<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 10 Sep 2026 01:22:46 +0000</lastBuildDate><item><title>தாம்பரம்-விழுப்புரம் பயணிகள் ரெயில் பகுதி நேர ரத்து </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/partial-cancellation-of-tambaram-villupuram-passenger-train</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/partial-cancellation-of-tambaram-villupuram-passenger-train#comments</comments><guid isPermaLink="false">317f4cc3-870d-459e-b814-03655528eb82</guid><pubDate>Thu, 10 Sep 2026 01:19:09 +0000</pubDate><atom:updated>2026-09-10T01:19:09.385Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tambaram,தாம்பரம்,விழுப்புரம்,passenger train,பயணிகள் ரெயில்,Egmore,Viluppuram,Southern Railway Announcement,பகுதி நேர ரத்து,Partial cancellation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/n5a8ihv4/2a.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/n5a8ihv4/2a.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>சென்னை எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் பேரனி பணிமனையில் பராமரிப்புப் பணி மேற்கொள்ள இருப்பதால் தாம்பரத்தில் இருந்து இன்று (10-ந்தேதி) காலை 9.45 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்லும் பயணிகள் ரெயில் (வண்டி எண்.66045), திண்டிவனம்-விழுப்புரம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. </p><p>விழுப்புரத்தில் இருந்து இன்று மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் பயணிகள் ரெயில் (66046), விழுப்புரம்-திண்டிவனம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, திண்டிவனத்தில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>விசிக மாநாட்டில் நெரிசல் ஏற்பட்டது சதித்திட்டமா? - தலைமைச் செயலாளர் விசாரிக்க ஆணையம் உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/conspiracy-to-jam-at-vck-conference-chief-secretary-orders-commission-to-investigate</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/conspiracy-to-jam-at-vck-conference-chief-secretary-orders-commission-to-investigate#comments</comments><guid isPermaLink="false">93a1d67d-4f2e-491e-8f8d-aff3343f4d20</guid><pubDate>Thu, 10 Sep 2026 01:18:35 +0000</pubDate><atom:updated>2026-09-10T01:18:35.722Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமாவளவன்,Thirumavalavan,விசிக,VCK,உளுந்தூர்பேட்டை,Ulundurpet,விசிக மாநாடு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/y3wnvhhk/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/y3wnvhhk/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கடந்த மாதம் 17-ந் தேதி நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் கடும் நெரிசல் ஏற்பட்டது. அப்போது தங்கள் கட்சித் தலைவர் திருமாவளவனை கொல்ல சதி நடந்ததாக வி.சி.க. சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.</p><p>இந்தநிலையில் சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த வக்கீல்கள் ராஜேந்திரன், நெப்போலியன் ஆகியோர் உளுந்தூர்பேட்டை சம்பவத்தைச் சுட்டிக்காட்டி திருமாவளவனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு மற்றும் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கவும், உளுந்தூர்பேட்டை மாநாட்டில் பாதுகாப்புக் குறைபாடு குறித்து உரிய விசாரணை நடத்தவும் உத்தரவிட வேண்டும் என சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தனர்.</p><p>இந்த மனுவை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினர்கள் ஆனந்தராஜா, இளஞ்செழியன் ஆகியோர், இந்த புகார் தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு உரிய விசாரணை மேற்கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-village-administrative-officer-arrested-for-accepting-a-bribe-from-a-farmer</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-village-administrative-officer-arrested-for-accepting-a-bribe-from-a-farmer#comments</comments><guid isPermaLink="false">c7b0cb69-6d0a-469a-a030-98a0806281ef</guid><pubDate>Thu, 10 Sep 2026 01:18:11 +0000</pubDate><atom:updated>2026-09-10T01:18:11.875Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Thoothukudi,தூத்துக்குடி,arrest,லஞ்சம்,bribe</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/fvxmg19w/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/fvxmg19w/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>திருச்செந்தூர் அருகே உள்ள தேரிக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மதிபால் (வயது 56). விவசாயியான இவர் காயாமொழியில் உள்ள 86 செண்ட் நிலத்தில் தென்னை மற்றும் எலுமிச்சை சாகுபடி செய்து வருகிறார். இதில் அரசு மானியம் மூலம் சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கு சிறு, குறு விவசாய சான்றிதழை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெற்றார். </p><p>ஆனால் நில அடங்கல் சான்றில் கையெழுத்திட்டு வழங்குவதற்கு மதிபாலிடம், கிராம நிர்வாக அலுவலர் தனசேகர் ரூ.2,500 லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத மதிபால் இதுகுறித்து தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூ.2,500-ஐ மதிபாலிடம் வழங்கி, அதை தனசேகரிடம் கொடுக்கும்படி கூறினர். </p><p>அதன்படி நேற்று பகலில் கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்த தனசேகரிடம் பணத்தை மதிபால் கொடுத்தார். அதை அவர் வாங்கியபோது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கிராம நிர்வாக அலுவலர் தனசேகரை கையும், களவுமாக பிடித்து அதிரடியாக கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>மும்மொழி கொள்கையில் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலக்கு-சி.பி.எஸ்.இ.க்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/exemption-from-three-language-policy-for-class-6-students-supreme-court-directs-cbse</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/exemption-from-three-language-policy-for-class-6-students-supreme-court-directs-cbse#comments</comments><guid isPermaLink="false">e777bf45-99bb-499e-bfc9-61d9c2d79bd5</guid><pubDate>Thu, 10 Sep 2026 01:16:28 +0000</pubDate><atom:updated>2026-09-10T01:16:28.251Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சி.பி.எஸ்.இ,CBSE,Supreme Court,சுப்ரீம் கோர்ட்டு,மும்மொழி கொள்கை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/25fclwoy/Supreme-court.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/25fclwoy/Supreme-court.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p> 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 1-ந்தேதி முதல் 3 மொழிகள் கட்டாயம் எனவும் அதில் 2 மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் சி.பி.எஸ்.இ. அறிவித்தது. இதை எதிர்த்து பல்வேறு தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜோய் மால்யா பாக்சி, மோகனா அமர்வு விசாரித்து வருகிறது. 3 மொழி கொள்கையை அமல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இதனால் மாணவர்கள் எத்தகைய அழுத்தத்துக்கும் ஆளாகக்கூடாது என்றும் வலியுறுத்தினர். பின்னர் இந்த கொள்கை 6-ம் வகுப்பிலேயே அறிமுகப்படுத்தினால், இந்த ஆண்டு விட்டுவிட்டு அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யுமாறும் அறிவுறுத்தி இருந்தனர். </p><p>இந்த நிலையில் தலைமை நீதிபதி அமர்வில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மீண்டும் இந்த கருத்தை நீதிபதிகள் வலியுறுத்தினர். அதன்படி நீதிபதிகள் கூறுகையில், 'இந்த ஆண்டு 6-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விலக்கு அளிக்க முடியுமா?' என்று பரிசீலிக்குமாறு சி.பி.எஸ்.இ. தரப்பை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். அதற்கு சி.பி.எஸ்.இ. சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஆலோசித்து கூறுவதாக தெரிவித்தார். எனினும் இந்த விவகாரத்தில் எந்த உறுதிமொழியையும் அவர் அளிக்கவில்லை.நாங்கள் அனைவரும் அமர்ந்து ஆலோசித்து கூறுகிறோம்' என்று மட்டும் கூறினார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை வருகிற 17-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.</p><p>அதேநேரம் வழக்கு தொடர்ந்து ஒத்திவைக்கப்படுவதற்கு மனுதாரர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மாணவர்கள் தேர்வு எழுத வேண்டியிருப்பதாலும், அது அவர்களது பெற்றோரிடையே கவலையை ஏற்படுத்துவதாலும், மேலும் ஒத்திவைப்புகளால் இந்த விஷயத்தை தாமதப்படுத்தக்கூடாது என்று மனுதாரர்களின் வக்கீல் ஒருவர் கேட்டுக்கொண்டார். எனினும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டி வராததால், விசாரணையை ஒத்திவைக்க சொலிசிட்டர் ஜெனரல் கேட்டுக்கொண்டார். எனவே குறைந்த நாட்களுக்கு மட்டுமே தள்ளி வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தஞ்சை: டாஸ்மாக் பணியாளர்கள் 6 பேர் பணி இடைநீக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thanjavur-6-tasmac-employees-suspended</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thanjavur-6-tasmac-employees-suspended#comments</comments><guid isPermaLink="false">c3ce809b-12fa-41bb-83da-d93bb4426a17</guid><pubDate>Thu, 10 Sep 2026 00:59:02 +0000</pubDate><atom:updated>2026-09-10T00:59:02.068Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thanjavur,order,உத்தரவு,தஞ்சை,பணி இடைநீக்கம்,டாஸ்மாக் பணியாளர்கள்,Tasmac employees,work suspension</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/v1p0yj52/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-6-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டாஸ்மாக் பணியாளர்கள் 6 பேர் பணி இடைநீக்கம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/v1p0yj52/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-6-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88">தஞ்சை</a> மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா பகுதியில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">மதுபானங்கள்</a> அரசு நிர்ணயித்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88">விலை</a>யை விட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">கூடுதலாக</a> ரூ.10 சேர்த்து விற்பனை செய்தது காரணமாக டாஸ்மாக் பணியாளர்கள் 6 பேர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">பணி இடைநீக்கம்</a> செய்யப்பட்டுள்ளனர். </p><h2>மதுபானங்கள் கூடுதலாக ரூ.10 சேர்த்து விற்பனை</h2><p>தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா குறிச்சி பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு டாஸ்மாக் கடையில் வெளிநபர்கள் பணிபுரிந்து வந்ததும், மதுபானங்கள் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூ.10 சேர்த்து விற்பனை செய்ததும் வீடியோவாக வெளிவந்தது. </p><h2>டாஸ்மாக் பணியாளர்கள் 6 பேர் பணி இடைநீக்கம்</h2><p>கடை பணியாளர்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டு தனது தலையாய பணியை செய்ய தவறியதன் காரணமாக மேற்பார்வையாளர்கள் செந்தில்குமார், சேகர், சரவணன், விற்பனையாளர்கள் துரைபிரகாஷ், மதியழகன், வீராசாமி ஆகிய 6 பேரை பணி இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>நெரிசல் மிகுந்த சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகமா? - எல்.முருகன் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-new-secretariat-in-congested-chennais-pattinapakkam-l-murugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-new-secretariat-in-congested-chennais-pattinapakkam-l-murugan#comments</comments><guid isPermaLink="false">a208ee76-0db2-4844-978f-8dc3b34cad3c</guid><pubDate>Thu, 10 Sep 2026 00:57:56 +0000</pubDate><atom:updated>2026-09-10T00:57:56.782Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>எல்.முருகன்,L. Murugan,பட்டினப்பாக்கம்,Pattinapakkam,புதிய தலைமைச் செயலகம்,new Secretariat</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/ghejjfr8/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/ghejjfr8/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்த நெருக்கடியான இடத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கனோர், நூற்றுக்கணக்கான வாகனங்களில்  தலைமைச் செயலகம் வந்து சென்றால் நிலைமை என்னவாகும்?  என பாஜக மத்திய இணை மந்திரி எல்.முருகன் கேள்வி எழுப்பி உள்ளா. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>புதிய தலைமைச் செயலகம்</h2><p>சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் 1200 கோடி ரூபாய் மதிப்பில் தலைமைச் செயலக கட்டிடம் கட்டப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.</p><p>புதிய தலைமைச்செயலகம் கட்டுவதற்கு சென்னை பட்டினப்பாக்கம் பகுதி பரிசீலனை செய்யப்படுவதாக, ஒரு சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானபோதே, பல்வேறு தரப்பினரும் இந்த திட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் அவசர கதியில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.</p><p>தலைமைச் செயலகம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டினப்பாக்கம் பகுதி ஏற்கனவே அதிக மக்கள் தொகை கொண்ட குடியிருப்புகள் நிறைந்த பகுதி. குறுகிய சாலைகள், போக்குவரத்து நெரிசல் அதிகம் கொண்ட பகுதியாக உள்ளது. இந்த பகுதியில் 20 லட்சம் சதுர அடி பரப்பில் இந்த கட்டடம் கட்டப்பட்டால் அதனுடன் இணைந்து தீயணைப்பு நிலையம், அவசர மருத்துவ வசதிகள், உணவகங்கள், வாகன நிறுத்துமிடங்கள், பொதுப்போக்குவரத்து வசதிகள் உள்ளிட்டவை ஏற்படுத்தித் தரப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.</p><h2>நிலைமை என்னவாகும்?</h2><p>இதனால் அந்த பகுதியில் எந்த அளவிற்கு இட நெருக்கடி ஏற்படும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த நெருக்கடியான இடத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கனோர், நூற்றுக்கணக்கான வாகனங்களில் தலைமைச் செயலகம் வந்து சென்றால் நிலைமை என்னவாகும்?</p><p>அப்பகுதியில் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் உருவாக வாய்ப்புள்ளது. இந்த பகுதி கடற்கரையையொட்டிய பகுதி என்பதால் இவ்வளவு பெரிய கட்டிடம் கட்டப்படும்போது ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்சனையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.</p><p>இந்த பகுதியில் தலைமைச் செயலகம் கட்டுவதற்கு மீனவ மக்கள் ஏற்கனவே தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.</p><h2>நெருக்கடியான பகுதி</h2><p>பட்டினப்பாக்கம் பகுதி என்பது நீண்ட நெடுங்காலமாக மீனவ மக்களின் வாழ்விடமாகவும், மீன்பிடி தொழில் மற்றும் மீன் வர்த்தக மையமாகவும் விளங்கி வருகிறது. இந்த இடத்தை நம்பி நூற்றுக்கணக்கான மீனவ குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. அத்தகைய இடத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது என்பது பட்டினப்பாக்கம் மீனவ மக்களின் வாழ்விடத்தையும், வாழ்வாதாரத்தையும் ஒட்டு மொத்தமாக சீர்குலைத்து விடும்.</p><p>எனவே மீனவ சமுதாய மக்களின் கோரிக்கைகளை முறையாகக் கேட்டறியாமல் அங்கு அவசரகதியில் தலைமைச் செயலகம் அமைப்பது, அவர்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் பாதிக்கும் நடவடிக்கையாக அமைந்து விடும்.</p><p>ரூ.1200 கோடி ரூபாய் செலவில் தலைமைச் செயலகம் அமைப்பது நீண்டகால அடிப்படையில் பயனுள்ளதாக இருக்க வேண்டும். தற்போதைய நிலையில் இவ்வளவு நெருக்கடி என்றால் இன்னும் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த இடத்தில் தலைமைச் செயலக கட்டடம் இருந்தால் நிலைமை மிக மோசமாகும்.</p><h2>மாற்று இடத்தைத் தேர்வு செய்க</h2><p>புதிய தலைமைச் செயலகம் தேவையான ஒன்று என்றாலும் அதற்கு தகுந்த இடத்தைதேர்வு செய்வது மிக அவசியம். இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தும் போது அவசரத்தை கைவிட்டு பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை செய்து, ஆய்வுக்கு பிறகு அமைக்கப்பட வேண்டும். போதிய இடவசதி, எதிர்கால விரிவாக்கத்திற்கான வாய்ப்பு, சிறந்த போக்குவரத்து வசதி உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான மாற்று இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும்</p><p>எனவே <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">போக்குவரத்து </a>மிக்க நெரிசலான பகுதியில் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சேலம் வழியாக செல்லும் 3 ரெயில் சேவைகள் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-3-train-services-passing-through-salem</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-3-train-services-passing-through-salem#comments</comments><guid isPermaLink="false">d3734ce1-b871-4e6f-943c-1cc33f4d83bc</guid><pubDate>Thu, 10 Sep 2026 00:51:15 +0000</pubDate><atom:updated>2026-09-10T00:51:15.114Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,ரெயில் சேவை,சேலம்,Train Services</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/bio0yatq/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/bio0yatq/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம், </p><p>கோவை-போத்தனூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி சேலம் வழியாக செல்லும் 3 ரெயில் சேவைகளில் மாற்றம் செய்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டது. அது பற்றிய விவரம் வருமாறு:-</p><h2>போத்தனூர்-தன்பாத்</h2><p>கோவை-போத்தனூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுநாள் (சனிக்கிழமை) போத்தனூரில் இருந்து புறப்பட வேண்டிய போத்தனூர்-தன்பாத் அமிர்த் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:16619) போத்தனூருக்கு பதிலாக கோவை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து காலை 6.35 மணிக்கு புறப்படும்.