<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 01 Aug 2026 17:30:16 +0000</lastBuildDate><item><title>நீலகிரியில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தச்சுத்தொழிலாளி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/15-year-old-girl-sexually-harassed-in-nilgiris-carpenter-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/15-year-old-girl-sexually-harassed-in-nilgiris-carpenter-arrested#comments</comments><guid isPermaLink="false">f6a3bd85-7b4b-4bbf-8ba4-e00a67e2635a</guid><pubDate>Sat, 01 Aug 2026 16:46:14 +0000</pubDate><atom:updated>2026-08-01T16:46:14.692Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>போக்சோ சட்டம்,POCSO act,Nilgiris,நீலகிரி</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/bz9gj34r/14.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/bz9gj34r/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவில் 15 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டின் அருகிலுள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அங்கு பொருட்களை வாங்கிவிட்டு தனது வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த தச்சுத்தொழி லாளியான சதீஷ்(வயது 45) என்பவர் திடீரென அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சலிட்டாள். இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து சதீஷை பிடித்து சரமாரியாக தாக்கினர்.</p><p>பின்னர் அருவங்காடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை; குண்டாறு அணை நிரம்பியது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/widespread-rainfall-in-the-western-ghats-region-gundaru-dam-fills-up</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/widespread-rainfall-in-the-western-ghats-region-gundaru-dam-fills-up#comments</comments><guid isPermaLink="false">fb8c7394-4ee0-4976-9ebe-15e5692109d2</guid><pubDate>Sat, 01 Aug 2026 16:41:24 +0000</pubDate><atom:updated>2026-08-01T16:41:24.753Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Western Ghats,குண்டாறு அணை,மேற்குத்தொடர்ச்சி மலை,Gundaru Dam</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/c9u82zas/13.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/c9u82zas/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,   </p><p>நெல்லை, தென்காசி மாவட்டங்களையொட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் 2 மாவட்டங்களிலும் உள்ள அணைகளுக்கு தண்ணீர் வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 309 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில், நேற்று நீர்வரத்து 900 கன அடியாக அதிகரித்தது.</p><p>கடந்த ஆண்டைவிட குறைவு</p><p>அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 63 அடியை தாண்டியது. கடந்த ஆண்டு இதேநாளில் பாபநாசம் அணை நீர்மட்டம் 129 அடியாக இருந்த நிலையில் தற்போது அதில் பாதி அளவுக்கு மட்டுமே நீர் இருப்பு உள் ளது.</p><p>இதேபோல் கடந்த ஆண்டு 137 அடி இருந்த சேர்வலாறு அணை நீர்மட் டம் நேற்று 77 அடியாக இருந்தது. 118 அடி உயரம் கொண்ட மணிமுத் தாறு அணை நீர்மட்டம் 69 அடியாக உள்ளது.</p><p>அணைக்கு நீர்வரத்து 70 கன அடியாகவும், வெளியேற்றம் 175 கன அடி யாகவும் உள்ளது.</p><p>குண்டாறு அணை நிரம்பியது</p><p>தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. 36 அடி உயரம் கொண்ட குண்டாறு அணை இந்த ஆண்டில் 2-வது முறையாக நேற்று நிரம்பி வழிந்தது.</p><p>அணையில் இருந்து உபரிநீர் அப்படியே வெளியேறி வருகிறது. 85 அடி உயரம் கொண்ட கடனாநதி அணை நீர்மட்டம் 56 அடியாக உள்ளது. அணைக்கு வருகிற 60 கன அடி தண்ணீர் அப்படியே பாசனத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு 4-ந்தேதி தொடக்கம்  </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/counseling-for-undergraduate-medical-courses-begins-on-the-4th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/counseling-for-undergraduate-medical-courses-begins-on-the-4th#comments</comments><guid isPermaLink="false">0de0d0ce-5112-492e-92f3-92d567206e09</guid><pubDate>Sat, 01 Aug 2026 16:27:39 +0000</pubDate><atom:updated>2026-08-01T16:27:39.751Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>MBBS,Counselling</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/ll6f81o1/National-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/ll6f81o1/National-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><p>மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள சுகாதார சேவைகள் தலைமை இயக்குநரகத்தின்(DGHS) அங்கமான மருத்துவக் கலந்தாய்வுக் குழு (MCC), அகில இந்திய ஒதுக்கீட்டு (AIQ) இடங்களை நிரப்புவதற்கு 2026-27 ஆம் ஆண்டிற்கான கலந்தாய்வு அட்டவணையை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (mcc.nic.in) வெளியிட்டுள்ளது.</p><p>இதன்படி, 2026-27 ஆம் கல்வி ஆண்டின் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 4-ந்தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு 4-ந்தேதி தொடங்கி 17-ந்தேதி வரையிலும், மாநில ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு 13-ந்தேதி தொடங்கி 23-ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/693f6xx8/National-08.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>தண்ணீர் திறந்து விடமுடியாது என கூறிய கர்நாடகா...இயற்கை வென்றது - பெ.சண்முகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/karnataka-said-no-water-nature-won-p-shanmugam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/karnataka-said-no-water-nature-won-p-shanmugam#comments</comments><guid isPermaLink="false">9cf7c53d-cd49-48fd-8505-49456ad81955</guid><pubDate>Sat, 01 Aug 2026 16:23:05 +0000</pubDate><atom:updated>2026-08-01T16:23:05.460Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பெ.சண்முகம்,P. Shanmugam,Nature,இயற்கை,In Karnataka,தண்ணீர்water,வென்றது</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/ofoji03m/ps.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/ofoji03m/ps.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தண்ணீர் திறந்து விடமுடியாது என கூறிய கர்நாடகா...இயற்கை வென்றது என்று பெ.சண்முகம் தெரிவித்தார். இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">பெ.சண்முகம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>அணை நிரம்பும்</h2><p>கர்நாடகாவில் உள்ள கபினி அணையிலிருந்து இன்று வினாடிக்கு 10,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. விரைவில் அணை நிரம்பும் என்று கர்நாடக முதல்-மந்திரியே சொல்லியிருக்கிறார்.</p> <h2>தண்ணீரே இல்லை</h2><p>காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டிற்கு 3,500 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டபோது, “கர்நாடக அணைகளில் தண்ணீரே இல்லை; குடிநீருக்கே பற்றாக்குறை ஏற்படும்” என்று கூறி கர்நாடக அரசின் பிரதிநிதிகள் தண்ணீர் திறந்து விட முடியாது என்றனர்.</p><h2>இயற்கை வென்றது</h2><p>இரண்டு நாட்களில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அணை எப்படி இரண்டே நாட்களில் நிரம்பியது? காவிரி கண்காணிப்புக் குழு கண்காணிக்கும் லட்சணம் இதுதானா? எப்படி இருப்பினும் இயற்கை வென்றது!</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>வறண்டு வரும் நீர்நிலைகள்... திருச்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/drying-water-bodies-risk-of-drinking-water-shortage-in-trichy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/drying-water-bodies-risk-of-drinking-water-shortage-in-trichy#comments</comments><guid isPermaLink="false">2bf3c6fe-159a-444b-8bd0-3bbcfbe25d26</guid><pubDate>Sat, 01 Aug 2026 16:20:57 +0000</pubDate><atom:updated>2026-08-01T16:20:57.059Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்சி,Trichy,குடிநீர் தட்டுப்பாடு,drinking water shortage</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/fcz87xcq/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/fcz87xcq/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>திருச்சி,  </p><p>காவிரி ஆறு</p><p>தென்னிந்தியாவின் ஜீவநதியான காவிரி ஆறு கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உற்பத்தியாகி சுமார் 800 கி.மீ. தூரம் பாய்ந்து சென்று தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே கடலில் கலக் கிறது. காவிரி ஆறு கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதி களில் வேளாண் உற்பத்திக்கு பெரும் பங்காற்றி வருவதுடன், இருமாநி லங்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது.</p><p>கர்நாடகாவில் இருந்து ஓகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வரும் காவிரி ஆறு மேட்டூர் அணையில் தேக்கி வைக்கப்பட்டு பாசனத்துக்காக திறந்து விடப்படுகிறது. அவ்வாறு திறந்துவிடப்படும் காவிரி நீரானது பல் வேறு மாவட்டங்களிலும் பாய்ந்து சென்று திருச்சி முக்கொம்பு அருகே காவிரி, கொள்ளிடம் மற்றும் கிளைவாய்க்கால்கள் என 3 ஆக பிரிந்து செல்கிறது. காவிரி நதி பாய்ந்து செல்கிற மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் காவிரியில் இருந்து தான் குழாய்கள் மூலம் குடிநீர் எடுத்து செல்லப்படுகிறது.</p><p>வறண்டு காட்சி அளிக்கிறது</p><p>திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை குடிநீர் திட்டம், ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டம், கம்பரசம்பேட்டை, ஸ்ரீரங்கம் என காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்கள் மூலம் கொண்டு செல்லப்படு கிற காவிரி நீரால் திருச்சி மாநகரம், புறநகர் பகுதிகள், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், அரியலூர் என பல்வேறு மாவட் டங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன.</p><p>இந்தநிலையில் சமீபகாலமாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறைந்து விட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் போதியஅளவு தண்ணீர் திறக்காததால் திருச்சியின் முக் கிய குடிநீர் ஆதாரங்களான காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகள் முற்றி லும் வறண்டு பாலைவனம்போல் காட்சி அளிக்கிறது. அகண்ட காவிரி என்று அழைக்கப்படும் காவிரி ஆறு எங்குப்பார்த்தாலும் தண்ணீரின்றி வறண்ட காவிரியாக மாறி வருகிறது.</p><p>குடிநீர் தேவை உயர்ந்தது</p><p>காவிரி எங்கும் தண்ணீரின்றி வறண்டு மணற்திட்டாக காட்சி அளிப்பதால் திருச்சிக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போதிய மழை இல்லாததால் காவிரி ஆறு மட்டுமின்றி திருச்சியில் உள்ள குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளும் வறண்டுபோய் உள்ளன. திருச்சி மாந கரில் கடந்த சில ஆண்டுகளில் குடிநீர் தேவை 135 முதல் 150 எம்.எல்.டி. என்ற அளவில் இருந்து கணிசமாக அதிகரித்தது. ஆனால் ஜூலை மாத நிலவரப்படி, நகரின் குடிநீர் தேவை மேலும் உயர்ந்து 165 எம்.எல்.டி. ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p>குடிநீர் தேவைக்காக மேட்டூரிலிருந்து காவிரி ஆற்றில் 1,003 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டாலும், நகரின் நீர் ஆதாரங்கள் அமைந்துள்ள இடத்திற் குக் கீழே உள்ள முக்கொம்பில் அதில் 10 சதவீதத்திற்கும் குறைவான அளவே வந்து சேர்கிறது.</p><p>மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள்</p><p>காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் உள்ள 9 முக்கிய நீர் ஆதாரங் கள் மூலம் நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு, நகரில் உள்ள 129 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த 5 மாதங்களாக மேட்டூர் அணையிலிருந்து முக்கொம்பு தடுப்ப ணைக்குக் காவிரி நீர் வரத்து குறைந்திருப்பதும், சேகரிப்பு கிணற்றில் போதிய நீர் இருப்பு இல்லாததும் குடிநீர் வினியோகத்தில் தினசரி 15 எம்.எல்.டி. அளவு குடிநீர் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளன. நகரின் குடிநீர் தேவையில் சுமார் 60 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் கொள்ளிடம் ஆற்றில் நீர் வரத்து மிகவும் குறைந்துவிட்டது. குடிநீர் வினியோகத்தில் கடும் பற்றாக்குறை நிலவுவதால், 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதை திருச்சி மாநகராட்சி ஒத்திவைக்க அதிக வாய்ப்புள்ளது. இந்த திட்டத்துக்காக 100 கி.மீ. நீளத்திற்கு குழாய்கள் பதிக்கப்பட்டு சில பகுதிகளில் சோதனை ஓட்டம் முடிக்கப்பட்டிருந்தாலும், குடிநீர் இருப்பு குறைவாக உள்ள நிலையில் இத்திட்டத்தைச் செயல்படுத் துவது ஒட்டுமொத்த நீர் வினியோகக் கட்டமைப்பிலும் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என அதிகாரிகள் கருதுகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>‘சிறப்பு மீட்டர் ரீடிங் மறுஆய்வுப் பணியில் 100 மின் இணைப்புகளில் மட்டுமே வேறுபாடு கண்டறியப்பட்டது’ - மின்சார வாரியம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/discrepancies-were-found-in-only-100-electricity-connections-during-the-special-meter-reading-review-electricity-board</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/discrepancies-were-found-in-only-100-electricity-connections-during-the-special-meter-reading-review-electricity-board#comments</comments><guid isPermaLink="false">e75cfa81-0a0b-4ae5-8653-8f9c9f9fa1e9</guid><pubDate>Sat, 01 Aug 2026 16:09:43 +0000</pubDate><atom:updated>2026-08-01T16:09:43.487Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Electricity Board,மின்சார வாரியம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/5sdg23kz/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/5sdg23kz/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சிறப்பு மீட்டர் ரீடிங் மறுஆய்வுப் பணியில் இதுவரை 15,323 மின் இணைப்புகள் ஆய்வு செய்ததில் 100 மின் இணைப்புகளில் மட்டுமே வேறுபாடு கண்டறியப்பட்டதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. </p><p>தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கூடுதல் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p> <p>“மின்கட்டணம் தொடர்பாக சில தரப்பினரால் எழுப்பப்பட்ட சந்தேகங்களைத் தொடர்ந்து, மின்நுகர்வோரின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு மின்சார வாரியம் மாநிலம் முழுவதும் சிறப்பு மின்னளவி (மீட்டர்) மறுஆய்வுப் பணியை நேற்று முதல் தொடங்கியுள்ளது. இந்த சிறப்பு ஆய்வுப் பணியின் ஒரு பகுதியாக, இதுவரை 15,323 மின் இணைப்புகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 100 மின் இணைப்புகளில் மட்டும், அதாவது 0.65 சதவீதத்தில் மட்டுமே மின்னளவி பதிவு மற்றும் மின்கட்டணத்தில் வேறுபாடுகள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.