<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 25 Aug 2026 14:28:42 +0000</lastBuildDate><item><title>பாரதிராஜாவுக்கு மணி மண்டபம்: அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி - சீமான்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/memorial-hall-for-bharathiraja-seeman-thanks-the-tamil-nadu-chief-minister-for-the-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/memorial-hall-for-bharathiraja-seeman-thanks-the-tamil-nadu-chief-minister-for-the-announcement#comments</comments><guid isPermaLink="false">8672b4fe-447b-4087-9c23-286c236a5cb7</guid><pubDate>Tue, 25 Aug 2026 14:16:57 +0000</pubDate><atom:updated>2026-08-25T14:16:57.516Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,நாதக,சீமான்,NTK,Seeman,தமிழகம்,தமிழக அரசு,TN govt,பாரதிராஜா,Bharathiraja,மணி மண்டபம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/2g7vj9cv/mukt.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/2g7vj9cv/mukt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாரதிராஜாவுக்கு தேனியில் மணி மண்டபம் அமைக்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார். </p><h2>அரசு மரியாதை</h2><p>இயக்குநர் பாரதிராஜா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் 10ஆம் தேதி உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரின் உடல் தேனியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. மறைந்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தது.</p><h2>மணிமண்டபம்</h2><p>மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் சாதனைகளை போற்றும் வகையில் ரூ.2.50 கோடியில் தேனியில் திருவுருவச்சிலையுடன் கூடிய மணி மண்டபம் அமைக்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் சட்டசபையில் நேற்று அறிவித்திருந்தார்.</p><p>இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார். </p><h2>தமிழ்நாடு அரசு</h2><p>இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>மண் மணம் மாறாத கலைப்படைப்புகளால் தமிழர் வாழ்வை, தமிழர் நிலத்தை, தமிழர் பண்பாட்டு விழுமியங்களைக் கவிதையாகப் படம்பிடித்த மகத்தான திரைக்கலைஞன், விழிகளில் என்றும் உலவக்கூடிய காவியங்களை, வெள்ளை திரைகளில் ஒப்பற்ற ஓவியங்களாக படைத்தளித்த தமிழ் மண்ணின் ஈடு இணையற்ற படைப்பாளி, என்னுயிர் அப்பா இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் புகழைப்போற்றும் வகையில் அவர் பிறந்த தேனி மண்ணில் மணிமண்டபம் கட்டப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.</p><h2>நெஞ்சம் நிறைந்த நன்றி</h2><p>அப்பா இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு பெருமை சேர்க்கும் அறிவிப்பினை வெளியிட்ட<a href="https://www.dailythanthi.com/topic/vijay"> தமிழக முதல்-அமைச்சர்</a> அவர்களுக்கும், பள்ளி கல்வி அமைச்சர் ராஜ்மோகன் அவர்களுக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>12 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-until-10-pm-in-12-districts</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-until-10-pm-in-12-districts#comments</comments><guid isPermaLink="false">e495f338-b512-4f2e-b949-dde9bf69a7ae</guid><pubDate>Tue, 25 Aug 2026 14:14:48 +0000</pubDate><atom:updated>2026-08-25T14:14:48.210Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/ppo411sd/Untitled-8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/ppo411sd/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தருமபுரி, தென்காசி, கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பொங்கல் வேட்டி-சேலை திட்டத்தை முடக்கி நெசவாளர்களை கண்ணீரில் ஆழ்த்துவதா? - நயினார் நாகேந்திரன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nayinar-nagendran-slams-tamil-nadu-govt-over-pongal-vetti-saree-scheme</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nayinar-nagendran-slams-tamil-nadu-govt-over-pongal-vetti-saree-scheme#comments</comments><guid isPermaLink="false">cd142fc6-33d9-4fa2-8d24-8c74188219e7</guid><pubDate>Tue, 25 Aug 2026 13:46:13 +0000</pubDate><atom:updated>2026-08-25T13:46:13.000Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,கண்டனம்,Pongal,condemns,பொங்கல்,வேட்டி,Weavers,நெசவாளர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/on1lrie3/nainar-nagendran.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/on1lrie3/nainar-nagendran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பொங்கல் வேட்டி-சேலை திட்டத்தை முடக்கி நெசவாளர்களைக் கண்ணீரில் ஆழ்த்துவதா? - தவெக அரசுக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன்</a> கண்டனம். இது தொடர்பாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;-</p><h2>3 லட்சம் நெசவாளர்</h2><p>பொங்கல் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு ஜூலை மாதமே அனுமதி வழங்கப்படுவது வழக்கம். ஆனால், பொங்கலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், 1.72 கோடி வேட்டி-சேலைகளை உற்பத்தி செய்ய இன்னும் அனுமதி தராமல் காலம் கடத்தி வருகிறது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">தவெக அரசு</a>. தற்போதைய அரசின் மெத்தனத்தால் 3 லட்சம் நெசவாளர் குடும்பங்கள் வேலையின்றி தவிக்கின்றன.</p><h2>கூட்டுறவுச்சங்கங்கள்</h2><p>புதிய ரகங்கள், ஜரிகை வேட்டிகள் என்ற பெயரில் தேவையற்ற விளம்பரங்களை முன்னிறுத்தி, ஏற்கனவே நெசவாளர்கள் உற்பத்தி செய்துள்ள துணிகளை கொள்முதல் செய்ய மறுப்பது அநீதியாகும். முறையான திட்டமிடல் இல்லாத அரசின் கொள்கைகளால் கூட்டுறவுச்சங்கங்கள் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. நடைமுறைக்கு சாத்தியமில்லாத அறிவிப்புகளை விடுத்து நெசவாளர்களின் வாழ்வாதாரத்துடன் விளையாடுவதை தவெக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். </p><h2>நடவடிக்கை</h2><p>எனவே, முதல்-அமைச்சர் விஜய் அரசு உடனடியாக நூல் கொள்முதலை முடித்து, உற்பத்தி ஆணையை வழங்கி, 3 லட்சம் குடும்பங்களின் பொங்கல் பண்டிகையை சிதைக்காமல் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>“கட்சிக்காரங்க மேலதான் தப்பு” - தஞ்சாவூரில் விசிக போராட்டத்தின்போது நடந்த சம்பவம் குறித்து விவரித்த இளைஞர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-fault-lies-with-the-party-members-a-young-man-describes-the-incident-that-occurred-during-the-vck-road-blockade-protest-in-thanjavur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-fault-lies-with-the-party-members-a-young-man-describes-the-incident-that-occurred-during-the-vck-road-blockade-protest-in-thanjavur#comments</comments><guid isPermaLink="false">ae3afcc4-1c88-4118-bebd-549590833763</guid><pubDate>Tue, 25 Aug 2026 13:44:16 +0000</pubDate><atom:updated>2026-08-25T13:44:16.803Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thanjavur,தஞ்சாவூர்,விசிக,VCK</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/6coafapg/aka.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/6coafapg/aka.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர், </p><p>தஞ்சாவூரில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95">விசிக </a>மறியல் போராட்டத்தின்போது நடந்த சம்பவம் குறித்து இளைஞர் ஆகாஷ் விவரித்துள்ளார். </p><h2>சாலை மறியல்</h2><p>தஞ்சாவூரில் விசிகவினர் கடந்த 17-ம் தேதி மாநகராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த விளார் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (26), தான் வேலைக்குச் செல்ல வழிவிட வேண்டும் என்று கூறி விசிகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.</p><h2>காவலருடன் வாக்குவாதம்</h2><p>அப்போது அங்கு வந்த சிறப்பு எஸ்ஐ அப்துல் ரஹீமுக்கும், ஆகாஷுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியநிலையில், ஆகாஷை எஸ்ஐ அப்துல் ரஹீம் கன்னத்தில் அறைந்தார். தொடர்ந்து ஆகாஷும் அவரை தாக்கினார். .</p><p>இதையடுத்து, ஆகாஷையும், அவருக்கு ஆதரவாக பேசிய திருக்கானூர்பட்டியைச் சேர்ந்த அய்யப்பன் என்பவரையும் போலீசார் காவல் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். பின்னர், அவர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். இதையடுத்து இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.</p><h2>கட்சிக்காரங்க மேலதான் தப்பு</h2><p>இந்நிலையில், தஞ்சாவூரில் விசிக மறியல் போராட்டத்தின்போது நடந்த சம்பவம் குறித்து ஆகாஷ் கூறியதாவது:</p><p>“அந்தக் கட்சி பற்றி எனக்கு எதுவும் தெரியாது. கட்சிக்காரங்க மேலதான் தப்பு. நான் முதலில் ரிக்வெஸ்ட் பண்ணி பேசினேன். ‘உங்க பிரச்சினை எனக்கு தெரியாது. என் பிரச்சினை உங்களுக்கு தெரியாது. நான் வேலை பார்த்தால்தான் எனக்கு சம்பளம்’ என்று சொன்னேன். ஆனால், கட்சிக்காரர்கள் என் மீது வழக்கு போடுவோம் என்று கூறினார்கள்.</p><p>போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடம் என்று எவ்வளவோ சொன்னேன். என்னை அடிக்க வந்தார்கள். அப்போது காவலர்கள் வந்தனர். ‘என் மீது கை வைத்து பாருங்கள்’ என்றேன். அவர்கள் என்னை அடித்தார்கள்.</p><p>நான் யூனிபார்மில் இருந்த காவலரை அடித்தது தவறுதான். அதுவும் அவர் வயதில் பெரியவர். இதில் காவல்துறை மீது எந்த தவறும் இல்லை. அந்த நேரத்தில் அவர்களுக்கும் அது சிரமமாகத்தான் இருந்திருக்கும்.</p><p>‘எங்களை அடித்ததால்தான் இந்த பிரச்சினை இதோடு நின்றது. இதே கட்சிக்காரர்களை அடித்திருந்தால், பி.சி.ஆர். வழக்கு போட்டிருப்பார்கள்’ என்று காவலர்கள் சொன்னார்கள்.</p><p>நானும் பாதிக்கப்பட்டிருக்கிறேன்; காவல்துறையினரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை எதுவும் சொல்லாதீர்கள்” என்று தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>மீனாட்சி அம்மன் கோவில் சொத்து மோசடி வழக்கு: ஜாமீன், முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/meenakshi-amman-temple-property-fraud-case-bail-and-anticipatory-bail-petitions-dismissed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/meenakshi-amman-temple-property-fraud-case-bail-and-anticipatory-bail-petitions-dismissed#comments</comments><guid isPermaLink="false">7190f9a4-456e-4e5f-bf8f-5652ae6dd522</guid><pubDate>Tue, 25 Aug 2026 13:23:50 +0000</pubDate><atom:updated>2026-08-25T13:23:50.228Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Madurai,மதுரை,ஜாமீன்,Meenakshi Amman Temple,மீனாட்சி அம்மன் கோவில்,ஐகோர்ட்டு மதுரை கிளை,HighCourt Madurai Branch,உயர் நீதிமன்ற மதுரை கிளை,property case,சொத்து மோசடி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/o240ymtk/meenat.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/o240ymtk/meenat.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/meenakshi-amman-temple">மதுரை மீனாட்சி அம்மன் கோவில்</a> சொத்து மோசடி வழக்கில், தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன், முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. </p><h2>ரூ.60 கோடி சொத்து மோசடி</h2><p>மதுரை தல்லாகுளம் அழகர்கோவில் சாலையில் உள்ள அசோகாவிலாஸ் பங்களா மற்றும் அதனுடன் இணைந்த தோட்டம் சுமார் 2 ஏக்கர் நிலம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், அழகர்கோவிலுக்கு சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்ட அறக்கட்டளைக்கு சொந்தமானது. இதன் மதிப்பு சுமார் 60 கோடி ரூபாய். ஆனால் அந்த சொத்தை முறைகேடாக பட்டா மாற்றம் செய்து பத்திரப் பதிவு செய்ததாக மீனாட்சி அம்மன் கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.</p><h2>வழக்குப்பதிவு</h2><p>அதன்பேரில் ராமாயி ஆயியார், செந்தமிழ்செல்வி, பிரேமா, ராஜ்குமார், முத்து ராணி, ராஜேந்திரன், குழந்தையா, புஷ்பராஜ், ஜோதி, கீதா, முன்னாள் வி.ஏ.ஓ. அரசன், முன்னாள் தாசில்தார் அன்பழகன், இளையராஜா, அனிஷ், அனந்தராமன், கவிதா, பிரகாஷ், காளிக்குமார் மற்றும் பிரசாந்த் சந்தானகருப்பன் ஆகிய 19 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.</p><h2>தீவிர விசாரணை</h2><p>மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி புதுக்கோட்டையை சேர்ந்த ராஜ்குமார், உசிலம்பட்டியை சேர்ந்த இளையராஜா, திண்டுக்கல் சிறுமலையை சேர்ந்த காளிக்குமார், சப்-கலெக்டர் அன்பழகன், வருவாய் அதிகாரி அரசன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு குறித்து மதுரை நகர் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.</p><p>அதில் ராமாயி ஆயியார் தரப்பினர் 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளர் அனந்தராமன் மூலம் உசிலம்பட்டியை சேர்ந்த இளையராஜா, திருவள்ளூர் மாவட்டம் அனிஷ் ஆகியோருக்கு பொது அதிகார ஆவணம் பதிவு செய்துள்ளனர்.</p><h2>கைது</h2><p>அது தொடர்பாக போலீசார் விசாரித்த போது அனந்தராமன் நெல்லை பாளையங்கோட்டை சாந்தி நகரை சேர்ந்தவர் என்றும், அவர் தற்போது ஓய்வு பெற்றதும் தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் அனந்தராமனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன் மூலம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்திருந்தது. </p><h2>தள்ளுபடி</h2><p>இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறக்கட்டளை சொத்து மோசடி வழக்கில் ஜாமீன், முன்ஜாமீன் மனுக்களை  ஐகோர்ட்டு மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது. </p><p>அதன்படி அன்பழகன், ராஜ்குமார் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் 13 பேரின் முன்ஜாமீன் மனுக்களையும் ஐகோர்ட்டு மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>விளைநிலங்களைக் கையகப்படுத்த மாட்டோம் என அரசு கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-not-acquire-farmlands-government-must-announce-policy-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-not-acquire-farmlands-government-must-announce-policy-anbumani#comments</comments><guid isPermaLink="false">4f137a23-d1bc-4c9a-b10c-62997b3d0d60</guid><pubDate>Tue, 25 Aug 2026 13:15:31 +0000</pubDate><atom:updated>2026-08-25T13:15:31.066Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK,நிலம் கையகப்படுத்துதல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/4adngvmf/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/4adngvmf/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுரங்கம் உள்ளிட்ட எந்தத் திட்டத்திற்காகவும் விளைநிலங்களைக் கையகப்படுத்த மாட்டோம் என அரசு கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வு காணவும், மூன்றாம் நிலக்கரி சுரங்கம் உள்ளிட்ட புதிய திட்டங்களுக்கு 60 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படவிருப்பதை தடுத்து நிறுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்திய நிலையில், மத்தியில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள், மத்திய அரசிடம் பேசி இச்சிக்கலுக்கு  தீர்வு காண வேண்டியது தானே? என்று தொழில்துறை அமைச்சர் பதிலளித்திருக்கிறார். கடலூர் மாவட்ட மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியாமல்  தொழில்துறை அமைச்சர் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.</p><p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கனிம வளங்கள் மற்றும் தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, தொழில்துறை அமைச்சர் தெரிவித்த கருத்துகள் முழுக்க முழுக்க உழவர்களின் நலனுக்கு எதிராக அமைந்திருக்கின்றன. விவாதத்தின்போது பேசிய பாமக சட்டப்பேரவைக் குழு தலைவர் சவுமியா அன்புமணி, கடலூர் மாவட்ட மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலத்திலிருந்து நிலக்கரி வெட்டியெடுத்து ஆண்டுக்கு ரூ.1,300 கோடிக்கும் கூடுதலாக லாபம் ஈட்டும் என்.எல்.சி நிறுவனம், அம்மாவட்ட மக்களுக்கு  எதிராக செயல்பட்டு வருவதை சுட்டிக்காட்டினார். ஏற்கனவே 40 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்திய  என்.எல்.