<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 23 Jul 2026 03:19:37 +0000</lastBuildDate><item><title>ஜனநாயகன் ரிலீஸ் கதை எல்லாம் எனக்கு தெரியாது: துரைமுருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-dont-know-the-whole-story-of-jana-nayagan-release-duraimurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-dont-know-the-whole-story-of-jana-nayagan-release-duraimurugan#comments</comments><guid isPermaLink="false">4b4ed6bd-516b-486e-9e5b-dfed5ace15e8</guid><pubDate>Thu, 23 Jul 2026 03:13:05 +0000</pubDate><atom:updated>2026-07-23T03:13:05.881Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,Jana Nayagan,Duraimurugan,துரைமுருகன்,ஜனநாயகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/tsv95hpq/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/tsv95hpq/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>வேலூர்,</p><p>காட்பாடியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>காலை உணவு திட்டத்திற்கு முதல்-அமைச்சர் காலை உணவு திட்டம் என்றுதான் பெயர் வைத்திருந்தார் மு.க.ஸ்டாலின். ஏற்கனவே மத்திய உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் காமராஜர். அதை விரிவுப்படுத்தியவர் எம்.ஜி.ஆர். ஆகையால் அந்த திட்டம் அந்த இரண்டு பேருக்கு மட்டும்தான் பொருந்தும்.</p><p>இது முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் என்று தான் சொன்னார்கள். மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டம் என சொல்லவில்லை. ஆனால் ஏன் இப்படி மிரண்டு பெயர் வைக்கிறார்கள் என்று தெரியவில்லை. நாங்கள் பெயர்களை எதுவும் மாற்றவில்லை. உதாரணத்திற்கு அம்மா உணவகம் பெயர் மாற்றாமல் இருந்தது. அவ்வளவு பெருந்தன்மையாக நடந்து கொண்டோம். அரசியலில் இருப்பவர்களுக்கு பெருந் தன்மை தேவை. அது இவர்களிடம் இல்லை என நிரூபித்து இருக்கிறார்கள்.</p><p>தி.மு.க. அரசு கொண்டுவந்த பல திட்டங்களின் பெயரை தொடர்ந்து மாற்றுகின்றனர். அவர்களால் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த முடியவில்லை. வேறு என்ன செய்வது என்று இருக்கும் திட்டங்களின் பெயரையாவது மாற்றலாம் என மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இது அவர்களுக்கு பெருமை தரக்கூடியது அல்ல. விமர்சனங்களை முன் வைக்கும் எம்.எல்.ஏ.க்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுகின்றனர். சில நேரங்களில் இப்படி பேசினால் அதனை புறம்தள்ள வேண்டும்.</p><p>சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தாமல் புது திட்டங்களை அறிவித்து அதில் கவனம் செலுத்த வேண்டும். அது போன்று எதுவும் இந்த ஆட்சியில் இல்லை. ஜனநாயகன் ரிலீஸ் கதை எல்லாம் எனக்கு தெரியாது. பஸ்களில் பெயர் மாற்றம், வண்ணம் மாற்றம் செய்கிறார்கள். இதெல்லாம் அவர்களுக்கு பெருமை தரும் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு சிறுமை தான் தரும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக அரசுக்கு கடந்த 3 மாதங்களில் ரூ.64,945 கோடி வருவாய் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-governments-revenue-stood-at-64945-crore-over-the-past-three-months</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-governments-revenue-stood-at-64945-crore-over-the-past-three-months#comments</comments><guid isPermaLink="false">e676e46d-5a2a-4240-b658-7bc5c5f88af3</guid><pubDate>Thu, 23 Jul 2026 02:07:54 +0000</pubDate><atom:updated>2026-07-23T02:07:54.958Z</atom:updated><atom:author><atom:name>Gokul Raj B</atom:name><atom:uri>/api/author/2401541</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt,வருவாய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/b334z496/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/b334z496/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக அரசுக்கு, மாநில சரக்கு மற்றும் சேவை வரி, முத்திரைத்தாள் பதிவு கட்டணம், விற்பனை வரி, ஆயத்தீர்வை வரி, மத்திய அரசின் மானியம் போன்றவற்றின் வாயிலாக வருவாய் கிடைத்து வருகிறது. அதன்படி நடப்பு நிதியாண்டின் முதல் 3 மாதங்களில் (ஏப்ரல் முதல் ஜூன் வரை) தமிழகத்திற்கு மொத்த வரி வருவாயாக 64,944.97 கோடி ரூபாய் கிடைத்திருப்பது, மத்திய தணிக்கை துறை அறிக்கையின் தற்காலிக புள்ளிவிவரங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது.</p><p>இது, முந்தைய ஆண்டின் இதே காலத்தில், 63,755.70 கோடியாக இருந்தது. இந்தாண்டில், 1,189.27 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. இந்தாண்டில் மத்திய அரசின் மானியமும், வரி பகிர்வும் குறைந்துள்ளது. </p><p>இந்த காலத்தில் வரிகள் வாயிலாக மட்டும் 60,061.72 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. வரி அல்லாத வருவாயாக 3,172 கோடி ரூபாயும், மத்திய அரசு மானியமாக 1,710 கோடி ரூபாயும் கிடைத்துள்ளது. </p><p>கடந்த நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில், வரிகள் வாயிலாக, 56,366.76 கோடி ரூபாய் கிடைத்தது. வரி அல்லாத வருவாயாக 2,895.70 கோடி ரூபாயும், மத்திய அரசு மானியமாக 4,493.23 கோடி ரூபாயும் கிடைத்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சிக்னலுக்காக காத்திருக்க தேவையில்லை.. நெல்லையில் அனைத்து ரெயில்களையும் ஒரே நேரத்தில் இயக்கும் வசதி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-need-to-wait-for-signalsfacility-to-operate-all-trains-simultaneously-in-nellai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-need-to-wait-for-signalsfacility-to-operate-all-trains-simultaneously-in-nellai#comments</comments><guid isPermaLink="false">fdb0df84-09d6-4eea-bbe1-70ed77440611</guid><pubDate>Thu, 23 Jul 2026 01:45:14 +0000</pubDate><atom:updated>2026-07-23T01:45:14.607Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>ரெயில் சேவை,Trains,ரெயில்கள்,Train Services,நெல்லை ரெயில் நிலையம்,சிக்னல்கள்,Nellai Railway Station,signals</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/xq26i63f/4.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/xq26i63f/4.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p>மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட நெல்லை ரெயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட தண்டவாள சீரமைப்பு பணிகளால் அனைத்து ரெயில்களையும் ஒரே நேரத்தில் இயக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.</p><h2>தண்டவாள சீரமைப்பு</h2><p>மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையத்தில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் பாதை இரட்டை அகலப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டது. இந்த பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் முடிந்து போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது. இருப்பினும் நெல்லை ரெயில் நிலையத்தில் இரட்டை அகலப்பாதை தண்டவாள இணைப்பு பணி முழுமை பெறாமல் இருந்தது.</p><p>அதனை தொடர்ந்து கடந்த மாதம் 10-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நெல்லை ரெயில் நிலையத்தில் தண்டவாள சீரமைப்பு பணிகள் நடந்தன. அதாவது ஒரே நேரத்தில் இரட்டை அகலப்பாதையில் ரெயில்கள் இயக்கு வதற்கான தொழில்நுட்ப பணிகள் நடந்து முடிந்தன. இதன் மூலம் நெல்லை ரெயில் நிலையத்திற்குள் வந்து செல்லும் ரெயில்களின் இயக்கத்தில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. </p><p>அதாவது, நெல்லை ரெயில் நிலையத்திற்குள் வரும் ரெயில்கள் அனைத் தும் 15 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்ட ரெயில்கள் 60 கி.மீ. வேகத்தில் இயக்க முடியும். நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்து மதுரை நோக்கி செல்லும் பாதையில் 15 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்ட ரெயில்கள் தற் போது 70 கி.மீ. வேகத்தில் இயக்க முடியும். கூடுதலாக 600 மீட்டர் நீளத் துக்கு ஒரு இணை ரெயில்வே தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது.</p><p>1-வது, 2-வது மற்றும் 3-வது பிளாட்பார பகுதியில் 686 மீட்டர் நீளத்தில் இருந்த தண்டவாங்கள் முறையே 730 மீட்டர், 716 மீட்டர், 729 மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. 5-வது தண்டவாளம் 791 மீட்டராகவும், 6 மற்றும் 8-வது தண்டவாளங்கள் 815 மீட்டர் நீளமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன. 4 மற்றம் 5-வது பிளாட்பாரங்கள் 625 மீட்டர் நீளமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. </p><h2>ஒரே நேரத்தில் வந்து செல்ல..</h2><p>தென்காசியில் இருந்து நெல்லை வரும் ரெயில்கள் அனைத்தும் 9-வது ரெயில்வே தண்டவாளம் வழியாக ஒரே நேரத்தில் புறப்படவும், வந்து சேரவும் முடியும். அதேபோல, தென்காசி, திருச்செந்தூரில் இருந்து ஒரே நேரத்தில் ரெயில் நிலையத்திற்குள் ரெயில்கள் வந்து செல்ல முடியும். இதனால் நாகர்கோவிலில் இருந்து வந்து செல்லும் ரெயில்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. நெல்லை-மேலப்பாளையம் இடையே உள்ள ரெயில்வே கேட் பகுதி சிக்னலுடன் இணைக்கப்பட்டுள்ளது.</p><p>1-வது ரெயில்வே கேட் தானியங்கி கேட்டாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளை தொடர்ந்து நெல்லை-தென்காசி, நெல்லை-மேலப்பா ளையம், நெல்லை-திருச்செந்தூர், நெல்லை-மதுரை ரெயில் பாதையில் சுமார் 108 புதிய சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் நெல்லை ரெயில் நிலையத்திற்குள் ரெயில் உள்ளே வரும் போதும், வெளியே செல்லும் போதும் நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>பழனி கோவில் சொத்துகளை பாதுகாக்க குழு அமைப்பு - அறநிலையத்துறை அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/committee-formed-to-protect-palani-temple-assets-hrce-department-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/committee-formed-to-protect-palani-temple-assets-hrce-department-announcement#comments</comments><guid isPermaLink="false">871a788a-6a85-46c8-b6f7-eb4f96085f69</guid><pubDate>Thu, 23 Jul 2026 01:44:25 +0000</pubDate><atom:updated>2026-07-23T01:44:25.003Z</atom:updated><atom:author><atom:name>Gokul Raj B</atom:name><atom:uri>/api/author/2401541</atom:uri></atom:author><description></description><media:keywords>பழனி,அறநிலையத்துறை,Palani,HRCE Department</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/vzrwtjm2/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/vzrwtjm2/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>“இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவின்பேரில், அறநிலையத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளை இணைத்து ஒரு புதிய ஆய்வுக் குழு பிரத்யேகமாக அமைக்கப்படுகிறது. இந்த குழு பழனி கோவில் சொத்துகளை முழுமையாக ஆய்வு செய்து, கணக்கில் உள்ள சொத்துகள் மற்றும் வருவாய்கள், கணக்கில் வராத சொத்துகள், ஆக்கிரமிப்புகள் மற்றும் சட்டவிரோத பெயர் மாற்றங்கள் போன்றவை நடந்துள்ளதா? என முழுமையாக அறிக்கை தயார் செய்து அதன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும். </p><p>பழனி கோவில் சொத்துகளை முழுமையாக ஆய்வு செய்து கோவில் சொத்துகளை பாதுகாக்கும் ஒரு முக்கிய முன்னெடுப்பாக இது அமையவிருக்கிறது. பழனியை தொடர்ந்து அறுபடை வீடுகளுக்கும் இதே போல் குழு அமைத்து அமைச்சர் உத்தரவின்பேரில் ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் ஊழியர்களுக்கு அக்டோபர் 1-ந் தேதி முதல் இ.எஸ்.ஐ. திட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/esi-scheme-for-tasmac-employees-from-october-1st</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/esi-scheme-for-tasmac-employees-from-october-1st#comments</comments><guid isPermaLink="false">4e64c152-a2bb-47d6-9640-d9bdcb566705</guid><pubDate>Thu, 23 Jul 2026 01:21:16 +0000</pubDate><atom:updated>2026-07-23T01:21:16.395Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,அக்டோபர்,October,டாஸ்மாக் ஊழியர்கள்,Tasmac employees,இ.எஸ்.ஐ.,ESI</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/h2jlei7c/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டாஸ்மாக் கடை பணியாளர்களுக்கு இ.எஸ்.ஐ. திட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/h2jlei7c/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>அக்டோபர் மாதம் 1-ந் தேதி முதல் அனைத்து கடை பணியாளர்களும் கட்டாயமாக இ.எஸ்.ஐ. திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். </p><p>டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் கே.நந்தகுமார், அனைத்து மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: </p><p>டாஸ்மாக் இயக்குனர்கள் குழுவின் 223-வது கூட்டம் கடந்த ஜூலை 6-ந்தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், சில்லறை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">மதுபானக்கடை பணியாளர்கள்</a> அனைவரும் ஊழியர்கள் மாநில காப்பீட்டு சட்டம், 1948-ன் விதிகளின்படி இ.எஸ்.ஐ. திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. </p><h2>அக்டோபர் 1-ந் தேதி முதல் இ.எஸ்.ஐ. திட்டம்</h2><p>இதையடுத்து, தற்போது டாஸ்மாக்கிற்கு வழங்கப்பட்டுள்ள இ.எஸ்.ஐ. விலக்கு வரும் செப்டம்பர் மாதம் 30-ந்தேதியுடன் முடிவடைவதால், அக்டோபர் மாதம் 1-ந் தேதி முதல் அனைத்து கடை பணியாளர்களும் கட்டாயமாக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%90.">இ.எஸ்.ஐ.