<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 18 Sep 2026 07:17:00 +0000</lastBuildDate><item><title>பெண்ணை வீட்டுக்குள் பூட்டி வைத்து தாக்குதல்: கணவர் உள்பட 3 பேருக்கு 5 ஆண்டு சிறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-5-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-5-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88#comments</comments><guid isPermaLink="false">c0332f6c-4a5e-450d-b547-5e409e193f46</guid><pubDate>Fri, 18 Sep 2026 07:11:27 +0000</pubDate><atom:updated>2026-09-18T07:11:27.807Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கணவர்,தாக்குதல்,Thoothukudi,தூத்துக்குடி,சிறை தண்டனை,பெண்,Woman,assault,3 people,3 பேர்,jailed</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/swq1dt9r/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 3 பேருக்கு சிறை தண்டனை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/swq1dt9r/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D">பெண்</a>ணை வீட்டுக்குள் பூட்டி வைத்து தாக்கிய வழக்கில், கணவர், அவரது சகோதரர் மற்றும் மாமியார் ஆகிய 3 பேருக்குத் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. </p><h2>பெண்ணை வீட்டுக்குள் பூட்டி வைத்து தாக்குதல்</h2><p>தூத்துக்குடி அருகேயுள்ள தருவைக்குளம் மேலத்தெருவைச் சேர்ந்த முருகன் (வயது 46) மனைவி குறியீஸ்வரி(35). இந்த நிலையில் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக, முருகன் அவரது சகோதரர் சண்முகசுந்தரராஜ்(41) மற்றும் தாயார் (மாமியார்) பூச்சம்மாள்(75) ஆகியோர் சேர்ந்து குறியீஸ்வரியை வீட்டுக்குள் பூட்டி வைத்து தீவிரமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">தாக்கியுள்ளனர்</a>. இதில் குறியீஸ்வரி பலத்த காயமடைந்தார்.</p><h2>3 பேர் கைது</h2><p>இந்த சம்பவம் குறித்து குறியீஸ்வரி அளித்த புகாரின் பேரில், தருவைக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணவர் முருகன் உள்பட 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-1-ல் நடைபெற்று வந்தது.</p><h2>3 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை</h2><p>இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி, குற்றம் சாட்டப்பட்ட முருகன், சண்முகசுந்தரராஜ் மற்றும் பூச்சம்மாள் ஆகிய 3 பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவர்கள் 3 பேருக்கும் தலா 5 ஆண்டுக்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">சிறை தண்டனை</a> வழங்கி தீர்ப்பளித்தார். </p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் அமையள்ள முதல் உலகளாவிய திறன் மையம்: முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/first-global-capability-centre-to-be-set-up-in-tamil-nadu-mou-signed-in-the-presence-of-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/first-global-capability-centre-to-be-set-up-in-tamil-nadu-mou-signed-in-the-presence-of-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">575821e0-0d6b-4681-b9d4-b73313ce624f</guid><pubDate>Fri, 18 Sep 2026 07:08:57 +0000</pubDate><atom:updated>2026-09-18T07:08:57.529Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,அமெரிக்கா,America,தமிழகம்,தமிழ்நாடு அரசு,புரிந்துணர்வு ஒப்பந்தம்,TamilNadu Govt,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/a7s28op3/nija.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/a7s28op3/nija.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டில் அமைய முதல் உலகளாவிய திறன் மையத்திற்கான (Global Capability Centre - GCC) புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதல்-அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">ச.ஜோசப் விஜய்</a> முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.</p><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழ்நாடு அரசால் புதிதாக அறிவிக்கப்பட்ட OMR GCC வழித்தடத்தில் அமைந்துள்ள DLF Downtown தரமணி வளாகத்தில் 250 நபர்களுக்கு உயர் மதிப்பு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட வால்கிரீன்ஸ் (Wall Greens) இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் முதல்முறையாக இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் அமைக்கவுள்ள தனது முதல் உலகளாவிய திறன் மையத்திற்கான (Global Capability Centre - GCC) புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதல்-அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">ச.ஜோசப் விஜய்</a> அவர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">ச.ஜோசப் விஜய் </a>அவர்கள் முன்னிலையில் இன்று (18.9.2026) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், தமிழ்நாடு அரசால் சென்னையில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள OMR GCC வழித்தடத்தில் அமைந்துள்ள DLF Downtown தரமணி வளாகத்தில், முதலாம் ஆண்டு 250 நபர்களுக்கு உயர் மதிப்பு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலும், வரும் ஆண்டுகளில் விரிவாக்கம் மேற்கொள்ளும் வகையிலும் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட வால்கிரீன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அமைக்கவுள்ள தனது முதல் உலகளாவிய திறன் மையத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.</p><h2>வால்கிரீன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்</h2><p>அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட வால்கிரீன்ஸ் நிறுவனம், உலகளவில் முன்னணி சுகாதார மற்றும் மருந்தக சேவை நிறுவனமாக விளங்குகிறது. மருந்தகச் சேவைகள், சுகாதாரப் பராமரிப்பு மற்றும் நுகர்வோர் சுகாதாரப் பொருட்கள் துறைகளில் செயல்பட்டுவரும் இந்நிறுவனம், தனது முதல் உலகளாவிய திறன் மையத்தை (Global Capability Centre – GCC) இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் அமைக்க முன்வந்துள்ளது. </p><p>தொழில்நுட்பம் மற்றும் வணிக சேவைகளை மையமாக கொண்டு அமையவுள்ள இம்மையம், தமிழ்நாடு அரசால் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள OMR GCC வழித்தடத்தில் அமைந்துள்ள DLF Downtown தரமணி வளாகத்தில் நிறுவப்படவுள்ளது.</p><p>இன்று தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர்</a> அவர்கள் முன்னிலையில், முதல் ஆண்டு 250 நபர்களுக்கு உயர் மதிப்பு வேலைவாய்ப்பு மற்றும் வரும் ஆண்டுகளில் விரிவாக்கம் என்ற வகையில் இந்நிறுவனத்தின் உலகளாவிய திறன் மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. </p><p>இந்நிறுவனம் இந்தியாவிலேயே முதன் முறையாக அமைக்கவுள்ள உலகளாவிய திறன் மையம் தமிழ்நாட்டில் அமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், GCC துறையில் உயர்மதிப்புக் கொண்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தமிழ்நாடு அரசின் கொள்கைக்கு மேலும் ஊக்கமளிப்பதுடன், தமிழ்நாட்டின் GCC வளர்ச்சிப் பயணத்தில் வால்கிரீன்ஸ் இணைவது, மாநிலம் உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் வணிகச் சேவை மையமாக உருவெடுத்து வருவதையும் எடுத்துக்காட்டுகிறது.</p><p>இந்நிகழ்வின்போது, தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர்</a> அவர்கள், தமிழ்நாட்டிலுள்ள Tier-II &amp; Tier-III நகரங்களிலுள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட கேட்டுக்கொண்டார்.</p><p>இந்நிகழ்வில், தொழில் துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா, தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், இ.ஆ.ப., தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ச. விஜயகுமார், இ.ஆ.ப., வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் தீபக் ஜேக்கப், இ.ஆ.ப., வால்கிரீன்ஸ் உலகளாவிய திறன் மையத்தின் தலைவர் உமாபதி விஸ்வநாதன், வால்கிரீன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் மசூத் அகமது மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: முதல்-அமைச்சர் விஜய் 4 நாட்கள் பிரசாரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madhuranthakam-dharapuram-by-elections-chief-minister-vijay-to-campaign-4-days</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madhuranthakam-dharapuram-by-elections-chief-minister-vijay-to-campaign-4-days#comments</comments><guid isPermaLink="false">085524fb-b943-4269-989e-2b77a78d9bd7</guid><pubDate>Fri, 18 Sep 2026 06:47:17 +0000</pubDate><atom:updated>2026-09-18T06:47:17.298Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,தேர்தல் பிரசாரம்,இடைத்தேர்தல்,By election,election campaign,மதுராந்தகம்,தாராபுரம்,Madhuranthakam,Dharapuram,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/v7krwk05/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/v7krwk05/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலையொட்டி முதல்-அமைச்சர் விஜய் 4 நாட்கள் பிரசாரம் மேற்கொள்கிறார்.</p><h2>இடைத்தேர்தல்</h2><p>தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் (தனி) மற்றும் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில் ஆளும் த.வெ.க., பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர், கம்யூனிஸ்டு கட்சிகள் தனித்தனியாக களம் காண்கின்றன. இதனால் 5 முனைப் போட்டி நிலவுகிறது.</p><p>மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. வேட்பாளராக பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஜானகிராமன் ஆகியோர் களம் இறங்கி உள்ளனர். தாராபுரத்தில் த.வெ.க. சார்பில் சத்தியபாமா, தி.மு.க. வேட்பாளராக சுகன்யா, அ.தி.மு.க. சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்டு சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் வேட்பாளராக கார்த்திகா ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.</p><h2>விஜய் பிரசாரம்</h2><p>2 தொகுதிகளிலும் போட்டியிடுபவர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து வருகிற 20-ந்தேதிக்கு பிறகு (அடுத்த வாரம்) அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்து இருக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மேற்கொண்டு உள்ளனர்.</p><p>இந்த நிலையில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளில் முதல்-அமைச்சர் விஜய் 4 நாட்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். இந்த மாதம் இறுதி மற்றும் அடுத்த மாதம் தொடக்கத்தில் ஒரு தொகுதிக்கு தலா 2 நாட்கள் என 4 நாட்கள் முதல்-அமைச்சர் விஜய் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். முதல்-அமைச்சர் விஜய் பேசுவதற்காக மதுராந்தகம், தாராபுரத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.</p><p>தாராபுரம் உடுமலை சாலையில் உள்ள திருமலைபாளையம் பகுதியில் பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் த.வெ.க. இருப்பதால் முதல்-அமைச்சர் விஜய்யின் பிரசாரம் அதற்கு கை கொடுக்கும் என்று கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.</p><h2>பலத்த பாதுகாப்பு</h2><p>கடந்த சட்டமன்ற தேர்தலில் முதல்-அமைச்சர் விஜய் பிரசாரம் மேற்கொண்ட போது அவரை பார்ப்பதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது. அவரது பிரசாரக் கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. இந்த நிலையில் தான் தற்போது முதல்-அமைச்சராக விஜய் தேர்தல் பிரசாரத்திற்கு செல்ல உள்ளார். இதையொட்டி 2 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. த.வெ.க. ஆளும் கட்சியான பிறகு முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் என்பதால் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.</p><h2>மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி</h2><p>தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கம்யூனிஸ்டு தலைவர்களும் 2 தொகுதிகளிலும் பிரசாரத்திற்கு தயாராகி வருகிறார்கள். மதுராந்தகம், தாராபுரம் 2 தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் பிரசாரம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார். இதேபோன்று எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பிரசார திட்டமும் தயாராகி வருகிறது.</p><h2>களை கட்டும் தேர்தல் களம்</h2><p>இப்படி இடைத்தேர்தல்களில் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட ஆயத்தமாகி வருவதால் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் தேர்தல் களம் களை கட்டுகிறது. தங்களது கட்சித் தலைவர்களை வரவேற்பதற்காக அனைத்து கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழுவீச்சில் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>
அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறேன் - சரத்குமார் பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-am-staying-away-from-politics-sarathkumars-interview</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-am-staying-away-from-politics-sarathkumars-interview#comments</comments><guid isPermaLink="false">ec9478f3-6c0a-4eaa-beaa-0f84bcb03144</guid><pubDate>Fri, 18 Sep 2026 06:41:32 +0000</pubDate><atom:updated>2026-09-18T06:41:32.613Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நாகர்கோவில்,Sarathkumar,சரத்குமார்,அரசியல்,politics,திருமண விழா,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/7ra2uqnb/9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/7ra2uqnb/9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>நாகர்கோவில், </p><p>"நான் அரசியலில் தற்போது இல்லை, ஒதுங்கி இருக்கிறேன். தமிழக அரசின் செயல்பாடு குறித்த கேள்விக்கு பதில் அளிக்க நிறைய பேர் உள்ளனர்" என்று மழுப்பலாக கூறிவிட்டு சென்றார். </p><h2>திருமண விழாவில் சரத்குமார்</h2><p>நாகர்கோவிலில் நடந்த ஒரு திருமண விழாவில் பிரபல நடிகரும், பா.ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினருமான சரத்குமார் கலந்து கொண்டார். அவர் மணமக்களை வாழ்த்தியதோடு, பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி மணமக்களுடன் இணைந்து ஏழைகளுக்கு தையல் எந்திரங்களை வழங்கினார்.</p><h2>நான் அரசியலில் தற்போது இல்லை..</h2><p>பின்னர் நிருபர்கள், சரத்குமாரிடம் கேள்வி எழுப்பினர். அதாவது "தமிழக முதல்-அமைச்சர் விஜய் வெளிநாட்டிற்கு சென்று முதலீடுகளை ஈர்த்து இருப்பதாக கூறியிருக்கிறார். அதுபற்றி என்ன சொல்கிறீர்கள்" என்று கேட்டனர். அதற்கு அவர் உடனடியாக பதில் அளிக்காமல் நகர்ந்து சென்றார். நடந்து சென்று கொண்டே அவர் கூறுகையில் "நான் அரசியலில் தற்போது இல்லை, ஒதுங்கி இருக்கிறேன். தமிழக அரசின் செயல்பாடு குறித்த கேள்விக்கு பதில் அளிக்க நிறைய பேர் உள்ளனர். மாநில தலைவர் இருக்கிறார், அவர் பதில் அளிப்பார்" என்று மழுப்பலாக கூறிவிட்டு சென்றார். சரத்குமாரின் இந்த பதில் அங்கு இருந்தவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.</p> ]]></content:encoded></item><item><title>தாராபுரம் த.வெ.க. வேட்பாளர் காரை தாக்கியதாக அ.தி.மு.க. வேட்பாளர் உட்பட 9 பேர் மீது வழக்கு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-registered-against-9-people-including-the-aiadmk-candidate-for-attacking-the-car-of-the-tvk-candidate-from-dharapuram</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-registered-against-9-people-including-the-aiadmk-candidate-for-attacking-the-car-of-the-tvk-candidate-from-dharapuram#comments</comments><guid isPermaLink="false">5d8d0786-76dd-43f0-8c09-51761bf87bd5</guid><pubDate>Fri, 18 Sep 2026 06:36:31 +0000</pubDate><atom:updated>2026-09-18T06:36:31.965Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,TVK,தவெக,Tamilnadu,அதிமுக,தமிழகம்,வழக்குப்பதிவு,இடைத்தேர்தல்,case registration,தாராபுரம்,byelection,Dharapuram</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/l44vn72p/sathya.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/l44vn72p/sathya.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தாராபுரம், </p><p>தவெக வேட்பாளர் சத்தியபாமாவின் காரை தாக்கியதாக அ.தி.மு.க. வேட்பாளர் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.</p><p>திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரு கிற 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில், கடந்த 9-ந்தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. அதன்படி நேற்று முன்தினத்தோடு வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. மொத்தம் 51 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. </p><p>இதனையடுத்து வேட்புமனு பரிசீலனை தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. பெலிக்ஸ் ராஜா தலைமையில் நேற்று நடைபெற்றது. தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 22 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. </p><p>இதேபோல் சுயேட்சை வேட்பாளர்கள் 13 பேரின் வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மொத்தம் தாக்கலான 51 மனுக்களில், 22 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மீதமுள்ள 29 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. நாளை (சனிக்கிழமை) மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். அன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.</p><p>இந்நிலையில் தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமாவின் காரை தாக்கியதாக அ.தி.மு.க. வேட்பாளர் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக வேட்புமனுத்தாக்கல் செய்ய சென்ற போது அ.தி.மு.க.வினர், சத்தியபாமாவின் காரை தடுத்து நிறுத்தி தாக்கியதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் கடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பி.சத்தியபாமா. இவர் உள்ளாட்சித்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, திருப்பூர் மாவட்ட ஊராட்சி தலைவராக பொறுப்பு வகித்தார். </p><p>சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பின்னர், அ.தி.மு.க.வில் நிலவி வந்த உட்கட்சி பூசல்கள் மற்றும் தலைமை மீது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அதிருப்தி அடைந்தார்.</p><p>இதனை தொடர்ந்து, அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகியதோடு, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். பின்னர் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">விஜய்</a> தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தில் (த.வெ.க) அதிகாரப்பூர்வமாக தன்னை இணைத்துக்கொண்டார்.</p>]]></content:encoded></item><item><title>சமத்துவமும் சமூக நீதியும் தழைத்திட அயராது பாடுபட்டவர் இரட்டைமலை சீனிவாசன்: கனிமொழி எம்.பி.</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/irattamalai-srinivasan-worked-tirelessly-to-promote-equality-and-social-justice-kanimozhi-mp</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/irattamalai-srinivasan-worked-tirelessly-to-promote-equality-and-social-justice-kanimozhi-mp#comments</comments><guid isPermaLink="false">4976c635-4862-4e43-8ade-fa3dfe69d818</guid><pubDate>Fri, 18 Sep 2026 06:32:06 +0000</pubDate><atom:updated>2026-09-18T06:32:06.237Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,X Page,எக்ஸ் பதிவு,Kanimozhi MP,நினைவு நாள்,Memorial Day,இரட்டைமலை சீனிவாசன்,கனிமொழி எம்.பி.,Irattamalai Srinivasan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/3l2n566d/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாள்: கனிமொழி எம்.பி. பதிவு. ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/3l2n566d/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D">இரட்டைமலை சீனிவாசன்</a> நினைவு நாளையொட்டி தி.மு.க. துணை பொதுச் செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF">கனிமொழி எம்.பி.</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:</p><h2>'திராவிட மணி' இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாள்</h2><p>ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, உரிமை, அரசியல் பிரதிநிதித்துவத்திற்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்த சமூகப் போராளியும், திராவிட இயக்கத்தின் முன்னோடியுமான 'திராவிட மணி' இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D">நினைவு நாள்</a> இன்று. </p><p>சமத்துவமும் சமூக நீதியும் தழைத்திட அயராது பாடுபட்ட அன்னாரின் நினைவைப் போற்றி வணங்குகிறேன்.</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இரட்டைமலை சீனிவாசனார் பெரும்புகழ் போற்றுவோம் - சீமான்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-extol-the-great-renown-of-rettaimalai-srinivasanar-seeman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-extol-the-great-renown-of-rettaimalai-srinivasanar-seeman#comments</comments><guid isPermaLink="false">349a8bc6-9ef1-4f71-a9b6-85ef1d6e89f1</guid><pubDate>Fri, 18 Sep 2026 06:25:34 +0000</pubDate><atom:updated>2026-09-18T06:25:34.867Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,Seeman,இரட்டைமலை சீனிவாசன்,Rettaimalai Srinivasan</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/00fbu7ny/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/00fbu7ny/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இரட்டைமலை சீனிவாசனின் நினைவு நாளையொட்டி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>“தமிழ்நாட்டில் சாதிய அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட மக்களின் இழிவு நீங்கவும், சமவுரிமை பெற்றுக் கண்ணியமாக வாழவும் பாடுபட்டதோடு, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய  சமூகநீதிப்போராளி..! </p><p>“எந்தச் சொல் உன்மீது இழிச்சொல்லாகச் சுமத்தப்படுகிறதோ, அந்தச் சொல்லை நீ எழுச்சிச் சொல்லாக மாற்றாத வரை உனக்கு விடுதலை இல்லை” என்று முழங்கிய புரட்சியாளர்!</p><p>வர்ணாசிரம கோட்பாட்டிற்கு எதிராக ஒரு மாற்றுக் கோட்பாட்டை நீ உருவாக்கிக்கொள்ளாத வரை உனக்கு விடுதலை இல்லை என்று கற்பித்த பெருந்தகை..! இலண்டன் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்குக் குரல்கொடுத்த போராளி..!</p> <p>சாதியக் கொடுமைகளுக்கு எதிராக சட்டமன்றத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களை முன்மொழிந்து அவை நிறைவேற காரணமான சமூகச் சீர்திருத்தவாதி..! அண்ணல் காந்தியடிகளுக்கு தமிழ்ப் படிக்கவும், தமிழில் கையெழுத்திடவும் கற்றுக்கொடுத்த தமிழறிஞர்..!</p><p>தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் நினைவு நாளில் சமத்துவச் சமுதாயம் உருவாக்கிட வேண்டும் என்ற அவருடைய உயரிய கனவினை நிறைவேற்ற தொடர்ந்து அயராது பாடுபடுவோம் என்ற உள உறுதியோடு, அவருடைய பேரப்பிள்ளைகளாகிய நாம் பெருமிதத்தோடும், திமிரோடும் நம்முடைய புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்! நம்முடைய தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் பெரும்புகழ் போற்றுவோம்!”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சென்னை வங்கியில் ரூ.3.15 கோடி நகைகள் திருட்டு வழக்கில் 6 ஊழியர்கள் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/six-employees-arrested-in-rs-315-crore-jewelry-theft-case-at-a-chennai-bank</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/six-employees-arrested-in-rs-315-crore-jewelry-theft-case-at-a-chennai-bank#comments</comments><guid isPermaLink="false">8e63acd6-98f9-4082-a86d-a27989e9bfab</guid><pubDate>Fri, 18 Sep 2026 06:04:47 +0000</pubDate><atom:updated>2026-09-18T06:04:47.015Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,jewelry theft,பஞ்சாப் நேஷனல் வங்கி,Punjab National Bank,நகைகள் திருட்டு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/enn8wnhk/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/enn8wnhk/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை அயனாவரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் பொதுமக்கள் அடமானம் வைத்த ரூ.3 கோடி மதிப்புள்ள நகைகளை அந்த வங்கியின் மேலாளரே திருடிய சம்பவம் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியது. உண்மையான அடகு நகைகளை திருடிவிட்டு, அதற்கு பதில் போலியான நகைகளை வைத்து நூதன திருட்டு நடந்தது.</p><p>இதுதொடர்பாக, வங்கி நிர்வாகம் அளித்த புகாரின்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த வங்கியின் மேலாளரை கைது செய்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பாக, சென்னை கீழ்ப்பாக்கத்தில் செயல்படும் பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையிலும் இதுபோன்ற ஒரு அடகு நகை திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.</p><p>குறிப்பிட்ட அந்த வங்கியில் பணியாற்றும் மேலாளர்கள் உள்பட ஊழியர்கள் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பொதுமக்கள் அடகு வைத்த உண்மையான நகைகளை திருடிவிட்டு, அவற்றிற்கு பதில் போலி நகைகளை வைத்துள்ளனர். இந்த வங்கியிலும் ரூ.3.15 கோடி அளவிற்கு அடமான நகைகள் திருடப்பட்டுள்ளன.</p><p>இதுதொடர்பாக வங்கி ஊழியர்களான புழல் பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் (வயது 58), கொரட்டூரைச் சேர்ந்த சரவண பாபு (58), கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியைச் சேர்ந்த கோபிகா (30), மணலி சேக்காடு பகுதியைச் சேர்ந்த துரைபாபு ஜனார்த்தனன் (50), புரசைவாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் (36) மற்றும் சுனிதா (51) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.</p><p>இவர்களில் புருஷோத்தமன் உதவியாளராக உள்ளார். சரவண பாபு சீனியர் மேலாளராக உள்ளார். கோபிகா துணை மேலாளராகவும், துரைபாபு ஜனார்த்தனன் மேலாளராகவும், விக்னேஷ் தூய்மை பணியாளராகவும், சுனிதா குமாஸ்தாவாகவும் பணியாற்றினார்கள். கைதான இவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் தொழிலதிபர் வீட்டில் ரூ.3 கோடி மதிப்புள்ள நகை கொள்ளை: 3 பேர் கைது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/jewellery-worth-3-crore-stolen-from-businessmans-house-in-delhi-3-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/jewellery-worth-3-crore-stolen-from-businessmans-house-in-delhi-3-arrested#comments</comments><guid isPermaLink="false">549299a1-c443-4db6-b86c-93cc86dab013</guid><pubDate>Fri, 18 Sep 2026 05:59:29 +0000</pubDate><atom:updated>2026-09-18T05:59:29.269Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrest,புதுடெல்லி,கொள்ளை,police enquiry,Robbery,உணவகம்,The businessman</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/ujt4h0jm/7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ தேவ சந்திர சா- கமல் (அனில் காமத்) ]]></media:title><media:description type="html"><![CDATA[ டெல்லியில் தொழிலதிபர் வீட்டில் ரூ.3 கோடி மதிப்புள்ள நகை கொள்ளை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/ujt4h0jm/7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><p>டெல்லியில் தொழிலதிபர் ஒருவர் வீட்டில் ரூ.3 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் ரூ.4.31 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவை கொள்ளையடிக்கபட்டன. இந்த சம்பவம் தொடர்பாக வீட்டு வேலைக்காரன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.</p><h2>வெளிநாடு சென்ற உரிமையாளர்- கொள்ளை</h2><p><a href="https://www.dailythanthi.com/news/india">டெல்லி </a>வடக்கு மாவட்டத்தின் மால் ரோடு பகுதியில் வசிப்பவர் ஒரு பிரபல தொழிலதிபர். இவருடைய குடும்பத்தினர் கடந்த 2-ந்தேதி அன்று வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றனர். வீட்டில் யாரும் இல்லாத இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட இவர்களது புதிய வீட்டு வேலைக்காரனான கமல் (அனில் காமத்) மற்றும் அவனது கூட்டாளிகள், கடந்த 5-ந்தேதி இரவில் வீட்டின் பூட்டை உடைத்து லாக்கரில் இருந்த ரூ.3 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88">கொள்ளையடித்து</a> தப்பியோடினர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இதையடுத்து கடந்த 6-ந்தேதி அன்று காலை வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை அறிந்த மேலாளர், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.