<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 24 Jul 2026 02:16:51 +0000</lastBuildDate><item><title>தவெக கோஷ்டி மோதல்.. எம்.எல்.ஏ., கார் கண்ணாடி உடைப்பு: தேனியில் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thaveka-faction-clash-mla-car-window-broken-theni-in-a-state-of-panic</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thaveka-faction-clash-mla-car-window-broken-theni-in-a-state-of-panic#comments</comments><guid isPermaLink="false">757ef5cc-6dee-497d-a66e-97608b45dc11</guid><pubDate>Fri, 24 Jul 2026 02:16:50 +0000</pubDate><atom:updated>2026-07-24T02:16:50.349Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Theni,தேனி,factional clash,கோஷ்டி மோதல்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/z9f6eaox/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/z9f6eaox/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி, </p><p>தேனியில், ஜன்நாயகன் திரைப்படம் காண வந்த த.வெ.க.,வினருக்குள் ஏற்பட்ட கோஷ்டி மோதலில், கம்பம் த.வெ.க., எம்.எல்.ஏ., ஜெகநாத் மிஸ்ரா, 50, என்பவரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.</p><p>தமிழக முதல்வர் விஜய் நடித்த, ஜனநாயகன் படம் நேற்று வெளியானது. இதற்காக, தேனி மாவட்டம், சின்னமனுாரில் உள்ள தியேட் டரில், 'கேக்' வெட்டுவதற்காக, கம்பம் த.வெ.க., எம்.எல்.ஏ., ஜெகநாத் மிஸ்ரா, இரு கார்களில் சென்றார் .</p><p>அப்போது, தேனி தெற்கு மாவட்ட செயலர் பாண்டி ஆதரவாளர்களுக்கும், ஜெகநாத் மிஸ்ரா ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில், ஜெகநாத் மிஸ்ராவின் கார் கண்ணாடி அடித்து உடைக்கப்பட்டது.</p><p>இரு தரப்பினரும், சின்னமனுார் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்த நிலையில், இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இந்நிலையில், நேற்று மாலை, எம்.எல்.ஏ.,வின் ஆதரவாளர்கள் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி, சின்னமனுார் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர். இதையடுத்து, </p><p>போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, வழக்குப்பதிவு செய்வதாக உறுதியளித்த பின், கலைந்து சென்றனர். சேதமடைந்த கார், போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘தமிழகத்தில் ரெயில் பாதை திட்டப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்துவதில் தாமதம்&apos; - ரெயில்வே அமைச்சகம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/delay-in-land-acquisition-for-railway-line-projects-in-tamil-nadu-ministry-of-railways</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/delay-in-land-acquisition-for-railway-line-projects-in-tamil-nadu-ministry-of-railways#comments</comments><guid isPermaLink="false">5c41fc20-7dbd-4743-ada1-068b781d5bfc</guid><pubDate>Fri, 24 Jul 2026 02:15:30 +0000</pubDate><atom:updated>2026-07-24T02:15:30.886Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,Tamil Nadu,Railway,ரெயில்வே அமைச்சகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/nmdlmlug/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/nmdlmlug/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி, 8 புதிய பாதைகள், 3 அகல பாதைகள், 8 இரட்டை பாதை திட்டங்களை செயல்படுத்த, 27,282 கோடி ரூபாய் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. </p><p>தமிழக ரெயில் திட்டங்களுக்கு மொத்தம் 11,391 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகவும், ஆனால், மாநில அரசு இதுவரை, 2,910 ஏக்கர்தான் ஒதுக்கி இருப்பதாகவும், இதனால் ரெயில் பாதை திட்டப் பணிகளில் தாமதம் ஏற்பட்டு வருவதாகவும் ரெயில்வே அமைச்சகத்தின் தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து, தெற்கு ரெயில்வே பயனாளர் குழு உறுப்பினர் ஜாபர் அலி கூறியதாவது:-</p> <p>“மத்திய பட்ஜெட்டில் தமிழக ரெயில் திட்டங்களுக்கு, ஆண்டுதோறும் கணிசமான அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. நடப்பு நிதி ஆண்டில், தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு, 7,611 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இருப்பினும், ரெயில்வே திட்டங்களுக்கு, நிலம் கையகப்படுத்தும் பணி முக்கிய தடையாக உள்ளது.</p><p>தமிழகத்தில் நடக்கும் பல்வேறு ரெயில் பாதை திட்டங்களுக்கு, 11,391 ஏக்கர் நிலம் தேவை. தற்போது வரை, 26 சதவீத நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்பட்டு உள்ளன.”</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>திமுக ஆட்சியில் ஒப்புதல் பெறப்பட்ட சோலார் மின்திட்டங்கள் நிறுத்தி வைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/solar-power-projects-approved-under-dmk-rule-are-on-hold</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/solar-power-projects-approved-under-dmk-rule-are-on-hold#comments</comments><guid isPermaLink="false">b4e45cf4-94bd-4f8c-85d6-9a57339e9a44</guid><pubDate>Fri, 24 Jul 2026 02:12:52 +0000</pubDate><atom:updated>2026-07-24T02:12:52.263Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,ஒப்புதல்,நிறுத்தி வைப்பு,Solar Power Project,Approved,withholding,சோலார் திட்டம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/sfl13ncw/solar.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/sfl13ncw/solar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p>கோவை பகுதிகளில் ஒப்பந்தம் செய்யப்பட்ட சோலார் மின்உற்பத்தி திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த திட்டங்களில் முதலீடு செய்ய நிறுவனங்கள் தயங்கும் நிலை உள்ளது.</p><h2>சோலார் மின் உற்பத்தி</h2><p>நவீன காலத்தில் எந்திரங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. எனவே அதை இயக்க தேவையான மின்சார தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதை பூர்த்தி செய்ய காற்றாலை, சோலார் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மின் உற்பத்தி திட்டங்கள் உதவுகின்றன. தமிழ்நாட்டில் 7 ஆயிரம் மெகாவாட்டுக்கு அதிகமாக சோலார் மின் உற்பத்தி செய்ய கட்டமைப்பு வசதி உள்ளது. கோவையிலும் சோலார் மின் உற்பத்தி கட்டமைப்புகள் தொழில் நிறுவனங்களில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் ஒப்புதல் பெறப்பட்ட சோலார் மின் உற்பத்தி திட்டங்கள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து சோலார் மின் உற்பத்தியாளர்கள் சிலர் கூறியதாவது:-</p><h2>நிறுத்தி வைப்பு</h2><p>கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் குறிப்பாக சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படுவதற்கு முன் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைப்பதற்காக சோலார் மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. தேர்தலுக்கு பிறகு த.வெ.க. தலைமையிலான அரசு பொறுப்பு ஏற்றது. இந்த நிலையில் தி.மு.க. ஆட்சி காலத்தில் ஒப்புதல் பெறப்பட்ட<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF"> சோலார் மின் உற்பத்தி</a> திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.</p><p>இதனால் சோலார் மின் உற்பத்தித்துறையில் புதிதாக முதலீடு செய்ய பலரும் தயங்குகின்றனர். தமிழக முதல்-அமைச்சர் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் சோலார் மின் உற்பத்தி திட்டங்களில் புதிய முதலீடுகள் அதிகரிக்கும்.</p><p>இவ்வாறு அவர்கள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.5 சரிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/price-of-egg-laying-hens-drops-by-rs-5-per-kg-in-the-namakkal-zone</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/price-of-egg-laying-hens-drops-by-rs-5-per-kg-in-the-namakkal-zone#comments</comments><guid isPermaLink="false">f442270b-ac1b-44c4-a422-d9dc17f50cc9</guid><pubDate>Fri, 24 Jul 2026 02:09:20 +0000</pubDate><atom:updated>2026-07-24T02:09:20.294Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Namakkal,நாமக்கல்,முட்டைக்கோழி</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/rsnvbh3t/3.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/rsnvbh3t/3.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல்,  </p><p>நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.125-க்கு விற்பனை செய் யப்பட்டு வந்தது. இதற்கிடையே நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 குறைக்க முடிவு செய்தனர்.</p><p>எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.120 ஆக குறைந்து உள்ளது. கறிக்கோழி விலை மாற்றம் இன்றி கிலோ ரூ.134 ஆகவும், முட்டை விலை மாற்றம் இல்லாமல் ரூ.6.80 காசுகளாகவும் நீடிக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் தெருநாய் தொல்லையை ஒழிக்கும் நடவடிக்கைகள்: இந்த ஆண்டு இறுதிக்குள் இலக்கு எட்டப்படும்</title><link>https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/steps-to-eradicate-stray-dog-menace-in-tamil-nadu-target-to-be-achieved-by-the-end-of-this-year</link><comments>https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/steps-to-eradicate-stray-dog-menace-in-tamil-nadu-target-to-be-achieved-by-the-end-of-this-year#comments</comments><guid isPermaLink="false">d27b7cef-ebca-4b83-bbc5-e2c2f3f1d318</guid><pubDate>Fri, 24 Jul 2026 01:39:48 +0000</pubDate><atom:updated>2026-07-24T01:39:48.277Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,stray dogs,Corporation,மாநகராட்சி,தமிழ்நாடு அரசு,Tamil Nadu Government,அரசு நடவடிக்கை,தெருநாய்கள் தொல்லை,problems,government action</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/4rfbvjwf/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தெருநாய்கள் தொல்லை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/4rfbvjwf/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சிறப்புக் கட்டுரைகள் (Sirappukatturaigal)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ்நாட்டில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88">தெருநாய் தொல்லை</a>களை ஒழிக்கும் நடவடிக்கையில் இந்த ஆண்டு இறுதிக்குள் இலக்கு எட்டப்பட்டுவிடும் என்று <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">தமிழ்நாடு அரசு</a> கூறியுள்ளது.</p><h2>தெருநாய் தொல்லை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு</h2><p>தெருநாய் தொல்லையால் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். இந்த அவலத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அதில் என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்காலத்தில் நாய்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக அவற்றுக்கு செய்ய வேண்டிய கருத்தடை அறுவை சிகிச்சை குறித்தும், அதன் பிறகு அவற்றின் உயிருக்கான உத்தரவாதம் குறித்தும் சுப்ரீம் கோர்ட்டு திட்டம் வகுத்தளித்துள்ளது.</p><h2>பாதிப்பு கடந்த 7 மாதங்களில் 4.6 லட்சம் பேராக குறைவு</h2><p>தமிழ்நாட்டில் கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரி-ஜூலை வரை 6 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டனர். 34 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டில் கடந்த 7 மாதங்களில் 4.6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 24 பேர் உயிரிழந்துவிட்டனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு நாய்க்கடி பாதிப்பு குறைந்துள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.</p><h2>சேலத்தில் அதிகபட்சமாக 28 ஆயிரம் பேர் பாதிப்பு</h2><p>தமிழகத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 28 ஆயிரம், நெல்லையில் 23 ஆயிரம், திருவள்ளூர் மாவட்டத்தில் 19 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தஞ்சாவூர், கோவை மாவட்டங்களில் நாய்க்கடியால் சுமார் 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.</p><h2>முக்கிய நடவடிக்கைகள்</h2><p>இந்த பாதிப்பை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் அனைத்து அரசு மருத்தவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய அளவில் நாய்க்கடி மருந்து இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. நாய் கடித்த பிறகு 4 தவணைகளில் ரேபிஸ் தடுப்பூசி உள்ளிட்ட ஊசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.</p><p>இந்த நிலையில் சமீபத்தில் தெரு நாய்த்தொல்லை தொடர்பான வழக்கு ஒன்றில் சென்னை ஐகோர்ட்டு சில கடுமையான கருத்துகளை கூறியிருந்தது. "காகித அளவில் அரசின் அறிக்கைகள் இருந்தாலும், நேரடி களத்தில் எந்தவித மாற்றமும் தெரியவில்லை. ஐகோர்ட்டு வளாகத்திலும் நாய்த் தொல்லை இருக்கிறதே" என்று நீதிபதிகள் குறிப்பிட்டு இருந்தனர். அதனடிப்படையில், தமிழ்நாட்டில் தெருநாய் தொல்லையை ஒழிக்கும் அரசின் நடவடிக்கை தோல்வி அடைந்துவிட்டதா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு அரசு உயர் அதிகாரி ஒருவர் அளித்த பதில் வருமாறு: </p><h2>வாரந்தோறும் ஆய்வு</h2><p>தெருநாய் பிரச்சினையை நாங்கள் எளிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மக்களுக்கு நேரடியான பிரச்சினை என்பதால், அதனுடன் மாவட்ட கலெக்டர்களையும் தொடர்புபடுத்தி வாரந்தோறும் ஆய்வு செய்து வருகிறோம். இதனால்தான் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக முன்னேற்றத்தை காண முடிகிறது. சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ள அனைத்து உத்தரவுகளையும் பின்பற்றி நடவடிக்கை எடுக்கிறோம். கடந்த ஜனவரி 24 முதல் ஜூலை 26-ந்தேதி வரை 3 லட்சத்து 38 ஆயிரத்து 135 நாய்களுக்கு ஏபிசி அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. குறுகிய காலத்தில் நடைபெற்ற அதிகபட்ச அறுவை சிகிச்சை எண்ணிக்கை இது. சென்னையில் 52 ஆயிரத்து 226 நாய்களுக்கு ஏபிசி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. </p><p>அனைத்து நாய்களுமே உயிருடன் உள்ளன. ஏபிசி மையங்களில் தனி அரங்குகள் உள்ளன. அங்கு அவை வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. கால்நடை மருத்துவர்கள், மாநகராட்சி டாக்டர்கள், தன்னார்வ ஆர்வலர்களாக உள்ள டாக்டர்கள் அவற்றை கண்காணித்து வருவார்கள். அவர்களுக்கு எத்தனை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதற்கான இலக்குகள் அளிக்கப்படுகின்றன. </p><h2>இந்த ஆண்டு முடிவதற்குள் அனைத்து நாய்களுக்குமே தடுப்பூசி</h2><p>அடுத்ததாக, நாய்களுக்கு நோய் வரக்கூடாது என்பதற்காக தடுப்பூசிகளை (ஆன்டி ரேபிஸ்) அளிக்கிறோம். அனைத்து நாய்களுக்கும் தடுப்பூசிகள் போட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன் விலை ரூ.9 தான். எனவே போதுமான அளவில் அவற்றை வாங்கி வைக்க உத்தரவிட்டுள்ளோம். ஊசி போடப்பட்டதும் மீண்டும் பழைய இடத்திற்கே அவை கொண்டு விடப்படும். இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 1 லட்சத்து 68 ஆயிரத்து 878 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முடிவதற்குள் அனைத்து நாய்களுக்குமே தடுப்பூசி போடும் அளவில் திட்டங்களை வகுத்துள்ளோம். </p><h2>படிப்படியாகத்தான்....</h2><p>தலைமைச் செயலாளர்கள், சம்பந்தப்பட்ட துறைகளின் செயலாளர்கள், இயக்குனர்கள், கமிஷனர்கள் அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதுபோன்ற நடவடிக்கைகளை கணக்கிட்டால், கடந்த ஆண்டைவிட 150 சதவீதம் அதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இதில் மற்ற மாநிலங்களைவிட தமிழகம்தான் சிறப்பான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளின் பலனை படிப்படியாகத்தான் அடைய முடியும். உயிர்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், ஒரே நாளில் சீர் செய்துவிட முடியாது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுகளையும் பின்பற்றியாக வேண்டும். </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><h2>சென்னையில் நடப்பது என்ன?