<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 07 Aug 2026 21:30:26 +0000</lastBuildDate><item><title>நெல்லையில் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/11-kg-of-cannabis-seized-in-paddy-field-youth-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/11-kg-of-cannabis-seized-in-paddy-field-youth-arrested#comments</comments><guid isPermaLink="false">a91bfc02-13cd-4786-a32d-75adc370b1b5</guid><pubDate>Fri, 07 Aug 2026 16:26:48 +0000</pubDate><atom:updated>2026-08-07T16:26:48.105Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,Tirunelveli,திருநெல்வேலி,Ganja,கஞ்சா,Youth arrested,வாலிபர் கைது,Seizure,பறிமுதல்,patrol,ரோந்து பணி,போலீசார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/g45j6wji/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கஞ்சா பறிமுதல், வாலிபர் கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/g45j6wji/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டம், சீவலப்பேரி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்டு மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 1 கிலோ 180 கிராம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">கஞ்சா பறிமுதல்</a> செய்த போலீசார், ஒரு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">வாலிபரை கைது</a> செய்தனர்.</p><h2>போலீசார் ரோந்து பணி</h2><p>திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொட்டல்நகர் பேருந்து நிறுத்தம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாரிஸ்(எ) நவீன் (வயது 21) என்பவரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். </p><p>அப்போது அந்த வாலிபர் அரசால் தடை செய்யப்பட்டு மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 1 கிலோ 180 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.</p><h2>1 கிலோ 180 கிராம் கஞ்சா பறிமுதல், வாலிபர் கைது</h2><p>இதுகுறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, அந்த வாலிபரை கைது செய்து, அவரிடமிருந்து 1 கிலோ 180 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த வாலிபரை நீதிமன்ற காவலில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>துணை ஜனாதிபதி வருகை: ஆகஸ்ட் 17-ல் திருவாரூரில் டிரோன் பறக்க தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vice-presidents-visit-drone-flying-banned-in-thiruvarur-on-august-17</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vice-presidents-visit-drone-flying-banned-in-thiruvarur-on-august-17#comments</comments><guid isPermaLink="false">bf89ab32-0d64-4fd4-857d-f59ed941a518</guid><pubDate>Fri, 07 Aug 2026 15:57:36 +0000</pubDate><atom:updated>2026-08-07T15:57:36.352Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vice President,Thiruvarur,திருவாரூர்,துணை ஜனாதிபதி,டிரோன் பறக்க தடை,ban on flying drones,வருகை,visit</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/t5mklwsc/77.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/t5mklwsc/77.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவாரூர், </p><p>திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் (CUTN) பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக துணை ஜனாதிபதி வருகைதரவுள்ளதால் அன்றைய தினம் திருவாரூர் மாவட்டம் முழுவதும் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><h2>துணை ஜனாதிபதி பங்கேற்பு</h2><p>திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வருகிற 17-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. இந்த விழாவில் துணை ஜனாதிபதி சி.பி. ராதா கிருஷ்ணன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF">துணை ஜனாதிபதி</a> சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்பதையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் வருகிற 17-ந் தேதி அன்று முழுவதும் டிரோன் கேமரா பறந்திட அல்லது செயல்படுத்திட தடை விதிக்கப்பட்டுள்ளது.  பாதுகாப்பு விதிமுறைகளை மீறி யாராவது டிரோன்களைப் பயன்படுத்தினால், அவர்கள் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தேனியில் வனப்பட்டா, நிலப்பட்டா வழங்க சிறப்பு கிராமசபை கூட்டங்கள்- பெ.சண்முகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-grama-sabha-meetings-for-forest-and-land-patta-in-theni</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-grama-sabha-meetings-for-forest-and-land-patta-in-theni#comments</comments><guid isPermaLink="false">5e1190fc-1863-4c2a-9535-41911d89fa3c</guid><pubDate>Fri, 07 Aug 2026 15:55:34 +0000</pubDate><atom:updated>2026-08-07T15:55:34.425Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Theni,தேனி,பெ.சண்முகம்,P. Shanmugam,Gram sabha meetings,ஆர்ப்பாட்டம் protest,கிராமசபை கூட்டங்கள்</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/adb3gn9q/shunmugam.jpg" width="768"><media:title type="html"><![CDATA[ பெ.சண்முகம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/adb3gn9q/shunmugam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தேனியில் வனப்பட்டா, நிலப்பட்டா வழங்க சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும் இது தொடர்பாக, தமிழ்நாடு மாநில செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">பெ.சண்முகம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தேனி மாவட்டத்தில் வன உரிமைச் சட்டம் தொடர்பான பணிகள் முடியும் வரை யாரையும் வெளியேற்ற மாட்டோம் - மாவட்ட கலெக்டர் உறுதியளிப்பு.</p> <h2>பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது</h2><p>தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்ற பெருந்திரள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">ஆர்ப்பாட்டம்</a> நடைபெற்றது. மக்களின் முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது</p><h2>மனு</h2><p>•உச்ச நீதிமன்றத்தில் மனு: வனப்பகுதி தொடர்பான தீர்ப்பை மறுசீராவு செய்ய தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் விரைவில் மனுத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.</p> <h2>கிராமசபை</h2><p>•வனப்பட்டா &amp; நிலப்பட்டா வழங்க நடவடிக்கை: வனவுரிமைச் சட்டம் 2006-இன் கீழ் மேகமலை, வருசநாடு உட்பட தேனி மாவட்டம் முழுவதும் உரிமையுள்ள மக்களுக்கு வனப்பட்டா மற்றும் நிலப்பட்டா வழங்க சிறப்பு கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படும்.</p> <h2> தடை</h2><p>•வெளியேற்ற தடை: பட்டா வழங்கும் பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை யாரையும் வீடுகளிலிருந்தோ அல்லது நிலங்களிலிருந்தோ வெளியேற்ற மாட்டோம் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.</p><h2>கால்நடை மேய்ச்சல்</h2><p>•கால்நடை மேய்ச்சல் உரிமை: தேனி மாவட்டத்திலுள்ள கால்நடைகள் மேய்ச்சலுக்கு எவ்விதத் தடையும் இருக்காது. மேலும், மேய்ச்சல் நிலங்கள் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்படும்.</p><h2> தீர்வு</h2><p>•வனத்துறை தொந்தரவுகளுக்குத் தீர்வு: விவசாயம், போக்குவரத்து போன்றவற்றில் வனத்துறையினரால் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்க, அடுத்த 1 வாரத்திற்குள் வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் தனிக்கூட்டம் நடத்தப்பட்டுத் தீர்வு காணப்படும்.</p><h2>போராட்டம் நிறைவு பெற்றது</h2><p>நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் வனக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்ததை தொடர்ந்து போராட்டம் நிறைவு பெற்றது.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் தீக்குளித்த பக்தரால் பரபரப்பு - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/devotee-self-immolation-thiruchendur-temple-complex-intensive-care</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/devotee-self-immolation-thiruchendur-temple-complex-intensive-care#comments</comments><guid isPermaLink="false">9b2eb04c-891b-4f93-a670-1186507f3a5e</guid><pubDate>Fri, 07 Aug 2026 15:40:41 +0000</pubDate><atom:updated>2026-08-07T15:40:41.876Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்செந்தூர்,Tiruchendur temple,திருச்செந்தூர் கோவில்,தீக்குளிப்பு,Tiruchendhur</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/ehxp7rpj/Untitled-10.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருச்செந்தூர் கோவில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/ehxp7rpj/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்செந்தூர்,</p><p>திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் பக்தர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.</p><h2>தீக்குளித்த பக்தர்</h2><p>திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வார விடுமுறை நாட்கள் மற்றும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இன்று காலையில் வழக்கம்போல் கோவிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.</p><p>அப்போது கோவில் வளாகத்தில் சண்முகவிலாச மண்டபம் முன்பாக நின்ற பக்தர் ஒருவர் திடீரென்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். அதிர்ச்சி அடைந்த சக பக்தர்கள் மற்றும் போலீசார் விரைந்து சென்று, தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து அந்த நபரைக் காப்பாற்றினர். பின்னர் அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.</p><h2>மனநலம் பாதிக்கப்பட்டவர்</h2><p>இதுகுறித்து திருச்செந்தூர் கோவில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கோவில் வளாகத்தில் தீக்குளித்தவர் கழுகுமலை அருகே கஸ்தூரிரங்கபுரத்தைச் சேர்ந்த குருசாமி மகன் சுரேஷ் (38 வயது) என்பது தெரியவந்தது. கூலி தொழிலாளியான இவருக்கு திருமணமாகி விட்டது. இவருக்கு குழந்தை இல்லை.</p><p>கடந்த சில மாதங்களாக சற்று மனநலம் பாதிக்கப்பட்ட சுரேஷ் திருச்செந்தூர் கோவில் பகுதியில் சுற்றி திரிந்ததாகவும், அவர் திடீரென்று தீக்குளித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் பக்தர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை ஐகோர்ட்டுக்கு 15 புதிய நீதிபதிகள் நியமனம்-ஜனாதிபதி உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/appointment-of-15-new-judges-to-the-madras-high-court-presidents-order</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/appointment-of-15-new-judges-to-the-madras-high-court-presidents-order#comments</comments><guid isPermaLink="false">e4324891-cbb1-42ce-9761-acd302068dec</guid><pubDate>Fri, 07 Aug 2026 15:22:41 +0000</pubDate><atom:updated>2026-08-07T15:22:41.559Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜனாதிபதி,நீதிபதிகள்,சென்னை ஐகோர்ட்டு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/mwp1tqik/High-court.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/mwp1tqik/High-court.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை ஐகோர்ட்டில் மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. இதில் 51 நீதிபதிகள் உள்ளனர். 24 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு மாவட்ட நீதிபதிகள், வக்கீல்கள் என்று 19 பேருடைய பெயரை சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் ஏற்றுக் கொண்டது. அந்த பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இந்த பரிந்துரை பரிசீலித்த மத்திய அரசு, 15 பேரை ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்டு ஜனாதிபதி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.</p><p>அதன்படி, ஐகோர்ட்டுக்கு  ஐந்து வழக்கறிஞர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.</p> <p>அதன்படி, ஐகோர்ட்டுக்கு  <strong>ஐந்து வழக்கறிஞர்கள்</strong> நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><p>கோவிந்தராஜன் கிருஷ்ணசாமி</p><p> ரஜ்னிஷ் பதியில்</p><p>ரமேஷ் நடராஜன்</p><p>ஜிகே முத்துக்குமார்</p><p>ராமகிருஷ்ணா ராஜேஷ் விவேகானந்தன் </p><p>மேலும் மூன்று வழக்கறிஞர்களும் மற்றும் ஏழு நீதித்துறை அதிகாரிகள் சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.</p><p>ரவீகுமார் சங்கரநாராயணன் </p><p> திலீப் குமார் நடராஜன் </p><p>எல்லப்பன் மனோகரன்</p><p>முருகன்( நீதித்துறை அதிகாரி)</p><p>சுமதி </p><p>அல்லி </p><p> திருமகள்</p><p>சண்முகன் கார்கிகேயன்</p><p>முருகேசன் பாலுசாமி </p><p>குணசேகரன் </p>]]></content:encoded></item><item><title>பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இலவச வை-பை: சேவை நிறுவனங்களுடன் சென்னை மாநகராட்சி ஆலோசனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/free-wi-fi-in-public-places-chennai-corporation-consults-with-service-companies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/free-wi-fi-in-public-places-chennai-corporation-consults-with-service-companies#comments</comments><guid isPermaLink="false">98430926-cd2c-4646-b800-aba603d069b6</guid><pubDate>Fri, 07 Aug 2026 15:17:04 +0000</pubDate><atom:updated>2026-08-07T15:17:04.412Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Corporation,சென்னை மாநகராட்சி,ஆலோசனை,Free Wi-Fi,இலவச வை-பை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/jl72lrlf/chennai-corporation.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/jl72lrlf/chennai-corporation.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் அவர்களின் உத்தரவின்படி, சென்னையில் பொது மக்கள் அதிகளவில் வந்து செல்லும் பகுதிகளில் மக்களுக்கு இலவச வை-பை (WIFI) குறித்து இணைய சேவை வழங்குநர்களுடனான ஆலோசணைக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், ஐ.ஏ.எஸ்., தலைமையில் இன்று நடைபெற்றது. இது குறித்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">சென்னை மாநகராட்சி</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், திருவொற்றியூர் கடற்கரைகள், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட மக்கள் அதிகளவில் வந்து செல்லும் பகுதிகளில் மக்களுக்கு இலவச வை-பை (WIFI) வசதி ஏற்படுத்துவது குறித்து இணைய சேவை வழங்குநர்களுடனான (Internet Service Providers) ஆலோசணைக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், ஐ.ஏ.எஸ்., தலைமையில் இன்று (07.08.2026) ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.</p><p>இக்கூட்டத்தில் மாநகராட்சி இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன், ஐ.ஏ.