<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 16 Sep 2026 09:17:15 +0000</lastBuildDate><item><title>திருவள்ளூர்: ஏடிஎம் கொள்ளை வழக்கில் 3 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvallur-3-arrested-in-atm-robbery-case</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvallur-3-arrested-in-atm-robbery-case#comments</comments><guid isPermaLink="false">0660d5bb-6919-4333-9a38-d8668a8a4daf</guid><pubDate>Wed, 16 Sep 2026 09:14:57 +0000</pubDate><atom:updated>2026-09-16T09:14:57.104Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,Thiruvallur,திருவள்ளூர்,கொள்ளை,ATM Machine,ஏடிஎம் எந்திரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/v7q35110/12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஏடிஎம் எந்திரம் கொள்ளை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/v7q35110/12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர்,</p><p>வெள்ளவேடு அருகே ஏடிஎம் இயந்திரத்தை பணத்துடன் கடத்திச் சென்ற வழக்கில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 3 பேரை ஆவடி தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.</p><h2>ஏடிஎம் எந்திரம் கொள்ளை</h2><p>திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அருகே கடந்த செப்டம்பர் 5-ம் தேதி ஏடிஎம் இயந்திரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல் திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் ஏடிஎம் மையங்களில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.</p><p>வெள்ளவேடு பகுதியில் நடைபெற்ற <a href="https://www.dailythanthi.com/topic/கொள்ளை">கொள்ளை</a> தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர்.</p><p>சம்பந்தப்பட்ட வங்கியில் நடத்தப்பட்ட விசாரணையில், கொள்ளையடிக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரத்தில் சுமார் ரூ.12 லட்சம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆவடி துணை ஆணையர் வினோத் சாந்தாராம் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த தனிப்படையினர் நேற்று இரவு மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்தனர்.</p><p>போலீசார் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் சமீம் (30), ஷாபாகான், ரசூல் என தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து ஒரு வேன் மற்றும் 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஏடிஎம் இயந்திரத்தை பெயர்த்து எடுத்து வாகனத்தில் கடத்திச் சென்றது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் கூறுகின்றனர். மேலும், இந்த கொள்ளை கும்பலுக்கு மூளையாக செயல்பட்டது யார்? கொள்ளை சம்பவங்களில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பது குறித்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார் </a>தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>கைது செய்யப்பட்ட 3 பேரையும் சென்னை அழைத்து வரும் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த பின்னர், போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>’தற்போதைய தலைமைச் செயலகத்தில் என்ன பிரச்சினை?” -  சீமான் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-not-allow-the-new-secretariat-to-be-built-at-pattinapakkam-seeman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-not-allow-the-new-secretariat-to-be-built-at-pattinapakkam-seeman#comments</comments><guid isPermaLink="false">ff536a46-56a8-4297-92e1-ae546ba3a110</guid><pubDate>Wed, 16 Sep 2026 09:08:53 +0000</pubDate><atom:updated>2026-09-16T09:08:53.481Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,Seeman,நாம் தமிழர் கட்சி,பட்டினப்பாக்கம்,Pattinapakkam,தலைமைச் செயலகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/zfnorfh6/SI.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சீமான் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/zfnorfh6/SI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>’தற்போதைய தலைமைச் செயலகத்தில் என்ன பிரச்சினை?” என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">சீமான்</a> கேள்வி எழுப்பியுள்ளார்.</p><h2>வெறும் அறிவிப்பு</h2><p>இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறியதாவது:</p><p>’பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் என்பது அறிவிப்பு தான், நடக்கப்போவதில்லை, கட்டப்போவதில்லை, கட்டவிடப்போவதில்லை. புதிய தலைமை செயலகம் வேண்டும் என சிலர் அறிக்கை விடுகிறார்கள், தற்போதைய தலைமை செயலகத்தில் என்ன பிரச்சினை உள்ளது?’ என்றார்.</p><h2>ஓமந்தூரார் மருத்துவமனை</h2><p>“உங்களுக்கு புதிய தலைமைச் செயலகம் வேண்டும் என்றால், ஓமந்தூரார் மருத்துவமனையை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு, அந்த இடத்தில் தலைமைச் செயலகத்தை அமைத்துக்கொள்ளுங்கள்.</p><p>கடன் வாங்கி, கடன் வாங்கி அதற்கு வட்டி கட்டிக்கொண்டிருக்கும் நிலையில், இதுபோன்ற செலவு தேவையா?” என்றும் சீமான் கேள்வி எழுப்பினார்.</p><h2>நெரிசல் ஏற்படும்</h2><p>’சென்னையில் எங்கு தலைமைச் செயலகம் கட்டினாலும் நெருக்கடி ஏற்படும். சொந்த ஊரில் அகதியாக இருக்க முடியாது’ என்றும் சீமான் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>

அன்பில் மகேஸ் வீட்டில் சோதனை: திவ்யா சத்யராஜ் வெளியிட்ட பரபரப்பு பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/raid-at-anbil-maheshs-house-divya-sathyaraj-releases-a-sensational-post</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/raid-at-anbil-maheshs-house-divya-sathyaraj-releases-a-sensational-post#comments</comments><guid isPermaLink="false">3fa0b635-77ff-42b4-b41b-f76e23ab5e24</guid><pubDate>Wed, 16 Sep 2026 09:07:33 +0000</pubDate><atom:updated>2026-09-16T09:07:33.161Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,Anbil Mahesh,Divya Sathyaraj,திவ்யா சத்யராஜ்,மத்திய குற்றப்பிரிவு போலீசார்,வீட்டில் சோதனை,அன்பில் மகேஸ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/flweevs8/1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/flweevs8/1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் மீது ஏவிவிடப்பட்டிருக்கும் இந்த சோதனை கடும் கண்டனத்துக்குரியது என திவ்யா சத்யராஜ் பதிவிட்டுள்ளார். </p>  <h2>அன்பில் மகேஸ் வீட்டில் போலீசார் சோதனை</h2><p>முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதில் லஞ்சம் பெற்றதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அன்பில் மகேஸ் வீட்டில் தற்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.</p>  <h2>திவ்யா சத்யராஜ் கடும் கண்டனம்</h2><p>இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் சோதனை நடைபெற்று வரும் நிலையில் சத்யராஜின் மகளும், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணை செயலாளருமான திவ்யா சத்யராஜ் தனது கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>"தொடர் மின்வெட்டு, லண்டன் ஏமாற்று வேலை, விலைவாசி உயர்வு, பட்டினப்பாக்கம் மக்கள் போராட்டம், விவசாயிகள் போராட்டம், டெண்டர் ஊழல் புகார்கள் என தொடர்ச்சியாக மக்களிடம் அடிவாங்குவதால் அதை திசைதிருப்புவதற்கு மீண்டும் ரெய்டு எனும் ஆயுதத்தைப் பிரயோகிக்கிறது தவெக அரசு.</p><p>முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் மீது ஏவிவிடப்பட்டிருக்கும் இந்த சோதனை கடும் கண்டனத்துக்குரியது. அவரும் கழகமும் இதனை சட்டரீதியாக எதிர்கொண்டு வெல்வோம்.</p><p>திமுக இதுபோன்ற மிரட்டல்களுக்கு அஞ்சாது என்பதை 77 வருடங்களாகப் பார்த்தும் இன்னும் திருந்தவில்லை என்றால், திருத்தப்படுவீர்கள்."</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>காவிரி கழிவுநீர்க் கால்வாயாக மாறுவது ஏன்? - வேல்முருகன் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-is-the-cauvery-turning-into-a-sewage-canal-velmurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-is-the-cauvery-turning-into-a-sewage-canal-velmurugan#comments</comments><guid isPermaLink="false">1d74ca07-5d85-468d-a09c-cc10174312d8</guid><pubDate>Wed, 16 Sep 2026 08:48:14 +0000</pubDate><atom:updated>2026-09-16T08:48:14.872Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Velmurugan,வேல்முருகன்,தமிழக வாழ்வுரிமைக் கட்சி,தி.வேல்முருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/xp82qag3/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேல்முருகன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/xp82qag3/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காவிரி கழிவுநீர்க் கால்வாயாக மாறுவது ஏன்? என்று வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.</p><p>இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>சுத்திகரிப்புக்கான கட்டமைப்பு இல்லை</h2><p>பெங்களூருக்குக் காவிரி மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் உள்ளிட்ட ஆதாரங்களிலிருந்து நாளொன்றுக்கு சுமார் 2,825 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது. அதே நகரில் நாளொன்றுக்கு சுமார் 2,580 மில்லியன் லிட்டர் கழிவுநீர் உற்பத்தியாகிறது. ஆனால், பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் கீழ் செயல்படும் 37 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் தற்போதைய சுத்திகரிப்புத் திறன் 1,364.5 மில்லியன் லிட்டர் மட்டுமே. இதனால் நாளொன்றுக்கு 1,215.5 மில்லியன் லிட்டர் அளவுக்குச் சுத்திகரிப்புத் திறன் பற்றாக்குறை இருப்பது கர்நாடக அரசின் அதிகாரிகளாலேயே ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>இதன் பொருள், பெங்களூரில் உருவாகும் கழிவுநீரில் பெரும் பகுதியைச் சுத்திகரிப்பதற்குத் தேவையான கட்டமைப்பு இன்னும் முழுமையாக இல்லை என்பதுதான். குடிநீராகப் பயன்படுத்தப்படும் நதியில் கழிவுநீர் கலப்பது வெறும் சுற்றுச்சூழல் பிரச்சினையல்ல. அது ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் உயிருடன் தொடர்புடைய தலையாய பிரச்சினை. காவிரி கர்நாடகத்தின் வழியாக மட்டுமே ஓடும் நதியல்ல. அதன் நீரை நம்பித் தமிழ்நாட்டில் குடிநீர் பெறும் கோடிக்கணக்கான மக்கள் உள்ளனர். பாசனம் செய்யும் விவசாயிகள் உள்ளனர். தலைமுறை தலைமுறையாகத் தமிழ்நாட்டின் வாழ்வாதாரம் அதனுடன் பின்னிப் பிணைந்திருக்கிறது.</p><h2>தண்ணீரின் தரத்தை பாதுகாக்க வேண்டும்</h2><p>ஒருபுறம் காவிரி நீர்ப் பங்கீட்டிற்காகத் தமிழ்நாடு தொடர் உரிமைப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது. மறுபுறம், அதே நதியின் நீர்த் தரம் பாழாகும் அளவுக்குக் கழிவுநீர் மேலாண்மையில் இத்தகைய மெத்தனமும் குறைபாடும் நீடிப்பது எந்த வகையில் நியாயம்?</p><p>தண்ணீரின் அளவை உறுதி செய்வதுடன் நின்றுவிடாமல், அதன் தரத்தையும் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். சுத்திகரிக்கப்படாதக் கழிவுநீர், நீர்நிலைகளில் கலப்பதைக் கர்நாடக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.</p><p>அதே வேளையில், இதில் தமிழ்நாடு அரசுக்கும் மிகப்பெரிய தலையாய கடமை உண்டு. கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டிற்குள் நுழையும் எல்லையான பிலிகுண்டுலு பகுதியில், காவிரியின் நீர்த் தரம் குறித்து தமிழ்நாடு அரசு தனது மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் தினசரி ஆய்வுகளைத் தீவிரப்படுத்த வேண்டும். நச்சுத் தன்மையோ கழிவுநீரோ கலந்திருப்பது கண்டறியப்பட்டால், உடனடியாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம், ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்று கர்நாடகத்திற்கு எதிராகக் கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.</p><h2>நீரின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும்</h2><p>தமிழக மக்களின் உயிர் மற்றும் உடல்நலம் சார்ந்த இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்க்காமல், அழுத்தமான எதிர்வினையாற்றுவதே தனது தலையாய கடமை என்பதை உணர வேண்டும்.</p><p>காவிரி வெறும் நீரோட்டம் அல்ல. அது <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழ்நாட்டின் </a>குடிநீர், விவசாயம், உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் அனைத்தையும் சுமந்து வரும் உயிர்நாடி.</p><p>அந்த உயிர்நாடியை நஞ்சாக மாற விடாமல் தடுத்து, எல்லையோர நீரின் தரத்தை ஆய்வுக்குட்படுத்தி, அதன் உண்மைத் தன்மையை மாதந்தோறும் பொதுவெளியில் வெளிப்படையாக தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் 18-ந்தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்: மாநகராட்சி அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-supply-to-be-stopped-in-thoothukudi-on-the-18th-corporation-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-supply-to-be-stopped-in-thoothukudi-on-the-18th-corporation-announcement#comments</comments><guid isPermaLink="false">5045ebcb-4698-4bb5-b300-24f4a8987fce</guid><pubDate>Wed, 16 Sep 2026 08:40:45 +0000</pubDate><atom:updated>2026-09-16T08:40:45.970Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Announcement,அறிவிப்பு,water supply stopped,குடிநீர் விநியோகம் நிறுத்தம்,Corporation Commissioner,மாநகராட்சி கமிஷனர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/0la11fbn/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூத்துக்குடி மாநகராட்சி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/0la11fbn/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடியில் வருகிற 18-ம் தேதி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">குடிநீர் விநியோகம் நிறுத்தம்</a> செய்யப்படும் என <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D">மாநகராட்சி கமிஷனர்</a> பிரியங்கா அறிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">அறிவிப்பில்</a> கூறப்பட்டுள்ளதாவது: </p><h2>மாதாந்திர பராமரிப்பு பணி</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாநகரின் குடிநீர் விநியோக பாதையான வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம், கலியாவூர் மற்றும் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பகுதிகளில் ‌வரும் மின்சார பாதையான கொம்பு காரநத்தம் துணை மின் நிலையத்தில் 18.9.2026, வெள்ளிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறது. </p><h2>குடிநீர் விநியோகம் நிறுத்தம்</h2><p>இதன் காரணமாக அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப் படுகிறது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>குடும்ப தகராறில் இளம்பெண் விஷம் குடித்து சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக கணவர், மாமனார் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-dies-by-poison-in-family-dispute-husband-and-father-in-law-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-dies-by-poison-in-family-dispute-husband-and-father-in-law-arrested#comments</comments><guid isPermaLink="false">b4e2a7b6-e73c-4be4-8edb-87d51ead1b1a</guid><pubDate>Wed, 16 Sep 2026 08:25:46 +0000</pubDate><atom:updated>2026-09-16T08:25:46.714Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கள்ளக்குறிச்சி,Kallakurichi,Family dispute,குடும்ப தகராறு,தற்கொலை,Suicide</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/p4bq0ew6/Untitled-12.