<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 17 Aug 2026 17:18:33 +0000</lastBuildDate><item><title>6 அடி நீளமுள்ள மலைப்பாம்பை  பிடித்த வாலிபர் தீயணைப்பு துறையினரிடம் ஒப்படைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/brave-youth-rescues-6-foot-rock-python-from-canal</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/brave-youth-rescues-6-foot-rock-python-from-canal#comments</comments><guid isPermaLink="false">fa2c4dc1-731b-4ac3-bce7-2e2f97760d88</guid><pubDate>Mon, 17 Aug 2026 16:31:16 +0000</pubDate><atom:updated>2026-08-17T16:31:16.947Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வாலிபர்,மலைப்பாம்பு,Fire Department,The python was caught,தீயணைப்பு துறை,A young man</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/umnul8as/snakee.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மலைப்பாம்பு]]></media:title><media:description type="html"><![CDATA[ 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பை  பிடித்த வாலிபர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/umnul8as/snakee.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தக்கலை,</p><p>தக்கலை அருகே கால்வாயில் மிதந்த 6 அடி நீள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">மலைப்பாம்பை </a>வாலிபர் ஒருவர் லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். இந்த துணிச்சலான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>கால்வாயில் மிதந்த மலைப்பாம்பு</h2><p>கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள குமாரபுரம் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட பூவங்காபறம்பு வழியாக திருவிதாங்கோடு கிளை கால்வாய் செல்கிறது. நேற்று மாலை இந்த கால்வாய் கரையின் உடைந்த பகுதியில் சுமார் 6 அடி நீளமுள்ள பெரிய மலைப்பாம்பு ஒன்று தனது தலையை நுழைத்துக்கொண்டு, உடல் முழுவதும் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த அப்பகுதியை சேர்ந்த ஜெரோம் என்பவர், கால்வாயில் மலைப்பாம்பு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இதுகுறித்து அருகில் இருந்த பொதுமக்களிடம் தெரிவித்தார். விஷயம் காட்டுத்தீ போல் பரவியதால், மலைப்பாம்பை பார்க்க அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். </p> <h2>வாலிபர் துணிச்சல்</h2><p>இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள், மலைப்பாம்பு அங்கிருந்து நகர்ந்து தண்ணீருக்குள் சென்று மறைந்துவிடும் என்று பொதுமக்கள் கருதினர். அப்போது கூட்டத்தில் இருந்த வாலிபர் ஒருவர் திடீரென கால்வாயில் இறங்கினார். </p><p>அவர் தண்ணீரில் கிடந்த 6 அடி நீள மலைப்பாம்பை நெஞ்சுரத்துடன் லாவகமாக பிடித்து கரைக்கு கொண்டு வந்தார். வாலிபரின் இந்த துணிச்சலான செயலை கண்டு அங்கிருந்தவர்கள் பாராட்டும் அதே வேளையில் அதிர்ச்சியும் அடைந்தனர்.</p> <h2>வனத்துறையிடம் ஒப்படைப்பு</h2><p>இதனை தொடர்ந்து பொதுமக்கள் அந்த மலைப்பாம்பை ஒரு சாக்குப்பையில் போட்டு பத்திரமாக கட்டினர். பின்னர் சித்திரங்கோட்டில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று, அங்குள்ள வன அதிகாரிகளிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர். மலைப்பாம்பை மீட்ட வாலிபரால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.</p>]]></content:encoded></item><item><title>ஈரோடு அருகே கார் மோதி காய்கறி வியாபாரி உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vegetable-vendor-dies-after-being-hit-by-car-near-erode</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vegetable-vendor-dies-after-being-hit-by-car-near-erode#comments</comments><guid isPermaLink="false">cf5b44b2-2a20-42ca-b747-cd7c613731d5</guid><pubDate>Mon, 17 Aug 2026 16:16:57 +0000</pubDate><atom:updated>2026-08-17T16:16:57.336Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Car,கார்,Erode,ஈரோடு,உயிரிழப்பு,Vehicle,வியாபாரி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/256qezw4/24.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விபத்து]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/256qezw4/24.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>அந்தியூர், </p><p>ஈரோடு மாவட்டம் பருவாச்சி அருகே பெட்ரோல் போட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பிய காய்கறி வியாபாரி மீது கார் மோதிய விபத்தில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். </p><p>பவானி நல்லிபாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அன்பழகன் (வயது 46). இருசக்கர வாகனத்தில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவர். நேற்று மோட்டார் வாகனத்தில் பருவாச்சியில் உள்ள பெட்ரோல் பங்கிற்குச் சென்று பெட்ரோல் நிரப்பியுள்ளார். </p><h2>விபத்து</h2><p>அதன் பின்னர், பவானி சாலையில் மீண்டும் தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, நிறுத்தம் அருகே பின்னால் பருவாச்சி காந்திநகர் பஸ் கார் எதிர்பாராதவிதமாக அன்பழகனின் வாகனம் மீது மோதியது.</p><p>இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்குத் தலையின் பின்புறம் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். </p><h2>விசாரணை</h2><p>எனினும், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அன்பழகன் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து அந்தியூர் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகவேலு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தை ஏற்படுத்தி விட்டு தலைமறைவான கார் ஓட்டுநரை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a> தீவிரமாகத் தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கூடுதல் பயிர்க்கடன் தள்ளுபடி யானை பசிக்கு சோளப்பொறி போல் இருக்கிறது ;பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-crop-loan-waiver-is-like-a-corn-trap-for-a-hungry-elephant-premalatha-vijayakanths-criticism</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-crop-loan-waiver-is-like-a-corn-trap-for-a-hungry-elephant-premalatha-vijayakanths-criticism#comments</comments><guid isPermaLink="false">6b536587-d063-43a7-8236-4832e9a6c5a8</guid><pubDate>Mon, 17 Aug 2026 16:12:55 +0000</pubDate><atom:updated>2026-08-17T16:12:55.131Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,பயிர்க்கடன் தள்ளுபடி,பிரேமலதா கண்டனம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/3yymsols/lathaa33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
கூடுதல் பயிர்க்கடன் தள்ளுபடி யானை பசிக்கு சோளப்பொறி போல் இருக்கிறது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/3yymsols/lathaa33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை தலைமை செயலகத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>த.வெ.க. அரசு 100 நாட்களைக் கடந்துள்ளது அவ்வளவுதான். வேற ஒன்னும் இல்லை. மாற்றம் வரும் என்று சொன்னார்கள். சட்டசபை நடைபெறாத கடந்த 4 நாட்களிலேயே அதிக பாலியல் வன்கொடுமைகளும் கொலைகளும் நடந்துள்ளன. இதுதான் அந்த மாற்றமா? மாற்றம் வேண்டும் என்று ஓட்டு போட்டார்கள் இளைஞர்கள். இன்று இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. கர்நாடகாவில் மூன்று தமிழர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.</p><p>அந்த குற்றவாளிகளுக்கு கர்நாடக அரசு உச்சபட்ச தண்டனையை அளிக்க வேண்டும். இதைத்தான் இந்த 100 நாட்களில் பார்த்துள்ளோம். மக்கள் வரிப்பணத்தில் தான் சட்டசபை நடந்து வருகிறது. சட்டசபைக்குள் தனிமனித தாக்குதலும் ஒரு கட்சி மற்றொரு கட்சியிடம் வாக்குவாதம் செய்வதுதான் நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் பிரச்சினைகளை பேசுவதற்கு யாரும் தயாராக இல்லை.</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய் </a>அறிவித்துள்ள கூடுதல் பயிர் கடன் தள்ளுபடி என்பது யானை பசிக்கு சோளப்பொறி போல் தான் இருக்கிறது. நாங்கள் ஏற்கனவே சொன்னது போல் தான் முழு பயிர் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை ஆகும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சோளிங்கர் தவெக எம்.எல்.ஏ. கபில் மீது வழக்குப்பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-registered-against-sholingar-tvk-mla-kapil</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-registered-against-sholingar-tvk-mla-kapil#comments</comments><guid isPermaLink="false">fc39081c-ee60-4a08-8871-2723bdbc77e1</guid><pubDate>Mon, 17 Aug 2026 16:05:03 +0000</pubDate><atom:updated>2026-08-17T16:05:03.394Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,சோளிங்கர்,தவெக எம்.எல்.ஏ.,Sholingur</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/y952aobg/solingar33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 

சோளிங்கர் தவெக எம்.எல்.ஏ. கபில் மீது வழக்குப்பதிவு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/y952aobg/solingar33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராணிப்பேட்டை,</p><p>செய்தியாளர்களை தாக்கிய புகாரில் சோளிங்கர் தவெக எம்.எல்.ஏ. கபில் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில், யூடியூபர் மற்றும் செய்தியாளர்கள் தாக்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் சோளிங்கர் தொகுதி எம்.எல்.ஏ. கபில் மீது ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் (எஸ்.பி.) புகார் அளிக்கப்பட்டது.</p><p>தகவலின்படி, சோளிங்கரில் உள்ள ஒரு திரையரங்கில் முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த எம்.எல்.ஏ. கபிலிடம், யூடியூபர் சிவா திரைப்படம் குறித்து கருத்து கேட்க மைக்கை நீட்டியதாக கூறப்படுகிறது. அப்போது கபில் அவரை தாக்க முயன்றதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதுடன், அந்த சம்பவம் தொடர்பான செய்திகள் வெளியாகின.</p><p>இதனைத் தொடர்ந்து, யூடியூபர் சிவாவை தேடி கபிலும், அவரது ஆதரவாளர்களும் சென்றதாகவும், பின்னர் சிவாவை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று தாக்கியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து செய்தி சேகரிக்கச் சென்ற நாளிதழ் நிருபர்கள் அரங்கநாதன் மற்றும் கல்யாணசுந்தரமும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p>சம்பவ இடத்தில் பொதுமக்கள் திரண்டதைத் தொடர்ந்து சோளிங்கர் போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டதாக கூறப்படுகிறது. மேலும், சம்பவத்தின் போது நிருபர்களின் செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்த வீடியோக்கள் காவல்துறை அதிகாரியால் அழிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தாக்குதலில் காயமடைந்த யூடியூபர் மற்றும் இரு செய்தியாளர்களும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.</p><p>இந்த சம்பவத்தை கண்டித்து பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் சோளிங்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததுடன், ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி. சிபினையும் நேரில் சந்தித்து நடவடிக்கை கோரி மனு வழங்கினர்.</p><p>இந்த விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்கள் சங்கங்களும் கண்டனம் தெரிவித்தனர். </p><p>இந்தநிலையில்,  செய்தியாளர்களை தாக்கிய வழக்கில் 21 நாட்களுக்குப் பிறகு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D">சோளிங்கர்  தொகுதி தவெக எம்.எல்.ஏ.</a> கபில் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  கபில் மற்றும் அவரது சகோதரர் தனஞ்செழியன் மற்றும் சிலர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>242 தொழில் நிறுவனங்களுக்கு அபராதம்; தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/242-industrial-firms-fined-labour-welfare-department-action</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/242-industrial-firms-fined-labour-welfare-department-action#comments</comments><guid isPermaLink="false">aa923829-68c7-4062-a4c5-bdbbb3d13def</guid><pubDate>Mon, 17 Aug 2026 16:01:33 +0000</pubDate><atom:updated>2026-08-17T16:01:33.792Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நடவடிக்கை,அபராதம்,தொழிலாளர் நலத்துறை,fines,தொழில் நிறுவனங்கள்,Labor Welfare Board</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/sqzo9qaa/govt.gif" width="750"><media:title type="html"><![CDATA[ தொழிலாளர் நலத்துறை ]]></media:title><media:description type="html"><![CDATA[ 242 தொழில் நிறுவனங்களுக்கு அபராதம்; தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/sqzo9qaa/govt.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>242 தொழில் நிறுவனங்களுக்கு அபராதம்; தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை. இது தொடர்பாக, தொழிலாளர் உதவி ஆணையர் பாலமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-</p><h2>ஆய்வு</h2><p>சென்னை மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தேசிய விடுமுறை தினமான சுதந்திர தினத்தன்று கடைகள், உணவகங்கள், பல்வேறு தொழில் நிறுவனங்களில் தொழிலாளர் உதவி ஆணையர்கள் (வட்டம் 1,2,3) ஆகியோர் தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள், தொழிலாளர்கள் துணை ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.</p><h2>நிறுவனங்களுக்கு அபராதம் </h2><p>தேசிய விடுமுறை நாளில் இரட்டைப்படி ஊதியம் அல்லது ஊதியத்துடன் கூடிய மாற்று விடுப்புடன் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனரா என்பது குறித்து 377 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 108 கடைகள்-நிறுவனங்கள், 132 உணவு நிறுவனங்கள், 2 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என 242 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>கேரளம் - தெலுங்கானா இடையே சிறப்பு ரெயில் இயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-service-between-kerala-and-telangana</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-service-between-kerala-and-telangana#comments</comments><guid isPermaLink="false">191ea391-792c-4888-867b-0d8ef038027e</guid><pubDate>Mon, 17 Aug 2026 15:49:16 +0000</pubDate><atom:updated>2026-08-17T15:49:16.855Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தெலுங்கானா,Telangana,சிறப்பு ரெயில்,கேரளா,Kerala,கோட்டயம்,சார்லபள்ளி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/advea0k0/Untitled-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/advea0k0/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>தெலுங்கானா மாநிலம் சார்லபள்ளியில் இருந்து வருகிற 23,30 ஆகிய தேதிகளில் காலை 7.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07197), காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக மறுநாள் மதியம் 12.25 மணிக்கு கேரள மாநிலம் கோட்டயம் சென்றடையும். மறுமார்க்கமாக, கோட்டயத்தில் இருந்து வருகிற 24, 31 ஆகிய தேதிகளில் மாலை 4.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07198), மேற்கண்ட வழித்தடம் வழியாக புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் நள்ளிரவு 12.30 மணிக்கு சார்லபள்ளி சென்றடையும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இது ஒரு நியூ எரா - 100 நாளில் 546 குற்ற சம்பவங்கள்; திமுக பரந்தாமன் குற்றச்சாட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/this-is-a-new-era-546-crimes-in-100-days-dmk-paranthaman-allegation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/this-is-a-new-era-546-crimes-in-100-days-dmk-paranthaman-allegation#comments</comments><guid isPermaLink="false">acefaae3-b106-4df1-be4c-e0b0f2146d13</guid><pubDate>Mon, 17 Aug 2026 15:26:08 +0000</pubDate><atom:updated>2026-08-17T15:26:08.599Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,திமுக,DMK,College student,குற்றச்சாட்டு,Criminal,கல்லூரி மாணவன்,incidents</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/i2ddbm2m/parathaman.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பரந்தாமன்]]></media:title><media:description type="html"><![CDATA[ திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/i2ddbm2m/parathaman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>100 நாள் அவல ஆட்சியை பற்றி திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன் குற்றச்சாட்டியுள்ளார். இது தொடர்பாக  அவர் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:-</p><h2> மக்களுக்கு நம்பிக்கை இல்லை </h2><p>100 நாளில் 546 குற்றச்சம்பவங்கள் பச்சிளம் குழந்தை முதல் பாட்டி வரை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88">பாலியல் வன்கொடுமை</a>க்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். கஞ்சா வாங்கினால் மாத்திரை ப்ரீ ஆட்சி இந்த அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை!</p> <h2>சர்க்கஸ் சர்க்கார்</h2><p>தவெக அரசு பொறுப்பேற்ற போது ‘இட்ஸ் எ பிகினிங் ஆப் ஏ நியூ எரா’ என்று சொன்னார். உண்மைதான், இது ஒரு நியூ எரா—100 நாளில் 546 குற்ற சம்பவங்களை செய்த ஒரு நியூ எரா!. இன்னைக்கு விஜய்யினுடைய சர்க்கஸ் சர்க்கார் ஆட்சியின் சாதனை இது. 'பெண்கள் பாதுகாப்பு ரொம்ப நான் ஸ்ட்ரிக்ட்டா வச்சிருப்பேன்'னு சொன்னார். ஆனால், இன்னைக்கு பெண்களுக்கான பாதுகாப்பு எந்த அளவில் தமிழ்நாட்டில் இருக்கின்றது என நாட்டு மக்களுக்கே நன்றாக தெரியும்.