<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 15 Aug 2026 10:25:49 +0000</lastBuildDate><item><title>தமது அநாகரிகமான பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் மன்னிப்பு கேட்க வேண்டும் - அமைச்சர் வன்னி அரசு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendran-must-apologize-for-his-uncivilized-remarks-minister-vanni-arasu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendran-must-apologize-for-his-uncivilized-remarks-minister-vanni-arasu#comments</comments><guid isPermaLink="false">f84e6f82-0955-40c4-984a-dadf75c960ee</guid><pubDate>Sat, 15 Aug 2026 09:58:17 +0000</pubDate><atom:updated>2026-08-15T09:58:17.383Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,பாஜக,BJP,Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,விசிக,VCK,முதல்-அமைச்சர் விஜய்,minister vanni arasu,அமைச்சர் வன்னி அரசு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/v47kzxq8/var.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/v47kzxq8/var.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> குறித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச்செயலாளரும், அமைச்சருமான வன்னி அரசு கண்டனம் தெரிவித்துள்ளார். </p><h2>அநாகரிகமான பேச்சு</h2><p>இது தொடர்பாக அவர் தண்நு எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- </p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் குறித்தும், அவரது குடும்பம் குறித்தும் மிக மோசமான அருவருக்கத்தக்க வகையில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களின் பேசிய அநாகரிகமான பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.</p><h2>கூட்டு பாலியல் வன்கொடுமை</h2><p>பாஜக சனாதனிகளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?</p><p>காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி குறித்து இந்திய தலைமை அமைச்சர் மோடி பேசாத அவதூறா?</p><p>காஷ்மீரில் 8 வயது ஆசிபாவை கூட்டு பாலியல்  வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்தி, 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல்  வன்கொடுமை செய்த குற்றவாளிகளை விடுதலை செய்து, வரவேற்பு அளித்தவர்கள் தான் பா.ஜ.க.வினர்.</p><h2>நடிகை ஒருவர்</h2><p>பெண்களுக்கு எதிரான வெறுப்பும், அவதூறும் தான் அவர்கள் பேசும் அரசியலின் அடிப்படை. இதற்கு முன்னரும் நடிகை ஒருவர் குறித்தும் நயினார் அவர்களின் பேச்சு தரம் தாழ்ந்து அமைந்திருந்தது.</p><p>நயினார் நாகேந்திரன் அவர்கள் தமது அநாகரிகமான பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை மக்களின் குடிநீருக்கு ஆபத்தா? - வேல்முருகன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/velmurugan-questions-safety-of-chennai-drinking-water</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/velmurugan-questions-safety-of-chennai-drinking-water#comments</comments><guid isPermaLink="false">2b5fd9af-f277-49ec-ba2c-367a56086f28</guid><pubDate>Sat, 15 Aug 2026 09:58:00 +0000</pubDate><atom:updated>2026-08-15T09:58:00.599Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,குடிநீர்,drinking water,Velmurugan,வேல்முருகன்,கேள்வி,பொதுமக்களின்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/keqqz3pb/velmurugan.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வேல்முருகன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை மக்களின் குடிநீருக்கு ஆபத்தா? - வேல்முருகன் கேள்வி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/keqqz3pb/velmurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மக்களின் குடிநீருக்கு ஆபத்தா? புழல் ஏரியில் கழிவுநீரா? ஏன்? என்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D">வேல்முருகன்</a> கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>புழல் ஏரி</h2><p>சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF">புழல் ஏரி</a> இன்று நேற்றல்ல.பல ஆண்டுகளாகவே மாசுபாட்டின் ஆபத்தை சுமந்து கொண்டிருக்கிறது. அதிகாரிகளின் ஆய்வுகள், நீதிமன்ற நடவடிக்கைகள், சுற்றுச்சூழல் எச்சரிக்கைகள் என அனைத்தும் இருந்தும், அதன் அடிப்படை பிரச்சினைக்கு இன்னும் நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை என்பது வேதனைக்குரியது.</p><h2>பசுமை தீர்ப்பாயம்</h2><p>2017-ஆம் ஆண்டிலேயே புழல் ஏரியில் மருத்துவ கழிவுகள் மற்றும் பிற கழிவுகள் கொட்டப்படுவதாக வெளியான செய்தியை தொடர்ந்து தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை எடுத்தது. விசாரணையில் ஏரியில் குப்பைகள் கொட்டப்பட்டிருந்தது பதிவானதுடன், ஒரு நிறுவனத்துக்கு ரூ.17.71 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுச்சூழல் இழப்பீடும் விதிக்கப்பட்டது.</p><h2>ஆய்வு அறிக்கை </h2><p>2021-ஆம் ஆண்டு நீதித்துறை ஆவணத்தில் இடம்பெற்ற தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வு அறிக்கை இன்னும் அதிர்ச்சியூட்டுகிறது. புழல் ஏரியில் சேகரிக்கப்பட்ட நீர் மாதிரியில் 100 மில்லிலிட்டருக்கு 93 என்ற அளவில் மலக்கழிவு கோலைபார்ம் பதிவாகியிருந்தது. அப்போது அருகிலுள்ள சடையங்குப்பம் பகுதியில் நிலவிய திறந்தவெளி மலம் கழிக்கும் நடைமுறையால் இந்த மாசுபாடு ஏற்பட்டிருக்கலாம் என அறிக்கை சுட்டிக்காட்டியது.</p><h2>சுத்திகரிக்கப்படாத கழிவுநீர்</h2><p>இப்போது 2026 பிப்ரவரியிலும் அதே புழல் ஏரியில் மீண்டும் மலக்கழிவு கோலைபார்ம் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், வெங்கடேஷ்வரா நகர், புதூர், பானு நகர், கள்ளிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மழைநீர் வடிகால்கள் வழியாக ஏரியை சென்றடைவதாகவும், சக்தி நகர் பகுதியில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நேரடியாக ஏரிக்குள் விடப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.</p> <h2> எங்கே போயின?</h2><p>2017-ல் புகார். 2021-ல் மலக்கழிவு மாசுபாடு பதிவாகிறது. 2026-ல் மீண்டும் அதே எச்சரிக்கை. அப்படியானால் கடந்த ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எங்கே போயின? இது ஒரு சாதாரண ஏரி பாதுகாப்பு பிரச்சினையல்ல. சென்னை மக்களின் குடிநீரின் பாதுகாப்பு, பொது சுகாதாரம், வருங்கால தலைமுறையின் வாழ்வுரிமை ஆகியவற்றை தொடும் பிரச்சினை ஆகும்.</p> <h2>நோய்கள் பரவும் அபாயம்</h2><p>மலக்கழிவால் மாசுபட்ட நீர் மூலம் வயிற்றுப்போக்கு, காலரா, சீதபேதி, வயிற்றுக்குடல் தொற்றுகள், டைபாய்டு, கல்லீரல் அழற்சி ‘ஏ’ உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. குறிப்பாக குழந்தைகள் கடுமையான வயிற்றுப்போக்கால் நீரிழப்பு உள்ளிட்ட ஆபத்துகளுக்கு உள்ளாகக்கூடும்.</p> <h2>எச்சரிக்கை</h2><p>இன்று ஏரியில் கண்டறியப்பட்ட மாசுபாடு, நாளை மக்களின் உடல்நல பேராபத்தாக மாறிவிடக்கூடாது. ஏரி நீர் சுத்திகரிக்கப்பட்ட பிறகே குடிநீராக வழங்கப்படுகிறது என்பதால், தற்போதே சென்னை மக்களின் குடிநீரில் நோய் பரவுகிறது என்று கூறவில்லை. ஆனால், குடிநீரின் மூல ஆதாரத்திலேயே மலக்கழிவு மாசுபாடு தொடர்ந்து கண்டறியப்படுவது மிகத் தீவிரமான எச்சரிக்கை ஆகும்.</p> <h2>சென்னை மக்கள்</h2><p>மேலும், ஒரு புறம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கழிவுநீர் ஏரியைச் சென்றடைவதாக தெரிவிக்கிறது. மறுபுறம் சென்னை குடிநீர் வாரியம் அதனை மறுக்கிறது. இந்த முரண்பாட்டில் சிக்கி தவிப்பது அதிகாரிகள் அல்ல. சென்னை மக்கள். எனவே, புழல் ஏரிக்குள் கழிவுநீர் செல்லும் ஒவ்வொரு வழித்தடத்தையும் உடனடியாக கண்டறிந்து நிரந்தரமாக தடுக்க வேண்டும்.</p><h2>வெளியிட வேண்டும்</h2><p>பாதாளச் சாக்கடை வசதி இல்லாத அனைத்து குடியிருப்புகளுக்கும் உடனடியாக இணைப்பு வழங்க வேண்டும். புழல் ஏரியின் நீரை தொடர்ந்து அறிவியல் முறையில் பரிசோதித்து, அதன் முழுமையான முடிவுகளை மக்களுக்கு வெளிப்படையாக வெளியிட வேண்டும்.</p><h2>வெள்ளை அறிக்கை</h2><p>2017 முதல் இதுவரை ஏரியை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?, செலவிடப்பட்ட நிதி எவ்வளவு?, நிறைவேற்றப்படாத பணிகள் எவை? என்பதைத் தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள அனைத்து சட்டவிரோதக் கழிவுநீர் வெளியேற்றங்களையும் கண்டறிந்து உடனடியாகத் தடுக்க வேண்டும். புழல் ஏரியை சுற்றி நிரந்தர கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்தி, கழிவுநீர் கலக்கும் இடங்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.</p><h2>இதற்கு யார் பொறுப்பு?</h2><p>பல ஆண்டுகளாக எச்சரிக்கைகள் எழுந்தும் புழல் ஏரி இன்னும் பாதுகாப்பாகவில்லை என்றால், இதற்கு யார் பொறுப்பு? சென்னையின் உயிர்நாடியான புழல் ஏரியை கழிவுநீர் கால்வாயாக மாற்ற அனுமதிக்க முடியாது.</p><p>மக்களுக்கு நோய் வந்த பிறகு தீர்வு காண்பது சரியல்ல. வருமுன் காப்பதே சரியாகும். எனவே, புழல் ஏரியை பாதுகாக்க தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நயினார் நாகேந்திரன் சர்ச்சை பேச்சு: எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது - அண்ணாமலை கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendrans-controversial-remarks-unacceptable-in-any-way-annamalai-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendrans-controversial-remarks-unacceptable-in-any-way-annamalai-condemns#comments</comments><guid isPermaLink="false">92df01f8-7edc-4cb8-9203-fb2a96f6c882</guid><pubDate>Sat, 15 Aug 2026 09:40:16 +0000</pubDate><atom:updated>2026-08-15T09:40:16.834Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Annamalai,அண்ணாமலை,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/uur4myzi/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/uur4myzi/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசியல் நாகரிகத்தின் எல்லைகளை மீறி, தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் தாய் குறித்து நயினார் நாகேந்திரன் கருத்து கூறியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். </p><h2>சர்ச்சை பேச்சு</h2><p>முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து அநாகரீகமாக பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. 'அப்பாவை காணோம்' என்ற முதல்-அமைச்சர் பேச்சுக்கு எதிர்வினையாக அவர் அநாகரீகமாக பேசியதாக கண்டனங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் முதல்-அமைச்சர் விஜய் குறித்த நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு, வி த லீடர்ஸ் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>கேள்வி கேட்கலாம். ஆனால்..</h2><p>தமிழ்நாட்டின் அரசியல் களத்தை அநாகரிகமாக்கும் பேச்சுகள் தொடர்ந்து அரங்கேறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. திமுகவின் உதயநிதி ஸ்டாலினைத் தொடர்ந்து, தற்போது தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும், அரசியல் நாகரிகத்தின் எல்லைகளை மீறி, தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் தாய் குறித்துக் கருத்து கூறியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.</p><p>அரசியலில் இருப்பவர்கள் தங்கள் வார்த்தைகளுக்கும், செயல்களுக்கும் பொறுப்புடன் இருக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கொள்கைகளை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விமர்சிக்கலாம்</a>. ஆட்சியின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்கலாம். ஆனால், ஒருவரின் குடும்பத்தினரை, குறிப்பாக அவர்களின் தாயாரை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.</p><h2>காலாவதியாகிப் போன அரசியல்</h2><p>இந்த வகையிலான தரக்குறைவான கருத்துக்கள், முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே காலாவதியாகிப் போன அரசியல். இன்றைய தமிழக இளைஞர்களுக்கும், வளரும் நமது குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டியது இத்தகைய மூன்றாந்தர அரசியல் அல்ல.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு..! வானிலை மையம் வெளியிட்ட அப்டேட்</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-heavy-rain-in-tamil-nadu-weather-department-issues-update</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-heavy-rain-in-tamil-nadu-weather-department-issues-update#comments</comments><guid isPermaLink="false">99b7baf4-51db-41d5-8db6-0606adecd77e</guid><pubDate>Sat, 15 Aug 2026 09:37:29 +0000</pubDate><atom:updated>2026-08-15T09:37:29.544Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Rain,Weather,கனமழை,வானிலை,தமிழகம்,Weather News,WeatherUpdate,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,வானிலை ஆய்வு மையம்,கன மழை,heavy rain,வானிலை அறிக்கை,weather condition,வானிலை முன்னறிவிப்பு,Weather Status,Rain Alert,வானிலை அறிவிப்பு,weather center</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/0923zewz/wather.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழகத்தில் கனமழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/0923zewz/wather.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><h2>மழை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><p><strong>இன்று (15-08-2026):</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p>ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>நாளை (16-08-2026):</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை </a>பெய்யக்கூடும்.</p><p>ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2>கனமழை</h2><p><strong>17-08-2026:</strong> செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <strong><ins><a href="https://www.dailythanthi.com/topic/rain">கனமழை</a></ins></strong> பெய்யக்கூடும்.