<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 18 Aug 2026 08:23:13 +0000</lastBuildDate><item><title>விமர்சனங்களை ஒடுக்குவதா..? முதல்-அமைச்சர் விஜய்க்கு அண்ணாமலை கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/suppressing-criticism-annamalai-condemns-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/suppressing-criticism-annamalai-condemns-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">d8160e24-3d08-4aaa-b98f-98773bbb85f4</guid><pubDate>Tue, 18 Aug 2026 08:08:11 +0000</pubDate><atom:updated>2026-08-18T08:08:11.983Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,Tamilnadu,விஜய்,Annamalai,அண்ணாமலை,தமிழகம்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,தவெக அரசு,TVK Government,we the leaders,வீ தி லீடர்ஸ் அமைப்பு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/y635kv8n/shiv.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/y635kv8n/shiv.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>ஆளும் கட்சியை விமர்சிக்கும் ஒவ்வொரு குரலையும் வழக்கு, கைது என்ற அதிகாரத்தின் மூலம் அடக்க முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல என்று 'வி த லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். </p><h2>அதிகார போதை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/vijay">தமிழக முதல்-அமைச்சர்  ஜோசப் விஜய்</a> அவர்களின் கவனத்திற்கு,</p><p>தி.மு.க. ஆட்சி வீழ்ச்சியடைந்ததற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, ஆளுங்கட்சியினர் என்ற அதிகார போதையில், மக்களின் விமர்சனங்களையும் எதிர்க்கருத்துகளையும் அலட்சியப்படுத்தியதுதான். அதே பாதையில் உங்கள் அரசும் பயணிக்கிறதோ என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது.</p><p>கடந்த ஒரு மாதத்தில் மட்டும், சமூக வலைத்தளங்களில் உங்கள் கட்சியினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் விமர்சனங்களுக்காக மாற்றுக் கருத்து கொண்ட 25-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. குறிப்பாக, தனது குடும்பத்தை தகாத வார்த்தைகளால் விமர்சித்த த.வெ.க. தொண்டருக்கு பதிலளித்த We The Leaders தன்னார்வலர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்திருப்பது கவலைக்குரியது.</p><h2>ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல</h2><p>சமூக வலைத்தளங்களில் தனிநபர் அவதூறு மற்றும் வரம்பு மீறிய பேச்சுகளை கண்காணிப்பது அவசியம்தான். ஆனால், ஆட்சியையும் ஆளும் கட்சியையும் விமர்சிக்கும் ஒவ்வொரு குரலையும் வழக்கு, கைது என்ற அதிகாரத்தின் மூலம் அடக்க முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல. முதல்-அமைச்சரை மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் தன்னிச்சையாக செயல்படுவதை நீங்கள் அனுமதிக்கக் கூடாது.</p><h2>வழக்கு, கைது</h2><p>நீங்கள் இன்று ஒரு கட்சியின் தலைவர் மட்டுமல்ல; தமிழகத்தின் அனைத்து மக்களுக்கும் பொதுவான முதல்-அமைச்சர். எதிர்க்கருத்துகளும் விமர்சனங்களும் ஜனநாயகத்தின் இயல்பான அங்கங்கள். சிறிய விமர்சனங்களுக்குக்கூட வழக்கு, கைது என்ற போக்கு தொடர்வது துரதிருஷ்டவசமானது. எனவே, இந்தப் போக்கை உடனடியாகத் தடுத்து, ஜனநாயக குரல்களுக்கும் விமர்சனங்களுக்கும் உரிய இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தென் மாநில முதல்வர்கள் மாநாடு: நாளை சென்னை வருகிறார் அமித்ஷா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/conference-of-southern-states-chief-ministers-amit-shah-to-visit-chennai-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/conference-of-southern-states-chief-ministers-amit-shah-to-visit-chennai-tomorrow#comments</comments><guid isPermaLink="false">5902ccb7-3ccb-4955-ab74-97cb5f6d3880</guid><pubDate>Tue, 18 Aug 2026 07:43:22 +0000</pubDate><atom:updated>2026-08-18T07:43:22.988Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>அமித்ஷா,Amit Shah,Conference,மாநாடு</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/eeeushjz/15.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/eeeushjz/15.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு 2 நாட்கள் நடைபெற உள்ளது. 31-வது தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக அமித்ஷா நாளை இரவு சென்னை வருகிறார். </p><p>சென்னையை அடுத்த கோவளத்தில் பிஷர்மேன்ஸ் கோவ் ஹோட்டலில் 2 நாட்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தமிழகம், புதுவை, கேரளம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநில முதல்வர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர். </p><p>தென் மாநிலங்களுக்கு இடையேயான உறவை சுமூகமாக பேணும் வகையில் முதல்வர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. மாநில பாதுகாப்பு, சுமூக உறவு, போதைப்பொருள் தடுப்பு, கடலோர பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ரூ.23.67 கோடி மதிப்பிலான புதிய கட்டடங்கள்: முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-inaugurates-new-buildings-worth-rs-2367-crore-at-irukankudi-mariamman-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-inaugurates-new-buildings-worth-rs-2367-crore-at-irukankudi-mariamman-temple#comments</comments><guid isPermaLink="false">2ce78fe0-e01e-492f-b5a4-ffb1c4abf57f</guid><pubDate>Tue, 18 Aug 2026 07:39:49 +0000</pubDate><atom:updated>2026-08-18T07:39:49.824Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவில்,Irukkankudi mariamman temple,இருக்கன்குடி மாரியம்மன்,New Buildings,திறந்து வைப்பு,கட்டடங்கள்,முதல்-அமைச்சர் விஜய்,inaugurates,Chief Minister Vijay,</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/v5wvdp43/121.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/v5wvdp43/121.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>இருக்கன்குடி,</p><p>விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் ரூ. 23 கோடியே 67 லட்சம் செலவில் பக்தர்களுக்காகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதல் அமைச்சர் திறந்து வைத்துள்ளார்.</p><p>இந்து சமய அறநிலையத்துறைக்கு உதவிப் பொறியாளர் (கட்டுமானம்), உதவி ஸ்தபதி மற்றும் செயல் அலுவலர் பணியிடங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 80 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர்  விஜய்</a> அவர்கள் வழங்கினார்.</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் அவர்கள் இன்று (18.8.2026) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில், விருதுநகர் மாவட்டம், இருக்கண்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில், ரூ.23 கோடியே 67 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள முடிகாணிக்கை மண்டபம், அன்னதானக் கூடம், விருந்து மண்டபங்கள் மற்றும் 235 பூஜைப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் ஆகியவற்றைத் திறந்து வைத்தார். மேலும், இந்து சமய அறநிலையத்துறைக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் உதவிப் பொறியாளர் (கட்டுமானம்), உதவி ஸ்தபதி மற்றும் செயல் அலுவலர் (நிலை–1 மற்றும் நிலை–3) ஆகிய பணியிடங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 80 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.</p><h2>புதிய கட்டடங்கள் திறந்து வைப்பு</h2><p>விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று 23 கோடியே 67 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முடிகாணிக்கை மண்டபம், 125 நபர்கள் ஒரேநேரத்தில் அமர்ந்து உணவருந்தும் வகையிலான அன்னதானக் கூடம், 25 நபர்கள் அமர்ந்து உணவருந்தும் வகையிலான 24 விருந்து மண்டபங்கள் மற்றும் 235 பூஜைப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் ஆகியவற்றைப் பக்தர்களின் பயன்பாட்டிற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்று திறந்து வைத்தார்.</p><h2>பணிநியமன ஆணை</h2><p>இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள சமய நிறுவனங்களை நிர்வகித்தல் மற்றும் மேற்பார்வை செய்தல், சொத்துகளைப் பாதுகாத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டுவரும் அலுவலர் மற்றும் பணியாளர் பணியிடங்களில் அவ்வப்போது ஏற்படும் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நிரப்பப்பட்டு வருகின்றன.</p><p>அந்த வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட 36 உதவிப் பொறியாளர்கள் (கட்டுமானம்), 38 உதவி ஸ்தபதிகள், 6 செயல் அலுவலர்கள் (நிலை-1 மற்றும் நிலை-3) என மொத்தம் 80 நபர்களுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் பணிநியமன ஆணைகளை இன்று வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.</p><p>இந்து சமய அறநிலையத் துறைக்காக முதன்முறையாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் உதவிப் பொறியாளர் (கட்டுமானம்) மற்றும் உதவி ஸ்தபதி பணியிடங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்டு பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், தலைமைச் செயலாளர் சாய்குமார், ஐ.ஏ.எஸ்., வணிகவரி, பதிவுத்துறை மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் குமரகுருபரன், ஐ.ஏ.எஸ்., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வினய், ஐ.ஏ.எஸ்., கூடுதல் ஆணையர்கள் துரை ரவிச்சந்திரன், ஐ.ஏ.எஸ்., ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை மறுநாள் ஜோசப் விஜய் - டி.கே.சிவகுமார் சந்திப்பு: காவிரி நதிநீர், மேகதாது பிரச்சினை குறித்து பேச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/joseph-vijay-and-dk-shivakumar-to-meet-in-chennai-the-day-after-tomorrow-talks-to-focus-on-the-cauvery-river-water-and-mekedatu-issues</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/joseph-vijay-and-dk-shivakumar-to-meet-in-chennai-the-day-after-tomorrow-talks-to-focus-on-the-cauvery-river-water-and-mekedatu-issues#comments</comments><guid isPermaLink="false">044b2a50-b1ee-4006-b3de-7b21e3736da7</guid><pubDate>Tue, 18 Aug 2026 07:33:56 +0000</pubDate><atom:updated>2026-08-18T07:33:56.567Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,Tamilnadu,தமிழ்நாடு,விஜய்,Chennai,சென்னை,தமிழகம்,காவிரி நீர்,டி.கே.சிவக்குமார்,Karnataka,கர்நாடகா,Cauvery,DK Shivakumar,கோவளம்,Kovalam,மேகதாது அணை,TamilNadu Goverment,தமிழக அரசியல்,tn politics,Mekedadu Dam</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/o81mhz12/cmmm.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/o81mhz12/cmmm.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>அரசியல் களம் (Politics)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னையில் நாளை மறுநாள் (20-ந் தேதி) தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a> - கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் ஆகியோர் சந்தித்து பேச இருக்கின்றனர். அப்போது, காவிரி நதிநீர், மேகதாது பிரச்சினை குறித்து பேச்சு வார்த்தை நடைபெற இருக்கிறது. </p><h2>தென் மாநில முதல்வர்கள் மாநாடு</h2><p>தென் மாநிலங்களின் முதல்-அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு, ஆகஸ்டு 19 (நாளை) மற்றும் 20-ந் தேதிகளில் சென்னையை அடுத்த கோவளத்தில் நடைபெற இருக்கிறது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்க உள்ளார். இதற்காக, கோவளத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டல் தயாராகி வருகிறது. </p><p>இந்த மாநாட்டில், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த முதல்-அமைச்சர்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதல்-மந்திரி ஆகியோர் கலந்துகொள்ள இருக்கின்றனர். கூட்டத்தில், தென் மாநிலங்களைச் சேர்ந்த முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. </p><h2>தென் மாநில முதல்-மந்திரிகள் பங்கேற்பு</h2><p>தற்போது, தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. என்றாலும், <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a> இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. </p><p>இதேபோல், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவகுமார், கேரளம் முதல்-மந்திரி வி.டி.சதீசன், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி ஆகியோர் பங்கேற்க உள்ளனர். </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/c47ydrac/dks.jpg" /></figure><h2>இரு மாநில முதல்வர்கள் சந்திப்பு</h2><p>இந்த மாநாட்டில், தென் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு, எல்லை பிரச்சினைகள், சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. </p><p>இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, <a href="https://www.dailythanthi.com/topic/vijay">தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a>, கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் ஆகியோர் வரும் 20-ந் தேதி (நாளை மறுநாள்) மாலை சந்தித்து பேச இருக்கின்றனர். இந்த சந்திப்பின்போது, காவிரி நீர் பிரச்சினை, மேகதாது அணை கட்டும் விவகாரம் குறித்து பேசப்பட இருக்கிறது. </p><p>ஏற்கனவே, கடந்த 3-ந் தேதி பெங்களூருவில் தமிழ்நாடு, கர்நாடக முதல்-அமைச்சர்கள் சந்தித்து பேச இருந்தனர். ஆனால், அங்கு போராட்டம் வெடித்ததால், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவகுமார், "<a href="https://www.dailythanthi.com/topic/vijay">விஜய்</a> இப்போது பெங்களூரு வரவேண்டாம். சந்திப்பை இன்னொரு நாள் வைத்துக்கொள்வோம்" என்று கூறிவிட்டார். </p><h2>முக்கிய முடிவுகள் எட்டப்படும்</h2><p>இந்த நிலையில்தான், வரும் 20-ந் தேதி (நாளை மறுநாள்) <a href="https://www.dailythanthi.com/topic/vijay">தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a> - கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் ஆகியோர் சந்தித்து பேச இருக்கின்றனர். இந்த சந்திப்பில், முக்கிய முடிவுகள் எட்டப்படும் என்று தெரிகிறது.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் அலுவலகம் ஏன் மாற்றப்படுகிறது? - ஆதவ் அர்ஜுனா விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-is-the-chief-ministers-office-being-relocated-aathav-arjuna-explains</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-is-the-chief-ministers-office-being-relocated-aathav-arjuna-explains#comments</comments><guid isPermaLink="false">96c3a458-c2e0-4e66-9e22-1d466c528c90</guid><pubDate>Tue, 18 Aug 2026 07:15:44 +0000</pubDate><atom:updated>2026-08-18T07:15:44.577Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Aadhav Arjuna,ஆதவ் அர்ஜுனா,சட்டசபை,எ.வ.வேலு,TN Assembly,Ev Velu,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/vj5ysbsy/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/vj5ysbsy/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>முதல்-அமைச்சர் அலுவலகம் ஏன் மாற்றப்படுகிறது? என்பது குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்தார்.</p><p>சென்னை,</p><h2>முதல்-அமைச்சர் அலுவலகம்</h2><p>புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள தலைமைச் செயலக கட்டிடத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த முதல்-அமைச்சர் அலுவலகம் நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றப்பட்ட உள்ளது. இதற்காக, மாளிகையின் 10-வது தளத்தில் புதிய முதல்-அமைச்சர் அறை, தனிச் செயலர்களுக்கான அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p><p>முதல்-அமைச்சரின் புதிய அலுவலகத்தை அமைக்கும் பணிகளுக்காக ரூ.5.54 கோடியில் தமிழக அரசின் பொதுப்பணித் துறை டெண்டர் கோரியிருந்தது. தமிழக அரசின் பொதுப்பணித் துறை கோரிய இந்த டெண்டரில் பல்வேறு முறைகேடுகளும் விதிமீறல் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து சட்டசபையில் திமுக கொறடா எ.வ.வேலு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.