சி நிறுவனம், புதிய திட்டங்களுக்காக மேலும் 60,000 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தத் துடிப்பதாகவும், அதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்தி உழவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அதிமுக உறுப்பினர் அருண்மொழித் தேவனும் இதே கோரிக்கையை அரசுக்கு முன்வைத்தார்.</p><p>அதற்கு பதிலளித்துப் பேசிய தொழில்துறை அமைச்சர், உழவர்களின் நலன்களைக் காப்பதற்கு உத்தரவாதம் அளிக்காமல், "என்.எல்.சி நிறுவனம் மத்திய அரசுக்கு சொந்தமானது; மத்திய அரசின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அங்கு பேசி தீர்வு கண்டால் நன்றாக இருக்கும்" என்று கூறியிருக்கிறார். என்.எல்.சிக்கு எதிரான பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்ட வரலாறு தெரியாததால்தான் அவர் இவ்வாறு பேசியிருக்கிறார்.</p><p>1950-ம் ஆண்டுகளில் கடலூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்ட என்.எல்.சி நிறுவனம், 1980-களில் விளைநிலங்களை அளவுக்கு அதிகமாக கையகப்படுத்தியது மட்டுமின்றி, அவற்றுக்கு உரிய விலை வழங்காமலும், நிலம் கொடுத்தவர்களின் குடும்பத்தினருக்கு வேலை வழங்காமலும் துரோகம் செய்து வந்தது. அதற்கு எதிராக கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சி நூற்றுக்கணக்கான போராட்டங்களை நடத்திதான் கடலூர் மாவட்ட மக்களுக்கு நீதி பெற்றுக் கொடுத்திருக்கிறது. என்.எல்.சிக்கு எதிரான பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டங்கள் தொடங்கிய காலத்தில் இன்றைய தொழில்துறை அமைச்சர் பிறந்திருக்கக் கூட மாட்டார். அதனால்தான், போராட்ட வரலாறு தெரியாமல் அறியாமையில் இவ்வாறு பேசியிருக்கிறார்.</p><p>என்.எல்.சி மத்திய அரசு நிறுவனமா? மத்தியில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கிறோமா? என்பது  குறித்த எந்தக் கவலையும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இருந்ததில்லை. கடலூர் மாவட்ட மக்களுக்கு என்.எல்.சி நிறுவனத்தால் சுரண்டலும், அநீதியும் இழைக்கப்படும் போதெல்லாம் அதற்கு எதிராக பாமக போராடி வெற்றி பெற்றுள்ளது. என்.எல்.சி விவகாரத்தில் கடலூர் மாவட்ட மக்களுக்கு கொஞ்சமாவது நீதி கிடைத்திருக்கிறது என்றால், அதற்கான முழு முதல் காரணம் பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய சமரசமற்ற போராட்டங்கள்தான்.</p><p>கடந்த திமுக ஆட்சியில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரு அமைச்சர்களும் என்.எல்.சி நிறுவனத்தின் தரகர்களாக செயல்பட்டு, காவல்துறை உதவியுடன் மக்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டு, நிலங்களைப் பறித்து என்.எல்.சிக்கு தாரை வார்த்தனர். வயலில் ராட்சத எந்திரங்களை இறக்கி கதிர் விடும் நிலையில் இருந்த பயிர்களை அழித்தனர். அத்தகைய அநீதிகளுக்கு எதிராக தீவிரமாக போராடியது பாட்டாளி  மக்கள் கட்சிதான். அதன் பயனாகத் தான் சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே நிலக்கரித் திட்டம், மைக்கேல்பட்டி நிலக்கரித் திட்டம், வடசேரி நிலக்கரித் திட்டம் ஆகியவற்றை மத்திய அரசு ஏலப்பட்டியலில் இருந்து நீக்கியது. காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வருவதால் வீராணம் நிலக்கரித் திட்டம், பாளையம்கோட்டை நிலக்கரித் திட்டம் ஆகியவற்றுக்கு அனுமதி தரப்போவதில்லை என்று முந்தைய திமுக அரசு அறிவித்தது.</p><p>நெய்வேலி மூன்றாவது சுரங்கத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களும் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வருவதால், அதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது தான் பாமக மற்றும் கடலூர் மாவட்ட மக்களின் நிலைப்பாடு ஆகும். இதை செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கே உள்ளது. என்.எல்.சி நிறுவனத்தின் 5% பங்குகள் தமிழக அரசிடம் தான் உள்ளன. தமிழக அரசின் எரிசக்தித் துறை செயலாளர்தான் என்.எல்.சியின் இயக்குனர்களில் ஒருவராக உள்ளார். இவை அனைத்துக்கும் மேலாக என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்தி தரும் சமூக அநீதி வேலையை செய்வதே தமிழக அரசுதான்.</p><p>அதனால், தமிழக அரசு மறுத்தாலோ, விளைநிலங்களை கையகப்படுத்த மாட்டோம் என்று கொள்கை முடிவு எடுத்து அறிவித்தாலோ, அதற்கு எதிராக என்.எல்.சி நிறுவனத்தால் எதுவும் செய்ய முடியாது. இதை செய்வோம் என்று சொல்வதற்கு பதிலாக மத்திய அரசிடம் கூட்டணி கட்சிகள் பேச வேண்டும் என்று தொழில்துறை அமைச்சர் கூறுகிறார் என்றால், இந்த தவெக அரசுக்கும், முந்தைய திமுக அரசுக்கும் என்ன தான் வித்தியாசம்?</p><p>அதே விவாதத்தில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர் கணேஷ் குமார், பரந்தூர் விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை வேறு திட்டங்களுக்காக பயன்படுத்த முடியாது என்பதால் அந்த நிலங்களை உழவர்களிடம் அரசு ஒப்படைக்குமா? என்று கேட்டபோது, 2013-ம் ஆண்டு நிலம் எடுப்பு சட்டத்தின்படி  விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தலாம் என்று கூறினார். அதுமட்டுமின்றி, பரந்தூர் விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் தொழில் திட்டங்களை செயல்படுத்தப் போவதாகவும் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.</p><p>ஒரு திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை இன்னொரு திட்டத்திற்கு பயன்படுத்தலாம் என்று 2013-ம் ஆண்டு சட்டத்தில் கூறப்பட்டிருந்தாலும் கூட, ஒரு திட்டம் கைவிடப்பட்டால், அந்தத் திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அவற்றின் பழைய உரிமையாளர்களிடம் வழங்க வேண்டும் என்று 2016-ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. அதன்படி தான் மேற்குவங்க மாநிலம் சிங்கூர், நந்திகிராமம் ஆகிய இடங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் மக்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டன. அதற்கு மாறாக பரந்தூர் விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் சிப்காட் உள்ளிட்ட தொழில்திட்டங்களைச் செயல்படுத்த தவெக அரசு முயன்றால் அதற்கு எதிராக மக்களைத் திரட்டி நானே தலைமையேற்று போராடுவேன்.</p><p>விவசாயிகளை பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று முதல்-அமைச்சர் விஜய் கூறுகிறார். செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக மேல்மா பகுதியில் நிலம் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறுகிறார். இவை வரவேற்கப்பட வேண்டிய நிலைப்பாடுகள். ஆனால், முதல்-அமைச்சரின் நிலைப்பாட்டுக்கு எதிராக பரந்தூர் விமான நிலையத்  திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் தொழிற்சாலைகளை அமைப்போம், என்.எல்.சிக்காக நிலம் கையகப்படுத்தப்படும் விவகாரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழில்துறை அமைச்சர் கூறுவதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. விமான நிலையம் கட்டப்பட்டால் பாதிக்கப்படும் விவசாயிகள் தொழிற்சாலை அமைக்கப்பட்டால் பாதிக்கப்பட மாட்டார்களா?</p><p>தொழில் வளர்ச்சியை விட விவசாயிகளின் நலன் தான் முக்கியம் என்று கூறும் தவெக அரசு, அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தால், என்.எல்.சி பழுப்பு நிலக்கரி சுரங்கமாக இருந்தாலும், டங்ஸ்டன் சுரங்கமாக இருந்தாலும், சிப்காட் தொழில்பூங்காவாக இருந்தாலும் அவற்றுக்கு ஒரே ஒரு சென்ட் வேளாண் நிலத்தைக் கூட கையகப்படுத்தித் தர மாட்டோம் என்பதை கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும். அதைச் செய்ய தவெக அரசு தயாரா? என்பதை ஆட்சியாளர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சாலை விபத்தில் உயிரிழந்த சக காவலர் குடும்பத்திற்கு ரூ.22 லட்சம் நிதி வழங்கிய காவலர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/6971-tamil-nadu-police-officers-support-late-colleagues-family</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/6971-tamil-nadu-police-officers-support-late-colleagues-family#comments</comments><guid isPermaLink="false">24a3e6b7-603a-49fc-aa6a-fac105caed02</guid><pubDate>Tue, 25 Aug 2026 13:03:38 +0000</pubDate><atom:updated>2026-08-25T13:03:38.608Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சாலை விபத்து,road accident,family,குடும்பம்,காவலர்,policemen,நிதி,Donate</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/f1mw6hz9/tamilselvan.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ தமிழ்ச்செல்வன்]]></media:title><media:description type="html"><![CDATA[ சாலை விபத்தில் உயிரிழந்த சக காவலர் குடும்பத்திற்கு ரூ.22 லட்சம் நிதி வழங்கிய காவலர்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/f1mw6hz9/tamilselvan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>சாலை விபத்தில் உயிரிழந்த<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D"> காவலரின்</a> குடும்பத்திற்கு, அவருடன் ஒரே பேட்ச்சில் பணியாற்றிய 6,971 காவலர்கள் இணைந்து ரூ.22 லட்சம் நிதி திரட்டி வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.</p> <h2>காவலர் விபத்தில் மரணம்</h2><p>மதுரை மாவட்டம் வாடிப்பட்டி சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 28). இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்தார். சென்னை ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வந்த தமிழ்ச்செல்வன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81"> சாலை விபத்து</a> ஒன்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p>உயிரிழந்த தமிழ்ச்செல்வனுக்கு மனைவியும், 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். குடும்பத்தின் ஒரே வாழ்வாதாரமாக இருந்த தமிழ்ச்செல்வனின் மறைவால், அவரது குடும்பத்தினர் கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்தனர்.</p><h2>ரூ.22 லட்சம் நிதி உதவி</h2><p>இந்த நிலையில், தமிழ்ச்செல்வனுடன் கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் ஒரே பேட்ச்சில் பணியில் சேர்ந்த சக காவலர்கள், அவரது குடும்ப நிலையை அறிந்து உதவ முன்வந்தனர். இதற்காக அவர்கள் உருவாக்கிய ‘காவலர்கள் காக்கும் உறவுகள்’ என்ற வாட்ஸ்-அப் குழு மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள 2017 பேட்ச் காவலர்களிடம்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF"> நிதி</a> திரட்டப்பட்டது. அதன்படி மொத்தம் 6,971 காவலர்கள் தங்களால் இயன்ற பணத்தை வழங்கி, குறுகிய காலத்தில் ரூ.22 லட்சத்து 80 ஆயிரம் நிதி திரட்டினர்.</p><h2>வங்கியில் டெபாசிட்</h2><p>இந்த நிதி வழங்கும் நிகழ்ச்சி மதுரை சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் திரட்டப்பட்ட மொத்த நிதியும் தமிழ்ச்செல்வனின் குடும்ப எதிர்காலத்திற்காக வங்கியில் பிக்சட் டெபாசிட்  செய்யப்பட்டு, அதற்கான ஆவணங்களை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.</p> <p><strong>அதன் விவரம் வருமாறு:-</strong></p><p>தமிழ்ச்செல்வனின் 2 வயது மகனின் பெயரில் ரூ.14 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டது. அவரது மனைவி பெயரில் ரூ.4 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டது. அவரது தாய் மற்றும் தந்தை பெயரில் தலா ரூ.2 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டது. உடனடி குடும்ப செலவுகளுக்காக ரொக்கமாக ரூ.80 ஆயிரம் வழங்கப்பட்டது. நெகிழ்ச்சிஒரே பேட்ச்சில் சேர்ந்த சக நண்பனின் குடும்பத்தை காக்க, தமிழகம் முழுவதும் உள்ள 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் ஒன்றிணைந்து ரூ.22 லட்சம் நிதியுதவி வழங்கிய </p><h2>மரக்கன்று</h2><p>இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளது. நிகழ்ச்சியின் நிறைவாக மறைந்த காவலரின் நினைவாக டி.எஸ்.பி அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டன.</p> ]]></content:encoded></item><item><title>பெண்கள் தங்கியிருந்த அறையில் ரகசிய கேமரா... வீட்டு உரிமையாளர் மகன் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/house-owners-son-arrested-for-installing-a-secret-camera-in-womens-room-and-watching-the-footage</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/house-owners-son-arrested-for-installing-a-secret-camera-in-womens-room-and-watching-the-footage#comments</comments><guid isPermaLink="false">07844c91-66d6-4601-bf78-729286d27698</guid><pubDate>Tue, 25 Aug 2026 12:53:52 +0000</pubDate><atom:updated>2026-08-25T12:53:52.572Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,வாலிபர் கைது,பறிமுதல்,ரகசிய கேமரா,police enquiry,Youth Arrest,video footage</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/upimx71a/54.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வானகரம் காவல் நிலையம்- சரவணன்]]></media:title><media:description type="html"><![CDATA[ சரவணன் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/upimx71a/54.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை வானகரத்தில் பெண்கள் தங்கியிருந்த அறையில் ரகசிய கேமரா பொருத்தி, அவர்கள் உடை மாற்றுவதை செல்போனில் லைவாக பார்த்து வந்த வீட்டு உரிமையாளரின் மகன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>ஸ்விட்ச் பாக்சில் கேமரா</h2><p>சென்னை வானகரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 4 பெண்கள் வாடகைக்கு தங்கி வந்துள்ளனர். இன்று (செவ்வாய்க்கிழமை) தங்களது அறையில் இருந்த மின்சார ஸ்விட்ச் பாக்சில் ஏதோ மாற்றம் இருப்பதை அந்தப் பெண்கள் கவனித்தனர். எனவே, சந்தேகமடைந்த அவர்கள் அந்த ஸ்விட்ச் பாக்சைத் திறந்து பார்த்தபோது, அதற்குள் அதிநவீன <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE">ரகசிய கேமரா</a> மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.</p><h2>போலீஸ் விசாரணை- கைது</h2><p>இதுகுறித்து அந்தப் பெண்கள் உடனடியாக வானகரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரகசிய கேமராவைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.விசாரணையில், வீட்டின் உரிமையாளரின் மகனான சரவணன் என்பவர், பெண்கள் இல்லாத நேரத்தில் அவர்களின் அறைக்குள் புகுந்து ரகசிய கேமராவைப் பொருத்தியது தெரியவந்தது.</p><p>மேலும், அந்த கேமராவைத் தனது மொபைல் போனுடன் இணைத்து, பெண்கள் உடை மாற்றுவதை லைவ் ஆகப் பார்த்து கண்காணித்து வந்ததும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, குற்றவாளி சரவணனை வானகரம் போலீசார் அதிரடியாகக் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். மேலும், அவரிடமிருந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D">செல்போன்</a> மற்றும் ரகசிய கேமரா உபகரணங்களைப் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இலவச நீட் பயிற்சி மையத்தில் படித்த 6 மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இடம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/this-free-coaching-centre-sends-six-under-privileged-students-to-study-medicine</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/this-free-coaching-centre-sends-six-under-privileged-students-to-study-medicine#comments</comments><guid isPermaLink="false">208c1e7c-a415-4f5d-900a-860957c77977</guid><pubDate>Tue, 25 Aug 2026 12:45:39 +0000</pubDate><atom:updated>2026-08-25T12:45:39.984Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கல்வி,Salem,education,நீட் தேர்வு,NEET Exam,பயிற்சி மையம்,Coaching Centres</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/pno9wg23/coaching-centre.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/pno9wg23/coaching-centre.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மகுடஞ்சாவடி, </p><p>சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் செயல்பட்டு வரும் சண்முகநாதன் கனகவல்லி அறக்கட்டளையின் இலவச நீட் பயிற்சி மையத்தில் படித்த 6 மாணவர்கள், ஒரே ஆண்டில் மருத்துவப் படிப்பில் சேர்க்கை பெற்றுள்ளனர்.</p><h2>இலவச நீட் பயிற்சி வகுப்பு</h2><p>தமிழகத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இலவசமாக நீட் பயிற்சி அளித்து வரும் இந்த மையத்தின் முயற்சிக்கு, இந்த ஆண்டு நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வு மூலம் குறிப்பிடத்தக்க வெற்றி கிடைத்துள்ளது. 6 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளில் சேர்க்கை பெற்றுள்ளனர்.