<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 07 Sep 2026 17:09:13 +0000</lastBuildDate><item><title>வேளாங்கண்ணியில் பெரிய தேர் பவனி; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thousands-of-devotees-worship</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thousands-of-devotees-worship#comments</comments><guid isPermaLink="false">6cd48df4-2b4a-47c3-a879-14d77c673db1</guid><pubDate>Mon, 07 Sep 2026 17:03:31 +0000</pubDate><atom:updated>2026-09-07T17:03:31.389Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நாகை,Nagai,தேர் பவனி,Velankanni,வேளாங்கண்ணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/05obmqhp/bavani33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
வேளாங்கண்ணி]]></media:title><media:description type="html"><![CDATA[ பக்தர்கள் வழிபாடு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/05obmqhp/bavani33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாகப்பட்டினம், </p><p>நாகை மாவட்​டம் வேளாங்​கண்ணி பேரால​யத்​தின் ஆண்​டுப் பெரு​விழா​வின் முக்​கிய நிகழ்ச்​சி​யான பெரிய தேர் பவனி  நடைபெற்றது. </p><h2>பெரிய தேர் பவனி</h2><p>உலகப் புகழ்பெற்ற நாகப்பட்டினம் மாவட்டம் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%20">வேளாங்கண்ணி</a> புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மின் அலங்கார பெரிய ஆடம்பரத் தேர் பவனி இன்று (திங்கட்கிழமை) மாலை கண்கொள்ளாக் காட்சியாக நடைபெற்றது.</p><p>இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, கோவா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணியில் வந்து குவிந்தனர். பேராலய வளாகமே பக்தர்கள் வெள்ளத்தில் தத்தளித்தது.</p><p>சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலிதேர் பவனியை முன்னிட்டு, இன்று மாலை 5.30 மணியளவில் பேராலயத்தில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு மற்றும் நவநாள் ஜெபம் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து, தஞ்சாவூர் மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் தலைமையில், நூற்றுக்கணக்கான பாதிரியார்கள் கலந்துகொண்ட பிரம்மாண்ட திருவிழா சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.</p><h2>மின்னொளியில் ஜொலித்த பெரிய தேர்</h2><p>திருப்பலி முடிவடைந்ததும், இரவு 7.30 மணியளவில் பக்தர்கள் ஆவலோடு எதிர்பார்த்த பெரிய தேர்பவனி தொடங்கியது. வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மிக்கேல் சம்மனசு, செபஸ்தியார், அந்தோணியார், சூசையப்பர், உத்திரிய மாதா ஆகிய சொரூபங்கள் தாங்கிய 6 சிறிய தேர்கள் (சப்பரங்கள்) ஒன்றன்பின் ஒன்றாகப் புறப்பட்டன. இந்தச் சிறிய தேர்களைப் பெண்கள் தங்களது தோள்களில் சுமந்து வந்தனர்.அவற்றின் பின்னால், அன்னை ஆரோக்கிய மாதாவின் சொரூபம் தாங்கிய பிரம்மாண்ட பெரிய ஆடம்பரத் தேர் மின் விளக்கு அலங்காரத்தில் பேரொளியுடன் நகர்ந்து வந்தது. இந்தத் தேரினை ஆண்கள் பக்திப் பெருக்குடன் சுமந்து வந்தனர்.</p><h2>பக்தர்கள் மரியே வாழ்க... மாதா வாழ்க...முழக்கம்</h2><p>பேராலயத்தின் முகப்பில் இருந்து புறப்பட்ட இந்தத் தேர் பவனி, கடற்கரை சாலை, திராவிடா ஓட்டல் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. அப்போது தேரின் இருபுறமும் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள், "மரியே வாழ்க... மாதா வாழ்க..." என்று பக்தி கோஷங்களை எழுப்பினர்.பலர் மெழுகுவர்த்தி ஏந்தியும், தேரின் மீது மலர்களைத் தூவியும், முழங்காலிட்டு அழுது உருகியும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.  வேளாங்கண்ணி நகரமே விழாக்கோலம் பூண்டு, மின்னொளியில் ஜொலித்தது.</p><h2>பலத்த போலீஸ் பாதுகாப்பு</h2><p>பக்தர்களின் வசதிக்காகப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 525-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. கடற்கரையில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மீட்புப் படகுகளுடன் வீரர்கள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 2,000-க்கும் மேற்பட்ட போலீசார் பேராலய வளாகம் மற்றும் முக்கிய வீதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.</p><h2>நாளை கொடியிறக்கம்</h2><p>அன்னையின் பிறந்தநாளான நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை பேராலயத்தில் சிறப்பு திருவிழா கூட்டுத் திருப்பலி நடைபெறும். தொடர்ந்து, நாளை மாலை அன்னை மாதாவின் கொடி இறக்கப்பட்டு, 11 நாட்கள் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வேளாங்கண்ணி ஆண்டுப் பெருவிழா முறைப்படி நிறைவு பெறுகிறது.</p>]]></content:encoded></item><item><title>மகளிடம் அத்துமீற முயன்றதை தட்டி கேட்ட தாய்: கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த கணவன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mother-confronts-husband-over-abuse-killed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mother-confronts-husband-over-abuse-killed#comments</comments><guid isPermaLink="false">b523aa6f-6b4a-484f-9eef-796ff17b948a</guid><pubDate>Mon, 07 Sep 2026 16:28:49 +0000</pubDate><atom:updated>2026-09-07T16:28:49.286Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருப்பூர்,தலைமறைவு,murder,கொலை,Tirupur</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/3cdu6610/Untitled-12.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/3cdu6610/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><p>மகளிடம் அத்துமீறியதைத் தட்டிக்கேட்ட தாயை, கணவன் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>முதல் கணவரின் மகள்</h2><p>திருப்பூர் அவிநாசி ரோடு, பாண்டியன் நகர் வீரமாருதி தெருவைச் சேர்ந்தவர் விசாலாட்சி (40 வயது). இவர் மகளிர் சுயஉதவிக் குழுவில் வேலை செய்து வந்தார். இவரது முதல் கணவர் இறந்துவிட்டார். முதல் கணவர் மூலம் 19 வயது மகள் உள்ளார். விசாலாட்சி சமையல் வேலை செய்து தனது மகளை படிக்க வைத்தார்.</p><h2>இரண்டாவது திருமணம்</h2><p>கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் சமையல் வேலைக்குச் சென்றபோது, விழுப்புரம் மாவட்டம் அதனூரைச் சேர்ந்த விஜயபாலன் (42 வயது) என்பவருடன் விசாலாட்சிக்கு பழக்கம் ஏற்பட்டு அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சரவணகுமார் (15 வயது), ஹரிஹர சிவா (11 வயது) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.</p><h2>அத்துமீறல்</h2><p>இந்த நிலையில், இன்று அதிகாலை 1 மணியளவில், தூங்கிக் கொண்டிருந்தபோது, முதல் கணவரின் மகளிடம் விஜயபாலன் அத்துமீறி தவறாக நடக்க முயன்றுள்ளார். அதிர்ச்சியடைந்த அவர் அலறித் துடித்து தாயை கூப்பிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜயபாலன் அவரை மிரட்டியுள்ளார். சத்தம் கேட்டு விழித்த விசாலாட்சி, தனது மகளிடம் அத்துமீற முயன்ற இரண்டாவது கணவர் விஜயபாலனை கடுமையாகத் தட்டிக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.</p><h2>கொலை</h2><p>வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த விஜயபாலன் விசாலாட்சியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்ய முயன்றார். இதில் ரத்த வெள்ளத்தில் விசாலாட்சி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கொலையை நேரில் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த மகளிடம், சத்தம் போட்டால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.</p><h2>தலைமறைவு</h2><p>இதையடுத்து, மகள் மிகவும் சாமர்த்தியமாக பாத்ரூம் செல்வதாகக் கூறி வெளியே வந்து, வீட்டின் கதவை பூட்டிவிட்டு தப்பியோடினார். பின்னர் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரிடம் செல்போனை வாங்கி போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார். இதனிடையே வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு வெளியே வந்த விஜயபாலன், தனது 2 மகன்களையும் அழைத்துக் கொண்டு, பைக்கில் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.</p><p>தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விசாலாட்சியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான விஜயபாலனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் லிப்ட் பழுது: நோயாளிகள் சிக்கியதற்கு வானதி சீனிவாசன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/lift-malfunction-at-thoothukudi-government-hospital-vanathi-srinivasan-condemns-incident-where-patients-were-trapped</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/lift-malfunction-at-thoothukudi-government-hospital-vanathi-srinivasan-condemns-incident-where-patients-were-trapped#comments</comments><guid isPermaLink="false">ab4405ff-b80e-4271-b349-7a012258a794</guid><pubDate>Mon, 07 Sep 2026 16:26:50 +0000</pubDate><atom:updated>2026-09-07T16:26:50.082Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,condemnation,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,பா.ஜ.க,லிப்ட்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/jk6d7pqk/5.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/jk6d7pqk/5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பா.ஜ.க. முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-</p><h2>அரசு மருத்துவமனை</h2><p>தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் லிப்ட் பழுதாகி உள்ளே ஆக்சிஜன் சிலிண்டருடன் நோயாளியும், மருத்துவப் பணியாளர்களும் சிக்கி மீட்கப்பட்டதாகக் கூறப்படும் செய்தி  பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. உயிர் காக்கும் மருத்துவமனைகள் தவெக ஆட்சியின் அலட்சிய நிர்வாகத்தால் மரண பயத்துடன் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. </p><p>மாற்றம் கொடுப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்களின் ஆட்சியில் இன்றும் அரசு மருத்துவமனைகளில் எலிகள் ஓடுவதும், குளூக்கோஸ் பாட்டில்களை உறவினர்கள் கையில் ஏந்திக் கொண்டு நிற்பதும், செவிலியர், டாக்டர் அல்லாதோர் சிகிச்சை கொடுக்கும் அவலங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஏழை மக்களின் உயிர் காக்கும் கூடங்களாக செயல்பட வேண்டிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88">அரசு மருத்துவமனைகள்</a> முறையான பராமரிப்பின்மை, பணியாளர்கள் பற்றாக்குறையால் அவல நிலைக்குச் சென்று கொண்டிருப்பது ஏழை மக்களின் உயிருடன் விளையாடுவது போன்றது. </p><h2>வலியுறுத்தல்</h2><p>இனியும் தாமதிக்காமல் அரசு மருத்துவமனைகளில் முறையான பராமரிப்பு, போதிய உபகரணங்கள், காலிப் பணியிடங்களை நிரப்பி நோயுற்றவர்களின் பிணி தீர்ப்பதில் அலட்சியம் காட்டாமல் அக்கறையுடன் செயல்பட நடவடிக்கைகளை மேற்கொள்ள தவெக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தி.மு.க.வை ஒழிப்பதில் தான் த.வெ.க. குறியாக உள்ளது- கிருஷ்ணசாமி பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-is-focused-solely-on-eliminating-the-dmk-krishnasamys-interview</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-is-focused-solely-on-eliminating-the-dmk-krishnasamys-interview#comments</comments><guid isPermaLink="false">a05f791c-d72e-4688-be34-086ac40a9d86</guid><pubDate>Mon, 07 Sep 2026 16:23:27 +0000</pubDate><atom:updated>2026-09-07T16:23:27.176Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,த.வெ.க,தி.மு.க,கிருஷ்ணசாமி,Krishnasamy</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/0x8pc5hb/Krishanasamai.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கிருஷ்ணசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/0x8pc5hb/Krishanasamai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p>கோவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>த.வெ.க. ஆட்சியில் 116 நாட்களில் கொலை, கொள்ளை, பாலியல் என 500 குற்றங்கள் நடந்துள்ளன. சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இது விஜய் கவனத்திற்கு வந்ததா?. போதைப்பொருட்கள் பயன்பாடும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இவற்றை தடுக்க அரசு மேற்கொள்ள உள்ள உறுதியான நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் விஜய் தெளிவான பதிலை அளிப்பார் என எதிர்பார்த்தோம். ஆனால், அந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை.</p> <p>அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் இறுதி தீர்ப்பாகாது. நீதிமன்ற விசாரணை மற்றும் தீர்ப்புக்கு பிறகே குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கருத முடியும். எனவே, விசாரணை அமைப்புகளின் குற்றச்சாட்டுகளை மட்டும் அடிப்படையாக வைத்து ஒருவரை குற்றவாளி என முடிவு செய்வது சரியல்ல. எதிர்கட்சியினர் தவறு செய்திருந்தால், அதற்கான ஆதாரம் இருந்தால் முதல்-அமைச்சர் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கலாம்.</p>  <p>ஒரு குற்றம் நடந்த பிறகு வழக்குப்பதிவு செய்து, கைது செய்வது மட்டுமே அரசின் கடமை அல்ல. குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதே ஒரு அரசின் முக்கிய பொறுப்பு. முதல்-அமைச்சர் தனது பதிலுரையில் தி.மு.க.வை மட்டுமே விமர்சனம் செய்துள்ளார். ஊழல் ஒழிப்பு என்று கூறிவிட்டு, தி.மு.க.வை ஒழிப்பதில்தான் த.வெ.க. குறியாக உள்ளது. முதல்-அமைச்சர் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் கவனம் செலுத்த வேண்டும். சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் விஜய் ஆவேசமாக பேச வேண்டிய அவசியம் இல்லை. அவரது பதிலுரை சினிமா பாணியில் மட்டுமே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மண்ணுக்கும் மக்களுக்கும் பேச வேண்டிய பேரவையில், மல்லுக்கட்டும் மோதல்கள் ஏன்? - வேல்முருகன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-are-there-aggressive-confrontations-in-the-assembly-a-forum-meant-to-speak-for-the-land-and-its-people-velmurugan-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-are-there-aggressive-confrontations-in-the-assembly-a-forum-meant-to-speak-for-the-land-and-its-people-velmurugan-asks#comments</comments><guid isPermaLink="false">5800ba28-fd2f-4292-b1fe-e05adbb2a983</guid><pubDate>Mon, 07 Sep 2026 16:02:06 +0000</pubDate><atom:updated>2026-09-07T16:02:06.438Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Assembly,Velmurugan,வேல்முருகன்,சட்டப்பேரவை,தமிழக வாழ்வுரிமைக் கட்சி,speaks</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/n4o8n9vj/194.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/n4o8n9vj/194.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மண்ணுக்கும் மக்களுக்கும் பேச வேண்டிய பேரவையில், மல்லுக்கட்டும் மோதல்கள் ஏன் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>சட்டப்பேரவை</h2><p>சட்டம் ஒழுங்கு குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதங்கள், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஆட்சியின் பொறுப்பு என்ன? என்ற அடிப்படைக் கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளன.</p><p>மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறதா? பெண்கள் அச்சமின்றி நடமாடும் சூழல் இருக்கிறதா? குற்றங்களைத் தடுக்க காவல்துறை போதிய அளவில் செயல்படுகிறதா? இத்தகைய கேள்விகளுக்குத் தெளிவான பதில்களும் செயல்பாடுகளும் வெளிப்பட வேண்டிய இடமே சட்டப்பேரவைதான்.</p><h2>அரசியல் எதிர்ப்பை</h2><p>மண்ணையும் மக்களையும் காப்பதற்கான செயல்பாடுகளைத் தீர்மானிக்க வேண்டிய அவையில், ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் அரசியல் மோதலில் ஈடுபடுவதால் மக்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது?</p><p>சட்டப்பேரவை என்பது வெறும் அரசியல் எதிர்ப்பை வெளிப்படுத்தும் மேடை அல்ல. ஆட்சியின் செயல்பாடுகளைப் பரிசீலிப்பதும், தவறுகளைச் சுட்டிக்காட்டுவதும், தீர்வுகளை உருவாக்குவதும்தான் சட்டப்பேரவையின் அடிப்படை நோக்கமாக இருக்க வேண்டும்.</p><p>எதிர்க்கட்சிக்குக் கேள்வி எழுப்பும் உரிமை உண்டு. அதே நேரத்தில், மக்களின் சார்பில் எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பொறுப்புடன் விளக்கம் அளிப்பது ஆட்சியாளர்களின் கடமை. </p><h2>வார்த்தை மோதல்கள்</h2><p>இரு தரப்பும் தங்கள் அரசியல் நிலைப்பாட்டைத் தாண்டி மக்களின் நலனை முன்னிறுத்த வேண்டிய பொறுப்பு கொண்டவர்கள். வார்த்தை மோதல்கள் மக்களின் அச்சத்தைப் போக்காது. அரசியல் சச்சரவுகள் குற்றங்களைத் தடுக்காது. குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் அரசியல், தமிழ்நாட்டில் உள்ள ஒரேயொரு குடும்பத்தின் பாதுகாப்பைக்கூட உறுதி செய்யாது.</p><p>மக்களுக்குத் தேவைப்படுவது அரசியல் வெற்றி தோல்விகள் அல்ல. அவர்கள் வாழும் ஒவ்வொரு நாளும் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதற்கான உறுதி.</p><p>அரசின் பொறுப்பு சட்டம் ஒழுங்குடன் முடிவடைவதில்லை. இந்த மண்ணில் வாழும் மக்களின் வாழ்க்கையைத் தாங்கி நிற்கும் நிலம், நீர், காற்று, காடு, கடல் மற்றும் மலை வளம் உள்ளிட்ட இயற்கைச் செல்வங்களை, பிற மாநிலங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் கொள்ளை அடிப்பதிலிருந்து பாதுகாப்பதும் ஆட்சியின் வரலாற்றுப் பொறுப்பு.</p><p>வளர்ச்சி என்ற பெயரில் நிலம் பறிக்கப்படும்போது, நீர்நிலைகள் அழிக்கப்படும்போது, கடற்கரை மற்றும் இயற்கை வளங்கள் சுரண்டப்படும்போது, அதன் துயரங்களை மக்கள்தான் அனுபவிக்கிறார்கள். நாளை பிறக்கப்போகும் தலைமுறைகளும் அந்தத் துயரங்களை அனுபவிக்க வேண்டுமா? என்கிற கேள்விக்கு நாம் என்ன பதில் சொல்லப் போகிறோம்?</p><p>மக்களின் உயிர் பாதுகாக்கப்பட வேண்டும்.</p><p>மக்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும்.</p><p>மக்களின் நிலம் பாதுகாக்கப்பட வேண்டும்.</p><p>வாழும் பூமியின் இயற்கைச் செல்வம், அடுத்த தலைமுறைக்கும் பாதுகாப்பானதாக விட்டுச் செல்லப்பட வேண்டும். இதுவே ஓர் ஆட்சியின் உண்மையான அளவுகோல்.