<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 05 Sep 2026 17:46:10 +0000</lastBuildDate><item><title>முருக பக்தர்களுக்கு எதிரானதாக உருமாறுகிறதா தவெக அரசு? - நயினார் நாகேந்திரன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-tvk-government-turning-against-lord-murugans-devotees-nainar-nagendran-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-tvk-government-turning-against-lord-murugans-devotees-nainar-nagendran-asks#comments</comments><guid isPermaLink="false">97fd379d-cd9b-4186-9c38-873631748004</guid><pubDate>Sat, 05 Sep 2026 17:11:52 +0000</pubDate><atom:updated>2026-09-05T17:11:52.531Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/kogh3ftl/CHENNAI-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/kogh3ftl/CHENNAI-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><p>செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே விலைமதிப்பற்ற 2.5 அடி உயர மரகத முருகர் சிலை காணாமல் போன பதற்றம் தணிவதற்குள்ளாகவே, ஆன்மிக அரசியல் கட்சியின் சார்பாக, எம்பெருமான் முருகனின் அறுபடை வீடுகளுக்கும், சிறுவாபுரியில் இருந்து யாத்திரையாக கொண்டு செல்லப்படவிருந்த 108 வெற்றிவேல்கள் அடங்கிய வாகனத்தை, மீஞ்சூர் நெய்தவாயல் அருகே சமூக விரோதிகள் சிலர் தீயிட்டு கொளுத்தியுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது.</p><p>108 கிராமங்களின் வழிபாட்டிற்காக வழங்கப்படவிருந்த வெற்றிவேல்கள் தீயில் எரிந்து கருகுவதை பார்க்கையில் நெஞ்சம் கனத்துப் போகிறது. சட்டமன்றத்தை “சர்ச்” ஆக மாற்றிய ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதற்கு மட்டும் வலுவாக தடை போட்டால் சமூகத்தில் மத நல்லிணக்கம் எப்படி மலரும்? இந்துக்களின் நம்பிக்கைகளையும் மதிக்க வேண்டும் என்ற சமத்துவ உணர்வு ஆளும் அரசுக்கே இல்லாத போது, சமூக விரோதிகளுக்கு எப்படி பயமிருக்கும்? அதனால் தான் இதுபோன்ற கொடுஞ்செயல்கள் அச்சமின்றி அரங்கேறுகின்றன. இந்துக்கள் மீது தொடரும் இத்தகைய அடக்குமுறைகளும், வன்முறைகளும் ஆபத்தானவை.</p><p>எனவே, இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும், “மதச்சார்பின்மை” என்ற போர்வையில், முழுக்க முழுக்க சிறுபான்மையின மக்களுக்காக மட்டுமே செயல்படாமல், இந்துக்களின் மத அடையாளங்கள் பாதுகாக்கப்படுவதையும் உறுதிசெய்ய வேண்டும் எனவும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரீல்ஸ் மோகம்: இளம்பெண்ணை கொடூரமாக கொன்ற கொத்தனார் போலீசில் சரண்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/reels-moham-the-bricklayer-who-brutally-murdered-a-young-woman-surrenders-to-the-police</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/reels-moham-the-bricklayer-who-brutally-murdered-a-young-woman-surrenders-to-the-police#comments</comments><guid isPermaLink="false">dc992b3c-2305-4654-a8c7-3029bbdf92ac</guid><pubDate>Sat, 05 Sep 2026 16:44:25 +0000</pubDate><atom:updated>2026-09-05T16:44:25.482Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,Thoothukudi,young woman,தூத்துக்குடி,இளம்பெண்,Reels Video,போலீசில் சரண்,Surrender,ரீல்ஸ் மோகம்,கொத்தனார்,கொடூர கொலை,Brutal murder,Obsession,Bricklayer</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/cq8s7yi3/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இளம்பெண் கொடூர கொலை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/cq8s7yi3/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a>யில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B">ரீல்ஸ் வீடியோ</a> பதிவிடுவதில் ஏற்பட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81">குடும்பத்தகராறு</a> காரணமாக, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF">மனைவி</a>யை கழுத்தை நெரித்து ஓடை நீரில் மூழ்கடித்துக் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">கொலை</a> செய்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D">கணவர் </a>காவல் நிலையத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D">சரணடைந்தார்</a>. </p><h2>கொத்தனார்</h2><p>திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை நடுவக்குறிச்சியை சேர்ந்த பரமசிவன் மகன் செல்லப்பாண்டி(எ) ஆறுமுகப்பாண்டி (வயது 33), கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் ஆறுமுகக்கனி(29) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். </p><h2>ரீல்ஸ் மோகத்தால் குடும்ப பிரச்சினை</h2><p>கடந்த 2 மாதங்களாக ஆறுமுகப்பாண்டி தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகேயுள்ள காசிலிங்கபுரம் கிராமத்தில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் மனைவி ஆறுமுகக்கனி அடிக்கடி செல்போனில் 'ரீல்ஸ்' வீடியோக்களைப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்துள்ளார். இதை கணவர் கண்டித்ததால் இருவருக்கும் இடையே குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. </p><h2>மனைவி கொடூர கொலை</h2><p>நேற்று இரவும் ரீல்ஸ் போட்டது தொடர்பாக மனைவியைக் கண்டித்த ஆறுமுகப்பாண்டி, பின்னர் அவரை சமாதானப்படுத்தி பாறைக்காடு கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்குச் செல்லலாம் எனக் கூறி மோட்டார் பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். ஈசா ஓடை அருகே சென்றபோது வாகனத்தை நிறுத்திய ஆறுமுகப்பாண்டி, ஆள்நடமாட்டம் இல்லாத சூழலைப் பயன்படுத்தி மனைவி ஆறுமுகக்கனியின் கழுத்தை நெரித்துள்ளார். பின்னர் மயக்கமடைந்த அவரை ஓடை நீரில் மூழ்கடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். கொலைக்குப் பின் அங்கிருந்து சென்ற ஆறுமுகப்பாண்டி, இன்று காலை முறப்பநாடு காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி சரணடைந்தார். </p><h2>கணவர் போலீசில் சரண்</h2><p>அதைத் தொடர்ந்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆறுமுகக்கனியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆறுமுகப்பாண்டியை அதிகாரப்பூர்வமாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரீல்ஸ் வீடியோ மோகத்தால் மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>‘மக்கள் அதிகாரத்தின் குறியீடாக இருப்பவர் முதல்-அமைச்சர்’ - மு.வீரபாண்டியன் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-chief-minister-is-the-symbol-of-peoples-power-m-veerapandian</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-chief-minister-is-the-symbol-of-peoples-power-m-veerapandian#comments</comments><guid isPermaLink="false">20e3b1d6-4ee5-477d-a35d-55b8eaf0c876</guid><pubDate>Sat, 05 Sep 2026 16:41:02 +0000</pubDate><atom:updated>2026-09-05T16:41:02.794Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.வீரபாண்டியன்,M.Veerapandian</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/imrty6qe/State-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/imrty6qe/State-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“இது அதிகாரிகளின் ஆட்சி அல்ல. இந்திய அரசியல் சட்டத்தின் வேலையாட்கள்தான் அதிகாரிகள். இங்கு அதிகாரம் இருப்பது மக்களுக்குதான். மக்கள் அதிகாரத்தின் குறியீடாக இருப்பவர் முதல்-அமைச்சர். </p><p>அதிகாரிகள் முதல்-அமைச்சரை வழிநடத்தக் கூடாது. மக்கள் அதிகாரத்தின் குறியீடாக இருக்கும் முதல்-அமைச்சரும், அமைச்சர்களும்தான் அதிகாரிகளை வழிநடத்த வேண்டும். ஆனால் இங்கு தலைகீழாக இருக்கிறது.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>விருதுநகர்: வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு நிதி உதவி - முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/virudhunagar-financial-assistance-for-the-families-of-those-who-died-in-the-explosion-accident-chief-minister-vijay-announces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/virudhunagar-financial-assistance-for-the-families-of-those-who-died-in-the-explosion-accident-chief-minister-vijay-announces#comments</comments><guid isPermaLink="false">fdf9b070-e4ec-4d80-8473-9a0c23487c17</guid><pubDate>Sat, 05 Sep 2026 16:32:48 +0000</pubDate><atom:updated>2026-09-05T16:32:48.170Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Virudhunagar,விருதுநகர்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/9d7y8fhc/State-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/9d7y8fhc/State-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தனியாருக்கு சொந்தமான வெடிபொருள்கள் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்-அமைச்சர் விஜய், அவர்களுக்கு நிதியுதவி வழங்குவது தொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், ஒத்தையால் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள்கள் தொழிற்சாலையில் இன்று (05.09.2026), எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் அங்கு பணியிலிருந்த மீனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாடசாமி (வயது 33), த/பெ. ராமர் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி அறிந்து மிகவும் வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.</p><p>இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மூலம் ஒரு வார காலத்தில் 238 புகார்கள் மீது உடனடி நடவடிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/singappen-special-rapid-force-takes-immediate-action-on-238-complaints-in-one-week</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/singappen-special-rapid-force-takes-immediate-action-on-238-complaints-in-one-week#comments</comments><guid isPermaLink="false">136c44a7-4192-496d-bbab-07e300b2da4d</guid><pubDate>Sat, 05 Sep 2026 16:05:23 +0000</pubDate><atom:updated>2026-09-05T16:05:23.034Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Action,நடவடிக்கை,பள்ளி,புகார்கள்,சிங்கப்பெண் அதிரடிப்படை,Singapen Special Task Force</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/5shl6wuf/lion.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ]]></media:title><media:description type="html"><![CDATA[ சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மூலம் ஒரு வார காலத்தில் 238 புகார்கள் மீது உடனடி நடவடிக்கை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/5shl6wuf/lion.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D">சிங்கப்பெண்</a> சிறப்பு அதிரடிப்படை மூலம் ஒரே வாரத்தில் 272 புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை  தெரிவித்துள்ளது. இது குறித்து காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><h2> 238 புகார்கள் நடவடிக்கை</h2><p>தமிழகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் பகுதிகளாக கருதப்படும் 12,547 இடங்களை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினர் கண்காணிப்பில் வைத்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 28-ந்தேதி முதல் 3-ந்தேதி வரையிலான 7 நாட்களில் இந்த அதிரடிப் படையினர் 238 புகார்களுக்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><h2>20 வழக்குகள் பதிவு</h2><p>இந்த அதிரடிப் படையினர் அளித்த புகார் மற்றும் தகவல்களின் அடிப்படையில் 20 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதேபோல, காணாமல்போன பெண்கள், குழந்தைகள் என 5 பேர் மீட்கப்பட்டு, அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலும் 4 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன.</p> <h2>விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்</h2><p>அதோடு பள்ளியை விட்டு நின்ற 61 குழந்தைகள் மீட்கப்பட்டு, மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என 3,448 இடங்களில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>கோவையில் இந்தியன் பாரா கிரிக்கெட் லீக் போட்டி - தொடக்க நிகழ்ச்சியில் கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ. பங்கேற்பு  </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/indian-para-cricket-league-match-in-coimbatore-mla-kanimozhi-santhosh-participates-in-the-inaugural-event</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/indian-para-cricket-league-match-in-coimbatore-mla-kanimozhi-santhosh-participates-in-the-inaugural-event#comments</comments><guid isPermaLink="false">b3437f49-5769-4d7e-ae56-461f50a52702</guid><pubDate>Sat, 05 Sep 2026 16:05:14 +0000</pubDate><atom:updated>2026-09-05T16:05:14.291Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவை,கிரிக்கெட்,Cricket,Kovai,கனிமொழி சந்தோஷ்,kanimozhi santhosh</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/142eqatl/State-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/142eqatl/State-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவை சரவணம்பட்டியில் இந்தியன் பாரா கிரிக்கெட் லீக் போட்டி நடைபெற்றது. இந்தியாவின் 15 மாநிலங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றுள்ள இந்த போட்டி தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறுகிறது.</p><p>இந்த கிரிக்கெட் போட்டியில் எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மாற்று திறனாளி வீரர்களின் திறமைகளை அங்கீகரித்து அவர்களுக்கு சமமான வாய்ப்புகளையும் உரிய தளத்தையும் உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.</p><p>தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மாற்றுத்திறனாளிகளுக்கான நிகழ்ச்சி என்பதை விட மாற்றத்திற்கான நிகழ்ச்சியாக இது அமைந்துள்ளது. த.வெ.க. அரசு விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்கு எந்த அளவு முன்னுரிமை கொடுத்து வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும்” என்று தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>பள்ளி கட்டிடத்தில் வைத்து 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; 4 சிறுவர்கள் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/16-year-old-girl-raped-in-school-building</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/16-year-old-girl-raped-in-school-building#comments</comments><guid isPermaLink="false">e49a89be-abfc-47b5-a276-43f29a3697a9</guid><pubDate>Sat, 05 Sep 2026 16:01:35 +0000</pubDate><atom:updated>2026-09-05T16:01:35.162Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்சி,Trichy,பாலியல் பலாத்காரம்,School students,பள்ளி கட்டிடம்,சிறுவர்கள் கைது</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/rypdrywa/studetns33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[  சிறுமி பாலியல் பலாத்காரம்]]></media:title><media:description type="html"><![CDATA[ 4 சிறுவர்கள் கைது