</p><h2>கனவுகளுக்கு கிடைத்த அங்கீகாரம்</h2><p>ஆகஸ்டு 13-ந் தேதி இரவு சுமார் 8.45 மணியளவில், ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் நீட் கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில், கியூரி மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குநர் காயத்ரி அனந்தகிருஷ்ணன், தனது ஓராண்டு கடின உழைப்பை நினைவு கூர்ந்து கூறியதாவது:-</p><p>அன்றிரவு அனைத்து பரபரப்பும், உற்சாகமும் அடங்கியிருந்தது. இரவு தெருவிளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. நகரமும் அடுத்த நாளை எதிர்கொள்ள தயாராகிக் கொண்டிருந்தது. ஆனால் எனக்கும், எனது ஆசிரியர்களுக்கும், அந்த 6 மாணவர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் அது ஒரு வருட கால அர்ப்பணிப்பு, விடாமுயற்சி, ஆர்வம், பலமுறை கைவிடலாம் என்ற நிலை, பகிர்ந்துகொண்ட போராட்டங்கள் மற்றும் கனவுகளுக்கு கிடைத்த அங்கீகாரமாக இருந்தது.</p><p>எங்கள் கிராம வீடுகளில் இருந்து மகுடஞ்சாவடி வகுப்பறைகளுக்கும், அங்கிருந்து மருத்துவக் கல்லூரிகளின் நடைபாதைகளுக்கும், விரைவில் மருத்துவர்களுக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்வுக்கும் செல்லும் இந்தப் பயணம் உண்மையிலேயே அற்புதமானது.</p><h2>2024-ல் தொடங்கிய முயற்சி</h2><p>எனது மகன் நிரஞ்சன் நீட் தேர்வு எழுதிய 2024-ம் ஆண்டில் இந்த இலவச நீட் பயிற்சி மையத்தை தொடங்கினேன். சிலுவம்பாளையம், கவுண்டனேரி, வெள்ளந்திவலசு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு தொடர்ந்து பயிற்சி பெற்று வருகின்றனர்.</p><p>“ஒரு குடும்பத்தில் முதல் பட்டதாரி மருத்துவராக மாறும்போது, அந்த குடும்பத்திற்கு அதன் அர்த்தமே தனி. ‘என் பையன், பொண்ணு டாக்டர்’ என்ற வார்த்தை வெறும் வார்த்தை அல்ல. அது அந்த குடும்பத்திற்கு சமூக மரியாதை, கண்ணியம், வேலைவாய்ப்பு உறுதி ஆகியவற்றை அளிக்கிறது. அடுத்த தலைமுறையின் வாழ்க்கைத் தரத்தையும் நம்பிக்கையையும் இது மிகப்பெரிய அளவில் மாற்றுகிறது.</p><h2>வகுப்பறையை அடைவதே சவால்</h2><p>இந்த மையத்தில் பயின்ற பல மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வதே மிகப்பெரிய சவாலாக இருந்தது. சில மாணவர்கள் தினமும் 2 மணி நேரம் வரை பயணம் செய்து வகுப்புகளுக்கு வந்தனர். வகுப்புகள் முடிந்த பிறகு வீட்டிலும், விவசாயப் பணிகளிலும் வேலை செய்துவிட்டு, இரவு நேரத்தில் படிப்பைத் தொடர்ந்தனர்.</p><p>அவர்களிடம் திறமையோ, ஆர்வமோ இல்லாதது பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக, அருகில் பயிற்சி மையம் இல்லாதது, பயிற்சிக் கட்டணத்தை செலுத்த முடியாதது, தமிழில் போதுமான புத்தகங்கள் கிடைக்காதது உள்ளிட்டவை தடையாக இருந்தன. குறிப்பாக மாணவிகளுக்கு தொடர்ந்து முயற்சி செய்வதற்கான குடும்ப ஆதரவு குறைவாக இருந்ததால், அவர்களுக்காக பயிற்சி மையத்தில் விடுதி வசதியும் ஏற்படுத்தப்பட்டது.</p><h2>மாணவர்களுக்கு ஏற்ப தனிப்பட்ட பயிற்சி</h2><p>ஒவ்வொரு மாணவரின் தேவைக்கும் ஏற்ப பயிற்சி அளிக்கப்பட்டது. “நாங்கள் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களை மட்டும் கற்றுக்கொடுக்கவில்லை. ஒவ்வொரு மாணவரின் வாழ்க்கைப் பயணத்தையும் புரிந்துகொண்டோம்.</p><p>அவர்களின் பயம், குறைகள், கற்றல் திறன் ஆகியவற்றை புரிந்துகொண்டு, தமிழ்வழி அல்லது ஆங்கிலவழி மாணவர் என்பதற்கேற்ப தனித்தனி படிப்பு திட்டங்களை ஆசிரியர்கள் உருவாக்கினர். வாராந்திர தேர்வுகள், விடைத்தாள் கலந்துரையாடல்கள், புதன்கிழமை மாலை ஆன்லைன் வீடியோ சந்திப்புகள், பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புகள் மற்றும் தினசரி கால அட்டவணை ஆகியவை பயிற்சியின் முக்கிய பகுதிகளாக இருந்தன.</p><h2>4, 5 முறை நீட் எழுதிய மாணவர்கள்</h2><p>இந்த மையத்தில் பயின்ற சில மாணவர்கள் 4 அல்லது 5 முறை <a href="https://www.dailythanthi.com/topic/neet-exam">நீட் தேர்வு</a> எழுதியுள்ளனர். எம்.பி.பி.எஸ். இடத்தைப் பெற வேண்டும் என்ற தங்கள் கனவில் அவர்கள் உறுதியாக இருந்தனர். ஏற்கனவே நர்சிங் படிப்பை முடித்திருந்த ஒரு மாணவியும், மருத்துவராக வேண்டும் என்ற தனது சிறுவயது கனவை நிறைவேற்றுவதற்காக மீண்டும் பயிற்சி மையத்திற்கு வந்து நீட் தேர்வுக்குத் தயாரானார்.</p><p>தமிழ்வழியில் படித்த ஒரு மாணவி, மொழிப் பிரச்சினையைப் பற்றி கூறியபோது, “கேள்வி புரிந்தால் தானே பதில் சொல்ல முடியும், மேடம்” என்று தெரிவித்தார். “பொருளாதார இடைவெளியை கருத்தில் கொண்டால், இது சமமான நிலையில் எழுதப்பட்ட தேர்வு அல்ல. <a href="https://www.dailythanthi.com/topic/neet-exam">தேர்வு அனைவருக்கும் ஒன்றுதான்</a>. அழுத்தங்களும் ஒன்றுதான். சில நேரங்களில் அவர்களுக்கு இன்னும் அதிகமாக இருந்தது.</p><p>ஆனால் மாணவர், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பகிர்ந்துகொண்ட கனவும், தங்களுக்குள் இருந்த சாதிக்க வேண்டும் என்ற தீவிரமான விருப்பமும்தான் அவர்களை இறுதிவரை அழைத்துச் சென்றது. அந்த முடிவு உண்மையில் மற்றொரு புதிய தொடக்கமாகும். </p><p>“இந்த மாணவர்கள் நிச்சயம் மற்றவர்களுக்கு உதவுவார்கள்”</p><p>“மகுடஞ்சாவடி வகுப்பறைகளில் இருந்து மருத்துவக் கல்லூரிகள் வரை இந்த மாணவர்களின் பயணத்தில் ஒரு பகுதியாக இருந்ததில் நான் பெருமைப்படுகிறேன். இந்தக் குழந்தைகள் எதிர்காலத்தில் தாங்கள் பெற்ற உதவியை மற்றவர்களுக்கும் வழங்குவார்கள் என்று நம்புகிறேன். இன்று தொடங்கியுள்ள இந்தச் சிறிய அலை, நாளை பலரின் கனவுகளை மருத்துவர்களாக மாற்றும் மிகப்பெரிய அலையாக மாறும்.</p><h2>ஆதரவளித்தவர்களுக்கு நன்றி</h2><p>இந்த இலவச நீட் பயிற்சி முயற்சிக்கு கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு அடிப்படையில் ஆதரவு வழங்கிய கோவை கங்கா மருத்துவமனை நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், கல்வி ஆலோசகர்கள் சதீஷ் மற்றும் ராஜேஷ், இயற்பியல் ஆசிரியர் செந்தில், வேதியியல் ஆசிரியர் சக்திவேல், உயிரியல் ஆசிரியர் திலகம், ஒருங்கிணைப்பாளர் அருண் தங்கராஜ் மற்றும் தட்டச்சர் சுகன்யா ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>இவர்கள் அனைவரும் இந்த முயற்சியின் முதுகெலும்பாக இருந்தனர். ஒரு மாணவரின் எதிர்காலத்தை மட்டுமல்ல, அவரது குடும்பத்தின் எதிர்காலத்தையும் அடுத்த தலைமுறையின் வாழ்க்கையையும் மாற்றியுள்ளனர்.</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p><h2>அறக்கட்டளை பற்றி..</h2><p>சண்முகநாதன் கனகவல்லி அறக்கட்டளை, சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களுக்காக இலவச நீட் பயிற்சி மையத்தை நடத்தி வருகிறது. குறிப்பாக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், பயிற்சி வகுப்புகளுக்கான கட்டணம் மற்றும் பிற பொருளாதார தடைகளால் பாதிக்கப்படாமல் மருத்துவக் கல்வியை நோக்கி முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மையம் செயல்பட்டு வருகிறது.</p><p>2024-ம் ஆண்டு கங்கா மருத்துவமனைகளால் தொடங்கப்பட்ட இந்த மையத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி, படிப்பு உபகரணங்கள், வழிகாட்டுதல் மற்றும் மாணவிகளுக்கான விடுதி வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.</p><p>காயத்ரி அனந்தகிருஷ்ணன், டாக்டர் சண்முகநாதன் மற்றும் கனகவல்லியின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><strong>தொடர்புக்கு:</strong> சண்முகநாதன் கனகவல்லி அறக்கட்டளை, 3/285, எம்.ஜி.ஆர். நகர், மகுடஞ்சாவடி, சிங்ககிரி, சேலம் – 637103. தொலைபேசி: 9362525262. </p>]]></content:encoded></item><item><title>பரந்தூர் விமான நிலையம்: தி.மு.க.வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/parandur-airport-communist-party-marxist-questions-the-dmk</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/parandur-airport-communist-party-marxist-questions-the-dmk#comments</comments><guid isPermaLink="false">9069b28a-d1fa-4efb-b4de-61c5cae9f07e</guid><pubDate>Tue, 25 Aug 2026 12:42:38 +0000</pubDate><atom:updated>2026-08-25T12:42:38.963Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,திமுக,DMK,தமிழகம்,பரந்தூர் விமான நிலையம்,Paranthur Airport,சிபிஎம்,CPM</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/hvceay7s/kker.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/hvceay7s/kker.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>விமான நிலைய விவகாரத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/dmk">தி.மு.க.</a> வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. </p><p>இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>எங்களைப் போன்றவர்கள் பலமுறை வற்புறுத்தியதற்கு பிறகும் ‌பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்ய மச்சேந்திர நாதன் ஐ.ஏ.எஸ். அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை <a href="https://www.dailythanthi.com/topic/dmk">தி.மு.க.</a> ஆட்சிக்காலம் முழுவதும் வெளியிடாமல் மூடி மறைத்தது ஏன்..?</p> <p>இந்த விஷயத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/dmk">தி.மு.க.</a> வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை. அந்த அறிக்கையை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு ஏன் ஏற்பட்டது என்பதை வெளியிடத் தயாரா?</p><p>இவ்வாறு அதில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பக்கத்து வீட்டு பெண்ணை குத்திக் கொன்ற வாலிபர் - ரத்தம் வடிந்த கத்தியுடன் சுற்றியதால் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-kills-neighbour-woman-kanyakumari</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-kills-neighbour-woman-kanyakumari#comments</comments><guid isPermaLink="false">c869daf9-9fcf-440a-ab15-dc1e0894641f</guid><pubDate>Tue, 25 Aug 2026 12:24:39 +0000</pubDate><atom:updated>2026-08-25T12:24:39.228Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,Kanyakumari,கொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/q4gtu91n/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/q4gtu91n/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி,</p><p>தாயை கொன்று ஜாமீனில் வந்த வாலிபர், பக்கத்து வீட்டு பெண்ணை குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே கைதக்குழி நாரகம்விளை பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன். அவரது மகன் சிஜூ (24 வயது). இவர் கடந்த 2021-ம் ஆண்டு தனது தாயை கொன்றார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிஜூவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து அவர் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் தந்தையுடன் வசித்து வந்தார். சிஜூ சற்று மனநலம் பாதிக்கப்பட்ட வர் என கூறப்படுகிறது.</p><p>இந்த நிலையில் நேற்று முன்தினம் ரத்தம் வடிந்த நிலையில் கத்தியுடன் அங்குமிங்கும் தெருவில் சுற்றினார். இதுகுறித்து தகவல் அறிந்த களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிஜூவை மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்த கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு அவரை ஆசுவாசப்படுத்திய போலீசார். நடந்த விவரத்தை கேட்டனர். ஆனால் சிஜூவால் சொல்ல முடியவில்லை. சிஜூவின் மனநிலையை உணர்ந்த போலீசார், அவரை பக்குவமாக அவருடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.</p><p>பிறகு சிஜூவின் பக்கத்து வீட்டுக்கு சென்ற நிலையில்தான் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு ஒரு பெண் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். கத்திக்குத்து காயங்களும் இருந்தன. மேலும் பெரிய கல்லும் கிடந்தது. இதனை வைத்து சிஜூ மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். </p><p>அதில் கொல்லப்பட்ட பெண், அசோக்குமாரின் மனைவி லீலா (56 வயது) என்றும், சிஜூவிற்கு உறவினர் என்பதும் தெரிய வந்தது. லீலாவின் வீட்டிற்கு சென்று சிஜூ சாப்பிடுவது வழக்கமாம். மனநிலை பாதிக்கப்பட்டவர் என கருதி லீலாவும், சிஜூவை மென்மையான அணுகுமுறையுடன் கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் திடீரென சிஜூ, லீலாவை கத்தியால் குத்தியும், கல்லை தூக்கிப்போட்டும் கொன்றது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>இந்தியா - வியட்நாம் கடலோர காவல் படைகளின் உயர்மட்டக் கூட்டம்: இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து வலியுறுத்தல் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/7th-high-level-meeting-between-the-indian-and-vietnamese-coast-guards</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/7th-high-level-meeting-between-the-indian-and-vietnamese-coast-guards#comments</comments><guid isPermaLink="false">608ff7d7-3c82-401c-b330-97c710d17d64</guid><pubDate>Tue, 25 Aug 2026 12:14:45 +0000</pubDate><atom:updated>2026-08-25T12:14:45.577Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,India,சென்னை,Coast Guard,கடலோர காவல்படை,வியட்நாம்,Vietnam,உயர்மட்ட கூட்டம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/roi8jpj6/iet.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/roi8jpj6/iet.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்திய கடலோர காவல் படை மற்றும் வியட்நாம் கடலோர காவல் படைக்கு இடையிலான ஏழாவது சுற்று உயர்மட்டக் கூட்டம்  இன்று (25 ஆகஸ்ட் 2026)  சென்னையில் நடைபெற்றது.</p><p>வியட்நாம் கடலோரக் காவல் படை (VCG) குழுவினர் சென்னைக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, வியட்நாம் கடலோர காவல் படையின் துணைத் தளபதி மேஜர் ஜெனரல் லுவோங் டின் ஹங் (Luong Dinh Hung), இந்திய கடலோர காவல் படையின் தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி AVSM, PTM, TM அவர்களை சந்தித்துப் பேசினார்.</p><p>இச்சந்திப்பை தொடர்ந்து, சென்னையிலுள்ள கடலோர காவல் படை மண்டலத் தலைமையகத்தில் இருநாட்டு கடலோரக் காவல் படைகளுக்கிடையிலான 7-வது உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. இந்தியக் கடலோர காவல் படை குழுவிற்கு அதன் தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி AVSM, PTM, TM தலைமை தாங்கினார்; வியட்நாம் கடலோரக் காவல் படை குழுவிற்கு மேஜர் ஜெனரல் லுவோங் டின் ஹங் தலைமை தாங்கினார். </p><p>இருநாட்டு கடலோர காவல் படைகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துதல், ஒருங்கிணைந்து செயல்படுதல், கடல்சார் செயல்பாடுகளை வலுப்படுத்துதல் ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டன. </p><p>சிறந்த கடல்சார் சூழலை உறுதி செய்வதற்குரிய செயல்பாடுகளை தொடர்ந்து கூட்டாக மேற்கொள்தல், இருதரப்பு ஒத்துழைப்பு மேம்பாடு ஆகியவற்றின் மீதான தங்கள் உறுதிப்பாட்டை இரு தரப்பினரும் இக்கூட்டத்தில் வலியுறுத்தினர்.</p>]]></content:encoded></item><item><title>ஆவணி அவிட்டம்: நாளை மறுநாள் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aavani-avittam-extra-tokens-at-sub-registrar-offices</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aavani-avittam-extra-tokens-at-sub-registrar-offices#comments</comments><guid isPermaLink="false">66f270c9-8d48-474c-bb6c-116b1e2eafba</guid><pubDate>Tue, 25 Aug 2026 11:54:40 +0000</pubDate><atom:updated>2026-08-25T11:54:40.436Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆவணி அவிட்டம்,கூடுதல் டோக்கன்கள்,sub-registrar offices,சார்பதிவாளர் அலுவலகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/dcz7vt0o/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சார்பதிவாளர் அலுவலகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/dcz7vt0o/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணி மாதத்தில் வரும் ஆவணி அவிட்டம் மற்றும் பவுர்ணமி தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று பதிவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>சுபமுகூர்த்தம் மற்றும் விசேஷ தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.</p><p>தற்போது ஆவணி மாதத்தில் வரும் ஆவணி அவிட்டம் மற்றும் பவுர்ணமி தினமான 27.08.2026 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.</p><p>எனவே, ஆவணி மாதத்தில் ஆவணி அவிட்டம் மற்றும் பவுர்ணமி தினமான 27.08.2026 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகள், கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>“புதிய விமானநிலையம் தேவைதான்.. ஆனால்..” - திருமாவளவன் கூறியதென்ன..