</p><h2>வலியுறுத்தல்</h2><p>ஆகவே, அரசியல் மோதல்களைத் தாண்டி மண்ணையும் மக்களையும், அவர்களின் வாழ்வாதாரத்தையும் இயற்கை வளங்களையும் பாதுகாப்பதே ஆட்சியின் முதன்மைக் கடமை என்பதை உணர்ந்து, அதற்கான உறுதியான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.</p><p>அதேவேளையில், பிற கட்சிகளைச் சேர்ந்த அனைத்துச் சட்டப்பேரவை உறுப்பினர்களும் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, சட்டப்பேரவையின் மாண்பையும் சனநாயக நெறிகளையும் காத்து, மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் குரல் கொடுத்துச் செயல்பட வேண்டும் என்றும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்</a> சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நோயுற்றவர்களின் பிணி தீர்ப்பதில் அலட்சியம் காட்டாமல் அக்கறையுடன் செயல்பட வேண்டும் - வானதி சீனிவாசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/must-act-with-care-in-resolving-patients-ailments</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/must-act-with-care-in-resolving-patients-ailments#comments</comments><guid isPermaLink="false">ef8b6092-673d-4007-a907-bbea566f4643</guid><pubDate>Mon, 07 Sep 2026 15:31:21 +0000</pubDate><atom:updated>2026-09-07T15:31:21.998Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,அரசு மருத்துவமனைகள்,Govt Hospitals,BJP ​</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/x1fi4at3/Untitled-11.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/x1fi4at3/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நோயுற்றவர்களின் பிணி தீர்ப்பதில் அலட்சியம் காட்டாமல் அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் லிப்ட் பழுதாகி உள்ளே ஆக்சிஜன் சிலிண்டருடன் நோயாளியும், மருத்துவப் பணியாளர்களும் சிக்கி மீட்கப்பட்டதாகக் கூறப்படும் செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. உயிர் காக்கும் மருத்துவமனைகள் தவெக ஆட்சியின் அலட்சிய நிர்வாகத்தால் மரண பயத்துடன் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.</p><p>மாற்றம் கொடுப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்களின் ஆட்சியில் இன்றும் அரசு மருத்துவமனைகளில் எலிகள் ஓடுவதும், குளூக்கோஸ் பாட்டில்களை உறவினர்கள் கையில் ஏந்திக் கொண்டு நிற்பதும், செவிலியர், மருத்துவர் அல்லாதோர் சிகிச்சை கொடுக்கும் அவலங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.</p><p>ஏழை மக்களின் உயிர் காக்கும் கூடங்களாக செயல்பட வேண்டிய அரசு மருத்துவமனைகள் முறையான பராமரிப்பின்மை, பணியாளர்கள் பற்றாக்குறையால் அவல நிலைக்குச் சென்று கொண்டிருப்பது ஏழை மக்களின் உயிருடன் விளையாடுவது போன்றது.</p><p>இனியும் தாமதிக்காமல் அரசு மருத்துவமனைகளில் முறையான பராமரிப்பு, போதிய உபகரணங்கள், காலிப் பணியிடங்களை நிரப்பி நோயுற்றவர்களின் பிணி தீர்ப்பதில் அலட்சியம் காட்டாமல் அக்கறையுடன் செயல்பட நடவடிக்கைகளை மேற்கொள்ள தவெக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திண்டுக்கல் மாநகராட்சியில் காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thindukkal-municipality-vegetable-waste-electricity-production</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thindukkal-municipality-vegetable-waste-electricity-production#comments</comments><guid isPermaLink="false">4e95c01e-f66b-4a7d-b194-14fe0adfa388</guid><pubDate>Mon, 07 Sep 2026 15:12:14 +0000</pubDate><atom:updated>2026-09-07T15:12:14.308Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Dindigul,திண்டுக்கல்,காய்கறி,மாநகராட்சி,மின்சாரம்,electricity,vegetable waste,கழிவு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/od7pzkok/dindugul.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ திண்டுக்கல் மாநகராட்சி]]></media:title><media:description type="html"><![CDATA[ திண்டுக்கல் மாநகராட்சியில் காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/od7pzkok/dindugul.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல், </p><p>திடக்கழிவு மேலாண்மை திட்டம்சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை முறையாக அகற்றி அவற்றை மாற்று சக்தியாக மாற்றவும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.</p><h2>வீடு வீடாக குப்பை சேகரிப்பு</h2><p>இதன்படி, திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளிலும் தினமும் தூய்மை பணியாளர்கள் மூலம் வீடு, வீடாக சென்று குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அப்போது, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக தரம் பிரித்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><h2>42 டன் இயற்கை உரம்</h2><p>இவ்வாறு மாநகராட்சி முழுவதும் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகளில், மக்கும் குப்பைகள் மட்டும் தனியாக பிரிக்கப்படுகின்றன. அவ்வாறு தினமும் சுமார் 42 டன் அளவுக்கு மக்கும் குப்பைகள் சேருகின்றன. இந்த குப்பைகளை வீணாக்காமல், அவற்றில் இருந்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">இயற்கை உரம்</a> தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.</p><h2>14 நுண்ணுர மையங்கள்</h2><p>இதற்காக திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் மட்டும் 14 இடங்களில் நுண்ணுர செயலாக்க மையங்கள் அமைக்கப்பட்டு, தங்கு தடையின்றி செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் மக்கும் குப்பைகள் கொண்டு இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது.இவ்வாறு தயார் செய்யப்படும் உயர்தர இயற்கை உரங்கள் அனைத்தும், அந்தந்த பகுதி விவசாயிகளுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. </p><h2>காய்கறி கழிவுகள்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D">திண்டுக்கல்</a> நகரின் மையப்பகுதியில் புகழ்பெற்ற காந்தி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் டன் கணக்கில் காய்கறி கழிவுகள் சேருகின்றன. இதேபோல் நகரின் இதர பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளிலும் அதிக அளவில் காய்கறி கழிவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.</p><h2>மின்சாரம் தயாரிக்க முடிவு</h2><p>இந்த காய்கறி கழிவுகள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88">மக்கும் குப்பையாக</a> இருப்பதால், அவற்றை வெறும் இயற்கை உரமாக மட்டும் மாற்றாமல், மாற்று எரிசக்தியாகவும் பயன்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி, காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்காக திண்டுக்கல் லயன் தெருவில் அதிநவீன மின்சாரம் தயாரிக்கும் மையம் ஒன்று அமைக்கப்பட்டது.</p><h2>மீத்தேன் தொழில்நுட்பம்</h2><p>இந்த மையம் தினமும் 5 டன் காய்கறி கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு கொண்டு வரப்படும் காய்கறி கழிவுகள் முதலில் எந்திரம் மூலம் நன்றாக அரைக்கப்பட்டு கூழாக மாற்றப்படுகிறது. பின்னர், அந்த கூழ் ராட்சத கலனில் நிரப்பப்படுகிறது. அங்கு காய்கறி கழிவு கூழில் இருந்து இயற்கையாக உருவாகும் மீத்தேன் வாயு, குழாய் மூலம் தனியாக பிரிக்கப்படுகிறது.</p><h2>120 யூனிட் மின் உற்பத்தி</h2><p>இவ்வாறு வெளியாகும் மீத்தேன் வாயு மற்றொரு அறையில் உள்ள ராட்சத பலூனில் சேகரிக்கப்படுகிறது. அந்த பலூன் முழுமையாக நிரம்பியதும், மீத்தேன் வாயு மூலம் இயங்கும் அதிநவீன ஜெனரேட்டர் இயக்கப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்த மையத்தில் தற்போது தினமும் 100 யூனிட் முதல் 120 யூனிட் வரை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">மின்சாரம்</a> வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. </p><figure><img alt="மீத்தேன் வாயு மூலம் இயங்கும் அதிநவீன ஜெனரேட்டர் இயக்கப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. " src="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/uum7yn31/genarator.jpg" /><figcaption>ஜெனரேட்டர் </figcaption></figure><h2>குடியிருப்புகளுக்கு மின்சாரம்?</h2><p>இங்கு தயாரிக்கப்படும் மின்சாரத்தை கொண்டு, காய்கறி கழிவுகளை அரைக்கும் மோட்டார்கள் இயக்கப்படுகின்றன. மேலும் மையத்தில் உள்ள மின்விளக்குகளும் இதன் மூலமே எரிக்கப்பட்டு வருகின்றன. இந்த மையத்தில் தற்போதைய உற்பத்தியை விட 4 மடங்கு கூடுதலாக மின்சாரம் தயாரிக்கும் வசதி உள்ளது. இதனால், வரும் நாட்களில் உற்பத்தியை அதிகரித்து, அருகில் உள்ள நுண்ணுர செயலாக்க மையங்கள் மற்றும் பொதுமக்களின் குடியிருப்புகளுக்கும் மின்சாரம் வழங்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்:   திமுக புறக்கணிப்பா?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-assembly-by-elections-is-the-dmk-boycotting</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-assembly-by-elections-is-the-dmk-boycotting#comments</comments><guid isPermaLink="false">3510fc06-621f-4735-af50-82ca35b48050</guid><pubDate>Mon, 07 Sep 2026 15:03:59 +0000</pubDate><atom:updated>2026-09-07T15:03:59.436Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,மதுராந்தகம்,தாராபுரம்,சட்டமன்ற இடைத்தேர்தல்,Madurantakam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/opuiw4n4/anna-arivalayam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/opuiw4n4/anna-arivalayam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழகத்தில் காலியாக உள்ள 7 தொகுதிகளில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தனித்தொகுதிகளுக்கு அடுத்த மாதம்(அக்டோபர்) 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது சட்டமன்ற தேர்தலில் விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் களம் கண்டிருந்தார். இதில் 2 தொகுதிகளிலும்  வெற்றி பெற்றார்.  இதைத்தொடர்ந்து அவர், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல, அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதி), எஸ்.ஜெயக்குமார் (ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி), பி.சத்தியபாமா (திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி), இசக்கி சுப்பையா(நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம்), டாக்டர் சி.விஜயகுமார்(புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி), எம்.ஆர். விஜயபாஸ்கர்(கரூர் தொகுதி) ஆகிய 6 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள். </p> <h2>7 தொகுதிகள் காலி</h2><p>அவர்களுடைய ராஜினா கடிதத்தை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் ஏற்றுக் கொண்டார்.இதையடுத்து அவர்கள் தங்களை த.வெ.க.வில் இணைத்து கொண்டனர். இதைத்தொடர்ந்து திருச்சி கிழக்கு உள்பட 7 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் திருச்சி கிழக்கு, புதுக்கோட்டை, கரூர், பெருந்துறை, விராலிமலை ஆகிய 5 தொகுதிகளின் தேர்தல் முடிவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இந்த 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்துவதற்கு தடை உத்தரவு பிறப்பித்தது.</p> <h2>இடைத்தேர்தல்</h2><p>ஒரு சட்டமன்ற தொகுதி காலியானால் அங்கு 6 மாதத்துக்குள் இடைத்தேர்தலை நடத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறை ஆகும். தற்போது ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து 5 தொகுதிகளை தவிர்த்து, மதுராந்தகம்(தனி), தாராபுரம் (தனி) ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் நாளை மறுநாள் தொடங்க உள்ளது.</p><h2>வெல்ல வேண்டிய கட்டாயம்</h2><p>இந்த  இரு தொகுதிகளிலும் தவெக சார்பில் ஏற்கனவே ராஜினாமா செய்த மரகதம் குமாராவேல் மற்றும் சத்யபாமா ஆகிய இருவருமே களம் இறங்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த இரண்டில் வெற்றி பெற்றால், தவெக தனது செல்வாக்கை மீண்டும் நிரூபிப்பதோடு, ஆட்சிக்கு இருக்கும் நெருக்கடியையும் சமாளிக்க முடியும் என்பதால் தவெக வியூகம் வகுத்து வருகிறது. அதேநேரத்தில்,  அதிமுக வெற்றி பெற்ற பெற்ற தொகுதி என்பதால், இரு தொகுதிகளிலும் மீண்டும் வெற்றி பெற்று தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. உட்கட்சி பூசல் அதிகரித்துள்ள நிலையில், இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தால் எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் பின்னடைவை இது கொடுக்கும் என்பதால் அதிமுகவும் கட்டாயம் வெல்ல வேண்டிய நிலையில், உள்ளது.  </p><h2>திமுக புறக்கணிப்பா?</h2><p>திமுகவை பொறுத்தவரை இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் கட்சியின் செல்வாக்கை நிரூபிப்பதாக இருக்கும். அதேவேளையில் தவெக, அதிமுக, திமுக என மும்முனை போட்டி ஏற்பட்டால், வாக்குகள் பிரியும். இது தவெகவுக்கு சாதகமாக மாறிவிடக்கூடாது எனவும் கணக்கு போடுவதாக சொல்லப்படுகிறது. எனவே, மதுராந்தகம் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதி இடைத்தேர்தலை திமுக புறக்கணிக்க முடிவு செய்து உள்ளதாக அறிவாலயம் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. அதேநேரத்தில் இடைத்தேர்தலில் வென்று விஜய்க்கு பதிலடி கொடுக்க வேண்டும் எனவும் திமுக தரப்பில் சிலர் விரும்புவதாகவும் சொல்லப்படுவதால் திமுகவின் முடிவு என்னவாக இருக்கும் என்பது அரசியல் களத்தில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>காருக்குள் சிக்கிய 1 வயது குழந்தை: ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/1-year-old-child-trapped-inside-car-rescued-after-an-hour-long-struggle</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/1-year-old-child-trapped-inside-car-rescued-after-an-hour-long-struggle#comments</comments><guid isPermaLink="false">35c823d6-1ad7-49b1-9ed2-5c2298ae79d2</guid><pubDate>Mon, 07 Sep 2026 14:52:20 +0000</pubDate><atom:updated>2026-09-07T14:52:20.182Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>குழந்தை,நெல்லை,child,break,கார்,மீட்பு,rescued,Windows</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/jhyl9b5u/193.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  குழந்தை மீட்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/jhyl9b5u/193.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை, </p><p>நெல்லை மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அன்சாரி. இவர் தனது குடும்பத்தினருடன் சொகுசு காரில் நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் போட வந்து உள்ளார். </p><h2>கார்</h2><p>அப்போது அவரது 1 வயது குழந்தை காருக்குள் இருந்து உள்ளது. அன்சாரி காரில் இருந்து இறங்கி பெட்ரோலுக்கான பணத்தை செலுத்திக் கொண்டிருந்தபோது, கார் திடீரென உள்புறமாக பூட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது.</p><p>இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அன்சாரி, காருக்குள் சிக்கியிருந்த குழந்தையை மீட்க கடுமையாக போராடினார். காரின் சாவியை வைத்து கதவை திறக்க முயற்சி செய்ததுடன். பல்வேறு வழிகளில் காரை திறக்க முயற்சி மேற்கொண்டார். ஆனால் எந்த முயற்சியும் பலனளிக்காத நிலையில், காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து குழந்தையை மீட்க முடிவு செய்யப்பட்டது. </p><h2>மீட்பு</h2><p>சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் காரின் கதவில் இருந்த ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டு, கதவு திறக்கப்பட்டது. தொடர்ந்து காருக்குள் சிக்கியிருந்த 1 வயது குழந்தை பத்திரமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">மீட்கப்பட்டது</a>. பெட்ரோல் நிரப்ப வந்த காருக்குள் ஒரு வயது குழந்தை சிக்கிய சம்பவத்தால் நெல்லை வண்ணார் பேட்டை பெட்ரோல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>ஈரோடு: பட்டாசு வெடித்து இளைஞர் படுகாயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-firecracker-explosion-youth-seriously-injured</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-firecracker-explosion-youth-seriously-injured#comments</comments><guid isPermaLink="false">77f3f9dc-b88a-4a2c-a7d7-9f8db1b3f8dd</guid><pubDate>Mon, 07 Sep 2026 14:40:44 +0000</pubDate><atom:updated>2026-09-07T14:40:44.257Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Fire accident,Erode,ஈரோடு,இளைஞர்,பட்டாசு,படுகாயம்,injured,A youth</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/liu8nr8u/kamraj.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ சூர்யா]]></media:title><media:description type="html"><![CDATA[ ஈரோடு: பட்டாசு வெடித்து இளைஞர் படுகாயம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/liu8nr8u/kamraj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே வீட்டின் மாடியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில், வீடு சேதமடைந்து வாலிபர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p> <h2>திடீர் வெடி விபத்து</h2><p>ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த நசியனூர் பகுதியை சேர்ந்தவர் காமராஜ். இவர் அந்த பகுதியில் உரிமம் பெற்ற <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88">பட்டாசு கடை</a> நடத்தி வருகிறார். இந்த நிலையில், காமராஜ் தனது வீட்டின் மாடியில் ஏகப்பட்ட பட்டாசுகளை கொண்டு வந்து சேமித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இன்று மாடியில் வைக்கப்பட்டிருந்த இந்த பட்டாசுகள் அனைத்தும் எதிர்பாராதவிதமாக திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. </p><h2>ஜன்னல்கள் நொறுங்கின</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">வெடி விபத்தின்</a> தாக்கம் பயங்கரமாக இருந்ததால், அந்த வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் அனைத்தும் சுக்குநூறாக நொறுங்கி விழுந்தன. மேலும் கட்டிடத்தின் சுவர்களும் பலத்த சேதமடைந்தன. இந்த  விபத்தின் போது, வீட்டில் இருந்த காமராஜின் மகன் சூர்யா (வயது 30) என்ற வாலிபர் பலத்த காயமடைந்தார். பயங்கர சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த சூர்யாவை மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p> <h2>கலெக்டர் ஆய்வு</h2><p>விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஈரோடு மாவட்ட கலெக்டர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்து சென்று தீவிர ஆய்வு நடத்தினர். இந்த வெடிவிபத்து தொடர்பாக சித்தோடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கேரள விபத்தில் பலியான தமிழக மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சர் ராஜேஷ்குமார் கோரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-rajeshkumar-has-requested-that-relief-be-provided-to-the-families-of-the-tamil-nadu-students-who-lost-their-lives-in-the-kerala-accident</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-rajeshkumar-has-requested-that-relief-be-provided-to-the-families-of-the-tamil-nadu-students-who-lost-their-lives-in-the-kerala-accident#comments</comments><guid isPermaLink="false">16ae4fae-8e88-4a27-8593-a55c8c34b90a</guid><pubDate>Mon, 07 Sep 2026 14:33:30 +0000</pubDate><atom:updated>2026-09-07T14:33:30.662Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Accident,சென்னை,Kerala,நிவாரணம்,கேரள,விபத்தில் சிக்கி,அமைச்சர் ராஜேஷ்குமார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/bl1dr4vj/192.