<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 21 Aug 2026 09:39:27 +0000</lastBuildDate><item><title>எம்.எல்.ஏ.க்களுக்கு கார் விவகாரம்: வண்டி ஓட்டக் கற்றுக்கொள்ளும் மலைப்பாதை டிரைவர் :  துரைமுருகன் விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/car-controversy-for-mlas-mountain-road-driver-duraimurugan-slams-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/car-controversy-for-mlas-mountain-road-driver-duraimurugan-slams-government#comments</comments><guid isPermaLink="false">40d1cd89-b9d6-40c5-82a9-8fec277b0dc5</guid><pubDate>Fri, 21 Aug 2026 09:34:37 +0000</pubDate><atom:updated>2026-08-21T09:34:37.258Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கார்,விமர்சனம்,politics,டிரைவர்,மலைப்பாதை,எம்.எல்.ஏ.க்கள்,Duraimurugan,துரைமுருகன்,Reviews</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/rmdsvbi9/durai-murugan.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்]]></media:title><media:description type="html"><![CDATA[ எம்.எல்.ஏ.க்களுக்கு கார் விவகாரம்: வண்டி ஓட்டக் கற்றுக்கொள்ளும் மலைப்பாதை டிரைவர் :  துரைமுருகன் விமர்சனம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/rmdsvbi9/durai-murugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>எம்.எல்.ஏ.க்களுக்கு கார் விவகாரத்தில், "வண்டி ஓட்டக் கற்றுக்கொள்ளும் மலைப்பாதை டிரைவர்" என்று <a href="https://www.dailythanthi.com/topic/duraimurugan">திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்</a> விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p> <h2>பொது பார்வை</h2><p>நிர்வாகத்தில் வெளித்தோற்றமும் முக்கியமானது அதாவது, அரசியலில் செய்யப்படும் எந்த ஒரு செயலின் மீதான பொது பார்வை எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து செயல்படுவது மிக மிக முக்கியம். ஏனென்றால், முதல் பார்வையில் ஒரு விஷயம் எப்படி இருக்கிறதோ, அதைத்தான் பெரும்பாலானோர் பிடித்துக்கொண்டு பேசுவார்கள். அது குறித்த தர்க்க நியாயங்களுக்குள் எல்லோரும் செல்வதில்லை என்பது நிர்வாக அனுபவம் உள்ளவர்களுக்கு புரியும்.</p><h2>மானிய கோரிக்கைகள்</h2><p>அதற்கு சமீபத்திய சிறந்த உதாரணம், எம்எல்ஏக்களுக்கு கார் வழங்கப்படும் என்பதை விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் அறிவித்ததும், அதற்கு எம்எல்ஏக்கள் வானளாவ புகழ்ந்ததும், பாட்டு பாடியதும். அதை தொடர்ந்து, அன்றைய தினத்தில் விவாதிக்கப்பட்ட ஏறத்தாழ மூன்று துறைகளின் மானிய கோரிக்கைகளுக்கு பதினைந்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. </p> <h2>சிறந்த உதாரணம்</h2><p>அது நியாயமானதா, இல்லையா? எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? எவ்வளவு உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும்? அதன் மூலம் மக்களின் வாழ்க்கை தரமும் பொருளாதாரமும் உயர்வதற்கான வாய்ப்புகள் எத்தனை? என்பதையெல்லாம் விவாதிக்காமல், ஐந்து ஆண்டுகளுக்கும் சேர்த்து சுமார் 150 கோடி ரூபாய் செலவு வைக்கும் எம்எல்ஏக்களுக்கு கார் வழங்கும் விஷயத்தை பேசுபொருளாக மாற்றிவிட்டார்கள்.</p><h2>சாதாரணமான ஒன்று</h2><p>அரசின் நிர்வாக செலவுகளில் எம்எல்ஏக்களுக்கு கார் வழங்குவது என்பது மிக மிக சாதாரணமான ஒன்று. அதுவும் குறிப்பாக வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், வேளாண்மை அலுவலர் என வட்ட அளவிலான அரசு அலுவலர்களுக்கும், வட்டார அளவிலான அரசியல் ஒன்றிய தலைவர்களுக்கும் கார் வழங்கப்பட்டிருக்கும் சூழலில், அரசின் அதிகாரப்பூர்வ வாகனம் எம்எல்ஏக்களுக்கு வேண்டும் என்பது ஒன்றும் நியாயமில்லாத கோரிக்கை அல்ல.</p><h2>தவெக அரசு</h2><p>அதுவும் இவ்வளவு பெரிய அரசு நிர்வாகத்தில், பட்ஜெட்டில் ஆண்டுக்கு சராசரியாக 30 முதல் 35 கோடி ரூபாய் என்பது ஒன்றும் பெரிய விஷயமும் அல்ல. ஏனென்றால், அரசின் மொத்த பட்ஜெட்டில் வீணாகும், விரயமாகும் செலவுகளே மிக எளிதாக 20 விழுக்காடு இருக்கக்கூடும். ஆனால், இதை ‘எடுத்தேன், கவிழ்த்தேன்’ என்றும், தான் என்ன செய்தாலும் மக்கள் ரசிப்பார்கள், ஏற்றுக்கொள்வார்கள் என்ற மமதையிலும், நிர்வாக அடிப்படை புரிதலும் இல்லாமல், இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், சரியான அதிகாரிகளை சரியான ஆலோசனைகளுடன் பயன்படுத்தாமலும்  இவ்வளவு சாதாரணமான ஒரு பிரச்சினையை பெரிய பேசுபொருளாக மாற்றி, சாணியை கரைத்து தலையில் ஊற்றிக்கொண்டிருக்கிறது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">தவெக அரசு</a>.</p> <h2>அரசாணையை வெளியிட்டிருப்போம்</h2><p>இந்த நிகழ்வை திமுக அரசு எப்படி கையாண்டிருக்கும்? ஒருவேளை எம்எல்ஏக்களுக்கு கார் வழங்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தால், தெளிவாக முடிவு செய்திருப்போம். வழங்கலாம். ஆனால் நேரடியாக வழங்காமல், மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட நிர்வாகத்திற்கு கூடுதல் வாகனங்கள் வழங்கப்பட்டு, எம்எல்ஏக்கள் பொதுமக்களின் பணிகளை மேற்கொள்வதற்காக தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ஓர் அரசாணையை வெளியிட்டிருப்போம்.</p> <h2> செயல்பட வேண்டும்</h2><p>அதற்கு பிறகு கொஞ்ச நாள் கழித்து, அந்த வாகனங்களை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எம்எல்ஏக்களிடம் ஒப்படைத்துவிட்டு, பிறகு ஓராண்டு கழித்து அதற்குரிய தொடர் செலவினங்களுக்கு நிதி ஒதுக்கி  சரியாக செய்திருப்போம். இப்படித்தான் பல விஷயங்களை செய்ய வேண்டும், செயல்பட வேண்டும்.</p> <h2>ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்</h2><p>ஏனென்றால், அரசியலில் என்ன செய்கிறோம் என்பதைவிட, அதை மக்கள் எப்படிப் பார்ப்பார்கள் என்ற ‘ஒளியியல்’ மிக மிக முக்கியம். எடுத்துக்காட்டாக, இதன் பொருளாதார பின்னணி என்ன, இதன் செலவினம் என்ன, அரசின் மொத்த பட்ஜெட் என்ன என்பதையெல்லாம் சாதாரண மக்கள் பார்க்க மாட்டார்கள். அவர்களை பொறுத்தவரை ‘கார்’ என்பது பெரிய விஷயம். தனக்கு கிடைக்காமல் மற்றவர்களுக்கு அரசிடமிருந்து அது கிடைப்பதை மக்கள் எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.</p><h2>பயம் ஒன்றே ஒன்றுதான்</h2><p>இந்த புரிதல் இல்லாமல், சாதாரண ஒரு விஷயத்தை  சின்னாபின்னமாக்கியிருக்கிறது. நமக்கெல்லாம் இருக்கும் பயம் ஒன்றே ஒன்றுதான். ஒரு நிர்வாக அனுபவமும் இல்லாமல், எந்த புரிதலும் இல்லாமல், இவ்வளவு பெரிய வளர்ச்சி பாதையில் சென்றுகொண்டிருந்த நாட்டை இவர்கள் கையில் ஒப்படைத்திருக்கிறோம்.</p><h2>ஒப்படைத்திருக்கிறோம்</h2><p>மேல்நோக்கி செல்ல வேண்டிய ஒரு வாகனம் தட்டு தடுமாறி அதே இடத்தில் நின்று, அதன்பிறகு பாதாளத்தை நோக்கி விரைந்து வந்துவிட்டால், மீண்டும் அதை மேல்நோக்கி செலுத்துவது எவ்வளவு கடினமோ, அதேபோல்தான் தமிழ்நாட்டுக்கும் நடந்திருக்கிறது. ஓட்ட தெரியாத ஒரு டிரைவரை நம்பி, மலைப்பாதையில் விரைந்து சென்றுகொண்டிருந்த ஒரு பேருந்தை ஒப்படைத்திருக்கிறோம்.</p><h2>யாரை நம்புவது</h2><p>அவரை சுற்றி நின்று ஓட்டுவதற்கு ஆலோசனைகள் சொல்கிறார்கள். சரியாக சொல்கிறார்களா, சரியாக சொல்லாமல் இருக்கிறார்களா, யாரை நம்புவது, யாரை நம்பாமல் இருப்பது என்று தெரிந்துகொள்வதற்குள் ஐந்தாண்டுகள் முடிந்துவிடும். வண்டி பல நூறு கிலோமீட்டர் பின்னால் வந்துவிடும்.</p> <h2>மிகக்கடினம்</h2><p>இது ஒரு எளிதான ஒரு புரிதல்தான், செங்குத்தான வளர்ச்சி பாதையில் இறங்குவது மிக மிக சுலபம். ஏறுவது மிக மிகக்கடினம். நாம் வேகமாக இறங்கிக்கொண்டிருக்கிறோம். காலமே, நீ ஓர் அதிசய பெட்டகம்! என்னென்ன அதிசயங்களை வைத்திருக்கிறாயோ தெரியவில்லை!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உயர்கல்வித்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்தியா-ரஷியா ஆலோசனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/india-russia-consultations-on-strengthening-cooperation-in-the-higher-education-sector</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/india-russia-consultations-on-strengthening-cooperation-in-the-higher-education-sector#comments</comments><guid isPermaLink="false">8bc78985-be93-40aa-992e-d18fd55ab519</guid><pubDate>Fri, 21 Aug 2026 09:20:01 +0000</pubDate><atom:updated>2026-08-21T09:20:01.573Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,India,Russia,ரஷியா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/3egh9lp7/National-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/3egh9lp7/National-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><p>மத்திய அரசின் உயர்கல்வித்துறை செயலாளர் தீப்தி கவுர் முகர்ஜி மற்றும் ரஷிய அரசின் அறிவியல் மற்றும் உயர்கல்வித்துறை இணை மந்திரி மொகிலெவ்ஸ்கி கான்ஸ்டான்டின் இலிச் ஆகியோர் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. </p><p>இது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சகம் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இரு தரப்பினரும் உயர்கல்வித்துறையில் பரஸ்பர முக்கியத்துவம் கொண்ட அம்சங்கள் குறித்து விவாதித்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையே உயர்கல்வித்துறை சார்ந்த ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான தங்கள் விருப்பத்தை உறுதிப்படுத்தினர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>கடந்த ஆகஸ்ட் 10-ந்தேதி மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட உயர்மட்ட அதிகாரத்துவ மாற்றங்களின் ஒரு பகுதியாக தீப்தி கவுர் முகர்ஜி உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த மாதம் பஞ்சாயத்து அமைச்சகத்தின் செயலாளராக நியமிக்கப்பட்ட வினீத் ஜோஷிக்கு பதிலாக இவர் பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஜாமீன் மனு: காவல்துறை பதிலளிக்க உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bail-petition-in-tasmac-corruption-case-police-ordered-to-respond</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bail-petition-in-tasmac-corruption-case-police-ordered-to-respond#comments</comments><guid isPermaLink="false">a2214952-ba7e-450c-b1f9-d99850f683fb</guid><pubDate>Fri, 21 Aug 2026 09:12:22 +0000</pubDate><atom:updated>2026-08-21T09:12:22.337Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை ஐகோர்ட்டு,காவல்துறை,TNPolice,செந்தில் பாலாஜி,chennaihighcourt,TASMACCase,டாஸ்மாக்  முறைகேடு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/z9mlsx5f/madrashc33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஜாமீன் மனு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/z9mlsx5f/madrashc33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக்கின் ஜாமீன் மனுவிற்கு  பதிலளிக்க காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.</p><p>டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை கடைகளுக்கு கொண்டு செல்ல போக்குவரத்து டெண்டர் வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட ஏழு பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.</p><p>இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் என்பவர், ஜாமீன் கோரி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D">சென்னை ஐகோர்ட்டில் </a>மனுத் தாக்கல் செய்திருந்தார்.</p><p>இந்த மனு, நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்த போது, மனுவிற்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் கோரினார்.</p><p>மனுதாரர் தரப்பில், குதிரைபேர வழக்கில் ஜாமீன் பெற்று விடுதலையான நாளில், இந்த வழக்கில் கைது செய்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து மனுவிற்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.</p>]]></content:encoded></item><item><title>கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை விவசாயிகளின் நலனில் காட்டத் தயங்குவது ஏன்? - டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-hesitate-to-show-speed-in-farmers-welfare-like-buying-cars-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-hesitate-to-show-speed-in-farmers-welfare-like-buying-cars-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">b6c7db5a-3bca-47c6-8ca5-fa472bb48164</guid><pubDate>Fri, 21 Aug 2026 08:59:56 +0000</pubDate><atom:updated>2026-08-21T08:59:56.417Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Farmers,TTV Dhinakaran,டிடிவி தினகரன்,விவசாயிகள்,Crop loan,பயிர்க்கடன் தள்ளுபடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/r4w4s8bv/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/r4w4s8bv/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வாங்குவதில் காட்டும் குதிரை வேகத்தை விவசாயிகளின் நலனில் காட்டத் தயங்குவது ஏன்? என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம்தேதி மேட்டூர் அணையைத் திறக்க முடியாத சூழலில், தமிழகம் முழுவதும் உள்ள டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், 134 கோடி ரூபாய் மதிப்பில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யால் அறிவிக்கப்பட்ட குறுவைத் தொகுப்பு இன்று வரை வந்துசேரவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.</p><p>குறுவை சாகுபடி மற்றும் அதனையொட்டி நடைபெறும் பணிகளுக்காக வழங்க வேண்டிய குறுவைத் தொகுப்பு, குறுவை சாகுபடியே முடிவடைந்து அறுவடை செய்யும் தருவாயிலும் வழங்காமல் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கும் தவெக அரசின் அலட்சியப் போக்கு, ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மேலும் கேள்விக்குறியாக்கியுள்ளது.</p><p>இயந்திரங்களின் மூலம் நடவு செய்ததற்கான ரசீதுகள் உட்பட அனைத்து ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து இரண்டு மாதங்கள் கடந்தும், விவசாயிகளுக்கான நிதியை விடுவிக்காமல் காலம் தாழ்த்திக் கொண்டிருப்பது, டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்ட விவசாயிகளின் நலனுக்காக அறிவிக்கப்பட்ட குறுவைத் தொகுப்பின் நோக்கத்தையே சிதைக்கும் அளவிற்கான அவல நிலையை உருவாக்கியுள்ளது.</p><p>ஏற்கனவே, வேளாண் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்வதாக அளித்த வாக்குறுதியையும் தவெக அரசு முழுமையாக நிறைவேற்றாமல் விவசாயிகளை வஞ்சித்து வரும் நிலையில், சாகுபடிச் செலவு அதிகரிப்பு, இடுபொருட்களின் விலை உயர்வு, விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது எனப் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வரும் விவசாயிகளுக்கு, குறுவைத் தொகுப்பையும் உரிய நேரத்தில் வழங்காமல் காலம் தாழ்த்துவது, விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும்.</p><p>எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய இந்தக் குறுவைத் தொகுப்புத் திட்டத்தில் அலட்சியம் காட்டாமல், அரசு அறிவித்த குறுவைத் தொகுப்பு முழுமையாகவும், உடனடியாகவும் விவசாயிகளைச் சென்றடையத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, விவசாயிகளுக்கு அளித்த முழுமையான வேளாண் கடன் தள்ளுபடி வாக்குறுதியையும் தாமதமின்றி நிறைவேற்றி, விவசாயிகளின் கடன் சுமையிலிருந்து அவர்களை விடுவிக்க வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சுரங்கங்கள் கனிமங்கள் சட்டத்திருத்தம் 2026: திரும்பப் பெற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mines-minerals-amendment-2026-withdrawal-demand-by-indian-communist-party</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mines-minerals-amendment-2026-withdrawal-demand-by-indian-communist-party#comments</comments><guid isPermaLink="false">c2525773-07ec-45bf-a169-9c4b66319063</guid><pubDate>Fri, 21 Aug 2026 08:57:10 +0000</pubDate><atom:updated>2026-08-21T08:57:10.043Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,தமிழ்நாடு அரசு,வலியுறுத்தல்,CPI,கனிமங்கள்,Minerals,withdrawal,Urges</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/0uzqhb0b/veerapandiyan.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன்]]></media:title><media:description type="html"><![CDATA[ சுரங்கங்கள் கனிமங்கள் சட்டத்திருத்தம் 2026: திரும்பப் பெற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/0uzqhb0b/veerapandiyan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்திருத்தம் 2026, ஐ மத்திய அரசு  திரும்ப பெற வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல். இது தொடர்பாக,<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF"> இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்</a> மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><h2>சட்டத்திருத்தம்</h2><p>மாநில உரிமைகளைப் பறித்து பெருநிறுவனங்கள் இயற்கை வளங்களை கொள்ளையடிக்க வழிவகுக்கும், மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள சுரங்கங்கள் மற்றும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">கனிமங்கள்</a> மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்திருத்தம் 2026, ஐ மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.</p> <h2>நிதி உரிமைகளை பறிக்கும் மத்திய அரசு</h2><p>இந்த சட்டத்தின் மூலம் கனிம வளங்கள் மீது மாநிலங்களுக்கு உள்ள வரி, செஸ்  மற்றும் பிற வருவாய் அதிகாரங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் உரிமை மத்திய அரசுக்கு வழங்கப்படுகிறது. இச்சட்டத்திருத்தம் மாநிலங்களின் வருவாய் உரிமையை பறிப்பதுடன் நிதி சுயாட்சியையும் கடுமையாக பாதிக்க செய்யும்.