</a> திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மைசூர்-கண்ணூர் இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-service-between-mysuru-and-kannur-via-salem</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-service-between-mysuru-and-kannur-via-salem#comments</comments><guid isPermaLink="false">fa3c0ee0-24ba-42ac-86ad-0099e3d51476</guid><pubDate>Thu, 23 Jul 2026 01:19:55 +0000</pubDate><atom:updated>2026-07-23T01:19:55.981Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,Salem,சேலம்,Special Train ​</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/qud87u5s/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/qud87u5s/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம், </p><p>கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் முக்கிய வழித்தடங்களில் ரெயில்வே நிர்வாகம் சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது மைசூரில் இருந்து கண்ணூருக்கும் மற்றும் கண்ணூரில் இருந்து பெங்களூருவுக்கும் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மைசூர்-கண்ணூர் சிறப்பு ரெயில் (06227) நாளை மறுநாள் (சனிக்கிழமை) இரவு 10.30 மணிக்கு மைசூரில் இருந்து புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம், பங்காரு பேட்டை வழியாக ஞாயிற்றுக்கிழமை காலை 5.07 மணிக்கு சேலம் வந்தடையும், இங்கிருந்து 5.10 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக மதியம் 2 மணிக்கு கண்ணூர் சென்றடையும்,</p> <p>அதேபோல கண்ணூர்-பெங்களூரு கன்டோன்மென்ட் சிறப்பு ரெயில் (06228) வருகிற ஞாயிற்றுக்கிழமை மாலை 6.25 மணிக்கு கண்ணூரில் இருந்து புறப்பட்டு போத்தனூர், திருப்பூர், ஈரோடு வழியாக மறுநாள் அதி காலை 3.17 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 3.20 மணிக்கு புறப்பட்டு பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக காலை 8.35 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் ரெயில் நிலையம் சென்றடையும். இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>25 பவுன் நகையை மறைத்து வைத்து திருட்டு என நாடகமாடிய தொழிலாளி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/worker-arrested-for-hiding-25-pounds-of-jewelry-and-pretending-to-steal-it</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/worker-arrested-for-hiding-25-pounds-of-jewelry-and-pretending-to-steal-it#comments</comments><guid isPermaLink="false">6940ad4e-fbd5-4e4a-8aa3-58543d515e53</guid><pubDate>Thu, 23 Jul 2026 00:19:30 +0000</pubDate><atom:updated>2026-07-23T00:19:30.257Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிவகங்கை,கைதுArrest,திருட்டுtheft,போலீஸ்Police</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/4fknpzlc/64.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/4fknpzlc/64.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்புவனம்,</p><p>சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே ஆனைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கிலி (வயது 55). கட்டிட தொழிலாளி. இவர் வீட்டில் இருந்து திருப்புவனம் சென்றிருந்தார். அவருடைய மனைவி பூர்ணவள்ளி சந்தைக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து அவர் வீட்டுக்கு வந்துபோது கதவுகள் திறந்து கிடந்தன. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 25 பவுன் நகைகள் மாயமானது தெரியவந்தது. </p><p>இதுகுறித்து சங்கிலி, பழையனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மயில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.</p><h2>நகை</h2><p>போலீஸ் மோப்ப நாய் லைலா, நகை மாயமான வீட்டில் இருந்து வெளியே செல்லாமல் அந்த வீட்டையே சுற்றி, சுற்றி வந்தது. இது போலீசாருக்கு முக்கிய துப்பாக அமைந்தது. அதன்பேரில் கணவன், மனைவியிடம் தீவிர விசாரணை நடத்தினர். இந்த நிலையில் பூர்ணவள்ளி பழையனூர் போலீசாருக்கு செல்போனில். தனது கணவர்தான் நகைகளை மறைத்து வைத்துள்ளதாக தகவல் கொடுத்தார். </p><h2>கைது</h2><p>அதன்பேரில் போலீசார் சம்பவம் நடந்த வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் அருகில் உள்ள வைக்கோல் படப்புக்குள் மறைத்து வைத்திருந்த 25 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a> சங்கிலியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொந்த வீட்டிலேயே நகையை திருடி மறைத்து வைத்துவிட்டு திருட்டுபோனதாக நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>
&apos;ஜனநாயகன்&apos; டிக்கெட் சர்ச்சை... ரூ.200 டிக்கெட்டுக்கு முன்பதிவு செய்தவர்களுக்கு ரூ.700 கட்டணம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/jananayagan-ticket-controversy-those-who-booked-200-tickets-charged-700</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/jananayagan-ticket-controversy-those-who-booked-200-tickets-charged-700#comments</comments><guid isPermaLink="false">1db0516d-a162-4efe-a944-78ca74169827</guid><pubDate>Wed, 22 Jul 2026 23:50:00 +0000</pubDate><atom:updated>2026-07-22T23:50:00.000Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டிக்கெட் முன்பதிவு,Ticket Booking,Thanjavur,கட்டண உயர்வு,ஜனநாயகன்,Jananayagan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/nej8eppv/10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/nej8eppv/10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சை,</p><p>தமிழக முதல்-அமைச்சரும், தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் இன்று (வியாழக்கிழமை) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்திற்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் வேகமாக விற்பனையாகி வருகின்றன.</p><h2>ரூ.200 டிக்கெட்டு.. திடீர் கட்டண உயர்வு</h2><p>தஞ்சை மாநகரில் மட்டும் 4 திரையரங்குகளில் 'ஜனநாயகன்' திரைப்படம் வெளியாகிறது. இதற்காக ரசிகர்கள் ஏற்கனவே ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வந்தனர்.</p><p>இந்த நிலையில், தஞ்சையில் உள்ள ஒரு திரையரங்கில் ரூ.200 கட்டணத்தில் டிக்கெட் முன்பதிவு செய்த ரசிகர்களுக்கு, நேற்று வாட்ஸ்-அப் மூலம் புதிய தகவல் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. அதில், டிக்கெட் கட்டணம் தற்போது ரூ.700 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள தொகையை கியூஆர் (QR) கோடு மூலம் செலுத்துமாறும் தெரிவிக்கப்பட்டிருந்தது.</p>  <h2>ரசிகர்கள் அதிர்ச்சி</h2><p>ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுக்கு திடீரென கூடுதல் தொகை செலுத்துமாறு தகவல் வந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட திரையரங்கின் நடவடிக்கை குறித்து ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>&apos;நீட்&apos; வினாத்தாள் கசிவு... பொறுப்புக்கூறல் எங்கே? – அண்ணாமலை சாடல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">3f7c5ab7-8798-4cb2-99fa-dceb38eab732</guid><pubDate>Wed, 22 Jul 2026 23:05:58 +0000</pubDate><atom:updated>2026-07-22T23:05:58.552Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Annamalai,அண்ணாமலை,சென்னை,நீட் வினாத்தாள் கசிவு,NEET question paper leak</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/k5d4khm4/62.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அண்ணாமலை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/k5d4khm4/62.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்காதது ஏன்? என மத்திய அரசுக்கு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">அண்ணாமலை</a> கேள்வி எழுப்பியுள்ளார். </p><p>'வீ த லீடர்ஸ்' அமைப்பை தொடங்கியுள்ள அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>கடந்த பல ஆண்டுகளாக, நாடு முழுவதும் மாணவர் சேர்க் கையில் ஒரு சீரான தன்மையைக் கொண்டு வந்ததாலும், பின்தங்கிய பின்னணி மாணவர்களுக்கு மருத்துவக்கல்வி கனவை நனவாக்க வாய்ப்பை வழங்கியதாலும், 'நீட்' தேர்வை நான் தனிப்பட்ட முறையில் ஆதரித்து வந்துள்ளேன். கடந்த 5 ஆண்டுகளில், 'நீட்' இளங்கலை தேர்வு வினாத்தாள் 3 முறை கசிந்துள்ளது. சீரான தன்மையை உறுதிப்படுத்த வேண்டிய அமைப்பே தோல்வியுற்ற நிலையில், இதற்கு காரணமானவர்களிடம் எந்தப் பொறுப்புக்கூறலும் இல்லை.</p><h2>போராட்டம்</h2><p>போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையை தொடங்க பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு ஏன் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது? போராட்டம் தீவிரமடைந்து ஒரு கொந்தளிப்பான நிலையை எட்டும் வரை, பேச்சுவார்த்தை ஏன் தாமதப்படுத்தப்பட்டது? ஒரு போராட்டம் வாரக்கணக்கில் நீடிக்கும்போது, சுயநல நோக்கங்களைக் கொண்டவர்கள் மேடையேறி, போராட்டத்தின் ஆரம்பகாலக் கோரிக்கைகளுக்கு தொடர்பில்லாத கருத்துகளை முன்வைப்பதோ அல்லது தங்கள் சொந்த நோக்கத்திற்காக போராட்டத்தைத் திசைதிருப்ப முயற்சிப்பதோ இயல்பு. </p><p>அத்தகைய சுயநலவாதிகள் தங்கள் நோக்கங்களை முன்னெடுக்க நீங்கள் மவுனம் காத்தால், உங்கள் முக்கிய நோக்கங்களிலிருந்து நீங்கள் விலகிச் செல்கிறீர்கள் என்று அர்த்தம். போராடும் மாணவர்களுடன் பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபடவும். தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவும் வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நீதிமன்றங்கள் அதிகரிப்பு மூலம் வழக்குத் தேக்கம் குறையும்: அமைச்சர் நிர்மல்குமார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-courts-will-reduce-case-backlog-minister-nirmal-kumar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-courts-will-reduce-case-backlog-minister-nirmal-kumar#comments</comments><guid isPermaLink="false">fc62b81a-5f60-4b08-9772-2bee957889ac</guid><pubDate>Wed, 22 Jul 2026 22:30:57 +0000</pubDate><atom:updated>2026-07-22T22:30:57.926Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,அதிகரிப்பு,Court,நீதிமன்றங்கள்,அமைச்சர் நிர்மல்குமார்,Minister Nirmal Kumar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/did8tq8b/61.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/did8tq8b/61.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள 'மெட்ராஸ் பார் அசோசியேஷன்' என்ற பழமையான வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமாருக்கு பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. </p><h2>நீதிமன்றங்களின் எண்ணிக்கை</h2><p>இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், "சட்டத்துறை மற்றும் நீதித்துறை நிர்வாகத்தில் உள்ள சிக்கல்களை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. கீழமை நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது. வக்கீல்களின் தொழில் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. 200 வழக்குகளுக்கு ஒரு நீதிமன்றம் என்ற வகையில் முன்னுரிமை வழங்கி கீழமை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">நீதிமன்றங்களின்</a> எண்ணிக்கை விரிவுபடுத்தப்படும். இதனால், வழக்குகளில் தேக்கம் குறையும். இதுதொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் ஓரிரு ஆண் டுகளில் முடிக்கப்படும்" என்றார்.</p><p>இந்த நிகழ்ச்சியில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், மாநில தலைமை குற்றவியல் வக்கீல் ஜான் சத்தியன், மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர் வி.ஆர். கமலநாதன், செயலாளர் ஜெ.போத்திராஜ், பொருளாளர் வி.டி. பாலாஜி, நூலகர் டி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>]]></content:encoded></item><item><title>அரசு பள்ளிகளில் நீர் மேலாண்மைக்கு திட்டம்.. அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கிவைத்தார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/scheme-for-water-management-in-government-schools-minister-rajmohan-inaugurates-it</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/scheme-for-water-management-in-government-schools-minister-rajmohan-inaugurates-it#comments</comments><guid isPermaLink="false">500905ac-86e7-4320-bae6-ba66f365cf43</guid><pubDate>Wed, 22 Jul 2026 20:07:47 +0000</pubDate><atom:updated>2026-07-22T20:07:47.682Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,அரசு பள்ளி,Government School,Water Management,நீர் மேலாண்மை திட்டம்,Minister Rajmohan,அமைச்சர் ராஜ்மோகன்,நீர் எழில் பள்ளி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/d0m7v3dn/5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/d0m7v3dn/5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை, </p><p>அரசு பள்ளிகளில் நீர் மேலாண்மைக்கான தனிசெயல்திட்டம் தொடங்கும் விதமாக “நீர் எழில் பள்ளி" (நீர் பாதுகாப்பு, பசுமை வளம், நிலைத்த எதிர்காலம்) திட்டத்துக்கு அடிக்கல் நாட்டு விழா சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டு நீர் எழில் பள்ளித் திட்டத்தை தொடங்கி வைத்தார்.</p> <p>இந்த திட்டம் முதல்கட்டமாக சென்னையில் எழும்பூர் மாநில அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, அசோக்நகர், போரூர், வில்லிவாக்கம், அம்பத்தூர் ஆகிய 5 பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளது.</p><p>இந்த திட்டத்தின்கீழ் இயற்கை சார்ந்த தீர்வுகள் மூலம் பங்கேற்கும் ஒவ்வொரு பள்ளியிலும் நாளொன்றுக்கு சுமார் 25 ஆயிரம் லிட்டர் கழிவுநீர் பாதுகாப்பாக சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட இருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>தூங்கிக் கொண்டிருந்த 12-ம் வகுப்பு மாணவர் மீது சுவர் இடிந்து விழுந்து உயிரிழப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-wall-collapsed-on-a-sleeping-12th-grader-killing-him</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-wall-collapsed-on-a-sleeping-12th-grader-killing-him#comments</comments><guid isPermaLink="false">7d2b1d19-d5e1-4dd1-8d7c-f6ce2915d2f9</guid><pubDate>Wed, 22 Jul 2026 19:50:16 +0000</pubDate><atom:updated>2026-07-22T19:50:16.524Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கடலூர்,உயிரிழப்பு,சுவர் இடிந்து விபத்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/yg2ybjv2/48.