<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95"> தவெக</a> கட்சியில் இருக்கக்கூடிய பெண்களுக்கே பாதுகாப்பு கொடுக்க முடியாத ஒரு பலவீனமான சர்க்காராகத்தான் இது.</p> <h2>சர்க்கஸ் சர்க்கார்</h2><p> 'போதை கலாச்சாரத்திலிருந்து நம்ம பசங்களை மீட்கணும், அவங்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கு'னு சொன்னார். ஆனால் போதை பழக்கமும் கடத்தலும் இங்க தீவிரமாக இருக்கிறது. 'இந்த கல்லூரி வளாகத்தில் போதைப்பொருள் கடத்தப்படுகிறது, விற்கப்படுகிறது' என்று காவல்துறைக்கு தகவல் கொடுத்த கோவை கல்லூரி மாணவன் அமுதனுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத  சர்க்கஸ் சர்க்கார் அரசுதான் இந்த விஜய்யின் அரசு.</p><h2>கொலை பழி</h2><p> காவல்துறையை கையில் வச்சிருக்கக்கூடிய முதல்-அமைச்சர். 'ஜென்-ஜி' பிள்ளைகள் எல்லாம் உங்களுக்கு ஆர்வமாக வாக்களித்தார்களே, இந்த முதல்-அமைச்சருக்கு, இன்னைக்கு 'ஜென்-ஜி'கள் மட்டும் ஏறத்தாழ 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இன்றைக்கு கொல்லப்பட்டிருக்கிறார்கள், இந்த கொலை பழியை முதல்-அமைச்சர்  ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். இந்த 100 நாளில் பல குற்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்திருக்கு. நான் ஏற்கனவே சொன்னது மாதிரி 546 குற்ற சம்பவங்கள் இருக்கு. இந்த ஒரு வாரத்தில் மட்டும் நடந்த குற்றங்களின் எண்ணிக்கையை எடுத்துக்கிட்டீங்களா?</p><h2>அமைச்சர் என்ன சொல்றாரு?</h2><p>கோவையில் போதைப்பொருளைப் பற்றி தகவல் கொடுத்ததாக சொல்லி, அமுதன் என்கிற மாணவனை அடித்து கொன்றுள்ளனர். அந்த மாணவன் போதை பொருள் பற்றி கொடுத்த தகவலை காவல்துறையே போதை கும்பலிடம் கொடுத்துள்ளது. ஆனால் சட்டமன்றத்தில் அமைச்சர் என்ன சொல்றாரு? 'இரு கோஷ்டிகளுக்கு இடையேயான மோதல்'னு சொல்லிட்டு வழக்கின் தன்மையை திசைதிருப்புறார்.</p> <h2>இளைஞர்களுக்கான அரசு</h2><p>நான் கேட்கிறேன் முதல்-அமைச்சர் அவர்களே, 'இளைஞர்களுக்கான அரசு' என்று நீங்கள் மார்தட்டி கொள்கிறீர்கள். 'இளைஞர்கள் மூலமாகவே ஆட்சிக்கு வந்தேன்' என்று சொல்லுகிற நீங்கள், ஒரு இளைஞன் குற்றம் நடைபெறுகிறது என்று காவல்துறைக்கு சொன்ன ரகசியத்தை காப்பாற்றாத காவல்துறை அப்படிப்பட்ட காவல்துறை வைத்திருக்கும் உங்களுக்கு முதல்-அமைச்சராக இருப்பதற்கு கொஞ்சமாவது தகுதி இருக்கிறதா என்ற கேள்வியைத்தான் உங்களை நோக்கி நான் கேட்கிறேன்.</p><h2>திமுக மீதுதான் நம்பிக்கை </h2><p> அமுதனுடைய தாயார் சொல்லுகிறார்கள், 'அரசின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை; எதிர்க்கட்சி தலைவர் அண்ணன் உதயநிதிதான் எங்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும்' என்று சொல்லுகிறார்கள் என்றால், ஆளுகிற அரசின் மீது இந்த நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை! எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய திராவிட முன்னேற்ற கழகத்தின் மீதுதான் நம்பிக்கை இருக்கிறது என்பதை இது காட்டுகிறது.</p><h2>100 நாள் சாதனை</h2><p> நேற்றைக்கு திருவொற்றியூரில் இரண்டு அமைச்சர்களை (ஆதவ் அர்ஜுனா மற்றும் ராஜ்மோகன்) ஓடவிட்டிருக்கிறார்கள். இந்த 100 நாள் சாதனை என்னவென்று சொன்னால், அமைச்சர்களைத் தலைதெறிக்க ஓட வைத்ததுதான் இந்த 100 நாள் சாதனை! இதே மாதிரி தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்றதைத் தட்டிக் கேட்ட பையனை அம்மிக்கல்லைத் தூக்கிப் போட்டுக் கொலை செஞ்சிருக்காங்க. திருவெறும்பூரில் இரண்டு தவெக காரங்க ஒருத்தரை வெட்டிக் கொலை பண்ணியிருக்காங்க.</p> <h2>ஒரு வார குற்ற சம்பவங்கள் </h2><p>விருதுநகரில் ஒரு பள்ளி பொண்ணை துன்புறுத்தியதை தட்டி கேட்ட அப்பாவை வெட்டி கொன்றிருக்காங்க. காஞ்சிபுரத்தில் கோவில் திருவிழாவில் இரண்டு இளைஞர்களை வெட்டி கொன்றிருக்காங்க. திருவனந்தபுரத்தில் 25 வயசு இளைஞரை வெட்டி கண்மாயில் வீசியிருக்காங்க. திருப்பூர்ல காதலை மறுத்த பெண்ணை கொலை செய்ததோடு மட்டுமல்லாமல், அந்த அம்மாவையும் இளைஞர்களையும் கொன்றிருக்காங்க. ஈரோட்டில்பேன்சி ஸ்டோருக்குள் புகுந்து ஒரு பெண்ணை கத்தியால் குத்தியிருக்காங்க. இதெல்லாம் கடந்த ஒரு வாரத்தில் நடந்த குற்றச் சம்பவங்கள்!</p> <h2>எந்த கலாச்சாரத்தை் காட்டுகிறது?</h2><p>அம்பத்தூர் புதூரில் ஆட்டோவில் ஒரு பெண்ணை உட்கார வச்சு கழுத்தை அறுத்து ரோட்டில் வீசியிருக்காங்க. இந்த மாதிரியான குற்ற சம்பவங்கள் எல்லாம் இதற்கு முன்னாடி நடந்ததே இல்லை. சினிமா படத்தில் வருகிற மாதிரியான கொலை காட்சிகளை அரங்கேற்றி கொண்டிருக்கிறார்கள். கும்மிடிப்பூண்டியில் 17 வயசு இளைஞனை கொன்று கல்லறை மேல போட்டு, சில கொலை சம்பவங்களைச் செய்து ரீல்ஸ் எடுத்து வெளியிடுகிறார்கள்! இதெல்லாம் எந்த கலாச்சாரத்தை காட்டுகிறது?</p><h2>தவறான முன்னுதாரணம்</h2><p>ஒரு திரைத்துறையிலிருந்து வந்தவர் தமிழ்நாட்டுக்கு முதல்-அமைச்சர். அதனுடைய விளைவு என்னவென்றால், நீங்கள் திரைப்படத்தில் ஹீரோவாக இருக்கலாம், நடித்த ஹீரோயிசத்தை பார்த்து இன்னைக்குத் தமிழ்நாட்டு இளைஞர்கள் இதை செய்கிறார்கள். தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு நீங்கள் ஒரு தவறான முன்னுதாரணமாக இருக்கிறீர்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது.</p> <h2>குற்ற சம்பவங்கள் நடக்கிறது</h2> <p>வேலூரில் தலைமை பெண் காவலரையே குத்தி கொன்றிருக்கிறார்கள்! இதைவிட என்ன கேவலம் இருக்கு? வெட்கமாக இல்லை முதல்-அமைச்சருக்கு? காவல்துறையை தன் கையில் வச்சிருக்கக்கூடிய முதல்-அமைச்சர், காவல்துறையிடம் தகவலை கொடுக்கும் பையனை காப்பாற்றுவதற்குமுடியல்லை இந்த காவல்துறைக்கு! ஆனால் எதிர்க்கட்சி தலைவர் கைதின் போது, சாலைகளில் இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய இளைஞரை பார்த்து இரண்டு கையை வைத்து அடிப்பார் சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ்! எந்த காவல் ஆணையர் ஒரு கைது நடவடிக்கைக்கு ஸ்பாட்டிற்கு வந்திருக்கிறார்கள்? இருக்கிற வேலையை விட்டுவிட்டு வேறு வேலையை நீங்கள் செய்வதனால்தான் இந்த குற்ற சம்பவங்கள் நடக்கிறது.</p> <h2>சட்டம்-ஒழுங்கை காப்பாற்றும் லட்சணமா?</h2><p> கோயம்புத்தூரில் இதே மாதிரி நகைக்காக ஒரு வயதான பெண்ணை கொன்றிருக்கிறார்கள். இந்த ஆட்சியில் பச்சிளம் குழந்தையிலிருந்து பாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். 'நான் ஆட்சிக்கு வந்தா சட்டம்-ஒழுங்கை காப்பாற்றுவேன்'னு சொன்னாரே, இதான் சட்டம்-ஒழுங்கை காப்பாற்றும் லட்சணமா?</p> <h2>வாய் திறந்திருக்கீங்களா?</h2><p> நான் ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கான ஆட்சியை தருவேன்'னு சொன்னீங்களே, மக்களுக்கான பிரச்சனையைப் பற்றி இதுவரைக்கும் எதாவது பேசியிருக்கீங்களா? காவிரி நதி பிரச்சனைக்காக நீங்கள் வாய் திறந்திருக்கீங்களா? கர்நாடகாவில் தமிழர்களை சுட்டுக் கொன்றார்களே, அதற்காக வாய் திறந்து பேசியிருக்கீங்களா? ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் தண்ணீர் திறந்து விட வேண்டுமே, அதைப்பற்றி வாய் திறந்து பேசியிருக்கீங்களா?</p> <h2>பாயும் முதல்-அமைச்சர்</h2><p> மேகதாது அண கட்டப்படுவதை தடுக்க தனியாக டிரிப்யூனல் அமைக்கப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சரிடத்தில் போய் கேட்டிருக்கீங்களா? மத்திய அரசிடத்தில் பயப்படுகிறார் முதல்-அமைச்சராகத்தான் இருக்கிறீர்களே தவிர, தமிழ்நாட்டில் சட்டமன்றத்திலும் வெளியிலேயும் மட்டும்தான் பாயும் முதல்-அமைச்சராக காட்டிக்கொள்கிறீர்கள்.</p><h2>நடந்திருக்கா?  </h2><p>ஆடி மாதம் வந்தால் தள்ளுபடி கொடுப்பார்கள்—ஒரு சட்டை வாங்கினால் ஒரு சட்டை ப்ரீ, ஒரு பேண்ட் வாங்கினால் ஒரு பேண்ட் ப்ரீ, ஒரு ஜாக்கெட் பிட் வாங்கினால் இன்னொன்று ப்ரீ என்று தள்ளுபடி கொடுப்பார்கள். அதுமாதிரி, இந்த கொக்கைன் பவுடர் பயன்படுத்திய சரத் மந்திரியுடைய தொகுதியில் 'கஞ்சா வாங்கினால் மாத்திரை ப்ரீ'! இப்படிப்பட்ட ஆட்சி தமிழ்நாட்டில் இதுவரைக்கும் நடந்திருக்கா? கஞ்சா வாங்கினால் மாத்திரை ப்ரீ என்று விஜய்யின் அரசாங்கமாக நடந்துகொண்டிருக்கிறது!</p><h2> கவன ஈர்ப்பு தீர்மானம்</h2><p>சட்டமன்றம் நடந்துகொண்டிருக்கிறது. கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொடுத்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர். கோவையில் நடைபெற்ற கொலை சம்பவத்திற்கும், தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிற பல்வேறு கொலை குற்றங்களுக்கும் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொடுத்து, பதில் கொடுக்க வேண்டிய இடத்தில் இருக்கக்கூடிய முதல்-அமைச்சர் இன்னைக்கு சட்டமன்றத்திற்குள் வந்து உட்காரவில்லை!</p><h2>இது என்ன மாண்பு?</h2><p>காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் பேசாமல் ஓடி ஒளிந்துகொண்டிருக்க, சம்பந்தமே இல்லாத அமைச்சர்கள் எல்லாம் எழுந்து எழுந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். இது என்ன மாண்பு? என்ன சட்டமன்ற மரபை நீங்கள் கடைப்பிடிக்கிறீர்கள்?</p> <h2>சிஎம் விஜய் சார் எழுந்து நிற்பாரா?</h2><p>இதுல லட்சணம் என்னவென்றால், ஒரு அமைச்சர் சொல்கிறார்—'முதல்-அமைச்சர் வரும்போது எழுந்து நிற்க வேண்டும்' என்று. எதிர்க்கட்சி தலைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான், முதல்-அமைச்சரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான். அப்ப எதிர்க்கட்சி தலைவர் வரும்போது சிஎம் விஜய் சார் எழுந்து நிற்பாரா? என்ன பேச்சு இது? சட்டமன்றத்தில் பேரவைத் தலைவர் வரும்போது மட்டும்தான் அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நிற்க வேண்டும். பேரவைத் தலைவரைத் தவிர வேறு யாருக்கும் அந்த இடத்தில் எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை!</p> <h2>சட்டம்-ஒழுங்கு</h2><p>இந்த 100 நாட்களில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரித்திருக்கிறது. விலைவாசி கட்டுக்கடங்காமல் ஏறியிருக்கிறது—அரிசி விலை கிலோவுக்கு ரூ. 30 ஏறியிருக்கிறது, ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது, மின்சாரக் கட்டணம் ஷாக் அடிக்கிறது! மக்களுடைய அன்றாடப் பிரச்சனையைப் பற்றி அரசாங்கத்தில் யாராவது வாய் திறந்து பேசுகிறார்களா? சட்டமன்றத்தில் கேட்கும் கேள்விக்கு அந்தந்தத் துறை மந்திரிகள் யாராவது பதில் சொல்கிறார்களா?</p> <h2>அட்ஜஸ்ட்மென்ட் கலாச்சாரம்</h2><p>அதேபோல இன்னைக்கு ஒரு பெரிய 'அட்ஜஸ்ட்மென்ட் கலாச்சாரம்'. தவெக கட்சியின் நிர்வாகியான ஒரு பெண்மணி தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்திற்குப் போய் 'அட்ஜஸ்ட்மென்ட் பண்ணச் சொல்கிறார்கள்' என்று புகார் கொடுக்கிறார். இது மக்களுக்கான ஆட்சியா அல்லது அட்ஜஸ்ட்மென்ட்க்கான ஆட்சியா? எந்தப் பெண்களின் பாதுகாப்பைச் சொல்லி ஆட்சிக்கு வந்தீர்களோ, இன்னைக்கு தினமும் பெண்களின் அலறல் குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறதே, விஜய் சார் உங்கள் காதில் கேட்கவில்லையா? புடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி உட்கார்ந்திருக்கிறீர்களே!</p><h2> பத்திரிகையாளர்களை அனுமதிக்கவில்லை </h2><p>இன்னொரு விஷயம்—சட்டமன்றம் நடந்துகொண்டிருக்கும்போது தேவையில்லாமல் முதல்-அமைச்சரோ அமைச்சர்களோ வெளியில் நிகழ்ச்சிகளில் போய் கலந்துகொள்ளக்கூடாது. கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது எங்கே போயிருந்தீர்கள் சார்? போன இடத்தில் உங்கள் சாதனையைப் பேசினீர்களா? இல்லையே. முதலீட்டாளர்கள் மாநாட்டில் பத்திரிகையாளர்களை அனுமதித்தீர்களா? ஏனென்றால் குட்டு வெளிப்பட்டுவிடும்! உள்ளே போனால் வந்திருப்பவர்கள் உண்மையான முதலீட்டாளர்களா அல்லது கோட்-சூட் மாட்டி வந்தவர்களா என்பது தெரிந்துவிடும் என்பதால் பத்திரிகையாளர்களை அனுமதிக்கவில்லை!</p> <h2> சாதனையை அல்ல! </h2><p>சினிமா படத்தில் நடிப்பது போலவே இன்னைக்கு ஆட்சியிலும் நடித்துக்கொண்டிருக்கிறீர்கள். 100 நாளில் சாதித்தது என்ன என்று ஒரு வீடியோ வெளியிடுகிறீர்கள்; அதில் பதவி ஏற்பு விழாவில் பேசிய பேச்சையும் விட்ட டயலாக்குகளையும்தான் காட்டியிருக்கிறீர்களே தவிர, சாதனையை அல்ல! பத்திரிகையாளர்களை சந்தித்து சாதனை எதையாவது சொல்லியிருக்கிறாரா? 100 நாள் ஆச்சே! இது அறிவிக்கப்படாத அவசரநிலை.</p> <h2>பொய் சொல்கிறார்கள்</h2><p>ரூ. 15,000 கோடி வருவாய் வந்துவிட்டதாக பொய் சொல்கிறார்கள். லீக்கேஜை அடைத்துவிட்டோம் என்று வாயில் வடை சுடுகிறார்களே தவிர, நிஜமாக எந்த ஆதாரமும் நிதிநிலை அறிக்கையில் இல்லை. பாரதிய ஜனதா கட்சியைக் கண்டு அஞ்சிப் பம்பும் 'டம்மி முதலமைச்சராக' விஜய் இருக்கிறார். இந்த 100 நாள் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து, போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து, தமிழ்நாட்டை நாசமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்! சட்டமன்றத்தில் அந்தந்த கேள்விகளுக்கு அந்தந்த அமைச்சர் பதில் சொல்ல வேண்டும் ஆனால் அது எல்லாம் தெரியாமல் அரவேக்காட்டு அமைச்சராக உள்ளார்கள். </p> <h2>முதல்-அமைச்சர் விஜய் </h2><p>நீட் மசோதா பற்றிப் பேசும் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிப்படை அரசியல் அறிவோ பாராளுமன்ற நடவடிக்கைகளோ தெரியவில்லை. 'மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா' அறிவிப்பை நாடாளுமன்ற மசோதா என்று அரைகுறையாகப் பேசுகிறார்கள். மாநில உரிமைகளை விட்டு கொடுக்க மாட்டோம் என்று சொல்லும் முதல்-அமைச்சர் விஜய், பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத்தில் UGC பிரதிநிதியை நியமிக்க ஒப்புக்கொண்டது ஏன்? பொம்மை முதல்-அமைச்சராக, டம்மி முதலமைச்சராகத்தான் இவர் இருக்கிறார்.</p> <h2> சர்க்கஸ் சர்க்கார்</h2><p>இந்த 100 நாள் ஆட்சி மக்களுக்கான 'சர்க்கார்' அல்ல, வெறும் 'சர்க்கஸ் சர்க்கார்'! நாளுக்கு நாள் நாசமாகும் தமிழ்நாடு இது. இந்த 100 நாட்களில் செய்ததெல்லாம் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது. போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. விலைவாசி பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை என எதையும் சரிசெய்ய முடியாமல் பல்லிளிக்குது இந்த 100 நாள் ஆட்சி என்று தெரிவித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>“வளமான பயணமாக அமைந்தது” - வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-has-been-a-fruitful-journey-vanathi-srinivasan-laichi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-has-been-a-fruitful-journey-vanathi-srinivasan-laichi#comments</comments><guid isPermaLink="false">5336fc43-a820-41c5-8582-961b65a624f8</guid><pubDate>Mon, 17 Aug 2026 15:18:18 +0000</pubDate><atom:updated>2026-08-17T15:18:18.811Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,சென்னை,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,success,நன்றி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/3sf4cy3j/135.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/3sf4cy3j/135.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கடந்த ஆண்டுகள் உண்மையிலேயே ஒரு வளமான பயணமாக அமைந்தது என்று <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D">வானதி சீனிவாசன்</a> தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>வளமான பயணம்</h2><p>பாஜக மகளிர் அணியின் தேசியத் தலைவர் பொறுப்பை கடந்த காலத்தில், என்னிடம் ஒப்படைத்ததற்காக, கட்சிக்கும் நமது மூத்த தலைமைக்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆண்டுகள் உண்மையிலேயே ஒரு வளமான பயணமாக அமைந்தன. நாடு முழுவதும் உள்ள பெண் தொண்டர்களுடன் தொடர்புகொண்டு, அவர்களின் பன்முகக் கலாச்சாரங்கள், மரபுகள் மற்றும் வாழ்க்கைப் பயணங்களைப் புரிந்துகொண்டு, அவர்களுடன் இணைந்து பணியாற்றியது, ஒரு நபராக என்னை வடிவமைத்து, எண்ணற்ற பாடங்களையும் நினைவுகளையும் எனக்கு அளித்துள்ளது.</p><h2>நன்றி</h2><p>நமது பெண் சக்தியைக் கண்டு நான் பெருமிதம் கொள்கிறேன் அவர்களின் உறுதி, தைரியம் மற்றும் சாதனைகள். பல பெண்கள் தடைகளைத் தகர்த்து, உயரப் பறப்பதைப் பார்ப்பது ஆழ்ந்த உத்வேகம் அளிக்கிறது. மத்திய தலைமைக்கும் ஒவ்வொரு தொண்டருக்கும் அவர்களின் நம்பிக்கை, வழிகாட்டுதல் மற்றும் ஆதரவிற்காக எனது மனமார்ந்த நன்றிகள். புதிய அணிக்கு மாபெரும் வெற்றியும், நிறைவான பயணமும் அமைய வாழ்த்துகிறேன். இந்த அமைப்பை இன்னும் பெரிய உயரங்களுக்குக் கொண்டு செல்லட்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தவெக ஆட்சியில், கழிவுநீர் கால்வாயாக மாறுகிறதா கொசஸ்தலை ஆறு? - நயினார் நாகேந்திரன் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/under-the-tvk-regime-is-the-kosasthalai-river-turning-into-a-sewage-canal-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/under-the-tvk-regime-is-the-kosasthalai-river-turning-into-a-sewage-canal-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">c7a29a34-dc60-485e-90fb-4e30e56cac3c</guid><pubDate>Mon, 17 Aug 2026 14:53:13 +0000</pubDate><atom:updated>2026-08-17T14:53:13.680Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,சென்னை,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Kosasthalai river,கொசஸ்தலை ஆறு,தவெக அரசு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/cc1n240p/134.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/cc1n240p/134.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தவெக ஆட்சியில், கழிவுநீர் கால்வாயாக மாறுகிறதா கொசஸ்தலை ஆறு என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>எண்ணூர் கழிமுகத்திற்கு அருகேயுள்ள கொசஸ்தலை ஆற்றில் ரசாயனக் கழிவுகள் கலந்ததால், டன் கணக்கான மீன்கள் செத்து மிதப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிப்பதோடு, மிகுந்த வருத்தமுமளிக்கின்றன. சுமார் 8 மீனவக் கிராமங்களின் வாழ்வாதாரத்தை பெருமளவில் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் இந்நிகழ்வை, <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a> கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.  </p><h2>வலியுறுத்தல்</h2><p>வழக்கம் போல எம்எல்ஏக்களையும், அமைச்சர்களையும் வைத்து பாதிக்கப்பட்டவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சினையை மூடி மறைப்பதை விட்டுவிட்டு, இறந்த மீன்களை ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பி, இந்தப் பேரழிவுக்கான உண்மையான காரணம் என்ன என்பதை தவெக அரசு மக்கள் முன் அறிக்கையாகச் சமர்ப்பிக்க வேண்டும். </p><p>அதுமட்டுமன்றி செத்து மிதக்கும் டன் கணக்கான மீன்களால், நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால், உடனடியாக இறந்த மீன்களை அப்புறப்படுத்துவதோடு, பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களுக்கு தகுந்த இழப்பீடும் வழங்க வேண்டுமென முதல்-அமைச்சரை வலியுறுத்துகிறேன்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தவெக ஆட்சியில், கழிவுநீர் கால்வாயாக மாறுகிறதா கொசஸ்தலை ஆறு? <br><br>எண்ணூர் கழிமுகத்திற்கு அருகேயுள்ள கொசஸ்தலை ஆற்றில் ரசாயனக் கழிவுகள் கலந்ததால், டன் கணக்கான மீன்கள் செத்து மிதப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிப்பதோடு, மிகுந்த வருத்தமுமளிக்கின்றன. சுமார் 8 மீனவக்… <a href="https://t.co/F2CzRKW34n">pic.twitter.com/F2CzRKW34n</a></p>&mdash; Nainar Nagenthran (@NainarBJP) <a href="https://x.com/NainarBJP/status/2089334096128557513?ref_src=twsrc%5Etfw">August 17, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்றது ஏன்? - சென்னை ஐகோர்ட்டில் சபாநாயகர் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-did-speaker-accept-aiadmk-mlas-resignations</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-did-speaker-accept-aiadmk-mlas-resignations#comments</comments><guid isPermaLink="false">305998b2-3594-453f-85ee-673528d6235f</guid><pubDate>Mon, 17 Aug 2026 14:46:00 +0000</pubDate><atom:updated>2026-08-17T14:46:00.921Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Highcourt,Resignation,ராஜினாமா,சபாநாயகர்,அதிமுக எம்.எல்.ஏக்கள்,Assembly Speaker,சென்னை ஐகோர்ட்டு,AIADMK MLAs</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/f020z6yk/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/f020z6yk/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்றது ஏன்? என்பது குறித்து சபாநாயகர் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.</p><h2>எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா</h2><p>கொறடா உத்தரவை மீறி, த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேருக்கு எதிரான தகுதிநீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்தபோது, அவர்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, அ.தி.மு.க. கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எஸ்.ரவி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடர்ந்தனர்.</p><p>இந்த வழக்குகள் விசாரணையின்போது, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சுய விருப்பத்தின்படி ராஜினாமா செய்தார்களா? என சபாநாயகர் விசாரணை நடத்தியிருக்க வேண்டும் எனவும், வழக்கு தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியும், சபாநாயகர் வழக்கை எதிர்கொள்ளவில்லை எனவும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.</p><h2>சட்டப்படி செல்லும்</h2><p>இந்நிலையில், இது சம்பந்தமாக விளக்கமளிக்கும் வகையில், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், 'இந்த வழக்கில் சட்டசபை செயலாளர் தாக்கல் செய்த பதில் மனுவே போதுமானது என்பதால், தனியாக பதில் மனு தாக்கல் செய்யவில்லை.</p><p>கோர்ட்டின் மீது அதிகபட்ச மரியாதை வைத்திருக்கிறேன். சட்டசபை செயலாளர் மூலமாக பதில் மனு தாக்கல் செய்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை. ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் தங்கள் கைப்பட எழுதிய ராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்தனர். சுய விருப்பத்தின்படிதான் ராஜினாமா செய்கிறார்களா என ஒவ்வொருவரிடமும் விசாரணை நடத்தி, திருப்தியடைந்த பிறகே அவற்றை ஏற்றுக் கொண்டேன்' என கூறப்பட்டுள்ளது.</p><p>மேலும், 'அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்றது சட்டப்படி செல்லுபடியானதுதான். எந்த சட்டவிரோதமும் இல்லை என்பதால், மனுவை ஏற்று தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்' என்று அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>அவகாசம்</h2><p>இந்த வழக்கு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சபாநாயகரின் மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் எஸ்.ஆர்.ராஜகோபால் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்று, சபாநாயகர் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்புக்கு அனுமதி அளித்த நீதிபதிகள், விசாரணையை அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>மருத்துவர்களுக்கும், மாணவர்களுக்கும், ஏழைகளுக்கும் தீர்வு எங்கே? - வேல்முருகன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/velmurugan-has-also-raised-the-question-what-is-the-benefit-of-the-demand-for-grants</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/velmurugan-has-also-raised-the-question-what-is-the-benefit-of-the-demand-for-grants#comments</comments><guid isPermaLink="false">5dd07cc9-7970-4388-8e59-c72877db147e</guid><pubDate>Mon, 17 Aug 2026 14:25:48 +0000</pubDate><atom:updated>2026-08-17T14:25:48.270Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Velmurugan,வேல்முருகன்,தி.வேல்முருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/moy44r9r/velmurugan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/moy44r9r/velmurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>நோயாளிகளுக்கான சேவைகள், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்த ஆண்டறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திப்பதாவது;-</p><h2>நிரந்தரத் தீர்வு வேண்டும்</h2><p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் சுகாதாரம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைகளுக்கான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றுள்ள நிலையில், அரசு வெளியிடும் அறிவிப்புகள் வெறும் காகித அறிவிப்புகளாக இல்லாமல், மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் செயல்படுத்தப்பட வேண்டும்.</p><p>அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர், செவிலியர், ஆய்வகத் தொழில்நுட்பப் பணியாளர் உள்ளிட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்புவதுடன், மாவட்ட அரசு மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளை நவீனப்படுத்த வேண்டும். தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை, சென்னைக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் இல்லாத அளவுக்கு மாவட்ட அளவிலேயே மருத்துவக் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும். அரசு மருத்துவமனைகளில் மருந்துத் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் வெளிப்படையான கொள்முதல் மற்றும் விநியோக நடைமுறை உருவாக்கப்பட வேண்டும். இலவச மருத்துவம் என்ற அரசின் கொள்கை, நோயாளிகள் மருந்துகளை வெளியில் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படாதபோதுதான் முழுமை பெறும்.</p><h2>போதைப்பொருள் பிரச்சினை</h2><p>மாணவர்களை அச்சுறுத்தும் போதைப்பொருள் பிரச்சினையை எதிர்கொள்ள, சம்பவம் நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பதைவிட , சுகாதாரம், காவல்துறை மற்றும் சமூக நலத்துறைகள் இணைந்த நிரந்தர முன்தடுப்பு மற்றும் ஆலோசனை அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.</p><p>முதியோர் மருத்துவப் பாதுகாப்பிற்காக, மொபைல் மருத்துவச் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டு, அரசு மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள கிராமங்கள் மற்றும் பின்தங்கியப் பகுதிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.</p><h2>பட்டா வழங்கும் சிறப்பு நடவடிக்கை</h2><p>வருவாய்த் துறையில், பல ஆண்டுகளாக பட்டா கேட்டுக் காத்திருக்கும் மக்களின் விண்ணப்பங்களை மாவட்ட வாரியாக ஆய்வு செய்து, தகுதியானவர்களுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பட்டா வழங்கும் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.</p><p>பேரிடர் மேலாண்மையில் நிவாரணம் வழங்குவது மட்டுமே இலக்காக இருக்கக் கூடாது. மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து, வடிகால், நீர்வழித்தடம் மற்றும் பாதுகாப்புக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பேரிடர் ஏற்பட்டவுடன் மத்திய அரசின் நிதியை எதிர்பார்க்காமல், மாநிலத்தின் சொந்த நிதியிலிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும் நிரந்தர நடைமுறை உருவாக்கப்பட வேண்டும்.</p><h2>ஆண்டறிக்கையை வெளியிட வேண்டும்</h2><p>அரசுத் திட்டங்களின் செயல்திறனை மக்கள் அறியும் வகையில், சுகாதாரத் திட்டங்கள், பணியாளர் நியமனங்கள், நோயாளிகளுக்கான சேவைகள், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்த ஆண்டறிக்கையை அரசு வெளியிட வேண்டும்.</p><p>மானியக் கோரிக்கை என்பது துறைகளின் வரவு செலவுக் கணக்கை வாசிக்கும் நிகழ்வாக மட்டும் இருக்கக் கூடாது. மக்களின் வாழ்க்கையை மாற்றுவதற்கான செயல்திட்டமாக இருக்க வேண்டும்.</p><p>மருத்துவமனையில் போதிய மருத்துவப் பணியாளர்கள் உள்ளனரா?</p><p>மாணவர்கள் போதைப்பொருளிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்களா?</p><p>ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் மக்களுக்கு பட்டா கிடைக்கிறதா?</p><p>பேரிடர் ஏற்பட்டால் மக்களைப் பாதுகாக்க அரசு தயாராக உள்ளதா?</p><p>இந்தக் கேள்விகளுக்கான நடைமுறைத் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தீர்வுகள்தான் </a>மானியக் கோரிக்கைகளின் வெற்றியை அளவிடும் அளவுகோல் ஆகும்.</p><p>எனவே, சுகாதாரம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைகளின் மானியக் கோரிக்கைகளில் மக்கள் நலனுக்கான முக்கியத் தேவைகள் விடுபடாமல், அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு, செயலாக்கக் காலக்கெடு மற்றும் பொறுப்புக்கூறல் முறையைத் தமிழ்நாடு அரசு தெளிவாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விசிக தமிழகத்தின் ஆளுங்கட்சியாக வளர வேண்டும் -  திருமாவளவன் பேச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vishik-should-become-the-ruling-party-of-tamil-nadu-thirumavalavans-speech</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vishik-should-become-the-ruling-party-of-tamil-nadu-thirumavalavans-speech#comments</comments><guid isPermaLink="false">f0333951-f203-4b96-915d-c0208c43156b</guid><pubDate>Mon, 17 Aug 2026 14:22:09 +0000</pubDate><atom:updated>2026-08-17T14:22:09.946Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thirumavalavan,விசிக,VCK,திருமாவளவன் எம்.பி,விசிக மாநாடு,tvk govt</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/5087hjtr/thirumaa33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
விசிக தமிழகத்தின் ஆளுங்கட்சியாக வளர வேண்டும்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/5087hjtr/thirumaa33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>விசிக தமிழகத்தின் ஆளுங்கட்சியாக வளர வேண்டும்  என திருமாவளவன் கூறினார்.</p><p>உளுந்தூர்பேட்டை மாநாட்டில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D">விசிக தலைவர் திருமாவளவன்</a> பேசியதாவது:-</p><p>தமிழர்களின் மொழி, இன மற்றும் அரசியல் உரிமைகளைப் பாதுகாக்க, இலக்கியம் மற்றும் பண்பாடு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் மாநிலங்களின் அதிகாரத்தை விரிவுபடுத்தும் வகையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று இந்த மாநாடு மூலமாக மத்திய அரசிடம் வலியுறுத்துகிறேன்.</p><h2>விசிக வளர வேண்டும்</h2><p>ஒரே தேசம், ஒரே மதம், ஒரே கலாசாரம், ஒரே அரசு, ஒரே ஆட்சி, ஒரே கட்சி என்கிற ஆதிக்க அரசியலை முற்றிலுமாக நிராகரித்து, மதச்சார்பற்ற, சமத்துவ ஜனநாயக இந்தியாவைக் கட்டியெழுப்ப வேண்டும். பிற மொழி மற்றும் இன மக்களைப் பகையாகக் கருதாமல் அனைத்து தேசிய இனங்களின் எழுச்சிக்கும், ஐக்கியத்திற்கும் துணைநின்று கூட்டாட்சி ஜனநாயகத்தை வலுப்படுத்த இந்த மாநாடு உறுதியேற்கிறது.</p> <p>தமிழகத்தின் ஆளுங்கட்சியாக விசிக வளர வேண்டும்; இத்தனை காலம் ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்தோம். திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆளும் கட்சி; இன்று அன்பு சகோதரர் ஜோசப் விஜயுடன் கூட்டணி வைத்துள்ளோம். விசிகவும் தவெகவும் இனி தமிழக அரசியல் களத்தில் இணைந்தே பயணிக்கும்; விசிகவும் ஆளுங்கட்சியாக பரிணமிக்கும்.</p><p>கட்டுக்கடங்காமல் அரங்கத்தில் உள்ள கூட்டத்தைவிடவும் வெளியே லட்சக்கணக்கான சிறுத்தைகள் திரண்டு இருக்கிறார்கள்.  உங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற வகையில் உங்களுடன் நீண்ட நேரம் பேச விரும்பியும், இந்த இக்கட்டான நிலையில் பேச இயலாத நிலையில் இருக்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><p>திருமாவளவன் பேச்சின்போது மேடையில்  தொண்டர்கள் குவிந்ததால் மாநாடு விரைந்து முடிக்கப்பட்டது. தேசிய கீதம் பாடப்பட்டு விசிக மாநாடு நிறைவடைந்தது.</p>]]></content:encoded></item><item><title>தீண்டாமை சுவரை இடிக்க சொல்லி நபர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டதால்  தலைமை செயலகத்தில் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/solo-protest-at-secretariat-over-16-year-untouchability-wall</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/solo-protest-at-secretariat-over-16-year-untouchability-wall#comments</comments><guid isPermaLink="false">8a687852-76a2-46b9-8847-56e8cc824f5b</guid><pubDate>Mon, 17 Aug 2026 14:22:00 +0000</pubDate><atom:updated>2026-08-17T14:22:00.144Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,போராட்டம்,தலைமை செயலகம்,Secretariat,நபர்,Untouchability,தீண்டாமை,சுவர்,wall</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/4s2vakjn/wall.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ தீண்டாமை சுவர்]]></media:title><media:description type="html"><![CDATA[ தீண்டாமை சுவரை இடிக்க சொல்லி நபர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டதால்  தலைமை செயலகத்தில் பரபரப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/4s2vakjn/wall.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விருதுநகர் மாவட்டம் வ.புதுப்பட்டியில் பட்டியிலயின மக்களின் நடமாட்டத்தை முடக்கும் வகையில் எழுப்பப்பட்டுள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88">தீண்டாமை</a> சுவரை உடனடியாக இடிக்க வலியுறுத்தி, சென்னை தலைமை செயலக வளாகத்தில் நபர் ஒருவர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.</p><h2>16 ஆண்டுகால அவலம்</h2><p>விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டி கிராமத்தில் கடந்த 2010-ம் ஆண்டு அரசு நிலத்தை ஆக்கிரமித்து 10 அடி உயரத்திற்கு ஒரு பெருஞ்சுவர் கட்டப்பட்டது. இந்த சுவரானது, அங்கு வசிக்கும் சுமார் 350 பட்டியிலயின குடும்பங்களின் அத்தியாவசிய போக்குவரத்தை 16 ஆண்டுகளுக்கும் மேலாக முற்றிலும் முடக்கியுள்ளது.</p><h2>தீண்டாமை சுவர்</h2><p> பட்டியிலயின மக்கள் பொது பாதை, பள்ளி மற்றும் பொதுக் கழிப்பறை போன்ற அத்தியாவசிய வசதிகளை பயன்படுத்த முடியாதவாறு இந்த சுவர் தடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து வேதனை தெரிவித்து வருகின்றனர். </p> <h2>அதிகாரிகள் மெத்தனம்</h2><p>இந்த சுவரை அகற்றக்கோரி உள்ளூர் அதிகாரிகளிடம் மனு அளித்தும், தொடர்ந்து காலம் தாழ்த்துவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனால் கடும் விரக்தியடைந்த வ.புதுப்பட்டியை சேர்ந்த நபர் ஒருவர், தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டி நேரடியாக சென்னைக்கு விரைந்தார். </p> <h2> கோட்டையில் பரபரப்பு</h2><p>உடனடியாக தீண்டாமை சுவரை இடி பட்டியிலயின மக்களின் வாழ்வுரிமையை பறிக்காதே!" என முழக்கமிட்டு தனிநபராய் போராட்டத்தில் குதித்தார். முக்கியப் பாதுகாப்பு வளையமான தலைமை செயலகத்திற்குள் நபர் ஒருவர் திடீரென முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கிருந்த காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தலைமைச் செயலகத்தில் முட்டி போட்டு நடந்து வந்த நபரை, குண்டுக்கட்டாக தூக்கி சென்ற போலீசார்</p><p>முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளிக்க போலீசார் அறிவுறுத்தினர்.</p> <h2>உத்தரவிட வேண்டும்</h2><p> அவரிடமிருந்த கோரிக்கை மனுவை அதிகாரிகள் பெற்று கொண்டதோடு, இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. ஏற்கனவே விருதுநகர் சிவகாசி விஸ்வநாதம் பகுதியில் எழுப்பப்பட்ட தீண்டாமை சுவர் அதிகாரிகளால் இடித்து தள்ளப்பட்ட நிலையில், இந்த வ.புதுப்பட்டி சுவரையும் இடிக்க அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும் என பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. </p><p>இந்தத் திடீர் தனிநபர் போராட்டத்தால் தலைமை செயலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.