<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 09 Aug 2026 04:31:12 +0000</lastBuildDate><item><title>காலை உணவு திட்டத்தில் கடலை மிட்டாய் வழங்க வேண்டும்: கோவில்பட்டியில் உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/peanut-candy-should-be-provided-under-the-breakfast-scheme-manufacturers-association-in-kovilpatti-urges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/peanut-candy-should-be-provided-under-the-breakfast-scheme-manufacturers-association-in-kovilpatti-urges#comments</comments><guid isPermaLink="false">994813f7-a007-4a87-8f02-1d4e7e545026</guid><pubDate>Sun, 09 Aug 2026 04:21:07 +0000</pubDate><atom:updated>2026-08-09T04:21:07.185Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Kovilpatti,கோவில்பட்டி,breakfast scheme,காலை உணவு திட்டம்,கடலை மிட்டாய்,peanut candy</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/o51clhad/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/o51clhad/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>கோவில்பட்டி,</p><h2>கோவில்பட்டி கடலை மிட்டாய்</h2><p>தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் அனைத்தும் கரிசல் மண் பூமி என்பதால் இப்பகுதியில் விளைவிக்கப்படும் நிலக்கடலைக்கு இயற்கையாகவே இனிப்பு சுவை உண்டு.</p><p>இந்த நிலக்கடலைகளை கொண்டு தயாரிக்கப்படும் கடலை மிட்டாய்கள் உலகளவில் பிரசித்தி பெற்றது. சிறப்பு வாய்ந்த கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ந் தேதி புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.</p><h2>வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி</h2><p>இந்தியா மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, மாலத்தீவு, லண்டன், அமெரிக்கா, பஹ்ரைன், கத்தார், சிங்கப்பூர், குவைத் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் கடலை மிட்டாய் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கோவில்பட்டியில் குடிசை தொழிலாக சுமார் 120 இடங்களில் கடலை மிட்டாய் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த கோவில்பட்டி கடலை மிட்டாய் தமிழக அரசின் சத்துணவு திட்டம் மற்றும் காலை உணவு திட்டத்தில் இடம்பெற வேண்டும். வந்தேபாரத் ரெயில் உணவு பட்டியலிலும் இடம்பெற வேண்டும் என்பது உற்பத்தியாளர்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.</p><h2>காலை உணவு திட்டம்</h2><p>இதுகுறித்து கோவில்பட்டி கடலைமிட்டாய் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் சங்க செயலாளர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-</p><p>வந்தே பாரத் ரெயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு ரெயில்வே நிர்வாகம் சார்பில் கடலை மிட்டாய் வழங்கப்படுகிறது. ஆனால் வடமாநிலங்களில் உள்ள நிறுவனங்கள் தயாரிக்கும் கடலை மிட்டாய் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு வழங்கிய புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் மற்றும் உணவு பொருட்களை வந்தே பாரத் ரெயில்களின் உணவு பட்டியலில் இணைக்க வேண்டும்.</p><p>அப்போது தான் இந்த பொருட்களின் பெருமை, வரலாறு, அதன் தரம் குறித்து பொதுமக்களுக்கு தெரியும். மேலும் பள்ளிக்கூடங்களில் தமிழக அரசின் சத்துணவு திட்டம், காலை உணவு திட்டம், அரசு நடத்தும் சமுதாய வளைகாப்பு விழாக்களில் சுவை மற்றும் சத்துள்ள கோவில்பட்டி கடலை மிட்டாய் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஈரோடு-செங்கோட்டை ரெயில் சேவையில் 2 நாட்கள் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-day-changes-to-the-erodesengottai-rail-service</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-day-changes-to-the-erodesengottai-rail-service#comments</comments><guid isPermaLink="false">2a27c2f3-ef5f-4425-bff6-54aab5a7f2ed</guid><pubDate>Sun, 09 Aug 2026 04:16:27 +0000</pubDate><atom:updated>2026-08-09T04:16:27.977Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Sengottai,செங்கோட்டை,ரெயில் சேவை,Erode,ஈரோடு,Rail service</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/uz2rbcfi/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/uz2rbcfi/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,  </p><p>ஈரோடு- கரூர் ரெயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் பாலங்கள் பராமரிப்பு, சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன்காரணமாக ஈரோடு வழியாக செல்லும் ரெயில்களின் சேவையில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை), வருகிற 13-ந்தேதி ஆகிய நாட்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி- ஈரோடு பாசஞ்சர் ரெயில் (வண்டி எண்-56809) கரூர் சந்திப்பு வரை மட்டுமே செல்லும். அதாவது கரூரில் இருந்து ஈரோடு வரை பகுதி ரத்து செய்யப்படுகிறது. ஈரோடு - செங் கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்- 16845) கரூர் வரை மட்டுமே இயங்கும். அதாவது ஈரோட்டில் இருந்து கரூர் வரை பகுதி ரத்தாகிறது. இதேபோல் பாலக்காடு டவுன்- திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16844) பாசூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படும். பராமரிப்பு பணி கள் நிறைவுபெற்ற பின்னர் பாசூரில் இருந்து திருச்சி வரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயிலாக இயக்கப்படும்.</p><p>மேலும் கோவை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16322) கோவை- திண்டுக்கல் இடையே மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இந்த ரெயில் போத்தனூர், பொள்ளாச்சி, பழனி வழியாக செல்லும். கோவை வடக்கு, பீளமேடு, சிங்காநல்லூர், இருகூர், சூலூர் ரோடு, சோமனூர், திருப்பூர், ஊத்துக்குளி, ஈங்கூர், ஈரோடு, பாசூர், கொடுமுடி, புகளூர், கரூர், பாளையம், எரியோடு ஆகிய ரெயில் நிலையங்களில் நிற்கும். மேலும் போத்தனூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய ரெயில் நிலையங்களில் மாற்று நிறுத்தம் ஏற்படுத்தப்படும் என்று சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்புக்காக கேமராக்கள் பொருத்தம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cameras-installed-for-tiger-census-in-mettupalayam-and-sirumugai-forests</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cameras-installed-for-tiger-census-in-mettupalayam-and-sirumugai-forests#comments</comments><guid isPermaLink="false">a1b28960-5c1e-4849-8924-e1af3867d9e0</guid><pubDate>Sun, 09 Aug 2026 03:45:56 +0000</pubDate><atom:updated>2026-08-09T03:45:56.817Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வனப்பகுதி,மேட்டுப்பாளையம்,Mettupalayam,புலிகள் கணக்கெடுப்பு,tiger census,Forests,கேமராக்கள்,Cameras</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/16ruhx63/23.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/16ruhx63/23.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மேட்டுப்பாளையம்,</p><p>மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பு பணிக்காக 194 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.</p><h2>புலிகள் கணக்கெடுப்பு</h2><p>கோவை வன கோட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதிகளில் காட்டுயானை, காட்டெருமை, புலி, சிறுத்தை, கரடி, மான், செந்நாய், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி அலையும் வனவிலங்குகள் வனப்பகுதிக்குள் இடம்பெயர்ந்து செல்வதை வழக்கமாக கொண்டு உள்ளன.</p><p>இந்த நிலையில் மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதிகளில் அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு- 2026 (பேஸ்-3) பணிகளுக்காக மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு உத்தரவின் பேரில் 194 தானியங்கி கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கியது.</p><h2>சிறுமுகை</h2><p>மேட்டுப்பாளையம் வனச்சரகம் 9,300 ஹெக்டேர் பரப்பளவில் மேட்டுப்பாளையம், சுண்டப்பட்டி ஆகிய 2 பிரிவுகளில் 6 சுற்றுகளை உள்ளடக்கியது. மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் சசிகுமார் தலைமையில் வனப்பணியாளர்கள் 6 குழுக்களாக பிரிந்து 94-க்கும் மேற்பட்ட இடங்களில் தானியங்கி கேமராக்களை பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><h2>கேமராக்கள் பொருத்தும் பணி</h2><p>சிறுமுகை வனச்சரகம் 11,000 ஹெக்டேர் பரப்பளவில் பெத்திக்குட்டை, ஒடந்துறை ஆகிய 2 பிரிவுகளில் 6 சுற்றுகளை உள்ளடக்கியது. வனச்சரக அலுவலர் தினேஷ் தலைமையில் வனவர், வனக்காப்பாளர், வனக்காவலர், வேட்டை தடுப்பு காவலர்கள் உள்பட வனப்பணியாளர்கள் 6 குழுக்களாக பிரிந்து 50 இடங்களில் தானியங்கி கேமராக்களை பொருத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த கேமராக்கள் பொருத்தப்பட்ட பிறகு அதில் பதிவான காட்சிகளை வைத்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">புலிகள்</a> கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆடி மாதம் தாய் வீட்டுக்கு சென்ற மனைவி; கணவன் போட்ட பிளான்...சபலத்தால் வந்த வினை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-drug-sales-representative-was-injured-when-his-wife-went-to-his-mothers-house</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-drug-sales-representative-was-injured-when-his-wife-went-to-his-mothers-house#comments</comments><guid isPermaLink="false">be39ca23-5018-49c0-baf2-568cf11f097c</guid><pubDate>Sun, 09 Aug 2026 03:44:49 +0000</pubDate><atom:updated>2026-08-09T03:44:49.732Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,கைது,arrest,பெண்,ஆடி மாதம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/vwkuoaya/women33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
ஆடி மாதம் தாய் வீட்டுக்கு சென்ற மனைவி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/vwkuoaya/women33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>ஆடி மாதத்தில் தாய் வீட்டுக்கு மனைவி சென்றுவிட்டதால் மற்றொரு பெண்ணுக்கு மருந்து விற்பனை பிரதிநிதி காதல் வலை வீசினார். இது அவருக்கு வினையானது. இதை வைத்து அவரை அடித்து மிரட்டி பணம் பறிக்க முயன்ற 3 பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.</p><h2>சபலத்தால் வந்த வினை</h2><p>சென்னை சூளைமேட்டில் நடைபெற்ற இந்த பரபரப்பு சம்பவம் வருமாறு:-</p><p>சென்னை சூளைமேடு பகுதியில் வசித்து வருபவர் சுதர்சன் (வயது 32). மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்க்கிறார். இவருக்கு 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற் றது. ஆடி மாதத்தை முன்னிட்டு அவரது மனைவி கடந்த 17-ந்தேதி அன்று அவரது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார். சுதர்சன் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார்.</p><p>அவரது வீட்டின் கீழ் தளத்தில் நமீதா என்ற 22 வயது பெண் வசித்து வருகிறார். மனைவி இல்லாததால் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20">சுதர்சன் மனதில் சபல எண்ணம் எழுந்துள்ளது. </a>நமீதாவிடம் பழகி அவரது செல்போன் எண்ணை வாங்கி அவருக்கு காதல் வலை விரித்துள்ளார். சுதர்சன் செல்போ னில் உருக, உருக பேசியதை அந்த பெண் பதிவு செய்துகொண்டு அவரது தோழி மோனி காவிடம் கூறி இருக்கிறார். அப்போது இந்த உரையாடலை வைத்து சுதர்சனை மிரட்டி பணம் பறிக்க 2 பேரும் திட்டம் போட்டனர். இந்த திட்டத்தில் மோனிகாவின் கணவர் பாலகிருஷ் ணன், அவருடைய நண்பர் கணேஷ், மற்றொரு தோழி சிவரஞ்சனி ஆகியோர் கைகோர்த்துள்ளனர்.</p><h2>வீட்டு சிறை</h2><p>நமீதாவும் சுதர்சனை காதலிப்பதாக ஏமாற்றி கடந்த 27-ந்தேதி அவரது தோழி மோனிகாவின் வீட்டுக்கு வரவழைத்துள்ளார். ஆசையாக சென்ற சுதர்சனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நமீதா மற்றும் 4 பேரும் சேர்ந்து சுதர்சனை வீட்டு சிறையில் வைத்து. 'செல்போனில் அவர் பேசிய காதல் வசனங்களை காண்பித்து. இதை உனது மனைவியிடம் அனுப்பினால் அவர் பிரிந்து சென்றுவிடுவார். போலீசில் புகார் செய்தால் சிறையில் அடைத்து விடுவார்கள் என்று மிரட்டி ரூ.5 லட்சம் பணம் கேட்டுள்ளனர்.</p><p>சுதர்சன் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறி இருக்கிறார். இதனால் அவரை அடித்து சித்ரவதை செய்து, பணத்தை தயார் செய்து வரவேண்டும் என்று கூறி அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் அவரை மீண்டும் 29-ந்தேதி வரவழைத்து அடித்து உதைத்துள்ளனர். அப்போது நமீதாவின் வீட்டு வாடகை உள்ளிட்ட செலவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லி அனுப்பி வைத்துள்ளனர்.</p><h2>மனைவி அளித்த நம்பிக்கை</h2><p>இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான சுதர்சன் தனது மனைவியிடம் நடந்த விவரத்தை செல்போனில் கண்ணீர் மல்க கூறியுள்ளார். அப்போது அவரது மனைவி நீங்கள் ஒன்றும் கவ லைப்படாதீர்கள் என்று நம்பிக்கை அளித்தார். மேலும் அவர் தனது கணவர் சுதர்சனை அழைத்துக் கொண்டு சூளைமேடு போலீஸ் நிலையத்தில் கடந்த 4-ந்தேதி அன்று புகார் அளித்தார்.</p><p>இந்த புகார் அடிப்படையில் சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர். சுதர்சனை அடித்து சித்ரவதை செய்து பணம் கேட்டு மிரட்டல் விடுத்த நமீதா உள்பட 5 பேரை கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் அவர்கள் 5 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>மீனாட்சி அம்மன் கோவில் நில மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/another-person-arrested-in-meenakshi-amman-temple-land-scam-case</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/another-person-arrested-in-meenakshi-amman-temple-land-scam-case#comments</comments><guid isPermaLink="false">9022dbd6-bf39-49f9-9034-86b12e42be66</guid><pubDate>Sun, 09 Aug 2026 03:39:58 +0000</pubDate><atom:updated>2026-08-09T03:39:58.403Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,மதுரை,arrest,Madurai Meenakshi Amman Temple,மீனாட்சி அம்மன் கோவில்,Land scam case,நில மோசடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/21f6tdl9/112.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மீனாட்சி அம்மன் கோவில் நில மோசடி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/21f6tdl9/112.