<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 31 Jul 2026 10:07:58 +0000</lastBuildDate><item><title>மேகதாது விவகாரம்: அனைத்துக்கட்சி கூட்டத்தை உடனே கூட்டுக - எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mekedatu-issue-convene-an-all-party-meeting-immediately-edappadi-palaniswami</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mekedatu-issue-convene-an-all-party-meeting-immediately-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">3f6655d6-4e7e-4841-8d22-dafc8705ff61</guid><pubDate>Fri, 31 Jul 2026 10:01:46 +0000</pubDate><atom:updated>2026-07-31T10:01:46.889Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,Edappadi Palaniswami,மேகதாது விவகாரம்,Mekedatu Issue</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/7w6jfu97/4.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/7w6jfu97/4.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;</p><p>"தமிழ்நாடு முதல்-அமைச்சர் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள உள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை தமிழக முதல்-அமைச்சர் தவிர்க்க வேண்டும். காவிரியில் நீர் திறக்க வேண்டும் என்ற தீர்ப்பை கர்நாடகா கடைபிடிக்கவில்லை. மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா  முயல்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை தீர்வு தராது. </p><p>அதிமுக ஆட்சியில் பல்வேறு தீர்ப்புகள் மூலம் தண்ணீர் பெற்றுத்தந்தோம். மேகதாது விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையில்லை. காவிரி விவகாரத்தில்  உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவான தீர்ப்பு வழங்கியுள்ளது. கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் இரு மாநில உறவுகளை சிதைக்கும் வகையில் பேசி வருகிறார். டி.கே.சிவக்குமாரின் பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது. </p><p>மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் பாலைவனமாகிவிடும். உணர்வுப்பூர்வமான விவாதங்களில் விரிவான கருத்து பரிமாற்றம் நடத்த அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். இதே கருத்தை பல அரசியல் தலைவர்களும் கூறி வரும் நிலையில், முதல்-அமைச்சர் விஜய் இன்னும் வாய் திறக்கவில்லை. மவுனப்புரட்சி செய்வதில் வல்லவர். எதிர்கும் பதிலளிக்கவில்லை. மேகதாது குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும்.”</p><p>இவ்வாறு அவர் பேசினார். </p> ]]></content:encoded></item><item><title>ஜாமீன்கோரி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் மீண்டும் மனு தாக்கல்; 3ம் தேதி விசாரணை

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-mla-markkandeyan-files-bail-plea-again-hearing-on-3rd</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-mla-markkandeyan-files-bail-plea-again-hearing-on-3rd#comments</comments><guid isPermaLink="false">c7605f05-f22b-426d-b9cf-5fe95e40881d</guid><pubDate>Fri, 31 Jul 2026 09:57:49 +0000</pubDate><atom:updated>2026-07-31T09:57:49.012Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,எம்.எல்.ஏ.,MLA,மார்க்கண்டேயன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/nxojtmfx/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/nxojtmfx/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/">திமுக </a>எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஜாமீன்கோரி மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு 3ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.</p><h2>திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது</h2><p>தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த 18-ந் தேதி தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கு  மிரட்டல் விடுக்கும் வகையிலும், அவதூறாகவும் பேசினார். </p><p>இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை போலீசார் கடந்த 20ம் தேதி கைது செய்தனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மார்க்கண்டேயனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க கோர்ட்டு உத்தவிட்டது. இதையடுத்து அவர் நெல்லை பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.  </p><p>இதையடுத்து, தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தாக்கல் செய்த மனுவை தூத்துக்குடி கோர்ட்டு கடந்த 22ம் தேதி தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி தூத்துக்குடி கோர்ட்டில் 2வது முறையாக மார்க்கண்டேயன் மீண்டும் மனு தாக்கல் செய்தார். அதை நேற்று விசாரித்த கோர்ட்டு அந்த ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்தது.</p><h2>மீண்டும் மனு</h2><p>இந்நிலையில், முதல்-அமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுத்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். மார்க்கண்டேயன் சார்பில் அவரது வழக்கறிஞரான திமுகவின் சரவணன் அண்ணாதுரை இந்த மனுவை தாக்கல் செய்தார்.  இந்த மனு வரும் 3ம் தேதி ஐகோர்ட்டு நீதிபதி இளந்திரையன் அமர்வில் விசாரணைக்கு வர உள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதில் தகராறு; விவசாயி படுகொலை - கொடைக்கானல் அருகே பரபரப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dispute-over-grazing-livestock-farmer-murdered-tension-near-kodaikanal</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dispute-over-grazing-livestock-farmer-murdered-tension-near-kodaikanal#comments</comments><guid isPermaLink="false">80afd4bc-7553-47d3-853e-01b8d776a987</guid><pubDate>Fri, 31 Jul 2026 09:56:51 +0000</pubDate><atom:updated>2026-07-31T09:56:51.539Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விவசாயி,murder,கொடைக்கானல்,Kodaikanal,படுகொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/xu77gmup/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/xu77gmup/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><p>கொடைக்கானல் அருகே விவசாய நிலத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதில் ஏற்பட்ட தகராறில் விவசாயி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பூம்பாறை கிராமம் அமைந்துள்ளது. இங்கு விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. இந்த கிராமத்தை சேர்ந்த சேர்ந்த விவசாயி ராமர் என்பவரின் கால்நடைகள், அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு விவசாயி ரகுவின் விவசாய நிலத்தில் மேய்ந்ததாக கூறப்படுகிறது. </p><p>இது தொடர்பாக ராமரை ஏற்கனவே ரகு கண்டித்துள்ளார். இருப்பினும் அடுத்தடுத்து பலமுறை கால்நடை மேய்ச்சல் தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், ராமர் மற்றும் அவரது நண்பர் பிரசாந்த ஆகியோரை ரகு தனது விவசாய நிலத்திற்கு வரவழைத்து கால்நடை மேய்ச்சல் பிரச்சினை குறித்து பேசியுள்ளார். </p><p>அந்த சமயத்தில் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ரகு தன்னிடம் இருந்த அரிவாளால் ராமர் மற்றும் பிரசாந்தை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். இந்த தாக்குதலில் ராமர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பிரசாந்த் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். </p><p>இதனிடையே ரகு காவல் நிலையத்தில் நேற்று சரணடைந்த நிலையில், உயிரிழந்த ராமரின் உறவினர்கள் பூம்பாறையில் உள்ள முக்கிய சாலையில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த கொலை சம்பவத்தில் ரகுவோடு சேர்ந்த்து மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். </p><p>இந்த கொலை சம்பவத்தில் கொலையாளி மற்றும் உயிரிழந்தவர் ஆகிய இருவரும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்திற்கு நடுவே சிலர் சாலையோரம் நின்றிருந்த வாகனங்களை சேதப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>போராட்டக்காரர்களை சமரசம் செய்ய காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தபோதும், காவல்துறையின் மெத்தனப்போக்கு மற்றும் முறையற்ற விசாரணை ஆகியவற்றைக் சுட்டிக்சாட்டி, உயிரிழந்த ராமரின் குடும்பத்தினரும், போராட்டக்காரர்களும் பின்வாங்க மறுத்துவிட்டனர். நிலைமை மேலும் தீவிரமடைவதை தடுக்க, பூம்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மக்களின் உடல்நலனுடன் விளையாடும் ஆவின் நிர்வாகம் - நயினார் நாகேந்திரன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aavin-administration-playing-with-peoples-health-nainar-nagendran-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aavin-administration-playing-with-peoples-health-nainar-nagendran-condemns#comments</comments><guid isPermaLink="false">c4983eb3-705e-4e22-8649-b2dd1c3e545b</guid><pubDate>Fri, 31 Jul 2026 09:22:44 +0000</pubDate><atom:updated>2026-07-31T09:22:44.183Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,கண்டனம்,உடல்நலம்,condemns,ஆவின் நிர்வாகம்,பொதுமக்களின்,Aavin management</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/9dau154t/nainar-nagendheran.new.gif" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/9dau154t/nainar-nagendheran.new.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> மக்களின் உடல்நலனுடன் விளையாடும் ஆவின் நிர்வாகம் - முறைகேடுகளை கண்டறிய உயர்மட்டக் குழு அமைத்திட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2> கலப்படம்</h2><p>தமிழகத்தில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D">ஆவின் பால்</a> விநியோகம் தொடர்பாக பொதுமக்களும் பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்களும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருவது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஒருபுறம் ஆவின் பால் பாக்கெட்டுகளில் பிளாஸ்டிக், குளோரின் மற்றும் மருந்து நெடி வீசுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டும் நிலையில், மறுபுறம் கடலூர் சேத்தியாதோப்பில் பாலில் மரவள்ளிக்கிழங்கு மாவு, அகர் அகர் போன்ற ரசாயனங்களை கலந்து கலப்படம் செய்வதாக பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p> <h2>பால் கொள்முதல்</h2><p>மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இத்தகைய ரசாயன கலப்படங்களை அனுமதிப்பதும், முறைகேடுகளை தட்டிக்கேட்பவர்களை கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்துவதும் தற்போதைய <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%20">தவெக </a>அரசின் நிர்வாக சீர்கேட்டை படம்பிடித்துக்காட்டுகிறது. மேலும், முறையான தரக்கட்டுப்பாட்டு சோதனைகள் ஏதுமின்றி, தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் பாலை கொள்முதல் செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.</p><h2>உயர்மட்ட குழு</h2><p>எனவே, பாலில் வரும் ரசாயன நெடி மற்றும் சேத்தியாதோப்பு மாவுக்கலப்பட முறைகேடு ஆகிய இரண்டு விவகாரங்கள் குறித்தும் உடனடியாக உயர்மட்ட குழு அமைத்து அரசு விசாரணை நடத்த வேண்டும். மக்களின் உடல்நலத்தோடு விளையாடும் ஆவின் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, தூய்மையான ஆவின் பால் விநியோகத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>‘திருச்செந்தூரில் தரிசன நேரம் குறைக்கப்படவில்லை’ - கோவில் நிர்வாகம் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/darshan-time-at-tiruchendur-has-not-been-reduced-temple-administration-clarifies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/darshan-time-at-tiruchendur-has-not-been-reduced-temple-administration-clarifies#comments</comments><guid isPermaLink="false">150974ec-3f50-4fac-89d7-7e879b509b75</guid><pubDate>Fri, 31 Jul 2026 09:07:04 +0000</pubDate><atom:updated>2026-07-31T09:07:04.482Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்செந்தூர்,Tiruchendur</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/z7rdvrsk/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/z7rdvrsk/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவில் தூத்துக்குடி மாவட்டத்தில், கடற்கரையோரத்தில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக விசேஷ நாட்களில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். </p> <p>இந்த நிலையில், திருச்செந்தூரில் தரிசன நேரம் மாற்றம் செய்யப்படுவதாக ஒரு தகவல் வெளியானது. கோவிலில் தரிசன நேரம் குறைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில், இன்று இது குறித்து திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. அதிகாலை 4.30 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு, இரவு 9 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவது வழக்கம். இதில் 100 ரூபாய் தரிசனம் மற்றும் இலவச பொது தரிசனம் ஆகிய வழிகளில் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர். </p> <p>இதனிடையே, இரவு 9 மணி வரை பக்தர்கள் தொடர்ச்சியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதால், கோவில் நடையை சாத்துவதற்கு தாமதம் ஏற்பட்டு இரவு 12 மணி வரை ஆகிவிடுகிறது என்பதால், கோவில் நிர்வாகம் தரப்பில் தரிசன நேரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, 100 ரூபாய் கட்டண தரிசனம் அதிகாலை நடை திறப்பு முதல் மாலை 6.30 மணி வரையிலும், இலவச பொது தரிசனம் அதிகாலை நடை திறப்பு முதல் மாலை 7 மணி வரையிலும் அனுமதிக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. </p><p>மேலும், கூட்ட நெரிசல் நாட்களில் வரிசையை முறைப்படுத்த மட்டுமே நேரக் கட்டுப்பாடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற நாட்களில் கோவிலில் தரிசன நேரம் குறைக்கப்படவில்லை என்றும் கோவில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழாவை சீர்குலைக்க முயற்சித்தால் கடும் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-warn-of-strict-action-if-anyone-tries-to-disrupt-the-panimaya-mata-cathedral-festival-in-thoothukudi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-warn-of-strict-action-if-anyone-tries-to-disrupt-the-panimaya-mata-cathedral-festival-in-thoothukudi#comments</comments><guid isPermaLink="false">28651a1d-f1ab-4d74-b7e5-67e9e1dda0e6</guid><pubDate>Fri, 31 Jul 2026 08:34:17 +0000</pubDate><atom:updated>2026-07-31T08:34:17.836Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Festival,தூத்துக்குடி,திருவிழா,Attempt,Strict action,கடும் நடவடிக்கை,Thoothukudi Panimaya Mata,பனிமய மாதா பேராலயம்,காவல்துறை எச்சரிக்கை,disruption,police warning,சீர்குலைக்க முயற்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/xhtrs1cx/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூத்துக்குடி பனிமய மாதா பேராலயம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/xhtrs1cx/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">பனிமய மாதா பேராலயத்தில்</a> நடைபெறும் 11 நாள் ஆண்டு திருவிழாவை சீர்குலைக்க முயற்சிப்பவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">காவல்துறை எச்சரிக்கை</a> விடுத்துள்ளது. </p><p>தூய பனிமய மாதா பேராலய ஆண்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE">திருவிழா</a>வை முன்னிட்டு காவல்துறையின் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: </p><h2>தூய பனிமய மாதா பேராலயத்தின் 11 நாள் திருவிழா</h2><p>தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 11 நாள் ஆண்டு திருவிழா கடந்த 26.7.2026 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, 5.8.2026 வரை நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தூத்துக்குடி மாவட்ட காவல்துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. </p><h2>காவல்துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள்</h2><p>26.7.2026 (கொடியேற்ற விழா): கொடியேற்  நிகழ்ச்சியன்று பாதுகாப்பு பணிக்காக மொத்தம் 660 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். </p><h2>27.7.2026 முதல் 2.8.2026 வரை:</h2><p>இந்த நாட்களில் தினமும் சுமார் 150 போலீசார் பாதுகாப்பு, கூட்ட நெரிசல் கட்டுப்பாடு, போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><h2>3 நாட்கள்; பாதுகாப்பு பணியில் 1,000 போலீசார்</h2><p>3.8.2026 முதல் 5.8.2026 வரை இறுதி 3 நாட்களில் 70,000 பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். </p><p>மேலும், தினமும் 50 ஆண் மற்றும் பெண் காவலர்கள் சீருடை அணியாமல் பொதுமக்களுடன் கலந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இறுதி 3 நாட்களில் இந்த எண்ணிக்கை 150 ஆக உயர்த்தப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். </p><h2>6 கண்காணிப்பு கோபுரங்கள், 4 டிரோன் கேமராக்கள்</h2><p>பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், முக்கிய இடங்களில் 82 தற்காலிக சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 6 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 4 டிரோன் கேமராக்கள் மூலம் வான்வழி கண்காணிப்பும் மேற்கொள்ளப்படுகிறது. இதனுடன், சிறப்பு காவல் குழுவும் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. </p><p>கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துதல், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், அவசரகால உதவி மற்றும் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><h2>பொதுமக்கள் ஒத்துழைப்பு</h2><p>பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் காவல்துறையினரின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி ஒத்துழைக்குமாறும், சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது உரிமையாளர் இல்லாமல் கிடக்கும் பொருட்கள் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். </p><h2>காவல்துறை எச்சரிக்கை</h2><p>திருவிழாவின் அமைதியையும் பாதுகாப்பையும் பாதிக்கும் வகையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் அல்லது திருவிழாவை சீர்குலைக்க முயற்சிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கியது சுப்ரீம் கோர்ட்டு: கைது செய்யவும் தடை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/supreme-court-grants-anticipatory-bail-to-senthil-balaji-arrest-stayed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/supreme-court-grants-anticipatory-bail-to-senthil-balaji-arrest-stayed#comments</comments><guid isPermaLink="false">0b250d43-ae7b-4d27-a5eb-a9b2ceb488c3</guid><pubDate>Fri, 31 Jul 2026 08:26:50 +0000</pubDate><atom:updated>2026-07-31T08:26:50.130Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,சுப்ரீம் கோர்ட்டு,Senthil Balaji,செந்தில் பாலாஜி</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/ol6r6iwh/1.