<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 17 Sep 2026 04:23:31 +0000</lastBuildDate><item><title>லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை வந்தார் முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-arrived-in-chennai-after-concluding-his-london-trip</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-arrived-in-chennai-after-concluding-his-london-trip#comments</comments><guid isPermaLink="false">923eb84d-2136-406d-810f-5e9e340812fc</guid><pubDate>Thu, 17 Sep 2026 04:21:13 +0000</pubDate><atom:updated>2026-09-17T04:21:13.663Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,London,லண்டன்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/vjoq2ufq/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/vjoq2ufq/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முதல்-அமைச்சர் விஜய், அரசு முறை பயணமாக கடந்த 10-ந்தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு லண்டன் சென்றார். அங்கு அவருக்கு தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத்தொடர்ந்து 12-ந் தேதி புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயத் திடலுக்கு சில்வர்ஸ்டோன் பந்தயக் களத்தில் உள்ள உள்கட்டமைப்பு, பந்தயச் சுற்றுப்பாதை, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போட்டிகளை வணிக ரீதியாக நடத்தும் முறைகள் ஆகியவற்றை முதல்-அமைச்சர் விஜய் நேரில் பார்வையிட்டார். பின்னர் அங்கு நடிகர் அஜித் பங்கேற்ற கார் ரேசையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.</p><p>அதன் தொடர்ச்சியாக 2 நாட்கள் முதல்-அமைச்சர் விஜய், பல்வேறு தொழில் அதிபர்களை சந்தித்து தமிழ்நாட்டுக்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்த்தார். சுமார் ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன் மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக அரசு அறிவித்தது.</p><p>இந்த நிலையில், 7 நாள் லண்டன் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு முதல்-அமைச்சர் விஜய் இன்று சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு த.வெ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து காரில் நீலாங்கரை இல்லத்திற்கு சென்றார்.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சிலையுடன் கச்சத்தீவுக்கு செல்ல முயன்ற 10 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/10-people-arrested-while-attempting-to-travel-to-katchatheevu-with-a-vinayagar-idol</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/10-people-arrested-while-attempting-to-travel-to-katchatheevu-with-a-vinayagar-idol#comments</comments><guid isPermaLink="false">acb9f6cb-15cf-46be-8584-543ffc904f7d</guid><pubDate>Thu, 17 Sep 2026 04:05:19 +0000</pubDate><atom:updated>2026-09-17T04:05:19.236Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Dindigul,திண்டுக்கல்,கச்சத்தீவு,Katchatheevu,விநாயகர் சிலை,Vinayagar idol</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/yw74xim7/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/yw74xim7/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><p>பாரதிய இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் தர்மா கடந்த சில நாட்களுக்கு முன்பு, விநாயகர் சிலையுடன் சென்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், தமிழக அரசு கச்சத்தீவை மீட்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கச்சத்தீவில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்ய வேண்டும், என்று கூறியிருந்தார். </p><p>இந்த நிலையில் நேற்று திண்டுக்கல் பாரதிபுரத்தில் இருந்து கச்சத்தீவுக்கு செல்லப்போவதாக பாரதிய இந்து மக்கள் கட்சியினர் அறிவித்தனர். இதையடுத்து கட்சியின் நிறுவன தலைவர் தர்மா தலைமையிலான அந்த கட்சியினர் கச்சத்தீவில் வைத்து வழிபாடு நடத்துவதற்காக 3 அடி உயர விநாயகர் சிலை, பாரத மாதா உருவப்படம் ஆகியவற்றுடன் புறப்பட்டனர்.</p><p>தகவல் அறிந்த திண்டுக்கல் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அவர்களை தடுத்து நிறுத்தினர். கச்சத்தீவுக்கு செல்ல முயன்றதாக நிறுவன தலைவர் தர்மா உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் கொண்டு வந்த விநாயகர் சிலையையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>வலிமையான இந்தியாவை உருவாக்குவதில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி: முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/prime-minister-modi-dedicated-to-building-strong-india-chief-minister-vijay-greeting</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/prime-minister-modi-dedicated-to-building-strong-india-chief-minister-vijay-greeting#comments</comments><guid isPermaLink="false">f0450d15-9bc8-4f6b-ad3c-c24d7f239149</guid><pubDate>Thu, 17 Sep 2026 04:04:52 +0000</pubDate><atom:updated>2026-09-17T04:04:52.765Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரதமர் மோடி,PM Modi,பிறந்தநாள் வாழ்த்து,Greetings,வாழ்த்து,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/mk7n9qzk/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/mk7n9qzk/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 76-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.<br><br>தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்.<br><br>I… <a href="https://t.co/2stjwXq2JC">pic.twitter.com/2stjwXq2JC</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2100431356882772451?ref_src=twsrc%5Etfw">September 17, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-enrollment-in-government-schools-must-be-increased-anbumani-urges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-enrollment-in-government-schools-must-be-increased-anbumani-urges#comments</comments><guid isPermaLink="false">0568a3e0-9961-4de4-a7bc-57768521c55c</guid><pubDate>Thu, 17 Sep 2026 03:58:33 +0000</pubDate><atom:updated>2026-09-17T03:58:33.848Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,அரசு பள்ளி,மாணவர் சேர்க்கை,Student Admission,Govt school</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/x1r3odk4/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/x1r3odk4/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக வெளியாகியுள்ள புள்ளி விவரங்களின்படி, மொத்தமுள்ள 24,349 அரசு தொடக்கப்பள்ளிகளில், 14,829 பள்ளிகளில், அதாவது 60.90 பள்ளிகளில் மொத்தமுள்ள 5 வகுப்புகளிலும் சேர்த்து 30-க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே பயின்று வருகின்றனர். அதிலும் கூட, 6,635 பள்ளிகளில் 20-க்கும் குறைவான மாணவர்களும், 3,027 பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்களும் தான் பயின்று வருகின்றனர். 20 முதல் 30 மாணவர்கள் வரை பயிலும் அரசு தொடக்கப்பள்ளிகளின் எண்ணிக்கை 5,167 ஆகும்.</p><p>அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக வேகத்தில் வீழ்ச்சியடைந்து வருவதையே இந்த தரவுகள் காட்டுகின்றன. இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், 30-க்கும் குறைவான மாணவர்கள் படிக்கும்  சுமார் 15 ஆயிரம் பள்ளிகளில் பாதிக்கும் மேற்பட்டவை வட மாவட்டங்களில் தான் உள்ளன என்பதாகும். குறிப்பாக, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், கடலூர், திருவள்ளூர் ஆகிய 5 வட மாவட்டங்களில்  30-க்கும் குறைவான மாணவர்கள் பயிலும் அரசு தொடக்கப் பள்ளிகள் 3,062 உள்ளன. இது மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் 20.65 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைவது என்பது கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்கதையாகி வருகிறது. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 2024-25ம் ஆண்டில் 45.10 லட்சமாக இருந்தது. 2025-26-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 43.03 லட்சமாக குறைந்து விட்டது. அதாவது ஒரே ஆண்டில் அரசு பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை 2.07 லட்சம் குறைந்துள்ளது.</p><p>அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது ஏன்? என்பதைக் கண்டறிய ஆய்வுகள் எதுவும் தேவையில்லை. அரசு பள்ளிகளில் போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லாததும், அரசு பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்புகள் கூட ஏற்படுத்தப்படாததும் தான் இதற்கு காரணம் என்பதை பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 15 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. 5 வகுப்புகளைக் கொண்ட அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு ஒன்று அல்லது இரண்டு ஆசிரியர்கள் மட்டும் இருந்தால், அவர்களால் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் எவ்வாறு பாடம் நடத்த முடியும்?.</p><p>அவ்வாறு பாடமே நடத்தப்படாத பள்ளிகளில் தங்களின் குழந்தைகள் பயில்வதை எந்தப் பெற்றோர் விரும்புவார்கள்? ஆகிய வினாக்களுக்கு விடைகளை கண்டறிந்தாலே அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை வீழ்ச்சிக்கு தீர்வு காண தமிழக அரசால் முடியும். பொதுத்தளத்தில் உள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கடந்த 12 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. ஒரே ஒரு ஆண்டில் கூட அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. இந்த விவரங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசுக்கு நன்றாகத் தெரியும். மத்திய அரசும் இது தொடர்பான புள்ளிவிவரங்களை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது.</p><p>அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியும் ஒவ்வொரு ஆண்டும் வலியுறுத்தி வருகிறது. ஆனால், பிரச்சினைகளை களைந்து பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே நிலை தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை.</p><p>அதைத் தடுக்க வேண்டும் என்றால், அரசு பள்ளிகளுக்கு தேவையான அளவில் ஆசிரியர்களை நியமிக்கவும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியை உடனடியாக 50 விழுக்காடும், அடுத்த மூன்றாண்டுகளில் 100 விழுக்காடும் உயர்த்த வேண்டும். அரசு பள்ளிகளுக்கு புத்துயிரூட்டுவதை ஒரு சிறப்பு இயக்கமாகவே தமிழ்நாடு அரசு முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பெரியார் விதைத்த சமூக நீதியின் விதைகள் தலைமுறைதோறும் தழைத்தோங்கட்டும்: முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/may-the-seeds-of-social-justice-sown-by-periyar-flourish-through-generations-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/may-the-seeds-of-social-justice-sown-by-periyar-flourish-through-generations-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">76fe5d02-2754-4130-8ade-f01e716df1c0</guid><pubDate>Thu, 17 Sep 2026 03:50:20 +0000</pubDate><atom:updated>2026-09-17T03:50:20.213Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,birthday,X Page,பிறந்தநாள்,பெரியார்,Periyar,news,எக்ஸ் பக்கம்,செய்தி,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/mvkr3spk/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெரியார் பிறந்தநாள்: தமிழக முதல்-அமைச்சர் விஜய் எக்ஸ் பதிவு. ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/mvkr3spk/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தந்தை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">பெரியார்</a> விதைத்த சமூகநீதியின் விதைகள் தலைமுறைதோறும் தழைத்தோங்கட்டும் என தமிழக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a> தெரிவித்துள்ளார். </p><h2>பெரியாரின் 148-வது பிறந்தநாள்</h2><p>தந்தை பெரியாரின் 148-வது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D">பிறந்தநாள்</a> இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பெரியாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழக முதல்-அமைச்சர் விஜய் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: </p><h2>தமிழக முதல்-அமைச்சர் விஜய் எக்ஸ் பதிவு</h2><p>சுயமரியாதையும், சமூகநீதியும், பகுத்தறிவும் நிறைந்த முற்போக்குச் சிந்தனைகளை மக்கள் மனங்களில் விதைத்து, சாதி, மத வேறுபாடுகளைக் களைந்திடவும், மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும் தம் வாழ்நாள் முழுவதும் போராடிய தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளில், அவரது புரட்சிகரமான சிந்தனைகளையும், கொள்கைகளையும் பெருமையுடன் நினைவுகூர்ந்து வணங்குகிறேன். </p><p>தந்தை பெரியாரின் கொள்கைத் தடத்தில் பயணித்து, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற முழக்கத்தின்படி, சம வாய்ப்புகளால் அனைவரும் வளம்பெற்று, சுயமரியாதை மிளிரும் தமிழ்நாட்டை உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்!</p><p>தந்தை பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தலைமுறைதோறும் தழைத்தோங்கட்டும்! வெற்றித் தமிழகத்தை உருவாக்கும் பயணத்தில் அவரது கொள்கைகள் நமக்கு வழிகாட்டட்டும்! </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>சமூகநீதிக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வென்றெடுத்துக் காட்டியவர் தந்தைப் பெரியார் - அன்புமணி புகழாரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-man-who-raised-his-voice-for-social-justice-and-won-father-periyar-anbumani-tribute</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-man-who-raised-his-voice-for-social-justice-and-won-father-periyar-anbumani-tribute#comments</comments><guid isPermaLink="false">b5d29ef3-9148-41cb-bd71-34791b1055c4</guid><pubDate>Thu, 17 Sep 2026 03:50:01 +0000</pubDate><atom:updated>2026-09-17T03:50:01.659Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,PMK,Periyar,Social Justice Day,பெரியார் பிறந்தநாள்,Periyar birthday,தந்தை பெரியார்,சமூகநீதி நாள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/sc73ia1t/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/sc73ia1t/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பகுத்தறிவுத் தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் 'சமூகநீதி நாளாக' கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் கனவு கண்ட 100 சதவீத வகுப்புவாரி இடப்பங்கீட்டை வென்றெடுப்பதற்காக போராட உறுதியேற்போம் என்று பாமக தலைவர்  அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியாரின் 148-ம் பிறந்தநாள் இன்று உலகில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தந்தைப் பெரியாரை வணங்கி போற்றுகிறேன்.</p><p>தமிழ்நாட்டில் சமூகநீதிக்காக தொடர்ந்து குரல் எழுப்பி, போராட்டங்களை நடத்தி, வென்றெடுத்துக் காட்டியவர் தந்தைப் பெரியார். அவரது அந்த உறுதி தான், தமிழ்நாட்டில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மிக மிக மோசமான நிலையில் இருந்த வன்னிய மக்கள் உள்ளிட்ட அனைத்து சமூகங்களுக்கும் சமூகநீதியை வென்றெடுப்பதற்கான தொடர்சாலை மறியல் போராட்டத்தை 39 ஆண்டுகளுக்கு முன் அவரது பிறந்தநாளில் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தை சமூகநீதிக் காவலர் ராமதாசுக்கு ஏற்படுத்தியது.</p><p>தமிழ்நாட்டில் அனைத்து மக்களுக்கும் 100 சதவீத வகுப்புவாரி இடப்பங்கீட்டை வழங்க வேண்டும் என்பதுதான் தந்தைப் பெரியாரின் கனவு. அதுதான் பாட்டாளி மக்களின் லட்சியம். பெரியாரின் கனவை நனவாக்கவும், பாட்டாளி மக்கள் கட்சியின் லட்சியத்தை வென்றெடுக்கவும் போராடுவதற்கு இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>
