<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 21 Aug 2026 12:31:15 +0000</lastBuildDate><item><title>கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை, விவசாயிகளுக்கான நிதியைக் கொண்டு சேர்ப்பதில் காட்ட வேண்டும் - உதயநிதி ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/show-the-speed-you-show-in-buying-cars-in-bringing-funds-to-farmers-udayanidhi-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/show-the-speed-you-show-in-buying-cars-in-bringing-funds-to-farmers-udayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">b7875b7f-c1b4-4b3f-a772-6b1583b02e6d</guid><pubDate>Fri, 21 Aug 2026 12:24:22 +0000</pubDate><atom:updated>2026-08-21T12:24:22.273Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,எதிர்க்கட்சித் தலைவர்,குறுவை சிறப்புத் தொகுப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/rhyrs26k/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/rhyrs26k/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>எம்.எல்.ஏ.க்களுக்குக் கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை, விவசாயிகளுக்கான நிதியைக் கொண்டு சேர்ப்பதில் அரசு காட்டியிருக்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>குறுவை சிறப்புத்தொகுப்பு அறிவிக்கப்பட்டு 2 மாதங்கள் கடந்துவிட்ட பிறகும், விவசாயிகளை அது சென்று சேராமல் இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்காத காரணத்தால், குறுவை சாகுபடி பொய்த்துவிட்டது. விவசாயிகளுக்கு அரசு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று பேரவையில் பேசி இருந்தேன்.</p><p>வறட்சி நிவாரணம் பற்றிக் கேட்டதற்கு, குறுவை சிறப்புத்தொகுப்புக்காக நிதி ஒதுக்கியதைப் பற்றி முதல்-அமைச்சர் விளக்கினார். ஆனால், அவர் ஒதுக்கியதாக சொன்ன அந்த நிதியும் இன்று வரை விவசாயிகளைச் சென்றடையவில்லை. இது தொடர்பான செய்திகள்  ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அவற்றை இந்த Inefficient அரசு கவனித்ததா? அல்லது வழக்கம்போல விவசாயிகள் பிரச்சினையில் அலட்சியம் காட்டுகிறதா?</p><p>எம்.எல்.ஏ.க்களுக்குக் கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை, விவசாயிகளுக்கான நிதியைக் கொண்டு சேர்ப்பதில் இந்த அரசு காட்டியிருக்க வேண்டும். விவசாயிகள் நலனில் அக்கறையின்றி தொடர்ந்து மெத்தனப் போக்கோடு நடந்து கொள்வது ஏற்புடையது அல்ல. குறுவை சிறப்புத்தொகுப்பு நிதி விவசாயிகளுக்குச் சென்று சேர இந்த விவசாயிகள் விரோத அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கூடலூர் அருகே புலி தாக்கி விவசாயி பலி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmer-killed-in-tiger-attack-near-gudalur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmer-killed-in-tiger-attack-near-gudalur#comments</comments><guid isPermaLink="false">7c0a663d-07b7-448b-b3e5-f1a9a2aaa586</guid><pubDate>Fri, 21 Aug 2026 12:11:18 +0000</pubDate><atom:updated>2026-08-21T12:11:18.355Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விவசாயி பலி,Farmer killed,public complaint,கூடலூர் அருகே,புலி தாக்கி,tiger attack</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/qeik5k2l/33.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ புலி தாக்கி விவசாயி பலி]]></media:title><media:description type="html"><![CDATA[ கூடலூர் அருகே விவசாயி ஒருவரை புலி தாக்கி, கொன்று தின்றது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/qeik5k2l/33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே விவசாயி ஒருவரை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF">புலி தாக்கி</a>, கொன்று தின்றது. அந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.</p><h2>புலி தாக்கி விவசாயி பலி</h2><p>நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட லாரஸ்டன் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 54) <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF">விவசாயி</a>. அவர் வழக்கம் போல் இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் தனது விளை நிலத்தில் விவசாயப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, புதருக்குள் மறைந்திருந்த புலி ஒன்று, திடீரென பாய்ந்து அவரை பயங்கரமாகத் தாக்கியது. எதிர்பாராத அந்த கொடூரத் தாக்குதலில் நிலைகுலைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>உடல் பாகங்களை தின்ற புலி</h2><p>ரவிச்சந்திரன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினரும், அக்கம் பக்கத்தினரும் விளை நிலத்திற்குச் சென்று தேடினர். அப்போது அங்கு கண்ட காட்சி அவர்களை உறைந்து போகச் செய்தது. ரவிச்சந்திரனைக் கொன்ற புலி, அவரது உடல் பாகங்களை கொடூரமாகத் தின்ற நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கூடலூர் வனத்துறையினர் மற்றும் போலீசார், ரவிச்சந்திரனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><h2>12 நாட்களில் 2வது பலி</h2><p>அதே ஓவேலி லாரஸ்டன் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 9-ந்தேதி பாலகிருஷ்ணன் (வயது 58) என்ற மற்றொரு விவசாயி தண்ணீர் பாய்ச்ச சென்றபோது புலி தாக்கி, உடல் பாதியளவு தின்னப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அந்த சோகம் மறைவதற்குள், வெறும் 12 நாட்கள் இடைவெளியில் அதே பகுதியில் மீண்டும் ஒரு மனித உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் கடும் கோபத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது.</p><h2>மக்கள் போராட்டம் - கோரிக்கை</h2><p>தொடர்ந்து புலி தாக்கும் சம்பவம் நடப்பதால் ஆத்திரமடைந்த ஓவேலி பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த புலி மனிதர்களை வேட்டையாடப் பழகிவிட்டதால் , உடனடியாக அதனை ஆட்கொல்லி புலியாக அறிவிக்க வேண்டும். வனத்துறையினர் உடனடியாக அப்பகுதியில் அதிநவீன கூண்டுகள் மற்றும் கேமராக்களைப் பொருத்தி புலியைப் பிடிக்க வேண்டும்.</p><p>தேயிலைத் தோட்டங்கள் மற்றும் விளை நிலங்களுக்குச் செல்லும் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தற்போது வனத்துறையினர் ட்ரோன் கேமராக்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் அந்த புலியைத் தீவிரமாகக் கண்காணித்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நடிகை சவுகார் ஜானகி மறைவு - காங்கிரஸ் கட்சி இரங்கல் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/demise-of-actress-sowcar-janaki-congress-party-offers-condolences</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/demise-of-actress-sowcar-janaki-congress-party-offers-condolences#comments</comments><guid isPermaLink="false">86ced2f5-3690-483c-9c8e-e709e6e7a30f</guid><pubDate>Fri, 21 Aug 2026 12:08:19 +0000</pubDate><atom:updated>2026-08-21T12:08:19.017Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,Sowcar Janaki,சவுகார் ஜானகி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/4xsqa8e6/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/4xsqa8e6/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகியின் மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது;-</p><p>“பழம்பெரும் திரைப்பட நடிகை சவுகார் ஜானகி அவர்கள் தமது 94-வது வயதில் காலமான செய்தி அறிந்து மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன். 1950-களில் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து தனக்கென தனியிடத்தை பிடித்தவர். </p><p>சிவாஜிகணேசன், எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் நடித்துள்ளார். கலைத்துறையில் ஆற்றிய பங்களிப்பிற்காக பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார். சவுகார் ஜானகி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கலையுலக நண்பர்களுக்கும ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>டி.என்.பி.எஸ்.சி. குரூப்1, 2, 2ஏ தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் - அறிவிப்பு வெளியீடு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/training-classes-have-been-conducted-at-the-state-vocational-guidance-centre-since-august-14</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/training-classes-have-been-conducted-at-the-state-vocational-guidance-centre-since-august-14#comments</comments><guid isPermaLink="false">70e24c40-4a1b-4a68-bebf-3f131acc484b</guid><pubDate>Fri, 21 Aug 2026 11:55:10 +0000</pubDate><atom:updated>2026-08-21T11:55:10.140Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TNPSC,டி.என்.பி.எஸ்.சி.,பயிற்சி வகுப்புகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/edx11txx/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/edx11txx/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், உளவியல் பகுப்பாய்வு சோதனைகளுடன் கூடிய வழிகாட்டுதல், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல், போட்டித் தேர்வுகளுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகள் நடத்துதல், கல்வி தொலைக்காட்சி வாயிலாக போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.</p><p>இதனில் போட்டி தேர்வுகளுக்கு, திறமையான, அனுபவமிக்க பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பாடக்குறிப்புகள், தினசரி, மாத இதழ்கள், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் ஆகியவை வழங்கப்படுவதுடன் பாடவாரியான துணைத் தேர்வுகள், மாதிரித் தேர்வுகள் ஆகியவையும் நடத்தப்பட்டு வருகின்றன. மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஆகஸ்ட் 14-ந்தேதி முதல் பின்வரும் போட்டித்தேர்விற்கான பயிற்சி வகுப்பானது நடத்தப்பட்டு வருகிறது.</p><p>TNPSC - Group 1, 2, &amp; 2A முதல் நிலை தேர்விற்கான ஒருங்கிணைந்த நேரடி பயிற்சி வகுப்பு (Offline Class) - திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை </p><p>மேற்காணும் போட்டித்தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் இப்பயிற்சி வகுப்பில் நேரடியாக கலந்து கொண்டு பயனடையுமாறு மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் முதன்மை செயல் அலுவலர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் இயக்குநர் டாக்டர்.சி.பழனி.இ.அ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். </p><p>எனவே, விருப்பமுள்ள போட்டித் தேர்வர்கள் தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் புகைப்படத்துடன் (Passport Size Photo) கீழ்க்கண்ட முகவரியில் நேரில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p>அலுவலக முகவரி: மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம், A-28, முதல் தளம், டான்சி கட்டிடம், திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-32. தொலைபேசி எண்: 044-22500134, 9361566648.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>2026 தேர்தலும் ஒரு சூரசம்ஹாரம் தான்  - அமைச்சர் ரமேஷ் பேச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-2026-election-will-also-be-a-soorasamharam-triumph-over-evil-minister-rameshs-remarks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-2026-election-will-also-be-a-soorasamharam-triumph-over-evil-minister-rameshs-remarks#comments</comments><guid isPermaLink="false">43e73121-a467-4591-9136-540b9259e1a3</guid><pubDate>Fri, 21 Aug 2026 11:41:51 +0000</pubDate><atom:updated>2026-08-21T11:41:51.836Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,soorasamharam,சூரசம்ஹாரம்,Ramesh,அமைச்சர் ரமேஷ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/6h2lifds/Minister.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ரமேஷ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/6h2lifds/Minister.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்  சட்டசபையில் இன்று பேசியதாவது:  அண்ணாவின் தம்பிகள் எப்படி சட்டமன்றத்தில் இருந்தார்களோ..அதேபோலத்தான் இன்று அண்ணணின் தம்பிகள் சட்டமன்றத்தில் செயல்பட்டு கொண்டு இருக்கிறோம்.  இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சராக இருக்கும் போது தமிழர் கடவுளாகிய தமிழர்களின் அடையாளம் ஆகிய  கடவுள் முருகரை பற்றி பேசமல் கடந்துவிட முடியாது.</p><p> முருகர் என்று சொன்னாலே சூரசம்ஹாரம் தான் எல்லோருக்கும் நியாபகம் வரும். அந்த சூரன் யார் என்றால், நான்  மட்டும்தான் ஆட்சி செய்வேன். நான் மட்டும்தான் நிரந்தர ஆட்சியாளர் மற்ற எல்லோரும் அடிமைகள் என்ற மனநிலையில் இருந்த சூரனை ஒரு சாதாரண பாலகன் கையில் வேல் ஏந்தி வந்து எதிர்த்து நின்றான் அப்போது  சூரன் சொன்னாராம்.. இந்த சின்னபையனா என்னை எதிர்த்து போர் செய்ய போகிறான். இந்த சின்ன பையனா என்னை எதிர்த்து  வென்றுவிட போகிறான் என்று ஏளனமாக பேசினாராம். </p><p>ஆனால் அந்த சின்ன பையன் தான் வேல் ஏந்தி சூரனுடைய அந்த ஆட்சிக்கு முடிவுரை கொண்டு வந்தார்..  2026 தேர்தலும் கிட்டத்தட்ட  ஒரு சூரசம்ஹாரம்தான். உடனே யாரை சூரன் என்று சொல்கிறேன் என்று யாரும் கூச்சல் போடவேண்டாம். நான் சொல்லும் சூரன் ஊழல், லஞ்சம், மக்களை  பிரித்தாளக்கூடிய சாதி அரசியல், மத அரசியல் என்ற சூரனை வீழ்த்தி எங்களுடைய வேலன் ஒரு ஜனநாயக ஆட்சியை தமிழ்நாட்டில் நிறுவியிருக்கிறார்' இவ்வாறு அவர் கூறினார்.</p>  ]]></content:encoded></item><item><title>நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி எழுப்பிய பிரச்சினைகள் குறித்த விளக்க கூட்டங்கள் - மாணிக்கம் தாகூர் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/explanatory-meetings-on-issues-raised-by-india-alliance-in-parliament</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/explanatory-meetings-on-issues-raised-by-india-alliance-in-parliament#comments</comments><guid isPermaLink="false">a617ffae-fe40-426a-b262-c7d8c0e09106</guid><pubDate>Fri, 21 Aug 2026 11:41:05 +0000</pubDate><atom:updated>2026-08-21T11:41:05.375Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>India Alliance,இந்தியா கூட்டணி,காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,Parliament,நாடாளுமன்ற கூட்டத்தொடர்,Manickam Tagore,விளக்க கூட்டங்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/qh027pyl/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/qh027pyl/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இந்தியா கூட்டணி கட்சியினர் எழுப்பிய பிரச்சினைகள் குறித்தும் அதற்காக நடத்தப்பட்ட போராட்டங்கள் குறித்தும் விளக்க கூட்டங்கள் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 20ம்தேதி தொடங்கி ஆகஸ்ட் 13ம்தேதி வரை நடைபெற்றபோது, மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து தலைவர் ராகுல்காந்தி எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடியோ, உள்துறை மந்திரி அமித்ஷாவோ பதில் தர முன்வரவில்லை.</p><p>குறிப்பாக, தலைநகர் டெல்லியில், நீட் வினாத்தாள் கசிவு குறித்த போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது காவல்துறையினர் பெல்லட் துப்பாக்கி குண்டுகளை ஏவி, தடியடி நடத்திட யார் உத்தரவிட்டார்கள் என்ற கேள்விக்கு நாடாளுமன்ற கூட்டத் தொடர் முழுவதும் பிரதமரோ, உள்துறை மந்திரியோ பதில் தர முன்வரவில்லை. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் இந்தியா கூட்டணி கட்சியினர் எழுப்பிய பிரச்சினைகள் குறித்தும் அதற்காக நடத்தப்பட்ட போராட்டங்கள் குறித்தும் தமிழக மக்களிடையே விளக்குவதற்கு, மாநகரங்களில் ‘டவுன் ஹால்” என்ற தலைப்பில் விளக்க கூட்டங்கள் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. இதன்படி, 7 மாநகரங்களில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த கீழ்க்கண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பார்கள்.</p><p>22.08.2026 அன்று காலை 11 மணிக்கு கோவையில் நடைபெறும் கூட்டத்தில் கே. சுப்பராயன், எஸ். ஜோதிமணி, விஜய் வசந்த்</p><p>23.08.2026 அன்று மாலை 3 மணிக்கு திருச்சியில் நடைபெறும் கூட்டத்தில் துரை வைகோ, செல்வராஜ், கிறிஸ்டோபர் திலக்</p><p>24.08.2026 அன்று காலை 11 மணிக்கு திருநெல்வேலியில் நடைபெறும் கூட்டத்தில் கார்த்தி ப. சிதம்பரம், துரை வைகோ, சி. ராபர்ட் புரூஸ்</p><p>27.08.2026 அன்று பிற்பகல் 3.30 மணிக்கு சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் ப. சிதம்பரம், எஸ். ரவிக்குமார், பிரவீன் சக்கரவர்த்தி</p><p>28.08.2026 அன்று காலை 11 மணிக்கு வேலூரில் நடைபெறும் கூட்டத்தில் சசிகாந்த் செந்தில், வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன்</p><p>29.08.2026 அன்று காலை 11 மணிக்கு சேலத்தில் நடைபெறும் கூட்டத்தில் சச்சிதானந்தம், டாக்டர் எம்.கே. விஷ்ணுபிரசாத்</p><p>29.09.2026 அன்று காலை 11 மணிக்கு மதுரையில் நடைபெறும் கூட்டத்தில் ப. சிதம்பரம், சு. வெங்கடேசன், நவாஸ்கனி </p><p>மாநகரங்களில் நடைபெறும் டவுன் ஹால் கூட்டங்களை அந்தந்த மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் இந்தியா கூட்டணி கட்சியினரோடு இணைந்து கூட்டம் சிறப்பாக நடத்திட ஒருங்கிணைப்புப் பணிகளை செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இக்கூட்டங்களை வெற்றிகரமாக நடத்துவதன் மூலம் நாட்டின் நலனிலும், மக்கள் பிரச்சினைகளிலும் நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி கட்சியினர் எந்த அளவிற்கு சர்வாதிகார, ஜனநாயக உணர்வில்லாத பா.