<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 29 Aug 2026 05:08:55 +0000</lastBuildDate><item><title>ஜல்லிக்கட்டு குறித்த தவெக எம்.எல்.ஏ பேச்சிற்கு முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் - அதிமுக</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-must-apologise-for-dmk-mla-jallikattu-remarks-aiadmk</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-must-apologise-for-dmk-mla-jallikattu-remarks-aiadmk#comments</comments><guid isPermaLink="false">5cde8bd7-5496-4931-9cd8-795d1cba8012</guid><pubDate>Sat, 29 Aug 2026 05:04:47 +0000</pubDate><atom:updated>2026-08-29T05:04:47.766Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,ஜல்லிக்கட்டு,Madurai,மதுரை,Jallikkattu,tvk mla,தவெக எம்.எல்.ஏ.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/e3pbdj0z/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அதிமுக]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/e3pbdj0z/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஜல்லிக்கட்டு குறித்த தவெக எம்.எல்.ஏ பேச்சிற்கு முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டு குறித்த அரசின் நிலைப்பாட்டை சட்டமன்றத்தில் அறிவிக்க வேண்டும் என்றும் அதிமுக வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதள பக்கத்தில் அதிமுக வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழரின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டைப் பற்றி இழிவாக சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஜல்லிக்கட்டிற்கு உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூரை தனது தொகுதியில் வைத்துள்ள ஒரு சட்டமன்ற உறுப்பினர் இப்படி பேசியிருப்பது மிகுந்த அதிர்ச்சியும் பல சந்தேகங்களையும் ஏற்படுத்துகிறது.</p><p>சங்க காலம் தொட்டே தமிழர்களுக்கும் மாடுகளுக்குமான உறவை பறைசாற்றும் இந்த “ஏறு தழுவுதல்” பற்றி புரிதல் இல்லாமலா அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இருப்பார்? மாணவர்கள், இளைஞர்கள் தன்னெழுச்சியாக திரண்டு நடத்திய வரலாற்றுப் புரட்சியின் விளைவாக, அன்றைய அஇஅதிமுக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்திப் பெற்ற ஒரு உரிமையை, மிகவும் கீழ்த்தரமாக பேசியுள்ள சட்டமன்ற உறுப்பினரின் இந்த பேச்சு ஏன் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படவில்லை?</p><p>ஜல்லிக்கட்டிற்கு தடை கொண்டு வர வேண்டும் என்று இன்றைய பொய்க்கால் குதிரை அரசு நினைத்து, அதற்கான First Look-ஆக தனது எம்.எல்.ஏவை பேச வைத்துள்ளாரா இன்றைய முதல்வர்? என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு வலுவாக எழுகிறது. தனது எம்.எல்.ஏ. பேசிய பேச்சிற்கு முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்! ஜல்லிக்கட்டு குறித்த இந்த அரசின் நிலைப்பாட்டை சட்டமன்றத்தில் அறிவிக்க வேண்டும்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மேட்டூர் அணையில் செப்.1-ந் தேதி தண்ணீர் திறக்க அரசு ஏற்பாடு: டெல்டா விவசாயிகள் சொல்வது என்ன? </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-arranges-to-release-water-from-mettur-dam-on-september-1-what-do-delta-farmers-say</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-arranges-to-release-water-from-mettur-dam-on-september-1-what-do-delta-farmers-say#comments</comments><guid isPermaLink="false">2120f48e-10e8-4d14-9def-6d22c9717b50</guid><pubDate>Sat, 29 Aug 2026 04:56:34 +0000</pubDate><atom:updated>2026-08-29T04:56:34.757Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur dam,Delta,டெல்டா விவசாயிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/vgses2za/Metttur-dam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மேட்டூர் அணை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/vgses2za/Metttur-dam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2>13 டெல்டா மாவட்ட விவசாயம்</h2><p> தமிழ்நாட்டின் 'நெற்களஞ்சியம்' என்று அழைக்கப்படும் தஞ்சாவூர் உள்பட 13 டெல்டா மாவட்டங்கள் விவசாயத்திற்கு மேட்டூர் அணையையே நம்பியுள்ளன. அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடியை மேற்கொள்ள ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவது வழக்கமாக இருந்து வருகிறது.ஆனால், அவ்வாறு தண்ணீர் திறக்க வேண்டும் என்றால், குறிப்பிட்ட நாளில், அணையின் நீர் மட்டம் 90 அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும். இந்த ஆண்டு ஜூன் மாத தொடக்கத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79 அடி என்ற நிலையிலேயே இருந்ததால், குறிப்பிட்ட நாளான ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. </p> <h2>குறுவை சாகுபடி பரப்பு குறைந்தது</h2><p>இதனால், காவிரி தண்ணீரை நம்பியிருந்த டெல்டா விவசாயிகளால் குறுவை சாகுபடியை மேற்கொள்ள முடியவில்லை. நிலத்தடி நீரைக் கொண்டு சாகுபடி செய்யும் விவசாயிகளே <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">குறுவை சாகுபடி</a>யில் ஈடுபட்டனர்.  இதனால், கடந்த ஆண்டு 5.66 லட்சம் ஏக்கராக இருந்த குறுவை சாகுபடி, இந்த ஆண்டு 3.78 லட்சம் ஏக்கராக குறைந்துவிட்டது. அடுத்து சம்பா சாகுபடிக்காவது தண்ணீர் திறந்துவிடப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர். </p> <h2>செப்டம்பர் 1-ந் தேதி திறப்பு</h2><p> இந்த நிலையில், சம்பா சாகுபடிக்காக செப்டம்பர் 1-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யே நேரடியாக சென்று அணையை திறந்துவைக்க இருப்பதால், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மொத்தம் 45 நாட்கள் தண்ணீர் திறந்துவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேட்டூர் அணையில் நேற்று மாலை நிலவரப்படி 89.72 அடி தண்ணீரே இருப்பு உள்ளது. அதாவது, 52.33 டி.எம்.சி. தண்ணீரே இருப்பு உள்ளதால், இது 45 நாட்களுக்கு போதுமானதாக இருக்காது என்று டெல்டா விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.</p> <h2>தண்ணீர் தேவை என்ன?</h2><p> அதாவது, பாசனப் பகுதியின் கடைமடை வரை காவிரி நீர் செல்ல வேண்டும் என்றால், ஒவ்வொரு நாளும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கனஅடி நீரை திறந்துவிட வேண்டிய நிலை உள்ளது. தற்போது, மேட்டூர் அணையில் உள்ள நீர் இருப்பு அதற்கு சாத்தியமானதாக இல்லை என்று <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">விவசாயிகள்</a> தெரிவிக்கின்றனர். ஏற்கனவே, தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. அடுத்து அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கும் வடகிழக்கு பருவமழையும் போதுமான அளவு மழையை கொடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. </p><h2>விவசாயிகள் சொல்வது என்ன?</h2><p>டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி பாசனத்திற்கு செப்டம்பர் 15-ந் தேதி முதல் ஜனவரி 28-ந் தேதி வரை 12 லட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களுக்கு 268.47 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது.  தண்ணீர் தேவை இவ்வாறு இருக்க, <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேட்டூர் அணை</a>யிலோ நீர் இருப்பு 89.72 அடியாக இருக்கிறது. இதனால், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பை செப்டம்பர் 1-ந் தேதி என்பதற்கு பதில், செப்டம்பர் 15-ந் தேதி என்று மாற்றினால், அணையில் தண்ணீர் குறையும் நேரத்தில் வடகிழக்கு பருவமழை கைகொடுக்கும் என்று விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால், தமிழக அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.</p>]]></content:encoded></item><item><title>சாதி, மத விஷயங்களை சட்டமன்றத்திற்குள் கொண்டு வருவதை தவெகவினர் தவிர்க்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-members-should-avoid-bringing-caste-and-religious-issues-into-the-legislative-assembly-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-members-should-avoid-bringing-caste-and-religious-issues-into-the-legislative-assembly-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">9cf25dc1-9427-45fc-a94f-9cb6cb6dbee2</guid><pubDate>Sat, 29 Aug 2026 04:45:50 +0000</pubDate><atom:updated>2026-08-29T04:45:50.691Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,சட்டசபை,Legislative Assembly</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/53a5f7ss/nainar.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/53a5f7ss/nainar.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>“தமிழக சட்டமன்றத்தில் அரங்கேறும் மத அரசியல் - திரு. ஜோசப் விஜய் ஆட்சியில் சீர்குலையும் சட்டமன்ற மாண்பு!</p><p>தமிழ்நாடு சட்டமன்றத்தின் சபாநாயகர் பதவி என்பது சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு நடுநிலை வகிக்க வேண்டிய ஒரு மிக உன்னதமான அரசியல் சாசனப் பதவியாகும். ஆனால், தற்போதைய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், தான் அமர்ந்திருக்கும் இருக்கையின் கண்ணியத்தை மறந்து, தன்னை ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவராக பகிரங்கமாக தொடர்ந்து அடையாளப்படுத்திக் கொள்வதோடு, தான் சார்ந்த மதத்தின் ஒரு பிரிவுக்கு இடஒதுக்கீடு வேண்டுமென்று சபாநாயகர் இருக்கையில் அமர்ந்துகொண்டே வெளிப்படையாகக் கோரிக்கை விடுக்கிறார். இது முதல்-அமைச்சர் விஜய்க்கு கட்டளையிடுவது போலவே அமைந்திருக்கிறது.</p><p>இந்த சட்டமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. இதற்கு முன்பு பல சபாநாயகர்கள் இந்தப் பதவியில் இருந்துள்ளனர். ஆனால், அவர்கள் யாரும் தான் சார்ந்த மதத்தையோ அல்லது சாதியையோ முன்னிலைப்படுத்திப் பேசியது கிடையாது. ஆனால், தவெக அரசு அமைந்த முதல் நாளிலிருந்தே முதல்வர் ஜோசப் விஜய் இது சிறுபான்மையினருக்கான அரசு என்று முன்னிலைப்படுத்திப் பேசுகிறார். அமைச்சர் மரிய வில்சனோ கையில் ஜெபமாலையுடன் வந்து பட்ஜெட் தாக்கல் செய்கிறார். அத்துடன் நில்லாமல், தான் ஒரு கிறிஸ்தவர் என்று சட்டசபையில் குறிப்பிடுவதோடு, தமிழ் மொழியை விடத் தனது மதமே உயர்ந்தது என்கிறார். சட்டமன்றத்தில் பைபிள் வசனங்களைக் குறிப்பிட்டுப் பேசி வருகிறார்.</p><p>அவர்களின் மத நம்பிக்கைகளைத் தவறு என்று கூறவில்லை. ஆனால், தங்களது தனிப்பட்ட நம்பிக்கைகளை சட்டமன்றத்திற்குள் பேசுவதும், செயல்படுத்துவதும் சட்டமன்றத்தின் மாண்பைக் குலைப்பதோடு, இந்த சட்டமன்றத்தையே ஒரு குறிப்பிட்ட மதம் நோக்கி நகர்த்துவது போல் உள்ளது. இது நல்லதல்ல. எல்லாவற்றிற்கும் மேலாக, சபாநாயகர் பதவியில் இருப்பவர் இதைப் பற்றிப் பேசுவது முற்றிலும் தவறான விஷயமாகும். எனவே, இனியாவது சபாநாயகர் அவர்களும் மற்றும் தவெகவின் அமைச்சர்களும் தங்களது தனிப்பட்ட சாதி, மத விஷயங்களை சட்டமன்றத்திற்குள் கொண்டு வராமல், அதன் மாண்பைக் காக்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,360 சரிவு.... இன்றைய நிலவரம் என்ன..?</title><link>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-drops-rs-2360-per-sovereign-todays-rates</link><comments>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-drops-rs-2360-per-sovereign-todays-rates#comments</comments><guid isPermaLink="false">c08d2d83-8195-473e-b5e9-784bcf68443c</guid><pubDate>Sat, 29 Aug 2026 04:37:23 +0000</pubDate><atom:updated>2026-08-29T04:37:23.693Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Gold Rate,தங்கம் விலை,வெள்ளி விலை,Silver rate,Gold Price,Silver Price,விலை நிலவரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/10heaqsb/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/10heaqsb/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தங்கம் (Gold Rate)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தங்கத்தின் விலை கடந்த ஓரிரு நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக உள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் தங்கம் ஒரு கிராம் ரூ.14,725-க்கும், ஒரு சவரன் ரூ.1,17,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. </p><p>நேற்று காலையில் கிராமுக்கு ரூ.75 குறைந்து, ரூ.14,650-க்கும், சவரனுக்கு ரூ.600 குறைந்து ரூ.1,17,200-க்கும் விற்பனையானது. இதற்கிடையில் மாலையில் தங்கத்தின் விலை திடீரென அதிகரித்தது. கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் உயர்ந்தது. அந்த வகையில் ஒரு கிராம் ரூ.14,800-க்கும், ஒரு சவரன் ரூ.1,18,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.</p><p>இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.2,360 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,16,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.295 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,505-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.260-க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைந்து ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் விற்பனையாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>செங்கோட்டை செல்லும் ரெயில்கள் இன்று முதல் பகுதியாக ரத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/trains-to-sengottai-partially-cancelled-starting-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/trains-to-sengottai-partially-cancelled-starting-today#comments</comments><guid isPermaLink="false">7070c3b1-206e-4b5d-b4a0-d4a4dfd6b639</guid><pubDate>Sat, 29 Aug 2026 04:30:11 +0000</pubDate><atom:updated>2026-08-29T04:30:11.615Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Sengottai,செங்கோட்டை,ரெயில்கள்,ரெயில்வே மேம்பாலம்,Railway Overbridge</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/r2qkuktf/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/r2qkuktf/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>நெல்லை,  </p><p>தென்காசி மாவட்டம் இலஞ்சி ரெயில்வே மேம்பாலத்துக்கான தூண்கள் பொருத்தும் பணி இன்று (சனிக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி செங்கோட்டை ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.