<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 19 Aug 2026 04:27:41 +0000</lastBuildDate><item><title>அரசு பள்ளி கட்டிட மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்தது: உயிர் தப்பிய மாணவ-மாணவிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/plaster-from-government-school-roof-collapses-students-escape-unhurt</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/plaster-from-government-school-roof-collapses-students-escape-unhurt#comments</comments><guid isPermaLink="false">57f14d37-e556-4e93-a65b-5d41f9daeee0</guid><pubDate>Wed, 19 Aug 2026 04:26:07 +0000</pubDate><atom:updated>2026-08-19T04:26:07.096Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,சிவகங்கை,Sivagangai,அரசு பள்ளி,திருப்புவனம்,Govt school</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/ktl23pfa/kloer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/ktl23pfa/kloer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்புவனம், </p><p>அரசு பள்ளி கட்டிட மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக மாணவ-மாணவிகள் தப்பினர்.</p><h2>அரசு தொடக்கப்பள்ளி</h2><p>சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மஞ்சள் குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி கட்டிடம் கட்டி சுமார் 10 ஆண்டுகள் இருக்கும் என கூறப்படு கிறது. இந்த பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை 24 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.</p><p>தலைமை ஆசிரியை, உதவி ஆசிரியை என 2 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பள்ளிக்கட்டிட முகப்பு பகுதி ஏற்கனவே சேதமடைந்து காணப்பட்டது. இதனை சீரமைக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்து வந்தனர்.</p><h2>பூச்சு பெயர்ந்து விழுந்தது</h2><p>இந்த நிலையில் நேற்று மதியம் கட்டிட முகப்பு மேற்கூரையில் சிமெண்டு பூச்சு பெயர்ந்து கீழே விழுந்தது. இதனால் கட்டிடத்தின் கம்பிகள் வெளியே நீட்டியபடி இருந்தன. மாணவ- மாணவிகள் வகுப்பறையில் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக தப்பினர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த வட்டார கல்வி அலுவலர் பால் பாண்டி பள்ளிக்கு நேரடியாக சென்று பார்வையிட்டார். மேலும் பாதுகாப்பு கருதி, முன்னதாகவே மாணவ-மாணவிகள் நேற்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு: முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/milk-procurement-price-hiked-by-rs-3-per-litre-chief-minister-vijay-announces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/milk-procurement-price-hiked-by-rs-3-per-litre-chief-minister-vijay-announces#comments</comments><guid isPermaLink="false">c4737e01-633c-4932-ba1c-4c8810582ec3</guid><pubDate>Wed, 19 Aug 2026 04:24:13 +0000</pubDate><atom:updated>2026-08-19T04:24:13.048Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,சட்டசபை,பால் விலை,milk price,பால் உற்பத்தி,Aavin Milk,Milk procurement,ஆவின் பால்,பால் கொள்முதல் விலை,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/johhdozu/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/johhdozu/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>ஆவின் பால்</h2><p>தமிழகத்தின் அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் கொள்முதல் செய்து வருகிறது. ஆரம்ப காலங்களில் பெரும்பாலான விவசாயிகள் இந்த பால் கூட்டுறவு சங்கங்களுக்கு சென்று பால் விற்பனை செய்து வந்தனர்.</p><p>ஆனால் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை அதிகரிக்கவில்லை. இதனால் ஆவினுக்கு பால் வழங்குவதற்கு தயக்கம் காட்டி வந்தனர். இதனால் தனியார் நிறுவனங்களுக்கு விவசாயிகள் பால் விற்பனை செய்து வருகின்றனர்.</p><h2>கொள்முதல் விலை</h2><p>ஆவின் நிறுவனம் சராசரியாக 1 லிட்டர் பாலை ரூ.34-க்கு கொள்முதல் செய்கிறது. அதே நேரத்தில் தனியார் நிறுவனங்கள் 1 லிட்டர் பாலை ரூ.50 வரை விலை கொடுத்து வாங்குகின்றனர். இதனால் தனியார் நிறுவனங்களுக்கு பால் விற்பதற்கே விவசாயிகள் முன்னுரிமை அளிக்கின்றனர். மேலும் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என விவசாயிகள், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் மற்றும் ஆவின் பிரதம சங்கங்களின் பணியாளர்கள் வலியுறுத்தினர்.</p><p>இந்த நிலையில், தமிழ்நாட்டில் பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படுவதாக சட்டசபையில் 110- விதியின் கீழ் முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.</p><p><strong>இதுதொடர்பாக அவர் பேசியதாவது:-</strong></p><p>உலகில் தான் உற்பத்தி செய்யும் பாலை தனது சந்ததிகளுக்கு மட்டுமின்றி, மனிதர்கள் உள்ளிட்ட பிற ஜீவராசிகளுக்கும் வழங்கி உயிரைக் காக்கும் பசுவை தெய்வமாகப் போற்றி வளர்த்து வருவது நமது பாரம்பரியத்தின் சிறப்பு. இன்றைய அறிவியல் உலகில், ஒரு லிட்டர் பாலை உற்பத்தி செய்வதற்காகப் பசுவின் உடலில் சுமார் 500 லிட்டர் ரத்தம் சுத்திகரிக்கப்படுவதாகக் கூறப்படும்போது, பசுவின் உழைப்பை எண்ணி வியக்க தோன்றுகிறது.</p><h2>34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல்</h2><p>தமிழ்நாட்டில் 8,800 பால் கூட்டுறவு சங்கங்களில் உள்ள 3,16,000 பால் உற்பட்டதியாளர்களிடமிருந்து தினசரி 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, ஆவின் நிறுவனத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 31 லட்சம் லிட்டர் பால் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p><p>தற்போது 4.3% கொழுப்பு சத்து மற்றும் 8.2% இதர சத்துகள் அடங்கிய ஒரு லிட்டர் பாலுக்கு கொள்முதல் விலையாக 35 ரூபாயும், மாநில ஊக்க தொகையாக ஒரு லிட்டர் பாலுக்கு 3 ரூபாயும் ஆக மொத்தம் ஒரு லிட்டருக்கு கொள்முதல் விலை 38 ரூபாய், 5.11.2022 முதல் வழங்கப்பட்டு வருகிறது.</p><h2>உயர்த்தப்படாத பால் கொள்முதல் விலை</h2><p>அதிகாலை 3 மணிக்கே எழுந்து மாடுகளைச் சுத்தம் செய்து பால் உற்பத்தி செய்யும் உற்பட்டதியாளர்களின் உழைப்பையும், தீவனம் மற்றும் வேலையாட்களின் கூலி உள்ளிட்ட அதிகரித்து வரும் செலவுகளையும் கடந்த கால அரசு போதிய அளவில் கருத்தில் கொள்ளவில்லை. உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல் இருந்துள்ளது.</p><p>கடந்த காலத்தில் கொள்முதல் விலை உரிய அளவில் உயர்த்தப்படாத நிலையில், நம் அரசு சந்தித்து வரும் அதிகப்படியான நிதி நெருக்கடியிலும் பால் உற்பத்தியாளர்களின் நலனையும் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு அவர்களின் உன்னதமான உழைப்பிற்கு உரிய மதிப்பை வழங்கும் வகையில் கொள்முதல் விலையை உயர்த்துவது நமது அரசின் கடமையாகும்.</p><h2>பால் கொள்முதல் விலை உயர்வு</h2><p>தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கும் 3 லட்சத்து 16 ஆயிரத்திற்கு மேலான பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில், பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு கூட்டுறவு சங்கம் மூலமாக 1 ரூபாய் உயர்த்தவும், மேலும் அரசு ஊக்க தொகை 3 ரூபாயிலிருந்து 5 ரூபாயாக உயர்த்தவும் ஆக மொத்தம் ஒரு லிட்டர் கொள்முதல் விலை 38 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த கொள்முதல் விலை உயர்வால் கூடுதலாக ஒரு மாதத்திற்கு ரூபாய் 30 கோடியும், ஒரு ஆண்டிற்கு 360 கோடியும் செலவாகும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பழனியில் ரூ.100 கோடி நில மோசடி: சார்பதிவாளர், பத்திர எழுத்தரை காவலில் விசாரிக்க போலீசார் மனு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-100-crore-land-fraud-in-palani-police-seek-custody-of-sub-registrar-and-document-writer-for-interrogation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-100-crore-land-fraud-in-palani-police-seek-custody-of-sub-registrar-and-document-writer-for-interrogation#comments</comments><guid isPermaLink="false">39a93414-ec8a-4fa5-9411-918a49336f78</guid><pubDate>Wed, 19 Aug 2026 04:07:09 +0000</pubDate><atom:updated>2026-08-19T04:07:09.717Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பழனி,Palani,Palani temple,சார்பதிவாளர்,Sub-Registrar,land dispute case,நில மோசடி,பழனி கோவில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/7yu8h9sh/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/7yu8h9sh/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>பழனி,</p><h2>ரூ.100 கோடி நில மோசடி</h2><p>பழனியில், தண்டபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமாக ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் இருக்கிறது. அந்த நிலம் 2 பேருக்கு மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இது குறித்து திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து, 100-க்கும் மேற்பட்டோரிடம் விசாரித்தனர். அதோடு பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர்.</p><p>அதையடுத்து திண்டுக்கல்லை சேர்ந்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், விழுப்புரத்தை சேர்ந்த ஆசிரியர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய திருப்பூர் பாப்பன்குளம் வெள்ளத்துரை, பழனியை சேர்ந்த சேதுபதி மற்றும் வக்கீல் அன்வர்தீன், ஒட் டன்சத்திரத்தை சேர்ந்த பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷ் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.</p><h2>காவலில் விசாரிக்க மனு</h2><p>இதைத்தொடர்ந்து ஜாமீன் கேட்டு 6 பேரும் தாக்கல் செய்த மனுவை, திண்டுக்கல் முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அதன்பின்னர் மாவட்ட கோர்ட்டில் சார்ப திவாளர் ஜஸ்டின் மணிகண்டன், பத்திர எழுத்தர் ஜெயபிர காஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவும் தள்ளுபடி ஆனது. மேலும் முருகதாஸ் தாக்கல் செய்த ஜாமீன் மனு இன்று (புதன்கிழமை) மாவட்ட கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.</p><p>இதற்கிடையே நில மோசடி வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந் துள்ளது. இதனால் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், பத் திர எழுத்தர் ஜெயபிரகாஷ் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர். இதற்காக திண்டுக்கல் 1-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர்.</p><p>இந்த மனு இன்று மாஜிஸ்திரேட்டு பாக்கியராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது. இதனால் இருவரும் போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். அந்த 2 பேரையும் காவலில் எடுத்து விசாரித்தால் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம். அதன்மூலம் மேலும் சிலர் சிக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>உடல் பருமன் அதிகரிப்பு: தொற்றா நோய் பாதிப்புகளால் சவால்களை எதிர்கொள்ளும் தமிழ்நாடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rising-obesity-tamil-nadu-faces-challenges-due-to-non-communicable-diseases</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rising-obesity-tamil-nadu-faces-challenges-due-to-non-communicable-diseases#comments</comments><guid isPermaLink="false">6c8e1aca-6a75-43ac-ae17-517ce2348ee4</guid><pubDate>Wed, 19 Aug 2026 03:55:01 +0000</pubDate><atom:updated>2026-08-19T03:55:01.387Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,obesity,உடல் பருமன்,மருத்துவத்துறை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/avz1fk3r/ulad.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/avz1fk3r/ulad.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>உலகளாவிய நோய் பாதிப்பு குறித்த ஆய்வின்படி, தமிழகத்தில் நடக்கும் மொத்த இறப்புகளில் 75 சதவீதம் தொற்றா நோயால் ஏற்படுகிறது. இதய நோய், புற்றுநோய், நீரிழிவு நோய், நாள்பட்ட சுவாச நோய் போன்றவை முக்கிய காரணிகளாக உள்ளன.</p><h2>உடல் பருமன்</h2><p>மாறிவரும் உணவு பழக்க வழக்கம், உடற்பயிற்சி இல்லாமை, உடல் உழைப்பு இல்லாதது, துரித உணவுகள் உள்ளிட்டவை மக்களிடையே உடல் பருமனை அதிகரித்து வருகிறது. உடல் பருமன் அதிகம் இருப்போருக்கு, தொற்றா நோய் பாதிப்பு தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.</p><h2>44.2 சதவீத பெண்கள்</h2><p>தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி, தொற்றா நோய் பாதிப்புகளால் அதிகபட்ச சவால்களை எதிர்கொள்ளும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக உள்ளது. அதன்படி தமிழகத்தில் அதிக எடை, உடல் பருமனால் 44.2 சதவீத பெண்கள், 38.8 சதவீத ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவை தொடர்ந்து அதிகரிக்கும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.</p><h2>10 ஆண்டுகளில்</h2><p>இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் கூறுகையில், “பெரும்பாலான மக்களிடையே உடல் உழைப்பு, உடற்பயிற்சி இருப்பதில்லை. துரித உணவு, புகையிலை பயன்பாடு, மதுப்பழக்கம் ஆகியவை தொற்றா நோய்க்கு முக்கிய காரணங்களாக உள்ளன. இந்நிலை நீடித்தால் 10 ஆண்டுகளில் தொற்றா நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும், தொற்றா நோயால் ஏற்படும் இறப்பு 80 சதவீதத்தை தாண்டும்” என்று தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/surprise-raids-by-the-directorate-of-vigilance-and-anti-corruption-across-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/surprise-raids-by-the-directorate-of-vigilance-and-anti-corruption-across-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">e8541405-7682-449b-9c1f-bd061e0e73e2</guid><pubDate>Wed, 19 Aug 2026 03:26:37 +0000</pubDate><atom:updated>2026-08-19T03:26:37.979Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,electricity,மின்வாரியம்,Electricity Board,மின்சாரத்துறை,லஞ்ச ஒழிப்புத்துறை,தமிழ்நாடு மின்வாரியம்,லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை,Vigilance Department</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/ys3kdrw8/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/ys3kdrw8/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னையில் செயல்பட்டு வரும் கணினி நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இன்று டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு வழக்கு தொடர்பாகத் தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.</p><h2>வருமானவரி சோதனை</h2><p>சென்னை, ஆழ்வார்பேட்டை, டி.டி.கே. சாலையில் செயல்பட்டு வரும் கணினி தொழில்நுட்பத் தொடர்பு நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.</p><p>கணினி உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் இந்த நிறுவனத்திற்கும் வெளிநாட்டு நிறுவனங்க ளுக்கும், இந்தியாவின் சிறிய நிறுவனங்களுக்கும் இடையே நடந்த நிதிப் பரிமாற்றங்களில் உள்ள முறைகேடுகள் மற்றும் புகார்களின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.</p><h2>நேற்று 5 இடங்களில் சோதனை</h2><p>இந்த நிறுவனத்துக்கு தொடர்புடைய எர்ணாவூர், ஆழ்வார்பேட்டை, விருகம்பாக்கம், ராஜமங்கலம் உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை நடந்தது. அனைத்து இடங்களிலும் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் தீவிர ஆவணச்சரிபார்ப்பு உள்ளிட்ட சோதனையில் ஈடுபட்டனர்.</p><p>வரி செலுத்தாமல் வருவாயை மறைத்ததாக வந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு தொடர்பாக எழுந்த இந்த புகார்கள் மற்றும் கணக்கில் வராத நிதிப் பரிமாற்றங்கள் தொடர்பான ஆவணங்களைச் சரிபார்க்க இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன. அதன்படி கணினி பதிவுகள் மற்றும் நிதி ஆவணங்கள் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டன. சோதனை முடிவில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மதிப்பு, ரொக்கம் உள்ளிட்டவை தெரிய வரும் என்று வருமானவரித்துறை அதிகாரிகள் கூறினர்.</p><h2>லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை</h2><p>இந்த நிலையில், <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னையில் </a>இன்று டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு வழக்கு தொடர்பாகத் தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் சென்னையில் மட்டும் பெருங்குடி (4 இடங்கள்), அண்ணா நகர் (3 இடங்கள்) உள்பட 27 இடங்களிலும், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், 10-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளிலும் இந்தச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>காஞ்சீபுரம்:  வீடு கட்ட பணம் தராத ஆத்திரத்தில் தந்தையை லாரி ஏற்றிக்கொன்ற மகன் கைது
