<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 03 Aug 2026 12:14:33 +0000</lastBuildDate><item><title>சிவகங்கை:  அரசு பஸ் - சுற்றுலா வேன் மோதி விபத்து - 20 பேர் படுகாயம்

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sivagangai-government-bus-tourist-van-accident-20-injured</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sivagangai-government-bus-tourist-van-accident-20-injured#comments</comments><guid isPermaLink="false">3eb62945-65e7-4438-869d-53ec176132c5</guid><pubDate>Mon, 03 Aug 2026 12:14:27 +0000</pubDate><atom:updated>2026-08-03T12:14:27.632Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,bus,பஸ்,சிவகங்கை,Sivagangai,சுற்றுலா வேன்,Tourist van</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/5t6949l3/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/5t6949l3/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சிவகங்கை,</p><p>சிவகங்கையில் அரசு பஸ், சுற்றுலா வேன் மோதிய விபத்தில் 20 பேர் படுகாயமடைந்தனர்.</p><p>மதுரை - பரமக்குடி நான்கு வழி சாலையில் இன்று மதியம் சுற்றுலா <a href="https://www.dailythanthi.com/">வேன் </a>சென்றுகொண்டிருந்தது. அந்த சுற்றுலா வேனில் 15க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.</p><h2>விபத்து</h2><p>இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே இன்று மதியம் சுற்றுலா வேன் சென்றபோது திடீரென சாலையின் மறுபுறத்தில் இருந்து அரசு பஸ் திரும்பியுள்ளது. அப்போது, அரசு பஸ் மீது  சுற்றுலா வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சுற்றுலா வேன், அரசு பஸ்சில் பயணித்தவர்கள் என மொத்தம் 20 பேர் படுகாயமடைந்தனர்.</p><p>இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு திருப்புவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதேவேளை, இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/president-draupadi-murmu-congratulates-medal-winners-at-commonwealth-games</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/president-draupadi-murmu-congratulates-medal-winners-at-commonwealth-games#comments</comments><guid isPermaLink="false">931a63e2-0a40-45a2-ae20-11317d2322d2</guid><pubDate>Mon, 03 Aug 2026 12:02:29 +0000</pubDate><atom:updated>2026-08-03T12:02:29.475Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>புதுடெல்லி,ஜனாதிபதி திரவுபதி முர்மு,காமன்வெல்த்,Commonwealth,congratulate,President Draupadi Murmu</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/fhwgyfys/43.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜனாதிபதி திரவுபதி முர்மு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/fhwgyfys/43.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><p>காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81">ஜனாதிபதி திரவுபதி முர்மு</a> வாழ்த்து தெரிவித்துள்ளார். </p><p>இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்திய விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மிகச் சிறப்பான திறனை வெளிப்படுத்தியதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். </p><h2>வாழ்த்து</h2><p>இந்தியா வென்ற 13 தங்கப்பதக்கங்களில் 8-ஐ பெண்கள் பெற்று தந்துள்ளனர் என்பதைக் குறிப்பிடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். பதக்கம் வென்ற 39 பேருக்கும், இப்போட்டிகளின் போது பங்களித்த இந்தியக் குழுவின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். </p><p>எதிர்காலத்தில் நடைபெறவுள்ள சர்வதேசப் போட்டிகளிலும் இந்திய விளையாட்டு வீரர்கள் நாட்டிற்கு மேலும் பெருமை சேர்ப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title> மதுரை: ஜேசிபி மீது கார் மோதி விபத்து - டிரைவர் பலி

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-jcb-meethu-car-mothi-vibathu-driver-bali</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-jcb-meethu-car-mothi-vibathu-driver-bali#comments</comments><guid isPermaLink="false">38f91e03-fb35-4bf9-98c3-a7e6e1002cea</guid><pubDate>Mon, 03 Aug 2026 11:46:24 +0000</pubDate><atom:updated>2026-08-03T11:46:24.631Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,car accident,கார் விபத்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/sbk42xmu/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/sbk42xmu/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>மதுரை,</p><p>மதுரையில் ஜேசிபி மீது கார் மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p><a href="https://www.dailythanthi.com/">மதுரை </a>மாவட்டம் மேலூர் அருகே தனியாமங்கலத்தில் நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வந்தன. இந்த பணியில் ஜேசிபி வாகனம் ஈடுபட்டப்பட்டிருந்தது. </p><h2>விபத்து - டிரைவர் பலி</h2><p>இந்நிலையில்,   அந்த சாலையில் வேகமாக வந்த கார் சாலையில் பணிகள் மேற்கொண்டிருந்த ஜேசிபி வாகனம் மீது  மோதியது.  இந்த கோர விபத்தில் காரை ஓட்டி வந்த டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அறிந்த போலீசார்,விரைந்து சென்று உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி - ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/census-work-new-order-for-teachers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/census-work-new-order-for-teachers#comments</comments><guid isPermaLink="false">7c10e619-855f-4325-9e13-e5adf2bd394c</guid><pubDate>Mon, 03 Aug 2026 11:38:38 +0000</pubDate><atom:updated>2026-08-03T11:38:38.218Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மக்கள் தொகை கணக்கெடுப்பு,Census,ஆசிரியர்கள்,Teachers</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/6aj3oj4y/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/6aj3oj4y/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பள்ளி வேலை நேரம் தவிர்த்து, காலை மற்றும் மாலை நேரங்களில் ஆசிரியர்கள் வீடு, வீடாக சென்று மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>தமிழகத்தில் கடந்த ஒன்றாம் தேதியில் இருந்து மாநிலம் முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கியது. இதன்படி, வரும் 31-ந்தேதி வரை இந்த பணிகள் நடைபெற உள்ளன. இந்த பணிக்காக நியமனம் செய்யப்பட்ட அலுவலர்கள் வீடு, வீடாக சென்று மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக இந்த பணியில் ஆசிரியர்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.</p> <p>இந்த சூழலில், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த முதன்மை கல்வி அலுவலர்கள், ஆசிரியர்களுக்கான சுற்றறிக்கைகளை அனுப்பி உள்ளனர். அதில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு எந்த ஆசிரியர்கள் எல்லாம் நியமிக்கப்பட்டுள்ளார்களோ, அவர்கள் அனைவரும் காலை மற்றும் மாலை நேரங்களில் வீடு, வீடாக சென்று மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>அதே சமயம், இந்த பணிகளால் பள்ளி வகுப்புகள் எதுவும் பாதிக்கப்படக் கூடாது எனவும், பள்ளி வேலை நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. எனவே, ஆசிரியர்கள் அனைவரும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும், மாணவர்களின் வகுப்புகள் பாதிக்காத வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>திருவள்ளூர் அருகே தீ மிதித்தபோது அக்னி குண்டத்தில் தவறி விழுந்த பக்தர் காயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/theemithi-festival-near-tiruvallur-devotee-injured</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/theemithi-festival-near-tiruvallur-devotee-injured#comments</comments><guid isPermaLink="false">7c9ef30b-a0f0-4cb7-82c4-9c0eed364801</guid><pubDate>Mon, 03 Aug 2026 11:33:44 +0000</pubDate><atom:updated>2026-08-03T11:33:44.434Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Festival,திருவிழா,Thimithi Festival,தீமிதி திருவிழா,தீக்காயம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/s3cp7rp8/tiruvallur.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ அக்னி குண்டத்தில் இருந்து மீட்கப்பட்ட பக்தர்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருவள்ளூர் அருகே தீமித்தபோது அக்னி குண்டத்தில் தவறி விழுந்த பக்தர் காயமடைந்தார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/s3cp7rp8/tiruvallur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர், </p><p>மப்பேடு ஓசூரம்மன் ஆலய திருவிழாவில், தீமிதித்த பக்தர் ஒருவர் கால் தவறி அக்னி குண்டத்தில் விழுந்தார். அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.</p><p>திருவள்ளூர் அடுத்த மப்பேடு கிராமத்தில் அமைந்துள்ள ஓசூரம்மன் ஆலயத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/thimithi-festival">தீமிதி திருவிழா</a> கடந்த மாதம் 24ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று முன்தினம் சனிக்கிழமை கூழ் ஊற்றுதல் அக்னி சட்டி புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. </p><p>விழாவின் சிகர நிகழ்வான தீமிதித்தல் நேற்று நடைபெற்றது. விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள், சாமி ஊர்வலத்துடன் கரகங்கள் ஏந்தி ஊர்வலமாக வந்து, கோவிலில் முன்பு உள்ள அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்து ஓசூரம்மனை தரிசனம் செய்தனர். </p><h2>காயமடைந்த பக்தர்</h2><p>தீ மிதிக்கும்போது முதியவர் ஒருவர் அக்னி குண்டத்தில் கால் தவறி விழுந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் விழா நடத்துபவர்கள் உடனடியாக அவரை மீட்டனர். நெருப்பில் விழுந்ததால் அந்த முதியவருக்கு தோள்பட்டையில் தீக்காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அவர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. </p><p><a href="https://www.dailythanthi.com/topic/thimithi-festival">தீமிதி திருவிழாவின்போது</a> பக்தர் ஒருவர், அக்னி குண்டத்தில் தவறி விழுந்து காயமடைந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>குருவாயூர் எக்ஸ்பிரஸ் பயண நேரத்தில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/change-in-travel-time-of-guruvayur-express</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/change-in-travel-time-of-guruvayur-express#comments</comments><guid isPermaLink="false">291acf35-abde-45b8-b392-4bfb51c66fe4</guid><pubDate>Mon, 03 Aug 2026 11:23:28 +0000</pubDate><atom:updated>2026-08-03T11:23:28.177Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>maintenance work,பராமரிப்பு பணி,Change,Guruvayur Express train,குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில்,Time,நேரம் மாற்றம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/uidgjlcv/train.03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ குருவாயூர் எக்ஸ்பிரஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/uidgjlcv/train.03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>திருவனந்தபுரம் கோட்டத்தில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதால், சென்னை எழும்பூர் - <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D">குருவாயூர் எக்ஸ்பிரஸ்</a> ரெயிலின் பயண நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. </p> <p>இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><h2>தாமதமாக செல்லும்</h2><p>சென்னை எழும்பூரில் இருந்து காலை 10.40 மணிக்கு குருவாயூர் புறப்பட்டு செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16127), ஆகஸ்டு 9, 10 ஆகிய தேதிகளில் வழியில் 40 நிமிடம் தாமதமாக செல்லும். </p> <p>அதேபோல், இந்த ரெயில் ஆகஸ்டு 11, 12 தேதிகளில் 45 நிமிடங்கள் தாமதமாகவும், ஆகஸ்டு 27, 31 ஆகிய தேதிகளில் 30 நிமிடங்கள் தாமதமாகவும், ஆகஸ்டு 28, 29, செப்டம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் 50 நிமிடங்கள் தாமதமாகவும் செல்லும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருமாவளவன் எம்.பி சென்ற காரில் தொங்கியபடி பயணித்த வி.சி.க நிர்வாகி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vck-executive-who-was-hanging-from-the-car-in-which-thirumavalavan-mp-was-travelling</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vck-executive-who-was-hanging-from-the-car-in-which-thirumavalavan-mp-was-travelling#comments</comments><guid isPermaLink="false">d7b81bee-5a59-4d08-a1f2-1cf95af81fe4</guid><pubDate>Mon, 03 Aug 2026 11:17:09 +0000</pubDate><atom:updated>2026-08-03T11:17:09.158Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Cuddalore,கடலூர்,Thirumavalavan,வி.சி.க.,நிர்வாகி,தொல் திருமாவளவன்,கார்car</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/jquvoxqb/171.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருமாவளவன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/jquvoxqb/171.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர், </p><p>கடலூர் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் சுட்சி தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D.%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D">தொல். திருமாவளவன்</a> எம்.பி. கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.