</p><h2>ரெயில்வே மேம்பாலம்</h2><p>தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசையில் இருந்து குற்றாலம் செல்லும் ரோட்டின் குறுக்கே தென்காசி -செங்கோட்டை ரெயில்வே பாதையும், கேட்டும் அமைந்திருந்தது. இங்கு கேட் அடைக்கும் போது நிலவிய போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு மற்றும் ரெயில்வே துறை இணைந்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் கட்டுவதற்கு பணிகளை தொடங்கியது. இதில் மாநில நெடுஞ்சாலைத்துறை பாலத்தை கட்டி முடித்து விட்டது. ஆனால் தண்டவாளத்துக்கு மேல் உள்ள பகுதியில் மட்டும் ரெயில்வே துறையால் பாலம் இணைக்கப்படாமல் உள்ளது.</p><h2>கிர்டர்கள் இணைக்கும் பணி</h2><p>இதற்காக ரெயில்வே ஒப்பந்த நிறுவனம் இரும்பு தூண்கள் (கிர்டர்கள்) கொண்டு வந்து பாலத்தின் அருகே வரிசையாக இறக்கி போட்டிருந்தது. பகுதி, பகுதியாக இருந்த கிர்டர்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது. இந்த கிர்டர்களை கான்கிரீட் தூண்கள் மீது தூக்கி வைத்து இணைத்து, கான்கிரீட் போடும் பணி இன்று (சனிக்கிழமை) தொடங்கி 31-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.</p><h2>ரெயில்கள் பகுதியாக ரத்து</h2><p>இந்த பணிக்காக தென்காசி -செங்கோட்டை இடையே 3 நாட்களுக்கு சில ரெயில்கள் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. செங்கோட்டையிலிருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்படும் (வண்டிஎண் 56776) செங்கோட்டை- நெல்லை பாசஞ்சர் ரெயில், செங்கோட்டை- தென்காசி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.</p><p>இந்த ரெயில் தென்காசியில் இருந்து புறப்படும். நெல்லையில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்படும் (வண்டி எண் 56773) நெல்லை- செங்கோட்டை பாசஞ்சர் ரெயில் தென்காசி-செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் தென்காசி வரை மட்டுமே இயக்கப்படும்.</p><p>மதுரையில் இருந்து காலை 7.25 மணிக்கு புறப்படும் செங்கோட்டை பாசஞ்சர் (56771) ரெயில் தென்காசி வரை மட்டுமே இயக்கப்டும். செங்கோட்டையில் இருந்து மதியம் 12.20 மணிக்கு புறப்படும் மதுரை பாசஞ்சர் ரெயில் (56772) செங்கோட்டை-தென்காசி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. தென்காசியில் இருந்து வழக்கமான 12.33 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு செல்லும்.</p><p>இந்த தகவலை தென்னக ரெயில்வே தெரிவித்து உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>விரும்பிய கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இடம் கிடைக்காததால் விரக்தி: மாணவி எடுத்த விபரீத முடிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mbbs-seat-denial-leads-to-tragic-decision</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mbbs-seat-denial-leads-to-tragic-decision#comments</comments><guid isPermaLink="false">56739b86-6bc3-4e2b-bc26-59ca90a9b5b2</guid><pubDate>Sat, 29 Aug 2026 04:08:55 +0000</pubDate><atom:updated>2026-08-29T04:08:55.323Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,தற்கொலை,Suicide,மாணவி தற்கொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/t4dwspa4/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/t4dwspa4/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>நெல்லையில் விரும்பிய கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைக்காததால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>நீட் தேர்வில் வெற்றி</h2><p>நெல்லை பெருமாள்புரம் அன்புநகர் சித்தார்தர் நகரைச் சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன். தனியார் ஐ.டி. நிறுவன ஊழியரான இவர் தற்போது வீட்டில் இருந்தவாறே ஆன்லைன் மூலம் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி பமில்தா. இவர்களுடைய மூத்த மகள் சுருதிலயா (21 வயது). பிளஸ்-2 படித்து விட்டு நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இவர் சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் வெற்றி பெற்றார். தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 7 கல்லூரிகளில் சேருவதற்காக கலந்தாய்வில் விண்ணப்பித்து இருந்தார்.</p><h2>தூக்குப்போட்டு தற்கொலை</h2><p>அதற்கான கலந்தாய்வு முடிவு நேற்று முன்தினம் வெளியானது. இதில், மாணவி சுருதிலயாவின் பெயர் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் தான் விரும்பிய கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்க இடம் கிடைக்கவில்லையே என்று மனமுடைந்த நிலையில் இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் வீட்டில் இருந்து திடீரென மாயமானார்.</p><p>இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகள் சுருதிலயாவை பல இடங்களிலும் தேடிப் பார்த்தனர். அவரை எங்கும் காணாததால் பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டுக்கு பின்னால் இருந்த குடோனில் மாணவி சுருதிலயா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இதையடுத்து மாணவியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>செங்கல்பட்டு அருகே கார் டயர் வெடித்து விபத்து: 3 கல்லூரி மாணவர்கள் பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/accident-near-chengalpattu-caused-by-a-burst-car-tyre-3-college-students-killed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/accident-near-chengalpattu-caused-by-a-burst-car-tyre-3-college-students-killed#comments</comments><guid isPermaLink="false">545edd00-fc34-42a1-9ea7-390bfbdad0df</guid><pubDate>Sat, 29 Aug 2026 03:27:58 +0000</pubDate><atom:updated>2026-08-29T03:27:58.051Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சாலை விபத்து,road accident,Chengalpattu,செங்கல்பட்டு</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/dbnayjc7/7.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/dbnayjc7/7.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை அருகே உள்ள தனியார் கல்லூரியை சேர்ந்த 7 மாணவர்கள் நேற்று கார் மூலம் புதுச்சேரி சென்றனர். அதன் பின்னர் மீண்டும் சென்னை நோக்கி வந்துகொண்டு இருந்தனர். செங்கல்பட்டு அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென காரின் டயர் வெடித்தது.</p><p>இதனால் கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தரிகெட்டு ஓடி தூக்கி வீசப்பட்டது. இந்த விபத்தில் 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 4 மாணவர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>அமைச்சர் மனைவிக்கு பணியிட மாற்றம்: மாற்று ஆசிரியர் நியமிக்கப்படாததால் கற்றல் பாதிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/job-transfer-for-ministers-wife-learning-hit-as-no-replacement-teacher</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/job-transfer-for-ministers-wife-learning-hit-as-no-replacement-teacher#comments</comments><guid isPermaLink="false">22e43b45-8aa2-4d03-a054-8f0503bf9947</guid><pubDate>Sat, 29 Aug 2026 03:17:10 +0000</pubDate><atom:updated>2026-08-29T03:17:10.637Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Transfer,பணியிட மாற்றம்,Govt school,பல்லாவரம்,அரசுப் பள்ளி,Minister Nirmalkumar,அமைச்சர் நிர்மல்குமார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/ac14xnit/Untitled-4.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/ac14xnit/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பல்லாவரம் அரசு பள்ளியில் இருந்து, அமைச்சர் நிர்மல்குமாரின் மனைவி, திருவல்லிக்கேணி அரசு பள்ளிக்கு மாற்றப்பட்ட நிலையில், அவருக்கு மாற்றாக புதிய ஆசிரியர் நியமிக்கப்படாததால், கற்றல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.</p><h2>கலந்தாய்வு பணிகள் நிறுத்தம்</h2><p>அரசு தொடக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, 'எமிஸ்' தளம் வழியாக, பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டுக்கான பணியிடமாறுதல் கலந்தாய்வுகள், ஜூன் மாதம் நடப்பதாக இருந்தன. கோர்ட்டு உத்தரவுகளால், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு பணிகள் நிறுத்தப்பட்டன.</p><h2>விமர்சனம்</h2><p>இந்த சூழலில், சென்னையை அடுத்த பல்லாவரம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில், அறிவியல் ஆசிரியையாக பணியாற்றிய, சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமாரின் மனைவிக்கு மட்டும், திருவல்லிக்கேணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றுப்பணி வழங்கப்பட்டது. இது ஆசிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமைச்சரின் அரசு இல்லம், சென்னை பசுமை வழிச்சாலையில் இருப்பதால், இந்த பணிமாறுதல் வழங்கப்பட்டதாக விமர்சனம் எழுந்தது.</p><h2>கூடுதல் சுமைகள்</h2><p>இந்த நிலையில், அமைச்சர் நிர்மல்குமாரின் மனைவி, ஏற்கனவே பணியாற்றிய பள்ளியில், அவருக்கு மாற்றாக ஆசிரியர் நியமிக்கப்படவில்லை. இதனால், அப்பள்ளியில் கற்றல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது. இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:-</p><h2>கற்றல் பாதிப்பு</h2><p>மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்கள் அதிகளவில் படித்து வருகின்றனர். மாணவர் ஆசிரியர் விகிதாசாரம் இந்த பள்ளியில் குறைவாகவே உள்ளது. ஆசிரியர்களுக்கு கூடுதல் சுமைகள் உள்ளன. இந்த சூழலில், அமைச்சரின் மனைவிக்கு மாற்றாக புதிய ஆசிரியரை, அந்த பணியிடத்தில் இரண்டு மாதங்களாக நியமிக்காமல் உள்ளனர். இதனால், மாணவர்களின் கற்றல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மந்தம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/slow-enrolment-in-government-arts-and-science-colleges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/slow-enrolment-in-government-arts-and-science-colleges#comments</comments><guid isPermaLink="false">3f768d1e-8a4e-4ab6-90ec-9c5bff6ebe9e</guid><pubDate>Sat, 29 Aug 2026 02:57:15 +0000</pubDate><atom:updated>2026-08-29T02:57:15.302Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணவர் சேர்க்கை,Counseling,கலந்தாய்வு,Arts and Science College,students Admission,கலை அறிவியல் கல்லூரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/0bc6ju2m/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மாணவர் சேர்க்கை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/0bc6ju2m/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் மந்தமான நிலை நீடித்து வருகிறது. இதனால் ஒரு லட்சம் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்கை அடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.</p><h2>கலந்தாய்வு</h2><p>தமிழக அரசின் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ், 181 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு இடங்களுக்கான, 2026-27ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. </p><h2>73.74 சதவீத இடங்கள்</h2><p>இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக, அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. நடப்பு கல்வியாண்டில், இளநிலை பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கி, இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மொத்தமுள்ள 1 லட்சத்து 29 ஆயிரத்து 929 இடங்களில், மாணவர்கள் 40 ஆயிரத்து 261 பேர்; மாணவியர் 55 ஆயிரத்து 174 பேர்; மூன்றாம் பாலினத்தவர்கள் 26 பேர் என, மொத்தம் 95 ஆயிரத்து 461 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். அதாவது, 73.74 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளன.</p><h2>மாணவர் சேர்க்கை மந்தம்</h2><p>பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவுகள், கடந்த 30-ம்தேதி வெளியான நிலையிலும், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் மந்தமான நிலை நீடித்து வருகிறது. ஒரு லட்சம் இடங்களை நிரப்ப வேண்டும் என்ற இலக்கை அடைவதில், உயர்கல்வித் துறைக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.</p><h2>ஆண்டு வாரியாக மாணவர் சேர்க்கை விபரம்:</h2><p><strong>கல்வியாண்டு - கல்லுாரி எண்ணிக்கை - மொத்த இடம் - நிரம்பிய இடம்</strong></p><p>2024-25 - 172 - 1,07,299 - 98,885</p><p>2025-26 - 181 - 1,31,034 - 1,03,280</p><p>2026-27 - 181 - 1,29,929 - 95,461</p>]]></content:encoded></item><item><title>&apos;அப்பா யாரென தெரிந்து பேசுங்கள்&apos;- திமுக மேயர் சர்ச்சை பேச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/know-who-my-father-is-before-you-speak-dmk-mayors-controversial-remarks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/know-who-my-father-is-before-you-speak-dmk-mayors-controversial-remarks#comments</comments><guid isPermaLink="false">2f6449ee-1934-408f-9ba7-4ceccf3ec4f3</guid><pubDate>Sat, 29 Aug 2026 02:17:57 +0000</pubDate><atom:updated>2026-08-29T02:17:57.512Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,Mayor,மேயர்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/te4m3nd8/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/te4m3nd8/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,  </p><p>தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் தலைமையில் நேற்று நடந்தது. சமீ பத்தில் த.