</p><h2>ஆதவ் அர்ஜுனா விளக்கம்</h2><p>இதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளித்து பேசியதாவது:-</p><p>"திமுக கொறடா எ.வ.வேலு பேசுகையில் பத்திரிகை செய்தியைக் குறிப்பிட்டு பேசினார். கடந்த 5 ஆண்டுகள் பத்திரிகை செய்திகளை எடுத்து வெளியிட்டால், இந்த துறை (பொதுப்பணித் துறை) ஊழல் மட்டும்தான் செய்திருக்கும் என்று எங்களாலும் சொல்ல முடியும். டெண்டரே இன்னும் முடியவில்லை. பொதுவாக கட்டுமான தொகைக்கு ஏற்ப டெண்டரின் மொத்த மதிப்பை வெளியிடுவார்கள். 3-லிருந்து 7 சதவிகிதம் வரை ஏற்றுவார்கள். ஆனால், நாங்கள் கடந்த ஆண்டு மதிப்பையே கொடுத்துள்ளோம்.</p><p>விரைவில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறைகளில் கடந்த 5 ஆண்டுகள் டெண்டரில் என்ன நடந்தது என்பதை வெள்ளை அறிக்கையை வெளியிடவுள்ளோம். கடந்த 60 நாள்களில் 20 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டது. சுமார் 25-லிருந்து 30 சதவிகிதம் வரை குறைவான தொகையில் டெண்டர் வந்துகொண்டுள்ளது.</p><h2>தவறான தகவல்....</h2><p>புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என்று கருணாநிதியும் ஜெயலலிதாவும் நினைத்தார்கள். இதில் அனைவருக்கும் உடன்பாடு இருக்கிறது. காலையிலிருந்து மாலை வரை அரசு அதிகாரிகளையும், வெளிநாட்டுப் பிரதிநிதிகளையும் முதல்-அமைச்சர் சந்தித்து வருகிறார்கள். அனைவரையும் சந்திக்க வேண்டுமென்பதால்தான் அறையை மாற்றுகிறார்கள்.</p><p>முதல்-அமைச்சரின் தனிச் செயலர்கள் வெறும் 100 சதுர அடிகூட இல்லாத சிறிய அறையில் பணி செய்து கொண்டுள்ளார்கள். முறையான கழிப்பறை வசதிகூட கிடையாது. ஆகையால்தான் அவர்களுக்கும் அறை மாற்றப்படுகிறது. பிரசாரத்தின் போது சாதாரணக் கடைகளில் கிடைக்கும் உணவுகளை சாப்பிட்டுவிட்டு, பிரசார வாகனத்திலேயே இரண்டு மணிநேரம் ஓய்வெடுக்கக் கூடிய எளிய முதல்-அமைச்சரைப் பற்றி தவறான தகவலை அவைக்கு தெரிவிக்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சருக்கான புதிய அறை: டெண்டருக்கு முன்பே பணிகள் தொடங்கியது எப்படி? - டிடிவி தினகரன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-room-for-the-chief-minister-how-did-the-work-start-before-the-tender-ttv-dhinakaran-questions</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-room-for-the-chief-minister-how-did-the-work-start-before-the-tender-ttv-dhinakaran-questions#comments</comments><guid isPermaLink="false">7ff258c2-e09c-48ea-ae68-d604fefb85f7</guid><pubDate>Tue, 18 Aug 2026 07:08:33 +0000</pubDate><atom:updated>2026-08-18T07:08:33.667Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,Chief Minister,tender,முதலமைச்சர்,டெண்டர் முறைகேடு,அறை,room</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/61fyeb4o/ttv.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/61fyeb4o/ttv.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தலைமைச் செயலகத்தில் முதலமைச்சருக்கான புதிய அறையை தயார் செய்வதற்கான டெண்டர் அறிவிக்கும் முன்பே தவெக அரசு  பணிகளை தொடங்கியுள்ளது. இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">டிடிவி தினகரன்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>சென்னை தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டடத்தில் இருந்த முதலமைச்சரின் அறையை அருகில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்திற்கு மாற்றுவது தொடர்பாக பணிகள் கடந்த மாதமே தொடங்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், அப்பணிக்கான டெண்டர் அண்மையில் வெளியிடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>அறை மாற்றம் அவசியம்தானா?</h2><p>தமிழக அரசுக்கு இருக்கும் நிதி நெருக்கடியில் முதலமைச்சரின் அறை மாற்றப்படுவது அவசியம்தானா? என்ற கேள்விக்கு மத்தியில், அப்பணிகளுக்கான அறிவிக்கப்பட்ட டெண்டரில் வெளிப்படைத்தன்மையின்றி பல்வேறு விதிமீறல்கள் நடைபெற்றிருப்பதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.</p><h2>டெண்டர்</h2><p>கடந்த 13ஆம் தேதி நாளிதழ்களில் டெண்டர் தொடர்பான விளம்பரம் வெளியிடப்பட்டு நான்கு நாட்கள் கழித்து இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள ஆவணங்களிலும் பணிக்கான மொத்த மதிப்பை குறிப்பிடாமல் மறைத்திருப்பதன் மூலம் வெளிப்படைத்தன்மைமிக்க ஆட்சி என்று சொல்வதற்கான தகுதியை தவெக அரசு இழந்திருப்பதாகவே பார்க்க வேண்டியுள்ளது.</p><p>முதலமைச்சரின் அறையை மாற்றும் பணிகளுக்கான டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கப்பட்டது எப்படி? யாருடைய உத்தரவின் பேரில் பணிகள் தொடங்கப்பட்டன? எந்த அடிப்படையில் ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டார்? பணிகள் தொடங்கிய பின் டெண்டர் கோரியது ஏன்? டெண்டர் அறிவித்த பின்பும் அதற்கான ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாதது ஏன்? என்ற மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் அவர்கள் வைத்திருக்கும் பதில் தான் என்ன?</p><h2>விதிமுறை மீறல்கள்</h2><p>ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் ஊழலற்ற, நியாயமான மற்றும் வெளிப்படைத்தன்மையான ஆட்சிதான் எங்களின் இலக்கு என வீரவசனம் பேசிக் கொண்டிருக்கும் முதலமைச்சர், அவருக்கான புதிய அறை மாற்றம் தொடர்பான டெண்டர்களிலேயே நடைபெற்றிருக்கும் இவ்வாறான விதிமுறை மீறல்கள், மற்ற துறைகளில் டெண்டர்கள் எப்படி வெளிப்படைத்தன்மையாக நடைபெறும் என்ற ஐயத்தை எழுப்புகிறது.</p><p>எனவே, விளம்பரங்களிலும், மேடைப் பேச்சுகளிலும் வெளிப்படைத்தன்மை என்ற சொல்லை பெயரளவுக்கு பயன்படுத்தாமல், தன் தலைமையிலான ஆட்சி நிர்வாகத்தில் முழுமையாக செயல்படுத்திட முன்வர வேண்டும் என முதலமைச்சர் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>10 கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகங்களை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-must-drop-the-decision-to-close-10-co-optex-showrooms-anbumani-urges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-must-drop-the-decision-to-close-10-co-optex-showrooms-anbumani-urges#comments</comments><guid isPermaLink="false">bcccda3f-4602-4c20-9bb1-e9536da1d045</guid><pubDate>Tue, 18 Aug 2026 07:05:10 +0000</pubDate><atom:updated>2026-08-18T07:05:10.851Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK,தமிழகம்,கோ-ஆப்டெக்ஸ்,Co-Optex,தவெக அரசு,tvk govt</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/aimzvrkb/anai.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/aimzvrkb/anai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நவீன சந்தை மற்றும் விற்பனை உத்திகளுடன்  கோ-ஆப்டெக்ஸ்  நிறுவனத்திற்கு புத்துயிரூட்ட வேண்டும் என்று பாமக தலைவர் மருத்துவர் <a href="https://www.dailythanthi.com/topic/anbumani-ramadoss">அன்புமணி ராமதாஸ்</a> வலியுறுத்தி உள்ளார்.</p><h2>கோ-ஆப்டெக்ஸ்</h2><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழ்நாட்டில் கடலூர், சேலம், வேலூர், திருநெல்வேலி  உள்ளிட்ட நகரங்களிலும், ஆந்திரம்,  மராட்டியம் உள்ளிட்ட நகரங்களிலும் செயல்பட்டு வரும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 10 விற்பனையகங்களை மூட அரசு ஆணையிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. கைத்தறி நெசவாளர்களின்  வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும்,  கைத்தறி துணிகளை விற்பனை செய்வதற்காகவும்  உருவாக்கப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மூடப்பட்டு வருவது கவலையளிக்கிறது.</p><h2>இன்றைய அவலம்</h2><p>விற்பனையிலும், வருவாயிலும் ஏற்பட்ட வீழ்ச்சி, ஆள்குறைப்பு நடவடிக்கைகள் ஆகியவை தான் இந்த முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த முடிவின்படி சில விற்பனையகங்கள் மூடப்பட்டு விட்டன. மேலும் சில விற்பனையகங்களில்  விற்பனையும்,  மீதமுள்ளவற்றில் கொள்முதலும் நிறுத்தப்பட்டு விட்டன. அடுத்த சில வாரங்களில் 10 விற்பனையகங்களும் மூடப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது.</p><p>கோ-ஆப்டெக்ஸ்  விற்பனையகங்கள்  நெசவாளர்களின் வாழ்வாதாரத்துடன் பின்னிப் பிணைந்தவை ஆகும். கோ-ஆப்டெக்ஸ் என்பதே தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் என்பதன் வணிகப் பெயர் தான் . 1935-ஆம் ஆண்டில்  தொடங்கப்பட்ட கோ-ஆப்டெக்ஸ்  விற்பனையகங்கள்  ஒரு காலத்தில் அரசு ஊழியர்கள், நெசவாளர்கள், ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் விருப்பத்திற்குரிய ஆடையகமாக இருந்தது. ஆனால், தனியார் நிறுவனங்களின் நலனுக்காக கோ-ஆப்டெக்ஸ் திட்டமிட்டு சீரழிக்கப்பட்டதன் விளைவு தான் இன்றைய அவலம் ஆகும்.</p><h2>நூற்றாண்டு விழா</h2><p>2025-16ஆம் ஆண்டில்  தமிழ்நாட்டில் 133, வெளிமாநிலங்கள், வளைகுடா நாடுகள், ஐரோப்பா ஆகியவற்றில் 67  என மொத்தம் 200 விற்பனையகங்களுடன்  கோ-ஆப்டெக்ஸ்  செயல்பட்டு வந்தது. அதன்பின் கடந்த 2025-26 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 150 ஆக குறைந்து விட்டது. நடப்பாண்டில் மேலும் 10 விற்பனையகங்கள் மூடப்படுகின்றன. இதே நிலை நீடித்தால் 2035-ஆம் ஆண்டில் நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டிய  கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மூடுவிழா நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். அதனால் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தைக் காக்க உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.</p><h2>வெற்றித் தறி ஷோரூம்கள்</h2><p>2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக அரசு வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ’’தமிழ்நாட்டின் ஒவ்வொரு முக்கிய நகரத்திலும் வெற்றித் தறி ஷோரூம்கள் அமைக்கப்படும். தமிழக நெசவாளர்களின் தயாரிப்புகளை சர்வதேச அளவில் விற்பனை செய்வதற்கு பிரத்தியேகமான இ-காமர்ஸ் பிராண்ட் உருவாக்கப்படும்” என்று வாக்குறுதி ( எண். அறம் 2 (8) ) அளிக்கப்பட்டிருந்தது. வெற்றித் தறி ஷோரூம்கள் என்ற பெயரில் புதிய விற்பனையகங்களை திறக்கப் போவதாகக் கூறி விட்டு, இருக்கும் விற்பனையகங்களையும் மூடுவது சரியல்ல. தவெகவின் சொல்லுக்கும், செயலுக்கும் தொடர்பு இல்லை என்பதையே இது காட்டுகிறது.</p><h2>தவெக ஆட்சிக்கு வந்தால்</h2><p>தவெக  ஆட்சிக்கு வந்தால் நமது வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று நெசவாளர்கள் நம்பினார்கள்.  அதனால் தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதற்கு காரணமாக நெசவாளர்களை ஏமாற்றக் கூடாது. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் 10 விற்பனையகங்களை  மூடும் முடிவை கைவிட வேண்டும். தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் புதிய கோ-ஆப்டெக்ஸ்  விற்பனையகங்களைத் திறந்து நவீன சந்தை மற்றும் விற்பனை உத்திகளுடன் கோ-ஆப்டெக்ஸ்  நிறுவனத்திற்கு புத்துயிரூட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thirumavalavan-meets-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thirumavalavan-meets-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">a042e7ca-0702-4d42-bc60-755e5b8f9489</guid><pubDate>Tue, 18 Aug 2026 07:01:13 +0000</pubDate><atom:updated>2026-08-18T07:01:13.923Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமாவளவன்,Thirumavalavan,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/xjhcwyqf/14.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/xjhcwyqf/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விசிக தலைவர் திருமாவளவன் பிறந்த தினத்தை முன்னிட்டு விக்கிரவாண்டியில் நேற்று அக்கட்சியின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசும்போது, இனி தவெக உடன் விசிக இணைந்து செயல்படும் என்று தெரிவித்து இருந்தார். </p><p>இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய்யை பார்ப்பதற்காக திருமாவளவன் சென்னை தலைமை செயலகத்திற்கு வருகை தந்துள்ளார். அவருடன் அமைச்சர் வன்னி அரசுவும் உள்ளார். தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய்யை திருமாவளவன் சந்தித்து பேசியுள்ளார். தவெக உடன் விசிக இணைந்து செயல்படும் என திருமாவளவன் கூறிய பின்னர் நடைபெறும் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>பெயரை நீங்கள் மாற்றியது இல்லையா..? - எ.வ.வேலு பேச்சுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/didnt-you-change-the-name-minister-rajmohan-hits-back-at-ev-velus-remarks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/didnt-you-change-the-name-minister-rajmohan-hits-back-at-ev-velus-remarks#comments</comments><guid isPermaLink="false">5dd26565-38de-4a88-8dfd-0e11d77845d3</guid><pubDate>Tue, 18 Aug 2026 06:44:36 +0000</pubDate><atom:updated>2026-08-18T06:44:36.518Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,Tamilnadu,விஜய்,திமுக,DMK,தமிழகம்,தமிழக சட்டசபை,எ.வ.வேலு,TN Assembly,Ev Velu,Assembly Session,TN Assembly session,தமிழக சட்டசபை கூட்டத்தொடர்,தவெக அரசு,Minister Rajmohan,அமைச்சர் ராஜ்மோகன்,சட்டசபை கூட்டத் தொடர்,tvk govt</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/g84xsenk/suff.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/g84xsenk/suff.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் <a href="https://www.dailythanthi.com/topic/budget">பொது பட்ஜெட்</a> கடந்த 5-ந்தேதியும், <a href="https://www.dailythanthi.com/topic/budget">வேளாண்மை பட்ஜெட்</a> 6-ந்தேதியும் தாக்கல் செய்யப்பட்டது. பொது மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதம் கடந்த 7, 10, 11 ஆகிய 3 நாட்கள் நடைபெற்றது. நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண்மை அமைச்சர் வினோத் ஆகியோர் தங்களது பதிலுரையை கடந்த 12-ந்தேதி வழங்கினார்கள்.</p><h2>மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம்</h2><p>இந்த நிலையில், மானிய கோரிக்கை விவாததின் 2-வது நாள் அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று இளைஞர் நலன், விளையாட்டு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணி, மனிதவள மேம்பாட்டுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது. இந்த விவாதத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட அமைச்சர்கள் பதில் அளித்து பேசி வருகிறார்கள். </p><h2>முதலமைச்சர் காலை உணவு திட்டம்</h2><p>இந்த சூழலில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது, தி.மு.க. அரசின் திட்டங்களை எம்.எல்.ஏ. எ.வ.வேலு பட்டியலிட்டார். அப்போது பேசிய அவர், “காலை உணவு திட்டத்தை மாற்றி காமராஜர் பெயரை வைப்பதற்கான அவசியம் என்ன? புதிய திட்டத்தை உருவாக்கி காமராஜர் பெயரை வையுங்கள். அதை நாங்கள் வரவேற்கிறோம். முதலமைச்சர் என்பது பொதுவான சொற்சொடர். அது யாரையும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய பெயர் அல்ல. ஆகையால் ‘முதலமைச்சர் காலை உணவு திட்டம்’ என்றுதான் பெயர் வைத்தோம். </p><p>ஸ்டாலின் காலை உணவுத் திட்டம் என பெயர் வைக்கலாம் என கூறியபோது ஸ்டாலின் அதை மறுத்தார். முதல்வர் காலை உணவுத் திட்டம் என பெயர் வைத்தால் யாரும் அந்தப் பெயரை மாற்ற மாட்டார்கள் என ஸ்டாலின் கூறினார். நாங்கள் உருவாக்கிய திட்டத்துக்கு நீங்கள் ஏன் பெயரை மாற்ற வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார். </p><p>தொடர்ந்து பேசிய அவர், “காமராஜருக்கு சென்னையில் சிலை அமைத்து பிரதமர் நேருவை அழைத்துவந்து திறந்தோம். குடியாத்தம் தொகுதியில் காமராஜரை எதிர்த்து திமுக வேட்பாளரை நிறுத்தாதவர் அண்ணா. காமராஜருக்கு சிலை அமைத்து, மணிமண்டபம் அமைத்தவர் கலைஞர் கருணாநிதிதான். பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்து பெருமை சேர்த்தார் கருணாநிதி” என்று எம்.எல்.ஏ. எ.வ.வேலு தெரிவித்தார். </p><p>இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “திட்டங்கள் மக்கள் வரி பணத்தில் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு முன், எத்தனை திட்டங்களுக்கு நீங்கள் பெயர் மாற்றியிருக்கிறீர்கள்? காலை உணவுத்திட்டம், காமராஜர் காலை உணவுத் திட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த திட்டத்திற்கு காமராஜர் பெயரை விட, பொருத்தமான பெயர் வேறு எதுவும் இல்லை. </p><p>திட்டங்களின் பெயர்களை மாற்றுவது காலம் காலமாக திமுக ஆட்சியிலும் செய்யப்பட்டதுதான்” என்று அவர் கூறினார்.