<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 27 Aug 2026 07:49:53 +0000</lastBuildDate><item><title>மதுரவாயலில் போதை மாத்திரைகள் விற்ற பெண் ரவுடி உட்பட 3 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-people-including-a-female-rowdy-arrested-for-selling-narcotic-pills-in-maduravoyal</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-people-including-a-female-rowdy-arrested-for-selling-narcotic-pills-in-maduravoyal#comments</comments><guid isPermaLink="false">17d0bc28-404f-4eab-8d9c-7dbc0fcfdaea</guid><pubDate>Thu, 27 Aug 2026 07:49:04 +0000</pubDate><atom:updated>2026-08-27T07:49:04.638Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,arrest,police enquiry,Drugs Case,போதை மாத்திரைகள் விற்பனை,3 ரவுடிகள் கைது,Popular rowdy</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/492qpfca/65.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ரவுடி கோகுல்ராஜ், நாராயணமூர்த்தி மற்றும்  தாரணி]]></media:title><media:description type="html"><![CDATA[ 3 பேர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/492qpfca/65.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மதுரவாயல் பகுதியில் சுடுகாட்டில் வைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்த பெண்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF"> ரவுடி </a>உட்பட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.</p><h2>போலீசார் சோதனை</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை </a>மதுரவாயல் ஓம் சக்தி நகர் பகுதியில் உள்ள சுடுகாட்டில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினர். இதையடுத்து, அவர்களை போலீசார் சோதனை செய்தபோது அவர்களிடம் போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.</p><h2>ரவுடிகள் கைது</h2><p>இதனைத் தொடர்ந்து, மதுரவாயலைச் சேர்ந்த ரவுடி கோகுல்ராஜ், நாராயணமூர்த்தி மற்றும் பெண் ரவுடி தாரணி ஆகிய மூன்று பேரையும் போலீசார் அதிரடியாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட அவர்களிடமிருந்து மொத்தம் 1,020 போதை மாத்திரைகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மாத்திரைகளை அவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து விற்பனை செய்ய முயன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><h2>பல்வேறு வழக்குகள் நிலுவை</h2><p>கைதானவர்களில் பெண் ரவுடியான தாரணி மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் மீது கொலை முயற்சி, அடிதடி மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல வழக்குகள் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள மதுரவாயல் போலீசார், அவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>காவல், தீயணைப்பு துறைகளுக்கு ரூ.164.64 கோடியில் புதிய கட்டடங்களை முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cm-vijay-inaugurates-new-buildings-for-police-and-fire-departments-at-a-cost-of-rs-16464-crore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cm-vijay-inaugurates-new-buildings-for-police-and-fire-departments-at-a-cost-of-rs-16464-crore#comments</comments><guid isPermaLink="false">c75b7100-a7ef-4839-80b8-80a2163a7d5c</guid><pubDate>Thu, 27 Aug 2026 07:47:16 +0000</pubDate><atom:updated>2026-08-27T07:47:16.704Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,police,inaugurated,காவல்,Fire Department,தீயணைப்பு துறை,கட்டடங்கள்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/h1t96txm/226.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/h1t96txm/226.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காவல், தீயணைப்பு துறைகளுக்கு ரூ.164.64 கோடியில் புதிய கட்டடங்களை முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்  இன்று தலைமைச் செயலகத்தில், காவல் துறை சார்பில் 127 கோடியே 76 லட்சம் ரூபாய் செலவிலும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் 36 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவிலும், என மொத்தம் 164 கோடியே 64 லட்சம் ரூபாய் செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைத் திறந்து வைத்தார்.</p><p>மாநிலத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றிவரும் காவல் துறையின் பணிகள் சிறக்கவும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் செயல்திறன் மேம்படவும், அத்துறைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.</p><h2>காவல்துறை சார்பில் திறந்து வைக்கப்பட்ட கட்டடங்களின் விவரங்கள்</h2><p>செங்கல்பட்டு மாவட்டம், பெரும்பாக்கத்தில் 121 கோடியே 85 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 400 காவலர் மற்றும் தலைமைக் காவலர் குடியிருப்புகள்.</p><p>சென்னை மாவட்டம், துறைமுகத்தில் 2 கோடியே 91 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையம்;</p><p>சென்னை மாவட்டம், ஆவடி, தமிழ்நாடு சிறப்புக் காவல்படை 5-ஆம் அணி வளாகத்தில் 1 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவலர் பல்பொருள் அங்காடி மற்றும் புனித தோமையார் மலை ஆயுதப்படை வளாகத்தில் 1 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவலர் பல்பொருள் அங்காடி.</p><p>காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் ஆயுதப்படை வளாகத்தில் 1 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவலர் பல்பொருள் அங்காடி, என மொத்தம் 127 கோடியே 76 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள காவல் துறைக் கட்டடங்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.</p><h2>தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் திறந்து வைக்கப்பட்ட கட்டடங்களின் விவரங்கள்</h2><p>சேலம் மாவட்டம் - செவ்வாய்பேட்டையில் 6 கோடியே 8 லட்சம் ரூபாய் செலவிலும், திருச்சிராப்பள்ளி மாவட்டம் - சமயபுரத்தில் 3 கோடியே 91 லட்சம் ரூபாய் செலவிலும், நாமக்கல் மாவட்டம் - வெப்படையில் 2 கோடியே 48 லட்சம் ரூபாய் செலவிலும், பெரம்பலூர் மாவட்டம் - பெரம்பலூரில் 4 கோடியே 33 லட்சம் ரூபாய் செலவிலும், மதுரை மாவட்டம் - தே. கல்லுப்பட்டியில் 2 கோடியே 38 லட்சம் ரூபாய் செலவிலும் மற்றும் வாடிப்பட்டியில் 2 கோடியே 21 லட்சம் ரூபாய் செலவிலும், சிவகங்கை மாவட்டம் - சிங்கம்புணரியில் 2 கோடியே 46 லட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள 7 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள்.</p><p>கோயம்புத்தூர் மாவட்டம் - பீளமேட்டில் 6 கோடியே 33 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான 15 குடியிருப்புகள் மற்றும் நாமக்கல் மாவட்டம் - திருச்செங்கோட்டில் 4 கோடியே 34 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான 14 குடியிருப்புகள்.</p><p>கோயம்புத்தூர் மாவட்டம் - மேட்டுப்பாளையத்தில் 2 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான படைக் குடியிருப்பு, என மொத்தம் 36 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக் கட்டடங்களை தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D">முதல்-அமைச்சர்</a> திறந்து வைத்தார்.</p><h2>பங்கேற்பு</h2><p>இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன், காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் வெங்கடராமன், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் வினித் தேவ் வான்கேடே, சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அமைச்சர்களுக்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் வேண்டுகோள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/speaker-jcd-prabhakars-appeal-to-ministers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/speaker-jcd-prabhakars-appeal-to-ministers#comments</comments><guid isPermaLink="false">32f0fe96-e928-4e4b-9912-11f074317037</guid><pubDate>Thu, 27 Aug 2026 07:27:24 +0000</pubDate><atom:updated>2026-08-27T07:27:24.409Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,TN Assembly,Ministers,அமைச்சர்கள்,ஜே.சி.டி.பிரபாகர்,JCD Prabhakar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/z3ry05jz/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/z3ry05jz/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மிலாடி நபி என்பதால் விடுமுறை முடிந்து இன்று காலை 9.30 மணிக்கு தமிழக சட்டசபை மீண்டும் கூடியது. த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, சட்டசபையில் இன்று கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.</p><p>இதனை தொடர்ந்து சமூக நீதித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது.  இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசி வருகின்றனர்.</p><p>முன்னதாக அவை நடவடிக்கையின்போது அமைச்சர்களுக்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் வேண்டுகோள் ஒன்றை வைத்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “சென்ற ஆகஸ்ட் 25-ஆம் தேதி மானியக் கோரிக்கை விவாதம் சிறப்பாக நடந்தது. முதன்முறையாக 9:43 மணி நேரம் தொடர்ந்து அவை நடந்தது. அறிவிப்புகளில் தான் அரசினுடைய உயிர்நாடி, திட்டங்களெல்லாம் இருக்கிறது; புதிதாக அறிவிப்புகளை வெளியிடுகிறோம் என்று சொல்லும்போது அதை முழுமையாக அமைச்சர்களால் வெளியிட முடியவில்லை என்பது என்னுடைய கவனத்திற்கு வந்தது.</p><p>நேற்று இரவு இதைப் பற்றி யோசித்தபோது ஏறத்தாழ 2 மணியளவில் எனக்கு ஒரு யோசனை வந்தது; அமைச்சர்கள் பேசுகிறபோது முன்னுரை ஏதேனும் கூற விரும்புகிறீர்களா என்று நான் கேட்கும்போதே அறிவிப்புகளை முழுமையாக படித்துவிடுங்கள்; அதை பொறுத்து நேரம் கருதி பதிலுரையைக் குறைத்து கொள்ளலாம் இனிமேல் இந்த நடைமுறையைதான் மானியக் கோரிக்கைகளின்போது அமைச்சர்கள் பின்பற்ற வேண்டும் என்பதை நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>“நேபாள வெள்ளத்தில் சிக்கிய 103 தமிழர்களை மீட்க நடவடிக்கை” - அமைச்சர் ராஜ்மோகன் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/measures-underway-to-rescue-103-tamils-stranded-in-nepal-floods-minister-rajmohan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/measures-underway-to-rescue-103-tamils-stranded-in-nepal-floods-minister-rajmohan#comments</comments><guid isPermaLink="false">901550f2-81ad-49ab-b65b-eda4ec22c813</guid><pubDate>Thu, 27 Aug 2026 07:08:26 +0000</pubDate><atom:updated>2026-08-27T07:08:26.498Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Nepal,நேபாளம்,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,தமிழக சட்டசபை,TN Assembly,Assembly Session,சட்டசபை கூட்டத்தொடர்,தமிழர்கள்,Tamils,TN Assembly session,தமிழக சட்டசபை கூட்டத்தொடர்,Minister Rajmohan,அமைச்சர் ராஜ்மோகன்,nepal flood,நேபாளம் வெள்ளம்,மீட்பு நடவடிக்கை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/1921cs76/minister.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/1921cs76/minister.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடியது. த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, சட்டசபையில் இதுவரை கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இன்று முதல் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.</p><h2>உதயநிதி ஸ்டாலின்</h2><p>இந்நிலையில் நேபாளத்தில் பெரு வெள்ளத்தில் சிக்கி தமிழர்கள் எத்தனை பேரை நாம் மீட்டுள்ளோம்? என்று பேரவையின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக சட்டசபையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “நேபாள நாட்டில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 160 பேர் உயிரிழப்பு, 750 பேரை காணவில்லை என செய்திகள் வருகின்றன. சுற்றுலா சென்ற 110 இந்தியர்கள் சிக்கியுள்ளதாகவும், குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு மாவட்டங்களில் 40-க்கும் மேற்பட்டோர் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. </p><h2>எத்தனை தமிழர்கள்</h2><p>நேபாள சிக்கியுள்ள தமிழர்களை மீட்க சிறப்பு அதிகாரியை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளதா? தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? தமிழ்நாடு அரசு அறிவித்த உதவி எண்களுக்கு எத்தனை அழைப்புகள் வந்துள்ளன? எத்தனை தமிழர்கள் சிக்கியுள்ளனர்? ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் சிக்கி இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. இதில் அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை தொடர்புகொள்ள முடியாததால் உறவினர்கள் அச்சத்தில் உள்ளனர்” என்று தெரிவித்தார்.</p><h2>103 பேர்</h2><p>இந்நிலையில் இதற்கு சட்டப்பேரவையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பதில் அளித்து பேசுகையில், “தமிழ்நாட்டைச் சேர்ந்த 103 பேர் நேபாளத்திற்கு சென்று உள்ளனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.நேபாள பெருவெள்ளத்தில் தப்பி அங்குள்ள திமுரே முகாமில் தஞ்சமடைந்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 பேரை, சாலை வழியாக காத்மாண்டு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><h2>தகவல் கிடைக்கவில்லை</h2><p>நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் குறித்த விவரங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். 34 தமிழர்கள் தொடர்பான தகவல் கிடைக்கவில்லை. நேபாள போலீஸ் உள்ளிட்ட அனைத்து துறைகளுடனும் இணைந்து தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். பெரு வெள்ளத்தில் 80 பாலங்கள், 40 கி.மீ சாலைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் தொடர்பாக இதுவரை 937 அழைப்புகள் வந்துள்ளன” என்று கூறினார்.</p><h2>ஆய்வுக் கூட்டம்</h2><p>தொடர்ந்து பேசிய அவர், “அரசு நிகழ்வை முடித்துவிட்டு, <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> வந்து கொண்டிருக்கிறார். அவர் தலைமையில் நேபாள சம்பவம் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான அவசரக் கூட்டம் நடைபெற உள்ளது” என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-the-day-after-tomorrow-23</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-the-day-after-tomorrow-23#comments</comments><guid isPermaLink="false">f084cc0e-3ff4-4822-93df-048ca20df3a8</guid><pubDate>Thu, 27 Aug 2026 07:07:24 +0000</pubDate><atom:updated>2026-08-27T07:07:24.141Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,monthly maintenance work,power outage,மாதாந்திர பராமரிப்பு பணி,மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/7dca72m8/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/7dca72m8/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டம், திருநெல்வேலி நகர்ப்புறம், திருநெல்வேலி கிராமப்புறம், வள்ளியூர், கல்லிடைக்குறிச்சி கோட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் (29.8.2026, சனிக்கிழமை) <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் காரணமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம்</h2><p>திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம் செயற்பொறியாளர் ரவிராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>பாளையங்கோட்டை மற்றும் சமாதானபுரம் துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (29.8.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும். </p><p>இதன் காரணமாக வி.எம்.சத்திரம், கிருஷ்ணாபுரம், கட்டபொம்மன்நகர், செய்துங்கநல்லூர், அரியகுளம், மேலக்குளம், நடுவக்குறிச்சி, ரஹமத்நகர், நீதிமன்றபகுதி, சாந்திநகர், சமாதானபுரம், அசோக் திரையரங்கம் பகுதி, பாளை மார்க்கெட் பகுதி, திருச்செந்தூர் சாலை, கான்சாபுரம், திம்மராஜபுரம், பொட்டல், படப்பக்குறிச்சி, திருமலைகொழுந்துபுரம், மணப்படைவீடு, கீழநத்தம், பாளை பேருந்து நிலையம், முருகன்குறிச்சி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p><h2>திருநெல்வேலி கிராமப்புற கோட்டம்</h2><p>திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>கரந்தானேரி, ரஸ்தா, மூன்றடைப்பு, பரப்பாடி, வன்னிக்கோனேந்தல், மானுர் மற்றும் மூலைக்கரைப்பட்டி துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (29.8.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. </p><p>இதன் காரணமாக மானூர், மாவடி, தெற்குபட்டி, களக்குடி, எட்டாங்குளம், கானார்பட்டி, பிள்ளையார்குளம், சிங்கநேரி, அம்பலம், திடியூர், மூன்றடைப்பு, பானாங்குளம். மதவக்குறிச்சி, துலுக்கர்பட்டி, ரஸ்தா, பட்டவர்த்தி, வெங்கலப்பொட்டல், நரியூத்து. அம்பூரணி, தோட்டாக்குடி, பத்தினிப்பாறை, மருதகுளம். </p><p>பரப்பாடி, இலங்குளம், சடையனேரி, சவனைக்காரன்குளம், வில்லயனேரி, ஏமன்குளம், பெருமாள்நகர், கேர்க்கனேரி, காரன்காடு, தட்டான்குளம், கண்ணநல்லூர், துலுக்கர்ப்பட்டி, பட்டர்புரம், மாவடி, முத்தலாபுரம், சித்தூர், சீயோன்மலை, கண்ணாத்திகுளம், தங்கயம். </p><p>வன்னிக்கோனேந்தல், மூவிருந்தாளி, தேவர்குளம், முத்தம்மாள்புரம், கண்ணாடிகுளம், மருக்காலங்குளம், தெற்குபனவடலி, நரிக்குடி மூலைகரைப்பட்டி, பருத்திப்பாடு, புதுக்குறிச்சி, மருதகுளம், கோவைகுளம், முனைஞ்சிப்பட்டி, தாமரைசெல்வி, காடான்குளம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இதேபோல் கங்கைகொண்டான் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (29.8.