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p>மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், அழகர்கோவிலுக்கு சேவை செய்வ தற்காக உருவாக்கப்பட்ட ரூ.60 கோடி மதிப்பிலான நிலத்தை முறைகேடாக பட்டா மாற்றம் செய்து பத்திரப்பதிவு செய்ததாக மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். </p><h2>கைது</h2><p>விசாரணையில் புதுக்கோட்டையை சேர்ந்த ராஜ்குமார் போலி ஆவணங்கள் மூலம் பட்டா பெற்றது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் போலீசார் விசாரணையில் 2016-ம் ஆண்டு மதுரை வடக்கு முன்னாள் தாசில்தார் அன்பழகன், அந்த சொத்தின் மீதான கோவில் பெயரை நீக்கி ராமாயி ஆயியார் உள்ளிட்ட 9 பேரின் பெயரில் சட்டவிரோதமாக பட்டா மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். </p><p>இதற்கிடையே அன்பழகன் பதவி உயர்வு பெற்று ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் துணை கலெக்டராக நில எடுப்பு பிரிவில் கலெக்டரின் நேர்முக உதவியாளராக பணியாற்றினார். அவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி கடந்த 4-ந் தேதி கைது செய்தனர். </p><h2>விசாரணை</h2><p>இந்த வழக்கில் தொடர்புடைய திண்டுக்கல் சிறுமலையை சேர்ந்த காளிக்குமார் உள்பட 3 பேர்<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF"> மோசடியாக</a> கூட்டுச்சதியில் ஈடுபட்டு வட மதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் நில அடமான பத்திரம் பதிவு செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி காளிக்குமாரை நேற்று கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>நெல்லையில் 12-ந்தேதி இ.எஸ்.ஐ. குறைதீர்க்கும் முகாம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/esi-grievance-redressal-camp-in-nellai-on-the-12th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/esi-grievance-redressal-camp-in-nellai-on-the-12th#comments</comments><guid isPermaLink="false">6e9cda6d-8259-4312-95f0-03bc22d031b9</guid><pubDate>Sun, 09 Aug 2026 03:31:44 +0000</pubDate><atom:updated>2026-08-09T03:31:44.460Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/sopudh6m/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/sopudh6m/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் (இ.எஸ்.ஐ.) நெல்லை துணை மண்டலம் சார்பில், இ.எஸ்.ஐ. திட்டத்தில் உள்ள பயனீட்டாளர்களுக்கு ஏதாவது குறை இருந்தால் அதை நிவர்த்தி செய்ய மாதந்தோறும் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மாதத்திற்கான குறைதீர்க்கும் முகாம் வருகிற 12-ந்தேதி (புதன்கிழமை) மதியம் 3 மணிக்கு நெல்லை இ.எஸ்.ஐ.சி. துணை மண்டல அலுவலகத்தில் நடைபெற உள்ளது.</p><h2>குறைகளை தெரிவிக்கலாம்</h2><p>முகாமில் இ.எஸ்.ஐ.சி. மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர், இ.எஸ்.ஐ. துணை மண்டல அலுவலக குறைதீர்க்கும் அதிகாரி, மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் மற்றும் இ.எஸ்.ஐ. திட்ட மருந்தக மருத்துவ அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். </p><p>எனவே <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பயனீட்டாளர்கள் </a>குறைகள் ஏதேனும் இருப்பின் முகாமில் கலந்து கொண்டு தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை நெல்லை இ.எஸ்.ஐ. துணை மண்டல அலுவலக பொறுப்பு அதிகாரி பாஸ்கர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>குமரியில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: கடைகளின் பூட்டை உடைத்து மது விற்பனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-employees-protest-in-kumari-breaking-the-locks-of-shops-selling-liquor</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-employees-protest-in-kumari-breaking-the-locks-of-shops-selling-liquor#comments</comments><guid isPermaLink="false">06997c40-1bd1-4912-bc04-721d80a226b6</guid><pubDate>Sun, 09 Aug 2026 03:22:02 +0000</pubDate><atom:updated>2026-08-09T03:22:02.676Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Kanniyakumari,போராட்டம்,மது விற்பனை,குமரி,டாஸ்மாக் ஊழியர்கள்,selling liquor,tasmac employees protest</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/ajwpfa7i/22.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/ajwpfa7i/22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி, </p><p>2-வது நாளாக ஊழியர்கள் போராட்டம் நடத்தியதால், டாஸ்மாக் கடைகளின் பூட்டை உடைத்து மது விற்பனையை அதிகாரிகள் தொடங்கிய சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p>டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்</p><p>டாஸ்மாக் கடைகளில் ஒரு மதுபாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்குவதை தடுக்க புதிதாக பொறுப்பேற்ற த.வெ.க. அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.</p><p>இந்த நிலையில் மதுவிற்பனையில் அரசின் குளறுபடியான நடவடிக்கையால் எங்களுக்கு பண இழப்பு ஏற்படுகிறது என்று டாஸ்மாக் ஊழியர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். அந்தவகையில் குமரி மாவட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுக்கடைகளை அடைத்து போராட்டத்தில் குதித்தனர்.</p><h2>2-வது நாளாக நீடித்தது</h2><p>முதல் நாளில் டாஸ்மாக் மண்டல மேலாளர் சுகிதா மற்றும் தொழிற்சங்கத்தினருடன் நடந்த 3 கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதில் சமாதானம் அடையாத டாஸ்மாக் பணியாளர்கள் நேற்று 2-வது நாளாகவும் கடைகளை அடைத்து போராட்டத்தில் குதித்தனர்.</p><p>அவர்களிடம் டாஸ்மாக் மண்டல மேலாளர் கோட்டை குமார் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் நிர்வாகிகளோ, மதுபாட்டிலில் ஒட்டப்படும் ஸ்டிக்கரை பெற்றால் மட்டுமே கடைகளை திறப்போம். மேலும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">டாஸ்மாக் கடைகளின் </a>சாவியையும் கொடுக்க மாட்டோம் என்பதில் உறுதியாக இருந்தனர்.</p><h2>மதுவிற்பனையை தொடங்கிய அதிகாரிகள்</h2><p>இதற்கிடையே அதிகாரிகளின் அடுத்தக்கட்ட நடவடிக்கை டாஸ்மாக் பணியாளர்களுக்கு கிலியை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது. அதாவது ஒரு சில இடங்களில் அதிகாரிகள் தலைமையில் டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு மது விற்பனை நடந்தது. ஆரல்வாய்மொழி குமாரபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டு தோவாளை தாசில்தார் சிவகலா தலைமையில் உடைக்கப்பட்டது. இதேபோல் பல இடங்களில் ஒவ்வொரு மதுக்கடையாக திறக்கப்பட்டது. இதனை மாலைக்கு பிறகு அறிந்த மதுப்பிரியர்கள், கடைகளுக்கு மதுவாங்க படையெடுத்ததால் ஒரு சில கடைகளில் கூட்டம் அலைமோதியது.</p><h2>பரபரப்பு</h2><p>இந்த பரபரப்புக்கு இடையே தொழிற்சங்கங்களின் கூட்டு குழுவினர், அதிகாரியுடன் நடத்திய இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அதாவது டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் 1 மாதத்திற்குள் பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டது. இதில் சமாதானம் அடைந்த பெரும்பாலான டாஸ்மாக் பணியாளர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். இந்த சம்பவம் குமரியில் பரபரப்பை </p><p>ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>பரமக்குடி அருகே ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி கலெக்டர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/assistant-collector-arrested-for-accepting-rs-50000-bribe-near-paramakudi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/assistant-collector-arrested-for-accepting-rs-50000-bribe-near-paramakudi#comments</comments><guid isPermaLink="false">2d343d88-323f-43f8-bb59-d1134a867acf</guid><pubDate>Sun, 09 Aug 2026 03:16:06 +0000</pubDate><atom:updated>2026-08-09T03:16:06.669Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrest,லஞ்சம்,கலெக்டர்,bribe,பரமக்குடி,paramakudi,Assistant Collector</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/jfeplv6g/111.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/jfeplv6g/111.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பரமக்குடி, </p><p>பரமக்குடியில் சவுடுமண் அள்ள அனுமதி வழங்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி கலெக்டர் கைது செய்யப்பட்டார். உடந்தையாக இருந்த டிரைவரும் சிக்கினார்.</p><h2>லஞ்சம்</h2><p>ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி. நயினார்கோவில், போகலூர் ஆகிய பகுதிகளில் சவுடு மண் அள்ளுவதற்கு அரசு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி விவசாயிகள் மண் அள்ளி வருகின்றனர். அள்ளப்படும் மண்ணை சிலர் தனிநபர்களுக்கு விற்பனை செய்வதாகவும் புகார்கள் எழுந்தன.</p><p>இந்தநிலையில் ஒருவர் சவுடுமண் அள்ளுவதற்காக தடையில்லா சான்று அனுமதி வழங்கக்கோரி பரமக்குடி உதவி கலெக்டர் (வருவாய் கோட்டாட்சியர்) சரவண பெருமாளிடம் (வயது 54) விண்ணப்பம் செய்திருந்தார். அதற்கு அவர் லஞ்சமாக ரூ.50 ஆயிரம் தரவேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர், இதுகுறித்து ராமநாதபுரம் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%20%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">லஞ்ச ஒழிப்பு</a> போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.</p><h2>உதவி கலெக்டர் கைது</h2><p>இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூ.50 ஆயிரத்தை அவரிடம் கொடுத்து உதவி கலெக்டரிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினர். அதன்பேரில் அந்த நபர் பரமக்குடி ஓட்டப்பாலம் அருகே உள்ள வருவாய் கோட்டாட்சியர் குடியிருப்புக்கு சென்று சரவணப்பெருமாளிடம் ரூ.50 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து நின்ற லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சரவணபெருமாளை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். </p><h2>பறிமுதல்</h2><p>பின்னர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் இதற்கு இடைத்தரகராக செயல்பட்ட உதவி கலெக்டரின் கார் டிரைவரான சுந்தர்(41) என்பவரிடம் விசாரணை நடத்தி, அவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பரமக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட சரவண பெருமாளின் சொந்த ஊர் மதுரை மாவட்டம் மேலூர் ஆகும். பரமக்குடியில் உள்ள அவரது வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.5 லட்சத்து 55 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.</p> ]]></content:encoded></item><item><title>விடுமுறை தினம்: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-tourists-flock-to-kanyakumari-12</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-tourists-flock-to-kanyakumari-12#comments</comments><guid isPermaLink="false">67f4a371-1de6-48e8-bde6-9ac47984a1f4</guid><pubDate>Sun, 09 Aug 2026 03:02:21 +0000</pubDate><atom:updated>2026-08-09T03:02:21.896Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,Tourists,சுற்றுலா பயணிகள்,Kanyakumari,விடுமுறை தினம்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/u6a7ccur/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/u6a7ccur/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி, </p><p>சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள். </p><p>இந்தநிலையில் இன்று ஞாயிறு விடுமுறையையொட்டி காலையில் இருந்தே கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை, சன்ரைஸ் பாயின்ட் போன்ற பகுதிகளில் நள்ளிரவு முதல் காத்திருந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். </p><p>அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். படகுத்துறையில் இருந்து சுற்றுலா பயணிகள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்த்து ரசித்து வருகின்றனர். காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள தமிழன்னை பூங்கா, சன்செட் பாயிண்ட், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.   </p> ]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை; துரோகம் இழைக்கும் இந்த மசோதாவை வீழ்த்த வாருங்கள்! - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/constituency-delimitation-come-let-us-defeat-this-treacherous-bill-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/constituency-delimitation-come-let-us-defeat-this-treacherous-bill-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">f7ce259e-c056-45c5-9b31-1ed08856e527</guid><pubDate>Sun, 09 Aug 2026 03:02:21 +0000</pubDate><atom:updated>2026-08-09T03:02:21.464Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore MP,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/2y0ls0n6/manickam-tagore.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/2y0ls0n6/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>அரசியல் சதி!</h2><p>‘மோடி-லிமிட்டேஷன்’ (MODI-LIMITATION) என்பது இந்தியாவின் இறையாண்மையையும் கூட்டாட்சி முறையையும் சீர்குலைக்கின்ற ஒரு மிகப்பெரிய அரசியல் சதி!. கடந்த ஏப்ரல் 17 அன்று 'இந்தியா' கூட்டணியால் மக்களவையில் தோற்கடிக்கப்பட்ட இந்த ஆபத்தான மசோதாவை,  50% தொகுதி உயர்வு என ஆசை காட்டி மீண்டும் கொண்டுவர மத்திய பா.ஜ.க. அரசு முயற்சிக்கிறது.  ஏன் இந்த மசோதாவை நாம் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்?</p><p>மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழ்நாட்டிற்குத் தண்டனையும், கட்டுப்படுத்தத் தவறிய வட மாநிலங்களுக்குப் பரிசும் அளிப்பது அப்பட்டமான அநீதி!</p><p>50% உயர்வு மூலம் உத்தரப் பிரதேசம் 80-ல் இருந்து 120 ஆகவும், தமிழ்நாடு 39-ல் இருந்து 59 ஆகவும் உயரும். இதனால் இரு மாநிலங்களுக்கும் இடையேயான தொகுதி இடைவெளி 41-ல் இருந்து 61 ஆக விரிவடையும்!</p><h2>அரசியல் அதிகாரத்தை பறித்துவிடும்</h2><p>எண்களின் பலமே முடிவுகளைத் தீர்மானிக்கும் நாடாளுமன்றத்தில், இந்த இடைவெளி அதிகரிப்பு தென்னக மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தை நிரந்தரமாகப் பறித்துவிடும்.</p><p>கடந்த காலத்தில் அன்னை இந்திரா காந்தியும், 2001-ல் வாஜ்பாயும் கொண்டு வந்த திருத்தங்கள் மூலமாகவே மக்களவை எண்ணிக்கை முடக்கப்பட்டது. அந்தப் பாதுகாப்பைத் தகர்க்கவே பாஜக துடிக்கிறது.</p><p>சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்கும் முன்பே இதைச் செய்தால், பட்டியலின, பழங்குடியின மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு தொகுதிகளைச் சரியாகத் தீர்மானிக்க முடியாது.</p><h2>உரிமைப் போராட்டம்!