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/p4bq0ew6/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சி,</p><p>குடும்ப தகராறில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர், மாமனாரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்</h2><p>கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள க.அலம்பாலம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் மகள் சங்கீதா (24 வயது). இவருக்கும் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள கரடிசித்தூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் மகன் அரவிந்த்குமார் (30 வயது) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அரவிந்த்குமார், தனியார் வங்கியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.</p><p>இந்த நிலையில் சங்கீதாவுக்கும், அரவிந்த்குமாருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் அரவிந்த்குமார் குடும்பத்தினரும் சங்கீதாவிடம் பிரச்சினை செய்து வந்ததாக தெரிகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் இரவும் கணவன்-மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அரவிந்தகுமார் சங்கீதாவை திட்டியுள்ளார்.</p><h2>விஷம் குடித்தார்</h2><p>இதனால் மனமுடைந்த சங்கீதா வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து குடும்பத்தினர் சென்று பார்த்தபோது சங்கீதா வீட்டில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த கச்சிராயப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சங்கீதாவின் உடலை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தனர். தொடர்ந்து சங்கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><p>இதற்கிடையே இறந்த சங்கீதாவின் தாய் சரசு, கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் எனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது. எனது மகள் சாவுக்கு அரவிந்த்குமார், அவருடைய தந்தை சரவணன் (60 வயது), தாய் அஞ்சலை (56 வயது), அக்கா அன்பரசி (35 வயது), உறவினர் அய்யம்பெருமாள் (70 வயது) ஆகியோர் தான் காரணம் எனவும் இவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.</p><h2>கணவர், மாமனார் கைது</h2><p>அதன்பேரில் சங்கீதாவை தற்கொலைக்கு தூண்டியதாக அய்யம்பெருமாள் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அரவிந்த் குமார், சரவணன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சங்கீதாவுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால், சங்கீதா வரதட்சணை கொடுமையால் இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் முருகன் மேல்விசாரணை நடத்தி வருகிறார்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் 14 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 வாலிபர்கள் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/14-kg-of-ganja-seized-in-thoothukudi-3-youths-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/14-kg-of-ganja-seized-in-thoothukudi-3-youths-arrested#comments</comments><guid isPermaLink="false">a4e20d28-65d4-4f44-8ba0-356a67ed90ef</guid><pubDate>Wed, 16 Sep 2026 08:22:26 +0000</pubDate><atom:updated>2026-09-16T08:22:26.216Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,Ganja,தூத்துக்குடி,கஞ்சா,Seizure,பறிமுதல்,smuggling,கடத்தல்,3 youths arrested,3 வாலிபர்கள் கைது</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/myxkfhjg/14-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 14 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 வாலிபர்கள் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/myxkfhjg/14-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடியில் விற்பனைக்காக கடத்தி வரப்பட்ட 14 கிலோ <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">கஞ்சாவை பறிமுதல்</a> செய்த போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/3-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">3 வாலிபர்களை கைது</a> செய்தனர். </p><h2>கஞ்சா கடத்தல்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி </a>மாவட்ட எஸ்.பி. சிவப்பிரசாத் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகளை காவல் சரகங்கள் வாரியாக போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி பகுதியில் விற்பனை செய்ய வாலிபர்கள் சிலர் கஞ்சாவை கடத்திக் கொண்டு வருவதாக ஏ.என்.டி.எப். போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜாவுக்கு தகவல் கிடைத்தது. </p><h2>3 வாலிபர்கள் கைது</h2><p>அதைத்தொடர்ந்து அவரது தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, தூத்துக்குடியில் வைத்து விற்பனைக்காக கடத்தி வரப்பட்ட 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு, காந்தாரி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த காசிபாண்டி (வயது 22), திருநெல்வேலி மானூர் காவல் சரகம், பள்ளிக்கோட்டை வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்த ரமேஷ்(23), தாழையூத்து, சங்கர்நகர் சாரதாம்பாள்நகர் பகுதியைச் சேர்ந்த ராஜகோபால்(23) ஆகிய 3 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ராமசாமி படையாச்சியார் பிறந்தநாள்: அமமுக சார்பில் மலர்தூவி மரியாதை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ramasamy-padayachiars-birthday-amamukha-showered-floral-tributes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ramasamy-padayachiars-birthday-amamukha-showered-floral-tributes#comments</comments><guid isPermaLink="false">f3b8d31d-2dfa-43eb-8870-73e9c0355bfc</guid><pubDate>Wed, 16 Sep 2026 08:18:02 +0000</pubDate><atom:updated>2026-09-16T08:18:02.634Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,TTV Dhinakaran,டிடிவி தினகரன்,birthday,former minister,Tribute,பிறந்த நாள்,ராமசாமி படையாட்சியார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/6gqfvpu6/352.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/6gqfvpu6/352.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுதந்திர போராட்ட வீரரரும், முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாட்சியாரின் 109-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.</p> <p>இந்நிலையில் ராமசாமி படையாச்சியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">டிடிவி தினகரன்</a> வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-</p><h2>மலர் தூவி மரியாதை</h2><p>விடுதலைப் போராட்ட வீரரும், பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தவரும், எளிய மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காக அரசியல் களத்தில் தொடர்ந்து போராடியவருமான எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார் பிறந்தநாள் விழாவையொட்டி, இன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சென்னை, கிண்டியில் அமைந்துள்ள அன்னாரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், அருகில் வைக்கப்பட்டிருந்த அன்னாரது உருவப் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/heavy-rain-forecast-in-9-districts-of-tamil-nadu-today</link><comments>https://www.dailythanthi.com/news/weather/heavy-rain-forecast-in-9-districts-of-tamil-nadu-today#comments</comments><guid isPermaLink="false">308556ea-9f75-4d21-8bd6-bb70a95fe124</guid><pubDate>Wed, 16 Sep 2026 08:12:02 +0000</pubDate><atom:updated>2026-09-16T08:12:02.069Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/id9v6yin/Untitled-11.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/id9v6yin/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் வடக்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தெற்கு உள் கர்நாடகா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. சுமார் 1.5 கி.மீ. உயரத்தில் தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய ராயலசீமா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.</p><p><strong>16-09-2026:</strong> நீலகிரி, கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் விழுப்புரம், சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>17-09-2026:</strong> நீலகிரி, கோயம்புத்தூர், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><h3>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</h3><p><strong>16-09-2026 முதல் 20-09-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.</p><h3>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</h3><p><strong>16-09-2026 முதல் 20-09-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று மற்றும் நாளை</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உளுந்தூர்பேட்டையில் இளைஞரை சவுக்கு தோப்புக்குள் தூக்கிச் சென்று தாக்கி நகை, பணம் கொள்ளை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-dragged-into-a-casuarina-grove-assaulted-and-robbed-of-jewelry-and-cash-in-ulundurpet</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-dragged-into-a-casuarina-grove-assaulted-and-robbed-of-jewelry-and-cash-in-ulundurpet#comments</comments><guid isPermaLink="false">079129f2-1cbd-406e-8e64-dc78726c62be</guid><pubDate>Wed, 16 Sep 2026 08:11:39 +0000</pubDate><atom:updated>2026-09-16T08:11:39.738Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நகை கொள்ளை,police enquiry,Robbery,உளுந்தூர்பேட்டை,Escape,GPay,மர்ம கும்பல்,assaulted</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/gqismr1w/3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட வசந்தவேல்]]></media:title><media:description type="html"><![CDATA[ உளுந்தூர்பேட்டையில் இளைஞரை சவுக்கு தோப்புக்குள் தூக்கிச் சென்று தாக்கி நகை, பணம் கொள்ளை. ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/gqismr1w/3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சி,</p><p>கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே வேலை முடிந்து தனியாக வீட்டிற்கு திரும்பிய இளைஞரை மர்ம கும்பல் ஒன்று வழிமறித்து, சவுக்கு தோப்புக்குள் இழுத்துச் சென்று கொடூரமாக தாக்கி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><h2>சவுக்கு தோப்புக்குள் அரங்கேறிய கொடூரம்</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கள்ளக்குறிச்சி மாவட்டம்</a> உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞர் வசந்தவேல். இவர், இன்று (புதன்கிழமை) தனது வேலைகளை முடித்து விட்டு தனியாக வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அவர் நைனாகுப்பம் மற்றும் மத்தியனூர் கிராமங்களுக்கு இடைப்பட்ட ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி வழியாக சென்றபோது, அங்கு மறைந்திருந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென வசந்தவேலை வழிமறித்தனர்.</p><p>இதையடுத்து அவரை வலுக்கட்டாயமாக அருகில் இருந்த சவுக்கு தோப்புக்குள் இழுத்துச் சென்று சரமாரியாக தாக்கினர். பின்னர், வசந்தவேல் கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்கச் சங்கிலியை பறித்தனர். மேலும், அவரது செல்போனை பறித்த கொள்ளையர்கள், அதிலிருந்த கூகுள் பே ஆப் மூலம் ரூ. 28,000 பணத்தை தங்களது வங்கிக் கணக்கிற்கு மாற்றிக் கொண்டனர்.</p><h2>அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி</h2><p>கொள்ளையர்களின் கடுமையான தாக்குதலில் படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த வசந்தவேல், சத்தம் போட்டு அலறினார். அவரது கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D">கொள்ளை கும்பல்</a> அங்கிருந்து தப்பியோடியது. இதையடுத்து பொதுமக்கள் வசந்தவேலை மீட்டு, சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><h2>போலீசார் தீவிர விசாரணை</h2><p>இந்த துணிகர வழிப்பறி சம்பவம் குறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி அசோகன் மற்றும் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று, பாதிக்கப்பட்ட வசந்தவேலிடம் முதற்கட்ட விசாரணை நடத்தினர். மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி ஷஹ்னாஸ் இன்று காலை நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். பட்டப்பகலில் இளைஞரைத் தாக்கி, ஆன்லைன் மூலமாக பணத்தைப் பறித்து சென்ற இந்த சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய 5 பேர் கொண்ட மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>2 தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? - அன்புமணி விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/whom-to-support-in-the-by-elections-for-two-constituencies-anbumani-clarifies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/whom-to-support-in-the-by-elections-for-two-constituencies-anbumani-clarifies#comments</comments><guid isPermaLink="false">1f8659bb-06fb-4e56-aaf6-6004c925c61c</guid><pubDate>Wed, 16 Sep 2026 08:04:26 +0000</pubDate><atom:updated>2026-09-16T08:04:26.781Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,இடைத்தேர்தல்,By election,மதுராந்தகம்,தாராபுரம்,Madhuranthakam,Dharapuram</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/8kqqydsp/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/8kqqydsp/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை தவெக அரசு நடத்த வேண்டும். மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாது. இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது தொடர்பாக கட்சிகள் ஆலோசனை நடத்துகிறோம். பாமக யாருக்கு ஆதரவு என்பதை விரைவில் அறிவிப்போம். எங்களின் நிலைப்பாட்டை அறிவித்த பின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறேன். </p><p>தமிழக முதல்-அமைச்சர் விஜய் லண்டன் சென்றுள்ளார். ஒரு நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டுள்ளார். அந்த நிறுவனம் 30 ஆண்டுகாலமாக சென்னையில் இயங்கி வருகிறது. இங்கையே ஒப்பந்தம் கையெழுத்து போட்டிருக்கலாம். சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தவறான முடிவு. பட்டினப்பாக்கம் மிகவும் குறுகிய, போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி. சென்னைக்கு வெளியே 1,000 ஏக்கரில் நிர்வாக நகரம் கட்டி தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும்.</p><p>தமிழகத்தில் எந்த ஒரு திட்டம் வந்தாலும் மக்கள் வரவேற்க கூடிய திட்டமாக மக்கள் எதிர்கிற திட்டமாகவும் இருக்க கூடாது. மக்கள் ஆதரிக்கிற ஒரு இடத்தை தேர்வு செய்யுங்கள். இப்போது மீனவர்கள் போராட்டத்தை ஆரம்பித்து விட்டார்கள். சென்னையின் வெளிபுறத்தில் இருந்தாலும் பரவாயில்லை அங்கு தலைமைசெயலகம் அமைக்கப்படலாம் அல்லது கலைஞர் கட்டிய ஓமந்தூரார் உள்ளது அதில் கொண்டு வரலாம். மக்களுக்கு பாதிப்பு இல்லாத எந்த இடத்தில் வந்தாலும் அதை வரவேற்போம். பரந்தூரில் புதிய தொழிற்சாலை அமைத்தால் நானே சென்று போராடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஜோத்பூர் - சென்னை இடையே சிறப்பு ரெயில் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-jodhpur-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-jodhpur-chennai#comments</comments><guid isPermaLink="false">c7404a34-6f8f-47a9-b3a0-a7340c183e0a</guid><pubDate>Wed, 16 Sep 2026 08:03:39 +0000</pubDate><atom:updated>2026-09-16T08:03:39.631Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,தமிழகம்,சிறப்பு ரெயில்,தெற்கு ரெயில்வே,Southern Railway,Special train,ஜோத்பூர்,Jodhpur</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/7a2z4a1u/chennai.