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும். இதன் காரணமாக பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. </p><p>சீவலப்பேரி, கங்கைகொண்டான், பாலாமடை, பதினாலாம்பேரி, குப்பக்குறிச்சி, பருத்திகுளம், துறையூர், ராஜாபதி, வெங்கடாசலபுரம், ஆலடிப்பட்டி, அலவந்தான்குளம், செழியநல்லூர் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p><h2>வள்ளியூர் கோட்டம்</h2><p>வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>நவலடி மற்றும் சங்கனான்குளம் துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (29.8.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணை மின் நிலையங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும். இதன் காரணமாக பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது. </p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>நவலடி, ஆற்றங்கரை பள்ளிவாசல், தோட்டவிளை, தெற்குபுளிமான்குளம், கோடாவிளை, மரக்காட்டுவிளை, செம்பொன்விளை, காளிகுமாரபுரம், குண்டல், உவரி, கூடுதாழை, கூட்டபணை, குட்டம், பெட்டைகுளம், உறுமன்குளம்.</p><p>மன்னார்புரம், வடக்கு விஜயநாராயண், தெற்கு விஜயநாராயண், இட்டமொழி, நம்பிகுறிச்சி, தெற்கு ஏராந்தை, சிவந்தியாபுரம், பரப்பாடி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p><h2>கல்லிடைக்குறிச்சி கோட்டம்</h2><p>கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும்பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>கல்லிடைக்குறிச்சி மின் கோட்டத்திற்குட்பட்ட மேலக்கல்லூர் துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் (29.8.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையத்தில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம் பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும். </p><p>இதன் காரணமாக மேலக்கல்லுர், சுத்தமல்லி, சங்கன்திரடு, கொண்டாநகரம், நடுக்கல்லுர், பழவூர், கருங்காடு, திருப்பணிகரிசல்குளம், துலுக்கர்குளம், பொழிக்கரை, வெள்ளாளங்குளம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>நேபாள பெருவெள்ளம்.. மேலும் 49 தமிழர்கள் குறித்த தகவல் இல்லை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nepal-floods-no-information-on-another-49-tamils</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nepal-floods-no-information-on-another-49-tamils#comments</comments><guid isPermaLink="false">6e79f60a-ba6d-443f-9ce7-57e8791624f2</guid><pubDate>Thu, 27 Aug 2026 06:57:03 +0000</pubDate><atom:updated>2026-08-27T06:57:03.759Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nepal,நேபாளம்,flood damage,வெள்ள சேதம்,nepal flood,நேபாளம் வெள்ளம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/c8duz5mu/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/c8duz5mu/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வடக்கு நேபாளத்தில், ஆற்றின் மேல் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக எல்லை நதி ஒன்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இத்துயரச் சம்பவத்தில் இதுவரை 162 பேர் உயிரிழந்ததுடன், சாலைகள் மற்றும் மின்சாரக் கட்டமைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. </p><p>வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் தனியார் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்படுகின்றன. தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வெள்ளப்பெருக்கில் சிக்கி இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களை மீட்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு இருப்பதாக முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.</p><p>நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவி தேவைப்படும் நிலையில் அவர்களோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது உறவினர்களோ தொடர்பு கொள்ள ஏதுவாக அவசர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மேலும், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் ஆகியவற்றின் வாயிலாக, தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் குறித்த தகவல்களை பெற்று, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>இந்த நிலையில், குரோம்பேட்டை மகாதேவ் கைலாஷ் ஏஜென்சி மூலம் கடந்த 14-ம் தேதி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 49 பேர் நேபாளம் பயணம் மேற்கொண்டுள்ளனர். யாத்திரையை முடித்துவிட்டு தாயகம் திரும்ப நேற்று குடியுரிமை அலுவலகம் சென்ற 49 பேர் குறித்து தற்போது வரை எந்த தகவலும் இல்லை. இதனால் 49 பேரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருப்பார்களா என்ற அச்சம் எழுந்துள்ளது.</p><p>தேனியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இந்த பயணத்தில் இருந்த நிலையில், அவர்களும் காணாமல் போயிருக்கிறார்கள். சென்னை பெரம்பூரைச் சேர்ந்த தீனதயால், ஈக்காட்டுத் தாங்கல் பகுதியிலிருந்து விக்ரமன், மஞ்சுளா, குரோம்பேட்டையிலிருந்து 6 பேர், காஞ்சிபுரத்திலிருந்து 6 பேர் என 49 பேர் நேபாளம் சென்றிருந்த நிலையில் காணாமல் போயுள்ளனர்.</p><p>மேலும் நாமக்கல்லிலிருந்து இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 5 பேரும் நேபாளம் சென்று காணாமல் போயிருக்கிறார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இவர்கள் சென்னையிலிருந்து நேபாளம் சென்று, அங்கு வெள்ளப்பெருக்கில் காணாமல் போயிருப்பது அவர்களது உறவினர்களுக்கு பெரும் துயரத்தை அளித்துள்ளது. மகாதேவ் கைலாஷ் ஏஜென்சிஅலுவலகத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p><p>நேபாளம் சென்றவர்கள் விவரங்கள், அவர்களை கடைசியாக தொடர்பு கொண்டது எப்போது? என்பது விவரங்களை திரட்டி வருகிறார்கள்.மேலும் மாயமானோர் குறித்து அரசு சார்பில் தீவிர விசாரணை நடந்து வருகிறது. கும்பகோணத்தில் இருந்து நேபாளம் சென்ற 57 பேரில் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: விவசாயி முகத்தில் ஸ்பிரே அடித்து 60 ஆடுகள் திருட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-farmer-sprayed-in-the-face-60-goats-stolen</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-farmer-sprayed-in-the-face-60-goats-stolen#comments</comments><guid isPermaLink="false">608e3ab7-8571-4b81-a4f0-e4f12e598ca1</guid><pubDate>Thu, 27 Aug 2026 06:56:42 +0000</pubDate><atom:updated>2026-08-27T06:56:42.960Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,farmer,விவசாயி,வழக்குப்பதிவு,case registered,goat theft,ஆடுகள் திருட்டு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/535w0sui/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆடுகள் திருட்டு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/535w0sui/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF">விவசாயி </a>முகத்தில் ஸ்பிரே அடித்து 60 <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">ஆடுகளை</a> 2 பேர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">திருடிச்</a> சென்றது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். </p><h2>ஆடு வாங்க வந்த 2 பேர்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், எட்டயபுரத்தை சேர்ந்த விவசாயிகளான செல்வம், சண்முகம் ஆகியோர் ஆடுகள் வளர்த்து வருகின்றனர். இவர்களிடம் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் இருந்து வருவதாக கூறிய 2 பேர், 60 ஆடுகளை ரூ.5 லட்சத்து 24 ஆயிரத்துக்கு வாங்க முன்பணம் ரூ.1,000 வழங்கினர். </p><h2>விவசாயி முகத்தில் ஸ்பிரே அடித்து 60 ஆடுகள் திருட்டு</h2><p>இதையடுத்து செல்வம் 60 ஆடுகளுடன் சேத்தியாத்தோப்பு வந்தார். அங்கு ஆடுகளை வாகனத்தில் ஏற்றிய பின்னர் பணம் கேட்டபோது, முகத்தில் ஸ்பிரே அடித்து அவரை மயக்கமடையச் செய்த அந்த நபர்கள் ஆடுகளுடன் தப்பிச் சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பவுர்ணமி, வார விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 3,710 சிறப்பு பஸ்கள் இயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/3710-special-buses-to-operate-across-tamil-nadu-for-pournami-and-weekend-holidays</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/3710-special-buses-to-operate-across-tamil-nadu-for-pournami-and-weekend-holidays#comments</comments><guid isPermaLink="false">8cd28efa-b5bc-4cfb-bb99-637170dc462f</guid><pubDate>Thu, 27 Aug 2026 06:55:50 +0000</pubDate><atom:updated>2026-08-27T06:55:50.809Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Holiday,Special Bus,வார விடுமுறை,Pournami,பவுர்ணமி,சிறப்பு பஸ்கள் இயக்கம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/j8ijpy3z/35.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு பஸ்கள் இயக்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/j8ijpy3z/35.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பவுர்ணமி, வார விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 3,710 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.</p><h2>சிறப்பு பஸ்கள் இயக்கம்</h2><p>இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>பவுர்ணமி மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 28-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று 1,140 பஸ்களும், 29-ந் தேதி (சனிக்கிழமை) 1,020 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று (வியாழக்கிழமை) முதல் 29-ந் தேதி (சனிக்கிழமை) வரை ஒவ்வொரு நாளும் தலா 130 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>மாதவரத்திலிருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, போளூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு 27 முதல் 29-ந் தேதி வரை ஒவ்வொரு நாளும் 90 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் 30-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 690 <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">சிறப்பு பஸ்கள்</a> இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை விற்பனை: 4 பேர் மீது வழக்குப்பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sale-of-2-day-old-baby-girl-near-chennai-case-registered-against-four-people</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sale-of-2-day-old-baby-girl-near-chennai-case-registered-against-four-people#comments</comments><guid isPermaLink="false">bc92dad9-c2f2-4658-9c71-79ff6a841f1b</guid><pubDate>Thu, 27 Aug 2026 06:51:41 +0000</pubDate><atom:updated>2026-08-27T06:51:41.725Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,வழக்குப்பதிவு,குழந்தை விற்பனை,police enquiry,baby girl,இடைத்தரகர்கள்,Case against 4 people</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/q5hegqbz/64.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வில்லிவாக்கம் போலீஸ் நிலையம்]]></media:title><media:description type="html"><![CDATA[ பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை விற்பனை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/q5hegqbz/64.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக குழந்தையின் தாய் மற்றும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88">மருத்துவர் </a>உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.</p><h2>வறுமையால் நேர்ந்த அவலம்</h2><p>சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பெண் பவித்ரா. அந்த பெண்ணிற்கு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. கணவரை பிரிந்து வறுமையில் வாடி வந்த பவித்ராவால், ஆஸ்பத்திரியின் கட்டணத்தை செலுத்த முடியவில்லை. இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்ட ஆண்டாள், தனலட்சுமி ஆகிய இடைத்தரகர்கள் மற்றும் மருத்துவர் ஆகியோர் குழந்தையை விற்கும்படி பவித்ராவை வற்புறுத்தியுள்ளனர்.</p><h2>6 பிரிவுகளின் கீழ் வழக்கு</h2><p>இடைத்தரகர்களின் ஆசை வார்த்தைகளில் விழுந்த தாய், பிறந்து 2 நாட்களே ஆன தனது பச்சிளம் குழந்தையை சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளார். இந்த சட்டவிரோத செயலுக்கு அந்த தனியார் மருத்துவமனையின் மருத்துவரும் உடந்தையாக இருந்ததாகத் தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து ரகசிய தகவல் அறிந்த வில்லிவாக்கம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.</p><p>விசாரணையின் முடிவில், குழந்தை கடத்தல் மற்றும் சட்டவிரோத தத்தெடுப்பு தடுப்புச் சட்டங்களின் கீழ், குழந்தையின் தாய் பவித்ரா, இடைத்தரகர்கள் 2 பெண்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவர் என 4 பேர் மீது 6 முக்கிய பிரிவுகளின் கீழ் இன்று (வியாழக்கிழமை) போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</p><h2>போலீஸ் நடவடிக்கை - குழந்தையின் நிலை</h2><p>இந்த சட்டவிரோத<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88"> குழந்தை விற்பனை</a> நெட்வொர்க்கில் வேறு பெரிய கும்பலுக்குத் தொடர்பு உள்ளதா, குழந்தை தற்பொழுது யாரிடம் விற்கப்பட்டுள்ளது? என்பது குறித்து வில்லிவாக்கம் உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மீட்கப்படும் குழந்தையைக் குழந்தைகள் நல குழுமத்திடம் ஒப்படைத்து, காப்பக பாதுகாப்பில் வளர்க்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">Chennai Baby | வில்லிவாக்கம் ஹாஸ்பிடலில் பிறந்த பெண் குழந்தை விற்பனை - 4 பேரை பிடித்தது போலீஸ் <a href="https://t.co/6n8xzWSwTU">https://t.co/6n8xzWSwTU</a> <a href="https://x.com/hashtag/chennai?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#chennai</a> <a href="https://x.com/hashtag/policearrest?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#policearrest</a> <a href="https://x.com/hashtag/thanthitv?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#thanthitv</a></p>&mdash; Thanthi TV (@ThanthiTV) <a href="https://x.com/ThanthiTV/status/2092829017661665375?ref_src=twsrc%5Etfw">August 27, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-the-day-after-tomorrow-15</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-the-day-after-tomorrow-15#comments</comments><guid isPermaLink="false">a6515685-6171-40a3-85ad-b8f4bb1a591c</guid><pubDate>Thu, 27 Aug 2026 06:37:34 +0000</pubDate><atom:updated>2026-08-27T06:37:34.273Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,monthly maintenance work,power outage,தென்காசி,மாதாந்திர பராமரிப்பு பணி,மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/vs4qesfo/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/vs4qesfo/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p>திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF">தென்காசி</a> மாவட்டம், சங்கரன்கோவில், கடையநல்லூர் கோட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் (29.8.2026, சனிக்கிழமை) <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் காரணமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>சங்கரன்கோவில் கோட்டம்</h2><p>சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>மலையாங்குளம், கலிங்கப்பட்டி, திருவேங்கடம், நக்கலமுத்தன்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (29.8.2026, சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு வேலைகள் நடைபெற உள்ளது. </p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>இதன் காரணமாக மலையாங்குளம், சிதம்பராபுரம், செவல்குளம், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி ஆகிய ஊர்களுக்கும், கலிங்கப்பட்டி, சத்திரப்பட்டி, ஆலடிப்பட்டி, மலையடிப்பட்டி, சுப்புலாபுரம், செள்ளிகுளம், பாறைப்பட்டி, பருவக்குடி, கரிசல்குளம் மற்றும் ரெங்கசமுத்திரம் ஆகிய ஊர்களுக்கும், திருவேங்கடம், உமையத்தலைவன்பட்டி, ஆலமநாயக்கம்பட்டி, மகாதேவர்பட்டி, ஆலடிப்பட்டி, கரிசல்குளம், குறிஞ்சாகுளம், வெள்ளாகுளம், சங்குப்பட்டி, புதுப்பட்டி, ஆவுடையார்புரம் மற்றும் குண்டம்பட்டி ஆகிய ஊர்களுக்கும், நக்கலமுத்தன்பட்டி, இளையரசனேந்தல், கொம்பன்குளம், வெங்கடாசலபுரம், புளியங்குளம் அய்யனேரி, அப்பனேரி. ஆண்டிப்பட்டி, மைப்பாறை ஆகிய ஊர்களுக்கும் மின்விநியோகம் தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  </p><h2>கடையநல்லூர் கோட்டம்</h2><p>கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பகவிநாயகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>விஸ்வநாதபேரி துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் (29.8.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பின்வருமாறு குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் பின்வரும் இடங்களில் இருக்காது. </p><h2>காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை</h2><p>சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்குசத்திரம், வழிவழிக்குளம், மேலகரிசல்குளம், ராயகிரி, கொத்தாடைப்பட்டி, சொக்கநாதன்புத்தூர், மேலூர் துரைச்சாமிபுரம் மற்றும் வடுகப்பட்டி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>நேபாள பெருவெள்ளம்: தமிழர்களை மீட்க என்ன நடவடிக்கை? எத்தனை பேரை மீட்டுள்ளோம்? -  உதயநிதி கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nepal-floods-what-measures-are-being-taken-to-rescue-tamils-how-many-have-been-rescued-udhayanidhi-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nepal-floods-what-measures-are-being-taken-to-rescue-tamils-how-many-have-been-rescued-udhayanidhi-asks#comments</comments><guid isPermaLink="false">d3f55ca2-ab8d-45d2-93d0-6d9a0df16807</guid><pubDate>Thu, 27 Aug 2026 06:37:27 +0000</pubDate><atom:updated>2026-08-27T06:37:27.252Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,திமுக,DMK,M.K.Stalin,தமிழகம்,Nepal,நேபாளம்,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,தமிழக சட்டசபை,தமிழக அரசு,TN govt,TN Assembly,Assembly Session,சட்டசபை கூட்டத்தொடர்,TN Assembly session,தமிழக சட்டசபை கூட்டத்தொடர்,nepal flood,நேபாளம் வெள்ளம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/dd53ea7n/must.