</p> <p>வேறுபாடு கண்டறியப்பட்ட மின் இணைப்புகளில், கள ஆய்வின் அடிப்படையில் விதிமுறைகளுக்கு இணங்க மின்கட்டணங்கள் உரிய முறையில் திருத்தி அமைக்கப்படும். மாநிலம் முழுவதும் சுமார் 3.70 லட்சம் மின் இணைப்புகளில் இந்தச் சிறப்பு மின்கட்டண கணக்கீட்டில் மறு ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நடவடிக்கையின் மூலம் மின்கட்டண கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மையை மேலும் உறுதி செய்வதோடு, மின்நுகர்வோரின் சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் அளிக்கவும் தமிழ்நாடு மின்சார வாரியம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.</p><p>எனவே, மின்நுகர்வோர் யாரும் ஆதாரமற்ற தகவல்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம். மின்கட்டணம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் அருகிலுள்ள மின்வாரிய அலுவலகங்களை அணுகியோ அல்லது மின்னகம் (94987 94987) சேவை மையத்தை தொடர்புகொண்டு மின் கட்டணம் தொடர்பான புகார் பதிவு செய்தோ உரிய விளக்கங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துக் கொள்கிறது.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கரூரில் தண்டவாள பராமரிப்பு பணி: ரெயில் சேவையில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/track-maintenance-work-in-karur-changes-to-train-services</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/track-maintenance-work-in-karur-changes-to-train-services#comments</comments><guid isPermaLink="false">493416c7-3bb5-454e-a6ff-7d2a109b3b57</guid><pubDate>Sat, 01 Aug 2026 16:09:18 +0000</pubDate><atom:updated>2026-08-01T16:09:18.270Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர்,Karur,ரெயில் சேவை,Train Services</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/2ciko0hx/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/2ciko0hx/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,  </p><p>கரூர் மாவட்டம் மூர்த்திபாளையம்-கரூர் இடையே தண்டவாள பராமரிப்பு பணியால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவை-நாகர் கோவில் (வண்டி எண்.16322) எக்ஸ்பிரஸ் நாளை (சனிக்கிழமை), 4, 6, 8, 11, 13, 15, 18, 20, 22, 25, 27, 29-ந்தேதிகளிலும், செப்டம்பர் 1 மற்றும் 3-ந்தேதிகளில் (சனிக்கிழமை, செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமை களில்) கோவையில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு கோவை-திண் டுக்கல் இடையே மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.</p><p>பாலக்காடு டவுன்-திருச்சி (16844) எக்ஸ்பிரஸ் நாளை, 4, 6, 8, 11, 13, 15, 18, 20, 22, 25, 27, 29-ந்தேதிகளிலும், செப்டம்பர் 1 மற்றும் 3-ந்தேதிகளில் பாலக்காடு டவுனில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு புகலூரில் நிறுத்தப்படும். பணிகள் முடிந்ததும் திருச்சிக்கு முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரெயிலாக இயக்கப்படும்.மேற்கண்ட தகவலை ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>ஆழியார் கவியருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sudden-flash-flood-at-aliyar-kaviaruvi-tourists-evacuated</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sudden-flash-flood-at-aliyar-kaviaruvi-tourists-evacuated#comments</comments><guid isPermaLink="false">7b351bfa-4bfd-483f-afe3-2154033c8db3</guid><pubDate>Sat, 01 Aug 2026 15:59:43 +0000</pubDate><atom:updated>2026-08-01T15:59:43.694Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Flood,வெள்ளப்பெருக்கு,ஆழியார் கவியருவி,Aliyar Kavi Aruvi</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/g0473bmb/10.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/g0473bmb/10.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p>பொள்ளாச்சி அடுத்த ஆழியார் கவியருவி இயற்கை எழில் சூழ்ந்த மலைப் பகுதியில் உள்ளதால் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்த இடமாக உள்ளது இதனால் தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து மகிழ்ச்சியாக குளித்து செல்வது வழக்கமாக உள்ள நிலையில் இன்று காலை முதல் வழக்கம்போல் அருயில் ஏராளமான சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக குளித்துக் கொண்டிருந்த நிலையில் வால்பாறை சக்தி எஸ்டேட், தலைநார் எஸ்டேட், லில்லி முருகன் எஸ்டேட்,போன்ற பகுதிகளில் காலை முதல் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது இதனால் சோலை காடுகள் வழியாக ஆழியார் கவியருவிக்கு வந்த தண்ணீர் திடீரென அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது .</p><p>அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தண்ணீர் வரத்து அதிகளவில்  வந்ததை அடுத்து சுதாரித்துக் கொண்ட வனத்துறையினர் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி  அப்பகுதியில் இருந்து அவசர அவசரமாக வெளியேற்றி அருவிக்குச் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது இதனால் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று வருகின்றனர் மேலும் வனத்துறையினர் கூறுகையில் நீர்வரத்து குறைந்தவுடன் வழக்கம்போல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் எனவும் அதுவரை தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதால் யாரும் அருவிக்கு வர வேண்டாம் என கேட்டுக் கொண்டனர்</p>]]></content:encoded></item><item><title>தமிழக நீர்வளத்துறை செயலாளர் சத்ய பிரதாசாகு திடீர் இடமாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-water-resources-secretary-satya-pratasagu-suddenly-transferred</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-water-resources-secretary-satya-pratasagu-suddenly-transferred#comments</comments><guid isPermaLink="false">d3104e18-2ebc-41d8-97a8-ec65e3f3341c</guid><pubDate>Sat, 01 Aug 2026 15:40:37 +0000</pubDate><atom:updated>2026-08-01T15:40:37.419Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,நீர்வளத்துறை,tngovt,IAS,காவிரி விவகாரம்,சத்ய பிரதாசாகு,WaterResourcesSecretary</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/5s13kddm/sagu33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சத்ய பிரதாசாகு திடீர் இடமாற்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/5s13kddm/sagu33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காவிரி நதிநீர் பிரச்சினை தீவிரமாகி உள்ள நிலையில் தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை செயலாளர் சத்யபிரதா சாகு திடீரென இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்பது காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு. ஆனால் இந்த உத்தரவை மதிக்கமாட்டோம்; தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை திறந்துவிடமாட்டோம் என கர்நாடகா முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் கூறி வருகிறார்.</p><p>இந்த நிலையில் <a href="https://www.dailythanthi.com/search?q=tamil%20govt">தென்மேற்கு பருவமழை</a>யால் கர்நாடகா அணைகளில் நீர்வரத்து அதிகமாக உள்ளது. கபினி அணை நிரம்பும் நிலையில் உள்ளது. அணையில் நீர்வரத்து 17,000 கன அடியாக அதிகரித்து, அணையில் இருந்து 12,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>இந்தநிலையில், தமிழக அரசின் நீர்வளத் துறை செயலராக பிரசாந்த் எம்.வடநரே நியமிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. </p><p>தமிழக அரசின் நீர்வளத்துறை புதிய செயலாளராக பிரசாந்த் வடநரே நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் செயலாளராக நியமிக்கப்பட்டவர் ஐஏஎஸ் அதிகாரி பிரசாந்த் வடநரே. இவர் தற்போது பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.</p><p>தமிழக அரசின் நீர்வளத்துறையின் புதிய செயலாளராக பிரசாந்த வடநரே நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. அவர் ஏற்கனவே இருந்த ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் செயலாளர் பணி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு உள்ளது. நீர்வளத் துறை செயலாளராக இருந்த சத்யபிரதா சாகுவுக்கு பணியிடம் ஒதுக்கப்படவில்லை.  நீர்வளத் துறையை கவனித்து வந்த சத்யபிரதா சாகு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>இதனிடையே  தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப் போவதாக சட்ட அமைச்சர் நிர்மல்குமார் கூறி வந்தார். ஆனால் காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டில் திமுக இன்று ஆகஸ்ட் 1-ந் தேதி திடீரென மனுத் தாக்கல் செய்துள்ளது. இந்த பின்னணியில் இன்று தமிழக அரசின் நீர்வளத்துறை செயலாளர் சத்யபிரதா சாகு திடீரென பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>உயிருக்கு ஆபத்து-தவெக எம்எல்ஏ மனு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/life-in-danger-tvk-mlas-petition</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/life-in-danger-tvk-mlas-petition#comments</comments><guid isPermaLink="false">937ed9d6-b29d-438f-afb7-3cddebba096a</guid><pubDate>Sat, 01 Aug 2026 15:30:41 +0000</pubDate><atom:updated>2026-08-01T15:30:41.737Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>MLA,Petition,மனு,danger,உயிருக்கு ஆபத்து,தவெக எம்.எல்.ஏ.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/x0vvbt98/vijay.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தவெக எம்.எல்.ஏ விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/x0vvbt98/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>எனது உயிருக்கு ஆபத்து; துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வேண்டும்" என மதுரை மாவட்ட எஸ்பியிடம் உசிலம்பட்டி தொகுதி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%20%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D.%E0%AE%8F%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">தவெக எம்.எல்.ஏ விஜய்</a> பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.</p><h2>பரபரப்பு மனு</h2><p>மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த மனு, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருப்பவர் தவெக-வை சேர்ந்த வழக்கறிஞர் எம். விஜய். இவர் மதுரை மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு நேரில் வந்து பரபரப்பான புகார் மனு ஒன்றை அளித்தார்.</p><p><strong>உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எம். விஜய் அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-</strong></p><h2>அரசியல் காழ்ப்புணர்ச்சி</h2><p>நான் உசிலம்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து தொகுதி முழுவதும் உள்ள கிராமங்கள் மற்றும் தெருக்களுக்கு நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து வருகிறேன். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக முன்விரோதம் மற்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனக்கு எதிராக சில சூழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.</p><h2>போலீஸ் பாதுகாப்பு கோரிக்கை</h2><p>இதனால் எனது உயிருக்கும், உடமைகளுக்கும் கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எந்நேரமும் எனக்கு ஆபத்து நேரலாம் என்ற பயம் நிலவுகிறது. எனவே, அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும் முன்பாக எனது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். எனக்குத் தனிப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வழங்க உடனடியாக உத்தரவிட வேண்டும்.</p><p>இவ்வாறு அந்த மனுவில் தவெக எம்.எல்.ஏ விஜய் குறிப்பிட்டுள்ளார்.</p><p>எம்.எல்.ஏ-வின் இந்தத் திடீர் புகார் குறித்து மதுரை மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தவெக எம்.எல்.ஏ-வுக்கு உயிருக்கு ஆபத்து இருப்பதாக எஸ்பியிடம் மனு அளித்துள்ள சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-athletes-win-medals-at-commonwealth-games-minister-athav-arjuna-congratulates</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-athletes-win-medals-at-commonwealth-games-minister-athav-arjuna-congratulates#comments</comments><guid isPermaLink="false">6e91cabd-b5c1-4771-91fc-082627ee9b77</guid><pubDate>Sat, 01 Aug 2026 15:25:37 +0000</pubDate><atom:updated>2026-08-01T15:25:37.093Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Aadhav Arjuna,ஆதவ் அர்ஜுனா,Commonwealth Games,தமிழக வீரர்கள்,காமன்வெல்த்,Medalists</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/qhk1hb6e/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/qhk1hb6e/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[   <p>சென்னை,</p><p>காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><p>ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் பிரவீன் சித்ரவேல் வெள்ளிப்பதக்கத்தையும், செல்வபிரபு திருமாறன் வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து</h2><p>இந்நிலையில், <a href="https://www.dailythanthi.com/">காமன்வெல்த்</a> போட்டியில் தமிழக வீரர்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,</p><p> ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றுவரும் 'Commonwealth Games 2026' போட்டிகளில் Triple jump விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ள வீரர் பிரவீன் சித்ரவேல், வெண்கலப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ள வீரர் செல்வ பிரபு ஆகிய இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை  தெரிவித்துக்கொள்கிறேன். </p><p>தமிழ்நாட்டை  சேர்ந்த இவ்விரு வீரர்களும் தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் தங்கி பயிற்சி பெற்ற முன்னாள் மாணவர்கள் என்பது தனிச்சிறப்பாகும். </p><p>தமிழ்நாட்டின் இளைஞர்கள் உலக அளவிலான போட்டிகளில் பங்குபெற்று பல்வேறு சாதனைகள் படைக்க இந்த வெற்றி ஊக்கமாக அமைந்துள்ளது. நம் தமிழ்நாட்டு வீரர்களின் திறமை மேலும் பல உலகப் போட்டிகளில் மிளிர தமிழ்நாடு அரசு அனைத்து விதத்திலும் துணை நிற்கும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>பஹ்ரைனில் இருந்து சென்னை திரும்பிய இரிடியம் மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளி கைது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/main-accused-in-iridium-scam-arrested-after-returning-to-chennai-from-bahrain</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/main-accused-in-iridium-scam-arrested-after-returning-to-chennai-from-bahrain#comments</comments><guid isPermaLink="false">c3b13987-8e79-4479-b596-8f5a2e2ae806</guid><pubDate>Sat, 01 Aug 2026 15:09:55 +0000</pubDate><atom:updated>2026-08-01T15:09:55.817Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Bahrain,பஹ்ரைன்,குற்றவாளி,மோசடி,கைது Arrest,இரிடியம் மோசடி,Iridium scam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/xhs32zxc/dgp.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டிஜிபி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/xhs32zxc/dgp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>போலி ரிசர்வ் வங்கி ஆவணங்கள் மற்றும் இரிடியம் காப்பர் விற்பனை மோசடி வழக்கில் பஹ்ரைனிலிருந்து திரும்பிய முக்கிய குற்றவாளியை கைது செய்தது சிபிசிஐடி.