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kancheepuram-son-who-pushed-his-father-into-a-truck-in-anger-over-not-being-given-money-to-build-a-house-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kancheepuram-son-who-pushed-his-father-into-a-truck-in-anger-over-not-being-given-money-to-build-a-house-arrested#comments</comments><guid isPermaLink="false">2a1d527c-c095-42bc-854e-7096bc7e3ed8</guid><pubDate>Wed, 19 Aug 2026 03:18:56 +0000</pubDate><atom:updated>2026-08-19T03:18:56.232Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrest,Kancheepuram,காஞ்சீபுரம்</media:keywords><media:content height="768" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/2fzmoboy/upael.jpg" width="1366"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/2fzmoboy/upael.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>காஞ்சீபுரம்</p><p>காஞ்சீபுரத்தில் ஸ்ரீபெரும்புதூர் அருகே வீடு கட்ட பணம் தராத ஆத்திரத்தில் தந்தையை லாரி ஏற்றிக்கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.</p><p><a href="https://www.dailythanthi.com/">காஞ்சீபுரம்</a> மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் ராம்ஜி தெருவை சேர்ந்தவர் சத்யா (வயது 50). இவரது மனைவி நாகம்மாள்.  இவர்களுக்கு சந்துரு, முனுசாமி (25), சதீஷ் என 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவரது 2-வது மகன் முனுசாமி. அதே பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு, தற்போது வாடகை வீட்டில் வசித்து வருகிறார். தனக்கு வீடு கட்டுவதற்காக இடம் தர வேண்டும் அல்லது இடம் வாங்க பணம் தர வேண்டும் என்று கூறி, கடந்த சில நாட்களாக முனுசாமி தனது தந்தை சத்யாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.</p><p>நேற்று முன்தினம் மீண்டும் தந்தையுடன் தகராறு செய்தார். இதில் முனுசாமிக்கும் அவரது தம்பி சதீஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பாக மாறியது.</p> <h2>தீவிர சிகிச்சை</h2><p>ஆத்திரம் அடைந்த முனுசாமி, சதீஷை நோக்கி மினி லாரியை வேகமாக ஓட்டி வந்தார். இதனை பார்த்த சத்யா, தனது மகன் சதீஷை காப்பாற்றுவதற்காக அவரை தள்ளிவிட்டார். இதில் சத்யா லாரி சக்கரத்தில் சிக்கினார். இதில் படுகாயம் அடைந்த சத்யாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சத்யா உயிரிழந்து விட்டார்.</p><p>இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் கொலை வழக்கில் தொடர்புடைய முனுசாமியை தேடி வந்தனர். மண்ணூர் காட்டு பகுதியில் பதுங்கி இருந்த முனுசாமியை போலீசார் நேற்று கைது செய்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை நேரடியாக வாங்க புதிய வசதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-facility-to-directly-purchase-empty-liquor-bottles-at-tasmac-shops</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-facility-to-directly-purchase-empty-liquor-bottles-at-tasmac-shops#comments</comments><guid isPermaLink="false">2b297f54-6af8-4a58-aee1-b01762e75c56</guid><pubDate>Wed, 19 Aug 2026 03:02:20 +0000</pubDate><atom:updated>2026-08-19T03:02:20.334Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,டாஸ்மாக்,Tasmac,liquor bottles,காலி மது பாட்டில்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/c8ztquvw/tas.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/c8ztquvw/tas.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>டாஸ்மாக் கடைகளில் வாகனங்களில் பாஸ்ட் ஸ்கேனர் எனப்படும் கருவியில் நேரடியாக காலி மது பாட்டில்கள் வாங்கப்பட உள்ளன.</p><h2>காலி மதுபாட்டில்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/tasmac">டாஸ்மாக்</a> கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தின் கீழ், ஒரு பாட்டிலுக்கு ரூ.10 டெபாசிட் வசூலிக்கப்படுகிறது. காலி பாட்டில்களை வாங்கிய கடையிலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட மையங்களிலோ திரும்ப ஒப்படைப்பதன் மூலம், ரூ.10-ஐ திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும்.</p><p>இத்திட்டத்தை டாஸ்மாக் ஊழியர்கள் கையாளும் நடைமுறைக்கு எதிர்ப்பு எழுந்ததையடுத்து, இத்திட்டம் முற்றிலும் மறுசீரமைக்கப்பட்டு மாற்றியமைக்கப்படும் என ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்திருந்தது. டாஸ்மாக் பணியாளர்கள் அல்லாத பிற நபர்களைக் கொண்டு பாட்டில்களை திரும்பப் பெறுவது உள்ளிட்ட திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.</p><h2>தானியங்கி கருவி</h2><p>இந்த சூழலில் தானியங்கி கருவியில் காலி பாட்டிலை வாங்கவும், அதன் வாயிலாக, 10 ரூபாயை திரும்ப வழங்கவும் டாஸ்மாக் முடிவு செய்தது. சோதனை ரீதியாக பீரோ வடிவில் உள்ள தானியங்கி கருவி, சென்னை எழும்பூரில் உள்ள ஒரு மது கடையில் வைக்கப்பட்டது. </p><p>அந்த கருவி பாட்டிலை தானாகவே உள்ளே எடுத்துக்கொள்ளும். பின்ன்ர் யு.பி.ஐ., கணக்கிற்கு காலி பாட்டிலுக்கான தொகை செலுத்தப்படும். பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் போதிய இடவசதி இல்லாமல், குறைந்த சதுர அடியில் இயங்கி வருகின்றன.</p><h2>'பாஸ்ட் ஸ்கேனர்’</h2><p>அந்த கடைகளில் பீரோ வடிவிலான தானியங்கி கருவிகளை வைக்க இடம் இல்லை. எனவே குறைந்த இட வசதியுடன் தினமும் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் மது வகைகள் விற்பனையாகும் கடைகளில் 'பாஸ்ட் ஸ்கேனர்’ எனப்படும் கருவியில் நேரடியாக வாகனங்களில், காலி பாட்டில்கள் வாங்கப்பட உள்ளன. இது சென்னை திருவல்லிக்கேணி மற்றும் எழும்பூரில் தலா ஒரு கடையில் சோதனை ரீதியாக வைக்கப்பட்டு பாட்டில்கள் வாங்கப்பட்டு வருகின்றன.</p><p>அதன்படி, வாகனத்தில் ஸ்கேனர் கருவியுடன் பணியாளர் இருப்பர். அவரிடம் காலி பாட்டிலை கொடுத்ததும் அதில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கரை கருவியில் ஸ்கேன் செய்து பாட்டிலை பெற்று கொண்டு 10 ரூபாய் திரும்ப வழங்குவர். இதன் வாயிலாக ஒரு நாளைக்கு 8 ஆயிரம் பாட்டில்களை திரும்ப பெற முடியும் என்று கூறப்படுகிறது. வாகனத்தில் சேகரிக்கப்படும் காலி பாட்டில்கள், டாஸ்மாக் நியமிக்கும் ஒப்பந்ததாரர்களிடம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விழுப்புரம் கோட்டத்தில் வருவாயை அதிகரிக்க வாரத்தில் 3 நாட்கள் 136 அரசு பஸ் சேவைகள் நிறுத்தம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/136-government-bus-services-in-the-villupuram-division-suspended-for-three-days-a-week-to-boost-revenue</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/136-government-bus-services-in-the-villupuram-division-suspended-for-three-days-a-week-to-boost-revenue#comments</comments><guid isPermaLink="false">c0b36d1a-738b-438c-89e2-58bd48a65a69</guid><pubDate>Wed, 19 Aug 2026 03:01:18 +0000</pubDate><atom:updated>2026-08-19T03:01:18.307Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசு பஸ்,Government bus,விழுப்புரம்,Villupuram,revenue,வருவாய்,சேவை நிறுத்தம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/x1bg4tjq/276.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அரசு பஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/x1bg4tjq/276.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விழுப்புரம்,</p><p>விழுப்புரம் கோட்டத்தில் குறைந்த வருவாய் ஈட்டிய 136 புறநகர் பஸ்களின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற் படுத்தியுள்ளது.</p><h2>விழுப்புரம் கோட்டம்</h2><p>தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக விழுப்புரம் கோட்டத்தில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 6 மண்டலங்கள் உள்ளன. இந்த மண்டலங்களுக்குட்பட்ட 10 மாவட்டங்களில் நாள் ஒன்றுக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. </p><p>இந்நிலையில் விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம். 6 மண்டல போக்குவரத்துக் கழக பொது மேலாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-</p><p>அரசு போக்குவரத்துக்கழகத்தின் வருவாய் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கிலும், அதிக சர்வீஸ்கள் இயக்கப்படும் வழித்தடங்களிலும், தனியார் பஸ் போக்குவ ரத்து இல்லாத வழித்தடங்களிலும் குறைந்த வருவாய் ஈட்டும் பஸ் சேவைகளை தேர்வு செய்து அவற்றை ஒவ்வொரு வாரமும் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய போக்குவரத்து குறைவாக காணப்படும் வார நாட்களில் தற்காலிகமாக நிறுத்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு போக்குவரத்துக்கழகத்தின் வருவாய் அதிகரிப்பதுடன், டீசல் செலவினமும் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>தற்காலிகமாக நிறுத்தம்</h2><p>அதன் அடிப்படையில் அனைத்து மண்டலங்களில் இருந்தும் பஸ்களை நிறுத்தம் செய்ய முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திலும் குறைந்த வருவாய் ஈட்டும் பஸ் சேவைகள் ஆய்வு செய்யப்பட்டு போக்குவரத்து குறைவாக காணப்படும் வார நாட்களில் தற்காலிகமாக நிறுத்தம் செய்ய முன்மொழிவுகள் பெறப்பட்டன.</p><p>இதன்படி விழுப்புரம் மண்டலத்திற்குட்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 26 பஸ்களும், கடலூர் மண்டலத்தில் 28 பஸ்களும், திருவண்ணாமலை மண்டலத்தில் 34 பஸ்களும், வேலூர் மண்டலத்தில் 23 பஸ்களும், காஞ்சீபுரம் மண்டலத்தில் 15 பஸ்களும், திருவள்ளூர் மண்டலத்தில் 10 பஸ்களும் ஆக மொத்தம் 136 புறநகர் பஸ் சேவைகள் (598 முறை இயக்குதல்) நிர்ணயிக்கப்பட்ட கிலோ மீட்டரில் 71,971 கி.மீ. இயக்கத்தை போக்குவரத்து குறைவான வார நாட்களான செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் குறைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.</p><p>இந்த நடைமுறைகளால் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு</a> வருவாய் அதிகரிக்கப்பட்டு, டீசல் செலவு குறைக்கப்படும் என்று சொல்லப்பட்டாலும், 136 புறநகர் பஸ்களின் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பள்ளி மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை.. அரசு விடுதியில் நடந்த பேரதிர்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/schoolgirls-sexually-harassed-after-being-given-alcoholshocking-incident-at-a-government-hostel</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/schoolgirls-sexually-harassed-after-being-given-alcoholshocking-incident-at-a-government-hostel#comments</comments><guid isPermaLink="false">58b9260c-885d-4d73-9073-a7038ebbf543</guid><pubDate>Wed, 19 Aug 2026 02:33:42 +0000</pubDate><atom:updated>2026-08-19T02:33:42.857Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,பாலியல் தொல்லை,Salem,POCSO act,போக்சோ,சேலம்,POCSO,மது,Liquor,அரசு விடுதி,sexual abuse,Govt hostel,அரசு பள்ளி மாணவிகள்,Govt School Students,வாழப்பாடி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/o25px02t/koer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/o25px02t/koer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வாழப்பாடி, </p><p>அரசு மாணவிகள் விடுதியில் தங்கி படித்த 2 மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் எதிரொலியாக விடுதி பெண் ஊழியர், நண்பருடன் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.</p><h2>மது கொடுத்து பாலியல் தொந்தரவு</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/salem">சேலம் </a>மாவட்டத்தில் சமீபகாலமாக அடுத்தடுத்து பாலியல் புகார்கள் வந்தபடி உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் அருகே உள்ள கொண்டலாம்பட்டி பகுதியில் 14 வயது சிறுமியை 7 பேர் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.</p><p>இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் 2 மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் தெரிய வந்துள்ளது. இந்த பகீர் தகவல் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p><h2>அரசு மாணவிகள் விடுதி</h2><p>சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் அரசு பெண்கள் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கான விடுதி உள்ளது. இங்கு பல்வேறு பகுதியில் இருந்து மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.