</p><h2>தொல். திருமாவளவன்</h2><p>அவர் கடலூர் உள்பட பல்வேறு மாவட்ட நிர்வாகிகளுடன் உளுந்தூர்பேட்டையில் நடக்க உள்ள மாநாடு சம்பந்தமாக விரிவான ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில் கடலூர் அடுத்த உண்ணாமலை செட்டி சாவடி விழுப்புரம் -  நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில்  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை வரவேற்க நிர்வாகிகள் திரண்டு இருந்தனர்.</p><h2>தொங்கியவாறு பயணம்</h2><p>அப்போது அங்கு நின்றிருந்த கடலூரை சேர்ந்த வி.சி.க. நிர்வாகி ஒருவர், கட்சி தொடர்பாக தலைவர் திருமாவளவனிடம் பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் கார் டிரைவர் காரை இயக்கி விட்டார். திருமாவளவனிடம் பேசி கொண்டிருந்த நிர்வாகி, உடனே காரின் ஜன்னலை கையால் பிடித்து கொண்டு அதில் தொங்கியவாறு சென்றார். </p><p>கார் மணிக்கு 60 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. நிர்வாகி, காரில் தொங்கியபடியே திருமாளவனிடம்   பேசி கட்சி கொண்டே சென்றார். சுமார் 100 மீட்டர் தொலைவு வரை கார் சென்று கொண்டிருந்த நிலையில், உடனடியாக திருமாவளவன் கார் டிரைவரிடம் காரை நிறுத்துமாறு உத்தரவிட்டார்.</p><p>இதை தொடாந்து சாலை ஓரமாக கார் நிறுத்தப்பட்டு அந்த நிர்வாகியை அங்கு இறக்கி விட்டனர். இந்த வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. </p>]]></content:encoded></item><item><title>காவிரி விவகாரத்தில் தவெக அரசின் சிறுபிள்ளைத்தனம்&quot;: டிடிவி தினகரன் பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvks-approach-to-the-cauvery-issue-is-childish-ttv-dhinakarans-interview</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvks-approach-to-the-cauvery-issue-is-childish-ttv-dhinakarans-interview#comments</comments><guid isPermaLink="false">24312672-f766-4636-b807-a3370c182219</guid><pubDate>Mon, 03 Aug 2026 11:08:32 +0000</pubDate><atom:updated>2026-08-03T11:08:32.635Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,Cauvery issue,காவிரி விவகாரம்,பேட்டி Interview,தவெக அரசு,Tvk  government</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/1qdxhtul/ttv-dinakaran.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/1qdxhtul/ttv-dinakaran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> தவெக அரசு தன்னிச்சையாக செயல்படுவது சிறுபிள்ளைத்தனமானது" என்று தெரிவித்தார். காவிரி நதிநீர் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில்<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D"> டிடிவி தினகரன்</a>, பேசியதாவது:-</p><h2>சிறுபிள்ளைத்தனமானது</h2><p>தமிழகத்தில் 40 முதல் 50 ஆண்டுகள் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறையில் அமைச்சர்களாக இருந்து அரிய அனுபவம் பெற்ற மூத்த தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் ஆலோசனைகளை கேட்டு, கூட்டு விவாதம் நடத்தி முடிவெடுக்காமல் தவெக அரசு தன்னிச்சையாக செயல்படுவது சிறுபிள்ளைத்தனமானது.</p><h2>எதிர்க்கட்சிகளை சந்திக்க பயம்</h2><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">தவெக அரசுக்கு</a> எதிர்க்கட்சிகளையோ அல்லது மற்ற அரசியல் கட்சி தலைவர்களையோ நேரில் சந்தித்து பேச ஒருவித தயக்கமும் அச்சமும் உள்ளது. இதனால்தான் அவர்கள் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட மறுக்கிறார்கள்.</p> <h2>தில்லுமுல்லு ஆட்சி</h2><p>ஆட்சி அமைப்பதற்காகவே தவெக தரப்பினர் பல தில்லுமுல்லுகளையும் செய்துள்ளனர். அதன் காரணமாகவே திமுக தலைவரையோ அல்லது அதிமுக பொதுச்செயலாளரையோ நேரில் சந்திக்க முதல்-அமைச்சர் விஜய் பயப்படுகிறார்.</p><p>இவ்வாறு அதில் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தவெகவில் இணைந்த அதிமுக மாவட்ட செயலாளர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-district-secretary-joins-tvkg</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-district-secretary-joins-tvkg#comments</comments><guid isPermaLink="false">01e2a668-6c1c-4e6e-adc6-42578f3e26db</guid><pubDate>Mon, 03 Aug 2026 10:57:48 +0000</pubDate><atom:updated>2026-08-03T10:57:48.350Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,TVK,தவெக,அதிமுக</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/e6fd8xnz/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/e6fd8xnz/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபை தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றிய <a href="https://www.dailythanthi.com/">தவெக</a>, காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. முதல்-அமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார்.</p><h2>தவெகவில் இணையும் பிரமுகர்கள்</h2><p>இதனிடையே, தேர்தலில் தவெக வெற்றிபெற்ற நிலையில் திமுக, அதிமுக, பாஜக உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், தொண்டர்கள் என பலரும் தவெகவில் இணைந்த வண்ணம் உள்ளனர்.</p><p>இந்நிலையில், வட சென்னை அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ். இவர் கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டவர். </p><p>அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் இன்று தவெகவில் இணைந்தார். தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்த ராஜேஷ் தன்னை தவெகவில் இணைத்துக்கொண்டார். </p> ]]></content:encoded></item><item><title>பாளையங்கோட்டை சிறையில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை சந்தித்த கனிமொழி எம்.பி. </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mp-kanimozhi-met-vilathikulam-mla-markandeyan-at-palayamkottai-prison</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mp-kanimozhi-met-vilathikulam-mla-markandeyan-at-palayamkottai-prison#comments</comments><guid isPermaLink="false">4617b2a6-3649-47f0-9ee4-5b2cdf4c0faf</guid><pubDate>Mon, 03 Aug 2026 10:57:24 +0000</pubDate><atom:updated>2026-08-03T10:57:24.202Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கனிமொழி எம்.பி.,Prison,palayamkottai,Kanimozhi,பாளையங்கோட்டை சிறை,மார்க்கண்டேயன்,Markandeyan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/c0aum67a/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/c0aum67a/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>பாளையங்கோட்டை  சிறையில் அடைக்கப்பட்டுள்ள தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை தி.மு.க. எம்.பி. கனிமொழி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். </p><p>தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த 18-ந்தேதி தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற விளாத்திகுளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், அவதூறாகவும் பேசினார் என்று கூறப்படுகிறது. </p><p>இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை போலீசார் கடந்த 20-ந்தேதி கைது செய்தனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மார்க்கண்டேயனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் நெல்லை பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.</p><p>இதையடுத்து, தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தாக்கல் செய்த மனுவை தூத்துக்குடி கோர்ட்டு கடந்த 22ம் தேதி தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி தூத்துக்குடி கோர்ட்டில் 2வது முறையாக மார்க்கண்டேயன் மீண்டும் மனு தாக்கல் செய்தார். அந்த ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.</p><p>இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அவருக்கு கொடுக்கப்பட்ட நிபந்தனைகளின்படி, “இனிமேல் இதுபோன்று பேசமாட்டேன் என்று உத்தரவாதம் அளிக்க வேண்டும். தூத்துக்குடி காவல் நிலையத்தில் நாள்தோறும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். சட்டமன்றம் நடைபெறும் நாளில் மட்டும் கையெழுத்திடுவதில் விலக்கு அளிக்கப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.</p><p>இந்த நிலையில், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி., பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு நேரில் சென்று, விரைவில் விடுதலையாக உள்ள மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வை சந்தித்து நலம் விசாரித்தார். இதற்கு முன்னர் கடந்த மாதம் ஜூலை 21-ந்தேதி பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு நேரில் சென்று மார்க்கண்டேயனை கனிமொழி சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>கருகிய குறுவை பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/compensation-of-rs-25000-per-acre-should-be-provided-for-scorched-paddy-crops-edappadi-palaniswami-insists</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/compensation-of-rs-25000-per-acre-should-be-provided-for-scorched-paddy-crops-edappadi-palaniswami-insists#comments</comments><guid isPermaLink="false">392542d6-71ed-4372-91b0-1ac49b52795f</guid><pubDate>Mon, 03 Aug 2026 10:56:55 +0000</pubDate><atom:updated>2026-08-03T10:56:55.389Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இழப்பீடு,Compensation,எடப்பாடி பழனிசாமி,சென்னை,வலியுறுத்தல்,குறுவை சாகுபடி,To Edappadi Palanisamy</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/kzrodza8/170.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/kzrodza8/170.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அதிமுக பொதுச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">எடப்பாடி பழனிசாமி</a> வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ஆம் தேதி குறுவை சாகுபடிக்கு மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும். ஆனால், இந்த ஆண்டு மேட்டூரில் இருந்து த.வெ.க. அரசு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடவில்லை.</p><h2>குறுவை சாகுபடி</h2><p>காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படாத நிலையில், ஆற்றுப் பாசனத்தை நம்பியுள்ள சுமார் 1.85 லட்சம் ஏக்கர் நிலத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை சாகுபடி செய்யாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளைப் பயன்படுத்தி டெல்டா மாவட்ட விவசாயிகள் இந்த ஆண்டு குறுவை சாகுபடி மேற்கொண்டனர். ஒரு ஏக்கர் நிலத்தில் நெற்பயிர் சாகுபடி செய்வதற்கு உடல் உழைப்போடு சுமார் ரூ. 25,000/- விவசாயிகளுக்கு செலவாகி உள்ளது. இந்நிலையில், தண்ணீர் இல்லாமல் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம், குடவாசல் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் முழுவதும் சுமார் 1 லட்சம் ஏக்கரில் பயிர் செய்த குறுவை நெற்பயிர்கள் கருகியதால் விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து பாதிப்படைந்துள்ளனர்.</p><h2>இழப்பீடு</h2><p>த.வெ.க. கூட்டணி அரசு உடனடியாக வருவாய் மற்றும் வேளாண்துறை அதிகாரிகளை டெல்டா மாவட்டங்களுக்கு நேரில் அனுப்பி, நெற்பயிர்கள் கருகி பாதிப்படைந்துள்ள விவசாய நிலங்களை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 25,000 -த்தை நஷ்ட ஈடாக வழங்குவதுடன், மீதமுள்ள நெற்பயிர்களைப் பாதுகாக்கும் வகையில், விவசாயத்திற்கு 24 மணிநேரமும் விலையில்லா மும்முனை மின்சாரத்தை தொடர்ந்து தடையின்றி வழங்க வேண்டும் என்றும் பொய்க்கால் குதிரை த.வெ.க. கூட்டணி அரசை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆலமரத்திற்கு 107-வது பிறந்தநாள்... கேக் வெட்டி கொண்டாடிய மாணவர்கள் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/students-in-madurai-celebrated-the-107th-birthday-of-banyan-tree</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/students-in-madurai-celebrated-the-107th-birthday-of-banyan-tree#comments</comments><guid isPermaLink="false">c8c46913-bcaf-406b-9be7-50c8f30352e7</guid><pubDate>Mon, 03 Aug 2026 10:42:41 +0000</pubDate><atom:updated>2026-08-03T10:42:41.671Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,birthday celebration,பிறந்தநாள் கொண்டாட்டம்,பழமையான ஆலமரம்,banyan tree</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/l6jyf02r/24.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ 107 வயது ஆலமரம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மதுரையில் ஆலமரத்திற்கு 107 பிறந்தநாள் விழா.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/l6jyf02r/24.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மதுரை மாவட்டம் </a>செல்லூர் கண்மாய்க்கரையில் அமைந்துள்ள ஆலமரத்திற்கு 107-வது பிறந்தநாளை மாணவர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கேக் வேட்டி கொண்டாடினர். </p><h2>பசுமை திருவிழா கொண்டாட்டம்</h2><p>மதுரை மாவட்டம் மீனாம்பாள்புரம் செல்லூர் கண்மாய்க்கரை பகுதியில் நூற்றாண்டு கடந்து கம்பீரமாக காட்சியளிக்கிறது ஒரு ஆலமரம். இந்த மரத்தின் 107-வது ஆண்டைக் குறிக்கும் வகையில் சமீபத்தில், "இயற்கை பசுமை திருவிழா" என்ற பெயரில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பிறந்தநாள் விழா</a> ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. </p><p>இந்த விழாவில், நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனர் அபுபக்கர், மதுரை காமராஜ் பல்கலைக்கழக பேராசிரியர் நாகரத்தினம், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் மீனாம்பாள்புரம் ராஜாஜி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.</p><h2>கேக் வெட்டி கொண்டாட்டம்</h2><p>மரத்தின் முன்பாக 107 வயது எனக் குறிப்பிடப்பட்ட <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பெரிய கேக் </a>வைக்கப்பட்டு, மாணவர்கள் வாழ்த்துப் பாடல்களைப் பாடி உற்சாகமாகக் கேக் வெட்டி கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.