எஸ்., மற்றும் ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio), ஹாத்வே (Hathway) மற்றும் ஏசிடி (ACT) ஆகிய இணைய சேவை வழங்குநர்கள், மாநகராட்சி தலைமைப் பொறியாளர் பாலமுரளி, கண்காணிப்புப் பொறியாளர் இளங்கோ உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p><h2>இலவச வை-பை</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் மக்களுக்கு எளிதாக சேவைகளை வழங்கும் வகையிலும் திட்டமிட்டு செயலாற்றி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, சென்னையில் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரைப் பகுதிகள், திருவான்மியூர், திருவொற்றியூர் கடற்கரைப் பகுதிகளிலும், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட மக்கள் அதிகளவில் வந்து செல்லும் பகுதிகளில் மக்கள் தங்குதடையின்றி இணைய பயன்பாட்டினை மேற்கொள்ளும் வகையில் உயர்தரத்தில் இலவச வை-பை (WIFI) வசதியினை ஏற்படுத்திட இதற்கான சேவைகளை வழங்கும் நிறுவனங்களான ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio), ஹாத்வே (Hathway) மற்றும் ஏசிடி (ACT) ஆகிய இணைய சேவை வழங்குநர்களுடன் மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டு அறிவுரைகள் வழங்கினார்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தேசிய கைத்தறி தினம்- பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/premalatha-vijayakanth-message-on-national-handloom-day</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/premalatha-vijayakanth-message-on-national-handloom-day#comments</comments><guid isPermaLink="false">58cd70e8-95b9-4a74-8869-d2b51420623d</guid><pubDate>Fri, 07 Aug 2026 15:08:20 +0000</pubDate><atom:updated>2026-08-07T15:08:20.707Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Greetings,வாழ்த்து,Premalatha Vijayakanth,பிரேமலதா விஜயகாந்த்,தேசிய கைத்தறி தினம்,National Handloom Day</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/l0on8805/premalatha.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பிரேமலதா விஜயகாந்த்]]></media:title><media:description type="html"><![CDATA[ தேசிய கைத்தறி தினம்- பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/l0on8805/premalatha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">தேசிய கைத்தறி தினத்தை</a> முன்னிட்டு, பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து. இது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D">பிரேமலதா விஜயகாந்த்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p> <h2>தேசிய கைத்தறி தினம்</h2><p>தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, மக்கள் அனைவரும் கைத்தறி மற்றும் கதர் ஆடைகளை அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். விஜயகாந்த் தனது வாழ்நாள் முழுவதும் கைத்தறி ஆடைகளை அணிவதை ஒரு கடமையாக கொண்டிருந்தார். ஒரு மனிதனுக்கு இரு கண்கள் எப்படி முக்கியமோ, அதுபோல் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு விவசாயமும் நெசவும் இரு கண்கள் என்று விஜயகாந்த்  கூறுவார்.</p><h2>எளிமையான வாழ்க்கை</h2><p>2003ஆம் ஆண்டு நெசவாளர்களுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, ஒரு கட்சியினர் கஞ்சி தொட்டி திறந்தனர்; மற்றொரு கட்சியினர் பிரியாணி வழங்கினர். ஆனால் விஜயகாந்த், நெசவாளர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன், ரூ.1 கோடிக்கும் மேல் நிதியை வழங்கினார். மேலும், நெசவாளர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக துணிகளை வழங்கினார். அவரது எளிமையான வாழ்க்கை முறை அனைவருக்கும் முன்மாதிரியாகும்.</p><h2>கோடைக்காலம் ஆடை</h2><p>மகாத்மா காந்தியடிகள் சுதேசி இயக்கத்தின் அடையாளமாக கதர் ஆடையை முன்னிறுத்தினார். அந்நிய ஆடைகளை புறக்கணித்து, இந்தியாவில் தயாரிக்கப்படும் கைத்தறி மற்றும் கதர் ஆடைகளை அணிவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தையும், சுதந்திர போராட்டத்தையும் வலுப்படுத்தினார். கைத்தறி என்பது ஒரு துணி மட்டுமல்ல; அது தன்னிறைவு, தேசப்பற்று மற்றும் இந்திய பாரம்பரியத்தின் சின்னமாகும். கைத்தறி ஆடைகள் கோடைக்காலத்தில் அணிவதற்கு மிகவும் வசதியானவை.</p><h2>இயற்கை இழைகள்</h2><p>இயற்கை இழைகளால் நெய்யப்படுவதால் இவை உடலுக்குக் குளிர்ச்சியையும், ஆரோக்கியமான உணர்வையும் அளிக்கின்றன. மேலும், கைத்தறி ஆடைகளை பயன்படுத்துவதன் மூலம் நம் நெசவாளர்களின் வாழ்வாதாரத்திற்கும் ஆதரவாக இருக்க முடியும். எனவே, தேசிய கைத்தறி தினமான இன்று மட்டுமல்லாமல், ஆண்டின் அனைத்து நாட்களிலும் கைத்தறி மற்றும் கதர் ஆடைகளை தொடர்ந்து பயன்படுத்துவோம்.</p> <h2> பாரம்பரியத்தை பாதுகாப்போம்</h2><p>இந்தியப் பாரம்பரியத்தைப் பாதுகாப்போம்; உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிப்போம்; நம் நெசவாளர்களின் உழைப்பை மதிப்போம். தமிழ்நாட்டின் கைத்தறி நெசவாளர்கள், கைத்தறி இணைத் தொழிலாளர்கள் அனைவருக்கும் தேமுதிக சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறோம். கதர் ஆடைகள் அணிவோம், கைத்தறியை காப்போம்; இந்தியப் பாரம்பரியத்தை போற்றுவோம்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>தொகுதி சீரமைப்பு மசோதா: பாஜகவின் திட்டத்தை முறியடிக்க வேண்டும்- கி.வீரமணி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/constituency-delimitation-bill-k-veeramani-urges-thwarting-bjps-plan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/constituency-delimitation-bill-k-veeramani-urges-thwarting-bjps-plan#comments</comments><guid isPermaLink="false">8bc1a87f-05ac-4205-be99-03b5d50149b4</guid><pubDate>Fri, 07 Aug 2026 14:57:59 +0000</pubDate><atom:updated>2026-08-07T14:57:59.125Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,கி.வீரமணி,தொகுதி மறுசீரமைப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/hq5a0owq/k-veera.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/hq5a0owq/k-veera.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,   </p><p>திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>நாடாளுமன்றத்தில் தொகுதி சீரமைப்பு மற்றும் தொகுதி எண்ணிக்கையை அதிகரிக்கும் மசோதாக்களை எதிர்க்கட்சிகள் உறுதியாக எதிர்க்க வேண்டும். ஜனநாயகத்தின் எதிர்காலத்தையும், உரிமையையும் தீர்மானிக்கும் மிக முக்கியமான பிரச்சினை இது. கடந்த ஏப்ரல் மாதம் கொண்டுவரப்பட்ட இந்த மசோதா, அப்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரின் முயற்சியால் மக்களவையில் 3-ல் 2 பங்கு பெரும்பான்மை கிடைக்காமல் தோல்வியடைந்தது.</p> <p>தற்போது மீண்டும் அந்த முயற்சியை மத்திய பா.ஜனதா அரசு மேற்கொண்டு வருகிறது. தொகுதி எண்ணிக்கையை உயர்த்துவது அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பை மாற்றும் ஆபத்து கொண்டது. இந்த சூழ்ச்சியை எதிர்க்கட்சிகள் உணர்ந்து, வேற்றுமைகளை மறந்து ஒன்றிணைய வேண்டும். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவையும், தொகுதி சீரமைப்பு மசோதாவையும் முடிச்சுப்போட்டு அரசியல் செய்யப் பார்க்கும் பா.ஜனதாவின் திட்டத்தை முறியடிக்க வேண்டும்.</p><p>ஏற்கெனவே மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில், அதை உடனே செயல்படுத்தாமல் தொகுதி மறுவரையறைக்குக் காத்திருப்பது பா.ஜனதாவின் உள்நோக்கம். ஆரிய நரித்தனமான இந்த மாயவலையில் சிக்காமல், தொகுதி சீரமைப்பு மசோதாவை ஏற்கக்கூடாது என்பதில் தமிழ்நாட்டுக் கட்சிகள் தெளிவான நிலைப்பாட்டுடன் இருக்க வேண்டும். அரசியல் பிழை இழைக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் எந்தச் சூழலிலும் சறுக்கிவிடக் கூடாது. இது எதிர்காலத் தலைமுறை சார்ந்த உரிமையைக் காக்கும் போராட்டமாகும் என்பதால், அனைவரும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: கிணற்றில் மூழ்கி முதியவர் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-elderly-man-dies-after-drowning-in-well</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-elderly-man-dies-after-drowning-in-well#comments</comments><guid isPermaLink="false">fb022420-4865-4828-bf93-47aa3911bc77</guid><pubDate>Fri, 07 Aug 2026 14:42:03 +0000</pubDate><atom:updated>2026-08-07T14:42:03.679Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Elderly man,Death,police investigation,well,கிணறு,போலீசார் விசாரணை,முதியவர் உயிரிழப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/v3utfygz/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதியவர் உயிரிழப்பு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/v3utfygz/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், புளியம்பட்டி அருகே காணாமல் போன <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D">முதியவர்</a> ஒருவர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">போலீசார் விசாரணை</a> நடத்தி வருகின்றனர்.</p><h2>திருமணமாகாத முதியவர்</h2><p>தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலமணியாச்சி கீழத்தெருவைச் சேர்ந்த செல்வம் மகன் கருணாநிதி (வயது 70). திருமணமாகாத இவர், உறவினர்கள் யாரும் கவனிக்காத நிலையில் தனியாக ஆடு மேய்த்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.</p><h2>காணாமல் போன முதியவர்</h2><p>கடந்த சில நாட்களாக கல்லடைப்பு நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு, அப்பகுதியைச் சேர்ந்த அண்டை வீட்டாரும் பொதுமக்களும் உணவு வழங்கி பராமரித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கருணாநிதி திடீரென வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார். அவரை அக்கம் பக்கத்தினர் பல இடங்களில் தேடி வந்தனர்.</p><h2>கிணற்றில் உடல் மீட்பு</h2><p>நேற்று அப்பகுதியில் பயன்படுத்தப்படாமல் இருந்த ஆழமான கிணறு ஒன்றில் அவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D">சடலமாகக்</a> கிடப்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த புளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சரியாக படிக்காததை கண்டித்த பெற்றோர்: 8-ம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/parents-scold-boy-for-poor-studies-8th-grader-takes-extreme-step</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/parents-scold-boy-for-poor-studies-8th-grader-takes-extreme-step#comments</comments><guid isPermaLink="false">ac50e574-9fc8-43c9-bfa3-1e03e9fc1678</guid><pubDate>Fri, 07 Aug 2026 14:38:08 +0000</pubDate><atom:updated>2026-08-07T14:38:08.316Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,தற்கொலை,கோயம்புத்தூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/lvot5bno/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/lvot5bno/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>சரியாக படிக்காததை பெற்றோர் கண்டித்ததால் 8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த கோவிந்தநாயக்கன்பாளையம் கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மகன் ரோகித் (13 வயது). வையம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.</p><p>இந்த நிலையில் ரோகித் சரிவர படிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதை பெற்றோர் கண்டித்தனர். மேலும் சரியாக படிக்காவிட்டால் விடுதியில் சேர்த்துவிடுவோம் என்று கூறியதாக தெரிகிறது.</p><p>இதனால் மனமுடைந்த ரோகித் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>செயின்ட் லூயிஸ் ரேபிட் &amp; பிளிட்ஸ் சாம்பியன்: பிரக்ஞானந்தாவுக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/st-louis-rapid-blitz-champion-chief-minister-vijay-congratulates-praggnanandha</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/st-louis-rapid-blitz-champion-chief-minister-vijay-congratulates-praggnanandha#comments</comments><guid isPermaLink="false">6ea2b39c-d469-4017-82ea-0857694799c4</guid><pubDate>Fri, 07 Aug 2026 14:36:28 +0000</pubDate><atom:updated>2026-08-07T14:36:28.643Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சாம்பியன்,வாழ்த்து,champion,பிரக்ஞானந்தா,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,Praggnanandha</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/cv2k9kiq/76.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/cv2k9kiq/76.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமெரிக்காவில் நடைபெற்ற 2026 செயின்ட் லூயிஸ் ரேபிட் &amp; பிளிட்ஸ் செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். இந்நிலையில், இதுகுறித்து முதல் அமைச்சர் விஜய் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>சாம்பியன் பட்டம்</h2><p>அமெரிக்காவில் நடைபெற்ற 2026 செயின்ட் லூயிஸ் ரேபிட் &amp; பிளிட்ஸ் செஸ் போட்டியில் (2026 Saint Louis Rapid &amp; Blitz) சாம்பியன் பட்டம் வென்ற <a href="https://www.dailythanthi.com/topic/praggnanandhaa">பிரக்ஞானந்தா</a>விற்கு மனமார்ந்த வாழ்த்துகள்! </p><h2>வெற்றிவாகை சூடிசாதனை</h2><p>உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்ற இத்தொடரில், பிரக்ஞானந்தா, தன்னைவிட அதிக ரேட்டிங் கொண்ட அமெரிக்கா, உஸ்பெகிஸ்தான், ஜெர்மனி வீரர்களை எதிர்கொண்டு, வெற்றிவாகை சூடிசாதனை படைத்துள்ளார். சர்வதேச செஸ் அரங்கில் தான் ஒரு சிறந்த சாம்பியன் என்பதை அவர் மீண்டும் ஒருமுறை நிரூபித்து, இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். </p><p>இவரைப் போன்ற இளம் விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவில் வெற்றிபெறத் தேவையானஆதரவையும், வழிகாட்டுதலையும் SDAT வழங்கி வருகிறது. ELITE திட்டத்தின்கீழ், பயன்பெற்றுவரும் செஸ் வீரர் பிரக்ஞானந்தா அவர்களுக்கு எனது பாராட்டுகள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title> கருணாநிதிக்கு மா.சுப்பிரமணியன் மாரத்தான் ஓடி அஞ்சலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ma-subramanian-runs-marathon-in-memory-of-karunanidhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ma-subramanian-runs-marathon-in-memory-of-karunanidhi#comments</comments><guid isPermaLink="false">0807ac34-d1ea-4211-99d6-00b4065ab46f</guid><pubDate>Fri, 07 Aug 2026 14:31:53 +0000</pubDate><atom:updated>2026-08-07T14:31:53.611Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மா.சுப்பிரமணியன்,Tribute,அஞ்சலி,Karunanidhi,கருணாநிதி,marathon,மாரத்தான்,Ma. Subramanian</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/on53ivxk/subramani.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மா.சுப்பிரமணியன்]]></media:title><media:description type="html"><![CDATA[ கருணாநிதிக்கு மா.சுப்பிரமணியன் மாரத்தான் ஓடி அஞ்சலி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/on53ivxk/subramani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு மா.சுப்பிரமணியன் அவருக்கு முற்றிலும் வித்தியாசமான முறையில் மாரத்தான் ஓடி அஞ்சலி செலுத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.</p> <h2>மாரத்தான்</h2><p>தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான மா.சுப்பிரமணியன், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF">கருணாநிதி</a> மீது மிகுந்த பற்று கொண்டவர். கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த போதே, பல்வேறு மாரத்தான் ஓட்டப் போட்டிகளில் கலந்து கொண்டு அவரிடம் நேரடியாக பாராட்டு பெற்றவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.</p><h2>நினைவு நாள்</h2><p>இந்த நிலையில், கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D">மா.