வெ.க.,வில் இணைந்த தி.மு.க., கவுன்சிலர் ராமர்,அ.தி. மு.க., கவுன்சிலர் மந்திர மூர்த்தி ஆகியோர், 'மாநகராட்சி பகுதியில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் மதன் ராஜா திறந்து வைத்த கட்டட கல்வெட்டில், அவரது பெயரை இடம் பெற செய்ய வேண்டும் என, வலியுறுத்தினர்.</p><p>மேயர் ஜெகன் பேசுகையில், "தி.மு.க., முன்னாள் சண்முகையா எம்.எல்.ஏ., நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்ட ரேஷன் கடை கல்வெட்டில், அமைச்சர் மதன் ராஜா பெயரை போட முடியாது. அடுத்தவர் பெயரில் உள்ளதற்கு பெயர் வைக்க அலைகிறீர்கள்.</p><p>'அதற்கு அப்பா யாரென தெரிந்து கொள்ளுங்கள் கடந்த ஆட்சியில் சி.எஸ். ஆர்., நிதியில் நாங்கள் கட்டிய கட்டடங்களை தற்போதைய அமைச்சர்கள் திறந்து வைக்கின்றனர். என் பெயரை மறைக்க நினைத்தவர்கள் அவர்களாகவே முடிந்துவிடுவார்கள்," என்றார். இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>‘வெள்ளத்தில் இருந்து உயிரை காப்பாற்ற ஓடினோம்’-நேபாளத்தில் இருந்து சென்னை திரும்பியவர்கள் பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-ran-to-save-our-lives-from-the-floods-interviews-with-those-who-returned-to-chennai-from-nepal</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-ran-to-save-our-lives-from-the-floods-interviews-with-those-who-returned-to-chennai-from-nepal#comments</comments><guid isPermaLink="false">77bc8539-a091-438e-8568-e84e2d5a931c</guid><pubDate>Sat, 29 Aug 2026 02:15:41 +0000</pubDate><atom:updated>2026-08-29T02:15:41.887Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Nepal,நேபாளம்,Flood,வெள்ளம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/tclpmrtv/Nepal-flood.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/tclpmrtv/Nepal-flood.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நேபாளம்-திபெத் எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்டு சென்னை திரும்பிய தமிழகத்தை சேர்ந்தவர்கள், 'சுனாமி போல் வந்த வெள்ளத்தில் இருந்து உயிரை காப்பாற்ற ஓடினோம்' என தாங்கள் உயிர் தப்பிய அனுபவத்தை உருக்கமாக தெரிவித்தனர்.</p><h2>செல்போனில் வீடியோ</h2><p>காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை சேர்ந்த சத்யா கூறியதாவது:- கைலாஷ் யாத்திரைக்காக சென்னை,மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 57 பேர் சென்றிருந்தோம். புனித பயணமாக சென்ற நாங்கள் சீனாவில் இருந்தபோது சம்பவத்தன்று காலை 8 மணியளவில்  சோதனை நடைபெற்றது.  நாங்கள் 3 பஸ்களில் பயணம் செய்து கொண்டிருந்தோம். பஸ்சில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஏதோ புழுதி கிளம்புவது போல் தெரிந்தது. அதை நாங்கள் செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருந் தோம். ஆனால், சிறிது நேரத்தில் அது சுனாமி போல் பிரமாண்டமாக எழுந்து வந்தது. அதன் தாக்கம் எங்களுக்கு உடனடியாக தெரியவில்லை. நாங்கள் சாதாரணமாகத்தான் இருந்தோம். வெள்ளம் வேகமாக வருவதை பார்த்ததும் அங்கிருந்த அனைவரும் ஓட ஆரம்பித்தனர். அதன் பிறகுதான் நாங்களும் பஸ்சில் இருந்து இறங்கி உயிரைக் காப்பாற்ற ஓடினோம்.</p><h2>தமிழக அரசு உதவி</h2><p>நேபாளத்தில் எங்களை மீட்புக்குழுவினர் மீட்டு உதவி செய்தனர். சுமார் 3 மணி நேரம் மரங்களை பிடித்தபடியே நடந்து சென்றோம். அந்த நேரத்தில் எங்களது கைகள் முழுவதும் முட்கள் குத்தி காயமடைந்தன. தமிழ்நாடு அரசு எங்களுக்கு அளித்த உதவி மிகப்பெரியது. தங்கத்தட்டில் வைத்து காப்பாற்றி அழைத்து வந்தது போல் தமிழக அரசு எங்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வந்துள்ளது. அந்த அளவுக்கு தமிழக அரசு எங்களுக்கு உதவி செய்துள்ளது. இவ்வாறு சத்யா கூறினார்.</p> <h2>4 அமைச்சர்கள் டெல்லியில் முகாம்</h2><p>இதுகுறித்து அமைச்சர் ஆனந்த் கூறியதாவது:- அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், தென்னரசு, வினோத் உள்ளிட்ட 4 அமைச்சர்கள் டெல்லியில் முகாமிட்டு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை கண்காணித்து வருகின்றனர். அவர்கள் டெல்லியில் இருந்து உடனுக்குடன் முதல்-அமைச்சர் விஜய்க்கு தகவல்களை தெரிவித்தனர். முதல்-அமைச்சரும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்யுமாறு அறிவுறுத்தி னார். 4 அமைச்சர்களும் டெல்லியில் முகாமிட்டு இருப்பதால், அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.அனைத்து பணிகளும் விரைவாக நடைபெற்று வருகின்றன. வெள்ளத்தில் சிக்கியுள்ள அனைவரும் நலமுடன் தாயகம் திரும்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்று அமைச்சர் ஆனந்த் கூறினார். </p> ]]></content:encoded></item><item><title>சிம் கார்டுக்கு அதிக கட்டணம் வசூல்: வாடிக்கையாளருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/consumer-court-orders-rs-40000-compensation-to-customer-for-charging-high-fees-for-sim-card</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/consumer-court-orders-rs-40000-compensation-to-customer-for-charging-high-fees-for-sim-card#comments</comments><guid isPermaLink="false">d301d47d-6eb7-4163-aacd-8905d105376a</guid><pubDate>Sat, 29 Aug 2026 01:49:39 +0000</pubDate><atom:updated>2026-08-29T01:49:39.210Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இழப்பீடு,Compensation,consumer court,நுகர்வோர் கோர்ட்டு,சிம் கார்டு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/qsldu8j3/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/qsldu8j3/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>செங்கல்பட்டு,</p><p>செங்கல்பட்டைச் சேர்ந்தவர் சரிதா. இவர், கடந்த 21.09.2025 அன்று தனது செல்போனை தவறவிட்டார். மறுநாள் புதிய சிம் கார்டு கேட்டு மணி மார்க்கெட்டிங் ஏர்டெல் ஷோரூமை அணுகினார். சிம் கார்டு அவரது தந்தை காந்தி பெயரில் இருப்பதால் மாற்றிக் கொடுக்க ரூ.650 செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அவர் 'ஜிபே' மூலம் பணம் செலுத்தினார்.</p><p>இதுகுறித்து ஏர்டெல் நிறுவனத்திடம் விசாரித்தபோது, 'டுப்ளிகேட்' சிம் கார்டுக்கு ரூ.50 மட்டுமே கட்டணம் என்றும், பெயர் மாற்றத்துக்கு கட்டணம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சரிதா, செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஆணையத்தின் தலைவர் காசிபாண்டியன், உறுப்பினர் ஜவகர் ஆகியோர், தொலைந்த சிம் கார்டுக்கு பதிலாக புதிய சிம் கார்டு வழங்க அதிக கட்டணம் வசூலித்த ரூ.600-ஐ, 24 சதவீத வட்டியுடன் திருப்பிச் செலுத்த உத்தரவிட்டனர்.</p><p>மேலும் மனஉளைச்சலுக்கு ரூ.25 ஆயிரம், வழக்கு செலவுக்கு ரூ.15 ஆயிரம் என மொத்தம் ரூ.40 ஆயிரம் வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>பணியாற்றும் பெண்களுக்கு மாதவிடாய் கால விடுமுறை: முடிவை தெரிவிக்க அரசுக்கு கெடு - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/menstrual-leave-working-women-madurai-high-court-deadline</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/menstrual-leave-working-women-madurai-high-court-deadline#comments</comments><guid isPermaLink="false">e9a5e1cd-b3f0-4325-87e6-fbca39b5d0a4</guid><pubDate>Sat, 29 Aug 2026 01:12:20 +0000</pubDate><atom:updated>2026-08-29T01:12:20.163Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மதுரை ஐகோர்ட்டு,Madurai Highcourt,leave,menstrual,மாதவிடாய் விடுமுறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/ngjcxhdf/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மதுரை ஐகோர்ட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/ngjcxhdf/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>பணியாற்றும் பெண்களுக்கு மாதவிடாய் கால விடுமுறை வழங்குவது குறித்து வருகிற 17-ந்தேதி அரசின் முடிவை தெரிவிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கெடு விதித்ததுடன் தவறினால் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.</p><h2>மாதவிடாய் கால விடுமுறை</h2><p>மதுரை கோமதிபுரத்தைச் சேர்ந்த நர்மதா என்பவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டவைகளில் பணியாற்றும் பெண்கள், கடுமையான மாதவிடாய் வலியால் அவதிப்படுகின்றனர். அதனை சமாளித்தபடியே பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டபோது, தமிழகத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் கால விடுப்பு வழங்கும் கொள்கை இல்லை என தெரிவிக்கப்பட்டது.</p><p>இதுசம்பந்தமாக பெண்கள் எதிர்கொள்ளும் உடல்நல பிரச்சினைகள், ஊதிய இழப்பு மற்றும் பணியிட சிரமங்கள் குறித்து விளக்கி தமிழக அரசுக்கு விரிவான மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. மாதவிடாய் என்பது இயற்கையான உயிரியல் செயல்முறை. எனவே தமிழகத்தில் பணியாற்றும் பெண்களுக்கு மாதவிடாய் கால ஊதிய விடுப்பு வழங்குவது குறித்த கொள்கையை அரசு உருவாக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இதுகுறித்து பதில் அளிக்க தமிழக அரசுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டு இருந்தது.</p><h2>கொள்கை முடிவு</h2><p>இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, தற்போது தமிழக சட்டசபை நடந்து வருகிறது. இதனால் இந்த விவகாரத்தில் கொள்கை சார்ந்த முடிவு எடுப்பதற்கு தாமதம் ஆகிறது. இதற்கு உரிய அவகாசம் வேண்டும் என்றார்.</p><h2>முடிவை தெரிவிக்க கெடு</h2><p>இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு வருகிற செப்டம்பர் 17-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அன்றைய தினம் இந்த விவகாரத்தில் இறுதியான முடிவை அரசு தெரிவிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். தவறும் பட்சத்தில் இந்த வழக்கில் உரிய உத்தரவை பிறப்பிப்போம் என்று அறிவுறுத்தி விசாரணையை ஒத்திவைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் சர்க்கரை விலை 19.44 சதவீதம் குறைவு; கிலோ ரூ.58-க்கு விற்பனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sugar-prices-in-tamil-nadu-have-dropped-by-1944-selling-at-58-per-kg</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sugar-prices-in-tamil-nadu-have-dropped-by-1944-selling-at-58-per-kg#comments</comments><guid isPermaLink="false">ba215dae-d480-426c-98e8-d8f2f336b588</guid><pubDate>Sat, 29 Aug 2026 00:55:29 +0000</pubDate><atom:updated>2026-08-29T00:55:29.720Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>உத்தரபிரதேசம்,மத்திய அரசு,Sugar,சர்க்கரை விலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/a0j8kfcs/sugar.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/a0j8kfcs/sugar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ரூ.72-க்கு விற்பனையானது</p><p>உத்தரபிரதேசம். மராட்டிய மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு பெருமளவிலான சர்க்கரை வரும் நிலையில், அங்கு முறையற்ற பருவமழை காரணமாக கரும்பு உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டதால் தமிழ்நாட் டில் வரலாறு காணாத அளவுக்கு சர்க்கரை விலையேற்றம் ஏற்பட்டது. அதன்படி கடந்த 24-ந் தேதி ஒரு கிலோ சர்க்கரை ரூ.72-க்கு விற்பனையானது. அதன்படி, 50 கிலோ கொண்ட ஒரு மூடை சர்க்கரை ரூ.3 ஆயிரத்து 600 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்தநிலையில், சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி, 10 லட்சம் டன் சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், சர்க்கரை உற்பத்தி ஆலைகளில் அதிரடி சோத னைகள் மேற்கொண்டு சர்க்கரை பதுக்கலை தடுக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டது.</p><h2>2 முறை ஒதுக்கீடு</h2><p>இதுதவிர சர்க்கரை விலை ஏறுவதற்கு ஆலைகளில் இருந்து சந்தைக்கு அவை எடுத்துச் செல்லப்படுவதில் காலதாமதம் ஆவதே காரணம் என தெரிகிறது.இதனை கவனித்த மத்திய அரசு இனிமேல் அதாவது, வருகிற செப்டம்பர் மாதத்தில் இருந்து 2 வாரத்துக்கு ஒருமுறை சர்க்கரை ஒதுக்கீட்டு நடைமுறையை அமல்படுத்த முடிவு செய்து உள்ளது. இந்த முறையின் கீழ் ஆலைகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அளவில் குறைந்தபட்சம் 40 சதவீதத்தை முதல் வாரத்திலும், மீதமுள்ள அளவை அடுத்த வாரத்திலும் அனுப்பிவிட வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><h2>19.44 சதவீதம் குறைவு</h2><p>இது போன்ற காரணங்களால் வெளிச்சந்தையில் சர்க்கரை கையிருப்பு சீராகி அதன் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 25-ந் தேதி 9.7 சதவீதம் விலை குறைந்து கிலோ ரூ.65-க்கு விற்ப னையாகி வந்த சர்க்கரை விலை நேற்று மேலும் குறைந்து கிலோ ரூ.58-க்கு விற்பனையானது. அதன்படி 50 கிலோ எடை கொண்ட ஒரு மூடை சர்க்கரை நேற்று ரூ.2 ஆயிரத்து 900-க்கு விற்பனையானது.இது, கடந்த 24-ந் தேதி விற்பனை செய்யப்பட்ட விலையில் இருந்து 19.44 சதவீதம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு கிலோ சர்க்கரை ரூ.45-க்கு தான் விற்பனை செய்யப்பட்டது என்பதும் கூடுதல் தகவல். எனவே, சர்க்கரை விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-today-14</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-today-14#comments</comments><guid isPermaLink="false">e98afc38-aaf6-4b6e-b8f3-cd5de667fa3e</guid><pubDate>Sat, 29 Aug 2026 00:53:35 +0000</pubDate><atom:updated>2026-08-29T00:53:35.958Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,powercut,மின்தடை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/k3o0zqk5/ep.