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-new-airport-is-indeed-needed-but-what-did-thirumavalavan-say</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-new-airport-is-indeed-needed-but-what-did-thirumavalavan-say#comments</comments><guid isPermaLink="false">1e063dbd-99c5-4ab1-8287-a779294d7fee</guid><pubDate>Tue, 25 Aug 2026 11:52:43 +0000</pubDate><atom:updated>2026-08-25T11:52:43.785Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,திருமாவளவன்,தமிழக அரசு,TN govt,விசிக,VCK,Thirumavalvan,Paranthur Airport,பரந்தூர் விமானநிலையம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/sxh0zuod/amma.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/sxh0zuod/amma.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பொதுமக்கள் பாதிப்பு அடையாமல் புதிய இடத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். </p><p>சட்டமன்றத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் வருடத்துக்கு 3 சிலிண்டர்கள் மற்றும் மாநகர, நகராட்சிப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்ற திட்டத்தை அறிவித்ததோடு, பரந்தூர் விமான நிலையத் திட்டம் அரசால் அதிகாரப்பூர்வமாக கைவிடப்படுவதாகவும் அவர் அறிவித்தார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>புதிய விமான நிலையம்</h2><p>இது குறித்து <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> கூறுகையில், “பரந்தூர் புதிய விமான நிலையம் அமைப்பது குறித்து உயர் அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த வல்லுனர்களிடமும் விரிவாக ஆலோசனை நடத்தினேன். ஏற்கெனவே நான் உறுதி அளித்தவாறு பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்த அரசால் கைவிடப்படும். துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்கள் உடன் கலந்துரையாடி விவசாய நிலம் மற்றும் குடியிருப்புகளுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பொருத்தமான சில மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. </p><h2>சென்னை மீனம்பாக்கம்</h2><p>அந்த இடங்களில் தொழில்நுட்ப ரீதியான சாத்தியக்கூறுகளை சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு புதிய விமான நிலையத்துக்கான இடம் விரைவில் இறுதி செய்யப்படும். சென்னை - மீனம்பாக்கம் விமான நிலையத்தை மேலும் விரிவாக்கம் செய்து, அதன் வடமேற்கு பகுதியில் ஆண்டுக்கு கூடுதலாக 20 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் கொண்ட 'டர்மினல் 5' ஐந்தாவது பயணிகள் முனையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல தற்போது நடைபெறும் 'டர்மினல் 3' கட்டுமான பணிகள் முடிவுற்ற பின் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ஆண்டுக்கு 35 மில்லியன் பயணிகளை கையாளும் வகையில் இருக்கும். டர்மினல் 5 பணிகள் நிறைவடைந்து, அது செயலாக்கத்துக்கு வந்த பிறகு ஆண்டுக்கு மொத்தம் 55 மில்லியன் பயணிகளை கையாளக்கூடியதாக இருக்கும். இதன் மூலம் சென்னை விமான நிலையம் மேம்படுத்த படுவதோடு, பயணிகளின் போக்குவரத்து தேவை புதிய விமான நிலையம் அமைக்கப்படும் வரை உறுதி செய்யப்படும்'என்று தெரிவித்திருந்தார். த.வெ.க. அரசின் இந்த அதிரடி அறிவிப்புக்கு பரந்தூர் மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். </p><h2>தேவையான வளர்ச்சி</h2><p>இந்நிலையில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு புதிய விமானநிலையம் தேவை என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “ புதிய விமான நிலையத்துக்கான இடத்தை தேர்வு செய்யும்போதும் அப்பகுதி மக்களின் கருத்துகளை கேட்க வேண்டும். காடுகளை அழிக்க வேண்டிய நிலையும் நீர்நிலைகளை தூர்வார வேண்டிய நிலையும் ஏற்படக்கூடும். இருந்தபோதிலும் விமான நிலையம், துறைமுகம், ரெயில் நிலையம் உள்ளிட்ட போக்குவரத்து மற்றும் கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதன் மூலமே மாநிலத்தின் மற்றும் நாட்டின் முன்னேற்றத்துக்கு தேவையான வளர்ச்சியை ஏற்படுத்த முடியும்.</p><h2>விடுதலைச் சிறுத்தைகள் கட்சி</h2><p>எனவே தமிழகத்துக்கு புதிய விமான நிலையம் தேவை. அதேவேளையில் பொதுமக்களின் இசைவை பெற்று அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அந்தத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும் என்பதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேண்டுகோள்.</p><p>தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு புதிய விமானநிலையம் தேவை என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. எனவே புதிய இடத்தை தேர்வு செய்து பணிகளை <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> விரைவுப்படுத்த வேண்டும்” என்று அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>வாணியம்பாடி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirupathur-18-month-old-child-dies-after-accidentally-falling-into-a-water-tank-near-vaniyambadi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirupathur-18-month-old-child-dies-after-accidentally-falling-into-a-water-tank-near-vaniyambadi#comments</comments><guid isPermaLink="false">be467709-b681-47e2-8c0e-b9ca22d0e742</guid><pubDate>Tue, 25 Aug 2026 11:49:51 +0000</pubDate><atom:updated>2026-08-25T11:49:51.845Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Accident,திருப்பத்தூர்,குழந்தை உயிரிழப்பு,தண்ணீர் தொட்டி,police enquiry,baby death</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/4uf9ofe8/53.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ குழந்தை நிதிஷ்]]></media:title><media:description type="html"><![CDATA[ தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/4uf9ofe8/53.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பத்தூர்,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">திருப்பத்தூர் மாவட்டம்</a> வாணியம்பாடி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து ஒன்றரை வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>குழந்தை மாயம்</h2><p>திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கூவல்குட்டை பகுதியைச் சேர்ந்த தம்பதியினரின் ஒன்றரை வயது <a href="https://www.dailythanthi.com/topic/children-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">ஆண் குழந்தை </a>நிதிஷ். இன்று (செவ்வாய்க்கிழமை) வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த அந்தக் குழந்தை திடீரென காணாமல் போனது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் குழந்தையை வீட்டின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிரமாகத் தேடினர்.</p><h2>தொட்டியில் விழுந்த குழந்தை</h2><p>நீண்ட நேரத் தேடலுக்குப் பின், வீட்டின் அருகே இருந்த நிலத்தடி நீர் தொட்டியில் குழந்தை நிதிஷ் தவறி விழுந்து கிடப்பது கண்டு பிடிக்கப்பட்டது. பெற்றோர் பதறியடித்தபடி குழந்தையை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர்.</p><h2>போலீஸ் விசாரணை</h2><p>ஆஸ்பத்திரியில் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆலங்காயம் போலீசார், குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><p>மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">தீவிர விசாரணை</a> மேற்கொண்டு வருகின்றனர். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் கூவல்குட்டை கிராம மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பலூன் ஊதியபோது விபரீதம்... தொண்டையில் சிக்கி 6 வயது சிறுவன் பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-while-blowing-up-a-balloon-6-year-old-boy-dies-after-it-gets-stuck-in-his-throat</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-while-blowing-up-a-balloon-6-year-old-boy-dies-after-it-gets-stuck-in-his-throat#comments</comments><guid isPermaLink="false">384a88d1-87ee-44e7-acdd-40ff1b985660</guid><pubDate>Tue, 25 Aug 2026 11:28:26 +0000</pubDate><atom:updated>2026-08-25T11:28:26.083Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருப்பத்தூர்,Balloon,பலூன்,நாட்றம்பள்ளி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/h2p2ut8r/thi.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருப்பத்தூர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/h2p2ut8r/thi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாட்றம்பள்ளி,</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D">பலூன் </a>ஊதியபோது அது தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>பலூன் தொண்டையில் சிக்கியது</h2><p>திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் கிராமத்தை சேர்ந்த துணி வியாபாரி குமார் - சத்யா தம்பதிக்கு 5 குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் 2 பேர் இரட்டை ஆண் குழந்தைகள் ஆவர்.</p><p>இந்நிலையில், குமார் மற்றும் சத்யா வழக்கம்போல் துணி வியாபாரம் முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது வீட்டில் இருந்த அவர்களது 6 வயது மகன் சோமநாத் எதிர்பாராதவிதமாக பலூனை விழுங்கியதாகக் கூறப்படுகிறது.</p><p>இதனால் பலூன் தொண்டையில் சிக்கி சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. பின்னர், சிறுவன் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுவனை உடனடியாக நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.</p><h2>சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு</h2><p>சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர், சிறுவனின் தொண்டைக் குழியில் சிக்கியிருந்த பலூனை மருத்துவர்கள் அகற்றினர்.</p><p>இதையடுத்து, சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இந்த சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>பலூன் தொண்டையில் சிக்கி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரூ.48 ஆக பால் கொள்முதல் விலையை தமிழ்நாடு அரசு உயர்த்தி வழங்க வேண்டும் - சி.பி.ஐ. வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-must-increase-the-milk-procurement-price-cpi-urges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-must-increase-the-milk-procurement-price-cpi-urges#comments</comments><guid isPermaLink="false">a4f6109d-ab71-4442-b413-342e2e242fd2</guid><pubDate>Tue, 25 Aug 2026 11:25:33 +0000</pubDate><atom:updated>2026-08-25T11:25:33.423Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,சி.பி.ஐ.,தமிழ்நாடு அரசு,தமிழக அரசு,TN govt,CPI,milk,பால்,கொள்முதல் விலை,TamilNadu Goverment,மு.வீரபாண்டியன்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,procurement price</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/3u8vrfz9/mv.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/3u8vrfz9/mv.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பால் கொள்முதல் விலையை தமிழ்நாடு அரசு உயர்த்தி வழங்கிட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தி உள்ளார். </p><h2>110 விதியின் கீழ்</h2><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை ரூபாய் 48 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டுமென தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தொடர்ந்து போராடி வருகிறது.</p><p>இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">தமிழ்நாடு முதல்-அமைச்சர் சி.ஜோசப் விஜய்</a> அவர்கள், பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூபாய் 38 லிருந்து 41 ஆக அதிகரிக்கப்படும் என அறிவித்தார். இது வரவேற்பிற்குரியது என்றாலும் கூட, பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு  ரூ.48 ஆக உயர்த்த வேண்டும் எனக் கோரி போராடி வருகின்றனர்.</p><h2>லிட்டருக்கு ரூபாய் 48</h2><p>எனவே, மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட பால் உற்பத்தியாளர்களின் பொருளாதார நலனை, வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, உடனடியாக பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூபாய் 48 ஆக தமிழ்நாடு அரசு உயர்த்தி வழங்கிட வேண்டும்.</p><h2>உரிய மானியங்கள்</h2><p>அதே சமயம் நுகர்வோருக்கு பாலின் விலையை அதிகரித்துவிடக்கூடாது. அதற்கேற்ப உரிய மானியங்களை தமிழ்நாடு அரசு ஆவின் நிறுவனத்திற்கு வழங்கிட வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>7 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-until-7-pm-in-7-districts</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-until-7-pm-in-7-districts#comments</comments><guid isPermaLink="false">4d36f2f2-a919-4231-b9d9-98791ea47a06</guid><pubDate>Tue, 25 Aug 2026 11:16:26 +0000</pubDate><atom:updated>2026-08-25T11:16:26.425Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,மழைக்கு வாய்ப்பு,வானிலை முன்னறிவிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/62r027wa/Untitled-4.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/62r027wa/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>“நபிகள் நாயகம் காட்டிய அன்பு வழியில்..” - மீலாதுன் நபி வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/following-the-path-of-love-shown-by-prophet-muhammad-mk-stalin-conveys-milad-un-nabi-greetings</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/following-the-path-of-love-shown-by-prophet-muhammad-mk-stalin-conveys-milad-un-nabi-greetings#comments</comments><guid isPermaLink="false">b0a307a4-a4fa-4b19-adf8-02c83382db97</guid><pubDate>Tue, 25 Aug 2026 11:00:10 +0000</pubDate><atom:updated>2026-08-25T11:00:10.331Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,M.K.Stalin,தமிழகம்,நபிகள் நாயகம்,Milad-un-Nabi,மிலாது நபி,மிலாடி நபி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/ivd3gbhm/rieor.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/ivd3gbhm/rieor.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தி.மு.கழகத் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/mkstalin">மு.க.ஸ்டாலின்</a> வெளியிட்டுள்ள மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:- </p><p>நபிகள் நாயகத்தின் பிறந்தநாளான மீலாதுன் நபியை கொண்டாடிடும் இசுலாமியச் சகோதரர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2>இரக்கச் சிந்தனை</h2><p>மற்றவர்களின் மனதை புண்படுத்தாதீர்கள் என அன்பையும், கல்வி கற்பது ஆண் பெண் இருவரின் கடமை என அறிவையும், ஒருவனுடைய உழைப்புக்கு அவனுடைய உழைப்பின் வியர்வை உலருவதற்குள் ஊதியத்தைக் கொடுத்து விடு எனத் தொழிலாளர்களின் உரிமையையும், எப்போதும் உண்மையையே பேச வேண்டும் எனப் பொய்யாமையையும், வறியவருக்கு உதவிடும் இரக்கச் சிந்தனையையும் வலியுறுத்திய பெருமகனார் அண்ணல் முகமது நபி அவர்கள்.</p><h2>நபிகள் நாயகம் விழா</h2><p>அத்தகைய நபிகள் நாயகம் காட்டிய வழியில் பிறழாது நடக்கும் இசுலாமிய மக்களின் வளர்ச்சிக்காகவும், அவர்தம் உரிமைகளுக்காகவும் தொடக்க காலம் முதலே அரணாகத் திகழும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். பேரறிஞர் அண்ணா அவர்களும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் முதன்முதலாகத் திருவாரூரில் சந்தித்துக் கொண்டதே நபிகள் நாயகம் விழாவில்தான். கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் காலந்தொட்டே திராவிடப் பெருந்தலைவர்கள் பலர் மீலாதுன் நபி விழாக்களில் தொடர்ந்து பங்கேற்று வந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>தி.மு.கழகம்</h2><p>ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் 1969-ஆம் ஆண்டிலேயே மீலாதுன் நபிக்கு அரசு விடுமுறை அளித்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். மேலும், உருது பேசக்கூடிய முஸ்லிம்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியது, சிறுபான்மையினர் நல ஆணையம் அமைத்தது, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மற்றும் உருது அகாடமி தொடங்கியது என எல்லா வகையிலும் இசுலாமியப் பெருமக்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்ட இயக்கம் தி.மு.கழகம்.</p><h2>தி.மு.க. - இசுலாமியர்கள் உறவு</h2><p>குடியுரிமைத் திருத்தச் சட்டம், வக்பு வாரியத் திருத்தச் சட்டம் என இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டங்களை ஒன்றிய அரசு கொண்டு வந்தபோதெல்லாம் போராட்டங்கள், நீதிமன்ற வழக்குகள், சட்டபேரவைத் தீர்மானங்கள் என இசுலாமியரின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தது நமது திராவிட மாடல் அரசு. இதனால்தான், எவராலும் அசைத்துப் பார்க்க முடியாத பாச உறவாக தி.மு.கழகத்துக்கும் இசுலாமியர்களுக்குமான உறவு தொடர்கிறது.</p><p>இப்படிப்பட்ட நீண்ட நெடிய நட்பின் உணர்வோடும் உரிமையோடும் நபிகள் நாயகம் காட்டிய அன்பு வழியில் பயணித்திடும் என் நெஞ்சுக்கினிய இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மீலாதுன் நபி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>