</p><p>இது தொடர்பாக, தமிழக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF">டிஜிபி</a> அலுவகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களை சேர்ந்த பொதுமக்களிடம் இரிடியம் காப்பர் விற்பனை மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசிடமிருந்து இந்திய ரிசர்வ் வங்கியிலிருந்து பெறப்பட்டுள்ளதாகவும், அந்த தொகையை விடுவிக்க ரிசர்வ் வங்கிக்கு சேவை வரி மற்றும் ரிசர்வ் வங்கியின் அதிகாரிகளுக்கு கமிசன் தொகை வழங்க வேண்டும் என்றும், இதன் மூலம் முதலீடு செய்பவர்களுக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என்றும் மோசடி கும்பலை சேர்ந்த எதிரிகள் பொதுமக்களிடம் பொய்யான தகவல்களை கூறி, அவர்களது நம்பிக்கையை பெறுவதற்காக ரிசரிவ் வங்கி. DRDO, BAARC &amp; IT ஆவணங்கள் போன்று போலியான ஆவணங்களை தயார் செய்து பொதுமக்களிடம் காட்டி அவர்களிடமிருந்து பணத்தை வசூலித்துள்ளனர்.</p><h2>மோசடி</h2><p>இம்மோசடி குறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் உதவி பொது மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் கடந்த 15.03.2025-ம்தேதி சேலம் மாநகர திட்டமிட்ட குற்றங்கள் பிரிவில் குற்ற எண்.3/2025 சட்டப்பிரிவு 419, 420, 465, 468 மற்றும் 471 இந்திய தண்டனை சட்டம். பிரிவு 66D தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000 மற்றும் பிரிவு  3 r/w 5 The Emblem and Names (Prevention of improper use) Act, 1950-ன்படி வழக்கு பதிவு செய்து புலன்விசாரணை செய்யப்பட்டு வருகிறது.</p><p>வழக்கின் புலன் விசாரணையில் சுமார் 50 நபர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட 19 எதிரிகளை கண்டறிந்து, கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட மடிகணினிகள், கைப்பேசிகள். பிரிண்டர் போன்ற மின்னனு சாதனங்கள். ரிசர்வ் வங்கி / DRDO-யின் ஆவணங்களை போன்று தயார் செய்யப்பட்ட போலி ஆவணங்கள், <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF">போலி வங்கி காசோலைகள்</a> மற்றும் இரிடியம் என்று கூறி ஏமாற்றுவதற்காக பயன்படுத்தப்பட்ட கற்கள் / உலோக பொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.</p><h2>முக்கிய குற்றவாளி </h2><p>வழக்கின் தொடர் புலன்விசாரணையில், ரிசர்வ் வங்கியிலிருந்து மிகப்பெரிய தொகை கொடுக்கப்படுவதற்கான ஆதாரமாக வழங்கப்பட்டதை போன்ற போலியான UOB மற்றும் RBI ஆவணங்களை சென்னையை பூர்வீகமாக கொண்ட சுரேஷ்குமார் த/பெ கணேஷ்ராஜா என்பவர் பஹ்ரைன் நாட்டிலிருந்து தயார் செய்து கொடுத்துள்ளார் என்பதும். அதற்காக ரூ.45,000 பெற்றுள்ளார் என்பதும், கண்டறியப்பட்டது. எதிரி பஹ்ரைன் நாட்டிலிருந்து செயல்பட்டு வருவது தெரியவந்ததால் அவருக்கு எதிராக கடந்த 07.08.2025-ம் தேதி Look Out Circular (LOC) பிறப்பிக்கப்பட்டது. </p><h2>கைது</h2><p>பின்னர் தொடர் கண்காணிப்பின் மூலமாக 31.07.2026-ம்தேதி பஹ்ரைனிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த எதிரி சுரேஷ்குமாரை கைது செய்து. இன்று (01.08.2026) நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது. அவர் பயன்படுத்திய செல்போனை ஆய்வு செய்யவேண்டி கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தொடர்ந்து புலன்விசாரணை செய்யப்பட்டுவருகிறது. இதுவரை, <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF">இரிடியம் மோசடி</a> மற்றும் ரிசரிவ் வங்கி போலி ஆவண மோசடி சம்பந்தமாக குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையில் 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சிலை திருட்டு தடுப்புப் பிரிவினரால் 5 குற்றவாளிகள் கைது: 3 பழங்கால சிலைகள் பறிமுதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/idol-smuggling-bust-5-held-3-ancient-idols-recovered</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/idol-smuggling-bust-5-held-3-ancient-idols-recovered#comments</comments><guid isPermaLink="false">2d5afc16-511a-4109-9500-a3a79c0a0204</guid><pubDate>Sat, 01 Aug 2026 14:56:51 +0000</pubDate><atom:updated>2026-08-01T14:56:51.117Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>arrest,விழுப்புரம்,criminals,குற்றவாளிகள் கைது,பறிமுதல் Confiscation,idols; சிலைகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/qoi8vl7a/idol.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பழங்கால சிலைகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/qoi8vl7a/idol.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சிலை திருட்டு தடுப்புப் பிரிவினரால் 5 குற்றவாளிகள் கைது: 3 பழங்கால சிலைகள் பறிமுதல். இதுதொடர்பாக, காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>தீவிர கண்காணிப்பு</h2><p>விழுப்புரம் சரக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">சிலை திருட்டு</a> தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் ரவீந்திரன் என்பவருக்கு கிடைத்த ரகசிய மற்றும் நம்பகமான தகவலின் அடிப்படையில், கடலூர் மாவட்டம் தேசிய நெடுஞ்சாலை-36ல் உள்ள சேத்தியாத்தோப்பு கூட்ரோடு மேம்பாலம் அருகே நேற்று பிற்பகல் சுமார் 2.00 மணியளவில், சிலை திருட்டு தடுப்புப் பிரிவு தனிப்படை காவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.</p><h2> உலோக சிலைகள்</h2><p>அப்பகுதியில் நெகிழிப் பைகளுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்த 5 நபர்களை சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவலர்கள் மடக்கிப் பிடித்து, சோதனையிட்டு அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது மொத்தம் ரூபாய் 7 கோடி மதிப்புள்ள 3 தொன்மையான <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20">உலோக சிலைகள் </a>கைப்பற்றப்பட்டு, சிலைகளை கடத்த முயன்ற 5 நபர்களும் கைது செய்யப்பட்டனர்.</p><p><strong>ஐந்து நபர்கள் வைத்திருந்த நெகிழி பைகளை சோதனையிட்டு பறிமுதல் செய்த மூன்று பழங்கால உலோக சிலைகளின் விவரம்:</strong></p><p>(i) பூதேவி சிலை. (56 செ.மீ உயரம் 19 கி.கி)</p><p>(ii) திருஞானசம்பந்தர் சிலை. (37 செ.மீ உயரம் -10 கி.கி)</p><p>(iii) சிவகாமி சுந்தரி சிலை, (55 செ.மீ உயரம் 12.40 கி.கி)</p> <h2>கைது</h2><p>மேலும் சந்தேக நபர்களிடம் நடத்திய விசாரணையில், சிலைகளை வாங்குபவர்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது. உலோகத்தில் தங்கத்தின் தூய்மையை பரிசோதிப்பதற்காக சிலைகளின் சில பகுதிகளை வெட்டி சேதப்படுத்தியது தெரியவந்தது. கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு பயணிக்கும் ஒரு நபரிடம் சிலைகளை ஒப்படைப்பதற்காக ஐந்து நபர்களும் அவ்விடத்தில் காத்திருந்தபோது சிலை திருட்டு தடுப்பு பிரிவு தனிப்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்கள் அனைவரும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டது. அதன் விவரம் பின்வருமாறு:</p><p>(1) ராஜலிங்கம் (வயது-38), திருநாரையூர்,</p><p>(2) முத்துராஜ் (வயது-40), வடக்கு கொளக்குடி,</p><p>(3) ராஜவேல் (வயது-50), திருச்சின்னபுரம்,</p><p>(4) செந்தில்குமார் (வயது-49), திருச்சின்னபுரம்.</p><p>(5) சுரேஷ் (வயது-34), வடலூர், குறிஞ்சிப்பாடி தாலுகா.</p><h2>வழக்குப்பதிவு</h2><p>இச்சம்பவம் குறித்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல்நிலைய குற்ற எண்.08/2026 சட்டபிரிவு 35(1)(e), 106 பாரதிய நியாய சன்ஹிதா இணைந்த 305(d) பாரதிய நியாய சன்ஹிதா பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையுடன் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் மற்றும் கைது செய்யப்பட்ட நபர்களை சென்னை, எழும்பூரில் உள்ள தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். </p><h2>புலன்விசாரணை</h2><p>அனைத்து எதிரிகளையும் 14.08.2026 வரை நீதித்துறை காவலில் வைத்திடவும். எதிரிகள் அனைவரையும் சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்திட உத்தரவிடப்பட்டது. கைப்பற்றப்பட்ட சிலைகள் எந்த கோயிலை சேர்ந்தவை என்பதை கண்டறியவும். இதன் பின்னணியில் உள்ள திருட்டு வலையமைப்பை கண்டறியவும் வேலூர் சரக ஆய்வாளர் முனியம்மாள் என்பவர் புலன்விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.</p><h2>பாராட்டினார்</h2><p>சிலை திருட்டு தடுப்புப் பிரிவு தனிப்படையினரின் இச்சிறப்பான நடவடிக்கையையும் உடனடி செயல்பாட்டையும் சிலை திருட்டு தடுப்பு பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குநர் கல்பனா நாயக், சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் துறை தலைவர் அனில் குமார் கிரி, மற்றும் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகரன் ஆகியோர்கள் வெகுவாக பாராட்டினார்கள். தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் முனைவர். மகேஷ் குமார் அகர்வால், சிலை திருட்டு தடுப்புப் பிரிவின் முழு குழுவையும் அதிகாரிகளையும் வெகுவாக பாராட்டினார்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>காமன்வெல்த்: தமிழக வீரர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/commonwealth-chief-minister-vijay-congratulates-tamil-nadu-players</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/commonwealth-chief-minister-vijay-congratulates-tamil-nadu-players#comments</comments><guid isPermaLink="false">29369f85-4581-4bb3-aafb-8b3c756ab149</guid><pubDate>Sat, 01 Aug 2026 14:38:48 +0000</pubDate><atom:updated>2026-08-01T14:38:48.923Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,தமிழக வீரர்கள்,காமன்வெல்த்,முதல்-அமைச்சர் விஜய்,CMVijay‌,CommonwealthGames,Medalists</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/0ex1qah1/vijayone33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  முதல்-அமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/0ex1qah1/vijayone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஒரே போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு விளையாட்டு வீரர்கள் பதக்கங்களை வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என முதல்-அமைச்சர் விஜய் கூறியுள்ளார்.</p><p>காமன்வெல்த் 2026 தொடரில் இந்தியாவின் பதக்க வேட்டை தொடர்ந்து வருகிறது. ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல் இறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இரண்டு பதக்கங்களை கைப்பற்றியுள்ளனர்.</p><p>இந்தியாவின் பிரவீன் சித்ரவேல் 16.58 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான செல்வ பிரபு திருமாறன், 16.52 மீட்டர் தாண்டி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.</p><p>இருவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு <a href="https://www.dailythanthi.com/search?q=cm%20vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக முதல்-அமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-</p><p>ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றுவரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில்,</p><p>ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. பிரவீன் சித்ரவேல் அவர்களுக்கும், வெண்கலப் பதக்கம் வென்ற மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த திரு. செல்வ பிரபு அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும்</p><p>பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வீரர்களின் சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக, வெள்ளிப் பதக்கம் வென்ற திரு. பிரவீன் சித்ரவேல் அவர்களுக்கு 30 இலட்சம் ரூபாயும், வெண்கலப் பதக்கம் வென்ற திரு. செல்வ பிரபு அவர்களுக்கு 20 இலட்சம் ரூபாயும் வழங்கப்படும்.</p><p>ஒரே போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு விளையாட்டு வீரர்கள் பதக்கங்களை வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த இருவீரர்களும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகளில் தங்கி பயின்று, முறையான பயிற்சி பெற்றவர்கள் என்பது தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறைக்குப் பெருமை சேர்ப்பதாகும்.</p><p>இவர்களின் கடின உழைப்பும், விடாமுயற்சியும், அர்ப்பணிப்பும் வெற்றியைத் தேடித்தந்ததோடு,ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை அளிக்கிறது. சர்வதேச அரங்கிலும் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற எனது வாழ்த்துகள் என அதில் பதிவிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மூலம் ஒரே வாரத்தில் 378 புகார்களுக்கு உடனடி தீர்வு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/immediate-resolution-of-378-complaints-within-a-single-week-through-the-singappenn-special-task-force</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/immediate-resolution-of-378-complaints-within-a-single-week-through-the-singappenn-special-task-force#comments</comments><guid isPermaLink="false">a66b28d8-2ff5-4361-b147-7763cb9529ef</guid><pubDate>Sat, 01 Aug 2026 14:31:23 +0000</pubDate><atom:updated>2026-08-01T14:31:23.034Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை,Singapen Special Task Force</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/jsoafiwk/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/jsoafiwk/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மூலம் ஒரே வாரத்தில் 378 புகார்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. </p><p>காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“தமிழ்நாடு காவல்துறையின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், மாநிலம் முழுவதும் துரிதமான நடவடிக்கைகள், சமூக பங்களிப்புடன் கூடிய காவல் பணிகள் மற்றும் விழிப்புணர்வு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. </p><p>கடந்த ஒரு வாரகாலத்தில் 24.07.2026 முதல் 30.07.2026 வரை, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மாவட்ட களப்பிரிவுகள் 378 4 புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுத்து 23 குற்றவழக்குகள் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், காணாமல்போன பெண்கள் மற்றும் 8 குழந்தைகள் கண்டறியப்பட்டு பாதுகாப்பாக அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.</p> <p>இந்த காலகட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இடையே 3,711 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும், மாநிலம் முழுவதும் அடையாளம் காணப்பட்ட 10,320 குற்றம் நடைபெற வாய்ப்புள்ள பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் தீவிர ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன.</p><p>இந்த காலகட்டத்தில், அறிவுசார் குறைபாடுடைய 9 நபர்கள் மீட்கப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. 