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உயிரிழப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/yg2ybjv2/48.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர்,</p><p>கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் குரு பிரசாத் (வயது 17). இவர் நெல்லிக்குப்பத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். குரு பிரசாத்தின் உறவினரான மகேஷ் என்பவரின் வீடு வரக்கால்பட்டில் உள்ளது. </p><h2>சுவர் இடிந்து விழுந்தது</h2><p>குருபிரசாத், தனது உறவினரான மகேஷின் வீட்டில் தூங்குவது வழக்கம். அதன்படி நேற்று முன் தினம் குருபிரசாத், உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் அங்கு அவர் தனது பாட்டி மற்றும் உறவினர் மகேஷ் ஆகியோருடன் படுத்து தூங்கினார். குரு பிரசாத் சுவரையொட்டி படுத்திருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை குருபிரசாத் தூங்கி கொண்டிருந்த போது வீட்டின் சுவர் திடீரென்று இடிந்து அவர் மீது விழுந்தது. </p><p>இதில் அவர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டு சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அருகே தூங்கி கொண்டிருந்த பாட்டி மற்றும் உறவினர் மகேஷ் ஆகியோர் விரைந்து எழுந்து, கட்டிட இடிபாடுகளை அகற்றி பார்த்தனர். அப்போது குருபிரசாத் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p>]]></content:encoded></item><item><title>வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-buses-to-operate-across-tamil-nadu-for-weekend-holidays</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-buses-to-operate-across-tamil-nadu-for-weekend-holidays#comments</comments><guid isPermaLink="false">180f2ac0-d9b8-4037-b8d0-290c40737702</guid><pubDate>Wed, 22 Jul 2026 19:06:06 +0000</pubDate><atom:updated>2026-07-22T19:06:06.717Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,சிறப்பு பேருந்துகள்,விடுமுறை நாட்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/cew8y8k2/58.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு பேருந்துகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/cew8y8k2/58.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு, பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு தடையின்றி பயணம் செய்ய வசதியாக, சென்னையில் உள்ள முக்கிய பேருந்து நிலையங்கள் மற்றும் தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களில் இருந்து 1,635 <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">சிறப்பு பேருந்துகள்</a> இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளர் (இயக்கம்) ஜெரோலின் லிஸ்பன் சிங் தெரிவித்துள்ளார்.</p><p>பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, வரும் 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மற்றும் 25-ந் தேதி (சனிக்கிழமை) ஆகிய தேதிகளில் இயக்கப்படவுள்ள சிறப்பு பேருந்துகளின் விவரம் பின்வருமாறு:-</p><h2>கிளாம்பாக்கம்</h2><p>வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று 395 பஸ்களும், 25-ந் தேதி (சனிக்கிழமை) 330 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2>கோயம்பேடு</h2><p>சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 24-ந் தேதி வெள்ளிக்கிழமை 120 பஸ்களும், 25-ந் தேதி சனிக்கிழமை 120 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2>மாதவரம்</h2><p>மாதாவரத்திலிருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, போளூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு 24 மற்றும் 25-ந் தேதிகளில் தலா 25 பஸ்களும் சிறப்பு பஸ்களாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 420 சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>வார இறுதி நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால், கடைசி நேர கூட்ட நெரிசலைத் தவிர்க்க பயணிகள், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ www.tnstc.in இணையதளம் அல்லது செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நீட் வினாத்தாள் கசிவை கண்டித்து ஜூலை 27-ல் தமிழகம் முழுவதும் விசிக ஆர்ப்பாட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/protests-across-tamil-nadu-on-july-27-against-neet-question-paper-leak</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/protests-across-tamil-nadu-on-july-27-against-neet-question-paper-leak#comments</comments><guid isPermaLink="false">ccca340c-6783-44ca-a09c-c550c6d1e49a</guid><pubDate>Wed, 22 Jul 2026 17:40:37 +0000</pubDate><atom:updated>2026-07-22T17:40:37.563Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,விசிக,நீட் வினாத்தாள் கசிவு,Question Paper Leak,ஆர்ப்பாட்டம்Demonstration</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/mt9u5g7b/57.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருமாவளவன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/mt9u5g7b/57.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விசிக தலைவரும், எம்.பி.யுமான <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D">திருமாவளவன்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-</p><p>நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிவு விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து புது டெல்லியில் மாணவர்களும் இளைஞர்களும் போராடி வருகின்றனர். இது தொடர்பாக காக்ரோச் ஜனதா பார்ட்டி நடத்திய பேரணியில் மோடி அரசின் காவல்துறை கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது. ஏராளமான மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.  நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்கள், இளைஞர்கள் மீது ஏவப்பட்ட கண்மூடித்தனமான வன்முறையைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதி மாவட்டங்களிலும் ஜூலை 27 திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம். </p><h2>வினாத்தாள் கசிவு</h2><p>தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சர் ஆனதற்குப் பிறகு நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகள் மற்றும் தகுதித் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் 152 முறை கசிந்து, பலமுறை தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு சுமார் ஏழரை கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்குப் பொறுப்பேற்க வேண்டிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.</p><p> “கல்வித் துறையைச் சீரழிக்கும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்” என்று மாணவர்கள் தன்னெழுச்சியாகக் கிளர்ந்தெழுந்து போராடி வருகின்றனர். அண்மையில் புதிதாகத் துவக்கப்பட்டுள்ள காக்ரோச் ஜனதா பார்ட்டி நாடாளுமன்றம் நோக்கி பேரணி ஒன்றை அறிவித்தது. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் ஆரம்பித்த ஜூலை 20ஆம் நாள் டெல்லியில் அந்தப் பேரணி அறிவிக்கப்பட்டது. ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும் இளைஞர்களும் அதில் பங்கேற்றனர். அந்தப் பேரணியைத் தடுப்பதற்கு வரலாறு காணாத அளவில் டெல்லியின் வீதி தோறும் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். பேரணியில் பங்கேற்ற மாணவர்களையும் இளைஞர்களையும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும், தடியால் அடித்தும் காவல்துறையினர் தாக்கியுள்ளனர். சீருடை அணியாத சில குண்டர்கள் தடிகளை ஏத்தி மாணவர்களைத் தாக்கிய காட்சிகள் ஊடகங்களில் வெளியாயின. காயம்பட்ட மாணவர்களை நேரில் சென்று விசாரித்த போது அவர்கள் ஆர் எஸ் எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை மாணவர்கள் தெரிவித்தனர்.</p><h2>மீண்டும் போராட்டம்</h2><p>மாணவர்களை சிவில் உடையில் வந்து யார் தாக்கியது என்பதைப் பற்றி இதுவரை டெல்லி காவல்துறை விளக்கம் அளிக்கவில்லை. பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் பலர் கை,கால்களில் முறிவு ஏற்பட்டும், தலையில் காயம் அடைந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறு காயங்களோடு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் மீண்டும் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். </p><p>பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் பலர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். எத்தனை பேர் கைது செய்யப்பட்டார்கள் என்பதை இதுவரை காவல் துறை தெரிவிக்கவில்லை. அவர்களைச் சந்திப்பதற்கு யாரும் அனுமதிக்கப்படவும் இல்லை. இதற்காக நீதி கேட்டு பிரதமர் இல்லத்துக்கு முன்பு கூடி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் காங்கிரஸ் எம்பிக்களும் காவல்துறையினரால் மோசமாக நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். மோடி அரசு முற்றிலும் ஒரு சர்வாதிகார அணுகுமுறையைக் கையாண்டு வருகிறது. ஜனநாயக மாண்புகள் படுகொலை செய்யப்பட்டுள்ளன. </p><p>போராடிவரும் மாணவர்களின் கோரிக்கைகளான கல்வி அமைச்சர் தர்மேந்தர பிரதான் பதவி விலக வேண்டும்; போராடிய மாணவர்கள் மீது வன்முறைத் தாக்குதலை நடத்தியவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்; இது தொடர்பாக பிரதமர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் - ஆகியவற்றை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரிக்கிறது.  நீட் தேர்வை முற்றாக ரத்து செய்ய வேண்டும்; மாநில அரசுகளே மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது. </p><h2>ஆர்ப்பாட்டம்</h2><p>மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்தும், அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஜூலை 27 ஆம் தேதி திங்களன்று  தமிழ்நாடு முழுவதும் உள்ள சட்டமன்றத் தொகுதி மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துக்கொள்கிறோம். அதில் ஜனநாயக சக்திகளும் திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மழைக்காலத்திற்கு முன்னதாகவே பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: மின்வாரியம் அறிவுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/maintenance-work-should-be-completed-quickly-before-the-monsoon-season-electricity-board-instructions</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/maintenance-work-should-be-completed-quickly-before-the-monsoon-season-electricity-board-instructions#comments</comments><guid isPermaLink="false">fd83ddcf-efc1-49d0-b9cf-e823237c9f5b</guid><pubDate>Wed, 22 Jul 2026 17:29:27 +0000</pubDate><atom:updated>2026-07-22T17:29:27.688Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Electricity Board,monsoon,அறிவுறுத்தல்,அவசர கால பராமரிப்பு பணி,தமிழ்நாடு மின்வாரியம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/b6vm9dei/56.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்வாரியம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/b6vm9dei/56.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மின்வாரிய தலைமையிடத்தில் இருந்து அனைத்து மின்வாரிய பொறியாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:- தமிழகம் முழுவதும் பருவ மழையையொட்டி தடையற்ற மின்சாரத்தை பராமரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மழைக்காலத்திற்கு முன்னதாகவே மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். </p><h2>பராமரிப்பு பணி</h2><p>தமிழ்நாட்டில் பருவ மழை தொடங்குவதற்கு முன்னதாக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">மின்வாரியத்தில்</a> தேவையான பொருட்களை கையிருப்பில் வைக்க வேண்டும். பராமரிப்பு பணிகளுக்கு தேவையான பொருட்களை போதிய அளவில் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். அதற்கான கொள்முதல் டெண்டரை முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வாரிசு சான்றிதழ் பெற பரிந்துரை செய்ய ரூ.4 ஆயிரம் லஞ்சம் - பெண் வருவாய் ஆய்வாளர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-4-000-bribe-for-legal-heir-certificate-recommendation-woman-revenue-inspector-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-4-000-bribe-for-legal-heir-certificate-recommendation-woman-revenue-inspector-arrested#comments</comments><guid isPermaLink="false">073ce949-e871-4c3b-9794-4c139e281b6c</guid><pubDate>Wed, 22 Jul 2026 16:35:17 +0000</pubDate><atom:updated>2026-07-22T16:35:17.531Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,திருச்சி,Trichy,லஞ்சம்,Bribery,வருவாய் ஆய்வாளர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/yl5thdnb/Untitled-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/yl5thdnb/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா அரசங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஈஸ்வரி. இவரது தந்தை கருப்பசாமி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இந்த நிலையில் தனது தாய் மற்றும் தன்னுடைய பெயருடன் வாரிசு சான்றிதழ் கேட்டு மணப்பாறை தாலுகா அலுவலகத்தில் ஈஸ்வரி விண்ணப்பம் செய்திருந்தார்.</p><p>இதுதொடர்பாக வி.பெரியபட்டி பிர்கா முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஆர்.ஹேமலதா நேரடி விசாரணை நடத்தி விட்டு சென்றார். ஆனாலும் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக ஹேமலதாவிடம் ஈஸ்வரி கேட்டபோது தனக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் தந்தாலதான் வாரிசு சான்றிதழுக்கான பரிந்துரை கடிதத்தை தாசில்தாருக்கு அனுப்புவேன் என கூறி உள்ளார்.