“ஏழை எளிய மக்களுக்காக உழைத்த மனிதநேயர்” - விஜயகாந்தை புகழ்ந்த உதயநிதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-humanitarian-who-worked-for-the-poor-and-downtrodden-udhayanidhi-praises-vijayakanth</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-humanitarian-who-worked-for-the-poor-and-downtrodden-udhayanidhi-praises-vijayakanth#comments</comments><guid isPermaLink="false">b92e0ce1-a1c2-489a-a552-82644d5570de</guid><pubDate>Tue, 25 Aug 2026 10:55:46 +0000</pubDate><atom:updated>2026-08-25T10:55:46.239Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,birthday,பிறந்தநாள்,விஜயகாந்த்,Vijayakanth</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/3f2nutbj/5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/3f2nutbj/5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p> <p>விஜயகாந்தின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு எதிர்க்கட்சித்தலைவர்<a href="https://www.dailythanthi.com/topic/udhayanidhi"> உதயநிதி ஸ்டாலின்</a> தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p> <h2>75-வது பிறந்தநாள்</h2><p>தேமுதிக நிறுவனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான <a href="https://www.dailythanthi.com/topic/vijayakanth">விஜயகாந்த்</a>-ன் 75-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.</p>  <h2>நினைவிடத்தில் அஞ்சலி</h2><p>விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் ஏராளமான ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் குவிந்தனர். அவர்கள் விஜயகாந்தின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும், விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலரும் அவரை நினைவுகூர்ந்து வாழ்த்து மற்றும் புகழஞ்சலி பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.</p>  <h2>"களத்தில் இறங்கி உழைத்த மனிதநேயர்"</h2><p>அந்த வகையில், எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின், மறைந்த நடிகர் விஜயகாந்தை புகழ்ந்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p><p>அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது, "தே.மு.தி.க நிறுவன தலைவர் அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் இன்று! முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மீது அளவற்ற அன்பும் - கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் நெருங்கிய நட்பும் கொண்டிருந்தவர். ஏழை எளிய மக்களின் நலனுக்காக களத்தில் இறங்கி உழைத்த மனிதநேயர் அண்ணன் கேப்டன் அவர்களின் பணிகள் என்றென்றும் நிலைத்திருக்கும்! அவர் புகழ் ஓங்கட்டும்!". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title> கல்வி பயில வழிவகுக்கும் உன்னதத் திட்டம் – மாணிக்கம் தாகூர் பாராட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/scheme-for-healthy-confident-learning-manickam-thakur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/scheme-for-healthy-confident-learning-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">b8b102b0-611c-48d6-bcdd-0d6264d24fc6</guid><pubDate>Tue, 25 Aug 2026 10:47:58 +0000</pubDate><atom:updated>2026-08-25T10:47:58.075Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கல்வி,education,மாணிக்கம் தாகூர்,பாராட்டு,திட்டம்,praise,Manikam Tagore</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/wp7r3tvb/manickam.jpg" width="768"><media:title type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/wp7r3tvb/manickam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாணவர்களின் ஆரோக்கியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் கல்வி பயில வழிவகுக்கும் உன்னதத் திட்டம் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">மாணிக்கம் தாகூர்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>ஒளிரும் புன்னகைத் திட்டம்</h2><p>நமது விருதுநகர் மாவட்டத்தில் அன்றைய மாவட்ட கலெக்டர்  ஜெயசீலன்  முன்னெடுப்பில், சி.எஸ்.ஆர் பங்களிப்பு மற்றும் அர்ப்பணிப்புள்ள மருத்துவக் குழுவுடன் வெற்றிகரமாக தொடங்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ முன்முயற்சி, இன்று தமிழகம் முழுவதும் 'ஒளிரும் புன்னகைத் திட்டம்' என்ற பெயரில் விரிவுபடுத்தப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது!</p> <h2> உரிய சிகிச்சை</h2><p>அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் பங்களிப்புடன் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF">அரசுப்பள்ளி</a> மாணவர்களுக்கு பல், கண் மற்றும் காது பரிசோதனைகள், உரிய சிகிச்சை, ஆலோசனை மற்றும் தொடர் மருத்துவக் கண்காணிப்பு வழங்கப்படுகிறது.</p><h2>உன்னதத் திட்டம்</h2><p>இது வெறும் உடல்நலப் பரிசோதனை மட்டுமல்ல; மாணவர்கள் எந்தவிதத் தாழ்வுணர்ச்சியுமின்றி மிகுந்த ஆரோக்கியத்துடனும், உளவியல் தன்னம்பிக்கையுடனும் கல்வி பயில வழிவகுக்கும் உன்னதத் திட்டம்.</p><h2>நன்றி</h2><p>விருதுநகரில் விதைக்கப்பட்ட இந்த நல்முயற்சியை மாநில அளவிலான அரசுத் திட்டமாக மாற்றிய ராஜ் மோகன்</p><p> அமைச்சருக்கும், இதற்கு அடித்தளமிட்ட அதிகாரிகள் மற்றும் மருத்துவக் குழுவினருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும்! </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோவில்பட்டி கடலைமிட்டாய் விலை உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/price-hike-of-kovilpatti-kadalai-mittai-peanut-candy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/price-hike-of-kovilpatti-kadalai-mittai-peanut-candy#comments</comments><guid isPermaLink="false">8ba61f80-e18a-4536-9d72-31de4268a3a7</guid><pubDate>Tue, 25 Aug 2026 10:40:41 +0000</pubDate><atom:updated>2026-08-25T10:40:41.268Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Kovilpatti,கோவில்பட்டி,விலை உயர்வு,price hike,கடலை மிட்டாய்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/pz7nq308/aoover.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/pz7nq308/aoover.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>புகழ்பெற்ற கோவில்பட்டி கடலைமிட்டாய் விலை 25 சதவீதம் உயர்த்தப்படுவதாக உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். </p><p>வெல்லம், நிலக்கடலை, ஏலக்காய், பேக்கிங் கவர்கள் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வால், உற்பத்தி செலவு உயர்ந்ததின் காரணமாக கடலை மிட்டாய் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF">கோவில்பட்டி</a> கடலை மிட்டாய் 25 சதவீத விலை உயர்வு இன்று முதல் (25.08.2026) அமலுக்கு வந்தது.</p><p>இதன்படி ஒரு கிலோ ரூ.220க்கு விற்பனை செய்யப்பட்ட கடலைமிட்டாய், தற்போது ரூ.270க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவைவை தொடர்ந்து கோவில்பட்டி கடலை மிட்டாய் விலையும் அதிகரித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>கர்நாடக வனத்துறையின் போலி என்கவுண்டர் வழக்கை சிபிஐக்கு மாற்ற விஜய் வலியுறுத்த வேண்டும் - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vijay-must-press-for-transfer-of-karnataka-forest-fake-encounter-case-to-cbi-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vijay-must-press-for-transfer-of-karnataka-forest-fake-encounter-case-to-cbi-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">31d678e8-8e27-4a9e-9497-3504a703fbf7</guid><pubDate>Tue, 25 Aug 2026 10:34:50 +0000</pubDate><atom:updated>2026-08-25T10:34:50.164Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,நயினார் நாகேந்திரன்,Karnataka,கர்நாடகா,Encounter,சிபிஐ விசாரணை,என்கவுண்டர்,Nainar Nagenthran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/kkbblqdy/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/kkbblqdy/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கர்நாடக வனத்துறையின் போலி என்கவுண்டர் வழக்கை சிபிஐக்கு மாற்ற கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு, முதல்-அமைச்சர் விஜய் வலியுறுத்த வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் வனப்பகுதியில் மூன்று தமிழக விவசாயிகள் அம்மாநில வனத்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், நியாயம் கிடைக்க சிபிஐ விசாரணை வேண்டும் என நாங்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் விவசாயிகளின் பிரேதப் பரிசோதனை அறிக்கை, இச்சம்பவம் ஒரு திட்டமிடப்பட்ட ‘போலி என்கவுண்டர்’ என்பதை நிரூபித்து, அந்தக் கோரிக்கைக்கு மேலும் வலுசேர்த்துள்ளது. 10 அடிக்கும் குறைவான, மிக நெருக்கமான தொலைவிலிருந்து அவர்கள் சுடப்பட்டிருப்பது வனத்துறையின் கொடூரமான முகத்தை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.</p><p>இந்த விவகாரத்தில் கர்நாடக காவல்துறையின் விசாரணையில் துளியும் நம்பிக்கையில்லை. எனவே உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படவும், மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிவரவும் இந்த வழக்கை உடனடியாக சிபிஐ (CBI) விசாரணைக்கு மாற்ற வேண்டியது அவசியமாகும். தவெக அரசு இந்த விஷயத்தில் மவுனம் காப்பது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு செய்யும் துரோகமாகும்.</p><p>எனவே, தமிழக முதல்வர் விஜய் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, தனது கூட்டணிக் கட்சி ஆளும் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து, இந்த வழக்கை சிபிஐ (CBI) விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என அம்மாநில அரசை வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் - டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/essential-commodities-price-rise-must-be-contained-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/essential-commodities-price-rise-must-be-contained-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">c0fcaa21-3381-4985-851e-3079d8f7f127</guid><pubDate>Tue, 25 Aug 2026 10:07:19 +0000</pubDate><atom:updated>2026-08-25T10:07:19.228Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,விலை உயர்வு,price hike,Commodities,அத்தியாவசிய பொருட்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/6mxyx0ab/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/6mxyx0ab/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்த நாள் முதல் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே செல்வது ஏழை, எளிய மற்றும் விளிம்புநிலை மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.</p><p>ஆட்சிப் பொறுப்பேற்று நூறு நாட்களைக் கடந்தும் விவசாயக் கடன் தள்ளுபடி, குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.2,500 உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அனைத்து தரப்பு மக்களையும் வஞ்சித்துள்ள நிலையில், மின்கட்டண உயர்வு, சென்னை மாநகராட்சி சொத்துவரி உயர்வு உள்ளிட்ட தொடர் கட்டண மற்றும் வரி உயர்வுகளால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் குடும்பச் செலவுகள் ஏற்கனவே அதிகரித்துள்ளன.</p><p>இந்நிலையில், மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் நேரடியாகத் தொடர்புடைய அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக்கூடக் கட்டுப்படுத்த முடியாதது தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையையும் கையாலாகாத்தனத்தையுமே வெளிப்படுத்துகிறது.</p><p>மேலும், அடுத்தடுத்த பண்டிகைகள் நெருங்கி வரும் சூழலில், அத்தியாவசியப் பொருட்களின் விலை, குறிப்பாக சர்க்கரையின் விலை 50% வரையிலும், அரிசியின் விலை 40% வரையிலும், எண்ணெயின் விலை 60% வரையிலும் உயர்ந்திருப்பதால், ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் அன்றாடச் செலவுகள் அதிகரித்துள்ளதோடு, அவர்களின் பண்டிகைக் காலக் கொண்டாட்டங்களையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.</p><p>எனவே, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதோடு, விலை குறையும் வரை நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் அளவை தேவைக்கேற்ப உயர்த்தி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>&quot;தமிழ்நாட்டிற்கு என்.எல்.சி தேவையில்லை, நிலத்தை மேலும் கையகப்படுத்த அனுமதிக்க கூடாது&quot; - சவுமியா அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-does-not-need-nlc-further-land-acquisition-should-not-be-permitted-sowmya-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-does-not-need-nlc-further-land-acquisition-should-not-be-permitted-sowmya-anbumani#comments</comments><guid isPermaLink="false">bef7f09c-fa1f-494c-8949-5be2a4e0485f</guid><pubDate>Tue, 25 Aug 2026 09:37:10 +0000</pubDate><atom:updated>2026-08-25T09:37:10.128Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Tamilnadu,பாமக,PMK,திமுக,DMK,தமிழகம்,தமிழக சட்டசபை,TN Assembly,Assembly Session,சட்டசபை கூட்டத்தொடர்,NLC,சவுமியா அன்புமணி,Soumya Anbumani,என்.எல்.சி.,அமைச்சர் கீர்த்தனா,Minister Keerthana,சட்டசபை கூட்டத் தொடர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/yqq0hlwq/sou.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/yqq0hlwq/sou.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>என்.எல்.சி. ஏற்கனவே 40 ஆயிரம் ஏக்கர் நிலத்தை அழித்துவிட்டது என்றும், மேலும் 60 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முயற்சி செய்வதாக பாமக சட்டமன்ற உறுப்பினர் <a href="https://www.dailythanthi.com/topic/sowmiya-anbumani">சவுமியா அன்புமணி</a> தெரிவித்தார். </p><h2>NLC நிறுவனம்</h2><p>இதுகுறித்து சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகைள் மீதான விவாதத்தின் போது அவர் பேசியதாவது:-</p><p>தமிழ்நாட்டின் மின்சாரத் தேவை 21 ஆயிரம் மெகாவாட். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள தனியார் மற்றும் அரசு துறைகளில் 36 ஆயிரம் மெகாவாட் உள்ளது. நாம் மின் மிகை மாநிலமாக மாறிவிட்டோம். இதில், NLC-யின் பங்கு 2 ஆயிரம் மெகாவாட் மட்டுமே. ஆகையால், நமக்கு NLC தேவையில்லை. NLC நிறுவனம் தனது CSR நிதி முழுவதையும் வடமாநிலங்களுக்குத்தான் வழங்குகிறது. CSR நிதியைப் பயன்படுத்தி தமிழகத்தில் தடுப்பணைகள் அல்லது நெல் குடோன்கள் கட்டித் தர வேண்டும்.</p><h2>பூட்டு போடும் போராட்டம்</h2><p>ஏற்கனவே 40,000 ஏக்கர் நிலத்தை அவர்கள் அழித்துவிட்டு, இரவோடு இரவாக அங்கிருந்த மக்களை ‘விஜயமாநகரம்’ என்ற இடத்தில் தங்க வைத்து, மூட்டை முடிச்சுகளுடன் அகதிகளாகச் செல்ல வைத்தனர். அவர்களுக்கு அவ்வளவு பெரிய பிரச்சினை இருக்கும்போது, மேலும் 60,000 ஏக்கர் நிலத்தை எடுக்க என்.எல்.சி. நிர்வாகம் தயாராகி வருகிறது; அதற்குப் பயங்கர முனைப்புடன் செயல்பட்டது. </p><p>அந்த சமயம் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி அனைவரையும் அழைத்துச் சென்று என்.எல்.சி. நிறுவனத்திற்குப் பூட்டு போடும் போராட்டை நடத்தினார். அப்போது வஜ்ரா வாகனத்தைக் கொண்டு அந்தப் போராட்டத்தை அடக்க முயற்சிகள் நடந்தன; அனைத்தையும் மீறி பெரிய போராட்டங்கள் நடைபெற்றன. எனவே, மேலும் 60,000 ஏக்கர் நிலத்தை எடுப்பதற்குத் கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது என்பதைத் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். அங்கு இளநீரில் கூட நச்சுத்தன்மை (டயாசின்) இருக்கிறது. </p><p>இவ்வாறு <a href="https://www.dailythanthi.com/topic/sowmiya-anbumani">சவுமியா அன்புமணி</a> ஆவேசமாக தெரிவித்தார்</p><h2>தி.மு.க. அரசு</h2><p>இதனைத் தொடர்ந்து பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ கணேசன், “என்.எல்.சி.