</h2><p>இன்று (ஆகஸ்ட் 9 - வெள்ளையனே வெளியேறு நாள்) நடைபெறவுள்ள 'QUIT UNFAIR DELIMITATION MARCH' பேரணி என்பது செயல்முறைகளை விளக்குவதற்கான நிகழ்வு அல்ல; அது தமிழ்நாட்டின் அரசியல் இறையாண்மை, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஜனநாயக </a>உரிமைகள் மற்றும் எதிர்காலத் தலைமுறையின் அதிகாரப் பாதுகாப்பிற்காக நாம் நடத்தும் உரிமைப் போராட்டம்! </p><p>நமது மாநிலத்தின் சுயமரியாதையையும் அரசியல் உரிமைகளையும் எவராலும் பறிக்க முடியாது என்பதை உரக்கச் சொல்லவே இந்தப் நடைபயணம்.</p><p>மேலும், இந்த அநீதியான தொகுதி மறுவரையறைக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் 'Unfair Delimitation' பாடலை உருவாக்கிய தம்பி சலாம் மாஸ்சுக்கும், அவரது தொடர் முயற்சிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும்! </p><h2>மசோதாவை வீழ்த்த வாருங்கள்!</h2><p>இது நம் அனைவரின் உரிமைக்கானப் போராட்டம்! தமிழ்நாட்டிற்குத் துரோகம் இழைக்கும் இந்த மசோதாவை வீழ்த்த வாருங்கள்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தனியார் மயமாகும் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kulasekarapattinam-rocket-launch-pad-to-be-privatized</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kulasekarapattinam-rocket-launch-pad-to-be-privatized#comments</comments><guid isPermaLink="false">d0610faf-cc30-48c2-835e-5f34a1fe233e</guid><pubDate>Sun, 09 Aug 2026 02:56:19 +0000</pubDate><atom:updated>2026-08-09T02:56:19.949Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இஸ்ரோ,ISRO,Rocket Launch,குலசேகரன்பட்டினம்,ராக்கெட் ஏவுதளம்,Kulasekarapattinam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/yde3yekc/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/yde3yekc/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><h2>ராக்கெட் ஏவுதளம்</h2><p>ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு (இஸ்ரோ) சொந்தமான ராக்கெட் ஏவுதளம் உள்ளது. இங்கிருந்து பல்வேறு செயற்கைக்கோள் கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன. இதையடுத்து நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளம், தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமைக்கப்படுகிறது.</p><p>பூமத்திய ரேகைக்கு மிக அருகில் குலசேகரன்பட்டினம் இருப் பதால், இங்கிருந்து ராக்கெட்டுகளை குறைந்த எரிபொருளில் விண்ணில் செலுத்தி புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த முடி யும். முதல்கட்டமாக இங்கிருந்து சிறியவகை ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.</p><h2>கட்டும் பணிகள் மும்முரம்</h2><p>குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி பணி களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கட்டுமான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இஸ்ரோ அலுவலகம், ராக்கெட் ஏவு தள கட்டிடம், ராக்கெட் பராமரிப்பு பணிமனை போன்றவை கட்டப்பட்டு உள்ளன.</p><p>மேலும் ஒரே நேரத்தில் 3 ஹெலிகாப்டர் கள் தரையிறங்கி புறப்படும் வகையில் பிரமாண்ட ஹெலிபேடு தளமும் அமைக்கப்பட்டு உள்ளன. கடற்கரையில் காற்றின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் 5 அடுக்குகளாக வனத்துறை சார்பில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன. தற்போது குலசகேரன்பட்டினம் இஸ்ரோ மைய வளாகம் வழி யாக கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்கள் செல்கின்றன.</p><p>ராக்கெட் ஏவுதள பணிகள் முடிந்ததும், அந்த வழியாக வாகனங்கள் செல்லாதவாறு மாற்றுப்பாதையில் புதிய சாலை அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு கருமேனி ஆற்றின் குறுக்கே அமராபுரம், காரங்காடு ஆகிய இடங்களில் புதிய உயர்மட்ட பாலங்கள் கட்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் ராக்கெட் ஏவுதளம் செயல்படும் வகையில் அனைத்து பணிகளையும் துரிதமாக நிறைவேற்றி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h2>தனியார் மயம்</h2><p>இந்த நிலையில், குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோ அமைத்து வரும் ராக்கெட் ஏவுதளத்தின் இயக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைக்கும் பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. ரூ.986 கோடியில் அமையும் இந்த ஏவுதளத்தை முழுமையாக நிர்வகிக்கவும், ராக்கெட்டுகளை ஏவுவதற்கான செயல்பாடுகளை மேற்கொள்ளவும் தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மதுரை மாநகரில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/traffic-diversion-in-madurai-city-starting-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/traffic-diversion-in-madurai-city-starting-today#comments</comments><guid isPermaLink="false">0a3483f3-2929-4941-87dd-4341c8b86893</guid><pubDate>Sun, 09 Aug 2026 02:50:58 +0000</pubDate><atom:updated>2026-08-09T02:50:58.153Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,போக்குவரத்து மாற்றம்,traffic diversion</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/sjszgmlt/traffic.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/sjszgmlt/traffic.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>மதுரை,  </p><p>மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><h2>போக்குவரத்து மாற்றம்</h2><p>மதுரை கரிமேடு போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அம்மா பாலமானது மிகவும் குறுகியதாக இருப்பதால் இப்பாலத்தில் அடிக்கடி போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க பாலத்தின் இருபக்கங்களிலும் உள்ள நுழைவுவாயில் பகுதியை அகலப்படுத்த மாநில நெடுஞ்சாலைதுறையினர் திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ள இருக்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமமின்றி செல்வதற்காக இலகுவான போக்குவரத்தினை ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆரப்பாளையம் ஜல்லிக்கட்டு ரவுண்டானாவில் இருந்து அம்மா பாலம், கே.வி.சாலை வழியாக தத்தனேரி ரோடு செல்லும்.</p><p>அனைத்து வாகன போக்குவரத்தும் முற்றிலும் தடை செய்யப்படுகிறது. வாகனங்கள் அனைத்தும் ஆரப்பாளையம் ரவுண்டானா, வைகை தென்கரை சாலை வழியாக குரு தியேட்டா சந்திப்பிற்கு சென்று திரும்பி காமராஜர் பாலம், பாத்திமா காலேஜ் ரவுண்டானா சென்று வலதுபுறம் திரும்பி கே.வி. சாலை மற்றும் தத்தனேரி சாலை வழியாக செல்ல வேண்டும்.</p><h2>ஒரு வழிப்பாதை</h2><p>கே.வி.சாலையில் இருந்து அம்மா பாலம் வழியாக ஆரப்பாளையம் ஜல்லிக்கட்டு ரவுண்டானாவிற்கு ஒரு வழிப்பாதையில் செல்ல இருசக்கர மற்றும் இலகுரக நான்கு சக்கர வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் பஸ்கள், கனரக வாகனங்கள் செல்ல முற்றிலும் தடை செய்யப்படுகிறது. இந்த வாகனங்கள் அனைத்தும் கே.வி.சாலையிலிருந்து பாத்திமா கல்லூரி சந்திப்பிற்கு சென்று இடதுபுறம் திரும்பி குரு தியேட்டர் சந்திப்பிற்கு சென்று டி.டி. ரோடு வழியாக ஆரப்பாளையம் பஸ் நிலையம் செல்லலாம். </p><p>மேலும், குரு தியேட்டர் சந்திப்பிலிருந்து இதர சாலைகளுக்கு செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அருள்தாஸ்புரம் சந்திப்பிலிருந்து தத்தனேரி பாலம் வரை ஒருவழிப்பாதையாக தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, அந்த சந்திப்பிலிருந்து தத்தனேரி பாலத்திற்கு வழக்கம் போல் அனைத்து வாகனங்களும் செல்லாம். தத்தனேரி பாலத்திலிருந்து அருள்தாஸ்புரம் சந்திப்பிற்கு எந்த வாகனமும் செல்வதற்கு அனுமதி இல்லை.</p><h2>முற்றிலும் தடை</h2><p>இந்த வாகனங்கள் அனைத்தும் தத்தனேரி பாலத்தில் இடதுபுறம் திரும்பி வைகை வடகரை சாலை வழியாக அருள்தாஸ்புரம் சந்திப்பிற்கு சென்று இடதுபுறம் திரும்பி இ.எஸ்.ஐ. மருத்துவமனை சாலை வழியாக பாத்திமா கல்லூரி சந்திப்பு சென்று இதர சாலைகளுக்கு செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பழங்காநத்தம் காளவாசல் பைபாஸ் சாலையிலிருந்து குரு தியேட்டர் சப்வே, வைகை தென்கரை சாலை, அம்மா பாலம், கே.வி. சாலை வழியாக தத்தனேரி ரோடு செல்லும் அனைத்து வாகன போக்குவரத்தும் முற்றிலும் தடை செய்யப்பட்டுகிறது. இந்த தற்காலிக போக்குவரத்து மாற்றமானது இன்று முதல் சோதனை அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டு நாளை முதல் அமல்படுத்தப்பட உள்ளது. </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் சைபர் மோசடி கும்பலுக்கு பணம் எடுத்து கொடுத்த மேலும் 128 பேர் அதிரடி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/128-more-people-arrested-for-taking-money-from-a-cyber-fraud-gang-in-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/128-more-people-arrested-for-taking-money-from-a-cyber-fraud-gang-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">229643f5-736b-4e00-95ad-7fb4e8d86cd2</guid><pubDate>Sun, 09 Aug 2026 02:45:44 +0000</pubDate><atom:updated>2026-08-09T02:45:44.006Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,police,மோசடி கும்பல்,fraud,Crime,cyber,சைபர் கிரைம் போலீசார்,கைதுArrest</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/8uk7mamh/110.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சைபர் கிரைம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/8uk7mamh/110.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>குறைந்த முதலீட்டில் அதிக லாபம் மற்றும் டிஜிட்டல் கைது மிரட்டல் மூலம் ஆன்லைன் வழியில் கோடிக்கணக்கில் பணம் பறிக்கப்படும் மோசடிகள் தொடர்கதையாகியுள்ளன. </p><h2>கைது</h2><p>'சைபர்' மோசடி செயல்களில் அபகரிக்கப்படும் பணம் பல்வேறு வங்கிக் கணக்குகளில் அனுப்பப்பட்டு எடுக்கப்படுகிறது. இந்த பணத்தை எடுத்து கொடுப்பதற்காக கமிஷன் தொகை வழங்கப்படுகிறது.</p><p>இந்த கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு இளைஞர்கள் பலர் மோசடி செயலுக்கு உடந்தையாக இருந்து வருவதை சென்னை 'சைபர் கிரைம்' போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சிறப்பு அதிரடி நடவடிக்கையில் நேற்று முன்தினம் 77 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில், மேலும் 128 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>சைபர் கிரைம் போலீசார்</h2><p>அரியலூர், கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை. நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், தஞ்சாவூர், தேனி, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவாரூர், நெல்லை, திருச்சி, விருதுநகர் மற்றும் சென்னையைச் சேர்ந்த மொத்தம் 205 பேரை சென்னை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D">சைபர் </a>கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.</p><p>ஒருவரது வங்கிக் கணக்கிற்கு அனுப்பும் பணத்தை கமிஷனுக்காக எடுத்து கொடுப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நீலகிரி: மசினக்குடி அருகே காட்டு யானை உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-wild-elephant-dies-near-masinagudi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-wild-elephant-dies-near-masinagudi#comments</comments><guid isPermaLink="false">a016f362-bed0-4b1f-8f04-46d18599c657</guid><pubDate>Sun, 09 Aug 2026 02:24:18 +0000</pubDate><atom:updated>2026-08-09T02:24:18.981Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nilgiris,நீலகிரி,காட்டு யானை,wild elephant</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/3ms7bu3k/4.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/3ms7bu3k/4.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல பகுதியான மசினகுடி கோட்ட வனத்தில் காட்டு யானைகள், புலி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் சீகூர் வனச்சரகம் ஆனைக்கட்டி தெற்கு காவல் பகுதிக்கு உட்பட்ட தனக்கடவு பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணி மேற்கொண்டனர்.</p><p>அப்போது ஒரு பெண் காட்டு யானை இறந்து கிடப்பதை கண்டனர். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத்தொ டர்ந்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கிருபாகரன், கோட்ட துணை இயக்குனர் வித்யாதர் ஆகியோர் உத்தரவின் பேரில் சீகூர் வனச்ச கர் ஜெயராஜன் தலைமையிலான வனத்துறையினர் நேரில் சென்று பார் வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் காட்டு யானை என்ன காரணத்துக்காக உயிரிழந்தது என தெரியவில்லை. </p><p>இதைத்தொடர்ந்து முதுமலை தெப்பக்காடு கால்நடை உதவி டாக்டர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட மருத்துஉ குழுவினர் வரவழைக்கப்பட்டனர். பின்னர் அழுகிய நிலையில் இருந்த காட்டு யானையின் உடலை ஆய்வு செய்தனர். தொடர்ந்து உரிய வழிகாட் டுதலின்படி யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் முக்கிய உடற்பாகங்கள் ஆய்வக பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டது. இறந்த யானைக்கு 48 வயது இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-inflow-into-mettur-dam-has-decreased</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-inflow-into-mettur-dam-has-decreased#comments</comments><guid isPermaLink="false">74f5a471-76f1-4bd6-91f4-e191ec28a6e4</guid><pubDate>Sun, 09 Aug 2026 02:17:38 +0000</pubDate><atom:updated>2026-08-09T02:17:38.779Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur dam,நீர்வரத்து,Water inflow</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/2se1k43g/3.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/2se1k43g/3.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைய தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 13 ஆயிரத்து 674 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 10 ஆயிரத்து 808 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.</p><p>தண்ணீர் திறப்பை விட நீர்வரத்து அதிகமாக இருப்பதால் தற்போது அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் மாலையில் 77.57 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலையில் 78.03 அடியாக உயர்ந்தது. அதேநேரத்தில் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறையும் பட்சத்தில் அணை நீர்மட்டம் உயருவதிலும் சிக்கல் ஏற்படும்.