</p><p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், பெரம்பலூர், சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். </p><p>ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>18-08-2026:</strong> செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <strong><ins><a href="https://www.dailythanthi.com/topic/rain">கனமழை</a></ins></strong> பெய்யக்கூடும்.</p><p>சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2>பலத்த காற்றுடன் கனமழை</h2><p><strong>19-08-2026:</strong> நீலகிரி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <strong><ins><a href="https://www.dailythanthi.com/topic/rain">கனமழை</a></ins></strong> பெய்யக்கூடும். </p><p>மேற்கு தொடர்ச்சி திருச்சிராப்பள்ளி, சேலம், கள்ளக்குறிச்சி, மலை மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>20-08-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, வேலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் புதுவையிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>21-08-2026:</strong> ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong><ins>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</ins></strong></p><p><strong>15-08-2026 முதல் 19-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் வட உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><p><strong><ins>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</ins></strong></p><p><strong>15-08-2026 முதல் 19-08-2026 வரை:</strong> வட உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று (15-08-2026)</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p><strong>நாளை (16-08-2026)</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>மீனவர்களுக்கான எச்சரிக்கை:</h2><p><strong><ins>தமிழக கடலோரப்பகுதிகள்:</ins></strong></p><p><strong>15-08-2026 முதல் 19-08-2026 வரை:</strong> தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடலின் ஒரு சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><h2>வங்கக்கடல் பகுதிகள்:</h2><p><strong>15-08-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடலை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>16-08-2026 மற்றும் 17-08-2026 வரை:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய வங்கக்கடலை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>18-08-2026 மற்றும் 19-08-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><h2>அரபிக்கடல் பகுதிகள் :</h2><p><strong>15-08-2026:</strong> எச்சரிக்கை ஏதுமில்லை.</p><p><strong>16-08-2026 முதல் 19-08-2026 வரை:</strong> மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோவையின் 1947 சுதந்திர தின அழைப்பிதழை வெளியிட்ட கே.சி.பழனிசாமி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/1947-coimbatore-independence-day-invitation-released-by-kc-palanisami</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/1947-coimbatore-independence-day-invitation-released-by-kc-palanisami#comments</comments><guid isPermaLink="false">feb9e32d-ba12-4c47-94b8-c1a4d2153d4a</guid><pubDate>Sat, 15 Aug 2026 09:25:58 +0000</pubDate><atom:updated>2026-08-15T09:25:58.152Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவை,Invitation,அழைப்பிதழ்,Independence Day,Kovai,Released,கே.சி.பழனிசாமி,சுதந்திர தின</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/j5cnioif/invitation.jpg" width="573"><media:title type="html"><![CDATA[ கே.சி.பழனிசாமி ]]></media:title><media:description type="html"><![CDATA[ கோவையின் 1947 சுதந்திர தின அழைப்பிதழை வெளியிட்ட கே.சி.பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/j5cnioif/invitation.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>இந்தியாவின் முதல் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9">சுதந்திர தின</a> விழா அழைப்பிதழை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி வெளியிட்டு, வரலாற்று நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.</p> <h2>வரலாற்று பொக்கிஷம்</h2><p>இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியிடம் இருந்து கடந்த 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி விடுதலை பெற்றது. அன்று நாடு முழுவதும் சுதந்திர திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், 1947 ஆகஸ்ட் 15 அன்று கோயம்புத்தூரில் நடைபெற்ற முதல் சுதந்திர தின விழாவின் அதிகாரப்பூர்வ அழைப்பிதழ் மற்றும் நிகழ்ச்சி குறிப்பை வரலாற்று பொக்கிஷமாக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.</p><p><strong>இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-</strong></p><h2>நெகிழ்ச்சியான நினைவு</h2><p>"காலங்கள் பல கடந்தாலும், 79 ஆண்டுகளுக்கு முந்தைய இந்த அரிய ஆவணம், அன்று நமது முன்னோர்கள் சுவாசித்த சுதந்திர காற்றின் உணர்வை இன்றும் நமக்கு கடத்துகிறது.</p> <h2>சுதந்திர தின வாழ்த்து</h2><p>இந்த அரிய வரலாற்று பதிவை வெளியிட்டதோடு, தமிழக மக்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த சுதந்திர தின நல்வாழ்த்துகளையும் கே.சி.பழனிசாமி தெரிவித்து கொண்டுள்ளார்.</p><p>இவ்வாறு அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நயினார் நாகேந்திரன் சர்ச்சை பேச்சு:  உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்! - மாணிக்கம் தாகூர் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendrans-controversial-remarks-he-must-offer-an-immediate-public-apology-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendrans-controversial-remarks-he-must-offer-an-immediate-public-apology-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">7cb74422-e31d-440d-8a5f-b64df1f4700a</guid><pubDate>Sat, 15 Aug 2026 09:19:10 +0000</pubDate><atom:updated>2026-08-15T09:19:10.233Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore MP,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Tagore,தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/dapzzewj/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/dapzzewj/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நயினார் நாகேந்திரன் தமிழ்நாட்டு மக்களிடமும் முதல்-அமைச்சரிடமும் உடனடியாக நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். </p><h2>சர்ச்சை பேச்சு</h2><p>முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து அநாகரீகமாக பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. 'அப்பாவை காணோம்' என்ற முதல்-அமைச்சர் பேச்சுக்கு எதிர்வினையாக அவர் அநாகரீகமாக பேசியதாக கண்டனங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் முதல்-அமைச்சர் விஜய் குறித்த நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>இது முதல் முறையல்ல</h2><p>அரசியல் விரக்தியின் உச்சத்தில் முதல்-அமைச்சர் விஜய்யையும் அவரது தாயாரையும் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இழிவாகப் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசியல் நாகரிகமற்ற முறையில் தரம் தாழ்ந்து பேசுவது இவருக்கு இது முதல் முறையல்ல; தொடர் வாடிக்கையாகிவிட்டது.</p><p>பொதுவெளியில் கவனத்தைப் பெற பெண்களை இழிவுபடுத்தும் , தனது அருவருக்கத்தக்க பேச்சுக்குத் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழ்நாட்டு </a>மக்களிடமும் முதல்-அமைச்சரிடமும் உடனடியாக நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் மீது டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/complaint-filed-against-tamil-nadu-bjp-leader-nainar-nagendran-at-the-dgps-office</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/complaint-filed-against-tamil-nadu-bjp-leader-nainar-nagendran-at-the-dgps-office#comments</comments><guid isPermaLink="false">051a67a4-508e-4da2-a471-a117d8b74c4d</guid><pubDate>Sat, 15 Aug 2026 09:14:14 +0000</pubDate><atom:updated>2026-08-15T09:14:14.100Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,DGP Office,டிஜிபி அலுவலகம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/63vez9cd/koe.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/63vez9cd/koe.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. </p><h2>புதிய சர்ச்சை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> மற்றும் அவரது தாயார் குறித்து அநாகரீகமாக பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. 'அப்பாவை காணோம்' என்ற முதல்-அமைச்சர் பேச்சுக்கு எதிர்வினையாக அவர் அநாகரீகமாக பேசியதாக கண்டனங்கள் எழுந்துள்ளது.</p><h2>ஆன்லைன் வாயிலாக புகார்</h2><p>இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மீது வழக்கறிஞர் வர்த்தினி என்பவர் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் ஆன்லைன் வாயிலாக புகார் அளித்துள்ளார். முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து அவதூறு கருத்துகளை பேசியதாக நயினார் நாகேந்திரன் மீது அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>தனிப்பட்ட முறையில்</h2><p>மேலும் அரசியல் விமர்சனங்களை மீறி, குடும்ப உறுப்பினரை தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்துவது கவலைக்குரியது எனவும், நயினாரின் பேச்சுகள் மக்கள் மத்தியில் அவதூறு, வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும்,  நயினார் நாகேந்திரன் பேச்சால் ஒரு பெண்ணாகவும், தாயாகவும் வேதனை அடைவதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2>பகிரங்க மன்னிப்பு</h2><p>இதனிடையே முதல்-அமைச்சர் பற்றிய அநாகரிக பேச்சுக்கு முதல்-அமைச்சரிடமும், தமிழ்நாட்டு மக்களிடமும் நயினார் நாகேந்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அரசியலில் எதிரியாக இருக்கலாம்; அதற்காக நாகரிகத்தை எதிரியாக்கிக் கொள்ளக் கூடாது என்று அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>முருகப்பெருமானை இழிவுபடுத்திய தவெக ஆதரவாளரை கைது செய்க! - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/arrest-the-tvk-supporter-who-insulted-lord-murugan-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/arrest-the-tvk-supporter-who-insulted-lord-murugan-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">7582d4d5-ce27-4cea-b09d-2ccbb05be3c2</guid><pubDate>Sat, 15 Aug 2026 09:02:57 +0000</pubDate><atom:updated>2026-08-15T09:02:57.789Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,முருகப்பெருமான்,Lord Murugan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/8r5ek3hl/Untitled-22.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/8r5ek3hl/Untitled-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்க்கடவுள் முருகப்பெருமானை இழிவுபடுத்திய தவெக ஆதரவாளரை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் காப்பாற்றுகிறாரா? என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>கைது செய்யாமல் இருப்பது ஏன்?</h2><p>ஆட்சிக்கு வந்த நாள் முதலே தான் சார்ந்த ஒரு மதத்தைப் பற்றி பெருமையாக பேசுவதும், மற்ற மதங்களையும், அன்னைத் தமிழை இழிவுபடுத்தி பேசுவதையும் வழக்கமாக வைத்துள்ள தவெக அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர், இவர்களைப் பின்பற்றி தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர் ஒருவர், சமூக வலைத்தளங்களில் எங்கள் தமிழ்க் கடவுள் முருகப் பெருமானையும், இந்து மத நம்பிக்கைகளையும் மிகக் கீழ்த்தரமான முறையில் இழிவுபடுத்தி வருவது கடும் கண்டனத்திற்குரியது. இதனை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது.</p><p>'மதநல்லிணக்கம்' என்று வசனம் பேசும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தலைவர் </a>ஜோசப் விஜய், தனது கட்சியின் ஆதரவாளர் இந்து கடவுள்களை இவ்வளவு ஆபாசமாகச் சித்தரிப்பதைக் கண்டும் காணாமல் மௌனம் காப்பது ஏன்? வழக்கு பதிவு செய்த பிறகும் கைது செய்யாமல் இருப்பது ஏன்?</p><h2>காப்பாற்ற நினைக்கிறாரோ?</h2><p>அவரின் இந்த மவுனம், 'ஜோசப் விஜய்' எனும் அதிகார நிழலில் ஒளிந்துகொண்டு, இந்து மதத்தின் மீது நஞ்சைக் கக்கி வரும் இத்தகைய நபர்களை அவர் காப்பாற்ற நினைக்கிறாரோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.</p><p>முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யே, கோடிக்கணக்கான மக்களின் ஆராதனைக்குரிய முருகப் பெருமானை இழிவுபடுத்திய இந்த நபர் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுத்து அவரைக் கைது செய்ய வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில், தவெக அரசு பெரும் போராட்டங்களை எதிர்கொள்ள நேரிடும். எங்களின் பொறுமையைச் சோதிக்க வேண்டாம் என தவெக அரசையும், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யையும் எச்சரிக்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நயினார் நாகேந்திரன் சர்ச்சை பேச்சு: விரைவில் தி.மு.க. - பா.ஜ.