</p><p>இந்த விடுதியில் தூய்மை பணியாளராக வேலை பார்க்கும் ராதிகாவும், அதே பகுதியை சேர்ந்த ரகுபதி என்ற கார் டிரைவரும் நட்புடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு ரகுபதி, ராதிகாவிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது அருகில் நின்று கொண்டிருந்த பள்ளி மாணவிகள் 2 பேரை ரகுபதிக்கு அறிமுகப்படுத்தியதாக தெரிகிறது.</p><h2>இரவு நேரத்தில்</h2><p>அதன்பிறகு அடிக்கடி ரகுபதியை மாணவிகள் ராதிகாவின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த 8-ந் தேதி இரவு மாணவிகள் விடுதி தூய்மை பணியாளர் ராதிகாவிற்கு பீர் பாட்டில் மற்றும் சில்லி சிக்கன் ஆகியவற்றை ரகுபதி கொடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து இரவு நேரத்தில் ராதிகா அந்த 2 பள்ளி மாணவிகளுடன் சேர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது.</p><h2>மாணவிகளுக்கு பாலியல் தொல்லை</h2><p>அப்போது அங்கு வந்த ரகுபதி தனது மோட்டார் சைக்கிளில் 2 மாணவிகளையும் தனிமையான இடத்திற்கு அழைத்துச்சென்றுள்ளார். அங்கு 2 மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.</p><p>மாணவிகளை விடுதிக்கு அழைத்து வருமாறு ராதிகா அழைத்ததன் பேரில் மீண்டும் விடுதிக்கு வந்து அவர்களை ரகுபதி விட்டு சென்றார். இதன் பின்னர் யாரிடமும் இதுகுறித்து மாணவிகள் தெரிவிக்கவில்லை.</p><p>இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி சுதந்திர தின விடுமுறையில் மாணவிகள் அவர்களது வீட்டுக்குச் சென்றிருந்தனர். அப்போது அவர்கள் பெற்றோரிடம் ரகுபதி நடந்து கொண்ட விவரம் குறித்து தெரிவித்தனர். மேலும் பள்ளிக்கு இனி செல்வதில்லை எனக்கூறியதை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.</p><h2>பெண் ஊழியர் கைது</h2><p>இது குறித்து பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், வாழப்பாடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி, சப்-இன்ஸ்பெக்டர் நிர்மலா மற்றும் மகளிர் போலீசார் நடத்திய விசாரணை முடிவில் மாணவிகள் விடுதி தூய்மை பணியாளர் ராதிகாவை போக்சோ சட்டத்தில் நேற்று மதியம் கைது செய்தனர்.</p><p>மாணவிகளுக்கு மது வாங்கி கொடுத்து பாலியல் தொல்லை செய்ததாக ரகுபதி மீதும் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில் நேற்று நள்ளிரவில் அவரையும் போலீசார் கைது செய்தனர்.</p><h2><strong>போலீசார் விசாரணை</strong></h2><p>ராதிகாவும், அவரது நண்பர் ரகுபதியும் வேறு மாணவிகள் யாருக்கும் மது கொடுத்துள்ளனரா? வேறு மாணவிகள் யாரும் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனரா? என்றும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>செங்கல்பட்டு அருகே கவிழ்ந்த அரசு பஸ்; 25 பேர் காயம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-bus-overturns-near-chengalpattu-25-injured</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-bus-overturns-near-chengalpattu-25-injured#comments</comments><guid isPermaLink="false">cdf9e300-6168-48d9-8e6f-34305ca0e621</guid><pubDate>Wed, 19 Aug 2026 02:31:52 +0000</pubDate><atom:updated>2026-08-19T02:31:52.043Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசு பஸ்,Government bus,Chengalpattu,செங்கல்பட்டு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/6byzo9a8/tnmats.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/6byzo9a8/tnmats.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>செங்கல்பட்டு அருகே அரசு பஸ் கவிழ்ந்த சம்பவத்தில் 25 பேர் காயம் அடைந்தனர்.</p><p>கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இருந்து சென்னை நோக்கி அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது.  பஸ்சில் 25-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.  அப்போது, அந்த பஸ் செங்கல்பட்டு அருகே ஜி.எஸ்.டி. சாலையில் வந்தபோது, திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.</p> <h2>போலீசார் விசாரணை</h2><p>இந்த சம்பவத்தில், பஸ்சில் இருந்த பயணிகளில் 25 பேர் காயம் அடைந்தனர்.  இதுபற்றி தகவல் அறிந்ததும், போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று அவர்களை மீட்டு, சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.</p><p>முதல்கட்ட விசாரணையில், பஸ்சின் பிரேக் பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.  விபத்து நடந்தவுடன் பஸ்சில் இருந்த இருந்து ஓட்டுநர், நடத்துனர் தப்பியோடி விட்டனர்.  விபத்து தொடர்ச்சியாக, ஜி.எஸ்.டி. சாலையில் 2 கி.மீ. தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.  செய்தனர்.  தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>நாடு தழுவிய அளவில் வெளிநாட்டு பணப் பரிமாற்றங்கள் சரிபார்ப்பு தொடங்கியது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nationwide-verification-of-foreign-money-transfers-has-begun</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nationwide-verification-of-foreign-money-transfers-has-begun#comments</comments><guid isPermaLink="false">88de0dac-ebf7-467c-932a-b23fc574363e</guid><pubDate>Wed, 19 Aug 2026 02:14:26 +0000</pubDate><atom:updated>2026-08-19T02:14:26.766Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Income Tax Department,வருமான வரித்துறை,Money transfer,வெளிநாட்டு பணம்,பணப்பரிமாற்றம்,foreign money</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/67o8u5tq/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/67o8u5tq/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வெளிநாட்டு பணப்பரிமாற்றங்கள் குறித்து வருமான வரித்துறை நாடு தழுவிய அளவில் சரிபார்ப்பு நடவடிக்கையை தொடங்கி உள்ளது.</p><h2>வருமான வரித்துறை</h2><p>சந்தேகத்திற்குரிய வெளிநாட்டு பணப் பரிமாற்றங்கள் குறித்து வருமான வரித்துறை நாடு தழுவிய விரிவான சரிபார்ப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் அதிகப்படியான அந்நிய செலாவணியை வெளிநாடுகளுக்கு அனுப்பிய சந்தேகத்திற்குரிய நிறுவனங்களை உளவுத்துறை மற்றும் தரவு பகுப்பாய்வு மூலம் வருமான வரித்துறை கண்டறிந்துள்ளது.</p><p>போலி அறக்கட்டளைகள் மூலம் நிதி பரிமாற்றம் செய்த நிறுவனங்கள், வருமான வரி தாக்கல் செய்யாதவை அல்லது மிகக்குறைந்த வருவாயைக் காட்டி வருமான வரி தாக்கல் செய்பவை என்பது களஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த நிறுவனங்கள் அறிவிக்கப்பட்ட முகவரிகளில் செயல்படவில்லை என்பதும், சரக்கு போக்குவரத்து. மென்பொருள் இறக்குமதி போன்ற பரிமாற்ற காரணங்கள் உண்மையானவை அல்ல என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.</p><h2>சரிபார்ப்பு நடவடிக்கை</h2><p>குறிப்பிட்ட தொழில் வல்லுநர்களால் அதிக எண்ணிக்கையி லான படிவம் 15 சிபி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதை வருமான வரித்துறை கவனித்துள்ளது. இந்த சான்றிதழ்களை வழங்கும் கணக்காளர்கள் போதிய விடாமுயற்சி மேற்கொள்ள வில்லை. தற்போது சுமார் 394 நிறுவனங்கள் மற்றும் 36 தொழில் வல்லுநர்கள் மீது இந்த சரிபார்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.</p><p>நில எல்லை மாவட்டங்களில் உள்ள நிறுவனங்களும் இதில் அடங்கும். சான்றிதழ்களை வழங்கும் கணக்காளர்கள், பணப் பரிமாற்றங்களைச் சான்றளிக்கும் முன் உண்மைகளை முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று வருமான வரி கமிஷனர் வி.ரஜிதா வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பான விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி:  கள்ளக்காதலனை பிரிந்து குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்த பெண் தீவைத்து எரித்துக்கொலை
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-woman-burned-alive-after-leaving-illicit-lover</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-woman-burned-alive-after-leaving-illicit-lover#comments</comments><guid isPermaLink="false">5db13678-91e6-4e8b-b184-fdb7e5d21da2</guid><pubDate>Wed, 19 Aug 2026 02:12:30 +0000</pubDate><atom:updated>2026-08-19T02:12:30.289Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,Thoothukudi,தூத்துக்குடி,பெண்,Woman</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/ftzgfsx9/tdonw.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/ftzgfsx9/tdonw.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>தூத்துக்குடி</p><p>தூத்துக்குடியில் கள்ளக்காதலனை பிரிந்து குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்த பெண் தீவைத்து எரித்துக்கொல்லப்பட்டார்.</p><p>தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள சால்நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். தொழிலாளியான இவரது மனைவி குருவலட்சுமி (வயது 42). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.  அதே பகுதியை சேர்ந்த சின்ன கெங்குராஜ் (வயது 47), குருவலட்சுமியும் பழகி வந்தனர். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதை அறிந்த சின்ன கெங்குராஜின் மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.</p> <h2>தீ வைப்பு</h2><p>அதுபோல் குருவலட்சுமியும், தனது கணவரை பிரிந்து சென்றார்.  பின்னர் குருவலட்சுமி, சின்ன கெங்குராஜ் வெளியூரில் வாடகை வீட்டில் வசித்தனர். 2 ஆண்டுகளாக ஒன்றாக குடும்பம் நடத்தி வந்த நிலையில், உறவினர்கள் சிலர் குருவலட்சுமியை கண்டித்தனர்.  இதனை தொடர்ந்து குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கள்ளக்காதலனை பிரிந்து மீண்டும் கணவருடன் குருவலட்சுமி சேர்ந்து குடும்பம் நடத்தினார்.</p><p>இதனால் ஆத்திரமடைந்த சின்ன கெங்குராஜ், தொடர்ந்து தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி குருவலட்சுமியிடம் தகராறு செய்து வந்தார். கடந்த 10-ந்தேதி கணவர், குழந்தைகள் வெளியே சென்றிருந்த நிலையில் குருவலட்சுமியின் வீட்டுக்கு சின்ன கெங்குராஜ் சென்றார். தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு மீண்டும் அவர் கூறினார். அதற்கு மறுத்த குருவலட்சுமியை அவர் அடித்து உதைத்தார். மேலும் ஆத்திரம் தீராத அவர் வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை குருவலட்சுமி மீது ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி சென்றுவிட்டார்.</p> <h2>போலீசார் விசாரணை</h2><p>இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து பசுவந்தனை போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து சின்ன கெங்குராஜை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பேரூரணி சிறையில் அடைத்தனர்.</p><p>இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி குருவலட்சுமி பலியானார். இதனையடுத்து போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர்.  தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>தொழிலதிபரிடம் ரூ.2.17 கோடி மோசடி - தொண்டு நிறுவன நிர்வாகிகள் 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/businessman-defrauded-of-217-crore-two-ngo-office-bearers-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/businessman-defrauded-of-217-crore-two-ngo-office-bearers-arrested#comments</comments><guid isPermaLink="false">cc1a705b-b3a2-4308-903a-2ac4d3c0d07a</guid><pubDate>Wed, 19 Aug 2026 01:59:52 +0000</pubDate><atom:updated>2026-08-19T01:59:52.622Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,வேலூர்,arrest,மோசடி,தொழிலதிபர்,businessman,தொண்டு நிறுவனம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/reuxrt2n/275.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/reuxrt2n/275.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வேலூர், </p><p>வேலூரில் தொண்டு நிறுவனத்துக்கு வரும் ரூ.100 கோடியில் இருந்து பங்கு தருவதாக கூறி தொழிலதிபரிடம் ரூ.2 கோடியே 17 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>தொண்டு நிறுவனம்</h2><p>வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் ஆலிவர் சினியோன் கதிரேஷ் (வயது 60). தொழில்அதிபர். இவரின் நண்பரான வேலூர் புது பைபாஸ் ரோடு பகுதியை சேர்ந்த பெருமாள் (53) என்பவர் கிரீன் சர்க்கிள் பகுதியில் தொண்டு நிறுவனம் நடத்தி வந்தார்.</p><p>இந்த நிறுவனத்துக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் ரூ.100 கோடி நிதி திரட்ட உள்ளதாகவும், இந்த நிதியை திரட்டுவதற்கு முன்பணமாக சில கோடி தேவைப்படுவதாகவும், முன்பணம் கொடுத்தால் அதற்கு ரூ.100 கோடியில் இருந்து பங்கு தருவதாக பெருமாள் மற்றும் வள்ளலாரை சேர்ந்த ஷாஜகான் (48), திருச்சி தெப்பக்குளத்தை சேர்ந்த மனோஜ்குமார் (50) ஆகியோர் கடந்த 2024-ம் ஆண்டு ஆலிவர் சினியோன் கதிரேஷிடம் தெரிவித்தனர். இதனை உண்மை என்று நம்பிய அவர் ரூ.2 கோடியே 17 லட்சத்தை ரொக்கமாகவும், வங்கிகள் மூலமாகவும் அவர்களிடம் கொடுத்தார். </p><p>அதன் பின்னர் சில மாதங்கள் ஆகியும் பெருமாள், ஷாஜகான். மனோஜ்குமார் ஆகியோர் தொண்டு நிறுவனத்துக்கு நிதி பெறவில்லை. மேலும் அதற்கான எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆலிவர் சினியோன் கதிரேஷ் இதுபற்றி 3 பேரிடமும் கேட்டபோது விரைவில் தொண்டு நிறுவனத்துக்கு நிதி வந்துவிடும். அதன் பின்னர் பங்கு தருகிறோம் என்று கூறி காலம் கடத்தி வந்துள்ளனர்.</p><h2>புகார்</h2><p>இதுகுறித்து ஆலிவர் சினியோன் கதிரேஷ் கடந்த 14-ந் தேதி வேலூர் போலீஸ் சூப்பிரண்டு சிவராமனிடம் புகார் அளித்தார். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கும்படி அவர், வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு இருதயராஜ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வசந்தி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார்.</p><h2>கைது</h2><p>அதில், பெருமாள், ஷாஜகான், மனோஜ்குமார் ஆகியோர் ஆலிவர் சினியோன் கதிரேஷிடம் இருந்து பெற்ற ரூ.2 கோடியே 17 லட்சத்தை 3 பாகமாக பிரித்து எடுத்துக் கொண்டதும், தொண்டு நிறுவனத்துக்கு வரும் நிதியில் பங்கு தருவதாக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF">மோசடி</a> செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து பெருமாள், ஷாஜகான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மனோஜ்குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தஞ்சையில் நாளை மறுநாள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/private-sector-job-fair-in-thanjavur-the-day-after-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/private-sector-job-fair-in-thanjavur-the-day-after-tomorrow#comments</comments><guid isPermaLink="false">41f3a04a-8e11-4365-ad0f-b66f9fadbb6d</guid><pubDate>Wed, 19 Aug 2026 01:55:58 +0000</pubDate><atom:updated>2026-08-19T01:55:58.541Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thanjavur,தஞ்சை,வேலைவாய்ப்பு முகாம்,job fair</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/kac8q8ru/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/kac8q8ru/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>கல்வி&amp;வேலைவாய்ப்பு (Eduction and Jobs)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர், </p><p>தஞ்சை மாவட்ட கலெக்டர் ரேவதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><h2>வேலைவாய்ப்பு முகாம்</h2><p>தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி அளவில் நடக்கிறது. முகாமில் தஞ்சையில் உள்ள முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.