<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 29 Jul 2026 02:24:07 +0000</lastBuildDate><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-thoothukudi-tomorrow-5</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-thoothukudi-tomorrow-5#comments</comments><guid isPermaLink="false">1853463e-efb0-4f71-ae3d-d6d32e21ba43</guid><pubDate>Wed, 29 Jul 2026 02:22:06 +0000</pubDate><atom:updated>2026-07-29T02:22:06.144Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,monthly maintenance work,power outage,மாதாந்திர பராமரிப்பு பணி,மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/wo4s6ysz/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/wo4s6ysz/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மின்பகிர்மான வட்டம், நகர்ப்புற மின் விநியோக பிரிவிற்கு உட்பட்ட துணைமின் நிலைய பகுதியில் நாளை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் காரணமாக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> என்று அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இது தொடர்பாக தூத்துக்குடி நகர் விநியோக செயற்பொறியாளர் எல்.சின்னத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>தூத்துக்குடி மின்பகிர்மான வட்டம், அரசு துணை மின் நிலையத்தில் நாளை (30.7.2026, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. </p><h2>காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை</h2><p>இதன் காரணமாக மேலஅரசடி, கீழஅரசடி தருவைகுளம் மற்றும் தருவைகுளம் உப்பளப் பகுதிகள் பட்டினமருதூர் மற்றும் பட்டினமருதூர் உப்பளப் பகுதிகள் சில்லாநத்தம் வாலசமுத்திரம் கிழக்குக் கடற்கரை சாலை, புதூர்பாண்டியாபுரம், எட்டையாபுரம் ரோடு வடபுறம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வரவிருக்கும் சம்பா சாகுபடிக்காவது உடனடியாகத் தண்ணீர் வந்தாக வேண்டும்! - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-must-be-released-immediately-at-least-for-the-upcoming-samba-cultivation-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-must-be-released-immediately-at-least-for-the-upcoming-samba-cultivation-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">9d26628c-8f9b-474d-9e10-199782caa153</guid><pubDate>Wed, 29 Jul 2026 02:07:27 +0000</pubDate><atom:updated>2026-07-29T02:07:27.957Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore MP,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/zvkjfc0d/Untitled-5.jpg" width="753"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/zvkjfc0d/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>விரிசலை உருவாக்கும்</h2><p>தமிழ்நாட்டின் குறுவை விவசாயம் ஏற்கனவே காய்ந்துவிட்டது, வரவிருக்கும் சம்பா சாகுபடிக்காவது உடனடியாகத் தண்ணீர் வந்தாக வேண்டும்! </p><p>CWRC அமைப்பின் உத்தரவை ஏற்க மறுத்து மேல்முறையீடு செய்வோம் என்றும், தண்ணீர் திறக்க முடியாது என்றும் கர்நாடக மந்திரி ராமலிங்க ரெட்டி பேசுவது தேவையற்ற பதற்றத்தையும் மாநிலங்களுக்கு இடையே விரிசலையும் மட்டுமே உண்டாக்கும். இத்தகைய பொறுப்பற்ற கருத்துக்களைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்.</p><h2>தண்ணீர் திறக்க வேண்டும்</h2><p>29.07.2026 முதல் 15 நாட்களுக்குப் பிலிகுண்டுலுவில் தினமும் 3,500 கன அடி நீரைத் திறக்க வேண்டும் என்ற CWRC உத்தரவைக் கர்நாடகா எவ்விதச் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சாக்குப்போக்கும் </a>இன்றி உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்!</p><p>26.07.2026 வரை பிலிகுண்டுலுவில் வழக்கமாக வரவேண்டிய 35.391 டிஎம்சி-க்கு பதிலாக வெறும் 3.543 டிஎம்சி (10.01%) மட்டுமே கிடைத்துள்ளது. இதனால் தமிழ்நாட்டிற்கு 9.46 டிஎம்சி நீர் பாக்கி உள்ள நிலையில், சட்டப்பூர்வ தீர்ப்புகளையும் உத்தரவுகளையும் மதித்து நடப்பதே கூட்டாட்சி தர்மத்திற்கு அழகு. </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அம்பத்தூரில் ரூ.1,000 செலுத்திய வீட்டுக்கு ரூ.14 ஆயிரம் மின் கட்டணமா? - மக்கள் கொந்தளிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/electricity-bill-of-rs-14-thousand-for-a-house-that-paid-rs-1000-in-ambattur-peoples-unrest</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/electricity-bill-of-rs-14-thousand-for-a-house-that-paid-rs-1000-in-ambattur-peoples-unrest#comments</comments><guid isPermaLink="false">6d4f0b7d-07f1-4f95-9ce3-6a25871e4c71</guid><pubDate>Wed, 29 Jul 2026 02:00:09 +0000</pubDate><atom:updated>2026-07-29T02:00:09.331Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மின் கட்டணம்,electricity bill,கொளத்தூர்,Kolathur,அம்பத்தூர்,Ambattur</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/n4nmnmoe/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/n4nmnmoe/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை அம்பத்தூர், கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆசீர்வாதம் (வயது 38). இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு மாதனாங்குப்பம் பிரதான சாலை, தீப்பாச்சியம்மன் நகரிலும் ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டிற்கான மின் கட்டணமாக ரூ.14 ஆயிரத்து 264 செலுத்த வேண்டும் என ஆசீர்வாதத்தின் தொலைபேசிக்கு குறுஞ்செய்தி வந்தது.</p><p>இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆசீர்வாதம், புழல் மின்வாரிய அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு விசாரித்தார். அப்போது அது 'பெண்டிங்' தொகை என மின்வாரிய தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆசீர்வாதம் கூறும்போது, 'ஒவ்வொரு முறையும் மின்வாரிய ஊழியர்கள் கணக்கீடு செய்து கூறும் தொகையை தவறாமல் செலுத்தி வருகிறேன். கடந்த முறை வரை ரூ.1,000-க்கும் குறைவாகவே மின்கட்டணம் செலுத்திய நிலையில், இந்த முறை திடீரென ரூ.14 ஆயிரத்து 264 செலுத்த வேண்டும் என்கிறார்கள்.</p><p>இதேபோல், எனது வீட்டின் அருகில் உள்ள மற்ற வீடுகளிலும் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை 'பெண்டிங்' தொகை செலுத்த வேண்டும் என மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர். மின்வாரிய ஊழியர்கள் முறையாக மீட்டர் கணக்கீட்டை செய்யவில்லை. திடீரென இவ்வளவு பெரிய தொகை வந்தால் நாங்கள் எங்கு செல்வது? என கேள்வி எழுப்பினார்.</p><p>இதைபோல கொளத்தூர் அடுத்த செக்ரட்டரி காலனியிலும் பல வீடுகளுக்கு வழக்கத்திற்கு மாறாக கூடுதல் மின் கட்ட ணம் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி வீட்டு உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கொளத்தூர் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் கொலை வழக்கு குற்றவாளிகள் 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-convicted-in-thoothukudi-murder-case-sentenced-to-double-life-imprisonment</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-convicted-in-thoothukudi-murder-case-sentenced-to-double-life-imprisonment#comments</comments><guid isPermaLink="false">f74e2a2e-c4d8-4f9e-a3f9-217ef096da8c</guid><pubDate>Wed, 29 Jul 2026 01:59:39 +0000</pubDate><atom:updated>2026-07-29T01:59:39.832Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Murder case,accused,கொலை வழக்கு,குற்றவாளிகள்,இரட்டை ஆயுள் தண்டனை,2 பேர்,2 people,double life imprisonment</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/03cqz0j2/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/03cqz0j2/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூர் காவல் நிலைய <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">கொலை வழக்கில்</a> சம்பந்தப்பட்ட 2 குற்றவாளிகளுக்கு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">இரட்டை ஆயுள் தண்டனை</a> விதித்து PCR நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><h2>கொலை வழக்கில் 2 பேர் கைது</h2><p>தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செண்பகப்பேரி பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜ் (வயது 25) என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான அதே பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை மகன் சதீஷ்(26) மற்றும் பாலமுருகன் மகன் மதன்(24) ஆகிய 2 பேரையும் நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். </p><h2>இரட்டை ஆயுள் தண்டனை</h2><p>இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட PCR (Protection of Civil Rights Act - குடியுரிமை பாதுகாப்புச் சட்டம்) நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி வசீத்குமார் நேற்று (28.7.2026) சதீஷ், மதன் ஆகிய 2 பேரும் குற்றவாளிகள் என உறுதி செய்து அவர்களுக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.</p>]]></content:encoded></item><item><title>சேலம் அருகே கோர விபத்து: லாரி-சரக்கு வாகனம் மோதல்; டிரைவர் பலி - 20 பேர் படுகாயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/horrific-accident-near-salem-lorry-and-goods-vehicle-collide-driver-killed-20-seriously-injured</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/horrific-accident-near-salem-lorry-and-goods-vehicle-collide-driver-killed-20-seriously-injured#comments</comments><guid isPermaLink="false">813c3b07-71d0-48ef-8bc7-48a51278a143</guid><pubDate>Wed, 29 Jul 2026 01:53:44 +0000</pubDate><atom:updated>2026-07-29T01:53:44.580Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,சேலம்,Salem News,சேலம் செய்திகள்,சேலம் மாவட்டம்,Salem district</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/huxm4d5p/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/huxm4d5p/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே நேற்று இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் லாரி டிரைவர் உயிரிழந்தார். மேலும், அரசு பஸ்சில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><h2>விபத்து எப்படி நடந்தது?</h2><p>மேட்டூரில் இருந்து அரசு பஸ் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் மேச்சேரி அருகே உள்ள எம்.காளிப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது, பஸ்சின் பின்னால் வந்த சரக்கு வாகனம் அரசு பஸ்சை முந்திச் செல்ல முயன்றது. அந்த நேரத்தில் எதிரே வந்த லாரியுடன் சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதியது. மோதிய வேகத்தில் சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ்சின் மீதும் மோதி விபத்துக்குள்ளானது.</p><h2> 20-க்கும் மேற்பட்டோர் காயம்</h2><p>இந்த விபத்தில் லாரி, சரக்கு வாகனம் மற்றும் அரசு பஸ் ஆகியவை கடுமையாக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சேதமடைந்தன</a>. லாரி டிரைவர், கிளீனர், சரக்கு வாகன டிரைவர் மற்றும் அரசு பஸ்சில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.</p><h2>மீட்புப் பணியில் போலீசார்</h2><p>விபத்து குறித்து தகவல் அறிந்த மேச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் தனியார் ஆம்புலன்ஸ்கள் மூலம் மேச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.</p><h2>டிரைவர் உயிரிழப்பு</h2><p>மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லாரி டிரைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற காயமடைந்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இந்த விபத்தால் மேச்சேரி-மேட்டூர் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சாலையில் </a>ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் சேதமடைந்த வாகனங்களை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். விபத்து தொடர்பாக மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பழனி கோவில் நில மோசடி விவகாரம்: வெள்ளத்துரை உள்பட 3 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-temple-land-fraud-case-three-people-including-vellathurai-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-temple-land-fraud-case-three-people-including-vellathurai-arrested#comments</comments><guid isPermaLink="false">066aeb70-5212-468e-8959-b0cd854bd375</guid><pubDate>Wed, 29 Jul 2026 01:49:12 +0000</pubDate><atom:updated>2026-07-29T01:49:12.465Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பழனி,Palani,CBCID,சிபிசிஐடி,கோவில் நில மோசடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/gbf8tibh/Palani-temple.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/gbf8tibh/Palani-temple.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள 1.4 ஏக்கர் நிலத்தை, மோசடியாகப் பதிவு செய்யப்பட்டது. அதாவது, கடந்த 6-ஆம் தேதி வெள்ளத்துரை, சேதுபதி ஆகிய இருவரின் பெயரில் அந்த இடம் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட இந்த நிலத்தை வெறும் 2 கோடிக்குக் கணக்கு கிரயம் செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. </p> <h2>வழக்குப்பதிவு</h2><p>அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் கோயில் சொத்து என்பதை மறைத்து தனிநபர்களுக்குக் கிரயம் செய்து மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இந்த மோசடிக்கு உறுதுணையாக இருந்த பழனி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், வெள்ளத்துரை, சேதுபதி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. </p><h2>சிபிசிஐடி போலீசார்</h2><p>மேலும் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகிய 2 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.  இந்த முறைகேடு தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்,    நில மோசடி விவகாரத்தில் வெள்ளத்துரை, முருகதாஸ் உள்பட 3 பேரை கைது செய்துள்ளனர். </p> ]]></content:encoded></item><item><title>4 வயது சிறுமியை பாலியல் தாக்குதல் செய்த முதியவருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/elderly-man-sentenced-to-life-imprisonment-for-sexually-assaulting-4-year-old-girl</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/elderly-man-sentenced-to-life-imprisonment-for-sexually-assaulting-4-year-old-girl#comments</comments><guid isPermaLink="false">ae8ecd36-9466-42f5-8ce1-36a986b98b74</guid><pubDate>Wed, 29 Jul 2026 01:28:36 +0000</pubDate><atom:updated>2026-07-29T01:28:36.963Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,Elderly man,முதியவர்,சிறுமி,Sexual assault,Minor girl,பாலியல் தாக்குதல்,சாகும் வரை ஆயுள் தண்டனை,life imprisonment till death</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/gdywzzie/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதியவருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/gdywzzie/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் விரைவான விசாரணை மூலம் 4 மாதங்களிலேயே, மாவட்டத்தில் 4 வயது <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF">சிறுமி</a>யை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">பாலியல் தாக்குதல்</a> செய்த வழக்கில் முதியவருக்கு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%20%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">சாகும்வரை ஆயுள் தண்டனை</a> விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது.</p><h2>4 வயது சிறுமியிடம் பாலியல் தாக்குதல்; முதியவர் கைது</h2><p>திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 16.3.2026 அன்று கணபதி (வயது 81) என்பவர் 4 வயது சிறுமியிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் இந்த வழக்கு மேல்நடவடிக்கைக்காக சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, அங்கு தொடர்ந்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு மேற்சொன்ன முதியவரை கைது செய்தார். </p><h2>முதியவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை</h2><p>புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து வழக்கின் விசாரணையானது, திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், மேற்சொன்ன முதியவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, நீதிபதி சுரேஷ்குமார் நேற்று (28.7.2026) குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.</p><h2>எஸ்.பி. பாராட்டு</h2><p>இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை நடைபெற, சிறப்பாக கண்காணிப்பு செய்த ஏ.டி.எஸ்.பி. சண்முகம் (CWC), சேரன்மகாதேவி உட்கோட்ட டி.எஸ்.பி. அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ், சேரன்மகாதேவி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி மற்றும் வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த அப்போதைய சேரன்மகாதேவி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி (தற்போது தூத்துக்குடி மாவட்டம்),  வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த ஏட்டு துர்காதேவி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் உஷா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி பாராட்டினார்.</p><h2>15 போக்சோ வழக்குகளில், 15 குற்றவாளிகளுக்கு தண்டனை</h2><p>திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரின் தீவிர நடவடிக்கையால் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 15 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 15 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க வகையில் 1 குற்றவாளிக்கு மரண தண்டனையும், 4 குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், 2 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும், 1 குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்று தரப்பட்டுள்ளது.</p><p>திருநெல்வேலி மாவட்ட காவல் துறையானது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களுக்கெதிராக குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தனிப்பட்ட கவனத்துடன் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை-செய்யாறு இடையே 4 வழிச்சாலை அமைக்கும் டெண்டர் ரத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tender-for-construction-of-4-lane-road-between-chennai-seyyaru-cancelled</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tender-for-construction-of-4-lane-road-between-chennai-seyyaru-cancelled#comments</comments><guid isPermaLink="false">843faba8-8da5-430e-b7d0-9257760800e1</guid><pubDate>Wed, 29 Jul 2026 01:22:33 +0000</pubDate><atom:updated>2026-07-29T01:22:33.972Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,சாலை,tender,டெண்டர்,செய்யாறு,Seyyaru</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/wp1o7s4e/CHENNAI-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/wp1o7s4e/CHENNAI-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையுடன் செய்யாறு தொழில் வழித்தட பகுதியை இணைக்கும் வகையில், 43 கி.மீ.க்கு 4 வழிச்சாலை அமைக்க தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டு உள்ளது. </p><p>புலிவாயலில் இருந்து மனமதி இடையே 15.30 கி.மீ. நீளமுள்ள 4 வழி நெடுஞ்சாலை 2 பக்க சர்வீஸ் சாலையுடன் அமைக்கவும், பழவேரில் இருந்து புலிவாய்க்கு 13.40 கி.மீ. நீளமுள்ள 4 வழி நெடுஞ்சாலை அமைக்கவும், வளையகரணையில் இருந்து பழவேரிக்கு 14.50 கி.மீ. நீளமுள்ள 4 வழி நெடுஞ்சாலை அமைக்கவும் கடந்த 10.3.2026 அன்று டெண்டர் விடப்பட்டது.</p><p>செய்யூர் 'சிப்காட்'டுக்காக முன்மொழியப்பட்ட தொழில் வழிச்சாலையின் ஒரு பகுதியாக இந்த சாலைகள் அமைக்கப் படும் என்று திட்டமிடப்பட்டிருந்தது. இந்தநிலையில் நிர்வாக காரணங்களுக்காக இந்த டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பை தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையகம் பிறப்பித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பெயரை மாற்ற திட்டமா? - தகவல் சரிபார்ப்பகம் பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-there-a-plan-to-rename-the-kilambakkam-bus-terminus-fact-check-response</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-there-a-plan-to-rename-the-kilambakkam-bus-terminus-fact-check-response#comments</comments><guid isPermaLink="false">2f43569e-186d-4fbc-ba77-33ea50f6a68a</guid><pubDate>Wed, 29 Jul 2026 01:01:59 +0000</pubDate><atom:updated>2026-07-29T01:01:59.467Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கிளாம்பாக்கம்,Kilambakkam,கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்,Kilambakkam Bus Stand,தகவல் சரிபார்ப்பகம்,TN Fact Check,தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம்,Fact-check</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/xi4d4lw4/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/xi4d4lw4/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பெயரை மாற்ற திட்டம் என பரவும் தவறான தகவல்</p><h2>பரவும் செய்தி</h2><p>கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பெயர் பண்டிதர் அயோத்திதாசர் நவீன பேருந்து நிலையம் என்று மாறுகிறது என சமூகவலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.</p><h2>உண்மை என்ன ?</h2><p>"கிளாம்பாக்கம் பேருந்து <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நிலையத்தின் </a>பெயரை மாற்றம் செய்ய இருப்பதாக சமூகவலைதளங்களில் பரவும் தகவல் தவறானது" என சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMDA ) தெரிவித்துள்ளது.</p><p>தவறான தகவலைப் பரப்பாதீர் !</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பா..? வானிலை மையம் வெளியிட்ட அப்டேட்</title><link>https://www.dailythanthi.com/news/weather/is-there-a-chance-of-rain-in-tamil-nadu-today-weather-department-releases-update</link><comments>https://www.dailythanthi.com/news/weather/is-there-a-chance-of-rain-in-tamil-nadu-today-weather-department-releases-update#comments</comments><guid isPermaLink="false">febd3052-38c6-4512-a128-fef929f6b022</guid><pubDate>Wed, 29 Jul 2026 00:51:26 +0000</pubDate><atom:updated>2026-07-29T00:51:26.386Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Rain,Weather,கனமழை,வானிலை,தமிழகம்,Weather News,WeatherUpdate,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,வானிலை ஆய்வு மையம்,heavy rain,வானிலை அறிக்கை,weather condition,வானிலை முன்னறிவிப்பு,Weather Status,weather center,weather center information,TN weather</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/tntzrsiv/yeaap.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மழை, rain]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/tntzrsiv/yeaap.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாளை (30.07.2026) நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><h2>மழை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><p><strong>இதன் காரணமாக இன்று (29-07-2026):</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். </p><p>ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><h2>கனமழை</h2><p><strong>நாளை (30-07-2026):</strong> நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <a href="https://www.dailythanthi.com/topic/கனமழை">கனமழை</a> பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். </p><p>ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>31-07-2026 மற்றும் 01-08-2026:</strong> கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் <a href="https://www.dailythanthi.com/topic/கனமழை">கனமழை</a> பெய்யக்கூடும்.</p><p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>02-08-2026 மற்றும் 03-08-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p> <h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong><ins>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</ins></strong></p><p><strong>29-07-2026 முதல் 01-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.</p><p><strong><ins>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</ins></strong></p><p><strong>29-07-2026 முதல் 31-07-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.</p><p><strong>01-08-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.</p> <h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று  (29-07-2026)</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>மீனவர்களுக்கான எச்சரிக்கை:</h2><p><strong><ins>தமிழக கடலோரப்பகுதிகள்:</ins></strong></p><p><strong>29-07-2026:</strong> எச்சரிக்கை ஏதுமில்லை.</p><p><strong>30-07-2026 மற்றும் 31-07-2026:</strong> தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>01-08-2026:</strong> தென் தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><h2>வங்கக்கடல் பகுதிகள்:</h2><p><strong>29-07-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>30-07-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>31-07-2026 மற்றும் 01-08-2026:</strong> எச்சரிக்கை ஏதுமில்லை.</p> <h2>அரபிக்கடல் பகுதிகள் :</h2><p><strong>29-07-2026:</strong> மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>30-07-2026 முதல் 01-08-2026 வரை:</strong> மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.</p>]]></content:encoded></item><item><title>ஊட்டிக்கு இன்ப சுற்றுலா அழைத்துச் சென்று கல்லூரி பேராசிரியை பாலியல் பலாத்காரம் - உடற்கல்வி இயக்குனர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/professor-sexual-assault-ooty-pleasure-trip</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/professor-sexual-assault-ooty-pleasure-trip#comments</comments><guid isPermaLink="false">99ad4663-b6aa-43b2-a6fb-dce089becbdf</guid><pubDate>Tue, 28 Jul 2026 23:21:49 +0000</pubDate><atom:updated>2026-07-28T23:21:49.671Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrest,பாலியல் பலாத்காரம்,ஊட்டி,Ooty,சுற்றுலா,tour</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/nlb7hnfy/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/nlb7hnfy/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் குமரேசன் (33 வயது). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உடற்கல்வி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவரும், அதே கல்லூரியில் பணியாற்றும் 30 வயது பேராசிரியையும் காதலித்து வந்துள்ளனர். அந்த பேராசிரியையை ஊட்டிக்கு இன்ப சுற்றுலா அழைத்துச் சென்ற குமரேசன் அங்கு தங்கும் விடுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.</p><p>இந்த நிலையில், குமரேசனுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடப்பதை அறிந்த பேராசிரியை அதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது அவர்கள் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் திருமணம் செய்ய முடியாது என குமரேசன் தரப்பில் கூறப்பட்டதாகத் தெரிகிறது.</p><p>இதனால் அதிர்ச்சியடைந்த பேராசிரியை கோவை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் இந்த வழக்கு ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை மற்றும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், உடற்கல்வி இயக்குனர் குமரேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்: புதுமாப்பிள்ளை கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minor-girl-sexual-assault-instagram-groom-held</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minor-girl-sexual-assault-instagram-groom-held#comments</comments><guid isPermaLink="false">c11ac1d2-1f02-4aa2-91c4-c4ee70392727</guid><pubDate>Tue, 28 Jul 2026 23:08:30 +0000</pubDate><atom:updated>2026-07-28T23:08:30.463Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>College student,கல்லூரி மாணவி,arrested,பாலியல் பலாத்காரம்,newlywed,raped,புதுமாப்பிள்ளை கைது</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/ljxc4gk1/newgroom.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கல்லூரி மாணவி,புதுமாப்பிள்ளை கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/ljxc4gk1/newgroom.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு, </p><p>இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த புதுமாப்பிள்ளையை போலீசார் கைது செய்தனர்.</p><h2>இன்ஸ்டாகிராம்</h2><p>சேலம் மாவட்டம் ஓமலூர் காடையாம்பட்டி ராஜமன்னார் கால னியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மகன் பிரதீப் (வயது 20). கூலித்தொழிலாளி. இன்ஸ்டாகிராம் சமூகவலைதளம் மூலமாக ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் 2 பேரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சிறுமி தற்போது கல்லூரியில்  முதலாம் ஆண்டு படித்து வருகிறார். </p><h2>பாலியல் பலாத்காரம்</h2><p>இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் மாணவியை பிரதீப் ஈரோட்டுக்கு வர சொல்லி நேரில் சந்தித்து உள்ளார். பின்னர் வ.உ.