<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 09 Sep 2026 09:15:52 +0000</lastBuildDate><item><title>கோவில்களுக்கு யானைகளை..வழங்குவது தொடர்பான ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு நயினார் நாகேந்திரன் வரவேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendran-welcomes-the-high-court-verdict-regarding-the-donation-of-elephants-to-temples</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendran-welcomes-the-high-court-verdict-regarding-the-donation-of-elephants-to-temples#comments</comments><guid isPermaLink="false">9df1eaf6-9820-4d7c-a7d1-c8ab946a6321</guid><pubDate>Wed, 09 Sep 2026 09:14:32 +0000</pubDate><atom:updated>2026-09-09T09:14:32.875Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Elephants,யானைகள்,கோவில் யானைகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/82ijkjog/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/82ijkjog/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திருக்கோவில்களுக்கு யானைகளை நன்கொடையாக வழங்குவது தொடர்பான சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை மனதார வரவேற்கிறேன் என தமிழக பாஜக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/nainar-nagendran">நயினார் நாகேந்திரன்</a> தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>கோவில்களுக்கு யானைகள் நன்கொடை</h2><p>பிற மாநிலங்களிலிருந்து தமிழகக் கோவில்களுக்கு யானைகளை நன்கொடையாக வழங்குவதைத் தமிழ்நாடு வனத்துறை தடுக்க முடியாது என்றும், அசாம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து கோவில்களுக்கு யானைகளைக் கொண்டு வர அனுமதிப்பது குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பை மனதார வரவேற்கிறேன். இது ஆன்மிகப் பெருமக்களுக்கும், பக்தர்களுக்கும் கிடைத்துள்ள பெரும் வெற்றியாகும்.</p><p>திருக்கோவில் உற்சவங்கள், பிரம்மோற்சவங்கள் மற்றும் குடமுழுக்கு நன்னாள்களில் யானைகளின் பங்கு என்பது நமது பாரம்பரிய வழிபாட்டு மரபின் பிரிக்க முடியாத அங்கமாகும். எனவே அதன் முக்கியத்துவம் கருதி மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெ. ஜெயலலிதாவால் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் வளர்ப்பு கோவில் யானைகள் மற்றும் மடங்களில் இருக்கும் யானைகளுக்காக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வந்த 48 நாள் நலவாழ்வு முகாமை முந்தைய திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நிறுத்திவிட்டது.</p><h2>யானைகள் சிறப்புப் புத்துணர்ச்சி முகாம்</h2><p>கோவில் யானைகள் என்பவை நமது ஆன்மிக அடையாளத்தின் மங்கலச் சின்னங்களாகும். எனவே, இந்து சமய அறநிலையத்துறையின் (HR&amp;CE) கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் பிரசித்தி பெற்ற திருக்கோவில்களுக்கும் யானைகள் நன்கொடையாக வழங்கப்படுவதற்குத் தேவையான நடைமுறைத் தடைகளை நீக்க வேண்டும். அதற்கான முன்முயற்சிகளை எடுப்பதோடு, நிறுத்தப்பட்ட "கோவில் யானைகள் சிறப்புப் புத்துணர்ச்சி முகாமை" இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உடனடியாக மீண்டும் தொடங்கிட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருப்பூர்: யானை தந்தத்தை பதுக்கிய வனத்துறை அதிகாரி உள்பட 3 பேர்  கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruppur-elephant-tusk-smuggling-forest-officer-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruppur-elephant-tusk-smuggling-forest-officer-arrested#comments</comments><guid isPermaLink="false">36680184-ab77-4fef-80b6-e857b0b278db</guid><pubDate>Wed, 09 Sep 2026 09:12:12 +0000</pubDate><atom:updated>2026-09-09T09:12:12.184Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்,கைது,arrest,Elephant tusks,யானை தந்தம்,வனத்துறை அதிகாரி,Forest Officer</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/aedizfb6/tuskers.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ யானை தந்தம்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருப்பூர்: யானை தந்தத்தை பதுக்கிய வனத்துறை அதிகாரி உள்பட 3 பேர்  கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/aedizfb6/tuskers.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>உடுமலைப்பேட்டை,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">திருப்பூர்</a> மாவட்டம் உடுமலைப்பேட்டை வனப்பகுதியில் பலத்த பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், யானை தந்தத்தை பதுக்கி வைத்திருந்த வனத்துறை அதிகாரி மாரிமுத்து உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>ரகசிய தகவல் </h2><p>உடுமலைப்பேட்டை வனப்பகுதியில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">யானை தந்தம்</a> பதுக்கப்பட்டு இருப்பதாக வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, ரகசிய இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த யானை தந்தத்தை பறிமுதல் செய்தனர். </p><p>இந்த கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பவத்தில் தொடர்புடைய வனத்துறை அதிகாரி மாரிமுத்து மற்றும் அவருடன் இருந்த இருவரை வனத்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.</p><h2>மர்ம மரணமா?</h2><p>வனப்பகுதியில் இயற்கையான முறையிலோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களாலோ இறந்த யானையிடம் இருந்து இந்த தந்தம் திருடி வரப்பட்டு பதுக்கப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. </p><p>கைது செய்யப்பட்டுள்ள வன அதிகாரி மாரிமுத்து மற்றும் இதர 2 கூட்டாளிகளிடமும் வனத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் பின்னணியில் பெரிய கடத்தல் கும்பல் ஏதேனும் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கூண்டு வெச்சது புலிக்கு ஆனால் சிக்கியது சிறுத்தை..! வனத்துறையினர் விடுத்த எச்சரிக்கை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-cage-was-set-for-a-tiger-but-a-leopard-got-caught-instead-forest-department-issues-a-warning</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-cage-was-set-for-a-tiger-but-a-leopard-got-caught-instead-forest-department-issues-a-warning#comments</comments><guid isPermaLink="false">af714356-5faf-499d-9659-c73a9df8e318</guid><pubDate>Wed, 09 Sep 2026 09:07:49 +0000</pubDate><atom:updated>2026-09-09T09:07:49.643Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Forest Department,வனத்துறை,நீலகிரி,leopard,சிறுத்தை,Tiger,புலி,Nilagiris,Gudalur,கூடலூர்,கூண்டு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/j45k6emh/sirutha.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/j45k6emh/sirutha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/nilgiris">நீலகிரி</a> மாவட்டம் கூடலூர் அடுத்த லாரஸ்டன் பகுதியில் தொழிலாளி, விவசாயி ஆகிய 2 பேரை அடுத்தடுத்து புலி கடித்து கொன்றது. இதனால் லாரஸ்டன் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் பீதியிலும், அச்சத்துடனும் வாழ்ந்து வருகின்றனர். </p><h2>போக்கு காட்டும் புலி</h2><p>மனிதர்களை வேட்டையாடும் அந்த புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து வன ஊழியர்கள், கால்நடை மருத்துவர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் களமிறக்கப்பட்டு புலியை தேடும் பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது. நேற்று 19-வது நாளாக புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க காடுகளுக்குள் பொருத்தப்பட்டு இருந்த தானியங்கி கேமராக்களில் வனத்துறையினர் ஆய்வு செய்தனர். </p><p>அதில் புலியின் உருவம் பதிவாகவில்லை. மேலும் நவீன டிரோன் மூலம் வான்வழியாக புலி பதுங்கியிருக்கும் இடத்தை கண்டறியும் முயற்சி முடுக்கி விடப்பட்டுள்ளது. அடர்ந்த புதர்கள் நிறைந்த பகுதிகளில் கூண்டுகள் வைக்கப்பட்டும், புலி சிக்காமல் போக்கு காட்டி வருகிறது.</p><h2>குடியிருப்புகளில் ரோந்து</h2><p>இதைத்தொடர்ந்து லாரஸ்டன் அரசு பள்ளிக்கூடம், பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். மேலும் குடியிருப்பு பகுதிக்குள் புலி நுழையலாம் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக லாரஸ்டன் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடம், குடியிருப்பு பகுதிகளில் வனத்துறையினர் ஆயுதங்களுடன் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தனியாக செல்ல வேண்டாம் என்றும், மாலை நேரங்களில் தேவை இன்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் வனத்துறையினர் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே புலியை விரைந்து பிடிக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது. </p><h2>சிக்கிய சிறுத்தை</h2><p>இந்நிலையில் கூடலூர் ஓவேலி பகுதியில் 2 பேரை கொன்ற புலியை பிடிக்க வனத்துறை வைத்த கூண்டில் சிறுத்தை ஒன்று சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. 13 இடங்களில் கூண்டு வைத்து 20-வது நாளாக புலியை தேடி வரும் வனத்துறையினர் கூண்டில் சிக்கிய சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர். புலியை பிடிக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>மதுரையில் 11-ம் வகுப்பு மாணவர் சடலமாக மீட்பு: காவல்துறை பாரபட்சமின்றி விசாரிக்க வேண்டும் - செல்வப்பெருந்தகை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/body-of-class-11-student-recovered-in-madurai-police-must-conduct-an-impartial-investigation-selvaperunthagai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/body-of-class-11-student-recovered-in-madurai-police-must-conduct-an-impartial-investigation-selvaperunthagai#comments</comments><guid isPermaLink="false">d1991dd3-30c3-4967-9f07-b2184c8c3216</guid><pubDate>Wed, 09 Sep 2026 09:05:51 +0000</pubDate><atom:updated>2026-09-09T09:05:51.875Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,செல்வப்பெருந்தகை,மதுரை,மீட்பு,Selvaperunthagai,மாணவர்student,In Madurai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/y1vyr70u/selvaperuthakai.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ செல்வப்பெருந்தகை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/y1vyr70u/selvaperuthakai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மதுரையில் 11-ம் வகுப்பு மாணவர் சடலமாக மீட்பு: காவல்துறை பாரபட்சமின்றி விசாரிக்க வேண்டும் என்று முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%88">செல்வபெருந்தகை</a> தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>11-ம் வகுப்பு மாணவர்</h2><p>மதுரை ஆனையூர் அருகே காணாமல் போன 11-ம் வகுப்பு மாணவர் கழிவுநீர் குட்டையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இக்கொடிய செயலில் ஈடுபட்டவர்களை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.</p><p>பெற்றோரும் குடும்பத்தினரும் தங்களது பிள்ளையைத் தேடி தவித்த நிலையில், மாணவர் சடலமாக மீட்கப்பட்டிருப்பது நெஞ்சை உலுக்கும் துயரமாகும். அதைவிட, உடற்கூறு ஆய்வில் மாணவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதற்கான தடயங்கள் கிடைத்துள்ளதாக வெளியாகும் தகவல்கள் மிகுந்த கவலையை ஏற்படுத்துகின்றன.</p><h2>விசாரணை</h2><p>ஒரு இளம் மாணவனின் உயிரை பறித்த இந்த கொடூர சம்பவத்தின் பின்னணி என்ன? மாணவர் எவ்வாறு உயிரிழந்தார்? அவரைத் தாக்கியது யார்? இந்த சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பன உள்ளிட்ட அனைத்து கேள்விகளுக்கும் காவல்துறை விரைந்து, பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தி உண்மையை முழுமையாக வெளிக்கொண்டு வர வேண்டும்.</p><p>மாணவரின் மரணம் தொடர்பாக எந்தவிதமான அரசியல் தலையீட்டுக்கும், செல்வாக்குக்கும் இடமளிக்காமல், அறிவியல் பூர்வமான விசாரணை மேற்கொள்ள வேண்டும். குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து, அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர வேண்டும்.</p><p>இளம் மாணவர்களின் உயிருக்கும் பாதுகாப்புக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கும், காவல்துறைக்கும் உள்ளது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நடைபெறாத வகையில், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.</p><h2>வலியுறுத்தல்</h2><p>மாணவனின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், இந்த கொடூர மரணத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தி.மு.க. வேட்பாளர்கள் பரந்தாமன், சுகன்யாவின் பின்னணி என்ன?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurantagam-dharapuram-byelection-dmk-candidates-paranthaman-suganya-background</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurantagam-dharapuram-byelection-dmk-candidates-paranthaman-suganya-background#comments</comments><guid isPermaLink="false">35a11c51-8b01-4d61-9c72-75ca0e64797a</guid><pubDate>Wed, 09 Sep 2026 08:57:34 +0000</pubDate><atom:updated>2026-09-09T08:57:34.776Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>இடைத்தேர்தல்,By election,மதுராந்தகம்,தாராபுரம்,Madhurandakam,tharapuram,பரந்தாமன்,சுகன்யா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/csaqh7c2/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/csaqh7c2/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பரந்தாமன், சுகன்யாவின் பின்னணி குறித்த தகவல்களை பார்ப்போம்.</p><h2>2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்</h2><p>தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. வேட்புமனு தாக்கல் இன்று (புதன்கிழமை) தொடங்கியுள்ள நிலையில், தி.மு.க. சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்களை அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.</p><p>மதுராந்தகம் தொகுதியில் வக்கீல் ஐ.பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் எஸ்.சுகன்யாவும் போட்டியிடுகின்றனர். இவர்கள் பின்னணி குறித்து தொடர்ந்து பார்ப்போம்.</p><h2>மதுராந்தகம் வேட்பாளர் பரந்தாமன்</h2><p>மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் ஐ.பரந்தாமன், பி.ஏ. பி.எல். படித்தவர். கட்சியின் சட்டத்துறை மாநில இணைச் செயலாளராக இருந்து வருகிறார். தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளிலும் தி.மு.க. சார்பில் பங்கேற்று கருத்துகளை முன்வைத்து வருகிறார். இவர் ஏற்கனவே, கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் எழும்பூர் (தனி) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதற்கு முந்தைய தேர்தலில் (2016) பூந்தமல்லி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தாலும், சுமார் 92 ஆயிரம் வாக்குகள் பெற்றார்.</p><h2>மீண்டும் வாய்ப்பு</h2><p>இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலின்போது, எழும்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட அவர் வாய்ப்பு கேட்டும் முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலையீட்டின் காரணமாக இவருக்கு  கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதற்கு பதிலாக தமிழன் பிரசன்னா களம் இறக்கப்பட்டு, அவர் த.வெ.க. வேட்பாளரும், தற்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான ராஜ்மோகனிடம் தோல்வி அடைந்தார். இந்த நிலையில்தான், மதுராந்தகம் இடைத்தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. </p><h2>தாராபுரம் வேட்பாளர் சுகன்யா</h2><p>தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் எஸ்.சுகன்யா, வக்கீலாக பணியாற்றி வருகிறார். கட்சியில் ஒன்றிய அணி செயலாளராக உள்ள இவர், தொகுதியை சேர்ந்தவர். உள்ளூர் அமைப்புகளிலும் தீவிரமாக செயல்பட்டு வருபவர். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலின்போதும், தாராபுரம் தொகுதியில் போட்டியிட இவர் விருப்பம் தெரிவித்து இருந்தபோதும் அப்போது அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இப்போது இடைத்தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தல் எதிரொலி.. மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும்படை தீவிர கண்காணிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/by-election-fallout-intensive-surveillance-in-maduranthakam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/by-election-fallout-intensive-surveillance-in-maduranthakam#comments</comments><guid isPermaLink="false">c7e76a34-28a9-4682-b383-c17c8d527bde</guid><pubDate>Wed, 09 Sep 2026 08:49:02 +0000</pubDate><atom:updated>2026-09-09T08:49:02.674Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,இடைத்தேர்தல்,மதுராந்தகம்,தாராபுரம்,Madurantakam,tharapuram,பறக்கும்படை,byelection,தேர்தல் பறக்கும்படை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/vlrtfa7j/pp.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/vlrtfa7j/pp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திருச்சி கிழக்கு, புதுக்கோட்டை, கரூர், பெருந்துறை, விராலிமலை ஆகிய 5 தொகுதிகளின் தேர்தல் முடிவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இந்த 5 தொகுதிகளுக்கு <a href="https://www.dailythanthi.com/topic/இடைத்தேர்தல்">இடைத்தேர்தல்</a> நடத்த தடை உத்தரவு பிறப்பித்தது.