</p><p>முகாமில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தஞ்சை </a>மாவட்டதை சேர்ந்த வேலை தேடும் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ. மற்றும் பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம். முகாமில் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்பவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும். சுய விவர குறிப்பு. கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம்.</p><p>இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வருமா..? பேரவையில் நிதி அமைச்சர் மரிய வில்சன் பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-assured-pension-scheme-be-implemented-finance-minister-maria-wilson-responds-in-the-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-assured-pension-scheme-be-implemented-finance-minister-maria-wilson-responds-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">f7cc9d92-98cd-49fd-830e-e5c337b87ef2</guid><pubDate>Wed, 19 Aug 2026 01:55:09 +0000</pubDate><atom:updated>2026-08-19T01:55:09.145Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,தமிழக சட்டசபை,TN Assembly,Assembly Session,pension,Old Pension Scheme,ஓய்வூதிய திட்டம்,TN Assembly session,தமிழக சட்டசபை செய்திகள்,அமைச்சர் மரிய வில்சன்,Minister Marie Wilson,MarieWilson,சட்டசபை கூட்டத் தொடர்,tvk govt</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/6ui5enld/pes.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/6ui5enld/pes.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>'டாப்ஸ்' என்பது கண்டிப்பாக வரப்போகிற நாட்களில் தயார்படுத்தப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்று நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். </p><h2>தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ.வேலு</h2><p>தமிழக சட்டசபையில் நேற்று பொதுப்பணித்துறை உள்ளிட்ட சில துறைகளின் மானிய கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர் அப்போது பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ.வேலு, 'உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கு அரசு ஊழியர்கள் சங்கங்கள், முதல்-அமைச்சருக்கு பாராட்டு விழாவே நடத்தினார்கள்.</p><h2>உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்</h2><p>தேர்தல் வந்ததும், த.வெ.க.வின் தேர்தல் அறிக்கையில் 25-வது பக்கத்தில், பழைய ஓய்வூதியத்திட்டம் நடைமுறைப்படுத்துதல் என்ற தலைப்பில், தி.மு.க. அரசு கொண்டுவந்துள்ள தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை ஒழித்துவிட்டு, அரசு ஊழியர்களின் கோரிக்கைக்கேற்ப முழுமையான பழைய ஓய்வூதியத் திட்டம் கனிவுடன் பரிசீலிக்கப்படும் என்று சொல்லியிருந்தீர்கள்.</p><h2>மூன்று விஷயங்கள்</h2><p>இப்போது அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் தொடருமா? அல்லது பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொடுக்கப்போகிறதா? என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும் என்று கேட்டார்.</p><p>அவருக்கு நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் அளித்த பதில் வருமாறு:-</p><p>உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் (டாப்ஸ்) தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது. அந்த திட்டம் தொடர்பாக கடந்த தி.மு.க. ஆட்சியில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட் டது. அந்தக் குழு, அரசுக்கு சில பரிந்துரைகளை அளித்தது. அதில் மூன்று விஷயங்கள் முக்கியமானவை. </p><h2>விஜய் நிறைவேற்றுவார்</h2><p>அந்த மூன்று விஷயங்களையும் தமிழ்நாட்டில் கண்டிப்பாக <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> நிறைவேற்றுவார். குழு பரிந்துரை செய்த மூன்று விஷயங்கள் என்னவென்றால், கடைசியாக வாங்கிய சம்பளத்தில் 50 சதவீதம் என்ற அடிப்படையில், அது கண்டிப்பாக உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். </p><p>இரண்டாவதாக, பணிக்கொடை வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தார்கள். அதுவும் இருக்கும். மூன்றாவதாக, குடும்ப ஓய்வூதியம் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்கள். இதில் நாங்கள் தற்போது அதற்கான விதிகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்.</p><h2>நடைமுறைக்கு வரும்</h2><p>அதை செயல்படுத்துவதற்கான வழிகாட்டிகள் தயாரிக்கும் பணியும் நடைபெறுகிறது. அதன்படி 'டாப்ஸ்' திட்டம் விரைவாக, கூடிய சீக்கிரத்தில் நடைமுறைக்கு வரும். மீண்டும் ஒருமுறை சொல்கிறேன், 'டாப்ஸ்' என்பது கண்டிப்பாக வரப்போகிற நாட்களில் தயார்படுத்தப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>
திருவண்ணாமலை கோவிலுக்குள் செப்டம்பர் 1-ந் தேதி முதல் செல்போன்கள் கொண்டு செல்ல தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-carrying-mobile-phones-inside-the-tiruvannamalai-temple-starting-september-1st</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-carrying-mobile-phones-inside-the-tiruvannamalai-temple-starting-september-1st#comments</comments><guid isPermaLink="false">7c0af9cb-f5c5-41ec-8fbf-db1f011234fa</guid><pubDate>Wed, 19 Aug 2026 01:41:37 +0000</pubDate><atom:updated>2026-08-19T01:41:37.864Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,Thiruvannamalai,செல்போன்கள்,செல்போன்களுக்கு தடை,திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்,Thiruvannamalai Arunaseleswarar Temple</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/8ujqowvp/3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/8ujqowvp/3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை,</p><p>திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வருகிற செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் கோவிலுக்குள் உள்ளே செல்போன்கள் எடுத்துச் செல்வது தடை விதிக்கப்பட்டுள்ளது. </p>  <h2>இணை ஆணையர் தகவல்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/tiruvannamalai-temple">திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்</a> இணை ஆணையர் பரணிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் வருகிற செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் கோவிலுக்குள் உள்ளே செல்போன்கள் எடுத்துச் செல்வது தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் செல்போன் எடுத்து வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். </p>  <h2>5 இடங்களில் செல்போன் பாதுகாப்பு மையம்</h2><p>மேலும் பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பாக வைத்து செல்ல ஏதுவாக கோவிலின் கிழக்கு ராஜகோபுரம் அருகில் 2 இடங்களிலும், வடக்கு அம்மணி அம்மன் கோபுரம் அருகில் 2 இடங்களிலும், தெற்கு திருமஞ்சன கோபுரம் அருகில் ஒரு இடத்திலும் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள மையங்களில் பக்தர்கள் தங்களது செல்போன்களை ரூ.5 கட்டணமாக செலுத்தி ஒப்படைத்துவிட்டு டோக்கன் பெற்றுக் கொள்ளலாம்."</p>  <h2>போலீசாரின் மூலம் நடவடிக்கை</h2><p>மேலும், "இந்த உத்தரவினை மீறி கோவிலுக்குள் மறைமுகமாக எடுத்துச் செல்லும் செல்போன்களை உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு போலீசாரின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் இன்றைய நிகழ்வுகள் என்னென்ன...?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-are-the-proceedings-in-the-legislative-assembly-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-are-the-proceedings-in-the-legislative-assembly-today#comments</comments><guid isPermaLink="false">2832a192-45d2-431a-9571-afff793b421e</guid><pubDate>Wed, 19 Aug 2026 01:38:00 +0000</pubDate><atom:updated>2026-08-19T01:38:00.899Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,TN Assembly,Water Resources Department,நீர்வளத்துறை,tourist,சுற்றுலாத்துறை,மானிய கோரிக்கை,Grant request</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/4k64zj1w/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/4k64zj1w/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. கூட்டம் தொடங்கியதும், நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, சுற்றுலா-கலை மற்றும் பண்பாட்டுத்துறை ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.</p><p>இந்த விவா தத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேச இருக்கிறார்கள். அதன்பின்னர், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் என்.ஆனந்த், சுற்றுலா கலை மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் ஆகியோர் பேசுகின்றனர். நிறைவாக, தங்களுடைய துறை சார்பில் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.</p>]]></content:encoded></item><item><title>ஈரோடு அருகே நடுரோட்டில் ஹாயாக படுத்திருந்த சிறுத்தைப்புலி - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/leopard-lies-casually-in-the-middle-of-the-road-near-erode-motorists-shocked</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/leopard-lies-casually-in-the-middle-of-the-road-near-erode-motorists-shocked#comments</comments><guid isPermaLink="false">adc3fb56-8cdf-469d-bd6c-2b54b57ab823</guid><pubDate>Wed, 19 Aug 2026 01:33:17 +0000</pubDate><atom:updated>2026-08-19T01:33:17.136Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>road,வாகன ஓட்டிகள்,Erode,ஈரோடு,சிறுத்தை,A leopard</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/8h9htni0/274.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறுத்தை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/8h9htni0/274.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தாளவாடி, </p><p>ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான சிறுத்தைப்புலிகள் காணப்படுகின்றன. சத்தியமங்க லம் வனப்பகுதி வழியாக திண்டுக்கல்-மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இரவு நேரங்களில் சிறுத்தைப்புலிகள் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்து திம்பம் மலைப்பாதையில் சுற்றுகின்றன.</p><h2>சிறுத்தைப்புலி</h2><p>இதுபோல் வனவிலங்குகள் அடிக்கடி இரவு நேரங்களில் திம்பம் மலைப்பாதைக்கு வந்துவிடுவதால், அதன் பாதுகாப்பு கருதி திம்பம் மலைப்பாதையில் இரவு நேரங்களில் செல்ல கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் வாகனங்கள் மற்றும் காய்கறி ஏற்றி வரும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்தநிலையில் நேற்று அதிகாலை திம்பம் மலைப்பாதையில் நடுரோட்டில் சிறுத்தைப்புலி ஒன்று 'ஹாயாக’ படுத்திருந்தது. அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்து சற்று தூரத்திலேயே வாகனங்களை நிறுத்திக்கொண்டனர்.</p><h2>வனத்துறை</h2><p>சிலர் வாகனங்களில் இருந்தபடியே செல்போனில் வீடியோ எடுத்தனர். சுமார் 10 நிமிடம் படுத்திருந்த சிறுத்தைப்புலி பின்னர் காட்டுக்குள் ஓடிவிட்டது. இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. திம்பம் மலைப்பாதையில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF">சிறுத்தைப்புலி </a>நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சட்டென மாறும் வானிலை.. எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..? வானிலை அலர்ட்</title><link>https://www.dailythanthi.com/news/weather/rapidly-changing-weather-which-districts-are-likely-to-see-heavy-rain-today-weather-alert</link><comments>https://www.dailythanthi.com/news/weather/rapidly-changing-weather-which-districts-are-likely-to-see-heavy-rain-today-weather-alert#comments</comments><guid isPermaLink="false">f43aaea1-21c2-48fe-b6a8-2a4962189e91</guid><pubDate>Wed, 19 Aug 2026 01:23:13 +0000</pubDate><atom:updated>2026-08-19T01:23:13.559Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,சென்னை,Rain,Weather,கனமழை,வானிலை,தமிழகம்,Weather News,WeatherUpdate,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,வானிலை ஆய்வு மையம்,கன மழை,heavy rain,வானிலை அறிக்கை,TN Rains,வானிலை தகவல்,Weather Report,வானிலை முன்னறிவிப்பு,வானிலை அறிவிப்பு,weather center</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/2nddpmwd/tools.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/2nddpmwd/tools.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, பெரம்பலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><h2>கனமழை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><p>இதன் காரணமாக <strong>இன்று (19-08-2026):</strong> செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">கனமழை</a></strong> பெய்யக்கூடும்.</p><p>திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong><a href="https://www.dailythanthi.com/topic/rain"> </a>பெய்யக்கூடும்.</p><h2>மழை</h2><p><strong>நாளை (20-08-2026):</strong> தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்யக்கூடும்.</p><p><strong>21-08-2026 மற்றும் 22-08-2026:</strong> தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்யக்கூடும்.