]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/rypdrywa/studetns33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>பள்ளி கட்டிடத்தில் வைத்து 16 வயது சிறுமி 4 சிறுவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p><p>திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையஎல்லைக்கு உட்பட்ட பகுதியில் பெற்றோர் இல்லாத 16 வயது சிறுமி உள்ளார். இவர் சற்று மனநிலை சரியில்லாதவர். அந்த சிறுமியை அதே பகுதியை சேர்ந்த நான்கு சிறுவர்கள் அருகில் கட்டப்பட்டு வரும் பள்ளி கட்டிடத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அந்த சிறுமியை வைத்து 4 சிறுவர்கள் சேர்ந்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">பாலியல் பலாத்காரம்</a> செய்து துன்புறுத்திள்ளனர். </p><h2>கதறி அழுத சிறுமி</h2><p>இந்த சம்பவம் குறித்து அந்த சிறுமி அருகில் உள்ள பொதுமக்களிடம் கூறி கதறி அழுதுள்ளார் இதனைக் கேட்டு அதிர்ச்சடைந்த அப் பகுதி பொதுமக்கள்  இந்த சம்பவம் தொடர்பாசுகோட்டை காவல் அனைத்து நிலையத்தில் புகார்கொடுத்தனர். </p><p>இந்த புகாரின் பேரில் கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அந்த 4 சிறுவர்களையும் அழைத்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>விசாரணையில் அந்த 4 சிறுவர்களும் சேர்ந்து 16வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப் புக்கொண்டனர். இதையடுத்து போலீசார் அந்த 4 சிறுவர்கள் மீது போக்சோசட்டப்பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.</p><h2>4 சிறுவர்கள் கைது </h2><p>நான்கு சிறுவர்களையும் கைது செய்து தஞ்சை கூர் நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.கைது செய்யப்பட்ட நாலு சிறுவர்களும் 10,9 ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் என்பது குறிப்பிடதக்கது. சமீப காலமாக அந்தப் பகுதியில் சிறுவர்கள் போதை மாத்திரை கஞ்சா உள்ளிட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி இது போன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மீது சட்டப்படியான கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>அரசு மருத்துவமனைகளா அல்லது அச்சுறுத்தும் அமரர் கூடங்களா? - நயினார் நாகேந்திரன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-hospitals-or-threatening-mortuaries-nainar-nagendran-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-hospitals-or-threatening-mortuaries-nainar-nagendran-asks#comments</comments><guid isPermaLink="false">042f7e25-72a4-49d0-9108-ad04ad8d88aa</guid><pubDate>Sat, 05 Sep 2026 15:47:17 +0000</pubDate><atom:updated>2026-09-05T15:47:17.254Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Question,அரசு மருத்துவமனை,கேள்வி,அலட்சியம்,At the Government Hospital</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/scn43tbc/112.jpg" width="752"><media:title type="html"><![CDATA[  நயினார் நாகேந்திரன் ]]></media:title><media:description type="html"><![CDATA[  பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/scn43tbc/112.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசு மருத்துவமனைகளா அல்லது அச்சுறுத்தும் அமரர் கூடங்களா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக, பாஜக மாநில தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன்</a> தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;-</p><h2>இறைவன் துணை நிற்கட்டும் </h2><p>திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்த கவுசிக் என்ற 12 வயது சிறுவன், அங்கிருந்த மின்விளக்கு கோபுரத்தில் இருந்து பாய்ந்த மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த மன வேதனையளிக்கின்றன. உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தார் இக்கொடூர நிகழ்வில் இருந்து மீண்டு வர, இறைவன் அவர்களுக்கு துணை நிற்கட்டும். </p><h2>அரசின் நிர்வாக தோல்வி</h2><p>விஜய் தலைமையிலான அரசின் கீழ் இயங்கும், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் உயிருக்கு தான் உத்தரவாதம் இல்லையென்று நினைத்தால், உடன் செல்பவர்களின் உயிருக்கும் ஆபத்து உள்ளது என்பதை உணர்த்தும் இந்த சம்பவம், ஆளும் அரசின் நிர்வாக தோல்விக்கான மற்றுமொரு சான்று. </p> <h2>மக்கள் பலியாக வேண்டுமா? </h2><p>ஆட்சிக்கு வந்ததும் சட்டம் ஒழுங்கு, சுகாதாரம், கல்வி, பெண்கள் பாதுகாப்பு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட மக்களின் அடிப்படை தேவைகளை சரி செய்யாமல், “ரீல்ஸ்” மோகத்தில் ஊறித் திளைக்கும் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களின் அலட்சியத்திற்கு, அப்பாவி மக்கள் பலியாக வேண்டுமா? </p> <h2>முக்கிய வேலை இருக்கிறது?</h2><p>ஏழை, எளிய மக்களின் புகலிடமாக விளங்கும் அரசு மருத்துவமனைகளில் போதிய அடிப்படை வசதிகளும், தரமான கட்டுமானங்களும் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதை விட சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், வேறு என்ன முக்கிய வேலை இருக்கிறது? தவெக அமைச்சர்கள் எல்லாம் “ரசிகர்” மனநிலையில் இருந்து முதலில் வெளியில் வர வேண்டும். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளின் செயல்பாடுகளில் முழு கவனம் செலுத்த வேண்டும். அரசின் அலட்சியத்தால் இனியொரு உயிரை இழக்க தமிழகம் தயாராக இல்லை.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்: யாரையும் பழிவாங்கும் நோக்கம் அரசுக்கு இல்லை - அமைச்சர் விக்னேஷ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-government-has-no-intention-of-taking-revenge-on-anyone-minister-vignesh</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-government-has-no-intention-of-taking-revenge-on-anyone-minister-vignesh#comments</comments><guid isPermaLink="false">c722f655-62aa-44b7-b937-2ac80b1200db</guid><pubDate>Sat, 05 Sep 2026 15:40:42 +0000</pubDate><atom:updated>2026-09-05T15:40:42.435Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டாஸ்மாக் ஊழியர்கள்,அமைச்சர் விக்னேஷ்,tasmac bar,tvk govt,MinisterVignesh</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/ir3vgesb/tasamac33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
டாஸ்மாக் ஊழியர்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ பழிவாங்கும் நோக்கம் அரசுக்கு இல்லை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/ir3vgesb/tasamac33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்கு தி.மு.க மற்றும் அ.தி.மு.க. கட்சிகளே காரணம். பணிக்கு வராத டாஸ்மாக் ஊழியர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகளில் பாட்டிலுக்கு குறைந்த பட்சம் ரூ.10 அதிகமாக வாங்கப்படுவதாக நீண்ட காலமாகவே குற்றச்சாட்டு உள்ளது.த வெசு ஆட்சிக்கு வந்தால், இந்த முறைகேடுஅடியோடு ஒழிக் கப்படும் என கூறப்பட்டது. தேர்தலுக்கு முன்னர் முதல்-அமைச்சர்  விஜய் தனது கரூர் பிரசாரத்தின் போது, பாட்டிலுக்கு 10 ரூபாய் என்று பாட்டும் பாடினார். ஆகவே அவர் இந்த ஊழலை ஒழிப்பதில் உறுதியாக உள்ளார்.</p><h2>பணம் பெறுவதாக புகார் </h2><p>எனவே டாஸ்மாக் பணியாளர்களுக்கு அரசு தொடர் எச்சரிக்கையும் விடுத்த்து. அதையும் மீறி, சில ஊழியர்கள் பணம் பெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.இதைதடுக்கும் வகையில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு கிட்டத்தட்ட இரண்டு மடங்கு ஊதியம் வழங்கப்படும் என அமைச்சர் விக்னேஷ் அறிவித்தார். </p><p>மேலும் 8 மணி நேர வேலை, வார விடுப்பு, மாதத்தில் 2 நாள் தற்செயல் விடுப்பு. பண்டிகை முன்பணம், சீரூடை வாங்க ரூ.6 ஆயிரம் எனபல்வேறு சலுகைகள்அறிவிக்கப்பட்டன.</p><h2>தொடர் சஸ்பெண்ட் </h2><p>ஆகவே இனிமேலும் கூடுதலாகவ சூலித்தால் கடும் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கைவிடப்பட்டது. இருந்த போதிலும் வசூல் வேட்டை நின்ற பாடில்லை. முதல் நாளில் 67 பேர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20">சஸ்பெண்ட்</a> செய்யப்பட்டதாக செய்தி வெளியானது. 2 ஆம் நாளில் மேலும் பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.</p><p>அந்த வகையில் நேற்று முன்தினம் வரை மொத்தம் 230 பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.</p><p>இப்படிப்பட்ட நிலையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல கடைகள் திறக்கப்படவில்லை. </p><p>இந்த போராட்டத்துக்கு. வெற்றுப் பாட்டில்களை வாங்க அதிகாரிகள் நிர்பந்திப்பதாக குற்றம் சாட்டினர். ஆனால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டதால்தான் போராட்டம் நடத்தியதாக அரசு குற்றம் சாட்டியது. இந்த நிலையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 44 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டி ருப்பதாகக் கூறப்படுகிறது.</p><h2>பழிவாங்கும் நோக்கம் அரசுக்கு இல்லை</h2><p>இந்நிலையில் கலால் மற்றும் ஆயத்தீர்வைத் துறை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D">அமைச்சர் விக்னேஷ் </a>கோவை பொள்ளாட்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:</p><p>டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்கு தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சி களே காரணம். பழிவாங்கும் நோக்கத்தில் டாஸ்மாக் ஊழியர்களை சஸ்பெண்ட் செய்யவில்லை.</p><p>மது பாட்டில்களை திரும்ப வாங்குவதற்கு விரைவில் தீர்வு காணப்படும். கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இதுபோன்ற பிரச்சினைகள் இல்லை. கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதில்லை. மற்ற பகுதிகளில் ஊழியர்களை தவறான பாதைக்கு வழிகாட்டுகின்றனர். </p><h2>அரசு ஒரு போதும் அடிபணியாது</h2><p>யார் தவறு செய்தாலும் தவறுதான். பணிக்கு வராத டாஸ்மாக் ஊழியர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டம் செய்து மிரட்ட நினைத்தால், இந்த அரசு ஒரு போதும் அடிபணியாது. அரசோ, அமைச்சரோ யார் தவறு செய்தாலும் அவர்களுக்கு கடுமையானதண்டனை கிடைக்கும். </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் - தலைமை செயலாளர் நேரில் ஆய்வு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-preparedness-measures-in-chennai-chief-secretary-inspects-in-person</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-preparedness-measures-in-chennai-chief-secretary-inspects-in-person#comments</comments><guid isPermaLink="false">9f806fa5-274f-4390-be08-1bf21e0bd166</guid><pubDate>Sat, 05 Sep 2026 15:38:11 +0000</pubDate><atom:updated>2026-09-05T15:38:11.534Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/fql7q83s/State-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/fql7q83s/State-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வடகிழக்கு பருவமலை விரைவில் தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் சென்னை அடையாறு, பெருங்குடி, சோலிங்கநல்லூர் மண்டலங்களில் நடைபெற்று வரும் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை தலைமை செயலாளர் சாய்குமார் இன்று நேரில் ஆய்வு செய்தார். </p><p>இந்த ஆய்வின்போது, ஏற்கனவே நடைபெற்று வரக்கூடிய பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். மேலும் நீர்வளத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆகாய தாமரைகள் அகற்றும் பணியை அவர் ஆய்வு செய்தார். </p> <p>மேலும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் சிறப்பாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளிடம் தலைமை செயலாளர் சாய்குமார் அறிவுறுத்தினார். </p><p>பெருங்குடி மண்டலத்துக்கு உட்பட்ட ரேடியல் சாலை முதல் பெருங்குடி குப்பை கிடங்கு வரை, நெடுஞ்சாலைத்துறை சார்பாக நடைபெற்று வரக்கூடிய பணிகளை வந்து விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும், வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக, குறிப்பாக செப்டம்பர் மாதத்தின் இறுதிக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் சாய்குமார் அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>ஆட்டோ டிரைவரின் மகன்: மாற்றுத்திறனாளி மாணவர் சென்னை ஐ.ஐ.டி.யில் படிக்க தேர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/auto-drivers-son-disabled-student-gets-admission-in-iit-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/auto-drivers-son-disabled-student-gets-admission-in-iit-chennai#comments</comments><guid isPermaLink="false">2816a1f1-3c33-42cd-9749-d958fe91b4ca</guid><pubDate>Sat, 05 Sep 2026 15:38:08 +0000</pubDate><atom:updated>2026-09-05T15:38:08.102Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,student,Chennai IIT,ஆட்டோ டிரைவர்,Auto driver,exam,தேர்வு,மாணவர்,சென்னை ஐ.ஐ.டி.,படிக்க,studying,differently-abled,மாற்றுத்திறனானி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/x6j0fhqq/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%90.%E0%AE%90.%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆட்டோ டிரைவரின் மகன்: மாற்றுத்திறனாளி மாணவர் சென்னை ஐ.ஐ.டி.யில் படிக்க தேர்வு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/x6j0fhqq/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%90.%E0%AE%90.%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a> அயப்பாக்கத்தைச் சேர்ந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D">ஆட்டோ டிரைவரின்</a> மகனான, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF">மாற்றுத்திறனாளி</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D">மாணவர்</a> சென்னை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%90%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF">ஐ.ஐ.டி.யில்</a> பி.எஸ். தகவல் அறிவியல் பாடப்பிரிவில் சேர்ந்து படிக்க <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">தேர்வு</a> செய்யப்பட்டுள்ளார். </p><h2>ஆட்டோ டிரைவரின் மாற்றுத்திறனாளி மகன்</h2><p>சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜெகநாதன்-பானுப்பிரியா தம்பதியின் மகன் சந்தோஷ் (வயது 17). முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான இவர், அத்திப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் கணினி அறிவியல் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படித்தார். நடந்து முடிந்த பிளஸ்-2 தேர்வில் 600-க்கு 531 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். </p><h2>சென்னை ஐ.ஐ.டி.யில் பி.எஸ். தகவல் அறிவியல் படிக்க தேர்வு</h2><p>இதைத்தொடர்ந்து ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு இல்லாமல் சென்னை ஐ.ஐ.டி.யில் 4 ஆண்டு பி.