு வாரத்திற்கு  தொடருவதன்  மூலம்  தமிழ்நாட்டின் காவிரி பாசன மாவட்டங்களில்  சம்பா சாகுபடி செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தேனாம்பேட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை மையம் - ஜே.சி.டி.பிரபாகர் திறந்து வைத்தார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/service-center-for-persons-with-disabilities-in-teynampet-inaugurated-by-jcdprabhakar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/service-center-for-persons-with-disabilities-in-teynampet-inaugurated-by-jcdprabhakar#comments</comments><guid isPermaLink="false">65a07a1f-eff4-4768-92c2-66ff825af006</guid><pubDate>Sat, 01 Aug 2026 12:31:24 +0000</pubDate><atom:updated>2026-08-01T12:31:24.652Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,ஜே.சி.டி.பிரபாகர்,J.C.T. Prabhakar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/mqoh47j8/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/mqoh47j8/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை தேனாம்பேட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மண்டல ஒருங்கிணைந்த சேவை மையத்தை சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் இன்று திறந்து வைத்தார்.</p><p>சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“இன்று(01.08.2026) மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் திரு.ஜே.சி.டி பிரபாகர் அவர்கள், ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேனாம்பேட்டை மாதிரி பள்ளி சாலையில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான வட்டார ஒருங்கிணைந்த சேவை மையத்தினை (One Stop Centre) திறந்து வைத்தார்.</p><p>தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் (TN Rights Project) கீழ் உலக வங்கி நிதி உதவியுடன், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரே இடத்தில் ஆலோசனை, மறுவாழ்வுக்கான வழிகாட்டுதல், அரசு நலத்திட்டங்கள் குறித்த தகவல் வழங்குதல், குறைதீர் சேவைகள் வழங்குதல், தேனாம்பேட்டை மண்டலத்தில் உள்ள பயனாளிகளுக்கு முன்கூட்டியே ஒதுக்கப்பட்ட நேர அட்டவணையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் தரமான மற்றும் தொடர்ச்சியான சிகிச்சை அளித்தல் ஆகியவற்றிற்காக மாற்றுத்திறனாளிகளுக்கான வட்டார ஒருங்கிணைந்த சேவை மையம் இன்று (01.08.2026) திறந்து வைக்கப்பட்டுள்ளது.</p><p>தென் சென்னையில் வளசரவாக்கம், பெருங்குடி மற்றும் ஈஞ்சம்பாக்கம் ஆகிய மூன்று இடங்களிலும் வட சென்னையில் இரயபுரத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கான வட்டார ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேலும் தென்சென்னையில் சாந்தோம் மற்றும் கண்ணகி நகரில் துணைக் கோட்ட அளவில் இரண்டு ஒருங்கிணைந்த சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தேனாம்பேட்டையில் புதிதாக மாற்றுத்திறனாளிகளுக்கான வட்டார ஒருங்கிணைந்த சேவை மையம் இன்று (01.08.2026) திறந்து வைக்கப்பட்டுள்ளது.</p><p>இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மாலதி ஹெலன், மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர்.கவுஷிக், மாமன்ற உறுப்பினர் நந்தினி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச‌.சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>காவிரி நீரை உடனடியாக தமிழ்நாட்டிற்கு திறந்துவிட சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. அவசர மனு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-files-urgent-petition-in-supreme-court-seeking-immediate-release-of-cauvery-water-to-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-files-urgent-petition-in-supreme-court-seeking-immediate-release-of-cauvery-water-to-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">e36cbeed-6b1d-4e5b-86a2-7cfe21cec109</guid><pubDate>Sat, 01 Aug 2026 12:19:44 +0000</pubDate><atom:updated>2026-08-01T12:19:44.509Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,Supreme Court,சுப்ரீம் கோர்ட்,Cauvery,காவிரி,தி.மு.க.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/8nzkhmb0/National-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/8nzkhmb0/National-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><p>காவிரி நீரை உடனடியாக தமிழ்நாட்டிற்கு திறந்துவிட சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. அவசர மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மூத்த வழக்கறிஞர் பி.வில்சனால் வரைவு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>தி.மு.க. விவசாயிகள் அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் மூலம், சிவில் மேல்முறையீட்டு வழக்கு எண் 2453/2007-ல் இடைக்கால மனுவைத் தாக்கல் செய்து, தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை உடனடியாக திறந்துவிட அவசர உத்தரவு பிறப்பிக்கவும், 16.02.2018 அன்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்தவும், காவிரி நீர் ஒழுங்குமுறை குழு(CWRC) மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம்(CWMA) வழங்கிய உத்தரவுகளை அமல்படுத்தவும் சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. அவசர மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மூத்த வழக்கறிஞர் பி.வில்சனால் வரைவு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>இந்த மனுவில் சுப்ரீம் கோர்ட்டிடம் பின்வரும் நிவாரணங்கள் கோரப்பட்டுள்ளன:</p><p>I. 28.07.2026 அன்று காவிரி நீர் ஒழுங்குமுறை குழு(CWRC) வழங்கியதும், 30.07.2026 அன்று காவிரிநீர் மேலாண்மை ஆணையம் (CWMA) உறுதிசெய்ததுமான உத்தரவை கர்நாடக அரசு உடனடியாக முழுமையாக செயல்படுத்துமாறு உத்தரவிட வேண்டும். அதன்படி, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து தொடர்ந்து 15 நாட்களுக்கு தினமும் 3,500 கனஅடி (கியூசெக்ஸ்) தண்ணீர் பிலிகுண்டுலுவில் திறந்துவிடவும், 29.07.2026 முதல் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையையும் ஈடு செய்யுமாறு உத்தரவிட வேண்டும்.</p><p>II. 26.07.2026 நிலவரப்படி, விகிதாச்சார (Distress Sharing) அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய 9.46 டி.எம்.சி. நீர்பற்றாக்குறையை ஈடு செய்யும் வகையில், 15 நாட்களுக்கு தினமும் சுமார் 7,000 கியூசெக்ஸ் தண்ணீர் பிலிகுண்டுலுவில் கிடைக்குமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.</p> <p>III. கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரையும், பிலிகுண்டுலுவில் கிடைக்கும் நீரின் அளவையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம்(CWMA) தினசரி கண்காணித்து, அதன் அமலாக்க நிலையை சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு உத்தரவிட வேண்டும்.</p><p>IV. வழக்கின் உண்மை நிலைகள் மற்றும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, நீதியை நிலைநாட்டுவதற்குத் தேவையான பிற உரிய உத்தரவுகளையும்சுப்ரீம் கோர்ட்டு பிறப்பிக்க வேண்டும்.</p><p>கர்நாடக அரசு, காவிரி நீர் மேலாண்மை திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள சட்டப்பூர்வ அமைப்புகளின் கட்டாய உத்தரவுகளைப் பின்பற்றாமல் காவிரி நீரைதிறந்துவிட மறுத்துள்ளதால், காவிரி டெல்டா பகுதியைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை இந்த மனு சுட்டிக்காட்டுகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், சுப்ரீம் கோர்ட்டின் 16.02.2018 தீர்ப்பை முழுமையாக அமல்படுத்தவும், உடனடி தலையீடு செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>மேற்கூறிய மேல்முறையீட்டில் திராவிட முன்னேற்ற கழகத்தையும் , காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தையும் (CWMA) ஒரு தரப்பினராக இணைத்துக்கொள்ளுமாறும் தி.மு.க. கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/places-where-there-will-be-power-outage-in-chennai-the-day-after-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/places-where-there-will-be-power-outage-in-chennai-the-day-after-tomorrow#comments</comments><guid isPermaLink="false">2bc743a1-5b5a-49f1-9e11-5bb1bd776154</guid><pubDate>Sat, 01 Aug 2026 12:08:18 +0000</pubDate><atom:updated>2026-08-01T12:08:18.348Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,தாம்பரம்,அடையாறு,maintenance work,பராமரிப்பு பணி,அம்பத்தூர்,மின் தடை power cut</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/gqie9x8j/pwer-cut.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின் தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/gqie9x8j/pwer-cut.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மின்சாரம் நிறுத்தம் தொடர்பாக<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D"> தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் </a>வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு பின்வருமாறு:</p><p>03.08.2026 திங்கட்கிழமை பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம்.</p><p>சென்னையில் 03.08.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><h2> மின் தடை ஏற்படும் இடங்கள்</h2><p><strong>அம்பத்தூர்:</strong> கொரட்டூர், மண்ணூர்பேட்டை, டிஎன்ஹெச்பி, சென்ட்ரல் அவென்யூ, எம்.டி.எச். சாலை, ஆர்.எஸ். சாலை, முகப்பேர் சாலை, கிழக்கு அவென்யூ, மேனாம்பேடு சாலை, திருமுல்லைவாயில் சாலை.</p><p><strong>அடையாறு:</strong> இரட்டைப்பிள்ளையார் கோயில் தெரு, அண்ணா தெரு, பாரதி தெரு, சான் அகாடமி, வ.ஊ.சி. நகர் 1வது முதல் 4வது தெருக்கள் வரை, ஜோஷ்னா ஃபிளாட்ஸ், ஸ்ரீனிவாச நகர், தேவி ஃபிளாட்ஸ், முருகு நகர், கோமதி நகர், ஜெயின் ஃபிளாட்ஸ்.</p><p><strong>தாம்பரம்:</strong> பெரியார் நகர், தேவராஜ் பிள்ளை தெரு, விஜிஎன், நித்யானந்தம் நகர், பெருமாள் கோயில் தெரு, ஜி.எஸ்.டி. சாலை, சர்வீஸ் சாலை, இரும்புலியூர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் செவ்வாய்க்கிழமை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-to-face-power-shutdown-on-tuesday</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-to-face-power-shutdown-on-tuesday#comments</comments><guid isPermaLink="false">ce642ef1-f90a-41dc-8500-4ec44668b33e</guid><pubDate>Sat, 01 Aug 2026 12:07:44 +0000</pubDate><atom:updated>2026-08-01T12:07:44.807Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,மின் நிறுத்தம்,செவ்வாய்க்கிழமை மின்தடை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/6pvg5d0p/power-cut.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின் நிறுத்தம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/6pvg5d0p/power-cut.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் 04.08.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மின் வாரிய பராமரிப்பு பணி</a> காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><h2>வேளச்சேரி</h2><p>சாரதி நகர், தாம்பரம் வேளச்சேரி பிரதான சாலை, மாதவமணி அவென்யூ, சீதாராம் நகர்.</p> <h2>அடையாறு</h2><p> காந்தி மண்டபம் சாலை, சர்தார் பட்டேல் சாலை, கோட்டூர்புரம், ஸ்ரீ நகர் காலனி, வெங்கடாபுரம், சின்னமலை, தரமணி, எல்லையம்மன் கோயில் தெரு, காணகம், கலிகுன்றம், பள்ளிப்பட்டு, ஸ்ரீராம் நகர், நேரு நகர் 1வது முதல் 4வது தெருக்கள் வரை, கே.பி. நகர் 1 வது முதல் 5வது பிரதான சாலைகள், அடையாறு 6வது பிரதான சாலை, கோவிந்தராஜபுரம், பக்தவத்சலம் நகர் 1வது முதல் 5வது சாலைகள்.</p><h2>முடிச்சூர்</h2><p>அஷ்டலட்சுமி நகர், மகாலட்சுமி நகர், குமரன் நகர், ஏ.என். காலனி, மணிமங்கலம் பிரதான சாலை, சாஸ்திரி நகர், கணேசபுரம் பிரதான சாலை.</p><h2>மேடவாக்கம்</h2><p>பெரும்பாக்கம் சேகரன் மால், கைலாஷ் நகர், ஸ்ரீ பெருமாள் நகர், அந்தோணி நகர், பஜனை கோயில் தெரு, நுக்கம்பாளையம் சாலை, மாடம்பாக்கம் கண்ணதாசன் தெரு, கருணாநிதி 1வது முதல் 7வது தெருக்கள் வரை, விசாலாட்சி நகர், ஜான் தெரு, தாமஸ் தெரு, விக்னராஜபுரம் 6வது தெரு, கோபாலபுரம் நகர், விக்னராஜபுரம் மோஹி ப்ளோரன்ஸ், குரு கணேஷ் நகர், பார்த்தசாரதி நகர், பள்ளிக்கரணை, ராஜலட்சுமி நகர், வள்ளல் பாரி நகர், சாய் பாலாஜி நகர், கிருஷ்ணா நகர், துளுக்காத்தம்மன் கோயில் பிரதான சாலை, அருண் நகர், வெங்கடேஸ்வரா நகர், ஜெயபால் நகர், மல்லிகேஸ்வரன் நகர், ஆதிசாமி நகர்.