<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 24 Aug 2026 04:21:35 +0000</lastBuildDate><item><title>10 ஆண்டுகளுக்கு பிறகு வறண்ட ரேலியா அணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rallia-dam-runs-dry-after-10-years</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rallia-dam-runs-dry-after-10-years#comments</comments><guid isPermaLink="false">67b89d62-3843-435f-832c-8fedc2ea9850</guid><pubDate>Mon, 24 Aug 2026 04:09:23 +0000</pubDate><atom:updated>2026-08-24T04:09:23.213Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nilgiris,நீலகிரி,ரேலியா அணை,Rallia Dam</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/p3nbhjw8/8.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/p3nbhjw8/8.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>நீலகிரி மாவட்டம் குன்னூர் நகருக்கு குடிநீர் வழங்கும் ரேலியா அணை 10 ஆண்டுகளுக்கு பிறகு வறண்டு உள்ளது. அணை பகுதியில் தண்ணீரை உறிஞ்சும் யூக லிப்டஸ் மரங்கள் வெட்டி அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.</p><h2>ரேலியா அணை</h2><p>நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளது. இங்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். குன்னூர் நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக ரேலியா அணை உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் இந்த அணை அமைக்கப்பட்டது. தற்போது தென்மேற்கு பருவ மழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் ரேலியா அணையில் நீர் வரத்து குறைந்ததோடு,நீர்மட்டம் வேகமாக சரிய தொடங்கியது.</p><p>மழை பெய்யாததால், தற்போது அணை வறண்டு சேறும், சகதியுமாக காணப்படுகிறது. அணை பகுதியில் பாளம், பாளமாக வெடித்து இருக்கிறது. அணையின் முழு கொள்ளளவான 46.7 அடியில், 10 அடிக்கும் குறைவாக நீர்மட்டம் உள்ளது. இதனால் குன்னூர் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் எமரால்டு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குன்னூர் பகுதிக்கு குடிநீர் வழங்கப்படுவதால், 5 நாட்களுக்கு ஒரு முறை 30 வார்டுகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு ரேலியா அணை வறண்டு சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>வக்கீல்கள் தகுதித்தேர்வு: நீண்ட பயணத்தை தவிர்க்க கூடுதல் மையங்கள் அமைக்க வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/lawyers-qualifying-examination-urge-to-set-up-additional-centers-to-avoid-long-journeys</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/lawyers-qualifying-examination-urge-to-set-up-additional-centers-to-avoid-long-journeys#comments</comments><guid isPermaLink="false">6a925431-5d7b-468e-9ad3-a8d3d50b3a2a</guid><pubDate>Mon, 24 Aug 2026 03:54:11 +0000</pubDate><atom:updated>2026-08-24T03:54:11.875Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>lawyers,Additional,வக்கீல்கள்,தேர்வு மையம்,qualifying examination,கூடுதல்,தகுதித்தேர்வு,Examination Centers</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/q0br5imy/lawyer.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/q0br5imy/lawyer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டப்படிப்பை முடித்து பார் கவுன்சிலில் பதிவு செய்தவர்கள் வக்கீலாக பணியாற்றுவதற்காக இந்திய பார் கவுன்சில் அகில இந்திய வக்கீல்கள் தேர்வை அவ்வப்போது நடத்தி வருகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்தியாவில் உள்ள எந்தவொரு நீதிமன்றத்திலும் வக்கீலாக பணியாற்றும் தகுதியைப் பெறுகிறார்கள். </p><h2>தகுதித்தேர்வு</h2><p>வக்கீல்களுக்கான இந்த தகுதித்தேர்வு நவம்பர் 29-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு தொடங்கிய நிலையில் அக்டோபர் 27-ந் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி ஆகிய 3 நகரங்கள் மட்டுமே தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.</p><h2>நீண்ட தூர பயணம்</h2><p>இத்தேர்வில், அனைத்து மாவட்டங்களை சேர்ந்த இளம் <a href="https://www.dailythanthi.com/topic/lawyers-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">வக்கீல்கள்</a> பங்கேற்கும் நிலையில் தமிழகத்தில் 3 நகரங்களில் மட்டும் தேர்வு மையங்களை அமைத்திருப்பதன் மூலம் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் நீண்ட தூரம் பயணம் செய்து தேர்வு மையங்களுக்கு செல்ல வேண்டியது உள்ளது.</p><h2>கூடுதல் தேர்வு மையங்கள்</h2><p>எனவே, இந்தத் தேர்வை எழுதவிருக்கும் இளம் வக்கீல்களின் நலனைக் கருத்தில் கொண்டு மதுரை, சேலம், நெல்லை, தஞ்சாவூர் மற்றும் வேலூர் போன்ற முக்கிய நகரங்களிலும் கூடுதல் தேர்வு மையங்களை அமைக்க தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர்கள், இந்திய பார் கவுன்சிலிடம் முறையிட்டு, தேர்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பணம் இரட்டிப்பாக தருவதாக ரூ.80 லட்சம் மோசடி... தொழில் அதிபரை கடத்திய 4 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/4-arrested-for-kidnapping-businessman-in-rs-80-lakh-fraud-case-claiming-to-double-the-money</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/4-arrested-for-kidnapping-businessman-in-rs-80-lakh-fraud-case-claiming-to-double-the-money#comments</comments><guid isPermaLink="false">da4d584e-41f2-4453-9ab5-1d947e15d8b8</guid><pubDate>Mon, 24 Aug 2026 03:43:06 +0000</pubDate><atom:updated>2026-08-24T03:43:06.759Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவை,கைது,arrest,மோசடி,money,kidnap,தொழில் அதிபர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/my3mwlvo/111.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/my3mwlvo/111.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவையில் நடந்த கடத்தல் வழக்கில் திடீர் திருப்பமாக ரூ.80 லட்சம் மோசடி செய்ததாக தொழில் அதிபர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.</p><p>மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியை சேர்ந்தவர் தேப்ஜித் ரானா (வயது 25). தொழில் அதிபரான இவர் திருப்பூரில் ஜவுளிக்கடை நடத்தி வருவதாகவும், தனது ஜவுளிக்கடையில் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பாக திரும்ப கொடுப்பதாகவும் அறிவித்து இருந்தார். அதை நம்பி கோவையை சேர்ந்த ஆனந்தகுமார். அவருடைய நண்பர் செந்தில்குமார் உள்பட 10 பேர் தேப்ஜித் ரானாவிடம் ரூ.80 லட்சம் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. </p><p>பணத்தை பெற்றுக்கொண்ட அவர், கூடுதல் லாபமோ அல்லது அவர்கள் முதலீடு செய்த பணத்தையோ திரும்ப கொடுக்கவில்லை என்று தெரிகிறது.</p><h2>வழக்குப்பதிவு</h2><p>இந்த நிலையில் தேப்ஜித் ரானா தனது நண்பர் சித்தார்த், ஆதர்ஷ் குமார் ஆகியோருடன் கோவை வந்தார். பின்னர் கோவையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தார். அதை அறிந்த ஆனந்தகுமார். செந்தில்குமார் உள்பட 10 பேரும் அங்கு சென்றனர். </p><p>பின்னர் தேப்ஜித் ரானா உள்பட 3 பேரையும் காரில் கடத்திச்சென்று ரூ.26 லட்சம் மற்றும் 1 பவுன் நகை ஆகியவற்றை பறித்தனர். இது குறித்து தேப்ஜித் ரானா பீளமேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.</p><h2>மோசடி</h2><p>அதில் தேப்ஜித் ரானா, இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி ரூ.80 லட்சத்தை பெற்றுக்கொண்டு, லாபத்தை கொடுக்க மறுத்ததுடன் முதலீடு செய்த பணத்தையும் கொடுக்காமல் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF">மோசடி </a>செய்ததும், இதனால்தான் ஆனந்தகுமார் உள்பட 10 பேரும் அவரை கடத்தி பணம், நகையை பறித்ததும் தெரியவந்தது. </p><p>எனினும் தேப்ஜித் ரானாவை கடத்தி சென்று பணத்தை பறித்த வழக்கில் திண்டுக்கல்லை சேர்ந்த வினோத் (37). வினோத்குமார் (39), திருச்சியை சேர்ந்த சண்முகராஜ் (44), மயிலாடுதுறையை சேர்ந்த செந்தில்குமார் (45) ஆகிய 4 பேரை பீளமேடு போலீசார் கைது செய்தனர். மீதமுள்ள 6 பேரை தேடி வருகின்றனர். இதற்கிடையே செந்தில்குமார் தான் உள்பட 10 பேரிடம் தேப்ஜித் ரானா, சித்தார்த் சர்மா ஆகியோர் ரூ.80 லட்சத்தை மோசடி செய்துவிட்டதாக ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தனர்.</p><h2>கைது</h2><p>அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேப்ஜித் ரானா, சித்தார்த் சர்மா ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் முகாம்: தொழிலாளர்கள் அச்சம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephants-camp-in-tea-estate-workers-fearful</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephants-camp-in-tea-estate-workers-fearful#comments</comments><guid isPermaLink="false">f3ca55d2-ff68-4317-92e2-edb8d093ac37</guid><pubDate>Mon, 24 Aug 2026 03:40:39 +0000</pubDate><atom:updated>2026-08-24T03:40:39.841Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>காட்டு யானைகள்,Wild elephants,தேயிலை தோட்டம்,Tea Estate</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/l6a1e5bm/7.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/l6a1e5bm/7.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கொலக்கம்பை பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அப்பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களுக்குள் புகுந்து, அங்குள்ள பலா மரங்களில் இருக்கும் பலாப்பழங்களை பறித்து தின்று வருகின்றன. இந்தநிலையில் கொலக்கம்பை, கிளிஞ்சடா பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களுக்குள் 6 காட்டு யானைகள் முகாமிட்டன. இதனால் அப்பகுதி மக்கள், தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். </p><p>இந்த வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையோரம் அல்லது தேயிலை தோட்டங்களில் யானைகளை காணும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி செல்பி மற்றும் புகைப் படம் எடுப்பதற்காக யானைகள் அருகே சென்று சத்தம் எழுப்புவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தகவல் அறிந்த வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>மேலும் அவர்கள், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கவனமுடன் செல்ல வேண்டும் என்றும், யானைகளை பார்த்த உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தலைமைச்செயலாளர் மாற்றமா? அமைச்சர் ஷாஜகான் பதில் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-chief-secretary-be-changed-minister-shahjahan-responds</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-chief-secretary-be-changed-minister-shahjahan-responds#comments</comments><guid isPermaLink="false">03da8133-b8f8-4e75-9aa5-2b33cd759bc0</guid><pubDate>Mon, 24 Aug 2026 03:39:47 +0000</pubDate><atom:updated>2026-08-24T03:39:47.419Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,விஜய்,தலைமைச்செயலாளர்,அமைச்சர் ஷாஜகான்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/4wbhtci2/shaa33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