விநாயகருடன் தங்கச்சங்கிலியை ஆற்றில் வீசிய ஓய்வு பெற்ற அரசு அதிகாரி
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/retired-officer-throws-gold-chain-river-with-ganesha</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/retired-officer-throws-gold-chain-river-with-ganesha#comments</comments><guid isPermaLink="false">785b7519-aca2-45d3-9bad-3dfcda49e933</guid><pubDate>Thu, 17 Sep 2026 03:44:58 +0000</pubDate><atom:updated>2026-09-17T03:44:58.204Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விநாயகர்,அரசு அதிகாரி,Gold chain,vinayagar,தங்கச்சங்கிலி,government official</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/mev915mw/rgows.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/mev915mw/rgows.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>கடலூர்</p> <p>ஓய்வு பெற்ற அரசு அதிகாரி, விநாயகருடன் தங்கச்சங்கிலியை ஆற்றில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><p>விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கடந்த திங்கட்கிழமை சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.  இதனை தொடர்ந்து, விநாயகர் சிலைகளை நீரில் கரைக்கும் நிகழ்வும் நடந்து வருகிறது.  இந்த நிலையில், கடலூர் வண்ணாரப்பாளையத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 62).  ஓய்வு பெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர்.</p> <h2>விநாயகர் சிலை</h2><p>இவர் விநாயகர் சதுர்த்தியையொட்டி தனது வீட்டில் சிறிய அளவிலான விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்தார். மேலும் அந்த சிலைக்கு தனது 1½ பவுன் தங்கச்சங்கிலியை அணிவித்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டு வந்தார்.</p><p>இந்த நிலையில் 3-வது நாளான நேற்று விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்க முடிவு செய்தார். இதற்காக அவர் நேற்று காலை 9.30 மணி அளவில் கடலூர் தேவனாம்பட்டினம் அருகில் உள்ள உப்பனாற்றுக்கு சென்றார். அங்கு அவர் உப்பனாற்றின் பாலத்தில் தங்கச்சங்கிலியுடன் விநாயகர் சிலையை வைத்து பூஜை செய்து தண்ணீரில் தூக்கி வீசினார்.</p> <h2>தீயணைப்பு வீரர்கள்</h2><p>அதன் பின்னர்தான் தங்கச்சங்கிலியை எடுக்காமல் ஆற்றில் வீசிவிட்டோமே என்ற நினைவு அவருக்கு வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராமமூர்த்தி, உடனே அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் தண்ணீரில் இறங்கி தங்கச்சங்கிலியை தேடத்தொடங்கினார். மேலும் இது பற்றி கடலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.</p><p>அதன் பேரில் தீயணைப்பு நிலைய வீரர்களும் விரைந்து வந்து மாலை 6 மணி வரை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ராமமூர்த்தி, சிலையை கரைத்த இடத்தையே பார்த்தபடி கவலையுடன் இருந்தார். ஆனால் விநாயகரும் கிடைக்கவில்லை. விநாயகருடன் சென்ற 1½ பவுன் சங்கிலியும் கிடைக்கவில்லை.</p> <h2>8½ மணி நேரம்</h2><p>காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை சுமார் 8½ மணி நேர தேடுதலுக்கு பிறகும் நகை கிடைக்காததால் ராமமூர்த்தி ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார். ஓய்வு பெற்ற அரசு அதிகாரி, சிலையை கரைக்கச்சென்ற இடத்தில், விநாயகர் சிலையுடன் 'மறந்துபோய்' தங்கச்சங்கிலியை ஆற்றில் வீசிய சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.</p> ]]></content:encoded></item><item><title>“சமூகநீதிக்காக சளைக்காமல் போராடிய துணிச்சல்காரர் பெரியார்” - ஆதவ் அர்ஜுனா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/periyar-was-a-brave-man-who-fought-tirelessly-for-social-justice-adhav-arjuna</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/periyar-was-a-brave-man-who-fought-tirelessly-for-social-justice-adhav-arjuna#comments</comments><guid isPermaLink="false">e7c2e94e-9f3c-4af0-990f-9a0e0859651b</guid><pubDate>Thu, 17 Sep 2026 03:34:57 +0000</pubDate><atom:updated>2026-09-17T03:34:57.748Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,ஆதவ் அர்ஜுனா,Social justice,Mullaiperiyar,தந்தை பெரியார்,Adhav Arjuna</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/03r7we9h/357.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜுனா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/03r7we9h/357.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பெரியாரின் பிறந்ததினத்தை முன்னிட்டு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><h2>புகழாரம்</h2><p>'மக்கள் பிறவியினால் உயர்வு தாழ்வு உண்டென்ற கொள்கையை அடியோடு மறுக்கிறோம்' என்று சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாடான செங்கற்பட்டு மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த சமத்துவக் கோட்பாட்டை தன் வாழ்நாள் முழுவதும் பிரசாரம் செய்து, தமிழக மக்கள் தன்மானத்துடன் வாழப் பேரொளியாய் வழிகாட்டிய தந்தை பெரியாரின் பிறந்தநாள் இன்று.</p><p>சமத்துவச் சிந்தனையை மக்கள் மயமாக்கிய பேராளுமை. சமூகநீதிக்காகச் சளைக்காமல் போராடி அரசியலமைப்பு முதல் திருத்தத்தை மேற்கொள்ளக் காரணமாக இருந்த துணிச்சல்காரர். பெண் விடுதலைக்காக முன்னின்று, 'மானுட சமத்துவத்தின் முதல் படி ஆண்-பெண் சமமென்ற சமூகம்' என்று கூறிய அறத்தின் குரல். இந்தி மொழி ஆதிக்கத்தைக் கண்டித்த போராளி. 'சுயமரியாதை வாழ்வே சுக வாழ்வு' என்று அறிவித்த சுடரொளி.</p><p>சாதி மற்றும் மதப் பெரும்பான்மைவாதத்திற்கு எதிரான கொள்கை அரணாக நம்மை வழிநடத்திக்கொண்டு இருக்கும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">தந்தை பெரியாரின்</a> புகழைப் போற்றுவோம். 'மதச்சார்பற்ற சமூகநீதி கொள்கைகள்' வழியில் சமரசமின்றி பயணிப்போம் என்று உறுதியேற்போம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>“தி.மு.க., கண்டிராத வெற்றியும் இல்லை; சந்தித்திராத தோல்வியும் இல்லை” - கனிமொழி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-no-victory-the-dmk-has-not-witnessed-nor-any-defeat-it-has-not-faced-kanimozhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-no-victory-the-dmk-has-not-witnessed-nor-any-defeat-it-has-not-faced-kanimozhi#comments</comments><guid isPermaLink="false">02d2cf09-3a14-4bd1-9c9b-202253b482b1</guid><pubDate>Thu, 17 Sep 2026 03:31:38 +0000</pubDate><atom:updated>2026-09-17T03:31:38.832Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,திமுக,DMK,தமிழகம்,கனிமொழி,Kanimozhi,DravidaMunnetraKazhagam,திராவிட முன்னேற்றக் கழகம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/3e2gqpp7/kani.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/3e2gqpp7/kani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திராவிட முன்னேற்றக் கழகத்தின் பயணம் 78-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளநிலையில், கலைஞரின் சொற்களை நெஞ்சில் ஏந்தி, கொள்கை பாதையில் தொடர்ந்து முன்னேறிச செல்வோம் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/kanimozhi">கனிமொழி</a> தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதளத்தில் கூறியதாவது:-</p><p>தமிழினத்தின் உரிமைக் குரலாக உதித்த திராவிட முன்னேற்றக் கழகம், கண்டிராத வெற்றியும் இல்லை; சந்தித்திராத தோல்வியும் இல்லை.</p><p>“ஆட்சி வரும், போகும்; அய்யா, அண்ணா வகுத்த கொள்கை போகாது; வாழும் நிலையாக!” என்ற தலைவர் கலைஞரின் சொற்களை நெஞ்சில் ஏந்தி, கொள்கைப் பாதையில் தொடர்ந்து முன்னேறிச் செல்வோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-sentenced-to-20-years-in-prison-for-sexually-assaulting-a-female-student</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-sentenced-to-20-years-in-prison-for-sexually-assaulting-a-female-student#comments</comments><guid isPermaLink="false">fa11e737-958f-46be-a5ed-b442b5231382</guid><pubDate>Thu, 17 Sep 2026 03:21:03 +0000</pubDate><atom:updated>2026-09-17T03:21:03.230Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>வாலிபர்,சிறை தண்டனை,Prison</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/go1wzo5m/8.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/go1wzo5m/8.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி, </p><p>தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 20). இவர், கடந்த 2024-ம் ஆண்டு ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்த 16 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் கொடுத்த புகாரின்பேரில், பெரியகுளம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, ஜெயராமனை கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் நடந்தது. அரசு தரப்பில் வக்கீல் ரக்சிதா ஆஜராகி வாதாடினார்.</p> <p>வழக்கு விசாரணை முடிவில் ஜெயராமனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.50 அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி எழில் நேற்று தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ஜெயராமனை போலீ சார் பாதுகாப்பாக அழைத்துச்சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 7 ஆண்டு சிறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/elderly-man-gets-7-years-in-prison-for-sexually-harassing-5-year-old-girl</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/elderly-man-gets-7-years-in-prison-for-sexually-harassing-5-year-old-girl#comments</comments><guid isPermaLink="false">6f7f9066-09e3-447f-aa94-1b6bdaada800</guid><pubDate>Thu, 17 Sep 2026 03:12:53 +0000</pubDate><atom:updated>2026-09-17T03:12:53.024Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Sexual harassment,Elderly man,முதியவர்,சிறை தண்டனை,Prison sentence,பாலியல் தொந்தரவு,சிறுமி,girl</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/jmixr3ki/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதியவருக்கு 7 ஆண்டு சிறை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/jmixr3ki/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">போக்சோ வழக்கில்</a> சம்பந்தப்பட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D">முதியவருக்கு</a> 7 ஆண்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">சிறை தண்டனை</a> மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. </p><h2>5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு</h2><p>தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு 5 வயது சிறுமியை, அப்பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81">பாலியல் தொந்தரவு</a> செய்தார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முதியவரான சாத்தான்குளம் கட்டாரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த சாமுவேல் மகன் தங்கையாதவமணி(எ) ஞானதுரை (வயது 67) என்பவரை சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். </p><h2>முதியவருக்கு 7 ஆண்டு சிறை</h2><p>இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மேற்சொன்ன நீதிமன்ற நீதிபதி முருகன் நேற்று (16.9.2026) மேற்சொன்ன முதியவர் தங்கையாதவமணி(எ) ஞானதுரை என்பவரை குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கவும் உத்தரவிட்டு தீர்ப்பளித்தார். </p>]]></content:encoded></item><item><title>காலமெல்லாம் காவல் பட்டாளமாகி உழைக்க களப்பணியாளர்கள் தயார் - தி.க. தலைவர் கி.வீரமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/field-workers-ready-to-work-as-an-organized-force-dk-president-k-veeramani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/field-workers-ready-to-work-as-an-organized-force-dk-president-k-veeramani#comments</comments><guid isPermaLink="false">e07317be-0a47-4fc1-9f26-807dadb9f922</guid><pubDate>Thu, 17 Sep 2026 03:07:17 +0000</pubDate><atom:updated>2026-09-17T03:07:17.453Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>birthday,கி.வீரமணி,Periyar,தந்தை பெரியார் திராவிட கழகம்,பெரியார் பிறந்த நாள் விழா,K.Veeramani</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/ojqnvs2v/peri.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/ojqnvs2v/peri.