</p><h2>திமுக எம்எல்ஏ எ.வ.வேலு:</h2><p>இப்பொழுது சட்டப்பேரவையில் இருக்கும் இந்த கலைநயத்தோடு கூடிய மேசைகளும், மைக்குகளும் திமுக ஆட்சியின்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த நான் இரவு பகலாக பார்த்து பார்த்து செய்தது.</p><h2>அமைச்சர் ராஜ்மோகன் </h2><p>அந்த டேபிளை செய்தது நாங்கள்தான்; அந்த மைக்கை செய்தது நாங்கள்தான்; அந்த நாற்காலியை செய்தது நாங்கள்தான் என சொல்கிறார்; இது மக்கள் வரிப்பணத்தில் தமிழக அரசு செய்தது என்பதை சுட்டிக்காட்டுகிறேன்</p><p>இவ்வாறு விவாதம் நடைபெற்றது.</p>]]></content:encoded></item><item><title>கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஆக.28-ந்தேதி உள்ளூர் விடுமுறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/local-holiday-for-kanyakumari-district-on-august-28</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/local-holiday-for-kanyakumari-district-on-august-28#comments</comments><guid isPermaLink="false">a629b361-d74a-42bd-9551-c4f255360021</guid><pubDate>Tue, 18 Aug 2026 06:39:38 +0000</pubDate><atom:updated>2026-08-18T06:39:38.112Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,Kanyakumari,Local Holiday,உள்ளூர் விடுமுறை,ஸ்ரீநாராயணகுரு</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/uqrvmje4/13.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/uqrvmje4/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி,</p><p>கேரள மறுமலர்ச்சியின் தந்தையாக போற்றப்படும் ஸ்ரீநாராயண குருவை பின்பற்றுவோர்கள் கன்னியாகுமரியில் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர். எனவே அவரது பிறந்த நாளை விடுமுறை நாளாகக் குறிப்பிட வேண்டும் என சமூக மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.</p><p>இந்த நிலையில், ஸ்ரீநாராயணகுரு பிறந்ததினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருகிற 28-ந்தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக, செப்டம்பர் 12-ந்தேதி வேலை நாளாக செயல்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>விருதுநகர்: கட்டி முடிக்கப்பட்டு 6 மாதங்களாகியும் திறக்கப்படாத புதிய பள்ளிக் கட்டிடம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-school-building-in-virudhunagar-remains-unopened-six-months-after-completion</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-school-building-in-virudhunagar-remains-unopened-six-months-after-completion#comments</comments><guid isPermaLink="false">d77f8565-17be-428b-84dd-9e651aa8f051</guid><pubDate>Tue, 18 Aug 2026 06:26:48 +0000</pubDate><atom:updated>2026-08-18T06:26:48.830Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Virudhunagar,விருதுநகர்,புதிய கட்டிடம்,அரசு உயர்நிலைப்பள்ளி,Government High School,public complaint</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/muhuavsm/6.jpg" width="735"><media:title type="html"><![CDATA[ புதிய கட்டிடம்- பழைய கட்டிடம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/muhuavsm/6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர்,</p><p>விருதுநகர் மாவட்டம், வீரசோழன் அரசு மேல்நிலைப் பள்ளியில், ரூ.3 கோடிக்கும் அதிக மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டிடம் 6 மாதங்களாகியும் திறக்கப்படாமல் பூட்டிக் கிடப்பது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p><h2>புதிய கட்டிடத்திற்கு நிதி ஒதுக்கீடு</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விருதுநகர் மாவட்டம்</a> நரிக்குடி ஒன்றியம் வீரசோழன் அரசு மேல்நிலைப் பள்ளியில் 850-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த மாணவர்களின் வசதிக்காக, நபார்டு வங்கி நிதி உதவியின் கீழ் ரூ.3 கோடியே 6 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பீட்டில் 13 புதிய நவீன வகுப்பறைகளுடன் கூடிய பிரம்மாண்ட கட்டிடம் கட்டப்பட்டது. இதற்கான கட்டுமானப் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்து 6 மாதங்களாகின்றன.</p><h2>ஆபத்தான பழைய கட்டிடம்</h2><p>புதிய கட்டிடம் தயாராக உள்ள நிலையிலும், அது இன்னும் பயன்பாட்டிற்குத் திறக்கப்படவில்லை. இதனால் வேறு வழியின்றி, 35 ஆண்டுகள் பழமையான, பாதுகாப்பற்ற பழைய கட்டிடத்திலேயே மாணவர்கள் தொடர்ந்து படித்து வருகின்றனர். இந்த கட்டிடத்தின் கூரைகளும் சுவர்களும் எப்போது இடிந்து விழுமோ என்ற ஆபத்தான நிலையில் உள்ளதால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தினசரி அச்சத்திலேயே பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.</p><h2>பெற்றோர்களின் கோரிக்கை</h2><p>"புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டும் ஏன் திறக்காமல் தள்ளிப் போடுகிறார்கள் என்று தெரியவில்லை. ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் முன், மாவட்ட நிர்வாகமும் பள்ளி கல்வித்துறையும் உடனடியாக தலையிட்டு இப்புதிய கட்டிடத்தை மாணவர்களின் பயன்பாட்டிற்குத் திறக்க வேண்டும்" எனப் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">கோரிக்கை</a> விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>வீடுகளுக்கு அவசியமான வருடாந்திர பராமரிப்பு பணிகள் என்னென்ன...?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-are-the-essential-annual-maintenance-tasks-for-homes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-are-the-essential-annual-maintenance-tasks-for-homes#comments</comments><guid isPermaLink="false">6e5cf855-a09d-4692-82b7-8a32955e2107</guid><pubDate>Tue, 18 Aug 2026 06:25:56 +0000</pubDate><atom:updated>2026-08-18T06:25:56.826Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு கட்டுரை,Special Articles,House,வீடுகள்,maintenance work,பராமரிப்பு பணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/capsf3u2/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/capsf3u2/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சொந்த வீடு என்பது பலரின் வாழ்நாள் கனவு. அந்தக் கனவு இல்லம் பல ஆண்டுகள் உறுதியாகவும் அழகாகவும் இருக்க வேண்டுமென்றால், அவ்வப்போது பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வது அவசியம். பலர் வீட்டில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்ட பிறகுதான் அதை சரிசெய்ய முயற்சிக்கிறார்கள். ஆனால் ஆண்டுக்கு ஒரு முறை சில முக்கியமான பராமரிப்புப் பணிகளைச் செய்தால், பெரிய செலவுகளையும் எதிர்பாராத சேதங்களையும் தவிர்க்க முடியும்.</p><h2>முதல் பணி</h2><p>முதலில் வீட்டின் கூரை மற்றும் மேல்தளத்தை ஆய்வு செய்ய வேண்டும். மழைக்காலத்தில் நீர் கசிவு ஏற்படுகிறதா, விரிசல்கள் உருவாகியுள்ளனவா என்பதை கவனிக்க வேண்டும். சிறிய விரிசல்கள்கூட காலப்போக்கில் பெரிய பிரச்சினைகளாக மாறக்கூடும். எனவே அவற்றை உடனடியாக சரிசெய்வது நல்லது.</p><p>வீட்டின் வெளிப்புற மற்றும் உட்புற சுவர்களையும் ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதிக்க வேண்டும். சுவர்களில் ஈரப்பதம், பூஞ்சை, பெயிண்ட் உரிதல் அல்லது விரிசல் போன்ற அறிகுறிகள் உள்ளனவா என்பதைப் பார்க்க வேண்டும். ஆரம்பத்திலேயே இதை கவனித்தால், சுவர் சேதத்தைத் தடுக்க முடியும்.</p><h2>மின் சாதனங்கள் சோதனை</h2><p>மின்சார அமைப்புகளை ஆய்வு செய்வதும் மிகவும் முக்கியம். மின் இணைப்புகள், சுவிட்சுகள், பிளக்குகள் மற்றும் மின் வயர்களில் ஏதேனும் சேதம் உள்ளதா என்பதை தகுதியான மின்பொறியாளர் மூலம் பரிசோதிக்க வேண்டும். இது மின்கசிவு மற்றும் தீ விபத்து போன்ற அபாயங்களைத் தவிர்க்க உதவும்.</p><p>வீட்டின் நீர் விநியோக அமைப்புகளையும் சரிபார்க்க வேண்டும். தண்ணீர் குழாய்கள், மோட்டார், மேல்நிலைத் தொட்டி மற்றும் கழிவுநீர் குழாய்களில் கசிவு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். சிறிய கசிவுகள்கூட நீர் வீணாவதற்கும் சுவர் ஈரப்பதத்திற்கும் காரணமாகலாம்.</p><h2>கதவு, நிலைகள் சோதனை</h2><p>கதவுகள் மற்றும் ஜன்னல்களின் நிலையும் கவனிக்கப்பட வேண்டும். மரக்கதவுகள் மற்றும் ஜன்னல்களில் கரையான் தாக்கம், துருப்பிடித்தல் அல்லது தளர்வு ஏற்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். தேவைப்பட்டால் பூட்டுகள், கைப்பிடிகள் மற்றும் கீல்களுக்கு எண்ணெய் தடவி பராமரிக்கலாம்.</p><p>வீட்டைச் சுற்றியுள்ள வடிகால் அமைப்புகளையும் சுத்தம் செய்ய வேண்டும். மழைநீர் செல்லும் பாதைகளில் குப்பைகள் அல்லது இலைகள் தேங்கியிருந்தால், நீர் தேங்கி கட்டிடத்திற்குச் சேதத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக மழைக்காலம் தொடங்குவதற்கு முன் இந்தப் பணியைச் செய்வது அவசியம்.</p><h2>எலக்ட்ரானிக் சாதனங்கள்</h2><p>வீட்டில் பயன்படுத்தப்படும் எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களையும் ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதிக்க வேண்டும். குளிர்சாதனப் பெட்டி, ஏர் கண்டிஷனர், நீர் சுத்திகரிப்பான் மற்றும் கீசர் போன்ற சாதனங்களுக்கு தேவையான சேவையைச் செய்தால் அவற்றின் ஆயுள் அதிகரிக்கும். பூச்சி மற்றும் கரையான் தடுப்பு பணிகளையும் ஆண்டுதோறும் மேற்கொள்வது நல்லது. குறிப்பாக மரச்சாமான்கள் அதிகம் உள்ள வீடுகளில் கரையான் பாதிப்பு பெரிய சேதத்தை ஏற்படுத்தக்கூடும். அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம்.</p><h2>சுற்றுப்புறப் பராமரிப்பு</h2><p>வீட்டின் சுற்றுப்புறத்தையும் பராமரிக்க வேண்டும். தோட்டம் இருந்தால் தேவையற்ற செடிகள் மற்றும் களைகளை அகற்ற வேண்டும். மரக்கிளைகள் வீட்டின் மீது உராயும் நிலையில் இருந்தால் அவற்றை வெட்டி ஒழுங்குபடுத்த வேண்டும். ஒரு வீட்டின் மதிப்பை பாதுகாப்பது புதிய வசதிகளைச் சேர்ப்பதில் மட்டும் இல்லை. அதை முறையாகப் பராமரிப்பதிலும் இருக்கிறது.</p><p>ஆண்டுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் இந்த எளிய பராமரிப்புப் பணிகள், வீட்டின் ஆயுளை நீட்டிப்ப தோடு அதன் அழகையும் பாதுகாக்கும். அதைவிட முக்கியமாக, குடும்பத்தினருக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான வாழ்விடத்தை உறுதி செய்யும். எனவே, வீட்டு பராமரிப்பை ஒரு செலவாக அல்லாமல், எதிர்காலத்தைப் பாதுகாக்கும் முதலீடாகக் கருதுவது புத்திசாலித்தனமான அணுகுமுறையாகும்.</p>]]></content:encoded></item><item><title>வைகை அணையின் நீர்மட்டம் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vaigai-dam-water-level-rises-farmers-happy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vaigai-dam-water-level-rises-farmers-happy#comments</comments><guid isPermaLink="false">6afc4c25-4f6c-45ef-907b-c12826e9877d</guid><pubDate>Tue, 18 Aug 2026 06:20:51 +0000</pubDate><atom:updated>2026-08-18T06:20:51.501Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Vaigai Dam,வைகை அணை,water level,நீர்மட்டம்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/c19e8571/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/c19e8571/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி,</p><p>தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை 71 அடி உயரம் கொண்டது. இந்த அணையின் தண்ணீர் முலம் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து பயன்பெற்று வருகிறது. மேலும் மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களுக்கு ஜீவாதாரமாக விளங்கி வருகிறது. இந்தநிலையில் எப்போதும் இல்லாத அளவில் இந்தாண்டு கடந்த ஜூன் மாதம் வைகை அணையின் நீர்மட்டம் வெறும் 20 அடியாக சரிந்தது.</p><p>இதனால் அணையின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து குடிநீர் திட் டங்களும் நிறுத்தப்பட்டது. இது தவிர ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல் போக பாசனத் திற்கும் திறக்கப்பட்ட தண்ணீர் இந்தாண்டு திறக்க முடியாமல்போனது.</p><h2>நீர்மட்டம் உயர்வு</h2><p>இந்த நிலையில் கேரளத்தில் திடீரென பெய்த மழையின் காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனை தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தேனி மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.</p><p>இந்தத் தண்ணீர் வைகை அணைக்கு வரத் தொடங்கியதால் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. இதனால் தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 35.79 அடியாக உயர்ந்து கடல்போல் காட்சியளிக்கிறது.</p><p>இந்த நீர்மட்டம் படிப்படியாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>காலை உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயர் வைத்தது ஏன்? - தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ. வேலு கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-was-the-breakfast-scheme-named-after-kamarajar-dmk-mla-ev-velu-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-was-the-breakfast-scheme-named-after-kamarajar-dmk-mla-ev-velu-asks#comments</comments><guid isPermaLink="false">0a0439a1-c3a4-422e-8280-4efe4059320d</guid><pubDate>Tue, 18 Aug 2026 06:08:03 +0000</pubDate><atom:updated>2026-08-18T06:08:03.572Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,திமுக,DMK,தமிழகம்,தமிழக சட்டசபை,TN govt,எ.வ.வேலு,TN Assembly,Ev Velu,Assembly Session,சட்டசபை கூட்டத்தொடர்,காலை உணவு திட்டம்,Breakfast plan,மானிய கோரிக்கை,TN Assembly session,காமராஜர் காலை உணவுத் திட்டம்,Kamarajar Breakfast Scheme,tvk govt</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/4o8b6lst/kadame.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/4o8b6lst/kadame.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பொது பட்ஜெட் கடந்த 5-ந்தேதியும், வேளாண்மை பட்ஜெட் 6-ந்தேதியும் தாக்கல் செய்யப்பட்டது. பொது மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதம் கடந்த 7, 10, 11 ஆகிய 3 நாட்கள் நடைபெற்றது. நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண்மை அமைச்சர் வினோத் ஆகியோர் தங்களது பதிலுரையை கடந்த 12-ந்தேதி வழங்கினார்கள்.</p><h2>மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம்</h2><p>இந்த நிலையில், மானிய கோரிக்கை விவாதத்தின் 2-வது நாள் அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று இளைஞர் நலன், விளையாட்டு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை பொதுப்பணி, மனிதவள மேம்பாட்டுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது. இந்த விவாதத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் அமைச்சர் சரத்குமார் ஆகியோர் பதில் அளித்து பேசி வருகிறார்கள். </p><h2>காமராஜர் பெயர்</h2><p>இந்த சூழலில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது, தி.மு.க. அரசின் திட்டங்களை எம்.எல்.ஏ. எ.வ.வேலு பட்டியலிட்டார்.</p><p> அப்போது பேசிய அவர், “தி.மு.க. ஆட்சியில் தலைவர்களுக்கு சிலைகள் மணி மண்டபங்கள் அமைத்து தந்தோம். மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையில் தான் கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தோம்.</p><p>முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தை காமராஜர் உணவுத் திட்டம் என மாற்ற வேண்டிய அவசியம் என்ன? வேறு ஒரு புதிய திட்டத்தை உருவாக்கி, காமராஜர் பெயரை வைக்கலாமே? நாங்கள் வைத்த திட்டத்திற்கு நீங்கள் பெயர் வைப்பது ஏன்?. </p><p>முதலமைச்சர் என்பது பொதுவான சொற்சொடர். அது யாரையும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய பெயர் அல்ல. ஆகையால் ‘முதலமைச்சர் காலை உணவு திட்டம்’ என்றுதான் பெயர் வைத்தோம். ஆனால் முதலமைச்சர் காலை உணவு திட்டத்திற்கு பெயர் மாற்றியது ஏன்?.</p><p>ஸ்டாலின் காலை உணவுத் திட்டம் எனபெயர் வைக்கலாம் என கூறியபோது ஸ்டாலின் அதை மறுத்தார். முதல்வர் காலை உணவுத் திட்டம் என பெயர் வைத்தால் யாரும் அந்தப் பெயரை மாற்ற மாட்டார்கள் என ஸ்டாலின் கூறினார். நாங்கள் உருவாக்கிய திட்டத்துக்கு நீங்கள் ஏன் பெயரை மாற்ற வேண்டும் என்பதே கேள்வி</p><p>காமராஜருக்கு சென்னையில் சிலை அமைத்து பிரதமர் நேருவை அழைத்துவந்து திறந்தோம். குடியாத்தம் தொகுதியில் காமராஜரை எதிர்த்து திமுக வேட்பாளரை நிறுத்தாதவர் அண்ணா.