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/ol6r6iwh/1.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Breaking-News</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியது. அவரை கைது செய்யவும் தடை விதித்துள்ளது.</p><h2>செந்தில் பாலாஜி</h2><p>தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அடுக்கடுக்கான வழக்குகளை சந்தித்து வருகிறார். அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி, டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு, டிரான்ஸ்பார்மர்கள் வாங்கியதில் ரூ.397 கோடி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.</p><p>தவெக அரசை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியது தொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி சகோதரர் அசோக்குமாரும் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட்டு வருகின்றனர்.</p><h2>டாஸ்மாக் முறைகேடு</h2><p>பரபரப்பாக பேசப்படும் இந்த வழக்கு ஒருபுறம் இருக்க, இன்னொரு புறம் டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, செந்தில்பாலாஜி மீது புதிய வழக்கு ஒன்றை லஞ்சஒழிப்பு போலீசார் பதிவு செய்தனர். இந்த வழக்கில் டாஸ்மாக் நிறுவனத்தின் முன்னாள் மேலாண்மை இயக்குனரான ஐ.ஏ.எஸ். அதிகாரி விசாகன் உள்ளிட்ட 7 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். லஞ்சஒழிப்பு சட்டப்பிரிவு உள்பட 9 சட்டப்பிரிவுகளில் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2021 முதல் 2025-ம் ஆண்டு வரை முறைகேடு நடந்துள்ளதாகவும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.</p><h2>முன்ஜாமீன் தள்ளுபடி</h2><p>இந்த சூழலில் டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஜி.கே. இளந்திரையன், "டாஸ்மாக் முறைகேடு நடந்ததற்கும், அரசுக்கு இழப்பு ஏற்பட்டதற்கும் ஆதாரங்கள் உள்ளன. குற்றம்சாட்டப்பட்டவர் அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்கான முகாந்திரம் இருக்கிறது. எனவே செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அவசியம் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்வதாக நீதிபதி தெரிவித்து செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். </p><h2>சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு</h2><p>முன் ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்த நிலையில், இதனை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு அவசர வழக்காக இன்று விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ’ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அரசியல் காழ்ப்புனர்ச்சி காரணமாக பழைய வழக்கை மீண்டும் கையில் எடுக்கிறார்கள். அவர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பார். செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும். மேலும் அவரை கைதுசெய்யக் கூடாது.’ என வாதிட்டார். </p><p>அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘டாஸ்மாக் வழக்கில் 100 கோடி ஊழல் செய்ததற்கான முகாந்திரம் உள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் வழக்கின் விசாரணைக்கு பல்வேறு வழிகளில் தடையை ஏற்படுத்தினார். அவரை காவலில் எடுத்து விசாரிப்பதற்கான தேவை உள்ளது.’ என வாதிட்டார். </p><h2>கைது செய்ய தடை</h2><p>இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பதை உறுதி செய்கிறோம். இதற்கு மேல் உங்களுக்கு என்ன வேண்டும்.? என தமிழக அரசு தரப்பு வழக்கறிஞரிடம் கூறினர். அத்துடன், செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். மேலும், அவரை கைது செய்யவும் தடை விதித்த நீதிபதிகள், இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தனர். </p><p>மேலும், பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், சாட்சிகளை கலைக்கக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை செந்தில் பாலாஜிக்கு வழங்கிய நீதிபதிகள், நிபந்தனைகளை மீறினால் முன் ஜாமீனை ரத்துசெய்வோம் எனவும் எச்சரிக்கை விடுத்தனர். </p>  ]]></content:encoded></item><item><title>மேகதாது விவகாரம்: முதல்-அமைச்சர் விஜய்யுடன் கர்நாடகம் செல்லும் 13 பேர் கொண்ட குழு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mekedatu-issue-13-member-team-to-accompany-chief-minister-vijay-to-karnataka</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mekedatu-issue-13-member-team-to-accompany-chief-minister-vijay-to-karnataka#comments</comments><guid isPermaLink="false">d01e90a7-a705-45d4-b8a1-114299de2b70</guid><pubDate>Fri, 31 Jul 2026 08:13:47 +0000</pubDate><atom:updated>2026-07-31T08:13:47.022Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Karnataka,மேகதாது அணை,மேகதாது,Mekedatu,Mekedatu dam,கர்நாடகம்,CM Vijay,Chief Minister Vijay,Mekedatu Issue</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/e591ez6l/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/e591ez6l/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>3-ந்தேதி முதல்-அமைச்சர் விஜய்யுடன் கர்நாடகா செல்லும் 13 பேர் கொண்ட குழுவின் விவரம் வெளியாகியுள்ளது.</p><h2>காவிரி நீர்</h2><p>கர்நாடகம்-தமிழகம் இடையே காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக நீண்டகாலமாக பிரச்சினை நீடித்து வருகிறது. குறிப்பாக மழை பொய்த்து போகும் காலங்களில் இந்த பிரச்சினை தலை தூக்கி வருகிறது. நடப்பாண்டும் கர்நாடகத்தில் போதிய மழை பெய்யாததால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்குவதில் பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது.</p><h2>டி.கே.சிவக்குமாருடன் சந்திப்பு</h2><p>இதற்கிடையே காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டவும் கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என முதல்-அமைச்சர் விஜய் கருதுகிறார். எனவே அவர் காவிரி நதி நீர் விவகாரம், மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரை சந்தித்து பேச முடிவு செய்து கடிதம் அனுப்பியுள்ளார். இதற்காக முதல்-அமைச்சர் விஜய் வருகிற 3-ந்தேதி (திங்கட்கிழமை) பெங்களூருவுக்கு செல்கிறார். </p><h2>விஜய் ஆலோசனை</h2><p>பெங்களூரு விதானசவுதா (சட்டசபை வளாகத்தில்) மாநாட்டு அரங்கில் டி.கே.சிவக்குமார், விஜய்யை சந்தித்து பேச உள்ளார். இந்த பேச்சுவார்த்தைக்கு தமிழ்நாடு விவசாயிகளும், அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதுபோல் கர்நாடக விவசாயிகளும், கன்னட அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.</p><p>இதற்கிடையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், தலைமைச் செயலாளர், துறைகளின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.</p><h2>13 பேர் கொண்ட குழு</h2><p>இந்த நிலையில், 3-ந்தேதி முதல்-அமைச்சர் விஜய்யுடன் கர்நாடகா செல்லும் 13 பேர் கொண்ட குழுவின் விவரம் வெளியாகியுள்ளது. அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் தலைமைச் செயலாளர் சாய்குமார், நீர்வளத்துறை செயலாளர் சத்யபிரதா சாகு, காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் உள்ளிட்டோர் முதல்-அமைச்சருடன் கர்நாடகா செல்கின்றனர். 3-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு கர்நாடகா செல்ல இந்த குழு திட்டமிட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர் உமாபதியும் முதல்-அமைச்சர் விஜய்யுடன் கர்நாடகா செல்ல உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடக அரசு தமிழகத்திற்கு உடனடியாக காவிரி நீரைத் திறந்துவிட வேண்டும் -  ஜி.கே.வாசன் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/karnataka-government-should-release-cauvery-water-to-tamil-nadu-immediately-gk-vasan-insists</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/karnataka-government-should-release-cauvery-water-to-tamil-nadu-immediately-gk-vasan-insists#comments</comments><guid isPermaLink="false">157a9200-d1d7-43fa-a9e9-dfab6352ccd2</guid><pubDate>Fri, 31 Jul 2026 08:02:11 +0000</pubDate><atom:updated>2026-07-31T08:02:11.237Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>G.K. Vasan,கர்நாடக அரசு,Karnataka,ஜி.கே.வாசன்,ஜி.கே.வாசன் வலியுறுத்தல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/5j9ok9b4/Untitled-17.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/5j9ok9b4/Untitled-17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>கர்நாடக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தைக்கூட்டி தண்ணீர் திறக்க மறுக்காமல் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழகத்திற்கு உடனடியாக காவிரி நீரைத் திறந்துவிட வேண்டும் தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>ஆணையம் உத்தரவு </h2><p>தமிழக விவசாயிகளின் உணர்வைப் புரிந்து அவர்களின் தேவையைக் கவனத்தில் கொண்டு தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்திருப்பது நியாயமானது. அதாவது காவிரியில் வினாடிக்கு 3,500 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்திற்கு மொத்தம் 4 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.</p><p>குறிப்பாக காவிரி மேலாண்மை ஆணையம் ஏற்கனவே கொடுத்த உத்தரவின்படி தண்ணீர் திறக்க மறுத்து மேல்முறையீடு செய்த கர்நாடக அரசின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இது கர்நாடக அரசின் நியாயமற்ற போக்கை வெளிப்படுத்தியிருக்கிறது. தமிழகத்திற்கான காவிரி நீர் தமிழக விவசாயிகளின் பயிர் தேவைக்கும், குடிநீர் தேவைக்கும் மிக மிக அவசரமானது மட்டுமல்ல அவசியமானதும் கூட.</p><h2>விவசாயம் பாதிப்பு</h2><p>ஏற்கனவே குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் தற்போதைய சம்பா சாகுபடிக்கு காவிரி நீர் உடனடி தேவையாக இருக்கிறது. இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை கர்நாடக அரசு கடைபிடிக்க வேண்டுமே தவிர அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி ஒத்த கருத்து என்று கூறி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மறுக்கக்கூடாது.</p><p>எனவே தமிழக விவசாயிகள், கர்நாடக விவசாயிகள் எனப்பிரித்துப் பார்க்காமல் விவசாய வர்க்கம் என எண்ணி அவர்களைப் பாதுகாக்கக்கூடிய நிலையை கர்நாடக அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தின் நியாயமான உரிமையை கர்நாடக அரசு கவனத்தில் கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.</p><h2>காவிரி நீரை திறந்துவிட வேண்டும்</h2><p>மேலும் நேற்றைய தினம் கர்நாடக அரசின் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது கர்நாடக அரசின் வீன்முயற்சியை, பின்னடவை வெளிப்படுத்தியுள்ளது.</p><p>எனவே கர்நாடக அரசு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">காவிரி மேலாண்மை</a> ஆணைய உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீரை உடனடியாக திறந்துவிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருச்சி: ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நீர்வளத்துறை பணி ஆய்வாளர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/trichy-water-resources-department-inspector-arrested-for-accepting-a-bribe-of-rs4000</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/trichy-water-resources-department-inspector-arrested-for-accepting-a-bribe-of-rs4000#comments</comments><guid isPermaLink="false">c7de107f-f651-45f7-b7f7-faffb1aa45fa</guid><pubDate>Fri, 31 Jul 2026 07:33:15 +0000</pubDate><atom:updated>2026-07-31T07:33:15.146Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrested,திருச்சி,Trichy,லஞ்சம்,Bribery,Water Resources Department,நீர்வளத்துறை,Inspector,agricultural land,விவசாய நிலம்,வண்டல் மண்,ஆய்வாளர்,Alluvial soil</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/1qp5lgmy/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது செய்யப்பட்ட லோகநாதன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/1qp5lgmy/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி, </p><p>திருச்சி மாவட்டத்தில் விவசாய நிலத்துக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D">வண்டல் மண்</a> அள்ள அனுமதி வழங்குவதற்கு ரூ.4 ஆயிரம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">லஞ்சம்</a> வாங்கிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">நீர்வளத்துறை</a> பணி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D">ஆய்வாளரை</a> லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர்.</p><h2>வண்டல் மண் அள்ள அனுமதி </h2><p>திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், முடிகண்டத்தைச் சேர்ந்தவர் செல்லையா மகன் எட்வர்ட் (வயது 49). இவர் தனது விவசாய நிலத்திற்கு மேக்குடி கிராமத்தில் உள்ள மாங்குளத்தில் இருந்து வண்டல் மண் அள்ள நீர்வளத்துறை அலுவலகத்தில் அனுமதி கோரியிருந்தார்.</p><h2>ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்ட நீர்வளத்துறை ஆய்வாளர்</h2><p>இதுதொடர்பாக புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் பிரிவு-1 பணி ஆய்வாளரான லோகநாதன்(41) என்பவரை அணுகிய போது, அவர் அனுமதி வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத எட்வர்ட், இதுகுறித்து திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டு நடவடிக்கை எடுத்தனர்.</p><h2>கைது</h2><p>அதன்படி, திருச்சி மாவட்ட நீர்வளத்துறை உதவி பொறியாளர் அலுவலகத்தில் வைத்து எட்வர்டிடம் இருந்து ரூ.4 ஆயிரத்தை லஞ்சம் வாங்கிய லோகநாதனை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>கோவை: பாரதியார் பல்கலைக்கழகத்தின் வனப்பகுதியில் ஊழியர் சடலமாக மீட்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-employee-found-dead-in-bharathiar-university-forest-area</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-employee-found-dead-in-bharathiar-university-forest-area#comments</comments><guid isPermaLink="false">ba2be3f1-3108-4517-91c5-895ed43bde32</guid><pubDate>Fri, 31 Jul 2026 07:22:47 +0000</pubDate><atom:updated>2026-07-31T07:22:47.783Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,சடலம் மீட்பு,போலீசார் விசாரணை,employee death,Bharathiar University,கோவை பாரதியார் பல்கலைக்கழகம்</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/5514thdj/42.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ சசிகுமார்]]></media:title><media:description type="html"><![CDATA[ கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் பின்புறம் உள்ள வனப்பகுதியில், சசிகுமார் சடலமாக மீட்கப்பட்டார். ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/5514thdj/42.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை</p><p>கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் பின்புறம் உள்ள வனப்பகுதியில், பல்கலைக்கழக ஊழியர் ஒருவர் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். </p><h2>வனப்பகுதியில் சடலம்</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கோயம்புத்தூர் மாவட்டம்</a> ஆனைக்கட்டி பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (வயது 33). இவர் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று (வியாழக்கிழமை) அன்று இவர் பல்கலைக்கழக வளாகத்தின் பின்புறம் உள்ள ஒதுக்குப்புறமான வனப்பகுதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். </p><h2>போலீசார் விசாரணை</h2><p>அந்த வழியாக தேன் எடுக்கச் சென்றவர்கள் இதைப் பார்த்து உடனடியாக போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வடவள்ளி காவல் நிலைய போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் விரைந்து வந்தனர். பின்னர் சசிகுமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.</p><p>தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திலுள்ள ஆதாரங்களை திரட்டினர். மேலும் இந்த கொலைக்கான காரணம் முன்விரோதமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என சசிகுமாரின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இவரின் உடலில் காயங்கள் இருந்ததால் இது கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வடவள்ளி போலீசார் </a>தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>திமுக ஆட்சியில் அறிமுகமான &apos;தாயுமானவர் திட்டம்&apos; பெயர் மாற்றம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-name-of-the-motherhood-scheme-introduced-during-the-dmk-regime-has-been-changed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-name-of-the-motherhood-scheme-introduced-during-the-dmk-regime-has-been-changed#comments</comments><guid isPermaLink="false">34101389-ad5e-4d60-a933-2d5f2402b199</guid><pubDate>Fri, 31 Jul 2026 07:18:04 +0000</pubDate><atom:updated>2026-07-31T07:18:04.445Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,தமிழக அரசு,பெயர் மாற்றம்,name change,TamilNadu Goverment,தாயுமானவர் திட்டம்,தவெக அரசு,TVK Government,Thayumanavar Scheme</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/5ffu56wk/Untitled-16.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/5ffu56wk/Untitled-16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, முந்தைய திமுக அரசின் நலத்திட்டங்களின் பெயர்களை தவெக அரசு மாற்றி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், தற்போது மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் 'முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டம்' என்ற பெயரும் அரசு அறிவிப்புகளில் நீக்கப்பட்டிருக்கிறது.