<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 28 Aug 2026 08:33:03 +0000</lastBuildDate><item><title>கிராண்ட் செஸ் டூர் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் - பிரக்ஞானந்தாவுக்கு எல்.முருகன் வாழ்த்து </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/first-indian-to-win-the-grand-chess-tour-title-l-murugan-congratulates-praggnanandhaa</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/first-indian-to-win-the-grand-chess-tour-title-l-murugan-congratulates-praggnanandhaa#comments</comments><guid isPermaLink="false">0808fb24-0ac2-489b-8e1e-093504bb6a2e</guid><pubDate>Fri, 28 Aug 2026 08:27:26 +0000</pubDate><atom:updated>2026-08-28T08:27:26.337Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எல்.முருகன்,L.Murugan,செஸ்,Chess,பிரக்ஞானந்தா,Praggnanandha</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/0vk4ndwj/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/0vk4ndwj/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கிராண்ட் செஸ் தொடரின் இறுதி சுற்று அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடந்தது. இதன் இறுதிப் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா- அமெரிக்க வீரர் பேபியானோ கருவானா மோதினர். இது 2 கிளாசிக்கல், 2 ரேபிட், 4 பிளிட்ஸ் ஆட்டங்கள் கொண்டதாகும்.</p><p>கிளாசிக்கல், ராபிட், பிலிட்ஸ் என மூன்று பிரிவு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய பிரக்ஞானந்தா, நடப்பு சாம்பியன் பேபியானோ கருவானாவை 15-13 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி பட்டம் வென்றார். இதன் மூலம் கிராண்ட் செஸ் டூரை வெல்லும் முதல் இந்தியர் என்ற சாதனையை பிரக்ஞானந்தா படைத்தார்.</p><p>இந்நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில், மத்திய இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது;-</p><p>“கிராண்ட் செஸ் டூர் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த இளம் செஸ் நட்சத்திரம் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.</p><p>இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் பேபியானோ கருவானாவை வீழ்த்தி பெற்றுள்ள இந்தச் சிறப்புமிக்க வெற்றி, நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான இளம் விளையாட்டு வீரர்களுக்கு மிகுந்த உத்வேகமாக அமையும். பிரக்ஞானந்தா தனது செஸ் பயணத்தில் மேலும் பல உயரங்களைத் தொட்டு, இந்தியாவிற்குப் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: வீடு புகுந்து ரூ.4 லட்சம் நகை திருட்டு- மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-house-burglary-jewellery-worth-rs-4-lakh-stolen-police-nab-mysterious-person</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-house-burglary-jewellery-worth-rs-4-lakh-stolen-police-nab-mysterious-person#comments</comments><guid isPermaLink="false">4c0845a2-bac5-4356-b048-5fadc69db038</guid><pubDate>Fri, 28 Aug 2026 08:22:25 +0000</pubDate><atom:updated>2026-08-28T08:22:25.753Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,நகை திருட்டு,போலீஸ் வலைவீச்சு,jewelry theft,mysterious person,மர்ம நபர்,வீடு புகுந்து,police netting,house break-in</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/hlfkcatn/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நகை திருட்டு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/hlfkcatn/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி அருகே வீடு புகுந்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">தங்க நகையை திருடிய</a> மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், புதுக்கோட்டை அருகே உள்ள நடுக்கூட்டன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி கல்யாணி (வயது 61). இவர்கள் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி வீட்டின் கதவை காற்றுக்காக திறந்து வைத்துவிட்டு அனைவரும் வராண்டாவில் படுத்துத் தூங்கினர். </p><h2>நகை திருட்டு</h2><p>நள்ளிரவில் இவர்களது வீட்டிற்குள் புகுந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D">மர்ம நபர்</a>, அங்கிருந்த பீரோவைத் திறந்து அதிலிருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள 4 சவரன் நகையைத் திருடிச் சென்றுள்ளார். நகை திருட்டு போனது குறித்து கல்யாணிக்கு ஆகஸ்ட் 26-ம் தேதியே தெரியவந்தது. இதுகுறித்து அவர் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். </p><h2>மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு</h2><p>புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜூடி வழக்குப்பதிவு செய்து, வீட்டிற்குள் புகுந்து திருடிய மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு வாகனம்: சட்டசபையில் மீண்டும் அனல் பறந்த விவாதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-vehicles-for-mlas-heated-debate-in-the-assembly-once-again</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-vehicles-for-mlas-heated-debate-in-the-assembly-once-again#comments</comments><guid isPermaLink="false">e90c3711-bb59-4710-9da2-4e5e3670ce66</guid><pubDate>Fri, 28 Aug 2026 08:21:20 +0000</pubDate><atom:updated>2026-08-28T08:21:20.806Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,TN Assembly</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/armw0bea/CHENNAI-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/armw0bea/CHENNAI-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையில் இன்றைய அவை நடவடிக்கையின்போது எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு வாகனம் வழங்கப்படுவது குறித்து சட்டசபையில் மீண்டும் அனல் பறந்த விவாதம் நடந்தது.</p><p>முதலில் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கூறுகையில், விவசாய கடன் முழுவதும் தள்ளுபடி செய்யவில்லை. மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தாமல் எம்.எல்.ஏ.க்களுக்கு கார் கொடுத்து என்ன பயன்? என கேள்வி எழுப்பினார்.</p><p>இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், “காரை எடுத்துக்கொண்டு தொகுதிக்கு செல்ல வேண்டும். தொகுதியை சுற்றி வந்து ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கு பணி செய்யவே எம்.எல்.ஏ.க்களுக்கு கார் கொடுக்கப்படுகிறது” என்றார்.</p><p>தொடர்ந்து அவை முன்னவர் செங்கோட்டையன் கூறுகையில், “அரசு கொடுக்கின்ற காரில் போகிறபோது அதற்கு தனி மரியாதை இருக்கும். திமுகவினர் கார் ரேசுக்கு ரூ.24 கோடி செலவு செய்தீர்கள். அது யார் அப்பா வீட்டு காசு?” என கேள்வி எழுப்பினார்.</p><p>இதற்கு பதிலளித்த திமுக எம்.எல்.ஏ. கே.என்.நேரு, “நீங்கள் (செங்கோட்டையன்) விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது ரூ.10 கோடிக்கு எதுவுமே செய்யாமல் அந்த பணத்தை அப்படியே வைத்திருந்தீர்கள். நாங்களும் உங்களை போலவே செயல்பட வேண்டுமா?” என்றார்.</p><p>தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “எந்தெந்த எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வேண்டுமோ அவர்களுக்கு மட்டும் வாங்கிக்கொடுங்கள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவின்படி திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வேண்டாம் என தெரிவித்தார்.</p><p>சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறுகையில், “திமுகவினர் தாங்கள் வசதியாக இருப்பதால் கார் வேண்டாம் என்கிறார்கள். அதனால் கார் இல்லாதவர்கள் மட்டும் பெற்றுக்கொள்ளலாம், கார் இருப்பவர்கள் அவரவர் காரிலேயே சென்று ஆய்வுப்பணிகளை மேற்கொள்வார்கள்” என்றார்.</p><p>தொடர்ந்து பேசிய அமைச்சர் அருண்ராஜ், அரசு கஜானாவில் பணமில்லை, அதனால் எம்.எல்.ஏ.க்களுக்கு கார் கொடுக்க வேண்டாம் என்று திமுகவினர் சொல்கிறார்கள். ஆனால் கடந்த ஆட்சியில் கலைஞருக்கு கடலில் பேனா வைக்க வேண்டும் என்று சொன்னீர்களே, அப்போது மட்டும் நிதி இருந்ததா?’ என கேள்வி எழுப்பினார்.</p><p>இதற்கு பதிலளித்த திமுக கொறடா எ.வ.வேலு, “மத்திய அரசு கலைஞருடைய பேனா சிலையை வைத்துக் கொள்ளலாம் என்று அனுமதி தந்தது. ஆனால், எங்களுடைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த சூழலில் அது தேவையா? என்று கேட்டதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் பொருளாதாரம் எப்போது சீர் ஆகிறதோ... அப்போது வைத்துக் கொள்ளலாம். தற்போது வேண்டாம் என்று சொன்னார். இது அனைவரும் அறிந்தது.” என்றார். இவ்வாறு சட்டசபையில் மீண்டும் அனல் பறந்த விவாதம் நடந்தது.</p>]]></content:encoded></item><item><title>ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஆதவ் அர்ஜுனா வழக்கு - மு.க.ஸ்டாலினுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-court-issues-notice-to-mk-stalin-regarding-the-1-crore-compensation-suit-filed-by-aadhav-arjuna</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-court-issues-notice-to-mk-stalin-regarding-the-1-crore-compensation-suit-filed-by-aadhav-arjuna#comments</comments><guid isPermaLink="false">d8878913-4433-430f-844e-f7ae900c922b</guid><pubDate>Fri, 28 Aug 2026 08:17:33 +0000</pubDate><atom:updated>2026-08-28T08:17:33.254Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,Chennai,ஆதவ் அர்ஜுனா,High Court,MK Stalin&apos;,ஐகோர்ட் செய்திகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/2j6sr0pg/Chennai-high-court.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஐகோர்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/2j6sr0pg/Chennai-high-court.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜான் பிரிட்டோ என்பவருடன் தன்னை தொடர்புபடுத்தி அவதூறாக பேசியதாக கூறி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணிக்கு எதிராக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சென்னை ஐகோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு பரப்பியதற்காக, மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக ரூ.1 கோடி மானநஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மனுவில்  கோரியிருந்தார். </p><h2>‘ஜான் பிரிட்டோவுடன் தொடர்பு இல்லை’</h2><p>போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் சிக்கிய ஜான் பிரிட்டோவுக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும், அவருடன் தன்னை தொடர்புபடுத்தி தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளதாகவும் தனது மனுவில் ஆதவ் அர்ஜுனா தெரிவித்து இருந்தார். இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று  விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக மு.க.