க. உறவு வெளிச்சத்துக்கு வரும் - அமைச்சர் ராஜ்மோகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendrans-controversial-remarks-the-relationship-between-dmk-and-bjp-will-soon-come-to-light-minister-rajmohan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendrans-controversial-remarks-the-relationship-between-dmk-and-bjp-will-soon-come-to-light-minister-rajmohan#comments</comments><guid isPermaLink="false">7d50e7dd-9781-4542-a4dd-aa1a901c0c1e</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:43:38 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:43:38.376Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,பாஜக,BJP,Vijay,Tamilnadu,தமிழ்நாடு,விஜய்,நயினார் நாகேந்திரன்,CM Vijay,Minister Rajmohan,அமைச்சர் ராஜ்மோகன்,Nainar Nagenthran</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/lv4ozeho/market.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/lv4ozeho/market.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> குறித்த நயினார் பேச்சுக்கு அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம் தெரிவித்துள்ளார். </p><h2>சர்ச்சை பேச்சு</h2><p>முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து அநாகரீகமாக பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. 'அப்பாவை காணோம்' என்ற முதல்-அமைச்சர் பேச்சுக்கு எதிர்வினையாக அவர் அநாகரீகமாக பேசியதாக கண்டனங்கள் எழுந்துள்ளது.</p><p>இந்நிலையில் முதல்-அமைச்சர் விஜய் குறித்த நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு, அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம் தெரிவித்துள்ளார். </p><h2>திமுக - பாஜக உறவு</h2><p>இதுதொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு அநாகரீகமானது. அவர் நாகரிகமாக பேச வேண்டும். தமிழக அரசியலில் மறைமுக நட்பெல்லாம் வெளிப்படும் நேரம் இது; விரைவில் திமுக - பாஜக இடையேயான உறவு வெளிச்சத்துக்கு வரும்.</p><p>திமுகவினர் போல பாஜகவினரும் அவதூறாக பேசி வருகின்றனர். சத்தம் இன்றி சாதனைகளை நிகழ்த்தும் முதல்-அமைச்சர் விஜய். மாற்றம் வேண்டும் என ரீல்ஸ் போட்டது மக்கள்தான். தவெகவினர் அல்ல.</p><p>சத்தமில்லாமல் ஒவ்வொரு நாளும் சாதனைகளை செய்து வருகிறார் முதல்-அமைச்சர் விஜய். ஊழலை ஒழிப்போம் என்ற நம்பிக்கையை மக்களின் மனதில் அறுவடை செய்திருக்கிறோம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><h2>இனிதான் நல்வாழ்வு</h2><p>இதனைத்தொடர்ந்து வாக்காளர்களுக்கு நல்ல சாவு வராது என்ற ஆர்.எஸ்.பாரதியின் விமர்சனத்துக்கு பதில் அளித்த அமைச்சர் ராஜ்மோகன், “வாக்காளர்களுக்கு நல்ல சாவு வராது என பேசுவதா? சைதாப்பேட்டை தொகுதி மக்களுக்கு இனிதான் நல்வாழ்வு வரப்போகிறது” என்று தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>‘2047-ல் வளர்ச்சி பாரதம் என்ற இலக்கை அடைய தொடர்ந்து முன்னேறுவோம்’ - வானதி சீனிவாசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-continue-to-move-forward-to-achieve-the-goal-of-a-developed-india-by-2047-vanathi-srinivasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-continue-to-move-forward-to-achieve-the-goal-of-a-developed-india-by-2047-vanathi-srinivasan#comments</comments><guid isPermaLink="false">1c4962ea-f0d4-4cc2-bdf5-2e86e4dfc228</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:37:25 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:37:25.521Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,சுதந்திர தினம்,Independence Day</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/7w2xhbvc/State-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/7w2xhbvc/State-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். தமிழகத்தில் த.வெ.க. அரசு அமைந்த பிறகு, சுதந்திர தினத்தில் முதல் முறையாக முதல்-அமைச்சர் விஜய் கோட்டை கொத்தளத்தில் இன்று தேசியக்கொடியை ஏற்றினார். </p><p>இந்நிலையில், பா.ஜ.க. எம்.எல்.ஏ. நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-</p><p>“தாய்த் திருநாட்டின் 80-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள். அடிமைத்தளையில் இருந்து விடுபட்டு இன்று சுதந்திரக்காற்றை சுவாசிக்க குருதி சிந்தி, தன்னுயிரை துச்சமென மதித்து உயிர்த்தியாகம் செய்து, சிறைக் கொடுமைகளை அனுபவித்து சுதந்திரம் பெற்றுக் கொடுத்த விடுதலைப் போராட்ட வீர்களையும், தேசத் தலைவர்களையும் மனதில் நிறுத்தி அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தி போற்றி வணங்குவோம். </p><p>தேசத்தின் வளங்களை போற்றிப் பாதுகாப்போம்..! 2047-ல் வளர்ச்சி பாரதம் ( Viksit Bharat ) என்ற இலக்கை அடைய தொடர்ந்து முன்னேறுவோம்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.   </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தாய்த் திருநாட்டின் 80-வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். அடிமைத்தளையிலிருந்து விடுபட்டு இன்று சுதந்திரக்காற்றைச் சுவாசிக்க குருதி சிந்தி, தன்னுயிரை துச்சமென மதித்து உயிர்த்தியாகம் செய்து, சிறைக் கொடுமைகளை அனுபவித்து சுதந்திரம் பெற்றுக் கொடுத்த விடுதலைப் போராட்ட வீர்களையும்,… <a href="https://t.co/xpANLIuuO9">pic.twitter.com/xpANLIuuO9</a></p>&mdash; Vanathi Srinivasan (@VanathiBJP) <a href="https://x.com/VanathiBJP/status/2088443616129859736?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>இளம்பெண்ணை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பகிர்வு: வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-arrested-for-sharing-obscene-depictions-of-a-young-woman-on-social-media</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-arrested-for-sharing-obscene-depictions-of-a-young-woman-on-social-media#comments</comments><guid isPermaLink="false">2859934e-8161-42f7-9e0c-91aa6ad91414</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:36:52 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:36:52.919Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,young woman,தூத்துக்குடி,இளம்பெண்,வாலிபர் கைது,social media,சமூக வலைதளங்கள்,Young man arrested,ஆபாசம்,பகிர்வு,Sharing,Obscenity</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/srmu3zx0/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/srmu3zx0/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டத்தில் ஒரு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D">இளம்பெண்</a>ணை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதோடு, அதைத் தட்டிக்கேட்ட அப்பெண்ணையும், அவரது தந்தையையும் மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். </p><h2>இளம்பெண்ணை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவு</h2><p>தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் காயிதே மில்லத் நகரைச் சேர்ந்த சிந்தா மதார் சாகிப் மகன் முகமது ரிச்வி (வயது 25). இவர் 25 வயது பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ்அப் உள்ளிட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">சமூக வலைதளங்களில் </a>பகிர்ந்ததாக கூறப்படுகிறது. </p><h2>வாலிபர் கைது</h2><p>இந்த செயலைப் பற்றி அறிந்த அந்த இளம்பெண்ணும், அவரது தந்தை சுலைமானும் முகமது ரிச்வியின் வீட்டிற்கு சென்று தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது, அவர்கள் 2 பேரையும் முகமது ரிச்வி அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், ஆறுமுகனேரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது ரிச்வியை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ரீல்ஸ்  போட்டதும்  ரீல்  விட்டதுமே  சாதனை: தவெக  அரசு மீது எடப்பாடி பழனிசாமி  விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/posting-reels-and-spinning-yarnsthats-the-only-achievement-edappadi-palaniswami-criticizes-the-tvk-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/posting-reels-and-spinning-yarnsthats-the-only-achievement-edappadi-palaniswami-criticizes-the-tvk-government#comments</comments><guid isPermaLink="false">000b3d9a-8469-45b2-9b30-f62b3118b305</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:32:48 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:32:48.691Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,எடப்பாடி பழனிசாமி,Edappadi K Palaniswami</media:keywords><media:content height="542" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/uu4x2esy/EPS.jpg" width="794"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/uu4x2esy/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>கோவை கல்லூரி மாணவர் கொலை தொடர்பாக சட்டமன்றத்தில் கேள்வி எழுப்புவோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ரீல்ஸ் போட்டதும் ரீல் விட்டதுமே தவெக அரசின் சாதனை. மக்களின் பிரச்சனைக்காக எந்த போராட்டத்தில் விஜய் பங்கேற்றார் என கேள்வி எழுப்பியுள்ளார். போதைப்பொருள் புழக்கத்தால் கல்லூரி மாணவர் கொலை நடந்ததா என்று விசாரிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது;   தவெக அட்சிக்கு வந்த பிறகு, சிறு குறு விவசாயிகளுக்கு 75 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி என்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு 35 ஆயிரம் தள்ளுபடி என்கிறார்கள். </p><p>இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். விவசாயிகள் வருமானம் இல்லமால் இருக்கிறரார்கள். மேகதாது விவகாரத்தில் மெத்தனம் இல்லாமல், அணை கட்டுவதை தடுத்து நிறுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கட்சி ஆரம்பித்தே மூன்று ஆண்டுக்ள்தான் ஆகிறது. எந்த போராட்டத்தில் அவர் கலந்து கொண்டார். எதோ கட்சி ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு ஒரு வாய்ப்பை கொடுத்துவிட்டார்கள். வாய்ப்பு கிடைத்த பிறகு மற்ற கட்சிகள் சொல்வதை கேக்க வேண்டும். காவிரி பிரச்சினை பற்றி இவருக்கு ஒன்னுமே தெரியவில்லை. </p><p>கர்நாடக அரசு தண்ணீர் திறக்கவில்லை என்றால் அதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆனால் காலம் தாழ்த்திதான் நடவடிக்கை எடுக்கிறார்கள். கர்நாடகா உபரி நீரைத்தான் திறக்கிறது. தவெகவிற்கு எதைப்பற்றியுமே தெரியவில்லை. மக்கள் சொல்வதையாவது கேக்க வேண்டும். எதையுமே செயல்படுத்தாத முதல்வராக மவுன முதல்வராக விஜய் உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>‘தமிழ்நாடே மகிழ்ச்சியாக இருக்கிறது’ - நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் பேட்டி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/all-of-tamil-nadu-is-happy-finance-minister-maria-wilsons-interview</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/all-of-tamil-nadu-is-happy-finance-minister-maria-wilsons-interview#comments</comments><guid isPermaLink="false">280d6445-4d1d-4107-861c-796401d9a9e1</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:30:11 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:30:11.772Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,Tamil Nadu,சுதந்திர தினம்,Independence Day,அமைச்சர் மரிய வில்சன்,Minister Maria Wilson</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/zjsabfdc/State-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/zjsabfdc/State-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் த.வெ.க. அரசு அமைந்த பிறகு, முதல் முறையாக சுதந்திர தினத்தில் முதல்-அமைச்சர் விஜய் கோட்டை கொத்தளத்தில் இன்று தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக தமிழ்நாடு காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்-அமைச்சர் விஜய் ஏற்றுக்கொண்டார்.</p><p>தேசியக்கொடியை ஏற்றிய பிறகு முதல்-அமைச்சர் விஜய் தனது முதல் சுதந்திர தின உரையை நிகழ்த்தினார். இதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் சுதந்திர தின சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவிற்கு பின்னர் தமிழக நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் செய்தியாளர்களிடம் பேசியபோது, “தமிழக முதல்-அமைச்சர் விஜய் முதல்-முறையாக சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்துள்ளார். மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. </p><p>தமிழ்நாடே மகிழ்ச்சியாக இருக்கிறது. இது நீண்ட காலத்திற்கு தொடரும். முதல்-அமைச்சர் தனது உரையில் மிகத் தெளிவாக எல்லாவற்றையும் கூறிவிட்டார். மக்கள் தன்னுடன் நிற்க வேண்டும் என்பதே அவரது விருப்பமாகும்” என்று தெரிவித்தார். </p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/dDpSpABr1xU"></iframe></figure>]]></content:encoded></item><item><title>காதல் தொல்லை கொடுத்ததை கண்டித்ததால் ஆத்திரம்: மாணவியின் தந்தையை குத்திக்கொன்ற வாலிபர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-stabs-girls-father-to-death-over-love-harassment</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-stabs-girls-father-to-death-over-love-harassment#comments</comments><guid isPermaLink="false">fded8ec0-f34b-4321-8ff4-9baff49e7a4d</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:26:32 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:26:32.717Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Virudhunagar,விருதுநகர்,murder,காதல் தொல்லை,குத்திக்கொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/7v6tgyhr/Untitled-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/7v6tgyhr/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர்,</p><p>பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்ததை கண்டித்ததால், மாணவியின் தந்தையை தெருவில் வழிமறித்து வாலிபர் குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>காதல் தொல்லை</h2><p>விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கோட்டையூர் கிழக்கு காலனியை சேர்ந்தவர் அய்யனார் (38 வயது). இவரது மகள் பள்ளிக்கு செல்லும்போது அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி (21 வயது) என்பவர் காதலிப்பதாக கூறி தினமும் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது தந்தையிடம் கூறியுள்ளார். எனவே பெரியசாமியை அய்யனார் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு குடும்பத்தினருக்கு இடையே விரோதம் ஏற்பட்டது.