யில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் அதிகம் இருப்பார்கள். அவர்களுக்கு இங்கு வெளியில் நடக்கும் போராட்டம் என்ன என்பது குறித்து பெரும்பாலும் தெரியாது. முதல்-அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசில், தொழிலாளர் நலத்துறை அமைச்சராக நான் இருந்த போது என்.எல்.சி. அதிகாரிகள், விவசாயிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் கலந்து பேசி, நிலம் கொடுத்த விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டிய கூடுதலான தொகையைப் பெற்றுக்கொடுத்தது தி.மு.க. அரசு. அதேபோல, ஆண்டிற்கு ரூ. 100 கோடி சி.எஸ்.ஆர். நிதியைப் பெற்றுக்கொடுத்ததும் தி.மு.க. அரசுதான்” என்றார்.</p><h2>அரசாங்கம் கைவிடாது</h2><p>இதனையடுத்து பேசிய தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, “பரந்தூர் மக்களை எப்படி நாம் பாதுகாத்தோமோ, அதேபோல் என்.எல்.சி. நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்களையும் நமது அரசாங்கம் கண்டிப்பாக கைவிடாது. ஆனால், நான் ஒன்றை மட்டும் கேட்டுக்கொள்கிறேன் .. என்.எல்.சி. நிறுவனம் யாருடைய நிறுவனம்? அது மத்திய அரசாங்கத்தின் நிறுவனம். நாங்கள் ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்கள்தான் ஆகின்றன; இந்த நேரத்தில் என்.எல்.சி. வரவில்லை. இது பல ஆண்டுகளாக நீடித்து வரும் பிரச்சினை. இன்று கூட்டணியில் யார் இருக்கிறார்கள்? அவர்களும் மத்திய அரசிடம் பேசி தமிழ்நாட்டிற்கான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாமே! உயர்மட்ட குழு கேட்டுள்ளனர். கண்டிப்பாக நமது முதல்-அமைச்சர் அங்கிருக்கும் மக்களை கைவிட மாட்டார்.” என்று கூறினார். </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/heavy-rain-forecast-today-in-three-districts-of-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/weather/heavy-rain-forecast-today-in-three-districts-of-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">a6caf218-c5df-4d91-ad61-c0ff8e69177b</guid><pubDate>Tue, 25 Aug 2026 09:30:22 +0000</pubDate><atom:updated>2026-08-25T09:30:22.772Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு,வானிலை முன்னறிவிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/d185uv4u/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/d185uv4u/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><p><strong>25-08-2026:</strong> நீலகிரி, தேனி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>26-08-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>27-08-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><h3>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</h3><p><strong>25-08-2026 மற்றும் 26-08-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.</p><p><strong>27-08-2026 முதல் 29-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் வட உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><h3>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</h3><p><strong>25-08-2026 மற்றும் 26-08-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.</p><p><strong>27-08-2026 முதல் 29-08-2026 வரை:</strong> வட உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p><strong>நாளை</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருவள்ளூர் அருகே பட்டப் பகலில் இளைஞர் வெட்டிக் கொலை; 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-hacked-to-death-in-broad-daylight-near-thiruvallur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-hacked-to-death-in-broad-daylight-near-thiruvallur#comments</comments><guid isPermaLink="false">cbfe816d-35bd-40c6-8658-a798d157cc66</guid><pubDate>Tue, 25 Aug 2026 09:03:51 +0000</pubDate><atom:updated>2026-08-25T09:03:51.074Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,திருவள்ளூர்,Tiruvallur,இளைஞர் கொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/o68f7nos/carone33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
திருவள்ளூர்]]></media:title><media:description type="html"><![CDATA[ இளைஞர் வெட்டிக் கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/o68f7nos/carone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட்டு விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த மாரி என்பவர் பட்டப் பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">திருவள்ளூர் </a>அருகே சிட்டத்தூர்கிராமத்தைச் சேர்ந்த மாரி ( எ ) ரூபன் (வயது 33) என்பவர்</p><p>குற்ற வழக்கு ஒன்றில் வெங்கல் காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் நண்பர் வெங்கடேஷ் என்பவருடன் தாமரைப்பாக்கம் கூட்டு சாலைக்கு  சென்று கொண்டிருந்தார், அப்போது மின்னல் வேகத்தில் எதிரே ஒரு காரில் ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் மாரி மோட்டார் சைக்கிள் மீது மோதி  சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர்.</p><p> பட்டபகலில் நடந்த கொலை சம்பவத்தை பார்த்த நேரில் மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><p>தப்ப முயன்ற போது  காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாகல்மேடு என்ற இடத்தில்சாலை ஓரமாக இருந்தவீட்டின் சுவர் மீது கார் மோதியதில் கொலைகார கும்பலைச் சேர்ந்த 3 பேரை பொதுமக்கள் விரட்டி பிடித்து வெங்கல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.  காரிலிருந்த மற்ற இருவர் தப்பி ஓடிவிட்டனர். தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.</p> <p>திருவள்ளூரில்  காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட்டு விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த மாரி என்பவர் பட்டப் பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>புதிதாக இயக்கப்படும் 130 தாழ் தள மின்சார குளிர்சாதன பஸ்கள்: எந்தெந்த இடங்களில் வழித்தடங்கள்..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/130-newly-operated-low-floor-electric-air-conditioned-buses-what-are-the-routes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/130-newly-operated-low-floor-electric-air-conditioned-buses-what-are-the-routes#comments</comments><guid isPermaLink="false">35db2ece-c1c8-4728-b05e-279521771c73</guid><pubDate>Tue, 25 Aug 2026 08:58:04 +0000</pubDate><atom:updated>2026-08-25T08:58:04.803Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,Chennai,சென்னை,தமிழகம்,தமிழக அரசு,TN govt,Government Transport Corporation,Electric Buses,அரசு போக்குவரத்து கழகம்,மின்சார குளிர்சாதன பஸ்கள்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/iiketmyb/kle.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/iiketmyb/kle.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் 2-ம் கட்டமாக 750 ஏ.சி. மின்சார பஸ் சேவையை <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> இன்று (செவ்வாய்கிழமை) தொடங்கி வைத்தார்.</p><h2>மின்சார பஸ்கள் இயக்கம்</h2><p>சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கத்தில், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் முதல் கட்டமாக ரூ.697 கோடி மதிப்பீட்டில் 625 தாழ்தள மின்சார பஸ்கள் வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, சென்டிரல் பணிமனை மற்றும் தண்டையார்பேட்டை-1 ஆகிய 5 பணிமனைகளில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.</p><p>இதனைத் தொடர்ந்து, 2-ம் கட்டமாக 750 புதிய தாழ்தள குளிர்சாதன மின்சார பஸ்கள் ஆலந்தூர், சென்டிரல் பணிமனை-2, பெரம்பூர், பாடியநல்லூர், ஆவடி, கே.கே.நகர் மற்றும் அய்யப்பன்தாங்கல் ஆகிய 7 பணிமனைகளில் இருந்து இயக்கப்பட உள்ளது. இந்த மின்சார பஸ்கள் இயக்கத்தை <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> சென்னை தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.</p><h2>வழித்தடங்கள்</h2><p>இந்நிலையில் புதிதாக இயக்கப்படும் 130 தாழ்த்தள மின்சார குளிர்சாதன பஸ்களுக்கான வழித்தடங்களை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.</p><p>இதன்படி மத்திய பணிமனையில் இருந்து இயக்கப்படும் 50 தாழ்த்தள குளிர்சாதன மின்சார பஸ்களின் வழித்தடங்கள்</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/nfhvnd1d/fifty.jpg" /></figure><p>ஆலந்தூர் பணிமனையில் இருந்து இயக்கப்படும் 80 தாழ்த்தள குளிர்சாதன மின்சார பஸ்களின் வழித்தடங்கள்</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/ley4mpw5/alan.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் அடுத்தடுத்து 3 பெண்களிடம் செல்போன், பணம் பறிப்பு: வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-snatching-mobile-phones-and-money-from-3-women-in-succession-in-thoothukudi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-snatching-mobile-phones-and-money-from-3-women-in-succession-in-thoothukudi#comments</comments><guid isPermaLink="false">9d58100b-e64e-47f5-9026-2d3b0c340067</guid><pubDate>Tue, 25 Aug 2026 08:37:52 +0000</pubDate><atom:updated>2026-08-25T08:37:52.838Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Youth arrested,வாலிபர் கைது,money laundering,செல்போன்,women,பெண்கள்,பணம் பறிப்பு,Cell phones,தொடர் வழிப்பறி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/h7j07ass/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வாலிபர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/h7j07ass/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடியில் அடுத்தடுத்து 3 பெண்களிடம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D">செல்போன்</a>கள், கைப்பை மற்றும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">பணத்தைப் பறித்துச் </a>சென்ற வாலிபரை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். </p><h2>செல்போன் பறிப்பு</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சண்முககனி (வயது 63) என்பவர் நேற்று மாலை சாலையில் நடந்து சென்றபோது, பைக்கில் வந்த மர்ம நபர் அவரது கையிலிருந்த செல்போனைப் பறித்துச் சென்றார். இதேபோல் கோமதிபாய் காலனியைச் சேர்ந்த வையனாச்சி(55) என்பவரிடமும் ஒரு மர்ம நபர் செல்போனைப் பறித்துவிட்டு தப்பினார். </p><h2>கைப்பை பறிப்பு</h2><p>விளாத்திகுளத்தைச் சேர்ந்த சந்திரா(55) என்பவர் தூத்துக்குடி அமெரிக்கன் மருத்துவமனையில் சிகிச்சையிலிருக்கும் தனது மகனைப் பார்த்துவிட்டு நடந்து சென்றபோது, அவரது கைப்பையை வாலிபர் ஒருவர் பறித்துச் சென்றார். அதில் ரூ.8 ஆயிரம் பணம் இருந்தது. </p><h2>வாலிபர் கைது</h2><p>இந்த சம்பவங்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில் தூத்துக்குடி அண்ணாநகர் 12-வது தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சக்திகணேஷ்(25) என்பவரே இந்த தொடர் வழிப்பறியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>&quot;வெறும் அரசியல் காரணங்களுக்காக ரூ.27,500 கோடி திட்டத்தை கைவிடுவதா?&quot; - கிருஷ்ணசாமி கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/abandoning-a-27500-crore-project-for-mere-political-reasons-krishnasamy-questions</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/abandoning-a-27500-crore-project-for-mere-political-reasons-krishnasamy-questions#comments</comments><guid isPermaLink="false">618f828c-be05-495f-b413-9bfceac29db9</guid><pubDate>Tue, 25 Aug 2026 08:31:19 +0000</pubDate><atom:updated>2026-08-25T08:31:19.958Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,தமிழக அரசு,டாக்டர் கிருஷ்ணசாமி,Dr. Krishnasamy,புதிய தமிழகம்,Paranthur Airport,பரந்தூர் விமானநிலையம்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,தவெக அரசு,tvk govt</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/7a239j8w/mkerer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/7a239j8w/mkerer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>”பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்தது” நியாயமாக தென்படவில்லை என்று புதிய தமிழகம் கட்சி நிறுவனரும், தலைவருமான டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். </p><h2>ரூ.27,500 கோடி நிதி</h2><p>இதுதொடர்பாக அவர் தனது பேஸ்புக் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழகத்தில் சென்னை விமான நிலையம் அருகே புதிதாக பசுமை விமான நிலையம் அமைக்க ’பரந்தூர்’ என்ற இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்காக ரூ.27,500 கோடி நிதியும் மத்திய அரசால் ஒதுக்கப்பட்டுவிட்டது.</p><p>எந்தவொரு விமான நிலையம் அமைய வேண்டும் என்றாலும் மாநில அரசே நில ஆர்ஜிதம் செய்ய வேண்டும். ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பரந்தூர் மற்றும் ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களில் ஏறக்குறைய 5,846 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்யத் திட்டமிடப்பட்டு, இதுவரை 1,802 ஏக்கர் நிலம் விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது.</p><p>எனினும், மிக முக்கியமான அந்த பகுதியில் உள்ள ஏகனாபுரம் மற்றும் பரந்தூர் கிராம மக்கள், தங்களுடைய வேளாண்மை நிலங்களை நாங்கள் விட்டுத்தர மாட்டோம் என்று கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாகப் போராடி வருகிறார்கள்.</p><h2>நில ஆர்ஜிதங்களுக்கு எதிராக குரல்</h2><p>ஒரு தொழில்-சிட்கோ (SIDCO), சிப்காட் (SIPCOT) அல்லது இதுபோன்ற விமான நிலையங்கள் அமைப்பதற்குப் பொதுவாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களே தேவைப்படுகின்றன. அந்த இடங்களைத் தேர்வு செய்கின்ற பொழுது பெருநகரங்களிலிருந்து இணைப்பு, எதிர்கால வளர்ச்சி, துறைமுகங்கள் மற்றும் பிற போக்குவரத்துகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கணக்கில்கொண்டே இடங்கள் தேர்வு செய்யப்படுகின்றன.</p><p>அவ்வாறு தேர்வு செய்யப்படுகின்ற பொழுது நிலங்களுக்கு கூடுதல் விலை மற்றும் நிலத்தின் மீதான தீராத பற்று ஆகியவற்றின் காரணமாக, அந்தப் பகுதி மக்கள் நில ஆர்ஜிதங்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பது என்பது நாடெங்கும் இருக்கக்கூடிய பிரச்சனை.</p><p>ஒரு காலத்தில் வசதி படைத்தவர்கள் மட்டுமே விமானப் பயணத்தை மேற்கொண்டனர். ஆனால், இப்போது விமானப் பயணம் என்பது சர்வசாதாரணமாக அனைத்துத் தரப்பினராலும் பயன்படுத்தக்கூடிய போக்குவரத்தாக மாறியுள்ளது. வரக்கூடிய காலகட்டங்களில் 90 சதவீதம் பேர் விமானப் போக்குவரத்தை பயன்படுத்தக்கூடிய சூழல் ஏற்படும்; அதுவே முதன்மைப் போக்குவரத்து வசதியாகக் கூட மாறலாம். எனவே, விமான நிலைய விரிவாக்கங்களை வசதி படைத்தோருக்கான வசதி என்று ஒதுக்கிவிட முடியாது; கூடாது.</p><h2>வாக்குறுதி</h2><p>பசுமை விமான நிலையம் என்பது பல்வேறு நவீன வசதிகளை உள்ளடக்கியது. வெறும் உள்நாட்டுப் பயணிகள் மட்டும் பிரயாணம் செய்யக்கூடியது அல்ல; பிற சர்வதேச நாடுகளுக்கும் பயணிக்கும் கேந்திரமாக இந்த விமான நிலையம் அமையும். அதுமட்டுமின்றி, இந்தியாவில் உற்பத்தியாகக்கூடிய பல்வேறு விதமான மின் உபகரணங்கள் மற்றும் பிற பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் இதுபோன்ற பெரிய விமான நிலையங்கள் முக்கியமான இடத்தைப் பெறும்.</p><p>அந்த நோக்கத்தோடு அமையப்பெற்ற பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்து <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> அவர்கள் அறிவித்திருக்கிறார். அவர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, அந்த மக்களைச் சந்தித்து வாக்குறுதி கொடுத்தார் என்பது வேறு விஷயம். ஆனால், தமிழ்நாட்டினுடைய முதல்-அமைச்சராக அமர்ந்த பிறகு, ஏற்கனவே அந்த திட்டத்திற்கான நில ஆர்ஜிதம் 75 சதவீதம் முடிந்த பிறகு அதை ரத்து செய்வது, ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய ஒரு மிகப்பெரிய திட்டத்தை நழுவ விடுவது ஆகாதா? </p><p>இந்திய விமான நிலைய ஆணையம் (Airports Authority of India - AAI) ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டப் பிறகு, இந்த இடம் ரத்து செய்யப்பட்டு இருந்தாலும் கூட பரவாயில்லை. ஆனால், மாற்று இடம் கூட தேர்வு செய்யப்படாத நிலையில் இத்திட்டம் ரத்து செய்யப்பட்டது துளியும் ஏற்புடையது அல்ல.