ஸ்டாலினுக்கும், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணிக்கும்   ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கில் தங்களது பதிலை செப்டம்பர் 15-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>‘தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்’ - அன்புமணி ராமதாஸ் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tamil-nadu-government-must-immediately-declare-tamil-nadu-a-drought-affected-state-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tamil-nadu-government-must-immediately-declare-tamil-nadu-a-drought-affected-state-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">724d3f74-5cf2-4ade-b431-de224a247391</guid><pubDate>Fri, 28 Aug 2026 08:08:02 +0000</pubDate><atom:updated>2026-08-28T08:08:02.832Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/ce7rv9q8/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/ce7rv9q8/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பா.ம.க.  தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை சுமார் 30% அளவுக்கு குறைவாக பெய்திருப்பதால் பாதிக்கப்பட்டுள்ள 101 வட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும், குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவும் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கர்நாடக அரசு அறிவித்திருக்கிறது.  இத்தகைய சூழலில் கர்நாடகத்தை விட கொடுமையாக பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டின் பெரும்பான்மையான பகுதிகள் இன்னும் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்படாதது ஏன்? என்ற வினா எழுகிறது.</p><p>கர்நாடகத்தில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை கர்நாடகத்தில் 666 மி.மீ மழை பெய்ய வேண்டிய நிலையில், 465 மி.மீ மழை மட்டுமே பெய்திருக்கிறது. வழக்கமாக சாகுபடி செய்யப்படும் 84.10 லட்சம் ஹெக்டேருக்கு பதிலாக 60 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில், அதாவது 71 விழுக்காடு மட்டுமே  சாகுபடி செய்யப்பட்டிருப்பது தான் 101 வட்டங்கள் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருப்பதற்கு காரணமாக கூறப்பட்டிருக்கிறது.</p><p>ஆனால், தமிழகத்தின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.  ஜூன் ஒன்றாம்  தேதி முதல் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் 180 மி.மீ. அளவுக்கு மட்டுமே மழை பெய்திருக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த ஆண்டு  6.31 லட்சம் ஏக்கரில்  குறுவை சாகுபடி செய்யப்பட்ட நிலையில் நடப்பாண்டில்  சுமார் 2 லட்சம்  ஏக்கரில் மட்டுமே  குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் அளவில் வெறும் 30% மட்டும்தான்.</p><p>தமிழகத்தில் மொத்தம் உள்ள 14,141 நீர்நிலைகளில், 4208 நீர்நிலைகள், அதாவது 29.25% நீர்நிலைகள் முற்றிலுமாக வறண்டு விட்டன. மேலும், 5,814 நீர்நிலைகளில் 1% முதல் 25% வரை மட்டுமே நீர் உள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் பயனளிக்கும் வகையில் தண்ணீர் இல்லை.  காவிரி பாசன மாவட்டங்களில் காவிரி, கல்லணைக் கால்வாய், வெண்ணாறு ஆகிய ஆறுகளில் இருந்து கால்வாய்கள் மூலம் தண்ணீர் பெறும் 737 நீர்நிலைகளில் 694 நீர்நிலைகள், அதாவது 95% தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன.</p><p>நிலத்தடி நீர்மட்டமும் வேகமாக குறைந்து விட்டதால்  காவிரி பாசன மாவட்டங்களில் குறுவைப் பயிர்கள் கருகுகின்றன.  இதே நிலை இன்னும் சில வாரங்களுக்கு நீடித்தால் தமிழ்நாட்டில் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து  ஏற்பட்டிருக்கிறது.  நிலைமை இந்த அளவுக்கு மோசமாக மாறியிருக்கும் நிலையில் தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து வறட்சி தணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதுதான் சிறந்ததாக இருக்கும்.</p><p>எனவே, தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். அத்துடன் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்; குறுவை சாகுபடி செய்யாத விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 வீதமும், குறுவை சாகுபடி செய்து நீரின்றி பயிர்கள் வாடியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதமும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். சம்பா சாகுபடி செய்யமுடியாத நிலை  உருவாகும் சூழலில் அதனால் பாதிக்கப்படும் உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.10000 உதவி வழங்க வேண்டும். நிலமில்லா தொழிலாளர்களுக்கு ஒருமுறை உதவியாக ரூ.25,000 வழங்க வேண்டும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>10 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: முதியவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-10-year-old-girl-elderly-man-gets-life-imprisonment-until-death</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-10-year-old-girl-elderly-man-gets-life-imprisonment-until-death#comments</comments><guid isPermaLink="false">e1348469-b7b3-434b-b1bc-7e01c178ac6c</guid><pubDate>Fri, 28 Aug 2026 07:44:59 +0000</pubDate><atom:updated>2026-08-28T07:44:59.451Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,Sexual harassment,Elderly man,முதியவர்,சிறுமி,minor,பாலியல் துன்புறுத்தல்,சாகும் வரை ஆயுள் தண்டனை,life imprisonment till death</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/23bjpncg/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதியவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/23bjpncg/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டத்தில் 10 வயது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF">சிறுமி</a>யை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">பாலியல் துன்புறுத்தல்</a> செய்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D">முதியவருக்கு </a><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">சாகும் வரை ஆயுள் தண்டனை</a> மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.</p><h2>10 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்</h2><p>திருநெல்வேலி மாவட்டத்தில் சித்திரை செல்வன் (வயது 64) என்பவர் 10 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, வீரவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர், மேற்சொன்ன வழக்கு மேல் நடவடிக்கைக்காக சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, அங்கு தொடர்ந்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் 5.8.2020 அன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அப்போதைய சேரன்மகாதேவி உட்கோட்ட ஏ.எஸ்.பி. பிரதிப் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு, முதியவரை கைது செய்தார். </p><h2>முதியவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை</h2><p>புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து. வழக்கின் விசாரணையானது, திருநெல்வேலி மாவட்ட போகசோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் முதியவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு நீதிபதி சுரேஷ்குமார் நேற்று குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிட்டு தீர்ப்பளித்தார். </p><p>இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை நடைபெற சிறப்பாக கண்காணிப்பு செய்த ஏ.டி.எஸ்.பி. சண்முகம் (CWC), சேரன்மகாதேவி உட்கோட்ட டி.எஸ்.பி. அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ், சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் துர்காதேவி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர் திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் உஷா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷவேஷ் பா.சாஸ்திரி பாராட்டினார். இந்த வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த காவல் அதிகாரி, அப்போதை சேரன்மகாதேவி உட்கோட்ட ஏ.எஸ்.பி. பிரதீப் ஆவார். தற்போது அவர் சென்னை மாநகரில் உதவி காவல் துறை தலைவராக (சட்டம் மற்றும் ஒழுங்கு, பொறுப்பு) பணியாற்றி வருகிறார். </p><h2>18 போக்சோ குற்றவாளிகளுக்கு தண்டனை</h2><p>திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரின் தீவிர நடவடிக்கையால், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 18 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 18 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க வகையில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும், 5 குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், 2 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும், 1 குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்றுத் தரப்பட்டுள்ளது. </p><h2>தீவிர நடவடிக்கை</h2><p>தமிழ்நாடு காவல்துறையானது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களுக்கெதிராக குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தனிப்பட்ட கவனத்துடன் தீவிரமான மற்றும் தொடரச்சியான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட காவல் எஸ்.பி. தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அமைச்சர் மரிய வில்சன் இங்கிலாந்தின் அரசர் அல்ல-சென்னை  ஐகோர்ட் கடும் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-maria-wilson-is-not-the-king-of-england-madras-high-court-expresses-strong-condemnation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-maria-wilson-is-not-the-king-of-england-madras-high-court-expresses-strong-condemnation#comments</comments><guid isPermaLink="false">ccd04de0-e7a2-4dd9-8325-88209c6df3f1</guid><pubDate>Fri, 28 Aug 2026 07:35:42 +0000</pubDate><atom:updated>2026-08-28T07:35:42.756Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,High Court,ஐகோர்ட்,மரிய வில்சன்,Minister Maria Wilson</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/jdcgqo4r/Maria-wilson.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மரிய வில்சன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/jdcgqo4r/Maria-wilson.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ந் தேதி, புதுச்சேரி எழில் நகரில் வசிக்கும் தனது சகோதரர் மரிய குலோத்தின் வீட்டுக்குள் கதவை உடைத்து அத்துமீறி நுழைந்து, அவரையும் அவரது மனைவி கெரோலினையும் தாக்கியதாக தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் மீது லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வழக்கை ரத்து செய்யக்கோரி மரிய வில்சன் தாக்கல் செய்த மனு, சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.அப்போது, அமைச்சர் தரப்பில் ஆஜரான வக்கீல், தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால், நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து அமைச்சருக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.</p> <h2>‘இங்கிலாந்து அரசர் அல்ல’</h2><p>இந்த கோரிக்கைக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். நீதிமன்றத்துக்கு செல்ல முடியாது என்று கூறுவதற்கு நிதியமைச்சர்<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D"> மரிய வில்சன்</a> இங்கிலாந்து அரசர் அல்ல. நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோதுகூட கோர்ட்டில் ஆஜராகி இருக்கிறார். மனுதாரர் தற்போது மாநிலத்தின் நிதியமைச்சராக உள்ளார். அமைச்சராக பதவியேற்பதற்கு முன்பு கோர்ட்டில் ஆஜரான அவர், பதவிக்கு வந்த பிறகு மட்டும் ஆஜராக மாட்டாரா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.