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/7a2z4a1u/chennai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பயணிகளுக்கான தேவையை கருத்தில் கொண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் - சென்னை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட இருக்கிறது. </p><h2>சிறப்பு ரெயில்</h2><p>இது தொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/topic/southern-railway">தெற்கு ரெயில்வே</a> வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p>ஜோத்பூரில் இருந்து சென்னை கடற்கரைக்கு அக்டோபர் 3-ந் தேதி முதல் நவம்பர் 28-ந் தேதி வரை சனிக்கிழமைகளில் இரவு 9.20 மணிக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண் 04815) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் 3-வது நாள் இரவு 8 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடையும். </p><h2>முன்பதிவு</h2><p>மறுமார்க்கத்தில், சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரலில் இருந்து ஜோத்பூருக்கு அக்டோபர் 6-ந் தேதி முதல் டிசம்பர் 1-ந் தேதி வரை செவ்வாய்கிழமைகளில் மாலை 5.15 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (04816) 3-வது நாள் இரவு 8.30 மணிக்கு ஜோத்பூரை சென்றடைகிறது. </p><p>இரு மார்க்கத்திலும் 9 முறை வாராந்திர ரெயிலாக இயக்கப்படும் இந்த சிறப்பு ரெயில் 19 பெட்டிகளை கொண்டதாக இருக்கும். </p><p>இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களுக்கு தடை இல்லை: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madhurantakam-dharapuram-by-elections-not-banned-madras-high-court-order</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madhurantakam-dharapuram-by-elections-not-banned-madras-high-court-order#comments</comments><guid isPermaLink="false">431132cb-576d-424f-8498-196667dc19ad</guid><pubDate>Wed, 16 Sep 2026 07:46:33 +0000</pubDate><atom:updated>2026-09-16T07:46:33.820Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை ஐகோர்ட்டு,Chennai High Court,இடைத்தேர்தல்,By election,மதுராந்தகம்,தாராபுரம்,Madhuranthakam,Dharapuram</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/hpxt6jp7/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/hpxt6jp7/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தேர்தல் முடிவுகள் வெளியான குறுகிய காலத்தில், மக்கள் தீர்ப்பை புறக்கணித்து அரசியல் காரணங்களுக்காக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால், இடைத்தேர்தலில் அவர்கள் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, தேர்தல் செலவை டெபாசிட் செய்யும் வகையில் உரிய நடைமுறையை வகுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த வக்கீல் சுதன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.</p><p>அதில், இந்த வழக்கு முடியும் வரை மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும் இந்த தொகுதிகளுக்கு தவெக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்எல்ஏக்கள் மரகதம் குமாரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோரின் வேட்பு மனுக்களை ஏற்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.</p><p>இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கிருஷ்ணசாமி கோவிந்தராஜன் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், எந்த காரணமும் இல்லாமல் குறுகிய காலத்தில் ராஜினாமா செய்ததால், இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் எழுந்து, மீண்டும் செலவு செய்ய வேண்டிய நிலை வந்துள்ளது. வாக்களித்த மக்களின் விரல் மை காய்வதற்கு முன், ராஜினாமா செய்து இன்னொரு தேர்தலை சந்திக்க வைத்துள்ளனர். மக்களின் நம்பிக்கை வீழ்த்தப்பட்டுள்ளது.</p><p>அரசிய சாசனத்தின்படி, இதுபோன்ற சூழலில் தேர்தல் ஆணையம் முறைபடுத்தலாம், ஐகோர்ட்டும் உத்தரவு பிறப்பிக்கலாம், என்பதால் இந்த வழக்கில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.</p><p>அப்போது நீதிபதிகள், எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முழு உரிமை உள்ளது. மக்கள் வாக்கு செலுத்தி தேர்ந்தெடுக்கப்பட்டவர், உரிய காரணங்கள் இல்லாமல் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததன் மூலமாக மக்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர். இது கேலிக்கூத்தானது. இதுபோன்ற சூழலை எதிர்கொள்ள தேர்தல் ஆணையத்திடம் விதிமுறைகள் ஏதேனும் உள்ளதா? மக்களின் உரிமையை தேர்தல் ஆணையம் பாதுகாக்க வேண்டும். தேர்தல் அறிவிப்பு வெளியிப்பட்டுள்ளதால், இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என்றனர்.</p><p>தேர்தல் ஆணையம் தரப்பில், தற்போது எழுந்துள்ள சூழல் தொடர்பாக விரிவாக ஆய்வு செய்து பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.</p><p>தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல், தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்கூட, இடைத்தேர்தலில் போட்டியிட முடியும் என சுட்டிக்காட்டினார். மேலும், ஏற்கெனவே எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்றதை எதிர்த்த வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பை தள்ளவைத்துள்ளது என்று தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம் செய்த நீதிபதிகள், விசாரணையை 18-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: தாம்பரத்தில் இருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/meenakshi-amman-temple-consecration-unreserved-special-train-from-tambaram-to-madurai-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/meenakshi-amman-temple-consecration-unreserved-special-train-from-tambaram-to-madurai-today#comments</comments><guid isPermaLink="false">77674fb7-24ac-4268-8574-a1d6137c9e29</guid><pubDate>Wed, 16 Sep 2026 07:45:41 +0000</pubDate><atom:updated>2026-09-16T07:45:41.453Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,சிறப்பு ரெயில்,Tambaram,தாம்பரம்,தெற்கு ரெயில்வே,Southern Railway,Madurai,மதுரை,Special train,Meenakshi Amman Temple,மீனாட்சி அம்மன் கோவில்,MEMU Rail,Meenakshi Sundareswarar Temple,மெமு சிறப்பு ரெயில்,மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/yrz7gj4j/kller.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/yrz7gj4j/kller.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை (வியாழக்கிழமை) நடைபெற இருப்பதையொட்டி, சென்னை தாம்பரத்தில் இருந்து மதுரைக்கு இன்று (புதன்கிழமை) மாலை முன்பதிவில்லாத மெமு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. </p><p>இது தொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/topic/southern-railway">தெற்கு ரெயில்வே</a> வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p>தாம்பரத்தில் இருந்து செப்டம்பர் 16-ந் தேதி (இன்று) மாலை 5 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரெயில் நள்ளிரவு 2.20 மணிக்கு மதுரையை சென்றடையும். </p><p>மறுமார்க்கத்தில், மதுரையில் இருந்து நாளை (17-ந் தேதி) மதியம் 2 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு மெமு ரெயில் இரவு 9.45 மணிக்கு தாம்பரத்தை வந்தடைகிறது. </p><p>12 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு மெமு ரெயில், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் பிறந்தநாள்: உருவ படத்துக்கு தமிழக அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ssramasamy-padayatchiyars-birthday-tamil-nadu-ministers-pay-floral-tribute-to-his-portrait</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ssramasamy-padayatchiyars-birthday-tamil-nadu-ministers-pay-floral-tribute-to-his-portrait#comments</comments><guid isPermaLink="false">107e1758-81f8-4ed3-b326-fdba83ecee64</guid><pubDate>Wed, 16 Sep 2026 07:25:22 +0000</pubDate><atom:updated>2026-09-16T07:25:22.653Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,Chennai,சென்னை,birthday,Ministers,தமிழக அமைச்சர்கள்,பிறந்தநாள்,floral tribute,ராமசாமி படையாட்சியார்,மலர்தூவி மரியாதை,Ramasamy Padayatchiyar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/wdq4xwrc/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் உருவ படத்துக்கு தமிழக அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/wdq4xwrc/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D">விடுதலைப் போராட்ட வீரரான</a> எஸ்.எஸ்.<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">ராமசாமி படையாட்சியாரின்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D">பிறந்தநாளை</a>யொட்டி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a> கிண்டியில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவ படத்துக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">தமிழக அமைச்சர்கள் </a><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88">மலர் தூவி மரியாதை</a> செலுத்தினார்கள்.</p><h2>அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை</h2><p>விடுதலைப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் 109-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப.வெங்கடரமணன், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் த.சரத்குமார் ஆகியோர் இன்று (16.9.2026) சென்னை, கிண்டி, ஹால்டா சந்திப்பில் அமைந்துள்ள ராமசாமி படையாட்சியாரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து அருகில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். </p><p>இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் அருள்பிரகாசம் (சைதாப்பேட்டை), தியாகராஜன் (செங்கல்பட்டு), சரவணமூர்த்தி (சோழிங்கநல்லூர்), காமாட்சி (பல்லாவரம்), விஜயராஜ் (திருப்போரூர்), ஹரிஷ் (ஆலந்தூர்), செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் அருண்தம்புராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். </p><h2>ராமசாமி படையாட்சியார் இளமைக்காலம்</h2><p>விடுதலைப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் அவர்கள் தென்னாற்காடு மாவட்டம், கடலூரில் சிவசிதம்பரம் படையாட்சி - ரெத்தினம்மாள் தம்பதியருக்கு 16.9.1918 அன்று மகனாகப் பிறந்தார். இளமையில் படிப்பிலும், விளையாட்டிலும் ஆர்வம் உள்ளவராக விளங்கினார். அந்தக்கால கல்வியான இன்டர்மீடியட் வரை கல்வி பயின்றார். </p><h2>60 ஆண்டுகள் பொதுவாழ்வு</h2><p>ராமசாமி படையாட்சியார் 1950-ம் ஆண்டு தொடக்கத்தில் தென்னாற்காடு மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டார். இளம் வயதிலேயே சமுதாயப் பணியில் நாட்டம் கொண்டதன் விளைவாக, தனது 24-வது வயதில் கடலூர் நகராட்சியில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த நான்கு ஆண்டுகளில் நகராட்சித் தலைவராகவும் தேர்வு பெற்றார். மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க குடிநீர் திட்டம் கொண்டு வந்தார். தமது 60 ஆண்டுகள் பொதுவாழ்வில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர், இரண்டு முறை மேலவை உறுப்பினர், இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு அமைச்சர் என்றளவிலும் மக்கள் பணியாற்றினார்.</p><h2>அரசு விழா கொண்டாட்டம்</h2><p>ராமசாமி படையாட்சியார் வேண்டுகோளின் பேரில் 1970-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு முதலாம் பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு என்ற அமைப்பை A.N.சட்டநாதன் என்பவரை தலைவராக கொண்டு அமைத்தார். அவர் 1992-ஆம் ஆண்டு ஏப்ரல் 3 அன்று மறைந்தார். இவர் மக்களுக்கு ஆற்றிய சேவையை போற்றுகின்ற வகையில், 1993-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு, தென்னாற்காடு மாவட்டத்தை இரண்டாக பிரித்து ஒரு பகுதியை ராமசாமி படையாட்சியார் மாவட்டம் என பெயர் சூட்டப்பட்டது. ராமசாமி படையாட்சியாரின் நினைவை போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பத்தில் முழு உருவ வெண்கல சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட்டு, அவரது பிறந்த நாளான செப்டம்பர் 16 அன்று தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. </p>]]></content:encoded></item><item><title>கோபிசெட்டிப்பாளையம் அருகே மின்சாரம் தாக்கி 16 வயது சிறுவன் பலி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/16-year-old-boy-dies-of-electrocution-near-gobichettipalayam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/16-year-old-boy-dies-of-electrocution-near-gobichettipalayam#comments</comments><guid isPermaLink="false">38f036ad-1871-4bdc-930d-4d456468d9ca</guid><pubDate>Wed, 16 Sep 2026 07:23:30 +0000</pubDate><atom:updated>2026-09-16T07:23:30.597Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்சாரம் தாக்கி,police enquiry,சிறுவன் பலி,Gobichettipalayam,கோபிச்செட்டிபாளையம்,electrocution death</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/tczx13e8/3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[  மனோஜ்]]></media:title><media:description type="html"><![CDATA[ மின்சாரம் தாக்கி 16 வயது சிறுவன் பலி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/tczx13e8/3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே விவசாய தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்த 16 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. </p><h2>சிறுவனை மின்சாரம் தாக்கியது</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஈரோடு மாவட்டம்</a> கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள ஊரைச் சேர்ந்த சிறுவன் மனோஜ் (வயது 16). அந்த சிறுவன் இன்று (புதன்கிழமை) அப்பகுதியில் உள்ள ஈஸ்வரமூர்த்தி என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தான். அப்போது, அங்கு அறுந்து கீழே விழுந்து கிடந்த உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் சிறுவன் மனோஜ் எதிர்பாராதவிதமாக மிதித்துள்ளான். மின்கம்பியை மிதித்த அடுத்த கணமே பலத்த மின்சாரம் பாய்ந்ததால் சிறுவன் தூக்கி வீசப்பட்டான். உடல் கருகிய நிலையில் மயங்கிக் கிடந்த அவனை, தோட்டத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.</p><h2>சிறுவன் உயிரிழப்பு- போலீசார் விசாரணை</h2><p>சிறுவனை பரிசோதித்த அரசு ஆஸ்பத்திரி மருத்துவர்கள், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உள்ளூர் போலீசார், சிறுவனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>விவசாயத் தோட்டத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF">மின்கம்பி </a>அறுந்து கிடந்தது குறித்து மின்வாரியத்திற்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதா அல்லது எதிர்பாராதவிதமாக மின்கம்பி அறுந்து விழுந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தோட்ட வேலைக்கு சென்ற 16 வயது சிறுவன் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF">மின்சாரம் தாக்கி </a>உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருவண்ணாமலை தொகுதி: தி.மு.க. வேட்பாளர் எ.வ.