</p><p><strong>23-08-2026 மற்றும் 24-08-2026:</strong> வட கடலோர தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் புதுவை ஏனைய மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong><a href="https://www.dailythanthi.com/topic/rain"> </a>பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong><ins>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</ins></strong></p><p><strong>19-08-2026 முதல் 22-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><p><strong><ins>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</ins></strong></p><p><strong>19-08-2026 முதல் 22-08-2026 வரை:</strong> உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று (19-08-2026):</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>மீனவர்களுக்கான எச்சரிக்கை:</h2><p><strong><ins>தமிழக கடலோரப்பகுதிகள்:</ins></strong></p><p><strong>19-08-2026 முதல் 22-08-2026 வரை:</strong> தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong><ins>வங்கக்கடல் பகுதிகள்:</ins></strong></p><p><strong>19-08-2026 முதல் 22-08-2026 வரை:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong><ins>அரபிக்கடல் பகுதிகள் :</ins></strong></p><p><strong>19-08-2026 முதல் 22-08-2026 வரை:</strong> மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>திருச்செந்தூர் அருகே கல்லால் தாக்கி கூலி தொழிலாளி கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wage-laborer-murdered-by-being-struck-with-a-stone-near-tiruchendur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wage-laborer-murdered-by-being-struck-with-a-stone-near-tiruchendur#comments</comments><guid isPermaLink="false">0a31b2e4-4699-4127-8d1f-a59a6b8b2246</guid><pubDate>Wed, 19 Aug 2026 01:15:06 +0000</pubDate><atom:updated>2026-08-19T01:15:06.085Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்செந்தூர்,murder,கொலை,தொழிலாளி,Tiruchendur,Wage Laborer</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/4ohnw2s2/42.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/4ohnw2s2/42.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்செந்தூர்,</p><p>திருச்செந்தூர் அருகே உள்ள கீழப்பள்ளிபத்து கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் சரவணன் (வயது 40). கூலி தொழிலாளி. இவரும், காயாமொழி தெற்கு தெருவை சேர்ந்த கனகசபாபதி மகன் இசக்கிமுத்து (23) என்பவரும் நண்பர்கள் ஆவார்கள்.</p><h2>தகராறு</h2><p>இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் வன்னிமாநகரம் அருகே துலுக்கன்குளத்து கரை யில் அமர்ந்து மது குடித்தனர். அப்போது அவர்களுக்கு இடையே திடீரென வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. ஒருவரையொருவர் கையால் தாக்கிக்கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த இசக்கிமுத்து அருகில் கிடந்த கல்லால் சரவணனின் தலையில் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. </p><p>சரவணன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட இசக்கி முத்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.</p><h2>வழக்குப்பதிவு</h2><p>இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். சரவணன் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.</p><p>மேலும் இதுகுறித்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார் </a>வழக்குப்பதிவு செய்து தலைமறைவான இசக்கிமுத்துவை வலைவீசி தேடி வருகிறார்கள். திருச்செந்தூர் அருகே கல்லால் தாக்கி தொழிலாளி கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>1 லட்சம் டன் பெட்ரோலை ரஷியாவுக்கு ஏற்றுமதி செய்த இந்தியா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/india-exported-100000-tonnes-of-petrol-to-russia</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/india-exported-100000-tonnes-of-petrol-to-russia#comments</comments><guid isPermaLink="false">4c190e31-c43f-4dba-b4a4-d7e5d1b21cf3</guid><pubDate>Wed, 19 Aug 2026 01:13:42 +0000</pubDate><atom:updated>2026-08-19T01:13:42.655Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,India,petrol,பெட்ரோல்,Russia,ரஷியா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/plfnlo1p/CHENNAI-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/plfnlo1p/CHENNAI-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><p>9 லட்சம் பீப்பாய்களில் 1 லட்சம் டன் பெட்ரோலை ரஷியா வுக்கு இந்தியா ஏற்றுமதி செய்தது. உலக பொருளாதார தடைக்கு மத்தியில் இது ரஷிய எல்லையை சென்றடைந்தது.</p><h2>4 ஆண்டுகால போர்</h2><p>உக்ரைன், ரஷியா இடையே 4 ஆண்டுகளுக்கு மேலாக போர் தாக்குதல் நீடித்து வருகிறது. உக்ரைன் நடத்திய தொடர் டிரோன் தாக்குதல்கள் காரணமாக, ரஷியாவின் உள்நாட்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அந்த நாட்டின் அரசு சுத்திகரிப்பு நிலையங்கள் தாக்கப்பட்டதால், நாட்டில் எரிபொருள் பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது. இது மீண்டும் பழைய நிலைக்கு வர 6 மாதங்கள் வரை ஆகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>பெட்ரோல் தட்டுப்பாடு</h2><p>இதனால் வரலாற்றில் முதல்முறையாக ரஷியா, இந்தியாவிலிருந்து கடல் வழியாக பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது. பொதுவாக ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெயை வாங்கும் நிலையில், தற்போது ரஷியா தனது நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய இந்தியாவிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வாங்கும் ஒரு அரிய தலை கீழ் மாற்றம் நிகழ்ந்துள்ளது.</p><p>உலகளவில் ரஷியாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளான இங்கிலாந்து. பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இத்தகைய சூழலுக்கு மத்தியில் இந்தியா ரஷியாவுக்கு ரகசியமாக பெட்ரோலை ஏற்றுமதி செய்தது.</p><h2>9 லட்சம் பீப்பாய்கள்</h2><p>இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் நயாரா எனர்ஜி நிறுவனத்தின் வாடினார் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து எகிப்து வழியாக ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு எரிபொருளை மாற்றி, ரகசியக் கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டது. கப்பல் போக்குவரத்துத் தரவுகளின்படி, முதற்கட்டமாக 42 ஆயிரம் டன் பெட்ரோல் அடங்கிய முதல் கப்பல் ரஷியாவைச் சென்றடைந்தது.</p><p>அதைத் தொடர்ந்து மற்றொரு கப்பல் மூலம் 68 ஆயிரம் டன் பெட்ரோல் ரஷியாவின் ஆர்க் டிக் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மொத்தம் 9 லட்சம் பீப்பாய்கள் மூலமாக மொத்தம் 1 லட்சத்து 10 ஆயிரம் டன் பெட்ரோல் இந்தியாவில் இருந்து ரஷியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. ஏற்கனவே ரஷியாவுடன் 80 ஆண்டுகால வெளியுறவு கொண்டாட்டத்தில் திளைக்கும் இந்தியாவின் நட்புறவுக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் அமித் ஷாவை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆர்ப்பாட்டம்..! - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/congress-to-stage-protest-in-chennai-today-condemning-amit-shah-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/congress-to-stage-protest-in-chennai-today-condemning-amit-shah-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">8a00f51a-8ced-4771-8464-3e79fa6e541c</guid><pubDate>Wed, 19 Aug 2026 01:03:09 +0000</pubDate><atom:updated>2026-08-19T01:03:09.006Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,protest,ஆர்ப்பாட்டம்,காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore MP,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/fmyvb795/manickam-tagore.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/fmyvb795/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டின் குரலை நசுக்கும் தொகுதி மறுவரையறையை கைவிடுங்கள் என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>உரிய பதில் அளிக்கவில்லை</h2><p>மாணவர்களுக்கு நீதி! தமிழ்நாட்டின் உரிமைக்கு குரல்!</p><p>இந்திய மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் வகையில் தொடரும் வினாத்தாள் கசிவுகள் குறித்து பதில் சொல்ல வேண்டிய மத்திய அரசு, தங்களது உரிமைக்காக டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறை வன்முறைக்கும் பொறுப்பேற்க வேண்டும்.</p><p>உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்திற்கு நேரடியாக பதிலளிக்க வேண்டிய நிலையில், பல நாட்கள் அவையைத் தவிர்த்து, இறுதி நாளிலும் மாணவர்களின் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கவில்லை. </p><p>கேள்விகளில் இருந்து ஓடலாம்; ஆனால் பொறுப்பிலிருந்து ஓட முடியாது.</p><h2>வாருங்கள்! ஒன்றுபடுவோம்!</h2><p>இன்று சென்னை வரும் உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் நாங்கள் தெளிவாகச் சொல்வோம்:</p><p>வினாத்தாள் கசிவுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்!</p><p>மாணவர்கள் மீதான வன்முறைக்கு பதில் சொல்லுங்கள்!</p><p>தமிழ்நாட்டின் குரலை நசுக்கும் தொகுதி மறுவரையறையை கைவிடுங்கள்!</p><p>நாடாளுமன்றத்தில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழ்நாட்டின் </a>பிரதிநிதித்துவத்தை குறைக்கும் எந்த முயற்சியையும் தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது.</p><p>தமிழ்நாட்டின் உரிமைக்காக</p><p>மாணவர்களின் எதிர்காலத்திற்காக</p><p>நாங்கள் தொடர்ந்து போராடுவோம்!</p><p> சென்னை, எழும்பூர் - ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில்</p><p> இன்று, 19.08.2026 | மாலை 5.00 மணி</p><p>வாருங்கள்! ஒன்றுபடுவோம்!</p><p>தமிழ்நாட்டின் உரிமைக்காக குரல் கொடுப்போம்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>
அமித்ஷா தலைமையில் தென்மாநில முதல்-மந்திரிகள் மாநாடு: முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்கிறார்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/conference-of-southern-state-chief-ministers-chaired-by-amit-shah-chief-minister-vijay-participates</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/conference-of-southern-state-chief-ministers-chaired-by-amit-shah-chief-minister-vijay-participates#comments</comments><guid isPermaLink="false">f38b0b96-7a19-4347-bc6f-154853bb150d</guid><pubDate>Tue, 18 Aug 2026 23:35:21 +0000</pubDate><atom:updated>2026-08-18T23:35:21.017Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>அமித்ஷா,முதல்-அமைச்சர் விஜய்,CMVijay‌</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/rlv72ca9/Untitled-1.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/rlv72ca9/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p> <p>மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தென்மாநில முதல்-மந்திரிகள் மாநாடு நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கடந்த 2022-ம் ஆண்டுக்கு பிறகு இந்த மாநாடு நடைபெறவில்லை. இந்தநிலையில், 31-வது தென்மாநில முதல்-மந்திரிகள் மாநாடு இன்று (புதன்கிழமை) சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொடங்குகிறது.</p>  <p>இந்த மாநாட்டுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை தாங்குகிறார். இதில் தமிழக முதல்-அமைச்சர் விஜய், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், கேரளம் முதல்-மந் திரி சதீசன், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.</p> <p>மேலும், அந்தந்த மாநில தலைமை செயலாளர்கள், உள்துறை செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்துகொள்கிறார்கள்.</p> <p>மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள், கூட்டுறவை பலப்படுத்துவது, கட்டமைப்பு மேம்பாடு, நீர்வள பகிர்வு, கல்வி, சுகாதாரம், தக வல் தொழில்நுட்பம், பேரிடர் மேலாண்மை, குற்றங்கள் தடுப்பு, எல்லை பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.</p> <p>தற்போது காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகம் மற்றும் தமிழகம் இடையே முரண்பாடுகள் எழுந்த நிலையில் இந்த கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.</p> <p>இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய மந்திரி அமித்ஷா இன்று மாலை 4.50 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை புறப்படுகிறார். இரவு 7.40 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்.</p><p>விமான நிலையத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் கட்சியினர் வரவேற்கிறார்கள். பின்னர் அவர், காரில் கோவளம் செல்கிறார்.</p> ]]></content:encoded></item><item><title>கர்நாடகாவில் 3 தமிழர்கள் என்கவுன்ட்டர் விவகாரம்:  பட்டும் படாமல் ஒரு அறிக்கை - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/encounter-involving-three-tamils-in-karnataka-udhayanidhi-stalin-issues-a-lukewarm-statement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/encounter-involving-three-tamils-in-karnataka-udhayanidhi-stalin-issues-a-lukewarm-statement#comments</comments><guid isPermaLink="false">431df1fe-ecb1-4426-9f04-aeade09e830f</guid><pubDate>Tue, 18 Aug 2026 16:42:31 +0000</pubDate><atom:updated>2026-08-18T16:42:31.182Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,விமர்சனம்,என்கவுன்ட்டர்,Encounter</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/9pn8xhrq/122.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/9pn8xhrq/122.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு தமிழக அரசு கண்டனம் தெரிவிக்காதது அதிர்ச்சி அளிக்கிறது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>கர்நாடகாவில் மூன்று தமிழர்களை அம்மாநில வனத்துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக எந்த கண்டனத்தையும் வெளியிடாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. சட்டப்பேரவையில் இந்த விவகாரம் தொடர்பாக பதிலளித்த அமைச்சரும், கர்நாடகத்தின் Version-ஐயே எதிரொலித்தார்.</p><h2>அறிக்கை</h2><p>தமிழ்நாடு அரசு சார்பிலோ, முதல்-அமைச்சர் சார்பிலோ கர்நாடக முதல்-மந்திரி இடம் விளக்கம் கேட்டு எந்தவொரு கடிதமும் இதுவரை எழுதப்படவில்லை. த.வெ.க. தலைவர் என்கிற நிலையில் பட்டும் படாமல் ஒரு அறிக்கையை மட்டும் வெளியிட்டு இருக்கிறார்கள். </p><p>இந்த சூழலில் சென்னையில் நாளைய தினம் தென் மாநில முதல்-அமைச்சர்கள் கூட்டம் கூடுகிறது. அந்தக் கூட்டத்தின் போது, கர்நாடக முதல்-அமைச்சரை சந்தித்து, இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் உரிய விளக்கத்தைக் கேட்டுப் பெற வேண்டும். இந்த வழக்கு விசாரணையை கர்நாடக காவல்துறை விசாரிப்பதற்கு பதிலாக நம்பகமான நீதி விசாரணை நடத்திட தமிழ்நாடு அரசு கோர வேண்டும்.