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/k3o0zqk5/ep.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>சென்னையில் பராமரிப்புப் பணிகள் காரணமாக பின்வரும் இடங்கள் மின்தடை செய்யப்பட உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;</p><p>சென்னையில் 29.08.2025 (இன்று) காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பிற்பகல் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p><strong>கிண்டி:</strong> கிண்டி தொழிற்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், அம்பாள் நகர், லேபர் காலனி, பிள்ளையார் கோயில் தெரு 3, 5 மற்றும் 6வது தெருக்கள், ஏ,பி,சி மற்றும் டி பிளாக், மவுண்ட் ரோடு ஒரு பகுதி, ஜே.என். சாலை, பூமகள் தெரு, தெற்கு கட்டம், பாலாஜி நகர், பாரதியார் தெரு, தனகோட்டி ராஜா தெரு, அச்சுதன் நகர், முனுசாமி தெரு, காந்தி நகர் பகுதி, பூந்தமல்லி சாலை பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.</p><p><strong>சித்தாலபாக்கம்:</strong> புஷ்பா நகர் பூங்கா, சந்தானம் தெரு, வெங்கடேஸ்வரா தெரு, மாம்பாக்கம் மெயின் ரோடு, மகேஸ்வரி நகர், பிரியதர்ஷினி நகர், ஒட்டியம்பாக்கம் மெயின் ரோடு, டி.வி. நகர், ஸ்கைலேப் அவென்யூ, வள்ளுவர் நார், ஜெயா நகர், விவேகானந்தா நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.</p><p><strong>ஈஞ்சம்பாக்கம்:</strong> ஈ.சி.ஆர். ஈஞ்சம்பாக்கம், ஈஞ்சம்பாக்கம் குப்பம், ஈஞ்சம்பாக்கம் முதல் வெட்டுவான்கேணி இணைப்புச் சாலை, வெட்டுவான்கேணி 1 மற்றும் 2வது அவென்யூ, அக்கரை, அல்லிகுளம் அம்பேத்கர் தெரு, அண்ணா என்கிளேவ், பெத்தல் நகர், பாரதி அவென்யூ, பிருந்தாவன் நகர், சோழமண்டலக் கலைஞர்கள் கிராமம், சோழமண்டல தேவி நகர். கடற்கரை சாலை, டாக்டர் நஞ்சுண்டராவ் சாலை, கங்கையம்மன் கோயில் தெரு, குணால் தோட்டம், ஹனுமான் காலனி, ஹரிச்சந்திரா 1 முதல் 4 தெருக்கள், கக்கன் தெரு, கே.கே. சாலை, கே.வி. நகர், கஸ்தூரிபாய் நகர், எல்.ஜி. அவென்யூ, சனிஸ் அவென்யூ, நைனார் குப்பம், உத்தண்டி, நீலாங்கரை குப்பம், ஆலிவ் பீச், பல்லவன் நகர், பனையூர் குப்பம், பனையூர் மற்றும் குப்பம், என்ஆர்ஐ மற்றும் விஜிபி லேஅவுட், பெப்பிள் பீச், பெரியார் மற்றும் பொதிகை மற்றும் பொன்னியம்மன் கோயில் தெரு, பிரெஸ்டீஜ் மற்றும் ராஜ்லிங் தெரு, ராஜ்லிங் &amp; மந்திரி நகர், ராயல் என்கிளேவ், கடல் பாறை, சீ ஷெல் அவென்யூ, சீஷோர் டவுன், செல்வா நகர், ஷாலிமார் கார்டன், ஸ்பார்க்ளிங் சாண்ட் மற்றும் ஷேஷாத்ரி அவென்யூ, ஸ்பிரிங் கார்டன், டி.வி.எஸ். அவென்யூ, டீச்சர்ஸ் காலனி, திருவள்ளுவர் சாலை, தாமஸ் அவென்யூ, வி.ஓ.சி. தெரு, விமலா கார்டன் மற்றும் ஜுஹு கடற்கரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். </p>]]></content:encoded></item><item><title>கைவிரல் ரேகை பதிவு: தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இன்று சிறப்பு முகாம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fingerprint-registration-special-camp-at-ration-shops-across-tamil-nadu-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fingerprint-registration-special-camp-at-ration-shops-across-tamil-nadu-today#comments</comments><guid isPermaLink="false">e9b1c048-8564-4ece-b551-e0294e23a42e</guid><pubDate>Sat, 29 Aug 2026 00:45:05 +0000</pubDate><atom:updated>2026-08-29T00:45:05.707Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Special camp,சிறப்பு முகாம்,ரேஷன் கடைகள்,ration shops</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/r3yz8cq5/2.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/r3yz8cq5/2.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கைவிரல் ரேகை பதிவு செய்ய தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இன்று சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு பின்வருமாறு;</p><p>”தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் அட்டைகளின் ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்காக மின்னணு ரேஷன் அட் டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் கை ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.</p><p>அதன்படி குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதும் இடையூறுமின்றி இப்பணியினை செய்திட அறிவுறுத்தப்பட்டு கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் முதல் குடும்ப உறுப்பினர்களின் கைவிரல் ரேகை சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி முன்னுரிமை ரேஷன் அட்டைகளில் 96.21 சதவீதம் கைவிரல் ரேகை சரிபார்ப்பு பணியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. </p><p>இந்த கைவிரல் ரேகை பதிவினை 100 சதவீதம் நிறைவு செய்யும் பொருட்டு வருகிற 29-ந் தேதி (இன்று) தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.</p><p>எனவே, இதுவரை, ரேஷன் கடைகள் மூலம் கைவிரல் ரேகைப்பதிவு செய்யப்படாமல் விடுபட்டுள்ள ரேஷன் அட்டைதாரர்கள் இன்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் நடைபெறும் சிறப்பு முகாமினை பயன்படுத்தி தங்களது கைவிரல் ரேகைப் பதிவினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-55</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-55#comments</comments><guid isPermaLink="false">2d5ee5f0-b6ad-4029-a9bd-2b53ca4ff852</guid><pubDate>Sat, 29 Aug 2026 00:35:18 +0000</pubDate><atom:updated>2026-08-29T00:35:18.666Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல் விலை,டீசல் விலை,diesel prices,petrol prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/r2pw15hm/petrol.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/r2pw15hm/petrol.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.</p> <p>பெட்ரோல், டீசல் விலை</p><p>இந்நிலையில், சென்னையில் இன்று (29.08.2026 வெள்ளிக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ. 99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது. </p> ]]></content:encoded></item><item><title>
கோவை குற்றால அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு; குளிக்க தடை விதிப்பு
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kovai-kutralam-waterfalls-floods-again-bathing-ban-imposed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kovai-kutralam-waterfalls-floods-again-bathing-ban-imposed#comments</comments><guid isPermaLink="false">eeb8405d-3cb2-4699-8ee1-0d0e6d7d3e74</guid><pubDate>Fri, 28 Aug 2026 20:44:26 +0000</pubDate><atom:updated>2026-08-28T20:44:26.572Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,குற்றால அருவி,Falls</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/ersrguzt/fwfic.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/ersrguzt/fwfic.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>கோவை</p><p>கோவை குற்றால அருவியில் மீண்டும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.</p><p>கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. கோவையின் பிரதான சுற்றுலாத்தலமான இந்த நீர்வீழ்ச்சிக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.</p> <h2>கோவை குற்றாலம் அருவி</h2><p>இந்த நீர்வீழ்ச்சியில் வாரந்தோறும் திங்கட்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.</p> <h2>குளிக்க தடை</h2><p>இதனால் கோவை குற்றாலம் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து இன்று (சனிக்கிழமை) கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  3 நாட்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்ட நிலையில், நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மீண்டும் இன்று முதல் அருவி மூடப்படுகிறது.  சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவியில் நீர்வரத்து சீராகும் வரை கோவை குற்றாலம் அருவி மூடப்படும் என்று வனத்துறை அறிவித்துள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>காஞ்சீபுரம்:  1 மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய கனமழை
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kanchipuram-heavy-rain-lashes-for-over-an-hour</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kanchipuram-heavy-rain-lashes-for-over-an-hour#comments</comments><guid isPermaLink="false">d9e764b1-2f69-4187-9442-3b7f9a1f6e8c</guid><pubDate>Fri, 28 Aug 2026 19:58:18 +0000</pubDate><atom:updated>2026-08-28T19:58:18.165Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கனமழை,heavy rain,Kanchipuram,காஞ்சீபுரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/qa9lrfx7/swlrft.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/qa9lrfx7/swlrft.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>காஞ்சீபுரம்</p><p>காஞ்சீபுரத்தின் பல்வேறு பகுதிகளில் 1 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று <a href="https://www.dailythanthi.com/">சென்னை வானிலை ஆய்வு மையம் </a>தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில், காஞ்சீபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான வெள்ளைகேட், நத்தப்பேட்டை, களக்காட்டூர், வைய்யாவூர், வாலாஜாபாத், தாமல், பாலுசெட்டி சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு 1 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.  இதனால், நகரில் வெப்பம் சற்று தணிந்தது.  மழையால், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>
நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் 21 பேர் இரவில் சென்னை வந்தடைந்தனர்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/21-tamils-trapped-in-nepal-floods-return-to-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/21-tamils-trapped-in-nepal-floods-return-to-chennai#comments</comments><guid isPermaLink="false">bce89710-11ca-426d-add1-e8a2b5450fdc</guid><pubDate>Fri, 28 Aug 2026 19:07:32 +0000</pubDate><atom:updated>2026-08-28T19:07:32.805Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழர்கள்,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/mvfmk7t0/tnprnt.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/mvfmk7t0/tnprnt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><p>நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட 21 தமிழர்கள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.</p><p>இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பலி எண்ணிக்கை 469 ஆக உயர்ந்து உள்ளது.  ஆயிரம் பேரை காணவில்லை.  தொடர்ந்து மூன்றாவது நாளாக தேடுதல் மற்றும் மீட்புப்பணிகள் தொடரப்பட்டு வருகின்றன.</p> <h2>முதல்-அமைச்சர் விஜய்</h2><p>இந்த சூழலில், நேபாளத்துக்கு சென்று மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க, அமைச்சர்களுக்கு உத்தரவிட்டிருந்த தமிழக முதல்-அமைச்சர் விஜய், மீட்கப்பட்டுள்ள 21 தமிழர்களை தாயகம் அழைத்து வர ஏற்பாடு செய்யவும், தொடர்பு கொள்ள இயலாதவர்களின் நிலையை கண்டறிந்து மீட்புப்பணிகளை துரிதப்படுத்தவும் அறிவுறுத்தியிருந்தார்.</p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/7txep93c/tnprn.jpg" /></figure><h2>21 பேர்</h2><p>இதனிடையே நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிய, கும்பகோணத்தில் இருந்து கைலாஷ் யாத்திரைக்கு சென்ற 57 பேரில் இதுவரை 21 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.  அவர்கள் இரவு சென்னை வருவார்கள் என தகவல் வெளியாகி இருந்தது.</p> <h2>சென்னை வருகை</h2><p>இந்த நிலையில், தமிழக அமைச்சர்கள் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் ராஜ்மோகன், வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் க.தென்னரசு, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத் ஆகியோர் டெல்லியில், மத்திய அரசின் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியை சந்தித்தனர்.</p><p>அப்போது, நேபாளத்திற்கு சுற்றுலா சென்றிருந்த தமிழர்களை மீட்டு பாதுகாப்பாக அழைத்து வருதல் தொடர்பாக மத்திய அரசின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் நேபாளத்திலுள்ள இந்திய தூதரகம் மூலம் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப்பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.</p> <h2>உறவினர்கள் வரவேற்பு</h2><p>இந்நிலையில் காத்மண்டுவில் இருந்து மதியம் 2.15 மணிக்கு, 21 தமிழர்களுடன் புறப்பட்ட இண்டிகோ விமானம் மதியம் 3.45 மணிக்கு புதுடெல்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தது.  இதன்பின்னர் 21 தமிழர்கள் 21 பேரையும் தமிழக அமைச்சர்கள் நேற்று (28.8.2026) நேரில் வரவேற்றனர்.</p><p>இதன்பின்னர் இரவு 8 மணியளவில் டெல்லியில் இருந்து புறப்பட்ட அவர்கள், இன்று இரவு 11.15 மணியளவில் சென்னையை வந்தடைந்தனர்.  விமான நிலையம் வந்த 21 பேரையும் தமிழக அமைச்சர்கள் என்.ஆனந்த், சரத்குமார் ஆகியோர் நேரில் வரவேற்றனர்.  மீட்கப்பட்ட 21 நபர்களும் திருச்சி, மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவர்.  