</h2><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D">சென்னை மாநகராட்சி கமிஷனர்</a> சமீரன் கூறியதாவது: </p><p>சென்னையில் கடந்த 2024-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 1.81 லட்சம் தெரு நாய்கள் இருப்பது தெரியவந்தது. இதில் பள்ளிகள், கல்லூரிகள் போன்ற பகுதிகளில் 3,544 தெரு நாய்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புளியந்தோப்பு, கண்ணம்மாபேட்டை, மீனம்பாக்கம், சோழிங்கநல்லூர், திருவொற்றியூர், மாதவரம், கண்ணப்பர்திடல், பெருங்குடி, லாயிட்ஸ் காலனி உள்ளிட்ட 11 இடங்களில் தெருநாய்கள் கருத்தடை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தெரு நாய்கள் பிரச்சினையை குறைப்பதில் அவற்றிற்கு கருத்தடை செய்வதை அதிகரிக்க தீவிரம் காட்டி வருகிறோம். </p><h2>கூடுதல் இனக்கட்டுப்பாட்டு மையம்</h2><p>தற்போது நாள் ஒன்றுக்கு 100 முதல் 110 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து அவற்றை பிடித்த இடத்திலேயே விடுகிறோம். நாள்தோறும் கருத்தடை செய்யும் எண்ணிக்கையை வரும் காலங்களில் 350 வரையில் அதிகரிக்க திட்டமிட்டு உள்ளோம். அதற்கேற்ப அம்பத்தூர், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 4 இடங்களில் கூடுதலாக இனக்கட்டுப்பாட்டு மையங்கள் திறக்க உள்ளோம். </p><p>ஆக்ரோஷ தன்மை கொண்ட நாய்களை பிடித்து அவற்றை பராமரிக்க மணலி மற்றும் பெருங்குடியில் தனிமைப்படுத்தல் மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அடுத்த 2 மாதங்களில் இவை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதில், 500 நாய்கள் வரை பராமரிக்க முடியும். கடந்த மே மாதம் 3,237 தெரு நாய்களுக்கும், ஜூன் மாதம் 4,765 தெரு நாய்களுக்கும் கருத்தடை செய்துள்ளோம். இதை வரும் காலங்களில் மாதம் தோறும் 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையில் அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். மண்டலத்திற்கு ஒரு கருத்தடை மையங்களை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். </p><h2>பொதுமக்கள், விலங்குகள் நல ஆர்வலர்களின் ஒத்துழைப்பு அவசியம்</h2><p>சென்னையை பொறுத்தவரை அதிகளவில் குப்பைகள் சேரும் இடங்களிலும் நாய்களின் தொல்லை உள்ளது. அந்த வகையில், சென்னையில் அதிக அளவில் குப்பைகளை உற்பத்தி செய்யும் 3,204 குடியிருப்பு வளாகங்கள் உள்ளன. அவர்கள் குப்பைகளை சரியான முறையில் அகற்றுகிறார்களா? என்பதை நாள்தோறும் கண்காணித்து வருகிறோம். பொதுமக்கள் சிலர் தாங்கள் சாப்பிட்ட உணவுகளை ஆங்காங்கே வீசி செல்கிறார்கள். அதை தேடி தெரு நாய்கள் வரும்போது, சாலையில் செல்லும் சிலரை கடிக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. சிலர் இரவு நேரங்களில் குப்பைகளை சாலையின் ஓரத்தில் போட்டுவிடுகிறார்கள். இதனால் அங்கே தெரு நாய்கள் அதிகரித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. </p><p>இவ்வாறு உத்தரவுகளை மீறுவோருக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையில் அபராதம் விதித்து வருகிறோம். என்னதான் விதிமுறைகள் இருந்தாலும் தெருநாய்கள் பிரச்சினையை கட்டுப்படுத்துவதில் பொதுமக்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். </p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>‘வீ த லீடர்ஸ்&apos; கட்சி பெயர், கொடியை அடுத்த மாதம் அறிவிக்கிறார், அண்ணாமலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-the-leaders-party-name-flag-to-be-announced-next-month-annamalai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-the-leaders-party-name-flag-to-be-announced-next-month-annamalai#comments</comments><guid isPermaLink="false">4d3b12a1-218f-4d73-b7aa-b34ab8ef5e30</guid><pubDate>Fri, 24 Jul 2026 01:10:16 +0000</pubDate><atom:updated>2026-07-24T01:10:16.961Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Annamalai,அண்ணாமலை,கட்சி கொடி,we the leaders</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/ptvuhkhg/annamalai.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அண்ணாமலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/ptvuhkhg/annamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>புதிய கட்சியின் பெயர், கொடியை அண்ணாமலை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.</p><p>தமிழக பா.ஜனதா தலைவராக இருந்த அண்ணாமலை கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு அந்த பதவியில் இருந்து விலக்கப்பட்டார். சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. பா.ஜனதா கூட்டணி தேர்தல் பிரசாரத்தில் பெரிய அளவில் அண்ணாமலை தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. இந்தநிலையில், கடந்த மாதம் பா.ஜனதாவில் இருந்து அண்ணாமலை விலகினார்.</p><p>தான் ஏற்கனவே நடத்தி வந்த 'வீ த லீடர்ஸ்' என்ற அமைப்பை அரசியல் களத்தில் இறக்கினார். ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கையும் நடத்தினார். முதல் நாளில் 10 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்தனர். தொடர்ந்து முகாம் மூலம் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது.</p><h2>புதிய கொடி</h2><p>இதற்கிடையே, பொள்ளாச்சியில் கடந்த 12-ந்தேதி அண்ணாமலை நடத்திய மாநாட்டில் திரளான இளைஞர்கள் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து, தூத்துக்குடியில் 2-வது மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. இதற்கிடையே, உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் புதிய கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்க அண்ணாமலை திட்டமிட்டு இருக்கிறார். இதற்கான பணிகளில் அவர் முழு வீச்சில் இறங்கியுள்ளார். வரும் ஆகஸ்டு 3-வது வாரத்தில் புதிய கட்சியின் பெயரை அண்ணாமலை அறிவிக்க உள்ளார். புதிய கொடியையும் அவர் அறிமுகம் செய்கிறார்.</p><h2>பிரமாண்ட மாநாடு</h2><p>கட்சியின் பெயர், கொடி அறிமுகத்தை தொடர்ந்து செப்டம்பர் 14-ந்தேதி மதுரை அல்லது திருச்சியில் பிரமாண்டமான மாநாட்டை நடத்தவும் அண்ணாமலை திட்டமிட்டு இருக்கிறார். கட்சியின் பெயர் அறிவிப்பு கூட்டத்திற்கான ஆலோசனை கூட்டங்கள் வரும் வாரங்களில் நடத்தப்பட இருக்கிறது.</p><p>இதற்காக தமிழகம் முழுவதும் 'வீ த லீடர்ஸ்' குழுவினர் தொண்டர்களை சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்கள். உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்கும் வகையில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">அண்ணாமலை </a>புதிய கட்சி தொடக்கம் அமைய இருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>தஞ்சை பெரிய கோவிலில் தொல்லியல், அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/officials-from-the-archaeology-and-hrce-departments-inspect-the-thanjavur-big-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/officials-from-the-archaeology-and-hrce-departments-inspect-the-thanjavur-big-temple#comments</comments><guid isPermaLink="false">65f2d09a-11e9-43c9-bd10-025ceb0d169c</guid><pubDate>Fri, 24 Jul 2026 01:01:06 +0000</pubDate><atom:updated>2026-07-24T01:01:06.317Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>தஞ்சை பெரிய கோவில்,Thanjavur Big Temple,அதிகாரிகள்,officials</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/zmte7xrw/4.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/zmte7xrw/4.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>தஞ்சாவூர்,  </p><p>தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையார், பெரியநாயகி, வராகி, முருகர், விநாயகர், கருவூரார், நடராஜர், தட்சிணாமூர்த்தி சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலின் 8 திசைகளில் ஆகம விதிகளின்படி இந்திரன், அக்னி தேவன், எமன், நிருதி, வருண தேவன், வாயு தேவன், குபேரன், ஈசானன் உள்ளிட்ட அஷ்டதிக் பாலகர்களின் சன்னதிகள் உள்ளன. இதில் இந்திரன், எமன், நிருதி, குபேரன் ஆகிய நான்கு சன்னதிகளில் சிலை இன்றி, பூட்டிய நிலையில் உள்ளன. மீதமுள்ள நான்கு சன்னதிகளில் சிலைகள் பராமரிப்பின்றி சிதைந்துள்ளன. </p><p>எனவே பூஜைகள் தடையின்றி நடக்க ஏதுவாக அஷ்டதிக் பாலகர்களின் சன்னதிகளை முறையாக பராமரிக்க வேண்டும், சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகள் நிறுவ அனுமதிக்க மத்திய தொல்லியல்துறை அனுமதி தர வேண்டும் என தஞ்சையை சேர்ந்த கலியமூர்த்தி என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். </p><p>இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், 'தஞ்சை அறநிலையத்துறை இணை கமிஷனர், மத்திய தொல்லியல்துறை திருச்சி உதவி கண்காணிப்பு அலுவலர், கோவிலின் பரம்பரை அறங்காவலர் ஆகியோர் இணைந்து கோவிலில் ஆய்வு செய்து வருகிற 28-ந் தேதி ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டனர். </p><p>இதையடுத்து கோர்ட்டு உத்தரவுப்படி மத்திய தொல்லியல்துறை திருச்சி மண்டல கண்காணிப்பாளர் அறவாழி, உதவிகண்காணிப்பாளர் வெற்றிச்செல்வி, முதுநிலை பராமரிப்பு அலுவலர் சோபிதா, இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை கமிஷனர் ஞானசேகர், உதவி கமிஷனர் கார்த்திகேயன், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-today-8</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-today-8#comments</comments><guid isPermaLink="false">dd8f4fe2-7245-4584-84d4-a05f8b830cbd</guid><pubDate>Fri, 24 Jul 2026 00:35:16 +0000</pubDate><atom:updated>2026-07-24T00:35:16.830Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,power cut,மின்தடை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/8qk3tvqg/ep.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/8qk3tvqg/ep.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் இன்று மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p>அந்த வகையில், இன்று மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இன்று (24.07.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன் விபரம்;</p><h2>வேளச்சேரி</h2><p>100 அடி புறவழிச்சாலை, வேளச்சேரி பிரதான சாலை, தேவி கருமாரியம்மன் நகர், வெங்கடேஸ்வரா நகர் 1-வது முதல் 4-வது தெரு வரை, டேவ் பிளாட், பாலகிருஷ்ணா தெரு, திருவள்ளூர் தெரு, கம்பர் தெரு, பாபா கார்டன், வீனஸ் காலனி, காமராஜர் தெரு, டான்சி நகர் மற்றும் முழு வி.ஜி.பி. செல்வா நகர்.</p><h2>ஆவடி</h2><p>சி.டி.எச் சாலை, கவரபளையம், சிந்து நகர், காந்தி நகர், டி.ஆர்.ஆர் நகர், தனலட்சுமி நகர், எம்.ஆர்.எப். நகர், நாசர் பிரதான சாலை, மோசஸ் தெரு.</p><h2>பூவிருந்தவல்லி</h2><p>ஜெ.ஜெ. நகர், குமரன் நகர், லீலாவதி நகர், ஏரிக்கரை சாலை, ஆவடி பிரதான சாலை.</p><h2>மாங்காடு</h2><p>மலையம்பாக்கம் பாரி கார்டன், ராயல் சிட்டி, சக்தி நகர், ரஹ்மத் நகர், எல்.கே.பி. நகர், பிள்ளையார் கோவில் தெரு, அபி எஸ்டேட், ஸ்ரீனிவாச நகர், ஜனனி நகர், நேரு தெரு, காமராஜர் தெரு, வசந்தபுரி பேஸ் I மற்றும் II, ராம் நகர்.</p><h2>தாம்பரம்</h2><p>மாடம்பாக்கம் நூத்தஞ்சேரி பிரதான சாலை, நூத்தஞ்சேரி லிங்க் சாலை, சபாபதி நகர், ஜோதி நகர், மாணிக்கம்நகர், வேங்கைவாசல், பாலா கார்டன் மற்றும் விரிவாக்கப் பகுதி. X</p><h2>புழல்</h2><p>மதானக்குப்பம், புத்தகரம், பெருமாள் நகர், ஆண்டாள் கோவில் தெரு, சண்முகபுரம். சிவப்பிரகாசம் நகர், நேதாஜி நகர், லட்சுமி அம்மன் நகர்.</p><h2>போரூர்</h2><p>சிக்கராயபுரம், கணபதி நகர், அஷ்டலக்ஷ்மி நகர், ஹரி அவென்யூ, மாசிலாமணி நகர், லட்சுமி அவென்யூ, மாந்தியம்மன் கோவில் தெரு, மங்களாபுரம், கே.கே.நகர், தென் காலனி, சபரி நகர், பாலாஜி நகர், கார்த்திக் பேலஸ், ஆர்.சி. பேலஸ், திருமுருகா மண்டபம், குன்றத்தூர் பிரதான சாலை, எம்.ஜி.ஆர். சிலை பஸ் ஸ்டாப், மேட்டு தெரு, பஜனை கோவில் தெரு, காந்தி தெரு, சிவன்தாங்கல், ஆஞ்சநேயர் கோவில் தெரு, அம்பாள் நகர், லீலாவதி நகர், குமாரசாமி நகர்,ஐடியா கம்பெனி.</p><h2>ஐ.டி. காரிடார்</h2><p>எழில் நகர், கண்ணகி நகர், வி.பி.ஜி அவென்யூ, ராயல் அவென்யூ, குமரன் குடில், தேவராஜ் அவென்யூ, மவுண்ட்பேட்டன் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, என்.ஜி.கே அவென்யூ, செயலக காலனி, பார்த்தசாரதி நகர், அன்னை பார்வதி நகர், தேவராஜ் நகர், ஸ்ரீ நகர், மகாத்மா காந்தி நகர், கற்பக விநாயகர் நகர், கணேஷ் நகர், திருவள்ளுவர் நகர், ராமலிங்க நகர், பாரதி தெரு, அண்ணா தெரு, நாராயணா நகர், கோபிநாத் அவென்யூ, ஈஞ்சம்பாக்கம், கஸ்தூரிபாய் நகர்.</p><h2>அடையாறு</h2><p>எல்.பி. சாலை, 1-வது முதல் 4-வது பரமேஸ்வரன் நகர், சாஸ்திரி நகர் 1-வது அவென்யூ, 1-வது முதல் 3-வது பத்மநாபன் நகர், இந்திரா நகர், சீனிவாசமூர்த்தி அவென்யூ, திருவேங்கடம் தெரு, 1-வது குறுக்குத் தெரு, கே.பி. நகர், அண்ணா அவென்யூ.</p><h2>பெசன்ட் நகர்</h2><p>கங்கை தெரு, அப்பர் தெரு, டைகர் வரதாச்சாரியார் தெரு, அருண்டேல் கடற்கரை சாலை, கடற்கரை சாலை, ருக்மணி சாலை விரிவாக்கப்பகுதி, அஷ்டலட்சுமி கார்டன், ஓடை குப்பம், திடீர் நகர், கோஸ்டல் சாலை, திருமுருகன் தெரு, வைகை தெரு. பாரி தெரு, காவேரி தெரு.</p><h2>கொட்டிவாக்கம்</h2><p>நியூ கடற்கரை சாலை மற்றும் விரிவாக்கப்பகுதி, சிட்ரஸ் ஹோட்டல், திருவள்ளுவர் நகர் 2-வது மற்றும் 7-வது பிரதான சாலை, 36-வது, 58-வது மற்றும் 59-வது குறுக்குத் தெரு, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், தாமரை ஹவுசிங் போர்டு, பேவாட்ச் புல்வார்டு. வாட்டர்லேண்ட் டிரைவ்.</p><h2>கோவிலம்பாக்கம்</h2><p>ஏழுமலை சாலை, வடிவேல் நகர், கோபால் நகர், பெருமாள் நகர், பார்த்தசாரதி சாலை, ஜெய்கணேஷ் நகர், பொன்னியம்மன் கோவில் தெரு, அபிநாதன் நகர், விஜயலட்சுமி நகர், தமிழன் தெரு. பாலகிருஷ்ணா தெரு, அவிவா என்க்ளேவ், பாலராமன் தெரு, பிள்ளையார் கோவில் தெரு.</p><h2>அம்பத்தூர்</h2><p>என்.ஆர்.எஸ். சாலை, பல்லா தெரு, டி.வி.எஸ். நகர், கண்டிகை தெரு, அக்ரஹாரம், சீனிவாசபுரம், செந்தில் நகர், ஐயப்பன் நகர், சீனிவாச நகர், தயாளன் நகர், கணேஷ் நகர், பாபா நகர், கடப்பா சாலை, வனசக்தி நகர், மூகாம்பிகை நகர், மதானக்குப்பம். பெருமாள் கோவில் தெரு மற்றும் ஆர்.கே. சிண்டிகேட்.</p> ]]></content:encoded></item><item><title>சென்னை ரெயில்வே கோட்டம் வரலாறு காணாத ரூ.5,038 கோடி வருவாய்: மேலாளர் சைலேந்திர சிங் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-railway-division-records-record-revenue-of-rs-5038-crore-manager-shailendra-singh</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-railway-division-records-record-revenue-of-rs-5038-crore-manager-shailendra-singh#comments</comments><guid isPermaLink="false">96593425-fc69-47b3-96cd-86611352c33d</guid><pubDate>Thu, 23 Jul 2026 21:34:43 +0000</pubDate><atom:updated>2026-07-23T21:34:43.038Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,ரெயில்வே,revenue,வருவாய்,Chennai Railway Division</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/my3phyyj/71.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சைலேந்திர சிங்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/my3phyyj/71.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தெற்கு ரெயில்வே சென்னை கோட்டத்திற்கான 71-வது வார விழா மற்றும் 'ரெயில்வே சேவா புரஸ்கார்' விருது வழங்கும் விழாவானது சென்னை அயனாவரத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை கோட்ட ரெயில்வே மேலாளர் சைலேந்திர சிங் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். </p> <p>தொடர்ந்து. 2025-26-ம் நிதியாண்டில் ரெயில்வேயில் சிறப்பாக பணியாற்றிய 3 ரெயில்வே அதிகாரிகள் மற்றும் 70 ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கினார். பின்னர், சைலேந்திர சிங் பேசியதாவது:-</p><h2>வருவாய்</h2><p>சென்னை கோட்டத்தில் தற்போது தினமும் 1,000 ரெயில்கள் இயக்கப்பட்டு, அதில் சுமார் 14 லட்சம் பேர் பயணம் செய்து வருகிறார்கள். 2025-26-ம் நிதியாண்டில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.5 ஆயிரத்து 38 கோடி வருவாய் எட்டியுள்ளது. 11.330 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. பொன்னேரியில் 2-வது கதி சக்தி முனையம் (சரக்கு முனையம்) செயல்படுத்தப்பட்டுள்ளது. </p><p>சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டி உணவக ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தானியங்கி புத்தக விற்பனை எந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. செங்கல்பட்டு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">ரெயில்</a> நிலையத்தில் பேட்டரி கார் வசதி புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>