ஜ.க.வினரோடு எத்தகைய போராட்டங்களை நடத்தினார்கள் என்பதை தமிழக மக்கள் அறிவதற்கு மிகச் சிறந்த வாய்ப்பாக இக்கூட்டங்கள் அமைய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பெண் தூய்மைப் பணியாளர் படுகொலை: திருவேற்காட்டில் பயங்கரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/female-sanitation-worker-murdered-horror-in-thiruverkadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/female-sanitation-worker-murdered-horror-in-thiruverkadu#comments</comments><guid isPermaLink="false">a61b13fe-84c7-479b-9e7a-516dd72e4d50</guid><pubDate>Fri, 21 Aug 2026 11:28:07 +0000</pubDate><atom:updated>2026-08-21T11:28:07.181Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>arrest,கொலை,திருவேற்காடு,Thiruverkadu,நகை கொள்ளை,murdered,தூய்மைப் பணியாளர்</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/qua6rrc4/32.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ கோவிலை ஒட்டியுள்ள ஹேமாவதியின் வீடு]]></media:title><media:description type="html"><![CDATA[ 8 சவரன் நகைகள் கொள்ளை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/qua6rrc4/32.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையை அடுத்த திருவேற்காட்டில் மாநகராட்சி பெண் தூய்மைப் பணியாளர் தலையணையால் முகத்தை அமுக்கிக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, அவரிடமிருந்த 8 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஒரு வாலிபரைப் போலீசார்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81"> கைது</a> செய்துள்ளனர்.</p><h2>துர்நாற்றம் வீசிய வீடு</h2><p>சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்த ஹேமாவதி (வயது 45). கணவனை இழந்த அவர் திருவேற்காடு பகுதியில் தனியாக வசித்து வந்தார். கடந்த 2 நாட்களாக அவரது வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில், அங்கிருந்து பலத்த துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக திருவேற்காடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.</p><h2>தலையணையால் அமுக்கிக் கொலை</h2><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஹேமாவதி படுக்கையறையில் சடலமாகக் கிடந்தார். அவரது முகம் தலையணையால் அமுக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்தன. மேலும், அவர் அணிந்திருந்த 8 சவரன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தன. நகைகளுக்காக அவர் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டதை போலீசார் உறுதி செய்தனர்.</p><h2>விசாரணையும் கைதும்</h2><p>இக்கொலை வழக்கு குறித்து தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நித்திஷ் என்ற வாலிபரைப் பிடித்துப் போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவரும் அவரது நண்பரான ஆகாஷ் என்பவரும் சேர்ந்து, ஹேமாவதி தனியாக இருப்பதைத் தெரிந்துகொண்டு வீட்டிற்குள் புகுந்து அவரைக்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88"> கொலை</a> செய்து நகைகளைக் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார்.</p><p>இதையடுத்து நித்திஷைக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளைப் பறிமுதல் செய்தனர். மேலும், இக்கொலையில் முதன்மைக் குற்றவாளியாகத் தலைமறைவாக இருக்கும் ஆகாஷைப் பிடிக்க போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">Breaking | Chennai | பெண் கொடூர கொ*லை..சென்னை அருகே நடுங்க வைத்த சம்பவம்  <br> <a href="https://x.com/hashtag/breakingnews?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#breakingnews</a> <a href="https://x.com/hashtag/chennai?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#chennai</a> <a href="https://x.com/hashtag/crimenews?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#crimenews</a> <a href="https://x.com/hashtag/thanthitv?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#thanthitv</a> <a href="https://t.co/QPA7UcOm0L">pic.twitter.com/QPA7UcOm0L</a></p>&mdash; Thanthi TV (@ThanthiTV) <a href="https://x.com/ThanthiTV/status/2090711909381423148?ref_src=twsrc%5Etfw">August 21, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>நடைபயிற்சி சென்றபோது பழக்கம்: வாலிபரிடம் ஆசைக்காட்டி நூதன முறையில் நகை, பணத்தை சுருட்டிய இளம்பெண்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-rolls-up-jewelry-and-money-in-a-novel-way-to-show-her-desire</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-rolls-up-jewelry-and-money-in-a-novel-way-to-show-her-desire#comments</comments><guid isPermaLink="false">37926960-6c68-422e-9639-42cf9a808e84</guid><pubDate>Fri, 21 Aug 2026 11:16:36 +0000</pubDate><atom:updated>2026-08-21T11:16:36.173Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,இளம்பெண்,Walking,Marriage,நடைபயிற்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/k1u32kyv/dressone33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வாலிபர்]]></media:title><media:description type="html"><![CDATA[ 
நடைபயிற்சியின் போது அழகில் மயங்கிய வாலிபர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/k1u32kyv/dressone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை போரூரில் வாலிபரிடம் திருமண ஆசைக்காட்டி ரூ.14 லட்சம் நகை சுருட்டிய இளம்பெண்ணால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. </p><h2>அழகில் மயங்கிய வாலிபர்</h2><p>போரூரை அடுத்த காரம்பாக்கம் பகுதியை சேர்ந்த வாலிபர் திருமணம் உள்ளிட்ட விஷேசங்களுக்கு நிகழ்ச்சிகள் நடத்தும் நிறுவனம் நடத்தி வருகிறார்.  இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாநகர் டவர் பூங்காவில் நடைப்பயிற்சி சென்றபோது திரிபுரா மாநிலத்தை சேர்ந்த 32 வயது இளம்பெண் அறிமுகம் ஆனார். தினமும் பூங்காவில் நடைப்பயிற்சி சென்றபோது இருவரும் நெருங்கி பழகி வந்தனர். அந்த இளம்பெண் நடைப்பயிற்சியின் போது அவரது அழகில் மயங்கிய வாலிபர் கேட்கும்போதெல்லாம் பணம் உதவி செய்து வந்துள்ளார். </p><h2>திருமணம்</h2><p>இந்தநிலையில் கணவரை பிரிந்து இருப்பதாக கூறிய இளம்பெண் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் பின்னர் திருமணம் செய்துகொள்ளலாம் என்று தெரிவித்தார். இதனையடுத்து அந்த வாலிபர் இளம்பெண்ணை காரம்பாக்கத்தில் உள்ள வீட்டில் தங்க வைத்து ரகசியமாக குடும்பம் நடத்தி வந்தார். இருவரும் அவ்வபோது உல்லாசமாக இருந்து வந்தனர்.</p><p>இந்தநிலையில் கடந்த மாதம்17-ம் தேதி தனது தாயாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக திரிபுராவுக்கு புறப்பட்டு சென்றுவிட்டார். இதனால் சந்தேகம் அடைந்த பாரதி வீட்டில் உள்ள பீரோவை சரிபார்த்தபோது அதில் இருந்த 25 பவுன் நகை, ரூ.14 லட்சம் ரொக்கம் மாயமாகி இருந்தன.</p><h2>பணத்தை சுருட்டி தப்பிய இளம்பெண்</h2><p>இதுகுறித்து வாலிபர் இளம்பெண்ணின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது சரியாக பதில் அளிக்காமல் வேலையாக உள்ளேன் பின்னர் பேசுகிறேன் என கூறி தொடர்பை துண்டித்துவிட்டார். பின்னர் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு விட்டது.</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%20%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF">திருமண ஆசை காட்டி</a> இளம்பெண் நூதன முறையில் நகை, பணத்தை சுருட்டி தப்பி சென்று இருப்பது தெரியவந்தது.</p><p>இது குறித்து அந்த வாலிபர் வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>முகத்தில் தேனீக்களுடன் 5 மணி நேரம் இருந்து நெல்லை வாலிபர் சாதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-youth-sets-record-with-bees-on-face-for-5-hours</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-youth-sets-record-with-bees-on-face-for-5-hours#comments</comments><guid isPermaLink="false">26df0ad3-61ff-4574-b736-b333e71d3d8c</guid><pubDate>Fri, 21 Aug 2026 11:16:01 +0000</pubDate><atom:updated>2026-08-21T11:16:01.266Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Tirunelveli,Youth,வாலிபர்,record,தேனீக்கள்,சாதனை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/bggp4gno/honeybee.jpg" width="752"><media:title type="html"><![CDATA[  இசக்கிமுத்து என்ற முருகன்]]></media:title><media:description type="html"><![CDATA[ முகத்தில் தேனீக்களுடன் 5 மணி நேரம் இருந்து நெல்லை வாலிபர் சாதனை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/bggp4gno/honeybee.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை, </p><p>நெல்லை மாவட்டத்தை சேர்ந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D">வாலிபர்</a>  இசக்கிமுத்து என்ற முருகன், தனது முகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தேனீக்களை 5 மணி நேரத்திற்கும் மேலாக மொய்க்கவிட்டு, புதிய  சாதனை படைத்துள்ளார். அவரது இந்த துணிச்சலான முயற்சி,  ‘சீனா உலக சாதனை புத்தகம்’  மற்றும் ‘சோழன் உலக சாதனை புத்தகத்தில்’ பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><h2>நெல்லை வாலிபர்</h2><p>நெல்லை மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து என்ற முருகன் (வயது 27). இவர் விவசாயம் மற்றும் வேளாண்மை தொடர்பான படிப்பை முடித்தவர் ஆவார். படிப்பை முடித்த பின், அவர் மாற்று பணிகளை தேடி செல்லாமல் முழுநேரமாகத் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">தேனீ வளர்ப்பு</a> தொழிலில் ஈடுபட்டு வருகிறார். தற்பொழுது 18-க்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட தேன் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வரும் இவர், பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் இலவசமாக தேனீ வளர்ப்பு பயிற்சிகளையும் வழங்கி வருகிறார்.</p><h2>மெய்சிலிர்க்க வைத்த சாதனை</h2><p>இந்த நிலையில், தேனீக்கள் மனித குலத்திற்கும் விவசாயத்திற்கும் எவ்வளவு முக்கியம் என்பதை உலகிற்கு உணர்த்த முருகன் முடிவு செய்தார். இதற்காக, அவர் ஒரு வினோதமான சாதனை முயற்சிக்கு திட்டமிட்டார். அதன்படி, நெல்லை மாரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்களின் முன்னிலையில், முருகன் தனது முகம் மற்றும் தலைப்பகுதி முழுவதும் ஆயிரக்கணக்கான இந்திய தேனீக்களை மொய்க்கவிட்டார். கண்கள், மூக்கு, வாய் என முகம் தெரியாத அளவுக்கு தேனீக்கள் அவரது முகத்தை முழுமையாக மூடி ஆக்கிரமித்தன.</p><h2>5 மணி நேரம்</h2><p>தேனீக்கள் கடித்தால் கடுமையான வலி மற்றும் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்ற சூழலிலும், முருகன் எதற்கும் அஞ்சாமல், துளியும் பதற்றமின்றி, சிலையை போல அசையாமல் அமர்ந்திருந்தார்.தொடர்ந்து 5 மணி நேரம் 3 நிமிடங்கள் வரை தேனீக்களை தனது முகத்திலேயே அமரவைத்து, பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் புதிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88">சாதனையை</a> படைத்து அசத்தினார். இதற்கு முன்பு கேரளாவை சேர்ந்த ஒருவர் படைத்திருந்த சாதனையை இதன் மூலம் முருகன் முறியடித்துள்ளார். </p><h2>சீன புத்தகத்தில் அங்கீகாரம்</h2><p>முருகனின் இந்த அசாத்திய சாதனை முயற்சியானது ‘சீனா உலக சாதனைப் புத்தகம்’  மற்றும் ‘சோழன் உலக சாதனை புத்தகத்தில்’ அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ்களும், விருதுகளும் அவருக்கு வழங்கப்பட்டன.</p> <p><strong>இதுகுறித்து சாதனையாளர் முருகன் தெரிவித்ததாவது:-</strong></p><p> "தேனீக்கள் மனிதர்களின் எதிரிகள் அல்ல, அவை நம் நண்பர்கள். தேனீ வளர்ப்பு  என்பது விவசாயிகளுக்கு ஒரு சிறந்த சுயதொழில் வாய்ப்பு ஆகும். இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த ஆபத்தான முயற்சியை நான் மேற்கொண்டேன். யாரும் தகுந்த பயிற்சியின்றி இதுபோன்ற ஆபத்தான முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டார். </p><p>முகத்தில் ஆயிரக்கணக்கான தேனீக்களுடன் நெல்லை வாலிபர் முருகன் அமைதியாக அமர்ந்திருக்கும் இந்த மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ காட்சிகள், தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல பரவி, உலக அளவில் வைரலாகி வருகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>வங்காளதேச பிரதமர் இந்தியா வருகை: டெல்லி ஜனாதிபதி மாளிகையில் ஏற்பாடுகள் தீவிரம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bangladesh-prime-ministers-visit-to-india-intensive-preparations-at-rashtrapati-bhavan-in-delhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bangladesh-prime-ministers-visit-to-india-intensive-preparations-at-rashtrapati-bhavan-in-delhi#comments</comments><guid isPermaLink="false">07a06e86-e5fc-4d7c-995d-ad9c6fbd938e</guid><pubDate>Fri, 21 Aug 2026 11:13:23 +0000</pubDate><atom:updated>2026-08-21T11:13:23.160Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,India,Bangladesh,வங்காளதேசம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/g99ne6y7/National-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/g99ne6y7/National-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><p>வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, அந்நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் இந்தியாவில் தஞ்சமடைந்தார். அவரை வங்காளதேசத்திற்கு நாடு கடத்த வேண்டும் என அந்நாட்டு அரசு கோரிக்கை விடுத்து வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் பதற்றம் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.</p><p>இதற்கிடையில், டெல்லியில் வரும் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் ‘பிரிக்ஸ்’ உச்சிமாநாட்டில் பங்கேற்க வங்காளதேச பிரதமர் தாரிக் ரகுமான் இந்தியாவிற்கு வருவாரா? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், தாரிக் ரகுமானின் இந்திய வருகை திட்டமிட்டபடி நடைபெறும் என இந்திய ஜனாதிபதி மாளிகை உறுதி செய்துள்ளது. </p><p>அவரது வருகையை முன்னிட்டு டெல்லி ஜனாதிபதி மாளிகையில் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வங்காளதேச பிரதமரை முறைப்படி வரவேற்கும் நிகழ்ச்சிக்கான முழு ஒத்திகை நடைபெறவுள்ளதால், வரும் 22-ந்தேதி(நாளை) ஜனாதிபதி மாளிகையின் முன்புற முற்றத்தில் நடைபெறவிருந்த 'காவலர் மாற்றும் நிகழ்ச்சி' (Change of Guard Ceremony) நடைபெறாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. </p> ]]></content:encoded></item><item><title> சவுகார் ஜானகி மறைவு: அன்புமணி ராமதாஸ்  இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/south-indian-actress-saukar-janaki-dies-anbumani-ramadoss-pays-tribute</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/south-indian-actress-saukar-janaki-dies-anbumani-ramadoss-pays-tribute#comments</comments><guid isPermaLink="false">fe8f6515-7d11-4be2-bbca-9fed7fe32c6d</guid><pubDate>Fri, 21 Aug 2026 10:56:33 +0000</pubDate><atom:updated>2026-08-21T10:56:33.848Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,இரங்கல்,condolences,மறைவு,Sowcar Janaki,சவுகார் ஜானகி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/olt0p5tz/janaki.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ சவுகார் ஜானகி,அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ சவுகார் ஜானகி மறைவு: அன்புமணி ராமதாஸ்  இரங்கல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/olt0p5tz/janaki.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> சவுகார் ஜானகி மறைவுக்கு <a href="https://www.dailythanthi.com/topic/anbumani-ramadoss">அன்புமணி ராமதாஸ்</a> தனது இரங்கலை தெரிவித்தார்.</p><h2> சவுகார் ஜானகி</h2><p>1931-ம் ஆண்டு பிறந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF">சவுகார் ஜானகி</a>, 1950-களில் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர். சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், கலைத்துறையில் ஆற்றிய பங்களிப்புக்காக 2022-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார். ஆந்திர மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் இவர்.</p><h2>400-வது படம்</h2><p>கடந்த 1950ஆம் ஆண்டு, 'சவுகார்' என்ற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமான சவுகார்ஜானகி, 70 ஆண்டுகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக, 2020ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான 'பிஸ்கோத்' படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் சவுகார் ஜானகிக்கு 400-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.</p> <p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தென்னிந்தியாவின் பழம்பெரும் திரைப்பட நடிகை சவுகார் ஜானகி அம்மையார் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன்.