</p><h2>செயின்ட் தாமஸ் மவுண்ட்</h2><p>ராமர் கோயில் தெரு, மவுண்ட் பூந்தமல்லி சாலை, நசரத்புரம், கணபதி காலனி, வசந்தம் நகர், கலைஞர் நகர், தண்டுமா நகர், போலீஸ் குடியிருப்பு, செவன் ஹில்ஸ் தெரு, மீனம்பாக்கம், பாண்டியன் தெரு, மாரிசன் 1வது முதல் 6வது தெரு வரை, திருவள்ளுவர் நகர், எம்.கே.என் சாலை, குமரன் நகர், குளத்துமேடு, மாங்காளியம்மன் கோயில் தெரு, டிபன்ஸ் காலனி, பர்மா காலனி, கரையார் கோயில் தெரு, நார்த் பரேட் சாலை, இந்திரா நகர், அதிகாரி பயிற்சி அகாடமி, நேவி ரெசிடென்சி பகுதி, வுட்கிரீக் கன்ட்ரி, துளசிங்கபுரம், மாரியாபுரம், மாத்தியாஸ் நகர், ஐரோப்பியன் லைன், பஜார் சாலை, மேட்டு தெரு, ஆர்காட் பேட்டை, ஹாப்மேன் 1வது மற்றும் 2வது தெரு, வி.ஜி.பி முர்பி சதுக்கம், நோபல் தெரு, கண்ணன் காலனி, ஆசிரியர் காலனி, எம்.ஜி.ஆர் நகர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறையை ஆதரிப்பவர்கள் எட்டப்பர்கள்; ராகுல் காந்தி காட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/those-who-support-constituency-redelineation-are-idiots-rahul-gandhi-is-a-joke</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/those-who-support-constituency-redelineation-are-idiots-rahul-gandhi-is-a-joke#comments</comments><guid isPermaLink="false">2f5ba863-57b4-438b-b026-497a812a5574</guid><pubDate>Sat, 01 Aug 2026 12:05:13 +0000</pubDate><atom:updated>2026-08-01T12:05:13.089Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,காங்கிரஸ்,Congress,ராகுல் காந்தி,Rahul Gandhi ராகுல்காந்தி,தொகுதி மறுவரையறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/1bqzvt1m/one33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  ராகுல் காந்தி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/1bqzvt1m/one33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம், மாமல்லபுரத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு சொந்தமான கடற்கரை விடுதியில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முகாமின் நிறைவு நாளான இன்று ராகுல் காந்தி பங்கேற்று, மாவட்டத் தலைவர்களிடம் கட்சியின் எதிர்கால அரசியல் திட்டங்கள், அமைப்பு வலுப்படுத்தல் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை வழங்கினார். </p><p>அதனை தொடர்ந்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D">ராகுல் காந்தி </a>செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- </p><p>தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும். தொகுதி மறுவரையறையை ஒவ்வொரு மாநில, தேசிய கட்சியும், தோற்கடிக்க வேண்டும். </p><p>தமிழ்நாடு மற்றும் தமிழக மக்களின் எதிர்காலம் குறித்த பிரச்சினை இது. தொகுதி மறுவரையறையை ஆதரிப்பவர்கள் எட்டப்பர்கள். தொகுதி மறுவரையறை தமிழ்நாடு மக்களிடம் இருந்து அதிகாரத்தை பறித்துவிடும் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>பயணிகள் கவனத்திற்கு.... மதுரை கோட்டத்தில் பொறியியல் பணி: தென்பகுதி ரெயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/attention-passengers-engineering-work-in-madurai-division-trains-to-the-southern-region-to-operate-via-diverted-routes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/attention-passengers-engineering-work-in-madurai-division-trains-to-the-southern-region-to-operate-via-diverted-routes#comments</comments><guid isPermaLink="false">7b6834d5-2f81-4b6f-b09e-025a2a373dc6</guid><pubDate>Sat, 01 Aug 2026 11:53:22 +0000</pubDate><atom:updated>2026-08-01T11:53:22.917Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,train,ரெயில்,Railways</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/5orzj71o/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/5orzj71o/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரை கோட்டத்தில் பொறியியல் பணிகள் நடைபெற்று வருவதால், செங்கோட்டை-மயிலாடுதுறை விரைவு ரெயில் உள்பட பல்வேறு ரெயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படவுள்ளன.</p><p>திருச்சி ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“மதுரை ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் நடைபெற்று வருவதால், சில ரெயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கோட்டை மயிலாடுதுறை விரைவு ரெயில் (எண்: 16848): ஆகஸ்ட் 1, 2, 3, 4, 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கொடைரோடு, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ஆகிய ரெயில் நிலையங்களைத் தவிர்த்து, மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை ரோடு, காரைக்குடி, புதுக்கோட்டை மற்றும் கீரனூர் வழியாக திருச்சிக்கு இயக்கப்படும்.</p><p>நாகர்கோவில் மும்பை சி.எஸ்.டி.எம். விரைவு ரெயில் (எண்: 16352): ஆகஸ்ட் 2 மற்றும் 6 ஆகிய தேதிகளில் கொடைரோடு, திண்டுக்கல் ஆகிய ரெயில் நிலையங்களைத் தவிர்த்து, மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு இயக்கப்படும். </p><p>கன்னியாகுமரி ஹவுரா அதிவிரைவு ரயில் (எண்: 12666): கொடைரோடு, திண்டுக்கல் ரெயில் நிலையங்களைத் தவிர்த்து, மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு இயக்கப்படும். குருவாயூர் சென்னை எழும்பூர் விரைவு ரெயில் (எண்: 16128): ஆகஸ்ட் 1, 2, 3, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் மதுரை, சோழவந்தான், கொடைரோடு, திண் டுக்கல், மணப்பாறை ஆகிய ரெயில் நிலையங்களைத் தவிர்த்து, விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு இயக்கப்படும். </p><p>கன்னியாகுமரி ஐதராபாத் விரைவு ரெயில் (எண்:17070): ஆகஸ்ட் 7-ந்தேதி கொடைரோடு, திண்டுக்கல் ரெயில் நிலையங்களைத் தவிர்த்து, மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு இயக்கப்படும்.</p><p>பகுதியாக ரத்து:</p><p>பாலக்காடு டவுன் திருச்சி விரைவு ரெயில் (எண்: 16844) ஆகஸ்ட் 1, 4, 6 மற்றும் 8 ஆகிய தேதிகளில் பாலக்காடு டவுன் முதல் புகளூர் வரை மட்டுமே இயக்கப்படும். புகளூர் முதல் திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மனைவியின் கள்ளக்காதலனை கூலிப்படையை மூலம் கொலை செய்ய கணவர் ஏற்பாடு; கோர்ட்டில் பரபரப்பு சம்பவம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/husband-arranges-to-have-his-wifes-alleged-killer-killed-by-mercenaries</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/husband-arranges-to-have-his-wifes-alleged-killer-killed-by-mercenaries#comments</comments><guid isPermaLink="false">35525d84-8c96-4ef8-b65e-34d380f752cf</guid><pubDate>Sat, 01 Aug 2026 11:36:44 +0000</pubDate><atom:updated>2026-08-01T11:36:44.631Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவள்ளூர்,கள்ளக்காதல்,கிரைம் செய்திகள்,girl,VCK</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/m3uhilln/women33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கோர்ட்டில் பரபரப்பு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/m3uhilln/women33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர், </p><p>திருநின்றவூர் விசிக பெண் கவுன்சிலரை கொல்லந் தூண்டிய வழக்கில் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆராக வந்த கள்ளக்காதலனை, கணவர் கூலிப்படையை வைத்து வெட்டிக் கொலை செய்ய திட்டம் தீட்டி காத்தி குந்தபோது போலீசார் சுற்றி வளைத்து கைது செய்ய முற்பட்டபோது இருவர் பிடிபட்டனர். இதில் தப்பி ஓடிய கணவர் உள்ளிட்ட பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.</p><h2>விசக பெண் கவுன்சிலர்</h2><p>திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்தபிரபல ரவுடி ஜோசப் என்பவர் அதே பகுதியைச் சேர்த்த ஸ்டீபன்ராஜ் மனைவியும் விசிக கவுன்சிலரான கோமதி என்பருடன் கள்ளக்காதல் இருந்துவந்துள்து.</p><p>இந்நிலையில் பலமுறை மனைவியை கண்டித்தும் கேட்காததாள் ஆத்திரத்தில் கவுன்சிலர் கோமதியை அவரது கணவர் ஸ்டீபன் ராஜ் 2023-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி வெட்டி கொலை செய்தார்.</p><p>இந்த கொலை வழக்கில் திருநின்றவூர் போலீசார் கோமதியின் கணவர் ஸ்டீபன் ராஜ், அஜித், ஜான் கள்ளக்காதலன் ரவுடி ஜோசப் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்.</p><h2>பிரபல ரவுடி ஜோசப்</h2><p>இந்த வழக்கில் அனைவரும் ஜாமினில் வெளியே வந்தநிலையில் கள்ளக்காதலான பிரபல ரவுடி ஜோசப் மீது 10-க்கும் மேற்பட்ட குற்றவழக்குகள்நிலுவையில் இருந்து வருகிறது.</p><p>இதில் ஒரு வழக்கில் கடந்த நான்கு தினங்களாக திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்துஇட்டுவந்துள்ளார். இதனைத் தெரிந்து கொண்ட ஸ்டீபன் ராஜ் தனதுமனைவியை கொலை செய்ய காரணமாக இருந்த கள்ளக்காதலன் ஜோசப்பை கூலிப்படை னவத்து கொலைசெய்யதிட்டம் தீட டியது, சைபர் கிரைம்காவல் துறை மூலம் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் பிரனித்துக்கு தெரிய வந்ததை தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் தனி சிறப்பு படை உஷார் படுத்தப்பட்டது.</p><h2>நீதிமன்றத்தில் வைத்து கொலை</h2><p>இந்த நிலையில் நேற்று திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஜொசப்பை நீதிமன்ற வளாகத்திலேயே வைத்து கொலை செய்து விடுவது என முடிவு செய்து ஒரு ஆட்டோவில் கணவர் ஸ்டீபன் ராஜ்தலைமையில் ஆறுபேர்கொண்ட கூலிப்படையினர் பயங்கர ஆயுதங்களுடன் நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்தனர்.</p><p>ஆனால் ரவுடி ஜோசப் மதியம் மணி ஆகியும் நீதி மன்றத்தை விட்டு வெளி வராததால், அந்தகும்பல் திருவள்ளூர் அடுத்தவேடங்கிய நல்லூர் பகுதியில் மது அருந்த சென்றபோது தனி சிறப்புப் படை போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர் அப்போது கோமதியின் கணவர் ஸ்டீபன் ராஜ் உள்ளிட்ட மூவர் தப்பியோடிய நிலையில் திருநின்றவூர்பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் (வயது 45) பிரபாகரன் (வயது 34)  ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>ஆட்டோவில் ஆயுதங்கள்</h2><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D">கள்ளக்காதலன்</a> ரவுடி ஜோசப்பை கொல்ல ஆட்டோவில் கொண்டு வந்த அரிவாள் போன்ற ஆயுதங்சுளைமற்றும் மிளகாய் பொடி பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சினிமா காட்சிகளில் வருவதுபோல் இச்சம்பவம் திருவள்ளூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முன்னாள் எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் தவெக-வில் இணைந்தனர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thousands-join-tamil-nadu-vetri-kazhagam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thousands-join-tamil-nadu-vetri-kazhagam#comments</comments><guid isPermaLink="false">a65c1c25-9cd9-4901-9528-7ad3ab720005</guid><pubDate>Sat, 01 Aug 2026 11:32:25 +0000</pubDate><atom:updated>2026-08-01T11:32:25.842Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,எம்.எல்.ஏ,MLAs,Former,முன்னாள்,எம்.பி,join,இணைந்தனர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/zxa3ewlc/EXPARTY-MEMBER.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பொதுச்செயலாளர் என்.ஆனந்த்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/zxa3ewlc/EXPARTY-MEMBER.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முன்னாள் எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தங்களை தவெக-வில் இணைத்துக்கொண்டனர்.</p><h2> இணைப்பு விழா</h2><p>தமிழக வெற்றிக் கழகத் தலைவர், தமிழ்நாடு முதல்-அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">விஜய்</a> வாழ்த்துக்களுடன், தவெக பொதுச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D">என்.ஆனந்த்</a> தலைமையில் பனையூரில் உள்ள தலைமை நிலைய செயலக அலுவலகத்தில் பிரம்மாண்ட இணைப்பு விழா நடைபெற்றது.</p><p><strong>இந்த விழாவில் முக்கிய அரசியல் பிரமுகர்களான:</strong></p><p>முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சீனிவாசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் மாலா ஆகியோர் தங்களை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக்கொண்டனர்.</p> <h2>ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வருகை</h2><p>மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகிய முன்னாள் மக்கள் பிரதிநிதிகளுடன், ஆயிரத்திற்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சென்னை பனையூர் அலுவலகத்தில் திரண்டு தவெக-வில் இணைந்தனர். இவர்களை கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் சால்வை அணிவித்து வரவேற்றார்.