</p><p>இதேபோல் நாளை மறுநாள் எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் எர்ணா குளம்-பாட்னா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (22669) 13-ந் தேதி போத்தனூர்-இருகூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இதனால் இந்த ரெயிலுக்கு கோவை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நிறுத்தம் இருக்காது. அதற்கு பதிலாக போத்தனூர் ரெயில் நிலையத்தில் இந்த ரெயில் அதி காலை 4.35 மணிக்கு வந்து 4.40 மணிக்கு புறப்பட்டு செல்லும்.</p><h2>மங்களூரு-சந்திரகாச்சி</h2><p>மேலும், அதே நாளில் மங்களூருவில் இருந்து புறப்படும் மங்களூரு-சந்திரகாச்சி விவேக் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (22852) 13-ந் தேதி போத்தனூர்-இருகூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இந்த ரெயிலுக்கும் கோவை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நிறுத்தம் இருக்காது. அதற்கு பதிலாக போத்தனூருக்கு காலை 6.24 மணிக்கு வந்து 6.27 மணிக்கு புறப்படும்.</p><p>இதேபோல் வருகிற 13-ந் தேதி புறப்படும் நாகர்கோவில்-நியூ ஜல்பைகுரி அம்ரித் பாரத் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (20604) 14-ந் தேதி போத்த னூர்-இருகூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். மற்ற 3 ரெயில்களை போல இந்த ரெயிலுக்கும் கோவை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நிறுத்தம் இருக்காது. அதற்கு பதிலாக போத்தனூர் ரெயில் நிலையத்துக்கு 14-ந் தேதி காலை 6.32 மணிக்கு வந்து 6.35 மணிக்கு புறப்பட்டு செல்லும்.</p><p>தண்டவாள பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் மாற்றப்பட்டுள்ள ரெயில் சேவைகளை கருத்தில் கொண்டு பயணத்தை திட்டமிடவும். இவ்வாறு சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய் முதன் முறையாக வெளிநாடு பயணம்; இன்று இரவு லண்டனுக்கு புறப்படுகிறார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijays-first-foreign-trip-leaves-for-london-tonight</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijays-first-foreign-trip-leaves-for-london-tonight#comments</comments><guid isPermaLink="false">6f8bd486-cdb5-4a13-bbf1-62de65c54afa</guid><pubDate>Wed, 09 Sep 2026 21:56:28 +0000</pubDate><atom:updated>2026-09-09T21:56:28.646Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,விஜய்,London,லண்டன்,வெளிநாடு பயணம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/xqfy9wh4/cmvijay33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
முதல்-அமைச்சர் விஜய் ]]></media:title><media:description type="html"><![CDATA[ இன்று இரவு லண்டனுக்கு புறப்படுகிறார்
]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/xqfy9wh4/cmvijay33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழகத்தில் ஆட்சி அமைத்த பிறகு முதல்-அமைச்சர் விஜய் முதன்முறையாக வெளிநாடு பயணமாக இங்கிலாந்து நாட்டின் லண்டனுக்கு செல்கிறார்.</p><h2>தொழில் முதலீடு</h2><p>தமிழக பொருளாதாரத்தை 2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலராக மாற்றுவதை த.வெ.க. அரசு தனது இலக்காக அறிவித்துள்ளது. எனவே தொழில் முதலீடுகளை ஈர்க்க த.வெ.க. அரசு ஆரம்பகட்டத்தில் இருந்தே திட்டமிட்டு வருகிறது. இதற்காக சமீபத்தில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா. தென்கொரியா நாட்டிற்கு சென்றிருந்தார். அங்கு கார் உற்பத்தி நிறுவனம் உள்ளிட்ட சில நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். மேலும் சில புரிந்து ணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.</p><h2>முதலீடு, வேலை வாய்ப்பு</h2><p>அதன் தொடர்ச்சியாக சென்னையில் கடந்த ஆகஸ்டு 13-ந் தேதியன்று உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு பல்வேறு நிறுவனங்களு டன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.</p><p>த.வெ.க. அரசு பொறுப்பேற்ற 110-க்கும் மேற்பட்ட நாட்களில் 104 நிறுவ னங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றின் மூலம் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 514 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 1 லட்சத்து 21 ஆயிரத்து 788 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>துபாய் வழியாக</h2><p>இந்த நிலையில், முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கும் வகையில்<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D"> முதல்-அமைச்சர் விஜய்</a> தலை மையிலான உயர்மட்டக் குழுவினர் லண்டன் செல்ல உள்ளனர். அதன் படி, இன்று (வியாழக்கிழமை) இரவு 10 மணியளவில் சென்னையில் இருந்து லண்டனுக்கு முதல்-அமைச்சர் விஜய் புறப்படுகிறார்.</p><p>துபாய் வழியாக அவர் லண்டன் செல்கிறார். அங்கு செப்டம்பர் 16-ந் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 17-ந் தேதி காலை 8 மணிக்கு துபாய் வழியாக சென்னை திரும்புகிறார்.</p><p>லண்டனில் நடைபெறும் முதலீட்டாளர்கள் சந்திப்பில் பங்கேற்கும் முதல்-அமைச்சர் விஜய், பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற் றும் முதலீட்டாளர்களை தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கிறார்.</p><h2>முதல் வெளிநாட்டு பயணம்</h2><p>இதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள தமிழக அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஏற்கனவே லண்டன் சென்றுவிட்டனர். அமைச்சர் கீர்த்தனாவும் லண்டனுக்கு செல்கிறார்.</p><p>முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு அரசு முறைப் பயணம் இதுவாகும். நேற்று முன்தினம்தான் சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து வெளிநாட்டு பயணத்திற்கு முதல்-அமைச்சர் விஜய் தயாராகியுள் ளார்.முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணத்துக்காக, சென்னை விமான நிலையத்தில், அதற்கான ஏற்பாடுகளை செய்வதில், அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.</p><h2>பிற மாநிலங்களுடன் போட்டி</h2><p>தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாட்டுக்கும் ஆந்திரா உள்ளிட்ட வேறு சில மாநிலங்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மற்ற மாநிலங்களைவிட கூடுதல் முதலீடுகளை ஈர்ப்பதில்தான் தொழில்து றையின் வெற்றி அமைந்துள்ளது. எனவேதான் புதிய முதலீடுகளை ஈர்ப்ப தற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>குடும்ப ஓய்வூதியம் பெற 2-வது மனைவிக்கு உரிமை இல்லை - ஐகோர்ட்டு தீர்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/second-wife-not-entitled-to-family-pension-high-court-verdict</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/second-wife-not-entitled-to-family-pension-high-court-verdict#comments</comments><guid isPermaLink="false">326a1ca1-386b-40fc-80e8-8b3abc92fc9f</guid><pubDate>Wed, 09 Sep 2026 21:44:31 +0000</pubDate><atom:updated>2026-09-09T21:44:31.028Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை ஐகோர்ட்டு,pension,ஓய்வூதியம்,madras highcourt</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/rlvfy02u/madrashighcourt33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[  ஐகோர்ட்டு தீர்ப்பு]]></media:title><media:description type="html"><![CDATA[ 
குடும்ப ஓய்வூதியம் பெற 2-வது மனைவிக்கு உரிமை இல்லை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/rlvfy02u/madrashighcourt33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>முதல் மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்யாததால், அரசு ஊழிய ரின் 2-வது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் பெற உரிமை இல்லை என சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.</p><h2>இரண்டாவது மனைவி</h2><p>தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் அரசு ஊழியராக பணியாற்றியவர் ஆர்.சமன். இவரது மறைவுக்குப் பிறகு, சமனின் இரண்டாவது மனைவியான தமிழரசி, குடும்ப ஓய்வூதியம் வழங்கக்கோரி அரசுக்கு விண்ணப் பம் செய்தார். சமன் தனது முதல் மனைவி நளினியை விவாகரத்து செய்யாமல், இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால் தமிழரசிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க முடியாது என அரசு மறுத்துவிட்டது.</p><p>இதை எதிர்த்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">சென்னை ஐகோர்ட்டில்,</a> தமிழரசி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, தமிழரசிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.</p><h2>தகுதி இல்லை</h2><p>இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரம ணியம், கிருஷ்ணசுவாமி கோவிந்தராஜன் ஆகியோர் பிறப்பித்த தீர்ப்பு வருமாறு:-</p><p>மறைந்த அரசு ஊழியர் சமனும், அவரது முதல் மனைவி நளினியும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பரஸ்பரம் பிரிந்து கொள்வதாக ஒப்பந்தம் செய்து அதை பதிவுச் செய்துள்ளனர். அந்த ஒப்பந்தத்தின்படி பிரிந்துள்ளனர். ஆனால், இவர்கள் செய்துள்ள இந்த ஒப்பந்தம் சட்டப்படியான விவாகரத்தாக கருத முடியாது. மேலும், அந்த ஒப்பந்தம் செய்வதற்கு முன்பே தமிழரசியை சமன் திருமணம் செய்துள்ளார். எனவே, இவர்களது திருமணமே செல்லத்தக்கது அல்ல. அதனால், தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளின்படி, தமிழரசி குடும்ப ஓய்வூதியம் பெற தகுதி இல்லை.</p><h2>ரத்து</h2><p>அதுமட்டுமல்ல தமிழரசி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஆவார். அவர் ஏற்கனவே தமிழ்நாடு அரசிடம் இருந்து ஓய்வூதியம் பெற்று வருகிறார். இந்த காரணங்களால், தமிழரசிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்று கடந்த 2023-ம் ஆண்டு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம். இந்த மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைக்கிறோம்</p><p>இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடவில்லை - துரை வைகோ பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mdmk-not-contesting-in-by-elections-durai-vaiko-interview</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mdmk-not-contesting-in-by-elections-durai-vaiko-interview#comments</comments><guid isPermaLink="false">d139342f-e8f2-4502-b72e-24ac036518e9</guid><pubDate>Wed, 09 Sep 2026 17:07:03 +0000</pubDate><atom:updated>2026-09-09T17:07:03.837Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Durai Vaiko,துரை வைகோ,இடைத்தேர்தல்,தாராபுரம்,TVK Alliance</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/rea4e30b/vaiko33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[  துரை வைகோ  பேட்டி]]></media:title><media:description type="html"><![CDATA[ 
இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடவில்லை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/rea4e30b/vaiko33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் இன்று  தொடங்கியுள்ளது.</p><p>இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ளதால் இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இந்தநிலையில், சென்னை பனையூரில் தந்தி டிவிக்கு எம்.பி துரை வைகோ பிரத்யேக  பேட்டியில் கூறியதாவது:-</p><p>மதுராந்தகம், தாராபுரம் இரு தொகுதிகளிலும்<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95"> மதிமுக </a>கடந்த தேர்தலில் போட்டியிடவில்லை. எனவே இந்த இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்கள் தான் போட்டியிட வாய்ப்புள்ளதாக நினைக்கின்றேன். ஆனால் மதிமுக கண்டிப்பாக இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை.</p><h2>மதிமுக உறுதுணையாக இருக்கும்</h2><p>வருகின்ற இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் அவரது வெற்றிக்கு மதிமுக உறுதுணையாக இருக்கும் என வைகோ அவர்கள் கூட்டத்தில் பேசியுள்ளார்.</p><h2>இந்த ஆட்சி தொடரவேண்டும்</h2><p>கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த கூட்டணிக்குள் வந்து இருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்பேன். இடதுசாரி கட்சிகள் அவர்களது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர். இந்த ஆட்சி தொடரவேண்டும் என அவர்களது ஆதரவை தொடர்ந்து தருகின்றனர். நிச்சயமாக இந்த கூட்டணியில் இடதுசாரி கட்சிகள் இடம்பெறும் என நான் நம்புகிறேன் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>அரசியல் உள்நோக்கத்துடன் உரிமை மீறல் பிரச்சினை எழுப்புவதா.? - தி.மு.க. கொறடா எ.வ.வேலு மறுப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-issue-of-breach-of-privilege-being-raised-with-political-motives-dmk-whip-ev-velu-clarifies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-issue-of-breach-of-privilege-being-raised-with-political-motives-dmk-whip-ev-velu-clarifies#comments</comments><guid isPermaLink="false">6af0b827-d96b-4e90-9195-6ad64d12396e</guid><pubDate>Wed, 09 Sep 2026 16:26:07 +0000</pubDate><atom:updated>2026-09-09T16:26:07.966Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,திமுக,DMK,தமிழகம்,எ.வ.வேலு,அரசியல் களம்,உரிமை மீறல் பிரச்சினை,tn politics,E.V.Velu</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/yqofi9i0/muire.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/yqofi9i0/muire.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டமன்ற உரிமை என்பது அரசியல் பழிவாங்கலுக்கான ஆயுதமல்ல. உண்மையான உரிமை மீறல் நிகழ்ந்துள்ளதா என்பதைத் தீர்மானிப்பதற்கான உயரிய நடைமுறையாகும் என்று <a href="https://www.dailythanthi.com/topic/dmk">தி.மு.க.</a> கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு தெரிவித்துள்ளார். </p><h2>உண்மைக்குப் புறம்பானது</h2><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள மறுப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>2021-2026 காலகட்டத்தில் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சராக நான் பொறுப்பு வகித்தபோது, 14.01.2026 அன்று வெளியிடப்பட்ட அரசாணை (நிலை) எண்.6ன் வாயிலாக, 2026-2027ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 80 பணிகளுக்கு இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் முன்கூட்டிய நிர்வாக அனுமதி அதன்மூலம் வழங்கப்பட்டதாகவும், அரசியலமைப்புச் சட்ட விதிகள் மீறப்பட்டதாகவும் தற்போதைய பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் கூறியிருப்பது உண்மைக்குப் புறம்பானதும், நிதிநிர்வாக நடைமுறைகளைத் திட்டமிட்டுத் திரித்துக் கூறுவதுமாகும்.</p><p>14.01.2026 நாளிட்ட அரசாணை (நிலை) எண் 6-ஐ முழுமையாகப் படித்தாலே, தற்போதைய அமைச்சரின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்பது தெளிவாகும். அந்த அரசாணையின் 9ஆம் பத்தியில், 80 பணிகளுக்கு ரூ.2,000 கோடி மதிப்பில் வழங்கப்பட்டது "Advance Administrative Sanction" அதாவது முன்கூட்டிய நிர்வாக அனுமதி - என்றே திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தற்போது அனுமதிக்கப்படும் தொகை 2026-2027ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் ஒட்டுமொத்த அனுமதிக்குள் சரிசெய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனையும் அதே பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>இடைக்கால நிதி நிலை அறிக்கை</h2><p>2026-2027ம் ஆண்டுக்கான இடைக்கால நிதி நிலை அறிக்கையில் பத்தி 112ல் நெடுஞ்சாலைதுறைக்கு முன் கூட்டிய நிர்வாக அனுமதியான ரூ.2000 கோடியையும் சேர்த்து ரூ.21,132 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு சட்டப் பேரவையின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.</p><p>மேலும், இந்த அரசாணை நிதித் துறையின் ஒப்புதலின்றி வெளியிடப்பட்டதாகக் கூற முடியாது. அரசாணையின் 11ஆம் பத்தியில், 14.01.2026 நாளிட்ட நிதித் துறையின் ஒப்புதலுடன் இந்த ஆணை வெளியிடப்படுவதாகத் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இறுதியாக, "By Order of the Governor என ஆளுநரின் ஆணைப்படி அரசுச் செயலாளரால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.