தலைமைச்செயலாளர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ஷாஜகான் பதில் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/4wbhtci2/shaa33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர், </p><p>தலைமைச் செயலாளர் மாற்றம் பற்றி முதல்-அமைச்சர் ஆய்வு செய்து, முடிவு எடுப்பார் என அமைச்சர் ஷாஜகான் கூறியுள்ளார்.</p><h2>வக்பு நிறுவனங்களுக்கு சவால்</h2><p>தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் கடலூரில்  நிருபர்களிடம் கூறியதாவது:-</p><p>தமிழகத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களும், தர்க்காக்களும் உள்ளன. அவற்றிற்கு சொந்தமான சில சொத்துகளை வாடகை மற்றும் குத்தகைக்கு விடப்படும் போது, அதை மீட்டெடுப்பதில், சம்பந்தப்பட்ட வக்பு நிறுவனங்களுக்கு சவால்கள் ஏற்படுகிறது. சொத்துகளை மீட்டு, வக்பு நிறுவனத்திடம் ஒப்படைத்து வருகிறோம்.</p><p>சட்டசபையில் வருகிற 27-ந்தேதி (வியாழக்கிழமை) சிறு பான்மையினர் நலத்துறை மானிய கோரிக்கை நடக்கிறது. இதில் பல்வேறு புதிய திட்டங்களை அறிவிக்க இருக்கிறோம். மிக முக்கியமாக கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்பு, சமுதாய மேம்பாட்டுக்கான திட்டங்கள் இருக்கும்.</p><h2>தலைமைச்செயலாளர் மாற்றமா?</h2><p>த.வெ.க. அரசின் 100 நாட்கள் ஆட்சி எப்படி இருக்கிறது என்று கேட்கிறீர்கள். லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி செயல்பட்டு வருகிறது. <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D">தலைமைச் செயலாளர் </a>தேர்தல் காலத்தில் நியமிக்கப்பட்டு. தற்போது 6 மாதங்கள் பதவி நீட்டிப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. </p><p>நாங்கள் பார்த்த வரையில், அரசு பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. இருந்தாலும் அவர் பா.ஜனதா சார்பில் நியமிக்கப்பட்டார் என்ற கருத்தின் அடிப்படையில், ஒரு சில அரசியல் கட்சிகளால் தகவல் சொல்லப்படுகிறது. தலைமைச் செயலாளர் மாற்றம் பற்றி முதல்-அமைச்சர் ஆய்வு செய்து, முடிவு எடுப்பார்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தென்காசி: மலையடிபட்டி அகழாய்வில் 5-ம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு கண்டுபிடிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tenkasi-5th-century-hero-stone-inscription-discovered-during-the-excavation-at-malaiyadipatti</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tenkasi-5th-century-hero-stone-inscription-discovered-during-the-excavation-at-malaiyadipatti#comments</comments><guid isPermaLink="false">e47b02ad-a413-44bd-a93a-5530caeb7687</guid><pubDate>Mon, 24 Aug 2026 03:26:07 +0000</pubDate><atom:updated>2026-08-24T03:26:07.505Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,தென்காசி,Excavation,அகழாய்வு</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/x0ktf6y9/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/x0ktf6y9/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><h2>நடுகல் கல்வெட்டு</h2><p>தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே மலையடிப்பட்டி கிரா மத்தில் தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு பழங்காலத்தை சேர்ந்த பானைகள், தாழிகள், இரும்பு கருவிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்தன.</p><p>சமீபத்தில் இங்கு படிக்கட்டுடன் கூடிய சங்க கால செங்கல் கிணறு சமீ பத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கிணற்றுக்குள் கி.பி. 5-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கல்வெட்டு தற்போது கிடைத்துள்ளது. இதில் பழங்கால தமிழி எழுத்தில் இருந்து வட்டெழுத்தாக உருமாறுகின்ற நிலையுடையதாக எழுத்துகள் உள்ளன. </p><h2>வாசகங்கள்</h2><p>நடுகல்லின் நீளம் 1 மீட்டர், அகலம் 0.30 மீட்டர் ஆகும். இதில் கருக் கண், சுளகன், நன்னங், கொடியன் ஆகிய வாசகங்கள் எழுதப்பட்டுள் ளன.இதுகுறித்து அங்கு அகழாய்வு இயக்குனர் எத்திஸ் குமார், அக ழாய்வு துணை பொறுப்பாளர் காளீஸ்வரன் ஆகியோர் கூறுகையில், "தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள நடுகல்லில் எழுதப்பட்டுள்ள வாசகத்தை கூர்ந்து கவனித்தால் இந்த கல்வெட்டானது கருக்கண்சுளகன் மகன் நன்னங்கொடியனுக்காக எழுதப்பட்டதாக பொருள் கொள்ளலாம். இதுகுறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது" என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>3 கோப்புகளை ஒரு வாரத்துக்குள் முதல்-அமைச்சர் வெளியிட வேண்டும் - துரைமுருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-chief-minister-must-release-three-files-within-a-week-duraimurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-chief-minister-must-release-three-files-within-a-week-duraimurugan#comments</comments><guid isPermaLink="false">9c61e175-6433-46d6-8f10-80b2659ac89a</guid><pubDate>Mon, 24 Aug 2026 03:20:40 +0000</pubDate><atom:updated>2026-08-24T03:20:40.770Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,திமுக,DMK,சட்டசபை,TN Assembly,Durai Murugan,துரைமுருகன்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/23bpwps0/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/23bpwps0/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>வேலூர்,</p><p>வேலூர் காட்பாடி காந்திநகரில் தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>'யார் ஆட்சிக்கு வந்தாலும், எங்களுக்கு பின்னாடி யாரும் வர மாட்டார்கள் என்று தான் சொல்வார்கள். அவ்வாறு தான் த.வெ.க. உறுப்பினர்கள் தி.மு.க. இனி வெல்ல முடியாது என்று கூறுகின்றனர். இப்படித்தான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் கூறினர். அவர்களையும் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். இதெல்லாம் அரசியல் ஞானத்தோடு சொல்லும் சொல் அல்ல.</p><p>என் மேஜையில் 3 பைல்கள் உள்ளது. அதனை திறக்க வைத்து விடாதீர்கள் என்று முதல்-அமைச்சர் விஜய் கூறியதற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். தைரியம் இருந்தால் அந்த பைல்களை திறந்து, யார் மீது குற்றம் இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள் என்று கூறி உள்ளார். அந்த பைலை திறக்க கூறி எதிர்க்கட்சிகள் வலியுறுத்த வேண்டும்.</p><p>ஒரு வாரத்திற்குள் திறக்கவில்லை என்றால் சட்டசபைக்கு முதல்-அமைச்சர் தவறான தகவலை கொடுத்தார் என உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரவேண்டும். எதிர்க்கட்சிக்காரன் வாளோடு சபைக்கு செல்ல வேண்டும். ஆளும் கட்சிக்காரன் கேடயத் தோடு வரவேண்டும். இவன் சுழற்றுவான். அவன் தடுக்க வேண்டும். தடுக்க முடிந்தால் தடுக்கணும் இல்லையென்றால் சலாம் போட்டு விட்டு செல்ல வேண்டும். இதுதான் சட்டசபை. இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>கோயம்பேடு சந்தையில் வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/onion-prices-rise-sharply-in-koyambedu-market</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/onion-prices-rise-sharply-in-koyambedu-market#comments</comments><guid isPermaLink="false">1ff1d10a-190f-4db1-bb00-9ab4e7b6a412</guid><pubDate>Mon, 24 Aug 2026 03:18:21 +0000</pubDate><atom:updated>2026-08-24T03:18:21.666Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Koyambedu market,கோயம்பேடு சந்தை,வெங்காயம்,Onions</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/jib4n0jo/4.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/jib4n0jo/4.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>கோயம்பேடு மார்க்கெட்</h2><p>ஆசியாவில் மிகப்பெரிய காய்கறி சந்தைகளில் ஒன்றான சென்னை கோயம்பேடு மார்க்கெட் என்பது சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு காய்கறி சப்ளை செய்யும் பிரதான மார்க் கெட்டாக விளங்கி வருகிறது. சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் காய்கறி தேவைகள் அனைத்தும் பெரும்பாலும் கோயம்பேடு மார்க்கெட்டால் பூர்த்தி செய்யப்படுகிறது.</p><p>சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிறு வியாபாரிகள் அனைவரும் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து இரவோடு இரவாக மொத்த விலைக்கு காய்கறிகளை வாங்கிச் சென்று, அதிகாலைக்குள் தங் கள் கடைகளுக்கு கொண்டு சென்று அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு அன்றாட தேவைக்கான காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர்.</p><h2>வெங்காயம் விலை</h2><p>இத்தகைய சிறப்பு மிக்க கோயம்பேடு மார்க்கெட்டுக்கு உத்தரபிரதேசம், மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து வெங் காயம் விற்பனைக்கு வருகிறது. மராட்டிய மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாகவும், வெங்காய ஏற்றுமதி அதிகரித்துள்ள காரணத்தாலும் வட மாநிலங்களில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் வெங்காய வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காய விலை அதிகரித்துள்ளதாக அங்குள்ள மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.</p><p>பொதுவாக தினசரி 70 முதல் 80 லாரிகளில் கோயம்பேடு மார்க்கெட் டுக்கு வரும் வெங்காய வரத்து 50 லாரிகளாக குறைந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால், கடந்த 7-ந் தேதி ரூ.30 முதல் ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ வெங்காயம் படிப்படியாக உயர்ந்து நேற்று ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><h2>தக்காளி, உருளை விலை</h2><p>இதே போன்று வரத்துக் குறைவு காரணமாக தக்காளி மற்றும் உருளைக் கிழங்கு விலையும் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை உயர்ந்து உள் ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்றைய காய்கறி மொத்த விலை விவரம் (கிலோவுக்கு) வருமாறு:-</p><p>நாட்டு தக்காளி ரூ.18 முதல் ரூ.25 வரை, நவீன் தக்காளி ரூ.40, உருளை கிழங்கு ரூ.15 - ரூ.35, கேரட் ரூ.50 ரூ.70, பீன்ஸ் ரூ.60 - ரூ.80, பீட்ரூட் ரூ.50 - ரூ.60, முட்டைகோஸ் ரூ.20 - ரூ.25, வெண்டைக்காய் மற்றும் வரி கத்திரிக்காய் ரூ.25 -ரூ.30, நாட்டு கத்திரிக்காய் ரூ.30 - ரூ.40, பாகற்காய் ரூ.40 - ரூ.50, புடலங்காய் ரூ.20ரூ.30, சுரக்காய் ரூ.15 - ரூ.25, முருங் கைக்காய் ரூ.25 ரூ.30, சேனைக்கிழங்கு ரூ.30 - ரூ.40, பச்சமிளகாய் ரூ.50 - ரூ.60, இஞ்சி ரூ.90 ரூ.180, பூண்டு ரூ.130 ரூ.240, தேங்காய் 5.55 .60.</p>]]></content:encoded></item><item><title>தானியங்கி முறையில் கட்டட அனுமதி: தயாராகும் புதிய திட்டம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/automated-building-permit-issuance-new-scheme-in-the-works</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/automated-building-permit-issuance-new-scheme-in-the-works#comments</comments><guid isPermaLink="false">956d82d2-9101-4e88-a215-1a1bf082f68e</guid><pubDate>Mon, 24 Aug 2026 02:29:42 +0000</pubDate><atom:updated>2026-08-24T02:29:42.784Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>அனுமதி,building,புதிய திட்டம்,new scheme,கட்டடம்</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/l35em2u8/1.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/l35em2u8/1.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>தமிழகத்தில், 3,500 சதுரடி வரையிலான குடி யிருப்புகள் கட்ட, சான்று முறையில் கட்டட அனுமதி வழங்கும் திட்டம், 2024ல் அமலுக்கு வந்தது. இதன்படி, அதிகாரிகளின் அலைக்கழிப்பு இல்லாமல், பொதுமக்கள் கட்டட அனுமதி பெறுவது எளிதாகி உள்ளது. இதையடுத்து, 5,000 சதுரடி மனையில், 7,500 சதுரடி வரையிலான தொழிலக கட்டடங்களுக்கு, சுயசான்று கட்டட அனுமதி முறை அமலுக்கு வந்துள்ளது. இதற்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.</p><p>இதையடுத்து, அடுக்கு மாடி திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவதை எளிதாக்க, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அதிகாரிகள், நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக, தானியங்கி முறையில் கட்டட அனு மதி பெற வழி ஏற்பட்டு உள்ளது. இது குறித்து, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகரரி ஒருவர் கூறியதாவது:</p><p>தானியங்கி முறையில் கட்டட அனுமதி வழங்க, புதிய திட்டம் தயாரிக்கப் பட்டு வருகிறது. நில வகைப்பாடு மாற்றம் தேவைப்படாத, அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு இருக்கும் திட்டங்களுக்கு, இதை செயல்படுத்துவதில் எந்த பிரச்னையும் இல்லை. கடந்த 2008க்கு முன், சி.எம்.டி.ஏ.,வில், '' - சேனல் என்ற பெயரில், இது போன்ற நடைமுறை இருந்தது. அதன் அடிப்படையில், தற்போதைய சூழலுக்கு ஏற்ப புதிய நடைமுறையை உருவாக்கி வருகிறோம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களை பாதிக்கும் அரசாணை: உடனடியாக திரும்பப் பெறுக! - எஸ்டிபிஐ</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-order-affecting-small-blood-testing-centers-withdraw-immediately-stbi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-order-affecting-small-blood-testing-centers-withdraw-immediately-stbi#comments</comments><guid isPermaLink="false">90730302-aa20-41ff-8a7e-39fe7c9ea5b1</guid><pubDate>Mon, 24 Aug 2026 02:27:18 +0000</pubDate><atom:updated>2026-08-24T02:27:18.638Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எஸ்டிபிஐ,STBI,Blood,Testing,Centers,ரத்த பரிசோதனை,நிலையங்கள்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/8y6ryq1h/sdpi.gif" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/8y6ryq1h/sdpi.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:</p><h2>ரத்தப் பரிசோதனை நிலையங்கள்</h2><p>தமிழக அரசின் அரசாணை எண் 41/2026 (13.02.2026), மாநிலத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களின் இயங்குதளத்தையும், அதில் பணியாற்றும் லேப் டெக்னீசியன்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாகப் பாதிப்பதாக உள்ளது. கிராமப்புறங்களிலும் சிறு நகரங்களிலும் பல ஆண்டுகளாகச் சேவை வழங்கி வரும் மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்ப இளங்கலை (BMLT), மற்றும் பட்டயப் படிப்பு (DMLT) பயின்ற தொழில் நுட்பனர்கள் பரிசோதனை அறிக்கைகளில் கையொப்பமிடத் தடை விதித்து,  எம்.பி.பி.எஸ். அல்லது முதுகலை மருத்துவர்கள் மட்டுமே கையொப்பமிட வேண்டும் எனக் கூறுவது முற்றிலும் நடைமுறைக்குச் சாத்தியமற்ற ஒன்றாகும். இது சிறு ஆய்வகங்களின் சுயசார்பை அழித்து, மருத்துவத் துறையில் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு மட்டுமே வழிவகுக்கும்.</p><h2>ரத்தப் பரிசோதனை கட்டணம் உயரும்</h2><p>மேலும், பரிசோதனை அறிக்கைகளுக்காக மருத்துவர்களைச் சார்ந்திருக்க வேண்டிய சூழல் உருவாக்கப்படும் போது, சாதாரண ரத்தப் பரிசோதனைகளின் கட்டணமும் பல மடங்கு உயரும் அபாயம் உள்ளது. இதனால் கிராமப்புற மற்றும் ஏழை எளிய மக்கள் மிகக் குறைந்த கட்டணத்தில் பெற்று வந்த முதன்மை சுகாதாரப் பரிசோதனைச் சேவைகள் பறிபோகும். சிறிய பரப்பளவில் இயங்கும் லேப்களுக்கும் தீயணைப்புத் துறைச் சான்றிதழ் கட்டாயம் என்பது போன்ற கட்டுப்பாடுகளும், அதிகப்படியான மருத்துவக் கழிவு அகற்றும் கட்டணங்களும் எளிய தொழில் முனைவோரை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும்.