சுப்பிரமணியன்</a> அவருக்கு முற்றிலும் வித்தியாசமான முறையில் அஞ்சலி செலுத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.</p> <h2> '8' வடிவம்</h2><p>கடந்த கொரோனா பொதுமுடக்க காலத்தின் போது, மா.சுப்பிரமணியன் தனது வீட்டு மாடியில் '8' வடிவம் அமைத்து, அதில் தொடர்ந்து 4 மணி நேரம் 8 நிமிடங்கள் 18 விநாடிகள் நிற்காமல் ஓடி ஆசியா புத்தகத்தில் இடம் பிடித்திருந்தார். </p><h2>காதில் கேட்டகருணாநிதி பேச்சு</h2><p>கருணாநிதியின் நினைவு நாளான இன்று, அதே பாணியில் ஒரு புதிய முயற்சியை கையில் எடுத்தார். இதற்காக இன்று அதிகாலை 4.30 மணிக்கே அவர் ஓடத் தொடங்கினார். காதொலி கருவி மூலம் கருணாநிதியின் காந்தக் குரல் மேடைப் பேச்சு தொகுப்புகளை கேட்டபடியே, தனது வீட்டு மாடியில் உள்ள 8 வடிவப் பாதையில் விறுவிறுப்பாக ஓடினார்.12 கிலோ மீட்டர் தூரம்கலைஞரின் பேச்சை கேட்டபடி, சற்றும் சோர்வடையாமல் தொடர்ந்து 12 கிலோ மீட்டர் தூரம் ஓடி முடித்தார்.</p> <h2> வினோத மாரத்தான்</h2><p> நினைவு நாளில் தனது ஆசானுக்கு இந்த வினோத மாரத்தான் ஓட்டத்தின் மூலம் மா.சுப்பிரமணியன் செலுத்திய அஞ்சலி, தி.மு.க தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியையும், பாராட்டுகளையும் பெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்: சென்னை மாநகராட்சி இணை ஆணையாளர் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-precautionary-works-chennai-corporation-joint-commissioner-inspection</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-precautionary-works-chennai-corporation-joint-commissioner-inspection#comments</comments><guid isPermaLink="false">639700ea-e9bb-443b-92b3-ec79c5aedda4</guid><pubDate>Fri, 07 Aug 2026 14:13:27 +0000</pubDate><atom:updated>2026-08-07T14:13:27.209Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Corporation,சென்னை மாநகராட்சி,Northeast Monsoon,முன்னெச்சரிக்கை பணிகள்,வடகிழக்குப் பருவமழை,ஆய்வுInspection,இணை ஆணையர்,joint commissioner</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/5zju0iof/75.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/5zju0iof/75.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன், ஐ.ஏ.எஸ்., இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>இணை ஆணையாளர் ஆய்வு</h2><p>பெருநகர <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">சென்னை மாநகராட்சி</a>, திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன், ஐ.ஏ.எஸ்.,  இன்று (07.08.2026) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.</p><h2>மழைநீர் வடிகால் பணி</h2><p>இணை ஆணையாளர் (பணிகள்) அவர்கள், திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-70க்குட்பட்ட பேப்பர் மில்ஸ் சாலையில் அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் பணி, வார்டு-68க்குட்பட்ட 70 அடி சாலையில் அமைக்கப்பட்டு வரும் நீர் உறிஞ்சும் பூங்கா பணி, ஜவஹர் நகர், முதல் பிரதான சாலையில் உள்ள மழைநீர் வடிகால்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வண்டல்கள் தூர்வாரும் பணி, வார்டு-72க்குட்பட்ட காந்தி கால்வாயில் ரொபோடிக் எஸ்கவேட்டர் இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணி மற்றும் பவுடர் மில்ஸ் சாலையில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணி ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>இதனைத் தொடர்ந்து, வார்டு-69க்குட்பட்ட சோமையா தெருவில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடப் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியினை விரைந்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வுகளின்போது, மண்டல அலுவலர் (பொ) சதீஷ் மற்றும் மண்டல நல அலுவலர், மண்டல மருத்துவ அலுவலர் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-camp-tomorrow-to-correct-smart-cards-thoothukudi-collector-informs-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-camp-tomorrow-to-correct-smart-cards-thoothukudi-collector-informs-2#comments</comments><guid isPermaLink="false">209ba606-ab5c-4674-85e1-6f1a82f6a58a</guid><pubDate>Fri, 07 Aug 2026 14:04:24 +0000</pubDate><atom:updated>2026-08-07T14:04:24.922Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Collector information,கலெக்டர் தகவல்,Special camp,சிறப்பு முகாம்,Correction,திருத்தம்,smart card,ஸ்மார்ட் கார்டு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/aobr6ock/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/aobr6ock/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி </a>மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">ஸ்மார்ட் கார்டுகளில்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">திருத்தம்</a> செய்ய நாளை சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது என கலெக்டர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>பொது விநியோகத்திட்டம் சிறப்பாக நடைபெற, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D">சிறப்பு முகாம் </a>நாளை (8.8.2026, சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அந்தந்த வட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது.</p><h2>புகைப்படம் பதிவேற்றம் செய்யலாம்</h2><p>இந்த முகாமில் மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோருதல் போன்ற குறைகள் முகாமில் சரிசெய்து வழங்கப்பட உள்ளது. மேலும், மின்னணு குடும்ப அட்டைகளுக்குரிய தவறுகளில் குடும்ப தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும்.</p><p>மேலும் இந்த முகாமில் பொது விநியோகத்திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெற்றுக் கொள்ளலாம். எனவே பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில், குறைகள் இருப்பின் மனு செய்து பயன்பெறலாம். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எனக்கு மிகவும் நெருக்கமானவர்: திமுக எம்.எல்.ஏ கார்த்திகேயன் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-aadav-arjuna-is-very-close-to-me-dmk-mla-karthikeyan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-aadav-arjuna-is-very-close-to-me-dmk-mla-karthikeyan#comments</comments><guid isPermaLink="false">8eacbd38-ce1c-4081-8bd1-fb4b7330500e</guid><pubDate>Fri, 07 Aug 2026 13:53:57 +0000</pubDate><atom:updated>2026-08-07T13:53:57.738Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,ஆதவ் அர்ஜுனா,சட்டசபை,Adhav Arjuna</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/dhs2x2a1/dmk-mla.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/dhs2x2a1/dmk-mla.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p> சென்னை,  </p><p>சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர் கார்த்திகேயன் பேசும்போது, பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா எங்கள் கட்சியில் இருந்து வந்தவர். எங்கள் கட்சியில் தேர்தலில் போட்டியிட ‘சீட்’ கேட்டு நான் வந்த போது, என்னை அழைத்து சென்று என்னுடைய உறவினர் என்று எனக்காக பேசியவர். எனக்கு மிகவும் நெருக்கமானவர். அன்பானவர். நேரு அண்ணனுக்கும் உறவினர்.’ என்றார்.</p> <p>அவருடைய பேச்சை கேட்டு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சிரித்தபடி அமர்ந்திருந்தார். அப்போது நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், ‘அவர் அமைதியாக அமர்ந்திருக்கிறார். எதற்கு அவரை போட்டு கொத்து விடுகிறீர்கள் என்று தெரியவில்லையே? என்று கேட்டார் இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.</p>]]></content:encoded></item><item><title>&quot;வெற்றித் தறி&quot; மின் வணிகத்தளம்: முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vetrit-thari-ecommerce-platform-launched-by-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vetrit-thari-ecommerce-platform-launched-by-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">c639e4d0-2056-4d72-8b69-71dd9dbae5e4</guid><pubDate>Fri, 07 Aug 2026 13:43:33 +0000</pubDate><atom:updated>2026-08-07T13:43:33.108Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,தேசிய கைத்தறி நாள்,வெற்றித் தறி,National Handlooms Day</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/hw965pga/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/hw965pga/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்ற 12-வது தேசிய கைத்தறி நாள் விழாவில், HANDTEX 2026 கைத்தறிக் கண்காட்சி, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் "வெற்றித் தறி" விற்பனையகம் மற்றும் மின்-வணிகத்தளத்தை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார். மேலும், 2025–2026ம் ஆண்டிற்கான சிறந்த நெசவாளர் மற்றும் வடிவமைப்பாளர் விருதுகளுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 11 விருதாளர்களுக்கு 22.25 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிச் சிறப்பித்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>1905-ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் நாளன்று தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7-ம் நாள் தேசிய கைத்தறி நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. கைத்தறி நெசவாளர்களின் கலாசார, சமூக மற்றும் பொருளாதாரப் பங்களிப்பைப் போற்றும் நோக்கத்துடன் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.</p><h2>HANDTEX 2026 கைத்தறிக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தல்</h2><p>தமிழ்நாட்டின் வளமான கைத்தறிப் பாரம்பரியத்தைப் போற்றவும், மாநிலத்தின் கலாசார மற்றும் பொருளாதார வளர்ச்சியில் நெசவாளர் சமூகத்தின் பங்களிப்பைக் கவுரவிக்கவும், தமிழ்நாடு கைத்தறித் துறை சார்பில் முதல்-அமைச்சர் தலைமையில் இன்று கலைவாணர் அரங்கில் நடைபெற்ற 12-வது தேசிய கைத்தறி நாள் விழாவில், இன்று (7.8.2026) முதல் 13.8.2026 வரை ஏழு நாட்கள் நடைபெறும் HANDTEX 2026 கைத்தறிக் கண்காட்சியை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.</p><p>இக்கண்காட்சியில் தமிழ்நாட்டிலுள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உற்பத்திசெய்யும் உலகப் புகழ்பெற்ற காஞ்சிபுரம், ஆரணி மற்றும் திருபுவனம் பட்டுச் சேலைகள், கோவை கோரா பருத்திச் சேலைகள், நெகமம் பருத்திச் சேலைகள், சேலம் வெண்பட்டு வேட்டிகள், வீட்டு உபயோக ஜவுளி வகைகள் உள்ளிட்ட பல்வேறு கைத்தறித் தயாரிப்புகளுடன், பிற மாநிலங்களின் தந்துஜா, மிருக்ணாயினி, குஜ்ஜாரி, பயோனிகா போன்ற புகழ்பெற்ற கைத்தறித் தயாரிப்புகளும் விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.</p><h2>சிறந்த நெசவாளர் மற்றும் வடிவமைப்பாளர் விருதுகள் வழங்குதல்</h2><p>இவ்விழாவில், சிறந்த கைவினைத்திறன், புதுமை மற்றும் தமிழ்நாட்டின் கைத்தறி மரபைப் பாதுகாப்பதில் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக, 2025–2026ம் ஆண்டிற்கான மாநில அளவில் பட்டு ரகத்தில் சிறந்த நெசவாளர் விருதுக்கான முதல் பரிசினை கும்பகோணம், திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் எஸ்.எல்.பி. சுரேசுக்கும், இரண்டாம் பரிசினை காஞ்சிபுரம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் மாணிக்கம் முனுசாமிக்கும், மூன்றாம் பரிசினை காஞ்சிபுரம் காமாட்சியம்மன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் எஸ். ஜெயஸ்ரீக்கும்;</p><p>பருத்தி ரகத்தில் சிறந்த நெசவாளர் விருதுக்கான முதல் பரிசினை பரமக்குடி, முருகன் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் இ.ஆர்.நாகலம்மாளுக்கும், இரண்டாம் பரிசினை சேலம், மேற்கு வனவாசி தொடக்க பருத்தி மற்றும் சுத்தப்பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் பெ. ராஜகணபதிக்கும், மூன்றாம் பரிசினை சேலம், திருவள்ளுவர் தொடக்கக் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் மோகனுக்கும்;</p><p>மாநில அளவிலான சிறந்த வடிவமைப்பாளர் விருதுக்கான முதல் பரிசினை திருவாரூர், கூறைடெக்ஸ் பருத்தி பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் பத்மாவதி திருமலைராயனுக்கும், இரண்டாம் பரிசினை கும்பகோணம், திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் எம். மகேஷ்குமார் மற்றும் திருவண்ணாமலை, ஆரணி பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் வி. பார்த்திபனுக்கும், மூன்றாம் பரிசினை திருப்பூர், கோவில்வழி பருத்தி மற்றும் பட்டு தொடக்கக் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் என். கார்த்திக் மற்றும் திருச்செங்கோடு, ராசிபுரம் பட்டு தொடக்கக் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் எம். பிரேமாவுக்கும் என 9 விருதுகளை 11 விருதாளர்களுக்கு மொத்தம் 22 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் வழங்கிச் சிறப்பித்தார்.</p><h2>"வெற்றித் தறி" விற்பனையகம் மற்றும் மின்-வணிகத்தளத்தைத் தொடங்கி வைத்தல்</h2><p>தமிழ்நாடு அரசின் "வெற்றித் தமிழகம்" தொலைநோக்குத் திட்டங்களின் ஒரு பகுதியாக, தமிழக நெசவாளர்களின் தயாரிப்புகளைச் சந்தைப்படுத்தும் நோக்கில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் "வெற்றித் தறி" விற்பனையகம் மற்றும் மின்-வணிகத்தளத்தினை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.</p><p>இவ்விழாவில், சென்னையிலுள்ள தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் (NIFT) உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள கருப்பொருள் காட்சி அரங்கில், மாநில அளவில் விருதுபெற்ற நெசவாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் உருவாக்கிய கைத்தறித் தயாரிப்புகள் மற்றும் புவிசார் குறியீடு (GI) பெற்ற தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள், பவானி ஜமக்காளம், மதுரை சுங்குடி சேலைகள், சேலம் வெண்பட்டு வேட்டிகள், கோவை கோரா காட்டன் சேலைகள், ஆரணி பட்டுச் சேலைகள், திருபுவனம் பட்டு சேலைகள், காரைக்குடி கண்டாங்கிச் சேலைகள், நெகமம் பருத்திச் சேலைகள், வீரவநல்லூர் செடிபுட்டா சேலைகள், உறையூர் பருத்திச் சேலைகள் ஆகிய 11 கைத்தறி ரகங்கள் அழகுற காட்சிப்படுத்தப்பட்டன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title> பழனி ரூ.100 கோடி நில மோசடி வழக்கு:ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ந் தேதி வரை நீதிமன்ற காவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-rs-100-crore-land-fraud-case-justin-manikandan-remanded-to-judicial-custody-until-the-21st</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-rs-100-crore-land-fraud-case-justin-manikandan-remanded-to-judicial-custody-until-the-21st#comments</comments><guid isPermaLink="false">3422074b-6ab6-4e8d-a698-5381be43aff0</guid><pubDate>Fri, 07 Aug 2026 13:36:41 +0000</pubDate><atom:updated>2026-08-07T13:36:41.437Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பழனி,கோவில்,நீதிமன்ற காவல்,Palani temple,நில மோசடி,temple land</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/wyxfyoun/Justin-manikandan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜஸ்டின் மணிகண்டன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/wyxfyoun/Justin-manikandan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல், </p><p>பழனி அடிவாரம் பகுதியில் தண்டபாணி சுவாமிகள் மடத்தின் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் உள்ளது. இந்த நிலம் கடந்த மாதம் 6-ந்தேதி பழனி சார் பதிவாளர் அலுவலகத்தில், தனி நபர்களுக்கு ரூ.2 கோடிக்கு கிரையமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில் அடிவாரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார், பழனி சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், விழுப்புரம் சாலாமேடு பகுதியை சேர்ந்த ஆசிரியர் முருகதாஸ் (வயது 56) உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு சார் பதிவாளர் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.