</p><h2>‘சட்டத்துக்கு மேலானவர் அல்ல’</h2><p>இதனிடையே, புதுச்சேரி போலீசார் தரப்பில் ஆஜரான வக்கீல், வேளாங்கண்ணி ஆலய கொடியேற்று நிகழ்ச்சியில் அமைச்சர் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார். அதற்கு நீதிபதி, வேளாங்கண்ணிக்கு சென்று திரும்பும்போது அமைச்சர் புதுச்சேரி   கோர்ட்டில்  ஆஜராகலாமே என்று கேள்வி எழுப்பினார்.மேலும், <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D">கோர்ட்டில்</a> ஆஜராகாமல் இருக்க முடியாது. அமைச்சர் சட்டத்துக்கு மேலானவர் அல்ல என்ற தகவலை மக்களிடம் கொண்டு சேர்க்க விரும்பவில்லை என்று நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து, அமைச்சர் எந்த தேதியில் புதுச்சேரி கோர்ட்டில் ஆஜராவார் என்பதை தெரிவிக்கும்படி அவரது தரப்பு வக்கீலுக்கு நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், வழக்கு விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்தார்.</p> ]]></content:encoded></item><item><title>திமுகவில் இனி 110 மாவட்டச் செயலாளர்கள் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-to-have-110-district-secretaries-henceforth-mk-stalin-announces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-to-have-110-district-secretaries-henceforth-mk-stalin-announces#comments</comments><guid isPermaLink="false">946cd0e9-238d-41a0-8b23-d00f95b16c34</guid><pubDate>Fri, 28 Aug 2026 07:33:36 +0000</pubDate><atom:updated>2026-08-28T07:33:36.050Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,M.K.Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/t5latzf4/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/t5latzf4/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திமுகவில் 110 மாவட்டச் செயலாளர்களை நியமிப்பதற்கு வசதியாக தொகுதிகளை பிரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் வீதம் நியமிக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஒரு சில மாவட்டச் செயலாளர்கள் மட்டும் 3 தொகுதிகளை கவனிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><p>கடந்த 22.8.2026 அன்று நடைபெற்ற திமுக தலைமை செயற்குழுக் கூட்டத்தில் நிர்வாகச் சீரமைப்புக்குத் தேவையான மிகமுக்கியமான முடிவுகளைத் தீர்மானங்களாக நிறைவேற்றி இருக்கிறோம். திமுக தொடங்கப்பட்ட நாள் முதல், இதுவரையில் 15 முறை கழக அமைப்புரீதியாகத் தேர்தல் நடத்தி, நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்துள்ளோம். </p><p>இதன் தொடர்ச்சியாக 16-வது கழக அமைப்புத் தேர்தலை நடத்திடவும் - பல்வேறு அமைப்புரீதியாக நிர்வாக மாற்றங்கள் மேற்கொள்ளப்படவும் பல தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் மிக முக்கியமானது மாவட்டக் கழகங்கள் குறித்த தீர்மானமாகும்.</p><p>அதில், தற்போதுள்ள மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கையை 77-லிருந்து 110-ஆக அதிகரித்து, எந்தெந்தத் தொகுதிகள் எந்தெந்த மாவட்டங்களில் இடம்பெற வேண்டும் என்பதை வரையறுப்பதற்கான அதிகாரம் எனக்கு வழங்கப்பட்டது.</p><p>இதனையடுத்து, கழக மறுசீரமைப்புக் குழு வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில், திமுக முன்னணியினருடன் கலந்தாலோசித்து, தமிழ்நாட்டில் உள்ள தொகுதிகளை 110 மாவட்டங்களாகப் பகுத்து அறிவிக்கிறேன். அதில், அதிகமான மக்கள் தொகை இருப்பதன் காரணமாகச் சோழிங்கநல்லூர் தொகுதி மட்டும் தனி மாவட்டமாக அறிவிக்கப்படுகிறது.</p><p>அறிவிக்கப்பட்டுள்ள இந்த 110 மாவட்டக் கழகங்களில் தற்போதுள்ள மாவட்டக் கழகச் செயலாளர்கள், தலைமைக் கழகத்தால் அனுப்பப்படும் பிரதிநிதியின் முன்னிலையில் மாவட்டச் செயற்குழுவைக் கூட்டி, மேற்குறிப்பிடப்பட்டுள்ள நகர கழக மாவட்டங்களின் அடிப்படையில், ஒன்றிய - பகுதி - பேரூர் - வட்ட கிளை அமைப்புகளைப் பிரிப்பதற்கான பரிந்துரைகளை 15 நாட்களுக்குள் வழங்கிட வேண்டும் என்றும், தலைமைச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையிலும், கழக மறுசீரமைப்புக்குழு மூலம் வழங்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, கழக அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை புழல் சிறையில் முதல்-அமைச்சர் விஜய் திடீர் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-conducts-a-surprise-inspection-at-chennais-puzhal-prison</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-conducts-a-surprise-inspection-at-chennais-puzhal-prison#comments</comments><guid isPermaLink="false">6660b021-4f03-41f7-9b6e-b346ec151edf</guid><pubDate>Fri, 28 Aug 2026 07:14:10 +0000</pubDate><atom:updated>2026-08-28T07:14:10.983Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Chennai,சென்னை,புழல் சிறை,Puzhal Jail,Puzhal prison,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/7ro69oio/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/7ro69oio/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை புழல் சிறையில் மத்திய விசாரணை சிறை, தண்டனை சிறை, மகளிர் சிறை என 3 சிறைகள் உள்ளன. இங்கு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர்.</p><p>இந்த நிலையில், சென்னை புழலில் அமைந்துள்ள மத்திய சிறைச்சாலையில் முதல்-அமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் நிலை மற்றும் அங்குள்ள வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.</p><p>மேலும் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு, உணவு தயாரிக்கப்படும் கூடும், மருத்துவ வசதிகள் என அனைத்தையும் முதல்-அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதல்-அமைச்சரின் ஆய்வின்போது உயர் அதிகாரிகள், சிறைத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் - ஜி.கே.வாசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-central-government-must-grant-approval-for-the-tamil-nadu-civil-supplies-corporation-to-procure-paddy-gkvasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-central-government-must-grant-approval-for-the-tamil-nadu-civil-supplies-corporation-to-procure-paddy-gkvasan#comments</comments><guid isPermaLink="false">d0783cf9-6825-441b-8e60-a1376091ec5d</guid><pubDate>Fri, 28 Aug 2026 07:05:20 +0000</pubDate><atom:updated>2026-08-28T07:05:20.356Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>G.K.Vasan,ஜி.கே.வாசன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/luk9svo3/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/luk9svo3/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“தமிழ்நாட்டில் நடப்பாண்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் (DPC) மூலம் விவசாயிகளிடம் இருந்து தடையின்றி நெல் கொள்முதல் செய்யத் தேவையான விரைவான ஒப்புதல்களை மத்திய அரசு வழங்க வேண்டும். காரணம் செப்டம்பர் 1 முதல் நெல் கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.</p><p>அப்படி என்றால் இன்னும் 3 நாட்களுக்குள் மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தால் தமிழக அரசு நெல் கொள்முதல் செய்யும். மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகமானது நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்ய வேண்டும்.</p><p>கொள்முதல் செய்யும் நெல்லை அரிசியாக்கி ரேஷன் கடைகளுக்கு கொடுத்து இலவசமாக மக்களுக்கு வழங்க வேண்டும். இதற்காக மத்திய மாநில அரசுகளின் சார்பில் 100 கிலோ எடை உள்ள குவிண்டால் நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதார விலை வழங்கப்படுகிறது. ஆனால் நடப்பாண்டில் இன்று வரை மத்திய அரசு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு நெல் கொள்முதல் செய்வதற்கான ஒப்புதலை அளிக்கவில்லை.</p><p>இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையடைந்துள்ளனர். தமிழக விவசாயிகளிடம் இருந்து காலம் தாழ்த்தாமல் நெல் கொள்முதல் செய்து விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும். குறிப்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு உடனடி ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். மேலும் தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் நெல் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசிடம் உடனடி ஒப்புதல் அளிக்க வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>சென்னை: மதுபோதையில் ரகளை செய்த இளம்பெண்- தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-young-woman-creates-a-ruckus-while-intoxicated-public-gives-her-a-sound-thrashing</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-young-woman-creates-a-ruckus-while-intoxicated-public-gives-her-a-sound-thrashing#comments</comments><guid isPermaLink="false">915e5238-90e6-4f08-aa80-583239d84fb4</guid><pubDate>Fri, 28 Aug 2026 06:44:36 +0000</pubDate><atom:updated>2026-08-28T06:44:36.759Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,இளம்பெண்,Public,police enquiry,மதுபோதையில் ரகளை,intoxication</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/l47mhzty/102.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மதுபோதையில் பெண் ரகளை]]></media:title><media:description type="html"><![CDATA[ பொதுமக்கள் தர்ம அடி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/l47mhzty/102.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் மதுபோதையில் பொதுமக்களிடம் ஆபாசமாகப் பேசி தகராறில் ஈடுபட்ட இளம்பெண்ணை போலீசார் மீட்டு, அவரது பெற்றோரிடம் அனுப்பி வைத்தனர்.</p><h2>மதுபோதையில் இளம்பெண் தகராறு</h2><p>சென்னை திருவல்லிக்கேணி டாக்டர் நடேசன் சாலையில் உள்ள ஒரு உணவகத்திற்கு இளம்பெண் ஒருவர் தனது காதலனுடன் நேற்றிரவு (வியாழக்கிழமை) சென்றுள்ளார். அப்போது, அந்த பெண் கடுமையான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">மதுபோதையில்</a> இருந்துள்ளார்.  உணவகத்தில் இருந்தபோதும், சாலையில் நடந்து சென்றபோதும் அப்பகுதியில் இருந்த பொதுமக்களைப் பார்த்து அந்த பெண் திடீரென ஆபாச வார்த்தைகளால் திட்டி ரகளையில் ஈடுபட்டுள்ளார். மேலும் அந்த வழியாக வந்த கார் ஒன்றை தனது காலால் எட்டி உதைத்தார்.</p><h2>பொதுமக்கள் கண்டனம்</h2><p>பெண்ணின் இந்த அநாகரிகமான செயலால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பொதுமக்கள்</a> மற்றும் வாகன ஓட்டிகள் அவரைச் சூழ்ந்துகொண்டு தட்டிக்கேட்டனர். இதனால் இருதரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே அங்கிருந்த ஒருவர் அந்த பெண்ணின் தலையில் பலமுறை அடித்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இந்த மோதல் தொடர்பான காட்சிகள் அங்கிருந்தவர்களால் வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களிலும் பரவியது.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஐஸ் ஹவுஸ் போலீசார், பொதுமக்களிடம் இருந்து அந்தப் பெண்ணை பத்திரமாக மீட்டனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88"> விசாரணை</a> நடத்தினர். பின்னர் அந்த பெண்ணின் பெற்றோரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்த போலீசார், அவர்களுக்கு உரிய அறிவுரைகளையும், எச்சரிக்கையையும் வழங்கி அந்த பெண்ணை அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">Chennai Drunkard Girl Viral Video| போதையில் சென்னை இளம்பெண் ரகளை..  