அவர்களை இனிப்புகள் வழங்கி உறவினர்கள் வரவேற்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>தமிழகம் முழுவதும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-actions-were-taken-by-the-singapenn-lioness-special-task-force-across-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-actions-were-taken-by-the-singapenn-lioness-special-task-force-across-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">1d7a227c-849f-4d4c-9981-fd5e3eaed2f0</guid><pubDate>Fri, 28 Aug 2026 16:28:38 +0000</pubDate><atom:updated>2026-08-28T16:28:38.769Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,TN Police,Singapen Athiradi Padai,சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை,சிங்கப்பெண் அதிரடிப்படை,Singapen Special Task Force</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/lspzfpjm/sur.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/lspzfpjm/sur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மாநிலம் முழுவதும் அடையாளம் காணப்பட்ட 12,921 பாதிக்கப்படக்கூடிய இடங்களில் கண்காணிப்பு மற்றும் தடுப்பு ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>சமூக விழிப்புணர்வு</h2><p>இதுதொடர்பாக <a href="https://www.dailythanthi.com/topic/chennai">சென்னை</a> காவல்துறை தலைமை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p>தமிழ்நாடு காவல்துறையின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை (Singappen Special Force SSF), பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், விரைவான தலையீடு, குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், தீவிர ரோந்துப் பணி, சமூக விழிப்புணர்வு மற்றும் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுடன் ஒருங்கிணைந்த செயல்பாடு ஆகியவற்றின் மூலம் மாநிலம் முழுவதும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.</p><h2>3 பெண்கள், 7 குழந்தைகள்</h2><p>21.08.2026 முதல் 27.08.2026 வரை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மாவட்ட களப்பிரிவுகள் 252 புகார்களுக்கு சம்பவ இடம் சென்று விசாரனை மேற்கெள்ளப்பட்டுள்ளது. 15 குற்ற வழக்குகள் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், காணாமல் போன 3 பெண்கள் மற்றும் 7 குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவர்கள் பாதுகாப்பாக அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.</p><h2>3,391 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்</h2><p>பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடையே 3,391 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும், மாநிலம் முழுவதும் அடையாளம் காணப்பட்ட 12,921 பாதிக்கப்படக்கூடிய இடங்களில் கண்காணிப்பு மற்றும் தடுப்பு ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.</p><h2>குழந்தை திருமணங்கள்</h2><p>பாதிக்கப்படக்கூடிய நபர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பல்வேறு தலையீட்டு நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. இவ்வாரத்தில், அறிவுசார் குறைபாடுகள் கொண்ட 5 நபர்கள் மீட்கப்பட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு மற்றும் தேவையான ஆதரவு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், 7 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், பள்ளிப் படிப்பை இடைநிறுத்திய 53 குழந்தைகள் மீண்டும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்படுவதற்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டன.</p><h2>வழக்குகள் பதிவு</h2><p>சென்னை, கள்ளகுறிச்சி, திருப்பூர், தேனி, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, ராமநாதபுரம், திருவள்ளுர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விரைவான தலையீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. </p><p>இந்நடவடிக்கைகளின் அடிப்படையில் (POCSO ACT) தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் (TNPHW), பாரதிய நியாய சன்ஹிதா (BNS), குழந்தைத்திருமணத் தடுப்புச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் (IT Act) உள்ளிட்ட தொடர்புடைய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. </p><p>மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதுடன், குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டது. சம்மந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டனர்.</p><h2>பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு</h2><p>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் தொடர்ச்சியான களப்பணிகள், அதன் அடிப்படை அணுகுமுறையான "தடுப்பு பாதுகாப்பு நம்பிக்கை உருவாக்குதல்" என்பதை பிரதிபலிக்கின்றன.</p><p>களத்தில் கண்கூடாகத் தெரியும் காவல் பணி, புகார்களுக்கு விரைவான நடவடிக்கை, குற்றத்தடுப்பு நடவடிக்கைகள், சமூகப் பங்களிப்பு மற்றும் ஒருங்கிணைந்த சட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம், தமிழகம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பையும், பொதுமக்களின் நம்பிக்கையையும் மேலும் வலுப்படுத்தி, பாதுகாப்பான மற்றும் அச்சமற்ற தமிழகத்தை உருவாக்குவதில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடர்ந்து முக்கிய பங்காற்றி வருகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சட்டசபைக்கு 2 நாள் விடுமுறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/2-day-holiday-for-the-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/2-day-holiday-for-the-assembly#comments</comments><guid isPermaLink="false">c1bc667a-446c-4bf6-8441-4e5e034a8702</guid><pubDate>Fri, 28 Aug 2026 16:08:54 +0000</pubDate><atom:updated>2026-08-28T16:08:54.438Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,விடுமுறை,Holiday,தமிழக சட்டசபை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/473korc6/assambly33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
சட்டசபை]]></media:title><media:description type="html"><![CDATA[ 
சட்டசபைக்கு 2 நாள் விடுமுறை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/473korc6/assambly33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபை கூட்டம் கடந்த 5ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் 2026-27ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் 6ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து சட்டசபை கூட்டத்தொடரில் தற்போது மானியக்கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. </p><p>இந்த நிலையில், <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">சட்டசபை</a>க்கு நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் விடுமுறை ஆகும். 31-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை ஆகிய துறைகள் மீதான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.</p><p>துறையின் அமைச்சர்கள் விக்னேஷ், ஜெகதீஷ்வரி, வினோத் ஆகியோர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டவுடன் எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். அதன்பின்னர் அவர்களுடைய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலுரை வழங்குவார்கள்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் கேட்பாரற்று கிடந்த 5,543 வாகனங்கள் மின்னணு முறையில் ஏலம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/5543-abandoned-vehicles-auctioned-online-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/5543-abandoned-vehicles-auctioned-online-in-chennai#comments</comments><guid isPermaLink="false">459dd2fb-eb48-4d3d-beed-5bfdfd08570a</guid><pubDate>Fri, 28 Aug 2026 16:04:32 +0000</pubDate><atom:updated>2026-08-28T16:04:32.886Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,auction,வாகனங்கள்,ஏலம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/lllmvnpg/Untitled-11.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/lllmvnpg/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை நகரில் கேட்பாரற்று சாலையில் கிடக்கும் வாகனங்களை, போலீசார் கைப்பற்றி வருகிறார்கள். அவ்வாறு கைப்பற்றப்பட்ட 5 ஆயிரத்து 543 வாகனங்கள், சென்னை மாநகராட்சி மூலம் ஏலத்தில் விடப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.</p><p>இவற்றில் மதிப்பீடு செய்யப்பட்ட 1,936 வாகனங்கள் முதல்கட்டமாக இன்று மின்னணு முறையில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. மீதி உள்ள 3,607 வாகனங்களும் முறையாக மதிப்பீடு செய்யப்பட்டு அடுத்தகட்டமாக ஏலத்தில் விடப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.</p><p>இதேபோல, போதைப்பொருள் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 81 மோட்டார் சைக்கிள்கள், 12 ஆட்டோக்கள் உள்ளிட்ட 102 வாகனங்களும், கோர்ட்டில் முறையாக அனுமதி பெற்று மின்னணு வாயிலாக விரைவில் ஏலத்தில் விடப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ஓணம் பண்டிகை: திருவனந்தபுரம்-சந்திரகாச்சி இடையே நாளை சிறப்பு ரெயில் இயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-festival-special-train-to-run-between-thiruvananthapuram-and-santragachi-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-festival-special-train-to-run-between-thiruvananthapuram-and-santragachi-tomorrow#comments</comments><guid isPermaLink="false">4713da02-ae37-43fd-9fa3-9fef3d6c7c3e</guid><pubDate>Fri, 28 Aug 2026 15:56:48 +0000</pubDate><atom:updated>2026-08-28T15:56:48.187Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thiruvananthapuram,திருவனந்தபுரம்,சந்திரகாச்சி,Santragachi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/esyuol0t/Untitled-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/esyuol0t/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>ஓணம் பண்டிகையையொட்டி பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.</p><p>அதன்படி, திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்தில் இருந்து நாளை (சனிக்கிழமை) மதியம் 2.15 மணிக்கு மேற்குவங்க மாநிலம் சந்திகாச்சிக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண்-06058) இயக்கப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வால்பாறை அருகே ருசிகரம்: பலா மரத்தில் இருந்து பழத்தை பறிக்க போராடிய காட்டு யானை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/delicious-struggle-near-valparai-wild-elephant-plucks-jackfruit-from-tree</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/delicious-struggle-near-valparai-wild-elephant-plucks-jackfruit-from-tree#comments</comments><guid isPermaLink="false">daffc091-7c01-4905-b83d-7927dc13c8d3</guid><pubDate>Fri, 28 Aug 2026 15:38:40 +0000</pubDate><atom:updated>2026-08-28T15:38:40.029Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வால்பாறை,Valparai,காட்டு யானை,wild elephant,Jackfruit,பலாப்பழம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/ahj1zlgq/Untitled-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/ahj1zlgq/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வால்பாறை,</p><p>கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை அருகே சின்னக்கல்லாறு, பெரியகல்லாறு, சிங்கோனா ஆகிய எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.</p><p>இந்த நிலையில் இன்று மதியம் ஆண் காட்டு யானை ஒன்று சின்னக்கல்லாறு நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் உள்ள குடியிருப்பு பகுதியில் புகுந்தது. அங்குள்ள பலா மரத்தில் இருந்து பழத்தை பறிக்க முயற்சித்தது. ஆனால் எப்படி பறிப்பது என தெரியாமல் சிறிது நேரம் பலா மரத்தின் அடியிலேயே சுற்றி வந்தது.</p><p>பின்னர் பலா மரத்தை தலையால் முட்டி ஆட்டிப்பார்த்தது. அப்படியாவது மரத்தில் இருந்து பலாப்பழம் கீழே விழும் என்று எதிர்பார்த்தது. ஆனால் பலாப்பழம் கீழே விழவில்லை. இதனால் பொறுமையை இழந்த காட்டு யானை பலா மரத்தின் மீது முன்னங்கால்களை தூக்கி வைத்து துதிக்கையால் எட்டி பலாப்பழத்தை பறித்தது. தொடர்ந்து பசியாற அந்த பழத்தை ருசித்து தின்றது. இறுதியாக அந்த யானையின் ஒரு மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது.</p><p>இதை அந்த பகுதியில் தோட்ட பணியில் இருந்த தொழிலாளர்கள், பாதுகாப்பு பணியில் இருந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் கண்டு மெய்சிலிர்த்து போயினர்.</p>]]></content:encoded></item><item><title>இரவில் வடமாநில நபர்களுக்கு பொருட்கள் வினியோகம் ; ரேஷன் கடை பணியாளர் பணியிடை நீக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ration-shop-worker-suspended</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ration-shop-worker-suspended#comments</comments><guid isPermaLink="false">d496c3a5-62d0-4ce9-87e7-b92837d8619b</guid><pubDate>Fri, 28 Aug 2026 15:37:34 +0000</pubDate><atom:updated>2026-08-28T15:37:34.954Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thiruvallur,பணியிடை நீக்கம்,suspended,ரேஷன் கடை ஊழியர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/xksbrgwd/susupend33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/xksbrgwd/susupend33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை, </p><p>திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், உளுந்தை கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் கடந்த 23-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தில் ரேஷன் கடையை இரவு 8 மணியளவில் திறந்து வைத்து அப்பகுதியில் தங்கி இருக்கும் வடமாநில நபர்களுக்கு சட்ட விரோதமாக ரேஷன் பொருட்களை கடை விற்பனையாளர் வினியோகம் செய்ததாகவும், இவர் தொடர்ச்சியாக அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்து சட்டவிரோதமாக வடமாநில நபர்களுக்கு விற்பனை செய்வதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது.</p><p>இது குறித்து துறை ரீதியிலான நடவடிக்கை மேற்கொண்ட கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகள் உளுந்தை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%20">ரேஷன் கடை </a>விற்பனையாளர் அருள் என்பவரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பரந்தூருக்கு ஒரு நியாயம்; ஓசூருக்கு ஒரு நியாயமா?; முதல்-அமைச்சருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/justice-for-paranthur-justice-for-hosur-nainar-nagendran-questions-the-chief-minister</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/justice-for-paranthur-justice-for-hosur-nainar-nagendran-questions-the-chief-minister#comments</comments><guid isPermaLink="false">9d87b9db-8684-4449-9f36-1280dcc4c536</guid><pubDate>Fri, 28 Aug 2026 15:26:20 +0000</pubDate><atom:updated>2026-08-28T15:26:20.070Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/gd9j1gv0/29.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/gd9j1gv0/29.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை.</p><p>தமிழக பாஜக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/nainar-nagendran">நயினார் நாகேந்திரன்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தனது தனிப்பட்ட காரணங்களுக்காக தமிழகத்தின் வளர்ச்சியை முதல்-அமைச்சர் முடக்குவது நியாயமல்ல!</p><p>கடந்த சில நாட்களுக்கு முன்பு, பரந்தூரில் விமான நிலையம் கொண்டு வந்தால் "விவசாய நிலங்கள் பாதிக்கப்படும்" என்று கூறி, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதாக சட்டமன்றத்தில் அறிவித்தார். முதல்-அமைச்சர் விஜய் அவர்கள். ஆனால், இன்று அதே சட்டமன்றத்தில், விவசாய நிலங்களை அழித்து ஓசூரில் விமான நிலையம் அமைக்க வேண்டாம் என்ற அதிமுக எம்.எல்.ஏ.  பாலகிருஷ்ண ரெட்டி அவர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளித்த வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், "ஓசூரில் விமான நிலையம் அமைக்க வேண்டுமென்றால், விவசாய நிலங்களை எடுத்துத்தான் ஆக வேண்டும்: வேறு வழியில்லை"என்று கூறியுள்ளார்.</p><h2>உண்மைக் காரணம் என்ன....</h2><p>எதற்கு இத்தனை பித்தலாட்டங்கள்? எதற்கு இந்த இரட்டை வேடம்? வளர்ச்சித் திட்டங்களுக்காக தமிழகத்தின் மற்ற விவசாய நிலங்களை கையகப்படுத்த தயாராக இருக்கும் தவெக அரசு, பரந்தூர் விவசாய நிலங்கள் மீது மட்டும் தனிக் கரிசனம் காட்டுவது போல நாடகமாடுவது ஏன்? ஏற்கனவே 1700 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட பரந்தூரில் விமான நிலையம் அமையவே கூடாது என முதல்-அமைச்சர் விஜய் அவர்கள் பிடிவாதம் பிடிப்பதன் உண்மைக் காரணம் என்ன? விவசாய நிலங்கள் காரணமாகவே பரந்தூர் திட்டம் நிராகரிக்கப்படுகிறது என்றால். ஓசூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கும் அதே விதி பொருந்தும் தானே?</p><p>இரும்புக்காட்டுக்கோட்டை சிப்காட ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் உள்ளிட்ட பெரும் தொழில் நகரங்களை இணைக்கும் படியாகவும், சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகிலேயும் உள்ள பரந்தூரில், விமான நிலையம் அமைப்பதில் தவெக அரசுக்கு என்ன சிக்கல்? அனைத்து வகைகளிலும் பொருத்தமாக இருக்கும் பரந்தூரை ஓரம்கட்டிவிட்டு, ஓசூரில் புதிதாக விமான நிலையம் அமைத்தே தீருவோம் என கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி சட்டமன்றத்தில் சபதம் எடுக்கிறார் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அவர்கள். இது என்ன கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலையும் கதை? எனவே. தனது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்காக தமிழகத்தின் வளர்ச்சியை முடக்குவது துளியும் நியாயமல்ல என்பதை முதல்-அமைச்சர் விஜய் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வி.சி.க. நிர்வாகி கொலை:  குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு - தாம்பரம் போலீசார் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/murder-of-vck-functionary-5-special-teams-formed-to-apprehend-the-culprits-tambaram-police</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/murder-of-vck-functionary-5-special-teams-formed-to-apprehend-the-culprits-tambaram-police#comments</comments><guid isPermaLink="false">67185860-468f-4345-be44-04777745d9e9</guid><pubDate>Fri, 28 Aug 2026 15:24:35 +0000</pubDate><atom:updated>2026-08-28T15:24:35.291Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,தமிழகம்,Tambaram,தாம்பரம்,Murder case,VCK,கொலை சம்பவம்,விசிக நிர்வாகி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/ihws17h3/tambara.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/ihws17h3/tambara.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வி.சி.க. நிர்வாகி கொல்லப்பட்ட சம்பவத்தில், தடயவியல் குழுவினர் மூலம் சம்பவ இடத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>வெட்டிக்கொலை</h2><p>இதுதொடர்பாக <a href="https://www.dailythanthi.com/topic/tambaram">தாம்பரம்</a> மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>திருநீர்மலை பிரதான சாலையில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை</p><p>28.08.2026 அன்று மதியம் சுமார் 14.15 மணியளவில், சங்கர் நகர் காவல் எல்லைக்குட்பட்ட திருநீர்மலை பிரதான சாலையில் உள்ள மன்ற கட்டிடத்திற்குள், அன்பழகன் (எ) மைனகுட்டி, வ/40, என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். </p><h2>கொலை வழக்குகள்</h2><p>நாகல்கேணியை சேர்ந்த இவர், தற்போது குடும்பத்தினருடன் கே.கே.நகரில் வசித்து வந்ததுடன், உள்ளூர் குவாரியில் கட்டிட வேலைக்கான சரளை மணலை (Gravel) கையாளும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது 2009 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட இரண்டு கொலை வழக்குகள் உட்பட மொத்தம் 14 குற்ற வழக்குகள் உள்ளன. </p><h2>அடையாளம் தெரியாத நபர்கள்</h2><p>முதற்கட்ட விசாரணையில், அன்பழகன் காலை சுமார் 9 மணியளவில் பணிக்காக திருநீர்மலை பிரதான சாலைக்கு வந்து, மதியம் 13.45 மணி வரை தனது நண்பர்களான பிரபு மற்றும் பாலாஜியுடன் மன்றக் கட்டிடத்தில் இருந்துள்ளார். அவர்கள் மதிய உணவிற்காக வெளியே சென்ற நிலையில், பிரபு சுமார் 14.30 மணியளவில் மீண்டும் அங்கு வந்தபோது, கத்திகளுடன் வந்த 4 முதல் 5 பேர் கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் கட்டிடத்திற்குள் செல்வதைக் கண்டு சத்தமிட்டுள்ளார்.</p><p>அக்கும்பல் பிரபுவை மிரட்டி தடுத்துவிட்டு, கட்டிடத்திற்குள் இருந்த அன்பழகனை கொடூரமாகத் தாக்கி கொலை செய்துவிட்டு, ஆட்டோ ரிக்ஷா மற்றும் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது.</p><h2>5 தனிப்படைகள்</h2><p>இச்சம்பவம் குறித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தடயவியல் குழுவினர் மூலம் சம்பவ இடத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளையும் அவர்கள் பயன்படுத்திய வாகனங்களையும் அடையாளம் காணவும், கொலையாளிகளை விரைந்து கைது செய்யவும் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சமூகநீதி கணக்காய்வை தமிழ்நாடு அரசு நடத்தும் - அமைச்சர் சம்பத்குமார் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-to-conduct-social-justice-audit-minister-sampath-kumar-informs</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-to-conduct-social-justice-audit-minister-sampath-kumar-informs#comments</comments><guid isPermaLink="false">b32d09d1-1491-4176-a607-df4e7641e1b7</guid><pubDate>Fri, 28 Aug 2026 15:21:00 +0000</pubDate><atom:updated>2026-08-28T15:21:00.434Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,சாதி வாரி கணக்கெடுப்பு,அமைச்சர் சம்பத்குமார்,minister sambathkumar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/8i3wiru8/smabathakumar33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் சம்பத்குமார் ]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/8i3wiru8/smabathakumar33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டசபையில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிக பிற்படுத்தப்பட்டோர் நலன் துறை அமைச்சர் வே.சம்பத்குமார் பேசியதாவது:-</p><p>இடஒதுக்கீடு சம்பந்தமாக விவாதம் சென்றது. பெரியார் வழியில் எல்லோருக்கும் எல்லாம் என்ற அணுகுமுறையை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு சமூகத்தினருக்கும் விகிதாசார இடப்பங்கீடு உறுதி செய்து, உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதே உண்மையான சமூகநீதி என்பது இந்த அரசின் அடிப்படை கொள்கை ஆகும்.</p><p>இதனை நிறைவேற்ற சாதிவாரி கணக்கெடுப்பை மக்கள் தொகை கணக்கெடுப்புடன் இணைந்து விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறது. மத்திய அரசின் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20">சாதி வாரி கணக்கெடுப்பு </a>முடிந்த பிறகு, நம்முடைய அரசு சமூகநீதி கணக்காய்வை நடத்தும்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>16 வயது சிறுமிக்கு திருமணம்: வாலிபர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/marriage-of-a-16-year-old-girl-case-registered-against-five-individuals-including-a-young-man</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/marriage-of-a-16-year-old-girl-case-registered-against-five-individuals-including-a-young-man#comments</comments><guid isPermaLink="false">2dd3ae18-a207-4bab-8142-79f77bd5d10c</guid><pubDate>Fri, 28 Aug 2026 15:18:55 +0000</pubDate><atom:updated>2026-08-28T15:18:55.392Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>வழக்குப்பதிவு,case registered,குழந்தை திருமணம்,child marriage</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/apbxzndi/13.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/apbxzndi/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே 16 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் நடந்ததாக கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றிய சமூக நலத்துறை அலுவலர் தனத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசாருடன் அலுவலர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுமியை பெற்றோர் கட்டாயப்படுத்தி கடந்த ஜூலை 5-ந்தேதி கோவிலில் வைத்து முருகன் என்பவ ருக்கு திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது. இதுகுறித்து சமூக நலத்துறை அலுவலர் தனம் சங்ககிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>அதேபோல,  திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா மாமண்டூர் முத்துமாரியம்மன் கோவிலில் கடந்த ஜூன் மாதம் 18-ந்தேதி ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை வந்தவாசி தாலுகாவை சேர்ந்த ஞானமுருகனின் மகன் பெருமாள் (வயது 22) திருமணம் செய்து கொண்டார்.</p><p>குழந்தை திருமணம் குறித்து ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா ஊரக அலுவலர் சித்ரா என்பவருக்கு தகவல் வந்தது. உடனே அவர் அரக்கோணம் அனைத்து மகளிர் போலீசில் பெருமாள், அவரின் திருமணத்துக்கு ஏற்பாடு செய்த பெற்றோர் மீது புகார் செய்தார். தொடர்ந்து சிறுமியை மீட்டு வாலாஜா ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தங்க வைத்தார். இந்த வழக்கை திருமணம் நடந்த போலீஸ் எல்லையான செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.</p>]]></content:encoded></item><item><title>சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு 31-ந்தேதி சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-tokens-allotted-at-subamuhurtha-day-on-31st</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-tokens-allotted-at-subamuhurtha-day-on-31st#comments</comments><guid isPermaLink="false">5e3d915e-9e5d-412d-b411-174d7188d818</guid><pubDate>Fri, 28 Aug 2026 14:47:32 +0000</pubDate><atom:updated>2026-08-28T14:47:32.826Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சுபமுகூர்த்த தினம்,கூடுதல் டோக்கன்கள்,சார்பதிவாளர் அலுவலகம்,Sub-Registrar&apos;s Office</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/grtkkw7n/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சார்பதிவாளர் அலுவலகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/grtkkw7n/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று பதிவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினமான 31.08.2026 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.