</p><h2>வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல்</h2><p>இந்த அரசாணையானது, லேப் டெக்னீசியன் படிப்பை முடித்துவிட்டு, சொந்தமாக சிறிய அளவில் ரத்தப் பரிசோதனை மையங்களை வைத்துள்ள பல்லாயிரக்கணக்கான டெக்னீசியன்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. மட்டுமின்றி, சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களின் உரிமையாளர்களை, கார்ப்பரேட் ரத்தப் பரிசோதனை நிலையங்கள் மற்றும் இதர பரிசோதனை நிலையங்களுக்கான கூலித் தொழிலாளிகளாக மாற்றும் நிலையையும் உருவாக்கியுள்ளது .</p><p>பெருநிறுவனங்களின் வளர்ச்சிக்காக, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களை ஒழித்துக்கட்டி, பல்லாயிரக்கணக்கான வேலை இழப்பை ஏற்படுத்தும் இத்தகைய நடவடிக்கை கண்டனத்திற்குரியது.</p><p>எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக அரசாணை எண் 41/2026-ல் உள்ள சிறு ஆய்வகங்களைப் பாதிக்கும் விதிகளை ரத்து செய்ய வேண்டும். அனுபவமிக்க ஆய்வகத் தொழில்நுட்பனர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்கி, பரிசோதனை அறிக்கைகளில் அவர்களே தொடர்ந்து கையொப்பமிடும் உரிமையை உறுதி செய்ய வேண்டும். அத்துடன் துணை மருத்துவ மற்றும் சுகாதாரக் குழுமத்தில் (Allied Health Council) ஆய்வகச் சங்கங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட ஆய்வக உரிமையாளர்கள் மற்றும் தொழில்நுட்பனர்களின் போராட்டங்களுக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90">எஸ்டிபிஐ </a>கட்சி முழு ஆதரவை தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>90 அடியை நெருங்கும் நீர்மட்டம்... மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுமா?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-level-nearing-90-feet-will-water-be-released-from-mettur-dam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-level-nearing-90-feet-will-water-be-released-from-mettur-dam#comments</comments><guid isPermaLink="false">fed451ba-e363-4c22-87de-128e3f568c35</guid><pubDate>Mon, 24 Aug 2026 02:11:10 +0000</pubDate><atom:updated>2026-08-24T02:11:10.708Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur dam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/twhv9f50/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/twhv9f50/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் டெல்டா பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் காய்ந்து வருகிறது. கர்​நாடக அணை​களில் இருந்து காவிரி ஆற்​றில் தண்​ணீர் திறந்து விடப்​பட்​டுள்ள நிலை​யில், மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து அதிகரித்துள்ளது.</p><p>விநாடிக்கு 13,538 கனஅடி​ தண்ணீர் வருகிறது. அணை​யில் இருந்து குடிநீர் தேவைக்​காக விநாடிக்கு 2,000 கனஅடி தண்​ணீர் திறக்கப்​பட்டு வரு​கிறது. வரும் நீரின் அளவைவிட வெளியேற்​றப்​படும் நீரின் அளவு குறை​வாக இருப்​ப​தால், நீர்​மட்​டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.</p><p>மேலும் மேட்டூர் அணை நீர்மட்டம் 87அடியை நெருங்கி உள்ளது. அணை நீர்மட்டம் நேற்று மாலை 86.83 அடியாக உள்ளது. தற்போதைய அளவில் நீர்வரத்து காணப்பட்டால், அணை நீர்மட்டம் அடுத்த சில நாட்களில் 90 அடியை எட்டி விடும். அதன்பிறகும் இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் சூழல் உருவாகலாம் என்று பொதுப்பணித்துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தின் உயர்கல்வித்துறையை மீட்டெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/reviving-tamil-nadus-higher-education-sector-is-the-need-of-the-hour-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/reviving-tamil-nadus-higher-education-sector-is-the-need-of-the-hour-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">6e863fe5-6bef-4cec-9c95-f74c02e43a06</guid><pubDate>Mon, 24 Aug 2026 02:10:46 +0000</pubDate><atom:updated>2026-08-24T02:10:46.731Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,Higher Education Department,மாணிக்கம் தாகூர்,Higher Education,உயர்கல்வித்துறை,Manickam Tagore MP,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/48p2hdej/manickam-tagore.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/48p2hdej/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இத்துறை சார்ந்த ஆக்கப்பூர்வப் பணிகளுக்கு முழு ஆதரவளித்து வழிநடத்தும் தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கு நெஞ்சார்ந்த நன்றிகள் என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF">மாணிக்கம் தாகூர்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை</h2><p>பெருந்தலைவர் காமராஜர் கண்ட உயர்ந்த கல்விக்கனவை நனவாக்கி, தமிழகத்தின் உயர்கல்வித்துறையை மீட்டெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.</p><p>பெரும்பாலான நிதி நிர்வாக மற்றும் தொடர் செலவினங்களுக்கே சென்றுவிடும் சூழல், தொலைதூரக் கல்வி வருவாய் இழப்பு, மத்திய UGC நிதி முடக்கம் மற்றும் பல்கலைக்கழக நிதி பற்றாக்குறை போன்ற கட்டமைப்பு சவால்களைச் சீரமைப்பது மிக முக்கியம். ஒரு பக்கம் ஊழலை ஒழித்து, மறுபுறம் வலதுசாரி/RSS சக்திகளின் ஊடுருவலை முறியடித்து, பல்கலைக்கழகங்களை மீட்டெடுத்து மாணவர்களுக்கு உலகத்தரக் கல்வியையும் பேராசிரியர்களுக்குப் பலத்தையும் தர வேண்டும்.</p><p>இன்று உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கையைத் தாக்கல் செய்யும் அமைச்சர் விஸ்வநாதனுக்கு வாழ்த்துகள்!</p><h2>பெருமிதம் கொள்கிறோம்</h2><p>வெற்றி தமிழகம் என்ற பாதையில் இத்துறை சார்ந்த ஆக்கப்பூர்வப் பணிகளுக்கு முழு ஆதரவளித்து வழிநடத்தும் தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!</p><p>2,150+ உயர்கல்வி நிறுவனங்கள், 60+ பல்கலைக்கழகங்களின் மறுமலர்ச்சிக்கான வரலாற்று நிதிநிலை அறிக்கையாகவும், உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை 50% GER என்ற மைல்கல்லைத் தாண்டி முன்னெடுத்துச் செல்லும் திட்டமாகவும் இது அமையும் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பணம் கேட்டு மிரட்டியதாக நாட்டு வைத்தியர் வீடியோ: இன்ஸ்பெக்டர், ஏட்டு இடைநீக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/country-doctor-video-inspector-suspended-for-blackmailing-for-money</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/country-doctor-video-inspector-suspended-for-blackmailing-for-money#comments</comments><guid isPermaLink="false">52d02b88-0d11-4feb-ab0a-e7276cf2f951</guid><pubDate>Mon, 24 Aug 2026 02:10:01 +0000</pubDate><atom:updated>2026-08-24T02:10:01.336Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிவகங்கை,money,Inspector,suspended,இடைநீக்கம்,போலீஸ் இன்ஸ்பெக்டர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/ibb39ahy/156.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இன்ஸ்பெக்டர், ஏட்டு இடைநீக்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/ibb39ahy/156.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை, </p><p>தன்னிடம் பணம் கேட்டு மிரட்டியதாக நாட்டு வைத்தியர் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆகிய 2 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.</p><p>சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை அருகே ஆத்திகாடு பகுதியை சேர்ந்தவர் நெடுஞ்செழியன் (வயது 45). இவர் சிங்கம் புணரியில் புத்தூர்கட்டு பாண்டி என்ற பெயரில் எலும்பு முறிவு, முடக்குவாதம், நரம்பு தளர்ச்சிக்கு நாட்டு வைத்திய சிகிச்சை அளித்து வந்தார். யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமடைந்தவர்.</p><h2>சிங்கம்புணரி போலீசார்</h2><p>இதற்கிடையே கடந்த ஜனவரி மாதம் இவரிடம் முறையாக கல்விச்சான்று இல்லை என்று மருத்துவத்துறை இணை இயக்குனர் கொடுத்த புகாரின் பேரில் சிங்கம்புணரி போலீசார் விசாரணை நடத்தி நெடுஞ்செழியனை கைது செய்தனர். மேலும் அவரின் மருத்துவமனைக்கும் 'சீல்' வைத்தனர். பின்னர், ஜாமீனில் வெளியே வந்த அவர், தனது தோப்பில் செம்புவேல் முருகன் என்ற பெயரில் கோவில் கட்டி, அங்கு சிகிச்சை அளித்து வந்தார்.</p><p>இந்தநிலையில், நெடுஞ்செழியன் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தற்போது சிங்கம் புணரி போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் சீனிபாபு என்பவர் தனக்கு மாதந்தோறும் பணம் தரவேண்டும் என்று தொல்லை கொடுக்கிறார். இல்லையென்றால் பொய் வழக்குப்பதிந்து விடுவேன் என்று மிரட்டுகிறார்.</p><h2>பணியிடை நீக்கம்</h2><p>மேலும், சிங்கம்புணரி போலீஸ் நிலையத்தில் முன்பு பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் ஒருவரின் பெயரைகூறி போலீஸ் ஏட்டு ஒருவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தன்னிடம் பணம் பெற்றது தொடர்பான காட்சியையும் வெளியிட்டார். <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">விசாரணையின்</a> அடிப்படையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிபாபு மற்றும் ஏட்டு ஜெயராஜ் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து டி.ஐ.ஜி. மணிவண்ணன் உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>வகுப்பறை முதல் ஆய்வகம் வரை... அரசு பள்ளிகளின் தேவைகள் பட்டியல் வெளியானது!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/from-classrooms-to-laboratories-government-schools-needs-list-released</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/from-classrooms-to-laboratories-government-schools-needs-list-released#comments</comments><guid isPermaLink="false">bb858108-f5dd-4bde-a395-358fb2a2fd61</guid><pubDate>Mon, 24 Aug 2026 02:01:42 +0000</pubDate><atom:updated>2026-08-24T02:01:42.509Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசு பள்ளி,பட்டியல்,வகுப்பறை,Government Schools,Classrooms,List,laboratory,ஆய்வகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/kdk7iawk/schooleducationdept.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/kdk7iawk/schooleducationdept.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பள்ளிக்கல்விக்கு பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு தேவைகள் பூர்த்தி செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அரசு பள்ளிகளில் 5,641 வகுப்பறைகள், 5,880 கழிவறைகள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.</p><h2>அரசு பள்ளிகள்</h2><p>அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு நிகராக கொண்டுவரும் நோக்கில், கடந்த கால அரசுகள் காட்டிய அதே முனைப்பை தற்போது புதிதாக பொறுப்பேற்று இருக்கும் அரசும் காட்டி வருகிறது. அதற்கேற்ப அரசு பள்ளிகளில் என்னென்ன உள்கட்டமைப்பு தேவைகள் இருக்கிறது? என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அரசு பள்ளிகளிடம் கேட்டு இருந்த நிலையில், அதற்கான விவரங்கள் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, உள்கட்டமைப்பு வசதிகளின் விவரங்கள் பள்ளிகளில் இருந்து பெறப்பட்டு, அதற்கு ஒரு உத்தேச செலவு பட்டியலையும் பள்ளிக்கல்வித் துறை தயாரித்திருக்கிறது.</p><h2>வகுப்பறைகள்</h2><p>அந்தவகையில் 2026-27-ம் ஆண்டில் வகுப்பறைகள் மட்டும் 5,641 என்ற எண்ணிக்கையில் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு வகுப்பறையின் மதிப்பு சுமார் ரூ.25.97 லட்சம் என கணக்கிடப்பட்டு, மொத்தம் சுமார் ரூ.1,465 கோடி செலவாகும் என சொல்லியுள்ளனர். அதேபோல், 3,142 எண்ணிக்கையில் மாணவர்கள் கழிவறைகளும், 2,738 எண்ணிக்கையில் மாணவிகள் கழிவறைகளும் என மொத்தம் 5 ஆயிரத்து 880 எண்ணிக்கையில் கழிவறை வசதிக்காக சுமார் ரூ.620 கோடி தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுமட்டுமல்லாமல், சுமார் ரூ.59 கோடியில் குடிநீர் வசதி 1,340 என்ற எண்ணிக்கையில் தேவைப்படுவதாகவும் கூறப்பட்டு இருக்கிறது.</p><h2>ரூ.4,200 கோடி வரை தேவை</h2><p>மேலும் 2,361 ஆய்வகங்கள் <a href="https://www.dailythanthi.com/topic/government-schools-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF">அரசு பள்ளி</a>களில் தேவைப்படுவதாகவும், இதற்கு ரூ.1,598 கோடியே 24 லட்சம் வரை செலவாகும் என்றும், அரசு பள்ளி சுற்றுச்சுவர்களுக்கு என ரூ.458 கோடி செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆக மொத்தம் அரசு பள்ளிகளின் இந்த உள்கட்டமைப்பு தேவைகளை பூர்த்தி செய்ய சுமார் ரூ.4,200 கோடி வரை தேவைப்படும் என பள்ளிக் கல்வித்துறை அரசிடம் தெரிவித்திருக்கிறது. சமீபத்தில் வெளியான பட்ஜெட் அறிவிப்பில், பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.44,527 கோடி ஒதுக்கப்பட்டுள்ள சூழலில், அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளின் தேவையை பள்ளிக்கல்வித்துறை எப்படி? எப்போது? பூர்த்தி செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு மாணவ-மாணவிகள், பெற்றோர், கல்வியாளர்கள் இடையே எழுந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பொறியியல் 3-ம் சுற்று கலந்தாய்வு: 12,346 மாணவர்கள் வெளியேறினர்!