பொளந்துவிட்ட பப்ளிக் <a href="https://x.com/hashtag/chennaidrunkardgirl?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#chennaidrunkardgirl</a> <a href="https://x.com/hashtag/drunkardgirlviralvideo?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#drunkardgirlviralvideo</a><a href="https://t.co/ovCPqeM57N">https://t.co/ovCPqeM57N</a></p>&mdash; Thanthi TV (@ThanthiTV) <a href="https://x.com/ThanthiTV/status/2093207918904844317?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: கடலில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு- போலீசார் விசாரணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-male-body-recovered-in-decomposed-state-in-the-sea-police-investigating</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-male-body-recovered-in-decomposed-state-in-the-sea-police-investigating#comments</comments><guid isPermaLink="false">b62de7a9-a393-4daf-bdb7-78d8db7982f2</guid><pubDate>Fri, 28 Aug 2026 06:40:11 +0000</pubDate><atom:updated>2026-08-28T06:40:11.605Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>sea,கடல்,Thoothukudi,தூத்துக்குடி,police investigation,body recovered,Male,போலீசார் விசாரணை,ஆண் உடல் மீட்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/0o3ynjar/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உடல் மீட்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/0o3ynjar/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> புதிய துறைமுகம் அருகே கடலில் அழுகிய நிலையில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D">ஆண் சடலம்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">மீட்கப்பட்டது</a> குறித்து கடலோரக் காவல் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>ஆண் சடலம் மீட்பு</h2><p>தூத்துக்குடி புதிய துறைமுக முகத்துவாரத்திற்குச் சற்று தெற்கே கடலில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் மிதப்பதாகக் காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற மீனவர் காலனி கடலோரக் காவல் நிலைய போலீசார், கடலில் மிதந்த சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். </p><h2>போலீசார் விசாரணை</h2><p>இறந்து கிடந்த நபரின் பெயர், ஊர் மற்றும் வயது குறித்த விவரங்கள் தெரியவில்லை. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கடலோர காவல் நிலைய போலீசார், உயிரிழந்தவர் யார்? அவர் எவ்வாறு கடலில் விழுந்தார் என்பது குறித்து தீவிர <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">விசாரணை</a> நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>நேபாள பெருவெள்ளம்: டெல்லி உதவி மைய கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர்கள் குழு ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nepal-floods-group-of-ministers-reviews-operations-at-delhi-assistance-centre-control-room</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nepal-floods-group-of-ministers-reviews-operations-at-delhi-assistance-centre-control-room#comments</comments><guid isPermaLink="false">ee98418a-b3dd-45fa-a2ba-2a72d6d2718c</guid><pubDate>Fri, 28 Aug 2026 06:36:24 +0000</pubDate><atom:updated>2026-08-28T06:36:24.261Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,Aadhav Arjuna,ஆதவ் அர்ஜுனா,ராஜ்மோகன்,Rajmohan,nepal flood,நேபாளம் வெள்ளம்,NepalFloods</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/cngzhs9s/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/cngzhs9s/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நேபாளத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் இருந்து சென்ற மொத்தம் 85 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களது உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.</p><p>இதனிடையே, மீட்புப்பணிகளை ஒருங்கிணைப்பதற்காக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் மற்றும் அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு ஆகியோர் நேற்று டெல்லி சென்றனர்.</p><p>இந்த நிலையில், நேபாள பேரிடரில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகளுக்காக, டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையக் கட்டுப்பாட்டு அறையை பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் மற்றும் அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.</p><p>உதவி மையத்தின் செயல்பாடுகள், பெறப்படும் அழைப்புகள், தகவல் சேகரிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பு குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்தனர். தூதரக அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.</p><p>இதுதொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் கூறுகையில், தமிழகத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் தான் நேபாளம் சென்றிருப்பார்கள் என்று நினைத்தோம். தற்போது ஒன்றுக்கும் மேற்பட்ட குழுவைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. 26 பேர் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களை தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிலரை கண்டறிய முடியவில்லை. மத்திய அரசு, நேபாள அரசுடன் பேசி அவர்களுக்கான உதவிகளை செய்வோம். விரைவில் அவர்களை மீட்டு வருவோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு துணை நிற்போம்’ என்றார்.</p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-tomorrow-16</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-tomorrow-16#comments</comments><guid isPermaLink="false">bdb2053f-63da-453b-9b0c-fc1f44444a46</guid><pubDate>Fri, 28 Aug 2026 06:20:51 +0000</pubDate><atom:updated>2026-08-28T06:20:51.867Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,monthly maintenance work,மாதாந்திர பராமரிப்பு பணி,Power outage tomorrow,நாளை மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/decrqgay/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை..]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/decrqgay/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டம், திருநெல்வேலி நகர்ப்புறம், திருநெல்வேலி கிராமப்புறம், வள்ளியூர், கல்லிடைக்குறிச்சி கோட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை (29.8.2026, சனிக்கிழமை) <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் காரணமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம்</h2><p>திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம் செயற்பொறியாளர் ரவிராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>பாளையங்கோட்டை மற்றும் சமாதானபுரம் துணை மின் நிலையங்களில் நாளை (29.8.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும். </p><p>இதன் காரணமாக வி.எம்.சத்திரம், கிருஷ்ணாபுரம், கட்டபொம்மன்நகர், செய்துங்கநல்லூர், அரியகுளம், மேலக்குளம், நடுவக்குறிச்சி, ரஹமத்நகர், நீதிமன்றபகுதி, சாந்திநகர், சமாதானபுரம், அசோக் திரையரங்கம் பகுதி, பாளை மார்க்கெட் பகுதி, திருச்செந்தூர் சாலை, கான்சாபுரம், திம்மராஜபுரம், பொட்டல், படப்பக்குறிச்சி, திருமலைகொழுந்துபுரம், மணப்படைவீடு, கீழநத்தம், பாளை பேருந்து நிலையம், முருகன்குறிச்சி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>திருநெல்வேலி கிராமப்புற கோட்டம்</h2><p>திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>கரந்தானேரி, ரஸ்தா, மூன்றடைப்பு, பரப்பாடி, வன்னிக்கோனேந்தல், மானுர் மற்றும் மூலைக்கரைப்பட்டி துணை மின் நிலையங்களில் நாளை (29.8.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. </p><p>இதன் காரணமாக மானூர், மாவடி, தெற்குபட்டி, களக்குடி, எட்டாங்குளம், கானார்பட்டி, பிள்ளையார்குளம், சிங்கநேரி, அம்பலம், திடியூர், மூன்றடைப்பு, பானாங்குளம். மதவக்குறிச்சி, துலுக்கர்பட்டி, ரஸ்தா, பட்டவர்த்தி, வெங்கலப்பொட்டல், நரியூத்து. அம்பூரணி, தோட்டாக்குடி, பத்தினிப்பாறை, மருதகுளம். </p><p>பரப்பாடி, இலங்குளம், சடையனேரி, சவனைக்காரன்குளம், வில்லயனேரி, ஏமன்குளம், பெருமாள்நகர், கேர்க்கனேரி, காரன்காடு, தட்டான்குளம், கண்ணநல்லூர், துலுக்கர்ப்பட்டி, பட்டர்புரம், மாவடி, முத்தலாபுரம், சித்தூர், சீயோன்மலை, கண்ணாத்திகுளம், தங்கயம். </p><p>வன்னிக்கோனேந்தல், மூவிருந்தாளி, தேவர்குளம், முத்தம்மாள்புரம், கண்ணாடிகுளம், மருக்காலங்குளம், தெற்குபனவடலி, நரிக்குடி மூலைகரைப்பட்டி, பருத்திப்பாடு, புதுக்குறிச்சி, மருதகுளம், கோவைகுளம், முனைஞ்சிப்பட்டி, தாமரைசெல்வி, காடான்குளம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.</p><p>இதேபோல் கங்கைகொண்டான் துணை மின் நிலையத்தில் நாளை (29.8.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும். இதன் காரணமாக பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. </p><p>சீவலப்பேரி, கங்கைகொண்டான், பாலாமடை, பதினாலாம்பேரி, குப்பக்குறிச்சி, பருத்திகுளம், துறையூர், ராஜாபதி, வெங்கடாசலபுரம், ஆலடிப்பட்டி, அலவந்தான்குளம், செழியநல்லூர் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>வள்ளியூர் கோட்டம்</h2><p>வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>நவலடி மற்றும் சங்கனான்குளம் துணை மின் நிலையங்களில் நாளை (29.8.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணை மின் நிலையங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும். இதன் காரணமாக பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது. </p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>நவலடி, ஆற்றங்கரை பள்ளிவாசல், தோட்டவிளை, தெற்குபுளிமான்குளம், கோடாவிளை, மரக்காட்டுவிளை, செம்பொன்விளை, காளிகுமாரபுரம், குண்டல், உவரி, கூடுதாழை, கூட்டபணை, குட்டம், பெட்டைகுளம், உறுமன்குளம்.</p><p>மன்னார்புரம், வடக்கு விஜயநாராயண், தெற்கு விஜயநாராயண், இட்டமொழி, நம்பிகுறிச்சி, தெற்கு ஏராந்தை, சிவந்தியாபுரம், பரப்பாடி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>கல்லிடைக்குறிச்சி கோட்டம்</h2><p>கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும்பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>கல்லிடைக்குறிச்சி மின் கோட்டத்திற்குட்பட்ட மேலக்கல்லூர் துணைமின் நிலையத்தில் நாளை (29.8.