</p><h2>இரங்கல்</h2><p>1952-ஆம் ஆண்டில்  திரையுலகில் அறிமுகமாகி  எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன் தொடங்கி தமிழ்த் திரையுலகின் அனைத்து நடிகர்களுடனும் நடித்தவர். ஏராளமான விருதுகளை வென்றவர். நடிகை சவுகார் ஜானகியை இழந்து வாடும்  அவரது குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சென்னை: கால்வாய்களில் குப்பைக் கழிவுகளை டிரோன் மூலம் கணக்கெடுக்கும் பணிகள் தொடக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-drone-survey-of-canal-waste-begins</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-drone-survey-of-canal-waste-begins#comments</comments><guid isPermaLink="false">25409c8a-4aff-449d-9a3a-4c32600f8b71</guid><pubDate>Fri, 21 Aug 2026 10:49:51 +0000</pubDate><atom:updated>2026-08-21T10:49:51.039Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Drone,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,Canal,கால்வாய்,டிரோன்,குப்பைகள்,கணக்கெடுக்கும் பணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/kv4onnsc/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/kv4onnsc/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 44 கால்வாய்களில் வண்டல்கள், குப்பைக் கழிவுகள் உள்ளிட்டவற்றை டிரோன் மூலம் நவீன தொழில்நுட்பத்துடன் கணக்கெடுப்பு மேற்கொள்ளும் பணிகளை கொடுங்கையூர் வடக்கு கால்வாயில் மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் இன்று தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 44 கால்வாய்களில் வண்டல்கள், குப்பைக் கழிவுகள், தோட்டக் கழிவுகள் மற்றும் ஆகாயத்தாமரைகள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணிகளை விஞ்ஞானபூர்வமாக மேற்கொள்ளும் வகையில் டிரோன் மூலம் நவீன தொழில்நுட்பத்துடன் கணக்கெடுப்பு மேற்கொள்ளும் பணிகளை இன்று (21.08.2026) தண்டையார்பேட்டை மண்டலம், முத்தமிழ் நகர் 2-வது பிளாக்கில் உள்ள கொடுங்கையூர் வடக்கு கால்வாயின் தொடக்க இடத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன், தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். இந்நிகழ்வில், மண்டல அலுவலர் ஏ.ராஜ்குமார், செயற்பொறியாளர் எஸ்.ஹரிநாத் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.</p><p>முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கொடுங்கையூர், வீராங்கல் ஓடை, மாம்பலம் கால்வாய், ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம், கேப்டன் காட்டன், டிரஸ்ட்புரம், ரெட்டிகுப்பம், பள்ளிக்கரணை, செக்ரடரியேட் காலனி உள்ளிட்ட 81.81 கி.மீ. நீளத்திலான 44 கால்வாய்களில் வண்டல்கள், குப்பைக் கழிவுகள், தோட்டக் கழிவுகள் மற்றும் ஆகாயத்தாமரைகள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணிகளை விஞ்ஞானபூர்வமாக மேற்கொள்ளும் வகையில் டிரோன் மூலம் நவீன தொழில்நுட்பத்துடன் கணக்கெடுப்பு மேற்கொள்ளும் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது.</p><p>இன்று (21.08.2026) கொடுங்கையூர் வடக்கு கால்வாய், வீராங்கல் ஓடை மற்றும் மேற்கு மாம்பலம் கால்வாயில் இந்த டிரோன் மூலம் கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. களஆய்வை விரைவாகவும் திறம்படவும் மேற்கொள்ள, தினசரி சுமார் 4 முதல் 5 டிரோன்கள் பயன்படுத்தப்பட்டு, கால்வாய்கள் கட்டம் வாரியாக ஆய்வு செய்யப்படும். ஒவ்வொரு டிரோனுக்கும் குறிப்பிட்ட கால்வாய் பகுதிகள் ஒதுக்கப்பட்டு, ஆய்வின் முன்னேற்றம் மற்றும் பெறப்படும் தரவுகள் முறையாக கண்காணிக்கப்படும்.</p><p>ஆய்வின் மூலம் பெறப்படும் அனைத்து படங்கள், காணொலிகள் மற்றும் புவியியல் தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, கால்வாய்களின் தற்போதைய நிலையை பிரதிபலிக்கும் GIS அடிப்படையிலான தரவுத்தளம் மற்றும் வரைபடங்கள் தயாரிக்கப்படும். இதனடிப்படையில், பருவமழைக்கு முன்னதாக கால்வாய்களில் மேற்கொள்ள வேண்டிய தூர்வாருதல், அடைப்புகளை அகற்றுதல், சேதமடைந்த பகுதிகளைச் சீரமைத்தல் மற்றும் நீரோட்டத்தைத் தடையின்றி உறுதி செய்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் ஆக. 23 முதல் ஈஷா கிராமோத்சவ போட்டிகள்: செப். 6-ல் கோவையில் மகா இறுதிப்போட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/grand-isha-gramotsavam-finals-in-coimbatore-on-september-6</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/grand-isha-gramotsavam-finals-in-coimbatore-on-september-6#comments</comments><guid isPermaLink="false">d3e3f827-13d5-4b05-846e-c04ee3c41f68</guid><pubDate>Fri, 21 Aug 2026 10:39:42 +0000</pubDate><atom:updated>2026-08-21T10:39:42.981Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவை,தமிழகம்,Isha Centre,ஈஷா,Competitions,போட்டிகள்,விளையாட்டு,In Tamil Nadu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/8lq795gh/isha-sports.jpg" width="752"><media:title type="html"><![CDATA[  டாக்டர் சுந்தர்,மகேந்திரன், தீபா,மகேஷ்]]></media:title><media:description type="html"><![CDATA[ 
தமிழகத்தில் ஆக. 23 முதல் ஈஷா கிராமோத்சவ போட்டிகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/8lq795gh/isha-sports.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டில் ஆக.23-ஆம் தேதி<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%88%E0%AE%B7%E0%AE%BE"> ஈஷா</a> கிராமோத்சவ மண்டல அளவிலான போட்டிகள் செப். 6-ஆம் தேதி சத்குரு முன்னிலையில் கோவையில் மாபெரும் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.</p><h2>10 மாநிலங்கள்</h2><p>சத்குருவின் ஈஷா அமைப்பால் ஆண்டுதோறும் நடத்தப்படும் பாரதத்தின் மாபெரும் கிராமப்புற விளையாட்டுத் திருவிழாவான 'ஈஷா கிராமோத்சவம்', இந்தாண்டு வட மாநில கிராமங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு, 10 மாநிலங்களில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. </p> <h2>செப்டம்பர் 6 ஆம் தேதி</h2><p>தமிழ்நாட்டின் 6 முக்கிய இடங்களில் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி ஈஷா கிராமோத்சவத்தின் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் பங்கேற்கும் மாபெரும் இறுதிப்போட்டி, வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி கோவை ஆதியோகி வளாகத்தில் சத்குரு அவர்களின் முன்னிலையில் நடைபெறவுள்ளது.</p><h2> பத்திரிகையாளர் சந்திப்பு</h2><p>இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இதில் ஈஷா கிராமோத்சவத்தின் தன்னார்வலர்கள் பிரபல எலும்பியல் நிபுணர் டாக்டர் சுந்தர், மகேந்திரன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் தீபா, வாலிபால் விளையாட்டு வீரர் மகேஷ் ஆகியோர் பங்கேற்று பேசினர்.</p> <p><strong>டாக்டர் சுந்தர் பேசுகையில்,</strong></p><h2>கிராமோத்சவம்</h2><p> “நம் கிராமங்களில் 60 சதவீத மக்கள் உழைக்கும் வயதில் இருந்தாலும், வேலை வாய்ப்பின்மை மற்றும் நலிவடையும் விவசாயம் போன்ற காரணங்களால் இளைஞர்கள் வறுமையின் பிடியில் சிக்குவதும் போதை பழக்கங்களுக்கு அடிமையாவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதேபோல், பெண்களுக்கு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு விளையாடுவதற்கான வாய்ப்புகளே இல்லாமல் போகிறது. இந்த சூழலை மாற்றி, "கிராமப்புற மக்களின் அன்றாட வாழ்வில் விளையாட்டை ஒர் அங்கமாக மாற்ற வேண்டும்" என்ற சத்குருவின் தொலைநோக்குப் பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் 'ஈஷா கிராமோத்சவம்' 2004-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மேலும் இளைஞர்களுக்கு உத்வேகம், பெண்கள் சுயமுன்னேற்றம், அனைத்து வயதினரும் விளையாடும் வாய்ப்பு, ஆரோக்கியம், சமூக ஒற்றுமை மற்றும் கிராமப்புறத் திறமைகளை வெளிக்கொணரும் ஒரு சிறந்த தளமாக கிராமோத்சவம் விளங்கி வருகிறது.</p> <h2>வாலிபால் மற்றும்  த்ரோபால் போட்டிகள்</h2><p> இப்போட்டி தொடரில் ஆண்களுக்கான வாலிபால் மற்றும் பெண்களுக்கான த்ரோபால் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் தொழில்முறை விளையாட்டு வீரர்கள் பங்கேற்க அனுமதி இல்லை. கிராமப்புறங்களை சேர்ந்த மீனவர்கள், விவசாயிகள், பெண்கள் மற்றும் தினசரி கூலித் தொழிலாளர்கள் மட்டுமே இப்போட்டிகளில் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p> <h2> புதிதாக 5 மாநிலங்களில் போட்டி</h2><p>இந்தாண்டு புதிதாக உத்தரப் பிரதேசம், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஒடிசா மற்றும் மராட்டியம் ஆகிய வட மாநிலங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரி இணைந்து மொத்தம் 10 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் போட்டிகள் நடைபெறுகின்றன. </p><p>தமிழ்நாட்டில் சுமார் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் முதற்கட்ட கிளஸ்டர் போட்டிகள் நடைபெற்றன. இதில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆகஸ்ட் 1 மற்றும் 2 தேதிகளிலும், அதனை தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளிலும் போட்டிகள் நடத்தப்பட்டன.</p><h2> 7,005 அணிகள்</h2><p>இதில் வாலிபால் பிரிவில் 2,246 அணிகளை சேர்ந்த 26,952 வீரர்களும், த்ரோபால் பிரிவில் 31 இடங்களில் 744 அணிகளைச் சேர்ந்த 7,440 வீரர்களும் பங்கேற்றனர். இம்முதற்கட்டப் போட்டிகளில் மொத்தம் சுமார் 34,392 கிராமப்புற மக்கள் பங்கேற்று விளையாடினர். அடுத்த கட்டமாக தமிழ்நாட்டில் கோவை, சேலம், வேலூர், மதுரை, திருநெல்வேலி, கடலூர் உள்ளிட்ட 6 இடங்களில் மண்டல அளவிலானப் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளன. இந்த மாபெரும் விளையாட்டு திருவிழாவில், சுமார் 7,005 அணிகள் மூலம் 40,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து கிட்டத்தட்ட 20,000 பெண்கள் உட்பட 80,352 கிராமப்புற மக்கள் பங்கேற்றுள்ளனர். </p><h2>பரிசுத்தொகை</h2><p>ஈஷா கிராமோத்சவம் 2026-இன் பிரம்மாண்ட இறுதிப்போட்டிகள் செப்டம்பர் 6 அன்று கோவை ஆதியோகி வளாகத்தில் சத்குரு அவர்களின் முன்னிலையில் நடைபெறும். இந்த இறுதிப் போட்டியில் வெல்லும் கைப்பந்து மற்றும் எறிபந்து அணிகளுக்கு தலா ரூ.5 லட்சமும், இரண்டாம் இடத்திற்கு ரூ.3 லட்சமும் பரிசாக வழங்கப்படும். மேலும், மூன்று மற்றும் நான்காம் இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.1 லட்சமும், ரூ.50,000-மும் பரிசாக வழங்கப்படவுள்ளது.</p> <h2>இருசக்கர வாகனம் பரிசு</h2><p>இதுமட்டுமின்றி, கிளஸ்டர் மற்றும் டிவிஷனல் போட்டிகளிலும் வெற்றியாளர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், “6 மண்டலங்களிலும் தேர்வு செய்யப்படும் சிறந்த பெண் த்ரோபால் வீராங்கனைகளுக்கு எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்படவுள்ளது.”</p><h2> கிராமிய கலாச்சார கொண்டாட்டம்</h2><p>மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறும் அணிகளுக்கு பிரத்யேகப் பரிசுகள் வழங்கப்படும். கிராமப்புற இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த விளையாட்டுத் திருவிழாவில் மொத்தம் ரூ.1 கோடிக்கும் மேல் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. கிராமிய கலாச்சார கொண்டாட்டம்.</p> <h2> பண்பாட்டு திருவிழா</h2><p>கிராமோத்சவம் என்பது வெறும் விளையாட்டு போட்டிகளோடு நின்றுவிடாமல், பாரம்பரிய நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள், இசை, நடனம், பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் கிராமத்து உணவுகள் என நம் கிராமத்து மரபுகளை முழுமையாக கொண்டாடும் பண்பாட்டு திருவிழாவாக திகழ்கிறது. அந்த வகையில், தற்போது நடைபெறவுள்ள மண்டல அளவிலான போட்டி நடைபெறும் இடங்களிலும், கோவையில் நடைபெறும் இறுதிப்போட்டி வளாகத்திலும் இத்தகைய கலை மற்றும் பண்பாட்டுக் கொண்டாட்டங்கள் வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளன  எனக் கூறினார்.</p><h2>கவனம் செலுத்த முடியும்</h2><p>தனிநபர்களையும் சமூகங்களையும் வடிவமைப்பதில் விளையாட்டின் ஆழமான பங்களிப்பு பற்றி சத்குரு கூறுகையில், “வாழ்க்கையை விளையாட்டுத்தனத்தோடு எதிர்கொள்வதே நாம் வாழ்வதற்கான ஆகச்சிறந்த பொறுப்பான வழியாகும். எப்போதும் வாடிய முகத்தோடு இந்த பூமியில் உலா வருவது முற்றிலும் பொறுப்பற்ற செயல். வாழ்க்கையில் விளையாட்டுத்தனத்தோடு இருப்பது என்பது பொறுப்பான மற்றும் சரியான செயலாற்றும் நிலையில் இருப்பதை குறிக்கிறது. நீங்கள் எப்போது விளையாட்டுத்தனத்தோடு இருக்கிறீர்களோ, அப்போதுதான் உங்களால் எல்லாவற்றின் மீதும் முழு கவனம் செலுத்த முடியும்.</p> <h2>பிட் இந்தியா அமைப்பின் அங்கீகாரம் </h2><p>www.instagram.com/reel/DZJnYsWzCWn பிட் இந்தியா (FIT India) அமைப்பின் அங்கீகாரம் பெற்றுள்ள ஈஷா கிராமோத்சவம், இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தால் ‘தேசிய விளையாட்டு மேம்பாட்டு அமைப்பாக’ (NSPO) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், கிராமப்புறங்களில் விளையாட்டை ஊக்குவித்ததற்காக 2018-ஆம் ஆண்டு ‘ராஷ்ட்ரிய கேல் ப்ரோத்சாஹன் புரஸ்கார்’ விருதையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.” எனக் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சவுகார் ஜானகி மறைவுக்கு முதல்-அமைச்சர் விஜய் இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-condoles-death-of-sowcar-janaki</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-condoles-death-of-sowcar-janaki#comments</comments><guid isPermaLink="false">8ad431f9-ef0c-4690-845d-12c08bbe582c</guid><pubDate>Fri, 21 Aug 2026 10:25:17 +0000</pubDate><atom:updated>2026-08-21T10:25:17.496Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இரங்கல்,condolences,Sowcar Janaki,சவுகார் ஜானகி,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/pa4ab1bz/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/pa4ab1bz/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்-அமைச்சர் விஜய் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 94. இந்த நிலையில் சவுகார் ஜானகியின் மறைவுக்கு முதல்-அமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>பழம்பெரும் திரைப்பட நடிகையும், தனது தனித்துவமான நடிப்பால் பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவருமான சவுகார் ஜானகி உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.</p><p>திரைத்துறையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து, எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டிய அவரது கலைப்பணி என்றும் போற்றத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல்வேறு மொழிப் படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளதோடு, பத்மஸ்ரீ விருது, கலைமாமணி விருது, நந்தி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள சவுகார் ஜானகியின் மறைவு திரையுலகத்திற்கு பேரிழப்பாகும்.</p><p>சவுகார் ஜானகியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடிகளில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி - நரசப்பூர் இடையே சிறப்பு ரெயில்: சென்னை எழும்பூர் வழியாக இயக்கம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-tuticorin-and-narsapur-to-run-via-chennai-egmore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-tuticorin-and-narsapur-to-run-via-chennai-egmore#comments</comments><guid isPermaLink="false">ccd2cc7a-7df2-4b93-95fb-72d20f72d6a7</guid><pubDate>Fri, 21 Aug 2026 10:08:04 +0000</pubDate><atom:updated>2026-08-21T10:08:04.338Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,Special train,தூத்துக்குடி,Tuticorin,Chennai Egmore,சென்னை எழும்பூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/o87e0w1m/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/o87e0w1m/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு தூத்துக்குடி - ஆந்திர மாநிலம் நரசப்பூர் இடையே சிறப்பு ரெயில் சென்னை எழும்பூர் வழியாக இயக்கப்படுகிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p>“தூத்துக்குடியில் இருந்து செப்டம்பர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை) இரவு 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி  எண் 06019) 3-வது நாள் இரவு 12.20 மணிக்கு நரசப்பூரை சென்றடையும்.</p><p>மறுமார்க்கத்தில், நரசப்பூரில் இருந்து செப்டம்பர் 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) காலை 4 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06020) மறுநாள் காலை 4.30 மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும். </p><p>18 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில், தமிழகத்தில் மேலூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்), விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (ஆகஸ்டு 22-ந் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மூலம் ஒரு வார காலத்தில் 272 புகார்கள் மீது உடனடி நடவடிக்கை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/immediate-action-taken-on-272-complaints-within-a-week-through-the-singappenn-special-task-force</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/immediate-action-taken-on-272-complaints-within-a-week-through-the-singappenn-special-task-force#comments</comments><guid isPermaLink="false">6792cf34-53a6-4d9a-8121-50087a50bc4e</guid><pubDate>Fri, 21 Aug 2026 09:50:29 +0000</pubDate><atom:updated>2026-08-21T09:50:29.151Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை,Singapen Special Task Force</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/5vyi9yd6/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/5vyi9yd6/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மூலம் ஒரே வாரத்தில் 272 புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“தமிழ்நாடு காவல்துறையின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மாநிலம் முழுவதும் துரிதமான கள நடவடிக்கைகள் சமூக பங்களிப்புடன் கூடிய காவல் பணிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.