</p><h2>வேட்புமனுத்தாக்கல்</h2><p>ஒரு சட்டமன்ற தொகுதி காலியானால் 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறை ஆகும். தற்போது ஐகோர்ட்டு உத்தரவைத் தொடர்ந்து 5 தொகுதிகளைத் தவிர்த்து, மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.</p><p>இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத்தாக்கல்  இன்று (9-ந்தேதி) தொடங்கியது. வாக்குப்பதிவு அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 9-ந்தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.</p><h2>திமுக வேட்பாளர்கள்</h2><p>இந்நிலையில் தாராபுரம், மதுரந்தகம் தொகுதி <a href="https://www.dailythanthi.com/topic/இடைத்தேர்தல்">இடைத்தேர்தலில்</a> போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மதுராந்தகம் தொகுதியில் திமுக சட்டத்துறை இணை செயலாளராக உள்ள பரந்தாமன் மற்றும் தாராபுரம் தொகுதியில் வழக்கறிஞர் சுகன்யாவும் போட்டியிட்டுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>மதுராந்தகம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பரந்தாமன், கடந்த தேர்தலில் சென்னை எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ஆளும் தவெக இன்னும் வேட்பாளர் அறிவிக்கவில்லை. அதேபோல, அதிமுகவும் வேட்பாளர் அறிவிக்காத நிலையில், முதல் கட்சியாக திமுக வேட்பாளரை அறிவித்துள்ளது. இடைத்தேர்தலில் தமிழகத்தில் பிரதானமாக உள்ள மூன்று கட்சிகளும் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளதால், தேர்தல் களம் அனல் பறக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><h2>மதுராந்தகம் தொகுதி</h2><p>கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் மதுராந்தம் (தனி) தொகுதியில் தி.மு.க. சார்பில் அமுலு பொன்மலர் போட்டியிட்டார். அ.தி.மு.க. சார்பில் மரகதம் குமரவேல், த.வெ.க. சார்பில் எழில் கேத்தரின், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் ஆகியோர் போட்டியிட்டனர்.</p><p>மொத்தம் பதிவான 1 லட்சத்து 96 ஆயிரத்து 268 வாக்குகளில், அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் 69,284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்டவர்களில், த.வெ.க. வேட்பாளர் எழில் கேத்தரின் 62,090 வாக்குகள் பெற்று 2-வது இடம்பிடித்தார். இருவருக்குமான வித்தியாசம் 7,194 வாக்குகள் ஆகும். தி.மு.க. வேட்பாளர் அமுலு பொன்மலர் 59,838 வாக்குகள் பெற்று 3-வது இடம் பிடித்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகி ராமன் 4,950 வாக்குகள் பெற்றார்.</p><h2>பறக்கும் படையினர்</h2><p>மதுராந்தகம் தொகுதியில் <a href="https://www.dailythanthi.com/topic/இடைத்தேர்தல்">இடைத்தேர்தல்</a> நடைபெற உள்ளதையொட்டி, தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்கும் வகையில் 9 பறக்கும் படையினர் மற்றும் 9 நிலையான கண்காணிப்பு குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர். </p><p>வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்கும் வகையில் கண்காணிப்பு மற்றும் வாகனச் சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தகவல்  தெரிவித்துள்ளனர். </p><p>பொதுவாக தேர்தல் காலத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் சென்றால், அதற்குரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். அந்த நடைமுறை இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது.  </p>]]></content:encoded></item><item><title>ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளை: அரசுக்கும், அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா? - வேல்முருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/exorbitant-fares-charged-by-private-buses-are-the-government-and-officials-involved-velmurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/exorbitant-fares-charged-by-private-buses-are-the-government-and-officials-involved-velmurugan#comments</comments><guid isPermaLink="false">d53ca8e5-8591-44ce-8c83-a2eac59e9758</guid><pubDate>Wed, 09 Sep 2026 08:48:12 +0000</pubDate><atom:updated>2026-09-09T08:48:12.379Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Velmurugan,வேல்முருகன்,தமிழக வாழ்வுரிமைக் கட்சி,தி.வேல்முருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/7bzgl0b9/velmurugan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/7bzgl0b9/velmurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையில் அரசுக்கும், அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா? என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>தொடர் விடுமுறை</h2><p>தொடர் விடுமுறை மற்றும் பண்டிகைக் காலங்களில் வெளியூர்களுக்குப் பயணிக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை இயல்பாகவே பன்மடங்கு அதிகரிக்கிறது. இத்தகைய சூழலில், அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் முன்பதிவு விரைவாக முடிந்துவிடுவதால், கணிசமான பயணிகள் தனியார் ஆம்னி பேருந்துகளையே சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.</p><p>இக்காலகட்டங்களில் இணையவழி முன்பதிவுத் தளங்களில் பேருந்துக் கட்டணங்கள் வழக்கத்தை விடப் பெருமளவில் உயர்த்தப்படுவதாகப் பயணிகள் முன்வைக்கும் தொடர் புகார்கள் கவலைகளை ஏற்படுத்துகின்றன. தேவை அதிகரிக்கும் போது கட்டணம் உயர்த்தப்படுவது இயல்பு எனக் கூறப்பட்டாலும், இது சாமானிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் பயணச் செலவைக் கடுமையாகப் பாதிக்கிறது.</p><p>பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசும் போக்குவரத்துத் துறையும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை அமல்படுத்த வேண்டும்.</p><h2>கூடுதல் கட்டணம்</h2><p>வழித்தடங்களின் தூரம் மற்றும் பேருந்து வசதிகளுக்கு ஏற்ப (Seater, Sleeper, AC) அரசு நிர்ணயித்த அதிகாரப்பூர்வ அதிகபட்சக் கட்டணப் பட்டியலை இணையதளம் மற்றும் பேருந்து நிலையங்களில் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். தனியார் பயண முன்பதிவு செயலிகள் மற்றும் இணையதளங்களில் நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பை விடக் கூடுதல் கட்டணம் பட்டியலிடப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய டிஜிட்டல் கண்காணிப்பு முறையை உருவாக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் பயணிகள் பயணச்சீட்டு ஆதாரத்துடன் உடனடியாகத் தெரிவிக்க எளிமையான வாட்ஸ்அப் எண், தனிச் செயலி அல்லது 24 மணி நேரக் கட்டணமில்லா உதவி மையத்தை வலுப்படுத்த வேண்டும். விடுமுறை தினங்களில் முக்கிய சுங்கச்சாவடிகள் மற்றும் புறப்படும் இடங்களில் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு, விதிமீறல் நிரூபிக்கப்படும் பட்சத்தில் உரிய சட்டரீதியான அபராதங்கள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளைத் தாமதமின்றி எடுக்க வேண்டும்.</p><p>தனியார் பேருந்துகளின் மீதான அதீதச் சார்பைக் குறைக்க, அதிகத் தேவையுள்ள வழித்தடங்களில் தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதல் சிறப்புப் பேருந்துகளை முன்கூட்டியே திட்டமிட்டு இயக்குகிறது என்றாலும், அந்த வகையான பேருந்துகளில் உள்ள வசதி குறைபாடுகள் முற்றிலும் சரி செய்யப்பட வேண்டும்.</p><p>பயணிகளின் நியாயமான பயண உரிமையையும், தனியார் பேருந்து உரிமையாளர்களின் தொழில் நடைமுறைகளையும் சமநிலையில் பேணும் வகையில் அரசு ஒரு நிரந்தர ஒழுங்குமுறை கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழக </a>வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/karnataka-must-implement-cauvery-water-management-authority-order-immediately-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/karnataka-must-implement-cauvery-water-management-authority-order-immediately-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">e245426d-0315-4284-8a15-a3f28c737fb2</guid><pubDate>Wed, 09 Sep 2026 08:39:50 +0000</pubDate><atom:updated>2026-09-09T08:39:50.643Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடக அரசு,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,order,உத்தரவு,Cauvery Water Management Authority,Karnataka government,காவிரி நீர் மேலாண்மை ஆணையம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/gov70w34/nainar-nagendran.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/gov70w34/nainar-nagendran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன்</a> தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p> <h2>காவிரி நீர் மேலாண்மை ஆணையம்</h2><p>ஒரே நாளில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழுவின் 142-வது கூட்டம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 57-வது கூட்டம் ஆகியவற்றில், இன்று காலை 8 மணி முதல் அடுத்த 15 நாட்களுக்கு, வினாடிக்கு 6000 கன அடி வீதம் 7.776 டிஎம்சி தண்ணீரை கர்நாடக காங்கிரஸ் அரசு தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டுமென பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை வரவேற்று மகிழ்கிறேன். </p><h2>குறுவை சாகுபடி</h2><p>கடந்த ஜூலை மாதம் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை கர்நாடக காங்கிரஸ் அரசு குறித்த நேரத்திற்கு முறையாக அமல்படுத்தாததால், தமிழகத்தின் குறுவை சாகுபடி பெருமளவில் பாதிக்கப்பட்டதோடு, விவசாயிகளின் வாழ்வாதாரமும் நலிவடைந்தது. </p><h2>மேட்டூர் அணை நீர்</h2><p>கர்நாடக காங்கிரஸ் அரசின் இந்த அலட்சிய போக்கால், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">டெல்டா பாசனத்திற்காக</a> ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதமே திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை நீர், இந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் தான் திறக்கப்பட்டது. இதனால் குறுவை மற்றும் இதர சாகுபடி பயிர்கள் காய்ந்து போகும் தருவாயில் உள்ளன.</p><h2>வாழ்வாதாரமே முக்கியம்</h2><p>எனவே, தமிழக விவசாயிகளுக்கும், விளைப் பயிர்களுக்கும் புத்துணர்வு அளிக்கும் வகையிலான காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின்தற்போதைய உத்தரவையாவது கர்நாடக காங்கிரஸ் அரசு காலம் தாழ்த்தாமல் அமல்படுத்துவதை, முதல்-அமைச்சர் விஜய் உறுதி செய்ய வேண்டும்! கர்நாடக காங்கிரஸ் அரசால் தமிழக விவசாயிகள் மீண்டுமொரு முறை வஞ்சிக்கப்படுவதை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் வேடிக்கை பார்க்க கூடாது! கூட்டணி பாசத்தை விட, விவசாயிகளின் வாழ்வாதாரமே முக்கியம்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்று தருவதாக ரூ.100 கோடி மோசடி; இதுவரை 177 புகார்கள் - ஐகோர்ட்டில் அதிர்ச்சி தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-100-crore-fraud-involving-promises-to-secure-permanent-recognition-for-private-schools-177-complaints-received-so-far-shocking-details-revealed-in-high-court</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-100-crore-fraud-involving-promises-to-secure-permanent-recognition-for-private-schools-177-complaints-received-so-far-shocking-details-revealed-in-high-court#comments</comments><guid isPermaLink="false">9a313003-6b36-4028-bf53-6e8cc0334dc4</guid><pubDate>Wed, 09 Sep 2026 08:32:02 +0000</pubDate><atom:updated>2026-09-09T08:32:02.906Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,ஐகோர்ட்டு,தனியார் பள்ளி,Chennai High Court</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/c92144xl/State-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/c92144xl/State-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், சி.எம்.டி. அனுமதி உள்ளிட்ட சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்று தருவதாக கூறி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தனியார் பள்ளிகளின் நிர்வாகிகளிடம் 100 கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்ததாக எழுந்த புகாரில், தனியார் பள்ளிகள் சங்க தலைவர் அரசகுமார் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.</p><p>இந்த வழக்கில் அரசகுமார் கைது செய்யப்பட்டு, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், தனியார் பள்ளிகள் சங்க பொருளாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முத்துக்குமார் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி லட்சுமி நாராயணன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. </p><p>அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக இதுவரை 117 புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்கள் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. எனவே மனுதாரரின் முன்ஜாமின் மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தார். </p>]]></content:encoded></item><item><title>தென்காசி: சுடுகாட்டில் தொழிலாளி அடித்துக்கொலை- மதுபோதையில் 2 நண்பர்கள் வெறிச்செயல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tenkasi-worker-beaten-to-death-in-crematorium-2-friends-commit-a-violent-act-while-intoxicated</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tenkasi-worker-beaten-to-death-in-crematorium-2-friends-commit-a-violent-act-while-intoxicated#comments</comments><guid isPermaLink="false">1b71df56-3dbe-442d-b0f2-32271fc2797b</guid><pubDate>Wed, 09 Sep 2026 08:25:47 +0000</pubDate><atom:updated>2026-09-09T08:25:47.216Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,தென்காசி,Worker,friends,மதுபோதை,alcoholism,நண்பர்கள்,beating,சுடுகாடு,வெறிச்செயல்,Crematorium,தொழிலாளி அடித்து கொலை,madness</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/idqk79jj/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தொழிலாளி கொலை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/idqk79jj/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF">தென்காசி</a> மாவட்டம், சுரண்டை அருகே <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">மதுபோதையில்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">சுடுகாட்டில்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">தொழிலாளியை அடித்துக்கொலை</a> செய்த, அவரது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">நண்பர்கள்</a> 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். </p><h2>நண்பர்கள்</h2><p>தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே உள்ள சாம்பவர்வடகரை இல்லத்தார் தெருவைச் சேர்ந்தவர் சத்தியன் (வயது 35). இவரது நண்பர்கள் அதே பகுதி மாதாகோவில் தெருவை சேர்ந்த கருப்பசாமி(35), உலைக்கூட தெருவை சேர்ந்த சுப்பிரமணியன்(35). இதில் சத்தியன், சுப்பிரமணியன் ஆகியோர் கேரளத்தில் கூலித்தொழிலாளர்களாகவும், கருப்பசாமி உள்ளூரில் சமையல் மாஸ்டராகவும் வேலை பார்த்தனர். </p><h2>மதுகுடித்தனர்</h2><p>கடந்த 2 நாட்களுக்கு முன் சத்தியன், சுப்பிரமணியன் ஆகியோர் ஒருவரின் திருமணத்திற்காக சொந்த ஊருக்கு வந்தனர். நேற்று மாலையில் சத்தியன், சுப்பிரமணியன், கருப்பசாமி ஆகியோர் ஒரே மோட்டார் சைக்கிளில் சாம்பவர்வடகரை மெயின் ரோட்டில் உள்ள சுடுகாட்டு நிழல்தாங்கலில் அமர்ந்து மதுக்குடித்தனர். </p><h2>அடித்துக்கொலை</h2><p>அப்போது, மதுபோதையில் அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றியதில் சுப்பிரமணியன், கருப்பசாமி ஆகியோர் சேர்ந்து சத்தியனை கைகளால் சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட சுப்பிரமணியன், கருப்பசாமி ஆகியோர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். </p><h2>போலீசார் விசாரணை</h2><p>இதுகுறித்து உடனடியாக சாம்பவர்வடகரை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சத்தியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சுப்பிரமணியன், கருப்பசாமி ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். சுரண்டை அருகே சுடுகாட்டில் தொழிலாளியை அவரது நண்பர்களே அடித்துக்கொலை செய்த பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய் பேச்சை கண்டித்து 12-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-to-hold-protest-on-the-12th-condemning-vijays-remarks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-to-hold-protest-on-the-12th-condemning-vijays-remarks#comments</comments><guid isPermaLink="false">c76aba54-7aed-4849-8479-b122abc09087</guid><pubDate>Wed, 09 Sep 2026 08:23:09 +0000</pubDate><atom:updated>2026-09-09T08:23:09.775Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,திமுக,DMK,சட்டசபை,TN Assembly,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/tp51dgkt/CHENNAI-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/tp51dgkt/CHENNAI-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><p>திராவிட முன்னேற்றக் கழகத்தையும், ஐந்து முறை இந்த நாட்டை ஆண்ட முன்னாள் முதல்-அமைச்சர் தலைவர் கலைஞரையும், இந்தியாவின் புகழை தோகா மாநாட்டில் நிலைநாட்டிய பொருளாதார மேதை முரசொலி மாறனையும், திருமணம் ஆன ஐந்தே மாதத்தில், 23 வயதில் மிசா அவசரநிலைச் சட்டத்தில் கைதாக்கப்பட்டு சிறைச்சாலை சித்திரவதைகளை அனுபவித்து, ஓராண்டு காலம் சிறையில் இருந்த தியாகத்தைச் செய்த தலைவர் மு.க.ஸ்டாலினின் தியாகத்தை  கொச்சைப்படுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் விஜய் பேசிய பேச்சு கடுமையான கண்டனத்துக்குரியது. அரசியல் உலகில் இத்தகைய அருவெறுப்பான உரையை சட்டமன்றம் கண்டிருக்காது.