3 குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டது. மேலும், 62 பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் மீண்டும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டனர்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சென்னை: ரேஷன் கடைகளில் நாளை கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-special-camp-for-fingerprint-registration-at-ration-shops-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-special-camp-for-fingerprint-registration-at-ration-shops-tomorrow#comments</comments><guid isPermaLink="false">46b29823-71d6-4ef7-bf84-b87bd12f8074</guid><pubDate>Sat, 01 Aug 2026 14:01:02 +0000</pubDate><atom:updated>2026-08-01T14:01:02.461Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,ரேஷன் கடை,Ration shop</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/e0zcuh9v/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/e0zcuh9v/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அனைத்து நியாயவிலைக் கடைகளில் நடைபெறும் சிறப்பு முகாமிற்கு சென்று பொதுமக்கள் தங்களது கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  </p><p>சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளில் இ-கே.ஒய்.சி. (e-kyc) பதிவு சிறப்பு முகாம் ஆகஸ்ட் 2-ந்தேதி(நாளை) நடைபெற உள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் தங்கள் குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கைவிரல் ரேகையை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். தற்போது வரை கைவிரல் ரேகையை பதிவு செய்யாதவர்கள் ஆகஸ்ட் 2-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்து நியாயவிலைக் கடைகளில் நடைபெறும் சிறப்பு முகாமிற்கு சென்று தங்களது கைவிரல் ரேகையினை பதிவு செய்திட வேண்டும். </p><p>பணி நிமித்தமாக வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசிப்பவர்கள் இப்போது வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைக்கு சென்று தங்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்யலாம்.</p><p>எனவே, அரசின் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி பொதுமக்கள் அனைவரும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் விரல் ரேகைப் பதிவை விடுதலின்றி முழுமையாக பதிவு செய்ய வேண்டும்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>காவிரி விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் திமுக அவசர மனு தாக்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-issue-dmk-files-urgent-petition-in-supreme-court</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-issue-dmk-files-urgent-petition-in-supreme-court#comments</comments><guid isPermaLink="false">6966465b-972b-4244-9d0c-610fd266520a</guid><pubDate>Sat, 01 Aug 2026 13:43:10 +0000</pubDate><atom:updated>2026-08-01T13:43:10.213Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,SupremeCourt,காவிரி விவகாரம்,KaveriIssue</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/x5kv7epy/dmk44.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
 காவிரி விவகாரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/x5kv7epy/dmk44.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காவிரி நீரை உடனடியாக தமிழ்நாட்டுக்கு விடுவிக்க கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனுத்தாக்கல் செய்தது திமுக.</p><h2>திமுக மனு</h2><p>திமுகவின் விவசாயிகள் அணி செயலாளர் விஜயன் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், கடந்த ஜூலை 28ஆம் தேதி காவிரி நீர் ஒழுங்குமுறை குழு வழங்கியதும், ஜூலை 30ஆம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணையம் உறுதிசெய்ததுமான உத்தரவை கர்நாடக அரசுஉடனடியாக முழுமையாக செயல்படுத்துமாறு உத்தரவிட வேண்டும்.</p><p>அதன்படி, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து தொடர்ந்து 15 நாட்களுக்கு தினமும் 3,500 கனஅடி தண்ணீர் பிலிகுண்டுலுவில் திறந்துவிடவும், ஜூலை 29 முதல் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையையும் ஈடு செய்யுமாறு உத்தரவிட வேண்டும்.</p><h2>கர்நாடக அரசு</h2><p>கடந்த ஜூலை 26ஆம் தேதி விகிதாச்சார (Distress Sharing) அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய 9.46 டி.எம்.சி. நீர்பற்றாக்குறையை ஈடு செய்யும் வகையில், 15 நாட்களுக்கு தினமும் சுமார் 7,000 கியூசெக்ஸ்தண்ணீர் பிலிகுண்டுலுவில் கிடைக்குமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.</p><p>கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரையும், பிலிகுண்டுலுவில் கிடைக்கும் நீரின்அளவையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தினசரி கண்காணித்து, அதன் அமலாக்கநிலையை சுப்ரீம் கோர்ட்டின் அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு உத்தரவிடவேண்டும். விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் .</p><p>வழக்கின் உண்மை நிலைகள் மற்றும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, நீதியைநிலைநாட்டுவதற்குத் தேவையான பிற உரிய உத்தரவுகளையும் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>காவிரி நீர் மேலாண்மை ஆணையம்</h2><p>அண்மையில் டெல்லியில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D">காவிரி நீர் மேலாண்மை</a> ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாட்டுக்கு ஒரு நாளைக்கு 3,500 கன அடி வீதம் 15 நாள்களுக்கு 4 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட உத்தரவிடப்பட்டது.</p><p>காவிரியில் இருந்து தமிழகத்துக்கு கர்நாடக அரசு தண்ணீர் திறப்பதில் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டுவரும் நிலையில் டெல்லியில் கூடிய காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்தது.</p>]]></content:encoded></item><item><title>திருத்தணி கோவிலுக்கு 13 நாட்கள் ஆட்டோக்கள் செல்ல தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/13-day-ban-on-autos-going-to-thiruttani-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/13-day-ban-on-autos-going-to-thiruttani-temple#comments</comments><guid isPermaLink="false">907b2b51-6997-46f5-9460-b37eecef7322</guid><pubDate>Sat, 01 Aug 2026 13:23:25 +0000</pubDate><atom:updated>2026-08-01T13:23:25.928Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>autos,ஆட்டோக்கள்,திருத்தணி கோவில்,Thiruttani Temple</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/jr34m84a/6.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/jr34m84a/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருத்தணி,</p><h2>ஆடி கிருத்திகை திருவிழா</h2><p>திருத்தணி முருகன் கோவிலில் வருகிற 4-ந் தேதி முதல் ஆடி கிருத்திகை திருவிழா தொடங்க உள்ளது. இந்நிகழ்ச்சியில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து முருகப் பெருமானை தரிசனம் செய்ய உள்ளனர்.</p><h2>பக்தர்கள் வருகை</h2><p>இந்நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை). 4-ந்தேதி ஆடி அஸ்வினி, 5-ந்தேதி ஆடி பரணி, 6-ந்தேதிஆடி கிருத்திகை, 7-ந்தேதி 2-ம் தெப்பல், 8-ந்தேதி 3-ம் தெப்பல், 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை), 14-ந்தேதி ஆடிப்பூரம், 15-ந்தேதி சுதந்திர தினம், 16, 23, 30-ந்தேதி ஞாயிற்றுக்கிழமைகள் ஆகிய 13 நாட்களில் நடைபெறும் விழாக்களில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் முருகன் கோவிலுக்கு வருவார்கள்.</p><h2>ஆட்டோக்கள் செல்ல தடை</h2><p>இதனால் இந்த நாட்களில் மலைக்கோவிலுக்கு ஆட்டோக்கள் செல்ல கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இட வசதிக்கேற்ப கார்கள் இயக்கப்படும்.</p><p>மலைக்கோவில் நுழைவுப் பகுதியில் இருந்து படா செட்டிகுளம் வரை பக்தர்கள் கட்டணமின்றி கோவில் பஸ்களில் பயணம் செய்யலாம். இருசக்கர வாகனங்களில் பக்தர்கள் மலைக்கோவில் மேல் செல்ல அனுமதிக்கப்படும். இதர பஸ்கள் கோவில் வாகன நிறுத்தும் இடங்களில் இலவசமாக நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம்: ஜே.சி. டி.பிரபாகர் திறந்து வைத்தார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/integrated-service-centre-for-persons-with-disabilities-jcd-prabhakar-inaugurates</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/integrated-service-centre-for-persons-with-disabilities-jcd-prabhakar-inaugurates#comments</comments><guid isPermaLink="false">a2daabd0-339b-403f-ad87-1b80e8b46f34</guid><pubDate>Sat, 01 Aug 2026 13:16:18 +0000</pubDate><atom:updated>2026-08-01T13:16:18.707Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சேவை மையம்,ஜே.சி.டி.பிரபாகர்,Service Centre,J.C.D. Prabhakar</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/3o96kmss/1.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/3o96kmss/1.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி பிரபாகர், இன்று ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேனாம்பேட்டை மாதிரி பள்ளி சாலையில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான வட்டார ஒருங்கிணைந்த சேவை மையத்தினை (One Stop Cnetre) திறந்து வைத்தார். </p><p>தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் (TN Rights Project) கீழ் உலக வங்கி நிதி உதவியுடன், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரே இடத்தில் ஆலோசனை, மறுவாழ்வுக்கான வழிகாட்டுதல், அரசு நலத்திட்டங்கள் குறித்த தகவல் வழங்குதல், குறைதீர் சேவைகள் வழங்குதல், தேனாம்பேட்டை மண்டலத்தில் உள்ள பயனாளிகளுக்கு முன்கூட்டியே ஒதுக்கப்பட்ட நேர அட்டவணையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் தரமான மற்றும் தொடர்ச்சியான சிகிச்சை அளிக்த்தல் ஆகியவற்றிற்காக மாற்றுத்திறனாளிகளுக்கான வட்டார ஒருங்கிணைந்த சேவை மையம் இன்று (01.08.2026) திறந்து வைக்கப்பட்டுள்ளது.</p><p>தென் சென்னையில் வளசரவாக்கம், பெருங்குடி மற்றும் ஈஞ்சம்பாக்கம் ஆகிய மூன்று இடங்களிலும் வட சென்னையில் இரயபுரத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கான வட்டார ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேலும் தென்சென்னையில் சாந்தோம் மற்றும் கண்ணகி நகரில் துணைக் கோட்ட அளவில் இரண்டு ஒருங்கிணைந்த சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தேனாம்பேட்டையில் புதிதாக மாற்றுத்திறனாளிகளுக்கான வட்டார ஒருங்கிணைந்த சேவை மையம் இன்று (01.08.2026) திறந்து வைக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>அகமதாபாத்-திருச்சி சிறப்பு ரெயில் மாற்றுப்பாதையில் இயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ahmedabad-trichy-special-train-operating-on-diversion</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ahmedabad-trichy-special-train-operating-on-diversion#comments</comments><guid isPermaLink="false">7fd337b2-3f83-4274-b07c-cec71eb886ff</guid><pubDate>Sat, 01 Aug 2026 13:09:17 +0000</pubDate><atom:updated>2026-08-01T13:09:17.043Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,திருச்சி,Trichy,Special Train ​</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/h05q9g2n/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/h05q9g2n/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் காரணமாக ஆமதாபாத்தில் இருந்து வருகிற 6-ந்தேதி, 13-ந்தேதி காலை 9.30 மணிக்கு புறப்படும் அகமதாபாத்-திருச்சி வாராந்திர சிறப்பு ரெயில் (எண்:09419) ரேணிகுண்டா, திருத்தணி, மேலபாக்கம், காஞ்சீபுரம், செங்கல்பட்டு வழியாக திருச்சிக்கு வரும். அந்த நாட்களில் அரக்கோணம், பெரம்பூர், சென்னை எழும்பூர், தாம்பரம் செல்லாது. </p><p>அதேபோல் திருச்சியில் இருந்து வருகிற 9-ந்தேதி, 16-ந்தேதி காலை 5.45 மணிக்கு புறப்படும் திருச்சி-ஆமதாபாத் வாராந்திர சிறப்பு ரெயில் (எண்:09420) செங்கல்பட்டு, காஞ்சீபுரம், மேல பாக்கம், திருத்தணி, ரேணிகுண்டா வழியாக அகமதாபாத் செல்லும். அந்த நாட்களில் தாம்பரம், சென்னை எழும்பூர், பெரம்பூர், அரக்கோணம் வழியாக செல்லாது.</p> ]]></content:encoded></item><item><title>பொய் சொல்வதில் நிர்மல்குமார் கின்னஸ் சாதனை -ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nirmal-kumar-guinness-record-for-lying-rp-udayakumar-review</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nirmal-kumar-guinness-record-for-lying-rp-udayakumar-review#comments</comments><guid isPermaLink="false">9a6a30bf-c579-4dd7-ba8e-0d0da0f7501f</guid><pubDate>Sat, 01 Aug 2026 13:01:01 +0000</pubDate><atom:updated>2026-08-01T13:01:01.781Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,தவெக,விஜய்,அதிமுக,EPS,காவிரி விவகாரம்,CMVijay,RBUdhayakumar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/gaug3fip/uday33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆர்.பி.உதயகுமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/gaug3fip/uday33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>பழனிசாமிக்கு மக்கள் மனதைப் படிக்க தெரிந்தது; எங்களுக்கு விஜய்போல நடிக்கத் தெரியவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.</p><p>அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>பழனிசாமிக்கு மக்கள் மனதை படிக்க தெரிந்தது. ஆனால் எங்களுக்கு விஜய் போல நடிக்க தெரியவில்லை. வலைதளங்களில் ரீல்ஸ் போடுவது அரசியல் அல்ல, கர்நாடக வரவேண்டாம் என அம்மாநில முதல்-மந்திரியே கூறும்படி, ஒரு முதல்-அமைச்சரை நாம் பெற்றுள்ளோம். எதுவுமே தெரியாத விஜய் முதல்-அமைச்சராகும்போது, இபிஎஸ் மீண்டும் முதல்-அமைச்சராகமாட்டாரா? ஊழல் ஒழிந்ததாக மாயையை கட்டமைக்கிறார்கள். ஆனால் ஊழல் ஒழியவில்லை. அரைவேக்காட்டுத்தனமான அணுகுமுறைதான் தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கிறது. காவிரி விவகாரத்தில் வாதத்தை எடுத்து வைக்க தவெக அரசு தவறிவிட்டது. </p><h2>நிர்மல்குமார் கின்னஸ் சாதனை</h2><p>பொய் சொல்வதில் அமைச்சர் நிர்மல்குமார் கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். மின்சாரத்துறையில் என்ன நடக்கிறது என்பதே அமைச்சருக்கு தெரியவில்லை. 200 யூனிட் மின்சாரம் இலவசம் என அறிவித்தார்கள், அதுவும் முழுமை அடையவில்லை. மின் கட்டணம் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 40%-60% உயர்ந்துள்ளது. மின்வெட்டு நாடு முழுவதும் இருக்கிறது, மக்கள் போராடுகிறார்கள். ஆனால் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95">தவெக மின்வாரியத்துறை </a>அமைச்சர் ஒப்புக்கொள்ள தயாராக இல்லை.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>காவிரி விவகாரம்: அனைத்துக்கட்சி கூட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் கூட்ட வேண்டும் - திருமாவளவன்