</p><h2>குத்திக்கொலை</h2><p>இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தெருவில் நடந்து சென்ற அய்யனாரிடம் பெரியசாமி, அவருடைய அண்ணன் அழகுராஜா (24 வயது), அவருடைய மனைவி பேச்சியம்மாள் (23 வயது), உறவினர் கருப்பசாமி (19 வயது) ஆகியோர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பெரியசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அய்யனாரை குத்தினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>கைது</h2><p>இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியசாமி, அழகுராஜா, கருப்பசாமி ஆகிய 3 பேரை கைது செய்தனர். பெரியசாமியின் வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது அங்கு விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தும் 17 நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>மேட்டூர் அணையில் பாதுகாப்பு குழுவினர் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/safety-team-inspects-mettur-dam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/safety-team-inspects-mettur-dam#comments</comments><guid isPermaLink="false">0df442aa-b5cc-4e02-a3bb-4be619c84bb1</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:24:02 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:24:02.164Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur dam,ஆய்வு,inspection</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/y3ntjzg0/15.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/y3ntjzg0/15.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,  </p><p>அணைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அணைகள் பாதுகாப்பினை மேற்கொள்வதற்காக விரிவான திட்ட மதிப்பீடு மேற்கொள்வதற்கு ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய நீர்வள ஆணையத்தின் ஓய்வு பெற்ற தலைவர் சந்திரசேகர் அய்யர் தலைமையில் இந்த நிபுணர் குழு அமைக் கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தமிழக நீர்வளத்துறையின் ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் செல்வம், திருச்சி என்.ஐ.டி. கல்லூரியின் புவியியல் தொழில்நுட்ப வல்லுனர் முத்துக்குமரன், நீரியல் வல்லுனர் மஞ்சுளா ஆகி யோர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். </p><p>இந்த குழுவினர் நேற்று மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து நிபுணர் குழு வின் தலைவர் சந்திரசேகர் அய்யர் நிருபர்களிடம் கூறுகையில், அணைகள் பாதுகாப்பிற்காக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்காக மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்டோம். அணையின் கட்டுமானம், நீர் வெளி யேற்ற மதகுகள், அணையின் முக்கிய பகுதிகள் மற்றும் அணையின் பாது காப்புக்காக அமைக்கப்பட்டுள்ள கருவிகளை ஆய்வு செய்தோம்.மேலும் அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகு பாலத்தை ஆய்வு செய் தோம். அவசரகால நீர் போக்கியான அணையின் மண் கரையையும் ஆய்வு மேற்கொண்டோம். இதுகுறித்து விரிவான திட்ட அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்வோம் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>முதல் முறை எம்எல்ஏக்களுக்கு கார், உதவியாளர் வழங்க முதல் அமைச்சர் விஜய் முடிவு?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/reports-indicate-that-chief-minister-vijay-has-decided-to-provide-cars-and-assistants-to-first-time-mlas</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/reports-indicate-that-chief-minister-vijay-has-decided-to-provide-cars-and-assistants-to-first-time-mlas#comments</comments><guid isPermaLink="false">d7a6b4b9-803d-4f2d-aead-2bcd1194d099</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:22:01 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:22:01.700Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,முதல் அமைச்சர்,எம்எல்ஏ,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/mzjbg2lo/vijay-PTI.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/mzjbg2lo/vijay-PTI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p> சட்டசபையில் விசிகவின் காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ ஜோதிமணி  சபாநாயகருக்கு கோரிக்கை ஒன்றை விடுத்தார்.  ஜோதிமணி பேசுகையில்,  "அய்யா.. இது என் சொந்த கோரிக்கை. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தேவையான கோரிக்கை. இதைப்பற்றி உங்களிடம் ஏற்கனவே கடிதமாக கொடுத்துள்ளேன். நான் 280 கி.மீ தொலைவில் இருந்துதான் சட்டமன்றம் வருகிறேன். பஸ் அல்லது ரயிலில் வருவதற்கு அலவென்ஸ் கொடுக்கறீர்கள். சட்டமன்றத்தின் தனி வண்டியில் வருவதற்கு என்னிடம் சொந்தமாக வண்டி இல்லை. வாடகை வண்டியில் தான் சட்டமன்றம் வருகிறேன். என்னுடைய தொகுதி 40 கி.மீ சுற்றளவில் உள்ளது. மக்களின் பிரச்சனை தொடர்பாக தொகுதிக்குள் பயணித்து, குறைகளை கேட்பதற்கு வாகன வசதி இல்லை. உடன் ஒரு செயலாளர் வைத்து கொண்டு அவருக்கு ஊதியம் கொடுப்பதற்கும் என்னிடம் வசதி இல்லை. இப்படித்தான் இன்றைக்குள்ள முக்கால்வாசி சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அதில் எந்த மாற்றமும் இல்லை. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் உள்ளிட்ட மற்ற வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.</p><h2> சபாநாயகர் பதில்</h2><p>காலணி கூட அணிய முடியாத சட்டமன்ற உறுப்பினர் இங்கே உள்ளனர். காலணி வாங்குவதற்கு கூட வசதி வாய்ப்பு இல்லாத எம்எல்ஏ பணியாற்றுகிறார்கள். இந்த சூழலில் லஞ்சம், லாவாண்யம் இல்லாத அரசாங்கத்தை கொடுப்பதாக கூறியுள்ளோம். அதற்கு நம்முடைய உறுப்பினர்களை நலமுடன் பார்த்துக் கொள்ளுமாறு உண்மையுடன், அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.  உடனே சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அளித்த பதிலில், " சட்டமன்ற உறுப்பினராக நேர்மையுடன், உண்மையாக பணியாற்றும் போது ஏற்படும் சிரமங்களை சொல்லியிருப்பதாக கருதுகிறேன்.  </p> <h2>கார் வாங்கித்தர முடிவு?</h2><p>முதலமைச்சர் இந்த அவையில் உள்ளார். நேரடியாகவே அவரின் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன். அவரின் கரங்கள் அள்ளி கொடுக்கும் கரங்கள். அந்த வகையில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் கொடுத்துள்ள கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறேன்" என்றார்.   இந்த நிலையில்,  ஜோதிமணியின் கோரிக்கையை ஏற்று எம்எல்ஏக்களுக்கு கார் வாங்கி கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>இதுகுறித்து தலைமை செயலக வட்டாரங்கள் கூறுகையில், "முதல்முறை எம்எல்ஏ ஆனவர்களுக்கு கார் வழங்க முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளார். தொகுதி அலுவலகத்துக்கு ஒரு கார் என்கிற அடிப்படையில் கார் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதை எம்எல்ஏவாக இருப்போர் பயன்படுத்தலாம். இதேபோல முதல்முறை எம்எல்ஏக்களுக்கு உதவியாளர் நியமனம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்” என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தந்தைக்கு ‘தகைசால் தமிழர் விருது’ - சவுமியா அன்புமணி எம்.எல்.ஏ. பெருமிதம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thagaisal-tamizhar-award-for-father-mla-sowmya-anbumani-expresses-pride</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thagaisal-tamizhar-award-for-father-mla-sowmya-anbumani-expresses-pride#comments</comments><guid isPermaLink="false">9ccb4a07-5275-4caa-9cfc-4a757e527c85</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:18:18 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:18:18.560Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தகைசால் தமிழர் விருது,Sowmiya Anbumani,சவுமியா அன்புமணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/iizfi2zq/State-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/iizfi2zq/State-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் த.வெ.க. அரசு அமைந்த பிறகு, முதல் முறையாக சுதந்திர தினத்தில் முதல்-அமைச்சர் விஜய் கோட்டை கொத்தளத்தில் இன்று தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக தமிழ்நாடு காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்-அமைச்சர் விஜய் ஏற்றுக்கொண்டார். </p><p>தேசியக்கொடியை ஏற்றிய பிறகு முதல்-அமைச்சர் விஜய் தனது முதல் சுதந்திர தின உரையை நிகழ்த்தினார். இதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் சுதந்திர தின சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. இதன்படி தமிழக அரசின் ‘தகைகசால் தமிழர் விருது’ காங்கிரஸ் மூத்த தலைவர் மு.கிருஷ்ணசாமிக்கு வழங்கப்பட்டது. </p><p>இந்த விழாவில் மு.கிருஷ்ணசாமியின் மகளும், பா.ம.க. எம்.எல்.ஏ.வுமான சவுமியா அன்புமணி கலந்து கொண்டார். தனது தந்தைக்கு ‘தகைசால் விருது’ வழங்கப்பட்டபோது, கைத்தட்டி தனது உற்சாகத்தை சவுமியா அன்புமணி வெளிப்படுத்தினார். இது தொடர்பான காட்சிகளை அவர் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார். </p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழ்நாட்டிற்காக அரும்பணி ஆற்றிய தமிழர்களைச் சிறப்பிக்கும் வகையில், இன்று தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் &quot;தகைசால் தமிழர் விருது&quot; பெறும் எனது தந்தையும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் தலைவருமான திரு.M.கிருஷ்ணசாமி (EX MP) அவர்களுடனான மகிழ்ச்சிகரமான தருணத்தில்.! <a href="https://t.co/a0PHpOye1u">pic.twitter.com/a0PHpOye1u</a></p>&mdash; Sowmiya Anbumani (@Sowmiyanbumani) <a href="https://x.com/Sowmiyanbumani/status/2088508168209060009?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>‘ஆப்ரோ டிரஸ்ட் நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்த பொதுமக்கள் ஆவணங்களுடன் புகார் அளிக்கலாம்’ - தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/members-of-the-public-who-were-defrauded-after-paying-money-to-the-afro-trust-company-may-file-complaints-along-with-supporting-documents-tamil-nadu-police-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/members-of-the-public-who-were-defrauded-after-paying-money-to-the-afro-trust-company-may-file-complaints-along-with-supporting-documents-tamil-nadu-police-announcement#comments</comments><guid isPermaLink="false">6beef76d-01c2-42d1-8b9d-db84a4153ee3</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:04:33 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:04:33.321Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu Police,தமிழ்நாடு காவல்துறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/qjjo0kpq/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/qjjo0kpq/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“ஆப்ரோ டிரஸ்ட் (APHRO TRUST) என்ற நிறுவனம் 2010 முதல் மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த மகளிர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் தருவதாக மக்களிடம் பணத்தை பெற்று ஏமாற்றியுள்ளார்கள். இதனால் இவர்கள் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டு பொருளாதார குற்றப்பிரிவு, அசோக்நகர், சென்னையில் விசாரணையில் இருந்து வருகிறது. </p><p>மேற்படி ஆப்ரோ டிரஸ்ட் நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் அசல் ஆவணங்களுடன் 17.08.2026 முதல் 21.08.2026 வரை ஆஜராகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விபரங்களுக்கு फ्र नं. 7010190757, 9498109056, 9840895154, 9498127068 ல் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் டிரைவருக்கு வாயில் கத்திக்குத்து: நண்பர்கள் 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/driver-stabbed-in-the-mouth-in-thoothukudi-two-friends-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/driver-stabbed-in-the-mouth-in-thoothukudi-two-friends-arrested#comments</comments><guid isPermaLink="false">4f8e5ecf-2ee3-4c6a-af09-241d5315c4e8</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:03:18 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:03:18.019Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>stabbing,கத்திக்குத்து,Thoothukudi,தூத்துக்குடி,car driver,கார் டிரைவர்,மதுபோதை,Drunken,Friends arrested,2 நண்பர்கள் கைது,வாயில்,mouth</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/465unpql/2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 2 பேர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/465unpql/2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a>யில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">நண்பர்களிடையே</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88">மது போதை</a>யில் ஏற்பட்ட தகராறில் கார் டிரைவரை வாயில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">கத்தியால் குத்திய</a> 2 பேரை போலீசார் கொலை முயற்சி வழக்கில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர்.