வேலு வெற்றி பெற்றது செல்லும் - சென்னை ஐகோர்ட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruvannamalai-constituency-dmk-candidate-ev-velus-election-victory-is-valid-madras-high-court</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruvannamalai-constituency-dmk-candidate-ev-velus-election-victory-is-valid-madras-high-court#comments</comments><guid isPermaLink="false">6d4262ca-cce4-4ed7-b081-da2ada9ed4bf</guid><pubDate>Wed, 16 Sep 2026 07:03:48 +0000</pubDate><atom:updated>2026-09-16T07:03:48.707Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,சென்னை ஐகோர்ட்டு,திருவண்ணாமலை,Tiruvannamalai,எ.வ.வேலு,Chennai High Court,திமுக வேட்பாளர்,DMK Candidate,E.V.Velu</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/zogcudkn/sing.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/zogcudkn/sing.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>திருவண்ணாமலை தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ. வேலுவுக்கு எதிரான தேர்தல் வழக்கை சென்னை ஐகோர்ட்டு நிராகரித்தது.</p><h2>சென்னை ஐகோர்ட்டு</h2><p>நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் <a href="https://dailythanthi.com/topic/evvelu">எ.வ. வேலு</a>, 2,455 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரது வெற்றியை எதிர்த்து த.வெ.க. வேட்பாளர் அருள் ஆறுமுகம் சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். </p><h2>தள்ளுபடி</h2><p>இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று எ.வ.வேலு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி, தேர்தல் வழக்கை விசாரிப்பதற்கு எந்த ஒரு காரணமும் இல்லை எனக்கூறி, தவெக வேட்பாளர் அருள் ஆறுமுகத்தின் தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.</p><h2>தேர்தல் வழக்குகள்</h2><p>முன்னதாக த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜா, பெருந்துறை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு ராஜினாமா செய்த ஜெயக்குமார், கோபிசெட்டிப்பாளையம் எம்.எல்.ஏ. செங்கோட்டையன், கோவை தெற்கு தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி ஆகியோருக்கு எதிரான தேர்தல் வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு நிராகரித்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>தன்னை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த இளைஞர்: தாம்பரத்தில் பரபரப்பு! </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-tambaram-young-man-arrives-at-hospital-with-the-snake-that-bit-him</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-tambaram-young-man-arrives-at-hospital-with-the-snake-that-bit-him#comments</comments><guid isPermaLink="false">a8f270fc-fda0-4462-b9bc-892c2be8233e</guid><pubDate>Wed, 16 Sep 2026 06:56:08 +0000</pubDate><atom:updated>2026-09-16T06:56:08.392Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,தாம்பரம்,Youth,Treatment,அரசு மருத்துவமனை,snake bite,பாம்பு கடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/18m51icn/2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பாம்பு- மையூர் சாகீக் ]]></media:title><media:description type="html"><![CDATA[ தாம்பரத்தில் தன்னை கடித்த பாம்புடன், மருத்துவமனைக்கு வந்த இளைஞரால் பரபரப்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/18m51icn/2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில், தன்னை கடித்த பாம்பு என்ன வகையான பாம்பு என்பதை மருத்துவர்களுக்கு அடையாளம் காட்டுவதற்காக, வாலிபர் ஒருவர் கடித்த பாம்பை பாட்டிலில் அடைத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>பாம்பு கடி</h2><p>சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் மையூர் சாகீக் (வயது 36). அவர் இன்று (புதன்கிழமை) காலை தனது வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த மரப்பலகையின் அடியில் பதுங்கியிருந்த சிறிய<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81"> பாம்பு </a>ஒன்று எதிர்பாராதவிதமாக அவரது கையில் கடித்தது.</p><h2>பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு வருகை</h2><p>பாம்பு கடித்தவுடன் பதற்றமடையாத மையூர் சாகீக், தன்னை கடித்த பாம்பை லாவகமாகப் பிடித்து ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்தார். பின்னர், அந்தப் பாட்டிலுடன் தாம்பரம் அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக விரைந்தார். அவர் கையில் பாம்புடன் வருவதைப் பார்த்த சக நோயாளிகளும், ஆஸ்பத்திரி ஊழியர்களும் அச்சமடைந்தனர். ஆனால், மருத்துவர்களிடம் தனக்கு முறையான<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88"> சிகிச்சை</a> அளிக்க வசதியாக பாம்பு வகையைக் காட்டவே இவ்வாறு கொண்டு வந்ததாக அவர் தெரிவித்தார்.</p><h2>ஆஸ்பத்திரியில் அனுமதி</h2><p>மருத்துவர்கள் அந்த பாம்பை ஆய்வு செய்தனர். ஆய்வில், அது விஷமில்லாத சாதாரண பாம்பு என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அந்த இளைஞருக்கு தேவையான முதலுதவி மற்றும் தடுப்பூசி செலுத்தப்பட்டு, அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். இச்சம்பவம் தாம்பரம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>நாமக்கல் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/head-on-collision-between-two-cars-near-namakkal-3-members-of-the-same-family-killed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/head-on-collision-between-two-cars-near-namakkal-3-members-of-the-same-family-killed#comments</comments><guid isPermaLink="false">65e5a8b0-d726-4491-8927-14aeb627b0e5</guid><pubDate>Wed, 16 Sep 2026 06:48:33 +0000</pubDate><atom:updated>2026-09-16T06:48:33.771Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,கரூர்,Namakkal,police enquiry,3 பேர் பலி,3 deaths,Cars Accident</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/uf6bz365/2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ விபத்துக்குள்ளான கார்]]></media:title><media:description type="html"><![CDATA[ நாமக்கல் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாகினர். ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/uf6bz365/2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல்,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நாமக்கல் </a>அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதி நிகழ்ந்த பயங்கர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயமடைந்தனர்.</p><h2>விபத்து</h2><p>கரூர் மாவட்டம் பள்ளபட்டியை அடுத்த மொலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்குமார் (வயது 35). கார்த்திக் இன்று (புதன்கிழமை) அதிகாலையில் அவரது தந்தை செல்வராஜ் (வயது 60) மற்றும் தாய் காந்திமதி (வயது 55) ஆகியோருடன் பெங்களூருவில் இருந்து சொந்த ஊரான கரூர் நோக்கி சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர்.</p><p>இந்த நிலையில் திருச்செந்தூர் சென்று விட்டு பெங்களூரூ நோக்கி மற்றொரு குடும்பத்தினர் எதிர்புற சாலையில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது திருச்செந்தூரில் இருந்து பெங்களூரு நோக்கி அதிவேகமாக வந்த அந்த கார் எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரை தாண்டி பாய்ந்து, கார்த்திக்குமாரின் கார் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.</p><h2>3 பேர் பலி – போலீசார் விசாரணை</h2><p>இந்த கோர <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">விபத்தில்</a> காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி கார்த்திக்குமார், செல்வராஜ், மற்றும் காந்திமதி ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த நல்லிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பொதுமக்களின் உதவியுடன் உடல்களை மீட்டனர். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.</p><p>மேலும், மற்றொரு காரில் இருந்த கிசான்கெளடா (வயது 19) உட்பட 3 பேர் விபத்தில் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பள்ளபட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மீனாட்சி கோவில் குடமுழுக்கில் தமிழ் மரபு முழுமையாக பின்பற்றப்பட வேண்டும் - வேல்முருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-tradition-should-be-fully-followed-in-the-meenakshi-temple-kudamuzhu-velmurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-tradition-should-be-fully-followed-in-the-meenakshi-temple-kudamuzhu-velmurugan#comments</comments><guid isPermaLink="false">249b610e-d970-4b63-8c07-f0ddb1be7c7a</guid><pubDate>Wed, 16 Sep 2026 06:47:59 +0000</pubDate><atom:updated>2026-09-16T06:47:59.538Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,தமிழ்,Velmurugan,வேல்முருகன்,Court,Madurai Meenakshi Amman Temple,மீனாட்சி அம்மன் கோவில்,குடமுழுக்கு விழா,தமிழக வாழ்வுரிமைக் கட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/ktxcf0ag/351.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/ktxcf0ag/351.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மீனாட்சி கோவில் குடமுழுக்கில் தமிழ் மரபு முழுமையாக பின்பற்றப்பட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>தமிழ் சமய மரபு</h2><p>சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மண்ணில், உலகப் புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலின் மகா குடமுழுக்கு செப்டம்பர் 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது.</p><p>தமிழரின் வரலாறு, பண்பாடு, கலை, கட்டடக்கலை மற்றும் சைவ மரபின் பெரும் அடையாளமாகத் திகழும் இத்திருக்கோயிலின் குடமுழுக்கு நிகழ்வில், தமிழ்ச் சமய மரபுக்கு உரிய மரியாதையும் முக்கியத்துவமும் வழங்கப்பட வேண்டும் என்பது இயல்பான எதிர்பார்ப்பாகும்.</p><h2>குடமுழுக்கு</h2><p>இந்தக் கோரிக்கை வெறும் மொழி உணர்வு சார்ந்த ஒன்றல்ல. தேவாரம், திருவாசகம், திருமந்திரம் உள்ளிட்ட தமிழ்ச் சைவப் பக்தி இலக்கியங்கள் பல நூற்றாண்டுகளாகத் தமிழரின் இறைநெறியோடு பின்னிப் பிணைந்தவை. எனவே, மீனாட்சி அம்மன் திருக்கோயில் குடமுழுக்கு நிகழ்வுகளில் நமது தமிழ் மரபு முழுமையாகப் பின்பற்றப்பட வேண்டும்.</p><p>இவ்விவகாரம் தொடர்பான வழக்கில், சென்னை ஐகோர்ட் மதுரை கிளை, சமஸ்கிருத வேதங்கள் ஓதப்படும் இடங்களிலேயே தமிழ்த் திருமுறை ஓதுவார்களுக்கும் உரிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். குடமுழுக்கின் அனைத்து முக்கிய நிகழ்வுகளிலும் அவர்கள் தமிழ்த் திருமுறைகள் மற்றும் சைவ மந்திரங்களை ஓத அனுமதிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.</p><h2>நீதிமன்றம்</h2><p>அதுமட்டுமின்றி, செப்டம்பர் 9-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், கடந்த காலங்களில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்குகளில் தமிழ் மந்திரங்களை ஓதிய ஓதுவார்களுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம், இம்முறையும் உறுதி செய்யப்பட வேண்டும் என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.</p><p>எனவே, கருவறை வழிபாடு, யாகசாலை நிகழ்வுகள், கோபுரக்கலச நன்னீராட்டு உள்ளிட்ட குடமுழுக்கின் முக்கியத் தருணங்களில் தமிழ் ஓதுவார்களின் பங்களிப்பு வெறும் பெயரளவில் இல்லாமல், நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள வகையில் நடைமுறையில் உறுதி செய்யப்பட வேண்டும்.</p><p>நமது தாய்மொழியின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டுவதற்கு நீதிமன்றத்தின் கதவைத் தட்ட வேண்டிய சூழல் இனியும் நீடிக்கக் கூடாது. கோவில்களின் வழிபாட்டு மரபுகளில் தமிழுக்கு வழங்கப்பட வேண்டிய இடம் குறித்து, அரசு தெளிவான நிரந்தர நடைமுறையை உருவாக்க வேண்டும்.</p><p>தமிழில் இறைவனைப் போற்றிய நாயன்மார்களின் பக்திப் பாரம்பரியம் வாழும் மண்ணில், தமிழ்த் திருமுறைகள் ஒலிப்பது எந்த வகையிலும் புறக்கணிக்கப்படக் கூடிய ஒன்றல்ல. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">குடமுழுக்கு</a> வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமைய வேண்டுமானால், சடங்குகள் முறையாக நடைபெறுவதோடு மட்டுமல்லாமல், தமிழ்ச் சைவ மரபின் குரலும் அதில் முழுமையாக ஒலிக்க வேண்டும்.</p><h2>வலியுறுத்தல்</h2><p>எனவே, நீதிமன்ற உத்தரவின் உணர்வை முழுமையாகக் கடைப்பிடித்து, தமிழ் ஓதுவார்களுக்கு உரிய இடம், வாய்ப்பு, மரியாதை ஆகியவற்றை உறுதி செய்யுமாறும், குடமுழுக்கு நிகழ்வுகளில் தேவாரம், திருவாசகம், திருமுறைகள் உள்ளிட்ட தமிழ்ச் சைவ மரபுகளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்குமாறும் தமிழ்நாடு அரசையும் இந்து சமய அறநிலையத்துறையையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நெல்லை: வீட்டில் 4 கிலோ கஞ்சா வைத்திருந்த சமோசா வியாபாரி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-samosa-vendor-arrested-for-having-4-kg-of-ganja-at-home</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-samosa-vendor-arrested-for-having-4-kg-of-ganja-at-home#comments</comments><guid isPermaLink="false">929be623-aa59-4cdf-895f-52e90ca1299f</guid><pubDate>Wed, 16 Sep 2026 06:39:09 +0000</pubDate><atom:updated>2026-09-16T06:39:09.373Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,கைது,Ganja,arrested,கஞ்சா,House,வீடு,சமோசா,Samosa,வியாபாரி,hoarding,பதுக்கல்,dealer</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/q1ih40h1/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கஞ்சா பதுக்கி வைத்திருந்த சமோசா வியாபாரி கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/q1ih40h1/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88">நெல்லை</a> மேலப்பாளையத்தில் வீட்டில் 4 கிலோ <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE">கஞ்சா </a>பதுக்கி வைத்திருந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BE">சமோசா</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF">வியாபாரி</a>யை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். </p><h2>சமோசா வியாபாரி வீட்டில் கஞ்சா பதுக்கல்</h2><p>நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர் முகமது யூனுஸ் (வயது 25). சமோசா வியாபாரியான இவர் வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் நேற்று முன்தினம் இரவு அவரின் வீட்டில் அதிரடியாக சோதனை செய்தனர்.</p><h2>4 கிலோ கஞ்சா பறிமுதல்; கைது</h2><p>அப்போது வீட்டில் 4 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்ததோடு, கஞ்சாவையும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">பறிமுதல்</a> செய்து மேலப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். </p><p>பின்னர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், முகமது யூனுசின் உறவினர் ஒருவர் கஞ்சா வியாபாரி என்பதும், அவர் சம்பவத்தன்று 4 கிலோ கஞ்சாவை வீட்டில் வைத்துக்கொள், 2 நாட்களில் வாங்கி கொள்கிறேன் என்று கூறி சென்றதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் அவரையும் சேர்த்து போலீசார் தேடி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்: த.வெ.