</p><p>காமராஜருக்கு சிலை அமைத்து, மணிமண்டபம் அமைத்தவர் கலைஞர் கருணாநிதிதான். பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்து பெருமை சேர்த்தார் கருணாநிதி” என்று அவர் கூறினார். </p> <h2>தந்தை பெரியார் நூலகம்</h2><p>தொடர்ந்து பேசிய அவர், “தந்தை பெரியாரை கொள்கை தலைவர் என்கிறீர்கள். தவெக அரசு ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள் ஆகிறது. ஆனால், கோவையில் கட்டப்பட்டுள்ள தந்தை பெரியார் நூலகம் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது என்பதனை அரசின் பார்வைக்கு கொண்டு வருகிறேன். பொதுப்பணித்துறை அமைச்சர் பிறந்த வடஆற்காடு மாவட்டம், இன்று அது வேலூர் மாவட்டம் “ என்று திமுக எம்எல்ஏ எ.வ.வேலு தெரிவித்தார். </p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/tmc222cv/yajer.jpg" /></figure><p>அதற்கு பதில் அளித்து சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “நான் பிறந்தது திருச்சி மாவட்டம் என்பதை பதிவு செய்கிறேன். நாங்கள் பெரியார் கொள்கையை பின்பற்றுவதாக தம்பட்டம் அடிப்பதாக பேசினார். இன்றும் அறிவாலயத்தில் பெரியார் சிலை இல்லை, எங்கள் அலுவலகத்தில் பெரியார் சிலை உள்ளது” என்று கூறினார். </p><p>முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேசிய போது மானியக் கோரிக்கை மீதான கருத்துக்களை மட்டும் பேசுமாறு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் குறுக்கிட்டு அறிவுறுத்திய போது, அவர்களின் உரையாடலை <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> கூர்ந்து கவனித்தார். </p>]]></content:encoded></item><item><title>சுதந்திர தினம் விடுமுறை: 2 நாட்களில் ரூ.423 கோடிக்கு மது விற்பனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/independence-day-holiday-liquor-sales-worth-423-crore-in-two-days</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/independence-day-holiday-liquor-sales-worth-423-crore-in-two-days#comments</comments><guid isPermaLink="false">7dac46c8-e364-4622-bbde-7aa3b47f2781</guid><pubDate>Tue, 18 Aug 2026 05:52:02 +0000</pubDate><atom:updated>2026-08-18T05:52:02.636Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டாஸ்மாக்,Tasmac,மது விற்பனை,liquor sales,டாஸ்மாக் கடை,Tasmac shop,சுதந்திர தினம்,Independence Day</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/burly99n/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/burly99n/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>சென்னை மண்டலம்</h2><p>சுதந்திர தினத்தை முன்னிட்டு 15-ந்தேதி டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதனால் அதற்கு முந்தைய நாளான 14-ந்தேதி வெள்ளிக்கிழமையும், விடுமுறைக்கு அடுத்த நாளான 16-ந்தேதி ஞாயிற்றுக்கிழமையும் மது விற்பனை நடைபெற்றது. </p><p>அதன்படி, 14-ந்தேதி சென்னை மண்டலத் தில் ரூ.55.39 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.43.34 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.42.36 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் ரூ.39.89 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.32.20 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றது. 5 மண்டலங்களிலும் சேர்த்து ரூ.213.78 கோடிக்கு மது விற்பனை நடந்தது.</p><p>16-ந்தேதி சென்னை மண்டலத்தில் ரூ.55.40 கோடியும், திருச்சி மண்டலத்தில் ரூ.42.48 கோடியும், சேலம் மண்டலத்தில் ரூ.38.64 கோடியும், மதுரை மண்டலத்தில் ரூ.38.63 கோடியும், கோவை மண்டலத்தில் ரூ.34.07 கோடியும் மதுவிற்பனை நடைபெற்றது. 5 மண்டலங்களிலும் சேர்த்து ரூ.209.22 கோடிக்கு மதுவிற்பனை நடந்தது.</p><h2>ஆன்லைன் விற்பனை</h2><p>சுதந்திர தினத்தன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், அதற்கு முந்தைய மற்றும் அடுத்த நாட்களில் சேர்த்து 2 நாட்களில் தமிழகத்தில் ரூ.423 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது. இதில் 14-ந்தேதி ஆன்லைன் மூலம் மட்டும் ரூ.6 லட்சத்து 38 ஆயிரத்துக்கும், 16-ந்தேதி ரூ.3 லட்சத்து 59 ஆயிரத்துக்கும் மது விற்பனை நடந்துள்ளது. 2 நாட்களிலும் சேர்த்து ஆன்லைன் மூலம் ரூ.9 லட்சத்து 97 ஆயிரத்துக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தஞ்சாவூர் இளைஞரை காவல்துறையினர் அச்சுறுத்தியது ஏற்க முடியாது - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-threatening-thanjavur-youth-is-unacceptable-nayinar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-threatening-thanjavur-youth-is-unacceptable-nayinar-nagendran#comments</comments><guid isPermaLink="false">8ee16ace-a107-45ef-b1df-ea2cffa58d52</guid><pubDate>Tue, 18 Aug 2026 05:45:22 +0000</pubDate><atom:updated>2026-08-18T05:45:22.679Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,காவல்துறை,Thanjavur,Youth,தஞ்சாவூர்,Nayinar Nagendran,இளைஞர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/ry6m93za/nainar.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/ry6m93za/nainar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>தஞ்சாவூரில் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட விசிகவினரிடம் தனக்கு வழிவிடுமாறு கேட்ட ஆகாஷ் என்ற இளைஞருக்கும் விசிகவினருக்கும் இடையே ஏற்பட்ட சச்சரவின் போது, காவல்துறையினர் விசிகவினருக்கு ஆதரவாகச் செயல்பட்டு, ஆகாஷை கையை ஓங்கி அடிப்பது போல் அச்சுறுத்தி தாக்கியதும், அதற்கு எதிர்வினையாக அந்த இளைஞர் சிறப்பு உதவி ஆய்வாளரின் கன்னத்தில் அறைந்ததும் துரதிர்ஷ்டவசமானது; கண்டிக்கத்தக்கது. </p><h2>மாற்று வழி ஏற்பாடு</h2><p>ஆனால், இதில் தர்மத்தின் வழிநின்று, மனசாட்சிப்படி சற்று சிந்தித்துப் பார்த்தால், அந்த இளைஞரின் பக்கம் உள்ள நியாயமே நமக்கு சரியெனப் படுகிறது. காரணம், பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில், அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டிருந்த விசிகவினரைத் தான் காவல்துறையினர் முதலில் அப்புறப்படுத்தியிருக்க வேண்டும். அல்லது அறிவிக்கப்படாத இந்த ஆர்ப்பாட்டத்தால் பாதிப்பிற்குள்ளான பொதுமக்களிடம் பொறுமையாக பேசி, மாற்று வழி ஏற்பாடு செய்து கொடுத்திருக்க வேண்டும். </p><h2>அடிப்படை மனித உரிமை</h2><p>அதற்காக, காவலர்கள் மீதான வன்முறையை யாரும் நியாயப்படுத்த முடியாது. அதேபோல், விசிகவினரின் Public Nuisance-ஐ தட்டிக் கேட்டவரை, அதிகாரத்தின் ஆணவத்தில் சில காவலர்கள் அச்சுறுத்தி, அமைதியாக்க முயன்றதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானது. </p><p>அதிலும், அத்தனை காவலர்கள் அந்த இளைஞரை மடக்கி பிடித்து, வம்படியாக காவலர் வண்டியில் ஏற்றுவதைப் பார்த்தாலே மனம் பதறுகிறது. சாதாரண குற்றங்களில் ஈடுபடுவோருக்கே தமிழக காவல் நிலையங்களில் அடிக்கடி ‘வழுக்கி விழுந்து’ எலும்பு முறிவுகள் ஏற்படும் நிலையில், ஆகாஷின் நிலையை நினைத்தால் கவலையாக இருக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட இளைஞரின் உயிருக்கும் உடமைக்கும் ஆரோக்கியத்திற்கும் முதல்-அமைச்சர் விஜய் முழு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மாணவிகளுக்கு காதல் வலை; நகை, பணம் பறித்து சொந்தமாக ஆம்னி பஸ்.. வாலிபர் மீது பாய்ந்த போக்சோ</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-ensnares-female-students-in-a-web-of-romance-steals-jewelry-and-cash-to-buy-his-own-omni-bus-booked-under-pocso-act</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-ensnares-female-students-in-a-web-of-romance-steals-jewelry-and-cash-to-buy-his-own-omni-bus-booked-under-pocso-act#comments</comments><guid isPermaLink="false">8b86f3cf-d7e0-41d6-910f-6e4989549b0c</guid><pubDate>Tue, 18 Aug 2026 05:29:21 +0000</pubDate><atom:updated>2026-08-18T05:29:21.089Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,மோசடி,POCSO act,Love,போக்சோ,POCSO,students,காதல்,மாணவிகள்</media:keywords><media:content height="800" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/z6jznjxj/stdu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/z6jznjxj/stdu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>களியக்காவிளை, </p><p>காதல் வலைவீசி மாணவிகளிடம் பறித்த நகைகளை விற்று ஆடம்பரமாக வலம் வந்த வாலிபரிடம் இருந்து ஆம்னி பஸ், 2 கார்களை பறிமுதல் செய்ய போலீசார் முடிவெடுத்துள்ளனர்.</p><h2>மாணவிகளை ஏமாற்றிய வாலிபர்</h2><p>குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பாகோடு பாளையங்கட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெனிஷ் (வயது 25), சவுண்ட் சர்வீஸ் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர்.</p><p>இந்தநிலையில் ஜெனிஷ் மீது பிளஸ்-2 மாணவி ஒருவர் புகார் அளித்தார். அதில், தன்னை ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி தன்னிடம் இருந்து 40 பவுன் தங்க நகைகளை பறித்ததுடன், பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து மிரட்டுவதாக கூறி இருந்தார். அந்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/pocso-act">போக்சோ</a> உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.</p><h2>ஆம்னி பஸ், கார்கள்</h2><p>பின்னர் விசாரணை நடத்தியதில், மேலும் ஒரு கல்லூரி மாணவி மற்றும் திருமணமான வசதி படைத்த 3 பெண்களையும் குறி வைத்த ஜெனிஷ், இனிக்க, இனிக்க பேசி தன்னுடைய வலையில் வீழ்த்தியது அம்பலமானது.</p><p>மேலும் அவர்களிடம் இருந்து அவசர தேவைக்கு பணம் வேண்டும் எனக் கூறி நகைகளை வாங்கி, அதனை விற்று பணமாக பெற்றுள்ளார். பிறகு அந்த பணம் மூலம் ஆம்னி பஸ், 2 சொகுசு கார்களையும் வாங்கி ஆடம்பரமாக வலம் வந்துள்ளார். இந்த வாகனங்களை வாடகைக்கு விட்டும் அவர் பணம் சம்பாதித்ததாக தெரிகிறது.</p><h2>திருமணமான பெண்கள்</h2><p>மாணவிகளிடம் மட்டும் வாலிபர் 66 பவுன் நகைகளை வாங்கி மோசடி செய்துள்ளார். இதுபோக திருமணமான பெண்கள் அவரிடம் கொடுத்து ஏமாந்த நகைகள் எவ்வளவு என்ற விவரத்தையும் போலீசார் கணக்கெடுத்து வருகின்றனர்.</p><h2>பாதிக்கப்பட்ட பெண்கள்</h2><p>மேலும் தான் நடத்தி வந்த சவுண்ட் சர்வீசுக்கு தேவையான ஜெனரேட்டர்கள் மற்றும் அதிநவீன ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட உபகரணங்களையும் வாங்கி உள்ளார் என்பதையும் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து ஆம்னி பஸ், கார்களை பறிமுதல் செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.</p><p>இதுதவிர ஜெனிஷால் பாதிக்கப்பட்ட பெண்கள் வேறு யாரேனும் இருக்கிறார்களா? என விசாரணை நடந்து வருகிறது. அவரால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம். அவர்களுடைய பெயர் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>அமைச்சர் நிர்மல் குமாருக்கு சபாநாயகர் கண்டிப்பு - அவையில் சலசலப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/speaker-reprimands-minister-nirmal-kumar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/speaker-reprimands-minister-nirmal-kumar#comments</comments><guid isPermaLink="false">221fb62a-e6ab-4ad8-9d7f-a55b420bdbc6</guid><pubDate>Tue, 18 Aug 2026 05:25:20 +0000</pubDate><atom:updated>2026-08-18T05:25:20.118Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,TN Assembly,CTR Nirmal kumar,JCD Prabhakar,அமைச்சர் நிர்மல் குமார்,ஜே.சி.டி. பிரபாகர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/2cib8f9q/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/2cib8f9q/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படி பேசுகிறீர்கள்? என்று அமைச்சர் நிர்மல் குமாரை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கண்டித்தார்.</p><p>சென்னை,</p><h2>கவன ஈர்ப்பு தீர்மானம்</h2><p>சட்டசபை கூட்டம் தொடங்கியதும் கர்நாடகா வனத்துறையில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக எதிர்கட்சி தலைவர் உதயநிதி, அதிமுகவின் இபிஎஸ், பாமகவின் சௌமியா, பாஜக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். அந்த தீர்மானத்தின் மீது அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.</p><h2>ஏற்றுக்கொள்ள முடியாது..</h2><p>இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் பதில் அளித்து பேசியதாவது:-</p><p>கர்நாடக வனப்பகுதியில் புலம்பெயர்ந்த தமிழர்கள் வசித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கர்நாடக அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. நீதி விசாரணைக்கு கர்நாடக முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார். கர்நாடக வனத்துறையின் பதிலை ஏற்றுக்கொள்ள முடியாது.</p><p>முதலில் சுட்டது யார் என விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்திற்கு முதல்-அமைச்சர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நேர்மையான, உயர்மட்ட விசாரணைக்கு முதல்-அமைச்சர் வலியுறுத்தி உள்ளார். உலகம் முழுவதும் உள்ள ஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே நம்பிக்கை முதலமைச்சர் விஜய். தமிழர்களுக்கு எங்கு தீங்கு ஏற்பட்டாலும் முதல் குரல் கொடுப்பவர் முதல்-அமைச்சர் விஜய்தான். என்று பேசினார்.</p><h2>சபாநாயகர் கண்டிப்பு</h2><p>தொடர்ந்து அமைச்சர் நிர்மல்குமார் பேசுகையில், ஒரு சில பேருக்கு திடீர் தமிழ் பாசம், தமிழர்கள் மீது பாசம் இருக்கும். அதனை நாம் அனைவரும் வரலாற்றில் பார்த்திருப்போம்; 2009-ம் ஆண்டு நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம் பற்றி ஒரு கருத்தை தெரிவித்தார்.</p><p>அமைச்சர் நிர்மல் குமாரின் பேச்சுக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே குறுக்கிட்ட சபாநாயகர் அமைச்சர் நிர்மல் குமார் கூறிய தேவையற்ற கருத்துகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். மேலும் அமைச்சர் நிர்மல் குமார் இனி தேவையற்றதை பேச அனுமதிக்கமாட்டேன் என்றும் கவன ஈர்ப்பு தீர்மானத்தை ஒட்டி தான் அனைவரும் பேச வேண்டும் என்றும் யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படி பேசுகிறீர்கள்? என அமைச்சர் நிர்மல்குமாரை சபாநாயகர் கண்டித்தார். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>ஓமனில் சிக்கித் தவித்து வரும் தமிழக மீனவர்களை  மீட்க நடவடிக்கை தேவை: மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-fishermen-stranded-in-oman-need-action-to-rescue-them-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-fishermen-stranded-in-oman-need-action-to-rescue-them-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">030bcf25-a5cd-4d2c-915e-5118ec5f7b76</guid><pubDate>Tue, 18 Aug 2026 05:22:27 +0000</pubDate><atom:updated>2026-08-18T05:22:27.228Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>மீனவர்கள்,fishermen,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/s8h08zl1/10.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/s8h08zl1/10.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”ஓமனில் பணி விசா பெற்றுத் தருவதாக ஏமாற்றப்பட்டு, கடந்த பிப்ரவரி முதல் தவித்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த 5 மீனவர்களான சிரில் ராபின் ஜார்ஜ் (47 | கன்னியாகுமரி), அந்தோணி பிச்சை அலெக்ஸ் ரவி (46 | கன்னியாகுமரி), அந்தோணி பிச்சை சரோன் ஜோசவா (22 | கன்னியாகுமரி), தாமஸ் அருள் (51 | கன்னியாகுமரி) மற்றும் மாரியப்பன் ஜெட்லி (29 | ராமநாதபுரம்) ஆகியோரை உடனடியாகப் பாதுகாப்பாக மீட்கக் கோரி வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.</p><p>மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகம் உடனடியாகத் தலையிட்டு, நமது மீனவர்களுக்குத் தேவையான சட்ட மற்றும் தூதரக உதவிகளை வழங்கி, அவர்களைப் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மீனவர்களை ஏமாற்றிய போலி ஏஜென்ட் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் சபாநாயகர் ஆக்கபூர்வமான விவாதங்களை அனுமதித்து நடத்த வேண்டும்: ஈ.