</p><h2>அமைப்புச்சட்டம்</h2><p>இச்சட்டம் வெறும் கனிம வளம் தொடர்பான பிரச்சனை மட்டுமல்ல, அரசியல் அமைப்புச்சட்டம் மாநிலங்களுக்கு வழங்கியுள்ள அதிகாரங்களையும், நிதி உரிமைகளையும் படிப்படியாக பறிக்கும் மத்திய அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.</p><h2>இயற்கை வளங்கள்</h2><p>இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் பெரு நிறுவனங்களுக்கு இச்சட்டத்திருத்தம் வாய்ப்பளிக்கும். இயற்கை வளங்களை மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் மையப்படுத்த இச்சட்டத்திருத்தம் வழிவகுக்கிறது.</p> <h2>முக்கிய இலக்கு</h2><p>2026 ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி, அரியவகை கனிமங்களின் உலகளாவிய விநியோக சங்கிலி அதற்கான முதலீடு மற்றும் கடல்சார் வளங்களை வேகமாக பயன்படுத்துதல் ஆகியவற்றை இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கான முக்கிய இலக்குகளாக அறிவித்தார். இதற்கு சில நாட்களுக்கு முன்பே, ஆகஸ்ட் 12 அன்று மக்களவையும், ஆகஸ்ட் 13 அன்று மாநிலங்களவையும் இந்த சட்டத்திருத்த மசோதா 2026-ஐ நிறைவேற்றியுள்ளன.</p><h2>கொள்ளை லாபம்</h2><p>உச்சநீதிமன்றத்தின் 2024-ஆம் ஆண்டு தீர்ப்பு, மாநிலங்களுக்கு உள்ள கனிம உரிமைகள் தொடர்பான வரி அதிகாரத்தை உறுதி செய்துள்ளது. இந்நிலையில் இத்தகைய சட்ட கட்டுப்பாட்டை ஒன்றிய பாஜக அரசு கொண்டு வருவது, மாநிலங்களின் அதிகாரத்தை நயவஞ்சகத்தை சட்டத்தின் மூலம் குறைக்கும் செயலாகும்.</p> <h2> பாதிப்படைய செய்யும்</h2><p>கனிம வளம் நிறைந்த மாநிலமான தமிழ்நாட்டின் வருவாயை மிகப்பெரிய அளவிற்கு இச்சட்டத்திருத்தம் பாதிக்கும். மாநில இயற்கை வளங்கள் மீது கொள்கைரீதியான முடிவெடுக்கும் உரிமையையும், கனிம வளங்களிலிருந்து கிடைக்கும் வருவாயை மாநில மக்களின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தும் பொருளாதார மற்றும் நிதிசார் தன்னாட்சியையும் இச்சட்டத்திருத்தம் பாதிப்படைய செய்யும்.</p> <h2>பொது சொத்து</h2><p>கனிம வளங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான லாபத்திற்கானது அல்ல; அவை இயற்கையான மக்களின் பொது சொத்து ஆகும். அவற்றின் பயன்பாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மக்கள் நலன், உள்ளூர் மக்களின் உரிமைகள், மாநில நலன் மற்றும் சமூக நீதியை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும்.</p><p>பாரம்பரிய உரிமைகளை பாதிக்கும்</p><p>இச்சட்டம் பழங்குடியினர் மற்றும் பாரம்பரியமாக வனங்களில் வாழும் மக்களின் நிலம், வாழ்வாதாரம், பாரம்பரிய உரிமைகளை பாதிக்கும். இயற்கை வளங்களின் மீதான அவர்களின் உரிமைகளை பாதிக்கும். குறிப்பாக வன உரிமைகள், சட்டம் 2006 வழங்கும் சமூக மற்றும் தனி நபர் வன உரிமைகள், கிராம சபையின் ஒப்புதல் மற்றும் பங்கேற்பு ஆகியவற்றை பாதுகாக்காமல், சுரங்க திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பது பழங்குடியினர் மற்றும் பாரம்பரியமாக வனங்களில் வாழும் மக்களின் அரசியலமைப்பு சட்டரீதியான உரிமைகளுக்கும், வாழ்வாதார பாதுகாப்பிற்கும் எதிரானதாகும் எனவே, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்திருத்தம் 2026, ஐ தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும். இச்சட்டத்திருத்தத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய பாஜக அரசை வலியுறுத்துகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருவனந்தபுரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-from-thiruvananthapuram-to-velankanni</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-from-thiruvananthapuram-to-velankanni#comments</comments><guid isPermaLink="false">0c5fcd98-8715-424a-b66d-acb463e086c3</guid><pubDate>Fri, 21 Aug 2026 08:29:09 +0000</pubDate><atom:updated>2026-08-21T08:29:09.623Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,Special train,Velankanni,வேளாங்கண்ணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/ox42ncpc/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/ox42ncpc/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,  </p><p>வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தென்னக ரெயில்வே சார்பில் திருவனந்தபுரத்தில் இருந்து நெல்லை, மதுரை வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.06115) திருவனந்தபுரம் வடக்கு (கொச்சுவேலி) ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 29-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் 5-ந் தேதி ஆகிய நாட்களில் இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 2.10 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் காலை 8.40 மணிக்கு வேளாங்கண்ணி ரெயில் நிலையம் சென்றடைகிறது. </p><p>மறுமார்க்கத் தில் இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.06116) வருகிற 30-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் 6-ந் தேதி வேளாங்கண்ணியில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 1.25 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந் 1 தடைகிறது. மறுநாள் காலை 7.30 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையம் சென்றடைகிறது. இந்த ரெயிலில் 3 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட் டிருக்கும். ரெயில், நெய்யாற்றின்கரை, குழித்துறை, இரணியல், நாகர்கோவில் டவுன், வள்ளியூர், நாங்குநேரி, நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட் டினம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். </p> ]]></content:encoded></item><item><title>5 மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை அப்டேட்</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-in-5-districts-over-the-next-3-days-starting-today-weather-update</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-in-5-districts-over-the-next-3-days-starting-today-weather-update#comments</comments><guid isPermaLink="false">c8b12d04-0fd2-4e48-b15f-305f41b20d7a</guid><pubDate>Fri, 21 Aug 2026 08:27:54 +0000</pubDate><atom:updated>2026-08-21T08:27:54.558Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,Rain,Weather,கனமழை,வானிலை,தமிழகம்,Weather News,WeatherUpdate,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,weather forecast,வானிலை ஆய்வு மையம்,கன மழை,வானிலை அறிக்கை,weather condition,Weather Report,வானிலை முன்னறிவிப்பு,வானிலை அறிவிப்பு,weather update news,TN Rain,வானிலை அப்டேட்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/mb96fqkg/kloere.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rain, மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/mb96fqkg/kloere.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>வரும் 24-ம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><h2>மழை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><p>இதன் காரணமாக <strong>இன்று (21-08-2026) முதல் 23-08-2026 வரை:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். </p><p>ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><h2>கனமழை</h2><p><strong>24-08-2026 மற்றும் 25-08-2026:</strong> கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் <a href="https://www.dailythanthi.com/topic/rain">கனமழை</a> பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>26-08-2026 மற்றும் 27-08-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong><ins>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</ins></strong></p><p><strong>21-08-2026 முதல் 23-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><p><strong>24-08-2026 மற்றும் 25-08-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.</p><p><strong><ins>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</ins></strong> </p><p><strong>21-08-2026 முதல் 23-08-2026 வரை:</strong> உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p><strong>24-08-2026 மற்றும் 25-08-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.</p> <h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று (21-08-2026) மற்றும் நாளை (22-08-2026):</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>மீனவர்களுக்கான எச்சரிக்கை:</h2><p><strong><ins>தமிழக கடலோரப்பகுதிகள்:</ins></strong></p><p><strong>21-08-2026:</strong> தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>22-08-2026 முதல் 25-08-2026 வரை:</strong> தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong><ins>வங்கக்கடல் பகுதிகள்:</ins></strong></p><p><strong>21-08-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>22-08-2026 முதல் 25-08-2026 வரை :</strong> தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong><ins>அரபிக்கடல் பகுதிகள் :</ins></strong></p><p><strong>21-08-2026 மற்றும் 22-08-2026:</strong> மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>23-08-2026:</strong> மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>24-08-2026:</strong> கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>25-08-2026:</strong> மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>டெல்டா விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு நிதியை உடனே வழங்கிடுக! - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/provide-the-kuruvai-package-to-delta-farmers-immediately-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/provide-the-kuruvai-package-to-delta-farmers-immediately-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">79118d8d-4b6c-4f42-8d6a-fabe496c3529</guid><pubDate>Fri, 21 Aug 2026 08:23:39 +0000</pubDate><atom:updated>2026-08-21T08:23:39.887Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,நிதி,டெல்டா விவசாயிகள்,குறுவைத் தொகுப்பு,Delta farmers</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/xwg7t53z/nainar.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/xwg7t53z/nainar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக பாஜக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>குறுவை சாகுபடி செய்யும் டெல்டா விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் வகையில், ரூ.134.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்தும், இதுவரை ஒரு பைசா கூட விவசாயிகளின் கைக்கு வந்து சேரவில்லை என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.</p><h2>குறுவை தொகுப்பு நிதி</h2><p>குறுவை தொகுப்புத் திட்டத்துக்கான நிதியை விவசாயிகளுக்கு வழங்கிவிட்டதாகச் சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்த நிலையில், களநிலவரமோ முற்றிலும் வேறாக உள்ளது. இயந்திர நடவு ரசீது உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பித்தும், இதுவரை நிதி வழங்கப்படவில்லை என விவசாயிகள் குமுறி வருகின்றனர்.</p><p>அறுவடைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், இனியும் காகித அறிவிப்புகளால் காலத்தைக் கடத்தாமல், குறுவை தொகுப்பு நிதியை உடனடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய சர்வேயர்; ‘யாரையும் நம்ப முடியவில்லை’ எனவும் பேச்சு

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/surveyor-takes-bribe-from-farmer-says-cant-trust-anyone</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/surveyor-takes-bribe-from-farmer-says-cant-trust-anyone#comments</comments><guid isPermaLink="false">e7c430a0-0232-43d7-bb3f-343337135431</guid><pubDate>Fri, 21 Aug 2026 08:22:06 +0000</pubDate><atom:updated>2026-08-21T08:22:06.788Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Pudukkottai,புதுக்கோட்டை,லஞ்சம்,bribe</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/awo48z2v/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/awo48z2v/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>புதுக்கோட்டை,</p><p><a href="https://www.dailythanthi.com/">புதுக்கோட்டை </a>மாவட்டத்தில் விவசாயியிடம் சர்வேயர்  லஞ்சம் வாங்கிய வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. </p><p>புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூர் அருகே ராயவயல் கிராமத்தை சேர்ந்தவர் உருமையா. இவர் தனது மனைவி பெயரில் உள்ள விவசாய இடத்தை பட்டாவில் உட்பிரிவு செய்ய புத்தாம்பூர் சர்வேயர் எழில்கொடியை அனுகியுள்ளார். </p> <h2>லஞ்சம்</h2><p>அப்போது, வேலையை முடிக்க லஞ்சம் தருமாறு சர்வேயர் எழில்கொடி கேட்டுள்ளார். அதன் அடிப்படையில் ஏற்கனவே சர்வேயர் எழில்கொடிக்கு ரூ. 2 ஆயிரம் லஞ்சமாக உருமையா கொடுத்துள்ளார்</p><p>இந்நிலையில், பட்டாவில் உட்பிரிவு வேலையை முடித்து தர கூடுதலாக ரூ. 2 ஆயிரம் தருமாறு சர்வேயர் எழில்கொடி லஞ்சம்  கேட்ட வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.</p><h2>யாரையும் நம்ப முடியவில்லை என பேச்சு</h2><p>விவசாயி உருமையாவிடம் ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கேட்ட வீடியோவில் சர்வேயர் எழில்கொடி பேசியதாவது;-</p><p>சீக்கிரம் வேலை முடியாது. எவ்வளவு நாளில் வேலை முடியும் என்றும் தெரியாது. செல்போன்களை எடுத்து வைத்துவிடுங்கள். யாரையும் நம்ப முடியவில்லை. நமது கையை கூட நம்மால் நம்ப முடியவில்லை. நீங்கள் எவ்வளவு கொடுப்பீர்களோ கொடுங்கள். ரூ. 1,000 எல்லாம் போதாது... ரூ. 2,000 கொடுங்கள்...</p><p>எனக்கு ஜிபே கிடையாது.  வீட்டில் உள்ளவர்கள் ஜிபே எண்ணுக்கும் பணம் அனுப்ப வேண்டாம்.  ஜிபேயில் நான் யாருக்கு மாற்றுவது.  யாரையும் நம்ப முடியவில்லை. காலம் மோசமான காலமாக உள்ளது. </p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>  <figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="ta" dir="ltr">புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூர் அருகே விவசாயி ஒருவரின் இடத்தை உட்பிரிவு செய்ய சர்வேயர் உதவியாளர் மூலம் 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.<br><br>புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூர் அருகே ராயவயல் கிராமத்தைச் சேர்ந்த உருமையா என்பவர் தனது மனைவி… <a href="https://t.co/Rlb7osV4ZY">pic.twitter.com/Rlb7osV4ZY</a></p>&mdash; ஜெயராமன் திமுக (@jayaraman418) <a href="https://x.com/jayaraman418/status/2090614451141804061?ref_src=twsrc%5Etfw">August 21, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>திருவாரூரில் கனமழை: அறுவடைக்குத் தயாரான 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/heavy-rain-in-tiruvarur-500-acres-of-harvest-ready-paddy-crops-submerged-and-damaged</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/heavy-rain-in-tiruvarur-500-acres-of-harvest-ready-paddy-crops-submerged-and-damaged#comments</comments><guid isPermaLink="false">df011d92-27c2-431d-81ee-c5ca4349b89f</guid><pubDate>Fri, 21 Aug 2026 08:16:18 +0000</pubDate><atom:updated>2026-08-21T08:16:18.194Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவாரூர்,heavy rain,damaged,Paddy crops,நெற்பயிர்கள் சேதம்,இழப்பீடு கோரி</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/bbskrh4h/31.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ நெற்பயிர்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ நெற்பயிர்கள் மழையால் சேதமடைந்தன.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/bbskrh4h/31.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவாரூர்,</p><p>திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாகப் பெய்த தொடர் கனமழை காரணமாக, சுமார் 500 ஏக்கர் பரப்பளவிலான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">நெற்பயிர்கள்</a> மழைநீரில் மூழ்கி சேதமடைந்தன.</p><h2>பயிர்கள் நாசம்</h2><p>டெல்டா மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெய்து வரும் இந்த திடீர் மழையால் திருவாரூர் மாவட்டம் நன்னிலம், குடவாசல், எரவாஞ்சேரி, வெள்ளை, அதம்பார் மற்றும் ராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விளைநிலங்கள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. இதில் கதிர்கள் முற்றி, இன்னும் சில நாட்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் சாய்ந்து மூழ்கின.</p><h2>விவசாயிகள் வேதனை</h2><p>"பயிர்களைக் காக்க கடுமையான உழைப்பையும் முதலீட்டையும் கொட்டிய நிலையில், அறுவடை நேரத்தில் பெய்த இந்த மழை மொத்த உழைப்பையும் வீணடித்துள்ளதாக" அப்பகுதி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">விவசாயிகள்</a> கண்ணீருடன் தெரிவித்தனர். தேங்கியுள்ள மழைநீரை வடிக்க வழியின்றி பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்தனர்.