</p><h2>பாதுகாக்க கோரிக்கை</h2><p>மதுரை நகரில் சாலை விரிவாக்கம் மற்றும் பல்வேறு காரணங்களால் பல பெரிய மரங்கள் வெட்டப்பட்டு வரும் நிலையில், எஞ்சியிருக்கும் இந்த ஆலமரம் பல அரிய வகை பறவைகளின் புகலிடமாக விளங்கி வருகிறது. நகரின் வெப்பம் மற்றும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இத்தகைய மரங்களைப் பாதுகாப்பது அவசியம் என விழாவில் வலியுறுத்தப்பட்டது.</p><p>மேலும், இந்த பழமையான மரத்தைச் சுற்றி குப்பைகள் கொட்டுவதைத் தடுத்து, அதன் வேர்களை மண்ணிட்டு மூடி முறையான தடுப்பு வேலி அமைத்து அரசு பாதுகாக்க வேண்டும் என்றும் இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மரங்களை வெறும் மரமாகப் பார்க்காமல், மனித குலத்தைக் காக்கும் உயிர் நாடியாக மதித்து நடத்தப்பட்ட இந்த பிறந்தநாள் விழா மதுரை மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தீரன் சின்னமலை நினைவு தினம்:  மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiran-chinnamalai-memorial-day-mk-stalin-pays-tribute</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiran-chinnamalai-memorial-day-mk-stalin-pays-tribute#comments</comments><guid isPermaLink="false">81169be1-b2f9-46f4-895a-bedb4b342cb3</guid><pubDate>Mon, 03 Aug 2026 10:36:01 +0000</pubDate><atom:updated>2026-08-03T10:36:01.150Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Tribute,நினைவு தினம்,மு.க. ஸ்டாலின்,தீரன் சின்னமலை சிலை,M.K. Stalin,புகழஞ்சலி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/994geqes/169.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.க. ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/994geqes/169.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>தீரன் சின்னமலை நினைவு தினத்தை முனிட்டு மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.</p><p>இது தொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க. ஸ்டாலின்</a> தனது எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>புகழஞ்சலி</h2><p>ஆங்கிலேய ஆதிக்கத்தை அசரடித்த வீர வித்து தீரன் சின்னமலை நினைவு நாள். எத்தனை முறை எத்தகு படைகளைக் கொண்டு தாக்கியும் வெற்றி கொள்ள முடியாத பெருவீரனாகப் போரிட்டவர் தீரன் சின்னமலை.</p><p>திப்பு சுல்தானுடன் கூட்டணி அமைத்து பிரிட்டிஷாருக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய விடுதலைப் போராளி. நேரடியாக எதிர்கொள்ள இயலாத எதிரிகள் சூழ்ச்சியால் அவரைத் தூக்கிலிட்டாலும் அவர் புகழைத் தமிழ்நாடு போற்றிக் கொண்டே இருக்கும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மாணவர்கள் மத்தியில் தலைமை ஆசிரியையை சரமாரியாக தாக்கிய ஆசிரியை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/teacher-attacks-headmistress-in-front-of-students</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/teacher-attacks-headmistress-in-front-of-students#comments</comments><guid isPermaLink="false">71bd5009-fc16-4602-8c22-47a67a3b0900</guid><pubDate>Mon, 03 Aug 2026 10:33:46 +0000</pubDate><atom:updated>2026-08-03T10:33:46.955Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர்,Karur,Teacher,ஆசிரியை,மாணவர்கள்,studensts</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/2yoigd3c/teacher33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மத்தியில் தலைமை ஆசிரியை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/2yoigd3c/teacher33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>அரசு பள்ளி தலைமை ஆசிரியை புவனா  என்பவரை, ஆசிரியை கலைமதி  என்பவர் தாக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.</p><p>கரூர்,</p><p>கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை ஊராட்சி ஆண்டாங்கோவில் கிழக்கு அரசு தொடக்கப்பள்ளி <a href="https://www.dailythanthi.com/search?q=teacher">தலைமை ஆசிரியை</a> புவனா. இதே பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக கலைமதி என்பவர் பணியாற்றி வருகிறார்.</p><p>கலைமதி சரியாக வேலை செய்யவில்லை என, புவனா அளித்த புகாரால், வட்டார கல்வி அலுவலர் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.இதில் ஆத்திரமடைந்த கலைமதி, ஜூலை 30ல் வகுப்பறையில் வைத்து, மாணவர்கள் மத்தியில் தலைமை ஆசிரியை புவனாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தை, தன் செல்போனில் மற்றொரு ஆசிரியை பதிவு செய்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.</p><p>மாவட்ட கல்வி அலுவலர் சண்முகவேல் கூறுகையில், தலைமை ஆசிரியை புவனா மீது, ஆசிரியை கலைமதி தாக்குதல் நடத்தியது குறித்து, விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில்  நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.</p><p>இந்த சம்பவம் மாணவர்கள், பெற்றோர்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>காஞ்சிபுரம் தொழில் வளாகத்தில் முதல்-அமைச்சர் விஜய் ஆய்வு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-inspects-kanchipuram-industrial-complex</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-inspects-kanchipuram-industrial-complex#comments</comments><guid isPermaLink="false">3a8f5600-917b-4fa3-a5c8-725bf16918ff</guid><pubDate>Mon, 03 Aug 2026 10:23:16 +0000</pubDate><atom:updated>2026-08-03T10:23:16.980Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,விஜய்,காஞ்சிபுரம்,Actor Vijay,தொழிற்சாலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/l4hpbk5r/vijay33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  முதல்-அமைச்சர் விஜய் ஆய்வு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/l4hpbk5r/vijay33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>ஸ்ரீபெரும்புதூர், ஒரகடத்தில் தனியார் தொழிற்சாலைகளை முதல்-அமைச்சர் விஜய்  நேரில் ஆய்வு செய்கிறார்.</p><p>காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடத்தில் அமைந்துள்ள சிப்காட் தொழிற் வளர்ச்சி மையத்தில், 'டெய்ம்லர் பஸஸ் இந்தியா' என்ற நிறுவனம் சார்பில் 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிர மாண்டமான 'டெய்ம்லர் இந்தியா வர்த்தக வாகனங்கள்' உற் பத்தி செய்யும் தொழிற்சாலை இயங்குகிறது. இந்த நிறுவனம் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.</p><h2>விஜய்</h2><p>'பாரத்பென்ஸ்' மற்றும் 'மெர்சிடிஸ்-பென்ஸ்' முத்திரையிடப் பட்ட பஸ்களையும், 'பஸ் சேஸ்'களையும் உற்பத்தி செய்கிறது. வணிக வாகன உற்பத்தியில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனத்தை இன்று <a href="https://www.dailythanthi.com/search?q=vijay">முதல்-அமைச்சர் விஜய் </a>பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.</p><h2>கண்ணாடி தொழிற்சாலை</h2><p>முன்னதாக  ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கத்தில் செயல்படும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான செயின்ட் கோபின் நிறுவனமும், தமிழக அரசுடன் இணைந்து புரிந்து ணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.</p><p>இந்த நிறுவனம் உலகத்தரத்திலான கண்ணாடி தயாரிப்பு வளாகத்தை விரிவுபடுத்தி உள்ளது. இதனை முதல்-அமைச்சர் விஜய் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து நிசான் கார் கம்பெனியையும் முதல்-அமைச்சர் விஜய் பார்வையிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக விவசாயிகளுக்கு சாகுபடி இழப்பீட்டுக்கான சிறப்பு தொகுப்பை உயர்த்தி வழங்க வேண்டும் -  ஜி.கே.வாசன் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-package-for-cultivation-compensation-should-be-increased-for-tamil-nadu-farmers-gk-vasan-insists</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-package-for-cultivation-compensation-should-be-increased-for-tamil-nadu-farmers-gk-vasan-insists#comments</comments><guid isPermaLink="false">01291ab8-a975-47b6-9da1-66f7abcc03af</guid><pubDate>Mon, 03 Aug 2026 10:18:30 +0000</pubDate><atom:updated>2026-08-03T10:18:30.024Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>G.K. Vasan,சென்னை,farmer,வலியுறுத்தல்,cultivation,ஜி.கே.வாசன்,இழப்பீடு தொகை,தமிழக விவசாயிகள்,insists</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/z8mbr1sx/168.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜி.கே.வாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/z8mbr1sx/168.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி இழப்பீட்டுக்கான சிறப்பு தொகுப்பை உயர்த்தி வழங்க வேண்டும் என்று <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9C%E0%AE%BF.%E0%AE%95%E0%AF%87.%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D">ஜி.கே.வாசன்</a> வலியுறுத்தி உள்ளார்.</p><p>இது தொடர்பாக, தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி காவிரி நீரை கர்நாடக அரசு உரிய நேரத்தில் திறக்காததால் தமிழகம் முழுவதும் சுமார் 7 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெறவில்லை, வாழ்வாதாரத்தை இழந்து வாடும் விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்த குறுவை சாகுபடி இழப்பீட்டுக்கான ரூ.134.83 கோடி சிறப்புத் தொகுப்பை உயர்த்தி வழங்க வேண்டும். தமிழக விவசாயிகளின் நியாயமான எதிர்பார்ப்பை கர்நாடகாவில் பெய்த தொடர் மழையின் மூலம் இயற்கை அண்ணையே பிரதிபலித்திருக்கிறது.</p><h2>குறுவை சாகுபடி</h2><p>நம்முடைய தண்ணீர் உரிமையை, காவிரி மேலேண்மை ஆணையத்தின் உத்தரவை மறுத்து வருகிறது கர்நாடக அரசு. கடந்த ஆண்டில் தமிழ்நாட்டில் 12.48 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நடைபெற்ற சாகுபடியானது நடப்பு ஆண்டில் தண்ணீர் பற்றாக்குறையால் 5.32 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்றுள்ளது. சுமார் 7 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்ய முடியவில்லை.</p><p>குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் 5.32 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெறும் வேளையில் நடப்பு ஆண்டில் தண்ணீர் பற்றாக்குறையால் 4.39 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்றது. சுமார் 1 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய முடியவில்லை. அதாவது காவிரி நீரை கர்நாடகா திறக்காததால், தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு குறுவை சாகுபடி சுமார் 7 லட்சம் ஏக்கர் பரப்பளவு வரை குறைந்துள்ளது.</p><h2>தமிழக விவசாயிகள்</h2><p>இதனையெல்லாம் கர்நாடக அரசு கவனத்தில் கொள்ளாமல் தன்னிச்சையாக முடிவு எடுத்து தமிழக விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது நீடிக்கக்கூடாது என்பது தான் ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. காவிரி நதிநீர் உடன்பாடு, மேகதாது அணைத்திட்டம் ஆகியவற்றில் தமிழக அரசு ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு தமிழக விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்ற வேண்டும். காவிரி நதிநீர் தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடுவது சரியான அணுகுமுறையாக அமைகிறது என த.மா.கா(மூ) கருதுகிறது.</p><p>குறுவை சாகுபடி பாதித்த விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்த ரூ.134.83 கோடி சிறப்புத் தொகுப்பை உயர்த்தி வழங்க வேண்டும் என்று<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D(%E0%AE%AE%E0%AF%82)"> தமிழ் மாநில காங்கிரஸ்(மூ)</a> சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘கிட்டப்பர்களாக இருந்தவர்கள் எட்டப்பர்களாக மாறிவிட்டார்கள்...’ - காங்கிரஸ், தி.மு.க. குறித்து தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/those-who-were-once-kittappars-have-turned-into-ettappars-tamilisai-soundararajan-criticizes-the-congress-and-dmk</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/those-who-were-once-kittappars-have-turned-into-ettappars-tamilisai-soundararajan-criticizes-the-congress-and-dmk#comments</comments><guid isPermaLink="false">3490e610-1f83-40eb-9957-57fae7bc3b53</guid><pubDate>Mon, 03 Aug 2026 10:16:40 +0000</pubDate><atom:updated>2026-08-03T10:16:40.707Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,காங்கிரஸ்,Congress,தமிழிசை சவுந்தரராஜன்,தி.மு.க.,Tamilisai Soundarajan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/biboy3bc/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/biboy3bc/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வேலூர்,</p><p>கிட்டப்பர்களாக இருந்தவர்கள் எட்டப்பர்களாக மாறி, ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருக்கிறார்கள் என தி.மு.க. மற்றும் காங்கிரஸ் குறித்து தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். </p><p>வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“தொகுதி மறுவரையறை காரணமாக தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் வராது, தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உறுதியாக சொன்ன பிறகும், காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வினர் இந்த விவகாரத்தில் தொடர்ந்து அரசியல் செய்து கொண்டிருந்தார்கள். </p><p>இன்று தி.மு.க. மற்றும் காங்கிரஸ் பிரிந்துவிட்டார்கள். கிட்டப்பர்களாக இருந்தவர்கள் எட்டப்பர்களாக மாறி, ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பிரச்சினை நமக்கு தேவையில்லை. தமிழக மக்கள் பயன்பெற வேண்டும் என்பதுதான் நமது ஆசை.