</p><p>ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஈஸ்வரி இதுதொடர்பாக திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்தில் புகார் செய்தார். இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் ஈஸ்வரியிடம் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பி வைத்தனர்.</p><p>இந்த நிலையில் நேற்று என்.பூலாம்பட்டியில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் வைத்து ரூ.4 ஆயிரம் லஞ்சப்பணத்தை ஈஸ்வரியிடம் இருந்து வருவாய் ஆய்வாளர் ஹேமலதா வாங்கியபோது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து ஹேமலதாவை கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>வாழை தோட்டங்களில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் அபாயம்: விவசாயிகள் அச்சம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/low-lying-power-lines-pose-a-danger-in-banana-plantations-farmers-fear</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/low-lying-power-lines-pose-a-danger-in-banana-plantations-farmers-fear#comments</comments><guid isPermaLink="false">45d248db-7750-40ab-a46c-97f815397b18</guid><pubDate>Wed, 22 Jul 2026 16:31:13 +0000</pubDate><atom:updated>2026-07-22T16:31:13.889Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Farmers,Thoothukudi,தூத்துக்குடி,சாத்தான்குளம்,விவசாயிகள்,கோரிக்கை,Satankulam,Banana,வாழை,Garden,தோட்டம்,electric wire,மின்கம்பி,emphasis,அபாயம்,danger</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/firllbpo/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வாழை தோட்டங்களில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் அபயாம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/firllbpo/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>சாத்தான்குளம் அருகே பள்ளிவாசல் பத்து பகுதியில் விவசாய நிலங்களில் மின் கம்பிகள் ஆபத்தான முறையில் தாழ்வாக சென்று கொண்டிருப்பதால் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">விபத்து ஏற்படும் அபாயம்</a> நிலவுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். </p><h2>வாழை தோட்டங்களில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் அபயாம்</h2><p>தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத் செல்லும் சாலையில் உள்ள பள்ளிவாசல் பத்து பகுதியில் வாழை, கடலை, நெல், சோளம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. அந்த பகுதியில் உள்ள இரண்டு மின்கம்பங்களுக்கு இடையே செல்லும் மின் கம்பிகள் வயல்வெளியில் மிகவும் தாழ்வாக சென்று வாழை இலைகளில் உரசியபடி காணப்படுகின்றன. இதனால் வாழை இலைகள், காய்களை பறிக்கவும், நிலத்தில் உழவுப் பணிகளை மேற்கொள்ளவும் விவசாயிகள் பெரும் அச்சத்துடன் செயல்பட வேண்டியுள்ளது. </p><p>தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் எந்த நேரமும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு</a> ஏற்படும் ஆபத்து உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த பிரச்சினை குறித்து சாத்தான்குளம் மின்வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. </p><h2>மின்வாரிய ஊழியர்கள் அலட்சியம்</h2><p>மின்கம்பத்தின் அருகே 'ஸ்டே கம்பி' அமைத்தோ அல்லது புதிய மின்கம்பம் நட்டோ மின் கம்பிகளை உயர்த்தி அமைக்கலாம் என விவசாயிகள் யோசனை தெரிவித்துள்ளனர். ஸ்டே கம்பி அமைக்க சொந்த செலவில் விவசாயிகள் குழி தோண்டி வைத்த போதிலும், மின்வாரிய ஊழியர்கள் நேரில் வந்து சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.</p><h2>விவசாயிகள் வலியுறுத்தல்</h2><p>திடீர் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தவிர்க்கும் பொருட்டு, பள்ளிவாசல் பத்து பகுதியில் ஆபத்தான நிலையில் தொங்கும் மின் கம்பிகளை உடனடியாக உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாத்தான்குளம் பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பெண்ணிடம் 3 சவரன் தங்க செயின் பறிப்பு: வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-snatching-3-sovereign-gold-chains-from-woman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-snatching-3-sovereign-gold-chains-from-woman#comments</comments><guid isPermaLink="false">0d357769-f2d3-4695-8818-4cc32755a46a</guid><pubDate>Wed, 22 Jul 2026 15:58:47 +0000</pubDate><atom:updated>2026-07-22T15:58:47.166Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Youth arrested,வாலிபர் கைது,பெண்,Woman,Kovilpatti,கோவில்பட்டி,Gold chain snatched,தங்க செயின் பறிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/7dg3plsn/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வாலிபர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/7dg3plsn/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பெண்ணிடம் 3 சவரன் தங்க செயினை பறித்துச் சென்ற வழக்கில் தொடர்புடைய வாலிபரை போலீசார் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர்.</p><h2>தங்க செயின் பறிப்பு</h2><p>தூத்துக்குடி மாவட்டம், <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF">கோவில்பட்டி</a> ராஜீவ்நகர் ஈபி காலனி, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சேவியர் மனைவி அனிதா (வயது 45). இவர் கடந்த 6-ம் தேதி ராஜீவ்நகர் அருகே நின்றுகொண்டிருந்தபோது, பைக்கில் வந்த 2 பேர் அவரது கழுத்தில் அணிந்திருந்த 3½ சவரன் தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.</p><h2>வாலிபர் கைது</h2><p>இந்த சம்பவம் குறித்து அனிதா அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையின் அடிப்படையில், இந்த குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் பாலாஜி நகரைச் சேர்ந்த காளிராஜ்(31) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை தேடி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>மின் கட்டண குளறுபடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க &apos;ஸ்மார்ட் மீட்டர்&apos; திட்டத்தை செயல்படுத்துக - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/implement-smart-meter-plan-to-end-electricity-billing-issues-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/implement-smart-meter-plan-to-end-electricity-billing-issues-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">8e8a3063-a365-4730-be52-f0d1251e8bf7</guid><pubDate>Wed, 22 Jul 2026 15:41:28 +0000</pubDate><atom:updated>2026-07-22T15:41:28.380Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,மின் கட்டணம்,electricity bill,ஸ்மார்ட் மீட்டர்,Nainar Nagenthran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/p38m9gs8/Untitled-11.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/p38m9gs8/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழகத்தில் வீடுகளுக்கான மின் நுகர்வைக் கணக்கெடுப்பதில் ஏற்படும் குளறுபடிகளாலும், அலட்சியப் போக்கினாலும் பொதுமக்கள் கடுமையான மின் கட்டண சுமைக்கு ஆளாகி வருகின்றனர். பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள இக்குளறுபடிகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது தவெக அரசின் முதற்கடமையாகும்.</p><p>அந்த வகையில், மின் விநியோக இழப்பைக் குறைத்து, மக்களுக்கு தடையற்ற மின்சாரத்தை உறுதிசெய்ய ரூ.3,03,758 கோடி மதிப்பீட்டில் RDSS திட்டத்தை நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி, தமிழகத்தில் 3 கோடி நுகர்வோர் ஸ்மார்ட் மீட்டர்கள், 4,72,500 விநியோக மின்மாற்றி மீட்டர்கள் (DT Meters), 18,274 மின்பாதை மீட்டர்கள் (Feeder Meters) ஆகியவற்றைப் பொருத்தும் பணிகளுக்காக ரூ.19,235.36 கோடியை மத்திய அரசு அனுமதித்துள்ளது. மத்திய அரசு 3 கோடி நுகர்வோர் ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்த ஒப்புதல் வழங்கியுள்ள போதிலும், தமிழகத்தில் சென்னை தி.நகர் பகுதியில் வெறும் 1.28 லட்சம் மீட்டர்கள் மட்டுமே இதுவரை பொருத்தப்பட்டிருப்பது ஏன்? இத்திட்டத்தின் மூலம் தமிழக மக்கள் பயனடைவதைத் தவெக அரசு தடுப்பது ஏன்?</p><p>மத்திய அரசின் நிதியுதவியுடன், ஆள்தேவையின்றி மின்நுகர்வைத் துல்லியமாகக் கணக்கிடும் இந்த ‘ஸ்மார்ட் மீட்டர்’ திட்டமே மின் கட்டண குளறுபடிகளுக்குச் சிறந்த தீர்வாகும். எனவே, மக்கள் நலன் காக்கும் வகையில் இந்த 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்தைத் தாமதப்படுத்தாமல், முதல்வர் விஜய் தலைமையிலான அரசு உடனடியாக செயல்படுத்த முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வு ஏன் ஒழிக்கப்பட வேண்டும்..? - தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-should-the-neet-exam-be-abolished-dmk-president-mk-stalins-post</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-should-the-neet-exam-be-abolished-dmk-president-mk-stalins-post#comments</comments><guid isPermaLink="false">a211b030-1716-497d-96aa-552a6d9cf8dc</guid><pubDate>Wed, 22 Jul 2026 15:27:38 +0000</pubDate><atom:updated>2026-07-22T15:27:38.579Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,M.K.Stalin,தமிழகம்,நீட் தேர்வு,NEET Exam,NEET,நீட்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/k5gt1xeo/leef.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/k5gt1xeo/leef.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>எல்லா மாநிலங்களைப் பற்றியும் என்னால் பேச முடியாது என்றாலும், தமிழ்நாட்டைப் பற்றி என்னால் உறுதியாகப் பேச முடியும். பாஜகவை தவிர தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் நீட் தேர்வை எதிர்க்கின்றன. நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி தமிழ்நாடு சட்டமன்றம் தொடர்ந்து தீர்மானங்களையும் மசோதாக்களையும் நிறைவேற்றி உள்ளது.</p><p>நியாயப்படுத்த முடியாத ஒன்றை நியாயப்படுத்துவதை நிறுத்துங்கள். நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யுங்கள்.</p><p>நாளை வெளியாகவுள்ள 'தி இந்து' நாளிதழில் எனது கருத்துக்கட்டுரையை வாசியுங்கள். அதில் நீட் தேர்வு ஏன் அடிப்படையில் நியாயமற்றது மற்றும் அது ஏன் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதை விரிவாக விளக்கியுள்ளேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">You cannot have both fairness and NEET. <br>NEET is fundamentally unfair.<br><br>While I cannot speak for every state, I can certainly speak for Tamil Nadu. Every political party in Tamil Nadu except the BJP opposes NEET. The Tamil Nadu Legislative Assembly has repeatedly passed… <a href="https://t.co/AHKUWaANjN">pic.twitter.com/AHKUWaANjN</a></p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2079938973213036776?ref_src=twsrc%5Etfw">July 22, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sri-lankan-navy-arrests-nine-rameswaram-fishermen-for-allegedly-fishing-across-the-maritime-boundary</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sri-lankan-navy-arrests-nine-rameswaram-fishermen-for-allegedly-fishing-across-the-maritime-boundary#comments</comments><guid isPermaLink="false">77ffc52f-a11c-4d93-a683-a1ec065e9418</guid><pubDate>Wed, 22 Jul 2026 15:18:06 +0000</pubDate><atom:updated>2026-07-22T15:18:06.835Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,மீனவர்கள்,Tamil Nadu,இலங்கை கடற்படை,fishermen,Sri Lanka</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/95zda9g2/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/95zda9g2/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமநாதபுரம்,</p><p>தனுஷ்கோடியைச் சேர்ந்த மீனவர்கள் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் பகுதியில் இருந்து மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் தனுஷ்கோடி தலைமன்னார் இடையே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். </p><p>அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை கைது செய்தனர். அவர்களின் மீன்பிடி படகையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட மீனவர்களை விசாரணைக்காக இலங்கைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.2.89 கோடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/offering-counted-at-palani-murugan-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/offering-counted-at-palani-murugan-temple#comments</comments><guid isPermaLink="false">92a574a7-3540-4d2f-9f1e-e47c8c741c68</guid><pubDate>Wed, 22 Jul 2026 15:14:52 +0000</pubDate><atom:updated>2026-07-22T15:14:52.984Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>முருகன் கோவில்,Palani Murugan Temple,பழனி முருகன் கோவில்,உண்டியல் காணிக்கை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/rd2ig0lw/Untitled-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/rd2ig0lw/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பழனி,</p><p>அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளம், ஆந்திரா, மராட்டியம் உள்பட வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.</p><p>அவ்வாறு வரும் பக்தர்கள் கோவிலில் தரிசனம் முடித்த பின்னர் அங்குள்ள உண்டியல்களில் பணம், நகைகள், நவதானியங்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் யாவும் நிரம்பியவுடன், அதிலுள்ள பணம், பொருட்கள் கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணி அளவிடப்படுகிறது. அதன்படி கடந்த 30-ந்தேதி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இந்த நிலையில் நேற்று கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மீண்டும் நடைபெற்றது.