</p><h2>உடனடி இழப்பீடு கோரிக்கை</h2><p>பாதிக்கப்பட்ட விளைநிலங்களை வேளாண்மை மற்றும் வருவாய்த்துறையினர் உடனடியாக நேரில் பார்வையிட்டு, சேத விபரங்களை துல்லியமாகக் கணக்கிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு தமிழக அரசு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81">உரிய இழப்பீடு</a>, விரைவில் வழங்கி உதவ வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை: சட்டசபையில் அனல் பறந்த விவாதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/constituency-delimitation-heated-debate-in-the-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/constituency-delimitation-heated-debate-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">72035c0f-2cf6-413b-9fa3-b153653a53c3</guid><pubDate>Fri, 21 Aug 2026 08:15:56 +0000</pubDate><atom:updated>2026-08-21T08:15:56.229Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,TVK,தவெக,பாஜக,BJP,பாமக,PMK,அதிமுக,திமுக,DMK,சட்டசபை,TN Assembly,Delimitation of Constituencies,தொகுதி மறுவரையறை,Delimitation,Fair Delimitation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/vsrmdkqv/CHENNAI-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/vsrmdkqv/CHENNAI-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தொகுதி மறுவரையறை தீர்மானம் குறித்து சட்டசபையில் அனல் பறந்த விவாதம் நடந்தது.</p><h2>பொதுப்பணித்துறை அமைசர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:-</h2><p>"தொகுதி மறுவரையறை குறித்து சில ஊடகங்களும், சில கட்சிகளும் தவறான கண்ணோட்டத்தோடு செய்தி வெளியிட்டுள்ளன. 543 எம்பிக்கள் என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்று தொகுதி மறுவரையறை தொடர்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் முதல்-அமைச்சரும் அரசும் உறுதியாக இருக்கின்றனர். Fair Delimitation தேவையில்லை.. Freeze Delimitationதான் தேவை" என்றார்.</p><p><strong>எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,</strong> "தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாட்டில் முதல்-அமைச்சர் பேசிய உரை குறித்து அமைச்சர் பேசினார். 543 எம்பிக்கள் என்ற எண்ணிக்கையில் வேண் இருக்க வேண்டும் என்றுதான் தீர்மானத்தில் உள்ளது. அந்த தீர்மானத்தைத்தான் பேரவையில் நிறைவேற்றியுள்ளோம். முதலமைச்சர்கள் மாநாட்டில் 543 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் பேசவில்லை" என்று கூறினார்.</p><p><strong>இதற்கு பதிலளித்த அமைசர் ஆதவ் அர்ஜுனா,</strong> "திமுக ஆளுங்கட்சியாக இருந்தபோது எம்.பிக்கள் எண்ணிக்கை உயர்த்த கூடாது என நகல் எரித்து போராட்டம் நடத்தினர். நாடாளுமன்றத்தில் மசோதா வரும் போது திமுக வெளிநடப்பு செய்யக்கூடாது. வாஜ்பாய் கொண்டு வந்தது போன்று சிறப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும். 39 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவையில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். புறக்கணித்தால் அதுவும் ஆளுங்கட்சிக்கு சாதகமாக அமைந்து விடும்.</p><p>தமிழ்நாட்டில் கோரிக்கை வைத்த நீட் விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத மத்திய அரசு, கோரிக்கையே வைக்காத போது தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது என்றால் அதில் கண்டிப்பாக அரசியல் இருக்கும்” என்றார்.</p><p><strong>தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,</strong> "தொகுதி மறுவரையறை என்பது சட்டம். தமிழ்நாட்டின் தொகுதிகளின் எண்ணிக்கை கூட வேண்டுமா? குறைய வேண்டுமா? அதை தெளிவுபடுத்துங்க"என்றார்.</p><p><strong>இதற்கு பதிலளித்த ஆதவ் அர்ஜுனா,</strong> "மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பின் சிறப்பு சட்டத்தை வாஜ்பாய் கொண்டு வந்தார். அதை கொண்டு வர, உங்கள் எம்பி.,கள் உள்ளிட்டோர் குரல் கொடுங்கள், அது தான் எங்கள் கோரிக்கை" என்றார்.</p><p><strong>திமுகவின் நிலைப்பாடு மாறுவதாக பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியதற்கு பாமக கணேஷ்குமார் பதில் அளித்து கூறுகையில்,</strong> 7.18%க்கு குறையாமல் இருந்தால் தொகுதி மறுவரையறையை ஆதரிப்பதாக தவெகவும் கூறியது; முந்தைய திமுக ஆட்சியில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தவெக பொதுச்செயலாளர் பங்கேற்றார். திமுக தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தவெகவும் கையெழுத்திட்டது; தவெகவும், காங்கிரஸும் Fair Delimitation எனக் கூறிவிட்டு இப்போது நிலைப்பாட்டை மாற்றுகின்றன’ என்றார்.</p><p><strong>பாஜக எம்.எல்.ஏ. போஜராஜன் கூறியதாவது,</strong> “தொகுதி மறுவரையறை தமிழகத்துக்கு நல்லது. 50% உயர்வு என வரும்போது தமிழக எம்பிக்கள் எண்ணிக்கை 59 ஆக உயரும்; தமிழக எம்பிக்களின் எண்ணிக்கையை 39-லிருந்து 59 ஆக உயர்த்தும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.</p><p>தொகுதி மறுவரையறையில் அமித்ஷா மாற்றி மாற்றி பேசுகிறார் என்று <strong>அமைச்சர் வன்னி அரசு</strong> தெரிவித்தார். மேலும் ”பா.ம.க நண்பர்கள் ராமதாஸை காப்பாத்துறத விட மோடி அமித்ஷாவை காப்பாத்துறதுல தான் குறியா இருக்கீங்க” என அவர் கூறினார். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.</p><p>இவ்வாறு தொகுதி மறுவரையறை தொடர்பாக த.வெ.க, தி.மு.க, அ.தி.மு.க., பாமக, பாஜக உறுப்பினர்கள் மாறி மாறி தங்களது கருத்துகளை தெரிவித்தனர். இதனால் சட்டசபையில் விவாதம் அனல் பறந்தது.</p>]]></content:encoded></item><item><title>தலைமை செயலாளர் அப்பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர்: மார்க்சிஸ்ட் கட்சி நாளை ஆர்ப்பாட்டம்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-secretary-unfit-to-continue-in-office-marxist-party-to-stage-protest-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-secretary-unfit-to-continue-in-office-marxist-party-to-stage-protest-tomorrow#comments</comments><guid isPermaLink="false">8336d373-50b2-4230-9b01-76a7bb0ce48c</guid><pubDate>Fri, 21 Aug 2026 08:14:06 +0000</pubDate><atom:updated>2026-08-21T08:14:06.596Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,ஆர்ப்பாட்டம்,Chief Secretary,Marxist Communist,பெ.சண்முகம்,Marxist Communist Party,தலைமை செயலாளர்,மார்க்சிஸ்ட் கம்ப்யூனிஸ்ட் கட்சி,p shanmugam,மார்க்சிஸ்ட் கட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/lh6c710m/shanmugam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெ.சண்முகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/lh6c710m/shanmugam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகம் முழுவதும்  நாளைய தினம் (22.08.2026) அனைத்து மாவட்டங்களிலும் வலிமையான கண்டனம் முழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>இடதுசாரிகள் குறிவைப்பு</h2><p>இடதுசாரி மாணவர் இயக்கங்களைக் குறிவைத்ததன் மூலம் தலைமை செயலாளரின் சித்தாந்த சாய்மானம் அம்பலப்பட்டு நிற்கிறது. அரசு எந்திரத்தை அவரது நோக்கத்திற்காக தவறாக பயன்படுத்தும் எல்லைக்கு அவர் சென்றிருக்கிறார். நியாயமான நிர்வாகத்தை இனிமேலும் அவரிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது. கடிதத்தின் 'பொருள்' இடதுசாரி இயக்கங்கள் குறித்து இருந்தாலும், உள்ளடக்கத்தில், மாணவர்களின் போராட்ட உரிமைகளையே அடக்கி ஒடுக்கும் எதேச்சதிகார மனோபாவமே அதில் பிரதிபலிக்கிறது. இது மிக ஆபத்தானது. மத்திய அரசின் பாணியை அடியொற்றி எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவே கருத வேண்டியிருக்கிறது. இது முதல்-அமைச்சரின் அனுமதியுடன் நடந்ததா என்கிற கேள்வி எழுகிறது.</p><p>கல்லூரி கல்வி இயக்குனர் தம் சுற்றறிக்கையைத் திரும்பப் பெற்றிருக்கலாம். ஆனால், சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தின் முடிவும், அதனை அறிவுறுத்தி தமிழக அரசின் சிறப்பு செயலாளர் அனுப்பிய கடிதமும் நீடிக்கின்றன. உயர் கல்வித் துறை செயலாளர், கல்லூரி கல்வி இயக்ககம் தவிர, மற்ற இயக்ககங்களோ, பல்கலைக்கழகங்களோ இந்த சுற்றறிக்கையை அனுப்பவில்லை என்று பத்திரிக்கைக்குக் கூறியிருப்பதாக தகவல் உள்ளது. ஆனால், தமிழக அரசின் சிறப்பு செயலாளரின் கடிதம், கல்லூரி கல்வி இயக்ககம், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்பட்டு, சென்னை பல்கலைக்கழக பதிவாளர் மூலம் அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அவையும் இன்னும் திரும்பப் பெறப்படவில்லை. 'டாப் பிரையாரிட்டி, மோஸ்ட் இம்மீடியட்' என்ற வார்த்தைகளுடன் நடவடிக்கை எடுக்கப்பட்ட விவரம் குறித்த அறிக்கை (action taken report) கோரப்பட்டுள்ளதானது, எவ்வளவு தீவிரத் தன்மையுடன் திட்டமிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. எனவே, கல்லூரி கல்வி இயக்ககம் மட்டுமே தவறு செய்தது என்பது உண்மையல்ல. எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.</p><h2>விளக்கம் வேண்டும்</h2><p>இப்பிரச்சனை சட்டமன்றத்தில் எழுப்பப்பட்டபோது, உயர்கல்வித்துறை அமைச்சர் அளித்த விளக்கமானது முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியதாகும். கல்வி வளாக அமைதி மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்குவதில் தான் இருக்கிறதா என அவர் விளக்க வேண்டும். சில வார்த்தைகள் தவறாக வந்துவிட்டன என்கிறார். மொத்த உள்ளடக்கமே மோசமானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது.</p><p>குஜிலியம்பாறை வட்டாட்சியர் பிரச்சனையிலும் சட்டப்பேரவையில் வருவாய்த்துறை அமைச்சர், நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டார். ஆனால், மாவட்ட ஆட்சியரின் குறிப்பு, பயிற்சி முடிந்து விட்டதால் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தில் பணியில் சேர்வதற்காக சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் விடுவிக்கப்பட்டதாகக் கூறுகிறது. பயிற்சி முடிந்த பின் விடுவிக்கப்பட்டு, வேறு பணியில் சேர்வதற்கு பெயர், தவெக ஆட்சியில், நடவடிக்கையா?</p><h2>நாளை கண்டன ஆர்ப்பாட்டம்</h2><p>அடுத்தடுத்து <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">இடதுசாரிகள் </a>குறிவைக்கப்படுவதைத் தற்செயலானது என எடுத்துக் கொள்ள முடியாது.</p><p>* தமிழக முதல்வரும் அரசும் தம் நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும்.</p><p>* தலைமைச் செயலாளர் அப்பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் என்ற முறையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>* குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்</p><p>என வலியுறுத்தி நாளைய தினம் (22.08.2026) தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வலிமையான கண்டனம் முழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுக்கிறது. அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அரசுப் பேருந்தில் மாணவர்கள் சேட்டை: பொதுமக்கள் அதிர்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/students-unruly-behavior-on-government-bus-public-shocked</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/students-unruly-behavior-on-government-bus-public-shocked#comments</comments><guid isPermaLink="false">2794b654-af90-4b0a-bfc9-a49a0c0f7991</guid><pubDate>Fri, 21 Aug 2026 07:25:04 +0000</pubDate><atom:updated>2026-08-21T07:25:04.638Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Government bus,கிருஷ்ணகிரி,மாணவர்கள்,social media,அரசுப்பேருந்து,public shock</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/v3xo6zm5/30.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ பேருந்தில் தொங்கிக்கொண்டு பயணம் செய்த மாணவர்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆபத்தான முறையில் பயணம் செய்த மாணவர்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/v3xo6zm5/30.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ணகிரி,</p><p>ஓசூர் அருகே அரசுப் பேருந்தில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>படிக்கட்டில் தொங்கியபடி சாகசம்</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கிருஷ்ணகிரி மாவட்டம்</a>, ஓசூர் அடுத்த அஞ்செட்டி தாலுகா பகுதிக்கு உட்பட்ட கிராமப்புறங்களில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ, மாணவிகள் அரசுப் பேருந்துகள் மூலம் பள்ளிக்குச் சென்று வருகின்றனர். இந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை வழக்கம்போல் இயக்கப்பட்ட அரசுப் பேருந்து ஒன்றில், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பள்ளி மாணவர்கள்</a> சிலர் பேருந்தின் படியில் தொங்கியபடியும், ஜன்னல் கம்பிகளைப் பிடித்துக் கொண்டும் ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். </p><p>ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு பேருந்தின் வெளிப்பகுதியில் சாகசம் செய்வது போல மாணவர்கள் நடந்து கொண்ட இந்த வீடியோ, பின்னால் வந்த வாகன ஓட்டிகளால் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.</p><h2>பெற்றோர்கள்-பொதுமக்கள் அதிர்ச்சி</h2><p>சிறு விபத்து ஏற்பட்டாலும் மாணவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடியக்கூடிய இந்த செயலைக் கண்டு சக பயணிகளும் பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர். மாணவர்களின் இந்த பொறுப்பற்ற செயலுக்கு பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.</p><h2>கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை</h2><p>கிராமப்புறப் பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களில் போதிய எண்ணிக்கையில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">அரசுப் பேருந்துகள்</a> இயக்கப்படாததே இது போன்ற கூட்ட நெரிசலுக்கும் ஆபத்தான பயணங்களுக்கும் முக்கியக் காரணம் எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்து வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும், ஆபத்தான முறையில் பயணிக்கும் மாணவர்கள் மீது போக்குவரத்து போலீசாரும் பள்ளி நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வங்கக்கடலில் மாயமான 7 ஆந்திர மீனவர்கள்... தேடுதல் பணியை தீவிரப்படுத்த வேண்டும்: அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/7-andhra-fishermen-missing-in-the-bay-of-bengal-search-operations-should-be-intensified-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/7-andhra-fishermen-missing-in-the-bay-of-bengal-search-operations-should-be-intensified-anbumani#comments</comments><guid isPermaLink="false">9781bd4d-eb6f-4df8-84a8-d7fd2e1045c8</guid><pubDate>Fri, 21 Aug 2026 07:21:12 +0000</pubDate><atom:updated>2026-08-21T07:21:12.446Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மீனவர்கள்,அன்புமணி,Anbumani,fishermen,Bay of Bengal,வங்கக்கடல்,தேடுதல் பணி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/z345kajd/anbumani.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/z345kajd/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/anbumani-ramadoss">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள  அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>ஆந்திரப் பிரதேசம் அம்பேத்கர் கோணசீமா மாவட்டம் ஒடலரேவு கடற்கரையிலிருந்து கடந்த ஆகஸ்ட் 3-ஆம்  தேதி வங்கக்கடலுக்கு சூறை மீன்பிடிப்புக்காக சென்ற 7 மீனவர்கள் காணாமல் போய், 14 நாள்களாகும் நிலையில், இதுவரை அவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர்களைத் தேடும் பணிகளைத்  தீவிரப்படுத்த வேண்டிய நிலையில், தேடும் பணிகள் கைவிடப்படவுள்ளதாக வெளியாகும் செய்திகள் கவலையளிக்கின்றன.</p><h2>மீனவர்கள் மாயம்</h2><p>ஒடலரேவு பகுதியைச் சேர்ந்த 7 மீனவர்கள் கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஓடலரேவு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சூறை மீன்பிடிக்கச் சென்றனர். கர்ரி ராமுடு, கே ராமகிருஷ்ணா, எஸ் தாத்தாராவ், ஏசுதாசு, பலேபு சாந்தராவ், கொல்லட்டி ஸ்ரீனிவாஸ், சதீஷ் ஆகிய 7 மீனவர்களும் கடந்த 10 அல்லது 11-ஆம் தேதி துறைமுகம் திரும்பியிருக்க வேண்டும். ஆனால், கடைசியாக கடந்த 7-ஆம் தேதி குடும்பத்தினரைத் தொடர்பு கொண்ட அவர்களை அதன்பின் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்களின் படகு  ஒதிஷா அல்லது மேற்கு வங்காள கடல்பகுதிக்கு காற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.</p><p>காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணியில் கடற்படைக்கு சொந்தமான இரு கப்பல்கள், கடலோரக் காவல் படைக்கு சொந்தமான 5 கப்பல்கள், விமானப் படைக்கு சொந்தமான இரு ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளன. அவர்கள் காணாமல் போனதாக கருதப்படும் பகுதியில் இருந்து 300 கடல் மைல் சுற்றளவில்  தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காக்கிநாடா, விசாகப்பட்டினம், ஒதிஷா மாநிலம் பாரதீப் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களின் உதவியும் கோரப்பட்டிருக்கிறது. ஒதிஷா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் அதிகாரிகளுக்கும் இது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உதவிகள் கோரப்பட்டுள்ளன.