</p><p>எனவே, ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினமான 31.08.2026 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகள், கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>புதுப்பொலிவுடன் குளிரூட்டப்பட்ட சென்னை கதர் அங்காடி: அமைச்சர் விஜய் பாலாஜி ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/air-conditioned-chennai-khadi-emporium-gets-a-facelift-minister-vijayabaskar-inspects-the-facility</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/air-conditioned-chennai-khadi-emporium-gets-a-facelift-minister-vijayabaskar-inspects-the-facility#comments</comments><guid isPermaLink="false">57edc855-5a93-4b08-b098-abcc1cb146c4</guid><pubDate>Fri, 28 Aug 2026 14:25:22 +0000</pubDate><atom:updated>2026-08-28T14:25:22.741Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Vijayabaskar,Minister C. Vijayabaskar,விஜய் பாலாஜி,அமைச்சர் விஜய் பாலாஜி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/5vs0ki71/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/5vs0ki71/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>புதுப்பொலிவுடன் குளிரூட்டப்பட்ட சென்னை கதர் அங்காடியை மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் ம. விஜய் பாலாஜி பார்வையிட்டார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>சென்னை கதர் அங்காடி</h2><p>சென்னை குறளகத்தின் தரைத்தளத்தில் செயல்பட்டு வந்த கதர் அங்காடி (காதி கிராப்ட்), தற்போது குறளகம் அருகிலுள்ள சென்னை இல்லம் முதல் தளத்தில் கடந்த ஓராண்டாக செயல்பட்டு வருகிறது.</p><p>வாடிக்கையாளர்களின் வசதியையும், சிறந்த விற்பனைச் சூழலையும் ஏற்படுத்தும் வகையில், இக்கதர் அங்காடி தற்போது குளிரூட்டப்பட்டு, புதுப்பொலிவுடன் நவீன முறையில் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.</p><p>இக்கதர் அங்காடியில் அனைத்து வகையான கதர், பாலியஸ்டர் மற்றும் பட்டு ரகங்களும் 30 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.</p><h2>அங்காடியில் ஆய்வு</h2><p>மேலும், கிராமத் தொழில் பொருட்களான பல்வேறு வகையான சோப்புகள், மார்த்தாண்டம் தேன், காலணி வகைகள், பூஜைப் பொருட்கள், சுகப்பிரியா வலி நிவாரண தைலம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும், ஒவ்வொரு மாவட்டத்தின் சிறப்பையும் எடுத்துக்காட்டும் வகையிலான பொருட்களும் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.</p><p>கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் ம. விஜய் பாலாஜி 27.08.2026 அன்று <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை </a>கதர் அங்காடியைப் பார்வையிட்டு, அங்காடியின் விற்பனையை மேலும் பன்மடங்கு உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.</p><p>இந்நிகழ்வின்போது, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை அரசு முதன்மைச் செயலாளர் தி.ந. வெங்கடேஷ், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் தலைமைச் செயல் அலுவலர் முனைவர் சீ. சுரேஷ்குமார், கைத்தறித் துறை ஆணையர் பி. உமா மகேஸ்வரி மற்றும் வாரிய அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய் புழல் சிறையில் ஆய்வு மேற்கொண்டது ஏன்? - வேல்முருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-did-chief-minister-vijay-conduct-an-inspection-at-puzhal-prison-velmurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-did-chief-minister-vijay-conduct-an-inspection-at-puzhal-prison-velmurugan#comments</comments><guid isPermaLink="false">72faddcd-007c-4fcf-acc4-134aba424523</guid><pubDate>Fri, 28 Aug 2026 14:12:16 +0000</pubDate><atom:updated>2026-08-28T14:12:16.891Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Velmurugan,வேல்முருகன்,தி.வேல்முருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/x4d57ior/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/x4d57ior/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டின் சிறைகளில் வாடும் இஸ்லாமிய மற்றும் அரசியல் சிறைவாசிகள், ஈழத் தமிழ்ச் சிறைவாசிகள் உள்ளிட்ட நீண்டகால சிறைவாசிகளின் விடுதலைக்கான சட்டரீதியான நடவடிக்கைகளின் தொடக்கமாக முதல்-அமைச்சர் மாற்ற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>புழல் சிறையில் ஆய்வு</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் புழல் சிறையில் மேற்கொண்ட ஆய்வு, சிறையின் நிர்வாகம், பாதுகாப்பு, உணவு, மருத்துவம் உள்ளிட்ட வசதிகளைப் பார்வையிட்டதோடு நின்றுவிடக் கூடாது. அந்தச் சிறைக்குள் நீண்டகாலமாக வாடும் சிறைவாசிகளின் நிலை, அவர்களின் விடுதலை மற்றும் மறுவாழ்வு குறித்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கும் இந்த ஆய்வு வழிவகுக்க வேண்டும்.</p><p>ஆண்டுகளைக் கடந்து சிறைக்குள் வாழ்வைத் தொலைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களின் எதிர்காலத்திற்கான முடிவாகவும் இந்த ஆய்வு அமைய வேண்டும்.</p><p>சிறைவாசிகளும் இந்தச் சமூகத்தின் மனிதர்கள்தான். குற்றச்சாட்டோ, தண்டனையோ ஒருவரின் மனித உரிமையையும், மீண்டும் சமூகத்தில் வாழ்வதற்கான வாய்ப்பையும் நிரந்தரமாகப் பறித்துவிடக் கூடாது.</p><h2>ஆக்கப்பூர்வமான நடவடிக்கை தேவை</h2><p>10 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை மற்றும் ஆயுள் தண்டனை சிறைவாசிகளாக சிறையில் உள்ள இஸ்லாமிய மற்றும் அரசியல் சிறைவாசிகளை, எந்தவித நிபந்தனைகளும் இன்றி உடனடியாக விடுதலை செய்வதற்குத் தேவையான சட்டரீதியிலான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று, பல ஆண்டுகளாகத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தி வருகின்றது.</p><p>விசாரணை முடிவடையாமலேயே பல ஆண்டுகள் சிறையில் கழிப்பது, சட்டத்தின் பார்வையில் விசாரணைக் காவலாக இருந்தாலும், அந்த மனிதரின் வாழ்க்கையில் அது மறைமுகத் தண்டனையாகவே மாறுகிறது.</p><p>எனவே, இத்தகைய வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான சட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.</p><p>அதேபோல், நீண்டகாலமாக சிறையில் இருப்பவர்களின் வழக்குகள் மற்றும் விடுதலைக்கான தகுதிகளைப் பாரபட்சமின்றி மறுபரிசீலனை செய்வதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதிகள், சட்ட வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் அடங்கிய சுயாதீன மறுபரிசீலனை ஆணையம் அமைக்கப்பட வேண்டும். ஆதாரங்கள் வலுவற்ற நிலையில் உள்ளவர்கள், நீண்டகால விசாரணைக் காவலில் இருப்பவர்கள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை அளித்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.</p><h2>வழக்குகளை ரத்து செய்க..</h2><p>அதேபோல், பல்வேறு வழக்குகளின் கீழ் நீண்டகாலமாக சிறையில் வாடும் ஈழத் தமிழர்களின் நிலையும் மனிதநேயக் கண்ணோட்டத்துடன் பரிசீலிக்கப்பட வேண்டும். பல ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் அவர்களின் வாழ்க்கையை மேலும் சிறைக்குள் முடக்காமல், நல்லெண்ணத்தின் அடிப்படையில் உரிய சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து, அவர்கள் தங்களுடைய குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்து கண்ணியமான வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்பை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.</p><p>குறிப்பாக, வயது மூப்பை அடைந்து, உடல் வலிமையை இழந்து, தங்களுடைய அன்றாடத் தேவைகளைக்கூட தாங்களே நிறைவேற்ற முடியாத நிலையில் இருக்கும் சிறைவாசிகளின் நிலை மனிதநேயக் கண்ணோட்டத்தில் உடனடியாகப் பரிசீலிக்கப்பட வேண்டும்.</p><p>ஒரு மனிதன் பத்து, பதினைந்து ஆண்டுகளைச் சிறையில் கழிப்பது என்பது நாட்காட்டியில் கடந்துபோகும் காலம் மட்டுமல்ல. அந்தக் காலத்துடன் அவரது இளமை, குடும்ப உறவுகள், குழந்தைகளின் வளர்ச்சி, பெற்றோரின் முதுமை என ஒரு வாழ்க்கையின் பெரும்பகுதியே அவரை விட்டு நகர்ந்துவிடுகிறது.</p><h2>சிறைவாசத்தை நீட்டிப்பது சரியானதல்ல</h2><p>எனவே, தண்டனையின் நோக்கம் நிறைவேறிய பின்னரும் சிறைவாசத்தை நீட்டிப்பது சரியானதல்ல. சட்டத்தின் வரம்புக்குள் மனிதநேயத்துடன் மீண்டும் சமூகத்தில் வாழ்வதற்கான வாய்ப்பை வழங்குவதுதான் நாகரிகமான அணுகுமுறை.</p><p>விடுதலை பெறுபவர்கள் சமூகத்தில் கண்ணியத்துடன் மீண்டும் நிலைபெறுவதற்கான வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி, குடும்பத்துடன் மீளிணைதல், ஆலோசனை மற்றும் முழுமையான மறுவாழ்வுத் திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.</p><p>முதலமைச்சர் விஜய் அவர்கள் புழல் சிறையில் நேரில் பார்த்த நிலைமைகள், அரசு கோப்புகளில் முடங்கிக் கிடக்கும் எண்ணிக்கைகளாக மட்டும் மாறக்கூடாது. அவை மனிதர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் அரசின் முடிவுகளாக மாற வேண்டும்.</p><h2>சட்டரீதியான நடவடிக்கை..</h2><p>எனவே, புழல் சிறை ஆய்வை ஒரு சம்பிரதாய நிகழ்வாகக் கடந்து செல்லாமல், 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டின் சிறைகளில் வாடும் இஸ்லாமிய மற்றும் அரசியல் சிறைவாசிகள், ஈழத் தமிழ்ச் சிறைவாசிகள் உள்ளிட்ட நீண்டகால சிறைவாசிகளின் விடுதலைக்கான சட்டரீதியான நடவடிக்கைகளின் தொடக்கமாக முதல்-அமைச்சர் மாற்ற வேண்டும் என்று <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழக </a>வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம் – ரூ.100 கோடி ஒதுக்கீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monsoon-preparedness-work-intensifies-in-chennai-rs-100-crore-allocated</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monsoon-preparedness-work-intensifies-in-chennai-rs-100-crore-allocated#comments</comments><guid isPermaLink="false">64a13da1-4b0e-4d32-8d72-65a63b839d94</guid><pubDate>Fri, 28 Aug 2026 14:05:10 +0000</pubDate><atom:updated>2026-08-28T14:05:10.377Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,பருவமழை முன்னெச்சரிக்கை,Monsoon Precautions</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/04zur98c/28.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/04zur98c/28.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>பெருநகர <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">சென்னை மாநகராட்சி</a> ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டர் இன்று (28.08.2026) ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.</p><p>இக்கூட்டத்தில் இணை ஆணையாளர் (பணிகள்) சரவணன், துணை ஆணையாளர்கள் சித்ரா விஜயன், (வருவாய் (ம) நிதி), அஃதாப் ரசூல், (தெற்கு வட்டாரம்), ஸ்வேதா சுமன், (வடக்கு வட்டாரம்) மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது:</p><p>பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை மற்றும் எல் நினோ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால் கட்டுதல், மழைநீர் வடிகால் இணைப்பு இல்லாத இடங்களில் இணைப்பினை ஏற்படுத்துதல், மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய்களில் தூர்வாருதல், ஆகாயத் தாமரைச் செடிகள் அகற்றுதல், நீர் நிலைகள் மேம்பாடு, ஆபத்தான நிலையில் உள்ள மரங்களின் கிளைகளைக் கத்திரித்து அகற்றுதல், நீர்த் தேக்கத் தொட்டிகள், நீர் வெளியேற்றும் மோட்டார்கள் பராமரிப்புப் பணிகள், வாகனங்கள் இயந்திரங்களை தயார்ப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><h2>ரூ.100 கோடி ஒதுக்கீடு</h2><p>இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, வடகிழக்குப் பருவமழை மற்றும் எல் நினோ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரூ.22.46 கோடி மதிப்பீட்டில் 1,671 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகாலில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p>பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்காக வார்டு ஒன்றுக்கு ரூ.5 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாலை ஒட்டுப் பணிகள் மற்றும் சாலையை சீர்செய்வதற்காக பகுதி வாரியாக ஒப்பம் கோரப்பட்டுள்ளது. இதற்காக ரூ.22 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெளியேற்றுவதற்கு ஏதுவாக 150 எண்ணிக்கையிலான 100 HP பம்புகள் மற்றும் வாடகை 500 ட்ராக்டர் மீது பொறுத்தப்பட்ட பம்புகள் அடிப்படையில் பயன்படுத்துவதற்கு மொத்தம் ரூ.26.53 கோடி மதிப்பீட்டில் ஒப்பங்கள் கோரப்பட்டுள்ளன.</p><p>பெருநகர சென்னை மாநகராட்சியின் மின்சார மோட்டார்களில் ஏதேனும் பழுது இருந்தால் சரிசெய்வதற்கு மண்டலத்திற்கு ஒரு இலட்சம் வீதம் ரூ.15 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பருவமழையால் பாதிக்கப்பட்ட மக்களின் பயன்பாட்டிற்காக அத்தியாவசியப் பொருட்களை உள்ளடக்கிய 15000 எண்ணிக்கையிலான Emergency kit ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும் .</p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>ரூ.4.65 கோடி மதிப்பில் பம்ப் மற்றும் நீர்த்தேக்கத் தொட்டியை இயக்குவதற்கான தற்காலிக பணியாளர்கள் நியமித்தல். பருவமழை தொடர்பான பணிகளுக்காக, ஒரு வார்டுக்கு 5 பணியாளர்கள் வீதம் கூடுதலாக 1,000 பணியாளர்கள் நியமிக்கப்படுவர். ரூ.15 இலட்சம் மதிப்பில் ட்ரோன் மூலம் கால்வாய்களில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு பணிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பணிகளுக்காக ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p>பெருநகர சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு மண்டலத்திலும் நடைபெற்று வரும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை அலுவலர்கள் கண்காணித்து விரைந்து மேற்கொள்ள வேண்டும். நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத் துறை, சென்னை குடிநீர் வாரியம், மின்சாரத் துறை, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், ரெயில்வே துறை உள்ளிட்ட சேவைத் துறைகளுடன் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொண்டு செப்டம்பர் மாதம் இறுதிக்குள் அனைத்துப் பணிகளையும் முடித்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>12 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-till-10-pm-in-12-districts-2</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-till-10-pm-in-12-districts-2#comments</comments><guid isPermaLink="false">073acfb1-2152-42ff-ba63-e344c9fa451e</guid><pubDate>Fri, 28 Aug 2026 13:47:15 +0000</pubDate><atom:updated>2026-08-28T13:47:15.375Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/xxapnxnk/Untitled-8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/xxapnxnk/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தருமபுரி, ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, நீலகிரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பவுர்ணமி: திருவண்ணாமலையில் விடிய, விடிய கிரிவலம் சென்ற பக்தர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/full-moon-day-devotees-undertook-the-girivalam-circumambulation-at-tiruvannamalai-throughout-the-night</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/full-moon-day-devotees-undertook-the-girivalam-circumambulation-at-tiruvannamalai-throughout-the-night#comments</comments><guid isPermaLink="false">6585cd4f-3fe1-4f5f-b5cf-cb17d18ac86a</guid><pubDate>Fri, 28 Aug 2026 13:41:03 +0000</pubDate><atom:updated>2026-08-28T13:41:03.260Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,Tiruvannamalai,Girivalam,கிரிவலம்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/w6n62be7/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/w6n62be7/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை,</p><p>கிரிவலம் செல்வதற்காக பக்தர்கள் பஸ்களிலும், ரெயில்களிலும் கூட்டம், கூட்டமாக வந்தனர்.