</p> ]]></content:encoded></item><item><title>தியாகராய நகரில் பெண்ணிடம் 4 பவுன் தங்க சங்கிலி பறிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/4-pounds-gold-chain-snatched-from-woman-in-thiagarajan-nagar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/4-pounds-gold-chain-snatched-from-woman-in-thiagarajan-nagar#comments</comments><guid isPermaLink="false">21f6b28e-2f5a-44e7-b331-cdcbfd8b58d6</guid><pubDate>Mon, 17 Aug 2026 14:21:15 +0000</pubDate><atom:updated>2026-08-17T14:21:15.232Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,police station,காவல் நிலையம்,Complaint,புகார்,T Nagar,தியாகராய நகர்,Gold chain,தங்க சங்கிலி பறிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/gxnrlzen/133.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தங்கச் சங்கிலி பறிப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/gxnrlzen/133.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தியாகராய நகரில் பெண்ணிடம் 4 பவுன் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு எற்படுத்தியது.</p><h2>சங்க சங்கிலி</h2><p>தியாகராய நகர் பகுதியை சேர்ந்தவர் உஷா(வயது 53). இவர் நேற்று மதியம் வீட்டின் அருகே உள்ள கடைக்கு செல்வதற்கு தியாகராய நகர் மேட்லி 1-வது தெரு வழியாக நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் முகவரி கேட்பது போல் உஷாவிடம் பேச்சு கொடுத்தனர். திடீரென்று அவர்கள் உஷா கழுத்தில் அணிந்து இருந்த தங்க சையினை பறித்தனர். </p><p>சுதாரித்துக்கொண்ட உஷாரான பெண் தங்க சையினை விடாமல் இருக்கிப்பிடித்து கொண்டு திருடன் திருடன் என்று சத்தம் போட்டவாறு கொள்ளையர்களிடம் இருந்து போராடினார்.  உடனே கொள்ளையர்கள் உஷாவை தாக்கி கீழே தள்ளி விட்டு 4 பவுன் தங்க சையினை பறித்தனர். பின்னர் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். </p><h2>வழக்கு பதிவு</h2><p>இது குறித்து உஷா மாம்பலம் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a> வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி. வி. காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>10 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/rain-possible-till-10-pm-in-10-districts</link><comments>https://www.dailythanthi.com/news/weather/rain-possible-till-10-pm-in-10-districts#comments</comments><guid isPermaLink="false">25c659aa-51e3-4873-83b6-fa9f36f2d0f4</guid><pubDate>Mon, 17 Aug 2026 14:04:28 +0000</pubDate><atom:updated>2026-08-17T14:04:28.324Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,மழைக்கு வாய்ப்பு,வானிலை அறிவிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/u7fn33de/Untitled-8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/u7fn33de/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை :ராயபுரம் மண்டலத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-warning-corporation-commissioner-inspects-rayapuram-zone</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-warning-corporation-commissioner-inspects-rayapuram-zone#comments</comments><guid isPermaLink="false">90078242-ab8a-4beb-af32-e0f3bc98a33a</guid><pubDate>Mon, 17 Aug 2026 13:23:40 +0000</pubDate><atom:updated>2026-08-17T13:23:40.738Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,வடகிழக்கு பருவமழை,Northeast Monsoon,ஆய்வு,முன்னெச்சரிக்கை,Corporation Commissioner,Rain Warning,மாநகராட்சி ஆணையாளர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/9dcn4nf7/132.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/9dcn4nf7/132.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி ஆணையாளர் சமீரன், இன்று நேரில்  ஆய்வு மேற்கொண்டார்.</p><p>இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>வடகிழக்குப் பருவமழை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்வாய்கள், வண்டல் வடிகட்டித் தொட்டிகள், ஏரிகள் மற்றும் குளங்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><h2>ஆய்வு</h2><p>இதன் ஒரு பகுதியாக, இன்று மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், பெருநகர <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">சென்னை மாநகராட்சி</a>, ராயபுரம் மண்டலம், வார்டு-61க்குட்பட்ட எழும்பூர் நெடுஞ்சாலையில் உள்ள வண்டல் வடிகட்டித் தொட்டி மற்றும் மழைநீர் வடிகால்வாய்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, மீதமுள்ள மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டித் தொட்டிகளிலும் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>இந்த ஆய்வின்போது, கண்காணிப்புப் பொறியாளர் சொக்கலிங்கம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>விவசாய கடன் குறைந்தபட்சம் ரூ.75 ஆயிரமாவது தள்ளுபடி செய்ய வேண்டும்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/farm-loan-waiver-should-be-at-least-rs-75-thousand-marxist-communist-demand</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/farm-loan-waiver-should-be-at-least-rs-75-thousand-marxist-communist-demand#comments</comments><guid isPermaLink="false">460d182d-6ef3-40a8-9eb2-0aafecba769a</guid><pubDate>Mon, 17 Aug 2026 13:16:02 +0000</pubDate><atom:updated>2026-08-17T13:16:02.779Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோரிக்கை,demands,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,தள்ளுபடி,CPI(M),விவசாய கடன்,waived,Agricultural loans</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/j4mdpsjo/communist.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பெ.சண்முகம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/j4mdpsjo/communist.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விவசாய கடனில் குறைந்தபட்சம் ரூ.75 ஆயிரமாவது தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் </a>மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><h2>முதல்-அமைச்சர்</h2><p>விவசாயிகள் பெற்ற <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF">பயிர்க்கடன் தள்ளுபடி</a> தொடர்பாக, இன்று சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p><h2> 50 சதவிதம் தள்ளுபடி</h2><p>தேர்தல் அறிக்கையில் சிறு, குறு விவசாயிகளுக்கு முழுமையாக கடன் தள்ளுபடி என்றும், மற்ற விவசாயிகளுக்கு அவர்கள் பெற்றுள்ள பயிர்க்கடனில் 50 சதவிதம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் 75 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி என்றும், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் பெற்ற விவசாயிகளுக்கு ஏற்கனவே அறிவித்தபடி 35 ஆயிரம் ரூபாய் மட்டுமே தள்ளுபடி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>75 ஆயிரம் ரூபாயாவது தள்ளுபடி</h2><p>எவ்வளவு கடன் பெற்றிருந்தாலும் அனைத்து விவசாயிகளுக்கும் குறைந்தபட்சம் 75 ஆயிரம் ரூபாயாவது தள்ளுபடி என்று அறிவிப்பதுதான் விவசாயிகளுக்கு ஓரளவாவது திருப்தியை கொடுக்கும். எனவே, இதை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அகில இந்திய காவல் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற காவலர்களுக்கு தமிழக டிஜிபி பாராட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-dgp-congratulates-medal-winning-police-officers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-dgp-congratulates-medal-winning-police-officers#comments</comments><guid isPermaLink="false">7e886233-43a1-43d9-95c6-9fb252e3cce9</guid><pubDate>Mon, 17 Aug 2026 13:10:17 +0000</pubDate><atom:updated>2026-08-17T13:10:17.587Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக டிஜிபி,Medals,விளையாட்டு போட்டிகள்,பதக்கம்,Games,Tamilnadu DGP,காவல் விளையாட்டு போட்டிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/j7gnbuiq/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/j7gnbuiq/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அகில இந்திய காவல் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற காவலர்களுக்கு தமிழக டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>2026-ம் ஆண்டிற்கான 11-வது அகில இந்திய காவல் ஜூடோ குழு போட்டிகள் (ஜூடோ, டேக்வாண்டோ, வூஷு, பென்காக் சிலாட் &amp; கராத்தே), கடந்த மாதம் 23.07.2026 முதல் 30.07.2026 வரை தெலுங்கானா மாநிலம் கச்சிபௌலியில் நடைபெற்றது. இப்போட்டிகளில் தமிழக காவல்துறை சார்பில் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் ஆக மொத்தம் 67 நபர்கள் இந்த 5 பிரிவுகளிலும் கலந்து கொண்டனர். பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டிகளில் 1-வெள்ளி மற்றும் 12-வெண்கல பதக்கங்கள் உட்பட மொத்தம் 13 பதக்கங்களை பெற்று தமிழ்நாட்டிற்கும், தமிழக காவல்துறைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.</p><p>மேற்கண்ட போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/ படைத்தலைவர் மகேஷ் குமார் அகர்வால் (இன்று 17.08.2026) நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.</p>]]></content:encoded></item><item><title>பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் பொறுப்பிலிருந்து வானதி சீனிவாசன் விடுவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vanathi-srinivasan-relieved-of-bjp-national-womens-wing-chief-post</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vanathi-srinivasan-relieved-of-bjp-national-womens-wing-chief-post#comments</comments><guid isPermaLink="false">fc5af691-8471-45c6-9c08-464b0e4c2fbc</guid><pubDate>Mon, 17 Aug 2026 12:52:20 +0000</pubDate><atom:updated>2026-08-17T12:52:20.054Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,புதுடெல்லி,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,நியமனம்,மகளிர் அணி,Appointed</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/4xh21b9c/131.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/4xh21b9c/131.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><p>பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் பொறுப்பிலிருந்து தமிழகத்தைச் சேர்ந்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D">வானதி சீனிவாசன்</a>  விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ரூப் குமாரி சவுத்ரி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.</p><h2>வானதி சீனிவாசன்</h2><p>வானதி சீனிவாசன், கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவராக முதன்முதலில் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து இரண்டு முறை அந்தப் பொறுப்பை வகித்து வந்த அவர், சுமார் 6 ஆண்டுகள் தேசிய அளவில் மகளிர் அணியை வழிநடத்திய நிலையில் தற்போது அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.</p><h2>நியமனம்</h2><p>வானதி சீனிவாசனுக்குப் பதிலாக மகளிர் அணியின் புதிய தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ரூப் குமாரி சவுத்ரி, சத்தீஸ்கர் மாநிலத்தின் மகாசமுந்த் நாடாளுமன்றத் தொகுதியின் தற்போதைய பாஜாக எம்.பி ஆவார். இதற்கு முன்பு அவர் சத்தீஸ்கர் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும், அம்மாநில அரசின் நாடாளுமன்றச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>சில்லறைக்கு சண்டை: ஆத்திரத்தில் ஹோட்டல் உரிமையாளர் மீது சரமாரி தாக்குதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fight-over-change-hotel-owner-brutally-attacked</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fight-over-change-hotel-owner-brutally-attacked#comments</comments><guid isPermaLink="false">53da5412-7bba-416a-8ef1-21c595858d84</guid><pubDate>Mon, 17 Aug 2026 12:41:48 +0000</pubDate><atom:updated>2026-08-17T12:41:48.677Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>hotel owner,clash,சண்டை,வாக்குவாதம்,ஹோட்டல்,Attacks,சரமாரி தாக்குதல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/sxm3a0dp/tea-shop-fight.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஹோட்டல் உரிமையாளர்]]></media:title><media:description type="html"><![CDATA[ சில்லறைக்கு சண்டை: ஆத்திரத்தில் ஹோட்டல் உரிமையாளர் மீது சரமாரி தாக்குதல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/sxm3a0dp/tea-shop-fight.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல்,</p><p>நாமக்கல்லில் ரூ.500 நோட்டை கொடுத்துவிட்டு 3 சிகரெட் கேட்டபோது, சில்லரை இல்லை என்று கூறிய ஹோட்டல் உரிமையாளரை 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p> <h2>ஹோட்டல் வியாபாரம்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D">நாமக்கல்</a> நகர் பகுதியில் உள்ள ஒரு முக்கிய சாலையில் ஹோட்டல்  கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று இரவு இந்த ஹோட்டலில் வழக்கம்போல் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருந்தது. </p><h2> 4 இளைஞர்கள்</h2><p>அப்போது அந்த கடைக்கு 4 இளைஞர்கள் கொண்ட ஒரு கும்பல் வந்தது. அவர்கள் கடையின் உரிமையாளரிடம் சென்று, தங்களுக்கு 3 சிகரெட்டுகள் தருமாறு கேட்டுள்ளனர். உரிமையாளரும் சிகரெட்டுகளை எடுத்து அவர்களிடம் கொடுத்துள்ளார்.</p> <h2>ரூ.500 நோட்டு</h2><p>3 சிகரெட்டுகளுக்கு பணமாக அந்த இளைஞர்கள் தங்களது பையிலிருந்து ஒரு 500 ரூபாய் நோட்டை எடுத்து கொடுத்துள்ளனர். சிகரெட்டின் மதிப்பு மிக குறைவு என்பதால், அவ்வளவு பெரிய தொகைக்கு தன்னிடம் தற்போது சில்லரை இல்லை என்று ஹோட்டல் உரிமையாளர் கூறியுள்ளார். மேலும், வேறு ஏதேனும் சிறிய தொகை இருந்தால் தருமாறும், அல்லது ஆன்லைன் மூலம் பணம் செலுத்துமாறும் கேட்டுள்ளார்.</p><h2>வாக்குவாதம்</h2><p>இதனால் ஆத்திரமடைந்த அந்த 4 பேர் கொண்ட கும்பல், 500 ரூபாய் நோட்டை கொடுத்தால் சில்லரை இல்லை என்று சொல்கிறாயா என்று கூறி தகாத வார்த்தைகளால், ஹோட்டல் உரிமையாளருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.</p><h2>சரமாரி தாக்குதல்</h2><p>வாக்குவாதம் முற்றவே, கண்ணிமைக்கும் நேரத்தில் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற அந்த கும்பல், ஹோட்டல் உரிமையாளரை சட்டையை பிடித்து இழுத்து, சரமாரியாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">தாக்க தொடங்கியது</a>. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஹோட்டல் ஊழியர்களும், அங்கிருந்த பொதுமக்களும் ஓடிவந்து அவர்களை தடுக்க முயன்றனர். ஆனால், அந்த கும்பல் அவர்களையும் மிரட்டிவிட்டு, அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகிவிட்டது.</p><h2>அரசு மருத்துவமனை</h2><p>இந்த கொடூர தாக்குதலில் படுகாயமடைந்த ஹோட்டல் உரிமையாளர், வலியால் அலறித்துடித்தார். உடனடியாக அவரை மீட்ட  ஊழியர்கள், சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. </p><h2>போலீஸ் விசாரணை</h2><p>இதுகுறித்து தகவல் அறிந்த உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், ஹோட்டலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, தலைமறைவாக உள்ள அந்த 4 மர்ம நபர்களையும் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>திடீரென ஹாரன் அடித்ததால் நிலைகுலைந்த பைக்.. தனியார் பேருந்து ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்த தம்பதி