</p><p>அவரது உரை மூலமாக சட்டமன்றத்தின் மாண்பு, மரபு, வரலாறு இவை அனைத்தும் காற்றில் பறக்கிறது. படங்களாக அந்த அவையில் நிற்கிறவர்கள் தலைகவிழ்ந்து கண்ணீர் வடித்திருப்பார்கள். சில அமைச்சர்கள் சட்டமன்றத்தில் தான் பேசுவது தவறு என்று தெரிந்தே பேசி, 'மீம்ஸ்', 'ரீல்ஸ்'-ஐ வெளியிடுகிறார்கள். நேரலை மூலமாக மக்களை சென்றடைந்த பிறகு அதை ஒப்புக்கு அவைக்குறிப்பில் இருந்து நீக்கிக் கொள்கிறார்கள். இப்படியாக தந்திர மேடையாக சட்டசபையை த.வெ.க. அரசு பயன்படுத்துகிறது.</p><p>ஆட்சியின் தோல்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தப்பித்துக் கொள்ள, கொச்சையான பேச்சுகளைப் பேசும் தரமற்ற மனிதராக முதலமைச்சர் விஜய் மாறியிருக்கிறார். இவரது இப்பேச்சைக் கண்டிக்கும் வகையில், தி.முக.. சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் வருகிற 12.09.2026 சனிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்.</p><p>இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் - நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் - மாநில - மாவட்ட நிர்வாகிகள் - ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழகச் செயலாளர்கள் - நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளில் உள்ள நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொண்டு முதலமைச்சரின் ஆணவப் பேச்சைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&quot;த.வெ.க. அரசின் அலட்சியப் போக்கால் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகப் போகின்றன?&quot; - தி.மு.க. எம்.பி. கனிமொழி கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-many-more-lives-will-be-lost-due-to-the-tvk-governments-negligent-attitude-dmk-mp-kanimozhi-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-many-more-lives-will-be-lost-due-to-the-tvk-governments-negligent-attitude-dmk-mp-kanimozhi-asks#comments</comments><guid isPermaLink="false">f4cc99b7-a448-479f-abd2-f6232cc6d19a</guid><pubDate>Wed, 09 Sep 2026 08:22:17 +0000</pubDate><atom:updated>2026-09-09T08:22:17.420Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,திமுக,DMK,Kanimozhi M.P.,கனிமொழி எம்.பி.,Kanimozhi,தவெக அரசு,TVK Government,tvk govt</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/d6ug69ti/jai.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/d6ug69ti/jai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மதுரை மாணவனின் மரணம் தொடர்பாக சமரசமற்ற விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று <a href="https://www.dailythanthi.com/topic/kanimozhi">தி.மு.க. எம்.பி. கனிமொழி</a> தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>மதுரை ஆனையூர் அருகே காணாமல் போன 11ஆம் வகுப்பு மாணவன் கழிவுநீர் குட்டையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், உடற்கூறு ஆய்வில் அவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது.</p><p>சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் தவெக அரசின் அலட்சியப் போக்கால் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகப் போகின்றன என்ற கேள்வி எழுகிறது.</p><p>மாணவனின் மரணம் தொடர்பாக சமரசமற்ற விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: மாமனாரை வெட்டிக்கொன்ற டிரைவர் உள்பட 6 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-6-people-including-driver-arrested-for-stabbing-father-in-law-to-death</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-6-people-including-driver-arrested-for-stabbing-father-in-law-to-death#comments</comments><guid isPermaLink="false">1cb852be-9c31-42bc-9478-1f668e1defae</guid><pubDate>Wed, 09 Sep 2026 07:47:43 +0000</pubDate><atom:updated>2026-09-09T07:47:43.732Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,வெட்டிக்கொலை,ஆட்டோ டிரைவர்,Auto driver,father-in-law,மாமனார்,6 பேர் கைது,hacked to death,6 arrested</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/b5casy8w/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கொலையுண்ட முனியசாமி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/b5casy8w/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> அருகே <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">மாமனாரை</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">வெட்டிக் கொன்ற</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D">ஆட்டோ டிரைவர்</a> உள்பட <a href="https://www.dailythanthi.com/topic/6-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">6 பேர் கைது</a> செய்யப்பட்டனர்.</p><h2>குடும்பத் தகராறு</h2><p>தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் வேலாயுதநகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் முனியசாமி (வயது 45). இவரது மகள் வைஷ்ணவிக்கும், மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரான முருகன்(27) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 1 மாதத்திற்கு முன் முனியசாமி தனது மகளை பார்க்க மதுரைக்கு சென்றார். அப்போது, முருகன் தனது மாமனாரான முனியசாமியை தாக்கியதாக கூறப்படுகிறது. </p><h2>மாமனார் வெட்டிக்கொலை</h2><p>அதைத் தொடர்ந்து முனியசாமி தனது மகள் வைஷ்ணவியை தூத்துக்குடிக்கு அழைத்து வந்து விட்டார். இந்த சம்பவங்களை தொடர்ந்து முருகன் மதுரையில் இருந்து தனது நண்பர்கள் 5 பேருடன் முனியசாமியின் வீட்டிற்கு வந்தார். அங்கு தனது மனைவியை குடும்பம் நடத்த மதுரைக்கு அனுப்புமாறு மாமனாரிடம் கூறினார். ஆனால் முனியசாமி மறுக்கவே ஆத்திரம் அடைந்த முருகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து அரிவாளால் அவரை வெட்டிக்கொலை செய்ததாக கூறப்படுகிறது. </p><h2>6 பேர் கைது</h2><p>இந்த கொலை குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 6 பேரையும் தேடி வந்தனர். போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் முருகன், அவரது நண்பர்களான சாயல்குடியை சேர்ந்த திருமுருகன்(23), மதுரை நல்லமன்னன்(24), அரவிந்த்(25), தீனதயாளன்(22), பெருமாள்(26) ஆகிய 6 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>அரசு மருத்துவமனைகளில் பார்வையாளர்களுக்கு நேரக் கட்டுப்பாடு கட்டாயம்: அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/time-restrictions-for-visitors-mandatory-in-government-hospitals-minister-arunraj</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/time-restrictions-for-visitors-mandatory-in-government-hospitals-minister-arunraj#comments</comments><guid isPermaLink="false">ba0fa3f4-0b85-4cb6-ab1d-b776812d04f0</guid><pubDate>Wed, 09 Sep 2026 07:47:42 +0000</pubDate><atom:updated>2026-09-09T07:47:42.107Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசு மருத்துவமனை,Government Hospitals,Minister Arunraj,அமைச்சர் அருண்ராஜ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/xa57886i/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/xa57886i/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் பார்வையாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நேரக் கட்டுப்பாடு கட்டாயமாக பின்பற்றப்படும். மதியம் 1-2 மணி, மாலை 4-6 மணி வரை மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும். நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்கப்படும். கடைகளில் இருந்து உணவு வாங்கி வரும்போது பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்படும்.</p><p>வீட்டில் இருந்து உணவு கொண்டு வந்தால் பாத்திரத்தில் எடுத்து வாருங்கள், பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம். மருத்துவமனையில் அதிக கூட்டம் இருப்பதால், அதை கட்டுபடுத்த நடவடிக்கை எடுத்தால் மக்களிடம் இருந்து எதிர்ப்புகள் வருகிறது. அரசு மருத்துவமனை எல்லாம் தனியார் மருத்துவமனையின் தரத்திற்கு மேல் இருக்க வேண்டும் என்பது தான் முதல்-அமைச்சரின் எதிர்பார்ப்பு. அனைவரின் ஒத்துழைப்புடன் முதல்-அமைச்சரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவோம்.</p><p>சுகாதாரத் துறையின் முதல் நோக்கம், மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும். இரண்டாவது தான் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது; ஆரோக்கியம் சார்ந்த அனைத்து செய்திகளும் ஏழை, பணக்காரர் பாகுபாடு இல்லாம் அனைவருக்கும் சென்று சேர வேண்டும்; மக்கள் எடுத்துக்கொள்ளும் உப்பின் அளவை குறைக்க வேண்டும்.</p><p>முதல்-அமைச்சர் விஜய்யின் வெளிநாடு பயணம் காரணமாக மதுரை உசிலம்பட்டியில் நடைபெறவிருந்த தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட துவக்கம் தள்ளிப்போகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். இந்த திட்டத்தில் வழங்கப்படும் மோதிரங்கள் 100 சதவீதம் தரமானவை. அனைத்து மோதிரங்களிலும் 916 ஹால்மார்க் முத்திரை இடம்பெறும். தங்கத்தின் தரத்தில் எந்தவித சமரசமும் இருக்காது.</p><p>பருவமழை துவங்க உள்ள நிலையில் டெங்கு சீசன் ஆரம்பிக்க போகிறது. படிப்படியாக ஒவ்வொரு நாட்களும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டு தான் இருக்கிறது. டெங்கு கொசு ஒழிப்பு பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கொசு ஒழிப்பு பணியாளர்களிடம் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று மழைநீர் தேங்காத வகையில் பணிகளை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம். வீடு உட்பட எல்லா இடங்களிலும் கொசு மருந்து அடிக்கும் பணிகளும் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>கள்ளச்சாராய மரணங்கள்: குற்றவாளிகள் அனைவரையும் கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - மாணிக்கம் தாகூர் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/illicit-liquor-deaths-all-the-culprits-must-be-identified-and-strict-action-taken-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/illicit-liquor-deaths-all-the-culprits-must-be-identified-and-strict-action-taken-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">77c70354-9eba-4433-8e2c-34b05abe6d62</guid><pubDate>Wed, 09 Sep 2026 07:30:41 +0000</pubDate><atom:updated>2026-09-09T07:30:41.706Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கள்ளக்குறிச்சி,Kallakurichi,மாணிக்கம் தாகூர்,கள்ளச்சாராய மரணம்,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/gl1ckeo2/State-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/gl1ckeo2/State-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் 17 முதல் 20 தேதிகளில் கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 70 பேர் பலியானதற்கு அதிகாரிகள் தங்கள் கடமையை முறையாக செய்யாததே காரணம்.  அதனால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் நீதியரசர் பி. கோகுல்தாஸ் தலைமையில் கடந்த தி.மு.க. ஆட்சியில் அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் பரிந்துரை செய்திருக்கிறது. </p><p>இந்த அறிக்கை சட்டப்பேரவையிலும் வைக்கப்பட்டிருக்கிறது. கள்ளச் சாராய விற்பனையில் சம்மந்தப்பட்ட 433 பேரிடம் விசாரணை நடத்தி இந்த அறிக்கையை ஆணையம் சமர்ப்பித்திருக்கிறது. 1971 ஆம் ஆண்டு முதல் மதுவிலக்கு கொள்கையை கடந்த கால அரசுகள் செயல்படுத்தாததால் பெரும்பான்மையான மக்கள் மது பிரியர்களாக மாறி விட்டனர். டாஸ்மாக் மதுவை விட குறைந்த விலையில் கிடைக்கும் கள்ளச்சாராயத்தை ஏழை, எளியவர்கள் நாடுகிற நிலை ஏற்பட்டதால்தான் இத்தகைய இழப்பு ஏற்பட்டிருக்கிறது. </p><p>கள்ளக்குறிச்சியை சுற்றியுள்ள பகுதிகளில் கள்ளச் சாராய விற்பனைக்காக சட்டவிரோதமாக பகிரங்க ஏலம் நடத்தியுள்ளனர். அதில் வெற்றி பெற்ற ஏலதாரருக்கு அதை விற்க எந்த இடையூறும் இருக்காது. அந்த ஏலதாரர் ரூபாய் 5 லட்சம் கொடுத்ததும் அதற்கான உரிமமும் அவருக்கு கொடுக்கப்படுகிறது. இவையெல்லாம் தெரிந்திருந்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காதது வேதனையளிக்கிறது என்று நீதியரசர் அறிக்கையில் கூறியிருக்கிறார். </p> <p>காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த விஷச் சாராய விற்பனை நடந்திருக்காது. கள்ளச் சாராய வியாபாரிகளுக்கும், காவல்துறை, ஆயத்தீர்வைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் இடையே கேடான கூட்டணி இருந்தது தெளிவாக தெரிகிறது. இதுபோன்ற கூட்டணி உடைக்கப்பட வேண்டும். கடமையை செய்யத் தவறிய அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று நீதியரசர் கோகுல்தாஸ் பரிந்துரை செய்திருக்கிறார். </p><p>கள்ளச் சாராயத்தை குடித்து 70 பேர் பலியான உடனேயே மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல்துறை அதிகாரி மற்றும் அந்த பகுதியில் இருந்த சில அதிகாரிகள் கடந்த ஆட்சியில் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். நீதியரசரின் அறிக்கையின்படி, கள்ளக்குறிச்சி பேரழிவிற்கு காரணமானவர்கள் அனைவர் மீதும் கடுமையான தண்டனை விதிப்பதற்கும், இந்த கொடூர சம்பவம் வெறும் அதிகாரிகள் அளவில் நடைபெற்றதா ? அல்லது இதற்குப் பின்னால் அரசியல் பின்னணி இருக்கிறதா? என்பது குறித்தும் தமிழக முதல்-அமைச்சர் சி.ஜோசப் விஜய் உரிய விசாரணையின் மூலம் அறிய வேணடும். அதனடிப்படையில் குற்றவாளிகள் அனைவரையும் கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுப்பதன் மூலமே கள்ளச் சாராயத்தினால் ஏற்படும் பேரழிவுகளை தடுக்க முடியும். </p> <p>கள்ளச் சாராயத்தினால் பலியானவர்களுக்கு கடந்த அரசு தலா ரூபாய் 10 லட்சம் வழங்கியிருந்தாலும் அதில் தந்தையை இழந்த குழந்தைகளுக்கு உணவு, குடியிருப்பு வசதி, கல்வி உதவி, அரசு வேலை போன்றவற்றை தமிழக அரசு வழங்க வேண்டுமென்று நீதியரசர் பரிந்துரை செய்திருக்கிறார். இந்த பரிந்துரையை மனிதாபிமான உணர்வோடு தமிழக முதல்-அமைச்சர் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டை மதுவின் பிடியில் இருந்து எவ்வளவு விரைவாக மீட்கிறோமோ அப்பொழுது தான் தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையில் விமோசனம் ஏற்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்: திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dharapuram-and-maduranthakam-by-elections-dmk-candidates-announced</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dharapuram-and-maduranthakam-by-elections-dmk-candidates-announced#comments</comments><guid isPermaLink="false">7133a130-21ae-4ba8-b94e-345f0c56ce95</guid><pubDate>Wed, 09 Sep 2026 07:17:33 +0000</pubDate><atom:updated>2026-09-09T07:17:33.404Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,TVK,தவெக,அதிமுக,திமுக,DMK,இடைத்தேர்தல்,மதுராந்தகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/a40477bf/dmk-candidates.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/a40477bf/dmk-candidates.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மதுராந்தகம் தொகுதியில் திமுக சட்டத்துறை இணை செயலாளராக உள்ள  பரந்தாமன் மற்றும்  தாராபுரம் தொகுதியில் வழக்கறிஞர் சுகன்யாவும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பரந்தாமன், கடந்த தேர்தலில் சென்னை எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  தமிழகத்தில் ஆளும் தவெக  இன்னும் வேட்பாளர் அறிவிக்கவில்லை. அதேபோல, அதிமுகவும் வேட்பாளர் அறிவிக்காத நிலையில், முதல் கட்சியாக திமுக வேட்பாளரை அறிவித்துள்ளது. இடைத்தேர்தலில் தமிழகத்தில் பிரதானமாக உள்ள  மூன்று கட்சிகளும் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளதால், தேர்தல் களம் அனல் பறக்கும்  என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><h2>மதுராந்தகம் தொகுதி</h2><p>கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் மதுராந்தகம் (தனி) தொகுதியில் தி.மு.க. சார்பில்  அமுலு பொன்மலர் போட்டியிட்டார். அ.தி.மு.க. சார்பில் மரகதம் குமரவேல், த.வெ.க. சார்பில் எழில் கேத்தரின், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் ஆகியோர் போட்டியிட்டனர்.</p><p>மொத்தம் பதிவான 1 லட்சத்து 96 ஆயிரத்து 268 வாக்குகளில், அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் 69,284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்டவர்களில், த.வெ.க. வேட்பாளர் எழில் கேத்தரின் 62,090 வாக்குகள் பெற்று 2-வது இடம்பிடித்தார். இருவருக்குமான வித்தியாசம் 7,194 வாக்குகள் ஆகும். தி.மு.க. வேட்பாளர் அமுலு பொன்மலர் 59,838 வாக்குகள் பெற்று 3-வது இடம் பிடித்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகி ராமன் 4,950 வாக்குகள் பெற்றார்.</p><h2>தாராபுரம் (தனி) தொகுதி</h2><p>தாராபுரம் (தனி) தொகுதியில் தி.மு.க. சார்பில் இந்திராணி, அ.தி.மு.க. சார்பில் சத்யபாமா, த.வெ.க. சார்பில் கவுரி சித்ரா, நாம் தமிழர் கட்சி சார்பில் திவ்யா ஆகியோர் போட்டியிட்டனர். மொத்தம் பதிவான 1 லட்சத்து 99 ஆயிரத்து 944 வாக்குகளில், அ.தி.மு.க. வேட்பாளர் சத்யபாமா 81,100 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்டவர்களில், தி.மு.க. வேட்பாளர் இந்திராணி 64,373 வாக்குகள் பெற்று 2-வது இடம்பிடித்தார். இருவருக்குமான வித்தியாசம் 16,727 வாக்குகள் ஆகும். த.வெ.க. வேட்பாளர் கவுரி சித்ரா 46,438 வாக்குகள் பெற்று 3-வது இடம் பிடித்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திவ்யா 6,026 வாக்குகள் பெற்றிருந்தார்.