</title><link>https://www.dailythanthi.com/education-and-employment/engineering-3rd-round-counseling-12346-students-dropped-out</link><comments>https://www.dailythanthi.com/education-and-employment/engineering-3rd-round-counseling-12346-students-dropped-out#comments</comments><guid isPermaLink="false">d4d22c3d-a43a-4a60-b617-d3d543ac6c19</guid><pubDate>Mon, 24 Aug 2026 01:58:11 +0000</pubDate><atom:updated>2026-08-24T01:58:11.050Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>என்ஜினீயரிங் படிப்பு,Engineering courses,Engineering course,என்ஜினீயரிங் படிப்புகள்,பொறியியல் கலந்தாய்வு,engineering counseling</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/dxjri4lq/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பொறியியல் 3-ம் சுற்று கலந்தாய்வு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/dxjri4lq/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கல்வி&amp;வேலைவாய்ப்பு (Eduction and Jobs)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 418 பொறியியல் கல்லூரிகளில், நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த 13-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்றாம் சுற்று கலந்தாய்வில் பங்கேற்க 1,02,719 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது.</p><h2>68,640 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடு</h2><p>இதையடுத்து, கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை கடந்த 21-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் பொதுப்பிரிவில் 66,159 பேருக்கும், 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் 2,481 பேருக்கும் என மொத்தம் 68,640 மாணவர்களுக்கு பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டது.</p><h2>56,294 பேருக்கு இறுதி ஒதுக்கீடு</h2><p>தற்காலிக ஒதுக்கீட்டை உறுதி செய்த மாணவர்களுக்கான இறுதி <a href="https://www.dailythanthi.com/education-and-employment">ஒதுக்கீட்டு ஆணை</a> நேற்று வெளியிடப்பட்டது. பொதுப்பிரிவில் 54,684 பேருக்கும், 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் 1,610 பேருக்கும் என மொத்தம் 56,294 மாணவர்களுக்கு இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது.</p><h2>6,621 பேர் மேல்நோக்கு நகர்வுக்கு காத்திருப்பு</h2><p>இறுதி ஒதுக்கீடு பெற்றவர்களில் 6,621 மாணவர்கள் தங்களுக்கு கிடைத்த கல்லூரி ஒதுக்கீட்டை உறுதி செய்துவிட்டு, மேல்நோக்கு நகர்வுக்காக காத்திருக்கின்றனர்.</p><h2>12,346 பேர் கலந்தாய்வில் இருந்து வெளியேற்றம்</h2><p>மூன்றாம் சுற்றில் தற்காலிக ஒதுக்கீடு பெற்ற 68,640 மாணவர்களில் 56,294 பேர் மட்டுமே அந்த ஒதுக்கீட்டை உறுதி செய்துள்ளனர். இதனால், தற்காலிக ஒதுக்கீட்டை இறுதி செய்யாத 12,346 மாணவர்கள் கலந்தாய்வில் இருந்து வெளியேறியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>1.69 லட்சம் அரிய ஓலைச்சுவடிகளை மின்பதிவாக்கம் செய்வது துவக்கம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/digitization-of-169-lakh-rare-palm-leaf-manuscripts-begins</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/digitization-of-169-lakh-rare-palm-leaf-manuscripts-begins#comments</comments><guid isPermaLink="false">37b9aedb-8e20-4b8d-9115-64f9893e05ae</guid><pubDate>Mon, 24 Aug 2026 01:52:17 +0000</pubDate><atom:updated>2026-08-24T01:52:17.402Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Meenakshi Amman Temple,மீனாட்சி அம்மன் கோவில்,ஓலைச்சுவடி</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/vwak1hsg/3.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/vwak1hsg/3.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>'தமிழக கோவில்களில் பாதுகாக்கப்பட்ட மன்னர் கால கொடைகள் மற்றும் வரலாற்று ஆவணங்கள் அடங்கிய, 1.69 லட்சம் அரிய ஓலைச்சுவடிகளை, 'டிஜிட்டலைசேசன்' எனப் படும். மின்பதிவாக்கம் செய்யும் பணி தொடங்கியுள்ளது' என, ஹிந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, துறையின் கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:</p><p>தமிழக இந்து சமய அற நிலையத்துறை சார்பில், கோவில்களில் உள்ளஅரிய ஓலைச்சுவடிகளை, வருங்கால  தலைமுறையினர் எளிதில் அறிந்து கொள்ள, அவற்றை மின்பதிவாக்கம் செய்து, தற்கால தமிழுக்கு ஏற்ப, மாற்றம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. </p><p>சுந்தரேஸ்வரர் கோவிலில் உள்ள சுவடிகள், வெற்றிகரமாக மின்பதிவாக்கம் செய்யப்பட்டுள்ளன</p><p>செய்யப்பட்டதில், 73 கோவில்களில், 1.69 லட்சம் ஓலைச்சுவடிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.</p><p>மேலும், செப்பேடு கள் மற்றும் செப்பு பட்டயங்கள் 82; தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி மற்றும் ஐம்பொன் ஏடுகள் 9 ; தாள் சுவடிகள், 13 என்ற எண்ணிக்கையில் கிடைக்கப் பெற்றுள்ளன. சேகரிக்கப்பட்ட ஓலைச் சுவடிகளில் இதுவரை, 80,000 சுவடகள் கள் சுத்திக முறையில் பராமரிக்கப்பட்டு ரிக்கப்பட்டு, அறிவியல்</p><p>பட்டுள்ளன. மீதமுள்ள சுவடிகளை பாதுகாக்கும் பணிகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. </p><p>இவ்வாறு கூறப்பட்டுள்ளது.  </p>]]></content:encoded></item><item><title>ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-flow-at-hogenakkal-increased-to-13000-cubic-feet-per-second</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-flow-at-hogenakkal-increased-to-13000-cubic-feet-per-second#comments</comments><guid isPermaLink="false">1a7113d3-ed56-465a-a981-d66920c2b710</guid><pubDate>Mon, 24 Aug 2026 01:42:28 +0000</pubDate><atom:updated>2026-08-24T01:42:28.376Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Hogenakkal,Increase,அதிகரிப்பு,நீர்வரத்து,water flow,பென்னாகரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/2tzxjtr4/146.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஒகேனக்கல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/2tzxjtr4/146.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பென்னாகரம்,</p><p>கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் சூழல் உருவாகியுள்ளது.</p><h2>நீர்வரத்து அதிகரிப்பு</h2><p>கர்நாடக மாநிலம் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை பொறுத்து தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.</p><p>இந்த நிலையில் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. அதன்படி நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.</p><h2>அணை நீர்மட்டம்</h2><p>நீர்வரத்து அதிகரிப்பதும். குறைவதுமாக உள்ளதால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை நேற்று 8-வது நாளாக நீடித்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.</p><p>மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் டெல்டா பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் காய்ந்து வரும் நிலையில், மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 87 அடியை நெருங்கி உள்ளது. அணை நீர்மட்டம் நேற்று மாலை 86.83 அடியாக உள்ளது. அணைக்கு காலையில் வினாடிக்கு 12 ஆயிரத்து 883 கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலையில் வினாடிக்கு 13 ஆயிரத்து 538 கனஅடியாக அதிகரித்து உள்ளது.</p><p>அதே நேரத்தில் அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போதைய அளவில் நீர்வரத்து காணப்பட்டால், அணை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">நீர்மட்டம் </a>அடுத்த சில நாட்களில் 90 அடியை எட்டி விடும். அதன் பிறகும் இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் சூழல் உருவாகலாம் என்று பொதுப்பணித்துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் த.வெ.க.வில் இணைய உள்ளனர் - செங்கோட்டையன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-10-mlas-to-join-tvk-sengottaiyan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-10-mlas-to-join-tvk-sengottaiyan#comments</comments><guid isPermaLink="false">10e9fad8-1e52-4b84-9a33-d41fc7a87a0f</guid><pubDate>Mon, 24 Aug 2026 01:31:56 +0000</pubDate><atom:updated>2026-08-24T01:31:56.670Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,செங்கோட்டையன்,Sengottaiyan,AIADMK,த.வெ.க.,எம்.எல்.ஏ.க்கள்,அ.தி.மு.க.,AIADMK MLAs</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/2aqgunal/senkottaiiyan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/2aqgunal/senkottaiiyan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோபி, </p><p>ஈரோடு மாவட்டம் கோபியில் த.வெ.க. சார்பில் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார். அவர் கூறியதாவது:-</p><p>தமிழக முதல்-அமைச்சர் விஜய் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். இதே இடத்தில் தேர்தலின்போது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D">செங்கோட்டையன் </a>நடமாட முடியுமா? என்று ஒருவர் கேட்டார். தற்போது அவர் சட்டமன்றத்தில் எனக்கு எதிர் திசையில் அமர்ந்துள்ளார். தமிழகத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை என்னால் கணிக்க முடியும். அதனால்தான் த.வெ.க.வில் முதல்-அமைச்சர் விஜய் முன்பு இணைந்தேன். அப்போது என்னை பலர் இவர் இந்த கட்சியில் சேர்ந்துவிட்டாரே என பேசினார்கள். </p><h2>அ.தி.மு.க. வெற்றி பெறாது</h2><p>11 முறை தேர்தலில் தோல்வி கண்டவருக்கு என்ன தெரியும்? விஜய் இருக்கும் வரை அவர்தான் தமிழகத்தில் நிரந்தர முதல்-அமைச்சர். அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கார் கொடுப்பதாக முதல்-அமைச்சர் கூறியுள்ளார். அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வேண்டாம் என கூறியுள்ளார். அரசு கொடுக்கின்ற காரில் சென்றால்தான் பொதுமக்களிடம் மதிப்பு அதிகரிக்கும். அ.தி.மு.க.வில் 47 எம்.எல்.ஏ.க்கள் தான் உள்ளனர். அதில் இன்னும் 10 பேர் எங்கள் த.வெ.க. கட்சியில் இணைய உள்ளனர். மீதி உள்ளவர்களும் இன்னும் 6 மாதங்களில் வந்து விடுவார்கள். அதன் பின்னர் அ.தி.மு.க. பூஜ்ஜியமாகிவிடும். இதை நான் சொல்லவில்லை. கட்சியில் இருப்பவர்கள் என்னிடம் கூறி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அ.தி.மு.க. வெற்றி பெறாது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>நடிகை சவுகார் ஜானகி மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/debate-on-demands-for-grants-for-six-departments-in-the-assembly-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/debate-on-demands-for-grants-for-six-departments-in-the-assembly-today#comments</comments><guid isPermaLink="false">53185802-f9ae-4502-b3bf-bb812894c7f8</guid><pubDate>Mon, 24 Aug 2026 00:59:08 +0000</pubDate><atom:updated>2026-08-24T00:59:08.626Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,சட்டசபை,TN Assembly,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/hyz7ucb6/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/hyz7ucb6/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சட்டசபையில் இன்று 6 துறைகள் மீது மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. முதல்-அமைச்சர் விஜய்யின் துறையும் இடம்பெற்றுள்ளதால் எதிர்பார்ப்பு நிலவுகிறது.</p><h2>பட்ஜெட் மீதான விவாதம்</h2><p>தமிழக சட்டசபையில் கடந்த 5-ந் தேதி 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 6-ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 7, 10, 11 ஆகிய தேதிகளில் 3 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. கடந்த 12-ந் தேதி நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண் துறை அமைச்சர் வினோத் ஆகியோரின் பதிலுரையுடன் பட்ஜெட் மீதான விவாதம் நிறைவடைந்தது.</p><h2>மானியக் கோரிக்கை விவாதம்</h2><p>சுதந்திர தினத்தை முன்னிட்டு, அடுத்த 4 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், கடந்த 17-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதுவரை 18 துறைகள் மீது மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றுள்ளது. கடந்த 2 நாட்கள் (22, 23-ந் தேதி) சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால், சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.</p><h2>முதல்-அமைச்சர் விஜய்யின் துறை</h2><p>இந்த நிலையில், தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. முதலில் பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. தீர்மானத்தை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் வாசித்தார். கோடிக்கணக்கான மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்தவர் என்றும் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் எனவும் புகழஞ்சலி செலுத்தப்பட்டது. இரங்கல் தீர்மானம் வாசித்தவுடன் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் 2 மணி துளிகள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.