</p> <h2>நிகழ்ச்சி</h2><p>இந்நிகழ்வில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம்வி. கருப்பையா, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  மரகதம் குமரவேல், முன்னாள் எம்.பி. பாலகங்கா, முன்னாள் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தன், வேலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் வேல்முருகன், கழக நிர்வாகி சினோரா பி.எஸ்.அசோக், கழக செய்தி தொடர்பாளர் இராவுத்தர் இம்பிராகிம், கமலக்கண்ணன் மற்றும் கழக நிர்வாகிகள்  கலந்துகொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை ஏற்றது சி.பி.ஐ. - புதிய வழக்கு பதிவு செய்ய ஏற்பாடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cbi-takes-over-armstrong-murder-case-investigation-arrangements-made-to-register-a-new-case</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cbi-takes-over-armstrong-murder-case-investigation-arrangements-made-to-register-a-new-case#comments</comments><guid isPermaLink="false">9b281431-cccc-43f0-98f0-a88b44a5bf2f</guid><pubDate>Sat, 01 Aug 2026 11:30:23 +0000</pubDate><atom:updated>2026-08-01T11:30:23.630Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>CBI,சி.பி.ஐ.,Armstrong,ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/d5bmqqgp/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/d5bmqqgp/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சி.பி.ஐ. ஏற்றுக்கொண்டது. தேவைப்பட்டால் புதிய வழக்கை பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சிறையில் இருப்பவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக செயல்பட்டவர் ஆம்ஸ்ட்ராங். இவர் சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை 5-ந்தேதி ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அன்றைய தினம் இரவில் அவர் ஒரு கட்டுமானப் பணியை ஆய்வு செய்து கொண்டிருந்த சமயத்தில் மர்ம நபர்கள் சிலர் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினர்.</p> <p>இதில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. இந்த கொலை வழக்கு தொடர்பாக செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுப் படை அமைக்கப்பட்டது. மொத்தம் 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். 7,800 பக்க குற்றப்பத்திரிகையும் தயாரானது. </p><p>இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒருவர் மருத்துவ சிகிச்சையின்போது உயிரிழந்தார். சிலருக்கு ஜாமினும் கிடைத்தது. இந்த வழக்கை தமிழக போலீசார் நேர்மையாக விசாரிக்கவில்லை என்று ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி குறிப்பிட்டார். பகுஜன் சமாஜ் கட்சியின் அகில இந்திய தலைவர் மாயாவதியும் சென்னைக்கு நேரில் வந்தார். இந்த வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் கூறினார். </p><p>ஆனால் அப்போதைய தமிழக அரசு இதற்கு உடன்படவில்லை. எனவே ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் இம்மானுவேல் சி.பி.ஐ. விசாரணை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் இவ்வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என கடந்த ஆண்டு டிசம்பர் 24-ந்தேதி உத்தரவிட்டது. </p><p>இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. சுப்ரீம் கோர்ட்டும் இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தமிழக அரசு சமீபத்தில் திரும்பப் பெற்றுக் கொண்டது. </p> <p>இதையடுத்து இவ்வழக்கின் விசாரணையை சி.பி.ஐ. மேற்கொள்ள எந்த தடையும் இல்லை என்ற நிலை ஏற்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை ஆவணங்கள் அனைத்தையும் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் சென்னை போலீசார் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் இந்த கொலை தொடர்பாக மறுவழக்கு பதிவு செய்ய உள்ளனர். மேலும் சிறையில் இருப்பவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். இதனால் இனிவரும் காலங்களில் இந்த வழக்கின் விசாரணை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p> ]]></content:encoded></item><item><title>பயிர்க்கடன் தள்ளுபடி என்று அறிவித்து விட்டு, வட்டியுடன் செலுத்த கட்டாயப்படுத்துவதா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/declare-crop-loan-waivers-and-force-them-to-pay-with-interest-question-by-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/declare-crop-loan-waivers-and-force-them-to-pay-with-interest-question-by-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">87053e5a-ec5e-42a8-ab4c-4c40ac7e58e2</guid><pubDate>Sat, 01 Aug 2026 11:28:51 +0000</pubDate><atom:updated>2026-08-01T11:28:51.957Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,சென்னை,Crop loan,Waiver,Dr Anbumani Ramadoss,பயிர்க்கடன் தள்ளுபடி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/ucv94ih5/31.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/ucv94ih5/31.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களில் உழவர்கள் வாங்கிய பயிர்க்கடன்கள் சில நிபந்தனைகளுடன் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாக தமிழக அரசு அறிவித்திருக்கும் நிலையில், கடன் பெற்ற விவசாயிகள் அதற்கான தவணைத் தொகையை வட்டியுடன் செலுத்த வேண்டும் என்று கூட்டுறவு சங்கங்கள்  அறிவிக்கை அனுப்பியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.  வறட்சி பாதிப்பால் ஏற்கனவே வாடிக் கொண்டிருக்கும் விவசாயிகளை இத்தகைய அறிவிக்கைகள் மூலம் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்குவது கண்டிக்கத்தக்கது.</p><h2>பயிர்க்கடன்</h2><p>மதுரை மாவட்டம்  கள்ளந்திரி பகுதியில் உள்ள பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர்க்கடன் பெற்ற  விவசாயிகள் அனைவருக்கும்  இந்த அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது.  அந்த அறிவிக்கையில்.’’ அரசால் அறிவிக்கப்பட்ட கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடியை பெறுவதற்கு தகுதி பெற்ற உழவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு,  அவர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட தொகை அரசால்  விடுவிக்கப்படும் வரை, கடன் பெற்ற உழவர்கள் தவறாமல் தவணை செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தா விட்டால்  அவர்களின் கடன்கள் தவணை தவறிய கடன்களாக கருதப்படும். கடன் தொகை  இறுதி செய்யப்பட்டு கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு விடுவிக்கும் போது அந்தத் தொகை சம்பந்தப்பட்ட விவசாயிகளிம் சேமிப்புக் கணக்கில் செலுத்தப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதே போன்று  தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ள  கூட்டுறவு சங்கங்களும் பயிர்க்கடன்  பெற்ற  உழவர்களுக்கு இதே போன்ற  அறிவிக்கையை  அனுப்பியுள்ளன. இதனால் உழவர்கள் பெரும் கவலைக்குள்ளாகியுள்ளனர்.  தமிழ்நாடு அரசின் இந்த  நிர்வாக அணுகுமுறை மிகவும் தவறானது.</p><h2>கடன் தொகை தவணை</h2><p>கடந்த காலங்களில் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து சில நாள்களில் அரசாணை பிறப்பிக்கப்படும். அந்த நாளில் உழவர்களின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு விடும். அதற்கான சான்றுகள்  விவசாயிகளுக்கு வழங்கப்படும். அதனால், உழவர்கள் நிம்மதி அடைவதுடன் அடுத்த பருவத்திற்கு பயிர்க்கடன் பெறுவதற்கும் தகுதி பெறுவார்கள்.  ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக, அரசு கடன் தொகையை செலுத்தும் வரை விவசாயிகள் கடன் தவணையை வட்டியுடன் செலுத்த  வேண்டும்  என்பதும், தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகை உழவர்களின் சேமிப்புக் கணக்கில் தான் செலுத்தப்படும் என்பதும் நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்றாகும்.</p><p>பயிர்க்கடன் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு  தொடக்கம் முதலாகவே நேர்மையுடன் செயல்படவில்லை. சிறு. குறு விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்  என்று வாக்குறுதி அளித்திருந்த  தவெக, ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.50 ஆயிரம் வரையிலான கடன்கள் மட்டுமே முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தது. அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும்  எதிர்ப்பு தெரிவித்ததால் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் கடன் தொகையின் அளவை ரூ.75 ஆயிரமாக உயர்த்தியது. இப்போது  கடன் தவணையை உடனடியாக  செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது.</p><h2>நிவாரணம்</h2><p>தமிழக உழவர்கள்  ஏற்கனவே  வாழ முடியாத அளவுக்கு  துயரத்தில் வாடிக் கொண்டிருக்கின்றனர்.   நடப்பாண்டில் தென் மேற்கு பருவமழை பொய்த்ததால்  தமிழ்நாடு முழுவதும் கடுமையான வறட்சி நிலவுகிறது. வறட்சியால் பாதிக்கப்பட்டு, குறுவை சாகுபடி செய்ய முடியாத விவசாயிகளுக்கு அரசுத்  தரப்பில் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்ற  கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், அவர்களை பயிர்க்கடன்களை செலுத்தும்படி கட்டாயப்படுத்துவது மனிதநேயமற்ற செயலாகும்.</p><p>தமிழக அரசு  மற்றும் கூட்டுறவுத் துறையின் தவறான அணுகுமுறையும்,  நிர்வாகக் குளறுபடிகளும் தான் அனைத்து குழப்பங்களுக்கும் காரணம் ஆகும்.  இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட்டு, உழவர்களிடம் பயிர்க்கடன் தவணைகளைக் கேட்டு தொல்லை கொடுக்கக் கூடாது என கூட்டுறவு சங்கங்களுக்கு ஆணையிட வேண்டும்; கடன் தள்ளுபடி தொகையை உடனடியாக கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பி, பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை உழவர்களுக்கு வழங்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காப்பிதோட்டத்தில் விரட்டிய காட்டு யானை: தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-chases-worker-in-coffee-plantation-tragedy-strikes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-chases-worker-in-coffee-plantation-tragedy-strikes#comments</comments><guid isPermaLink="false">3fa0db9a-4b12-4a4c-9413-e071558fc91a</guid><pubDate>Sat, 01 Aug 2026 11:22:40 +0000</pubDate><atom:updated>2026-08-01T11:22:40.718Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தாக்குதல்,நீலகிரி,காட்டு யானை,Nilagiris,worker death,தொழிலாளி உயிரிழப்பு,Wild elephant attacked</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/ezexkcxu/54.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ பாலசுப்பிரமணியம்]]></media:title><media:description type="html"><![CDATA[ யானை தாக்கி எஸ்டேட் தொழிலாளி உயிரிழந்தார்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/ezexkcxu/54.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி, </p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நீலகிரி மாவட்டம்</a> கூடலூர் அருகே காட்டு யானை தாக்கியதில் எஸ்டேட் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.</p><h2>திடீரென புகுந்த காட்டு யானை</h2><p>நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவாலா அருகே உள்ள கரியசோலை பகுதியில் ஒரு தனியார் காபி தோட்டம் அமைந்துள்ளது. இந்தத் தோட்டத்தில், அப்பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் (வயது 65) என்ற தொழிலாளி, சக தொழிலாளர்களுடன் இணைந்து வழக்கம் போல காபி மற்றும் தேயிலை தோட்டப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அடர்ந்த வனப்பகுதியிலிருந்து வெளியேறிய<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> காட்டு யானை</a> ஒன்று திடீரென தோட்டப் பகுதிக்குள் நுழைந்தது.</p><h2>தாக்குதலில் பறிபோன உயிர்</h2><p>தோட்டத்திற்குள் யானை வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் தப்பியோட முயன்றனர். அப்போது அங்கிருந்த காட்டு யானை, பாலசுப்பிரமணியத்தை திடீரென துரத்திச் சென்று தாக்கியது. இதில் நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தபோது, யானை அவரை மீண்டும் கொடூரமாக தாக்கியது. இந்த பயங்கர தாக்குதலில் பலத்த காயமடைந்த பாலசுப்பிரமணியம், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>வனத்துறை அதிகாரிகள் விசாரணை</h2><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் தொழிலாளியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக மனித-விலங்கு மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அப்பகுதி எஸ்டேட் தொழிலாளர்களும் பொதுமக்களும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.