வடக்கு டெல்லி டிசிபி தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல்களைக் கொண்டு தீவிர விசாரணையை தொடங்கினர்.</p><h2>அதிரடி சோதனை</h2><p>விசாரணையில் குற்றவாளிகள் டெல்லியிலிருந்து தப்பி ஜார்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு சென்றது தெரியவந்தது. டெல்லி போலீசார் உடனடியாக ஜார்கண்ட் விரைந்து, அங்கு மறைந்திருந்த 17 வயது சிறுவன் ஒருவனைப் பிடித்தனர். அவன் கொடுத்த தகவலின் பேரில், பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் உள்ள சுகா நகர் கிராமத்திற்கு விரைந்தனர். அங்கு கமலின் மாமனார் தேவ சந்திர சா (வயது 49) என்பவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.</p><h2>தரைக்கு அடியில் புதைக்கப்பட்ட 'புதையல்'</h2><p>வீட்டில் சோதனையிட்ட போது நகைகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், வீட்டின் ஒரு அறையின் தரைப்பகுதி புதிதாக பூசப்பட்டிருப்பது குறித்து போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. எனவே, அந்த இடத்தை 5 அடி ஆழத்திற்கு தோண்டிய போது, உள்ளே ஒரு பை மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பையை திறந்து பார்த்தபோது போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அந்த பையில் 117 தங்க மற்றும் வைர நகை பொருட்கள் (நெக்லஸ்கள், வளையல்கள், மோதிரங்கள்) மற்றும் ரூ.4.31 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவை பத்திரமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தன.</p><h2>கைது</h2><p>இதற்கிடையில், போலீசாரிடம் சிக்காமல் தப்பியோடிய முக்கிய குற்றவாளியான கமல், கடந்த 16-ந்தேதி அன்று டெல்லியின் ஆனந்த் விகார் பகுதியில் வைத்து போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.</p><h2>நேபாளத்தில் 'கபே' வைக்க திட்டம்</h2><p>திருடப்பட்ட ரூ.3 கோடி நகைகளை சில மாதங்கள் கழித்து விற்றுவிட்டு, அந்த பணத்தைக் கொண்டு நேபாளத்திற்கு தப்பிச் சென்று அங்கு ஒரு ஆடம்பர உணவகம் அல்லது கபே தொடங்க அவர் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. ஆனால், அவரது திட்டத்தை முறியடித்த டெல்லி போலீசார், திருடப்பட்ட அனைத்து நகைகளையும் பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>
சிவகாசியில் பயங்கரம்...கட்டிங் இயந்திரத்தில் சிக்கி பெண் பலி!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/horror-in-sivakasi-woman-dies-after-getting-stuck-in-cutting-machine</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/horror-in-sivakasi-woman-dies-after-getting-stuck-in-cutting-machine#comments</comments><guid isPermaLink="false">cc957865-779a-4ca0-aad1-acf59117c465</guid><pubDate>Fri, 18 Sep 2026 05:42:32 +0000</pubDate><atom:updated>2026-09-18T05:42:32.179Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,Sivakasi,சிவகாசி,பெண் பலி,எந்திரம்,lady died</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/dut12zqw/8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இயந்திரத்தில் சிக்கி பெண் பலி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/dut12zqw/8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகாசி,</p><p>சிவகாசியில் கட்டிங் செய்யும் இயந்திரத்தில் சிக்கி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>பெண் பலி</h2><p>சிவகாசியை சேர்ந்த பாண்டியம்மாள் என்பவர் அங்குள்ள காகித அட்டை தயாரிக்கும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">நிறுவனத்தில்</a> கட்டிங் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். இன்று காலையில் வழக்கம்போல் கம்பெனிக்குச் சென்று வேலை செய்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அவரது சேலை இயந்திரத்தில் சிக்கி இயந்திரத்தினுள் இழுத்து சென்றது. </p><p>இந்த விபத்தில் பாண்டியம்மாளின் கை துண்டாகி, அதிக அளவில் ரத்தம் வெளியேறியது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p>இது குறித்து தகவல் அறிந்த சிவகாசி கிழக்கு காவல் நிலைய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார் </a>சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாண்டியம்மாளின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>
“மாணவனை வஞ்சித்து கண்ணீர் சிந்த விடுவதற்கா ஆட்சி?” - போஸ் வெங்கட் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-this-administration-meant-to-deceive-a-student-and-leave-him-in-tears-bose-venkat-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-this-administration-meant-to-deceive-a-student-and-leave-him-in-tears-bose-venkat-asks#comments</comments><guid isPermaLink="false">6a712652-9ec2-49f4-beee-6335ed381f29</guid><pubDate>Fri, 18 Sep 2026 05:40:55 +0000</pubDate><atom:updated>2026-09-18T05:40:55.925Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>போஸ் வெங்கட்,Director Bose Venkat,Vanni Arasu,பாரதிதாசன்,Bharathidasan,TVK Government,தலித் மாணவன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/dbixhwgs/8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/dbixhwgs/8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஒரு தலித் மாணவனையே வஞ்சித்து, கண்ணீர் சிந்த விடுவதற்குத்தான் நீங்கள் ஆட்சியதிகாரத்தில் பங்குகேட்டீங்களா திருமா அண்ணே? இதுவெல்லாம் தலித் விரோதப்போக்கு இல்லையா? என்று இயக்குநர் போஸ் வெங்கட் கேள்வி எழுப்பி உள்ளார்.</p>  <h2>கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட மாணவன்</h2><p>தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருபவர் மாணவர் பாரதிதாசன். தனக்கு கடந்த சில மாதங்களாக கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என்றும், கல்லூரியிலிருந்து வெளியேற்றும் நிலை உருவாகியுள்ளதாகவும் கூறி அவர் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் தலைவர்கள் பலரும் கவலை தெரிவித்து அரசை வலியுறுத்தினர்.</p> <h2>இது உண்மைக்கு புறம்பானது - தமிழக சமூக நீதித்துறை</h2><p>மாணவர் பாரதிதாசன் வெளியிட்டுள்ள காணொலி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று தமிழக சமூக நீதித்துறை விளக்கம் அளித்துள்ளது. ஏற்கனவே அவரது படிப்புக்கு மொத்தம் ரூ.48 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.மேலும், ரூ.19.50 லட்சம் செலவின கோரிக்கை தொடர்பாக சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாகவும், பல்கலைக்கழகத்திடம் இருந்து பதில் கிடைத்தவுடன் கல்வி உதவித்தொகை விடுவிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.</p>  <h2>இயக்குநர் போஸ் வெங்கட் பதிவு</h2><p>இந்த நிலையில், மாணவர் பாரதிதாசனுக்கு ஆதரவாக இயக்குநர் போஸ் வெங்கட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது, </p><p>5,000 கோடி ரூபாய்க்கு மேல் குடும்பச்சொத்தாக வைத்திருப்பதாகக் கூறிய லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோசுக்கும் 34 இலட்ச ரூபாய் மதிப்பில் கார் வழங்குவதாக அறிவித்த வெட்கங்கெட்ட தவெக அரசு, மாணவர் பாரதிதாசனுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குவதற்குக் கணக்குப் பார்ப்பதும், தயங்குவதும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்!</p><p>ஒரு தலித் மாணவனையே வஞ்சித்து, கண்ணீர் சிந்த விடுவதற்குத்தான் நீங்கள் ஆட்சியதிகாரத்தில் பங்குகேட்டீங்களா திருமா அண்ணே? இதுவெல்லாம் தலித் விரோதப்போக்கு இல்லையா?</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்... நேற்று ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-recorded-244-dengue-fever-cases</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-recorded-244-dengue-fever-cases#comments</comments><guid isPermaLink="false">75d29e76-c03b-446c-bc8c-b3e11e6c64a7</guid><pubDate>Fri, 18 Sep 2026 05:15:17 +0000</pubDate><atom:updated>2026-09-18T05:15:17.818Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,டெங்கு காய்ச்சல்,Dengue Fever</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/nuvqe7zt/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/nuvqe7zt/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகளவில் உள்ளது. வெயில் மற்றும் மழை என காலநிலை மாற்றத்தால், டெங்குவை பரப்பும், 'ஏடிஸ்' வகை கொசுக்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக, மாநிலம் முழுவதும் பரவலாக டெங்கு பாதிப்பு உள்ளது.</p><p>குறிப்பாக தினசரி, 70 முதல் 100 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிகள், மாவட்ட ஆஸ்பத்திரிகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு பிரத்யேக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.</p><p>இந்த நிலையில், தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 244 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் டெங்குவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,577ஆக உயர்ந்துள்ளது. டெங்கு பாதிப்பால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் 87 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு காய்சல் பாதிப்பு அதிகமாக உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கொசு ஒழிப்பு பணியில் 25,000க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். காய்ச்சல் ஏற்பட்டால் பொதுமக்கள் மருந்தகங்களுக்குச் சென்று தாங்களாகவே மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வீடுகளின் அருகில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதன் மூலம் கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுத்து. டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எம்.பி.பி.எஸ். படிக்காமல் சிகிச்சை: போலி டாக்டரை கைது செய்த போலீசார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/treating-patients-without-an-mbbs-degree-police-arrest-quack</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/treating-patients-without-an-mbbs-degree-police-arrest-quack#comments</comments><guid isPermaLink="false">3eae4987-5f03-4229-9de2-824749c97efa</guid><pubDate>Fri, 18 Sep 2026 04:55:36 +0000</pubDate><atom:updated>2026-09-18T04:55:36.038Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Dindigul,திண்டுக்கல்,தமிழகம்,கைது,வடமதுரை,போலி டாக்டர்,fake doctor,north madurai</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/vm7q9y3z/poli.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/vm7q9y3z/poli.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வடமதுரை, </p><p>போலி டாக்டர் அந்தோணிதாசை  கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><h2>ஆங்கில வைத்தியம்</h2><p>திண்டுக்கல் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் பாரதி தலைமையிலான மருத்துவத்துறை அதிகாரிகள், நேற்று முன்தினம் வடமதுரை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கொம்பேறிபட்டியில் செயல்பட்டு வந்த ஆஸ்பத்திரியில், அந்தோணிதாஸ் (வயது 68) என்பவர் முறையான கல்வித் தகுதி (எம்.பி.பி.எஸ்.) இன்றி நோயாளிகளுக்கு ஆங்கில வைத்தியம் பார்த்து வந்தது கண்டறியப்பட்டது.</p><h2>கைது</h2><p>மேலும், அந்த ஆஸ்பத்திரியில் காலாவதியான கருக்கலைப்பு மாத்திரைகள் மற்றும் ஆங்கில மாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவ அதிகாரிகள் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்ததைதொடர்ந்து, போலி டாக்டராக செயல்பட்ட அந்தோணிதாசை போலீசார் கைது  செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>இந்த மருத்துவமனை அப்பகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது</p> ]]></content:encoded></item><item><title>இரட்டைமலை சீனிவாசனின் புகழைத் தலைமுறைகள் தொடர்ந்து நினைவுகூரட்டும்: நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/may-generations-continue-to-cherish-the-legacy-of-rettaimalai-srinivasan-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/may-generations-continue-to-cherish-the-legacy-of-rettaimalai-srinivasan-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">8fafe199-b3da-404e-95c8-006dd0d7b0b1</guid><pubDate>Fri, 18 Sep 2026 04:54:30 +0000</pubDate><atom:updated>2026-09-18T04:54:30.393Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,இரட்டைமலை சீனிவாசன்,Rettaimalai Srinivasan</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/s8l74dy4/9.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/s8l74dy4/9.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இரட்டைமலை சீனிவாசனின் நினைவு நாளையொட்டி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”சமூக நீதிக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் அயராது பாடுபட்ட இரட்டைமலை சீனிவாசனின் நினைவு நாள் இன்று!</p> <p>‘பறையன்’ இதழைத் தொடங்கி, கல்வி, சமூக முன்னேற்றம், சமத்துவம் மற்றும் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தவர். தாழ்த்தப்பட்ட மக்களின் குரலை அரசியல் மற்றும் சமூகத் தளங்களில் வலிமையாக ஒலிக்கச் செய்த முன்னோடிகளில் ஒருவர் இரட்டைமலை சீனிவாசன்.</p><p>சமத்துவமும் சுயமரியாதையும் நிறைந்த சமூகத்தை உருவாக்க அவர் மேற்கொண்ட அரும்பணிகள் என்றும் நம் நினைவில் நிலைத்திருக்கும். அவரது சமூக நீதிப் பயணத்தையும் சீர்திருத்தச் சிந்தனைகளையும் இந்நாளில் போற்றி வணங்கி, அவரது புகழைத் தலைமுறைகள் தொடர்ந்து நினைவுகூரட்டும்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>லண்டன் முதலீடுகள் மற்றும் புதிய திட்டங்கள்: முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/london-investments-and-new-projects-chief-minister-vijay-to-hold-consultations-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/london-investments-and-new-projects-chief-minister-vijay-to-hold-consultations-today#comments</comments><guid isPermaLink="false">8320964d-9c21-429e-bfe4-ec40bff1e772</guid><pubDate>Fri, 18 Sep 2026 04:24:47 +0000</pubDate><atom:updated>2026-09-18T04:24:47.339Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,முதலீடு,காலை உணவு திட்டம்,Investments,CM Vijay,Kaalai Unavu Thittam,தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்,Thaimaman Gold Ring Project</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/xj9xoj1g/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/xj9xoj1g/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>லண்டன் முதலீடுகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சர் விஜய் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.