</p><p>வருணபகவான் தொடர்ந்து கருணை காட்டினால் தான் காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாய பணிகளுக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் வகையில் நீர்மட்டம் கணிசமாக உயரும் வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் எதிர்பார்ப்புடன் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக அரசின் 100 நாட்கள் சாதனை பட்டியல்; அனைத்து துறைகளும் தயாரிக்க உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-governments-100-day-achievement-list-all-departments-ordered-to-prepare</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-governments-100-day-achievement-list-all-departments-ordered-to-prepare#comments</comments><guid isPermaLink="false">70d3684c-4b54-4ceb-8d98-e3f5eabf9fa4</guid><pubDate>Sun, 09 Aug 2026 02:14:39 +0000</pubDate><atom:updated>2026-08-09T02:14:39.172Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>முதல்-அமைச்சர்,Tamil Nadu Government,தமிழக அரசு,சாதனை பட்டியல்,CM Vijay</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/xawp7jsg/21.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/xawp7jsg/21.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>த.வெ.க. அரசு பதவி ஏற்று 100 நாட்கள் ஆக இருக்கும் நிலையில், அனைத்து துறைகளும் இதுவரை செய்த சாதனையடங்கிய பட்டியல் தயாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.</p><h2>தமிழக வரலாற்றில் முக்கிய மைல்கல்</h2><p>தமிழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சி அமைத்தது. மே 10-ந்தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் கவர்னர் ஆர்.வி.அர்லேகர், விஜய்க்கு முதல்-அமைச்சர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். திராவிட கட்சிகளின் 60 ஆண்டுகால தொடர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த இந்த வெற்றி, தமிழக வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது.</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a> தலைமையிலான அரசு, நிர்வாகத்தில் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. லஞ்சத்தை ஒழிக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை. லஞ்சம் கேட்டால் தன்னிடம் புகார் அளிக்க வலியுறுத்திய அவர், இதற்காக 9498180936 என்ற வாட்ஸ்அப் எண்ணையும் அறிவித்தார்.</p><h2>கனிமக்கொள்ளை தடுப்பு</h2><p>பெண்களின் பாதுகாப்பிற்காக 'சிங்கப்பெண் சிறப்புப்படை', 200 யூனிட் இலவச மின்சாரம், 717 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடல், அம்மா உணவகங்கள் சீரமைப்பு மற்றும் விவசாயிகளுக்கு ரூ.134 கோடியில் சிறப்புத் தொகுப்பு திட்டம் என பல அதிரடி திட்டங்களை அரசு செயல்படுத்தியுள்ளது. மேலும், கூட்டுறவு வங்கிக்கடன் தள்ளுபடிக்கு ரூ.2 ஆயிரத்து 45 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>காஞ்சீபுரம், கோவை, திருவள்ளூர் மாவட்டங்களில் புதிய தொழில்துறை திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி ‘ஜல்ஜீவன் 2.0' குடிநீர்த் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. பத்திரப்பதிவுத் துறையில் முறைகேடுகளை தடுக்க வருகையில்லா ஆவணப்பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. கனிமக் கொள்ளை தடுப்பு மற்றும் சட்டவிரோத கல்குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>த.வெ.க. அரசின் 100 நாட்கள்</h2><p>இவையெல்லாம் மாற்றத்திற்கான தொடக்கம் மட்டுமே என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் பிரகடனம் செய்திருந்தார். த.வெ.க. அரசு பொறுப்பேற்று 100 நாட்களை எட்ட உள்ள நிலையில், அனைத்து துறைகளிலும் கடந்த 100 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட சாதனைப் பட்டியலைத் தயாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.</p><p>அந்தந்த துறை அதிகாரிகள் இந்தப் பட்டியலை தயார் செய்து வருகின்றனர். விரைவில் இந்த சாதனைகள் குறித்த விரிவான அறிவிப்பு வெளியாகும் என்று தலைமைச்செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லஞ்சமில்லாத மற்றும் பெண்களுக்கு முழுப்பாதுகாப்பான முன்மாதிரி தமிழ் நாட்டை உருவாக்குவதே த.வெ.க. அரசின் நோக்கமாக உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆன்லைன் மது விற்பனை திட்டத்தை கைவிட வேண்டும் - டாஸ்மாக் தொ.மு.ச. வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-lpf-urges-abandoning-the-online-liquor-sales-scheme</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-lpf-urges-abandoning-the-online-liquor-sales-scheme#comments</comments><guid isPermaLink="false">0bf40284-f2fb-4a09-ae28-2bf09df52938</guid><pubDate>Sun, 09 Aug 2026 02:09:15 +0000</pubDate><atom:updated>2026-08-09T02:09:15.955Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டாஸ்மாக்,Tasmac,மது விற்பனை,liquor sales,டாஸ்மாக் கடை,tasmac bar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/04j4otpk/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/04j4otpk/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சை, </p><p>தஞ்சை மாவட்ட டாஸ்மாக் தொ.மு.ச.வின் ஆலோசனைக் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட தலைவர் சேவியர் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் கமலநாதன் வரவேற்றார். கூட்டத்தில் வருகின்ற 13-ந் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட மேலாளர் அலுவலகங்களிலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தினை நடத்துவது. </p><h2>ஆன்லைன் மது விற்பனை</h2><p>மேலும் மதுபான சில்லறை விற்பனையை தனியார் மயமாக்கும் முயற்சிக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். ஆன்லைன் மது விற்பனை திட்டத்தை கைவிட வேண்டும். மதுபான சில்லரை விற்பனை கடை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். </p><p>அரசின் கொள்கை முடிவில் மூடப்படும் மதுபான கடை பணியாளர்களுக்கு அரசின் இதர துறைகளில் நிரந்தர பணியாளர்களாக பணியமர்த்த வேண்டும். காலி மதுபான பாட்டில்கள் திரும்பப்பெறும் பணியை தனியார் முகமை மூலம் மேற்கொள்ளப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். காலி அட்டை பெட்டிகளுக்கு 50 சதவீத கழிவு வழங்க வேண்டும். வார விடுமுறை மற்றும் அரசு விடுமுறை நாட்களுக்கு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மதுபானக்கடை </a>பணியாளர்களுக்கு விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் கும்பகோணம் பகுதி செயலாளர் ராமதாஸ் நன்றி கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>அரசு விரைவு பஸ்களில் ரூ.10 குடிநீர் பாட்டில் விற்பனை மீண்டும் தொடக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sale-of-rs-10-drinking-water-bottles-resumes-on-government-express-buses</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sale-of-rs-10-drinking-water-bottles-resumes-on-government-express-buses#comments</comments><guid isPermaLink="false">4263716f-3ba5-4802-8d37-e22a3b061cca</guid><pubDate>Sun, 09 Aug 2026 01:59:36 +0000</pubDate><atom:updated>2026-08-09T01:59:36.325Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசு பஸ்,குடிநீர்,drinking water,govt bus,SETC buses,அரசு விரைவு பஸ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/o9e3qqqs/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/o9e3qqqs/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பயணிகளின் நலன் மற்றும் வசதியை மேம்படுத்தும் நோக்கில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் நீண்ட தூரப் பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தரமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ், ரூ.10-க்கு "பயணி” குடிநீர் பாட்டில் வழங்கும் திட்டத்தை, போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், அறிமுகம் செய்து வைத்தார்.</p><p>நீண்ட தூரப் பயணங்களின் போது, பயணிகளுக்கு தரமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை குறைந்த விலையில் எளிதில் கிடைக்க செய்யும் நோக்கில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2013-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் 'அம்மா' குடிநீர் பாட்டில் (ஒரு லிட்டர்) ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. அம்மா குடிநீர் முக்கிய பஸ் நிலையங்களிலும் விற்பனை செய்யப்பட்டது.</p><p>பின்னர், 2021 தி.மு.க. ஆட்சியின்போது இத்திட்டம் பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், தற்போது அரசு விரைவு பஸ்களில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'பயணி' குடிநீர் பாட்டிலுக்கு பொதுமக்களிடம் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து முக்கிய பஸ் நிலையங்களிலும் விற்பனை செய்யும் வகையில் விரிவாக்கம் செய்யப்படும் என்று போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>ரெயிலில் கடத்திய 3½ கிலோ கஞ்சா பறிமுதல்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/3-kg-of-ganja-smuggled-by-train-seized</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/3-kg-of-ganja-smuggled-by-train-seized#comments</comments><guid isPermaLink="false">fa7a3346-ccd2-4e5e-a1df-a9ac6fabedc3</guid><pubDate>Sun, 09 Aug 2026 01:42:15 +0000</pubDate><atom:updated>2026-08-09T01:42:15.333Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,சேலம்,கஞ்சா பறிமுதல்,ரெயிலில் கஞ்சா கடத்தல்,ganja smuggled</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/honrhtc6/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/honrhtc6/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>கர்நாடகம், ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க சேலம் ரெயில்வே போலீசார் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். </p><h2>கஞ்சா பறிமுதல்</h2><p>இந்த நிலையில் நேற்று காலை காட்பாடி ரெயில் நிலையத்தின் 3-வது நடைமேடைக்கு வந்த மங்களூரு-சென்ட்ரல் விவேக் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 22851) ரெயிலில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் முன்பக்க பொதுப்பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த ஒரு பையில் 3½ கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. </p><p>இதையடுத்து அவற்றை போலீசார் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பறிமுதல் </a>செய்தனர். மேலும் ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>புதிய வரி விதிப்பால் தமிழகத்தில் மதுபானங்கள் விலை உயரும்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-new-tax-will-increase-the-price-of-alcoholic-beverages-in-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-new-tax-will-increase-the-price-of-alcoholic-beverages-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">1b2bbcd8-5e95-4a8f-87cd-9d3f78013131</guid><pubDate>Sun, 09 Aug 2026 01:33:01 +0000</pubDate><atom:updated>2026-08-09T01:33:01.846Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழகம்,tax,வரி விதிப்பு,மதுபானங்கள்,price increase,Alcoholic,விலை உயரும் அபாயம்,For Tamil Nadu</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/602zt3w6/liquor-bottle.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/602zt3w6/liquor-bottle.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>புதிய வரி விதிப்பால் தமிழகத்தில் மதுபானங்களின் விலை உயரும்.</p><h2>சுற்றுச்சூழல் வரி</h2><p>தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. அரசுக்கு மதுபானங்கள் விற்பனை மூலம் வருவாய் அதிகம் கிடைத்து வருகிறது. இந்தநிலையில் த.வெ.க. அரசு மதுபான விற்பனையை ஒழுங்குபடுத்தவும், காலி மதுபாட்டில்களை அகற்றுதல் மற்றும் மறுசுழற்சி செய்வதில் ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்யவும், மதுவிலக்கு மற்றும் மறுவாழ்வு, மதுவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றுக்காக 'சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரி்' எனும் புதிய வரி விதிப்பை கொண்டு வந்துள்ளது.</p><h2>ரூ.20 வரை நிர்ணயம்</h2><p>சட்டசபையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன், தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச் சட்டம், 2006-ல் திருத்தம் செய்து மசோதாவை தாக்கல் செய்தார். இதில் மதுபானங்களின் விற்பனைக்கு கூடுதலாக 'சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரி' விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வரி, ஒரு மதுப்பாட்டிலுக்கு அதிகபட்சம் ரூ.20 என நிர்ணயிக்கப்படும். இது ஏற்கனவே உள்ள வாட் வரிக்கு மேலாக வசூலிக்கப்படும். மதுபானத்தின் வகை, அளவு மற்றும் கொள்கலனின் அளவைப் பொறுத்து வரி விகிதம் மாறுபடும்.</p><h2>மதுபானம் விலை உயரும்</h2><p>இந்தத் திருத்தத்தின் மூலம், சட்டத்தில் புதிய பிரிவு 3 (ஏ) சேர்க்கப்படுகிறது. இதன்படி, தமிழகத்தில் மதுபானம் விற்பனை செய்யும் ஒவ்வொரு வணிகர்களும், அரசு அறிவிக்கும் விற்பனை நிலையிலேயே இந்த வரியை செலுத்த வேண்டும். கவர்னரின் ஒப்புதல் பெறப்பட்டு, அரசு அறிவிக்கை வெளியிட்டதும் இந்த புதிய வரி அமலுக்கு வரும். இதன் மூலம் மதுபானங்கள் விலை உயரும். அதேநேரத்தில் டாஸ்மாக்கில் மதுபானங்கள் விலை உயராது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த புதிய வரியால் டாஸ்மாக்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"> மதுபானங்கள்</a> விலை விரைவில் உயரலாம் என்ற நிலை உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>80-வது சுதந்திர தினம்: கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாக தேசிய கொடி ஏற்றுகிறார், முதல்-அமைச்சர் விஜய்! </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/80th-independence-day-chief-minister-vijay-to-hoist-the-national-flag-at-the-fort-ramparts-for-the-first-time</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/80th-independence-day-chief-minister-vijay-to-hoist-the-national-flag-at-the-fort-ramparts-for-the-first-time#comments</comments><guid isPermaLink="false">bfdc2e7c-b05a-4946-a937-e7fa009e2524</guid><pubDate>Sun, 09 Aug 2026 01:32:36 +0000</pubDate><atom:updated>2026-08-09T01:32:36.473Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,தமிழ்நாடு அரசு,Tamil Nadu Government,TN govt,சுதந்திர தினம்,Independece Day,national flag,தேசியக் கொடி,CM Vijay,Chief Minister Vijay,முதல் - அமைச்சர் விஜய்,கோட்டை கொத்தளம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/tnpp7cx8/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/tnpp7cx8/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>80-வது சுதந்திர தின நாளில், கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாக, <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a> தேசிய கொடியை ஏற்றிவைக்க இருக்கிறார். </p><h2>சுதந்திர தினம்</h2><p>ஆங்கிலேயர்களின் ஆளுமையின் கீழ் இருந்த இந்தியா, 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திரம் பெற்றது. நாட்டு மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கத் தொடங்கிய நாளை நினைவுகூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. </p><p>ஆரம்பத்தில் குடியரசு தினத்தைப்போல, சுதந்திர தினத்திலும் மாநில கவர்னர்களே தேசிய கொடியை ஏற்றும் வழக்கம் இருந்தது. 