</p><p>இந்த சம்பவத்தில் நடைபெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணைய வழிகாட்டுதல்கள் மற்றும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் அடிப்படையில் இந்த உயிரிழப்புகளுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">தமிழ்நாடு அரசு</a> வலியுறுத்த வேண்டும்.</p><p>மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு கூடுதல் இழப்பீடு தரப்படுவதை உறுதி செய்ய கர்நாடக முதல்-மந்திரி இடம் தமிழ்நாட்டு முதல்-அமைச்சர் வலியுறுத்த வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை முதல்-அமைச்சரின் நிதிக்கு வழங்கிய முதியவர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/elderly-man-donates-rs-10000-alms-to-chief-ministers-relief-fund</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/elderly-man-donates-rs-10000-alms-to-chief-ministers-relief-fund#comments</comments><guid isPermaLink="false">5a316c37-8b19-486e-b774-3a5678919e7a</guid><pubDate>Tue, 18 Aug 2026 16:08:32 +0000</pubDate><atom:updated>2026-08-18T16:08:32.239Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Namakkal,நாமக்கல்,தூத்துக்குடி,முதியவர்,நிவாரண நிதி,Thoothukkudi,யாசகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/rtek8wdo/Untitled-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/rtek8wdo/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல்,</p><p>தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அடுத்த ஆலங்கிணறு கிராமத்தை சேர்ந்தவர் பூல்பாண்டியன் (75 வயது). இவர் யாசகம் எடுத்து அரசு பள்ளிகளுக்கும், முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கும் பணத்தை வழங்கி வருகிறார்.</p><p>இந்த நிலையில் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வருகை தந்த பூல்பாண்டியன், தான் யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை, நாமக்கல் கலெக்டர் மதுபாலனிடம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக வழங்கினார்.</p><p>தொடர்ந்து முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, ரூ.10 ஆயிரம் வழங்கிய முதியவர் பூல்பாண்டியனுக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், பணம் பெற்றதற்கான ஒப்புகை சான்றிதழை வழங்கினார்.</p>]]></content:encoded></item><item><title>இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதைப்பொருள் புழக்கம்: தூக்கத்தில் இருக்கிறதா விஜய் அரசு - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/drug-circulation-ruining-the-future-of-the-youth-is-the-vijay-government-asleep-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/drug-circulation-ruining-the-future-of-the-youth-is-the-vijay-government-asleep-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">595dbb1e-b625-4a61-a6b6-3ff03d58c0b4</guid><pubDate>Tue, 18 Aug 2026 15:49:33 +0000</pubDate><atom:updated>2026-08-18T15:49:33.390Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,இளைஞர்,sleep,போதைப்பொருள் புழக்கம்,tvk govt</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/8cwo848p/112.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/8cwo848p/112.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதைப்பொருள் புழக்கம் தூக்கத்தில் இருக்கிறதா விஜய் அரசு என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>போதை பொருட்களின் கூடாரமாக</h2><p>காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவின்போது, கஞ்சா போதைக் கும்பலால் இரு இளைஞர்கள் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது தமிழகத்தையே உலுக்கியுள்ளது. முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான இந்த ஆட்சியில், தமிழகம் போதைப் பொருட்களின் கூடாரமாக மாறிவிட்டது என்பதையே இந்தச் கொடூரச் சம்பவம் பறைசாற்றுகிறது.</p><p>சமீபத்தில் சென்னை திருவொற்றியூர் பள்ளி மாணவர் தனுஷ், கோவை இந்துஸ்தான் கல்லூரி மாணவர் அமுதன் போன்றவர்களின் அகால மரணங்களுக்கு இந்த கட்டுக்கடங்காத போதைப்பொருள் புழக்கமே முக்கிய காரணமாகும். வருங்காலத் தூண்களாக இருக்க வேண்டிய இளைஞர்களைப் போதைப் பாதைக்குத் தள்ளிவிட்டு, தவெக அரசு மெத்தனமாக செயல்படுவது தமிழகத்திற்குப் பெரும் சாபக்கேடு.</p><h2>போராட்டங்கள்</h2><p>எனவே, இனியாவது கும்பகர்ண தூக்கத்திலிருந்து விடுபட்டு, போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் சமூக விரோதிகள் மீது முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இரும்புக்கரம் கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை காக்க <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">பாரதிய ஜனதா கட்சி</a> சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என எச்சரிக்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 10 இடங்களில் இன்று வெயில் சதமடித்தது</title><link>https://www.dailythanthi.com/news/weather/today-heatwave-crosses-100f-in-10-places-in-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/weather/today-heatwave-crosses-100f-in-10-places-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">b883543a-4e5b-4bec-a4ca-65e12a25bce0</guid><pubDate>Tue, 18 Aug 2026 15:31:11 +0000</pubDate><atom:updated>2026-08-18T15:31:11.815Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Weather,வானிலை,Weather update,heat,வானிலை தகவல்,வெயில் சதம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/mgqgxr0g/Untitled-10.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ வெயில் சதம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/mgqgxr0g/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்தாலும், பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 10 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p>அதன்படி தமிழகத்தில் இன்று அதிகமாக வெப்பநிலை பதிவான இடங்கள் வருமாறு:-</p><p>திருச்சி - 104.18° பாரன்ஹீட் (40.1° செல்சியஸ்)</p><p>வேலூர் - 103.64° பாரன்ஹீட் (39.8° செல்சியஸ்)</p><p>நாமக்கல் - 102.56° பாரன்ஹீட் (39.2° செல்சியஸ்)</p><p>பாளையங்கோட்டை - 102.38° பாரன்ஹீட் (39.1° செல்சியஸ்)</p><p>ஈரோடு - 102.2° பாரன்ஹீட் (39.0° செல்சியஸ்)</p><p>கரூர் பரமத்தி - 101.3° பாரன்ஹீட் (38.5° செல்சியஸ்)</p><p>மதுரை விமான நிலையம் - 101.3° பாரன்ஹீட் (38.5° செல்சியஸ்)</p><p>நாகப்பட்டினம் - 100.4° பாரன்ஹீட் (38.0° செல்சியஸ்)</p><p>தஞ்சாவூர் - 100.4° பாரன்ஹீட் (38.0° செல்சியஸ்)</p><p>திருத்தணி - 100.4° பாரன்ஹீட் (38.0° செல்சியஸ்)</p>]]></content:encoded></item><item><title>ரீல்ஸ்க்காக பெட்ரோல் குண்டு தயாரித்து வக்கீல் வீட்டில் வீசிய வாலிபர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youths-make-petrol-bomb-for-reels-and-hurl-it-at-lawyers-house</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youths-make-petrol-bomb-for-reels-and-hurl-it-at-lawyers-house#comments</comments><guid isPermaLink="false">7b40b7f5-f588-4925-8079-5715be6ac450</guid><pubDate>Tue, 18 Aug 2026 15:15:24 +0000</pubDate><atom:updated>2026-08-18T15:15:24.884Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விழுப்புரம்,House,ரீல்ஸ்,வாலிபர்கள்,Reels,lawyer,பெட்ரோல் குண்டு,petrol bomb,போலீசார்,கைதுArrest</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/e0rzb40k/209.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல் குண்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/e0rzb40k/209.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விழுப்புரம், </p><p>விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவில் வசித்து வருபவர் காளிதாஸ்(வயது 48). இவர் விழுப்புரம் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார்.</p><h2>பெட்ரோல் குண்டு</h2><p>இந்த நிலையில் காளிதாஸ், விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை இந்திரா நகரில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த கட்டிடத்தின் அருகில் சம்பவத்தன்று இரவு 4 வாலிபர்கள் அமர்ந்து மது குடித்தனர். மதுபோதை தலைக்கேறிய நிலையில் இந்த அந்த வாலிபர்கள், தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலை ஒரு கேனில் பிடித்து அதனை காலி மது பாட்டிலில் நிரப்பி திரி போட்டு பற்ற வைத்து அந்த வீட்டின் முன்புற சுவற்றில் வீசி தப்பி சென்று விட்டனர்.</p><p>இதில் அந்த பெட்ரோல் குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் அந்த பகுதியே புகைமூட்டமாக காட்சியளித்தது. சத்தம் கேட்டதும் அருகில் இருந்த மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாரவையிட்டனர். </p><p>உடனடியாக இது குறித்து அவர்கள் விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.</p><h2>கைது</h2><p>போலீசாரின் விசாரணையில், வக்கில் வீட்டின முன்பு பெட்ரோல் குண்டை வீசியது அதே பகுதியை சேர்ந்த தயா(21) மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் என்பது தெரியவந்தது. இவர்கள் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்காக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">பெட்ரோல் குண்டை</a> தயாரித்ததும், பின்னர் அதனை வெடிக்க செய்ததும் தெரிய வந்தது. </p><p>இதையடுத்து போலீசார் தயா உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, தயாவை கைது செய்தனர். தொடர்ந்து தப்பியோடிய மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மெட்ரோவுடன் இணைகிறது சென்னை பறக்கும் ரெயில் திட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-flying-train-project-to-be-connected-with-metro</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-flying-train-project-to-be-connected-with-metro#comments</comments><guid isPermaLink="false">6719c624-e904-44b3-9a45-4c2dbc7315d2</guid><pubDate>Tue, 18 Aug 2026 14:47:11 +0000</pubDate><atom:updated>2026-08-18T14:47:11.572Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,Indian Railways,Metro,MetroRail,ChennaiMetroRail</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/f9dbczci/metro33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
மெட்ரோவுடன் இணைகிறது சென்னை பறக்கும் ரெயில் திட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/f9dbczci/metro33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை பறக்கும் ரெயில் சேவையை மெட்ரோ ரெயில் நிறுவனத்துடன் இணைக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.</p><p>சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துடன் சென்னை பறக்கும் ரெயில் சேவையை இணைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசால் முதல்முறையாக கடந்த 2011 ஆம் ஆண்டில் அனுப்பப்பட்ட முன்மொழிவுக்கு, 15 ஆண்டுகால காத்திருப்புக்கு பிறகு அனுமதி கிடைத்துள்ளது. இதன்மூலம்  எம்.ஆர்.டி.எஸ் ன் சொத்துக்கள், இயக்கம், பராமரிப்பு ஆகியவை சென்னை மெட்ரோவுக்கு கைமாறுகிறது.</p><p>இதையடுத்து மெட்ரோ ரெயில் கட்டமைப்புகளுக்கு ஏற்றவாறு எம்ஆர்டிஎஸ் ரெயில் சேவை மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்படும். </p><p>எம்ஆர்டிஎஸ் ரெயில் நிலையத்தில் வணிக வளாகங்கள் அமைத்தல் சிக்னல் மேம்பாடு செய்தல், எம்ஆர்டிஎஸ் தண்டவாளங்களுக்கு ஏற்ப <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%20%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20">மெட்ரோ ரெயில் </a>பெட்டிகளைத் தயாரித்தல், ரெயில் நிலையத்தில் மின்தூக்கி அமைத்தல், நகரும் மின்படிக்கட்டு உள்ளிட்டவையுடன் 2028-ம் ஆண்டு இறுதிக்குள் எம்ஆர்டிஎஸ் வழித்தடத்தை மெட்ரோ ரெயில் சேவைக்கு நிகராக மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 15 ஆண்டு கால காத்திருப்புக்கு பிறகு மெட்ரோ ரயிலுடன் இணைகிறது சென்னை பறக்கும் ரயில் சேவை</p>]]></content:encoded></item><item><title>தஞ்சாவூர் சாலை மறியல்: இளைஞரை விசிகவினரும், காவல் துறையும் தாக்கியது கண்டிக்கதக்கது - ஈ.ஆர். ஈஸ்வரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thanjavur-road-blockade-the-assault-on-the-young-man-by-vck-members-and-the-police-is-condemnable-er-eswaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thanjavur-road-blockade-the-assault-on-the-young-man-by-vck-members-and-the-police-is-condemnable-er-eswaran#comments</comments><guid isPermaLink="false">f0e7c628-4a7f-48e3-9064-b46b68cd879d</guid><pubDate>Tue, 18 Aug 2026 14:31:51 +0000</pubDate><atom:updated>2026-08-18T14:31:51.982Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thanjavur,தஞ்சாவூர்,விசிக,சாலை மறியல்,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி,DMK road blockade,ஈ.ஆர்.ஈஸ்வரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/k92748i1/208.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஈ.ஆர். ஈஸ்வரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/k92748i1/208.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர்,</p><p>தஞ்சாவூர் சாலை மறியல் போது இளைஞரை விசிகவினரும், காவல் துறையும் தாக்கியது கண்டிக்கதக்கது என்று ஈ.ஆர். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தஞ்சாவூர் மாநகராட்சியில் தங்களுடைய விளம்பர பேனர்களை அரசு தரப்பில் எடுத்துவிட்டார்கள் என்பதற்காக கண்டனம் தெரிவித்து விசிகவினர் சாலை மறியலில் திடீரென்று ஈடுபட்டு இருக்கிறார்கள். அந்த சாலையில் அவசர வேலையாக சென்று கொண்டிருந்த ஆகாஷ் என்ற இளைஞனை மறியலில் ஈடுபட்டிருந்த விசிகவினர் தாக்க ஆரம்பிக்கிறார்கள்.  </p><h2>காவல்துறை அதிகாரி</h2><p>அங்கு வந்த காவல்துறை விசிகவினரை பார்த்து நீங்கள் விடுங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று ஆளுங்கட்சியாக இருக்கின்ற விசிகவினருக்கு ஆதரவாக நின்று அந்த அப்பாவி இளைஞனை அடிக்கிறார்கள். இது எப்படி இருக்கிறது என்று சொன்னால் காவல்துறை விசிகவினரை பார்த்து “நீங்கள் அடித்தால் அது குற்றம் நாங்கள் அடித்தால் அது சட்டம்" என்று சொல்லியது போல இருந்தது. தன்மானம் உள்ள ஆகாஷ் தொடர்ந்து போராடி பார்க்கிறார் ஆனால் ஒரு காவல்துறை அதிகாரி ஓங்கி கன்னத்தில் அடிக்கிறார்.