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ராஜேஷ்குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/bl1dr4vj/192.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>கேரள விபத்தில் பலியான தமிழக மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க அமைச்சர் ராஜேஷ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>இது தொடர்பாக, தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கு, சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமார் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-</p><h2>சாலை விபத்து</h2><p>கேரளம் மாநிலம் திருச்சூர் மாவட்டம் கைப்பமங்கலம் அருகே பனம்பிக்குன்னு பகுதியில் கடந்த 4-ந் தேதி இரவு நடந்த சாலை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">விபத்தில்</a> தமிழ்நாட்டை சேர்ந்த இளம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சூர்யா,யுவசஞ்சித், ஜீவா, சந்தோஷ், பிரசன்னா, ஜோஷூவா ஹில்சன், முரளி கிருஷ்ணன், விஸ்வா ஆகிய 8 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனைனையும் அளித்துள்ளது.</p><p>இவர்கள் தங்கள் குடும்பங்களின் எதிர்கால நம்பிக்கையாகவும், உயர் கல்வி மூலம் குடும்பத்தின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பாடுபட்டுக் கொண்டி ருந்தவர்களாகவும் இருந்துள்ளனர். குறிப்பாக சில குடும்பங்களில் இவர்கள் முதல் தலைமுறை பொறியியல் பட்டதாரிகளாக உருவாகி கொண்டிருந்தவர்கள்.</p><h2>நிவாரணம்</h2><p>அந்த மாணவர்களை இழந்து நிற்கும் அவர்களது பெற்றோருக்கும் குடும்பத்திற்கும் அரசு உறுதுணை யாக நிற்பது. மனிதாபிமான கடமையாகும். எனவே உயிரிழந்த 8 மாணவர்களின் குடும்பங்களுக்கும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.10 லட்சம் அல்லது அரசு உரியதாக கருதும் உயர்த்தப்பட்ட நிவாரண தொகையை வழங்கிட வேண்டும்.</p><p>அது மட்டுமின்றி ஒவ்வொரு குடும்பத்தின் பொருளாதார மற்றும் குடும்ப சூழ்நிலைகளை ஆய்வு செய்து தேவையான கூடுதல் அரசு உதவிகளை வழங்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 6 இடங்களில் இன்று வெயில் சதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/today-heat-crosses-100f-in-6-places-in-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/today-heat-crosses-100f-in-6-places-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">1f09cb47-8754-4b62-be84-b12fe089d01e</guid><pubDate>Mon, 07 Sep 2026 14:18:28 +0000</pubDate><atom:updated>2026-09-07T14:18:28.325Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Weather,வானிலை,Weather update,heat,வானிலை தகவல்,வெப்பம்,வெயில் சதம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/kuepvptg/Untitled-10.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ வெயில் சதம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/kuepvptg/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்தாலும், பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 6 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p>அதன்படி தமிழகத்தில் இன்று அதிகமாக வெப்பநிலை பதிவான இடங்கள் வருமாறு:-</p><p>வேலூர் - 104.9° பாரன்ஹீட் (40.5° செல்சியஸ்)</p><p>ஈரோடு - 103.64° பாரன்ஹீட் (39.8° செல்சியஸ்)</p><p>திருச்சி - 102.38° பாரன்ஹீட் (39.1° செல்சியஸ்)</p><p>கரூர் பரமத்தி - 101.3° பாரன்ஹீட் (38.5° செல்சியஸ்)</p><p>பாளையங்கோட்டை - 101.12° பாரன்ஹீட் (38.4° செல்சியஸ்)</p><p>நாமக்கல் - 100.22° பாரன்ஹீட் (37.9° செல்சியஸ்)</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தல்- 2 தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதி அமல்: சட்டசபையில் புதிய அறிவிப்புகள் வெளியிட  முடியுமா?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/by-election-model-code-of-conduct-in-force-in-two-constituencies-can-new-announcements-be-made-in-the-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/by-election-model-code-of-conduct-in-force-in-two-constituencies-can-new-announcements-be-made-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">95125769-c9ee-4eff-b3f5-ec70c40af756</guid><pubDate>Mon, 07 Sep 2026 14:05:36 +0000</pubDate><atom:updated>2026-09-07T14:05:36.758Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,இடைத்தேர்தல்,புதிய அறிவிப்புகள்,தேர்தல் நடத்தை விதி மீறல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/xbl9kk95/vijay.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சட்டசபை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/xbl9kk95/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தனிப்பெரும் கட்சியாக வென்ற தவெக  காங்கிரஸ், விசிக, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், கம்யூனிஸ்ட்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக மதுராந்தகம் மரகதம் குமர​வேல், தாராபுரம் சத்​தி​ய​பா​மா, பெருந்​துறை ஜெயக்​கு​மார், அம்​பாச​முத்​திரம் இசக்கி சுப்பை​யா, விராலிமலை சி.​விஜய​பாஸ்​கர், கரூர் எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர் ஆகியோர் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினமா செய்வதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் கடிதம் கொடுத்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இவர்​களின் ராஜி​னா​மாவை பேர​வைத் தலை​வர் ஜே.சி.டி. பிரபாகர் ஏற்​றுக் கொண்​டதையடுத்து அந்த தொகு​தி​கள் காலி​யான​தாக அறிவிக்​கப்​பட்​டன.</p><h2>ராஜினாமா</h2><p>இதேபோல், திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை முதல்வர் விஜய் ராஜினாமா செய்தார். இதனால், அந்த தொகுதியும் காலியானது. இதன்மூலம், மொத்தம் 7 தொகுதிகள் காலியாகின.இதனிடையே, அதி​முக கொற​டா​வின் உத்​தரவை மீறி பதவியை ராஜினாமா செய்த அதிமுக எம்எல்ஏக்கள் மீது கட்​சித்​ தாவல் தடைச் ​சட்​டத்​தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் ​கோரி அதிமுக சார்​பில் பேர​வைத் தலை​வரிடம் கடிதம் கொடுக்​கப்​பட்​டது.மேலும், கட்​சித் ​தாவல் நடவடிக்கை நிலு​வை​யில் இருந்து வந்த நிலை​யில் அதி​முக எம்​எல்​ஏ-க்​களின் ராஜி​னாமா கடிதங்​களை ஏற்று பேர​வைத் தலை​வர் பிறப்​பித்த உத்தரவை ரத்து செய்​யக் ​கோரி அதி​முக கொறடா எஸ்.எஸ். கிருஷ்ண​மூர்த்தி உள்​ளிட்​டோர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​கு​ தொடர்ந்​திருந்​தனர். </p><p>இடைத்தேர்தல் நடத்த 5 தொகுதிகளுக்கு தடை இருப்பதால்,, மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், 2 தொகுதிகளில் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவு பெறுகிறது.</p><h2>சட்டசபை கடைசி நாள்;</h2><p>நாளை பொதுத்துறை, சட்டமன்றம், ஆளுநர் - அமைச்சரவை மற்றும் ஓய்வூதியத் துறைகளுக்கான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற  உள்ளது. சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசிநாள் என்பதால் நாளை  முக்கிய அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படுமா? என்ற எதிர்பார்ப்பு  நிலவியது. தற்போது  இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருப்பதால்,  அறிவிப்புகள் வெளியிட முடியாது என்ற கேள்வி எழுந்துள்ளது.  </p><h2>அறிவிக்க முடியுமா?</h2><p>இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுவதாவது; பிற மாவட்டங்களில் அறிவிக்கப்படும் புதிய திட்டங்கள் அல்லது சலுகைகள், இடைத்தேர்தல் நடக்கும் தொகுதி மக்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கவரும் வகையில் இருக்கக்கூடாது. மாநிலம் முழுமைக்குமான ஒரு பெரிய புதிய கொள்கை முடிவு அறிவிக்கப்பட்டால் இடைத்தேர்தல் தொகுதியையும் பாதிக்கும் என்பதால், அதுபோன்ற பெரிய அறிவிப்புகளுக்கு தேர்தல் ஆணையத்திடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்று சொல்லப்படுகிறது.  அல்லது தேர்தல் முடியும் வரை தள்ளி வைக்க வேண்டியிருக்குமாம். அதே நேரத்தில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களாக இருந்தால் அதை செயல்படுத்துவதில் எந்த சிக்கலும் இல்லை.</p><h2>50 ஆயிரத்திற்கு மேல் எடுத்து செல்ல தடை</h2><p>இடைத்தேர்தல் நடைபெறும் இரண்டு தொகுதிகளிலும்  50 ஆயிரத்திற்கும் மேல் ஆவணங்கள் இன்றி எடுத்து செல்ல முடியாது. ஆங்காங்கே பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு சோதனைகள் நடைபெறும். </p>]]></content:encoded></item><item><title>விமானப்படை தள பாதுகாப்பை வலுப்படுத்த ஆவடியில் புதிய பயிற்சி கல்லூரி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-training-college-in-avadi-to-strengthen-air-force-base-security</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-training-college-in-avadi-to-strengthen-air-force-base-security#comments</comments><guid isPermaLink="false">e2ed3545-5ec8-4f47-af51-14358a2e936d</guid><pubDate>Mon, 07 Sep 2026 14:05:08 +0000</pubDate><atom:updated>2026-09-07T14:05:08.736Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,விமானப்படை,Security,Training,Indian Air Force,பயிற்சிக் கல்லூரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/qlec8tfc/191.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விமானப்படை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/qlec8tfc/191.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்திய விமானப்படையின் முதலாவது தரைப்பாதுகாப்பு பயிற்சி கல்லூரி, சென்னை ஆவடி விமானப்படை நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. </p><p>இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>பயிற்சி கல்லூரி</h2><p>சென்னையில் உள்ள ஆவடி விமானப்படை நிலையத்தில் 'இந்திய விமானப்படை தரைப்பாதுகாப்பு பயிற்சிக் கல்லூரி' 07 செப்டம்பர் 2026 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. விமானப்படைத் தளங்களின் தரைப்பாதுகாப்பு தொடர்பான பயிற்சிகளை வலுப்படுத்தும் நோக்கில் இது தொடங்கப்பட்டுள்ளது. <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88">விமானப்படை</a> தலைமையக நிர்வாகப்பிரிவுக்கு பொறுப்பு வகிக்கும் ஏர் மார்ஷல் எஸ். சிவகுமார் இக்கல்லூரியைத் தொடங்கி வைத்தார்.</p><p>விமானப்படை தளங்களின் தரைப்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களின் தயார்நிலை மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதில் இக்கல்லூரி கவனம் செலுத்தும். புதிதாக நிறுவப்பட்ட இம்மையத்தில் முதல் பயிற்சி வகுப்பும் உடனடியாக தொடங்கியது.</p><p>இப்பயிற்சிக்கல்லூரியின் தொடக்க விழாவில் விமானப்படையின் பராமரிப்புப்பிரிவு, பயிற்சிப்பிரிவு ஆகியவற்றின் பிரதிநிதிகள், முப்படை அதிகாரிகள், சிவில் பாதுகாப்பு அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தொழில்நுட்ப கோளாறு: மலேசியாவில் இருந்து சவுதி புறப்பட்ட விமானம் சென்னையில் தரையிறக்கம்

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/engine-issue-forces-malaysia-airlines-flight-to-make-emergency-landing-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/engine-issue-forces-malaysia-airlines-flight-to-make-emergency-landing-in-chennai#comments</comments><guid isPermaLink="false">6f9f9dd9-1c66-4ba7-84e6-5903dcd3b80c</guid><pubDate>Mon, 07 Sep 2026 13:52:58 +0000</pubDate><atom:updated>2026-09-07T13:52:58.758Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>plane,விமானம்,Chennai Airport,சென்னை விமான நிலையம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/tfof12ye/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/tfof12ye/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>மலேசியாவில் இருந்து சவுதி புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.</p><p>மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சவுதி அரேபியாவின் ஜித்தா நகருக்கு இன்று மாலை மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 186 பேர் பயணம் செய்தனர். </p> <h2>சென்னையில் தரையிறக்கம்</h2><p>இந்நிலையில், தமிழ்நாட்டின் சென்னை அருகே வான்பரப்பில் பறந்துகொண்டிருந்தபோது விமானம் எஞ்சினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. உடனடியாக விமானத்தை <a href="https://www.dailythanthi.com/topic/chennai-airport">சென்னை விமான நிலையத்தில்</a> தரையிறக்க விமானிகள் அனுமதி கேட்டனர். இதையடுத்து, சென்னை விமான கட்டுப்பாட்டு மையம் விமானம் தரையிறங்க அனுமதி அளித்தது.</p><p>இதனை தொடர்ந்து மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் சென்னை விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணித்த யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதையடுத்து, விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமான எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>சர்க்காரியா கமிஷன் பற்றி நேருக்கு நேர் விவாதிக்க விஜய் தயாரா? - ஆர்.எஸ். பாரதி கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-vijay-ready-for-direct-debate-on-sarkaria-commission-rs-bharathi-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-vijay-ready-for-direct-debate-on-sarkaria-commission-rs-bharathi-asks#comments</comments><guid isPermaLink="false">76f48edb-4396-4381-b591-763f3e108485</guid><pubDate>Mon, 07 Sep 2026 13:36:57 +0000</pubDate><atom:updated>2026-09-07T13:36:57.986Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,ஆர்.எஸ்.பாரதி,RS Bharathi,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,சர்க்காரியா கமிஷன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/un5qp5ou/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/un5qp5ou/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சர்க்காரியா கமிஷன் பற்றி நேருக்கு நேர் விவாதிக்க முதல்-அமைச்சர் விஜய் தயாரா? என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:-</p><p>இன்றைய முதல்-அமைச்சர் இந்த ஆட்சி மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல எதுவுமில்லாத காரணத்தால் அவர் பிறப்பதற்கு முன்பு சொல்லபட்ட குற்றச்சாட்டை எடுத்து வந்து இப்போது பேசி உள்ளார். எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இந்த 116 நாள் ஆட்சியில் நடைபெற்றுள்ள கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், கொள்ளைகள், சட்டம் ஒழுங்கு சீரழிவு பற்றி ஆதாரங்களோடு நேருக்கு நேராக குற்றம் சாட்டி கேள்வி எழுப்பினார். மற்ற எதிர்க்கட்சி தலைவர்களும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அவை எதற்கும் பதில் அளிக்க யோக்கியதை இல்லாமல், தைரியமில்லாமல், செத்த பாம்பை அடிப்பது போல முடிந்து போன சர்க்காரியா கமிஷன் பற்றி பேசி உள்ளார். சர்க்காரியா கமிஷன் பற்றி இவருக்கு தெரியுமா?</p><p>சர்க்காரியா கமிஷன் தொடர்பான உண்மைகளை தற்போதைய சூழ்நிலையில் மக்களுடன் பகிர்வது என்னைப் போன்றவர்களின் கடமையாகும். அவர் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் எதற்கும் எந்தவொரு அடிப்படை ஆதாரமும் இல்லை. சர்க்காரியா கமிஷன் எத்தகைய சூழ்நிலையில் நடைபெற்றது என்பதை அவர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவசர நிலை பிரகடனத்தின் போதுதான் அது நடந்தது. ஆனால், இன்றிருக்கும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி அன்றைக்கு இல்லை. சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டபோது பேச்சுரிமை இல்லை. பத்திரிகை சுதந்திரமும் இல்லை. பத்திரிகையாளர்களைச் சந்திக்க முடியாது. எந்தவொரு செய்தியும் பத்திரிகைகளில் வராது. மறுப்புகளும் வெளியிடப்படாது.</p><p>அந்தக் காலக்கட்டத்தில் இந்த ஆணையத்தை அமைத்த இந்திரா காந்தி கூட, 1980-ல் கடற்கரைக்கு வந்து, அவசர நிலையின்போது தனக்கு தெரியாமல் சில தவறுகள் நடந்துவிட்டதாகக் கூறி கலைஞருக்கு முன்னால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். இது பத்திரிகை உலகத்திற்கும், அரசியலை அறிந்தவர்களுக்கும், மூத்த அரசியல்வாதிகளுக்கும் தெரிந்த ஒன்றாகும். நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்களுக்கு, அரசியல் விவரமற்றவர்களுக்கு இது தெரியாது.</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சரிடம் நான் ஒரே ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். அவருக்கு உண்மையில் தெம்பும் திராணியும் இருந்தால், அவர் வார்த்தைகளில் ஏதேனும் உண்மை இருந்தால், எங்களுடன் சர்க்காரியா கமிஷன் குறித்து விவாதிக்கத் தயாரா? வார்த்தைக்கு வார்த்தை விவாதிக்க நாங்கள் விவாதிக்க தயார், அவர் தயாரா? உதாரணமாக, புகார் கொடுத்த எம்.ஜி.ஆர். தான் அடுத்த 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார். ஆனால் எந்த வழக்கும் போட முடியவில்லை . </p><p>கலைஞர் அல்லது திமுக ஏதேனும் தவறு செய்திருந்தால் எம்.