</p><h2>தாயுமானவர் திட்டம்</h2><p>திமுக ஆட்சிக் காலத்தில், 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மட்டுமே உள்ள குடும்பங்கள் ரேஷன் கடைகளுக்குச் சென்று அத்தியாவசியப் பொருட்களை பெற்றுச் செல்வதில் ஏற்படும் சிரமங்களைப் போக்குவதற்காக, அவர்களின் வீடுகளுக்கே சென்று பொருட்களை வழங்கும் வகையில் 'முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதைய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் வீடு தோறும் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டம் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.</p><p>இந்நிலையில், விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, புதிய நலத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்குப் பதிலாக, முந்தைய அரசின் திட்டங்களின் பெயர்களை மாற்றி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அந்த வகையில், 'மகளிர் விடியல் பயணம்' என்ற திட்டம் 'மகளிர் பயணம்' என்றும், 'முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம்' 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்' என்றும், 'நான் முதல்வன்' திட்டம் 'திறன் தமிழ்நாடு' என்றும் மாற்றப்பட்டுள்ளன.</p><h2>பெயர் மாற்றம்</h2><p>இந்த வரிசையில் தற்போது 'முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டம்' என்ற பெயரும் அரசு அறிவிப்புகளில் இடம்பெறாமல் போயிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. அதற்கு பதிலாக, "பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே சென்று அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும்" என்ற பொதுவான குறிப்புடன் அறிவிப்பு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வெளியிடப்பட்டுள்ளது</a>.</p><p>இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, ஆகஸ்ட் மாதத்திற்கான பொது விநியோகப் பொருட்கள் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே ஆகஸ்ட் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் வழங்கப்படும் என்றும், தகுதியுள்ள பயனாளிகள் இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p>இந்தத் திட்டத்தின் பெயர் நீலகிரி மாவட்டத்தில் மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் அரசு அறிவிப்புகளில் நீக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், முந்தைய அரசின் திட்டங்களின் அரசியல் அடையாளங்களை நீக்கும் நோக்கில்தான் இந்தப் பெயர் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. அதேவேளையில், திட்டத்தின் சேவை தொடர்ந்து செயல்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>கலெக்டரின் செய்திக்குறிப்பு</h2><p>இது தொடர்பாக, நீலகிரி மாவட்ட நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியிருப்பதாவது;-</p><p>ஆகஸ்ட் 2026 மாதத்திற்கு 04.08.2026 மற்றும் 05.08.2026 தேதிகளில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம். </p><p>பொது விநியோகத் திட்டத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத் திட்டப் பொருட்கள் ஆகஸ்ட் 2026 மாதத்திற்கு 04.08.2026 மற்றும் 05.08.2026 ஆகிய நாட்களில் வழங்கப்படும். இத்திட்டத்தினை முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தலைமைச் செயலகத்துக்கு பட்டு வேட்டி-சட்டையில் வந்த முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-joseph-vijay-arrived-at-the-secretariat-wearing-a-silk-dhoti-and-shirt</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-joseph-vijay-arrived-at-the-secretariat-wearing-a-silk-dhoti-and-shirt#comments</comments><guid isPermaLink="false">dbc84b4d-d170-47fa-8754-e4cd2a47174d</guid><pubDate>Fri, 31 Jul 2026 07:05:02 +0000</pubDate><atom:updated>2026-07-31T07:05:02.926Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,Secretariat,தலைமைச் செயலகம்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,Chief Minister Vijay,முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/e6aqn5w3/vettai.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/e6aqn5w3/vettai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/vijay">தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a>, கடந்த மே மாதம் 10-ந் தேதி பதவியேற்றுக் கொண்டார். அதன்பின்னர், ஒவ்வொரு நாளும் அரசு அலுவலர்கள்  பணிக்கு வருவதுபோல், காலையிலேயே தலைமைச் செயலகம் வந்து மாலை வரை பணியாற்றி வருகிறார். மதிய உணவையும் தன்னுடன் எடுத்துவந்து சாப்பிடுகிறார். </p><h2>திரைத்துறை</h2><p>இதுவரை இருந்த முதல்-அமைச்சர்கள் எல்லாம் வெள்ளைநிற வேட்டி - சட்டையில் தலைமைச்செயலகம் வந்து சென்றுள்ளனர். ஆனால், இவர் திரைத்துறையில் இருந்து வந்ததாலோ என்னவோ, ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வகையான ஆடைகள் அணிந்து வருகிறார். </p><h2>பட்டு வேட்டி-சட்டை</h2><p>குறிப்பாக, கோட்-சூட்டுடன் வரும் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a>, வெள்ளிக்கிழமைகளில் பட்டு வேட்டி-சட்டையில் வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். அந்த வகையில், இன்று தலைமைச் செயலகம் வந்த அவர் பட்டு வேட்டி-சட்டையிலேயே வந்திருந்தார். அவரை பல்வேறு முக்கிய பிரமுகர்கள் சந்தித்து பேசினார்கள்.</p>]]></content:encoded></item><item><title>மின்கட்டணம் உயர்வா? - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/are-electricity-bill-high-minister-explains-mk-stalins-accusation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/are-electricity-bill-high-minister-explains-mk-stalins-accusation#comments</comments><guid isPermaLink="false">62a8c0ac-7f07-4398-b9b1-d89721bf6a5a</guid><pubDate>Fri, 31 Jul 2026 06:55:27 +0000</pubDate><atom:updated>2026-07-31T06:55:27.655Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,M.K.Stalin,electricity bill,CTR Nirmal kumar,மின்கட்டணம்,அமைச்சர் நிர்மல் குமார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/zaw7t2lt/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/zaw7t2lt/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மின்கட்டணம் குறித்த மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.</p><p><strong>சென்னை தலைமைச் செயலகத்தில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-</strong></p><p>வாட்ஸ்-அப்பில் வந்த ஏதோவொரு தவறான தகவலைத்தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். பலருக்கும் மின் கட்டணம் அதிகம் வந்திருப்பதாக பலரும் சமூக ஊடகங்களில் கூறி வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.</p><p>கடந்தாண்டுடன் இந்தாண்டு ஒப்பிடுகையில், கடந்தாண்டில் இதே காலகட்டத்தில் (கோடை) 11.50 லட்சம் பேருக்கு 3 மடங்கு அளவில் மின் கட்டணம் வந்தது. ஆனால், இந்தாண்டில் 9.60 லட்சம் பேருக்குத்தான் அதிகரித்துள்ளது. கடந்தாண்டைவிட இந்தாண்டில் 2 லட்சம் பேர் குறைந்துள்ளனர்.</p><p>மக்களைக் குழப்புவதற்காகவே மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதுபோல 3.70 லட்சம் புகார்களெல்லாம் வரவில்லை. மின் கட்டணம் உயர்வு என வதந்தி பரவுகிறது. வெயில் காலத்தில் அதிகளவு ஏசி பயன்படுத்துவதால் கட்டணம் உயர்கிறது. மின் பயன்பாடு அதிகரிக்கும்போது மின் கட்டணம் அதிகரித்து வரத்தான் செய்யும்.</p><p>மேகதாது பிரச்சினை இரு மாநிலம் விவகாரம் என்பதால் முதல்-அமைச்சர் விஜய் அனைத்து தரப்பு ஆலோசனைகளையும் கேட்கிறார். மேகதாது விவகாரத்தில் நேற்று அதிமுக தரப்பில் தேவையின்றி வழக்கு தாக்கல் செய்துள்ளனர். தேவையின்றி மக்களை குழப்பும் வகையில் பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை எதிர்த்து அதிமுக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.</p><p>ஆணையத்தில் இருந்து நீர் திறக்க வேண்டும என்று உத்தரவு கொடுத்த பின்னரும் கர்நாடகா நீர் திறக் மறுக்கிறது. மேகதாது விவகாரத்தில் சட்டநடவடிக்கை தொடர்பாக ஒரு சில நாட்களில் அறிவிப்பு வரும். முதல்-அமைச்சர் விஜய் கர்நாடகா செல்வாரா?, இல்லையா? என்பது குறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியாகும். தமிழகத்தில் நீர் திறக்க மறுப்பதையே 40 ஆண்டு கால அரசியலாக கர்நாடா வைத்துள்ளது.</p><p>மேகதாது விவகாரத்தில் முதல்-அமைச்சர் ஆலோசனை செய்து வருகிறார்; இந்த பிரச்சினையில் தெளிவாக உள்ளோம்; தமிழக மக்களுக்கு எதிராக செய்ய வேண்டும் என்பதற்காக மத்திய அரசு இப்படி செய்கிறதா என தெரியவில்லை?. மேகதாது விவகாரத்தில் முதல்-அமைச்சர் தரப்பிலிருந்து ஒரு வாரத்துக்குள் தேவையான முடிவுகள் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>“பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.. இல்லையெனில்..?” - எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட பரபரப்பு அறிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/crop-loans-must-be-fully-waived-otherwise-edappadi-palaniswami-issues-a-sensational-statement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/crop-loans-must-be-fully-waived-otherwise-edappadi-palaniswami-issues-a-sensational-statement#comments</comments><guid isPermaLink="false">da6d3ee0-f531-4465-af26-2bea0d461f2e</guid><pubDate>Fri, 31 Jul 2026 06:45:51 +0000</pubDate><atom:updated>2026-07-31T06:45:51.006Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,TVK,தவெக,Vijay,Tamilnadu,விஜய்,எடப்பாடி பழனிசாமி,அதிமுக,Edappadi Palaniswami,தமிழகம்,Karnataka,கர்நாடகா,Edappadi Palanisami,மேகதாது,Mekedatu,பயிர் கடன்,Crop loans,CM Vijay,Chief Minister Vijay,முதல் அமைச்சர் விஜய்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/jvf53pkz/illaer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/jvf53pkz/illaer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>2026 தேர்தல் வாக்குறுதியின்படி பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவும், காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும், த.வெ.க. - காங்கிரஸ் கூட்டணி அரசின் முதல்-அமைச்சரை வலியுறுத்துவதாக <a href="https://www.dailythanthi.com/topic/edappadi-palaniswami">அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி</a> தெரிவித்துள்ளார். </p><h2>விவசாயிகள் தொடர் ஆர்ப்பாட்டம்</h2><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>த.வெ.க. ஆட்சிக்கு வந்தால் 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ள விவசாயிகளுக்கு முழுமையான கூட்டுறவு பயிர்க் கடன் தள்ளுபடி; 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு 50 சதவீதம் கூட்டுறவு பயிர்க் கடன் தள்ளுபடி என்று அறிவித்தது. </p><p>ஆட்சிக்கு வந்தபின் ரூ. 75,000/-ம் வரை குறு, சிறு விவசாயிகள் பயிர்க் கடன் பெற்றிருந்தால் அவை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும்; ரூ. 75,000/-க்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ. 35,000/- மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும் சரித்திரத்திலேயே இல்லாத ஒரு நாடகத்தை இந்த அரசு அரங்கேற்றி உள்ளது.</p><p>பொய்க்கால் குதிரை அரசின் இந்த பயிர்க் கடன் அறிவிப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் தொடர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடனை முழுமையாக ரத்து செய்யக் கோரி, கழகத்தின் சார்பில் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. </p><h2>பயிர்க் கடன் தள்ளுபடி.. இல்லையெனில்..</h2><p>த.வெ.க. அரசு வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டமன்றத்தில் 6.8.2026 அன்று தாக்கல் செய்யும்போது, பயிர்க் கடன் தள்ளுபடி குறித்து 2026 தேர்தல் வாக்குறுதியில் அளித்தவாறு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்க வேண்டும். இல்லையெனில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், த.வெ.க.கூட்டணி அரசை எதிர்த்து தமிழகமெங்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்.</p> <h2>சுப்ரீம்கோர்ட்டு</h2><p>காவிரி நீரை மாநிலங்களுக்கிடையே பங்கிடுவது பற்றி சுப்ரீம்கோர்ட்டு மிகத் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி கர்நாடக அரசு இந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழகத்திற்கு தரவேண்டிய 9.19 TMC தண்ணீருக்கு பதில் 2.91 TMC நீரை மட்டுமே திறந்துள்ளது. ஜூலை மாதம் வழங்கப்பட வேண்டிய தண்ணீர் 31.24 TMC நீர். </p><p>ஆனால், கர்நாடக அரசு தமிழகத்திற்கு திறக்க வேண்டிய பங்கு நீரையும் இன்றுவரை முழுமையாகத் திறந்துவிடவில்லை. காவிரி நீர் ஒழுங்குமுறை குழு (CWRC) கூட்டத்தில் இதுகுறித்து முறையிடப்பட்டது. </p><p>அதன்படி, காவிரியிலிருந்து தமிழ் நாட்டிற்கு ஜூலை 29ம் தேதி முதல் 15 நாட்களுக்கு தினமும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு விநாடிக்கு 3,500 கன அடி வீதம் கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீரை திறந்துவிட வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையமும் கர்நாடக காங்கிரஸ் அரசை அறிவுறுத்தியுள்ளது.</p><h2>ஒரு சொட்டு தண்ணீர்கூட கிடைக்காது</h2><p>ஆனால், கர்நாடக முதல்-மந்திரி அவர்கள் காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த மறுக்கிறார். மேலும், இதுகுறித்து கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்படும் என்று கர்நாடக முதல்-மந்திரி அறிவித்துள்ளார். தமிழக முதல்-அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு பெங்களூரு வரும்பொழுது அவரை ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று கர்நாடக அணைகளைப் பார்வையிட வைப்பேன் என்றும் கூறியுள்ளார்.</p><p>இதுபோன்ற நிலையில், மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டினால் தமிழகத்திற்கு காவிரியிலிருந்து ஒரு சொட்டு தண்ணீர்கூட கிடைக்காது. குடிநீருக்காக காவிரியை நம்பியுள்ள சுமார் 20 மாவட்டங்களில் கடும் குடிநீர் பிரச்சனை ஏற்படுவதுடன், டெல்டா மாவட்டங்களும் பாலைவனமாக மாறும் சூழ்நிலை ஏற்படும்.</p><h2>அனைத்துக் கட்சிக் கூட்டம்</h2><p>த.வெ.க.-காங்கிரஸ் கூட்டணி அரசின் முதல்-அமைச்சர் பேச்சுவார்த்தைக்காக பெங்களூரு செல்வதாகச் செய்திகள் வெளிவந்தவுடன், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளின் ஆலோசனையைப் பெறவேண்டும் என்றும், அதன் அடிப்படையில் சட்ட வல்லுநர்களின் ஆலோசனையைப் பெற்றும் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொய்க்கால் குதிரை அரசின் முதல்-அமைச்சரை வலியுறுத்தி ஏற்கெனவே நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன்.</p><h2>மறுபரிசீலனை</h2><p>ஏற்கெனவே, சுப்ரீம்கோர்ட்டின் இறுதித் தீர்ப்பின்படி கர்நாடகா ஒவ்வொரு ஆண்டும் 177.25 TMC தண்ணீர் தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும்; மாத வாரியாக எவ்வளவு திறக்க வேண்டும் என்ற அளவீடும் உள்ளது. சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. </p><p>சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பு தெளிவாக உள்ளதால், பேச்சுவார்த்தைக்காக தமிழக முதல்-அமைச்சர் பெங்களூரு செல்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்; அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று இந்த அரசை மீண்டும் வலியுறுத்தினேன். தமிழகத்திலுள்ள பெரும்பாலான கட்சித் தலைவர்களும், விவசாய சங்கப் பிரதிநிதிகளும் இதே கருத்தை தெரிவித்துள்ளனர்.</p> <h2>வாய்மூடி மவுனியாக..</h2><p>த.வெ.க.-காங்கிரஸ் கூட்டணி அரசின் முதல்-அமைச்சர் இன்றுவரை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபடாததோடு, மேகதாது குறித்து மத்திய இணை அமைச்சர் அளித்த பதிலைப் பற்றியும், காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவின்படி தண்ணீர் திறக்கமாட்டேன் என்று கூறிய கர்நாடக முதல்-மந்திரியின் கருத்து பற்றியும், எதுவும் பேசாமல் வாய்மூடி மவுனியாக இருப்பதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்வதோடு, தமிழக விவசாயிகளின் ஜீவ நதியாம் காவிரி நதி மற்றும் மேகதாது பிரச்சனைகள் பற்றி விவாதிக்க, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>கர்நாடக-தமிழக அரசின் முதல்-அமைச்சர்கள் நேரில் சந்திப்பதில் எந்தவித பயனுமில்லை - டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-no-point-in-the-chief-ministers-of-karnataka-and-tamil-nadu-meeting-in-person-ttv-dinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-no-point-in-the-chief-ministers-of-karnataka-and-tamil-nadu-meeting-in-person-ttv-dinakaran#comments</comments><guid isPermaLink="false">08038580-fd22-4dcc-990c-64753f8ecd12</guid><pubDate>Fri, 31 Jul 2026 06:25:24 +0000</pubDate><atom:updated>2026-07-31T06:25:24.412Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடக அரசு,டிடிவி தினகரன்,தமிழக அரசு,AMMK,அமமுக,Karnataka government,TamilNadu Goverment,TTV Dinakaran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/cvgkc2w0/Untitled-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/cvgkc2w0/Untitled-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக விவசாய சங்கங்கள் இந்த சந்திப்பு அவசியமற்றது என தெரிவித்துள்ள நிலையில் முதல்-அமைச்சர் விஜய் மேற்கொள்ளவுள்ள இந்த சந்திப்பு சம்பிரதாயமா? அல்லது சந்தர்ப்பவாதமா? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>10 சதவீதம் கூட வழங்கவில்லை</h2><p>டெல்லியில் நேற்று நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்றுக் குழு வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3500 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி கடந்த ஜூன் மாதத்திற்கு 9.19 டி.எம்.சி. தண்ணீருக்கு 2.91 டி.எம்.சி. தண்ணீரை மட்டுமே தந்த கர்நாடக அரசு, ஜூலை மாதத்திற்கான 31.24 டி.எம்.சி. தண்ணீரில் 10 சதவீதத்தைக் கூட வழங்காமல் தமிழகத்தையும், தமிழக விவசாயிகளையும் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.</p><h2>எந்த பயனும் இல்லை</h2><p>தமிழகத்திற்கான தண்ணீரை வழங்க முடியாது என நேற்றும் கர்நாடக மாநில முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கும் நிலையில், காவிரி நதிநீர் மற்றும் மேகதாது அணை தொடர்பாக விவாதிக்க தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கர்நாடகாவுக்குச் செல்வதால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை என்று தமிழக விவசாய சங்கங்களும் தெரிவித்துள்ளனர்.