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தந்தை பெரியார் இயக்கத்தின் முன், எந்த எதிர்ப்பும், கந்தகத்தைத் தொட்ட கனலின் குச்சிகள் போல, தானே வெந்து போகும் என்பது உறுதி என்று தந்தை பெரியார் 148ம் ஆண்டு பிறந்தாள் வாழ்த்து செய்தியில், தி.க தலைவர் கி.வீரமணி சூளுரைத்துள்ளார். </p><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>நம் பேராசான் தந்தை பெரியாரின் 148 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாச் செய்தி!</p><p>வருக அவர் விரும்பும் சுயமரியாதை உலகு!</p><p>நமது லட்சியங்களை நாம் அடைய வேண்டுமானால், அதற்குரிய கஷ்ட நஷ்டங்கள், கள அடக்குமுறைகள், அவதூறுகள், அழிவழக்குகள் அனைத்தையும் எதிர்கொண்டு, அவற்றிற்குரிய விலையை நாம் கொடுத்தே தீரவேண்டும். இதில் சற்றும் பின்வாங்கக்கூடாது.</p><h2>அனைவருக்கும் அரிய பாடங்கள் ஆகும்!</h2><p>தன்னலம் பாராது இப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் எவருக்கும் இது எளிதான வகையில், லட்சியப் போரில், உரிய வெற்றியை நிச்சயம் அளித்தே தீரும்’’ என்ற அருமையான அனுபவ முத்திரை பதித்த அறிவுரை, அய்யாவின் அருந்தொண்டர்களாகிய நமக்கு மட்டுமல்ல, பொதுத் தொண்டில் ஈடுபடும் அனைவருக்கும் அரிய பாடங்கள் ஆகும்!</p><p>ஒப்பாரும், மிக்காரும் இல்லாத தந்தை பெரியார், ஒற்றை மனிதராக சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி, ‘உலகத்தோரின் எதிர்ப்பு இமயமே ஆனாலும், எனது லட்சியப் பயணத்தில் நான் ஒருபோதும் சோர்வடையேன்; நில்லேன்; மாரத்தான் ஓட்டப் பந்தய வீரனைப் போல், அலுக்காது, சலிக்காது ஓடிக்கொண்டே இருப்பேன்’’ என்ற உள்ள உறுதியோடு, எதிர்நீச்சலே எனக்கு வாடிக்கை என்று,  தனது 95 ஆம் ஆண்டுவரை, 1973 டிசம்பர் 19 ஆம் தேதிவரை உடல் உபாதைகள், வலிகள், வேதனைகள் எல்லாவற்றையும் தாண்டியவர். </p><p>அவர் பணியில் ஓய்ந்தவர் இல்லை என்று எதிரிகள்கூட திகைக்கும் வண்ணம் வாழ்ந்தவர் ‘அய்யா’ என்ற நம் அறிவாசான்! தனி மனிதன் என்ற நிலை மாறி, தத்துவ அறிவுக் கலங்கரை வெளிச்சமாகி, அவரது கொள்கை உலகமயமாகி வரும் நிலையில்தான், இன்று (17.9.2026) கொண்டாடப்படுகிறது பெரியார்தம் 148 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா!</p><p>53 ஆண்டுகள் அவர் முடிவெய்தி உருண்டோடி விட்டன!</p><p>இன்னமும்  அவர், ஆரியத்தின் அடிவேரையே அகற்றும் கோடரியாய் காணப்படுகிறார்!</p> <h2>உலக அதிசயங்களில் முதன்மையானவை!</h2><p>அவர் எவரையும் வெறுத்தவர் இல்லை! ஆனால், அவர் இன்றும்கூட, போதை ஏறி, பாதை தெரியாதவர்களால் வெறுக்கப்பட்டு, கூலிப்படையாய், விபீடணன் - அனுமான் - சுக்கீரவன்களாகி வந்தாலும், ‘அத்தகைய எதிர்ப்பை நான் விரும்புகிறேன்; எனது கொள்கைப் பயிர் வளர, அப்படி ஒரு உரம் தேவையல்லவா?’ என்று  எதிர்ப்பை வரவேற்கும் ஏற்றமிகு தலைவராக, வரலாற்றில் வாழ்ந்து வருகிறார் என்பது உலக அதிசயங்களில் முதன்மையானவை!</p><p>அவரது காலத்தில், அவர் நின்ற, வென்ற களங்களில் எதிர்த்து நின்றவர்கள் பெயர்கள், மக்கள் நினைவிலிருந்து மறைந்தே போய்விட்டன.</p><p>களம் காண – கழகத்தில், அஞ்சாநெஞ்சர்களை ஆயிரக்கணக்கில் உருவாக்கிவிட்டுத்தான் அவர் கண்மூடி, நமக்குக் கலங்கரை வெளிச்சமாகி, லட்சிய ஒளியாக, இன்று வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்!</p><h2>நெருப்பின் முன்னால் பருத்திப் பொதியா?</h2><p>புரட்சிக்கவிஞர் இதுபற்றி தீட்டிய ஒரு கருத்தோவியத்திலிருந்து உணர்வு கொப்பளிக்கும் வைர வரிகளில் சில, இதோ:</p><p>‘‘உண்மை ஒளியினை மக்களுக்குக் கூட்டிய</p><p>பெரியார்தம்மை ஏசினர்; பேசினர்.</p><p>குட்டிநாய்கள்போல் குரைத்துப் பார்த்தனர்</p><p>கோழைநரிகள்போல் ஊளைஇட்டனர்</p><p>நெருப்பின் முன்னால் பருத்திப் பொதியா?</p><p>வெள்ளத்தின் முன் உப்பு மூட்டையா?</p><p>ஊற்றை மண்ணால் அடைக்க முடியுமா?</p><p>புல்லேந்தும் கையால் வில்லேந்துவதாகச்</p><p>சொல்லேந்திப் பார்த்து சோர்வடைந்தனர்!</p><p>விபீடண மரபில் பிறந்த ஒருவரை</p><p>கேடயமாக்கி கீழற்றுப்பவர்கள்’’</p><p>தந்தை பெரியார் இயக்கத்தின் முன், எந்த எதிர்ப்பும், கந்தகத்தைத் தொட்ட கனலின் குச்சிகள் போல, தானே வெந்து போகும் என்பது உறுதி!</p><h2>சுயமரியாதை உலகு!</h2><p>காலமெல்லாம் காவல் பட்டாளமாகி உழைக்கக் களப்பணியாளர்கள் தயார் – வீரர்களாகிய கருஞ்சட்டைப் பட்டாளத்திற்குக் கடமையே கண்ணாகும்.</p><p>அணிவகுப்போம், என்றும் தயாராக!</p><p>பணி முடிப்போம், தயக்கமின்றி!!</p><p>திக்கெட்டும் திராவிட ஒளி பரவட்டும்!</p><p>பெரியார் உலக மயம் - உலகம் பெரியார் மயம்.</p><p>இது கனவல்ல; செயல் திட்டத்தின் செழுமை! வாழ்க பெரியார்.</p><p>வருக அவர் விரும்பும் சுயமரியாதை உலகு.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>“ஆதிக்கத்திற்கு எதிரானது பெரியாரின் போராட்டம்” - எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/periyars-struggle-was-against-domination-edappadi-palaniswami</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/periyars-struggle-was-against-domination-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">1632ab56-e193-4918-813d-70597d4b538f</guid><pubDate>Thu, 17 Sep 2026 02:49:52 +0000</pubDate><atom:updated>2026-09-17T02:49:52.971Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,Edappadi Palaniswami,சென்னை,Periyar birthday,தந்தை பெரியார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/3801m43l/356.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/3801m43l/356.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.</p><p>அந்த வகையில், தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>புகழாரம்</h2><p>ஆயிரம் ஆண்டுகளாக வேரூன்றியிருந்த சாதிய ஆதிக்கத்தையும், சமூக ஏற்றத்தாழ்வுகளையும், மூடநம்பிக்கைகளையும் எதிர்த்து, சுயமரியாதை- பகுத்தறிவு- சமத்துவம்- சமூகநீதி எனும் நான்கு தூண்களின் மீது புதிய எழுச்சிமிகு சமூகத்தைக் கட்டமைக்கப் போராடியவர் தந்தைப் பெரியார் பிறந்தநாளில், அவர்தம் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன்.</p><p>அவரது போராட்டம் ஒரு தனிமனிதருக்கு எதிரானதல்ல; ஆதிக்கத்திற்கு எதிரானது. அவரது குரல் ஒரு காலத்திற்கானதல்ல; சமத்துவம் நிலைநாட்டப்படும் வரை தொடர வேண்டிய குரல்.</p><p>“பிறப்பால் உயர்வு - தாழ்வு இல்லை; மனிதன் மனிதனாக மதிக்கப்பட வேண்டும்” என்ற சமூகநீதிப் பாதையைத் தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூக வாழ்வில் ஆழமாகப் பதித்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">பெரியாரின்</a> வழியில் என்றும் நடந்திட உறுதியேற்போம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மரம் விழுந்து குட்டி யானை உயிரிழப்பு: தாய் யானை பாசப்போராட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/calf-elephant-dies-after-tree-falls-mother-elephants-emotional-struggle</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/calf-elephant-dies-after-tree-falls-mother-elephants-emotional-struggle#comments</comments><guid isPermaLink="false">4aa54991-5c61-486f-b14d-3277370a31f4</guid><pubDate>Thu, 17 Sep 2026 02:48:15 +0000</pubDate><atom:updated>2026-09-17T02:48:15.512Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Erode,ஈரோடு,elephant,குட்டி யானை</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/z7avw58l/7.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/z7avw58l/7.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>ஆசனூர் அருகே மரம் விழுந்ததில் காயம் அடைந்த குட்டி யானை இறந்தது.</p><h2>உடல் நலம் பாதிப்பு</h2><p>ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட ஆசனூர் வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் மாலை குட்டி யானை ஒன்று தாயை பிரிந்து வெளியேறியது. பின்னர் அந்த யானை தமிழக-கர்நாடக மாநில எல்லையான காரப்பள்ளம் வன சோதனைச்சாவடி அருகே வந்தது. அப்போது திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அந்த இடத்திலேயே படுத்தது. </p><h2>வனத்துறையினரை விரட்டியது</h2><p>இதைத்தொடர்ந்து சோதனைச்சாவடி குட்டி வன ஊழியர்கள் அங்கு சென்று யானையை எழுப்பமுயன்றனர். ஆனால் யானையால் எழுந்திருக்க முடியவில்லை. இதற் கிடையே அங்கு வந்த தாய் யானை குட்டி யானையை சுற்றி சுற்றி வந்து பாசப்போராட்டம் நடத்தியது. யாரையும் குட்டி யானை அருகே நெருங்கவிடவில்லை. இதனால் சோதனைச்சாவடி ஊழியர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். </p> <p>இதையடுத்து குட்டி யானை படுத்து கிடந்த இடம் கர்நாடக வனத்துறைக்குட்பட்ட பகுதி என்பதால் கர்நாடகா வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவர்கள் அங்கு செல்ல முயன்றனர். ஆனால் தாய் யானை அவர்களையும் துரத்தியுள்ளது. மேலும் இரவு ஆனதால் வனத்துறையினர் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.</p><h2>குட்டி யானை சாவு</h2><p>இதைத் தொடர்ந்து நேற்று காலை நடை டாக்டர் மற்றும் கர்நாடகா வனத்துறையினர் 10-க்கும் மேற்பட்டோர் அங்கு சென்றனர். பின்னர் பட்டாசு வெடித்து தாய் யானையை அங்கிருந்து விரட்டிவிட்டனர். - அதன்பின்னர் படுத்து கிடந்த குட்டி யானைக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குட்டி யானை இறந்தது.</p><p>இதுகுறித்து கால்நடைடாக்டர் கூறும்போது, 'இறந்த ஆண் குட்டி யானைக்கு 2 வயது இருக்கும். குட்டியானையின் கழுத்தில் மரம் விழுந்துள்ளது. இதனால் படுகாயம் அடைந்து உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது' என்றனர். தொடர்ந்து யானையின் உடல் பிரேத பரி சோதனை செய்யப்பட்டு அங்கேயே குழி - தோண்டி புதைக்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காகவே அன்பில் மகேஷ் வீட்டில் சோதனை - கனிமொழி விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/raid-on-anbil-maheshs-house-is-merely-to-divert-public-attention-kanimozhi-criticizes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/raid-on-anbil-maheshs-house-is-merely-to-divert-public-attention-kanimozhi-criticizes#comments</comments><guid isPermaLink="false">f8071315-d78c-43a2-8a1e-032d8c9c23cb</guid><pubDate>Thu, 17 Sep 2026 02:34:53 +0000</pubDate><atom:updated>2026-09-17T02:34:53.278Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,திமுக,DMK,தமிழகம்,தமிழக அரசு,கனிமொழி,Anbil Mahesh,அன்பில் மகேஷ் பொய்யாமொழி,Kanimozhi,அன்பில் மகேஷ்,TamilNadu Goverment</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/j57o7os7/kanis.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/j57o7os7/kanis.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் ரூ.100 கோடி லஞ்சப்புகார் தொடர்பாக <a href="https://www.dailythanthi.com/topic/dmk">தி.மு.க.</a> முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது வழக்கு பாய்ந்தது.</p><p>இது தொடர்பாக சென்னை, திருச்சியில் 9 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது. சோதனை முடிவில் 18-ந்தேதி (நாளை) விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு போலீசார் சம்மன் வழங்கி சென்றனர்.</p><p>இந்நிலையில் மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக அன்பில் மகேஷ் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், புதிய தலைமைச் செயலகத்திற்காக பட்டினப்பாக்கம் மக்களை அப்புறப்படுத்தும் முயற்சி என, த.வெ.க. அரசின் அராஜகங்களை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். அதோடு, முதலீடுகளை ஈர்க்கச் சென்ற வெளிநாட்டுப் பயணத்தின் உண்மை நிலையும் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், வழக்கம்போல மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக, நேற்று முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.</p><p>அதிகாரத்தைப் பயன்படுத்தி அச்சுறுத்துவதாலும், அடக்குமுறைகளாலும் தி.மு.கழகத்தின் குரலை ஒருபோதும் ஒடுக்கிவிட முடியாது. இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு எல்லாம் தி.மு.கழகம் ஒருபோதும் அடிபணியாது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>விளைச்சல் பாதிப்பு: தேங்காய் விலை உயர வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/impact-on-yield-coconut-prices-likely-to-rise</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/impact-on-yield-coconut-prices-likely-to-rise#comments</comments><guid isPermaLink="false">6651964c-c493-4736-83ca-bf6121b580ca</guid><pubDate>Thu, 17 Sep 2026 02:34:06 +0000</pubDate><atom:updated>2026-09-17T02:34:06.363Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்,தேங்காய் விலை,Coconut Prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/zkp79a4v/6.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/zkp79a4v/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர், </p> <p>தமிழகம் முழுவதும் தேங்காய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் விலை உயரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் இருப்பு வைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.</p><h2>தேங்காய் விளைச்சல்</h2><p>உடுமலை, குடிமங்கலம் பகுதிகளில் தென்னை சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. தேங்காயை விட இளநீர் அதிக வருவாய் தருவதால் விவசாயிகள் பலரும் இளநீர் உற்பத்தியில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். இந்தநிலையில் கடும் வெயில், தண்ணீர் பற்றாக்குறை, நோய் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தேங்காய் விளைச்சல் குறைந்துள்ளது. வறண்ட வானிலை தொடர்வதாலும், ஏராளமான மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாலும் விளைச்சல் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p> <p>கேரளம் மாநிலத்திலும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தேங்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தேங்காய் விலை மளமளவென அதிகரித்து விரைவில் புதிய உச்சத்தை தொடும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். எனவே பல விவசாயிகள் பறித்த தேங்காய்களை விற்பனை செய்யாமல் விளைநிலங்களில் குவித்து வைத்து இருப்பு வைக் கின்றனர்.