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/dd53ea7n/must.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக சட்டசபையில் கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 6-ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 7, 10,11 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதமும், 12-ந் தேதி நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோரின் பதில் உரையும் இடம் பெற்றது.</p><p>இந்த நிலையில், 17-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதுவரை, 27 துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து முடிந்துள்ளது.</p><p>நேற்று மிலாது நபி என்பதால் அரசு விடுமுறை விடப்பட்டிருந்தது. இன்று காலை 9.30 மணிக்கு தமிழக சட்டசபை மீண்டும் கூடியது. த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, சட்டசபையில் இதுவரை கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இன்று முதல் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.</p><h2>உதயநிதி ஸ்டாலின்</h2><p>இந்நிலையில் நேபாளத்தில் பெரு வெள்ளத்தில் சிக்கி தமிழர்கள் எத்தனை பேரை நாம் மீட்டுள்ளோம்? என்று பேரவையின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/udhayanidhi-stalin">உதயநிதி</a> கேள்வி எழுப்பினார். </p><p>இதுதொடர்பாக சட்டசபையில் பேசிய <a href="https://www.dailythanthi.com/topic/udhayanidhi-stalin">உதயநிதி ஸ்டாலின்</a>, “நேபாள நாட்டில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 160 பேர் உயிரிழப்பு, 750 பேரை காணவில்லை என செய்திகள் வருகின்றன. சுற்றுலா சென்ற 110 இந்தியர்கள் சிக்கியுள்ளதாகவும், குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு மாவட்டங்களில் 40-க்கும் மேற்பட்டோர் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. </p><h2>ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி</h2><p>நேபாள சிக்கியுள்ள தமிழர்களை மீட்க சிறப்பு அதிகாரியை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளதா? தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? தமிழ்நாடு அரசு அறிவித்த உதவி எண்களுக்கு எத்தனை அழைப்புகள் வந்துள்ளன? எத்தனை தமிழர்கள் சிக்கியுள்ளனர்? ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் சிக்கி இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. இதில் அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை தொடர்புகொள்ள முடியாததால் உறவினர்கள் அச்சத்தில் உள்ளனர்" என்று அவர் கூறினார். </p><h2>37 பேரின் கதி என்ன..?</h2><p>முன்னதாக நேபாள சுற்றுலா வாரியம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சுற்றுலா பயணிகள் 500 பேர் வெள்ளத்துக்கு பிறகு தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். இவர்களில் 291 பேர் வெளிநாட்டினரும், 32 பேர் பாதுகாப்புப் படையினரும் அடங்குவர். வெளிநாட்டினரில் 133 பேர் இந்தியர்கள் என்றும், 37 பேர் வெளிநாடுவாழ் இநதியர்கள் என்றும் தெரியவந்துள்ளது.</p><p>இந்தியர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 57 பேரும் இருப்பதாக கூறப்படுகிறது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் என்ற தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்த கைலாஷ் மானசரோவர் பயணத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இந்த 57 பேரும் சென்றிருந்தனர். இவர்களில் 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மற்ற 37 பேரின் கதி என்ன? என்று தெரியவில்லை.</p>]]></content:encoded></item><item><title>மகளிர் இலவச பஸ்களில் &apos;வெற்றி பயணம்&apos; பெயர் பலகை - அதிகாரிகள் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/journey-of-success-signage-on-free-buses-for-women-officials-statement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/journey-of-success-signage-on-free-buses-for-women-officials-statement#comments</comments><guid isPermaLink="false">45bebd4e-fcba-459f-986d-a7ac3c8b1984</guid><pubDate>Thu, 27 Aug 2026 06:20:14 +0000</pubDate><atom:updated>2026-08-27T06:20:14.771Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt,Free Bus,இலவச பஸ்கள்,மகளிர் பஸ்,வெற்றி பயணம்,woman bus</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/ybxvoksu/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/ybxvoksu/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மகளிர் இலவச பயண திட்டத்தின் விரிவாக்கத்தின்படி, மாநகர, நகர பகுதிகளில் இயக்கப்படும் சாதாரண, சொகுசு பஸ்களிலும், மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ளும் புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில், சாதாரண கட்டண பஸ்களிலும், வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல் மகளிர் இலவச பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த நிலையில், மகளிர் இலவச பயண பஸ்களை அடையாளம் காணும் வகையில், 'வெற்றி 'பயணம்' என்ற 'டிஜிட்டல்' பலகை அமைக்கப்பட உள்ளது. இதுகுறித்து, போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-</p><p>மகளிர் இலவச பயண திட்டத்தின்படி, சென்னையில் 3,633 பஸ்களிலும், மாவட்டங்களில் 9,000-க்கும் மேற்பட்ட பஸ்களிலும் பயணம் செய்யலாம். இதற்கான வழிகாட்டு முறைகளை, தமிழக அரசு விரைவில் வெளியிடும். மகளிர் இலவச பயண பஸ்களை அடையாளம் காணும் வகையில் மாநகரங்களில், 'வெற்றி பயணம்' என பெயரிட்டு, டிஜிட்டல் பலகையுடன் பஸ்கள் இயக்கப்படும்.</p><p>மாவட்ட பஸ்களில், 'மகளிர் கட்டணம் இல்லா பயணம்" என, குறிப்பிட முடிவு செய்துள்ளோம். இந்த பஸ்களுக்கு பிரத்யேக வண்ணம் பூசுவது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>நேபாளத்தில் இயற்கை பேரிடர்: இந்தியா அனைத்து உதவிகளையும் வழங்க தயார் - எச்.ராஜா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/natural-disaster-in-nepal-india-ready-to-provide-all-assistance-h-raja</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/natural-disaster-in-nepal-india-ready-to-provide-all-assistance-h-raja#comments</comments><guid isPermaLink="false">31f852f3-f069-4b30-bf40-386e445a1008</guid><pubDate>Thu, 27 Aug 2026 06:18:08 +0000</pubDate><atom:updated>2026-08-27T06:18:08.816Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,எச்.ராஜா,H. Raja,Natural Disaster,இயற்கை பேரிடர்,Provide,நேபாளத்தில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/ergvob5j/225.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எச்.ராஜா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/ergvob5j/225.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்திய அரசு நேபாளத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாக தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக, தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>இயற்கை பேரிடர்</h2><p>நேபாளத்தில் பனிமலை உருகி அந்நாட்டின் கண்டகி, திரிசூலி, கோஷி உள்ளிட்ட அனைத்து ஜீவநதிகளிலும் வரலாறு காணாத பெருவெள்ளம் வந்து மிகப்பெரிய இயற்கை பேரிடர் உருவாகி அது நேபாளம் முழுவதும் ஏற்படுத்தியுள்ள பேரழிவு உலகெங்கும் வாழும் அனைவருக்கும் வேதனையையும், வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது. </p><p>வீடுகள், வர்த்தக கட்டிடங்கள், மிகப்பெரிய மேம்பாலங்கள், பிரதான சாலைகள், வாகனங்கள் அனைத்தும் பெருத்த சேதமடைந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காட்சிகளை பார்க்கும் போது அதிர்ச்சியிலும், அச்சத்திலும் நெஞ்சம் பதைபதைக்கிறது. இந்த பெரு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">வெள்ளத்தில்</a> சிக்கி பலர் இறந்துள்ளனர். </p><p>மேலும் இந்த பெரு வெள்ளத்தில் நேபாள மக்களும், அந்நாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்த இந்நிய மக்களில் பலரும் காணாமல் போயுள்ளனர். தமிழகத்தில் இருந்து நேபாளத்திற்கு 57 பேர் சென்றுள்ளனர். அனைவரும் பத்திரமாக மீட்கப்பட எல்லாம் வல்ல இறைவன் அருள்புரியட்டும். </p><h2>உதவிகள்</h2><p>இந்திய அரசு நேபாளத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. நேபாளத்தில் ஏற்பட்டுள்ள இந்த இயற்கை பேரிடரைத் தொடர்ந்து உலக நாடுகள் தங்கள் கவலையையும், ஆதரவையும் தெரிவித்துள்ளன. நேபாளில் ஏற்பட்டுள்ள இந்த பெருவெள்ளம் எல்லையோர இந்திய மாநிலமான பீகாரையும் தாக்கக் கூடும் என்ற எச்சரிக்கை வந்திருப்பதால் மத்திய அரசு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. </p><p>நெருக்கடியான நேரங்களில் நாடு, மொழி, எல்லைகளை கடந்து இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள நேபாள மக்கள் இந்த பேரழிவில் இருந்து விரைவில் மீண்டு வர பிரார்த்திப்போம்.  மேலும் நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை அனைவரும் பிரார்த்திப்போம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">நேபாளத்தில் பனிமலை உருகி அந்நாட்டின் கண்டகி, திரிசூலி, கோஷி உள்ளிட்ட அனைத்து ஜீவநதிகளிலும் வரலாறு காணாத பெருவெள்ளம் வந்து மிகப்பெரிய இயற்கை பேரிடர் உருவாகி அது நேபாளம் முழுவதும் ஏற்படுத்தியுள்ள பேரழிவு உலகெங்கும் வாழும் அனைவருக்கும் வேதனையையும், வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது.… <a href="https://t.co/x1wzVK3KX3">pic.twitter.com/x1wzVK3KX3</a></p>&mdash; H Raja (@HRajaBJP) <a href="https://x.com/HRajaBJP/status/2092816178473545798?ref_src=twsrc%5Etfw">August 27, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>பரவி வரும் பன்றிக் காய்ச்சல் - அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/spreading-swine-flu-minister-arunraj-clarifies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/spreading-swine-flu-minister-arunraj-clarifies#comments</comments><guid isPermaLink="false">b826bf18-8888-49d2-a183-3957aa369b99</guid><pubDate>Thu, 27 Aug 2026 05:41:26 +0000</pubDate><atom:updated>2026-08-27T05:41:26.558Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,TN Assembly,swine flu,பன்றி காய்ச்சல்,Minister Arunraj,அமைச்சர் அருண்ராஜ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/x920wiv3/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/x920wiv3/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மிலாடி நபி என்பதால் விடுமுறை முடிந்து இன்று காலை 9.30 மணிக்கு தமிழக சட்டசபை மீண்டும் கூடியது. த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, சட்டசபையில் இன்று கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.</p><p><strong>அப்போது திமுக எம்.எல்.ஏ. லட்சுமணன் பேசுகையில்,</strong> “தமிழகத்தில் பரவி வரும் எச்1,என்1 (பன்றி) காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது; முதியவர், கர்ப்பிணி பெண்களுக்காவது தடுப்பூசி போடும் திட்டம் அரசிடம் உள்ளதா?” என கேள்வி எழுப்பினார்.</p><p><strong>இதற்கு பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ்,</strong> “பன்றிக்காய்ச்சல் எனப்படும் எச்1,என்1 ப்ளூ காய்ச்சல் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. மக்கள் அச்சப்பட தேவையில்லை. சென்ற ஆண்டில் முதல் 4 மாதம் (ஜனவரி - ஏப்ரல்) தான் தாக்கம் அதிகமாக இருந்தது, இந்த ஆண்டு மே -ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் தாக்கம் அதிகமாக உள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்து தேவைப்பட்டால் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும்; முதியவர்களையும், கர்ப்பிணிகளையும் அதிகமாக பாதிக்கும் என்பதால் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” என்று கூறினார்.</p><p><strong>தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-</strong> “கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது. கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க வேண்டும். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும்"</p><p><strong>இதற்கு பதிலளித்த அமைச்சர் அருண்ராஜ்,</strong> “உயர் சிறப்பு மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது. முதல் முறையாக 284 மருத்துவர்களுக்கான பணியிடங்களை உருவாக்கியுள்ளோம். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான தேவையை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்”என்றார்.</p><p><strong>தொடர்ந்து சட்டசபையில் பாமக எம்.எல்.ஏ. கணேஷ்குமார் பேசுகையில்,</strong> “செஞ்சி மருத்துவமனையில் கடந்த ஆட்சிக் காலத்தில் மகப்பேறுக்கான தனிக் கட்டடம் கட்டப்பட்டு ஆபரேஷன் தியேட்டர் நடைமுறைக்கு வராமல் இருந்தது அமைச்சர் ஆனந்திடம் ஒரே ஒரு கோரிக்கைதான் வைத்தேன்; மறுநொடியே முதல்வரை அழைத்து சொன்னதன் விளைவாக 10 நாட்களுக்கு முன்பாக ஆபரேஷன் தியேட்டர் முழு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது; சிசேரியன் மிக சிறப்பாக நடைபெற்றுள்ளது. இதற்கு நீர்வளத்துறை அமைச்சருக்கும்(ஆனந்த்) சுகாதாரத்துறை அமைச்சருக்கும்(அருண்ராஜ்) நன்றிக்கடனுடன் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.2 லட்சம் கோடி மதிப்பில் சாலை திட்டங்கள் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/road-projects-worth-rs-2-lakh-crore-minister-adhav-arjuna-shares-details</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/road-projects-worth-rs-2-lakh-crore-minister-adhav-arjuna-shares-details#comments</comments><guid isPermaLink="false">6a3ab5ab-4b5a-409b-b5ab-6ca1a23af36b</guid><pubDate>Thu, 27 Aug 2026 05:19:44 +0000</pubDate><atom:updated>2026-08-27T05:19:44.574Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Aadhav Arjuna,ஆதவ் அர்ஜுனா,சட்டசபை,TN Assembly,நெடுஞ்சாலை திட்டங்கள்,சாலை பணிகள்,Road project</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/3d2ule9e/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/3d2ule9e/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மிலாடி நபி என்பதால் விடுமுறை முடிந்து இன்று காலை 9.30 மணிக்கு தமிழக சட்டசபை மீண்டும் கூடியது. த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, சட்டசபையில் இன்று கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.</p><p>அப்போது பேசிய உறுப்பினர் மாரிமுத்து, திருத்துறைப்பூண்டியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, எனவே ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.</p><p>இதற்கு பதிலளித்த பொதுப் பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ரெயில்வே மேம்பாலங்கள் அமைப்பது குறித்து துறை ரீதியான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது குறித்து விரைவில் அறிவிக்கப்படும். அங்கு மட்டுமல்ல, அனைத்து மாவட்டங்களிலும் ரெயில்வே கிராசிங் உள்ள சில இடங்களில் ரெயில்வே மேம்பாலங்கள் இல்லை.</p><p>எனவே, முதலில் செய்ய வேண்டிய பணிகளாக ரெயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படும். பல ரெயில்வே கிராசிங் பகுதிகளில் ஒரு மணி நேரம் நிற்க வேண்டிய நிலை உள்ளது. டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களிலும் இந்த பிரச்சினை உள்ளது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. முதல் பணியாக ரெயில்வே மேம்பாலங்கள் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டு வரப்படும். அதுபோல ரிங் ரோடு பிரச்னை உள்ளது. அதுவும் விரைவில் சரி செய்யப்படும் என்றார்.</p><p>தொடர்ந்து முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், சென்னையிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ளது. எனவே, தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு வரை உயர்நிலை மேம்பாலம் அமைக்குப் பணிகள் அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒப்புதல் பெறப்பட்டு தொடங்கவிருந்தது. ஆனால் ஆட்சி மாற்றத்த்தால் கிடப்பில் போடப்பட்டதாக கூறினார். கிடப்பில் போடப்பட்ட உயர்நிலைப் பாலப் பணியை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.</p><p>இதற்கு பதிலளித்த ஆதவ் அர்ஜுனா, சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை எட்டுவழிச் சாலையாக மாற்றும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறோம். மத்திய மந்திரியுடன் சந்திப்பின்போதும் இது குறித்து வலியுறுத்தியிருக்கிறோம். சென்னை-கன்னியாகுமரி வரை எட்டு வழிச் சாலையாக மாற்றுவதுதான், அடுத்த 30 வருடத்துக்கான போக்குவரத்து பிரச்சினைக்கான தீர்வாக இருக்கும்.</p><p>சென்னை நோக்கி வரும்போது, திருச்சி செங்கல்பட்டு வர 4 மணி நேரம் ஆகும். ஆனால், அதே செங்கல்பட்டிலிருந்து சென்னை வர 3 மணி நேரம் ஆகிறது. அதுபோலவே பெங்களூரிலிருந்து திருவள்ளுர் 3 மணி நேரம் வந்துவிடுவோம், ஆனால் திருவள்ளூரிலிருந்து சென்னைக்குள் வர 3 மணி நேரம் ஆகிறது. மகாபலிபுரத்திலிருந்தும் சென்னை வர மூன்று மணி நேரம் ஆகிறது. எனவே, சென்னையை சுற்றியுள்ள சாலைகள் மேம்படுத்தப்படும். இது குறித்து மத்திய அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நல்ல செய்தி அறிவிக்கப்படும்.