ஹஜ் பயணம்: ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/hajj-pilgrimage-today-is-the-last-day-to-apply-online</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/hajj-pilgrimage-today-is-the-last-day-to-apply-online#comments</comments><guid isPermaLink="false">035d82cf-f1a3-476c-a8bd-f0e2a60e79ad</guid><pubDate>Thu, 23 Jul 2026 20:57:44 +0000</pubDate><atom:updated>2026-07-23T20:57:44.565Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஹஜ் பயணம்,Hajj Pilgrimage,Apply online,இன்று கடைசி நாள்,இந்திய ஹஜ் குழு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/n8f6xw9j/5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/n8f6xw9j/5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் இந்த ஆண்டு ஹஜ் பயணம் செல்ல விரும்புவோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 24-ந்தேதி (இன்று) இரவு 11.59 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் கால அவகாசம் நீடிக்கப்பட மாட்டாது என மும்பை இந்திய ஹஜ் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p>  <p>விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் முடிந்தவுடன் 30-ந்தேதி காலை 11 மணிக்கு கணினி வழி குலுக்கல் தேர்வு நடைபெறும். இத்தேர்வு ( https://www.hajcommittee.gov.in ஒளிபரப்பு செய்யப்படும். இதன் மூலம் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் மற்றும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்களின் விவரம் இந்திய ஹஜ் குழுவின் இணையதளத்தில் வெளியிடப்படுவதுடன், குறுஞ்செய்தி மூலமாகவும் தெரிவிக்கப்படும். தற்காலிகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புனிதப் பயணிகள் ஒவ்வொருவரும் முதல் தவணையாக ரூ.1 லட்சத்து 52 ஆயிரத்து 300-ஐ அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் இந்திய ஹஜ் குழு தெரிவித்துள்ளது.</p><p>மேற்கண்ட தகவல் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மகளிர் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் கற்றாழை ஜெல் தயாரிப்பது குறித்த பயிற்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/training-on-making-aloe-vera-gel-by-the-women-entrepreneurs-association</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/training-on-making-aloe-vera-gel-by-the-women-entrepreneurs-association#comments</comments><guid isPermaLink="false">6f367a34-fcfb-413d-8a8e-2fb3d06a5aa5</guid><pubDate>Thu, 23 Jul 2026 20:07:12 +0000</pubDate><atom:updated>2026-07-23T20:07:12.167Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,கற்றாழை,பயிற்சிTraining,மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/hbezvf2y/69.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கற்றாழை ஜெல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/hbezvf2y/69.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நல சங்கத் தலைவி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%B2%20%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">மகளிர் தொழில் முனைவோர் நல சங்கம் </a>நேரடி தொழிற்பயிற்சிகளையும், ஆன்லைன் பயிற்சிகளையும் மகளிர் தொழில் தொடங்குவதற்கான அனைத்து உதவிகளையும் சேவை மனப்பான்மையுடன் கடந்த 18 ஆண்டுகளாக வழங்கி வருகிறது. அதன்படி, மாதம்தோறும் 2-வது சனிக்கிழமையும், 4-வது சனிக்கிழமையும் ஆன்லைன் கருத்தரங்கம் மற்றும் பயிற்சி நடைபெற்று வருகிறது. </p><h2>ஆன்லைன் பயிற்சி</h2><p>அந்த வகையில் 25-ந் தேதி (நாளை) சனிக்கிழமை மதியம் 3 மணியளவில் ஆலுவேரா ஜெல் (கற்றாழை) தயாரிக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த தொழில் பயிற்சியில் கலந்து கொள்ளும் பெண்கள் கட்டணம் இன்றி உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ளப்படுவார்கள். </p><p>இதில் கலந்து கொள்ள எந்த கட்டண மும் கிடையாது. zoom.wewatn.com என்ற இணைப்பின் வழியாக இணைந்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னைக்கு புதிதாக 750 மின்சார பஸ்கள்: ஆயத்த பணிகள் தீவிரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/750-new-electric-buses-for-chennai-preparatory-work-in-full-swing</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/750-new-electric-buses-for-chennai-preparatory-work-in-full-swing#comments</comments><guid isPermaLink="false">42296525-efc0-423c-95db-5e83d74b2fca</guid><pubDate>Thu, 23 Jul 2026 19:45:29 +0000</pubDate><atom:updated>2026-07-23T19:45:29.944Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,சென்னை மாநகர போக்குவரத்து கழகம்,மின்சார பஸ்கள்,Buses பஸ்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/lwpr6hgr/68.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்சார பஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/lwpr6hgr/68.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 2-வது கட்டமாக 750 மின்சார பஸ்கள் வரப்போகிறது. அதில், 80 மின்சார பஸ்கள் ஆகஸ்டு மாதத்திற்குள் ஆலந்தூர் பணிமனையில் இருந்து இயக்கப்பட உள்ளன.</p><p>சென்னை மாநகர போக்குவரத்துக் கழகமானது பயணிகளுக்கு சொகுசு மற்றும் காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில் பொது போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் மின்சார பஸ்கள் இயக்கத்தை தொடங்கியது. அதன்படி, 225 ஏ.சி.பஸ்கள் மற்றும் 400 ஏ.சி. அல்லாத பஸ்கள் என 625 மின்சார பஸ்கள் மொத்த விலை ஒப்பந்தப்படி படிப்படியாக வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, சென்னை சென்டிரல், தண்டையார்பேட்டை என 5 பணிமனைகளில் இருந்து இயக்கப்பட்டன.</p><p>இந்த நிலையில் அடுத்து 2-வது கட்டமாக 550 ஏ.சி. பஸ்கள், 200 ஏ.சி. அல்லாத பஸ்கள் என 750 மின்சார பஸ்களை மொத்த விலை ஒப்பந்தப்படி இயக்க சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.</p><h2>ஆலந்தூர் பணிமனையில்...</h2><p>அதன்படி, அசோக் லைலண்டு நிறுவனத்தின் துணை நிறுவனமான ஓம் குளோபல் மொபைலிட்டி நிறுவனம் (ஏற்கனவே மின்சார பஸ்களை இயக்கி கொண்டிருக்கும் நிறுவனம்) 380 ஏ.சி. பஸ்கள், 120 ஏ.சி. அல்லாத பஸ்கள் என மொத்தம் 500 மின்சார பஸ்களை இயக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. மேலும், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 170 ஏ.சி. பஸ் கள், 80 ஏ.சி. அல்லாத பஸ்கள் என 250 மின்சார பஸ்களை இயக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.</p><p>இந்த 750 <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">மின்சார பஸ்களும்</a> ஆலந்தூர், சென்டிரல்-2, பெரம்பூர், பாடியநல்லூர், அய்யப்பன்தாங்கல், ஆவடி, கே.கே.நகர் ஆகிய 7 பணிமனைகளில் இருந்து இயக்கப்பட உள்ளது. அதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, முதன் முதலாக ஆலந்தூர் பணிமனையில் இருந்து 80 மின்சார பஸ்கள் ஆகஸ்டு மாதத்திற்குள் இயக்கப்பட இருப்பதாக சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>முன்விரோதம் காரணமாக வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: 2 இளஞ்சிறார்கள் உட்பட 3 பேர் கைது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/petrol-bomb-hurled-at-house-due-to-enmity-3-arrested-including-2-youths</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/petrol-bomb-hurled-at-house-due-to-enmity-3-arrested-including-2-youths#comments</comments><guid isPermaLink="false">2431776a-5262-4bd5-868f-5e7f6278268d</guid><pubDate>Thu, 23 Jul 2026 18:21:07 +0000</pubDate><atom:updated>2026-07-23T18:21:07.754Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தூத்துக்குடி,petrol bomb,கைதுArrest,பெட்ரோல் குண்டுகள் வீச்சு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/hgghz106/67.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல் குண்டு வீச்சு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/hgghz106/67.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்து நகர் அருகே விவேகானந்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தனகுமார்(வயது 43). தொழிலாளி. இவரது வீட்டின் மீது நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.</p><h2>கைது</h2><p>இதில் சந்தனகுமார் மகன் விஷ்வாவிற்கும் மீள விட்டான் கக்கன்ஜி நகர் பகுதியை சேர்ந்த முகிலன் மற்றும் 2 சிறுவர்களுக்கும் இடையே ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக சந்தனகுமார் வீட்டின் மீது 3 பேரும் சேர்ந்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">பெட்ரோல் குண்டு </a>வீசியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 இளஞ்சிறார்கள் உள்பட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்.. உரிய நேரத்தில் வெளிவருவார்: பழ. நெடுமாறன் பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/prabhakaran-is-alive-will-be-released-at-the-right-time-pazha-nedumaran-interview</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/prabhakaran-is-alive-will-be-released-at-the-right-time-pazha-nedumaran-interview#comments</comments><guid isPermaLink="false">e8da3af9-71e0-4e2e-af82-fca19c8cc6a1</guid><pubDate>Thu, 23 Jul 2026 17:52:54 +0000</pubDate><atom:updated>2026-07-23T17:52:54.477Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தஞ்சாவூர்,Captain Prabhakaran,பிரபாகரன்,பழ.நெடுமாறன் பேட்டி,Pazha. Nedumaran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/1biprjkl/66.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பழ. நெடுமாறன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/1biprjkl/66.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர்,</p><p>தஞ்சாவூரில் இன்று உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%B4.%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D">பழ. நெடுமாறன்</a> நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>தஞ்சை முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தில் வரும் 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவிலேயே மொழிக்காக நிறுவப்பட்ட முதல் பல்கலைக்கழகமான தமிழ் பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தராக பொறுப்பேற்ற முது முனைவர் வ.அய். சுப்ரமணியம் நூற்றாண்டு விழா நடை பெற உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.</p><h2>காலை உணவு திட்டம்</h2><p>தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி எப்படி உள்ளது என்பது குறித்து ஓராண்டுக்கு பிறகு கருத்து கூறுவது தான் சரியாக இருக்கும். முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் காமராஜர் காலை உணவு திட்டம் என பெயர் மாற்றியதை வரவேற்கிறோம். நான் சினிமா பார்ப்பதில்லை. அதனால் ஜனநாயகன் படம் பற்றி கருத்து கூற முடியாது.</p><h2>பிரபாகரன்</h2><p>விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார். இதனை நான் கடந்த 2009-ம் ஆண்டு முதல் கூறி வருகிறேன். உரிய நேரத்தில் அவர் வெளியே வருவார். தற்போது வெளியே வருவதற்கான சர்வதேச சூழ்நிலை இல்லை. பிரபாகரன் மகள் ஏற்கனவே தொலைக்காட்சி முன்பு தோன்றி பேசி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>லாக்கப் படுகொலை விவகாரத்தில் முதல்-அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் - பிரேமலதா வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-chief-minister-should-intervene-and-take-action-in-the-lockup-massacre-issue-premalatha-insists</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-chief-minister-should-intervene-and-take-action-in-the-lockup-massacre-issue-premalatha-insists#comments</comments><guid isPermaLink="false">4c59058a-d66b-429f-a726-81d59b60c8f0</guid><pubDate>Thu, 23 Jul 2026 16:25:02 +0000</pubDate><atom:updated>2026-07-23T16:25:02.416Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>DMDK,தேமுதிக,பிரேமலதா விஜயகாந்த்,பிரேமலதா,Premalatha Vijayakand,Premalatha</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/5sh7j8vy/Untitled-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/5sh7j8vy/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>லாக்கப் மரணங்களுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;</p><h2>லாக்கப் படுகொலை</h2><p>“தூத்துக்குடி மாவட்டம் அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் (வயது 24) என்பவர் காவல்துறை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் லாக்கப் படுகொலை செய்து உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>இந்தச் சம்பவம் குறித்து தலையில் மொட்டை அடிக்கப்பட்ட நிலையில் அருணாச்சலம் வாக்குமூலம் அளித்துள்ள வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதேபோல், அண்மையில் நாகர்கோவிலில் காவல் நிலையத்தில் காவலில் இருந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் லாக்கப் படுகொலை செய்து உயிரிழந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, மீண்டும் இதுபோன்ற லாக்கப் படுகொலை நிகழ்ந்திருப்பது மிகவும் கவலைக்குரியது.</p><h2>கடுமையான நடவடிக்கை</h2><p>சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய காவல் அதிகாரிகள், சட்டத்தை தன் கையில் எடுத்து லாக்கப் படுகொலை செய்வது எந்த வகையில் நியாயம்?. எனவே, இந்த வழக்கில் உண்மை நிலையை முழுமையாக வெளிக்கொணரும் வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.</p><p>மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழ்நாடு </a>அரசு உரிய நிவாரணத் தொகையை வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுவேலை வழங்கவேண்டும்.</p><h2>கடும் கண்டனம்</h2><p>அந்தக் குடும்பத்திற்கு நடந்த அநீதி யாருக்கும் நடக்கக் கூடாது என்பதற்காக, நாங்கள் ஒவ்வொரு முறையும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். ஆனாலும், லாக்கப் படுகொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே, “வேலியே பயிரை மேய்ந்தது போல" பாதுகாக்க வேண்டிய காவல்துறையே சட்டத்தை மீறி லாக்கப் படுகொலை செய்வது கடுமையாக கண்டிக்ககூடியது.</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் இதில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">உடனடியாக </a>கவனம் செலுத்தி, இதுபோன்ற லாக்கப் படுகொலைகள் இனி நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>குடும்ப தகராறில் கிணற்றில் குதித்த கர்ப்பிணி மனைவி: காப்பாற்ற முயன்ற கணவர் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pregnant-wife-jumps-into-well-in-family-dispute-husband-dies-trying-to-save-her</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pregnant-wife-jumps-into-well-in-family-dispute-husband-dies-trying-to-save-her#comments</comments><guid isPermaLink="false">46e962d4-2588-4a2c-a38a-46e594855947</guid><pubDate>Thu, 23 Jul 2026 15:49:51 +0000</pubDate><atom:updated>2026-07-23T15:49:51.325Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Dindigul,திண்டுக்கல்,தற்கொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/md3gd18s/Untitled-10.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/md3gd18s/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><p>திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள சுத்தி காலடிபட்டியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27 வயது). ஆட்டோ டிரைவர். இவரும் ஆத்தூர் அருகே உள்ள கூலம்பட்டியைச் சேர்ந்த பவித்ரா (22 வயது) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பின்னர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். தற்போது பவித்ரா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.