</p><p>கடந்த ஒரு வாரகாலத்தில் 14.08.2026 முதல் 20.08.2026 வரை, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மாவட்ட களப்பிரிவுகள் 272 புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுத்து 20 குற்றவழக்குகள் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், காணாமல் போன 2 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாக அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த காலகட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இடையே 3,519 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும், மாநிலம் முழுவதும் அடையாளம் காணப்பட்ட 12,577 குற்றம் நடைபெற வாய்ப்புள்ள பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் தீவிர ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன.</p> <p>இந்த காலகட்டத்தில், அறிவுசார் குறைபாடுடைய 5 நபர்கள் மீட்கப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. 3 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டது. மேலும், 53 பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் மீண்டும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டனர். கடந்த வாரத்தின் போது, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை (SSF) களப்பிரிவுகள் சென்னை, திருநெல்வேலி, மதுரை, கள்ளக்குறிச்சி, தேனி, தூத்துக்குடி, மயிலாடுதுறை, பெரம்பலூர், ராணிப்பேட்டை, விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர், தாம்பரம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் பதிவான வழக்குகளுக்கு விரைவாகச் செயல்பட்டு, குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம் (POCSO Act), தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் (TNPHW), பாரதிய நியாய சன்ஹிதா (Bharatiya Nyaya Sanhita BNS), குழந்தைத் திருமண தடுப்புச்சட்டம்மற்றும்சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் உள்ளிட்ட தொடர்புடைய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதுடன், குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.</p> <p>இத்தகைய துரிதமான மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்தி வரும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு, தமிழகத்தை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாநிலமாக உருவாக்குவதில் முக்கிய பங்காற்றி வருகிறது.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.26.5 லட்சம் மோசடி - அச்சக ஊழியர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-job-scam-26-5-lakh-printing-employee-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-job-scam-26-5-lakh-printing-employee-arrested#comments</comments><guid isPermaLink="false">eab351ef-4629-422b-b610-fbe3fc0770e4</guid><pubDate>Fri, 21 Aug 2026 09:41:43 +0000</pubDate><atom:updated>2026-08-21T09:41:43.346Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மோசடி,Duping,கொடுங்கையூர்,Kodungaiyur</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/vn9jmcol/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மோசடி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/vn9jmcol/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.26.5 லட்சம் மோசடி செய்த அரசு அச்சக ஊழியரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>அரசு வேலை</h2><p>சென்னை கொடுங்கையூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் முரளி (39 வயது). இவர், தொழிலாளர் நலத்துறையில் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்திருந்தார். இதை அறிந்த தமிழ்நாடு அரசு அச்சகத்தில் பணிபுரியும் தாவீத் ராஜா (34 வயது) என்பவர், முரளியை தொடர்புகொண்டு, தனக்கும், நிதித்துறையில் பணிபுரியும் தனது தாயாருக்கும் பல அரசு அதிகாரிகளை தெரியும் என்றும், பலருக்கு அரசு வேலை வாங்கிக் கொடுத்துள்ளதாகவும் கூறினார்.</p><p>மேலும், முரளிக்கு கல்வித்துறையில் டிரைவர் பணியும், அவரது மனைவிக்கு லேப் டெக்னீசியன் பணியும் வாங்கி தருவதாக கூறினார். இதற்காக இருவருக்கும் தலா ரூ.6.5 லட்சம் வீதம் ரூ.13 லட்சம் கேட்டுள்ளார். இதை நம்பிய முரளி, 2 தவணைகளாக ரூ.13 லட்சத்தை தாவீத் ராஜாவிடம் கொடுத்தார்.</p><h2>ரூ.26.5 லட்சம் மோசடி</h2><p>இதையடுத்து, முரளியின் தம்பி சிவா மற்றும் அவரது மனைவிக்கும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மேலும் ரூ.13.5 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், தாவீத் ராஜா சொன்னபடி யாருக்கும் வேலை வாங்கி தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முரளி, இதுபற்றி புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.</p><p>விசாரணையில் புகார் உண்மை என தெரியவந்தது. இதையடுத்து தாவீத் ராஜாவை போலீசார் கைது செய்தனர். மேலும், மோசடி செய்த பணத்தில் பல்லாவரத்தில் நிலம் வாங்கியிருந்ததும் தெரிய வந்தது. அந்த நிலத்துக்கான பத்திரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான தாவீத் ராஜாவை சிறையில் அடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>எம்.எல்.ஏ.க்களுக்கு கார் விவகாரம்: வண்டி ஓட்டக் கற்றுக்கொள்ளும் மலைப்பாதை டிரைவர் :  துரைமுருகன் விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/car-controversy-for-mlas-mountain-road-driver-duraimurugan-slams-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/car-controversy-for-mlas-mountain-road-driver-duraimurugan-slams-government#comments</comments><guid isPermaLink="false">40d1cd89-b9d6-40c5-82a9-8fec277b0dc5</guid><pubDate>Fri, 21 Aug 2026 09:34:37 +0000</pubDate><atom:updated>2026-08-21T09:34:37.258Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கார்,விமர்சனம்,politics,டிரைவர்,மலைப்பாதை,எம்.எல்.ஏ.க்கள்,Duraimurugan,துரைமுருகன்,Reviews</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/rmdsvbi9/durai-murugan.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்]]></media:title><media:description type="html"><![CDATA[ எம்.எல்.ஏ.க்களுக்கு கார் விவகாரம்: வண்டி ஓட்டக் கற்றுக்கொள்ளும் மலைப்பாதை டிரைவர் :  துரைமுருகன் விமர்சனம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/rmdsvbi9/durai-murugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>எம்.எல்.ஏ.க்களுக்கு கார் விவகாரத்தில், "வண்டி ஓட்டக் கற்றுக்கொள்ளும் மலைப்பாதை டிரைவர்" என்று <a href="https://www.dailythanthi.com/topic/duraimurugan">திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்</a> விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p> <h2>பொது பார்வை</h2><p>நிர்வாகத்தில் வெளித்தோற்றமும் முக்கியமானது அதாவது, அரசியலில் செய்யப்படும் எந்த ஒரு செயலின் மீதான பொது பார்வை எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து செயல்படுவது மிக மிக முக்கியம். ஏனென்றால், முதல் பார்வையில் ஒரு விஷயம் எப்படி இருக்கிறதோ, அதைத்தான் பெரும்பாலானோர் பிடித்துக்கொண்டு பேசுவார்கள். அது குறித்த தர்க்க நியாயங்களுக்குள் எல்லோரும் செல்வதில்லை என்பது நிர்வாக அனுபவம் உள்ளவர்களுக்கு புரியும்.</p><h2>மானிய கோரிக்கைகள்</h2><p>அதற்கு சமீபத்திய சிறந்த உதாரணம், எம்எல்ஏக்களுக்கு கார் வழங்கப்படும் என்பதை விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் அறிவித்ததும், அதற்கு எம்எல்ஏக்கள் வானளாவ புகழ்ந்ததும், பாட்டு பாடியதும். அதை தொடர்ந்து, அன்றைய தினத்தில் விவாதிக்கப்பட்ட ஏறத்தாழ மூன்று துறைகளின் மானிய கோரிக்கைகளுக்கு பதினைந்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. </p> <h2>சிறந்த உதாரணம்</h2><p>அது நியாயமானதா, இல்லையா? எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? எவ்வளவு உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும்? அதன் மூலம் மக்களின் வாழ்க்கை தரமும் பொருளாதாரமும் உயர்வதற்கான வாய்ப்புகள் எத்தனை? என்பதையெல்லாம் விவாதிக்காமல், ஐந்து ஆண்டுகளுக்கும் சேர்த்து சுமார் 150 கோடி ரூபாய் செலவு வைக்கும் எம்எல்ஏக்களுக்கு கார் வழங்கும் விஷயத்தை பேசுபொருளாக மாற்றிவிட்டார்கள்.</p><h2>சாதாரணமான ஒன்று</h2><p>அரசின் நிர்வாக செலவுகளில் எம்எல்ஏக்களுக்கு கார் வழங்குவது என்பது மிக மிக சாதாரணமான ஒன்று. அதுவும் குறிப்பாக வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், வேளாண்மை அலுவலர் என வட்ட அளவிலான அரசு அலுவலர்களுக்கும், வட்டார அளவிலான அரசியல் ஒன்றிய தலைவர்களுக்கும் கார் வழங்கப்பட்டிருக்கும் சூழலில், அரசின் அதிகாரப்பூர்வ வாகனம் எம்எல்ஏக்களுக்கு வேண்டும் என்பது ஒன்றும் நியாயமில்லாத கோரிக்கை அல்ல.</p><h2>தவெக அரசு</h2><p>அதுவும் இவ்வளவு பெரிய அரசு நிர்வாகத்தில், பட்ஜெட்டில் ஆண்டுக்கு சராசரியாக 30 முதல் 35 கோடி ரூபாய் என்பது ஒன்றும் பெரிய விஷயமும் அல்ல. ஏனென்றால், அரசின் மொத்த பட்ஜெட்டில் வீணாகும், விரயமாகும் செலவுகளே மிக எளிதாக 20 விழுக்காடு இருக்கக்கூடும். ஆனால், இதை ‘எடுத்தேன், கவிழ்த்தேன்’ என்றும், தான் என்ன செய்தாலும் மக்கள் ரசிப்பார்கள், ஏற்றுக்கொள்வார்கள் என்ற மமதையிலும், நிர்வாக அடிப்படை புரிதலும் இல்லாமல், இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், சரியான அதிகாரிகளை சரியான ஆலோசனைகளுடன் பயன்படுத்தாமலும்  இவ்வளவு சாதாரணமான ஒரு பிரச்சினையை பெரிய பேசுபொருளாக மாற்றி, சாணியை கரைத்து தலையில் ஊற்றிக்கொண்டிருக்கிறது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">தவெக அரசு</a>.</p> <h2>அரசாணையை வெளியிட்டிருப்போம்</h2><p>இந்த நிகழ்வை திமுக அரசு எப்படி கையாண்டிருக்கும்? ஒருவேளை எம்எல்ஏக்களுக்கு கார் வழங்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தால், தெளிவாக முடிவு செய்திருப்போம். வழங்கலாம். ஆனால் நேரடியாக வழங்காமல், மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட நிர்வாகத்திற்கு கூடுதல் வாகனங்கள் வழங்கப்பட்டு, எம்எல்ஏக்கள் பொதுமக்களின் பணிகளை மேற்கொள்வதற்காக தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ஓர் அரசாணையை வெளியிட்டிருப்போம்.</p> <h2> செயல்பட வேண்டும்</h2><p>அதற்கு பிறகு கொஞ்ச நாள் கழித்து, அந்த வாகனங்களை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எம்எல்ஏக்களிடம் ஒப்படைத்துவிட்டு, பிறகு ஓராண்டு கழித்து அதற்குரிய தொடர் செலவினங்களுக்கு நிதி ஒதுக்கி  சரியாக செய்திருப்போம். இப்படித்தான் பல விஷயங்களை செய்ய வேண்டும், செயல்பட வேண்டும்.</p> <h2>ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்</h2><p>ஏனென்றால், அரசியலில் என்ன செய்கிறோம் என்பதைவிட, அதை மக்கள் எப்படிப் பார்ப்பார்கள் என்ற ‘ஒளியியல்’ மிக மிக முக்கியம். எடுத்துக்காட்டாக, இதன் பொருளாதார பின்னணி என்ன, இதன் செலவினம் என்ன, அரசின் மொத்த பட்ஜெட் என்ன என்பதையெல்லாம் சாதாரண மக்கள் பார்க்க மாட்டார்கள். அவர்களை பொறுத்தவரை ‘கார்’ என்பது பெரிய விஷயம். தனக்கு கிடைக்காமல் மற்றவர்களுக்கு அரசிடமிருந்து அது கிடைப்பதை மக்கள் எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.</p><h2>பயம் ஒன்றே ஒன்றுதான்</h2><p>இந்த புரிதல் இல்லாமல், சாதாரண ஒரு விஷயத்தை  சின்னாபின்னமாக்கியிருக்கிறது. நமக்கெல்லாம் இருக்கும் பயம் ஒன்றே ஒன்றுதான். ஒரு நிர்வாக அனுபவமும் இல்லாமல், எந்த புரிதலும் இல்லாமல், இவ்வளவு பெரிய வளர்ச்சி பாதையில் சென்றுகொண்டிருந்த நாட்டை இவர்கள் கையில் ஒப்படைத்திருக்கிறோம்.</p><h2>ஒப்படைத்திருக்கிறோம்</h2><p>மேல்நோக்கி செல்ல வேண்டிய ஒரு வாகனம் தட்டு தடுமாறி அதே இடத்தில் நின்று, அதன்பிறகு பாதாளத்தை நோக்கி விரைந்து வந்துவிட்டால், மீண்டும் அதை மேல்நோக்கி செலுத்துவது எவ்வளவு கடினமோ, அதேபோல்தான் தமிழ்நாட்டுக்கும் நடந்திருக்கிறது. ஓட்ட தெரியாத ஒரு டிரைவரை நம்பி, மலைப்பாதையில் விரைந்து சென்றுகொண்டிருந்த ஒரு பேருந்தை ஒப்படைத்திருக்கிறோம்.</p><h2>யாரை நம்புவது</h2><p>அவரை சுற்றி நின்று ஓட்டுவதற்கு ஆலோசனைகள் சொல்கிறார்கள். சரியாக சொல்கிறார்களா, சரியாக சொல்லாமல் இருக்கிறார்களா, யாரை நம்புவது, யாரை நம்பாமல் இருப்பது என்று தெரிந்துகொள்வதற்குள் ஐந்தாண்டுகள் முடிந்துவிடும். வண்டி பல நூறு கிலோமீட்டர் பின்னால் வந்துவிடும்.</p> <h2>மிகக்கடினம்</h2><p>இது ஒரு எளிதான ஒரு புரிதல்தான், செங்குத்தான வளர்ச்சி பாதையில் இறங்குவது மிக மிக சுலபம். ஏறுவது மிக மிகக்கடினம். நாம் வேகமாக இறங்கிக்கொண்டிருக்கிறோம். காலமே, நீ ஓர் அதிசய பெட்டகம்! என்னென்ன அதிசயங்களை வைத்திருக்கிறாயோ தெரியவில்லை!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஜாமீன் மனு: காவல்துறை பதிலளிக்க உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bail-petition-in-tasmac-corruption-case-police-ordered-to-respond</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bail-petition-in-tasmac-corruption-case-police-ordered-to-respond#comments</comments><guid isPermaLink="false">a2214952-ba7e-450c-b1f9-d99850f683fb</guid><pubDate>Fri, 21 Aug 2026 09:12:22 +0000</pubDate><atom:updated>2026-08-21T09:12:22.337Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை ஐகோர்ட்டு,காவல்துறை,TNPolice,செந்தில் பாலாஜி,chennaihighcourt,TASMACCase,டாஸ்மாக்  முறைகேடு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/z9mlsx5f/madrashc33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஜாமீன் மனு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/z9mlsx5f/madrashc33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக்கின் ஜாமீன் மனுவிற்கு  பதிலளிக்க காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.</p><p>டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை கடைகளுக்கு கொண்டு செல்ல போக்குவரத்து டெண்டர் வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட ஏழு பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.</p><p>இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் என்பவர், ஜாமீன் கோரி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D">சென்னை ஐகோர்ட்டில் </a>மனுத் தாக்கல் செய்திருந்தார்.</p><p>இந்த மனு, நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்த போது, மனுவிற்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் கோரினார்.</p><p>மனுதாரர் தரப்பில், குதிரைபேர வழக்கில் ஜாமீன் பெற்று விடுதலையான நாளில், இந்த வழக்கில் கைது செய்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து மனுவிற்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.</p>]]></content:encoded></item><item><title>கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை விவசாயிகளின் நலனில் காட்டத் தயங்குவது ஏன்? - டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-hesitate-to-show-speed-in-farmers-welfare-like-buying-cars-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-hesitate-to-show-speed-in-farmers-welfare-like-buying-cars-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">b6c7db5a-3bca-47c6-8ca5-fa472bb48164</guid><pubDate>Fri, 21 Aug 2026 08:59:56 +0000</pubDate><atom:updated>2026-08-21T08:59:56.417Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Farmers,TTV Dhinakaran,டிடிவி தினகரன்,விவசாயிகள்,Crop loan,பயிர்க்கடன் தள்ளுபடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/r4w4s8bv/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/r4w4s8bv/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வாங்குவதில் காட்டும் குதிரை வேகத்தை விவசாயிகளின் நலனில் காட்டத் தயங்குவது ஏன்? என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம்தேதி மேட்டூர் அணையைத் திறக்க முடியாத சூழலில், தமிழகம் முழுவதும் உள்ள டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், 134 கோடி ரூபாய் மதிப்பில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யால் அறிவிக்கப்பட்ட குறுவைத் தொகுப்பு இன்று வரை வந்துசேரவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.</p><p>குறுவை சாகுபடி மற்றும் அதனையொட்டி நடைபெறும் பணிகளுக்காக வழங்க வேண்டிய குறுவைத் தொகுப்பு, குறுவை சாகுபடியே முடிவடைந்து அறுவடை செய்யும் தருவாயிலும் வழங்காமல் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கும் தவெக அரசின் அலட்சியப் போக்கு, ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மேலும் கேள்விக்குறியாக்கியுள்ளது.</p><p>இயந்திரங்களின் மூலம் நடவு செய்ததற்கான ரசீதுகள் உட்பட அனைத்து ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து இரண்டு மாதங்கள் கடந்தும், விவசாயிகளுக்கான நிதியை விடுவிக்காமல் காலம் தாழ்த்திக் கொண்டிருப்பது, டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்ட விவசாயிகளின் நலனுக்காக அறிவிக்கப்பட்ட குறுவைத் தொகுப்பின் நோக்கத்தையே சிதைக்கும் அளவிற்கான அவல நிலையை உருவாக்கியுள்ளது.