சி. பூங்காவுக்கு அவர்கள் சென்றனர். அங்கு அவர்கள் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறிய பிரதீப். அந்த மாணவியை <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20">பாலியல் பலாத்காரம்</a> செய்து உள்ளார். இதையடுத்து மாணவியிடம் பிரதீப் பழகுவதை தவிர்த்து வந்தார். </p><h2>மாணவி அதிர்ச்சி</h2><p>இந்த நிலையில், காதலனைப் பார்ப்பதற்காக மாணவி திடீரென பிரதீப்பின் வீட்டிற்கு சென்றார். அங்கு சென்ற மாணவிக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. பிரதீப்புக்கு ஏற்கனவே அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் கடந்த மாதம் திருமணம் நடந்து முடிந்தது மாணவிக்கு தெரியவந்தது. தன்னை உருகி உருகி காதலித்துவிட்டு, தனக்கு தெரியாமல் வேறொரு பெண்ணை பிரதீப் திருமணம் செய்து ஏமாற்றியதை அறிந்து அந்த மாணவி நிலைகுலைந்து போனார்.</p><h2>போக்சோ பாய்ந்தது</h2><p>இதனால் பெரும் ஏமாற்றமும், மனவேதனையும் அடைந்த மாணவி, நேராக ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்குச் சென்று பிரதீப் மீது பரபரப்பு புகார் அளித்தார். புகாரின் பேரில், மகளிர் போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்தனர். மைனர் சிறுமியை காதலித்து ஏமாற்றிய குற்றத்திற்காக, வாலிபர் பிரதீப் மீது  போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டது. இதையடுத்து, பிரதீப்பை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். </p><p>இன்ஸ்டாகிராம் காதலால் கல்லூரி மாணவி ஏமாற்றப்பட்டு, வாலிபர் போக்சோவில் கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கொளுத்தும் வெயில்: பஜனகிரி குட்டையில் இறங்கி காட்டு யானைகள் ஆனந்த குளியல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/heatwave-elephants-enjoy-bath-bajanagiri-pond</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/heatwave-elephants-enjoy-bath-bajanagiri-pond#comments</comments><guid isPermaLink="false">b4daa3f8-d657-412f-a735-ba407cbce86e</guid><pubDate>Tue, 28 Jul 2026 22:50:20 +0000</pubDate><atom:updated>2026-07-28T22:50:20.092Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வெயில்,காட்டு யானைகள்,Wild elephants,குட்டை,pond,குளியல்,To bathe,Extreme Heat</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/1bsgxzus/elephant-bath.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ யானைகள் குளியல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/1bsgxzus/elephant-bath.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ணகிரி,</p><p>கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 25-க்கும் மேற்பட்ட <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">யானைகள்</a> முகாமிட்டுள்ளன.  தற்போது நிலவி வரும் கடுமையான வெயிலின் காரணமாக, வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் மற்றும் குட்டைகள் வேகமாக வறண்டு வருகின்றன. இதனால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி காட்டை விட்டு வெளியேறி, விளைநிலங்கள் மற்றும் கிராமப்புற குட்டைகளை நோக்கி வரத்தொடங்கியுள்ளன.</p> <h2> குட்டையில் குளித்த யானைகள்</h2><p>இந்த நிலையில், வனப்பகுதியையொட்டி உள்ள பஜனகிரி பகுதியில் உள்ள ஒரு தண்ணீர் குட்டைக்கு நேற்று மாலை திடீரென 5-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வந்தன. தண்ணீரை கண்டதும் மகிழ்ச்சியில் பிளிறிய யானைகள், சட்டென்று குட்டைக்குள் இறங்கின. பின்னர், தங்களது தும்பிக்கையால் தண்ணீரை அள்ளி உடம்பில் ஊற்றி, நீண்ட நேரம் ஆனந்த குளியல் போட்டன. குட்டி யானைகள் தண்ணீரில் ஒன்றோடொன்று விளையாடி மகிழ்ந்தன.</p><h2>பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர்</h2><p>யானைகள் குட்டையில் குளிக்கும் தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் பாதுகாப்பு தூரத்தில் நின்றுகொண்டு, யானைகளின் இந்த ஆனந்த குளியலை ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர். சிலர் தங்களது செல்போன்களிலும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்துக்கொண்டனர்.</p> <h2>வனத்துறை எச்சரிக்கை</h2><p>இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், பொதுமக்களை யானைகள் அருகே செல்ல வேண்டாம் என எச்சரித்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீரில் விளையாடிய காட்டு யானைகள், வெயில் தாக்கம் குறைந்த பின்னர் மெதுவாக அங்கிருந்து நகர்ந்து மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றன.</p> ]]></content:encoded></item><item><title>கடலூரில் புதுப்பெண் தற்கொலை: கணவர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/newlywed-suicide-in-cuddalore-husband-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/newlywed-suicide-in-cuddalore-husband-arrested#comments</comments><guid isPermaLink="false">3e910d2f-5c21-40aa-b507-85a37e1f0fe4</guid><pubDate>Tue, 28 Jul 2026 22:35:35 +0000</pubDate><atom:updated>2026-07-28T22:35:35.993Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கணவர்,கைது,Cuddalore,கடலூர்,arrested,commits suicide,newlywed,புதுப்பெண் தற்கொலை,Her Husband</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/m8i9irge/newly-married-woman.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நிவேஷா, பாலமணிகண்டன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/m8i9irge/newly-married-woman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர்,</p><p>,கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கீழக்கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் விவேகானந்தன். இவருடைய மகன் பாலமணிகண்டன் (வயது 30). பொக்லைன் எந்திர ஆபரேட்டர். இவரும், அதே கிராமத்தை சேர்ந்த அன்பு என்பவரது மகள் நிவேஷாவும் (25) கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். </p><h2>திருமணம்</h2><p>இவர்களது காதலுக்கு இருவீட்டு பெற்றோரும் பச்சைக்கொடி காட்டினர். இதைத்தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் 12-ந் தேதி இருவருக்கும் பெற்றோர்கள் முன்னிலையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.</p><h2>அடிக்கடி தகராறு</h2><p>திருமணம் முடிந்த சில நாட்களிலேயே பாலமணிகண்டனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பது தெரியவந்தது. தினமும் அவர் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை அவரது மனைவி நிவேஷா கடுமையாக கண்டித்தார். இதனால் கணவன்,மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இருவருக்கும் இடையே சண்டை ஏற்படும் போதெல்லாம், குடும்பத்தினர் உடனடியாக தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தி வந்தனர்.</p><h2>புதுப்பெண் தற்கொலை</h2><p>இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையும் பாலமணிகண்டன் வழக்கம் போல் மது குடித்துவிட்டு போதையில் வீட்டிற்கு வந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த நிவேஷா அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் இருவருக்கும் இடையே மீண்டும் பலத்த தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த நிவேஷா, வாழ்க்கையில் விரக்தியடைந்து யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88"> தற்கொலை</a> செய்து கொண்டார்.</p><h2>அதிர்ச்சி</h2><p>சிறிது நேரம் கழித்து அறைக்குள் சென்ற பாலமணிகண்டன், மனைவி நிவேஷா தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனால் செய்வதறியாது திகைத்த அவர், தானும் வாழ விரும்பாமல் வீட்டில் இருந்த வேட்டியால் தூக்குப்போட்டுக்கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள், தூக்கில் தொங்கிய பாலமணிகண்டனை உடனடியாக மீட்டு காப்பாற்றினர்.</p><h2>கணவர் கைது</h2><p> இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், நிவேஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, நிவேஷாவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் பாலமணிகண்டனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>திருமணமான 3 மாதங்களிலேயே புதுப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வங்கி மேலாளரை தாக்கிய வழக்கு: மு.க.அழகிரி மகள் கைதாகி விடுதலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-attacking-bank-manager-mk-alagiri-daughter-arrested-released</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-attacking-bank-manager-mk-alagiri-daughter-arrested-released#comments</comments><guid isPermaLink="false">6af00326-3ce8-4258-8393-71d6ef4a93e8</guid><pubDate>Tue, 28 Jul 2026 22:07:02 +0000</pubDate><atom:updated>2026-07-28T22:07:02.278Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,அடையாறு,மு.க.அழகிரி,கயல்விழி,adaiyar,Kayalvizhi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/ixmstktg/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/ixmstktg/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் மு.க.அழகிரியின் மகள் கயல்விழிக்கு சொந்தமான வணிக வளாக கட்டிடத்தில் எஸ்.பி.ஐ. வங்கி கிளை இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்தில் கடந்த 20-ந்தேதி அன்று 'லிப்ட்' பழுதானது. இதனால் வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்கள் அவதி அடைந்ததால் வங்கியின் கிளை மேலாளர் ஹர்ஷீன் சிங், கயல்விழியின் உதவியாளரை தொடர்பு கொண்டு கண்டித்தார்.</p><p>இதைத்தொடர்ந்து கயல்விழி வங்கிக்கு வந்தார். அப்போது அவர் ஆத்திரத்தில் வங்கி மேலாளர் ஹர்ஷீன் சிங்கின் கன்னத்தில் 'பளார்' என்று ஓங்கி அறைந்தார். இந்த சம்பவம் வங்கி மேலாளர் அறையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அதன் அடிப்படையில் கயல்விழி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வங்கியின் முதன்மை மேலாளர் நமச்சிவாயம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.</p><p>அதன்பேரில் கயல்விழி மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் சாஸ்திரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் போலீசார் அனுப்பிய சம்மன் அடிப்படையில் சாஸ்திரி நகர் போலீஸ் நிலையத்தில் கயல்விழி நேற்று மதியம் 1 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகினார். அவரிடம் மாலை 4 மணி வரை விசாரணை நடைபெற்றது. விசாரணை விவரம் வீடியோ கேமராவில் பதிவு செய்யப்பட்டது.</p><p>விசாரணை முடிவில் அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் அவர் போலீஸ் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர் கயல்விழி போலீஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். கயல்விழி மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>அரசு பேருந்துகளில் செல்போன் பயன்படுத்த கட்டுப்பாடுகள் - போக்குவரத்து துறை அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/restrictions-on-cellphone-use-in-government-buses-transport-department-notice</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/restrictions-on-cellphone-use-in-government-buses-transport-department-notice#comments</comments><guid isPermaLink="false">8dc71ecf-ec84-4a4c-83ca-8401d1fefe7d</guid><pubDate>Tue, 28 Jul 2026 21:14:06 +0000</pubDate><atom:updated>2026-07-28T21:14:06.347Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Transport,Restrictions,கட்டுப்பாடுகள்,govt bus,போக்குவரத்து துறை,அரசு பேருந்துகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/5kcvn7ze/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அரசு பேருந்துகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/5kcvn7ze/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அனைத்து போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர்களுக்கும் அரசு செயலாளர் நிர்மல் ராஜ் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>மோட்டார் வாகன (ஓட்டுதல்) ஒழுங்குமுறை விதிப்படி, பேருந்துகளில் உரத்த ஒலியுடன் இசை ஒலிக்கப்படாமல் இருப்பதை டிரைவர்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும், தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் விதிப்படி, சக பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் எந்தவொரு செயலும் முறைகேடாக கருதப்படும்.</p><p>அதன்படி பயணிகள் செல்போனில் உரத்த குரலில் பேசுவதையும், ‘ஸ்பீக்கர்' மூலம் இசை கேட்பதையும், காணொலிகளை பார்ப்பதையும் தவிர்க்க வேண்டும். 'இயர்போன்' அல்லது 'ஹெட்போன்' பயன்படுத்தாமல் இசை கேட்பது மற்றும் வீடியோ பார்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் செல்போன் பயன்பாடு மற்றவர்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்காத வகையில் இருக்க வேண்டும்.</p><p>இந்த விதிமுறைகளை அனைத்து பேருந்துகளிலும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். பேருந்துகளின் முன்பக்க கதவு, நடுப்பகுதி மற்றும் பின்பக்க கதவு ஆகிய இடங்களில் பயணிகளுக்கு தெளிவாக தெரியும் வகையில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும்.</p><p>அதில், செல்போனில் 'ஸ்பீக்கர்' ஒலியை தவிர்க்க வேண்டும் என்றும், 'இயர்போன்' அல்லது 'ஹெட்போன்'களை பயன்படுத்தி சக பயணிகளை மதிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட வேண்டும். 'அமைதியான பயணம் பாதுகாப்பான பயணம்' என்ற வாசகத்துடன் இந்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் இடம்பெற வேண்டும்.</p><p>மேலும், பணி நேரத்தின்போது டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு இந்த வழிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க அறிவுறுத்த வேண்டும். இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டதற்கான புகைப்பட ஆதாரங்களுடன் கூடிய அறிக்கையை தலைவர் அலுவலகம் மற்றும் அரசிற்கு விரைந்து சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மு.க.ஸ்டாலின் கோரிக்கை அடிப்படையில் கொளத்தூர் தொகுதியில் 14 வாக்குச்சாவடிகளில் மின்னணு எந்திரங்கள் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalin-request-evm-inspection-kolathur-constituency</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalin-request-evm-inspection-kolathur-constituency#comments</comments><guid isPermaLink="false">5f5620e9-7fe7-4ad2-aac2-6c7b653ced59</guid><pubDate>Tue, 28 Jul 2026 19:55:06 +0000</pubDate><atom:updated>2026-07-28T19:55:06.105Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,ஆய்வு,கொளத்தூர்,Kolathur,EVM,MKstalin,மின்னணு எந்திரங்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/6lomeuyb/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/6lomeuyb/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டமன்ற தேர்தல்களில் சென்னை கொளத்தூர் தொகுதியில் (2011, 2016, 2021) 'ஹாட்ரிக்' வெற்றியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவு செய்திருந்தார். ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் த.வெ.க. வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் தோல்வி அடைந்தார்.</p><p>இந்த நிலையில் கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட 14 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்கு எந்திரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் மு.க.ஸ்டாலின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தேர்தல் அலுவலர்கள் இன்று முதல் ஆய்வு செய்ய உள்ளனர்.</p><p>இதுகுறித்து தமிழக தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-</p><p>பொதுவாகவே தேர்தல் முடிந்த பின்னர், தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்கள் தொகுதிக்குட்பட்ட குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் குளறுபடிகள் ஏற்பட்டது குறித்தோ, வேறு ஏதாவது முக்கிய காரணங்களை குறிப்பிட்டு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைப்பார்கள். அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு முழுமையாக ஆய்வு செய்யும். </p><p>அதன்படி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு வந்துள்ள கோரிக்கை மனுக்கள் குறித்து ஆராயப்பட்டது. இதில் முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள மனுவும் அடங்கும். கொளத்தூர் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எண்ணிக்கை முடிந்தவுடன் அவை 'சீல்' வைக்கப்பட்டு சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) காலை 9 மணியளவில் தி.மு.க. முகவர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரி முன்னிலையில் இந்த எந்திரங்கள் சரிபார்க்கப்படும்.</p><p>மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள 14 வாக்குச்சாவடிகளில் பதிவான மின்னணு எந்திரங்கள் ஆய்வு செய்யப்படும். இன்று முதல் 7 நாட்களுக்கு இப்பணி நடைபெறும். ஒவ்வொரு நாளும் 2 வாக்குச்சாவடிகளுடைய எந்திரங்கள் ஆய்வு செய்யப்படும். இதேபோன்று புகார்கள் வந்துள்ள காஞ்சிபுரம், உத்திரமேரூர், செங்கல்பட்டு உள்ளிட்ட தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் இன்று முதல் தொடங்கி நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/look-out-notice-against-e-v-velu-cancelled-madras-high-court-order</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/look-out-notice-against-e-v-velu-cancelled-madras-high-court-order#comments</comments><guid isPermaLink="false">590d2c9c-8973-47a4-acf4-49e091ba4ef8</guid><pubDate>Tue, 28 Jul 2026 19:07:51 +0000</pubDate><atom:updated>2026-07-28T19:07:51.501Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை ஐகோர்ட்டு,Chennai Highcourt,எ.வ.வேலு,Ev Velu,லுக் அவுட் நோட்டீஸ்,Look Out Notice</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/9zz9gss7/Untitled-4.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/9zz9gss7/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நெடுஞ்சாலை துறையில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடு தொடர்பாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும், தனக்கு எதிராக பிறப்பிக்கப் பட்ட லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்யக்கோரியும் எ.வ.வேலு சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தன.</p><p>விசாரணையின்போது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வக்கீல், விரிவான பதில் அளிக்க கால அவகாசம் கேட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, லஞ்ச ஒழிப்புத்துறை பதில் அளிக்க ஆகஸ்ட் 14-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கினார்.</p><p>எ.வ.வேலு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் வில்சன், எ.வ.வேலு விசாரணைக்கு ஒத்துழைத்து வரும் நிலையில், அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதனை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.</p><p>இதையடுத்து எ.வ.வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது. இருப்பினும், வழக்கு நிலுவையில் உள்ளதால், அவர் வெளிநாடு செல்ல விரும்பினால் கீழமை கோர்ட்டின் அனுமதியை பெற வேண்டும் என்ற நிபந்தனையையும் ஐகோர்ட்டு விதித்துள்ளது. அதே நேரத்தில், எ.வ.வேலுவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்க கூடாது என ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவையும் ஆகஸ்ட் 14-ந்தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்த்தாய் வாழ்த்தை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலேயே 3-ம் இடத்திற்குத் தள்ளுவதா? - சீமான் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-tamil-thai-vaalthu-being-pushed-to-third-place-even-at-manoanmanyam-sundaranar-university-seeman-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-tamil-thai-vaalthu-being-pushed-to-third-place-even-at-manoanmanyam-sundaranar-university-seeman-condemns#comments</comments><guid isPermaLink="false">ead63f60-c566-486d-9d35-390dd5ea4ee6</guid><pubDate>Tue, 28 Jul 2026 18:29:12 +0000</pubDate><atom:updated>2026-07-28T18:29:12.274Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,Seeman,தமிழ்த்தாய் வாழ்த்து,MS University</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/5jd0yzhw/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சீமான்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/5jd0yzhw/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதிய பெருமகனார் மனோன்மணியம் சுந்தரனாரின் பெயரிலிருக்கும் பல்கலைக்கழகத்திலேயே தமிழ்த்தாயை அவமதிக்கும் வகையில் நடந்தேறிய இச்செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.</p><p>தமிழ்நாட்டின் பல்கலைக்கழகமொன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பது இத்தனை ஆண்டுகால வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். வந்தே மாதரம் எனும் மதச்சார்பு கொண்டப் பாடலை முதலாவதாக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் இடத்துக்குத் தள்ளியிருப்பது தமிழுக்கும், தமிழர்களுக்கும் நேர்ந்த பெரும் அவமானமாகும். கவர்னர் அர்லேகர் அழுத்தத்தின் பெயரில் இவ்வாறு நடக்கவிருக்கிறது என்பதைத் துணைவேந்தர் சந்திரசேகர் வாயிலாக முன்பே அறிந்தும்கூட, அதற்கு எவ்வித எதிர்வினையுமாற்றாது கள்ளமௌனம் சாதித்து வேடிக்கைப் பார்க்கும் தவெக அரசின் அணுகுமுறை கையாலாகாத்தனத்தின் உச்சமாகும்.</p><p>கொள்கை எதிரியென மேடையில் அறிவித்துவிட்டு, பாஜக எதிர்ப்பையே முழுமையாக மறந்துபோய், மத்திய அரசிடம் சரணாகதி அடைந்துவிட்ட முதல்வர் விஜய், தமிழ்நாட்டில் இதுநாள்வரைப் பின்பற்றப்பட்டு வரும் மரபுகளையும், போராடிப் பெற்ற உரிமைகளையும் மொத்தமாய் தாரைவார்ப்பது தமிழ்நாட்டுக்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும். இதனை வன்மையாக எதிர்க்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தவெக ஆட்சியில் மக்களுக்குப் பாதுகாப்பு எங்கே? - நயினார் நாகேந்திரன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/where-is-public-safety-under-dmk-rule-nainar-nagendran-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/where-is-public-safety-under-dmk-rule-nainar-nagendran-asks#comments</comments><guid isPermaLink="false">4fa099d7-7439-4912-a826-d4737d00f4fa</guid><pubDate>Tue, 28 Jul 2026 17:50:24 +0000</pubDate><atom:updated>2026-07-28T17:50:24.811Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,நயினார் நாகேந்திரன்,Chennai Central,சென்னை சென்டிரல்,Nainar Nagenthran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/3312gd0m/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/3312gd0m/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே, பட்டப்பகலில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இருவர் மீது 15 பேர் கொண்ட போதை கும்பல் பட்டாக்கத்திகளால் சரமாரியாக வெட்டி வெறியாட்டம் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. பொதுமக்களும் வியாபாரிகளும் அதிகம் கூடும் சென்னை மாநகரின் மையப்பகுதியிலேயே அரங்கேறியுள்ள இந்தத் தாக்குதலால், மக்கள் தங்களின் உயிருக்கு அஞ்சி அலறியடித்து ஓடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.</p><p>மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தையும் வன்முறையையும் கட்டுப்படுத்தத் தவறிய தவெக அரசின் நிர்வாகத் தோல்வியே இத்தகைய சம்பவங்களுக்குக் காரணமாகும். </p><p>எனவே, பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ள அந்த 15 பேர் கொண்ட வன்முறைக் கும்பலை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். கல்லூரி வளாகங்கள், ரெயில் மற்றும் மெட்ரோ நிலையங்களில் நிரந்தரப் பாதுகாப்பு அளிப்பதோடு, போதைப்பொருள் புழக்கத்தையும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில், தவெக அரசுக்கு எதிராகப் பா.ஜ.க சார்பில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>காஞ்சிபுரம்: 5 மாத கர்ப்பிணி கழுத்தை நெரித்துக்கொலை - கணவருக்கு போலீசார் வலைவீச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kanchipuram-5-month-pregnant-wife-killed-police-hunt-home-guard-husband</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kanchipuram-5-month-pregnant-wife-killed-police-hunt-home-guard-husband#comments</comments><guid isPermaLink="false">d9f2e430-6056-491e-95d6-37f3bf34953f</guid><pubDate>Tue, 28 Jul 2026 17:43:42 +0000</pubDate><atom:updated>2026-07-28T17:43:42.893Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கணவர்,husband,Home Guard,ஊர்க்காவல் படை,Kanchipuram,காஞ்சிபுரம்,pregnant woman,கர்ப்பிணி,கொலை Murder</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/jbxtn1gm/pregant.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கர்ப்பிணி மனைவியை கழுத்தை நெரித்துக்கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/jbxtn1gm/pregant.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>காஞ்சிபுரம்,</p><p>காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரம் அருகே குடும்பத் தகராறில் 5 மாத <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D">கர்ப்பிணி பெண்</a> கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><h2>5 மாத கர்ப்பிணி</h2><p>காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரம் பகுதியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 28). இவர் ஊர்க்காவல் படையில் வீரராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் சோனியா (28) என்ற பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. தற்போது சோனியா 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.</p><h2>கழுத்தை நெரித்து கொலை</h2><p> இந்த நிலையில், கணவன், மனைவி இடையே திடீரென குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சோமசுந்தரம், தனது மனைவி சோனியா என்றும் பாராமல் அவரது <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">கழுத்தை நெரித்து கொலை</a> செய்தார். பின்னர் அங்கிருந்து அவர் தப்பியோடி தலைமறைவாகிவிட்டார்.  </p><p>இதுகுறித்து தகவல் அறிந்த உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோனியாவின் உடலைக் கைப்பற்றினர். பின்னர் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.</p><h2>போலீசார் வலைவீச்சு</h2><p> இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய ஊர்க்காவல் படை வீரர் சோமசுந்தரத்தை தீவிரமாக தேடி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 9 இடங்களில் இன்று வெயில் சதம்..!</title><link>https://www.dailythanthi.com/news/weather/heatwave-in-nine-tamil-nadu-locations-today</link><comments>https://www.dailythanthi.com/news/weather/heatwave-in-nine-tamil-nadu-locations-today#comments</comments><guid isPermaLink="false">e8c0bb8a-8bef-4513-bd95-f62d62bf06b7</guid><pubDate>Tue, 28 Jul 2026 17:25:04 +0000</pubDate><atom:updated>2026-07-28T17:25:04.476Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Weather,வானிலை,வெயில்,heat,வானிலை தகவல்,அதிக வெப்பம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/p6p5j36d/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ வெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/p6p5j36d/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்தாலும், பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 9 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p>அதன்படி தமிழகத்தில் இன்று அதிகமாக வெப்பநிலை பதிவான இடங்கள் வருமாறு:</p><p>மதுரை விமான நிலையம் - 104.36° பாரன்ஹீட் (40.2° செல்சியஸ்)</p><p>மதுரை நகரம் - 102.92° பாரன்ஹீட் (39.4° செல்சியஸ்)</p><p>திருச்சி - 102.38° பாரன்ஹீட் (39.1° செல்சியஸ்)</p><p>சென்னை நுங்கம்பாக்கம் - 101.84° பாரன்ஹீட் (38.8° செல்சியஸ்)</p><p>பரங்கிப்பேட்டை - 101.84° பாரன்ஹீட் (38.8° செல்சியஸ்)</p><p>நாகப்பட்டினம் - 101.3° பாரன்ஹீட் (38.5° செல்சியஸ்)</p><p>சென்னை மீனம்பாக்கம் - 100.4° பாரன்ஹீட் (38.0° செல்சியஸ்)</p><p>பாளையங்கோட்டை - 100.4° பாரன்ஹீட் (38.0° செல்சியஸ்)</p><p>வேலூர் - 100.04° பாரன்ஹீட் (37.8° செல்சியஸ்)</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; மக்கள் அச்சப்பட வேண்டாம் - சுகாதாரத்துறை