</p><p>அஜித்குமார் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று இரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கணவரை மிரட்ட பவித்ரா வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குறித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் அஜித்குமார் தனது மனைவியை காப்பாற்றுவதற்கு, அவரும் கிணற்றில் குதித்தார்.</p><p>இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் நிலக்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றுக்குள் விழுந்த அஜித்குமார் மற்றும் அவரது மனைவியை மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். </p><p>அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அஜித்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது மனைவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் மனைவியை காப்பாற்ற முயன்ற கணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தவெக ஆட்சியில் தொடர்கதையாகும் காவல் மரணங்கள் - நயினார் நாகேந்திரன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-deaths-continue-to-be-a-story-under-the-thaweka-regime-nainar-nagendran-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-deaths-continue-to-be-a-story-under-the-thaweka-regime-nainar-nagendran-condemns#comments</comments><guid isPermaLink="false">d9f77288-4010-4619-a559-66a746b55d40</guid><pubDate>Thu, 23 Jul 2026 15:18:39 +0000</pubDate><atom:updated>2026-07-23T15:18:39.459Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/zxywflru/Untitled-22.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/zxywflru/Untitled-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>காவல் மரணம்</h2><p>தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த வாலிபர் அருணாச்சலம், தென்பாகம் காவல் நிலையப் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "போலீசார் தன்னைத் தலையில் தாக்கினர்" என உயிரிழப்பதற்கு முன் அருணாச்சலம் அளித்துள்ள மரண வாக்குமூல வீடியோ, இக்கொடூரத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்தியுள்ளது.</p><p>சமீபத்தில் நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் சிறை ஊழியர்களின் கொடூரத் தாக்குதலால் பலியான அதிர்ச்சி அடங்குவதற்குள், தற்போது தூத்துக்குடியில் மீண்டும் காவல் மரணம்(Custodial Death) நிகழ்ந்துள்ளது. இன்னும் எத்தனை காவல் மரணங்கள் நிகழும் என முதல்-அமைச்சர் விஜய் விளக்க வேண்டும். </p><h2>தொடர்கதை</h2><p>தவெக ஆட்சி அமைந்த குறுகிய காலத்திலேயே அடுத்தடுத்து நிகழும் இத்தகைய சம்பவங்கள், தமிழகத்தில் காவல் மரணங்கள் தொடர்கதையாக மாறியுள்ளதை நிரூபிக்கின்றன.</p><p>எனவே, பாதிக்கப்பட்ட அருணாச்சலத்தின் மரணத்திற்குப் பொறுப்பான தென்பாகம் காவல் நிலைய அதிகாரிகள் மீது உடனடியாகக் கொலை வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்வதோடு, பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினருக்குத் தகுந்த நீதியையும், இழப்பீட்டையும் விரைந்து வழங்க வேண்டும் என தவெக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் மரணமடைந்த விசாரணை கைதியின் உடல் நாளை பிரேதப் பரிசோதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/post-mortem-of-undertrial-prisoner-who-died-in-thoothukudi-to-be-conducted-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/post-mortem-of-undertrial-prisoner-who-died-in-thoothukudi-to-be-conducted-tomorrow#comments</comments><guid isPermaLink="false">318384ef-aad0-4212-9a88-af897be6acbc</guid><pubDate>Thu, 23 Jul 2026 15:04:55 +0000</pubDate><atom:updated>2026-07-23T15:04:55.668Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Thoothukudi,தூத்துக்குடி,மரணம்,உடல் பிரேத பரிசோதனை,விசாரணை கைதி,postmortem,லாக்கப்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/3h1p8x9b/enne.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/3h1p8x9b/enne.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>கடந்த 17.07.2026 அன்று, தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில், <a href="https://www.dailythanthi.com/topic/thoothukudi">தூத்துக்குடி</a> அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த அருணாசலம் (24) என்பவர் மதுவிலக்கு அமலாக்க சோதனையின் போது 180 மில்லிலிட்டர் அளவிலான 120 மதுபான பாட்டில்களை சட்டவிரோதமாக வைத்திருந்தது கண்டறியப்பட்டதால், தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய குற்ற எண். 751/2026 ச/பி தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் பிரிவுகள் 4(1)(A) மற்றும் 14 -ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.</p><h2>வெளிப்புற காயங்கள் இல்லை</h2><p>அதனைத் தொடர்ந்து, 17.07.2026 அன்று மாலை சுமார் 5.50 மணியளவில், அவரை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, மருத்துவ பரிசோதனைக்காக காவல் துறையினர் அழைத்துச் சென்றனர். பரிசோதனை மேற்கொண்ட டாக்டர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தகுதியுடையவர் என சான்றளித்ததுடன், அவரது உடலில் எந்தவித வெளிப்புறக் காயங்களும் இல்லை என்றும் மருத்துவ சான்றிதழில் சான்றளித்தார்.</p><h2>லாக்-அப்</h2><p>சட்ட மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்காக அவர் மீண்டும் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, அப்போது காவல் நிலையத்தில் இருந்த பிற கைதிகளுடன் காவல் நிலைய லாக்-அப்பில் வைக்கப்பட்டார். லாக்-அப்பில் இருந்த போது, மற்ற கைதிகளுடன் இயல்பாக நின்று பேசிக் கொண்டிருந்த அவர், திடீரென தானாகவே மயங்கி கீழே விழுந்தார். </p><p>இச்சம்பவம் லாக்-அப்பின் முன்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சிகிச்சையின் போது, அவருக்கு மருத்துவ நடைமுறை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல், இன்று (23.07.2026) அவர் இறந்ததாக டாக்டர்களால் அறிவிக்கப்பட்டது.</p><h2>இளைஞர் மரணம்</h2><p>இச்சம்பவம் தொடர்பாக, அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சட்டப்படி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் தென்பாகம் காவல் நிலையத்தில் அருணாச்சலம் மயங்கி விழுந்த வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி இளைஞர் மரணம் தொடர்பாக அவரது குடும்பத்தினரிடம் மாஜிஸ்திரேட் விஜயராஜ் நேரில் விசாரணை நடத்தினார்.</p><h2>பிரேத பரிசோதனை</h2><p>தூத்துக்குடியில் மரணமடைந்த விசாரணை கைதி அருணாசலத்தின்  உடல் நாளை பிரேதப் பரிசோதனை செய்யப்பட உள்ளது. நாளை காலை 7 மணிக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்த மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>அரசு, அமைச்சர்களை விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றமல்ல - சென்னை கோர்ட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-criticising-ministers-not-crime-against-public-peace-says-chennai-court</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-criticising-ministers-not-crime-against-public-peace-says-chennai-court#comments</comments><guid isPermaLink="false">1673cb61-8fdf-47a6-adaa-ab5ff42de4f8</guid><pubDate>Thu, 23 Jul 2026 15:01:00 +0000</pubDate><atom:updated>2026-07-23T15:01:00.483Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை கோர்ட்டு,Palani temple,Chennai Court,பழனி கோவில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/z07b4nes/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/z07b4nes/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பழனி கோவில் நில விவகாரத்தில் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் ரமேஷ் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய குற்றச்சாட்டின் கீழ், வினோத் சூர்யகுமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். பொது அமைதியை குலைப்பது, கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுவது போன்ற பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.</p><p>இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை கோர்ட்டில் வினோத் சூர்யகுமார் வழக்கு தொடர்ந்தார். அதில், அரசியல் உள்நோக்கத்துடன் தொடரப்பட்ட வழக்கு என்றும், பேச்சுரிமை கருத்துரிமை சுதந்திரத்துக்கு எதிரானது எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், “மனுதாரர் பிரபல ஊடகவியலாளர். கோவில் நில நிர்வாக முறைகேடுகளை வெளிச்சம் போட்டு காட்டுவதன் மூலம் பொது நலனுக்கு பயன்படும் என்ற உண்மையான நம்பிக்கையின் பேரிலும், தகவல்களின் அடிப்படையிலும் அந்த பதிவுகள் வெளியிடப்பட்டன. அமைச்சர் மீது தனிப்பட்ட விரோதமோ அல்லது பழிவாங்கும் உணர்வோ இல்லை" என வாதிட்டார்.</p><p>போலீசார் தரப்பில், "மனுதாரரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும். எனவே அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று வாதிடப்பட்டது. நீதிபதி கூறியதாவது:-</p><p>ஜனநாயகத்தில் மாறுபட்ட கருத்துகளின் குரல் மதிக்கப்பட வேண்டும். அரசையோ, அதன் அமைச்சர்களையோ விமர்சிப்பது, அரசுக்கோ அல்லது பொது அமைதிக்கோ எதிரான குற்றமாகாது. கோவிலுக்கு சொந்தமான சொத்து, சொற்ப விலைக்கு விற்கப்பட்டது என்பதோ அல்லது அமைச்சரின் உறவினருக்கு இதில் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதோ மதம், இனம், மொழி, சாதி, சமூகங்களுக்கு இடையே பகை, வெறுப்பை உருவாக்க வாய்ப்புள்ளதாகவோ, ஊக்குவிப்பதாகவோ கூற முடியாது.</p><p>அவதூறான, தரக்குறைவான கருத்துகளை கூறுவது அல்லது தவறான தகவல்களை வெளியிடுவது, அதிகபட்சமாக இந்திய தண்டனை சட்டத்தின்படி தண்டிக்கப்படக்கூடிய ஒரு குற்றம் மட்டுமே தவிர, அது ஒரு புலன் விசாரணைக்குரிய குற்றம் அல்ல. மனுதாரர் தினமும் காலை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும். இவ்வாறு கூறி நிபந்தனை ஜாமீனில் அவரை விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மடைமாற்றுவது சமூக அநீதியின் வெளிப்பாடு - டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/diverting-funds-meant-for-marginalised-communities-is-social-injustice-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/diverting-funds-meant-for-marginalised-communities-is-social-injustice-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">bd7cbc8a-3f55-44e7-a504-c9fb66220057</guid><pubDate>Thu, 23 Jul 2026 14:27:32 +0000</pubDate><atom:updated>2026-07-23T14:27:32.305Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,காலை உணவுத் திட்டம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/2khypjbh/Untitled-8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/2khypjbh/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்காக, பழங்குடியினர் முன்னேற்றத்திற்கான சிறப்புச் செயல் திட்ட நிதியிலிருந்து சுமார் 6 கோடி ரூபாயைப் பயன்படுத்துவதாக அரசு வெளியிட்ட அரசாணை மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.</p><p>பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் இன்றளவும் தரமான கல்வி, குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாகக் கிடைக்காத நிலையில், அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மடைமாற்றம் செய்வது அவர்களின் முன்னேற்றத்தை மேலும் தாமதப்படுத்தும் செயலாகும்.</p><p>காலை உணவுத் திட்டம் மாணவர்களின் நலனை மேம்படுத்தும் மிக முக்கியமான திட்டம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அந்தத் திட்டத்தை விரிவாக்கம் செய்கிறோம் என்ற பெயரில் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மடைமாற்றுவது சமூக அநீதியின் வெளிப்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளது.</p><p>எனவே, பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அவர்களின் வறுமையை ஒழிக்கவும் ஒதுக்கப்பட்ட நிதியை மடைமாற்றும் முடிவை உடனடியாகக் கைவிட்டு, பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்திற்கான நிதியை தமிழக அரசின் சமூக நலத்துறையின் மூலமாகவே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் மேலும் இரண்டு டி.என்.ஏ. ஆய்வகங்களை அமைக்க உள்ளதாக அரசு தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-government-has-announced-plans-to-set-up-two-additional-dna-laboratories-in-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-government-has-announced-plans-to-set-up-two-additional-dna-laboratories-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">9217cac5-7c21-4adf-ad21-dac6b7f1f089</guid><pubDate>Thu, 23 Jul 2026 14:26:08 +0000</pubDate><atom:updated>2026-07-23T14:26:08.348Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,சென்னை ஐகோர்ட்டு,தமிழ்நாடு அரசு,TN govt,Chennai High Court,பரிசோதனை ஆய்வகங்கள்,டி.என்.ஏ. பரிசோதனை,DNA Testing</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/96h11opj/aruthal.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/96h11opj/aruthal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில், மேலும் 2 டி.என்.ஏ. ஆய்வகங்களை மாநிலத்தில்அமைக்க உள்ளதாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">தமிழ்நாடு அரசு</a> தெரிவித்துள்ளது.</p><h2>மேலும் 2 டி.என்.ஏ. ஆய்வகங்கள்</h2><p>சென்னை ஐகோர்ட்டில் இன்று நடந்த வழக்கு விசாரணையின் போது, தலைமை வழக்கறிஞர் வழியே தமிழக அரசு அறிக்கை அளித்தது. அதில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் மற்றும் இதர குற்றவியல் வழக்குகளின் விசாரணைகளிலும், நீதிமன்ற நடவடிக்கைகளிலும் தாமதத்தை தவிர்க்கும் வகையில் மேலும் 2 டி.என்.ஏ. ஆய்வகங்களை மாநிலத்தில் அமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.</p><p>தற்போது மாநிலத்தில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே தடையவியல் துறை மூலம் டி.என்.ஏ. பரிசோதனை வசதிகள் உள்ளன. இதனால், ஆய்வக அறிக்கைகள் பெற காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்க கூடுதல் மையங்கள் நிறுவப்படுகின்றன.  டி.என்.ஏ. சோதனைகளின் முடிவுகள் விரைவாகக் கிடைக்கும்போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைத் தாமதமின்றி வழங்க முடியும். </p><p>தடய அறிவியல் துறை மற்றும் பிராந்திய ஆய்வகங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம், நீதிமன்றங்களில் வழக்குகளின் முடிவுகள் விரைந்து வெளிவர வாய்ப்பு ஏற்படும். இதுவரை தமிழ்நாட்டில் உள்ள குற்ற வழக்குகளுக்கான டி.என்.ஏ. பரிசோதனைகள் பெரும்பாலும் சென்னையில் உள்ள ஒரே மையத்தை மட்டுமே நம்பி இருந்தன. இந்த புதிய ஆய்வகங்கள் செயல்பாட்டுக்கு வரும்போது முடிவுகள் மிக விரைவாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>ஆந்திர பெண்</h2><p>இதனிடையே பெரும்பாலான வழக்குகளில் வழக்கறிஞர்கள் தான் விசாரணையை தள்ளிவைக்க கேட்கின்றனர் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். முன்னதாக பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட ஆந்திர பெண் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் விசாரணைக் கைதி உயிரிழப்பு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/death-of-an-undertrial-prisoner-in-thoothukudi-edappadi-palaniswami-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/death-of-an-undertrial-prisoner-in-thoothukudi-edappadi-palaniswami-condemns#comments</comments><guid isPermaLink="false">5998398c-40eb-48b8-aa37-69dc835613e5</guid><pubDate>Thu, 23 Jul 2026 14:17:10 +0000</pubDate><atom:updated>2026-07-23T14:17:10.061Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,எடப்பாடி பழனிசாமி,அதிமுக,Edappadi Palaniswami,AIADMK,Thoothukudi,தூத்துக்குடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/2d0eu1oc/Untitled-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/2d0eu1oc/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர் காவல் துறையினர் தாக்கியதில் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.