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-issue-cm-vijay-must-convene-all-party-meet-thirumavalavan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-issue-cm-vijay-must-convene-all-party-meet-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">5cdb21c9-5a83-4131-a1a5-afdc5321c539</guid><pubDate>Sat, 01 Aug 2026 13:00:12 +0000</pubDate><atom:updated>2026-08-01T13:00:12.914Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,காவிரி நீர்,Thirumavalavan,Cauvery River,Cauvery,காவிரி,காவிரி பிரச்சினை,காவிரி நீர் திறப்பு,Cauvery dispute,Cauvery affair</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/03nivj4c/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/03nivj4c/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>காவிரி விவகாரத்தில் முதல்-அமைச்சர் விஜய் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். </p><p><a href="https://www.dailythanthi.com/">காவிரி</a>யில் இருந்து  தமிழகத்திற்கு   வினாடிக்கு 3,500 கனஅடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி நீர் முறைப்படுத்தும் குழு உத்தரவிட்டது. </p><p> இந்த உத்தரவை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு முறையீடு செய்தது. ஆனால், அந்த முறையீட்டை நிராகரித்த காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிட உத்தவிட்டது. ஆனால், தமிழகத்திற்கு காவிரியில் இருந்து கர்நாடக அரசு தண்ணீரை திறந்துவிடவில்லை.</p><p>அதேவேளை, காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்ய உள்ளது.</p><h2>திருமாவளவன் வலியுறுத்தல்</h2><p>இந்நிலையில், காவிரி நீர் விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் விஜய் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.</p><p>மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் கூறியதாவது,</p><p>காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் விஜய் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.  குறுவை சாகுபடியை பாதுகாக்க மத்திய அரசு மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு முன் தமிழக அரசு தனது வாதத்தை முன்வைக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதற்காக  அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட வேண்டும்</p><p>என்றார். </p>]]></content:encoded></item><item><title>கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்தும் தண்ணீர் திறக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-must-be-released-from-the-krishnaraja-sagar-dam-as-well-anbumani-urges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-must-be-released-from-the-krishnaraja-sagar-dam-as-well-anbumani-urges#comments</comments><guid isPermaLink="false">c1e6fed0-7756-4add-b1ba-89e2f3d98761</guid><pubDate>Sat, 01 Aug 2026 12:36:45 +0000</pubDate><atom:updated>2026-08-01T12:36:45.373Z</atom:updated><atom:author><atom:name>Muthu Pandian K</atom:name><atom:uri>/api/author/2401539</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/dmiyibhf/anbu.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/dmiyibhf/anbu.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;</p><p>“கர்நாடகத்தில் காவிரியின் துணை ஆறுகளில் ஒன்றான கபிணியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை நிரம்பி வழிவதையடுத்து அங்கிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம்  தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.  இந்த நீர் இன்னும் எவ்வளவு காலத்திற்கு திறக்கப்படும், தமிழகத்தின் தேவைக்கு போதுமானதாக இருக்குமா? என்பதெல்லாம்  அடுத்த சில வாரங்களுக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் எவ்வளவு மழை பெய்யும் என்பதைப் பொறுத்தே அமையும்.  எனினும் இயற்கையின் கொடையால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது நிம்மதியளிக்கிறது.</p><p>கபினி அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 2281 அடியாகவும்,  நீர் இருப்பு 17.50  டி.எம்.சியாகவும் இருந்தது. அணை நிரம்புவதற்கு இன்னும் 3 அடியும்,  2 டி.எம்.சி நீருமே தேவை என்ற நிலையில், வினாடிக்கு 11747 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பிற்பகலில் நீர்வரத்து அதிகரித்த நிலையில்  நாளைக்குள் அணை நிரம்பி விடும் என்பதால் முன்னெச்சரிக்கையாகவே  நீர் திறந்து விடப்பட்டுள்ளது.  இது இயற்கையின் கொடையே தவிர கர்நாடக அரசின் விருப்பம் அல்ல.</p><p>காவிரி பாசன மாவட்டங்களுக்கு குறைந்த பட்சம் சம்பா பருவத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்றால் இன்னும் குறைந்தது  40 முதல் 45 டிஎம்சி  தண்ணீர் தேவை. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்தால் கபினி அணையிலிருந்து தண்ணீர் வருவதும் நிறுத்தப்பட்டு விடும். அதனால் தமிழகத்திற்கு பயன் கிடைக்காது. இன்னொரு அணையான ஹாரங்கி நிரம்பி வழிவதால் அதிலிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.  அடுத்த சில நாள்களில் நீர்வரத்து அதிகரிக்கும் என்று தெரிகிறது.</p><p>எனவே, வெள்ளம் போல் வரும் கூடுதல் நீரை சேமித்து வைக்க வசதியாக கிருஷ்ணராஜசாகர்  அணையிலிருந்தும் தமிழ்கத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும். அதை இன்னும் ஒரு வாரத்திற்கு  தொடருவதன்  மூலம்  தமிழ்நாட்டின் காவிரி பாசன மாவட்டங்களில்  சம்பா சாகுபடி செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தேனாம்பேட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை மையம் - ஜே.சி.டி.பிரபாகர் திறந்து வைத்தார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/service-center-for-persons-with-disabilities-in-teynampet-inaugurated-by-jcdprabhakar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/service-center-for-persons-with-disabilities-in-teynampet-inaugurated-by-jcdprabhakar#comments</comments><guid isPermaLink="false">65a07a1f-eff4-4768-92c2-66ff825af006</guid><pubDate>Sat, 01 Aug 2026 12:31:24 +0000</pubDate><atom:updated>2026-08-01T12:31:24.652Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,ஜே.சி.டி.பிரபாகர்,J.C.T. Prabhakar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/mqoh47j8/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/mqoh47j8/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை தேனாம்பேட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மண்டல ஒருங்கிணைந்த சேவை மையத்தை சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் இன்று திறந்து வைத்தார்.</p><p>சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“இன்று(01.08.2026) மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் திரு.ஜே.சி.டி பிரபாகர் அவர்கள், ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேனாம்பேட்டை மாதிரி பள்ளி சாலையில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான வட்டார ஒருங்கிணைந்த சேவை மையத்தினை (One Stop Centre) திறந்து வைத்தார்.</p><p>தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் (TN Rights Project) கீழ் உலக வங்கி நிதி உதவியுடன், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரே இடத்தில் ஆலோசனை, மறுவாழ்வுக்கான வழிகாட்டுதல், அரசு நலத்திட்டங்கள் குறித்த தகவல் வழங்குதல், குறைதீர் சேவைகள் வழங்குதல், தேனாம்பேட்டை மண்டலத்தில் உள்ள பயனாளிகளுக்கு முன்கூட்டியே ஒதுக்கப்பட்ட நேர அட்டவணையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் தரமான மற்றும் தொடர்ச்சியான சிகிச்சை அளித்தல் ஆகியவற்றிற்காக மாற்றுத்திறனாளிகளுக்கான வட்டார ஒருங்கிணைந்த சேவை மையம் இன்று (01.08.2026) திறந்து வைக்கப்பட்டுள்ளது.</p><p>தென் சென்னையில் வளசரவாக்கம், பெருங்குடி மற்றும் ஈஞ்சம்பாக்கம் ஆகிய மூன்று இடங்களிலும் வட சென்னையில் இரயபுரத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கான வட்டார ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேலும் தென்சென்னையில் சாந்தோம் மற்றும் கண்ணகி நகரில் துணைக் கோட்ட அளவில் இரண்டு ஒருங்கிணைந்த சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தேனாம்பேட்டையில் புதிதாக மாற்றுத்திறனாளிகளுக்கான வட்டார ஒருங்கிணைந்த சேவை மையம் இன்று (01.08.2026) திறந்து வைக்கப்பட்டுள்ளது.</p><p>இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மாலதி ஹெலன், மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர்.கவுஷிக், மாமன்ற உறுப்பினர் நந்தினி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச‌.சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>காவிரி நீரை உடனடியாக தமிழ்நாட்டிற்கு திறந்துவிட சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. அவசர மனு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-files-urgent-petition-in-supreme-court-seeking-immediate-release-of-cauvery-water-to-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-files-urgent-petition-in-supreme-court-seeking-immediate-release-of-cauvery-water-to-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">e36cbeed-6b1d-4e5b-86a2-7cfe21cec109</guid><pubDate>Sat, 01 Aug 2026 12:19:44 +0000</pubDate><atom:updated>2026-08-01T12:19:44.509Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,Supreme Court,சுப்ரீம் கோர்ட்,Cauvery,காவிரி,தி.மு.க.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/8nzkhmb0/National-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/8nzkhmb0/National-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><p>காவிரி நீரை உடனடியாக தமிழ்நாட்டிற்கு திறந்துவிட சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. அவசர மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மூத்த வழக்கறிஞர் பி.வில்சனால் வரைவு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>தி.மு.க. விவசாயிகள் அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் மூலம், சிவில் மேல்முறையீட்டு வழக்கு எண் 2453/2007-ல் இடைக்கால மனுவைத் தாக்கல் செய்து, தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை உடனடியாக திறந்துவிட அவசர உத்தரவு பிறப்பிக்கவும், 16.02.2018 அன்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்தவும், காவிரி நீர் ஒழுங்குமுறை குழு(CWRC) மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம்(CWMA) வழங்கிய உத்தரவுகளை அமல்படுத்தவும் சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. அவசர மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மூத்த வழக்கறிஞர் பி.வில்சனால் வரைவு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>இந்த மனுவில் சுப்ரீம் கோர்ட்டிடம் பின்வரும் நிவாரணங்கள் கோரப்பட்டுள்ளன:</p><p>I. 28.07.2026 அன்று காவிரி நீர் ஒழுங்குமுறை குழு(CWRC) வழங்கியதும், 30.07.2026 அன்று காவிரிநீர் மேலாண்மை ஆணையம் (CWMA) உறுதிசெய்ததுமான உத்தரவை கர்நாடக அரசு உடனடியாக முழுமையாக செயல்படுத்துமாறு உத்தரவிட வேண்டும். அதன்படி, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து தொடர்ந்து 15 நாட்களுக்கு தினமும் 3,500 கனஅடி (கியூசெக்ஸ்) தண்ணீர் பிலிகுண்டுலுவில் திறந்துவிடவும், 29.07.2026 முதல் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையையும் ஈடு செய்யுமாறு உத்தரவிட வேண்டும்.</p><p>II. 26.07.2026 நிலவரப்படி, விகிதாச்சார (Distress Sharing) அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய 9.46 டி.எம்.சி. நீர்பற்றாக்குறையை ஈடு செய்யும் வகையில், 15 நாட்களுக்கு தினமும் சுமார் 7,000 கியூசெக்ஸ் தண்ணீர் பிலிகுண்டுலுவில் கிடைக்குமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.</p> <p>III. கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரையும், பிலிகுண்டுலுவில் கிடைக்கும் நீரின் அளவையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம்(CWMA) தினசரி கண்காணித்து, அதன் அமலாக்க நிலையை சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு உத்தரவிட வேண்டும்.</p><p>IV. வழக்கின் உண்மை நிலைகள் மற்றும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, நீதியை நிலைநாட்டுவதற்குத் தேவையான பிற உரிய உத்தரவுகளையும்சுப்ரீம் கோர்ட்டு பிறப்பிக்க வேண்டும்.</p><p>கர்நாடக அரசு, காவிரி நீர் மேலாண்மை திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள சட்டப்பூர்வ அமைப்புகளின் கட்டாய உத்தரவுகளைப் பின்பற்றாமல் காவிரி நீரைதிறந்துவிட மறுத்துள்ளதால், காவிரி டெல்டா பகுதியைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை இந்த மனு சுட்டிக்காட்டுகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், சுப்ரீம் கோர்ட்டின் 16.02.2018 தீர்ப்பை முழுமையாக அமல்படுத்தவும், உடனடி தலையீடு செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>மேற்கூறிய மேல்முறையீட்டில் திராவிட முன்னேற்ற கழகத்தையும் , காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தையும் (CWMA) ஒரு தரப்பினராக இணைத்துக்கொள்ளுமாறும் தி.மு.க. கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/places-where-there-will-be-power-outage-in-chennai-the-day-after-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/places-where-there-will-be-power-outage-in-chennai-the-day-after-tomorrow#comments</comments><guid isPermaLink="false">2bc743a1-5b5a-49f1-9e11-5bb1bd776154</guid><pubDate>Sat, 01 Aug 2026 12:08:18 +0000</pubDate><atom:updated>2026-08-01T12:08:18.348Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,தாம்பரம்,அடையாறு,maintenance work,பராமரிப்பு பணி,அம்பத்தூர்,மின் தடை power cut</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/gqie9x8j/pwer-cut.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின் தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/gqie9x8j/pwer-cut.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மின்சாரம் நிறுத்தம் தொடர்பாக<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D"> தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் </a>வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு பின்வருமாறு:</p><p>03.08.2026 திங்கட்கிழமை பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம்.</p><p>சென்னையில் 03.08.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><h2> மின் தடை ஏற்படும் இடங்கள்</h2><p><strong>அம்பத்தூர்:</strong> கொரட்டூர், மண்ணூர்பேட்டை, டிஎன்ஹெச்பி, சென்ட்ரல் அவென்யூ, எம்.டி.எச். சாலை, ஆர்.எஸ். சாலை, முகப்பேர் சாலை, கிழக்கு அவென்யூ, மேனாம்பேடு சாலை, திருமுல்லைவாயில் சாலை.</p><p><strong>அடையாறு:</strong> இரட்டைப்பிள்ளையார் கோயில் தெரு, அண்ணா தெரு, பாரதி தெரு, சான் அகாடமி, வ.ஊ.சி. நகர் 1வது முதல் 4வது தெருக்கள் வரை, ஜோஷ்னா ஃபிளாட்ஸ், ஸ்ரீனிவாச நகர், தேவி ஃபிளாட்ஸ், முருகு நகர், கோமதி நகர், ஜெயின் ஃபிளாட்ஸ்.</p><p><strong>தாம்பரம்:</strong> பெரியார் நகர், தேவராஜ் பிள்ளை தெரு, விஜிஎன், நித்யானந்தம் நகர், பெருமாள் கோயில் தெரு, ஜி.எஸ்.டி. சாலை, சர்வீஸ் சாலை, இரும்புலியூர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் செவ்வாய்க்கிழமை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-to-face-power-shutdown-on-tuesday</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-to-face-power-shutdown-on-tuesday#comments</comments><guid isPermaLink="false">ce642ef1-f90a-41dc-8500-4ec44668b33e</guid><pubDate>Sat, 01 Aug 2026 12:07:44 +0000</pubDate><atom:updated>2026-08-01T12:07:44.807Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,மின் நிறுத்தம்,செவ்வாய்க்கிழமை மின்தடை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/6pvg5d0p/power-cut.