</p><p>வனத்துறையினர் இப்பகுதியில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> பொதுமக்கள் கோரிக்கை </a>விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>காரிய பூனைதான் திமுக: தவெக பதிலடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-is-a-business-cat-tvks-response</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-is-a-business-cat-tvks-response#comments</comments><guid isPermaLink="false">eec2b385-5c0e-46c4-a973-b511638a01a0</guid><pubDate>Sat, 01 Aug 2026 11:05:32 +0000</pubDate><atom:updated>2026-08-01T11:05:32.172Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,திமுக,DMK,சென்னை,பூனை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/2houcsyn/153.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விஜய் ,ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/2houcsyn/153.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4.%E0%AE%B5%E0%AF%86.%E0%AE%95">த.வெ.க</a> தகவல் தொழில்நுட்ப அணி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>விவசாயிகள் நலன்களுக்காகவும் கர்நாடக வாழ் தமிழ் சொந்தங்களுக்காகவும் யோசித்துச் செயல்படுவதுதான் மக்கள் விரும்பும் முதல்-அமைச்சர், நம் வெற்றித் தலைவர், தமிழ்நாடு முதல்-அமைச்சரின் மனசாட்சி உள்ள மக்களாட்சி.</p><h2>காவிரி விவகாரம்</h2><p>திமுக போல சுயநலம் கொண்டு தனி ஆவர்த்தனம் செய்யத் துடிப்பவர் இல்லை, எங்கள் வெற்றித்தலைவர். தொடர்ந்து பல ஆண்டுகளாக மத்திய அரசிடம் பேரம் பேசி, பெற வேண்டிய இலாகாக்களை பெற்ற போதெல்லாம் காவிரி விவகாரத்திற்காக ஒரு மந்திரி பதவியையாவது, ஒருநாளாவது உதறி இருக்குமா இந்தத் திமுக? அத்தனை ஆண்டுகளில் ஒருமுறையாவது காவிரிப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண முயன்றிருக்குமா இந்தத் திமுக? அப்போதெல்லாம் பதவியில் ஒட்டிக்கொண்டு சுகம் கண்ட சுயநல இயக்கம்தான் இந்தத் திமுக.</p><h2>காரிய பூனைதான் திமுக</h2><p>ஆட்சியில் இருக்கும்போது சத்தம் போடுவதுபோல சவுண்ட் கொடுத்துவிட்டு, மியூட் மோடுக்குச் சென்று, மியாவ் என்று கூட சத்தம் எழுப்பாத காரிய பூனைதான் திமுக. ஆனால், ஆட்சி பறிபோன பிறகு பாருங்கள் மண், மொழி, மானம் என்று உரிமை முழக்கத்தை எழுப்பி எம்பி எம்பிக் குதிக்கும். எப்போதும் மக்களை தூண்டிவிட்டு குளிர்காயும் திமுக, இப்போது எரிச்சல் மற்றும் விரக்தி மோடில் அலறிக்கொண்டு இருக்கிறது. கடந்த மே மாதத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட கட்சியாகத் தவிக்கும் திமுக, காவிரி விவகாரத்தில் கபட நாடகமாடுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள்.</p><p> எனவே, காவிரி பிரச்சனையில் ஸ்டாலின், திமுக ஆட்சி போய் விட்டதே,  தவெக ஆட்சி வந்து விட்டதே என்று வன்மமாக பேசாமல் மக்கள் நலன் சார்ந்து உண்மையாக பேச வேண்டும். அப்படி அவரால் பேச முடியுமா முடியாதா? என்றால் அவர் உள்மனம் முடியாது என்றுதான் உண்மையான வன்மம் பேசும். இது அவர் மட்டுமன்று, உலகமே அறிந்த உண்மை.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் காங்கிரஸ் வளர்ச்சிக்கு உட்கட்சி பூசலே முட்டுக்கட்டை - ராகுல் காந்தி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/internal-party-feud-is-a-stumbling-block-to-congresss-growth-in-tamil-nadu-rahul-gandhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/internal-party-feud-is-a-stumbling-block-to-congresss-growth-in-tamil-nadu-rahul-gandhi#comments</comments><guid isPermaLink="false">cd795edb-75b6-46dc-a910-80a9af957f88</guid><pubDate>Sat, 01 Aug 2026 10:46:53 +0000</pubDate><atom:updated>2026-08-01T10:46:53.782Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,ராகுல் காந்தி,Ragul Gandhi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/4qfjf10d/raggul-444.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல் காந்தி ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/4qfjf10d/raggul-444.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு உட்கட்சி பூசலே முட்டுக்கட்டையாக உள்ளது என ராகுல் காந்தி கூறியுள்ளார்.</p><p>தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம், மாமல்லபுரத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு சொந்தமான கடற்கரை விடுதியில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முகாமின் நிறைவு நாளான இன்று <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D">ராகுல் காந்தி </a>பங்கேற்று, மாவட்டத் தலைவர்களிடம் கட்சியின் எதிர்கால அரசியல் திட்டங்கள், அமைப்பு வலுப்படுத்தல் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை வழங்கினார். அதனை தொடர்ந்து,</p><p>மாமல்லபுரத்தில் நடைபெற்ற மாவட்ட தலைவர்கள் பயிற்சி முகாம் நிறைவு விழாவில் ராகுல் காந்தி பேசியதாவது:-</p><p>உட்கட்சி பூசல் மற்றும் பல அணிகளாக செயல்படுவதே தமிழகத்தில் காங்கிரஸ் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது.  கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளை டெல்லியில் இருந்து கண்காணித்து வருகிறோம்.</p><p>நிர்வாகிகளை அரவணைத்து செல்லாத தலைவர்களுக்கு காங்கிரஸில் இனி இடமில்லை </p><p>புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட தலைவர்கள் தலைமையின் வழிகாட்டுதலின்படி செயல்பட வேண்டும். கட்சிக்கு விஸ்வாசமாக செயல்படுபவர்களுக்கு மட்டுமே எதிர்காலத்தில் வாய்ப்புகள் வழங்கப்படும். </p><p>தவறு செய்பவர்கள் கட்சி நிர்வாகிகளை அரவணைத்து செல்லாத தலைவர்களுக்கு காங்கிரஸ் சில் இனி இடமில்லை </p><p>இளைஞர்களை அதிக அளவில் கட்சியில் இணைத்து, காங்கிரஸின் அடுத்த கட்ட வளர்ச்சிக்காக பணியாற்ற வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>விளைநிலங்களில் குழாய் பதிக்கும் திட்டத்தை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் கைவிட வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bharat-petroleum-corporation-should-abandon-the-plan-to-lay-pipelines-through-agricultural-lands-communist-party-of-india-insists</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bharat-petroleum-corporation-should-abandon-the-plan-to-lay-pipelines-through-agricultural-lands-communist-party-of-india-insists#comments</comments><guid isPermaLink="false">cd7598b9-a969-4664-b5fa-3307dfd1e5ff</guid><pubDate>Sat, 01 Aug 2026 10:27:31 +0000</pubDate><atom:updated>2026-08-01T10:27:31.749Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,Communist Party of India,pipeline,விளைநிலங்கள்,குழாய்கள் பதிக்கும் பணி,திருப்பூர் மாவட்டத்தில்,பாரத் பெட்ரோலியம்,Bharat Petroleum</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/57s8z9o8/152.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்திய கம்யூனிஸ்ட் கட்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/57s8z9o8/152.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விளைநிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.</p><p>இது தொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்</a> தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் கோவை மாவட்டம் இருகூர் முதல் கர்நாடக மாநிலம் தேவன குந்தி வரையில் 340 கிலோ மீட்டர் தொலைவிற்கு எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.</p><h2>விவசாய விளைநிலங்கள்</h2><p>திருப்பூர் மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் இருந்து கர்நாடக மாநிலம் தேவனகுந்தி வரை நெடுஞ்சாலை வழியாக குழாய் பதிக்கப்படுகிறது. ஆனால், இருகூரிலிருந்து முத்தூர் வரையிலான 70 கிலோமீட்டர் தூரத்திற்கு விவசாய விளைநிலங்கள் வழியாக குழாய்களை பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இது விவசாயிகளின் நலன்களுக்கு எதிரானது. </p><p>இதற்கு விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதை கவனத்தில் கொள்ளாமல்  போலீஸ் பாதுகாப்புடன் நேற்று விவசாய நிலங்களில் குழாய்பதிக்கும் பணிகள் நடந்துள்ளன.</p><h2>போராட்டம்</h2><p>இதை கண்டித்தும், இந்தப் பணிகளை கைவிடக்கோரியும் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வேலம்பட்டி டோல்கேட் பகுதியில் விவசாயிகள் திரண்டு, விளை நிலங்களில் குழாய் பதிக்க அனுமதிக்க மாட்டோம் , நெடுஞ்சாலை வழியாக குழாய்களை பதிக்கவேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் - தாராபுரம் பிரதான சாலையில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்படும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.</p><h2>வலியுறுத்தல்</h2><p>எனவே, விளை நிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் கைவிட வேண்டும்.நெடுஞ்சாலை வழியாக குழாய்  பதிக்கும் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் . அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு எடுக்க வேண்டுமென, <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்</a> தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஐசிஎப் நிறுவனத்தின் புதிய பொது மேலாளராக மனிஷ் அகர்வால் பொறுப்பேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/manish-agarwal-takes-over-as-the-new-general-manager-of-icf</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/manish-agarwal-takes-over-as-the-new-general-manager-of-icf#comments</comments><guid isPermaLink="false">45be1e72-1899-4a3e-90e5-ad10eb48cb41</guid><pubDate>Sat, 01 Aug 2026 10:07:10 +0000</pubDate><atom:updated>2026-08-01T10:07:10.297Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,பொது மேலாளர்,General Manager,ரெயில் பெட்டிகள்,New,Responsibility பொறுப்பேற்பு,ICF factory</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/13sdyiso/151.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஐசிஎப் நிறுவனம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/13sdyiso/151.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலையின் (Integral Coach Factory – ICF) புதிய பொது மேலாளராக மனிஷ் அகர்வால் இன்று பொறுப்பேற்றுள்ளார்.</p><p>இதற்கு முன்பு ஐசிஎப் பொது மேலாளராக பணியாற்றிய யு. சுப்பா ராவ், தற்போது தெற்கு ரெயில்வேயின் பொது மேலாளராக பொறுப்பேற்றுள்ளதை அடுத்து மனிஷ் அகர்வால் இந்த புதிய பொறுப்பை ஏற்றுள்ளார்.</p><h2>35 ஆண்டுகள் அனுபவம்</h2><p>மனிஷ் அகர்வால் 1989-ஆம் ஆண்டு பேட்ச் இந்திய ரெயில்வே மெக்கானிக்கல் இன்ஜினியர்ஸ் (IRSME) பிரிவை சேர்ந்த மூத்த அதிகாரி ஆவார். ரெயில்வே துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றிய நீண்ட அனுபவம் கொண்டவர்.</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D">ஐசிஎப்</a> பொது மேலாளராக பொறுப்பேற்பதற்கு முன்பு, அவர் ரெயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) நிறுவனத்தில் முதன்மை செயல் இயக்குநராக (மெக்கானிக்கல்) பணியாற்றி வந்தார். மேலும், திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளராகவும் (DRM) அவர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>காவிரி நீர் விவகாரம்: ஆகஸ்ட் 7-ல் தமிழக கட்சிகள் ஓரணியில் ஆர்ப்பாட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-united-parties-august-7-cauvery-mega-protest</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-united-parties-august-7-cauvery-mega-protest#comments</comments><guid isPermaLink="false">8bb9d804-6939-429a-80d6-e39f079317f0</guid><pubDate>Sat, 01 Aug 2026 09:53:48 +0000</pubDate><atom:updated>2026-08-01T09:53:48.955Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காவிரி நீர்,அனைத்து கட்சிகள் கூட்டம்,விவகாரம்,ஆர்ப்பாட்டம்protest,Cauvery Water Issue,All Parties</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/goqng11u/krishnasamy.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/goqng11u/krishnasamy.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மத்திய, மாநில அரசுகளுக்கு உரிய அழுத்தம் கொடுக்கும் வகையில், வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி சென்னையில் முதற்கட்டமாக மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடத்திட முடிவு செய்யப்படுகிறது.