</p><p>உரிய நேரத்தில் உச்சநீதிமன்றமும், காவிரி மேலாண்மை ஆணையமும் தெளிவான உத்தரவுகளைப் பிறப்பித்த பின்னரும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழகத்திற்கான </a>உரிய நீரை உரிய நேரத்தில் பெற முடியாத முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், கர்நாடகா சென்று அம்மாநில முதல்-மந்திரியிடம் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது "கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போனானாம்" என்ற பழமொழியைத் தான் நினைவுபடுத்துகிறது.</p><h2>தைரியம் இருக்கிறதா?</h2><p>காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாளை தமிழகம் வர உள்ள நிலையில், தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் ராகுல் காந்தியை சந்தித்து, காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடக அரசு மேகதாது அணைத் திட்டத்தைக் கைவிடுவதற்கு அரசியல் ரீதியாக உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.</p><p>மேகதாது அணை விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் கர்நாடக அரசுக்கு தேவையான அழுத்தத்தை வழங்க மறுக்கும் பட்சத்தில், தமிழக அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் பங்கேற்பு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்பதை ராகுல் காந்தியிடம் நேரடியாக தெரிவிக்க தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்க்கு தைரியம் இருக்கிறதா?</p><p>எனவே, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழகத்திற்கு </a>தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு குறித்து விவாதிக்க கர்நாடக மாநிலத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நிலையில், கர்நாடக அரசின் சட்டவிரோதப் போக்கை சட்டரீதியாக முறியடிக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து விவாதிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை மீண்டும் ஓர் முறை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காவிரி விவகாரத்தில் முதல்-அமைச்சர் விஜய் கர்நாடகம் செல்லக் கூடாது; அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-should-not-visit-karnataka-over-cauvery-issue-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-should-not-visit-karnataka-over-cauvery-issue-anbumani#comments</comments><guid isPermaLink="false">bacf75e0-7cfe-40c9-8b9d-dedfba46fc45</guid><pubDate>Fri, 31 Jul 2026 06:24:05 +0000</pubDate><atom:updated>2026-07-31T06:24:05.485Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani,Cauvery issue,காவிரி விவகாரம்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/zmpzrnmg/vijay-anpumani.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/zmpzrnmg/vijay-anpumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டில் கருகும் குறுவை பயிர்களைக் காப்பாற்ற  காவிரியில் வினாடிக்கு 3500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடும்படி காவிரி மேலாண்மை ஆணையம் ஆணையிட்ட பிறகும் கூட  தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக காங்கிரஸ் அரசு மறுக்கிறது; அங்குள்ள மக்களைத் தூண்டி விட்டு தமிழ்நாட்டுக்கு எதிராக போராட வைக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் கர்நாடகத்துக்கு சென்று அம்மாநில முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாருடன் பேச்சு நடத்தியே  தீருவேன் என்று முதல்-அமைச்சர் விஜய் பிடிவாதம் பிடிப்பது தமிழகத்தின் நலனுக்கு எந்த வகையிலும் பயனளிக்காது.</p><h2>முழு அடைப்பு போராட்டம்</h2><p>தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ஏற்க முடியாது என்று கூறிவிட்ட கர்நாடக அரசு, அத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தீர்மானித்திருக்கிறது.  காவிரி ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கக் கூடாது  என்று எதிர்ப்பு தெரிவித்துள்ள கன்னட அமைப்புகள் காவிரி பாயும் மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக எச்சரித்திருக்கின்றன. கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரும்  இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க ஆகஸ்ட் 2-ஆம் தேதி அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டியிருக்கிறார்.</p><h2>எதை சாதிக்கப் போகிறார்?</h2><p>தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கக் கூடாது  என்பதற்காகத் தான் கர்நாடக அரசும்,  கன்னட இயக்கங்களும் இத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு  ஒரு சொட்டு தண்ணீரைக் கூட தரக் கூடாது என்ற மனநிலையில் கர்நாடகம் இருக்கும் போது அங்கு சென்று பேச்சு நடத்தி முதல்-அமைச்சர் விஜய் எதை சாதிக்கப் போகிறார்? அவரது பயணத்தின் மூலம் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது. மாறாக மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகள்  தான் தாரைவார்க்கப்படும். இந்த  தவறை முதல்-அமைச்சர் விஜய் செய்யக் கூடாது.</p><h2>4.5 டிஎம்சி நீர்</h2><p>தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3500 கன அடி வீதம் 15 நாள்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று தான் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த 15 நாள்களில்  வெறும் 4.5 டிஎம்சி நீர் மட்டும் தான் தமிழகத்திற்கு கிடைக்கும். இது ஜுன், ஜுலை மாதங்களில் தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் வழங்க வேண்டிய நீரில் பத்தில் ஒரு பங்கு தான். ஆனால், அந்த அளவுக்கு குறைந்த நீரைத் திறப்பதற்குக் கூட கர்நாடகம் தயாராக இல்லை.</p><h2>காவிரி மேலாண்மை ஆணையம்</h2><p>கர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 4 அணைகளில்  இன்று காலை நிலவரப்படி மொத்தம் 67.078 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. அதுமட்டுமின்றி, 4 அணைகளுக்கும் சேர்த்து வினாடிக்கு 25,644 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.  அதில் ஆறில் ஒரு பங்கு நீரை மட்டுமே திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் ஆணையிட்டுள்ளது. இதனால் கர்நாடக அணைகளின் நீர்மட்டம் குறையாது. மாறாக தினமும் 1.9 டி.எம்.சி  வீதம் அணைகளின் நீர் இருப்பு  15 நாள்களில் 28 டி.எம்.சி அதிகரிக்கும். ஆனாலும் தமிழகத்திற்கு குறைந்த அளவு நீரைக் கூட தருவதற்கு கர்நாடக அரசுக்கு மனமில்லை.</p><h2>பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது</h2><p>காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்; மேகதாது அணை தடுக்கப்பட வேண்டும்; இவை தொடர்பாக கர்நாடக அரசுடன் எந்த பேச்சுகளையும் தமிழ்நாடு  நடத்தக் கூடாது என்பது தான் தமிழக மக்களின் நிலைப்பாடு ஆகும். இதற்கு எதிராக எந்த முடிவையும் முதல்-அமைச்சர் விஜய் மேற்கொள்ளக் கூடாது. எனவே, வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடகம் செல்லும் முடிவை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர்  விஜய்  </a>கைவிட வேண்டும்</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-tomorrow-9</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-tomorrow-9#comments</comments><guid isPermaLink="false">5ad52a41-10c4-4667-afe1-99583cfbcf09</guid><pubDate>Fri, 31 Jul 2026 06:16:57 +0000</pubDate><atom:updated>2026-07-31T06:16:57.251Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,monthly maintenance work,தென்காசி,மாதாந்திர பராமரிப்பு பணி,Power outage tomorrow,நாளை மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/6b0z2b4h/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/6b0z2b4h/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p>திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF">தென்காசி</a> மாவட்டம், சங்கரன்கோவில்,  திருநெல்வேலி கிராமப்புறம், கடையநல்லூர் கோட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை (1.8.2026, சனிக்கிழமை) <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் காரணமாக பின்வருமாறு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>சங்கரன்கோவில் கோட்டம்</h2><p>சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  </p><p>சங்கரன்கோவில், பெருமாள்பட்டி துணை மின் நிலையங்களில் நாளை (1.8.2026, சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் அன்று சங்கரன்கோவில் நகர்பகுதி, என்.ஜி.ஓ.காலனி, களப்பாகுளம், புளியம்பட்டி, வாடிக்கோட்டை, பெரியூர். </p><p>மணலூர், பெரும்பத்தூர், ராமலிங்கபுரம், வடக்குபுதூர், நகரம் முள்ளிகுளம், சீவலராயனேந்தல், பெருங்கோட்டுர், அழகாபுரி ஆகிய ஊர்களுக்கும், பெருமாள்பட்டி, மாங்குடி, இனாம்கோவில்பட்டி, அருகன்குளம்புதூர், செந்தட்டியாபுரம். </p><p>எட்டிச்சேரி, தென்மலை, அ.சுப்பிரமணியாபுரம், இடையான்குளம், முறம்பு, ஆசிலாபுரம். </p><p>கூனங்குளம், பருவக்குடி, பந்தபுளி, பி.ரெட்டியாபட்டி, தெற்கு வெங்காநல்லுார், சோலைச்சேரி, வேலாயுதபுரம் ஆகிய ஊர்களுக்கும் மின்விநியோகம் தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p><h2>திருநெல்வேலி கிராமப்புற கோட்டம்</h2><p>திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>ஊத்துமலை, ஆலங்குளம் மற்றும் கீழப்பாவூர் துணை மின் நிலையங்களில் நாளை (1.8.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணை மின் நிலையங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. </p><p>அதன்படி ஊத்துமலை, கீழக்கலங்கல், குறிஞ்சான்குளம், மேலமருதப்பப்புரம், சோலைசேரி, கருவந்தா, அமுதாபுரம், மாவிலியூத்து, கல்லத்திக்குளம், கங்கணாங்கிணறு, ருக்குமணியம்மாள்புரம். </p><p>ஆலங்குளம், ஆண்டிபட்டி, நல்லூர், சிவலார்குளம், ஆண்டிபட்டி, ஐந்தான்கட்டளை, துத்திக்குளம், கல்லூத்து, குருவன்கோட்டை, குறிப்பன்குளம், அத்தியூத்து, குத்தபாஞ்சான், மாயமான்குறிச்சி, கழுநீர்குளம், அடைக்கலப்பட்டிணம், பூலாங்குளம், முத்துகிருஷ்ணபேரி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>கடையநல்லூர் கோட்டம்</h2><p>கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பகவிநாயகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>புளியங்குடி மற்றும் வீரசிகாமணி துணைமின் நிலையங்களில் நாளை (1.8.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பின்வருமாறு குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் பின்வரும் இடங்களில் இருக்காது. </p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>புளியங்குடி, சிந்தாமணி, அய்யாபுரம், ராஜகோபாலபேரி, ரத்தினபுரி, இந்திராநகர், புன்னையாபுரம், காடுவெட்டி, சிங்கிலிபட்டி, சங்கனாப்பேரி, சிதம்பரபேரி, சுந்தரேசபுரம், திருவேட்டநல்லூர், சொக்கம்பட்டி, திரிகூடபுரம், மேலபுளியங்குடி, முள்ளிகுளம், தலைவன்கோட்டை, துரைசாமியாபுரம், நகரம், மலையடிகுறிச்சி மற்றும் வெள்ளகவுண்டன்பட்டி. </p><p>வீரசிகாமணி, பட்டாடைகட்டி, அருணாச்சலபுரம், அரியநாயகிபுரம், பாம்புகோயில், வென்றி லிங்கபுரம், திருவேட்டநல்லூர், திருமலாபுரம், வடநத்தம்பட்டி, சேர்ந்தமரம் மற்றும் நடுவக்குறிச்சி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணை விவகாரம்: ராகுல் காந்தியை அன்புமணி வம்புக்கு இழுப்பது நியாயமல்ல - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mekedatu-dam-issue-it-is-unfair-for-anbumani-to-pick-a-quarrel-with-rahul-gandhi-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mekedatu-dam-issue-it-is-unfair-for-anbumani-to-pick-a-quarrel-with-rahul-gandhi-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">c7a483af-a915-4433-bb0a-a7597922bf72</guid><pubDate>Fri, 31 Jul 2026 06:14:20 +0000</pubDate><atom:updated>2026-07-31T06:14:20.386Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Tamilnadu,பிரதமர் மோடி,அன்புமணி ராமதாஸ்,தமிழகம்,Modi,காங்கிரஸ்,Congress,Karnataka,ராகுல் காந்தி,Rahul Gandhi,கர்நாடகா,Narendra Modi,மாணிக்கம் தாகூர்,மேகதாது அணை,மேகதாது,Mekedatu,Anbumani Ramadass,Manickam Tagore,Mekedadu Dam</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/zvz8i0kq/anbu.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/zvz8i0kq/anbu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மத்திய பா.ஜ.க. அரசில் அன்புமணி, அவருக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடைக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D">காங்கிரஸ் </a>தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளார். </p><h2>கூட்டணியில் இருந்து வெளியேறத் தயார்</h2><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>நேற்று (ஜூலை 30) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாமக தலைவர் அன்புமணி, ‘ஆகஸ்ட் 1ஆம் தேதி சென்னை வரும், இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மேகதாது அணை கட்டுவது தமிழ்நாட்டிற்கு எதிரானது. </p><p>காவிரியின் குறுக்கே மேகதாது அணை கர்நாடக அரசு அணை கட்டக்கூடாது என்று சொல்வாரா? அப்படி சொன்னால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறத் தயார்" என்று கூறியுள்ளார்.</p><h2>மோடியின் கடமை</h2><p>தமிழ்நாடு  - கர்நாடகம் இடையிலான காவிரி நதி நீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது பிரதமர் நரேந்திர மோடியின் கடமையும், பொறுப்பும் ஆகும். இந்த ஆண்டு மழை பொய்த்ததால், காவிரியில் இருந்து, தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தண்ணீர் வரவில்லை. </p><p>இந்நிலையில், ‘தமிழ்நாட்டிற்கு, தினமும் 3,500 கன அடி வீதம், அடுத்த 15 நாட்களுக்கு  தண்ணீர் திறந்து விட வேண்டும்" என, கர்நாடக அரசுக்கு, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இரு மாநில முதல்வர்களுடன் பேச்சு நடத்தி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை, செயல்படுத்த வைக்க வேண்டியது பிரதமர் நரேந்திர மோடியின் கடமை. ஆனால் அந்த கடமையிலிருந்து பிரதமர் மோடி தவறுகிறார் என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் குற்றச்சாட்டு. நாம் அனைவரும் இதைத்தான் கண்டிக்க வேண்டும்.</p> <h2>தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்ப்பு</h2><p>பாமக தலைவர் அன்புமணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறார். பிரதமர் மோடியை எளிதில் அணுகக்கூடிய நிலையிலும் இருக்கிறார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் இருக்கிறார். </p><p>இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் பேசி, காவிரி பிரச்சினையில் தமிழ்நாட்டிற்கு நியாயம் கிடைக்கவும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடவும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். அவரிடம் இருந்து இதைத்தான்  தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர்.</p><h2>காவிரி பிரச்சினை</h2><p>அதற்கு மாறாக, தேவையில்லாமல் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களை வம்புக்கு இழுப்பது எந்த விதத்திலும் நியாயமல்ல. அவர் பிரதமர் ஆனதும் இந்த கோரிக்கையை அன்புமணி வைக்கலாம். </p><p>காவிரி பிரச்சினையில் தமிழ்நாட்டிற்கு நியாயம் கிடைக்க வேண்டும், தமிழகத்திற்கு உரிய தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. அதில் நாங்கள் எப்போதும் உறுதியாக இருக்கிறோம். </p><h2>காங்கிரஸ்</h2><p>சட்டமன்றத்தில் தமிழ்நாட்டின் நியாயத்திற்காக <a href="https://www.dailythanthi.com/topic/காங்கிரஸ்">காங்கிரஸ் கட்சி</a> எம்.எல்.ஏ.க்கள் எப்போதும் குரல் கொடுப்பார்கள். காவிரி பிரச்சினையில் காங்கிரஸ் அரசியல் செய்ய விரும்பவில்லை. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் நின்று, தமிழ்நாட்டின் குரலை உரக்க வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது. </p><p>எனவே, அன்புமணி அவர்கள் இதில் அரசியலை தவிர்த்து, மத்திய பாஜக அரசில் அவருக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடைக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>கர்நாடகா சென்று தண்ணீரை  தூக்கிட்டு வரப்போறீங்களா? – விஜய் பயணத்திற்கு பெ. சண்முகம் கடும் எதிர்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/are-you-going-to-karnataka-to-fetch-water-pe-shanmugam-strongly-opposes-vijays-visit</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/are-you-going-to-karnataka-to-fetch-water-pe-shanmugam-strongly-opposes-vijays-visit#comments</comments><guid isPermaLink="false">ec886ae1-be1a-4f58-91b4-6ae46eac278b</guid><pubDate>Fri, 31 Jul 2026 06:09:23 +0000</pubDate><atom:updated>2026-07-31T06:09:23.842Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,கர்நாடகா,Karnadaka,காவிரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/4bftcva2/P-shangmugam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சண்முகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/4bftcva2/P-shangmugam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்  மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் பேசியதாவது;- தமிழக முதல் அமைச்சர் விஜய் வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகாவுக்கு சென்று காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்போது நான் என்ன கேட்க விரும்புகிறேன்.. கர்நாடகாவுக்கு சென்று நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்..? நீங்க அங்க போய் ஒண்ணும் நடக்கலைனா என்ன ஆகும் தெரியுமா? அங்கிருந்து தண்ணீரை நேராக தூக்கிட்டு வர போறீங்களா 3 ஆயிரத்து 500 டிஎம்சி தண்ணீரை திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையத்திடம் நேரடியாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. </p><h2>கர்நாடகாவிற்கு ஏன் போக வேண்டும்</h2><p>போனால் தண்ணீரை வாங்கிட்டு வர முடியாது. மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்பது அவர்களுடைய கோரிக்கைகாவிரிக்கு நடுவே அணைக்கட்ட கூடாது என்பது ஏற்கனவே தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒரு விரிவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது .இதை நீங்கள் அங்கு சென்று நாங்கள் அணைகட்ட அனுமதிக்க மாட்டோம் என்று சொல்ல போறீங்களா? இத்தகைய சூழ்நிலையில் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் இப்பொழுது எதற்கு கர்நாடகாவிற்கு செல்ல வேண்டும் ?.அந்தப் பயணத்தை அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.