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின் நிறுத்தம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/6pvg5d0p/power-cut.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் 04.08.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மின் வாரிய பராமரிப்பு பணி</a> காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><h2>வேளச்சேரி</h2><p>சாரதி நகர், தாம்பரம் வேளச்சேரி பிரதான சாலை, மாதவமணி அவென்யூ, சீதாராம் நகர்.</p> <h2>அடையாறு</h2><p> காந்தி மண்டபம் சாலை, சர்தார் பட்டேல் சாலை, கோட்டூர்புரம், ஸ்ரீ நகர் காலனி, வெங்கடாபுரம், சின்னமலை, தரமணி, எல்லையம்மன் கோயில் தெரு, காணகம், கலிகுன்றம், பள்ளிப்பட்டு, ஸ்ரீராம் நகர், நேரு நகர் 1வது முதல் 4வது தெருக்கள் வரை, கே.பி. நகர் 1 வது முதல் 5வது பிரதான சாலைகள், அடையாறு 6வது பிரதான சாலை, கோவிந்தராஜபுரம், பக்தவத்சலம் நகர் 1வது முதல் 5வது சாலைகள்.</p><h2>முடிச்சூர்</h2><p>அஷ்டலட்சுமி நகர், மகாலட்சுமி நகர், குமரன் நகர், ஏ.என். காலனி, மணிமங்கலம் பிரதான சாலை, சாஸ்திரி நகர், கணேசபுரம் பிரதான சாலை.</p><h2>மேடவாக்கம்</h2><p>பெரும்பாக்கம் சேகரன் மால், கைலாஷ் நகர், ஸ்ரீ பெருமாள் நகர், அந்தோணி நகர், பஜனை கோயில் தெரு, நுக்கம்பாளையம் சாலை, மாடம்பாக்கம் கண்ணதாசன் தெரு, கருணாநிதி 1வது முதல் 7வது தெருக்கள் வரை, விசாலாட்சி நகர், ஜான் தெரு, தாமஸ் தெரு, விக்னராஜபுரம் 6வது தெரு, கோபாலபுரம் நகர், விக்னராஜபுரம் மோஹி ப்ளோரன்ஸ், குரு கணேஷ் நகர், பார்த்தசாரதி நகர், பள்ளிக்கரணை, ராஜலட்சுமி நகர், வள்ளல் பாரி நகர், சாய் பாலாஜி நகர், கிருஷ்ணா நகர், துளுக்காத்தம்மன் கோயில் பிரதான சாலை, அருண் நகர், வெங்கடேஸ்வரா நகர், ஜெயபால் நகர், மல்லிகேஸ்வரன் நகர், ஆதிசாமி நகர்.</p><h2>செயின்ட் தாமஸ் மவுண்ட்</h2><p>ராமர் கோயில் தெரு, மவுண்ட் பூந்தமல்லி சாலை, நசரத்புரம், கணபதி காலனி, வசந்தம் நகர், கலைஞர் நகர், தண்டுமா நகர், போலீஸ் குடியிருப்பு, செவன் ஹில்ஸ் தெரு, மீனம்பாக்கம், பாண்டியன் தெரு, மாரிசன் 1வது முதல் 6வது தெரு வரை, திருவள்ளுவர் நகர், எம்.கே.என் சாலை, குமரன் நகர், குளத்துமேடு, மாங்காளியம்மன் கோயில் தெரு, டிபன்ஸ் காலனி, பர்மா காலனி, கரையார் கோயில் தெரு, நார்த் பரேட் சாலை, இந்திரா நகர், அதிகாரி பயிற்சி அகாடமி, நேவி ரெசிடென்சி பகுதி, வுட்கிரீக் கன்ட்ரி, துளசிங்கபுரம், மாரியாபுரம், மாத்தியாஸ் நகர், ஐரோப்பியன் லைன், பஜார் சாலை, மேட்டு தெரு, ஆர்காட் பேட்டை, ஹாப்மேன் 1வது மற்றும் 2வது தெரு, வி.ஜி.பி முர்பி சதுக்கம், நோபல் தெரு, கண்ணன் காலனி, ஆசிரியர் காலனி, எம்.ஜி.ஆர் நகர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறையை ஆதரிப்பவர்கள் எட்டப்பர்கள்; ராகுல் காந்தி காட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/those-who-support-constituency-redelineation-are-idiots-rahul-gandhi-is-a-joke</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/those-who-support-constituency-redelineation-are-idiots-rahul-gandhi-is-a-joke#comments</comments><guid isPermaLink="false">2f5ba863-57b4-438b-b026-497a812a5574</guid><pubDate>Sat, 01 Aug 2026 12:05:13 +0000</pubDate><atom:updated>2026-08-01T12:05:13.089Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,காங்கிரஸ்,Congress,ராகுல் காந்தி,Rahul Gandhi ராகுல்காந்தி,தொகுதி மறுவரையறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/1bqzvt1m/one33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  ராகுல் காந்தி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/1bqzvt1m/one33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம், மாமல்லபுரத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு சொந்தமான கடற்கரை விடுதியில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முகாமின் நிறைவு நாளான இன்று ராகுல் காந்தி பங்கேற்று, மாவட்டத் தலைவர்களிடம் கட்சியின் எதிர்கால அரசியல் திட்டங்கள், அமைப்பு வலுப்படுத்தல் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை வழங்கினார். </p><p>அதனை தொடர்ந்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D">ராகுல் காந்தி </a>செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- </p><p>தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும். தொகுதி மறுவரையறையை ஒவ்வொரு மாநில, தேசிய கட்சியும், தோற்கடிக்க வேண்டும். </p><p>தமிழ்நாடு மற்றும் தமிழக மக்களின் எதிர்காலம் குறித்த பிரச்சினை இது. தொகுதி மறுவரையறையை ஆதரிப்பவர்கள் எட்டப்பர்கள். தொகுதி மறுவரையறை தமிழ்நாடு மக்களிடம் இருந்து அதிகாரத்தை பறித்துவிடும் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>பயணிகள் கவனத்திற்கு.... மதுரை கோட்டத்தில் பொறியியல் பணி: தென்பகுதி ரெயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/attention-passengers-engineering-work-in-madurai-division-trains-to-the-southern-region-to-operate-via-diverted-routes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/attention-passengers-engineering-work-in-madurai-division-trains-to-the-southern-region-to-operate-via-diverted-routes#comments</comments><guid isPermaLink="false">7b6834d5-2f81-4b6f-b09e-025a2a373dc6</guid><pubDate>Sat, 01 Aug 2026 11:53:22 +0000</pubDate><atom:updated>2026-08-01T11:53:22.917Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,train,ரெயில்,Railways</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/5orzj71o/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/5orzj71o/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரை கோட்டத்தில் பொறியியல் பணிகள் நடைபெற்று வருவதால், செங்கோட்டை-மயிலாடுதுறை விரைவு ரெயில் உள்பட பல்வேறு ரெயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படவுள்ளன.</p><p>திருச்சி ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“மதுரை ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் நடைபெற்று வருவதால், சில ரெயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கோட்டை மயிலாடுதுறை விரைவு ரெயில் (எண்: 16848): ஆகஸ்ட் 1, 2, 3, 4, 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கொடைரோடு, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ஆகிய ரெயில் நிலையங்களைத் தவிர்த்து, மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை ரோடு, காரைக்குடி, புதுக்கோட்டை மற்றும் கீரனூர் வழியாக திருச்சிக்கு இயக்கப்படும்.</p><p>நாகர்கோவில் மும்பை சி.எஸ்.டி.எம். விரைவு ரெயில் (எண்: 16352): ஆகஸ்ட் 2 மற்றும் 6 ஆகிய தேதிகளில் கொடைரோடு, திண்டுக்கல் ஆகிய ரெயில் நிலையங்களைத் தவிர்த்து, மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு இயக்கப்படும். </p><p>கன்னியாகுமரி ஹவுரா அதிவிரைவு ரயில் (எண்: 12666): கொடைரோடு, திண்டுக்கல் ரெயில் நிலையங்களைத் தவிர்த்து, மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு இயக்கப்படும். குருவாயூர் சென்னை எழும்பூர் விரைவு ரெயில் (எண்: 16128): ஆகஸ்ட் 1, 2, 3, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் மதுரை, சோழவந்தான், கொடைரோடு, திண் டுக்கல், மணப்பாறை ஆகிய ரெயில் நிலையங்களைத் தவிர்த்து, விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு இயக்கப்படும். </p><p>கன்னியாகுமரி ஐதராபாத் விரைவு ரெயில் (எண்:17070): ஆகஸ்ட் 7-ந்தேதி கொடைரோடு, திண்டுக்கல் ரெயில் நிலையங்களைத் தவிர்த்து, மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு இயக்கப்படும்.</p><p>பகுதியாக ரத்து:</p><p>பாலக்காடு டவுன் திருச்சி விரைவு ரெயில் (எண்: 16844) ஆகஸ்ட் 1, 4, 6 மற்றும் 8 ஆகிய தேதிகளில் பாலக்காடு டவுன் முதல் புகளூர் வரை மட்டுமே இயக்கப்படும். புகளூர் முதல் திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மனைவியின் கள்ளக்காதலனை கூலிப்படையை மூலம் கொலை செய்ய கணவர் ஏற்பாடு; கோர்ட்டில் பரபரப்பு சம்பவம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/husband-arranges-to-have-his-wifes-alleged-killer-killed-by-mercenaries</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/husband-arranges-to-have-his-wifes-alleged-killer-killed-by-mercenaries#comments</comments><guid isPermaLink="false">35525d84-8c96-4ef8-b65e-34d380f752cf</guid><pubDate>Sat, 01 Aug 2026 11:36:44 +0000</pubDate><atom:updated>2026-08-01T11:36:44.631Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவள்ளூர்,கள்ளக்காதல்,கிரைம் செய்திகள்,girl,VCK</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/m3uhilln/women33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கோர்ட்டில் பரபரப்பு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/m3uhilln/women33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர், </p><p>திருநின்றவூர் விசிக பெண் கவுன்சிலரை கொல்லந் தூண்டிய வழக்கில் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆராக வந்த கள்ளக்காதலனை, கணவர் கூலிப்படையை வைத்து வெட்டிக் கொலை செய்ய திட்டம் தீட்டி காத்தி குந்தபோது போலீசார் சுற்றி வளைத்து கைது செய்ய முற்பட்டபோது இருவர் பிடிபட்டனர். இதில் தப்பி ஓடிய கணவர் உள்ளிட்ட பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.</p><h2>விசக பெண் கவுன்சிலர்</h2><p>திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்தபிரபல ரவுடி ஜோசப் என்பவர் அதே பகுதியைச் சேர்த்த ஸ்டீபன்ராஜ் மனைவியும் விசிக கவுன்சிலரான கோமதி என்பருடன் கள்ளக்காதல் இருந்துவந்துள்து.</p><p>இந்நிலையில் பலமுறை மனைவியை கண்டித்தும் கேட்காததாள் ஆத்திரத்தில் கவுன்சிலர் கோமதியை அவரது கணவர் ஸ்டீபன் ராஜ் 2023-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி வெட்டி கொலை செய்தார்.</p><p>இந்த கொலை வழக்கில் திருநின்றவூர் போலீசார் கோமதியின் கணவர் ஸ்டீபன் ராஜ், அஜித், ஜான் கள்ளக்காதலன் ரவுடி ஜோசப் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்.</p><h2>பிரபல ரவுடி ஜோசப்</h2><p>இந்த வழக்கில் அனைவரும் ஜாமினில் வெளியே வந்தநிலையில் கள்ளக்காதலான பிரபல ரவுடி ஜோசப் மீது 10-க்கும் மேற்பட்ட குற்றவழக்குகள்நிலுவையில் இருந்து வருகிறது.</p><p>இதில் ஒரு வழக்கில் கடந்த நான்கு தினங்களாக திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்துஇட்டுவந்துள்ளார். இதனைத் தெரிந்து கொண்ட ஸ்டீபன் ராஜ் தனதுமனைவியை கொலை செய்ய காரணமாக இருந்த கள்ளக்காதலன் ஜோசப்பை கூலிப்படை னவத்து கொலைசெய்யதிட்டம் தீட டியது, சைபர் கிரைம்காவல் துறை மூலம் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் பிரனித்துக்கு தெரிய வந்ததை தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் தனி சிறப்பு படை உஷார் படுத்தப்பட்டது.</p><h2>நீதிமன்றத்தில் வைத்து கொலை</h2><p>இந்த நிலையில் நேற்று திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஜொசப்பை நீதிமன்ற வளாகத்திலேயே வைத்து கொலை செய்து விடுவது என முடிவு செய்து ஒரு ஆட்டோவில் கணவர் ஸ்டீபன் ராஜ்தலைமையில் ஆறுபேர்கொண்ட கூலிப்படையினர் பயங்கர ஆயுதங்களுடன் நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்தனர்.</p><p>ஆனால் ரவுடி ஜோசப் மதியம் மணி ஆகியும் நீதி மன்றத்தை விட்டு வெளி வராததால், அந்தகும்பல் திருவள்ளூர் அடுத்தவேடங்கிய நல்லூர் பகுதியில் மது அருந்த சென்றபோது தனி சிறப்புப் படை போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர் அப்போது கோமதியின் கணவர் ஸ்டீபன் ராஜ் உள்ளிட்ட மூவர் தப்பியோடிய நிலையில் திருநின்றவூர்பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் (வயது 45) பிரபாகரன் (வயது 34)  ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>ஆட்டோவில் ஆயுதங்கள்</h2><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D">கள்ளக்காதலன்</a> ரவுடி ஜோசப்பை கொல்ல ஆட்டோவில் கொண்டு வந்த அரிவாள் போன்ற ஆயுதங்சுளைமற்றும் மிளகாய் பொடி பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சினிமா காட்சிகளில் வருவதுபோல் இச்சம்பவம் திருவள்ளூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முன்னாள் எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் தவெக-வில் இணைந்தனர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thousands-join-tamil-nadu-vetri-kazhagam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thousands-join-tamil-nadu-vetri-kazhagam#comments</comments><guid isPermaLink="false">a65c1c25-9cd9-4901-9528-7ad3ab720005</guid><pubDate>Sat, 01 Aug 2026 11:32:25 +0000</pubDate><atom:updated>2026-08-01T11:32:25.842Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,எம்.எல்.ஏ,MLAs,Former,முன்னாள்,எம்.பி,join,இணைந்தனர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/zxa3ewlc/EXPARTY-MEMBER.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பொதுச்செயலாளர் என்.ஆனந்த்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/zxa3ewlc/EXPARTY-MEMBER.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முன்னாள் எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தங்களை தவெக-வில் இணைத்துக்கொண்டனர்.</p><h2> இணைப்பு விழா</h2><p>தமிழக வெற்றிக் கழகத் தலைவர், தமிழ்நாடு முதல்-அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">விஜய்</a> வாழ்த்துக்களுடன், தவெக பொதுச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D">என்.ஆனந்த்</a> தலைமையில் பனையூரில் உள்ள தலைமை நிலைய செயலக அலுவலகத்தில் பிரம்மாண்ட இணைப்பு விழா நடைபெற்றது.</p><p><strong>இந்த விழாவில் முக்கிய அரசியல் பிரமுகர்களான:</strong></p><p>முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சீனிவாசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் மாலா ஆகியோர் தங்களை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக்கொண்டனர்.</p> <h2>ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வருகை</h2><p>மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகிய முன்னாள் மக்கள் பிரதிநிதிகளுடன், ஆயிரத்திற்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சென்னை பனையூர் அலுவலகத்தில் திரண்டு தவெக-வில் இணைந்தனர். இவர்களை கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் சால்வை அணிவித்து வரவேற்றார்.</p> <h2>நிகழ்ச்சி</h2><p>இந்நிகழ்வில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம்வி. கருப்பையா, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  மரகதம் குமரவேல், முன்னாள் எம்.பி. பாலகங்கா, முன்னாள் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தன், வேலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் வேல்முருகன், கழக நிர்வாகி சினோரா பி.எஸ்.அசோக், கழக செய்தி தொடர்பாளர் இராவுத்தர் இம்பிராகிம், கமலக்கண்ணன் மற்றும் கழக நிர்வாகிகள்  கலந்துகொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை ஏற்றது சி.