</p><p>தொடர்ந்து சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தில முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும். இந்த திட்டம் பொங்கல் பண்டிகை முதல் செயல்பாட்டுக்கு வரும். ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு சிலிண்டர் வழங்கப்படும். எரிவாயு சிலிண்டருக்கான விலை நேரடியாக பயனாளியின் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அறிவித்தார்.</p><p>நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, பள்ளிக் கல்வித் துறை, தமிழ் வளர்ச்சித் துறை, உயர் கல்வித் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.</p><p>இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சரும், முதல்-அமைச்சருமான ஜோசப் விஜய், செய்தி மற்றும் விளம்பரம், பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், உயர் கல்வித் தறை அமைச்சர் விஸ்வநாதன் ஆகியோர் பேசுகிறார்கள். நிறைவாக, தங்கள் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிட இருக்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் சர்க்கரை விலை மேலும் உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sugar-prices-rise-further-in-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sugar-prices-rise-further-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">11f8ce3a-6ea0-405f-b84c-420bd2029f7b</guid><pubDate>Mon, 24 Aug 2026 00:53:38 +0000</pubDate><atom:updated>2026-08-24T00:53:38.092Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,உயர்வு,Rise,All over Tamil Nadu,சர்க்கரை விலை,Sugar Prices</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/u61iw0kj/sugar1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/u61iw0kj/sugar1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ்நாட்டில் சர்க்கரை விலை மேலும் உயர்ந்து கிலோ ரூ.72-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><h2>பண்டிகை காலம்</h2><p>தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவிற்கு சர்க்கரை விலை உயர்ந்து வருகிறது. அதாவது கடந்த மாதம் கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்ட சர்க்கரை விலை கிடுகிடுவென உயர்ந்து கடந்த 20-ந்தேதி ஒரு கிலோ சர்க்கரை ரூ.67-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், ஓணம் பண்டிகை, விநாயகர் சதுர்த்தி. ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வரவுள்ளதால் சர்க்கரையின் தேவை அதிகரித்துள்ளது.</p><h2>இ-20 பெட்ரோல்</h2><p>இது ஒரு புறம் இருக்க, கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக நமது நாட்டில் இ-20 வகை பெட்ரோல் பயன்படுத்தப்படுகிறது. இந்த இ-20 பெட்ரோல் தயாரிப்பதற்கு கரும்பை மூலப்பொருளாகக் கொண்ட எத்தனால் பயன்படுத்தப்படுகிறது. எனவே அதற்கு கரும்பு தேவை அதிகமாக இருப்பதால் சர்க்கரை விலை கூடுவதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் மத்திய அரசு இ-20 பெட்ரோல் விற்பனைக்கும், சர்க்கரை விலை உயர்வுக்கும் சம்பந்தமில்லை என்று விளக்கம் கொடுத்துள்ளது.</p><h2>கிலோ ரூ.72-க்கு விற்பனை</h2><p>எது எப்படியாக இருந்தாலும் சர்க்கரைத் தேவை அதிகரிப்பு காரணமாக விலை உயர்ந்து வருவதால் மராட்டிய மாநிலத்தில் உள்ள சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் சர்க்கரைப் பதுக்கலில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு காரணங்களுக்காக தமிழ்நாட்டில் சர்க்கரை விலை மேலும் உயர்ந்துள்ளது. அதன்படி நேற்று தமிழ்நாட்டில் சர்க்கரை ஒரு கிலோ ரூ.72 விற்பனை ஆனது. <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D">சர்க்கரை</a> விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-price-situation-in-chennai-125</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-price-situation-in-chennai-125#comments</comments><guid isPermaLink="false">4338a46f-1361-4cab-85a6-8a93a95bc81c</guid><pubDate>Mon, 24 Aug 2026 00:33:34 +0000</pubDate><atom:updated>2026-08-24T00:33:34.258Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல் விலை,டீசல் விலை,Petrol and diesel prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/0gxd1bk7/petrol.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/0gxd1bk7/petrol.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.</p> <h3>பெட்ரோல், டீசல் விலை</h3><p>இந்நிலையில், சென்னையில் இன்று (24.08.2026 திங்கட்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ. 99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>சென்னையில் 750 புதிய மின்சார பஸ்கள்: முதல்-அமைச்சர் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/750-new-electric-buses-in-chennai-chief-minister-vijay-to-inaugurate-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/750-new-electric-buses-in-chennai-chief-minister-vijay-to-inaugurate-tomorrow#comments</comments><guid isPermaLink="false">2e57875a-b8d7-4017-b39f-d55b8f57820c</guid><pubDate>Sun, 23 Aug 2026 22:33:00 +0000</pubDate><atom:updated>2026-08-23T22:33:00.000Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,முதல்-அமைச்சர் விஜய்,CMVijay‌</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/3dd75xpr/Untitled-1.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/3dd75xpr/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p> <p>சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், முதல்கட்டமாக ரூ.697 கோடி மதிப்பீட்டில், 625 தாழ்தள மின் சாரபஸ்கள் (மொத்த விலை ஒப்பந்தத்தின் அடிப்படையில்) வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, சென்டிரல் பணி மனை மற்றும் தண்டையார்பேட்டை-1 ஆகிய 5 பணிமனை களில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.</p><p>இதனைத் தொடர்ந்து, 2-ம் கட்டமாக 750 புதிய தாழ்தள குளிர்சாதன மின்சார பஸ்கள் ஆலந்தூர், சென்டிரல் பணிமனை-2, பெரம்பூர், பாடியநல்லூர், ஆவடி, கே.கே. நகர் மற்றும் அய்யப் பன்தாங்கல் ஆகிய 7 பணிமனைகளில் இருந்து இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.</p> <p>இதில் முதன் முதலாக ஆலந்தூர் பணிமனையில் இருந்து 130 ஏ.சி. மின்சார பஸ்கள் இயக்கப் பட உள்ளன. இந்த மின்சார பஸ்கள் இயக்கத்தை முதல்-அமைச்சர் விஜய் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வைக்கிறார். மேலும், சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் இருந்து 5 மின்சார பஸ்களை முதல்-அமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த நிலையில், ஆலந்தூர் மின்சார பஸ் பணி மனைக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் நேற்று நேரில் சென்று மின்சார உள்கட்டமைப்பு பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது. மின்னேற்றிகளின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.</p> <p>இந்த ஆய்வின்போது, சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் த.மோகன், இணை மேலாண் இயக்குனர் ராம.சுந்தரபாண்டியன் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>திருநெல்வேலி: பள்ளி அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirunelveli-youth-arrested-for-selling-ganja-near-school</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirunelveli-youth-arrested-for-selling-ganja-near-school#comments</comments><guid isPermaLink="false">1f321da8-3ec6-4a1e-a6cc-36b9525ac07b</guid><pubDate>Sun, 23 Aug 2026 16:44:15 +0000</pubDate><atom:updated>2026-08-23T16:44:15.943Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,Youth arrested,வாலிபர் கைது,கஞ்சா விற்பனை,School,பள்ளி,selling ganja</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/62q53xcm/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கஞ்சா விற்ற வாலிபர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/62q53xcm/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் காவல் நிலைய பகுதியில் அரசு பள்ளி அருகே, 260 கிராம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">கஞ்சாவை பறிமுதல்</a> செய்த போலீசார் ஒரு வாலிபரை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர்.</p><h2>போலீசார் ரோந்து பணி</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டம், தேவர்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வன்னிகோனந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த தென்காசி மாவட்டம், புளியங்குடி, இந்திராநகர் பகுதியைச் சேர்ந்த சரவணதாஸ் (வயது 19) என்பவரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.</p><h2>260 கிராம் கஞ்சா பறிமுதல், வாலிபர் கைது</h2><p>அப்போது அவர் அரசால் தடை செய்யப்பட்டு மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 260 கிராம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88">கஞ்சாவை விற்பனை</a> செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து தேவர்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சரவணதாஸை கைது செய்து, அவரிடமிருந்து 260 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை நீதிமன்றக் காவலில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து ரீல்ஸ் வெளியிட்ட 3 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/3-arrested-for-making-homemade-bomb-and-releasing-reels-in-thoothukudi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/3-arrested-for-making-homemade-bomb-and-releasing-reels-in-thoothukudi#comments</comments><guid isPermaLink="false">e9631544-de0d-4a3e-ad30-efe6ad4e291a</guid><pubDate>Sun, 23 Aug 2026 16:20:37 +0000</pubDate><atom:updated>2026-08-23T16:20:37.855Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,ரீல்ஸ்,3 arrested,3 பேர் கைது,Reels,நாட்டு வெடிகுண்டு,country bomb,தயாரிப்பு,Production</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/a8h7igvh/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாட்டு வெடிகுண்டு தயாரித்து ரீல்ஸ் வெளியிட்ட 3 பேர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/a8h7igvh/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடியில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">நாட்டு வெடிகுண்டு</a> தயாரித்து வெடிக்கச் செய்து, அதை சமூக வலைதளங்களில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D">ரீல்ஸ்</a> மற்றும் ஸ்டேட்டஸ் ஆகப் பதிவிட்ட 3 வாலிபர்களை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர்.</p><h2>யூடியூப்பை பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> லெவஞ்சிபுரத்தைச் சேர்ந்த அலெக்ஸ் (வயது 22), அமுதாநகரைச் சேர்ந்த பிரகாஷ்(23), சுடலை காலனியைச் சேர்ந்த குரு(21) ஆகிய 3 பேரும் நெருங்கிய நண்பர்கள். நேற்று முன்தினம் அலெக்ஸின் பிறந்தநாளை முன்னிட்டு 3 பேரும் சேர்ந்து யூடியூப்பைப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்துள்ளனர்.</p><h2>இன்ஸ்டாகிராமில் பதிவு</h2><p>தயாரித்த குண்டை திறந்தவெளியில் வெடிக்கச் செய்து அதை வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர். பின்னர் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவிக்கும் விதமாக அந்த வீடியோவை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.