</p><h2>தவறான சமிக்ஞை</h2><p>அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா, கர்நாடக அரசுகள் தமிழகத்தினுடைய எல்லையிலேயே போட்டி போட்டுக்கொண்டு புதிய புதிய விமான நிலையங்களைக் கட்டி வருகின்றன. இந்த ஒரு தருணத்தில் இவ்வளவு பெரிய தொகையில் கட்டக்கூடிய விமான நிலையத் திட்டத்தை வலிந்து விட்டுக்கொடுப்பது, சர்வதேசத் தொழில் முதலீடுகளுக்கும் வளர்ச்சியை நோக்கிக் கொண்டு பயணிப்பவர்களுக்குமான தவறான சமிக்ஞையாக அமைந்துவிடாதா?</p><p>இதுபோன்ற விமான நிலையங்கள் இப்போது தொடங்கினாலே பயன்பாட்டுக்கு வருவதற்கு குறைந்தது 10 வருடங்கள் ஆகும். பரந்தூரை ரத்து செய்துவிட்டு, இன்று இருக்கக்கூடிய சென்னை விமான நிலையம் அருகிலேயே எப்படி 5,000 ஏக்கர் நிலத்தை - அதுவும் நீர்நிலைகள் இல்லாத, விவசாயம் செய்ய முடியாத தரிசு நிலங்களைத் தேடிக் கண்டுபிடிக்க முடியும்?</p><p>ஒருவேளை இதே பரந்தூர், ஏகனாபுரத்தை முன்னுதாரணமாகக் கொண்டு அங்கும் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றால், அப்போது எந்தத் திட்டத்தைக் கொண்டுவர முடியும்? தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய கனவுத் திட்டமான ரூ.27,000 கோடி பசுமை விமான நிலையத் திட்டம் வெறும் கனவாகவே போய்விடாதா?</p><h2>மறுபரிசீலனை</h2><p>இதுபோன்ற ஒரு முக்கியமான முடிவை எடுப்பதற்கு முன்பாவது அனைத்துக் கட்சியினர், அனைத்துத் தரப்பினரையும் அழைத்து பேசி ஒரு சரியான முடிவை எடுத்திருக்கலாமே?</p><p>"நான் வாக்குறுதி கொடுத்துவிட்டேன்; அதைக் காப்பாற்றுவேன்" என்பதற்காக <a href="https://www.dailythanthi.com/topic/vijay">தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்</a> அவர்கள் ”பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்தது” நியாயமாக தென்படவில்லை. மறுபரிசீலனை செய்வாரா? என பொறுத்திருந்து பார்ப்போம். </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>விமான நிலைய திட்டம் ரத்து: முதல்-அமைச்சர் விஜய்யுடன் பரந்தூர் விவசாயிகள் சந்திப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/airport-project-cancelled-parandur-farmers-meet-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/airport-project-cancelled-parandur-farmers-meet-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">b481ecc2-c877-4027-aecd-dfed06538831</guid><pubDate>Tue, 25 Aug 2026 08:28:28 +0000</pubDate><atom:updated>2026-08-25T08:28:28.196Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Farmers,விவசாயிகள்,Parandur,பரந்தூர்,பரந்தூர் விமான நிலையம்,Parandur Airport,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/zq03klgx/CHENNAI-15.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/zq03klgx/CHENNAI-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக முதல்-அமைச்சர் விஜய், சட்டசபையில் நேற்று அறிவித்தார். </p><p><strong>இதுதொடர்பாக அவர் கூறுகையில்</strong>, பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள், இந்த அரசால் கைவிடப்படும். துறை சார்ந்த வல்லுனர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோர்களிடம் கலந்தாலோசித்து, விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாதவாறு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பொருத்தமான சில மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.</p><p>அவ்விடங்க ளின் தொழில்நுட்ப ரீதியான சாத்தியக்கூறுகளை சம்பந்தப் பட்ட துறைகள் மூலம் விரிவான ஆய்வு மேற்கொண்டு, புதிய விமான நிலையத்திற்கான இடம் விரைவில் இறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார். தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு அரசி​யல் கட்சி தலை​வர்​கள் வரவேற்​பும், எதிர்ப்​பும் தெரி​வித்​துள்​ளனர்.</p><p>இந்த நிலையில், பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படும் என முதல்-அமைச்சர் விஜய் அறிவித்த நிலையில், பரந்தூர் விவசாயிகள், விமான நிலைய எதிர்ப்புக் குழுவினர் தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது விவசாயிகள் முதல்-அமைச்சர் விஜய்க்கு பச்சை துண்டு அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/wmygx7uy/Untitled-1.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>திருவாரூரில் கனமழை: அறுவடைக்குத் தயாரான 2,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/heavy-rain-in-tiruvarur-2000-acres-of-ready-to-harvest-paddy-crops-submerged-and-damaged</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/heavy-rain-in-tiruvarur-2000-acres-of-ready-to-harvest-paddy-crops-submerged-and-damaged#comments</comments><guid isPermaLink="false">96800e30-d1fa-4e07-b580-0811446d30f0</guid><pubDate>Tue, 25 Aug 2026 08:23:33 +0000</pubDate><atom:updated>2026-08-25T08:23:33.199Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவாரூர்,கனமழை,heavy rain,Tiruvarur,Paddy crops,நெற்பயிர்கள் சேதம்</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/4zdz1wl5/31.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ நெற்பயிர்கள் சேதம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கனமழையால் 2000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/4zdz1wl5/31.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவாரூர்,</p><p>திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த திடீர் கனமழை காரணமாக, அறுவடைக்குத் தயாராக இருந்த சுமார் 2,000 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி கடுமையான சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.</p><h2>2 நாட்கள் பெய்த கனமழை</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">திருவாரூர் மாவட்டம்</a> மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2 நாட்கள் தொடர்ந்து கனமழை பெய்தது. இதையடுத்து நன்னிலம், குடவாசல், கலக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 2,000 ஏக்கர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">குருவை நெற்பயிர்கள்</a> முற்றிலும் நீரில் மூழ்கின. இன்னும் சில தினங்களில் அறுவடை செய்யப்படவிருந்த நிலையில், வயல்களில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற முடியாததால் நெற்கதிர்கள் அழுகி, முளைக்கத் தொடங்கியுள்ளன.</p><h2>விவசாயிகள் வேதனை-.கோரிக்கை</h2><p>ஏக்கருக்குப் பல்லாயிரக்கணக்கில் செலவு செய்து, அறுவடை நேரத்தில் பெய்த இந்த மழையால் தங்களுக்குப் பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட விளைநிலங்களை வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் உடனடியாக நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என்றும், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்றும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">கோரிக்கை </a>விடுக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விஜயகாந்த் பிறந்தநாள்: அண்ணாமலை புகழாரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vijayakanths-birthday-annamalai-pugazharam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vijayakanths-birthday-annamalai-pugazharam#comments</comments><guid isPermaLink="false">21079c74-e3fb-4851-83be-57f77d3ef018</guid><pubDate>Tue, 25 Aug 2026 08:22:11 +0000</pubDate><atom:updated>2026-08-25T08:22:11.237Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Annamalai,அண்ணாமலை,சென்னை,birthday,பிறந்தநாள்,விஜயகாந்த்,புகழாரம்,Captain Vijayakanth</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/ckhk516k/167.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அண்ணாமலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/ckhk516k/167.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தனது வாழ்வையே தமிழக மக்களுக்காக அர்ப்பணித்த விஜயகாந்தின் நினைவுகளை போற்றி வணங்குகிறோம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, வீ த லீடர்ஸ் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>வாழ்த்து</h2><p>தேமுதிக நிறுவனத் தலைவர் அமரர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த தினம் இன்று. திரையுலகிலும், அரசியலிலும் தனக்கென தனி முத்திரை பதித்ததோடு, ஏழை எளிய மக்களின் மீது அளவற்ற அன்பும், கொடுத்து சிவந்த கரங்களும் கொண்ட மக்கள் தலைவராகத் திகழ்ந்தவர்.</p><p>நேர்மை, துணிவு, மக்கள் பணி எனத் தனது வாழ்வையே தமிழக மக்களுக்காக அர்ப்பணித்த அமரர் கேப்டன் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D">விஜயகாந்த்</a> அவர்களின் நினைவுகளைப் போற்றி வணங்குகிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பரந்தூர் விமான நிலையம் வந்தால் சென்னைக்கு வெள்ள ஆபத்து   - அமைச்சர் கீர்த்தனா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-at-risk-of-flooding-if-parantur-airport-comes-minister-keerthana</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-at-risk-of-flooding-if-parantur-airport-comes-minister-keerthana#comments</comments><guid isPermaLink="false">fd315df6-1aa4-40f9-a0d6-03c7afdcc409</guid><pubDate>Tue, 25 Aug 2026 08:18:10 +0000</pubDate><atom:updated>2026-08-25T08:18:10.730Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,பரந்தூர் விமான நிலையம்,CMVijay,அமைச்சர் கீர்த்தனா,MinisterKeerthana</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/x1bae9e2/mla333.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
பரந்தூர் விமான நிலையம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னைக்கு வெள்ள ஆபத்து]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/x1bae9e2/mla333.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பரந்தூரை நாம் விமான நிலையமாக மாற்றினால் கண்டிப்பாக சென்னைக்குள் வெள்ளம் வரும் அபாயம் உள்ளது என அமைச்சர் கீர்த்தனா கூறினார்.</p><h2>சட்டசபையில் காராசார விவாதம்</h2><p>சட்டசபையில் இன்றைய மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்படுவதாக முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தது குறித்து பெரும் விவாதம் நடைபெற்றது. தி.மு.க.-த.வெ.க. அதிமுக, பாமக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு:-</p><p>விவசாயிகளின் தொடர் எதிர்ப்பு, தேர்தல் வாக்குறுதியை ஏற்று, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் (பரந்தூர் விமானநிலையம்) அமையவிருந்த சென்னையின் 2-வது புதிய பசுமை விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாகவும், அதற்கு மாற்றாக வேறு இடத்தைத் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தார்.</p><p>இந்த அறிவிப்பிற்கு முக ஸ்டாலின் உள்பட திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அண்ணாமலை, அன்புமணி ராமதாசும் பரந்தூர் விமான நிலையம் அமையவில்லை என்றால் வேறு இடத்தை உடனடியாக தேர்வு செய்த அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.</p><h2>விமான நிலையம் எதற்காக கொண்டுவந்தோம்</h2><p>இந்நிலையில் இது தொடர்பான விவாதம் இன்று சட்டசபையில் நடந்தது. அப்போது <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20">பரந்தூர் விமான நிலையம்</a> எதனால் கைவிடப்பட்டது? இதுவரை கையகப்படுத்திய நிலத்தை அரசு என்ன செய்யப்போகிறது என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.</p><p>அப்போது பேசிய திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, பரந்தூர் விமான நிலையத்தை எதற்காக கொண்டுவந்தோம் என்று விளக்கம் அளித்துள்ளோம். பல இடங்களை ஆய்வு செய்த பிறகும் ஏர்போர்ட் நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை. குறைந்த பாதிப்புகள் அடிப்படையில் தான் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. இன்னொரு இடத்தை தேர்வு செய்வதாக கூறியிருக்கிறீர்கள். அங்கும் நீங்கள் இதே சூழலை எதிர்கொள்வீர்கள் என்று கூறினார்</p><p>அதற்கு பதில் அளித்து பேசிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, ‘சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய விரிவாக்க பணிகளை திமுக கிடப்பில் போட்டது ஏன்?  பரந்தூர் குறித்த உயர்மட்ட குழுவின் அறிக்கை ஏன் வெளியிடப்படவில்லை.</p><h2>சென்னைக்கு வெள்ள அபாயம்</h2><p>பரந்தூரை நாம் விமான நிலையமாக மாற்றினால் கண்டிப்பாக சென்னைக்குள் வெள்ளம் வரும் அபாயம் உள்ளது.பரந்தூர் விமான நிலையத்தால் 1500 நீர்நிலைகள் பாதிக்கப்படும். பரந்தூரில் நீர்நிலைகளை அழிப்பது சென்னைக்கு வெள்ள அபத்தை உருவாக்குவதோடு, பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தையும் அதிகரிக்கும்.</p><p>விளை நிலத்தில் விமான நிலையம் அமைத்தால் கொச்சி பாதிக்கப்படுகிறது. பரந்தூர் கால்வாயை அழித்தால் கேரளத்தில் ஏர்போர்ட்டுக்குள் வெள்ளம் வந்ததை போன்ற நிலை தான் ஏற்படும்.</p><p>1500 நீர்நிலை, 1000 குடும்பம் பாதிக்கும் என்பதை கருதாமல் பரந்தூர் நிலத்தை ஏர்போர்ட்டுக்கு தேர்வு செய்தது தவறு. பரந்தூர் நிலங்கள் முப்போகம் நெல் விளையக்கூடிய வளமான விவசாய பூமியாகும். இப்பகுதிகளில் உள்ள இயற்கை நீர்நிலைகள் மழைநீரை சேமித்து ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.</p><h2>விசாயம் நடக்கும் விளைநிலம்</h2><p>மழை பெய்யாமல் இருந்தாலும் விவசாயம் நடக்கும் விளைநிலம் என்பதால் தான் பரந்தூர் ஏர்போர்ட் திட்டம் ரத்து செய்யப்பட்டது.</p><p>மக்களின் தொடர் சுற்றுச்சூழல் கவலைகள் மற்றும் ஈரநில பாதுகாப்பு கோரிக்கைகளை தொடர்ந்து மாற்று தொழில் திட்டங்கள் மற்றும் மாற்று இடங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் மாற்று தொழில் திட்டங்களை பரிசீலிக்க உள்ளோம். </p><p> பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மக்களுக்கும் மண்ணுக்கும் இடையூறு இல்லாத தொழில்கள் தொடங்கப்படும். வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் பரந்தூரில் தொழில்கள் தொடங்கப்படும் என்றார்.</p><h2>கம்பன் கால்வாய் </h2><p>அதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன்,‘ 1000 ஆண்டு கால பொக்கிஷமான கம்பன் கால்வாய் பரந்தூர் பகுதிகளில் ஓடுகிறது’ என்றார்.</p><p>பரந்தூர் விமான நிலையத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தை என்ன செய்யப்போகிறீர்கள்? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பிய நிலையில் அதுகுறித்து அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்தார்.</p><p>விமான நிலையத்திற்காக 5 வருடமாக கையப்படுத்திய நிலங்கள் அனைத்தும் வெளியூரில் வசிப்பவர்களுடையது. உள்ளூரில் வசிக்கும் யாருடைய நிலங்களையும் தமிழக அரசு தற்போது வரை கையகப்படுத்தவில்லை. பரந்தூர் விமான நிலையத்திற்காக சொந்த மக்களை அகதிகளாக வெளியேற்ற முடியாது. விமான நிலையத்திற்காக கையப்படுத்தப்பட்ட நிலங்களை என்ன செய்வது என பின்னர் முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.</p><h2>11 கிராமங்கள் ஒத்துக்கொண்டன</h2><p>விமான நிலையம் அமைப்பது மத்திய அரசாங்கத்திற்கு உட்பட்டது. நிலம் கையகப்படுத்துவது மட்டும் தான் மாநில அரசின் பணி. மாநில அரசாங்கத்தின் சார்பில் குழு அமைக்கப்பட்டு மூன்று அமைச்சர்கள் நேரடியாக காஞ்சிபுரம் மாவட்ட  கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகளை அழைத்து பேசினோம். 13 கிராமங்களில் 11 கிராமங்கள் ஒத்துக் கொண்டன. ஏகனாபுரம், பரந்தூர் ஆகிய இரண்டு கிராமங்கள் மட்டுமே ஒத்துக் கொள்ளவில்லை என திமுக முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு கூறினார்.</p><p>இதையடுத்து பேசிய அமைச்சர் வன்னி அரசு, திமுகவுடன் கூட்டணி இருந்தபோதே பரந்து திட்டத்தை எதிர்த்து போராடினோம். பரந்தூர் விவசாய நிலங்களும் மண்ணின் மைந்தர்களும் தவெக அரசால் பாதுகாக்கப்பட்டுள்ளனர் என்றார்.</p><h4>இடமில்லை... இடமிருக்கு!