எஸ். தகவல் அறிவியல் பாடப்பிரிவில் சேர்ந்து படிப்பதற்கான தகுதித்தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்த தகுதித்தேர்வில் தேர்வான நிலையில், பி.எஸ். தகவல் அறிவியல் பாடப்பிரிவில் சேர்ந்துள்ளார். எதிர்காலத்தில் கேட் தேர்வு எழுதி முதுகலை பட்டம் பெற விரும்புவதாக சந்தோஷ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். </p><h2>மாற்றுத்திறனாளிகளுக்கு உயர்கல்வி விழிப்புணர்வு; அரசு நடவடிக்கை</h2><p>மேலும் அவர், தன்னை போன்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இதுபோன்ற உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து முறையான விழிப்புணர்வு கிடைக்கவும், பிளஸ்-2 படிக்கும் போதே மாணவர்களுக்கு இதுகுறித்த தகவல்களை கொண்டு சேர்க்கவும் அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார். </p>]]></content:encoded></item><item><title>‘பிரதமர் வேட்பாளர் குறித்து த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் கூறுவது அவர்களின் தனிப்பட்ட கருத்து’ - அமைச்சர் வெங்கடரமணன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-tvk-mlas-say-regarding-the-prime-ministerial-candidate-is-their-personal-opinion-minister-venkataramanan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-tvk-mlas-say-regarding-the-prime-ministerial-candidate-is-their-personal-opinion-minister-venkataramanan#comments</comments><guid isPermaLink="false">1c59410d-b1a9-4a2e-a9f3-1f6675c27450</guid><pubDate>Sat, 05 Sep 2026 15:14:30 +0000</pubDate><atom:updated>2026-09-05T15:14:30.916Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,த.வெ.க.,அமைச்சர் வெங்கடரமணன்,Minister Venkataramanan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/118vqrly/State-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/118vqrly/State-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>த.வெ.க. எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ், அண்மையில் செய்தியாளர்களிடம் பேசியபோது 2029 நாடாளுமன்ற தேர்தலில் முதல்-அமைச்சர் விஜய்தான் பிரதமர் வேட்பாளர் என்று தெரிவித்திருந்தார். அவரது கருத்துக்கு த.வெ.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்திருந்தது. 2029 நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். </p><p>இந்த நிலையில், பிரதமர் வேட்பாளர் குறித்து த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் கூறுவது அவர்களின் தனிப்பட்ட கருத்து என அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் முதல்-அமைச்சர் விஜய் மீது கொண்ட அன்பால் அவ்வாறு கருத்து தெரிவிக்கின்றனர். </p><p>தமிழகத்தில் ஊழல் இல்லாத, லஞ்சம் இல்லாத ஆட்சியை கொண்டு வந்து, மக்களின் தேவைகளை கேட்டறிந்து செயல்படும் முதல்-அமைச்சராக விஜய் இருக்கிறார். அப்படிப்பட்டவர் இந்தியாவின் பிரதமராக வர வேண்டும் என்று த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் தங்கள் கருத்தை சொல்கிறார்கள். அவர்கள் கூறுவது அவர்களின் தனிப்பட்ட கருத்துதான். அது கட்சியின் கருத்தோ, அரசாங்கத்தின் கருத்தோ அல்ல. </p><p>2029 தேர்தல் வரும்போது, அப்போதைய கால சூழ்நிலையை கருத்தில் கொண்டு, முடிவுகள் எடுக்கப்படும். த.வெ.க. தலைவர், முதல்-அமைச்சர் விஜய் என்ன முடிவெடுக்கிறாரோ, அதன்படி நாங்கள் செயல்படுவோம்” என்று தெரிவித்தார்.  </p> ]]></content:encoded></item><item><title>குடும்பத்தகராறு: தம்பியை கட்டையால் தாக்கிய அண்ணன் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/family-dispute-brother-arrested-for-attacking-younger-brother-with-stick</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/family-dispute-brother-arrested-for-attacking-younger-brother-with-stick#comments</comments><guid isPermaLink="false">91d4bf7a-21b0-4fcf-97d0-3a6bad867a31</guid><pubDate>Sat, 05 Sep 2026 15:05:14 +0000</pubDate><atom:updated>2026-09-05T15:05:14.866Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தாக்குதல்,Chennai,சென்னை,Family dispute,attack,தம்பி,younger brother,குடும்பத்தகராறு,Brother arrested,அண்ணன் கைது,stick,கட்டை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/r2l9axkv/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/r2l9axkv/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a> திருவல்லிக்கேணி பகுதியில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81">குடும்பத்தகராறு</a> காரணமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF">தம்பி</a>யை கட்டையால் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">தாக்கிய</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">அண்ணன் கைது</a> செய்து சிறையில் அடைக்கப்பட்டார். </p><h2>சகோதரர்களிடையே குடும்பத்தகராறு</h2><p>சென்னை திருவல்லிக்கேணி, பி.எம்.தர்கா 3-வது தெருவைச் சேர்ந்த இஸ்மாயில் (வயது 36), மெரினா கடற்கரையில் வளையல் கடை நடத்தி வருகிறார். இவர் வசிக்கும் வீட்டின் மற்றொரு குடியிருப்பில் இவரது அண்ணன் சையது அலி குடும்பத்துடன் வசித்து வருகிறார். சகோதரர்களிடையே குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது. </p><h2>தம்பியை கட்டையால் தாக்கிய அண்ணன்</h2><p>சையது அலியின் வீட்டுக்கதவை இஸ்மாயில் அடிக்கடி தட்டிவிட்டு சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இஸ்மாயில் வீட்டின் அருகே உள்ள ஆட்டோவில் அமர்ந்திருந்தார். அப்போது சையது அலி 'எதற்காக அடிக்கடி என் வீட்டு கதவை தட்டுகிறாய்?' எனக்கேட்டு அவரை கட்டையால் தாக்கினார். </p><h2>கைது</h2><p>இதில் காயமடைந்த இஸ்மாயில், ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். தன்னை தாக்கிய சையது அலி மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார். அதன்பேரில் ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சையது அலியை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். </p>]]></content:encoded></item><item><title>30 இடங்களில் சோதனை: 241 ஆவணங்கள் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/30-locations-raided-241-documents-seized-anti-corruption-department</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/30-locations-raided-241-documents-seized-anti-corruption-department#comments</comments><guid isPermaLink="false">5c928b67-4cd8-4a20-9689-9b9511096dd4</guid><pubDate>Sat, 05 Sep 2026 15:01:25 +0000</pubDate><atom:updated>2026-09-05T15:01:25.602Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,திமுக,திருச்சி,கே.என்.நேரு,லஞ்ச ஒழிப்புத்துறை,நேரு,Raid 2,KNNehru</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/vp13xud9/werhu33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 

30 இடங்களில் சோதனை]]></media:title><media:description type="html"><![CDATA[ லஞ்ச ஒழிப்புத்துறை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/vp13xud9/werhu33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.</p><h2>லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை</h2><p>அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். இதனைதொடர்ந்து கடந்த மாதம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்தநிலையில் இன்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சென்னை, திருச்சி வீடுகள் மற்றும் அவரது சகோதரர்களுக்கு சொந்தமான இடங்களில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%20%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">லஞ்ச ஒழிப்பு போலீசார்</a> அதிரடி சோதனை நடத்தினார்கள்.</p><p>சென்னை மயிலாப்பூர் மற்றும் திருச்சி தில்லை நகர் ஆகிய இடங்களில் உள்ள கே.என்.நேருவுக்கு சொந்தமான இடங்களில் வீடுகளுக்கு இன்று காலை 7 மணி அளவில் சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினார்கள். திருவான்மியூர், அடையாறு, அண்ணாநகர், ராஜா அண்ணாமலைபுரம் ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.</p><p>ராஜா அண்ணாமலை புரத்தில் கே.என்.நேருவின் தம்பி ரவிச்சந்திரனுக்கு சொந்தமான தனியார் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இதேபோன்று திருச்சி, கோவை என மொத்தம் 30 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.</p><h2>டெண்டர் ஒதுகீட்டில் முறைகேடு</h2><p>கே.என்.நேரு திமுக ஆட்சியில் நகராட்சி, நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது அந்த துறை சார்பில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டது.  இந்த டெண்டர் ஒதுகீட்டில்தான் முறைகேடு நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிஏயே இன்றைய சோதனை நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். </p><p>திருச்சி தில்லைநகர் 5-வது கிராசில் உள்ள<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%87.%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81"> கே.என்.நேரு </a>வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் 10 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் இன்று காலை 7.30 மணிக்கு சென்றனர்.  காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது. அதனை தொடர்ந்து கே.என்.நேருவிற்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை பறிமுதல் செய்து எடுத்து சென்றனர்.</p><h2>241 ஆவணங்கள் பறிமுதல்</h2><p>இந்தநிலையில்,  கே.என்.நேருவுக்கு தொடர்புடைய இடங்களில் நடத்திய சோதனையில் 241 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.</p><p>தமிழகத்தில்  கோவை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 30 இடங்களில் நடந்த சோதனையில் 241 ஆவணங்கள், மின்னணு சாட்சியங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் பல்வேறு ஒப்பந்தங்களில் முறைகேடு என்ற புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>சட்டசபை கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவராக உள்ள கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது தமிழக அரசியலில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வயிற்று வலி தாங்காமல் தீக்குளித்த மாணவர் - கும்பகோணத்தில் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-sets-himself-on-fire-unable-to-bear-stomach-pain-sensation-in-kumbakonam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-sets-himself-on-fire-unable-to-bear-stomach-pain-sensation-in-kumbakonam#comments</comments><guid isPermaLink="false">70e40912-54a1-45a1-9eaf-b69b03521637</guid><pubDate>Sat, 05 Sep 2026 14:57:29 +0000</pubDate><atom:updated>2026-09-05T14:57:29.656Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கும்பகோணம்,Kumbakonam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/s5o35zhg/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/s5o35zhg/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர்,</p><p>தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தை சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவர் ஒருவர் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர் கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. </p><p>இந்நிலையில் வயிற்று வலி தாங்காமல் இன்று அந்த மாணவர் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். இதில் அந்த மாணவரின் உடலில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பட்டீஸ்வரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகளை பயன்படுத்துங்கள்: தமிழக அரசு அறிவுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/use-eco-friendly-ganesha-idols-tamil-nadu-government-instructs</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/use-eco-friendly-ganesha-idols-tamil-nadu-government-instructs#comments</comments><guid isPermaLink="false">1aad7e51-45ef-4647-b8b6-668e07cf15e5</guid><pubDate>Sat, 05 Sep 2026 14:46:50 +0000</pubDate><atom:updated>2026-09-05T14:46:50.107Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Tamil Nadu Government,தமிழக அரசு,Instructions,Guidelines,விநாயகர் சதுர்த்தி,Ganesha Chaturthi,Pollution Control Board,வழிகாட்டுதல்கள்,சிலைகள்,மாசு கட்டுப்பாட்டு வாரியம்,Idols,அறிவுறுத்தல்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/mbr91b7l/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகளை பயன்படுத்துங்கள்: தமிழக அரசு அறிவுறுத்தல்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/mbr91b7l/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE">விநாயகர் சதுர்த்தி விழா</a> வருகிற 14-ம் தேதி திங்கள்கிழமை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">விநாயகர் சிலைகளை</a> நீர் நிலைகளில் கரைப்பதற்கான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">வழிமுறைகள்</a> தொடர்பாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">தமிழ்நாடு அரசு</a> வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: </p><h2>மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்கள்</h2><p>சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்று தொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது. எனவே நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும் போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி (www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது) மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எனவே பொது மக்களுக்கு கீழ்க்கண்டவாறு வேண்டுகோள் விடப்படுகிறது. </p><p>1. களி மண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP), பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது. </p><p>2. சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும் சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம். </p><p>3. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கூடாது. நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும்பொருட்டு வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள் / பந்தல்கள்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும். </p><p>4. சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயனசாயம் / எண்ணெய் வண்ணப் பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப் பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த / மக்கக்கூடிய / நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். </p><p>5. சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். </p><p>6. விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க வேண்டும்.</p><p>விநாயகர் சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாவட்ட கலெக்டர், எஸ்.