க. வேட்பாளர் வேட்புமனு தாக்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dharapuram-constituency-by-election-tvk-candidate-files-nomination-papers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dharapuram-constituency-by-election-tvk-candidate-files-nomination-papers#comments</comments><guid isPermaLink="false">d4ebaca7-f451-4ab2-b93c-01a1f0ea38be</guid><pubDate>Wed, 16 Sep 2026 06:33:49 +0000</pubDate><atom:updated>2026-09-16T06:33:49.317Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Tamilnadu,தமிழகம்,இடைத்தேர்தல்,வேட்புமனு தாக்கல்,தாராபுரம்,Nomination,Dharapuram</media:keywords><media:content height="511" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/6lu3rgf9/nin.jpg" width="795"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/6lu3rgf9/nin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.</p><h2>5 முனைப் போட்டி</h2><p>செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் த.வெ.க., தி.மு.க. அ.தி.மு.க., நாம் தமிழர், கம்யூனிஸ்டு கட்சிகள் என 5 முனைப் போட்டி நிலவுகிறது. </p><p>இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அந்தந்த கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) அலுவலகங்களில் கடந்த 9-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 12, 13, 14-ந் தேதி தொடர் விடுமுறை முடிந்து நேற்று மீண்டும் வேட்புமனு தாக்கல் நடந்தது. இதில் மதுராந்தகம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 14 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதன் மூலம் இதுவரை மொத்தம் 18 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.</p><h2>மனு தாக்கல்</h2><p>தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மரகதம் குமரவேல், த.வெ.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்துடன் சென்று தனது மனுவை தாக்கல் செய்தார். தி.மு.க. வேட்பாளர் பரந்தாமன், முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தர் மற்றும் முக்கிய கட்சி நிர்வாகிகளுடன் வந்து மனு தாக்கல் செய்தார். நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் மனு தாக்கல் செய்தார். மேலும், பனைமரம் ஏறும் தொழிலாளி சதீஷ்குமார் என்பவர் தனது தொழிலைக் குறிக்கும் வகையில் பனைமரம் ஏறும் உபகரணங்களுடன் வந்து சுயேச்சையாக மனு தாக்கல் செய்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.</p><h2>15 பேர் வேட்புமனு</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/dharapuram">தாராபுரம்</a> தொகுதியில் நேற்று ஒரே நாளில் 15 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனால் மொத்த வேட்புமனுக்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. இதில் நேற்று தளவாய்பட்டினத்தைச் சேர்ந்த வக்கீல் சுகன்யா தி.மு.க. வேட்பாளராக  4 மனுக்களைத் தாக்கல் செய்தார். முன்னதாக அண்ணா படத்துக்கு மாலை அணிவித்துவிட்டு, முன்னாள் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி உள்ளிட்டோருடன் ஆர்.டி.ஓ. பெலிக்ஸ் ராஜாவிடம் மனு அளித்தார்.  மேலும் இவரது கணவர் மணிவாசகமும் ஒரு மனு தாக்கல் செய்தார். </p><h2>இன்று கடைசி நாள்</h2><p>இந்நிலையில் <a href="https://www.dailythanthi.com/topic/dharapuram">தாராபுரம்</a> தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமா தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். </p><p>வேட்புமனு தாக்கலுக்கு இன்று (புதன்கிழமை) கடைசி நாள் என்பதால், அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி மற்றும் இந்திய கம்யூனிஸ்டு, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும், மதுராந்தகத்தில் அ.தி.மு.க.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.</p><p>வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெற நாளை மறுநாள் கடைசி நாள் ஆகும். வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 6 ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கை 9 ஆம் தேதியும் நடைபெறும்.</p>]]></content:encoded></item><item><title>“வியாதி மக்களுக்கு.. லாபம் பாஜகவுக்கு..” - மனோ தங்கராஜ் சாடல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sickness-for-the-people-profits-for-the-bjp-mano-thangaraj</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sickness-for-the-people-profits-for-the-bjp-mano-thangaraj#comments</comments><guid isPermaLink="false">93f95dd1-324c-46aa-b57a-73832daf743a</guid><pubDate>Wed, 16 Sep 2026 06:33:39 +0000</pubDate><atom:updated>2026-09-16T06:33:39.563Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,மனோ தங்கராஜ்,Mano Thangaraj,நீரிழிவு நோய்,Diabetes,BJP ​</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/nsmiw604/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/nsmiw604/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><p>இந்தியாவில் நீரிழிவு நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்யும் Pharma நிறுவனங்கள் பாஜகவிற்கு ரூ.400 கோடிக்கு மேல் நன்கொடை வழங்கியுள்ளன. அதே நேரம் இந்தியா வீட்டுக்கு இரண்டு நீரிழிவு நோயாளிகள் உடைய நாடாக மாறி வருகிறது. இதே மருந்து நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை பெருக்க மத்திய பாஜக அரசு Production Linked Incentive (PLI) Scheme மூலமாக ரூ.6,000 கோடி மானியம் வழங்கியுள்ளது. </p><p>மறுபுறம், அதே நிறுவனங்கள் தங்கள் மருந்துகளை சிபாரிசு செய்யும் மருத்துவர்களை கவர விலையுயர்ந்த அன்பளிப்புகள், வெளிநாட்டு சுற்றுலா, ஸ்டார் ஹோட்டல்களில் கேளிக்கை நிகழ்ச்சிகள், வரிச்சலுகைகள், இலவச மருந்துகள் என அள்ளி வீசுகின்றன. 2024-25 ஆம் ஆண்டு தரவுகளின்படி இந்தியாவில் நீரிழிவு நோய்க்கான மருந்து விற்பனையின் சந்தை மதிப்பு ரூ.15,000 கோடி. இதில் Sun Pharma, USV, Torrent, &amp; Lupin போன்ற நிறுவனங்கள் 2025-26 நிதியாண்டில் பல ஆயிரம் கோடி லாபம் ஈட்டியிருக்கின்றன.</p><p>நாட்டில் எப்படியெல்லாம் அநியாயம் நடக்கிறது? பொதுவாக சர்க்கரை நோயாளி ஒருவர் மாதந்தோறும் சராசரியாக ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை மருத்துவ செலவு செய்கிறார். இதே போன்று நாடு முழுவதும் உள்ள நோயாளிகள் செலவு செய்யும் தொகையில் தான் பாஜக ரூ.400 கோடிக்கு மேல் கட்சி நிதி வாங்கியிருக்கிறது. ஒரு நோயாளி தனது உயிரை காக்க செலவு செய்யும் பணத்தில் பாரதிய ஜனதா கட்சி தங்களுக்கு பங்கு வேண்டும் என்று பண வசூல் செய்வது எவ்வளவு கீழ்த்தரமானது?.</p><p>பாஜக, எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்ற எண்ணத்துடன் கொள்ளையடிக்கிற நோக்கத்தில் குறியாக இருக்கிறது. இந்தியாவில் இப்போது எங்கு பார்த்தாலும் நீரிழிவு நோயாளிகள் இருக்கின்றனர். 50 வயதை கடந்தோர் தங்கள் வாழ்நாள் முழுவதும் மருந்து உட்கொண்டு காலங்கடத்த வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இந்தியா போலியோ, அம்மை உட்பட பல நோய்களுக்கு எதிராகப் போராடி வெற்றி கண்டிருக்கிறது. ஆனால் நீரிழிவு நோய் மக்களை பாதிக்கும் பிரச்சனை என்ற கோணத்தில் பாஜக அரசு இன்னும் சிந்திக்கவே துவங்கவில்லை; மாறாக அது தங்களுக்கு வசூல் செய்யும் வாய்ப்பு என்ற கோணத்திலேயே பாஜக அணுகுகிறது.</p><p>மோடியின் சகாக்கள் - மக்கள் எக்கேடுகெட்டு போனால் எங்களுக்கென்ன என்ற சிந்தனையுடன், தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்த மக்களிடையே பிரிவினையை தூண்டிவிடுவதை மட்டும் கச்சிதமாகச் செய்து வருகின்றனர். சுப்ரீம் கோர்ட்டு வழக்கு ஒன்றில் Right to Health is an integral part of the Right to Life under Article 21 எனக் குறிப்பிட்டிருக்கிறது. ஆளும் அரசுகள் மக்களுக்கு அரசமைப்புச்சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோவையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை - 3 பெண்கள் உட்பட 6 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sale-of-banned-lottery-tickets-in-coimbatore-6-people-including-3-women-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sale-of-banned-lottery-tickets-in-coimbatore-6-people-including-3-women-arrested#comments</comments><guid isPermaLink="false">c5654cce-50e4-4806-8223-b4a7f38f9d66</guid><pubDate>Wed, 16 Sep 2026 06:16:42 +0000</pubDate><atom:updated>2026-09-16T06:16:42.430Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவை,ஆனைமலை,Anaimalai,Kovai,6 பேர் கைது,6 arrested,லாட்டரி சீட்டுகள் விற்பனை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/ysie00hg/5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ லாட்டரி சீட்டு விற்பனை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/ysie00hg/5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோயம்புத்தூர்,</p><p>தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தததில் 3 பெண்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>லாட்டரி சீட்டு விற்பனை</h2><p>கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை பாரதி நகரை சேர்ந்தவர் கவுதம் ( வயது 34). இவர் கேரள மாநிலம் மீனாட்சிபுரம் பகுதியில் லாட்டரி சீட்டு கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகள் பதுக்கி வைத்து, வாட்ஸ்-அப் செயலி மூலம் விற்பனை செய்து வருவதாக கோவை மாவட்ட எஸ்.பி. பவன்குமார் ரெட்டிக்கு தகவல் கிடைத்தது.</p><p>இதையடுத்து, அவரது உத்தரவின்பேரில் ஆனைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் தலைமையில் சப் - இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் மற்றும் போலீசார்கள் இணைந்து கவுதம் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நடத்தப்பட்ட சோதனையில் அங்கு 5,900 கேரள மாநிலம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">லாட்டரி சீட்டு</a>கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடித்து, அவற்றை பறிமுதல் செய்தனர்.</p><h2>6 பேர் கைது</h2><p>போலீசார் நடத்திய விசாரணையில், கவுதம் மற்றும் அவரது உறவினர்கள் ஜெயசவுந்தராயன் (32), ஜீவானந்தம் (26) உள்ளிட்டோர் கேரள மாநில ஓணம் பம்பர் லாட்டரி சீட்டுகளின் புகைப்படங்களை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D">வாட்ஸ்-அப்</a> செயலி மூலம் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி, ஆன்லைன் வாயிலாக பணம் பெற்று விற்பனை செய்து வந்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர்.</p><p>இதையடுத்து கவுதம், ஜெயசவுந்தரயன், ஜீவானந்தம் மற்றும் 3 பெண்கள் என மொத்தம் 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்த 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நெல்லையில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பெட்ரோல் பங்க் மேலாளர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/petrol-pump-manager-arrested-for-sexually-harassing-young-woman-in-nellai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/petrol-pump-manager-arrested-for-sexually-harassing-young-woman-in-nellai#comments</comments><guid isPermaLink="false">e5d00ecd-406a-4827-bd5b-8096928b12e2</guid><pubDate>Wed, 16 Sep 2026 06:00:41 +0000</pubDate><atom:updated>2026-09-16T06:00:41.221Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,young woman,arrested,இளம்பெண்,Sexual harassment,பாலியல் தொல்லை,மேலாளர் கைது,manager,பெட்ரோல் பங்க்,petrol pump</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/md05rh4y/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெண்ணக்கு பாலியல் தொல்லை, கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/md05rh4y/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a>யில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D">இளம்பெண்</a>ணுக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88">பாலியல் தொல்லை</a> கொடுத்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D">பெட்ரோல் பங்க்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D">மேலாளரை</a> போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்தனர். </p><h2>பெட்ரோல் பங்க் மேலாளர்</h2><p>விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்த கணேஷ் சந்திரன் (வயது 57), திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் மேலாளராக பணியாற்றி வருகிறார். </p><h2>வேலையை விட்டு நீக்கம்</h2><p>இவர் பணிபுரியும் பெட்ரோல் பங்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 24 வயது இளம்பெண் ஒருவர் வேலைக்கு சேர்ந்தார். ஒரு வாரத்திலேயே அந்த பெண் வேலையை விட்டு நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. </p><h2>பாலியல் தொல்லை; கைது</h2><p>இதற்கிடையே அந்த பெண்ணிற்கு கணேஷ் சந்திரன் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கங்கைகொண்டான் போலீசார் கணேஷ் சந்திரனை நேற்று முன்தினம் கைது செய்தனர். </p>]]></content:encoded></item><item><title>மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் அரசியல் தலையீடா..? - அறங்காவலர் குழு குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மறுப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/political-interference-in-meenakshi-amman-temple-consecration-ceremony-minister-denies-allegations-made-by-the-board-of-trustees</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/political-interference-in-meenakshi-amman-temple-consecration-ceremony-minister-denies-allegations-made-by-the-board-of-trustees#comments</comments><guid isPermaLink="false">5070fc6a-e7b4-474b-afa1-c78b012f3876</guid><pubDate>Wed, 16 Sep 2026 05:50:53 +0000</pubDate><atom:updated>2026-09-16T05:50:53.164Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Kumbabhishekam,கும்பாபிஷேகம்,தமிழகம்,Madurai,மதுரை,அரசியல்,politics,Meenakshi Amman Temple,Madurai Meenakshi Amman Temple,அறங்காவலர் குழு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/7q3e2l5a/pass.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/7q3e2l5a/pass.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p>மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக அறங்காவலர் குழு குற்றம்சாட்டியது.</p><p><a href="https://www.dailythanthi.com/topic/madurai">மதுரை</a> மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை (வியாழக்கிழமை) நடக்க உள்ளது. </p><p>இந்தநிலையில் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், அறங்காவலர்கள் டாக்டர் சீனிவாசன், சுப்புலட்சுமி ஆகியோர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-</p><p>உலகமே எதிர்பார்ப்பில் உள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழாவை எந்தவித கருத்து வேறுபாடுகளுக்கும் இடம் கொடுக்காமல் ஒருமித்த கருத்துடன் அனைவரும் மகிழ்ச்சியாக நடத்திட வேண்டும் என நினைத்தோம். 2018-ம் ஆண்டு ஏற்பட்ட தீவிபத்துக்கு பிறகு மீண்டும் தொன்மை மாறாமல் கோவிலை புனரமைக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், அப்பணியை தொடங்கி வைத்த சில மாதங்களில் அப்போதைய அறங்காவலர் குழு தலைவர் கருமுத்து கண்ணன் மரணம் அடைந்தார்.</p><h2>அழைப்பிதழில்  பெயர்</h2><p>அதன் பிறகு அறங்காவலர் குழுவினராக நாங்கள் பொறுப்பேற்று கொண்ட பிறகு சவாலான இப்பணியை முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரிலும், முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் வழிகாட்டுதலின்படி சிறப்பாகவே செய்து வந்தோம். கும்பாபிேஷேக விழா அழைப்பிதழில் எங்களின் பெயர் புறக்கணிக்கப்பட்டு, அதனை கோர்ட்டு அறிவுறுத்தி பேசுபொருளானது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/7xnwspya/mani.jpg" /></figure><p>விழா சிறப்பாக நடைபெற வேண்டிய இந்த நேரத்தில் பக்தர்களின் பாதுகாப்பு, உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை தாண்டி முறையான வழிகாட்டு நெறிமுறைகள் அனைவரும் தெரிந்து கொள்ளும்படி வெளியிடப்பட்டு உள்ளதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆனால் எங்களை எந்த செயல்பாட்டிலும் கலந்து ஆலோசிக்காமல், தன்னிச்சையாக அரசியல் தலையீடு கொண்டதாக கோவில் நிர்வாகத்தின் செயல்பாடுகள் உள்ளன.