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>விருதுநகர்: அரசுப் பள்ளிக்கு அடிப்படை வசதிகள் கேட்டு தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/virudhunagar-public-appeals-to-the-tamil-nadu-government-for-basic-amenities-at-a-government-school</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/virudhunagar-public-appeals-to-the-tamil-nadu-government-for-basic-amenities-at-a-government-school#comments</comments><guid isPermaLink="false">0701d778-205c-496f-b90f-ca0674a1e290</guid><pubDate>Mon, 03 Aug 2026 10:07:51 +0000</pubDate><atom:updated>2026-08-03T10:07:51.582Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Virudhunagar,விருதுநகர்,அரசுப் பள்ளி,பொதுமக்கள் கோரிக்கை,public request,the Tamil Nadu government</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/a764m2iw/61.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ ரெங்கப்பாளையம்- அரசு தொடக்கப்பள்ளி]]></media:title><media:description type="html"><![CDATA[ விருதுநகர்: அரசுப் பள்ளிக்கு அடிப்படை வசதிகள் கேட்டு தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/a764m2iw/61.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர்,</p><p>விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை என அந்தப் பகுதி பொதுமக்களும் பெற்றோர்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><h2>பள்ளியின் பாதுகாப்பின்மை</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விருதுநகர் மாவட்டம்</a> வத்திராயிருப்பு அருகே உள்ள ரெங்கப்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு ஒன்று இயங்கி வருகிறது. அந்தப் பள்ளியில் முறையான குடிநீர் வசதி, கழிவறை உள்ளிட்ட அத்தியாவசிய உள்கட்டமைப்பு வசதிகள் தற்பொழுது போதிய அளவில் இல்லை என கூறப்பட்டது. மேலும், பள்ளிக்கு பாதுகாப்பு சுற்றுச்சுவர் இல்லாததால், பள்ளி நேரங்களிலும், அதற்குப் பிறகும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.</p><h2>பொதுமக்கள் கோரிக்கை</h2><p>வசதிகள் குறைபாட்டின் காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக அப்பள்ளியில் மாணவர் சேர்க்கையும் தொடர்ந்து குறைந்து வருவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டினர். எனவே, மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகமும் பள்ளிக் கல்வித்துறையும் உடனடியாக தலையிட வேண்டும் என<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> கோரிக்கை</a> எழுந்துள்ளது.</p><p>பள்ளிக்குத் தேவையான நிதியை ஒதுக்கி, உடனடியாக சுற்றுச்சுவர் மற்றும் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் விரைவில் செய்து தர வேண்டும் என தமிழக அரசுக்கு அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>காவிரி விவகாரம்: தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய நீரைப் பெற உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-petition-in-supreme-court-over-cauvery-water-share</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-petition-in-supreme-court-over-cauvery-water-share#comments</comments><guid isPermaLink="false">72ff5bd2-9bbc-4e85-88ff-bfe85cf74a4f</guid><pubDate>Mon, 03 Aug 2026 09:50:10 +0000</pubDate><atom:updated>2026-08-03T09:50:10.491Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,உச்ச நீதிமன்றம்,தமிழ்நாடு அரசு,Tamil Nadu Government,Cauvery issue,காவிரி விவகாரம்,மனுPetition</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/8emegfdt/tamilnadu-government.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு அரசு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/8emegfdt/tamilnadu-government.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய நீரைப் பெற உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p> <h2>உச்ச நீதிமன்றத்தில் வழக்கு</h2><p>காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் உத்தரவுகளின்படி கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடாத நிலையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவுறுத்தலின் படி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.</p><h2>ஆய்வு</h2><p>28.07.2026 அன்று நடைபெற்ற 139-வது கூட்டத்தில், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு காவிரி படுகையின் நீரியல்-வானிலை சூழலை ஆய்வு செய்து, 29.07.2026 (காலை 8.00 மணி) முதல் அடுத்த 15 நாட்களுக்கு (29.07.2026 முதல் 12.08.2026 வரை) பில்லிகுண்டுலுவில் வினாடிக்கு 3500 கன அடி வீதம் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யுமாறு கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து கர்நாடக அரசு தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. </p><p>30.07.2026 அன்று நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 54-வது (அவசர) கூட்டத்திலும் காவிரி படுகையின் நீரியல்-வானிலை நிலவரம் ஆய்வு செய்யப்பட்டு, குழுவின் முடிவு உறுதி செய்யப்பட்டது.</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D">காவிரி நீர்</a> முறைப்படுத்தும் குழுவின் உத்தரவுக்கு பிறகு, பில்லிகுண்டுலுவில் 29.07.2026 முதல் 02.08.2026 வரை வரப்பெற்ற நீரின் அளவு வினாடிக்கு 158 முதல் 550 கனஅடி மட்டுமே.</p><h2>சிரமமும் இருக்காது</h2><p>3 ஆகஸ்ட் 2026 நிலவரப்படி, கர்நாடகாவின் கே.ஆர்.எஸ்-அணையில் 23.078 டி.எம்.சி, கபினியில் 18.610 டி.எம்.சி, ஹாரங்கியில் 7.827 டி.எம்.சி மற்றும் ஹேமாவதியில் 28.022 டி.எம்.சி என மொத்தம் 77.537 டி.எம்.சி மொத்த நீர் இருப்பு (பயன்பாட்டு நீர் இருப்பு 67.517 டி.எம்.சி) உள்ளது. எனவே, விகிதாச்சார அடிப்படையில் பில்லிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கு நீரை தனது அணைகளில் இருந்து திறந்து விடுவதில் கர்நாடக அரசுக்கு எந்தச் சிரமமும் இருக்காது.</p><h2>விகிதாச்சாரப்படி</h2><p>இதற்கிடையே, கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அதிக மழை பெய்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால், விகிதாச்சாரப்படி பில்லிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு கிடைக்கவேண்டிய நீரின் அளவு 26.954 டி.எம்.சி ஆகும். இதன்படி, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அளித்த உத்தரவான 4.536 டி.எம்.சி மிகக் குறைவாகும்.</p><h2>முதல்-அமைச்சர் உத்தரவு</h2><p>இச்சூழலில், விகிதாச்சார அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய நீரை கர்நாடக அரசு அளிக்க தவறியதாலும் தமிழ்நாட்டிற்கு விகிதாச்சாரப்படி கிடைக்க வேண்டிய நீர் 26.954 டி.எம்.சி என்பதாலும், மூத்த வழக்கறிஞர்களின் ஆலோசனைப்படி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D">தமிழ்நாடு முதல்-அமைச்சர்</a> இன்று உச்சநீதிமன்றத்தினை அணுகி தக்க உத்தரவை பெற அறிவுறுத்தினார்.</p><h2>மனு தாக்கல்</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின் படி இப்பிரச்சனைக்கு தீர்வு காணவும் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை குறித்த காலத்தில் பெறவும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81">உச்சநீதிமன்றத்தில் இன்று மனு</a> தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தீரன் சின்னமலை நினைவு தினம்: அமைச்சர் ராஜேஷ்குமார் மலர்தூவி மரியாதை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiran-chinnamalai-memorial-day-minister-rajesh-kumar-pays-floral-tributes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiran-chinnamalai-memorial-day-minister-rajesh-kumar-pays-floral-tributes#comments</comments><guid isPermaLink="false">b89b7eb5-1361-4f85-ab77-60a8c06062f2</guid><pubDate>Mon, 03 Aug 2026 09:43:47 +0000</pubDate><atom:updated>2026-08-03T09:43:47.318Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Memorial Day,மரியாதை,தீரன் சின்னமலை சிலை,Minister Rajesh Kumar,அமைச்சர் ராஜேஷ்குமார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/k95gssje/167.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ராஜேஷ்குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/k95gssje/167.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">அமைச்சர் ராஜேஷ்குமார்</a> மலர்தூவி மரியாதை செலுத்தினார்.</p><h2>அமைச்சர் மரியாதை</h2><p>சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் 221-வது நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேஷ்குமார் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.</p><p>இந்த நிகழ்வில் தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜோதி பொன்னம்பலம், முன்னணி அமைப்புகள், பல்வேறு துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு தீரன் சின்னமலையின் தியாகத்தையும், நாட்டிற்காக அவர் ஆற்றிய பங்களிப்பையும் நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தினர்.</p>]]></content:encoded></item><item><title>விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tdtv-dhinakaran-urges-cm-to-safeguard-farmers-livelihoods</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tdtv-dhinakaran-urges-cm-to-safeguard-farmers-livelihoods#comments</comments><guid isPermaLink="false">f6d3662c-eacf-4477-82f1-c7315b2bfb99</guid><pubDate>Mon, 03 Aug 2026 09:24:12 +0000</pubDate><atom:updated>2026-08-03T09:24:12.774Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,விவசாயிகள்,வலியுறுத்தல்,protected,Livelihood,வாழ்வாதாரம்,All farmers,Urges</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/qgexrd02/ttv-dinakaran.gif" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/qgexrd02/ttv-dinakaran.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும் என <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்க்கு</a>  வலியுறுத்துகிறேன் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார். இது தொடர்பாக, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-</p><h2> முதல்-அமைச்சர் கண்டிப்பாரா ?</h2><p>டெல்லிக்கு போராட்டம் நடத்த சென்ற <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">தமிழக விவசாயிகள்</a> நாக்பூரில் தடுத்து நிறுத்தப்பட்டு தமிழகத்திற்கு திருப்பி அனுப்பி வைப்பு  – தமிழக விவசாயிகள் மீதான மராட்டிய மாநில அரசாங்கத்தின் அடக்குமுறையையாவது தமிழக முதல்-அமைச்சர் கண்டிப்பாரா ? அல்லது காவிரி விவகாரத்தை போலவே மவுனம் காப்பாரா ?</p><h2>செய்திகள் வெளியாகியுள்ளன</h2><p>காவிரி நதிநீர் மற்றும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">மேகதாது அணை விவகாரத்தில்</a> போராட்டம் நடத்துவதற்காக ரெயில் மூலமாக டெல்லி சென்ற தமிழக காவிரி டெல்டா பாசன மாவட்டங்களை சார்ந்த விவசாயிகளை நாக்பூரில் தடுத்து நிறுத்தி வலுக்கட்டாயமாக மீண்டும் தமிழகத்திற்கே அனுப்பி வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. </p><h2>எங்கிருந்து அதிகாரம் வந்தது ? </h2><p>மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்தின் சட்டவிரோத போக்கை கண்டித்தும், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் ஜனநாயகம் தங்களுக்கு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையை பயன்படுத்தி டெல்லிக்கு போராட சென்ற தமிழக விவசாயிகளை தடுத்து நிறுத்தவும், அவர்களை திருப்பி அனுப்பவும் மராட்டிய மாநில அரசுக்கும் அங்குள்ள காவல்துறைக்கும்  எங்கிருந்து அதிகாரம் வந்தது ? </p><h2>நகைப்புக்குரியது</h2><p>கர்நாடக மாநில முதல்-மந்திரியுடன் பேச்சுவார்த்தை நடத்தி கையோடு தண்ணீரை கொண்டு வரப்போவதாக தவெக ஆச்சரியகுறிகள் பரப்பிய ரீல்ஸ்கள் அனைத்தும் அறுந்து போன நிலையில், இயற்கையின் கொடையால்  கர்நாடக நீர் பிடிப்பு  பகுதிகளில் கனமழை பொழிந்து காவிரிக்கு நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், ஏதோ தாங்களே இயற்கையிடம் மன்றாடி நீரை கொண்டுவந்ததை போல தவெகவினர் தங்கள் தலைவரை  இயற்கையின் அருளை பெற்ற தேவதூதன் எனவும், தெய்வ குழந்தை எனவும் தற்போது ரீல்ஸ் பரப்பி கொண்டு இருப்பது நகைப்புக்குரியது.</p> <h2>கும்பக்கர்ண தூக்கம்</h2><p>எனவே, டெல்லி சென்று கொண்டிருந்த விவசாயிகளை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியது தொடர்பாக மராட்டிய மாநில அரசாங்கத்திடன் உடனடியாக விளக்கம் கேட்பதோடு, தனது கும்பக்கர்ண தூக்கத்தை கலைத்து தமிழகத்தின் ஜீவாதாரமான காவிரி நதிநீர் விவகாரத்தில் மாநிலத்தின் உரிமையை எந்தவகையிலும் விட்டுக் கொடுக்காமல் உறுதியாக நின்று விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும் என முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>தீரன் சின்னமலை நினைவு தினம் - அண்ணாமலை புகழஞ்சலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/theeran-chinnamalai-memorial-day-annamalai-tribute</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/theeran-chinnamalai-memorial-day-annamalai-tribute#comments</comments><guid isPermaLink="false">1d0f242a-8200-4765-8bbd-436bc4026ad8</guid><pubDate>Mon, 03 Aug 2026 09:14:41 +0000</pubDate><atom:updated>2026-08-03T09:14:41.737Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவை,Annamalai,அண்ணாமலை,Theeran Chinnamalai,அஞ்சலி Tribute,தீரன் சின்னமலை சிலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/1flgttfg/166.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அண்ணாமலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/1flgttfg/166.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>வி த லீடர்ஸ் இயக்கத்தின் நிறுவனர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">அண்ணாமலை </a>தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>மாவீரர் தீரன் சின்னமலை</h2><p>ஆங்கிலேய ஆட்சியைத் துணிச்சலுடன் எதிர்த்து, தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக தனது உயிரையே தியாகம் செய்த, மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளில், அவருக்கு எங்கள் அஞ்சலியை செலுத்திக் கொள்கிறோம்.