</p><h2>4 பேர் கைது</h2><p>இதையடுத்து நிலத்தை விற்பனை செய்த ஆசிரியர் முருகதாஸ் (52), நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை (60), சேதுபதி (67), பழனி கவுண்டன்குளம் பகுதியை சேர்ந்த வக்கீல் அன்வர்தீன் (65) ஆகிய 4 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திண்டுக்கல் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கடந்த 3 நாட்களாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் முருகதாஸ் உள்பட 4 பேரிடமும் விசாரணை நடத்தினர்.</p><h2>மதுரை மத்திய சிறை</h2><p>இதற்கிடையே முருகதாஸ், சேதுபதி, அன்வர்தீன் ஆகியோர் தரப்பில் ஜாமீன் கேட்டு திண்டுக்கல் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுக்களை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து மாலையில் ஆசிரியர் முருகதாஸ் உள்பட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 12-ந் தேதிவரை போலீஸ் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு பாக்கியராஜ் உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அதேபோல, சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ந் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>தேவகோட்டை அருகே 18-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/18th-century-inscription-discovered-near-devakottai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/18th-century-inscription-discovered-near-devakottai#comments</comments><guid isPermaLink="false">3fc30321-817f-457f-8722-576cf79849d6</guid><pubDate>Fri, 07 Aug 2026 13:28:52 +0000</pubDate><atom:updated>2026-08-07T13:28:52.038Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Devakottai,தேவகோட்டை,கண்டெடுப்பு,discovered,Inscription - கல்வெட்டு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/5n692udv/74.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/5n692udv/74.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேவகோட்டை, </p><p>தேவகோட்டை அருகே 18-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டு உள்ளது.</p><h2>18-ம் நூற்றாண்டு</h2><p>சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பிரண்டவயல் கிராமத்தில் பழமையான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">கல்வெட்டு</a> இருப்பதாக அக்கிராமத்தை சேர்ந்த முத்து, ஆறாவயல் பெரியய்யா ஆகியோர் கொடுத்த தகவலின்பேரில் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை இணை பேராசிரியர் வேலாயுதராஜா களஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>3 அடி நீளமும், 1 அடி அகலமும் உள்ள இந்த கல்வெட்டில் மொத்தம் 5 வரிகள் காணப்படுகின்றன. திருனாகீசர் முத்துகுமாரு தேவர் பிறதோச கட்டளைக்கு நம்புகுளி என அதில் எழுதப்பட்டிருந்தது. கல்வெட்டின் எழுத்தமைதியை கொண்டு இது 18-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம். முத்துகுமார் தேவர் என்பவர் திருநாகேசுவரர் கோவிலுக்கு பிரதோஷ கட்டளைக்காக நம்புகுளி எனப்படும் நிலப்பகுதியை கொடையாக கொடுத்ததை தெரிவிக்கிறது. கல்வெட்டில் சிவன் கோவிலுக்கு தானமாக கொடுக்கப்படும் நிலங்களை குறிக்கும் திரிசூலம் பொறிக்கப்பட்டுள்ளது. நிலத்தை தானமாக கொடுத்தவர் நிலக்கிழாராக இருக்க வாய்ப்புள்ளது. </p><h2>நாகநாதர் கோவில்</h2><p>மேலும் இங்கு நம்புகுளி என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதி இன்றும் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. கல்வெட்டு கிடைத்த பிரண்டவயலுக்கு அருகில் உள்ள கோட்டவயல் கிராமத்தில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான கோவிலான நாகநாதர் கோவில் என்னும் சிவாலயம் அமைந்துள்ளதால் இக்கல்வெட்டு குறிப்பிடும் திருநாகேசுவரர் நாகநாதராக இருக்கலாம். கல்வெட்டில் குழி என்பது குளி என்றும், பிரதோஷம் என்பது பிறதோசம் எனலாம். பிரதோஷ கட்டளை என்பது தொன்று தொட்டு இருந்து வந்துள்ளது.</p><p>தஞ்சை பெரிய கோவில், பிற சோழர் கால சிவாலய கல்வெட்டுகளில் "பிரதோஷ காலத்து திரு அமுது செய்ய" (உணவு படைக்க) காசுகளும், பொன்னும் முதலீடாக வைக்கப்பட்ட விவரங்கள் விரிவாக செதுக்கப்பட்டுள்ளன. மன்னர்களும் உள்ளூர் நிலப்பிரபுக்களும் குறிப்பிட்ட விளைநிலங்களை அல்லது முழு கிராமங்களையே கோவிலுக்கு தானமாக வழங்கினர். அந்த நிலத்தில் இருந்து வரும் நெல், வருவாய், பிரதோஷத்தன்று இறைவனுக்கு படைக்கப்படும் அமுதுபடி, சாத்துப்படி (ஆடை, ஆபரணம்) செலவுகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>காதலிப்பதாக ஆசை காட்டி சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவன் - உடந்தையாக இருந்த பெற்றோர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/boy-rapes-girl-on-pretense-of-love-parents-who-were-accomplices-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/boy-rapes-girl-on-pretense-of-love-parents-who-were-accomplices-arrested#comments</comments><guid isPermaLink="false">4f57d2c8-061d-48a7-83a4-7960808284cf</guid><pubDate>Fri, 07 Aug 2026 13:26:02 +0000</pubDate><atom:updated>2026-08-07T13:26:02.423Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrest,Theni,தேனி,பாலியல் பலாத்காரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/mlz42ivu/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/mlz42ivu/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி,</p><p>தேனி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானார். இதையடுத்து அவரது பெற்றோர் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். இந்த நிலையில் தேனி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் அந்த சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றதாக தெரிய வந்தது. </p><p>சிறுமியை அந்த சிறுவன் திண்டுக்கல்லுக்கு அழைத்து சென்றதும், அங்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. சிறுமி இருக்கும் இடத்தை போலீசார் தேடிச் சென்ற நிலையில், அந்த சிறுவன் அங்கிருந்து தப்பி சென்று விட்டான். இதையடுத்து சிறுமியை போலீசார் மீட்டனர்.</p><p>விசாரணையில், இந்த சம்பவத்துக்கு சிறுவனின் பெற்றோர் உடந்தையாக இருந்ததாக தெரிய வந்தது. அதன்பேரில், சிறுவனின் தாய், தந்தை ஆகிய இருவரையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தப்பியோடிய சிறுவனை தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-tomorrow-10</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-tomorrow-10#comments</comments><guid isPermaLink="false">48da5807-9496-4ea2-b456-8e43b0f1cd65</guid><pubDate>Fri, 07 Aug 2026 13:17:26 +0000</pubDate><atom:updated>2026-08-07T13:17:26.159Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,monthly maintenance work,தென்காசி,மாதாந்திர பராமரிப்பு பணி,Power outage tomorrow,நாளை மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/gfncqonj/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/gfncqonj/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p>திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF">தென்காசி</a> மாவட்டம், கடையநல்லூர் துணை மின் நிலையத்தில் உள்ள பகுதிகளில் நாளை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் காரணமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை</h2><p>இது தொடர்பாக கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பக விநாயக சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  </p><p>கடையநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட கடையநல்லூர் துணை மின் நிலைய பகுதிகளில்  நாளை (8.8.2026, சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின் வினியோகம் தடை செய்யப்படும்.</p><p>அதன்படி கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம், பேட்டை, மாவடிக்கால், குமந்தாபுரம், முத்துச்சாமிபுரம், வலசை, கருப்பாநதி, தார்க்காடு, போகநல்லூர், கண்மணியாபுரம், பாலஅருணாச்சலபுரம், கம்பனேரி, மங்களபுரம், அச்சம்பட்டி, பொய்கை, ஊர் மேல் அழகியான், வேலாயுதபுரம், இடைகால், சிவராம்பேட்டை, கொடிக்குறிச்சி மற்றும் நயினாரகரம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சிறுமியிடம் திருமணம் செய்வதாக கூறி பாலியல் தாக்குதல்: வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/teenager-gets-10-years-in-prison-for-sexually-assaulting-girl-on-the-pretext-of-marriage</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/teenager-gets-10-years-in-prison-for-sexually-assaulting-girl-on-the-pretext-of-marriage#comments</comments><guid isPermaLink="false">452b7a3f-c786-4db7-ae6c-53850d54f529</guid><pubDate>Fri, 07 Aug 2026 13:01:01 +0000</pubDate><atom:updated>2026-08-07T13:01:01.780Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமணம்,Tirunelveli,திருநெல்வேலி,Marriage,Youth,வாலிபர்,சிறை தண்டனை,Prison sentence,சிறுமி,girl,Sexual assault,ஆசை வார்த்தை,பாலியல் தாக்குதல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/wsdy3fzv/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/wsdy3fzv/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>திருநெல்வேலி மாவட்டத்தில், 12 வயது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF">சிறுமி</a>யிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">பாலியல் தாக்குதல் </a>செய்த வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">சிறை தண்டனை</a>, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்து. </p><h2>12 வயது சிறுமிக்கு பாலியல் தாக்குதல்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டத்தில் சுபாஷ் (வயது29) என்பவர் 12 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் 17.10.2022 அன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு, உவரி காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு, அந்த வாலிபரை கைது செய்தார். </p><p>புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, வழக்கின் விசாரணையானது, திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அந்த வாலிபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, நீதிபதி சுரேஷ்குமார் இன்று (7.08.2026) குற்றவாளிக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டார். </p><h2>தண்டனை விபரம்</h2><p>3(a) r/w 4 POCSO Act-ன்படி 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம். IPC 366-ன்படி 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம். மேற்சொன்ன தண்டனைகளை குற்றவாளி ஏககாலத்தில் (Concurrent) அனுபவிக்க நீதிபதி அவர்கள் தனது தீர்ப்பில் உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.</p><h2>எஸ்.பி. பாராட்டு</h2><p>இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை நடைபெற சிறப்பாக கண்காணிப்பு செய்த ஏ.டி.எஸ்.பி. சண்முகம் (CWC), வள்ளியூர் உட்கோட்ட டி.எஸ்.பி. வெங்கடேஷ், உவரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரேமா மற்றும் வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த அப்போதைய உவரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரேமா (தற்போது விஜயநாராயணம் காவல் நிலையம்) வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் அஜய்குமார், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் உஷா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி பாராட்டினார்.</p><h2>16 போக்சோ வழக்குகள்; 16 குற்றவாளிகளுக்கு தண்டனை</h2><p>திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரின் தீவிர நடவடிக்கையால் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 16 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 16 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க வகையில் 1 குற்றவாளிக்கு மரண தண்டனையும், 4 குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், 2 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும், 1 குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்று தரப்பட்டுள்ளது.</p><p>தமிழ்நாடு காவல்துறையானது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களுக்கெதிராக குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தனிப்பட்ட கவனத்துடன் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தேனி பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் விஜய் ஆணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-orders-release-of-water-from-theni-periyar-dam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-orders-release-of-water-from-theni-periyar-dam#comments</comments><guid isPermaLink="false">9dab135d-9e4c-4d8e-9688-1c2b41014d9f</guid><pubDate>Fri, 07 Aug 2026 12:47:14 +0000</pubDate><atom:updated>2026-08-07T12:47:14.944Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பெரியாறு அணை,முதல்-அமைச்சர் விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/imjn01tb/cm-vijay.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/imjn01tb/cm-vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக நீர்வளத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>தண்ணீர் திறக்க ஆணை</h2><p>தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய் </a>அவர்களின் உத்தரவிற்கிணங்க, தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு இரு போக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போகத்திற்கு 14,707 ஏக்கர் நிலங்களுக்கு வினாடிக்கு 200 கனஅடி வீதமும், தேனி மாவட்டம் மற்றும் மதுரை மாநகராட்சிக்கு குடிநீர் தேவைக்காகவும் வினாடிக்கு 150 கனஅடி தண்ணீரையும் சேர்த்து வினாடிக்கு 350 கனஅடி தண்ணீரை பெரியாறு அணையிலிருந்து 08.08.2026 முதல் 120 நாட்களுக்கு தேவைக்கேற்ப மொத்தம் 3,629 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் வரத்து மற்றும் நீர் இருப்பைப் பொறுத்து தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.