</p><h2>3 பேர் கைது</h2><p>இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத் உத்தரவின் பேரில், தென்பாகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அலெக்ஸ், பிரகாஷ், குரு ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். </p><p>யூடியூப்பைப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து வெடிக்கச் செய்து பயிற்சி எடுத்தோம். எங்கள் பகுதியில் சிலரிடம் கெத்து காட்டுவதற்காக இதைச் செய்தோம்" என கைதானவர்கள் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். </p><h2>போலீசார் விசாரணை</h2><p>இளைஞர்களின் வீடுகளில் மேலும் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா எனப் போலீசார் சோதனை நடத்தினர். ஆனால் வீடுகளில் வேறு வெடிகுண்டுகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இவர்கள் கோஷ்டி மோதலில் ஈடுபட நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரித்தார்களா அல்லது வேறு ஏதேனும் சதித்திட்டம் தீட்டினார்களா என்ற கோணத்தில் தென்பாகம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ஈரோடு: தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரியை வழிமறித்து கரும்பை ருசித்த காட்டு யானை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-wild-elephant-intercepts-lorry-on-national-highway-and-eats-sugarcane</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-wild-elephant-intercepts-lorry-on-national-highway-and-eats-sugarcane#comments</comments><guid isPermaLink="false">bdac62e3-0693-492a-a54a-3227d8d59cb8</guid><pubDate>Sun, 23 Aug 2026 16:02:59 +0000</pubDate><atom:updated>2026-08-23T16:02:59.697Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Erode,ஈரோடு,காட்டு யானை,elephant</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/pbollw9d/State-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/pbollw9d/State-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில், கரும்பு கட்டுகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென சாலைக்குள் புகுந்த காட்டு யானை, அந்த லாரியை வழிமறித்தது. யானையை பார்த்ததும் லாரியின் வேகத்தை ஓட்டுனர் குறைத்தார். </p><p>இதையடுத்து அந்த யானை லாரியின் அருகே வந்து, அதில் இருந்த கரும்பு கட்டுகளை எடுத்து சாப்பிட்டது. சாலையை வழிமறித்து யானை நின்றுகொண்டிருந்ததால், வாகனங்கள் செல்ல முடியாமல் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனிடையே லாரி ஓட்டுநர் மெதுவாக வாகனத்தை இயக்கி, யானையிடம் இருந்து லாவகமாக தப்பிச் சென்றார். பின்னர் யானை மீண்டும் காட்டுப்பகுதிக்குள் சென்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. </p>]]></content:encoded></item><item><title>திருப்பூரில் பனியன் வேஸ்ட் குடோனில் பயங்கர தீ விபத்து - பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/massive-fire-at-a-hosiery-waste-warehouse-in-tiruppur-goods-worth-several-lakhs-damaged</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/massive-fire-at-a-hosiery-waste-warehouse-in-tiruppur-goods-worth-several-lakhs-damaged#comments</comments><guid isPermaLink="false">5723d093-68ab-4e2e-acad-ed0649a44486</guid><pubDate>Sun, 23 Aug 2026 15:47:58 +0000</pubDate><atom:updated>2026-08-23T15:47:58.461Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/hgmcxmls/State-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/hgmcxmls/State-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><p>திருப்பூர் சின்னபொம்மநாயக்கன்பாளையம் பகுதியில் பனியன் வேஸ்ட் குடோன்களில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், அருகில் இருந்த 6-க்கும் மேற்பட்ட குடோன்களுக்கும் தீ வேகமாக பரவியது. குடோன்களில் பனியன் வேஸ்ட் துணிகள் மற்றும் பழைய அட்டைகள் அதிகளவில் இருந்ததால், தீ கொழுந்துவிட்டு எரிந்து அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. </p><p>இது குறித்து தகவலறிந்து வந்த திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தீயணைப்புத் துறையினர் 3 வாகனங்களில் சென்று, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், 10-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகளும் வரவழைக்கப்பட்டன. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயை கட்டுப்படுத்துவதில் சவால் ஏற்பட்டது. தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>பண்ணாரி வன உயிரியல் பூங்காவிற்குள் புகுந்த சிறுத்தைப்புலி:  பக்தர்கள் பீதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pannari-wildlife-park-leopard-sighting-sparks-fear</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pannari-wildlife-park-leopard-sighting-sparks-fear#comments</comments><guid isPermaLink="false">68d5dc1f-10b4-4e27-a0eb-3e522365f7bf</guid><pubDate>Sun, 23 Aug 2026 15:36:01 +0000</pubDate><atom:updated>2026-08-23T15:36:01.545Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பக்தர்கள்,பூங்கா,Bannari,பண்ணாரி,சிறுத்தைப்புலி,crowd of devotees,பீதி,Panic,A leopard</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/os6huxhl/leopard.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ சிறுத்தைப்புலி]]></media:title><media:description type="html"><![CDATA[ பண்ணாரி வன உயிரியல் பூங்காவிற்குள் புகுந்த சிறுத்தைப்புலி:  பக்தர்கள் பீதி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/os6huxhl/leopard.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சத்தியமங்கலம்,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF">பண்ணாரி </a>மாரியம்மன் கோவில் அருகே உள்ள வன உயிரியல் பூங்காவிற்குள் சிறுத்தைப்புலி ஒன்று புகுந்து உலா வந்த சம்பவம், அங்கு வந்திருந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p> <h2>வனவிலங்குகள் நடமாட்டம்</h2><p>ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த விலங்குகள் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி, அடிக்கடி அடர்ந்த காட்டை விட்டு வெளியேறி அருகே உள்ள வனப்பகுதி சாலைகளை கடப்பது வழக்கம். இந்த நிலையில், பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அருகே வனத்துறை சார்பில் வன உயிரியல் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள்,  அவ்வப்போது பூங்கா பகுதிக்குள் சென்று வருவது உண்டு.</p> <h2> பூங்காவிற்குள் புகுந்த சிறுத்தை</h2><p>நேற்று மாலை பண்ணாரி வனப்பகுதியில் இருந்து திடீரென வெளியேறிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88">சிறுத்தைப்புலி</a> ஒன்று, எதிர்பாராதவிதமாக இந்த வன உயிரியல் பூங்காவிற்குள் நுழைந்தது. பூங்காவின் உள்ளே புகுந்த அந்த சிறுத்தைப்புலி, அங்கும் இங்கும் அலைந்து திரிந்து உலா வந்தது.</p> <h2>பக்தர்கள் அச்சம்</h2><p>பூங்காவிற்குள் சிறுத்தைப்புலி நடமாடுவதை நேரில் பார்த்த பண்ணாரி மாரியம்மன் கோவில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.அதே நேரத்தில், அங்கிருந்த ஒரு சிலர் தங்களது செல்போன்களில் சிறுத்தைப்புலி உலா வரும் காட்சியை புகைப்படம் மற்றும் வீடியோவாகப் பதிவு செய்தனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.</p><h2>அதிர்ஷ்டவசமாக தப்பினர்</h2><p>சிறுத்தைப்புலி புகுந்த சமயத்தில், மாலை நேரம் என்பதால் பூங்காவின் உட்பகுதிக்குள்ளே பக்தர்கள் யாரும் செல்லவில்லை. இதனால் எவ்வித அசம்பாவிதமும், உயிர்ச் சேதமும் இன்றி அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.வனப்பகுதியை ஒட்டியுள்ள பூங்காவிற்குள் சிறுத்தைப்புலி புகுந்த சம்பவம் பண்ணாரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ரூ.4 கோடிக்கு வீடு வாங்கினாரா? அமைச்சர் கீர்த்தனா அளித்த அதிரடி பதில்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/did-she-buy-rs-4-crore-house-minister-keerthana-gives-bold-reply</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/did-she-buy-rs-4-crore-house-minister-keerthana-gives-bold-reply#comments</comments><guid isPermaLink="false">944f5fb0-93c3-48d9-aefe-152ec5b5b439</guid><pubDate>Sun, 23 Aug 2026 15:18:56 +0000</pubDate><atom:updated>2026-08-23T15:18:56.303Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,த.வெ.க.,அமைச்சர் கீர்த்தனா,Minister Keerthana</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/5rv3i1w0/tnldk.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/5rv3i1w0/tnldk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சிவகாசி</p><p>சிவகாசியில் நடந்த த.வெ.க. கூட்டத்தில், ரூ.4 கோடிக்கு வீடு வாங்கியது பற்றி அமைச்சர் கீர்த்தனா அதிரடியாக பதில் அளித்து பேசியுள்ளார்.</p><p>சிவகாசியில் நடைபெற்ற த.வெ.க. கூட்டத்தில் தமிழக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா கலந்து கொண்டு பேசினார்.  அவர் பேசும்போது, நான் நான்கு கோடியில் வீடு வாங்கியிருக்கிறேன் என குற்றச்சாட்டு கூறப்படுகிறது.  அப்படிப்பட்ட பத்திரத்தை யார் கொண்டு வந்து கொடுக்கிறார்களோ அவர்களுக்கே அந்த வீட்டை பரிசாக வழங்குகிறேன் என்றார்.</p><p>இதுபற்றி அவர் பேசும்போது, ஒருவர் ரூ.நான்கு கோடியில் வீடு வாங்கிட்டாங்க.. என பேசி நிறுத்தி விட்டு, ரூ.நான்கு கோடி வீடு.. எனக்கே அது தெரியவில்லை.</p> <h2>பத்திரம்</h2><p>அதனால், இந்த தகவலை யாரெல்லாம் வந்து வெளியிட்டார்களோ, அவர்களுக்கு நான் சொல்கிறேன். அந்த ரூ.நான்கு கோடி வீட்டை... ரூ.நான்கு கோடி வீட்டுக்கான அந்த பத்திரத்தை யார் கொண்டு வந்து காண்பிக்கிறார்களோ, அவர்களுக்கே அதனை நான் பரிசாக கொடுத்து விடுகிறேன்.  அன்பளிப்பாக கொடுத்து விடுகிறேன் என்று கூறி சற்று நிறுத்தினார். </p><p>பின்னர் அவர், முடியலங்க.  நாங்க மக்களுக்காக செய்ய வந்திருக்கோம். தேவையில்லாமல் போட்டு எரிச்சலா இருக்கு.  இது எதுக்கு?  மக்களுக்கு தெரியும்.  நீங்க என்ன பொய் கூறினாலும், அவர்களுக்கு தெரியும். யார் நல்லது பண்றா? யாரு கெட்டது பண்றா? என்று இந்த கூட்டத்தில் இருக்கும் பெண்கள் அத்தனை பேருக்கும் தெரியும்.</p><p>கூட்டத்திற்கு வந்துள்ள பெண்கள் நீங்கள்தான்  இனிமேல் சென்று, அறியாமையில் ஒரு சில பேர் இருக்கிறார்கள். அந்த அறியாமையில் இருக்கிற மக்களுக்கு நீங்கள்தான் புரிய வைக்க வேண்டும்.  அந்த பொறுப்பை அண்ணன் விஜய் உங்கள் எல்லோருக்கும் தந்துள்ளார் என்று பேசியுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் 5.5 கிலோ கஞ்சா, 2 பைக் பறிமுதல்: 5 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/55-kg-of-ganja-2-bikes-seized-in-thoothukudi-5-people-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/55-kg-of-ganja-2-bikes-seized-in-thoothukudi-5-people-arrested#comments</comments><guid isPermaLink="false">ad99d455-8349-466f-ab26-05a1fa64e895</guid><pubDate>Sun, 23 Aug 2026 15:06:57 +0000</pubDate><atom:updated>2026-08-23T15:06:57.129Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,போலீஸ்,Thoothukudi,Ganja,தூத்துக்குடி,கஞ்சா,பறிமுதல்,patrol,bike,seized,ரோந்து பணி,பைக்,5 people arrested,5 பேர் கைது</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/qqu8t0a4/5.5-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-2-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 5.5 கிலோ கஞ்சா, 2 பைக் பறிமுதல்: 5 பேர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/qqu8t0a4/5.5-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-2-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியில் சட்ட விரோத விற்பனைக்காக 5.5 கிலோ <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE">கஞ்சா</a> வைத்திருந்த 5 பேர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>போலீசார் ரோந்து பணி</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா தலைமையிலான போலீசார் சிவந்தாகுளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே சந்தேகப்படும்படி 2 பைக்குகளில் வந்த நபர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது, அவர்கள் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.</p><h2>5.5 கிலோ கஞ்சா, 2 பைக் பறிமுதல்; 5 பேர் கைது</h2><p>தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா வழக்குப்பதிவு செய்து சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த வேல்முருகன் மகன் சங்கர் (வயது 20), சங்கரப்பேரி பகுதியைச் சேர்ந்த கனிஅரசன் மகன் வெங்கடேஷ்(23), பிரையன்ட்நகரைச் சேர்ந்தவர்களான செந்தில் மகன் காளிதாஸ்(22), சிவக்குமார் மகன் முத்துமாதவன்(19) மற்றும் வள்ளிநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் சுடலைசெல்வம்(20) ஆகிய 5 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 5 கிலோ 500 கிராம் கஞ்சா மற்றும் 2 பைக்குகளையும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">பறிமுதல்</a> செய்தார்.</p>]]></content:encoded></item><item><title>திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/severe-traffic-congestion-on-the-trichy-chennai-national-highway</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/severe-traffic-congestion-on-the-trichy-chennai-national-highway#comments</comments><guid isPermaLink="false">dc771c47-9c4a-4d26-8a40-44f786394ae2</guid><pubDate>Sun, 23 Aug 2026 14:52:17 +0000</pubDate><atom:updated>2026-08-23T14:52:17.857Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,திருச்சி,Trichy,தேசிய நெடுஞ்சாலை,போக்குவரத்து நெரிசல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/n4q87ww8/Traffic.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ போக்குவரத்து நெரிசல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/n4q87ww8/Traffic.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>விக்கிரவாண்டி,  </p><p> சனி விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அன்று முகூர்த்த நாளையொட்டி சென்னையிலிருந்து ஏராளமான வாகனங்கள் தென் மாவட்டங்களை நோக்கி படையெடுத்து சென்றன. இன்று முகூர்த்தம் முடிந்து நாளை அலுவலகத்திற்கும், பள்ளிக்கும் செல்ல வேண்டும் என்பதால் தென் மாவட்டங்களை நோக்கு சென்ற வாகனங்கள் அனைத்தும் சென்னை நோக்கி திரும்பின.