பி.ஐ. - புதிய வழக்கு பதிவு செய்ய ஏற்பாடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cbi-takes-over-armstrong-murder-case-investigation-arrangements-made-to-register-a-new-case</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cbi-takes-over-armstrong-murder-case-investigation-arrangements-made-to-register-a-new-case#comments</comments><guid isPermaLink="false">9b281431-cccc-43f0-98f0-a88b44a5bf2f</guid><pubDate>Sat, 01 Aug 2026 11:30:23 +0000</pubDate><atom:updated>2026-08-01T11:30:23.630Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>CBI,சி.பி.ஐ.,Armstrong,ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/d5bmqqgp/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/d5bmqqgp/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சி.பி.ஐ. ஏற்றுக்கொண்டது. தேவைப்பட்டால் புதிய வழக்கை பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சிறையில் இருப்பவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக செயல்பட்டவர் ஆம்ஸ்ட்ராங். இவர் சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை 5-ந்தேதி ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அன்றைய தினம் இரவில் அவர் ஒரு கட்டுமானப் பணியை ஆய்வு செய்து கொண்டிருந்த சமயத்தில் மர்ம நபர்கள் சிலர் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினர்.</p> <p>இதில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. இந்த கொலை வழக்கு தொடர்பாக செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுப் படை அமைக்கப்பட்டது. மொத்தம் 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். 7,800 பக்க குற்றப்பத்திரிகையும் தயாரானது. </p><p>இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒருவர் மருத்துவ சிகிச்சையின்போது உயிரிழந்தார். சிலருக்கு ஜாமினும் கிடைத்தது. இந்த வழக்கை தமிழக போலீசார் நேர்மையாக விசாரிக்கவில்லை என்று ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி குறிப்பிட்டார். பகுஜன் சமாஜ் கட்சியின் அகில இந்திய தலைவர் மாயாவதியும் சென்னைக்கு நேரில் வந்தார். இந்த வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் கூறினார். </p><p>ஆனால் அப்போதைய தமிழக அரசு இதற்கு உடன்படவில்லை. எனவே ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் இம்மானுவேல் சி.பி.ஐ. விசாரணை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் இவ்வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என கடந்த ஆண்டு டிசம்பர் 24-ந்தேதி உத்தரவிட்டது. </p><p>இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. சுப்ரீம் கோர்ட்டும் இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தமிழக அரசு சமீபத்தில் திரும்பப் பெற்றுக் கொண்டது. </p> <p>இதையடுத்து இவ்வழக்கின் விசாரணையை சி.பி.ஐ. மேற்கொள்ள எந்த தடையும் இல்லை என்ற நிலை ஏற்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை ஆவணங்கள் அனைத்தையும் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் சென்னை போலீசார் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் இந்த கொலை தொடர்பாக மறுவழக்கு பதிவு செய்ய உள்ளனர். மேலும் சிறையில் இருப்பவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். இதனால் இனிவரும் காலங்களில் இந்த வழக்கின் விசாரணை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p> ]]></content:encoded></item><item><title>பயிர்க்கடன் தள்ளுபடி என்று அறிவித்து விட்டு, வட்டியுடன் செலுத்த கட்டாயப்படுத்துவதா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/declare-crop-loan-waivers-and-force-them-to-pay-with-interest-question-by-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/declare-crop-loan-waivers-and-force-them-to-pay-with-interest-question-by-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">87053e5a-ec5e-42a8-ab4c-4c40ac7e58e2</guid><pubDate>Sat, 01 Aug 2026 11:28:51 +0000</pubDate><atom:updated>2026-08-01T11:28:51.957Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,சென்னை,Crop loan,Waiver,Dr Anbumani Ramadoss,பயிர்க்கடன் தள்ளுபடி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/ucv94ih5/31.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/ucv94ih5/31.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களில் உழவர்கள் வாங்கிய பயிர்க்கடன்கள் சில நிபந்தனைகளுடன் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாக தமிழக அரசு அறிவித்திருக்கும் நிலையில், கடன் பெற்ற விவசாயிகள் அதற்கான தவணைத் தொகையை வட்டியுடன் செலுத்த வேண்டும் என்று கூட்டுறவு சங்கங்கள்  அறிவிக்கை அனுப்பியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.  வறட்சி பாதிப்பால் ஏற்கனவே வாடிக் கொண்டிருக்கும் விவசாயிகளை இத்தகைய அறிவிக்கைகள் மூலம் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்குவது கண்டிக்கத்தக்கது.</p><h2>பயிர்க்கடன்</h2><p>மதுரை மாவட்டம்  கள்ளந்திரி பகுதியில் உள்ள பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர்க்கடன் பெற்ற  விவசாயிகள் அனைவருக்கும்  இந்த அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது.  அந்த அறிவிக்கையில்.’’ அரசால் அறிவிக்கப்பட்ட கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடியை பெறுவதற்கு தகுதி பெற்ற உழவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு,  அவர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட தொகை அரசால்  விடுவிக்கப்படும் வரை, கடன் பெற்ற உழவர்கள் தவறாமல் தவணை செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தா விட்டால்  அவர்களின் கடன்கள் தவணை தவறிய கடன்களாக கருதப்படும். கடன் தொகை  இறுதி செய்யப்பட்டு கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு விடுவிக்கும் போது அந்தத் தொகை சம்பந்தப்பட்ட விவசாயிகளிம் சேமிப்புக் கணக்கில் செலுத்தப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதே போன்று  தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ள  கூட்டுறவு சங்கங்களும் பயிர்க்கடன்  பெற்ற  உழவர்களுக்கு இதே போன்ற  அறிவிக்கையை  அனுப்பியுள்ளன. இதனால் உழவர்கள் பெரும் கவலைக்குள்ளாகியுள்ளனர்.  தமிழ்நாடு அரசின் இந்த  நிர்வாக அணுகுமுறை மிகவும் தவறானது.</p><h2>கடன் தொகை தவணை</h2><p>கடந்த காலங்களில் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து சில நாள்களில் அரசாணை பிறப்பிக்கப்படும். அந்த நாளில் உழவர்களின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு விடும். அதற்கான சான்றுகள்  விவசாயிகளுக்கு வழங்கப்படும். அதனால், உழவர்கள் நிம்மதி அடைவதுடன் அடுத்த பருவத்திற்கு பயிர்க்கடன் பெறுவதற்கும் தகுதி பெறுவார்கள்.  ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக, அரசு கடன் தொகையை செலுத்தும் வரை விவசாயிகள் கடன் தவணையை வட்டியுடன் செலுத்த  வேண்டும்  என்பதும், தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகை உழவர்களின் சேமிப்புக் கணக்கில் தான் செலுத்தப்படும் என்பதும் நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்றாகும்.</p><p>பயிர்க்கடன் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு  தொடக்கம் முதலாகவே நேர்மையுடன் செயல்படவில்லை. சிறு. குறு விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்  என்று வாக்குறுதி அளித்திருந்த  தவெக, ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.50 ஆயிரம் வரையிலான கடன்கள் மட்டுமே முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தது. அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும்  எதிர்ப்பு தெரிவித்ததால் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் கடன் தொகையின் அளவை ரூ.75 ஆயிரமாக உயர்த்தியது. இப்போது  கடன் தவணையை உடனடியாக  செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது.</p><h2>நிவாரணம்</h2><p>தமிழக உழவர்கள்  ஏற்கனவே  வாழ முடியாத அளவுக்கு  துயரத்தில் வாடிக் கொண்டிருக்கின்றனர்.   நடப்பாண்டில் தென் மேற்கு பருவமழை பொய்த்ததால்  தமிழ்நாடு முழுவதும் கடுமையான வறட்சி நிலவுகிறது. வறட்சியால் பாதிக்கப்பட்டு, குறுவை சாகுபடி செய்ய முடியாத விவசாயிகளுக்கு அரசுத்  தரப்பில் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்ற  கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், அவர்களை பயிர்க்கடன்களை செலுத்தும்படி கட்டாயப்படுத்துவது மனிதநேயமற்ற செயலாகும்.</p><p>தமிழக அரசு  மற்றும் கூட்டுறவுத் துறையின் தவறான அணுகுமுறையும்,  நிர்வாகக் குளறுபடிகளும் தான் அனைத்து குழப்பங்களுக்கும் காரணம் ஆகும்.  இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட்டு, உழவர்களிடம் பயிர்க்கடன் தவணைகளைக் கேட்டு தொல்லை கொடுக்கக் கூடாது என கூட்டுறவு சங்கங்களுக்கு ஆணையிட வேண்டும்; கடன் தள்ளுபடி தொகையை உடனடியாக கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பி, பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை உழவர்களுக்கு வழங்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காப்பிதோட்டத்தில் விரட்டிய காட்டு யானை: தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-chases-worker-in-coffee-plantation-tragedy-strikes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-chases-worker-in-coffee-plantation-tragedy-strikes#comments</comments><guid isPermaLink="false">3fa0db9a-4b12-4a4c-9413-e071558fc91a</guid><pubDate>Sat, 01 Aug 2026 11:22:40 +0000</pubDate><atom:updated>2026-08-01T11:22:40.718Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தாக்குதல்,நீலகிரி,காட்டு யானை,Nilagiris,worker death,தொழிலாளி உயிரிழப்பு,Wild elephant attacked</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/ezexkcxu/54.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ பாலசுப்பிரமணியம்]]></media:title><media:description type="html"><![CDATA[ யானை தாக்கி எஸ்டேட் தொழிலாளி உயிரிழந்தார்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/ezexkcxu/54.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி, </p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நீலகிரி மாவட்டம்</a> கூடலூர் அருகே காட்டு யானை தாக்கியதில் எஸ்டேட் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.</p><h2>திடீரென புகுந்த காட்டு யானை</h2><p>நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவாலா அருகே உள்ள கரியசோலை பகுதியில் ஒரு தனியார் காபி தோட்டம் அமைந்துள்ளது. இந்தத் தோட்டத்தில், அப்பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் (வயது 65) என்ற தொழிலாளி, சக தொழிலாளர்களுடன் இணைந்து வழக்கம் போல காபி மற்றும் தேயிலை தோட்டப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அடர்ந்த வனப்பகுதியிலிருந்து வெளியேறிய<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> காட்டு யானை</a> ஒன்று திடீரென தோட்டப் பகுதிக்குள் நுழைந்தது.</p><h2>தாக்குதலில் பறிபோன உயிர்</h2><p>தோட்டத்திற்குள் யானை வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் தப்பியோட முயன்றனர். அப்போது அங்கிருந்த காட்டு யானை, பாலசுப்பிரமணியத்தை திடீரென துரத்திச் சென்று தாக்கியது. இதில் நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தபோது, யானை அவரை மீண்டும் கொடூரமாக தாக்கியது. இந்த பயங்கர தாக்குதலில் பலத்த காயமடைந்த பாலசுப்பிரமணியம், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>வனத்துறை அதிகாரிகள் விசாரணை</h2><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் தொழிலாளியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக மனித-விலங்கு மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அப்பகுதி எஸ்டேட் தொழிலாளர்களும் பொதுமக்களும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.</p><p>வனத்துறையினர் இப்பகுதியில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> பொதுமக்கள் கோரிக்கை </a>விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>காரிய பூனைதான் திமுக: தவெக பதிலடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-is-a-business-cat-tvks-response</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-is-a-business-cat-tvks-response#comments</comments><guid isPermaLink="false">eec2b385-5c0e-46c4-a973-b511638a01a0</guid><pubDate>Sat, 01 Aug 2026 11:05:32 +0000</pubDate><atom:updated>2026-08-01T11:05:32.172Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,திமுக,DMK,சென்னை,பூனை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/2houcsyn/153.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விஜய் ,ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/2houcsyn/153.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4.%E0%AE%B5%E0%AF%86.%E0%AE%95">த.வெ.க</a> தகவல் தொழில்நுட்ப அணி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>விவசாயிகள் நலன்களுக்காகவும் கர்நாடக வாழ் தமிழ் சொந்தங்களுக்காகவும் யோசித்துச் செயல்படுவதுதான் மக்கள் விரும்பும் முதல்-அமைச்சர், நம் வெற்றித் தலைவர், தமிழ்நாடு முதல்-அமைச்சரின் மனசாட்சி உள்ள மக்களாட்சி.</p><h2>காவிரி விவகாரம்</h2><p>திமுக போல சுயநலம் கொண்டு தனி ஆவர்த்தனம் செய்யத் துடிப்பவர் இல்லை, எங்கள் வெற்றித்தலைவர். தொடர்ந்து பல ஆண்டுகளாக மத்திய அரசிடம் பேரம் பேசி, பெற வேண்டிய இலாகாக்களை பெற்ற போதெல்லாம் காவிரி விவகாரத்திற்காக ஒரு மந்திரி பதவியையாவது, ஒருநாளாவது உதறி இருக்குமா இந்தத் திமுக? அத்தனை ஆண்டுகளில் ஒருமுறையாவது காவிரிப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண முயன்றிருக்குமா இந்தத் திமுக? அப்போதெல்லாம் பதவியில் ஒட்டிக்கொண்டு சுகம் கண்ட சுயநல இயக்கம்தான் இந்தத் திமுக.</p><h2>காரிய பூனைதான் திமுக</h2><p>ஆட்சியில் இருக்கும்போது சத்தம் போடுவதுபோல சவுண்ட் கொடுத்துவிட்டு, மியூட் மோடுக்குச் சென்று, மியாவ் என்று கூட சத்தம் எழுப்பாத காரிய பூனைதான் திமுக. ஆனால், ஆட்சி பறிபோன பிறகு பாருங்கள் மண், மொழி, மானம் என்று உரிமை முழக்கத்தை எழுப்பி எம்பி எம்பிக் குதிக்கும். எப்போதும் மக்களை தூண்டிவிட்டு குளிர்காயும் திமுக, இப்போது எரிச்சல் மற்றும் விரக்தி மோடில் அலறிக்கொண்டு இருக்கிறது. கடந்த மே மாதத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட கட்சியாகத் தவிக்கும் திமுக, காவிரி விவகாரத்தில் கபட நாடகமாடுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள்.</p><p> எனவே, காவிரி பிரச்சனையில் ஸ்டாலின், திமுக ஆட்சி போய் விட்டதே,  தவெக ஆட்சி வந்து விட்டதே என்று வன்மமாக பேசாமல் மக்கள் நலன் சார்ந்து உண்மையாக பேச வேண்டும். அப்படி அவரால் பேச முடியுமா முடியாதா? என்றால் அவர் உள்மனம் முடியாது என்றுதான் உண்மையான வன்மம் பேசும். இது அவர் மட்டுமன்று, உலகமே அறிந்த உண்மை.