</p><h2>ஏற்றுமதி</h2><p>தற்போது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தேங்காயின் விலை உயர்ந்து, ஒரு கிலோ ரூ.52 வரை விற்பனையாகிறது. ஒரு டன் தேங்காய் ரூ.52 ஆயிரம் வரை விற்பனையாகிறது. விரைவில் ஒரு கிலோ ரூ.70 என்ற நிலையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேங்காயை இருப்பு வைப்பதற்கு அதிகம் மெனக்கெடத் தேவையில்லை. கூடுதல் செலவினங்கள் எதுவும் இல்லாமல் தோப்பிலேயே குவித்து வைத்து இருப்பு வைக்க முடியும். எனவே தேங்காய்களை இருப்பு வைத்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக விவசாயிகள் கூறினர்.</p> ]]></content:encoded></item><item><title>மோட்டார் சைக்கிள் மீது சொகுசு பஸ் மோதி 2 வாலிபர்கள் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/2-youths-killed-after-luxury-bus-hits-motorcycle</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/2-youths-killed-after-luxury-bus-hits-motorcycle#comments</comments><guid isPermaLink="false">9450ebcd-2eed-40a5-a851-11e5319487a5</guid><pubDate>Thu, 17 Sep 2026 02:31:34 +0000</pubDate><atom:updated>2026-09-17T02:31:34.042Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,உயிரிழப்பு,Bus accident,Motorcycle,மோட்டார் சைக்கிள்,சொகுசு பஸ்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/kquz6nt3/26.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விபத்து]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/kquz6nt3/26.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கீழ்பென்னாத்தூர்,</p><p>கீழ்பென்னாத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது சொகுசு பஸ் மோதியதில் 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.</p><p>திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த வழுதலங்குணம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் வேடியப்பன். இவரது மகன் செல்வம் (வயது 25). பெங்களூருவில் கூலி வேலை செய்து வந்தார். அதே கிராமத்தில் உள்ள புதுத்தெருவை சேர்ந்த ராஜா ராமன் மகன் பரத் (23). இவர் சென்னையில் இருசக்கர வாகன மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.</p><p>நண்பர்களான செல்வம் மற்றும் பரத் ஆகிய இருவரும் சொந்த ஊரான வழுதலங்குணம் கிராமத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் திருமண விழாக்களில் கலந்து கொள்வதற்காக ஊருக்கு வந்திருந்தனர்.</p><h2>சொகுசு பஸ் </h2><p>நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் இருவரும் சாமி கும்பிட்டு விட்டு சொந்த வேலையாக மோட்டார் சைக்கிளில் வெளியூர் சென்றனர். பின்னர் நள்ளிரவு 12.30 மணி அளவில் இருவரும் மீண்டும் வழுதலங்குணம் கிராமத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். கீழ்பென்னாத்தூர் புறவழிச்சாலையில் உள்ள ராஜாதோப்பு கூட்ரோடு அருகே வந்தபோது புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற தனியார் சொகுசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் செல்வம் மற்றும் பரத் ஆகிய இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.</p><h2>விசாரணை</h2><p>இதுகுறித்து தகவல் அறிந்ததும் கீழ்பென்னாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a> வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொள்வதற்காக சொந்த ஊருக்கு வந்திருந்த நண்பர்கள் இருவரும் விபத்தில் பலியான சம்பவம் வழுதலங்குணம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடர், தலைமுறைகள் கடந்து ஒளிரட்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-rationalist-flame-lit-by-periyar-should-shine-across-generations-says-dmk-chief-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-rationalist-flame-lit-by-periyar-should-shine-across-generations-says-dmk-chief-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">846dbb2a-5462-4d67-b14e-018c2df00376</guid><pubDate>Thu, 17 Sep 2026 02:24:07 +0000</pubDate><atom:updated>2026-09-17T02:24:07.094Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,பெரியார்,Periyar,பெரியார் பிறந்தநாள்,Periyar birthday,MKstalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/6rtyzkp3/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/6rtyzkp3/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பகுத்தறிவுத் தந்தை பெரியாரின் பிறந்தநாள் 'சமூகநீதி நாளாக' கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று பெரியாரின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு, 'பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடர், தலைமுறைகள் கடந்து ஒளிரட்டும்' என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழர் தலைமுறை தலைநிமிரப் பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்குப் புரட்சி வணக்கம்! பல தலைமுறைகள் ஆதிக்கத்துக்குப் பணிந்தன. ஒரு தலைமுறை பெரியார் நிகழ்த்திய புரட்சியைக் கண்டது. பல தலைமுறைகள் அதன் மாற்றத்தைக் காண்கின்றன. ஆனாலும், ஆதிக்கம் இன்னும் முற்றாக அகலவில்லை. அதனை அடையாளம் காண வேண்டியது வரும் தலைமுறைகளின் பொறுப்பும்கூட!</p><p>வெளிச்சமற்ற இடம் இருள்; கேள்விகளற்ற சமூகம் அதைவிடப் பேரிருள். “ஏன்? எதற்கு? எப்படி?” என்ற கேள்விகள் உயிரோடு இருக்கும் வரை, இருள் நம்மை அண்டாது. பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடர், தலைமுறைகள் கடந்து ஒளிரட்டும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழர் தலைமுறை தலைநிமிரப் பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்குப் புரட்சி வணக்கம்!<br><br>பல தலைமுறைகள் ஆதிக்கத்துக்குப் பணிந்தன.<br><br>ஒரு தலைமுறை பெரியார் நிகழ்த்திய புரட்சியைக் கண்டது.<br><br>பல தலைமுறைகள் அதன் மாற்றத்தைக் காண்கின்றன.<br><br>ஆனாலும், ஆதிக்கம் இன்னும் முற்றாக அகலவில்லை.… <a href="https://t.co/K0vRSuzqmB">pic.twitter.com/K0vRSuzqmB</a></p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2100393046068396476?ref_src=twsrc%5Etfw">September 17, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க மாட்டோம் என உத்தரவாதம் அளிக்க வேண்டும் - பசுமை தீர்ப்பாயம் உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/must-guarantee-no-immersion-of-vinayagar-idols-in-waterbodies-green-tribunal-order</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/must-guarantee-no-immersion-of-vinayagar-idols-in-waterbodies-green-tribunal-order#comments</comments><guid isPermaLink="false">e65820cc-492e-41da-9675-e05391117c56</guid><pubDate>Thu, 17 Sep 2026 01:58:35 +0000</pubDate><atom:updated>2026-09-17T01:58:35.988Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt,விநாயகர் சதுர்த்தி,விநாயகர் சிலைகள்,Green Tribunal,பசுமை தீர்ப்பாயம்,Vinayagar Chathurthi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/s5miuwy5/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ பசுமை தீர்ப்பாயம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/s5miuwy5/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விநாயகர் சிலைகளை அடுத்த ஆண்டு முதல் இயற்கை நீர்நிலைகளில் கரைக்க மாட்டோம் என உத்தரவாதம் அளிக்க தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.</p><h2>விநாயகர் சதுர்த்தி</h2><p>சென்னையில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திக்காக பூஜைக்கு வைக்கப்படும் சிலைகள் பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் கரைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.</p><p>கடந்த வாரம் இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், சென்னை பட்டினப்பாக்கம், நீலாங்கரை ஆகிய பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்க தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் நேற்று அந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்யா நாராயணன், உறுப்பினர் பிரசாந்த் கார்கவே முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.</p><h2>தற்காலிக குட்டைகள்</h2><p>அப்போது அரசு தரப்பில், 'சிலைகளை கரைப்பதற்கு குறுகிய நாட்களே உள்ளதால் மாற்று இடத்தை ஏற்பாடு செய்வதில் நடைமுறை சிக்கல் உள்ளது. இந்த ஆண்டு பட்டினப்பாக்கம், நீலாங்கரை கடற்கரையில் சிலைகளை கரைக்க அனுமதிக்க வேண்டும். அடுத்த ஆண்டு முதல் இங்கு விநாயகர் சிலைகள் கரைக்கப்பட மாட்டாது' என தெரிவிக்கப்பட்டது.</p><h2>தீர்ப்பாயம் கேள்வி</h2><p>அப்போது மனுதாரர் தரப்பு வக்கீல், பட்டினப்பாக்கம், நீலாங்கரை மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த கடற்கரைகளிலும் அடுத்த ஆண்டு முதல் சிலைகள் கரைக்க அனுமதிக்கக்கூடாது என்றும் மாறாக தற்காலிக குட்டைகளை உருவாக்கி அதில் சிலைகளை கரைப்பதால் எந்த பிரச்சினையும் ஏற்படாது என்றும் வாதாடினார். சிலைகளுக்கு ஏற்ப கரைப்பதற்கான கட்டணத்தை வசூலிக்கும்படி பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில், அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது.</p><h2>உத்தரவாதம்</h2><p>விசாரணை முடிவில், அடுத்த ஆண்டு முதல் இயற்கை நீர்நிலைகளில், சிலைகள் கரைக்க அனுமதிக்க மாட்டோம் என்றும், விநாயகர் சிலைகள் கரைப்பது சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு மற்றும் பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுகள், விதிகள் பின்பற்றப்படும் என உத்தரவாதம் அளித்து தமிழக அரசு பிரமாணப் பத்திரத்தை இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்படும் என தீர்ப்பாயம் அறிவித்தது.</p>]]></content:encoded></item><item><title>பூம்புகார் கடைசி அணைக்கு வந்த காவிரிநீர் : விவசாயிகள் வரவேற்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-water-reaches-poompuhars-last-regulator-farmers-welcome-the-arrival</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-water-reaches-poompuhars-last-regulator-farmers-welcome-the-arrival#comments</comments><guid isPermaLink="false">2eb4c148-39f0-4f2c-b15e-2be4505bbcc5</guid><pubDate>Thu, 17 Sep 2026 01:56:29 +0000</pubDate><atom:updated>2026-09-17T01:56:29.090Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,காவிரி நீர்,Mayiladuthurai,மயிலாடுதுறை,Cauvery,Cauvery Delta,பூம்புகார்,காவிரி டெல்டா,டெல்டா பாசனம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/p5gtgxev/kadai.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/p5gtgxev/kadai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவெண்காடு, </p><p>பூம்புகார் கடைசி அணைக்கு காவிரிநீர் வந்தது. அந்த தண்ணீரை நீர்வளத்துறை அதிகாரிகள், விவசாயிகள் மலர்தூவி வரவேற்றனர்.</p><h2>மேட்டூர் அணை</h2><p>காவிரி டெல்டா பாசனத்துக்காக ஆண்டுதோறும் ஜூன் 12 -ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு போதிய மழையின்மை காரணமாக மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லை. இதனால் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. இந்தநிலையில் கர்நாடகாவில் பெய்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு ஓரளவு நீர்வரத்து அதிகரித்தது.</p><p>இதைத்தொடர்ந்து <a href="https://www.dailythanthi.com/topic/vijay">தமிழக முதல்- அமைச்சர் விஜய்</a> கடந்த 1-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை திறந்து வைத்தார்.</p><h2>கடைசி கதவணை</h2><p>இந்த தண்ணீர் தஞ்சையை அடுத்த கல்லணையை அடைந்து அங்கிருந்து கடந்த 6-ந்தேதி தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு திறந்து விடப்பட்டது. கடந்த 13-ந் தேதி இந்த தண்ணீர் மயிலாடுதுறை மாவட்ட எல்லையான திருவாலங்காட்டை அடைந்தது.</p><p>மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி கடலோடு கலக்கும் பூம்புகார் அருகே மேலையூரில் காவிரி ஆற்றின் கடைசி கதவணை அமைந்துள்ளது.</p><p>கர்நாடக மாநிலம் குடகு மலையில் உருவாகும் காவிரி ஆறு பல நூறு கிலோமீட்டர் ஓடி மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் அருகே மேலையூரில் உள்ள இந்த கடை அணையான சட்ரஸ் வழியாக பூம்புகார் கடலில் சங்கமிக்கும்.</p><h2>வரவேற்பு</h2><p>ஆண்டுதோறும் மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் இந்த கடைசி கதவனையை வந்தடைந்த பின்னர் தான் பாசனத்துக்கு நீர் திறக்கப்படும். இந்த ஆண்டு மேட்டூரில் கடந்த 1 -ந் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று மதியம் மேலையூரில் உள்ள காவிரியின் கடைசி கதவணையை அடைந்தது. காவிரி தண்ணீரில் பொதுபணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் படையலிட்டு மலர், தானியங்கள் தூவி வணங்கி வரவேற்றனர்.</p><p>இதில் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் சங்கர், மேலையூர் நீர்வளத்துறை உதவி பொறியாளர் சண்முகம் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.</p><h2>பெருந்தோட்டம் ஏரி</h2><p>இந்த கதவணையில் நீரை தேக்கி வைத்து ஒவ்வொரு பாசன ஆறுகள், கிளை வாய்க்கால்கள், மற்றும் பெருந்தோட்டம் ஏரிக்கு முறைவைத்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இதன் மூலம் 3,057 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.</p><p>பெருந்தோட்டம் ஏரி பாசனத்தின் மூலம் 2,020 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.</p><p>பெருந்தோட்டம் ஏரிக்கு உட்பட்ட கிளை வாய்க்கால்கள், மேலையூர் பகுதியில் வாய்க்கால்களை தண்ணீர் வந்தடைந்தாலும் குறைவாக தண்ணீர் வருவதால் பாசனத்துக்கு முழுமையாக தண்ணீர் வழங்க முடியாத நிலை உள்ளது. எனவே முறைவைக்காமல் கூடுதல் தண்ணீரை தொடர்ந்து வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>1,400 ஏக்கர் நாற்றுகள் கருகும் அபாயம்: டெல்டா மாவட்டங்களில் பாசன தட்டுப்பாடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/risk-of-1400-acres-of-seedlings-withering-irrigation-shortage-in-delta-districts</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/risk-of-1400-acres-of-seedlings-withering-irrigation-shortage-in-delta-districts#comments</comments><guid isPermaLink="false">712b9223-17ed-4174-b805-bcb54ee7ac67</guid><pubDate>Thu, 17 Sep 2026 01:42:12 +0000</pubDate><atom:updated>2026-09-17T01:42:12.289Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Farmers,தமிழகம்,தண்ணீர்,Delta Districts,சம்பா சாகுபடி,Samba Cultivation,டெல்டா மாவட்டங்கள்,பாசன வாய்க்கால்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/kie3j8lx/pasa.