</p><p>இதனால் திருச்சி-சென்னை சாலையில் வாகனங்கள் அணிவகுத்ததால் விக்கிரவாண்டி டோல் கேட்டில் வாகன நெரிசல் ஏற்பட்டது.சென்னை நோக்கி அதிகமான வாகனங்கள் சென்றதால் கூடுதலாக மூன்று வழிகள் திறந்து மொத்தம் ஒன்பது வழிகள்மூலம் வாகனங்கள் சென்னை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டன.</p><p>விக்கிரவாண்டி வடக்கு புறவழி சாலை முனையில் மேம்பால பணி நடைபெறுவதால் தெற்கு புறவழிச்சாலை முனையிலிருந்து டி.எஸ்.பி.,அலுவலகம் வரை சர்வீஸ் சாலையை கடக்க முடியாமல் வாகனங்கள் 2 கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து மெதுவாக ஊர்ந்து சென்றன.நேற்று மாலை 6 மணி வரை 40ஆயிரத்து 740 வாகனங்கள் டோல்கேட் டை கடந்து சென்றன மேலும் கூடுதலாக வாகனங்கள் செல்லும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>கோவில்பட்டி: வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kovilpatti-2-people-arrested-under-the-detention-act-in-connection-with-the-murder-of-a-youth</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kovilpatti-2-people-arrested-under-the-detention-act-in-connection-with-the-murder-of-a-youth#comments</comments><guid isPermaLink="false">f3dd289f-2b54-4903-923d-ca4bb304005c</guid><pubDate>Sun, 23 Aug 2026 14:46:55 +0000</pubDate><atom:updated>2026-08-23T14:46:55.882Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Thoothukudi,arrested,தூத்துக்குடி,Kovilpatti,கோவில்பட்டி,Youth Murder,வாலிபர் கொலை,2 பேர்,2 people,தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டம்,Tamil Nadu Detention Act</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/y01v38ok/2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 2 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/y01v38ok/2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">வாலிபர் கொலை</a> வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பேர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின்</a> கீழ் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்யப்பட்டனர்.</p><h2>வாலிபர் கொலை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF">கோவில்பட்டி</a> மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரதிநகர் பகுதியில், அதே பகுதியைச் சேர்ந்த முனியசாமி மகன் ஞானதிரவியம் (வயது 30) என்பவரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.</p><h2>தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் 2 பேர் கைது</h2><p>மேற்சொன்ன கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான பாரதி நகரைச் சேர்ந்தவர்களான செல்லபாண்டி மகன் மகாராஜன்(35) மற்றும் முத்து மகன் முத்துராஜ்(25) ஆகிய 2 பேரையும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, சம்பந்தப்பட்ட போலீசார் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து திருநெல்வேலி மத்திய சிறையில் அடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>விடுமுறை தினம், சுபமுகூர்த்த நாள்: திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-and-auspicious-day-surge-of-devotees-at-thiruchendur-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-and-auspicious-day-surge-of-devotees-at-thiruchendur-temple#comments</comments><guid isPermaLink="false">0e99a652-f08d-4d84-9377-2c9251247725</guid><pubDate>Sun, 23 Aug 2026 14:44:42 +0000</pubDate><atom:updated>2026-08-23T14:44:42.649Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்செந்தூர்,Holiday,Tiruchendur,விடுமுறை தினம்,பக்தர்கள் கூட்டம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/ewieih96/Tiruchendur.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/ewieih96/Tiruchendur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்செந்தூர்</p><p>அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாகவும், ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். திருவிழா காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்படுகிறது.</p><p>இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் மற்றும் சுபமுகூர்த்த தினம் என்பதால் கோவிலில் அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் சன்முகவிலாச மண்டபம், கோவில் வளாகம் உள்ளிட்ட இடங்களில் 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது. இன்று கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷே கமும், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் இடியுடன் கூடிய மிதமான மழை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/moderate-rain-accompanied-by-thunderstorms-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/moderate-rain-accompanied-by-thunderstorms-in-chennai#comments</comments><guid isPermaLink="false">65c0727a-74dd-496b-b4ad-2bcd4c29365c</guid><pubDate>Sun, 23 Aug 2026 14:40:48 +0000</pubDate><atom:updated>2026-08-23T14:40:48.024Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Rain,மழை</media:keywords><media:content height="270" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/ecece9la/State-09.jpg" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/ecece9la/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக கடலோர பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில், சென்னையில் தற்போது இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. தொடர்ந்து நாளை(திங்கட்கிழமை) தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் மற்றும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  </p>]]></content:encoded></item><item><title>சிவகாசி: சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sivakasi-commotion-as-a-luxury-car-parked-by-the-roadside-suddenly-caught-fire</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sivakasi-commotion-as-a-luxury-car-parked-by-the-roadside-suddenly-caught-fire#comments</comments><guid isPermaLink="false">efd2b35c-ce80-4269-85e1-e88feabbeb8b</guid><pubDate>Sun, 23 Aug 2026 14:38:33 +0000</pubDate><atom:updated>2026-08-23T14:38:33.740Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Sivakasi,சிவகாசி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/x8ersv9n/State-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/x8ersv9n/State-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகாசி,</p><p>சிவகாசியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகாசி மாவட்டம் ஞானகிரி சாலையைச் சேர்ந்த கண்ணன் என்பவர், தனது காரை சிவகாசி ரெயில் நிலையம் அருகே சாலையோரத்தில் நிறுத்தியிருந்தார். அந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. </p><p>இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் அதற்குள் கார் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. அந்த காரின் மதிப்பு சுமார் 16 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>தீப்பற்றி எரிந்தபோது காரில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-the-day-after-tomorrow-22</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-the-day-after-tomorrow-22#comments</comments><guid isPermaLink="false">dedb66da-7ab4-4b6b-a0b2-56c00e7cd472</guid><pubDate>Sun, 23 Aug 2026 14:19:27 +0000</pubDate><atom:updated>2026-08-23T14:19:27.378Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,monthly maintenance work,power outage,மாதாந்திர பராமரிப்பு பணி,மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/c7kn3yty/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/c7kn3yty/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மின்பகிர்மான வட்டம், கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் உள்ள கரிசல்பட்டி, சேரன்மகாதேவி துணை மின் நிலையங்களில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் காரணமாக நாளை மறுநாள் (25.8.2026, செவ்வாய்கிழமை) <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>கல்லிடைக்குறிச்சி கோட்டம் கரிசல்பட்டி மற்றும் சேரன்மகாதேவி துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் (25.8.2026, செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையங்களில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம், பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும்.</p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>கரிசல்பட்டி, பிள்ளைகுளம், மணிமுத்தான்குளம், புலவன் குடியிருப்பு, கோவிந்தபேரி, தெய்வநாயகபேரி, மீனவன்குளம், பட்டன்காடு, இடையான்குளம், கங்கணாங்குளம், சடையமான்குளம், வெங்கட்ரங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லுர், காடுவெட்டி, சேரன்மகாதேவி, பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், கரிசூழ்ந்தமங்கலம், கேசவசமுத்திரம், மலையடி, மேல்கரை ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>வீட்டு உபயோக சிலிண்டருக்கான இகேஒய்சி காலக்கெடு நீடிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/deadline-extended-for-e-kyc-for-domestic-lpg-cylinders</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/deadline-extended-for-e-kyc-for-domestic-lpg-cylinders#comments</comments><guid isPermaLink="false">c4a45fc5-7ee2-4dde-a798-f642005ffe1a</guid><pubDate>Sun, 23 Aug 2026 14:06:21 +0000</pubDate><atom:updated>2026-08-23T14:06:21.706Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>cylinder,சிலிண்டர்,காலக்கெடு,இகேஒய்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/8c589ms6/Gas.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/8c589ms6/Gas.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p> சென்னை, </p><p>கியாஸ் நிறுவனங்கள் மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சகத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், மாதம் ஒன்றுக்கு 25 லட்சத்துக்கும் அதிகமான வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் இணைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் எழுந்தது.அதாவது, மானியத்துடன் கூடிய சிலிண்டரை பெற்று வணிகப் பயன்பாடுகளுக்கு பயன்படுத்துவதாகவும், ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் இருப்பதாகவும், இறந்து போன நபர்கள் பெயரில் உள்ள இணைப்புகளை வேறு சிலர் பயன்படுத்தி வருவதாகவும் தெரியவந்துள்ளது.5 பேர் உள்ள ஒரு குடும்பத்திற்கு 35 முதல் 40 நாட்கள் வரை ஒரு சிலிண்டர் போதுமானதாக இருக்கும் நிலையில், ஒரே ஒரு நபர் மட்டுமே உள்ள வீடுகளில் கூட வருடத்திற்கு 12 சிலிண்டர்கள் பெறப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.இதையடுத்து கள்ளச்சந்தையில் சமையல் கியாஸ் சிலிண்டர் விற்பனை செய்வதை தடுக்கவும், சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கத்திலும் சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கு ‘இ-கே.ஒய்.சி.’ அடிப்படையில் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.</p><h2>புதிய கட்டுப்பாடு</h2><p>மேலும் மத்திய கிழக்கு போர் காரணமாக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், சமையல் கியாஸ் சிலிண்டர் முன்பதிவில் மத்திய அரசு சமீபத்தில் புதிய கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்தது. அதன்படி கியாஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யும் கால அளவு உயர்த்தப்பட்டது.நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் 25 நாட்களுக்கு ஒரு முறையும், கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் 45 நாட்களுக்கு ஒரு முறையும் கியாஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யும் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டது. மேலும் ‘இ-கே.ஒய்.சி.’ ஆவணங்களை ஆகஸ்டு 16-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்து இருந்தது.</p> <h2>இன்று வரை கெடு</h2><p>இதனைத்தொடர்ந்து வாடிக்கையாளர்கள் பலரும் ஆன்லைன் மூலமும், சிலிண்டர் வினியோக அலுவலகங்களுக்கு நேரடியாக சென்றும் ஆவணங்களை சமர்ப்பித்து வருகின்றனர். இந்த நிலையில் வாடிக்கையாளர்களின் கோரிக்கையை ஏற்று ஆவணங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசத்தை மத்திய அரசு இன்று வரை நீட்டித்து இருந்தது. வீடுகளுக்கு தற்போது மானிய விலையில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 நிறுவனங்கள் மூலம் கியாஸ் வினியோகம் செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் சராசரியாக 85 சதவீத வாடிக்கையாளர்கள் தங்களது ஆவணங்களை பதிவேற்றம் செய்து விட்ட நிலையில், 15 சதவீத வாடிக்கையாளர்கள் பதிவு செய்யவில்லை என்று தெரிகிறது.