1974-ம் ஆண்டு முதல் குடியரசு தினத்தில் மாநில கவர்னர்களும், சுதந்திர தினத்தில் மாநில முதல்-அமைச்சர்களும் தேசிய கொடியை ஏற்றும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது.</p><h2>தேசிய கொடியை ஏற்றுகிறார், விஜய்</h2><p>இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர், அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதிதான். அவர்தான் 1974-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாக தேசிய கொடியை ஏற்றிவைத்தார். அன்று முதல், ஒவ்வொரு மாநில முதல்-மந்திரிகளும் சுதந்திர தினத்தில் தேசிய கொடியை ஏற்றி வருகிறார்கள்.</p><p>அந்த வகையில், நாட்டின் 80-வது சுதந்திர தினம் வரும் 15-ந் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. அதையொட்டி, சென்னை தலைமைச்செயலகம் செயல்பட்டு வரும் புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாக <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a> தேசியக் கொடியை ஏற்ற இருக்கிறார்.</p><h2>தகைசால் தமிழர் விருது</h2><p>முன்னதாக, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொள்கிறார். இந்த விழாவில், <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்,</a> தமிழ்நாட்டுக்கும், தமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்த தகைசால் தமிழர் என்ற பெயரிலான விருதும், ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்க இருக்கிறார். </p><p>அதேபோல், அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு டாக்டர் அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதல்வரின் நல் ஆளுமை விருது, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகள், மகளிர் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும்  சமூகப் பணியாளருக்கான விருதுகள், சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்-அமைச்சர் விருதுகள், முதல்-அமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் உள்ளிட்ட விருதுகளையும் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் ஜோசப் </a>விஜய் வழங்கி கவுரவிக்க உள்ளார். </p><h2>7-வது முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</h2><p>இதற்கு முன்பு சென்னை கோட்டை கொத்தளத்தில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் சுதந்திர தின நாளில் தேசிய கொடியை ஏற்றி வைத்துள்ளனர். அந்த வகையில், 7-வது <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சராக ஜோசப் விஜய்</a> தேசிய கொடியை ஏற்றிவைக்க இருக்கிறார்.</p><p>ஏற்கனவே, சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், சுதந்திர தின விழாவுக்கான அணிவகுப்பு ஒத்திகையும் மெரினா கடற்கரையில் தனியாக நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட தலைமை ஆசிரியை மீது தாக்குதல்: தொழிலாளி கைது!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/attack-on-headmistress-involved-in-census-work-worker-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/attack-on-headmistress-involved-in-census-work-worker-arrested#comments</comments><guid isPermaLink="false">cbe2ee5f-6a54-43ac-8f3f-c5bca479763b</guid><pubDate>Sun, 09 Aug 2026 01:25:42 +0000</pubDate><atom:updated>2026-08-09T01:25:42.962Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,கைது,arrest,attack,மக்கள் தொகை கணக்கெடுப்பு,ஆசிரியர்,Headmistress</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/otloy3r6/109.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கணக்கெடுப்பு பணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/otloy3r6/109.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>நெல்லை மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முதற்கட்ட பணி கடந்த 1-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்கு நியமிக்கப்பட்டு உள்ள தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் வீடு, வீடாக சென்று கணக்கெடுத்து விவரங்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர். </p><h2>கணக்கெடுப்பு பணி</h2><p>இந்த பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நெல்லை அருகே உள்ள கீழநத்தம் கிராமம் செல்விநகர் பகுதியில் நேற்று பகலில் முன்னீர்பள்ளம் யூனியன் பள்ளி தலைமை ஆசிரியை சங்கரேஸ்வரி கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டார்.</p><p>தொழிலாளியான சத்தியமூர்த்தி (வயது 46) என்பவரது வீட்டில் கணக்கெடுப்பு விவரங்களை கேட்டுக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சத்தியமூர்த்தி திடீரென்று சங்கரேஸ்வரியை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதை தடுக்க வந்த தலைமை ஆசிரியையின் கணவருக்கும் லேசாக காயம் ஏற்பட்டது. </p><h2>மத்திய சிறை</h2><p>இதுகுறித்து சங்கரேஸ்வரி பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து சத்தியமூர்த்தியை அதிரடியாக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>3 ஆண்டுகளுக்குப் பின்.. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் கிழக்கு கோபுர நுழைவுவாயில் இன்று திறப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/after-3-years-srirangam-renganathar-temples-east-tower-entrance-is-opening-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/after-3-years-srirangam-renganathar-temples-east-tower-entrance-is-opening-today#comments</comments><guid isPermaLink="false">703f7de2-6dd1-42c9-8a04-735709951f27</guid><pubDate>Sun, 09 Aug 2026 01:16:48 +0000</pubDate><atom:updated>2026-08-09T01:16:48.412Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>ஸ்ரீரங்கம் கோவில்,கோபுரம்,Srirangam Ranganathar Temple,gopuram</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/98p43d2p/2.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/98p43d2p/2.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பல்வேறு சிறப்புகளை கொண்டதாகும். இந்த கோவிலின் கிழக்கு நுழைவுவாயிலில் உள்ள தாமோதர கிருஷ்ணன் கோவில் கோபுரத்தின் ஒரு பகுதி (கொடுங்கை எனப்படும் வளைவுப் பகுதி) கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி நள்ளிரவில் திடீரென இடிந்து விழுந்தது. இதையடுத்து அப்ப குதி மக்கள் மற்றும் பக்தர்கள் கிழக்குவாசல் கோபுரத்தை சீரமைக்க கோரிக்கை விடுத்தனர். அதன்படி பழமை மாறாமல் சிற்ப வல்லுனர்கள், தொல்லியல் துறை அதிகாரிகள், ஸ்தபதிகள் கொண்ட குழுவின் வழிகாட்டுதலின் படி புனரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்றது. </p><p>இந்த கோபுர வாயில் 3 ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்தது. தற்போது சீரமைப்பு பணிகள் முழு மையாக நிறைவடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு, அந்த கோபுரத்தின் நுழைவுவாயில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பா.ஜ.க.வை நெருங்குகிறதா தி.மு.க.? அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை முதல்-அமைச்சர் கூட்டியதன் பின்னணி என்ன?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-dmk-moving-closer-to-the-bjp-what-is-the-backdrop-behind-the-chief-minister-convening-a-meeting-of-all-party-mps</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-dmk-moving-closer-to-the-bjp-what-is-the-backdrop-behind-the-chief-minister-convening-a-meeting-of-all-party-mps#comments</comments><guid isPermaLink="false">62c809fc-0a14-4f36-87db-913f3615fffe</guid><pubDate>Sun, 09 Aug 2026 01:08:01 +0000</pubDate><atom:updated>2026-08-09T01:08:01.194Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,TVK,தவெக,பாஜக,BJP,Vijay,Tamilnadu,விஜய்,அதிமுக,திமுக,DMK,தமிழகம்,All Party Meeting,அனைத்து கட்சிகள் கூட்டம்,MPs meeting,எம்.பி.க்கள் கூட்டம்,தொகுதி மறுவரையறை,CM Vijay,Chief Minister Vijay,முதல் - அமைச்சர் விஜய்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/zql35qkx/vijay.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பா.ஜ.க.வை நெருங்குகிறதா தி.மு.க.?]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/zql35qkx/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> தனது தலைமையில், அனைத்து கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்டியதன் பின்னணி என்ன? என்பது பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><h2>தொகுதி மறுவரையறை</h2><p>மக்களவை தொகுதி மறுவரையறையை மேற்கொள்வதற்காக மத்திய பா.ஜனதா அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்படவுள்ள மசோதாவை, போதிய எம்.பி.க்கள் ஆதரவுடன் நிறைவேற்ற, பா.ஜனதாவுக்கு அதிக எம்.பி.க்களை கொண்ட தி.மு.க.வின் உதவி தேவைப்படுகிறது.</p><h2>தி.மு.க.வை நாடும் பா.ஜ.க.</h2><p>இதில், தி.மு.க.வுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஏற்பட்டுள்ள உறவுப்பிளவை, சிறந்த வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. தற்போது மக்களவை தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற அதிக எம்.பி.க்களை கொண்ட தி.மு.க.வின் உதவியை பா.ஜனதா நாடுகிறது.</p><h2>நிபந்தனையுடன் கூடிய உறவு</h2><p>கூட்டணி உறவை சொல்லாமல் முறித்துக்கொண்ட காங்கிரஸ் கட்சி மீது தி.மு.க. கசப்பில் உள்ளது. காங்கிரசுக்கு கடுமையான நெருக்கடியை கொடுக்கும் சந்தர்ப்பமாக தி.மு.க. இதனை பார்க்கிறது. ஆக, பா.ஜனதாவுடன் தி.மு.க.வுக்கு நிபந்தனையுடன் கூடிய உறவுக்கான பாதி கதவு திறக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.</p><h2>தி.மு.க.வின் மூத்த தலைவர்</h2><p>மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு கோரி பா.ஜனதா. தங்களை அணுகியதை தி.மு.க.வின் மூத்த தலைவர் ஒருவர் உறுதிபடுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. </p><p>தொகுதி மறுவரையறைக்கு தி.மு.க. எதிரானதல்ல என்றும், அந்த நடவடிக்கை நியாயமான முறையில் அமைய வேண்டும் என்பதே தி.மு.க.வின் விருப்பம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.</p><p>மேலும், முன்பு தி.மு.க.வின் கோரிக்கைகள் கவனிக்கப்படவில்லை என்றும், தற்போது மீண்டும் பா.ஜனதா அணுகியபோது எங்கள் கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.</p><h2>பா.ஜ.க.வை நெருங்கும் தி.மு.க.? </h2><p>இந்த சூழ்நிலையில்தான் அனைத்துக்கட்சிகளின் எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டத்தை <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய் </a>திடீரென கூட்டினார். இது, எந்தக் கட்சி பா.ஜனதாவுடன் நெருக்கம் காட்ட உள்ளது என்பதை வெளியுலகத்திற்கு காட்டுவதற்கான த.வெ.க.வின் ஏற்பாடாக இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.</p><p>ஏனென்றால், சட்டசபையில் கடந்த 7-ந்தேதி விவாதம் நடைபெற்றபோது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியிடம் 'எம்.பி.க்கள் கூட்டத்தில் தி.மு.க. பங் கேற்குமா? இல்லையா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கும்படி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேட்டார்.</p><p>அந்த நேரத்தில் அந்த கேள்வி, அவைக்கு சம்பந்தம் இல்லாமல் இருந்தாலும், அரசியலுக்கு தொடர்புடையதாக இருந்தது. இதில் த.வெ.க.வின் நோக்கம், பா.ஜனதாவை தி.மு.க. நெருங்குகிறதாக காட்டுவதாக உள்ளது என்றே கருதப்படுகிறது.</p><h2>விவாதம்</h2><p>ஆனால், அப்போதைய விவாதத்திற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் கேள்வி தொடர்பில்லாதது என்று உதயநிதி பதில் அளித்திருந்தார். என்றாலும், மேகதாது விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை த.வெ.க. அரசு கூட்டினால், எம்.பி.க்கள் கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்கும் என்று பந்தை த.வெ.க. பக்கம் தி.மு.க. தள்ளிவிட்டது.</p><h2>அரசியல் நாடகம்</h2><p>மேலும், தொகுதி மறுவரையறையில் தி.மு.க. தனது நிலைப்பாட்டை மாற்றவில்லை என்றும், எம்.பி.க்கள் கலந்தாய்வு என்று த.வெ.க. நடத்தும் அரசியல் நாடகத்தில் தி.மு.க. பங்கேற்காது என்றும் கனிமொழி எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.</p><p>எம்.பி.க்கள் கூட்டத்தில் அ.தி.மு.க.வும் பங்கேற்கவில்லை. அ.தி.மு.க. தரப்பில் இதுபற்றி கேட்டபோது, 'எம்.பி.க்களை அழைப்பதற்கு முன்பாக, கட்சித் தலைவர்களை முதல்-அமைச்சர் அழைத்து பேசியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டனர்.</p><h2>மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவா..?</h2><p>இந்த கூட்டத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் பங்கேற்காதது, மத்திய அரசின் மறுவரையறை மசோதாவை ஆதரிக்கும் நிலையை நோக்கி அக்கட்சி நகர்வதை காட்டுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு பிறகு காங்கிரசுடன் தி.மு.க.கூட்டணி முறிந்துள்ள நிலையில், இந்த நகர்வு முக்கியத்துவம் பெறுகிறது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-44</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-44#comments</comments><guid isPermaLink="false">3416e1d8-6c86-42e8-b2bd-8f8b6eb13d70</guid><pubDate>Sun, 09 Aug 2026 01:00:09 +0000</pubDate><atom:updated>2026-08-09T01:00:09.655Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல் டீசல் விலை,Petrol and diesel prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/wtt9ffwv/petrol.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/wtt9ffwv/petrol.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.</p> <p>பெட்ரோல், டீசல் விலை</p><p>இந்நிலையில், சென்னையில் இன்று (09.08.2026 ஞாயிற்றுக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ. 