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/kie3j8lx/pasa.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர், </p><p>டெல்டா மாவட்டங்களில் பாசன தட்டுப்பாடு காரணமாக, 1,400 ஏக்கரில் நெல் நாற்றுகளை நடவு செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது.</p><p>நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர்  உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், குறுவை மற்றும் சம்பா என இரண்டு பருவங்களில் பிரதானமாக நெல் சாகுபடி நடக்கும். இந்த பருவங்களில் உற்பத்தியாகும் நெல்லின் பெரும் பகுதி, அரசின் உணவு தானிய திட்டத்திற்கு கொள்முதல் செய்யப்படுகிறது.</p><p>நடப்பாண்டு, மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாததால், குறுவை பாசனத்திற்கு ஜூனில் நீர் திறக்கப்படவில்லை. சம்பா சாகுபடிக்கு, கடந்த 1ம் தேதி நீர் திறக்கப்பட்டது. அடுத்த, 45 நாட்களுக்கு நீர் திறக்கப்படும் என்று அப்போது அறிவிக்கப்பட்டது.</p><p>நேற்றைய நிலவரப்படி வினாடிக்கு, 12 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது. ஆனால், டெல்டா மாவட்டங்களில் வறண்டு கிடக்கும் நீர்வழித்தடங்களை இந்த நீர் நனைக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆறுகளில் மட்டுமின்றி, பிரதான கால்வாய்களிலும் போதிய நீரோட்டம் இல்லை.</p><p>தண்ணீர் கிடைக்கும் என நம்பி டெல்டா மாவட்டங்களில், இதுவரை 22 ஆயிரம் ஏக்கரில் நெல் நடவு பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. மேலும், 1,400 ஏக்கரில் நாற்றுகள் விடப்பட்டு, நடவுக்கு தயார் நிலையில் உள்ளன.</p><p>ஒரு ஏக்கர் நாற்றை, 10 முதல் 15 ஏக்கர் வரை நடவு செய்ய வேண்டும். அதன்படி,14 ஆயிரம் முதல் 21 ஆயிரம் ஏக்கர் வரையில் இந்த நாற்றுகளை நடவு செய்யலாம். ஆனால், பாசனத்திற்கு நீர் கிடைக்காததால் நடவு செய்யாமல் அவை கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘ஏன் பள்ளிக்கு வரவில்லை?’ என கேட்ட தலைமை ஆசிரியர் மீது மாணவர்கள் தாக்குதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/students-attack-principal-after-asking-why-didnt-you-come-to-school</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/students-attack-principal-after-asking-why-didnt-you-come-to-school#comments</comments><guid isPermaLink="false">88c4d05d-c30c-49c9-a7be-233dab124a58</guid><pubDate>Thu, 17 Sep 2026 01:38:55 +0000</pubDate><atom:updated>2026-09-17T01:38:55.737Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தாக்குதல்,திருப்பூர்,student,attack,மாணவர்கள்,தலைமை ஆசிரியர்,Principal</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/mpka4toy/354.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆசிரியர் மீது மாணவர்கள் தாக்குதல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/mpka4toy/354.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><p>திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரை, பிளஸ்-2 மாணவர்கள் 7 பேர் அறைக்குள் புகுந்து சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><h2>தலைமை ஆசிரியர்</h2><p>பள்ளியின் தலைமை ஆசிரியர் கர்னல் (வயது 54), நேற்று தனது அறையில் அமர்ந்து, பள்ளிக்கு தொடர்ந்து வராமல் நேரடியாக தேர்வுக்கு வந்த மாணவர்களிடம் விசாரித்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அறைக்குள் புகுந்த பிளஸ்-2 மாணவர்கள் 7 பேர், அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.</p><p>சத்தம் கேட்டு அருகில் இருந்த வகுப்பறையில் இருந்து ஆசிரியர் ஒருவர் ஓடி வந்தார். இதையடுத்து மாணவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.</p><h2>சிகிச்சை</h2><p>தாக்குதலில் காயமடைந்த தலைமை ஆசிரியரை மீட்டு கல்லம்பாளையம் மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. முகத்தில் ஏற்பட்ட காயத்தில் இருந்து ரத்தம் வழிந்ததால், அவரது சட்டையும் ரத்தக்கறை படிந்தது.</p><p>மாலை வரை மருத்துவமனையில் இருந்த தலைமை ஆசிரியர், சிகிச்சை முடிந்ததும் மீண்டும் பள்ளிக்கு வந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே, சக ஆசிரியர் அளித்த தகவலின்பேரில் பள்ளிக்கு வந்த போலீசார், பிளஸ்-2 மாணவர்கள் சிலரை தலைமை ஆசிரியர் அறைக்கு அழைத்து வந்து தனித்தனியாக விசாரணை நடத்தினர். மேலும், பள்ளியில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.</p><p>இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் புனிதா அந்தோணியம்மாள் கூறுகையில், "தலைமை ஆசிரியர் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தியது மோசமான நடத்தை. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். தவறு செய்த மாணவர்கள் மீது தயக்கமின்றி கடும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">நடவடிக்கை</a> எடுக்கப்படும்" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>கும்பாபிஷேக பாதுகாப்பு பணி: போலீசார் தங்குவதற்காக மதுரையில் 24 பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kumbabishekam-security-duty-two-day-holiday-for-24-schools-in-madurai-to-accommodate-police-personnel</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kumbabishekam-security-duty-two-day-holiday-for-24-schools-in-madurai-to-accommodate-police-personnel#comments</comments><guid isPermaLink="false">53dadfc6-e472-401c-8af0-59d1768b2547</guid><pubDate>Thu, 17 Sep 2026 01:30:39 +0000</pubDate><atom:updated>2026-09-17T01:30:39.399Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,Madurai,மதுரை,பள்ளிகளுக்கு விடுமுறை,மதுரை மீனாட்சி அம்மன் கோவில்,school holiday,போலீசார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/m3pe2luq/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/m3pe2luq/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இன்று (வியாழக்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது. இந்த விழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதற்காக சுமார் 6,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த பணிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் வந்துள்ளனர். </p><p>ஆனால், இவர்களை தனியார் மண்டபங்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து, மதுரை நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்களில் போலீசார் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><p>அதன்படி விளக்குத்தூண் அவ்வையார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, எம்.ஏ.வி.எம்.எம். மேல்நிலைப்பள்ளி, அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப்பள்ளி, திலகர்திடல் மீனாட்சி பெண்கள், மங்கையர்க்கரசி, வீரமாமுனிவர், சேதுபதி, மீனாட்சி பஜார் தொழிலாளர் நலத்துறை ஆகிய மேல்நிலைப்பள்ளிகள், தெப்பக்குளம் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சவுராஷ்டிரா ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள். மீனாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தியாகராஜர் மாதிரி மேல்நிலைப்பள்ளி, அண்ணாநகர் எம்.வி.எம்.எம். மேல்நிலைப்பள்ளி, மதிச்சியம் இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, கீரைத்துறை செயிண்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளி, தெற்குவாசல் ஈ.வெ.ரா. பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 24 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.</p><p>ஏற்கனவே, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் இன்று ஒரு நாள் விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில், மேற்கண்ட பள்ளிகளுக்கு மட்டும் நேற்றும் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த பள்ளிகள் மட்டும் அடுத்த மாதம் ஒரு சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக செயல்பட வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தயாளன் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மது போதையில் அண்ணனை தாக்கியதில் மரணம்: 2 சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு 5 ஆண்டுகள் சிறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/2-convicted-criminals-sentenced-to-5-years-in-prison-for-beating-brother-to-death-while-under-the-influence-of-alcohol</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/2-convicted-criminals-sentenced-to-5-years-in-prison-for-beating-brother-to-death-while-under-the-influence-of-alcohol#comments</comments><guid isPermaLink="false">4ad94a0b-ae22-4001-82f4-59c38653fb3c</guid><pubDate>Thu, 17 Sep 2026 01:24:26 +0000</pubDate><atom:updated>2026-09-17T01:24:26.885Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தாக்குதல்,drunkenness,Tirunelveli,திருநெல்வேலி,சிறை தண்டனை,jail sentence,Death,மரணம்,attack,brother,மதுபோதை,அண்ணன்,2 people,2 பேருக்கு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/vsbb4w4q/2-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-5-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  2 சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு 5 ஆண்டுகள் சிறை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/vsbb4w4q/2-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-5-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டம், திசையன்விளை அருகே <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88">மதுபோதை</a>யில் அண்ணனை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">தாக்கி</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D">மரணம்</a> ஏற்படுத்திய வழக்கில் தம்பி உள்பட 2 சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">சிறை தண்டனை</a> மற்றம் ரூ.1,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>மதுபோதையில் தாக்கி உயிரிழப்பு</h2><p>திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே கடந்த 2021-ம் ஆண்டு,  அந்தோணியார்புரத்தை சேர்ந்த மிக்கேல்தயாளன் (வயது 50) என்பவரை அவரது தம்பி அந்தோணிமில்டன்(45) மற்றும் அவரது உறவினரான தனசிங்(35) ஆகிய 2 பேரும் சேர்ந்து மதுபோதையில் முன்விரோதம் காரணமாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக திசையன்விளை போலீஸ் நிலையத்தில் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு, அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் புலன் விசாரணை மேற்கொண்டு மேற்சொன்ன நபர்களை கைது செய்தார்.</p><h2>கொலையாகாத மரணம் விளைவித்த குற்றம்</h2><p>புலன் விசாரணை முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து வழக்கின் விசாரணையானது, வள்ளியூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் (எண்-V) நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ராஜ்மோகன், மேற்சொன்ன நபர்கள் புரிந்த குற்றத்தை கொலையாகாத மரணம் விளைவித்த குற்றம் (IPC 304(ii)) என தீர்மானித்து, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கினார். </p><h2>தண்டனை விபரம்</h2><p>IPC 304(ii)-ன்படி 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம், IPC 201-ன்படி 1 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.500 அபராதம், மேலும் மேற்சொன்ன தண்டனைகளை குற்றவாளிகள் ஏககாலத்தில் (Concurrent) அனுபவிக்க நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டார். குற்றவாளிகள் 2 பேரும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் (History Sheet offenders) என்பது குறிப்பிடத்தக்கது. </p><h2>எஸ்.பி. பாராட்டு</h2><p>இந்த வழக்கில் திறம்பட சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த வள்ளியூர் உட்கோட்ட டி.எஸ்.பி. வெங்கடேஷ், திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் எழில் சுரேஷ்சிங், இவ்வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் (தற்போது உதவி கமிஷனர், சென்னை மாநகரம்), வழக்கில் விசாரணைக்கு உதவி செய்த நீதிமன்ற காவலர் சபரிஸ் செல்வா மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர சிறப்பாக வாதிட்ட அரசு வழக்கறிஞர் வடிவேல் ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி பாராட்டினார்.</p><h2>7 கொலை வழக்குகளில் 14 பேருக்கு தண்டனை</h2><p>திருநெல்வேலி மாவட்டத்தில் 2026-ம் ஆண்டில் இதுவரை 7 கொலை வழக்குகளில் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு, 14 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. இதில் 6 சரித்திர பதிவேடு உடைய குற்றவாளிகள் உள்பட 8 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.</p><p>திருநெல்வேலி மாவட்ட காவல்துறையானது, நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரும் முனைப்பில் தொடர்ந்து உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&apos;வெண்ணிலா கபடி குழு&apos; பாணியில் போட்டி: 16 புரோட்டாக்கள் சாப்பிட்டவருக்கு ரூ.6 ஆயிரம் பரிசு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vennila-kabadi-kuzhu-style-parotta-eating-contest-16-parottas-6k-prize</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vennila-kabadi-kuzhu-style-parotta-eating-contest-16-parottas-6k-prize#comments</comments><guid isPermaLink="false">2ca55d49-fe8c-42dc-a3a2-d8356180392f</guid><pubDate>Thu, 17 Sep 2026 01:20:43 +0000</pubDate><atom:updated>2026-09-17T01:20:43.181Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Karaikudi,காரைக்குடி,சிவகங்கை,Parotta,food eating,சாப்பிடும் போட்டி,புரோட்டா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/fle0mdvv/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/fle0mdvv/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>காரைக்குடி,</p><p>காரைக்குடியில் நடைபெற்ற புரோட்டா சாப்பிடும் போட்டியில் 16 புரோட்டாக்கள் சாப்பிட்டவர் வெற்றி பெற்றார்.</p><h2>புரோட்டா சாப்பிடும் போட்டி</h2><p>'வெண்ணிலா கபடி குழு' படத்தில் ஒரு கடையில் 50 புரோட்டா சாப்பிடும் போட்டியில் நடிகர் சூரி பங்கேற்று சாப்பிடுவது போன்ற காமெடி காட்சி பிரபலம். அதை நினைவுப்படுத்தும் வகையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட இந்து முன்னணி சார்பில் காரைக்குடி நூறடி ரோட்டில் உள்ள ஒரு கடையில் புரோட்டா சாப்பிடும் போட்டி நடைபெற்றது.</p><h2>16 புரோட்டாக்கள்</h2><p>இதில் 2 சிறுவர்கள் உள்பட 8 பேர் கலந்து கொண்டு போட்டிபோட்டு சாப்பிட்டனர். இந்த போட்டியில் காரைக்குடியை சேர்ந்த சேகர் என்பவர் அதிகபட்சமாக 16 புரோட்டாக்கள் சாப்பிட்டு வெற்றி பெற்றார்.