</p><h2>லண்டன் பயணம்</h2><p>தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் பயணம் மேற்கொண்ட முதல்-அமைச்சர் விஜய் 12-ந்தேதி. உலகத்தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் தமிழ்நாட் டில் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டுக்கு நேரில் சென்று, அங்குள்ள 'ரேஸ் கண்ட்ரோல்' மற்றும் 'ரேஸ் சர்க்யூட் பகுதிகளை பார்வையிட்டார்.</p><p>14-ந்தேதி முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் லண்ட னில் வாகன உதிரிபாக உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் மின்கட்டமைப்பு உபகரணங்கள் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், புதிய தொழில் முதலீட்டுக்கான கடிதம் என மொத்தம் 15,300 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.</p><h2>முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை</h2><p>இந்த நிலையில், லண்டனில் மேற்கொள்ளப்பட்ட ரூ.15,300 கோடி முதலீட்டு ஒப்பந்தங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். அதைபோல வரும் 22-ம் தேதி காலை உணவு திட்ட விரிவாக்கம் மற்றும் 25-ம் தேதி 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம் தொடக்கம் தொடர்பான நடைமுறைகள் குறித்தும் ஆலோசனை நடத்துகிறார்.</p><p>அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் மோதிரம் வழங்கப்பட உள்ளது. தங்கமோதிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கும் தேதி, இடம் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.</p>]]></content:encoded></item><item><title>திடீர் மாரடைப்பு.. பயணிகளை பத்திரமாக காப்பாற்றிவிட்டு உயிரிழந்த அரசு பஸ் டிரைவர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sudden-heart-attack-government-bus-driver-dies-after-safely-saving-passengers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sudden-heart-attack-government-bus-driver-dies-after-safely-saving-passengers#comments</comments><guid isPermaLink="false">fce606c4-8c58-4e69-8358-d57bd5e00fac</guid><pubDate>Fri, 18 Sep 2026 04:10:53 +0000</pubDate><atom:updated>2026-09-18T04:10:53.946Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,மரணம்,மாரடைப்பு,Government bus driver,Heart attack,குடியாத்தம்,Gudiyatham,அரசு பஸ் டிரைவர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/j0sk4oze/bus.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/j0sk4oze/bus.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>குடியாத்தம், </p><p>25 பயணிகளுடன் சென்ற அரசு பஸ் டிரைவர், திடீர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், பயணிகளை பத்திரமாக காப்பாற்றிவிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>திருப்பத்தூர் மாவட்டம் அம்பலூர் அருகே தெக்குப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடசாமி (வயது 59), அரசு பஸ் டிரைவர். இவருக்கு பேபி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். தற்போது வெங்கடசாமி குடும்பத்துடன் வேலூர் காட்பாடி கழிஞ்சூர் பகுதியில் வசித்து வந்தார். </p><p>இவரது மனைவி பேபி அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வெங்கடசாமி நேற்று காலை 8 மணி அளவில் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் இருந்து 25 பயணிகளுடன் குடியாத்தம் வழியாக சேலம் செல்லும் பஸ்சை ஓட்டிச் சென்றார். இறைவன்காடு பகுதியைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் கண்டக்டராக இருந்தார்.</p><h2>சிகிச்சை பலனின்றி</h2><p>இந்த பஸ் குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றோரம் புதிய பைபாஸ் சாலையில் வந்தபோது வெங்கடசாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் சாமர்த்தியமாக பஸ்சை வேகமாக இயக்காமல் மெதுவாக ஓட்டி வந்து சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு மயங்கினார். இதனைப் பார்த்த பயணிகள் அவரை மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடசாமி பரிதாபமாக இறந்தார்.</p><h2>பயணிகள் கண்ணீர்</h2><p>பஸ்சில் வந்த பயணிகள் கூறுகையில், 25-க்கும் அதிகமான பயணிகள் இந்த பஸ்சில் வந்தோம். டிரைவர் வெங்கடசாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது தாறுமாறாக பஸ்சை ஓட்டி இருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். மேலும் கெங்கையம்மன் பாலத்தை இடித்துக் கொண்டு ஆற்றில் விழும் அபாயமும் ஏற்பட்டிருக்கும். ஆனால் பயணிகளை காப்பாற்றும் நோக்கில் மிகவும் ஜாக்கிரதையுடன் பஸ்சை மெதுவாக இயக்கியபடி எங்களை பாதுகாப்பாக குடியாத்தம் நகருக்குள் கொண்டு வந்தார் என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>போதிய மழையின்றி, மாடுகளுக்கு தீவனமாகும் மக்காச்சோள பயிர்: விவசாயிகள் கவலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/maize-crop-turning-into-cattle-fodder-due-to-lack-of-rain-farmers-concerned</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/maize-crop-turning-into-cattle-fodder-due-to-lack-of-rain-farmers-concerned#comments</comments><guid isPermaLink="false">31e9c042-0240-4255-9444-ca2a5c926b61</guid><pubDate>Fri, 18 Sep 2026 03:57:53 +0000</pubDate><atom:updated>2026-09-18T03:57:53.754Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>monsoon,பருவமழை,maize,மக்காச்சோளம்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/1wxflz9b/6.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/1wxflz9b/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் மக்காச்சோளம் பயிர் கருகியது. இதனால் சோகத்தில் மாடுகளுக்கு மக்காச்சோள பயிரை தீவனமாக விவசாயிகள் கொடுக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.</p><h2>தென்மேற்கு பருவமழை</h2><p>தம்மம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளான செந்தாரப்பட்டி, கொண்டையம் பள்ளி, வாழக்கோம்பை, நாகியம்பட்டி, உலிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய தொழிலே பிரதானம் ஆகும். இங்கு ஆண்டுதோறும் மானாவாரி பயிராக, அதிகளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது.</p><p>இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையை நம்பி கடந்த மாதம் வரை மக்காச்சோளத்தை அதிக பரப்பளவில் சாகுபடி செய்தனர். 'எல்நினோ' தாக்கத்தால் தென்மேற்கு பருவமழை பொய்த்தது. இதனால் சாகுபடி செய்த மக்காச்சோளம் பயிர்கள், ஈரப்பதம் இல்லாததாலும், அதிக வெப்பத்தாலும் காய்ந்து கருகியதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். </p><h2></h2><h2>மக்காச்சோளம் காய்ந்தது</h2><p>இதனால் வேதனையடைந்த விவசாயிகள் சிலர் காய்ந்த மக்காச்சோள வயலில் கறவை மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு வருகின்றனர். இதுகுறித்து தம்மம்பட்டி கருமாயி பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில்,</p><p>”ஆண்டுதோறும், தென்மேற்கு பருவமழை காலத்தில் மழையின் ஈரப்பதத்தை பயன்படுத்தி, நிலத்தை உழுது, மக்காச்சோளத்தை விதைப்பு செய்வோம். பின், வடகிழக்கு பருவமழையின் போது மக்காச்சோளம் நன்கு செழிப்புடன் வளர்ந்து மகசூல் கிடைக்கும்.</p><p>நடப்பாண்டில் ஒரு மாதத்திற்கு முன்பு நிலத்தை உழுது, மக்காச்சோளத்தை விதைத்தோம். இதற்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவானது. ஆனால், மழை இல்லாததால் மக்காச்சோள பயிர்கள் வளராமல் காய்ந்து போனது. இதனால் சோகத்தில் வேறுவழியின்றி கறவை மாடுகளை, காய்ந்த மக்காச்சோளம் வயலில் கட்டி மேய விடுகிறோம்.”</p><p>என்றார்.</p>]]></content:encoded></item><item><title>ஸ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்கும் - போலீசார் முன் மிரட்டல் விடுத்த இளைஞர்

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bomb-will-explode-in-srivilliputhur-youth-threatens-police</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bomb-will-explode-in-srivilliputhur-youth-threatens-police#comments</comments><guid isPermaLink="false">8e8917ae-730a-4241-a168-e64ead56ada5</guid><pubDate>Fri, 18 Sep 2026 03:42:54 +0000</pubDate><atom:updated>2026-09-18T03:42:54.629Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Virudhunagar,ஸ்ரீவில்லிபுத்தூர்,Srivilliputhur,Vinayagar Chaturthi,விநாயகர் சதுர்த்தி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/ryku5053/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/ryku5053/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>விருதுநகர்,</p><p>ஸ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்கும் என்று போலீசார் முன் இளைஞர் மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p> <p>விருதுநகர் மாவட்டம் <a href="https://www.dailythanthi.com/topic/ஸ்ரீவில்லிப்புத்தூர்">ஸ்ரீவில்லிபுத்தூரில் </a>இந்து மத பண்டிகையான விநாயகர் சதுர்த்தியின்போது கடந்த 16ம் தேதி விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, அப்பகுதியில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலம் வழியாக விநாயகர் ஊர்வலம் சென்றுள்ளது. அப்போது, இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.</p> <h2>வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர்</h2><p>இது தொடர்பாக இஸ்லாமிய மத வழிபாட்டு தலத்தில் போலீசார் விசாரணைக்கு சென்றனர். அப்போது, அங்கு இருந்த இளைஞர், பாரத மாதவுக்கு ஜெய் என்று கூச்சலிடுவார்கள்.. நாங்கள் கேட்டுக்கொண்டு இருக்க வேண்டுமா? என்று கூறினார்.</p><p>அப்போது மற்றொரு இளைஞர் வேகமாக ஓடி வந்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்கும் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்... என்று போலீசார் முன் கோஷம் எழுப்பினார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த இரு இளைஞர்களையும் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.</p><p>ஸ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்கும் என்று போலீசார் முன் இளைஞர் மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>நீலகிரி: கஞ்சா சாக்லேட் விற்க முயன்ற வடமாநில வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-youth-from-another-state-arrested-for-attempting-to-sell-cannabis-laced-chocolates</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-youth-from-another-state-arrested-for-attempting-to-sell-cannabis-laced-chocolates#comments</comments><guid isPermaLink="false">c452dbd6-8053-4d4f-ae11-60dddc7a228d</guid><pubDate>Fri, 18 Sep 2026 03:28:21 +0000</pubDate><atom:updated>2026-09-18T03:28:21.891Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrest,Youth,Nilgiris,நீலகிரி,விற்பனை,North Indian,sales,வடமாநில வாலிபர்,கஞ்சா சாக்லேட்,cannabis chocolates</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/ypr90yk3/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கஞ்சா சாக்லேட் விற்க முயன்ற வடமாநில வாலிபர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/ypr90yk3/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF">நீலகிரி</a> மாவட்டம் ஊட்டியில் கஞ்சா சாக்லேட் விற்க முயன்ற வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர். </p><h2>வடமாநில வாலிபரிடம் போலீசார் சோதனை</h2><p>நீலகிரி மாவட்டம், ஊட்டி பஸ் நிலையத்துக்கு நேற்று முன்தினம் வந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D">வடமாநில வாலிபர் </a>ஒருவர் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தார். இதையடுத்து ஊட்டி மேற்கு போலீசார் அவரது பையை சோதனை செய்தனர். அதில் சாக்லேட்டுகள் இருந்தது. </p><h2>கஞ்சா சாக்லேட் வைத்திருந்தவர் கைது</h2><p>போலீசார் மேற்கொண்ட விசாரணையின்போது, அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சர்பராஸ்அன்சாரி (வயது 27) என்பதும், கட்டிட ஒப்பந்ததாரராக பணியாற்றி வந்த அவர் பையில் வைத்திருந்தது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D">கஞ்சா கலந்த சாக்லேட்டுகள்</a> என்பதும் தெரியவந்தது. மேலும் சர்பராஸ்அன்சாரியை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். </p>]]></content:encoded></item><item><title>நீலகிரி: கூண்டில் சிக்கியது ஆட்கொல்லி புலியா..? வனத்துறையினர் ஆய்வு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-is-it-a-man-eating-tiger-caught-in-the-cage-forest-department-officials-inspect</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-is-it-a-man-eating-tiger-caught-in-the-cage-forest-department-officials-inspect#comments</comments><guid isPermaLink="false">41432525-8dbf-46d5-ac7a-06408990616b</guid><pubDate>Fri, 18 Sep 2026 03:26:59 +0000</pubDate><atom:updated>2026-09-18T03:26:59.952Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Forest Department,வனத்துறை,நீலகிரி,Tiger,கூடலூர்,Nilgiri,ஆட்கொல்லி புலி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/g1tnfvvg/pilk.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/g1tnfvvg/pilk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கூடலூர், </p><p>நீலகிரி மாவட்டம் கூடலூர் சில்வர் கிளவுட் பகுதியில் வனத்துறையினர் வைத்த கூண்டில் <a href="https://www.dailythanthi.com/topic/புலி">புலி</a> ஒன்று சிக்கி உள்ளது.