</p><p>மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் நடைப்பெற்று வரும் சாலை திட்டங்களின் தொய்வு குறித்தும் தமிழ்நாட்டிற்கு தேவையான சாலை திட்டம் குறித்து மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரியிடம் நேரில் வலியுறுத்தினேன்; வரும் ஐந்து ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பீட்டிலான சாலை திட்டங்களுக்கு மத்திய அரசு தயாராக உள்ளதாகவும், மத்திய சாலை நிதி ரூ.1,000 கோடியாக உயர்த்தி வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சியின் இடர்பாடுகளால் தமிழகத்திற்கு திட்டங்கள் வரவில்லை.. இடர்பாடுகளை நீக்கினால் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசிடம் இருந்து ரூ.2 லட்சம் கோடி கிடைக்கும் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்திற்கு ரூ.5,109 கோடி கல்வி நிதியை விடுவிக்காமல் வஞ்சிக்கும் மத்திய அரசு: மாணிக்கம் தாகூர் எம்.பி. கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/central-government-is-deceiving-tamil-nadu-by-not-releasing-rs-5109-crore-education-fund-manickam-thakur-mp-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/central-government-is-deceiving-tamil-nadu-by-not-releasing-rs-5109-crore-education-fund-manickam-thakur-mp-condemns#comments</comments><guid isPermaLink="false">6d2b4c46-b314-42c1-ba19-837bfba81798</guid><pubDate>Thu, 27 Aug 2026 05:18:23 +0000</pubDate><atom:updated>2026-08-27T05:18:23.002Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,Chennai,சென்னை,தமிழகம்,காங்கிரஸ்,Congress,condemnation,கண்டனம்,மத்திய அரசு,education,Central Government,கல்வி நிதி,fund,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Thakur MP</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/lgq3wgen/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் மாணிக்கம் தாகூர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/lgq3wgen/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழகத்திற்கு ரூ.5,109 கோடி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF">கல்வி நிதி</a>யை விடுவிக்காமல் வஞ்சித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசின் பழிவாங்கும் அரசியலை வன்மையாகக் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">கண்டிக்கிறேன்</a> என்று தமிழக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D">காங்கிரஸ்</a> கட்சி தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF">மாணிக்கம் தாகூர் எம்.பி. </a>தெரிவித்துள்ளார். </p><p>இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: </p><p>தமிழ்நாட்டின் கல்வி உரிமைகளை நசுக்கி, மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் மோடி அரசின் துரோகப் போக்கு நாளுக்கு நாள் எல்லை மீறுகிறது.</p><h2>மத்திய அரசுக்கு கண்டனம்</h2><p>தமிழகத்திற்குச் சேர வேண்டிய ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதியைத் தடுத்து நிறுத்தி, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.5,109 கோடியை விடுவிக்காமல் வஞ்சித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசின் பழிவாங்கும் அரசியலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.</p><h2>கல்வி நிதி தடுத்து நிறுத்தம்</h2><p>தமிழக பள்ளிக்கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பின்படி, 2024-25 நிதியாண்டில் ரூ.1,788 கோடி, 2025-26-ல் ரூ.1,496 கோடி, நடப்பு 2026-27 நிதியாண்டில் ரூ.1,825 கோடி என மொத்தம் ரூ.5,109 கோடி கல்வி நிதியை மோடி அரசு தடுத்து நிறுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு பெயரளவில் RTE திட்டத்திற்கு ரூ.714 கோடியை மட்டும் பெயரளவுக்கு விடுவித்துவிட்டு, பள்ளிக் கல்விக்கான ஒட்டுமொத்த நிதியையும் பிடித்து வைத்துப் பிளாக்மெயில் செய்வது வெட்கக்கேடானது.</p><h2>கடுமையான நெருக்கடி</h2><p>மத்திய அரசின் நிதியுதவி இல்லாத போதிலும், தமிழக அரசு தனது சொந்த நிதியிலிருந்து கடந்த 2 ஆண்டுகளில் ரூ.2,014 கோடியையும், நடப்பாண்டில் ரூ.647 கோடியையும் ஒதுக்கிப் பள்ளிகளை நடத்தி வருகிறது. ஆனால், மோடி அரசின் இந்த அதிகார மமதையால் அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாடு, ஆசிரியர் பயிற்சிகள் மற்றும் பள்ளிக் கட்டமைப்புப் பணிகள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகின்றன.</p><h2>மோடி அரசின் பிடிவாதம்</h2><p>மும்மொழிக் கொள்கை விலக்கு உள்ளிட்ட தமிழகத்தின் நியாயமான குரலை நசுக்கி, PM-SHRI மற்றும் தேசிய கல்விக் கொள்கையை (NEP) கட்டாயமாகத் திணிக்கத் துடிக்கும் மோடி அரசின் அரசியல் பிடிவாதத்திற்குப் பிஞ்சுக் குழந்தைகளின் கல்வியைப் பணயம் வைப்பதா? இது கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல்.</p><h2>ரூ.5,109 கோடி கல்வி நிதியை விடுவிக்க கோரிக்கை</h2><p>தமிழக மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் இந்த அநீதியை உடனடியாகக் கைவிட வேண்டும். எந்தவித நிபந்தனையுமின்றி தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய ரூ.5,109 கோடி கல்வி நிதி நிலுவைத் தொகையை உடனே விடுவிக்கக் கோரி மத்திய கல்வி மந்திரி பிரகலாத் ஜோஷிக்கு கடிதம் எழுதியுள்ளேன். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறியது யார்? வேல்முருகன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/who-failed-to-control-price-increases-velmurugan-question</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/who-failed-to-control-price-increases-velmurugan-question#comments</comments><guid isPermaLink="false">28513772-eabd-4c09-9126-8763d596f8b8</guid><pubDate>Thu, 27 Aug 2026 05:01:44 +0000</pubDate><atom:updated>2026-08-27T05:01:44.698Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Question,Velmurugan,வேல்முருகன்,விலைவாசி உயர்வு,தமிழக வாழ்வுரிமைக் கட்சி,increases</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/vzrs3tug/224.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/vzrs3tug/224.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறியது யார் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>இது தொடர்பாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D">வேல்முருகன்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டில் சமையல் எண்ணெய், தனியா, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து மக்களின் மாதாந்திர பட்ஜெட்டை நிலைகுலைய வைத்துள்ளது. இது வெறும் அரசியல் குற்றச்சாட்டு அல்ல. மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத்துறையின் (Price Monitoring Division) அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களே இதை உறுதிப்படுத்துகின்றன. 2024 ஆகஸ்ட் முதல் 2026 ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில்,</p><h2>விலை உயர்வு</h2><p>சூரியகாந்தி எண்ணெய் கிலோ ரூ.115.71-லிருந்து ரூ.193.58 ஆக உயர்வு (67.3 சதவீதம்)., மல்லி (தனியா) கிலோ ரூ.23.82-லிருந்து ரூ.46.11 ஆக உயர்வு (93.6 சதவீதம்)., சர்க்கரை கிலோ ரூ.44.28-லிருந்து ரூ.53.58 ஆக உயர்வு (21 சதவீதம்)., அரிசி கிலோ ரூ.55.75-லிருந்து ரூ.60.25 ஆக உயர்வு (8.1 சதவீதம்)., உப்பு விலை 11 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.</p><p>அதேவேளையில், துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், மஞ்சள் போன்ற சில பொருட்களின் விலை குறைந்துள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.</p><h2>நலத்திட்ட உதவிகள்</h2><p>ஆனால், எளிய மக்களுக்கு கையில் நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு, மறுகையில் கட்டுக்கடங்காத விலைவாசி மூலம் அவர்களின் சேமிப்பைப் பறிக்கும் சூழல் நீடிக்கக்கூடாது.</p><p>வெளிச்சந்தை விலை உயர்வுக்குக் காரணங்களை அடுக்கித் தட்டிக்கழிக்காமல், இடைத்தரகர்களின் ஆதிக்கம், பதுக்கல் மற்றும் செயற்கைத் தட்டுப்பாடுகளைத் தகர்க்க வேண்டும்.  ஏற்கனவே உள்ள ‘விலை நிலைப்படுத்தும் நிதியை’ (Price Stabilisation Fund) ஒன்றிய அரசு முறையாகப் பயன்படுத்த வேண்டும். </p><h2>வலியுறுத்தல்</h2><p>அதேபோல் தமிழ்நாடு அரசும் வெளிப்படையான சந்தைத் தலையீடுகளை முன்னெடுத்து, சாமானிய மக்களுக்கு மலிவு விலையில் மளிகைப்பொருட்கள் தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி முதல்-அமைச்சருக்கு பெ.சண்முகம் கடிதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/p-shanmugam-writes-to-the-chief-minister-seeking-action-against-the-chief-secretary</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/p-shanmugam-writes-to-the-chief-minister-seeking-action-against-the-chief-secretary#comments</comments><guid isPermaLink="false">78e680f3-d77f-418f-a9ba-b1d42bad9ff0</guid><pubDate>Thu, 27 Aug 2026 04:50:58 +0000</pubDate><atom:updated>2026-08-27T04:50:58.587Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,Chief Secretary,தமிழக அரசு,TN govt,பெ.சண்முகம்,தலைமைச் செயலாளர்,சிபிஎம்,CPM,P.Shanmugam</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/t59ll6vj/siier.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/t59ll6vj/siier.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>இடதுசாரி இயக்கங்களை ஒடுக்கும் நோக்கில் செயல்பட்ட தலைமைச் செயலாளர் மற்றும் குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி <a href="https://www.dailythanthi.com/topic/vijay">தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கு</a> சி.பி.எம். மாநில செயலாளர் பெ.சண்முகம் கடிதம் எழுதி உள்ளார். </p><h2>சுற்றறிக்கை</h2><p>இதுதொடர்பான அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவாக, இடதுசாரி இயக்கங்கள் மற்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பினரின் போராட்டத்தில் இளைஞர்கள், மாணவர்கள் பங்கேற்பதைத் தடுப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து செயல்பட வேண்டும் என்ற சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. </p><h2>விளக்கம் அவசியம்</h2><p>இது உரிய முன்னுரிமை என்றும் மிக அவசரம் என்றும் வகைப்படுத்தப்பட்டு, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கை (action taken report) கோரப்பட்டுள்ளது. இது முற்றிலும் சட்டவிரோதமானதும், அரசமைப்பு சட்டம் வழங்கியுள்ள போராட்ட உரிமையை மறுப்பதும் ஆகும். இது திட்டமிட்டு இடதுசாரி அமைப்புகளைக் குறி வைக்கிற செயல் என்கிற முறையில் எங்களது கடும் கண்டனத்தைத் தெரியப்படுத்துகிறோம். அரசின் அதிகார கட்டமைப்பில் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கும் தலைமைச் செயலாளர் எடுக்கும் முடிவு அரசின் முடிவாகவே கருதப்படும். எனவே, இதுகுறித்து தாங்கள் விளக்கம் அளிப்பது அவசியம்.</p><h2>தலைமை செயலாளர் மீது நடவடிக்கை</h2><p>இடதுசாரி அமைப்புகள் மட்டுமல்ல, எந்தவொரு அமைப்பும் போராடுவதற்கு உரிமை உண்டு. அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமையை ஒடுக்குவதற்கு, பல்துறை ஒருங்கிணைப்பை செயல்படுத்துவது அரசமைப்பு சட்டத்திற்கு முரணானதாகும். காவல்துறை உட்பட கல்வி வளாகங்களுக்குள் சென்று நடவடிக்கை எடுக்கும் சட்டவிரோத செயலை அங்கீகரிப்பதாகும். எனவேதான், தலைமை செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், ஜனநாயக இயக்கங்களும் கோரிக்கை விடுத்துள்ளன.</p><p>ஆனால், உயர் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அவர்களின் முடிவை கல்லூரிகளுக்கு அனுப்பி வைத்த இணை இயக்குநரிடம் விளக்கம் கேட்டுவிட்டோம் என்று சொல்வது எவ்விதத்திலும் ஏற்கத்தக்கதல்ல; பொருத்தமானதும் அல்ல.</p> <h2>அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது</h2><p>உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் மன்னிப்பு கோரியிருக்கிறார். நாங்கள் யாரிடமும் மன்னிப்பு கோர வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை. மாறாக, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை என்பதையே வலியுறுத்தியிருக்கிறோம்; இப்போதும் வலியுறுத்துகிறோம். இதுகுறித்து அரசு தரப்பிலிருந்து இதுவரையிலும் பொறுப்பான பதில் ஏதும் சொல்லப்படவில்லை.</p><p>திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டாட்சியர், அந்த வட்டத்திற்குட்பட்ட CPI(M), CPI கட்சிகளின் உறுப்பினர்கள் பற்றிய விபரங்கள் சேகரிக்க கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். இது நேரடியான அச்சுறுத்தல் மட்டுமல்ல, அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானதும், தனது பதவியை தவறாக பயன்படுத்துவதும் ஆகும். </p><p>இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லாமல் அவரது பயிற்சி காலம் முடிந்ததால் இடமாறுதல் செய்வதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்திருந்தார். பிறகு அவருக்கு அரசு ஊழியர் நடத்தை விதிகள் 17 A-யின் கீழ் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதாவது இது சிறு குற்றமாக மட்டுமே அரசால் கருதப்பட்டு மென்மையாக அணுகப்படுகிறது.</p><h2>பாதுகாப்பதற்கான முயற்சி</h2><p>சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அவர்கள், வட்டாட்சியரின் கடிதத்திற்கும், அரசுக்கும் சம்பந்தமில்லை; சொந்த விருப்பு, வெறுப்பு அடிப்படையில் அவர் அந்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார் என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியிருந்தார். வட்டாட்சியரின் சட்டவிரோதமான இந்த செயலுக்கு அமைச்சரின் பதிலும், துறையின் நடவடிக்கையும் எந்தவகையிலும் பொருத்தமானதல்ல. அரசுப் பதவியில் உள்ள ஒருவர் தனிப்பட்ட நோக்கத்திற்காக செய்தார் (abuse of power) என்றால் அது கடுமையான குற்றமாகும். </p><p>ஆனால், இதற்குமேல் எந்த நடவடிக்கையும் தேவையில்லை என்கிற முறையில் அமைச்சர் பதிலளித்திருப்பதும், 17 A பிரிவின் கீழ் விளக்கம் கேட்டிருப்பதும் சம்பந்தப்பட்ட வட்டாட்சியரை அவருடைய தவறுக்கு தண்டிப்பதற்கு பதிலாக, அவரை பாதுகாப்பதற்கான முயற்சியாகவே கருத வேண்டியுள்ளது.</p><h2>தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை</h2><p>எனவே, முதல்-அமைச்சர் அவர்கள் இந்த பிரச்சனையில் தலையிட்டு, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் குஜிலியம்பாறை வட்டாட்சியர் உட்பட தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தலைமைச் செயலாளர் பங்கேற்ற கூட்டத்தின் முடிவு ரத்து செய்யப்பட்டு, அந்த சுற்றறிக்கை முழுமையாகத் திரும்பப் பெறப்பட வேண்டுமென்றும் வலியுறுத்துகிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>டெல்டா விவசாயிகள் பாசனப் பணிகளை தொடங்க அறிவுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/delta-farmers-advised-to-commence-irrigation-activities</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/delta-farmers-advised-to-commence-irrigation-activities#comments</comments><guid isPermaLink="false">4720eacf-5cea-4a8d-b3a3-1bf160005fcc</guid><pubDate>Thu, 27 Aug 2026 04:33:13 +0000</pubDate><atom:updated>2026-08-27T04:33:13.793Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur dam,விவசாய பணி,டெல்டா விவசாயிகள்,Delta farmers</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/96jkqsz9/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/96jkqsz9/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>மேட்டூர் அணை திறப்பு</h2><p>கர்நாடக அணைகளிலிருந்து கிடைக்க வேண்டிய நீர் போதிய அளவில் கிடைக்காததாலும், அணையின் குறைந்தபட்ச இருப் பான 10 டி.எம்.சி.யை பராமரிக்க வேண்டியிருந்ததாலும், டெல்டா பாசனத்திற்கு தொடர்ச்சியாக நீர் வழங்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. இருப்பினும், பொதுமக்களின் அத்தியாவசிய குடிநீர் தேவைகளுக்காக மேட்டூர் அணையிலிருந்து தேவையான அளவு நீர் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.</p><p>இந்த நிலையில், மேட்டூர் அணையில் இருந்து வருகிற 1-ந் தேதி முதல் 45 நாட்களுக்கு தண்ணீரை திறந்துவிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, 1-ந் தேதி முதல்-அமைச்சர் விஜய், மேட்டூர் அணையிலிருந்து, டெல்டா பாசனத்திற்காக நீரைத் திறந்து வைக்க உள்ளார்.</p><h2>பாசனப் பணி</h2><p>இதனையொட்டி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனப் பணிகளை உடனடியாகத் தொடங்குவதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள், கிடைக்கும் நீரை சிக்கனமாகவும், திட்டமிட்டும் பயன்படுத்தி, வேளாண்மைத் துறையின் ஆலோசனையுடன் சாகுபடி பணிகளை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p>சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள், நீர்வளத்துறை மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, முறைப்பாசனத்தின் மூலம் கடைமடை வரை நீர் சென்றடைவதையும், கிடைக்கும் ஒவ்வொரு துளிநீரும் அதிகபட்ச பாசன பயனை அளிப்பதையும் 'ஒவ்வொரு துளி நீரிலும் அதிக மகசூல்' கிடைப்பதையும் உறுதிசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&apos;இன்றைய முதல்வர், நாளைய பிரதமர் விஜய்&apos; தூத்துக்குடியில் த.வெ.க. போஸ்டரால் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-chief-minister-tomorrows-prime-minister-vijay-tv-poster-creates-stir-in-thoothukudi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-chief-minister-tomorrows-prime-minister-vijay-tv-poster-creates-stir-in-thoothukudi#comments</comments><guid isPermaLink="false">d63eca3f-5e9a-4a4f-8da0-d7e4da613d67</guid><pubDate>Thu, 27 Aug 2026 03:50:07 +0000</pubDate><atom:updated>2026-08-27T03:50:07.921Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,த.வெ.க.,Thoothukudi,தூத்துக்குடி,T.V.K.,போஸ்டர்,prime minister,பிரதமர்,பரபரப்பு,Poster,sensation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/lujeuydk/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4.%E0%AE%B5%E0%AF%86.%E0%AE%95.-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூத்துக்குடியில் த.வெ.