</p><h2>மது அருந்திய நண்பர்கள்</h2><p>தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த முத்துக்குமார் (வயது 40), கார் டிரைவராகப் பணியாற்றி வருகிறார். சக்தி நகரைச் சேர்ந்த சரவணன்(40), பிரையண்ட் நகரைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ்(33) ஆகிய இருவரும் கட்டிடத் தொழிலாளர்கள். நண்பர்களான இவர்கள் 3 பேரும் ஒன்றாகச் சேர்ந்து மது அருந்துவது வழக்கம். </p><p>இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரையண்ட்நகர் 7-வது தெருவில் உள்ள வெட்டவெளியில் அமர்ந்து 3 பேரும் மது அருந்தியுள்ளனர். அப்போது போதை தலைக்கேறிய நிலையில், முத்துக்குமார் தனது நண்பர்களான சரவணன் மற்றும் ஜெயப்பிரகாஷை அவதூறாகப் பேசியதாக கூறப்படுகிறது. </p><h2>டிரைவருக்கு கத்திக்குத்து</h2><p>இதனால் ஆத்திரமடைந்த சரவணனும், ஜெயப்பிரகாஷும் சேர்ந்து முத்துக்குமாரை சரமாரியாக தாக்கி, கத்தியால் அவரது நெஞ்சுப் பகுதி மற்றும் வாயில் குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த முத்துக்குமார் மயங்கிச் சரிந்ததும், அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.</p><h2>2 பேர் கைது</h2><p>இதுகுறித்து தகவலறிந்த தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையிலான போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, படுகாயமடைந்த முத்துக்குமாரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய சரவணன் மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகிய 2 பேரையும் கொலை முயற்சி வழக்கின் கீழ் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>வேலூர் பி.டி.ஓ அலுவலகத்தில் தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றியதாக புகார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/velur-bdo-office-complaint-over-hoisting-national-flag-upside-down</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/velur-bdo-office-complaint-over-hoisting-national-flag-upside-down#comments</comments><guid isPermaLink="false">d38fdd95-8157-4c92-9825-8a6e304e879f</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:02:20 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:02:20.624Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vellore,வேலூர்,சுதந்திர தினம்,Independece Day,தேசியக் கொடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/p88llnlu/Untitled-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/p88llnlu/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வேலூர்,</p><p>வேலூர் பி.டி.ஓ அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றியதாக புகார் எழுந்துள்ளது.</p><h2>தலைகீழாக தேசியக்கொடி</h2><p>நாடு முழுவதும் 80-வது சுதந்திர தின விழா இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் வேலூர் அண்ணா சாலையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.</p><p>வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமால், சத்தியமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.</p><h2>அதிகாரிகள் அலட்சியம்</h2><p>தேசியக்கொடியை ஏற்றுவதற்கு முன்பு முறையாக சரிபார்க்காமல், அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் மாவட்ட நிர்வாகம் உரிய கண்காணிப்பையும் நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>80-வது சுதந்திர தினம்: ரிப்பன் கட்டட வளாகத்தில் மேயர் பிரியா தேசியக் கொடி ஏற்றிவைத்து மரியாதை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/80th-independence-day-mayor-priya-hoists-national-flag-ripon-building</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/80th-independence-day-mayor-priya-hoists-national-flag-ripon-building#comments</comments><guid isPermaLink="false">18dd4463-c8bf-4d9a-8f5d-38644acaccfc</guid><pubDate>Sat, 15 Aug 2026 07:54:53 +0000</pubDate><atom:updated>2026-08-15T07:54:53.640Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Mayor Priya,மேயர் பிரியா,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,Flag hoisting,சுதந்திர தினம்,Independece Day,ரிப்பன் மாளிகை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/7gwn71at/Untitled-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/7gwn71at/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>80-வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் மேயர் பிரியா தேசியக் கொடியினை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>சென்னை மாநகராட்சியில் இன்று (15.08.2026) 80-வது இந்திய சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் மேயர் பிரியா தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, மூவர்ண பலூன்களை விண்ணில் பறக்க விட்டார்.</p><p>தொடர்ந்து, மேயர் தேசிய மாணவர் படையினர், சாரண, சாரணியர் மற்றும் பேண்டு, வாத்தியக்குழுவின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, சென்னை மாநகராட்சியின் சஞ்சீவராயன் தெரு, புழல், கிருஷ்ணாம்பேட்டை, பூத்தப்பேடு, கோயம்பேடு மற்றும் ஜல்லடியான்பேட்டை சென்னை நடுநிலைப்பள்ளிகளின் மாணவ, மாணவிகள், குரு வித்யாஷ்ரம் சிறப்புப் பள்ளியைச் சார்ந்த மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவிகளின் கண்கவரும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.</p><p>பின்னர், சென்னை மாநகராட்சிக்கு மிக அதிகமாக சொத்துவரி செலுத்திய 3 நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கும், வட்டாரங்கள் அளவில் உரிய காலங்களில் முறையாக தாமதமில்லாமல் சொத்துவரி செலுத்திய 3 சொத்து உரிமையாளர்களுக்கும் பாராட்டுக் கடிதங்களை (Letter of Appreciation) மேயர் பிரியா வழங்கிப் பாராட்டினார். தொடர்ந்து, மாவட்ட அளவிலான சிறந்த பகுதி கூட்டமைப்பு மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு “மணிமேகலை விருதுகள்” வழங்கிப் பாராட்டினார்.</p><p>தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சியில் சிறப்பாகப் பணியாற்றிய வடக்கு, தெற்கு மற்றும் மத்திய வட்டார துணை ஆணையாளர்கள் உள்ளிட்ட 180 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கிப் பாராட்டினார். மேலும், தேசிய மாணவர் படை, சாரண சாரணியர்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சுதந்திர தின விழா: தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/independence-day-mechanised-boat-fishermen-in-thoothukudi-did-not-venture-out-to-sea</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/independence-day-mechanised-boat-fishermen-in-thoothukudi-did-not-venture-out-to-sea#comments</comments><guid isPermaLink="false">aec5fc4f-07d9-450d-92d5-57827b03846b</guid><pubDate>Sat, 15 Aug 2026 07:50:04 +0000</pubDate><atom:updated>2026-08-15T07:50:04.858Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>boat,Thoothukudi,தூத்துக்குடி,விசைப்படகு,சுதந்திர தின விழா,Independence Day Celebration,மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை,Fishermen did not go to sea</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/fswc4xlj/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/fswc4xlj/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>நாட்டின் 80-வது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE">சுதந்திர தின விழா</a>வை முன்னிட்டு, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தைச் சேர்ந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">விசைப்படகு மீனவர்கள்</a> இன்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88">கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை</a>. </p><h2>சுதந்திர தினம், விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை</h2><p>நாட்டின் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாகவும், தேசிய மரியாதையைச் செலுத்தும் விதமாகவும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இயங்கும் 270-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இன்று கடலுக்குச் செல்லவில்லை. இதனால் விசைப்படகுகள் அனைத்தும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகப் பகுதியில் வரிசையாக நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.</p><p>துறைமுக வளாகத்திலும் படகுகளிலும் மீனவர்கள் மற்றும் விசைப்படகு உரிமையாளர்கள் தேசியக் கொடியை ஏற்றி, சுதந்திர தின வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர். இன்று ஒருநாள் விடுமுறைக்குப்பின், நாளை (ஆகஸ்ட் 16) வழக்கம்போல் விசைப்படகுகள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லும் என மீன்பிடி துறைமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p>]]></content:encoded></item><item><title>பாரதத் தாயின் புகழை உலகெங்கும் பரப்புவோம்: நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/lets-spread-the-fame-of-mother-india-all-over-the-world-nayanar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/lets-spread-the-fame-of-mother-india-all-over-the-world-nayanar-nagendran#comments</comments><guid isPermaLink="false">7f723d1e-a575-49e8-8db5-4e7c46a04b71</guid><pubDate>Sat, 15 Aug 2026 07:32:55 +0000</pubDate><atom:updated>2026-08-15T07:32:55.524Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,சுதந்திர தினம்,Independence Day</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/nbbqs3lx/13.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/nbbqs3lx/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”அன்னை பாரதத்தின் அடிமை சாங்கிலியை அறுத்து, விடுதலைக் காற்று வீசத் தொடங்கிய 80-ஆம் ஆண்டு விடியலில் நாம் பெருமையுடன் அடியெடுத்து வைக்கிறோம், அகிலமே வியக்கும் வண்ணம், தொன்மைச் சிறப்பும் நவீன வளர்ச்சியும் ஒருங்கே மிளிரும் நமது தேசத்தின் 80-வது சுதந்திர தினத் திருநாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பாரதத்தின் விடுதலை வேள்வியில், தியாகத் தீயாகத் தங்களை அர்ப்பணித்த தீரர்களை இவ்வேளையில் போற்றி வணங்குகிறோம். </p><p>அந்நியரின் அடக்குமுறைக்கு அஞ்சாது. செங்குருதி சிந்தி இம்மண்ணைப் புனிதமாக்கிய தியாகச் செம்மல்களின் வீரத்தையும், அறச்சீற்றத்தையும் நாம் ஒருபோதும் மறவோம், அந்த மகத்தான தியாகிகளின் கனவுகள் இன்று நனவாகிக் கொண்டிருப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.</p><p>மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தீர்க்கதரிசனமான தலைமையின் கீழ், வளர்ச்சியடைந்த பாரதம் (Viksit Bharat) எனும் இலக்கை நோக்கி நமது தேசம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. உலகிற்கே வழிகாட்டும் 'விஸ்வகுரு'வாக இந்தியா மிளிர்வது நமது பிரதமரின் அசாத்திய உழைப்பிற்குச் சான்றாகும். சாமானியர் நலனும், தேசப் பாதுகாப்பும் ஒருங்கே மிளிரும் அவரது புதிய இந்தியா ஒவ்வொரு இந்தியனுக்கும் மட்டற்ற பெருமிதத்தை அளிக்கிறது.</p><p>ஜாதி, மத, மொழி கடந்து 'தேசியம்' எனும் மந்திரத்தால் ஒன்றிணைவோம். வலிமையான பாரதத்தை வருங்காலத்திற்கு அளிப்பதே நாம் தியாகிகளுக்குச் செய்யும் நன்றிக்கடன். தியாகிகளின் கனவையும் நமது பிரதமரின் லட்சியத்தையும் நனவாக்க தேசியக் கொடியின் கீழ் அணிவகுத்து. அன்னை பாரதத்தின் புகழை உலகெங்கும் பரப்புவோம்! அனைவருக்கும் இனிய 80-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்! பாரத் மாதா கி ஜே!”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>‘கோமாளி சர்க்காரை கண்டு சமூக விரோதிகளுக்கு துளியும் பயமில்லை’ - உதயநிதி ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anti-social-elements-have-not-the-slightest-fear-of-the-clown-government-udhayanidhi-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anti-social-elements-have-not-the-slightest-fear-of-the-clown-government-udhayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">b2eed740-98cb-49f6-9dbb-043b6de10d22</guid><pubDate>Sat, 15 Aug 2026 07:25:49 +0000</pubDate><atom:updated>2026-08-15T07:25:49.364Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/d4vop61g/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/d4vop61g/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-</p><p>“சென்னை திருவொற்றியூரில் போதைப்பொருள் புழக்கத்தைத் தட்டிக்கேட்டதால், அரசுப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவர் தனுஷ், 30 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.</p><p>கோவையில் போதை கும்பலை தட்டிக் கேட்டதற்காக கல்லூரி மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட, அடுத்த சில தினங்களில் சென்னையிலும் இத்தகைய கொடூரம் நடந்திருக்கிறது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் இந்த அரசு எந்த அளவுக்கு தோற்றுக் கொண்டிருக்கிறது என்பதற்கு தமிழ்நாட்டிலே தொடரும் கொலைகளே சாட்சி.</p><p>போதைப் பொருள் பயன்படுத்துவதையோ – விற்பதையோ அம்பலப்படுத்தினால், அவர்கள் கொலை செய்யப்படுவார்கள் என்பது, ஒட்டுமொத்த சமூகத்திற்கும் விடப்படும் எச்சரிக்கை. நிர்வாகத்திறனற்ற இந்த கோமாளி சர்க்காரை கண்டு சமூக விரோதிகளுக்குத் துளியும் பயமில்லை என்பதே இதற்கு காரணம்.