</p> ]]></content:encoded></item><item><title>தாராபுரம் இடைத்தேர்தல்: முதல் ஆளாக வேட்புமனு தாக்கல் செய்த தேர்தல் மன்னன் பத்மராஜன்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dharapuram-by-election-election-king-padmarajan-files-nomination-first</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dharapuram-by-election-election-king-padmarajan-files-nomination-first#comments</comments><guid isPermaLink="false">081c3f5f-977c-4f6a-b8ea-a34460b4cf2b</guid><pubDate>Wed, 09 Sep 2026 07:09:58 +0000</pubDate><atom:updated>2026-09-09T07:09:58.496Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இடைத்தேர்தல்,தாராபுரம்,வேட்புமனு,By-election,Dharapuram,தேர்தல் மன்னன்,Election king,பத்மராஜன்,Padmarajan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/5u1aqdy7/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/5u1aqdy7/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் பத்மராஜன் (65). இவர் அதே பகுதியில் பழைய லாரி மற்றும் பஸ் டயர்களை புதுப்பிக்கும் கடை நடத்தி வருகிறார். இவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு தேர்தலிலும் வேட்புமனுத் தாக்கல் செய்து வருகிறார். இவர் 1988-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 38 ஆண்டுகளுக்கு மேலாக அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்.</p><p>இந்திய அளவில் தலைவர்களை எதிர்த்தும் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்து வருகிறார் இதனால் இவர் தேர்தல் மன்னன் என்ற அடைமொழியோடு வலம் வருகிறார். இதுவரை கருணாநிதி, ஜெயலலிதா, வாஜ்பாய், நரேந்திர மோடி, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல தலைவர்களை எதிர்த்து போட்டியிட்டு இருக்கிறார். கூட்டுறவு சங்க தேர்தல் முதல் ஜனாதிபதி தேர்தல் வரை வேட்புமனு தாக்கல் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இவரது சாதனைகள் லிம்கா புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.</p><p>இந்த நிலையில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த 2 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (புதன்கிழமை) தொடங்கி உள்ள நிலையில், இடைத்தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன.</p><p>இந்நிலையில், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 'தேர்தல் மன்னன்' பத்மராஜன் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். 256-வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்யும் இவர் இதற்காக இதுவரை ரூ.1 கோடி வரை செலவழித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணி திருவிழா தேரோட்டம்: பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruchendur-murugan-temple-avani-festival-chariot-devotees-held-the-rope-and-pulled-it</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruchendur-murugan-temple-avani-festival-chariot-devotees-held-the-rope-and-pulled-it#comments</comments><guid isPermaLink="false">d9876a39-a9ff-4593-964d-bc575c39d676</guid><pubDate>Wed, 09 Sep 2026 07:05:32 +0000</pubDate><atom:updated>2026-09-09T07:05:32.492Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பக்தர்கள்,Devotees,Thoothukudi,தூத்துக்குடி,தேரோட்டம்,திருச்செந்தூர் முருகன் கோவில்,Thiruchendur Murugan Temple,Avani Festival,ஆவணி திருவிழா,chariot,rope,வடம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/0fajamla/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணி திருவிழா தேரோட்டம்: பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/0fajamla/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">திருச்செந்தூர் முருகன் கோவில்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE">ஆவணி திருவிழா</a> தேரோட்டத்தின்போது தேரில் எழுந்தருளிய குமரவிடங்க பெருமான், வள்ளி-தெய்வானை அம்பாள் தேரை பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வடம் பிடித்து இழுத்தனர். </p><h2>திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணி திருவிழா</h2><p>முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஆவணி திருவிழா திருச்செந்தூரில் ஆகஸ்ட் 31-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் சுவாமியும், அம்பாளும் காலை மற்றும் மாலையில் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்கள் காட்சி கொடுத்தனர்.</p><figure><img alt="திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணி திருவிழா தேரோட்டம்." src="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/q9msufgf/திருச்செந்தூர்-முருகன்-கோவில்-ஆவணி-திருவிழா-தேரோட்டம்.jpg" /></figure><h2>தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்</h2><p>இந்த நிலையில் 10-ம் நாளான இன்று காலையில் இத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">தேரோட்டம்</a> வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்று வழிபாடு செய்தனர். இந்த திருவிழாவின் சிகர நிகழ்வாக குமரவிடங்க பெருமான் வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். </p><h2>பக்தர்கள் வழிபாடு</h2><p>தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்துள்ள பக்தர்கள் கடலில் நீராடி நீண்ட வரிசையில் நின்று பெருமானைத் தரிசனம் செய்து வழிபாடு செய்தனர். தேரோட்ட திருவிழாவையொட்டி போலீசாரின் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு இருந்ததோடு, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகத்தின் மூலம் செய்யப்பட்டு இருந்தன. </p>]]></content:encoded></item><item><title>நெல்லையில் இஸ்லாமியர்களை காவல் நிலையத்திற்கு வரவழைத்து பயோமெட்ரிக் பதிவு - எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/biometric-registration-of-muslims-summoned-to-the-police-station-in-nellai-sdpi-party-condemns-the-move</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/biometric-registration-of-muslims-summoned-to-the-police-station-in-nellai-sdpi-party-condemns-the-move#comments</comments><guid isPermaLink="false">a8236efa-ec1a-4052-8a7a-c991b28f4fb8</guid><pubDate>Wed, 09 Sep 2026 06:40:35 +0000</pubDate><atom:updated>2026-09-09T06:40:35.441Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Tirunelveli,நெல்லை முபாரக்,sdpi,எஸ்.டி.பி.ஐ.,Nellai Mubarak</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/bw83xvro/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/bw83xvro/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் பகுதியில் இஸ்லாமிய மக்களைக் காவல் நிலையத்திற்கு வரவழைத்து கைரேகை, கண் கருவிழி  பதிவு மற்றும் பல கோணங்களில் புகைப்படங்களை எடுக்கும் நெல்லை மாநகரக் காவல்துறையின் அடக்குமுறை நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிப்பதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>“பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் குறிப்பிட்ட சில சமூக மக்களைப் பிறப்பாலேயே குற்றவாளிகளாக சித்தரித்து, அவர்களின் கைரேகைகளைப் பதிவு செய்து, சுதந்திர நடமாட்டத்தைக் கட்டுப்படுத்திய கொடூரமான 'குற்றப்பரம்பரைச் சட்டம்' நடைமுறையில் இருந்தது. பல தியாகப் போராட்டங்களுக்குப் பிறகு சுதந்திர இந்தியாவில் ஒழிக்கப்பட்ட அந்தப் பாசிச நடைமுறையை, தற்காலத்தில் நெல்லை மேலப்பாளையத்தில் காவல்துறை கையில் எடுத்திருப்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது.</p><p>லட்சக்கணக்கான இஸ்லாமிய மக்கள் அமைதியுடன் வசித்து வரும் மேலப்பாளையம் பகுதியில், எவ்வித சட்டப்பூர்வ அழைப்பாணையோ  முறையான காரணமோ இன்றி அப்பகுதி மக்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கண் ரேகை, கைரேகைகளைப் பதிவு செய்வது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். 20 ஆண்டுகளுக்கு முன்பு முடிந்துபோன சிறிய சமுதாய வழக்குகளை காரணம் காட்டி, குறிப்பிட்ட ஒரு சமூக மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியை மட்டுமே குறிவைத்து இத்தகைய அடக்குமுறையை ஏவுவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.</p><p>குறிப்பாக, காவல்துறைக்கு வரம்பற்ற அதிகாரங்களை வழங்கும் இத்தகைய நடைமுறைகளை முற்றிலும் கைவிட வேண்டும். 'சரித்திரப் பதிவேடு'  என்ற பெயரில் குற்றவாளிகளை கண்காணிக்கிறோம் எனக் கூறி, அப்பாவிகளையும் பொதுமக்களையும் தொடர்ந்து அச்சுறுத்துவதும், அவர்களின் சுதந்திரமான வாழ்வுரிமையைப் பறிப்பதும் மனித உரிமைக்கு எதிரானது. இத்தகைய சரித்திரப் பதிவேடு நடைமுறையால் பல அப்பாவி மக்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டு வரும் சூழலில், இந்த அடக்குமுறை நடைமுறைகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.</p><p>சிறுபான்மை மக்கள் வாழும் பகுதிகளைத் தொடர்ச்சியாகச் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதும், தேவையற்ற பதற்றத்தை உருவாக்குவதும் சமூக நல்லிணக்கத்திற்குப் பேராபத்தை விளைவிக்கும். அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழகத்தில், சில காவல்துறை அதிகாரிகளின் இத்தகைய ஒருதலைப்பட்சமான அதிகார துஷ்பிரயோகம் மாநில அரசுக்குத் தான் களங்கத்தை ஏற்படுத்தும்.</p><p>எனவே, தமிழக முதல்வர் அவர்கள் இந்த விவகாரத்தில் உடனடியாக நேரடியாகத் தலையிட்டு, மேலப்பாளையத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடத்தப்படும் பயோமெட்ரிக் பதிவு நடவடிக்கைகளையும், சரித்திரப் பதிவேடு என்ற பெயரிலான அடக்குமுறைகளையும் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். சட்டத்திற்குப் புறம்பாக பொதுமக்களிடம் அச்சத்தை விதைக்கும் காவல்துறை அதிகாரிகள் மீது துறைரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட  திமுக முடிவு?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-decides-to-contest-by-elections-in-maduranthakam-and-dharapuram-constituencies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-decides-to-contest-by-elections-in-maduranthakam-and-dharapuram-constituencies#comments</comments><guid isPermaLink="false">f259b9d9-9045-4308-a810-c52277eadb6e</guid><pubDate>Wed, 09 Sep 2026 06:40:22 +0000</pubDate><atom:updated>2026-09-09T06:40:22.815Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இடைத்தேர்தல்,Kanchipuram,மதுராந்தகம்,தாராபுரம்,Maduranthakam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/7iyopju8/MK-Stalin.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முக ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/7iyopju8/MK-Stalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை, </p><p>மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப் படும் என்ற அறிவிப்பை தேர்தல் கமிஷன் நேற்று முன்தினம் வெளியிட்டது. இந்த 2 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (புதன்கிழமை) தொடங்க உள்ள நிலையில், இடைத்தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன.</p> <h2>ராஜினாமா</h2><p>த.வெ.க. ஆட்சி அமைந்த சில மாதங்களிலேயே நடைபெற உள்ள இடைத்தேர்தல் என்பதால் ஆட்சியையும், அவர்களின் கொள்கை கோட்பாடுகளையும் அவர்கள் எவ்வாறு செயல்படுத்துகின்றனர் என்பதை மக்கள் எவ்வாறு ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதை நிரூபிக்கும் களமாக பார்க்கப்படுகிறது. இதனால், இந்த இடைத்தேர்தலில் எப்படியும் வெற்றிபெற்றாக வேண்டும் என்பதில் த.வெ.க. தீவிரமாக களப்பணியாற்றி இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளையும் தனதாக்கிக்கொள்ள தீவிரமாக களமாடும். அதேநேரத்தில், அ.தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ.க்களாக தேர்வானவர்கள் ராஜினாமா செய்ததால் ஏற்பட்ட இடைத்தேர்தல் என்பதால் அந்தந்த தொகுதியில் உள்ள அ.தி.மு.க.வின் செல்வாக்கை இழக்கக்கூடாது என்ப தில் அ.தி.மு.க. தீவிரமாக உள்ளது.</p><h2>ஸ்டாலின் ஆலோசனை</h2><p>அதேபோன்று, தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.க. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுமா? அல்லது புறக்கணிக்குமா? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.  இது தொடர்பாக முடிவு செய்ய இன்று  முக ஸ்டாலின் வீட்டில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, இடைத்தேர்தலில்  போட்டியிடுவது என திமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாராபுரம் தொகுதியில் கடந்த தேர்தலில், திமுக 2ம் பிடித்து தோல்வி அடைந்தது. மதுராந்தகம் தொகுதியில் திமுக 3-ம் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது. </p><h2>திமுக வேட்பாளர்கள் பட்டியல்</h2><p>இடைத்தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணித்தால் கட்சி நிர்வாகிகள் சோர்வடைந்துவிடுவார்கள் எனவும் திமுகவை கடுமையாக விமர்சிக்கும் விஜய்க்கு தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனால், தேர்தலில் போட்டியிடும் முடிவை திமுக தலைமை எடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. நாளை அல்லது நாளை மறுநாள் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் எனத்தகவல்கள் வெளியாகியுள்ளன.</p> ]]></content:encoded></item><item><title>நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து 11-ந்தேதி வரை ரத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nagapattinam-sri-lanka-boat-service-cancelled-until-the-11th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nagapattinam-sri-lanka-boat-service-cancelled-until-the-11th#comments</comments><guid isPermaLink="false">762b81c7-3fb9-4895-a449-b7aa1415b92e</guid><pubDate>Wed, 09 Sep 2026 06:23:50 +0000</pubDate><atom:updated>2026-09-09T06:23:50.151Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nagapattinam,SriLanka,இலங்கை,நாகை,கப்பல் போக்குவரத்து,Boat Service</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/zeoacc8c/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/zeoacc8c/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>நாகை,</p><p>நாகை - இலங்கை காங்கேசன்துறை இடையே வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கப்பல் போக்குவரத்து தொடர்பான பாதுகாப்பு, ஆய்வு சான்றிதழ்கள் மற்றும் விதிமுறை குறித்து ஆய்வு செய்யும் வணிக கடல்சார் துறை அதிகாரிகள் சென்னையில் இருந்து நாகை வந்து நாகை -இலங்கை இடையே இயக்கப்படும் கப்பல்களை ஆய்வு செய்தனர்.</p><p>இந்த ஆய்வில் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டதாகவும், இந்த குறைபாடுகளை சரிசெய்யும் வரை கப்பல் சேவையை ரத்து செய்ய சென்னை வணிக கடல் சார்துறை சார்பில் கடிதம் வழங்கப்பட்டதாகவும் தெரிகிறது. இதனையடுத்து கப்பல்களில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.</p><p>இந்த பணிகள் நிறைவு பெற்றவுடன் 11-ந்தேதிக்கு பின்னர் பயணிகள் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை நாகை-இலங்கை காங்கேசன் துறை இடையே திட்டமிடப்பட்ட பயணங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>எல் நினோ தாக்கம்: ஊட்டியில் முன்கூட்டியே தொடங்கிய நீர் பனிப்பொழிவு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/el-ni%C3%B1o-impact-early-frost-in-ooty</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/el-ni%C3%B1o-impact-early-frost-in-ooty#comments</comments><guid isPermaLink="false">f2bd081a-8d80-44e1-a52d-bdf0fc7fdc48</guid><pubDate>Wed, 09 Sep 2026 06:18:52 +0000</pubDate><atom:updated>2026-09-09T06:18:52.339Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Ooty,El Nino,எல் நினோ</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/vbuvz2yj/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/vbuvz2yj/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் நீர் பனிப்பொழிவு தொடங்கும். இந்த நீர் பனிப்பொழிவானது படிப்படியாக உறை பனிப்பொழிவாக மாறி, ஜனவரி மாதம் வரை ஊட்டியில் உறைபனி தொடர்ந்து நீடிக்கும். </p><p>ஆனால் நடப்பாண்டில் எல் நினோ தாக்கம் மற்றும் மழை இல்லாத காரணத்தினால் காலநிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக ஊட்டியில் செப்டம்பர் மாதத்திலேயே நீர் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. </p><p>இதன் காரணமாக காலை நேரங்களில் புல்வெளிகளில் நீர் பனிப்பொழிவால், முத்துமுத்தாக தண்ணீர் துளிகள் காட்சி அளிக்கின்றன. குறிப்பாக ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, காந்தல் உள்ளிட்ட சமவெளி பகுதிகளில் இந்த நீர் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. </p><p>இனிவரும் நாட்களில் இந்த நீர் பனிப்பொழி அதிகமாகி விரைவில் உறை பனிப்பொழிவு தொடங்குவதற்கு வாய்ப்புள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த நீர் பனிப்பொழிவு காரணமாக ஊட்டில் தற்போது கடும் குளிர் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>மணப்பாறை அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-dies-after-being-electrocuted-near-manapparai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-dies-after-being-electrocuted-near-manapparai#comments</comments><guid isPermaLink="false">f46b7cf4-03b9-4bd0-847f-a108376d4c99</guid><pubDate>Wed, 09 Sep 2026 06:13:17 +0000</pubDate><atom:updated>2026-09-09T06:13:17.718Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்சி,Youth,மின்சாரம் தாக்கி,வாலிபர் உயிரிழப்பு,police enquiry,Death by electrocution</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/hd2j2hsa/-02.