</p><h2>அரசியல் கட்சிகளின் கூட்டம்</h2><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">புதிய தமிழகம் கட்சியின்</a> முன்னெடுப்பில், மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்திடவும், ஆண்டுதோறும் காவிரி நதிநீர் பங்கீட்டை தடையின்றி பெற்றிடவும், அனைத்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">அரசியல் கட்சிகளின் கூட்டம்</a> இன்று காலை 11 மணிக்குச் சென்னை தி.நகரில் உள்ள ஹோட்டல் அக்கார்டு மெட்ரோபாலிட்டன் அரங்கில் வெற்றிகரமாக நடைபெற்றது.</p><p><strong>கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:</strong></p><p><strong>தீர்மானம் : 1</strong></p><h2>கண்டனம்</h2><p> காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்கு மாறாக, தமிழகத்தின் உரிமையை பாதிக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் "கர்நாடக அரசின் பிடிவாதப் போக்குிற்கு" தமிழக அரசியல் கட்சிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.</p><h2><strong>தீர்மானம் : 2</strong></h2><h2>போராடும் அவல நிலை</h2><p>மே, ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய 40 டி.எம்.சி அளவு காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட மறுத்துள்ளதால், டெல்டா மாவட்டங்களில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலையும்; தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மக்களுக்கும் கால்நடைகளுக்கும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, தினமும் பொதுமக்கள் சாலைக்கு வந்து போராடும் அவல நிலையும் உருவாகியுள்ளது.</p><h2>மெத்தனப்போக்கு</h2><p> 3.5 டி.எம்.சி நீரை 15 தினங்களுக்கு திறந்துவிட இரண்டு தினங்களுக்கு முன் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆணையம் பரிந்துரைத்தும், "ஒரு சொட்டு நீரைக் கூட திறந்துவிட முடியாது; இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடுவோம்" என கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவகுமார் அறிவித்துள்ள நிலையை அறிந்தும், உடனடியாக உச்சநீதிமன்றத்தை நாடுவதற்கு பதிலாக, கர்நாடக முதல்-அமைச்சருடன் பேச்சுவார்த்தை, பிரதமருக்கு கடிதம் என இன்றைய தமிழக அரசு நேரத்தை வீணடித்து கொண்டிருக்கிறது. இந்த இக்கட்டான தருணத்தில் தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தைக்கூட்டிட தமிழக அனைத்து அரசியல் கட்சிகளும் பலமுறை வேண்டுகோள் விடுத்தும், அதை உதாசீனப்படுத்திவிட்டு மெத்தனப்போக்குடன் செயல்படும் முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசை அனைத்துக் கட்சிக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.</p><h2><strong>தீர்மானம் : 3</strong></h2><h2>தலைகுனிவு</h2><p>தமிழக முதல்-அமைச்சர் ஆர்வம் காட்டியும், கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவகுமார் "இன்னொரு சந்திப்பில் சந்திக்கலாம்" எனக் கூறியுள்ளது தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவாகவே இக்கூட்டம் கருதுகிறது.</p><h2><strong>தீர்மானம் : 4</strong></h2><h2>காவிரி நதிநீர் உரிமை</h2><p>ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலம் உச்சநீதிமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் போராடி பெற்ற காவிரி உரிமையை தமிழகத்தில் யார் ஆட்சியில் அமர்ந்தாலும் விட்டுத்தரக்கூடாது. "மேல்மடையில் உட்கார்ந்திருக்கிறோம்" என்ற தைரியத்தில் "ஒரு சொட்டு நீர் கூட திறந்துவிட முடியாது" என கர்நாடகாவில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படுகிறது; பந்த் நடத்தப்படுகிறது. இந்த அசாதாரண சூழ்நிலையில்கூட இன்றைய தவெக அரசு விழித்து கொள்ளவில்லையெனில், எட்டு கோடி தமிழக மக்களின் காவிரி நதிநீர் உரிமை பறிபோய்விடும் அவலநிலை ஏற்படும். எனவே, இனி சிறிதும் காலம் தாழ்த்தாமல் செயல்படுமாறு இவ்வாரசை வலியுறுத்துவதுடன்; இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளையும் அழைத்துக்கொண்டு டெல்லி சென்று, பாரத பிரதமரை சந்தித்து, மேகதாது அணை விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், காவிரி நதிநீர் பங்கீடு அனைத்து காலகட்டங்களிலும் எந்தவித இடர்ப்பாடும் இன்றி முறையாக கிடைத்திடவும் உரிய அழுத்தம் கொடுக்க முதல்வர் விஜய் அவர்களை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.</p><h2><strong>தீர்மானம் : 5</strong></h2><h2>மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்</h2><p>காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீரவை கண்டிட அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு தமிழக அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு உரிய அழுத்தம் கொடுக்கும் வகையில், வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி சென்னையில் முதற்கட்டமாக மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடத்திட முடிவு செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>7 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/rain-is-likely-in-7-districts-till-4-pm</link><comments>https://www.dailythanthi.com/news/weather/rain-is-likely-in-7-districts-till-4-pm#comments</comments><guid isPermaLink="false">fab011b9-9edc-4213-ba55-67d04fe60a94</guid><pubDate>Sat, 01 Aug 2026 09:37:17 +0000</pubDate><atom:updated>2026-08-01T09:37:17.620Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,வானிலை ஆய்வு மையம்,district,வாய்ப்பு,மழைrain,the Meteorological Department said</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/8mzbdd02/150.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/8mzbdd02/150.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காற்றழுத்தத் தாழ்வுப்பாதை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.</p><h2>7 மாவட்டங்களில் மழை</h2><p>இந்த நிலையில், தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p>அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, கோவை, நீலகிரி, திருப்பூர்  ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">வானிலை ஆய்வு மையம்</a> தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>200 யூனிட் இலவசம் என்று சொல்லிட்டு 4 மடங்கு வரை மின் கட்டணம் உயர்ந்தது எப்படி? - சீமான் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-did-the-electricity-bill-increase-by-4-times-after-being-told-that-200-units-were-free-seemans-question</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-did-the-electricity-bill-increase-by-4-times-after-being-told-that-200-units-were-free-seemans-question#comments</comments><guid isPermaLink="false">07a84ffc-8db2-4c46-b031-1515a8ab14d9</guid><pubDate>Sat, 01 Aug 2026 09:20:29 +0000</pubDate><atom:updated>2026-08-01T09:20:29.797Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,Seeman,சென்னை,electricity bill,உயர்வு,இலவசம்,Electricity bill மின் கட்டணம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/ja21udx5/149.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சீமான்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/ja21udx5/149.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">சீமான்</a> தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-</p><h2>தவெக அரசு</h2><p>தமிழ்நாட்டில் நடப்பு மாதம் தமிழ்நாட்டின் பெரும்பாலான வீடுகளுக்கான மின்சார கட்டணம் 4 மடங்கு வரை உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தவெக அரசு 200 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என்று அறிவித்த நிலையில், அதற்கு நேர் எதிராகப் பெரும்பாலான வீடுகளுக்கு வழக்கத்தைவிடப் பல மடங்கு மின்கட்டணம் அதிகரித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.</p><p>மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் தாமதமாக மின் அளவீடு எடுக்கப்பட்டதும், பழுதான மின் அளவீட்டுக் கருவிகள் குறித்த புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்காமல் இருந்ததுமே மின்கட்டண உயர்வுக்கு காரணம் என்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 200 யூனிட் இலவச மின்சாரத்தின் பலன் மக்களுக்குக் கிடைக்கப்பெறாமல் இருக்க வேண்டுமென்றே திட்டமிட்டு தாமதமாக மின் அளவீடு செய்யப்பட்டதோ? என்ற சந்தேகமும் எழுகின்றது. தாமதிக்கப்பட்ட மின் அளவீட்டினால், மின்பயன்பாடு 500 யூனிட்டிற்கு மேல் அதிகமானதால், 200 யூனிட் இலவச மின்சாரத்தின் பலன் கிடைக்காததோடு, ஓர்  அலகிற்கான மின் கட்டண விகிதமும் அதிகரித்துள்ளது. மின்கட்டண அமைப்பில் உள்ள நடைமுறை மற்றும் தொழில்நுட்ப குளறுபடிகளும், தாமதமான மின்கணக்கீடும்தான் தற்போதைய தாறுமாறான கட்டண உயர்வுக்கு அடிப்படை காரணமாகும். </p><h2>மின் கட்டணம்</h2><p>தவெக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று கூறியிருந்த நிலையில் தேர்தலில் வென்று ஆட்சி, அதிகாரத்தில் அமர்ந்த பிறகு இரண்டு மாதத்திற்கு 200 யூனிட் இலவசம் என்றும், அதுவும் 500 யூனிட் வரை பயன்படுத்தும் நுகர்வோருக்கு மட்டுமே என்றும் அறிவித்து மக்களை ஏமாற்றியது போதாதென்று தற்போது, மின்கணக்கீட்டில் குளறுபடிகள் செய்து வழக்கத்தை விட பன்மடங்கு மின்கட்டணம் உயரவும் காரணமாகியுள்ளது பெருங்கொடுமையாகும். மாதம் ஒரு முறை மின் கணக்கீடு செய்யும் நடைமுறையை உடனடியாகச் செயல்படுத்துவதும், மின்னிலக்க அளவீட்டுக் கருவியை விரைந்து பொருத்துவதும் மட்டுமே இது போன்ற குளறுபடிகள் இனி வருங்காலத்தில் நடைபெறாமல் தடுக்கவும், மக்கள் பயன்படுத்தும் அளவிற்கான உண்மையான மின்கட்டணத்தை செலுத்துவதற்கான வாய்ப்பாகவும் அமையும்.</p><h2>வலியுறுத்தல்</h2><p>ஆகவே, தமிழ்நாடு அரசு மின் கணக்கீட்டில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பன்மடங்கு தற்போது அதிகரித்துள்ள மின் கட்டணத்தை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும், வாக்குறுதி அளித்தபடி மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை மெட்ரோவின் புதிய சாதனை: ஜூலை மாதத்தில் 1.06 கோடி பேர் பயணம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-metros-new-record-106-crore-people-travelled-in-july</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-metros-new-record-106-crore-people-travelled-in-july#comments</comments><guid isPermaLink="false">9f5f4bcb-57f1-4026-a03f-fb90f679ce48</guid><pubDate>Sat, 01 Aug 2026 08:57:43 +0000</pubDate><atom:updated>2026-08-01T08:57:43.202Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,chennai metro,பயணம்,Travel,மெட்ரோ,சாதனை achievement</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/cy1awwpm/148.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மெட்ரோ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/cy1awwpm/148.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில்பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது.</p><p>அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 1,06,37,647 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>பயணம்</h2><p>அதிகபட்சமாக 24.07.2026 அன்று 3,84,412 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். 2026, ஜூலை மாதத்தில் மட்டும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 55,87,494 பயணிகள், க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி (Single Journey Paper QR 19,66,202, Online QR – 1,47,760, Static QR 2,24,701, Whatsapp - 4,51,715, Paytm 2,99,228, ONDC – 12,68,411, PhonePe – 2,84,121, CMRL Mobile App(SVP) 95,430, Chennai One App – 2,98,702, HCL 50 Year Celebration Music Concert Event QR – 13,883) பயணிகளும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.</p><h2>தள்ளுபடி</h2><p>சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், Digital SVP, க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு, Whatsapp - (+91 83000 86000), Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு 20% கட்டணத் தள்ளுபடியைவழங்குகிறது. மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு கவுண்டர்களில் வாங்கப்படும் ஒற்றைப்பயணத்துக்கான காகித QR பயணச்சீட்டுகளுக்கு (Single Journey Paper QR tickets) இந்தத் தள்ளுபடிகிடையாது.