ஜி.ஆரின் 10 ஆண்டு கால ஆட்சியில் எங்கள் மீது வழக்குத் தொடர்ந்திருக்கலாம். ஆனால், எம்.ஜி.ஆர். அரசு அத்தகைய எந்த வழக்கையும் தொடரவில்லையே ஏன்? நாங்கள் அக்டோபர் 1977-ல் இந்திரா காந்திக்கு கருப்புக்கொடி காட்டினோம். அதனால் வழக்கு பதியப்பட்டு கலைஞருடன் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டோம். இந்த வழக்கில் எப்படியாவது எங்களை உள்ளே வைக்க வேண்டும் என ஐகோர்ட்டில் எம்.ஜி.ஆர். மேல்முறையீடு செய்தார்.  ஐகோர்ட்டில் நாங்கள் விடுதலை செய்யப்பட்ட பிறகு, அவர் சுப்ரீம் கோர்ட்டு வரை சென்றார். 1977-ல் நாங்கள் காட்டிய கருப்புக்கொடி தொடர்பான வழக்கு பிப்ரவரி 1996-ல்தான் முடிந்தது. இந்த ஒரு உதாரணம் போதாதா? முழு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.</p><p>முதல்-அமைச்சர் விஜய் தனது ரசிகர்களுக்காக பேசி உள்ளார் அவ்வளவே. தமிழ்நாட்டின் தரம், மாண்பு, பாரம்பரியம் மற்றும் சட்டமன்ற மரபுகள் அனைத்தும் இன்று மாண்புமிக்க தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீறப்பட்டுள்ளது. சாதாரண ஒரு கருப்புக் கொடிப் போராட்ட வழக்கிற்காகவே அன்றைய அரசாங்கம் சுப்ரீம் கோர்ட்டு வரை சென்றபோது, கலைஞர் அல்லது மற்றவர்கள் உண்மையில் ஏதாவது தவறு செய்திருந்தால் அவர்கள் விட்டிருப்பார்களா? இதை தெரிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ளாமலேயே விஜய் பேசுகிறார்.</p><p>இன்று காலையில் அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கார் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று ஆளும் த.வெ.க. கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் நடுரோட்டில் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். சட்டமன்றத்தில் இதையெல்லாம் பேச வேண்டிய நேரம் இது. ஆனால், முதல்-அமைச்சர் விஜய் இப்பிரச்சினைகளை திசைதிருப்பும் வேலையைச் செய்கிறார்; இதுவொரு "திசைதிருப்பல்" தந்திரமாகும். இதனால், மக்கள் பேசப்போவதெல்லாம் விஜய்யின் சட்டமன்றப் பேச்சை பற்றி மட்டும்தான். தொலைக்காட்சியில், சமூகவலைதளங்களில் பார்ப்பவர்களுக்கு த.வெ.க. உறுப்பினர் கொலை மற்றும் அமைச்சரின் காரால் ஏற்பட்ட உயிரிழப்பு பற்றிய பெரிய செய்திகள் எதுவும் வெளிவராது.</p><p>1989 சட்டமன்ற நிகழ்வு குறித்தும் - ஜெயலலிதா குறித்தும் விஜய் பேசுகிறார். அதைப் பற்றிப் பேச அவருக்கு எந்த யோக்கியதையும் இல்லை. ஏனெனில், அந்நிகழ்வு நடக்கும்போது ஜெயலலிதா உடனிருந்த திருநாவுக்கரசு அன்று சட்டமன்றத்தில் என்ன நடந்தது என்பதைப் பலமுறை பத்திரிகைகளுக்குத் தெளிவுபடுத்தியுள்ளார். ஆக திசை திருப்புகிற அரசியல் செய்கிறார் விஜய்.</p><p>ஆணித்தரமாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்வதற்கு தெம்பில்லாமல், திராணி இல்லாமல் இன்றைக்கு ஒரு கபட நாடகத்தையும், திசைதிருப்பும் முயற்சியையும் சட்டசபையிலே அரங்கேற்றிவிட்டு ஓடியிருக்கிறார் தமிழ்நாட்டினுடைய முதல்-அமைச்சர் விஜய். தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றை எல்லாம் முதல்-அமைச்சர் தெரிந்து கொண்டு பேச வேண்டும். சும்மா யாரோ ஸ்கிரிப்ட் எழுதி கொடுத்ததை வைத்து பேசக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ தேர்வு: 9-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்</title><link>https://www.dailythanthi.com/education-and-employment/tnpsc-group-2-and-2a-exams-applications-accepted-until-the-9th</link><comments>https://www.dailythanthi.com/education-and-employment/tnpsc-group-2-and-2a-exams-applications-accepted-until-the-9th#comments</comments><guid isPermaLink="false">814bf0f2-5060-417d-bdee-a353bd137c22</guid><pubDate>Mon, 07 Sep 2026 12:58:20 +0000</pubDate><atom:updated>2026-09-07T12:58:20.937Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,டிஎன்பிஎஸ்சி,TNPSC,Application,தேர்வு,Competitive Exams,குரூப்-2</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/gn1qbv99/190.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டிஎன்பிஎஸ்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/gn1qbv99/190.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கல்வி&amp;வேலைவாய்ப்பு (Eduction and Jobs)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(<a href="https://www.dailythanthi.com/topic/tnpschttps://www.dailythanthi.com/topic/tnpsc">டிஎன்பிஎஸ்சி</a>) சார்பில் குரூப்-2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் 11-ந் தேதி அன்று வெளி​யிடப்பட்டது.</p><h2>காலியிடங்கள் விவரம்</h2><p>அசிஸ்டென்ட் இன்ஸ்பெக்டர்-7, டெபுடி கமர்ஷியல் டேக்ஸ் ஆபீசர்-1, ஜூனியர் எம்ப்ளாய்மென்ட் ஆபீசர்-1, புரபேஷன் ஆபீசர்-5, சப்-ரிஜிஸ்டிரார் (கிரேடு)-II-3, ஜெயிலர் (ஆண்)-3, ஜெயிலர் (ஸ்பெஷல் பெர்சன் பார் வுமன்)-1, ஸ்பெஷல் அசிஸ்டென்ட்-2, ஸ்பெஷல் பிராஞ்ச் அசிஸ்டென்ட்-8, ஸ்டோர்கீப்பர்-5, அசிஸ்டென்ட் செக்‌ஷன் ஆபீசர்-9, சீனியர் இன்ஸ்பெக்டர்-9, ஆடிட் இன்ஸ்பெக்டர்-5, கைத்தறி இன்ஸ்பெக்டர்-3, சூபர்வைசர் / இளநிலை கண்காணிப்பாளர்-7, சீனியர் ரெவினியூ இன்ஸ்பெக்டர்-4, அசிஸ்டென்ட்-686, அக்கவுன்டென்ட்-31,எக்சிக்யூட்டிவ் ஆபீசர் கிரேடு-III-9, எக்சிக்யூட்டிவ் ஆபீசர் கிரேடு-II-1, ஜூனியர் அக்கவுன்டென்ட், ஆண் வார்டன், லோயர் டிவிசன் கிளார்க்-20.</p><h2>கல்வித்தகுதி</h2><p>1. அசிஸ்டென்ட் செக்‌ஷன் ஆபீசர்: ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். ஜெனரல் லா பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றிருப்பவர்கள் அல்லது ஏதாவதொரு பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.</p><p>2. சப்- ரிஜிஸ்டிரார் கிரேடு-II. ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பிஎல் பட்டம் பெற்றிருப்பது, விரும்பத்தக்கது.</p><p>3. ஸ்பெஷல் பிராஞ்ச் அசிஸ்டென்ட்: ஏதொவதொரு இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கில டைப்பிங் படித்திருப்பது, விரும்பத்தக்கது.</p><p>4. மற்ற பணிகளுக்கு: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.வயது: பொதுப்பிரிவினர் 18 முதல் 32க்குள் இருக்க வேண்டும். பொதுப் பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும். பொதுப்பிரிவைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.</p><p>மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் எஸ்சி/ அருந்ததியர்/எஸ்டி/ பிற்பட்டோர்/சீர்மரபினர்/ முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.</p><p>தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.</p><p>எழுத்துத் தேர்வு பிரிலிமினரி தேர்வு, மெயின் தேர்வு என இரு கட்டங்களாக நடைபெறும். பிரிலிமினரி தேர்வு நவ.1ம் தேதி நடைபெறும். இதில் பொது அறிவு, கணித அறிவு மற்றும் தமிழ் அல்லது ஆங்கில மொழி தொடர்பான கேள்விகள் கேட்கப்படும். பொது அறிவு கேள்விகள் பட்டப்படிப்பு தரத்திலும், மொழித்திறன் தொடர்பான கேள்விகள் 10ம் வகுப்பு தரத்திலும் கேட்கப்படும். பிரிலிமினரி தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டும் மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.</p><h2>தேர்வுக் கட்டணம்</h2><p>முதல் நிலை தேர்வுக்கு மட்டும் ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/அருந்ததியர்/மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு தேர்வுக் கட்டணம் கிடையாது.</p><p>www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 09.09.2026.</p>]]></content:encoded></item><item><title>அரசு கல்வியியல் கல்லூரிகளில் 2-ம் கட்ட மாணவர் சேர்க்கை: இன்று முதல் 15-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/second-phase-student-admissions-in-government-education-colleges-online-applications-open-from-today-till-15th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/second-phase-student-admissions-in-government-education-colleges-online-applications-open-from-today-till-15th#comments</comments><guid isPermaLink="false">755becfc-6b6e-4f78-a426-5893a01558cf</guid><pubDate>Mon, 07 Sep 2026 12:55:06 +0000</pubDate><atom:updated>2026-09-07T12:55:06.470Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விண்ணப்பிக்கலாம்,மாணவர் சேர்க்கை,Admission,அரசு கல்வியியல் கல்லூரி,Education Colleges</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/33n6ybuj/Untitled-8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/33n6ybuj/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். பாடப்பிரிவுகளுக்கான 2-ம் கட்ட மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப்பதிவு வசதி 07.09.2026 முதல் 15.09.2026 வரை செயல்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் முதல் கட்ட கலந்தாய்விற்கு பிறகு 2 அரசு கல்வியியல் கல்லூரிகளில் (கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் (தன்னாட்சி), சைதாப்பேட்டை, செ-15, விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் (தன்னாட்சி), திருவல்லிக்கேணி, செ-05.) 70 காலியிடங்கள் மற்றும் 10 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 508 காலியிடங்கள் என மொத்தம் 578 இடங்கள் உள்ளன.</p><p>இதனை நிரப்பும் பொருட்டு பி.எட். பாடப்பிரிவுகளுக்கான இரண்டாம் கட்ட மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப்பதிவு வசதி 07.09.2026 முதல் 15.09.2026 வரை தொடர்ந்து செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே இவ்வாய்ப்பினை பயன்படுத்தி மாணவர்கள் தாங்கள் சேர விரும்பும் கல்லூரிகளில் பி.எட். பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.</p><p>10 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளாவன:-</p><p>1.அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரி, தூத்துக்குடி, 2. என்.கே.டி. தேசிய மகளிர் கல்வியியல் கல்லூரி, திருவல்லிக்கேணி, 3.ஸ்ரீஆர்.கே.எம்.வி. ஆடவர் கல்வியியல் கல்லூரி, கோயம்புத்தூர், 4.வ.உ.சி. கல்வியியல் கல்லூரி, தூத்துக்குடி, 5.மெஸ்டன் கல்வியியல் கல்லூரி (இருபாலர்), ராயப்பேட்டை, 6.தூய சேவியர் கல்வியியல் கல்லூரி, பாளையங்கோட்டை, 7.ஸ்டெல்லா மேட்டிடுனா கல்வியியல் கல்லூரி, அசோக் நகர், 8.தூய கிறிஸ்டோபர் கல்வியியல் கல்லூரி, வேப்பேரி, 9.தூய இக்னேஷியஸ் மகளிர் கல்வியியல் கல்லூரி, பாளையங்கோட்டை, 10.என்.வி.கே.எஸ்.டி. கல்வியியல் கல்லூரி, ஆத்தூர், திருவட்டாறு. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தி விடுமுறை; ஆம்னி பஸ்களில் கட்டணம் பல மடங்கு உயர்வு- பயணிகள் அவதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-chaturthi-holiday-omni-bus-fares-skyrocket-passengers-suffer</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-chaturthi-holiday-omni-bus-fares-skyrocket-passengers-suffer#comments</comments><guid isPermaLink="false">0f953a93-4277-42e8-b787-9abeae960c55</guid><pubDate>Mon, 07 Sep 2026 12:30:34 +0000</pubDate><atom:updated>2026-09-07T12:30:34.260Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Omni Bus,விடுமுறை,Holiday,ஆம்னி பஸ்கள்,passengers,Ganesh Chaturthi,கட்டணம் உயர்வு,suffer,விநாயகர் சதுர்த்தி பண்டிகை,bus fares</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/yklew0aq/omni.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஆம்னி பேருந்துகள்]]></media:title><media:description type="html"><![CDATA[ விநாயகர் சதுர்த்தி விடுமுறை; ஆம்னி பஸ்களில் கட்டணம் பல மடங்கு உயர்வு- பயணிகள் அவதி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/yklew0aq/omni.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழகத்தில் வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் அதையொட்டி வரும் தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">ஆம்னி பேருந்துகளில்</a> கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்த பொதுமக்கள் இந்தத் திடீர் கட்டண உயர்வு காரணமாக கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.</p><h2>தொடர் விடுமுறை</h2><p>தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பிற மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்திற்காகவும், கல்வி மற்றும் பணிக்காகவும் தங்கி வசிக்கின்றனர். இவர்கள் தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி போன்ற முக்கிய பண்டிகை காலங்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம்.</p><h2>3 மடங்கு உயர்வு</h2><p>வழக்கமாக வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் சற்று உயர்வது வழக்கம் என்றாலும், இந்த முறை நிலவரம் எல்லை மீறியுள்ளது. ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செயலிகளில் சென்னை டூ நாகர்கோவில் வழித்தடத்திற்கான  ஸ்லீப்பர் கட்டணம் வழக்கமான நாட்களை விட 3 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது. வழக்கமாக 1,200 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை வசூலிக்கப்படும் இந்த வழித்தடத்தில், தற்போது ஒரு இருக்கையின் விலை ரூ.4,000 முதல் ரூ.5,000 வரை உயர்ந்துள்ளது. </p> <h2>செப்டம்பர் 12, 13-ந்தேதிகளில் கட்டண உயர்வு</h2><p>பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ்களில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D">கட்டணம்</a> சற்று அதிகமாக இருப்பது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், இந்த முறை அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளையும் மீறி கட்டணத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். சென்னையில் இருந்து நாகர்கோவில் வரும் பயணிகளுக்காக வருகிற செப்டம்பர் மாதம் 12 மற்றும் 13-ந்தேதிகளில் கட்டணம் மிக அதிக அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, விடுமுறை நாளான செப்டம்பர் 13-ந்தேதி அன்று சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் படுக்கை வசதி கொண்ட ஆம்னி பேருந்துகளில் ஒரு இருக்கைக்கு தலா ரூ.5,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.</p> <h2>திரும்புவதற்கும் ரூ.5,000 வரை கட்டணம்</h2><p>சொந்த ஊருக்கு செல்வதற்கு மட்டுமின்றி, மீண்டும் சென்னை திரும்புவதற்கும் ஆம்னி பஸ்கள் கட்டண உயர்வு . நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு திரும்புவதற்காக செப்டம்பர் 14 மற்றும் 15-ந்தேதிகளில் ஆம்னி பஸ்களில் ரூ.4,000 முதல் ரூ.5,000 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.</p> <h2>முன்பதிவு செய்யும் பயணிகள்</h2><p>தொடர் விடுமுறையை தவறவிடாமல் சொந்த ஊரில் உள்ள தங்களது குடும்பத்தினருடன் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில், ரெயில்களில் டிக்கெட் கிடைக்காத நடுத்தர மக்கள், வேறு வழியின்றி இந்த கூடுதல் கட்டணத்தை செலுத்தி முன்பதிவு செய்து வருகின்றனர். </p> <h2> பொதுமக்கள் கோரிக்கை</h2><p>தொடர் விடுமுறையை பயன்படுத்தி சொந்த ஊரில் உள்ள குடும்பத்தினருடன் பண்டிகையை கொண்டாட நினைத்தால், ஆம்னி பஸ் நிறுவனங்கள் ரெயில்களில் டிக்கெட் கிடைக்காததை சாதகமாக்கி கொண்டு இவ்வாறு கட்டணத்தை உயர்த்துவது அநியாயம்" என்று பயணிகள் கடும் வேதனை தெரிவித்துள்ளனர்.</p><h2></h2><p>பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளின் இந்த கட்டண உயர்வை தடுத்து நிறுத்த போக்குவரத்து துறை அதிகாரிகள் உடனடியாக சோதனைகளை நடத்த வேண்டும் என்றும், கூடுதல் அரசுச் சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் ஆலோசகர் நியமன அரசாணையை வெளியிட அஞ்சுவது ஏன்? - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-is-there-hesitation-to-issue-the-government-order-appointing-an-advisor-to-the-chief-minister-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-is-there-hesitation-to-issue-the-government-order-appointing-an-advisor-to-the-chief-minister-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">2fef4113-3078-49c8-8970-b219c7b0b155</guid><pubDate>Mon, 07 Sep 2026 12:28:41 +0000</pubDate><atom:updated>2026-09-07T12:28:41.597Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,சென்னை,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,முதல்-அமைச்சர்,Government Order,தமிழக அரசாணை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/hgkv5ca8/47.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/hgkv5ca8/47.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முதல்-அமைச்சர் ஆலோசகர் நியமன அரசாணையை வெளியிட அஞ்சுவது ஏன் என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.</p><p>இது தொடர்பாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது;</p><p>முதல்-அமைச்சர், ஜான் ஆரோக்கியசாமி என்பவரைத் தனது ஆலோசகராக அமர்த்தி, அவருக்கு அரசு வாகனம், காவல்துறைப் பாதுகாப்பு மற்றும் தலைமைச் செயலகத்திலேயே தனி அலுவலகம் என அரசு அதிகாரத்தை வாரி வழங்கியுள்ளார். இந்த நியமனம் குறித்த அரசாணையைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் கேட்டால், முன்னுக்குப் பின் முரணான பதில்களை வழங்கி உண்மையை மூடி மறைக்கிறது தவெக அரசு. இது அரசின் வெளிப்படைத் தன்மையற்ற போக்கை அம்பலப்படுத்துவதோடு, அதன் பின்னணியில் உள்ள முறைகேடுகளை மறைக்கும் முயற்சியாகும்.</p><h2>பதவி நியமனம்</h2><p>ஏற்கனவே, தான் கடைசியாக நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணாவிற்கு டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவி, தனது மேலாளர் ஜெகதீஷ் பழனிசாமிக்கு முதல்-அமைச்சரின் தனிச்செயலாளர் பதவி, தனது நண்பரான விஷ்ணு ரெட்டிக்கு முதல்-அமைச்சர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ஆலோசகர் பதவி, தனது நண்பரும் ஒளிப்பதிவாளருமான மனோஜ் பரமஹம்சாவிற்கு எம்.ஜி.ஆர் அரசுத் திரைப்படக் கல்லூரித் தலைவர் பதவி, தனது திரைப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்குக் கோவில்களுக்கான அறங்காவலர் தேர்வுக்குழு உறுப்பினர் பதவி என ஜோசப் விஜய், தனக்கு நெருக்கமானவர்களுக்கு பதவிகளைத் தாரைவார்த்து வரும் நிலையில், தற்போது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">தவெக</a>-வின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியின் நியமனமும் அந்தப் பட்டியலிலேயே சேர்ந்துள்ளது.