</p><p>ஆகவே, எனது தனிப்பட்ட முடிவு என்றோ, சட்டமன்றத்தின் நிதி அதிகாரத்தை மீறி ரூ.2,000 கோடி செலவு செய்தேன் என்றோ கூறுவது உண்மைக்கும், அரசாணையில் உள்ள பதிவுகளுக்கும் முற்றிலும் முரணானதாகும். அரசமைப்புச் சட்டத்தின் Article 203 மானியக் கோரிக்கைகள் தொடர்பான சட்டமன்ற நடைமுறையையும், Article 204 மாநிலத்தின் தொகுப்பு நிதியிலிருந்து பணம் எடுப்பதற்கான ஒதுக்கீட்டுச் சட்ட நடைமுறையையும் குறிப்பிடுகின்றன. ஆனால், இவ்விரு Articles-லும் எதிர்வரும் நிதியாண்டுக்கான பணிகளுக்கு முன்கூட்டிய நிர்வாக அனுமதி வழங்கக்கூடாது என்று எங்கும் கூறப்படவில்லை.</p><h2>அரசுக் கணக்கில் செலவினம்</h2><p>ஒரு பணிக்கு நிர்வாக அனுமதி வழங்குவது வேறு; அரசின் தொகுப்பு நிதியிலிருந்து உண்மையில் பணத்தை எடுத்துச் செலவிடுவது வேறு. அரசமைப்புச் சட்டத்தின் Article 204(3) தடை செய்வது, சட்டப்படி செய்யப்பட்ட ஒதுக்கீடு இல்லாமல் தொகுப்பு நிதியிலிருந்து பணம் எடுப்பதைத்தான். இந்த அரசாணையின் மூலம் ரூ.2,000 கோடி தொகுப்பு நிதியிலிருந்து எடுக்கப்பட்டதாகவோ, செலவிடப்பட்டதாகவோ சொல்லமுடியாது.</p><p>அரசாணையின் பத்தி 10-ல் செலவினம் பதிவு செய்யப்பட வேண்டிய கணக்குத் தலைப்புகள் குறிப்பிடப்பட்டிருப்பது, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.2,000 கோடி செலவிடப்பட்டது எனச் சொல்லமுடியாது. அரசுக் கணக்கில் செலவினம் எந்தக் கணக்குத் தலைப்பின்கீழ் வகைப்படுத்தப்பட வேண்டும் என்பதை மட்டுமே அது குறிக்கிறது. சட்டப்படியான நிதி ஒதுக்கீட்டிற்கு உட்பட்டே உண்மையான செலவு மேற்கொள்ளப்பட வேண்டும்.</p><h2>ஒப்பந்தப்புள்ளி கோரப்படுவதால்</h2><p>நெடுஞ்சாலைப் பணிகள் என்பது ஒரே நாளில் தொடங்கி முடிக்கக்கூடியவை அல்ல. கள ஆய்வு, விரிவான திட்ட அறிக்கை, நிலம் மற்றும் கட்டமைப்புகள் தொடர்பான ஆய்வு, மதிப்பீடு, தொழில்நுட்ப ஒப்புதல், ஒப்பந்தப்புள்ளி மற்றும் பணியாணை போன்ற பல்வேறு கட்டங்கள் அதில் உள்ளன. எனவே, ஒரு நிதியாண்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளுக்கான நிர்வாக நடவடிக்கைகளை முந்தைய நிதியாண்டிலேயே தொடங்குவது, வளர்ச்சிப் பணிகள் தாமதமின்றி நடைபெறுவதற்கான வழக்கமான நிதிநிர்வாக நடவடிக்கையாகும்.</p><p>பொதுவாகவே ஒப்பந்தப்புள்ளி கோரப்படுவதால் மட்டும் ஒப்பந்ததாரர்களுக்குப் பணம் செலுத்தப்பட்டதாகக் கருத முடியாது. எந்தப் பணிக்காக, எந்தத் தேதியில், எந்த நிதியாண்டின் ஒதுக்கீட்டிலிருந்து, எவ்வளவு தொகை உண்மையில் செலவிடப்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை. எனவே, முன்கூட்டிய நிர்வாக அனுமதியை உண்மையான நிதிச் செலவினமாகத் திரித்து, அரசமைப்புச் சட்டத்தின் Articles 203 மற்றும் 204 மீறப்பட்டதாகக் கூறுவது சட்டரீதியாக நிலைக்கக்கூடிய குற்றச்சாட்டு அல்ல. இதில் சட்டமன்றத்தின் உரிமையையோ மாண்பையோ பாதிக்கும் எந்தச் செயலும் நடைபெறாததால், உரிமை மீறல் பிரச்சினை எழுவதற்கே இடமில்லை.</p><h2>அரசியல் ஆதாயத்திற்காக</h2><p>எனவே, அரசியலமைப்புச் சட்டத்தின் 202 முதல் 206 வரையிலான உறுப்புகளை நான் மீறியதாகக் கூறுவது சரியல்ல. நிர்வாக அனுமதி வழங்குவதற்கும், தொகுப்பு நிதியிலிருந்து பணம் எடுத்துச் செலவிடுவதற்கும் இடையிலுள்ள அடிப்படை வேறுபாட்டை மறைத்து, அரசியல் ஆதாயத்திற்காக உரிமை மீறல் பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் நான் சட்டமன்றத்தையோ, மாண்புமிகு பேரவைத் தலைவரையோ, பேரவையின் உரிமைகளையோ எந்த வகையிலும் அவமதிக்கவில்லை; பேரவையின் மாண்பைக் குறைக்கும் எந்தச் செயலிலும் ஈடுபடவில்லை. </p><p>ஆகவே, இதில் உரிமை மீறல் என்ற பேச்சுக்கே இடமில்லை. இதைப் போன்ற அரசு ஆணைகள் இதற்கு முன்பும் வெளியிடப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சி சாலைகள், புறவழிச்சாலைகள் ஆகியவற்றை விரிவாக்கம் செய்து மேம்படுத்த ரூ.13,967.10 கோடிக்கு அதிமுக ஆட்சியில் ஒப்புதல் வழங்கப்பட்டு அரசு ஆணை எண் 16 நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை நாள்: 29.1.2021ல் ஆணை பிறப்பிக்கப்பட்டு இத்தொகையை ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகளில் செயல்படுத்தப் பட்டுள்ளது. முதல் ஆண்டில் ரூ.5,313 கோடியும், இரண்டாம் ஆண்டு ரூ.5,450.30 கோடியும் மூன்றாம் ஆண்டில் ரூ.3230.80 கோடியும் பெற்று திட்டம் நிறைவேற்றப்பட்டது. என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.</p><h2>உரிமை மீறல்</h2><p>சட்டமன்ற உரிமை என்பது அரசியல் பழிவாங்கலுக்கான ஆயுதமல்ல. உண்மையான உரிமை மீறல் நிகழ்ந்துள்ளதா என்பதைத் தீர்மானிப்பதற்கான உயரிய நடைமுறையாகும். எனவே, நிர்வாக அனுமதியையும் உண்மையான நிதிச் செலவினத்தையும் குழப்பிக் கொள்ள வேண்டாம். </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>வெப்பத் தணிப்புத் திட்டம்: ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/heat-mitigation-plan-consultations-with-representatives-of-the-united-nations-environment-programme</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/heat-mitigation-plan-consultations-with-representatives-of-the-united-nations-environment-programme#comments</comments><guid isPermaLink="false">685205bd-b86b-4322-85a9-12a710fc9258</guid><pubDate>Wed, 09 Sep 2026 16:23:36 +0000</pubDate><atom:updated>2026-09-09T16:23:36.633Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,சென்னை மாநகராட்சி ஆணையர்,Chennai Corporation Commissioner</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/gvfypj9l/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜி.எஸ். சமீரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/gvfypj9l/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜி.எஸ். சமீரன், தலைமையில் நகர்ப்புற வெப்பத் தணிப்புத் திட்டம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP- United Nation Environment Programme) பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று (09.09.2026) ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>வெப்பத்தைக் குறைக்க முயற்சி</h2><p>இக்கூட்டம் சென்னையில் நகர்ப்புற வெப்பத்தைக் குறைப்பதற்கான கூட்டு முயற்சிகளை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டு நடைபெற்றது.</p><p>இக்கூட்டத்தில் மாநகராட்சி இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன், ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் அமைப்பின் திட்ட மேலாளர் பெஞ்சமின் ஹிக்மேன் (UNEP Programme Manager - Benjamin Hickman), மூத்த ஆலோசகர்கள் ஆர்த்தி நைன் (Aarti Nain), துர்கானந்த் பல்சாவர் (Durganand Balsavar), மணிகண்டன் பரமேஸ்வரன் (Manikandan Parameswaran), ஆரோவில் கன்சல்டிங் அமைப்பின் திட்ட மேலாண்மை குழுவினர் (Project Management Unit from Auroville Consulting Team) மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.</p><h2>நிலையான குளிர்ச்சி முறை</h2><p>செயற்கை ஆற்றலைச் சாராத குளிர்ச்சி தீர்வுகள் (Passive Cooling Solutions - PCS) மற்றும் இயற்கை சார்ந்த தீர்வுகளை (Nature-based Solutions - NbS) ஒருங்கிணைப்பதன் மூலம் சென்னை முழுவதும் நிலையான குளிர்ச்சி முறைகளைச் செயல்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிவதில் இக்கூட்டம் கவனம் செலுத்தியது. விவாதிக்கப்பட்ட முக்கிய முன்னுரிமைப் பகுதிகள் பின்வருமாறு:</p><p>· <strong>இயற்கை சார்ந்த தீர்வுகள் (NbS) மற்றும் பசுமை உள்கட்டமைப்பு:</strong> நகரத்தில் அதிக வெப்பம் பதிவாகும் பகுதிகளில் நிழல் தரும் நடைபாதைகள், நீர் ஊடுருவும் பரப்புகள் மற்றும் நகர்ப்புற பசுமையாக்குதல் திட்டங்களை ஒருங்கிணைத்தல்.</p><p>· <strong>பசுமைப் பள்ளிகளுக்கான PCS மறுசீரமைப்பு:</strong> சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஏற்கனவே நடைமுறையிலுள்ள 'குளிர்ந்த கூரை' (Cool Roof) திட்டங்களை விரிவுபடுத்துவதுடன், PCS நுட்பங்கள் மூலம் பள்ளிகளை மறுசீரமைத்தல்.</p><p>· <strong>பெருநகர சென்னை மாநகராட்சி PCS வழிகாட்டுதல்கள் மற்றும் வெப்பநிலைக் தரநிலைகள்:</strong> அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பெருநகர சென்னை மாநகராட்சியின் பொது உள்கட்டமைப்புகளுக்கு ஏற்ற காலநிலைக்கேற்ற கட்டட வடிவமைப்பு மாதிரிகள், வெப்ப வசதி தரநிலைகள் உள்ளிட்ட வழிகாட்டுதல்களை வழங்குதல்.</p><p>· <strong>டிஜிட்டல் கருவிகள் மற்றும் திட்டமிடல்:</strong> ஆதாரப்பூர்வமான நகர்ப்புற திட்டமிடலுக்கு ஆதரவளிக்கும் வகையில், சென்னை மாநகராட்சியின் 'டிஜிட்டல் ட்வின்' (Digital Twin) திட்டத்தில் நிகழ்நேர நுண்காலநிலை மாதிரியாக்கத்தைச் (Real-time microclimate modelling) சேர்த்தல்.</p><p>· <strong>மாவட்ட குளிர்ச்சி அமைப்புகள் (District Cooling Systems):</strong> புதிய மற்றும் மறுசீரமைக்கப்படும் சென்னை மாநகராட்சி மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மாவட்ட குளிர்ச்சி மற்றும் 'சேவையாக குளிர்ச்சி' (Cooling-as-a-Service - CaaS) மாதிரிகளின் சாத்தியக்கூறுகளை மதிப்பிடுதல்.</p><p>இந்த கூட்டு முயற்சியானது, காலநிலைக்கு ஏற்ற நகர்ப்புற வளர்ச்சிக்கான பெருநகர சென்னை மாநகராட்சியின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துவதோடு, அளவிடக்கூடிய மற்றும் ஆதாரப்பூர்வமான வெப்பத் தணிப்பு உத்திகளைச் செயல்படுத்துவதில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னையை </a>ஒரு முன்னோடி நகரமாக உயர்த்திடும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்: அமைச்சர்கள் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-precautionary-works-ministers-inspect</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-precautionary-works-ministers-inspect#comments</comments><guid isPermaLink="false">2f929311-c673-4d3f-a212-a4cfa278784c</guid><pubDate>Wed, 09 Sep 2026 16:07:20 +0000</pubDate><atom:updated>2026-09-09T16:07:20.710Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Northeast Monsoon,inspection,minister,முன்னெச்சரிக்கை பணிகள்,வடகிழக்குப் பருவமழை,அமைச்சர்கள் ஆய்வு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/0vggomxo/Untitled-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/0vggomxo/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, சென்னை மாநகராட்சியில் மண்டல அளவில் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் முன்னெச்சரிக்கைப் பணிகளை இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>இன்று (09.09.2026) வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் நெ.மரிய வில்சன், சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-38க்குட்பட்ட பகுதியில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் இயந்திரம் மூலம் ஆகாயத்தாமரைகள் மற்றும் வண்டல்கள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>மேலும், கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் மண்டலங்களுக்கான கண்காணிப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே.பிரபு, வளசரவாக்கம் மண்டலம், வார்டு-148க்குட்பட்ட புவனேஸ்வரி நகரில் உள்ள விருகம்பாக்கம் கால்வாய் தொடங்கும் இடத்தினைப் பார்வையிட்டு, இக்கால்வாயில் மழை வெள்ள நீர் தங்குதடையின்றி செல்லும் வகையில் ஆகாயத்தாமரைகளை அகற்றி, வண்டல் மண் தூர்வாரிடவும், தடுப்புச் சுவர் கட்டுதல் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>இந்த ஆய்வுகளின்போது, மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் ப.ரேவந்த் சரண், மண்டல உதவி ஆணையர்கள் ஏ.ராஜ்குமார், என்.தட்சணாமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் வி.கிரிதரண் மற்றும் நீர்வளத்துரை, மாநகராட்சி உள்ளிட்ட துறைகளின் அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மதுரை அருகே லாரியில் இருந்து இரும்பு ராடு விழுந்து  விபத்து: ஜல்லிக்கட்டு வீரர்கள் 2 பேர் பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-lorry-iron-rod-accident-two-jallikattu-players-killed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-lorry-iron-rod-accident-two-jallikattu-players-killed#comments</comments><guid isPermaLink="false">8467422f-0c3a-48ef-ba34-057518928bb8</guid><pubDate>Wed, 09 Sep 2026 15:30:53 +0000</pubDate><atom:updated>2026-09-09T15:30:53.384Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,Madurai,மதுரை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/lj7ygft1/Untitled-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/lj7ygft1/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை அருகே லாரியில் இருந்து இரும்பு ராடு தவறி விழுந்த விபத்தில் ஜல்லிக்கட்டு வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.</p><h2>ஜல்லிக்கட்டு வீரர்கள்</h2><p>மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள சித்தாலங்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள் கோபாலகிருஷ்ணன் (28 வயது), அவரது நண்பர் ராகுல் (26 வயது). இவர்கள், பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகவில்லை.</p><p>இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் இருவரும் மதுரை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். சோழவந்தான் அருகே இரும்பு பொருட்களை ஏற்றி சென்ற கனரக லாரி அவர்கள் பைக்கை முந்தி சென்றது.</p><h2>விபத்து</h2><p>அப்போது, எதிர்பாராதவிதமாக லாரியில் இருந்து கீழே சரிந்து விழுந்த பெரிய இரும்பு ராடு அவர்களது பைக் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கோபாலகிருஷ்ணன், ராகுல் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>விபத்து குறித்து தகவலறிந்து வந்த போலீசார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரி குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>“மதச்சார்பற்ற சமூகநீதி கூட்டணி என எப்படி அழைக்க முடியும்?” - தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-can-it-be-called-a-secular-social-justice-alliance-asks-tamilisai-soundararajan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-can-it-be-called-a-secular-social-justice-alliance-asks-tamilisai-soundararajan#comments</comments><guid isPermaLink="false">7df80dcd-44c0-4569-91bc-c58c619c4ffa</guid><pubDate>Wed, 09 Sep 2026 15:24:54 +0000</pubDate><atom:updated>2026-09-09T15:24:54.887Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,சென்னை,காங்கிரஸ்,தமிழிசை சவுந்தரராஜன்,Tamilisai Soundararajan,மதிமுக,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி,மதச்சார்பற்ற அரசு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/34az4g64/308.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழிசை சவுந்தரராஜன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/34az4g64/308.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மதச்சார்பற்ற சமூகநீதி கூட்டணி என எப்படி அழைக்க முடியும் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி</h2><p>புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டிற்கான இடைத்தேர்தலை முன்னிட்டு “மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி” என்று ஒரு கூட்டணியை அறிவித்திருக்கிறார்கள். ஆனால், IUML போன்ற கட்சிகளை கூட்டணியில் வைத்துக்கொண்டு, இதை எப்படி “மதச்சார்பற்ற கூட்டணி” என்று அழைக்க முடியும்? மதச்சார்பின்மை என்பது பெயரில் வைத்துக்கொள்ளும் அடையாளமல்ல; அனைத்து மதங்களையும் சமமாக அணுகும் கொள்கையாக இருக்க வேண்டும்.</p><h2>பிரதமர் வேட்பாளர் யார் ?</h2><p>காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேசிய அளவில் I.N.D.I.A. கூட்டணியில் இருக்கின்றனவா, இல்லையா? மாநிலத்திற்கு ஒரு கூட்டணி, தேசிய அளவில் வேறு கூட்டணி - ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்ற நிலைப்பாடா? அதிலும், “பிரதமர் வேட்பாளர் யார்?” என்ற கேள்விக்குக்கூட பதில் சொல்ல காங்கிரஸ் தயங்குகிறது. மாணிக்கம் தாகூர் போன்ற   தலைவர்களே தெளிவான பதிலைச் சொல்ல முடியாத நிலை, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D">காங்கிரஸ்</a> கட்சிக்கு அரசியல் முதுகெலும்பு இல்லாததை வெளிப்படுத்துகிறது.</p> <p>இலங்கைத் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட காலத்தில் காங்கிரஸ் ஆட்சியை கடுமையாக விமர்சித்தவர்கள் வைகோவும் திருமாவளவனும். இன்று அதே காங்கிரஸுக்கு ஆதரவாக நிற்பது ஏன்? அன்று கொள்கை, இன்று கூட்டணி அரசியலா? “மாநில உரிமைக்காக இந்தக் கூட்டணி” என்று கூறுகிறார்கள். ஆனால், தமிழகத்தின் முக்கியமான மாநில உரிமையான காவிரி நீர் உரிமையையே காங்கிரஸால் தமிழகத்திற்கு உறுதியாகப் பெற்றுத்தர முடியவில்லை. அப்படியிருக்கும்போது, மாநில உரிமையை காப்பாற்றுவோம் என்று எப்படி மக்களிடம் கூற முடியும்?</p><h2>குழப்பமான கூட்டணி</h2><p>ஆக, இது உண்மையில் மதச்சார்பற்ற கூட்டணியா? சமூகநீதிக் கூட்டணியா? மாநில உரிமைக்கான கூட்டணியா? என்ற கேள்விகளுக்கு அவர்களிடமே தெளிவான பதில் இல்லை. கொள்கையில் குழப்பம், கூட்டணியில் குழப்பம், பிரதமர் வேட்பாளரில் குழப்பம், மாநில உரிமையில் தோல்வி ஒட்டுமொத்தமாக இது ஒரு “குழப்பமான கூட்டணி”. எனவே, இதை “மனிதாபிமானமற்ற, சமூகநீதியற்ற, கொள்கையற்ற குழப்பக் கூட்டணி” என்றுதான் மக்கள் பார்க்க வேண்டியிருக்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>பழங்குடியின தாயும், சேயும் பலி; மரவியாபாரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tribal-mother-and-child-sacrificed-cpm-urges-legal-action-against-tamil-nadu-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tribal-mother-and-child-sacrificed-cpm-urges-legal-action-against-tamil-nadu-government#comments</comments><guid isPermaLink="false">203f7386-369d-4ca6-8fbf-3eace2cc0fe2</guid><pubDate>Wed, 09 Sep 2026 15:19:24 +0000</pubDate><atom:updated>2026-09-09T15:19:24.937Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>குழந்தை,நடவடிக்கை,பலி,தமிழக அரசு,Government of Tamil Nadu,Mother,வலியுறுத்தல்,பழங்குடியின பெண்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,tribal,infant death,CPI(M),Legal Action,Urges</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/sht56lxw/communist.