99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியருக்கு கருணை படி என்பது சலுகைதான்; உரிமை இல்லை - ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mercy-pay-is-a-privilege-for-dismissed-employees-not-a-right-high-court-order</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mercy-pay-is-a-privilege-for-dismissed-employees-not-a-right-high-court-order#comments</comments><guid isPermaLink="false">464f8ea2-5be7-45ca-8522-52615f458c8f</guid><pubDate>Sun, 09 Aug 2026 00:56:52 +0000</pubDate><atom:updated>2026-08-09T00:56:52.661Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பணி நீக்கம்,ஐகோர்ட்டு,Chennai High Court,Dismissed,கருணைத்தொகை</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/g7egggsy/highcourt.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/g7egggsy/highcourt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மத்திய அரசின் தபால் துறையில், கடந்த 1996-ம் ஆண்டு பணியில் சேர்ந்த தபால்காரர் பழனி என்பவர், 2010-ம் ஆண்டு முதல் பணிக்கு வரவில்லை. அவருக்கு பலமுறை அதிகாரிகள் கடிதம் அனுப்பியும் வராததால். துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதற்கும் அவர் ஆஜராகாததால், 2014-ம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டார். </p><p>இதன்பின்னர் 2 ஆண்டுகள் கழித்து, 14 ஆண்டுகள் பணியாற்றியுள்ளதால், ஓய்வூதியத்தில் ஒரு பகுதியை கருணை படியாக வழங்கக்கோரி  அதிகாரிகளுக்கு பழனி மனு அனுப்பினார். அந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படாததையடுத்து, மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த தீர்ப்பாயம், அவருக்கு கருணை படி வழங்கும்படி உத்தரவிட்டது.</p><h2>கருணை படி</h2><p>இந்த உத்தரவை எதிர்த்து <a href="https://www.dailythanthi.com/topic/madras-high-court">சென்னை ஐகோர்ட்டில்</a> தபால் துறை மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், என்.செந்தில்குமார் ஆகியோர், "பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியருக்கு கருணை படி வழங்குவது குறித்து அதிகாரிகள் தான் பரிசீலிக்க வேண்டும். அது சலுகைதானே தவிர உரிமை இல்லை. அதனால் கருணை படி வழங்கும்படி தீர்ப்பாயம் உத்தரவிட முடியாது. அப்படி உத்தரவு பிறப்பித்தால், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் அனைவரும் தங்களுக்கும் கருணை படி வழங்க வேண்டும் என்று வரக்கூடும். அதனால், மத்திய நிர்வாக தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்கிறோம்" என்று உத்தரவிட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>கேரளத்தில் இருந்து ஒற்றை சக்கர சைக்கிளில் ராமேசுவரம் வந்த என்ஜினீயர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/engineer-from-kerala-reaches-rameswaram-on-unicycle</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/engineer-from-kerala-reaches-rameswaram-on-unicycle#comments</comments><guid isPermaLink="false">9be422b8-15e8-45fe-ab84-21112d28b8a5</guid><pubDate>Sun, 09 Aug 2026 00:55:59 +0000</pubDate><atom:updated>2026-08-09T00:55:59.947Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rameswaram,ராமேசுவரம்,என்ஜினீயர்,Engineer,சைக்கிள்,cycle,கேரளம்,keralam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/uih3e4zr/CHENNAI-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/uih3e4zr/CHENNAI-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>ராமேசுவரம்,</p><p>கேரளம் மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் சனித் (வயது 25). என்ஜினீயர். இவர் போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கேரளத்தில் இருந்து கடந்த மே மாதம் 25-ந்தேதி சைக்கிளில் முன் பக்க சக்கரம் இன்றி பின்பக்க சக்க ரத்தை மட்டும் பயன்படுத்தி ஒரு சக்கரத்தில் தனது பிரசார பயணத்தை தொடங்கினார். </p><p>கேரளத்தில் இருந்து புறப்பட்ட இவர் கோவை வழியாக பழனி, மதுரை, ராமநாதபுரம், மண்டபம், பாம்பன் ரோடு பாலம் வழியாக ராமேசுவரம் வந்தடைந்தார். பின்னர் தனுஷ்கோடி சென்று அங்கு சுற்றுலா பயணிகளிடம் போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரங்களை செய்தார்.</p><p>அங்கிருந்து புறப்பட்டு புதுச்சேரி, சென்னை வழியாக நேபாளத்தில் தனது விழிப்புணர்வு பிரசாரத்தை முடிக்கவுள்ளதாக தெரிவித்தார். 1 நாளைக்கு 30 முதல் 40 கிலோமீட் டர் வரை ஒற்றை சக்கரத்தில் சைக்கிள் பயணம் செய்து வருவதாகவும் தெரிவித்தார். சைக்கிளில் முன்பக்க சக்கரம் இன்றி பின்பக்க சக்கரத்தை மட்டுமே வைத்து சாலைகளில் நூதன முறையில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யும் வாலிபரை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சேலம் போஸ் மைதானத்தில் அரசு பொருட்காட்சி தொடக்கம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-exhibition-begins-at-salem-bose-maidan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-exhibition-begins-at-salem-bose-maidan#comments</comments><guid isPermaLink="false">df059293-a877-46dd-b8ed-51767c49ea1c</guid><pubDate>Sun, 09 Aug 2026 00:54:11 +0000</pubDate><atom:updated>2026-08-09T00:54:11.032Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,சேலம்,Exhibition,அரசு பொருட்காட்சி,Government exhibition</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/iftq31np/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/iftq31np/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள போஸ் மைதானத்தில் மாவட்ட செய்தி-மக்கள் தொடர்பு துறை சார்பில் அரசு பொருட்காட்சி தொடக்க விழா நேற்று மாலை நடந்தது. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/pbv0x82p/Untitled-3.jpg" /></figure><p>இதில், போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி பொருட்காட்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளையும் திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து நடைபெற்ற விழாவில், அமைச்சர் கலந்து கொண்டு ரூ.7 கோடியே 72 லட்சம் மதிப்பில் 227 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.</p><h2>45 நாட்கள் நடைபெறும்</h2><p>அரசு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பொருட்காட்சியில் </a>அரசின் திட்டங்கள், சாதனைகளை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் 26 அரசு துறைகள், 5 அரசு சார்பு நிறுவனங்கள் என மொத்தம் 31 துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர பல்வேறு பொழுதுபோக்கு கடைகளும் உள்ளன. தினமும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. </p><p>இந்த அரசு பொருட்காட்சி 45 நாட்கள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். விழாவில் கலெக்டர் இளம்பகவத், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமணன், சிவக்குமார். பழனிவேல், மாநகராட்சி ஆணையாளர் லலித் ஆதித்யநீலம், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>மேட்டுப்பாளையம் அருகே பூட்டிய காருக்குள் மூச்சுத்திணறி 9 வயது சிறுவன் பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/9-year-old-boy-dies-after-suffocating-in-locked-car-near-mettupalayam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/9-year-old-boy-dies-after-suffocating-in-locked-car-near-mettupalayam#comments</comments><guid isPermaLink="false">8ffc250f-ea84-422c-9cf3-a94257b416d8</guid><pubDate>Sun, 09 Aug 2026 00:49:49 +0000</pubDate><atom:updated>2026-08-09T00:49:49.263Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டுப்பாளையம்,Mettupalayam,சிறுவன் பலி,Die,மூச்சுத்திணறி,கார்car</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/jxv5e5pn/108.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/jxv5e5pn/108.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மேட்டுப்பாளையம்,</p><p>கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பெத்திக்குட்டை கருப்பராயன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் வேலுமணி (வயது 39). குடிநீர் வடிகால் வாரியத்தில் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சுமதி(31). இவர்களது மகன் முகுந்த்(9). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தான்.</p><h2>கார்</h2><p>இந்த நிலையில் நேற்று மதியம் வேலுமணியின் வீட்டுக்கு முன்பு ஆசிரியர் ஒருவரின் கார் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த காருக்குள் ஏறி முகுந்த் விளையாடிக் கொண்டு இருந்தான்.</p><p>அப்போது காரின் கதவுகள் திடீரென மூடிக்கொண்டன. முகுந்த், எவ்வளவோ முயற்சித்தும் காரின் கதவுகளை திறக்க முடியவில்லை. இதனால் சிறிது நேரத்தில் காரிலேயே அவன் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தான்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் இன்று எந்தெந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு..? </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/which-areas-in-tamil-nadu-are-likely-to-receive-rain-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/which-areas-in-tamil-nadu-are-likely-to-receive-rain-today#comments</comments><guid isPermaLink="false">b5542914-335a-424f-b2b6-99a4c9b5696f</guid><pubDate>Sun, 09 Aug 2026 00:27:36 +0000</pubDate><atom:updated>2026-08-09T00:27:36.358Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,Rain,Weather,வானிலை,தமிழகம்,Weather News,WeatherUpdate,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,வானிலை ஆய்வு மையம்,வானிலை அறிக்கை,weather condition,வானிலை தகவல்,Weather Report,Weather Status,weather conditions,வானிலை அறிவிப்பு,weather center</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/ru4jh021/kantha.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rain, மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/ru4jh021/kantha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>வானிலை செய்திகள் (Weather)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.</p><h2>மழை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>சுமார் 5.8 கிமீ முதல் 7.6 கிமீ உயரம் வரை வட கடலோர தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.</p><p>இதன் காரணமாக <strong>இன்று (09-08-2026):</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.</p><h2>பலத்த தரைக்காற்று</h2><p><strong>10-08-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.</p><p><strong>11-08-2026 முதல் 14-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong><ins>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</ins></strong></p><p><strong>09-08-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.</p><p><strong>10-08-2026 முதல் 12-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் வட உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><p><strong><ins>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</ins></strong></p><p><strong>09-08-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.</p><p><strong>10-08-2026 முதல் 12-08-2026 வரை:</strong> வட உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p> <h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று (09-08-2026)</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.</p>]]></content:encoded></item><item><title>கூடுதல் தொகை வசூலை தடுக்கவே ஆன்லைன் முறையில் மது விற்பனை - அமைச்சர் விக்னேஷ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/online-liquor-sales-to-prevent-extra-charges-minister-vignesh</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/online-liquor-sales-to-prevent-extra-charges-minister-vignesh#comments</comments><guid isPermaLink="false">f0a01a47-a611-49d3-98ce-818bd3a43c38</guid><pubDate>Sat, 08 Aug 2026 16:29:44 +0000</pubDate><atom:updated>2026-08-08T16:29:44.621Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டாஸ்மாக்,Tasmac,Minister Vignesh,அமைச்சர் விக்னேஷ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/wctza5lh/Untitled-12.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் விக்னேஷ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/wctza5lh/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு கூடுதல் தொகை வசூலிப்பதை தடுக்கவே ஆன்லைன் முறை கொண்டு வரப்பட்டுள்ளது என்று அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் விக்னேஷ் கூறியதாவது:-</p><p>வெளிநாட்டு மதுபானங்கள், ஏற்கெனவே மதுக்கடைகளில் கிடைக்கின்றன. வாடிக்கையாளர்கள் என்ன விரும்புகின்றனரோ அதை கொடுக்க வேண்டியது கடமை. சட்டப்பேரவையிலேயே ஆன்லைன் முறை குறித்து விளக்கமாக பேசியிருக்கிறேன். டாஸ்மாக் கடைகளில் பணப் பரிவர்த்தனை இருக்கக் கூடாது என்பதற்காகவும், கூடுதல் தொகை வசூலிப்பதை தடுக்கவும் ஆன்லைன் விற்பனை நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.</p><p>சில மதுக் கடைகளில் சில பிராண்ட் மது வகைகள் மட்டுமே விற்கப்படுவதாக புகார்கள் வந்தன. ஆன்லைன் மூலம் எந்தெந்த கடையில் என்னென்ன மது வகைகள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். ஆன்லைன் ஆர்டர் அமலுக்கு வந்த பிறகு 700 பேர் வரை ஆர்டர் செய்து மதுபானங்கள் பெற்றுள்ளனர். இதில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன என்பதையும் கவனித்து வருகிறோம். கடந்த காலங்களில் இந்த துறையை சீர்படுத்த முயற்சி எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சில எதிர்க்கட்சிகள் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்க திட்டம்; துரை வைகோ</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/some-opposition-parties-plan-to-support-the-constituency-delimitation-bill-durai-vaiko</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/some-opposition-parties-plan-to-support-the-constituency-delimitation-bill-durai-vaiko#comments</comments><guid isPermaLink="false">63cf631b-3aba-4c1b-8677-2273a35f3888</guid><pubDate>Sat, 08 Aug 2026 16:28:06 +0000</pubDate><atom:updated>2026-08-08T16:28:06.537Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,DMK,Durai Vaiko,துரை வைகோ,தொகுதி மறுவரையறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/34ygr0yc/Durai-vaiko.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ துரை வைகோ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/34ygr0yc/Durai-vaiko.