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ முருகன்]]></media:title><media:description type="html"><![CDATA[ மின்சாரம் தாக்கி வாலிபர் பலி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/hd2j2hsa/-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தண்ணீர் தொட்டியில் குளித்துவிட்டு மின் மோட்டாரை நிறுத்த சென்ற வாலிபர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF">மின்சாரம் தாக்கி </a>சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>மின்சாரம் தாக்கி வாலிபர் பலி</h2><p>திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 29). இவர் இன்று (புதன்கிழமை) தனது வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் குளித்தார். குளித்து முடித்தவுடன், ஓடிக்கொண்டிருந்த மின் மோட்டாரை நிறுத்துவதற்காக ஈரமான உடலுடன் சுவிட்சைத் தொட்டுள்ளார்.</p><p>அப்போது, எதிர்பாராதவிதமாக முருகன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81"> உயிரிழந்தார்</a>. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர், உடனடியாக இதுகுறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உள்ளூர் போலீசார், முருகனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குளித்துவிட்டு மின் மோட்டாரை நிறுத்தச் சென்ற வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எல்நினோவால் சாதகம்: தூத்துக்குடியில் 80 சதவீதத்தை எட்டிய உப்பு உற்பத்தி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/boost-from-el-ni%C3%B1o-salt-production-in-thoothukudi-reaches-80-percent</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/boost-from-el-ni%C3%B1o-salt-production-in-thoothukudi-reaches-80-percent#comments</comments><guid isPermaLink="false">781cd788-3c73-435f-88ec-29ad377de819</guid><pubDate>Wed, 09 Sep 2026 05:59:59 +0000</pubDate><atom:updated>2026-09-09T05:59:59.833Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,உப்பு உற்பத்தி,Salt production,எல் நினோ,El Niño,தூத்துக்குடி உப்பு,Thoothukudi salt,சூப்பர் எல் நினோ,Super El Niño</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/h6kpsjmz/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/h6kpsjmz/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>தூத்துக்குடி மாவட்டத்தில் எல்நினோவால் சாதகமான சூழல் உருவானதால், 80 சதவீதம் உப்பு உற்பத்தியாகி உள்ளது. அதேசமயம் விலை வீழ்ச்சியால் உற்பத்தியாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.</p><h2>உப்பு உற்பத்தி</h2><p>தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையா புரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்து உள்ளன. இவைகளில் சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.</p><p>நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தப்படியாக தூத்துக்குடி மாவட்டம் உள்ளது. இங்கு ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக்கான பணிகள் தொடங்கும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 6 மாதங்கள் உப்பு உற்பத்திக்கான உச்சகட்ட காலங்கள் ஆகும். அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் உப்பு சீசன் முடிவடையும்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/dusetbki/CHENNAI-10.jpg" /></figure><h2>சாதகமான சூழல்</h2><p>நடப்பு ஆண்டில் ஜனவரி மாதம் முதல் உப்பு உற்பத்தி பணிகள் தொடங்கின. தொடர்ந்து புதிய உப்பு உற்பத்தியாகி வந்தது. தொடர்ச்சியாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் உப்பு உற்பத்தி வேகம் எடுத்து உள்ளது. வழக்கமாக ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்து உப்பு உற்பத்தியை பாதிக்கும். இதனால் உப்பு விலை ஓரளவு உயர்ந்து இருக்கும்.</p><p>இந்த ஆண்டு 'எல்நினோ' போன்ற இயற்கை மாற்றங்களால் உப்பு உற்பத்திக்கு சாதகமான சூழல் நிலவி வருகிறது. மேற்கு பகுதியில் இருந்து வீசும் மேல்காற்றும், கொளுத்தும் வெயிலும் சேர்ந்து இருந் தால் 'கோடை' என்று உப்பு உற்பத்தியாளர்கள் அழைப்பார்கள். அந்த கோடை இந்த ஆண்டு சிறப்பாக அமைந்து இருப்பதால் உப்பு உற்பத்தியை அதிகரித்து உள்ளது. இதனால் இதுவரை சுமார் 80 சதவீதம் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் உப்பளங்களில் எங்கு பார்த்தாலும் உப்புக்குவியல்கள் வெள்ளை நிற குன்றுகள் போன்று காட்சி அளிக்கின்றன.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/1wvauh0o/Untitled-4.jpg" /></figure><h2>விலை சரிவு</h2><p>அதே நேரத்தில் உப்பு உற்பத்தி அதிகரித்தாலும் போதிய விலை கிடைக்காமல் உற்பத்தியாளர்கள் கலக்கத்திற்கு ஆளாகி உள்ளனர். தூத்துக்குடியில் தற்போது தரமான உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் முதல் தர உப்பு ரூ.1,000 முதல் ரூ.1,200 வரையும், 2-வது தர உப்பு ரூ.800 முதல் ரூ.1,000 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p>ஆனாலும் கேரளம், கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு குஜராத் உப்பு அதிக அளவில் விற்பனைக்கு வருவதால் தூத்துக்குடி உப்பு மார்க்கெட்டை இழந்து உள்ளது. இதனால் உப்பு விற்பனையும் மந்தமாக உள்ளது. இது உப்பளத் தொழிலை தொடர்ந்து நலிவடைய செய்வதாக உள்ளது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/92cq9p16/Untitled-2.jpg" /></figure><h2>உற்பத்தியாளர் கவலை</h2><p>இது குறித்து உப்பு உற்பத்தியாளர் ஒருவர் கூறும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி சுமார் 80 சதவீதம் வரை அதிகரித்து உள்ளது. அதாவது 20 லட்சம் டன் வரை உப்பு உற்பத்தியாகி உள்ளது. உப்பு உற்பத்திக்கு சாதகமான சூழல் நிலவுவதால் இந்த ஆண்டு 100 சதவீதம் உப்பு உற்பத்தியை எட்டுவதற்கான வாய்ப்பு உள்ளது.</p><p>கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட உப்பு இன்னும் விற்பனை செய்யப்படாமல் உள்ளது. அதே நேரத்தில் விற்பனைக்கான வாய்ப்புகளும் குறைந்து உள்ளன. தூத்துக்குடியில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் உப்பு மார்க்கெட்டை தூத்துக்குடி வியாபாரிகள் இழந்து உள்ளனர். அங்கு குஜராத்தில் இருந்து நேரடியாக உப்பு விற்பனைக்கு வருகிறது.</p><p>இதனால் உப்பு விலை மிகவும் குறைந்து உள் ளது. இதே நிலை நீடித்தால் உப்புத் தொழில் மிகவும் நலிவடைந்துவிடும். ஆகையால் அரசு உப்புத் தொழிலை பாது காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/5edohma2/Untitled-3.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>‘பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்’ - அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-law-banning-smoking-in-public-places-must-be-strictly-enforced-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-law-banning-smoking-in-public-places-must-be-strictly-enforced-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">9b6448d6-1d05-4ec7-b050-d6e14e352264</guid><pubDate>Wed, 09 Sep 2026 05:30:44 +0000</pubDate><atom:updated>2026-09-09T05:30:44.898Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/91421sao/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/91421sao/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“இந்தியாவில் பிறர் புகைத்து விடும் சிகரெட் புகையை சுவாசிப்பதால் கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் 3.25 லட்சம் பேர் உயிரிழந்ததாக உலக அளவில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது. நாட்டில் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகும் கூட,  சிகரெட் புகையை சுவாசிப்பதால் ஏற்படும் உயிரிழப்புகள் மிகப்பெரிய அளவில் அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது.</p><p>இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் லான்செட் குழுமத்தின் ஆன்லைன் மருத்துவ இதழான The Lancet Public Health-இல் வெளியாகியுள்ள ஆய்வுக்கட்டுரையில் பிறர் புகைத்து விடும் சிகரெட் புகையை சுவாசிப்பதால் 2023 ஆம் ஆண்டில் மட்டும் 3 லட்சத்து 25,600 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 1990 ஆம் ஆண்டில் இதே முறையில் ஏற்பட்ட 2 லட்சத்து 17,700 உயிரிழப்புகளுடன் ஒப்பிடும் போது இது 49.56% அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதில் ஆண்களின் உயிரிழப்பு விகிதல் 61.74 விழுக்காடும், பெண்களின் உயிரிழப்பு  38.35 விழுக்காடும் அதிகரித்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதே காலக்கட்டத்தில் பிறர் புகைத்து விடும் புகையை சுவாசிக்கும் நிலைக்கு தள்ளப்படுவோரின் எண்ணிக்கை 37.50 கோடியில் இருந்து 44.40 கோடியாக வெறும் 18.40% மட்டுமே அதிகரித்துள்ள நிலையில், உயிரிழப்போரின் எண்ணிக்கை மட்டும் சுமார் 50% அளவுக்கு அதிகரித்திருப்பதுதான் இந்த விவகாரத்தின் தீவிரத்தையும், ஆபத்தையும் உணர்த்தியுள்ளது.</p><p>இந்தியாவில் இந்த அளவுக்கு நிலைமை மோசமடைந்திருப்பதற்கு மிக முக்கியக் காரணம் பொது இடங்களில் புகை பிடிப்பது கட்டுப்படுத்தப்படாததுதான். சமூக அக்கறை சிறிதும் இல்லாமல் பொது இடங்களில் புகைப்பிடிக்கும் வழக்கம் இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அவ்வாறு புகைப்பவர்கள் வெளியிடும் புகையை சுவாசிக்கும் அப்பாவி மக்கள், குறிப்பாக குழந்தைகளும், பெண்களும் மிகக்கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். </p><p>இந்தக் கொடுமைக்கு முடிவு கட்டும் நோக்கத்துடன் தான், 2004-09 காலத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகித்த போது,  பொது இடங்களில் புகைப்பிடிப்பதை  தடை செய்யும் சட்டத்தைக் கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையில் நிறைவேற்றி 2008 ஆம் ஆண்டு தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தினேன். அதன்பிறகு தான் திரையரங்குகள், உணவகங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் பெண்களும், குழந்தைகளும்  பிறர் புகைத்து வெளியிடும் புகையை சுவாசிக்காமல் நடமாடும் ஆரோக்கியமான சூழ்நிலை உருவானது.</p><p>பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை இயற்றியது மத்திய அரசு என்றாலும் கூட , அதை நடைமுறைப்படுத்தும் கடமையும், பொறுப்பும் மாநில அரசுகளுக்குத் தான் இருக்கிறது. ஆனால், எந்த மாநிலத்திலும் இந்தச் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதையே இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.</p><p>எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட 02.10.2008 முதல் கடந்த 2024 மார்ச் 31 ஆம் நாள் வரையிலான பதினைந்தரை ஆண்டுகளில் 3.89 லட்சம் பேர் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டு, ரூ.6.83 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு வெறும் 68 பேர் மட்டும் தான் பொது இடங்களில் புகைப்பிடித்ததாகக் கூறி அவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது; அவர்களில் ஒவ்வொருவரிடமிருந்து சராசரியாக ரூ.177 மட்டும் தான் தண்டமாக வசூலிக்கப்பட்டிருக்கிறது என்பதிலிருந்தே இந்தச் சட்டம்  எவ்வளவு அலட்சியமாக செயல்படுத்தப்படுகிறது என்பதை உணரலாம்.</p><p>2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இப்போது வரையிலான காலத்தில் இந்த சட்டத்தின்படி எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரங்கள் நடப்பாண்டுக்கான மருத்துவத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் சேர்க்கப்படவில்லை. இதனால், இந்த சட்டத்தின் அடிப்படையில், பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புதிய அரசு விரும்பவில்லையோ என்று தோன்றுகிறது.</p> <p>நேரடியாக புகைப்பிடிப்பதால்  என்னென்ன தீமைகள் ஏற்படுமோ, அவை அனைத்தும் பிறர் புகைத்து விடும் சிகரெட் புகையை சுவாசிப்பவர்களுக்கும் ஏற்படும் என்று மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். சிகரெட்  புகையில் கலந்துள்ள நிகோட்டின் என்ற வேதிப்பொருளை உள்ளிழுக்கும் போது, அது மூளைக்கும், இதயத்திற்கும் செல்லும் இரத்த நாளங்களில் படிந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. அதனால், இதய நோய், பக்கவாதம், நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (Chronic Obstructive Pulmonary Disease - COPD), ஆஸ்துமா, நுரையீரல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், நீரிழிவு நோய் உள்ளிட்ட நோய்களும் சிகரெட் புகையை மக்கள் சுவாசிப்பதால் ஏற்படுகின்றன. இந்த நோய்களால் அதிகம் பாதிக்கப்படுவோர் பெண்களும், குழந்தைகளும் தான்.</p><p>பெண்களும், குழந்தைகளும் எந்தத் தவறும் செய்யாதவர்கள். பொதுவெளிகளில் யாரோ சிலர் சட்டவிரோதமாக சிகரெட் புகைத்து வெளியிடும் புகையை சுவாசித்த ஒரே பாவத்திற்காக ஆண்டுக்கு ஒரு லட்சத்து 56,900 பெண்கள் உயிரிழக்கும் கொடுமையை மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கக் கூடாது. எனவே, பொது இடங்களில் புகைப் பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் இன்னும் தீவிரமாகவும், கடுமையாகவும் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் கள் இறக்க உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/immediate-permission-must-be-granted-for-palm-wine-in-tamil-nadu-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/immediate-permission-must-be-granted-for-palm-wine-in-tamil-nadu-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">cee65a05-6e92-4b9c-8386-93676ada0b44</guid><pubDate>Wed, 09 Sep 2026 05:26:39 +0000</pubDate><atom:updated>2026-09-09T05:26:39.394Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,palm tree,wine,கள் விற்பனை,கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/0gl1xz0s/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/0gl1xz0s/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><p>மண்ணின் மணம் மாறாத மாண்பினைத் தழுவி, இயற்கை அன்னை தந்த கொடையான 'கள்' இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் பரிந்துரையைத் தமிழக பாஜக சார்பில் மனமுவந்து வரவேற்கிறேன். மண்ணின் மைந்தர்களான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தவும், கிராமப்புறப் பொருளாதாரத்தில் புதிய ஒளியேற்றவும் இந்தப் பரிந்துரை ஒரு நல்வாய்ப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.</p><p>ரசாயனக் கலப்புள்ள மது அரக்கனுக்கு எதிராக தமிழக பாஜக தொடுத்த அறப்போர்களில், "மக்களின் உயிரைக் குடிக்கும் நச்சு மதுவை ஒழித்து, மண்ணின் பானமான கள்ளை அனுமதிக்க வேண்டும்" என்ற முழக்கம் எப்போதும் ஓங்கி ஒலித்துள்ளது. கள்ளுக்கு ஆதரவாக நான் தொடர்ந்து வாதிட்டும் வந்துள்ளேன். இந்நிலையில் இன்றைய ஆணையத்தின் பரிந்துரை மூலம் பாஜகவின் நீண்டகாலப் போராட்டத்திற்கு ஒரு தார்மீக வெற்றி கிடைத்துள்ளது.</p><p>எனவே, விவசாயிகளின் வாடிய முகத்தில் புன்னகை பூக்கவும், கள்ளச்சாராய மரணங்கள் என்னும் கருநிழல் தமிழகத்தை விட்டு விலகவும், தவெக அரசு இந்தப் பரிந்துரையை வெறும் காகிதத்தோடு நிறுத்திவிடக் கூடாது. காலம் தாழ்த்தாமல், உரிய பாதுகாப்பு விதிகளுடன் கள் இறக்கவும், சந்தைப்படுத்தவும் உடனடியாக அனுமதி வழங்கி, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் 'வசந்தத்தை' ஏற்படுத்த வேண்டும் எனத் முதல்-அமைச்சர் விஜய்யை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி விசைப்படகுடன் 9 மீனவர்கள் சிறைபிடிப்பு: லட்சத்தீவு தீவு அருகே பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/9-fishermen-captured-with-tuticorin-fishing-boat-tension-near-lakshadweep-island</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/9-fishermen-captured-with-tuticorin-fishing-boat-tension-near-lakshadweep-island#comments</comments><guid isPermaLink="false">567e0a2f-02a2-41d6-948b-030607e75fcb</guid><pubDate>Wed, 09 Sep 2026 05:22:25 +0000</pubDate><atom:updated>2026-09-09T05:22:25.377Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மீனவர்கள்,fishermen,Thoothukudi,தூத்துக்குடி,விசைப்படகு,navy,Lakshadweep,லட்சத்தீவு,captivity,சிறைபிடிப்பு,கடற்படையினர்,motorboat</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/h4zcgxbp/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-9-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விசைப்படகுடன் 9 மீனவர்கள் சிறைபிடிப்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/h4zcgxbp/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-9-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81">லட்சத்தீவு</a> நோக்கி மீன்பிடிக்கச் சென்ற <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a>யைச் சேர்ந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81">விசைப்படகையும்</a>, அதில் இருந்த 9 <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">மீனவர்களையும்</a> கவராத்தி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D">கடற்படையினர்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4">சிறைபிடித்த</a> சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><h2>தூத்துக்குடியைச் சேர்ந்த விசைப்படகு; 9 மீனவர்கள்</h2><p>தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தைச் சேர்ந்த நட்டார்(எ) மிக்கேல்ராஜ் என்பவருக்குச் சொந்தமான செவுள் வலை விசைப்படகில், கடந்த செப்டம்பர் 4-ம் தேதி கேரள மாநிலம் கொச்சின் துறைமுகத்திலிருந்து 9 மீனவர்கள் லட்சத்தீவுகள் நோக்கி மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். </p><h2>விசைப்படகு, 9 மீனவர்கள் சிறைபிடிப்பு</h2><p>நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் கவராத்தி தீவுப் பகுதியில் விசைப்படகு சென்று கொண்டிருந்தபோது, பாதுகாப்பு காரணங்களுக்காக தடை செய்யப்பட்ட கடல் பகுதிக்குள் நுழைய முயன்றதாகக் கூறி கவராத்தி கடற்படையினர் அந்த விசைப்படகைக் கைப்பற்றிச் சிறைபிடித்தனர். </p><p>படகு உரிமையாளர் நட்டார் என்ற மிக்கேல்ராஜ் உள்பட படகிலிருந்த 9 மீனவர்களும் கவராத்தி தீவில் கடற்படையினரின் விசாரணைக்காக விசைப்படகிலேயே சிறை வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தருவைகுளம் பகுதி கடலோர மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா மருத்துவமனையில் அனுமதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/communist-party-of-india-national-general-secretary-d-raja-admitted-to-hospital</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/communist-party-of-india-national-general-secretary-d-raja-admitted-to-hospital#comments</comments><guid isPermaLink="false">497621b2-3c63-4a10-8820-f0aa2ea1e6b0</guid><pubDate>Wed, 09 Sep 2026 05:19:34 +0000</pubDate><atom:updated>2026-09-09T05:19:34.234Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Communist Party of India,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி,டி.