</p><h2>தீய பழக்கம் இல்லை</h2><p>அவருக்கு இந்து முன்னணி சார்பில் ரூ.6 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது. இதுகுறித்து சேகர் கூறுகையில், எனக்கு புகைத்தல், மது உள்ளிட்ட எந்த கெட்ட பழக்கமும் இல்லாததால் அதிக புரோட்டா சாப்பிட முடிந்தது. வாழ்க்கையில் தீய பழக்கம் இல்லாத நபர்கள் எதிலும் வெற்றி பெறலாம் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>மரவள்ளி கிழங்கு விலை உயர்வு: டன் ரூ.15,500க்கு விற்பனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rise-in-tapioca-prices-sold-at-15500-per-tonne</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rise-in-tapioca-prices-sold-at-15500-per-tonne#comments</comments><guid isPermaLink="false">2cbe555f-2fdc-46c1-b647-6dba05c799bb</guid><pubDate>Thu, 17 Sep 2026 01:20:00 +0000</pubDate><atom:updated>2026-09-17T01:20:00.287Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>விற்பனை,sales,மரவல்லிக்கிழங்கு</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/sfcw7rw2/4.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/sfcw7rw2/4.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,  </p><p>மரவள்ளி கிழங்கு விலை உயர்ந்து, டன், 15 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. தமிழகத்தில் மரவள்ளி கிழங்கு உணவுக்கும், சிப்ஸ் போன்ற ஸ்நாக்ஸ்களில் பயன்படுத்தவும், ஸ்டார்ச் மாவு, ஜவ்வரிசி உற்பத்திக்கும் பயன்படுகிறது.</p><p>ஈரோடு மாவட்டத்தில் மார்ச் முதல் மூன்று மாதங்கள் அறுவடை சீசனாகும். கடந்தாண்டும், இந்தாண்டும் மழை இன்மையால் உற்பத்தி, வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு குறித்து தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க தலைவர் சுதந்திரராசு கூறுகையில், "கடந்த ஜனவரி மாதம் டன், 8,000 முதல் 9,000 ரூபாய்க்கு விற்பனையானது. சீசன் நேரம் வரத்து இருந்ததால் விலை குறைந்தும், சீராகவும் இருந்தது. தற்போது குறைந்த அளவே அறுவடையாவதால், ஆலைக்கு, டன், 15 ஆயிரத்து 500 ரூபாய்க்கு வாங்கி செல்கின்றனர்.</p><p>"கடந்த மாதத்தை ஒப்பிடும்போது, 500 முதல் 800 ரூபாய் விலை அதிகம். உணவு, சிப்ஸ் போன்ற பயன்பாட்டுக்கு டன், 18 ஆயிரம் முதல், 20 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி செல்கின்றனர். தற்போது, விலை நன்றாக இருப்பதால், லாபம் கிடைக்கிறது. ஆனால், வரத்து குறைவாகவே உள்ளது," என்றார்.</p>]]></content:encoded></item><item><title>சுபமுகூர்த்த தினம்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/subhamukurtha-day-additional-tokens-allocated-at-sub-registrar-offices</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/subhamukurtha-day-additional-tokens-allocated-at-sub-registrar-offices#comments</comments><guid isPermaLink="false">23c52cee-344c-45e9-be91-dab008e3f106</guid><pubDate>Thu, 17 Sep 2026 01:18:08 +0000</pubDate><atom:updated>2026-09-17T01:18:08.538Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,சுபமுகூர்த்த தினம்,டோக்கன்,Sub-Registrar,சார்பதிவாளர் அலுவலகம்,tokens,ஒதுக்கீடு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/6ma77hyg/353.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சார்பதிவாளர் அலுவலகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/6ma77hyg/353.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி. அருண் சுந்தர் தயாளன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>கூடுதல் முன்பதிவு</h2><p>சுபமுகூர்த்த மற்றும் விசேஷ தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. </p><p>தற்போது ஆவணி மாதத்தில் வரும் கடைசி முகூர்த்த தினமான 17-ந்தேதி (இன்று) அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">முன்பதிவு டோக்கன்கள்</a> ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.</p><p>எனவே, இன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களோடு ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களோடு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>7 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/weather/heavy-rain-set-to-lash-7-districts-weather-office-issues-warning</link><comments>https://www.dailythanthi.com/news/weather/heavy-rain-set-to-lash-7-districts-weather-office-issues-warning#comments</comments><guid isPermaLink="false">77958742-7429-4551-85a7-c24d87934d76</guid><pubDate>Thu, 17 Sep 2026 01:11:03 +0000</pubDate><atom:updated>2026-09-17T01:11:03.936Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Rain,Weather,கனமழை,வானிலை,தமிழகம்,Weather News,WeatherUpdate,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,வானிலை ஆய்வு மையம்,கன மழை,heavy rain,வானிலை அறிக்கை,weather condition,வானிலை தகவல்,Weather Report,வானிலை முன்னறிவிப்பு,Weather Status,Rain Alert,வானிலை அறிவிப்பு,weather center,TN Rain,வானிலை அப்டேட்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/dm8avug2/kut.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/dm8avug2/kut.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 16 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><h2><strong>கனமழை</strong></h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>சுமார் 0.9 கிமீ உயரத்தில் வடக்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தெற்கு உள் கர்நாடகா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><p>சுமார் 1.5 கிமீ உயரத்தில் தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய ராயலசீமா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.</p><p>இதன்காரணமாக <strong><ins>இன்று (17-09-2026):</ins></strong> நீலகிரி, கோயம்புத்தூர், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">கனமழை</a></strong> பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <strong>மழை</strong> பெய்யக்கூடும்.</p> <h2>மழை</h2><p><strong>18-09-2026:</strong> நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">கனமழை</a></strong> பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>19-09-2026:</strong> நீலகிரி, கோயம்புத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">கனமழை</a></strong> பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் ஏனைய வட தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p> <p><strong>20-09-2026:</strong> நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">கனமழை</a></strong><a href="https://www.dailythanthi.com/topic/rain"> </a>பெய்யக்கூடும்.</p><p>ஏனைய வட தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>21-09-2026 மற்றும் 22-09-2026:</strong> வட தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p> <h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong><ins>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</ins></strong></p><p><strong>17-09-2026 முதல் 20-09-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.</p><p><strong><ins>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</ins></strong></p><p><strong>17-09-2026 முதல் 20-09-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.</p><p><strong><ins>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</ins></strong></p><p><strong>இன்று  (17-09-2026):</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>மீனவர்களுக்கான எச்சரிக்கை:</h2><p><strong><ins>வங்கக்கடல் பகுதிகள்:</ins></strong></p><p><strong>17-09-2026:</strong> தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலின் தென் பகுதிகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள், இதர தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>18-09-2026:</strong> தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>19-09-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் தென் பகுதிகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>20-09-2026:</strong> அந்தமான் கடலின் சில பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடலின் தென் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இதர அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p><strong><ins>தமிழக கடலோரப்பகுதிகள் &amp; அரபிக்கடல் பகுதிகள்:</ins></strong> எச்சரிக்கை ஏதுமில்லை.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>நெல்லை-பிரயாக்ராஜ் இடையே இன்று சிறப்பு ரெயில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-nellai-and-prayagraj-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-nellai-and-prayagraj-today#comments</comments><guid isPermaLink="false">4f844384-8bd4-4021-af60-cd21ccdafd04</guid><pubDate>Thu, 17 Sep 2026 01:06:51 +0000</pubDate><atom:updated>2026-09-17T01:06:51.843Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,சிறப்பு ரெயில்,Special train</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/6xyjk4yq/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/6xyjk4yq/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,  </p><p>சேலம், காட்பாடி வழியாக நெல்லை-பிரயாக்ராஜ் இடையே சிறப்பு ரெயில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) முதல் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.</p><h2>சிறப்பு ரெயில்</h2><p>உத்தரபிரதேச மாநிலத்தில் வரலாற்று சிறப்புமிக்க பிரயாக்ராஜ் நகரம் அமைந்துள்ளது. வடக்கு மத்திய ரெயில்வே சார்பில் பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் நெல்லை-பிரயாக்ராஜ் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.</p><p>பிரயாக்ராஜ் பகுதியில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண் 04171) வருகிற நாளை மறுநாள் (சனிக்கிழமை), 26-ந்தேதி, அக்டோபர் 3-ந்தேதி, 10-ந்தேதி ஆகிய சனிக்கிழமைகளில் மதியம் 1.15 மணிக்கு புறப்ப டுகிறது.</p><p>மறுமார்க்கத்தில் நெல்லை-பிரயாக்ராஜ் சிறப்பு ரெயில் (04172) நெல்லை யில் இருந்து வருகிற 21-ந்தேதி, 28-ந்தேதி, அக்டோபர் மாதம் 5-ந்தேதி. 12-ந்தேதி ஆகிய திங்கட்கிழமைகளில் அதிகாலை 3.30 மணிக்கு புறப்படுகிறது.</p><h2></h2><h2>எத்தனை பெட்டிகள்?</h2><p>இந்த ரெயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஜோலார்பேட்டை, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, வாராங்கல், நாக்பூர், ஜபல்பூர் வழி யாக இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் ஒரு ஏ.சி. மூன்றடுக்கு பெட்டி, 12 தூங்கும் வசதியுள்ள இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 6 பொது பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளி பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இதற்கான முன்பதிவு இன்று (வியாழக் கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>புறம்போக்கு நிலங்களில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு: தமிழக அரசு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/electricity-connections-for-houses-on-poramboke-lands-tamil-nadu-government-order</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/electricity-connections-for-houses-on-poramboke-lands-tamil-nadu-government-order#comments</comments><guid isPermaLink="false">049ef045-92a5-4557-beb5-45e722ffd2e2</guid><pubDate>Thu, 17 Sep 2026 01:00:07 +0000</pubDate><atom:updated>2026-09-17T01:00:07.839Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு மின்சார வாரியம்,தமிழக அரசு,TN govt,land,மின் இணைப்பு,Electricity connection,TNEB,புறம்போக்கு நிலம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/po0l5bq8/CHENNAI-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/po0l5bq8/CHENNAI-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-</p><p>புறம்போக்கு நிலங்களில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்குத் தடையில்லா சான்றின்றி மின் இணைப்பு வழங்கக் கோரி பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, புறம்போக்கு நிலங்களில் 250 சதுர அடிக்குள் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு மட்டும், அதி காரிகளின் தடையில்லா சான்று இன்றி வீட்டு உபயோக மின் இணைப்பு வழங்க மின்வாரியத் தலைவருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. </p><p>இருப்பினும், நீர்நிலை, மேய்க்கால், மந்தைவெளி, வனத்துறை நிலங்கள், மத்திய அரசுக்கு சொந்தமான ராணுவ கட்டுப்பாட்டு பகுதிகள், ரெயில்வே நிலங்கள், அனைத்து மத நிறுவனங்களின் பெயரில் உள்ள பட்டா நிலங்கள் மற்றும் கோவில் புறம்போக்கு நிலங்களில் உள்ள வீடுகளுக்கு இச்சலுகை பொருந்தாது.