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bike-derailed-due-to-sudden-horn-blast-couple-had-an-argument-with-private-bus-staff</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bike-derailed-due-to-sudden-horn-blast-couple-had-an-argument-with-private-bus-staff#comments</comments><guid isPermaLink="false">737cb165-3df0-4e3b-aa25-a18273f18983</guid><pubDate>Mon, 17 Aug 2026 12:40:55 +0000</pubDate><atom:updated>2026-08-17T12:40:55.336Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>bus,பஸ்,couple,தம்பதி,வாக்குவாதம்,Discussion</media:keywords><media:content height="400" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/83nqvg93/Untitled-2.jpg" width="710"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  வாக்குவாதம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/83nqvg93/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>நாமக்கல்,</p><p>நாமக்கல் மாவட்டத்தில், தனியார் பேருந்து ஹாரன் ஒலியை எழுப்பியதால் முன்னால் பைக்கில் சென்று கொண்டிருந்த தம்பதி  தடுமாறினர்.</p><h2>தடுமாற்றம் - வாக்குவாதம்</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நாமக்கல் மாவட்டம்</a> பள்ளிப்பாளையம் சாலையில் இன்று தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தின் முன்னால் தம்பதியினர் பைக்கில் சென்றனர். அப்போது பேருந்து ஓட்டுநர் தம்பதியின் பைக்கின் அருகில் சென்று ஹாரன் அடித்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத தம்பதி, பதற்றத்தில் தடுமாறினர். இதனால் பைக்குடன் அவர்கள் கீழே விழும் நிலை ஏற்பட்டது. எனினும் சுதாரித்துக்கொண்டு பைக்கை நிறுத்தினர்.</p><p>அதன்பின், தங்களை அச்சுறுத்தும் வகையில் ஹாரன் அடித்த பேருந்தை பின் தொடர்ந்து சென்றனர். அந்த பேருந்து பள்ளிப்பாளையம் அருகே சென்றபோது பேருந்தை வழிமறித்து நிறுத்தினர். பின்னர் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் நீண்டநேரம் முடிவுக்கு வராததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் அங்கு திரண்ட பொதுமக்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>விண்வெளி துறையில் தனியார் துறையை அனுமதிப்பது வரவேற்கத்தக்கது - மயில்சாமி அண்ணாதுரை பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/allowing-private-sector-in-space-is-welcome-mayilsamy-annadurai-interview</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/allowing-private-sector-in-space-is-welcome-mayilsamy-annadurai-interview#comments</comments><guid isPermaLink="false">de793b0a-528e-46a1-b81b-b6a173c4c255</guid><pubDate>Mon, 17 Aug 2026 12:25:32 +0000</pubDate><atom:updated>2026-08-17T12:25:32.572Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இஸ்ரோ,private,மயில்சாமி அண்ணாதுரை,Mayilsamy Annadurai,விண்வெளி துறை,Space Research Center,தனியார் துறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/dfz7xn6g/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மயில்சாமி அண்ணாதுரை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/dfz7xn6g/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுக்கோட்டை,</p><p>விண்வெளி துறையில் தனியார் துறையை அனுமதிப்பது வரவேற்கத்தக்கது என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.</p><p>புதுக்கோட்டையில் இஸ்ரோ முன்னாள் தலைவரும், தமிழ்நாடு அரசின் பாடத்திட்ட வழிகாட்டு குழு தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>இஸ்ரோவால் பலதரப்பட்ட விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில் தற்போது மனிதனை விண்ணிற்கு அனுப்பும் முயற்சியில் இஸ்ரோ இறங்கியுள்ளது. மிகவும் சிக்கனமாக விண்கலம் தயாரிக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. இந்த முயற்சி வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கும் வேளையில் தற்போது தனியார் பங்களிப்புடன் செயற்கைக்கோள் தயாரிக்கும் பணியில் இஸ்ரோ இறங்குவதற்கு தயாராக உள்ளது.</p><h2>ஆரோக்கியமான போட்டி</h2><p>குலசேகரப்பட்டினத்தில் ஏவுகணைகள் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பணியும் தொடங்குவதற்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆரோக்கியமான போட்டியாக இருக்க வேண்டும் என்று தனியார் பங்களிப்புடனும் இது நடைபெற வேண்டும் என்று இஸ்ரோ மற்றும் மத்திய அரசு முயற்சிகளை எடுத்துள்ளது. இதுவரை மத்திய அரசு, விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ஏவுகணைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தது. தற்போது தனியார் பங்களிப்புடன் இது நடைபெற வேண்டும் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது வரவேற்கத்தக்கது.</p><p>விண்வெளித் துறையில் நிறைய வாய்ப்புகள் வருகிறது. அரசுத்துறை இத்தகைய வாய்ப்புகளை பயன்படுத்தி வந்தாலும், தனியார் துறை வந்தால் இன்னும் ஆரோக்கியமான போட்டிகள் வந்து அதிக தயாரிப்புகளை நாம் செய்ய முடியும். ஆகையால் விண்வெளி துறையில் தனியார் துறை வருவது என்பது தவறு கிடையாது. </p><h2>2 மொழிகளில் திறன்</h2><p>தமிழ், ஆங்கிலம் என 2 மொழிகளிலும் திறன்பட மாணவர்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. வகுப்பறைகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கரும்பலகையை தாண்டி ஸ்மார்ட் கிளாஸ் அமைப்பதற்கு நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.</p><p>சரியாக புரிதல் இருந்தால் எந்த பாடத்திட்டத்திலும் மாணவர்கள் திறம்பட செயல்படலாம். எந்த கேள்விக்கும் பதில் சொல்ல முடியும். போட்டி தேர்வுகளில் தமிழக மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை விரைவில் எடுக்க போகிறோம். புத்தகத்தை எவ்வளவு எளிதாக மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறோம்.</p><h2>போட்டி தேர்வுகளில் தோல்வி</h2><p>3-ம் வகுப்பு முடிக்கும்போது மாணவர்கள் தமிழ், ஆங்கிலத்தில் சரளமாக பேச, எழுத, புரிந்து கொள்ள ஏதுவாக பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தமிழக பாடத்திட்டம் விரைவில் உலகத்தரம் வாய்ந்ததாக மாறறப்படும்.</p><p>சி.பி.எஸ்.சி. மட்டுமல்லாது மற்ற நாடுகளில் உள்ள பாடத்திட்டங்களையும் ஆய்வு செய்து நமது மாணவர்கள் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு ஏதுவாக பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் போட்டி தேர்வுகளில் தோல்வியுற்றால் விபரீத முடிவுகளை எடுக்கின்றனர். அதை தடுப்பதற்கு உளவியல் ரீதியாகவும் மனரீதியாகவும் மாணவர்களை தயார் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>
18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டு முழுவதும் இன்சுலின்: அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/insulin-for-children-under-18-years-of-age-throughout-the-year-minister-arunraj-announces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/insulin-for-children-under-18-years-of-age-throughout-the-year-minister-arunraj-announces#comments</comments><guid isPermaLink="false">f5108309-4023-45a5-913f-149aafff19f5</guid><pubDate>Mon, 17 Aug 2026 12:21:27 +0000</pubDate><atom:updated>2026-08-17T12:21:27.187Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,TNAssembly,Insulin,அமைச்சர் அருண்ராஜ்,மருத்துவ பணியாளர் தேர்வு,HealthDepartment</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/mfgwwggc/arun33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/mfgwwggc/arun33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, ரூ.9.94 கோடியில் ஆண்டு முழுவதும் இன்சுலின் மருந்துகள் வழங்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.</p><p>தமிழக சட்டசபையில், சுகாதாரத்துறை மானிய கோரிக்கையின் மீது <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D">அமைச்சர் அருண்ராஜ் </a>பதில் அளித்தார்.</p><p>அப்போது,"திமுக ஆட்சியில் பல நல்ல திட்டங்கள் கொண்டு வந்தாலும் லஞ்சத்தை எதார்த்தமாக மாற்றி விட்டார்கள். அதுதான் பிரச்சினை" என்றார்.</p><p>கடந்த ஆட்சியாளர்கள் ஊழலை அன்றாட வாழ்வின் எதார்த்தமாக பார்த்ததாக அமைச்சர் அருண்ராஜ் பேசியதற்கு திமுகவினர் கண்டனம் தெரிவித்தனர்.</p><p>ஊழலை எதார்த்தமாக பார்த்த கடந்த ஆட்சியாளர்கள் என அமைச்சர் அருண்ராஜ் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.</p><p>அப்போது, எந்த கட்சி என்றே அமைச்சர் அருண்ராஜ் குறிப்பிடவில்லை, ஊழல் என்றால் திமுகவினர் கத்துவது ஏன் என அமைச்சர் ஆனந்த் கேள்வி எழுப்பினார்.</p><p>அதனை தொடர்ந்து அமைச்சர் அருண்ராஜ் பேசுகையில்,</p><p>அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6, 9 மற்றும் 11-ஆம் வகுப்பு பயிலும் 16.5 இலட்சம் வளரிளம் பருவ மாணவ-மாணவிகளுக்கு, ரூ.6.37 கோடியில் இரத்த சோகையைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் இரும்பு கண்மணி திட்டம் செயல்படுத்தப்படும்.</p><p>தமிழ்நாட்டில் முதன்முறையாக, அரசு மருத்துவமனைகளில், Type-1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள, 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, ரூ.9.94 கோடியில் ஆண்டு முழுவதும் இன்சுலின் மருந்துகள் வழங்கப்படும்.</p><p>நவீன, விரிவான மற்றும் எதிர்கால நோக்குடைய புதிய தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் இயற்றப்படும்</p><p>சமூகம், குடும்பம் மற்றும் தனிமனித அளவில் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை மேம்படுத்தும் வகையில் புதிய positive health policy உருவாக்கப்படும்</p><p>தமிழ்நாட்டில் முதன் முறையாக 70 வயதிற்கு மேற்பட்ட சுமார் 38 லட்சம் மூத்த குடிமக்களுக்கு வருமான உச்ச வரம்பு இன்றி கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் முதலமைச்சரின் முதியோர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்</p><p>3594 மருத்துவ பணியாளர்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். 1695 தொகுப்பூதிய செவிலியர் பணியிடங்கள் உருவாக்கப்படும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><p>வீடு மற்றும் மருத்துவமனை அல்லாத இடங்களில் சுயமாக பிரசவம் செய்வதை சட்டப்படி குற்றம் என்பதைச் சேர்த்து புதிய |பொது சுகாதார சட்டம் கொண்டு வரப்படும். முதலமைச்சரின் முதியோர் காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும் எனவும் மருத்துவத்துறை மானியக் கோரிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>எங்களுக்குத் தகுதி பாடம் எடுக்க இவ்வளவு நீளமான கடிதம் தேவையா நயினார் அண்ணே? - மாணிக்கம் தாகூர் பதிலடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/brother-nainar-was-such-a-long-letter-really-necessary-to-lecture-us-on-qualifications-manickam-tagore-hits-back</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/brother-nainar-was-such-a-long-letter-really-necessary-to-lecture-us-on-qualifications-manickam-tagore-hits-back#comments</comments><guid isPermaLink="false">925d0085-a6e5-4761-8453-a946e99daf05</guid><pubDate>Mon, 17 Aug 2026 12:07:50 +0000</pubDate><atom:updated>2026-08-17T12:07:50.747Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore MP,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/mdx1mb9u/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/mdx1mb9u/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காலங்காலமாக தமிழர்களுக்கு என்றும் விரோதமாக செயல்படும் உங்கள் காங்கிரஸ் கட்சிக்கு, பாஜகவை நோக்கி விரல் நீட்டி குறை கூற எந்த தகுதியுமில்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>நாடாளுமன்றப் பக்கமே வரவில்லை</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu/manickam-tagore-has-no-standing-to-criticize-the-bjp-nainar-nagendran">அண்ணே நயினார் நாகேந்திரனுக்கு</a>, நீங்க அனுப்பின கடிதத்துல CWRC, CWMA பத்தியெல்லாம் பாடம் எடுத்துட்டு, கடைசியில "பாஜகவை நோக்கி விரல் நீட்ட தகுதியில்லை"னு சொல்றீங்க.</p><p>நாங்க மட்டும் இல்ல அண்ணே... இந்த தேசத்தின் இளைஞர்களும் மாணவர்களும் நீட் ஊழல் முதல் வினாத்தாள் கசிவு வரை விரல் நீட்டிக் கேள்வி கேட்டதால தானே, அந்த கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாம உங்க பிரதமர் மோடியும் உள்துறை மந்திரி அமித் ஷாவும் நாடாளுமன்றப் பக்கமே வராமல் ஓடி ஒளிஞ்சாங்க!</p><h2>பாஜக எம்.பி பேசியதை கேட்டீங்களா?</h2><p>காவிரி விவகாரத்தைப் பொறுத்தவரை எப்போதும் தமிழக மக்களின் உரிமைக்காகவும், நம் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காகவும் சமரசமின்றி உறுதியாக நிற்பது தமிழ்நாடு காங்கிரஸ்! மாநிலத்தின் நலனைப் பாதிக்கும் எந்த செயலையும் நாங்கள் களத்தில் நின்று எதிர்த்தே வந்திருக்கிறோம்.</p><p>நீங்க சொல்றதெல்லாம் இருக்கட்டும்... கடந்த சில நாட்களாக கர்நாடகா தண்ணீர் திறந்து விட்டுக்கொண்டிருப்பது தெரிந்தும், ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று அதாவது 2 நாட்களுக்கு முன்னாடி உங்க சொந்தக் கட்சி எம்.பி பசவராஜ் பொம்மை என்ன பேசியிருக்காருன்னு கேட்டீங்களா?</p><h2>ஒரு சொட்டுத் தண்ணீரும் விடக்கூடாது</h2><p>"கபினி, (KRS) அணைகளில் நீர்வரத்து குறைந்துவிட்டது. CWRC மற்றும் CWMA சொல்வதுபோல் 12,000 கன அடி தண்ணீர் திறக்க முடியாது. சிவக்குமார் உடனே உச்சநீதிமன்றம் சென்று தடை வாங்க வேண்டும். தீர்ப்பு வரும் வரை தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டுத் தண்ணீரும் விடக்கூடாது!" - என்று பகிரங்கமாக தூண்டிவிட்டு, தமிழக உரிமையைத் தடுப்பது உங்கள் பாஜக எம்பியும், முன்னால் முதல்-மந்திரியுமான பசவராஜ் பொம்மை தான்!</p><p>நாங்கள் ஆதாரத்தோடு விரல் நீட்டினால், மடைமாற்று அரசியல்னு பதுங்குறீங்க. கர்நாடகத்துல உங்க கட்சி எம்பி பண்ணுற அநியாயத்தை தட்டிக்கேட்க தயக்கம் காட்டிட்டு, எங்களுக்குத் தகுதி பாடம் எடுக்க இவ்வளவு நீளமான கடிதம் தேவையா அண்ணே?</p><h2>வீடியோவை முழுசா போட்டுப் பாருங்க!</h2><p>முதல்ல இந்த Back door அரசியல்ல இருந்து கொஞ்சம் வெளியே வாங்க அண்ணே... நீங்க மறைக்கப் பார்க்குற எல்லாமே இப்போ வெளிச்சத்துக்கு வந்துடுச்சு!</p><p>ப்ரீயா இருக்கும்போது கீழே உள்ள இந்த வீடியோவையும் கொஞ்சம் முழுசா போட்டுப் பாருங்க!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">அண்ணே <a href="https://x.com/NainarBJP?ref_src=twsrc%5Etfw">@NainarBJP</a>, <br><br>நீங்க அனுப்பின கடிதத்துல CWRC, CWMA பத்தியெல்லாம் பாடம் எடுத்துட்டு, கடைசியில &quot;பாஜகவை நோக்கி விரல் நீட்ட தகுதியில்லை&quot;னு சொல்றீங்க.<br><br>நாங்க மட்டும் இல்ல அண்ணே... இந்த தேசத்தின் இளைஞர்களும் மாணவர்களும் நீட் ஊழல் முதல் வினாத்தாள் கசிவு வரை விரல் நீட்டிக் கேள்வி… <a href="https://t.co/Fc4epc9E46">https://t.co/Fc4epc9E46</a> <a href="https://t.co/b4KDMeDAmx">pic.twitter.com/b4KDMeDAmx</a></p>&mdash; Manickam Tagore .Bமாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) <a href="https://x.com/manickamtagore/status/2089313348982800664?ref_src=twsrc%5Etfw">August 17, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் பாதுகாப்புத்துறை பொற்காலத்தை எட்டியுள்ளது - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/under-pm-modis-leadership-indias-defence-sector-has-entered-golden-era-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/under-pm-modis-leadership-indias-defence-sector-has-entered-golden-era-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">8baabf08-fd7a-4557-9b1f-128e29e4b2e8</guid><pubDate>Mon, 17 Aug 2026 11:28:08 +0000</pubDate><atom:updated>2026-08-17T11:28:08.462Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,பிரதமர் மோடி,PM Modi,நயினார் நாகேந்திரன்,பாதுகாப்புத்துறை,Ministry of Defence,Nainar Nagenthran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/1nffiiab/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/1nffiiab/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தீர்க்கமான தலைமையின் கீழ், இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஒரு பொற்காலத்தை எட்டியுள்ளது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>பிற நாடுகளிடம் தற்காப்புத் தளவாடங்களுக்காகக் காத்திருந்த காலத்தைத் தடம் மாற்றி, இன்று உலக நாடுகளுக்கே பாதுகாப்பு அரண்களைத் தயாரித்து வழங்கும் பேராற்றலாக நமது அன்னை பாரதம் வீறுநடை போடுகிறது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தீர்க்கமான தலைமையின் கீழ், இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஒரு பொற்காலத்தை எட்டியுள்ளது.</p><p>2013-14ம் ஆண்டில் வெறும் ரூ.686 கோடியாக இருந்த பாதுகாப்புத்துறை ஏற்றுமதி, இன்று ரூ.38,424 கோடியாக உயர்ந்துள்ளது. இது சுமார் 5,500 சதவீதத்திற்கும் மேலான வரலாற்றுச் சாதனையாகும். ‘இந்தியாவிலேயே தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் உள்நாட்டுத் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால் இத்தகைய சாதனை சாத்தியமாகியுள்ளது.</p><p>மேலும், கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.8.75 லட்சம் கோடி மதிப்பிலான ராணுவ நவீனமயமாக்கல் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 80-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பாதுகாப்புத் தளவாடங்களை ஏற்றுமதி செய்து, உலக அரங்கில் இந்தியா தனது பலத்தை நிரூபித்து வருகிறது. இது வெறும் வணிகம் மட்டுமல்ல; தற்காப்பில் தன்னிறைவு பெற்று உலகளாவிய உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுத்துள்ளதன் கம்பீர அடையாளம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் புற்றுநோய் பாதிப்பு  உயர்வு; ஆண்டுக்கு 1 லட்சம் பேருக்கு நோய் பாதிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rise-in-cancer-cases-in-tamil-nadu-100000-people-affected-annually</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rise-in-cancer-cases-in-tamil-nadu-100000-people-affected-annually#comments</comments><guid isPermaLink="false">3247e250-9a22-400e-a170-f0294ac8af84</guid><pubDate>Mon, 17 Aug 2026 11:18:04 +0000</pubDate><atom:updated>2026-08-17T11:18:04.931Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,புற்றுநோய்,cancer,பெண்கள்,First place</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/import/h-upload/2024/01/27/1603057-cancer.webp" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னையில் புற்றுநோய் பாதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/import/h-upload/2024/01/27/1603057-cancer.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D">புற்றுநோய்</a> பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருவதாக மருத்துவத் துறை புள்ளி விவரங்கள் எச்சரிக்கின்றன. மாநில வரலாற்றிலேயே முதன்முறையாக, ஆண்டுக்கு புதிய புற்றுநோய் பாதிப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p><h2>முன்னணியில் சென்னை-பெண்கள்</h2><p>சமீபத்திய தரவுகளின்படி, தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சராசரியாக 1,00,097 புதிய புற்றுநோய் பாதிப்புகள் கண்டறியப்படுகின்றன.  இதில் ஆண்களை விட பெண்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோயால் 53,542 பெண்களும், 46,555 ஆண்களும் பாதிப்படைந்துள்ளனர். மாவட்ட வாரியான கணக்கெடுப்பில், தலைநகர்<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> சென்னை</a> முதலிடத்தில் உள்ளது. சென்னையில் மட்டும் ஆண்டுக்கு 10,000-க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகள் பதிவாகின்றன.</p><h2>அதிகரிக்கும் மார்பக- வாய் புற்றுநோய்</h2><p>பெண்களுக்கு மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயும், ஆண்களுக்கு வாய், தொண்டை மற்றும் நுரையீரல் புற்றுநோய்களும் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. மருத்துவ வல்லுநர்களின் கூற்றுப்படி, பின்வரும் காரணங்களால் இந்த பாதிப்பு உயர்ந்துள்ளது.