</p><p> ஒரு இளைஞனாக கோபம் வந்ததால் திருப்பி அறைந்திருக்கிறார். தற்போது திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டு போக்குவரத்துக்கு தடையை ஏற்படுத்தி ஆகாஷை போகாமல் தடுத்தவர்கள் மீது வழக்கு கிடையாது. </p><h2>கண்டனம்</h2><p>பேசிக் கொண்டிருந்த போது கன்னத்தில் அறைந்த காவல்துறை அதிகாரி மீது வழக்கு கிடையாது ஆனால் விசிகவினரால் தடுத்து தாக்கப்பட்டு தொடர்ந்து காவல்துறை அதிகாரியால் தாக்கப்பட்டு அதனால் பாதிப்புக்குள்ளான ஆகாஷ் மீது ஆறு பிரிவுகளில் வழக்கு போடப்பட்டு இருப்பது கண்டனத்திற்குரியது. </p><p>முழுமையான வீடியோ ஆதாரம் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு விட்டது. அனைத்து தரப்பின் மீது வழக்கு போட்டு விசாரிப்பது தான் ஜனநாயகமாக இருக்கும். காவல்துறை உயர் அதிகாரிகள் சார்பு இல்லாத ஒரு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">விசாரணையை</a> நடத்தி தவறு இழைத்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>17 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-till-10-pm-in-17-districts</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-till-10-pm-in-17-districts#comments</comments><guid isPermaLink="false">5d0a8ca2-05f8-4f22-aa1b-6d37156b9ac5</guid><pubDate>Tue, 18 Aug 2026 14:21:28 +0000</pubDate><atom:updated>2026-08-18T14:21:28.502Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/a1452xdp/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/a1452xdp/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், சென்னை, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, நாமக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, பெரம்பலூர், கோயம்புத்தூர், மதுரை, திருவள்ளூர், சிவகங்கை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>போக்குவரத்து கழகத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களையே அரசு நியமிக்க வேண்டும் - இந்திய கம்யூ. கட்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-must-appoint-only-tamils-in-transport-corporation-indian-communist-party</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-must-appoint-only-tamils-in-transport-corporation-indian-communist-party#comments</comments><guid isPermaLink="false">e3e8da11-08e0-4b32-83b9-4611539397bc</guid><pubDate>Tue, 18 Aug 2026 14:08:40 +0000</pubDate><atom:updated>2026-08-18T14:08:40.476Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,Transport,CPI,போக்குவரத்து கழகம்,மு.வீரபாண்டியன்,M Veerapandian</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/sn7mt7xc/Untitled-8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.வீரபாண்டியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/sn7mt7xc/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>போக்குவரத்து கழகத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களையே நடத்துனர்களாகவும், ஓட்டுநர்களாகவும், நிரந்தர அடிப்படையில் தமிழ்நாடு அரசு நியமிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 1,800 நடத்துநர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதற்கு, உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அத்தனியார் நிறுவனம், வடமாநிலத்தவர்களை நடத்துநர்களாக சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் நியமித்துள்ளது. இது கண்டனத்திற்குரியது.</p><p>தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் ஏராளமானோர் வேலையில்லா திண்டாட்டத்தில் வாடும் பொழுது, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில், வேறு மாநிலத்தவர்களுக்கு வேலை வழங்குவது தமிழக மக்களுக்கு எதிரானதாகும். இத்தகைய முயற்சியை சென்னை மாநகர போக்குவரத்து கழகமும், தமிழ்நாடு அரசும் கைவிட வேண்டும்.</p><p>சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கும், தமிழ்நாடு போக்குவரத்து கழகத்திற்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களையே, நடத்துனர்களாகவும், ஓட்டுநர்களாகவும், நிரந்தர அடிப்படையில் தமிழ்நாடு அரசு நியமிக்க வேண்டும்.</p><p>ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றக்கூடிய நடத்துனர்கள், ஓட்டுநர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டுமென, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title> மதுரையில் தவெக அரசின் 100-வது நாள் கொண்டாட்டம்: இனிப்பு மழையில் நனைந்த பொதுமக்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvks-100th-day-celebration-in-madurai-public-showered-with-sweets</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvks-100th-day-celebration-in-madurai-public-showered-with-sweets#comments</comments><guid isPermaLink="false">7d97cb20-1f50-48ea-84d4-2a9aaae48975</guid><pubDate>Tue, 18 Aug 2026 14:07:13 +0000</pubDate><atom:updated>2026-08-18T14:07:13.874Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,பொதுமக்கள்,Madurai,மதுரை,கொண்டாட்டம்,இனிப்புகள்,celebration,general public,Celebration with sweets,தவெக ஆட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/k2cbgcb3/sweet.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ தவெக 100-வது நாள்]]></media:title><media:description type="html"><![CDATA[ மதுரையில் தவெக அரசின் 100-வது நாள் கொண்டாட்டம்:]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/k2cbgcb3/sweet.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">தமிழக வெற்றிக் கழகம்</a> ஆட்சி தொடங்கப்பட்டு 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் தவெக கட்சியினர் மற்றும் நிர்வாகிகள் திரண்டு வந்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இனிப்பு மழையில் நனைந்தனர் பொதுமக்கள்.</p> <h2>இனிப்பு வழங்கி உற்சாகம்</h2><p>மதுரையின் முக்கிய சந்திப்புகள் மற்றும் பொது இடங்களில் தவெக நிர்வாகிகள் இன்று ஒன்று கூடினர். விண்ணதிரும் வகையில் பட்டாசுகளை வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பொதுமக்களுக்கும், பேருந்து பயணிகள் மற்றும் பாதசாரிகளுக்கும் தவெகவினர் லட்டுகள் மற்றும் இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். </p> <p>மக்கள் பாராட்டு</p><p>கட்சியின் கொள்கைகள் மற்றும் மக்கள் நல பணிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களிடம் விநியோகித்தனர். ஊழலற்ற நிர்வாகம், இலவச மின்சாரம் மற்றும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களால் இந்த 100 நாள் ஆட்சி தங்களுக்கு பெரும் பயன் தந்துள்ளதாக பொதுமக்கள் பலரும் தவெகவினரிடம் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்த விழா மதுரையில் பரபரப்பையும், தவெக தொண்டர்களிடையே மிகுந்த எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>படகுப் போக்குவரத்து - சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/boat-transport-minister-adhav-arjunas-announcement-in-the-legislative-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/boat-transport-minister-adhav-arjunas-announcement-in-the-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">60019432-a29d-4dc7-8178-2f1c267637df</guid><pubDate>Tue, 18 Aug 2026 14:04:44 +0000</pubDate><atom:updated>2026-08-18T14:04:44.271Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,படகுப் போக்குவரத்து,பாராலிம்பிக் போட்டி,AdhavArjuna,BoatService</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/qc8gkztr/vijayone33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
படகுப் போக்குவரத்து]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/qc8gkztr/vijayone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது. அப்போது விளையாட்டுக்கான முக்கிய அறிவிப்புகளையும் பல்வேறு முக்கிய கோரிக்கைகளையும் விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது:-</p><h2>படகுப் போக்குவரத்து</h2><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">இராமேஸ்வரம் </a>அக்னிதீர்த்தத்தில் இருந்து பாம்பன் கால்வாய் வழியாக மண்டபம் வரை உள்நாட்டு பயணிகள் படகுப் போக்குவரத்து சேவை தொடங்கப்படும்.</p><h2>தடையற்ற போக்குவரத்து</h2><p>வடசென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தி தடையற்ற போக்குவரத்தை உறுதிசெய்யும் வகையில், வியாசர்பாடி இரயில்வே மேம்பாலத்தின் மாதவரம் நோக்கிய கரம் நீட்டிக்கப்பட உள்ள நிலையில், முதற்கட்டமாக ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.</p><p>அதே போல சென்னையில் வியாசர்பாடி, கொருக்குப்பேட்டை மற்றும் வடசென்னை பகுதிகளை நகரின் மத்தியப் பகுதிகளுடன் இணைக்கும் பேசின் பிரிட்ஜ் சந்திப்பில் அமைந்துள்ள குறுகலான பாலங்கள் அகலப்படுத்தப்படும்.</p><p>பொதுப்பணித்துறை திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் தரக் கட்டுப்பாட்டைப் பொதுமக்கள் நேரடியாகப் பார்வையிடும் வகையிலும், 100% வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையிலும் புதிய "TN.PWD" செயலி உருவாக்கப்படும்.</p><h2>பல்நோக்கு உள்விளையாட்டரங்கம்</h2><p>"இறகுப்பந்து, கூடைப்பந்து, வாள்வீச்சு, ஜூடோ, கையுந்துபந்து, கபாடி, மேசைப்பந்து உள்ளிட்ட பல்வேறு உள்விளையாட்டுகளில் வீரர், வீராங்கனைகள் அனைத்துப் பருவ காலங்களிலும் தடையின்றிப் பயிற்சி பெறும் வகையில் கரூர், கடலூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் தலா ரூ.14 கோடியில் புதிய பல்நோக்கு உள்விளையாட்டரங்கங்கள் அமைக்கப்படும்.</p><h2>ஏஐ கட்டட மேலாண்மை அமைப்பு</h2><p>அரசு மருத்துவமனைகளின் பராமரிப்புப் பணிகளை நவீனப்படுத்தும் நோக்கில் IIT தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் முதற்கட்டமாகச் சென்னை இராசீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் AI தொழில்நுட்பம் சார்ந்த கட்டட மேலாண்மை அமைப்பு (BMS) அறிமுகப்படுத்தப்பட்டு, படிப்படியாகத் தமிழ்நாட்டின் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் இந்த நவீன முறை விரிவுபடுத்தப்படும்.</p><h2>ஊக்கத் தொகை உயர்வு</h2><p>ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கான உயரிய ஊக்கத் தொகை உயர்வு அதிகரிக்கப்படும்.</p><p>அதன்படி, தங்கப் பதக்கம் வெல்வோருக்கான ஊக்கத்தொகை ரூ.3 கோடியிலிருந்து ரூ.5 கோடியாகவும், வெள்ளிப் பதக்கத்திற்கு ரூ.2 கோடியிலிருந்து ரூ.3 கோடியாகவும், வெண்கலப் பதக்கத்திற்கு ரூ.1 கோடியிலிருந்து ரூ.2 கோடியாகவும் உயர்த்தி வழங்கப்படும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: விடுபட்ட பணிகளை துரிதப்படுத்த சென்னை மாநகராட்சி உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-preparedness-chennai-corporation-orders-acceleration-of-pending-works</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-preparedness-chennai-corporation-orders-acceleration-of-pending-works#comments</comments><guid isPermaLink="false">5c157fe1-20d6-4de6-ac19-ad39c198b6e8</guid><pubDate>Tue, 18 Aug 2026 14:00:23 +0000</pubDate><atom:updated>2026-08-18T14:00:23.734Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,வடகிழக்கு பருவமழை,Northeast Monsoon,முன்னெச்சரிக்கை,monsoon,மாநகராட்சி உத்தரவு,Northeast</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/kiinjpp9/207.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாநகராட்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/kiinjpp9/207.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கைகாக விடுபட்ட பணிகளை துரிதப்படுத்த சென்னை மாநாகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>முன்னெச்சரிக்கை பணிகள்</h2><p>பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, மழைநீர் வடிகால் கட்டும் பணிகள், கால்வாய்கள், மழைநீர்வடிகால் மற்றும் வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் தூர்வாரும் பணிகள், நீர்நிலைகளைத் தூர்வாருதல், அபாயகரமான மரக்கிளைகளை வெட்டி அகற்றுதல், மோட்டார் பம்புகள் உள்ளிட்ட அனைத்து இயந்திரங்களையும் தயார்நிலையில் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p>இந்நிலையில், வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகளுக்காக கூடுதலாக ரூ.58.15 கோடி மதிப்பீட்டிலான பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் உள்ள ஒவ்வொரு வார்டுகளிலும் பருவமழைக்கான முன்னெச்சரிக்கை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதற்கு வார்டு வாரியாக தலா ரூ.5 லட்சம் வீதம் 200 வார்டுகளுக்கு மொத்தம் ரூ.10 கோடி வழங்கப்பட்டுள்ளது.</p><h2>நிர்வாக அனுமதி</h2><p>மேலும் ஒவ்வொரு மண்டலங்களிலும் உடனடி சாலை சீரமைப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்காக, 15 மண்டலங்களுக்கும் மொத்தம் ரூ. 22 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மின்சார மற்றும் இயந்திர உபகரணங்களை பழுதுபார்ப்பதற்காக ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள மழைநீரை உடனுக்குடன் அகற்றுவதற்காக 150 உயர் திறன் மோட்டார்கள் (100 HP மோட்டார்களுக்கு - ரூ.10 கோடி) மற்றும் 500 டிராக்டர் மூலம் இயக்கப்படும் மோட்டார்கள் மற்றும் பம்புகள் வாங்குவதற்காக (ரூ.16 கோடி) என மொத்தம் ரூ.26 கோடி மதிப்பீட்டில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p>பருவமழை தொடர்பான பணிகளுக்காக, ஒரு வார்டுக்கு 5 பணியாளர்கள் வீதம் கூடுதலாக 1,000 பணியாளர்கள் நியமிக்கப்படுவர். இவர்கள் மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளுதல், அபாயகரமான மரக்கிளைகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வர். மேற்கண்ட தகவலை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">மாநகராட்சி</a> ஆணையாளர் ஜி.எஸ். சமீரன் தெரிவித்துள்ளார்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஜென் ஸி  குறித்து பதிவிட்ட பெண்...இணையத்தில் வைரல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/womans-post-about-gen-z-goes-viral-online</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/womans-post-about-gen-z-goes-viral-online#comments</comments><guid isPermaLink="false">680bfc30-0a32-4c4a-9f59-5395b22631a4</guid><pubDate>Tue, 18 Aug 2026 13:27:56 +0000</pubDate><atom:updated>2026-08-18T13:27:56.872Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,High Court,உயர்நீதிமன்றம்,மாதவிடாய் விடுமுறை,period pain</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/wisia81x/14.