</p><h2>தேடும் பணிகளை நிறுத்த அரசு முடிவு</h2><p>கடற்படை, விமானப்படை ஆகியவை இணைந்து மேற்கொள்ளும் தேடுதல் வேட்டையை குறை சொல்ல முடியாது. ஆனால், இரு வாரங்களாகியும் அவர்களை கண்டுபிடிக்க முடியாததால், இன்னும் ஓரிரு நாள்களில் தேடும் பணிகளை நிறுத்த அரசு முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் மீனவர்களின் குடும்பத்தினரும், உறவினர்களும் கவலை அடைந்துள்ளனர். கடலுக்கு சென்ற மீனவர்களிடம் 1000 லிட்டர் டீசலும், 20 நாள்களுக்குத் தேவையான உணவும் இருப்பதாகக் கூறப்படுகிறது. கடுமையான காற்று காரணமாக அவர்கள் வெகு தொலைவுக்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><h2>மீனவர்கள் குடும்பத்தினருக்கு வாழ்வாதாரம்</h2><p>அதனால், தேடுதல் தொலைவை சற்று அதிகரித்து பணிகளை தீவிரப்படுத்தினால், காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்து விடலாம். காணாமல் போன மீனவர்களில் மூவருக்குக் நீச்சல் கூட தெரியாது என்று கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தேடும் பணிகள் கைவிடப்பட்டால், இதுநாள் வரை மேற்கொள்ளப் பட்ட முயற்சிகள் வீணாகி விடும். எனவே, காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்கும் வரை தேடுதல் பணிகளை நீட்டிக்க வேண்டும் என்று ஆந்திர அரசையும், கடற்படை மற்றும் கடலோரக் காவல்படைகளை  கேட்டுக் கொள்கிறேன். காணால் போன மீனவர்கள் குடும்பத்தினருக்கு வாழ்வாதாரம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அவர்களுக்கு தேவையான உணவு, நிதி ஆகியவற்றை அரசு வழங்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருப்பூர் அருகே குடியிருப்பில் குளம்போல் தேங்கிய கழிவுநீர் அகற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/disposal-of-stagnant-sewage-in-a-residence-near-tirupur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/disposal-of-stagnant-sewage-in-a-residence-near-tirupur#comments</comments><guid isPermaLink="false">4ebe1b98-8e79-419c-9dc9-6ba6b5f66ee1</guid><pubDate>Fri, 21 Aug 2026 07:20:16 +0000</pubDate><atom:updated>2026-08-21T07:20:16.728Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்,sewage,கழிவுநீர்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/y2hl9nx7/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/y2hl9nx7/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர், </p><p>திருப்பூர் அருகே கரைப்புதூர் ஊராட்சி அய்யம்பாளையம் கிழக்கு பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அங்கேயே குளம்போல் தேங்கி நின்றது. உரிய திட்டமிடல் இல்லாமல் கால்வாய் கட்டப்பட்டதால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். </p><p>இது குறித்து ‘தினத்தந்தி’ யில் செய்தி பிரசுரிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக, கரைப்புதூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குளம் போல் தேங்கியிருந்த கழிவுநீர் அகற்றப்பட்டது. இதையடுத்து மக்கள் பிரச்சினைகளை செய்தியாக வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>போடி-சென்னை அதிவிரைவு ரெயிலில் கூடுதல் பெட்டிகள் சேர்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-coaches-added-to-the-bodi-chennai-express-train</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-coaches-added-to-the-bodi-chennai-express-train#comments</comments><guid isPermaLink="false">c38f91b8-feec-4189-8a39-94ee4b6424ed</guid><pubDate>Fri, 21 Aug 2026 07:13:51 +0000</pubDate><atom:updated>2026-08-21T07:13:51.749Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Additional Coaches,கூடுதல் பெட்டிகள்,போடி,Bodi</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/pqg1r020/11.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/pqg1r020/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>போடி,  </p><p>போடி-சென்னை இடையே அதிவிரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் இந்த ரெயில் இரு மார்க்கத்திலும் இயக்கப்படுகிறது. போடியில் இருந்து இரவு 8.55 மணிக்கு புறப்படும் ரெயில், மதுரை, சேலம், காட்பாடி வழியாக மறுநாள் காலை 7.55 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறு நாள் காலை 10 மணிக்கு போடியை வந்தடைகிறது. தற்போது இந்த ரெயிலில் 4 சாதாரண படுக்கை வசதி பெட்டிகள் உள்ள நிலையில் மேலும் 2 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. </p> <p>இதனால் சாதாரண படுக்கை வசதி பெட்டிகளின் எண்ணிக்கை 6 ஆக அதிகரிக்கிறது. அதேநேரத்தில் முதல் மற்றும் 2-ம் தர ஏ.சி. படுக்கை வசதி பெட்டிகள் தலா ஒன்று குறைக்கப்பட உள்ளன. புதிதாக இணைக்கப்படும் ரெயில் பெட்டிகள் சென்னை-போடி மார்க்கத்தில் நாளை மறுநாளும், போடி-சென்னை மார்க்கத்தில் 24-ந்தேதியும் பயன்பாட்டுக்கு வரும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>”கார் இல்லை.. ரூ.10 ஆயிரம் தான் இருக்கிறது என்று கூட நீங்கள் சொல்வீர்கள்” - உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/you-might-even-say-there-is-no-caronly-10000-retorts-aadhav-arjuna-to-udhayanidhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/you-might-even-say-there-is-no-caronly-10000-retorts-aadhav-arjuna-to-udhayanidhi#comments</comments><guid isPermaLink="false">1b8b8c1e-bcb6-4a75-92d3-58f6d250b9ad</guid><pubDate>Fri, 21 Aug 2026 07:09:12 +0000</pubDate><atom:updated>2026-08-21T07:09:12.894Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Tamilnadu,திமுக,DMK,தமிழகம்,Udhayanidhi Stalin,ஆதவ் அர்ஜுனா,Car,கார்,தமிழக சட்டசபை,TN Assembly,உதயநிதி,Assembly Session,தமிழக சட்டசபை கூட்டம்,Adhav Arjuna,சட்டசபை கூட்டத் தொடர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/619x414p/gandue.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/619x414p/gandue.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ்நாடு சட்டசபையில் நீதி, சிறை, சட்டம், எரிசக்தி, அறநிலையத் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. </p><h2>கார் வேண்டாம் - உதயநிதி</h2><p>இந்த நிலையில், திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் வாகனம் (கார்) வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/udhayanidhi-stalin">உதயநிதி ஸ்டாலின்</a> அறிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக சட்டசபையில் அவர் பேசுகையில், “தமிழ்நாடு கடன் சுமையில் இருப்பதாக முதல்-அமைச்சர் கூறியுள்ளார். அதனால், அரசு அறிவித்த காரினை திமுகவின் 59 எம்.எல்.ஏ.க்களும் பெறுவதில்லை என முடிவெடுத்துள்ளோம். இந்த முடிவு முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில் எடுத்துள்ளோம். நாங்கள் அனைவரும் கையெழுத்திட்ட கோப்பை சமர்பித்துள்ளேன். தேவையற்ற செலவுகளை குறைக்கும் நோக்கில் பொருளாதாரத்தில் நலிவடைந்த உறுப்பினர்களுக்கு மட்டுமே கார் அளிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.</p><h2>ஆதவ் அர்ஜுனா</h2><p>இந்நிலையில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி அறிவிப்புக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளிக்கையில், “வி.சி.க.வை சேர்ந்த ஏழ்மையான சட்டமன்ற உறுப்பினர் வைத்த கோரிக்கையால் தான் முதல்-அமைச்சர் கார் வழங்குவதாக கூறினார். ஏழ்மையான உறுப்பினர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கப்பட்டது. எதிர்கட்சி தலைவருக்கு 3 வீடுகள் இருக்கிறது, ஏன் அரசு பங்களாவில் இருக்கிறார்? அவருக்கு பங்களா இருப்பதால், தர முடியாது என்று சொல்ல முடியுமா?</p><p>நீங்கள் வேட்பு மனுவில், கார் இல்லை, வீடு இல்லை, கையில் ரூ.10 ஆயிரம் இருப்பதாக கூறலாம். எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களிடம் வீடு, கார் இல்லாமல் இருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் உறுப்பினரிடம் கார் இல்லை. முதல்-அமைச்சர் பொதுவாக தான் அறிவிப்பு கொடுத்தார். ஏற்கனவே கார் வைத்திருக்கும் த.வெ.க.வினர், கார் கேட்டு விண்ணப்பிக்க மாட்டார்கள்” என்று அவர் தெரிவித்தார். </p><h2>கே.என்.நேரு</h2><p>அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.என்.நேரு பதில் அளிக்கையில், “கார் வேண்டாம் என்று தான் சொல்கிறோம், அரசுக்கு செலவு வைக்க வேண்டாம் என்பதால் சொல்கிறோம். எங்கள் வேட்புமனுவை குறிப்பிட்டு பேசினால், வேண்டுமானால் வழக்கு போடுங்கள். அமைச்சர் சொந்த வீட்டில் இருக்கிறார், ஆனால் அவர் வீட்டுக்கு அரசு வாடகை செலுத்துகிறது. வீடு வேண்டாம் என எழுதிக் கொடுங்கள்” என்று கூறினார்.</p> <h2>பா.ம.க., சி.பி.ஐ.</h2><p>இதுதொடர்பாக பாமக எம்எல்ஏ கணேஷ்குமார் கூறுகையில், “பா.ம.க. எம்.எல்.ஏ.,க்களுக்கு கார் வேண்டும் என்பது உண்மை தான். என்னிடம் கார் உள்ளது. யாருக்கு கார் தேவையோ அவர்களுக்கு மட்டும் கார் வழங்கலாம் என்பது எங்களின் நிலைப்பாடு” என்று தெரிவித்தார். </p><p>இதுதொடர்பாக சிபிஐ எம்எல்ஏ இராமச்சந்திரன் கூறுகையில், “"சில சட்டமன்ற உறுப்பினர்கள் கார் கேட்டு கோரிக்கை வைத்தார்கள். முதல்-அமைச்சர், அவர்களுக்கு கொடுக்கட்டும், பிரச்சினை இல்லை. இருந்தாலும், கார் தேவையில்லை என்பது எங்களின் நிலைப்பாடு" என்று தெரிவித்தார். </p><h2>அமைச்சர் ஷாஜகான்</h2><p>உதயநிதி அறிவிப்புக்கு அமைச்சர் ஷாஜகான் பதிலளிக்கையில், “சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் என்பது சர்ச்சையாக பேசப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, 300க்கும் அதிகமான ஊராட்சி ஒன்றியத் தலைவர்களுக்கு கார் வழங்கினார். அன்றும் இதே நிதிநிலை தான் இருந்தது. அன்று கேட்காமல், இன்று மட்டும் கேள்வி கேட்கிறார்கள்” என்று கூறினார். </p>]]></content:encoded></item><item><title>பழனி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! தினமும் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/good-news-for-devotees-visiting-palani-temple-daily-food-distribution-to-10000-people</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/good-news-for-devotees-visiting-palani-temple-daily-food-distribution-to-10000-people#comments</comments><guid isPermaLink="false">70c59dba-b8fc-42d0-988b-a3bff3fa8c12</guid><pubDate>Fri, 21 Aug 2026 07:07:53 +0000</pubDate><atom:updated>2026-08-21T07:07:53.486Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பக்தர்கள்,Devotees,அன்னதானம்,Palani temple,பழனி மலைக்கோவில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/ak7sqssv/127.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/ak7sqssv/127.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பழனி,</p><p>பழனி மலைக்கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் தினமும் 10 ஆயிரம் பேருக்கு உணவு வழங்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.</p><h2>பழனி முருகன் கோவில்</h2><p>அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், திருவிழா மற்றும் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கடந்த 13.9.2012 முதல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மலைக்கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.</p><p>இந்த அன்னதானத்தில் பக்தர்களுக்கு சாதம், ரசம், பொரியல், கூட்டு, அப்பளம், பாயசம் மற்றும் மோர் உள்ளிட்ட உணவுகள் தரமாகவும், சுவையாகவும் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் அன்னதானத்தில் உணவு சாப்பிடும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.</p><p>இதுவரை மலைக்கோவிலில் தினமும் சராசரியாக 5 ஆயிரம் பக்தர்களும். கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில் 7 ஆயிரம் பக்தர்கள் வரையிலும் அமர்ந்து அன்னதானம் சாப்பிட்டு வந்தனர். ஒரு பந்தியில் 204 பக்தர்கள் அமர்ந்து சாப்பிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.</p><h2>எண்ணிக்கை விரிவாக்கம்</h2><p>இந்நிலையில் பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து. அன்னதானம் வழங்கும் வசதியை விரிவுபடுத்த கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி மலைக்கோவிலில் 4 இடங்களில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு பந்தியில் 204 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் இருந்த எண்ணிக்கை தற்போது 410 பேராக அதிகரிக்கப்பட்டுள்ளது.</p><h2>பக்தர்கள் மகிழ்ச்சி</h2><p>மேலும், மலைக்கோவில் அன்னதான மடத்தில் பக்தர்கள் காத்திருக்கும் அறை மாற்றியமைக்கப்பட்டு, கூடுதல் </p><p>இடவசதியுடன்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D"> அன்னதானம் </a>வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல் மேலும் 2 இடங்களிலும் அன்னதானம் வழங்கும் வசதி தற்போது நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரே நேரத்தில் அதிக எண் ணிக்கையிலான பக்தர்கள் அன்னதானம் சாப்பிடும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தினமும் சுமார் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><p>பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் அன்னதானம் சாப்பிடும் வகையிலும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையிலும் இந்த விரிவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மலைக்கோவிலில் அன்னதானம் வழங்கும் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>ஊழல் கோப்புகளை நிச்சயமாக முதல்-அமைச்சர் விஜய் வெளியிடுவார் - அமைச்சர் ராஜ்மோகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-will-certainly-release-the-corruption-files-minister-rajmohan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-will-certainly-release-the-corruption-files-minister-rajmohan#comments</comments><guid isPermaLink="false">a7574fb9-bba4-40d0-b434-fa26ac30fd51</guid><pubDate>Fri, 21 Aug 2026 07:06:11 +0000</pubDate><atom:updated>2026-08-21T07:06:11.219Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,திமுக,DMK,உதயநிதி ஸ்டாலின்,சட்டசபை,Udayanidhi Stalin,ராஜ்மோகன்,Minister Rajmohan,அமைச்சர் ராஜ்மோகன்,Rajmohan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/3es64rt7/Untitled-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/3es64rt7/Untitled-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஊழல் கோப்புகளை நிச்சயமாக முதல்-அமைச்சர் விஜய் வெளியிடுவார். எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கையை முதல்-அமைச்சர் விஜய் நிறைவேற்றுவார் என சட்டசபையில் அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.</p><h2>ஜோதிடர் சொல்ல வேண்டுமா?</h2><p>எதிர்க்கட்சித்தலைவர் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-mlas-do-not-need-government-cars-udhayanidhi-stalin-announces">உதயநிதி ஸ்டாலின்</a> சட்டசபையில் பேசியதாவது, “தனது டேபிளில் பைல் இருப்பதாகவும், திறந்து பார்க்க வைத்துவிடாதீர்கள் என்று முதல்வர் பேசினார். தயவு செய்து அவர் திறந்து பார்க்க வேண்டும், நடவடிக்கை எடுக்க வேண்டும். எதற்காக பயப்படுகிறீர்கள்? காலம் தாழ்த்துகிறீர்கள்? ஜோதிடர் சொன்னால் தான் திறப்பீர்களா? நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? நடவடிகை எடுப்பேன் என உருட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் பயப்பட மாட்டோம்.</p><p>ஆளுங்கட்சியினர் எங்களுக்கு பதில் சொல்லும்போது ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டுகின்றனர். சட்டமன்றத்தில் பாட்டெல்லாம் பாடுகிறார்கள். எங்களுக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோமா அல்லது சட்டமன்றத்திற்கு வந்திருக்கிறோமா என்று சந்தேகப்படும் அளவுக்கு பாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.</p><h2>நீக்கும் கருத்துகள் ரீல்ஸ்சாக வெளியாகிறது</h2><p>நீங்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கும் கருத்துகள் ரீல்ஸ்சாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. நான் பேசியதை நீக்கிவிட்டீர்கள். ஆனால் அது சமூகவலைதளங்களில் வெளியாகிறது. அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடுகிறது என்பதை குறிப்பிடுகிறேன்” என பேசினார்.</p><p>தொடர்ந்து பதிலளித்த நிர்மல்குமார், 'ஜோசியம் என்று பேசுகிறார்கள்; ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்ட கதையெல்லாம் எங்களுக்கும் தெரியும். எப்போது நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அப்போது சரியான நேரத்தில் எடுப்போம்' என்று காரசாரமாகத் தெரிவித்தார்.</p><h2>கோப்புகளை திறப்பதில் தயக்கமில்லை</h2><p>அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது, ‘தமிழக சட்டசபையில் நடப்பது எல்லாம் மக்களுக்கு தெரிய வேண்டும். யார் எந்த தொகுதி சார்பாக கேட்கிறார்கள், அதற்கு பதில் சொல்வது தெரிய வேண்டும் என்பதற்காக தான் நேரலை தருகிறோம்.</p><p>நேரலை என்பது வெறும் ஆளும்கட்சிக்கு சாதகமாக இல்லாமல், முழுமையான நேரலை என்பது தவெக ஆட்சியில் தான் தொடர்ந்து கொண்டு இருக்கிறோம். கோப்புகளை திறப்பதில் முதல்-அமைச்சருக்கு தயக்கமில்லை. ஊழல் கோப்புகளை நிச்சயமாக முதல்-அமைச்சர் விஜய் வெளியிடுவார். எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கையை முதல்-அமைச்சர் விஜய் நிறைவேற்றுவார்’ என ராஜ்மோகன் கூறினார்.