</p><h2>டெல்டா மாவட்டம்</h2><p>ஒருவேளை நீங்கள் அங்கு சென்று காவிரியின் நதிநீர் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடும்போது அவர்கள் தண்ணீரை திறந்து விட முடியாது என்று கூறினால் தமிழ்நாட்டு டெல்டா விவசாயிகளின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை முதலமைச்சர் விஜய் யோசிக்க வேண்டும் இது தேவையற்ற பயணம் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அனுமதி கொடுக்க வேண்டும் என்கிற பிரச்சனை கிடையாது. டெல்டா மாவட்டம் பாலைவனமாக மாறிவிட்டது அங்கு தண்ணீர் கிடையாது” என்றார்.  காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடகா முதல்வர் டி.கே. சிவக்குமாரை சந்தித்து பேசுவதற்காக தமிழக முதல் அமைச்சர் விஜய் ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடகா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  விஜய்யின் இந்த கர்நாடக பயணத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. காவிரி விவகாரத்தில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சினையை அணுகுவது சரியான முடிவாக இருக்காது என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. </p> ]]></content:encoded></item><item><title>நெல்லையில் போலீசாரை தாக்கி தனியார் சொத்துக்கள் சேதம்: 5 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/5-arrested-for-attacking-police-and-damaging-private-property-in-nellai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/5-arrested-for-attacking-police-and-damaging-private-property-in-nellai#comments</comments><guid isPermaLink="false">c2ce53e0-7577-4ef0-b2cd-bfeca54cd46d</guid><pubDate>Fri, 31 Jul 2026 06:01:57 +0000</pubDate><atom:updated>2026-07-31T06:01:57.298Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தாக்குதல்,police,Tirunelveli,திருநெல்வேலி,attack,Damage,சேதம்,private,தனியார்,5 பேர் கைது,போலீசார்,சொத்துக்கள்,Properties,5 arrested</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/zm8jf8ud/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 5 பேர் கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/zm8jf8ud/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>திசையன்விளை பகுதியில் போலீசாரை தாக்கியதோடு, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">தனியார்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">சொத்துக்களை</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">சேதப்படுத்திய</a> வழக்கில் போலீசாரின் துரித நடவடிக்கையால் முக்கிய குற்றவாளி உள்பட <a href="https://www.dailythanthi.com/topic/5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">5 பேர் கைது</a> செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>போலீசார் மீது தாக்குதல்</h2><p>திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் உட்கோட்டம், திசையன்விளை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 24.7.2026 அன்று போலீசாரை தாக்கியதுடன், சொத்துக்களை சேதப்படுத்திய சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க, திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவிட்டார். இதனையடுத்து வள்ளியூர் உட்கோட்ட போலீசார் தனிப்படை அமைத்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.</p><h2>தனியார் சொத்துக்கள் சேதம்</h2><p>விசாரணையில், முக்கிய குற்றவாளியான இசக்கிராஜா என்பவர் மேலும் 8 பேரை திரட்டி, 3 பைக்குகளில் திசையன்விளை மற்றும் இட்டமொழி பகுதிகளுக்குச் சென்று தொடர் சேதப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் திசையன்விளையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பும் மீட்டரை அரிவாளால் சேதப்படுத்தியதுடன், இட்டமொழி சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரையும் சேதப்படுத்தினர். </p><p>அதைத் தொடர்ந்து, இட்டமொழி பகுதியில் ரூ.400-க்கு எரிபொருள் நிரப்பிய பின்னர், அங்குள்ள பெட்ரோல் பங்கின் பெட்ரோல் நிரப்பும் மீட்டரையும் அரிவாளால் சேதப்படுத்தினர். மேலும், இட்டமொழி சாலையில் ஒரு பயணிகள் ஆட்டோ மற்றும் 2 லோடு ஆட்டோக்களையும் சேதப்படுத்தினர்.</p><h2>5 வழக்குகள் பதிவு</h2><p>இந்த சம்பவங்கள் தொடர்பாக திசையன்விளை காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவுகள் மற்றும் தமிழ்நாடு பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்துதல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.</p><h2>5 பேர் கைது</h2><p>இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட இளஞ்சிறார் ஒருவர் உள்பட 4 பேர் முன்னதாகவே கைது செய்யப்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக நேற்று தனிப்படை போலீசார் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையால் முக்கிய குற்றவாளியான மகாதேவன்குளம் பகுதியைச் சேர்ந்த இசக்கிராஜா (வயது 20), அதே பகுதியைச் சேர்ந்தவர்களான முத்துராஜா(18), இசக்கிபாண்டி(23), சுயம்புராஜா(22), தாமரைசெல்வி பகுதியைச் சேர்ந்த சுடலைகண்ணு(23) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.</p><h2>இதுவரை 10-ல் 9 பேர் கைது</h2><p>இந்த வழக்கில் தொடர்புடைய மொத்தம் 10 குற்றவாளிகளில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மீதமுள்ள ஒருவரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவ்வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>தென்அமெரிக்காவில் கட்டப்படும் சமயபுரம் மாரியம்மன் கோவில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/samayapuram-mariamman-temple-to-be-built-in-south-america</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/samayapuram-mariamman-temple-to-be-built-in-south-america#comments</comments><guid isPermaLink="false">af8f0925-3d52-459d-a179-8e9e6b51ac8c</guid><pubDate>Fri, 31 Jul 2026 05:56:26 +0000</pubDate><atom:updated>2026-07-31T05:56:26.576Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>South America,Samayapuram Mariamman Temple,சமயபுரம் மாரியம்மன் கோவில்,Samayapuram,Samayapuram Mariamman,சமயபுரம் மாரியம்மன்,சமயபுரம்,தென்அமெரிக்கா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/s5fq2dux/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/s5fq2dux/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தென் அமெரிக்காவில் ராஜகோபுரம், தெப்பக்குளத்துடன் சமயபுரம் மாரியம்மன் கோவில் கட்டப்பட இருக்கிறது.</p><h2>சமயபுரம் மாரியம்மன் கோவில்</h2><p>சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்வது வழக்கம். </p><p>அந்தவகையில், அமெரிக்க நாட்டை சேர்ந்த ரூபினா அரோன் என்ற இளம்பெண் பக்தர் சமயபுரத்தில் நடக்கும் விழாக்களில் கலந்து கொண்டு தீ மிதிப்பது, அக்கினி சட்டி ஏந்தி தமிழ் பக்தர்கள் மரபில் சாமி தரிசனம் செய்து வருகிறார். இந்த நிலையில், தென் அமெரிக்காவில் உள்ள கயானாவில் சமயபுரம் மாரியம்மன் கோவில் போன்று ஒரு கோவில் கட்ட இருக்கிறார். இதற்காக சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனைகளைப் பெற்றார்.</p><p>52 ஏக்கர் பரப்பில்...</p><p>இதுகுறித்து சென்னையில் ரூபினா அரோன் நிருபர்களிடம் கூறும்போது, "தென்அமெரிக்காவிலுள்ள கயானாவில் வசித்தாலும் சமயபுரம் மாரியம்மன் தான் எங்களுக்குக் காவல் தெய்வம். ஆண்டுதோறும் ஆடிமாதம் சித்திரை தேர் திருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வேன். சென்ற ஆண்டு அம்மனிடம் வைத்த ஒரு வேண்டுதல் நிறைவேறியது. தொடர்ந்து அங்க பிரதிஷ்டை செய்து நேர்த்திக்கடனை அருளும்படி வேண்டிக் கொண்டேன்.</p><p>அமெரிக்கா கயானாவில் 5% ஏக்கர் நிலப்பரப்பில் ராஜகோபு ரத்துடன் சமயபுரம் மாரியம்மன் கோவில் கட்ட முடிவு செய்துள்ளோம். சமயபுரம் மாரியம்மன், விநாயகர், முருகன், சிவன், நவகிரகங்கள், தெப்பக்குளம், யாகசாலை, தீமிதி மைதானம், கலாசார மையம் ஆகியவற்றை அமைக்க இருக்கிறோம். இதற்கு உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான நாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கத்தினர் நிதி உதவி வழங்குகின்றனர்.</p><p>அதற்கு அம்மனின் முழு அருளும் கிடைக்க அங்க பிரதிஷ்டை வழிபாடு செய்தேன். இந்த பிரார்த்தனை நிறைவேறியதும் அடுத்த ஆண்டு தேர் திருவிழாவில் கண்டிப்பாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுப்பேன். எங்கள் நாட்டில் கோவில் கட்டுவதற்காக தமிழக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளையும் சந்தித்து ஆலோசனையும் பெற்றுள்ளேன்' என்றார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழர்களை மது அடிமைகளாக மாற்றப் போகிறோமோ?..மதுக்கடைகளை மூடுங்கள்!  - அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/are-we-going-to-turn-tamils-into-alcohol-slavesshut-down-the-liquor-shops-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/are-we-going-to-turn-tamils-into-alcohol-slavesshut-down-the-liquor-shops-anbumani#comments</comments><guid isPermaLink="false">ec5bc6f1-3d20-4a91-81a3-f540a90a5b0a</guid><pubDate>Fri, 31 Jul 2026 05:54:40 +0000</pubDate><atom:updated>2026-07-31T05:54:40.425Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK,அன்புமணி,Anbumani</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/vnefyska/Untitled-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/vnefyska/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>மிகப்பெரிய ஆபத்து</h2><p>தமிழ்நாட்டில் உடனடியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், தமிழர்களின் மரபணுவிலேயே மது மீதான மோகமும், அடிமைத்தனமும் பதிந்து விடும் என்று  பொது சுகாதார வல்லுனர்கள் கூறியுள்ளனர். இது எந்த வகையிலும் அதிர்ச்சியளிக்கவில்லை. மாறாக, தமிழ்நாடு மிகப்பெரிய ஆபத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் சூழலில், மிகச் சரியான தருணத்தில் ஊதப்பட்டிருக்கும் அபாய சங்காகவே இது தோன்றுகிறது.</p><p>தமிழக அரசின் மருத்துவத் துறையில் பொது சுகாதாரத்துறை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவரான மருத்துவர் குழந்தைசாமி தான் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறார். ‘‘தமிழகத்தில், 1971-ஆம் ஆண்டில்  மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது.  அப்போது  தொடங்கி, இப்போது வரையிலான 55 ஆண்டுகளில் இரண்டு தலைமுறையினர் மது குடிக்கின்றனர். இதனால், மது குடிப்பவர்களின் குழந்தைகளின் மரபணுக்களில் பாதிப்பு ஏற்படுகிறது. இப்போதுள்ள மூன்றாவது தலைமுறையும் மதுவை தொடர்ந்து குடித்தால், அது  தமிழர்களின் மரபணுக்களில் மாற்றத்தை ஏற்படுத்தி, தமிழர்களை மது மீது மோகம் கொண்டவர்களாகவும், மதுவுக்கு அடிமையானவர்களாகவும் மாற்றி விடும். அதற்குபின் பிறக்கும் குழந்தைகள் மதுவுக்கு அடிமைகளாகவே பிறக்க வாய்ப்பு உள்ளது’’ என்று மருத்துவர் குழந்தைசாமி எச்சரித்திருக்கிறார். அவரது எச்சரிக்கை உண்மை தான். இதையே தான் பாட்டாளி மக்கள் கட்சியும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகிறது.</p><h2>200 நோய்கள் வரை தாக்கும்</h2><p>மதுவால்  ஏற்படும் பாதிப்புகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து தான் வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மது குடிப்பவர்களை  60  நோய்கள் தான் தாக்குவதாக எச்சரிக்கப்பட்டு வந்த நிலையில், அண்மைக்காலமாக 200 நோய்கள் தாக்குவதாக உலக சுகாதார நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மது அருந்துபவர்களுக்கு 7 வகையான புற்றுநோய்கள், கல்லீரல் இழைநார் வளர்ச்சி (Liver Cirrhosis), நிமோனியா, காசநோய், ஆண்மையிழப்பு போன்றவை அவற்றில் முக்கியமானவை ஆகும்.</p><p>சங்க இலக்கியங்களில் மட்டுமின்றி, மருத்துவ ஆராய்ச்சிகளிலும் தமிழர்கள் நோய்களை வென்றவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால்,  தொடர்ந்து  55 ஆண்டுகளாக மதுவைக் குடிப்பதால் அவர்களின் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மரபணுக்களில் </a>மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இளம் வயதிலேயே தமிழர்கள் பல்வேறு நோய்களுக்கு அடிமையாகி வருகின்றனர். பொது சுகாதாரத்துறை வல்லுனர்களின் எச்சரிக்கை இந்தக் கருத்தை உறுதி செய்திருக்கிறது.</p><h2>மதுவை வெள்ளமாக ஓட விட்ட திமுக</h2><p>தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்கள் காலத்திலேயே, 1937-38 ஆம் ஆண்டுகளில்  இன்றைய  தமிழ்நாட்டின் அங்கமாக இருக்கும் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை  ஆகிய மாவட்டங்களில் முழு மதுவிலக்கை ராஜாஜி ஏற்படுத்தினார். இந்தியா விடுதலையடைந்த காலத்தில்  சென்னை மாகாணத்தின் முதல்-அமைச்சராக இருந்த  ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஒட்டுமொத்த சென்னை மாகாணத்திற்கும் மதுவிலக்கை நீட்டித்தார். அப்போது தொடங்கி 1971ஆம் ஆண்டு வரை 25 ஆண்டுகள் ஒரு தலைமுறையே மதுவை மறந்திருந்தது. 1971ஆம் ஆண்டில் ராஜாஜியின் எச்சரிக்கையையும் மீறி  சாராயக்கடைகளை திறந்து மதுவை வெள்ளமாக ஓட வைத்தது கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சி தான்.</p><p>கடந்த திமுக ஆட்சியில் மதுப் புழக்கம் புதிய பரிமாணத்தை அடைந்தது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 5000 மதுக்கடைகள் இருந்த நிலையில், அவற்றையொட்டிய பகுதிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சந்துக்கடைகளை திறந்து, தெருவுக்கு தெரு மது கிடைப்பதை திமுக அரசு உறுதி செய்தது. 500 மதுக்கடைகளை மூடியதாக அறிவித்த திமுக அரசு, அதற்கு பதிலாக 1200-க்கும் கூடுதலான மனமகிழ் மன்றங்களைத் திறந்தது. அதுமட்டுமின்றி, மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 284 குடிப்பகங்களிலும் மதுவணிகத்தை திமுக அரசு நடத்தியது. இதனால் திமுக ஆட்சியில் மிகப்பெரிய அளவில் இளைஞர்கள் மதுவுக்கு அடிமையானார்கள்.</p><h2>முழு மதுவிலக்கு வேண்டும்</h2><p>முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத்தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவற்றுக்கு அருகில் செயல்பட்டு வந்த மதுக்கடைகள் மூடப்பட்ட போது, இந்த ஆட்சியில் மது கட்டுப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், ரெஸ்டோ பார்களை திறக்க அனுமதி அளிக்கவும், அரசு மதுக்கடைகளை தனியார்மயமாக்கவும் அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் இந்த நம்பிக்கையை குலைத்துவிட்டன. மதுவைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் தவெகவின் ஆட்சியும் திமுக ஆட்சியின் நீட்சியாகவே திகழுமோ என்ற கவலை தமிழக மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது.</p><p>தமிழர்கள் நோயில்லா வாழ்வுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள். அவர்களின் வரலாற்றில் மதுவுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டதில்லை. அப்படிப்பட்ட தமிழ்ச் சமுதாயத்தை நிரந்தரமான குடிகார சமுதாயமாக மாற்றி விடக் கூடாது. எனவே, மதுவணிகத்தை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஊக்குவிக்கும் </a>வகையிலான திட்டங்களை அரசு கைவிட்டு, படிப்படியாக மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வில் சாதனை படைத்த திருப்பூர் அரசுப் பள்ளி மாணவ-மாணவிகள்: நயினார் நாகேந்திரன் பாராட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendran-praises-tiruppur-government-school-students-for-achieving-success-in-neet-exam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendran-praises-tiruppur-government-school-students-for-achieving-success-in-neet-exam#comments</comments><guid isPermaLink="false">e7d5207b-ef24-4475-9071-bcb5ce6b6337</guid><pubDate>Fri, 31 Jul 2026 05:38:06 +0000</pubDate><atom:updated>2026-07-31T05:38:06.245Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,நீட் தேர்வு,NEET Exam,Achievement,பாராட்டு,Government School Students,மாணவ-மாணவிகள்,அரசுப் பள்ளி,சாதனை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/0wi49i1i/nainar.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/0wi49i1i/nainar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர், </p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>நீட் தேர்வில் தேர்ச்சி</h2><p>அரிய சாதனைகள் எப்போதும் எளிய பின்னணியில் இருந்தே தொடங்குகின்றன என்பதை திருப்பூர் மாவட்டம், இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 10 மாணவ-மாணவிகள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டியுள்ளனர். நடப்பு நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, தங்களது மருத்துவக் கனவை நனவாக்கியுள்ள இந்த இளம் சாதனையாளர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2>மனமார்ந்த பாராட்டுகள்</h2><p>சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வந்து, "முயற்சி திருவினையாக்கும்" என்பதற்கு இலக்கணமாகத் திகழும் இம்மாணவர்களில் 9 பேர், முதல் முயற்சியில் ஏற்பட்ட சறுக்கல்களால் சோர்ந்து போகாமல், விடாமுயற்சியுடன் மறுமுறைத் தேர்வு (Repeaters) எழுதி சாதித்துள்ளனர். இம்மாணவர்களோடு சேர்ந்து அவர்களின் மருத்துவக் கனவுக்கு தோள் கொடுத்த அன்புப் பெற்றோர்களுக்கும், அர்ப்பணிப்புடன் வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">பாராட்டு</a>கள்.</p><p>சமூக மற்றும் பொருளாதாரப் பின்னணி ஒருவரது கனவுகளுக்குத் தடையல்ல என்பதை இம்மாணவர்களின் வெற்றி நிரூபித்துள்ளது. தங்களது உழைப்பால் உயர்ந்து, எதிர்காலத்தில் ஏழை, எளிய மக்களுக்குச் சேவை செய்யும் சிறந்த மருத்துவர்களாக உருவாக இவர்களை வாழ்த்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பாறைகளாக காட்சியளிக்கும் ஒகேனக்கல் காவிரி ஆறு - குடிநீர் தட்டுப்பாடு அபாயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-river-in-hogenakkal-appears-as-rocks-danger-of-water-shortage</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-river-in-hogenakkal-appears-as-rocks-danger-of-water-shortage#comments</comments><guid isPermaLink="false">800d61b4-e194-487e-a308-8cc6eee86d16</guid><pubDate>Fri, 31 Jul 2026 05:27:56 +0000</pubDate><atom:updated>2026-07-31T05:27:56.573Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Hogenakkal,ஒகேனக்கல்,Hogenakkal Cauvery river,ஒகேனக்கல் காவிரி ஆறு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/7zwy2pve/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/7zwy2pve/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>தர்மபுரி,</p><h2>நீர்வரத்து குறைந்தது</h2><p>கர்நாடக மாநிலம் குடகுமலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு தமிழக எல்லையான தர்மபுரி மாவட்டம் பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வருகிறது. மேலும் கர்நாடக மாநில அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு வெள்ளமாக ஓடும்.