</p><p>ஏற்கனவே, வேளாண் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்வதாக அளித்த வாக்குறுதியையும் தவெக அரசு முழுமையாக நிறைவேற்றாமல் விவசாயிகளை வஞ்சித்து வரும் நிலையில், சாகுபடிச் செலவு அதிகரிப்பு, இடுபொருட்களின் விலை உயர்வு, விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது எனப் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வரும் விவசாயிகளுக்கு, குறுவைத் தொகுப்பையும் உரிய நேரத்தில் வழங்காமல் காலம் தாழ்த்துவது, விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும்.</p><p>எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய இந்தக் குறுவைத் தொகுப்புத் திட்டத்தில் அலட்சியம் காட்டாமல், அரசு அறிவித்த குறுவைத் தொகுப்பு முழுமையாகவும், உடனடியாகவும் விவசாயிகளைச் சென்றடையத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, விவசாயிகளுக்கு அளித்த முழுமையான வேளாண் கடன் தள்ளுபடி வாக்குறுதியையும் தாமதமின்றி நிறைவேற்றி, விவசாயிகளின் கடன் சுமையிலிருந்து அவர்களை விடுவிக்க வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சுரங்கங்கள் கனிமங்கள் சட்டத்திருத்தம் 2026: திரும்பப் பெற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mines-minerals-amendment-2026-withdrawal-demand-by-indian-communist-party</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mines-minerals-amendment-2026-withdrawal-demand-by-indian-communist-party#comments</comments><guid isPermaLink="false">c2525773-07ec-45bf-a169-9c4b66319063</guid><pubDate>Fri, 21 Aug 2026 08:57:10 +0000</pubDate><atom:updated>2026-08-21T08:57:10.043Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,தமிழ்நாடு அரசு,வலியுறுத்தல்,CPI,கனிமங்கள்,Minerals,withdrawal,Urges</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/0uzqhb0b/veerapandiyan.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன்]]></media:title><media:description type="html"><![CDATA[ சுரங்கங்கள் கனிமங்கள் சட்டத்திருத்தம் 2026: திரும்பப் பெற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/0uzqhb0b/veerapandiyan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்திருத்தம் 2026, ஐ மத்திய அரசு  திரும்ப பெற வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல். இது தொடர்பாக,<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF"> இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்</a> மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><h2>சட்டத்திருத்தம்</h2><p>மாநில உரிமைகளைப் பறித்து பெருநிறுவனங்கள் இயற்கை வளங்களை கொள்ளையடிக்க வழிவகுக்கும், மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள சுரங்கங்கள் மற்றும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">கனிமங்கள்</a> மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்திருத்தம் 2026, ஐ மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.</p> <h2>நிதி உரிமைகளை பறிக்கும் மத்திய அரசு</h2><p>இந்த சட்டத்தின் மூலம் கனிம வளங்கள் மீது மாநிலங்களுக்கு உள்ள வரி, செஸ்  மற்றும் பிற வருவாய் அதிகாரங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் உரிமை மத்திய அரசுக்கு வழங்கப்படுகிறது. இச்சட்டத்திருத்தம் மாநிலங்களின் வருவாய் உரிமையை பறிப்பதுடன் நிதி சுயாட்சியையும் கடுமையாக பாதிக்க செய்யும்.</p><h2>அமைப்புச்சட்டம்</h2><p>இச்சட்டம் வெறும் கனிம வளம் தொடர்பான பிரச்சனை மட்டுமல்ல, அரசியல் அமைப்புச்சட்டம் மாநிலங்களுக்கு வழங்கியுள்ள அதிகாரங்களையும், நிதி உரிமைகளையும் படிப்படியாக பறிக்கும் மத்திய அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.</p><h2>இயற்கை வளங்கள்</h2><p>இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் பெரு நிறுவனங்களுக்கு இச்சட்டத்திருத்தம் வாய்ப்பளிக்கும். இயற்கை வளங்களை மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் மையப்படுத்த இச்சட்டத்திருத்தம் வழிவகுக்கிறது.</p> <h2>முக்கிய இலக்கு</h2><p>2026 ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி, அரியவகை கனிமங்களின் உலகளாவிய விநியோக சங்கிலி அதற்கான முதலீடு மற்றும் கடல்சார் வளங்களை வேகமாக பயன்படுத்துதல் ஆகியவற்றை இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கான முக்கிய இலக்குகளாக அறிவித்தார். இதற்கு சில நாட்களுக்கு முன்பே, ஆகஸ்ட் 12 அன்று மக்களவையும், ஆகஸ்ட் 13 அன்று மாநிலங்களவையும் இந்த சட்டத்திருத்த மசோதா 2026-ஐ நிறைவேற்றியுள்ளன.</p><h2>கொள்ளை லாபம்</h2><p>உச்சநீதிமன்றத்தின் 2024-ஆம் ஆண்டு தீர்ப்பு, மாநிலங்களுக்கு உள்ள கனிம உரிமைகள் தொடர்பான வரி அதிகாரத்தை உறுதி செய்துள்ளது. இந்நிலையில் இத்தகைய சட்ட கட்டுப்பாட்டை ஒன்றிய பாஜக அரசு கொண்டு வருவது, மாநிலங்களின் அதிகாரத்தை நயவஞ்சகத்தை சட்டத்தின் மூலம் குறைக்கும் செயலாகும்.</p> <h2> பாதிப்படைய செய்யும்</h2><p>கனிம வளம் நிறைந்த மாநிலமான தமிழ்நாட்டின் வருவாயை மிகப்பெரிய அளவிற்கு இச்சட்டத்திருத்தம் பாதிக்கும். மாநில இயற்கை வளங்கள் மீது கொள்கைரீதியான முடிவெடுக்கும் உரிமையையும், கனிம வளங்களிலிருந்து கிடைக்கும் வருவாயை மாநில மக்களின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தும் பொருளாதார மற்றும் நிதிசார் தன்னாட்சியையும் இச்சட்டத்திருத்தம் பாதிப்படைய செய்யும்.</p> <h2>பொது சொத்து</h2><p>கனிம வளங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான லாபத்திற்கானது அல்ல; அவை இயற்கையான மக்களின் பொது சொத்து ஆகும். அவற்றின் பயன்பாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மக்கள் நலன், உள்ளூர் மக்களின் உரிமைகள், மாநில நலன் மற்றும் சமூக நீதியை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும்.</p><p>பாரம்பரிய உரிமைகளை பாதிக்கும்</p><p>இச்சட்டம் பழங்குடியினர் மற்றும் பாரம்பரியமாக வனங்களில் வாழும் மக்களின் நிலம், வாழ்வாதாரம், பாரம்பரிய உரிமைகளை பாதிக்கும். இயற்கை வளங்களின் மீதான அவர்களின் உரிமைகளை பாதிக்கும். குறிப்பாக வன உரிமைகள், சட்டம் 2006 வழங்கும் சமூக மற்றும் தனி நபர் வன உரிமைகள், கிராம சபையின் ஒப்புதல் மற்றும் பங்கேற்பு ஆகியவற்றை பாதுகாக்காமல், சுரங்க திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பது பழங்குடியினர் மற்றும் பாரம்பரியமாக வனங்களில் வாழும் மக்களின் அரசியலமைப்பு சட்டரீதியான உரிமைகளுக்கும், வாழ்வாதார பாதுகாப்பிற்கும் எதிரானதாகும் எனவே, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்திருத்தம் 2026, ஐ தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும். இச்சட்டத்திருத்தத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய பாஜக அரசை வலியுறுத்துகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருவனந்தபுரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-from-thiruvananthapuram-to-velankanni</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-from-thiruvananthapuram-to-velankanni#comments</comments><guid isPermaLink="false">0c5fcd98-8715-424a-b66d-acb463e086c3</guid><pubDate>Fri, 21 Aug 2026 08:29:09 +0000</pubDate><atom:updated>2026-08-21T08:29:09.623Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,Special train,Velankanni,வேளாங்கண்ணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/ox42ncpc/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/ox42ncpc/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,  </p><p>வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தென்னக ரெயில்வே சார்பில் திருவனந்தபுரத்தில் இருந்து நெல்லை, மதுரை வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.06115) திருவனந்தபுரம் வடக்கு (கொச்சுவேலி) ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 29-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் 5-ந் தேதி ஆகிய நாட்களில் இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 2.10 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் காலை 8.40 மணிக்கு வேளாங்கண்ணி ரெயில் நிலையம் சென்றடைகிறது. </p><p>மறுமார்க்கத் தில் இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.06116) வருகிற 30-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் 6-ந் தேதி வேளாங்கண்ணியில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 1.25 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந் 1 தடைகிறது. மறுநாள் காலை 7.30 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையம் சென்றடைகிறது. இந்த ரெயிலில் 3 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட் டிருக்கும். ரெயில், நெய்யாற்றின்கரை, குழித்துறை, இரணியல், நாகர்கோவில் டவுன், வள்ளியூர், நாங்குநேரி, நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட் டினம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். </p> ]]></content:encoded></item><item><title>5 மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை அப்டேட்</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-in-5-districts-over-the-next-3-days-starting-today-weather-update</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-in-5-districts-over-the-next-3-days-starting-today-weather-update#comments</comments><guid isPermaLink="false">c8b12d04-0fd2-4e48-b15f-305f41b20d7a</guid><pubDate>Fri, 21 Aug 2026 08:27:54 +0000</pubDate><atom:updated>2026-08-21T08:27:54.558Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,Rain,Weather,கனமழை,வானிலை,தமிழகம்,Weather News,WeatherUpdate,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,weather forecast,வானிலை ஆய்வு மையம்,கன மழை,வானிலை அறிக்கை,weather condition,Weather Report,வானிலை முன்னறிவிப்பு,வானிலை அறிவிப்பு,weather update news,TN Rain,வானிலை அப்டேட்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/mb96fqkg/kloere.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rain, மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/mb96fqkg/kloere.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>வரும் 24-ம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><h2>மழை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><p>இதன் காரணமாக <strong>இன்று (21-08-2026) முதல் 23-08-2026 வரை:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். </p><p>ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><h2>கனமழை</h2><p><strong>24-08-2026 மற்றும் 25-08-2026:</strong> கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் <a href="https://www.dailythanthi.com/topic/rain">கனமழை</a> பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>26-08-2026 மற்றும் 27-08-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong><ins>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</ins></strong></p><p><strong>21-08-2026 முதல் 23-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><p><strong>24-08-2026 மற்றும் 25-08-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.</p><p><strong><ins>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</ins></strong> </p><p><strong>21-08-2026 முதல் 23-08-2026 வரை:</strong> உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p><strong>24-08-2026 மற்றும் 25-08-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.</p> <h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று (21-08-2026) மற்றும் நாளை (22-08-2026):</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>மீனவர்களுக்கான எச்சரிக்கை:</h2><p><strong><ins>தமிழக கடலோரப்பகுதிகள்:</ins></strong></p><p><strong>21-08-2026:</strong> தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>22-08-2026 முதல் 25-08-2026 வரை:</strong> தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong><ins>வங்கக்கடல் பகுதிகள்:</ins></strong></p><p><strong>21-08-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>22-08-2026 முதல் 25-08-2026 வரை :</strong> தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong><ins>அரபிக்கடல் பகுதிகள் :</ins></strong></p><p><strong>21-08-2026 மற்றும் 22-08-2026:</strong> மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>23-08-2026:</strong> மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>24-08-2026:</strong> கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>25-08-2026:</strong> மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>டெல்டா விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு நிதியை உடனே வழங்கிடுக! - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/provide-the-kuruvai-package-to-delta-farmers-immediately-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/provide-the-kuruvai-package-to-delta-farmers-immediately-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">79118d8d-4b6c-4f42-8d6a-fabe496c3529</guid><pubDate>Fri, 21 Aug 2026 08:23:39 +0000</pubDate><atom:updated>2026-08-21T08:23:39.887Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,நிதி,டெல்டா விவசாயிகள்,குறுவைத் தொகுப்பு,Delta farmers</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/xwg7t53z/nainar.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/xwg7t53z/nainar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக பாஜக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>குறுவை சாகுபடி செய்யும் டெல்டா விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் வகையில், ரூ.134.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்தும், இதுவரை ஒரு பைசா கூட விவசாயிகளின் கைக்கு வந்து சேரவில்லை என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.</p><h2>குறுவை தொகுப்பு நிதி</h2><p>குறுவை தொகுப்புத் திட்டத்துக்கான நிதியை விவசாயிகளுக்கு வழங்கிவிட்டதாகச் சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்த நிலையில், களநிலவரமோ முற்றிலும் வேறாக உள்ளது. இயந்திர நடவு ரசீது உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பித்தும், இதுவரை நிதி வழங்கப்படவில்லை என விவசாயிகள் குமுறி வருகின்றனர்.</p><p>அறுவடைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், இனியும் காகித அறிவிப்புகளால் காலத்தைக் கடத்தாமல், குறுவை தொகுப்பு நிதியை உடனடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய சர்வேயர்; ‘யாரையும் நம்ப முடியவில்லை’ எனவும் பேச்சு