பி. மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை மேலும் விவரங்களுக்கு அணுகலாம். </p><p>சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தமிழகத்திற்கு நீண்ட கால பாரம்பரியம் உள்ளது. விநாயகர் சதுர்த்தி தெய்வீகத்தின் கொண்டாட்டம் மட்டுமல்ல, நமது சுற்றுச்சூழலின் அழகையும் தூய்மையையும் பாதுகாப்பதற்கான நமது உறுதிப்பாட்டை நிரூபிக்க ஒரு வாய்ப்பாகும். மேலும் மாவட்ட நிர்வாகத்தால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சிலைகளை கரைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். </p><h2>விநாயகர் சதுர்த்தி விழா: செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை</h2><p>சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகளைப் பயன்படுத்துங்கள். பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP) சிலைகளைப் பயன்படுத்த கூடாது. </p><p>சுற்றுச்சூழலுக்கு உகந்த அலங்கார பொருட்களை பயன்படுத்தவும். சிலைகளை அலங்கரிப்பதற்கு, சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒருமுறை உபயோகித்து தூக்கியெறிப்படும் பிளாஸ்டிக், தெர்மாகோல் மற்றும் இரசாயனங்களை பொருட்கள் அல்லது சாயங்களை பயன்படுத்த கூடாது. </p><p>சிலைகளுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த மற்றும் இயற்கையாக மக்கக்கூடிய நச்சுத்தன்மையற்ற இயற்கை சாயங்களைப் பயன்படுத்துங்கள். சிலைகளின் மேல் பூச்சிற்கும் அலங்காரத்திற்கும் நச்சுத்தன்மையுள்ள மற்றும் மக்கும் தன்மையற்ற  ரசாயனசாயங்கள் / எண்ணெய் வண்ணப் பூச்சுகளை பயன்படுத்த கூடாது. </p><p>சுற்றுச்சூழலிற்கு உகந்த பூக்கள். இலைகள் மற்றும் துணிகளை பூஜை பொருட்களாக பயன்படுத்தவும். சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒருமுறை உபயோகித்து தூக்கியெறிப்படும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோலாலான பொருட்களை பூஜை பொருட்களாக பயன்படுத்த கூடாது. </p><p>அகற்றி துவைத்து மீண்டும் உபயோகிக்ககூடிய அலங்கார துணிகளையே அலங்காரத்திற்கு பயன்படுத்தவும். வண்ணப் பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட ஒரு முறையே உபயோகித்து தூக்கியெறியகூடிய  அலங்கார பொருட்களை பயன்படுத்த கூடாது. </p><p>பிரசாத விநியோகத்திற்கு மக்கும் / மீண்டும் பயன்படுத்தக்கூடிய தட்டுகள் மற்றும் கண்ணாடி கோப்பைகளை பயன்படுத்தவும். பண்டிகையின்போது ஒரு முறை பயன்படுத்தி தூக்கியெறியகூடிய பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள், கரண்டிகள் மற்றும் உறிஞ்சு குழாய்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும். </p><p>பொறுப்புடன் குப்பைகளை பிரித்து அப்புறப்படுத்துங்கள். குப்பை மற்றும் கழிவுகளை பொறுப்பற்று கொட்ட கூடாது. </p><p>அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும். அனுமதி இல்லாத நீர் நிலைகளில் சிலைகளை கரைக்க கூடாது. </p><p>எல்.இ.டி. பல்புகள் போன்ற சுற்றுசூழலிற்கு உகந்த விளக்குகளை பயன்படுத்தவும். ஃபிலமென்ட் பல்புகளை விளக்குகளாக பயன்படுத்த கூடாது. </p><p>அலங்கார பொருட்களை எதிர்கால பண்டிகைகளுக்கு சேமித்து பயன்படுத்தவும். ஒற்றை உபயோக அலங்கார பொருட்களை பயன்படுத்த வேண்டாம். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மின்கம்பத்தை தொட்ட மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-dies-of-electrocution-after-touching-electric-pole-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-dies-of-electrocution-after-touching-electric-pole-in-chennai#comments</comments><guid isPermaLink="false">a9a277cb-9fa4-471b-8e21-ab91d74bffa6</guid><pubDate>Sat, 05 Sep 2026 14:45:08 +0000</pubDate><atom:updated>2026-09-05T14:45:08.366Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>dies,மாணவன்,மின்சாரம்,உயிரிழப்பு,மின்கம்பம்,electrocution,a college student,தாக்கி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/910hnr53/jeyachandran.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஜெயசந்திரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ மின்கம்பத்தை தொட்ட மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/910hnr53/jeyachandran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> சென்னை மயிலாப்பூரில் சாலையில் இருந்த மின்கம்பத்தில் பாய்ந்த<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF"> மின்சாரம் தாக்கியதில்</a>, கல்லூரி மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த பகுதியையும் உலுக்கியுள்ளது.</p><h2>யார் இந்த ஜெயசந்திரன்?</h2><p>திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் அனந்த். இவருடைய 18 வயது மகன் ஜெயசந்திரன்,<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88"> சென்னை</a> நந்தனம் கலை கல்லூரியில் பி.எஸ்.சி இயற்பியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். படிப்பிற்காக சென்னை வந்த இவர், மயிலாப்பூர் கபாலி தோட்டம் பகுதியில் உள்ள அரசு மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்.</p> <h2>நள்ளிரவில் நடந்த விபரீதம்</h2><p>ஜெயசந்திரன் நேற்று இரவு தனது நண்பரான யுவராஜ் என்பவருடன் வெளியே சென்றுள்ளார். பின்னர், இன்று அதிகாலை வேளையில் விடுதிக்கு திரும்பி கொண்டிருந்தனர். விடுதிக்கு அருகே வந்தபோது, சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரை ஜெயசந்திரன் தாண்ட முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராதவிதமாக அங்கு இருந்த மின்கம்பத்தில் அவரது கை பட்டுள்ளது. அடுத்த சில நொடிகள்.. யாரும் சற்றும் எதிர்பாராத அந்த  விபரீதம் நிகழ்ந்தது</p><h2>மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சோகம்</h2><p>மின்கம்பத்தில் ஏற்கனவே இருந்த மின்கசிவு காரணமாக, ஜெயசந்திரன் மீது பயங்கர வேகத்தில் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து துடித்தார். இதை பார்த்து  அக்கம் பக்கத்தினரும் அலறியடித்துக்கொண்டு ஓடிவந்து ஜெயசந்திரனை மீட்டனர். உடனடியாக அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஜெயசந்திரன் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறி அதிர்ச்சியளித்தனர்.</p> <h2>போலீசார் தீவிர விசாரணை</h2><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மயிலாப்பூர் காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நந்தனம் கல்லூரியில் படித்து வந்த இளம் மாணவர் ஒருவர் அதிகாலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம், அவரது குடும்பத்தினரிடையேயும் கல்லூரி நண்பர்களிடையேயும் பெரும் சோக அலைகளை ஏற்படுத்தியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>கோவை: தொழிலதிபரிடம் ரூ.1 கோடி கொள்ளையடித்த மர்ம கும்பல் - போலீஸ் தீவிர விசாரணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-mysterious-gang-robs-businessman-of-1-crore-police-conducting-intensive-investigation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-mysterious-gang-robs-businessman-of-1-crore-police-conducting-intensive-investigation#comments</comments><guid isPermaLink="false">ae0c73cd-91e3-499e-b9b0-1354a0e4cd4d</guid><pubDate>Sat, 05 Sep 2026 14:29:18 +0000</pubDate><atom:updated>2026-09-05T14:29:18.400Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/77w5us28/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/77w5us28/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>ஐதராபாத்தில் இருந்து நேற்று இரவு பேருந்தில் கிளம்பி வந்த தொழிலதிபர் தாமுன் என்பவர், கோவை லட்சுமி மில்ஸ் அருகே இன்று காலை இறங்கியுள்ளார். அவர் தொழில் தொடர்பாக சூட்கேசில் சுமார் ரூ.1 கோடி பணத்தை கொண்டு வந்துள்ளார். கோவை வந்தடைந்ததும் பேருந்தை விட்டு இறங்கிய அவர், அடுத்த வாகனத்திற்காக சாலையோரம் காத்திருந்தார். </p><p>அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் சிலர், அவரிடம் இருந்த சூட்கேசை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடியுள்ளனர். இது தொடர்பாக கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் தாமுன் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். </p> <p>இந்த வழக்கு தொடர்பாக இதுவரை ஒரு நபர் போலீசார் கைது செய்துள்ளதாகவும், தொடர்ந்து மற்ற நபர்களை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் மக்கள் அதிகமாக இருக்கக்கூடிய பகுதியில் தொழிலுக்காக கொண்டுவரப்பட்ட ஒரு கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பிரதமர் வேட்பாளர் குறித்த கேள்வி - அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் மழுப்பல் பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/question-about-the-prime-ministerial-candidate-minister-ctr-nirmal-kumars-vague-answer</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/question-about-the-prime-ministerial-candidate-minister-ctr-nirmal-kumars-vague-answer#comments</comments><guid isPermaLink="false">518393e4-14cd-4fc4-8c28-93eef4b13ff4</guid><pubDate>Sat, 05 Sep 2026 14:25:06 +0000</pubDate><atom:updated>2026-09-05T14:25:06.640Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,Madurai,மதுரை,ராகுல் காந்தி,Meenakshi Amman Temple,பிரதமர் வேட்பாளர்,மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து,அமைச்சர் நிர்மல்குமார்,Nirmal Kumar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/wtaifl6u/nirmalkumar33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[  அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார்]]></media:title><media:description type="html"><![CDATA[ 
பிரதமர் வேட்பாளர் குறித்த கேள்வி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/wtaifl6u/nirmalkumar33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>பிரதமர் விஜய் என்பது ஊடகங்களில் பரப்பப்படும் தகவல் மட்டுமே.. பிரதமர் வேட்பாளர் பற்றி பேசுவதற்கு இன்னும் காலம் உள்ளது என <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் </a>மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.</p><p>மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் கூறுகையில்,</p><p> பிரதமர் வேட்பாளர் பற்றி பேசுவதற்கு இன்னும் காலம் உள்ளது. இது குறித்து யாரும் பேசவே இல்லை. பத்திரிகையாளர்கள் தான் இதுபற்றி மாற்றி மாற்றி கேள்வி எழுப்பி வருகிறீர்கள்.</p><p>தவெக - காங்கிரஸ் இடையே எந்த முரண்பாடும் கிடையாது. பிரதமர் விஜய் என்பது ஊடகங்களில் பரப்பப்படும் தகவல் மட்டுமே. நமது அரசு மக்களுக்கான அரசு. எப்பொழுது மக்களுக்கு சென்ன செய்ய வேண்டுமோ, அந்த நேரத்தில் சரியாக செய்வோம்.</p><p>நாளை மறுநாள் முதல்-அமைச்சர் பதிலுரைக்கு பிறகு 2 மானிய கோரிக்கை நடக்கும். ஒவ்வொரு நாளும் சட்டசபை 7 மணி நேரம், 8 மணி நேரம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. சட்டசபையில் அனைவருக்கும் பேச சரி சமமான வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.</p><p>கோவில் விஷயத்தில் எங்களுடைய தலையீடு இல்லை. முந்தைய அரசு செய்த எந்த தவறையும் நாங்கள் செய்ய மாட்டோம். தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பு உள்ளது. ஊழல்வாதிகளுக்கு தான் பாதுகாப்பு இல்லை.</p><p>முன்னாள் அமைச்சர் கேஎன் நேரு வீட்டில் நடந்து வரும் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு பழிவாங்கும் நடவடிக்கை இல்லை, ஆதாரங்கள் மற்றும் புகாரின் அடிப்படையில் தான் ரெய்டு நடக்கிறது. சோதனை குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவிப்பார்கள்.</p><p>வரும் தேர்தலில் அதிமுக, திமுக ஒரே கூட்டணியில் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. யார் யாருடன் சேர்ந்தாலும் எங்கள் ஆட்சியை எதுவும் செய்ய முடியாது என்றார்.</p><p>மேலும் மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>ஜனாதிபதியிடம் விருது பெற்ற தமிழக ஆசிரியர்கள் - வானதி சீனிவாசன் வாழ்த்து  </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-teachers-receive-awards-from-the-president-vanathi-srinivasan-extends-congratulations</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-teachers-receive-awards-from-the-president-vanathi-srinivasan-extends-congratulations#comments</comments><guid isPermaLink="false">90ea6cc2-3110-4c63-922a-26120cdfee27</guid><pubDate>Sat, 05 Sep 2026 13:48:57 +0000</pubDate><atom:updated>2026-09-05T13:48:57.627Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,ஆசிரியர்கள்,Teachers</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/1cz4a5h7/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/1cz4a5h7/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பா.ஜ.க. முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-</p><p>“இன்று தலைநகர் டெல்லியில் நடந்த ஆசிரியர் தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்முவால் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த மதுரை கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை அமுதாவுக்கும் மற்றும் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் தங்கராஜுக்கும் மற்றும் இதர ஆசிரியர்கள், மாநில நல்லாசிரியர் விருது பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துகள். </p> <p>மேலும், இவ்விழாவில் 'தரமான கல்வியின் மூலமே வளர்ச்சியடைந்த பாரதம் சாத்தியமாகும்' என்பதை வலியுறுத்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, தேசத்தின் எதிர்கால தலைமுறையை உருவாக்குவதில் ஆசிரியர்களின் மகத்தான பங்கினையும் எடுத்துரைத்ததை மனதில் நிறுத்தி  தங்களின் உன்னத கல்விப் பணியை சிறந்த முறையில் மென்மேலும் தொடர்ந்து கல்லாமை என்னும் இருளை அகற்றி அறிவொளி ஏற்றிட வாழ்த்துகிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>  வ.உ.சிதம்பரனாரின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குவோம்: அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/paying-tribute-to-vu-chidambaranars-courage-and-sacrifice-anbumani-ramadas</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/paying-tribute-to-vu-chidambaranars-courage-and-sacrifice-anbumani-ramadas#comments</comments><guid isPermaLink="false">246c4ade-b72b-48f2-906c-a6c8d65b002a</guid><pubDate>Sat, 05 Sep 2026 13:33:05 +0000</pubDate><atom:updated>2026-09-05T13:33:05.883Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,வ.உ.சிதம்பரனார்,வீரம்,தியாகம்,Honor,Dr Anbumani Ramadoss,V.O. Chidambaranar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/ciuldh39/186.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ் ]]></media:title><media:description type="html"><![CDATA[ வ.உ.சிதம்பரனாரின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குவோம்: அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/ciuldh39/186.