ராஜா,Raja</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/u259h4fs/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/u259h4fs/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, உடல் நல பரிசோதனைகளுக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் டி.ராஜாவுக்கு உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது. அவர் முழு உடல்&nbsp;பரிசோதனைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல் நலத்துடன் உள்ளார்.</p><p>கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், டி.ராஜா அவர்களின் மகளும் தேசியக் குழு உறுப்பினருமான அபராஜிதா, மாநிலக் குழு உறுப்பினர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி, உள்ளிட்டோர் உடன் இருந்து உதவி வருகின்றனர்.</p><p>இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் ஆகியோர் மருத்துவமனைக்கு வருகை தந்து தோழர் டி.ராஜாவிடம் உடல் நலம் விசாரித்து சென்றனர்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி தொடங்க வாய்ப்பு இல்லை: என்ன காரணம்?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/unlikely-that-the-thai-maman-gold-ring-scheme-will-launch-on-september-15-what-is-the-reason</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/unlikely-that-the-thai-maman-gold-ring-scheme-will-launch-on-september-15-what-is-the-reason#comments</comments><guid isPermaLink="false">a2a0819c-ed5e-4362-8263-ddf2cb5b9183</guid><pubDate>Wed, 09 Sep 2026 05:00:51 +0000</pubDate><atom:updated>2026-09-09T05:00:51.500Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Chennai,சென்னை,தமிழ்நாடு அரசு,தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்,Thaimaman Gold Ring Project</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/6159yy4l/vijay-gold-ring.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தாய்மாமன் தங்க மோதிரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/6159yy4l/vijay-gold-ring.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2>தாய்மாமன் தங்க மோதிர திட்டம்</h2><p>அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் பிறப்பை அதிகரிக்கும் நோக்கத்தில், கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்தார். மேலும், இந்த திட்டம் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.  இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற கடந்த ஜூன் மாதம் 22-ந் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் தகுதி பெற்றவர்கள் ஆவார்கள். இந்த குழந்தைகளுக்கு 22 கேரட் தங்கத்தில் செய்யப்பட்ட ஒரு கிராம் தங்க மோதிரம் தாய்மாமன் சீராக வழங்கப்படும். </p> <h2>செப்டம்பர் 15-ல் தொடக்கம் இல்லை</h2><p>இதற்காக, பட்ஜெட்டில் அடுத்த ஓராண்டுக்கு ரூ.755 கோடியே 83 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 4 லட்சத்து 41 ஆயிரத்து 667 தங்க மோதிரத்திற்கும் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. தங்க மோதிரம் செய்து கொடுக்கும் ஒப்பந்தத்தை ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் 70 சதவீதம் அளவுக்கும், கல்யாண் ஜூவல்லரி நிறுவனம் 30 சதவீதம் அளவுக்கும் பெற்றுள்ளன.  தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடங்குவதற்கு 5 நாட்களே இடைவெளி உள்ள நிலையில், குறிப்பிட்ட நாளில் (செப்டம்பர் 15) திட்டத்தை தொடங்க வாய்ப்பு இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. </p><h2>என்ன  காரணம்?</h2><p>அதற்கு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் லண்டன் பயணம் காரணமாக கூறப்படுகிறது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக நாளை (வியாழக்கிழமை) லண்டனுக்கு புறப்படும் அவர், சென்னையில் இருந்து துபாய் சென்று, அங்கிருந்து லண்டன் போய் சேருகிறார்.  லண்டன் பயணத்தின்போது, சில்வர்ஸ்டோனில் நடைபெறும் நடிகர் அஜித்குமாரின் கார் பந்தயத்தையும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கண்டுகளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணம் 16-ந் தேதி வரை 7 நாட்கள் நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது. </p><h2>உசிலம்பட்டியில் 25-ந் தேதி தொடக்கம்</h2><p>அப்படிப்பார்த்தால், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், 16-ந் தேதி இரவு தான் லண்டனில் இருந்து சென்னை திரும்பும் நிலை உள்ளது. நிலைமை அவ்வாறு இருக்கும்போது, அதற்கு முந்தைய நாளான (செப்டம்பர் 15) அண்ணா பிறந்த நாளில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை அவர் தொடங்கிவைக்க சாத்தியம் இல்லை.  இந்த நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் செப்டம்பர் 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">தாய்மாமன் தங்க மோதிரம்</a> திட்டத்தை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கிவைப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. உசிலம்பட்டி பகுதியில் தாய்மாமன் சீர் வழங்கும் பழக்கம் பிரபலம் என்பதால், குறிப்பிட்ட ஊர் தேர்வு செய்யப்பட்டதாக தெரிகிறது. </p> <h2>காலை உணவுத் திட்ட விரிவாக்கம்</h2><p>முன்னதாக, செப்டம்பர் 17-ந் தேதி (லண்டனில் இருந்து திரும்பிய அடுத்த நாள்) விருதுநகரில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பிறந்த நாளில், அவர் படித்த பள்ளியில், காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கிவைக்க இருக்கிறார்.  அதே நாளில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகமும் நடைபெற இருப்பதால், முதலில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு, அதன்பிறகு காலை உணவு திட்டத்தை தொடங்கிவைக்க முதல்-அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">ஜோசப் விஜய்</a> செல்வார் என்றும் கூறப்படுகிறது</p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-tomorrow-18</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-tomorrow-18#comments</comments><guid isPermaLink="false">b43b09e9-a9ce-4566-98b7-3d1a887a6faa</guid><pubDate>Wed, 09 Sep 2026 04:45:12 +0000</pubDate><atom:updated>2026-09-09T04:45:12.102Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,monthly maintenance work,மாதாந்திர பராமரிப்பு பணி,Power outage tomorrow,நாளை மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/3tbw452x/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/3tbw452x/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டத்தில் திருநெல்வேலி நகர்ப்புறம், கல்லிடைக்குறிச்சி, வள்ளியூர் ஆகிய கோட்டங்களுக்கு உட்பட்ட துணைமின் நிலையங்களில் நாளை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் காரணமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> செய்யப்படும். </p><h2>திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம்</h2><p>திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம் செயற்பொறியாளர் ரவிராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>பழையபேட்டை மற்றும் பொருட்காட்சி திடல் துணை மின் நிலையத்தில் நாளை (10.9.2026, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. </p><p>அதன்படி திருநெல்வேலி டவுன், மேலரதவீதி மேல் பகுதிகள், தெற்குரதவீதி தெற்கு பகுதிகள், வடக்குரதவீதி வடக்கு பகுதிகள், பழையபேட்டை, காந்திநகர், திருப்பணிகரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை தொழிற்பேட்டை, கோட்டீஸ்வரன்நகர், சாஸ்திரிநகர், தீன்நகர், திருமங்கைநகர், செந்தமிழ்நகர், பாட்டபத்து, அபிஷேகப்பட்டி, பொருட்காட்சிதிடல், திருநெல்வேலிடவுன் SN ஹைரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம், சிவந்திரோடு, சுந்தர தெரு, பாரதியார் தெரு, C.N.கிராமம், குறுக்குத்துறை, கருப்பன்துறை, டவுன் கீழரதவீதி, போஸ்மார்க்கெட், A.P. மாடத்தெரு, சாமி சன்னதி தெரு, அம்மன் சன்னதி தெரு, மேலமாடவீதி, கள்ளத்திமுடுக்குதெரு, நயினார்குளம் ரோடு, சத்தியமூர்த்தி தெரு, போத்தீஸ் நயினார்குளம், மார்க்கெட், வ.உ.சி.தெரு, வையாபுரிநகர், பாரத் இந்துஸ்தான் பெட்ரோலியம், சிவன் கோவில், தெற்குதெரு, ராம்நகர் மற்றும் ஊருடையான் குடியிருப்பு பகுதிகள் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><h2>காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை</h2><p>இதேபோல் மேலப்பாளையம், ரெட்டியார்பட்டி மற்றும் புதிய பேருந்து நிலையம் துணை மின் நிலையங்களில் நாளை (10.9.2026, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. </p><p>அதன்படி மேலப்பாளையம், கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின் ரோடு, சந்தை பகுதிகள், குலவணிகர்புரம், மத்திய சிறைச்சாலை, மாசிலாமணிநகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹமீபுரம், மேலக்கருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக்குளம், அன்னைநகர், தருவை, ஓமநல்லூர், கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம், ஆஸ்பத்திரி ரோடு, தெற்கு பைபாஸ் ரோடு, மேலகுலவணிகபுரம், பஜார்திடல், ஜின்னாதிடல், டவுன் ரோடு, அண்ணாவீதி, பஷீர் அப்பா தெரு, கணேசபுரம், செல்வகாதர்தெரு, உமறுப்புலவர்தெரு, ஆசாத்ரோடு, PSN கல்லூரி. </p><p>ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கன்தான்பாறை, பொன்னாக்குடி, அடைமிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி மற்றும் தாமரைச்செல்வி. </p><p>பெருமாள்புரம், பொதிகைநகர், அரசு ஊழியர் குடியிருப்பு, என்.ஜி.ஓ.காலனி, மகிழ்ச்சிநகர், திருநகர், திருமால்நகர், ராமச்சந்திராகார்டன், ராமச்சந்திராநகர், பரணிபார்க், அரசு பொறியியல் கல்லூரி பகுதி மற்றும் புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்ளில் நாளை மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p><h2>கல்லிடைக்குறிச்சி கோட்டம்</h2><p>கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும்பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>கல்லிடைக்குறிச்சி கோட்டம் விக்கிரமசிங்கபுரம் மற்றும் ஆழ்வார்குறிச்சி துணைமின் நிலையங்களில் நாளை (10.9.2026, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம், பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும். </p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>அதன்படி காரையார், சேர்வலார், பாபநாசம், டாணா, விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம்,  அடையகருங்குளம், ஆறுமுகபட்டி, கோட்டைவிளைபட்டி, முதலியார்பட்டி, தாட்டான்பட்டி, கொண்டபையன்பட்டி, வடமலைசமுத்திரம், பசுக்கிடைவிளை, சங்கரபாண்டியபுரம், கருத்தையாபுரம், அய்யனார்குளம். </p><p>ஆழ்வார்குறிச்சி, கருத்தபிள்ளையூர், ஏ.பி.நாடானூர், துப்பாகுடி, கலிதீர்த்தான்பட்டி, பொட்டல்புதூர், ஆம்பூர், பாப்பான்குளம், சம்பன்குளம், செல்லப்பிள்ளையார்குளம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.  </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p><h2>வள்ளியூர் கோட்டம்</h2><p>வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>கூடன்குளம் துணை மின் நிலையத்தில் நாளை (10.9.2026, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையத்தில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் கீழே குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது. </p><h2>காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை</h2><p>கூடங்குளம், இடிந்தகரை, இருக்கன்துறை, பொன்னார்குளம், விஜயாபதி, ஆவுடையாள்புரம், தோமையார்புரம், சங்கனேரி, வைராவிகிணறு, தாமஸ் மண்டபம் ஆகிய இடஙகளில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>‘வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர் இந்திய ஓட்டுரிமையை கோர முடியாது&apos; - மதுரை ஐகோர்ட்டு கிளை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/holders-of-foreign-citizenship-cannot-claim-indian-voting-rights-madurai-bench-of-the-madras-high-court</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/holders-of-foreign-citizenship-cannot-claim-indian-voting-rights-madurai-bench-of-the-madras-high-court#comments</comments><guid isPermaLink="false">e6d51fc0-c54c-4923-8945-deae50262007</guid><pubDate>Wed, 09 Sep 2026 04:33:43 +0000</pubDate><atom:updated>2026-09-09T04:33:43.100Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai High Court Branch,மதுரை ஐகோர்ட்டு கிளை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/t0qnaxom/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/t0qnaxom/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>நெல்லையை சேர்ந்த ஜெய ஆனந்தன் என்பவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “நெல்லை மாவட்டம் கூடங்குளம் பகுதியை சேர்ந்த நான் இலங்கைக்கு சென்று அந்நாட்டு குடியுரிமை பெற்று கொழும்பு நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தேன். கடந்த ஏப்ரல் மாதம் என் தாயாரின் மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வந்தபோது, எனது பெயர் இந்திய வாக்காளர் பட்டியலில் தொடர்ந்து இருப்பதை அறிந்து, தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களித்தேன்.</p><p>இதையடுத்து எனக்கு எதிராக குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இலங்கைக்கு திரும்பி செல்ல அனுமதித்து உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கவுரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. </p><p>இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “வெளிநாட்டு குடியுரிமை பெற்ற ஒருவர், வாக்காளர் பட்டியலில் பெயர் தொடர்ந்து இடம்பெற்றிருப்பதை மட்டும் காரணமாக கொண்டு இந்திய குடி மக்களுக்கு உரிய ஓட்டுரிமையை கோர முடியாது. எனவே, மனுதாரர் சம்பந்தப்பட்ட கோர்ட்டை அணுகி, தனது இலங்கை பயணம் தொடர்பான முழு விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். </p><p>விசாரணைக்கு தேவைப்படும் பட்சத்தில் எப்போது அழைத்தாலும் நேரில் ஆஜராக உறுதி அளிக்கும் உத்தரவாத பத்திரத்தை தாக்கல் செய்து, இலங்கை செல்ல அனுமதி கோரி முறையாக விண்ணப்பிக்கலாம். </p><p>இலங்கை குடியுரிமை பெற்றவர் தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களித்து விட்டு மீண்டும் இலங்கை செல்ல அனுமதி கோருகிறார். ஒருவர் வெளிநாடு செல்வது என்பது தனி நபர் சுதந்திரம் ஆகும். இருப்பினும் அந்த சுதந்திரம் என்பது முழுமையானதல்ல.</p><p>குற்றவியல் வழக்கை எதிர்கொள்ளும் நபர் சட்டத்திற்கு உட்பட்டுதான் வெளிநாடு செல்ல முடியும். எனவே, மனுதாரர் முறைப்படி சட்ட அனுமதி பெற்றுதான் வெளிநாடு செல்ல முடியும்” என்று உத்தரவிட்டு, இந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.</p>]]></content:encoded></item><item><title>101 வயதை மனைவியுடன் கொண்டாடிய விவசாயி: ஊர் மக்கள் ஆசி பெற்றனர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmer-celebrates-101st-birthday-with-wife-receives-blessings-from-villagers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmer-celebrates-101st-birthday-with-wife-receives-blessings-from-villagers#comments</comments><guid isPermaLink="false">c48e562a-e592-4136-968c-5b3a2fe7f7e3</guid><pubDate>Wed, 09 Sep 2026 04:25:03 +0000</pubDate><atom:updated>2026-09-09T04:25:03.214Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,farmer,விவசாயி,wife,மனைவி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/oypjggmb/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/oypjggmb/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ள மேலச்செவல் தேவர் தெற்கு தெருவை சேர்ந்தவர் கோபாலசாமி (வயது 101). இவரது மனைவி ராமலட்சுமி (92). விவசாய தம்பதியான இவர்களுக்கு திருமணம் முடிந்து 7 மகன்கள், 2 மகள், மருமகன், மருமகள், பேரன், பேத்திகள், கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்தி என குடும்பத்தில் 73 பேர் உள்ளனர்.