</p><p>அதிகாரப்பூர்வமற்ற நபர்களையும், தகுதியைப் பார்க்காமல் தனது சினிமா உறவுகளையும், நண்பர்களையும் மட்டுமே அதிகார மையத்தில் அமர்த்தி அழகு பார்ப்பதும், அதற்காகப் பொதுமக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்துவதும் தவெக அரசு தமிழக மக்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும். எனவே, இனிவரும் காலங்களில் அனைத்து அரசு நியமனங்களும் ஒளிவுமறைவின்றிப் பொதுவெளியில் வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும். தகுதி மற்றும் நேர்மையைப் புறக்கணித்துவிட்டு தனக்குத் தேர்தல் வேலை பார்த்தவர்கள் மற்றும் சினிமா நண்பர்கள் போன்றவர்களுக்கு அரசுப் பதவிகளைப் பரிசாக வழங்குவதை முதல்-அமைச்சர் நிறுத்திவிட்டு, தகுதியுடையவர்களுக்கு மட்டுமே பதவிகளை வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-election-commission-announced-the-by-election-dates-only-for-the-maduranthakam-and-dharapuram-constituencies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-election-commission-announced-the-by-election-dates-only-for-the-maduranthakam-and-dharapuram-constituencies#comments</comments><guid isPermaLink="false">2367a43a-09cf-4a7b-a3d4-e6bed74af68d</guid><pubDate>Mon, 07 Sep 2026 12:21:09 +0000</pubDate><atom:updated>2026-09-07T12:21:09.300Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இடைத்தேர்தல்,மதுராந்தகம்,தாராபுரம்,தேர்தல் ஆணையம் அறிவிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/y0b4ncn9/election-commisson.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தேர்தல் ஆணையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/y0b4ncn9/election-commisson.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><p>தமிழகத்தில் காலியாக 7 சட்டமன்ற தொகுதிகளில் இரண்டு தொகுதிகளுக்கு மட்டும்  இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அக்டோபர் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. </p><p>மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், விராலிமலை , பெருந்துறை, கரூர் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவதில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இந்த தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை.  </p><h2> தேர்தல் எப்போது? </h2><p>செப்டம்பர் 9 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.</p><p>வேட்பு மனு தாக்கல் நிறைவு: செப்டம்பர் 16</p><p>வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை: செப்டம்பர் 17</p><p>வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாள்: செப்டம்பர் 19</p><p>வாக்குப்பதிவு: அக்டோபர் 6</p><p>வாக்கு எண்ணிக்கை; அக்டோபர் 9</p>  <p>அதி.மு.க. சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்யபாமா (தாராபுரம்) இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததால் தொகுதிகள் காலியானது. இந்த இரண்டு தொகுதிகளிலும் தவெக சார்பில்  மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்யபாமா (தாராபுரம்)   வேட்பாளர்களாக நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது.  </p><h2> தவெகவுக்கு நெருக்கடி</h2><p>தமிழகத்தில் த.வெ.க. அரசு அமைந்து 3 மாதங்களே கடந்துள்ள நிலையில், கூட்டணியில் உள்ள கட்சிகள் பல்வேறு வகையில் குடைச்சல் கொடுக்க தொடங்கியிருக்கின்றன. அதாவது, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, தலைமைச் செயலாளருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியது. விடுதலை சிறுத்தைகள் கட்சியோ, அரசின் கொள்கை முடிவுகளில், தங்களுடைய கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க நெருக்கடி கொடுத்து வருகிறது.தற்போது, காங்கிரஸ் கட்சியும், ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால் அமைச்சரவையில் இருந்து வெளியேறுவோம் என்றும் மிரட்டி வருகிறது. கூட்டணி கட்சிகள் இவ்வாறு நெருக்கடி கொடுத்து வருவது த.வெ.க. அரசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. </p><h2>இடைத்தேர்தல்</h2><p>ஏற்கனவே, எதிர்க்கட்சிகளான தி.மு.க.. அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள், த.வெ.க. அரசு எப்போது கவிழும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு த.வெ.க. அரசை கவலையடைய செய்துள்ளது. ஆட்சியில் தொடர வேண்டும் என்றால், தமிழகத்தில் காலியாக உள்ள 7 தொகுதிகள் இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் த.வெ.க. அரசுக்கு ஏற்பட்டுள்ளது. கடைசியாக கரூர் தொகுதி காலியானதாக கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி அறிவிக்கப்பட்டது. அதிலிருந்து 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்ற விதிமுறை இருந்தாலும், திருச்சி கிழக்கு. பெருந்துறை, விராலிமலை. கரூர், அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் மீது தேர்தல் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால், குறிப்பிட்ட காலத்திற்குள் இடைத்தேர்தல் நடைபெறாது என தெரியவந்துள்ளது.</p> <p>மேற்கண்ட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான தடை செப்டம்பர் 8-ந் தேதி வரை நீட்டிக்கபட்டுள்ளது.  மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளிலும் இடைத்தேர்தல்  நடத்துவதில் சிக்கல் இல்லை என்பதால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்று செல்வாக்கை காட்ட  வேண்டிய கட்டாயத்தில் தவெக உள்ளது. அதேநேரத்தில் தவெகவை வீழ்த்த திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன.  இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருப்பதால், அந்த இரண்டு தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. </p>]]></content:encoded></item><item><title>செல்வாக்கு மிகுந்த நபர்கள் மீதான ஊழல் வழக்கை விசாரிப்பது சிரமமாக உள்ளது - சென்னை ஐகோர்ட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/probing-corruption-cases-against-influential-people-is-difficult-says-madras-high-court</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/probing-corruption-cases-against-influential-people-is-difficult-says-madras-high-court#comments</comments><guid isPermaLink="false">416f9882-23a7-4b3d-a578-502ed3d9730d</guid><pubDate>Mon, 07 Sep 2026 12:09:13 +0000</pubDate><atom:updated>2026-09-07T12:09:13.856Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை ஐகோர்ட்டு,Chennai Highcourt,எஸ்.பி.வேலுமணி,SP Velumani,Corruption case,ஊழல் வழக்கு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/h4ofehcx/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/h4ofehcx/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்தியாவில் செல்வாக்கு மிகுந்த நபர்கள் மீதான ஊழல் வழக்கை விசாரிப்பது சிரமமாக உள்ளது என்று சென்னை ஐகோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது.</p><p>முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், கந்தசாமி மற்றும் விஜயகார்த்திகேயன் ஆகிய இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி வழங்க தாமதம் செய்வது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.</p><p>இது தொடர்பான வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில், ‘வழக்கு தொடர அனுமதி வழங்கக் கோரி தமிழக அரசு அனுப்பிய விளக்கம் கடிதம் ஜூலை 28-ம்தேதி கிடைக்கப் பெற்றது. அதன்மீது பரிசீலனை நடந்து வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.</p><p>தமிழக அரசு தரப்பில், ‘இது தொடர்பாக ஆகஸ்ட் 27-ம்தேதி நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.</p><p>இதையடுத்து நீதிபதி, ‘ஊழல் வழக்கில் அனுமதி வழங்க தாமதம் ஏற்படுத்துவது ஏன்? இந்தியர்கள் ஊழலுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை. ஊழல் வழக்கில் ஒப்புதல் பெறுவதற்கு கோர்ட்டு எவ்வளவு வற்புறுத்த வேண்டியுள்ளது. இந்தியாவில் செல்வாக்கு மிகுந்த நபர்கள் மீதான ஊழல் வழக்கை விசாரிப்பது சிரமமாக உள்ளது. அனுமதி பெறுவதற்கே இவ்வளவு சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ள சூழலில், இதற்குபின் இந்த வழக்கில் என்ன நடக்கும் என கடவுளுக்குத்தான் தெரியும்’ என அதிருப்தி தெரிவித்தார்.</p><p>பின்னர், இந்த வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர ஒப்புதல் வழங்க தாமதம் ஏற்பட்டது ஏன் என்பது குறித்தும், ஒப்புதல் கோரிய கடிதத்தின் தற்போதைய நிலை என்ன என்பதையும் காணொலி வாயிலாக ஆஜராகி விளக்கம் அளிக்க மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சி துறை சார்பு செயலாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 16-ம்தேதிக்கு தள்ளிவைத்தார்.</p>]]></content:encoded></item><item><title>விலை உயர்வுக்கு எதிராக வினையாற்றுக -  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/indian-communist-party-urges-action-on-rising-prices</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/indian-communist-party-urges-action-on-rising-prices#comments</comments><guid isPermaLink="false">33845721-6bf6-44da-a9b8-f7b96eb3773d</guid><pubDate>Mon, 07 Sep 2026 12:01:11 +0000</pubDate><atom:updated>2026-09-07T12:01:11.517Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Communist Party of India,நடவடிக்கை,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி,அரசு,விலை உயர்வு,price hike,Urges</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/801stzn4/veerapandiyan.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மு.வீரபாண்டியன்]]></media:title><media:description type="html"><![CDATA[ இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/801stzn4/veerapandiyan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விலை உயர்வுக்கு எதிராக வினையாற்றுக என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்</a> தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் விடப்பட்டுள்ள ஊடகங்களுக்கான செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-</p> <h2>அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு</h2><p>தமிழ்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88">விலை</a> தொடர்ந்து கடுமையாக உயர்ந்து சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு பெரும் சுமையாக மாறி வருகிறது. உயரும் விலைவாசியை கட்டுப்படுத்த அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.</p> <h2>நவீனமான பதுக்கல்</h2><p>தமிழ்நாட்டில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகள், மளிகை பொருட்கள், எண்ணெய், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF">அரிசி</a>, சர்க்கரை ஆகியவை 20 சதத்திலிருந்து 35 சதம் வரை உயர்ந்து விட்டது. வெளி மாநிலங்களில் இருந்து வரும் இத்தகைய பொருட்கள் பதுக்கப்படுவதும், ஆன்லைன் வர்த்தக முறையில் நவீனமான பதுக்கல் நடைபெறுவதும், அரிசி, சர்க்கரை உள்ளிட்டவைகள் எத்தனால் உற்பத்திக்கு ஆலைகளுக்கு திருப்பி விடப்படுவதாலும் இந்த பற்றாக்குறை உருவாக்கப்பட்டு விலைகள் கடுமையாக உயர காரணமாகிறது என கருதப்படுகிறது.</p><h2>நியாய விலை கடை</h2><p>தமிழ்நாடு அரசு உடன் இதில் தலையிட்டு, பதுக்கலை தடுக்கவும், நியாய விலை கடைகள் மூலம் குறைந்த விலைக்கு, மக்களுக்கு பொருட்கள் தடையின்றி கிடைக்கவும் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.</p> ]]></content:encoded></item><item><title>சட்டமன்ற ஜனநாயக மாண்புகளை காக்கும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு - மு. வீரபாண்டியன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/everyone-bears-the-responsibility-of-upholding-the-dignity-of-legislative-democracy-m-veerapandian</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/everyone-bears-the-responsibility-of-upholding-the-dignity-of-legislative-democracy-m-veerapandian#comments</comments><guid isPermaLink="false">4eecb213-a748-4739-974e-11c57f5d1cf6</guid><pubDate>Mon, 07 Sep 2026 11:53:02 +0000</pubDate><atom:updated>2026-09-07T11:53:02.745Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி,சபாநாயகர்,Communist Party,மு. வீரபாண்டியன்,M. Veerapandian</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/mqmknsh9/37.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு. வீரபாண்டியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/mqmknsh9/37.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டமன்ற ஜனநாயக மாண்புகளை காக்கும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு என்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D">மு. வீரபாண்டியன்</a> தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சட்டமன்ற பதிலுரையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் பெண்களை இழிவுப்படுத்தும் விதத்தில் யார் பேசினாலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார். இது வரவேற்கத்தக்கது. அத்துடன் சமூகவலை தளங்களில் பெண்கள் இழிவுப்படுத்தப்படுவதையும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.</p><h2>சட்டமன்றத்தின் நேரம்</h2><p>உயிர்புள்ள ஜனநாயகத்திற்கு சட்டமன்ற நடவடிக்கைகள் மக்களின் கோரிக்கைகளுக்கான பிரச்சனைகளை பேசவும், தீர்வு காணவும் கவனம் செலுத்திட வேண்டும். எதிர்கட்சிகளின் குரலுக்கு செவி சாய்க்கவும், அதற்கு உரிய முறையில் பதிலளிப்பதற்கும் மாறாக சட்டமன்ற நடவடிக்கைகளில் வெறும் கூச்சல் மிகும் வாதமுறையால் சட்டமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுகிறது. சட்டமன்ற மரபையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதில் ஆளுங்கட்சிக்கு அதிக பொறுப்பு உள்ளது. அத்துடன் சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சட்டம் - ஒழுங்கு குறித்து விவாதிக்காதது வருத்தமளிக்கிறது: இந்திய தவ்ஹீத் ஜமாஅத்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/failure-to-discuss-law-and-order-is-regrettable-indian-thowheed-jamaath</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/failure-to-discuss-law-and-order-is-regrettable-indian-thowheed-jamaath#comments</comments><guid isPermaLink="false">2c249114-4ec6-4a1c-96cd-3adbc9bc0bba</guid><pubDate>Mon, 07 Sep 2026 11:28:53 +0000</pubDate><atom:updated>2026-09-07T11:28:53.633Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,சட்டம் ஒழுங்கு,Law and order,முதல்-அமைச்சர்Chief Minister,இந்திய தவ்ஹீத் ஜமாஅத்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/2i71kz8s/189.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்திய தவ்ஹீத் ஜமாஅத்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/2i71kz8s/189.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டம் - ஒழுங்கு குறித்து விவாதிக்காதது வருத்தமளிக்கிறது என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கூறியுள்ளது.</p><p>இது தொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D">இந்திய தவ்ஹீத் ஜமாஅத்</a> பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு,சட்டம் ஒழுங்கு மோசமாகி வருவது மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தி வருகின்றன. தினந்தோறும் வெளியாகும் குற்றச்சம்பவங்கள் குறித்து மக்கள் அச்சத்துடனும், பாதுகாப்பு குறித்த கேள்விகளுடனும் வாழும் நிலை உருவாகியுள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றன.</p><h2>ரீல்ஸ்</h2><p>இத்தகைய சூழலில், இன்றைய சட்டமன்றக்கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து விவாதிக்க வாய்ப்பு வழங்கப்படாதது வருத்தமளிக்கிறது. மக்களின் அன்றாட வாழ்வை பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்காமல், பல ஆண்டுகளுக்கு முன்பு கூறப்பட்ட, நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளை முன்வைத்து ரீல்ஸ் தயாரிப்பதற்காக சட்டமன்றத்தின் பொன்னான நேரத்தை செலவிடுவது மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றதாக இல்லை.</p><p>தமிழ்நாட்டை வளர்ச்சிப்பாதையில் முன்னேற்றுவதற்கான புதிய திட்டங்கள், வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி, முதலீடு, கல்வி மற்றும் அடிப்படை கட்டமைப்பு போன்ற முக்கிய பிரச்சினைகள் குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். ஆனால், முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களின் பேச்சுகளும் நடவடிக்கைகளும் மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை விட அரசியல் விளம்பரத்திற்கே அதிக முக்கியத்துவம் அளிப்பதாக தெரிகிறது.</p><h2>சட்டம் ஒழுங்கு</h2><p>சட்டம் ஒழுங்கு குறித்து எழும் மக்களின் கவலைகளுக்கு அரசு தெளிவான பதிலும், உறுதியான நடவடிக்கையும் எப்போது எடுக்கும் என்ற கேள்வி இன்று பொதுமக்களிடையே பரவலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. அரசியல் விவாதங்களைத் தாண்டி, மக்களின் பாதுகாப்பையும், மாநிலத்தின் வளர்ச்சியையும் முன்னிலைப்படுத்தி செயல்பட வேண்டியது அரசு சட்டமன்றத்தில் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் அத்தியாவசிய மளிகை பொருட்கள் விலை கடும் உயர்வு; இல்லத்தரசிகள் கலக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-essential-grocery-prices-surge-housewives-anxious</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-essential-grocery-prices-surge-housewives-anxious#comments</comments><guid isPermaLink="false">489ebd99-17f9-4346-825d-0744e4412aff</guid><pubDate>Mon, 07 Sep 2026 11:12:59 +0000</pubDate><atom:updated>2026-09-07T11:12:59.781Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழகம்,ரேஷன் கடை,Ration shop,price hike,அத்தியாவசிய பொருட்கள்,விலை அதிகரிப்பு,All over Tamil Nadu,குறைந்த விலை,groceries,Essential</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/qa90u1hg/basic-food-material.