ஆர்.ஈஸ்வரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/speaker-should-allow-constructive-debates-in-assembly-eriswaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/speaker-should-allow-constructive-debates-in-assembly-eriswaran#comments</comments><guid isPermaLink="false">75d9c8c3-b6d6-4226-b5fc-31d65215ff23</guid><pubDate>Tue, 18 Aug 2026 05:12:31 +0000</pubDate><atom:updated>2026-08-18T05:12:31.666Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>ஈ.ஆர்.ஈஸ்வரன்,சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்,Speaker J.C.D. Prabhakar,E.R. Eswaran</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/3siqj62t/9.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/3siqj62t/9.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;</p><p>”தொடர்ந்து சட்டமன்ற நிகழ்வுகளை தமிழக மக்களோடு சேர்ந்து நாங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சட்டமன்ற விவாதங்கள் விதண்டாவாதமாக நடந்து கொண்டிருக்கிறது. சட்டமன்றம் தமிழக மக்களுடைய தலையெழுத்தை எழுதக்கூடிய மன்றம். அங்கு நடக்கக்கூடிய விவாதங்கள் தமிழக உரிமைகளை பாதுகாக்க கூடியதாகவும், தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கூடியதாகவும், பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடக் கூடியதாகவும் அமையப் பெற வேண்டும். அப்படி ஆக்கபூர்வமாக மாற்ற வேண்டிய பொறுப்பு சபாநாயகருக்கு இருக்கிறது. </p><p>இன்றைய சபாநாயகர் அனுபவம் மிகுந்தவர் தான் அவருடைய அனுபவத்தை பயன்படுத்தி சட்டமன்றத்தில் என்ன பேச அனுமதிக்க வேண்டுமோ அதை அனுமதிக்க வேண்டும். நேரலையில் உலகம் முழுவதும் சபை நடவடிக்கைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆளுங்கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே எந்த பயனும் இல்லாத வாக்குவாதங்கள் நடக்கிறது என்றால் சபாநாயகர் தான் பொறுப்பேற்க வேண்டும். சபை நடவடிக்கைகள் ஆக்கப்பூர்வமாக இல்லையென்ற குற்றச்சாட்டை சபாநாயகர் மேல் தான் சுமத்துவார்கள். இதையெல்லாம் கவனத்தில் கொண்டு சபாநாயகர் தாமதம் இல்லாமல் விழித்துக் கொள்ள வேண்டும்.</p><p>அநாகரிகமான, கண்ணியம் இல்லாத பேச்சுக்களை சபையில் எந்த உறுப்பினர் பேசினாலும் அதை உடனடியாக கட்டுப்படுத்துவதற்கு அவருடைய மைக்கை செயலிழக்க செய்வதற்கு சபாநாயகருக்கு முழு அதிகாரம் இருக்கிறது. பேச விட்டு விட்டு அது நேரலையில் உலகம் முழுவதும் பார்த்த பிறகு சபை குறிப்புகளில் இருந்து நீக்குகிறேன் என்று அறிவிப்பது எந்தப் பயனையும் தராது. இதேபோன்று சபை நடவடிக்கைகளை சபாநாயகர் தொடர விட்டால் கைகலப்பிலே சென்று முடிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. </p><p>உங்கள் அனுமதியுடன் சட்டசபைக்குள்ளே ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வார்த்தை பிரயோக வாக்குவாதம் வெளியிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கின்ற கட்சி உறுப்பினர்களிடையே தமிழகம் முழுவதும் வன்முறையாக மாறுவதற்கு கூட வாய்ப்பிருக்கிறது. நாம் அச்சப்படுகிற விஷயங்கள் நாளை நடந்தால் சபாநாயகர் தான் முழு பொறுப்பேற்க வேண்டும். இன்றைய சபை நடைமுறை என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தலாம் என்பதை மனதில் கொண்டு சட்டசபைக்குள்ளே வானளாவிய அதிகாரம் கொண்ட சபாநாயகர் ஆக்கபூர்வமான விவாதங்களை அனுமதித்து நடத்த வேண்டும். தமிழகத்தின் அமைதிக்காக, பாதுகாப்புக்காக, வளர்ச்சிக்காக தமிழக சட்டசபையில் சபாநாயகரின் அணுகுமுறை அமைய பெற வேண்டும்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பெரியார் பல்கலைக்கழக அரியர் மாணவர்களுக்கு சிறப்புத் தேர்வு: விண்ணப்பிக்க 28-ந் தேதி வரை அவகாசம்</title><link>https://www.dailythanthi.com/education-and-employment/special-examination-for-aryan-students-of-periyar-university-deadline-to-apply-is-28th</link><comments>https://www.dailythanthi.com/education-and-employment/special-examination-for-aryan-students-of-periyar-university-deadline-to-apply-is-28th#comments</comments><guid isPermaLink="false">7fa0d451-286f-4d87-afac-39954734c931</guid><pubDate>Tue, 18 Aug 2026 05:01:07 +0000</pubDate><atom:updated>2026-08-18T05:01:07.969Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தேர்வு,Students apply,Salem Periyar University,சேலம் பெரியார் பல்கலைக்கழகம்,arrears,அரியர் மாணவர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/a1g3eqgy/periyar-university.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெரியார் பல்கலைக்கழகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/a1g3eqgy/periyar-university.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கல்வி&amp;வேலைவாய்ப்பு (Eduction and Jobs)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட பெரியார் தொலைநிலைக்கல்வி நிறுவனம் தற்போது தொலைநிலை மற்றும் இணையவழிக் கல்வி மையம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத் தொழிற்சாலைப் புரிந்துணர்வு திட்டத்தின் கீழ் சேர்க்கை பெற்று இளநிலை, முதுநிலை மற்றும் பிற பாடப்பிரிவுகளில் படித்த மாணவர்களின் படிப்புக்காலம் முடிந்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அரியர் வைத்துள்ள மாணவர்கள் தங்களது அரியருக்கு உரிய தேர்வை எழுதுவதற்காக சிறப்பு தேர்வு நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.</p><h2>காலஅவகாசம் நீட்டிப்பு</h2><p>2017-ம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பு படித்த மாணவர்கள் தாங்கள் படித்த பாடத்திட்டத்திலேயே அரியர் தேர்வுகளை எழுதலாம் என்றும், சிறப்புத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் வழக்கமான தேர்வுக்கட்டணத்துடன் சிறப்புக் கட்டணமாக ஒவ்வொரு பாடத்தாளிற்கும் ரூ.2 ஆயிரம் சேர்த்துச் செலுத்த வேண்டும். இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் கடந்த மாதம் 15-ந் தேதியுடன் முடிந்து விட்டது. இந்த நிலையில் சிறப்புத் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் வருகிற 28-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பங்கள் பல்கலைக்கழக வலைத்தளமான www.periyaruniversity.ac.in இல் வெளியிடப்பட்டுள்ளது என்றும் இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறும் <a href="https://www.dailythanthi.com/topic/salem-periyar-university">பெரியார் பல்கலைக்கழக</a> துணைவேந்தர் குழு தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காவல் மரணங்களை விசாரிக்க உயர்மட்ட குழு அமைக்க வேண்டும்: டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-high-level-committee-must-be-constituted-to-investigate-custodial-deaths-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-high-level-committee-must-be-constituted-to-investigate-custodial-deaths-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">5a21d6b0-346c-46b4-be36-e55bd08a746e</guid><pubDate>Tue, 18 Aug 2026 04:58:57 +0000</pubDate><atom:updated>2026-08-18T04:58:57.394Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,காவல் மரணங்கள்,Custodial deaths</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/9nt3avhm/ttv.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/9nt3avhm/ttv.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>“மதுரை சிந்தாமணி காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் உயிரிழந்ததாக புகார் – தவெக ஆட்சியில் தொடரும் காவல் மரணங்கள் குறித்து உயர்மட்டக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும். </p><p>மதுரை அனுப்பானடி அருகே பொது இடத்தை பயன்படுத்துவதில் இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக விசாரணைக்காக சிந்தாமணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பரமசிவம் உயிரிழந்துள்ளதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகின்றன.  </p><p>கடந்த ஜூலை 19ஆம் தேதி சிந்தாமணி காவல் நிலையத்தில் வைத்து காவலர்கள் இணைந்து கண்மூடித்தனமாக தாக்கியதில் பரமசிவம் பலத்த காயமடைந்ததாகவும், அதனைத் தொடர்ந்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்</p><p>பொதுமக்களுக்கு பாதுகாப்பையும், சட்டத்தின் மீது நம்பிக்கையையும் அளிக்க வேண்டிய காவல்நிலையங்களில் தொடர்ந்து அரங்கேறும் இதுபோன்ற காவல் மரணங்கள், காவல்துறையின் மீது பொதுமக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.  </p><p>எனவே, சிந்தாமணி காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் உயிரிழந்தது தொடர்பாக விரிவான விசாரணை நடத்திடுவதோடு, தொடர்ந்து அதிகரிக்கும்  காவல் மரணங்கள் குறித்து உயர்மட்ட  குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/incident-of-three-tamils-shot-dead-in-karnataka-calling-attention-motion-in-the-legislative-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/incident-of-three-tamils-shot-dead-in-karnataka-calling-attention-motion-in-the-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">fe75cac8-f48f-4533-a7a7-0e536a7ec44c</guid><pubDate>Tue, 18 Aug 2026 04:55:49 +0000</pubDate><atom:updated>2026-08-18T04:55:49.656Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,Karnataka,கர்நாடகா,TN Assembly,கவன ஈர்ப்பு தீர்மானம்,Tamilans,தமிழர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/915oskfn/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/915oskfn/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர்.</p><p>சென்னை,</p><h2>பட்ஜெட்</h2><p>சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பொது பட்ஜெட் கடந்த 5-ந்தேதியும், வேளாண்மை பட்ஜெட் 6-ந்தேதியும் தாக்கல் செய்யப்பட்டது. பொது மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதம் கடந்த 7, 10, 11 ஆகிய 3 நாட்கள் நடைபெற்றது. நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண்மை அமைச்சர் வினோத் ஆகியோர் தங்களது பதிலுரையை கடந்த 12-ந்தேதி வழங்கினார்கள்.</p><p>இந்த நிலையில், மானிய கோரிக்கை விவாதத்தின் 2-வது நாள் அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று இளைஞர் நலன், விளையாட்டு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை பொதுப்பணி, மனிதவள மேம்பாட்டுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது. இந்த விவாதத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் அமைச்சர் சரத்குமார் ஆகியோர் பதில் அளித்து பேசுவார்கள். நிறைவாக, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிடுவார்கள்.</p><h2>கவன ஈர்ப்பு தீர்மானம்</h2><p>சட்டசபை கூட்டம் தொடங்கியதும் கர்நாடகா வனத்துறையில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக எதிர்கட்சி தலைவர் உதயநிதி, அதிமுகவின் இபிஎஸ், பாமகவின் சௌமியா, பாஜக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். அந்த தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் உரையாற்றினர்.</p><p><strong>திமுக சார்பில் எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் பேசியதாவது:-</strong> “கர்நாடகாவில் தமிழர்கள் 3 பேர் போலி என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளனர். எங்கே தமிழன் பாதிக்கப்பட்டாலும் முதல்முதலில் குரல்கொடுதவர் எங்கள் தலைவர் (மு.க.ஸ்டாலின்).. 3 பேரை சுட்டுக் கொன்றது மனித உரிமை மீறல்.</p><p>வனத்துறையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இது குறித்து தெளிவான நீதி விசாரணை நடைபெற வேண்டும். தமிழ்நாடு அரசு இந்த கொலையை கண்டித்து, கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.</p><p><strong>அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,</strong> “கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். நியாயமான விசாரணை வேண்டும் என்றால் சிபிஐ விசாரித்தால் தான் உண்மை வெளிவரும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் தொடராத வகையில் கர்நாடக அரசுடன் தமிழக அரசு பேச வேண்டும்; கர்நாடகா வழங்கிய ரூ.5 லட்சம் நிதியுதவி மிக குறைவானது; தமிழக அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும்” என்றார்.</p><p><strong>இ.கம்யூ எம்.எல்.ஏ ராமச்சந்திரன் பேசுகையில்,</strong> “கர்நாடாகவில் 3 தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசின் சார்பாக கர்நாடக அரசு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தேவை; குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும்’ என்று கூறினார்.</p><p><strong>பாமக எம்.எல்.ஏ. கணேஷ்குமார் கூறியதாவது:-</strong> “மாடுகளை தேடி சென்ற தமிழர்கள் என்கவுன்ட்டர். குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். மான் வேட்டைக்கு சென்றார்கள் என கூறுவது பொய். சிபிஐ விசாரணை வேண்டும்” என்றார்.</p><p>கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்பதே தமிழ்நாடு காங்கிரஸின் நிலைப்பாடு என்று எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மதுரை கோவில் பூசாரி மரணம்: காவல் நிலைய மரணங்களை தடுக்க அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-temple-priest-dies-anbumani-urges-government-to-prevent-police-station-deaths</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-temple-priest-dies-anbumani-urges-government-to-prevent-police-station-deaths#comments</comments><guid isPermaLink="false">baf5d199-0a49-4536-b053-7514ae7986c9</guid><pubDate>Tue, 18 Aug 2026 04:37:03 +0000</pubDate><atom:updated>2026-08-18T04:37:03.137Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி,Anbumani,Madurai,மதுரை,temple priest,கோவில் பூசாரி,காவல் மரணம்,Lockup Death</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/f7e2hek2/anbumani.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/f7e2hek2/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>மதுரையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் பூசாரி காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். </p><h2>கோவில் பூசாரி உயிரிழப்பு</h2><p>மதுரை சிந்தாமணி காவல் நிலையத்திற்கு  விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட  மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்த கோவில் பூசாரி பரமசிவம் என்பவரை, காவல்நிலையத்தில் வைத்து  கொடூரமாகத் தாக்கியதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில்  தீவிர மருத்துவம் அளிக்கப்பட்டும் பயனின்றி உயிரிழந்தார் என்று வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.  பூசாரி பரமசிவம் அவர்களை இழந்து வாடும்  குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்,  அனுதாபங்களையும்  தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2>வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட மோதல்</h2><p>காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்த பரமசிவம் எந்த தவறும் செய்யவில்லை. அண்டை வீட்டாருடன் வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட மோதல் தொடர்பான விசாரணைக்காக கடந்த மாதம்  19-ஆம் தேதி  அழைத்துச் சென்ற  சிந்தாமணி காவல் நிலைய காவலர்கள், அவரை கொடூரமாகத் தாக்கியதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து வாந்தி, மயக்கம், தலைவலி ஏற்பட்டு அவதிப்பட்ட பரமசிவம்  மதுரை  தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டும் பயனின்றி  உயிரிழந்திருக்கிறார். காவல்துறையினர் தம்மை கொடூரமாகத் தாக்கியது தான் தமது உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடுவதற்கு காரணம் என்று இறப்பதற்கு முன் பதிவு செய்யப்பட்ட காணொலியில் பரமசிவம் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><h2>காவல்துறையினர் கொடூர தாக்குதல்</h2><p>விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுவோரை காவல்துறையினர் கொடூரமாகத் தாக்குவதும், அதில் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பதும்  அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.  