க. போஸ்டரால் பரபரப்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/lujeuydk/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4.%E0%AE%B5%E0%AF%86.%E0%AE%95.-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>'இன்றைய முதல்வர், நாளைய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D">பிரதமர்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">விஜய்</a>' என்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a>யில் ஒட்டப்பட்டுள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95">த.வெ.க.</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">போஸ்டரால் பரபரப்பு</a> ஏற்பட்டுள்ளது.</p><h2>அடுத்த பிரதமர் விஜய்</h2><p>த.வெ.க. வெற்றிபெற்று ஆட்சி அமைத்த பின்னர் பல்வேறு கட்சிகளில் இருந்தும் முக்கிய பிரபலங்கள் மற்றும் பலர் த.வெ.க.வில் இணைந்து வருகிறார்கள். இதற்கிடையே த.வெ.க.வினர் சமீபகாலமாக அடுத்த பிரதமர் விஜய் என்று கூறி வருகின்றனர். </p><h2>காங்கிரசார் விமர்சனம்</h2><p>இது த.வெ.க.வுடன் கூட்டணியில் உள்ள காங்கிரசாருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக தெரிகிறது. இதனை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் த.வெ.க.வினர் ரசிகர் மன்ற மனநிலையில் இருப்பதாக விமர்சித்துள்ளார். மேலும் ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று உறுதியாக கூறி உள்ளார்.</p><h2>த.வெ.க. போஸ்டரால் பரபரப்பு</h2><p>இந்த நிலையில் தூத்துக்குடி மாநகரம் முழுவதும் முதல்-அமைச்சர் விஜய்யை வாழ்த்தி, அ.தி.மு.க.வில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்த சுதாகர் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. அந்த போஸ்டரில், 'இன்றைய முதல்வர், நாளைய பிரதமர் விஜய்' என்றும், தூத்துக்குடி மத்திய மாவட்ட த.வெ.க. என்றும் எழுதப்பட்டு உள்ளது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>கள ஆய்வு இல்லாமல் நாளை முதல் வீடுகளுக்கு புதிய மின் இணைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-electricity-connections-for-homes-starting-tomorrow-without-on-site-inspection</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-electricity-connections-for-homes-starting-tomorrow-without-on-site-inspection#comments</comments><guid isPermaLink="false">ce67008c-2fa9-4d0c-a8eb-c118b7556813</guid><pubDate>Thu, 27 Aug 2026 03:06:20 +0000</pubDate><atom:updated>2026-08-27T03:06:20.107Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Electricity Board,மின்சார வாரியம்,மின் இணைப்பு,Electricity connection</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/hs9hbyq5/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/hs9hbyq5/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அனைத்து தலைமை என்ஜினீயர்கள், மேற்பார்வை என்ஜினீயர்களுக்கு தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும்போது தேவையான ஆவணங்களுடன், மின்சார இணைப்பு வழங்க வேண்டிய இடத்தின் ஜி.பி.எஸ். இருப்பிட குறியீடுகளை விண்ணப்பதாரரே பதிவு செய்ய வேண்டும். ஆவணங்களின் அச்சு நகல்களை கட்டாயமாக சமர்ப்பிக்கக் கூடாது. </p><p>விண்ணப்பதாரர் அளிக்கும் ஜி.பி.எஸ். தகவல்கள் (செயற்கைக்கோள்கள் மூலம் பூமியில் எங்கு இருக் கிறோம் என்பதைத் துல்லியமாகக் கண்டறியும் வழிகாட்டு அமைப்பு) புவியிட அமைப்பு வரைபடங்களுக்கான ஜி.ஐ.எஸ். செயலி மூலம் சரிபார்க்கப்படும். தகவல்கள் சரியாக இருந்தால் கள ஆய்வு இல்லாமல் விண்ணப்பம் அடுத்தகட்டத்துக்கு அனுப்பப்படும்.</p><p>சரிபார்ப்பில் தோல்வி ஏற்பட்டால், வழக்கமான கள ஆய்வு நடைமுறை மேற்கொள்ளப்படும். ஜி.பி.எஸ். சரிபார்ப்பு முடிந்ததும், மதிப்பீடு செய்யப்பட்டு, மின்சார இணைப்பு வழங்கும் பணியின்போது மீட்டர் பொருத்தப்படும் இடத்தின் உண்மையான ஜி.பி.எஸ். தகவலும் பதிவு செய்து சரிபார்க்கப்படும். பின்னர் மீட்டர் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு இணைப்பு வழங்கப்படும்.</p><p>விண்ணப்பத்தின் நிலை மற்றும் மாற்றங்கள் குறித்த தகவல்களும் விண்ணப்பதாரருக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல் அல்லது அறிவிப்பு மூலம் தெரிவிக்கப்படும். இந்தப் புதிய நடைமுறை நாளை (வெள்ளிக்கிழமை) முதல் இணையதளத்தில் பதிவு செய்யப்படும். இது புதிய விண்ணப்பங்களுக்கு மட்டும் பொருந்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கூடலூரில் இன்றும் நாளையும் வேலை நிறுத்தம், கடைகள் அடைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/strike-and-shop-closures-in-gudalur-today-and-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/strike-and-shop-closures-in-gudalur-today-and-tomorrow#comments</comments><guid isPermaLink="false">f5ebb1fa-2d15-4fc7-af33-ee65e7befa7c</guid><pubDate>Thu, 27 Aug 2026 02:36:33 +0000</pubDate><atom:updated>2026-08-27T02:36:33.628Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Forest Department,வனத்துறை,வேலைநிறுத்தம்,Tiger,புலி,Shops closed,Gudalur,கூடலூர்,கடைகள் அடைப்பு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/5r631ok8/koop.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/5r631ok8/koop.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கூடலூர், </p><p>கூடலூர் அருகே போக்கு காட்டும் புலியை பிடிக்க கோவை, தேனியில் இருந்து வன உயர் அடுக்குப்படையினர் வரவழைக்கப்பட்டு, தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.</p><h2>மோசமான வானிலை</h2><p>நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி லாரஸ்டன் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன், ரவிச்சந்திரன் ஆகியோரை புலி கடித்து கொன்றது. இதைத் தொடர்ந்து தமிழக தலைமை வன உயிரின காப்பாளர் ராகேஷ் குமார் டோக்ரா உத்தரவின் பேரில், கூடலூர் வன அலுவலர் தேவராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>இதற்காக 3 தெர்மல் டிரோன்கள், 130 தானியங்கி கேமராக்கள், 11 கூண்டுகளை பயன்படுத்தி புலியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும், மோசமான வானிலை காரணமாக புலியின் நடமாட்டத்தை கண்டறிய முடியாமல் வனத்துறையினர் சிரமம் அடைந்து வருகின்றனர்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/v1dq3hss/kier.jpg" /></figure><h2>போக்கு காட்டும் புலி</h2><p>இதனால் 5 நாட்கள் ஆகியும் வனத்துறையினருக்கு ஆட்கொல்லி புலி போக்கு காட்டி வருகிறது. நேற்று 6-வது நாளாக கோவையில் இருந்து வரவழைக்கப்பட்ட 12-வது ராட்சத கூண்டை வனத்துறையினர் பொருத்தினர். இதுதவிர மொத்தம் 130 தானியங்கி கேமராக்களையும் வனத்துறையினர் ஆய்வு செய்தனர். ஆனால், அதில் புலியின் நடமாட்டம் பதிவாகவில்லை. இதனால் வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர்.</p><h2>வன உயர் அடுக்குப்படையினர்</h2><p>இந்தநிலையில் ஏற்கனவே கோவை உள்பட முக்கிய இடங்களில் இருந்து கூடுதலாக வனத்துறையினர் வரவழைக்கப்பட்டு இருந்தனர். இதேபோல் தேனியில் இருந்து வனச்சரகர் தலைமையிலான வன உயர் அடுக்குபடையி னர் 10-க்கும் மேற்பட்டோர் ஓவேலிக்கு வரவழைக்கப்பட்டு, புலியை பிடிப்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து சுற்றுவட்டார பகுதிகளில் வனத்துறையினர் ரோந்து பணி மற்றும் அதிநவீன தெர்மல் டிரோன்கள் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><h2>வனத்துறையினர் தடை</h2><p>இதேபோல் புலி நடமாட்டம் மற்றும் அச்சுறுத்தல் உள்ள கிராமங்கள் அடையாளம் காணப்பட்டு, பொதுமக்கள் வெளியே நடமாட வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர். தெய்வமலை, மேட்டூர், குறிஞ்சி நகர், முல்லை நகர், காந்தி நகர், வளப்பு ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.</p><h2>வேலை நிறுத்தம்</h2><p>இந்நிலையில் கூடலூரில் இன்றும், நாளையும் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. ஓவேலி  லாரஸ்டன்  பகுதியில் 2 பேரை தாக்கிக்கொன்ற புலியை சுட்டுப்பிடிக்க வலியுறுத்தி 10 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.</p><p>முன்னதாக கோத்தகிரி தாலுகாவில் அதிகரித்து வரும் மனித-வனவிலங்கு மோதலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து அரசியல் கட்சிகள், வியாபாரிகள் சங்கங்கள் மற்றும் சமூக அமைப்புகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கோத்தகிரியில் நடைபெற்றது. </p><p>கூட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. பொறுப்பாளர் குருமூர்த்தி வரவேற்றார். கூட்டத்தில், கூடலூரில் 2 பேரை கடித்து கொன்ற புலியை பிடிக்க கோரி 48 மணி நேர வேலைநிறுத்த போராட்டம் இன்று (வியாழக்கிழமை), நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. </p><p>இதற்கு ஆதரவாகவும், கோத்தகிரி பகுதியில் மனித-வனவிலங்கு மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் நாளை கோத்தகிரி மார்க்கெட் திடலில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். வனவிலங்கு தாக்குதலால் உயிரிழந்தால் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரண தொகையை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.</p>]]></content:encoded></item><item><title>
நேபாளத்தில் பெருவெள்ளத்தால் பேரழிவு: நடிகர் சிம்பு வேதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/devastation-caused-by-massive-floods-in-nepal-actor-simbu-expresses-anguish</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/devastation-caused-by-massive-floods-in-nepal-actor-simbu-expresses-anguish#comments</comments><guid isPermaLink="false">fae090ae-635f-49e1-ad03-0e052696382d</guid><pubDate>Thu, 27 Aug 2026 02:33:52 +0000</pubDate><atom:updated>2026-08-27T02:33:52.213Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nepal,நேபாளம்,Flood,வெள்ளப்பெருக்கு,Simbu,நடிகர் சிம்பு,nepal flood,நேபாளம் வெள்ளம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/yg8f0dgb/3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/yg8f0dgb/3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நேபாளம், ரசுவா மாவட்டத்தில் உள்ள போடேகோஷி ஆற்றில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கில் இதுவரை 157 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பேரழிவைக் காண்பது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது என நடிகர் <a href="https://www.dailythanthi.com/topic/simbu">சிம்பு</a> பதிவிட்டுள்ளார். </p> <p>நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் வடக்கே ரசுவா மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள ரசுவாகடி பகுதியில் லெண்டே கோலா உள்ளிட்ட ஆறுகள் ஒன்றிணைந்து போடேகோஷி ஆறாக பாய்கின்றன.</p><h2>திடீர் வெள்ளப்பெருக்கு</h2><p>இந்த ஆற்றில் நேற்று காலை 8.30 மணியளவில் திடீரென பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ரசுவா மற்றும் அருகில் உள்ள நுவாகோட் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆற்றின் இருபுறங்களிலும் இருந்த வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதுவரை 157 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 93 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p>  <h2>தமிழகத்தை சேர்ந்த 37 பேர் மாயம்</h2><p>நேபாள சுற்றுலா வாரிய தகவலின்படி, வெள்ளத்துக்கு பிறகு 750 சுற்றுலா பயணிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை. இவர்களில் 133 பேர் இந்தியர்கள். தமிழகத்தை சேர்ந்த 57 பேரில் 20 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 37 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. வெள்ளத்தில் சிக்கிய பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் மற்றும் பாலங்கள் சேதம் அடைந்ததால், பல இடங்களில் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p>  <h2>நடிகர் சிம்பு வேதனை</h2><p>இந்த நிலையில், நடிகர் சிம்பு நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவால் மனவேதனை அடைவதாக பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பேரழிவைக் காண்பது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்கள், பாதிக்கப்பட்ட அனைவரும் மற்றும் இன்னும் மீட்கப்படக் காத்திருப்பவர்கள் ஆகியோருக்காக நான் பிரார்த்திக்கிறேன். அவர்களின் பாதுகாப்பு மற்றும் மனவலிமைக்காகப் பிரார்த்திக்கிறேன்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>நடிகை கவுதமியின் நிலம் விற்பனையில் மோசடி; 4 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/actress-gautamis-land-sale-scam-4-people-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/actress-gautamis-land-sale-scam-4-people-arrested#comments</comments><guid isPermaLink="false">1ff5d574-ed45-47c5-9273-5c2c4933874f</guid><pubDate>Thu, 27 Aug 2026 02:29:40 +0000</pubDate><atom:updated>2026-08-27T02:29:40.683Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Enforcement Directorate,Chennai,அமலாக்கத்துறை,சென்னை,4 பேர் கைது,4 people arrested,actress Gautami,நடிகை கவுதமி,நண்பர்,friend,Land scam case,நிலம் மோசடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/3js0m2tj/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நடிகை கவுதமியின் நிலம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அழகப்பன்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/3js0m2tj/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF">நடிகை கவுதமி</a>க்கு சொந்தமான 26 கோடி ரூபாய் மதிப்புள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF">நிலத்தை விற்று மோசடி</a> செய்தது தொடர்பாக, அவரது நண்பர் அழகப்பன் (வயது 66) மற்றும் அவரது குடும்பத்தினர் என 4 பேரை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">அமலாக்கத்துறை</a> அதிகாரிகள் கைது செய்தனர். </p><p>சென்னை போலீசில் நடிகை கவுதமி(58) கடந்த 2023-ம் ஆண்டு புகார் அளித்தார். அந்த புகார் விவரம் பின்வருமாறு: </p><p>சிவகங்கை மாவட்டம், கோட்டையூரைச் சேர்ந்த அழகப்பன் என்பவர், அவரது குடும்பத்தினருடன் சென்னை வேளச்சேரியில் வசித்து வருகிறார். எனக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் உள்ளது. புற்றுநோய்க்கு சிகிச்சை பெறவும், மகளின் எதிர்கால படிப்புக்காகவும் அந்த நிலத்தை விற்க முடிவு செய்தேன். அது பற்றி, என் குடும்ப நண்பரான அழகப்பனிடம் தெரிவித்தேன். அவர் தன் பெயருக்கு பொது அதிகார பத்திரம் பெற்றார். </p><h2>பணம் மோசடி</h2><p>ஆனால் 6 கோடி ரூபாய்க்கு தான் விற்க முடிந்தது என கூறி பண மோசடி செய்துள்ளார். இதற்கு அவரின் மனைவி, மகன், மருமகள் உள்ளிட்டோர் உடந்தையாக இருந்துள்ளனர். அழகப்பன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. </p><h2>4 பேர் கைது; ஜாமினில் வெளியே வந்தனர்</h2><p>இதுகுறித்து சென்னை போலீசின் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் கேரளம் மாநிலம், திருச்சூரில் தலைமறைவாக இருந்த அழகப்பன்(66), அவரது மனைவி நாச்சாள்(60), மகன் சிவா(35), மருமகள் ஆர்த்தி(33) ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். பின்னர் அவர்கள் ஜாமினில் வெளியே வந்தனர். </p><h2>அமலாக்கத்துறை வழக்குப்பதிவு</h2><p>இந்த நிலையில், இந்த மோசடி தொடர்பாக சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். கடந்த 17-ம்தேதி அழகப்பனுக்கு சொந்தமான 6 இடங்களில் சோதனை நடத்தினர். அங்கு கைப்பற்றிய ஆவணங்கள் மற்றும் நிதி பரிவர்த்தனைகள் குறித்து விளக்கம் பெற, நடிகை கவுதமிக்கு 'சம்மன்' அனுப்பினர். அவரும், சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். </p><h2>4 பேர் கைது; 3 பேர் சிறையில் அடைப்பு</h2><p>இதையடுத்து அழகப்பன், நாச்சாள், சிவா மற்றும் ஆர்த்தி ஆகியோரை நேற்று முன்தினம் அமலாக்கத்துறையினர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். கைக்குழந்தையுடன் இருப்பதால், நீதிமன்றத்தால் ஆர்த்தி ஜாமினில் விடப்பட்டார். மற்ற 3 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>புதிய கியாஸ் இணைப்பு வழங்கப்படாததால் தவிக்கும் இளம் தம்பதிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-couple-in-distress-due-to-inability-to-get-a-new-gas-connection</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-couple-in-distress-due-to-inability-to-get-a-new-gas-connection#comments</comments><guid isPermaLink="false">90a6f935-8b3e-4a4d-85e6-56102bc5169b</guid><pubDate>Thu, 27 Aug 2026 02:23:45 +0000</pubDate><atom:updated>2026-08-27T02:23:45.428Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,America,ஈரான்,Iran,Gas Cylinder,young couple,கியாஸ் சிலிண்டர்,Gas Pipeline,கியாஸ் இணைப்பு,இளம் தம்பதிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/xkhw2nb6/CHENNAI-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/xkhw2nb6/CHENNAI-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>புதிய இணைப்பு</h2><p>அமெரிக்க-ஈரான் போர் காரணமாக இந்தியாவுக்கு பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி பாதிக்கப்பட்டது. இதனால் பெட் ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது. கியாஸ் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் மத்திய அரசு புதிய சமையல் கியாஸ் இணைப்புகள் வழங்குவதை தடை செய்தது.</p><p>இதுபோல் ஏற்கனவே கியாஸ் இணைப்பு பெற்றவர்களுக்கும் முன்பதிவு செய்து சிலிண்டர் பெற வழக்கத்தை விட நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியது இருந்தது. அதற்கு பிறகு ஓரளவு நிலைமை சீராகி, தற்போது கியாஸ் சிலிண்டர்கள் உடனுக்குடன் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.