</p><p>உண்டியல்களில் இருந்த பணம், தங்கம், வெள்ளி நகைகள் காணிக்கை எண்ணும் பணி நடைபெறும் கார்த்திகை மண்டபத்துக்கு கொண்டு வரப்பட் டது. பின்னர் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை தனித்தனியாக பிரிக்கப்பட்டு எண்ணப்பட்டது. அதில் காணிக்கையாக ரூ.2 கோடியே 89 லட்சத்து 45 ஆயிரத்து 711 கிடைத்தது. மேலும் தங்கம் 470 கிராம், வெள்ளி 6 ஆயிரத்து 857 கிராம், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 739-ம் கிடைத்தன.</p>]]></content:encoded></item><item><title>கொலை வழக்கு சாட்சிகளுக்கு மிரட்டல்: ஜாமீனில் வந்த ரவுடி மீண்டும் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/murder-case-rowdy-arrested-again-after-being-released-on-bail-for-threatening-witnesses</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/murder-case-rowdy-arrested-again-after-being-released-on-bail-for-threatening-witnesses#comments</comments><guid isPermaLink="false">62b66d25-2f33-4cb1-957f-3cd663797630</guid><pubDate>Wed, 22 Jul 2026 15:09:54 +0000</pubDate><atom:updated>2026-07-22T15:09:54.102Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Murder case,கொலை வழக்கு,மிரட்டல்,Intimidation,rowdy arrested,ரவுடி கைது,arumuganeri,Witness,சாட்சிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/knb0kpc8/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜாமீனில் வந்த ரவுடி கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/knb0kpc8/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி, கொலை வழக்கு சாட்சிகளை அரிவாளை காட்டி மிரட்டிய <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">ரவுடியை போலீசார் கைது செய்தனர்</a>.</p><h2>பூசாரி கொலை வழக்கில் ஜாமீனில் வந்த ரவுடி</h2><p>தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி, பெருமாள்புரத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து (வயது 27) மீது கொலை உள்பட 12 வழக்குகள் ஆறுமுகனேரி, ஆத்தூர் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. கடந்த ஆண்டு ஆறுமுகனேரி - காயல்பட்டினம் புறவழிச்சாலையில் உள்ள சுடலைமாடசுவாமி கோவில் பூசாரி முருகேசனை கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர், சமீபத்தில் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்து திருச்செந்தூர் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார்.</p><h2>அரிவாளை காட்டி மிரட்டல்</h2><p>இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை ஆறுமுகனேரி, செல்வராஜபுரம் மாரியம்மன் கோவில் அருகே பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் இசக்கிமுத்து அரிவாளைக் காட்டி ரகளையில் ஈடுபட்டுள்ளார். பூசாரி கொலை வழக்கில் தனக்கு எதிராக சாட்சி சொல்பவர்களை கொலை செய்து விடுவதாகவும் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த ஆறுமுகனேரி போலீசார், இசக்கிமுத்து மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் வீட்டிற்குள் புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை - பாஸ்ட் புட் கடை ஊழியர் கைது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fast-food-shop-employee-arrested-for-entering-a-house-and-sexually-harassing-a-woman-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fast-food-shop-employee-arrested-for-entering-a-house-and-sexually-harassing-a-woman-in-chennai#comments</comments><guid isPermaLink="false">ecf7d201-59ef-4851-b59e-52f73c84abea</guid><pubDate>Wed, 22 Jul 2026 15:02:17 +0000</pubDate><atom:updated>2026-07-22T15:02:17.457Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/c1lk51pn/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/c1lk51pn/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த 48 வயது பெண் ஒருவர், உடல்நலக்குறைவு காரணமாக சூளைமேட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனைக்கு சென்று வருவதற்கு வசதியாக, கிழக்கு நமச்சிவாயபுரம் பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் அப்பெண் தங்கியிருந்தார். </p><p>இந்நிலையில், நேற்று அந்த பெண் மட்டும் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதையடுத்து அந்த பெண் அலறியடித்து எழுந்ததோடு, கத்தி கூச்சல் போட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார். இதனிடையே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடினார். </p> <p>பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்து, அண்ணா நகரைச் சேர்ந்த கேசப் குமார் போகடி(வயது 29) என்ற வாலிபரை அதிரடியாக கைது செய்தனர். அந்த வாலிபர் பாஸ்ட் புட் கடை ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார். </p><p>சம்பவத்தன்று தனது நண்பரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக நமச்சிவாயபுரம் பகுதிக்கு சென்ற கேசப் குமார், நண்பரின் பக்கத்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கேசப் குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்த போலீசார், பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். </p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு காவல்துறையின் சட்ட விரோதமான அத்துமீறல்கள் நிறுத்தப்பட வேண்டும்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/illegal-abuses-by-tamil-nadu-police-must-stop-cpi-m-asserts</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/illegal-abuses-by-tamil-nadu-police-must-stop-cpi-m-asserts#comments</comments><guid isPermaLink="false">7cdef120-debc-4c86-965c-44b5c4cb556b</guid><pubDate>Wed, 22 Jul 2026 14:49:14 +0000</pubDate><atom:updated>2026-07-22T14:49:14.116Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,காவல்துறை,வலியுறுத்தல்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,Illegal,சட்ட விரோதம்,CPI(M),அத்துமீறல்,insists,For Tamil Nadu</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/wa0koltv/shunmugam.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/wa0koltv/shunmugam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:- ஜனநாயக உரிமைகளை நசுக்கும் தமிழ்நாடு காவல்துறையின் சட்டவிரோதமான அத்துமீறல்கள் நிறுத்தப்பட வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!</p> <h2>நீட் தேர்வு செய்யப்பட வேண்டும்</h2><p>மத்திய பாஜக அரசு அமலாக்கி வரும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும். நீட்தேர்வு வினாத்தாள் கசிவிற்கு காரணமான மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். தேசிய தேர்வு முகமை மூலம் தேர்வுகள் நடத்தப்படக் கூடாது. நீட் தேர்வால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, தலைநகர் டெல்லியில் அறவழிப் போராட்டம் நடந்து வருகிறது.</p><h2>சோனம் வாங்சுக் கைது</h2><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">சோனம் வாங்சுக் கைது</a> செய்யப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள் ஊர்வலம் நடத்திட முயற்சித்தனர். அவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக காவல்துறை தடியடி தாக்குதல் நடத்தியது. நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மாணவிகள் மீது மிகவும் கீழ்த்தரமான அணுகுமுறையை காவல்துறையினரும், துணைநிலை ராணுவ வீரர்களும் கையாண்டுள்ளனர். இவை அனைத்தும் வீடியோக்களாக வெளிவந்துள்ளன.</p> <h2>அடக்குமுறை</h2><p>நெஞ்சம் பதைபதைக்கும் மத்திய பாஜக அரசின் மிக மோசமான இந்த அடக்குமுறையை கண்டித்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. தமிழ்நாடும் இதற்கு விதிவிலக்கல்ல. நேற்று முன்தினம் முதல் சென்னையில் ஓரிடத்தில் அமர்ந்து போராட வழியில்லாமல், இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தமிழ்நாடு காவல்துறையால் அலைக்கழிக்கப்படுகின்றனர். மூன்று நாட்களாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்படுகின்றனர். காவல்துறையின் இத்தகைய நடவடிக்கை, போராடும் ஜனநாயக உரிமைக்கு எதிரானது.</p> <h2>வன்மையாக கண்டிக்கிறது</h2><p>இன்று இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாகத் தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராடியுள்ளனர். காவல்துறை சென்னையில் திருவொற்றியூர், ஆர்.கே. நகர், பெரம்பூர் மற்றும் கோவை, மதுரை, கடலூர், தஞ்சை உள்ளிட்ட பல நகரங்களில், கல்வி வளாகத்திற்குள் புகுந்து கைது செய்துள்ளது இதுவரை நடந்திராத செயல். இது மிக மோசமான அத்துமீறல் ஆகும். காவல்துறை கல்லூரி வளாகங்களுக்குள் சென்று மாணவர்களைக் கைது செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. இதுபோன்ற ஜனநாயக விரோத அத்துமீறல்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.</p> <h2>முதல்-அமைச்சர்</h2><p>போராடும் உரிமையை நசுக்குகின்ற தமிழ்நாடு காவல்துறையின் செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். காவல்துறைக்குப் பொறுப்பாக இருக்கிற மாநில முதல்-அமைச்சர், ஜனநாயக உரிமைகள் சார்ந்த போராட்ட நடவடிக்கைகளை ஒடுக்க நினைக்கும் காவல்துறையைக் கட்டுப்படுத்த வேண்டும். சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும், ஜனநாயக ரீதியில் அறப்போராட்டங்களை நடத்தும்போது, உரிய இடத்தை ஒதுக்கி தர வேண்டும்.</p> <h2>ஜனநாயக குரல்களை நெறிப்பது</h2><p>நீட் தேர்வை ரத்து செய்ய கோரும் தமிழக அரசு, நீட் தேர்வுக்கு எதிராக போராடும் மாணவர்களின் ஜனநாயக குரல்களை நெரிப்பது பாஜகவின் கல்வி கொள்கைக்கு துணை போவதாகவே அமைந்துவிடும். எனவே, தமிழ்நாடு காவல்துறையின் சட்டவிரோத அத்துமீறல்களை உடனடியாக நிறுத்த வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>துணி மாற்றும்போது விஷப்பூச்சி கடித்து பெண் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-dies-after-being-bitten-by-a-poisonous-insect-while-changing-clothes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-dies-after-being-bitten-by-a-poisonous-insect-while-changing-clothes#comments</comments><guid isPermaLink="false">09b4e587-423e-4262-b0c4-8e99053a0e82</guid><pubDate>Wed, 22 Jul 2026 14:33:49 +0000</pubDate><atom:updated>2026-07-22T14:33:49.750Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Woman dies,பெண் உயிரிழப்பு,Poisonous insect,bite,clothes,துணி,விஷப்பூச்சி கடித்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/ltwnbxww/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விஷப்பூச்சி கடித்து பெண் உயிரிழப்பு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/ltwnbxww/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், நாரைக்கிணறு அருகே வீட்டின் உள்ளே துணி மாற்றும்போது <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF">விஷப்பூச்சி கடி</a>த்த பெண், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.</p><h2>விஷப்பூச்சி கடித்தது</h2><p>தூத்துக்குடி மாவட்டம், நாரைக்கிணறு காவல் எல்லைக்குட்பட்ட கொல்லங்கிணறு கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 34). லாரி ஓட்டுநரான இவருடைய மனைவி பிரியா(32). இவர் கடந்த 20-ம் தேதி மதியம் தனது வீட்டில் துணி மாற்றிக் கொண்டிருந்தபோது, இடது கை பெருவிரலில் ஏதோ பூச்சி கடித்து விட்டதாக கணவரிடம் தெரிவித்துள்ளார். </p><h2>பெண் உயிரிழப்பு</h2><p>உடனடியாக கணேசன் தனது பைக்கில் மனைவியை அழைத்துச் சென்று, அருகில் உள்ள ஒட்டநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆம்புலன்சில் செல்லும் வழியிலேயே பிரியா உயிரிழந்தார். பின்னர் மருத்துவமனை பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விஷப்பூச்சி கடித்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D">உயிரிழந்த சம்பவம்</a> தொடர்பாக கணேசன் அளித்த புகாரின் பேரில், நாரைக்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>12 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-till-10-pm-in-12-districts</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-till-10-pm-in-12-districts#comments</comments><guid isPermaLink="false">839e38dd-5013-4771-b9d1-bb72cf59684e</guid><pubDate>Wed, 22 Jul 2026 14:20:45 +0000</pubDate><atom:updated>2026-07-22T14:20:45.407Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/5emrkhtm/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/5emrkhtm/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>அதன்படி அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஜனநாயகனை கொண்டாடுவோம்... பொறுப்புள்ள நாயகனாக மாறுவோம் - கனிமொழி பேச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/lets-celebrate-the-democrat-lets-become-responsible-heroes-kanimozhi-speech</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/lets-celebrate-the-democrat-lets-become-responsible-heroes-kanimozhi-speech#comments</comments><guid isPermaLink="false">52de4242-2208-43c5-8b2d-7ea7247e43a1</guid><pubDate>Wed, 22 Jul 2026 14:16:46 +0000</pubDate><atom:updated>2026-07-22T14:16:46.657Z</atom:updated><atom:author><atom:name>K.Sakthivel</atom:name><atom:uri>/api/author/2422436</atom:uri></atom:author><description></description><media:keywords>நாயகன்,கனிமொழி,Kanimozhi,Hero,பொறுப்பு,responsible,ஜனநாயகன்,Jananayagan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/eotcps2w/jananayagan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/eotcps2w/jananayagan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஜனநாயகனை கொண்டாடுவோம்... பொறுப்புள்ள நாயகனாக மாறுவோம்! "<a href="https://www.dailythanthi.com/cinema/cinemanews/jananayagan-film-team-released-the-2nd-promo">ஜனநாயகன்</a> பாஸ்போர்ட்" மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கினார் எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ்.