</h4><p>கையகப்படுத்தப்பட்ட நிலத்தை வேறு திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் என அமைச்சர் கீர்த்தனா கூறினார். </p><p>சட்டத்தில் அதற்கு இடமில்லை. எந்த திட்டத்திற்கு கையகப்படுத்தப்பட்டதோ, அந்த திட்டத்திற்கு தான் பயன்படுத்த வேண்டும், இல்லை என்றால், விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என பாமக சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார் கூறினார். </p><p>குறிப்பிட்ட திட்டத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலம், குறிப்பிட்ட காரணங்களால் செயல்படுத்த முடியாத நிலையில், மற்ற திட்டங்களுக்கு அரசு ஒதுக்கீடு செய்ய சட்டத்தில் இடம் உள்ளது என </p><p>அமைச்சர் கீர்த்தனா பதில் அளித்ஹ்டார்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்ட 2 ரவுடிகள் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-2-rowdies-arrested-for-rioting-with-sickles</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-2-rowdies-arrested-for-rioting-with-sickles#comments</comments><guid isPermaLink="false">46a9439b-b94a-4fa8-84d1-d7aa2d5b0b49</guid><pubDate>Tue, 25 Aug 2026 08:14:47 +0000</pubDate><atom:updated>2026-08-25T08:14:47.629Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பொதுமக்கள்,Thoothukudi,தூத்துக்குடி,Riot,அரிவாள்,Public,Scythe,ரகளை,ரவுடிகள் கைது,rowdies arrested</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/jmwf9agn/2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரவுடிகள் 2 பேர் கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/jmwf9agn/2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி மற்றும் குலசேகரன்பட்டினம் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D">அரிவாளைக் </a>காட்டி மிரட்டி ரகளையில் ஈடுபட்ட 2 ரவுடிகளை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். </p><h2>போலீசாருக்கு அரிவாளுடன் மிரட்டல்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், உடன்குடி தேரியூர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (வயது 29). பிரபல ரவுடியான இவர் மீது கொலை முயற்சி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சசிகுமார் உடன்குடி பஜார் பகுதியில் கையில் அரிவாளுடன் சென்று பொதுமக்களை மிரட்டி ரகளையில் ஈடுபட்டுள்ளார். </p><p>இதுகுறித்த தகவலறிந்து வந்த குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் தலைமையிலான போலீசார் அவரை பிடிக்க முயன்றபோது, போலீசாரை அவர் அரிவாளால் மிரட்டியுள்ளார். இருப்பினும் போலீசார் அவரை லாவகமாக மடக்கிப் பிடித்து கைது செய்தனர். </p><h2>ரவுடி கைது</h2><p>உடன்குடி, புதுமனைக்கோட்டை விளையைச் சேர்ந்த முத்துராஜ்(21) மற்றும் அவரது கூட்டாளிகளான சச்சின், சிவசுதேஷ் ஆகியோர் மீது கொலை முயற்சி, கஞ்சா விற்பனை வழக்குகள் உள்ளன. இவர்கள் 3 பேரும் குலசேகரன்பட்டினம் பகுதியில் கையில் அரிவாளுடன் பொதுமக்களை மிரட்டியுள்ளனர். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரைக் கண்டு அரிவாளைக் காட்டி மிரட்டியவாறே 3 பேரும் தப்பி ஓட முயன்றனர். </p><p>தப்பியோடியவர்களில் முத்துராஜை போலீசார் மடக்கிப் பிடித்த நிலையில், சச்சின் மற்றும் சிவசுதேஷ் ஆகிய 2 பேரும் அரிவாளுடன் தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவங்கள் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள குலசேகரன்பட்டினம் போலீசார், முத்துராஜை கைது செய்து, தப்பியோடிய 2 பேரையும் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>இலவச பஸ் பயண திட்டம் விரிவாக்கம்: சேலத்தில் தனியார் பஸ் ஓட்டுநர்கள் போராட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/expansion-of-free-bus-travel-scheme-private-bus-drivers-protest-in-salem</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/expansion-of-free-bus-travel-scheme-private-bus-drivers-protest-in-salem#comments</comments><guid isPermaLink="false">ae948f32-8296-44c3-9499-6a209cc941ef</guid><pubDate>Tue, 25 Aug 2026 08:07:05 +0000</pubDate><atom:updated>2026-08-25T08:07:05.720Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,சேலம்,தனியார் பஸ்,Free Bus,private buses,இலவச பஸ் பயணம்,bus drivers,driver strike</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/h6p6ky2q/CHENNAI-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/h6p6ky2q/CHENNAI-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>இலவச பஸ் பயண திட்டம் விரிவாக்கத்து எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் தனியார் பஸ் ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தினர்.</p><h2>தேர்தல் வாக்குறுதி</h2><p>கடந்த சட்டமன்ற தேர்தலின்போது ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக தரப்படும் என்றும், அனைத்து அரசு பஸ்களிலும் பெண்களுக்கு இலவச பயண திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் தவெக வாக்குறுதி அளித்தது. பின்னர் தேர்தலில் அதிக இடங்களில் தவெக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. இதையடுத்து தவெக அளித்த வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என்று பெண்கள் எதிர்பார்த்து இருந்தனர்.</p><h2>புதிய அறிவிப்புகள்</h2><p>இந்த நிலையில் முதல்-அமைச்சர் விஜய் நேற்று சட்டசபையில் அன்னப்பூரணி சூப்பர் 6 திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும், இந்த திட்டம் பொங்கல் பண்டிகை முதல் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.</p><p>மேலும் வெற்றி பயணம் திட்டத்தின் கீழ் பெண்கள் இனி மாநகர, நகர பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் ஆகிய அரசு பஸ்கள், மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் (மப்சல்) பஸ்கள், மலைப்பகுதிகளில் இயக்கப்படும் சாதாரண பஸ்களில் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்றும் தெரிவித்தார்.</p><h2>தனியார் பஸ் ஓட்டுநர்கள்</h2><p>இந்த நிலையில் பெண்களின் இலவசப் பயணத் திட்ட விரிவாக்கத்துக்கு தனியார் பஸ் ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெண்களின் இலவச பயணத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சேலத்தில் தனியார் பஸ் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். </p><p>மகளிர் இலவச பயணத் திட்டத்தால் தங்களின் வாழ்வாதாரம் போய்விடும் என்று அவர்கள் கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் தனியார் பேருந்துகள் இன்று இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/paranthur-airport-project-cancelled-tamil-nadu-farmers-association-welcomes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/paranthur-airport-project-cancelled-tamil-nadu-farmers-association-welcomes#comments</comments><guid isPermaLink="false">13773e53-2ed5-416c-ab3b-38736a5f59ff</guid><pubDate>Tue, 25 Aug 2026 07:57:14 +0000</pubDate><atom:updated>2026-08-25T07:57:14.372Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,farmer,ரத்து,பரந்தூர் விமான நிலையம்,Paranthur Airport,தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,welcomes</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/h3jyqecw/166.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பி.எஸ்.மாசிலாமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/h3jyqecw/166.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்திருப்பதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்றுள்ளது என்று பி.எஸ்.மாசிலாமணி தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>பரந்தூர் விமான நிலையம்</h2><p>ஆயிரக்கணக்கான  விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்  எதிர்ப்பையும் தாண்டி காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர், ஏகனாபுரம் சுற்றியுள்ள 13 கிராமங்களில் உள்ள 5300 ஏக்கரில் தமிழகத்தின் இரண்டாவது பசுமை விமான நிலையத்தை அமைக்க இருந்த திட்டத்தை நேற்றைய சட்டமன்ற கூட்டத்தில் ரத்து செய்வதாக முதல்-அமைச்சர் அறிவித்துள்ளதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது.</p><p>இப்பகுதி வெறும் மண்ணால் ஆன நிலம் அல்ல. இங்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல், தென்னை உள்ளிட்ட நஞ்சை பயிர்கள், தோட்டக்கலை பயிர்களும் சாகுபடி செய்து வரும் பகுதிகளாகும். இதனை நம்பியே பல ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரத்தையே நிலைகுலையச்செய்து, இவர்கள் தன் வாழ்விடங்களையே மாற்ற வேண்டிய நிலை ஏற்படும் என அஞ்சி தொடர்ந்து இப்பகுதி மக்கள் அரசின் எதிர் நடவடிக்கையும் எதிர்கொண்டு போராடி வந்தனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் போராடிவரும் நிலையில் இந்தத் திட்டத்தை முற்றாக ரத்து செய்தது பாராட்டத்தக்கது. </p><h2>இரண்டாவது விமான நிலையம்</h2><p>ஒன்றிய அரசும் இந்த இடத்தில் விமான நிலையம் அமைப்பதற்கான சில மாறுபாடுகளை தெரிவித்து இருந்த நிலையில் தமிழக அரசு இதை அறிவித்துள்ளது. இது எதிர்த்து போராடியவர்கள்  மீது காவல்துறை போட்டுள்ள வழக்குகளை அனைத்தையும் தமிழ்நாடு அரசு தள்ளுபடி செய்திட வேண்டும். இந்த இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கு, புதிய இடம் தேர்வு செய்யப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். </p><p>அதே நேரத்தில் பெரும்பகுதி விளைநிலங்களாக, குடியிருப்புகளாக உள்ள பகுதிகளை தேர்வு செய்து மறுபடியும் விவசாயிகளை துயரத்திற்கு உள்ளாக்க வேண்டாம்  என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம். <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">பரந்தூர் </a>பகுதி விவசாயிகளுக்கும், போராட்டக் குழுவினருக்கும் வாழ்த்துக்களை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மிலாடி நபி: இசுலாமிய மக்களுக்கு இதயம் நிறைந்த வாழ்த்துகள்- வைகோ</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/milad-un-nabi-heartfelt-greetings-to-the-muslim-people-vaiko</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/milad-un-nabi-heartfelt-greetings-to-the-muslim-people-vaiko#comments</comments><guid isPermaLink="false">dde80a87-122f-44cd-aaf0-1a9ade7027a5</guid><pubDate>Tue, 25 Aug 2026 07:41:46 +0000</pubDate><atom:updated>2026-08-25T07:41:46.727Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Greetings,வாழ்த்து,மிலாடி நபி,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,MDMK General Secretary Vaiko,milad-e-nabi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/bdg99ecu/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மிலாடி நபி: வைகோ வாழ்த்து.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/bdg99ecu/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF">மிலாடி நபி</a>யை முன்னிட்டு இசுலாமிய மக்களுக்கு இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B">வைகோ</a> தெரிவித்துள்ளார். </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">ம.தி.மு.க.</a> பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள மிலாடி நபி வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: </p><p>அகிலத்தில் மனிதகுல விடுதலைக்காகவும், அறியாமை அழியவும் அயராது பாடுபட்டவர் அண்ணல் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">நபிகள் நாயகம் </a>(ஸல்). </p><p>63 வயதான போதும் அவர்கள் மிக்க இளமையானவராகவே இருந்தார்கள். அன்பைப் பொழிவதிலும், ஆதரவற்றோர்களை அரவணைப்பதிலும், யுத்த களத்தில் எதிரிகளின் அருகே இருந்து போரிடுவதும், அநீதிகளை எதிர்த்ததும், அரிய செயல்கள் புரிந்ததும் என அகிலம் உள்ளவரை அண்ணலாரின் புகழ் அழியாது நிலைத்து நிற்கும். </p><p>சகோதரத்துவத்தையும், சமாதானத்தையும், அகில உலகத்திற்கும் போதித்த அண்ணல் அவர்களின் பிறந்தநாள் சந்திர கணக்கின் படி 1501, சூரிய கணக்கின் படி 1456. </p><p>அண்ணலாரின் பிறந்தநாள் பெருமங்கலம் உலகெங்கும் ஆரவாரமாக கொண்டாடப்படுகிறது. அன்னைத் தமிழ்நாட்டிலும் அண்ணலாரின் பிறந்தநாளை அமைதியுடனும், மகிழ்வுடனும் கொண்டாடும் அன்பு நிறை இசுலாமிய பெருமக்களுக்கு இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தேர்தல் வழக்கு: முதல்-அமைச்சர் விஜய் பதிலளிக்காவிட்டால் ரூ.50 ஆயிரம் அபராதம்: ஐகோர்ட்டு எச்சரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/election-case-high-court-warns-of-50000-fine-if-chief-minister-vijay-fails-to-respond</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/election-case-high-court-warns-of-50000-fine-if-chief-minister-vijay-fails-to-respond#comments</comments><guid isPermaLink="false">283ff3eb-74e0-4ac0-b338-9b653def23bf</guid><pubDate>Tue, 25 Aug 2026 07:16:56 +0000</pubDate><atom:updated>2026-08-25T07:16:56.573Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,சென்னை ஐகோர்ட்டு,Chennai High Court,தேர்தல் வழக்கு,election case,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/mbjjhwyj/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/mbjjhwyj/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>தேர்தல் வழக்கு</h2><p>பெரம்பூர் தொகுதியில் முதல்-அமைச்சர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து அந்தத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். அதேபோல, வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோரும் முதல்-அமைச்சர் விஜய்யின் வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்கு தாக்கல் செய்தனர். </p><p>இதைபோல திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்-அமைச்சர் விஜய் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜும் தேர்தல் வழக்கை தாக்கல் செய்தார். இந்த தேர்தல் வழக்குகள் அனைத்தும் நீதிபதி வி.லட்சுமிநாராயணன் அமர்வில் விசாரணையில் உள்ளன. இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம், முதல்-அமைச்சர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.</p><h2>ரூ.50 ஆயிரம் அபராதம்</h2><p>இந்த நிலையில், இந்த வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்ய இருப்பதாகவும், அதற்கு இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என, முதல்வர் விஜய் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி, “மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 86-வது பிரிவின்படி, தேர்தல் வழக்குகளை 6 மாதத்துக்குள் முடிக்க வேண்டியுள்ளது.</p><p>கடந்த முறையே வழக்கை நிராகரிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கப்பட மாட்டாது என கூறியிருந்தேன்,” என்றார். இதேபோல, ஆதவ் அர்ஜுனா தரப்பிலும் தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்ய இருப்பதாகவும், அதற்கு அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டது.</p><p>இரண்டு வார கால அவகாசம் வழங்க மறுத்த நீதிபதி, ஆகஸ்ட் 27-ம் தேதி வரை அவகாசம் வழங்கினார். அதற்குள் நிராகரிப்பு மனு தாக்கல் செய்யாவிட்டால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு எச்சரிக்கை விடுத்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஓணம் பண்டிகை: திருப்பூர் வழியாக திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரெயில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-festival-special-train-to-thiruvananthapuram-via-tiruppur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-festival-special-train-to-thiruvananthapuram-via-tiruppur#comments</comments><guid isPermaLink="false">611670d4-992b-4416-9099-102b0316f115</guid><pubDate>Tue, 25 Aug 2026 07:16:26 +0000</pubDate><atom:updated>2026-08-25T07:16:26.639Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்,சிறப்பு ரெயில்,Special train</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/iuqb7kva/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/iuqb7kva/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,  </p><p>ஓணம் பண்டிகையை முன்னிட்டு அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி, பெங்களூரு-திருவனந்தபுரம் வடக்கு (வண்டி எண்.06579) சிறப்பு ரெயில் வருகிற 28-ந்தேதி மாலை 4.40 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10.30 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கிற்கு சென்றடையும். </p><p>இந்த ரெயில் திருப்பூருக்கு வருகிற 29-ந்தேதி நள்ளிரவு 12.20 மணிக்கு வந்து 12.22 மணிக்கு புறப்படும். திருவனந்தபுரம் வடக்கு-பெங்களூரு (06580) சிறப்பு ரெயில் வருகிற 29-ந்தேதி மதியம் 12.40 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இந்த ரெயில் திருப்பூருக்கு வருகிற 29-ந்தேதி இரவு 9.38 மணிக்கு வந்து 9.40 மணிக்கு புறப்படும். மேற்கண்ட தகவலை, ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item></channel></rss>