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/20-people-test-positive-for-corona-in-tamil-nadu-people-should-not-panic-health-department</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/20-people-test-positive-for-corona-in-tamil-nadu-people-should-not-panic-health-department#comments</comments><guid isPermaLink="false">77a0e3d5-29b4-499a-bee4-2efa145e0a95</guid><pubDate>Tue, 28 Jul 2026 17:17:03 +0000</pubDate><atom:updated>2026-07-28T17:17:03.930Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>health department,சுகாதாரத்துறை,Corona Infection,கொரோனா தொற்று</media:keywords><media:content height="542" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/1xodvi5d/tncid.jpg" width="794"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/1xodvi5d/tncid.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>தமிழகத்தில் ஒமைக்ரான் வகை <a href="https://www.dailythanthi.com/">கொரோனா பரவல்</a> உறுதி செய்யப்பட்டு உள்ளது என்றாலும் மக்கள் அச்சப்பட தேவையில்லை என சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.</p><p>தமிழகத்தில் இருந்து கொரோனா பாதித்த 20 பேரின் மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.  இதில், 20 மாதிரிகளிலும் ஆர்.எப்-5 வகை வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>இதுபற்றி தமிழக பொது சுகாதார துறையின் இயக்குநர் சோமசுந்தரம் கூறும்போது, தற்போது தமிழகத்தில் கொரோனாவால் 15 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். பொது மக்கள் காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.</p>  <h2>கூட்டங்களை தவிர்க்க வேண்டும்</h2><p>உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவதுடன், கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.</p><p>65 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் பெரிய கூட்டங்களை தவிர்க்க வேண்டும்.  தற்போது அதிக ஆபத்து உள்ளவர்கள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு முன் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.</p>  <h2>கொரோனா பாதிப்புகள்</h2><p>ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் வழக்கமான கண்காணிப்பும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2026-ம் ஆண்டில் இதுவரை தமிழ்நாட்டில் 335 கொரோனா தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன.</p><p>2025-ம் ஆண்டில் 1,250 பேருக்கும், 2024-ம் ஆண்டில் 990 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இவை அனைத்தும் வழக்கமான கண்காணிப்பு மூலம் கண்டறியப்பட்டவை என்றும் பெரும்பாலானோருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்தன என்றும் சுகாதார துறை தெரிவித்துள்ளது.</p>  <h2>அச்சம் தேவையில்லை</h2><p>தமிழ்நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸ், ஒமைக்ரான் ஆர்.எப்-5 வகை என்பது மரபணு ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸ் அதிக வீரியம் கொண்டதல்ல என்றும் பெரும்பாலானோருக்கு லேசான பாதிப்பையே ஏற்படுத்தும் என்றும் அதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>தருமபுரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/3rd-august-is-a-local-holiday-in-dharmapuri-district</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/3rd-august-is-a-local-holiday-in-dharmapuri-district#comments</comments><guid isPermaLink="false">3245ea7e-46c8-48f5-b465-fb0ed3e40cd8</guid><pubDate>Tue, 28 Jul 2026 16:06:11 +0000</pubDate><atom:updated>2026-07-28T16:06:11.772Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Local Holiday,District Collector,Dharmapuri,உள்ளூர் விடுமுறை,தருமபுரி,ஆடிப்பெருக்கு,மாவட்ட ஆட்சியர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/8mgm51ng/31.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  உள்ளூர் விடுமுறை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/8mgm51ng/31.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தருமபுரி, </p><p>தருமபுரி மாவட்டத்திற்கு வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>உள்ளூர் விடுமுறை</h2><p>ஆடிப்பெருக்கு திருவிழாவை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தருமபுரி மாவட்டம் முழுவதும் ஆகஸ்ட் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்ட் 8-ம் தேதி பணி நாளாக கடைபிடிக்கப்படும் எனவும்  மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.  </p><p>அதன்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் நிறுவனங்களுக்கு ஆகஸ்ட் 3-ம் தேதி உ<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">ள்ளூர் விடுமுறை</a> அறிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வெப்ப பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழ்நாடு புதிய திட்டம்: ரூ.50 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் செங்கோட்டையன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadus-new-plan-to-combat-heatwaves-rs-50-crore-allocated-minister-sengottaiyan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadus-new-plan-to-combat-heatwaves-rs-50-crore-allocated-minister-sengottaiyan#comments</comments><guid isPermaLink="false">3d744a51-3eb0-4d64-9764-aafb58078c92</guid><pubDate>Tue, 28 Jul 2026 14:51:39 +0000</pubDate><atom:updated>2026-07-28T14:51:39.997Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,New plan,ஒதுக்கீடு,அமைச்சர் செங்கோட்டையன்,Minister Sengottaiyan,வெப்ப அபாயம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/g9egx4rh/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் செங்கோட்டையன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/g9egx4rh/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று சென்னை கிண்டியில் "வெப்பத் தாங்கு திறன் கொண்ட தமிழ்நாட்டை நோக்கி" வெப்ப அபாய மேலாண்மை பயிலரங்கினை தொடங்கி வைத்தார்கள்.</p><p>வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் தனது தலைமையுரையில், இந்த அரசு பொறுப்பேற்ற பின், பேரிடர் மேலாண்மையில் முன்னெச்சரிக்கை, ஆயத்தநிலை, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் வசம் முன்கூட்டியே நிதி இருப்பது அவசியமாகும் என்பதை கருத்தில் கொண்டு, ரூ.50 கோடி சுழற்சி நிதியை தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தேவைக்கேற்ப மாவட்ட ஆட்சியர்களுக்கு இந்த நிதி உடனடியாக வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். </p><h2>தன்னார்வலர்கள்</h2><p>மேலும், மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான முன்களப் பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக, 550 ஆப்தா மித்ரா தன்னார்வலர்களும், 6,034 யுவா ஆப்தா மித்ரா தன்னார்வலர்களும் பேரிடர் மேலாண்மையில் தங்களது சிறப்பான பங்களிப்பை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.</p><p>தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனம் ரூ.55 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளதாகவும், இந்நிறுவனம், பேரிடர் மேலாண்மை தொடர்பான பயிற்சி, ஆராய்ச்சி, திறன் மேம்பாடு, கொள்கை ஆதரவு மற்றும் அறிவியல் புதுமைகளுக்கான மாநிலத்தின் தலைமை நிறுவனமாக விளங்கும் எனவும் தெரிவித்தார்.</p><h2>மாநில வெப்ப செயல் திட்டம் - 2026</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு பேரிடர் அபாயக்குறைப்பு முகமை தயாரித்துள்ள தமிழ்நாடு மாநில வெப்ப செயல் திட்டம் - 2026, கடந்த 09.06.2026 அன்று வெளியிடப்பட்டதாகவும், இத்திட்டம் நாட்டிலேயே மிகவும் விரிவான வெப்ப செயல் திட்டங்களில் ஒன்றாகத் திகழ்வதாகவும் தெரிவித்தார்.</p><p>இப்பயிலரங்கில், தமிழ்நாட்டிற்கான விரிவான மாநில வெப்பச்செயல் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாகவும், வெப்பத்தை எதிர்கொள்ளும் திறனுக்கான நிலையான குளிர்விப்பு மற்றும் வெப்பத்தாக்கத்தை ஆற்றுப்படுத்துதல் தொடர்பாகவும், தமிழ்நாட்டில் வெப்பத்தை தாங்கும் திறன் கொண்ட கட்டடங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளை ஏற்படுத்துதல் தொடர்பாகவும், தீவிர வெப்பச்சூழலில் எரிசக்தி அமைப்பின் மீள்திறன் மற்றும் தேவை மேலாண்மை குறித்தும் வல்லுநர்களால் விரிவாக விவாதிக்கப்பட்டது.</p><h2>இந்திய வானிலை ஆய்வு</h2><p>இப்பயிலரங்கில், தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை, இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம், புனே-உடன், நகர்ப்புற வானிலை ஆய்வு, தீவிர வானிலை பகுப்பாய்வு, இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் குறித்த ஆய்வுகள் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதோடு, சென்னையில் பாதிப்புக்குள்ளாகக்கூடிய வார்டுகளில் கடும் வெப்பத்தைச் சமாளிப்பதற்கான ஆயத்த நிலையை வலுப்படுத்தவும், அதன் தாக்கத்தைக் குறைக்கவும், விரிவான திட்ட அறிக்கைகளை தயாரிப்பதற்கான ‘திட்ட மேலாண்மைப் பிரிவை' அமைப்பதற்காகவும், பெருநகர சென்னை மாநகராட்சிக்கும் ‘ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சிலுக்கும்' இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. மேலும், இந்திய வானிலை ஆய்வு மையத்துணை இயக்குநரால் வருடாந்திர <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88">வானிலை</a> அறிக்கை வெளியிடப்பட்டதோடு தினசரி வானிலை முன்னறிவிப்பு குறித்தும் அறிமுகம் செய்யப்பட்டது.</p><h2>பங்கேற்பு</h2><p>இப்பயிலரங்கில், கூடுதல் தலைமைச் செயலாளர் முருகானந்தம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைச் செயலாளர், பழனிசாமி, பொதுப் பணித் துறை அரசுச் செயலாளர்செல்வராஜ், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன், பேரிடர் மேலாண்மை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) காயத்ரி கிருஷ்ணன், தேசிய சுகாதார இயக்கம் இயக்குநர் அனீஷ் சேகர், தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இயக்குநர் ஆஷா அஜித், மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>வங்கி மேலாளரை தாக்கிய விவகாரம்: மு.க. அழகிரியின் மகளிடம் விசாரணை

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bank-manager-assault-case-mk-alagiri-daughter-questioned</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bank-manager-assault-case-mk-alagiri-daughter-questioned#comments</comments><guid isPermaLink="false">3bd0fc40-4c9d-483a-b73c-32820f25ee3b</guid><pubDate>Tue, 28 Jul 2026 14:16:36 +0000</pubDate><atom:updated>2026-07-28T14:16:36.601Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,police,போலீஸ்,SBI,எஸ்.பி.ஐ,மு.க.அழகிரி,கயல்விழி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/ziz5genj/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/ziz5genj/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/">திமுக </a>தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினின் சகோதரர் மு.க. அழகிரி. இவர் திமுக தென்மண்டல அமைப்பு செயலாளராகவும், முன்னாள் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார்.  </p><p>பின்னர் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி தற்போது கட்சியில் இருந்து ஒதுங்கி உள்ளார். மு.க.அழகிரியின் மகள் கயல்விழி. இவருக்கு சென்னை அடையாறில் சொந்தமாக ஒரு கட்டிட வளாகம் உள்ளது. இதில் எஸ்பிஐ வங்கி செயல்பட்டு வருகிறது. </p><p>எஸ்பிஐ வங்கி செயல்படும் கட்டிடத்தின் லிப்ட் செயல்படாததாதால் உரிமையாளரான கயல்விழியிடம் புகார் அளித்துள்ளனர். </p><h2>கயல்விழி தாக்குதல்</h2><p>இது தொடர்பாக கடந்த 25ம் தேதி எஸ்பிஐ வங்கிக்கு வந்த கயல்விழி வங்கி மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், வங்கி மேலாளரின் கன்னத்தில் அறைந்து அவரை தாக்கியுள்ளார். </p><p>இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் கயல்விழி மீது அடையாறு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.</p><h2>விசாரணை</h2><p>இந்நிலையில், வங்கி மேலாளரை தாக்கிய சம்பவத்தில் கயல்விழியிடம் போலீசார் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.  அடையாறு போலீஸ் நிலையத்தில் கயல்விழியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். </p> ]]></content:encoded></item><item><title>
சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் அருகே கல்லூரி மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல்:  3 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/murderous-attack-on-college-students-near-chennai-central-railway-station-3-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/murderous-attack-on-college-students-near-chennai-central-railway-station-3-arrested#comments</comments><guid isPermaLink="false">1f4009ca-ea6b-46d3-99eb-75eaf11817ae</guid><pubDate>Tue, 28 Jul 2026 13:34:46 +0000</pubDate><atom:updated>2026-07-28T13:34:46.316Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Central Railway Station,சென்டிரல் ரெயில் நிலையம்</media:keywords><media:content height="768" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/sh7fwrpo/upael.jpg" width="1366"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/sh7fwrpo/upael.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் அருகே கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.</p><p>சென்னை பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 2 பேர் நேற்று காலை சென்டிரல் ரெயில் நிலையம் அருகே மெட்ரோ சுரங்கப்பாதை வழியாக பூங்கா ரெயில் நிலையம் சென்று கொண்டிருந்தனர்.</p>  <p>அப்போது 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அடங்கிய கும்பல், திடீரென அவர்கள் இருவரையும் வழிமறித்து சரமாரியாக கத்தியால் தாக்கியது.  தலை, கழுத்து, உடல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெட்டு காயத்துடன் 2 மாணவர்களும் கீழே மயங்கி விழுந்தனர்.</p><p>இதனை பார்த்த பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். ரத்தகாயங்களுடன் கிடந்த 2 மாணவர்களையும் பெரியமேடு போலீசார் மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p>  <h2>3 பேர் கைது</h2><p>இதுகுறித்து பெரியமேடு போலீசார் விசாரணை நடத்தினர். மாணவர்கள் மோதலில் காயம் அடைந்த ஒரு மாணவரின் பெயர் நிதீஷ்குமார் (வயது 19) இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மற்றொரு மாணவர் பெயர் ஹேமந்த் குமார் (வயது 17) முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.</p><p>இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சரத்குமார், பிரகதீஷ், புவனேஸ்வரன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  இவர்கள் 3 பேரும், தாக்கப்பட்ட மாணவர்கள் படித்த அதே கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் என்றும் ரூட் தல விவகாரத்தில், யார் பெரிய நபர் என்பது தொடர்பாக இந்த சம்பவம் நடந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.</p><p>இந்த தாக்குதலில் தொடர்புடைய மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.  எனினும், மாணவர்களின் இந்த மோதலுக்கான உண்மையான காரணம் என்ன? என்பது பற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>காவிரி விவகாரம்: மத்திய அமைச்சரின் பதிலை திரும்பப் பெற வேண்டும் - சிபிஐ(எம்) வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-issue-union-ministers-response-should-be-withdrawn-cpim-insists</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-issue-union-ministers-response-should-be-withdrawn-cpim-insists#comments</comments><guid isPermaLink="false">726394d2-0d2b-4595-b3e9-f03ed284293a</guid><pubDate>Tue, 28 Jul 2026 13:31:21 +0000</pubDate><atom:updated>2026-07-28T13:31:21.909Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,வலியுறுத்தல்,Union Minister,CPI(M),Cauvery issue,காவிரி டெல்டா பாசனம்,சிபிஐ(எம்)</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/w139z362/30.