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையத்தில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம் பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும். </p><p>இதன் காரணமாக மேலக்கல்லுர், சுத்தமல்லி, சங்கன்திரடு, கொண்டாநகரம், நடுக்கல்லுர், பழவூர், கருங்காடு, திருப்பணிகரிசல்குளம், துலுக்கர்குளம், பொழிக்கரை, வெள்ளாளங்குளம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>‘நேபாளத்தில் சிக்கிய தமிழர்களை தாயகம் அழைத்து வர அனைத்து நடவடிக்கைகளையும் முதல்-அமைச்சர் விஜய் மேற்கொள்வார்’ - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-will-take-all-measures-to-bring-back-the-tamils-stranded-in-nepal-to-their-homeland-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-will-take-all-measures-to-bring-back-the-tamils-stranded-in-nepal-to-their-homeland-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">00b683a1-709c-40b8-a436-3953c29ee619</guid><pubDate>Fri, 28 Aug 2026 06:09:02 +0000</pubDate><atom:updated>2026-08-28T06:09:02.401Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nepal,நேபாளம்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/jcozjung/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/jcozjung/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காங்கிரஸ் மாநில தலைவர் ப.மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“வரலாறு காணாத வகையில் நேபாள நாட்டில் பனிப்பாறை சரிவு ஏற்படுத்திய பெருவெள்ளத்தில் சிக்கி 392 பேர் பலியாகி இருக்கிறார்கள். 800 பேர் மீட்கப்பட்டுள்ளனர், 910 பேர் காணாமல் போயிருக்கிறார்கள். இவர்களை மீட்கின்ற பணியில் இந்திய வெளியுறவுத்துறை, நேபாள அரசோடும், காத்மாண்டுவில் அமைந்துள்ள இந்திய தூதரகத்துடனும் தொடர்பு கொண்டு மீட்பு பணிகளை விரைவாக மேற்கொண்டு வருகின்றனர். </p><p>நேபாள நாட்டில் கைலாஷ் யாத்திரைக்காக தமிழ்நாட்டிலிருந்து 103 தமிழர்கள் பயணம் மேற்கொண்டனர். இதில் 54 பேர் மீட்கப்பட்டு தாயகம் திரும்புவதற்கு காத்மாண்டில் உள்ள இந்திய தூதரகம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நேபாளத்தில் ஏற்பட்டுள்ள இந்த மரணப் பெருவெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவிப்பதோடு, எஞ்சியிருக்கிற குறிப்பாக, தமிழர்களை மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தனது அமைச்சரவை மூலமாக துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகிறார். </p><p>அதன்மூலம் மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்கின்ற பணி நடைபெற்று வருகிறது. இத்தகைய துயரமான நேரத்தில் பெருவெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க வேண்டிய கடமையும், பொறுப்பும் இந்திய அரசுக்கு இருக்கிறது. தமிழர்களை மீட்க வேண்டிய கூடுதல் பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது.</p><p>நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, அவர்கள் தாயகம் திரும்பி வர அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் மேற்கொள்வார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>நெல்லையில் பெட்ரோல் குண்டு வீச்சால் பரபரப்பு: 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/petrol-bomb-attack-causes-panic-in-nellai-2-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/petrol-bomb-attack-causes-panic-in-nellai-2-arrested#comments</comments><guid isPermaLink="false">a47a40cf-71db-4a2a-94bc-edd542bfc73b</guid><pubDate>Fri, 28 Aug 2026 06:08:57 +0000</pubDate><atom:updated>2026-08-28T06:08:57.091Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,2 arrested,2 பேர் கைது,police investigation,போலீஸ் விசாரணை,பரபரப்பு,petrol bomb attack,commotion,பெட்ரோல் குண்டு வீச்சு,தச்சநல்லூர்,Thachanallur</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/1wv15jsv/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நெல்லையில் பெட்ரோல் குண்டு வீச்சால் பரபரப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/1wv15jsv/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">நெல்லையில்</a> ஒரு தலைவரின் நினைவு பீடம் அருகே <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81">பெட்ரோல் குண்டு வீசப்பட்ட</a> சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக <a href="https://www.dailythanthi.com/topic/2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">2 பேர் கைது</a> செய்யப்பட்டுள்ளனர். அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். </p><h2>பெட்ரோல் குண்டு வீச்சு</h2><p>நெல்லை சந்திப்பு ஸ்ரீபுரம் பகுதியில் இருந்து தச்சநல்லூர் செல்லும் சிவசக்தி சாலையில் ஊருடையான் குடியிருப்பு பகுதியில் 2 சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் முத்துராமலிங்க தேவரின் நினைவு பீடம் உள்ளது. அந்த பீடத்தின் அருகே நேற்று நள்ளிரவில் 2 மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டினை வீசிவிட்டு தப்பிச் சென்றனர். இதைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். பின்னர் இதுகுறித்து தச்சநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. </p><h2>சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் ஆய்வு</h2><p>அதை தொடர்ந்து தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டபோது, அந்த இடத்தில் கண்ணாடி பாட்டில் துகள்கள், திரி ஆகியவை சிதறிக் கிடந்தது தெரிய வந்தது. போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மதுபாட்டிலில் பெட்ரோல் நிரப்பி திரி வைத்து, அதில் தீ பற்ற வைத்து மர்ம நபர்கள் அந்த பீடத்தின் மீது வீசிவிட்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களின் பதிவுகள் மூலம் போலீசார் ஆய்வு செய்தனர். </p><h2>2 பேர் கைது</h2><p>அதில் அப்பகுதியைச் சேர்ந்த சீனிவாசராஜா மகன் ஆகாஷ்ராமதுரை (வயது 22) மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த சந்தனக்குமார்(21) ஆகிய 2 பேரும் பெட்ரோல் குண்டு வீசிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் உடனடியாக போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதையடுத்து இன்று அதிகாலையில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் (பொறுப்பு), நெல்லை சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். இதனிடையே பெட்ரோல் குண்டு வீசிய 2 பேரும் ரவுடிகள் பட்டியலில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருவது விசாரணையில் தெரியவந்தது. </p><h2>பெட்ரோல் குண்டு வீச்சுக்கு காரணம் என்ன?</h2><p>நெல்லை சந்திப்பு ஊருடையான்குடியிருப்பு பகுதியில் இரண்டு சமுதாயத்தினரும் வசித்து வரும் குடியிருப்புகளுக்கு நடுவில் அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்த இடத்தை இரண்டு சமுதாயத்தினரும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் தனிப்பட்ட நபர்கள் யாருக்கும் அதில் உரிமை இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த இடத்தில் ஒரு தரப்பினர் கூரை அமைக்க நடவடிக்கை எடுத்ததாகவும், அதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து தச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் அந்த பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆத்திரமடைந்ததை தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்திருக்கலாம் என்று காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>போலீசார் குவிப்பு</h2><p>பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">பரபரப்பு</a> ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புக்காக ஏராளமான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்</a>.</p>]]></content:encoded></item><item><title>செம்மஞ்சேரியில் விளையாட்டு நகரம் அமைக்க வழங்கப்பட்ட பணி ஆணை ரத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/work-order-issued-for-setting-up-a-sports-city-in-semmancheri-cancelled</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/work-order-issued-for-setting-up-a-sports-city-in-semmancheri-cancelled#comments</comments><guid isPermaLink="false">205a5028-289f-4abe-b0e1-9425c85382fe</guid><pubDate>Fri, 28 Aug 2026 05:44:45 +0000</pubDate><atom:updated>2026-08-28T05:44:45.027Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,தமிழக அரசு,TN govt,செம்மஞ்சேரி,Semmancheri,விளையாட்டு நகரம்,sports city</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/xk52yymi/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/xk52yymi/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு அரசு விளையாட்டுத்துறைக்கு அதிக அளவில் முக்கியத்துவம் அளித்து வருகிறது.  இதனால் பல்வேறு வகையான விளையாட்டுகளினுடைய சர்வதேச போட்டிகள் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடத்தப்பட்டன.  அந்த வகையில்,  சென்னையில் உலக தரத்திலான மெகா ஸ்போர்ட் சிட்டி எனும் விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என்று 2023-ம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.</p><p>இந்த விளையாட்டு நகரத்தை அமைக்க தகுந்த இடத்திற்கான ஆய்வுகள் நடந்தன.  அதில் செம்மஞ்சேரி, வண்டலூர்,  குண்டம்பாக்கம் உள்ளிட்ட 3 இடங்களில் இந்த விளையாட்டு நகரம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக கண்டறியப்பட்டது. இதனையடுத்து, செம்மேஞ்சேரியை தேர்வு செய்து அங்கு விளையாட்டு நகரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.</p><p>இந்த விளையாட்டு நகரத்தில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான வீரர்கள் பயிற்சி பெறும் வகையிலும் சர்வதேச அளவில் போட்டிகள் நடைபெறும்போது வெளிநாட்டு வீரர்கள் வந்து செல்ல வசதியாக சென்னை விமான நிலையத்துக்கு அருகேயும் இந்த விளையாட்டு நகரத்தை அமைக்க அரசு திட்டமிட்டிருந்தது. இதையடுத்து அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு செய்து விளையாட்டு நகரத்தை அமைக்க ஆர்பிபி என்ற நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டிருந்தது.</p><p>இந்த நிலையில், செம்மஞ்சேரியில் சர்வதேச தரத்தில் மெகா விளையாட்டு நகரம் அமைக்க திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பணி ஆணையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. 112 ஏக்கரில் ரூ.206 கோடியில் விளையாட்டு நகரம் அமைக்க ஆர்பிபி என்ற நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டிருந்தது. அதனை ரத்து செய்துள்ளதாக அந்நிறுவனத்திற்கு அரசு கடிதம் அனுப்பியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்: முதல் அமைச்சர் விஜய் பதில் மனு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-has-filed-a-counter-affidavit-seeking-the-lifting-of-the-stay-on-holding-by-elections-for-five-constituencies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-has-filed-a-counter-affidavit-seeking-the-lifting-of-the-stay-on-holding-by-elections-for-five-constituencies#comments</comments><guid isPermaLink="false">837212da-b199-42aa-9615-96ea1b7ecbdf</guid><pubDate>Fri, 28 Aug 2026 05:14:56 +0000</pubDate><atom:updated>2026-08-28T05:14:56.009Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,இடைத்தேர்தல்,By election,முதல் அமைச்சர்,TN CM</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/2t4kgm9g/Vijay.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/2t4kgm9g/Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். அதேபோல, கரூர் தொகுதி எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். இவர்களின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள போது, இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.