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ அத்தியாவசிய மளிகை பொருட்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழகத்தில் அத்தியாவசிய மளிகை பொருட்கள் விலை கடும் உயர்வு; இல்லத்தரசிகள் கலக்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/qa90u1hg/basic-food-material.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p> சென்னை,</p><p>தமிழகத்தில் அத்தியாவசிய மளிகை பொருட்களின் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">விலை கடும் உயர்வினால்</a>, பண்டிகை கால செலவை எதிர்கொள்ள முடியாமல் இல்லத்தரசிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.</p> <h2>20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது</h2><p>தமிழகத்தில் மக்கள் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் அரிசி, சமையல் எண்ணெய், பூண்டு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடந்த இரண்டு மாதங்களில் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அடுத்தடுத்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88">பண்டிகை</a> காலங்கள் நெருங்கி வரும் வேளையில், இந்த விலை உயர்வு நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டைப் பெரிதும் பாதிக்கும்.</p> <h2>ரூ.300-ஐ தொட்ட மிளகாய்</h2><p>சமையலில் காரத்திற்கு முக்கியமாக சேர்க்கப்படும் மிளகாய் வற்றலின் விலை கடந்த சில வாரங்களாகவே ஏறுமுகமாக உள்ளது. கடந்த மாதம் சந்தையில் ஒரு கிலோ 220 ரூபாய்க்கு விற்கப்பட்ட மிளகாய் வற்றல், தற்பொழுது தரத்திற்கு ஏற்ப 270 ரூபாய் முதல் 300 ரூபாய்க்கு மேல் வரை விற்று மக்களை அதிர வைத்துள்ளது. இதேபோல், குழம்புத்தூள் அரைக்க பயன்படும் தனியாவின் விலையும் கிலோ 150 ரூபாயில் இருந்து உயர்ந்து, தற்பொழுது 220 ரூபாயாக அதிகரித்துள்ளது.</p><h2>இரண்டு மடங்கு உயர்ந்த பூண்டு விலை</h2><p>மளிகை பொருட்களிலேயே மிக கடுமையான விலை உயர்வை சந்தித்திருப்பது பூண்டுதான். கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கிலோ 150 ரூபாய்க்கு  விற்கப்பட்டு வந்த பூண்டின் விலை, தற்பொழுது  கிலோ 280 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பூண்டின் விலை மிக குறுகிய காலத்தில் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது, நடுத்தர குடும்பத்து இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்ந்துள்ளனர்.</p><h2>பாமாயில் விலை</h2><p>இதேபோல் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமையல் எண்ணெய்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சந்தையில் லிட்டர் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பாமாயில்  தற்பொழுது  லிட்டர் 185 ரூபாயாக அதிகரித்துள்ளது.</p> <h2>இரட்டிப்பான வெல்லம் விலை! </h2><p>பண்டிகை காலங்களில் இனிப்புகள் செய்ய இல்லத்தரசிகள் அதிகம் வாங்கும் வெல்லத்தின் விலை கடந்த மாதம் வரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்பொழுது 100 ரூபாயாக உயர்ந்து இரட்டிப்பாகியுள்ளது. இதேபோல், கடந்த மாதம் கிலோ 700 ரூபாய்க்கு விற்கப்பட்ட முந்திரி பருப்பு தற்பொழுது 950 ரூபாயாகவும், முன்பு 250 ரூபாய்க்கு விற்கப்பட்ட பாதாம் பருப்பு தற்பொழுது கிலோ 1,200 ரூபாயாகவும் தடாலடியாக உயர்ந்து இல்லத்தரசிகளைத் திகைக்க வைத்துள்ளது.</p><h2>ஆறுதல் தரும் சர்க்கரை விலை</h2><p>மற்ற அனைத்து இனிப்பு பொருட்களின் விலையும் ஏறிக்கொண்டே போகும் வேளையில், சர்க்கரை விலை மட்டும் சரிவை சந்தித்துள்ளது. வெளிச்சந்தையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கிலோ 70 ரூபாய் வரை எகிறியிருந்த சர்க்கரையின் விலை, தற்பொழுது குறைந்து கிலோ ரூ.60 ஆக  குறைந்துள்ளது. </p> <h2>கவலை அளிக்கும் அரிசி விலை</h2><p>ஏழை எளிய மக்களின் அன்றாட உணவான அரிசியின் விலையும் கிலோவுக்கு 8 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் ஏற்பட்ட இந்த விலை உயர்வால், மொத்த சந்தையில் 26 கிலோ கொண்ட சாப்பாடு அரிசி மூட்டையின் விலை ரகத்திற்கு ஏற்ப 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. முன்பு 1,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட அரிசி மூட்டை தற்பொழுது 1,500 ரூபாயாகவும், 1,500 ரூபாய்க்கு விற்கப்பட்ட உயர் ரக அரிசி மூட்டை தற்பொழுது 2,000 ரூபாயாகவும் உயர்ந்து நடுத்தர குடும்பங்களின் பட்ஜெட்டை தலைகீழாக மாற்றியுள்ளது. </p><h2>முக்கிய காரணம் </h2><p>அரிசி விலை உயர்க்கு முக்கிய காரணம் நெல் வரத்து குறைந்தது என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஆந்திரா கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து தான் தமிழகத்திற்கு அதிக அளவில் அரிசி வருகிறது. அந்த மாநிலங்களில் விளைச்ச குறைந்துள்ளதால் தமிழகத்துக்கான வரத்தும் குறைந்துள்ளது.</p> <h2>வரத்து குறைவு</h2><p>இதனால் அரிசியின் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு வரும் டிசம்பர் மாதம் வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது. புதிய அரிசி வரத்தை தொடங்கும் போது தான் விலை குறையும் என்று அரிசி  வியாபாரிகள் தெரிவித்தனர். மளிகை பொருட்களின் விலை மட்டுமல்லாது காய்கறிகள் விலையும் உயர்ந்துள்ளது. பெரிய  வெங்காயம், சின்ன வெங்காயம், கேரட் மற்றும் பீன்ஸ் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளன. இவற்றின் வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளன.</p> <h2>ரேஷன் கடைகள்</h2><p>தக்காளி, உருளைக்கிழங்கு விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை அதிகரித்துள்ளதாக கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் தெரிவித்தனர். மளிகை அத்தியாவசிய பொருட்கள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் மாதாந்திர செலவு அதிகரிக்கிறது. இதனால் மாதாந்திர பட்ஜெட்டில் துண்டு விழுகிறது. பொருட்களை போதுமான அளவு வாங்க முடியவில்லை. </p><p>வருகின்ற பண்டிகை காலங்களில் இது பொதுமக்களை அதிகளவு பாதிக்கும் என்பதால் அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>7 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/rain-forecast-seven-districts-tamil-nadu-till-7-pm</link><comments>https://www.dailythanthi.com/news/weather/rain-forecast-seven-districts-tamil-nadu-till-7-pm#comments</comments><guid isPermaLink="false">310c9f91-98b1-48d6-93a3-a8c13c204a78</guid><pubDate>Mon, 07 Sep 2026 11:11:49 +0000</pubDate><atom:updated>2026-09-07T11:11:49.034Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு,வானிலை முன்னறிவிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/pwnpvrao/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/pwnpvrao/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுமார் 0.9 கிமீ உயரத்தில் தெற்கு தெலுங்கானா முதல் மன்னார் வளைகுடா வரை ராயலசீமா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. </p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>புதிய தலைமைச்செயலகம் கட்ட பட்டினப்பாக்கத்தில் இடம் தேர்வு

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-secretariat-site-selected-in-pattinapakkam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-secretariat-site-selected-in-pattinapakkam#comments</comments><guid isPermaLink="false">77f782fe-0f31-4d2d-b023-201ebb8d347e</guid><pubDate>Mon, 07 Sep 2026 11:06:55 +0000</pubDate><atom:updated>2026-09-07T11:06:55.679Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,விஜய்,முதல்-அமைச்சர்,தலைமை செயலகம்,Secretariat,Chief Secretariat,Cheif Minister</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/c9vch515/1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/c9vch515/1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>புதிய தலைமைச்செயலகம் கட்ட பட்டினப்பாக்கத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.</p> <h2>ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச்செயலகம்</h2> <p>ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சென்னையில் கட்டப்பட்ட புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழக அரசின் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">தலைமைச் செயலகம்</a> செயப்பட்டு வருகிறது. தற்போது, ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள இந்த கட்டிடத்தில்தான் சட்டமன்ற கூட்ட அரங்கமும் உள்ளது. இதற்காக, மாதந்தோறும் ராணுவத்திற்கு தமிழக அரசு குத்தகை தொகை கட்டி வருகிறது.</p><p>இந்த நிலையில், தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு, ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்ட முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பை சமீபத்தில் முதல்-அமைச்சர் ஜோசப் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">விஜய்</a> சட்டசபையில் வெளியிட்டார். ஆனால், அப்போது எந்த இடத்தில் புதிய தலைமைச்செயலகம் அமையப்போகிறது என்பதை அவர் தெரிவிக்கவில்லை.</p> <h2>இடம் தேர்வு</h2><p>இந்த நிலையில், புதிய தலைமைச்செயலகம் கட்டுவதற்கு பட்டினப்பாக்கம், கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நந்தம்பாக்கத்தில் உள்ள பின் டெக் சிட்டிக்கு எதிரே உள்ள நிலம் ஆகிய 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.</p><p>தற்போது, பட்டினப்பாக்கம் சாந்தோம் பிரதான சாலையில் இருந்து அணுகு சாலையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/moud3g2s/0.jpg" /></figure><h2>மார்க்கெட் மதிப்பு ரூ.2,047 கோடி</h2><p>தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான இந்த இடம் 21.37 ஏக்கர் பரப்பளவை கொண்டது. இந்த பகுதியில் தற்போதைய மார்க்கெட் மதிப்பு சதுரடிக்கு ரூ.22 ஆயிரம் ஆகும். அதை வைத்து கணக்கிடும்போது, இடத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ.2,047 கோடியாக உள்ளது. இந்த இடத்தை பொதுத்துறை பயன்பாட்டிற்கு வழங்குவதாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தெரிவித்துள்ளது.</p><p>இந்த நிலப்பகுதி 1958-ம் ஆண்டு வீட்டு வசதி திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்டது. 1963 முதல் 1968-ம் ஆண்டு காலக்கட்டத்தில் 1,112 அரசு ஊழியர்கள் குடியிருப்புகளும், 96 தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளும் கட்டப்பட்டன. 1986-ம் ஆண்டு மேலும் 60 குடியிருப்புகளும், 1998-ல் 112 குடியிருப்புகளும் புதிதாக கட்டப்பட்டன. அதன்பிறகு குடியிருப்புகளின் எண்ணிக்கை 1,380 ஆக அதிகரித்தது.</p> <h2>ஆட்சேபனை இல்லை என கடிதம்</h2><p>இந்த நிலையில், இதிலுள்ள 1,284 குடியிருப்புகள் சிதலமடைந்ததால், அவை இடிக்கப்பட்டன. தற்போது அந்த இடம் காலியாக உள்ளது. மேலும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியமும் தனக்கு சொந்தமான 96 குடியிருப்புகளை இடிப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.</p><p>இந்த நிலையில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் சென்னை மாவட்ட கலெக்டருக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், நிலத்தை பயன்படுத்துவதில் தங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <h2>கமிஷனர் சமீரன் ஒப்புதல்</h2><p>இதேபோல், தலைமைச்செயலகம் கட்டுவதற்கு சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 0.93 ஏக்கர் இடத்தை வழங்கவும் கமிஷனர் சமீரன் ஒப்புதல் வழங்கியுள்ளார். நிலம், சாலை அமைப்பதற்கும், சில பயன்பாடுகளுக்கும் என்று வருவாய் துறையின் கீழ் உள்ள கூடுதல் நிலம் வகைப்படுத்தப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>படத்தில் அடுக்கடுக்கான வசனங்கள் பேசுவது போல கத்தி கூப்பாடு போடுவது, அநாகரிகமான அரசியல் - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/shouting-like-delivering-layered-dialogues-in-film-indecent-politics-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/shouting-like-delivering-layered-dialogues-in-film-indecent-politics-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">ac8c5ff7-6a82-4a15-8f94-463a6ec3ae95</guid><pubDate>Mon, 07 Sep 2026 11:03:27 +0000</pubDate><atom:updated>2026-09-07T11:03:27.542Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,நயினார் நாகேந்திரன்,தமிழக சட்டசபை,TN Assembly,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,Nainar Nagenthran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/mx3f101b/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/mx3f101b/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>படத்தில் அடுக்கடுக்கான வசனங்கள் பேசுவது போல கத்தி கூப்பாடு போடுவது, அநாகரிகமான அரசியல் என்ற தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சட்டமன்றம் உங்கள் சினிமா ஸ்டுடியோ அல்ல முதல்-அமைச்சர் விஜய் அவர்களே! உங்கள் அடுக்கடுக்கான வசனங்களை கேட்டு ஆர்ப்பரிப்பதற்கு தமிழக மக்கள் ஒன்றும் உங்கள் கட்சியின் ஆச்சரியக்குறிகள் அல்ல.</p><p>உங்கள் கட்சிக்கு இரண்டு அமைச்சர்களை வழங்கிய கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 கொலைகள் நடந்துள்ளன. உங்கள் அலுவலகம் அமைந்துள்ள சென்னை மாநகரில் நேற்று ஒரே நாளில் மட்டும் இரண்டு படுகொலைகள் நடந்துள்ளன. நீங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து 6 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவலர்களில் சிலர் பொதுமக்களை தரக்குறைவாக நடத்துகின்றனர். உங்கள் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்.</p><p>அப்படியிருக்கையில் இன்று சட்டமன்றத்தில் நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது, இந்த அவலங்களுக்கெல்லாம் நீங்கள் முறையாக பதில் அளித்திருக்க வேண்டும். சீரழிந்து கொண்டிருக்கும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கிற்கு முழுப்பொறுப்பேற்று, மக்கள் பாதுகாப்பிற்கென புதிய திட்டங்களை நீங்கள் முன்மொழிந்திருக்க வேண்டும். மக்களின் உயிருக்கும் உடமைக்கும் உத்தரவாதம் அளித்திருக்க வேண்டும்.</p><p>ஆனால், நீங்களோ “எனக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் எந்த தொடர்புமில்லை” என்ற ரீதியில், அதிரடி திரைப்படத்தில் அடுக்கடுக்கான வசனங்கள் பேசுவது போல கத்தி கூப்பாடு போடுவது, அநாகரிகமான அரசியல். எனவே, மக்கள் மன்றத்தில் மக்கள் நலன் சார்ந்த விஷயங்களை மட்டும் பேசுங்கள் முதல்வரே, “தந்தை, மகன்” கதையெல்லாம் தமிழக மக்களுக்கு தேவையில்லை. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மக்கள் பிரச்சனைகள் குறித்து பேச வேண்டிய சபை, இன்று சர்க்கஸ் கூடாரமாக மாறியிருக்கிறது - கனிமொழி விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/assembly-meant-for-peoples-issues-has-turned-into-circus-tent-kanimozhi-criticism</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/assembly-meant-for-peoples-issues-has-turned-into-circus-tent-kanimozhi-criticism#comments</comments><guid isPermaLink="false">1f0a026f-0f7b-4dba-abcf-8e2d9cac6887</guid><pubDate>Mon, 07 Sep 2026 10:57:10 +0000</pubDate><atom:updated>2026-09-07T10:57:10.279Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,தமிழக சட்டசபை,விமர்சனம்,TN Assembly,கனிமொழி,Kanimozhi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/wqv1iqrf/Untitled-4.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கனிமொழி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/wqv1iqrf/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் நிறைவடைந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய் இன்று பதிலளித்து பேசினார். அப்போது திமுக மீது அமலாக்கத்துறை வைத்த பல குற்றச்சாட்டுகள் பற்றி பேசியிருந்தார். கடந்த ஆட்சியில் திமுக எல்லா துறைகளிலும் ஊழல் செய்திருக்கிறது. கட்சி நிதி என்ற பெயரில் உதயநிதிக்கும், மு.க ஸ்டாலினுக்கும் பணம் சென்றிருக்கிறது என்று அமலாக்கத்துறை கூறியிருப்பதாக அவர் தெரிவித்தார்.</p><p>இந்த நிலையில் மக்கள் பிரச்சனைகள் குறித்து பேச வேண்டிய சபை, இன்று சர்க்கஸ் கூடாரமாக மாறியிருக்கிறது என்று திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>வரலாறு பேச வேண்டுமென்றால், நீதிக்கட்சி காலத்திலிருந்து தொடங்க வேண்டும். இந்தத் தமிழ்ச் சமூகத்துக்காக நாங்கள் என்ன செய்தோம் என்பதிலிருந்து தொடங்க வேண்டும். ஆனால், தவெகவிற்கும், அதன் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்க்கும் அந்த வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.</p><p>தலைவர் கலைஞரைப் பற்றியோ, தி.மு.க.வைப் பற்றியோ அவதூறாகப் பேசுவதையே அரசியல் தகுதியாக இன்னும் எத்தனை காலத்திற்கு நினைத்துக் கொள்ளப்போகிறார்கள் என்று தெரியவில்லை. எல்லாவற்றையும் நம்புவதற்கு ஒரு கூட்டம் இருக்கும் வரை, எதை வேண்டுமானாலும் பேசுவதற்கு ஒரு கூட்டமும் இருந்துகொண்டுதான் இருக்கும்.</p><p>காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதிலுரை அளிக்க வேண்டிய முதல்-அமைச்சர், எழுதிக் கொடுத்ததைப் படிப்பதைத் தவிர, கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் சொல்ல முடியாமல், நீண்ட சொற்பொழிவை நிகழ்த்திவிட்டு, எதிர்வினை வந்துவிடுமோ என்ற பயத்தில் விவாதத்தையே சபாநாயகர் தவிர்த்திருக்கிறார்.</p><p>கடந்த மூன்று நாட்களாக காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்க ஒத்திகை பார்த்தும், அந்த மானியக் கோரிக்கை தொடர்பாக முதல்-அமைச்சர் பேசியது சொற்பமே. மற்றவை எல்லாம் காலம் காலமாகப் பரப்பப்பட்ட வதந்திகளையும், சமீபத்திய WhatsApp factory பொய்களையும் கலந்து, முதல்-அமைச்சருக்கு ஒரு பிரதியைக் கொடுத்துவிட்டார்கள் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.</p><p>சட்டம்-ஒழுங்கு குறித்தும், குழந்தைகள் &amp; பெண்களின் பாதுகாப்பு குறித்தும், பிற மக்கள் பிரச்சனைகள் குறித்தும் பேச வேண்டிய சபை, இன்று சர்க்கஸ் கூடாரமாக மாறியிருக்கிறது. ஒன்று மட்டும் சொல்லத் தோன்றுகிறது... சத்தமாகச் சொல்லப்படுபவை அனைத்தும் உண்மையல்ல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">வரலாறு பேச வேண்டுமென்றால், நீதிக்கட்சி காலத்திலிருந்து தொடங்க வேண்டும். இந்தத் தமிழ்ச் சமூகத்துக்காக நாங்கள் என்ன செய்தோம் என்பதிலிருந்து தொடங்க வேண்டும். ஆனால், தவெகவிற்கும், அதன் முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கும் அந்த வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.