</p><p>மெட்ரோ ரெயில்கள் மற்றும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B">மெட்ரோ</a> ரெயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காவல்துறையின் உதவியோடு விளைநிலங்களை பறிக்கும் தவெக அரசு: டிடிவி தினகரன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-government-seizing-agricultural-lands-with-police-assistance-ttv-dhinakaran-condemns-the-move</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-government-seizing-agricultural-lands-with-police-assistance-ttv-dhinakaran-condemns-the-move#comments</comments><guid isPermaLink="false">e34ad1c4-e617-46c6-a7a1-d487ddc56462</guid><pubDate>Sat, 01 Aug 2026 08:45:37 +0000</pubDate><atom:updated>2026-08-01T08:45:37.503Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,தவெக அரசு,TVK Government</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/y77jra8j/ttv.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/y77jra8j/ttv.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>“விளைநிலங்களின் வழியே எண்ணெய் குழாய்கள் பதிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகள் வலுக்கட்டாயமாக கைது –  காவல்துறையின் உதவியோடு விளைநிலங்களை பறிக்கும் தவெக அரசின் விவசாய விரோதப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. </p><p>பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சார்பில் கோவையிலிருந்து, கர்நாடக மாநிலம் தேவனஹொந்தி வரை 340 கி.மீட்டர் தூரத்திற்கு எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டம் நடைபெற்று வரும் நிலையில், இருகூரில் இருந்து முத்தூர் வரையிலான 70 கி.மீட்டர் தூரத்திற்கு விளைநிலங்களின் வழியே எண்ணெய் குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லடத்தில் போராடிய விவசாயிகளை காவல்துறையினரின் மூலம் வலுக்கட்டாயமாக கைது செய்த தவெக அரசின் அதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. </p><p>விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழும் விளைநிலங்களின் வழியே எண்ணெய் குழாய்கள் அமைக்கப்படுவதால், நிலத்தின் பயன்பாடு, நிலத்தடி நீர்,  விவசாய உற்பத்தி என பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்ற விவசாயிகளின் குரலுக்கு செவிசாய்க்க மறுத்து, அவர்களின் போராட்டத்தை ஒடுக்க தவெக அரசு கையாண்டிருக்கும் அடக்குமுறை, ஆணவம் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சமாகும். </p><p>கடந்த ஆட்சிக்காலங்களில் இதே திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் நடத்திய தொடர் போரட்டங்களின் விளைவாக  எண்ணெய் குழாய்கள் அமைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தவெக ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில், காவல்துறை உதவியுடன் விளைநிலங்களை வலுக்கட்டாயமாக  பறிக்க முற்படுவது ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் தவெக அரசு இழைக்கும் மிகப்பெரிய துரோகம் ஆகும். </p><p>எனவே, வாழ்வாதாரத்திற்காக போராடும் விவசாயிகளின் பிரதிநிதிகளை  அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கையின் படி சாலையோரமாகவோ அல்லது நெடுஞ்சாலைகளின் ஓரமாகவோ எண்ணெய் குழாய்களை பதிக்கும் வகையில் மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என தவெக அரசையும், அதன் முதலமைச்சர் ஜோசப் விஜய்யையும் வலியுறுத்துகிறேன்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>வழக்கை சட்டப்படி சந்திப்பேன் - காவல் நிலையத்தில் ஆஜரான பின் செந்தில் பாலாஜி பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-will-face-the-case-legally-senthil-balaji-speaks-to-the-press-after-appearing-at-the-police-station</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-will-face-the-case-legally-senthil-balaji-speaks-to-the-press-after-appearing-at-the-police-station#comments</comments><guid isPermaLink="false">d8141734-fd66-4637-8b3c-a65bcb871961</guid><pubDate>Sat, 01 Aug 2026 08:25:21 +0000</pubDate><atom:updated>2026-08-01T08:25:21.086Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,முன்னாள் அமைச்சர்,காவல் நிலையம்,செந்தில் பாலாஜி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/ln4qcoi1/senthil-balaji.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ செந்தில் பாலாஜி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/ln4qcoi1/senthil-balaji.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்ட பிறகு செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: </p><p> சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பான வழக்கில் புகாரிலும் பெயர் இல்லை. எப்.ஐ.ஆரிலும் பெயர் இல்லாத நிலையிலும்  என் பெயர்  சேர்க்கப்பட்டு அதற்காக முன் ஜாமீன் பெற்று காவல் நிலையத்தில் தொடர்ந்து காலையும் மாலையும் கையெழுத்திட்டு வருகிறேன்.  லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதலாக ஒருவழக்கு பதிவு செய்து, நான் தங்கியிருந்த அறைகளிலும் பல்வேறு இடங்களிலும் சோதனை செய்து வழக்கை பதிவு செய்து உள்ள்னர். அந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெறுவதற்காக  மூத்த வழக்கறிஞர்களுடன் கலந்து ஆலோசித்தேன். </p> <p>இதனால், கையெழுத்திடுவதில் இருந்து  விலக்கு அளிக்க வேண்டும் என்று விசாரணை அதிகாரிக்கு கடிதம் அனுப்பியிருந்தேன். சென்னை உயர் நீதிமன்றத்திலும் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.  அதற்கான அனுமதிவேண்டும் என்று தாக்கல் செய்து இருந்தோம்.  உச்ச நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கிய நிலையில், காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறேன்.  </p> <p>இருவர் கைது செய்யப்பட்டதில் ஒருவர் பெயர் எப்.ஐ.ஆரில் உள்ளது. இன்னொருவர் பெயர் எப்.ஐஆரிலேயே இல்லை. அவரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார். சட்டப்படி வழக்கை எதிர்கொள்ள தயாராகி இருக்கிறோம். வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.  ஆக்கப்பூர்வமான அரசு என்றால் மக்களின் அடிப்படை கோரிக்கைகளை , தேவைகளை நிறைவேற்றும் பணிகளில் கவனம் செலுத்தும். ஆனால்,  தவெக அரசு வழக்கு  போடுவதில்  முனைப்பு காட்டி வருகிறது. நீதிமன்றம் இருக்கிறது. எத்தனை வழக்குகள் போட்டாலும் நீதிமன்றத்தில் எதிர்கொண்டு இந்த வழக்குகள் அனைத்தும் பொய்யானவை என்பதை நிரூபித்து காட்டுவோம்” என்றார். </p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-schoolgirl-in-chennai-youth-sentenced-to-20-years-in-prison</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-schoolgirl-in-chennai-youth-sentenced-to-20-years-in-prison#comments</comments><guid isPermaLink="false">fee10307-5dbd-405b-8a48-b56fa90fa168</guid><pubDate>Sat, 01 Aug 2026 08:24:31 +0000</pubDate><atom:updated>2026-08-01T08:24:31.644Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Sexual harassment,வாலிபர்,Verdict,தீர்ப்பு,சிறை தண்டனை,Prison sentence,பாலியல் தொந்தரவு,பள்ளி மாணவி,Schoolgirl,teenager</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/zdo3nx24/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணவிக்கு பாலியல் தொல்லை, வாலிபருக்கு சிறை தண்டனை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/zdo3nx24/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>17 வயது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF">பள்ளி மாணவி</a>க்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81">பாலியல் தொந்தரவு</a> கொடுத்த வழக்கில் தொடர்புடைய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D">வாலிபரு</a>க்கு 20 ஆண்டுகள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">சிறை தண்டனை</a> விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.</p><h2>பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை</h2><p>சென்னை நொளம்பூர் பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியுடன், இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பாண்டியராஜன்(எ) ஜான் ஒபெத் (வயது 24) என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு அந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் பாண்டியராஜன் மீது திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.</p><h2>வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை</h2><p>இந்த வழக்கு விசாரணை சென்னை மகளிர் சிறப்பு கோர்ட்டில் நீதிபதி பிரபாகரன் முன்னிலையில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பாண்டியராஜன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>கனிம வளங்களை எடுத்துச் செல்ல தடை; விவசாய நிலங்களை அழிப்பதற்கு அனுமதியா? - வேல்முருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-transporting-mineral-resources-yet-permission-to-destroy-agricultural-lands-velmurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-transporting-mineral-resources-yet-permission-to-destroy-agricultural-lands-velmurugan#comments</comments><guid isPermaLink="false">cf89b298-0f9c-4a3e-97f9-f0264869c08a</guid><pubDate>Sat, 01 Aug 2026 08:13:36 +0000</pubDate><atom:updated>2026-08-01T08:13:36.638Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Velmurugan,வேல்முருகன்,தமிழக வாழ்வுரிமைக் கட்சி,தி.வேல்முருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/c1xbw1yh/velmurugan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/c1xbw1yh/velmurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ்நாடு அரசே இரட்டை நிலைப்பாடு ஏன்? நெடுஞ்சாலை வழியாக கர்நாடகாவுக்கு எண்ணெய் கொண்டு செல்ல முடியும் என்றால், விவசாய நிலங்களை ஏன் சிதைக்க வேண்டும்? என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>அனுமதிக்க முடியாது</h2><p>தமிழ்நாட்டின் உரிமையான காவிரி நீரைக் கூட திறக்க மறுக்கும் கர்நாடக அரசுக்கு, தமிழ்நாட்டின் வளமான விவசாய நிலங்களை அழித்து எண்ணெய் குழாய் அமைத்துக் கொடுக்கும் அநீதியைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.</p><p>தமிழகத்தின் உரிமைகளை மதிக்காத மாநிலங்களின் தேவைகளுக்காக, தமிழ்நாட்டின் இயற்கை வளங்களையும், விவசாய வளங்களையும் பலியிடும் போக்கு இனியும் தொடர அனுமதிக்க முடியாது.</p><h2>நிலங்களை பாதுகாத்திட வேண்டும்</h2><p>தமிழ்நாடு அரசு, மாநிலத்தின் கனிம வளங்கள் கட்டுப்பாடின்றி பிற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதைத் தடுத்து, தமிழ்நாட்டின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அதே கொள்கை, அதே உறுதி, அதே பாதுகாப்பு விவசாய நிலங்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.</p><p>பிற மாநிலங்களுக்காகத் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழ்நாட்டின் </a>கனிம வளங்களைச் சுரண்ட அனுமதிக்கக் கூடாதென்றால், பிற மாநிலங்களின் தேவைக்காக தமிழ்நாட்டின் விவசாய நிலங்களையும் அழிக்க அனுமதிக்கக் கூடாது. இதுவே சரியானது. கனிம வளங்களைப் பாதுகாக்க சட்டம் இருந்தால், விவசாய நிலங்களைப் பாதுகாக்கவும், அதைவிட வலுவான பாதுகாப்பு இருக்க வேண்டும்.</p><h2>ஏற்றுக்கொள்ள முடியாத அநீதி</h2><p>பாரத் பெட்ரோலியம் நிறுவனம் கோவை மாவட்டம் இருகூரிலிருந்து கர்நாடக மாநிலம் தேவனகுந்தி வரை எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் முத்தூரிலிருந்து கர்நாடக எல்லை வரை நெடுஞ்சாலை ஓரமாக குழாய்கள் பதிக்கப்படுகின்றன. ஆனால், இருகூரிலிருந்து முத்தூர் வரையிலான சுமார் 70 கிலோமீட்டர் தொலைவுக்கு மட்டும் விவசாயிகளின் எதிர்ப்பை மீறி விளைநிலங்களைத் தோண்டி குழாய் பதிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத அநீதியாகும்.</p> <ul><li><p>நெடுஞ்சாலை வழியாகக் கொண்டு செல்ல முடியும் என்றால், விவசாய நிலங்களை ஏன் சிதைக்க வேண்டும்? </p></li><li><p>கர்நாடகாவுக்கு எண்ணெய் கொண்டு செல்ல, தமிழனின் வயல்தான் பாதையா? </p></li><li><p>நாளை எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டால், அந்த நிறுவனம் இழப்பீடு கொடுக்கலாம். ஆனால் நஞ்சான மண்ணை மீண்டும் உயிர்ப்பிக்க முடியுமா? </p></li><li><p>மாசடைந்த நிலத்தடி நீரை மீட்டெடுக்க முடியுமா? </p></li><li><p>பல தலைமுறைகள் உழைத்து உருவாக்கிய விளைநிலத்தை மீண்டும் உருவாக்க முடியுமா?</p></li></ul><h2>நிலங்களை அழிக்கக் கூடாது</h2><p>கேரளாவுக்காக தமிழ்நாட்டின் கனிம வளங்களை எடுத்துச் செல்லக் கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு. அதேபோல், கர்நாடகாவுக்காகத் தமிழ்நாட்டின் விவசாய நிலங்களையும் அழிக்கக் கூடாது என்பதும் எங்கள் உறுதியான கொள்கை.</p><p>எனவே, தமிழ்நாடு அரசு கனிம வளங்களைப் பாதுகாக்க எடுத்துள்ள கொள்கையைப் போலவே, பிற மாநிலங்களின் திட்டங்களுக்காக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழ்நாட்டின் </a>விவசாய நிலங்களை கையகப்படுத்தவோ, சேதப்படுத்தவோ கூடாது என்ற, தெளிவான கொள்கை முடிவை உடனடியாக அறிவிக்க வேண்டும்.