</p><p>அப்போது இங்குள்ள மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு அருவிகள், காவிரி கரையோர பகுதிகளில் குளித்து மகிழ்வர். மேலும் குடும்பத்தினருடன் உற்சாகமாக பரிசலில் சென்று காவிரியின் அழகை கண்டு ரசிப்பர்.</p><p>இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடங் காததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அடியோடு குறைந்து விட்டது. இத்தகைய சூழ்நிலையில் கர்நாடக அணையில் இருந்து நீர் திறப்பு முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் கர்நாடக அரசு காவிரி ஆற்றில் தண்ணீரை திறந்து விட மறுக்கிறது. இதனால் நீர்வரத்து முற்றிலுமாக சரிந்துள்ளது.</p><h2>பாறைகளாக காட்சி அளிக்கிறது</h2><p>குறிப்பாக ஒகேனக்கல் காவிரி ஆற்றுப்பகுதி முழுவதும் கடந்த ஆண்டு இதேகாலக்கட்டத்தில் நீர் நிரம்பி இருந்த நிலை மறைந்து தற்போது வெறும் பாறைகளாக மட்டுமே காட்சியளிக்கிறது. ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட பகுதிகள் முழுமையாக வறண்டு கிடக்கின்றன. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28-ந் தேதி காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால் தற்போது நீர்வரத்து குறைந்து பாறைகளாக காட்சியளிக்கிறது. ஆங்காங்கே தண்ணீர் தேங்கி குட்டை போல காட்சியளிக்கிறது.</p><h2>குடிநீர் தட்டுப்பாடு</h2><p>காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதுமான மழை இல்லாததாலும், கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதாலும் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கான தண்ணீர் எடுக்க தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. நீர்வரத்து குறைவால் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் சுற்றுலாவை நம்பி உள்ள பரிசல் ஓட்டிகள், உணவு சமைப்பவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சேலத்தில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-arrested-in-salem-for-sexually-harassing-a-17-year-old-girl</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-arrested-in-salem-for-sexually-harassing-a-17-year-old-girl#comments</comments><guid isPermaLink="false">2f9f162b-70f6-4899-b902-687eac5908c9</guid><pubDate>Fri, 31 Jul 2026 05:24:48 +0000</pubDate><atom:updated>2026-07-31T05:24:48.790Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாலியல் தொல்லை,Youth arrested,வாலிபர் கைது,Salem,சேலம்,police enquiry,sexual abuse</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/wjk5b49l/41.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ ஹரிகரன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பாலியல் தொல்லை வழக்கில் கைதான வாலிபர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/wjk5b49l/41.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம் மாவட்டத்தில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>பாலியல் தொல்லை</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சேலம் மாவட்டம் </a>வாழப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. அந்த சிறுமிக்கு ஹரிகரன் (வயது 28) என்ற வாலிபர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.</p><h2>வாலிபர் கைது</h2><p>சிறுமிக்கு பாலியல் ரீதியான அத்துமீறல் மற்றும் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஹரிகரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> கைது </a>செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>151 முதுநிலை மருத்துவ இடங்களை இழப்பது தமிழக எதிர்கால சுகாதார சேவைக்கும் இழப்பு! - சீமான்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/losing-151-postgraduate-medical-seats-is-a-loss-for-the-future-of-tamil-nadus-healthcare-system-seeman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/losing-151-postgraduate-medical-seats-is-a-loss-for-the-future-of-tamil-nadus-healthcare-system-seeman#comments</comments><guid isPermaLink="false">bd50a8c2-74d4-42e9-b0d3-a88d8eadf99c</guid><pubDate>Fri, 31 Jul 2026 05:19:11 +0000</pubDate><atom:updated>2026-07-31T05:19:11.379Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>நாதக,சீமான்,NTK,Seeman,நாம் தமிழர் கட்சி,Naam Thamilar Katchi,சீமான் கண்டனம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/svy9ov4q/Untitled-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/svy9ov4q/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ்நாட்டு அரசு மருத்துவர்களுக்கு சேர வேண்டிய 151 முதுநிலை மருத்துவ இடங்களை ஒன்றிய ஒதுக்கீட்டிற்கு தாரைவார்த்துட்டு, அதில் 50% மீள கிடைக்கும் என்ற தீர்ப்பை தவெக அரசு வெற்றி என்று கொண்டாடுவது வெட்கக்கேடானது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>151 இடங்கள் பறிகொடுப்பு</h2><p>தமிழ்நாட்டு அரசு மருத்துவர்களுக்கு சேர வேண்டிய 151 முதுநிலை மருத்துவ இடங்களை மத்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தவெக அரசு வலுவான வாதங்களை எடுத்து வைக்கத்தவறி, இடங்களை பறிகொடுத்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு சார்பாக முன்நின்று வாதங்களை முன்வைக்கக்கூட தவறியுள்ளது தமிழ்நாட்டின் உரிமையைத் தாரைவார்க்கும் பெருங்கொடுமையாகும். </p><p>தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு மொத்தம் 415 இடங்கள் உள்ளன. அவற்றில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு, முதுநிலை மற்றும் பல்நோக்கு சிறப்பு மருத்துவப் படிப்புகளில் வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இடஒதுக்கீடானது, நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், இந்திய மத்திய அரசால் தொடுக்கப்பட்ட வழக்கின் காரணமாக, கடந்த 2017ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் நீக்கப்பட்டது. அதனை எதிர்த்து, 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் இந்திய மருத்துவ கழகத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. </p><h2>உரிமை மீண்டும் பறிப்பு</h2><p>நீண்டகால சட்டப்போராட்டத்தின் விளைவாக, கடந்த 2020ஆம் ஆண்டு அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை உச்சநீதிமன்றம் வழங்கியது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு அரசாணை எண் 462ஐ பிறப்பித்து, முதுகலை மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நடைமுறைப்படுத்தியது</a>. ஓய்வு பெறும் வரை அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டிய கட்டுப்பாட்டில் உள்ள அரசு மரு‌த்துவ‌ர்களு‌க்கான இடஒதுக்கீடு என்பது வெறும் கல்வி வாய்ப்பு அல்ல; அது மாநிலத்தின் பொது சுகாதார கட்டமைப்பை பாதுகாக்கும் உயர்நோக்கு கொள்கையாகும்.</p><p>ஆனால், நடப்பு கல்வியாண்டிற்கான முதுநிலை மருத்துவப் படிப்புச் சேர்க்கையில், அரசு மருத்துவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 219 இடங்களில், நிரப்பப்படாத 151 இடங்களை அனைத்திந்திய ஒதுக்கீட்டிற்கு மாற்ற, கடந்த 29.05.2026 அன்று உச்சநீதிமன்றம் இட்ட உத்தரவினால், தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் உயர்கல்வி உரிமை மீண்டும் பறிக்கப்பட்டது. தவெக அரசின் அலட்சியத்தால் 151 மருத்துவ இடங்கள் பறிபோவதை கடுமையாக கண்டித்து கடந்த 03.06.2026 அன்று அறிக்கை வெளியிட்டதோடு, நீட் மதிப்பெண் வரம்பு குறைப்புக்காக தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான அரசு மருத்துவர்கள் காத்திருக்கும் சூழலில், இந்திய மத்திய அரசு மாநில அரசுக்கு சொந்தமான உயர் மருத்துவ இடங்களை நீதிமன்றத்தின் மூலம் பறிக்கும் சூழ்ச்சியை தமிழ்நாடு அரசு சட்டப்போராட்டம் நடத்தி தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தேன். ஆனால் அதன் பிறகும் திறமையான மூத்த வழக்கறிஞர்களை நியமித்து, வழக்கினை திறம்பட தவெக அரசு நடத்தாததன் விளைவே தற்போது மீண்டும் தனது தீர்ப்பினை உச்சநீதிமன்றம் உறுதி செய்ய முதன்மைக்காரணமாகும். </p><h2>கொண்டாடுவது வெட்கக்கேடானது</h2><p>கடந்த சில ஆண்டுகளாக இந்திய மருத்துவ ஆலோசனைக் குழு (MCC) மருத்துவக் கலந்தாய்வு நீட் மதிப்பெண் வரம்பினை (NEET cut-off percentile) தொடர்ந்து குறைத்து வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அது முற்றிலுமாக (Zero percentile) குறைக்கப்பட்டது. ஆனால் இந்திய மருத்துவ ஆலோசனைக் குழு இந்த ஆண்டு திட்டமிட்டு நீட் மதிப்பெண் (cut-off) குறைப்பு அறிவிப்பை வேண்டுமென்றே வெளியிடாமல் தாமதப்படுத்தி, அனைத்திந்திய இரண்டாம் சுற்று கலந்தாய்வையும் நீட்டித்தது. அதன் மூலம் தமிழ்நாட்டில் காலியாக உள்ள சேவை இடங்களை இந்திய ஒதுக்கீட்டில் சேர்க்க முயன்று, அதனை உச்சநீதிமன்ற வழக்கின் மூலம் சாதித்தது. </p><p>அதனை தனது வாதத்தில் சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு கிடைக்க வேண்டிய இடங்களை முழுமையாக மீண்டும் திருப்பித்தர வேண்டும் என்ற உத்தரவை தமிழ்நாடு அரசு பெற்றிருக்க வேண்டும். அதனை விடுத்து, ஒருவேளை இரண்டாம் சுற்று கலந்தாய்வும் முடிந்து, நீட் மதிப்பெண் வரம்பினைக் குறைக்க நேரிட்டால், அப்போது 50 சதவீத இடங்களை அதாவது 151 இல் பாதி இடங்களை மாநில அரசு ஒதுக்கீட்டிற்கு தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏதோ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுபோல அமைச்சர் அருண்ராஜ் கொண்டாடுவது வெட்கக்கேடானது. இதுதான் தவெக அரசு தமிழ்நாட்டு உரிமைகளைக் காக்கும் முறையா? </p><h2>உரிமையை இழந்துள்ளோம்</h2><p>உண்மையில் தமிழ்நாட்டு மருத்துவர்களுக்கு சேர வேண்டிய 151 இடங்கள் பறிபோயுள்ளது. அதில் பாதி, அதாவது 151 இடங்களில் நிரம்பியதுபோக, மீதமுள்ள இடங்களில் பாதி இடங்கள், அதுவும் நீட் மதிப்பெண்ணைக் குறைக்க நேரிட்டால் மட்டுமே கிடைக்கும் சாத்தியம் உள்ளது. ஆனால், NEET SS cut-off குறைப்பு பொதுவாக மூன்றாம் சுற்று கலந்தாய்வின் போது அறிவிக்கப்படுவதால், அதற்குள் இந்த 151 இடங்களில் பெரும்பாலானவை அரசு சாரா (Non-Service) மருத்துவர்களால் நிரப்பப்பட்டிருக்கும். </p><p>எனவே, அவை உச்சநீதிமன்றம் 75 இடங்களை ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தாலும், அதுகூட மீண்டும் கிடைக்கும் வாய்ப்பு மிகமிக குறைவே. தமிழ்நாட்டின் உரிமையை இழந்துள்ளோம் என்பதைக் கூட அறியாமல், அதனை ஏதோ பெரிய சாதனை போல தவெக அரசு கொண்டாடுவதுதான் மிகுந்த வேதனைக்குரியதாகும். 151 உயர் சிறப்பு மருத்துவ இடங்களை இழப்பது என்பது வெறும் அரசு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மருத்துவர்களுக்கான </a>இழப்பு மட்டுமல்ல; எதிர்காலத்தில் தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய 151 உயர்சிறப்பு அரசு மருத்துவர்களை இழப்பதாகும்.</p><p>ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாக உச்சநீதி மன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்து, நம்முடைய அரசு மருத்துவர்களின் உயர் மருத்துவப் படிப்பிற்கான இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆடி அமாவாசை - காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aadi-amavasya-restrictions-on-devotees-to-visit-karaiyaru-sorimuthu-ayyanar-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aadi-amavasya-restrictions-on-devotees-to-visit-karaiyaru-sorimuthu-ayyanar-temple#comments</comments><guid isPermaLink="false">cc2de6f5-0d8d-4b93-9de3-bdefa27ac05b</guid><pubDate>Fri, 31 Jul 2026 05:06:59 +0000</pubDate><atom:updated>2026-07-31T05:06:59.952Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Devotees,Restrictions,aadi amavasai,ஆடி அமாவாசை,Sorimuthu Ayyanar Temple,சொரிமுத்து அய்யனார் கோவில்,கட்டுப்பாடு,பக்தர்களுக்கு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/huouhix1/sorimuthu-ayyanar.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/huouhix1/sorimuthu-ayyanar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>ஆன்மிகம் (Devotional)</category><content:encoded><![CDATA[ <p>பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவுக்கு அரசு பஸ்களில் மட்டுமே சென்று வர பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். வனப்பகுதியில் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><h2>சொரிமுத்து அய்யனார் கோவில்</h2><p>பாபநாசம் காரையாறு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">சொரிமுத்து அய்யனார் கோவில்</a> ஆடி அமாவாசை திருவிழாவிற்காக பக்தர்கள் நலன் கருதி பல்வேறு சிறப்பான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. பக்தர்கள் வனத்துறை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, 4 மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய தாமிரபரணி ஆறு மற்றும் அது உருவாகும் வனத்தில் இயற்கை சூழலை பாதுகாப்பதன் அவசியத்தையும் உணர்ந்து அனைத்து துறை அலுவலர்களுக்கும் நன்முறையில் ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.</p><h2>6 நாட்கள் அனுமதி</h2><p>கூட்ட நெரிசலால் ஏற்படும் பாதிப்பை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் முந்தைய ஆண்டுகள் போலவே இந்த ஆண்டும் பாரம்பரிய முறைப்படி 6 நாட்கள் வரை வழிபாடு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் பொருட்களை எடுத்து செல்ல ஆகஸ்டு 9-ந் தேதி காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டும் பாபநாசம் சோதனைச்சாவடியில் இருந்து வாகனங்கள் அனுமதிக்கப்படும். ஆகஸ்டு 7 மற்றும் 8 ஆகிய நாட்கள் முழுவதும் கோவில் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளும் காரணத்தினால் அரசு பஸ், தனியார் உள்ளிட்ட எந்த வாகனங்களும் பாபநாசம் சோதனைச்சாவடியில் அனுமதிக்கப்படமாட்டாது.</p><h2>அரசு பஸ்களில் மட்டுமே அனுமதி</h2><p>ஆகஸ்டு 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை பக்தர்கள் பாரம்பரிய சடங்குகள் மேற்கொள்ள முந்தைய ஆண்டுகள் போலவே கோவிலில் தங்க அனுமதிக்கப்படுகிறது. பக்தர்கள் அகஸ்தியர்பட்டி தற்காலிக பஸ்நிலையத்தில் இருந்து அரசு பஸ்களில் மட்டுமே கோவிலுக்கு சென்று வர அனுமதிக்கப்படுவார்கள். தனியார் வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படமாட்டாது.</p><h2>வழக்கமான நடைமுறை</h2><p>ஆகஸ்டு 13-ந் தேதி காலை குறைவான எண்ணிக்கையில் மட்டுமே பஸ்கள் இயக்கப்படும். பக்தர்கள் பொருட்களை கீழே கொண்டு வருவதற்காக மட்டும் தனியார் வாகனங்களுக்கு ஆகஸ்டு 14-ந் தேதி காலை 6 மணி முதல் மாலை 3 மணிவரையிலும் பாபநாசம் கோவில் பார்க்கிங் பகுதியில் பாஸ் வழங்கப்பட்டு அனுமதிக்கப்படும். கீழே இறங்கும் பக்தர்களுக்காக அரசு பஸ்கள் ஏற்பாடு செய்யப்படும். ஆகஸ்டு 15, 16-ந் தேதிகளில் தூய்மை பணிகள் மற்றும் கோவில் உழவார பணி காரணமாக பொதுமக்கள் பாபநாசம் சோதனை சாவடியை கடந்து செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்டு 17-ந் தேதி முதல் வழக்கமான நடைமுறைப்படி கோவிலுக்கு சென்று வரலாம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-tomorrow-13</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-tomorrow-13#comments</comments><guid isPermaLink="false">bed35c83-222d-4b47-8962-a92d7fbc4767</guid><pubDate>Fri, 31 Jul 2026 05:06:03 +0000</pubDate><atom:updated>2026-07-31T05:06:03.554Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,monthly maintenance work,மாதாந்திர பராமரிப்பு பணி,Power outage tomorrow,நாளை மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/dgrxfs52/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/dgrxfs52/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூர், திருநெல்வேலி நகர்ப்புறம், கல்லிடைக்குறிச்சி ஆகிய கோட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை (1.8.2026, சனிக்கிழமை) <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் காரணமாக பின்வருமாறு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>வள்ளியூர் கோட்டம்</h2><p>வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>பணகுடி துணை மின் நிலையத்தில் நாளை (1.8.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணை மின் நிலையத்தில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் கீழே குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது. </p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>பணகுடி, லெப்பைகுடியிருப்பு, புஷ்பவனம், குமந்தான், காவல்கிணறு, சிவகாமிபுரம், தளவாய்புரம், பாம்பன்குளம், கலந்தபனை, கடம்பன் குளம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம்</h2><p>திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம் செயற்பொறியாளர் ரவிராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>பழையபேட்டை மற்றும் பொருட்காட்சி திடல் துணை மின் நிலையத்தில் நாளை (1.8.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. </p><p>அதன்படி திருநெல்வேலி டவுன், மேலரத வீதி மேல் பகுதிகள், தெற்கு ரத வீதி தெற்கு பகுதிகள், வடக்கு ரத வீதி வடக்கு பகுதிகள், பழையபேட்டை, காந்திநகர் ,திருப்பணி கரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை, தொழிற்பேட்டை கோட்டீஸ்வரன்நகர், சாஸ்திரிநகர், தீன்நகர், திருமங்கைநகர், செந்தமிழ்நகர், பாட்டப்பத்து, அபிஷேகப்பட்டி, பொருட்காட்சிதிடல், திருநெல்வேலி டவுன் SN ஹை ரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம் ,சிவந்தி ரோடு, சுந்தர தெரு, பாரதியார் தெரு, C.N.கிராமம், குறுக்குத்துறை, கருப்பன்துறை, டவுன் கீழ ரத வீதி வீதி, போஸ் மார்க்கெட், A.P. மாடத் தெரு, சாமி சன்னதி தெரு, அம்மன் சன்னதி தெரு, மேல மாடவீதி, கள்ளத்திமுடுக்கு தெரு, நயினார்குளம் ரோடு, சத்தியமூர்த்தி தெரு, போத்தீஸ் நயினார்குளம், மார்க்கெட், வ.உ.சி. தெரு, வையாபுரிநகர், பாரத் இந்துஸ்தான் பெட்ரோலியம், சிவன்கோவில், தெற்கு தெரு, ராம்நகர் மற்றும் ஊர் உடையான் குடியிருப்பு பகுதிகள் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>கல்லிடைக்குறிச்சி கோட்டம்</h2><p>கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும்பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>கல்லிடைக்குறிச்சி கோட்டம், ஓ.துலுக்கப்பட்டி, வீரவநல்லூர், அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, கடையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (1.8.