</p><h2>நடவடிக்கை</h2><p>சட்டசபையில் அவை குறிப்பிலிருந்து நீக்கியதை வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>திருவண்ணாமலை: டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பெண்கள் போராட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruvannamalai-women-protest-demanding-the-removal-of-a-tasmac-shop</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruvannamalai-women-protest-demanding-the-removal-of-a-tasmac-shop#comments</comments><guid isPermaLink="false">29c9e142-9ede-4989-b9a6-fe86ce40e8be</guid><pubDate>Fri, 21 Aug 2026 07:02:42 +0000</pubDate><atom:updated>2026-08-21T07:02:42.928Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Suicide Attempt,போராட்டம்,School students,District Collector,பெண்கள்,டாஸ்மாக் கடை,bar,மாவட்ட ஆட்சியர்</media:keywords><media:content height="410" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/mb6g5udt/6.jpg" width="710"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெண்கள் போராட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/mb6g5udt/6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை,</p><p>திருவண்ணாமலை மாவட்டம் அண்ணகிளிகொட்டம் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p> <h2>கடையை அகற்ற போராட்டம்</h2><p>திருவண்ணாமலை மாவட்டம் அண்ணக்கிளிகொட்டம் சாலையில் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து டாஸ்மாக் கடையை நடத்தி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். டாஸ்மாக் கடையை சுற்றி 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அந்த வழியே நடந்து செல்லும் பொதுமக்களிடம் மதுப்பிரியர்கள் தகராறில் ஈடுபடுகின்றனர். இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் பெண்கள் பெரும் அச்சத்தில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. வேலைக்கு சென்று இரவில் வீடு திரும்பும் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு <a href="https://www.dailythanthi.com/topic/டாஸ்மாக்கடை">டாஸ்மாக் கடை</a>யை அகற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.</p> <p>3 முறை மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பதால் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்றவில்லை என்றால் கடையின் முன்பு “தீக்குளித்து உயிரிழப்போம்” என பெண்கள் எச்சரித்துள்ளனர். இந்த<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D"> போராட்டம் </a>அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பட்டப்பகலில் பெண்ணிடம் கைப்பை பறிப்பு; கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-college-students-arrested-for-snatching-a-womans-handbag-in-broad-daylight</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-college-students-arrested-for-snatching-a-womans-handbag-in-broad-daylight#comments</comments><guid isPermaLink="false">45250473-e9b4-4bb9-a111-baeea0f81726</guid><pubDate>Fri, 21 Aug 2026 06:41:46 +0000</pubDate><atom:updated>2026-08-21T06:41:46.478Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,பெண்,Woman,கல்லூரி மாணவர்கள்,பறிப்பு,கைப்பை,handbag,college students arrested</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/vnoiyqah/arrest1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/vnoiyqah/arrest1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>குளித்தலை,</p><p>குளித்தலை அருகே பட்டப்பகலில் பெண்ணிடம் கைப்பை பறித்த கல்லூரி மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.</p><p>கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தென்கடை குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ராமதுரை மனைவி அம்பிகா(வயது 34). இவர் தமிழக வெற்றிக் கழகத்தில் கரூர் மாவட்ட மகளிர் அணி செயலாளராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் மதியம் தனது ஸ்கூட்டரில், தெற்கு மாடு விழுந்தான் பாறை பகுதியை சேர்ந்த காமாட்சி (37) என்பவரை அமர வைத்து கொண்டு வீட்டிலிருந்து குளித்தலை நகரப் பகுதிக்கு செல்வதற்காக கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்துள்ளார்.</p><p>குளித்தலையில் உள்ள ஒரு தனியார் பள்ளி மேம்பாலம் சர்வீஸ் சாலையில் வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர் அம்பிகாவின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறிக்க முயற்சித்தனர். அப்போது சுதாரித்து சற்று நகர்ந்து கொண்டதால் பின்னால் அமர்ந்து வந்த காமாட்சி கையில் இருந்த கைப்பையை பிடுங்கிக்கொண்டு மர்மநபர்கள் தப்பி சென்றுவிட்டனர்.</p><h2>மாணவர்கள் 2 பேர் கைது</h2><p>அந்த கைப்பையில் ரூ.ஆயிரம். ஏ.டி.எம்., பான் கார்டு மற்றும் 2 செல்போன்கள் இருந்தன. இதனால் பதற்றம் அடைந்த இருவரும் குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் குளித்தலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை கொண்டு 2 பேரை வலைவீசி தேடி வந்தனர்.</p><p>இதில் கைப்பையை பறித்து சென்ற சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரை சேர்ந்த டிப்ளமோ படித்து வரும் கிருஷ்ணமூர்த்தி மகன் முகேஷ் (19) மற்றும் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வரும் மூர்த்தி மகன் புவனேஷ்(19) ஆகிய 2 பேரை குளித்தலை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/arrest-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்து சிறையில் அடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. ஆட்சிக்குப்பின் வீடுகளில் மின்கட்டணம் திடீரென அதிகமாக வந்தது ஏன்? - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-did-household-electricity-bills-suddenly-spike-after-the-tvk-government-took-office-minister-nirmal-kumar-explains</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-did-household-electricity-bills-suddenly-spike-after-the-tvk-government-took-office-minister-nirmal-kumar-explains#comments</comments><guid isPermaLink="false">4d4cf83a-a789-4509-ad44-d9447ab6b825</guid><pubDate>Fri, 21 Aug 2026 06:36:33 +0000</pubDate><atom:updated>2026-08-21T06:36:33.382Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,தமிழக சட்டசபை,electricity bill,TN Assembly,Assembly Session,Senthil Balaji,செந்தில் பாலாஜி,மின் கட்டண உயர்வு,தமிழக சட்டசபை கூட்டத்தொடர்,அமைச்சர் நிர்மல்குமார்,Tvk  government,Minister Nirmal Kumar,தவெக ஆட்சி,சட்டசபை கூட்டத் தொடர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/s7ga4ili/niemrl.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/s7ga4ili/niemrl.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ்நாடு சட்டசபையில் நீதி, சிறை, சட்டம், எரிசக்தி, அறநிலையத் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. </p><h2>மின் கட்டண உயர்வு</h2><p>இந்நிலையில் <a href="https://www.dailythanthi.com/topic/tvk">த.வெ.க</a>. ஆட்சிக்கு பின் வீடுகளில் மின்கட்டணம் திடீரென அதிகமாக வந்தது ஏன்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் மின் கட்டண உயர்வு குறித்து, அமைச்சர் ஒன்று சொல்கிறார், நிர்வாகம் ஒன்று சொல்கிறது என்று முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். </p><h2>டேபிள் ரீடிங்</h2><p>இதற்கு சட்டப்பேரவையில் பதிலளித்து பேசிய மின் துறை அமைச்சர் நிர்மல்குமார், “மின்வாரியம் தானாக 3 லட்சத்திற்கு அதிகமான இணைப்புகளை மறு ஆய்வு செய்த போது, 2,719 மிஸ் மேட்ச் ஆனது. தவறான கணக்கிடுதலால் அது நடந்தது. டேபிள் ரீடிங் என்று ஒன்றை செய்து வந்துள்ளனர். நேரடியாக ரீடிங் செய்யாமல், முந்தைய ரீடிங்கை கணக்கில் செய்துள்ளனர். நேரடியாக ரீடிங் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>4 அமைச்சர்கள்</h2><p>செய்தியாளர் சந்திப்பில் நான் தடித்த வார்த்தைகளை பேசுவதாக செந்தில் பாலாஜி குறிப்பிட்டார். 45 டெண்டர்களில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடந்து வருவது அவருக்கு தெரியும்</p><p>கடந்த ஆட்சியில் மின்துறையில் 4 அமைச்சர்கள் மாற்றப்பட்டனர். 2021-க்கு பின்னர் மின்துறை அமைச்சர் சிறைக்குச் செல்கிறார். பின்னர் இன்னொரு அமைச்சர், இன்னொரு அமைச்சர் என மின்துறைக்கு 4 அமைச்சர்கள் கடந்த ஆட்சியில் வந்துள்ளனர்” என்று அவர் கூறினார். </p><p>இதனிடையே முன்னாள அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், “மின்வாரிய கொள்கை விளக்க குறிப்பை படித்தேன். 5 பக்கங்களில் தான் டேட்டாக்கள் இருக்கிறது. மீதமெல்லாம் புள்ளி விபரம் இல்லாத பழைய குறிப்புகள் தான் உள்ளது. 3,437 கேங் மேன் மாறுதல் செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை யாரும் விடுவிக்கப்படவில்லை” என்று கூறினார். </p>]]></content:encoded></item><item><title>திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார் வேண்டாம்: உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-mlas-do-not-need-government-cars-udhayanidhi-stalin-announces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-mlas-do-not-need-government-cars-udhayanidhi-stalin-announces#comments</comments><guid isPermaLink="false">f24c850d-06a4-4114-8d2b-dd19f3da7343</guid><pubDate>Fri, 21 Aug 2026 06:34:33 +0000</pubDate><atom:updated>2026-08-21T06:34:33.775Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,சட்டசபை,Car,கார்,TN Assembly</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/35vj77k9/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/35vj77k9/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>அரசு சார்பில் வாகனம்</h2><p>தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வின்போது 110 விதியின் கீழ் 3 அறிவிப்புகளை முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டார். அதில், ஒரு அறிவிப்பு பொருளாதார பலமில்லாமல் சட்டமன்ற உறுப்பினர்களாக பணியாற்றும் மற்றும் முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினர்க ளாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தங்களது மக்கள் பணியை தொய்வின்றி தொடருவதற்கு வசதியாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும்.</p><p>அரசு வழங்கும் வாகனத்தை பராமரிக்கும் விதமாக, வாகனத்துக்கு டிரைவர், எரிபொருள், வாகன பராமரிப்பு உள்ளிட்ட செலவினங்களுக்காக மாதந்தோறும் ரூ.75 ஆயிரம் வாகனப்படியாகவும், அலுவலகப்பணிகளில் உதவி செய்ய ஒரு உதவியாளரை நியமித்துக்கொள்ள மாதந்தோறும் ரூ.25 ஆயிரம் உதவியாளர் படியாகவும் வழங்கப்படும். இதற்காக உரிய சட்டத்தில் திருத்தங்கள் மேற் கொண்டு ஆணைகள் வெளியிடப்படும் என்று அறிவித்தார்.</p><h2>கார் வேண்டாம்</h2><p>இந்த நிலையில், திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் வாகனம் (கார்) வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சட்டசபையில் அவர் பேசியதாவது:-</p><p>தமிழ்நாடு கடன் சுமையில் இருப்பதாக முதல்-அமைச்சர் கூறியுள்ளார். அதனால், அரசு அறிவித்த காரினை திமுகவின் 59 எம்.எல்.ஏ.க்களும் பெறுவதில்லை என முடிவெடுத்துள்ளோம். இந்த முடிவு முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில் எடுத்துள்ளோம். நாங்கள் அனைவரும் கையெழுத்திட்ட கோப்பை சமர்பித்துள்ளேன். தேவையற்ற செலவுகளை குறைக்கும் நோக்கில் பொருளாதாரத்தில் நலிவடைந்த உறுப்பினர்களுக்கு மட்டுமே கார் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.</p><h2>அரசு பங்களா...</h2><p>இதைபோல சி.பி.ஐ. உறுப்பினர்களுக்கு கார் வேண்டாம் என்றும் கார் தேவையில்லை என்பது எங்கள் நிலைப்பாடு என எம்.எல்.ஏ. தளி ராமச்சந்திரன் தெரிவித்தார்.</p><p>கார் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளித்து பேசியதாவது:-</p><p>அமைச்சருக்கு கார், வீடு, 4 உதவியாளர்கள் கொடுக்கப்படுகிறது; ஆனால் எம்எல்ஏக்களுக்கு அப்படி இல்லை; ஒரு எம்எல்ஏ மூன்று லட்சம் மக்களை சென்று பார்க்க வேண்டிய சூழல் இருக்கிறது; அதனால்தான் கார் வழங்குகிறோம். எதிர்க்கட்சி தலைவருக்கு இரண்டு மூன்று வீடு உள்ளது ஆனால் அரசு பங்களாவில் இருக்கிறார். உங்களுக்கு சொந்த வீடு உள்ளதே எதற்கு அரசு பங்களா வேண்டும் என கேள்வி எழுப்ப முடியுமா?. என்றார்.</p>]]></content:encoded></item><item><title>சேலம்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரத்துடன் நிறுத்தம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/salemchennai-egmore-express-service-to-terminate-at-tambaram</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/salemchennai-egmore-express-service-to-terminate-at-tambaram#comments</comments><guid isPermaLink="false">174d028d-5bf1-4595-ae84-92e854fb0a59</guid><pubDate>Fri, 21 Aug 2026 06:29:11 +0000</pubDate><atom:updated>2026-08-21T06:29:11.755Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>ரெயில் சேவை,Chennai Egmore,சென்னை எழும்பூர்,Train Services</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/j5q20wdi/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/j5q20wdi/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,  </p><p>சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடை பெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நடைமேம்பால தூண்கள் அமைத்தல், இரும்பு கர்டர்களை பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதையொட்டி சேலம்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (22154) சேலம் சந்திப்பில் இருந்து  வருகிற 24-ந்தேதி வரை சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு செல்லாமல், தாம்பரம் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். </p><p>இந்த ரெயில் சேலம் சந் திப்பில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு ஆத்தூர், சின்னசேலம், விருத்தாசலம், விழுப்புரம் வழியாக தாம்பரம் ரெயில் நிலையத்தை அதி காலை 3.30 மணிக்கு சென்றடையும். இந்த ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>குறுவைத் தொகுப்பு அறிவிக்கப்பட்டு 70 நாள்கள் ஆகியும் வழங்கப்படவில்லை - அன்புமணி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kuruvai-package-not-yet-provided-despite-70-days-since-announcement-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kuruvai-package-not-yet-provided-despite-70-days-since-announcement-anbumani#comments</comments><guid isPermaLink="false">aafaa3d9-a193-4b27-922b-eb6ce6c75b48</guid><pubDate>Fri, 21 Aug 2026 06:14:52 +0000</pubDate><atom:updated>2026-08-21T06:14:52.440Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK,அன்புமணி,Anbumani,Kuruvai,குறுவைத் தொகுப்பு,kuruvai crops</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/v2bnoubk/anbumani.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/v2bnoubk/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>குறுவைத் தொகுப்பு அறிவிக்கப்பட்டு 70 நாள்கள் ஆகியும் வழங்கப்படவில்லை என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>தொகுப்பை வழங்குவதில் அலட்சியம்</h2><p>காவிரி பாசன மாவட்டங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் குறுவை சாகுபடி செய்யும் உழவர்களுக்கு உரம், விதைகள் மற்றும் நேரடி உதவி என பல வடிவங்களில் ஏக்கருக்கு ரூ.4000 கிடைக்கும் வகையில் குறுவைத் தொகுப்பு அறிவிக்கப்பட்டு, 70 நாள்களாகியும் இன்று வரை உழவர்களுக்கு வழங்கப்படவில்லை. மிகவும் நெருக்கடியான காலத்தில் உழவர்களுக்கு கிடைக்க வேண்டிய குறுவைத் தொகுப்பை வழங்குவதில் காட்டப்படும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.</p><p>மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், நடப்பாண்டில் இன்று வரை மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையில், உழவர்கள் குறுவை சாகுபடி செய்வதை ஊக்குவிக்கும் வகையில், எப்போதும் வழங்கப்படும் குறுவைத் தொகுப்பை விரைந்து வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில் தான் கடந்த ஜூன் 12-ஆம் தேதி குறுவைத் தொகுப்பு வழங்குவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது.</p><h2>உடனடியாக வழங்க வேண்டும்</h2><p>குறுவை சாகுபடி தொகுப்பு என்பதே நெற்பயிர்களை நடவு செய்யும் காலத்திலும், அதைத் தொடர்ந்து வரும் சில நாள்களிலும் வழங்கப்பட வேண்டியதாகும். ஆனால், நடவு முடிந்து விரைவில் அறுவடை தொடங்கவுள்ளது. இன்னும் 10 நாள்களில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் கொள்முதல் பருவம் தொடங்கவுள்ள நிலையில், இன்று வரை குறுவைத் தொகுப்பு வழங்கப்படாமல் இருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.</p><p>உழவர்களுக்கான உதவி என்பது அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயருக்கு ஆக்சிஜன் வழங்கப்படும் வேகத்தில் அளிக்கப்பட வேண்டும். இதை அரசு உணர்ந்து கொண்டு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">உழவர்களுக்கான </a>குறுவைத் தொகுப்பை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>குன்னூரில் கார் செங்குத்தாக கவிழ்ந்து விபத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/car-overturns-vertically-in-accident-in-coonoor</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/car-overturns-vertically-in-accident-in-coonoor#comments</comments><guid isPermaLink="false">e7281bfc-9837-41f6-80d9-334d47caefdc</guid><pubDate>Fri, 21 Aug 2026 06:07:47 +0000</pubDate><atom:updated>2026-08-21T06:07:47.697Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,கார்,நீலகிரி,traffic jam,Police advice</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/06uq0roc/28.