</p><p>இந்நிலையில் இவரது குடும்பத்தினர் நேற்று முன்தினம் கோபாலசாமிக்கு 101-வது சதாயுசு விழா கொண்டாடினர். மேலச்செவல் ஆதித்தவர்னேஸ்வரர் கோவிலில் கோபாலசாமி-ராமலட்சுமி தம்பதிக்கு இந்து சமய முறைப்படி சதாயுசு விழா நடைபெற்றது.</p><p>இந்த நிகழ்ச்சியில் குடும்பத்தினர், உறவினர்கள் மட்டுமின்றி ஊர் மக்களும் திரளாக கலந்துகொண்டு மூத்த தம்பதியினரிடம் ஆசி பெற்றனர். தொடர்ந்து விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது. இதில் மேலச்செவல் பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னைக்கு வெளியில் தனி நிர்வாக நகரம் அமைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-separate-administrative-city-should-be-established-outside-chennai-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-separate-administrative-city-should-be-established-outside-chennai-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">e05a4b3d-2b2e-463f-a301-f30c5eac13fe</guid><pubDate>Wed, 09 Sep 2026 04:02:24 +0000</pubDate><atom:updated>2026-09-09T04:02:24.787Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/z5vxlks2/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/z5vxlks2/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவைக்கு 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய வளாகம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்திருந்த நிலையில், பட்டினப்பாக்கம் பகுதியில் அந்த வளாகம் அமைக்கப்படவிருப்பதாக ஊடகங்களில் அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த செய்திகள் உண்மையாக இருந்தால் அது தொலைநோக்குப் பார்வையற்றதாகவே இருக்கும்.</p><p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 3-ந் தேதி அவை விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்-அமைச்சர் விஜய், தலைமைச் செயலகம், சட்டப்பேரவைச் செயலகம் மற்றும் அனைத்துத் துறை அலுவலகங்கள் அடங்கிய நிர்வாக வளாகம் ரூ.1200 கோடி செலவில், 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து கடந்த சில நாள்களாகவே சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைக்கப்படும் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. </p><p>அந்தப் பகுதியில் வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான 21.37 ஏக்கர் நிலம், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 0.93 ஏக்கர் நிலம், வருவாய்த் துறையில் ஆவணங்கள் இல்லாத 1.20 ஏக்கர் நிலம் உள்பட மொத்தம் 26.36 ஏக்கர் பரப்பளவில் 15 மாடி கட்டிடமாக புதிய வளாகம் அமைக்கப்படும். அதில் அனைத்து வசதிகளும் இடம் பெறும் என்று ஊடகங்களில் வெளியான செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தமிழக அரசுக்கு புதிய தலைமைச் செயலகம் தேவை என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து கிடையாது. கடந்த 25 ஆண்டுகளாகவே புதிய தலைமைச் செயலகத்திற்கான தேடல் நீடித்துக் கொண்டே இருக்கிறது. ஆனாலும், இடம் அடையாளம் காண்பது முதல் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 80%க்கும் கூடுதலான பணிகள் முடிந்த நிலை வரை பல்வேறு கட்டங்களில் அம்முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், இப்போது புதிய அரசால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது. எனினும், புதிய தலைமைச் செயலக வளாகம் பட்டினப்பாக்கத்தில்தான் அமையும் என்றால் அதனால் ஏற்படும் சாதகங்களை விட பாதகங்களே அதிகம்.</p><p>பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதில் உள்ள மிகப்பெரிய சிக்கல் போக்குவரத்து நெரிசல் ஆகும். சாந்தோம் சாலையிலும், பசுமைவழிச் சாலையிலும் ஏற்கனவே கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படும் நிலையில், அதை சமாளிப்பதற்காகத்தான் லூப் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில்தான் புகழ்பெற்ற சாந்தோம் தேவாலயம், புகழ்பெற்ற பள்ளிக் கூடங்கள், பத்திரப்பதிவுத்துறை தலைவர் அலுவலகம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்ளன. இவற்றுடன் புதிய தலைமைச் செயலகமும் அமைக்கப்பட்டால் அப்பகுதியில் சமாளிக்க முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளது.</p><p>அடுத்ததாக, புதிய தலைமைச் செயலகம், சட்டப்பேரவை வளாகம், அனைத்துத் துறை அலுவலங்களைக் கொண்ட வளாகம் அமைக்க இப்போது அடையாளம் காணப்பட்டிருப்பதாகக் கூறப்படும் 26.36 ஏக்கர் நிலம் போதுமானதல்ல. மொத்தம் 20 லட்சம் சதுர அடி பரப்பளவிலான வளாகம் 15 மாடிக் கட்டிடமாக கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், எப்.எஸ்.ஐ விதிகளின்படி அதற்கேற்ற வகையில் காலி இடமும், பசுமைப் பரப்பும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். </p><p>இவை தவிர ஓர் தலைமைச் செயலக வளாகம் செயல்படும் இடத்தில், தீயவிப்பு நிலையம், அவசர மருத்துவ வசதிகள், உணவகங்கள், வாகன நிறுத்துமிடங்கள், பொதுப்போக்குவரத்து வசதிகள் உள்ளிட்டவை ஏற்படுத்தித் தரப்பட வேண்டியது கட்டாயமாகும். இத்தகைக் கட்டமைப்பு வசதிகளையும் இப்போது அடையாளம் காணப்பட்டுள்ள இடத்தில் ஏற்படுத்தினால், இப்போதுள்ள தலைமைச் செயலக வளாகத்தில் ஏற்பட்டதைப் போன்ற இட நெருக்கடி மிக விரைவில் புதிய வளாகத்திலும் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. </p><p>புதிய தலைமைச் செயலகம் அமைப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்ட முதல்-அமைச்சர் விஜய், புதிய வளாகம் அடுத்த நூறாண்டுகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அமையும் என்று தெரிவித்தார். முதல்-அமைச்சரின் இந்த கனவு நிறைவேற வேண்டும் என்றால், அதற்கு பட்டினப்பாக்கம் பொருத்தமான இடம் அல்ல என்பதுதான் எனது கருத்து. முதல்-அமைச்சர் விஜய் தொலைநோக்குப் பார்வையுடன் இதற்காக சென்னைக்கு வெளியில் குறைந்தது 500 முதல் 1,000 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த நிர்வாக நகரத்தை  அமைப்பதற்கான முன்னேற்பாடுகளைத் தொடங்க வேண்டும் என்பது தான் பாமகவின் கோரிக்கை ஆகும்.</p> <p>ஓர் அரசின் கட்டுப்பாட்டு அறையாக திகழ்வது தலைமைச் செயலகம்தான். அத்தகைய தலைமைச் செயலகத்தில் இடம் பற்றாக்குறையாக உள்ளது. அதனால் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை உலகம்  முழுவதும் ஜனநாயகம் தழைக்கத் தொடங்கிய கடந்த ஒரு நூற்றாண்டாக ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. உலகின் பல நாடுகளில் அதற்கானத் தீர்வு ஒருங்கிணைந்த நிர்வாக நகரம் அமைப்பதாகவே இருந்திருக்கிறது. இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த உலகத்திற்கும் இந்தியாதான் வழிகாட்டியாக இருந்துள்ளது.</p><p>ஆங்கிலேயர் ஆட்சியில், 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரசின் தலைமைச் செயலகம் கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது. அப்போது மொகலாயர் ஆட்சியின் தலைநகரமாக இருந்த டெல்லியில் போதிய இட வசதிகள் இல்லாததால், புதுடெல்லி என்ற நிர்வாக நகரத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டு அதற்கு 1911-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. 1932-ம் ஆண்டில் திறப்பு விழா செய்யப்பட்ட அந்த நகரத்தில்தான் ஆங்கிலேயர் காலம் தொடங்கி இன்று வரை அரசின் தலைமைச் செயலகம், சுதந்திர இந்தியாவின் நாடாளுமன்றம், குடியரசுத் தலைவர் மாளிகை, சுப்ரீம் கோர்ட்டு உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.</p><p>மலேஷியாவில் இதே போன்ற சிக்கல் ஏற்பட்ட போது, கோலாம்ம்பூரில் இருந்து 34 கி.மீ தொலைவில் உள்ள புத்ரஜெயாவில் புதிய தலைமைச் செயலகம் உருவாக்கப்பட்டு 1999-ம் ஆண்டில் திறக்கப்பட்டது. தென் அமெரிக்காவின் பிரேசில் இன்னும் ஒரு படி மேலே சென்று தலைநகரத்தையே ரியோடி ஜெனிரோ நகரத்திலிருந்து 928  கி.மீ தொலைவில் பிரேசிலியா என்ற புதிய நிர்வாக நகரத்தை உருவாக்கி அங்கு மாற்றியது.</p><p>2001-ம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற ஜெயலலிதா கிழக்குக் கடற்கரை சாலையில் ஒருங்கிணைந்த நிர்வாக நகரத்தை அமைக்க வேண்டும் என்று திட்டமிட்டார். இந்த முன்னுதாரணங்களை பின்பற்றி தமிழ்நாட்டுக்கான தலைமைச் செயலகம், சட்டப்பேரவைச் செயலகம் ஆகியவற்றையும்  சென்னைக்கு வெளியில் ஒருங்கிணைந்த நிர்வாக நகரமாக உருவாக்க வேண்டும். </p><p>அதில் தலைமைச் செயலகம், சட்டப்பேரவைச் செயலகம், அனைத்துத் துறை தலைமை அலுவலகங்கள், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கான மாளிகைகள், அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புகள், மெட்ரோ ரயில் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து வசதிகள், தேசிய, உலகத் தலைவர்கள் வருகை தருவதற்கு வசதியாக ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள்,  தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவைச் செயலகத்தில் பணியாற்றும் செயலாளர்கள் நிலையிலான இ.ஆ.ப அதிகாரிகள் தொடங்கி கடைநிலைப் பணியாளர்கள் வரை அனைத்துப் பணியாளர்களின் பிள்ளைகள் படிப்பதற்குத் தேவையான பள்ளிகள், கல்லூரிகள், உள் விளையாட்டு அரங்குகள், வணிக வளாகங்கள் என ஒரு நகரத்திற்கு என்னென்ன அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் தேவையோ, அவை அனைத்தையும்  கட்டமைத்துக் கொடுக்கவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-tomorrow-14</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-tomorrow-14#comments</comments><guid isPermaLink="false">b6ed7c2e-dde9-481b-879e-d719e04af9f0</guid><pubDate>Wed, 09 Sep 2026 03:32:46 +0000</pubDate><atom:updated>2026-09-09T03:32:46.603Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,monthly maintenance work,தென்காசி,மாதாந்திர பராமரிப்பு பணி,Power outage tomorrow,நாளை மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/zj6b9wp4/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/zj6b9wp4/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p>திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF">தென்காசி</a> மாவட்டத்தில் சங்கரன்கோவில், தென்காசி ஆகிய கோட்டங்களுக்கு உட்பட்ட துணைமின் நிலையங்களில் நாளை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் காரணமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> செய்யப்படும். </p><h2>தென்காசி கோட்டம்</h2><p>தென்காசி கோட்ட செயற்பொறியாளர் ஸ்ரீவனஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>மங்கம்மாள் சாலை துணைமின் நிலையத்தில் நாளை (10.9.2026, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.</p><h2>காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை</h2><p>அதன்படி தென்காசி புதிய பேருந்து நிலையம், மங்கம்மாள் சாலை பகுதிகள், சக்திநகர், காளிதாசன்நகர், ஹவுசிங் போர்டு காலனி மற்றும் கீழப்புலியூர்,தென்காசி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p><h2>சங்கரன்கோவில் கோட்டம்</h2><p>சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>கரிவலம்வந்தநல்லூர் துணைமின் நிலையத்தில் நாளை (10.9.2026, வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு வேலைகள் நடைபெறுவதால் அன்று கரிவலம்வந்தநல்லூர், பனையூர், குவளைக்கண்ணி, கோமதிமுத்துபுரம், இடையன்குளம், துரைச்சாமியாபுரம், எட்டிச்சேரி, சென்னிகுளம்,லெட்சுமியாபுரம், காரிசாத்தான், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம் ஆகிய ஊர்களுக்கு மின்விநியோகம் தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்க இந்து முன்னணி ஏற்பாடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/hindu-munnani-plans-to-install-ganesha-statues-at-15-lakh-places-in-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/hindu-munnani-plans-to-install-ganesha-statues-at-15-lakh-places-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">3bd28423-41d9-4dba-bbae-91d0593e89c5</guid><pubDate>Wed, 09 Sep 2026 03:24:26 +0000</pubDate><atom:updated>2026-09-09T03:24:26.690Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்து முன்னணி,Chennai,சென்னை,Vinayagar Chaturthi,விநாயகர் சதுர்த்தி,hindu munnani,சிலைகள்,ஏற்பாடு,Idols,Organization,தமிழகம் முழுவதும்,All over Tamil Nadu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/nl3pexls/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விநாயகர் சிலைகள்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/nl3pexls/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>வருகிற 14-ம் தேதி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE">விநாயகர் சதுர்த்தி விழா</a>வை முன்னிட்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D">தமிழகம் முழுவதும்</a> 1.5 லட்சம் இடங்களில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">விநாயகர் சிலைகள்</a> அமைக்க <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF">இந்து முன்னணி</a> அமைப்பு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">ஏற்பாடுகள்</a> செய்து வருகிறது. </p><h2>தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள்</h2><p>வருகிற 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்க இந்து முன்னணி அமைப்பு ஏற்பாடுகள் செய்து வருகிறது. இதுகுறித்து இந்து முன்னணி நிர்வாகிகள் கூறியதாவது: </p><p>தமிழகத்தில் நகர்ப்புறங்கள், கிராமப்பகுதிகள் என அனைத்து இடங்களிலும் 1 லட்சத்து 50 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகளை அமைத்து வழிபட திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2>இயற்கை பொருட்களால் செய்யப்பட்ட சிலைகளை வைக்க நடவடிக்கை</h2><p>பொது மக்களுக்கு இடையூறின்றி விழாக்கள் நடத்தவும், சிலைகள் கரைப்பு ஊர்வலத்துக்கான ஏற்பாடுகள் குறித்தும், அந்தந்த மாவட்ட அமைப்பாளர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலை பாதிக்கும் ரசாயனப் பொருட்களைத் தவிர்த்து முற்றிலும் இயற்கை பொருட்களால் செய்யப்பட்ட சிலைகளையே வழிபாட்டிற்கு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. </p><h2>சென்னையில் 5,501 இடங்களில் விநாயகர் சிலைகள்</h2><p>விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் 5,501 இடங்களில் சிலைகள் வைக்கப்பட உள்ள நிலையில், எர்ணாவூரில் பிரமாண்ட சிலைகள் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வள்ளுவர் கோட்டம், திருவல்லிக்கேணி, வடசென்னை மற்றும் கொட்டிவாக்கம் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்ட உள்ளன. விழாவை ஒட்டி, காப்பு கட்டி 10 நாட்கள் மேற்கொள்ளப்படும் சிறப்பு விரதம் தொடங்கிவிட்டது. </p><p>இவ்வாறு அவர்கள் கூறினர். </p>]]></content:encoded></item><item><title>சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக பார்த்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-the-number-of-people-watching-assembly-proceedings-live</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-the-number-of-people-watching-assembly-proceedings-live#comments</comments><guid isPermaLink="false">037a5371-bd3f-4503-a187-8de2c68996d4</guid><pubDate>Wed, 09 Sep 2026 02:49:13 +0000</pubDate><atom:updated>2026-09-09T02:49:13.284Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,TN Assembly,Assembly Session,சட்டசபை கூட்டத்தொடர்,ஜே.சி.டி.பிரபாகர்,JCD Prabhakar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/s48bqwyq/CHENNAI-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/s48bqwyq/CHENNAI-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக பார்க்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் பேசும்போது, 'முந்தைய காலங்களில் சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக பார்ப்பதற்கு பலர் தயக்கம் காட்டியது உண்டு. அதற்கு முக்கிய காரணம் அனுமதி கிடைக்குமா? என்பதுதான். இந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்து இருப்பது உள்ளபடியே மகிழ்ச்சி அளிக்கிறது. </p><p>அதாவது, 2023-ம் ஆண்டு 20 ஆயிரத்து 137 பேரும், 2024-ம் ஆண்டு 10 ஆயிரத்து 754 பேரும், 2025-ம் ஆண்டு 20 ஆயிரத்து 123 பேரும் சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக பார்த்துள்ளனர். தற்போது சட்டமன்றம் 28 நாட்கள்தான் நடந்துள்ளது. நேரலையில் சட்டசபை நிகழ்வுகள் ஒளிபரப்பப்பட்ட போதும் சட்டசபைக்குள் என்ன நடக்கிறது? என்பதை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இந்த 28 நாட்களில் மட்டும் 32 ஆயிரத்து 55 பேர் சட்டசபைக்கு நேரடியாக வந்து பார்த்துள்ளனர்.</p><p>அதுவும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு சட்டசபை நிகழ்வுகளை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது. பொதுவாழ்வில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம்தான் இதற்கு காரணம். சராசரியாக 20 பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமே ஆண்டுதோறும் சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக பார்த்து வந்த நிலையில் இந்த முறை 76 பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் வந்துள்ளனர்' என்றார்.