</p><h2>மக்கள் பிரதிநிதிகள்</h2><p>இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, தேர்தல் வழக்கு முடிவுக்கு வரும் முன்பு அந்த தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்துவது அரசு பணம் செலவிடப்படுவதுடன், ஒரே தொகுதிக்கு இரண்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் சாசன பிரச்சினை எழும் என குறிப்பிட்டு, ஐந்து தொகுதிகளுக்கும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">இடைத்தேர்தல்</a> அறிவிக்க தடை விதித்து, இந்திய தேர்தல் ஆணையம், மத்திய அரசு, சட்டப்பேரவை செயலாளர், முதல்வர் விஜய், எம்.எல்.ஏ.-க்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா உள்ளிட்டோர் மூன்று வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. </p> <h2>தேர்தல் அறிவிக்க வேண்டும்</h2><p>இந்த வழக்கில் முதல் அமைசச்ர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">விஜய்</a> தரப்பில்  பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், 5 தொகுதி இடைத்தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். மக்கள் பிரதிநித்துவ சட்டப்படி 6 மாதத்திற்குள் தேர்தல் அறிவிக்க வேண்டும்.  எம்.எல்.ஏக்கள் இல்லாமல் தொகுதி மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.  எனவே, 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை  நீக்க வேண்டும். இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்ற உள்நோக்கத்துடன் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே, இடைத்தேர்தலுக்கு தடை கோரி வெங்கடாஜலபதி தாக்கல் செய்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு: சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rise-in-prices-of-essential-commodities-calling-attention-motion-in-the-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rise-in-prices-of-essential-commodities-calling-attention-motion-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">66640654-0e1d-4f71-b765-994ffa08904e</guid><pubDate>Fri, 28 Aug 2026 05:03:26 +0000</pubDate><atom:updated>2026-08-28T05:03:26.514Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,Edappadi Palaniswami,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,சட்டசபை,TN Assembly,அத்தியாவசிய பொருட்கள்,essential commodities</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/3ego0gmh/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/3ego0gmh/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு தொடர்பாக சட்டசபையில் திமுக, அதிமுக, பாமக, கம்யூனிஸ்டு கட்சிகள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். </p><p><strong>இந்த தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-</strong></p><p>அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட எந்தப் பொருளை எடுத்துக்கொண்டாலும், மூன்று மாதங்களில் பல மடங்கு விலை உயர்ந்துள்ளது. விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழை மக்கள் மளிகை கடை பக்கம் போவதையே குறைத்துக்கொண்டார்கள்.</p><p>இடதுசாரிகள் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்தி உள்ளனர். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 2007-ம் ஆண்டு தேசிய அளவில் கடுமையான விலைவாசி உயர்வு ஏற்பட்டது. அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, சிறப்பு விநியோகத் திட்டத்தைக் கொண்டு வந்தார். அதன்படி, ரேஷன் கடைகள் மூலம் பருப்பு, எண்ணெய், ரவா உள்ளிட்டவற்றை சந்தை விலையைவிட குறைந்த விலையில் வழங்கினார்கள்.</p><p>மேலும், கடுகு, சீரகம் போன்ற 10 மளிகைப் பொருட்களை ரூ.50-க்கு வழங்கினார்கள். இந்தத் திட்டம் இன்றும். நடைமுறையில் உள்ளது. ரேஷன் கடைகளில் தற்போது வழங்கப்படும் சர்க்கரை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை, கூடுதலான அளவில் வழங்க வேண்டும். மேலும் விலைவாசி உயர்வு தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும் என்று கூறினார்.</p><p><strong>பின்னர் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-</strong></p><p>தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அரிசி விலை ரூ.20 வரை உயர்ந்துள்ளது. அரிசி, சர்க்கரை, மிளகாய், புளி, வெல்லம், எண்ணெய் போன்றவற்றின் விலை அதிகரித்துள்ளது. எங்கள் ஆட்சியில் விலையைக் குறைக்க, எந்த மாநிலத்தில் விலை குறைவாக உள்ளதோ, அந்த மாநிலத்திற்குச் சென்று கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழகம் கொண்டு வந்து விற்பனை செய்து, விலை ஏற்றத்தைத் தடுத்தோம். அதேபோல், இந்த அரசும் செய்ய வேண்டும் என்றார்.</p><p><strong>பாமக எம்.எல்.ஏ. கனேஷ்குமார் பேசுகையில்,</strong> “மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் விலை 30% வரை உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.</p><p>சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் பதில் அளித்து பேசியதாவது:-</p><p>ஈரான் போர், எரிபொருள் விலை உயர்வால்தான் அத்தியாவசிய பொருட்களும் விலை உயர்ந்துள்ளன; வெங்காயம் உள்ளிட்ட 41 பொருட்களுக்கான விலையை தினந்தோறும் கவனித்து வருகிறோம். விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விலை அதிகமாக உள்ள பொருட்களை அரசு விற்பனை செய்யவும், கடந்த ஆட்சிகளில் நடந்தது போல் ரேஷன் கடை மூலம் மட்டுமல்ல பசுமை அங்காடி மூலமும் பொருட்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெங்காய விலையை கட்டுப்படுத்த 2 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும். வெங்காயம், உருளை விலையும் தினசரி கண்காணிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: லாரியில் கடத்திய 2.8 கிலோ கஞ்சா பறிமுதல்- 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-28-kg-of-ganja-smuggled-in-a-lorry-seized-2-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-28-kg-of-ganja-smuggled-in-a-lorry-seized-2-arrested#comments</comments><guid isPermaLink="false">105e16f7-d3fb-49d2-b686-e4f8563dc04b</guid><pubDate>Fri, 28 Aug 2026 04:08:13 +0000</pubDate><atom:updated>2026-08-28T04:08:13.199Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,Ganja,தூத்துக்குடி,கஞ்சா,பறிமுதல்,seized,2 arrested,2 பேர் கைது,lorry,லாரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/f3wtwsu2/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-2.8-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ லாரியில் கடத்திய 2.8 கிலோ கஞ்சா பறிமுதல்- 2 பேர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/f3wtwsu2/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-2.8-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மதுரை பைபாஸ் சாலையில் உள்ள லாரி நிறுத்தம் பகுதியில் லாரியில் சட்டவிரோத விற்பனைக்காக 2.8 கிலோ <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE">கஞ்சா</a> வைத்திருந்த 2 பேரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.</p><h2>போலீஸ் அதிரடி சோதனை</h2><p>தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரை பைபாஸ் சாலையின் லாரி நிறுத்தம் அருகில், கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா தலைமையிலான போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது லாரியில் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. </p><h2>2.8 கிலோ கஞ்சா, லாரி பறிமுதல், 2 பேர் கைது</h2><p>இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கஞ்சா வைத்திருந்த ஏரல் மாறமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜ் மகன் பொன்செல்வம் (வயது 22) மற்றும் தூத்துக்குடி பண்டாரவிளை பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் அசோக்குமார்(28) ஆகிய 2 பேரையும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 கிலோ 800 கிராம் கஞ்சா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF">லாரி</a> ஆகியவற்றை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">பறிமுதல்</a> செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-tomorrow-12</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-tomorrow-12#comments</comments><guid isPermaLink="false">6fce7390-2e32-4808-8c34-51f4c9053bb7</guid><pubDate>Fri, 28 Aug 2026 03:44:34 +0000</pubDate><atom:updated>2026-08-28T03:44:34.191Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,monthly maintenance work,தென்காசி,மாதாந்திர பராமரிப்பு பணி,Power outage tomorrow,நாளை மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/8j3hlr9a/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/8j3hlr9a/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p>திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF">தென்காசி</a> மாவட்டம், சங்கரன்கோவில், கடையநல்லூர் கோட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை (29.8.2026, சனிக்கிழமை) <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் காரணமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>சங்கரன்கோவில் கோட்டம்</h2><p>சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>மலையாங்குளம், கலிங்கப்பட்டி, திருவேங்கடம், நக்கலமுத்தன்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (29.8.2026, சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு வேலைகள் நடைபெற உள்ளது. </p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>இதன் காரணமாக மலையாங்குளம், சிதம்பராபுரம், செவல்குளம், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி ஆகிய ஊர்களுக்கும், கலிங்கப்பட்டி, சத்திரப்பட்டி, ஆலடிப்பட்டி, மலையடிப்பட்டி, சுப்புலாபுரம், செள்ளிகுளம், பாறைப்பட்டி, பருவக்குடி, கரிசல்குளம் மற்றும் ரெங்கசமுத்திரம் ஆகிய ஊர்களுக்கும், திருவேங்கடம், உமையத்தலைவன்பட்டி, ஆலமநாயக்கம்பட்டி, மகாதேவர்பட்டி, ஆலடிப்பட்டி, கரிசல்குளம், குறிஞ்சாகுளம், வெள்ளாகுளம், சங்குப்பட்டி, புதுப்பட்டி, ஆவுடையார்புரம் மற்றும் குண்டம்பட்டி ஆகிய ஊர்களுக்கும், நக்கலமுத்தன்பட்டி, இளையரசனேந்தல், கொம்பன்குளம், வெங்கடாசலபுரம், புளியங்குளம் அய்யனேரி, அப்பனேரி. ஆண்டிப்பட்டி, மைப்பாறை ஆகிய ஊர்களுக்கும் மின்விநியோகம் தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p><h2>கடையநல்லூர் கோட்டம்</h2><p>கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பகவிநாயகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>விஸ்வநாதபேரி துணைமின் நிலையத்தில் நாளை (29.8.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பின்வருமாறு குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் பின்வரும் இடங்களில் இருக்காது.