</p><h2>அரசு உத்தரவிட வேண்டும்</h2><p>பாரத் பெட்ரோலியம் நிறுவனம் விவசாய நிலங்கள் வழியாக மேற்கொள்ளும் பணிகளை உடனடியாக நிறுத்தி, ஏற்கனவே பயன்படுத்தப்படும் நெடுஞ்சாலை வழித்தடத்திலேயே முழு திட்டத்தையும் மாற்ற தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருமூர்த்தி அணையில் வண்டல் மண் அள்ளும் பணி நிறுத்தம்; அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/silt-removal-work-at-thirumurthy-dam-halted-officials-take-action</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/silt-removal-work-at-thirumurthy-dam-halted-officials-take-action#comments</comments><guid isPermaLink="false">cd28cf93-c647-4d5b-bc55-54ec40bc3103</guid><pubDate>Sat, 01 Aug 2026 08:07:19 +0000</pubDate><atom:updated>2026-08-01T08:07:19.894Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Dam,திருமூர்த்தி அணை,வண்டல் மண்,Alluvial soil</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/yobtu1an/99.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/yobtu1an/99.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>உடுமலை, </p><p>‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக, அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து, திருமூர்த்தி அணையில் வண்டல் மண் அள்ளும் பணியை நிறுத்தினர்.</p><h2>திருமூர்த்தி அணை</h2><p>உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகும் பாலாற்றை தடுத்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">திருமூர்த்தி அணை </a>கட்டப்பட்டது. இந்த அணைக்கு வனப்பகுதியில் உற்பத்தியாகும் ஆறுகள், ஓடைகள் நீராதாரமாக உள்ளன.</p><p>இந்த அணை மூலம் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பழைய ஆயக்கட்டு பாசனத்தில் தளி மற்றும் வளையபாளையம் வாய்க்கால் மூலம் 3 ஆயிரத்து 44 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி பெறுகிறது. மேலும் அணையை ஆதாரமாக கொண்டு கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.</p><h2>வண்டல் மண் எடுக்க அனுமதி</h2><p>இந்த நிலையில் கோடை காலத்தையொட்டி, அணையில் இருந்து வண்டல் மண்ணை எடுப்பதற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் திருமூர்த்தி அணையில் இருந்து வண்டல் மண் அள்ளிக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, கடந்த 27-ந் தேதியில் இருந்து வண்டல் மண் எடுக்கும் பணி தொடங்கியது. ஆனால் ஒரு சிலர் விவசாயிகள், போர்வையில் வண்டல் மண்ணை எடுத்து சென்று விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.</p><h2>மண் அள்ளுவது நிறுத்தம்</h2><p>இது குறித்த செய்தி ‘தினத்தந்தி’யில் பிரசுரமானது. இதன் எதிரொலியாக அதிகாரிகள் திருமூர்த்தி அணைக்கு சென்று, மண் அள்ளிக்கொண்டு வரும் வாகனங்களை சோதனை செய்தனர். இதையடுத்து முறைகேடாக வண்டல்மண் எடுத்து செல்வது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்,  வண்டல் மண் அள்ளுவதை நிறுத்தி வைத்தனர்.</p><p>ஆனாலும் இதுவரையிலும் எடுக்கப்பட்ட வண்டல் மண் விற்பனைக்கு எங்கு கொண்டு செல்லப்பட்டது?அது எவ்வளவு தொகைக்கு விற்பனை செய்யப்பட்டது? யார் யாருக்கு விற்பனை செய்தனர்?என்பது குறித்து விரிவான விசாரணை செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>அதிக விலைக்கு உரம் விற்கும் கடைகளுக்கு விற்பனை தடை: வேளாண்மை அதிகாரி எச்சரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-sales-to-shops-selling-fertilizer-at-high-prices-agriculture-official-warns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-sales-to-shops-selling-fertilizer-at-high-prices-agriculture-official-warns#comments</comments><guid isPermaLink="false">bca4052f-bbf2-4c9f-b12d-4b372be5b611</guid><pubDate>Sat, 01 Aug 2026 07:50:42 +0000</pubDate><atom:updated>2026-08-01T07:50:42.159Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,agriculture,Sale,warning,எச்சரிக்கை,ban,Fertilizer,உரம்,Assistant Director,வேளாண்மை,விற்பனைக்கு தடை,அதிக விலை,high price,உதவி இயக்குநர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/0v5qmd2s/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூத்துக்குடி வேளாண்மை உதவி இயக்குநர் கண்ணன் உரக்கடைகளில் திடீர் ஆய்வு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/0v5qmd2s/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>அரசு நிர்ணயித்த விலையை விட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88">அதிக விலை</a>க்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88">உரங்களை விற்பனை</a> செய்யும் உரக்கடைகளுக்கு உடனடியாக '<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88">விற்பனை</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">தடை</a>' விதிக்கப்படும் என தூத்துக்குடி வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) கண்ணன் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">எச்சரிக்கை</a> விடுத்துள்ளார்.</p><h2>உரக்கடைகளில் திடீர் ஆய்வு</h2><p>தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டாரத்தில் இயங்கி வரும் தனியார் உரக்கடைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உரக்கடைகளில், தூத்துக்குடி வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) கண்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். </p><h2>ஆய்வின் முக்கிய அம்சங்கள், அறிவுறுத்தல்கள்</h2><h3>விலை மற்றும் இருப்பு விவரம்</h3><p>ஆய்வின் போது உரங்களின் இருப்பு நிலை மற்றும் விற்பனை விலைக் குறிப்புகளைக் கேட்டறிந்த அதிகாரி, உரங்களை விவசாயிகளுக்கு அரசு நிர்ணயம் செய்த விலையிலேயே விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். </p><h3>கடும் நடவடிக்கை எச்சரிக்கை</h3><p>அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு உரங்களை விற்பனை செய்யும் உரக்கடைகளுக்கு உடனடியாக 'விற்பனைத் தடை' விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. </p><h3>அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் மட்டுமே அனுமதி</h3><p>அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் பூச்சி மருந்துகள் மற்றும் உரங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். அங்கீகாரம் பெறாத நிறுவனங்களின் பூச்சி மருந்துகள் மற்றும் இயற்கை உரங்களை விற்பனை செய்யத் தடை விதிக்கப்படும் எனத் தெரிவித்து, இதுகுறித்துத் தொடர்ந்து கண்காணிக்க வட்டார உர ஆய்வாளருக்கு அறிவுறுத்தப்பட்டது. </p><h3>யூரியா விற்பனை</h3><p>யூரியா உரத்தினை விவசாயிகளுக்கு அவர்களின் தேவைக்கேற்ப மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என அனைத்துத் தனியார் மற்றும் கூட்டுறவு உரக்கடைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது. </p>]]></content:encoded></item><item><title>கொளத்தூர் தொகுதியில் முறையாக தேர்தல் நடக்கவில்லை என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன: திமுக</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-evidence-that-the-election-in-the-kolathur-constituency-was-not-conducted-properly-dmk</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-evidence-that-the-election-in-the-kolathur-constituency-was-not-conducted-properly-dmk#comments</comments><guid isPermaLink="false">93096fb0-1422-48d0-b0a1-143529f878c9</guid><pubDate>Sat, 01 Aug 2026 07:11:39 +0000</pubDate><atom:updated>2026-08-01T07:11:39.062Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,கொளத்தூர்,Kolathur,ஸ்டாலின்,MK Stalin&apos;</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/wltpgn05/NR-Elango.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ என்.ஆர். இளங்கோ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/wltpgn05/NR-Elango.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கொளத்தூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 14 வாக்குச்சாவடிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தது. இதையடுத்து இவிஎம் எந்திரங்கள் ஆய்வு செய்யும் பணி கடந்த 29 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது.  நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு இருந்தார். </p><h2>ஸ்டாலின் தோல்வி</h2><p>இவரை எதிர்த்து தவெக சார்பில் விஎஸ் பாபு களம் இறங்கினார். தேர்தல் ரிசல்டில் மு.க ஸ்டாலினை, விஎஸ் பாபு 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். தேர்தல் முடிவுகள் வெளியாகி 2 மாதங்களுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில், கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 14 வாக்குச்சாவடிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தது. இதையடுத்து, சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த கொளத்தூர் தொகுதிக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடந்த 29 ஆம் தேதி ஆய்வு செய்யப்பட்டது. </p> <h2>வழக்கு தொடர முடிவு?</h2><p>மாநகராட்சி ஆணையர் சமீரன் முன்னிலையில் இவிஎம் இயந்திரங்கள் திறக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ உள்ளிட்டோரும் தவெக சார்பில் விஎஸ் பாபுவின் பிரதிநிதிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்று இருந்தனர். ஒரு நாளைக்கு 2 வாக்குச்சாவடிகள் வீதம் மொத்தம் 14 வாக்குச்சாவடிகளுக்கு 7 நாட்களாக இந்த வாக்கு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்று 4-வது நாளாக வாக்கு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி நடந்தது.</p><p>இந்நிலையில் திமுக மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறையாக நடைபெறவில்லை என கூறியுள்ளார். மேலும் ஆய்வு செய்த 8 எந்திரங்களில் 3 எந்திரங்கள் சரியாக இல்லை. இது தொடர்பாக மு.க ஸ்டாலினின் அறிவுறைப்படி நீதிமன்றத்தை நாடுவோம்” என்று கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ரேஷன் கடைகளில் நாளை சிறப்பு பயோமெட்ரிக் முகாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-biometric-camp-at-ration-shops-tomorrow-thoothukudi-collector-informs</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-biometric-camp-at-ration-shops-tomorrow-thoothukudi-collector-informs#comments</comments><guid isPermaLink="false">104385d4-7a10-404a-aa5a-701f614a20cb</guid><pubDate>Sat, 01 Aug 2026 07:07:16 +0000</pubDate><atom:updated>2026-08-01T07:07:16.149Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Collector information,கலெக்டர் தகவல்,Special camp,சிறப்பு முகாம்,ரேஷன் கடைகள்,ration shops</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/se98lq1r/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரேஷன் கடைகளில் சிறப்பு பயோமெட்ரிக் முகாம்; தூத்துக்குடி கலெக்டர் தகவல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/se98lq1r/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டத்தில் உள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88">ரேஷன் கடை</a>களில் நாளை சிறப்பு பயோமெட்ரிக்  <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D">முகாம் </a>நடைபெற உள்ளது என்று மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.</p><p>தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் (ரேஷன் கடைகள்), குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் தங்களது கைரேகை மற்றும் கண்கருவிழி (Biometric) பதிவுகளை மேற்கொள்ள சிறப்பு முகாம் நாளை (ஆகஸ்ட் 2) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. </p><h2>கைரேகை பதிவு</h2><p>தூத்துக்குடி மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்று வரும் குடும்ப அட்டைதாரர்களில், இதுவரையிலும் கைரேகை அல்லது கண்கருவிழி பதிவு செய்யாத உறுப்பினர்கள் அனைவரும் தங்களது பதிவுகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><h2>அருகாமையிலுள்ள ரேஷன் கடைகளில் பதிவு செய்யலாம்</h2><p>வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் தங்கிப் பணியாற்றி வருபவர்கள், மற்றும் பள்ளி, கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் தாங்கள் தற்போது வசிக்கும் ஊர் அல்லது மாவட்டத்தில் உள்ள அருகாமையிலுள்ள நியாயவிலை கடைகளுக்கே நேரில் சென்று தங்களது ரேகையைப் பதிவு செய்து கொள்ளலாம்.