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/w139z362/30.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகாவிற்கு தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லை என மாநிலங்களவையில் மத்திய நீர்வளத்துறை இணை மந்திரி அளித்துள்ள பதில் தமிழ்நாடு முழுவதுமுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><h2>பாராளுமன்றம்</h2><p>காவிரி பாசன உரிமையை பாதுகாக்கவும், மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக மாநில அரசின் அடாவடித்தனத்தை எதிர்த்தும் போராட வேண்டிய நிலையில் அன்புமணி ராமதாஸ் அவர்கள் இத்தகைய கேள்வியை பாராளுமன்றத்தில் எழுப்பியிருக்க வேண்டிய அவசியமில்லை.</p><p>பன்மாநில நதிகள் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் தன்னிச்சையாக மேல் பகுதி பாசன பகுதியினர் முடிவெடுக்கக்கூடாது என்பது சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள விதிமுறை. இதை அறியாதவரல்ல மத்திய இணைய மந்திரி. ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டு நலனுக்கு விரோதமாக நடந்து கொள்வதன் தொடர்ச்சியே விளைவுகள் குறித்து கவலைப்படாமல் பாராளுமன்றத்தில் அளித்துள்ள பதில் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டுகிறது.</p><h2>மேகதாது அணை</h2><p>நடுவர்மன்ற தீர்ப்பு, காவிரி பிரச்சனை தொடர்பாக சுப்ரீம் கோர்ட் இறுதி தீர்ப்பின் அடிப்படையில் மாதவாரியாக தமிழகத்திற்கு உரிய தண்ணீரை கர்நாடக மாநில அரசு இதுவரை வழங்கியதில்லை. மாறாக, அபரிமிதமான மழை பெய்து உபரி நீரை திறந்து விடும் வடிகாலாகத்தான் தமிழ்நாட்டை பயன்படுத்தி வருகிறது. இந்த நிலையில், மேகதாது அணை கட்டினால், தமிழ்நாட்டிற்குரிய தண்ணீர் கிடைக்காமல் பாலைவனமாகும் ஆபத்தை மறுக்க முடியாது. இதனால் குடிதண்ணீர் மற்றும் பாசனத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை தமிழ்நாடு எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும். காவிரி நடுவர் மன்ற உத்தரவின் அனைத்து அம்சங்களையும் சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு உட்படுத்தவில்லை என்பதையும் குறிப்பாக, நீர்ப்பங்கீட்டு அளவுகுறித்தே கர்நாடகாவின் கோரிக்கையை பரிசீலித்து தீர்ப்பு வழங்கியது என்பதையும் கவனப்படுத்துகிறோம்.</p><h2>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி</h2><p>எனவே, மத்திய இணைய மந்திரி பாராளுமன்றத்தில் நதிநீர் பிரச்சனைகள் தொடர்பாக தெரிவித்துள்ள பதிலை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட கீழ் பகுதி பாசன மாநிலங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மத்திய அரசை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்</a> மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.</p><h2>கண்டன ஆர்ப்பாட்டம்</h2><p>தமிழ்நாட்டின் பாசன உரிமையைப் பாதுகாக்கவும், மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சிக்கு சாதகமாக செயல்படும் மத்திய பாஜக அரசின் போக்கைக்கண்டித்தும் 2026 ஆகஸ்ட் 2-ந் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.</p>]]></content:encoded></item><item><title>யார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம் - தவெக

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/whoever-blocks-tamil-gets-first-place-tvk</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/whoever-blocks-tamil-gets-first-place-tvk#comments</comments><guid isPermaLink="false">6092bae1-5106-4ce5-8ace-002be066e1b4</guid><pubDate>Tue, 28 Jul 2026 13:26:32 +0000</pubDate><atom:updated>2026-07-28T13:26:32.587Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Governor,கவர்னர்,தமிழ்த்தாய் வாழ்த்து,Tamil Thai Vazhthu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/4q98epeq/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/4q98epeq/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[   <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/">நெல்லை </a>மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மாணவ - மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்.</p><h2>தமிழ்தாய் வாழ்த்து</h2><p>இதனிடையே, இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3வது இடத்தில் பாடப்பட்டது. வந்தே மாதரம், தேசிய கீதத்திற்கு அடுத்து 3வதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.</p><h2>தவெக கண்டனம்</h2><p>இந்நிலையில், தாய்மொழியை 3வது இடத்திற்கு தள்ளுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ளமாட்டோம் என்று தவெக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தவெக வெளியிட்ட எக்ஸ் பதிவில்,</p><p>நமது மனசாட்சி உள்ள மக்களாட்சியில் யார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கு முதலிடமே இருக்கும். எம் தாய்மொழியை மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம்.அதற்குக் காரணமாக ஒன்றிய பா.ஜ.க. அரசாக இருந்தாலும் சரி அல்லது ஆளுநராக இருந்தாலும் சரி கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்கிறோம்.  </p><p>எங்கள் நிலத்தில் எங்கள் மொழிக்கே முன்னுரிமை. இதை உறுதியாக நாம் நிலைநாட்டுவோம். சட்ட முன்னெடுப்புத் தேவை எனில், அதற்கும் தயாராகவே இருக்கிறோம்.</p><p>இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>நாகர்கோவில் - கோவை, ராமேஸ்வரம் - திருப்பதி, ராமேஸ்வரம் - கன்னியாகுமரி ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-coaches-to-be-added-to-nagercoil-coimbatore-rameswaram-tirupati-rameswaram-kanyakumari-trains</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-coaches-to-be-added-to-nagercoil-coimbatore-rameswaram-tirupati-rameswaram-kanyakumari-trains#comments</comments><guid isPermaLink="false">586671b6-e02f-4bfb-ad5f-68bc968c5bce</guid><pubDate>Tue, 28 Jul 2026 12:51:34 +0000</pubDate><atom:updated>2026-07-28T12:51:34.011Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,கன்னியாகுமரி,சென்னை,Additional Coaches,Rameswaram,நாகர்கோவில்,Tirupati,திருப்பதி,Kanyakumari,ராமேஸ்வரம்,ரெயில்train,கூடுதல் பெட்டிகள் இணைப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/dw0er80b/29.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/dw0er80b/29.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பயணிகள் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு நாகர்கோவில் - கோவை, ராமேஸ்வரம் - திருப்பதி, ராமேஸ்வரம் - கன்னியாகுமரி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">ரெயில்களில் கூடுதல் பெட்டிகள்</a> இணைக்கப்படுகின்றன. </p><p>இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><h2>நாகர்கோவில் - கோவை</h2><p>நாகர்கோவில் - கோவை இடையே இயக்கப்படும் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகஸ்டு 1-ந் தேதி முதல் செப்டம்பர் 29-ந் தேதி வரை கூடுதலாக ஒரு முன்பதிவு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்படுகிறது. </p><h2>ராமேஸ்வரம் - திருப்பதி</h2><p>இதேபோல், ராமேஸ்வரம் - திருப்பதி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஆகஸ்டு 2-ந் தேதி முதல் செப்டம்பர் 29-ந் தேதி வரை கூடுதலாக ஒரு 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி இணைக்கப்படுகிறது. </p><h2>ராமேஸ்வரம் - கன்னியாகுமரி</h2><p>மேலும், ராமேஸ்வரம் - கன்னியாகுமரி இடையே இயக்கப்படும் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஆகஸ்டு 1-ந் தேதி முதல் செப்டம்பர் 29-ந் தேதி வரை கூடுதலாக ஒரு 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி இணைக்கப்படுகிறது.</p><h2>சென்டிரல் - திருப்பதி</h2><p>இதேபோல், சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் - திருப்பதி இடையே இயக்கப்படும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஆகஸ்டு 1-ந் தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை கூடுதலாக ஒரு முன்பதிவு இருக்கை வசதி பெட்டி இணைக்கப்படுகிறது. </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>
சென்னை விமான நிலையத்தில் சர்வதேச முனையத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் பரிதவிப்பு

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/hundreds-of-passengers-stranded-at-chennai-international-terminal</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/hundreds-of-passengers-stranded-at-chennai-international-terminal#comments</comments><guid isPermaLink="false">3d1e063a-a470-493d-8445-15e8c076b98b</guid><pubDate>Tue, 28 Jul 2026 12:39:37 +0000</pubDate><atom:updated>2026-07-28T12:39:37.488Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,airport,விமான நிலையம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/waept2zb/ctoia.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ai image]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/waept2zb/ctoia.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>சென்னை விமான நிலையத்தில் சர்வதேச முனையத்தில் நுழைவு வாயில்கள் திறக்கப்படாமல், நூற்றுக்கணக்கான பயணிகள் பரிதவித்த சம்பவம் ஏற்பட்டு உள்ளது.</p><p>சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனையத்தில் 12 நுழைவு வாயில்கள் உள்ளன.  அவற்றில் 10 வாயில்களில், இருபுறமும் பயணிகள் உள்ளே செல்ல முடியும்.  இந்த நிலையில், 5, 8, 9 மற்றும் 10 உள்ளிட்ட முக்கிய <a href="https://www.dailythanthi.com/">நுழைவு வாயில்கள்</a> மூடப்பட்டு இருந்துள்ளன.</p><p>இதனால், இன்று அதிகாலை 5 மணி முதல் முற்பகல் 11 மணிவரை பயணிகள் உள்ளே செல்ல முடியாமல் தவித்தனர்.  விமானம் புறப்படுவதற்கு 3 மணிநேரத்திற்கு முன்பு விமான முனையத்திற்குள் செல்ல பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்.</p>  <h2>நீண்ட வரிசை</h2><p>ஆனால், குறைந்த அளவிலான நுழைவு வாயில்களே திறக்கப்பட்டு இருந்தன.  இதனால், நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருந்தனர்.  விமான முனைய கட்டிடத்திற்குள் நுழைவதற்கே ஒரு மணிநேரம் வரிசையில் நிற்க வேண்டி இருந்தது என பயணிகள் பலர் வேதனை தெரிவித்தனர்.</p>  <h2>இ-விசா</h2><p>இதனால், கடும் நெருக்கடிக்கு மத்தியில் பல்வேறு சோதனைகளை முடித்து கொண்டு, உள்ளே செல்வதில் சிக்கல் ஏற்பட்டு, நூற்றுக்கணக்கான பயணிகள் பரிதவித்தனர்.  அதிலும், இ-விசா வைத்திருப்பவர்கள் கூடுதல் சோதனைகளை முடித்து கொண்டு செல்வதற்கு முன்பு விமானம் கிளம்பி விடுமோ என்ற அச்சத்திலும், மனஅழுத்தத்திலும் இருந்தனர்.</p><p>இதனால் லண்டன், துபாய், சிங்கப்பூர், மியான்மர் மற்றும் தோஹா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டியவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.</p> ]]></content:encoded></item><item><title>அடவிநயினார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-orders-to-release-water-from-adavinayanar-dam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-orders-to-release-water-from-adavinayanar-dam#comments</comments><guid isPermaLink="false">4170af6d-8516-42b2-8071-ea233262a81d</guid><pubDate>Tue, 28 Jul 2026 12:34:00 +0000</pubDate><atom:updated>2026-07-28T12:34:00.340Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Tamil Nadu Government,order,water,Adavinayanar dam-அடவிநயினார் அணை,தமிழக அரசு உத்தரவு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/xk5czp3e/28.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அடவிநயினார் அணை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/xk5czp3e/28.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அடவிநயினார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவு  தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக நீர்வளத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>உத்தரவு</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிற்கிணங்க, தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், மேக்கரை கிராமத்தில் உள்ள <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">அடவிநயினார்கோவில்</a> நீர்த்தேக்கத்தின் கீழ் பாசனம் பெறும் மேட்டுக்கால், கரிசல்கால்வாய், பண்பொழிகால்வாய், வல்லாக்குளம்கால்வாய், இலத்தூர்கால்வாய், நயினாரகரம்கால்வாய், கிளங்காடுகால்வாய், கம்பிளிகால்வாய், புங்கன்கால்வாய் மற்றும் சாம்பவர்வடகரை கால்வாய் ஆகியவற்றின் நேரடிப் பாசன நிலங்களுக்கு 29.07.2026 முதல் 31.10.2026 வரை 95 நாட்களுக்கு அடவிநயினார்கோவில் நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 60 கன அடி வீதம் 268.43 மில்லியன் கன அடிக்கு மிகாமல் நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.</p><p>இதன் மூலம் தென்காசி மாவட்டம், செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் வட்டத்தில் உள்ள 2147.47 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை மருந்து குடோனில் பயங்கர தீ விபத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/massive-fire-at-a-medicine-warehouse-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/massive-fire-at-a-medicine-warehouse-in-chennai#comments</comments><guid isPermaLink="false">c599ae2b-bf7e-4b6f-88ab-33f3506517f5</guid><pubDate>Tue, 28 Jul 2026 12:32:05 +0000</pubDate><atom:updated>2026-07-28T12:32:05.132Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Fire accident,தீ விபத்து,Medicine,தீயணைப்பு படையினர்,மருந்துக்கடை</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/hzhybwzg/38.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ மருந்து குடோன்]]></media:title><media:description type="html"><![CDATA[ மருந்து குடோனில் எரியும் தீயை தீயணைப்பு படையினர் அணைக்கும் காட்சி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/hzhybwzg/38.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை</a> மேற்கு மாம்பலம் பகுதியில் உள்ள தனியார் மருந்து குடோனில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. </p><h2>தீ விபத்து </h2><p>சென்னை மேற்கு மாம்பலம், ஷாமளா வதனா தெருவில் ஒரு தனியார் மருந்து குடோன் இயங்கி வருகிறது. இன்று வழக்கம் போல் ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது  குடோனின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மருந்துகள்</a> மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் அங்கு இருந்ததால், தீ சில நிமிடங்களிலேயே குடோன் முழுவதும் வேகமாகப் பரவியது.