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணை மின் நிலையங்களில் பின்வரும் நேரங்களில் பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம் பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும். </p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>ஆழ்வான்துலூக்கப்பட்டி, ஒ.துலூக்கப்பட்டி, செங்குளம், பாப்பாகுடி, கபாலிபாறை, இடைகால், அணைந்தநாடார்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்தப்பாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை. </p><p>அம்பாசமுத்திரம், ஊர்க்காடு, வாகைகுளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி. </p><p>மணிமுத்தாறு, ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவிகுளம், பொன்மாநகர், தெற்குபாப்பன்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம்.  </p><p>கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், வெள்ளாங்குளி,  ரெங்கசமுத்திரம், கூனியூர், காருகுறிச்சி. </p><p>கடையம், கட்டேரிபட்டி, முதலியார்பட்டி, பண்டாரகுளம், பொட்டல்புதூர், திருமலையப்புரம், ரவணசமுத்திரம், வள்ளியம்மாள்புரம், சிவநாடனூர், மாதாபுரம், மைலப்பபுரம், வெய்காலிப்பட்டி, மேட்டூர், கோவிந்தபேரி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மேற்கு தொடர்ச்சி மலை பகுதி பாதுகாக்கப்படுமா? - மத்திய அரசு வரைவு அறிக்கை வெளியீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-western-ghats-region-be-protected-central-government-releases-draft-report</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-western-ghats-region-be-protected-central-government-releases-draft-report#comments</comments><guid isPermaLink="false">1588b8f6-e653-4094-8781-3b37e7d5ef9e</guid><pubDate>Fri, 31 Jul 2026 04:53:30 +0000</pubDate><atom:updated>2026-07-31T04:53:30.112Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழ்நாடு,மத்திய அரசு,Central Government,மேற்கு தொடர்ச்சி மலை,Western Ghats</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/eme6fk9w/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/eme6fk9w/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><h2>இயற்கையின் அருள்கொடை</h2><p>மேற்கு தொடர்ச்சி மலை இயற்கையின் அருள்கொடை. இதனால் தான் தமிழ்நாட்டின் மேற்கு பகுதியான கோவை, நீலகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் மழையை பெறு வதுடன், பசுமையான பகுதியாக விளங்கி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் மருந்துவாழ் மலையில் தொடங்கி குஜராத், மராட்டிய எல்லையில் உள்ள தபதி ஆற்றுக்கு தெற்கே முடிவடைகிறது. இதனால் குஜராத், மராட்டியம், கோவா, கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு ஆகிய பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலையால் பசுமை பயனை அடைகின்றன.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/ixj5kbpt/Untitled-3.jpg" /></figure><h2>அனைத்தும் அதிசயங்கள்...</h2><p>1 லட்சத்து 29 ஆயிரம் சதுர கிலோ பரப்பளவு கொண்ட இந்த மலைத் தொடர் தென்இந்தியாவுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கி வருகிறது. இது, அரபிகடலில் இருந்து வரும் குளிர்ந்த காற்றை தடுத்து தென் மாநிலங்களுக்கு நல்ல மழையை தருகிறது. மேலும் முள்புதர் காடுகள், புல்வெளி பிரதேசங்கள், சோலை காடுகள் உள்ளிட்ட இயற்கை அன்னையின் அனைத்து அதிசயங்களையும் தன்னகத்தே கொண்டு உள்ளது.</p><p>இந்த மலையில் நீலகிரி வரையாடு, சிங்கவால் குரங்கு, ஆசிய யானைகள். மலபார் அணில், இருவாச்சி பறவைகள், நீலகிரி பறவை, பலவகையான அரிய மர தவளைகள், பாம்புகள், அரிய பறவைகள் என்று ஏராளமான உயிரினங்கள் வசித்து வருகின்றன.</p> <h2>முக்கிய அச்சுறுத்தல்கள்</h2><p>இந்த மலைத்தொடரில் தற்போது பல்வேறு அச்சுறுத்தல்கள் உள்ளன. அதாவது அருகே உள்ள குவாரிகளில் டைன மேட்டை வெடிக்கச் செய்தல், தொழிற்சாலை கழிவுகளை கலத்தல், சட்ட விரோத சுரங்கங்கள் அமைத்தல், கண்மூடித்தனமான மணல் கொள்ளை, ரிசார்ட் பெருக்கம், காடுகள் அழிப்பு உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன.</p><p>மேற்குத் தொடர்ச்சி மலையை பாதுகாப்பது தொடர்பான சர்ச்சை கடந்த 2011-ம் ஆண்டில் இருந்தே நீடிக்கிறது. அப் போது, மறைந்த சூழலியலாளர் மாதவ் காட்கில் தலைமையிலான குழு, இந்த மலைத்தொடர் முழுவதையும் சூழலியல் ரீதியாக உணர்திறன் மிக்க பகுதியாக கருதி, அதற்கு பல் வேறு நிலைகளிலான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.</p><h2>வரைவு அறிக்கை வெளியீடு</h2><p>இந்தநிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் சூழலி யல் ரீதியாக உணர்திறன் மிக்க பகுதியை (எகோ ஸோன்) உருவாக்குவதற்கான வரைவு அறிவிப்பை, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மீண்டும் தற்போது வெளியிட்டு உள்ளது. பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்துக்கு பின் இந்த வரைவு அறிக்கை இறுதி செய்யப்படும்.</p><p>இதையடுத்து அந்த பகுதியில் சுரங்கப் பணிகள், கல்குவாரிகள், மணல் அள்ளுதல், புதிய அனல் மின் நிலையங்கள், குறிப்பிட்ட சில தொழிற்சாலைகள் மற்றும் பெரிய கட்டுமானத் திட்டங்கள் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட உள்ளது. அதேவேளையில் நீர்மின் உற்பத்தி போன்ற செயல்பாடுகள் முறைப்படுத்தப்படும் என்றும் இந்த அறிவிப்பு வலியுறுத்துகிறது.</p><p>சூழலியல் ரீதியாக உணர்திறன் மிக்க பகுதியில் சேர்க்கப்பட வேண்டிய 'கிராமங்களின் சரியான பெயர்கள் மற்றும் பரப்ப ளவு மற்றும் மாநில அரசுகள் சமர்ப்பித்த பிற பரிந்துரைகள் ஆகியவை குறித்து நிபுணர் குழு தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த புதிய அறிவிப்பானது, ஆறு மாநிலங்களில் பரவியுள்ள சூழலியல் உணர்திறன் மிக்க பகுதியின் பரப்பளவை 56,825.7 சதுர கிலோ மீட்டராகவே தக்கவைத்து உள்ளது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/wvs5vhx5/Untitled-4.jpg" /></figure><h2>நாளைய தலைமுறை</h2><p>ஆறு மாநிலங்களில் பரவியுள்ள 56,825.7 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான முன்மொழியப்பட்ட சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியை இந்த அறிவிப்பு அப்படியே தக்கவைத்துள்ளது. இதில் மராட்டியம் மற்றும் கர்நாடகா மாநிலங்கள் இணைந்து 20,668 சதுர கிலோமீட்டர் பரப்பளவையும், கேரளா 9,993.7 சதுர கி.மீ, தமிழ்நாடு 6,914 சதுர கி.மீ, கோவா 1,461 சதுர கி.மீ மற்றும் குஜராத் 449 சதுர கி.மீ பரப்பளவையும் கொண்டுள்ளன.</p><p>கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மானந்தவாடி, சுல்தான்பத்தேரி மற்றும் வைதிரி ஆகிய வட்டங்களைச் சேர்ந்த 13 கிராமங்கள் முந்தைய வரைவில் இடம்பெற்றிருந்தன. அவை தற்போதைய அறிவிப்பிலும் தொடர்ந்து சேர்க்கப்பட்டு உள்ளன. மத்திய அரசின் வரைவு அறிக்கை குறித்து கோவை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறும்போது, மேற்கு தொடர்ச்சி மலைப்பகு தியை காக்க இந்த அறிக்கையின் மூலம் 6 மாநில அரசு களும் கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இல்லாவிட் டால் நாளைய தலைமுறைகள் இயற்கை சூழலை இழக்கும் அபாயம் ஏற்படும். எனவே மேற்கு தொடர்ச்சி மலை பகுதி பாதுகாக்கப்பட வேண்டிய மிகவும் அவசியம் என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மாறப்போகும் வானிலை.. சென்னையில் இன்று மாலை மழை பெய்ய வாய்ப்பு..!</title><link>https://www.dailythanthi.com/news/weather/changing-weather-chance-of-rain-in-chennai-this-evening</link><comments>https://www.dailythanthi.com/news/weather/changing-weather-chance-of-rain-in-chennai-this-evening#comments</comments><guid isPermaLink="false">bfb9cb92-00a1-4261-a315-355b6670cebc</guid><pubDate>Fri, 31 Jul 2026 04:37:42 +0000</pubDate><atom:updated>2026-07-31T04:37:42.495Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,Rain,Weather,வானிலை,தமிழகம்,WeatherUpdate,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,வானிலை ஆய்வு மையம்,வானிலை அறிக்கை,வானிலை தகவல்,Weather Report,தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்,வானிலை முன்னறிவிப்பு,Weather Status,weather conditions,weather center</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/obcjupog/maerer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/obcjupog/maerer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், 2 நாட்கள் <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a>க்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். </p><h2>காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகள்</h2><p>இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>இன்றும் (31.07.2026) நாளையும் (01.08.2026)  மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரவலான தென்மேற்குப் பருவமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக:</p><p><strong>-</strong> <ins>கேரளா</ins></p><p><strong>-</strong> <ins>கர்நாடகா (குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகள்)</ins></p><p><strong>-</strong> <ins>தமிழ்நாட்டின் மலைப்பகுதிகள்</ins> (<strong>வால்பாறை, நீலகிரி, தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்டவை</strong>).</p> <p><strong>இந்த மழை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள நீர் பற்றாக்குறையை சரிசெய்ய உதவுமா?</strong></p><p>இந்த <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> மிகவும் அவசியமானது. இது அணைகளுக்கு வரும் நீர்வரத்தை அதிகரிக்க உதவும் என்றாலும், ஒட்டுமொத்த நீர் பற்றாக்குறையை இது முழுமையாக சரிசெய்ய வாய்ப்பில்லை. ஏனெனில், மேற்குத் தொடர்ச்சி மலையின் பல நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பருவமழைப் பற்றாக்குறை இன்னும் கணிசமாகவே உள்ளது.</p><p>மேலும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், ஆகஸ்ட் மாதத்தின் எஞ்சிய நாட்களில் மழைப்பொழிவு குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்குப் பருவமழைக்குரிய பல நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இயல்பை விடக் குறைவான மழையே பெய்யக்கூடும். </p><h2>மேலும் மோசமாக்கும்</h2><p>பொதுவாக, தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் ஆகஸ்ட் மாதம் அதிக மழை பொழியும் மாதங்களில் ஒன்றாகும், மேலும் இது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள அணைகளுக்குக் கணிசமான நீர்வரத்தை அளிக்கிறது. ஜூன் மாதத்தில் பருவமழை பெருமளவில் ஏமாற்றம் அளித்த நிலையில், தென்மேற்குப் பருவமழைக்கு மிக முக்கியமான மாதமான ஆகஸ்டிலும் மழை குறைவாக இருப்பது, இப்பருவமழையின் நிலையை மேலும் மோசமாக்கும் ஒரு காரணியாக அமைகிறது.</p><p>சென்னை - வானிலை நிலவரம்</p><p>-----------------</p><p>ஈரப்பதம் அதிகரிப்பதாலும், வெப்பச்சலனம் சார்ந்த மேகங்கள் இப்பகுதியைக் கடந்து செல்வதாலும், இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் சென்னையில் வேகமான மழைப்பொழிவுக்கான நல்ல வாய்ப்புகள் உள்ளன.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பா.ஜ.க. பெண் கவுன்சிலர் விஷம் குடித்து தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bjp-woman-councilor-commits-suicide-by-consuming-poison</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bjp-woman-councilor-commits-suicide-by-consuming-poison#comments</comments><guid isPermaLink="false">e2a64285-6612-4261-929d-87a1c68680c9</guid><pubDate>Fri, 31 Jul 2026 04:35:33 +0000</pubDate><atom:updated>2026-07-31T04:35:33.536Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பா.ஜ.க.,Tenkasi,தென்காசி,விஷம் குடித்து தற்கொலை,Female,Councilor,நகராட்சி,municipality,பெண் கவுன்சிலர்,commits suicide by consuming poison</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/bxsfd0lf/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தற்கொலை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/bxsfd0lf/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF">தென்காசி</a> நகராட்சி 23-வது வார்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95">பா.ஜ.க.</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D">பெண் கவுன்சிலர்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">விஷம் குடித்து தற்கொலை</a> செய்து கொண்டார்.</p><h2>நகராட்சி பா.ஜ.க. பெண் கவுன்சிலர்</h2><p>தென்காசி பகுதியைச் சேர்ந்தவர் முத்து கோபாலகிருஷ்ணன். இவரும் சென்னையில் உள்ள அனாதை ஆசிரமத்தில் வளர்ந்ததாக கூறப்படும் சுனிதா (வயது 45) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சுனிதா தென்காசி நகராட்சி 23-வது வார்டு பா.ஜ.க. கவுன்சிலராக இருந்து வந்தார்.</p><h2>விஷம் குடித்து தற்கொலை</h2><p>கடந்த 2 நாட்களுக்கு முன் தென்காசியில் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்க்க சென்றபோது சுனிதாவுக்கும், அவரது மூத்த மகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சுனிதாவை, முத்துகோபாலகிருஷ்ணன் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் இருந்த சுனிதா நேற்று முன்தினம் தனது வீட்டின் மாடியில் வைத்து வயலுக்கு தெளிக்கும் களைக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணை விவகாரம்: முதல்-அமைச்சர் விஜய் இன்று முக்கிய ஆலோசனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mekedatu-dam-issue-chief-minister-vijay-to-hold-important-meeting-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mekedatu-dam-issue-chief-minister-vijay-to-hold-important-meeting-today#comments</comments><guid isPermaLink="false">29cd8921-b2d4-4fb7-9d5f-ab39b3e14b97</guid><pubDate>Fri, 31 Jul 2026 04:24:05 +0000</pubDate><atom:updated>2026-07-31T04:24:05.782Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,மேகதாது அணை,Mekedatu dam,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/lcn9668f/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/lcn9668f/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கு தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.</p><h2>காவிரி நீர்</h2><p>கர்நாடகம்-தமிழகம் இடையே காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக நீண்டகாலமாக பிரச்சினை நீடித்து வருகிறது. குறிப்பாக மழை பொய்த்து போகும் காலங்களில் இந்த பிரச்சினை தலை தூக்கி வருகிறது. நடப்பாண்டும் கர்நாடகத்தில் போதிய மழை பெய்யாததால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்குவதில் பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது.</p><h2>டி.கே.சிவக்குமாருடன் சந்திப்பு</h2><p>இதற்கிடையே காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டவும் கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என முதல்-அமைச்சர் விஜய் கருதுகிறார். எனவே அவர் காவிரி நதி நீர் விவகாரம், மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரை சந்தித்து பேச முடிவு செய்து கடிதம் அனுப்பியுள்ளார். </p><p>இதற்காக முதல்-அமைச்சர் விஜய் வருகிற 3-ந்தேதி (திங்கட்கிழமை) பெங்களூருவுக்கு செல்கிறார். பெங்களூரு விதானசவுதா (சட்டசபை வளாகத்தில்) மாநாட்டு அரங்கில் டி.கே.சிவக்குமார், விஜய்யை சந்தித்து பேச உள்ளார்.  இந்த பேச்சுவார்த்தைக்கு தமிழ்நாடு விவசாயிகளும், அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதுபோல் கர்நாடக விவசாயிகளும், கன்னட அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.</p><h2>விஜய் ஆலோசனை</h2><p>இதற்கிடையில், தமிழகத்துக்கு 15 நாட்கள் வினாடிக்கு 3,500 கன அடி வீதம் மொத்தம் 4½ டி.எம்.சி. தண்ணீரை காவிரியில் திறந்துவிட மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு தற்போது வரை செயல்படுத்தவில்லை.</p><p>இந்த நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார், தலைமைச் செயலாளர், துறைகளின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இந்த ஆலோசனையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>இன்று கடைசி நாள்: வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் எவ்வளவு அபராதம்?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/itr-filing-last-day-what-if-you-miss-the-july-31-deadline-today-know-the-penalty-and-consequences</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/itr-filing-last-day-what-if-you-miss-the-july-31-deadline-today-know-the-penalty-and-consequences#comments</comments><guid isPermaLink="false">21347045-e395-4b79-bd8f-c9d0bdd26d34</guid><pubDate>Fri, 31 Jul 2026 04:10:59 +0000</pubDate><atom:updated>2026-07-31T04:10:59.627Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Income Tax Department,மத்திய அரசு,Central Govt,Income Tax,New Income Tax,வருமானவரி,IncomeTax,Income Tax Check,வருமானவரி கணக்கு தாக்கல்,Income tax filing,income taxes,புதிய வருமானவரி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/vkrcenkm/fikli.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/vkrcenkm/fikli.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாத ஊதியதாரர்கள் உள்ளிட்டோர் <a href="https://www.dailythanthi.com/topic/income-tax">வருமான வரிக்கணக்கு தாக்கல்</a> செய்ய இன்று (ஜூலை 31) கடைசி நாள் ஆகும். தவறவிட்டால் டிச.31ம் தேதி வரை ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை அபராதம் செலுத்தி கணக்கு தாக்கல் செய்யலாம்.</p><h2>கிராஷ் ஆகாது</h2><p>தனிநபர்கள், வரி செலுத்தும் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் வரி தணிக்கை தேவைப்படாதோர் (ஐடிஆர் 1 அல்லது ஐடிஆர் 2) மதிப்பீட்டு ஆண்டு 2026-27-க்கான (நிதியாண்டு 2025-26) <a href="https://www.dailythanthi.com/topic/income-tax">வருமான வரி கணக்கை</a> இன்றிரவு 12 மணிக்குள் (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்ய வேண்டும்.</p><p>மத்திய அரசு இந்த தேதியை நீட்டிப்பதாக எந்த ஒரு பரிசீலனையும் இல்லை என அறிவித்து விட்டது. மேலும் கடைசி நேரத்தில் எத்தனை பேர் ஐடிஆர் இணையதளத்தை பயன்படுத்தினாலும் இணையதளம் கிராஷ் ஆகாது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.</p><h2>அபராதம் எவ்வளவு..?