</p><h2>பொதுமக்கள் ஒத்துழைப்பு</h2><p>பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரசின் சலுகைகளைத் தொடர்ந்து பெறவும், இந்தச் சிறப்பு வாய்ப்பினைப் பயன்படுத்தி தங்களது விவரங்களைப் பதிவு செய்யவும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இரவில் மதுப்பிரியர்கள் கூடாரம்: திருப்பூர் மார்க்கெட் கடைகள் தகடுகளால் அடைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/liquor-enthusiasts-camp-out-at-night-tiruppur-market-shops-barricaded-with-metal-sheets</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/liquor-enthusiasts-camp-out-at-night-tiruppur-market-shops-barricaded-with-metal-sheets#comments</comments><guid isPermaLink="false">cfae825a-874a-4af4-93a6-2dc3f496a660</guid><pubDate>Sat, 01 Aug 2026 07:05:08 +0000</pubDate><atom:updated>2026-08-01T07:05:08.790Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்,திருப்பூர் மார்க்கெட்,Tiruppur market</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/8hltuwmq/Untitled-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/8hltuwmq/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><p>திருப்பூர் மத்திய பஸ் நிலையம் எதிரே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தினசரி மார்க்கெட் புதிதாக கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் இன்னும் திறப்பு விழா காணப்படாமல் உள்ளது. இந்த கடைகளை ஏலம் விடுவதில் குளறுபடி நிலவுவதால் திறப்பு விழா தள்ளிப்போவதாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. </p><h2>தினத்தந்தி செய்தி எதிரொலி</h2><p>இதன்காரணமாக இரவு நேரங்களில் மதுப்பிரியர்களின் கூடாரமாக இந்த தினசரி மார்க்கெட் கடைகள் மாறிப்போனது. மார்க்கெட்டின் முன்புறம் உள்ள கடைகளுக்கு கதவுகள் எதுவும் இல்லாததால் இரவு நேரங்களில் சாலையோரவாசிகள், மதுப்பிரியர்கள் இந்த கடைகளுக்குள் சென்று தங்குவது, தகாத செயல்களில் ஈடுபடுவது அதிகரித்தது. </p><p>எனவே இதுகுறித்து `<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தினத்தந்தி'யில் </a>செய்தி பிரசுரமானது. இதன் எதிரொலியாக தினசரி மார்க்கெட் முன்புறம் உள்ள கடைகளில் இரும்பு தகடுகளை கொண்டு யாரும் உள்ளே செல்லாத வகையில் அடைக்கப்பட்டுள்ளன. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கையை மக்கள் பாராட்டினர்.</p>]]></content:encoded></item><item><title>தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்துத் தனிமைப்பட்டு நிற்கிறார் முதல்-அமைச்சர் விஜய் - மு.க. ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-is-standing-in-isolation-thinking-of-doing-a-solo-act-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-is-standing-in-isolation-thinking-of-doing-a-solo-act-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">4600ea57-edfe-4536-8bdf-b885c729d477</guid><pubDate>Sat, 01 Aug 2026 06:58:06 +0000</pubDate><atom:updated>2026-08-01T06:58:06.775Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க. ஸ்டாலின்,M.K. Stalin,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/ppte9gul/stalin-vijay.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/ppte9gul/stalin-vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயிகள் சங்கத்தினர் எல்லோரும் <a href="https://www.dailythanthi.com/topic/megadadu-dam">மேகதாது அணை</a> விவகாரத்தில் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனளிக்காது என்று எச்சரித்தோம். கர்நாடகம் செல்ல வேண்டாம் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு கோரிக்கை வைத்தோம்.</p><p>தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரமுடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்ட மாநிலத்துடன் சட்டரீதியாகத்தான் போராட வேண்டும் என்பதே கடந்தகாலத்தில் நாம் பெற்ற படிப்பினை. உபரிநீரை வெளியேற்றும் வடிகால் பகுதியாகத்தான் அவர்கள் தமிழ்நாட்டைப் பார்க்கிறார்கள்.</p><h2>கர்நாடகம் செல்வதற்கு தூது</h2><p>ஆனால், தான் கர்நாடகம் சென்றால் காவிரியைக் கையோடு எடுத்துவந்து விடலாம் என்று தமிழ்நாட்டின் புதிய முதல்-அமைச்சர் நினைத்தாரோ என்னவோ... நமது எச்சரிக்கைகளை மீறி கர்நாடகம் செல்வதற்கு தூது அனுப்பினார்.  தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடச் சொல்லி CWMA உத்தரவிட்டதும் "நீங்கள் இப்போதைக்கு வரவேண்டாம்" என்று கேட்டைச் சாத்திவிட்டார்கள்.</p><p>இதுபோன்ற சூழ்நிலைகளை முன்பே கணித்துதான், தமிழ்நாட்டிலுள்ள அனைவரும் எச்சரித்தோம். இனியேனும் தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சினையான காவிரி விவகாரத்தை முதல்-அமைச்சர் ஆலோசனைகளோடு அணுக வேண்டும்.</p><h2>அனைத்துக் கட்சிக் கூட்டம்</h2><p>நமது முதல்-அமைச்சரை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு, கர்நாடகத்தில் ஆகஸ்ட் 2 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அம்மாநில முதல்-மந்திரி அழைப்பு விடுத்து அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதைத் தனது செயலால் உணர்த்திவிட்டார்.</p><p>முதல்-அமைச்சர் விஜய் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது எப்போது? முடியுமா முடியாதா?</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>காவிரியில் நீர் பெற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர தமிழகம் முடிவு: அன்புமணி வரவேற்பு!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-decides-to-move-the-supreme-court-to-secure-cauvery-water-anbumani-welcomes-the-move</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-decides-to-move-the-supreme-court-to-secure-cauvery-water-anbumani-welcomes-the-move#comments</comments><guid isPermaLink="false">f33aed63-4642-462e-af25-3ad1e373c151</guid><pubDate>Sat, 01 Aug 2026 06:36:04 +0000</pubDate><atom:updated>2026-08-01T06:36:04.308Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK,அன்புமணி,Anbumani,காவிரி விவகாரம்,மேகதாது அணை விவகாரம்,மேகதாது அணை பிரச்சினை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/5t945cw9/anbumani.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/5t945cw9/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காவிரியில் நீர் பெற உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழகம் முடிவு தாமதமாக எடுக்கப்பட்டாலும் சரியான நடவடிக்கை! என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;- </p><h2>சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு</h2><p>காவிரியில் தமிழ்நாட்டுக்கான தண்ணீரைப் பெறுவதற்காக சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடரப்போவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிராக நடைபெறவிருந்த இரு தரப்பு பேச்சுகள்ளுக்கான கதவுகளை கர்நாடக அரசு மூடியதற்கு பிறகு மிகவும் தாமதமாகத் தான் இந்த முடிவை தமிழக அரசு எடுத்திருக்கிறது என்றாலும், காவிரி சிக்கலில் இது தான் சரியான நடவடிக்கையாகும்.</p><p>காவிரி நீர்ப் பகிர்வு, மேகதாது அணை சிக்கல் ஆகியவை குறித்து கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரை  தமிழக முதல்-அமைச்சர் விஜய் நாளை மறுநாள் பெங்களூரில் சந்தித்து பேசுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், கர்நாடகத்திலும் வெடித்துள்ள போராட்டங்களைக் காரணம் காட்டி, இரு தரப்பு பேச்சுகளுக்கு உகந்த சூழல் நிலவவில்லை என்று கர்நாடக முதல்-மந்திரி நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து அங்கு செல்லும் திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் கைவிட்டிருப்பதாக அரசு அறிவித்துள்ளது. அதற்கு மாறாக, காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரை உடனடியாக திறந்து விடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடரப் போவதாக சட்ட அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்திருக்கிறார். ஆகஸ்ட் ஐந்தாம் தேதிக்குப் பிறகு இந்த வழக்கு தொடரப்படும் என்று தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><h2>சட்டப்படி எதிர்கொள்வது சரி</h2><p>தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு மறுக்கும் சிக்கலாக இருந்தாலும், மேகதாது அணையை கட்ட கர்நாடகம் சதி செய்யும் சிக்கலாக இருந்தாலும் அதை சட்டப்படியாக எதிர்கொள்வது தான் சரியானதாக இருக்கும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால், அதற்கு மாறாக இந்த விவகாரத்தில் தவறான பாதையில் பயணித்த தமிழக அரசு, இப்போதாவது சரியான பாதைக்கு திரும்பி இருப்பது மனநிறைவு அளிக்கிறது. இனிவரும் காலத்திலும் கூட காவிரி நீர்ப்பகிர்வு, மேகதாது விவகாரம்  ஆகியவற்றில் கர்நாடக அரசுடன் எந்த வகையிலும் பேசுவதில்லை என்ற கொள்கை முடிவை தமிழக அரசு எடுக்க வேண்டும்.</p><p>தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய் அரசியலுக்கு புதிது என்பதால், புதுமையாக எதையாவது செய்து தமிழகத்திற்கு தண்ணீரை பெற வேண்டும் என்று நினைத்திருக்கலாம். ஆனால், கர்நாடகத்தில் எந்தக் கட்சியின் ஆட்சி நடந்தாலும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க அம்மாநில முதல்-மந்திரிகள் முன்வர மாட்டார்கள் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு 205 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும். 1995-ஆம் ஆண்டில் கடுமையான வறட்சி நிலவிய சூழலில் சுப்ரீம் கோர்ட்டே ஆணையிட்ட பிறகும் கூட தமிழகத்திற்கு கர்நாடகம் தண்ணீர் வழங்கவில்லை.  அதன்பின் இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு ஆணையிட்ட பிறகு, அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் இது தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, கர்நாடக முதல்-மந்திரி தேவகவுடா ஆகியோரை அழைத்து பேச்சு நடத்தினார். அதன்பயனாக நடுவர் மன்றம் ஆணையிட்ட 11 டி.எம்.சிக்கு பதிலாக 6 டிஎம்சி நீரை மட்டும் கர்நாடகம் திறந்து விட்டது.</p><h2>கோர்ட்டு அவமதிப்பு</h2><p>அதன்பின், 2002-ஆம் ஆண்டில் காவிரி பாசன மாவட்டங்களில் உழவர்கள் எலிக்கறி சாப்பிடும் அளவுக்கு கடுமையான வறட்சி நிலவியது. அப்போது சம்பா பயிர்களைக் காப்பாற்றுவதற்காக தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடகத்திற்கு பிரதமர் தலைமையிலான காவிரி நீர் ஆணையம் ஆணையிட்டது. ஆனால், கர்நாடகம் தண்ணீர் திறக்க மறுத்து விட்ட நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தமிழகத்திற்கு  தினமும் 0.8 டி.எம்.சி தண்ணீர் திறக்க ஆணையிட்டது. ஆனால், அதையும் மதிக்காத கர்நாடக காங்கிரஸ் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா தண்ணீர்  திறக்க முடியாது என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தமிழகம் தொடர்ந்தது.</p><p>அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடாவிட்டால், கடுமையான விளைவுகள் ஏற்படும்; கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் சிறை தண்டனை வழங்கவும் தயங்க மாட்டோம் என்று 26.10.2002-ஆம் நாள் ஆணையிட்டது. அதைத் தொடர்ந்து தான் கர்நாடகம் தமிழகத்திற்கு  காவிரியில் தண்ணீர் திறந்து விட்டது. அதன்பிறகும் எஸ்.எம். கிருஷ்ணா மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்காமல் நிலுவையில் வைத்துக் கொண்டே நவம்பர் 15-ஆம் தேதி வரை தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க சுப்ரீம் கோர்ட்டு ஆணையிட்டது. மிதவாதிகள் என்று அறியப்பட்ட எஸ்.எம்.கிருஷ்ணாவும்,  எச்.டி.தேவகவுடாவுமே சுப்ரீம் கோர்ட்டு ஆணையிட்ட பிறகும் கூட தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முன்வராத நிலையில், காவிரி சிக்கலை தீவிரமாக்கியே அடுத்த தேர்தலிலும் முதல்-மந்திரியாக பதவியைத் தக்க வைத்துக் கொள்ளத் துடிக்கும் டி.கே.சிவக்குமார் கேட்டவுடன் காவிரியில் தண்ணீர் திறந்து விடுவார் என்று எதிர்பார்ப்பது அரசியல் அறியாமையாகவே இருக்கும். இந்த அணுகுமுறையை அரசு கைவிட வேண்டும்.</p><h2>தடைவிதிக்க வேண்டும்</h2><p>காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆணைப்படி தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட ஆணையிடும்படி சுப்ரீம் கோர்ட்டில் விரைந்து வழக்கு தொடர்ந்து நீரைப் பெற வேண்டும். அதுமட்டுமின்றி, மேகதாது அணை விவகாரத்திலும் மத்திய அரசும், கர்நாடக அரசும் செய்யும் கூட்டுச் சதியை உரிய தரவுகளுடன் சுப்ரீம் கோர்ட்டின் கவனத்திற்கு கொண்டு சென்று மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க தடைவிதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>