நாகர்கோவில் கிளைச்சிறையில் சபரிவர்மன் என்ற மாற்றுத்திறனாளியும், தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த அருணாச்சலம் என்ற இளைஞரும் முறையே சிறைத்துறையினர், காவல்துறையினர்  தாக்கியதில் உயிரிழந்ததால் ஏற்பட்ட பதட்டம் விலகும் முன்பே  மதுரை கோவில் பூசாரி பரமசிவம் உயிரிழந்தது மனித உரிமை மீறல்கள் குறித்த கவலையை  அதிகரித்துள்ளது.</p><h2>6 காவல் மரணங்கள்</h2><p>ஆட்சிக்கு வந்தால் காவல் மரணங்கள் முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்படும் என்று கடந்த தேர்தலின் போது தவெக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பின்  இது வரை 6 காவல் மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக குற்றச்சாட்டுகள்  எழுந்துள்ளது.  இனிவரும் காலங்களில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D">காவல் மரணங்கள்</a> நடப்பதை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும். காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்த  பரமசிவம்  குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இதற்கு காரணமான காவலர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தங்கம் விலை சற்று உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன.?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/gold-price-rises-slightly-what-is-the-situation-today-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/gold-price-rises-slightly-what-is-the-situation-today-2#comments</comments><guid isPermaLink="false">2390c623-c6a4-4f38-8733-ef4233dea761</guid><pubDate>Tue, 18 Aug 2026 04:29:47 +0000</pubDate><atom:updated>2026-08-18T04:29:47.516Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>தங்கம் விலை,தங்கம் விலை நிலவரம்,இன்றைய தங்கம் விலை,Gold Price,today gold rate,gold rate today</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/s1tp3ft4/gold.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/s1tp3ft4/gold.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே உயர்ந்து வருகிறது. நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,14,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,270-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p><h2>தங்கம் விலை</h2><p>இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,14,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,290-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><h2>வெள்ளி விலை</h2><p>வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. </p>]]></content:encoded></item><item><title>10 நாட்களுக்குப் பின் அனுமதி: அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள்  உற்சாக குளியல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/permission-granted-after-10-days-tourists-enjoy-an-enthusiastic-dip-at-agasthiyar-falls</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/permission-granted-after-10-days-tourists-enjoy-an-enthusiastic-dip-at-agasthiyar-falls#comments</comments><guid isPermaLink="false">d1b76d37-6150-44c8-97a4-48ff207b8360</guid><pubDate>Tue, 18 Aug 2026 04:24:36 +0000</pubDate><atom:updated>2026-08-18T04:24:36.422Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tourists,சுற்றுலா பயணிகள்,அகஸ்தியர் அருவி,agasthiyar falls</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/6g6mqute/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/6g6mqute/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>10 நாட்களுக்கு பிறகு பாபநாசம் அகஸ்தியர் அருவிக்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.</p> <p>10 நாட்கள் தடைக்கு பிறகு அனுமதி</p><p>பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் கடந்த 12-ந்தேதி ஆடி அமாவாசை திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழா மற்றும் இதன் முன்னேற்பாடு பணிகள், தூய்மைப் பணிகள் உள்ளிட்ட காரணங்களால் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு கீழே மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள பிரசித்தி பெற்ற அகஸ்தியர் அருவிக்கு கடந்த 7-ந் தேதியில் இருந்து நேற்று முன்தினம் வரையிலும் 10 நாட்கள் பொதுமக்கள் செல்ல வனத்துறையினர் தடைவி தித்து இருந்தனர். தொடர்ந்து நேற்று முதல் வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அகஸ்தியர் அருவிக்கு செல்ல வனத்துறையினர் அனுமதி வழங்கினர்.</p><p>சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்</p><p>இதன் காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் காலை யில் இருந்தே குடும்பத்துடன் வந்து அருவியில் குளித்து சென்றனர். இதேபோல் கடந்த இரு தினங்களாக சொரிமுத்து அய்யனார் கோவில் தூய்மைப் பணிகள் காரணமாக பாபநாசம் வனச்சோதனை சாவடியும் மூடப்பட்டு இருந்த நிலையில் நேற்று முதல் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கும் பக்தர்கள் வழக்கம் போல் அனுமதிக்கப்பட்டனர்.</p> ]]></content:encoded></item><item><title>குரங்கினை பிடித்து துன்புறுத்திய விவகாரம்: 2 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/incident-involving-the-capture-and-torment-of-a-monkey-two-individuals-fined-25000-each</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/incident-involving-the-capture-and-torment-of-a-monkey-two-individuals-fined-25000-each#comments</comments><guid isPermaLink="false">04a3447c-95ef-4541-b6e5-87d32d424c4a</guid><pubDate>Tue, 18 Aug 2026 04:21:10 +0000</pubDate><atom:updated>2026-08-18T04:21:10.425Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,அபராதம்,Perambalur,பெரம்பலூர்,குரங்கு,monkey,அரசு பாலிடெக்னிக் கல்லூரி,Government Polytechnic</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/gcegu0jt/mon.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/gcegu0jt/mon.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பெரம்பலூர், </p><p><a href="https://www.dailythanthi.com/topic/perambalur">பெரம்பலூர்</a> மாவட்டம், கீழக்கணவாய் கிராமத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில் குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததாக கூறப்படுகிறது.</p><h2>வீடியோ காட்சிகள்</h2><p>இந்த நிலையில் மாணவ-மாணவிகளின் நலன் கருதி கல்லூரி நிர்வாகம், வளாகத்தில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடிக்க முடிவு செய்துள்ளனர். இதையடுத்து சம்பவத்தன்று குரங்குகளை பிடிக்க 2 பேர் கல்லூரிக்கு வந்துள்ளனர். அவர்கள் குரங்குகளை துன்புறுத்தி பிடித்ததாக கூறப்படுகிறது. குரங்கினை துன்புறுத்தி பிடித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. </p><h2>ரூ.25 ஆயிரம் அபராதம்</h2><p>இதனை கண்ட பெரம்பலூர் வனத்துறையினர் மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில் குரங்கினை துன்புறுத்தி பிடித்த விவகாரம் குறித்து கல்லூரி முதல்வர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து வனத்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக, குரங்கு பிடிப்பாளர்களான புதுக்கோட்டை மாவட்டம் மாதிரிப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ஜீவா(வயது 20), திருச்சி மாவட்டம் துறையூர் பெருமாள் மலை அடிவாரத்தை சேர்ந்த சின்னத்துரை (70) ஆகியோருக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>நடிகை திவிஷா தற்கொலை வழக்கு; கணவர், மாமியார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/actress-divisha-suicide-case-charge-sheet-filed-against-husband-and-mother-in-law</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/actress-divisha-suicide-case-charge-sheet-filed-against-husband-and-mother-in-law#comments</comments><guid isPermaLink="false">6a164725-c830-4a29-80c2-ef92c65250b4</guid><pubDate>Tue, 18 Aug 2026 04:18:15 +0000</pubDate><atom:updated>2026-08-18T04:18:15.091Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>குற்றப்பத்திரிகை,தற்கொலை வழக்கு,திவிஷா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/4x986c37/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/4x986c37/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>போபால்,</p><p>மாடல் அழகியும், நடிகையுமான திவிஷாவுக்கும், மத்தியபிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த வக்கீல் சமர்த் சிங்குக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் 9-ந் தேதி திருமணம் நடந்தது. போபாலில் கணவர் வீட் டில் வசித்து வந்த திவிஷா, அங்கு கடந்த மே 12-ந் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். </p><p>இதையடுத்து திவிஷாவின் குடும்பத்தினர் போலீசில் அளித்த புகாரில், திவிஷாவின் புகுந்த வீட்டினர் கூடுதல் வரதட்சணை கேட்டு திவிஷாவை சித்ரவதை செய்ததாகவும், மனஉளைச்சல் ஏற்படுத்தியதாகவும் கூறியிருந்தனர்.</p><p>அதன்பேரில், சமர்த் சிங்கும், அவரது தாயாரும், முன்னாள் மாவட்ட நீதிபதியுமான கிரிபாலா சிங்கும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், போபாலில் உள்ள தனிக் கோர்ட்டில் சமர்த் சிங், கிரிபாலா சிங் ஆகியோர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.</p>]]></content:encoded></item><item><title>கோவில் திருவிழாவில் மோதல்: 2 வாலிபர்கள் வெட்டிக்கொலை; ஒருவர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/clash-at-temple-festival-two-youths-hacked-to-death-one-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/clash-at-temple-festival-two-youths-hacked-to-death-one-arrested#comments</comments><guid isPermaLink="false">60151ee0-20b8-4a41-b60c-4db4fbff12e5</guid><pubDate>Tue, 18 Aug 2026 04:01:15 +0000</pubDate><atom:updated>2026-08-18T04:01:15.682Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Crime News,தமிழகம்,கிரைம் செய்திகள்,Kanchipuram,காஞ்சிபுரம்,Temple festival,கோவில் திருவிழா,double murder,இரட்டை கொலை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/rzqfitdh/nker.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/rzqfitdh/nker.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>காஞ்சிபுரம், </p><p>கோவில் விழாவில் 2 வாலிபர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><h2>வாலிபர்கள் வெட்டிக்கொலை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/kanchipuram">காஞ்சிபுரம்</a> மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நடைபெற்றது. ஆடித்திருவிழாவின் ஒரு பகுதியாக இரவு சாமி வீதிஉலா நடைபெற இருந்த நிலையில் கோவில் அருகே சாமியை அலங்காரம் செய்யும் பணி நடைபெற்றது. சாமி அலங்காரம் செய்யும் இடத்தில் இரு பிரிவினரிடையே வாய்த்தகராறு ஏற்பட்டு தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது.</p><p>இதனால் கோபம் அடைந்த நபர்கள் சிலர் கஞ்சா போதையில் நள்ளிரவில் படுநெல்லி கிராமத்தை சேர்ந்த சந்திரசேகரன் (வயது 27), நீலகண்டன் (27) ஆகியோரை மதுபான பாட்டில்களால் அடித்தும், கத்தியால் வெட்டி விட்டும் தப்பிச்சென்றனர். இதில் படுகாயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்து போனார்கள். இதனால் படுநெல்லி கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.</p><h2>தப்பி ஓடிய நபர்கள்</h2><p>இந்த கொலை சம்பவம் குறித்து பொன்னேரிகரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.</p><p>இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொன்னேரிகரை போலீசார் அந்த பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டு ஆதாரங்களை சேகரித்து கஞ்சா மற்றும் மது போதையில் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய நபர்களை தேடும் பணி யில் ஈடுபட்டனர்.</p><h2>உறவினர்கள் சாலை மறியல்</h2><p>கொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் சிலர் காஞ்சிபுரம்- அரக்கோணம் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு கொலையாளிகளையும் அவர்களின் குடும்பத்தினரையும் விரைந்து கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீர் சாலை மறியல் போராட்டம் காரணமாக காஞ்சிபுரம்- அரக்கோணம் சாலையில் நேற்று காலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.</p><p>இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பாதுகாப்புக்காக வந்த போலீசார், கொலையாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி சமாதான பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிட வைத்தனர்.</p><h2>ஒருவர் கைது</h2><p>இந்நிலையில் கோவில் திருவிழாவின்போது இருவரை வெட்டிக் கொன்ற வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தடுக்கி விழுந்ததில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் சில நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>ரெயில் பெட்டிக்குள் அமர்ந்து சாப்பிடலாம்! சேலத்தில் வித்தியாசமான உணவகம் தொடக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/you-can-eat-sitting-inside-the-train-compartment-a-unique-restaurant-opens-in-salem</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/you-can-eat-sitting-inside-the-train-compartment-a-unique-restaurant-opens-in-salem#comments</comments><guid isPermaLink="false">c8fafa1f-e7e4-4244-bb01-67e1f3939cf7</guid><pubDate>Tue, 18 Aug 2026 03:58:49 +0000</pubDate><atom:updated>2026-08-18T03:58:49.149Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>train,Salem,சேலம்,தொடக்கம்,open,ரெயில் பெட்டி,உணவகம்,restaurant,compartment</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/qft8osze/120.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/qft8osze/120.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம் அயோத்தியாப்பட்டணம் மெயின் ரோட்டில் ரெயில் பெட்டி உணவகம் புதிதாக தொடங்கப்பட்டு உள்ளது. இந்த உணவகத்தை நேற்று சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் பன்னாலால் திறந்து வைத்தார். ரெயில் பெட்டிக்குள் அமர்ந்து உணவு சாப்பிடும் வித்தியாசமான அனுபவத்தை இந்த உணவகம் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-</p><h2>ரெயில் பெட்டி உணவகம்</h2><p>அயோத்தியாப்பட்டணத்தில் ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் இந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">ரெயில் </a>பெட்டி உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. ரெயில்வேயின் கட்டணமில்லா வருவாய் கொள்கையின் கீழ் இந்த உணவகம் நடத்துவதற்கு 5 ஆண்டுகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. பயன்படுத்தப்படாமல் இருந்த பழைய ரெயில் பெட்டி ஒன்று ஒப்பந்ததாரர் மூலம் புதுப்பிக்கப்பட்டு, பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு உணவு விற்பனை செய்யும் வகையில் தேவையான வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த திட்டத்தின் மூலம் ஒப்பந்த காலமான 5 ஆண்டுகளில் சேலம் ரெயில்வே கோட்டத்துக்கு ரூ.46 லட்சத்து 20 ஆயிரம் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள். நிகழ்ச்சியில் சேலம் கோட்ட கூடுதல் ரெயில்வே மேலாளர் சரவணன், கோட்ட வணிக மேலாளர் மல்லிகா, முதுநிலை கோட்ட மின் பொறியாளர் (பொது) பல்ராம்குமார். கோட்ட பாதுகாப்பு ஆணையர் ராகேஷ் பாண்டே மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>கணவரின் இறப்புக்கு நிவாரணம் கேட்டு 54 ஆண்டுகளாக போராடும்  85 வயது மூதாட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/85-year-old-woman-fights-for-54-years-seeking-compensation-for-husbands-death</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/85-year-old-woman-fights-for-54-years-seeking-compensation-for-husbands-death#comments</comments><guid isPermaLink="false">a6d5e8d4-64a7-4db4-b6be-45085d9e5430</guid><pubDate>Tue, 18 Aug 2026 03:53:35 +0000</pubDate><atom:updated>2026-08-18T03:53:35.659Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Compensation,Thoothukudi,தூத்துக்குடி,நிவாரணம்,மூதாட்டி,Elderly woman</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/pigm0p02/6.