</p><p>உடற்பயிற்சி இன்மை மற்றும் துரித உணவுப் பழக்கவழக்கங்களால் ஏற்பட்டுள்ளன. மேலும் புகையிலை, குட்கா மற்றும் மதுபானங்களின் பயன்பாடு அதிகரிப்பாலும் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. நகர்ப்புற காற்று மாசுபாடு மற்றும் அதீத மன அழுத்தம் காரணத்தாலும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், விழிப்புணர்வு குறைவால், 70% நோயாளிகள் நோய் முற்றிய நிலையிலேயே சிகிச்சைக்காக வருகின்றனர்.</p><h2>அரசின் நடவடிக்கைகள் -தீர்வுகள்</h2><p>இந்த எண்ணிக்கையைக் குறைக்க, ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயைக் கண்டறியும் சிறப்பு முகாம்களை தமிழக அரசு தீவிரப்படுத்தியது. மாவட்டத் தலைமை ஆஸ்பத்திரிகளில் நவீன சிகிச்சை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. 30 வயதைக் கடந்த அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறையாவது புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நிலவரி ரத்து, 20 லட்சம் ஏழை எளிய குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/20-lakh-poor-families-to-get-housing-plots</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/20-lakh-poor-families-to-get-housing-plots#comments</comments><guid isPermaLink="false">41ce5105-221b-4ecc-a622-6ffdc2b3a707</guid><pubDate>Mon, 17 Aug 2026 11:13:33 +0000</pubDate><atom:updated>2026-08-17T11:13:33.889Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,Tamilnadu,வீட்டுமனை பட்டா,அமைச்சர் செங்கோட்டையன்,Minister Sengottaiyan Information</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/6pf6gy5z/kottaiyan33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஏழை எளிய குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/6pf6gy5z/kottaiyan33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>20 லட்சம் ஏழை எளிய குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.</p><p>தமிழக சட்டசபையில் இன்று, மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீது, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D">அமைச்சர் செங்கோட்டையன்</a> பதிலளித்துப் பேசியதாவது:-</p><p>கடந்த ஆட்சியில் 3.5 லட்சம் காலி பணியிடங்களில் 25% தான் நிரப்பப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளில் காலி பணியிடம் இல்லை என்ற நிலை உருவாகும்.</p><h2>சென்னையில் சிறுவட்ட அலுவலகங்கள்</h2><p>ரூ. 1.02 கோடியில் பொதுமக்கள் இருப்பிடங்களுக்கு அருகிலேயே சேவை பெற சென்னையில் முதற்கட்டமாக 12 சிறுவட்ட அலுவலகங்கள் அமைக்கப்படும்.</p><h2>சான்றிதழ் பெற புதிய நடைமுறை </h2><p>வருவாய்த் துறை மூலம் வழங்கப்படும் அனைத்து சான்றிதழ்களும் பொதுமக்களுக்கு விரைந்து வழங்க 3 அலுவலர் படிநிலைகளில் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படும்.</p><h2>20 லட்சத்திற்கும் மேற்பட்டோர்</h2><p>எளிய முறையில் பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும், பத்திரப்பதிவு செய்யப்பட வேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் வைத்து வருகிறார்கள். பத்திரப்பதிவு செய்ததும் தானாக பட்டா மாறும்முறை கொண்டு வர வேண்டும் என்ற திட்டத்தில், கடந்த ஆட்சிக் காலத்தில் 45 சதவிகிதம் அதுபோல மாற்றப்பட்டுள்ளது.</p><p>ஏழை, எளியோர் பயனடையும் வகையில் வீட்டுமனை பட்டா சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும், 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயனடையும் வகையில் சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும். </p><p>சென்னையில் முதற்கட்டமாக 12 சிறுவட்ட அலுவலகங்கள் அமைக்கப்படும். பொதுமக்கள் இருப்பிடங்களுக்கு அருகிலேயே சேவை பெற நடவடிக்கை எடுக்கப்படும். </p><h2>நிலவரி ரத்து</h2><p>விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் பயன்பெறும் வகையில், ஆங்கிலேயர் காலத்து நிலவரி வசூல் 1436-ஆம் பசலி (நடப்பாண்டு) ஆண்டு முதல் ரத்து செய்யப்படும். </p><h2>எளிமையாகும் அரசு அனுமதி</h2><p>தமிழ்நாடு நிலச்சீர்திருத்த (நில உச்சவரம்பு நிர்ணயம்] சட்டம் 1961, பிரிவு 37A மற்றும் 37B-ன் கீழ் அரசின் அனுமதி வழங்குவதற்கான தற்போது நடைமுறையிலுள்ள நெறிமுறைகளை எளிமைப்படுத்திட உரிய சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.</p> <h2>வெள்ளத் தணிப்பு நடவடிக்கைகள்</h2><p>கடலோர மாவட்டங்களுக்கான வெள்ளத் தணிப்பு நடவடிக்கைகள். ரூ.3.90 கோடி மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.</p><h2>கையடக்க கணினிகள் வழங்கப்படும்</h2><p>12,466 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கையடக்க கணினிகள். 1,253 குறுவட்ட வருவாய் ஆய்வாளர்களுக்கும் கையடக்க கணினிகள் ரூ.68.63 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>கும்பகோணம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகைகள் கொள்ளை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/35-sovereigns-of-gold-jewelry-stolen-after-breaking-into-a-house-near-kumbakonam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/35-sovereigns-of-gold-jewelry-stolen-after-breaking-into-a-house-near-kumbakonam#comments</comments><guid isPermaLink="false">b845d48e-0be9-4185-89e6-148ea7b26e95</guid><pubDate>Mon, 17 Aug 2026 11:12:16 +0000</pubDate><atom:updated>2026-08-17T11:12:16.715Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>jewelry stolen,நகை திருட்டு,போலீஸ் விசாரணை,police enquiry,Near Kumbakonam,கும்பகோணம் அருகே</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/uowzxh7k/4.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ கொள்ளை நடந்த வீடு]]></media:title><media:description type="html"><![CDATA[ வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/uowzxh7k/4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர்,</p><p>கும்பகோணம் அருகே பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து,  35 பவுன் தங்க நகைகள் மற்றும் அரைகிலோ வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.</p><h2>ஓய்வு பெற்ற தமிழாசிரியர்</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தஞ்சாவூர் மாவட்டம்</a> கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் அருகே உள்ள அம்மாசத்திரம் வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் ஓய்வு பெற்ற தமிழாசிரியர். கடந்த (சனிக்கிழமை) அவர் தனது குடும்பத்தினருடன் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியில் சென்றிருந்தார். இந்நிலையில், செல்வராஜின் கைபேசியில் இணைக்கப்பட்டிருந்த வீட்டு கண்காணிப்பு கேமரா திடீரென வேலை செய்யாமல் போனது.</p><h2>கதவின் பூட்டு உடைப்பு</h2><p>இதனால் சந்தேகமடைந்த அவர், அக்கம் பக்கத்தினரைத் தொடர்புகொண்டு வீட்டைப் போய்ப் பார்க்குமாறு கூறியுனார். அங்கு சென்று பார்த்த அக்கம் பக்கத்தினர், வீட்டின் முன் பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து செல்வராஜுக்கும், திருவிடைமருதூர் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.</p><h2>35 பவுன் நகைகள் திருட்டு</h2><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் செல்வராஜின் குடும்பத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது, அறையிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த 35 பவுன் தங்க நகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளிப் பொருட்கள் <a href="https://www.dailythanthi.com/topic/கொள்ளை">கொள்ளை</a> அடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.</p><h2>போலீசார் தீவிர விசாரணை</h2><p>இச்சம்பவம் குறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும், அப்பகுதியில் உள்ள மற்ற கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி, கொள்ளையர்களை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">Thanjai || ஓய்வு பெற்ற தமிழாசிரியர் வீட்டில் 35 பவுன் கொள்ளை <a href="https://t.co/7FYnjhKrug">https://t.co/7FYnjhKrug</a><a href="https://x.com/hashtag/Kumbakonam?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Kumbakonam</a> <a href="https://x.com/hashtag/KumbakonamNews?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#KumbakonamNews</a> <a href="https://x.com/hashtag/TamilNaduNews?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TamilNaduNews</a></p>&mdash; Thanthi TV (@ThanthiTV) <a href="https://x.com/ThanthiTV/status/2089189822414094483?ref_src=twsrc%5Etfw">August 17, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>சேலம்: 13 வயது சிறுமிக்கு மது கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை - 4 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-4-arrested-for-gang-raping-13-year-old-girl-after-giving-her-alcohol</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-4-arrested-for-gang-raping-13-year-old-girl-after-giving-her-alcohol#comments</comments><guid isPermaLink="false">3cebd49f-168a-4d4f-b80d-06944dec177c</guid><pubDate>Mon, 17 Aug 2026 11:07:20 +0000</pubDate><atom:updated>2026-08-17T11:07:20.737Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Salem,சேலம்,மது,Gang rape,கூட்டு பாலியல் வன்கொடுமை,13 வயது சிறுமி,13 year old girl,Alcohol addiction</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/fhlbsn40/salem.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கூட்டு பாலியல் வன்கொடுமை]]></media:title><media:description type="html"><![CDATA[ சேலம்: 13 வயது சிறுமிக்கு மது கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை - 4 பேர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/fhlbsn40/salem.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம் மாநகர் பகுதியில் 13 வயது பள்ளி சிறுமிக்குத் திட்டமிட்டு மதுபானம் கொடுத்து, ஓராண்டுக்கும் மேலாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88">கூட்டு பாலியல் வன்கொடுமை</a> செய்ததாக எழுந்துள்ள புகார் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் 14 பேரை பிடித்துத் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். </p><h2>கூட்டு பாலியல்</h2><p>சேலம் மாநகரம் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி, கடந்த ஓராண்டுக்கு முன்பு அவரது தோழிகளுடன் சேர்ந்து அங்குள்ள ஒரு தனியார் பூங்காவுக்கு சென்றுள்ளார். அங்கு அச்சிறுமிக்கு சிலர் திட்டமிட்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81">மது</a> கொடுத்து பழக்கியுள்ளனர். பின்னர், அந்த பழக்கத்தை சாதகமாக பயன்படுத்தி கொண்டு, சிறுமியை ஓராண்டுக்கும் மேலாக பலமுறை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர்.</p><h2>தலைமை ஆசிரியர்</h2><p>சிறுமியின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து அவர் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியருக்கு தெரியவந்துள்ளது. உடனடியாக அவர் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் அளித்து எச்சரித்துள்ளார். </p> <h2>போலீசார்  நடவடிக்கை</h2><p>தலைமை ஆசிரியர் கொடுத்த தகவலால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்தனர். புகாரின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, உடனடியாக போக்சோ  சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையில் இறங்கினர். முதற்கட்டமாக, இக்குற்றச்சாட்டுகளுடன் நேரடியாக தொடர்புடைய 4 பேரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். </p> <h2>தீவிர விசாரணை</h2><p> சிறுமிக்கு மது விநியோகம் செய்தது மற்றும் இந்த வன்கொடுமை சம்பவ பின்னணியில் தொடர்புடையவர்களாக கருதப்படும் மேலும் 14 பேரை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய முழு நெட்வொர்க்கையும் கண்டறிய தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாக சேலம் மாநகரக் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p>]]></content:encoded></item><item><title>வட சென்னையில்..மீன் வளம் மற்றும் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும்- மு.வீரபாண்டியன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fishery-resources-and-the-livelihoods-of-fishermen-in-north-chennai-must-be-protected-m-veerapandian</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fishery-resources-and-the-livelihoods-of-fishermen-in-north-chennai-must-be-protected-m-veerapandian#comments</comments><guid isPermaLink="false">9949891a-6ff1-473f-a2a7-7402f737cce9</guid><pubDate>Mon, 17 Aug 2026 11:06:17 +0000</pubDate><atom:updated>2026-08-17T11:06:17.676Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Communist Party of India,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி,மு.வீரபாண்டியன்,M. Veerapandian</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/u1gcdfoj/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/u1gcdfoj/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வடசென்னை பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்து, மீன் வளம் மற்றும் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>மீன்கள் செத்து மிதப்பு</h2><p>வடசென்னை பகுதியில் கவுதம் அதானி குழுமத்தின் கட்டுப்பள்ளி துறை உள்ளிட்ட சிறப்பு பொருளாதார மண்டலம் உட்பட ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் 50 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் சிவப்பு பட்டியலில் இருந்து வரும் அபாயகரமான தொழிற்சாலைகளாகும்.</p><p>இந்த வகைத் தொழிற்சாலைகளில் முன்னெச்சரிக்கை தடுப்பு மற்றும் உடனடி மீட்புக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தொழிற்சாலை ஆய்வுத்துறை காலமுறைப்படி ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை தருகிறதா? என்ற ஆழ்ந்த சந்தேகம் எழுகிறது.</p><p>அண்மையில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">திருவள்ளூர் </a>மாவட்டம், எண்ணூர் அனல் மின் நிலையத்தின் விரிவாக்க கட்டுமானப் பணியில் புலம் பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது, கான்கிரீட் வளைவு சாரம் சரிந்து வீழ்ந்ததில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தொடர்ந்து கன்னிகைப்பேர் கிராமத்தில் இயங்கி வரும் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை அமோனியா விஷவாயு கசிவு காரணமாக புலம் பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் 13 பேர் உயிரிழந்தனர். தற்போது கொசஸ்தலை ஆற்றில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதக்கும் நிகழ்வு பேரதிர்ச்சி அளிக்கும் சம்பவமாகும்.</p><h2>மீன்களின் சாவுக்கு காரணம் என்ன?</h2><p>இதனை செயற்கை பேரிடர் நிகழ்வாகவே கருத வேண்டும். இதன் காரணமாக நெட்டு குப்பம், தாழங்குப்பம், முகத்துவாரக் குப்பம், எண்ணூர் குப்பம், சிவன்டை குப்பம் உட்பட 40க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்களில் வாழ்ந்து வரும் ஆயிரக்கணக்கான மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வரும் போதும், சிலவகை மீன்கள் மிதக்காமல், தரைத்தளப் பகுதிக்கு சென்று கிடக்கும் என கூறப்படுகிறது. இதனால், இப்பகுதியில் வீசும் துர்நாற்றத்தால் காற்று கடுமையாக மாசு பட்டிருப்பதைக் காட்டுகிறது. செத்து மிதந்த மீன்களும், நீரில் மூழ்கி தரைத்தளதில் விழுந்து கிடக்கும் மீன்களும் சாப்பிடவும், கருவாடாக பதப்படுத்தவும் பயன்படுத்தக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>டன் கணக்கான மீன்களின் சாவுக்கு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">காரணம் என்ன</a> என்பதை பற்றி நடைபெறும் ஆய்வு மற்றும் விசாரணை அறிக்கை விபரம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். தொழிற்சாலை ஆய்வு காலமுறைப்படி மேற்கொள்ளப்பட்டு, அதன் விபரத்தை பொதுமக்களுக்கு மாதம்தோறும் தெரிவிக்க வேண்டும். இந்த செயற்கை பேரிடர் சம்பவத்துக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டு, சட்டத்தில் இருந்து தப்பி விடாமல் தண்டனை பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அண்ணா நகரில் மத்திய வட்டார துணை ஆணையாளர் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-precautionary-measures-central-deputy-commissioner-inspection-anna-nagar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-precautionary-measures-central-deputy-commissioner-inspection-anna-nagar#comments</comments><guid isPermaLink="false">a5f3c2f1-6aae-420e-994f-3539b4a204aa</guid><pubDate>Mon, 17 Aug 2026 10:43:42 +0000</pubDate><atom:updated>2026-08-17T10:43:42.470Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Northeast Monsoon,ஆய்வு,inspection,முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்,வடகிழக்குப் பருவமழை,அண்ணா நகர்,Anna Nagar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/b6sg55kt/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/b6sg55kt/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, அண்ணாநகர் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர்.கௌஷிக் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர்.கௌஷிக் இன்று, அண்ணாநகர் மண்டலம், வார்டு-103க்குட்பட்ட அண்ணாநகர் 2-வது அவென்யூவில் மழைநீர் வடிகால் பணி, நடுவங்கரைப் பகுதியில் உள்ள வண்டல் வடிகட்டித் தொட்டி, 3-வது பிரதான சாலையில் உள்ள வண்டல் வடிகட்டித் தொட்டி, வார்டு-100க்குட்பட்ட ஹால்ஸ் சாலை சந்திப்புப் பகுதியில் மழைநீர் வடிகால் பணி, அப்பகுதியில் உள்ள ஓட்டேரி கால்வாய், கே.