</p><p>அடிமைத்தனத்திற்கு ஒருபோதும் தலைவணங்காத மனஉறுதியும், தாய்நாட்டின் மீது கொண்ட அசைக்க முடியாத பற்றும், எதிரிகளை அச்சுறுத்திய போர்த்திறனும், தீரன் சின்னமலை அவர்களின் தனித்துவ அடையாளம். </p><p>தலைமுறைகள் கடந்தும் வாழும் தீரன் சின்னமலை அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம். </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">ஆங்கிலேய ஆட்சியைத் துணிச்சலுடன் எதிர்த்து, தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக தனது உயிரையே தியாகம் செய்த, மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளில், அவருக்கு எங்கள் அஞ்சலியை செலுத்திக் கொள்கிறோம்.<br><br>அடிமைத்தனத்திற்கு ஒருபோதும் தலைவணங்காத மனஉறுதியும், தாய்நாட்டின் மீது கொண்ட… <a href="https://t.co/gDMouJIORJ">pic.twitter.com/gDMouJIORJ</a></p>&mdash; K.Annamalai (@annamalai_k) <a href="https://x.com/annamalai_k/status/2084112753850208660?ref_src=twsrc%5Etfw">August 3, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>கொடைச்சிறப்பும் வீரமும் ஒருங்கே திகழ்ந்த மாமன்னர் வல்வில் ஓரிக்கு வீரவணக்கம்! - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tribute-to-king-valvil-ori-nainar-nagendran-message</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tribute-to-king-valvil-ori-nainar-nagendran-message#comments</comments><guid isPermaLink="false">a090a99d-14bc-471d-8fe1-fd993f6bb8a8</guid><pubDate>Mon, 03 Aug 2026 09:04:04 +0000</pubDate><atom:updated>2026-08-03T09:04:04.263Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,வீரம்,salute,வீரவணக்கம்,Heroic,வல்வில் ஓரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/0p9mtlgc/ori.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாமன்னர் வல்வில் ஓரி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/0p9mtlgc/ori.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கொடைச்சிறப்பும் வீரமும் ஒருங்கே திகழ்ந்த மாமன்னர் வல்வில் ஓரிக்கு வீரவணக்கம், மாமன்னரின் விழாவை முன்னிட்டு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:-</p><p>கடையெழு வள்ளல்களில் ஒருவரும், கொடைச் சிறப்பும், வீரமும் ஒருங்கே திகழ்ந்த "மாமன்னர் வல்வில் ஓரி" வீரவணக்கம்!</p> <h2>நினைவு விழா</h2><p>மாமன்னர் வல்வில் ஓரி அவர்களின் நினைவு விழாவை முன்னிட்டு, இன்று ஈரோடு மாவட்டம், கொட்டாரத்தோட்டம், அறச்சலூரில் நடைபெற்ற மரியாதை நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.</p> <p>அந்நிகழ்வில், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கலந்து கொண்டு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BF">மாமன்னர் வல்வில் ஓரி</a> திருஉருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினோம்.</p> <h2>வரவேற்பு</h2><p>அப்போது, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான  விடியல் சேகர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய நிர்வாகியான திலகபாமா அன்புடன் வரவேற்று நிகழ்வில் இணைந்தனர்.</p><h2>மரியாதை</h2><p>மேலும், இந்நிகழ்வில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், காரியகர்த்தாக்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு, மாமன்னர் வல்வில் ஓரி புகழையும் வீர வரலாற்றையும் போற்றும் வகையில் தங்களது மரியாதையை செலுத்தினர்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">கடையெழு வள்ளல்களில் ஒருவரும், கொடைச் சிறப்பும், வீரமும் ஒருங்கே திகழ்ந்த &quot;மாமன்னர் வல்வில் ஓரி&quot;அவர்களுக்கு வீரவணக்கம்!<br><br>மாமன்னர் வல்வில் ஓரி அவர்களின் நினைவு விழாவை முன்னிட்டு, இன்று ஈரோடு மாவட்டம், கொட்டாரத்தோட்டம், அறச்சலூரில் நடைபெற்ற மரியாதை நிகழ்வில் பல்வேறு அரசியல்… <a href="https://t.co/2WMNBbA3Wq">pic.twitter.com/2WMNBbA3Wq</a></p>&mdash; Nainar Nagenthran (@NainarBJP) <a href="https://x.com/NainarBJP/status/2084195364429762808?ref_src=twsrc%5Etfw">August 3, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் விளையாட்டு போட்டி: 39 பதக்கங்களுடன் இந்தியா 4-வது இடம் - வானதி சீனிவாசன் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/commonwealth-games-india-4th-with-39-medals-vanathi-srinivasan-congratulations</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/commonwealth-games-india-4th-with-39-medals-vanathi-srinivasan-congratulations#comments</comments><guid isPermaLink="false">9bee48fc-82cc-45d9-ba03-15b52e0ce0b7</guid><pubDate>Mon, 03 Aug 2026 08:58:40 +0000</pubDate><atom:updated>2026-08-03T08:58:40.975Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவை,Congratulations,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,விளையாட்டு வீரர்கள்,காமன்வெல்த்,CommonwealthGames</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/adiahahi/165.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/adiahahi/165.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p> <h2>வாழ்த்து</h2><p>கிளாஸ்கோ- 2026 <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D">காமன்வெல்த்</a> விளையாட்டு போட்டிகளில் இந்திய அணியின் அபாரமான ஆட்டத்தை வெளிபடுத்தியுள்ளது.</p><p>நமது விளையாட்டு வீரர்கள் ஈடு இணையற்ற உறுதி, மனவுறுதி மற்றும் சிறப்பை வெளிப்படுத்தி 13 தங்கம், 17 வெள்ளி மற்றும் 9 வெண்கல பதக்கங்களை வென்று, ஒட்டுமொத்தமாக 39 பதக்கங்களுடன் நான்காவது இடத்தைப் பிடித்தனர். ஒவ்வொரு பதக்கமும் வளர்ந்து வரும் இந்தியாவின் உணர்விற்குச் சான்றாகும். ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும், பயிற்சியாளருக்கும் மற்றும் துணைப் பணியாளர்களுக்கும் வாழ்த்துகள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>நூற்றாண்டு கண்ட அரசு பள்ளி: மேளதாளங்களுடன் சீர்வரிசை வழங்கி மிரளவிட்ட ஊர்மக்கள்...</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-century-old-government-school-villagers-dazzle-by-presenting-ceremonial-gifts-accompanied-by-music-and-drums</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-century-old-government-school-villagers-dazzle-by-presenting-ceremonial-gifts-accompanied-by-music-and-drums#comments</comments><guid isPermaLink="false">a6fe7057-6b09-4a8b-be66-c01e938097f2</guid><pubDate>Mon, 03 Aug 2026 08:38:51 +0000</pubDate><atom:updated>2026-08-03T08:38:51.454Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சேலம்,celebration,Government School,அரசுப்பள்ளி,Salem district,கல்வி சீர்வரிசை,ஊர்மக்கள்</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/1m66vtbl/60.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ அரசுப்பள்ளி நூற்றாண்டு விழா]]></media:title><media:description type="html"><![CDATA[ நூற்றாண்டு கண்ட அரசு பள்ளிக்கு ஊர் மக்கள் மேளதாளங்களுடன் சீர்வரிசை வழங்கி மகிழ்ந்தனர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/1m66vtbl/60.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம் மாவட்டத்தில் 100 ஆண்டுகளைக் கடந்து கல்விப் பணியாற்றி வரும் ஒரு அரசுப் பள்ளிக்கு, கிராம மக்கள் மேளதாளங்களுடன் சீர்வரிசை கொண்டு சென்றனர். </p><h2>100 ஆண்டுகள் கடந்த அரசுப்பள்ளி</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சேலம் மாவட்டம்</a> ஓமலூர் அருகே பெரிய காடம்பட்டி அரசு தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. அந்த பள்ளியின் நூற்றாண்டு விழாவை, அந்த கிராம மக்கள் கொண்டாட விரும்பினர். அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கவும் கல்விச் சீர்வரிசை வழங்கும் வழக்கம் தமிழகத்தில் பரவலாக நடந்து வருகிறது. அந்த வகையில், 100 ஆண்டுகளைக் கடந்து கல்விப் பணியாற்றி வரும் அந்த அரசுப் பள்ளிக்கு விழா நடத்த கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டனர்.</p><h2>விழாவின் முக்கிய நிகழ்வுகள்</h2><p>கிராம மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து தட்டுக்களில் நோட்டுப் புத்தகங்கள், எழுதுபொருட்கள், மின்விசிறிகள் மற்றும் பள்ளிக்குத் தேவையான பொருட்களை கையில் ஏந்தி ஊர்வலமாக வந்தனர். மேலும், பாரம்பரிய மேளதாளங்கள் மற்றும் தாரைத் தப்பட்டை முழங்க, உற்சாக ஆட்டத்துடன் சீர்வரிசைப் பொருட்கள் ஊர்வலமாகப் பள்ளிக்கு எடுத்து வரப்பட்டன. பின்னர் பள்ளியின் நூற்றாண்டு விழா உற்சாகமாக நடைபெற்றது.</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அரசுப் பள்ளி</a> மீதும், அங்கு படிக்கும் குழந்தைகள் மீதும் கிராம மக்கள் வைத்துள்ள பற்றை இந்த நிகழ்வு பிரதிபலிப்பதாக சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். நூற்றாண்டு கண்ட பள்ளியையும், அதன் ஆசிரியர்களையும் கவுரவிக்கும் வகையில் கிராமமே திரண்டு நடத்திய இந்த விழா தற்பொழுது இணையத்தில் வைரலாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>வல்வில் ஓரியின் பெரும்புகழ் போற்றுவோம் - சீமான் பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-celebrate-the-great-renown-of-valvil-ori-seemans-post</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-celebrate-the-great-renown-of-valvil-ori-seemans-post#comments</comments><guid isPermaLink="false">1a37a84b-5cc0-4ce4-ae2f-145fab4bf781</guid><pubDate>Mon, 03 Aug 2026 08:06:56 +0000</pubDate><atom:updated>2026-08-03T08:06:56.951Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,Seeman,வல்வில் ஓரி,Valvil Ori</media:keywords><media:content height="288" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/s44ywie2/15.gif" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/s44ywie2/15.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>கடையேழு வள்ளல்களுள் ஒருவரான வல்வில் ஓரியின் விழாவையொட்டி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>“கொல்லிமலையையும் அதைச் சுற்றி அமைந்த வளப்பூர், வாழவந்தி, திண்ணனூர், சேலூர், அரியூர், குண்டூர், தேவானூர், குண்டுனி, ஆலந்தூர், திருப்புலி, எடப்புலி, சித்தூர், பைல், பெரக்கரை உள்ளிட்ட 14 மலைநாடுகளை அரசாண்ட மாவீரன்...!</p><p>புறநானூறு, நற்றிணை, அகநானூறு, குறுந்தொகை, சிறுபாணாற்றுப்படை உள்ளிட்ட  சங்கத்தமிழ் இலக்கியங்கள் போற்றி புகழும் பெருவீரன்..!</p><p>இல்லை என்று வந்த புலவர்களுக்கும், பாணர்களுக்கும், இசைவாணர்களுக்கும்</p><p>அள்ளிக்கொடுத்து தமிழ் மண்ணில் நிலைத்த வள்ளல்..! விற்போரில் சிறந்து விளங்கிய  வீரத்தமிழ்மகன் வல்வில் ஓரியின் பெரும்புகழ் போற்றுவோம்!”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>நெசவாளர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் உரிமைத்தொகை: அரசுக்கு கோரிக்கை!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/demand-to-government-for-monthly-allowance-of-5000-for-weavers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/demand-to-government-for-monthly-allowance-of-5000-for-weavers#comments</comments><guid isPermaLink="false">a4770901-83e8-43f6-9cee-62ae5d316327</guid><pubDate>Mon, 03 Aug 2026 08:03:42 +0000</pubDate><atom:updated>2026-08-03T08:03:42.672Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>உரிமைத்தொகை,Weavers,நெசவாளர்கள்,கைத்தறி நெசவாளர்கள்,demand to govt,அரசுக்கு கோரிக்கை,தமிழக அரசுக்கு கோரிக்கை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/ur8kfuca/Untitled-16.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/ur8kfuca/Untitled-16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நெசவுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காக்கும் வகையில், நெசவாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள நெசவாளர்களுக்கு மாதம் ரூ.5000 உரிமைத் தொகை வழங்க வேண்டும் என தறி ஆடையகத்தின் நிறுவனர் சி. சண்முகம் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது, அவர் கூறியதாவது;-</p><p>தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு அடுத்தபடியாக பெரும்பான்மை உழைக்கும் சமூகம் நெசவாளர்கள் தான். உழவர்கள்  உணவை உற்பத்தி செய்து  மக்களின் பசியைப் போக்குகிறார்கள் என்றால், நெசவாளர்கள் ஆடைகளை தயாரித்து  மக்களின் மானத்தைக் காப்பவர்கள் நெசவாளர்கள் தான்.  அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும்.  நெசவாளர்களின் நலன்களை காப்பதற்காக கீழ்க்கண்ட <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கோரிக்கைகளை </a>நிறைவேற்ற வேண்டும் என்று  இந்திய ஜனநாயகத்தின் நான்காம் தூண்களான பத்திரிகையாளர்கள் வாயிலாக  அரசுக்கு  கோரிக்கை விடுக்கிறோம்.</p><h2>கோரிக்கைகள்:</h2><p>1. நெசவுத் தொழில் நலிவடைந்து வரும் நிலையில் அதை மீட்டெடுப்பதற்காக பல்வேறு புதிய திட்டங்களையும், சீர்திருத்தங்களையும் செய்ய வேண்டியுள்ளது. இதை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் வேளாண்மைத் துறைக்கு தனி நிதிநிலை தாக்கல் செய்யப்படுவதைப் போல நெசவுத்துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்.</p><p>2.  நெசவுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காக்கும் வகையில், நெசவாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள நெசவாளர்களுக்கு மாதம் ரூ.5000 உரிமைத் தொகை வழங்க வேண்டும்.</p><p>3. பட்டு நெசவாளர்களுக்கும், கைத்தறி நெசவாளர்களுக்கும்  30% கூலி உயர்வு வழங்க வகை செய்ய வேண்டும். ஆண்டுக்கு 10% கூலி உயர்வு வழங்குவதை சட்டப்பூர்வமாக்க வேண்டும்.</p><p>4. கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் நெசவாளர்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.