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக முதல் அமைச்சர் விஜய் தலைமையில் இன்று தமிழக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு மதிமுக எம்பி துரைவைகோ செய்தியாளர்களிடம் பேசியதாவது: </p><p> 39 எம்.பி.க்களை வைத்துக் கொண்டே நமது உரிமைகளை பேச முடியவில்லை. ஏற்கனவே உள்ள எண்ணிக்கை தொடர வேண்டும் என்பதுதான் இந்த கூட்டத்தின் முடிவு. சில எதிர்க்கட்சிகள் பா.ஜனதாவுக்கு ஆதரவாக இருப்பதாக தெரிகிறது. இப்போதுள்ள நிலைப்பாடுதான் தொடர வேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய் பேசினார்.</p> <p>சிறுபான்மையினருக்கும் இந்த மறுவரையறையினால் ஆபத்து வரும். அதற்கு அசாம் உதாரணம். அவசர அவசரமாக மசோதாவை நிறைவேற்ற முனைப்பு காட்டுகின்றனர். இதில் பா.ஜனதாவின் கருத்தைதான் தி.மு.க. கூறி வருகிறது. சமூகவலைதளத்தில் அதை காண முடிகிறது. 50 சதவீத உயர்வு ஏற்கக்கூடியதுதான் என்று கருத்து கூறி வருகின்றனர். மறுவரையறைக்கான ஆணையம் அமைத்துவிட்டால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் நினைத்ததை செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>திருச்செந்தூரில் கஞ்சா விற்றவர் கைது: 880 கிராம் பறிமுதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ganja-seller-arrested-in-tiruchendur-880-grams-seized</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ganja-seller-arrested-in-tiruchendur-880-grams-seized#comments</comments><guid isPermaLink="false">4bf38ea1-ca4e-42c2-864f-6a2485951967</guid><pubDate>Sat, 08 Aug 2026 16:27:18 +0000</pubDate><atom:updated>2026-08-08T16:27:18.112Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,திருச்செந்தூர்,Thoothukudi,தூத்துக்குடி,arrest,Seizure,பறிமுதல்,Tiruchendur,sale of ganja,கஞ்சா விற்பனை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/8lmfm6bx/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கஞ்சா விற்றவர் கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/8lmfm6bx/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">திருச்செந்தூர்</a> பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE">கஞ்சா</a> வைத்திருந்த தூத்துக்குடியைச் சேர்ந்த நபரை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர்.</p><h2>போலீஸ் ரோந்து பணி</h2><p>தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். </p><h2>கஞ்சா விற்பனை</h2><p>விசாரணையில் அவர் தூத்துக்குடி, தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் மணிகண்டன்(எ) மொட்டை மணி (வயது 37) என்பதும்,  அவர் விற்பனை செய்வதற்காக சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. </p><h2>880 கிராம் கஞ்சா பறிமுதல், கைது</h2><p>அதைத் தொடர்ந்து திருச்செந்தூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சோனியா வழக்குப்பதிவு செய்து, மேற்சொன்ன நபரை கைது செய்தார். மேலும் அவரிடமிருந்த 880 கிராம் கஞ்சாவை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">பறிமுதல் </a>செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி சிவன் கோவிலில் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடி ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/officials-of-the-idol-theft-prevention-unit-conduct-a-thorough-inspection-at-the-thoothukudi-shiva-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/officials-of-the-idol-theft-prevention-unit-conduct-a-thorough-inspection-at-the-thoothukudi-shiva-temple#comments</comments><guid isPermaLink="false">f5e63c49-3d42-4fd1-bab1-0608ca29e607</guid><pubDate>Sat, 08 Aug 2026 16:07:33 +0000</pubDate><atom:updated>2026-08-08T16:07:33.071Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>raid,police,போலீஸ்,பக்தர்கள்,Devotees,Thoothukudi,தூத்துக்குடி,ஆய்வு,Theft,Excitement,பரபரப்பு,statue,shiva temple,சிவன் கோவில்,சிலைகள் திருட்டு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/zttk5iuw/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூத்துக்குடி சிவன் கோவிலில் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடி ஆய்வு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/zttk5iuw/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">சிவன் கோவிலில்</a> நெல்லை மண்டல <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">சிலை திருட்டு</a> தடுப்புப் பிரிவு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D">போலீஸ் இன்ஸ்பெக்டர் </a>தலைமையிலான  போலீசார் அதிரடி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">ஆய்வு </a>செய்தனர்.</p><h2>சிவன் கோவிலில் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீசார் ஆய்வு</h2><p>தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பின், கோவில் சிலைகளை பாதுகாக்கும் வகையில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டார். அதன்படி நெல்லை மண்டல சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா ராணி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் திருவளவன் மற்றும் தலைமைக் காவலர் செல்லப்பா ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று காலை தூத்துக்குடியில் பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.</p><h2>மொத்தம் 34 உலோகச் சிலைகள்</h2><p>ஆய்வின் முதற்கட்டமாக கோவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமசுப்பிரமணியன், செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி மற்றும் கோவில் பணியாளர்களிடம் கோவிலில் உள்ள சுவாமி சிலைகள் மற்றும் அதன் விவரங்களை அதிகாரிகள் சேகரித்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், கோவிலில் மொத்தம் 34 உலோகச் சிலைகள் இருப்பதும், அதற்கான முறையான ரசீதுகள் மற்றும் ஆவணங்கள் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. அந்த சிலைகள் சேதமின்றி பராமரிக்கப்பட்டு வருகிறதா என்றும் ஆய்வு செய்யப்பட்டது. </p><h2>சிலைகள் சேதம் குறித்து ஆய்வு</h2><p>மேலும் கடந்த 2002-ம் ஆண்டு மூக்குப் பகுதியில் சேதமடைந்ததால் தனியாக பிரித்து வைக்கப்பட்டிருந்த முருகன் சிலையை இன்ஸ்பெக்டர் வனிதா ராணி பார்வையிட்டு சோதனை செய்தார். அந்த சிலை எதிர்பாராத விதமாகக் கீழே தவறி விழுந்ததால் சேதமடைந்தது சோதனையில் தெரியவந்தது. இதன்பின் கோவிலில் உள்ள அனைத்துக் கற்சிலைகளையும் ஆய்வு செய்ததில் அவை அனைத்தும் சேதமன்றி சரியாக இருப்பது கண்டறியப்பட்டது. </p><h2>பக்தர்களிடம் விசாரணை</h2><p>ஆய்வின் ஒரு பகுதியாக, கோவிலுக்கு வருகை தந்த சுமார் 25 பக்தர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். "தினமும் கோவிலுக்கு வரும் உங்களுக்குச் சிலைகளில் ஏதேனும் மாற்றம் அல்லது சேதம் ஏற்பட்டிருப்பது தெரியுமா?" என கேட்டறிந்தனர். அதற்கு பக்தர்கள், "நாங்கள் பல வருடங்களாக பார்த்து வரும் அதே சிலைகள்தான் எந்த மாற்றமுமின்றி உள்ளன" என தெரிவித்தனர்.</p><h2>பக்தர்களிடையே பரபரப்பு</h2><p>நேற்று காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நீண்ட இந்த விரிவான ஆய்வின் முடிவில், கோவிலில் உள்ள அனைத்து சிலைகளும் அதற்கான ஆவணங்களும் சரியாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிவன் கோவிலில் நாள் முழுவதும் நடைபெற்ற இந்த ஆய்வுப் பணி பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>புதிய எம்.பி.பி.எஸ். இடங்களில் தனியார் கல்லூரிகளின் ஆதிக்கம் அதிகரிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/private-colleges-dominance-in-new-mbbs-seats-increases</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/private-colleges-dominance-in-new-mbbs-seats-increases#comments</comments><guid isPermaLink="false">c41d7474-75b4-4f9e-b7df-468b873554b8</guid><pubDate>Sat, 08 Aug 2026 16:03:11 +0000</pubDate><atom:updated>2026-08-08T16:03:11.093Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அதிகரிப்பு,MBBS,Private College,தனியார் கல்லூரி,எம்.பி.பி.எஸ். படிப்பு,ஆதிக்கம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/nmrjdrpj/mbbs.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/nmrjdrpj/mbbs.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதை ஒட்டுமொத்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இந்த நிலையில் தற்போது அவ்வாறு உயர்த்தப்பட்டு வரும் இடங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான சதவீதம் குறைந்து வருவதாக ஒரு புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகிறது. அதன்படி, 2023-ல் 1 லட்சத்து 7 ஆயிரத்து 948 <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D">எம்.பி.பி.எஸ். </a>இடங்கள் இருந்தது. அதில் அரசு கல்லூரிகளில் 52 சதவீதமும், தனியார் மற்றும் நிகர்நிலை கல்லூரிகளில் 48 சதவீதமும் இடங்கள் இருந்தன.</p><h2>தனியார் கல்லூரிகளின் ஆதிக்கம்</h2><p>2024-ல் 1 லட்சத்து 17 ஆயிரத்து 750 இடங்கள் இருந்த நிலையில், அரசு கல்லூரிகளில் 51 சதவீதமும், தனியார் கல்லூரிகளில் 49 சதவீதமும் இருந்தன. 2025-ல் 1 லட்சத்து 23 ஆயிரத்து 700 எம்.பி.பி.எஸ். இடங்கள் இருந்த சூழலில், அரசு கல்லூரிகளில் 51 சதவீதமும், தனியார் கல்லூரிகளில் 49 சதவீதமும் என இருந்தன. 2026-ல் 1 லட்சத்து 36 ஆயிரத்து 939 இடங்களாக உயர்ந்திருந்த நிலையிலும், அரசு கல்லூரிகளில் 46 சதவீதமும், தனியார் கல்லூரிகளில் 54 சதவீதமும் என உள்ளன.அதாவது. ஒட்டுமொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் அதிகரித்தாலும் அதில் தனியார் கல்லூரிகளின் ஆதிக்கமே இருக்கிறது. புதிய எம்.பி.பி.எஸ். இடங்கள் உருவாக்கப்படுவதில் அரசுத்துறையைவிட தனியார் துறை மிகவேகமாக செயல்பட்டுள்ளதை இந்த புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை தொகுதி மறுவரையறை பாதிக்கும்: முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/delimitation-to-affect-tamil-nadus-representation-says-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/delimitation-to-affect-tamil-nadus-representation-says-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">f225d245-ad1f-4001-bb6b-b0a69ddcc80b</guid><pubDate>Sat, 08 Aug 2026 15:59:58 +0000</pubDate><atom:updated>2026-08-08T15:59:58.378Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தொகுதி மறுவரையறை,Delimitation,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/w9bi58ze/Untitled-11.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/w9bi58ze/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்ற தொகுதி மறுவரையறை தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>முதல்-அமைச்சர் விஜய் தலைமையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்ற தொகுதி மறுவரையறை தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் இன்று (8.8.2026) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.</p><p>இந்தக் கூட்டத்தில் பங்கேற்க, தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் (57) அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், இந்திய தேசிய காங்கிரஸ் (11), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (2), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (1) மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (1) ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 19 மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.</p><p>இந்தக் கூட்டத்தில் மத்திய அரசால் உத்தேசிக்கப்பட்ட தொகுதி மறுவரையறை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மக்கள்தொகை கட்டுப்பாடு திட்டத்தினைச் சிறப்பாக செயல்படுத்திய தமிழ்நாடு மற்றும் இதர தென் மாநிலங்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதிக்கப்படாமல் காப்பது குறித்தும், தமிழ்நாட்டின் தற்போதைய பாராளுமன்ற பிரதிநிதித்துவம் தொடர்ந்து நீடிப்பது குறித்தும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.</p><p>இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆக இருக்கும்போதே, ஒவ்வொரு உறுப்பினருக்கும் பாராளுமன்றத்தில் பேசக் கிடைக்கும் நேரம் குறைவாக உள்ளது எனவும், உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், தங்களது கருத்துக்களை முழுமையாக எடுத்துக்கூறுவதில் உள்ள சிக்கல்கள் பற்றி கூறினர். மேலும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில், பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை மக்கள்தொகைக்கேற்ப அதிகப்படுத்தப்படவில்லை எனவும் கூறினர்.</p><p>தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மற்றும் முக்கியத்துவம், தொகுதி மறுவரையறை செய்வதின் மூலம் பாதிக்கும் என்பதால் இந்த மத்திய அரசின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் தொகுதி மறுவரையறையினை இப்போதுள்ள எண்ணிக்கையிலேயே நிரந்தரமாக நிலைநிறுத்திடவும், தற்போதுள்ள நிலையே தொடரவும், தமிழ்நாட்டின் உரிமையினை பாராளுமன்றத்தில் நிலை நிறுத்துவதற்கும், அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், தொகுதி மறுவரையறை குறித்த மத்திய அரசின் அரசமைப்பு சட்டத் திருத்தம் மற்றும் புதிய மசோதாவை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.</p><p>மேலும், 2026-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பிற்குப் பின் அரசமைப்பு பிரிவு 81(2)(a)-ன் கீழ் தென் மாநிலங்களின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதால், சட்ட முன்மொழிவை பாராளுமன்றத்தில் எதிர்க்க வேண்டும். சர்வ வல்லமை பெற்றதாக தொகுதி மறுவரையறை ஆணையம் உள்ளது. இந்த அதிகாரத்தை குறித்து பாராளுமன்றத்திற்கே இறுதிசெய்யும் அதிகாரம் இருக்க வேண்டும் உள்ளிட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.</p><p>அனைத்து மாநிலங்களின் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையினை 50% வரை உயர்த்தலாம் என்ற கருத்து மக்களை திசைதிருப்பும் ஆசை வார்த்தை (50% increase of existing Lok Sabha seats is an illusion to sweeten the pill) என்ற கருத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுத்து வைத்தனர்.</p><p>இந்தக் கூட்டத்தின்போது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் உத்தேசிக்கப்பட்ட தொகுதி மறுவரையறை முன்மொழிவு செயல்படுத்தப்பட்டால், மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டத்தினை சிறப்பாகச் செயல்படுத்திய தமிழ்நாடு மற்றும் இதர தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவ உரிமை பாதிக்கப்படுமென்பதால், தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையான 543 என்ற அளவிலேயே நிரந்தரமாக வைப்பதற்கும், மாநிலங்களுக்கு இடையேயான எண்ணிக்கை பகிர்வை நிரந்தரமாக வைக்கவும், அதற்குத் தேவையான மற்றும் உரிய சட்ட திருத்தங்கள் பாராளுமன்றத்தில் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினார்கள்.