ஜி. கார்டன் பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் வெளியேற்றும் பகுதி, வார்டு-107க்குட்பட்ட எம்.ஜி.ஆர். நகரில் உள்ள அரும்பாக்கம் கால்வாய், நேரு நகரில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணி உள்ளிட்டவற்றைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மழைநீர் தேங்காமல் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.</p><p>தொடர்ந்து, வார்டு-103க்குட்பட்ட அண்ணாநகர் 3-வது பிரதான சாலை மற்றும் நடுவங்கரைப் பகுதியில் உள்ள அம்மா உணவகம், வார்டு-101க்குட்பட்ட அண்ணாநகர் 1-வது அவென்யூவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடைபாதை மேம்பாட்டுப் பணி, புல்லா அவென்யூ 1-வது பிரதான சாலையில் உள்ள ஶ்ரீ பாலாஜி பவன் ஹோட்டலில் பெருமளவு திடக்கழிவுகளைத் தரம் பிரித்து வழங்குவது குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்து, அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவின் தரம், உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் சமையலறையினைத் தூய்மையாகப் பராமரித்திடவும், நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடித்திடவும், பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் குப்பைக் கழிவுகளை தரம் பிரித்து வழங்குவது தொடர்பாக அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.</p><p>இந்த ஆய்வுகளின்போது, மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருப்பூரில் வடமாநில வாலிபர் தலையில் கல்லைப் போட்டு கொலை: தூய்மைப் பணியாளர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sanitation-worker-arrested-for-murdering-a-young-man-from-north-india-by-dropping-a-stone-on-his-head-in-tiruppur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sanitation-worker-arrested-for-murdering-a-young-man-from-north-india-by-dropping-a-stone-on-his-head-in-tiruppur#comments</comments><guid isPermaLink="false">5b23f51b-af6d-438a-859f-f1eeba83bfa3</guid><pubDate>Mon, 17 Aug 2026 10:41:49 +0000</pubDate><atom:updated>2026-08-17T10:41:49.540Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/0zgpj2kk/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/0zgpj2kk/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><p>திருப்பூர் மாநகராட்சி 1-வது வார்டில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வரும் முகுந்த், நேற்று இரவு செட்டிபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளார். பின்னர் மது போதையில் அப்பகுதியில் நடந்து சென்றுள்ளார்.</p><h2>பீடி கேட்டு தகராறு</h2><p>அப்போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ஒருவர், முகுந்திடம் இந்தியில் பீடி கேட்டதாக கூறப்படுகிறது. முகுந்த் பீடி தர மறுத்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் அந்த வாலிபர் முகுந்தை இந்தியில் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.</p><h2>கல்லால் தாக்கி படுகொலை</h2><p>இதனால் ஆத்திரமடைந்த முகுந்த், அந்த வாலிபரை பின்தொடர்ந்து சென்று தாக்கி கீழே தள்ளியதாக தெரிகிறது. பின்னர் அருகில் கிடந்த பெரிய கல்லை எடுத்து அவரது தலையில் போட்டார். இதில் படுகாயமடைந்த அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.</p><h2>சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை</h2><p>இது குறித்து தகவல் அறிந்த வேலம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கொலை தொடர்பாக முகுந்தை கைது செய்தனர்.</p><h2>உயிரிழந்தவர் யார்?</h2><p>இதனிடையே படுகொலை செய்யப்பட்ட வடமாநில வாலிபர் யார், அவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொலைக்கான முழுமையான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கடமானை வேட்டையாடிய வாலிபர் கைது: வாட்ஸ்-அப்பில் ‘ஸ்டேட்டஸ்&apos; வைத்ததால் சிக்கினார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-hunting-barking-deer-whatsapp-status-exposes-crime</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-hunting-barking-deer-whatsapp-status-exposes-crime#comments</comments><guid isPermaLink="false">81cddef2-f10e-4d69-a2fc-09905d526017</guid><pubDate>Mon, 17 Aug 2026 10:26:49 +0000</pubDate><atom:updated>2026-08-17T10:26:49.719Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Tenkasi,தென்காசி,arrest,கடையம்,hunting,வேட்டை,கடமான்,Kadayam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/09s9r2zm/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/09s9r2zm/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><p>தென்காசி மாவட்டத்தில் கடமானை வேட்டையாடிய வாலிபரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர் வாட்ஸ்-அப்பில் 'ஸ்டேட்டஸ்' வைத்ததால் சிக்கினார்.</p><h2>வனத்துறையினர் கண்காணிப்பு</h2><p>தென்காசி மாவட்டம் கடையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட சிவசைலம் பிரிவில் உள்ள முள்ளிமலை பொத்தை பகுதியில் மிளா, மான்கள், காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளன. வனவிலங்குகளை வேட்டையாடுவதை தடுக்கும் வகையில் வனத்துறையினர் அடிக்கடி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>வனவிலங்குகளை வேட்டையாடுபவர்களை தேடி கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் கடமான் (மிளா) ஒன்றை வேட்டையாடிய வாலிபர் ஒருவர் தானாகவே வனத்துறையினரிடம் சிக்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது.</p><h2>வாட்ஸ்-அப்பில் 'ஸ்டேட்டஸ்'</h2><p>வீரகேரளம்புதூர் தாலுகா வீராணம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் மகன் சுரேஷ் (26 வயது). இவர் சமீபத்தில் முள்ளிமலை பொத்தை பகுதிக்கு சென்று கடமான் ஒன்றை வேட்டையாடி உள்ளார். பின்னர் துண்டுகளாக வெட்டப்பட்ட கறியை வாட்ஸ்-அப்பில் 'ஸ்டேட்டஸ்' வைத்துள்ளார். இந்த தகவல் வைரலாக பரவிய நிலையில் வனத்துறையினரின் கவனத்துக்கு வந்தது.</p><h2>வாலிபர் கைது</h2><p>இதுதொடர்பாக வனத்துறை துணை இயக்குனர் அன்பு உத்தரவின்படி, கடையம் வனச்சரகர் ஜெயப்பிரகாஷ் மற்றும் வனப்பணியாளர்கள் நேற்று முன்தினம் அங்கு சென்று சுரேஷை அதிரடியாக கைது செய்தனர்.</p><p>பின்னர் அவரை தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். கடமான் வேட்டையில் மேலும் 3 பேருக்கு தொடர்புள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து தலைமறைவான அவர்களையும் வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சட்டப்பேரவைத் தலைவர் கருக்கலைப்பிற்கு எதிராக பேசியது தவறு -  மு.வீரபாண்டியன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-was-wrong-for-the-assembly-speaker-to-speak-against-abortion-m-veerapandian</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-was-wrong-for-the-assembly-speaker-to-speak-against-abortion-m-veerapandian#comments</comments><guid isPermaLink="false">1ac6ef19-ba16-46a9-b950-6ecd1c4ebe1f</guid><pubDate>Mon, 17 Aug 2026 09:59:41 +0000</pubDate><atom:updated>2026-08-17T09:59:41.834Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Communist Party of India,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி,மு.வீரபாண்டியன்,M. Veerapandian</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/v4uenajm/veerapandiyan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.வீரபாண்டியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/v4uenajm/veerapandiyan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் கருக்கலைப்பிற்கு எதிராக பேசியது தவறு. மத அடிப்படைவாதத்திற்கு இடமளிக்கக்கூடாது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>பிற்போக்கான கருத்து</h2><p>தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் சென்னையில் நடைபெற்ற 5-வது "மார்ச் பார் லைப்” என்ற கத்தோலிக்க மத அமைப்பின் கருக்கலைப்புக்கு எதிரான நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அண்மையில் கலந்து கொண்டுள்ளார்.</p><p>அதில், "கருக்கலைப்பு செய்வதற்கு நமக்கு உரிமை இல்லை” என்றும், ஒவ்வொரு குழந்தையும் "கடவுள் கொடுத்த பரிசு” என்றும் பேசியிருப்பது பெண்களின் கருக்கலைப்பு உரிமைகளுக்கு எதிரான, பிற்போக்கான கருத்தாகும்.</p><p>அவர் வகிக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் உயர்ந்த பதவிக்கு இத்தகைய மத அடிப்படையிலான, பிற்போக்கான போதனைகள் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>ஒரு பெண்ணின் இனப்பெருக்கத் தேர்வு மற்றும் உரிமை என்பது அவரது உடல் மீதான உரிமை என்பதோடு, உடல்நலம், உளநலம், கண்ணியம் மற்றும் சமத்துவ உரிமை ஆகியவற்றுடன் நேரடியாகத் தொடர்புடையதாகும்.</p><p>கர்ப்பம், கருக்கலைப்பு, மகப்பேறு என்பவை ஒரு மதக் கோட்பாட்டின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டியவை அல்ல</p><h2>கருக்கலைப்புச்சட்டம் 1971</h2><p>அது பெண்ணின் உடல், உள நலம், கருப்பையில் வளரும் சிசு, மற்றும் தாய் சேய் நலம், பெண்ணுரிமை, சமூக நலம் சார்ந்த விசயமாகும்.</p><p>அந்த அடிப்படையிலும், மருத்துவரீதியான காரணங்களுக்காகவும் கருக்கலைப்பை சட்ட ரீதியாக மேற்கொள்வதற்கும் ஏதுவாகவே, மருத்துவ ரீதியான கருக்கலைப்புச்சட்டம் 1971 (MTP Act -1971) மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. அது கருக்கலைப்புத் தொடர்பாக உலக நாடுகளில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டங்களில் ஓரளவு முற்போக்கான சட்டமாகும்.</p><p>கருக்கலைப்பு உரிமை இல்லாத அயர்லாந்தில் இந்தியப் பெண் பல்மருத்துவர் டாக்டர் சவீதா, கர்ப்பப்பையில் கருச்சிதைவுக்கு உள்ளான 17 வார சிசுவை கருக்கலைப்பு செய்ய முடியாமல் தொடர்ந்து சுமந்ததால் ஏற்பட்ட மருத்துவ ரீதியான பாதிப்பால் பரிதாபகரமாக 2012 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இது உலகம் முழுவதும் கண்டனத்திற்கு ஆளாகியது. இதன் மூலம் கருக்கலைப்புக்கு ஆதரவான சட்டத்திருத்தம் 2018 ல் கொண்டுவரப்பட்டது.</p><h2>50 நாடுகளில் கருக்கலைப்பிற்கு அனுமதி</h2><p>உலகளவில் எகிப்து, மால்ட்டா, ஹாண்டுராஸ், உள்ளிட்ட 24 நாடுகளில் கருக்கலைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளில் சட்டத்திற்கு விரோதமான முறையில் கருக்கலைப்பு செய்துகொண்டதால் பெண்கள் சிறை தண்டனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். துயரங்களுக்கு ஆளாகிவருகிறார்கள். அங்கெல்லாம் கருக்கலைப்பு உரிமை கோரி பெண்கள் போராடி வருகிறார்கள். ஏராளமான</p><p>லிபியா, இந்தோனேசியா, நைஜீரியா, ஈரான் போன்ற 50 நாடுகளில் கட்டுப்பாடுகளுடன் கருக்கலைப்பிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளில் கருக்கலைப்புக்கு சட்டப்படி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.</p><p>உலகின் வளர்ச்சியடைந்த நாடான அமெரிக்காவிலேயே, பல மாகாணங்களில் குறிப்பாக குடியரசுக் கட்சி ஆளும் மாகாணங்களில் கருக்கலைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிராக அமெரிக்கப் பெண்கள் தொடர்ச்சியாக குரல் எழுப்பி, போராட்டங்களிலும் பங்கெடுத்து வருகின்றனர். அது அமெரிக்காவின் ஒரு தேர்தல் பிரச்சனையாகவே தொடர்ந்து நீடித்து வருகிறது.</p><p>கருக்கலைப்பு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சட்டரீதியாக </a>இருக்கின்ற நாடுகளில் 90 விழுக்காடு கருக்கலைப்புகள் பாதுகாப்பானதாக இருக்கின்றன. சட்டரீதியாக இல்லாத நாடுகளில் 25 விழுக்காடு கருக்கலைப்புகள் மட்டுமே பாதுகாப்பானதாக உள்ளன.</p><p>உலகில் உள்ள கருக்கலைப்பு சட்டங்களை ஒப்பிடும் பொழுது, இந்தியாவின் கருக்கலைப்பு சட்டம் மற்றும் அதன் திருத்தங்கள் பெண்களுக்கு ஆதரவாக இருக்கிறது.</p><p>இந்தியாவில் கருக்கலைப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டு 50 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. 1971 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்தச் சட்டத்தில் 2002, 2003, 2021 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p><h2>பாதுகாப்பற்ற கருக்கலைப்பு</h2><p>பெண்ணின் மற்றும் குழந்தையின் கருவில் உள்ள உயிருக்கு ஆபத்தான நிலை, மனநல பிரச்சினைகள், மருத்துவக் காரணிகள், மனிதாபிமான அடிப்படைகள், கருத்தடை சாதனம் செயல்படாதது, பாலியல் வன்புணர்வு, சமூகக் காரணிகள் போன்ற காரணிகளுக்காக கருக்கலைப்பு செய்வதை சட்டபூர்வமாக இந்தியச் சட்டம் அனுமதிக்கிறது.</p><p>திருமணமாகாத பெண்களும், சில காரணங்களுக்காக கர்ப்பத்தை 20 வாரங்களிலும், சில காரணங்களுக்காக கர்ப்பத்தை 24 வாரங்கள் வரையிலான காலத்திலும் கலைக்கலாம் என்பது போன்ற முக்கியத்திருத்தங்கள் செய்யப்பட்டன. பெண்களுக்கு சாதகமாக மேலும் திருத்தங்கள் அவசியப்படுகின்றன.</p><p>இருப்பினும் இன்றையச் சட்டத்தின் காரணமாகவே, பாதுகாப்பற்ற கருக்கலைப்புகள், சட்டத்திற்கு புறம்பான கருக்கலைப்புகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன.</p><p>அபாயகரமான கருக்கலைப்பு காரணமாக ஏற்படும் பேறுகால மரணங்களும் தொடர்ந்து குறைந்து வருகின்றன.</p><p>இந்நிலையில் கருக்கலைப்பு செய்துகொள்ளும் பெண்களை களங்கப்படுத்தும் வகையிலான சில தவறான கருத்துக்களும், கண்ணோட்டங்களும் நம் சமூகத்தில் பரவலாக காணப்படுகின்றன. அவற்றின் விளைவாகவும், பல பெண்கள் பாதுகாப்பில்லாத கருக்கலைப்பு முறைகளை நாடுகின்றனர். அது, அவர்களின் உடலுக்கும் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கிறது. இந்தியாவில், பாதுகாப்பில்லாத கருக்கலைப்பினால் ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ 8 பெண்கள் இறக்கிறார்கள்.</p><p>இந்தியாவின் பேறுகால தாய் மரணங்களில் 8 முதல் 13 விழுக்காடு பாதுகாப்பற்ற கருக்கலைப்பினால் ஏற்படுகின்றன என்பது கவலை அளிப்பதாகும்.</p><h2>உரிமைகளுக்கு எதிராக பேசுவதை கைவிட வேண்டும்</h2><p>இத்தகைய நிலையில் தமிழக அரசின் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் போன்று முக்கிய அரசுப் பதவிகளில் இருப்பவர்கள், கருக்கலைப்புக்கு எதிரான கருத்துக்களை சொல்வது இறப்புகளை மேலும் அதிகரிக்கும்.</p><p>எனவே, பெண்களுக்கு எதிரான மத நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும், பெண்களின் உரிமைகளுக்கு எதிராக பேசுவதையும் கைவிட வேண்டும்.</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மதச்சார்பற்ற </a>கொள்கையையும், அறிவியல் ரீதியான கண்ணோட்டத்தையும் பற்றி நிற்க வேண்டுமென, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எஸ்.ஐ கன்னத்தில் அறைந்த இளைஞர்:  தஞ்சையில் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-slaps-si-on-cheek-uproar-in-thanjavur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-slaps-si-on-cheek-uproar-in-thanjavur#comments</comments><guid isPermaLink="false">cad2873c-812d-477b-aa90-8b11926c89ae</guid><pubDate>Mon, 17 Aug 2026 09:44:09 +0000</pubDate><atom:updated>2026-08-17T09:44:09.341Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thanjavur,இளைஞர்,தஞ்சை,எஸ்.ஐ,கைதுArrest,சாலை மறியல் Roadblock</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/hgr8swaj/127.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எஸ்.ஐ கன்னத்தில் அறைந்த இளைஞர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/hgr8swaj/127.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சை,</p><p>தஞ்சை மாநகராட்சி அலுவலகம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.</p><h2>வாக்குவாதம்</h2><p>விசிக பேனர் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மறியலை மீறி பைக்கில் செல்ல முயன்ற இளைஞருக்கும் விசிகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.</p><p>இதனைத் தடுக்க வந்த காவலருக்கும் அந்த இளைஞருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது இளைஞர் ஒருமையில் பேசியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த காவலர் அவரை கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது. </p><h2>கைது</h2><p>இதையடுத்து அந்த இளைஞரும் காவலரின் கன்னத்தில் அறைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக இளைஞரை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார் </a>கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தவெக அரசின் 100 நாள் ஆட்சி …வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளும், பொதுமக்களுமே சாட்சி - டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmers-and-public-suffering-under-100-days-of-tvk-rule-ttv-dhinakaran-claims</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmers-and-public-suffering-under-100-days-of-tvk-rule-ttv-dhinakaran-claims#comments</comments><guid isPermaLink="false">5feead0b-c953-4c42-b645-52fe6ad50fd3</guid><pubDate>Mon, 17 Aug 2026 09:27:13 +0000</pubDate><atom:updated>2026-08-17T09:27:13.678Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பொதுமக்கள்,டிடிவி தினகரன்,விவசாயிகள்,வாழ்வாதாரம்,தவெக அரசு</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/sq7mz7kn/dinakaran.jpg" width="768"><media:title type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/sq7mz7kn/dinakaran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">தவெக அரசின் 100 நாள் ஆட்சி</a> …வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளும், பொதுமக்களுமே சாட்சி என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சத்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>ஏமாற்றம்</h2><p>தமிழ்நாட்டில் அரசு ஆட்சியமைத்து இன்றோடு 100 நாட்கள் நிறைவடைந்துள்ளன. முதல் 100 நாட்களில் வாக்களித்த மக்கள் மனதில் நம்பிக்கையை விதைக்க வேண்டியதற்கு பதிலாக, ஏமாற்றத்தையும் அதிருப்தியையுமே இந்த அரசு விதைத்துள்ளது. </p><h2>ரீல்ஸ்</h2><p>அரசு நிர்வாகத்தை முதல் 100 நாளை கொண்டு முழுமையாக மதிப்பிட முடியாது என்றாலும், அந்த அரசு செல்லும் திசையை குறிப்பிட்ட நாட்களில் நிச்சயமாக கண்டறிய முடியும். இந்த 100 நாட்களில் மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய அரசு நிர்வாகம், தனக்கும் மக்கள் நலனுக்கும் எந்த வகையிலும் சம்பந்தமே இல்லாதது போல சமூக வலைத்தளங்களில்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D"> ரீல்ஸ் </a>போடுவதையே பிரதான வேலையாக செய்து வந்துள்ளது. </p><h2>வேடிக்கையான அறிவிப்பு</h2><p>அந்த வகையில் கடந்த 100 நாட்களில்... கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களால் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு; புதிதாக காவலர்களை நியமிக்காமல், இருக்கும் காவலர்களை வைத்தே புதிய அதிரடிப்படை என்ற வேடிக்கையான அறிவிப்பு மட்டுமே மிஞ்சியுள்ளது.