</p><h2>3 அதிநவீன டிரோன்கள்</h2><p>கூடலூர் அருகே ஓவேலி லாரஸ்டன் பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவரை கடந்த மாதம் 9-ந் தேதியும், ரவிச்சந்திரனை 21-ந் தேதியும் அடுத்தடுத்து <a href="https://www.dailythanthi.com/topic/புலி">புலி</a> ஒன்று கடித்து கொன்றது. இந்த ஆட்கொல்லி புலியை பிடிக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். </p><p>இதைத்தொடர்ந்து லாரஸ்டன், கெவிப்பாரா, பாரம், கோக்கல் உள்ளிட்ட பகுதிகளில் முதற்கட்டமாக 70-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் களத்தில் இறங்கி புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இரவு, பகல் என எந்த நேரத்திலும் செயல்படக்கூடிய 3 அதிநவீன டிரோன்களை கொண்டு நிலப்பரப்பில் புலி எந்த இடத்தில் பதுங்கி உள்ளது என தேடும் பணியும் நடைபெற்று வந்தது.</p><h2>போக்கு காட்டிய புலி</h2><p>மேலும் 70-க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்கள் புலியின் வழித்தடங்களாக கருதப்பட்ட இடங்களில் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. இதனிடையே கன்றுக்குட்டி, ஆடுகள் கட்டப்பட்ட 13 இரும்பு கூண்டுகளையும் வனத்துறையினர் பல இடங்களில் வைத்து கண்காணித்து வந்தனர். 2 கும்கி யானைகள் மீது அமர்ந்தும் தேடும் பணி நடந்து வந்தது. ஆனால், வனத்துறையினருக்கு போக்கு காட்டும் வகையில் <a href="https://www.dailythanthi.com/topic/புலி">புலி</a> பிடிபடாமல் தப்பி வந்தது. </p><p>இதனால் முதுமலை, கூடலூர், நீலகிரி கோட்டம், கோவை, மதுரை, தேனி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கூடுதலாக வனத்துறையினர் வரவழைக்கப்பட்டு கூடலூர் பகுதியில் புலியை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. அப்போது சில இடங்களில் ஆட்கொல்லி புலியின் நடமாட்டம் இருப்பதை வனத்துறையினர் உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், சமதள நிலப்பரப்பில் புலி வராமல் அடர்ந்த புதர்களுக்குள் பதுங்கியதால் வனத்துறையினரால் மயக்க ஊசி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.</p><h2>தொழிலாளர்கள் பாதிப்பு</h2><p>இருப்பினும், இரவு நேரத்தில் புலி இரையை தேடி வரலாம் என்ற கோணத்தில் இரவிலும் படம் பிடிக்கும் (நைட் விஷன்) டிரோன்கள் மூலம் வனத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஆனால், மழை மற்றும் கடும் பனிமூட்டம் உள்பட மோசமான காலநிலையால் <a href="https://www.dailythanthi.com/topic/புலி">புலி</a> இடம் பெயர்ந்தவாறு உள்ளது. இதனிடையே புலி அச்சுறுத்தல் காரணமாக தொழிலாளர்கள் வீடுகளுக்குள் முடங்கினர். அவர்களின் குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு வாகனத்தில் காலை மற்றும் மாலை நேரத்தில் வனத்துறையினர் அழைத்து சென்று வருகின்றனர். மேலும் தோட்ட வேலைக்கு செல்லாததால் பொருளாதார ரீதி யாக தொழிலாளர்கள் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டனர்.</p><p>இந்தநிலையில் வனத்துறையினர் நடுவட்டம், சிங்காரா, கார்குடி வனப்பகுதிக்கு புலி இடம்பெயர்ந்து இருக்கலாம் என கருதினர்.</p><h2>சிக்கிய புலி</h2><p>இதைத்தொடர்ந்து முதுமலை எல்லையோர பகுதிகளில் தானியங்கி கேமராக் கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது. மொத்தம் 244 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டன. நேற்றுடன் (17.9.2026) 28 நாட்கள் ஆகியும் புலி வனத்துறையினரிடம் சிக்காமல் இருந்து வந்தது.அதே நேரத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/புலி">புலி</a> சிக்காததால் அந்த பகுதி மக்கள் தொடர்ந்து கிலியில் இருந்து வந்தனர். </p><p>இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் சில்வர் கிளவுட் பகுதியில் வனத்துறையினர் வைத்த கூண்டில் புலி ஒன்று சிக்கி உள்ளது. வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் 28 நாட்களுக்குப் பின்னர் புலி சிக்கி உள்ளது. அது 2 பேரை கொன்ற ஆட்கொல்லி புலியா என வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>காங்கிரஸ் தலைவரின் தந்தை மீது தாக்குதல்: தி.மு.க. நிர்வாகிக்கு போலீஸ் வலைவீச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/attack-on-congress-leaders-father-police-on-the-lookout-for-dmk-functionary</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/attack-on-congress-leaders-father-police-on-the-lookout-for-dmk-functionary#comments</comments><guid isPermaLink="false">1f150f84-7362-42f6-9b35-f2c9c91fddb7</guid><pubDate>Fri, 18 Sep 2026 03:15:11 +0000</pubDate><atom:updated>2026-09-18T03:15:11.725Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,தாக்குதல்,காங்கிரஸ்,Congress,Thoothukudi,தூத்துக்குடி,போலீஸ் வலைவீச்சு,attack,Father,leader,தலைவர்,தந்தை,administrator,திமுக நிர்வாகி,police netting</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/n6mshihh/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காங்கிரஸ் தலைவரின் தந்தை மீது தாக்குதல்: தி.மு.க. நிர்வாகிக்கு போலீஸ் வலைவீச்சு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/n6mshihh/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> முள்ளக்காடு பகுதியில் காங்கிரஸ் தலைவரின் தந்தைய அவரது வீட்டிற்குள் புகுந்து தாக்கிய தி.மு.க. நிர்வாகியை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81">போலீசார் வலைவீசி </a>தேடி வருகின்றனர். </p><h2>காங்கிரஸ் தலைவரின் தந்தை போலீசில் புகார்</h2><p>தூத்துக்குடி முள்ளக்காடு அருகே உள்ள நேசமணிநகரைச் சேர்ந்தவர் மரியவின்சென்ட் (வயது 72). இவர் தூத்துக்குடி மாநகர் மாவட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D">காங்கிரஸ் தலைவர்</a> சகாயராஜின் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88">தந்தை</a> ஆவார். சமூக ஆர்வலரான மரிய வின்சென்ட் தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் மதுபான கடைகள் மூடப்பட்ட பின்னரும் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீசில் புகார் தெரிவித்துள்ளார். </p><h2>வீடு புகுந்து தாக்கிய தி.மு.க. நிர்வாகிக்கு போலீஸ் வலைவீச்சு</h2><p>இதனை அறிந்த நேசமணிநகரை சேர்ந்த பொன்கற்பகராஜ்(35) என்பவர் மரியவின்சென்ட் வீட்டிற்குள் புகுந்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF">தி.மு.க. நிர்வாகி </a>பொன்கற்பகராஜை போலீசார் வலைவீசி தேடி வருகினறனர்.</p>]]></content:encoded></item><item><title>வார விடுமுறை: தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 655 சிறப்பு பஸ்கள் இயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/weekend-2655-special-buses-operated-across-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/weekend-2655-special-buses-operated-across-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">1cb58fc9-8a91-471e-9d7e-e5c52cf03de6</guid><pubDate>Fri, 18 Sep 2026 03:06:01 +0000</pubDate><atom:updated>2026-09-18T03:06:01.427Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,சிறப்பு பஸ்கள்,Special Bus,Weekend,வார விடுமுறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/0kodmwsy/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/0kodmwsy/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) அன்று 760 பஸ்களும், நாளை (சனிக்கிழமை) 520 பஸ்களும் இயக்கப்பட உள்ளன.</p><p>சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 115 பஸ்களும், நாளை 115 பஸ்களும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன.</p><p>மாதவரத்திலிருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை. திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு 18 மற்றும் 19-ந் தேதிகளில் தலா 70 பஸ்களும் சிறப்பு பஸ்களாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 805 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/heavy-rain-in-cauvery-catchment-areas-inflow-to-hogenakkal-increases</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/heavy-rain-in-cauvery-catchment-areas-inflow-to-hogenakkal-increases#comments</comments><guid isPermaLink="false">9a9ffc9e-0fa3-461b-9ec5-83525a100af4</guid><pubDate>Fri, 18 Sep 2026 03:02:19 +0000</pubDate><atom:updated>2026-09-18T03:02:19.470Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழ்நாடு,கனமழை,தமிழகம்,Hogenakkal,ஒகேனக்கல்,காவிரி நீர்,Karnataka,கர்நாடகா,Hogenakkal Cauvery,Cauvery,பரிசல் இயக்க தடை,Hogenakkal Cauvery river</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/bckrdzju/papa.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/bckrdzju/papa.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பென்னாகரம், </p><p>தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.</p><p>கர்நாடக மற்றும் தமிழக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81">காவிரி</a> நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான பிலிகுண்டுலு, ராசிமணல், அஞ்செட்டி, கேரட்டி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.</p><p>இதனால் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி வீதம் வந்த தண்ணீர், நேற்று படிப்படியாக அதிகரித்து மாலை நிலவரப்படி வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியானது.</p><p>இந்நிலையில் ஒகேனக்கல் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81">காவிரி</a> ஆற்றில் இன்று (செப்.18) காலை 6 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு 12,000 கன அடியாக அதிகரித்துள்ளது. </p><h2>6-வது நாளாக தடை</h2><p>இதன் காரணமாக ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செந்நிறத்தில் கொட்டி வருகிறது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.</p><p>காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை இன்று 6-வது நாளாக நீடிக்கிறது. இதனால் ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்று வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக அரசு, ஆண்டுக்கு, ரூ.1.20 லட்சம் கோடி கூடுதல் நிதி வசதி உருவாக்க வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/opportunity-for-the-tamil-nadu-government-to-generate-additional-financial-resources-of-120-lakh-crore-annually</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/opportunity-for-the-tamil-nadu-government-to-generate-additional-financial-resources-of-120-lakh-crore-annually#comments</comments><guid isPermaLink="false">8ff6f0eb-d45f-4343-ab39-f817621f901a</guid><pubDate>Fri, 18 Sep 2026 02:48:04 +0000</pubDate><atom:updated>2026-09-18T02:48:04.793Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu Government,தமிழக அரசு,நிதி வசதி,Financial Resource</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/0k2rkeks/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/0k2rkeks/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>செனனை,</p> <p>புதிய வரிகளை விதிக்காமலும், கூடுதல் கடன் பெறாமலும் தமிழக அரசு ஆண்டுக்கு, 1.20 லட்சம் கோடி ரூபாய்க் கும் அதிகமான கூடுதல் நிதி வசதியை உருவாக்க வாய்ப்பு இருப்பதாக, அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட ஆலோசனை நிறுவனமான, 'கியர்னி' நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. வருவாய் வசூலை மேம்படுத்துவது மற்றும் அரசு செலவுகளை சரியாக நிர்வகிப்பதன் வாயிலாக, இதை எட்ட முடியும் என இந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. இது குறித்து ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:</p><p>”தமிழக அரசு ஆண்டுக்கு, 1.20 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கூடுதல் நிதி வசதியை உருவாக்க வாய்ப்புள்ளது. </p><p>* தமிழகத்தின் தனிநபர் மாத செலவினம், மஹாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை விட அதிகமாக உள்ளது. ஆனால், மாநில மொத்த உற்பத்தி மதிப்புடன் ஒப்பிடும்போது, தமிழகத்தின் ஜி.எஸ். டி., வருவாய் இன்னும் குறைவாக உள்ளது.</p><p>* தமிழக பொருளாதாரத்தில், சேவை துறையின் பங்கு, 53.60 சதவீதமாக உள்ளது. ஆனால், மாநிலத்தின் ஜி.எஸ்.டி., வசூலில், சேவை துறையின் பங்கு, 37.80 சதவீதம் என குறைந்து காணப்படுகிறது.</p><p>வரி வரம்புக்குள் வரும் சேவைகளை முறையாக கண்காணித்து, ஜி.எஸ்.டி., வசூலை மேம்படுத்த வேண்டும். </p><p>* மதுபான விற்பனையில், விலை அடிப்படையில் மாறுபட்ட கலால் வரியை நிர்ணயிப்பது, டாஸ்மாக் கொள்முதல் மற்றும் விற்பனையைனயை முழுமையாக கண்காணிப் பது ஆகிய நடவடிக்கைகள் வாயிலாகவும் வருவாயை அதிகரிக்கலாம்.</p> <p>* பத்திரப்பதிவு மற்றும் முத்திரை தீர்வை வருவாயை உயர்த்த, வழிகாட்டி மதிப்பை தேவைக்கேற்ப மாற்றி அமைக்க வேண்டும்.</p><p>* 2025-26ல் இந்த வருவாய் தமிழகத்தின் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில், 0.72 சதவீதமாக இருந்த நிலையில், மஹாராஷ்டிராவில், 1.33 சதவீதமாக இருந்தது.</p><p>* சுரங்கங்களில் எடுக்கப்படும் கனிமத்தின் அளவையும், அதற்கான ராயல்டி வசூலையும் துல்லியமாக கண்காணிப்பது மற்றும் மத்திய அரசின் நிதியுதவி திட்டங்களில் தமிழகத்துக்கு கிடைக்கக்கூடிய நிதியை முழுமையாக பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியம்.</p><p>* வருவாய் வசூலை மேம்படுத்தி, செலவுகளுக்கு சரியான முன்னுரிமை அளித்து செயல்பட்டால், வளர்ச்சி, நலத் திட் டங்கள் மற்றும் நிதி நிர்வாகம் ஆகிய மூன்றையும், ஒரே நேரத் தில் முன்னெடுக்கத் தேவையான வசதியை உருவாக்க முடியும்.</p><p>இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாணவர் பாரதிதாசனுக்கு உடனடியாக அரசு நிதி வழங்க வேண்டும் - நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-government-must-immediately-provide-financial-assistance-to-student-bharathidasan-neelam-cultural-centre-urges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-government-must-immediately-provide-financial-assistance-to-student-bharathidasan-neelam-cultural-centre-urges#comments</comments><guid isPermaLink="false">f80f51e9-2ef8-4d35-b8de-3b4a121f772e</guid><pubDate>Fri, 18 Sep 2026 02:30:04 +0000</pubDate><atom:updated>2026-09-18T02:30:04.792Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Malaysia,மலேசியா,மாணவன்,student,தமிழக அரசு,கல்வி நிதி,நீலம் பண்பாட்டு மையம்,pa.ranjith,பா. இரஞ்சித்,Neelam Culture Center,education fund</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/eemg44n8/santha.