<br><br>தலைவர்…</p>&mdash; Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) <a href="https://x.com/KanimozhiDMK/status/2096910410502816044?ref_src=twsrc%5Etfw">September 7, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>மக்களின் குடியிருப்பு உரிமைக்காக போராடிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது -  மு.வீரபாண்டியன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/indian-communist-party-members-arrested-for-fighting-for-housing-rights</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/indian-communist-party-members-arrested-for-fighting-for-housing-rights#comments</comments><guid isPermaLink="false">3afdbf0c-64ef-492a-89a9-c0effcaea42c</guid><pubDate>Mon, 07 Sep 2026 10:17:51 +0000</pubDate><atom:updated>2026-09-07T10:17:51.356Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி,மக்கள்,condemned,Communist Party,members,உரிமை,மு.வீரபாண்டியன்,M. Veerapandian</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/x0mshzl0/veerapandiyan.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மு.வீரபாண்டியன்]]></media:title><media:description type="html"><![CDATA[ இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/x0mshzl0/veerapandiyan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மக்களின் குடியிருப்பு உரிமைக்காக போராடிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது -  மு.வீரபாண்டியன் கண்டனம். இதுகுறித்து, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்</a> தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் விடப்பட்டுள்ள ஊடகங்களுக்கான செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-</p><h2>20 குடும்பங்கள்</h2><p>சென்னை, சைதாப்பேட்டை தொகுதி, மேட்டுப்பாளையம் அருகில் உள்ள ஆதிசென்ன கேசவ பெருமாள் கோவில் நிலத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வாடகை செலுத்தி வசித்து வருகிறார்கள். அவர்களில்  20 குடும்பங்களை சேர்ந்த ஏழை எளிய மக்கள், அவர்களின் குடியிருப்புகளை காலி செய்ய  வேண்டுமென மிரட்டப்படுகிறார்கள் என பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகிறார்கள்.</p><h2>மிரட்டல்</h2><p>அவர்களின் வசிப்பிடத்தை வேறு சில தனியார் அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கோவில் நிர்வாகத்தை சேர்ந்த  சிலரும், அதிகாரிகளும், தனிநபர்களும்  இணைந்து அவர்களை மிரட்டுகிறார்கள் என பாதிக்கப்பட்டோர் கூறுகின்றனர்.</p> <h2>பொது நல வழக்கு</h2><p>தனது வீட்டுக்கு எதிரே ஏழை எளிய மக்களின் குடியிருப்புகள் இருப்பதை விரும்பாத ஒரு நபர், அக்குடியிருப்புகளை அகற்ற பொது நல வழக்கை போட்டுள்ளார் என்றும் ஏழை  மக்களின் குடியிருப்புகள் உள்ள இடத்தை அபகரிக்க அவர் திட்டமிட்டுள்ளார் என்றும் பாதிக்கப்பட்டுள்ளோர் கூறுகின்றனர். இந்த நிலையில் இன்று காலை காவல்துறை அந்த குடியிருப்பு பகுதியில் குவிக்கப்பட்டது.</p> <h2>அறநிலைய துறை</h2><p>ஏழை, எளிய மக்களின் குடியிருப்பை பாதுகாக்க வேண்டும் எனக் கேட்டு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை பொதுமக்கள் நாடினர். நீதிமன்றத்தில் தனிநபருக்கு ஆதரவாக அறநிலைய துறையில்  உள்ள அதிகாரிகளில் சிலர் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.</p><h2>போராட்டம்</h2><p>இந்நிலையில், அரசுக்கு சொந்தமான கோவில் நிலத்தில் வாடகை செலுத்தி நீண்ட காலமாக வசிக்கும் ஏழை எளிய மக்களின் குடியிருப்புகளை பாதுகாக்க  வேண்டும், அம்மக்களின் வசிப்பிட உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு ஆதரவாக இந்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">அறநிலையத்துறை </a>நீதிமன்றத்தில் செயல்பட வேண்டும் என வலியுறுத்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து இன்று போராடியது.</p> <h2>கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது </h2><p>போராட்டம் நடத்திய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சிவா, மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாவட்ட துணை செயலாளர் அபிஷேக், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்ட செயலாளர் ர.சௌமியா, துணைத் தலைவர் கமலக்கண்ணன் போன்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>கண்டனம்</h2><p>தமிழ்நாடு அரசின் காவல்துறையும், இந்து அறநிலையத் துறையும், 20 குடும்பங்களை சேர்ந்தவர்களின் பொருட்களை எடுத்து  சாலையில் வீசிவிட்டன. கைக்குழந்தைகளுடன் உள்ள ஏழை, எளிய மக்களையும் வீட்டுக்குள் புகுந்து வெளியேற்றிவிட்டு, வீடுகளுக்கு சீல் வைத்துள்ளன. தமிழக அரசின் காவல்துறை மற்றும் இந்து அறநிலையத் துறையின் இத்தகைய ஏழை, அடித்தட்டு மக்களுக்கு எதிரான நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.</p> <h2>வலியுறுத்தல்</h2><p>தமிழ்நாடு அரசு இப்பிரச்சினையில் உடனடியாக தலையிட வேண்டும். கோவில் மனைகளில் குடியிருக்கும் அந்த 20 குடும்பங்களின் குடியிருப்பு உரிமைகளை பாதுகாத்திட முன்வர வேண்டும் எனவும், கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நாட்டிலே உள்ள சமூகநோய்க்கும் மருந்து கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க வேண்டும் - மு.க. ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalin-urges-cure-and-treatment-for-indias-social-diseases</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalin-urges-cure-and-treatment-for-indias-social-diseases#comments</comments><guid isPermaLink="false">fa1a2402-7423-42a3-bb7b-0338d352db5b</guid><pubDate>Mon, 07 Sep 2026 09:55:28 +0000</pubDate><atom:updated>2026-09-07T09:55:28.176Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Treatment,சிகிச்சை,Anna,அண்ணா,சுயமரியாதை திருமணம்,மு.க. ஸ்டாலின்,disease,நோய்,மருந்து,M.K. Stalin</media:keywords><media:content height="500" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/ig371srx/stalin-function.jpg" width="935"><media:title type="html"><![CDATA[ மு.க. ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[  தி.மு.க.  தலைவர் மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/ig371srx/stalin-function.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாட்டிலே உள்ள சமூகநோய்க்கும் மருந்து கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்தார். இது தொடர்பாக, தி.மு.க.  தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின்</a> இன்று சென்னையில் நடைபெற்ற கலைஞர் தொலைக்காட்சி செய்தி பிரிவு தலைவர் - எழுத்தாளர் திருமாவேலன்  இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி ஆற்றிய உரையில் தெரிவித்ததாவது:-</p> <h2>மணவிழா நிகழ்ச்சி</h2><p>அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்! தமிழே வாழ்வு என தொண்டாற்றி வரும் புலவர் படிக்கராமுவின்  குடும்பத்தில், அதுவும் குறிப்பாக திருக்குறள் முறைப்படி - நெறிப்படி, நம்முடைய அன்பான வாழ்த்துகளோடு இந்த மணவிழா நிகழ்ச்சி நிறைவேறியிருக்கிறது.</p><h2>திருமாவேலன்</h2><p>புலவர் மு. படிக்கராமு - ப. முத்துலக்குமி அம்மாள், சு. கிருஷ்ணன் - கி. அழகம்மாள் ஆகியோரின் பேத்தியும், கலைஞர் தொலைக்காட்சி செய்திகள் பிரிவு தலைவர் நம்முடைய புரட்சி எழுத்தாளர் – திராவிட இயக்க எழுத்தாளர் இனிய சகோதரர் திருமாவேலன் - ரேணுகா திருமாவேலன் இணையரின் அன்பு மகளுமான டாக்டர் அமிர்தாவுக்கும்.</p><h2>மகிழ்ச்சியடைகிறேன்</h2><p>கா. சுந்தரம் - சு. இலட்சுமி அம்மாள், இரா. பாண்டியராஜன் - பா. ரமணி அம்மாள் ஆகியோரின் பேரனும், டாக்டர் பாலசுப்பிரமணியன் - சுதா பாலசுப்ரமணியன் இணையரின் அன்பு மகனுமான டாக்டர் ரவிந்திரனுக்கும் நடைபெற்றிருக்கும் இந்த திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துவதில், உங்களோடு சேர்ந்து நானும் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன்.</p> <h2>தமிழர்களின் நெறி</h2><p>இந்த இனிய மணவிழா திருக்குறள் நெறிப்படி நடந்தேறியிருக்கிறது. இதுதான் தமிழர்களின் நெறி! இதுதான் தமிழர்களின் பண்பாடு! இதைத்தான் திராவிட இயக்கம் நூறாண்டு காலமாக வலியுறுத்தி, தொடர்ந்து நிறைவேற்றி செயல்படுத்தி காட்டி கொண்டிருக்கிறது.</p> <h2>மூன்று திட்டங்கள்</h2><p>இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், இது போன்ற <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D">சுயமரியாதை திருமணங்கள்</a> 1967-க்கு முன்பு நடைபெறும் என்று சொன்னால், அந்த திருமணங்கள் சட்டப்படி முறைப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தை அன்றைக்கு நாம் பெற்றிருக்கவில்லை. </p><p>ஆனால், முதன்முதலில் ஒரு மாநில கட்சி நம்முடைய தமிழ்நாட்டிலே ஆட்சி பொறுப்பேற்று, திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி உதயமாகி, 1967-இல் அண்ணா முதன்முதலாக முதல்-அமைச்சராக பொறுப்பேற்று சட்டமன்றத்திற்குள்ளே சென்று, நம்முடைய தமிழ்நாட்டிற்காக முத்தான மூன்று திட்டங்களை நிறைவேற்றி தந்தார்கள்.</p><h2>சுயமரியாதை திருமண சட்டம்</h2><p>ஒன்று, இருமொழி கொள்கை. இன்னொன்று, தமிழ்நாட்டிற்கு 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டக்கூடிய நிகழ்வு. அடுத்து, சுயமரியாதை திருமணங்கள் செல்லுபடியாவதற்கான சட்டம். அண்ணாவால் சட்டமன்றத்திலே சுயமரியாதை திருமணங்கள் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என்று நிறைவேற்றி தந்திருக்கும் அந்த திருமணம்தான், இன்றைக்கு இங்கே நடந்தேறியிருக்கிறது.</p> <p>இதுபோன்ற திருமணங்களை நம்முடைய தலைவர் கலைஞரும், இனமான பேராசிரியரும், இந்த இயக்கத்தின் முன்னோடிகளும் ஆயிரக்கணக்கான அளவில் நடத்தி வைத்திருக்கிறார்கள். தொடர்ந்து நாமும் அதை நடத்தி வருகிறோம்.</p> <h2>திருவள்ளுவர் விருது</h2><p>இல்வாழ்க்கையை பற்றி வள்ளுவர் சொல்கிறபோது, இல்வாழ்க்கை என்பது அன்பும் அறனும் கொண்டதாக அமைந்திட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். நம்முடைய திருமாவேலன் அவர்களுடைய தந்தை புலவர் படிக்கராமு, திருக்குறளை பரப்புகிற பணியிலே தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, அதற்காகவே அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய பணியை பாராட்டி, கடந்த திராவிட மாடல் ஆட்சியில் அவருக்கு திருவள்ளுவர் விருது வழங்கி சிறப்பித்திருக்கிறோம். தலைமுறைகளை கடந்தும் இன்றும் இந்த பணியை நம்முடைய திருமாவேலனுடைய குடும்பத்தார் தொடர்ந்து செய்து கொண்டிருப்பது பாராட்டுக்குரியது, மகிழ்ச்சிக்குரியது, பெருமைக்குரியது, போற்றுதலுக்குரியது!</p><h2>கலைஞர் தொலைக்காட்சி</h2><p>நம்முடைய திருமாவேலனிடம் எந்த பணியை கொடுத்தாலும், அதை நேர்த்தியாக, சிறப்பாக, அனைவரும் பாராட்டும் வகையில் நிறைவேற்றி காட்டும் ஆற்றலை பெற்றவர் அவர். இன்றைக்கு கலைஞர் தொலைக்காட்சியில் செய்தி பிரிவிலே தலைவராக பொறுப்பேற்று சிறப்பாக தன்னுடைய கடமையை நிறைவேற்றி வருகிறார். </p> <h2>முரசொலி நாளிதழ்</h2><p>அதுமட்டுமல்ல, திராவிட முன்னேற்ற கழகத்தின் போர்முரசாக விளங்கி கொண்டிருக்கும், கலைஞரின் மூத்த பிள்ளையாக விளங்கி கொண்டிருக்கும் 'முரசொலி' நாளிதழின் தலையங்கத்தை தினமும் நீங்கள் படித்து கொண்டிருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். அந்த தலையங்கத்தை நம்முடைய திருமாவேலன் தான் தொடர்ந்து எழுதி வருகிறார்.</p><h2>அரசியல் சூழ்நிலை</h2><p>குறிப்பாக இளைஞர்களுக்கு, இளைய சமுதாயத்தினருக்கு நம்முடைய திராவிட முன்னேற்ற கழகத்தின் வரலாறு மட்டுமல்லாது, நம்முடைய திராவிட இயக்கத்தின் வரலாற்றையும், அவர்கள் ஆற்ற வேண்டிய பணிகளையும், அதிலும் குறிப்பாக இன்றைக்கு இருக்கும் அரசியல் சூழ்நிலைகளையெல்லாம் தெளிவாக எடுத்து சொல்லி, அந்த பணியை அவர் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார்.</p> <h2>கடமைப்பட்டிருக்கிறேன்</h2><p>நான் இந்த நேரத்தில் உங்களையெல்லாம் கேட்டுக்கொள்ள விரும்புவது, திருமாவேலன் முரசொலியில் எழுதும் தலையங்கத்தை தொடர்ந்து இங்கே வந்திருக்கும் அனைவரும் படித்தாக வேண்டும். படிப்பது மட்டுமல்லாமல், மக்களிடம் கொண்டு சேர்த்தாக வேண்டும் என்ற அந்த வேண்டுகோளை இந்த நேரத்திலே நான் எடுத்து வைக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.</p> <h2>முப்பெரும் விழா</h2><p>அவருடைய பணியை பாராட்டி - திராவிட முன்னேற்ற கழகத்தின் முப்பெரும் விழா நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது என்பது உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும். அந்த வகையில் இந்த மாதம் 15-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள முப்பெரும் விழாவில், தமிழறிஞர்களுக்கு, சான்றோர்களுக்கு, திராவிட இயக்கத்தின் முன்னோடிகளுக்கு விருதுகளை வழங்கி நாம் தொடர்ந்து பெருமைப்படுத்தி வருகிறோம். </p> <h2>முரசொலி செல்வம் விருது</h2><p>அந்த வகையில் இந்த ஆண்டு முரசொலி அறக்கட்டளையின் சார்பில், நம்முடைய 'முரசொலி செல்வம் விருது' நம்முடைய திருமாவேலனுக்கு வழங்கப்பட இருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை நீங்கள் ஏற்கனவே பத்திரிகையில் பார்த்திருப்பீர்கள். அதனை நான் மகிழ்ச்சியோடு இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, அவருடைய இல்லத்தில் நடைபெறும் இந்த மணவிழாவில் அவரை பாராட்டும் வாய்ப்பு எனக்கு கிடைத்தமைக்காக நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.</p><h2>சமூக நோய்</h2><p>இங்கே மணமகன், மணமகள் இரண்டு பேருமே மருத்துவர்கள். மருத்துவர்களாக இருக்கும் அவர்களிடம் நான் கேட்டு கொள்ள விரும்புவது, மனிதர்களின் நோய்க்கு இன்றைக்கு நீங்கள் எப்படி மருந்துகளை கண்டுபிடித்து சிகிச்சை வழங்கி வருகிறீர்களோ, அதுபோல இன்றைக்கு நாட்டிலே உள்ள 'சமூக நோய்க்கும்' மருந்து கண்டுபிடித்து, அதற்கும் நீங்கள் சிகிச்சை அளிக்க வேண்டும். அந்த பணியை நிறைவேற்றும் கடமையை நீங்கள் நிறைவேற்றி தர வேண்டும் என்பது என்னுடைய அன்பான வேண்டுகோள்.</p> <h2>தமிழ் பெயர்கள்</h2><p>அடுத்து, உங்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகள் ஆண் குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தையாக இருந்தாலும், அந்த குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டுங்கள் என்ற வேண்டுகோளை வைத்து விடைபெறுகிறேன்.</p> <p>புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எடுத்து சொல்லியிருக்கும், "வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்கு தொண்டராய்" மணமக்கள் வாழ்க! வாழ்க! வாழ்க! என வாழ்த்தி விடைபெறுகிறேன்.</p><p>இவ்வாறு அவர்&nbsp;கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>
எங்களை ஓட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்: அமைச்சர் ஷாஜகான் ஆவேசம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-have-to-reveal-who-confined-us-in-the-hotel-minister-shahjahan-speaks-out-angrily</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-have-to-reveal-who-confined-us-in-the-hotel-minister-shahjahan-speaks-out-angrily#comments</comments><guid isPermaLink="false">9d59289b-29e9-4585-b352-e961fd01c95e</guid><pubDate>Mon, 07 Sep 2026 09:55:20 +0000</pubDate><atom:updated>2026-09-07T09:55:20.142Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,குதிரை பேரம்,அமைச்சர் ஷாஜகான்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/qeev4zqh/shagajgagan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/qeev4zqh/shagajgagan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் வாணியம்பாடி எம்எல்ஏ சையத் பாருக் பாஷா பேசுகையில் திருவண்ணாமலை பொதுக் கூட்டத்தில் ஐயூஎம்எல் எம்எல்ஏக்களை திமுகவினர் மிரட்டி கோடி கோடியாக பணம் கொடுப்பதாகவும் அமைச்சர் பதவி கொடுப்பதாகவும் கூறினர் என நான் கூறியதை திமுகவினர் திரித்து பேசுகிறார்கள்.  தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக கூறி வருகிறார்கள். நான் யாரையும் தவறாக பேசவில்லை. மே 7ஆம் தேதி அதிமுக தலைவரை முதல்வராக்க திமுக திட்டமிட்டிருந்தது. அதை எங்கள் தலைவர் காதர் மொய்தீன் ஏற்க மறுத்தார். அவர் பேட்டியில் சொன்னதைதான் நான் எங்கள் கட்சி கூட்டத்தில் சொன்னேன்’ என்றார்.   சையத் பாரூக் பாஷா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். </p><p> அப்போது எழுந்து பேசிய அமைச்சர் ஷாஜகான், "சோஃபா மாடல் அரசு, முஸ்லீம் லீக் பணம் வாங்கியது, குதிரை பேரம் என பேசுவதை ஏற்க முடியாது. ஐயுஎம்எல் எம்எல்ஏ சையது பாருக் பாஷா, அதிமுகவினர் பற்றி பேசவில்லை.மே 7 ஆம் தேதி ஐயுஎம்எல் கட்சியை தொடர்புகொண்டு அதிமுக தலைவரை முதல்வராக்க வேண்டும் என்று கூறினார். திமுகதான் அந்த முடிவை எடுத்தது.</p><p>மே 8 ஆம் தேதி வேறொரு முடிவை எடுத்துக் கூறியது. ஐயுஎம்எல் இதனை ஏற்க மறுத்த காரணத்தால் எங்கள் இரண்டு உறுப்பினர்களை மே 8-ம் தேதி இரவு ஹோட்டலில் அடைத்து வைத்தது யார்? மிரட்டியது யார்? எங்களுக்கு காவலுக்கு போட்டது யார்? என்பதை உடைத்து சொல்ல வேண்டியது வரும். ஆளுநர் ஆட்சி இங்கு வந்துவிடக்கூடாது என்று தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தோம்" என்றார்.</p> ]]></content:encoded></item><item><title>தடுமாறிய திமுக எம்.எல்.ஏ.வுக்கு கைகொடுத்து உதவிய முதல்-அமைச்சர் விஜய் - வைரலாகும் வீடியோ</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cm-vijay-helps-dmk-mla-video-goes-viral</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cm-vijay-helps-dmk-mla-video-goes-viral#comments</comments><guid isPermaLink="false">4da4cf7e-6e74-488d-bb0f-9e116dc0ea2b</guid><pubDate>Mon, 07 Sep 2026 09:47:09 +0000</pubDate><atom:updated>2026-09-07T09:47:09.382Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN Assembly,திமுக எம்.எல்.