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ செங்குத்தாக கவிழ்ந்த கார்]]></media:title><media:description type="html"><![CDATA[ குன்னூரில் கார் கவிழ்ந்து விபத்து]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/06uq0roc/28.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நீலகிரி மாவட்டம் </a>குன்னூர் மலைப்பாதைப் பகுதியில் ஆன்மீகப் பயணமாக கோவிலுக்குச் சென்று கொண்டிருந்த 3 பேர் பயணித்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் செங்குத்தாக தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காரில் இருந்த 3 பேரும் அதிர்ஷ்டவசமாக பெரும் ஆபத்தின்றி உயிர் தப்பினர்.</p><h2>விபத்து</h2><p>கோவிலுக்குச் செல்வதற்காக 3 பேர், காரில் குன்னூர் மலைப்பாதை வழியாகச் சென்று கொண்டிருந்தனர். வளைவுகள் நிறைந்த மலைப்பாதைப் பகுதியில் கார் சென்றபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் ஓரத்தில் செங்குத்தாக கவிழ்ந்து நின்றது. கார் தலைகீழாக நின்ற காட்சியைக் கண்டு அந்த வழியாக வந்த பிற வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.</p><h2>மீட்புப் பணிகள்- ஆஸ்பத்திரியில் அனுமதி</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">விபத்து</a> நடந்த உடனே, அங்கிருந்த உள்ளூர் பொதுமக்களும் பிற வாகன ஓட்டிகளும் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 3 பேரையும் பத்திரமாக வெளியே மீட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர், காயமடைந்தவர்களை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக உடனடியாக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.</p><h2>போக்குவரத்து சீரமைப்பு</h2><p>மலைப்பாதையின் முக்கிய வளைவில் இந்த விபத்து நிகழ்ந்ததால், குன்னூர் வழித்தடத்தில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்துக்குள்ளான காரை அப்புறப்படுத்தி, போக்குவரத்தைச் சீரமைத்தனர். மலைப்பாதைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் தங்களின் வேகத்தைக் குறைத்து, எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என போக்குவரத்துப் போலீசார் மீண்டும் அறிவுறுத்தியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>மனைவியின் கள்ளக்காதல்.. கண்டித்தும் தொடர்ந்த தகாத உறவு: தச்சுத்தொழிலாளி எடுத்த விபரீத முடிவு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wifes-illicit-affair-illicit-relationship-continued-despite-warnings-carpenter-takes-a-drastic-step</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wifes-illicit-affair-illicit-relationship-continued-despite-warnings-carpenter-takes-a-drastic-step#comments</comments><guid isPermaLink="false">545de88b-6f44-4ab0-baef-2a7419aae224</guid><pubDate>Fri, 21 Aug 2026 05:57:16 +0000</pubDate><atom:updated>2026-08-21T05:57:16.077Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Mayiladuthurai,கள்ளக்காதல்,fake love,wife,மனைவி,மயிலாடுதுறை,கணவன் தற்கொலை,husband suicide</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/5k2i91mr/vara.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/5k2i91mr/vara.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மயிலாடுதுறை, </p><p>மனைவியின் தகாத உறவால் தச்சுத்தொழிலாளி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், அவரது மனைவியின் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.</p><h2>தச்சுத்தொழிலாளி</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/mayiladuthurai">மயிலாடுதுறை</a> மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள வேட்டங்குடி கிராமம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 44). தச்சுத்தொழிலாளியான இவருக்கும், மயிலாடுதுறையை சேர்ந்த துர்காதேவி (41) என்பவருக்கும் 11 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.</p><h2>தகாத உறவு</h2><p>கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடேசன் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மீண்டும் தனது ஊரான வேட்டங்குடிக்கு திரும்பி வந்தார்.</p><p>இந்த நிலையில் அதே கிராமத்தில் வெங்கடேசன் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசித்து வரும் பாலகுருவுக்கும் (40), வெங்கடேசன் மனைவி துர்கா தேவிக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்தது. இவர்களது தகாத உறவு வெங்கடேசனுக்கு தெரிய வந்தது.</p><h2>தாய் வீட்டிற்கு சென்ற மனைவி</h2><p>இதனால் கடந்த 15 நாட்களுக்கு முன்பு துர்காதேவியை வெங்கடேசன் திட்டினார். இதில் கோபித்துக்கொண்டு மயிலாடுதுறை அருகே உள்ள சோழ சக்கரநல்லூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு துர்காதேவி சென்று விட்டார்.</p><p>துர்காதேவி தனது தாய் வீட்டிற்கு சென்ற பிறகும் பாலகுரு அவருடன் தொடர்ந்து பேசி உறவு வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வெங்கடேசன் நேற்று முன்தினம் தனது வீட்டிற்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.</p><h2>போலீசார் வழக்குப்பதிவு</h2><p>இந்த நிலையில் அவர் இறப்பதற்கு முன்பு செல்போன் வாட்ஸ் அப்பில் தனது சாவுக்கு பாலகுரு தான் காரணம் என்றும் பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.</p><p>இதுகுறித்து புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை தற்கொலைக்கு தூண்டியதாக பாலகுருவை கைது செய்தனர். மேலும் தலைமறைவான துர்காதேவியை தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சபாநாயகருக்கு வாழ்த்தும்... சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தலும்... சட்டசபையில் இன்றைய நிகழ்வுகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wishes-for-the-speaker-advice-to-the-mlas-todays-proceedings-in-the-legislative-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wishes-for-the-speaker-advice-to-the-mlas-todays-proceedings-in-the-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">70b9df91-83bb-4ccd-aafa-6fc31d406711</guid><pubDate>Fri, 21 Aug 2026 05:56:12 +0000</pubDate><atom:updated>2026-08-21T05:56:12.983Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,சட்டசபை,TN Assembly,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/19qsw6pr/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/19qsw6pr/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>சபாநாயகருக்கு வாழ்த்துகள்...</h2><p>தமிழ்நாடு சட்டசபையில் நீதி, சிறை, சட்டம், எரிசக்தி, அறநிலையத் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "பேரவைத் தலைவரான நீங்கள், இந்த அவையை மிகவும் சிறப்பாக வழிநடத்தி கொண்டு செல்கிறீர்கள். எங்களுக்கும் வாய்ப்பு தந்தாலும் எங்களைவிட ஆளும் கட்சியினருக்கு அதிக வாய்ப்பு கொடுக்கிறீர்கள்.</p><p>ஆளும் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆதாரம் இல்லாமல் ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். நீங்களும் அதை அவைகுறிப்பில் இருந்து நீக்குகிறீர்கள். எதிர்கட்சிகளைவிட ஆளும்கட்சி உறுப்பினர்கள் பேசுவதை அதிகமாக நீங்கள்தான் அவைகுறிப்பில் இருந்து நீக்கி வரலாறு படைத்திருக்கிறீர்கள். அதற்கு என் வாழ்த்துகள்.</p><h2>உருட்டல், மிரட்டல்...</h2><p>சட்டப்பேரவை நேரலை செய்யப்படுகிறது. நாங்கள் கேள்வி கேட்டால் ஆச்சரியப்படும் அளவுக்கு பதில் தருகிறார்கள். இப்போது பாட்டு எல்லாம் பாடுகிறார்கள். நாங்கள் சட்டப்பேரவைக்கு வந்திருக்கிறோமா, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோமோ என்று சந்தேகம் வருகிறது. நீங்கள் இதையெல்லாம் அவைக் குறிப்பில் இருந்து நீக்கினாலும் ரீல்ஸ் மூலமாக சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்படுகிறது. நீங்கள் அதை நீக்குவதை அர்த்தமில்லாமல் போய்விடுகிறது.</p><p>தனது டேபிளில் பைல் இருப்பதாகவும், திறந்து பார்க்க வைத்துவிடாதீர்கள் என்று முதல்-அமைச்சர் விஜய் பேசினார். தயவு செய்து அவர் திறந்து பார்க்க வேண்டும், நடவடிக்கை எடுக்க வேண்டும். எதற்காக பயப்படுகிறீர்கள்? காலம் தாழ்த்துகிறீர்கள்? ஜோதிடர் சொன்னால் தான் திறப்பீர்களா? நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா?. நடவடிகை எடுப்பேன் என உருட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் பயப்பட மாட்டோம் என்றார்.</p><h2>திமுகவை தோற்கடித்து...</h2><p>இதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "மிசாவைப் பார்த்த தனிப்பெரும் இயக்கமான திமுகவை தோற்கடித்து வெற்றி பெற்றிருக்கிறோம். அனைத்துத் துறைகளிலும் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். தவறுகள் மீது ஆதாரத்துடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றுதான் முதல்-அமைச்சர் அன்று சொல்ல வந்தது. இவர்கள் செய்யாத ரீல்ஸா? நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் யார் பெயரைக் கூறி பதவியேற்றுக்கொண்டார்கள்?</p><p>2021 தேர்தல் அறிக்கையில் சட்டப்பேரவை நேரலை செய்யப்படும் என்று சொன்னீர்களே ஏன் செய்யவில்லை?. நேரலை செய்து வெளிப்படையாக நடத்தக்கூடிய தைரியம் திமுகவுக்கு இதுவரை இருந்ததில்லை. தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே முதல்முறையாக ஜனநாயகத்தை காக்க நேரலை செய்து வருகிறோம்" என்று கூறினார். இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், சட்டப்பேரவையில் முதல்முதலில் கேள்வி நேரத்தை நேரலை செய்தது திமுகதான் என்றார். இவ்வாறு காரசார விவாதம் நடந்தது.</p><h2>டிரெண்டாகி</h2><p>தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "சட்டப்பேரவையில் நாங்கள் பேசியவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிட்டீர்கள். ஆனால், இவையனைத்தும் நேரலையில் சென்று விட்டது. இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? சட்டப்பேரவை அலுவல் நேரலையை நாங்கள் எதிர்க்கவில்லை. அது ஒரு நல்ல முயற்சி, அதனை நாங்கள் பாராட்டுகிறோம். அவைக்குறிப்பில் நீங்கள் நீக்கியவையெல்லாம் சமூக ஊடகங்களில் டிரெண்டாகி வருகிறது" என்று தெரிவித்தார்.</p><h2>சபாநாயகர் வலியுறுத்தல்</h2><p><strong>இதற்கு பதிலளித்து பேசிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கூறியதாவது:-</strong></p><p>குற்றச்சாட்டுகளை எந்தப் பக்கம் இருந்து வைத்தாலும், ஆதாரபூர்வமான கருத்துகளைச் சொல்வதன் மூலமாகவே அவையின் குறைந்தபட்ச மாண்பை நாம் காப்பாற்ற முடியும். அதே வேளையில், ஆதாரமற்ற கருத்துகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டியது என்பது அவையின் மரபு.</p><p>இனி வருங்காலத்திலும் அவைக் குறிப்பில் இருந்து நீக்குவது என்பது எனது தனிப்பட்ட உரிமை. ஏனெனில், அவையின் மாண்பை காப்பாற்றியாக வேண்டும்.</p><p>மேலும், அவைக் குறிப்பில் இருந்து கருத்துகளை நீக்காமல் பேச முயற்சிப்பதும், ஆதாரங்கள் இல்லாமல் பேசாமல் இருப்பது நல்லது. ஏனெனில், இரு தரப்பினரும் ஆதாரங்களை வைத்துக் கொண்டுதான் பேச வேண்டும் என நானும் மக்களும் விரும்புகிறோம். போகிற போக்கிலே அள்ளித் தெளித்துப் போகிற இடமல்ல இது. இங்கு பேசும்போது அவையின் கண்ணியத்தையும் காப்பாற்ற வேண்டும்.</p><p>எல்லா பேச்சுகளை நீக்குவது என்பது எனது நோக்கமல்ல. இருப்பினும், அவைக்குப் பயன்தராத, நம் பண்பாட்டுக்கு உதவாத, அவையின் மாண்பைக் குறைக்கக்கூடிய எந்த விஷயமாக இருந்தாலும், அவற்றை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவேன்" என்று தெரிவித்தார்.</p><h2>இது தான் மரபா? - ஓபிஎஸ் கேள்வி</h2><p>எதிர்கட்சி தலைவருக்கான மரியாதையை சபையில் தர வேண்டும். கேபினேட் அந்தஸ்து எதிர்கட்சி தலைவருக்கு உள்ளது. அவர் பேசிக் கொண்டிருக்கும் போது, திடீரென அமைச்சர் எழுந்து பேசுகிறார்கள். இது மரபா?. 4 முறை எதிர்கட்சி தலைவர் எந்திருச்சு எந்திருச்சு உட்கார்றாரு.. நீங்க மத்தவங்கள பேச கூப்புடுறீங்க.. இது எந்த விதத்துல நியாயம் என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார்.</p><p>நீங்கள் பேசுவது எனக்கு புரிகிறது. முதல்-அமைச்சர் பற்றி பேசும்போது, அமைச்சர் எழுந்து பேசாமல் போனால், இங்கு அமர்ந்திருப்பதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பதில் அளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>சிவகங்கை அருகே 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈமச்சின்னங்கள் கல்வட்டம் கண்டெடுப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/3000-year-old-burial-monuments-and-a-stone-circle-discovered-near-sivaganga</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/3000-year-old-burial-monuments-and-a-stone-circle-discovered-near-sivaganga#comments</comments><guid isPermaLink="false">512ee20d-a122-43e4-8bd8-38e08b1c0f00</guid><pubDate>Fri, 21 Aug 2026 05:50:18 +0000</pubDate><atom:updated>2026-08-21T05:50:18.135Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சிவகங்கை,Sivagangai,கற்கால பொருட்கள்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/x0cm1krr/10.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/x0cm1krr/10.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை,  </p><p>சிவகங்கை அருகே 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வட்டம் மற்றும் ஈமச்சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டன.</p><h2>பழங்கால கற்கள்</h2><p>சிவகங்கை மாவட்டம், ஒக்கூர் அருகே உள்ள பிரவலூர் கிராமத்தில் பழங்கால கற்கள் இருப்பதாக இக்கிராமத்தை சேர்ந்த சரவணன், அஜய், மதிச்செல்வம், செந்தூர், பாலசுப்பிரமணியன், மணி ஆகியோர் அளித்த தகவலின் பேரில் அழகப்பா அரசு கலைக்கல்லூரியின் வரலாற்றுத்துறை இணைப்பேராசிரியர் வேலாயுதராஜா களஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த கற்கள் ஆனது 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங் கற்கால ஈமச்சின்னங்கள் மற்றும் கல்வட்டம் என்பது தெரியவந்தது.</p><p>இதுகுறித்து அவர் கூறியதாவது:-</p><p>பிரவலூர் கிராமத்தின் வடக்குப்பகுதியில், கடம்பன்குடி கண்மாய்க்கு தெற்கு பகுதியில் பரந்துவிரிந்த ஒரு மேட்டுப்பகுதியும், அதன் அருகில் வறண்ட நிலையில் ஒரு ஓடையும் காணப்படுகிறது. அதன் மேற்பரப்பில் ஏராளமான கல்வட்டங்களும், ஈமத்தாழிகளும் காணப்படுகின்றன. மண் அரிப்பு காரணமாக பெரும்பாலான ஈமத்தாழிகள் வெளியில் நன்கு தெரிகின்றன. மேலும் அதிகமான கல்வட்டங்களும், 2 குத்துக்கற்களும் காணப்படுகின்றன.</p><p>மேலும் ஆங்காங்கே உடைந்த கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகளும், இரும்புக்கசடுகளும், குவார்ட்ஸ் வகைக்கற்களும் காணப்படுகின்றன. இவை 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால ஈமச்சின்னங்களாக இருக்க சாத்தியக்கூறுகள் உள்ளன. இறந்தவர்களை புதைத்த இடத்திலோ அல்லது அவரது எலும்புகளை புதைத்த இடத்திலோ பெரிய கற்களை கொண்டு எடுக்கப்பட்ட ஈமச்சின்னங்களை, பெருங்கல் சின்னங்கள் என கூறுகிறார்கள்.</p><h2>பெருங்கற்கால சின்னங்கள்</h2><p>இங்கு இரும்பை உருக்கி கருவிகள் செய்யப்பட்டிருக்கலாம். ஏனெனில் பிரவலூரில் உள்ள இப்பகுதியில் இரும்பு கசடுகள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவை சிவகங்கை மாவட்ட தொல்லியல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதால், இப்பகுதியில் விரிவான ஆய்வு செய்வ தன்மூலம் மேலும் அதிக தகவல்கள் தெரிய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>விஜய்க்கு இருக்கும் திமிர்தான் ஜெயலலிதாவுக்கும் இருந்தது.. கடைசியில என்ன நடந்துச்சு? - ஆர்.எஸ்.பாரதி சர்ச்சை பேச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/jayalalithaa-possessed-the-same-arrogance-that-vijay-has-what-happened-in-the-end-rs-bharathis-controversial-remarks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/jayalalithaa-possessed-the-same-arrogance-that-vijay-has-what-happened-in-the-end-rs-bharathis-controversial-remarks#comments</comments><guid isPermaLink="false">66a2ed7f-a6ad-4fb6-b697-44658fdedcb6</guid><pubDate>Fri, 21 Aug 2026 05:36:14 +0000</pubDate><atom:updated>2026-08-21T05:36:14.623Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,ஆர்.எஸ்.பாரதி,RS Bharathi,ஜெயலலிதா,Jayalalitha,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/pyl7un2y/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/pyl7un2y/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை திருவொற்றியூரில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசியதாவது:-</p><p>விஜய் அவர்களே.. திருவொற்றியூர் கூட்டம் வாயிலாக உங்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். இப்பத்தான் உங்களுக்கு கேடு காலம் ஆரம்பித்துள்ளது. இப்படித்தான் 1991-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது டான்சி நில விவகாரம் பிரச்சனையானது.</p><p>ஆட்சிக்கு வந்த இரண்டே மாதங்களில் முதல்-அமைச்சர் விஜய் டெண்டரில் ஊழல் செய்துள்ளார். அதேபோல 1991-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த இரண்டே மாதங்களில் டான்சி நிலம் வாங்கப்பட்டது. நான் தான் முதல்முதலாக அது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த ஆவணங்களை எல்லாம் பார்த்து தப்பு என்று நான் தான் கூறினேன். </p><p>அந்தம்மா வேறு ஏதும் உலகமகா தப்பு செய்யவில்லை. அந்தம்மாவே நிலம் வாங்கியதை ஒப்புக் கொண்டார். இன்றைக்கு முதல்-அமைச்சர் விஜய்க்கு இருக்கும் திமிரை போலத்தான் அன்றைக்கு ஆட்சிக்கு வந்த முதல்முறை ஜெயலலிதாவுக்கும் திமிர் இருந்தது. காரணம் எதிர்க்கட்சியில் யாரும் இல்லை. ஒரே ஒரு கலைஞர் மட்டும் தான் வெற்றி பெற்றார். டான்சி நிலம் வாங்கினேன். அதில் என்ன தவறு என கேட்டார். அவராக வாய் விட்டு சிக்கி கொண்டார். அதுதான் கடைசிவரை அந்த அம்மாவை சிறைக்கு கொண்டு சென்றது.