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ ஜென் ஸி - பெண்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஜென் ஸி- பெண்கள் மாதவிடாய் விடுப்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/wisia81x/14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பணியிடங்களில் மாதவிடாய் விடுப்பு எடுப்பது குறித்த விவாதங்கள் தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், தங்களது உடல்நலப் பிரச்சினைகளைத் தயக்கமின்றி வெளிப்படையாகப் பேசும் 'Gen Z' (90-களின் இறுதி மற்றும் 2000-களில் பிறந்தவர்கள்) தலைமுறையினரின் நேர்மைக்குச் சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.</p><h2>மாறிவரும் அலுவலகக் கலாசாரம்</h2><p>முந்தைய தலைமுறையினர் உடல்நலக் குறைவு அல்லது மாதவிடாய் வலியை மறைத்து, வேறு காரணங்களைக் கூறி விடுப்பு எடுத்த நிலையை Gen Z ஊழியர்கள் மாற்றியுள்ளனர். "மாதவிடாய் வலி காரணமாக இன்று பணிக்கு வர இயலாது" என நேரடியாகவும் நேர்மையாகவும் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி அனுப்பும் இவர்களின் அணுகுமுறை, பணியிடங்களில் நிலவிவந்த தேவையற்ற தயக்கங்களை உடைத்துள்ளதாகப் பாராட்டப்படுகிறது.</p><h2>இந்தியாவில் சட்டப்பூர்வ நிலை</h2><p>தேசிய அளவில் இந்தியாவில் மாதவிடாய் விடுப்புக்கான தனிச் சட்டம் இன்னும் இயற்றப்படவில்லை. எனினும், பீகார், ஒடிசா, <a href="https://www.dailythanthi.com/news/india">கர்நாடகா</a> மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் சில கட்டுப்பாடுகளுடன் இந்த விடுப்பை நடைமுறைப்படுத்தியுள்ளன. அனைத்து மாநிலங்களிலும் இதைக் கட்டாயமாக்கக் கோரிய வழக்கில், "இது பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில் பின்னடைவை ஏற்படுத்தலாம்" என்ற கவலையையும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><h2>தமிழக அரசின் தீவிரம்</h2><p>தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் துறை பெண் ஊழியர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D">மாதவிடாய் விடுப்பு </a>வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் விதிகளை வகுக்க ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, பெண்களின் ஆரோக்கியம் மற்றும் வேலைவாய்ப்பு இரண்டையும் பாதிக்காத வகையில் முறையான கொள்கையை உருவாக்கத் தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி இடையே வாரந்திர சிறப்பு ரெயில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/weekly-special-train-between-thiruvananthapuram-and-velankanni</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/weekly-special-train-between-thiruvananthapuram-and-velankanni#comments</comments><guid isPermaLink="false">af0079d6-c2e2-4e56-99cc-515678d13a2c</guid><pubDate>Tue, 18 Aug 2026 13:24:35 +0000</pubDate><atom:updated>2026-08-18T13:24:35.169Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,தெற்கு ரெயில்வே,Southern Railway,Special train,Thiruvananthapuram,திருவனந்தபுரம்,Velankanni,வேளாங்கண்ணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/ps1e2yu4/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/ps1e2yu4/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வேளாங்கண்ணியில் நடைபெறும் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா ஆலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி இடையே வாரந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>திருவனந்தபுரம் வடக்கு - வேளாங்கண்ணி (வண்டி எண் 06115) வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 29-ந்தேதி மற்றும் செப்டம்பர் 5-ந்தேதி சனிக்கிழமைகளில் (2 சேவைகள்) திருவனந்தபுரம் வடக்கில் இருந்து இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.40 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.</p><p>மறுமார்க்கத்தில் வேளாங்கண்ணி - திருவனந்தபுரம் வடக்கு (வண்டி எண் 06116) வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 30-ந்தேதி மற்றும் செப்டம்பர் 6-ந்தேதி ஞாயிற்றுக்கிழமைகளில் (2 சேவைகள்) வேளாங்கண்ணியில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கை சென்றடையும்.</p><p>இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை மறுநாள் (20-ந்தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>யானைகள் வருவதை தடுக்க புதிய அகழி தோண்டும் பணி தொடக்கம்; பொதுமக்கள் வரவேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-ditches-to-stop-elephants-public-welcome</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-ditches-to-stop-elephants-public-welcome#comments</comments><guid isPermaLink="false">a2447387-8224-4754-8ad2-2d03a1d8f378</guid><pubDate>Tue, 18 Aug 2026 13:19:41 +0000</pubDate><atom:updated>2026-08-18T13:19:41.044Z</atom:updated><atom:author><atom:name>K.Sakthivel</atom:name><atom:uri>/api/author/2422436</atom:uri></atom:author><description></description><media:keywords>DIG,Elephants,யானைகள்,அகழி,பணி தொடக்கம்,general public,பொதுமக்கள் வரவேற்பு,welcomes</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/cxswmnz9/jcb.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ புதிய அகழி தோண்டும் பணிதொடக்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ யானைகள் வருவதை தடுக்க புதிய அகழி தோண்டும் பணிதொடக்கம்; பொதுமக்கள் நிம்மதி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/cxswmnz9/jcb.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கூடலூர், </p><p>நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பாடந்தொரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">காட்டு யானைகளின்</a> நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இந்த காட்டு யானைகள் நள்ளிரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள விவசாய பயிர்களை காலால் மிதித்தும், தின்றும் நாசம் செய்து வருகின்றன.</p><h2>காட்டு யானை</h2><p>மேலும், வழியில் எதிரே வரும் பொதுமக்களையும் ஓட ஓட விரட்டுவதால், அந்த பகுதி மக்கள் கடும் பீதியிலும், உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழலிலும் வசித்து வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். </p><h2>கும்கி யானைகள் வருகை</h2><p>பொதுமக்களின் போராட்டத்தை தொடர்ந்து, வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். முதுமலை தப்பக்காடு யானைகள் முகாமில் இருந்து 'சுஜய்', 'வசீம்' உள்ளிட்ட 2 கும்கி யானைகள் பாடந்தொரை பகுதிக்கு வரவழைக்கப்பட்டன. இந்த கும்கி யானைகளின் உதவியுடன், காடுகளிலிருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>தற்போது கொட்டாய் மட்டம் உள்ளிட்ட சில பகுதிகளில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை நேற்றும் வனத்துறையினர் கும்கி யானைகள் மூலம் விரட்டியடித்தனர்.</p> <h2>புதிதாக அகழி தோண்டும் பணி</h2><p>இதற்கிடையே, காட்டு யானைகள் மீண்டும் ஊருக்குள் வராதபடி அவை வரும் வழித்தடங்களை கண்டறிந்து புதிய அகழிகளை தோண்ட வேண்டும் எனவும், ஏற்கனவே உள்ள அகழிகளை தூர்வார வேண்டும் எனவும் வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று, தற்போது 4-ம் மைல், கோல்கேட், செளுக்காடி ஆகிய முக்கிய இடங்களில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் புதியதாக ஆழமான அகழிகள் தோண்டும் பணியை வனத்துறையினர் போர்க்கால அடிப்படையில் தொடங்கி உள்ளனர். </p><p> பல கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏற்கனவே தோண்டப்பட்டு, மண் மூடி போயிருந்த பழைய அகழிகளை தூர்வாரும் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நடவடிக்கையால் காட்டு யானைகள் ஊருக்குள் வருவது முற்றிலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><h2>பொதுமக்கள் கோரிக்கை</h2><p>இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறும்போது, "காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் புதிய அகழி தோண்டுவது வரவேற்கத்தக்கது. ஆனால், இதே பகுதியில் உள்ள சில தனியார் எஸ்டேட்களில் புதர்கள் மண்டி கிடக்கின்றன. இந்த புதர்களை அகற்ற வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.</p><h2>முகாமிட அதிக வாய்ப்பு</h2><p>எஸ்டேட் நிர்வாகத்தினர் பெயரளவுக்கு மட்டுமே புதர்களை அகற்றும் பணியை தொடங்கிவிட்டு, பின்னர் அப்படியே கைவிட்டுவிட்டனர். இதனால் மண்டியுள்ள புதர்களுக்குள் காட்டு யானைகள் மறைந்து முகாமிட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, மாவட்ட அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>3-வது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியர்களுக்கு குட் நியூஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/good-news-for-female-government-employees-expecting-their-third-child</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/good-news-for-female-government-employees-expecting-their-third-child#comments</comments><guid isPermaLink="false">411dd0f7-de0f-499f-afd0-5d4960d10415</guid><pubDate>Tue, 18 Aug 2026 13:12:15 +0000</pubDate><atom:updated>2026-08-18T13:12:15.595Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,தமிழக அரசு,அரசு ஊழியர்கள்,TNAssembly,pregnancy,கர்பிணிப்பெண்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/xkculmbe/tngovt33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெண் ஊழியர்களுக்கு குட் நியூஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/xkculmbe/tngovt33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசு பெண் ஊழியர்களின் 3வது குழந்தைக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">அமைச்சர் சரத்குமார் </a>அறிவித்தார்.</p><p>தமிழக அரசு பெண் பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்கும் வகையில்,  மிக முக்கியமான மற்றும் முற்போக்கான அறிவிப்பை தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசு வெளியிட்டுள்ளது. அரசுப் பெண் ஊழியர்களின் மூன்றாவது பிரசவத்திற்கும் இனி 365 நாட்கள் (ஓராண்டு) முழுமையான மகப்பேறு விடுப்பு சம்பளத்துடன் வழங்கப்படும் என்பதே அந்த அறிவிப்பு ஆகும் இது அனைத்து அரசு பெண் ஊழியர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுளது. இதற்கு முன் 2 குழந்தைகளுக்கு சம்பளத்துடன் கூடிய ஓராண்டு விடுப்பு வழங்கப்பட்டு வந்தது.</p><p>தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது. அப்போது மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் சரத்குமார் பதிலளித்துப் பேசியதாவது:</p><p>AM, PM என நேரம் பார்க்காமல் வேலை பார்க்கும் முதல்-அமைச்சரே நாளைய பாரதத்தின் PM நீங்கள் தான். தற்போதைய விடுப்பு முறையை 12 வாரங்களில் இருந்து அப்படியே நீட்டித்து, முதல் இரு குழந்தைகளைப் போலவே மூன்றாவது குழந்தைக்கும் முழுமையாக 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்க தவெக அரசு முடிவெடுத்துள்ளது.</p><p>போட்டித் தேர்வுக்கு தயாராகும் ஆர்வலர்களுக்காக வெற்றி பாதை செயலி உருவாக்கப்படும்.</p><p>அரசு பணியிடங்களை நிரப்ப தனி செயலி உருவாக்கப்படும். டிஎன்பிஎஸ்சி கூடுதல் இணைப்பு கட்டிடம் ரூ.5.12 கோடி செலவில் கட்டப்படும் என்றார்.</p><p>மூன்றாவது குழந்தையின் போதான பிரசவ வலியும், பராமரிப்புத் தேவையும் மற்ற பிரசவங்களைப் போன்றதே என்பதால், இந்தச் சலுகை மறுக்கப்படக் கூடாது என்று அண்மைக் காலங்களில் சென்னை ஐகோர்ட்டும் சில முக்கிய வழக்குகளில் சுட்டிக்காட்டியிருந்தது. </p><p>நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களையும், பெண் ஊழியர்களின் குடும்ப நலனையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி முடிவிற்கு அரசு ஊழியர் சங்கங்களும், பெண் பணியாளர்களும் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளையும் வரவேற்பையும் தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>முதுமலை வனப்பகுதியில் கடும் வறட்சி: 3 யானைகள் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/severe-drought-in-mudumalai-forest-area-3-elephants-die</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/severe-drought-in-mudumalai-forest-area-3-elephants-die#comments</comments><guid isPermaLink="false">82d13036-eba5-4890-b2ba-a1bb527b58e9</guid><pubDate>Tue, 18 Aug 2026 12:31:23 +0000</pubDate><atom:updated>2026-08-18T12:31:23.510Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நீலகிரி,water,கடும் வறட்சி,elephant death,யானைகள் உயிரிழப்பு,Forest Officer,Nilgiris District</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/55gih9zt/13.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ யானை உயிரிழப்பு]]></media:title><media:description type="html"><![CDATA[ ஒரே மாதத்தில் 3 யானைகள் உயிரிழப்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/55gih9zt/13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நீலகிரி மாவட்டம்</a> முதுமலை புலிகள் காப்பகப் பகுதியில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக, கடந்த 10 நாட்களில் மட்டும் 3 காட்டு யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p><h2>தொடர் மரணங்கள்</h2><p>நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகப் பகுதியில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88">யானைகள்</a> முகாம் அமைந்துள்ளது. பருவமழை இல்லாத காரணத்தால் அந்தப் பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால் மசினகுடி வனச்சரகத்தில் கடந்த 8-ந்தேதி ஒரு யானையும், நேற்று முன்தினம் குதிரைப்பாறை பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் யானையும் உயிரிழந்தன. இந்நிலையில், இன்றும் (செவ்வாய்க்கிழமை) அதே பகுதியில் மற்றொரு பெண் யானையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>வறட்சியின் வீரியம்</h2><p>நடப்பு (ஆகஸ்ட்) மாதத்தில் போதிய மழையின்றி காடுகளில் உள்ள நீர்நிலைகள் மற்றும் குட்டைகள் முற்றிலும் வறண்டுவிட்டன. இதனால் உணவும் குடிநீரும் கிடைக்காமல் காட்டு விலங்குகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றன.</p><h2>வனத்துறை அதிரடி</h2><p>வனவிலங்குகளின் தாகத்தைத் தணிக்க, லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீரைச் செயற்கைத் தொட்டிகளில் நிரப்பும் அவசரப் பணிகளை வனத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். இறந்த யானைகளின் உடற்கூறுகள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. வறட்சி அல்லது வேறு ஏதேனும் நோய் பாதிப்பு காரணமா என்பது குறித்து<a href="https://www.dailythanthi.com/topic/வனத்துறை"> வனத்துறை அதிகாரிகள்</a> தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item></channel></rss>