</p><h2>முன்பதிவு செய்ய முடியாது</h2><p>ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவதால், தமிழகம் முழுவதும் சுமார் 50 லட்சம் வாடிக்கையாளர்கள் நாளை (24-ந்தேதி) முதல் மானியத்துடன் கூடிய வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.இதனால் ஆவணங்களை பதிவேற்றம் செய்யாத வாடிக்கையாளர்கள் தவித்தனர். அவர்கள் மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.</p><h2>அவகாசம் நீடிப்பு</h2><p>இதனை ஏற்று கியாஸ் சிலிண்டர்கள் பெற ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கியாஸ் வினியோகஸ்தர்கள் சார்பில் வீடுகளுக்கு கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் பணியாளர்கள், தங்களிடம் உள்ள ஆண்ட்ராய்டு போனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள செயலி மூலம் வீடுகளுக்கு சிலிண்டர் வினியோகம் செய்யும்போது ஆவணங்களை பதிவேற்றம் செய்தனர்.அதாவது, யார் பெயரில் சிலிண்டர் இணைப்பு உள்ளதோ அவரை மொபைல் கேமராவைப் பயன்படுத்தி புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்தனர். இது மிகவும் எளிமையான நடைமுறையாகும்.</p> <h2>செயலி அறிமுகம்</h2><p>ஒரு சிலர் கியாஸ் வினியோகஸ்தர்களின் அலுவலகத்திற்கு சென்று அவர்களிடம் உள்ள மொபைல் போனில் ஆவணங்களை பதிவேற்றம் செய்தனர். வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.அந்த செயலியில் நுழைந்து ஆவண விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். தமிழகத்தில் இணைப்பு பெற்றுள்ள குடும்பத் தலைவர்களின் குடும்பம் தமிழகத்தில் வசித்து வரும் நிலையில், குடும்பத் தலைவர்கள் மட்டும் உலகில் கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு இத்தகைய செயலி மொபைல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அதன் மூலம் அவர்கள் ஆவணங்களை சமர்ப்பித்தனர். தற்போது சிலிண்டர்களுக்கு ஆவணங்களை சமர்ப்பிக்க வருகிற 31-ந்தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சட்டமன்ற கூட்டத்தொடருக்கு உறுப்பினர்கள் ரெயிலிலேதான் வந்து சென்றோம் - முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-came-and-went-to-assembly-sessions-only-by-train-former-mla-balabharathi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-came-and-went-to-assembly-sessions-only-by-train-former-mla-balabharathi#comments</comments><guid isPermaLink="false">d0cd2a34-bb5b-452a-9f55-5fb3b424ed1b</guid><pubDate>Sun, 23 Aug 2026 13:46:35 +0000</pubDate><atom:updated>2026-08-23T13:46:35.431Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>train,ரெயில்,Assembly,members,உறுப்பினர்கள்,Travel,சட்டமன்ற கூட்டத்தொடர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/8fplhwvi/bala-bharathi.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பாலபாரதி]]></media:title><media:description type="html"><![CDATA[ முன்னாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/8fplhwvi/bala-bharathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் எம்.எல்.ஏ.க்களின் தொகுதிப் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள கார், ஓட்டுநர் உதவியாளர் மற்றும் மாதம் ரூ.75,000 பராமரிப்புத் தொகை வழங்கப்படும் என முதல்-அமைச்சர் விஜய் சமீபத்தில் சட்டபேரவையில் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. </p><h2>கோரிக்கை</h2><p>நிதிச்சுமையைக் கருத்தில் கொண்டு, பொருளாதாரத்தில் நலிவடைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டுமே இந்தச் சலுகையை வழங்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்தனர்.</p><h2>பாலபாரதி</h2><p>இந்த நிலையில், அப்போது (2001 முதல் 2016) சட்டமன்ற கூட்டத்தொடரை முன்னிட்டு உறுப்பினர்கள் ரெயிலிலேதான் வந்து சென்றோம் என்று முன்னாள்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D"> மார்க்சிஸ்ட்</a> கம்யூனிஸ்டு கட்சி சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி தெரிவித்தார். இது தொடர்பாக, அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>பாண்டியன் எக்ஸ்பிரஸ்</h2><p>அநேகமாக, பாண்டியன் எக்ஸ்பிரஸில்தான் தென்மாவட்ட எம்எல்ஏக்கள் நிறைந்திருப்பார்கள். இரண்டாம் வகுப்பு எஸ் 3, எஸ் 4 பெட்டிகளில் அவர்கள் பயணம் செய்வார்கள். அதிகாலையில் அரசுப் பேருந்துகள் எம்எல்ஏக்களுக்காக சென்ட்ரல் மற்றும் எக்மோர் ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டிருக்கும். இரண்டு அல்லது மூன்று பேருந்துகளில் எம்எல்ஏக்கள், அவர்களின் உதவியாளர்கள் அல்லது உறவினர்கள் ஏறிக்கொள்வார்கள். தலைமை செயலக கோட்டைக்குள்ளும் பேருந்தில்தான் செல்வோம்.</p><h2>காரணம் சிம்பிள்</h2><p>ஆளும்கட்சி எதிர்க்கட்சி பாகுபாடில்லாமல் அந்த பேருந்து கலகலப்பாகவே பயணிக்கும். அதன்பிறகு இன்றுவரை ரெயில் நிலையங்களில் எம்எல்ஏக்களை காணமுடியவில்லை... காரணம் சிம்பிள்.அதாவது எளிமை.</p><p>ரெயில் விமானமாக பரிணாம வளர்ச்சியை அடைந்திருந்தது.</p><p> இவ்வாறு அதில் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>‘அமைச்சர்களுக்கு அவை மரபும், சட்டமும் தெரியவில்லை’ - துரைமுருகன் விமர்சனம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ministers-are-unaware-of-house-conventions-and-the-law-duraimurugans-criticism</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ministers-are-unaware-of-house-conventions-and-the-law-duraimurugans-criticism#comments</comments><guid isPermaLink="false">984ac481-ad8c-4860-81ff-e696a6214dc5</guid><pubDate>Sun, 23 Aug 2026 13:26:12 +0000</pubDate><atom:updated>2026-08-23T13:26:12.467Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Duraimurugan,துரைமுருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/fk8cgfut/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/fk8cgfut/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>த.வெ.க. அமைச்சர்களுக்கு அவை மரபும் தெரியவில்லை, சட்டமும் தெரியவில்லை என தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-</p><p>“சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் நீண்ட நாள் சட்டசபையில் இருந்த அனுபவம் உள்ளவர். அவர் தற்போது சட்டசபையை நடத்துகின்ற விதத்தைப் பாக்கும்போது, ஓரளவு நல்ல முறையில்தான் அவையை நடத்துகிறார். அதை மறுக்க முடியாது. ஆனால் சட்டசபையில் நடக்கும் கூத்துகளை அவர்தான் தடுக்க வேண்டும். </p><p>த.வெ.க. அமைச்சர்களுக்கு அவை மரபும் தெரியவில்லை, சட்டமும் தெரியவில்லை. சட்டசபைக்குள் முதல் முறையாக செல்லும் எம்.எல்.ஏ.க்களுக்கு, அவையின் விதிமுறைகள் பற்றிய புத்தகத்தைக் கொடுப்பார்கள். அதை தற்போது உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு கொடுத்தார்களா என்பது தெரியவில்லை. அதை அவர்கள் வாங்கிப் படிக்க வேண்டும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>‘100 நாட்கள் ஆட்சியில் மக்களின் எண்ணங்களை த.வெ.க. அரசு பிரதிபலித்திருக்கிறது’ - ஜி.கே.வாசன்  </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tvk-government-has-reflected-the-sentiments-of-the-people-during-its-100-days-in-office-gk-vasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tvk-government-has-reflected-the-sentiments-of-the-people-during-its-100-days-in-office-gk-vasan#comments</comments><guid isPermaLink="false">97af0834-8589-4529-9e6d-c318f3a9a3cc</guid><pubDate>Sun, 23 Aug 2026 13:13:24 +0000</pubDate><atom:updated>2026-08-23T13:13:24.719Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>G.K.Vasan,ஜி.கே.வாசன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/swoodl3c/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/swoodl3c/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை ,</p><p>சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான கேள்விகளை எழுப்ப வேண்டும் என்றும், மக்கள் மற்றும் தொகுதி சார்ந்த பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-</p><p>“சட்டமன்றத்தில் ஏனோ தானோ என்று கேள்விகள் கேட்காமல் ஆக்கப்பூர்வமான முறையில் கேள்விகள் கேட்பதையே மக்கள் விரும்புகிறார்கள். சட்டமன்ற நிகழ்வுகள் நேரலை செய்யப்படுகிறது என்றால் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பொறுப்புணர்வு இன்னும் அதிகமாக இருக்க வேண்டும். மக்கள் தங்கள் தொகுதி எம்.எல்.ஏ.வின் செயல்பாடுகளை ஒவ்வொரு நிமிடமும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.</p><p>சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்கள் பேசும் பேச்சுகள் மக்கள் சார்ந்த பேச்சுகளாக, தங்கள் தொகுதி திட்டங்கள் சார்ந்த ஆக்கப்பூர்வமான பேச்சுகளாக இருக்க வேண்டுமே தவிர, ஏட்டிக்கு போட்டி பேச்சாகவோ, வெறுப்பு பேச்சாகவோ இருக்கக்கூடாது.</p><p>100 நாட்கள் ஆட்சியில் மக்களின் எண்ணங்களை பல விதங்களில் த.வெ.க. அரசு பிரதிபலித்திருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. அதே நேரம், விவசாயிகளின் எண்ணங்களை அரசு முழுமையாக பிரதிபலிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>வெள்ளத்தில் மூழ்கிய நெற்பயிர்கள்: த.வெ.க. அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/flooded-paddy-crops-tvk-government-should-provide-immediate-compensation-edappadi-palaniswami-insists</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/flooded-paddy-crops-tvk-government-should-provide-immediate-compensation-edappadi-palaniswami-insists#comments</comments><guid isPermaLink="false">b308f022-eeac-4fac-9439-3966da016f55</guid><pubDate>Sun, 23 Aug 2026 12:45:54 +0000</pubDate><atom:updated>2026-08-23T12:45:54.773Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இழப்பீடு,Compensation,எடப்பாடி பழனிசாமி,வலியுறுத்தல்,Edappadi Palaniswami ​,Paddy crops,flooded,நெற்பயிர்கள் சேதம்,insists,TVK Government,த.வெ.க. அரசு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/apf405py/7.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி ]]></media:title><media:description type="html"><![CDATA[ அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/apf405py/7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95">த.வெ.க.</a> கூட்டணி அரசை வலியுறுத்தல். இது தொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p> <h2>கன மழை</h2><p>கடந்த இரண்டு நாட்களாக திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">டெல்டா மாவட்டங்களில்</a> பெய்த திடீர் மழையினால் சுமார் 2000 ஏக்கர் நிலத்தில் விளைவித்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. விவசாயத்திற்கு ஆதாரம் தண்ணீர். தண்ணீருக்கு மழைதான் ஆதாரம்! கடந்த இரண்டு நாட்களாக டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் பெய்த கன மழை, சுமார் 2000 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகளின் வாழ்வை அடியோடு புரட்டிப்போட்டுள்ளது.</p><h2>விவசாயிகள் கண்ணீர்</h2><p>கன மழையால் அறுவடைக்குத் தயாரான நெற்கதிர்கள் எதிர்பாராத மழையால் சேதமடைந்ததை எண்ணி அப்பகுதி விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள். இவர்களின் கண்ணீரைத் துடைப்பது த.வெ.க. கூட்டணி அரசின் கடமையாகும். அடுத்த ஜென்மத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF">விவசாயியாக</a> பிறக்க கனவு காணும் பொய்க்கால் அரசின் முதல்-அமைச்சர்  ஜோசப் விஜய், இந்த ஜென்மத்தில் அல்லலுறும் விவசாயிகளை காக்கும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.</p><h2>வேதனையில் விவசாயிகள் </h2><p>இந்த அரசு ஜூன் 12-ல், குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடாத நிலையில், நிலத்தடி நீரை நம்பி கடன் வாங்கி வேளாண் பயிர் செய்திருந்த விவசாயிகள், தற்போது கதிர்கள் முற்றி அறுவடைக்கு தயாராக இருக்கும் நேரத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த திடீர் மழையினால், பாடுபட்டு விளைவித்திருந்த நெற்கதிர்கள் மழையில் மூழ்கிய நிலையை பார்த்து விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.</p><h2>தேர்தல் வாக்குறுதி </h2><p>ஏற்கெனவே, த.வெ.க. தேர்தல் நேரத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய வேளாண் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு, தவணை முறையில் சிறிது, சிறிதாக வேளாண் கடனை தள்ளுபடி செய்யும் அறிவிப்புகளை வெளியிடும் த.வெ.க. அரசின் முதல்-அமைச்சரின் செய்கைகளை கண்டு விவசாயிகள் கொதித்துப்போய் உள்ளனர்.</p> <h2>30,000 ரூபாய் நஷ்டஈடு</h2><p>தற்போது பெய்த கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு கை கொடுக்க இந்த அரசு முன்வர வேண்டும். தமிழக அரசின் வருவாய்த் துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகளை உடனடியாக மழையால் பாதிக்கப்பட்ட திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு அனுப்பி, பயிர் சேத விவரங்களை முழுமையாக கணக்கெடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் அனைவருக்கும் ஏக்கர் ஒன்றுக்கு 30,000 ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று பொய்க்கால் த.வெ.க. அரசை வலியுறுத்துகிறேன்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>