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/surveyor-takes-bribe-from-farmer-says-cant-trust-anyone</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/surveyor-takes-bribe-from-farmer-says-cant-trust-anyone#comments</comments><guid isPermaLink="false">e7c430a0-0232-43d7-bb3f-343337135431</guid><pubDate>Fri, 21 Aug 2026 08:22:06 +0000</pubDate><atom:updated>2026-08-21T08:22:06.788Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Pudukkottai,புதுக்கோட்டை,லஞ்சம்,bribe</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/awo48z2v/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/awo48z2v/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>புதுக்கோட்டை,</p><p><a href="https://www.dailythanthi.com/">புதுக்கோட்டை </a>மாவட்டத்தில் விவசாயியிடம் சர்வேயர்  லஞ்சம் வாங்கிய வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. </p><p>புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூர் அருகே ராயவயல் கிராமத்தை சேர்ந்தவர் உருமையா. இவர் தனது மனைவி பெயரில் உள்ள விவசாய இடத்தை பட்டாவில் உட்பிரிவு செய்ய புத்தாம்பூர் சர்வேயர் எழில்கொடியை அனுகியுள்ளார். </p> <h2>லஞ்சம்</h2><p>அப்போது, வேலையை முடிக்க லஞ்சம் தருமாறு சர்வேயர் எழில்கொடி கேட்டுள்ளார். அதன் அடிப்படையில் ஏற்கனவே சர்வேயர் எழில்கொடிக்கு ரூ. 2 ஆயிரம் லஞ்சமாக உருமையா கொடுத்துள்ளார்</p><p>இந்நிலையில், பட்டாவில் உட்பிரிவு வேலையை முடித்து தர கூடுதலாக ரூ. 2 ஆயிரம் தருமாறு சர்வேயர் எழில்கொடி லஞ்சம்  கேட்ட வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.</p><h2>யாரையும் நம்ப முடியவில்லை என பேச்சு</h2><p>விவசாயி உருமையாவிடம் ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கேட்ட வீடியோவில் சர்வேயர் எழில்கொடி பேசியதாவது;-</p><p>சீக்கிரம் வேலை முடியாது. எவ்வளவு நாளில் வேலை முடியும் என்றும் தெரியாது. செல்போன்களை எடுத்து வைத்துவிடுங்கள். யாரையும் நம்ப முடியவில்லை. நமது கையை கூட நம்மால் நம்ப முடியவில்லை. நீங்கள் எவ்வளவு கொடுப்பீர்களோ கொடுங்கள். ரூ. 1,000 எல்லாம் போதாது... ரூ. 2,000 கொடுங்கள்...</p><p>எனக்கு ஜிபே கிடையாது.  வீட்டில் உள்ளவர்கள் ஜிபே எண்ணுக்கும் பணம் அனுப்ப வேண்டாம்.  ஜிபேயில் நான் யாருக்கு மாற்றுவது.  யாரையும் நம்ப முடியவில்லை. காலம் மோசமான காலமாக உள்ளது. </p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>  <figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="ta" dir="ltr">புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூர் அருகே விவசாயி ஒருவரின் இடத்தை உட்பிரிவு செய்ய சர்வேயர் உதவியாளர் மூலம் 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.<br><br>புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூர் அருகே ராயவயல் கிராமத்தைச் சேர்ந்த உருமையா என்பவர் தனது மனைவி… <a href="https://t.co/Rlb7osV4ZY">pic.twitter.com/Rlb7osV4ZY</a></p>&mdash; ஜெயராமன் திமுக (@jayaraman418) <a href="https://x.com/jayaraman418/status/2090614451141804061?ref_src=twsrc%5Etfw">August 21, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>திருவாரூரில் கனமழை: அறுவடைக்குத் தயாரான 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/heavy-rain-in-tiruvarur-500-acres-of-harvest-ready-paddy-crops-submerged-and-damaged</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/heavy-rain-in-tiruvarur-500-acres-of-harvest-ready-paddy-crops-submerged-and-damaged#comments</comments><guid isPermaLink="false">df011d92-27c2-431d-81ee-c5ca4349b89f</guid><pubDate>Fri, 21 Aug 2026 08:16:18 +0000</pubDate><atom:updated>2026-08-21T08:16:18.194Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவாரூர்,heavy rain,damaged,Paddy crops,நெற்பயிர்கள் சேதம்,இழப்பீடு கோரி</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/bbskrh4h/31.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ நெற்பயிர்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ நெற்பயிர்கள் மழையால் சேதமடைந்தன.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/bbskrh4h/31.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவாரூர்,</p><p>திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாகப் பெய்த தொடர் கனமழை காரணமாக, சுமார் 500 ஏக்கர் பரப்பளவிலான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">நெற்பயிர்கள்</a> மழைநீரில் மூழ்கி சேதமடைந்தன.</p><h2>பயிர்கள் நாசம்</h2><p>டெல்டா மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெய்து வரும் இந்த திடீர் மழையால் திருவாரூர் மாவட்டம் நன்னிலம், குடவாசல், எரவாஞ்சேரி, வெள்ளை, அதம்பார் மற்றும் ராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விளைநிலங்கள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. இதில் கதிர்கள் முற்றி, இன்னும் சில நாட்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் சாய்ந்து மூழ்கின.</p><h2>விவசாயிகள் வேதனை</h2><p>"பயிர்களைக் காக்க கடுமையான உழைப்பையும் முதலீட்டையும் கொட்டிய நிலையில், அறுவடை நேரத்தில் பெய்த இந்த மழை மொத்த உழைப்பையும் வீணடித்துள்ளதாக" அப்பகுதி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">விவசாயிகள்</a> கண்ணீருடன் தெரிவித்தனர். தேங்கியுள்ள மழைநீரை வடிக்க வழியின்றி பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்தனர்.</p><h2>உடனடி இழப்பீடு கோரிக்கை</h2><p>பாதிக்கப்பட்ட விளைநிலங்களை வேளாண்மை மற்றும் வருவாய்த்துறையினர் உடனடியாக நேரில் பார்வையிட்டு, சேத விபரங்களை துல்லியமாகக் கணக்கிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு தமிழக அரசு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81">உரிய இழப்பீடு</a>, விரைவில் வழங்கி உதவ வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை: சட்டசபையில் அனல் பறந்த விவாதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/constituency-delimitation-heated-debate-in-the-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/constituency-delimitation-heated-debate-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">72035c0f-2cf6-413b-9fa3-b153653a53c3</guid><pubDate>Fri, 21 Aug 2026 08:15:56 +0000</pubDate><atom:updated>2026-08-21T08:15:56.229Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,TVK,தவெக,பாஜக,BJP,பாமக,PMK,அதிமுக,திமுக,DMK,சட்டசபை,TN Assembly,Delimitation of Constituencies,தொகுதி மறுவரையறை,Delimitation,Fair Delimitation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/vsrmdkqv/CHENNAI-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/vsrmdkqv/CHENNAI-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தொகுதி மறுவரையறை தீர்மானம் குறித்து சட்டசபையில் அனல் பறந்த விவாதம் நடந்தது.</p><h2>பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:-</h2><p>"தொகுதி மறுவரையறை குறித்து சில ஊடகங்களும், சில கட்சிகளும் தவறான கண்ணோட்டத்தோடு செய்தி வெளியிட்டுள்ளன. 543 எம்பிக்கள் என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்று தொகுதி மறுவரையறை தொடர்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் முதல்-அமைச்சரும் அரசும் உறுதியாக இருக்கின்றனர். Fair Delimitation தேவையில்லை.. Freeze Delimitationதான் தேவை" என்றார்.</p><p><strong>எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,</strong> "தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாட்டில் முதல்-அமைச்சர் பேசிய உரை குறித்து அமைச்சர் பேசினார். 543 எம்பிக்கள் என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்றுதான் தீர்மானத்தில் உள்ளது. அந்த தீர்மானத்தைத்தான் பேரவையில் நிறைவேற்றியுள்ளோம். முதலமைச்சர்கள் மாநாட்டில் 543 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் பேசவில்லை" என்று கூறினார்.</p><p><strong>இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,</strong> "திமுக ஆளுங்கட்சியாக இருந்தபோது எம்.பிக்கள் எண்ணிக்கை உயர்த்த கூடாது என நகல் எரித்து போராட்டம் நடத்தினர். நாடாளுமன்றத்தில் மசோதா வரும் போது திமுக வெளிநடப்பு செய்யக்கூடாது. வாஜ்பாய் கொண்டு வந்தது போன்று சிறப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும். 39 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவையில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். புறக்கணித்தால் அதுவும் ஆளுங்கட்சிக்கு சாதகமாக அமைந்து விடும்.</p><p>தமிழ்நாட்டில் கோரிக்கை வைத்த நீட் விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத மத்திய அரசு, கோரிக்கையே வைக்காத போது தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது என்றால் அதில் கண்டிப்பாக அரசியல் இருக்கும்” என்றார்.</p><p><strong>தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,</strong> "தொகுதி மறுவரையறை என்பது சட்டம். தமிழ்நாட்டின் தொகுதிகளின் எண்ணிக்கை கூட வேண்டுமா? குறைய வேண்டுமா? அதை தெளிவுபடுத்துங்க"என்றார்.</p><p><strong>இதற்கு பதிலளித்த ஆதவ் அர்ஜுனா,</strong> "மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பின் சிறப்பு சட்டத்தை வாஜ்பாய் கொண்டு வந்தார். அதை கொண்டு வர, உங்கள் எம்பி.,கள் உள்ளிட்டோர் குரல் கொடுங்கள், அது தான் எங்கள் கோரிக்கை" என்றார்.</p><p><strong>திமுகவின் நிலைப்பாடு மாறுவதாக பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியதற்கு பாமக கணேஷ்குமார் பதில் அளித்து கூறுகையில்,</strong> 7.18%க்கு குறையாமல் இருந்தால் தொகுதி மறுவரையறையை ஆதரிப்பதாக தவெகவும் கூறியது; முந்தைய திமுக ஆட்சியில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தவெக பொதுச்செயலாளர் பங்கேற்றார். திமுக தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தவெகவும் கையெழுத்திட்டது; தவெகவும், காங்கிரஸும் Fair Delimitation எனக் கூறிவிட்டு இப்போது நிலைப்பாட்டை மாற்றுகின்றன’ என்றார்.</p><p><strong>பாஜக எம்.எல்.ஏ. போஜராஜன் கூறியதாவது,</strong> “தொகுதி மறுவரையறை தமிழகத்துக்கு நல்லது. 50% உயர்வு என வரும்போது தமிழக எம்பிக்கள் எண்ணிக்கை 59 ஆக உயரும்; தமிழக எம்பிக்களின் எண்ணிக்கையை 39-லிருந்து 59 ஆக உயர்த்தும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.</p><p>தொகுதி மறுவரையறையில் அமித்ஷா மாற்றி மாற்றி பேசுகிறார் என்று <strong>அமைச்சர் வன்னி அரசு</strong> தெரிவித்தார். மேலும் ”பா.ம.க நண்பர்கள் ராமதாஸை காப்பாத்துறத விட மோடி அமித்ஷாவை காப்பாத்துறதுல தான் குறியா இருக்கீங்க” என அவர் கூறினார். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.</p><p>இவ்வாறு தொகுதி மறுவரையறை தொடர்பாக த.வெ.க, தி.மு.க, அ.தி.மு.க., பாமக, பாஜக உறுப்பினர்கள் மாறி மாறி தங்களது கருத்துகளை தெரிவித்தனர். இதனால் சட்டசபையில் விவாதம் அனல் பறந்தது.</p>]]></content:encoded></item><item><title>தலைமை செயலாளர் அப்பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர்: மார்க்சிஸ்ட் கட்சி நாளை ஆர்ப்பாட்டம்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-secretary-unfit-to-continue-in-office-marxist-party-to-stage-protest-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-secretary-unfit-to-continue-in-office-marxist-party-to-stage-protest-tomorrow#comments</comments><guid isPermaLink="false">8336d373-50b2-4230-9b01-76a7bb0ce48c</guid><pubDate>Fri, 21 Aug 2026 08:14:06 +0000</pubDate><atom:updated>2026-08-21T08:14:06.596Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,ஆர்ப்பாட்டம்,Chief Secretary,Marxist Communist,பெ.சண்முகம்,Marxist Communist Party,தலைமை செயலாளர்,மார்க்சிஸ்ட் கம்ப்யூனிஸ்ட் கட்சி,p shanmugam,மார்க்சிஸ்ட் கட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/lh6c710m/shanmugam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெ.சண்முகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/lh6c710m/shanmugam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகம் முழுவதும்  நாளைய தினம் (22.08.2026) அனைத்து மாவட்டங்களிலும் வலிமையான கண்டனம் முழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>இடதுசாரிகள் குறிவைப்பு</h2><p>இடதுசாரி மாணவர் இயக்கங்களைக் குறிவைத்ததன் மூலம் தலைமை செயலாளரின் சித்தாந்த சாய்மானம் அம்பலப்பட்டு நிற்கிறது. அரசு எந்திரத்தை அவரது நோக்கத்திற்காக தவறாக பயன்படுத்தும் எல்லைக்கு அவர் சென்றிருக்கிறார். நியாயமான நிர்வாகத்தை இனிமேலும் அவரிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது. கடிதத்தின் 'பொருள்' இடதுசாரி இயக்கங்கள் குறித்து இருந்தாலும், உள்ளடக்கத்தில், மாணவர்களின் போராட்ட உரிமைகளையே அடக்கி ஒடுக்கும் எதேச்சதிகார மனோபாவமே அதில் பிரதிபலிக்கிறது. இது மிக ஆபத்தானது. மத்திய அரசின் பாணியை அடியொற்றி எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவே கருத வேண்டியிருக்கிறது. இது முதல்-அமைச்சரின் அனுமதியுடன் நடந்ததா என்கிற கேள்வி எழுகிறது.</p><p>கல்லூரி கல்வி இயக்குனர் தம் சுற்றறிக்கையைத் திரும்பப் பெற்றிருக்கலாம். ஆனால், சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தின் முடிவும், அதனை அறிவுறுத்தி தமிழக அரசின் சிறப்பு செயலாளர் அனுப்பிய கடிதமும் நீடிக்கின்றன. உயர் கல்வித் துறை செயலாளர், கல்லூரி கல்வி இயக்ககம் தவிர, மற்ற இயக்ககங்களோ, பல்கலைக்கழகங்களோ இந்த சுற்றறிக்கையை அனுப்பவில்லை என்று பத்திரிக்கைக்குக் கூறியிருப்பதாக தகவல் உள்ளது. ஆனால், தமிழக அரசின் சிறப்பு செயலாளரின் கடிதம், கல்லூரி கல்வி இயக்ககம், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்பட்டு, சென்னை பல்கலைக்கழக பதிவாளர் மூலம் அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அவையும் இன்னும் திரும்பப் பெறப்படவில்லை. 'டாப் பிரையாரிட்டி, மோஸ்ட் இம்மீடியட்' என்ற வார்த்தைகளுடன் நடவடிக்கை எடுக்கப்பட்ட விவரம் குறித்த அறிக்கை (action taken report) கோரப்பட்டுள்ளதானது, எவ்வளவு தீவிரத் தன்மையுடன் திட்டமிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. எனவே, கல்லூரி கல்வி இயக்ககம் மட்டுமே தவறு செய்தது என்பது உண்மையல்ல. எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.</p><h2>விளக்கம் வேண்டும்</h2><p>இப்பிரச்சனை சட்டமன்றத்தில் எழுப்பப்பட்டபோது, உயர்கல்வித்துறை அமைச்சர் அளித்த விளக்கமானது முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியதாகும். கல்வி வளாக அமைதி மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்குவதில் தான் இருக்கிறதா என அவர் விளக்க வேண்டும். சில வார்த்தைகள் தவறாக வந்துவிட்டன என்கிறார். மொத்த உள்ளடக்கமே மோசமானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது.</p><p>குஜிலியம்பாறை வட்டாட்சியர் பிரச்சனையிலும் சட்டப்பேரவையில் வருவாய்த்துறை அமைச்சர், நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டார். ஆனால், மாவட்ட ஆட்சியரின் குறிப்பு, பயிற்சி முடிந்து விட்டதால் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தில் பணியில் சேர்வதற்காக சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் விடுவிக்கப்பட்டதாகக் கூறுகிறது. பயிற்சி முடிந்த பின் விடுவிக்கப்பட்டு, வேறு பணியில் சேர்வதற்கு பெயர், தவெக ஆட்சியில், நடவடிக்கையா?</p><h2>நாளை கண்டன ஆர்ப்பாட்டம்</h2><p>அடுத்தடுத்து <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">இடதுசாரிகள் </a>குறிவைக்கப்படுவதைத் தற்செயலானது என எடுத்துக் கொள்ள முடியாது.</p><p>* தமிழக முதல்வரும் அரசும் தம் நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும்.</p><p>* தலைமைச் செயலாளர் அப்பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் என்ற முறையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>* குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்</p><p>என வலியுறுத்தி நாளைய தினம் (22.08.2026) தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வலிமையான கண்டனம் முழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுக்கிறது. அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அரசுப் பேருந்தில் மாணவர்கள் சேட்டை: பொதுமக்கள் அதிர்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/students-unruly-behavior-on-government-bus-public-shocked</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/students-unruly-behavior-on-government-bus-public-shocked#comments</comments><guid isPermaLink="false">2794b654-af90-4b0a-bfc9-a49a0c0f7991</guid><pubDate>Fri, 21 Aug 2026 07:25:04 +0000</pubDate><atom:updated>2026-08-21T07:25:04.638Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Government bus,கிருஷ்ணகிரி,மாணவர்கள்,social media,அரசுப்பேருந்து,public shock</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/v3xo6zm5/30.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ பேருந்தில் தொங்கிக்கொண்டு பயணம் செய்த மாணவர்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆபத்தான முறையில் பயணம் செய்த மாணவர்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/v3xo6zm5/30.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ணகிரி,</p><p>ஓசூர் அருகே அரசுப் பேருந்தில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>படிக்கட்டில் தொங்கியபடி சாகசம்</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கிருஷ்ணகிரி மாவட்டம்</a>, ஓசூர் அடுத்த அஞ்செட்டி தாலுகா பகுதிக்கு உட்பட்ட கிராமப்புறங்களில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ, மாணவிகள் அரசுப் பேருந்துகள் மூலம் பள்ளிக்குச் சென்று வருகின்றனர். இந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை வழக்கம்போல் இயக்கப்பட்ட அரசுப் பேருந்து ஒன்றில், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பள்ளி மாணவர்கள்</a> சிலர் பேருந்தின் படியில் தொங்கியபடியும், ஜன்னல் கம்பிகளைப் பிடித்துக் கொண்டும் ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். </p><p>ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு பேருந்தின் வெளிப்பகுதியில் சாகசம் செய்வது போல மாணவர்கள் நடந்து கொண்ட இந்த வீடியோ, பின்னால் வந்த வாகன ஓட்டிகளால் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.</p><h2>பெற்றோர்கள்-பொதுமக்கள் அதிர்ச்சி</h2><p>சிறு விபத்து ஏற்பட்டாலும் மாணவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடியக்கூடிய இந்த செயலைக் கண்டு சக பயணிகளும் பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர். மாணவர்களின் இந்த பொறுப்பற்ற செயலுக்கு பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.