</p><h2>தீயணைப்புப் படையினர் நடவடிக்கை</h2><p>விபத்து குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் மற்றும் வீரர்கள், தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். குடோனுக்குள் இருந்து கரும்புகை வெளியேறுவதால், தீயணைப்பு வீரர்கள் முகமூடி அணிந்து உள்ளே சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><h2>சேதங்கள்</h2><p>முதற்கட்ட தகவல்களின்படி, இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. எனினும், குடோனில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தீயில் எரிந்து கருகி சாம்பலாகின.</p><p>அப்பகுதியில் உள்ள குறுகலான தெருக்கள் காரணமாக தீயணைப்பு வாகனங்கள் உள்ளே நுழைவதில் சற்று சிரமம் ஏற்பட்டன. இந்த தீ விபத்து குறித்து உள்ளூர் போலீசார் மற்றும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தீயணைப்பு துறையினர்</a> மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாமோ என்ற பல கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும், அடர்ந்த புகையும் சூழ்ந்து காணப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-that-will-experience-power-outages-tomorrow-5</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-that-will-experience-power-outages-tomorrow-5#comments</comments><guid isPermaLink="false">4e990e42-c58a-4485-b458-f6c22d3aa037</guid><pubDate>Tue, 28 Jul 2026 12:00:07 +0000</pubDate><atom:updated>2026-07-28T12:00:07.462Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,தாம்பரம்,மின் தடை,கும்மிடிப்பூண்டி,maintenance work,பராமரிப்பு பணி,power cut,வேளச்சேரி,பல்லாவரம்,திருமுல்லைவாயல்,மேடவாக்கம்,அண்ணாசாலை,கொட்டிவாக்கம்,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/ft17zleh/27.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  மின் தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/ft17zleh/27.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு மின் பகிர்மானக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>சென்னையில் 30.07.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மின் விநியோகம்</a> நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><h2>மின் தடை ஏற்படம் இடங்கள்</h2><p><strong>தாம்பரம்:</strong> நியூ ஸ்டேட் பாங்க் காலனி, கக்கன் தெரு, லோகநாதன் தெரு, சர்வீஸ் சாலை, பட்டேல் நகர், ஜி.எஸ்.டி. சாலை, இரும்புலியூர், மங்களாபுரம், கலைஞர் நெடுஞ்சாலை, எஸ்.வி. ராகவன் சாலை, திருவள்ளுவர் தெரு, பாலாஜி தெரு, காந்தி தெரு, சூரத்தம்மன் கோயில் தெரு, மணிமேகலை தெரு, சிலப்பதிகாரம் தெரு, குண்டலகேசி தெரு, பாரதிதாசன் தெரு, நாவலர் தெரு, லட்சுமி தெரு, உமா நகர், டி.கே.சி. தெரு, அம்மன் கோயில் தெரு, வெங்கடசாமி தெரு, மணி தெரு, பாலகிருஷ்ணன் தெரு, கலைவாணி தெரு, கண்ணதாசன் தெரு, அர்ச்சனா நகர், பீர்க்கன்காரணை, ஸ்ரீராம் நகர், ஜாய் நகர், மாணிக்கம் நகர், மாடம்பாக்கம் பிரதான சாலை, ராஜம்மாள் நகர், மாருதி நகர், சதாசிவம் நகர், தேனுபுரீஸ்வரர் கோயில், டெல்லஸ் அவென்யூ, எல்.டி.எஸ். அவென்யூ, சாந்தா நகர், அன்னை அருள் பள்ளி, மணவாள நகர், ஜெயேந்திர நகர், ஐயப்பா நகர், பிரசாந்த் காலனி, செந்தில் அவென்யூ, பாக்கியம் நகர், நவநீதம் நகர், வி.ஜி.பி. பொன் நகர், கிருஷ்ணா நகர், பாலாஜி நகர் மற்றும் விரிவாக்கம், பாரத் நகர், வெங்கடாத்ரி நகர், ஏ.எல்.எஸ். கிரீன் லேண்ட், கனகம்மன் கோவில் தெரு.</p><p><strong>மேடவாக்கம்:</strong> மல்லேஸ் மற்றும் கே.ஜி. அபார்ட்மெண்ட், நூக்கம்பாளையம் சாலை, ஆர்.சி. ப்ளாசம் அபார்ட்மெண்ட், நேசமணி நகர், வரதாபுரம், ஏரிக்கரை சாலை.</p><p><strong>திருமுல்லைவாயல்:</strong> வெள்ளானுர், கொள்ளுமேடு, மகளிர் தொழிற்பேட்டை, கன்னடபாளயம், பொத்தூர் ,அரிக்கமேடு, காட்டூர், லட்சுமிபுரம், பம்மதுகுளம், கோனிமேடு, ஈஸ்வரன் நகர், எல்லம்மன் பேட்டை, காந்தி நகர், டி.எச் .சாலை , எடபாளையம் சாலை,ரெட்ஹில்ஸ்.</p><p><strong>கும்மிடிப்பூண்டி:</strong> சிறுபுழல்பேட்டை, பில்லக்குப்பம், முத்து ரெட்டி கண்டிகை, சூரவாரி கண்டிகை, புது ராஜா கண்டிகை, ஐயர் கண்டிகை, பார்த்தபாளையம், கல்லூர், எருக்குவாய், ராமச்சேரி கண்டிகை, எல்லையம்மன் நகர், புதுப்பேட்டை.</p><p><strong>கொட்டிவாக்கம்:</strong> ஜர்னலிஸ்ட் காலனி, லட்சுமண பெருமாள் நகர் 1 வது முதல் 6வது தெரு வரை, ராஜா கார்டன், ராஜாகல்யாணி தெரு, குப்பம் சாலை, நியூ காலனி 1 வது முதல் 3வது தெரு வரை, கற்பகாம்பாள் நகர் 1 வது முதல் 3வது தெரு வரை, ஸ்ரீனிவாசபுரம் 1 வது மற்றும் 2வது தெரு, நஜீமா அவென்யூ, இ.சி.ஆர். பிரதான சாலை, திருவள்ளுவர் நகர் 39 வது முதல் 43வது குறுக்குத் தெரு வரை, திருவள்ளுவர் நகர் 2 வது மற்றும் 7வது பிரதான சாலை, காவேரி நகர் 1 வது முதல் 6வது தெரு வரை, பேவாட்ச் புல்வர்டு, வள்ளலார் நகர், கொட்டிவாக்கம் குப்பம் 1வது தெரு, வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள், தென்றல் H43 முதல் H50 வரை, முல்லை H70 முதல் H78 வரை அடுக்குமாடி குடியிருப்புகள்.</p><p><strong>பல்லாவரம்:</strong> ராஜீவ் காந்தி நகர், யாதவாள் தெரு, மகாவீர் சாலை, சுபம் நகர், அம்மன் நகர்.</p><p><strong>வேளச்சேரி:</strong> விஜயா நகர் 1வது பிரதான சாலை, கோல்டன் அவென்யூ, எம்.ஜி.ஆர். நகர் 10 வது முதல் 13வது தெரு, சி.டி.இ.எஸ், வெங்கடேஸ்வரா நகர் 6வது தெரு, தேவி கருமாரியம்மன் நகர், சக்திபவுனாம்பாள் தெரு.</p><p><strong>அண்ணாசாலை:</strong> பங்காரு நாய்க்கன் தெரு, குப்பமுத்து தெரு, ஜான் முகமது தெரு, லத்தூராம் தெரு, சையத் அப்துல்லா தெரு, சையத் நூர் தெரு, அப்துல் காதர் தெரு, புராசாகிப் தெரு, பூபேகம் தெரு, வெங்கடேசன் 1வது, 2வது தெரு, ரஜாஐதர் தெரு, அமீருனிசா பேகம் தெரு, குலாம் மொய்தீன் தெரு, குமாரசாமி தெரு, குருசாமி தெரு, மாருசாகிப் தெரு, திருவல்லிக்கேனி தெரு, சுவாமி சிவானந்தா சாலை, எல்லீஸ் ரோடு, வாலாஜா ரோடு, அப்பாவு தெரு, பச்சையப்பன் தெரு, பாலமுத்து தெரு, யுன்னீஸ் சாலி மெயின் தெரு, யுன்னீஸ் சாலி 1 வது முதல் 7 வது லேன், திப்பு சாகிப் தெரு, நல்லதம்பி தெரு, முக்தரனிஸா தெரு, காமராஜர் சாலை, நேப்பியார் பாலம் முதல் பிரஸிடென்ஸி கல்லூரி வரை, தாயார்சாகிப் தெரு மற்றும் லேன், ஔலியா சாகிப் தெரு மற்றும் லேன், பாரதி சாலை, பைகிராப்ட்ஸ் சாலை, வி.ஆர். பிள்ளை தெரு, அனுமந்தராயன் தெரு, கற்பூரகன்னியம்மன் கோயில் 1 வது முதல் 4வது தெரு, விக்டோரியா ஹாஸ்டல் சாலை, அக்பர் சாகிப் தெரு, சைடோஜி தெரு, பெல்ஸ் சாலை.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சேலம்:  ஆகஸ்டு 3-ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-local-holiday-august-3-announced</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-local-holiday-august-3-announced#comments</comments><guid isPermaLink="false">f8e1d667-2291-44e6-a424-e1cc40f38ac7</guid><pubDate>Tue, 28 Jul 2026 11:51:02 +0000</pubDate><atom:updated>2026-07-28T11:51:02.010Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,Local Holiday,சேலம்,உள்ளூர் விடுமுறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/sdo3e6g2/sdcah.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/sdo3e6g2/sdcah.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சேலம்</p><p>சேலம் மாவட்டத்திற்கு வருகிற ஆகஸ்டு 3-ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.</p>  <h2>உள்ளூர் விடுமுறை</h2><p>இந்திய விடுதலை போராட்டத்தில் பங்கு பெற்ற தீரன் சின்னமலையின் நினைவு நாள் வருகிற ஆகஸ்டு 3-ந்தேதி அனுசரிக்கப்படுகிறது.  இதேபோன்று ஆடிப்பெருக்கு விழாவும் வருகிறது.  இதனை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கு வருகிற ஆகஸ்டு 3-ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.</p><p>இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில், ஆகஸ்டு 22-ந்தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p>  <h2>ஆடிப்பெருவிழா</h2><p>இதேபோன்று, சேலம் மாநகரில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. சேலம் மாநகரில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களுக்கும் தாய் கோவிலாக கோட்டை மாரியம்மன் கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு 22 நாட்கள் ஆடிப்பெருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.</p><p>அந்த வகையில், இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 21-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின்போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலில் பொங்கல் வைத்து மாவிளக்கு போட்டு அம்மனை வழிபடுவார்கள். இதை தவிர உருளுதண்டம் போட்டும், அக்னி கரகம் எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.</p>  <h2>கலெக்டர் அறிவிப்பு</h2><p>கோவில் திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கு ஆகஸ்டு 5-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது என கலெக்டர் இளம்பகவத் அறிவித்து உள்ளார். அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.</p><p>அதேநேரம் மாவட்ட மற்றும் சார்நிலை கருவூலங்கள், குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும். உள்ளூர் விடுமுறைக்கு மாற்றாக, அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லுாரிகள் ஆகஸ்டு 8-ந்தேதி பணி நாளாக செயல்படும் என மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மேகதாது அணை விவகாரத்தில் மத்திய மந்திரி பதிலுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/edappadi-palaniswami-condemns-union-ministers-response-on-mekedatu-dam-issue</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/edappadi-palaniswami-condemns-union-ministers-response-on-mekedatu-dam-issue#comments</comments><guid isPermaLink="false">f9798c5d-3ad5-41c9-9f47-1786b28f9c39</guid><pubDate>Tue, 28 Jul 2026 11:44:01 +0000</pubDate><atom:updated>2026-07-28T11:44:01.616Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,அதிமுக,Edappadi Palaniswami,சென்னை,condemns,மேகதாது அணை திட்டம்,Mekedatu Dam Issue</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/21pluysr/26.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/21pluysr/26.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அதிமுக பொதுசெயலளார் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">எடப்பாடி பழனிசாமி</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>காவிரி நதிநீர் தொடர்பான வழக்கில் 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் நாள் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பில், "காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவிதமான கட்டுமானத்தையும் கர்நாடக அரசு கட்டுவதற்கு தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநில அரசுகளிடம் ஒப்புதல் பெற வேண்டும்" என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்று மத்திய நீர்வளத்துறை இணை மந்திரு நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதில், தமிழக மக்களிடையே மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p><h2>தொடர் நடவடிக்கை</h2><p>காவிரி நதிநீர் தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், டெல்டா மாவட்டங்களின் விவசாயத்திற்கு உயிர்நாடியாகவும் விளங்குகிறது. பல சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா மற்றும் எனது தலைமையிலான அம்மாவின் அரசு எடுத்த தொடர் நடவடிக்கைகளின் காரணமாக, 16.2.2018 அன்று காவிரி நதிநீர் தொடர்பான போற்றத்தக்க இறுதி தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் வழங்கியது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொடர் அழுத்தம் காரணமாக மத்திய அரசு, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் நீர் முறைப்படுத்தும் குழு செயலாக்கத் திட்டத்தை 1.6.2018 அன்று மத்திய அரசிதழில் வெளியிட்டு, அதன்படி தமிழ் நாட்டிற்குரிய பங்கு நீர் பெறப்பட்டு வந்தது. இந்த ஆண்டு கர்நாடக அரசு காவிரியில் நமக்குரிய பங்கு நீரை உரிய காலத்தில் வழங்கத் தவறியதால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பல மாவட்டங்களில் குடிநீருக்கே பாதிப்பு ஏற்பட்டுள்ளது.</p><h2>சுப்ரீம் கோர்ட்</h2><p>பன்மாநில நதிகள் தேசிய சொத்து. எந்த ஒரு மாநிலமும் தனி உரிமை கோர இயலாது என்று 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களின் வாதங்களை முழுமையாகக் கேட்டறிந்த சுப்ரீம் கோர்ட், தனது தீர்ப்பில், ஆற்றின் மேல்புறத்தில் அமைந்துள்ள எந்த ஒரு மாநிலமும், ஆற்றின் கீழ்ப்புறத்தில் உள்ள மாநிலங்களுக்கு திட்டமிடப்பட்டபடி நீர் விநியோகம் செய்யப்படுவதை பாதிக்கும் வகையிலான எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளக்கூடாது' எனத் தெரிவித்துள்ளது. மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்ற நிலைப்பாட்டை எனது தலைமையிலான அம்மாவின் அரசு 25.2.2017, 27.2.2017, 4.9.2018, 8.10.2018 மற்றும் 22.11.2018 ஆகிய நாட்களில், பிரதமருக்கு கடிதங்கள் மூலமாகவும், நேரடியாகவும் வலியுறுத்தினேன். மத்திய நீர்வளத்துறை மந்திரிடமும் இதுகுறித்து வலியுறுத்தப்பட்டது.</p><h2>காவிரி நதிநீர்</h2><p>கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28-ஆவது கூட்டத்தின் விவாதப் பொருளில் மேகதாது அணை விவகாரம் சேர்க்கப்பட்டதை மிகக் கடுமையாகக் கண்டித்தேன். தமிழகத்தை வஞ்சிக்க முயற்சிக்கும் எந்த் பிரச்சனையையும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. 2018-ஆம் ஆண்டு காவிரி நதிநீர் தொடர்பான சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் மிகத் தெளிவாக "காவிரி ஆற்றின் மேல்புறத்தில் அமைந்துள்ள எந்த ஒரு மாநிலமும், ஆற்றின் கீழ்ப்புறத்தில் உள்ள மாநிலங்களுக்கு திட்டமிடப்பட்டபடி நீர் விநியோகம் செய்யப்படுவதை பாதிக்கும் வகையிலான எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது' என்று குறிப்பிட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மத்திய நீர்வளத் துறை இணை மந்திரி பதில், காவிரி நதி பாயும் சம்பந்தப்பட்ட மாநில மக்களிடையே பதட்டத்தை உருவாக்கி உள்ளது.