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வ.உ.சிதம்பரனாரின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குவோம் என்று அன்புமணி தெரிவித்தார். இது தொடர்பாக, பா.ம.க. தலைவர் மருத்துவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> அறிக்கையில் தெரிவித்ததாவது:-</p><h2>வீர வணக்கம்</h2><p>இந்திய விடுதலைக்காக  வெள்ளையர்களுடன் சமரசம்  செய்து கொள்ளாமல்  போராடிய  செக்கிழுத்த செம்மல் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%89%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">வ.உ.சிதம்பரம்</a> பிள்ளையின்  155 ஆம் பிறந்தநாள்  இன்று  கொண்டாடப்படும்  நிலையில், அவருக்கு வீர வணக்கங்களை செலுத்துகிறேன். அவரது  தியாகத்தையும், தேசப்பற்றையும் போற்றி வணங்குகிறேன்.</p><h2>விடுதலை போராட்டம்</h2><p> காந்தியடிகளுக்கு முன்பே விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட சிதம்பரம் பிள்ளை, தென் மாவட்டங்களில் மிகச்சிறந்த தொழிற்சங்கவாதியாகவும் திகழ்ந்தவர் ஆவார். ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதவர். வணிகம் செய்வதாக கூறி இந்தியாவுக்குள் வந்தவர்களை, வணிகம் மூலமாகவே வீழ்த்தி நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்று போராடியவர் வ.உ.சி. </p><h2>சுதேசி கப்பல்</h2><p>ஆங்கிலேயர்களுக்கு எதிராக அவர் தொடங்கிய சுதேசி கப்பல் நிறுவனத்தின் வெற்றியும், அவரது ஆதரவுடன் நடைபெற்ற தூத்துக்குடி நூற்பாலை வேலைநிறுத்தப் போராட்டத்தின் வெற்றியும் ஆங்கிலேயர்களை நடுங்க வைத்தது. அதனால் வ.உ.சி கடுமையான அடக்குமுறைகளுக்கும் கொடுமைக்கும் ஆளானார்.</p><h2>செக்கு இழுத்த கொடுமை</h2><p> நமக்கு விடுதலை பெற்று தருவதற்காக அவர் செய்த தியாகங்களுக்கு உரிய மரியாதையும், அங்கீகாரமும் இன்னும் அவருக்கு வழங்கப்படவில்லை. கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் அவர் செக்கு இழுத்த கொடுமை குறித்து நாம் தொடர்ந்து பேசி வருகிறோம். ஆனால், அது அவருக்கு வழங்கப்பட்ட மாற்று தண்டனை தான். அதைவிட கொடுமையான தண்டனைகளையும் சிறையில் வ.உ.சிதம்பரம் பிள்ளை அனுபவித்துள்ளார். </p> <h2>சணல் பிரிக்கும் எந்திரம்</h2><p>சிறையில் அவருக்கு சணல் பிரிக்கும் எந்திரத்தை சுழற்றும் பணி முதலில் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த பணியின் போது, அவரது கைத்தோல் உரிந்து ரத்தம் வடிந்திருக்கிறது. எதற்கும் கலங்காதவரான வ.உ.சி அந்த தண்டனை மற்றும் அதனால் ஏற்பட்ட உடல்நல பாதிப்புகளை எண்ணி கண்ணீர் வடித்தார். சணல் பிரிக்கும் எந்திரத்தை சுழற்ற அவரது உடல்நிலை இடம் தராத நிலையில் தான் அவருக்கு மாற்று தண்டனையாக செக்கு இழுக்கும் பணி வழங்கப்பட்டுள்ளது. </p> <h2>போராட்ட உணர்வு</h2><p>இவ்வளவு கொடுமைகளுக்கு பிறகும் அவரது விடுதலை போராட்ட உணர்வு  தீவிரமடைந்ததே தவிர, நீர்த்து போகவில்லை.  அது தான் வ.உ.சியின் சிறப்பு ஆகும். அவரது  தியாகத்தை போற்றும் வகையில் நாடாளுமன்ற வளாகத்தில் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் உருவச்சிலையை திறக்க வேண்டும்; சென்னை உத்தண்டியில் செயல்பட்டு வரும் கடல்சார் பல்கலைக்கழகத்திற்கும், கடற்படை கப்பலுக்கும் அவரது பெயரைச் சூட்ட வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘தனக்கென்று தனி பாதையை வகுத்துக் கொண்டவர் நடிகர் அஜித்’ - அமைச்சர் ராஜ்மோகன் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/actor-ajith-has-carved-out-a-unique-path-for-himself-minister-rajmohan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/actor-ajith-has-carved-out-a-unique-path-for-himself-minister-rajmohan#comments</comments><guid isPermaLink="false">1855391b-a4ea-4abf-ad61-b83a59189da8</guid><pubDate>Sat, 05 Sep 2026 13:16:11 +0000</pubDate><atom:updated>2026-09-05T13:16:11.179Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Minister Rajmohan,அமைச்சர் ராஜ்மோகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/rv57durq/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/rv57durq/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டில் இளைஞர்களிடையே மோட்டார் பந்தயங்கள் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, விளையாட்டு சுற்றுலாவையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்தப் புதிய "மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்" உருவாக்கப்படும் என்று சட்டசபையில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தார். </p><p>பார்முலா 1, பார்முலா 2, பார்முலா 3, மற்றும் பார்முலா 4 உள்ளிட்ட பன்னாட்டுப் பந்தயங்களை நடத்தும் வகையில் சர்வதேசத் தரத்திலான பந்தயத் தடம் மற்றும் பயிற்சி மையங்கள் இங்கு அமைக்கப்படும். தேசிய மற்றும் சர்வதேச அளவிலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் வீரர்களை உருவாக்குவதோடு, தமிழ்நாட்டை உலகளாவிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் மையமாக மாற்றுவதே இதன் முக்கிய நோக்கமாகும் என்று முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்தார். தமிழக முதல்-அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு நடிகர் அஜித் நன்றி தெரிவித்திருந்தார்.</p><p>இந்நிலையில், முதல்-அமைச்சருக்கு விஜய்க்கு நடிகர் அஜித் நன்றி தெரிவித்தது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது;-</p><p>“முதல்-அமைச்சர் விஜய்யின் அறிவிப்புக்கு நடிகர் அஜித் நன்றி தெரிவித்துள்ளார். இது விளையாட்டுத்துறையின் மீது அவருக்கு இருக்கும் ஈடுபாட்டை காட்டுகிறது. அவர் விளையாட்டுத்துறையிலும் தனக்கென்று தனி பாதையை வகுத்துக் கொண்டவர். அவருக்கு நாங்களும் நெஞ்சார்ந்த நன்றியை தெரித்துக் கொள்கிறோம். </p><p>அவர் ஆசைப்பட்டபடி விளையாட்டுத்துறை மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் பல்வேறு முன்னேற்றங்களை தமிழக முதல்-அமைச்சர் விஜய் ஏற்படுத்துவார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: தவெக அரசின் பழி வாங்கும் நடவடிக்கை - கே.என்.நேரு பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anti-corruption-bureau-raid-retaliatory-action-kn-nehru</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anti-corruption-bureau-raid-retaliatory-action-kn-nehru#comments</comments><guid isPermaLink="false">ccdcfb30-dcbc-461c-87dc-a321cce735a7</guid><pubDate>Sat, 05 Sep 2026 12:47:01 +0000</pubDate><atom:updated>2026-09-05T12:47:01.467Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,DMK,கே.என்.நேரு,லஞ்ச ஒழிப்புத்துறை,KNNehru</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/fk38a2ej/nerhu33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
சட்டசபை]]></media:title><media:description type="html"><![CDATA[  கே.என்.நேரு பதில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/fk38a2ej/nerhu33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு. அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் திடீரென லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். சென்னை, திருச்சி, அடையாறு, திருவான்மியூர் என 19 இடங்களிலும் சோதனை நடந்தது.</p><h2>லஞ்ச ஒழிப்பு துறை </h2><p>சென்னையில் ரவிச்சந்திரன் அலுவலகத்திலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். திருச்சி தில்லை நகரில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர்.</p><p>அரசு டெண்டர்களில் கட்சி நிதி என்ற பெயரில் சட்டவிரோதமாக நடந்த வசூல் தொடர்பாக சோதனை நடத்தியதாக லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.</p><h2>சோதனைக்கு முழு ஒத்துழைப்பு</h2><p>இந்தநிலையில், திருச்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>என் வீட்டில் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்றது. சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை.</p><p>லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தோம். என்னை பொறுத்தவரை நான் எந்த தவறும் செய்யவில்லை. எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தை அணுகி சட்டப்படி வெல்வோம்.அலுவலகத்தில் இருந்து வழக்கமான ஒரு பைல், வரவு செலவு கணக்கு எழுதி வைத்திருந்த துண்டு சீட்டை மட்டும் எடுத்துச் சென்றுள்ளனர்.</p><h2>சட்டசபையில் கேள்வி எழுப்புவதால்</h2><p>சட்டசபையில் அரசை நோக்கி நான் கேள்வி எழுப்புவதால் என்னை மிரட்டுவதற்காக கூட இது போன்ற சோதனையை அவர்கள் செய்யலாம். இந்த சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான். எனது வீட்டில் 3வது முறை சோதனை நடைபெற்று உள்ளது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>வடகிழக்கு பருவமழை பணிகள்: தலைமைச்செயலாளர் நேரில் சென்று ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-works-chief-secretary-inspects</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-works-chief-secretary-inspects#comments</comments><guid isPermaLink="false">276968e5-963d-41bf-b858-e3d19df081db</guid><pubDate>Sat, 05 Sep 2026 12:44:25 +0000</pubDate><atom:updated>2026-09-05T12:44:25.168Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வடகிழக்கு பருவமழை,Northeast Monsoon,ஆய்வு,பணிகள்,தலைமைச்செயலாளர்,Preparation,Chief Secretary Inspection,நேரில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/nzzal505/sai.1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ தலைமை செயலாளர் முனைவர் மு. சாய்குமார்]]></media:title><media:description type="html"><![CDATA[ வடகிழக்கு பருவமழை பணிகள்: தலைமைச்செயலாளர் நேரில் சென்று ஆய்வு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/nzzal505/sai.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இன்று தலைமை செயலாளர் மு. சாய்குமார், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a> மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p> <h2>செப்டம்பர் மாதம்</h2><p>வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் பணிகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மாநகராட்சி, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னை குடிநீர் வாரியம் உள்ளிட்ட தொடர்புடைய துறைகள் ஒருங்கிணைந்து பணிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார்.</p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>இன்று  தலைமை செயலாளர் மு. சாய்குமார்,  வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,  சென்னை மாநகராட்சியில் அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள், ஏரி மற்றும் கால்வாயில் ஆகாயத்தாமரைகளை அகற்றிடும் பணி உள்ளிட்ட பணிகளைப் பார்வையிட்டு <a href="https://www.dailythanthi.com/topic/inspection">ஆய்வு </a>மேற்கொண்டார்.</p> <h2>மழைநீர் வடிகால் ஆய்வு</h2><p>தலைமைச் செயலாளர், அடையாறு மண்டலத்தில் ஐ.ஐ.டி. பகுதியிலிருந்து வெளிவரும் மழைநீரை பக்கிங்ஹாம் கால்வாயில் செலுத்தும் வகையில் டைடல் பார்க் பகுதியில் ரூ.13.52 கோடி மதிப்பீட்டில் 660 மீ. நீளத்தில் 3 மீ. x 3 மீ. அளவில் இரண்டு நீர்வழிப்பாதைகளாக கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகாலினை பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p> <figure><img alt="மழைநீர் வடிகாலினை பார்வையிட்டு ஆய்வு" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/zwlqm8g5/sai.2.jpg" /><figcaption>தலைமைச் செயலாளர்</figcaption></figure><h2>மேம்பாட்டு பணிகள்</h2><p>இதனை தொடர்ந்து, பெருங்குடி மண்டலம், வார்டு-188க்குட்பட்ட மயிலை பாலாஜி நகர், 1ஆவது பிளாக் கால்வாயில் ரூ.6.48 கோடி மதிப்பீட்டில் 235 மீ. நீளம் மற்றும் 13 மீ. அகலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாட்டு பணிகள், 4ஆவது பிளாக் பகுதி கால்வாயில் ரூ.8.68 கோடி மதிப்பீட்டில் 207 மீ. நீளம் மற்றும் 14.40 மீ. அகலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாட்டுப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். </p> <h2>பள்ளிக்கரணை சதுப்பு நிலம்</h2><p>நிலுவையில் உள்ள 110 மீ. நீளத்திலான பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த கால்வாயில் வெளியேறும் மழைநீரானது வேளச்சேரி, மேடவாக்கம் சாலைப் பகுதியில் உள்ள கால்வாயின் வழியாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு சென்றடையும். இதன் மூலம் இப்பகுதியில் உள்ள ராம் நகர் (தெற்கு), குபேரன் நகர், சதாசிவம் நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் மழைநீர்த் தேக்கமின்றி இக்கால்வாயின் வழியாக வெளியேறும்.</p> <h2>ஆய்வு</h2><p>பின்னர், வார்டு-189க்குட்பட்ட நாராயணபுரம் ஏரியில் நீர்வளத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணியினையும், தண்ணீர் வெளியேற்றும் மதகு மற்றும் கால்வாயின் கட்டமைப்பினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் சிறப்பாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><h2>பக்கிங்ஹாம் கால்வாய்</h2><p>தொடர்ச்சியாக, பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட ரேடியல் சாலை முதல் பெருங்குடி குப்பை கிடங்கு வரையிலான நெடுஞ்சாலைதுறையின் சாலை பகுதியில் உள்ள சதுப்பு நிலப்பகுதியில் உள்ள நீர் எளிதில் வெளியேறும் வகையில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி மற்றும் இந்த சாலையில் உள்ள 17 கல்வெர்ட்டுகளின் வழியே மழைநீர் தங்குதடையின்றி பக்கிங்ஹாம் கால்வாயில் செல்லும் வகையில் ஆகாயத்தாமரைகளை அகற்றி வண்டல்கள் தூர்வாரிட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p> <h2>மழைநீர் வடிகால் பணி</h2><p>இதனை தொடர்ந்து, சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-193க்குட்பட்ட துரைப்பாக்கம், ஓ.எம்.ஆர். சாலை பகுதியில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் பணிகள் நடைபெறும் இடத்தில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திலிருந்து வெளியேறும் நீரை பக்கிங்ஹாம் கால்வாயுடன் சேர்ப்பதற்காக ரூபாய் 73 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணியினை பார்வையிட்டு, இப்பணியினை தொடர்ந்து மேற்கொண்டு, பக்கிங்ஹாம் கால்வாயில் இணைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p> <h2>ஆகாயத்தாமரை அகற்றும் பணி</h2><p>பின்னர், சோழிங்கநல்லூர் மண்டலம், ஒக்கியம் மடுவு கால்வாயில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சார்பில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்து, மழைநீர் தங்குதடையின்றி இந்த கால்வாயில் வெளியேறும் வகையில் பணிகளை விரைந்து முடித்திடவும், ஆகாயத்தாமரை அகற்றும் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p> <figure><img alt="ஆகாயத்தாமரை அகற்றும் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்." src="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/1d5erlbu/sai.3.jpg" /><figcaption>ஆகாயத்தாமரை</figcaption></figure><h2>வடகிழக்கு பருவமழை பணிகள்</h2><p>வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாநகராட்சி, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னை குடிநீர் வாரியம் உள்ளிட்ட தொடர்புடைய சேவை துறைகள் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொண்டு செப்டம்பர் மாத இறுதிக்குள் முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.