</p><h2>இளம் தம்பதிகள்</h2><p>அதே நேரத்தில் இன்னும் புதிய இணைப்புகள் வழங்குவதற்கான தடை நீக்கப்படாமல் உள்ளது. இதனால் திருமணம் ஆகி தனிக்குடித்தனம் செல்லும் இளம் தம்பதிகள் தவித்து வருகிறார்கள். இதன் காரணமாக சமையல் செய்வதற்காக மானிய விலை கியாஸ் சிலிண்டர் கிடைக்காமல், வணிக சிலிண்டர்களை கூடுதல் விலைக்கு வாங்குவதால் குறைந்த வருமானம் கொண்ட தம்பதிகள் அவதி அடைந்து வருகிறார் கள். இதுமட்டுமின்றி, கியாஸ் சிலிண்டர் இணைப்பு இல்லாததால் புதிய ரேஷன் கார்டு பெறவும் அவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.</p><h2>இணைப்பு ரசீது கட்டாயம்</h2><p><strong>இதுகுறித்து புதிய கியாஸ் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ள ஒருவர் கூறியதாவது:-</strong></p><p>நான் திருமணத்துக்கு பின்னர் பெற்றோருடன் வசித்து வந்தேன். தற்போது பணி காரணமாக தனிக்குடித்தனம் வந்துள் ளேன். தற்போது எனது வீட்டுக்கு புதிய கியாஸ் இணைப் புக்கு விண்ணப்பிக்க சென்றபோது தற்காலிகமாக புதிய இணைப்பு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக கியாஸ் ஏஜென் சிகளில் தெரிவித்தனர்.</p><p>இதனால் வீட்டில் சமையல் பணி கடும் சிரமமாக உள்ளது. இந்தநிலையில் புதிய ரேஷன் கார் டுக்கு விண்ணப்பித்தபோது, அதற்கு கியாஸ் இணைப்பு ரசீது கட்டாயம் என்று கூறுகிறார்கள். இப்போது கியாஸ் இணைப் பும் இல்லாமல் புதிய ரேஷன் கார்டுக்கும் விண்ணப்பிக்க முடியாமல் சிரமப்படுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.</p><h2>வழங்க முடியாது</h2><p>இதுகுறித்து ஈரோட்டில் உள்ள கியாஸ் ஏஜென்சீஸ் மேலாளர் ஒருவரிடம் கேட்டபோது, 'சுமார் 6 மாதங்களுக்கு மேலாக புதிய கியாஸ் இணைப்பு வழங்கப்படவில்லை. புதிய இணைப்பு வழங்குவது தொடர்பாக மறு உத்தரவு வரும் வரை வழங்க முடியாது' என்றார். இதுபோல் ரேஷன் கார்டு விண்ணப்பத்தில், மனு தாரர்கள் தனி வீட்டில் வசிக்கிறார்கள் என்பதற்கு அத்தாட்சியாக கியாஸ் இணைப்பு ரசீது கண்டிப்பாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.</p><p>அவ்வாறு பதிவேற்றம் செய்யவில்லை என்றால் விண்ணப்பம் தானாக நிராகரிக்கப்பட்டு விடும் என்று வட்ட வழங்கல் துறையினர் தெரிவித்தனர். இதுதொடர்பாக அரசும், அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுத்து மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என் பதே இளம் தம்பதிகளின் வேண்டுகோளாக உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஊராட்சி தலைவர் பதவிக்கு ரூ.2 கோடி கேட்பதாக புகார்: த.வெ.க. நிர்வாகிகளின் ஆடியோ வைரல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/complaint-of-asking-rs-2-crore-for-the-post-of-panchayat-president-audio-of-trc-executives-goes-viral</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/complaint-of-asking-rs-2-crore-for-the-post-of-panchayat-president-audio-of-trc-executives-goes-viral#comments</comments><guid isPermaLink="false">36981c70-1b54-4c54-8b3b-8648aac6f2b9</guid><pubDate>Thu, 27 Aug 2026 02:12:37 +0000</pubDate><atom:updated>2026-08-27T02:12:37.263Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,த.வெ.க,Complaint,பல்லடம்,Panchayat president,நிர்வாகிகள்,ஆடியோ,audio,ஊராட்சி தலைவர் பதவி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/czeubxf9/221.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ த.வெ.க. நிர்வாகிகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/czeubxf9/221.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பல்லடம்,</p><p>ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட ரூ.2 கோடி வரை செலவாகும் என தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பேசியதாக கூறப்படும் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>ஊராட்சி தலைவர் பதவி</h2><p>திருப்பூர் மேற்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் சங்கர் (45), பல்லடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியம் (35) ஆகியோர், கணபதிபாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுவது தொடர்பாக பேசியதாக கூறப்படும் அந்த ஆடியோவில், தேர்தலில் போட்டியிட ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரை செலவாகும் என சங்கர் கூறுவது இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.</p><p>மேலும், பல்லடம் எம்.எல்.ஏ. ராம்குமாரை பாலசுப்பிரமணியம் சந்திக்க சென்றது தொடர்பான தகவல்களும் அந்த உரையாடலில் இடம்பெற்றுள்ளது.</p><h2>புகார்</h2><p>இதற்கிடையே, பாலசுப்பிரமணியம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்துள்ளார். அதில், கணபதிபாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்ததாகவும், இதுதொடர்பாக சங்கரிடம் பேசியபோது, ரூ.2 கோடி வேண்டும் என அவர் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த உரையாடலை யாரோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளதாகவும், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இதுகுறித்து சங்கர் கூறுகையில், மற்ற கட்சியினர் தேர்தலில் ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரை செலவழிப்பதாகத்தான் தான் பேசியதாகவும், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B">ஆடியோ</a> பரப்பப்பட்டது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>பெண் போலீசை வழிமறித்து காதல் தொல்லை: கணினி ஆபரேட்டர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/computer-operator-arrested-for-harassing-female-police-officer-by-harassing-her</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/computer-operator-arrested-for-harassing-female-police-officer-by-harassing-her#comments</comments><guid isPermaLink="false">31f65646-01ee-487d-9ecf-ae4eaa51195b</guid><pubDate>Thu, 27 Aug 2026 01:53:48 +0000</pubDate><atom:updated>2026-08-27T01:53:48.028Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பெண் போலீஸ்,கைது,நாமக்கல்,arrest,female police,தொல்லை,harassing</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/273i9dls/220.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/273i9dls/220.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பள்ளிப்பட்டு,</p><p>நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண், திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் புகார்கள் மற்றும் முதல் தகவல் அறிக்கைகளை கணினியில் பதிவு செய்யும் வேலை செய்து வருகிறார். </p><h2>காதல் தொல்லை</h2><p>இந்நிலையில், பள்ளிப்பட்டு போலீஸ் நிலையத்தில் கணினி ஆப ரேட்டராக பணிபுரியும் திருத்தணியை சேர்ந்த ராம்குமார் (32) என்பவர். அந்த பெண்ணுக்கு தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. தனக்கு விருப்பம் இல்லை என பெண் போலீஸ் தெரிவித்தும், ராம்குமார் தொடர்ந்து செல்போனில் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.</p><p>இந்நிலையில், நேற்று முன்தினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காக அந்த பெண் தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். இதனை அறிந்த ராம்குமார், தனது காரில் அவரை பின்தொடர்ந்து சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அந்த பெண்ணை வழிமறித்து தன்னை காதலிக்க வேண்டும் என வற்புறுத்தியதாக தெரிகிறது. அவரிடமிருந்து தப்பிய பெண் போலீஸ், தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரணீத்திடம் கண்ணீர் மல்க புகார் அளித்தார். </p><h2>கைது</h2><p>இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் பள்ளிப்பட்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a> ராம்குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். போலீஸ் துறையில் பணியாற்றிய போது ராம்குமாரின் தந்தை உயிரிழந்ததை தொடர்ந்து, கருணை அடிப்படையில் ராம்குமாருக்கு கணினி ஆபரேட்டர் பணி கிடைத்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>மரவள்ளி கிழங்கு விலை &apos;கிடுகிடு&apos; உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tapioca-cassava-prices-skyrocket</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tapioca-cassava-prices-skyrocket#comments</comments><guid isPermaLink="false">7db429a0-78ec-4057-8415-40431e693a63</guid><pubDate>Thu, 27 Aug 2026 01:44:38 +0000</pubDate><atom:updated>2026-08-27T01:44:38.388Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Erode,ஈரோடு,மரவள்ளி கிழங்கு,Cassava,Tapioca</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/gyi6s4hh/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/gyi6s4hh/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>ஈரோடு உட்பட பெரும்பாலான மாவட்டங்களில், டிசம்பர் முதல், ஏப்ரல் 15-ம் தேதி வரை மரவள்ளி கிழங்கு சீசன் காலம். மானாவாரி சாகுபடியில் நவம்பரில் சீசன் தொடங்கும். கடந்த ஆண்டு குறைந்த மழை, நடப்பாண்டு மழை, வாய்க்கால் நீர் இல்லாததால், மரவள்ளி கிழங்கு அறுவடை, சாகுபடி பரப்பு குறைந்துள்ளது.</p><p>தற்போது சீசன் இல்லை என்றபோதும், உணவு, சிப்ஸ் போன்ற தயாரிப்பு, ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவு உற்பத்திக்கு வாங்கி செல்வர். உற்பத்தி மிகவும் குறைந்ததால் ஒரு மாதத்துக்குள் டன், 4,000 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.</p><p><strong>இதுகுறித்து தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் கூறியதாவது:-</strong></p><p>மரவள்ளி கிழங்கு சேகோ ஆலைகளுக்கு டன், 15,000 ரூபாய்க்கு அனுப்பப்படுகிறது. கடந்த மாதம், 11,000 ரூபாய்க்கு விலை போன நிலையில் தற்போது, 4,000 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. ஓரளவு பருவமழை கை கொடுத்து, வாய்க்காலில் தண்ணீர் வரத்தானால் விவசாயிகளுக்கு கூடுதலாக விளைச்சல் இருந்து அதிக லாபம் கிடைத்திருக்கும்.</p><p>விலை இருந்தும் விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் இந்த விலை உயர் வால், 90 கிலோ ஸ்டார்ச் மாவு மூட்டை, ரூ.4,000-ல் இருந்து, ரூ. ஆகவும், ஜவ்வரிசி மூட்டை, 5,500 2, 6,300 ரூபாயாகவும் விலை உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தேர்தல் விழிப்புணர்வு மாநாடு: இன்று சென்னை வருகிறார் தலைமை தேர்தல் கமிஷனர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/election-awareness-conference-chief-election-commissioner-arrives-in-chennai-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/election-awareness-conference-chief-election-commissioner-arrives-in-chennai-today#comments</comments><guid isPermaLink="false">9a69aeac-4edf-4ea4-ac71-935f26a5c926</guid><pubDate>Thu, 27 Aug 2026 01:39:55 +0000</pubDate><atom:updated>2026-08-27T01:39:55.567Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,தேர்தல் ஆணையம்,தமிழகம்,Election Commision,மாணவர்கள்,students,தலைமை தேர்தல் ஆணையர்,Chief Election Commissioner of India,தேர்தல் அதிகாரிகள்,Election Officers,தலைமை தேர்தல் கமிஷனர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/adz7fpe8/kumar.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/adz7fpe8/kumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/chennai">சென்னையில்</a> இன்று நடைபெறும் மண்டல மாநாட்டில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மாணவர்களிடையே உரையாற்றவும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் (BLOs) கலந்துரையாடவும் உள்ளார்.</p><h2>மண்டல மாநாடு</h2><p>இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று (27-ம் தேதி) <a href="https://www.dailythanthi.com/topic/chennai">சென்னைக்கு</a> வருகை தந்து, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ள ‘தேர்தல் விழிப்புணர்வு மன்றங்கள் மற்றும் ECINET’ குறித்த மண்டல மாநாட்டிற்கு தலைமை வகித்து, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் நேரடி கலந்துரையாடல் நடத்த உள்ளார்.</p><h2>டிஜிட்டல் தளங்கள்</h2><p>இந்திய தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியுடன் ஒருங்கிணைந்து ‘ஜனநாயகத்தை கற்போம், ஜனநாயகத்தை வழிநடத்துவோம்’ என்ற கருப்பொருளின் கீழ் நடத்தப்படும் இந்த முன்னெடுப்பானது, வாக்காளர் விழிப்புணர்வை வலுப்படுத்துதல், வருங்கால வாக்காளர்களிடையே அரசியலமைப்பு விழிப்புணர்வை வளர்த்தல் மற்றும் தேர்தல் பணிகளுக்கு டிஜிட்டல் தளங்களை பயன்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டுள்ளது.</p><h2>300 பள்ளிகள், 75 கல்லூரிகள்</h2><p>இன்று (வியாழக் கிழமை) முழுவதும் நடைபெறும் இந்நிகழ்வில் துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு, தலைமை இயக்குநர் (ஊடகம்) ஆஷிஷ் கோயல் மற்றும் தலைமை இயக்குநர் (தகவல் தொழில்நுட்பம்) சீமா கண்ணா உள்ளிட்ட இந்திய தேர்தல் ஆணையத்தின் உயர்மட்டக் குழுவினர் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 300 பள்ளிகள், 75 கல்லூரிகள் மற்றும் 25 பல்கலைக்கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் என சுமார் 1,000 பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.</p><h2>500 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்</h2><p>மேலும் துணை மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் துறைசார் மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலர்களும் இதில் பங்கேற்கிறார்கள். இன்று காலை அமர்வில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சுமார் 500 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் கலந்துரையாடி, கள அளவிலான வாக்காளர் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் களப்பணி சார்ந்த கருத்துக்களை கேட்டறிவார்</p><h2>கேள்வி-பதில் அமர்வு</h2><p>இன்று மதியம், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் ஜனநாயக பங்களிப்பு மற்றும் தேர்தல் விழிப்புணர்வு குறித்து உரையாற்றி, அதைத் தொடர்ந்து நடைபெறும் கேள்வி-பதில் அமர்வில் பங்கேற்பார். மேலும், இந்த மாநாட்டில் வாக்காளர் பதிவு, வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைமுறைகளின் நேரடி செயல்விளக்கங்கள், கலந்துரையாடல் கண்காட்சி பலகைகள், தேர்தல் வினாடி வினாக்கள் மற்றும் ELC 2.0, ஒருங்கிணைந்த ECINET செயலி போன்ற தொழில்நுட்பத் தளங்களின் பயன்பாடுகளும் இடம்பெறும்.</p>]]></content:encoded></item><item><title>பரந்தூரில் நிலத்தின் விலை 50 சதவீதம் வரை சரிந்தது; நிலைமை மாறியது</title><link>https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/land-prices-in-paranthur-fell-by-up-to-50-percent-the-situation-changed</link><comments>https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/land-prices-in-paranthur-fell-by-up-to-50-percent-the-situation-changed#comments</comments><guid isPermaLink="false">f2e69d6a-d8cf-427d-a8f5-026e5a3ad685</guid><pubDate>Thu, 27 Aug 2026 01:31:25 +0000</pubDate><atom:updated>2026-08-27T01:31:25.383Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Announcement,அறிவிப்பு,நிலம்,land,Paranthur Airport,விலை சரிவு,பரந்தூர் விமானநிலையம்,price drop,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/h6lkd0ci/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-50-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பரந்தூரில் நிலத்தின் விலை 50 சதவீதம் வரை சரிந்தது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/h6lkd0ci/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-50-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சிறப்புக் கட்டுரைகள் (Sirappukatturaigal)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">விமான நிலைய</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">திட்டம்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">ரத்து</a> செய்யப்பட்டதால் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை </a><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">பரந்தூரில்</a> நிலத்தின் விலை 50 சதவீதம் வரை சரிந்து தற்போது  நிலைமை மாறியது.</p><h2>நிலத்தின் விலை 200 சதவீதம் உயர்ந்தது</h2><p>சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சீபுரம் மாவட்டம், பரந்தூரில் அமைக்கப்படும் என்று கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு முன்பு சாதாரண விவசாயப் பகுதியாக இருந்த பரந்தூர் மற்றும் சுற்றுவட்டார நிலங்கள் மீது பலரின் கவனம் திரும்பியது. இதனால் ஏக்கருக்கு சுமார் ரூ.6 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை இருந்த விவசாய நிலங்களின் விலை ரூ.18 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை உயர்ந்தது. சில பகுதிகளில் நிலங்களின் மதிப்பு 100 சதவீதம் முதல் 200 சதவீதம் வரை அதிகரித்தது. </p><h2>நிலம் வாங்கும் ஆர்வம் அதிகரிப்பு</h2><p>குறிப்பாக விமான நிலையத்தை ஒட்டிய பகுதிகளில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D">நிலம்</a> வாங்குவதற்கான ஆர்வம் அதிகரித்ததால், கடந்த ஆண்டு சில பகுதிகளில் சாதாரண லே-அவுட் பிளாட்டுகளின் விலை ஒரு சதுர அடிக்கு ரூ.1,600 முதல் ரூ.1,850 வரை உயர்ந்தது. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய சிறப்பு வாய்ந்த பகுதிகளில் ஒரு சதுர அடி ரூ.2,200 முதல் ரூ.2,999 வரை விலை உயர்ந்தது.</p><h2>நிலைமை மாறியது</h2><p>ஆனால், கடந்த மே மாதம் விஜய் தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற பிறகு நிலைமை மாறியது. பரந்தூரில்தான் சென்னையின் 2-வது விமான நிலையம் அமைக்கப்படுமா? அல்லது மாற்று இடம் தேர்வு செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்ததால், அதுவரை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலங்களின் விலை உயர்வு அப்படியே தேக்கமடைந்தது. அதாவது, 2022-ம் ஆண்டு விமான நிலைய அறிவிப்பு வெளியானது முதல் வேகமாக உயர்ந்து வந்த நிலங்களின் விலை, புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு உயர்வைத் தொடர முடியாமல் நின்றது.