</p> <h2>போதைப்பொருள் கலாச்சாரம்</h2><p>பெண்களுக்கு எதிரான குற்றங்களில் அமைச்சர் மற்றும் ஆளும்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது குற்றச்சாட்டு எழுந்த பின்னும் எந்தவித விசாரணையும் இல்லை. பள்ளி, கல்லூரிகளில் தொடங்கி பட்டிதொட்டி எங்கும் பரவியிருக்கும் போதைப்பொருள் கலாச்சாரம்; இது குறித்து தகவல் தரும் மாணவர்கள் படுகொலை. போதைப்பொருள் விற்பனை தொடங்கி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் வரை ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்குத் தொடர்பு.</p> <h2>அது போதைப்பொருளோ?</h2><p>தற்போதைய அமைச்சர் ஒருவர், தேர்தலுக்கு முன்பாக உடல்நலம் சரியில்லாத தனது குழந்தையை கிரிக்கெட் போட்டிக்கு அழைத்து சென்று, வெள்ளை நிற பவுடரை தனது ஏடிஎம் கார்டு மூலம் உடைத்ததை அவரே 'தக்' தருணம்' என ரீலாக வெளியிட, "அது போதைப்பொருளோ?" என பலர் சந்தேகம் எழுப்பியும் இதுவரை எந்த விசாரணையும், நடவடிக்கையும் இல்லை. </p><h2>மெத்தனப்போக்கு</h2><p>விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதாக தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதி கொடுத்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பின்பு அரைகுறையாக அறிவிக்கப்பட்ட தள்ளுபடி; இன்றுவரை விவசாயிகள் போராடியும் எந்தப் பயனும் இல்லை. காவிரி நதிநீர், மேகதாது அணை மற்றும் குறுவை சாகுபடி விவகாரங்களில் தொடரும் அரசு நிர்வாகத்தின் மெத்தனப்போக்கு. </p> <h2> ஏமாற்று அறிவிப்பு</h2><p>மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் என்ற வாக்குறுதிக்கு மாறாக, 2 மாதங்களுக்கு 200 யூனிட் இலவசம் என ஏமாற்று அறிவிப்பு. முதல்-அமைச்சர் தொகுதியில் தொடங்கி, அனைத்து பகுதிகளிலும் அறிவிக்கப்படாத இரவுநேர மின்வெட்டு. தமிழகம் எங்கும் திடீரென உயர்த்தப்பட்ட மின்கட்டணம்; மக்கள் போராட்டத்திற்கு பின் "மின்கணக்கீட்டில் குளறுபடி" என்று திசைதிருப்பினர். </p><h2>உயர்த்தப்பட்ட சொத்துவரி</h2><p>அதுவும் இன்றுவரை தீர்க்கப்படவில்லை. சென்னை மாநகராட்சியில், மக்கள் பிரதிநிதிகளிடம் ஆலோசிக்காமல் எதேச்சதிகாரத்தோடு உயர்த்தப்பட்ட சொத்துவரி, மக்களின் தொடர் கேள்விகளுக்குப் பின் கைவிடப்பட்டது.</p><h2>கலிங்குராய மன்னர்</h2><p>அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகள், அம்மா உணவகம் என அரசு நிர்வாகத்திற்குள் ஆளுங்கட்சியினரின் தலையீடு. உதவியாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் தமக்கு வேண்டப்பட்டவர்களுக்கு அரசு உயர் பதவிகளை வழங்கி, தன்னை நவீன கலிங்குராய மன்னர் என நிரூபித்துள்ளார் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்.</p><h2>ஸ்டிக்கர் ஒட்டுதல்</h2><p>அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் சொந்த கட்சியினரிடமே லஞ்சம் கேட்பதாக தவெக நிர்வாகிகள் புகார். கடந்த திராவிட ஆட்சிகளில் அறிமுகப்படுத்தி செயல்படுத்திய திட்டங்களுக்கு "வெற்றி" என வீணாக பெயர் சூட்டி ஸ்டிக்கர் ஒட்டுதல். சட்டமன்ற உறுப்பினர்கள் தொடங்கி அமைச்சர்கள் மற்றும் முதல்-அமைச்சரின் அறைகள் வரை அதிகரித்திருக்கும் ரீல்ஸ் மோகம்.</p><h2>அவல நிலை</h2><p>அரசு மருத்துவமனை அவசரச் சிகிச்சை பிரிவுகளுக்குள்ளாகவே எலிகள் சுற்றித்திரியும் அவல நிலை. அங்கன்வாடி மையங்களில் உணவருந்தும் குழந்தைகள் முதல், தூய்மை பணியாளர்கள் வரை வழங்கப்படும் உணவின் தரம் கேள்விக்குறி. பழனி முருகன் திருக்கோவிலுக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலம் தனிநபர் பெயரில் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது; அதனைத் தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்கும் சொந்தமான நிலம் மோசடியாக பத்திரப்பதிவு என தினந்தோறும் வரும் நில மோசடி புகார்கள்.</p> <h2>நிதிநிலை அறிக்கை</h2><p>மக்களுக்கும் மாநிலத்திற்கும் எந்த வகையிலும் துளியளவும் பயன்படாத நிதிநிலை அறிக்கை; விவசாயிகளின் வலியை உணராமல் தயாரிக்கப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை. கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில் தலைமை செயலகத்தில் பல கோடி ரூபாய் செலவில் தனது அறையை மாற்றும் முதலமைச்சர். </p><h2>அக்கறையின்மை</h2><p>உண்மையான முதலீடுகளை கொண்டுவருவதிலும் வேலைவாய்ப்பைப் பெருக்குவதிலும் அக்கறையின்மை. தொகுதி மறுவரையறை தொடர்பாக எந்தவொரு அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடாத நிலையில், இந்தத் தமிழக அரசின் மீது மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியை மடைமாற்ற அவசியமற்ற ஒரு தீர்மானம் நிறைவேற்றம்.</p><h2>ரீல்ஸ் மற்றும் விளம்பர மோகம்</h2><p>இப்படியாக தமிழக அரசின் இந்த 100 நாட்களில் நடைபெற்ற குழப்பங்களையும் குளறுபடிகளையும் அடுக்கும் நிலையில், ஏதேனும் மக்கள் நலனுக்கென ஆக்கப்பூர்வமான திட்டங்கள் ஏதேனும் கொண்டு வரப்பட்டதா என்றால் இதுவரை தெரியவில்லை. நிர்வாகக் குழப்பம், திட்டமிடலின்மை, ரீல்ஸ் மற்றும் விளம்பர மோகம் மட்டுமே இந்த 100 நாட்கள் தவெக ஆட்சியின் அடையாளங்களாக மாறியுள்ளன. </p><h2>ஒட்டுமொத்த தோல்வி</h2><p>முதல் 100 நாட்கள் ஆட்சியில் ஒட்டுமொத்த தோல்வியை சந்தித்திருந்தாலும், இனியாவது மக்கள் பயனடைவதற்கான பாதையை தேர்ந்தெடுத்து பயணிக்க முன்வர வேண்டும் என இந்நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/western-ghats-north-coastal-tamil-nadu-rain-forecast-today</link><comments>https://www.dailythanthi.com/news/weather/western-ghats-north-coastal-tamil-nadu-rain-forecast-today#comments</comments><guid isPermaLink="false">e77a27ff-812f-4457-88ec-52efa6fe35e0</guid><pubDate>Mon, 17 Aug 2026 09:25:03 +0000</pubDate><atom:updated>2026-08-17T09:25:03.710Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/u4882e0i/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/u4882e0i/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><p><strong>17-08-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>18-08-2026:</strong> செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>19-08-2026:</strong> நீலகிரி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><h3>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</h3><p><strong>17-08-2026 முதல் 21-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும், வட உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><h3>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</h3><p><strong>17-08-2026 முதல் 21-08-2026 வரை:</strong> வட உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று</strong> மற்றும் <strong>நாளை</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாற்றமும்…மக்கள் பணியும்…இன்னும் கம்பீரமாகத் தொடரும் -  தவெக எம்.எல்.ஏ கனிமொழி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/changeand-the-work-of-the-peoplewill-continue-with-greater-dignity-kanimozhi-santosh-mla</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/changeand-the-work-of-the-peoplewill-continue-with-greater-dignity-kanimozhi-santosh-mla#comments</comments><guid isPermaLink="false">fa7aeb94-e201-41b7-83b3-d98b24520ea7</guid><pubDate>Mon, 17 Aug 2026 09:14:16 +0000</pubDate><atom:updated>2026-08-17T09:14:16.150Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,Actor Vijay,கனிமொழி சந்தோஷ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/154a9x4w/kanimoz33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/154a9x4w/kanimoz33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கவுண்டம்பாளையத்தின் மாற்றமும்…மக்கள் பணியும்… இன்னும் கம்பீரமாகத் தொடரும் என கனிமொழி சந்தோஷ் கூறியுள்ளார்.</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்ற 2026-ஆம் ஆண்டு மே 10-ஆம் நாள் முதல் மாற்றம் தந்த மக்களுக்காக, அனைத்துத் தரப்பினரும் பயன்பெறத்தக்க வகையில் ஒரு சிறப்பான மக்களாட்சியைத் தந்து தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் பணியாற்றி வருகிறார். </p><p>இந்தநிலையில், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D">கனிமொழி சந்தோஷ்</a> எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,</p><p>முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் நல்லாசியுடனும், பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான  என்.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலுடனும்,கவுண்டம்பாளையத்தின் சட்டமன்ற உறுப்பினராக, மக்கள் எனக்கு அளித்த இந்தப் புனிதமான பணியில் இன்றுடன் 100 நாட்களை நிறைவு செய்கிறேன்!கடந்த 100 நாட்களில்…</p><p>953 மனுக்களுக்கு உடனடியாகத் தீர்வு</p><p>30,000+ அன்பு மக்களை நேரில் சந்தித்து, 1,317 கோரிக்கை மனுக்களைப்பெற்று, உங்கள் தேவைகளையும் குறைகளையும் நேரில் கேட்டறிந்துள்ளேன்.அவற்றில் 953 மனுக்களுக்கு உடனடியாகத் தீர்வு கண்டு, உங்கள் முகத்தில் மலர்ந்த மகிழ்ச்சியைப் பார்த்திருக்கிறேன்.</p><p>மேலும், 323 இடங்களில் நேரடியாகக் களத்தில் இறங்கி ஆய்வுகளை மேற்கொண்டு, மக்களின் தேவைகளை அறிந்து நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளேன். இந்த 100 நாள் சாதனைப் பயணம் என்பது வெறும் எண்களின் கணக்கு அல்ல…</p><h2>உழைப்பதே என் லட்சியம்</h2><p>தொகுதி மக்களின் ஒவ்வொரு தேவையையும் கேட்டறிந்து, உரிய நலத்திட்ட உதவிகளையும் தீர்வுகளையும் உங்களிடம் கொண்டு வந்து சேர்த்த என் மக்கள் பணியின் சான்று!எனக்கு வாக்களித்து, என்னை வெற்றி பெறச் செய்த ஒவ்வொரு குடும்பத்தின் நம்பிக்கையையும் காப்பாற்றுவது என் கடமை!</p><p>உங்கள் வீட்டுப் பிள்ளையாகவும், மக்கள் பிரதிநிதியாகவும், எந்நாளும் உங்கள் தோளோடு தோள் நின்று உழைப்பதே என் லட்சியம்!</p><p>கவுண்டம்பாளையத்தின் மாற்றமும்…மக்கள் பணியும்… இன்னும் கம்பீரமாகத் தொடரும்!  என அதில் பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தொழில்துறையை காக்க மின்சாரப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண்க! - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/find-an-immediate-solution-to-the-electricity-crisis-to-safeguard-the-industrial-sector-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/find-an-immediate-solution-to-the-electricity-crisis-to-safeguard-the-industrial-sector-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">2a6c60ee-8dd1-43a7-ab8d-d86ed73a15d4</guid><pubDate>Mon, 17 Aug 2026 09:05:39 +0000</pubDate><atom:updated>2026-08-17T09:05:39.282Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Electricity Board,மின்சாரத்துறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/o5heq8mv/Untitled-22.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/o5heq8mv/Untitled-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தொழில்துறையை காக்க மின்சாரப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண்க என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>தொழில்துறையைச் சீரழித்த பெருமை</h2><p>சென்னை முதல் கோவை வரை நிலவும் லோ-வோல்டேஜ் பிரச்சினையால் மக்களின் டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் பழுதாவதாக ஊடகங்களில் வரும் செய்தி கவலையளிக்கிறது. வெயில் காலம் முடிந்தும் மின் தேவையைச் சரியாகக் கையாளத் தெரியாத தவெக அரசு, மக்கள் மீது தேவையற்ற பொருளாதாரச் சுமையை ஏற்றியுள்ளது. இந்த நிர்வாகத் தோல்வியும் அரசின் மெத்தனப் போக்கும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.</p><p>வீடுகள் மட்டுமல்லாது, கோவை, விழுப்புரம் போன்ற தொழில் நகரங்களில் நிலவும் லோ-வோல்டேஜ் பிரச்சினையால், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் பழுதாகி உற்பத்தி மொத்தமாக முடங்கியுள்ளதாகத் தொழில்துறையினரே வேதனையுடன் தெரிவிக்கின்றனர். ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே தொழில்துறையைச் சீரழித்த பெருமை இந்த தவெக அரசையே சாரும்.</p><h2>போர்க்கால அடிப்படையில் தீர்வு காண்க</h2><p>மின் வாரியப் பராமரிப்புப் பணிகளில் தோல்வி ஏற்பட்டுள்ளதை அதிகாரிகளே ஒப்புக்கொள்ளும் நிலையில், <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மின்துறை அமைச்சர்</a> நிர்மல்குமார் வெற்று வாக்குறுதிகள் அளிப்பதை நிறுத்திவிட்டு, இப்பிரச்சினைக்குத் தொழில்நுட்ப ரீதியாகப் போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடக வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/karnataka-forest-department-personnel-should-be-booked-for-murder-and-dismissed-tamil-nadu-farmers-association</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/karnataka-forest-department-personnel-should-be-booked-for-murder-and-dismissed-tamil-nadu-farmers-association#comments</comments><guid isPermaLink="false">ef9b5182-30b5-4298-afc3-4ea99824f779</guid><pubDate>Mon, 17 Aug 2026 09:01:50 +0000</pubDate><atom:updated>2026-08-17T09:01:50.786Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,farmer,Forest Department,வனத்துறை,தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,கொலை வழக்குmurder case</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/njc8g63x/126.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பி.எஸ். மாசிலாமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/njc8g63x/126.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கால்நடை விவசாயிகள் மூன்று பேர் உயிர் பறித்த கர்நாடக வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து பணி நீக்கம் செய்ய வேண்டும், மூன்று குடும்பங்களுக்கும் கர்நாடக அரசே வாழ்வு கால இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">விவசாயிகள் </a>சங்கம் வலியுறுத்தியுள்ளது. </p><p>இது தொடர்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.எஸ். மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு</h2><p>கர்நாடக மாநிலம் தோமையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும்  மூன்று கால்நடை வளர்ப்பு விவசாயிகள் மீது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். இது தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியையும்... கர்நாடகத்தில் இரண்டாவது நாளாக அங்கு வெகு மக்கள் போராட்டமும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95">கர்நாடக</a> வனத்துறைக்கு எதிராக நடந்து வருகிறது.</p><p>தமிழகத்திலிருந்து 15 ஆண்டுகளுக்கு முன்னால் பிழைப்பு தேடி இடம் பெயர்ந்த தமிழர்கள், கர்நாடக மாநிலம் சாமுராய் நகர் மாவட்டம் ஹானூர் தாலுகாவில் வசித்து  வருகின்றனர். இவர்கள் தங்களுடைய ஆடு மாடுகளை காட்டுப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று தங்கி இருந்து திருப்பி ஓட்டிச்செல்வது வழக்கம். இந்நிலையில் இரவு நேரமாகியும் கிடைக்காத கால்நடைகளை விட்டு விட்டு வீட்டுக்கு வந்தவர்கள் மறுநாள் காலை தன் கால்நடைகளை தேடிச் சென்ற பொழுது... அதாவது ஆகஸ்ட் 15 அதிகாலை இவர்களை கர்நாடக வனத்துறையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த வக்கிர தாக்குதலில் அந்தோணிசாமி வயது 50.... லாசர் குமார் 33... ஜான்ரோஸ் பீட்டர்...48 ஆகிய மூவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மகிமை தாஸ் என்பவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். இவரது சாட்சி தான் அம்பலத்திற்கு வந்துள்ளது. வனத்துறையின் செயல் சந்தேகத்தை விளைவிக்கிறது.</p><h2>பிரேத பரிசோதனை</h2><p>குற்றவாளி என கருதினால் அவரை எச்சரிக்கும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாது அல்லது அரசின் வழி நெறி படி துப்பாக்கி பிரயோகம் செய்யாது உயிர் பறிக்கும் நிலையில் சுட வேண்டிய அவசியம் என்ன...? அதுவும் நான்கு பேரையும் ஒரே நேரத்தில் சுட வேண்டிய தேவை என்ன...? அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யாமல் ஆதாரங்களை மறைக்கும் நோக்கத்தில் 110 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மைசூர் மருத்துவ கல்லூரிக்கு ஏன் ரகசியமாக, உடனடியாக கொண்டு சென்றனர். இப்படி எல்லா வகையிலும் சந்தேகத்தை  விளைவிக்கக் கூடிய இந்த படுகொலையை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டிக்கிறது. </p><p>சுட்டுக் கொல்லப்பட்ட இவர்கள் தன் குடும்பத்துடன் அங்கே 15 ஆண்டுகள் வாழ்ந்து வருவதால் அவர்கள் கர்நாடக வாழ்விடத்தவர் ஆவர். இக் குடும்பங்களை பாதுகாக்க வேண்டிய முழு பொறுப்பு கர்நாடக அரசே. எனவே உரிய இழப்பீட்டை உடன் கொடுத்திட வேண்டும். வனத்துறையினர் மீது கொலை குற்ற வழக்கு பதிவு செய்து உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். உடன் இவர்களை பணியில் இருந்து விடுவித்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.</p>]]></content:encoded></item></channel></rss>