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/eemg44n8/santha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>எதிர்காலம் குறித்து மிகுந்த மன உளைச்சலுடன் ஒரு மாணவர் வீடியோ வெளியிடும் நிலைக்கு இந்தச் சூழலை அரசு அனுமதித்திருக்கக் கூடாது என்று நீலம் பண்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.</p><h2>பல்வேறு நெருக்கடி</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p><a href="https://www.dailythanthi.com/topic/tamilnadu">தமிழ்நாடு </a>அரசின் அண்ணல் அம்பேத்கர் உயர்கல்வித் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆய்வு மேற்கொண்டு வரும் மாணவர் பாரதிதாசன் ராமன் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய Research Expenses மற்றும் அடுத்த ஆறு மாதங்களுக்கான Living Expenses உள்ளிட்ட நிதி நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்தது. இதனால் தனது கல்வி மற்றும் ஆய்வுப் பணிகளுக்கு மத்தியில் அவர் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.</p><p>இந்தப் பிரச்சனை தொடங்கியதிலிருந்தே பல்வேறு ஜனநாயக சக்திகளும், சமூகநீதியில் அக்கறை கொண்ட இயக்கங்களும் மாணவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து, அரசுக்கு எழுத்துப்பூர்வமாகவும். தனிப்பட்ட முறையிலும் கோரிக்கைகளை முன்வைத்து, இப்பிரச்சனைக்கு தீர்வு காண தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர்.</p><h2>விரைவில் தீர்வு</h2><p>அதன் தொடர்ச்சியாக, நீலம் பண்பாட்டு மையத்தின் நிறுவனத் தலைவர் பா.இரஞ்சித் அவர்கள் சமூகநீதி துறை அமைச்சர் வன்னியரசு அவர்களையும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் இணை இயக்குநர் அவர்களையும் தொடர்புகொண்டு, மாணவரின் நிலைமை குறித்தும், அவரது ஆய்வுப் பணிகள் பாதிக்கப்படாத வகையில் நிலுவையில் உள்ள நிதியை உடனடியாக வழங்க வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார். </p><p>இதனைத் தொடர்ந்து, மாணவரைத் தொடர்புகொண்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நிதியை அவருக்கு எவ்வாறு வழங்குவது என்பதற்கான நடைமுறையை வகுத்து, அதன் அடிப்படையில் இப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என உறுதியளித்துள்ளனர்.</p><h2>மாணவர் வீடியோ</h2><p>ஒரு மாணவர் தனது கல்வி மற்றும் ஆய்வுப் பணிகளுக்கு மத்தியில் பல மாதங்கள் தொடர்ந்து போராடி, பல்வேறு தரப்பினரிடம் முறையிட்ட பின்னர்தான் ஒரு நடைமுறையை உருவாக்கி தீர்வு காணும் நிலை ஏற்பட்டிருப்பது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று. இத்தகைய பிரச்சனைகள் உருவாகாமல் இருப்பதற்கான வழிமுறைகளை அரசு முன்கூட்டியே வகுத்திருக்க வேண்டும்.</p><p>இந்தப் பிரச்சனையின் இறுதிக்கட்டமாக, தனது கல்வி மற்றும் ஆய்வின் எதிர்காலம் குறித்து மிகுந்த மன உளைச்சலுடன் ஒரு மாணவர் வீடியோ வெளியிடும் நிலைக்கு இந்தச் சூழலை அரசு அனுமதித்திருக்கக் கூடாது.</p><h2>நிரந்தரத் தீர்வு</h2><p>மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலை எந்த மாணவருக்கும் ஏற்படாத வகையில், அண்ணல் அம்பேத்கர் உயர்கல்வித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உரிய காலத்தில், எவ்விதத் தடையுமின்றி மாணவர்களைச் சென்றடைவதற்கான முறையான மற்றும் நிலையான நடைமுறையை அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும். பாரதிதாசன் ராமனுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை நிதியை உடனடியாக வழங்குவதோடு, இனி எந்த மாணவரும் இதற்காக அலைக்கழிக்கப்படாத வகையில் இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என நீலம் பண்பாட்டு மையம் கேட்டுக்கொள்கிறது.</p><p>ஜெய் பீம்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ரூ.100 கோடி லஞ்ச வழக்கு: விசாரணைக்கு ஆஜரானார் அன்பில் மகேஷ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-100-crore-bribery-case-anbil-mahesh-to-appear-for-inquiry-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-100-crore-bribery-case-anbil-mahesh-to-appear-for-inquiry-today#comments</comments><guid isPermaLink="false">203cb4e6-a0bf-44c5-b2bc-cddbb2390429</guid><pubDate>Fri, 18 Sep 2026 02:20:21 +0000</pubDate><atom:updated>2026-09-18T02:20:21.320Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,Anbil Mahesh Poyyamozhi,அன்பில் மகேஷ்,லஞ்ச வழக்கு,bribery case</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/wd7283v5/CHENNAI-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/wd7283v5/CHENNAI-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>ரூ.100 கோடி சுருட்டல்</h2><p>சென்னை தியாகராயநகரில் செயல்படும் தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகார் மனுவில், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுதருவதாக கூறி, ரூ.100 கோடி வரை பணம் வசூலித்து மோசடி நடந்துள்ளது என்றும், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.</p><p>இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். தி.மு.க. பிரமுகரான பி.டி.அரசகுமாரும், அவரது உறவினர்களான ஆரோக்கியராஜ், சுரேஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். பி.டி.அரசகுமார் தனியார் பள்ளிகளின் சங்க நிர்வாகிகளை சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் வைத்தும், போரூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைத்தும் சந்தித்து, பணம் வசூலித்ததாக தெரியவந்தது.</p><h2>அன்பில் மகேஷ் மீது வழக்கு</h2><p>அதன் அடிப்படையில்தான் அவர் கைது செய்யப்பட்டார். அவர் குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில், இதுவரை 177 பேர் புகார் கொடுத்துள்ளனர். 250 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 61 வங்கிக்கணக் குகள் முடக்கப்பட்டு உள்ளன. இந்த வழக்கில் தி.மு.க. முன் னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாரை போலீசார் தேடிவருகிறார்கள்.</p><p>அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும் 'லுக்-அவுட்' நோட்டீஸ் கொடுக் கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தற்போது, லஞ்ச ஊழல் வழக்காக மாற்றப்பட் டுள்ளது. திமுக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.</p><h2>போலீசார் சோதனை</h2><p>இதனையடுத்து நேற்று முன்தினம் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு தொடர்புடைய இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை, திருச்சியில் 9 இடங்களில் சோதனை நடத்தினார்கள். இதில் சொத்து ஆவணங்கள், வங்கி விவரங்கள், காசோலைகள் ஆகியவற்றுடன் சேர்த்து வழக்கு சம்பந்தமாக 118 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 18 செல்போன்கள், 3 மடிக்கணி னிகள், 8 பென்டிரைவ் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.</p><h2>சம்மன்</h2><p>சோதனை முடிவில் 18-ந்தேதி (அதாவது இன்று) விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு போலீசார் சம்மன் வழங்கி சென்றனர். போலீசாரின் சம்மனின்படி வழக்கு விசாரணைக்காக சென்னை வேப்பேரியில் உள்ள மத்தியக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் அன்பில் மகேஷ் ஆஜரானார். அவரிடம் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>திருச்சி: கோவில்களில் ரூ.7 லட்சம் நகைகள் திருட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/trichy-jewellery-worth-rs-7-lakh-stolen-from-temples</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/trichy-jewellery-worth-rs-7-lakh-stolen-from-temples#comments</comments><guid isPermaLink="false">12a1cb08-a861-4b0b-9a9d-c988d5cdb17a</guid><pubDate>Fri, 18 Sep 2026 02:10:15 +0000</pubDate><atom:updated>2026-09-18T02:10:15.327Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>temples,கோவில்கள்,திருட்டு,திருச்சி,Trichy,jewelry,piggy bank,உண்டியல்,நகை,Theft</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/0z7kkr9j/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கோவில்களில் ரூ.7 லட்சம் நகைகள் திருட்டு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/0z7kkr9j/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">திருச்சி</a> மாவட்டத்தில் உள்ள இரண்டு கோவில்களில் மர்ம நபர்கள் மொத்தம் ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருடிச் சென்றனர்.  </p><h2>அம்மன் தாலி, உண்டியல் திருட்டு</h2><p>திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள காளிப்பட்டி தெற்கு தெருவில் முத்துமாரியம்மன் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">கோவில்</a> உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் கோவிலின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த 2 சவரன் தாலி மற்றும் உண்டியலை திருடிச் சென்றனர். </p><h2>மர்ம நபர்கள் கைவரிசை</h2><p>இதேபோல் சிங்களாந்தபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கியூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த சுமார் 5½ சவரன் தாலி, தங்க காசு மற்றும் உண்டியலை திருடிச் சென்றுள்ளனர். கோவில்களில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">திருட்டு</a> போன நகைகள் மதிப்பு ரூ.7 லட்சம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகார்களின் பேரில் சம்பந்தப்பட்ட போலீசார், இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>மயிலாடுதுறை: வட்டாட்சியர் பெயரை சொல்லி ரூ.3.50 லட்சம் லஞ்சம் - கிராம உதவியாளர் கைது 

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mayiladuthurai-vattatchiyar-peyarai-solli-ru-3-50-latcham-lanjam-kiram-uthaviyalar-kaithu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mayiladuthurai-vattatchiyar-peyarai-solli-ru-3-50-latcham-lanjam-kiram-uthaviyalar-kaithu#comments</comments><guid isPermaLink="false">c3f8e667-2c06-44df-ac33-af66d4a386cd</guid><pubDate>Fri, 18 Sep 2026 02:07:57 +0000</pubDate><atom:updated>2026-09-18T02:07:57.478Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கிரைம் செய்தி,Mayiladuthurai,மயிலாடுதுறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/wcqqat1f/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/wcqqat1f/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>மயிலாடுதுறை,</p><p>மயிலாடுதுறையில் வட்டாட்சியர் பெயரை சொல்லி ரூ.3.50 லட்சம் லஞ்சம் வாங்கிய கிராம உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.</p> <h2>கிராம உதவியாளர் கைது</h2> <p><a href="https://www.dailythanthi.com/topic/மயிலாடுதுறை">மயிலாடுதுறை </a>மாவட்டம் குத்தாலம் அருகே மருத்தூர் கிராமத்தில் வண்டல் மண் எடுக்கச்செல்ல வட்டாட்சியர் பெயரை சொல்லி கிராம உதவியாளர் முகமது என்பவர் ரூ. 3.50 லட்சம் லஞ்சம் வசூலித்துள்ளார். இது குறித்து அறிந்த வட்டாட்சியர் ரவிச்சந்திரன் போலீசில் புகார் அளித்தார்.</p> <p>புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கிராம உதவியாளர் முகமதுவை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நெல்லை-பிரயாக்ராஜ் இடையே நாளை சிறப்பு ரெயில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-nellai-and-prayagraj-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-nellai-and-prayagraj-tomorrow#comments</comments><guid isPermaLink="false">cb5f91fd-9a69-4aaa-a139-186ee0a56c0c</guid><pubDate>Fri, 18 Sep 2026 02:04:36 +0000</pubDate><atom:updated>2026-09-18T02:04:36.048Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,சிறப்பு ரெயில்,Special train</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/cuq9v33k/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/cuq9v33k/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>நெல்லை,  </p><p>சேலம், காட்பாடி வழியாக நெல்லை-பிரயாக்ராஜ் இடையே சிறப்பு ரெயில் நாளை (சனிக்கிழமை) முதல் இயக்கப்படுகிறது. </p><h2>சிறப்பு ரெயில்</h2><p>உத்தரபிரதேச மாநிலத்தில் வரலாற்று சிறப்புமிக்க பிரயாக்ராஜ் நகரம் அமைந்துள்ளது. வடக்கு மத்திய ரெயில்வே சார்பில் பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் நெல்லை-பிரயாக்ராஜ் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.</p><p>பிரயாக்ராஜ் பகுதியில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண் 04171) வருகிற நாளை (சனிக்கிழமை), 26-ந்தேதி, அக்டோபர் 3-ந்தேதி, 10-ந்தேதி ஆகிய சனிக்கிழமைகளில் மதியம் 1.15 மணிக்கு புறப்ப டுகிறது.</p><p>மறுமார்க்கத்தில் நெல்லை-பிரயாக்ராஜ் சிறப்பு ரெயில் (04172) நெல்லையில் இருந்து வருகிற 21-ந்தேதி, 28-ந்தேதி, அக்டோபர் மாதம் 5-ந்தேதி. 12-ந்தேதி ஆகிய திங்கட்கிழமைகளில் அதிகாலை 3.30 மணிக்கு புறப்படுகிறது.</p><h2></h2><h2>எத்தனை பெட்டிகள்?</h2><p>இந்த ரெயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஜோலார்பேட்டை, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, வாராங்கல், நாக்பூர், ஜபல்பூர் வழி யாக இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் ஒரு ஏ.சி. மூன்றடுக்கு பெட்டி, 12 தூங்கும் வசதியுள்ள இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 6 பொது பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளி பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். </p>]]></content:encoded></item><item><title>சென்னை விமான நிலையத்தில் ஏற்றுமதி சரக்குகள் தேக்கம்: காரணம் என்ன.?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/backlog-of-export-cargo-at-chennai-airport-what-is-the-reason</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/backlog-of-export-cargo-at-chennai-airport-what-is-the-reason#comments</comments><guid isPermaLink="false">3ff569f0-c419-40c0-b59f-394da27e5aba</guid><pubDate>Fri, 18 Sep 2026 02:01:08 +0000</pubDate><atom:updated>2026-09-18T02:01:08.349Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Airport,சென்னை விமான நிலையம்,Cargo,சரக்குகள்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/4b3l5dja/2.