</p><p>இணைப்புகள் ‘குறைந்த அழுத்த மின் கட்டணம் ஐஏ (3) -புறம்போக்கு' பிரிவில் வகைப்படுத்தப்பட்டு, சாதாரண வீட்டு உபயோக கட்டணமே வசூலிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு மின் பகிர்மான விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள 'படிவம் 1'-ஐ பயன்படுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 'படிவம் 6' (பின்னிணைப்பு III)-ல் இழப்பீட்டு பத்திரம் வழங்குவதோடு, வழக்கமான பாதுகாப்பு வைப்புத் தொகையை விட இரு மடங்கு தொகையை செலுத்த வேண்டும்.</p><p>மின் இணைப்பு வழங்குவதற்கான அனைத்து கட்டணங்களும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி விண்ணப்பதாரரிடம் இருந்து வசூலிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் நீதித்துறை சாராத முத்திரைத்தாளில் ஒரு உறுதிமொழி அளிக்க வேண்டும். அதில், அரசுக்கு நிலம் தேவைப்படும்போதோ அல்லது எதிர்காலத்தில் ஏதாவது பிரச்சினை ஏற்படும்போதோ, எந்த நேரத்திலும் மின் இணைப்பு துண்டிக்கப்படும். நிலத்திலிருந்து வெளியேற்றப்படுவோம் என்றும் தெரிந்தே விண்ணப்பிப்பதாக கூற வேண்டும்.</p><p>இந்த மின் இணைப்பு பெறுவதன் மூலம், நிலத்தின் மீது எந்தவிதமான நிரந்தர உரிமையோ அல்லது முழு உரிமையோ கோர முடியாது. தாங்கள் குடியிருக்கும் வீடு தடை செய்யப்பட்ட நீர் நிலை, மேய்க்கால், மந்தைவெளி உள்ளிட்ட புறம்போக்கு நிலங்களில் இல்லை என்றும் அந்த உறுதிமொழிப் பத்திரத்தில் குறிப்பிட வேண்டும். மின் இணைப்பு வழங்குவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட வீடு தடை செய்யப்பட்ட புறம்போக்கு நிலங்களில் இல்லை என் பதை ‘தமிழ் நிலம்' இணையதளத்தின் மூலம் பிரிவு அதிகாரி உறுதிசெய்ய வேண்டும்.</p><p>இந்த அரசாணை வெளியிடப்பட்டதும், தமிழ்நாடு மின் பகிர்மான விதிகளின் விதிமுறை 27 (12)-ல் தேவையான திருத்தங்களை மேற்கொள்வதற்கும், இந்த மின் இணைப்புகளுக்கு தனி கட்டணப் பிரிவை உருவாக்குவதற்கும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தெரிவிக்கப்படும். இந்த திட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில், தாலுகா மற்றும் மாவட்ட வாரியாக எத்தனை பேருக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்ற விரிவான அறிக்கையை 3 மாதங்களுக்கு ஒரு முறை வாரியத் தலைவர் அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கடற்கரை-தாம்பரம் மின்சார ரெயில் சேவையில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-the-beach-tambaram-electric-train-service</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-the-beach-tambaram-electric-train-service#comments</comments><guid isPermaLink="false">bdac8495-c9a6-4ac8-8384-9f6674945c90</guid><pubDate>Thu, 17 Sep 2026 00:52:24 +0000</pubDate><atom:updated>2026-09-17T00:52:24.745Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tambaram,தாம்பரம்,மின்சார ரெயில்,electric train</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/qn6xtvwv/2.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/qn6xtvwv/2.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே குறிப்பிட்ட நேரத்தில் ரெயில்வே ஊழியர்கள் பராமரிப்புப் பணி மேற்கொள்ள இருப்பதால் சில மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன. அதன் விவரம் வருமாறு:-</p><p>* தாம்பரத்தில் இருந்து இன்று (வியாழக்கிழமை) காலை 11, மதியம் 1.30 ஆகிய நேரங்களில் கடற்கரை வரும் மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.</p><p>* சென்னை கடற்கரையில் இருந்து இன்று காலை 11.50, மாலை 3.25 ஆகிய நேரங்களில் தாம்பரம் செல்லும் மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-59</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-59#comments</comments><guid isPermaLink="false">f70bca2b-6fbf-4e4b-8091-b6f7a2aa922a</guid><pubDate>Thu, 17 Sep 2026 00:46:16 +0000</pubDate><atom:updated>2026-09-17T00:46:16.212Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல் விலை,டீசல் விலை,Petrol and diesel prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/5euux7c0/petrol.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/5euux7c0/petrol.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.</p> <h2>பெட்ரோல், டீசல் விலை</h2><p>இந்நிலையில், சென்னையில் இன்று (17.09.2026 வியாழக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ. 99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title> மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: விழாக்கோலம் பூண்டது மதுரை மாநகரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/meenakshi-amman-temple-consecration-madurai-city-wears-a-festive-look</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/meenakshi-amman-temple-consecration-madurai-city-wears-a-festive-look#comments</comments><guid isPermaLink="false">b0d52a6b-04d4-4ad4-abe2-ca8f8920cb38</guid><pubDate>Wed, 16 Sep 2026 23:01:27 +0000</pubDate><atom:updated>2026-09-16T23:01:27.220Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கும்பாபிஷேகம்,Madurai,மதுரை,Meenakshi Amman,மீனாட்சி அம்மன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/ipi6crc1/pooja.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/ipi6crc1/pooja.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று (வியாழக்கிழமை) காலையில் கோலாகலமாக நடக்கிறது.இதை முன்னிட்டு கோவிலில் பல மாதங்களாக திருப்பணிகள் ரூ.25 கோடி மதிப்பில் நடந்தன. தீவிபத்தில் சேதம் அடைந்த வீரவசந்தராயர் மண்டபம் புனரமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. யாகசாலை பூஜைக்காக வடக்கு ஆடி வீதியில் 184 குண்டங்களுடன் பிர மாண்ட யாகசாலை அமைக்கப்பட்டது. மூலவர் மீனாட்சி அம்மன், சுந்த ரேசுவரருக்காக பிரத்யேக தங்க குடங்கள் யாக சாலையில் வைக்கப்பட் டன. கங்கை, யமுனை, காவிரி, வைகை உள்ளிட்ட பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரை கலசங்களில் நிரப்பி யாகசாலை யில் வைத்து தினமும் பூஜைகள் நடந்து வருகின்றன. 400-க்கும் மேற் பட்ட சிவாச்சாரியார்கள் வேள்விகளை நடத்திவருகின்றனர். கடந்த 11-ந் தேதியன்று முதல்கால யாக பூைஜகள் தொடங்கிய நிலையில், மற்ற கால பூஜைகளும் நடந்து வந்தன.</p><h2>பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம்</h2><p>நேற்று அதிகாலை 3.45 மணி அளவில் 10-ம்கால யாகசாலை பூஜைகள் நடந்தன. அந்த வழிபாடு நிறைவு பெற்ற பிறகு பரிவார தெய்வங்களுக் கான கும்பாபிஷேகம் தொடங்கியது.மேளதாளங்கள் முழங்க யானை, டங்கா மாடு அணிவகுத்து செல்ல யாக சாலையில் இருந்து புனிதநீர் கலசங்கள் புறப்பாடாகி கோவிலுக்குள் உள்ள பரிவார தெய்வங்கள் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டன. காலை 5 மணி முதல் 6 மணிக்குள் சித்தி விநாயகர், கூடல்குமாரர், தட் சிணாமூர்த்தி, துர்க்கை, மகாலட்சுமி, பத்திரகாளி, அக்னி வீரபத்திரர், 63 நாயன்மார்கள், நவகிரகங்கள் உள்பட 414 பரிவார தெய்வங்களுக்கு நேற்று புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.மூலவர் மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர். தங்க விமானங்கள், சன்னதி விமானங்கள், 12 கோபுரங்கள் உள்ளிட்டவற்றுக்கான கும்ப கலசங்களுக்கு நேற்று மாலை 11-ம் கால யாகசாலை<a href="https://www.dailythanthi.com/devotional"> பூஜைகள்</a> நடந்தன. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.</p><h2>இன்று மகா கும்பாபிஷேகம்</h2><p>விழாவின் சிகரமாக மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் மகா கும்பாபிஷேக விழா இன்று (வியாழக்கிழமை) காலையில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதனால் மதுரை மாநகர் விழாக்கோலம் பூண்டு காணும் இட மெல்லாம் மின்னொளி அலங்காரத்தில் ஜொலிக்கிறது. முன்னதாக இன்று அதிகாலை 3.45 மணிக்கு 12-ம் கால யாக பூஜை நடைபெற்றது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கடங்கள் புறப் பாடு 5.45 மணிக்கு  நடைபெற்றது. அதனை சிவாச்சாரியார்கள் 4 ராஜ கோபுரங்கள் உள்பட 12 கோபுரங்கள், தங்க விமானங்களுக்கு கொண்டு சென்றபிறகு சரியாக 7.40 மணிக்கு கோபுரங்களுக்கு பக்தி கோஷங்கள் விண்ணதிர முழங்க கும்பாபிஷேகம் நடைபெறும். </p><p>பின்பு மூலவர் <a href="https://www.dailythanthi.com/devotional">மீனாட்சி அம்மனுக்கு</a> காலை 8.10 மணிக்கும், சுந்தரேசுவரருக்கு 8.50 மணிக்கும் புனித நீரால் மகா கும்பாபிஷேம் நடைபெறுகிறது. அதன்பின் னர் அலங்காரம், சிறப்பு தீபாராதனைகள் நடைபெறும். காலை 10 மணி முதல் இரவு வரை நடைசாத்தப்படாமல் மூலவர் தரிச னத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். கும்பாபிஷேகத்தை காண முடி யாத பக்தர்களுக்காக இன்றிரவு 7 மணிக்கு நான்கு மாசி வீதிகளிலும் மீனாட்சி, சுந்தரேசுவரர் வீதி உலா வந்து காட்சி அளிக்கிறார்கள்.</p> ]]></content:encoded></item><item><title>டெங்கு காய்ச்சல் பாதிப்பு: பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை- தமிழக அரசு தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dengue-fever-cases-no-need-for-public-alarm-tamil-nadu-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dengue-fever-cases-no-need-for-public-alarm-tamil-nadu-government#comments</comments><guid isPermaLink="false">d3602cab-cb3d-4c4c-a7f4-ea8ce48e26b2</guid><pubDate>Wed, 16 Sep 2026 21:04:46 +0000</pubDate><atom:updated>2026-09-16T21:04:46.840Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt,டெங்கு காய்ச்சல்,Dengue Fever</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/od29nmxk/dengue.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/od29nmxk/dengue.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்ககம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவல் என்பது வழக்கத்திற்கு மாறானதாகவோ அல்லது அபாயகரமான அளவிலோ இல்லை. ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்காலத்தில் தட்பவெப்பநிலை மாற்றங்களின் காரணமாக டெங்கு பாதிப்புகளில் பருவகால மாறுபாடு ஏற்படுவது இயல்பானதாகும்.</p> <p>கடந்த 3 ஆண்டுகளில் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான தரவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, 2024-ம் ஆண்டில் மொத்தம் 34,339 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 13 உயிரிழப்புகளும், 2025-ம் ஆண்டில் 15,688 பேர் பாதிக்கப்பட்டு, 13 உயிரிழப்புகளும், இந்த ஆண்டில் செப் டம்பர் 16-ந் தேதி வரையிலான நிலவரப்படி, 16,334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். </p><p>9 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.காய்ச்சல் பாதிப்புகளைக் கண்காணித்து, தேவையான மருத்துவச் சிகிச்சையை விரைவாக வழங்கும் வகையில் காய்ச்சல் வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>லண்டன் சுற்றுப்பயணம் நிறைவு:  முதல்-அமைச்சர் விஜய் இன்று சென்னை திரும்புகிறார்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/london-tour-concludes-chief-minister-vijay-returns-to-chennai-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/london-tour-concludes-chief-minister-vijay-returns-to-chennai-today#comments</comments><guid isPermaLink="false">8ff800b0-f92f-4aa4-93bb-33337c54e74c</guid><pubDate>Wed, 16 Sep 2026 20:23:13 +0000</pubDate><atom:updated>2026-09-16T20:23:13.731Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,London,லண்டன்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/d0h5p9yh/vijay.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/d0h5p9yh/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல் அமைச்சர் விஜய் கடந்த 10 ஆம் தேதி இரவு லண்டன் புறப்பட்டு சென்றார். 6 நாள் பயணமாக லண்டன் சென்ற முதல் அமைச்சர் விஜய்க்கு அங்கு வசிக்கும் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத்தொடர்ந்து 12-ந் தேதி முதல்-அமைச்சர் விஜய், தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைப்பதற்காக புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயத் திடலுக்கு உலகப் புகழ் பெற்ற சில்வர்ஸ்டோன் பந்தயக் களத்தில் உள்ள உள்கட்டமைப்பு, பந்தயச் சுற்றுப்பாதை, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போட்டிகளை வணிக ரீதியாக நடத்தும் முறைகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டார். பின்னர் அங்கு நடிகர் அஜித் பங்கேற்ற கார் ரேசையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.</p><h2>சென்னை புறப்பட்டார் </h2><p>அதன் தொடர்ச்சியாக 2 நாட்கள் முதல்-அமைச்சர் விஜய், பல்வேறு தொழில் அதிபர்களை சந்தித்து தமிழ்நாட்டுக்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்த்தார். சுமார் ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன் மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக அரசு அறிவித்தது.   இதற்கிடையே நேற்று இரவு விஜய், தனது அரசு முறை சுற்றுப்பயணத்தை முடித்து லண்டனில் இருந்து சென்னை புறப்பட்டார்.  </p><h2>தவெகவினர் ஆர்வம்</h2><p>விஜய் தங்கியுள்ள ஹோட்டலில் இருந்து கிளம்பும் போது அவரைக்காண ஏராளமன ரசிகர்கள்  காத்திருந்தனர். ரசிகர்களை பார்த்து உற்சாகமாக கை அசைத்த முதல் அமைச்சர் விஜய், அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். சிலருக்கு ஆட்டோகிராப்பும் போட்டு கொடுத்தார்.. லண்டனில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட முதல் அமைச்சர் விஜய், இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க த.வெ.க.வினர் ஏற்பாடு செய்துள்ளனர். </p> ]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: 99 வேட்பு மனுக்கள் தாக்கல் இன்று பரிசீலனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-by-elections-99-nomination-papers-filed-scrutiny-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-by-elections-99-nomination-papers-filed-scrutiny-today#comments</comments><guid isPermaLink="false">603a2f3c-9449-4bdf-8524-aca992364c3e</guid><pubDate>Wed, 16 Sep 2026 19:35:19 +0000</pubDate><atom:updated>2026-09-16T19:35:19.460Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இடைத்தேர்தல்,மதுராந்தகம்,தாராபுரம்,வேட்பு மனு</media:keywords><media:content height="288" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/pqb1hep0/Election.jpg" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேட்பு மனுக்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/pqb1hep0/Election.