</p><p>காவிரி நதி தமிழகத்தின் ஜீவ நதி. பல ஆண்டுகளாக சட்ட போராட்டங்கள் நடத்திய பின்பு, சுப்ரீம் கோர்ட் ஒரு நல்ல தீர்ப்பை வழங்கியது. இச்சூழ்நிலையில், மத்திய நீர்வளத்துறை இணை மந்திரி மாநிலங்களவையில் அளித்த பதில், தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, இதுபோன்ற முக்கியமான பிரச்சனைகள் குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு மிக பதில் அளிக்கும்போது, சம்பந்தப்பட்ட மாநில மக்களின் உணர்வுகளை மனதில்கொண்டு பதில் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>இன்ஸ்டாவில் ராகுலை முந்திய முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cm-vijay-overtakes-rahul-on-instagram</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cm-vijay-overtakes-rahul-on-instagram#comments</comments><guid isPermaLink="false">68f0037f-b199-4f9e-bb85-78bdc7ae8055</guid><pubDate>Tue, 28 Jul 2026 10:36:44 +0000</pubDate><atom:updated>2026-07-28T10:36:44.787Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,Ragul Gandhi,Instagram,முதல்-அமைச்சர் விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/xmzr1s5p/vijayinsta33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/xmzr1s5p/vijayinsta33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி  பெற்று முதல்-அமைச்சர் ஆன பிறகு இன்ஸ்டாகிராமில் விஜய்யை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.</p><h2>இன்ஸ்டா மோகம்</h2><p>இன்றைய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மத்தியில் இன்ஸ்டாகிராம் மோகம் அதிகமாகவே இருந்து வருகிறது. அதில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பலர் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.</p><p>இதன் மூலமாக பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி பலர் வருவாயும் ஈட்டி வருகிறார்கள். </p><p>இதுபோன்று இன்ஸ்டாகிராம் அதிகம் பயன்படுத்தும் இளம் தலை முறையினர் தங்களுக்கு பிடித்தமான தலைவர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்களையும் பின் தொடர்கிறார்கள்.</p><h2>பிரதமர் மோடி முன்னிலை</h2><p>அந்த வகையில் பிரதமர் மோடி உலக அளவில் இன்ஸ்டா கிராமில் முன்னிலையில் இருந்து வருகிறார். அவரை 10.2 கோடி பேர் பின் தொடர்கிறார்கள். மத்திய மந்திரிகளில் அமித்ஷாவை 3.22 கோடி பேரும், நிதின் கட்கரியை 66 லட்சம் பேரும் பின் தொடர்கிறார்கள்.</p><p>எதிர்கட்சி தலைவரான ராகுல்காந்தியை 1.47 கோடி பேர் பின் தொடர்ந்து வரும் நிலையில் தமிழ்நாடு<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D"> முதல்- அமைச்சர் விஜய் </a>அவரை பின்னுக்கு தள்ளி முன்னிலை பெற்றுள்ளார்.  முதல்-அமைச்சர் விஜய்யை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 1.87 கோடியாக உயர்ந்துள்ளது.</p><p>மஜ்லீஸ் கட்சி தலைவர் ஓவைசியை 1.25 கோடி பேரும், டெல்லி முன்னாள் முதல்-மந்திரி கெஜ்ரிவால் மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை 40 லட்சம் பேரும் பின் தொடரும் நிலையில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும். தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை 23 லட்சம் பேரும் பின் தொடர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.</p><h2>பிரசார களம்</h2><p>இன்ஸ்டாகிராமை பொறுத்தவரையில் இன்று அது மிகப்பெரிய பிரசார களமாகவே மாறியுள்ளது என்று கூறலாம். டெல்லியில் சமீபத்தில் இளைஞர்களை திரட்டி மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் இன்ஸ்டாகிராம், உள்ளிட்ட சமூகவலை தளம் மூலமாகவே மிகப்பெரிய கூட்டத்தை கூட்டினார்கள்.</p><p>த.வெ.க.வினர் பலரும் இன்ஸ்டாகிராம் மூலமாக கட்சியின் செயல்பாடுகள் மற்றும் தமிழக அரசின் திட்டங்கள் ஆகியவற்றை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார்கள். </p><p>இளைஞர்களின் ஆதரவு சட்டமன்ற தேர்தலில் அதிக அளவு கிடைத்ததால் தான் விஜய் முதல்-அமைச்சராக முடிந்தது. அந்த வரிசையில் தான் இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும்  வெகுவாக உயர்ந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மழை வெள்ள முன்னெச்சரிக்கை: அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் தூர்வாரும் பணிகள் தீவிரம் - அமைச்சர் என். ஆனந்த் நேரில் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rain-flood-warning-adyar-buckingham-canal-dredging-work-in-full-swing-minister-n-anand-personally-inspects</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rain-flood-warning-adyar-buckingham-canal-dredging-work-in-full-swing-minister-n-anand-personally-inspects#comments</comments><guid isPermaLink="false">b7a1c03a-bbb2-4772-957e-a4c4a540f7d6</guid><pubDate>Tue, 28 Jul 2026 10:24:11 +0000</pubDate><atom:updated>2026-07-28T10:24:11.501Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,work,inspects,பருவமழை முன்னெச்சரிக்கை,அமைச்சர் என். ஆனந்த்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/o9l79e3h/24.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் என். ஆனந்த்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/o9l79e3h/24.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவுப்படி இன்று காலை 9.00 மணியளவில் சென்னை மாவட்டம், ஆலந்தூர் வட்டம், மணப்பாக்கம் கிராமம் அடையாறு ஆற்றுப்பகுதியினை தூர்வாரி சீரமைக்கும் பணி தொடங்கி வைத்து கள ஆய்வு மேற்கொண்டார். </p><p>அதன் பிறகு காலை 11.00 மணியளவில் சென்னை மாவட்டம், சோழிங்கநல்லூர் வட்டம் சோழிங்கநல்லூர், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையின் இணைப்பு மேம்பாலம் அருகே அமைந்துள்ள தெற்கு பக்கிங்ஹாம் கால்வாயில் தூர்வாரி சீரமைக்கும் பணியை மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D">நீர்வளத்துறை அமைச்சர்</a> என்.ஆனந்த் அவர்கள் கள ஆய்வு செய்து தொடங்கி வைத்தார்கள்.</p><h2>அடையாறு ஆற்றை தூர்வாரி சீரமைக்கும் பணி:</h2><p>அடையாறு ஆறு சென்னை நகரின் மூன்று முக்கிய ஆற்றுப்படுகையில் ஒன்றாகும். அடையாறு ஆறு ஆதனூர் ஏரியில் இருந்து உருவாகி மொத்தம் 42.38கி.மீ நீளத்திற்கு பயணித்து பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் அருகில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. அடையாறு ஆற்றின் நீர்பிடிப்பு பரப்பளவு 808 சதுர.கிமீ ஆகும். மேலும் அடையாறு ஆறு காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஏரிகளிலிருந்தும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீரையும், மழை நீரையும் கடலில் கலக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீர் அடையாறு ஆற்றில் தொலைதூரம் 17.18 கி.மீ கலக்கிறது. பின் அடையாறு ஆறு 17.00 கி.மீ சென்னை மாவட்டத்தில் பாய்ந்து கடலில் கலக்கிறது. பெருநகர சென்னை மாநகராட்சியின் எல்லைக்குள் ஓடும் இந்த ஆற்றில் ஆகாயத்தாமரைகள் மிதவைத் தாவரங்கள் மற்றும் மிதவைப் பொருட்கள் படர்ந்து நீரோட்டத்தை பாதிக்கும் வகையில் உள்ளது.</p><p>நீர்வளத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் இணைந்து தூர்வாரும் பணியை மேற்கொள்வதன் காரணத்தினால், அடையாறு ஆற்றில் விமான நிலைய ஓடுபாதை கீழ் நீரோட்டப்பாதை முதல் திரு.வி.க பாலம் வரை மற்றும் அடையாறு முகத்துவாரத்தில் பணி மேற்கொள்ளப்படுவதால், சென்னை பெருநகர பகுதிகளான மணப்பாக்கம், நந்தம்பாக்கம், கோடம்பாக்கம், ஜாபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் அடையாறு ஆற்றில் மழை மற்றும் வெள்ள நீர் தங்கு தடையின்றி செல்ல வழிவகை ஆகும்.</p><h2>தெற்கு பக்கிங்ஹாம் கால்வாய் தூர்வாரி சீரமைக்கும் பணி</h2><p>பக்கிங்ஹாம் கால்வாய் பழவேற்காடு ஏரியிலிருந்து மரக்காணம் உப்பங்கழினி வரை உள்ளது. 167 கி.மீ நீளமும் 20 முதல் 100 மீட்டர் வரை மாறுபட்ட அகலம் கொண்டுள்ளது. தெற்கு பக்கிங்ஹாம் கால்வாய், அடையாறு ஆற்றின் பகுதியில் இருந்து முட்டுக்காடு முகத்துவாரம் வரை சுமார் 23.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைந்துள்ளது. வெள்ளப்பெருக்கு காலங்களில் இக்கால்வாயில் சுமார் 8000 கன அடி மழைநீரானது ஒக்கியம் மடுவு வழியாக வங்காள விரிகுடாவில் சென்று சங்கமிக்கிறது.</p><p>சோழிங்கநல்லூர் பகுதியில், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலை இணைப்பு மேம்பாலம் அருகில் அமைந்துள்ள தெற்கு பக்கிங்ஹாம் கால்வாயில் அதிக அளவில் ஆகாயத்தாமரை, மிதக்கும் பொருட்கள் மேலே உள்ள பள்ளிக்கரணை மற்றும் ஒக்கியமடுவு போன்ற பகுதிகளில் இருந்து நீரோட்டத்தில் அடித்து வரப்பட்டும், மேலும் அப்பகுதியில் வளர்ந்துள்ள நீர்த்தாவரங்களும் சேர்ந்து அதிக அளவில் காணப்படுகிறது. இது நீரோட்டத்தை கடுமையாக பாதிப்பது மட்டுமின்றி, நீர் கடத்தும் திறனையும் குறைக்கின்றது. இதனால், மழைக்காலங்களில் நீர்த்தேக்கம் ஏற்பட்டு வெள்ள அபாயம் அதிகரிப்பதுடன் பொதுமக்கள் மற்றும் அருகில் உள்ள குடியிருப்புகளும் பாதிப்புக்கு உள்ளாகும். தேவையற்ற நீர்த்தேக்கத்தினால் துர்நாற்றம் மற்றும் கொசு உற்பத்தியாவது மட்டுமின்றி, சுகாதார கேடும் ஏற்படுகின்றது.</p><p>இவற்றை முறையாக தூர்வாரி பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி, மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், பெருநிறுவனப் பங்களிப்பு மற்றும் தன்னார்வலர்களின் பங்கேற்புடன், சோழிங்கநல்லூர் பகுதியில் அமைந்துள்ள, தெற்கு பக்கிங்ஹாம் கால்வாயில் அமைந்துள்ள ஆகாயத்தாமரை, மிதக்கும் பொருட்கள் மற்றும் கழிவுகள் ஆகியவற்றை அகற்றி மழைக்காலங்களில் மழை நீர் தங்கு தடையின்றி சென்று கடலில் கலக்க வழிவகை செய்யப்படவுள்ளது.</p><h2>வெள்ள முன்னெச்சரிக்கை</h2><p>பருவ மழை காலத்திற்கு முன்னர் வெள்ள முன்னெச்சரிக்கை பணியாக, திட்டமிடப்பட்டு முடிக்க தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவுப்படி, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்என்.ஆனந்த் அவர்கள் தூர்வாரும் பணியை கொடியசைத்து தொடங்கி வைத்து, கள ஆய்வு மேற்கொண்டு விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.</p><p>இந்நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் விஜய் பாலாஜி , சோழிங்கநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.சரவணன், ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஹரிஷ், தெற்கு வட்டார துணை ஆணையாளர் ஆஃப்தாப் ரசூல், தலைமைப் பொறியாளர்எம்.ஜானகி, நீர்வளத்துறை பொறியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>நெல்லையில் சக மாணவரை தாக்கிய பிளஸ் 2 மாணவர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/plus-2-student-arrested-for-assaulting-classmate-in-nellai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/plus-2-student-arrested-for-assaulting-classmate-in-nellai#comments</comments><guid isPermaLink="false">27bff284-70cc-4d77-bd02-991352651d0e</guid><pubDate>Tue, 28 Jul 2026 10:17:53 +0000</pubDate><atom:updated>2026-07-28T10:17:53.972Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,police enquiry,student arrested,போலீசார் விசாரணை,மாணவன் கைது</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/yz92xkz5/35.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ நெல்லை]]></media:title><media:description type="html"><![CDATA[ பிளஸ்-2 மாணவரை கட்டையால் அடித்த சக மாணவன் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/yz92xkz5/35.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நெல்லை மாவட்டம்</a> அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ்-2 மாணவனை கட்டையால் தாக்கிய வழக்கில், சக பள்ளி மாணவனை போலீசார் கைது செய்தனர். </p><h2>குடிநீர் பிடிப்பதில் தகராறு </h2><p>நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அரசு மேல்நிலைப்பள்ளி</a> அமைந்துள்ளது. அந்த பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் பட்டியல் இன மாணவர் ஒருவர் நேற்று (திங்கட்கிழமை) பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்கச் சென்றார். அப்போது அங்கிருந்த மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த சக மாணவர் ஒருவருக்கும் இவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. </p><h2>சாதிப் பெயரைச் சொல்லி தாக்குதல்</h2><p>இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அந்த மாணவர் அங்கிருந்த மரக்கட்டையை எடுத்து, பாதிக்கப்பட்ட மாணவரின் தலையின் பின்புறத்தில் பலமாகத் தாக்கினார். மேலும், சாதிப் பெயரைச் சொல்லி வசைபாடிவிட்டு அந்த மாணவர் பள்ளி வளாகத்தில் இருந்து தப்பியோடினார்.</p><p>தலையில் பலத்த காயமடைந்த மாணவரை மீட்ட பள்ளி ஆசிரியர்கள், உடனடியாக சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><h2>போலீசார் அதிரடி நடவடிக்கை</h2><p>பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மூலைக்கரைப்பட்டி போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தனிப்படை அமைத்துத் தேடி வந்த நிலையில், இன்று தலைமறைவாக இருந்த மாணவனை போலீசார்<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> கைது </a>செய்துள்ளனர்.</p><p>கைது செய்யப்பட்ட மாணவரை நெல்லை சிறார் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் நடந்த இந்தச் சாதியத் தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பட்டமளிப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்? - டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் விளக்கம்

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-didnt-he-attend-the-graduation-ceremony-dgp-maheshkumar-aggarwal-explains</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-didnt-he-attend-the-graduation-ceremony-dgp-maheshkumar-aggarwal-explains#comments</comments><guid isPermaLink="false">d28b12a9-e917-4e1b-a379-cb0efe2d83b9</guid><pubDate>Tue, 28 Jul 2026 09:55:25 +0000</pubDate><atom:updated>2026-07-28T09:55:25.929Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>DGP,டிஜிபி,Manonmaniam Sundaranar University,மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/aqysj2pg/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/aqysj2pg/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[   <p>நெல்லை,</p><p><a href="https://www.dailythanthi.com/">நெல்லை </a>மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்துகொண்டார். இந்த விழாவில் 37 ஆயிரத்து 877 பேருக்கு பட்டம் வழங்கப்படுகிறது. விழாவில் 871 பேருக்கு கவர்னர் அர்லேகர் நேரடியாக பட்டங்களை வழங்கினார்.</p><h2>டிஜிபி மகேஷ்குமார்</h2><p> இதனிடையே, தமிழக டிஜிபி மகேஷ்குமார் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கிரிமினாலஜி துறையில் ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற இருந்தார். அவர் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.</p><h2>விளக்கம்</h2><p>இந்நிலையில், பட்டமளிப்பு விழாவில் டிஜிபி மகேஷ்குமார் பங்கேற்கவில்லை. காவல்துறை ஆலோசனை கூட்டம் மற்றும் அலுவலக பணிச்சுமை காரணமாக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கமுடியவில்லை என்று டிஜிபி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. </p><p>அதேவேளை, இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3வது இடத்தில் பாடப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், நெல்லை, கடையம் எம்.எல்.ஏ.க்கள் இந்த விழாவில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  </p> ]]></content:encoded></item></channel></rss>