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/4b3l5dja/2.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புது டெல்லி, </p><p>சென்னை விமான நிலைய சரக்கு மையங்களில் ஏற்பட்டுள்ள நெரிசல் காரணமாக, ஏற்றுமதி சரக்குகள் கிட் டத்தட்ட ஐந்து நாட்கள் வரை தேங்குகின்றன. இதனால், ஏற்றுமதியாளர்கள் பெங்களூரு மற்றும் பிற நகரங்களின் விமான சரக்கு மையங்களை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இது குறித்து துறை சார்ந்தவர்கள் கூறியதாவது;</p><p>கிடங்கு வசதி குறைவு, ஆட்கள் பற்றாக்குறை, போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் விமான சரக்கு போக்குவரத்து தேவை அதிகரித்திருப்பது ஆகியவை இந்த நெரிசலுக்கு காரணமாக உள்ளன. குறிப்பாக, சரக்குகள் நான்கு முதல் ஐந்து நாட்கள் வரை தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. </p><p>இந்த தாமதம், ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ், ஜவுளி, விரைவில் கெடும் பொருட்கள் போன்ற துறைகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. உற்பத்தி தொடர் பான சரக்குகள் தாமதமடைவதால், ஏற்றுமதி திட்டங்கள் பாதிக்கப்படுகின்றன. </p> <p>கடந்த இரண்டு மாதங்களில், வளைகுடா பதற்றத்தால் விமான சரக்கு போக்குவரத்து தேவை அதிகரித்திருப்பதும் நெருக்கடியை அதிகரித்துள்ளது. விமான நிறுவனங்கள், திட்டமிட்ட புறப்பாட்டுக்கு முன் மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு முன்பே சரக்குகளை ஏற்க தொடங்கியுள்ளன. இது கிடங்கு இடத்தை முன் கூட்டியே நிரப்பி, நெரிசலை மேலும் மோசமாக்குகிறது. இதற்கு தீர்வாக, 24 - 36 மணி நேரத்திற்கு முன்பிலிருந்து லாரி நுழைவுக்கு டிஜிட்டல் டோக்கன் முறை அறிமுகப்படுத்த வேண்டும் என தொழில் அமைப்புகள் கோரியுள்ளன. நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், ஏற்றுமதி சரக்குகள் அனைத்தும் பெங்களூரு உள்ளிட்ட மாற்று மையங்களுக்கு மாறி விடும்.”</p><p>இவ்வாறு எச்சரித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>திருமணத்திற்கு ஆர்டர் செய்த லெஹங்காவில் குறைபாடு: மணப்பெண் அதிர்ச்சி; ஆடை வடிவமைப்பு நிறுவனத்திற்கு ரூ.3.46 லட்சம் அபராதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/defect-in-ordered-wedding-lehenga-bride-shocked-fashion-house-fined-346-lakh</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/defect-in-ordered-wedding-lehenga-bride-shocked-fashion-house-fined-346-lakh#comments</comments><guid isPermaLink="false">079bd560-2804-4d16-88a6-3f7743aad9c6</guid><pubDate>Fri, 18 Sep 2026 01:57:30 +0000</pubDate><atom:updated>2026-09-18T01:57:30.422Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,திருமணம்,தமிழகம்,Marriage,அபராதம்,bride,fined,மணப்பெண் ஆடை,லெஹங்கா</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/o7irarzf/redf.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/o7irarzf/redf.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>குறைபாடுள்ள திருமண ஆடையை விற்பனை செய்த வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 3.46 லட்சம் ரூபாய் இழப்பீ டு வழங்க ஆடை வடிவமைப்பு நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.dailythanthi.com/topic/chennai">சென்னை</a> அண்ணாநகரைச் சேர்ந்தவர் அழகு சஞ்சனா. </p><p>இவர், சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், 'கடந்த 2024-ம் ஆண்டு தாய்லாந்தில் எனது திருமணம் நடைபெற இருந்த நிலையில், அதற்காக டெல்லியில் உள்ள 'ஓம் பை பாரதி அண்ட் ஆஷ்னா' என்ற ஆடை வடிவமைப்பகத்தில் ரூ.1.15 லட்சத்திற்கு முத்துக்களால் ஆன லெஹங்கா ஆடைக்கு ஆர்டர் செய்தேன். குறிப்பிட்ட தேதியில் ஆடை வழங்கப்படாததோடு, கூடுதல் கட்டணமாக ரூ.6,850-ம் கட்டாயப்படுத்தி வசூலித்தனர். திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு தான் அந்த ஆடை வழங்கப்பட்டது. அதுவும் தையல் மற்றும் வடிவமைப்பு குறைபாடுகளுடன் இருந்தது. இதுகுறித்து கேட்டபோது, உள்ளூர் தையல்காரரிடம் கொடுத்து சரி செய்து கொள்ளுமாறு அலட்சியமாக பதிலளித்தனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான நான், வேறு வழியின்றி அவசரமாக மாற்று ஆடையை வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். எனவே, உரிய இழப்பீடு வழங்க ஆடை வடிவமைப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டிருந்தது.</p><p>இந்த வழக்கு விசாரணை ஆணையத்தின் தலைவர் டி.கோபிநாத் மற்றும் உறுப்பினர் கவிதா கண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. ஆடை வடிவமைப்பு நிறுவனம் தரப்பில் வக்கீல்கள் யாரும் ஆஜராகவில்லை.</p><p>வழக்கை விசாரித்த ஆணையம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-</p><p>புகார்தாரர் சமர்ப்பித்த ஆதாரங்களின்படி, ஆடை வடிவமைப்பாளர்கள் உரிய நேரத்தில் ஆடையை வழங்காததும், குறைபாடுள்ள ஆடையை வழங்கிவிட்டு அதை உள்ளூர் தையல்காரரிடம் சரி செய்து கொள்ளுமாறு கூறியதும் சேவை குறைபாடு மற்றும் முறையற்ற வணிக நடைமுறையாகும். எனவே, புகார்தாரர் மாற்று ஆடை வாங்க செலவிட்ட தொகை ரூ.1,69,215 மற்றும் டெல்லி சென்று வந்ததற்கான போக்குவரத்து செலவு உள்ளிட்ட இதர செலவுகள் என மொத்தம் 2 லட்சத்து 91 ஆயிரம் ரூபாயை 9 சதவீத வட்டியுடன் ஆடை வடிவமைப்பு நிறுவனம் வழங்க வேண்டும். மேலும், சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்காக ரூ.50 ஆயிரம் மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.3 லட்சத்து 46 ஆயிரம் வழங்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருநெல்வேலி: கூண்டில் சிக்கிய கரடி வனப்பகுதியில் விடுவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirunelveli-bear-caught-in-a-cage-released-into-the-forest</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirunelveli-bear-caught-in-a-cage-released-into-the-forest#comments</comments><guid isPermaLink="false">531b2d3f-64d5-4c32-b538-e75b486be514</guid><pubDate>Fri, 18 Sep 2026 01:43:36 +0000</pubDate><atom:updated>2026-09-18T01:43:36.816Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,கரடி,bear,caught,Cage,கூண்டில் சிக்கியது</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/79a2rpbm/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கூண்டில் சிக்கிய கரடி வனப்பகுதியில் விடுவிப்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/79a2rpbm/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டம், பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார கிராமமான அனவன்குடியிருப்பு பகுதியில் வனத்துறையினர் சார்பில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் கரடி சிக்கியது. </p><h2>வனத்துறையினர் கண்காணிப்பு பணி</h2><p>திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார கிராமமான அனவன்குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">கரடிகள் நடமாட்டம்</a> இருந்து வருகிறது. அதன்படி அந்த பகுதியில் வனத்துறை சார்பில் கூண்டு வைத்து தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். </p><h2>கரடி கூண்டில் சிக்கியது</h2><p>நேற்று முன்தினம் இரவில் அந்த கூண்டில் ஒரு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81">கரடி சிக்கியது</a>. தொடர்ந்து கரடியை கூண்டோடு வாகனத்தில் ஏற்றி பாபநாசம் அருகே கொடமாடி பீட் வனப்பகுதிக்கு வனத்துறையினர் கொண்டு சென்றனர். அங்கு கூண்டை திறந்ததும் கரடி அங்கிருந்து வனப்பகுதிக்குள் ஓடியது. </p> ]]></content:encoded></item><item><title>பிரதமர் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 25 ஆயிரம் வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/central-government-approves-25000-houses-for-tamil-nadu-under-the-prime-ministers-scheme</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/central-government-approves-25000-houses-for-tamil-nadu-under-the-prime-ministers-scheme#comments</comments><guid isPermaLink="false">264a0c91-b78e-48f6-b010-3368ee0bba5b</guid><pubDate>Fri, 18 Sep 2026 01:34:20 +0000</pubDate><atom:updated>2026-09-18T01:34:20.689Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழ்நாடு,தமிழகம்,Narendra Modi,மத்திய அரசு,prime minister,Central Government,Houses,பிரதமர் வீடு கட்டும் திட்டம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/drx19z8z/akier.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/drx19z8z/akier.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 25 ஆயிரம் வீடுகள் கட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் <a href="https://www.dailythanthi.com/topic/narendra-modi">பிரதமர் நரேந்திர மோடி</a> தலைமையிலான மத்திய அரசால் 25 ஜூன் 2015 அன்று தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வீடுகள் இல்லாதவர்கள் வீடு கட்டவோ அல்லது வாங்கவோ பயன் பெறுவார்கள். மத்திய, மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஊரக பகுதிகளில் ஏழைகளுக்கு வீடு வழங்கப்படுகிறது.</p><p>இதில் பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தின் முதல் கட்டம் முடிவடைந்தநிலையில், 2024ம் ஆண்டு பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் இரண்டாம் கட்டம் அறிவிக்கப்பட்டது. இதில் 2.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு கோடி வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. </p><p>இதில் நாடு முழுவதும் 5 ஆயிரத்து 206 நகரங்களில், 71.55 லட்சம் வீடுகள் கட்ட மத்திய அரசு பல்வேறு மாநிலங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. </p><p>இதுதொடர்பாக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், “மத்திய அரசு அறிவித்துள்ள பிரதமரின் வீட்டுவசதி திட்ட இரண்டாம் கட்டத்தில், தமிழகத்தில் 722 நகரங்களில், 25 ஆயிரம் வீடுகள் கட்டப்பட உள்ளன. இதில் 300 சதுரடி பரப்பளவில் வீடுகள் கட்டப்பட உள்ளன. இத்திட்டத்தில் ஒரு வீட்டுக்கான மொத்த செலவில் 2.50 லட்சம் ரூபாயை மத்திய அரசு மானியமாக வழங்கும் மீதித் தொகையை தமிழக அரசு வழங்கும். திட்டத்தின் இரண்டாம் பாகத்தில், வழக்கமான முறைக்கு பதிலாக, புதிய தொழில்நுட்பத்தில் வீடுகள் கட்ட முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: நாளை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madhuranthakam-and-dharapuram-by-elections-final-list-of-candidates-to-be-released-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madhuranthakam-and-dharapuram-by-elections-final-list-of-candidates-to-be-released-tomorrow#comments</comments><guid isPermaLink="false">99821fb3-6506-4140-8972-05c9f7225fe8</guid><pubDate>Fri, 18 Sep 2026 01:27:28 +0000</pubDate><atom:updated>2026-09-18T01:27:28.996Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இடைத்தேர்தல்,வேட்பாளர் பட்டியல்,Candidate list,மதுராந்தகம்,தாராபுரம்,By-election,Madhuranthakam,Dharapuram</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/n2g4l4qs/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/n2g4l4qs/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>மதுராந்தகம் தொகுதி</h2><p>செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதியில் அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடை பெறுகிறது. இங்கு த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பில் பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சுகந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமன் உள்ளிட்ட 48 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர். </p><p>வேட்பு மனுக்கள் பரிசீலனை நேற்று நடைபெற்றது. பரிசீலனை முடிவில் த.வெ.க, தி.மு.க., அ.தி.மு.க. மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட 28 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது 20 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.</p><h2>தாராபுரம் தொகுதி</h2><p>அதேபோல் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 6-ந்தேதி நடைபெற உள் ளது. இதனை முன்னிட்டு தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத் தில், கடந்த 9-ந்தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. நேற்று முன்தினத்தோடு வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. மொத்தம் 51 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.</p><p>இதனையடுத்து வேட்புமனு பரிசீலனை, ஆர்.டி.ஓ. பெலிக்ஸ் ராஜா தலைமையில் நேற்று நடைபெற்றது. தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 22 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. அதன்படி தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் சத்தியபாமா, தி.மு.க. வேட்பாளர் வக்கீல் சுகன்யா, அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் லட்சுமணன் உள்ளிட்டோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.</p><h2>இறுதி வேட்பாளர் பட்டியல்</h2><p>13 சுயேச்சை வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மொத்தம் தாக்கலான 51 மனுக்களில், 22 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மீதமுள்ள 29 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. நாளை (சனிக்கிழமை) மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..! வானிலை மையம் அப்டேட் </title><link>https://www.dailythanthi.com/news/weather/heavy-rain-warning-for-2-districts-weather-department-update</link><comments>https://www.dailythanthi.com/news/weather/heavy-rain-warning-for-2-districts-weather-department-update#comments</comments><guid isPermaLink="false">621119a9-945d-4422-910d-59c8761d1ccd</guid><pubDate>Fri, 18 Sep 2026 01:06:47 +0000</pubDate><atom:updated>2026-09-18T01:06:47.544Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,Rain,Weather,கனமழை,வானிலை,தமிழகம்,Weather News,WeatherUpdate,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,வானிலை ஆய்வு மையம்,கன மழை,heavy rain,வானிலை அறிக்கை,weather condition,Weather Report,வானிலை முன்னறிவிப்பு,weather information,Weather Status,வானிலை அறிவிப்பு,weather center,TN Rain,TN weather,வானிலை அப்டேட்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/7676ojrp/sat.