</p><p>அனுமதி அட்டைகளை பொறுத்தவரை 9 ஆயிரம் எனவும், 11 ஆயிரம் என வும் தினமும் ஒரு தகவல் வெளிவருகிறது. அதிலும் நன்கொடைதாரர், உபய தாரர்களுக்கு இந்த அழைப்பு சென்று சேர்ந்துள்ளதா என எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. யாரெல்லாம் இதில் விடுபட்டுவிடக்கூடாது என்பதை பட்டியலாக நாங்கள் தயாரித்து வைத்துள்ள நிலையில் அதனை கோவில் நிர்வாகம் பொருட்படுத்தவில்லை.</p><h2>ஆன்மிக திருப்பணிகள்</h2><p>1963-ம் ஆண்டு பி.டி.ராஜன் தலைமையில் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று, மீனாட்சி அம்மனுக்கு வைரக்கிரீடம் சாற்றிய குடும்பத்தின் வழி வந்த எங்கள் குடும்பத்தில் என்றைக்குமே அரசியலையும், ஆன்மிகத்தையும் இணைத்து பார்த்ததில்லை. ஆன்மிக திருப்பணிகள் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதில் கண்ணும் கருத்தாக இருக்கும் நாங்கள், அதில் அரசியல் கலந்துவிடக்கூடாது என்று கருதுகிறோம்.</p><p>இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.</p><h2>2,000 பாஸ்கள்</h2><p>இந்நிலையில் அறங்காவலர் குழு குற்றச்சாட்டுக்கு அமைச்சர் நிர்மல் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அறங்காவலர்களின் செயல்பாடுகளை தடுக்கவில்லை. அறங்காவலர்களின் தேவை என்ன என அதிகாரிகள் மூலம் கேட்டறியப்படும்.  பாஸ் விவகாரங்களில் யாரும் தலையிடவில்லை. பக்தர்களுக்கு 2,000 பாஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வரும் வழிகளில் ஒத்திகை பார்க்கப்படுகிறது. பொதுப்பணித்துறையினரின் ஆய்வின் அடிப்படையில் நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள்” என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூல் செய்யும் முறையை ரத்து செய்ய வேண்டும் - இந்திய கம்யூ. கட்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/upi-transaction-fee-collection-method-must-be-abolished-indian-communist-party</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/upi-transaction-fee-collection-method-must-be-abolished-indian-communist-party#comments</comments><guid isPermaLink="false">6f9b93be-0927-4aa9-9653-367942f96bef</guid><pubDate>Wed, 16 Sep 2026 05:49:06 +0000</pubDate><atom:updated>2026-09-16T05:49:06.091Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,UPI transactions,CPI,யுபிஐ பரிவர்த்தனை,மு.வீரபாண்டியன்,M Veerapandian</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/4kkssl8a/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.வீரபாண்டியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/4kkssl8a/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூல் செய்யும் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>அக்டோபர் 15 முதல் ரூ.2 ஆயிரத்திற்கு&nbsp;மேற்பட்ட வர்த்தகம் சார்ந்த யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 2 விழுக்காடு வரை கட்டணம் வசூலிக்கப்படும். இக்கட்டணம் வர்த்தகர்களுக்கு மட்டுமே பொருந்தும், சாதாரண நுகர்வோருக்கு யுபிஐ சேவைகள் எப்பொழுதும் போல இலவசமாக வழங்கப்படும் என இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் அறிவித்துள்ளது. இது அதிர்ச்சி அளிக்கிறது.</p><p>வர்த்தகர்களுக்கு மட்டுமே இக்கட்டணம் வசூலிக்கப்படும் எனக் கூறப்பட்டாலும் கூட, ரெயில்வே, தொலைத்தொடர்பு, பெட்ரோல் பங்க், காப்பீட்டு பிரீமியம், மின்சாரம், தண்ணீர் பயன்பாடு போன்றவற்றிற்கான கட்டணங்களுக்கு, அக்கட்டணம்&nbsp;&nbsp;ரூ.2,000-க்கு மேல் இருந்தால், அதற்கு ரூ.5 நிலையான கட்டணமாக வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இக்கட்டணம்&nbsp;&nbsp;படிப்படியாக உயர்த்தப்படுவதற்கான வாய்ப்பு உண்டு. இக்கட்டண வசூல் பொதுமக்களை நேரடியாக கடுமையாக பாதிக்கும்.</p><p>வர்த்தகத்திற்கு யுபிஐ பரிவர்த்தனை கட்டணத்தை நடைமுறைப்படுத்தினால்,&nbsp;அந்தக் கட்டணச் செலவும், பொருட்களின் மீதே ஏற்றப்படும். அதனால் விலைவாசி உயர்வு ஏற்படும்.&nbsp;யுபிஐ சேவைக்கு கட்டணம் வசூலிப்பது, இச்சேவையை வழங்கிவரும் பன்னாட்டு பெரு நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்குமே, நிதி மூலதனத்திற்குமே சாதகமானதாகும். அவற்றின் லாப வேட்கைக்கு இரை போடுவதாகவே அமையும்.</p><p>ஒன்றிய பாஜக அரசு இதுபோன்று கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுவதும், சாதாரண&nbsp;மக்களுக்கு எதிராக செயல்படுவதும் கடுமையான கண்டனத்திற்குரியது. எனவே, உடனடியாக யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூல் செய்யும் முறையை ரத்து செய்ய வேண்டுமென, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு&nbsp;ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திருநெல்வேலி: சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து வாலிபர் பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirunelveli-youth-dies-after-car-overturns-in-roadside-ditch</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirunelveli-youth-dies-after-car-overturns-in-roadside-ditch#comments</comments><guid isPermaLink="false">40a1cdd0-3d6a-4575-840a-aec9724eb2ad</guid><pubDate>Wed, 16 Sep 2026 05:28:10 +0000</pubDate><atom:updated>2026-09-16T05:28:10.500Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,படுகாயம்,வாலிபர் பலி,seriously injured,3 people,3 பேர்,accidents,youth killed,பள்ளம்,ditch,கார் கவிழ்ந்து விபத்து,Car overturns</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/hd1vt30k/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் பலி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/hd1vt30k/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டம், சிவந்திபட்டி பகுதியில் சாலையோர பள்ளத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">கார் கவிழ்ந்த விபத்தில்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF">வாலிபர் பலி</a>யானார். மேலும் 3 நண்பர்கள் படுகாயமடைந்தனர்.</p><h2>நண்பர்கள்</h2><p>தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் அஸ்வின் (வயது 21). இவர் நெல்லை சமாதானபுரத்தில் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் நண்பர்களான கருங்குளத்தைச் சேர்ந்த கணேசன்(22), செய்துங்கநல்லூரைச் சேர்ந்த செல்வக்குமார் மகன் சிவா(23), கோபி(22) ஆகியோர் பணியாற்றினர். </p><h2>கார் கவிழ்ந்து விபத்து</h2><p>இவர்கள் நேற்று முன்தினம் இரவு கடையில் நீண்ட நேரம் வேலை பார்த்துவிட்டு, நள்ளிரவில் காரில் வீட்டுக்கு புறப்பட்டனர். காரை அஸ்வின் ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. நெல்லை-திருச்செந்தூர் ரோட்டில் இந்திய புவியியல் ஆராய்ச்சி மையம் அருகில் சென்றபோது, கார் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய 4 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடியவாறு கிடந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, சிவந்திப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். </p><h2>வாலிபர் பலி</h2><p>உடனே இன்ஸ்பெக்டர் ராபர்ட் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காரின் இடுபாடுகளுக்குள் சிக்கிய 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி சிவா பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து சிவந்திபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>பழிக்கு பழியாக வாலிபர் வெட்டிக் கொலை - 6 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-hacked-to-death-in-revenge-6-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-hacked-to-death-in-revenge-6-arrested#comments</comments><guid isPermaLink="false">3cee4494-4195-49cf-8fd5-94101ef19fa1</guid><pubDate>Wed, 16 Sep 2026 05:25:46 +0000</pubDate><atom:updated>2026-09-16T05:25:46.972Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chengalpattu,செங்கல்பட்டு,murder,கொலை,revenge,பழிக்கு பழி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/hhbr3iad/4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வெட்டிக் கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/hhbr3iad/4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>செங்கல்பட்டு,</p><p>பழிக்கு பழியாக வாலிபரை வெட்டி கொலை செய்த வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். </p><h2>வெட்டிக் கொலை</h2><p>செங்கல்பட்டு சிங்கபெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் வீரா என்ற வீரமுத்துகிருஷ்ணன் (வயது 26). இவர் அப்பகுதியில் பாஸ்ட் புட் கடை நடத்தி வருகிறார். <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">கொலை</a> வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டுவிட்டு நேற்று வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.</p><p>அப்போது திருச்சி - சென்னை பைபாஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்காக தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். அப்போது 2 பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், வீரமுத்துகிருஷ்ணனை வழிமறித்து கையில் வைத்திருந்த ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த வீரமுத்து ரத்த வெள்ளத்தில் மிதந்து துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>6 பேர் கைது</h2><p>இது குறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a> சம்பவ இடத்திற்கு விரைந்து அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற மர்ம கும்பலை தேடி வந்தனர். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக நிதிஷ்குமார் (20), ஹரிஷ் (18), சூர்யா (20), ஜெயபால் (20), பரத் (22), சூர்யா (19) ஆகிய 6 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.</p><p>போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீரமுத்து கிருஷ்ணன் என்பவர் சிங்கபெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞரை வெட்டிக் கொலை செய்ததாகவும், அதற்கு பழிவாங்கும் நோக்கிலேயே தற்போது இந்த கொலை சம்பவம் நடைபெற்றதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அச்சுறுத்தும் நோக்கத்துடன் சோதனை நடத்துகின்றனர்: கே.என்.நேரு குற்றச்சாட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/raids-are-being-conducted-with-the-intention-of-intimidation-kn-nehru-alleges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/raids-are-being-conducted-with-the-intention-of-intimidation-kn-nehru-alleges#comments</comments><guid isPermaLink="false">a595d7b7-2a8a-47b9-90f4-20b477e2fb8d</guid><pubDate>Wed, 16 Sep 2026 05:20:51 +0000</pubDate><atom:updated>2026-09-16T05:20:51.450Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,கே.என்.நேரு,KN Nehru,Anbil Mahesh Poyyamozhi,அன்பில் மகேஸ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/cz6irufu/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/cz6irufu/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதில் லஞ்சம் பெற்றதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அன்பில் மகேஸ் வீட்டில் தற்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.</p><p>இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் இல்லத்தில் நடைபெற்று வரும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனைக்கு கே.என்.நேரு கண்டனம் தெரிவித்துள்ளார். </p><p><strong>இதுதொடர்பாக அவர் கூறுகையில்,</strong></p><p>திமுகவில் சிறப்பாக செயல்படுவோரை குறிவைத்து அச்சுறுத்தும் வகையில் சோதனை நடத்துகிறார்கள். அன்பில் மகேஸ் வீட்டில் சோதனை நடத்தப்படுவது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. திமுகவினரை அச்சுறுத்த தவெக அரசு முயற்சிக்கிறது. தவெக அரசின் சோதனைகளை நீதிமன்றம் மூலம் எதிர்கொள்வோம். சோதனையை சட்டப்படி எதிர்கொண்டு நீதிமன்றத்தில் நிரபராதி என நிரூபித்து வெற்றிபெறுவோம். அன்பில் மகேஸை பார்ப்பதற்கு கூட காவல்துறையினர் எங்களை அனுமதிக்கவில்லை. என்று கூறினார்.</p><p>முன்னதாக மத்திய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வரும் நிலையில் அன்பில் மகேஷ் வீட்டின் முன் ஆதரவாளர்களுடன் கே.என்.நேரு காத்திருந்தார். சிறிது நேரம் காத்திருந்த நிலையிலும் அன்பில் மகேஸை சந்திக்க கே.என்.நேருவுக்கு போலீஸார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் அவரிடம் செல்போனில் பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.</p>]]></content:encoded></item><item><title>ராமசாமி படையாட்சியாரின் மக்கள் நலப்பணிகளை போற்றிடுவோம்: முதல்-அமைச்சர் விஜய் புகழாரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-cherish-the-public-welfare-initiatives-of-ramasamy-padayatchiar-chief-minister-vijay-pays-tribute</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-cherish-the-public-welfare-initiatives-of-ramasamy-padayatchiar-chief-minister-vijay-pays-tribute#comments</comments><guid isPermaLink="false">1768f0c1-43fd-4f81-a1d4-fea6750ad512</guid><pubDate>Wed, 16 Sep 2026 05:18:15 +0000</pubDate><atom:updated>2026-09-16T05:18:15.961Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,புகழாரம்,ராமசாமி படையாட்சியார்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,Ramasamy Padayatchiyar</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/6c5ik1n2/ramasai.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/6c5ik1n2/ramasai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சுதந்​திர போராட்ட வீரரரும், முன்​னாள் அமைச்​சரு​மான ராமசாமி படை​யாட்​சி​யின் 109-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்​படுகிறது. </p><p>இந்நிலையில் ராமசாமி படையாச்சியாரின் பிறந்தநாளை முன்னிட்டு <a href="https://www.dailythanthi.com/topic/vijay">தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்</a> வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>சமூக நீதிக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்கும் அயராது பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். இராமசாமி படையாச்சியார் அவர்களின் பிறந்தநாளில், அவரது மகத்தான மக்கள் பணியை நினைவுகூர்ந்து வணங்குகிறேன்.