</p><p>5. சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பட்டுப்புடவைகள் இறக்குமதி செய்யப்படுவதற்கு மத்திய, மாநில அரசுகள் தடை விதிக்க வேண்டும்.</p><p>6. நெசவுத் தொழிலுக்கு தேவையான  நூல், சாயம் உள்ளிட்ட மூலப் பொருள்களுக்கு 50% மானியம் வழங்க வேண்டும்.</p><p>7. கைத்தறி வீடுகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தின் அளவு 500 யூனிட்டுகளாகவும்,  விசைத்தறி உள்ள வீடுகளுக்கான  இலவச மின்சாரத்தின் அளவு  1500 யூனிட்டுகளாகவும் அதிகரிக்கப்பட வேண்டும்.</p><p>8. 12 விசைத்தறிகள் வரை உள்ள சிறிய விசைத்தறிக் கூடங்களுக்கு  சூரிய ஒளி மின்னுற்பத்திக் கட்டமைப்பை ஏற்படுத்த 75% மானியம் வழங்க வேண்டும்.</p><p>9.  ஆடை வடிவமைப்பு ( Designs), துணி தொழில்நுட்பம் ( Textile Technology) போன்ற படிப்புகளில் நெசவாளர்கள் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு தனி இட ஒதுக்கீடும், படிக்கும் போதே உதவித் தொகையும் வழங்க வேண்டும்.</p><p>10. கைத்தறி துணிகளை விற்பனை செய்ய  அனைத்து நகரங்களிலும் விற்பனை மையங்கள் அமைக்கப்பட வேண்டும்,  ஆன்லைனில் விற்பனை செய்வதற்காக தனி பிராண்டு உருவாக்கப்பட வேண்டும். தறி என்ற எங்களின் பிராண்டை அரசு பயன்படுத்திக் கொள்ள விரும்பினால் விட்டுக் கொடுக்க தயாராக இருக்கிறோம்.</p><h2>நிறைவேற்றித்தர வேண்டும்</h2><p>எங்களின் இந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கோரிக்கையை </a>சம்பந்தப்பட்ட துறைகளின்  அமைச்சர்களையும், முதல்-அமைச்சரையும் நேரில் சந்தித்து வழங்க இருக்கிறோம்.  இந்த கோரிக்கைகள் அனைத்தையும் தமிழக  அரசு நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>நடிகர் பார்த்திபன் தொடர்ந்த வழக்கு:  தமிழக அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-filed-by-actor-parthiban-madras-high-court-orders-tamil-nadu-government-to-respond</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-filed-by-actor-parthiban-madras-high-court-orders-tamil-nadu-government-to-respond#comments</comments><guid isPermaLink="false">f3e17835-5d1a-4d97-ad7b-8bfae3442523</guid><pubDate>Mon, 03 Aug 2026 07:55:20 +0000</pubDate><atom:updated>2026-08-03T07:55:20.028Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,Chennai High Court,சென்னை ஐகோர்ட்,நடிகர் பார்த்திபன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/t6c0ov2u/Parthiban.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நடிகர் பார்த்திபன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/t6c0ov2u/Parthiban.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை ஐகோர்ட் உத்தரவின் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் சாதி, மதமற்றவர் என சான்றிதழை பெற்ற நடிகர் பார்த்திபன், நீதிபதி தண்டபாணி முன் ஆஜராகி சான்றிதழை காண்பித்தார். அப்போது, நீங்கள் மட்டும் பயனடைந்தால் போதாது, இதுபோல சான்றிதழ் விண்ணப்பிக்கும் நபர்களும் பயனடைய வேண்டும் என நீதிபதி தெரிவித்ததையடுத்து, இதுசம்பந்தமாக பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்ய இருப்பதாக பார்த்திபன் தெரிவித்திருந்தார்.</p><h2>பொது நல மனு</h2><p>இந்த நிலையில், சாதி, மதமற்றவர் என சான்று கோரி விண்ணப்பிப்பவர்கள் உடனடியாக சான்றிதழை பெறும் வகையில், சட்டம் அல்லது அரசாணை பிறப்பிக்கும் படி, தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி நடிகர் பார்த்திபன் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில், "சாதி, மதமற்றவர் என சான்று கோரிய விண்ணப்பங்களை பரிசீலிக்கும் வகையில் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கி, அரசாணைகள் பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கடந்த 2025 ம் ஆண்டு ஜூன் மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், அரசின் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் கவர்நருக்கும், அப்போதைய அரசுக்கும் இடையில் சுமூக உறவு இல்லாததால், இந்த உத்தரவு கிடப்பில் போடப்பட்டது.</p><h2>விசாரணை ஒத்திவைப்பு</h2><p>தற்போது அதுபோன்ற சூழ்நிலை இல்லை என்பதால், சட்டம் இயற்ற உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.  இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இன்று  விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவிற்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க உள்துறை, வருவாய்த்துறை, சட்டத்துறை செயலாளர்களுக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர் வன்னி அரசு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-vanniyarasu-met-actor-rajinikanth-and-received-his-best-wishes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-vanniyarasu-met-actor-rajinikanth-and-received-his-best-wishes#comments</comments><guid isPermaLink="false">1a2a170d-db6f-4640-a303-184ade437fda</guid><pubDate>Mon, 03 Aug 2026 07:46:41 +0000</pubDate><atom:updated>2026-08-03T07:46:41.681Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajinikanth,நடிகர் ரஜினிகாந்த்,வன்னி அரசு,Vanni Arasu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/h1tj1hri/vanni-arasu.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் வன்னி அரசு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/h1tj1hri/vanni-arasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு வாழ்த்து பெற்றார். இது தொடர்பான புகைப்படங்களையும் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.  வன்னியரசு தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:  “திரை உலகின் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்தை சந்தித்துஇன்று வாழ்த்து பெற்றேன். சமூகநீதித்துறை அமைச்சராக பதவி ஏற்றதும் சூப்பர் ஸ்டார் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற விரும்பினேன். இப்போது தான் அதற்கான வாய்ப்பு கிடைத்தது. “நிறைய மக்களுக்கு செய்யுங்கள் வாழ்த்துகள்” என வாழ்த்தி அனுப்பினார்.” என்று கூறியுள்ளார். </p> <h2>ரஜினியின் அடுத்த படங்கள்</h2><p>நடிகர் ரஜினிகாந்த் தற்போது,  ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து ‘தர்மன்’ படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை ‘டிராகன்’ பட இயக்குநர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கி வருகிறார்.  இந்தப் படத்தில் சிம்ரன், ராஷி கன்னா, யோகி பாபு உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.</p><p>இந்த படத்திற்கு பிறகு கமலுடன் இணைந்து ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.இதற்கு மத்தியில் ரஜினிகாந்த் தனது சுயசரிதை எழுதி முடித்துள்ளதாகவும், அதை புத்தகமாக விரைவில் வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வேளாங்கண்ணி-வாஸ்கோடகாமா இடையே சிறப்பு ரெயில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-velankanni-and-vasco-da-gama</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-velankanni-and-vasco-da-gama#comments</comments><guid isPermaLink="false">ba2de0f7-3f98-4119-9be1-0cd86a218920</guid><pubDate>Mon, 03 Aug 2026 07:40:30 +0000</pubDate><atom:updated>2026-08-03T07:40:30.278Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,Special train,Velankanni,வேளாங்கண்ணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/n87604fi/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/n87604fi/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு, வேளாங்கண்ணி-வாஸ்கோடகாமா இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-</p><p>* வாஸ்கோடகாமாவில் இருந்து வருகிற 27, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் இரவு 9.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.07361), புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் அதிகாலை 3.45 மணிக்கு வேளாங்கண்ணி வந்தடையும். மறுமார்க்கமாக, வேளாங்கண்ணியில் இருந்து வருகிற 29, செப்டம்பர் 3 ஆகிய தேதிகளில் இரவு 11.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07362), புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் அதிகாலை 3 மணிக்கு வாஸ்கோடகாமா சென்றடையும்.</p><p> * வாஸ்கோடகாமாவில் இருந்து வருகிற செப்டம்பர் 6-ந்தேதி இரவு 9.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07365), புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் அதிகாலை 3.45 மணிக்கு வேளாங்கண்ணி வந்தடையும். மறுமார்க்கமாக, வேளாங்கண்ணியில் இருந்து வருகிற செப்டம்பர் 9-ந்தேதி அதிகாலை 1 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07366), புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் அதிகாலை 3 மணிக்கு வாஸ்கோடகாமா சென்றடையும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p><p>இதேபோல, உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 8,15,22 ஆகிய தேதிகளில் காலை 10.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (04171), காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக் கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் மதியம் 1.15 மணிக்கு நெல்லை வந்தடையும். </p><p>மறுமார்க்கமாக, நெல்லையில் இருந்து இன்று (3-ந்தேதி), 10,17,24 ஆகிய தேதிகளில் இரவு 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (04172), மேற்கண்ட வழித்தடம் வழியாக புறப்பட்டதில் இருந்து 4-வது நாள் அதிகாலை 3.30 மணிக்கு பிரயாக்ராஜ் ரெயில் நிலையம் சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>உழவர் பெருமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் பெருகும்! - மு.க. ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-the-demands-of-the-farmers-are-not-met-the-struggle-will-intensify-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-the-demands-of-the-farmers-are-not-met-the-struggle-will-intensify-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">de07df43-227b-4eb7-ba22-c04ca9fbc69a</guid><pubDate>Mon, 03 Aug 2026 07:33:13 +0000</pubDate><atom:updated>2026-08-03T07:33:13.918Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Farmers,கோரிக்கை,போராட்டம்,demands,மு.க. ஸ்டாலின்,உழவர்கள்,M.K. Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/ksabbq79/stalin.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/ksabbq79/stalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தி.மு.க. தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க. ஸ்டாலின்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>காவிரி விவசாயிகளுக்காக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தஞ்சையில் திரண்ட கழகம்! உழவர் பெருமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் பெருகும். காவிரி பெருக்கெடுக்க வேண்டிய ஆடிப்பெருக்கு நாளில் டெல்டா விவசாயிகள் ஆதங்கம் பெருக்கெடுக்கப் போராடி வருகின்றனர். விவசாயப் பெருங்குடி மக்களின் உணர்வுகளை உரக்கச் சொல்லும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தோழமைக் கட்சித் தலைவர்கள் ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி, நெல்லை முபாரக் ஆகியோருக்கும், அக்கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட தோழர்களுக்கும், பல்வேறு விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2>விவசாய விரோதி</h2><p>ஜூன் 12 வந்து சேர்ந்திருக்க வேண்டிய காவிரி நீர் ஆகஸ்ட் பிறந்தும் வரவில்லை. ஆடி பதினெட்டில் பொங்கி வரும் புதுப்புனலை வரவேற்ற காவிரிக்கரையின் மைந்தர்கள்  விவசாய விரோதி விஜய் ஆட்சியின் சோம்பேறித்தனத்தால் சோகத்தில் மூழ்கியுள்ளனர். தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து ஒரு வார்த்தை கூட பேசாத முதல்-அமைச்சரைத் தமிழ்நாடு இப்போதுதான் பார்க்கிறது. அண்டை மாநிலத்தில் திரைப்படம் ஓடுவதற்காக நம் விவசாயிகளின் வாழ்க்கையையா அடகு வைப்பீர்கள்?</p><h2>மோசடி ஆட்சி</h2><p>முழுக் கடன் தள்ளுபடி என வாழைப்பழம் போல வாக்குறுதி தந்து வெற்றி பெற்றுவிட்டு, விவசாயிகளை ஏமாற்றிய மோசடி ஆட்சியாக இந்தத் த.வெ.க. ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. மேகதாது அணை கட்டியே தீருவோம் என அடம் பிடிக்கும் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தைக்குச் செல்லத் துடியாய்த் துடிக்கும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் நேற்று கர்நாடகத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் பற்றிய செய்திகளைப் பார்த்தாரா? இங்கு அதேபோல் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட முதல்-அமைச்சருக்கு நேரமில்லையா?</p><h2>கள்ள மவுனம்</h2><p>விவசாயிகளைச் சந்திக்காமல் புறக்கணித்துவிட்டு, வேளாண் பட்ஜெட்டைத் திருப்பதிக்குத் தூக்கிக் கொண்டு சென்றால் உங்கள் பாவங்கள் போய்விடுமா? நாக்பூரில் நம் விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்குக் கூட கண்டனம் தெரிவிக்காமல், கள்ள மவுனம் காக்கிறார் திரையில் தன்னூத்து விவசாயியாக வேடம் தரித்தவர்.</p><h2>முழு கடன் தள்ளுபடி</h2><p>விவசாயிகளை இனியும் வஞ்சிக்காமல் த.வெ.க. அரசு வாக்குறுதியளித்தபடி முழு கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். குறுவை சிறப்பு நிவாரணத் தொகுப்பு வழங்கி, டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்திட வேண்டும். காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையைக் காற்றில் பறக்க விடாமல் தீவிரமாகச் செயல்பட வேண்டும். அதுவரை கழகத்தின் போராட்டம் தொடரும்!