</p><p>இந்த ஆய்வுகளின்போது, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளர் சுஞ்சோங்கம் ஜாதக் சிரு, நீர்வளத்துறை செயலாளர் பிரசாந்த் எம். வட்னேரே, மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ். சமீரன்,  மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் மகேஸ்வரி ரவிக்குமார், (பெருங்குடி), டி. பாஸ்கர பாண்டியன், (சோழிங்கநல்லூர்), இணை ஆணையாளர் (பணிகள்) செ. சரவணன், தெற்கு வட்டார துணை ஆணையாளர் அதாப் ரசூல், மற்றும் மாநகராட்சி, நெடுஞ்சாலை துறை, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னை குடிநீர் வாரியம், நீர்வளத்துறை உள்ளிட்ட துறைகளின் அலுவலர்கள் உடனிருந்தனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோவில்பட்டி: ஓய்வுபெற்ற வனத்துறை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kovilpatti-retired-forest-department-employee-commits-suicide-by-hanging-himself</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kovilpatti-retired-forest-department-employee-commits-suicide-by-hanging-himself#comments</comments><guid isPermaLink="false">9bcd0b98-1054-411b-88ee-ecaff1dcf150</guid><pubDate>Sat, 05 Sep 2026 12:38:46 +0000</pubDate><atom:updated>2026-09-05T12:38:46.077Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Forest Department,வனத்துறை,Suicide by hanging,தூக்குப்போட்டு தற்கொலை,Retired,ஓய்வு பெற்ற,Kovilpatti,கோவில்பட்டி,employee,ஊழியர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/cw7qg4nj/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூக்குப்போட்டு தற்கொலை..]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/cw7qg4nj/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF">கோவில்பட்டி</a>யில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1">ஓய்வுபெற்ற</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">வனத்துறை</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D">ஊழியர்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">தூக்குப்போட்டு தற்கொலை</a> செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>ஓய்வுபெற்ற வனத்துறை ஊழியர்</h2><p>தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பாபா நகரைச் சேர்ந்த மாடசாமி (வயது 65), வனத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஆவார். இவர் குடும்பத்தைப் பிரிந்து தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள ஒரு குடியிருப்பின் கீழ்தளத்தில் தனியாக வசித்து வந்தார். இவருக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். அவர்கள் கழுகுமலையில் வசித்து வருகின்றனர். </p><h2>தூக்குப்போட்டு தற்கொலை</h2><p>இந்த நிலையில் நேற்று மாடசாமி தனது வீட்டில் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>
தவெக அரசின் சாதனை: 100 நாட்களில் ரூ.45,000 கோடி கடன் வாங்கியது தான்  - ரகுபதி குற்றச்சாட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-thaweka-governments-achievement-it-borrowed-rs-45000-crore-in-100-days-raghupathi-alleges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-thaweka-governments-achievement-it-borrowed-rs-45000-crore-in-100-days-raghupathi-alleges#comments</comments><guid isPermaLink="false">b9905293-4722-440b-8f37-82b9cc6058ad</guid><pubDate>Sat, 05 Sep 2026 12:22:35 +0000</pubDate><atom:updated>2026-09-05T12:22:35.093Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,DMK,கே.என்.நேரு,ரகுபதி,KNRNehru</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/pla00ubs/ragupathi33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[  ரகுபதி குற்றச்சாட்டு
]]></media:title><media:description type="html"><![CDATA[  தவெக அரசின் சாதனை  ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/pla00ubs/ragupathi33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல்,</p><p>விஜய் ஆட்சிக்கு வந்தால், பாலாறும் தேனாறும் ஓடும் என்றனர். ஆனால், 100 நாட்களில் ரூ.45,000 கோடி கடன் வாங்கியதுதான் தவெக ஆட்சியின் சாதனை என திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டி உள்ளார்.</p><p>புதுக்கேட்டையில் செய்தியாளர்கள் சந்திப்பில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">திமுக</a> முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏ-வுமான ரகுபதி பேசியதாவது, </p><h2>விஜய் ஆட்சிக்கு வந்தால் பாலாறும் தேனாறும் ஒடும் </h2><p>தவெகவினர் ரீல்ஸ் மூலமாகவே ஆட்சிக்கு வந்தனர். அவர்களின் எந்தச் சாதனையையும் சொல்லி, அவர்கள் ஆட்சிக்கு வரவில்லை. இவர் (விஜய்) ஆட்சிக்கு வந்தால், பாலாறும் தேனாறும் ஓடும் என்றனர். ஆனால், 100 நாள்களில் ரூ. 45,000 கோடி கடன் வாங்கியதுதான் இந்த ஆட்சியின் சாதனை. இதில் ஒரு பைசாகூட மூலதனச் செலவுக்கு செலவிடப்படவில்லை.</p><h2>பட மடங்கு கடன்</h2><p>நாங்கள் (திமுக) கடன் மட்டுமே வைத்துவிட்டு சென்றதாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால், எங்களைவிட பல மடங்கு கடன் வாங்கப் போகிறவர்கள்தான் இந்த ஆட்சி.</p><p>ஒரு திட்டத்தை அறிவிப்பர்; ஆனால், எந்த இடம் என்று சொல்ல மாட்டார்கள். ரூ. 1,200 கோடியில் 20 லட்சம் சதுர அடியில் சட்டசபை அலுவலகம் என்றார்கள். அப்படியெனில், ஒரு சதுர அடிக்கு ரூ. 6,000 வருகிறது. ஆனால், எந்த இடத்தில் அமைக்கப்படும் என்பது குறித்து கூற மாட்டார்கள்.</p><p>நாங்கள் செம்மஞ்சேரியில் விளையாட்டு நகரத்தை உருவாக்கினோம். அதற்கான அடிப்படைச் செலவுகளைச் செய்துவிட்டோம். ஆனால், அதனை ரத்து செய்து விட்டார்கள்.</p><h2>ரீல்ஸ் ஆட்சி</h2><p>ராணிப்பேட்டையில் ஜேகே டயர் தொழிற்சாலையை மூட வேண்டும் என சட்டப்பேரவையில் தவெக எம்எல்ஏ சொல்கிறார். அந்த தொழிற்சாலையை மூட முடியாது என அமைச்சர் கீர்த்தனா பதிலளிக்கிறார்.</p><p>ஆனால், அந்த இடத்தில் தொழிற்சாலையே இல்லை. இல்லாத தொழிற்சாலையை மூட வேண்டும் என்றும், பாதுகாப்போம் என்றும் சொல்கின்றனர். அவர்கள் ரீல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றனர். இது ரியல் ஆட்சி கிடையாது. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டை ஆட்கள் வைத்து சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வீட்டை சுத்தம் செய்து கொடுத்துவிட்டனர்.</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியை சிங்கப்பூர் அளவிற்கு தரம் உயர்த்துவதே அரசின் இலக்கு: அமைச்சர் ஸ்ரீநாத் பேச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-governments-goal-is-to-upgrade-thoothukudi-to-the-level-of-singapore-minister-srinaths-speech</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-governments-goal-is-to-upgrade-thoothukudi-to-the-level-of-singapore-minister-srinaths-speech#comments</comments><guid isPermaLink="false">085f2fd2-735a-4a46-993f-aedf188c5a80</guid><pubDate>Sat, 05 Sep 2026 12:15:51 +0000</pubDate><atom:updated>2026-09-05T12:15:51.717Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Tamil Nadu Government,தமிழக அரசு,speech,பேச்சு,தரம் உயர்வு,இலக்கு,Quality,Target,Improvement,அமைச்சர் ஸ்ரீநாத்,Minister Srinath</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/vbgwsrdh/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் பேச்சு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/vbgwsrdh/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>காற்றாலை உள்ளிட்ட பசுமை எரிசக்தி திட்டங்களை விரிவுபடுத்தி தூத்துக்குடியை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">சிங்கப்பூர்</a> அளவிற்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">தரம் உயர்த்த</a> வேண்டும் என்பதே அரசின் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">இலக்கு</a> என்று தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்தார். </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a>யில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பின் (CII) மாநில அளவிலான தொழில் வளர்ச்சிக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D">அமைச்சர் ஸ்ரீநாத்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81">பேசியதாவது</a>: </p><h2>தென்மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி</h2><p>"தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த வேண்டியது நமது அடிப்படை நோக்கமாகும். இதற்காக அரசு மற்றும் தொழில்முனைவோர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். </p><h2>குண்டூசி முதல் கப்பல் வரை தயாரிக்கும் கட்டமைப்பு வசதிகள்</h2><p>தூத்துக்குடியைச் சுற்றுலாத் துறையில் மேம்படுத்தப்பட்ட நகரமாக மாற்றத் திட்டமிட்டு வருகிறோம். இதன் ஒரு பகுதியாக பூங்காக்கள், கடற்கரைப் பகுதிகளைச் சீரமைத்தல் மற்றும் நீர் விளையாட்டுகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குண்டூசி முதல் கப்பல் வரை தயாரிக்கும் கட்டமைப்பு வசதிகள் தூத்துக்குடியில் உள்ளதால், இங்குள்ள வ.உ.சி. துறைமுகம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில் வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விரைவில் இங்கு பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்படவுள்ளது. மேலும் உயர்தர சிகிச்சைக்காகப் பல்நோக்கு மருத்துவமனையும் திறக்கப்பட உள்ளது.</p><h2>தூத்துக்குடியை சிங்கப்பூர் அளவிற்கு தரம் உயர்த்த வேண்டும்</h2><p>காற்றாலை உள்ளிட்ட பசுமை எரிசக்தி திட்டங்களை விரிவுபடுத்தி, தூத்துக்குடியை சிங்கப்பூர் அளவிற்கு தரம் உயர்த்த வேண்டும் என்பதே அரசின் இலக்காகும். தொழில் வளர்ச்சியை உயர்த்த அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்; அதேபோல் தொழில் துறையினரும் தங்களின் பங்களிப்பை வழங்கி இந்தக் கனவை நனவாக்க வேண்டும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p><p>இந்த கூட்டத்தில் தொழில் வல்லுநர்கள் தென் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி குறித்த பல்வேறு ஆக்கப்பூர்வமான கருத்துகளை முன்வைத்தனர். நிகழ்ச்சியில் இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழ்நாடு தலைவர் தேவராஜன், துணை தலைவர் முருகவேல், தமிழ்நாடு தலைவர் ஜெய் கிருஷ்ணன், தூத்துக்குடி தலைவர் முரளி கணேசன், துணை தலைவர் செந்தில்குமார் சுப்ரமணியன் உள்பட பல தொழிலதிபர்களும், நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். </p>]]></content:encoded></item><item><title>மதுரை - சென்னை விமான சேவை அக்.25 முதல் நிறுத்தம்?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-chennai-flight-service-to-be-suspended-from-october-25</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-chennai-flight-service-to-be-suspended-from-october-25#comments</comments><guid isPermaLink="false">33cdc265-130d-45fb-9b4e-5923c9cf581f</guid><pubDate>Sat, 05 Sep 2026 11:44:44 +0000</pubDate><atom:updated>2026-09-05T11:44:44.940Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Madurai,மதுரை,விமான சேவை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/no77fga8/flight33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
மதுரை - சென்னை]]></media:title><media:description type="html"><![CDATA[ விமான சேவை அக்.25 முதல் நிறுத்தம்?]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/no77fga8/flight33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை-மதுரை-சென்னை வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை அக்டோபர் 25 முதல் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக விமான போக்குவரத்து துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><h2>68 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்த விமான சேவை </h2><p>இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்களால் கடந்த 68 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்த இந்த விமான சேவை, கட்டணம் குறைவாக இருந்ததால் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த சேவை நிறுத்தப்பட்டால், இந்த வழித்தடத்தில் நாள்தோறும் 5-க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கும் 'இண்டிகோ' மட்டுமே ஒரே விமான சேவை நிறுவனமாக நீடிக்கும் நிலை உருவாகும்.</p><p>போதிய பயணிகள் வருகை இல்லை என்பது உள்ளிட்ட காரணங்கள் சேவை நிறுத்தத்திற்கு சொல்லப்பட்டாலும், அதனை பயண முகவர்களும் சுற்றுலா அமைப்பாளர்களும் மறுத்துள்ளனர். எடுத்துக்காட்டாக, வெள்ளிக்கிழமை அன்று கூட சென்னையில் இருந்து மதுரைக்கு 159 பயணிகளும், மதுரையிலிருந்து சென்னைக்கு 70 பயணிகளும் இந்த விமானத்தில் பயணித்துள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p>மேலும், சென்னை-மதுரை வழித்தடமே லாபகரமாக இல்லை என்றால், மதுரை-பெங்களூரு இடையேயான சேவை மட்டும் எவ்வாறு லாபகரமாக இயங்கும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.</p><h2>சேவை தொடர வேண்டும் </h2><p>இத்தடத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, தென் மாவட்டங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை மந்திரியை நேரில் சந்தித்துப் பேசி, இச்சேவையைத் தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயண முகவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><h2>முகவர்கள் அதிருப்தி</h2><p>திருச்சியிலிருந்து ஐதராபாத், சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு இடங்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் புதிய<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88"> விமான சேவை</a>களைத் தொடங்கியுள்ள நிலையில், மதுரை மட்டும் ஏன் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது என்று மதுரை, சிவகாசி மற்றும் காரைக்குடியைச் சேர்ந்த முகவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.</p><p>அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலம் சுற்றுலாவுக்கான உச்சக்கட்ட காலமாகும். தசரா, தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் போன்ற பண்டிகைகள் வரவுள்ள நிலையில், வெளிநாட்டுப் பயணிகள் பலர் தென் தமிழகத்திற்கு வரத் திட்டமிட்டு ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்திருக்கக்கூடும்.</p><h2>விமான கட்டணங்கள் உயர வாய்ப்பு </h2><p>தற்போது இந்த சேவை ரத்து செய்யப்படுவதால் கட்டணங்கள் உயர வாய்ப்புள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மதுரைக்கு வருவதைத் தவிர்க்கும் சூழல் உருவாகி, உள்ளூர் சுற்றுலாத்துறை கடுமையாகப் பாதிக்கப்படும் என மதுரை டிராவல்ஸ் நிர்வாகி கவலை தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திருவள்ளூர்: ஏ.