</p><h2>நீதி வேண்டும்</h2><p>இன்றைய பொய்க்கால் குதிரை அரசு பொறுப்பேற்றதில் இருந்து காவல் மரணங்களும் குதிரை வேகத்தில் அதிகரிப்பது மிகுந்த வேதனைக்கும் கடும் கண்டனத்திற்கும் உரியது.</p><p>மடப்புரம் அஜித்குமார் மரணத்தின் போது “சாரி வேண்டாம், நீதி வேண்டும்” என்று பதாகை பிடித்த இன்றைய முதல்-அமைச்சர், தனது ஆட்சியில் நடக்கும் தொடர் காவல் மரணங்களுக்கு என்ன பதில், நீதி வைத்துள்ளார்?</p><h2>பாரபட்சமின்றி நடவடிக்கை</h2><p>அருணாச்சலம் மரணத்தின் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு, தவறு யார் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">இழைத்திருந்தாலும்</a>, எந்த பாரபட்சமும் இன்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய் மவுனத்தை கலைக்க வேண்டும் - தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-must-break-his-silence-dmk-leader-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-must-break-his-silence-dmk-leader-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">6a098b0c-80e6-4fe6-818b-efa637446dcc</guid><pubDate>Thu, 23 Jul 2026 13:43:13 +0000</pubDate><atom:updated>2026-07-23T13:43:13.670Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,Tamilnadu,விஜய்,Farmers,திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,M.K.Stalin,தமிழகம்,காவிரி நீர்,தமிழக அரசு,TN govt,விவசாயிகள்,Cauvery water,மேகதாது அணை,குறுவை சாகுபடி,சம்பா சாகுபடி,kuruvai cultivation,Samba Cultivation,Mekedatu Dam Issue,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,Chief Minister Vijay</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/q03gwuw4/mou.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/q03gwuw4/mou.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காவிரி நீரைப் பெறவும், மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை பிரதமரிடம் நேரில் கொடுக்கவும் ஏன் பயம்? என்று <a href="https://www.dailythanthi.com/topic/mkstalin">தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்</a>, <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a>யிடம் கேள்வி எழுப்பி உள்ளார். </p><h2>பிரதமரிடம் பேசாதது ஏன்?</h2><p>இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-</p><p><a href="https://www.dailythanthi.com/topic/vijay">தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்</a> அவர்களுக்கு சில கேள்விகள்:</p><p>1) தமிழ்நாட்டின் கோரிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்து நிராகரித்து வரும் நிலையில் இதுகுறித்து பிரதமரிடம் பேசாதது ஏன்?</p><p>2) தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் என்ன செய்துகொண்டிருக்கிறார்?</p><p>3) தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை எதிர்த்துப் பேச என்ன பயம்?</p> <h2>நிவாரணத் தொகுப்பு எங்கே?</h2><p>4) அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏன் கூட்டவில்லை?</p><p>5) மேகதாது அணைக்கு எதிரான சட்டமன்றத் தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் சென்று பிரதமரிடம் நேரில் அளிப்பது எப்போது?</p><p>6) தவிக்கும் டெல்டா விவசாயிகளுக்கான நிவாரணத் தொகுப்பு எங்கே?</p><p>காவிரி டெல்டாவின் உயிர்நாடிப் பிரச்சினையில் த.வெ.க. அரசின் அர்த்தமற்ற மவுனம் அதிர்ச்சியளிக்கிறது!</p> <h2>காவிரி டெல்டா விவசாயிகள்</h2><p>தமிழ்நாட்டின் கோரிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையம் மீண்டும் மீண்டும் நிராகரித்து - காலதாமதம் செய்து கொண்டிருக்கிறது. ஏற்கெனவே முழுக் கடன் தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை ஏமாற்றி விட்டது இந்த அரசு.</p><p>குறுவையும் பாதித்து - சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகும் பேராபத்தில் காவிரி டெல்டா விவசாயிகள் உள்ளனர்.</p><p>நெருக்கடியான இச்சூழ்நிலையில், முதல்-அமைச்சர் அவர்கள் பிரதமர் அவர்களைச் சந்தித்திருக்க வேண்டும்.</p><p>ஆனால் முதல்-அமைச்சரும் பேசவில்லை. நீர்வளத்துறை அமைச்சரும் பேசவில்லை.</p><h2>போர்க்கால நடவடிக்கை</h2><p>மேகதாது அணைக்கு எதிரான சட்டமன்றத் தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளையும் அழைத்துக் கொண்டு பிரதமரிடம் நேரில் கொடுக்க நேரமில்லாமல் இருக்கிறார் முதல்-அமைச்சர்.</p><p>தமிழ்நாட்டிற்குக் காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசையும் தட்டிக் கேட்க முடியாமல் தவிக்கிறார்.</p><p>அர்த்தமற்ற மவுனத்தைக் கலைத்து மாநில உரிமையை நிலைநாட்ட போர்க்கால நடவடிக்கையில் ஈடுபடுக!</p><p>குறுவை பாதிப்பு மற்றும் சம்பா சாகுபடி ஏமாற்றத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு "புதிய நிவாரணத் தொகுப்பினை" அறிவித்திடுக!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆகஸ்டு முதல் தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/express-trains-to-operate-from-tambaram-railway-station-from-august</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/express-trains-to-operate-from-tambaram-railway-station-from-august#comments</comments><guid isPermaLink="false">bf25d76c-dac8-4521-aafb-822ed70fcf3e</guid><pubDate>Thu, 23 Jul 2026 13:41:15 +0000</pubDate><atom:updated>2026-07-23T13:41:15.641Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,தாம்பரம்,எக்ஸ்பிரஸ் ரெயில்கள்,Express Rail,சென்னை எழும்பூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/qdxx7j6h/train33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
எக்ஸ்பிரஸ் ரெயில்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/qdxx7j6h/train33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணிகள் ரூ.840 கோடியில் நடைபெற்று வருகின்றன. விமான நிலையம் போல ரெயில் நிலையத்தை மாற்றவும் பயணிகளுக்கு கூடுதலான வசதிகள் அளிக்கவும் திட்டமிடப்பட்டு 5 கட்டங்களாக இப்பணிகள் நடந்து வருகிறது.</p><p>நடைமேடைகள், பிரமாண்ட நடை மேம்பாலங்கள், பயணிகள் காத்திருக்கும் பகுதி, ஓய்வுஅறைகள், ஓட்டல்கள், வணிகப் பகுதிகள், எஸ்கலேட்டர், லிப்ட் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்படுகிறது.</p><p>இந்த சீரமைப்பு பணிகளுக்காக அவ்வப்போது ரெயில் இயக்கத்தில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. தாம்பரத்தில் இருந்து ஒரு சில ரெயில்கள் இயக்கப்பட்டன.</p><p>இந்த நிலையில் 3-வது கட்டமாக இரும்பு நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. 500 மெட்ரிக் டன் எடைக்கும் அதிகமான கிரேன்கள் பயன்படுத்தப்பட்டு இரும்பு ராடர்கள் பாலமாக நிறுவப்படுகிறது. தற்போது காந்தி இர்வின் சாலையில் எழும்பூர் ரெயில் நிலைய தாம்பரம் வழித்தட தொடக்கத்தில் இருந்து முதல் 5 நடைமேடைகளில் இரும்பு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.</p><p>அந்தப் பாலம் 18 மீட்டர் அகலத்துடனும் 120 மீட்டர் நீளத்துடனும் அமைய உள்ளது. அதன்படி எழும்பூர் ரெயில் நிலைய 6-வது நடைமேடையில் இருந்து இரும்பு பாலம் புறநகர் மின்சார ரெயில்கள் செல்லும் 10 மற்றும் 11-வது நடைமேடை வரையிலான பணிகள் ஓரிரு வாரங்களில் தொடங்க இருக்கிறது.</p> <p>இந்தப் பணிகள் தொடங்கும்போது புறநகர் மின்சார ரெயில் சேவை பாதிக்காமல் வேறு நடைமேடைக்கு மாற்ற வேண்டி உள்ளது. புறநகர் மின்சார ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்படாமல் ரெயில்களை இயக்குவது குறித்து ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டது.</p><p>அதன்படி ஆகஸ்ட் மாதம் முதல் <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">எக்ஸ்பிரஸ் ரெயில்களில்</a> சிலவற்றை தாம்பரத்தில் இருந்து தென் மாவட்டத்திற்கு இயக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பெரும்பாலான ரெயில்கள் எழும்பூரில் இருந்து இயக்கப்படுகிறது. அவற்றில் சில ரெயில்களை மட்டும் தாம்பரத்தில் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>இந்த நிலையில் இரும்பு நடைமேம்பால பணியை சென்னை ரெயில்வே கோட்ட மேலாளர் சைலேந்திர சிங் நேற்று ஆய்வு செய்தார். அவரிடம் பணிகள் நடைபெறும் நிலை குறித்தும் அதற்காக 5 மற்றும் 6 ஆகிய நடைமேடைகளுக்கு புறநகர் மின்சார ரெயில்களை மாற்றி இயக்குவது குறித்தும் ரெயில்வே பொறியாளர்கள் விளக்கிக் கூறினார்கள்.</p><p>இந்த ஆய்வின்போது தெற்கு ரெயில்வே கூடுதல் மேலாளர் செந்தில்குமார், எழும்பூர் ரெயில் நிலைய இயக்குனர் ஜெயகாந்தன், பொறியாளர் லோகநாயகி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>சட்ட விரோத மணல் குவாரிகள் செயல்பட தடை - ஐகோர்ட்டு மதுரை கிளை அதிரடி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-illegal-sand-quarries-madurai-bench-of-the-high-court-takes-decisive-action</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-illegal-sand-quarries-madurai-bench-of-the-high-court-takes-decisive-action#comments</comments><guid isPermaLink="false">dbd4e8fe-fd45-450b-91f3-6a949d60e7da</guid><pubDate>Thu, 23 Jul 2026 13:15:56 +0000</pubDate><atom:updated>2026-07-23T13:15:56.558Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Madurai,மதுரை,Madurai High Court,மதுரை ஐகோர்ட்டு,Melur,மேலூர்,sand quarries,மணல் குவாரிகள்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/b9y0axyw/shada.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/b9y0axyw/shada.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் சட்ட விரோத மணல் குவாரிகள் செயல்பட தடை விதித்து <a href="https://www.dailythanthi.com/topic/madurai-high-court">ஐகோர்ட்டு மதுரை கிளை</a> உத்தரவிட்டுள்ளது. </p><h2>நீதிபதிகள் எச்சரிக்கை</h2><p>இதுதொடர்பாக இன்று நடந் த வழக்கு விசாரணையின்போது இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதை இனியும் கண்களை மூடி வேடிக்கை பார்க்க முடியாது என்று நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.</p><p>மேலும் சட்ட விரோத குவாரிகள் செயல்பாட்டுக்கு உடனடியாக மாவட்ட கலெக்டர் தடை விதித்து நடைவடிக்கை எடுக்க  வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். </p><p>மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் சட்ட விரோத மணல் குவாரிகள் நடைபெறுவதை தடுக்கக்கோரிய வழக்கில் <a href="https://www.dailythanthi.com/topic/madurai-high-court">ஐகோர்ட்டு மதுரை கிளை</a> அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ரூ. 2.75 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட அறிஞர் அண்ணா நீச்சல் குளம் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திறந்து வைத்தார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-2-75-kodi-mathipeettil-putuppikkappatta-arignar-anna-neechal-kulam-amanichar-athav-arjuna-thirandhu-vaithar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-2-75-kodi-mathipeettil-putuppikkappatta-arignar-anna-neechal-kulam-amanichar-athav-arjuna-thirandhu-vaithar#comments</comments><guid isPermaLink="false">f9a907af-5dce-4a1f-ad6d-abfd954a54ed</guid><pubDate>Thu, 23 Jul 2026 13:07:07 +0000</pubDate><atom:updated>2026-07-23T13:07:07.795Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Aadhav Arjuna,நீச்சல் குளம்,Swimming pool,அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/16anibry/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/16anibry/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ரூ. 2.75 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட அறிஞர் அண்ணா நீச்சல் குளத்தை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று திறந்து வைத்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் ரூ. 2.75 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட அறிஞர் அண்ணா நீச்சல் குளம், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவால் இன்று (23.07.2026) திறந்து வைக்கப்பட்டது.</p><p>இந்த நீச்சல்குளம் பொதுப்பணித்துறையால் நிறுவப்பட்டு, கல்வித்துறையால் நிர்வகிக்கப்பட்டு, தற்போது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. 50 மீட்டர் நீளமும், 25 மீட்டர் அகலமும், 4 - 12 அடி ஆழமும் கொண்ட பெரிய நீச்சல் குளமும், 25 மீட்டர் நீளமும், 15 மீட்டர் அகலமும், 2.5 - 3.5 அடி ஆழமும் கொண்ட பயிற்சி குளமும் (Warmup Pool) ரூ. 2.75 கோடி மதிப்பீட்டில் உயர்தரத்துடன் புனரமைக்கப்பட்டுள்ளது.</p><p>நீச்சல் குளங்களின் பழுதடைந்த தரை மற்றும் சுவர் டைல்ஸ்கள் மாற்றப்பட்டுள்ளன. மேலும், புதிய குழாய்கள், பம்புகள், வடிகட்டும் (Filtration) அமைப்புகள், ஸ்டார்டிங் பிளாக்குகள், ஏணிகள், கிரேட்டிங், உள்ளிட்ட உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் நீச்சல் வீரர்கள் பாதுகாப்பாகவும், தரமான சூழலிலும் பயிற்சி பெறும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 1,500 சதுர அடியில் குளிர்சாதன வசதியுடன் கூடிய உடற்பயிற்சி கூடமும் அமைக்கப்பட்டுள்ளது. நீச்சல் வீரர்களுக்கும், பொது மக்களுக்கும் பயிற்சி அளிக்க ஏதுவாக 4 பயிற்றுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><p>மேலும் மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ.12.50 கோடி மதிப்பீட்டிலும், கரூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ.6.27 கோடி மதிப்பீட்டிலும் புதிய நீச்சல் குளங்கள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிறுவிளையாட்டு வளாகத்தில் அமைந்துள்ள நீச்சல் குளம் ரூ.23 லட்சம் மதிப்பீட்டிலும், சென்னை வேளச்சேரியில் உள்ள நீச்சல் குளம் ரூ.16.35 கோடி மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகள் என தமிழ்நாட்டில் மொத்தம் ரூ.35.35 கோடி மதிப்பீட்டில் 4 நீச்சல் குளங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அவனை சும்மா விடாதீர்கள்... வீடியோ வெளியிட்டு பெண் தற்கொலை - கணவர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dont-spare-him-woman-dies-by-suicide-after-video</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dont-spare-him-woman-dies-by-suicide-after-video#comments</comments><guid isPermaLink="false">16c1e0e6-b646-400d-bcda-bbbc2ae7a9b3</guid><pubDate>Thu, 23 Jul 2026 12:54:50 +0000</pubDate><atom:updated>2026-07-23T12:54:50.376Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,பூந்தமல்லி,தற்கொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/q3uehp0b/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/q3uehp0b/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே கரையான்சாவடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் செல்வின். இவரது மனைவி ஷாலினி (33 வயது). என்ஜினீயரான இவர் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இருவரும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளார். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ஷாலினி மனவேதனையில் இருந்து வந்தார்.</p><p>இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது ஷாலினி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போலீசார் ஷாலினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே ஷாலினி தற்கொலை செய்வதற்கு முன்பு வீடியோ ஒன்றை பதிவு செய்து, உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி உள்ளார். அந்த வீடியோவில் கதறி அழுதபடி ஷாலினி கூறியிருப்பதாவது:-</p><p>என்னால் தாங்க முடியவில்லை. பிரிந்தும் வாழ விடமாட்டீர்கள். என்னால் யாருக்கும் எந்த பாரமும் வேண்டாம். இவனை யாரும் சும்மா விடாதீர்கள். நான் பொறுத்து பார்த்தும் முடியவில்லை. செல்கிறேன். நான் இந்த வீடியோவை அனுப்புகிறேன். இதனை போலீசில் கொடுங்கள். ஆவடியில் உள்ள வீடு இரண்டு பேரின் பெயரில் உள்ளது. அதனை நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள். நானே எதுவும் செய்து கொள்ள வேண்டும் என்று கொடுமைப்படுத்துகிறான். பிளீஸ் அவனை சும்மா விடாதீர்கள். நான் போகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.