</p> <h2>ஜனநாயகன் பாஸ்போர்ட்</h2><p> முதல்-அமைச்சர் விஜய் நடித்துள்ள "ஜனநாயகன்" திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, திரைப்பட கொண்டாட்டத்தை சமூக பொறுப்புணர்வுடன் இணைக்கும் வகையில், கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ்  "ஜனநாயகன் பாஸ்போர்ட்" என்ற மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கினார்.</p><h2>சமூகப்பொறுப்பு</h2><p> "ஜனநாயகனைக் கொண்டாடுவோம்... பொறுப்புள்ள நாயகனாக மாறுவோம்!" என்ற முழக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், திரைப்படத்தை வெறும் பொழுதுபோக்காக மட்டும் பார்க்காமல், அதன் மூலம் சமூகத்தில் ஒவ்வொரு குடிமகனும் தனது ஜனநாயக மற்றும் சமூகப் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.</p> <figure><img alt="எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ்" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/o24vkuc9/kanimozhi.jpg" /></figure><h2> சமூக ஒற்றுமை</h2><p>இந்த "ஜனநாயகன் பாஸ்போர்ட்" மூலம் சாலை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தூய்மையான சூழல், மனிதநேயம், சட்டங்களை மதித்தல், பொது இடங்களை பாதுகாத்தல், சமூக ஒற்றுமை உள்ளிட்ட பொறுப்புமிக்க குடிமகனின் அடிப்படை கடமைகள் குறித்து உறுதிமொழி எடுக்க மக்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.</p> <h2>உறுதிமொழி ஏற்றனர்</h2><p>திரையில் ஜனநாயகன்... சமூகத்தில் பொறுப்புள்ள நாயகன்" என்ற சிந்தனையை மக்களிடம் கொண்டு சேர்த்து, பொறுப்புணர்வும் சமூக அக்கறையும் கொண்ட குடிமக்களை உருவாக்குவதே இந்த முன்னெடுப்பின் முக்கிய நோக்கமாகும். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திரைப்பட ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக பங்கேற்று, பொறுப்புள்ள குடிமகனாக செயல்பட உறுதிமொழி ஏற்றனர்.</p>]]></content:encoded></item><item><title>‘சாலையை காணவில்லை..’ வடிவேல் பாணியில் காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-road-is-missing-petition-submitted-to-the-kancheepuram-collector-in-the-style-of-comedian-vadivel</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-road-is-missing-petition-submitted-to-the-kancheepuram-collector-in-the-style-of-comedian-vadivel#comments</comments><guid isPermaLink="false">8184f351-243e-4225-91b0-7e421ca62bb6</guid><pubDate>Wed, 22 Jul 2026 13:55:35 +0000</pubDate><atom:updated>2026-07-22T13:55:35.963Z</atom:updated><atom:author><atom:name>Gokul Raj B</atom:name><atom:uri>/api/author/2401541</atom:uri></atom:author><description></description><media:keywords>கலெக்டர்,collector,Kanchipuram,காஞ்சிபுரம்,மனு,வடிவேல்,Vadivel</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/l7w81prn/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/l7w81prn/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>காஞ்சிபுரம்,</p><p>காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரிடம் ஏரிவாய் கிராமத்தைச் சேர்ந்த விநாயகமூர்த்தி என்பவர் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், “ஏரிவாய் கிராமப் பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம் மூலம் ரூ.9.27 லட்சம் மதிப்பீட்டில் 604 மீட்டர் அளவில் ஜல்லி சாலை போடப்பட்டதாக பெயர்பலகை வைத்துள்ளனர். அந்த சாலையானது எங்கள் பகுதியிலோ ஊர் பொதுமக்களுக்காகவோ போடப்பட்டதாக தெரியவில்லை.</p><p>இது குறித்து வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை நேரடியாகவும் மனுக்கள் மூலம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை, எனவே காணாமல் போன சாலையை கண்டுபிடித்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது. திரைப்படத்தில் வரும் காமெடி காட்சியில் நடிகர் வடிவேல் கிணற்றை காணவில்லை என்று காவல்துறையிடம் புகார் அளிப்பது போல், சாலையை காணவில்லை என கலெக்டரிடம் கிராம மக்கள் மனு அளித்தது கவனத்தைப் பெற்றுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் கார் மீது ஆட்டோ மோதி விபத்து: மும்பை மூதாட்டி பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/auto-rickshaw-collides-with-car-in-thoothukudi-elderly-woman-from-mumbai-dies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/auto-rickshaw-collides-with-car-in-thoothukudi-elderly-woman-from-mumbai-dies#comments</comments><guid isPermaLink="false">254fa8ae-422b-4cfa-ac5c-030d67a1555f</guid><pubDate>Wed, 22 Jul 2026 13:48:38 +0000</pubDate><atom:updated>2026-07-22T13:48:38.151Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,Thoothukudi,தூத்துக்குடி,மும்பை,Mumbai,Car,கார்,பலி,old woman,மூதாட்டி,Death,Auto,ஆட்டோ</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/1fuh2ihq/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மூதாட்டி பலி ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/1fuh2ihq/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரத்தில் கார் மீது ஆட்டோ மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மும்பையைச் சேர்ந்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF">மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலி</a>யானார்.</p><h2>மும்பைக்கு புறப்பட்ட மூதாட்டி</h2><p>மும்பை டோம்பிவ்லி பகுதியைச் சேர்ந்த முத்துராஜன் மனைவி ராஜராஜேஸ்வரி (வயது 60). இவர் கடந்த 18-ம் தேதி மும்பையிலிருந்து புறப்பட்டு எட்டையபுரத்திலுள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். உறவினர்களைச் சந்தித்து நலம் விசாரித்துத் தங்கியிருந்த அவர், கடந்த 20-ம் தேதி மதியம் மீண்டும் மும்பைக்கு புறப்பட்டார்.</p><h2>மூதாட்டி பலி</h2><p>இதற்காக எட்டையபுரத்திலிருந்து கோவில்பட்டி ரெயில் நிலையத்திற்கு செல்வதற்காக ஆட்டோவில் பயணித்துள்ளார். அந்த ஆட்டோவை எட்டையபுரம் அருகேயுள்ள சுரைக்காய்பட்டியைச் சேர்ந்த சுரேஷ்(37) என்பவர் ஓட்டியுள்ளார். ஆட்டோ எட்டையபுரம் பேரூராட்சி மன்றம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அந்த அலுவலகம் முன்பிருந்து ஒரு கார் திடீரென சாலையில் திரும்பியுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக கண் இமைக்கும் நேரத்தில் காரின் மீது ஆட்டோ மோதி, சாலையில் கவிழ்ந்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">விபத்து</a>க்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஆட்டோவில் பயணித்த ராஜராஜேஸ்வரி படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். </p><p>இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த எட்டையபுரம் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி, எட்டையபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து எட்டையபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த எட்டையபுரம் அருகேயுள்ள முதலிபட்டியைச் சேர்ந்த காளிராஜிடம்(36) தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உறவினர் வீட்டிலிருந்து ஊருக்கு திரும்பிய வழியில் விபத்தில் சிக்கி பெண் பலியான சம்பவம் எட்டையபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பழனி கோவில் நில முறைகேடு வழக்கு: நிலத்தை வாங்கிய வெள்ளத்துரைக்கு முன்ஜாமீன் நிராகரிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-temple-land-irregularity-case-anticipatory-bail-rejected-for-vellathurai-who-purchased-the-land</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-temple-land-irregularity-case-anticipatory-bail-rejected-for-vellathurai-who-purchased-the-land#comments</comments><guid isPermaLink="false">b2f575d5-dba3-48c5-9b32-73edf6fae95c</guid><pubDate>Wed, 22 Jul 2026 13:41:10 +0000</pubDate><atom:updated>2026-07-22T13:41:10.212Z</atom:updated><atom:author><atom:name>Paramasivan S</atom:name><atom:uri>/api/author/2406196</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Palani Murugan Temple,Madurai High Court,மதுரை ஐகோர்ட்டு,முன் ஜாமீன்,நில மோசடி,பழனி கோவில்,Land fraud case</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/fb9nooib/klere.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/fb9nooib/klere.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/palani">பழனி </a>கோவில் நில முறைகேடு வழக்கில், நிலத்தை வாங்கிய வெள்ளத்துரைக்கு முன்ஜாமீன் நிராகரிக்கப்பட்டுள்ளது.</p><p>பழனியில் ரூ.100 கோடி கோவில் நிலம் மோசடி வழக்கில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியதுடன், இந்த பத்திரப்பதிவு செல்லாது எனவும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.</p><h2>முன்ஜாமீன் கேட்டு மனு</h2><p>இந்த நிலையில் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள வெள்ளத்துரை, தனக்கு முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். </p><p>அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-</p><p>எனக்கு பழனியை அடுத்த பாப்பான்குளம் சொந்த ஊராகும். சமீபத்தில் எனக்கு சொந்தமான சொத்தை சுமார் ரூ.2 கோடிக்கு விற்றேன். இந்தத் தொகையை வங்கிகளில் வைப்புத்தொகையாக முதலீடு செய்ய முடிவு செய்தேன். ஆனால் அவ்வாறு செய்தால் பெரும் தொகையை வருமானவரியாக செலுத்த நேரிடும். ஒரு சொத்தின் மூலம் கிடைக்கும் பணத்தை மற்றொரு சொத்து வாங்கி முதலீடு செய்வதுதான் நல்லது என்று எனது ஆடிட்டர் ஆலோசனை தெரிவித்தார். அவரது ஆலோசனையின் பேரில் நிலம் வாங்குவது என முடிவு செய்து விசாரித்தேன்.</p><h2>பதிவு செய்ய மறுப்பு</h2><p>அந்த சமயத்தில்தான் <a href="https://www.dailythanthi.com/topic/palani">பழனி</a> மலை அடிவாரத்தில் உள்ள நிலம் விற்பனைக்கு வந்ததை தெரிந்து கொண்டேன். ஆவணங்களை சரிபார்த்த போது நிலம் சம்பந்தமான வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டு விற்பனைக்கு தயாராக இருந்தது தெரிய வந்தது.</p><p>பின்னர் அந்த நிலத்தை வாங்க ஒப்புக்கொண்டேன். தொடக்கத்தில் இந்த நிலத்தின் ஆவணங்கள் போலி என்று கூறி பத்திரப்பதிவு செய்ய மறுத்தனர். இதனால் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உத்தரவு பெற்று அதன் பிறகு இந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்து அதன் உரிமையைப் பெற்றேன். இதைத் தவிர வேறு எதற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.</p><p>நான் வசதியாக வாழ்வதற்கு தேவையானதை விட அதிகமாகவே என்னிடம் வசதி வாய்ப்புகள் உள்ளன. இப்போது இந்த சொத்து பத்திரப்பதிவு ஐகோர்ட்டால் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால், என்னிடம் எந்த விளக்கமும் கேட்கப்படவில்லை. நான் உழைத்து சேர்த்த பணத்தை செலுத்தி இந்த நிலத்தை வாங்கினேன். எனவே இதற்காக நான் செலுத்திய தொகையை விற்பனையாளரிடம் இருந்து மீட்கும் நிலையில் இருக்கிறேன்.</p><h2>மதிப்பு ரூ.100 கோடி</h2><p>1 ஏக்கர் 40 சென்ட் பரப்பளவுள்ள நிலம், <a href="https://www.dailythanthi.com/topic/palani">பழனி</a> முருகன் கோவில் தேவஸ்தானத்திற்குச் சொந்தமானது என்றும், அதன் மதிப்பு 100 கோடி ரூபாய் என்றும், மேலும் அந்த நிலம் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகன நிறுத்துமிடமாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த நிலத்தை மோசடி செய்யும் நோக்கத்தில் பத்திரப்பதிவு செய்ததாக பொய்யான குற்றச்சாட்டு கூறப்படுகிறது. அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் என்னை சிக்க வைத்து இருக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்.</p><p>இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.</p><h2>சி.பி.சி.ஐ.டி. பதில்</h2><p>இந்த மனு நீதிபதி ராஜசேகர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரை ஒரு தரப்பாக சேர்க்கிறோம். அவர்கள் உரிய பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு (புதன்கிழமை) ஒத்திவைத்திருந்தார்.</p><h2>முன்ஜாமீன் நிராகரிப்பு</h2><p>இந்நிலையில் இன்று நடந்த வழக்கு விசாரணையின்போது, பழனி கோவில் நில முறைகேடு வழக்கில், நிலத்தை வாங்கிய வெள்ளத்துரைக்கு முன்ஜாமீன் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி வெள்ளத்துரை முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட்டு மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை மறுநாள் மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-electricity-maintenance-outage-24-07-2026</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-electricity-maintenance-outage-24-07-2026#comments</comments><guid isPermaLink="false">cbb8d71d-d37d-405a-8c4b-3a0e44be8ab9</guid><pubDate>Wed, 22 Jul 2026 13:30:15 +0000</pubDate><atom:updated>2026-07-22T13:30:15.178Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,maintenance work,பராமரிப்பு பணி,Power outage the day after tomorrow,நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/d32d2v7v/power-cut.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின் தடை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/d32d2v7v/power-cut.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் 24.07.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">மின் விநியோகம்</a> கொடுக்கப்படும்.</p><h2>வேளச்சேரி</h2><p> 100 அடி புறவழிச்சாலை, வேளச்சேரி பிரதான சாலை, தேவி கருமாரியம்மன் நகர், வெங்கடேஸ்வரா நகர் 1வது முதல் 4வது தெருக்கள் வரை, டேவ் பிளாட், பாலகிருஷ்ணா தெரு, திருவள்ளூர் தெரு, கம்பர் தெரு, பாபா கார்டன், வீனஸ் காலனி, காமராஜர் தெரு, டான்சி நகர் மற்றும் முழு வி.ஜி.பி. செல்வா நகர்.</p> <h2>ஆவடி</h2><p> சி.டி.எச் சாலை, கவரபளையம், சிந்து நகர், காந்தி நகர், டி.ஆர்ஆர் நகர், தனலக்ஷ்மி நகர், எம்.ஆர்.எப் நகர், நாசர் பிரதான சாலை, மோசஸ் தெரு.</p><h2>பூவிருந்தவல்லி</h2><p>ஜெஜெ நகர், குமரன் நகர்,லீலாவதி நகர், ஏரிக்கரை சாலை, ஆவடி பிரதான சாலை.