</p><h2>கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை</h2><p>கிராமப்புறப் பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களில் போதிய எண்ணிக்கையில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">அரசுப் பேருந்துகள்</a> இயக்கப்படாததே இது போன்ற கூட்ட நெரிசலுக்கும் ஆபத்தான பயணங்களுக்கும் முக்கியக் காரணம் எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்து வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும், ஆபத்தான முறையில் பயணிக்கும் மாணவர்கள் மீது போக்குவரத்து போலீசாரும் பள்ளி நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வங்கக்கடலில் மாயமான 7 ஆந்திர மீனவர்கள்... தேடுதல் பணியை தீவிரப்படுத்த வேண்டும்: அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/7-andhra-fishermen-missing-in-the-bay-of-bengal-search-operations-should-be-intensified-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/7-andhra-fishermen-missing-in-the-bay-of-bengal-search-operations-should-be-intensified-anbumani#comments</comments><guid isPermaLink="false">9781bd4d-eb6f-4df8-84a8-d7fd2e1045c8</guid><pubDate>Fri, 21 Aug 2026 07:21:12 +0000</pubDate><atom:updated>2026-08-21T07:21:12.446Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மீனவர்கள்,அன்புமணி,Anbumani,fishermen,Bay of Bengal,வங்கக்கடல்,தேடுதல் பணி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/z345kajd/anbumani.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/z345kajd/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/anbumani-ramadoss">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள  அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>ஆந்திரப் பிரதேசம் அம்பேத்கர் கோணசீமா மாவட்டம் ஒடலரேவு கடற்கரையிலிருந்து கடந்த ஆகஸ்ட் 3-ஆம்  தேதி வங்கக்கடலுக்கு சூறை மீன்பிடிப்புக்காக சென்ற 7 மீனவர்கள் காணாமல் போய், 14 நாள்களாகும் நிலையில், இதுவரை அவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர்களைத் தேடும் பணிகளைத்  தீவிரப்படுத்த வேண்டிய நிலையில், தேடும் பணிகள் கைவிடப்படவுள்ளதாக வெளியாகும் செய்திகள் கவலையளிக்கின்றன.</p><h2>மீனவர்கள் மாயம்</h2><p>ஒடலரேவு பகுதியைச் சேர்ந்த 7 மீனவர்கள் கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஓடலரேவு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சூறை மீன்பிடிக்கச் சென்றனர். கர்ரி ராமுடு, கே ராமகிருஷ்ணா, எஸ் தாத்தாராவ், ஏசுதாசு, பலேபு சாந்தராவ், கொல்லட்டி ஸ்ரீனிவாஸ், சதீஷ் ஆகிய 7 மீனவர்களும் கடந்த 10 அல்லது 11-ஆம் தேதி துறைமுகம் திரும்பியிருக்க வேண்டும். ஆனால், கடைசியாக கடந்த 7-ஆம் தேதி குடும்பத்தினரைத் தொடர்பு கொண்ட அவர்களை அதன்பின் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்களின் படகு  ஒதிஷா அல்லது மேற்கு வங்காள கடல்பகுதிக்கு காற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.</p><p>காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணியில் கடற்படைக்கு சொந்தமான இரு கப்பல்கள், கடலோரக் காவல் படைக்கு சொந்தமான 5 கப்பல்கள், விமானப் படைக்கு சொந்தமான இரு ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளன. அவர்கள் காணாமல் போனதாக கருதப்படும் பகுதியில் இருந்து 300 கடல் மைல் சுற்றளவில்  தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காக்கிநாடா, விசாகப்பட்டினம், ஒதிஷா மாநிலம் பாரதீப் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களின் உதவியும் கோரப்பட்டிருக்கிறது. ஒதிஷா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் அதிகாரிகளுக்கும் இது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உதவிகள் கோரப்பட்டுள்ளன.</p><h2>தேடும் பணிகளை நிறுத்த அரசு முடிவு</h2><p>கடற்படை, விமானப்படை ஆகியவை இணைந்து மேற்கொள்ளும் தேடுதல் வேட்டையை குறை சொல்ல முடியாது. ஆனால், இரு வாரங்களாகியும் அவர்களை கண்டுபிடிக்க முடியாததால், இன்னும் ஓரிரு நாள்களில் தேடும் பணிகளை நிறுத்த அரசு முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் மீனவர்களின் குடும்பத்தினரும், உறவினர்களும் கவலை அடைந்துள்ளனர். கடலுக்கு சென்ற மீனவர்களிடம் 1000 லிட்டர் டீசலும், 20 நாள்களுக்குத் தேவையான உணவும் இருப்பதாகக் கூறப்படுகிறது. கடுமையான காற்று காரணமாக அவர்கள் வெகு தொலைவுக்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><h2>மீனவர்கள் குடும்பத்தினருக்கு வாழ்வாதாரம்</h2><p>அதனால், தேடுதல் தொலைவை சற்று அதிகரித்து பணிகளை தீவிரப்படுத்தினால், காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்து விடலாம். காணாமல் போன மீனவர்களில் மூவருக்குக் நீச்சல் கூட தெரியாது என்று கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தேடும் பணிகள் கைவிடப்பட்டால், இதுநாள் வரை மேற்கொள்ளப் பட்ட முயற்சிகள் வீணாகி விடும். எனவே, காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்கும் வரை தேடுதல் பணிகளை நீட்டிக்க வேண்டும் என்று ஆந்திர அரசையும், கடற்படை மற்றும் கடலோரக் காவல்படைகளை  கேட்டுக் கொள்கிறேன். காணால் போன மீனவர்கள் குடும்பத்தினருக்கு வாழ்வாதாரம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அவர்களுக்கு தேவையான உணவு, நிதி ஆகியவற்றை அரசு வழங்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருப்பூர் அருகே குடியிருப்பில் குளம்போல் தேங்கிய கழிவுநீர் அகற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/disposal-of-stagnant-sewage-in-a-residence-near-tirupur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/disposal-of-stagnant-sewage-in-a-residence-near-tirupur#comments</comments><guid isPermaLink="false">4ebe1b98-8e79-419c-9dc9-6ba6b5f66ee1</guid><pubDate>Fri, 21 Aug 2026 07:20:16 +0000</pubDate><atom:updated>2026-08-21T07:20:16.728Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்,sewage,கழிவுநீர்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/y2hl9nx7/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/y2hl9nx7/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர், </p><p>திருப்பூர் அருகே கரைப்புதூர் ஊராட்சி அய்யம்பாளையம் கிழக்கு பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அங்கேயே குளம்போல் தேங்கி நின்றது. உரிய திட்டமிடல் இல்லாமல் கால்வாய் கட்டப்பட்டதால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். </p><p>இது குறித்து ‘தினத்தந்தி’ யில் செய்தி பிரசுரிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக, கரைப்புதூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குளம் போல் தேங்கியிருந்த கழிவுநீர் அகற்றப்பட்டது. இதையடுத்து மக்கள் பிரச்சினைகளை செய்தியாக வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>போடி-சென்னை அதிவிரைவு ரெயிலில் கூடுதல் பெட்டிகள் சேர்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-coaches-added-to-the-bodi-chennai-express-train</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-coaches-added-to-the-bodi-chennai-express-train#comments</comments><guid isPermaLink="false">c38f91b8-feec-4189-8a39-94ee4b6424ed</guid><pubDate>Fri, 21 Aug 2026 07:13:51 +0000</pubDate><atom:updated>2026-08-21T07:13:51.749Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Additional Coaches,கூடுதல் பெட்டிகள்,போடி,Bodi</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/pqg1r020/11.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/pqg1r020/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>போடி,  </p><p>போடி-சென்னை இடையே அதிவிரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் இந்த ரெயில் இரு மார்க்கத்திலும் இயக்கப்படுகிறது. போடியில் இருந்து இரவு 8.55 மணிக்கு புறப்படும் ரெயில், மதுரை, சேலம், காட்பாடி வழியாக மறுநாள் காலை 7.55 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறு நாள் காலை 10 மணிக்கு போடியை வந்தடைகிறது. தற்போது இந்த ரெயிலில் 4 சாதாரண படுக்கை வசதி பெட்டிகள் உள்ள நிலையில் மேலும் 2 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. </p> <p>இதனால் சாதாரண படுக்கை வசதி பெட்டிகளின் எண்ணிக்கை 6 ஆக அதிகரிக்கிறது. அதேநேரத்தில் முதல் மற்றும் 2-ம் தர ஏ.சி. படுக்கை வசதி பெட்டிகள் தலா ஒன்று குறைக்கப்பட உள்ளன. புதிதாக இணைக்கப்படும் ரெயில் பெட்டிகள் சென்னை-போடி மார்க்கத்தில் நாளை மறுநாளும், போடி-சென்னை மார்க்கத்தில் 24-ந்தேதியும் பயன்பாட்டுக்கு வரும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>”கார் இல்லை.. ரூ.10 ஆயிரம் தான் இருக்கிறது என்று கூட நீங்கள் சொல்வீர்கள்” - உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/you-might-even-say-there-is-no-caronly-10000-retorts-aadhav-arjuna-to-udhayanidhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/you-might-even-say-there-is-no-caronly-10000-retorts-aadhav-arjuna-to-udhayanidhi#comments</comments><guid isPermaLink="false">1b8b8c1e-bcb6-4a75-92d3-58f6d250b9ad</guid><pubDate>Fri, 21 Aug 2026 07:09:12 +0000</pubDate><atom:updated>2026-08-21T07:09:12.894Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Tamilnadu,திமுக,DMK,தமிழகம்,Udhayanidhi Stalin,ஆதவ் அர்ஜுனா,Car,கார்,தமிழக சட்டசபை,TN Assembly,உதயநிதி,Assembly Session,தமிழக சட்டசபை கூட்டம்,Adhav Arjuna,சட்டசபை கூட்டத் தொடர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/619x414p/gandue.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/619x414p/gandue.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ்நாடு சட்டசபையில் நீதி, சிறை, சட்டம், எரிசக்தி, அறநிலையத் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. </p><h2>கார் வேண்டாம் - உதயநிதி</h2><p>இந்த நிலையில், திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் வாகனம் (கார்) வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/udhayanidhi-stalin">உதயநிதி ஸ்டாலின்</a> அறிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக சட்டசபையில் அவர் பேசுகையில், “தமிழ்நாடு கடன் சுமையில் இருப்பதாக முதல்-அமைச்சர் கூறியுள்ளார். அதனால், அரசு அறிவித்த காரினை திமுகவின் 59 எம்.எல்.ஏ.க்களும் பெறுவதில்லை என முடிவெடுத்துள்ளோம். இந்த முடிவு முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில் எடுத்துள்ளோம். நாங்கள் அனைவரும் கையெழுத்திட்ட கோப்பை சமர்பித்துள்ளேன். தேவையற்ற செலவுகளை குறைக்கும் நோக்கில் பொருளாதாரத்தில் நலிவடைந்த உறுப்பினர்களுக்கு மட்டுமே கார் அளிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.</p><h2>ஆதவ் அர்ஜுனா</h2><p>இந்நிலையில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி அறிவிப்புக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளிக்கையில், “வி.சி.க.வை சேர்ந்த ஏழ்மையான சட்டமன்ற உறுப்பினர் வைத்த கோரிக்கையால் தான் முதல்-அமைச்சர் கார் வழங்குவதாக கூறினார். ஏழ்மையான உறுப்பினர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கப்பட்டது. எதிர்கட்சி தலைவருக்கு 3 வீடுகள் இருக்கிறது, ஏன் அரசு பங்களாவில் இருக்கிறார்? அவருக்கு பங்களா இருப்பதால், தர முடியாது என்று சொல்ல முடியுமா?</p><p>நீங்கள் வேட்பு மனுவில், கார் இல்லை, வீடு இல்லை, கையில் ரூ.10 ஆயிரம் இருப்பதாக கூறலாம். எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களிடம் வீடு, கார் இல்லாமல் இருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் உறுப்பினரிடம் கார் இல்லை. முதல்-அமைச்சர் பொதுவாக தான் அறிவிப்பு கொடுத்தார். ஏற்கனவே கார் வைத்திருக்கும் த.வெ.க.வினர், கார் கேட்டு விண்ணப்பிக்க மாட்டார்கள்” என்று அவர் தெரிவித்தார். </p><h2>கே.என்.நேரு</h2><p>அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.என்.நேரு பதில் அளிக்கையில், “கார் வேண்டாம் என்று தான் சொல்கிறோம், அரசுக்கு செலவு வைக்க வேண்டாம் என்பதால் சொல்கிறோம். எங்கள் வேட்புமனுவை குறிப்பிட்டு பேசினால், வேண்டுமானால் வழக்கு போடுங்கள். அமைச்சர் சொந்த வீட்டில் இருக்கிறார், ஆனால் அவர் வீட்டுக்கு அரசு வாடகை செலுத்துகிறது. வீடு வேண்டாம் என எழுதிக் கொடுங்கள்” என்று கூறினார்.</p> <h2>பா.ம.க., சி.பி.ஐ.</h2><p>இதுதொடர்பாக பாமக எம்எல்ஏ கணேஷ்குமார் கூறுகையில், “பா.ம.க. எம்.எல்.ஏ.,க்களுக்கு கார் வேண்டும் என்பது உண்மை தான். என்னிடம் கார் உள்ளது. யாருக்கு கார் தேவையோ அவர்களுக்கு மட்டும் கார் வழங்கலாம் என்பது எங்களின் நிலைப்பாடு” என்று தெரிவித்தார். </p><p>இதுதொடர்பாக சிபிஐ எம்எல்ஏ இராமச்சந்திரன் கூறுகையில், “"சில சட்டமன்ற உறுப்பினர்கள் கார் கேட்டு கோரிக்கை வைத்தார்கள். முதல்-அமைச்சர், அவர்களுக்கு கொடுக்கட்டும், பிரச்சினை இல்லை. இருந்தாலும், கார் தேவையில்லை என்பது எங்களின் நிலைப்பாடு" என்று தெரிவித்தார். </p><h2>அமைச்சர் ஷாஜகான்</h2><p>உதயநிதி அறிவிப்புக்கு அமைச்சர் ஷாஜகான் பதிலளிக்கையில், “சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் என்பது சர்ச்சையாக பேசப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, 300க்கும் அதிகமான ஊராட்சி ஒன்றியத் தலைவர்களுக்கு கார் வழங்கினார். அன்றும் இதே நிதிநிலை தான் இருந்தது. அன்று கேட்காமல், இன்று மட்டும் கேள்வி கேட்கிறார்கள்” என்று கூறினார். </p>]]></content:encoded></item><item><title>பழனி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! தினமும் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/good-news-for-devotees-visiting-palani-temple-daily-food-distribution-to-10000-people</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/good-news-for-devotees-visiting-palani-temple-daily-food-distribution-to-10000-people#comments</comments><guid isPermaLink="false">70c59dba-b8fc-42d0-988b-a3bff3fa8c12</guid><pubDate>Fri, 21 Aug 2026 07:07:53 +0000</pubDate><atom:updated>2026-08-21T07:07:53.486Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பக்தர்கள்,Devotees,அன்னதானம்,Palani temple,பழனி மலைக்கோவில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/ak7sqssv/127.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/ak7sqssv/127.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பழனி,</p><p>பழனி மலைக்கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் தினமும் 10 ஆயிரம் பேருக்கு உணவு வழங்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.</p><h2>பழனி முருகன் கோவில்</h2><p>அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், திருவிழா மற்றும் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கடந்த 13.9.2012 முதல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மலைக்கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.</p><p>இந்த அன்னதானத்தில் பக்தர்களுக்கு சாதம், ரசம், பொரியல், கூட்டு, அப்பளம், பாயசம் மற்றும் மோர் உள்ளிட்ட உணவுகள் தரமாகவும், சுவையாகவும் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் அன்னதானத்தில் உணவு சாப்பிடும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.</p><p>இதுவரை மலைக்கோவிலில் தினமும் சராசரியாக 5 ஆயிரம் பக்தர்களும். கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில் 7 ஆயிரம் பக்தர்கள் வரையிலும் அமர்ந்து அன்னதானம் சாப்பிட்டு வந்தனர். ஒரு பந்தியில் 204 பக்தர்கள் அமர்ந்து சாப்பிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.</p><h2>எண்ணிக்கை விரிவாக்கம்</h2><p>இந்நிலையில் பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து. அன்னதானம் வழங்கும் வசதியை விரிவுபடுத்த கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி மலைக்கோவிலில் 4 இடங்களில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு பந்தியில் 204 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் இருந்த எண்ணிக்கை தற்போது 410 பேராக அதிகரிக்கப்பட்டுள்ளது.</p><h2>பக்தர்கள் மகிழ்ச்சி</h2><p>மேலும், மலைக்கோவில் அன்னதான மடத்தில் பக்தர்கள் காத்திருக்கும் அறை மாற்றியமைக்கப்பட்டு, கூடுதல் </p><p>இடவசதியுடன்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D"> அன்னதானம் </a>வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல் மேலும் 2 இடங்களிலும் அன்னதானம் வழங்கும் வசதி தற்போது நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரே நேரத்தில் அதிக எண் ணிக்கையிலான பக்தர்கள் அன்னதானம் சாப்பிடும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தினமும் சுமார் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><p>பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் அன்னதானம் சாப்பிடும் வகையிலும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையிலும் இந்த விரிவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மலைக்கோவிலில் அன்னதானம் வழங்கும் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>ஊழல் கோப்புகளை நிச்சயமாக முதல்-அமைச்சர் விஜய் வெளியிடுவார் - அமைச்சர் ராஜ்மோகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-will-certainly-release-the-corruption-files-minister-rajmohan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-will-certainly-release-the-corruption-files-minister-rajmohan#comments</comments><guid isPermaLink="false">a7574fb9-bba4-40d0-b434-fa26ac30fd51</guid><pubDate>Fri, 21 Aug 2026 07:06:11 +0000</pubDate><atom:updated>2026-08-21T07:06:11.219Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,திமுக,DMK,உதயநிதி ஸ்டாலின்,சட்டசபை,Udayanidhi Stalin,ராஜ்மோகன்,Minister Rajmohan,அமைச்சர் ராஜ்மோகன்,Rajmohan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/3es64rt7/Untitled-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/3es64rt7/Untitled-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஊழல் கோப்புகளை நிச்சயமாக முதல்-அமைச்சர் விஜய் வெளியிடுவார். எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கையை முதல்-அமைச்சர் விஜய் நிறைவேற்றுவார் என சட்டசபையில் அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.