</p><p>குறிப்பாக, பள்ளிகளில் – கல்லூரிகளில் இத்தகைய சம்பவங்கள் நடப்பதை அரசு கண்டும் காணாமல் வாயை மூடிக் கொண்டு இருப்பது வெட்கக்கேடு. மாணவர் தனுஷ் கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும். </p> <p>இத்தகைய தொடர் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி கல்லூரிகளில் போதைப் பொருள் பயன்பாடு இருக்கிறதா? அதற்கு என்ன காரணம்? இதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை எல்லாம் உரிய முறையில் விசாரித்து இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>மேலும், வன்முறை எதற்கும் தீர்வல்ல என்பதை உணர்த்தும் வகையில் மாணவர்கள் மத்தியில் கவுன்சிலிங் வழங்கி போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>விடுமுறை தினம்: குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-tourists-flock-to-courtallam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-tourists-flock-to-courtallam#comments</comments><guid isPermaLink="false">7d9b4527-d46b-4d2d-b844-996fb040a392</guid><pubDate>Sat, 15 Aug 2026 07:23:15 +0000</pubDate><atom:updated>2026-08-15T07:23:15.852Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tourists,சுற்றுலா பயணிகள்,குற்றாலம் அருவி,Courtallam</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/xqulwuav/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/xqulwuav/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p>தென்காசி மாவட்டத்தையொட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தற்போது அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்வீழ்ச்சிகள், அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. </p><p>முக்கிய சுற்றுலாத்தலமான குற்றால அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சீராக தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. </p><p>இன்று விடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்தனர். ஐந்தருவி, மெயின் அருவி பழைய குற்றால அருவிகளில் நீண்ட வரிசையில் நின்று குளித்து மகிழ்ந்தனர்.</p><p>அருவிகளில் குளித்த சுற்றுலா பயணிகள் அருவிக்கரை பகுதியில் உள்ள கடைகளில் தேநீர், தின்பண்டங்களை வாங்கி ருசித்தனர். இதனால் கடைகளிலும் வியாபாரம் சூடுபிடித்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் ஏ.டி.எம். இயந்திரத்திற்கு பணம் நிரப்பும் வாகனத்தில் ரூ.24 லட்சம் மாயம் - போலீஸ் தீவிர விசாரணை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-24-lakh-goes-missing-from-an-atm-cash-loading-vehicle-in-chennai-police-conducting-an-intensive-investigation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-24-lakh-goes-missing-from-an-atm-cash-loading-vehicle-in-chennai-police-conducting-an-intensive-investigation#comments</comments><guid isPermaLink="false">478cbe9d-e76f-409d-a6ae-f877c959708a</guid><pubDate>Sat, 15 Aug 2026 07:15:03 +0000</pubDate><atom:updated>2026-08-15T07:15:03.472Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,ATM,ஏ.டி.எம்.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/ohscgveg/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/ohscgveg/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் வங்கிக்காக ஒப்பந்த அடிப்படையில் செயல்படக்கூடிய ‘கேஷ் செக்யூர் சிஸ்டம்’ நிறுவன ஊழியர்கள் பல்வேறு ஏ.டி.எம். மையங்களில் உள்ள இயந்திரங்களில் பணம் நிரப்பக்கூடிய பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று இரவு வேளச்சேரியில் உள்ள இந்த நிறுவன அலுவலகத்தில் இருந்து ரூ.4.69 கோடி பணத்துடன் 105 பணப்பெட்டிகளை எடுத்துக்கொண்டு, பணம் நிரப்பும் வாகனத்தில ஊழியர்கள் புறப்பட்டனர்.</p><p>அவர்கள் நகரில் உள்ள 14 ஏ.டி.எம். மையங்களில் பணத்தை நிரப்பிய நிலையில் 15-வது ஏ.டி.எம். மையமான பெரம்பூர் பேப்பர் மில் சாலையில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணத்தை நிரப்புவதற்காக வந்தபோது, அந்த வாகனத்தில மூன்று பணப்பெட்டிகள் குறைவாக இருப்பது தெரியவந்திருக்கிறது.</p> <p>இதனையடுத்து அவர்கள் வந்த வழியிலேயே திரும்பிச் சென்று தேடி பார்த்தபோது, முரசொலிமாறன் மேம்பாலத்தின் மீது 2 காலி பணப்பெட்டிகள் மட்டும் கிடந்திருக்கிறது. ஆனால் ஒரே ஒரு பணப்பெட்டி மாயமாகி உள்ளது. அந்த பணப்பெட்டியில் சுமார் 24 லட்சம் ரூபாய் வரை இருந்ததாக கூறப்படுகிறது.</p><p>இது குறித்து உடனடியாக ஊழியர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து கொளத்தூர் துணை ஆணையர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து முரசொலிமாறன் மேம்பாலத்திற்கு அருகே உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இது தொடர்பாக ஐ.சி.எப். போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கி உள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>கஞ்சா அடித்ததை தட்டிக் கேட்டதால் மாணவன் படுகொலை - தந்தை பரபரப்பு பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-killed-after-confronting-cannabis-use-fathers-interview</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-killed-after-confronting-cannabis-use-fathers-interview#comments</comments><guid isPermaLink="false">8615e8e9-e156-430e-bf9d-0c330276f322</guid><pubDate>Sat, 15 Aug 2026 07:12:45 +0000</pubDate><atom:updated>2026-08-15T07:12:45.376Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,திருவொற்றியூர்,Tiruvottiyur,மாணவன் கொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/xika0p76/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/xika0p76/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கஞ்சா அடித்ததை தட்டிக் கேட்டதால் தனது மகனை கொலை செய்துவிட்டதாக, பிளஸ்-2 மாணவனின் தந்தை தெரிவித்துள்ளார்.</p><h2>மாணவர் கொலை</h2><p>சென்னை மாவட்டம் திருவொற்றியூரை சேர்ந்த தனுஷ் (16 வயது) என்ற மாணவர் ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று 30-க்கும் மேற்பட்ட மாணவர்களால் தனுஷ் அடித்து கொல்லப்பட்டார். இதுதொடர்பாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><h2>தட்டிக்கேட்ட மாணவன்</h2><p>மாணவர் கொலை குறித்து அவரது தந்தை கூறியதாவது:-</p><p>பள்ளி வளாகத்தில் தனுஷ் மற்றும் அவரது நண்பர் ஜெயகேஷ் சென்று கொண்டிருந்தபோது, பிளஸ்-1 மாணவர்கள் சிலர் கஞ்சா அடித்து, தனுஷின் முகத்தில் ஊதியுள்ளனர். அதனை ஜெயகேஷ் தட்டிகேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் பழிவாங்கும் நோக்கில், அவரை கொலை செய்வதற்காக திட்டம் தீட்டியுள்ளனர்.</p><p>இந்த நிலையில் ஜெயகேஷ் நேற்று பள்ளிக்கு வராததால், பள்ளி முடிந்து பேருந்து நிலையம் சென்ற தனுஷை 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வழிமறித்து, வலுகட்டாயமாக ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு மைதானத்திற்கு இழுத்து சென்று தாக்கியுள்ளனர். இதில் உள்காயங்கள் அடைந்த தனுஷ் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இந்த சம்பவம் குறித்து அறிந்த திருவொற்றியூர் போலீசார், மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவரின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். </p><h2>3 பேர் கைது</h2><p>இது தொடர்பாக 3 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மாணவர்களை கைது செய்வதற்காக வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். 30 மாணவர்களையும் கைது செய்யும் வரை மறியலில் ஈடுபடுவோம் என பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆவேசமாக கூறியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் 5 கட்டிடங்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு: மாநகராட்சி அதிரடி நடவடிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/drinking-water-connections-to-five-buildings-in-thoothukudi-disconnected-corporation-takes-swift-action</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/drinking-water-connections-to-five-buildings-in-thoothukudi-disconnected-corporation-takes-swift-action#comments</comments><guid isPermaLink="false">dfded2c2-83fb-43d5-b8b1-d9e5eca8132d</guid><pubDate>Sat, 15 Aug 2026 07:10:01 +0000</pubDate><atom:updated>2026-08-15T07:10:01.300Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Action,நடவடிக்கை,Corporation,மாநகராட்சி,Buildings,கட்டிடங்கள்,disconnection,குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு,Drinking water connection</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/98qv38kx/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-5-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூத்துக்குடியில் 5 கட்டிடங்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/98qv38kx/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-5-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">மாநகராட்சி</a>யில் நீண்ட நாட்களாகச் சொத்து வரி நிலுவை வைத்திருந்த 5 கட்டிடங்களின் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">குடிநீர் இணைப்பு</a>களை மாநகராட்சி அலுவலர்கள் அதிரடியாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">துண்டித்து</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">நடவடிக்கை</a> எடுத்தனர். </p><h2>மாநகராட்சி கமிஷனர் உத்தரவு</h2><p>தூத்துக்குடி மாநகராட்சியில் 2025-26-ம் நிதியாண்டு வரை (31.3.2026 வரை) சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தாத வரிவிதிப்பதாரர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சி கமிஷனர் பிரியங்கா உத்தரவின்படியும், கிழக்கு மண்டல உதவி கமிஷனரின் அறிவுறுத்தலின்படியும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>5 கட்டிடங்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு</h2><p>அதன் ஒரு பகுதியாக மாநகராட்சி கமிஷனர் உத்தரவின்படி, கிழக்கு மண்டல உதவி கமிஷனரின் அறிவுரையின்படி, கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு 24 மற்றும் 47  வார்டுகளுக்குட்பட்ட தெற்கு காட்டன் ரோடு மற்றும் வடக்கு ராஜா பகுதிகளில் குறைந்தபட்சம் 2023-24-ம் ஆண்டு முதலும் அதிகபட்சம் 2018-19-ம் ஆண்டிலிருந்தும் சொத்துவரி (நிலுவை தொகை ரூ.18,000 இலிருந்து ரூ.69,000 வரை) செலுத்தாமல் நிலுவை வைத்திருந்த 5 கட்டிடங்களுக்கு முறையாக கால அவகாசம் கொடுத்து அறிவிப்பு வழங்கியும் நிலுவை வரி செலுத்தாதனை முன்னிட்டு இன்று  மாநகராட்சி அலுவலர்களால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்யப்பட்டது. </p><h2>மாநகராட்சி எச்சரிக்கை</h2><p>குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்ட கட்டிடங்களின் உரிமையாளர்கள், தங்களது சொத்து வரி நிலுவையை 3 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். தவறினால், நடைமுறையில் உள்ள மாநகராட்சி விதிகளின்படி ஜப்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><h2>சொத்து வரி, குடிநீர் கட்டணம்</h2><p>"பொதுமக்கள் அனைவரும் தங்களது கட்டிடங்களுக்கான சொத்து வரி, குடிநீர் கட்டணம், திடக்கழிவு மேலாண்மை வரி மற்றும் பாதாள சாக்கடை கட்டணம் போன்றவற்றை நடப்புக் காலம் வரை செலுத்தியுள்ளீர்களா என்பதைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். நிலுவை இருப்பின் உடனடியாகச் செலுத்தி, குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் இதர சட்டபூர்வ நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சமரசம் செய்ய சென்றவருக்கு சபலம்: நண்பரின் மனைவியை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த பூசாரி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/compromise-goer-gets-karma-priest-arrested-for-threatening-friends-wife-with-obscene-video</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/compromise-goer-gets-karma-priest-arrested-for-threatening-friends-wife-with-obscene-video#comments</comments><guid isPermaLink="false">86935cc3-65ce-4513-b181-866cc69c5cae</guid><pubDate>Sat, 15 Aug 2026 06:51:54 +0000</pubDate><atom:updated>2026-08-15T06:51:54.601Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrest,Blackmail,ஆபாச வீடியோ,மிரட்டல்,தர்மபுரி,Dharmapuri</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/avir1kf1/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/avir1kf1/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தர்மபுரி,</p><p>நண்பரின் மனைவியை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த பூசாரியை போலீசார் கைது செய்தனர். குடும்ப தகராறில் சமரசம் செய்ய சென்றவருக்கு வந்த சபலத்தால் தற்போது கைதாகி உள்ளார்.</p><h2>குடும்ப தகராறு</h2><p>தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அந்த இளம்பெண் அப்பகுதியில் உள்ள தனியார் பார்மசி கல்லூரியில் படித்து வந்தார். தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பயிற்சிக்கும் சென்று வந்தார். அவருடைய கணவர் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட்டு வந்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.</p><p>கணவன், மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் கணவரின் நண்பரான கோவில் பூசாரி ரகுராம் (28 வயது) இவர்களை சமாதானம் செய்துள்ளார். அதன்பின்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த அந்த இளம்பெண்ணை ரகுராம் காரில் வருமாறு அழைத்துள்ளார்.</p><h2>வீடியோ எடுத்து மிரட்டல்</h2><p>காரில் சென்றபோது இருவரும் நெருக்கமாக இருப்பது போல் படத்தை செல்போனில் எடுத்து வைத்துக்கொண்ட ரகுராம், நமக்கு தகாத உறவு இருப்பதாக வெளியே சொல்லி விடுவேன் என்று கூறி இளம்பெண்ணை பாலியல் இச்சைக்கு வருமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது.</p><p>இதனால் பயந்துபோன இளம்பெண் அதற்கு உடன்பட்டுள்ளார். இவர்கள் தனிமையில் இருந்தபோது செல்போனில் மறைமுகமாக படம் பிடித்த ரகுராம் அந்த வீடியோ காட்சிகளை சென்னையில் உள்ள தனது நண்பருக்கு அனுப்பினார். அந்த நண்பரும் இளம்பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு வீடியோ காலில் நிர்வாணமாக நின்றபடி பேச வேண்டும் என மிரட்டல் விடுத்தார்.</p><h2>கைது</h2><p>இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் அவர் கூறியதை போலவே வீடியோ காலில் பேசினார். அதை பதிவு செய்து வைத்துக்கொண்ட அந்த வாலிபர் இளம்பெண்ணை பாலியல் இச்சைக்கு அழைத்தார். ஆனால் இளம்பெண் மறுப்பு தெரிவித்ததால் அந்த வீடியோ பதிவுகளை இளம்பெண்ணின் கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு அனுப்பி விடுவதாக கூறி மிரட்டினார்.</p><p>இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் இது தொடர்பாக அரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூசாரி ரகுராமை நேற்று கைது செய்தனர். தலைமறைவான சென்னையைச் சேர்ந்த வாலிபரை தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>திருச்செந்தூர் கடலில் ராட்சத அலையில் சிக்கிய சிறுவனை மீட்ட பாதுகாப்பு பணியாளர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/security-personnel-rescues-a-boy-caught-in-a-giant-wave-in-the-sea-at-tiruchendur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/security-personnel-rescues-a-boy-caught-in-a-giant-wave-in-the-sea-at-tiruchendur#comments</comments><guid isPermaLink="false">864cc3a7-e473-45e6-938a-8b4de7842f36</guid><pubDate>Sat, 15 Aug 2026 06:50:11 +0000</pubDate><atom:updated>2026-08-15T06:50:11.386Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,பாதுகாப்பு,Thiruchendur Temple,திருச்செந்தூர் கோவில்,Rescue,sea wave,boy,security personnel,சிறுவன் மீட்பு,பணியாளர்,ராட்சத கடல் அலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/py83379a/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருச்செந்தூர் கடலில் ராட்சத அலையில் சிக்கிய சிறுவனை மீட்ட பாதுகாப்பு பணியாளர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/py83379a/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்செந்தூர், </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">திருச்செந்தூர் கோவில்</a> கடலில் குளித்தபோது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88">ராட்சத அலை</a>யில் சிக்கி ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்ட 14 வயது சிறுவனை, கோவில் கடற்கரை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">பாதுகாப்பு</a>ப் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D">பணியாளர் </a>பத்திரமாக மீட்டார். </p><h2>கடல் அலைகளின் கடும் சீற்றம்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பகுதியில் அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு முந்தைய, பிந்தைய நாட்களில் கடல் உள்வாங்குவதும், பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்புவதும் வழக்கமாக நடக்கும் ஒன்று. கடந்த 12-ம் தேதி ஆடி அமாவாசையன்று காலையில் சுமார் 100 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியது. இந்த நிலையில் நேற்று காலையில் கடல் அலைகள் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது.</p><h2>ராட்சத அலையில் சிக்கிய சிறுவன்</h2><p>இருப்பினும் பக்தர்கள் வழக்கம்போல் கடலில் புனித நீராடி வந்தனர். விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த சரண் (வயது 14) என்ற சிறுவன், தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தான். பின்னர் தனது நண்பர்களுடன் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டு தண்ணீரில் தத்தளித்துள்ளான். </p><h2>உடலில் சிராய்ப்பு காயங்கள்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D">சிறுவன்</a> தத்தளிப்பதைக் கண்ட கோவில் கடற்கரை பாதுகாப்புப் பணியாளர் சிவராஜா, உடனடியாகக் கடலில் குதித்து சிறுவன் சரணை பத்திரமாக மீட்டு கரைக்குக் கொண்டு வந்தார். அப்பகுதி பாறைகள் நிறைந்த பகுதி என்பதால், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">மீட்பு</a> நடவடிக்கையின் போது இருவருக்கும் உடலில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன.</p><h2>பாதுகாப்பு பணியாளருக்கு பாராட்டு</h2><p>இதையடுத்து 2 பேருக்கும் கோவில் வளாகத்தில் உள்ள முதலுதவி மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தனது உயிரைப் பொருட்படுத்தாமல் கடலில் தத்தளித்த சிறுவனை சாதுரியமாக மீட்ட பாதுகாப்புப் பணியாளர் சிவராஜாவை கோவில் அதிகாரிகளும், பொதுமக்களும் பாராட்டினர்.</p>]]></content:encoded></item><item><title>‘சுதந்திர தினத்தன்று மாநில முதல்-அமைச்சர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையை பெற்றுத் தந்தவர் கலைஞர்’ - கனிமொழி எம்.பி. </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-was-kalaignar-who-secured-the-right-for-state-chief-ministers-to-hoist-the-national-flag-on-independence-day-kanimozhi-mp</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-was-kalaignar-who-secured-the-right-for-state-chief-ministers-to-hoist-the-national-flag-on-independence-day-kanimozhi-mp#comments</comments><guid isPermaLink="false">3a0d1b34-0492-4df8-9ce8-aa921bc22ca1</guid><pubDate>Sat, 15 Aug 2026 06:29:43 +0000</pubDate><atom:updated>2026-08-15T06:29:43.335Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கனிமொழி எம்.பி.,Kanimozhi,சுதந்திர தினம்,Independence Day</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/2bi6cucb/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/2bi6cucb/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். தமிழகத்தில் த.வெ.க. அரசு அமைந்த பிறகு, சுதந்திர தினத்தில் முதல் முறையாக முதல்-அமைச்சர் விஜய் கோட்டை கொத்தளத்தில் இன்று தேசியக்கொடியை ஏற்றினார். </p><p>இந்நிலையில், தி.மு.க. எம்.பி. கனிமொழி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-</p><p>“எண்ணற்ற தியாகங்களாலும், போராட்டங்களாலும் ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்து இந்நாளில் விடுதலை பெற்றது, இந்திய நாடு. அவ்வாறு போராடிப் பெற்ற சுதந்திரம் அனைத்து மக்களுக்குமானது என்பதை உணர்த்தும் வகையிலும், இந்நாடு ஏற்றுள்ள கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தும் வகையிலும், சுதந்திர தினத்தன்று மாநில முதல்-அமைச்சர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையை போராடிப் பெற்றுத் தந்தவர் தலைவர் கலைஞர்.</p><p>தாய்நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வீரர்களின் தியாகங்களைப் போற்றுவோம். அந்த விடுதலையை முழுமையாக்கும் கூட்டாட்சித் தத்துவத்தின் விழுமியங்களை உயர்த்திப் பிடிப்போம்!”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசை பெற்ற கோவை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-wins-the-first-prize-for-the-best-municipal-corporation-in-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-wins-the-first-prize-for-the-best-municipal-corporation-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">dc75d104-3b67-499d-a3d8-9658060f5080</guid><pubDate>Sat, 15 Aug 2026 05:54:44 +0000</pubDate><atom:updated>2026-08-15T05:54:44.367Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,Tamil Nadu,மாநகராட்சி,Municipal Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/k5uhalst/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/k5uhalst/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் த.வெ.க. அரசு அமைந்த பிறகு, முதல் முறையாக சுதந்திர தினத்தில் முதல்-அமைச்சர் விஜய் கோட்டை கொத்தளத்தில் இன்று தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக தமிழ்நாடு காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்-அமைச்சர் விஜய் ஏற்றுக்கொண்டார். </p><p>தேசியக்கொடியை ஏற்றிய பிறகு முதல்-அமைச்சர் விஜய் தனது முதல் சுதந்திர தின உரையை நிகழ்த்தினார். இதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் சுதந்திர தின சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. இதில், தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் விருதுகள் வழங்கி கவுரவித்தார். </p><p>இதன்படி தமிழகத்தில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசு கோவை பெற்றது. அதே போல், சிறந்த மாநகராட்சிக்கான இரண்டாம் பரிசு தஞ்சாவூருக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து சிறந்த நகராட்சிக்கான முதல் பரிசு தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சிக்கும், இரண்டாம் பரிசு திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சிக்கும், மூன்றாம் பரிசு விழுப்புரம் நகராட்சிக்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. </p> ]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி:  உடன்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-udankudi-thermal-power-plant-shutdown</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-udankudi-thermal-power-plant-shutdown#comments</comments><guid isPermaLink="false">6757f03a-309c-48ec-a761-0e7fde67e7f4</guid><pubDate>Sat, 15 Aug 2026 05:33:52 +0000</pubDate><atom:updated>2026-08-15T05:33:52.013Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தூத்துக்குடி,மின் உற்பத்தி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/58q7yj6o/tdutp.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/58q7yj6o/tdutp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி</p><p>தூத்துக்குடி உடன்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.</p><p>தூத்துக்குடியில் <a href="https://www.dailythanthi.com/">உடன்குடி</a> பகுதியில் அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.  இதில், கடந்த மார்ச் 13-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மின் உற்பத்தியை தொடங்கி வைத்தார்.  இந்நிலையில், அனல் மின் நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.</p> <h2>மின் உற்பத்தி நிறுத்தம்</h2><p>இந்த பராமரிப்பு பணி காரணமாக முதல் அலகில் 660 மெகாவாட் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. . தற்போது பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், 2-வது அலகில் மின் உற்பத்திக்கான சோதனை ஓட்டங்கள் மற்றும் கூலிங் டவர் சோதனைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.</p> ]]></content:encoded></item><item><title>சுதந்திர தின விழா: முதல் அமைச்சர் விஜய்யின் பெற்றோர், நடிகை திரிஷா பங்கேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/independence-day-celebration-chief-minister-vijays-parents-and-actress-trisha-participate</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/independence-day-celebration-chief-minister-vijays-parents-and-actress-trisha-participate#comments</comments><guid isPermaLink="false">e80280a8-d876-4518-86d5-934fa7d8c1c9</guid><pubDate>Sat, 15 Aug 2026 05:29:23 +0000</pubDate><atom:updated>2026-08-15T05:29:23.442Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,Trisha,Independece Day,சுதந்திர தின விழா,திரிஷா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/x9dizjos/Trisha-ama.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/x9dizjos/Trisha-ama.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை:</p><p>நாட்டின் 80-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல்முறையாக ஆட்சி அமைத்துள்ள தவெக அரசின் சார்பில் முதல் சுதந்திர தின விழா இன்று நடைபெற்றது. தமிழக அரசு சார்பில் சென்னை கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்பதற்காக முதல் அமைச்சர் விஜய், இன்று காலை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்டார். மெரீனா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே வந்த  விஜய்க்கு காவல்துறையினரின் மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. </p>  <p>இதனைத் தொடர்ந்து அவர் கோட்டைக்கு வந்தார். கோட்டையில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட விஜய், பின்னர் திறந்த ஜீப்பில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.இதையடுத்து சரியாக காலை 8.45 மணிக்கு கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து முதல் அமைச்சர் மரியாதை செலுத்தினார்.</p><h2> திரிஷா பங்கேற்பு</h2><p>இந்த சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ. சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர் ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும், நடிகை திரிஷாவும் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விஜய்யின் பெற்றோர் அமர்ந்திருந்த இடத்துக்கு அருகிலேயே த்ரிஷாவுக்கும் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.  