</p> <h2>மாங்காடு</h2><p>மலையம்பாக்கம் பாரி கார்டன், ராயல் சிட்டி, சக்தி நகர், ரஹ்மத் நகர், எல்.கே.பி. நகர், பிள்ளையார் கோவில் தெரு, அபி எஸ்டேட், ஸ்ரீனிவாச நகர், ஜனனி நகர், நேரு தெரு, காமராஜர் தெரு, வசந்தபுரி பேஸ் I மற்றும் II, ராம் நகர்.</p><h2>தாம்பரம்</h2><p>மாடம்பாக்கம் நூத்தஞ்சேரி பிரதான சாலை, நூத்தஞ்சேரி லிங்க் சாலை, சபாபதி நகர், ஜோதி நகர், மாணிக்கம் நகர், வேங்கைவாசல், பாலா கார்டன் மற்றும் விரிவாக்கப் பகுதி.</p><h2>புழல்</h2><p>மதானக்குப்பம், புத்தகரம், பெருமாள் நகர், ஆண்டாள் கோயில் தெரு, சண்முகபுரம், சிவப்பிரகாசம் நகர், நேதாஜி நகர், லட்சுமி அம்மன் நகர்.</p><h2>போரூர்</h2><p> சிக்கராயபுரம், கணபதி நகர், அஷ்டலக்ஷ்மி நகர், ஹரி அவென்யு, மாசிலாமணி நகர், லட்சுமி அவென்யு,மாந்தியம்மன் கோவில் தெரு, மங்களாபுரம், கே.கே.நகர், தென் காலனி, சபரி நகர், பாலாஜி நகர், கார்த்திக் பேலஸ், ஆர்சி பேலஸ், திருமுருகா மண்டபம், குன்றத்தூர் பிரதான சாலை, எம்ஜிஆர் சிலை பஸ் ஸ்டாப், மேட்டு தெரு, பஜனை கோவில் தெரு, காந்தி தெரு, சிவன்தாங்கள், ஆஞ்சநேயர் கோவில் தெரு, அம்பாள் நகர், லீலாவதி நகர்,குமாரசாமி நகர், ஐடியா கம்பெனி.</p><h2>ஐடி காரிடார்</h2><p>எழில் நகர், கண்ணகி நகர், வி.பி.ஜி அவென்யூ, ராயல் அவென்யூ, குமரன் குடில், தேவராஜ் அவென்யூ, மவுண்ட்பேட்டன் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, என்.ஜி.கே அவென்யூ, செயலக காலனி, பார்த்தசாரதி நகர், அன்னை பார்வதி நகர், தேவராஜ் நகர், ஸ்ரீ நகர், மகாத்மா காந்தி நகர், கற்பக விநாயகர் நகர், கணேஷ் நகர், திருவள்ளுவர் நகர், ராமலிங்க நகர், பாரதி தெரு, அண்ணா தெரு, நாராயணா நகர், கோபிநாத் அவென்யூ, ஈஞ்சம்பாக்கம், கஸ்தூரிபாய் நகர்.</p> <h2>அடையாறு</h2><p> எல்.பி. சாலை, 1வது முதல் 4வது பரமேஸ்வரன் நகர், சாஸ்திரி நகர் 1வது அவென்யூ, 1வது முதல் 3வது பத்மநாபன் நகர், இந்திரா நகர், ஸ்ரீனிவாசமூர்த்தி அவென்யூ, திருவேங்கடம் தெரு, 1வது குறுக்குத் தெரு, கே.பி. நகர், அண்ணா அவென்யூ.</p><h2>பெசன்ட் நகர்</h2><p>கங்கை தெரு, அப்பர் தெரு, டைகர் வரதாச்சாரியார் தெரு, அருண்டேல் பீச் சாலை, பீச் சாலை, ருக்குமணி சாலை விரிவாக்கப்பகுதி, அஷ்டலட்சுமி கார்டன், ஓடை குப்பம், தீடீர் நகர், கோஸ்டல் சாலை, திருமுருகன் தெரு, வைகை தெரு, பாரி தெரு, காவேரி தெரு.</p><h2>கொட்டிவாக்கம்</h2><p> நியூ பீச் சாலை மற்றும் விரிவாக்கப்பகுதி, சிட்ரஸ் ஹோட்டல், திருவள்ளுவர் நகர் 2வது மற்றும் 7வது பிரதான சாலை, 36வது, 58வது மற்றும் 59வது குறுக்குத் தெருக்கள், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், தாமரை ஹவுசிங் போர்டு, பேவாட்ச் புல்வார்டு, வாட்டர்லேண்ட் டிரைவ்.</p> <h2>கோவிலம்பாக்கம்</h2><p> ஏழுமலை சாலை, வடிவேல் நகர், கோபால் நகர், ஸ்ரீ பெருமாள் நகர், பார்த்தசாரதி சாலை, ஜெய்கணேஷ் நகர், பொன்னியம்மன் கோவில் தெரு, அபிநாதன் நகர், விஜயலட்சுமி நகர், தமிழன் தெரு, பாலகிருஷ்ணா தெரு, அவிவா என்க்ளேவ், பாலராமன் தெரு, பிள்ளையார் கோவில் தெரு.</p><h2>அம்பத்தூர்</h2><p> என்.ஆர்.எஸ் சாலை, பல்லா தெரு, டி.வி.எஸ் நகர், கண்டிகை தெரு, அக்ரஹாரம், ஸ்ரீனிவாசபுரம், செந்தில் நகர், ஐயப்பன் நகர், ஸ்ரீனிவாச நகர், தயாளன் நகர், கணேஷ் நகர், பாபா நகர், கடப்பா சாலை, வனசக்தி நகர், மூகாம்பிகை நகர், மதானக்குப்பம், பெருமாள் கோவில் தெரு மற்றும் ஆர்.கே. சிண்டிகேட்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அன்புமணிக்கு எதிரான வழக்கை திரும்ப பெற்றார் ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ramadas-withdraws-case-against-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ramadas-withdraws-case-against-anbumani#comments</comments><guid isPermaLink="false">31a32771-2de2-4ee3-b2f8-41dd882f4861</guid><pubDate>Wed, 22 Jul 2026 13:12:32 +0000</pubDate><atom:updated>2026-07-22T13:12:32.269Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,ராமதாஸ்,வழக்கு,AnbumaniRamadoss,வாபஸ்,Dr.Ramadoss</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/wf1pizy9/ramdosss.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ராமதாஸ்,அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/wf1pizy9/ramdosss.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவராக தன்னை அறிவிக்க கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றார் ராமதாஸ்</p><h2>கடும் மோதல்</h2><p> பா.ம.க.வில் உச்சக்கட்ட அதிகாரம் யாருக்கு என்பதில் ராமதாஸுக்கும், அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடு நிலவி வந்தது. </p><h2>நீதிமன்றத்தில் மனு</h2><p>பாமக தலைவராக என்னை அறிவிக்க வேண்டும்; கட்சியின் பெயர், கொடி, மாம்பழ சின்னத்தை அன்புமணி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்" என ராமதாஸ் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அன்புமணியை பாமக தலைவராக அங்கீகரித்து தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை செல்லாது என அறிவிக்கவும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. </p><h2>திடீர் சந்திப்பு</h2><p> இந்த பரபரப்பான சூழ்நிலையில், ராமதாஸின் திருமண நாளன்று அவரது தைலாபுரம் தோட்ட இல்லத்திற்கு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ் </a>நேரில் சென்றார். அங்கு தந்தை-மகன் இடையே நீண்ட நேரம் சுமுகப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இருவருக்கும் இடையே இருந்த மனக்கசப்புகள் அனைத்தும் நீங்கி, குடும்ப ரீதியாகவும் கட்சி ரீதியாகவும் சமரசம் ஏற்பட்டது.</p><h2> வாபஸ் மனு</h2><p> தங்களுக்குள் ஏற்பட்ட சுமுக உடன்பாட்டை அடுத்து, வழக்கை மேற்கொண்டு நடத்த விரும்பவில்லை என்றும், மனுவை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என்றும் ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தனக்கும், அன்புமணிக்கும் இடையே பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்பட்டு விட்டதால் வழக்கை வாபஸ் பெறுகிறேன்" என்ற ராமதாஸின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சென்னை நீதிமன்றம், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.</p>]]></content:encoded></item><item><title>நீலக் கம்பளம் விரித்த நீலகிரி.. கூடலூரில் பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-nilgiris-draped-in-a-blue-carpet-kurinji-flowers-in-full-bloom-in-gudalur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-nilgiris-draped-in-a-blue-carpet-kurinji-flowers-in-full-bloom-in-gudalur#comments</comments><guid isPermaLink="false">e267c834-6f42-400c-8f86-199ae555fcf9</guid><pubDate>Wed, 22 Jul 2026 13:10:49 +0000</pubDate><atom:updated>2026-07-22T13:10:49.941Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,நீலகிரி,கூடலூர்,Nilgiri,Kudalur,குறிஞ்சி மலர்கள்,Strobilanthes kunthiana,Kurinji</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/14ym126c/pathi.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/14ym126c/pathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கூடலூர், </p><p>பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்களால் <a href="https://www.dailythanthi.com/topic/kudalur">கூடலூர்</a> வனப்பகுதி செல்பி ஸ்பாட்டாக மாறி வருகிறது. குறிஞ்சி மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.</p><h2>குறிஞ்சி மலர்கள்</h2><p>குறிஞ்சி மலர், தமிழர்களின் பண்பாட்டோடும், இயற்கை வளத்தோடும் நெருங்கிய தொடர்புடைய மலராகும். இது நீல நிறத்தில் பூக்கும். சங்க இலக்கியங்களில் குறிஞ்சி நிலம் என்ற பெயருக்கு இந்த மலரே காரணமாக விளங்குகிறது. குறிஞ்சி மலரின் அறிவியல் பெயர் 'ஸ்டிராபிலாந்தஸ் குந்தியானா' ஆகும். வழக்கமாக நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் குறிஞ்சி செடிகள் வளருகிறது.</p><p>12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூப்பதால், சிறப்பு வாய்ந்த மலராக மக்கள் மனதில் இடம் பிடித்து வருகிறது. தற்போது நீலகிரி மாவட்டம் கூடலூர் நாடு காணி, ஓவேலி, நடுவட்டம் ஊசிமலை காட்சி முனை வனப்பகுதியில் குறிஞ்சி மலர்கள் பூத்து உள்ளன. மலைகள் முழுவதும் நீல நிற போர்வை போர்த்தியது போல் குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்கி காட்சியளிக்கிறது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/xs17qhf1/laper.jpg" /></figure><h2>செல்பி ஸ்பாட்</h2><p>இதனால் கூடலூர் சுற்றுவட்டார மக்கள் குறிஞ்சி மலர்களை கண்டு ரசித்து வருகின்றனர். இதேபோல் கேரளம், கர்நாடகா மாநில சுற்றுலா பயணிகளும் குறிஞ்சி மலர்கள் பூத்துள்ள தகவல் அறிந்து, அதிக அளவு வர தொடங்கியுள்ளனர். </p><p>இதன் காரணமாக கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஊசிமலை காட்சி முனை வனப்பகுதியில் பூத்துள்ள குறிஞ்சி மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். தங்களது செல்போன்களில் குடும்பத்தினருடன் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.</p><p>இதேபோல் பாண்டியாறு வனப்பகுதியில் குறிஞ்சி மலர்களை கண்டு, அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் வனப்பகுதிக்குள் அத்துமீறி சென்று செல்பி எடுத்து வருகின்றனர். இதனால் வனப்பகுதி செல்பி ஸ்பாட்டாக மாறி வருகிறது. இதனிடையே காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அச்சுறுத்தல் உள்ள வனப்பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் அத்துமீறி செல்பி எடுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவில் அரசு சமரசம் செய்யக் கூடாது - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/arasup-palligalil-vazhankappadum-saththunavil-arasu-samarasam-seiyak-koodathu-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/arasup-palligalil-vazhankappadum-saththunavil-arasu-samarasam-seiyak-koodathu-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">8e649662-c354-498d-b0ae-cbbc21dfe8a4</guid><pubDate>Wed, 22 Jul 2026 12:39:58 +0000</pubDate><atom:updated>2026-07-22T12:39:58.017Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,அரசுப் பள்ளிகள்,Govt Schools,சத்துணவு,Nainar Nagenthran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/a4s6pk58/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/a4s6pk58/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள அங்கன்வாடி மையத்தில் வழங்கப்பட்ட சத்துணவு முட்டையில் அழுகிய நிலையில் கோழிக்குஞ்சு கிடந்ததாகவும், தருமபுரி மாவட்டம், ஏரியூா் பகுதி அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் முட்டைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து வெளியாகி வரும் செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.</p><p>மாணவர்களின் ஆரோக்கியத்தையும், பெற்றோர்களின் நம்பிக்கையையும் ஒருசேர சீர்குலைக்கும் இதுபோன்ற செய்திகளை, விஜய் தலைமையிலான அரசு இனியும் அலட்சியப்படுத்தக் கூடாது. </p><p>அதுமட்டுமன்றி, தமிழக அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் முட்டைகள் அனைத்தும் 'ஏ' தரம் (Agmark A grade) மற்றும் குறைந்தபட்சம் 46 கிராம் எடை கொண்டவைகளாக இருக்க வேண்டும் என்ற விதிகள் இருக்கும் பட்சத்தில், இதுபோன்ற குளறுபடிகள் எப்படி தொடர்கின்றன? அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு வேண்டியவர்களின் கோழிப்பண்ணைகளில் இருந்து தரமற்ற முட்டைகள் கொள்முதல் செய்யப்படுகின்றனவா? கொள்முதல் செய்யப்படும் முட்டைகள் முறையாக பதப்படுத்தப்படுகின்றனவா? அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர் எண்ணிக்கையை கணக்கிட்டு முட்டைகள் வழங்கப்படுகின்றனவா? அல்லது, மாணவர்களுக்கென ஒதுக்கப்படும் சத்துணவு முட்டைகள் கள்ளச் சந்தையில் விற்கப்படுகின்றனவா? உள்ளிட்ட மக்களின் சந்தேகங்களுக்கு அரசு சார்பில் இருந்து முறையான விளக்கம் தேவை. </p><p>முந்தைய திமுக ஆட்சியைப் போலவே, எளிய பின்புலம் கொண்டவர்கள் பெருமளவில் படிக்கும் அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவில், தற்போதைய அரசும் சமரசம் செய்யக் கூடாது! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு: குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சியா..? ஐகோர்ட்டு காட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-against-sp-velumani-an-attempt-to-shield-the-guilty-high-court-expresses-strong-displeasure</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-against-sp-velumani-an-attempt-to-shield-the-guilty-high-court-expresses-strong-displeasure#comments</comments><guid isPermaLink="false">1ee41815-32f9-4e2d-9ed0-a079a9b9a732</guid><pubDate>Wed, 22 Jul 2026 12:37:58 +0000</pubDate><atom:updated>2026-07-22T12:37:58.981Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,சென்னை ஐகோர்ட்டு,former minister,முன்னாள் அமைச்சர்,Chennai High Court,எஸ்.பி.வேலுமணி,S.P.Velumani</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/qjil19uk/spv.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/qjil19uk/spv.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/spvelumani">முன்னாள் அமைச்சர் வேலுமணி</a>க்கு எதிரான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை பாதுகாக்க அனைவரும் முயற்சிப்பது துரதிருஷ்டவசமானது என சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.</p><h2>விசாரணை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/spvelumani">முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி</a>க்கு எதிரான 98 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு வழக்கில், அறப்போர் இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.