டி.எம். இயந்திரத்தை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - மோப்பநாய் உதவியுடன் போலீஸ் தீவிர விசாரணை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvallur-thieves-make-off-with-atm-police-conduct-intensive-investigation-with-the-help-of-a-sniffer-dog</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvallur-thieves-make-off-with-atm-police-conduct-intensive-investigation-with-the-help-of-a-sniffer-dog#comments</comments><guid isPermaLink="false">4381a672-5fbe-4723-95af-ee6a2d216ed2</guid><pubDate>Sat, 05 Sep 2026 11:40:15 +0000</pubDate><atom:updated>2026-09-05T11:40:15.059Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thiruvallur,திருவள்ளூர்,ATM,ஏ.டி.எம்.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/t30zckng/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/t30zckng/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர்,</p><p>திருவள்ளூர் மாவட்டம் கூடப்பாக்கம் பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தில் இருந்து மர்ம நபர்கள் சிலர் பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியில், அங்கிருந்த ஏ.டி.எம். இயந்திரத்தை பெயர்த்து எடுத்து கொண்டு சென்றுள்ளனர். </p><p>அந்த ஏ.டி.எம். இயந்திரத்தில் சுமார் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்ததோடு, மோப்பநாய்கள் உதவியோடு கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.  </p> ]]></content:encoded></item><item><title>வி.சி.க. தலைவர் திருமாவளவனுடன் த.வெ.க. அமைச்சர்கள் சந்திப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-ministers-meet-vck-leader-thirumavalavan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-ministers-meet-vck-leader-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">dcec5655-91e2-48b6-85a4-2d943c1124eb</guid><pubDate>Sat, 05 Sep 2026 11:34:50 +0000</pubDate><atom:updated>2026-09-05T11:34:50.623Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,த.வெ.க.,திருமாவளவன்,Thirumavalavan,VCK,வி.சி.க.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/aphbpywe/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/aphbpywe/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை அவரது கட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று இன்று த.வெ.க. அமைச்சர்கள் இன்று நேரில் சந்தித்து பேசினர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் ஆகியோர் இணைந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சென்னை: 19-வது மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-youth-commits-suicide-by-jumping-from-19th-floor</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-youth-commits-suicide-by-jumping-from-19th-floor#comments</comments><guid isPermaLink="false">993f3ad1-6324-44b5-8c4a-83ce5ace91c7</guid><pubDate>Sat, 05 Sep 2026 11:13:26 +0000</pubDate><atom:updated>2026-09-05T11:13:26.274Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,வாலிபர் தற்கொலை,Youth suicide,மாடியில் இருந்து குதித்து,From the floor,Jumping</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/pno16sju/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வாலிபர் தற்கொலை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/pno16sju/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a> அம்பத்தூர் பகுதியில் உள்ள 19-வது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">மாடியில் இருந்து குதித்து</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">வாலிபர் தற்கொலை</a> செய்தார்.</p><h2>அடுக்குமாடி குடியிருப்பு</h2><p>சென்னை அருகே ஆவடி, காந்திநகர், வள்ளலார் தெருவைச் சேர்ந்த சந்தோஷ் (வயது 23), அம்பத்தூர் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். வழக்கம்போல் நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து, அம்பத்தூர் அத்திப்பட்டு பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்றார். </p><h2>19-வது மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை</h2><p>அங்குள்ள 19-வது மாடிக்குச் சென்ற சந்தோஷ், திடீரென அங்கிருந்து குதித்துவிட்டார். இதில் தலை மற்றும் 2 கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார், வழக்குப்பதிவு செய்து, சந்தோஷ் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை; நவம்பர் 1-ந்தேதிக்குள் மாற்ற வேண்டும் - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/shop-nameboards-must-be-in-tamil-high-court-issues-stern-order-to-make-the-change-by-november-1st</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/shop-nameboards-must-be-in-tamil-high-court-issues-stern-order-to-make-the-change-by-november-1st#comments</comments><guid isPermaLink="false">7930427d-3327-484e-9641-d9b0aa376197</guid><pubDate>Sat, 05 Sep 2026 11:06:25 +0000</pubDate><atom:updated>2026-09-05T11:06:25.141Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>High Court,ஐகோர்ட்டு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/2x7n0ix1/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/2x7n0ix1/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை மாநகராட்சி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருக்கக்கூடிய கடைகளுக்கு தமிழில் பெயர் பலகைகள் வைக்க வேண்டும் என்று கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. பெயர் பலகைகளில் தமிழ் பெயருக்கு கீழ் ஆங்கிலத்தில் பெயர் வைத்துக் கொள்ளலாம் என்றும், பெயரை மாற்றத் தவறினால் 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><p>இந்த உத்தரவை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பையை சேர்ந்த இந்திய சில்லறை வர்த்தகர்கள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி கே.சுரேந்தர் முன்பு விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த தயாராக இருப்பதாகவும், அதற்கு மூன்று மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் மனுதாரர் சங்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். </p><p>இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி கடைசி வாய்ப்பாக நவம்பர் 1-ந்தேதிக்குள் கடைகளின் பெயர் பலகைகளை தமிழில் மாற்ற வேண்டும் எனவும் தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்தார். </p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் திடீர் வேலைநிறுத்தம்: 272 படகுகள் கரையில் நிறுத்தம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-powerboat-fishermen-go-on-a-sudden-strike-272-boats-docked-at-the-shore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-powerboat-fishermen-go-on-a-sudden-strike-272-boats-docked-at-the-shore#comments</comments><guid isPermaLink="false">c77e1d4a-d2bb-47d0-8d33-d98b90da9389</guid><pubDate>Sat, 05 Sep 2026 10:33:40 +0000</pubDate><atom:updated>2026-09-05T10:33:40.254Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>fishermen,Thoothukudi,தூத்துக்குடி,நிறுத்தம்,strike,விசைப்படகு மீனவர்கள்,வேலைநிறுத்தம்,boats,stopped,படகுகள்,கடற்கரையில்,Shore,motorboats</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/sf59vs8z/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-272-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூத்துக்குடியில் 272 படகுகள் கரையில் நிறுத்தம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/sf59vs8z/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-272-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a>யில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">விசைப்படகு மீனவர்கள்</a> இன்று கடலுக்கு செல்லாமல் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">வேலைநிறுத்தப் போராட்டத்தில்</a> ஈடுபட்டதால், 272 படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. </p><p>தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 'கலசல்' வகை மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததைக் கண்டித்து, தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லாமல், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக 272 விசைப்படகுகள் துறைமுகத்திலேயே கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.</p><h2>கலசல் வகை மீன்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை</h2><p>தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தை மையமாகக் கொண்டு நூற்றுக்கணக்கான விசைப்படகுகள் மூலம் தினமும் கடலுக்குச் சென்று மீன்பிடித் தொழில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சமீபநாட்களாகக் கடலில் பிடிக்கப்பட்டு வரும் கலசல் வகை மீன்களுக்குத் துறைமுகத்தில் போதிய மற்றும் நியாயமான விலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. </p><h2>இன்று திடீர் வேலை நிறுத்தம்</h2><p>மீன்பிடிக்கச் செல்வதற்கான டீசல் மற்றும் ஆட்களுக்கான செலவைக்கூட ஈடுகட்ட முடியாத சூழல் நிலவுவதால், விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் மீனவர்கள் இணைந்து இன்று ஒருநாள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதில்லை எனத் திடீர் முடிவெடுத்தனர். </p><h2>272 விசைப்படகுகள் கரையில் நிறுத்தம்</h2><p>இதனால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தைச் சேர்ந்த 272 விசைப்படகுகளும் கடலுக்குச் செல்லாமல் துறைமுகத்திலேயே வரிசையாகக் கட்டி வைக்கப்பட்டுள்ளன. திடீர் வேலைநிறுத்தம் காரணமாக மீன் வியாபாரம் மற்றும் ஏல நடவடிக்கைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு, மீன்பிடி துறைமுகமே பரபரப்பின்றி ஆள்நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>மாற்றுத்திறனாளிக்கான போட்டி அல்ல இது மாற்றத்திற்கான போட்டி - கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/this-is-not-a-competition-for-the-differently-abled-it-is-a-competition-for-change-kanimozhi-santhosh-mla</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/this-is-not-a-competition-for-the-differently-abled-it-is-a-competition-for-change-kanimozhi-santhosh-mla#comments</comments><guid isPermaLink="false">a36cf746-addc-44f3-b683-f4f3fddb9324</guid><pubDate>Sat, 05 Sep 2026 09:49:44 +0000</pubDate><atom:updated>2026-09-05T09:49:44.628Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>MLA,competition,எம்.எல்.ஏ,மாற்றுத்திறனாளி,போட்டி,Change,மாற்றம்,Kanimozhi,differently-abled,கனிமொழி சந்தோஷ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/fugl5jay/kanimozhisanthosh.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ ]]></media:title><media:description type="html"><![CDATA[ மாற்றுத்திறனாளிக்கான போட்டி அல்ல இது மாற்றத்திற்கான போட்டி - கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/fugl5jay/kanimozhisanthosh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p>மாற்றுத்திறனாளிகான போட்டி அல்ல இது மாற்றத்திற்கான போட்டி என்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D">கனிமொழி சந்தோஷ்</a> எம்.எல்.ஏ தெரிவித்தார்.</p><h2> பாரா கிரிக்கெட்</h2><p>கோவை சரவணம்பட்டியில் கோயம்புத்தூர் கேலக்ஸி ரோட்டராக்ட் மன்றம் மற்றும் யாழ் ஹோம்ஸ் சார்பில் நடத்தப்பட்டஇந்திய பாரா கிரிக்கெட் லீக்  கிரிக்கெட் போட்டியில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.</p><h2>15 மாநிலங்கள்</h2><p>இந்தியாவின் 15 வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வீரர்கள் கலந்து கொண்ட இந்த போட்டி, தொடர்ந்து 3 நாட்கள் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு இணையான உற்சாகத்துடனும், விளையாட்டு உணர்வுடனும் இந்தப் போட்டி நடைபெற்றுவருகிறது.</p><p><strong>நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி பேசியதாவது:-</strong></p><h2> திறமைகள்</h2><p>“<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF">மாற்றுத்திறனாளிகளுக்கான</a> ஒரு நிகழ்ச்சி என்று மட்டும் இதை பார்க்க முடியாது. அவர்களுடைய திறமைகளை வெளிக்கொண்டு வந்து, அவர்களுக்கு உரிய வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு சிறப்பான நிகழ்ச்சியாக இது அமைந்திருக்கிறது. இந்தியாவின் 15 மாநிலங்களில் இருந்து வீரர்கள் வந்து, மூன்று நாட்கள் போட்டியில் பங்கேற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது.ஐபிஎல் போட்டிகளுக்கு இணையான உற்சாகத்துடன் இந்த போட்டி நடைபெற்றது.</p><h2>கடவுளின் குழந்தைகள்</h2><p>நான் எத்தனையோ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் நான் மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன்.‘கடவுளின் குழந்தைகள்’ என்று இவர்களை அழைப்பது மட்டும் போதாது. அவர்களின் திறமைகளை அங்கீகரித்து, அவர்களுக்கு சமமான வாய்ப்புகளையும் உரிய தளத்தையும் உருவாக்க வேண்டும். அந்த வகையில், இவர்களுக்காக நடத்தப்பட்டுள்ள இந்த கிரிக்கெட் போட்டி மிகவும் பாராட்டுக்குரியது.</p> <h2>முன்னுரிமை</h2><p>தவெக அரசு விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்து வருகிறது. அனைத்து தரப்பினருக்கும் விளையாட்டில் சமமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். குறிப்பாக மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களின் திறமைகளை ஊக்குவித்து, அவர்கள் மேலும் பல உயரங்களை அடைய தேவையான ஆதரவை வழங்க வேண்டும்.</p><p>இத்தகைய சிறப்பான போட்டியை ஏற்பாடு செய்த ரோட்டரி கேலக்சி அமைப்பினருக்கும், இதில் பங்கேற்ற 15 மாநிலங்களை சேர்ந்த அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்” என  தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>நெல்லை: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான குழாய்கள் எரிந்து நாசம் - கரும்புகையால் பொதுமக்கள் அவதி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-pipes-worth-several-lakh-rupees-destroyed-by-fire-public-distressed-by-thick-black-smoke</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-pipes-worth-several-lakh-rupees-destroyed-by-fire-public-distressed-by-thick-black-smoke#comments</comments><guid isPermaLink="false">db733ac6-504e-4981-ba74-a447a770200a</guid><pubDate>Sat, 05 Sep 2026 09:46:53 +0000</pubDate><atom:updated>2026-09-05T09:46:53.258Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Tirunelveli,Fire</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/w3asqrl7/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/w3asqrl7/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>நெல்லை மாவட்டம் பொதிகை நகர் அருகே மாநகராட்சி கூட்டு குடிநீர் திட்டப் பணிகளுக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ஹெச்.