</p><p>மேலும், தற்போது மக்களவை, மாநிலங்களவையினுடைய விகிதம் 2.2:1 என்ற அளவிலேயே நிலைநிறுத்த வேண்டும் என்றும், இதில் ஏதேனும் மாற்றம் ஏற்படின் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் கடுமையாகப் பாதிக்கும் என்றும் தெரிவித்தார்கள்.</p><p>இதனைத் தொடர்ந்து இறுதியாக தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் உரிமையை நிரந்தரமாகப் பாதுகாத்திட தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்றிட ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.</p><p>கூட்டத்தின் இறுதியில், முதல்-அமைச்சர், தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் மற்றும் முக்கியத்துவம், தொகுதி மறுவரையறை செய்வதின் மூலம் பாதிக்கும் என்பதால் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் தொகுதி மறுவரையறையினை கைவிடவும், தற்போதுள்ள நிலையே தொடரவும், தமிழ்நாட்டின் உரிமையினை நிலைநிறுத்துவதற்கும், அனைத்துக் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்றும் அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கோரிக்கை விடுத்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மதுரை: சைக்கிளை பற்களால் தூக்கியபடி 100 அடி நடந்து சென்று ராணுவ வீரர் சாதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-ex-soldier-sets-record-carrying-35kg-cycle-with-teeth</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-ex-soldier-sets-record-carrying-35kg-cycle-with-teeth#comments</comments><guid isPermaLink="false">2cbe1146-efe6-4276-b7f8-06c5dac1f2c2</guid><pubDate>Sat, 08 Aug 2026 15:38:36 +0000</pubDate><atom:updated>2026-08-08T15:38:36.173Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,சைக்கிள்,Bicycle,Ex-Servicemen&apos;s-முன்னாள் ராணுவ வீரர்கள்,Achievement - சாதனை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/f8b3znyu/miltary.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ராணுவ வீரர்]]></media:title><media:description type="html"><![CDATA[ சைக்கிளை பற்களால் தூக்கியபடி 100 அடி நடந்து சென்று ராணுவ வீரர் சாதனை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/f8b3znyu/miltary.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p> பற்களால் சைக்கிளை கவ்வி பிடித்து முன்னாள் ராணுவ வீரர் செய்த சாதனை அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D">முன்னாள் ராணுவ வீரர் </a>ஒருவர், தனது அசாத்திய உடல் பலத்தை நிரூபிக்கும் வகையில் விநோத சாதனை முயற்சி ஒன்றில் ஈடுபட்டார். </p> <h2>35 கிலோ எடை</h2><p>பொதுவாக மனிதர்கள் கைகளால் தூக்குவதற்கே திணறும் 35 கிலோ எடை கொண்ட இரும்பு சைக்கிளை, அவர் கைகளைப் பயன்படுத்தாமல் தனது பற்களால் மட்டுமே கவ்விப் பிடித்தார். சைக்கிளை பற்களால் கவ்வித் தூக்கியவாறே, சற்றும் தடுமாறாமல் 100 அடி தூரத்திற்கு நேராக நடந்து சென்று அவர் சாதனை படைத்தார்.</p> <h2>பாராட்டு மழை</h2><p>முன்னாள் ராணுவ வீரரின் இந்த அசாத்தியமான பற்களின் உறுதியையும், உடல் வலிமையையும் நேரில் பார்த்த திருமங்கலம் பொதுமக்கள் கைதட்டி தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர். இந்த வியத்தகு சாதனை வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>காங்கோவில் மேலாளர் வேலை செய்பவரிடம் ரூ.75.2 லட்சம் மோசடி: தூத்துக்குடி வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-youth-arrested-for-defrauding-a-manager-working-in-congo-of-rs752-lakh</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-youth-arrested-for-defrauding-a-manager-working-in-congo-of-rs752-lakh#comments</comments><guid isPermaLink="false">1598a0ed-8756-4b27-87ac-b256623089ba</guid><pubDate>Sat, 08 Aug 2026 15:33:06 +0000</pubDate><atom:updated>2026-08-08T15:33:06.019Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>South Africa,தென் ஆப்பிரிக்கா,கைது,Thoothukudi,தூத்துக்குடி,Online,ஆன்லைன்,பணம் மோசடி,arrest,money laundering,சைபர் கிரைம்,Complaint,புகார்,cybercrimes,Congo,காங்கோ,manager,மேலாளர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/tum39elf/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பணம் மோசடி, கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/tum39elf/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தென்ஆப்பிரிக்க நாடான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B">காங்கோ</a>வில் வேலை பார்த்து வரும் தனியார் நிறுவன மேலாளரிடம் ஆன்லைன் முதலீட்டு மோசடி மூலம் ரூ.75.2 லட்சம் சுருட்டிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">வாலிபர் கைது </a>செய்யப்பட்டுள்ளார். </p><h2>காங்கோவில் தனியார் நிறுவன மேலாளர்</h2><p>தூத்துக்குடியைச் சேர்ந்த நபர் ஒருவர் தென்ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆண்டின் இறுதியில் இவரது பேஸ்புக் பக்கத்திற்கு வந்த விளம்பர லிங்க் ஒன்றில், "குறைந்த முதலீட்டில் 200 சதவீதம் அதிக லாபம் பெறலாம்" என கவர்ச்சிகரமான விளம்பரம் வந்துள்ளது. </p><h2>ரூ.75 லட்சத்து 25 ஆயிரம்</h2><p>இதனை நம்பி அவர் அந்த எண்ணைத் தொடர்பு கொண்டபோது, அவரை ஒரு வாட்ஸ்அப் குழுவில் இணைத்துள்ளனர். அக்குழுவில் பலர் ஆன்லைன் மார்க்கெட்டிங் மூலம் அதிக லாபம் பெற்றது போன்ற போலி தோற்றத்தை உருவாக்கியுள்ளனர். இதனை உண்மையென நம்பிய, அந்த பாதிக்கப்பட்ட மேலாளர் சிறுகச் சிறுக மொத்தம் ரூ.75 லட்சத்து 25 ஆயிரம் பணத்தை அனுப்பியுள்ளார். </p><h2>சைபர் கிரைம் பிரிவில் புகார்</h2><p>சில நாட்களுக்கு பிறகு லாபத் தொகை எதுவும் வராததால், தனது கணக்கிலிருந்த பணத்தை எடுக்க முயன்றபோது, பணம் எதுவும் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் உடனடியாக சைபர் கிரைம் பிரிவில் ஆன்லைன் மூலம் புகார் அளித்தார். </p><h2>வாலிபர் கைது</h2><p>இந்த புகாரின் பேரில் தூத்துக்குடி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்த மோசடி கும்பலுக்கு உடந்தையாகவும், வங்கி கணக்குகளைச் செயல்படுத்த உதவியாகவும் இருந்த ஏரல் அருகே பள்ளிப்பத்து பகுதியைச் சேர்ந்த அர்ஜூன் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர். </p><h2>வடமாநில நபர்கள் 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு</h2><p>மேலும் இந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF">பண மோசடி</a> வழக்கில் தொடர்புடைய வடமாநிலத்தைச் சேர்ந்த 5 பேரை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை ஆலோசனைக் கூட்டம்: “ஓடும் நீரில் கோலம் போடும் வீண் முயற்சி” – இன்பதுரை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/constituency-redelineation-consultation-meeting-a-futile-attempt-to-cast-a-shadow-on-running-water-inbadurai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/constituency-redelineation-consultation-meeting-a-futile-attempt-to-cast-a-shadow-on-running-water-inbadurai#comments</comments><guid isPermaLink="false">655d33b6-bbbf-4a35-b381-067e41946a8f</guid><pubDate>Sat, 08 Aug 2026 15:10:25 +0000</pubDate><atom:updated>2026-08-08T15:10:25.743Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இன்பதுரை,consultation meeting,ஆலோசனைக் கூட்டம்,admk அ.தி.மு.க.,தொகுதி மறுவரையறை,Constituency redelineation,Inpadurai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/7qrybqb9/inpadurai-mp.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/7qrybqb9/inpadurai-mp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தொகுதி மறுவரையறை ஆலோசனைக் கூட்டம் “ஓடும் நீரில் கோலம் போடும் வீண் முயற்சி” என்று அதிமுக எம்.பி. இன்பதுரை விமர்சித்துள்ளார்.</p><h2>ஆலோசனைக் கூட்டம்</h2><p>தொகுதி மறுவரையறை மசோதாவை விரைவில் மத்திய அரசு தாக்கல் செய்யலாம் என்று பேசப்படும் நிலையில், இதற்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இது தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சி எம்பிக்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு முதல் அமைச்சர் விஜய் அழைப்பு விடுத்திருந்தார். இந்த கூட்டத்தை திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன. இந்நிலையில், இது குறித்து அதிமுக எம்.பி. <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88">இன்பதுரை</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>வீண் முயற்சி</h2><p>உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் வருடா வருடம் தமிழ்நாடு பெற்றுவரும் காவிரி உரிமை நீரை, இந்த ஆண்டு பெற்றுத் தரும் திறன் இல்லாத முதல்-அமைச்சர் விஜய்யால் கூட்டப்பட்ட, தொகுதி மறுவரையறை ஆலோசனைக் கூட்டம்  என்பது ஓடும் நீரில் கோலம் போடும் வீண் முயற்சியாகும். </p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பழனி நில மோசடி வழக்கில் கைதானவர் சிறைக்குள் உயிரிழந்தது ஏன்? - வேல்முருகன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-land-fraud-case-death-in-jail-raises-questions-velmurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-land-fraud-case-death-in-jail-raises-questions-velmurugan#comments</comments><guid isPermaLink="false">5e21320a-2fe6-4fe0-b2e8-bf1f8ffcb5b8</guid><pubDate>Sat, 08 Aug 2026 14:32:54 +0000</pubDate><atom:updated>2026-08-08T14:32:54.670Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பழனி,Question,சிறை,Velmurugan,வேல்முருகன்,நில மோசடி வழக்கு,Prison,கேள்வி,Land fraud case</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/lq9u18xb/velmurugan.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வேல்முருகன்]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/lq9u18xb/velmurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/velmurugan">வேல்முருகன் </a>வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF">பழனி நில மோசடி</a> வழக்கில் கைதானவர் சிறைக்குள் உயிரிழந்தது ஏன்? சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன்? குற்றவாளிகளை காப்பாற்ற நினைப்பது யார்?</p> <h2>சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.</h2><p>பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சொந்தமானதாக கூறப்படும் சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் முறைகேடாகப்பதிவு செய்யப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அன்வர்தீன் மதுரை மத்திய சிறையில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும், பலத்த சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.</p><h2>பொறுப்புடன் அணுக வேண்டும்</h2><p>பெரும் சொத்து முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவர், நீதிமன்ற காவலில் இருந்தபோதே சிறைக்குள் உயிரிழந்திருப்பது சாதாரண நிகழ்வாக கடந்து செல்லக்கூடியதல்ல. இதே வழக்கில் கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த இரு நிகழ்வுகளையும் அரசு மிகுந்த பொறுப்புடன் அணுக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.</p><h2>தீர்மானிக்க முடியாது</h2><p>அன்வர்தீனின் மரணத்திற்கான காரணத்தை விசாரணை முடிவதற்கு முன்பே எவரும் தீர்மானிக்க முடியாது. ஆனால், சிறைக் காவலில் நிகழ்ந்த மரணம் என்பதால், அரசு கூறும் விளக்கம் மட்டுமே இறுதியான உண்மையாக ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.</p><h2>தமிழக அரசின் கடமை</h2><p>மரணத்திற்கு முன்பு அவரது உடல்நிலை எப்படி இருந்தது? சிறையில் அவருக்கு முறையான மருத்துவக் கண்காணிப்பு இருந்ததா? உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டதா? சிறை வளாகத்தின் கண்காணிப்பு காட்சிகள் என்ன சொல்கின்றன? அவருடன் இருந்தவர்கள் யார்? அவரது இறுதி நேரங்களில் நடந்தது என்ன? இந்தக் கேள்விகளுக்கு பொதுமக்களுக்கு தெளிவான பதில் அளிக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.</p><h2>அதிகார சங்கிலி</h2><p>அதேவேளையில், இந்த மரணத்தை மட்டும் முன்னிறுத்தி பழனி கோவில் நில மோசடியின் அடிப்படை குற்றச்சாட்டை மறந்துவிடவும் கூடாது. கோவிலுக்கு சொந்தமானதாக கூறப்படும் பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் எவ்வாறு முறைகேடான ஆவணங்களின் மூலம் கைமாறியது? அதற்கு துணை நின்ற அதிகாரிகள் யார்?</p><p>பத்திரப்பதிவு நடைமுறையில் விதிமீறல்கள் எவ்வாறு நடைபெற்றன? இதன் பின்னணியில் அதிகார மையங்களின் தலையீடு இருந்ததா? ஆவணத்தில் கையெழுத்திட்டவர்களை மட்டும் விசாரிப்பது போதாது. அந்த ஆவணத்தின் பின்னால் இருந்த முழு அதிகார சங்கிலியையும் விசாரணை சென்றடைய வேண்டும்.</p> <h2>வன்மையாக கண்டிக்கிறது</h2><p>சிறை காவலில் இருந்த ஒருவரின் உயிரிழப்பை சுற்றி எழும் சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் அளிக்காமல் இருப்பதையும், கோவில் சொத்து முறைகேட்டின் பின்னணியில் உள்ள பெரிய வலையமைப்பை தொடாமல் இருப்பதையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.</p><h2>பிரேதப்பரிசோதனை அறிக்கை</h2><p>எனவே தமிழக அரசு, அன்வர்தீன் மரணம் குறித்து சுயாதீனமான, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும். பிரேதப்பரிசோதனை அறிக்கையை வெளிப்படையாக வெளியிட வேண்டும். சிறை மருத்துவப் பதிவுகள் மற்றும் கண்காணிப்பு காட்சிகளைப் பாதுகாத்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனின் உடல்நிலை குறித்த முழுமையான மருத்துவத் தகவல்களையும் உரிய முறையில் பதிவு செய்ய வேண்டும்.</p><h2>சட்டப்படி நடவடிக்கை</h2><p>பழனி கோவில் நில முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகள் அனைவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும். அரசியல் அல்லது அதிகார பின்னணி எதுவாக இருந்தாலும், குற்றத்தில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><h2>கொள்ளை பொருள் அல்ல</h2><p>கோவில் சொத்து என்பது தனிநபர்களின் கொள்ளை பொருள் அல்ல. அது மக்களின் நம்பிக்கையால் ஒப்படைக்கப்பட்ட பொதுச்சொத்து. அந்த சொத்தின் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள முறைகேட்டையும், சிறைக் காவலில் நிகழ்ந்துள்ள மரணத்தையும் தனித்தனி சம்பவங்களாக பார்க்காமல், இரண்டின் பின்னணியிலும் உள்ள உண்மையை முழுமையாக வெளிக்கொணர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>