</p><h2>தமிழக முதல்-அமைச்சர் அறிவிப்பு</h2><p>இந்த நிலையில், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிடுவதாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய் </a>சட்டசபையில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">அறிவித்தார்</a>. இந்த அறிவிப்பு பரந்தூர் நிலச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அங்கு முதலீடு செய்து நிலங்களை வாங்கியவர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். சில நிறுவனங்கள் லே-அவுட் அமைக்கும் திட்டத்துடன் பல ஏக்கர் நிலங்களை வாங்கிய நிலையில், இனி அந்த நிலங்களை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். </p><h2>நிலங்களின் மதிப்பு கடும் வீழ்ச்சி</h2><p>இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு நில புரமோட்டர் கூறுகையில், "வாங்கிய விலைக்காவது நிலத்தை விற்றுவிடலாம் என்று நினைத்தாலும், இப்போது வாங்குவதற்கு ஆள் இல்லை. விமான நிலையம் வரும் என்ற எதிர்பார்ப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு பல மடங்கு உயர்ந்திருந்த நிலங்களின் மதிப்பு தற்போது கடுமையாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">வீழ்ச்சி</a> அடைந்துள்ளது" என்றார். </p><h2>நிலங்களின் விலை 50 சதவீதம் வரை சரிந்தது</h2><p>மேலும், ஒரு நிலத்தரகர் கூறுகையில், "பரந்தூரில் கடந்த ஆண்டு ஒரு சதுர அடிக்கு ரூ.1,400 முதல் ரூ.1,650 வரை இருந்த நிலங்களின் விலை தற்போது ரூ.600 முதல் ரூ.900 வரை குறைந்துள்ளது. ரூ.1,600 முதல் ரூ.1,850 வரை இருந்த சாதாரண லே-அவுட் பிளாட்டுகளின் விலை ரூ.1,000 முதல் ரூ.1,200 வரை சரிந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய சிறப்பு வாய்ந்த பிளாட்டுகளின் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88">விலை</a> ரூ.2,999-ல் இருந்து ரூ.1,800 வரை வந்துள்ளது. மொத்தத்தில், விமான நிலையத் திட்டத்தை மட்டுமே நம்பி உயர்ந்திருந்த நிலங்களின் மதிப்பு சுமார் 40 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை சரிவைச் சந்தித்துள்ளது" என்றார். </p><h2>நடுத்தர மக்கள் பாதிப்பு</h2><p>முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் என்றாலும், ஏற்கனவே அங்கு சிறிய பிளாட்டுகளை வாங்கிய நடுத்தர மக்களும் தற்போது பாதிப்பை சந்தித்து இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>சர்க்கரை விலை உயர்வால் திருநெல்வேலி அல்வா உள்ளிட்ட இனிப்புகள் விலை அதிகரிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirunelveli-halwa-including-sweets-increases-in-price-due-to-sugar-price-hike</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirunelveli-halwa-including-sweets-increases-in-price-due-to-sugar-price-hike#comments</comments><guid isPermaLink="false">ef7cd829-278c-473d-a5eb-24fde6c017b7</guid><pubDate>Thu, 27 Aug 2026 01:22:25 +0000</pubDate><atom:updated>2026-08-27T01:22:25.633Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Increase,அல்வா,Sugar,விலை அதிகரிப்பு,சீனி,Sweet,Halwa</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/v12gjz3p/219.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அல்வா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/v12gjz3p/219.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>சர்க்கரை விலை அதிகரிப்பால் திருநெல்வேலி அல்வா விலை உயர்த்தப்பட்டு, ஒரு கிலோ ரூ.340-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><h2>திருநெல்வேலி அல்வா</h2><p>அன்றாட வாழ்க்கையில் c (சீனி) அத்தியாவசியமாகி விட்டது. பல்வேறு இனிப்புகள் செய்யவும், குறிப்பாக தித்திக்கும் திருநெல்வேலி அல்வா தயாரிப்பதற்கும் சர்க்கரை முக்கிய பங்கு வகிக்கிறது. திருநெல்வேலி அல்வாவின் ருசிக்கு தாமிரபரணி தண்ணீர் பக்கபலமாக இருந்தாலும், சர்க்கரையும் அத்தியாவசிய தேவையாக உள்ளது.</p><p>சர்க்கரையின் தட்டுப்பாடு மற்றும் நுகர்வு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ சீனி ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் படிப்படியாக விலை உயர்ந்து நேற்று ரூ.75-க்கு விற்பனை ஆனது.</p><h2>விலை </h2><p>இதனால் திருநெல்வேலி அல்வா உள்ளிட்ட பல்வேறு இனிப்புகளின் விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. நெல்லை சந்திப்பில் உள்ள பிரபல மிட்டாய் கடையில் ஒரு கிலோ அல்வா ரூ.320-ல் இருந்து ரூ.20 விலை உயர்த்தப்பட்டு ரூ.340-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர மற்ற இனிப்பு வகைகள், மிக்சர். காரசேவு போன்ற கார வகைகளும் ரூ.20 உயர்த்தப்பட்டு ரூ.340-க்கு விற்கப்படுகிறது. இதேபோல் ஒரு கிலோ சிப்ஸ் ரூ.20 உயர்த்தப்பட்டு ரூ.380 ஆகவும், பால்கோவா ரூ.500, பால் அல்வா ரூ.500, ஸ்பெஷல் மைசூர் பாகு ரூ.540 ஆகவும் விற்கப்படுகிறது.</p><p>நெல்லை சந்திப்பில் உள்ள மற்றொரு பிரபல கடையில் ஏற்கனவே ஒரு கிலோ அல்வா ரூ.340-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தவிர நெல்லை டவுன் கீழ ரதவீதியில் உள்ள இருட்டுக்கடை அல்வா ரூ.440-க்கும். அதையொட்டி கீழ ரதவீதியில் அமைந்துள்ள மிட்டாய் கடைகளில் அல்வா ரூ.360-க்கும். கல்லத்தி முடுக்கில் உள்ள 2 கடைகளில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE">அல்வா</a> ரூ.360-க்கும் தற்போது விற்பனை செய்யப்படுகிறது.</p><p>இதன் விலையை கிலோவுக்கு ரூ.40 வரை உயர்த்த பரிசீலனை செய்து வருவதாகவும், அது தொடர்பாக ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்படாவிட்டால் போராட்டம்: தொழிலாளர் சங்கம் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/protest-if-auto-rickshaw-meter-fares-are-not-hiked-workers-union-announces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/protest-if-auto-rickshaw-meter-fares-are-not-hiked-workers-union-announces#comments</comments><guid isPermaLink="false">a43d6e15-39aa-45ab-88a1-fbe33c829408</guid><pubDate>Thu, 27 Aug 2026 01:17:06 +0000</pubDate><atom:updated>2026-08-27T01:17:06.026Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,தமிழகம்,protest,ஆட்டோ கட்டணம்,போராட்டம் அறிவிப்பு,தொழிலாளர் சங்கம்,Auto fare,workers union</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/dqm3khsg/kove.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/dqm3khsg/kove.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்படாவிட்டால் வலுவான போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று ஆட்டோ - டாக்சி தொழிலாளர் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.</p><h2>கடந்த 13 ஆண்டுகளாக...</h2><p>ஆட்டோ - டாக்சி தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணி யம் <a href="https://www.dailythanthi.com/topic/chennai">சென்னையில்</a> நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-</p><p>தமிழ்நாட்டில் கடந்த 13 ஆண்டுகளாக ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்படவில்லை. 2022-ம் ஆண்டு ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பின்படி, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மீட்டர் கட்டணத்தை மாற்றியமைத்து, அதை மக்களுக்கும் ஓட்டுனர்களுக்கும் பாதிப்பு இல்லாத வகையில் தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><h2>1.5 கிலோ மீட்டருக்கு ரூ.60</h2><p>போக்குவரத்து அமைச்சர் தலைமையில் கடந்த 9-ந்தேதி நடைபெற்ற கூட்டத்தில், முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. நாங்கள் 1.5 கிலோ மீட்டருக்கு ரூ.60-ம், அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.30-ம், காத்திருப்பு கட்டணமாக ஒரு நிமிடத்துக்கு ஒரு ரூபாயும், இரவு நேர கட்டணமாக 1½ மடங்கும் நிர்ணயிக்க வேண்டும் என்று விரிவான மனு அளித்துள்ளோம்.</p><h2>அறிவிப்பு வெளியாகும்</h2><p>இந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ.க்களை சந்தித்து மனு கொடுத்துள்ளோம். நாளை 27-ந்தேதி (இன்று) போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் இது தொடர்பாக கூட்டம் நடைபெற உள்ளது. அதில் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம்.</p><h2>வலுவான போராட்டம்</h2><p>ஒருவேளை அறிவிப்பு வெளியாகவில்லை என்றால், வருகிற 28-ந்தேதி நடை பெறவுள்ள போக்குவரத்து மானியக் கோரிக்கையின் போது முதல்-அமைச்சர் இந்த கட்டண உயர்வை அறிவிப்பார் என்று நம்புகிறோம். அவ்வாறு அறிவிக்கப்படாவிட்டால், 29-ந்தேதி அனைத்து சங்கங்களும் கூடி ஆலோசித்து வலுவான போராட்டத்தை முன்னெடுப்போம்.</p><p>இவ்வாறு அவர்கள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் வினா-விடை நேரம் தொடங்கியது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/question-hour-begins-in-the-assembly-today-debate-on-demands-for-grants-for-two-departments</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/question-hour-begins-in-the-assembly-today-debate-on-demands-for-grants-for-two-departments#comments</comments><guid isPermaLink="false">42fe0954-3438-4677-a1fa-cc21a795c1ef</guid><pubDate>Thu, 27 Aug 2026 01:03:31 +0000</pubDate><atom:updated>2026-08-27T01:03:31.956Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,TN Assembly,மானிய கோரிக்கை,பட்ஜெட் 2026,Budget 2026</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/s9elqppj/CHENNAI-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/s9elqppj/CHENNAI-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சட்டசபையில் இன்று (வியாழக்கிழமை) முதல் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. 2 துறைகள் மீது மானியக் கோரிக்கை விவாதமும் நடக்க உள்ளது. </p><h2>பட்ஜெட் தாக்கல்</h2><p>தமிழக சட்டசபையில் கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 6-ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 7, 10,11 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதமும், 12-ந் தேதி நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோரின் பதில் உரையும் இடம் பெற்றது.</p><p>இந்த நிலையில், 17-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதுவரை, 27 துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து முடிந்துள்ளது.</p><h2>இன்று முதல் கேள்வி நேரம்</h2><p>நேற்று மிலாது நபி என்பதால் அரசு விடுமுறை விடப்பட்டிருந்தது. இன்று காலை 9.30 மணிக்கு தமிழக சட்டசபை மீண்டும் கூடுகிறது. த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, சட்டசபையில் இதுவரை கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படவில்லை.</p><p>இன்று முதல் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. பொதுவாக, கேள்வி நேரத்தில் 10 கேள்விகள் எடுத்துக்கொள்ளப்படும். ஆனால், தற்போது 5 கேள்விகள் எடுத்துக்கொள்ளப்படுவதாக தெரிகிறது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறைகளில் இருந்து பதில் வராதது இதற்கு காரணமாக கூறப்படுகிறது.</p><h2>மானியக் கோரிக்கை விவாதம்</h2><p>கேள்வி நேரம் முடிந்ததும் பா.ஜ.க. உறுப்பினர் போஜராஜன், ஊட்டி படகு இல்லத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் குறித்து அரசின் கவனத்தை ஈர்த்து பேசுகிறார். அதனைத் தொடர்ந்து, சமூக நீதித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது.</p><p>இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து சமூக நீதித் துறை அமைச்சர் வன்னியரசு, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் வெ.சம்பத்குமார் ஆகியோர் பேசுகின்றனர். நிறைவாக, தங்களது துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிடுகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு..? - வானிலை மையம் அப்டேட்</title><link>https://www.dailythanthi.com/news/weather/which-districts-in-tamil-nadu-are-likely-to-receive-rain-today-meteorological-centre-update</link><comments>https://www.dailythanthi.com/news/weather/which-districts-in-tamil-nadu-are-likely-to-receive-rain-today-meteorological-centre-update#comments</comments><guid isPermaLink="false">f744c841-c0a6-4cac-a803-050b8e369dac</guid><pubDate>Thu, 27 Aug 2026 01:00:55 +0000</pubDate><atom:updated>2026-08-27T01:00:55.413Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,Rain,Weather,வானிலை,தமிழகம்,Weather News,WeatherUpdate,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,வானிலை ஆய்வு மையம்,வானிலை அறிக்கை,weather condition,வானிலை முன்னறிவிப்பு,Weather Status,வானிலை அறிவிப்பு,weather center</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/9m3f4adr/rainer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/9m3f4adr/rainer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><h2>மழை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><p>இதன் காரணமாக <strong>இன்று (27-08-2026):</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். </p><p>செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான<a href="https://www.dailythanthi.com/topic/rain"> மழை</a>யும், ஏனைய தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a>யும் பெய்யக்கூடும்.</p><p><strong>28-08-2026 முதல் 30-08-2026 வரை:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>31-08-2026 மற்றும் 01-09-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong><ins>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</ins></strong></p><p><strong>27-08-2026 முதல் 30-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் வட உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><p><strong><ins>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</ins></strong></p><p><strong>27-08-2026 முதல் 30-08-2026 வரை:</strong> வட உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று (27-08-2026):</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச ឈប់លេ 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>மீனவர்களுக்கான எச்சரிக்கை:</h2><p><strong><ins>தமிழக கடலோரப்பகுதிகள்:</ins></strong></p><p><strong>27-08-2026 முதல் 30-08-2026 வரை:</strong> தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong><ins>வங்கக்கடல் பகுதிகள்:</ins></strong></p><p><strong>27-08-2026 மற்றும் 28-08-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடலின் அநேக பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>29-08-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள், மத்தியகிழக்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>30-08-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் மத்தியகிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகள், மத்தியகிழக்கு வங்கக்கடலின் இதர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p> <h2>அரபிக்கடல் பகுதிகள் :</h2><p><strong>27-08-2026 முதல் 30-08-2026 வரை:</strong> மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>
நேபாள வெள்ளத்தில் சிக்கிய 37 தமிழர்கள்; தமிழக அரசு அவசர உதவி எண் அறிவிப்பு