</p><p>மக்களின் உரிமைகளுக்காகக் களம்கண்டு, கல்வி, சமூக முன்னேற்றம், சம உரிமை ஆகியவற்றை முன்னிறுத்தி அவர் ஆற்றிய தொண்டும், முன்னெடுப்புகளும், தமிழக அரசியல் களத்தில் அழியாத தடம் பதித்துள்ளன. இந்நாளில் அவரது மக்கள் நலப்பணிகளைப் போற்றிடுவோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காவிரியில் கலக்கும் கழிவுநீர்! கண்டுகொள்ளாத முதல்-அமைச்சர் - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sewage-mixing-in-cauvery-chief-minister-indifferent</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sewage-mixing-in-cauvery-chief-minister-indifferent#comments</comments><guid isPermaLink="false">19dbb2d4-eb18-4c01-867a-164421a5b7bf</guid><pubDate>Wed, 16 Sep 2026 05:16:33 +0000</pubDate><atom:updated>2026-09-16T05:16:33.795Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,நயினார் நாகேந்திரன்,நீர்நிலைகள்,கழிவுநீர்,waste water,Nainar Nagenthran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/pwn7ni4e/Untitled-8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/pwn7ni4e/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக நீர்நிலைகளில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு கருவிகள் எல்லாம் நல்ல நிலையில் உள்ளனவா என்பதை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>திருச்சி மாவட்டம் பஞ்சப்பூர் பகுதியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கருவிகள் பழுதடைந்து விட்டதாகவும், இதனால் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கோரையாற்றில் வெளியேற்றப்படுவதாகவும், சுத்திகரிப்பு தொட்டிகளில் நிரம்பி வழியும் கழிவுநீரானது அங்கங்கே தேங்குவதால் கடுமையான சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாகவும் அதிர்ச்சி செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>பஞ்சப்பூர், கருமண்டபம், எடமலைப்பட்டி, உறையூர் உள்ளிட்ட பகுதிகளின் வழியாக பாய்ந்து காவிரி ஆற்றில் கலக்கும் கோரையாறு, திருச்சி மாநகரத்தின் முக்கிய நீராதாரமாக விளங்குகிறது. அதுமட்டுமன்றி, 75 கி.மீ. நீளம் கொண்ட இந்த கோரையாற்றின் வடிநிலப் பகுதிகளில் அமைந்துள்ள ஏராளமான பாசனக் குளங்கள் மூலம், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதிகளையும் பெறுகின்றன. கர்நாடக காங்கிரஸ் அரசின் ஆணவத்தாலும், தவெக அரசின் அலட்சியத்தாலும், தமிழகத்திற்கு காவிரி நீர் வரத்து குறைந்து, நமது விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரமும், மக்களின் குடிநீர் தேவையும் ஏற்கனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில், கையிருப்பு உள்ள தண்ணீரை சுகாதாரமான முறையில் பாதுகாத்து வைப்பதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு, ஏற்கனவே தமிழகத்தில் இயங்கி வரும் நிறுவனங்களிடம் முதலீடுகளை ஈர்க்க, மக்கள் வரிப்பணத்தில் முதல்வர் ஜோசப் விஜய் வெளிநாடுகளுக்கு இன்பச்சுற்றுலா சென்றிருப்பது விரயச் செலவு. மேட்டூர் அணையில் நீர் திறப்பதை விளம்பரப்படுத்திக் கொள்ள ரூ.5 கோடிக்கும் அதிகமாக வெட்டி செலவு செய்த ஜோசப் விஜய், தமிழக நீர்நிலைகளில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு கருவிகள் எல்லாம் நல்ல நிலையில் உள்ளனவா என்பதை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்! மக்களின் ஆரோக்கியத்தையும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் உறுதி செய்ய வேண்டும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப்பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/corruption-case-registered-against-former-minister-anbil-mahesh</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/corruption-case-registered-against-former-minister-anbil-mahesh#comments</comments><guid isPermaLink="false">ac3f5ba8-2b6a-43e6-8214-a56d901cbe12</guid><pubDate>Wed, 16 Sep 2026 05:01:38 +0000</pubDate><atom:updated>2026-09-16T05:01:38.588Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,Anbil Mahesh Poyyamozhi,அன்பில் மகேஷ் பொய்யாமொழி,மத்திய குற்றப்பிரிவு போலீசார்,Corruption case,ஊழல் வழக்கு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/z29fypic/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/z29fypic/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதில் லஞ்சம் பெற்றதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அன்பில் மகேஸ் வீட்டில் தற்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.</p><p>தனியார் பள்ளிகளுக்கு அரசிடம் இருந்து அங்கீகாரம் மற்றும் பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி, சுமார் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை லஞ்சமாகப் பெற்று மோசடியில் ஈடுபட்ட புகாரில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் நிறுவனர் தலைவரும், தி.மு.க நிர்வாகியுமான பி.டி. அரசகுமாரை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்.</p><p>இந்த நிலையில், சோதனை குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்ட தகவலில், திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஸ் மீது ஊழல் தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் அங்கீகாரம், தர உயர்வு, டி.டி.சி.பி. அனுமதி பெற்றுத்தருவதாக கூறி திமுக ஆட்சியில் ரூ.100 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. பிடி அரசகுமார் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் சிக்கின. அதன் அடிப்படையில் சோதனை நடந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.</p><p>சென்னை தியாகராய நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் அலுவலக பூட்டை உடைக்க மத்திய குற்றப்பிரிவு முடிவு செய்துள்ளது. சோதனைக்கு போலீசார் வந்த நிலையில் பூட்டப்பட்டுள்ளதால் அலுவலகம் முன்பு காத்திருக்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ராமசாமி படையாட்சியாரின் சமூக பணிகளை போற்றுவோம்: அன்புமணி புகழாரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-appreciate-the-social-work-of-ramasamy-padayatchiyar-anbumani-praises</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-appreciate-the-social-work-of-ramasamy-padayatchiyar-anbumani-praises#comments</comments><guid isPermaLink="false">7a080197-b1d7-474e-9a52-300b66766180</guid><pubDate>Wed, 16 Sep 2026 05:00:36 +0000</pubDate><atom:updated>2026-09-16T05:00:36.776Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani Ramadoss,PMK,Chennai,சென்னை,birthday,அறிக்கை,statement,பிறந்தநாள்,பாமக அன்புமணி ராமதாஸ்,ராமசாமி படையாட்சியார்,Ramasamy Padayatchiyar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/awfxmrai/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ராமசாமி படையாட்சியார் பிறந்தநாள்: அன்புமணி புகழாரம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/awfxmrai/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">ராமசாமி படையாட்சியாரின்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D">பிறந்த நாளில்</a> அவரின் சமூக பணிகளை போற்றுவோம்; சமூக நீதியை வென்றெடுக்கும் வரை போராடுவோம் என்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95">பா.ம.க. </a>தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> தெரிவித்துள்ளார். </p><h2>ராமசாமி படையாட்சியார் 109-வது பிறந்தநாள்</h2><p>ராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாளையொட்டி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: </p><p>தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் நிறுவனரும், மறைந்த முன்னாள் அமைச்சருமான  பெரியவர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் 109-ம் பிறந்தநாளில் அவரை வணங்கி மகிழ்கிறேன். </p><h2>சமூக நீதியை வென்றெடுக்கும் வரை போராடுவதற்கு உறுதியேற்போம்!</h2><p>பெருந்தலைவர் காமராசரின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அவர் பாட்டாளி மக்களின் சமூகநீதிக்காக மேற்கொண்ட முன்னெடுப்புகள் குறிப்பிடத்தக்கவை. எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் பணிகளைப் போற்றும் இந்த நாளில், சமூக நீதியை வென்றெடுக்கும் வரை போராடுவதற்கு உறுதியேற்போம்!</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>அன்பில் மகேஸ் வீட்டில் சோதனை: திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/raid-on-anbil-mahes-house-diversionary-political-vengeance-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/raid-on-anbil-mahes-house-diversionary-political-vengeance-stalin#comments</comments><guid isPermaLink="false">7b10fcc8-037c-45fe-a41f-4eca4d8e06ec</guid><pubDate>Wed, 16 Sep 2026 04:53:13 +0000</pubDate><atom:updated>2026-09-16T04:53:13.706Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,Anbil Mahesh,சோதனை,MKstalin,அன்பில் மகேஸ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/adgahrwk/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/adgahrwk/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதில் லஞ்சம் பெற்றதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அன்பில் மகேஸ் வீட்டில் தற்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>இந்த நிலையில் இந்த சோதனை மற்றுமொரு திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது ரெய்டு: மற்றுமொரு திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை</p><ul><li><p>தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டினால் பாதிக்கப்படும் மக்களின் போராட்டங்கள்</p></li><li><p>பட்டினப்பாக்கம் மீனவர்கள் போராட்டம்</p></li><li><p>நேபாளத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் உரிய பதில் கிடைக்காமல் தலைமைச் செயலகம் முன் போராட்டம்</p></li><li><p>ஆவின் பால் தட்டுப்பாட்டால் மக்கள் பரிதவிப்பு</p></li><li><p>ராமநாதபுரம் இரட்டைக் கொலை,</p></li><li><p>சென்னையில் பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் அடித்துக் கொலை,</p></li><li><p>அயனாவரத்தில் பெண் காவலரிடம் த.வெ.க. நிர்வாகி சீண்டல் என மாநிலத்தை உலுக்கி வரும் எதையும் கண்டுகொள்ளாமல் லண்டனில் ஷூட்டிங் நடத்திக்கொண்டிருக்கிறார் முதல்-அமைச்சர்.</p></li></ul><p>இந்தப் பிரச்சினைகளைச் சரிசெய்ய முடியாத விரக்தியில், மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் மீது ரெய்டு அஸ்திரத்தை ஏவியுள்ளது எதற்கும் லாயக்கற்ற த.வெ.க. அரசு. இந்த அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையைச் சட்டரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம். எதிர்க்கட்சி மீது ரெய்டு நடத்துவதால் மக்கள் கோபத்தைத் தணிக்க முடியாது. பொய்யான குற்றச்சாட்டுகளும் சட்டத்தின் முன் நிலைக்காது என்பதை இந்த அரசு விரைவில் உணரும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது ரெய்டு: மற்றுமொரு திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை<br><br>▶️ தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டினால் பாதிக்கப்படும் மக்களின் போராட்டங்கள்<br><br>▶️ பட்டினப்பாக்கம் மீனவர்கள் போராட்டம்<br><br>▶️ நேபாளத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் உரிய பதில் கிடைக்காமல்…</p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2100079595378864300?ref_src=twsrc%5Etfw">September 16, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்விக் கட்டண உதவி வழங்க வேண்டும் - அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/backward-and-extremely-backward-students-should-be-provided-with-tuition-assistance-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/backward-and-extremely-backward-students-should-be-provided-with-tuition-assistance-anbumani#comments</comments><guid isPermaLink="false">4d678960-4eb3-4da4-a1f2-9a76724a1303</guid><pubDate>Wed, 16 Sep 2026 04:53:06 +0000</pubDate><atom:updated>2026-09-16T04:53:06.643Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,அரசு,உதவி,அன்புமணி ராமதஸ்,பிற்படுத்தப்பட்டோர்,Backward Classes,கல்விக் கட்டணம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/2yqqjyfv/350.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/2yqqjyfv/350.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தனியார் கல்லூரிகளின் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் கல்விக் கட்டண உதவி வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அன்புமணி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-</p><h2>கல்வி கட்டணம்</h2><p>தமிழ்நாட்டில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் பட்டியலின மற்றும் பழங்குடியின  மாணவர்களுக்கு வழங்கப்படும் ஆண்டு கல்விக் கட்டண (Annual Tution Fees) உதவித் தொகையை 4 மடங்கு முதல் 8 மடங்கு வரை உயர்த்தி தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு வழங்கப்பட்டுள்ள உதவித்தொகை உயர்வு வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்விக்கட்டண உதவி மறுக்கப்படுவது பெரும் சமூக அநீதியாகும்.</p><p>பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வி நிலையை உயர்த்தும் வகையில், அரசு கலைக் கல்லூரிகளில் பயில இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், அவர்களின் கட்டணச் சுமையை ஏற்றுக் கொள்ளும் நோக்குடன் ஆண்டு கல்விக் கட்டண உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித் தொகை கடந்த 2011-ம் ஆண்டுக்கு பிறகு உயர்த்தப்படாத நிலையில், இப்போது பி.எஸ்சி, பி.காம் பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு கல்விக் கட்டண உதவி ரூ.2850-லிருந்து, 295 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ.11,250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எம்.ஏ மாணவர்களுக்கான உதவித் தொகை ரூ.1350-லிருந்தும், எம்.எஸ்சி, எம்.காம் மாணவர்களுக்கான உதவித்தொகை ரூ.2850-லிருந்து ரூ.12,000 ஆகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது.</p><h2>தனியார் கல்வி நிறுவனம்</h2><p>பி.ஏ. மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1350 உதவித் தொகை 733 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ.11,250 ஆக வழங்கப்படும். பி.பி.ஏ மாணவர்களுக்கும் இதே தொகை வழங்கப்படும். இதுதவிர மேலும் 11 இளநிலை பட்டப்படிப்பு மானவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.11,250 வீதமும், 10 முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 வீதமும் கல்விக் கட்டண உதவியாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களில் கல்விக் கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டிருப்பதையும், பட்டியலின, பழங்குடியின மாணவர்களின் கல்விக் கட்டண உதவித் தொகை கடந்த 15 ஆண்டுகளாக உயர்த்தப்படாததையும் கனக்கில் கொண்டு பார்க்கும் போது இந்த உதவித்தொகை உயர்வு நியாயமானதும், தேவையானதும் ஆகும்.</p><p>அதே நேரத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்கள்   ஆகியோருக்கு இத்தகைய கல்விக்கட்டண உதவிகள் வழங்கப்படுவதே இல்லை. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அரசு கல்லூரிகளில்  அனைத்து மாணவர்களுக்கும் இலவசக் கல்வி வழங்கப்படுவதால், அவற்றில் பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ஒரு பிரச்சினை இல்லை. ஆனால், தனியார் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய சமூக மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கும் கல்விக்கட்டண உதவித் தொகை வழங்கப்பட வேண்டும்.</p><h2>கல்லூரிகள்</h2><p>அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இலவசக் கல்வி வழங்கப்பட்டாலும், தரமான கல்வி வழங்கப்படுவதில்லை. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களில் 8,083 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசுக் கல்லூரிகளில் கல்வித் தரம் சீரழிந்திருப்பதால், பெரும்பான்மையான மாணவர்கள் அவற்றில் இடம் கிடைத்தாலும் தவிர்த்து விட்டு தனியார்  கலைக் கல்லூரிகளில் சேரும் வழக்கம் அதிகரித்து வருகிறது.