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/pigm0p02/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,  </p><p>தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையை சேர்ந்த குப்புசாமி, பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக, வேலை பார்த்தார். கடந்த, 1972 அக்., 2ல் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தேசிய கொடி ஏற்ற, கொடி கம்பம் நடும் பணியில் ஈடுபட்டபோது, குப்புசாமி உட்பட மூவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர்.</p><p>அவரது இறப்புக்கு, நிவாரணம் கேட்டு, 54 ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில், உச்சிமகாளி தொடர்ந்து மனு அளித்து வருகிறார். இதுவரை எந்த பலனும் இல்லை. நேற்று, துாத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில், உச்சிமகாளி அளித்த மனுவில், 'என் கணவர் இறப் புக்கு நிவாரணம் கேட்டு, 54 ஆண்டுகளாக அரசாங்கத்திடம் மனு அளித்தும், உரிய நடவடிக்கை இல்லை. 'கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். வறுமையில் வாழும் எனக்கு, கணவரின் பணிக்கால இறப்புக்கான உரிய நஷ்ட ஈடும், ஓய்வூதியமும் வழங்க வேண்டும்' என, கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஆசிரியையை கட்டிப்போட்டு நகை பறித்த தோழி உள்பட 2 பெண்கள் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/2-women-including-friend-arrested-for-tying-up-teacher-and-stealing-her-jewelry</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/2-women-including-friend-arrested-for-tying-up-teacher-and-stealing-her-jewelry#comments</comments><guid isPermaLink="false">595746fd-5714-4f96-b941-1f61c5e11507</guid><pubDate>Tue, 18 Aug 2026 03:36:38 +0000</pubDate><atom:updated>2026-08-18T03:36:38.615Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நகை பறிப்பு,2 பெண்கள் கைது,Teacher,ஆசிரியை,women arrested,stealing jewelry</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/r1aowyrx/arrest1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/r1aowyrx/arrest1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சோழவந்தான், </p><p>சோழவந்தானில் ஆசிரியையை கட்டிபோட்டு நகை பறித்த சம்பவத்தில் பர்தா அணிந்து வந்து கைவரிசை காட்டிய அவரது தோழி உள்பட 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.</p><h2>ஆசிரியை மீது தாக்குதல்</h2><p>மதுரை மாவட்டம் சோழவந்தான் மார்க்கெட் ரோடு பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் வசித்து வருபவர் கார்த்திகேயன். இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 43). ராஜலட்சுமி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். வீட்டில் டியூசனும் நடத்தி வந்தார் நேற்று முன்தினம் ராஜலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட பர்தா அணிந்த 2 பெண்கள் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, ராஜலட்சுமியின் வாயில் துணியை வைத்து அடைத்து. அவரது கை மற்றும் கால்களை கட்டிப் போட்டதாக கூறப்படுகிறது. 2 பெண்களும் ராஜலட்சுமியை அடித்து, உதைத்து, அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு தப்பி சென்றனர்.</p><h2>2 பெண்கள் கைது</h2><p>இதுகுறித்து சோழவந்தான் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் உத்தரவின்பேரில் சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தராஜ் ஆலோசனையின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.</p><p>தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது சோழவந்தான் அருகே தென்கரையை சேர்ந்த கார்த்தி என்பவரின் மனைவி அன்னபூரணி (41), அதே ஊரைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மனைவி கனிமொழி (36) என்பதும் தெரியவந்தது. இதில் அன்னபூரணி ஆசிரியை ராஜலட்சுமிக்கு தோழி என்றும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சுப்பையா, சப்-இன்ஸ்பெக்டர் அழகர்சாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து 2 பெண்களையும் <a href="https://www.dailythanthi.com/topic/arrest-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்து, அவர்களிடம் இருந்து நகையை கைப்பற்றினர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>வாலிபரை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முதலில் தாக்கினாரா? - தஞ்சை போலீஸ் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/did-the-special-sub-inspector-attack-the-young-man-first-thanjavur-police-clarification</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/did-the-special-sub-inspector-attack-the-young-man-first-thanjavur-police-clarification#comments</comments><guid isPermaLink="false">cfe0d1d5-4092-4aba-a4fd-236588d757b4</guid><pubDate>Tue, 18 Aug 2026 03:23:17 +0000</pubDate><atom:updated>2026-08-18T03:23:17.466Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,போலீஸ்,Thanjavur,Youth,வாலிபர்,தஞ்சாவூர்,சப்-இன்ஸ்பெக்டர்,Tanjore,Sub Inspector,Thanjavur police</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/vbd4gnu3/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/vbd4gnu3/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர்,</p><p>தஞ்சையில் தன்னை தாக்கிய சிறப்பு சப்-இன்ஸ் பெக்டரின் கன்னத்தில் அறைந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.</p> <p><strong>இந்த சம்பவம் குறித்து தஞ்சாவூர் போலீஸ் வெளியிட்ட விளக்க அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-</strong></p><p>தஞ்சை ரெயில் நிலையம் முன்பு நேற்று காலை 12 மணி அளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சுமார் 40 பேர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அவ்வழியில் போக்குவரத்து தடை ஏற்பட்டிருந்தது. அப்போது, ஆகாஷ் (26) என்பவர் இருசக்கர வாகனத்தில் அவ்வழியாக வந்தபோது, தொடர்ந்து ஹாரன் அடித்துள்ளார். இதனால், அரசியல் கட்சியினருக்கும் ஆகாஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.</p><p>வாக்குவாதம் மேலும் முற்றி இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படாமல் தடுக்கும் வகையில், பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரஹீம் தலையிட்டு, ஆகாஷை அமைதிப்படுத்தி அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். அப்போது, ஆகாஷ் போலீசாரை நோக்கி தொடர்ச்சியாக ஒருமையில் மரியாதையற்ற மற்றும் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.</p><p>தொடர்ந்து வாக்குவாதத்தில் அந்த நபர் ஈடுபட்டதாலும் நிலைமை மேலும் மோசம் அடையாமல் கட்டுக்குள் கொண்டு வரவும் குறைந்தபட்ச பல பிரயோகத்தை எஸ்.எஸ்.ஐ. ரஹீம் பயன்படுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து, அந்த நபர் உடனடியாக ரஹீமை கன்னத்தில் அறைந்துள்ளார். உடனடியாக போலீசார் தலையிட்டு, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.</p><p>இந்த சம்பவத்தில் அந்த நபரின் செயல் மேலும் சட்ட ஒழுங்கு பிரச்சனை உருவாக்காமல் தடுக்கும் நோக்கத்திலேயே குறைந்தபட்ச பலபிரயோகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆகாஷ் மீது ஏற்கனவே தஞ்சை தாலுகா காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு பெண் ஒருவரை தாக்கியது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது தெரிய வருகிறது.</p><p>மேலும் சில மாதங்களுக்கு முன்பு அவர் பணிபுரியும் இடத்தில் தனது மேற்பார்வையாளரிடம் தகாத மற்றும் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியதாக அவருடைய மேற்பார்வையாளர் மூலம் புகார் அளிக்கப்பட்டு பின்னர் இருதரப்பினரிடையே சமரசம் ஏற்பட்டதாகவும் தெரிய வருகிறது. போலீசார் ஆகாஷை தேவையின்றி தாக்கியதாக கூறப்படும் தகவல் உண்மைக்கு மாறானது.</p><p>அரசியல் கட்சியினருக்கும் ஆகாஷுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மேலும் முற்றி சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாக மாறாமல் தடுப்பதே போலீசாரின் முதன்மையான நோக்கமாக இருந்தது. சம்பவத்தின் போது போலீசார் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p><p><strong>வழக்கின் முழுவிரம்:-</strong></p><h2>விசிகவினர் சாலை மறியல்</h2><p>தஞ்சை ரெயில் நிலையம் முன்பு விசிக சார்பில் அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்த நாள் மற்றும் மாநாடு தொடர்பான விளம்பர பேனர் வைக்கப்பட்டு இருந்தது. அனுமதியின்றி அந்த விளம்பர பேனர் வைக்கப்பட்டிருந்ததாக அந்த பேனரை நேற்று மாநக ராட்சி அலுவலர்கள் அகற்றினர்.</p><p>இதை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு விசிகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அகற்றிய பேனரை அதே இடத்தில் மீண்டும் வைக்க வேண்டும் எனக் கூறி, மாநகராட்சி அலுவலகம் எதிரே சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர்.</p><h2>போக்குவரத்து நெரிசல்-வாக்குவாதம்</h2><p>போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மேற்கு போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் பேனரை மீண்டும் வைத்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என வாக்குவாதம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த ஏராளமான பொதுமக்கள் வழி விடுமாறு கூறி வி.சி.க.வினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.</p><h2>போலீசார் சமாதானம்</h2><p>இதேபோல அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரும் வழிவிடுமாறு கூறியதால் வி.சி.க.வினர் அந்த வாலிபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அந்த வாலிபரை சமாதானப்படுத்த முயன்றனர். தன்னை சமாதானப்படுத்திய போலீசாரிடம், அந்த வாலிபர், தான் வேலைக்கு செல்ல வேண்டும். நான் வேலைக்கு செல்லாவிட்டால் என்னுடையை சம்பளத்தை யார் தருவார்கள்? எனக்கேட்டு வாக்குவாதம் செய்தார். அப்போது போலீசார், வாலிபரிடம் அமைதியாக இருக்கும்படி கூறினர்.</p><h2>கன்னத்தில் அறைந்த...</h2><p>இது தொடர்பாக போலீசாருக்கும். அந்த வாலிபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த வாலிபரை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் ரஹீம், தாக்கினார். உடனே ஆவேசமான அந்த வாலிபர் பதிலுக்கு அப்துல் ரஹீமின் கன்னத்தில் அறைந்தார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், அந்த இளைஞரை குண்டுக்கட்டாக தூக்கி ஜீப்பில் ஏற்றி மேற்கு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.</p><h2>கைது</h2><p>போலீசாரின் விசாரணையில் அந்த வாலிபர் தஞ்சை அருகே உள்ள விளார் கிராமத்தை சேர்ந்த ஆகாஷ்(வயது 26) என் பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரும், வாலிபரும் சாலையில் தாக்கிக்கொண்ட வீடியோ காட்சிகள் சமூகவலைதளங் களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கிடையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் கன்னத்தில் அறைந்த ஆகாஷ் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/inflow-to-mettur-dam-increases</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/inflow-to-mettur-dam-increases#comments</comments><guid isPermaLink="false">08c4ff5f-29e4-4104-8d2c-adb5db25e47b</guid><pubDate>Tue, 18 Aug 2026 03:21:33 +0000</pubDate><atom:updated>2026-08-18T03:21:33.608Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,மேட்டூர் அணை,Mettur dam,Salem,சேலம்,காவிரி ஆறு,நீர்வரத்து அதிகரிப்பு,Cauvery,மேட்டூர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/wu3ni61x/mettur.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/wu3ni61x/mettur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம், </p><p><a href="https://www.dailythanthi.com/topic/mettur-dam">மேட்டூர் அணை</a>க்கு காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 12,350 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. </p><h2>தண்ணீர் திறப்பு</h2><p>காவிரி மேலாண்மை வாரியம் கடந்த 15-ந் தேதி முதல் தொடர்ந்து 10 நாட்க ளுக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தர விட்டுள்ளது. இந்த நிலையில் கபினி அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி தண்ணீரும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 2 ஆயிரத்து 298 கன அடி தண்ணீரும் என மொத்தமாக 12 ஆயிரத்து 298 கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>காவிரி ஆறு </h2><p>இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று காலை 6 மணி நிலவரப்படி 12 ஆயிரத்து 500 கன அடியானது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.</p><p>மேலும், ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, சினிப்பால்ஸ், உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.</p><h2>3-வது நாளாக தடை</h2><p>காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக -கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து 3-வது நாளாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று (ஆக.18) காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 14,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.</p><h2>மேட்டூர் அணை</h2><p>இதற்கிடையே <a href="https://www.dailythanthi.com/topic/mettur-dam">மேட்டூர் அணை</a>க்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 15-ந் தேதி அணைக்கு வினாடிக்கு 4,385 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து நேற்றுமுன்தினம் வினாடிக்கு 6,179 கன அடியாக அதிகரித்தது. இந்தநிலையில், நேற்று காலை மேலும் அதிகரித்து வினாடிக்கு 8 ஆயிரத்து 555 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.</p><p>மாலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 82.13 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 12,174 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. </p><p>இந்நிலையில் மேட்டூர் அணைக்கு இன்று (செவ்வாய் கிழமை) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 12,350 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. குடிநீருக்காக 2,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், நீர் இருப்பு 44.701 டிஎம்சியாக உள்ளது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்குமானால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்புள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பெரம்பலூர் டீக்கடையில் சிலிண்டர் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/death-toll-rises-to-4-in-perambalur-tea-shop-cylinder-explosion</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/death-toll-rises-to-4-in-perambalur-tea-shop-cylinder-explosion#comments</comments><guid isPermaLink="false">34af5111-7274-4811-95bb-17826540a33a</guid><pubDate>Tue, 18 Aug 2026 02:58:35 +0000</pubDate><atom:updated>2026-08-18T02:58:35.203Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Perambalur,பெரம்பலூர்,tea shop,சிலிண்டர் விபத்து,டீக்கடை,cylinder explosion</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/lc1tn8oz/CHENNAI-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/lc1tn8oz/CHENNAI-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>பெரம்பலூர்,</p><p>பெரம்பலூரில் உள்ள டீக்கடையில் சிலிண்டர் வெடித்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.</p><h2>சிலிண்டர் வெடித்தது</h2><p>பெரம்பலூர் காமராஜர் வளைவு போக்கு வரத்து சிக்னல் அருகே குறிஞ்சி நகரை சேர்ந்த அருணாச்சலம் என்பவர் நடத்தி வந்த டீக்கடையில் கடந்த 11-ந்தேதி கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 4 பெண்கள் உள்பட 16 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். மேலும், டீக்கடை அருகே நிறுத்தப்பட்டிருந்த 17 மோட்டார் சைக்கிள்களும் சேதம் அடைந்தன.