</p><h2>ஜோதிடர் சொல்ல வேண்டுமா?</h2><p>எதிர்க்கட்சித்தலைவர் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-mlas-do-not-need-government-cars-udhayanidhi-stalin-announces">உதயநிதி ஸ்டாலின்</a> சட்டசபையில் பேசியதாவது, “தனது டேபிளில் பைல் இருப்பதாகவும், திறந்து பார்க்க வைத்துவிடாதீர்கள் என்று முதல்வர் பேசினார். தயவு செய்து அவர் திறந்து பார்க்க வேண்டும், நடவடிக்கை எடுக்க வேண்டும். எதற்காக பயப்படுகிறீர்கள்? காலம் தாழ்த்துகிறீர்கள்? ஜோதிடர் சொன்னால் தான் திறப்பீர்களா? நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? நடவடிகை எடுப்பேன் என உருட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் பயப்பட மாட்டோம்.</p><p>ஆளுங்கட்சியினர் எங்களுக்கு பதில் சொல்லும்போது ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டுகின்றனர். சட்டமன்றத்தில் பாட்டெல்லாம் பாடுகிறார்கள். எங்களுக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோமா அல்லது சட்டமன்றத்திற்கு வந்திருக்கிறோமா என்று சந்தேகப்படும் அளவுக்கு பாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.</p><h2>நீக்கும் கருத்துகள் ரீல்ஸ்சாக வெளியாகிறது</h2><p>நீங்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கும் கருத்துகள் ரீல்ஸ்சாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. நான் பேசியதை நீக்கிவிட்டீர்கள். ஆனால் அது சமூகவலைதளங்களில் வெளியாகிறது. அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடுகிறது என்பதை குறிப்பிடுகிறேன்” என பேசினார்.</p><p>தொடர்ந்து பதிலளித்த நிர்மல்குமார், 'ஜோசியம் என்று பேசுகிறார்கள்; ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்ட கதையெல்லாம் எங்களுக்கும் தெரியும். எப்போது நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அப்போது சரியான நேரத்தில் எடுப்போம்' என்று காரசாரமாகத் தெரிவித்தார்.</p><h2>கோப்புகளை திறப்பதில் தயக்கமில்லை</h2><p>அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது, ‘தமிழக சட்டசபையில் நடப்பது எல்லாம் மக்களுக்கு தெரிய வேண்டும். யார் எந்த தொகுதி சார்பாக கேட்கிறார்கள், அதற்கு பதில் சொல்வது தெரிய வேண்டும் என்பதற்காக தான் நேரலை தருகிறோம்.</p><p>நேரலை என்பது வெறும் ஆளும்கட்சிக்கு சாதகமாக இல்லாமல், முழுமையான நேரலை என்பது தவெக ஆட்சியில் தான் தொடர்ந்து கொண்டு இருக்கிறோம். கோப்புகளை திறப்பதில் முதல்-அமைச்சருக்கு தயக்கமில்லை. ஊழல் கோப்புகளை நிச்சயமாக முதல்-அமைச்சர் விஜய் வெளியிடுவார். எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கையை முதல்-அமைச்சர் விஜய் நிறைவேற்றுவார்’ என ராஜ்மோகன் கூறினார்.</p><h2>நடவடிக்கை</h2><p>சட்டசபையில் அவை குறிப்பிலிருந்து நீக்கியதை வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>திருவண்ணாமலை: டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பெண்கள் போராட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruvannamalai-women-protest-demanding-the-removal-of-a-tasmac-shop</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruvannamalai-women-protest-demanding-the-removal-of-a-tasmac-shop#comments</comments><guid isPermaLink="false">29c9e142-9ede-4989-b9a6-fe86ce40e8be</guid><pubDate>Fri, 21 Aug 2026 07:02:42 +0000</pubDate><atom:updated>2026-08-21T07:02:42.928Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Suicide Attempt,போராட்டம்,School students,District Collector,பெண்கள்,டாஸ்மாக் கடை,bar,மாவட்ட ஆட்சியர்</media:keywords><media:content height="410" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/mb6g5udt/6.jpg" width="710"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெண்கள் போராட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/mb6g5udt/6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை,</p><p>திருவண்ணாமலை மாவட்டம் அண்ணகிளிகொட்டம் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p> <h2>கடையை அகற்ற போராட்டம்</h2><p>திருவண்ணாமலை மாவட்டம் அண்ணக்கிளிகொட்டம் சாலையில் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து டாஸ்மாக் கடையை நடத்தி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். டாஸ்மாக் கடையை சுற்றி 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அந்த வழியே நடந்து செல்லும் பொதுமக்களிடம் மதுப்பிரியர்கள் தகராறில் ஈடுபடுகின்றனர். இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் பெண்கள் பெரும் அச்சத்தில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. வேலைக்கு சென்று இரவில் வீடு திரும்பும் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு <a href="https://www.dailythanthi.com/topic/டாஸ்மாக்கடை">டாஸ்மாக் கடை</a>யை அகற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.</p> <p>3 முறை மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பதால் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்றவில்லை என்றால் கடையின் முன்பு “தீக்குளித்து உயிரிழப்போம்” என பெண்கள் எச்சரித்துள்ளனர். இந்த<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D"> போராட்டம் </a>அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பட்டப்பகலில் பெண்ணிடம் கைப்பை பறிப்பு; கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-college-students-arrested-for-snatching-a-womans-handbag-in-broad-daylight</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-college-students-arrested-for-snatching-a-womans-handbag-in-broad-daylight#comments</comments><guid isPermaLink="false">45250473-e9b4-4bb9-a111-baeea0f81726</guid><pubDate>Fri, 21 Aug 2026 06:41:46 +0000</pubDate><atom:updated>2026-08-21T06:41:46.478Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,பெண்,Woman,கல்லூரி மாணவர்கள்,பறிப்பு,கைப்பை,handbag,college students arrested</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/vnoiyqah/arrest1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/vnoiyqah/arrest1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>குளித்தலை,</p><p>குளித்தலை அருகே பட்டப்பகலில் பெண்ணிடம் கைப்பை பறித்த கல்லூரி மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.</p><p>கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தென்கடை குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ராமதுரை மனைவி அம்பிகா(வயது 34). இவர் தமிழக வெற்றிக் கழகத்தில் கரூர் மாவட்ட மகளிர் அணி செயலாளராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் மதியம் தனது ஸ்கூட்டரில், தெற்கு மாடு விழுந்தான் பாறை பகுதியை சேர்ந்த காமாட்சி (37) என்பவரை அமர வைத்து கொண்டு வீட்டிலிருந்து குளித்தலை நகரப் பகுதிக்கு செல்வதற்காக கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்துள்ளார்.</p><p>குளித்தலையில் உள்ள ஒரு தனியார் பள்ளி மேம்பாலம் சர்வீஸ் சாலையில் வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர் அம்பிகாவின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறிக்க முயற்சித்தனர். அப்போது சுதாரித்து சற்று நகர்ந்து கொண்டதால் பின்னால் அமர்ந்து வந்த காமாட்சி கையில் இருந்த கைப்பையை பிடுங்கிக்கொண்டு மர்மநபர்கள் தப்பி சென்றுவிட்டனர்.</p><h2>மாணவர்கள் 2 பேர் கைது</h2><p>அந்த கைப்பையில் ரூ.ஆயிரம். ஏ.டி.எம்., பான் கார்டு மற்றும் 2 செல்போன்கள் இருந்தன. இதனால் பதற்றம் அடைந்த இருவரும் குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் குளித்தலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை கொண்டு 2 பேரை வலைவீசி தேடி வந்தனர்.</p><p>இதில் கைப்பையை பறித்து சென்ற சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரை சேர்ந்த டிப்ளமோ படித்து வரும் கிருஷ்ணமூர்த்தி மகன் முகேஷ் (19) மற்றும் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வரும் மூர்த்தி மகன் புவனேஷ்(19) ஆகிய 2 பேரை குளித்தலை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/arrest-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்து சிறையில் அடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. ஆட்சிக்குப்பின் வீடுகளில் மின்கட்டணம் திடீரென அதிகமாக வந்தது ஏன்? - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-did-household-electricity-bills-suddenly-spike-after-the-tvk-government-took-office-minister-nirmal-kumar-explains</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-did-household-electricity-bills-suddenly-spike-after-the-tvk-government-took-office-minister-nirmal-kumar-explains#comments</comments><guid isPermaLink="false">4d4cf83a-a789-4509-ad44-d9447ab6b825</guid><pubDate>Fri, 21 Aug 2026 06:36:33 +0000</pubDate><atom:updated>2026-08-21T06:36:33.382Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,தமிழக சட்டசபை,electricity bill,TN Assembly,Assembly Session,Senthil Balaji,செந்தில் பாலாஜி,மின் கட்டண உயர்வு,தமிழக சட்டசபை கூட்டத்தொடர்,அமைச்சர் நிர்மல்குமார்,Tvk  government,Minister Nirmal Kumar,தவெக ஆட்சி,சட்டசபை கூட்டத் தொடர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/s7ga4ili/niemrl.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/s7ga4ili/niemrl.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ்நாடு சட்டசபையில் நீதி, சிறை, சட்டம், எரிசக்தி, அறநிலையத் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. </p><h2>மின் கட்டண உயர்வு</h2><p>இந்நிலையில் <a href="https://www.dailythanthi.com/topic/tvk">த.வெ.க</a>. ஆட்சிக்கு பின் வீடுகளில் மின்கட்டணம் திடீரென அதிகமாக வந்தது ஏன்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் மின் கட்டண உயர்வு குறித்து, அமைச்சர் ஒன்று சொல்கிறார், நிர்வாகம் ஒன்று சொல்கிறது என்று முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். </p><h2>டேபிள் ரீடிங்</h2><p>இதற்கு சட்டப்பேரவையில் பதிலளித்து பேசிய மின் துறை அமைச்சர் நிர்மல்குமார், “மின்வாரியம் தானாக 3 லட்சத்திற்கு அதிகமான இணைப்புகளை மறு ஆய்வு செய்த போது, 2,719 மிஸ் மேட்ச் ஆனது. தவறான கணக்கிடுதலால் அது நடந்தது. டேபிள் ரீடிங் என்று ஒன்றை செய்து வந்துள்ளனர். நேரடியாக ரீடிங் செய்யாமல், முந்தைய ரீடிங்கை கணக்கில் செய்துள்ளனர். நேரடியாக ரீடிங் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>4 அமைச்சர்கள்</h2><p>செய்தியாளர் சந்திப்பில் நான் தடித்த வார்த்தைகளை பேசுவதாக செந்தில் பாலாஜி குறிப்பிட்டார். 45 டெண்டர்களில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடந்து வருவது அவருக்கு தெரியும்</p><p>கடந்த ஆட்சியில் மின்துறையில் 4 அமைச்சர்கள் மாற்றப்பட்டனர். 2021-க்கு பின்னர் மின்துறை அமைச்சர் சிறைக்குச் செல்கிறார். பின்னர் இன்னொரு அமைச்சர், இன்னொரு அமைச்சர் என மின்துறைக்கு 4 அமைச்சர்கள் கடந்த ஆட்சியில் வந்துள்ளனர்” என்று அவர் கூறினார். </p><p>இதனிடையே முன்னாள அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், “மின்வாரிய கொள்கை விளக்க குறிப்பை படித்தேன். 5 பக்கங்களில் தான் டேட்டாக்கள் இருக்கிறது. மீதமெல்லாம் புள்ளி விபரம் இல்லாத பழைய குறிப்புகள் தான் உள்ளது. 3,437 கேங் மேன் மாறுதல் செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை யாரும் விடுவிக்கப்படவில்லை” என்று கூறினார். </p>]]></content:encoded></item><item><title>திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார் வேண்டாம்: உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-mlas-do-not-need-government-cars-udhayanidhi-stalin-announces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-mlas-do-not-need-government-cars-udhayanidhi-stalin-announces#comments</comments><guid isPermaLink="false">f24c850d-06a4-4114-8d2b-dd19f3da7343</guid><pubDate>Fri, 21 Aug 2026 06:34:33 +0000</pubDate><atom:updated>2026-08-21T06:34:33.775Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,சட்டசபை,Car,கார்,TN Assembly</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/35vj77k9/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/35vj77k9/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>அரசு சார்பில் வாகனம்</h2><p>தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வின்போது 110 விதியின் கீழ் 3 அறிவிப்புகளை முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டார். அதில், ஒரு அறிவிப்பு பொருளாதார பலமில்லாமல் சட்டமன்ற உறுப்பினர்களாக பணியாற்றும் மற்றும் முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினர்க ளாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தங்களது மக்கள் பணியை தொய்வின்றி தொடருவதற்கு வசதியாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும்.</p><p>அரசு வழங்கும் வாகனத்தை பராமரிக்கும் விதமாக, வாகனத்துக்கு டிரைவர், எரிபொருள், வாகன பராமரிப்பு உள்ளிட்ட செலவினங்களுக்காக மாதந்தோறும் ரூ.75 ஆயிரம் வாகனப்படியாகவும், அலுவலகப்பணிகளில் உதவி செய்ய ஒரு உதவியாளரை நியமித்துக்கொள்ள மாதந்தோறும் ரூ.25 ஆயிரம் உதவியாளர் படியாகவும் வழங்கப்படும். இதற்காக உரிய சட்டத்தில் திருத்தங்கள் மேற் கொண்டு ஆணைகள் வெளியிடப்படும் என்று அறிவித்தார்.</p><h2>கார் வேண்டாம்</h2><p>இந்த நிலையில், திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் வாகனம் (கார்) வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சட்டசபையில் அவர் பேசியதாவது:-</p><p>தமிழ்நாடு கடன் சுமையில் இருப்பதாக முதல்-அமைச்சர் கூறியுள்ளார். அதனால், அரசு அறிவித்த காரினை திமுகவின் 59 எம்.எல்.ஏ.க்களும் பெறுவதில்லை என முடிவெடுத்துள்ளோம். இந்த முடிவு முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில் எடுத்துள்ளோம். நாங்கள் அனைவரும் கையெழுத்திட்ட கோப்பை சமர்பித்துள்ளேன். தேவையற்ற செலவுகளை குறைக்கும் நோக்கில் பொருளாதாரத்தில் நலிவடைந்த உறுப்பினர்களுக்கு மட்டுமே கார் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.</p><h2>அரசு பங்களா...</h2><p>இதைபோல சி.பி.ஐ. உறுப்பினர்களுக்கு கார் வேண்டாம் என்றும் கார் தேவையில்லை என்பது எங்கள் நிலைப்பாடு என எம்.எல்.ஏ. தளி ராமச்சந்திரன் தெரிவித்தார்.</p><p>கார் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளித்து பேசியதாவது:-</p><p>அமைச்சருக்கு கார், வீடு, 4 உதவியாளர்கள் கொடுக்கப்படுகிறது; ஆனால் எம்எல்ஏக்களுக்கு அப்படி இல்லை; ஒரு எம்எல்ஏ மூன்று லட்சம் மக்களை சென்று பார்க்க வேண்டிய சூழல் இருக்கிறது; அதனால்தான் கார் வழங்குகிறோம். எதிர்க்கட்சி தலைவருக்கு இரண்டு மூன்று வீடு உள்ளது ஆனால் அரசு பங்களாவில் இருக்கிறார். உங்களுக்கு சொந்த வீடு உள்ளதே எதற்கு அரசு பங்களா வேண்டும் என கேள்வி எழுப்ப முடியுமா?. என்றார்.</p>]]></content:encoded></item><item><title>சேலம்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரத்துடன் நிறுத்தம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/salemchennai-egmore-express-service-to-terminate-at-tambaram</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/salemchennai-egmore-express-service-to-terminate-at-tambaram#comments</comments><guid isPermaLink="false">174d028d-5bf1-4595-ae84-92e854fb0a59</guid><pubDate>Fri, 21 Aug 2026 06:29:11 +0000</pubDate><atom:updated>2026-08-21T06:29:11.755Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>ரெயில் சேவை,Chennai Egmore,சென்னை எழும்பூர்,Train Services</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/j5q20wdi/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/j5q20wdi/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,  </p><p>சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடை பெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நடைமேம்பால தூண்கள் அமைத்தல், இரும்பு கர்டர்களை பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதையொட்டி சேலம்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (22154) சேலம் சந்திப்பில் இருந்து  வருகிற 24-ந்தேதி வரை சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு செல்லாமல், தாம்பரம் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். </p><p>இந்த ரெயில் சேலம் சந் திப்பில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு ஆத்தூர், சின்னசேலம், விருத்தாசலம், விழுப்புரம் வழியாக தாம்பரம் ரெயில் நிலையத்தை அதி காலை 3.30 மணிக்கு சென்றடையும். இந்த ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item></channel></rss>