</p><h2>காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை</h2><p>சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்குசத்திரம், வழிவழிக்குளம், மேலகரிசல்குளம், ராயகிரி, கொத்தாடைப்பட்டி, சொக்கநாதன்புத்தூர், மேலூர் துரைச்சாமிபுரம் மற்றும் வடுகப்பட்டி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஈரோட்டில் கழுத்தை நெரித்து இளம்பெண் கொலை; கள்ளக்காதலன் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-strangled-to-death-in-erode-fake-lover-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-strangled-to-death-in-erode-fake-lover-arrested#comments</comments><guid isPermaLink="false">d2838bf0-cb93-45b5-ade4-247bde1deff4</guid><pubDate>Fri, 28 Aug 2026 03:39:35 +0000</pubDate><atom:updated>2026-08-28T03:39:35.635Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,young woman,இளம்பெண்,கள்ளக்காதல்,Erode,ஈரோடு,கிரைம் செய்திகள்,fake love</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/www950h3/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/www950h3/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>ஈரோடு பி.பி.அக்ரஹாரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 31). டிரைவர். இவருடைய மனைவி சுகுணா (26). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சுகுணாவுக்கும், பி.பி.அக்ரஹாரம் இஸ்மாயில் மைதீன் வீதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான தவுபிக் (28) என்பவருக்கும் இடையே கடந்த 12 ஆண்டாக கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படு கிறது. இது குறித்து கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் 2 முறை புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் 2 பேரையும் அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.</p><p>இந்த நிலையில் சம்பவத்தன்று மதியம் இஸ்மாயில் மைதீன் வீதியில் சுகுணா மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சுகுணா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார், சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.</p><h2>சாலை மறியல்</h2><p>இந்த நிலையில், ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்ய போதிய வசதி இல்லை எனக்கூறி சுகுணாவின் உடல் நேற்று காலை பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையில், பி.பி.அக்ரஹாரம் பகுதியில் ஈரோடு -பவானி ரோட்டில் சுகுணாவின் உறவினர்கள் 300-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை 3 மணிக்கு திடீரென சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர்.</p><p>மேலும் ரோட்டில் கற்கள், பலகைகளை போட்டு அந்த வழியாக எந்தவிதமான வாகனங்களும் செல்ல முடியாதபடி செய்தனர். இதனால் பவானி ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், துணை சூப்பிரண்டுகள் முத்துக்குமார், ஜெயசிங் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று போக்குவரத்தை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர்.</p><h2>போக்குவரத்து பாதிப்பு</h2><p>இதைத்தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர் களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சுகு ணாவின் உறவினர்கள் கூறும்போது. 'சுகுணாவின் கழுத்தை நெரித்து தவுபிக் தான் கொலை செய்துள்ளார். எனவே அவரை கைது செய்து எங்களிடம் காண்பிக்க வேண்டும். மேலும் அவருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்' என்று கூறினர்.</p><p>அதைத்தொடர்ந்து போலீசார், தவுபிக்கை கைது செய்து, வீடியோ கால் மூலம் அங்கிருந்தவர்களிடம் காண்பித்தனர். இதையடுத்து சுகுணாவின் உறவினர்கள் மாலை 5 மணி அளவில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். போராட்டம் காரணமாக பவானி ரோட் டில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பதற்றமான சூழ்நிலையும் நிலவியது.</p><h2>இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் கூறியதாவது:-</h2><p>தவுபீக் திருமணம் ஆனவர். அவருக்கு குழந்தை இல்லை. நேற்று முன்தினம் காலையில் தவுபிக் வீட்டுக்கு சுகுணா சென்றுள்ளார். அங்கு 2 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த தவுபிக், சுகுணா வின் கழுத்தை பிடித்து நெரித்துள்ளார். இதில் சுகுணா மயங்கி கீழே விழுந்து எந்தவிதமான அசைவின்றி கிடந்துள்ளார்.</p><p>இதனால் சுகுணாவை தனது வீட்டுக்கு வெளியே சிறிது தூரம் இழுத்து சென்று ரோட்டோரம் போட்டு விட்டு தவுபிக் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதைத்தொடர்ந்து தவுபிக்கை தேடி கண்டுபிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தோம். இதற் கிடையில் பிரேத பரிசோதனையில் சுகுணா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது உறுதியானது. இதனால் சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி, கள்ளக்காதலனான தவுபிக்கை கைது செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>மதுரையில் ஹெலிகாப்டர் சேவை: 30 நிமிடத்தில் திருச்செந்தூர் செல்லலாம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/helicopter-service-in-madurai-you-can-go-to-tiruchendur-in-30-minutes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/helicopter-service-in-madurai-you-can-go-to-tiruchendur-in-30-minutes#comments</comments><guid isPermaLink="false">cf39451a-8280-478e-beb2-3ba926200d6d</guid><pubDate>Fri, 28 Aug 2026 03:36:31 +0000</pubDate><atom:updated>2026-08-28T03:36:31.041Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Madurai,மதுரை,திருச்செந்தூர்,Tiruchendur,service,helicopter,தொடக்கம்,சுற்றுலா,Tourism,Start,ஹெலிகாப்டர் சேவை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/8k2bbumo/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மதுரையில் ஹெலிகாப்டர் சேவை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/8k2bbumo/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p>மதுரையில் தொடங்கப்பட்டுள்ள தனியார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88">ஹெலிகாப்டர் சேவை</a> மூலம் 30 நிமிடத்தில் திருச்செந்தூர் செல்ல முடியும்.</p><h2>சுற்றுலாவுக்கு ஹெலிகாப்டர் சேவை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88">மதுரை</a> வளர்ந்து வரும் சுற்றுலா நகரமாக உள்ளது. இந்த நிலையில் மதுரையை மையமாக கொண்டு ராமேசுவரம், கொடைக்கானல், திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட பகுதிகளுக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE">சுற்றுலா</a> செல்வதற்கான தனியார் ஹெலிகாப்டர் சேவை நேற்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">தொடங்கப்பட்டது</a>. இதற்கான ஹெலிகாப்டர் இறங்கு தளம் மதுரை விமான நிலையம் அருகில் உள்ள ஒரு கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.</p><h2>30 நிமிடங்களில் திருச்செந்தூர் செல்ல முடியும்</h2><p>இதன் மூலம் மதுரையில் இருந்து சுமார் 30 நிமிடங்களில் திருச்செந்தூர் செல்ல முடியும். இதே போல் ராமேசுவரம் மற்றும் கொடைக்கானலுக்கு சுமார் ½ மணி நேரத்தில் செல்லலாம்.</p><h2>1 மணி நேரம் 10 நிமிடங்களில் சென்னைக்கு செல்லலாம்</h2><p>சென்னைக்கு ஒரு மணி நேரம் 10 நிமிடங்களிலும், பெங்களூருவுக்கு 1½ மணி நேரத்திலும் செல்லலாம். அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி உண்டு. ஒரு மணி நேரம் ஹெலிகாப்டரில் பயணம் செய்ய சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும், இதில் 5 பேர் வரை பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘கருணாநிதி, ஜெயலலிதா காலத்தில் சட்டமன்றம் நாகரிகமாக இருந்தது’ - தமிழிசை சவுந்தரராஜன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-legislative-assembly-was-dignified-during-the-eras-of-kalaignar-and-jayalalithaa-tamilisai-soundararajan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-legislative-assembly-was-dignified-during-the-eras-of-kalaignar-and-jayalalithaa-tamilisai-soundararajan#comments</comments><guid isPermaLink="false">25158130-7c73-4352-8ea2-211377971aa9</guid><pubDate>Fri, 28 Aug 2026 03:17:33 +0000</pubDate><atom:updated>2026-08-28T03:17:33.521Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழிசை சவுந்தரராஜன்,TN Assembly,சட்டமன்றம்,Tamilisai Soundarajan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/fq0tf34h/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/fq0tf34h/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“நான் சிறுவயதில் சட்டமன்றத்திற்கு எனது தந்தையுடன் சென்று, அங்குள்ள கேலரியில் அமர்ந்து பார்த்திருக்கிறேன். முன்னாள் முதல்-அமைச்சர்கள் கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா, எனது அப்பா குமரி அனந்தன் போன்றவர்கள் இருந்த காலத்தில் சட்டமன்ற விவாதங்களை பார்ப்பதற்கே ஆசையாக இருக்கும். இந்த சபை ஒரு நாகரிகமான சபை, நாகரிகமான தலைவர்கள் அமர்ந்திருக்கின்ற சபை என்ற எண்ணம் தோன்றும். </p><p>தற்போது தமிழக சட்டமன்றத்தை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் மிகச் சிறப்பாக வழிநடத்துகிறார். ஆனால் அவரே வெறுத்துப் போகும் அளவிற்கு சிலர் நடந்து கொள்கின்றனர். மக்கள் தற்போது நேரலையில் சட்டமன்ற நிகழ்வுகளை பார்க்கிறார்கள். இளைஞர்கள் அதிகமாக பார்க்கிறார்கள். அது ஒரு ஆரோக்கியமான விஷயம். சட்டமன்றம் முன்பு போல் நாகரிகமான விவாதங்கள் நடைபெறும் சபையாக இருக்க வேண்டும். அதன் மரபை பாதுகாக்க வேண்டும். சட்டமன்றத்தை அனைவரும் ஒரு நாகரிகமான அரசியல் மன்றமாக மாற்ற வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளுக்கு தடை நீட்டிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/stay-extended-on-cases-against-senthil-balaji</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/stay-extended-on-cases-against-senthil-balaji#comments</comments><guid isPermaLink="false">1aaec835-1dfb-437b-ad6e-0c83de3d455c</guid><pubDate>Fri, 28 Aug 2026 03:16:33 +0000</pubDate><atom:updated>2026-08-28T03:16:33.933Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை ஐகோர்ட்டு,Chennai High Court,Senthil Balaji,செந்தில் பாலாஜி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/yuil4joj/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/yuil4joj/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><h2>செந்தில் பாலாஜி</h2><p>ஊத்தங்கரை த.வெ.க. எம்.எல்.ஏ. என்.இளையராஜாவிடம், குதிரை பேரம் பேசியதாக செந்தில் பாலாஜி உள்பட பலர் மீது தொடரப்பட்ட வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த ஐகோர்ட்டு குதிரை பேர வழக்கு விசாரணைக்கு ஒட்டுமொத்தமாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.</p><p>அதேபோல செந்தில்பாலாஜி உள்பட பலர் மீது டாஸ்மாக் ஊழல் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரமேஷ், சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து, அவருக்கு எதிரான விசாரணைக்கு மட்டும் இடைக் கால தடை உத்தரவை பெற்றுள்ளார்.</p><h2>தடை நீட்டிப்பு</h2><p>இந்த இரு வழக்குகளும், தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி. நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு வழக்குகளிலும் விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழ்நாடு அரசுத் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.