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் காங்கிரஸ் வளர்ச்சிக்கு உட்கட்சி பூசலே முட்டுக்கட்டை - ராகுல் காந்தி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/internal-party-feud-is-a-stumbling-block-to-congresss-growth-in-tamil-nadu-rahul-gandhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/internal-party-feud-is-a-stumbling-block-to-congresss-growth-in-tamil-nadu-rahul-gandhi#comments</comments><guid isPermaLink="false">cd795edb-75b6-46dc-a910-80a9af957f88</guid><pubDate>Sat, 01 Aug 2026 10:46:53 +0000</pubDate><atom:updated>2026-08-01T10:46:53.782Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,ராகுல் காந்தி,Ragul Gandhi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/4qfjf10d/raggul-444.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல் காந்தி ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/4qfjf10d/raggul-444.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு உட்கட்சி பூசலே முட்டுக்கட்டையாக உள்ளது என ராகுல் காந்தி கூறியுள்ளார்.</p><p>தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம், மாமல்லபுரத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு சொந்தமான கடற்கரை விடுதியில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முகாமின் நிறைவு நாளான இன்று <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D">ராகுல் காந்தி </a>பங்கேற்று, மாவட்டத் தலைவர்களிடம் கட்சியின் எதிர்கால அரசியல் திட்டங்கள், அமைப்பு வலுப்படுத்தல் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை வழங்கினார். அதனை தொடர்ந்து,</p><p>மாமல்லபுரத்தில் நடைபெற்ற மாவட்ட தலைவர்கள் பயிற்சி முகாம் நிறைவு விழாவில் ராகுல் காந்தி பேசியதாவது:-</p><p>உட்கட்சி பூசல் மற்றும் பல அணிகளாக செயல்படுவதே தமிழகத்தில் காங்கிரஸ் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது.  கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளை டெல்லியில் இருந்து கண்காணித்து வருகிறோம்.</p><p>நிர்வாகிகளை அரவணைத்து செல்லாத தலைவர்களுக்கு காங்கிரஸில் இனி இடமில்லை </p><p>புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட தலைவர்கள் தலைமையின் வழிகாட்டுதலின்படி செயல்பட வேண்டும். கட்சிக்கு விஸ்வாசமாக செயல்படுபவர்களுக்கு மட்டுமே எதிர்காலத்தில் வாய்ப்புகள் வழங்கப்படும். </p><p>தவறு செய்பவர்கள் கட்சி நிர்வாகிகளை அரவணைத்து செல்லாத தலைவர்களுக்கு காங்கிரஸ் சில் இனி இடமில்லை </p><p>இளைஞர்களை அதிக அளவில் கட்சியில் இணைத்து, காங்கிரஸின் அடுத்த கட்ட வளர்ச்சிக்காக பணியாற்ற வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>விளைநிலங்களில் குழாய் பதிக்கும் திட்டத்தை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் கைவிட வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bharat-petroleum-corporation-should-abandon-the-plan-to-lay-pipelines-through-agricultural-lands-communist-party-of-india-insists</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bharat-petroleum-corporation-should-abandon-the-plan-to-lay-pipelines-through-agricultural-lands-communist-party-of-india-insists#comments</comments><guid isPermaLink="false">cd7598b9-a969-4664-b5fa-3307dfd1e5ff</guid><pubDate>Sat, 01 Aug 2026 10:27:31 +0000</pubDate><atom:updated>2026-08-01T10:27:31.749Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,Communist Party of India,pipeline,விளைநிலங்கள்,குழாய்கள் பதிக்கும் பணி,திருப்பூர் மாவட்டத்தில்,பாரத் பெட்ரோலியம்,Bharat Petroleum</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/57s8z9o8/152.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்திய கம்யூனிஸ்ட் கட்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/57s8z9o8/152.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விளைநிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.</p><p>இது தொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்</a> தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் கோவை மாவட்டம் இருகூர் முதல் கர்நாடக மாநிலம் தேவன குந்தி வரையில் 340 கிலோ மீட்டர் தொலைவிற்கு எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.</p><h2>விவசாய விளைநிலங்கள்</h2><p>திருப்பூர் மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் இருந்து கர்நாடக மாநிலம் தேவனகுந்தி வரை நெடுஞ்சாலை வழியாக குழாய் பதிக்கப்படுகிறது. ஆனால், இருகூரிலிருந்து முத்தூர் வரையிலான 70 கிலோமீட்டர் தூரத்திற்கு விவசாய விளைநிலங்கள் வழியாக குழாய்களை பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இது விவசாயிகளின் நலன்களுக்கு எதிரானது. </p><p>இதற்கு விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதை கவனத்தில் கொள்ளாமல்  போலீஸ் பாதுகாப்புடன் நேற்று விவசாய நிலங்களில் குழாய்பதிக்கும் பணிகள் நடந்துள்ளன.</p><h2>போராட்டம்</h2><p>இதை கண்டித்தும், இந்தப் பணிகளை கைவிடக்கோரியும் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வேலம்பட்டி டோல்கேட் பகுதியில் விவசாயிகள் திரண்டு, விளை நிலங்களில் குழாய் பதிக்க அனுமதிக்க மாட்டோம் , நெடுஞ்சாலை வழியாக குழாய்களை பதிக்கவேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் - தாராபுரம் பிரதான சாலையில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்படும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.</p><h2>வலியுறுத்தல்</h2><p>எனவே, விளை நிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் கைவிட வேண்டும்.நெடுஞ்சாலை வழியாக குழாய்  பதிக்கும் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் . அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு எடுக்க வேண்டுமென, <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்</a> தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஐசிஎப் நிறுவனத்தின் புதிய பொது மேலாளராக மனிஷ் அகர்வால் பொறுப்பேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/manish-agarwal-takes-over-as-the-new-general-manager-of-icf</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/manish-agarwal-takes-over-as-the-new-general-manager-of-icf#comments</comments><guid isPermaLink="false">45be1e72-1899-4a3e-90e5-ad10eb48cb41</guid><pubDate>Sat, 01 Aug 2026 10:07:10 +0000</pubDate><atom:updated>2026-08-01T10:07:10.297Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,பொது மேலாளர்,General Manager,ரெயில் பெட்டிகள்,New,Responsibility பொறுப்பேற்பு,ICF factory</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/13sdyiso/151.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஐசிஎப் நிறுவனம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/13sdyiso/151.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலையின் (Integral Coach Factory – ICF) புதிய பொது மேலாளராக மனிஷ் அகர்வால் இன்று பொறுப்பேற்றுள்ளார்.</p><p>இதற்கு முன்பு ஐசிஎப் பொது மேலாளராக பணியாற்றிய யு. சுப்பா ராவ், தற்போது தெற்கு ரெயில்வேயின் பொது மேலாளராக பொறுப்பேற்றுள்ளதை அடுத்து மனிஷ் அகர்வால் இந்த புதிய பொறுப்பை ஏற்றுள்ளார்.</p><h2>35 ஆண்டுகள் அனுபவம்</h2><p>மனிஷ் அகர்வால் 1989-ஆம் ஆண்டு பேட்ச் இந்திய ரெயில்வே மெக்கானிக்கல் இன்ஜினியர்ஸ் (IRSME) பிரிவை சேர்ந்த மூத்த அதிகாரி ஆவார். ரெயில்வே துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றிய நீண்ட அனுபவம் கொண்டவர்.</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D">ஐசிஎப்</a> பொது மேலாளராக பொறுப்பேற்பதற்கு முன்பு, அவர் ரெயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) நிறுவனத்தில் முதன்மை செயல் இயக்குநராக (மெக்கானிக்கல்) பணியாற்றி வந்தார். மேலும், திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளராகவும் (DRM) அவர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>காவிரி நீர் விவகாரம்: ஆகஸ்ட் 7-ல் தமிழக கட்சிகள் ஓரணியில் ஆர்ப்பாட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-united-parties-august-7-cauvery-mega-protest</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-united-parties-august-7-cauvery-mega-protest#comments</comments><guid isPermaLink="false">8bb9d804-6939-429a-80d6-e39f079317f0</guid><pubDate>Sat, 01 Aug 2026 09:53:48 +0000</pubDate><atom:updated>2026-08-01T09:53:48.955Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காவிரி நீர்,அனைத்து கட்சிகள் கூட்டம்,விவகாரம்,ஆர்ப்பாட்டம்protest,Cauvery Water Issue,All Parties</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/goqng11u/krishnasamy.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/goqng11u/krishnasamy.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மத்திய, மாநில அரசுகளுக்கு உரிய அழுத்தம் கொடுக்கும் வகையில், வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி சென்னையில் முதற்கட்டமாக மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடத்திட முடிவு செய்யப்படுகிறது.</p><h2>அரசியல் கட்சிகளின் கூட்டம்</h2><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">புதிய தமிழகம் கட்சியின்</a> முன்னெடுப்பில், மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்திடவும், ஆண்டுதோறும் காவிரி நதிநீர் பங்கீட்டை தடையின்றி பெற்றிடவும், அனைத்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">அரசியல் கட்சிகளின் கூட்டம்</a> இன்று காலை 11 மணிக்குச் சென்னை தி.நகரில் உள்ள ஹோட்டல் அக்கார்டு மெட்ரோபாலிட்டன் அரங்கில் வெற்றிகரமாக நடைபெற்றது.</p><p><strong>கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:</strong></p><p><strong>தீர்மானம் : 1</strong></p><h2>கண்டனம்</h2><p> காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்கு மாறாக, தமிழகத்தின் உரிமையை பாதிக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் "கர்நாடக அரசின் பிடிவாதப் போக்குிற்கு" தமிழக அரசியல் கட்சிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.</p><h2><strong>தீர்மானம் : 2</strong></h2><h2>போராடும் அவல நிலை</h2><p>மே, ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய 40 டி.எம்.சி அளவு காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட மறுத்துள்ளதால், டெல்டா மாவட்டங்களில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலையும்; தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மக்களுக்கும் கால்நடைகளுக்கும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, தினமும் பொதுமக்கள் சாலைக்கு வந்து போராடும் அவல நிலையும் உருவாகியுள்ளது.</p><h2>மெத்தனப்போக்கு</h2><p> 3.5 டி.எம்.சி நீரை 15 தினங்களுக்கு திறந்துவிட இரண்டு தினங்களுக்கு முன் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆணையம் பரிந்துரைத்தும், "ஒரு சொட்டு நீரைக் கூட திறந்துவிட முடியாது; இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடுவோம்" என கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவகுமார் அறிவித்துள்ள நிலையை அறிந்தும், உடனடியாக உச்சநீதிமன்றத்தை நாடுவதற்கு பதிலாக, கர்நாடக முதல்-அமைச்சருடன் பேச்சுவார்த்தை, பிரதமருக்கு கடிதம் என இன்றைய தமிழக அரசு நேரத்தை வீணடித்து கொண்டிருக்கிறது. இந்த இக்கட்டான தருணத்தில் தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தைக்கூட்டிட தமிழக அனைத்து அரசியல் கட்சிகளும் பலமுறை வேண்டுகோள் விடுத்தும், அதை உதாசீனப்படுத்திவிட்டு மெத்தனப்போக்குடன் செயல்படும் முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசை அனைத்துக் கட்சிக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.</p><h2><strong>தீர்மானம் : 3</strong></h2><h2>தலைகுனிவு</h2><p>தமிழக முதல்-அமைச்சர் ஆர்வம் காட்டியும், கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவகுமார் "இன்னொரு சந்திப்பில் சந்திக்கலாம்" எனக் கூறியுள்ளது தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவாகவே இக்கூட்டம் கருதுகிறது.</p><h2><strong>தீர்மானம் : 4</strong></h2><h2>காவிரி நதிநீர் உரிமை</h2><p>ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலம் உச்சநீதிமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் போராடி பெற்ற காவிரி உரிமையை தமிழகத்தில் யார் ஆட்சியில் அமர்ந்தாலும் விட்டுத்தரக்கூடாது. "மேல்மடையில் உட்கார்ந்திருக்கிறோம்" என்ற தைரியத்தில் "ஒரு சொட்டு நீர் கூட திறந்துவிட முடியாது" என கர்நாடகாவில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படுகிறது; பந்த் நடத்தப்படுகிறது. இந்த அசாதாரண சூழ்நிலையில்கூட இன்றைய தவெக அரசு விழித்து கொள்ளவில்லையெனில், எட்டு கோடி தமிழக மக்களின் காவிரி நதிநீர் உரிமை பறிபோய்விடும் அவலநிலை ஏற்படும். எனவே, இனி சிறிதும் காலம் தாழ்த்தாமல் செயல்படுமாறு இவ்வாரசை வலியுறுத்துவதுடன்; இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளையும் அழைத்துக்கொண்டு டெல்லி சென்று, பாரத பிரதமரை சந்தித்து, மேகதாது அணை விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், காவிரி நதிநீர் பங்கீடு அனைத்து காலகட்டங்களிலும் எந்தவித இடர்ப்பாடும் இன்றி முறையாக கிடைத்திடவும் உரிய அழுத்தம் கொடுக்க முதல்வர் விஜய் அவர்களை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.</p><h2><strong>தீர்மானம் : 5</strong></h2><h2>மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்</h2><p>காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீரவை கண்டிட அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு தமிழக அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு உரிய அழுத்தம் கொடுக்கும் வகையில், வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி சென்னையில் முதற்கட்டமாக மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடத்திட முடிவு செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>7 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/rain-is-likely-in-7-districts-till-4-pm</link><comments>https://www.dailythanthi.com/news/weather/rain-is-likely-in-7-districts-till-4-pm#comments</comments><guid isPermaLink="false">fab011b9-9edc-4213-ba55-67d04fe60a94</guid><pubDate>Sat, 01 Aug 2026 09:37:17 +0000</pubDate><atom:updated>2026-08-01T09:37:17.620Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,வானிலை ஆய்வு மையம்,district,வாய்ப்பு,மழைrain,the Meteorological Department said</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/8mzbdd02/150.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/8mzbdd02/150.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காற்றழுத்தத் தாழ்வுப்பாதை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.</p><h2>7 மாவட்டங்களில் மழை</h2><p>இந்த நிலையில், தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p>அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, கோவை, நீலகிரி, திருப்பூர்  ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">வானிலை ஆய்வு மையம்</a> தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>