</p><h2>பவுர்ணமி கிரிவலம்</h2><p>திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட் களில் லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கிரிவலப்பாதையில் நடந்தே கிரிவலம் செல்கின்றனர். இந்த நிலையில் ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி நேற்று காலை 9.52 மணிக்கு தொடங்கியது.</p><p>பவுர்ணமியை முன்னிட்டு நேற்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் செல்லத்தொடங்கினர். பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கிரிவலம் சென்ற பக்தர்களின் கூட்டம் குறைந்து காணப்பட்டது. பின்னர் மாலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.</p><h2>லட்சக்கணக்கான பக்தர்கள்</h2><p>குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் வந்திருந்தனர். முன்னதாக நேற்று காலை முதல் அருணாசலேஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் பக்தர்கள் விரைந்து சாமி தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. மாலையில் கிரிவலம் செல்வதற்காக பக்தர்கள் பஸ்களிலும், ரெயில்களிலும் கூட்டம், கூட்டமாக வந்தனர்.</p><p>இதனால் இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. பவுர்ணமி கிரிவலம் இன்று காலை 10.59 மணிக்கு நிறைவடைந்தது. இதனால் பக்தர்கள் தொடர்ந்து விடிய, விடிய கிரிவலம் சென்றனர். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.</p><h2>சிறப்பு ரெயில்</h2><p>மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உதயகுமார் தலைமையில் போலீசார் தொடர்ந்து ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அத்துடன் சிங்கப்பெண் அதிரடிப்படையினர் கிரிவலப்பாதையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.</p><p>மேலும் சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டன. இதனை பயன்படுத்தி கிரிவலம் சென்ற பக்தர்கள் தங்கள் பகுதிக்கு எந்தவித சிரமமுமின்றி திரும்பி சென்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சிறந்த நூல் பரிசுத் திட்டம்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/best-book-prize-scheme-application-deadline-extended</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/best-book-prize-scheme-application-deadline-extended#comments</comments><guid isPermaLink="false">fc3c50e6-ba70-4557-82c6-7029f3121c16</guid><pubDate>Fri, 28 Aug 2026 13:37:20 +0000</pubDate><atom:updated>2026-08-28T13:37:20.790Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விண்ணப்பம்,Application,திட்டம்,Book,கால அவகாசம் நீட்டிப்பு,பரிசு,நூல்,Deadline extended</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/l1lf8roa/27.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/l1lf8roa/27.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சிறந்த நூல் பரிசு திட்டத்திற்கணை விண்ணப்பங்களைப் பெற அக்டோபர் 5-ந் தேதி வரை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">கால நீட்டிப்பு</a> வழங்கப்படுகிறது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>கால நீட்டிப்பு</h2><p>தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாகச் செயற்படுத்தப்படும் சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டத்தில் 2025ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நூல்களுக்கான நூலாசிரியர்களுக்கும், பதிப்பகத்தார்களுக்கும் கூடுதல் வாய்ப்பு வழங்கும் வகையில் விண்ணப்பங்கள் நிறைவுசெய்து அளிக்கப் பெறும் நாள் அக்டோபர் 5-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பெறுகிறது.</p><h2>பரிசுத்தொகை</h2><p>அவ்வகையில், 33 வகைப்பாடுகளின் வாயிலாகப் பரிசுப்போட்டிக்கு நூல்கள் வரவேற்கப்படுகின்றன. ஒவ்வொரு வகைப்பாட்டிலும் சிறந்த நூலாக ஒரு நூல் தெரிவு செய்யப்பட்டு, நூலாசிரியருக்குப் பரிசுத்தொகையாக ரூ.50,000/- அந்நூலைப் பதிப்பித்த பதிப்பகத்தாருக்குப் பாராட்டுத்தொகையாக ரூ.25,000/- என ஒரு நூலுக்கு ரூ. 75,000/- பரிசுத்தொகைகள் வழங்கப்பெறும்.</p><h2>கடைசி நாள்</h2><p>விண்ணப்பங்களை துறையின் வலைதளத்திலிருந்து (tamilvalarchithurai.tn.gov.in) இலவசமாகப் பதிவிறக்கம்செய்து பரிசுக்குரிய விதிமுறைகளின்படி விண்ணப்பங்களை நிறைவு செய்து நூல்களுடன் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாக அனுப்பப்பெற வேண்டும். விண்ணப்பங்களை அஞ்சல் வாயிலாகப் பெற 23X10 செ.மீ அளவிலான தன் முகவரியிட்ட உறையில் ரூ.10 அஞ்சல்வில்லை ஒட்டி அனுப்பியும் பெற்றுக்கொள்ளலாம்.</p><p>போட்டிக்கான விண்ணப்பத்துடன் 5 நூற்படிகளும் போட்டிக் கட்டணம் ரூ.100/- “தமிழ் வளர்ச்சி இயக்குநர், சென்னை“ (Director of Tamil Development, Chennai) என்ற பெயரில் வங்கிக் கேட்புக் காசோலை (Demand Draft) சேர்த்து அளிக்க வேண்டும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெற அக்டோபர் 5-ந் தேதி கடைசி நாளாகும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 9 இடங்களில் இன்று வெயில் சதமடித்தது</title><link>https://www.dailythanthi.com/news/weather/heatwave-in-nine-tamil-nadu-towns-today</link><comments>https://www.dailythanthi.com/news/weather/heatwave-in-nine-tamil-nadu-towns-today#comments</comments><guid isPermaLink="false">39866fa3-7657-4ff9-89b7-79c8ba8e3499</guid><pubDate>Fri, 28 Aug 2026 13:30:50 +0000</pubDate><atom:updated>2026-08-28T13:30:50.925Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Weather,வானிலை,Weather update,heat,வானிலை தகவல்,வெப்பம்,வெயில் சதம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/01r2vy1v/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ வெயில் சதம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/01r2vy1v/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்தாலும், பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. </p><p>இந்த நிலையில், தமிழகத்தில் 9 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று அதிகமாக வெப்பநிலை பதிவான இடங்கள் வருமாறு:-</p><p>மதுரை விமான நிலையம் - 104° பாரன்ஹீட் (40.0° செல்சியஸ்)</p><p>மதுரை நகரம் - 103.28° பாரன்ஹீட் (39.6° செல்சியஸ்)</p><p>வேலூர் - 102.92° பாரன்ஹீட் (39.4° செல்சியஸ்)</p><p>திருச்சி - 102.38° பாரன்ஹீட் (39.1° செல்சியஸ்)</p><p>பாளையங்கோட்டை - 102.02° பாரன்ஹீட் (38.9° செல்சியஸ்)</p><p>பரங்கிப்பேட்டை - 101.12° பாரன்ஹீட் (38.4° செல்சியஸ்)</p><p>திருத்தணி - 100.76° பாரன்ஹீட் (38.2° செல்சியஸ்)</p><p>நாகப்பட்டினம் - 100.4° பாரன்ஹீட் (38.0° செல்சியஸ்)</p><p>தஞ்சாவூர் - 100.4° பாரன்ஹீட் (38.0° செல்சியஸ்)</p>]]></content:encoded></item><item><title>வைகை அணைக்கான நீர்வரத்து நிறுத்தம்: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-inflow-to-vaigai-dam-halted-risk-of-drinking-water-shortage</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-inflow-to-vaigai-dam-halted-risk-of-drinking-water-shortage#comments</comments><guid isPermaLink="false">823598ed-f64a-4d6c-9293-2fe23176a5e3</guid><pubDate>Fri, 28 Aug 2026 13:29:31 +0000</pubDate><atom:updated>2026-08-28T13:29:31.848Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>வைகை அணை,drinking water,Vaigai River,குடிநீர் தட்டுப்பாடு</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/2r2sqa3b/11.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/2r2sqa3b/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மானாமதுரை,  </p><p>போதிய மழை இல்லாததால் வைகை ஆற்றுப்படுகை பாலைவனம் போல் காட்சியளிக்கிறது. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.</p><h2>வறட்சியின் பிடியில் வைகை</h2><p>கடந்த சில நாட்களாக போதிய மழை இல்லாத காரணத்தினாலும், தென் மாவட்டங்களில் கோடை வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருவதாலும் வைகை அணைக்கான நீர்வரத்து முற்றிலும் நின்றுபோனது. 71 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் சரிந்துள்ளதால், ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய நீராதாரமான வைகை ஆறு வறட்சியின் பிடியில் சிக்கி உள்ளது. </p><p>குறிப்பாக மழைக்காலங்களில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளமென ஆர்ப்பரித்து ஓடும் மானாமதுரை அருகே கீழப்பசலை மதகு அணை பகுதி, தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு வறண்டு பாலை வனமாக காட்சியளிக்கிறது. தடுப்பணையின் மதகுகள் அனைத்தும் துருப்பிடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. தடுப்பணையை ஒட்டியுள்ள ஆற்றுப்பகுதிகள் முழுவதும் ஆழமான வெடிப்புகளுடன் தரிசு நிலம் போல் காட்சியளிக்கின்றன.</p><h2>விவசாய பணிகள் முடக்கம்</h2><p>வழக்கமாக மதகு அணையில் மீன்பிடிக்கவும், தண்ணீரின் அழகைக் காணவும் குவியும் மக்கள் கூட்டம் இன்றி, அப்பகுதி முழுவதுமாக ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.</p><p>வைகை ஆற்று நீரை மட்டுமே பிரதான வாழ்வாதாரமாகக் கொண்ட சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களின் பாசன கண்மாய்கள், ஏரிகள் மற்றும் குளங்கள் அனைத்தும் நீர்வரத்து இன்றி வறண்டு கிடக்கின றன. இதனால் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடைபெற வேண்டிய விவசாய பணிகள் முற்றிலுமாக முடங்கியுள்ளன. நிலத்தடி நீர்மட்டம் பல நூறு அடிகள் கீழே சென்றுவிட்டதால், ஆழ்துளை கிணறுகளும் செயலிழந்து வருகின்றன.</p><h2>குடிநீர் தட்டுப்பாடு</h2><p>ஆற்றுப்படுகையில் உள்ள குடிநீர் திட்டக்கிணறுகளில் நீர்மட்டம் வற்றிவிட்டதால், கிராமப்புறங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு தலை தூக்க தொடங்கியுள்ளது. ஆற்றங்கரையோர கிராமங்களில் உள்ள ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் தவிப்பிற்கு உள்ளாகியுள்ளன.</p><p>தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு, வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மானாமதுரை மற்றும் தென் மாவட்டக் கிராமங்களுக்கு லாரிகள் மூலம் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு உரிய வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை: விசிக நிர்வாகி பட்டப்பகலில் வெட்டிக்கொலை..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-vck-functionary-hacked-to-death-in-broad-daylight</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-vck-functionary-hacked-to-death-in-broad-daylight#comments</comments><guid isPermaLink="false">0f5197b5-8534-49d3-bef9-a0d1274b6ee7</guid><pubDate>Fri, 28 Aug 2026 13:25:41 +0000</pubDate><atom:updated>2026-08-28T13:25:41.277Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,வெட்டிக்கொலை,VCK,விசிக நிர்வாகி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/g07jwyna/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/g07jwyna/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விசிக நிர்வாகி பட்டப்பகலில் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><h2>விசிக நிர்வாகி கொலை</h2><p>சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பகுதியை சேர்ந்த அன்பழகன் என்ற மைனாக்குட்டி இவர் விசிக நிர்வாகியாக இருந்து வருகிறார் . இவர் இன்று அதே பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே தலைக்கவசம் அணிந்து வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி தப்பி ஓடிவிட்டனர். உடனே அங்கிருந்த பொதுமக்கள் 108-க்கு அழைப்பு விடுத்தனர். இதனையடுத்து அங்கு ஆம்புலன்சில் வந்த மருத்துவர்கள் அவரை பரிசோதித்து உயிரிழந்ததாக தெரிவித்தனர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இது குறித்து தகவல் அறிந்த சங்கர் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலையில் ஈடுபட்ட மர்ம நபர்களை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">போலீசார் </a>வலைவீசி தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட அன்பழகன் மீது 3 கொலை வழக்குகள் உள்ளதாகவும், இதன் காரணமாக முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item></channel></rss>