ஏ,DMK MLA,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/6m72wqte/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/6m72wqte/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தர்ணாவில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏவை முதல்-அமைச்சர் கைகொடுத்து தூக்கிவிட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.</p><h2>முதல்-அமைச்சர் பதிலுரை</h2><p>காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் நிறைவடைந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய் இன்று பதிலளித்து பேசினார். அப்போது திமுக மீது அமலாக்கத்துறை வைத்த பல குற்றச்சாட்டுகள் பற்றி பேசியிருந்தார். கடந்த ஆட்சியில் திமுக எல்லா துறைகளிலும் ஊழல் செய்திருக்கிறது. கட்சி நிதி என்ற பெயரில் உதயநிதிக்கும், மு.க ஸ்டாலினுக்கும் பணம் சென்றிருக்கிறது என்று அமலாக்கத்துறை கூறியிருப்பதாக அவர் தெரிவித்தார்.</p><h2>திமுக உறுப்பினர்கள் அமளி</h2><p>இதையடுத்து அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இது தொடர்பாக தங்களை பேச அனுமதிக்க வேண்டும் என்றும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை சபாநாயகர் ஏற்கவில்லை. இதையடுத்து திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.</p><h2>தரையில் அமர்ந்து தர்ணா</h2><p>மேலும் சபாநாயகரின் இருக்கைக்கு முன்பு தரையில் அமர்ந்து அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது முதல்-அமைச்சர் விஜய்யின் இருக்கைக்கு முன்னே திமுக எம்.எல்.ஏ. துரை சந்திரசேகரன் (திருவையாறு தொகுதி) கீழே அமர்ந்து தர்ணா செய்தார். அதன்பின்பு அவர் எழுவதற்கு முயன்றபோது தடுமாறினார்.</p><h2>கைகொடுத்த முதல்-அமைச்சர்</h2><p>அப்போது முதல்-அமைச்சர் விஜய், துரை சந்திரசேகரனின் கையை பிடித்து, அவரை தூக்கி விட்டார். மேலும், தர்ணா செய்வதற்கு உதவும் வகையில் முதல்-அமைச்சர் தனது டேபிளை கொஞ்சம் பின்னே இழுத்துப் போட்டார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>திருச்சியில் ‘டிஜிட்டல் கைது’ எனக்கூறி ரூ.17 லட்சம் மோசடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-17-lakh-swindled-in-trichy-via-digital-arrest-scam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-17-lakh-swindled-in-trichy-via-digital-arrest-scam#comments</comments><guid isPermaLink="false">89d7c279-fc2a-479a-97fc-f510aad85f26</guid><pubDate>Mon, 07 Sep 2026 09:41:47 +0000</pubDate><atom:updated>2026-09-07T09:41:47.584Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்சி,Trichy,Digital arrest,டிஜிட்டல் கைது,பள்ளிschool</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/k4onbo74/187.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மோசடி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/k4onbo74/187.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>திருச்சியில் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியரிடம் ‘டிஜிட்டல் கைது’ எனக்கூறி ரூ.17 லட்சம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. </p><h2> பள்ளி ஆசிரியர்</h2><p>திருச்சி அரியமங்கலம் வி.ஓ.சி. தெருவை சேர்ந்தவர் பிலோமின் ராஜ் (வயது 67). இவரது மனைவி, பள்ளி ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த மாதம் 31-ந் தேதி பிலோமின் ராஜின் மனைவிக்கு செல்போனில் ஒரு எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தன்னை மதன்குமார் என்று அறிமுகப் படுத்திக்கொண்டு, தான் சி.பி.ஐ.யில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார்.</p><p>அப்போது அவர், உங்களின் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ஒரு வங்கிக்கணக்கு உருவாக்கப்பட்டு உள்ளது. அந்த வங்கிக் கணக்கிற்கு ஒரு பெரிய தொகை மாற்றப்பட்டு உள்ளது. இதனால் நீங்கள் கைது செய்யப்படாமல் இருக்க பணம் செலுத்த வேண்டும் என்று அந்த நபர் கூறியுள்ளார். அதனை நம்பிய பிலோமின் ராஜின் மனைவி, வங்கிக்கணக்கு மூலம் ரூ.17 லட்சத்தை, அந்த நபர் கூறிய வங்கிக் கணக்கிற்கு அனுப்பி உள்ளார். பின்னர் தான் அவருக்கு, அந்த நபர் தன்னை மிரட்டி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF">மோசடியில்</a> ஈடுபட்டது தெரியவந்தது. </p><h2>விசாரணை</h2><p>இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அந்த நபரை செல்போனில் தொடர்பு கொண்டபோது, அந்த எண் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. இது குறித்து பிலோமின் ராஜ் ஆன்லைன் மூலம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-three-days-to-read-ed-charges-udayanidhi-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-three-days-to-read-ed-charges-udayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">85fef16b-1f2d-45d5-a664-31e25d05f838</guid><pubDate>Mon, 07 Sep 2026 09:22:23 +0000</pubDate><atom:updated>2026-09-07T09:26:35.720Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,அமலாக்கத்துறை,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,தமிழக சட்டசபை,TN Assembly</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/dnfba53n/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/dnfba53n/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் நிறைவடைந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய் இன்று பதிலளித்து பேசினார். அப்போது திமுக மீது அமலாக்கத்துறை வைத்த பல குற்றச்சாட்டுகள் பற்றி பேசியிருந்தார். கடந்த திமுக ஆட்சியில் எல்லா துறைகளிலும் திமுக ஊழல் செய்திருக்கிறது. கட்சி நிதி என்கிற பெயரில் உதயநிதிக்கும், மு.க ஸ்டாலினுக்கும் பணம் சென்றிருக்கிறது என்று அமலாக்கத்துறை கூறியிருப்பதாக அவர் தெரிவித்தார்.</p><p>அதன் பிறகு முதல்-அமைச்சரின் பதிலுரை மீது பேச அனுமதிக்குமாறு கூறி தி.மு.க.உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, தி.மு.க.உறுப்பினர்கள் பேச அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.</p><p>இந்த நிலையில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு? என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு? பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - திசைதிருப்பும் உத்திகள் - மொத்தத்தில் எந்த தயாரிப்பும் இல்லாமல், ரோல் கேமரா, ஆக்சன் மோடில் Cringe டயலாக் பேசி இருக்கிறார் டம்மி CM. எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், அடுத்த முறை நன்றாகத் தயாராகுங்கள். இன்னும் சிறப்பாகச் செய்ய முயற்சி செய்யுங்கள்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/light-to-moderate-rain-possible-in-western-ghat-districts-today</link><comments>https://www.dailythanthi.com/news/weather/light-to-moderate-rain-possible-in-western-ghat-districts-today#comments</comments><guid isPermaLink="false">933e3fe8-6ae9-4a14-b667-72772140e331</guid><pubDate>Mon, 07 Sep 2026 09:00:02 +0000</pubDate><atom:updated>2026-09-07T09:00:02.730Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு,வானிலை முன்னறிவிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/bihdko8z/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/bihdko8z/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>சுமார் 0.9 கிமீ உயரத்தில் தெற்கு தெலுங்கானா முதல் மன்னார் வளைகுடா வரை ராயலசீமா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><p><strong>07-09-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>08-09-2026:</strong> தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>09-09-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><h3>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</h3><p><strong>07-09-2026 மற்றும் 11-09-2026:</strong> உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.</p><h3>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</h3><p><strong>07-09-2026 முதல் 11-09-2026 வரை:</strong> உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று</strong> மற்றும் <strong>நாளை</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உலக பிசியோதெரபி தினம் - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/world-physiotherapy-day-greetings-from-the-communist-party-of-india</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/world-physiotherapy-day-greetings-from-the-communist-party-of-india#comments</comments><guid isPermaLink="false">2e8dc766-43ba-4446-bced-6c48876bf639</guid><pubDate>Mon, 07 Sep 2026 08:40:34 +0000</pubDate><atom:updated>2026-09-07T08:40:34.395Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Communist Party of India,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி,பிசியோதெரபி தினம்,World Physiotherapy Day</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/3rxw17ak/State-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/3rxw17ak/State-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>உலக பிசியோதெரபி தினம் செப்டம்பர் 8-ந்தேதி(நாளை) கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பிசியோதெரபி மருத்துவர்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“உலக இயன்முறை(பிசியோதெரபி) மருத்துவ தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 8 ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினம் உலகில் உள்ள பிசியோதெரபி மருத்துவர்களால் கொண்டாடப்படுகிறது. உலக பிசியோதெரபி மருத்துவ அமைப்பு 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் நாள் தொடங்கப்பட்டது. அந்த தினம் 1996 ஆம் ஆண்டு முதல், உலக இயன்முறை மருத்துவர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.</p><p>இருதய நோய் மற்றும் பக்கவாதம் தடுப்பில், சிகிச்சையில் மற்றும் மறுவாழ்வளித்தலில் பிசியோதெரபி மருத்துவத்தின் பங்கு என்பது தான், இந்த 2026 ஆம் ஆண்டின் பிசியோதெரபி மருத்துவ தினத்தின் கருப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இருதய நோய் மற்றும் பக்கவாதம் தடுப்பில், சிகிச்சையில் மற்றும் மறுவாழ்வளித்தலில் இயன் முறை மருத்துவம் மற்றும் உடற்பயிற்சி மகத்தான பங்கை வகிக்கிறது. எனவே, அதனை முதன்மை படுத்தி ,கருப்பொருளாகக் கொண்டு, இவ்வாண்டு பிசியோதெரபி தினம் கடைபிடிக்கப்படுவது பாராட்டுக்குரியது.</p><p>இத்துறையை சார்ந்தவர்கள் மக்களிடையே பிசியோதெரபி மருத்துவத்தைப் பற்றியும் அதன் நன்மைகளையும் பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். மக்களுக்கு உடலியக்கம், தசைகளின் வலிமையை பாதுகாத்தல், உடல் ஆரோக்கியம், மூட்டுகளின் இயக்கம், அறிவியல் பூர்வமான உடற்பயிற்சி  போன்றவற்றை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்.</p><p>தசைகள், எலும்புகள் மற்றும் மூட்டு வலிகளுக்குச் சிகிச்சை அளித்தல், அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு உடல் இயக்கத்தை மீட்டெடுத்தல், பக்கவாதம் அல்லது நரம்பு மண்டல பாதிப்பு உள்ளவர்களுக்குப் பயிற்சி அளித்தல், விளையாட்டு வீரர்களின் காயங்களைச் சரிசெய்தல் போன்ற பல மருத்துவ சேவைகளை பிசியோதெரபி மருத்துவர்கள் வழங்குகின்றனர்.</p> <p>நவீன அறிவியல் மருத்துவத்துடன் இணைந்து வளரும், செயல்படும், அதன் ஒருங்கிணைந்த முறையாக, பகுதியாக  மகத்தான பங்களிப்பை செலுத்தும் பிசியோதெரபி மருத்துவச் சேவைகள் அனைத்து மக்களுக்கும் கிட்டிட வேண்டும். அதற்கேற்ப பிசியோதெரபி மருத்துவ வசதிகளை தமிழ்நாடு அரசு பரவலாக்க வேண்டும்.</p><p>தமிழ்நாட்டில் பிசியோதெரபி மருத்துவத்தை படித்தவர்கள் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இல்லாமல் உள்ளனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பை தமிழ்நாடு அரசு உருவாக்கி வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில், தற்காலிக அடிப்படையில்  பணிபுரியும் பிசியோதெரபி மருத்துவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும்.</p><p>தனியார் துறைகளில் பணியாற்றும் பிசியோதெரபி மருத்துவர்களுக்கு ரூபாய் 7,000 முதல் 15,000 ரூபாய் வரை மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே, அவர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை நியாயமான முறையில் நிர்ணயிக்க வேண்டும். அந்த குறைந்த பட்ச ஊதியம் வழங்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்திட வேண்டும்.</p><p>உலக பிசியோதெரபி தினத்தில், சேவை மனப்பாங்கோடு செயலாற்றும் அனைத்து பிசியோதெரபி மருத்துவர்களுக்கும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறது.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>‘த.வெ.க. குதிரை பேரம் நடத்தியதாக தவறான தகவலை பரப்புகிறார்கள்’ - ஐ.யூ.எம்.எல். கண்டனம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/false-information-is-being-spread-alleging-horse-trading-by-tvk-iuml-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/false-information-is-being-spread-alleging-horse-trading-by-tvk-iuml-condemns#comments</comments><guid isPermaLink="false">1d574473-18b1-4daa-9083-6c16f58dbb59</guid><pubDate>Mon, 07 Sep 2026 08:28:57 +0000</pubDate><atom:updated>2026-09-07T08:28:57.875Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,த.வெ.க.,குதிரை பேரம்,ஐ.யூ.எம்.எல்.,IUML,horse trading</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/ntsujv2u/State-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/ntsujv2u/State-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர்,</p><p>இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முகம்மது அபுபக்கர் திருவள்ளூரில்  இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் சார்பாக வெற்றி பெற்றிருக்கக்கூடிய இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் பல்வேறு நிலைகளிலே ஆட்சியாளர்களுக்கு துணையாக நின்று சமுதாயத்தின் பிரச்சினைகளை களைவதில் சிறப்பாக செயலாற்றி வருகின்றார்கள். </p><p>ஆனால் எதிரணியில் இருக்கக்கூடியவர்கள் அவ்வப்போது தவறான பிரசாரங்களை செய்து குழப்பங்களை ஏற்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள். எங்களுடைய வாணியம்பாடி எம்.எல்.ஏ. சையத் பாரூக் பாஷா பேசியது இன்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. அவர் எந்த கட்சியையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. </p><p>நடந்து முடிந்த இந்த சட்டமன்ற தேர்தலில் நிலையான ஆட்சியை யார் அமைப்பது என்ற குழப்பம் ஏற்பட்டு, காலதாமதம் ஆனதன் காரணமாக பல கட்சிகளும் ஆட்சி அமைப்பதற்கு முயற்சி செய்தார்கள். அதன் காரணமாக குதிரை பேரம் நடந்தது என்றுதான் அவர் சொல்லி இருக்கிறார். </p><p>ஆனால் ஒட்டுமொத்தமாக த.வெ.க.தான் குதிரை பேரம் நடத்தியது என்ற தவறான தகவலை பரப்புகிறார்கள். அதனை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். தேர்தலுக்கு பிறகு நடந்த சூழ்நிலைகளை நாம் அலசி ஆராயும் பொழுது, அப்போது நடந்த விஷயங்களைப் பேசினால் மேலும் பிரச்சினைகள்தான் அதிகமாகும். </p><p>அதை விடுத்து, இப்பொழுது அமைந்திருக்கின்ற இந்த ஆட்சியில் என்ன நன்மையான காரியங்கள் இருக்கிறதோ அதைப் பாராட்ட வேண்டும். குறைபாடுகள் இருந்தால் அதை ஆரோக்கியமாக கண்ணியமாக சுட்டிக்காட்டுவதுதான் எதிர்க்கட்சிகளுக்கு அழகு. அதை விட்டுவிட்டு தரம் தாழ்ந்த விமர்சனங்களை செய்வதன் மூலமாக எதையும் சாதிக்க முடியாது.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>முதல்வர் அலுவலகத்தை மாற்ற ரூ.6 கோடிக்கு மேல் செலவிடுவதா? - நயினார் நாகேந்திரன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/spending-over-6-crore-to-relocate-the-chief-ministers-office-nainar-nagendran-questions</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/spending-over-6-crore-to-relocate-the-chief-ministers-office-nainar-nagendran-questions#comments</comments><guid isPermaLink="false">940aa283-8f9f-405b-9559-ec369c402add</guid><pubDate>Mon, 07 Sep 2026 08:21:11 +0000</pubDate><atom:updated>2026-09-07T08:21:11.420Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/sj0eyv5t/nainar.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/sj0eyv5t/nainar.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>மாற்றம் தருவேன், புதிய அரசியல் செய்வேன்" என்று கூறி ஆட்சிக்கு வந்த முதல்-அமைச்சரின் சாயம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் வெளியாகியுள்ள தகவலின் மூலம் குறுகிய காலத்திலேயே வெளுத்துப் போய்விட்டது. தமிழக மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காகவும், அடிப்படைத் தேவைகளுக்காகவும் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், முதல்வர் ஜோசப் விஜய் தனது சொகுசுக்காகவும்,  தனது தனிப்பட்ட காரணங்களுக்காகவும் மக்கள் வரிப்பணமான ரூ. 6.17 கோடியை தனது அலுவலகத்தை 10-வது தளத்திற்கு மாற்றுவதற்காக வாரி இறைப்பது கடும் கண்டனத்திற்குரியது.</p><p>ஒருபுறம் ரூ. 1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று அறிவித்துவிட்டு, மறுபுறம் தற்காலிகமாக அலுவலகத்தை மாற்ற இத்தனை கோடி ரூபாயை விரயம் செய்வது ஏன்?</p><p>தலைமைச் செயலக கோட்டையில் ஏற்கனவே போதிய வசதிகள் இருக்கும்போது, சொகுசுக்காகவும், தனது தனிப்பட்ட காரணங்களுக்காகவும் முதல்வர் அலுவலகத்தை மாற்ற ரூ.6 கோடிக்கு மேல் செலவிடுவது எந்த விதத்தில் நியாயம்?</p><p>விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல் மணிகளைப் பாதுகாக்கச் சரியான சேமிப்புக் கிடங்குகள் இன்றி, அவை மழையில் நனைந்து வீணாகி வருவதாகக் குமுறி வரும் நிலையில், இவ்வளவு பெரிய தொகையைத் தற்காலிக அலுவலகத்திற்காக செலவிட முதல்வருக்கு மனசாட்சி உறுத்தவில்லையா?</p><p>"மாற்றம்" என்பது மக்களின் வாழ்வில் மலர வேண்டுமே தவிர, முதல்வரின் அலுவலகச் சுவர்களில் அல்ல. எனவே, இது போன்ற ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து, அந்த நிதியைத் தமிழக மக்களின் நலன் காக்கும் ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்கு செலவிட வேண்டும் என முதல்வர் ஜோசப் விஜய்யை  கேட்டுக்கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item></channel></rss>