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பெ.சண்முகம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/sht56lxw/communist.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>கொத்தடிமை முறையின் கொடூரம்! பழங்குடியின தாயும், சேயும் பலி!! மரவியாபாரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">பெ.சண்முகம்</a> வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>வேதனை</h2><p>காஞ்சிபுரம் மாவட்டம், சிங்காடிவாக்கம் ஊராட்சியை சேர்ந்த இருளர் பழங்குடியின பெண் தேன்மொழி (35) மற்றும் அவரது பச்சிளம் குழந்தையுடன் கொடுரமான முறையில் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.</p><h2>விறகு வியாபாரி</h2><p>இருளர் சமூகத்தை சேர்ந்த ஆனந்தன் (40), தேன்மொழி (35) தம்பதியினர். அரக்கோணம் சாலையில் உள்ள வெள்ளை கேட் பகுதியில் ஆறுமுகம் என்ற விறகு வியாபாரியிடம் கடந்த 6 மாதங்களாக வேலை செய்து வந்துள்ளனர். அவர்களுடன் திருமணமான மகள் காவியா, மருமகன் முத்து குடும்பமும் வேலை செய்து வந்துள்ளனர். விறகு வியாபாரி அமைத்து கொடுத்த தார்ப்பாய் கூடாரத்திலேயே அவர்கள் தங்கி வேலை செய்து வந்துள்ளனர்.</p><h2>பிரசவ வலி </h2><p>வேலைக்காக முன்பணமாக ஆறுமுகத்திடம் ஆனந்தன் தம்பதியினர் ரூ.20,000 கடன் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், 9 மாத கர்ப்பிணியான தேன்மொழிக்கு  திடீரென கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டிய அவசர நிலையில் இருந்த அவரை, "வாங்கிய கடனை திருப்பி கொடுக்காமல் மரம் வெட்டும் இடத்தைவிட்டு செல்லக்கூடாது" என்று கூறி ஆறுமுகம் மருத்துவமனைக்கு செல்லவிடாமல் தடுத்து விட்டார்.</p><h2>கொடூரம்</h2><p>மருத்துவ உதவியின்றி தேன்மொழிக்கு தார்ப்பாய் கூடாரத்திலேயே பிரசவம் தொடங்கியுள்ளது. குழந்தையின் உடல் பாதி வெளியே வந்த நிலையில், கடுமையான வலி மற்றும் அதிக ரத்தப்போக்கு காரணமாக தேன்மொழியும் அவரது பச்சிளம் குழந்தையும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.</p><p>ஒரு நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்ட நேரத்தில், வெறும் ரூ.20,000 கடனுக்காக அவரை மருத்துவமனைக்கு செல்லவிடாமல் தடுத்தது மிக மிக கொடூரமானதுமாகும்.</p><h2>உழைப்பு சுரண்டல்</h2><p>பழங்குடியின மக்களின் வறுமையையும் கல்வியறிவின்மையையும் பயன்படுத்தி அவர்களை கடன் மற்றும் உழைப்பு சுரண்டலுக்குள் தள்ளும் நடைமுறைகளுக்கு இந்த கொடூர சம்பவம் மற்றுமொரு அதிர்ச்சிகரமான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.</p> <h2>விசாரணை</h2><p>இந்த கொத்தடிமையின் கொடூரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தேன்மொழி மற்றும் அவரது பச்சிளம் குழந்தையின் மரணம் இயற்கை மரணம் என்று எளிதில் மூடிமறைக்கப்படாமல், முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.</p><h2>வன்கொடுமைகள் தடுப்பு சட்டம்</h2><p>மருத்துவமனைக்கு செல்லவிடாமல் தடுத்த விறகு வியாபாரி ஆறுமுகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் இரண்டு உயிர்கள் பறிக்கப்பட்டதற்கு இணையான வழக்கும் அத்துடன் எஸ்.சி/எஸ்.டி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின்</a> படியும் வழக்குப் பதிவு செய்து நியாயமான மற்றும் விரைவான விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த தேன்மொழியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும், அரசின் அனைத்து நிவாரணங்களும் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.</p><p>இருளர் உள்ளிட்ட பழங்குடியின மக்களின் உழைப்பு சுரண்டலையும், கடன் கொத்தடிமைத்தனத்தையும் தடுத்து நிறுத்துவதற்கு தமிழ்நாடு அரசு உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் சேது செல்வம் போட்டி - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sethu-selvam-to-contest-the-puducherry-thattanchavady-constituency-by-election-mk-stalin-announces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sethu-selvam-to-contest-the-puducherry-thattanchavady-constituency-by-election-mk-stalin-announces#comments</comments><guid isPermaLink="false">7013c8e3-106a-461b-8ab6-ace075d7a29b</guid><pubDate>Wed, 09 Sep 2026 15:18:27 +0000</pubDate><atom:updated>2026-09-09T15:18:27.266Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,M.K.Stalin,தமிழகம்,புதுச்சேரி,puducherry,இடைத்தேர்தல்,தட்டாஞ்சாவடி,byelection</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/xsltjlt3/parthu.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/xsltjlt3/parthu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி திமுக வேட்பாளராக சேது செல்வம் போட்டியிடுவார் என <a href="https://www.dailythanthi.com/topic/dmk">திமுக</a> தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.</p><p>தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. வேட்புமனு தாக்கல் இன்று (புதன்கிழமை) தொடங்கியுள்ள நிலையில், <a href="https://www.dailythanthi.com/topic/dmk">தி.மு.க.</a> சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்களை அக்கட்சி தலைமை அறிவித்திருந்தது.</p><p>இதன்படி மதுராந்தகம் தொகுதியில் <a href="https://www.dailythanthi.com/topic/dmk">திமுக</a> சட்டத்துறை இணை செயலாளராக உள்ள பரந்தாமன் மற்றும் தாராபுரம் தொகுதியில் வழக்கறிஞர் சுகன்யாவும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பரந்தாமன், கடந்த தேர்தலில் சென்னை எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இடைத்தேர்தலில் தமிழகத்தில் பிரதானமாக உள்ள மூன்று கட்சிகளும் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளதால், தேர்தல் களம் அனல் பறக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில் புதுச்சேரி சட்டசபை இடைத்தேர்தல், தட்டாஞ்சாவடி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் <a href="https://www.dailythanthi.com/topic/dmk">தி.மு.கழக</a> வேட்பாளரை, அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>வருகிற 06-10-2026 அன்று நடைபெற உள்ள புதுச்சேரி மாநிலம், தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் சேது (எ) சேது செல்வம் அவர்கள் கழக வேட்பாளராக போட்டியிடுவார்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>ரங்கசாமி ராஜினாமாவால் காலியாக உள்ள தட்டாஞ்சாவடி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/wkh66mt5/thokae.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>மதுரை: தூய்மைப் பணியாளர் கொடுத்த புகாரில் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது - காவல்துறை விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-investigation-into-the-complaint-filed-by-a-sanitation-worker-is-ongoing-police-clarification</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-investigation-into-the-complaint-filed-by-a-sanitation-worker-is-ongoing-police-clarification#comments</comments><guid isPermaLink="false">aa67472e-5f25-4cd9-9475-cd5fcf0714c0</guid><pubDate>Wed, 09 Sep 2026 14:48:25 +0000</pubDate><atom:updated>2026-09-09T14:48:25.436Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,police,தமிழகம்,Madurai,மதுரை,காவல்துறை,தூய்மை பணியாளர்,Sanitation worker</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/0hynwley/klere.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/0hynwley/klere.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரை மாவட்டம் மேலூர் உட்கோட்டம், கம்பூர் கிராம வழக்கு நிலை தொடர்பான காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. </p><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p>மதுரை மாவட்டம், மேலூர் உட்கோட்டம், கம்பூர் கிராமத்தில் தூய்மை காவலர் திருமதி சசிகலா என்பவர் ஊராட்சி செயலாளர் ரூபா என்பவர் மீது கொடுத்த புகாரின் பேரில், கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் குற்ற எண்: 355/2026-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.</p><p>மேலும், இது தொடர்பாக ஊர் பெரியவர்கள் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற போது மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரிலும், மற்றொரு வழக்கு கொட்டாம்பட்டி காவல் நிலைய குற்ற எண்: 358/2026 -ன் கீழ் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது.</p><p>இந்நிலையில், இவ்வழக்கு ரத்து செய்யப்பட்டுவிட்டதாகவோ அல்லது முழுமையாக முடித்து வைக்கப்பட்டுவிட்டதாகவோ ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின்றன.</p><p>இவ்வழக்குகள் எதுவும் ரத்து செய்யப்படவில்லை; காவல் துறையினரால் சட்டப்படி புலன் விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>8 இடங்களில் சதம் அடித்த வெயில்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/temperatures-hit-the-century-mark-in-8-locations</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/temperatures-hit-the-century-mark-in-8-locations#comments</comments><guid isPermaLink="false">49eb6041-8465-4afa-bac0-8ef12051ae76</guid><pubDate>Wed, 09 Sep 2026 14:44:11 +0000</pubDate><atom:updated>2026-09-09T14:44:11.107Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வெயில்,Temperature,Tamilnadu Temperature,High Temperature,வெயில் தாக்கம்,Temperature rise,வெயில் கொடுமை,வெயில் அளவு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/wcv59vx8/sun.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/wcv59vx8/sun.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்தாலும், பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், <a href="https://www.dailythanthi.com/news/weather">தமிழகத்தில் </a>8 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p>அதன்படி தமிழகத்தில் இன்று அதிகமாக வெப்பநிலை பதிவான இடங்கள் வருமாறு:-</p><ol><li><p>ஈரோடு – 39.8°C - 103.6°F</p></li><li><p>கரூர் பரமத்தி – 39°C - 102.2°F</p></li><li><p>மதுரை விமான நிலையம் – 38°C - 100.4°F</p></li><li><p>நாமக்கல் – 38°C - 100.4°F</p></li><li><p>பாளையங்கோட்டை – 39.1°C - 102.4°F</p></li><li><p>தஞ்சாவூர் – 39°C - 102.2°F</p></li><li><p>திருச்சி – 39.7°C - 103.5°F</p></li><li><p>வேலூர் – 38.9°C - 102.0°F</p></li></ol>]]></content:encoded></item><item><title>சட்டத்தின் பெயரில் ஒரு சமூகத்தை குறிவைக்கக் கூடாது - இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-community-should-not-be-targeted-in-the-name-of-the-law-indian-thowheed-jamath-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-community-should-not-be-targeted-in-the-name-of-the-law-indian-thowheed-jamath-condemns#comments</comments><guid isPermaLink="false">7a318323-7066-4acb-9b9e-926025916f6b</guid><pubDate>Wed, 09 Sep 2026 14:34:07 +0000</pubDate><atom:updated>2026-09-09T14:34:07.906Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,விசாரணை,முதல்-அமைச்சர்,கண்டனம்,investigation,law,Condemn,Community,இந்திய தவ்ஹீத் ஜமாஅத்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/ullbfj6s/307.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முஹம்மது ஷிப்லி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/ullbfj6s/307.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அழைப்பாணை இல்லாமல் காவல் நிலையத்திற்கு அழைத்து கண், கைரேகை பதிவு செய்த போலீசாருக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது.</p><p>இது தொடர்பாக, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>மனித உரிமை மீறல்</h2><p>நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில், எந்தவொரு சட்டப்பூர்வ அழைப்பாணை அல்லது முறையான காரணமும் இல்லாமல் சிறுபான்மை மக்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து, அவர்களிடம் கண் ரேகை மற்றும் கைரேகைகளை பதிவு செய்வதாக வெளியாகியுள்ள தகவல்கள் மனித உரிமை மீறலாகும்.</p><p>அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கும் எதிரான செயலாகும். சட்டத்தின் பெயரில் எந்தவொரு சமூகத்தினரையும் அச்சுறுத்தும் அல்லது குறிவைத்து நடவடிக்கை எடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.</p><h2>விசாரணை</h2><p>இந்த விவகாரத்தில் தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D">முதல்-அமைச்சர்</a> உடனடியாக தலையிட்டு, முழுமையான விசாரணை நடத்த வேண்டும். அனைத்து குடிமக்களும் சட்டத்தின் முன் சமமானவர்கள். எந்தவொரு சமூகத்தினருக்கும் அச்சம் ஏற்படும் சூழல் உருவாகாத வகையில் அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>தவெக அரசின் நிர்வாகத் தோல்வி: தொடரும் மின்வெட்டால் பரிதவிக்கும் தமிழக மக்கள் - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-governments-administrative-failure-tamil-nadu-suffers-from-continued-power-cuts-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-governments-administrative-failure-tamil-nadu-suffers-from-continued-power-cuts-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">74599884-f0d5-4361-afa0-0f8f70f07581</guid><pubDate>Wed, 09 Sep 2026 14:25:44 +0000</pubDate><atom:updated>2026-09-09T14:25:44.447Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,நயினார் நாகேந்திரன்,power cut,மின்வெட்டு,Nainar Nagenthran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/7py6lwbm/Untitled-8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/7py6lwbm/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகம் முழுவதும் தடையில்லா மின்சாரத்தையும், குடிநீர் வசதியையும் உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தவெக ஆட்சியில் தொடரும் மின்வெட்டுப் பிரச்சினைகளால் தமிழகம் முழுவதும் தாய்மார்களும், முதியவர்களும் அன்றாடம் தெருவில் இறங்கிப் போராடும் அவலநிலை ஏற்பட்டிருப்பது கவலையளிக்கிறது. அந்த வகையில் திருவள்ளூர் அத்திப்பட்டு, சென்னை கொருக்குப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஒட்டுமொத்தப் பகுதியும் இருளில் மூழ்கியுள்ளதாகக் கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். உழைக்கும் எளிய மக்களுக்கு அடிப்படை வசதிகளைக் கூடச் செய்து தராமல் அவர்களை வீதிக்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ள தவெக அரசின் நிர்வாகத் தோல்வி வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.</p><p>லேசான காற்று வீசினாலே மின் விநியோகம் நிறுத்தப்படுவதால் மோட்டார்கள் இயங்காமல் குடிநீரின்றி அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். இதுகுறித்துப் புகார் அளிக்க முயன்றால் மின்வாரிய அதிகாரிகள் தொலைபேசிகளை அணைத்து (Switch off) வைப்பதும், மக்களை அலைக்கழிப்பதுமாகப் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு வருகின்றனர்.</p><p>பகலெல்லாம் கூலி வேலைக்கு சென்றுவிட்டு வரும் உழைக்கும் மக்கள், இரவில் நிம்மதியாகத் தூங்கக்கூட வழியின்றி குழந்தைகளுடன் தவிக்கும் அவலநிலை தவெக ஆட்சியில் அரங்கேறி வருகிறது. எனவே ஜோசப் விஜய் தலைமையிலான அரசு உடனடியாகத் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு, போர்க்கால அடிப்படையில் தமிழகம் முழுவதும் தடையில்லா மின்சாரத்தையும் குடிநீர் வசதியையும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு - முழு விவரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/quarterly-exam-schedule-released-full-details</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/quarterly-exam-schedule-released-full-details#comments</comments><guid isPermaLink="false">ff88db3a-1053-4979-a5d6-14dbd1689801</guid><pubDate>Wed, 09 Sep 2026 14:22:46 +0000</pubDate><atom:updated>2026-09-09T14:22:46.104Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,schools,பள்ளிகள்,காலாண்டு தேர்வு,Quarterly Exam,Quarterly Examination,பள்ளி கல்வி இயக்ககம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/y4zbnluk/atta.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/y4zbnluk/atta.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான காலாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்ககம் இன்று (09.09.2026) வெளியிட்டுள்ளது.</p><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>* 1 மற்றும் 2ஆம் வகுப்புகளுக்கு செப்.17ம் தேதி் தொடங்கி செப். 24ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும்.</p><p>* 3 முதல் 10ஆம் வகுப்பு வரை செப்.16ம் தேதி தொடங்கி, செப்.24ம் தேதி வரை  தேர்வுகள் நடைபெறும்.</p><p>* 11, 12ஆம் வகுப்புகளுக்கு செப்.16ம் தேதி தொடங்கி செப்.25ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>முழு விபரம்:-</h2><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/ajpvkwt3/pariot1111.jpg" /></figure><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/f6d4h988/att2222.jpg" /></figure><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/o2bl7o5a/time3333.jpg" /></figure><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/a0jt9dx5/top4444.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>2029 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார்..? - மாணிக்கம் தாகூர் பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/who-will-be-the-prime-ministerial-candidate-for-the-2029-parliamentary-elections-manickam-tagore-responds</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/who-will-be-the-prime-ministerial-candidate-for-the-2029-parliamentary-elections-manickam-tagore-responds#comments</comments><guid isPermaLink="false">e4134365-43f4-484e-a04f-91d94b888c2d</guid><pubDate>Wed, 09 Sep 2026 14:01:14 +0000</pubDate><atom:updated>2026-09-09T14:01:14.564Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,காங்கிரஸ்,Congress,VCK,மதிமுக,mdmk,மாணிக்கம் தாகூர்,கூட்டணி கட்சிகள்,விடுதலை சிறுத்தைகள்,இந்திய யூனியன் முஸ்லீம் லீக்,Alliance parties,Manickam Tagore,மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/pun254qr/cong.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/pun254qr/cong.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>நாடாளுமன்றத் தேர்தலில் யார் பிரதமர் வேட்பாளர்? என்பதை இந்தியா கூட்டணிதான் முடிவு செய்யும்” என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கூறினார்</p><h2>கூட்டணி கட்சிகள்</h2><p>சட்டமன்ற தேர்தலில் தனித்து களம் இறங்கிய த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை அக்கட்சிக்கு இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.</p><p>விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் த.வெ.க. அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நிலையில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய 2 கட்சிகளும் வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகின்றன.</p><h2>முதல்-அமைச்சர் விஜய் தலைமையில்</h2><p>இதனிடையே தவெக தலைமையில் புதிய கூட்டணியை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதற்கான முதல் ஆலோசனைக் கூட்டம் கடந்த ஜூலை 1-ந்தேதி சென்னை கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் நடந்தது. அந்த கூட்டத்தில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் பங்கேற்றது. வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து வருவதால் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.</p><p>இந்த நிலையில், தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்த கட்சிகளின் 2-ம் கட்ட ஆலோசனைக் கூட்டம் சென்னையை அடுத்த பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய் </a>தலைமையில் நடைபெற்றது.</p><h2>'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி'</h2><p>இக்கூட்டத்தில் கலந்துகொள்ள ஏற்கனவே காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவற்றுக்கு தவெகவின் மூத்த நிர்வாகிகளும், அமைச்சர்களுமான ஆனந்த். ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோர் நேரில் அழைப்பு விடுத்திருந்தனர். இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்தன.</p><p>இந்த நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி எம்.பி., சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் தாரகை கத்பர்ட், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ எம்.பி., இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீன், அமைச்சர் ஷாஜகான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ரவிக்குமார் எம்.பி., சிந்தனைச் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p><p>சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் த.வெ.க. தலைமையிலான கூட்டணிக்கு 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' என்று பெயர் வைக்கப்பட்டது. கூட்டணி தலைவராக <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> தேர்வு செய்யப்பட்டார்.</p><h2>புதிய கட்சிகள்</h2><p>இந்நிலையில் தவெக ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு கூட்டணி கட்சி தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். </p><p>அப்போது தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூரிடம் “2029 நாடாளுமன்றத் தேர்தலில் யார் பிரதமர் வேட்பாளர்? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “2029 நாடாளுமன்றத் தேர்தலில் யார் பிரதமர் வேட்பாளர்? என்பதை இந்தியா கூட்டணிதான் முடிவு செய்யும்” என்று கூறினார். </p><p>தொடர்ந்து பேசிய அவர், “முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் செயல்படும். மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் அடுத்த கட்ட கூட்டத்தில் செயல் திட்டங்கள் குறித்து கலந்தாலோசித்து அறிவிப்போம். இந்த கூட்டணி ஒரு பலமான கூட்டணி.</p><p>மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் இடைத்தேர்தல் வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படுவார்கள். அவர்களின் வெற்றிக்காக பாடுபடுவோம். முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியில் தற்போது 4 கட்சிகள் உள்ளன. புதிய கட்சிகள் வருவதற்கான அடுத்த நகர்வுகள் எடுக்கப்படும்” என்று மாணிக்கம் தாகூர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>எண்ணூர் மீன்வளத்துறை அலுவலகம் முற்றுகை: டன் கணக்கில் மீன்கள் செத்து மிதந்த விவகாரம் - 8 கிராம மீனவர்கள் போராட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ennur-fisheries-office-siege-over-mass-fish-deaths</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ennur-fisheries-office-siege-over-mass-fish-deaths#comments</comments><guid isPermaLink="false">a3ac693a-63a5-4d85-8a5c-552df58bfc39</guid><pubDate>Wed, 09 Sep 2026 13:43:51 +0000</pubDate><atom:updated>2026-09-09T13:43:51.603Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மீனவர்கள்,protest,fishermen,போராட்டம்,மீன்வளத்துறை,Ennore,எண்ணூர்,Fisheries department,செத்து மிதந்த மீன்கள்,Dead fish floating</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/hv0ua08i/fishermanprotest.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மீனவர்கள் போராட்டம்]]></media:title><media:description type="html"><![CDATA[ எண்ணூர் மீன்வளத்துறை அலுவலகம் முற்றுகை: டன் கணக்கில் மீன்கள் செத்து மிதந்த விவகாரம் - 8 கிராம மீனவர்கள் போராட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/hv0ua08i/fishermanprotest.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">எண்ணூர் </a>முகத்துவாரம் பகுதியில் கடந்த மாதம் திடீரென டன் கணக்கில் மீன்கள் இறந்து கரை ஒதுங்கின. இந்த மீன்களின் இறப்புக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து அதிகாரிகள் இதுவரை எந்த விளக்கமும் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக, எண்ணூர் பகுதியில் பிடிக்கப்படும் மீன்களை வாங்குவதற்கு பொதுமக்கள் கடும் அச்சமடையும் நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.</p><h2>மீனவர்கள் திடீர் முற்றுகை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">மீன்கள்</a> இறந்து 25 நாட்கள் ஆகியும், இதுவரை அது தொடர்பான முழுமையான ஆய்வறிக்கையை அதிகாரிகள் வெளியிடவில்லை. இதை கண்டித்தும், மீன்கள் இறப்புக்கான ஆய்வறிக்கையை உடனடியாக வெளியிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், வாழ்வாதாரத்தை இழந்த மீனவர்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும், ஆலை கழிவுகளை முறையாக சுத்திகரிப்பு செய்த பின்னரே ஆற்றில் விட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.</p><h2> 8 மீனவ கிராம மீனவர்கள்</h2><p>இன்று காலை நெட்டுக்குப்பம், தாழங்குப்பம், எண்ணூர் குப்பம், முகத்துவாரக் குப்பம், சின்னக்குப்பம், பெரியகுப்பம், காட்டுக்குப்பம், சிவன் படை வீதி குப்பம் ஆகிய 8 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">மீனவர்கள்</a> திரண்டு வந்து, எண்ணூர் மீன்வளத்துறை அலுவலகத்தை  முற்றுகையிட்டு திடீர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">போராட்டத்தில்</a> ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.</p><h2>அதிகாரிகள் பேச்சுவார்த்தை</h2><p>இதுபற்றி தகவல் அறிந்ததும் மீன்வளத்துறை இயக்குனர் ஜான் பெக்கர், எண்ணூர் போலீஸ் உதவி கமிஷனர் வெங்கட்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் அவர்கள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மீனவர்களின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்கும் முடிவை தவெக அரசு கைவிட வேண்டும் - டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tvk-government-must-abandon-the-decision-to-establish-the-new-secretariat-at-pattinapakkam-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tvk-government-must-abandon-the-decision-to-establish-the-new-secretariat-at-pattinapakkam-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">1a992b62-eb18-4bac-b893-1a9b36f0e4ef</guid><pubDate>Wed, 09 Sep 2026 13:24:36 +0000</pubDate><atom:updated>2026-09-09T13:24:36.099Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,சென்னை,TTV Dhinakaran,டிடிவி தினகரன்,அமமுக,தலைமை செயலகம்,Secretariat</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/egb4sdjg/ttv.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/egb4sdjg/ttv.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தவெக அரசு கைவிட வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>புதிய தலைமை செயலகம்</h2><p>புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வரும் தலைமைச் செயலகத்தில் இடநெருக்கடி மற்றும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், நவீன வசதிகளுடன் கூடிய புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டிய அவசியம் இருப்பது உண்மைதான். ஆனால், அதற்காக பொதுமக்களுக்கும், அப்பகுதி மீனவ மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இடத்தை அவசரகதியில் தேர்வு செய்வது ஏற்புடையதல்ல.</p><p>நடைபெற்று முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் சென்னையில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், சென்னை பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.</p><p>110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு இதுவரை அரசாணைகள் வெளியிடப்படவில்லை எனக் கூறப்படும் நிலையில், புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான இடத்தை மட்டும் அவசரமாகத் தேர்வு செய்து அரசாணை வெளியிடப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.</p><h2>போக்குவரத்து நெரிசல்</h2><p>புதிய தலைமைச் செயலகம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டினம்பாக்கம் பகுதி ஏற்கனவே அதிக மக்கள் தொகை கொண்ட குடியிருப்புகள் நிறைந்த பகுதியாகும். மேலும், குறுகிய சாலைகள், போக்குவரத்து நெரிசல், எதிர்காலத்தில் சாலை மற்றும் உள்கட்டமைப்புகளை விரிவுபடுத்துவதற்கான குறைந்த வாய்ப்புகள் ஆகியவை உள்ள நிலையில், அங்கு தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, அப்பகுதி பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்படும்.</p><h2>தொழில் நிறுவனங்கள்</h2><p>அதுமட்டுமின்றி, பள்ளிகள், கல்லூரிகள், தேவாலயங்கள், உள்ளிட்ட பல்வேறு முக்கிய தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ள அப்பகுதியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்களும் பொதுமக்களும் வந்து செல்கின்றனர். இத்தகைய சூழலில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால், அரசு அலுவலர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என அதிக எண்ணிக்கையிலானோர் வந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு, அப்பகுதியில் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் உருவாக வாய்ப்புள்ளது.</p><p>மேலும், புதிய தலைமைச் செயலகம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலம், தங்களது பாரம்பரிய பயன்பாட்டில் இருந்து வந்த நிலம் எனவும், அதனை தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மீனவ சமுதாய மக்கள் நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இத்தகைய நிலையில், அவர்களின் கோரிக்கைகளை முறையாகக் கேட்டறியாமல் அங்கு தலைமைச் செயலகம் அமைப்பது, அவர்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் பாதிக்கும் நடவடிக்கையாகவே அமையும். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.</p><p>தமிழக அரசின் நிர்வாகத் தலைமையிடமாகவும், ஒட்டுமொத்த தமிழக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முக்கிய மையமாகவும் செயல்பட வேண்டிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்யும்போது,  பல்வேறு தரப்பினரின் கருத்துகளைக் கேட்டறிவது அவசியமாகும். ஆனால், எவருடனும் முறையாகக் கலந்தாலோசிக்காமல், எதிர்க்கட்சிகள்கூட விரிவாக விவாதிக்க முடியாத வகையில் 110 விதியின் கீழ் இத்திட்டத்தை அறிவித்து, தற்போது அவசரகதியில் இடத்தையும் தேர்வு செய்திருப்பது முதல்-அமைச்சர் விஜய் சர்வாதிகார போக்கை வெளிப்படுத்துகிறது.</p><h2>வலியுறுத்தல்</h2><p>எனவே, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கும், போக்குவரத்திற்கும், அப்பகுதி மீனவ மக்களின் வாழ்வாதாரத்திற்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், போதிய இடவசதி, எதிர்கால விரிவாக்கத்திற்கான வாய்ப்பு, சிறந்த போக்குவரத்து வசதி உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான மாற்று இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும் என <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D">முதல்-அமைச்சர்</a> விஜயை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு: 91.50 அடியாக குறைந்தது நீர்மட்டம் - டெல்டா பாசனத்திற்கு 12,000 கன அடி தண்ணீர் திறப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mettur-dam-inflow-drops-water-level-down-to-91-50-feet</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mettur-dam-inflow-drops-water-level-down-to-91-50-feet#comments</comments><guid isPermaLink="false">4d05696b-ec10-4ffd-abd0-567b8611b5ca</guid><pubDate>Wed, 09 Sep 2026 13:16:30 +0000</pubDate><atom:updated>2026-09-09T13:16:30.029Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur dam,தண்ணீர்,திறப்பு,water level,water,Released,டெல்டா பாசனம்,நீர்வரத்து குறைந்தது</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/c1gqr01w/metturdam.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மேட்டூர் அணை]]></media:title><media:description type="html"><![CDATA[ மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு: 91.50 அடியாக குறைந்தது நீர்மட்டம் - டெல்டா பாசனத்திற்கு 12,000 கன அடி தண்ணீர் திறப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/c1gqr01w/metturdam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மேட்டூர்,</p><p>காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், கர்நாடக அணைகளில் இருந்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேட்டூர் அணைக்கு</a> வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து சரிந்து வருகிறது.</p> <h2>நீர்வரத்து குறைந்தது</h2><p>மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 4,822 கன அடியாக மேலும் குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு சரிந்துள்ள அதே வேளையில், பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.</p><p>இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 91.50 அடியாக குறைந்துள்ளது. அணையின் மொத்த நீர் இருப்பு 54.38 டி.எம்.சி.யாக உள்ளது.</p><h2>12,400 கன அடி தண்ணீர் திறப்பு</h2><p>காவிரி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE">டெல்டா</a> மாவட்டங்களின் பாசன தேவைக்காக கடந்த செப்டம்பர் 1-ந் தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன்படி, இன்று காலை நிலவரப்படி டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் வினாடிக்கு 12,000 கன அடி தண்ணீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 400 கன அடி தண்ணீரும் என மொத்தம் 12,400 கன அடி தண்ணீர் அணையில் இருந்து தொடர்ந்து திறந்து விடப்பட்டு வருகிறது.