</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>டம்மி முதல்-அமைச்சர்... ஜோக்கர் அமைச்சர்கள்... உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dummy-chief-minister-joker-ministers-udhayanidhi-stalins-strong-criticism</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dummy-chief-minister-joker-ministers-udhayanidhi-stalins-strong-criticism#comments</comments><guid isPermaLink="false">95829373-3006-4f63-a263-156e916ca1cb</guid><pubDate>Mon, 03 Aug 2026 07:21:27 +0000</pubDate><atom:updated>2026-08-03T07:21:27.071Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,திமுக,DMK,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/pkt70alw/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/pkt70alw/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர்,</p><p>மேகதாது அணை கட்டுவதை தடுக்க தவறிய த.வெ.க. அரசை கண்டித்தும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட் டங்களாக அறிவிக்க வேண்டியும் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தி.மு.க. சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். முதன்மை செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவருமான கே.என்.நேரு வரவேற்று பேசினார்.</p><p>ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-</p><h2>டம்மி முதல்-அமைச்சர்</h2><p>குறுவை பாதிக்கப்பட்டதற்கு டம்மி முதல்-அமைச்சர்தான் காரணம். விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்-அமைச்சர் விஜய் இதுபற்றி வாய்திறந்து பேசவில்லை. ஆடி 18-ம் நாள் இன்று, ஆடிப்பெருக்கில் ஆறு முழுவதும் தண்ணீர் வழிந்து ஓடும். ஆனால், இப்போது டெல்டா நீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. "திமுக ஆட்சி இருந்திருந்தல் இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா?" நிர்வாகத் திறனற்ற ஒரு டம்மி முதல்-அமைச்சரால் இந்த நிலைமை தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது.</p><p>கர்நாடகா முதல்-அமைச்சர பாக்குறது இருக்கட்டும்.. நம்ம ஊரு விவசாயிகள முதல்-அமைச்சர் விஜய் சந்தித்தாரா?. தயவு செய்து இந்த பக்கம் வந்து விடாதீர்கள் என முதல்-அமைச்சர் விஜயிடம் கர்நாடக முதல்-மந்திரி கூறி விட்டார். ஆட்சி அமைத்து 3 மாதங்கள் ஆகியும் பாஜக என்ற சொல்லைக் கூட உச்சரிக்காத தைரியசாலி நமது முதல்-அமைச்சர் விஜய். கர்நாடகாவில் உள்ள காங்கிரஸை எதிர்த்துப் பேச முதல்-அமைச்சருக்கு திராணி இல்லை.</p><h2>சினிமாவிற்கு சென்று கண்ணீர்..</h2><p>காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்ல. விவசாயிகள் கண்ணீர் வடிக்கக்கூடிய நிலையில் அமைச்சர்கள் சினிமாவிற்கு சென்று கண்ணீர் வடிக்கிறார்கள். ஏதாவது ஒரு பிரச்சினை வந்தால் அதை எப்படி திசைதிருப்புவது என்ற வேலையில் ஈடுபடுகின்றனர்; தினமும் மாலை 4 மணி ஆனால் போதும்; ஏதாவது ஒரு ரீல்ஸ் போட்டு திசைதிருப்புகிறார் முதல்-அமைச்சர் விஜய்.</p><p>தண்ணீர் திறப்பது குறித்து ஆட்சியாளர்களுக்கு கவலை இல்லாமல் இருக்கலாம்; ஆனால் திமுக மக்கள் மன்றத்தில் போராடுகிறது. காவிரி விவகாரத்தில் திமுக சட்டப் போராட்டத்தை தொடங்கியுள்ளது; உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழக வேளாண் பட்ஜெட்டை திருப்பதி கோவிலில் வைத்து பூஜை செய்துள்ளார் வேளாண்துறை அமைச்சர் வினோத்.</p><h2>ஜோக்கர் கூட்டம்..</h2><p>தமிழக அமைச்சர்கள் அனைவரும் ரீல்ஸ் போடுவதிலேயே குறியாக உள்ளனர். நிருபர்களை பார்த்தால் திருடன் போல் ஓடுகிறார் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த். "திருட்டு லாட்டரி விற்ற அமைச்சர், திருட்டு விசிடி, பிளாக் டிக்கெட் விற்ற அமைச்சர், போதைப்பொருளுடன் சுற்றும் அமைச்சர் என ஒட்டுமொத்த ஜோக்கர் கூட்டமும் அமைச்சரவையில் உள்ளது. அமைச்சரின் அண்ணன், தம்பி எல்லாம் ஆய்வுக்கு செல்கிறார்கள். யார் அமைச்சர் என அதிகாரிகளுக்கே தெரியவில்லை. யார் யார் அமைச்சர் என முதல்-அமைச்சருக்கே தெரியாது.</p><p>முதல்-அமைச்சர் ரீல்ஸ், அமைச்சர்கள் ரீல்ஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் ரீல்ஸ் என அனைவரும் ரீல்ஸ் போட்டுக்கொண்டு சுற்றுகின்றனர். கழிவறையக் கூட விட்டுவைக்காமல் ரீல்ஸ் போடுகின்றனர். இந்த அரசிற்கு ரீல்ஸ் வெறி முத்திப்போய் உள்ளது. இதுபோன்ற ஒரு ரீல்ஸ் போடும் கேடு கெட்ட அரசை தமிழ்நாடு இதுவரைக் கண்டதில்லை.</p><h2>வாயைத் திறங்க.. வாயைத் திறங்க..</h2><p>திமுக ஆட்சியில் கட்டப்பட்ட மெட்ரோ ரெயில் பாலத்திற்கு சென்று முதல்-அமைச்சர் விஜய் ஆய்வு செய்கிறார். மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து ரீல்ஸ் போடுகிறார். திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் தொடர்பாகவே முதல்-அமைச்சர் விஜய் தொடர்ந்து ஆய்வு செய்கிறார். காவிரி பிரச்சினை உச்சத்தில் உள்ள நிலையில் ரீல்ஸ் கண்டென்ட் கொடுத்துக் கொண்டிருக்கிறார் விஜய். ஊரார் வீட்டு நெய்யில் ஸ்வீட் செய்து கொண்டிருக்கிறார்.</p><p>அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் விவசாயியாக பிறக்க வேண்டும் என்கிறார் விஜய்; இப்போதே அதை செய்யலாமே?. தவெக ஆட்சியில் அதிகம் பாதிக்கப்படுவது விவசாயிகள் தான். திமுகவின் தூண்டுதலின் பேரில் விவசாயிகள் போராடுவதாக கூறி கொச்சைப்படுத்தியவர் முதல்-அமைச்சர் விஜய். தமிழகத்தில் பலவீனமான ஆட்சி நடக்கிறது; இதை புரிந்து கொண்டு மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா முயற்சி செய்கிறது.</p><p>“வாயைத் திறங்க.. வாயைத் திறங்க.. மேகதாது பிரச்சினையில் தூங்கி வழியும் முதல்-அமைச்சரே வாயைத் திறங்க.. வாயைத் திறங்க.. புரியலையா.. புரியலையா.. விவசாயிகளின் வேதனைகள்.. புரியலையா.. புரியலையா..”. இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>மதுரை: வைகை ஆற்றை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்ட அண்ணாமலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-annamalai-engaged-in-the-task-of-cleaning-the-vaigai-river</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-annamalai-engaged-in-the-task-of-cleaning-the-vaigai-river#comments</comments><guid isPermaLink="false">f9dc21b0-d6f4-4d1f-a57b-e8e3fc348cd9</guid><pubDate>Mon, 03 Aug 2026 07:10:27 +0000</pubDate><atom:updated>2026-08-03T07:10:27.332Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Annamalai,அண்ணாமலை,Madurai,மதுரை,cleaning work,Vaigai River,வைகை ஆறு,தூய்மை பணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/7xd6etc3/75.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/7xd6etc3/75.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>‘வி த லீடர்ஸ்’ இயக்கத்தின் நிறுவனர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">அண்ணாமலை</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>இன்றைய தினம் காலை, நமது மதுரையின் அடையாளமாகவும், நம் வாழ்வியலோடும், பண்பாட்டோடும் ஒன்றிணைந்த, புனிதமான வைகை நதிக்கரையில், நமது வி த லீடர்ஸ் அமைப்பின் சார்பில் "சுத்தமான, வளமான தமிழகம்" இயக்கத்தின் கீழ் தூய்மைப் பணியிலும், மரக்கன்றுகள் நடும் நிகழ்விலும் பங்கேற்றதில் பெரும் மகிழ்ச்சி. </p><h2>மனமார்ந்த பாராட்டு</h2><p>திங்கள்கிழமை காலை என்றாலும், பெருந்திரளாகக் கூடி, முழு அர்ப்பணிப்புடன் உழைத்த தன்னார்வலர்கள், இளைஞர்கள் மற்றும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் சமூக அக்கறையே நமது இயக்கத்தின் மிகப்பெரிய பலம்.</p><h2>மதுரை மாநகரின் உயிர்நாடி</h2><p>வைகை நதி என்பது வெறும் நதி மட்டும் அல்ல. மதுரை மாநகரின் உயிர்நாடி. பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த மண்ணின் நாகரிகத்தையும், விவசாயத்தையும், ஆன்மிகப் பாரம்பரியத்தையும் தாங்கி நிற்கும் தாய். வைகை அன்னையைத் தூய்மையாகப் பாதுகாப்பது, நம் ஒவ்வொருவரின் தார்மீகப் பொறுப்பு. ஒரு நதியைப் பாதுகாப்பது என்பது வெறும் சுற்றுச்சூழலைக் காப்பதல்ல, நமது பண்பாடு, வரலாறு, வாழ்வாதாரம் அனைத்தையும் பாதுகாப்பதாகும்.</p><h2>"சுத்தமான, வளமான தமிழகம்"</h2><p>வைகையை மாசுபடுத்தாமல் காப்போம். பிளாஸ்டிக் மற்றும் கழிவுகளை நதியில் கொட்டாமல் இருப்போம். நம் குழந்தைகளுக்கும், வருங்கால தலைமுறைக்கும் தூய்மையான வைகையை விட்டுச் செல்வோம். "சுத்தமான, வளமான தமிழகம்" என்ற இலக்கை மக்கள் இயக்கமாக மாற்றி, பசுமையும் தூய்மையும் நிறைந்த தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்குவோம் என்ற அன்பான வேண்டுகோளை, மதுரை மக்களுக்கு வைத்துக் கொள்கிறேன். </p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நடிகை திரிஷாவை அரசியலுக்கு வரவேற்கும் விதமாக ஒட்டப்பட்ட போஸ்டர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/posters-were-put-up-to-welcome-actress-trisha-to-politics</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/posters-were-put-up-to-welcome-actress-trisha-to-politics#comments</comments><guid isPermaLink="false">6575a494-fcdf-4930-b7fb-9c7d0287f545</guid><pubDate>Mon, 03 Aug 2026 06:42:35 +0000</pubDate><atom:updated>2026-08-03T06:42:35.795Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Trisha,நடிகை திரிஷா,Madurai,மதுரை,அரசியல்,politics,திரிஷா,Actress Trisha,Trisha Krishnan,போஸ்டர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/3whgz568/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/3whgz568/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>நடிகை திரிஷா</h2><p>தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. 22 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் கொடிகட்டி பறந்து வரும் திரிஷா குறித்து சமீபகாலமாக சர்ச்சைகள் அதிகரித்துள்ளன. திரிஷாவின் தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமின்றி திரையுலக வாழ்க்கை குறித்தும் அவ்வப்போது பரபரப்பு கிளம்பி வருகிறது. </p><p>சமீபத்தில் தவெக தலைவரும், முதல்-அமைச்சருமான விஜய்யின் பிறந்தநாளையொட்டி அவருக்கு திரிஷா வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் நடிகை திரிஷா அரசியலில் ஈடுபட தயாராகி வருவதாகவும் இணையதளங்களில் தகவல் பரவியது. இதற்கு அவர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.</p><h2>போஸ்டர்கள்</h2><p>இந்த நிலையில், மதுரையில் நடிகை திரிஷாவை அரசியலுக்கு வரவேற்கும் விதமாக நகரின் பல்வேறு பகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் “எந்தவொரு அரசியல் கட்சியும் ஆரம்பிக்கும் முதல் மண் எங்கள் மதுரை... என்றும் மதுரை மீனாட்சி தாய் ஆசிர்வாதத்தால் தமிழக சங்க வரலாற்றில் முதல் முறையாக எங்கள் அக்க திரிஷாவிற்கு தமிழக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் சங்கம். மதுரை மாவட்டம் திரிஷா நற்பணி மன்றம்” என்று அதில் எழுதப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>தீரன் சின்னமலையை இளைஞர்கள் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்- அன்புமணி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-should-look-up-to-theeran-chinnamalai-as-a-role-model-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-should-look-up-to-theeran-chinnamalai-as-a-role-model-anbumani#comments</comments><guid isPermaLink="false">c7e8c88d-3419-4d89-96bc-00b30cfb6d9b</guid><pubDate>Mon, 03 Aug 2026 06:32:17 +0000</pubDate><atom:updated>2026-08-03T06:32:17.281Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ராமதாஸ்,Erode,ஈரோடு,Anbumani Ramadas,தீரன் சின்னமலை,Theeran Chinnamalai</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/import/h-upload/2025/08/03/44436963-9.webp" width="750"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ தீரன் சின்னமலையை இளைஞர்கள் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்- அன்புமணி ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/import/h-upload/2025/08/03/44436963-9.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>யாருக்கும் அஞ்சாத தீரன் சின்னமலையின் 222-ஆம் நினைவு நாளை முன்னிட்டு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அன்புமணி இராமதாஸ்</a>  அறிக்கையில் கூறியதாவது:-</p><p>உலகமே ஆங்கிலேயர்களைக் கண்டு அஞ்சி நடுங்கிய நிலையில், இந்திய விடுதலைப் போராட்டத்தில் அவர்களை அலற வைத்த வீரத்திற்கும், தீரத்திற்கும் சொந்தக்காரரான கொங்கு நாட்டு மன்னர் தீரன் சின்னமலையின் 222-ஆம் நினைவுநாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் அவருக்கு வீர வணக்கத்தை செலுத்துவோம்; மரியாதையை செலுத்துவோம்.</p><p>ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகிலுள்ள செ.மேலப்பாளையம் எனும் சிற்றூரில் 1756 ஆம் ஆண்டில் பிறந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தீரன் சின்னமலை</a>, இளம் வயதிலேயே ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு எதிராக போராடத் தொடங்கினார். இன்றைய கேரளத்திலும் கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனிப்படை ஒன்று சேராவண்ணம் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை விளங்கினார். மைசூர் ஸ்ரீரங்கப் பட்டணத்தை ஆட்சி செய்து வந்த திப்பு சுல்தானுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் இடையில் நடந்த போரில் திப்பு சுல்தான் வெற்றி பெறுவதற்கு பெருமளவில் உதவிகளை செய்தார்.</p><p>1801-இல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-இல் ஓடாநிலையிலும், 1804-இல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார். போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்பதை அறிந்த ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி மூலம், சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று தூக்கிலிட்டனர். ஒரு தீரன் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட நாள் இன்று.