</p><p>இதன் மூலம் தேனி மாவட்டம், உத்தமபாளையம், தேனி மற்றும் போடிநாயக்கனூர் தாலுக்காக்களில் உள்ள 14,707 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆசிரியர்கள் கண்டித்ததால் ரத்த அழுத்த மாத்திரைகளை தின்று மயங்கிய மாணவிகள் - அரசு பள்ளியில் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/students-take-blood-pressure-pills-after-scolding</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/students-take-blood-pressure-pills-after-scolding#comments</comments><guid isPermaLink="false">da03be07-77e8-4c91-be66-c866bc466d61</guid><pubDate>Fri, 07 Aug 2026 12:31:01 +0000</pubDate><atom:updated>2026-08-07T12:31:01.013Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,Thiruvannamalai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/kes9hele/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/kes9hele/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை,</p><p>அரசு பெண்கள் பள்ளியில் ஆசிரியர்கள் கண்டித்ததால் 3 மாணவிகள் ரத்த அழுத்த மாத்திரைகளை தின்று மயங்கி விழுந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.</p><h2>மயங்கி விழுந்தனர்</h2><p>திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள மேல் பள்ளிப்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 3 மாணவிகளை ஆசிரியர்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த 3 மாணவிகளும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தும் மாத்திரைகளை தின்றதாக கூறப்படுகிறது.</p><p>ஒரே நேரத்தில் அதிக அளவில் மாத்திரைகளை உட்கொண்டதால் அங்கேயே மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளி ஆசிரியர்கள், மாணவிகளை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்று அனுமதித்தனர்.</p><h2>வாக்குவாதம்</h2><p>பின்னர் இதுகுறித்து அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் திரண்டனர். மேலும் அவர்கள் ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்த 3 மாணவிகளில் பிளஸ் 2 மாணவி ஒருவர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.</p><h2>பரபரப்பு</h2><p>மாணவிகளுக்கு ரத்த அழுத்த மாத்திரை எங்கிருந்து கிடைத்தது? ஆசிரியர்கள் தனி அறையில் வைத்து கண்டித்தார்களா? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பெற்றோர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக இளைஞர்களுக்கு ஜப்பானில் வேலை: அமைச்சர் முகமது பர்வேஸ் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/jobs-in-japan-for-tamil-nadu-youth-mou-signed-in-the-presence-of-minister-mohammad-parvez</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/jobs-in-japan-for-tamil-nadu-youth-mou-signed-in-the-presence-of-minister-mohammad-parvez#comments</comments><guid isPermaLink="false">7f209bf2-a8a3-49c0-8397-5380d8a28a3e</guid><pubDate>Fri, 07 Aug 2026 12:17:11 +0000</pubDate><atom:updated>2026-08-07T12:17:11.444Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,புரிந்துணர்வு ஒப்பந்தம்,கையெழுத்து,sign,Government Vocational Training Institute,அரசு தொழிற்பயிற்சி நிலையம்,Memorandum of Understanding,அமைச்சர் முகமது பர்வேஸ்,Minister Mohammed Parvez</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/3s4ta1al/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் முகமது பர்வேஸ் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/3s4ta1al/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ்நாட்டில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">தொழிற்பயிற்சி</a> பெற்ற <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பட்டதாரிகளை</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">வேலைவாய்ப்பு</a>க்காக ஜப்பான் நாட்டிற்கு அனுப்பிட தொழிலாளர் நலத்துறை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D">அமைச்சர் முகமது பர்வேஸ்</a> முன்னிலையில் இன்று தலைமை செயலகத்தில் முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. </p><h2>132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள்</h2><p>தமிழ்நாட்டில் தற்போது 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும், 277 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பாரம்பரிய தொழிற்பிரிவுகளான பிட்டர், எலக்ட்ரீசியன், ஏ.சி. மெக்கானிக், வெல்டர், கணினி உள்ளிட்ட தொழிற்பிரிவுகளிலும் தொழில் 4.0 தரத்திலான அட்வான்ஸ்டு சி.என்.சி., ரோபோடிக்ஸ், எலக்ட்ரிக் வெஹிக்கிள் போன்ற நவீன தொழிற்பிரிவுகளிலும் பயிற்சி வழங்கப்படுகின்றன. </p><h2>31-ம்தேதி வரை நேரடி சேர்க்கை</h2><p>2026-ம் கல்வியாண்டில் 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஒதுக்கப்பட்ட இருக்கைகளில், இதுவரை 80 சதவீத இருக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. நேரடி சேர்க்கை 31.8.2026 வரை நடைபெறும். கடந்த ஆண்டு பயிற்சி பெற்ற மாணவர்களில் 95 சதவீதம் மாணவர்கள் உள்நாட்டு முன்னணி நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டனர். </p><h2>முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்யின் வழிகாட்டுதல்களின்படி, சர்வதேச அளவில் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்திட வேண்டி முதற்கட்டமாக, தமிழ்நாட்டின் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆட்டோமொபைல் துறைக்கான தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு தொழில்நுட்ப பயிற்சி அளித்து, ஆட்டோமொபைல் சர்வீஸ் டெக்னீசியன்களாக ஜப்பான் நாட்டில் உள்ள எஹிமே-நிசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அமைத்துத் தர, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் எஹிமே–நிசான் நிறுவனம் ஆகியோரால் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் முகமது பர்வேஸ் முன்னிலையில் இன்று (7.8.2026) தலைமைச் செயலகத்தில் முத்தரப்பு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் </a>கையெழுத்திடப்பட்டது. </p><h2>ஆறு மாத கால ஜப்பானிய மொழிப் பயிற்சி</h2><p>இதன்படி, பயிற்சி பெறும் தொழிற்பயிற்சி பட்டதாரிகளுக்கு ஆறு மாத கால ஜப்பானிய மொழிப் பயிற்சி, தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் போக்குவரத்து செலவுகள் ஆகியவை எஹிமே-நிசான் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. ஜப்பான் சென்றபின் மொழிப் பயிற்சி செலவுகள், ஆவணத் தயாரிப்பு உதவி, மருத்துவ பரிசோதனை கட்டணங்கள் மற்றும் விசா கட்டணங்கள் ஆகியவை அனைத்தும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் ஏற்றுக் கொள்ளப்படும்.</p><p>இந்த நிகழ்வின்போது தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அரசுச் செயலாளர் வீரராகவராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் டாக்டர் பழனி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன், எஹிமே-நிசான் நிறுவன பிரதிநிதி செல்லப்பா ஸ்ரீராம் மற்றும் துறையின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையால் எடுக்கப்பட்ட தொடர் தீவிர நடவடிக்கைகள் என்ன? - டி.ஜி.பி அலுவலகம் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dgp-office-explains-operations-of-singappen-special-strike-force-for-women-and-children-safety</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dgp-office-explains-operations-of-singappen-special-strike-force-for-women-and-children-safety#comments</comments><guid isPermaLink="false">3bf08455-cba8-49ba-b069-61d977686f30</guid><pubDate>Fri, 07 Aug 2026 12:05:52 +0000</pubDate><atom:updated>2026-08-07T12:05:52.154Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விழிப்புணர்வு,Awareness,டி.ஜி.பி. அலுவலகம்,Police DGP,action நடவடிக்கை,Lioness Special Task Force,சிங்கப்பெண் அதிரடிப்படை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/yhbi7n9l/singapen.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை]]></media:title><media:description type="html"><![CDATA[ சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையால் எடுக்கப்பட்ட தொடர் தீவிர நடவடிக்கைகள் என்ன? - டி.ஜி.பி அலுவலகம் விளக்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/yhbi7n9l/singapen.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p> சென்னை,</p><p>தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையால் எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகள்பற்றி டி.ஜி.பி அலுவலகம் விளக்கம். இது தொடர்பாக தமிழ்நாடு டி.ஜி.பி அலுவலகம் வெளியிட்ட செய்தியில், தெரிவித்திருப்பதாவது:-</p><h2>நடவடிக்கை</h2><p>தமிழ்நாடு காவல்துறையின் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88">சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை</a> பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மாநிலம் முழுவதும் துரிதமான கள நடவடிக்கைகள் சமூக பங்களிப்புடன் கூடிய காவல் பணிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.</p> <h2> 308 புகார்கள்</h2><p>கடந்த ஒரு வாரகாலத்தில் 31.07.2026 முதல் 06.08.2026 வரை. சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மாவட்ட களப்பிரிவுகள் 308 புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுத்து 16 குற்றவழக்குகள் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், காணாமல்போன 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாக அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.</p><h2>விழிப்புணர்வு நிகழ்ச்சி</h2><p> இந்த காலகட்டத்தில் பள்ளிகள் கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இடையே 3,402 <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">விழிப்புணர்வு</a> நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும், மாநிலம் முழுவதும் அடையாளம் காணப்பட்ட 11,560 குற்றம் நடைபெற வாய்ப்புள்ள பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் தீவிர ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன.</p><h2>போக்சோ சட்டம்</h2><p>இந்த காலகட்டத்தில், அறிவுசார் குறைபாடுடைய 6 நபர்கள் மீட்கப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. 2 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டது. மேலும், 62 பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் மீண்டும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டனர். கடந்த வாரத்தின் போது. சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை  களப்பிரிவுகள் சென்னை, தாம்பரம். தர்மபுரி, திருநெல்வேலி. சிவகங்கை, மதுரை. பெரம்பலூர். திருவண்ணாமலை ராணிப்பேட்டை, திருப்பூர். மயிலாடுதுறை, கன்னியாகுமரி மற்றும் கரூர் ஆகிய பகுதிகளில் பதிவான வழக்குகளுக்கு விரைவாக செயல்பட்டு, குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் போக்சோ சட்டம்.</p><h2>சம்பந்தப்பட்ட நபர்கள் கைது</h2><p>தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் , பாரதிய நியாய சன்ஹிதா  மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட தொடர்புடைய சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதுடன், குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.</p><h2>பாதுகாப்பான மாநிலம்</h2><p>இத்தகைய துரிதமான மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்தி வரும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு, தமிழகத்தை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உருவாக்குவதில் முக்கிய பங்காற்றி வருகிறது. பாதுகாப்பான மாநிலமாக உருவாக்குவதில் முக்கிய பங்காற்றி வருகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பண்ருட்டியில் 2ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-class-2-girl-in-panruti-teacher-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-class-2-girl-in-panruti-teacher-arrested#comments</comments><guid isPermaLink="false">314b1f9a-c5f2-443c-9fb7-233868602251</guid><pubDate>Fri, 07 Aug 2026 11:42:04 +0000</pubDate><atom:updated>2026-08-07T11:42:04.302Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணவி,பாலியல் தொல்லை,student,sexually harassed,Teacher Arrested,ஆசிரியர் கைது,பண்ருட்டி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/aoqda87i/abuse.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஆசிரியர் கைது]]></media:title><media:description type="html"><![CDATA[ மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/aoqda87i/abuse.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சாத்திப்பட்டு கிராமத்தில், 2-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவிக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88">பாலியல் தொல்லை </a>கொடுத்த புகாரில் தனியார் பள்ளி ஆசிரியர் அகஸ்டின் (24) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>பாலியல் தொல்லை</h2><p>கடலூர் மாவட்டம் பண்ருட்டிக்கு அருகில் உள்ள சாத்திப்பட்டு பகுதியில் ஒரு பிரபலமான தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், அப்பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில், அகஸ்டின் (24) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த சில தினங்களாக, ஆசிரியர் அகஸ்டின் அந்த சிறுமிக்கு வகுப்பறையில் தனியாக இருக்கும் போது பலமுறை பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.</p><h2>பள்ளி முற்றுகை</h2><p> பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமி, ஆசிரியரின் தவறான அத்துமீறல்கள் குறித்து தனது பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார். சிறுமி கூறிய விவரங்களை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோரும், உறவினர்களும் ஆத்திரமடைந்தனர். இன்று, பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் மற்றும் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பள்ளிக்கு சென்று முற்றுகையிட்டனர். </p><h2>கைது</h2><p>அங்கு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியர் அகஸ்டினை பிடித்து பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் சரமாரியாக தாக்கினர். இதனால் பள்ளி வளாகத்தில் பெரும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டு, பதற்றமான சூழல் நிலவியது. சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன், பண்ருட்டி மற்றும் நெல்லிக்குப்பம் பகுதி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பொதுமக்களின் பிடியில் சிக்கி தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் அகஸ்டினை போலீசார்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81"> கைது</a> செய்தனர்.</p><p>இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கருணாநிதி நினைவு நாள்: &apos;திட்டங்களிலிருந்து பெயரை நீக்கலாம்; வரலாற்றை மாற்ற முடியாது&apos; – கனிமொழி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/karunanidhis-death-anniversary-name-can-be-removed-from-projects-history-cannot-be-changed-kanimozhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/karunanidhis-death-anniversary-name-can-be-removed-from-projects-history-cannot-be-changed-kanimozhi#comments</comments><guid isPermaLink="false">9da99e65-3cef-437d-9e0c-ad5b82620cae</guid><pubDate>Fri, 07 Aug 2026 11:20:03 +0000</pubDate><atom:updated>2026-08-07T11:20:03.157Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Karunanidhi,Memorial Day,Kanimozhi,கனிமொழி எம்பி,கருணாநிதி நினைவு தினம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/coida86y/73.