</p><p><strong>இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது:-</strong></p><p>காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாத காரணத்தாலும், கர்நாடக அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய உரிய காவிரி நீரை திறந்து விட மறுப்பதாலும் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,822 கன அடியாக குறைந்துள்ளது.</p><p>இவ்வாறு அவர்கள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>இளம் கலைஞர்களுக்கான மாநில கலைப்போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பரிசுகள் வழங்கினார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/state-art-competition-for-young-artists-minister-rajmohan-presents-awards</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/state-art-competition-for-young-artists-minister-rajmohan-presents-awards#comments</comments><guid isPermaLink="false">b945c3e6-7122-4fe4-befb-dbacb7a20c8c</guid><pubDate>Wed, 09 Sep 2026 13:08:03 +0000</pubDate><atom:updated>2026-09-09T13:08:03.138Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,கலைப்போட்டிகள்,Minister Rajmohan,அமைச்சர் ராஜ்மோகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/up1rgpg4/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/up1rgpg4/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கலை பண்பாட்டுத்துறை சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட இளம் கலைஞர்களுக்கான மாநில கலைப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் பரிசுகள் வழங்கி பாராட்டினார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டில் இளம் கலைஞர்களின் கலைத்திறமைகளை வெளிக் கொணரவும் அவர்களை ஊக்கப்படுத்தவும் மாவட்ட, மாநில கலைப்போட்டிகள் கலை பண்பாட்டுத்துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. குரலிசை, பரதநாட்டியம், கருவியிசை, ஓவியம் மற்றும் கிராமியக்கலை என 5 பிரிவுகளில் 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளம் கலைஞர்கள் பங்கு பெறும் வகையில் நடத்தப்படுகிறது.</p><p>சென்னையில் மாநில அளவிலான போட்டிகள் 08.09.2026 அன்று இசைக்கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்டன. இப்போட்டியில் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட போட்டிகளில் முதலிடம் பெற்றவர்கள் கலந்து கொண்டனர். மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா 09.09.2026 அன்று சென்னை அருங்காட்சியகம் கலையரங்கில் நடைபெற்றது பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் பரிசுகள் வழங்கி விழா பேருரையாற்றினார்.</p><p>உருபாணர் குழுவின் தொல்கருவியிசை, அனுஷம் குழுவினரின் புவி காப்போம் நாட்டிய நிகழ்ச்சி, கிராமியக்கலைஞர்களின் தென்னிந்திய கிராமியக்கலைக்கூடல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பரிசளிப்பு விழாவின் தொடக்கமாக கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் மகேஸ்வரி ரவிக்குமார், வரவேற்புரையாற்றினார். அருங்காட்சியகங்கள் துறை இயக்குநர் தே.பாஸ்கர பாண்டியன் வாழ்த்துரை வழங்கினார். கலை பண்பாட்டுத்துறை இணை இயக்குநர் ஜெ. கார்குழலி நன்றியுரை நல்கினார். இவ்விழாவில், டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பூமாலினி, தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி முதல்வர் கும்பகோணம் ஆ.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p><p>குரலிசை போட்டியில் பிரீத்தி சேதுராமன் (சென்னை), ச.வினோதா (காஞ்சிபுரம்), சி.மகன்யாஸ்ரீ (கிருஷ்ணகிரி), கருவியிசை போட்டியில் தவில் பி.வெங்கடேசன் (நாமக்கல்), வயலின் சா.முகுந்தன் (மயிலாடுதுறை), நாதஸ்வரம் ம.முருகன்(சென்னை), பரதநாட்டியப்போட்டியில் மு.இதிகாசினி (திருச்சிராப்பள்ளி), ம.சுகி பிரார்த்தனா (திருவள்ளூர்), ரா.மகேஸ்வரன் (சிவகங்கை), ஓவியப்போட்டியில் மா.ஸ்ரீநிலவன் (தஞ்சாவூர்), மா.கிஷோர் (ராணிபேட்டை), பொ.சுகுமார் (காஞ்சிபுரம்), கிராமியக் கலைப்போட்டியில் கு.பார்த்தீபன் (தருமபுரி), பி.பிரசன்னா (திருவள்ளூர்), க.அழகேஸ்வரன் (விருதுநகர்) ஆகியோர் முறையே முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் பெற்றனர். முதல் பரிசு ரூ.30,000, இரண்டாம் பரிசு ரூ.20,000, மூன்றாம் பரிசு ரூ.10,000 என 15 இளம் கலைஞர்களுக்கு ரூ.3 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/permission-granted-to-operate-coracles-on-the-cauvery-river-at-hogenakkal</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/permission-granted-to-operate-coracles-on-the-cauvery-river-at-hogenakkal#comments</comments><guid isPermaLink="false">93bafeae-5d01-42ee-8faf-4ba45780cf56</guid><pubDate>Wed, 09 Sep 2026 13:00:26 +0000</pubDate><atom:updated>2026-09-09T13:00:26.820Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Hogenakkal,ஒகேனக்கல்,அனுமதி,Cauvery River,காவிரி,தருமபுரி,பரிசல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/dp5n937p/306.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பரிசல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/dp5n937p/306.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தருமபுரி,</p><p>ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.</p><h2>நீர்வரத்து</h2><p>கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரிநீர் காரணமாக நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை நீர்மட்டம் 92 அடியை தாண்டியது. இதையடுத்து கடந்த 1-ந் தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்துக்கும், நேற்று முன்தினம் மதியம் முதல் கிழக்கு, மேற்கு கால்வாய் கரையோர மக்களுக்கு குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.</p><h2>பரிசல்</h2><p>நீர்வரத்து குறைந்ததை தொடர்ந்து ஒகேனக்கல்லில் மீண்டும் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. கடந்த 24 நாட்களுக்கு பிறகு பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து பரிசல் ஓட்டிகள் பரிசல்களை இயக்கத் தொடங்கினர். </p><p>நீண்ட நாட்களுக்குப் பிறகு பரிசல் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு கிடைத்ததால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பரிசலில் பயணம் செய்தனர். இதனால் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%92%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D">ஒகேனக்கல் </a>சுற்றுலாத்தளத்தில் மீண்டும் பரிசல் பயணம் களைகட்டத் தொடங்கியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-buses-to-be-operated-across-tamil-nadu-for-vinayagar-chaturthi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-buses-to-be-operated-across-tamil-nadu-for-vinayagar-chaturthi#comments</comments><guid isPermaLink="false">66ccc452-9fc3-4d67-97bc-8020dddb6967</guid><pubDate>Wed, 09 Sep 2026 12:59:40 +0000</pubDate><atom:updated>2026-09-09T12:59:40.658Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>special buses,சிறப்பு பேருந்துகள்,Special Bus,சிறப்பு பேருந்துகள் இயக்கம்,Vinayagar Chaturthi,விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi Festival,விநாயகர் சதுர்த்தி பண்டிகை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/awglsyy7/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு பேருந்துகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/awglsyy7/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முகூர்த்தம், விநாயகர் சதுர்த்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக வெளியான செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>விநாயகர் சதுர்த்தி</h2><p>10/09/2026 (வியாழக்கிழமை) 11/09/2026 (வெள்ளிக்கிழமை) 12/09/2026 (சனிக்கிழமை], 13/09/2026 (ஞாயிற்றுக்கிழமை முகூர்த்தம்) 14/09/2026 [விநாயகர் சதுர்த்தி) மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழநாடு முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 10/09/2026 [வியாழக்கிழமை) அன்று 585 பேருந்துகளும் 11/09/2026 (வெள்ளிக்கிழமை) அன்று 1255 பேருந்துகளும், 12/09/2026 (சனிக்கிழமை) அன்று 1030 பேருந்துகளும் 13/09/2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 650 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 11/09/2026 வெள்ளிக்கிழமை அன்று 240 பேருந்துகளும், 12/09/2026 சனிக்கிழமை அன்று 240 பேருந்துகளும் 13/09/2026 ஞாயிற்றுக்கிழமை அன்று 105 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2>சிறப்பு பஸ்கள் இயக்கம்</h2><p>பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்திலிருந்து 11/09/2026 முதல் 13/09/2026 வரையிலான நாட்களில் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு ஒவ்வொரு நாளும் 110 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>மேலும், திங்கள் அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 14/09/2026 (திங்கட்கிழமை) அன்று 765 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2>முன்பதிவு விவரங்கள்</h2><p>இந்நிலையில், இந்த வார இறுதியில் வியாழக்கிழமை அன்று 8666 பயணிகளும் வெள்ளிக்கிழமை அன்று 32171 பயணிகளும் சனிக்கிழமை 18772 பயணிகளும், ஞாயிறு அன்று 11177 மற்றும் திங்கள் அன்று 23740 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு ww-w.tnstc.in மற்றும் TNSTC Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p>இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கண்காணிக்க </a>அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆபத்தை உணராத சட்டமன்ற உறுப்பினர், பாராட்டி மகிழும் பேரவை துணை தலைவர்; விவசாய தொழிலாளர் சங்கம் விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mla-ignores-risk-deputy-speaker-praised-farm-workers-union-criticism</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mla-ignores-risk-deputy-speaker-praised-farm-workers-union-criticism#comments</comments><guid isPermaLink="false">099b3b67-a481-4194-ac12-138b225f6f34</guid><pubDate>Wed, 09 Sep 2026 12:54:24 +0000</pubDate><atom:updated>2026-09-09T12:54:24.990Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விமர்சனம்,பாராட்டு,ஆபத்து,சட்டமன்ற உறுப்பினர்,Deputy Speaker,criticize,danger,Agricultural Workers,துணை தலைவர்,பேரவை,விவசாய தொழிலாளர் சங்கம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/tbcs5bch/basakar.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பாஸ்கர்]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க பொது செயலாளர் பாஸ்கர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/tbcs5bch/basakar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஆபத்தை உணராத சட்டமன்ற உறுப்பினர், பாராட்டி மகிழும் பேரவைத் துணை தலைவர் என்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">விவசாய தொழிலாளர் சங்கம் </a>விமர்சனம் செய்துள்ளது. இது தொடர்பாக, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க பொது செயலாளர் பாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-</p><h2>அடிப்படை புரிதல்</h2><p>தமிழ்நாடு சட்ட பேரவை கூட்டத்தின் நிறைவு நாளில் உரையாற்றிய முசிறி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எம்.விக்னேஷ், <a href="https://www.dailythanthi.com/topic/100-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">100 நாள் வேலைத்திட்டம்</a> குறித்து பேசியுள்ளார். அவர், அந்த திட்டத்தை பற்றிய அடிப்படை புரிதல் இல்லாமல் பெரும் குழப்பத்தில் இருப்பதை அவரது உரை வெளிப்படுத்தியுள்ளது. </p><h2>சட்டபூர்வ உரிமை</h2><p>நாடாளுமன்றத்தில் வலுவான எண்ணிக்கையில் இருந்த இடதுசாரி கட்சிகளின் முன்முயற்சியால், அப்போது அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மத்திய அரசு 2005 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தை நிறைவேற்றியது. இதன் மூலம், ஊரகப்பகுதிகளில் வாழ்ந்து வரும் விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்ட உடல் உழைப்பு தொழிலாளர் குடும்பங்கள் ஆண்டுக்கு 100 நாள் வேலை பெறுவதற்கு சட்டபூர்வ உரிமை அளிக்கப்பட்டது. </p><h2>26 கோடி தொழிலாளர்கள்</h2><p>மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தின் கீழ் திட்டப்பணிகள் தேர்வு செய்து, தொழிலாளர்களுக்கு வேலை வழங்கும் பொறுப்பு கிராம ஊராட்சிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. இதன் மூலம் நாடு முழுவதும் 26 கோடி தொழிலாளர்கள் அரைகுறை வேலை வாய்ப்பு பெற்று வந்தனர். இந்த திட்டத்தால் வறுமை நிலை குறைந்துள்ளது.</p><h2>வேளாண் உற்பத்தி அதிகரிப்பு</h2><p> புலம்பெயர்ந்து செல்லும் துயரம் தணிந்துள்ளது. வேளாண் உற்பத்தி அதிகரிப்பு, நிலத்தடி நீர் மட்டம் உயர்வு உள்ளிட்ட பல நற்பயன்கள் கிடைத்து வந்தன. பல்லாயிரக்கணக்கில் சமூக சொத்துக்களும் உருவாக்கப்பட்டன. இதன் காரணமாக 100 நாள் வேலை  திட்டம்  உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. பாராட்டுகளையும் பெற்று வந்தது. </p><h2>புதிய திட்டம்</h2><p>இந்த நிலையில் 2014 ஆம் ஆண்டில் பாஜக தலைமையில் அமைந்த மத்திய அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை நடைமுறையில் சிதைத்து அழித்து வந்தது. கடைசியாக கடந்த 2025 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டம் மற்றும் திட்டத்தை மாற்றி, வளர்ந்த பாரதம் - ஊரக வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம்  என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.</p><h2>நிதி சுமை</h2><p>இதன் மூலம் மகாத்மா காந்தியின் பெயரை அழித்தொழித்து விட்டு, மாநிலங்கள் தலையில் நிதி சுமையை ஏற்றியுள்ளது. பழைய திட்டத்தில், திட்டப் பணிகளுக்கான செலவுகளுக்கு 100 சதவீத நிதியும் மத்திய அரசு வழங்கி வந்தது. புதிய திட்டத்தில் மத்திய அரசு 60 சதவீதம் மட்டுமே நிதி வழங்கும், 40 சதவீத நிதியை மாநில அரசு கொடுத்தால் மட்டுமே திட்டத்தை செயல்படுத்த முடியும் என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு அரசுக்கு ரூ.5000 கோடிக்கும் மேல் நிதி செலவு கூடியுள்ளது.</p> <h2>முதல்-அமைச்சர் கடிதம்</h2><p>பாஜக மத்திய அரசின் வஞ்சக நடவடிக்கைக்கு எதிராக சட்ட பேரவையில் கடந்த ஜனவரி 23 ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போதைய முதல்-அமைச்சர் சி ஜோசப் விஜய் கடுமையான குரலில் கடிதம் எழுதியுள்ளார். </p><h2>அறியாமை</h2><p>இந்த விபரங்கள் எதனையும் அறிந்து கொள்ளாத நிலையில் முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம் விக்னேஷ் குழப்ப உரையாற்றினார். அது பேரவை பதிவேடுகளில் பதிவாகியுள்ளது. அமைச்சர்கள் உட்பட  உறுப்பினர்கள் பேரவைக்கு தவறான தகவல்களை தந்தால், அதனை திருத்த வேண்டிய கடமை பொறுப்பில் இருந்த பேரவை துணை தலைவர் எம்.ரவி சங்கர், இவர் துறையூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முசிறி சட்டமன்ற உறுப்பினர் ஆற்றிய குழப்ப உரையை பாராட்டி, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக கூறி, வாழ்த்துகளை தெரிவித்து தனது அறியாமையை வெளிப்படுத்தி கொண்டார். </p> <h2>ஆட்சேபனை</h2><p>சட்டபூர்வ வேலை பெறும் உரிமையை பறித்துள்ள பாஜக மத்திய அரசின் வஞ்சக செயலை கண்டிக்க வேண்டிய சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பேரவை துணை தலைவர் ஆகியோரின் குழப்ப பேச்சுக்கு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் தனது ஆட்சேபனையை தெரிவித்து கொள்கிறது. </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&apos;மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி&apos; - தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/secular-social-justice-victory-alliance-name-announced</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/secular-social-justice-victory-alliance-name-announced#comments</comments><guid isPermaLink="false">e6ae0bda-a0f3-4288-84c9-b6fed996b4b4</guid><pubDate>Wed, 09 Sep 2026 12:36:42 +0000</pubDate><atom:updated>2026-09-09T12:49:55.440Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,Vaiko,வைகோ,தமிழக வெற்றிக் கழகம்,திருமாவளவன்,Thirumavalavan,Tamilaga Vettri Kazhagam,VCK,மதிமுக,CPI,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,விடுதலை சிறுத்தைகள் கட்சி,இந்திய கம்யூனிஸ்ட்,ஆலோசனைக் கூட்டம்,இந்திய யூனியன் முஸ்லீம் லீக்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,IUML,தவெக கூட்டணி,TVK Alliance,மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/1sqekqbe/Untitled-5-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/1sqekqbe/Untitled-5-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தவெக தலைமையிலான கூட்டணிக்கு 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.</p><h2>கூட்டணி கட்சிகள்</h2><p>சட்டமன்ற தேர்தலில் தனித்து களம் இறங்கிய தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை அக்கட்சிக்கு இல்லாத நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.