</p><p>நாட்டைக் காப்பதில் தீரன் சின்னமலையின் வீரத்தையும், தேசப்பற்றையும் இன்றைய இளைஞர்கள் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும். தீரன் சின்னமலையில் வீர வரலாறு மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும். தீரன் சின்னமலையின் வரலாற்றை அடுத்த தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் பாடப்புத்தகத்தில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தீரன் சின்னமலையின் நினைவு நாளில் அவரது வீரத்தையும், தீரத்தையும் போற்றுவோம்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தீரன் சின்னமலையின் துணிச்சலையும் தியாகத்தையும் நினைவில் வைத்து வணங்கிடுவோம்: டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-remember-and-pay-tribute-to-the-courage-and-sacrifice-of-theeran-chinnamalai-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-remember-and-pay-tribute-to-the-courage-and-sacrifice-of-theeran-chinnamalai-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">bb192819-ca8d-490a-b461-d55ef4204727</guid><pubDate>Mon, 03 Aug 2026 06:20:49 +0000</pubDate><atom:updated>2026-08-03T06:20:49.267Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,தீரன் சின்னமலை,Theeran Chinnamalai</media:keywords><media:content height="288" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/x0q3enmd/12.gif" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/x0q3enmd/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தீரன் சின்னமலையின் 221-வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தனது உயிரையே தியாகம் செய்த விடுதலைப் போராட்ட வீரரும், தனது வீரத்தாலும் அசாத்தியமான போர்த் திறமையாலும் ஆங்கிலேயப் படைகளை விரட்டியடித்த பெருமைமிக்க மாவீரருமான தீரன் சின்னமலையின் நினைவுதினம் இன்று..</p><p>போர்க்களத்தில் ஆங்கிலேயப் படைகளால் வீழ்த்தவே முடியாத மாவீரராக வலம் வந்ததோடு , கொங்கு மண்ணின் பெருமையாகவும், தமிழர்களின் வீரத்தின் அடையாளமாகவும் திகழ்ந்த மாவீரன் தீரன் சின்னமலையின் துணிச்சலையும் தியாகத்தையும் நினைவில் வைத்து வணங்கிடுவோம்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>பணக்காரர்களுக்கான ஆட்சி நடத்தும் மோடி அரசு - மாணிக்கம் தாகூர் விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/modi-government-runs-for-the-rich-manickam-thakur-criticizes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/modi-government-runs-for-the-rich-manickam-thakur-criticizes#comments</comments><guid isPermaLink="false">69d6748d-c718-4870-993b-d6efcabb5224</guid><pubDate>Mon, 03 Aug 2026 06:12:44 +0000</pubDate><atom:updated>2026-08-03T06:12:44.498Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விமர்சனம்,Modi government,மோடி அரசு,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Thakur MP,பணக்காரர்கள்,rich people</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/u9w4wmzc/manikamtakore.gif" width="753"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/u9w4wmzc/manikamtakore.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி என்பது மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.</p><p>தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் <a href="http://dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">மாணிக்கம் தாகூர்</a> எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>பொருளாதார சமத்துவமின்மை</h2><p>'உலக சமத்துவமின்மை ஆய்வகம்' என்ற அமைப்பு வெளியிட்ட, '2026 உலக சமத்துவமின்மை' அறிக்கையில், 'இந்தியாவின் மொத்த செல்வத்தில், 40 சதவீதம், ஒரு சதவீதம் பேரிடம் குவிந்துள்ளது. உலகிலேயே பொருளாதார சமத்துவமின்மை அதிகம் உள்ள நாடு இந்தியா' என்பது ஆதாரங்களுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'நாட்டின் மொத்த வருமானத்தில் 58 சதவீதம், 10 சதவீதம் பேருக்கு செல்கிறது. 50 சதவீத மக்களுக்கு, 15 சதவீத வருமானமே செல்கிறது. இந்தியாவில் 'வருமானம், செல்வம், பாலினம்' ஆகிய மூன்று பரிமாணங்களிலும் சமத்துவமின்மை ஆழமாக வேரூன்றியுள்ளது' என்று, அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சமத்துவம், சமூக நீதியை விரும்பும் அனைவருக்கும், இது இதயத்தில் ஈட்டியைப் பாய்ச்சியது போல உள்ளது.</p><h2>300 சதவீதம் அதிகரிப்பு</h2><p>'இந்தியாவில் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டியவர்களின் எண்ணிக்கை 2025 - 2026ஆம் ஆண்டில், 576 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2021-2022ஆம் ஆண்டில் 142 பேராக இருந்த நிலையில், ஐந்து ஆண்டுகளில் 300 சதவீதம் அதிகரித்துள்ளது' என நாடாளுமன்றத்தில் மோடி அரசே ஒப்புக் கொண்டுள்ளது. கடந்த 12 ஆண்டுகால மோடி ஆட்சி என்பது, அதானி, அம்பானி போன்ற பெரும் பணக்காரர்களுக்கான ஆட்சிதான் என்பது மீண்டுமொரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. மோடி ஆட்சியில் பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்களாக உயர்ந்து கொண்டே செல்கிறார்கள்; ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாகி வருகிறார்கள்; நடுத்தர மக்கள் வாங்கும் சக்தியை இழந்து கீழே சென்று கொண்டிருக்கிறார்கள்.</p><h2>அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு உயர்வு</h2><p>2014ஆம் ஆண்டில், சுமார் 44,000 கோடி ரூபாயாக இருந்த, அதானி குழுமத்தின் மொத்த சொத்து மதிப்பு, இப்போது சுமார் 7.85 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. சொத்து குவிப்பில், அதானி குழுமம் கின்னஸ் சாதனை படைக்க உதவியதுதான், கடந்த 12 ஆண்டுகளில் மோடி அரசு நிகழ்த்திய ஒரே சாதனை. பல்வேறு மதங்கள், ஜாதிகள், மொழிகள், இனங்கள், கலாசாரங்கள் கொண்ட இந்தியாவில், பொருளாதார வளர்ச்சி என்பது சமச்சீராக இருக்க வேண்டும். மாறாக, ஒரு சதவீதம் பேரிடம், 40 சதவீத செல்வம் குவிந்திருப்பது மிகப்பெரிய சமூக அநீதி. ஆட்சி நிர்வாகத்தின் மிகப்பெரிய தோல்வி. இதற்காக மோடி அரசு வெட்கப்பட வேண்டும். இந்த அவலத்திற்கு ஏழைகள் நலனில் அக்கறை இல்லாத,  வலதுசாரி மனப்பான்மையே காரணம்.</p><p>பொருளாதார சமத்துவமின்மை என்பது, சிலிண்டருக்குள் அடைக்கப்பட்ட எரிவாயு போன்றது. அளவுக்கு அதிகமானால் வெடித்து சிதறிவிடும். பொருளாதார சமத்துவமின்மை தொடர்ந்தால், மக்கள் வீதியில் இறங்கி போராடும் நிலை வரும். அதானி, அம்பானிக்காக ஆட்சி நடத்தும் மோடி அரசை, விரைவில் மக்கள் தூக்கி எறிவார்கள். இந்தியாவில் சமச்சீரான வளர்ச்சி சாத்தியமாக, நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும். விரைவில் அது நடக்கும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தவெகவுக்கு எதுவுமே தெரியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-knows-nothing-edappadi-palaniswamis-criticism</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-knows-nothing-edappadi-palaniswamis-criticism#comments</comments><guid isPermaLink="false">798279eb-3ffc-43e6-95fd-6dddb61e27da</guid><pubDate>Mon, 03 Aug 2026 05:48:23 +0000</pubDate><atom:updated>2026-08-03T05:48:23.775Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,TVK,தவெக,எடப்பாடி பழனிசாமி,அதிமுக,Edappadi Palaniswami</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/xcfubf3v/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/xcfubf3v/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாளையொட்டி கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.</p><p><strong>அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-</strong></p><p>கட்சி தொடங்கி இரண்டரை ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்த தவெகவுக்கு காவிரி பிரச்சினை பற்றி முழுமையாக எதுவுமே தெரியாது; அனுபவம் இல்லாததால் மற்ற கட்சிகளின் கருத்துகளை தவெக அரசு கேட்டிருக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை பெற இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்றே தெரியவில்லை.</p><h2>காவிரி பிரச்சினை</h2><p>உச்சநீதிமன்றத்தில் பெற்ற தீர்ப்பை கூட காப்பாற்ற கூட முடியாத அரசாக தவெக அரசு உள்ளது. மூத்த சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து காவிரி பிரச்சினை, மேகதாது அணை விவகாரத்திற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி பிரச்சினையில் அரசியல் கட்சி தலைவர்கள் கூறுவதை தவெக அரசு கேட்கவில்லை. கர்நாடக அரசு அரசியல் கட்சி தலைவர்கள், விவசாயிகளை மதித்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியது.</p><p>காவிரி நீர் விவகாரத்தில் அதிமுக, திமுக ஆட்சியில் எவ்வளவு போராட்டம் நடந்தது என மக்களுக்கு தெரியும். அதிமுக, திமுக என எந்த ஆட்சியாக இருந்தாலும் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்கப்பட்டது. அதைபோல காவிரி நீர் விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை தவெக அரசு கூட்ட வேண்டும். விவசாய பிரதிநிதிகளையும் அழைத்து கருத்துக்களை பெற வேண்டும். அதிமுக பொதுக்குழு கூட்டம் விரைவில் கூட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>வல்வில் ஓரி திருவிழா கொண்டாடும் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள் - அண்ணாமலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/best-wishes-to-everyone-celebrating-the-valvil-ori-festival-annamalai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/best-wishes-to-everyone-celebrating-the-valvil-ori-festival-annamalai#comments</comments><guid isPermaLink="false">53ebfa7e-1f81-4e5b-b476-a3fd290ebea4</guid><pubDate>Mon, 03 Aug 2026 05:43:34 +0000</pubDate><atom:updated>2026-08-03T05:43:34.045Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Annamalai,அண்ணாமலை,வள்ளல் ஓரி விழா,Vallal Oori Festival</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/ttqgn64w/74.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/ttqgn64w/74.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>வி த லீடர்ஸ் இயக்கத்தின் நிறுவனர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">அண்ணாமலை</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>வல்வில் ஓரி திருவிழா</h2><p>எட்டுத்தொகை, பத்துப்பாட்டு உள்ளிட்ட தமிழின் பழம்பெரும் இலக்கியங்களில் பாடப்பட்ட மன்னரும், 14 நாடுகளை உள்ளடக்கிய கொல்லிமலையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த மாவீரருமான வல்வில் ஓரி அவர்களின் திருவிழாவைக் கொண்டாடும் அனைவருக்கும், இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2>பெரும் கொடையாளி</h2><p>பெரும் கொடையாளியாகவும், இணையற்ற வீரராகவும் விளங்கிய அவரது வாழ்க்கை, தமிழரின் வீரத்திற்கும் அறத்திற்கும் எடுத்துக்காட்டாகும். வீரம், கொடை, நீதி ஆகிய உயரிய பண்புகள் கொண்ட மாவீரர் வல்வில் ஓரி அவர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.</p><p>இவ்வாரு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு மின்வாரியத்தில் மேலும் ஒரு சாதனை: 700 உதவிப் பொறியாளர்களுக்கு பதவி உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/another-milestone-for-the-tamil-nadu-electricity-board-promotion-for-700-assistant-engineers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/another-milestone-for-the-tamil-nadu-electricity-board-promotion-for-700-assistant-engineers#comments</comments><guid isPermaLink="false">08158426-e12c-411e-a39e-27cdaa352b9a</guid><pubDate>Mon, 03 Aug 2026 05:32:06 +0000</pubDate><atom:updated>2026-08-03T05:32:06.833Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,மின்வாரியம்,Electricity Board,பொறியாளர்கள்,பதவி உயர்வு,Promotion,தமிழ்நாடு மின்வாரியம்,TamilNadu Goverment,Tamilnadu Electricity Board</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/bnel1nub/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/bnel1nub/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றி வந்த 700 உதவிப் பொறியாளர்கள் (மின்னியல்), இன்று ( 03.08.2026 ) உதவி செயற்பொறியாளர்கள் (மின்னியல்) ஆக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>பொறியாளர்களுக்கு பதவி உயர்வு</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய்யின் வழிகாட்டுதலின்படியும், எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாரின் அறிவுறுத்தல் மற்றும் தொடர் கண்காணிப்பின் அடிப்படையிலும், தமிழ்நாடு மின்வாரியத்தில் வெளிப்படையான, மூப்பு மற்றும் தகுதி அடிப்படையிலான நிர்வாக நடைமுறைகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய அளவில் பொறியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p>இந்த பதவி உயர்வின் மூலம், மின்வாரியத்தின் களப்பணிகள் மேலும் வலுப்பெறுவதுடன், எதிர்வரும் பருவ மழைக்காலங்களில் மின் விநியோகம், பராமரிப்பு, புதிய மின் இணைப்புகள், துணை மின் நிலையங்களின் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் கூடுதல் திறனுடனும், விரைவாகவும் மேற்கொள்ள இயலும் .</p><h2>முக்கியமான மைல்கல்</h2><p>இப்பதவி உயர்வு பெற்றுள்ள பொறியாளர்கள், தமிழ்நாட்டின் மின்கட்டமைப்பை மேலும் மேம்படுத்துவதிலும், பொதுமக்களுக்கு தடையற்ற மற்றும் தரமான மின் விநியோக சேவையை வழங்குவதிலும் முக்கியப் பங்காற்றுவார்கள் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.</p><p>மின்வாரிய ஊழியர்களின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருவதாகவும், நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பதவி உயர்வு மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வெளிப்படையான </a>முறையில் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p>இந்நடவடிக்கை, தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றும் பொறியாளர்களின் தொழில் முன்னேற்றத்தை உறுதி செய்வதோடு, ஊழியர்களின் மன உறுதியையும், பணித் திறனையும் மேலும் உயர்த்தும் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>