</p><p>இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷாலினியின் கணவர் செல்வினை கைது செய்தனர். விசாரணையில் நேற்று காலை குழந்தையை ஷாலினி அடித்ததாக கூறப்படுகிறது. இதனை கணவர் கண்டித்து ஷாலினியை தாக்கிவிட்டு உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றதாக தெரிகிறது. அதன் பின்னர் ஷாலினி தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஷாலினியின் தற்கொலை முடிவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>&apos;ஜனநாயகன்&apos; வெற்றி பெற வேண்டி அம்மன் கோவிலில் மண்சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vijay-fans-ate-man-soru-at-an-amman-temple-praying-for-the-success-of-jananayagan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vijay-fans-ate-man-soru-at-an-amman-temple-praying-for-the-success-of-jananayagan#comments</comments><guid isPermaLink="false">7d47eb99-2aba-4cf0-947f-28bcfee2a121</guid><pubDate>Thu, 23 Jul 2026 12:34:06 +0000</pubDate><atom:updated>2026-07-23T12:34:06.904Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Amman temples,மண்சோறு,விஜய் ரசிகர்கள்,Jananayagan,ஜனநாயகன் படம்</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/r8dbzgtt/8.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ மண்சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஜனநாயகம் திரைப்பட வெற்றிக்காக மண்சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/r8dbzgtt/8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>'ஜனநாயகன்' திரைப்படம் வெற்றி பெற வேண்டுமென்று விஜய் ரசிகர்கள் அம்மன் கோவிலில் மண்சோறு சாப்பிட்டு வினோத நேர்த்திகடன் செலுத்தினர்.</p><h2>முதலமைச்சரின் கடைசி திரைப்படம்</h2><p>தமிழக முதலமைச்சரும், நடிகருமான விஜய் நடிப்பில் இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் '<a href="https://www.dailythanthi.com/search?q=jananayagan">ஜனநாயகன்'</a>. விஜய்யின் அரசியல் வருகைக்குப் பின், அவரது கடைசித் திரைப்படமாக திரைக்கு வந்துள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. </p><h2>வினோத வழிபாடு</h2><p>இந்நிலையில், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திரண்ட விஜய் ரசிகர்கள், படம் உலகளவில் இமாலய வெற்றி பெற வேண்டும் என வேண்டி அம்மன் கோவில் வளாகத்தில் ஒன்று கூடினர். அங்கு முட்டிப்போட்டபடி, வெறும் தரையில் சாதத்தைப் கொட்டி, மண்ணோடு பிசைந்து 'மண்சோறு' சாப்பிட்டு வினோத முறையில் தங்களது அசுர பிரார்த்தனையை நிறைவேற்றினர்.</p><h2>நெட்டிசன்கள் - பொதுமக்கள் விமர்சனம்</h2><p>திரைப்பட வெற்றிக்காகவும், தணிக்கை சான்றிதழ் தடைகளைத் தாண்டியும் ரசிகர்கள் நடத்திய இந்த வேண்டுதல் நிகழ்வு இணையத்தில் கடுமையான விவாதங்களை கிளப்பியுள்ளது."ஒரு திரைப்படத்திற்காக ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் இப்படி மண்ணில் சோறு போட்டு சாப்பிடுவது அநாகரிகமானது, தேவையற்றது" என பொதுமக்களும் நெட்டிசன்களும் தங்களது கண்டனங்களை சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.</p><p>எனினும், தளபதி விஜய் மீதான தங்களின் அலாதி அன்பின் வெளிப்பாடே இது என அவரது ரசிகர்கள், இந்த செயல் நியாயம் தான் என்று கூறி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை: பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து வடக்கு வட்டார துணை ஆணையர் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-northern-regional-deputy-commissioner-inspects-various-development-project-works</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-northern-regional-deputy-commissioner-inspects-various-development-project-works#comments</comments><guid isPermaLink="false">b807eeb5-8920-400b-b593-82a31a1ac363</guid><pubDate>Thu, 23 Jul 2026 12:29:16 +0000</pubDate><atom:updated>2026-07-23T12:29:16.964Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/03gk4xv7/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/03gk4xv7/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மணலி மற்றும் மாதவரம் மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை வடக்கு வட்டார துணை ஆணையாளர் ஸ்வேதா சுமன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>துணை ஆணையர் ஆய்வு</h2><p>இன்று (23.07.2026) வடக்கு வட்டார துணை ஆணையாளர் ஸ்வேதா சுமன் பெருநகர சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், வார்டு-16க்குட்பட்ட கடப்பாக்கம் ஏரி, வார்டு-19க்குட்பட்ட மஞ்சம்பாக்கம் பகுதியில் கட்டப்பட்டு வரும் நிவாரண மையம், தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு தயாரிக்கும் சமையல் கூடம், மாத்தூர் பகுதியில் நர்சரி பண்ணைகள் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அமைக்கப்படவுள்ள </a>இடம், தொடர்ந்து, மாதவரம் மண்டலம், வார்டு-23க்குட்பட்ட புழல் பகுதியில் உள்ள சமுதாய கூடம், வார்டு-24க்குட்பட்ட நகர்ப்புற சமுதாய நல மையம் உள்ளிட்டவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.</p><h2>அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்</h2><p>இந்த ஆய்வின்போது, வடக்கு வட்டார துணை ஆணையாளர் கடப்பாக்கம் ஏரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளையும், நிவாரண மையம் கட்டுமானப் பணிகளையும், சமையல் கூடத்தினைத் தூய்மையாகப் பராமரித்திடவும், நகர்ப்புற சமுதாய நல மையத்தில் மருத்துவர்கள், பணியாளர்கள் வருகை, பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்தும், சமுதாய கூடத்தினை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பராமரித்திடவும் </a>அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரூ.2,000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலம் - தமிழக அரசு அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-2000-crore-worth-of-bonds-auction-tamil-nadu-government-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-2000-crore-worth-of-bonds-auction-tamil-nadu-government-announcement#comments</comments><guid isPermaLink="false">68389d6e-b9b2-4e13-9efd-87a6f3c73e6e</guid><pubDate>Thu, 23 Jul 2026 12:27:04 +0000</pubDate><atom:updated>2026-07-23T12:27:04.582Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt,auction,ஏலம்,பிணையப் பத்திரங்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/t589qfv3/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/t589qfv3/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ரூ.2,000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு அரசு மொத்தம் ரூபாய் 2,000 கோடி மதிப்புள்ள, பங்குகள் வடிவிலான 7.39 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள் 2034 ரூபாய் 1,000 கோடி மறுவெளியீடு மற்றும் 7.59 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள் 2041 ரூபாய் 1,000 கோடி மறுவெளியீடு ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.</p><p>இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் ஜீலை 28, 2026 அன்று நடத்தப்படும். போட்டி ஏலக்கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.00 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் [Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System] மின்னணு படிவத்தில் (Electronic format) ஜீலை 28, 2026 அன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இனிமே சண்டை இல்லை..நாம பிரெண்ட்ஸ்.. டெலிவிரி ஊழியரை கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டு.. மன்னிப்பு கோரிய இளம்பெண் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/were-friends-young-woman-apologizes-after-cursing-delivery-worker</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/were-friends-young-woman-apologizes-after-cursing-delivery-worker#comments</comments><guid isPermaLink="false">a15dfeca-1e9c-4b56-99ae-a26fd8945945</guid><pubDate>Thu, 23 Jul 2026 12:20:19 +0000</pubDate><atom:updated>2026-07-23T12:20:19.625Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,women,delivery,delivery boy,Food delivery</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/z6jdcv0l/zemoto33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மன்னிப்பு கோரிய இளம்பெண்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/z6jdcv0l/zemoto33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>டெலிவரி ஊழியரை ஆபாசமாக பேசிய பெண்ணின் வீடியோ வெளியாகி அப்பெண்ணிற்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் அந்த இளைஞரை அழைத்து அந்த பெண் மன்னிப்பு கேட்டு வீடியோவாக வெளியிட்டுள்ளார்.</p><h2>டெலிவிரி ஊழியர்கள்</h2><p>தொழில்நுட்பங்கள் பெருகிவிட்ட இந்த காலக்கட்டத்தில் நாம் வாங்க விரும்பும் பொருட்கள் அனைத்தும் வீட்டு வாசலுக்கே வரும் வகையில் காலம் மாறி விட்டது. ஸ்விக்கி, சோமட்டோ, பிக் பாஸ்கெட், பிளிங்கிட், அமேசான், பிளிப்கார்ட், செப்டோ போன்ற பல வகையான நிறுவனங்கள் தங்கள் கீழ் டெலிவரி ஊழியர்களை கொண்டு இத்தகைய தொழிலை மேற்கொண்டு வருகிறது. உணவு, மளிகைப் பொருட்கள், ஆடைகள் என அனைத்தும் கிடைக்கிறது. இந்த தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் என அனைவரும் சென்னை போன்ற பெருநகரங்களில் பணியாற்றி வருகின்றனர். </p><p>ஒவ்வொரு ஆர்டருக்கும் குறிப்பிட்ட தொகை வழங்கப்படும் என்பதால் பலரும் நிரந்தர பணி அமையும் வரை இத்தகைய பணிகளை தங்கள் வாழ்வாதாரத்துக்காக செய்து வருகின்றனர். ஆனால் சில இடங்களில் இத்தகைய டெலிவரி ஊழியர்களை ஆர்டர் செய்யும் மக்கள்  டெலிவிரி ஊழியர்களை கொஞ்சம் கூட மதிப்பதில்லை. அடிமை போல் நடத்தி கேவலமாக பேசும் காட்சிகளும் சமூக வலைதளங்களிலும் டிரெண்டிங் ஆவதுண்டு. அப்படி ஒரு சம்பவம் தான் நேற்று சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியது. </p><h2>வசைபாடிய இளம்பெண்</h2><p>சென்னை மணலி அருகே உணவு ஒன்றை இளம்பெண் ஒருவர் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவர் தன் முகவரியை தவறாக கூறியதாக தெரிகிறது.  . கூகுள் மேப் பார்த்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D">டெலிவரி ஊழியர்கள்</a> வருவார்கள் என்பதால் அந்த முகவரி மேப்பிலும் தவறாக காட்டியுள்ளது. இதனால் உணவை டெலிவரி செய்ய தாமதமானதாக சொல்லப்படுகிறது. இதனால் அப்பெண்ணுக்கும் டெலிவரி செய்ய வந்த கிஷோர் என்ற நபருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. </p><p>இதில் கோபமடைந்த அந்த பெண் கிஷோரை கெட்ட கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்தார். காது கொடுத்து கேட்க கூடாத அளவிற்கு மிகவும் அறுவதறுக்தக்க  வகையில் வசைபாடினார். அதுமட்டுமல்லாமல் அந்த ஊழியரின் குடும்பத்தையும் இழிவாக பேசினார். மேலும் எல்லாவற்றையும் பேசிவிட்டு போலீசுக்கும் போன் போடும் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் வைரலானது. பலரும் அந்த பெண்ணை  வெளுத்து வாங்கினர். </p><h2>பகிரங்க மன்னிப்பு </h2><p>இந்த நிலையில் டெலிவரி ஊழியர் கிஷோரை தேடி கண்டுபிடித்த அந்த இளம்பெண் நடந்த தவறுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவை யாரும் பரப்ப வேண்டாம். இந்த செயல் மற்ற டெலிவரி ஊழியர்களை காயப்படுத்தியிருந்தால் மன்னியுங்கள் எனவும் அந்த பெண் தெரிவித்துள்ளார். நாங்கள் இனிமேல் நண்பர்கள்..இனிமே சண்டைலாம் இல்லை.. நாம  ப்ரெண்ஸ் சரியா என தெரிவிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மாதிரி உணவு தெருக்கள் திட்டம் - அமைச்சர் அருண்ராஜ் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/model-food-streets-scheme-for-six-districts-including-chennai-minister-arunraj-announces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/model-food-streets-scheme-for-six-districts-including-chennai-minister-arunraj-announces#comments</comments><guid isPermaLink="false">98da0d40-8961-4325-963d-db1729e98833</guid><pubDate>Thu, 23 Jul 2026 12:12:33 +0000</pubDate><atom:updated>2026-07-23T12:12:33.686Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,உணவு,விற்பனையாளர்கள்,Minister Arunraj,அமைச்சர் அருண்ராஜ்,food street</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/i77iued6/annayar.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/i77iued6/annayar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் , திருவள்ளூர் மாவட்ட சாலையோர உணவு வியாபாரிகளுக்கான சிறப்பு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாமை இன்று தொடங்கி வைத்தார்.</p> <p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை <a href="https://www.dailythanthi.com/topic/arunraj">அமைச்சர் அருண்ராஜ்</a> அவர்கள் இன்று (23.07.2026) திருவள்ளூர் மாவட்ட சாலையோர உணவு வியாபாரிகளுக்கான சிறப்பு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாமை சென்னை ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி கலையரங்கில் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.</p><p>இந்த பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாமில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர், பூண்டி, எல்லாபுரம், மீஞ்சூர், புழல், சோழவரம், கும்மிடிப்பூண்டி, வில்லிவாக்கம், ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, திருவேற்காடு, மாதவரம், திருவெற்றியூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய பகுதிகளை சார்ந்த சுமார் 1500 க்கும் மேற்பட்ட சாலையோர உணவு வியாபாரிகள் கலந்து கொண்டனர்.</p><h2>விழிப்புணர்வு கண்காட்சி</h2><p>இம்முகாமில் சாலையோர உணவு வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் சார்பில் உணவுப் பொருள் கலப்படத்தை எளிதில் கண்டறியும் முறை, பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்களை பாதுகாப்பாக மறுசுழற்சி செய்தல் மற்றும் உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. </p><p>அமைச்சர் அவர்கள் இக்கண்காட்சிகளை பார்வையிட்டு, அதன் செயல்முறைகளை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும் துருப்பிடிக்காத எக்குவால் (stainless-steel) வடிவமைக்கப்பட்டிருந்த உணவு வண்டிகளை பார்வையிட்டார்.</p><h2>உணவுப் பாதுகாப்பு பதிவு சான்றிதழ்</h2><p>இம்முகாமில் அமைச்சர் அவர்கள் தலைமையில் சாலையோர உணவு விற்பனையாளர்கள் அனைவரும் உணவுப் பாதுகாப்பு குறித்த உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து  அமைச்சர் அவர்கள் இம்முகாமில் கலந்து கொண்ட சாலையோர உணவு விற்பனையாளர்களுக்கு உணவுப் பாதுகாப்பு பதிவு சான்றிதழ், உணவுப் பாதுகாப்பு பயிற்சி சான்றிதழ், மருத்துவத் தகுதி சான்றிதழ்களை வழங்கினார்.</p><p>மேலும் Breaks India, Pan Oleo Energy Ltd, Udhayam Agro Foods, Grace Pvt Ltd ஆகிய நிறுவனங்களின் சார்பில் வழங்கப்பட்ட உணவு வண்டிகளை 5 சாலையோர உணவு விற்பனையாளர்களுக்கு அமைச்சர் அவர்கள் வழங்கினார்.</p><h2>சாலையோர உணவு விற்பனையாளர்கள்</h2><p>இந்நிகழ்ச்சியில், மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் கூறியதாவது:-</p><p>மருத்துவத்துறையில் நோய் வந்த பிறகு அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மற்றும் குணப்படுத்துவது இதைப்பற்றி மட்டுமே சிந்தித்து வந்தோம். தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு நோய் வருவதற்கு முன்பே நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. </p><p>அதில் முக்கிய பங்கு என்பது சுத்தமான, சுகாதாரமான உணவு தான். ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு அடிப்படை தேவை உணவு. உணவு இல்லாமல் பசியோடு எந்த ஒரு நபரும் இருக்கக் கூடாது என்பதுதான் நம்முடைய முதல்-அமைச்சர் அவர்களின் எண்ணம். மக்களின் பசியை போக்குவதில் சாலையோர உணவு விற்பனையாளர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. குறைந்த விலையில் சுத்தமான, சுகாதாரமான உணவினை சாலையோர உணவு விற்பனையாளர்கள் வழங்குகிறார்கள்.