</p>]]></content:encoded></item><item><title>திருத்தணி முருகன் கோவிலில் இலவச செல்போன் பாதுகாப்பு கவுண்ட்டர் திறப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/free-mobile-phone-safekeeping-counter-opened-at-thiruttani-murugan-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/free-mobile-phone-safekeeping-counter-opened-at-thiruttani-murugan-temple#comments</comments><guid isPermaLink="false">c7a6bf62-9203-4568-9e7a-571f5a2b8379</guid><pubDate>Wed, 09 Sep 2026 02:31:59 +0000</pubDate><atom:updated>2026-09-09T02:31:59.168Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>செல்போன்,Tiruttani Murugan temple,திருத்தணி முருகன் கோவில்,cellphone</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/lpbraxav/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/lpbraxav/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர்,</p><p>தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் வரும் 58 கோவில்களில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. கோவில்களில் அமைக்கப்படும் சிறப்பு கவுண்ட்டர்களில் பக்தர்கள் தங்கள் செல்போன்களை ஒப்படைத்துவிட்டு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த நடைமுறை கடந்த செப்டம்பர் 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. </p><p>அந்த வகையில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணியில், பக்தர்கள் தங்கள் செல்போன்களை வைப்பதற்கான கவுண்ட்டர் திறக்கப்பட்டது. அதற்கு கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்பட்டது. இதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியதால் திருத்தணியில் கடந்த வார இறுதியில் செல்போன் பாதுகாப்பு கவுண்ட்டர்கள் மூடப்பட்டு, பக்தர்கள் தங்கள் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து கோவிலுக்குள் எடுத்து செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டது. </p><p>இதனிடையே நேற்று திருத்தணியில் செல்போன் பாதுகாப்பு கவுண்ட்டர் மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் கட்டணம் எதுவும் வசூலிக்காமல், இலவசமாக பக்தர்கள் தங்கள் செல்போன்களை வைத்துச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் வரிசையில் நின்று தங்கள் செல்போன்களை ஒப்படைத்துவிட்டு கோவிலுக்குள் சென்றனர். </p><p>இந்நிலையில், இந்த இலவச செல்போன் கவுண்ட்டர் நடைமுறைக்கும் பக்தர்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஏற்கனவே கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய சுமார் 2 முதல் 3 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், செல்போன்களை ஒப்படைக்க சுமார் அரை மணி நேரம், அதே போல், செல்போனை திரும்ப பெறுவதற்கு மீண்டும் ஒரு அரை மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் இன்று மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-today-3</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-today-3#comments</comments><guid isPermaLink="false">667e3b79-a6e2-4919-be06-f225f898875c</guid><pubDate>Wed, 09 Sep 2026 02:16:48 +0000</pubDate><atom:updated>2026-09-09T02:16:48.159Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,monthly maintenance work,power outage,தென்காசி,மாதாந்திர பராமரிப்பு பணி,மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/74i7zgc7/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/74i7zgc7/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p>திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF">தென்காசி</a> மாவட்டத்தில் சங்கரன்கோவில், தென்காசி, திருநெல்வேலி கிராமப்புறம், கடையநல்லூர் ஆகிய கோட்டங்களுக்கு உட்பட்ட துணைமின் நிலையங்களில் இன்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் காரணமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> செய்யப்படும். </p><h2>சங்கரன்கோவில் கோட்டம்</h2><p>சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>சங்கரன்கோவில், பெருமாள்பட்டி துணைமின் நிலையங்களில் இன்று (9.9.2026, புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. </p><h2>காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை</h2><p>இதன் காரணமாக இன்றைய தினம் சங்கரன்கோவில் நகர்பகுதி, என்.ஜி.ஓ.காலனி, களப்பாகுளம், புளியம்பட்டி, வாடிக்கோட்டை, பெரியூர். மணலூர், பெரும்பத்தூர், ராமலிங்கபுரம், வடக்குபுதூர், நகரம் முள்ளிகுளம், சீவலராயனேந்தல், பெருங்கோட்டுர், அழகாபுரி ஆகிய ஊர்களுக்கும், பெருமாள்பட்டி, மாங்குடி, இனாம்கோவில்பட்டி, அருகன்குளம்புதூர், செந்தட்டியாபுரம். </p><p>எட்டிச்சேரி, தென்மலை, அ.சுப்பிரமணியாபுரம், இடையான்குளம், முறம்பு, ஆசிலாபுரம், கூனங்குளம், பருவக்குடி, பந்தபுளி, பி.ரெட்டியாபட்டி, தெற்கு வெங்காநல்லுார், சோலைச்சேரி, வேலாயுதபுரம் ஆகிய ஊர்களுக்கும் மின்விநியோகம் தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p><h2>தென்காசி கோட்டம்</h2><p>தென்காசி கோட்ட செயற்பொறியாளர் ஸ்ரீவனஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>தென்காசி, செங்கோட்டை, சுரண்டை மற்றும் சாம்பவர்வடகரை துணைமின் நிலையங்களில் இன்று (9.9.2026, புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. </p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>அதன்படி தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜர்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூர், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தாளம் பாறை, திரவியநகர், ராமச்சந்திரபட்டணம், மேலமெஞ்ஞானபுரம், செங்கோட்டை, கணக்கப்பிள்ளைவலசை, பெரியபிள்ளைவலசை, பிரானூர், வல்லம், கற்குடி, புளியரை, தெற்குமேடு, பூலாங்குடியிருப்பு, கட்டளைகுடியிருப்பு, சுரண்டை, இடையர்தவணை, குலையனேரி, இரட்டைக்குளம், சுந்தரபாண்டியபுரம், பாட்டாக்குறிச்சி, வாடியூர், ஆனைக்குளம், கரையாளனூர், அச்சங்குன்றம், சாம்பவர்வடகரை, சின்னத்தம்பிநாடானூர், பொய்கை, கோவிலாண்டனூர், கள்ளம்புளி, M.C.பொய்கை, துரைச்சாமிபுரம் ஆகிய இடங்களில் இன்று மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p><h2>திருநெல்வேலி கிராமப்புற கோட்டம்</h2><p>திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>ஊத்துமலை, ஆலங்குளம் மற்றும் கீழப்பாவூர் துணைமின் நிலையங்களில் இன்று (9.9.2026, புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. </p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>அதன்படி ஊத்துமலை, கீழக்கலங்கல், குறிஞ்சான்குளம், மேலமருதப்பப்புரம், சோலைசேரி, கருவந்தா, அமுதாபுரம், மாவிலியூத்து, கல்லத்திக்குளம், கங்கணாங்கிணறு, ருக்குமணியம்மாள்புரம். </p><p>ஆலங்குளம், ஆண்டிபட்டி, நல்லூர், சிவலார்குளம், ஆண்டிபட்டி, ஐந்தான்கட்டளை, துத்திக்குளம், கல்லூத்து, குருவன்கோட்டை. </p><p>குறிப்பின்குளம், அத்தியூத்து, குத்தபாஞ்சான், மாயமான்குறிச்சி, கழநீர்குளம், அடைக்கலப்பட்டிணம், பூலான்குளம், முத்துகிருஷ்னபேரி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p><h2>கடையநல்லூர் கோட்டம்</h2><p>கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பகவிநாயகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>நாரணாபுரம் துணைமின் நிலையத்தில் இன்று (9.9.2026, புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பின்வருமாறு குறிப்பிட்டுள்ள நேரத்தில் மின்விநியோகம் பின்வரும் இடங்களில் இருக்காது. </p><h2>காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை</h2><p>தரணிநகர், வாசுதேவநல்லூர், சங்கனாப்பேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம், கீழப்புதூர், நெல்கட்டும்சேவல், சுப்ரமணியபுரம், உள்ளார், வெள்ளானைகோட்டை, மலையடிக்குறிச்சி மற்றும் தாருகாபுரம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இதேபோல் புளியங்குடி மற்றும் வீரசிகாமணி துணைமின் நிலையங்களில் இன்று (9.9.2026, புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பின்வருமாறு குறிப்பிட்டுள்ள நேரத்தில் மின்விநியோகம் பின்வரும் இடங்களில் இருக்காது. </p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>புளியங்குடி, சிந்தாமணி, அய்யாபுரம், ராஜகோபாலபேரி, ரத்தினபுரி, இந்திராநகர், புன்னையாபுரம், காடுவெட்டி, சிங்கிலிபட்டி, சங்கனாப்பேரி, சிதம்பரபேரி, சுந்தரேசபுரம், திருவேட்டநல்லூர், சொக்கம்பட்டி, திரிகூடபுரம், மேலபுளியங்குடி, முள்ளிகுளம், தலைவன்கோட்டை, துரைசாமியாபுரம், நகரம், மலையடிகுறிச்சி மற்றும் வெள்ளகவுண்டன்பட்டி. </p><p>வீரசிகாமணி, பட்டாடைகட்டி, அருணாச்சலபுரம், அரியநாயகிபுரம், பாம்புகோயில், வென்றிலிங்கபுரம், திருவேட்டநல்லூர், திருமலாபுரம், வடநத்தம்பட்டி, சேர்ந்தமரம் மற்றும் நடுவக்குறிச்சி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இதேபோல் கடையநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட கடையநல்லூர் துணைமின் நிலைய பகுதிகளில் இன்று (9.9.2026, புதன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது. அதன்படி கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், பேட்டை, மாவடிக்கால், குமந்தாபுரம், முத்துச்சாமிபுரம், வலசை, கருப்பாநதி, தார்க்காடு, போகநல்லூர், கண்மணியாபுரம், பாலஅருணாச்சலபுரம், கம்பனேரி, மங்களபுரம், அச்சம்பட்டி,  பொய்கை, ஊர்மேல்அழகியான், வேலாயுதபுரம், இடைகால், சிவராம்பேட்டை கொடிக்குறிச்சி மற்றும் நயினாரகரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்று த.வெ.க. ஆதரவு கட்சிகள் கூட்டம்: கம்யூனிஸ்டு கட்சிகள் புறக்கணிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/meeting-of-parties-supporting-tvk-in-chennai-today-communist-parties-stay-away</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/meeting-of-parties-supporting-tvk-in-chennai-today-communist-parties-stay-away#comments</comments><guid isPermaLink="false">bf67c47a-9087-4676-a8b5-0bb027095e1b</guid><pubDate>Wed, 09 Sep 2026 02:09:33 +0000</pubDate><atom:updated>2026-09-09T02:09:33.812Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,த.வெ.க,கம்யூனிஸ்டு கட்சிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/hillhjpx/Chennai-tvk.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/hillhjpx/Chennai-tvk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஆதரவு கட்சிகள்</p><p>த.வெ.க. தலைமையில் புதிய கூட்டணியை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதற்கான முதல் ஆலோசனை கூட்டம் கடந்த ஜூலை 1-ந்தேதி சென்னை கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் நடந்தது. அந்த கூட்டத்தில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் பங்கேற்றது. வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து வருவதால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆகியவை இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.</p> <h2>2-ம் கட்ட ஆலோசனை</h2><p>இந்த நிலையில், த.வெ.க. ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்த கட்சிகளின் 2-ம் கட்ட ஆலோசனை கூட்டம் இன்று நடக்கிறது. சென்னையை அடுத்த பனையூரில் உள்ள த.வெ.க. கட்சி தலைமை அலுவலகத்தில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் மாலை 4 மணிக்கு இக்கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ள ஏற்கனவே காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆகியவற்றுக்கு த.வெ.க.வின் மூத்த நிர்வாகிகளும், அமைச்சர்களுமான ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் ஆகியோர் நேரில் அழைப்பு விடுத்திருந்தனர். </p><p>இன்று நடைபெறும் கூட்டத்தில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் பங்கேற்க இருக்கிறது. இந்த கூட்டத்தில் கூட்டணிக்கு பெயர் வைக்கப்படுகிறது. இதேபோல கூட்டணிக்கான தலைவராக முதல்-அமைச்சர் விஜய் தேர்வு செய்யப்பட இருக்கிறார். மேலும், ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் உருவாக்கப்பட்டு அதற்கென ஆட்களும் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. </p> <h2>கம்யூனிஸ்ட்கள் புறக்கணிப்பு</h2><p>தவெக கூட்டும் இந்த கூட்டத்தில் பங்கேற்க வருமாறு இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், இதில் பங்கேற்க போவது இல்லை என இரண்டு கட்சிகளும் அறிவித்துவிட்டன. அதேநேரத்தில் தவெக அரசுக்கு அளித்து வரும் ஆதரவு தொடரும் எனவும் கூறியுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>பிளஸ்-2 மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த ரவுடிக்கு தூக்கு தண்டனை: 2 பேருக்கு சிறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rowdy-who-gang-raped-a-plus-2-student-gets-death-sentence-2-get-jail</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rowdy-who-gang-raped-a-plus-2-student-gets-death-sentence-2-get-jail#comments</comments><guid isPermaLink="false">82330de6-000b-438f-9241-2a2fd4b7b50a</guid><pubDate>Wed, 09 Sep 2026 02:05:07 +0000</pubDate><atom:updated>2026-09-09T02:05:07.840Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,plus-2 student,பிளஸ்-2 மாணவி,death sentence,தூக்கு தண்டனை,சிறை தண்டனை,Prison sentence,Rowdy,ரவுடி,Gang rape,கூட்டு பாலியல் பலாத்காரம்,2 பேர்,2 people</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/1jdnyib7/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சின்னக்குட்டி, ஜெயில் தண்டனை பெற்ற முருகேசன், முனீஸ்வரன்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/1jdnyib7/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>நிர்வாண <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">படம்</a> எடுத்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF">மிரட்டி</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-2-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF">பிளஸ்-2 மாணவி</a>யை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">கூட்டு பாலியல் பலாத்காரம்</a> செய்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">ரவுடி</a>க்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">தூக்கு தண்டனை </a>விதிக்கப்பட்டது. மேலும் அவரது கூட்டாளி உள்பட 2 பேருக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">சிறை தண்டனை</a> வழங்கி நெல்லை சிறப்பு கோர்ட்டு அதிரடி தீர்ப்பளித்துள்ளது. </p><h2>பிளஸ்-2 மாணவி</h2><p>நெல்லையில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெள்ளை அடிக்கும் பணி நடந்தது. இந்த பணியில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த முனீஸ்வரன் (வயது 26) உள்ளிட்ட சிலர் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஒருவருக்கும், முனீஸ்வரனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. </p><h2>நிர்வாணமாக படம் எடுத்தனர்</h2><p>இது நாளடைவில் காதலாக மாறியது. அவர் அந்த மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார். கடந்த 10.10.2022 அன்று மாணவியை முனீஸ்வரன் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு பாளையங்கோட்டை வீரராகவபுரத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு அவர் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். அப்போது அங்கு 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் அந்த மாணவி நிர்வாணமாக இருந்ததை தங்களது செல்போனில் படம் எடுத்தனர். </p><h2>கூட்டு பலாத்காரம்</h2><p>இந்த புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக முனீஸ்வரனையும், அந்த மாணவியையும் மிரட்டினர். தொடர்ந்து மாணவியை கட்டாயப்படுத்தி 2 பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். </p><h2>3 பேர் அதிரடி கைது</h2><p>விசாரணையில், மாணவியை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது நெல்லை கொக்கிரகுளம் கீழவீரராகவபுரத்தை சேர்ந்த சின்னக்குட்டி(28), முருகேசன்(23) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேர் மற்றும் மாணவியை ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்ற முனீஸ்வரன் ஆகிய 3 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதில் சின்னக்குட்டி, முருகேசன் ஆகியோரை மேலப்பாளையம் போலீசார் ரவுடி பட்டியலில் சேர்த்து கண்காணித்து வந்தனர். </p><h2>தூக்கு தண்டனை</h2><p>இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், குற்றம் சாட்டப்பட்ட சின்னக்குட்டி, முருகேசன், முனீஸ்வரன் ஆகியோர் குற்றவாளிகள் என கடந்த வாரம் தீர்ப்பளித்தார். அவர்களுக்கான தண்டனை விவரம் 8-ந்தேதி (அதாவது நேற்று) அறிவிக்கப்படும் என தெரிவித்து இருந்தார். நேற்று காலையில் 3 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் அதிரடி தீர்ப்பு கூறினார். அதில் மாணவியை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்த சின்னக்குட்டிக்கு தூக்கு தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும் விதித்தார். அதேபோல் அவரது கூட்டாளியான முருகேசனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் மற்றும் முனீஸ்வரனுக்கு 13 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். </p><h2>இதுவரை 10 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கிய நீதிபதி</h2><p>நீதிபதி சுரேஷ்குமார் இதுவரை 10 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளார். அதாவது போக்சோ கோர்ட்டில் மட்டும் சிறுமிகளை பலாத்காரம் செய்த வழக்கில் 4 பேருக்கும், மகளை கர்ப்பமாக்கிய தந்தை என 5 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்துள்ளார். இதுதவிர 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் 3 பேர் கொலை வழக்கில் 4 பேருக்கும், மற்றொரு கொலை வழக்கில் ஒருவருக்கும் என மொத்தம் 10 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து அவர் அதிரடி தீர்ப்பளித்துள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>