</p><h2>வெளியில் இருந்து ஆதரவு</h2><p>விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நிலையில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய 2 கட்சிகளும் வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகின்றன.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/p5hmeov4/Untitled-5.jpg" /></figure><h2>புதிய கூட்டணி</h2><p>இதனிடையே தவெக தலைமையில் புதிய கூட்டணியை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதற்கான முதல் ஆலோசனைக் கூட்டம் கடந்த ஜூலை 1-ந்தேதி சென்னை கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் நடந்தது. அந்த கூட்டத்தில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் பங்கேற்றது. வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து வருவதால் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.</p><h2>2-ம் கட்ட ஆலோசனை</h2><p>இந்த நிலையில், தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்த கட்சிகளின் 2-ம் கட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தவெக கட்சி தலைமை அலுவலகத்தில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் மாலை 4 மணிக்கு இக்கூட்டம் தொடங்கியது.</p><h2>கம்யூனிஸ்டுகள் புறக்கணிப்பு</h2><p>இக்கூட்டத்தில் கலந்துகொள்ள ஏற்கனவே காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவற்றுக்கு தவெகவின் மூத்த நிர்வாகிகளும், அமைச்சர்களுமான ஆனந்த். ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோர் நேரில் அழைப்பு விடுத்திருந்தனர். இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்தன.</p><p>இந்த நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி எம்.பி., சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் தாரகை கத்பர்ட், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ எம்.பி., இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீன், அமைச்சர் ஷாஜகான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ரவிக்குமார் எம்.பி., சிந்தனைச் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p><h2>வெற்றிக் கூட்டணி</h2><p>சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தவெக தலைமையிலான கூட்டணிக்கு 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கூட்டணி தலைவராக முதல்-அமைச்சர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் யார்?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/who-are-the-aiadmk-candidates-contesting-the-by-elections-in-the-maduranthakam-and-dharapuram-constituencies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/who-are-the-aiadmk-candidates-contesting-the-by-elections-in-the-maduranthakam-and-dharapuram-constituencies#comments</comments><guid isPermaLink="false">aa89ff53-22a9-4006-9809-923be5c87e98</guid><pubDate>Wed, 09 Sep 2026 12:40:49 +0000</pubDate><atom:updated>2026-09-09T12:40:49.656Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,TVK,தவெக,Tamilnadu,எடப்பாடி பழனிசாமி,அதிமுக,திமுக,DMK,தமிழகம்,இடைத்தேர்தல்,மதுராந்தகம்,தாராபுரம்,Madhurandakam,tharapuram,byelection,Edappadi Palaniasamy</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/wl027z5q/edua.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/wl027z5q/edua.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் <a href="https://www.dailythanthi.com/topic/admk">அ.தி.மு.க.</a> வேட்பாளர்கள் யார்? என்ற தகவல் வெளியாகியுள்ளது. </p><h2>இடைத்தேர்தலிலும் 4 முனைப்போட்டி</h2><p>தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் இன்று (புதன்கிழமை) தொடங்கியுள்ளது. </p><p>கடந்த ஏப்ரல் மாதம் 23-ந் தேதி நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலின்போது 4 முனைப்போட்டி நிலவியது. இடைத்தேர்தலிலும் அதேநிலை தொடர்கிறது. த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் ஆகிய கட்சிகள் களத்தில் உள்ளன. </p><h2>வேட்பாளர்கள் யார்?</h2><p>தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் சுகன்யாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வரும் 13-ந் தேதி அறிவிக்கப்பட இருக்கின்றனர். </p><p>த.வெ.க.வில் வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்று வந்தாலும், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்த மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்யபாமா (தாராபுரம்) ஆகியோருக்கே மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது. </p><h2>அ.தி.மு.க. வேட்பாளர்கள் குறித்து எதிர்பார்ப்பு</h2><p>இந்த நிலையில், <a href="https://www.dailythanthi.com/topic/admk">அ.தி.மு.க.</a> சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்? என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இந்த 2 தொகுதியிலும் அ.தி.மு.க.வே வெற்றி பெற்றுள்ளது. </p><p>ஆனால், அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க.வில் இணைந்ததால், மீண்டும் அவர்களே எதிர் அணியில் (த.வெ.க.) இருந்து களம் இறக்கப்படுவார்கள் என்று அ.தி.மு.க. கருதுகிறது. எனவே, பழிக்கு பழியாக அவர்களை எப்படியாவது தோற்கடித்தாக வேண்டும் என்று <a href="https://www.dailythanthi.com/topic/admk">அ.தி.மு.க.</a> தலைமை கங்கணம் கட்டி நிற்கிறது. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/m696h6yq/uma.jpg" /></figure><h2>உமா சங்கரி - கணிகா சம்பத் </h2><p>அதனால், வேட்பாளர்களையும் அதற்கு ஏற்றவகையில் களம் இறக்க அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். அதுவும், பெண் வேட்பாளர்கள் மூலமே பதிலடி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளார்.  </p><p>அந்த வகையில், <a href="https://www.dailythanthi.com/topic/admk">அ.தி.மு.க.</a> வேட்பாளர்களாக மதுராந்தகம் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. கணிகா சம்பத்தும், தாராபுரம் தொகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமி வின்சென்டின் மகள் வக்கீல் உமா சங்கரியும் களம் இறக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>பெருங்குடி மண்டலத்தில் ரூ.1.64 கோடி மதிப்பீட்டில் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையம்: அமைச்சர் கமலி திறந்து வைத்தார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/perungudi-dog-birth-control-centre-inaugurated-by-minister-kamali</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/perungudi-dog-birth-control-centre-inaugurated-by-minister-kamali#comments</comments><guid isPermaLink="false">98cf7a32-5301-47fd-a839-78bc077bf5e2</guid><pubDate>Wed, 09 Sep 2026 12:31:08 +0000</pubDate><atom:updated>2026-09-09T12:31:08.012Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Perungudi,அமைச்சர் கமலி,பெருங்குடி மண்டலம்,நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையம்,மாடுகள் காப்பகம்,Minister Kamali</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/939xdjf8/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/939xdjf8/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெருங்குடி மண்டலத்தில் ரூ.1.64 கோடி மதிப்பீட்டில் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையம், ரூ.4.81 கோடி மதிப்பீட்டில் 2 நவீன மாடுகள் காப்பகங்களை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் செ. கமலி இன்று பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலம், வார்டு-188க்குட்பட்ட தாம்பரம்-வேளச்சேரி பிரதான சாலையில் மூலதன நிதியில் ரூ.1.64 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நாய்கள் இனக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் செல்லப் பிராணிகள் சிகிச்சை மையத்தினையும், ரூ.2.56 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன மாடுகள் காப்பகத்தினையும், வார்டு-184க்குட்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் குறுக்குத் தெருவில் மூலதன நிதியில் ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன மாடுகள் காப்பகத்தினையும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் செ. கமலி இன்று (09.09.2026) பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.</p><h2>நாய்கள் இனக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் செல்லப் பிராணிகள் சிகிச்சை மையம்</h2><p>தாம்பரம்-வேளச்சேரி பிரதான சாலையில் 563.37 ச.மீ. பரப்பளவில் மூலதன நிதியில் ரூ.1.64 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த மையத்தில் நாய்களுக்கான 100 கூண்டுகள் மற்றும் 50 அறைகளும், நாளொன்றுக்கு 20 அறுவை சிகிச்சைகளும், மருத்துவர் அறை, அறுவை சிகிச்சை அறை, மருந்தகம், செல்லப்பிராணிகள் சிகிச்சை அறை, சமையலறை, உதவியாளர் அறை மற்றும் கழிவறை உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><h2>நவீன மாடுகள் காப்பகம்</h2><p>தாம்பரம்-வேளச்சேரி பிரதான சாலையில் 1003.52 ச.மீ. பரப்பளவில் மூலதன நிதியில் ரூ.2.56 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன மாடுகள் காப்பகமானது 100 எண்ணிக்கையிலான கால்நடைகளை பராமரிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. மேலும், மருத்துவர் அறை, மருந்தகம், சிகிச்சை அறை, தீவனக் கிடங்கு மற்றும் கழிவறை உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>வீரபாண்டிய கட்டபொம்மன் குறுக்குத் தெருவில் 941 ச.மீ. பரப்பளவில் மூலதன நிதியில் ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன மாடுகள் காப்பகமானது 120 எண்ணிக்கையிலான கால்நடைகளை பராமரிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. மேலும், மருத்துவர் அறை, மருந்தகம் அறை, சிகிச்சை அறை, தீவனக் கிடங்கு, கழிப்பறை மற்றும் குளியலறை உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><h2>தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்கள் மற்றும் மாடுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள்</h2><p>சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாலைகள் மற்றும் தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்கள் மற்றும் மாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>இதன் ஒரு பகுதியாக, பெருங்குடி மண்டலம், வார்டு-188க்குட்பட்ட தாம்பரம்-வேளச்சேரி பிரதான சாலையில் புதிதாக கட்டப்பட்ட நாய்கள் கருத்தடை மையம் மற்றும் செல்லப்பிராணிகள் மருத்துவமனை இன்று திறந்து வைக்கப்பட்டது.</p><p>ஏற்கனவே பெருநகர சென்னை மாநகராட்சியில் புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாபேட்டை, மீனம்பாக்கம், சோழிங்கநல்லூர், செட்டிமேடு 1 மற்றும் 2, திருவொற்றியூர், மாதவரம், கண்ணப்பர் திடல், பெருங்குடி மற்றும் நந்தம்பாக்கம் ஆகிய 12 நாய்கள் கருத்தடை சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.</p><p>அம்பத்தூர் மண்டலத்தில் அத்திப்பட்டு மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலத்தில் உயிரி எரிவாயு நிலையம் ஆகிய 2 இடங்களில் நாய்கள் கருத்தடை சிகிச்சை மையம் மற்றும் செல்லப்பிராணிகள் மருத்துவமனை கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது.</p><p>சென்னை மாநகராட்சியில் தெருக்களில் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு, 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு மாடு பிடிக்கும் வாகனம் ஒதுக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா 5 மாடு பிடிக்கும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><p>மேலும், 15 மண்டலங்களிலும் 18 இடங்களில் சுமார் 2,000 மாடுகளை பராமரிப்பதற்கான நவீன மாடுகள் காப்பகங்கள் அமைக்கப்படும் பணி மேற்கொள்ளப்பட்டு, டி.பி.பி சாலை, அரியலூர்-தீயம்பாக்கம், காமராஜர் சாலை, சி.எம்.டி.ஏ டெர்மினல், பேசின் பிரிட்ஜ் சாலை, பாடி பிர்ட்ஜ் அருகில் உள்ள சிவசக்தி நகர், பீட்டர்ஸ் சாலை, நந்தம்பாக்கம்-எம்.ஜி.ஆர் சாலை (2 இடங்கள்), வீரபாண்டிய கட்டபொம்மன் குறுக்கு தெரு, பயோ சிஎன்ஜி பிளான்ட் அருகில் என 11 நவீன மாடுகள் காப்பகங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 1,230 மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.</p><p>இன்று தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலை மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் குறுக்கு தெருவில் இரண்டு நவீன மாடுகள் காப்பகங்கள் திறந்து வைக்கப்பட்டது. இதில் 220 மாடுகள் பராமரிக்கப்படும்.</p><p>மேலும், திருவொற்றியூரில் உள்ள டி.பி.பி சாலை, ராயபுரத்தில் உள்ள மூர் மார்க்கெட், அம்பத்தூரில் உள்ள என்.ஆர்.எஸ்.ரோடு, கிருஷ்ணாம்பேட்டை, சோழிங்கநல்லூரில் உள்ள இஸ்கான் கோயில் அருகில் என 5 இடங்களில் புதிய காப்பகங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதில் 550 மாடுகள் பராமரிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பட்டினப்பாக்கத்தில் அமைகிறது புதிய தலைமைச்செயலகம்: அரசாணை வெளியீடு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-secretariat-to-be-located-at-pattinapakkam-government-order-issued</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-secretariat-to-be-located-at-pattinapakkam-government-order-issued#comments</comments><guid isPermaLink="false">2ce929da-e62a-407d-be0b-64da14507ff5</guid><pubDate>Wed, 09 Sep 2026 12:11:42 +0000</pubDate><atom:updated>2026-09-09T12:11:42.456Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,தமிழ்நாடு அரசு,TN govt,பட்டினப்பாக்கம்,Tamilnadu government,Government Order,அரசாணை,Pattinapakkam,தலைமைச் செயலகம்,தமிழக அரசு அரசாணை,புதிய தலைமைச் செயலகம்,new Secretariat</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/zhq011vu/proep.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/zhq011vu/proep.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>20 லட்சம் சதுர அடியில் ரூ.1,200 கோடியில்  நவீன வசதிகளுடன் சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது</p><h2>புதிய தலைமைச்செயலகம்</h2><p>ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சென்னையில் கட்டப்பட்ட புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழக அரசின் தலைமைச் செயலகம் செயப்பட்டு வருகிறது. தற்போது, ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள இந்த கட்டிடத்தில்தான் சட்டமன்ற கூட்ட அரங்கமும் உள்ளது. இதற்காக, மாதந்தோறும் ராணுவத்திற்கு தமிழக அரசு குத்தகை தொகை கட்டி வருகிறது.</p><p>இந்த நிலையில், தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு, ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்ட முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பை சமீபத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a> சட்டசபையில் வெளியிட்டார். ஆனால், அப்போது எந்த இடத்தில் புதிய தலைமைச்செயலகம் அமையப்போகிறது என்பதை அவர் தெரிவிக்கவில்லை.</p> <h2>பட்டினப்பாக்கம்</h2><p>இந்த நிலையில், புதிய தலைமைச்செயலகம் கட்டுவதற்கு பட்டினப்பாக்கம், கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நந்தம்பாக்கத்தில் உள்ள பின் டெக் சிட்டிக்கு எதிரே உள்ள நிலம் ஆகிய 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.</p><p>தற்போது, பட்டினப்பாக்கம் சாந்தோம் பிரதான சாலையில் இருந்து அணுகு சாலையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. </p><h2>மார்க்கெட் மதிப்பு ரூ.2,047 கோடி</h2><p>தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான இந்த இடம் 21.37 ஏக்கர் பரப்பளவை கொண்டது. இந்த பகுதியில் தற்போதைய மார்க்கெட் மதிப்பு சதுரடிக்கு ரூ.22 ஆயிரம் ஆகும். அதை வைத்து கணக்கிடும்போது, இடத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ.2,047 கோடியாக உள்ளது. இந்த இடத்தை பொதுத்துறை பயன்பாட்டிற்கு வழங்குவதாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தெரிவித்திிருந்தது.</p><h2>அரசாணை</h2><p>இந்நிலையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு இன்று (09.09.2026) வெளியிட்டுள்ளது. இதற்காக பட்டினப்பாக்கத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான 21.37 ஏக்கர் பரப்பளவில் நிலங்களை அரசு அடையாளம் கண்டுள்ளது. இதன்படி அங்கு ரூ.1,200 கோடி மதிப்பில் அனைத்து நவீன வசதிகளுடன் புதிய தலைமை செயலகம் அமைய உள்ளது. </p><p>சட்டமன்றம் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளை ஒரே ஒருங்கிணைந்த வளாகத்தின் கீழ் கொண்டு வருவதே இத்திட்டத்தின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/uv6yk9xu/vad.