</p><p>படுகாயமடைந்தவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த பொம்மனப்பாடியை சேர்ந்த கார் டிரைவர் மணிகண்டன் கடந்த 13-ந்தேதியும், டீ மாஸ்டர் சிறுகுடலை சேர்ந்த தினேஷ்குமார், பெரம்பலூர் ரெங்கா நகரை சேர்ந்த சகாதேவன் ஆகியோர் கடந்த 15-ந்தேதியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.</p><h2>டீக்கடை ஊழியர் சாவு</h2><p>இந்த நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டீக்கடை ஊழியரான ஆலத்தூர் தாலுகா, கொட்டரை கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (வயது 50) நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் டீக்கடையில் சிலிண்டர் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. மீதமுள்ள 12 பேருக்கு மருத்துவமனைகளில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தன்னை தாக்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் கன்னத்தில் அறைந்த வாலிபர் மீது வழக்குப்பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-registered-against-a-young-man-who-slapped-a-special-sub-inspector-who-had-assaulted-him</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-registered-against-a-young-man-who-slapped-a-special-sub-inspector-who-had-assaulted-him#comments</comments><guid isPermaLink="false">6e409931-d406-4090-bf0f-9b9f40348342</guid><pubDate>Tue, 18 Aug 2026 02:52:56 +0000</pubDate><atom:updated>2026-08-18T02:52:56.218Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,தஞ்சாவூர்,சப்-இன்ஸ்பெக்டர்,விசிக,VCK,விசிக மாநாடு,Sub Inspector,Tanjaore,V.C.K.</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/yhgryfwd/arest.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/yhgryfwd/arest.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர், </p><p>தன்னை தாக்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் கன்னத்தில் அறைந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.</p><p>தஞ்சையில் நடந்த இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-</p><h2>வி.சி.க.வினர் சாலை மறியல்</h2><p>தஞ்சை ரெயில் நிலையம் முன்பு <a href="https://www.dailythanthi.com/topic/vck">வி.சி.க.</a> சார்பில் அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்த நாள் மற்றும் மாநாடு தொடர்பான விளம்பர பேனர் வைக்கப்பட்டு இருந்தது. அனுமதியின்றி அந்த விளம்பர பேனர் வைக்கப்பட்டிருந்ததாக அந்த பேனரை நேற்று மாநகராட்சி அலுவலர்கள் அகற்றினர்.</p><p>இதை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு <a href="https://www.dailythanthi.com/topic/vck">வி.சி.க.</a>வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அகற்றிய பேனரை அதே இடத்தில் மீண்டும் வைக்க வேண்டும் எனக்கூறி, மாநகராட்சி அலுவலகம் எதிரே சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர்.</p><h2>போக்குவரத்து நெரிசல்-வாக்குவாதம்</h2><p>போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மேற்கு போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் பேனரை மீண்டும் வைத்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என வாக்குவாதம் செய்தனர்.</p><p>இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த ஏராளமான பொதுமக்கள் வழிவிடுமாறி கூறி <a href="https://www.dailythanthi.com/topic/vck">வி.சி.க.</a>வினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.</p><h2>போலீசார் சமாதானம்</h2><p>இதேபோல அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரும் வழிவிடுமாறு கூறியதால் <a href="https://www.dailythanthi.com/topic/vck">வி.சி.க.</a>வினர் அந்த வாலிபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.</p><p>இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அந்த வாலிபரை சமாதானப்படுத்த முயன்றார்.</p><p>தன்னை சமாதானப்படுத்திய போலீசாரிடம், அந்த வாலிபர், தான் வேலைக்கு செல்ல வேண்டும். நான் வேலைக்கு செல்லாவிட்டால் என்னுடையை சம்பளத்தை யார் தருவார்கள்? எனக்கேட்டு வாக்குவாதம் செய்தார். அப்போது போலீசார், வாலிபரிடம் அமைதியாக இருக்கும்படி கூறினர்.</p><h2>சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் கன்னத்தில் அறைந்த வாலிபர்</h2><p>இது தொடர்பாக போலீசாருக்கும், அந்த வாலிபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த வாலிபரை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் ரஹீம் தாக்கினார். உடனே ஆவேசமான அந்த வாலிபர் பதிலுக்கு அப்துல் ரஹீமின் கன்னத்தில் அறைந்தார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், அந்த இளைஞரை குண்டுக்கட்டாக தூக்கி ஜீப்பில் ஏற்றி மேற்கு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.</p>]]></content:encoded></item><item><title>காட்டு யானை  மசினகுடி வனப்பகுதியில் இறந்து கிடந்த காட்டு யானை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-wild-elephant-was-found-dead-in-the-masinagudi-forest-area</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-wild-elephant-was-found-dead-in-the-masinagudi-forest-area#comments</comments><guid isPermaLink="false">500c7735-fb4c-4562-9abd-5b1f6bef2442</guid><pubDate>Tue, 18 Aug 2026 02:49:13 +0000</pubDate><atom:updated>2026-08-18T02:49:13.623Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nilgiris,நீலகிரி,காட்டு யானை,wild elephant</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/px97zj63/4.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/px97zj63/4.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி, </p><h2>காட்டு யானை சாவு</h2><p>நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக பகுதியில் காட்டு யானை கள், புலிகள், மான்கள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இதுதவிர பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் விலை உயர்ந்த மரங்களும் உள்ளது. இதனால் வனப்பகுதியை பாதுகாப்பது, வன குற்றங்களை தடுப்பது தொடர்பான பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தினமும் ரோந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல பகுதியான மசினகுடி வனச்சரகத்துக்கு உட்பட்ட அவரல்லா பிரிவு குதிரைப்பாறை வனத்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெண் காட்டு யானை இறந்து கிடப்பதை பார்த்தனர். ஆனால், யானை இறந்ததற்கான காரணம் தெரியவில்லை. இதைத்தொடர்ந்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் புலிகள் காப்பக இயக்குனர் கிருபா சங்கர் உத்தரவின்பேரில், துணை இயக்குனர் வித்யாதர், வனச்சரகர் ராஜன் மற்றும் வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.</p><h2>வயது மூப்பு</h2><p>மேலும் தெப்பக்காடு வன கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டனர். பின்னர் வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் இணைந்து ஆய்வு நடத்தினர். அப்போது இறந்த பெண் காட்டு யானைக்கு 50 வயது இருக்கும் எனவும், வயது மூப்பு காரணமாக யானை இறந்ததும் உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வனப்பகுதியில் இறந்த பெண் யானைக்கு 50 வயது இருக்கும். மருத்துவ குழுவினர் ஆய்வு செய்ததில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்து இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருப்பினும், பிரேத பரிசோதனை நாளை (அதாவது இன்று) நடைபெறும். அதில் யானையின் உடலில் உள்ள முக்கிய உடற்பாகங்களை சேகரித்து ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்படும். அதன் பின்னர் அறிக்கை கிடைத்த பின்னர் முழு விவரம் தெரிய வரும் என்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>14 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் தொல்லை: 4 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/gang-sexual-abuse-of-14-year-old-girl-4-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/gang-sexual-abuse-of-14-year-old-girl-4-arrested#comments</comments><guid isPermaLink="false">856709eb-c88c-4bfc-a0a8-5926d26808cd</guid><pubDate>Tue, 18 Aug 2026 02:29:27 +0000</pubDate><atom:updated>2026-08-18T02:29:27.469Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,போக்சோ சட்டம்,POCSO act,சிறுமி</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/xq407530/4.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/xq407530/4.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,  </p><p>சேலத்தை சேர்ந்த 14 வயது சிறுமி, 9-ம் வகுப்பை பாதியிலேயே நிறுத்தினாள். மேலும் அவளுக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் ஆண் நண்பர்கள் சிலர் பழக்கம் ஆனார்கள். இதனிடையே அந்த சிறுமி சமீபத்தில் நண்பர் ஒருவரது வீட்டில் தனது பிறந்தநாளை கொண்டாடினாள். இதில் ஆண் நண்பர்கள் மற்றும் தோழிகள் சிலர் கலந்து கொண்டனர். அப்போது மது போதையில் இருந்த நண்பர்களான சிறுவர்கள் உள்பட 7 பேர் கூட்டாக அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. </p><p>இதுகுறித்து சிறுமியின் தாய்க்கு தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர், மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.</p><p>இதில் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 21), ஆகாஸ் (19) மற்றும் 13, 17 வயதுடைய சிறுவர்கள் உள்பட 7 பேர் என தெரியவந்தது. இதையடுத்து பாலமுருகன், ஆகாஷ் மற்றும் சிறுவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சிறுமிக்கு கூட்டாக பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல அமைப்பு அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டுக்குள் நீட்டை கொண்டு வந்தது அதிமுக ஆட்சிதான் – மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-was-the-aiadmk-regime-that-brought-neet-to-tamil-nadu-manickam-thakur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-was-the-aiadmk-regime-that-brought-neet-to-tamil-nadu-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">d56ad3da-91f9-45e8-9aab-30e511d5b1d0</guid><pubDate>Tue, 18 Aug 2026 02:20:21 +0000</pubDate><atom:updated>2026-08-18T02:20:21.278Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>AIADMK,NEET Exam,நீட்,அதிமுக ஆட்சி,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Thakur MP</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/bg0q7n3e/9.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/bg0q7n3e/9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக காங்கிரஸ் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">மாணிக்கம் தாகூர்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>சட்டப்பேரவையில் நீட் விவகாரம் குறித்து அமைச்சர் ராஜேஷ் குமார் மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி அவர்களே, காங்கிரஸ் மீது வீண் பழி போட்டு உங்கள் வரலாற்றுத் துரோகத்தை மறைக்க முடியாது!</p><h2>அடிமை ஆட்சி</h2><p>மறைந்த ஜெயலலிதா அவர்கள் உயிருடன் இருந்தவரை தமிழ்நாட்டுக்குள் நுழைய முடியாத நீட் தேர்வு, நீங்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து, அதிமுகவை பாஜகவின் காலடியில் அடகு வைத்த பிறகு 2017-ல் தான் தமிழ்நாட்டுக்குள் நுழைந்தது! தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்து நீட்டை தமிழ்நாட்டுக்குள் அனுமதித்தது காங்கிரஸ் அல்ல, உங்கள் அடிமை ஆட்சிதான். இந்த வரலாற்று உண்மையை உங்களால் எப்போதும் மறைக்க முடியாது.</p><p>ஏழை, எளிய மாணவர்களின் நலனை முன்னிறுத்தித் திட்டங்களை யோசித்தாலும், மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து முடிவுகளை மாற்றிக்கொள்ளும் இயக்கம் காங்கிரஸ். காலின் அளவுக்குத் தக்கபடிதான் காலணியைத் தைக்க வேண்டுமே தவிர, காலணிக்காக காலை வெட்ட முடியாது!</p><h2>குரங்கு கையில் கிடைத்த பூமாலை</h2><p>ஆனால் பாஜக அரசோ ‘குரங்கு கையில் கிடைத்த பூமாலை’ போல, ஒட்டுமொத்த அதிகாரத்தையும் NTA என்ற ஒரே அமைப்பிடம் கொடுத்து, வினாத்தாள் கசிவு, ஊழல், பயிற்சி மைய மாஃபியாக்கள் என நீட் தேர்வை வணிகச் சந்தையாக்கிவிட்டது. அனிதா தொடங்கி எண்ணற்ற மாணவர்களின் உயிர்கள் பறிபோயும் ‘பிடித்த முயலுக்கு மூன்று கால்’ என மோடி அரசு பிடிவாதம் பிடிக்கிறது.</p><p>மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் உறுதியளித்தபடி, காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு தெளிவானது: "எந்த மாநிலத்திற்கு நீட் வேண்டாம் என்று நினைக்கிறதோ, அந்த மாநிலத்திற்கு முழு விலக்கு அளிக்கப்படும்." இதை உங்கள் கூட்டணிக் கட்சியான பாஜகவைச் சொல்ல வைக்க முடியுமா?</p><h2>கேள்வி கேட்கும் துணிச்சல்</h2><p>பாஜகவின் அடிமைத்தனத்திலிருந்து வெளியே வந்து, மாணவர்களின் நலனுக்காக "தமிழ்நாட்டிற்கு நீட் வேண்டாம்" என்று மோடி அரசை எதிர்த்துக் கேள்வி கேட்கும் துணிச்சல் இப்போதாவது உங்களுக்கு இருக்கிறதா எடப்பாடி பழனிசாமி அவர்களே?</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்</p>]]></content:encoded></item><item><title>போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்கு சென்றவர் கொலை; 5 பேர் கைது
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/patient-killed-in-de-addiction-center-five-held</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/patient-killed-in-de-addiction-center-five-held#comments</comments><guid isPermaLink="false">923383e2-61c2-43c2-a0cb-a70783d81d75</guid><pubDate>Tue, 18 Aug 2026 02:11:22 +0000</pubDate><atom:updated>2026-08-18T02:11:22.414Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrested,போதை மறுவாழ்வு மையம்,drug rehabilitation center</media:keywords><media:content height="768" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/ewyvdt9h/upael.jpg" width="1366"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/ewyvdt9h/upael.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>தாம்பரம்</p><p>போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்கு சென்றவர் கொலையான சம்பவத்தில் நிர்வாகி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.</p><p>காஞ்சீபுரத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 39). மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர், சேலையூர் அருகே செம்பாக்கம் வி.ஜி.பி. நகரில் செயல்பட்டு வரும் தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சில மாதங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிகிச்சை முடிந்ததும் அவர் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால், வீட்டிற்கு சென்ற சில நாட்களிலேயே மீண்டும் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது.</p><p>இதனையடுத்து கடந்த 10-ந்தேதி அருண்குமாரை மீண்டும் அதே போதை மறுவாழ்வு மையத்தில் குடும்பத்தினர் சேர்த்துள்ளனர்.  இந்த நிலையில் அருண்குமார் மறுவாழ்வு மையத்தில் இருந்து தப்பி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.  இதனால் ஊழியர்கள் அவரை பிடித்து தடுத்து வைத்ததாகவும், அவர் கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டபோது கட்டிலில் கட்டிப்போட்டதாகவும் கூறப்படுகிறது.</p>  <h2>போலீசார் விசாரணை</h2><p>சிறிது நேரத்தில் அருண்குமார் மயக்கமடைந்த நிலையில், அவரை தாம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக போதை மறுவாழ்வு ஊழியர்கள் அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அருண்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.</p><p>இதுகுறித்த புகாரின் பேரில் சேலையூர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அருண்குமாரை கட்டிலில் கட்டிப்போட்டு, அவரது வாயில் துணியை வைத்து அழுத்தியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக போதை மறுவாழ்வு மைய நிர்வாகி மணிகண்டன் (36), அங்கு சிகிச்சை பெற்று வந்த ஏழுமலை (40), குணசீலன் (43) ராஜாசுதாகர் (41) ராஜ்கமல் (33) ஆகிய 5 பேரை சேலையூர் போலீசார் கைது செய்தனர்.</p> ]]></content:encoded></item></channel></rss>