</p><p>தமிழ்நாடு முழுவதும் சுமார் 50,000 சாலையோர உணவு விற்பனையாளர்கள் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களிடம் ஆலோசித்த போது சாலையோர உணவகங்களில் சுத்தமான, சுகாதாரமான உணவு கிடைக்கின்றது என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் எனதெரிவித்தார். அதற்கு நாம் சமைக்கும் உணவினை சுத்தமாக குறிப்பாக உணவிற்கு பயன்படுத்தப்படும் காய்கறி மற்றும் இதர உணவுப் பொருட்களை தூய்மையாக சுகாதாரத்துடன் பயன்படுத்துகிறோம் என்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்கு சாலையோர உணவு விற்பனையாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.</p><p>ஒவ்வொருவரும் செய்யும் தொழிலே தெய்வம் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இத்தொழிலை மேற்கொள்ள வேண்டும். பிறப்பபொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதே இந்த அரசின் கொள்கை, இந்த மண்ணின் கொள்கை. மருத்துவம் எப்படி ஒரு புனிதமான தொழிலோ அதுபோன்று உணவு வழங்குவது என்பதும் ஒரு புனிதமான தொழில். சாலையோர உணவு விற்பனையாளர்கள் பல பேரின் பசியை போக்குகின்ற இடத்தில் நான் இருக்கிறேன் என்ற ஒரு கர்வத்துடன் நீங்கள் இருக்க வேண்டும். அதே நேரத்தில் சுத்தமான சுகாதாரமான உணவினை வழங்குகிறோம் என்ற பொறுப்பும் நமக்கு இருக்க வேண்டும். சாலையோர உணவு விற்பனையாளர்கள் உணவு சங்கிலி முறையில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறார்கள்.</p><h2>6 மாவட்டங்களில்</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றவுடன் உணவு பாதுகாப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்டபொழுது தமிழ்நாடு முழுவதும் மாதிரி உணவு தெருக்களை உருவாக்கலாம் என்ற ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த மாதிரி உணவு தெருக்களில் வழங்கப்படும் உணவுகள் சுத்தமாகவும், சுகாதாரத்துடன் இருக்கும். இத்தெருக்களில் வியாபாரிகளுக்கு துருப்பிடிக்காத எக்குவால் ஆன உணவு சமைக்கும் வாகனங்கள் ஒரே மாதிரியான வடிவமைப்புடன் இருக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்பொழுது இந்த நிகழ்ச்சியில் பிரேக் இந்தியா (Breaks India) போன்ற நிறுவனங்களின் சார்பில் 5 விற்பனையாளர்களுக்கு உணவு விற்பனை வண்டிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>தமிழ்நாட்டில் சென்னை, கோயம்பத்தூர், மதுரை, திருச்சி, சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் மாதிரி உணவு தெருக்கள் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த மாவட்டங்களில் முதலில் ஒரு தெரு தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு பொது மக்களுக்கு குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உணவு பாதுகாப்பு வழிமுறைகளின்படி சுத்தமான, சுகாதாரமான உணவு கிடைக்கும். இதுபோன்று திட்டத்தை செயல்படுத்தும் போது பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் பாதுகாப்பான ஒன்றாக இருக்கும். இத்திட்டம் படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும்.</p> <p>உணவுப் பொருட்களில் தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தும் உணவு தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற விதிமீறல்களை அரசு வேடிக்கை பார்க்காது என்பதை இக்கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன். சாலையோர உணவு விற்பனையாளர்கள் மற்றும் உணவு தயாரிப்பாளர்கள் தங்களுடைய உடல் நலத்திலும் கவனம் கொள்ள வேண்டும். </p><p>ஏனெனில் பலருக்கு உணவு வழங்கும் நமக்கு ஏதேனும் தொற்று நோய்கள் இருந்தால் அது பிறருக்கு பரவக்கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே அவ்வப்போது நம்முடைய உடல் நிலையை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். சாலையோர உணவு விற்பனையாளர்கள் சமுதாயத்திற்கு ஆற்றும் தொண்டு மிக முக்கியமானது. பொதுமக்களுக்கு சுத்தமான, சுகாதாரமான உணவினை வழங்குவோம், வியாபாரத்தையும் பெருக்குவோம்</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p><p>இந்நிகழ்ச்சியில், முதன்மைச் செயலாளர் / உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் லால்வேனா, இ.ஆ.ப., உணவுப் பாதுகாப்புத் துறை கூடுதல் ஆணையர் நாகராணி, உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் கதிரவன் மற்றும் சாலையோர உணவு விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ரீல்ஸ் மோகம்.. கொழுக்குமலையில் 200 அடி பள்ளத்தில் தவறி விழுந்த சென்னை வாலிபர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourist-falls-200ft-at-kolukkumala-resued</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourist-falls-200ft-at-kolukkumala-resued#comments</comments><guid isPermaLink="false">7fcfe78a-5b57-430f-9544-3bc73ed49cb4</guid><pubDate>Thu, 23 Jul 2026 11:53:31 +0000</pubDate><atom:updated>2026-07-23T11:53:31.496Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,Vellore,Reels,Forest</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/rwg6coi1/body33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
ரீல்ஸ் மோகம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/rwg6coi1/body33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த முருகன் மகன் கார்த்திக் (வயது 28). தனியார் உணவு வினியோக நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது நண்பர்கள் 5 பேருடன் சில நாட்களுக்கு முன்பு கேரளம் மாநிலம் மூணாறு பகுதிக்கு சுற்றுலா வந்தார்.</p><p>பின்னர் அவர்கள் தமிழக-கேரளம் மாநில எல்லையில், தேனி மாவட்டம் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">குரங்கணி மலை</a> உச்சியில் உள்ள கொழுக்குமலைக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். இதற்காக மூணாறு அருகே சூரியநல்லியில் இருந்து நேற்று அதிகாலை ஒரு ஜீப்பில் கொழுக்குமலைக்கு புறப்பட்டனர். அங்கு அவர்கள் சூரிய உதயத்தை பார்த்து ரசித்தனர்.</p><h2>பள்ளத்தில் விழுந்தார்</h2><p>காலை 8 மணியளவில் அங்குள்ள சிங்கப்பாறை என்ற இடத்தில் அவர்கள் புகைப்படம், வீடி யோக்கள் எடுத்துக் கொண்டு இருந்தனர். அப்போது கார்த்திக் ஆபத்தான பள்ளம் அருகில் நின்று கொண்டு இருந்தார். எதிர்பாராத விதமாக அவர் பள்ளத்தில் தவறி விழுந்தார். அது சுமார் 200 அடி பள்ளம் ஆகும்.</p><p>உடனே அவருடைய நண்பர்கள் தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் கேரளம் மாநில தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். குரங்கணி மற்றும் போடியில் இருந்து போலீசாரும் அங்கு விரைந்தனர்.</p><h2>2 மணி நேரம் போராடி மீட்பு </h2><p>பள்ளத்தில் கார்த்திக் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். சுமார் 2 மணி நேரம் போராடி கார்த்திக்கை மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர் அவரை ஆஸ் பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து குரங்கணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>சிங்கப்பாறை</h2><p>கடந்த மாதம் இதே சிங்கப்பாறை பகுதியில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் காதல் தோல்வியால் பள்ளத்தில் குதித்து தற்கொலை செய்தார். இந்த சிங்கப்பாறை பகுதி யில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், 'ரீல்ஸ்' மோகத்தால் தடையை மீறி அங்கு சுற்றுலா பயணிகள் செல்வதால் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதால் அங்கே ஆட்கள் நுழையாத வகையில் தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/places-in-chennai-that-will-experience-power-outages-the-day-after-tomorrow-14</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/places-in-chennai-that-will-experience-power-outages-the-day-after-tomorrow-14#comments</comments><guid isPermaLink="false">ecb83012-8fba-4654-9931-63fceacc4dfd</guid><pubDate>Thu, 23 Jul 2026 11:37:10 +0000</pubDate><atom:updated>2026-07-23T11:37:10.514Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மின் தடை,power cut</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/yvw9a02h/Untitled-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/yvw9a02h/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>சென்னையில் 25.07.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">முடிவடைந்தவுடன் </a>மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><h2>மின் தடை ஏற்படும் இடங்கள்</h2><p><strong>போரூர்</strong>: குமணன்சாவடி பெரியார் நகர், எஸ்.வி.நகர், கண்ணகி நகர்,பவித்ரா நகர்,சுகுந்தலா நகர், ஜீவன் பிரகாஷ் நகர், விஜிஎன் நகர், சாந்தி நகர், அட்கோ நகர்.    </p><p><strong>தாம்பரம்</strong>: எம்.ஆர்.எம். தெரு, ராஜாஜி சாலை, வெங்கடேசன் தெரு, சண்முகம் சாலை, சிவசண்முகம் தெரு, அப்துல் ரஸாக் தெரு, போலீஸ் குடியிருப்புகள், ஜி.எஸ்.டி. சாலை, துரைசாமி ரெட்டி தெரு, எம்.கே. ரெட்டி தெரு, பக்தவத்சலம் தெரு.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூரில் 29ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-protest-in-cuddalore-on-the-29th-against-the-hydrocarbon-project</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-protest-in-cuddalore-on-the-29th-against-the-hydrocarbon-project#comments</comments><guid isPermaLink="false">81fd34c8-9d90-467c-b429-3e7e51ae1126</guid><pubDate>Thu, 23 Jul 2026 11:14:21 +0000</pubDate><atom:updated>2026-07-23T11:14:21.377Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,அதிமுக,AIADMK,Cuddalore,கடலூர்,அதிமுக ஆர்ப்பாட்டம்,AIADMK protests,Edapadi Palanisamy,ஹைட்ரோ கார்பன் திட்டம்,Hydrocarbon project</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/l6o86vwx/eps.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/l6o86vwx/eps.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர்,</p><p>அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>கடலூர் மாவட்டம், சிதம்பரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பரங்கிப்பேட்டை கடற்கரையில் சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில், 4 புதிய கடல்சார் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய் எடுப்பதற்காக இந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளோரேஷன் நிறுவனம், தமிழ் நாடு அரசு மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையத்தின் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது.</p><h2>வாழ்வாதாரம் பாதிக்கப்படும்</h2><p>அம்மாவின் நல்லாசியோடு நடைபெற்ற எனது தலைமையிலான கழக ஆட்சியில், கடலூர் மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.</p><p>ஆனால் தற்போது, கடலில் இக்கிணறுகள் அமைக்க இந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளோரேஷன் நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. இதற்கு அனுமதி அளிக்கும்பட்சத்தில், இக்கிணறுகளை அமைப்பதற்கு அதிகப்படியான துளையிடுதலாலும், அதன்மூலம் ஏற்படும் அதிக சத்தத்தாலும், நச்சு ரசாயனக் கழிவுகளாலும் கடல் வாழ் உயிரினங்கள் அழியவும், இனப் பெருக்கம் குறையவும், சுற்றுச் சூழல் பாதிப்பும் ஏற்படுவதோடு, கடலையே நம்பி வாழும் மீனவ சமுதாய மக்களின் வாழ்வாதாரமும் பெருமளவில் பாதிக்கப்படும். மேலும், கடற்கரை ஓரம் உள்ள சதுப்பு நிலத்தின் தன்மையும், அங்கே வளரும் மாங்ரோவ் இன காடுகளும் அழியும் அபாய நிலையும் உருவாகும். இவைகளின் காரணமாக, மக்களின் பொருளாதார நிலை வெகுவாக சீர்கெட்டுவிடும்.</p><h2>கண்டன ஆர்ப்பாட்டம்</h2><p>இந்நிலையில், மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு, சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பரங்கிப்பேட்டை கடற்கரையில் இந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளோரேஷன் நிறுவனம், ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய் எடுப்பதற்கு த.வெ.க. அரசு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தியும்; கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் பக்கம் சேரவைத்து, குதிரைபேர ஆட்சி நடத்தி வரும் த.வெ.க. அரசைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டத்தின் சார்பில், 29.7.2026 -புதன் கிழமை காலை 10 மணியளவில், பரங்கிப்பேட்டையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.</p><p>இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான உதயகுமார் தலைமையிலும், கழக அமைப்புச் செயலாளரும், கடலூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான சொரத்தூர் ரா. ராஜேந்திரன், கடலூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தாமோதரன், கடலூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பாண்டியன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.</p><h2>எடப்பாடி பழனிசாமி அழைப்பு</h2><p>இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கடலூர் கிழக்கு, கடலூர் வடக்கு, கடலூர் தெற்கு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், கழக சட்டமன்ற உறுப்பினர்கள், கழகம் மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கலந்துகொள்ளுமாறு </a>கேட்டுக்கொள்கிறேன்.</p><p>மக்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் விசாரணை கைதி மரணம்.. என்ன நடந்தது..?  மாவட்ட காவல்துறை பரபரப்பு விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/death-of-undertrial-prisoner-arunachalam-in-thoothukudi-what-happened-district-police-issue-a-detailed-statement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/death-of-undertrial-prisoner-arunachalam-in-thoothukudi-what-happened-district-police-issue-a-detailed-statement#comments</comments><guid isPermaLink="false">8e255397-a693-4442-8360-07dd0c3ca6c4</guid><pubDate>Thu, 23 Jul 2026 11:03:26 +0000</pubDate><atom:updated>2026-07-23T11:03:26.005Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Thoothukudi,தூத்துக்குடி,மரணம்,விசாரணை கைதி,லாக் அப் மரணங்கள்,காவல்துறை விளக்கம்,Lockup Death</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/mpd286om/veLi.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/mpd286om/veLi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சட்ட விரோதமாக மது விற்றதாக விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட  அருணாசலம் என்ற வாலிபர் மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>கைதி அருணாச்சலம்</h2><p>விசாரணை என்ற பெயரில் போலீசார் நடத்திய கடுமையான தாக்குதலாலேயே அருணாச்சலம் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் இதற்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>இந்நிலையில் விசாரணை கைதி அருணாச்சலம் மரணம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.</p><h2>120 மதுபான பாட்டில்கள்</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>கடந்த 17.07.2026 அன்று, தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில், தூத்துக்குடி அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த அருணாசலம் (24) என்பவர் மதுவிலக்கு அமலாக்க சோதனையின் போது 180 மில்லிலிட்டர் அளவிலான 120 மதுபான பாட்டில்களை சட்டவிரோதமாக வைத்திருந்தது கண்டறியப்பட்டதால், தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய குற்ற எண். 751/2026 ச/பி தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் பிரிவுகள் 4(1)(A) மற்றும் 14 -ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.</p><h2>காயங்கள் இல்லை</h2><p>கைது செய்யப்பட்ட பின்னர், சட்டப்படி பின்பற்றப்பட வேண்டிய அனைத்து நடைமுறைகளும் முறையாக கடைபிடிக்கப்பட்டன. அவரது உடல் சோதனையானது, காணொளி பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட விபரம் அவரது குடும்பத்தினருக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.