</p><h2>பொதுத்துறை செயலாளருக்கு கடிதம்</h2><p>அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி இருந்த நிலையில், சில விளக்கங்களை கேட்டு மத்திய அரசு கடிதம் அனுப்பி இருந்ததாகவும், இதுசம்பந்தமாக கடந்த பிப்ரவரி 27-ம் தேதி விளக்கம் அளித்து, பொதுத்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><h2>காணொலி காட்சி மூலம் ஆஜர்</h2><p>இதையடுத்து, கடந்த பிப்ரவரி 27-ம் தேதி முதல் இந்த விவகாரம், பொதுத்துறை செயலாளரிடம் நிலுவையில் உள்ளது. அதுகுறித்து பொதுத்துறை தரப்பில் எந்த விளக்கமும் இல்லை என தெரிவித்த நீதிபதி, கடந்த ஐந்து மாதங்களாக பொதுத்துறை செயலாளரிடம் இந்த கோப்புகள் நிலுவையில் வைத்தது ஏன் என அப்போது பொதுத்துறை செயலாளராக பதவி வகித்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ரீட்டா ஹரிஷ் தாக்கர், காணொலி காட்சி மூலம் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டார்.</p><h2>நீதிபதி கண்டனம்</h2><p>அதேபோல, கோப்புகளை கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து நிலுவையில் வைத்திருந்தது ஏன் என்பது குறித்து தற்போது பொதுத்துறை செயலாளரும், இதுசம்பந்தமாக விளக்கமளித்து மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 3-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். </p><p>முன்னதாக, இந்த விவகாரத்தில் சட்டமன்ற தேர்தல், ஆட்சி மாற்றம் போன்ற காரணங்களை ஏற்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, முன்னாள் அமைச்சருக்கு எதிரான இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை பாதுகாக்க அனைவரும் முயற்சிப்பது துரதிருஷ்டவசமானது என கண்டனம் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>துப்பாக்கி முனையில் கொள்ளை: சென்னையில் பதுங்கியிருந்த மேற்கு வங்காள தம்பதி அதிரடி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/robbery-at-gunpoint-west-bengal-couple-hiding-in-chennai-arrested-in-a-sting-operation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/robbery-at-gunpoint-west-bengal-couple-hiding-in-chennai-arrested-in-a-sting-operation#comments</comments><guid isPermaLink="false">f247b361-cd9a-48c3-b662-be18f664319b</guid><pubDate>Wed, 22 Jul 2026 12:36:49 +0000</pubDate><atom:updated>2026-07-22T12:36:49.088Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,கொள்ளை,Couple arrested,தம்பதி கைது,Jewel-cash robbery</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/ez82v2hd/5.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ அலீம் கான்- சிமகதுன்]]></media:title><media:description type="html"><![CDATA[ மேற்கு வங்கத்தில் கொள்ளையடித்து விட்டு சென்னையில் பதுங்கியிருந்த தம்பதியை போலீசார் கைது செய்தனர். ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/ez82v2hd/5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மேற்கு வங்காளத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து விட்டு சென்னையில் பதுங்கியிருந்த தம்பதியை போலீசார் கைது செய்தனர். </p><h2>நகை-பணம் கொள்ளை</h2><p><a href="https://www.dailythanthi.com/news/india">மேற்கு வங்காள மாநிலம்</a> நந்திகிராம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் அலீம் கான் - சிமகதுன் தம்பதியினர் துப்பாக்கியுடன் அதிரடியாக நுழைந்தனர். பின்னர் துப்பாக்கியை காட்டி வீட்டிற்குள் இருந்தவர்களை மிரட்டி 35 சவரன் தங்கம் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். </p><p>பணம், நகையை பறிகொடுத்தவர்கள் இதுகுறித்து  போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய தம்பதியினரை தேடி வந்தனர்.</p><h2>உறவினர்கள் வீட்டில் தஞ்சம்</h2><p>மேற்கு வங்காளத்தில் இந்தக் கொடூர கொள்ளைச் சம்பவத்தை செய்த தம்பதி, போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காகத் தமிழ்நாட்டிற்கு விரைந்தனர். இதையடுத்து சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள டைல்ஸ் கடை ஒன்றில் வேலை பார்த்து வரும் தங்கள் உறவினர்களின் வீட்டில் அவர்கள் ரகசியமாகத் தங்கி இருந்தனர்.</p><h2>கூட்டு நடவடிக்கை மூலம் கைது</h2><p>குற்றவாளிகளின் மொபைல் சிக்னல் மற்றும் ரகசிய தகவல்களின் அடிப்படையில், மேற்கு வங்க போலீசார் சென்னைக்கு விரைந்தனர். சென்னை மதுரவாயல் போலீசாரின் உதவியுடன் இணைந்து அதிரடி சோதனை நடத்தினர்.</p><p>அங்கு பதுங்கியிருந்த தம்பதியை சுற்றி வளைத்து போலீசார் <a href="https://www.dailythanthi.com/news/india">கைது</a> செய்தனர். மேலும், கைதானவர்களை மேற்கு வங்கத்திற்கு அழைத்துச் சென்று மேல் விசாரணை நடத்த உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>முதல்வரின் காலை உணவு திட்டம்: பெயர் மாற்றம் செய்த த.வெ.க. அரசு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-ministers-breakfast-scheme-tvk-government-changes-the-name</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-ministers-breakfast-scheme-tvk-government-changes-the-name#comments</comments><guid isPermaLink="false">158a5908-a7c8-4770-bbbc-eb719090722a</guid><pubDate>Wed, 22 Jul 2026 11:48:35 +0000</pubDate><atom:updated>2026-07-22T12:35:05.702Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,தமிழக அரசு,TN govt,Kamarajar,காமராஜர்,காலை உணவு திட்டம்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,Chief Minister Vijay,தவெக அரசு,TVK Government,Chief Minister Breakfast Scheme</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/ql9nkf4n/koer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/ql9nkf4n/koer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் பெயரை 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என தவெக அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. </p><h2>காலை உணவுத் திட்டம்</h2><p>கடந்த தி.மு.க. ஆட்​சி​யில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை அரசு தொடக்​கப் பள்​ளி​களில் முதல்​வரின் காலை உணவுத் திட்டம் கொண்டு வரப்​பட்​டது. கடந்த 2022 செப்​.15-ம் தேதி அண்ணா பிறந்த நாளில் இத்​திட்​டத்தை அப்​போதைய முதல்​-அமைச்சர் மு.க.ஸ்டா​லின் தொடங்​கி​வைத்​தார்.</p><p>பின்​னர், அரசு உதவி​பெறும் தொடக்​கப் பள்​ளி​களுக்​கும் இத்​திட்​டம் விரிவுபடுத்​தப்​பட்​டது. விரி​வாக்க திட்​டத்தை ஸ்டா​லின் 2023 ஆக.25-ம் தேதி தொடங்​கி​வைத்​தார். தற்​போது 17.55 லட்​சம் மாணவ, மாணவி​கள் இத்திட்​டத்​தால் பயன்​பெற்று வரு​கின்​றனர்.</p> <h2>த.வெ.க. அரசு</h2><p>இந்​த சூழலில் தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்டு த.வெ.க. அரசு பொறுப்​பேற்​றுள்ள நிலை​யில், முதல்​வரின் காலை உணவுத் திட்​டத்தை 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை விரி​வாக்​கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.</p><p>இதன்படி தன் கொள்கை தலைவரான தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17-ந்தேதி முதல் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">விஜய்</a> அறிவித்துள்ளார். இதன்மூலம் 15 லட்சம் மாணவர்கள் இனி பள்ளிகளிலேயே காலை உணவு சாப்பிடுவார்கள்.</p> <h2>பெருந்தலைவர் காமராஜர்</h2><p>சமையலறை மற்றும் உபகரணங்கள் இருக்கும் பள்ளிகளில் செப்டம்பர் 17-ந்தேதியும், மற்ற பள்ளிகளில் அடுத்த ஒரு மாதத்துக்குள்ளும் இந்த திட்டம் தொடங்கப்படஉள்ளது. ஆக தமிழ்நாட்டில் இனி 34.36 லட்சம் மாணவர்களுக்கு பசிப்பிணி தெரியாது என்று கூறப்படுகிறது. </p><p>இந்நிலையில் முதல்வரின் காலை உணவு திட்டம் என்ற பெயரை <strong>'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்'</strong> என தவெக அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. </p> <h2>சத்துணவோடு முட்டை</h2><p>முன்னதாக ஏழை மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தை கொண்டுவந்தவர் பெருந்தலைவர் காமராஜர். அடுத்து புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது 1982-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிக்கூடங்களில் சத்துணவு வழங்கும் திட்டத்தை அறிவித்தார். </p><p>இதேபோல, முதல்-அமைச்சராக கலைஞர் கருணாநிதி இருந்தபோது சத்துணவோடு முட்டை வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்தநேரத்தில், 1-வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சுவை மிகுந்த காலை உணவு வழங்கும் திட்டத்தை கொண்டுவந்தார். தற்போது <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. </p><h2>முழுவிவரம் :-</h2>]]></content:encoded></item><item><title>காலை உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயர்: காங்கிரஸ் கட்சி வரவேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kamarajs-name-for-breakfast-program-congress-party-welcomes-it</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kamarajs-name-for-breakfast-program-congress-party-welcomes-it#comments</comments><guid isPermaLink="false">5a73ccc1-1d02-4b39-85d5-072dc00f23ae</guid><pubDate>Wed, 22 Jul 2026 12:31:16 +0000</pubDate><atom:updated>2026-07-22T12:31:16.220Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,காங்கிரஸ்,Congress,Announcement,அறிவிப்பு,மாணிக்கம் தாகூர்,காமராஜர்,காலை உணவு திட்டம்,Reception,வரவேற்பு,Breakfast Program,Kamaraj,பெயர் சூட்டல்,Manickam Thakur MP,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,Naming</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/l7iprwbl/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/l7iprwbl/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக அரசின் காலை உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய் </a>அறிவிப்பு வெளியிட்டதற்கு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: </p><p>தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பெருந்தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D">காமராஜர்</a> பொறுப்பேற்று பொற்கால ஆட்சி நடத்திய போது கல்வியில் புரட்சி செய்தார். மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார்.</p><h2>பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்</h2><p>அதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி வரும் காலை உணவு திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">காலை உணவு திட்டம்</a> என்று பெயர் சூட்டி முதல்-அமைச்சர் சி.ஜோசப் விஜய் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.</p><h2>வரவேற்பு</h2><p>இதனை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்பதோடு, பெருந்தலைவரின் புகழுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்ட முதல்-அமைச்சர் சி.ஜோசப் விஜய்க்கு நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை அருகே எம்.பி.பி.எஸ். மாணவி திடீர் தற்கொலை - போலீஸ் விசாரணை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mbbs-student-commits-sudden-suicide-near-chennai-police-investigation-underway</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mbbs-student-commits-sudden-suicide-near-chennai-police-investigation-underway#comments</comments><guid isPermaLink="false">b8e44693-af60-4d73-af3a-43772c3f1a62</guid><pubDate>Wed, 22 Jul 2026 11:58:02 +0000</pubDate><atom:updated>2026-07-22T11:58:02.053Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மாணவி,MBBS,எம்.பி.பி.எஸ்.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/0p2r03ek/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/0p2r03ek/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>செங்கல்பட்டு,</p><p>பீகார் மாநிலம், தானா பகல்பூர் பகுதியைச் சேர்ந்தவர் வருண்குமார் ராய், இவரது மகள் ரியாஸ்ராய் (வயது 24). இவர் சென்னை அருகே திருப்போரூரில் உள்ள நெல்லிக்குப்பத்தில் உள்ள மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 3-ம் ஆண்டு படித்து வந்தார்.  </p><p>இவர் கல்லூரி அருகே உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து உடன் படித்து வரும் தோழிகள் 2 பேருடன் தங்கி இருந்தார். நேற்று காலை ரியாஸ் ராய் தோழிகளிடம் "நான் கல்லூரிக்கு வரவில்லை. மனது சரியில்லை” என்று கூறினார். இதையடுத்து தோழிகள் இருவரும் வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று விட்டனர்.</p><p>நேற்று மாலை கல்லூரி முடிந்து அவர்கள் திரும்பி வந்தபோது அறையின் கதவு உள்பக்கம் பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டியும் ரியாஸ்ராய் திறக்கவில்லை. அவரது செல்போன் அழைப்பும் எடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தோழிகள் இதுகுறித்து காயார் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். </p><p>போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு படுக்கை அறையில் இருந்த மின் விசிறியில் ரியாஸ் ராய் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக கிடந்தார். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.</p><p>மாணவி ரியாஸ் ராயின் தற்கொலைக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. அவர் தற்கொலை செய்து இருப்பது குறித்து பீகாரில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாணவி ரியாஸ் ராய் 2-ம் ஆண்டு தேர்வில் இரண்டு பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை என்று தெரிகிறது. </p><p>இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் சொந்த ஊருக்கு வருவது குறித்து பெற்றோரிடம் செல்போனில் பேசி உள்ளார். ஆனால் அவர்கள் சொந்த ஊருக்கு வர வேண்டாம் என்று கூறி நன்றாக படிக்குமாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த மாணவி தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.</p><p>எனினும் மாணவியின் தற்கொலை முடிவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? அவரிடம் கடைசியாக பேசியது யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உடன் படித்து வரும் மாணவிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. </p> ]]></content:encoded></item></channel></rss>