டி.பி. குழாய்கள் இன்று திடீரென தீப்பிடித்து எரிந்தன. அதில் இருந்து வெளியேறிய கரும்புகை சுமார் 4 கி.மீ. தொலைவுக்கு பரவியதால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டது. </p><p>இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு சுவாசக்கோளாறு ஏற்பட்டு பெரும் அவதிக்குள்ளாகினர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பாளையங்கோட்டை தீயணைப்புத்துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். </p>]]></content:encoded></item><item><title>கோவை: ஆடிட்டர் வீட்டில் 75 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-75-kg-of-silver-items-stolen-from-auditors-house</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-75-kg-of-silver-items-stolen-from-auditors-house#comments</comments><guid isPermaLink="false">ed7870b9-5ccd-4200-a519-93718adb21e4</guid><pubDate>Sat, 05 Sep 2026 09:43:15 +0000</pubDate><atom:updated>2026-09-05T09:43:15.978Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,திருட்டு,House,வீடு,Theft,Auditor,ஆடிட்டர்,வெள்ளி பொருட்கள்,silver items</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/6do8v6ca/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வெள்ளி பொருட்கள் திருட்டு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/6do8v6ca/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88">கோவை</a> ஒப்பணக்காரவீதி பகுதியில் வசித்து வரும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1">ஓய்வு பெற்ற</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D">ஆடிட்டர்</a> ஒருவரின் வீட்டில் இருந்து 75 கிலோ <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">வெள்ளிப் பொருட்களை திருடிச்</a> சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். </p><h2>ஓய்வு பெற்ற ஆடிட்டர்</h2><p>கோவை ஒப்பணக்காரவீதி பகுதியில் வசித்து வரும் சேஷகிரி (வயது70), தனியார் நிறுவனத்தில் ஆடிட்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் பெங்களூருவில் வசித்து வரும் தனது மகனை பார்ப்பதற்காக ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றார். அங்கு ஒரு மாதம் தங்கி இருந்துவிட்டு நேற்று காலை கோவையில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். </p><h2>75 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு</h2><p>அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு சுமார் 75 கிலோ வெள்ளி பூஜை பொருட்கள், வெள்ளித்தட்டு, வெள்ளி குத்துவிளக்கு உள்ளிட்ட வெள்ளிப்பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். திருட்டு போன வெள்ளி பொருட்களின் மதிப்பு ரூ.1 1/2 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் யானைகள் வழித்தடங்களை அடையாளம் காண 3 மாதங்கள் அவகாசம் - ஐகோர்ட்டு உத்தரவு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-court-orders-three-month-timeframe-to-identify-elephant-corridors-in-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-court-orders-three-month-timeframe-to-identify-elephant-corridors-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">80910e55-4a7b-4690-a57a-fc14de00dcf4</guid><pubDate>Sat, 05 Sep 2026 08:50:03 +0000</pubDate><atom:updated>2026-09-05T08:50:03.065Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,Tamil Nadu,ஐகோர்ட்டு,Elephants,யானைகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/n2wzxpmj/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/n2wzxpmj/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டில் உள்ள யானைகள் வழித்தடங்களை அடையாளம் கண்டு அறிவிக்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி கடந்த 2019-ம் ஆண்டு விலங்குகள் நல ஆர்வலர் எஸ்.முரளிதரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில், ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், யானைகள் வழித்தடங்களை கண்டறிய, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் தலைமையில் இரண்டு குழுக்களை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது.</p><p>இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார், நீதிபதி கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு குழு அடையாளம் கண்டிருக்கக்கூடிய 41 பகுதிகளையும் யானைகள் வழித்தடங்களாக அறிவிக்க வேண்டுமா என ஆய்வு செய்து வருவதாக முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் குழு தகவல் தெரிவித்தது. </p><p>இதனையடுத்து, தமிழகத்தில் யானைகள் வழித்தடங்களாக அறிவிக்க வேண்டிய பகுதிகளை அடையாளம் காண முதன்மை தலைமை வன பாதுகாவலர் தலைமையிலான குழுவுக்கு 3 மாத காலம் அவகாசம் வழங்கிய ஐகோர்ட்டு, இந்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 4-ந்தேதிக்கு ஒத்திவைத்தது. </p>]]></content:encoded></item><item><title>பழனியில் 12-ந்தேதி முதல் மீண்டும் ரோப் கார் சேவை தொடக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rope-car-service-in-palani-to-resume-from-the-12th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rope-car-service-in-palani-to-resume-from-the-12th#comments</comments><guid isPermaLink="false">1e17c3b9-f47b-4876-a985-3fe1867505c1</guid><pubDate>Sat, 05 Sep 2026 08:29:49 +0000</pubDate><atom:updated>2026-09-05T08:29:49.698Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Palani Murugan Temple,பழனி முருகன் கோவில்,ரோப் கார் சேவை</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/lkw6wez9/15.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/lkw6wez9/15.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><p>உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவில், மலை மீது அமைந்துள்ளது. அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை பிரதான வழிகளாக உள்ளன. இதுதவிர பக்தர்கள் மலைக்கோவிலுக்கு எளிதில் சென்றுவர ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகள் பயன்பாட்டில் உள்ளது. இதில் ரோப்கார் வழியாக விரைவாகவும், பழனி மலையின் இயற்கை அழகை பார்த்து ரசித்தபடியும் செல்லலாம் என்பதால் பெரும்பாலானோர் ரோப்காரில் செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் இந்த ரோப்கார் சேவை பக்தர்களுக்கு சிறந்த சுற்றுலா அனுபவத்தை கொடுக்கிறது.</p><p>பழனி ரோப்கார் நிலையத்தில் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாதாந்திர, வருடாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவது வழக்கம். அப்போது ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டு பணி மேற்கொள்ளப்படும். அதன்படி பழனி முருகன் கோவில் ரோப்கார் நிலையத்தில், வருடாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூலை 20-ந்தேதி முதல் 45 நாட்களுக்கு ரோப் கார் சேவை இயங்காது என கோவில் நிர்வாகம் தெரிவித்தது. </p><p>அதன்படி, ஜூலை 20-ந்தேதி முதல் செப்டம்பர் 2-ந்தேதி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த காலகட்டத்தில் பக்தர்கள் மின்இழுவை ரெயில், படிப்பாதையை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு சென்று வந்தனர். </p><p>பராமரிப்புப் பணியின் முக்கிய பணிகளான புதிய பெட்டி பொருத்தம், சோதனை ஓட்டம் மற்றும் புனரமைப்புப் பணிகள் போன்றவை நடைபெற்றன. தற்போது பணிகள் அனைத்தும் நிறைவுபெற்றன. இந்த நிலையில், வருகிற 12-ந்தேதி முதல் மீண்டும் ரோப் கார் சேவை தொடங்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>“தவெக அரசின் நடவடிக்கைகளைப் பார்த்து தி.மு.க. ஒருபோதும் அஞ்சாது” - கனிமொழி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-will-never-be-afraid-of-the-governments-actions-kanimozhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-will-never-be-afraid-of-the-governments-actions-kanimozhi#comments</comments><guid isPermaLink="false">3fa83ad0-c6e6-4d13-8398-a75521c1931e</guid><pubDate>Sat, 05 Sep 2026 07:44:51 +0000</pubDate><atom:updated>2026-09-05T07:44:51.721Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,DMK,கனிமொழி,Kanimozhi,தி.மு.க.</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/lwiepau2/kanimozhi.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  கனிமொழி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/lwiepau2/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று (சனிக்கிழமை) காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.</p><p>இந்தநிலையில் தவெக அரசின் மிரட்டல்கள் மற்றும் சோதனைகளுக்கு தி.மு.க. ஒருபோதும் அஞ்சாது என்று அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்<a href="https://www.dailythanthi.com/topic/kanimozhi"> கனிமொழி </a>தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>காழ்ப்புணர்ச்சியின் உச்சம்</h2><p>சட்டமன்றத்தில் தி.மு.கழகத்தை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல், தொடர்ந்து அவதூறுகளையும் திசைதிருப்பல் நாடகங்களையும் அரங்கேற்றி வந்த தவெக அரசு, தற்போது காழ்ப்புணர்ச்சியின் உச்சத்திற்கே சென்று, கழக முதன்மைச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான கே.என்.நேரு அவர்களைப் பழிவாங்கப் பார்க்கிறது. </p><p>மிரட்டல்களுக்கும் சோதனைகளுக்கும் பணிந்து போகும் இயக்கம் தி.மு.கழகம் அல்ல. எதிர்க்கட்சியின் குரல்வளையை நெரிப்பதற்காக, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் இந்த ஜனநாயக விரோத தவெக அரசின் நடவடிக்கைகளைப் பார்த்து தி.மு.கழகம் ஒருபோதும் அஞ்சாது.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>11 மாத பயிற்சியை நிறைவு செய்த ராணுவ அதிகாரிகள் - உறுதிமொழி ஏற்று பணியில் இணைந்தனர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/army-officers-complete-training-take-oath-and-assume-duty</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/army-officers-complete-training-take-oath-and-assume-duty#comments</comments><guid isPermaLink="false">828e457f-506f-44c9-9840-da9bbb99aa84</guid><pubDate>Sat, 05 Sep 2026 07:43:52 +0000</pubDate><atom:updated>2026-09-05T07:43:52.259Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழ்நாடு,Chennai,Training,இந்திய ராணுவம்,indian army,ராணுவ அதிகாரிகள்,பயிற்சி முகாம்,Army officers</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/imh9sv1e/parar.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/imh9sv1e/parar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/chennai">சென்னை</a> ஆலந்தூரில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் (ஓடிஏ) இந்திய ராணுவத்தில் அதிகாரிகளாக பொறுப்பேற்க உள்ள இளம் அதிகாரிகள் பயிற்சியை நிறைவு செய்து பணியில் இணைந்தனர்</p><h2>கடுமையான பயிற்சி</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p><a href="https://www.dailythanthi.com/topic/chennai">சென்னையிலுள்ள</a> இந்திய ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியின் (OTA) பரமேஸ்வரன் அணிவகுப்பு மைதானத்தில் இன்று (5 செப்டம்பர் 2026) 'குறுகிய கால சேவை' (SSC) 122-வது பிரிவு மற்றும் SSC (பெண்கள்) 36-வது பிரிவு மாணவர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. பாரம்பரியமும் கண்ணியமும்  மிக்க இந்த நிகழ்வு, பயிற்சி அதிகாரிகள் மேற்கொண்ட பல மாத கால கடுமையான பயிற்சியின் நிறைவைக் குறிப்பதோடு, அவர்கள் இந்திய ராணுவத்தின் எதிர்காலத் தலைவர்களாக உருவெடுப்பதையும் பறைசாற்றியது.</p><h2>சர்வதேச எல்லைகளுக்கு அப்பால்</h2><p>கடமை மற்றும் தியாக உணர்வை வெளிப்படுத்தும் வகையில், மொத்தம் 313 ஆண் அதிகாரி பயிற்சி மாணவர்களும், 29 பெண் அதிகாரி பயிற்சி மாணவர்களும் இந்திய ராணுவத்தின் பல்வேறு பிரிவுகள் மற்றும் சேவைகளில் அதிகாரிகளாகப் பணியில் இணைந்தனர். மேலும், சீஷெல்ஸ், தான்சானியா, உகாண்டா, ஜிம்பாப்வே, எஸ்வாட்டினி, பூட்டான் மற்றும் லெசோதோ ஆகிய நட்பு நாடுகளைச் சேர்ந்த ஏழு ஆண் மற்றும் பத்து பெண் பயிற்சி அதிகாரிகளும் தங்கள் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தனர். இது சர்வதேச எல்லைகளுக்கு அப்பால் நல்லுறவையும் ஒத்துழைப்பையும் வளர்க்கும் விதமாக அமைந்தது.</p> <h2>சிறப்பான சாதனை</h2><p>ராணுவ இசைக்கு ஏற்ப பயிற்சி அதிகாரி மாணவர்கள் கச்சிதமான ஒருங்கிணைப்புடன் அணிவகுத்துச் சென்றது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.</p><p>கடற்படைத் தளபதி அட்மிரல் கிருஷ்ண சுவாமிநாதன் இந்த அணிவகுப்பைப் பார்வையிட்டார்; புதிதாகப் பணியில் இணைந்த அதிகாரிகளுக்கு அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அணிவகுப்பைப் பார்வையிட்ட அதிகாரி, பயிற்சி மாணவர்கள் மற்றும் OTA பணியாளர்களின் சிறப்பான சாதனைகளைப் பாராட்டினார். </p><h2>உறுதிமொழி</h2><p>மேலும், புதிதாகப் பணியில் இணைந்த அதிகாரிகள் 'நாட்டிற்கான தன்னலமற்ற சேவை' மற்றும் அனைத்து முயற்சிகளிலும் சிறந்து விளங்குதல் ஆகிய ராணுவத்தின் முக்கிய விழுமியங்களைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தினார். சிறப்பான அணிவகுப்பைத் தொடர்ந்து நடைபெற்ற 'பிப்பிங்' (Pipping) விழாவில், தங்கள் தோள்களில் மின்னும் ராணுவ பிரிவுகள் மற்றும் படைவகுப்புகளின் சின்னங்களை அணிந்த புதிய அதிகாரிகள், இந்திய அரசியலமைப்புக்கு விசுவாசமாக இருப்பதற்கும், எத்தகைய சூழலிலும் நாட்டைப் பாதுகாப்பதற்கும் உறுதியளிக்கும் வகையில் உறுதிமொழியை ஏற்றனர்.</p><h2>பயிற்சி நிறைவு அணிவகுப்பு</h2><p>இந்நிகழ்ச்சியில், பயிற்சியை நிறைவு செய்த அதிகாரிகளின் (Officer Cadets) பெற்றோர்கள், முக்கிய பிரமுகர்கள், தூதரகப் பிரதிநிதிகள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.</p><p>மதிப்பாய்வு அதிகாரியாகப் பங்கேற்ற கடற்படைத் தளபதி, BUO குர்கீரத் சிங் ஹோராவுக்கு 'கவுரவ வாள்' (Sword of Honour) மற்றும் வெண்கலப் பதக்கத்தையும், AUO அபினப் சௌஹானுக்கு OTA தங்கப் பதக்கத்தையும், ACA நிகெட் சிங் தோமருக்கு வெள்ளிப் பதக்கத்தையும் வழங்கினார்.</p><p>சென்னை அதிகாரி பயிற்சி அகாடமியில் (OTA) நடைபெற்ற இந்தப் பயிற்சி நிறைவு அணிவகுப்பானது, இந்திய ராணுவத்தின் பெருமைமிக்க பாரம்பரியத்தையும் மரபுகளையும் தொடர்ந்து நிலைநிறுத்தவிருக்கும் எதிர்கால ராணுவத் தலைவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, வீரம் மற்றும் தளராத ஈடுபாடு ஆகியவற்றிற்குச் சான்றாகத் திகழ்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>