</p><p>அதனைத் தொடர்ந்து, 17.07.2026 அன்று மாலை சுமார் 5.50 மணியளவில், அவரை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டது. பரிசோதனை மேற்கொண்ட டாக்டர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தகுதியுடையவர் என சான்றளித்ததுடன், அவரது உடலில் எந்தவித வெளிப்புறக் காயங்களும் இல்லை என்றும் மருத்துவ சான்றிதழில் சான்றளித்தார்.</p><h2>தானாகவே மயங்கி விழுந்தார்</h2><p>சட்ட மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்காக அவர் மீண்டும் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, அப்போது காவல் நிலையத்தில் இருந்த பிற கைதிகளுடன் காவல் நிலைய லாக்-அப்பில் வைக்கப்பட்டார். லாக்-அப்பில் இருந்த போது, மற்ற கைதிகளுடன் இயல்பாக நின்று பேசிக் கொண்டிருந்த அவர், திடீரென தானாகவே மயங்கி கீழே விழுந்தார். </p><p>இச்சம்பவம் லாக்-அப்பின் முன்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து, காவல்துறையினர் உடனடியாக அவருக்கு தேவையான உதவிகளை செய்து, குடிநீர் வழங்கி, பாதுகாப்பாக அமர வைத்தனர். காவல் நிலைய வரவேற்பு பகுதியிலிருந்த அவரது தாயாரும் உடனடியாக அழைக்கப்பட்டார். </p><h2>சட்டப்படி விசாரணை</h2><p>அதன்பின்னர், அவரது உடல்நிலை இயல்பாக இருந்ததால், கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவரை ஜாமீனில் விடுவிக்கப்பட்டு, தொடர் மருத்துவப் பரிசோதனைக்காக அவரது உறவினர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.</p><p>அதன்பின்னர், மருத்துவமனை அருகே அவர் மீண்டும் மயங்கி விழுந்ததாக அவரது உறவினர்கள், காவல்துறையினருக்கு தெரிவித்தனர். தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சிகிச்சையின் போது, அவருக்கு மருத்துவ நடைமுறை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல், 23.07.2026 அன்று அவர் இறந்ததாக டாக்டர்களால் அறிவிக்கப்பட்டது.</p><p>இச்சம்பவம் தொடர்பாக, அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சட்டப்படி விசாரணை நடைபெற்று வருகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>வீடியோ வெளியீடு</h2><p>இந்த சூழலில் தென்பாகம் காவல் நிலையத்தில் அருணாச்சலம் மயங்கி விழுந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 17ஆம் தேதி இரவு 8.38க்கு காவல் நிலையத்தில் அருணாச்சலம் மயங்கி விழுந்த வீடியோவை மாவட்ட காவல்துறை வெளியிட்டது. </p>]]></content:encoded></item><item><title>கோயம்பேடு பேருந்து நிலையத்தை புனரமைத்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் - எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rebuild-koyambedu-bus-terminus-for-public-use-edappadi-palaniswami</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rebuild-koyambedu-bus-terminus-for-public-use-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">7bb969cf-f711-4631-b9d1-528c4a32702e</guid><pubDate>Thu, 23 Jul 2026 11:02:53 +0000</pubDate><atom:updated>2026-07-23T11:02:53.705Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,Edappadi Palaniswami,கோயம்பேடு பேருந்து நிலையம்,Koyambedu bus stand</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/xu3xc16i/Untitled-4.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/xu3xc16i/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சென்னை மாநகரில் பாரிஸ் கார்னரில் இயங்கி வந்த பேருந்து நிலையம் மற்றும் மொத்த காய்கறி வியாபாரத்தின் கேந்திரமாய்த் திகழ்ந்த கொத்தவால்சாவடி ஆகியவற்றின் காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து மற்றும் மக்கள் நெருக்கடியைப் போக்கவும், கோயம்பேட்டில் ஒரே நேரத்தில் 300 பேருந்துகள் நிறுத்தும் வசதியுடன், சராசரியாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பலனடையும் வகையில் சுமார் 35 ஏக்கரில் ரூ.103 கோடி மதிப்பீட்டில் ஆசியாவிலேயே மிக பிரமாண்டமான பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு 2002-ம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசால் திறந்து வைக்கப்பட்டது. மேலும், சென்னை மாநகரின் காய்கறி மொத்த வியாபார வளாகமும் கோயம்பேட்டில் அமைக்கப்பட்டது.</p><p>வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய விரைவுப் பேருந்துகள், சென்னை மாநகருக்குள் வராமல், கோயம்பேடு பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்பட்டதாலும், அங்கிருந்து சென்னை மாநகருக்குள் போதுமான அளவு மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டதாலும், பொதுமக்கள் பெரிதும் பலன் அடைந்தனர். மேலும், 2015-ம் ஆண்டு மெட்ரோ ரெயில் போக்குவரத்தும் தொடங்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசலும் குறைந்தது. அதேபோல், ஆம்னி பேருந்துகளை இயக்கவும் கோயம்பேட்டில் தனியாக இடவசதி செய்து தரப்பட்டது.</p><p>இந்நிலையில், கோயம்பேட்டிலும் போக்குவரத்து மற்றும் மக்கள் நெரிசல் அதிகமானதைத் தொடர்ந்து பேருந்து பயணிகளுக்கு மென்மேலும் வசதிகளை ஏற்படுத்தித் தர, செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் பிரம்மாண்டமான புறநகர் பேருந்து நிலையம் எனது தலைமையிலான கழக அரசால் வடிவமைக்கப்பட்டு, 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ம் நாளன்று அடிக்கல் நாட்டி பேருந்து நிலையப் பணிகளை துவக்கி வைத்தேன்.</p><p>சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, எங்கள் ஆட்சியில் போடப்பட்ட திட்டத்தின்படி, தென் மாவட்டங்களுக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து வாகனங்கள் இயக்கப்படுவது என்றும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மேற்கு மாவட்டங்களுக்கும், வட மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுவது என்றும், மாதவரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா மற்றும் வெளி மாநிலங்களுக்கு இயக்குவது என்றும் முடிவெடுக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வந்தது.</p><p>2021-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசு, இந்தத் திட்டங்கள் அனைத்தையும் இனம் புரியாத ஒரு காரணத்திற்காக நாசப்படுத்தி, கோயம்பேடு பேருந்து நிலையத்தை முழுவதுமாக முடக்கி, 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30-ம் தேதி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அவசர கதியில் திறந்ததுடன், சென்னையில் பொது போக்குவரத்து வசதியை மேம்படுத்தாத நிலையில், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பேருந்துகளை இயக்கச் செய்ததால் சென்னை மாநகர மக்கள் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சொல்லொண்ணா துன்பங்களுக்கு உள்ளாகினர்.</p><p>கோயம்பேடு பேருந்து நிலையம் தனது பொலிவை தொலைத்து செயலிழந்தது. மேலும், கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்துள்ள நிலத்தை தனியார் ஒருவருக்கு தாரை வார்க்க திமுக அரசு முனைந்தபோது அதைக் கண்டித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அறிக்கை வெளியிட்டதுடன், பொதுவெளியிலும், பேட்டிகள் வாயிலாகவும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தேன். அதன் விளைவாக, மக்களிடம் ஏற்பட்ட எதிர்ப்புக்கு அஞ்சி அத்திட்டத்தை செயல்படுத்த முடியாமல் அன்றைய திமுக அரசு தவிர்த்தது. தங்களுடைய எண்ணம் நிறைவேறாத நிலையில் கோயம்பேடு பேருந்து நிலைய வளாகம் கேட்பாரற்று சீர்குலைந்து, சீரழிந்துவிட்டது. திமுக அரசின் இந்த அலட்சியப் போக்கின் காரணமாக, இன்றைக்கு அந்த இடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வெளி வந்துள்ளன.</p><p>தற்போது, கோயம்பேடு பேருந்து வளாகம் முழுவதும் இரவு நேரங்களில் மது அருந்துதல் மற்றும் தவறான பாலியல் தொழில்களில் ஈடுபடும் சமூக விரோதச் செயல்கள் நடைபெறுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. சாலைகள் மோசமானதாகவும், உரிய மின் விளக்குகள் வசதியில்லாமல் கோயம்பேடு பேருந்து வளாகத்தின் உட்புறம் காணப்படுகிறது. தற்போது புதிய அரசு அமைந்த பின்னரும், கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெறும் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த காவல் துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன.</p><p>கடந்த திமுக ஆட்சியில் நடந்தது போலவே, தற்போதைய த.வெ.க. ஆட்சியிலும் கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தை, வெளி மாநில கட்டுமான நிறுவனத்திடம் ஒப்படைக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. அப்படி ஒரு திட்டம் இருந்தால் உடனடியாக அம்முயற்சியைக் கைவிட வேண்டும் என்று த.வெ.க. கூட்டணி அரசை வலியுறுத்துகிறேன்.</p><p>கோயம்பேடு பேருந்து நிலையத்தைப் போர்க்கால அடிப்படையில் புனரமைத்து, அதிமுக ஆட்சியில் திட்டமிட்டதுபோல், மேற்கு மற்றும் வட மாவட்டங்களுக்குச் செல்லக்கூடிய பேருந்துகளையும், நகரப் பேருந்துகளையும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தஞ்சை பெரிய கோவிலில் வண்டுகள் கடித்ததில் ஆந்திர பக்தர்கள் 4 பேர் மயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/4-andhra-devotees-faint-after-being-bitten-by-beetles-at-thanjavurs-big-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/4-andhra-devotees-faint-after-being-bitten-by-beetles-at-thanjavurs-big-temple#comments</comments><guid isPermaLink="false">64f5aaa7-06e0-4ac5-a8ff-efaa9d1db31a</guid><pubDate>Thu, 23 Jul 2026 10:49:40 +0000</pubDate><atom:updated>2026-07-23T10:49:40.651Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பக்தர்கள்,Thanjavur,தஞ்சாவூர்,108 Ambulance,பெரிய கோவில்,Big Temple</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/rqydv9zr/7.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ தஞ்சை பெரிய கோவில்]]></media:title><media:description type="html"><![CDATA[ தஞ்சை பெரிய கோவிலில் வண்டுகள் கடித்து 4 ஆந்திர பக்தர்கள் மயக்கம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/rqydv9zr/7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர்,</p><p>தஞ்சாவூர் மாவட்டம் பெரிய கோவிலில் கதண்டு எனப்படும் பெரிய வகை வண்டு கடித்ததில் ஆந்திர பக்தர்கள் 4 பேர் மயக்கமடைந்தனர்.</p><h2>யாகப் புகை</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தஞ்சாவூர்</a> உலகப் புகழ்பெற்ற பெரிய கோயில் வளாகத்தில் இன்று விசேஷ யாகம் ஒன்று நடைபெற்றது. இந்த யாகக் குண்டத்திலிருந்து அதிகளவில் புகை வெளியேறியது. இந்த அடர்ந்த புகை அருகில் இருந்த மரத்தில் கட்டப்பட்டிருந்த வண்டுகள் கூட்டின் மீது பட்டுள்ளது. இதனால் ஆவேசமடைந்த வண்டுகள் கூட்டம் கூட்டமாக கலைந்து பறந்தன. அப்போது கோயிலில் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த பக்தர்கள் மீது கதண்டுகள் திடீரென தாக்குதல் நடத்தின.</p><h2>4 பேர் மயக்கம்</h2><p>வண்டுகள் கொட்டியதில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உட்பட 4 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தனர். இதனால் கோயில் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மயக்கமடைந்த பக்தர்களை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">108 ஆம்புலன்ஸ்</a> மூலம் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.</p><p>அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வனத்துறையினர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் கதண்டுக் கூட்டை முழுமையாக அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>குற்றவாளிகளின் கூடாரமாக மாறுகிறதா தவெக? - நயினார் நாகேந்திரன் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-tvk-becoming-a-den-of-criminals-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-tvk-becoming-a-den-of-criminals-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">6fd9c4c5-cebb-435c-bc58-40d4b71ee16e</guid><pubDate>Thu, 23 Jul 2026 10:27:18 +0000</pubDate><atom:updated>2026-07-23T10:27:18.034Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,பாஜக,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/ft1xdsb0/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/ft1xdsb0/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எகஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே, வீட்டில் தனியாக இருந்த பெண்ணைக் கட்டிப்போட்டு 21 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், தவெகவின் மாவட்ட இளைஞரணி இணை செயலாளரான சரவண குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது. அதிலும் குறிப்பாக, ஒட்டுமொத்த கொள்ளை சம்பவத்திற்கும் இந்த தவெக நிர்வாகி தான் மூளையாக செயல்பட்டுள்ளார் என்ற கூடுதல் தகவல், ஒருவித அச்சத்தை நம்முள் படரச் செய்கிறது. </p><h2>நீக்கினால் சரியாகிவிடுமா?</h2><p>ஒரு வீட்டை தொடர்ந்து நோட்டமிட்டு, அங்கு யார் வருகிறார்கள் போகிறார்கள் என்பதையெல்லாம் குறித்து வைத்து, ஒரு பெண் வீட்டில் தனியாக இருக்கும் பொழுது உள்ளே புகுந்து கொள்ளையடிக்க திட்டம் போட்டுக் கொடுக்கும் கைதேர்ந்த குற்றவாளிக்கு, தவெக கட்சி எதன் அடிப்படையில், இளைஞரணியில் பொறுப்பு கொடுத்தது? பின்புலத்தை ஆராயாமல் கட்சியில் பதவி கொடுத்து விட்டு, பின்பு குற்ற வழக்கில் சிக்கியதும் கட்சியை விட்டு நீக்கினால் எல்லாம் சரியாகிவிடுமா? “தவெகக்காரன்” என்ற முகமூடியை அணிந்து கொண்டு இன்னும் எத்தனை கொள்ளையர்கள், பாலியல் குற்றவாளிகள் மக்களிடையே உலவிக் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கொண்டிருக்கிறார்களோ </a>தெரியவில்லை.</p><h2>தண்டிக்க வேண்டும்</h2><p>எனவே, சட்டம், ஒழுங்கை தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இயக்கும் முதல்-அமைச்சர் விஜய், முதலில் தனது கட்சிக்குள் இருக்கும் குற்றவாளிகளை கண்டறிந்து, தண்டிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் குடும்பம்.. திரைப்படத்தை பார்த்து கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள் - உதயநிதி ஸ்டாலின் பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-family-shedding-tears-over-the-loss-of-their-son-rulers-shedding-tears-while-watching-the-movie-udhayanidhi-stalins-post</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-family-shedding-tears-over-the-loss-of-their-son-rulers-shedding-tears-while-watching-the-movie-udhayanidhi-stalins-post#comments</comments><guid isPermaLink="false">011c7260-b9f3-49cd-b205-0617ae803efb</guid><pubDate>Thu, 23 Jul 2026 10:26:02 +0000</pubDate><atom:updated>2026-07-23T10:26:02.000Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,திமுக,DMK,தமிழகம்,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,Thoothukudi,தூத்துக்குடி,காவல் மரணம்,Lockup Death</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/xi5l2lh8/udhaty.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/xi5l2lh8/udhaty.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/தூத்துக்குடி">தூத்துக்குடி</a> தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சட்ட விரோதமாக மது விற்றதாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p> <p>விசாரணை என்ற பெயரில் போலீசார் நடத்திய கடுமையான தாக்குதலாலேயே அருணாச்சலம் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் இதற்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>போலீஸ் அநீதி</h2><p>இந்நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-</p><p><a href="https://www.dailythanthi.com/topic/தூத்துக்குடி">தூத்துக்குடி</a>யில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்னும் இளைஞர், காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்து இருப்பது வேதனை அளிக்கிறது.</p><p>போலீஸ் தனக்கு இழைத்த அநீதியை தனது இறுதி நிமிடங்களில் அருணாச்சலமே எடுத்துச் சொன்னதைப் பார்க்கும் போது நெஞ்சம் கலங்குகிறது.</p><h2>என்ன பதில்</h2><p>காவல் மரணங்களின் போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.</p><p>மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் அருணாச்சலத்தின் குடும்பத்துக்கு, திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்து இருக்கிறார்கள்? </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item></channel></rss>