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/37-tamils-stranded-in-nepal-floods-tamil-nadu-government-announces-emergency-helpline</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/37-tamils-stranded-in-nepal-floods-tamil-nadu-government-announces-emergency-helpline#comments</comments><guid isPermaLink="false">f6a1cc3e-f98b-4708-bc5e-f9d814d89849</guid><pubDate>Wed, 26 Aug 2026 20:15:51 +0000</pubDate><atom:updated>2026-08-26T20:15:51.822Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nepal,நேபாளம்,தமிழக அரசு,Flood,வெள்ளம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/6ad1fs6f/nftnp.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/6ad1fs6f/nftnp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>நேபாள வெள்ளத்தில் 37 தமிழர்கள் சிக்கிய நிலையில், தமிழக அரசு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அவசர உதவி எண்களை </a>அறிவித்துள்ளது.</p><p>நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் வடக்கே அமைந்துள்ளது ரசுவா மாவட்டம்.  இந்த மாவட்டத்தின் வடக்கு பகுதியில் உள்ள ரசுவாகடி பகுதியில், லெண்டே கோலா ஆறும், பிற சிறிய ஆறுகளும் ஒன்றிணைந்து 'போடேகோஷி' ஆறாக கீழ்நோக்கி பாய்கின்றன.</p> <h2>திடீர் வெள்ளப்பெருக்கு</h2><p>இந்த ஆற்றில் நேற்று காலை 8.30 மணியளவில் திடீரென பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ரசுவா மற்றும் அருகில் உள்ள நுவாகோட் மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஆற்றின் இருபுறமும் உள்ள வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.</p><p>வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கி இதுவரை 95 பேர் பலியாகி உள்ளனர்.  வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.  93 பேர் பல்வேறு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 30 பேர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p> <h2>தமிழர்கள் 37 பேர்</h2><p>இந்த நிலையில், நேபாள சுற்றுலா வாரியம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சுற்றுலா பயணிகள் 750 பேர் வெள்ளத்துக்கு பிறகு தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். இவர்களில் 291 பேர் வெளிநாட்டினரும். 32 பேர் பாதுகாப்பு படையினரும் அடங்குவர்.</p><p>வெளிநாட்டினரில் 133 பேர் இந்தியர்கள் என்றும், 37 பேர் வெளிநாடுவாழ் இந்தியர்கள் என்றும் தெரியவந்துள்ளது.  இந்தியர்களில் தமிழகத்தை சேர்ந்த 57 பேரும் உள்ளனர்.  இவர்களில் 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மற்ற 37 பேரின் கதி என்ன? என்று தெரியவில்லை.</p> <h2>தமிழக அரசு அவசர உதவி எண்</h2><p>அவர்களை மீட்க தமிழக அரசு அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது. தமிழர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும் வகையில், தமிழக அரசின் அயலக தமிழர் நலத்துறை 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இந்தியாவில் இருந்து 1800 309 3793 என்ற எண்ணிலும், வெளிநாடுகளில் இருந்து +91 80 6900 9900 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் மூலமும் தொடர்பு கொள்ளலாம். மேலும் +91 80 6900 9901 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பியும் உதவி பெறலாம். தமிழக அரசின் உதவி மையத்தின் வாட்ஸ்அப் எண் 9289516712 ஆகும்.</p> ]]></content:encoded></item><item><title>நேபாளத்தின் வெள்ளப்பெருக்கு; தமிழர்களை மீட்பது குறித்து மத்திய அரசுடன் தொடர்ந்து ஆலோசனை - அமைச்சர் வினோத் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/floods-in-nepal-minister-vinoth-states-that-consultations-with-the-central-government-regarding-the-rescue-of-tamils-are-ongoing</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/floods-in-nepal-minister-vinoth-states-that-consultations-with-the-central-government-regarding-the-rescue-of-tamils-are-ongoing#comments</comments><guid isPermaLink="false">587b2ed2-7b82-42fa-8b05-22f6e847a954</guid><pubDate>Wed, 26 Aug 2026 16:16:33 +0000</pubDate><atom:updated>2026-08-26T16:16:33.516Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nepal,நேபாளம்,தமிழக அரசு,TN govt,அமைச்சர் வினோத்,Minister Vinoth</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/16s7n07f/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/16s7n07f/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திபெத் எல்லை நேபாளத்தில் இன்று ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக குடியிருப்புகள், வாகனங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வெள்ள பாதிப்பு தொடர்பான சேதங்களை மதிப்பிடும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். </p><p>இதுவரை வெளியான தகவலின்படி, வெள்ள பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்பட சுமார் 300-க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. </p> <p>இதனிடையே நேபாளத்தில் சிக்கிய இந்தியர்களில் 57 பேர் தமிழர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், நேபாளத்தில் சிக்கிய தமிழகர்களை மீட்பது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் தமிழக அரசு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாக அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார். </p><p>நேபாளத்தின் ரசுவா பகுதியில் சிக்கிய 36 பெண்கள் உள்பட மொத்தம் 57 தமிழர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இது குறித்து நேபாளத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு தமிழக அரசு சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  </p>]]></content:encoded></item><item><title>‘தேர்தல் முடிவை வைத்து ஒரு கட்சியின் பலம், பலவீனத்தை தீர்மானிக்க முடியாது’ - முத்தரசன் கருத்து </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-partys-strength-or-weakness-cannot-be-determined-based-on-election-results-mutharasans-view</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-partys-strength-or-weakness-cannot-be-determined-based-on-election-results-mutharasans-view#comments</comments><guid isPermaLink="false">5d2a2c28-ef43-4fe6-bd68-21c7925717a3</guid><pubDate>Wed, 26 Aug 2026 16:03:45 +0000</pubDate><atom:updated>2026-08-26T16:03:45.525Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>முத்தரசன்,Mutharasan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/abforbg3/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/abforbg3/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் திருவாரூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“தேர்தல் முடிவு வைத்து ஒரு கட்சியின் பலம், பலவீனத்தை தீர்மானித்துவிட முடியாது. கடந்த கால சட்டமன்ற முடிவுகளை எல்லாம் பார்க்க வேண்டும். நாட்டில் அனைத்து மாநிலங்களிலும், மத்தியிலும் 1967 வரை காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி நடத்தியது. 1967-ல் 8 மாநிலங்களில் காங்கிரஸ் தோற்றது. 1977-ல் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது. </p><p>அதே போல் தமிழ்நாட்டில 1971-ல் தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பின்னர் 1977-ல் தி.மு.க. தோற்றது, அதைத் தொடர்ந்து 1989-ல் மீண்டும் வெற்றி பெற்றது. 1991-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல 234 தொகுதிகளில் திருத்திரைபூண்டி, திருவாரூர், சென்னையில் கலைஞர் போட்டியிட்ட துறைமுகம் தொகுதி, புதுக்கோட்டை மாவட்டத்தில் அரந்தாங்கி தொகுதி ஆகிய 4 தொகுதிகளை தவிர மற்ற 230 இடங்களிலும் அ.தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது.</p> <p>அத்தகைய இமாலய வெற்றியை பெற்ற அ.தி.மு.க., 1996 தேர்தலில் நான்கே இடங்களில்தான் வெற்றி பெற்றது. ஜெயலலிதா தோற்றுப் போனார். தொடர்ந்து 2001-ல் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்றது, தி.மு.க. தோற்றது. இதுபோல் கடந்த காலங்களில் வெற்றிகளும், தோல்விகளும் மாறி மாறி வந்துள்ளன. </p><p>தற்போது தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அணி தோற்றிருக்கிறது. தி.மு.க.வுடன் சேர்ந்து போட்டியிட்ட நாங்களும் தோற்றிருக்கிறோம். எங்கள் அணி தோற்றிருக்கிறது. த.வெ.க. பெற்ற வெற்றியை ஏற்கிறோம். வெற்றியை மதிக்கிறோம். ஆனால் இது நிரந்தரம் அல்ல என்பதை தோற்றவர்களும், வெற்றி பெற்றவர்களும் புரிந்து கொள்ள வேண்டும். </p><p>இது ஜனநாயக நாடு. மக்கள் தங்களது விருப்பத்தின்படி ஆட்சியை தேர்ந்தெடுப்பார்கள். இன்றைக்கு த.வெ.க.வை பெரிய நம்பிக்கையோடு தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அதை நாங்களும் ஏற்கிறோம். ஆனா இது நிரந்தரம் நிரந்தரம் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார்.  </p>]]></content:encoded></item><item><title>அதிரடிக்கு தயாராகும் தி.மு.க: எந்த மாவட்டத்தில் எந்தெந்த தொகுதிகள்..? - 2 நாட்களில் வெளியாகும் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-gears-up-for-bold-moves-which-constituencies-in-which-districts-announcement-expected-in-two-days</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-gears-up-for-bold-moves-which-constituencies-in-which-districts-announcement-expected-in-two-days#comments</comments><guid isPermaLink="false">6b6aab42-8651-4d7f-a9a4-ceced096106c</guid><pubDate>Wed, 26 Aug 2026 15:43:38 +0000</pubDate><atom:updated>2026-08-26T15:43:38.159Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,M.K.Stalin,தமிழகம்,அரசியல் களம்,District Secretaries,மாவட்ட செயலாளர்கள்,tn politics</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/862rovor/bloo.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/862rovor/bloo.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு தி.மு.க.வில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர அக்கட்சியின் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/mkstalin">மு.க.ஸ்டாலின்</a> நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். முதியவர்களை விடுவித்து, இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.</p><p>குறிப்பாக, அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இளைஞரணியை சேர்ந்தவர்களுக்கும் மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 22-ம் தேதி நடைபெற்றது. கட்சியின் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/mkstalin">மு.க.ஸ்டாலின்</a> தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.</p><h2>14 மாவட்டங்களில்</h2><p>குறிப்பாக, தி.மு.க.வின் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 75-ல் இருந்து 110 ஆக உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க.வின் அமைப்பு ரீதியான மாவட்டங்கள் 110ஆக உயரும் நிலையில், எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த தொகுதிகள் இடம்பெறலாம் என்பது குறித்து கட்சியின் மறுசீரமைப்பு குழு தரப்பில் ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை உட்பட 14 மாவட்டங்களில் மட்டும் 3 தொகுதிகளுக்கு அமைப்பு ரீதியாக மாவட்டம் என்று பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><h2>தீர்மானம்</h2><p>மாவட்டங்களின் எண்ணிக்கை 110ஆக உயர்த்தப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் மூலமாக 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற நிலை உருவாகும் என்பதோடு, மாவட்டச் செயலாளர்களுக்கு வயது வரம்பு மற்றும் 3 முறை மட்டுமே பொறுப்பில் இருக்க முடியும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.</p><h2>புதிதாக மாவட்டச் செயலாளர் பொறுப்பு</h2><p>இதற்கு தி.மு.க.வின் அடுத்த தலைமுறை தலைவர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. அதேபோல் சீனியர்களை ஒரே அடியாக ஓரம் கட்டாமல், அவர்களுக்கு மாநில அளவிலான பொறுப்புகளை கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க.வின் இந்த புதிய அறிவிப்பு காரணமாக 13 முன்னாள் அமைச்சர்கள் மாவட்டச் செயலாளர்கள் பொறுப்பை இழக்கின்றனர்.</p><p>இதனால் மொத்தமாக தி.மு.க.வில் சுமார் 50 பேர் வரை புதிதாக மாவட்டச் செயலாளர் பொறுப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தி.மு.க.வில் அமைப்பு ரீதியான மாவட்டங்கள் 110ஆக பிரிக்கப்படும் சூழலில், இதுதொடர்பாக மறுசீரமைப்பு பரிந்துரை குழு நேற்று ஸ்டாலினிடம் ஒரு அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறது.</p><h2>சென்னை, திருச்சி, சேலம்</h2><p>அந்த அறிக்கையில் எந்தெந்த தொகுதிகள் எந்தெந்த மாவட்டங்களோடு சேர்க்கலாம் என்ற தகவல் இடம்பெற்றுள்ளன. அதன்படி 14 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் செயற்குழு தீர்மானங்களின் படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 2 தொகுதிகளாக பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி, சேலம், விருதுநகர், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களை பிரிக்கும் போது தலா 3 தொகுதிகளுடன் மாவட்டம் உருவாக்கப்படுகிறது.</p><h2>110 மாவட்டங்கள் எது</h2><p>அதேபோல் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும் தலா 3 தொகுதிகளுடன் ஒரு அமைப்பு ரீதியான மாவட்டம் உருவாக்கப்படுகிறது. இந்த மாவட்டங்களின் அடிப்படையில் ஓரிரு நாட்களில் ஸ்டாலின் 110 மாவட்டங்கள் எது, எப்படி பிரிக்கப்பட்டுள்ளது என்பதை அறிவிக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.</p><p>ஏற்கனவே தேர்தல் மூலமாகவே தி.மு.க.வில் பதவிகள் நிரப்பப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இதனால் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு அறிவிக்கப்பட உடன், அடுத்தக் கட்டமாக மாவட்டச் செயலாளர்கள் மற்ற கிளை நிர்வாகங்களை பிரித்து அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு குறித்த செய்திகள் மிகுந்த கவலையளிக்கின்றன - மு.க.ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/news-of-floods-in-nepal-are-deeply-distressing-says-m-k-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/news-of-floods-in-nepal-are-deeply-distressing-says-m-k-stalin#comments</comments><guid isPermaLink="false">5581008b-367f-468a-9b1b-38e54d07d041</guid><pubDate>Wed, 26 Aug 2026 15:25:43 +0000</pubDate><atom:updated>2026-08-26T15:25:43.364Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,மு.க.ஸ்டாலின்,MKstalin,nepal flood,நேபாளம் வெள்ளம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/gh5hy15j/Untitled-10.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/gh5hy15j/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நேபாளத்தில் ரசுவா மாவட்டத்தில் உள்ள கிராமங்களை, இன்று (புதன்கிழமை) காலை போட்டேகோஷி (Bhotekoshi) ஆற்றில் ஏற்பட்ட கடும் திடீர் வெள்ளம் அடித்து சென்றதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சுமார் 350-க்கும் மேற்பட்டோர் (28 போலீசார் உள்பட) மாயமாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த நிலையில் நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு குறித்த செய்திகள் மிகுந்த கவலையளிக்கின்றன என்று திமுக தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு குறித்த செய்திகள் மிகுந்த கவலையளிக்கின்றன. பல்வேறு மனித உயிர்கள் பலியாகியிருக்கும் சூழலில் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் அங்கு சிக்கியிருக்கின்றனர்.</p><p>மத்திய அரசும், மாநில அரசும் விரைந்து செயல்பட்டு, நமது மக்கள் பத்திரமாகத் தாய்நாடு திரும்ப வேண்டுமென்று விழைகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு குறித்த செய்திகள் மிகுந்த கவலையளிக்கின்றன. பல்வேறு மனித உயிர்கள் பலியாகியிருக்கும் சூழலில் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் அங்கு சிக்கியிருக்கின்றனர். <br><br>ஒன்றிய அரசும் மாநில அரசும் விரைந்து செயல்பட்டு, நமது மக்கள் பத்திரமாகத் தாய்நாடு… <a href="https://t.co/OL2MhEkxfJ">https://t.co/OL2MhEkxfJ</a></p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2092623039594967515?ref_src=twsrc%5Etfw">August 26, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய்யின் புகைப்படம் வாங்கியதில் ஊழல்: மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த அதிரடி உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/corruption-in-purchase-of-chief-minister-vijays-photo-madurai-high-court-issues-order</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/corruption-in-purchase-of-chief-minister-vijays-photo-madurai-high-court-issues-order#comments</comments><guid isPermaLink="false">8d43fc64-bd11-4b5b-86f0-1d994240d874</guid><pubDate>Wed, 26 Aug 2026 15:16:04 +0000</pubDate><atom:updated>2026-08-26T15:16:44.433Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Corruption,ஊழல்,மதுரை ஐகோர்ட்டு,Madurai Highcourt</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/kt4labgq/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/kt4labgq/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விக்டோரியா கவுரி, "கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர், அந்தந்த பகுதிகளில் அதிகாரிகளை நியமித்து புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளார். மேலும், புகைப்படங்கள் வாங்கப்பட்டதற்கான செலவு குறித்து விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.மதுரை,</p><p>கூட்டுறவு சங்க அலுவலகங்களில் முதல்-அமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை ரூ.800-க்கு வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக ஐகோர்ட்டு மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், புகைப்படங்கள் வாங்கப்பட்டதற்கான செலவு குறித்து விசாரிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.</p><p>தமிழ்நாடு பொது விநியோகத் திட்ட ஊழியர் சங்கத்தின் மாநிலத்தலைவர் பால்ராஜ், ஐகோர்ட்டு மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>திண்டுக்கல் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளராக ராகவ் பாலாஜி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பொறுப்பேற்றதில் இருந்தே, கூட்டுறவு சங்கங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.</p><p>ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடாத அலுவலர்களையும், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களையும் மிரட்டி மாதந்தோறும் கமிஷன் பெற்று வருகிறார். தற்போது ஒவ்வொரு கூட்டுறவு கடைகளிலும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் புகைப்படம் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்துக்கு சந்தை மதிப்பை விட கூடுதலாக தொகையை குறிப்பிட்டு முறைகேடுகளை செய்து வருகிறார்.</p><p>இந்த ஊழல் குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தலைமையில் விசாரணை நடத்தக் கோரி மனு அளித்தேன். அந்த மனுவை நாங்கள் புகார் கொடுத்த அதிகாரியின் கீழ் பணியாற்றும் அதிகாரி விசாரணை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு உயரதிகாரி மீது குற்றச்சாட்டுகளை வைத்தால், அவருக்கு கீழ் பணிபுரியும் ஒரு அலுவலரை விசாரணை செய்ய உத்தரவிட்டால், அந்த விசாரணை எவ்வாறு முறையாக இருக்கும்? எனவே, கூட்டுறவுத்துறை செயலர் அல்லது கூட்டுறவு சங்கத்தின் தலைமை பதிவாளர் தலைமையில் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.</p><p>இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விக்டோரியா கவுரி, "கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர், அந்தந்த பகுதிகளில் அதிகாரிகளை நியமித்து புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளார். மேலும், புகைப்படங்கள் வாங்கப்பட்டதற்கான செலவு குறித்து விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>