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>நெல்லை அருகே விநாயகர் சிலைகள் குப்பை போல் வீசப்பட்டனவா? - போலீசார் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/were-vinayagar-idols-dumped-like-trash-near-nellai-police-clarification</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/were-vinayagar-idols-dumped-like-trash-near-nellai-police-clarification#comments</comments><guid isPermaLink="false">f1327f27-796f-4c79-b4fb-f6c96c4612f5</guid><pubDate>Wed, 09 Sep 2026 12:09:56 +0000</pubDate><atom:updated>2026-09-09T12:09:56.527Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,Fact Check Unit,விநாயகர் சிலைகள்,Fact check,Nellai District,Vinayagar idol,Vinayagar Statues,தகவல் சரிபார்ப்பகம்,TN Fact Check,தகவல் நம்பகத்தன்மை,தகவல் நம்பகத்தன்மை பிரிவி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/vfdfhx2c/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விநாயகர் சிலைகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/vfdfhx2c/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நெல்லை அருகே விநாயகர் சிலைகளை வீசி எறிந்ததாக பரவும் தவறான தகவல் தொடர்பாக தகவல் நம்பகத்தன்மை பிரிவு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>பரவும் செய்தி</h2><p>“நெல்லை மாவட்டம் தேவர்குளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் விநாயகர் சிலைகளை வீசி எறிந்து உடைத்து குப்பை போல் போட்டுள்ளனர்” என்று சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.</p><h2>உண்மை என்ன ?</h2><p>இது தொடர்பாக தேவர்குளம் காவல் நிலையம் அளித்துள்ள விளக்கத்தில், “தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரிஸ் (PoP) கலவையால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டு தேவர்குளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தற்காலிகமாக வைக்கப்பட்டன. பின்னர் வன்னிக்கோனேந்தல் ஆரம்ப சுகாதார நிலைய மருந்து சேமிப்பு கிடங்கு கட்டடத்தில் உள்ள பாதுகாப்பு அறைக்கு மாற்றப்பட்டன. காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தற்காலிகமாக சிலைகள் வைக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்ட காணொலி சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தவறான தகவலைப் பரப்பாதீர் !</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>16-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - தேமுதிக அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/district-secretaries-meeting-on-16th-dmdk-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/district-secretaries-meeting-on-16th-dmdk-announcement#comments</comments><guid isPermaLink="false">ef7174cb-881d-45fb-adf2-8449d1c6ff6c</guid><pubDate>Wed, 09 Sep 2026 12:05:55 +0000</pubDate><atom:updated>2026-09-09T12:05:55.677Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>DMDK,தேமுதிக,Premalatha Vijayakanth,பிரேமலதா விஜயகாந்த்,மாவட்ட செயலாளர்கள் கூட்டம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/6nsn4ygk/Untitled-4.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரேமலதா விஜயகாந்த்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/6nsn4ygk/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 16-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் வரும் 16.09.2026 புதன்கிழமை காலை 10 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள கேப்டன் ஆலயத்தில் (தலைமை கழகம்) மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.</p><p>அன்று கட்சியின் 22-ம் ஆண்டு துவக்க நாள் மற்றும் வர இருக்கும் இடைத்தேர்தல் குறித்து முக்கிய ஆலோனைகள் நடக்க இருப்பதால், அனைத்து மாவட்ட கழக செயலாளர்களும் தவறாமல் இந்த ஆலோனை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரூ.20 ஆயிரம் முன்பணம்... வேலையை விட்டு செல்ல தடை?  தாய்-சேய் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-20000-advance-payment-a-ban-on-leaving-the-job-mother-and-infant-die</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-20000-advance-payment-a-ban-on-leaving-the-job-mother-and-infant-die#comments</comments><guid isPermaLink="false">838d7006-4499-45ed-8350-fe16d3e164e7</guid><pubDate>Wed, 09 Sep 2026 11:51:17 +0000</pubDate><atom:updated>2026-09-09T11:51:17.398Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Job,உயிரிழப்பு,பணம்,hospital,தாய்,ஆஸ்பத்திரி,காஞ்சீபுரம்,Advance,Die</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/all0nnma/42.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  உயிரிழப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/all0nnma/42.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>காஞ்சீபுரம், </p><p>காஞ்சீபுரம் மாவட்டம் சிங்காடிவாக்கத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி தேன்மொழி இருளர் சமூகத்தை சேர்ந்த இவர்கள் அரக்கோணம் சாலையில் விறகு வியாபாரி ஒருவரிடம் தார்ப்பாய் கூடாரத்தில் தங்கி கடந்த 6 மாதங்களாக வேவை செய்து வந்தனர். அவர்கள் வேலைக்காகக்காக ரூ. 20 ஆயிரம் முன்பணம் பெற்று இருந்ததாக கூறப்படுகிறது.</p><h2>பிரசவம்</h2><p>இந்த நிலையில் தேன்மொழி 9 மாத காப்பிணியாக இருந்தார். முன் பணமாக பெற்றதை கொடுக்காமல் வேலை பார்த்த இடத்தில் இருந்து செல்லக்கூடாது என்ற வியாபாரி மிரட்டல் விடுத்து தடுத்து வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே தேன்மொழிக்கு பிரசவவழி ஏற்பட்டது. ஆஸ்பத்திரிக்கு செல்லாததால் அவருக்கு தார்ப்பாய் கூடாரத்திலேயே சிலர் பிரசவம் பார்த்ததாக தெரிகிறது. இதில் குழந்தையும், தேன்மொழியும் இறந்தனர். இதனால் அங்கிருந்தவர்கள்கள் அதிர்ச்சி அடைந்தனர். </p><h2>விசாரணை</h2><p>மேலும் இயற்கை மரணம் எனக்கூறி தேன்மொழியின் உடலை அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பொன்னேரிக்கரை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a> விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.10,000 கோடி விதிமீறல்: சிஏஜி அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது - வானதி சீனிவாசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-10000-crore-violation-in-smart-city-project-cag-report-is-shocking-vanathi-srinivasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-10000-crore-violation-in-smart-city-project-cag-report-is-shocking-vanathi-srinivasan#comments</comments><guid isPermaLink="false">a330f906-733b-4a1e-8090-2a91f9f2e654</guid><pubDate>Wed, 09 Sep 2026 11:42:49 +0000</pubDate><atom:updated>2026-09-09T11:42:49.060Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,சிஏஜி அறிக்கை,CAG Report,Vanathi Srinivasan MLA,Smart City Project,ஸ்மார்ட் சிட்டி திட்டம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/ojtbrnbi/vanathi.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/ojtbrnbi/vanathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ரூ. 1602.20 கோடி மதிப்பிலான 52 திட்டங்கள் செயல்படுத்தப்படவே இல்லை என பா.ஜ.க. முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D">வானதி சீனிவாசன்</a> தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள 'எக்ஸ்' தள பதிவில் கூறியிருப்பதாவது;-</p><h2>ஸ்மார்ட் சிட்டி திட்டம்</h2><p>இந்திய பெருநகரங்களை அழகுபடுத்தவும், நகரங்களின் அடிப்படைக் கட்டமைப்பு வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தவும், மத்திய அரசின் உன்னத திட்டமான ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் தமிழ்நாட்டில் ரூ. 10,000 கோடியில் மேற்கொள்ளப்பட்ட திட்டப் பணிகள் பலவற்றில் மிகப் பெரிய அளவில் விதி மீறல் நடைபெற்றிருப்பதாக சிஏஜி-யால் வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையானது அதிர்ச்சி அளிக்கிறது.</p><p>கடந்த 2015 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாமல் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்கான நிதியை மாநகராட்சியின் சொந்த நிதியில் செய்யப்பட வேண்டிய பணிகளில் சேர்த்துள்ளதன் மூலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் குறிக்கோளானது சிதைக்கப்பட்டு வழக்கமான மாநகராட்சியின் பணிகளில் சேர்த்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது.</p><h2>52 திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை</h2><p>அவற்றில் குறிப்பாக ரூ. 1602.20 கோடி மதிப்பிலான 52 திட்டங்கள் செயல்படுத்தப்படவே இல்லை என்றும், மாநகராட்சிகிள் நிதியின் கீழ் செயல்படுத்தியிருக்க வேண்டிய ரூ. 21.42 கோடியிலான 5 பணிகள் ஸ்மார்ட் சிட்டி நிதியின் செயல்படுத்தப்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதுமட்டுமின்றி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கிழ் அனுமதியே பெறாமல் சில திட்டங்களும், அரசின் விளம்பரத்திற்காகவும், அரசு அலுவலகங்களின் பயன்பாட்டிற்கான கார், பர்னிச்சர்கள் முதலிய பொருட்கள் வாங்கியதும், ஸ்மார்ட் சிட்டி நிதியை தமிழக துறைகளின் நிதிக்கணக்கிற்கு மாற்றியிருப்பதுமாக தோண்டத் தோண்ட கிளம்பிய பூதம் போல் அடுத்தடுத்து விதிமீறல்கள் அதிர்ச்சி அடைய வைக்கிறது.</p><h2>கொட்டிக் கொடுத்த மத்திய அரசு</h2><p>மத்திய பா.ஜ.க அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது என்றெல்லாம் குறைகூறிக்கொண்டு அரசியல் செய்பவர்களுக்கு இப்போது புரிந்திருக்கும் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு எவ்வளவு கொட்டிக் கொடுத்தும் அதை முறையாகச் செலவிடாமல் தமிழகத்தின் வளர்ச்சியைப் பாதித்தவர்கள் யார் என்று..!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>புதிய கல்வி கொள்கையின் நேரடி வடிவம்: தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த சட்ட மசோதாவை திரும்பப்பெற எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sdpi-urges-tamil-nadu-to-withdraw-private-universities-amendment-linked-to-new-education-policy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sdpi-urges-tamil-nadu-to-withdraw-private-universities-amendment-linked-to-new-education-policy#comments</comments><guid isPermaLink="false">58355c11-5d73-49a1-a575-f88db60d9643</guid><pubDate>Wed, 09 Sep 2026 11:36:21 +0000</pubDate><atom:updated>2026-09-09T11:36:21.431Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Universities,Amendment Bill,சட்ட மசோதா,private,தனியார்,பல்கலைக்கழகங்கள்,New Education Policy,கல்வி கொள்கை,SDPI Party,Urges,எஸ்டிபிஐ வலியுறுத்தல்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/teg6iwgf/mubark.gif" width="750"><media:title type="html"><![CDATA[ நெல்லை முபாரக்]]></media:title><media:description type="html"><![CDATA[ எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/teg6iwgf/mubark.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் கூட்டத்தொடரின் கடைசி நாளில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ள ‘தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த சட்ட முன்வடிவு - 2026’ உயர் கல்வியை முற்றிலும் வணிகமயமாக்கும் பேராபத்து கொண்டது என்பதால், தமிழக அரசு இந்த மசோதாவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றும், மத்திய பாஜக அரசின் புதிய கல்வி கொள்கையின் கூறுகளை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த கூடாது என்றும் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90">எஸ்டிபிஐ</a> கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-</p><h2>அதிர்ச்சியளிக்கிறது</h2><p>தமிழ்நாட்டில் தனியார் பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு 100 ஏக்கர் நிலமும், 50 கோடி ரூபாய் நிலையான அறக்கட்டளை நிதியும் தேவை என்றிருந்த விதியை தளர்த்தி, சென்னை போன்ற பெருநகரங்களில் வெறும் 12 ஏக்கர் நிலமும், பிற பகுதிகளில் 18 முதல் 25 ஏக்கர் நிலமும் இருந்தால் போதும் என மாற்றியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.</p><h2>ஜனநாயக பண்புகளுக்கு எதிரானது</h2><p>உயர்கல்வி துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் முடிந்து 15 நாட்கள் கழித்து, சட்டமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளில் இவ்வளவு அவசரகதியில் இந்த சட்டத் திருத்தத்தை கொண்டுவந்து நிறைவேற்றியிருப்பது ஜனநாயக பண்புகளுக்கு எதிரானது. பாமக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளின் நியாயமான எதிர்ப்புகளையும் மீறி இச்சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.</p> <h2>முரண்பாடான போக்கு</h2><p>கல்வி சேவையை வழங்கிடும் அரசின் பொறுப்பை துறந்து, அதை தனியாரிடம் ஒப்படைக்க துடிக்கும் மத்திய பாஜக அரசின் புதிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">கல்வி கொள்கையின்</a> நேரடி வடிவமே இந்த சட்ட திருத்தமாகும். புதிய கல்வி கொள்கையை தமிழ்நாட்டில் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனக் கூறிவிட்டு, அதன் கூறுகளை இத்தகைய சட்ட திருத்தங்கள் மூலம் நடைமுறைப்படுத்துவது அரசின் முரண்பாடான போக்கை காட்டுகிறது.</p><h2>அறக்கட்டளை நிதி</h2><p>மேலும், 50 கோடி ரூபாயாக இருந்த அறக்கட்டளை நிதியை வெறும் 25 கோடி ரூபாயாக பாதியாக குறைத்திருப்பது, உயர்கல்வியை தனியார்மயமாக்குவதற்கும் வணிகமயமாக்குவதற்கும் அரசே சிவப்பு கம்பளம் விரிப்பது போல் உள்ளது. எதிர்பாராதவிதமாக ஒரு தனியார் பல்கலைக்கழகம் திவாலாகும் பட்சத்தில், அங்கு பயிலும் மாணவர்கள் மற்றும் பணியாற்றும் ஆசிரியர்களின் எதிர்காலத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்யவே இந்த அறக்கட்டளை நிதி உருவாக்கப்பட்டது. </p> <h2>பாதுகாப்பிற்கு உலை</h2><p>அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நிதியை சரிபாதியாக குறைத்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பிற்கு உலை வைப்பது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல. அத்துடன், இந்தச் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%88">சலுகையை</a> ஏற்கெனவே இயங்கி வரும் தனியார் பல்கலைக்கழகங்களுக்கும்,  பின்தேதியிட்டு நீட்டித்திருப்பது யாருடைய நலனுக்காக என்ற கேள்வி எழுகிறது.</p> <h2>பறிபோகும் அபாயம்</h2><p>உயர்கல்வியை தனியாரிடம் ஒப்படைப்பதன் மூலம் கல்வி வணிகம் பெருகுவதோடு, எளிய மற்றும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கான சமூகநீதியும் இடஒதுக்கீட்டு உரிமைகளும் முற்றிலுமாக பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டை பாதுகாப்பதே அரசின் முதன்மை கடமையாக இருக்க வேண்டும்.</p> <h2>ஏற்புடையதல்ல</h2><p>உயர்கல்வித்துறையில் தனியாரின் ஆதிக்கத்தை எளிதாக்கிவிட்டு அரசு தன் கடமையிலிருந்து விலகி செல்வது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. அரசுதான் கூடுதல் பொது கல்வி நிறுவனங்களை உருவாக்கி எளிய மக்களுக்கு கல்வி வழங்க வேண்டுமே தவிர, அதை வணிக நோக்கிலான தனியாரிடம் ஒப்படைக்க கூடாது.</p> <p>எனவே, மாணவர் நலனுக்கும் சமூகநீதிக்கும் எதிரான ‘தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட முன்வடிவை’ தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றும், புதிய கல்வி கொள்கையின் எந்தவொரு கூறையும் மாநிலத்தில் செயல்படுத்த கூடாது என்றும் எஸ்டிபிஐ கட்சி சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>குரோம்பேட்டையில் சாலை விபத்து: லாரியில் சிக்கி 50 அடி தூரம் இழுத்து செல்லப்பட்ட இளம்பெண் பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chromepet-road-accident-young-woman-dragged-50-feet-killed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chromepet-road-accident-young-woman-dragged-50-feet-killed#comments</comments><guid isPermaLink="false">41a565cd-098c-4578-ac28-40f4233e3619</guid><pubDate>Wed, 09 Sep 2026 11:35:30 +0000</pubDate><atom:updated>2026-09-09T11:35:30.719Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சாலை விபத்து,road accident,Chennai,சென்னை,குரோம்பேட்டை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/ewueq2e4/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/ewueq2e4/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தாம்பரம்,</p><p>கும்பகோணத்தை சேர்ந்தவர் ஜமுனா (23 வயது) நர்சிங் முடித்து உள்ளார். இவர் குரோம்பேட்டையில் தோழி ஸ்ரீஜா என்பவருடன் தனியாக அறை எடுத்து தங்கி வேலை தேடி வந்தார். ஸ்ரீஜா குரோம்பேட்டையில் உள்ள பிரபல துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.</p><p>இந்த நிலையில் தோழிகள் இருவரும் ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதற்காக மொபட்டில் சென்றனர். ஸ்ரீஜா வண்டியை ஓட்ட ஜமுனா பின்னால் அமர்ந்து பயணம் செய்தார். குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலை, ரேடியல் சாலையை இணைக்கும் பாண்ட்ஸ் மேம்பாலம் அருகே சென்றபோது மேம்பாலம் மீது செல்ல வந்த டாரஸ் லாரி திடீரென மொபட் மீது மோதியது.</p><p>இதில் மொபட்டுடன் லாரியில் சிக்கிய ஜமுனா சுமார் 50 அடி தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டார். இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தோழி ஸ்ரீஜா பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். தோழி ஜமுனா கண்முன் இறந்ததை கண்டு அவர் கதறி துடித்தார். காயம் அடைந்த ஸ்ரீஜா சிகிச்சைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.</p><p>தகவல் அறிந்ததும் குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து பலியான ஜமுனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரான கடபேரியை சேர்ந்த சதிஷ் (27 வயது) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தோழியுடன் சென்ற இளம்பெண் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>