அதாவது முதல் வரிசையில் திரிஷா அமரவைக்கப்பட்டு இருந்தார். </p><p>காவல்துறையினரின் அணிவகுப்பை விஜய் பார்வையிட்டபோது, அவர் சல்யூட் அடித்தார். அப்போது திரிஷாவும் முதல்வர் விஜய்யை பார்த்து சல்யூட் அடித்தார். விழா நிறைவடைந்து முதல்வர் விஜய் புறப்பட்டுச் சென்றபோது, அவரது பெற்றோர் மற்றும் நடிகை திரிஷா ஆகியோர் கையசைத்து அவரை வழியனுப்பி வைத்தனர். சுதந்திர தின விழாவில் நடிகை திரிஷா கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில், தமிழ்நாட்டிற்கு தனித்துவமான இடமுண்டு: முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-has-a-unique-place-in-indias-freedom-struggle-says-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-has-a-unique-place-in-indias-freedom-struggle-says-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">bc817f1e-e67e-47e0-beb3-59defb437f60</guid><pubDate>Sat, 15 Aug 2026 05:28:05 +0000</pubDate><atom:updated>2026-08-15T05:28:05.045Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Greetings,வாழ்த்து,சுதந்திர தினம்,Independence Day,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/3tlxvxtn/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/3tlxvxtn/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாடு முழுவதும் 80-வது சுதந்திர தின விழா இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தாய்நாட்டின் விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே ஈந்த எண்ணற்ற தியாகிகளையும், ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராக அஞ்சாது களமிறங்கிப் போராடிய தேசத் தலைவர்களையும் இந்நன்னாளில் நன்றியுடன் நினைவுகூர்ந்து, மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில், தமிழ்நாட்டிற்கு என்றும் ஒரு தனித்துவமான, மகத்தான இடமுண்டு. அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக அச்சமின்றி எழுந்த முதல் குரலும், விடுதலை வேட்கையை மக்கள் மனங்களில் விதைத்த வீர உணர்வும் இந்த தமிழ் மண்ணிலிருந்தே வலிமை பெற்றன. இத்தகைய வீரத்தையும், தேசப்பற்றையும் விதைத்திட்ட தியாக சீலர்கள் கண்ட கனவுகளை நிறைவேற்றுவோம்.</p><p>நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பேணிக்காத்து, அனைத்து குடிமக்களின் நலனையும் முன்னிறுத்தி, சமத்துவமும் சமூகநீதியும் ஜனநாயகமும் தழைத்தோங்கும் இந்தியாவை உருவாக்கிட இந்நன்னாளில் உறுதியேற்போம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்தது கர்நாடக அரசு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-leader-mk-stalin-has-stated-that-our-india-is-one-that-upholds-pluralism-and-unity</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-leader-mk-stalin-has-stated-that-our-india-is-one-that-upholds-pluralism-and-unity#comments</comments><guid isPermaLink="false">ffe1b473-f3a8-4220-b89f-f157e6557770</guid><pubDate>Sat, 15 Aug 2026 05:25:19 +0000</pubDate><atom:updated>2026-08-15T05:25:19.718Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தண்ணீர் திறப்பு,Water Opening,Cauvery,காவிரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/o0r0x1ue/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/o0r0x1ue/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><p>கர்நாடக அரசு தற்போது கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வர உள்ளது. </p><h2>காவிரி நீர் மேலாண்மை ஆணையம்</h2><p>கிருஷ்ணராஜ சாகர்(கே.ஆர்.எஸ்.) அணையில் இருந்து கடந்த ஜூலை 29-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 12-ந் தேதி வரை தண்ணீர் திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை கர்நாடக அரசு அமல்படுத்தவில்லை. பிலிகுண்டுலு அளவீட்டின்படி, ஜூன் மாதத்தில் கிடைக்க வேண்டிய 9.140 டி.எம்.சி.க்கு பதிலாக 2.915 டி.எம்.சி.யும், ஜூலையில் 31.240 டி.எம்.சி.க்கு பதிலாக 0.714 டி.எம்.சி.யும், ஆகஸ்டு 9-ந் தேதி வரை 13.341 டி.எம்.சி.க்கு பதிலாக 6.757 டி.எம்.சி. மட்டுமே கிடைத்துள்ளது. ஒட்டு மொத்தமாகப் பெற வேண்டிய 53.721 டி.எம்.சி.க்கு பதிலாக 10.386 டி.எம்.சி. நீர் மட்டுமே தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்துள்ளது.</p><h2>12 ஆயிரம் கனஅடி நீர்</h2><p>இதைத் தொடர்ந்து தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று காவிரிநீர் ஒழுங்காற்று குழு சென்ற 11-ந் தேதி கூட்டப்பட்டது. அதில் ஆகஸ்ட் மாதத்திற்குரிய நிலுவை நீர் மற்றும் வழக்கமான நீர் சேர்த்து மொத்தம் 37 டி.எம்.சி. நீரை உடனடியாக திறக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரியது. ஆனால், ஆணையம் இதனை ஏற்காமல், 15 நாட்களுக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீரை மட்டும், அதாவது 15.552 டி.எம்.சி.நீரை மட்டும் திறக்கப் பரிந்துரைத்தது. </p> <h2>சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு </h2><p>இந்த அளவு விவசாயத் தேவைகளுக்குப் போதுமானதாக இல்லை என தமிழ்நாடு அரசு சுட்டிக்காட்டியது. எனவே, நிலுவை நீரான 21.357 டி.எம்.சி. நீரையும், விகிதாசார அடிப்படையில் ஆகஸ்டு 12 முதல் இறுதி வரையிலான மொத்த நீரின் அளவான 37 டிஎம்சி நீரை திறக்க நாள்தோறும் 10 நாள்களுக்கு வினாடிக்கு 21.413 கனஅடி நீரை அதாவது 1.85 டிஎம்சி நீரை திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வக்கீல்கள் சி.எஸ். வைத்தியநாதன் ஜி.உமாபதி, வக்கீல் பி.கருணாகரன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். </p><h2>காவிரியில் தண்ணீர் திறப்பு</h2><p>இந்த நிலையில், கர்நாடக அரசு தற்போது கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டுள்ளது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு சுமார் 12 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படும் நிலையில், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வர உள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வர உள்ள நிலையில், இன்று காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.    </p>]]></content:encoded></item><item><title>தென்காசி: லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tenkasi-electricity-board-official-arrested-for-accepting-a-bribe</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tenkasi-electricity-board-official-arrested-for-accepting-a-bribe#comments</comments><guid isPermaLink="false">fda0b9fe-7c6f-4fce-989f-166a43ac1f3b</guid><pubDate>Sat, 15 Aug 2026 05:05:47 +0000</pubDate><atom:updated>2026-08-15T05:05:47.294Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,farmer,விவசாயி,Tenkasi,தென்காசி,arrest,லஞ்சம்,Electricity Board,bribe,Electricity connection,New,புதிய மின் இணைப்பு,மின்வாரிய அதிகாரி,Official</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/flhfmuuf/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ லஞ்சம், கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/flhfmuuf/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF">தென்காசி</a> மாவட்டத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">புதிய மின் இணைப்பு</a> வழங்க ரூ.2 ஆயிரம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">லஞ்சம்</a> வாங்கிய மின்வாரிய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்தனர். </p><h2>ரூ.2 ஆயிரம் லஞ்சம்</h2><p>தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகே உள்ள கொக்குகுளத்தைச் சேர்ந்த விவசாயி காளிராஜ் (வயது 32), புதிய மின் இணைப்பு பெற விண்ணப்பித்தார். அப்போது பழங்கோட்டை மின்வாரிய வணிக ஆய்வாளர் கருப்பசாமி ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.</p><h2>மின்வாரிய அதிகாரி கைது</h2><p>லஞ்சம் கொடுக்க விரும்பாத காளிராஜ் இதுகுறித்து தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். அந்த புகாரின்பேரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய பணத்தைப் பெற்றுக் கொண்ட கருப்பசாமியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>விஜய் தலைமையில் தகவல் ஆணையர்கள் தேர்வுக்கான கூட்டம்;  உதயநிதி பங்கேற்கவில்லை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/meeting-to-select-information-commissioners-held-under-vijays-leadership-udhayanidhi-did-not-participate</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/meeting-to-select-information-commissioners-held-under-vijays-leadership-udhayanidhi-did-not-participate#comments</comments><guid isPermaLink="false">a8efcd36-500e-4dcf-8500-81730dbed996</guid><pubDate>Sat, 15 Aug 2026 05:03:08 +0000</pubDate><atom:updated>2026-08-15T05:03:08.188Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,Tamil Nadu,உதயநிதி,Udhayanidhi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/afit7f5q/Vija.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/afit7f5q/Vija.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் தலைமை தகவல் ஆணையர் மற்றும் 8 தகவல் ஆணையர்கள் உள்ளனர். தலைமை தகவல் ஆணையர் முகமது ஷகீல் அக்தர் மற்றும் தகவல் ஆணையர்கள் தாமரைக்கண்ணன், பிரியகு மார், திருமலைமுத்து ஆகியோர் ஓய்வு பெற்றுவிட்டனர். அதைத் தொடர்ந்து அங்கு 5 ஆணையர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான வழிகாட்டுதல்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.</p><p>அதன்படி முதல்-அமைச்சர் தலைமையில் சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் கூடி, பட்டியலில் உள்ளவர்களில் யாரை ஆணையராக தேர்வு செய்ய வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும். இந்த காலி பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் தலைமையில் தேடல் குழுவை தமிழக அரசு அமைத்திருந்தது. </p> <p>அந்த குழு தகுதியானவர்களிடம் இருந்து விண் ணப்பங்களை பெற்று இறுதிப்பட்டியலை அரசுக்கு சமர்ப்பித்துள்ளது. அந்த வகையில் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் இந்த கூட்டம் கூடியது. சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் மட்டும் அதில் பங்கேற்றார். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க வில்லை.</p>]]></content:encoded></item><item><title>தங்கம் விலை மேலும் உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..?</title><link>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-rises-further-whats-todays-rate</link><comments>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-rises-further-whats-todays-rate#comments</comments><guid isPermaLink="false">c22d5964-8e63-4722-83a9-4f61f7207802</guid><pubDate>Sat, 15 Aug 2026 04:50:54 +0000</pubDate><atom:updated>2026-08-15T04:50:54.096Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Gold Rate,தங்கம் விலை,வெள்ளி விலை,Silver rate,Gold Price,Silver Price,விலை நிலவரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/mf9johfk/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/mf9johfk/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தங்கம் (Gold Rate)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,13,760-க்கு விற்பனையானது. இந்த நிலையில் நேற்று காலையில் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.1,440 குறைந்து, ரூ.1,12,320-க்கு விற்பனை செய்யப்பட்டது.</p><p>காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது. நேற்று மாலையில் சவரனுக்கு ரூ.1,280-ம், கிராமுக்கு ரூ.160-ம் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,600-க்கும், ஒரு கிராம் ரூ.14,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.</p><p>இந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>பிளஸ்-2 மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-arrested-for-raping-plus-2-student-after-threatening-her</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-arrested-for-raping-plus-2-student-after-threatening-her#comments</comments><guid isPermaLink="false">20328fec-bd1e-48d2-aefa-6cb72c1879dc</guid><pubDate>Sat, 15 Aug 2026 04:36:44 +0000</pubDate><atom:updated>2026-08-15T04:36:44.200Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பலாத்காரம்,கன்னியாகுமரி,plus-2 student,பிளஸ்-2 மாணவி,Youth arrested,வாலிபர் கைது,Kanyakumari,rape</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/w8yv02l0/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-2-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிளஸ்-2 மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த வாலிபர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/w8yv02l0/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-2-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF">கன்னியாகுமரி</a> மாவட்டத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-2-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF">பிளஸ்-2 மாணவி</a>யை மிரட்டி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">பலாத்காரம்</a> செய்த வாலிபரை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். </p><h2>பிளஸ்-2 மாணவியை மிரட்டி பலாத்காரம்</h2><p>கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே ராமன்துறையை சேர்ந்த மீன்பிடி தொழிலாளி ஆரோக்கிய டிக்சன் (வயது 27), பிளஸ்-2 மாணவியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி, ஆபாச காட்சிகளை பதிவு செய்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. </p><h2>வாலிபர் போக்சோவில் கைது</h2><p>மேலும், மாணவியின் ஆபாச புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ஆரோக்கிய டிக்சனை கைது செய்தனர்.</p>]]></content:encoded></item></channel></rss>