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/coida86y/73.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் நினைவு நாள் இன்று கட்சித் தொண்டர்களால் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் தனது தந்தையின் நினைவு நாளன்று திமுக எம்.பி.<a href="https://www.dailythanthi.com/topic/kanimozhi">கனிமொழி</a> தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது:-</p><h2>வரலாற்றை மாற்ற முடியாது</h2><p>“திட்டங்களிலிருந்து அவர் பெயரை நீக்குவது எளிதாக இருக்கலாம். ஆனால், நவீன தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றி எழுத எவராலும் முடியாது. அந்த வரலாற்றின் முதல் வரியிலேயே, "இதற்கு விதையிட்டவர் தலைவர் கலைஞர்" என்று எழுதப்பட்டிருக்கிறது!" </p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர் கருணாநிதி கொண்டு வந்த சில முக்கியத் திட்டங்களையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">திட்டங்களிலிருந்து அவர் பெயரை நீக்குவது எளிதாக இருக்கலாம்.<br>ஆனால், நவீன தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றி எழுத எவராலும் முடியாது.<br><br>அந்த வரலாற்றின் முதல் வரியிலேயே, &quot;இதற்கு விதையிட்டவர் தலைவர் கலைஞர்&quot; என்று எழுதப்பட்டிருக்கிறது!<a href="https://x.com/hashtag/KalaignarForever?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#KalaignarForever</a> <a href="https://t.co/ATYAtJ86MY">pic.twitter.com/ATYAtJ86MY</a></p>&mdash; Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) <a href="https://x.com/KanimozhiDMK/status/2085587231260262611?ref_src=twsrc%5Etfw">August 7, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை மசோதா: திமுகவின் நிலைப்பாடு என்ன? ஆர்.எஸ்.பாரதி பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-to-decide-stance-on-delimitation-bill-only-after-it-is-tabled-in-parliament-r-s-bharathi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-to-decide-stance-on-delimitation-bill-only-after-it-is-tabled-in-parliament-r-s-bharathi#comments</comments><guid isPermaLink="false">8306086c-d43f-4f40-91ce-1d9b65367ebd</guid><pubDate>Fri, 07 Aug 2026 11:18:51 +0000</pubDate><atom:updated>2026-08-07T11:18:51.662Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,ஆர்.எஸ்.பாரதி,RSBharathi,தொகுதி மறுவரையறை மசோதா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/5mbmxbua/RS-bharathi.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆர்.எஸ்.பாரதி ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/5mbmxbua/RS-bharathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட்ட பிறகே அதற்கு ஆதரவு அளிப்பதா, எதிர்ப்பதா என்பது குறித்து தி.மு.க. முடிவு செய்யும் என்று அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- தொகுதி மறுவரையறை தொடர்பாக தற்போது முடிவு எடுப்பது முன்கூட்டிய நடவடிக்கையாகும். மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறகே அதில் உள்ள அம்சங்களை ஆய்வு செய்து கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும். கடந்த முறை தொகுதி மறுவரையறை தொடர்பாக தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்ததுடன், சில பரிந்துரைகளையும் மத்திய அரசிடம் வழங்கியிருந்தது. </p><h2>மசோதா பார்த்த பிறகே</h2><p>அந்த பரிந்துரைகள் மசோதாவில் இடம்பெற்றுள்ளதா என்பதை முதலில் பார்க்க வேண்டும்.<a href="https://www.dailythanthi.com/news/india">மசோதா</a>வின் ஒவ்வொரு அம்சத்தையும் வரி வரியாக ஆய்வு செய்து, அதன் சாதக-பாதகங்களை விரிவாக விவாதித்த பிறகே ஆதரிப்பதா, எதிர்ப்பதா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.மசோதாவை முழுமையாக பார்த்த பிறகே கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும்” என்று கூறினார். </p> <h2>பிரதிநிதித்துவ விகிதம்</h2><p>குறிப்பாக, 2026-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டுள்ள  தொகுதி மறுவரையறை மசோதாவில், தற்போதுள்ள 543 மக்களவை தொகுதிகளை சுமார் 50 சதவீதம் உயர்த்தி 816 தொகுதிகளாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இந்த முறையில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவ விகிதம் குறையாது என்றும், தமிழ்நாட்டின்<a href="https://www.dailythanthi.com/news/india"> மக்களவை தொகுதி</a>கள் 39-ல் இருந்து 59 ஆக உயர்ந்தாலும், அதன் பிரதிநிதித்துவ விகிதம் சுமார் 7.2 சதவீதமாகவே நீடிக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>சென்னை மாநகராட்சியில் ஆதரவற்றோர் தங்குமிட ஒருங்கிணைப்பாளர்களுக்கு சிறப்பு பயிற்சி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-training-for-homeless-shelter-coordinators-in-chennai-corporation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-training-for-homeless-shelter-coordinators-in-chennai-corporation#comments</comments><guid isPermaLink="false">9b36ca93-6a85-4537-ab0b-d0ed9a816788</guid><pubDate>Fri, 07 Aug 2026 11:00:31 +0000</pubDate><atom:updated>2026-08-07T11:00:31.213Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Corporation,சென்னை மாநகராட்சி,volunteers,தன்னார்வலர்கள்,சிறப்பு பயிற்சி,special training</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/59jgcbvo/chennai-corporation.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/59jgcbvo/chennai-corporation.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>மாநகராட்சி இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன், ஐ.ஏ.எஸ்., தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் நகர்ப்புற ஆதரவற்றோர் தங்குமிடங்களுக்கான நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனத்தினருக்கான பயிற்சி இன்று நடைபெற்றது.</p><h2>தன்னார்வலர்களுக்கு பயிற்சி</h2><p>மாநகராட்சி இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன், ஐ.ஏ.எஸ்., தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் நகர்ப்புற ஆதரவற்றோர் தங்குமிடங்களுக்கான (Shelter for Urban Homeless) நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் (Standard Operating Procedures – SOP) குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனத்தினருக்கான பயிற்சி இன்று (06.08.2026) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது.</p><p>இப்பயிற்சியில் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் (NGOs) இயக்குநர்கள், தலைமை சமுதாய வளர்ச்சி அலுவலர் (CCDO), கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள், சமூக மேம்பாட்டு அலுவலர்கள் (CDOs), தங்குமிட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தங்குமிட மேலாண்மையுடன் தொடர்புடைய அலுவலர்கள் பங்கேற்றனர்.</p><h2>பாதுகாப்பான மற்றும் தரமான சேவை</h2><p>இப்பயிற்சியின் போது, நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை (SOP) திறம்பட செயல்படுத்துவது குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக பயனாளிகள் சேர்க்கை மற்றும் மறுவாழ்வு, தங்குமிட மேலாண்மை, பதிவேடுகள் பராமரித்தல், சுகாதாரம் மற்றும் தூய்மை, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள், குறைதீர் அமைப்பு, துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் நகர்ப்புற ஆதரவற்றோருக்கு கண்ணியமான, பாதுகாப்பான மற்றும் தரமான சேவைகளை வழங்குவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.</p><p>மேலும், தங்குமிடங்களின் செயல்பாட்டில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், சிறந்த நடைமுறைகள் பகிரப்பட்டு, அனைத்து பங்குதாரர்களிடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.</p><p>இப்பயிற்சியானது, பெருநகர<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF"> சென்னை மாநகராட்சி</a>, அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, நகர்ப்புற ஆதரவற்றோருக்கு பாதுகாப்பான, உள்ளடக்கிய மற்றும் கண்ணியமான தங்குமிட வசதிகளை உறுதி செய்வதற்கும், தொடர்ச்சியான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கும் முக்கிய பங்காற்றும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மு.க.ஸ்டாலின்  ரூ.900 கோடி ஏன் வாங்கினார்? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா - உதயநிதி இடையே காரசார வாதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-did-mk-stalin-receive-900-crore-heated-exchange-between-minister-aadav-arjuna-and-udhayanidhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-did-mk-stalin-receive-900-crore-heated-exchange-between-minister-aadav-arjuna-and-udhayanidhi#comments</comments><guid isPermaLink="false">a286a0d2-76a9-4da7-ace2-8e8538422d8d</guid><pubDate>Fri, 07 Aug 2026 10:55:25 +0000</pubDate><atom:updated>2026-08-07T10:55:25.078Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆதவ் அர்ஜுனா,சட்டசபை,TN Assembly,உதயநிதி,லாட்டரி,ஸ்டாலின்,MK Stalin&apos;,Udhayanidhi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/wzwvwy0o/Udhayanidhi.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆதவ் அர்ஜுனா - உதயநிதி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/wzwvwy0o/Udhayanidhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற்றது. அப்போது, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா  பேசியதாவது:  மது விலக்கு கொள்கை என்பது எங்களுடைய கொள்கை; போதையில்லா தமிழகம் எங்களுடைய கொள்கை, ஆட்சிக்கு வந்த பின்பும், ஆட்சிக்கு வருவதற்கு முன்பும், இங்கு இருக்கும் எம்,எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் எந்த தொழிலிலும் நாங்கள் ஈடுபட்டது கிடையாது.</p><p>திமுகவின் நாடாளுமன்ற  எம்.பி ஜெகத்ரட்சகன் சாராய ஆலை நடத்துகிறாரா இல்லையா, சாராய ஆலை நடத்தி கொண்டு டாஸ்மாக் நிறுவனம் மூலம் ஆர்டர் வந்து யார் வாங்கியது; திமுகவே அரசு, திமுகவில் இருக்கும்  எம்பிக்கள் சாராய ஆலைகள் நடத்துகிறார்கள்.</p><p>திமுகவின் பொருளாளர் சாராய ஆலை நடத்துகிறார். திமுகவின் ஐடி அமைச்சர் சாராய ஆலை நடத்துகிறார். இதுக்கு மேல் என்ன ஆதாயம் வேண்டும், என்றார். </p> <h2>வாங்கியது ஏன்?</h2><p>இதனால்  கோபம் அடைந்த திமுக எம்.எல்.ஏக்கள் லாட்டரி  குறித்து பேசினார். இதையடுத்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, லாட்டரி என கூறுகிறார்கள்; லாட்டரி நிறுவனத்திடம் ஸ்டாலின் ரூ.900 கோடி வாங்கியது ஏன், தைரியம் இருந்தால் பதில் சொல்லுங்கள், அப்பொழுது சொல்லுங்கள். நான் எந்த தொழிலும் இல்லை. எந்த நிறுவனமும் நடத்தவில்லை’ என்றார். இதற்கு எதிர்க்கட்சி தலைவர் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">உதயநிதி</a>  உடனே பதில்  கொடுத்தார். </p> <h2>அப்பாவுக்கு மட்டும் தான் தெரியும்</h2><p>உதயநிதி கூறும் போது,  திமுக ஏன் லாட்டரி நிறுவனத்திடம் இருந்து பணம் வாங்கினார்கள் என்று கேட்கிறார். அதனை கொடுத்தது அவருடைய மாமனார் தான். ஏன் கொடுத்தீர்கள் என்பதை உங்கள் மாமனாரிடம் கேட்டு விளக்கத்தை பெற்றுக்கொள்ளலாம்” என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஆதவ் அர்ஜுனா, </a>அவர் அப்பாவுக்கு மட்டும் தான் தெரியும். அது அவர் அப்பாவிடம் தான் கேட்க வேண்டும். எனக்கு அது எதுவும் தெரியாது. அப்பாவை இங்கே காணும். வீட்டிற்கு போய் உங்கள் அப்பாவிடம் கேளுங்கள். உங்கள் அப்பா கரெக்டா சொல்லுவார். ஏன் வாங்கினார் என்று உங்கள் அப்பா சொல்லுவார்” என்றார்.</p> ]]></content:encoded></item><item><title>விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் விநியோகம்: வேளாண்மை உதவி இயக்குநர் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/free-saplings-distributed-to-farmers-assistant-director-of-agriculture-information</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/free-saplings-distributed-to-farmers-assistant-director-of-agriculture-information#comments</comments><guid isPermaLink="false">434b5655-3ee4-48d6-a275-6be099a41a38</guid><pubDate>Fri, 07 Aug 2026 10:50:28 +0000</pubDate><atom:updated>2026-08-07T10:50:28.717Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Farmers,Thoothukudi,தூத்துக்குடி,விவசாயிகள்,Information,தகவல்,agriculture,Distribution,விநியோகம்,vilathikulam,விளாத்திகுளம்,Assistant Director,வேளாண்மை,saplings,மரக்கன்றுகள்,உதவி இயக்குநர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/32rbdgco/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் விநியோகம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/32rbdgco/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">விளாத்திகுளம்</a> வட்டார <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">விவசாயிகளுக்கு</a> வனத்துறை நாற்றுப்பண்ணை சார்பில் இலவசமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">மரக்கன்றுகள் </a><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">விநியோகம்</a> செய்யப்பட உள்ளதாக வேளாண்மை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D">உதவி இயக்குநர்</a> சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். </p><p>இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>2026-27-ம் நிதியாண்டில் விவசாய நிலங்களில் மரக்கன்றுகளை நடுவதற்கு, 'காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டம்' மற்றும் 'பசுமை தமிழ்நாடு இயக்கம்' ஆகிய திட்டங்களின் கீழ் விளாத்திகுளம் வனத்துறை நாற்றுப்பண்ணையில் பின்வரும் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.</p><h2>ஒரு ஏக்கருக்கு 250 முதல் 300 மரக்கன்றுகள் இலவசம்</h2><p>தேக்கு, மலைவேம்பு, மகாகனி, ஈட்டி, வேங்கை மரக்கன்றுகள் அனைத்தும் விளாத்திகுளம் வட்டார விவசாயிகளுக்கு முழுமையாக இலவசமாக வழங்கப்படும். விவசாய நிலத்தில் முழுமையாக நடவு செய்ய ஒரு ஏக்கருக்கு 250 முதல் 300 மரக்கன்றுகள் வரையிலும், நிலத்தின் வரப்புகளைச் சுற்றி மட்டும் நடவு செய்ய ஒரு ஏக்கருக்கு 150 மரக்கன்றுகள் வரையிலும் வழங்கப்படும். </p><p>இந்த வகை மரங்கள் அதிகப் பராமரிப்பு இன்றி எளிதாக வளரக்கூடியவை. எதிர்காலத்தில் விவசாயிகளுக்குச் சிறந்த பொருளாதார வருவாயைத் தருவதுடன், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும். </p><h2>மரக்கன்றுகள் முன்பதிவு செய்து பெறலாம் </h2><p>விருப்பமுள்ள விளாத்திகுளம் வட்டார விவசாயிகள் உடனடியாக முன்பதிவு செய்து கொண்டு, செப்டம்பர் மாத இறுதியிலிருந்து மரக்கன்றுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.  கூடுதல் விவரங்களுக்கும் முன்பதிவிற்கும் விளாத்திகுளம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பள்ளி மதிப்பெண் அடிப்படையில் கால்நடை மருத்துவ படிப்பிற்கான சேர்க்கை: பிரதமருக்கு முதல்-அமைச்சர் கடிதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/admission-to-veterinary-course-based-on-school-marks-chief-ministers-letter-to-prime-minister</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/admission-to-veterinary-course-based-on-school-marks-chief-ministers-letter-to-prime-minister#comments</comments><guid isPermaLink="false">43e3f7a9-87fe-4663-97b0-8662cf3cffa2</guid><pubDate>Fri, 07 Aug 2026 10:45:12 +0000</pubDate><atom:updated>2026-08-07T10:45:12.555Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரதமர் மோடி,PM Modi,கால்நடை மருத்துவ படிப்பு,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/v5kavt71/Untitled-4.