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/7676ojrp/sat.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 25 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><h2>கனமழை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>சுமார் 0.9 கிமீ உயரத்தில் மராத்வாடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து மன்னார் வளைகுடா வரை, உள் கர்நாடகா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இதன் காரணமாக <strong>இன்று (18-09-2026):</strong> நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">கனமழை</a></strong> பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், மதுரை, சிவகங்கை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், கரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்யக்கூடும். ஏனைய தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான <strong>மழை</strong> பெய்யக்கூடும்.</p><p><strong>நாளை (19-09-2026):</strong> நீலகிரி, கோயம்புத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">கனமழை</a></strong> பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் ஏனைய வட தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான <strong>மழை</strong> பெய்யக்கூடும்.</p><p><strong>20-09-2026 மற்றும் 21-09-2026:</strong> நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <strong>கனமழை</strong> பெய்யக்கூடும்.</p><p>ஏனைய வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான <strong>மழை</strong> பெய்யக்கூடும்.</p><p><strong>22-09-2026 மற்றும் 23-09-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான <strong>மழை</strong> பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்யக்கூடும்.</p> <h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong><ins>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</ins></strong></p><p><strong>18-09-2026 முதல் 21-09-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.</p><p><strong><ins>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</ins></strong></p><p><strong>18-09-2026 முதல் 21-09-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>(18-09-2026):</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>மீனவர்களுக்கான எச்சரிக்கை:</h2><p><strong><ins>வங்கக்கடல் பகுதிகள்:</ins></strong></p><p><strong>18-09-2026:</strong> அந்தமான் கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இதர அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>19-09-2026 மற்றும் 20-09-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் தென் பகுதிகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>21-09-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் தென் பகுதிகள் மற்றும் அந்தமான் கடலின் அநேக பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடலின் சில பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p><strong><ins>தமிழக கடலோரப்பகுதிகள் &amp; அரபிக்கடல் பகுதிகள்:</ins></strong> எச்சரிக்கை ஏதுமில்லை.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-60</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-60#comments</comments><guid isPermaLink="false">0305c347-c25f-4028-8c08-aa2b7ca6f867</guid><pubDate>Fri, 18 Sep 2026 01:00:44 +0000</pubDate><atom:updated>2026-09-18T01:00:44.759Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல் விலை,டீசல் விலை,Petrol and diesel prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/1xj9q4i0/petrol.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/1xj9q4i0/petrol.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.</p> <h2>பெட்ரோல், டீசல் விலை</h2><p>இந்நிலையில், சென்னையில் இன்று (18.09.2026 வெள்ளிக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ. 99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>வார விடுமுறை; தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 655 சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்து கழகம் முடிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/weekend-transport-corporation-decides-to-operate-2655-special-buses-across-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/weekend-transport-corporation-decides-to-operate-2655-special-buses-across-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">aed239e4-85c9-450c-b1b9-fc655b62c6c1</guid><pubDate>Thu, 17 Sep 2026 22:35:45 +0000</pubDate><atom:updated>2026-09-17T22:35:45.942Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Special Bus,வார விடுமுறை,போக்குவரத்து கழகம்,weekly leave</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/fkds4lg8/BUS.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/fkds4lg8/BUS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி. கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர் கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) அன்று 760 பஸ் களும், நாளை (சனிக்கிழமை) 520 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள் ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங் கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 115 பஸ்களும், நாளை 115 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>மேலும், பெங்களூரு. திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல் வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.மாதவரத்திலிருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோ ணம், வேலூர், ஓசூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு 18 மற்றும் 19-ந் தேதிகளில் தலா 70 பஸ்களும் சிறப்பு பஸ்களாக இயக்க திட்டமிடட் பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக் கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 805 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஒரு எம்.பி சீட்டுக்காக திமுக கூட்டணிக்கு வந்த கட்சி தேமுதிக: வன்னி அரசு கடும் தாக்கு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmdk-joined-the-dmk-alliance-for-the-sake-of-a-single-mp-seat-vanni-arasu-launches-a-scathing-attack</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmdk-joined-the-dmk-alliance-for-the-sake-of-a-single-mp-seat-vanni-arasu-launches-a-scathing-attack#comments</comments><guid isPermaLink="false">854b7edc-f87b-44f3-aa84-8b13f6d57767</guid><pubDate>Thu, 17 Sep 2026 22:01:27 +0000</pubDate><atom:updated>2026-09-17T22:01:27.754Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,DMDK,தேமுதிக,வன்னி அரசு,Vanni Arasu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/tpwduokn/vanni-arasu.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/tpwduokn/vanni-arasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை வேப்பேரியில் அமைச்சர் வன்னி அரசு நிருபர்களிடம் கூறியதாவது:-</p><p>இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சிகள் வேட்பாளர்கள் நிறுத்துவது முன்பே தெரிந்திருந்தால், நாங்கள் வேட்பாளர்களை நிறுத்தியிருக்க மாட்டோம் என சீமான் தெரிவித்த கருத்தைப் பொறுத்தவரையில், அவர் கூறிய பல பொய்களில் இதுவும் ஒன்று.மாணவர் தமிழ்ச்செல்வன் மரணத்திற்கு என்ன காரணம்? என்ற உண்மையை அறிய வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் சி.பி.சி.ஐ.டி. விசாரணை வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். எங்களுக்கும் அதே கோரிக்கைதான் உள்ளது. அப்போதுதான் நீதி கிடைக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.</p><h2>இருபக்கமும் பேரம்</h2><p>தே.மு.தி.க. கடந்த காலங்களில் பா.ஜனதாவோடு இணைந்து செயல்பட்டவர்கள். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது அந்த கூட்டணியா அல்லது இந்த கூட்டணியா என்று இரு பக்கமும் பேரம் பேசியவர்கள்தான் தே.மு.தி.க. தலைவர்கள்.கடைசியாக ஒரு மேல்-சபை எம்.பி. சீட்டுக்காக தி.மு.க. கூட்டணிக்கு வந்தனர். இத்தகைய பின்னணி கொண்டவர்கள், எங்களைப் பார்த்து அமைச்சர் பதவிக்காக கூட்டணி மாறியதாக கூறுவது ஏற்புடையதல்ல. திருமாவளவன் கூறிய கருத்தை அவர்கள் சரியாக உள்வாங்கிக்கொள்ளவில்லை.</p><h2>எம்.பி. சீட்டுக்காக...</h2><p>நாங்கள் தி.மு.க. கூட்டணியில் நீண்ட காலமாக பயணம் செய்து வந்தோம். இந்தப் பயணத்தில் திடீரென புதிதாக ஒரு கட்சி வருகிறது. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியை விட அவர்களுக்கு அதிகமாக கொடுத்திருக்கிறார்கள் என்பதுதான் தி.மு.க.வோடு எங்களுக்கு ஏற்பட்ட முரண்பாடுகளில் முக்கியமான ஒன்று. இது எங்களை தி.மு.க. எப்படி நடத்தியது என்று சொல்லப்பட்ட உண்மை சம்பவமாகும். இதில் தே.மு.தி.க.வை நாங்கள் குற்றம்சாட்டவில்லை. அதை புரிந்து கொள்ளாமல் பிரேமலதா பேசியது, அவரின் அறியாமையைக் காட்டுகிறது. விடுதலைச் சிறுத்தைகள் எப்போதும் பதவிக்காக செல்பவர்கள் இல்லை என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஒரு கூட்டணியில் எங்களுக்கான எண்ணிக்கை மற்றும் மதிப்பீடு எவ்வளவு என்று சொல்லும்போது ஏற்பட்ட கசப்பைதான் நாங்கள் வெளிப்படுத்தினோம். அது தே.மு.தி.க. மீதான குற்றச்சாட்டு அல்ல. இவ்வாறு அவர் கூறினார்</p> ]]></content:encoded></item><item><title>தவெக ஆட்சி அற்புதமான ஆட்சி: இடைத்தேர்தலில் வெற்றி பெறும்- மதுரை ஆதீனம் பேட்டி
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvks-governance-will-be-magnificent-it-will-win-the-by-election-madurai-adheenams-interview</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvks-governance-will-be-magnificent-it-will-win-the-by-election-madurai-adheenams-interview#comments</comments><guid isPermaLink="false">4d4c3492-6333-43bf-9fcf-36ce12a5bf30</guid><pubDate>Thu, 17 Sep 2026 20:34:00 +0000</pubDate><atom:updated>2026-09-17T20:34:00.021Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,இடைத்தேர்தல்,Madurai Adeenam,மதுரை ஆதீனம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/qbwyrnl7/adeenam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மதுரை ஆதீனம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/qbwyrnl7/adeenam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>காஞ்சிபுரம், </p><p>காஞ்சிபுரம் மாநகராட்சி பிள்ளையார் பாளையம் பகுதியில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் சமேத வில்வநாத ஈஸ்வரர் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் மதுரை ஆதீனத்தின் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மதுரை ஆதீனம் கூறியதாவது:  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது. மதுரை ஆதீனம் கோவிலுக்கு சென்றால் அவரை பின்தொடர்ந்து ஏராளமானோர் வரக்கூடும் என்பதால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக கும்பாபிஷேகத்தில் பங்கேற்கவில்லை. </p><p>மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்கும்பாபிஷேக ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் விஜய் ஆண்டவன் பெயரில் பதவி ஏற்றிருப்பதும் லஞ்சம் கொடுக்கக்கூடாது என்றும், லஞ்சம் கேட்டால் முதலமைச்சர் பெயரை சொல்லுங்கள் என்று விஜய் கூறியிருப்பது தனக்கு பிடித்துள்ளது. </p><p>தவெக ஆட்சி அற்புதமான ஆட்சி. எனது ஆசி தவெகவுக்கே. இதுவரை இருந்த முதலமைச்சர்களைவிட விஜய் போன்ற அற்புதமான முதலமைச்சரை நான் பார்த்ததில்லை . வருகிற இடைத்தேர்தல் மட்டுமின்றி, அடுத்த 100 ஆண்டுகளுக்கும் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறும்”என்றார்.</p> ]]></content:encoded></item><item><title>சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட திருத்த மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/governor-grants-assent-to-amendment-bills-tabled-in-the-legislative-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/governor-grants-assent-to-amendment-bills-tabled-in-the-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">dca9513d-4b8b-4752-a40f-52582a635f00</guid><pubDate>Thu, 17 Sep 2026 20:28:27 +0000</pubDate><atom:updated>2026-09-17T20:28:27.859Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,Governor,கவர்னர்,சட்ட திருத்தம்,Assembly</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/26hhy368/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/26hhy368/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த கூட்டத் தொடரின் போது பல்வேறு சட்ட மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டன. அவற்றில் ஒரு சில மசோதாக்கள் தவிர மற்ற மசோதாக்களுக்கு கவர்னர் அர்லேகர் ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளார்.</p> <p> அந்த வகையில் தமிழ்நாடு ஊரமைப்பு சட்ட திருத்த மசோதா,தீயணைப்புத் துறை சட்ட திருத்த மசோதா, சம்பளம் வழங்கல் சட்ட திருத்த மசோதா, ஊராட்சிகள் 2-ம் சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் (கூடுதல் பணி) சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு ஜி.எஸ்.டி. சட்டத் திருத்த மசோதா உள்பட 11 சட்ட மசோதாக்களுக்கு கவர்னரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. எனவே அந்த மசோதாக்கள், தற்போது சட்டங்களாகிவிட்டன. அவை அனைத்தும் கடந்த 15-ந் தேதியிட்ட தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.</p> <p>தமிழகத்தில் பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கான நிலப்பரப்பை குறைத்து, சட்டசபையில் அறிமுகம் செய்யப்பட்ட தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டம் தொடர்பான மசோதா, கவர்னரிடம் இருந்து ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>