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>இடைத்தேர்தல்</p><p>தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் (தனி) மற்றும் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில் ஆளும் த.வெ.க., பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர், கம்யூனிஸ்டு கட்சிகள் தனித்தனியாக களம் காண்கின்றன. இதனால் 5 முனைப்போட்டி நிலவுகிறது. அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் கடந்த 9-ந்தேதி முதல் தொடங்கி நடந்தது. விறுவிறுப்பாக நடந்த வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. </p><p>மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சுகந்தி மற்றும் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 30 பேர் நேற்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.ஏற்கனவே த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பில் பரந்தாமன். நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் உள்ளிட்ட 18 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இதன்மூலம் மதுராந்தகம் தொகுதியில் பிரதான கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 48 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.</p><h2>தாராபுரத்தில் </h2><p>தாராபுரம் பகுதியில் த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமா, அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆனந்த், அருண்ராஜ் மற்றும் தொண்டர்களுடன் வந்து, தேர்தல் நடத்தும் அலுவலரான ஆர்.டி.ஓ. பெலிக்ஸ் ராஜாவிடம் காலை 11 மணிக்கு மேல் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்தபோது, த.வெ.க. வேட்பாளர் சத்திய பாமாவுக்கு எதிராக அ.தி. மு.க. தொண்டர்கள் கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு உண்டானது.</p><h2>மொத்தம் 51 வேட்பு மனுக்கள்</h2><p>அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் லட்சுமணன், கள் இயக்க வேட்பாளர் முத்துசாமி உள்ளிட்டோரும் மனு தாக்கல் செய்தனர். மாலை 3 மணியுடன் மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், பிரதான கட்சிகள், மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் உள்பட 39 வேட்பாளர்கள் மொத்தம் 51 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். மதுராந்தகம் மற்றும் தாராபுரம் என இரு தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 99 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.இன்று (வியாழக்கிழமை) வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெற உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘லண்டனில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்’ - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tamil-nadu-government-should-release-a-white-paper-on-the-investments-attracted-in-london-former-minister-jayakumar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tamil-nadu-government-should-release-a-white-paper-on-the-investments-attracted-in-london-former-minister-jayakumar#comments</comments><guid isPermaLink="false">070abf6b-1dc2-4ce1-a914-078cfc2f3ba0</guid><pubDate>Wed, 16 Sep 2026 16:38:53 +0000</pubDate><atom:updated>2026-09-16T16:38:53.881Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜெயக்குமார்,Jayakumar,London,லண்டன்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/m3k4ij5h/State-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/m3k4ij5h/State-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“தமிழக முதல்-அமைச்சர் விஜய் லண்டன் பயணத்தின்போது நடிகர் அஜித்தை சந்தித்தது பண்பாடு. அதில் விமர்சிக்க ஒன்றுமில்லை. ஆனால் முதல்-அமைச்சர் விஜய்யின் லண்டன் பயணத்தால் கிடைத்த பயன் என்ன? என்பது குறித்து தமிழக மக்களிடம் தெரிவிக்க வேண்டும். </p><p>லண்டனில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இருதரப்பு ஒப்பந்தங்கள் எப்போது கையெழுத்தாகும்? திட்டங்கள் எப்போது செயல்பாட்டுக்கு வரும்? இந்த முதலீடுகளின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்? என்ற விவரங்கள் அடங்கிய வெளிப்படையான வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>குன்னூர் அருகே இறந்த குட்டியை சுமந்து அலையும் தாய் குரங்கு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kunnur-near-dead-infant-monkey-carried-by-mother</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kunnur-near-dead-infant-monkey-carried-by-mother#comments</comments><guid isPermaLink="false">7134a014-7244-4b96-83cf-a1aa943dbfd4</guid><pubDate>Wed, 16 Sep 2026 16:01:48 +0000</pubDate><atom:updated>2026-09-16T16:01:48.545Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Mother,dead,குரங்கு,monkey,குன்னூர்,Coonoor,carrying,குட்டி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/zn2lhojs/mothermonkey.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ குரங்கு]]></media:title><media:description type="html"><![CDATA[ குன்னூர் அருகே இறந்த குட்டியை சுமந்து அலையும் தாய் குரங்கு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/zn2lhojs/mothermonkey.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>குன்னூர்,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF">நீலகிரி</a> மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வெலிங்டன், அருவங்காடு, பாய்ஸ் கம்பெனி உள்ளிட்ட இடங்களில் சமீபகாலமாக குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. </p> <h2>குரங்கு கூட்டம்</h2><p>இப்பகுதிகளில் உள்ள குடியிருப்பு வளாகங்களுக்குள் புகுந்து வரும் <a href="https://www.dailythanthi.com/topic//%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">குரங்கு</a> கூட்டங்கள், கேபிள் வயர்கள் மற்றும் இணையதள வயர்களை கடித்து துண்டித்து அட்டகாசம் செய்து வருகின்றன. மேலும், வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து உணவுப் பொருட்களையும் சேதப்படுத்தி விடுகின்றன. இதனால் நிம்மதியிழந்த பொதுமக்கள், இந்த குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.</p><h2>கண்கலங்க வைத்த காட்சி</h2><p>இந்த நிலையில், வெலிங்டன் பகுதியில் பார்ப்போரின் நெஞ்சை உருக்கும் சோகமான காட்சி ஒன்று அரங்கேறியுள்ளது. அங்குள்ள சாலை ஒன்றில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், குட்டி குரங்கு ஒன்று சாலையோரமாக பரிதாபமாக இறந்து கிடந்தது. ஆனால், தன் குட்டி இறந்தது கூட தெரியாமல் பாச போராட்டம் நடத்திய தாய் குரங்கு, அந்த குட்டியை தனது மார்போடு அணைத்தபடி தூக்கி கொண்டு அங்கும் இங்குமாக அலைந்து திரிந்தது. </p> <h2>தாய் பாசம்</h2><p>குட்டிக்கு உயிர் இருப்பதாகவே நினைத்து, அதை தூக்கி கொண்டு தாய் குரங்கு தவிப்புடன் சுற்றிய இந்த நெஞ்சை உருக்கும் காட்சி, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளையும் பொதுமக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியதுடன், பலரையும் கண்கலங்கச் செய்தது.</p>]]></content:encoded></item><item><title>பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பெருங்குடி கண்காணிப்பு அலுவலர் ஆலோசனை..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/perungudi-monitoring-officer-holds-consultation-on-monsoon-preparedness-measures</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/perungudi-monitoring-officer-holds-consultation-on-monsoon-preparedness-measures#comments</comments><guid isPermaLink="false">c2e8b3d2-0a0b-4d0b-839b-e90d23d548bf</guid><pubDate>Wed, 16 Sep 2026 15:51:30 +0000</pubDate><atom:updated>2026-09-16T15:51:30.706Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,பெருங்குடி,Perungudi,பெருங்குடி மண்டலம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/2mrl4zut/Untitled-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெருங்குடி கண்காணிப்பு அலுவலர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/2mrl4zut/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெருங்குடி மண்டலக் கண்காணிப்பு அலுவலர் மகேஷ்வரி ரவிக்குமார் தலைமையில், பெருங்குடி மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. </p><h2>ஆலோசனைக் கூட்டம்</h2><p>இது தொடர்பாக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை </a>மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>பெருங்குடி மண்டலத்தில் வார்டு 181 முதல் 191க்குட்பட்ட 11 வார்டுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மண்டலக் கண்காணிப்பு அலுவலர் மகேஷ்வரி ரவிக்குமார் தலைமையில் இன்று (16.09.2026) பெருங்குடி மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.</p><p>இக்கூட்டத்தில், மண்டல அலுவலர் என்.ஶ்ரீதேவி, பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னைக் குடிநீர் வாரியம், தமிழ்நாடு மின்சாரத்துறை, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட சேவைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p><h2>அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்</h2><p>இக்கூட்டத்தில், பெருங்குடி மண்டலத்தில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்களை பணிகளை விரைந்து முடித்திடவும், மழைநீர் சீராகச் செல்லும் வகையில் வண்டல் வடிகட்டித் தொட்டிகள் மற்றும் மழைநீர் வடிகால்கள், கால்வாய்கள், ஆறுகள், குளம், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகள், ஆகாயத்தாமரைகள் அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடித்திடவும், மழைநீர் தேங்கும் இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டமைப்புகளை விரைந்து முடித்திடவும், மோட்டார் பம்புகளை தயார்நிலையில் வைத்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>14 நிவாரண முகாம்களில் பொதுமக்களை தங்கவைப்பதற்கான அடிப்படை வசதிகள் மற்றும் உணவு சமைத்திடும் 6 மைய சமையலறைகளில் உணவுப் பொருட்களின் இருப்பினை உறுதி செய்திடவும், மாநகராட்சி உள்ளிட்ட சேவைத்துறைகளின் சார்பில் நடைபெறும் பணிகளை ஒருங்கிணைந்து செப்டம்பர் மாத இறுதிக்குள் முடித்திடவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><h2>கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு</h2><p>இதனைத் தொடர்ந்து, ரேடியல் சாலை முதல் பெருங்குடி குப்பைக் கிடங்கு வரையிலான நெடுஞ்சாலைத்துறையின் சாலைப் பகுதியில் உள்ள சதுப்பு நிலப்பகுதியில் உள்ள நீர் எளிதில் வெளியேறும் வகையில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி மற்றும் இந்த சாலையில் உள்ள 17 கல்வெர்ட்டுகளின் வழியே மழைநீர் தங்குதடையின்றி பக்கிங்ஹாம் கால்வாயில் செல்லும் வகையில் ஆகாயத்தாமரைகளை அகற்றி வண்டல்கள் தூர்வாரிடும் பணி ஆகியவற்றினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.</p><p>பின்னர், இந்த சாலையில் உள்ள பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் சரிந்துள்ள மண் மேடு பகுதியினைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, இப்பகுதியில் தண்ணீர் எளிதில் செல்லும் வகையில் சரிந்த மண் மேடுகளை அகற்றி நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட வீடுகள்; தடையில்லா சான்று இல்லாமல் மின் இணைப்பு - தமிழக அரசு அரசாணை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/houses-built-on-poramboke-government-owned-land-electricity-connections-granted-without-a-no-objection-certificate-tamil-nadu-government-order</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/houses-built-on-poramboke-government-owned-land-electricity-connections-granted-without-a-no-objection-certificate-tamil-nadu-government-order#comments</comments><guid isPermaLink="false">be0ad5be-2291-47f1-9001-5c80f40d1e9a</guid><pubDate>Wed, 16 Sep 2026 15:47:16 +0000</pubDate><atom:updated>2026-09-16T15:47:16.246Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt,மின் இணைப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/xcvq2kp1/State-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/xcvq2kp1/State-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>புறம்போக்கு நிலங்களில் கட்டப்பட்டிருக்கக் கூடிய வீடுகளுக்கு அரசு அதிகாரியிடம் இருந்து தடையில்லா சான்று பெறாமலேயே மின் இணைப்பு வழங்குவது தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து ஏராளமான கோரிக்கைகள் வந்தன. இது குறித்து எரிசக்தித்துறை அமைச்சர் நிர்மல் குமார் கடந்த ஜூலை மாதம் ஆய்வு செய்தார். </p><p>இந்த நிலையில், புறம்போக்கு நிலங்களில் கட்டப்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு பெறுவதற்கு என்.ஓ.சி.(NOC) எனப்படும் தடையில்லா சான்று தேவையில்லை என உத்தரவு பிறப்பித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, புறம்போக்கு நிலங்களில் 250 சதுர அடிக்குள் கட்டப்பட்ட வீடுகளுக்கு மட்டும் தடையில்லா சான்று இல்லாமல் வீட்டு உபயோக மின் இணைப்பு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. </p><p>அதே சமயம், நீர்நிலை புறம்போக்கு, மேய்ச்சல் மந்தைவெளி புறம்போக்கு நிலங்களில் வீடுகள் கட்டப்பட்டிருந்தால் அதற்கு இந்த உத்தரவு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி, வனத்துறைக்கு சொந்தமான நிலங்கள், வன புறம்போக்கு நிலங்கள், மத்திய அரசுக்கு சொந்தமான ராணுவ கட்டுப்பாட்டு பகுதிகள், ரெயில்வே நிலங்கள், மத நிறுவனங்களின் பெயரில் இருக்கக் கூடிய பட்டா நிலங்கள், கோவில் புறம்போக்கு நிலங்கள் ஆகியற்றிற்கும் இந்த உத்தரவு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item></channel></rss>