</p><p>இந்த ஆட்சியிலும் முதல் வழக்கே அப்படித்தான் ஆரம்பித்துள்ளது. இப்போதே சொல்கிறேன், சென்டிமென்டலாக முதன்முதலாக இவரும் அந்த இடத்தில் இருந்து தான் ஆரம்பித்துள்ளார். கடைசியாக ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார். ஆர்.எஸ். பாரதியின் இந்த பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய்யுடன் ரிசர்வ் வங்கி கவர்னர் சந்திப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/reserve-bank-governor-meets-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/reserve-bank-governor-meets-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">c328601e-b994-4abc-ae67-5ef18dfab9e2</guid><pubDate>Fri, 21 Aug 2026 05:28:37 +0000</pubDate><atom:updated>2026-08-21T05:28:37.555Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,விஜய்,தமிழக அரசு,ரிசர்வ் வங்கி கவர்னர்,TamilNadu Goverment,Reserve Bank Governor,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/70uu68xr/Untitled-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/70uu68xr/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா சந்தித்து பேசினார். </p><p>இந்த சந்திப்பின்போது, தலைமைச் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">செயலாளர் </a>மு.சாய்குமார், இந்திய ரிசர்வ் வங்கியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல இயக்குநர் உமா சங்கர், தலைமை பொது மேலாளர் யாராசி ஜெயக்குமார் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>108 ஆம்புலன்சில் கர்ப்பிணி பெண்ணுக்கு சுகப்பிரசவம்.. தாயும் சேயும் நலம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/baby-girl-born-in-108-ambulance-mother-and-child-are-doing-well</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/baby-girl-born-in-108-ambulance-mother-and-child-are-doing-well#comments</comments><guid isPermaLink="false">46eaed34-18d6-467f-bcb7-a47a9e05c4f8</guid><pubDate>Fri, 21 Aug 2026 05:28:25 +0000</pubDate><atom:updated>2026-08-21T05:28:25.719Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>புதுக்கோட்டை,Government Hospital,108 Ambulance,baby girl,பெண் குழந்தை,கர்ப்பிணிப் பெண்</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/uc3xhiws/27.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ மருத்துவ உதவியாளர்- ஆம்புலன்ஸ் ஓட்டுநர்-பெண் குழந்தை]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆம்புலன்சில் பெண் குழந்தை பிறந்தது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/uc3xhiws/27.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுக்கோட்டை,</p><p>புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசவ வலியால் துடித்த நிறைமாத <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF">கர்ப்பிணி</a> ஒருவருக்கு ஆஸ்பத்திரிக்குச் செல்லும் வழியிலேயே, 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் அவசரக்கால மருத்துவப் பணியாளர்கள் துரிதமாகச் செயல்பட்டு பிரசவம் பார்த்தனர். இதன் மூலம் அந்தப் பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.</p><h2>நடுவழியில் கடுமையான பிரசவ வலி</h2><p>புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பொண்ணு (வயது 32). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு திடீரென கடுமையான பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவரது குடும்பத்தினர் 108 அவசர ஆம்புலன்ஸ் சேவைக்குத் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் குழுவினர், கர்ப்பிணிப் பெண்ணை ஏற்றிக்கொண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர்.</p><h2>துரிதமாகச் செயல்பட்ட மருத்துவக் குழு</h2><p>ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில், கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவ வலி மிகவும் தீவிரமடைந்தது. ஆஸ்பத்திரிக்குச் செல்ல இன்னும் நேரம் எடுக்கும் என்பதை உணர்ந்த ஆம்புலன்ஸ் அவசர மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர், வாகனத்தை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தினர். தொடர்ந்து, மருத்துவக் கட்டுப்பாட்டு அறையின் உரிய ஆலோசனைகளுடன் ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே அவசரப் பிரசவம் பார்க்கப்பட்டது.</p><h2>தாயும் சேயும் நலம்</h2><p>மருத்துவப் பணியாளர்களின் சாதுர்யமான மற்றும் துரிதமான செயல்பாட்டால், பொண்ணு என்ற அந்தப் பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது. முதலுதவிகள் அனைத்தும் செய்யப்பட்ட பின்னர், தாயும் குழந்தையும் பாதுகாப்பாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாக <a href="https://www.dailythanthi.com/topic/hospital-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF">ஆஸ்பத்திரி</a> வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><h2>பாராட்டுகள்</h2><p>சரியான நேரத்தில் உரிய முதலுதவிகளை வழங்கி, 2 உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கு கர்ப்பிணியின் உறவினர்களும் பொதுமக்களும் தங்களது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்து மிதந்ததற்கு தொழிற்சாலை கழிவுகள் காரணமா..? - அமைச்சர் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/are-industrial-effluents-the-reason-for-dead-fish-floating-in-the-ennore-kosasthalaiyar-river-ministers-clarification</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/are-industrial-effluents-the-reason-for-dead-fish-floating-in-the-ennore-kosasthalaiyar-river-ministers-clarification#comments</comments><guid isPermaLink="false">89f63473-129e-4a86-9983-2019a76a60c4</guid><pubDate>Fri, 21 Aug 2026 05:22:18 +0000</pubDate><atom:updated>2026-08-21T05:22:18.323Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,மீன்கள்,தமிழக சட்டசபை,TN Assembly,Kosasthalai river,கொசஸ்தலை ஆறு,தங்கம் தென்னரசு,Assembly Session,சட்டசபை கூட்டத்தொடர்,Edappadi Palanisami,Thangam Tennarasu,தமிழக சட்டசபை கூட்டத்தொடர்,எடப்பாடி  பழனிசாமி,அமைச்சர் ராஜீவ்,minister rajiv</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/n4z3872t/vara.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/n4z3872t/vara.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்து மிதந்தது தொடர்பாக சட்டசபையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/edappadi-palanisamy">எடப்பாடி பழனிசாமி</a> சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். </p><h2>எடப்பாடி பழனிசாமி</h2><p>அப்போது அவர் கூறுகையில், “எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் கழிவுகள் கலப்பதால் மீன்கள் கொத்து கொத்தாக செத்து மிதக்கின்றன. இதனால் அந்த பகுதியில் வசித்து வரும் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிற்சாலைகளின் கழிவுகள் நீரில் கலப்பதால் இந்த நிலை ஏற்பட்டதாக மீனவர்கள் கூறுகின்றனர்.  கழிவுகள் ஆற்றில் கலப்பதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அரசு உடனடியாக தலையிட்டு மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.</p><h2>அமைச்சர் ராஜீவ்</h2><p>இந்நிலையில் எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதந்த விவகாரம் தொடர்பாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ் விளக்கம் அளித்தார்.  </p><p>இதுதொடர்பாக சட்டசபையில் பேசிய அவர், “எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்து மிதந்ததற்கு தொழிற்சாலைக் கழிவுகள் காரணம் அல்ல. மனிதக் கழிவுகள் உள்பட கழிவு நீர் கலப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என தெரியவருகிறது. எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. 10 நாட்களுக்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று  அமைச்சர் ராஜீவ் கூறினார். </p><h2>முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு</h2><p>இதனிடையே முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், “"சென்னையின் ஜீவாதாரமாக விளங்கும் வடசென்னை கொசஸ்தலை ஆறு மற்றும் அதன் முகத்துவாரப் பகுதிகள், தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பதால் தொடர்ந்து மாசடைந்து வருகின்றன. ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பது வாடிக்கையாகிவிட்டதால், அப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கொசஸ்தலை ஆற்றுப் பகுதியைச் சூழலியல் மண்டலமாக அறிவித்து, அரசு உடனடியாகத் தலையிட்டுத் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று கூறினார். </p><h2>பாமக சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார்</h2><p>இதேபோல் பாமக சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார் கூறுகையில், “சென்னையின் முக்கிய நதிகளில் ஒன்றான கொசஸ்தலை ஆற்றில், அனல் மின் நிலையங்கள் மற்றும் ரசாயன தொழிற்சாலைகளின் கழிவுகள் கலப்பதால் மீன்கள் செத்து மிதக்கிறது. மீன்கள் செத்து மிதப்பது முதல் முறை அல்ல. இதனை தடுத்து சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் பாதுகாக்க தனியாக ஆணையம் அமைக்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார். </p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/GWXD2r2zXwY"></iframe></figure>]]></content:encoded></item><item><title>காட்டின் காவலனுக்கே பாதுகாப்பில்லையா? அதிர்ச்சி தரும் உயிரிழப்பு புள்ளிவிவரங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/are-the-forest-guards-not-even-safe-shocking-death-toll-statistics</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/are-the-forest-guards-not-even-safe-shocking-death-toll-statistics#comments</comments><guid isPermaLink="false">0493cf52-59a7-4209-bb1c-7fc533a3e22f</guid><pubDate>Fri, 21 Aug 2026 05:21:41 +0000</pubDate><atom:updated>2026-08-21T05:21:41.302Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Death,உயிரிழப்பு,Elephants,யானைகள்,புள்ளிவிவரங்கள்,Statistics</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/0qc17lyw/elephant.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/0qc17lyw/elephant.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி,</p><p>காடுகளின் காவலனாகவும், இயற்கையின் சமநிலையை பேணும் முதன்மை உயிரினமாகவும் திகழ்பவை யானைகள். காடுகளின் வளத்தை பெருக்குவதில் யானைகள் முக்கிய பங்காற்றுகின்றன.</p><h2>காட்டின் பேருயிர்</h2><p>காடுகளில் இரை தேடி பயணிக்கும் யானைகள் செடிகள், மரக்கிளைகளை ஒடித்து தின்பதோடு, செல்லும் இடங்கள் எங்கும் விதைகளை விதைக்கின்றன. யானைகளின் சாணத்தில் எண்ணற்ற விதைகள் இருக்கும். சாணத்தை உரமாக்கி அந்த விதைகள் வளர்ந்து காட்டை வளமாக்குகின்றன. யானைகளின் வியக்கத்தக்க வாழ்வியலும், அவற்றின் ஆழமான குடும்ப பிணைப்பும் இயற்கையின் வரப்பிரசாதம் எனலாம். காட்டின் பேருயிரான யானைகள் சுதந்திரமாக உலா வரும்போது காடுகளின் வளம் பெருகுகிறது. ஆனால், தமிழகத்தில் காட்டு யானைகளின் உயிரிழப்பு என்பது, அவற்றால் பாதுகாப்பாக காடுகளில் உலாவ முடிகிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறது.</p><h2>1,883 யானைகள் உயிரிழப்பு</h2><p>தமிழக காடுகளில் யானைகளின் உயிரிழப்பு அடிக்கடி நிகழ்கின்றன. வயது முதிர்வு. நோய் பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பு ஒருபுறம் என்றால், இயற்கைக்கு மாறான உயிரிழப்பு சம்பவங்களும் நடக்கின்றன. இந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் இதுவரை 40-க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளன. கடந்த 15 ஆண்டுகளில் 1,883 யானைகள் செத்து மடிந்துள்ளன. அதில் இயற்கையான மரணம் 1,663 ஆகும். யானை-மனித மோதலில் மின்சாரம் பாய்தல், வேட்டையாடுதல், விபத்தில் சிக்குவது போன்ற இயற்கைக்கு மாறாக உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை மட்டும் 199-ஐ தொட்டுள்ளது.</p><h2>யானைகளுக்கு பாதுகாப்பு இல்லையா?</h2><p>தேனி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 15 ஆண்டுகளில் 30 யானைகள் உயிரிழந்துள்ளன. அதில் 18 யானைகள் இயற்கையாகவும், 12 யானைகள் இயற்கைக்கு மாறாகவும் இறந்துள்ளன. மாவட்டத்தில் மேகமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தான் இந்த 30 யானைகளும் இறந்துள்ளன. அதில் வருசநாடு வனச்சரகத்தில் 4, கூடலூர் வனச்சரகத்தில் 7, மேகமலை வனச்சரகத்தில் 4, சின்னமனூர் வனச்சரகத்தில் 6, கம்பம் கிழக்கு வனச்சரகத்தில் 9 யானைகள் உயிரிழந்துள்ளன. இதில் மின்விபத்தில் சிக்கி மட்டும் 7 யானைகள் செத்துள்ளன. 2 யானைகள் தந்தத்திற்காக வேட்டையாடப்பட்டுள்ளன. இயற்கைக்கு மாறான உயிரிழப்புகளில் தமிழக சராசரியை விட தேனி மாவட்டத்தின் சராசரி மிக அதிகமாக உள்ளது. மாநில அளவில் மொத்த இறப்புகளில் இயற்கைக்கு மாறான உயிரிழப்பு 10.57 சதவீதமாக உள்ள நிலையில், தேனி மாவட்டத்தில் இது 40 சதவீதமாக உள்ளது. எனவே. காடுகளின் காவலனாக திகழும் யானைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? என்பது இயற்கை ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.</p><h2>தேவையான நடவடிக்கை</h2><p>யானைகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை வனத்துறையினர் தீவிரப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. மாவட்ட வனப்பகுதிகளில் அந்நிய களைச்செடிகளின் ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளது. அந்த களைச்செடிகளை அகற்றிவிட்டு யானைகளுக்கு தேவையான பழ மரங்கள், இலைதழைகளை கொடுக்கும் மரங்கள், செடி வகைகளை வளர்க்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதுபோல், கடந்த காலங்களில் யானைகள் காட்டில் இறந்தால் அதை வனத்துறையினர் கண்டறியாமல் அழுகிய பின்பு கண்டுபிடித்த சம்பவங்களும் நடந்துள்ளன.</p><h2>வனத்துறையில் பணியாளர்கள் குறை</h2><p>இதுபோன்ற சம்பவங்களின் போது யானையின் இறப்புக்கான உண்மையான காரணத்தை அறிய முடியாமல் போகிறது. வனப்பரப்பளவுக்கு ஏற்ப ரோந்து செல்வதற்கு போதிய எண்ணிக்கையில் வனத்துறையில் பணியாளர்கள் இல்லை என்ற குறையும் உள்ளது. எனவே கூடுதல் பணியாளர்களை நியமிப்பதோடு, கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளையும் தீவிரப்படுத்த வேண்டும். ஏனெனில்,<a href="https://www.dailythanthi.com/topic/elephants"> யானை</a>களை பாதுகாப்பது என்பது காடுகளை பாதுகாப்பதற்கு சமம்.</p>]]></content:encoded></item><item><title>’ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள்.. மிரட்டல்களுக்கு திமுக பயப்படாது&apos; - உதயநிதி பேச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/take-action-if-there-is-evidence-the-dmk-will-not-be-intimidated-by-threats-says-udhayanidhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/take-action-if-there-is-evidence-the-dmk-will-not-be-intimidated-by-threats-says-udhayanidhi#comments</comments><guid isPermaLink="false">35e56cbd-ef28-4b6e-9624-b8321b97b8e6</guid><pubDate>Fri, 21 Aug 2026 05:14:17 +0000</pubDate><atom:updated>2026-08-21T05:14:17.846Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,சட்டசபை,Legislative Assembly</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/xluta68q/9.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/xluta68q/9.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில் பேசியதாவது;</p><h2>ஜோதிடர் சொல்ல வேண்டுமா?</h2><p>தனது டேபிளில் பைல் இருப்பதாகவும், திறந்து பார்க்க வைத்துவிடாதீர்கள் என்றும் முதல்வர் பேசினார். தயவு செய்து அவர் திறந்து பார்க்க வேண்டும், நடவடிக்கை எடுக்க வேண்டும். எதற்காக பயப்படுகிறீர்கள்? காலம் தாழ்த்துகிறீர்கள்? ஜோதிடர் சொன்னால் தான் திறப்பீர்களா? நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? நடவடிக்கை எடுப்பேன் என உருட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் பயப்பட மாட்டோம். </p><h2>சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி</h2><p>ஆளுங்கட்சியினர் எங்களுக்கு பதில் சொல்லும்போது ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டுகின்றனர். சட்டமன்றத்தில் பாட்டெல்லாம் பாடுகிறார்கள். எங்களுக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோமா அல்லது சட்டமன்றத்திற்கு வந்திருக்கிறோமா என்று சந்தேகப்படும் அளவுக்கு பாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. </p><p>நீங்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கும் கருத்துகள் ரீல்ஸ்சாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. நான் பேசியதை நீக்கிவிட்டீர்கள். ஆனால் அது சமூக வலைதளங்களில் வெளியாகிறது. அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடுகிறது என்பதை குறிப்பிடுகிறேன்.”