</h2><p>சுமார் 5 கோடிக்கும் அதிகமானவர்கள் இதுவரை கணக்கு தாக்கல் செய்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று கடைசி நாள் என்பதால் லட்சக்கணக்கான சம்பளதாரர்கள் ஒரே சமயத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>ஒருவேளை இன்று இரவு 12 மணிக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தவறுபவர்கள், தாமதமான வருமான வரி தாக்கல் (Belated Return) முறையை பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், இதற்கு அபராதம் விதிக்கப்படும். உங்களின் ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம். வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருந்தால் 1,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்.</p><h2>அக்டோபர் 31ம் தேதி கடைசி நாள்</h2><p>வணிகம் அல்லது தொழில் வருமானம் ஈட்டும் நபர்கள் மற்றும் தணிக்கை தேவையில்லாத நபர்கள் ஐடிஆர் 3 மற்றும் ஐடிஆர் 4 படிவங்களை தாக்கல் செய்ய வேண்டும். இவர்களுக்கு ஆகஸ்ட் 31ம் தேதி கடைசி நாள் ஆகும். அதே போல கணக்கு தணிக்கை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள வணிகம் அல்லது தொழில் செய்பவர்களுக்கு அக்டோபர் 31ம் தேதி கடைசி நாள் ஆகும்.</p><h2>இரண்டு வழிமுறை</h2><p>பழைய வரி கணக்கு நடைமுறை, புதிய வரி கணக்கு நடைமுறை என இரண்டு வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து வருமான வரியை தாக்கல் செய்யலாம். புதிய வரி கணக்கு நடைமுறையில் பல்வேறு வரி சலுகைகள் கிடைக்காது என்றாலும் இதில் வருமான வரி உச்சவரம்பு அதிகம், ஆனால் பழைய வரி முறையில் பல்வேறு முதலீடுகளை குறிப்பிட்டு வரி சேமிப்பு செய்யலாம். உங்களுக்கு எது பொருத்தமானதோ அதனை பயன்படுத்தி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். </p><p>வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் இறுதியில் e- verification கண்டிப்பாக செய்ய வேண்டும். அப்போதுதான் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்பட்டது உறுதி செய்யப்படும்.</p> ]]></content:encoded></item><item><title>தேனியில் 400 ஆண்டுகள் பழமையான் 4 நடுகற்கள் கண்டுபிடிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/400-year-old-center-stones-discovered-in-theni</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/400-year-old-center-stones-discovered-in-theni#comments</comments><guid isPermaLink="false">668eba76-3800-4d3b-9aa5-6d7271411212</guid><pubDate>Fri, 31 Jul 2026 03:50:14 +0000</pubDate><atom:updated>2026-07-31T03:50:14.760Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Theni,தேனி,கண்டுபிடிப்பு,discovered,Stones,நடுகற்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/wktfdn3e/92.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/wktfdn3e/92.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி, </p><p>சின்னமனூர் அருகே வேப்பம்பட்டியில் அரிய துப்பாக்கி வீரன் உள்பட 4 நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.</p><h2>நடுகற்கள்</h2><p>சின்னமனூர் அருகே வேப்பம்பட்டி பகுதியில், தொல்லியல் ஆய்வாளரும், கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியருமான செல்வம், பழமையான நடுகற்கள் தொடர்பாக கள ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதியில் 4 அரிய நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் செல்வம் கூறியதாவது:-</p><p>வேப்பம்பட்டியை சேர்ந்த ஆசிரியர் ராமமூர்த்தி அளித்த தகவலின் அடிப்படையில் இந்த கள ஆய்வு நடத்தப்பட்டது. வேப்பம்பட்டி சீப்பாலக்கோட்டைச் சாலையில் 500 மீட்டர் இடைவெளியில் 2 வெவ்வேறு இடங்களில் இந்த வரலாற்றுச் சின்னங்கள் அமையப்பெற்றுள்ளன. ஸ்ரீரெங்கன் குளக்கரையில், முதன்மைப் படைத்தலைவன் சிற்பம் உள்ளது. 3 அடி உயரமுள்ள அது கி.பி. 16-ம் நூற்றாண்டை சேர்ந்தது. அதில், வீரன் தனது வலது கையில் நீண்ட வாளையும், இடது தோளில் இருந்து தொங்கும் வில்லை இடது கையாலும் ஒருசேரப் பற்றியது போல் இது உள்ளது.</p><h2>துப்பாக்கி வீரன்</h2><p>நடராஜ் என்பவருடைய வீட்டின் அருகில் 6 அடி ஆழத்தில் புதைந்திருந்து கண்கெடுக்கப்பட்ட மற்றொரு சிற்பம் 2 அடி உயரம் கொண்டது. அது 16, 17-ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு வாள் வீரனின் நடுகல். வலது கையில் ஓங்கிய வாளுடனும், இடது தோளில் தொங்கும் வில்லுடனும், மற்றொரு கையை இடுப்பில் ஊன்றியவாறும் போர்க்கோலத்தில் அமைந்துள்ளது. அதே பகுதியில், அரிய திணிப்பு துப்பாக்கி வீரனின் நடுகல் கண்டறியப்பட்டது. அது 17 அல்லது 18-ம் நூற்றாண்டை சேர்ந்தது. 2 அடி உயரமுள்ள அந்த நடுகல்லில், வீரன் தனது இடது கையில் நீண்ட திணிப்புத் துப்பாக்கியை தலைகீழாகத் தரையில் ஊன்றிப் பிடித்துள்ளான். வலது கையில் கூரிய உடைவாள் கீழ்நோக்கிப் பாயும் நிலையில் உள்ளது. தமிழகத் தொல்லியலில் துப்பாக்கி ஏந்திய வீரர்களின் நடுகற்கள் மிக அரிது என்பதால், இது ஆயுதப் பரிணாமத்தின் முதன்மைச் சான்றாகக் கருதப்படுகிறது. இந்த இரு நடுகற்களையும் உள்ளூர் மக்கள் 'கோட்டை கருப்பன்', 'கொத்தால முத்து' ஆகிய சிறுதெய்வப் பெயர்களில் வழிபாட்டில் வைத்துள்ளனர். அதே பகுதியில் கிடைமட்ட நடுகற்பலகை ஒன்றும் உள்ளது.</p><h2>வரலாற்று உண்மைகள்</h2><p>இந்த நடுகற்கள் தென் தமிழகத்தின் 400 ஆண்டுகால ராணுவ மற்றும் சமூக வரலாற்றை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளன. 500 மீட்டர் இடைவெளியில் இவை பரவியிருப்பதால், இங்கு ஒரு பிரம்மாண்டமான பாளையக் கோட்டை அரணும் காவற்சாவடியும் இருந்திருக்க வேண்டும். இப்பகுதியில் தொல்லியல் துறை முறையான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">அகழாய்வு</a> மற்றும் பாதுகாக்கப்பட்ட வரலாற்று மண்டலம் சார்ந்த களஆய்வுகளை மேற்கொண்டால் மேலும் பல வரலாற்று உண்மைகள் வெளிவர வாய்ப்புள்ளன.</p>]]></content:encoded></item><item><title>மக்கள் பணம் எங்கே? - பிரதமர் மோடியிடம் மாணிக்கம் தாகூர் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/where-is-the-peoples-money-manickam-thakur-asks-prime-minister-modi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/where-is-the-peoples-money-manickam-thakur-asks-prime-minister-modi#comments</comments><guid isPermaLink="false">99315dc2-5667-416c-bb2f-2a607778b2fc</guid><pubDate>Fri, 31 Jul 2026 03:30:06 +0000</pubDate><atom:updated>2026-07-31T03:30:06.821Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,பிரதமர் மோடி,PM Modi,காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,பிரதமர்,பிரதமர் நரேந்திர மோடி,Manickam Tagore MP,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Narendra Modi ‏,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/fz8fkh5n/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/fz8fkh5n/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>பணம் எங்கே?</h2><p>மக்கள் பணம் எங்கே பிரதமர் நரேந்திர மோடியே? ZERO ACCOUNTABILITY </p><p>பொதுமக்களின் வியர்வைச் சிந்திய பணமும், அரசு ஊழியர்களின் சம்பளப் பங்களிப்பும் இணைந்து உருவாக்கப்பட்டது தான் இந்த PMCARES நிதி! </p><p>2022-23 ஆம் நிதியாண்டில் மட்டும் ரூ.909.64 கோடி நன்கொடை உட்பட ரூ.6,723.07 கோடி வரவு வந்த நிலையில், அதில் வெறும் ரூ.439.38 கோடி மட்டுமே செலவழிக்கப்பட்டு, மீதம் ரூ.6,283.68 கோடி கையிருப்பில் உள்ளது.</p><h2>வெளியிடப்படாதது ஏன்?</h2><p>1. 2022-23க்கு பின் ஆடிட் ஸ்டேட்மெண்ட்ஸ் வெளியிடப்படாதது ஏன்?</p><p>2. அமைச்சர்கள் இருக்கும் அமைப்பிற்கு ஆர்.டி.ஐ. (RTI) பொருந்தாது எனக் கூறித் தப்பிப்பது ஏன்?</p><p>மத்திய அமைச்சர்களே இதன் அறங்காவலர்களாக பொறுப்பில் இருக்கும் போது, சட்டப்படி பொது ஊழியர்களான அவர்கள் மக்களுக்குப் பதில் சொல்லியே தீர வேண்டும்! எனவே, PM CARES நிதி நிச்சயம் ஆர்.டி.ஐ. <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வரம்பிற்குள் </a>(Ambit of RTI Act) தான் வருகிறது. </p><p>மக்கள் பணத்தின் கணக்கை மறைக்காமல் உடனடியாக வெளியிட வேண்டும்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆடிப்பெருக்கு அன்று பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதிக்கு செல்ல தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/entry-to-bhavanisagar-dam-reservoir-area-prohibited-on-aadi-perukku</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/entry-to-bhavanisagar-dam-reservoir-area-prohibited-on-aadi-perukku#comments</comments><guid isPermaLink="false">7ba7ff0c-b96b-479e-97a0-25eca359a4bd</guid><pubDate>Fri, 31 Jul 2026 03:14:02 +0000</pubDate><atom:updated>2026-07-31T03:14:02.590Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Bhavanisagar Dam,பவானிசாகர் அணை,ஆடிப்பெருக்கு,aadi perukku,Prohibited,செல்ல தடை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/lgqdsu8k/bavani-dam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/lgqdsu8k/bavani-dam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தளமாக பவானிசாகர் அணை மற்றும் பூங்கா உள்ளது. இதில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">பவானிசாகர் அணை</a>யின் மேல்பகுதிக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆடி 18-ந்தேதி அதாவது ஆடிப்பெருக்கு தினத்தில் மட்டும் பொதுமக்கள் அணையின் நீர்த்தேக்க பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆடிப்பெருக்கு அன்றும் பொதுமக்கள் அணையின் நீர்த்தேக்க பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. </p><h2>சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்</h2><p>இதனால் இந்த ஆண்டு ஆடிப்பெருக்குக்கு அணையின் மேல் பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்படும் என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் இந்த ஆண்டும் அணையின் மேல் பகுதிக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அணையின் பூங்காவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாட ஊஞ்சல், படகுசவாரி உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. எனவே ஆடிப்பெருக்கை முன்னிட்டு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அணையின் முன்பு உள்ள பூங்காவில் பண்டிகையை கொண்டாடலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>அரசு பஸ்களில் பார்சல் வசதி.. நஷ்டத்தை போக்க புதிய முடிவு..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/parcel-service-in-government-buses-a-new-decision-to-overcome-losses</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/parcel-service-in-government-buses-a-new-decision-to-overcome-losses#comments</comments><guid isPermaLink="false">21f2786e-4afd-460e-a9af-0ed065532800</guid><pubDate>Fri, 31 Jul 2026 03:04:01 +0000</pubDate><atom:updated>2026-07-31T03:04:01.566Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,அரசு பஸ்,Tamil Nadu Government,TN govt,தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்,Govt Buses,Parcel Service,பார்சல் வசதி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/iu16slfb/buyse.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/iu16slfb/buyse.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/tamil-nadu-government">தமிழ்நாடு அரசு</a> போக்குவரத்து கழகங்களில் பார்சல் அனுப்பும் வசதி விரைவில் ஏற்படுத்தப்பட உள்ளது.</p><h2>வருவாயை பெருக்க புதிய திட்டம்</h2><p>அரசு போக்குவரத்து கழகங்களின் வருவாயை பெருக்க, தமிழ்நாடு அரசு புதிய திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதற்காக, பார்சல்கள் ஏற்றிச் செல்லும் வசதியுடன் புதிய பஸ்கள் தயாரிக்கப்படுகின்றன. அதுபோன்ற பஸ்சை போக்குவரத்துதுறை அமைச்சர் பார்த்திபன் ஆய்வு செய்தார்.</p><h2>வணிக வளாகம்</h2><p>இது குறித்து, அரசு போக்குவரத்துகழக அதிகாரிகள் கூறுகையில், “கட்டண உயர்வு இன்றி இதர வழிகளில் வருவாயை பெருக்க புதிய திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள காலி இடங்களை தனியாருக்கு நீண்ட நாட்களுக்கு குத்தகைக்கு விடுவது, சூரியசக்தி மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்துவது, பஸ் நிலையங்களில் வணிக வளாகம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.</p><h2>'பார்சல்' புக்கிங்</h2><p>உடனடியாக செயல்படுத்தும் வகையில் வெளியூர் செல்லும் அரசு விரைவு பஸ்களில் பார்சல் எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை தொடங்க முடிவு செய்துள்ளோம். பயணிகள் தங்களது பயணத்தின்போது, கையில் எடுத்து செல்ல முடியாத பெரிய பொருட்கள், லக்கேஜ்களை, 'பார்சல்' என புக்கிங் செய்து அதற்கான கட்டணம் செலுத்தி எடுத்து செல்லலாம்.</p><p>இதற்காக, புதிய பஸ் பின்பகுதியில், பிரத்யேக இடம் ஒதுக்கீடு செய்யப்படும்.  நியாயமான முறையில் கட்டணம் இருக்கும். முதல் கட்டமாக, சென்னை உட்பட முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் ஆயிரம் அரசு விரைவு பஸ்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டு உள்ளோம்” என்று அவர்கள் கூறினர். </p>]]></content:encoded></item><item><title>சிவகங்கை: வீடு புகுந்து பிரபல ரவுடி வெட்டிக்கொலை- காரில் வந்த கும்பல் வெறிச்செயல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sivagangai-famous-rowdy-hacked-to-death-after-breaking-into-house-gang-in-car-commits-brutal-act</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sivagangai-famous-rowdy-hacked-to-death-after-breaking-into-house-gang-in-car-commits-brutal-act#comments</comments><guid isPermaLink="false">37fdb821-c464-42d1-af06-d28b3c6b13e7</guid><pubDate>Fri, 31 Jul 2026 02:53:23 +0000</pubDate><atom:updated>2026-07-31T02:53:23.400Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Car,கார்,கும்பல்,சிவகங்கை,Sivagangai,Rowdy murder,வெறிச்செயல்,Gang,வீடு புகுந்து,Enter the house,பிரபல ரவுடி வெட்டிக்கொலை,madness</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/2358yswp/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஊர்க்காவலன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/2358yswp/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">சிவகங்கை</a> மாவட்டத்தில் 30 வழக்குகளில் தொடர்புடைய பிரபல <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">ரவுடி</a>யை காரில் வந்த கும்பல் வீடு புகுந்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">வெட்டிக்கொலை</a> செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. </p><h2>ஜாமீனில் வந்த ரவுடி</h2><p>சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே உள்ள மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஊர்க்காவலன் (வயது 31). பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது 3 கொலை வழக்குகள், 2 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. ஊர்க்காவலனை வழக்கு ஒன்றில் கைது செய்ய கடந்த மார்ச் மாதம் திருப்பாச்சேத்தி போலீசார் தேடிச்சென்றனர்.  அப்போது அவர் போலீசாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்றார். இதையடுத்து அவரை துப்பாக்கியால் காலில் சுட்டுப் பிடித்தனர். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஊர்க்காவலன், சிறையில் அடைக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.</p><h2>வீடு புகுந்து வெட்டிக்கொலை</h2><p>இந்த நிலையில் நேற்று காலை ஊர்க்காவலன் தனது வீட்டையொட்டி உள்ள ஒரு கடையில் அமர்ந்து இருந்தார். அப்போது ஒரு காரில் வந்து இறங்கிய 5 பேர் திடீரென ஊர்க்காவலனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். அவர்களிடம் இருந்து காயங்களுடன் ஊர்க்காவலன் தப்பி தனது வீட்டுக்குள் ஓடினார். இருப்பினும் அந்த கும்பல் பின்தொடர்ந்து சென்று வீட்டுக்குள் புகுந்து ஊர்க்காவலனை கொடூரமாக வெட்டிக்கொன்றது. மேலும் ஊர்க்காவலனின் முகத்தை முழுமையாக சிதைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது.</p><p>இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஊர்க்காவலனை வெட்டிக்கொன்ற கும்பலை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் சிவகங்கையில் அம்பேத்கர் சிலை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>திராவிடர் கழகத்தின் பரப்புரைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் - திருமாவளவன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-should-allow-dravidar-kazhagams-campaign-thirumavalavan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-should-allow-dravidar-kazhagams-campaign-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">1ee7de3f-9d4c-4f46-87be-f381851ec19b</guid><pubDate>Fri, 31 Jul 2026 02:42:23 +0000</pubDate><atom:updated>2026-07-31T02:42:23.221Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமாவளவன்,Thirumavalavan,Dravidar Kazhagam,திராவிடர் கழகம்,பரப்புரை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/bxz5un3c/thiruma.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/bxz5un3c/thiruma.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D">திருமாவளவன் </a>தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>‘நீட்’ தேர்வையும், முன்னேறிய சமூகத்தினருக்கான (EWS) இட ஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டுமென 30-07-2026 முதல் 02-08-2026 வரை மத்திய அரசை வலியுறுத்தி, திராவிடர் கழகத்தின்  இளைஞரணி,  மாணவர் அணி, மற்றும் மகளிர் பாசறை ஆகியவற்றின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இரு சக்கர வாகன பரப்புரைப் பயணம் மேற்கொள்ள அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தனர். </p><h2>அனுமதி</h2><p>உரிய முறைப்படி முன்கூட்டியே விண்ணப்பித்திருந்தும் அதற்கு காவல்துறை அனுமதி மறுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமையைப் பறிக்கும் சனநாயக விரோத நடவடிக்கை ஆகும். 'நீட்' தேர்வு வேண்டாமென்பதுதான் தவெக அரசின் கொள்கை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு வலு சேர்க்கக்கூடிய திராவிடர் கழகத்தின் பரப்புரைக்கு அனுமதி மறுப்பது வியப்பளிக்கிறது. திராவிடர் கழகத்தின் இந்தப் பரப்புரைக்கு அனுமதி வழங்குமாறு தமிழ்நாடு முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன். </p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>