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/v5kavt71/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு (BVSc &amp; AH) பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையானது, பொது நுழைவுத் தேர்வு அடிப்படையில் அல்லாமல், மேல்நிலைப் பள்ளித் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் அல்லது அந்தந்த மாநில அரசுகளால் தீர்மானிக்கப்படும் மாணவர் சேர்க்கை அளவுகோல்களின் அடிப்படையில் மட்டுமே நடைபெற வேண்டுமென வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.</p><p>அக்கடிதத்தில், கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு (BVSc &amp; AH) பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பான மிக முக்கியமான பொருண்மை குறித்து பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் சட்டம், 1984-ன் விதிமுறைகளின்படி, அனைத்து கால்நடை மருத்துவக் கல்லூரிகளிலும் கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையானது, பொது நுழைவுத் தேர்வின் (Common Entrance Examination) அடிப்படையில் மையப்படுத்தப்பட்ட கலந்தாய்வு முறை (Centralized Counselling Process) மூலம் இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்துள்ளதோடு, அதற்கு மாற்று ஏற்பாடாக, மேற்படி 2026-27 கல்வியாண்டு முதல் தனியாக நுழைவுத் தேர்வு நடத்த முடியாத பட்சத்தில், நீட் (NEET UG-2026) தேர்வின் தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டும் என இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில், மாநிலங்களுக்கு அறிவுறுத்தியிருப்பது தனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார். மேலும், இந்த முன்மொழிவு, தமிழ்நாடு மாநிலத்திற்குப் பல்வேறு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>கால்நடை மருத்துவக் கல்வியானது தமிழகத்தின் வளர்ச்சிக்கான முன்னுரிமைகளில் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது என்று குறிப்பிட்டுள்ள முதல்-அமைச்சர், கால்நடை மருத்துவக் கல்வி என்பது வெறும் தொழில்சார் படிப்பு மட்டுமல்ல, மாறாக, மாநிலத்தின் கால்நடை பராமரிப்பை வலுப்படுத்துவதற்கும், கால்நடைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், பால்வள மேம்பாட்டினை வலுப்படுத்துவதற்கும், லட்சக்கணக்கான கிராமப்புறக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்குமான நமது முயற்சிகளின் அடித்தளமாகும் என்றும், இன்று கால்நடை மருத்துவக் கல்வியில் சேர்க்கை பெறும் மாணவர்களே, வரும் ஆண்டுகளில் நமது விவசாயிகளுக்கும், கிராமங்கள் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறைக்கும் சேவை செய்யும் கால்நடை மருத்துவர்களாகவும் உருவெடுக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>தமிழ்நாடு, மேல்நிலைப் பள்ளித் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தொழிற்கல்விப் படிப்புகளுக்கான சேர்க்கை முறையை பல தசாப்தங்களாக பின்பற்றி வருகிறது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளதோடு, இந்த முறையானது (Model), திறமையான தொழில்முறை வல்லுநர்களைத் தொடர்ந்து உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், கிராமப்புறங்கள், அரசுப் பள்ளிகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் மற்றும் சமூகரீதியாகப் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த தகுதியான மாணவர்களுக்கு, உயர்கல்வியைப் பெறுவதற்கான நியாயமான வாய்ப்பை உறுதிசெய்துள்ளது. இத்தேர்வு முறை, சமூக நீதி, பிராந்திய சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான ஒரு பயனுள்ள கருவியாகச் செயல்பட்டுள்ளது என்றும் முதல்-அமைச்சர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.</p><p>2007-2008ம் கல்வியாண்டு முதல், தமிழ்நாடு அரசு, தொழிற்கல்விப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்துள்ளது என்றும், குறிப்பாக கிராமப்புற மற்றும் பின்தங்கிய பின்னணியைக் கொண்ட பல திறமையான மாணவர்களுக்கு நுழைவு நிலையில் பெரும் தடைகளை நீட் (NEET) உள்ளிட்ட ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுகள் ஏற்படுத்துகின்றன என்பதை மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்றும் முதல்-அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தேசியத் தேர்வுகள் முகமை (NTA), நீட் தேர்வுகளை நடத்துவதில் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருவதையும், அண்மையில் சில முறைகேடுகள் காரணமாக, தேர்வை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வு நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு மேற்படி முகமை ஆளான நிலையில், 2024-ம் ஆண்டில் வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணைக்கும் வழிவகுத்தன என்பதையும் கருத்தில்கொண்டு, கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நீட் தேர்வை அறிமுகப்படுத்துவது பொருத்தமானதாக இருக்காது என்று முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p>பள்ளிப் படிப்பின் மூலம் வெளிப்படும் தகுதியை பிரதிபலிப்பதற்குப் பதிலாக, சிறப்புப் பயிற்சிக்கான வாய்ப்புகள், நிதி ஆதாரங்கள் மற்றும் பலமுறை தேர்வு எழுதுவதற்கான வாய்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இதுபோன்ற நுழைவுத் தேர்வுகளில் பெறப்படும் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது என்ற எண்ணத்தை சமீபத்திய ஆண்டுகளின் அனுபவங்கள் மேலும் உறுதிப்படுத்தியுள்ளன என்று தெரிவித்து, இத்தகைய நடைமுறையைக் கால்நடை மருத்துவக் கல்விச் சேர்க்கைக்கும் விரிவுபடுத்துவது என்பது, அதைப் போன்ற பாதிப்புகளையே ஏற்படுத்தும் என முதல்-அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>மேலும், கால்நடை மருத்துவக் கல்வியானது ஒவ்வொரு மாநிலத்தின் வேளாண் மற்றும் கிராமப்புறப் பொருளாதாரத்துடன் இயல்பாகப் பிணைக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ள முதல்-அமைச்சர், கால்நடை மருத்துவ வல்லுநர்களுக்கான தேவை, இத்துறையில் சேரும் மாணவர்களின் பின்புலம் மற்றும் கால்நடைத் துறையின் வளர்ச்சிக்கான முன்னுரிமைகள் ஆகியவை நாடு முழுவதும், மாநிலத்திற்கு மாநிலம் கணிசமாக மாறுபடுகின்றன என்றும், இந்தச் சூழலில், கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அளவுகோல்களைத் தீர்மானிக்கும் உரிமையை அந்தந்த மாநில அரசுகளிடமே விட்டுவிடுவதுதான் சரியானதாக இருக்கும் என்றும், இத்தகைய அணுகுமுறையே, நமது கூட்டாட்சி அமைப்பை மதிப்பதாக அமைவதோடு, கல்வித் தரத்தைத் தொடர்ந்து உயர்த்தவும், தகுதியான கால்நடை மருத்துவர்கள் உருவாவதை உறுதிசெய்யவும் உதவும் என்றும், அதேவேளையில், மாநிலங்கள் தங்களது சமூக-பொருளாதார நிலைகளுக்கும் கல்வி அமைப்புகளுக்கும் ஏற்புடைய மாணவர் சேர்க்கைக் கொள்கைகளை உருவாக்கிக் கொள்ளவும் இது வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p>எனவே, இப்பொருண்மை குறித்து பிரதமர் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டுமென்று கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்துள்ள முதல்-அமைச்சர், இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்துமாறும், மேல்நிலைப் பள்ளித் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கான சேர்க்கையைத் தொடரவோ அல்லது மாணவர் சேர்க்கை அளவுகோல்களை அந்தந்த மாநில அரசுகளே தீர்மானிக்கவோ அனுமதிக்க வேண்டுமென்றும் அக்கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.</p><p>மேலும், இக்கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்து, கால்நடை மருத்துவக் கல்வியை அனைவரும் சமமாகப் பெறுவதை உறுதி செய்யுமாறும், கிராமப்புற மற்றும் சமூகரீதியாகப் பின்தங்கிய பின்னணியைக் கொண்ட மாணவர்களுக்கான வாய்ப்புகளைப் பாதுகாக்குமாறும், நமது கூட்டாட்சி அமைப்பிற்குள் மாநிலங்களின் தங்களுக்கான சட்டபூர்வ கொள்கை முடிவுகளை எடுக்கும் நிலையை உறுதிசெய்யுமாறும் பிரதமரை, முதல்-அமைச்சர்  தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பேஸ் பேஸ் பில்டர் காபி... ருசித்துக் குடித்த ராமேஸ்வரம் கோவில் யானை ராமலட்சுமி! </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/delicious-filter-coffee-ramalakshmi-the-rameswaram-temple-elephant-savoured-it</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/delicious-filter-coffee-ramalakshmi-the-rameswaram-temple-elephant-savoured-it#comments</comments><guid isPermaLink="false">6796c1ba-a5d2-4f10-a9b3-81bf43f608ca</guid><pubDate>Fri, 07 Aug 2026 10:32:43 +0000</pubDate><atom:updated>2026-08-07T10:32:43.336Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>elephant,யானை,காபி,coffee,ராமேஸ்வரம் கோவில்,Rameshwaram Temple</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/dkp06f0n/97.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ ராமேஸ்வரம் கோவில் யானை ராமலட்சுமி]]></media:title><media:description type="html"><![CDATA[ ராமநாதசுவாமி திருக்கோயில் யானை ராமலட்சுமி, வீதியுலாவின் போது சுடச்சுட பில்டர் காபியை ருசித்துக் குடித்தது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/dkp06f0n/97.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமேஸ்வரம்,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ராமேஸ்வரம்</a> ராமநாதசுவாமி திருக்கோயில் யானை ராமலட்சுமி, வீதியுலாவின் போது சுடச்சுட பில்டர் காபியை ருசித்துக் குடித்த சுவாரஸ்யமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.</p><h2>காபி குடித்த யானை</h2><p>ராமேஸ்வரம் கோவிலில் சுவாமி, அம்பாள் வீதியுலா விமரிசையாக நடைபெற்றது. இந்த ஊர்வலத்தின் முன்னணியில் கோயில் யானையான ராமலட்சுமி கம்பீரமாக நடந்து சென்றது. யானை தெற்கு ரத வீதி வழியாகச் சென்றபோது, அங்கிருந்த உணவகத்தில் இருந்து பக்தர் ஒருவர் யானைக்காக பிரத்யேகமாக ஒரு பெரிய டம்பளரில் சுடச்சுட பில்டர் காபியை வாங்கிக் கொடுத்தார்.</p><h2>ரசித்து குடித்த ராமலட்சுமி</h2><p>பக்தர் கொடுத்த அந்த காபியை, யானைப் பாகன் ராமு பெற்று ராமலட்சுமியிடம் வழங்கினார். வழக்கமாகப் பழங்கள், கரும்புகளைச் சாப்பிடும் ராமலட்சுமி, அன்று பில்டர் காபியைக் கண்டதும் உற்சாகமடைந்தது. தன் தும்பிக்கையால் டம்பளரை லாவகமாக வாங்கி, காபியை வாயில் ஊற்றி மிகவும் ரசித்து ருசித்துக் குடித்தது.</p><h2>வைரல் வீடியோ</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">யானை </a>மனிதர்களைப் போல ரசித்துக் காபி குடித்த இந்த விநோதக் காட்சியைக் கண்ட அங்கிருந்த பக்தர்களும் பொதுமக்களும் வியப்படைந்தனர். பலர் இதனைத் தங்களது மொபைல் போன்களில் வீடியோவாகப் பதிவு செய்ய, தற்போது அந்த காட்சிகள் இணையத்தில் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து லைக்குகளைக் குவித்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதித்த பிடிவாரண்ட் ரத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/arrest-warrant-issued-against-former-minister-ponmudi-revoked</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/arrest-warrant-issued-against-former-minister-ponmudi-revoked#comments</comments><guid isPermaLink="false">f82568e2-6c7d-44a7-8578-baaf8ec629d5</guid><pubDate>Fri, 07 Aug 2026 10:30:28 +0000</pubDate><atom:updated>2026-08-07T10:30:28.935Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பொன்முடி,Ponmudi,Court,பிடிவாரண்ட்,சென்னை கோர்ட்டு,Arrestwarrant</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/rhx9f6ec/ponmudi33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
முன்னாள் அமைச்சர் பொன்முடி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/rhx9f6ec/ponmudi33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.</p><p>இதுசம்பந்தமாக சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன், சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், வெறுப்பு பேச்சு பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான இந்த புகாரை விசாரித்து, மதரீதியாக வெறுப்புணர்வை ஏற்படுத்துதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவரை தண்டிக்க வேண்டும் என கோரப்பட்டது.</p><p>இந்த புகார் மனு,  எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றமான ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு  நிலுவையில் உள்ளது. </p><p>தனக்கு எதிரான புகாரை விசாரணைக்கு ஏற்று ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் அனுப்பிய சம்மன் மற்றும் வழக்கை ரத்து செய்யக் கோரி <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">பொன்முடி</a> தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p>இந்த வழக்கை விசாரித்த  சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் , திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் வழக்கை ஆறு மாதத்தில் முடிக்க உத்தரவிட்டார்.</p><p>இந்த வழக்கு நேற்று சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் உமா ஆனந்த தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை  சென்னை ஐகோர்ட்டு நீக்கி இருப்பதாகவும் ஆறு மாதத்தில் விசாரணையை முடிக்க  சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டதாகவும் தெரிவித்தார்.</p><p>பொன்முடி தரப்பில் ஆஜராக இருந்த வழக்கறிஞர் வழக்கில் நேற்று ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது ஆனால் வழக்கில் இன்று ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி பொன்முடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரிப்பதாக உத்தரவிட்ட நீதிபதி</p><p>சைவ, வைணவ சமயங்கள், பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படுகிறது.  பொன்முடியை செப்டம்பர் 2ஆம் தேதிக்குள் கைது செய்து ஆஜர்படுத்த காவல் துறைக்கு சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டு உத்தரவிடுகிறது என கூறி வழக்கு விசாரணையை செப்டம்பர் 2 தேதிக்கு தள்ளிவைத்தார்.</p><p>இந்தநிலையில்,  சைவ, வைணவ சமயம், பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதித்த பிடிவாரண்ட் ரத்து  செய்யப்பட்டுள்ளது. சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் பொன்முடி ஆஜரானதால் பிடிவாரண்ட் திரும்பப் பெறப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>&apos;திமுக காலத்து ஊழல் தொடரக் கூடாது&apos; - தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-era-corruption-should-not-continue-nayinar-nagendran-urges-tvk-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-era-corruption-should-not-continue-nayinar-nagendran-urges-tvk-government#comments</comments><guid isPermaLink="false">14aa85f9-f413-499d-b455-893a72da2520</guid><pubDate>Fri, 07 Aug 2026 10:22:29 +0000</pubDate><atom:updated>2026-08-07T10:22:29.321Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,நயினார் நாகேந்திரன்,Corruption,ஊழல்,Nayinar Nagendran,தவெக அரசு,TVK Government</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/dqcc9r7g/8.