</p><p>இவ்வாறு அவர் பேசினார். </p> ]]></content:encoded></item><item><title>புகைப்படக் கலைஞர்களை படம் எடுத்த முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-photographs-photographers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-photographs-photographers#comments</comments><guid isPermaLink="false">9ec75f75-49ff-48a8-be46-02104717a2c6</guid><pubDate>Fri, 21 Aug 2026 04:42:00 +0000</pubDate><atom:updated>2026-08-21T04:42:00.761Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,World Photography Day,உலக புகைப்பட தினம்,CM Vijay,புகைப்பட கலைஞர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/z3luizfa/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/z3luizfa/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>உலக புகைப்பட தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19-ந்தேதி கொண்டாடப்படுகிறது. புகைப்படக் கலையின் வரலாறு, அறிவியல் மற்றும் அதன் தாக்கத்தை போற்றும் வகையிலும், இக்கலையில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை கவுரவிக்கும் விதமாகவும் உலகெங்கிலும் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.</p><p>1839-ம் ஆண்டு பிரான்சின் லூயிஸ் டேகுயர் மற்றும் ஜோசப் நைபோர் ஆகியோர் இணைந்து 'டேகுயரோடைப்' என்ற புகைப்பட முறையைக் கண்டுபிடித்தனர். பிரெஞ்சு அரசு இதற்கான காப்புரிமையை வாங்கியதுடன், இந்த நாளைப் புகைப்படக் கலையின் தொடக்கமாக அறிவித்தது. முதன்முதலில் 2010 ம் ஆண்டு ஆகஸ்ட் 19 அன்று உலகளாவிய அளவில் ஆன்லைன் கேலரி மற்றும் கண்காட்சிகள் மூலம் உலக புகைப்பட தினம் கொண்டாடப்பட்டது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/hh7nz95s/Untitled-2.jpg" /></figure><p>இந்த நிலையில், நேற்று முன்தினம் உலக புகைப்பட தினம் கொண்டாடப்பட்டதையொட்டி முதல்-அமைச்சர் விஜய் புகைப்படக் கலைஞர்களுக்கு தனது மனமார்த்த வாழ்த்துகளை தெரிவித்து இருந்தார். இதனையடுத்து முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் உலக புகைப்பட நாளை முன்னிட்டு பத்திரிகை புகைப்படக் கலைஞர்களைக் காணொளி எடுத்து மகிழ்ந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="ta" dir="ltr">மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் 19.8.2026 அன்று உலக புகைப்பட நாளை முன்னிட்டு பத்திரிகை புகைப்படக் கலைஞர்களைக் காணொளி எடுத்து மகிழ்ந்தார்.<a href="https://x.com/hashtag/CMJosephVijay%E2%80%8C?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CMJosephVijay‌</a> <a href="https://t.co/oKk4Hzr7cU">pic.twitter.com/oKk4Hzr7cU</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2090640680293114145?ref_src=twsrc%5Etfw">August 21, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>நயினார் நாகேந்திரனுக்கு டெல்லி அழைப்பு; தமிழக பாஜகவில் பரபரப்பு..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/summons-to-delhi-for-nainar-nagendran-stir-within-the-tamil-nadu-bjp</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/summons-to-delhi-for-nainar-nagendran-stir-within-the-tamil-nadu-bjp#comments</comments><guid isPermaLink="false">96e40ebc-ec08-4254-bb01-632de5f9dda8</guid><pubDate>Fri, 21 Aug 2026 04:13:45 +0000</pubDate><atom:updated>2026-08-21T04:13:45.907Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Delhi,பாஜக,BJP,Tamilnadu,டெல்லி,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,தமிழக பாஜக,தமிழக அரசியல்,பாஜக தலைமை அலுவலகம்,tn politics</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/ve4bsxq6/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/ve4bsxq6/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று காலை டெல்லி புறப்பட்டார். அதேபோல், பாஜகவின் முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசனும் இன்று மாலை டெல்லி செல்ல உள்ளார். இருவரின் டெல்லி பயணமும் தமிழக பாஜகவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.</p><h2>மேலிடத் தலைவர்களுடன் ஆலோசனை</h2><p>தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் பாஜகவின் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்துவது, கட்சியின் செயல்பாடுகள் மற்றும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பாஜக தேசிய தலைமை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>பாஜக மேலிடத்தின் அழைப்பை ஏற்று டெல்லி செல்லும் நயினார் நாகேந்திரன், தேசிய தலைவர்களை சந்தித்து கட்சியின் முக்கியப் பணிகள் மற்றும் தமிழக அரசியல் சூழல் குறித்து ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>அமித் ஷா ஆலோசனை</h2><p>சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்திருந்தார். அப்போது நயினார் நாகேந்திரனுக்கு கட்சிப் பணிகள் மற்றும் தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கியிருக்கலாம் என கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.</p><p>இதன் தொடர்ச்சியாகவே, தமிழக பாஜக தலைவருக்கு டெல்லி மேலிடம் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>புதிய பொறுப்புகள் குறித்து ஆலோசனை?</h2><p>தமிழக பாஜகவில் புதிய பொறுப்பாளர்களை நியமிப்பது தொடர்பாகவும் டெல்லியில் ஆலோசனை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசியல் சூழல் மற்றும் கட்சியின் எதிர்கால செயல்பாடுகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>வானதி சீனிவாசனுக்கும் அழைப்பு</h2><p>இதற்கிடையே, சமீபத்தில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் பதவியில் இருந்து <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu/vanathi-srinivasan-relieved-of-bjp-national-womens-wing-chief-post">வானதி சீனிவாசன்</a> விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், அவரும் இன்று மாலை டெல்லி செல்ல உள்ளார்.</p><p>வானதி சீனிவாசனுக்கு தமிழக பாஜகவில் முக்கியப் பொறுப்பு வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடைபெறலாம் என கட்சி வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.</p><h2>எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டெல்லி பயணம்</h2><p>நயினார் நாகேந்திரன் மற்றும் வானதி சீனிவாசனின் டெல்லி பயணம் தமிழக பாஜகவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவருடனும் தேசிய தலைமை நடத்தும் ஆலோசனைகளுக்குப் பிறகே, அவர்களின் பயணத்துக்கான முக்கிய காரணங்கள் மற்றும் கட்சியில் ஏற்பட உள்ள மாற்றங்கள் குறித்த முழுமையான தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஓமனில் சிக்கிய 5 தமிழக மீனவர்கள் மீட்பு! மாணிக்கம் தாகூர் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/5-tamil-nadu-fishermen-trapped-in-oman-rescued-manickam-thakur-reports</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/5-tamil-nadu-fishermen-trapped-in-oman-rescued-manickam-thakur-reports#comments</comments><guid isPermaLink="false">fb903ab6-9d5b-4364-af22-363d240a3b6f</guid><pubDate>Fri, 21 Aug 2026 04:03:03 +0000</pubDate><atom:updated>2026-08-21T04:03:03.821Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மீனவர்கள்,மீட்பு,மாணிக்கம் தாகூர்,Fishermen -,Manickam Thakur MP</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/z3xvyb3p/9.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/z3xvyb3p/9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக காங்கிரஸ் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">மாணிக்கம் தாகூர்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>ஓமனில் தவித்து வந்த கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த 5 தமிழக மீனவர்களை மீட்கக் கோரி வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அவர்களுக்கு நான் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><h2>5 மீனவர்கள் மீட்பு</h2><p>தற்போது 5 மீனவர்களும் மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகத்தின் பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான விசா காலாவதிக் கட்டண நடைமுறைகளை முறைப்படுத்தி, பாதுகாப்பாக தாயகம் அனுப்பி வைப்பதற்கான தூதரக நடவடிக்கைகள் அந்நாட்டு அதிகாரிகளுடன் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமைச்சர் அலுவலகம் தகவல் அனுப்பியது. அனைத்து மீனவர்களும் விரைவில் தாயகம் திரும்புவதை உறுதி செய்யத் தொடர்ந்து கண்காணிப்போம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணைக்கு புதிய திட்ட அறிக்கை: அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது - அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-project-report-for-mekedatu-dam-government-must-no-longer-remain-indifferent-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-project-report-for-mekedatu-dam-government-must-no-longer-remain-indifferent-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">f3dc83a6-9a8a-437c-a8b8-51cc709da62b</guid><pubDate>Fri, 21 Aug 2026 04:01:19 +0000</pubDate><atom:updated>2026-08-21T04:01:19.541Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,மேகதாது அணை,Mekedatu dam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/iwdxt50a/anbu.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/iwdxt50a/anbu.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;</p><p>“காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயாரித்து மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளது. உரிய அனுமதிகளை பெற்று அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் புதிய அணைக்கு அடிக்கல் நாட்டப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேகதாது அணைக்கு கர்நாடகம் இவ்வளவு தீவிரம் காட்டும் நிலையில் தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது.</p><p>மத்திய நீர்வள அமைச்சகத்திடம் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையில், மத்திய அரசால் ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்ட தொழில்நுட்ப அடிப்படையிலான சில திருத்தங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளனவே தவிர, அணையின் கொள்ளளவு, நீர்த்தேக்கப்பகுதி ஆகியவற்றில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதனால் தமிழகத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறைய வாய்ப்பில்லை.</p><p>புதிய விரிவான திட்ட அறிக்கையின்படி மேகதாது அணையின் கொள்ளளவு 67 டி.எம்.சியாக இருக்கும்;  அதில் 4.75 டி.எம்.சி மட்டும் பெங்களூர் நகரின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்படும்; 400 மெகாவாட் மின்திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணை கட்டி முடிக்கப்பட்டால் 12,500 ஏக்கர் வனப்பகுதி நீர்த்தேக்கப்பகுதியாக மாற்றப்பட்டு மூழ்கடிக்கப்படும். அணை கட்டப்படும் பகுதிகளில் உள்ள 8 லட்சத்து 90 ஆயிரம் மரங்கள் வெட்டி வீழ்த்தப்படும் என்றும் திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேகதாது அணை கட்டப்பட்டால், மிகமோசமான சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும்; 12,500 ஏக்கர் பரப்பளவிலான  காவிரி வனவிலங்கு சரணாலய நிலப்பகுதி நீரில் மூழ்கும். யானைகள், புலிகள், பறவைகள் வாழிடம் அழியும்; அதனால் வனவிலங்குகள் உள்ளிட்ட அரிய வகை விலங்குகள் அழியும்;  பல மலைவாழ் கிராமங்கள் மூழ்கும்; இது ஒரு மாபெரும் சூழலியல் பேரழிவாக அமையும் என்று பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி எச்சரித்து வந்தது. அது உண்மை என்பது புதிய விரிவான திட்ட அறிக்கை மூலம் மீண்டும் உறுதியாகி உள்ளது.</p><p>அதேபோல், பெங்களூர் நகரத்தின் குடிநீர் தேவைக்காக 4.75 டி.எம்.சி நீர் எடுப்பதற்காக 67 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட மேகதாது அணை கட்டுவது தேவையற்றது. பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக கூறி வருவதைப் போல, அணையின் கொள்ளளவு 67 டி.எம்.சி என கூறப்பட்டாலும் நீர்த்தேக்கப்பகுதி அதிகமாக இருப்பதால் 70 டி.எம்.சிக்கும் கூடுதலாக தேக்கி வைக்க முடியும். ஏற்கனவே, கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகரம், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய 4 அணைகளின் கொள்ளளவு 114.57 டி.எம்.சி ஆகும். இப்போது மேகதாது அணையையும் சேர்த்தால் மொத்தக் கொள்ளளவு 185 டி.எம்.சியாக அதிகரிக்கும். இது தவிர ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் 40 டி.எம்.சி நீரையும் சேர்த்து 225 டி.எம்.சி நீரை காவிரியின் குறுக்கே கர்நாடகம் தேக்கி வைத்தால் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு நீர் கூட வராது. அதனால் காவிரி பாசன மாவட்டங்கள் விரைவில் பாலைவனமாகி விடும். மேலும் சென்னை உள்ளிட்ட 25 மாவட்டங்களில் உள்ள 5 கோடி மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் போகும்.</p><p>திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்து தேவையான அனுமதிகளைப் பெற்று 2027&amp;ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் மேகதாது அணைக்கு அடிக்கல் நாட்டப்படும் என்று கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சாலுவராயசாமி தெரிவித்துள்ளார். இதுவும் பாட்டாளி மக்கள் கட்சியின் குற்றச்சாட்டை உறுதி செய்யும் வகையில் தான் உள்ளது. கர்நாடகத்தில் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத் தான் மேகதாது அணை விவகாரத்தை கர்நாடக காங்கிரஸ் அரசு தீவிரப்படுத்தி வருவதாக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து கூறிவருகிறது. கர்நாடகத்தில் 2028&amp;ஆம்  ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 2027&amp;ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மேகதாது அணைக்கு அடிக்கல் நாட்டப்பட்டால், அதையே பரப்புரையின் முக்கிய அம்சமாக மாற்றி, அரசியல்   இலாபம் தேடலாம் என்பது தான் கர்நாடக காங்கிரசின் திட்டம். மேகதாது அணை விவகாரத்தில் கடந்த சில ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி எதையெல்லாம் கணித்ததோ, அவையெல்லாம் நடந்து வருகின்றன.</p><p>மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு இவ்வளவு தீவிரம் காட்டி வரும் நிலையில், தமிழக அரசு இனியும் அலட்சியப் போக்கைத் தொடரக்கூடாது. மேகதாது அணை கட்டப்படுவதையும், காவிரியில் தமிழக உரிமைகளை பாதுகாக்கவும் அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் தமிழக அரசு உடனடியாகக் கூட்ட வேண்டும். அக்கூட்டத்தில்  எடுக்கப்படும் முடிவை முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கொண்ட குழு பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் அவர்களையும் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும். அப்போது தான் மேகதாது அணை கட்டுவதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க 2018&amp;ஆம் ஆண்டில் அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு அழுத்தம் தரத் தவறினால், மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிப்பதற்கு கூட வாய்ப்பு உள்ளது. அது நடந்தால் மிகப்பெரிய வரலாற்றுப் பிழையாகி விடும். அதற்கான பழியை காலம் முழுவதும் முதலமைச்சர் விஜய் அவர்கள் தான் சுமக்க நேரிடும்.</p><p>எனவே, மேகதாது அணை விவகாரத்தில் எந்த ஈகோவும் பார்க்காமல் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை முதலமைச்சர் விஜய் அவர்கள் கூட்ட வேண்டும். அதில் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு உடன்பாடு இல்லை என்றால், அனைத்துக் கட்சித் தலைவர்கள் அடங்கிய குழுவுடன் டெல்லி சென்று பிரதமர், நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோரையாவது நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>85 அடியை நெருங்கும் மேட்டூர் அணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mettur-dam-nearing-85-feet</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mettur-dam-nearing-85-feet#comments</comments><guid isPermaLink="false">1196764d-d8c1-40c4-b69a-4741ac26310f</guid><pubDate>Fri, 21 Aug 2026 04:00:10 +0000</pubDate><atom:updated>2026-08-21T04:00:10.687Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur dam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/ouaqiunr/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/ouaqiunr/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து சுமார் 14 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படும் நிலையில், ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 12 ஆயிரம் கனஅடியாக தொடர்கிறது.</p><p>இதன்காரணமாக மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 12 ஆயிரத்து 106 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 10 ஆயிரத்து 692 கனஅடியாக குறைந்தது. நேற்று முன்தினம் 83.52 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 84.50 அடியாக உயர்ந்தது.</p><p>இந்த நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 10,579 கன அடியாக உள்ளது. அணையின் நீர் மட்டம் 84.95 அடியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து 2000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 47.067 டி.எம்.சி. ஆக உள்ளது. திறக்கப்படும் நீரின் அளவை விட, வரத்து அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 85 அடியை நெருங்கியுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>