</p><p>எடுத்துக்காட்டாக, 2022-23 ஆண்டில் 170 அரசுக் கல்லூரிகளில் இளநிலை முதலாம் ஆண்டில், ஒரு லட்சத்து 8,748 மாணவர்கள் சேர்ந்தனர். ஆனால், கடந்த ஆண்டில் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் மாணவர் சேர்க்கை 96,000 ஆக குறைந்து விட்டது. அதேநேரத்தில், தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 94,306 ஆக இருந்த முதலாமாண்டு மாணவர் சேர்க்கை, 2025-26ஆம் ஆண்டில்  2.60 லட்சத்தைக் கடந்திருக்கிறது. தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகளில் சுமார் 10 லட்சம் மாணவர்கள் பயிலும் நிலையில், அவர்களில் பெரும்பான்மையினர் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் இஸ்லாமிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.</p><h2>தமிழக அரசு</h2><p>அவர்களிலும் கணிசமானவர்கள் கல்லூரிக் கல்விக் கட்டணம் செலுத்த வசதியற்றவர்கள். அவர்களில் பெரும்பான்மையினரின் பெற்றோர் கடன் வாங்கித் தான் கட்டணம் செலுத்துகின்றனர். இத்தகைய நிலை  ஏற்பட்டதற்கு மாணவர்களோ, பெற்றோர்களோ காரணமல்ல. </p><p>தமிழக அரசு தான் இதற்கு காரணம். அரசு கலைக் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரித்தும்,  அவற்றில் தகுதியான உதவிப் பேராசிரியர்களை நியமித்தும் தரமானக் கல்வியை வழங்கியிருந்தால் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் சேர்ந்து கல்வி கற்க வேண்டிய நிலைமை  ஏற்பட்டிருக்காது. அதனால், தனியார் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்விக்கட்டண சுமையை அரசு தான் ஏற்க வேண்டும்.</p><h2>உதவித் தொகை</h2><p>அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே, பிற்படுத்தப்பட்ட, மிகவும்  பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் ஆண்டு கல்விக் கட்டண உதவித் தொகையை வழங்க முன்வர வேண்டும். நடப்பு 2026-27ஆம் கல்வியாண்டிலிருந்தே இந்த  உதவித் தொகை வழங்கும் திட்டத்தை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">தமிழக அரசு</a> செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>செல்போன் செயலி மூலம் பண மோசடி: மேலூரை சேர்ந்த மேலும் ஒரு பெண் சரண்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/money-fraud-via-mobile-app-another-woman-from-melur-surrenders</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/money-fraud-via-mobile-app-another-woman-from-melur-surrenders#comments</comments><guid isPermaLink="false">661e3ba2-a5f1-46dc-a30d-94d96195609b</guid><pubDate>Wed, 16 Sep 2026 04:49:28 +0000</pubDate><atom:updated>2026-09-16T04:49:28.444Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Madurai,மதுரை,arrest,வழக்குப்பதிவு,case registration,Melur,மேலூர்,செல்போன் செயலி,Cellphone App</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/6n849ep5/aare.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/6n849ep5/aare.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p>செல்போன் செயலி மூலம் கோடிக்கணக்கில் பண மோசடி நடந்த விவகாரத்தில், மேலூரை சேர்ந்த மேலும் ஒரு பெண் கைது செய்யப்பட்டார்.</p><h2>பணம் வசூலித்து மோசடி</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/madurai">மதுரை</a> மாவட்டம் மேலூரில் எப்.கியூ.எல். என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனத்தின் செயலி மூலம் ஆன்லைனில் முதலீடு செய்தால், 2 மாதங்களில் பணம் இரட்டிப்பாகும் என்று கூறப்பட்டது. அதோடு பொதுமக்களிடம் இருந்து முதலீடு பெறுவதற்கு முகவர்களும் நியமிக்கப்பட்டனர். இந்த முகவர்கள், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம மக்களை குறிவைத்து, மூளைச்சலவை செய்து, நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்தனர். அதோடு ஒரு சிலருக்கு, முதலீட்டு தொகை இரட்டிப்பாக கிடைத்தது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் தலா ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை முதலீடு செய்தனர்.</p><h2>மதுரை மத்திய சிறை</h2><p>இந்தநிலையில், அந்த தனியார் நிறுவனம் திடீரென மூடப்பட்டது. இதனால், பணத்தை முதலீடு செய்த மக்கள், முகவர்களின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட மக்கள் மேலூரில் உள்ள திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>இதனை தொடர்ந்து இந்த வழக்கு மதுரை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டு, விசாரணை நடந்து வந்தது.</p><p>இதற்கிடையே, மோசடி வழக்கில் மேலூர் அருகே உள்ள கட்டையம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித், பிரியதர்ஷினி ஆகிய தம்பதியினர் கடந்த 7-ந்தேதி திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் சரணடைந்தனர். இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.</p><h2>மேலும் ஒரு பெண் கைது</h2><p>இதற்கிடையே அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது:-</p><p>கைது செய்யப்பட்ட ரஞ்சித் மற்றும் பிரியதர்ஷினி ஆகியோர் சமூக வலைதளங்கள் மூலம் முதலீடு செய்ய கிராம மக்களிடம் பேசி உள்ளார். நம்பும் வகையில் பேசி ஏமாற்றியதால், ஏராளமானவர்கள் பணத்தை முதலீடு செய்துள்ளனர். அவர்கள் இருவரும் மோசடி செய்ய பயன்படுத்திய செல்போன்கள், வங்கி கணக்குகள் விவரங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. </p><p>மேலும், அந்த செல்போன்களின் ஐ.பி. முகவரியை வழங்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் சைபர் கிரைம் போலீசார் மூலம் கோரிக்கை வைத்துள்ளோம். அந்த முகவரிகள் கிடைத்தால், இந்த மோசடியின் பின்னணியில் யார், யார் இருக்கிறார்கள் என்ற விவரம் தெரியவரும். அதுபோல், இவர்கள் எவ்வளவு பணம் மோசடி செய்தார்கள் என்ற விவரமும் தெரிந்துவிடும்.</p> <h2>தேவையான ஏற்பாடுகள்</h2><p>இந்த வழக்கில் இதுவரை, மதுரையில் இருந்து 3 ஆயிரம் புகார்களும், திண்டுக்கல்லில் 4 ஆயிரம் புகார்களும், விருதுநகரில் 30 புகார்களும் வந்துள்ளன. இந்த மோசடியில் போலீசாரின் மனைவிகளும் ஏமாற்றப்பட்டு உள்ளனர். யார், யார் எவ்வளவு பணம் இழந்தார்கள் என்பதை கண்டறியும் பணியும் ஒரு புறம் நடக்கிறது. கோடிக்கணக்கில் பணம் மோசடி நடந்திருப்பதால், ரஞ்சித் மற்றும் அவரது மனைவியிடம் விசாரணை நடத்துவதற்காக, போலீஸ் காவலில் எடுக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.</p><p>இதற்கிடையே ரஞ்சித்தின் உறவினரான மேலூர் கட்டையம்பட்டியை சேர்ந்த ரேவதி (35) என்பவர், இந்த வழக்கில் மதுரை மாவட்ட கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரையும் கைது செய்து விசாரிக்க இருக்கிறோம். அவரை விசாரித்தால் இன்னும் கூடுதல் தகவல்கள் கிடைக்கும் </p><p>இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். </p>]]></content:encoded></item><item><title>தங்கம் விலை சற்று உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..?</title><link>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/slight-rise-in-gold-prices-todays-status-2</link><comments>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/slight-rise-in-gold-prices-todays-status-2#comments</comments><guid isPermaLink="false">04d96ec6-25a0-40cd-9416-fc55d767ddeb</guid><pubDate>Wed, 16 Sep 2026 04:31:35 +0000</pubDate><atom:updated>2026-09-16T04:31:35.905Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Gold Rate,தங்கம் விலை,வெள்ளி விலை,Silver rate,Gold Price,Silver Price,விலை நிலவரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/aig07vlw/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/aig07vlw/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தங்கம் (Gold Rate)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்தது. தொடர்ந்து நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து, ரூ.1,12,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.85 குறைந்து, ரூ.14,040-க்கு விற்பனை செய்யப்பட்டது. </p><p>இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,12,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,065-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>வெள்ளி விலையை பொறுத்தவரையில் 5-வது நாளாக மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.250-க்கும். ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>போலீஸ்காரரால் கற்பை இழந்து-கருவையும் சுமந்தார்... சென்னை பெண் போலீசின் கண்ணீர் கதை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/lost-her-chastity-to-a-policeman-and-bore-his-child-the-tearful-story-of-a-chennai-policewoman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/lost-her-chastity-to-a-policeman-and-bore-his-child-the-tearful-story-of-a-chennai-policewoman#comments</comments><guid isPermaLink="false">bf35a905-d2f7-4299-a4d4-9f82c9abd801</guid><pubDate>Wed, 16 Sep 2026 04:15:55 +0000</pubDate><atom:updated>2026-09-16T04:15:55.177Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,Chennai,சென்னை,police,போலீஸ்,பெண் போலீஸ்,rape,கிரைம் செய்திகள்,பாலியல் பலாத்காரம்,woman police</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/9auz4wyd/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/9auz4wyd/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை பெண் போலீஸ் ஒருவர் தன்னுடன் வேலை பார்க்கும் போலீஸ்காரரை காதலித்து கற்பையும் பறிகொடுத்து கரு வையும் சுமந்து தற்போது அந்த போலீஸ்காரர் மீது பரபரப்பு புகாரை கொடுத்துள்ளார்.</p><h2>ஆயுதப்படை பெண் போலீஸ்</h2><p>அந்த பெண் போலீசின் கண்ணீர் கதை வருமாறு:-</p><p>திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அந்த பெண் போலீஸ் 24 வயது நிரம்பியவர். பட்டதாரி. சென்னை ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணியாற்றி வருகிறார். தேனாம்பேட்டையில் உள்ள வங்கி ஒன்றில் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டு உள்ளார். புதுப்பேட்டையில் தனியாக வீடு எடுத்து தங்கி உள்ளார்.</p><p>இந்த நிலையில் தன்னுடன் ஆயுதப்படையில் பணியாற்றும் ஒரு போலீஸ்காரருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள். கடந்த 3 ஆண்டுகளாக காதலித்தனர்.போலீஸ்காரர் திருமணம் செய்து கொள்வதாக ஆசைகாட்டி அந்த பெண் போலீசுடன் ஒரே வீட்டில் வாழ்க்கை நடத்தி உள்ளார். பெண் போலீசும் தனக்கு கணவராகப் போகிறார் என்ற எண்ணத்தில் அவரது இச்சைக்கு இணங்கி வந்துள்ளார்.</p><h2>கர்ப்பம்</h2><p>கடந்த 3 ஆண்டுகளாக இவர்களின் காதல் வாழ்க்கை உல்லாசமாக கடந்துள்ளது. இந்த நிலையில் இவர்களின் காதலுக்கு இரு வீட்டு தரப்பிலும் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக போலீஸ்காரர் வீட்டில் அவரது பெற்றோர் இந்த காதலை ஆதரித்து திருமணம் செய்து வைக்க சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது. இதற்கிடையே போலீஸ்காரருடன் வாழ்ந்த உல்லாச வாழ்க் கையால் பெண் போலீஸ் கர்ப்பமாகி இருந்தார்.</p><p>அந்த கருவை கலைக்க சொல்லி தனியார் ஆஸ்பத்திரியில் பெண் போலீசை சிகிச்சைக்கு சேர்த்ததாக தெரிகிறது. அதனால் கரு கலைக்கப்பட்டது. இந்த நிலையில் போலீஸ்காரர் பெண் போலீசை திடீரென்று திருமணம் செய்ய மறுத்தார். அவருடனான தொடர்பையும் துண்டித்தார். விடுமுறை எடுத்துக்கொண்டு சொந்த ஊரான கிருஷ்ணகிரிக்கு சென்றுவிட்டார். அங்கு அவர் வேறு திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.</p><h2>பரபரப்பு புகார்</h2><p>இந்த நிலையில் தனது வாழ்க்கையை சீரழித்தவர் மீது சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவருடன் 3 ஆண்டுகள் வாழ்ந்த வாழ்க்கைக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட பெண் போலீஸ் எழும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவை பெற்றுக் கொண்ட போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கி உள்ளனர்.</p><p>இதுதொடர்பாக போலீஸ் காரரிடம் விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே இது போன்ற பெண் போலீஸ் ஒருவரின் புகார் மனு மீது விசாகா கமிட்டி விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது புகார் கொடுத்துள்ள பெண் போலீசின் கண்ணீர் கதையும் சென்னை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>தென்காசி: மெத்தை வியாபாரியை காரில் கடத்தி நகை பறிப்பு- பட்டப்பகலில் துணிகரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tenkasi-mattress-dealer-kidnapped-in-car-and-robbed-of-jewelry-a-daring-act-in-broad-daylight</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tenkasi-mattress-dealer-kidnapped-in-car-and-robbed-of-jewelry-a-daring-act-in-broad-daylight#comments</comments><guid isPermaLink="false">0e1c8920-c4ed-45f7-85fd-92d6736f1ccd</guid><pubDate>Wed, 16 Sep 2026 04:09:22 +0000</pubDate><atom:updated>2026-09-16T04:09:22.679Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,தென்காசி,Car,கார்,mysterious persons,மர்ம நபர்கள்,போலீஸ் வலைவீச்சு,கடத்தல்,நகை பறிப்பு,Kidnapping,வியாபாரி,கடையநல்லூர்,dealer,Kadayanallur,மெத்தை,police net sweep,jewelry snatching,Mattress</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/bv3lfkaw/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தங்க நகை கொள்ளை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/bv3lfkaw/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF">தென்காசி</a> மாவட்டம், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">கடையநல்லூர்</a> பஜாரில் மெத்தை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF">வியாபாரி</a>யை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">காரில் கடத்தி</a> சென்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">நகை பறித்த</a> மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p><h2>மெத்தை வியாபாரி</h2><p>தென்காசி மாவட்டம், கடையநல்லூர் மெயின் பஜாரில் சந்தான கிருஷ்ணன் (வயது 76) என்பவர் கடை வைத்து பஞ்சு மெத்தை வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று மதியம் சுமார் 3 மணியளவில் தனது கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கடைக்கு வந்து தலையணை குறித்து விசாரித்துள்ளார். பின்னர், தனது உறவினர் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு காரில் இருப்பதாகவும், அவரால் காரில் இருந்து இறங்கி கடைக்கு வர முடியாது என்றும் கூறியுள்ளார். </p><h2>காரில் கடத்தி நகை பறிப்பு</h2><p>மேலும், அவர் கேட்கும் தலையணையை காரின் அருகே சென்று காண்பிக்குமாறு தெரிவித்துள்ளார். இதனை நம்பிய சந்தான கிருஷ்ணன் அந்த வாலிபருடன், அவர் கூறிய காருக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென மர்ம நபர், சந்தான கிருஷ்ணனை காருக்குள் இழுத்துப்போட்டு, கதவை அடைத்து கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. பின்னர், கடையநல்லூர் புதிய பஸ் நிலையம் அருகே வைத்து சந்தான கிருஷ்ணன் அணிந்திருந்த 2 சவரன் தங்க சங்கிலி மற்றும் 1 சவரன் எடையுள்ள 2 தங்க மோதிரங்களை பறித்துக் கொண்டு, அவரை காரில் இருந்து கீழே இறக்கிவிட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். </p><h2>மர்ம நபர்களுக்கு வலைவீச்சு</h2><p>இதுகுறித்து சந்தான கிருஷ்ணன் கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும், சம்பவம் நடைபெற்ற மெயின் பஜார் மற்றும் கடத்திச் செல்லப்பட்ட வழித்தடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.</p><p>மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மெயின் பஜார் பகுதியில் பட்டப்பகலில் வியாபாரியை காரில் கடத்திச் சென்று நகைகளை பறித்துச் சென்ற சம்பவம் கடையநல்லூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>