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/dqcc9r7g/8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் ஒரு செங்கல் கூட நடாமல், அண்டை வீடுகளைக் காட்டி 21 லட்சம் ரூபாய் முறைகேடு செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது குறித்து தமிழக பாஜக தலைவர்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D"> நயினார் நாகேந்திரன்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>திமுக ஆட்சிக் காலத்தில்  ஊழல்</h2><p>மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் ஒரு செங்கல் கூட நடாமல், அண்டை வீடுகளைக் காட்டி 21 லட்சம் ரூபாய் முறைகேடு செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நிலவிய ஊழல் கலாசாரமும், அதிகாரிகளின் மெத்தனப்போக்குமே இத்தகைய முறைகேடுகள் துணிச்சலாக நடைபெறக் காரணமாக இருந்துள்ளன. மத்திய அரசு ஏழை மக்களுக்காக வழங்கும் நிதியைச் சுரண்டுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.</p><h2>தவெக அரசில் தொடரக்கூடாது</h2><p>திமுக காலத்து இந்த ஊழல் முறைகேடுகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், ஆட்சியில் இருக்கும் தவெக அரசு, வெறும் 'ரீல்ஸ்' மோகத்திலும், வெற்று விளம்பர அரசியலிலும் மட்டுமே மூழ்கிக் கிடக்காமல், நிர்வாகத்தில் போதிய கவனம் செலுத்தி, அதே தவறுகள் மீண்டும் தொடராமல் தடுக்க வேண்டும்.</p><p>மத்திய அரசின் திட்டங்கள் தகுதியுள்ள ஏழைப் பயனாளிகளுக்கு நேரடியாகச் சென்றடைவதை உறுதி செய்வதோடு, முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இனிவரும் காலங்களில் தகுதியற்றவர்கள் நிதி பெறுவதைத் தடுக்க, தவெக அரசு மிகுந்த கண்காணிப்புடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-thoothukudi-tomorrow-6</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-thoothukudi-tomorrow-6#comments</comments><guid isPermaLink="false">05b75a58-2548-426c-835c-f6d046604d25</guid><pubDate>Fri, 07 Aug 2026 10:14:01 +0000</pubDate><atom:updated>2026-08-07T10:14:01.439Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,monthly maintenance work,மாதாந்திர பராமரிப்பு பணி,Power outage tomorrow,நாளை மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/zbdyzvko/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/zbdyzvko/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> ஊரக உட்கோட்டத்திற்குட்பட்ட விளாத்திகுளம், குளத்தூர், சூரங்குடி துணை மின் நிலையங்களில் நாளை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் காரணமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை </a>செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இது தொடர்பாக தூத்துக்குடி ஊரக கோட்ட செயற்பொறியாளர் சின்னத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><h2>காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை</h2><p>தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தூத்துக்குடி ஊரகக் கோட்டத்திற்குட்பட்ட விளாத்திகுளம், குளத்தூர், சூரங்குடி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (8.8.2026, சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். </p><h2>விளாத்திகுளம்</h2><p>விளாத்திகுளம், மந்திகுளம், செங்கல்படை, கமலாபுரம், பிள்ளையார்நத்தம், பேரிலோவன்பட்டி, அயன்பொம்மையாபுரம், ராமசந்திராபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்கள். </p><h2>குளத்தூர்</h2><p>குளத்தூர், கீழவைப்பார், வைப்பார், வேப்ப‌லோடை, மார்த்தாண்டம்பட்டி, முள்ளூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்கள். </p><h2>சூரங்குடி</h2><p>மேல்மாந்தை, ஈ.வேலாயுதபுரம், வேம்பார், பச்சையாபுரம், அரியநாயகிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களில் மின் விநியோகம் இருக்காது. </p><p>எனவே பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இந்த மின்நிறுத்த அறிவிப்பைக் கருத்தில் கொண்டு தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் சங்கீதா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sangeetha-withdrew-the-divorce-case</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sangeetha-withdrew-the-divorce-case#comments</comments><guid isPermaLink="false">a7554930-c805-47cd-b126-71fdf11bdab8</guid><pubDate>Fri, 07 Aug 2026 10:11:52 +0000</pubDate><atom:updated>2026-08-07T10:11:52.744Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,விவாகரத்து,சங்கீதா,CMVijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/00j1e0tk/san.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக முதல்-அமைச்சரும், தனது கணவருமான விஜய்யிடம் விவாகரத்து கோரி தாக்கல் செய்திருந்த மனுவை சங்கீதா வாபஸ் பெற்றுள்ளார். லண்டனில் இருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் செங்கல்பட்டு குடும்ப நல கோர்ட்டில் ஆஜரான அவர், வழக்கை தொடர விருப்பமில்லை என்று தெரிவித்ததை தொடர்ந்து, கோர்ட்டு வழக்கை முடித்து வைத்தது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/00j1e0tk/san.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக முதல்-அமைச்சரும், தனது கணவருமான விஜய்யிடம் விவாகரத்து கோரி தாக்கல் செய்திருந்த மனுவை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE">சங்கீதா </a>வாபஸ் பெற்றுள்ளார். லண்டனில் இருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் செங்கல்பட்டு குடும்ப நல கோர்ட்டில் ஆஜரான அவர், வழக்கை தொடர விருப்பமில்லை என்று தெரிவித்ததை தொடர்ந்து, கோர்ட்டு வழக்கை முடித்து வைத்தது.</p><h2>விவாகரத்து வழக்கின் பின்னணி</h2><p>விஜய் மற்றும் சங்கீதாவுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கு விசாரணைக்கு வந்தபோது இருவரும் நேரில் ஆஜராகாமல், அவர்களது வழக்கறிஞர்கள் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜராகினர். இருவரும் பிரபலமானவர்கள் என்பதால், வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி வழங்குமாறு தரப்புகள் கோரிக்கை வைத்திருந்தன.</p><h2>சமரச முயற்சிக்கு பிறகு திருப்பம்</h2><p>பின்னர் கடந்த ஜூன் 15-ம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, நீதிபதி சில நடைமுறை கேள்விகளை எழுப்பியதுடன், இருவரையும் சமரச மையத்துக்கு அனுப்ப வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். பின்னர் வழக்கு ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.</p><h2>வழக்கை வாபஸ் பெற்ற சங்கீதா</h2><p>அதன்படி, இன்று நடைபெற்ற விசாரணையின்போது, சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்ததால் முதல்-அமைச்சர் விஜய் நேரில் ஆஜராக முடியவில்லை என்று அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். </p><p>அதே நேரத்தில், லண்டனில் இருந்த சங்கீதா வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜராகி, விவாகரத்து மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். இதையடுத்து, அவரது கோரிக்கையை ஏற்று வழக்கை முடித்து வைத்து கோர்ட்டு உத்தரவிட்டது. </p>]]></content:encoded></item><item><title>ஒப்பந்த காவலாளியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி பெண் அதிகாரி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/block-development-officer-arrested-rs-10k-bribe</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/block-development-officer-arrested-rs-10k-bribe#comments</comments><guid isPermaLink="false">5c91a210-90da-48a5-ac9f-cafd76672beb</guid><pubDate>Fri, 07 Aug 2026 10:09:05 +0000</pubDate><atom:updated>2026-08-07T10:09:05.135Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrest,லஞ்சம்,Bribery</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/87l0luhy/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/87l0luhy/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>ஈரோடு கனிராவுத்தர் குளம் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (55 வயது). இவர் ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் இரவு நேர காவலாளியாக பணியாற்றி வருகிறார். வட்டார வளர்ச்சி அதிகாரியால் நேரடியாக நியமனம் செய்யப்பட்ட இந்த பணிக்கு தினக்கூலியாக ரூ.762 பெற்று வந்துள்ளார்.</p><p>இதற்கிடையில் மாதந்தோறும் ஊதியம் பெறவும், பணியில் தொடர்ந்து நீடிக்கவும் தனக்கு லஞ்சம் தர வேண்டும் என, வட்டார வளர்ச்சி அதிகாரி லதா கூறியதாக தெரிகிறது. அதன் அடிப்படையில் கடந்த 1½ ஆண்டுகளாக சண்முகசுந்தரம், தான் வாங்கிய சம்பளத்தில் மாதந்தோறும் ரூ.10 ஆயிரத்தை, வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் கொடுத்துள்ளார்.</p><p>இந்த நிலையில் இந்த மாதத்துக்கான ஊதியம் சண்முகசுந்தரத்தின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த மாதத்துக்கான லஞ்சம் ரூ.10 ஆயிரத்தை வழங்குமாறு லதா கேட்டுள்ளார். ஆனால் நண்பர்கள் சிலரின் அறிவுறுத்தலால், லஞ்ச பணம் கொடுப்பதற்கு விரும்பாத சண்முகசுந்தரம் இதுகுறித்து ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.</p><p>அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு சாந்தி, இன்ஸ்பெக்டர் ரேகா ஆகியோர், சண்முகசுந்தரத்திடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பி உள்ளனர். இதைத்தொடர்ந்து சண்முகசுந்தரம் லஞ்சமாக ரூ.10 ஆயிரம் ரசாயனம் தடவிய நோட்டுகளை வட்டார வளர்ச்சி அதிகாரி லதாவிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வட்டார வளர்ச்சி அதிகாரியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>கடலூர் அருகே ஒரேநாளில் 25 பேரை கடித்த தெரு நாய்! </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/stray-dog-bites-25-people-in-a-single-day-near-cuddalore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/stray-dog-bites-25-people-in-a-single-day-near-cuddalore#comments</comments><guid isPermaLink="false">eb689910-98e1-4880-b6ae-a33a53941e6a</guid><pubDate>Fri, 07 Aug 2026 10:04:23 +0000</pubDate><atom:updated>2026-08-07T10:04:23.256Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கடலூர்,attack,Street dog,வெறிநாய் கடி,Cuddalore district,25 பேர் காயம்</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/oymhfini/96.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ வெறிபிடித்த நாய்]]></media:title><media:description type="html"><![CDATA[ கடலூர் அருகே ஒரேநாளில் 25 பேரை ஒரு தெரு நாய் கடித்தது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/oymhfini/96.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர்,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கடலூர் மாவட்டம்</a> புவனகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரே ஒரு தெருநாய், ஒரே நாளில் 25 பேரைக் கடித்துக் குதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><h2>நாயின் அடுத்தடுத்த தாக்குதல்</h2><p>கடலூர் மாவட்டம் புவனகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தெரு நாய் ஒன்று சுற்றித் திரிந்தது. அப்போது திடீரென வெறிபிடித்த அந்த நாய் சாலையில் சென்றவர்களைத் தாக்கத் தொடங்கியது.</p><p>மேலும், கண்ணில் பட்டவர்களையெல்லாம் துரத்தித் துரத்திக் கடித்தது. அந்த வெறிநாயிடமிருந்து தப்பிக்க பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். எனினும், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்கள் உட்பட மொத்தம் 25 பேர் இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்தனர்.</p><h2>தீவிர சிகிச்சை</h2><p>காயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு புவனகிரி அரசு ஆஸ்பத்திரி மற்றும் கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து, ரேபிஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி வருகின்றனர்.</p><h2>மக்கள் கோரிக்கை</h2><p>ஒரே நாளில் இத்தனை பேரை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நாய்</a> கடித்த சம்பவம் புவனகிரி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சி முடங்கியுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அந்த வெறிநாயைப் பிடிக்க வேண்டும் என்றும், நகரில் உள்ள மற்ற தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சுதந்திர தின விழாவையொட்டி கோவை விமான நிலையத்துக்கு பார்வையாளர்கள் செல்ல தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/visitors-banned-from-entering-coimbatore-airport-for-independence-day-celebrations</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/visitors-banned-from-entering-coimbatore-airport-for-independence-day-celebrations#comments</comments><guid isPermaLink="false">e5f738aa-a234-4bb8-8a1c-008d19d15d34</guid><pubDate>Fri, 07 Aug 2026 09:54:12 +0000</pubDate><atom:updated>2026-08-07T09:54:12.339Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவை விமான நிலையம்,Coimbatore Airport,சுதந்திர தின விழா,Independence Day Celebration,banned,பார்வையாளர்கள்,visitors,செல்ல தடை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/csqzx5q7/covai-airport.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/csqzx5q7/covai-airport.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>சுதந்திர தின விழாவையொட்டி கோவை விமான நிலையத்துக்கு பார்வையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.</p><h2>கோவை விமான நிலையம்</h2><p>நாடு முழுவதும் வருகிற 15-ந் தேதி சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.</p><p>அதன் ஒரு பகுதியாக விமான நிலையங்களுக்குள் செல்ல பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. கோவையில் உள்ள விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமான விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதுபோன்று சார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகிறது.</p><h2>பார்வையாளர்கள் செல்ல தடை</h2><p>இதன் காரணமாக தினமும் ஏராளமான பயணிகள் இந்த விமான நிலையத்துக்கு வந்து செல்கிறார்கள். அவர்களை அழைத்துச்செல்லவும், அனுப்பி வைக்கவும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலர் வருகிறார்கள். அவர்கள் டிக்கெட் எடுத்து பார்வையாளர்கள் வசதி உள்ள பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சுதந்திர தின விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் நடந்து வருவதால், கோவை விமான நிலையத்துக்குள் பார்வையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><h2>முழு ஒத்துழைப்பு</h2><p>இது குறித்து கோவை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">விமான நிலைய</a> அதிகாரிகள் கூறும்போது, சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக மறு உத்தரவு வரும் வரை கோவை விமான நிலையத்துக்குள் பார்வையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே மறு அறிவிப்பு வரும் வரை கோவை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கான நுழைவு சீட்டு, பிரத்யேக பாஸ் வழங்கப்பட மாட்டாது. இந்த அறிவிப்புக்கு பயணிகள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றனர்.</p>]]></content:encoded></item></channel></rss>