</p><p>ஆனால், ஐகோர்ட்டு உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை எதுவும் விதிக்கவில்லை என்று நீதிபதிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடைகளை நீட்டித்தும், வழக்குகளின் விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக்கில் இன்று முதல் காலி மதுபாட்டில்களை வாங்க மாட்டோம்: வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/traders-association-announces-that-empty-liquor-bottles-will-not-be-accepted-at-tasmac-outlets-starting-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/traders-association-announces-that-empty-liquor-bottles-will-not-be-accepted-at-tasmac-outlets-starting-today#comments</comments><guid isPermaLink="false">ee5a3cf2-ea39-4b62-830e-186b428f0033</guid><pubDate>Fri, 28 Aug 2026 02:58:47 +0000</pubDate><atom:updated>2026-08-28T02:58:47.871Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டாஸ்மாக்,Tasmac,மதுபாட்டில்,liquor bottles</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/u3j5avr4/CHENNAI-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/u3j5avr4/CHENNAI-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் 3 பாட்டில் வியாபாரிகள் நலச்சங்க பொதுச்செயலாளர் சிவகுமார், இணை செயலாளர் கந்தவேல் ஆகியோர் கூறியதாவது:-</p><p>டாஸ்மாக் கடைகளில் இருந்து காலி மதுபாட்டில்களை வாங்கி, சுத்தம் செய்து மது ஆலைகளுக்கு அனுப்பும் தொழிலை நம்பி சுமார் 5 லட்சம் குடும்பங்கள் வாழ்கின்றன. வண்டி, குடோன் வாடகை உயர்வு மற்றும் ஜி.எஸ்.டி. வரி குளறுபடிகளால் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே ஜி.எஸ்.டி. வரியை மது ஆலை உரிமையாளர்களே ஏற்க வேண்டும். </p><p>அபராத நடவடிக்கைகளை கைவிட வேண்டும். இதுகுறித்து அமைச்சர்கள், மதுஆலை உரிமையாளர்கள் ஆகியோருடன் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (வெள்ளிக்கிழமை) முதல் காலி பாட்டில்களை வாங்கி சுத்தம் செய்து அனுப்பும் பணியை நிறுத்த உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் &apos;டாஸ்மாக்&apos; பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-employees-strike-in-tamil-nadu-postponed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-employees-strike-in-tamil-nadu-postponed#comments</comments><guid isPermaLink="false">f3934277-1629-4d83-9265-dfb8e94a60ec</guid><pubDate>Fri, 28 Aug 2026 02:54:02 +0000</pubDate><atom:updated>2026-08-28T02:54:02.568Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,Chennai,சென்னை,தமிழகம்,டாஸ்மாக்,Tasmac,employees,பணியாளர்கள்,strike,ஒத்திவைப்பு,வேலைநிறுத்த போராட்டம்,Postponement</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/7pf9v3px/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டாஸ்மாக் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/7pf9v3px/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">தமிழகத்தில்</a> கோரிக்கைகளை வலியுறுத்தி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D">டாஸ்மாக்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">தொழிற்சங்கங்களின்</a> கூட்டு நடவடிக்கை குழுவினர் இன்று அறிவித்திருந்த மாநிலம் தழுவிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">வேலைநிறுத்தப் போராட்டம்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">ஒத்திவைக்கப்பட்டுள்ளது</a> என அச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.   </p><h2>மாநிலம் தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம்</h2><p>தமிழக அரசின் 'டாஸ்மாக்' நிறுவனத்தின் மதுக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர், இன்று முதல் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர். </p><h2>அமைச்சர் விக்னேஷ் பேச்சுவார்த்தை</h2><p>அவர்களுடன் இந்த மாதம் 24-ம் தேதி, மது விலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் திருப்தி அடையாததால், திட்டமிட்டபடி போராட்டம் நடந்தப்படும் என தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில், நேற்று மாலை அவர்களுடன், அமைச்சர் விக்னேஷ் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். </p><h2>வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு</h2><p>அந்த பேச்சுவார்த்தையில், 'வரும் 31-ம் தேதி மது விலக்கு ஆயத்தீர்வை துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு, சீருடை உள்ளிட்ட கோரிக்கைகள் சார்ந்த அறிவிப்புகள் வெளியிடப்படும்' என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, போராட்டத்தை ஒத்தி வைப்பதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. </p>]]></content:encoded></item><item><title>உயரும் விலை; ஆன்லைன் செயலிகளில் சர்க்கரை வாங்க வரம்பு நிர்ணயம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rising-prices-limits-set-on-sugar-purchases-via-online-apps</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rising-prices-limits-set-on-sugar-purchases-via-online-apps#comments</comments><guid isPermaLink="false">d0bcdc27-f1a6-44af-bd7b-488a38cde691</guid><pubDate>Fri, 28 Aug 2026 02:49:34 +0000</pubDate><atom:updated>2026-08-28T02:49:34.919Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆன்லைன்,Sugar,சர்க்கரை,விலை அதிகரிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/1dig95vu/National-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/1dig95vu/National-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><p>விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் செப்டம்பர் 14-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. தொடர்ந்து அக்டோபர் 11-ந்தேதியில் இருந்து நவராத்திரி பண்டிகை ஆரம்பமாக உள்ளது. பண்டிகை காலம் நெருங்கும் வேலையில், சர்க்கரை விலை தற்போது கணிசமாக உயர்ந்துள்ளதால் 'ஆன்லைன்' செயலிகளில் சர்க்கரை வாங்க வரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. </p> <p>ஒரு வாடிக்கையாளர், ஆன்லைன் மூலம் அதிகபட்சமாக இரண்டு கிலோ சர்க்கரை மட்டுமே வாங்க முடியும். ஆன்லைன் விற்பனைக்கு மட்டுமின்றி, நேரடி சில்லரை விற்பனையிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. டி மார்ட், ரிலையன்ஸ் உள்ளிட்ட பெரிய சில்லரை விற்பனை நிறுவனங்களில், ஒரு வாடிக்கையாளர் 2 முதல் 3 கிலோ சர்க்கரை மட்டுமே வாங்க வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும் வினியோகத்தை அதிகரிக்கவும், பதுக்கலைத் தடுக்கவும், 10 லட்சம் டன் சுத்திகரிக்கப்படாத சர்க்கரையை சுங்க வரியின்றி இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இவற்றை இறக்குமதி செய்த காலத்தில் இருந்து இரண்டு மாதத்திற்குள் சுத்திகரித்து விற்பனை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>அதிக வரி பாக்கி பட்டியலில் கரூர் தி.மு.க. அலுவலகம் இரண்டாம் இடம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-dmk-office-ranks-second-in-the-list-of-highest-tax-arrears</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-dmk-office-ranks-second-in-the-list-of-highest-tax-arrears#comments</comments><guid isPermaLink="false">ebf2cc31-b943-48c8-a15f-ce3a0c308b38</guid><pubDate>Fri, 28 Aug 2026 02:24:36 +0000</pubDate><atom:updated>2026-08-28T02:24:36.174Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர்,DMK,Corporation,மாநகராட்சி,Karur,Website,இணையதளம்,Office,2-வது இடம்,2nd place,வரி பாக்கி,திமுக அலுவலகம்,Tax Dues</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/uw5mrtm8/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கரூர் மாநகராட்சி அலுவலகம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/uw5mrtm8/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கரூர், </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">கரூர்</a> மாநகராட்சிக்கு அதிக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF">சொத்து வரி</a> பாக்கி வைத்துள்ளோர் பட்டியலில், மாவட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">தி.மு.க. அலுவலகம் </a>இரண்டாம் இடம் பிடித்துள்ளது. </p><p>கரூர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">மாநகராட்சி</a>யின் பிரதான வரி வருவாயாக சொத்து வரி உள்ளது. இதன் மூலமே மாநகரில் குப்பை அகற்றுதல், தெரு விளக்கு, பூங்கா, சாலை பராமரித்தல், பொது சுகாதாரம், நோய் தடுப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. </p><h2>சொத்து வரி நிலுவை வைத்துள்ள முதல் 100 பேரின் பட்டியல்</h2><p>இதனால் 1 முதல் 48 வரை உள்ள வார்டுகளில் வரி வசூல் பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதிகளவில் சொத்து வரி நிலுவை செலுத்த வேண்டிய முதல் 100 பேரின் பட்டியலை https:/www.tnurbantree.tn.gov.in/karur/ என்ற கரூர் மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.</p><h2>ரூ.36.48 லட்சம் வரி பாக்கி வைத்து முதலிடம்</h2><p>அந்த பட்டியலில் 33-வது வார்டு, கரூர் திண்டுக்கல் சாலையில் உள்ள ராமசாமி, நாராயணசாமி ஆகியோர் ரூ.36.48 லட்சம் வரி பாக்கி வைத்து முதலிடத்தில் உள்ளனர். </p><h2>ரூ.28.33 லட்சம் வரி பாக்கி வைத்து இரண்டாம் இடம்</h2><p>தொடர்ந்து இரண்டாவது இடத்தில் 30-வது வார்டு, கவுரிபுரம் விரிவாக்கத்தில் இருக்கும் தி.மு.க. மாவட்ட அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகம் 2008-ல் திறக்கப்பட்டபோது ஆண்டுக்கு ரூ.1.18 லட்சம் சொத்து வரி நிர்ணயிக்கப்பட்டது. தற்போது ஆண்டு வரியாக ரூ.2.36 லட்சம் செலுத்த வேண்டும். 2008 முதல் 2026 மார்ச் வரை மொத்தம் ரூ.28.33 லட்சம்  சொத்து வரி பாக்கி வைத்து, பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் பருவ நெல் கொள்முதல் காலத்தை செப்டம்பர் 1-ந்தேதி முதல் தொடங்க மத்திய அரசு அனுமதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/central-government-grants-permission-to-commence-the-seasonal-paddy-procurement-period-in-tamil-nadu-from-september-1st</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/central-government-grants-permission-to-commence-the-seasonal-paddy-procurement-period-in-tamil-nadu-from-september-1st#comments</comments><guid isPermaLink="false">11a0b9c9-19a5-4b5c-8938-2d7d0ce96636</guid><pubDate>Fri, 28 Aug 2026 02:19:08 +0000</pubDate><atom:updated>2026-08-28T02:19:08.294Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,Tamil Nadu,நெல் கொள்முதல்,Paddy procurement</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/9bu6fu48/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/9bu6fu48/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக விவசாயிகளிடம் இருந்து மத்திய அரசின் இந்திய உணவு கழகம் சார்பில் நெல் கொள்முதல் செய்யும் பணியை தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகம் மேற்கொள்கிறது. இதற்காக விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு வழங்குகிறது. அதனுடன் தமிழக அரசும் ஊக்கத்தொகை வழங்குகிறது. நெல் அரிசியாக மாற்றப்பட்டு, ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது.</p><p>தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் செப்டம்பர் வரை நெல் கொள்முதல் பருவம் இருந்தது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த தி.மு.க. ஆட்சியில் ஒரு மாதம் முன்கூட்டியே, அதாவது, செப்டம்பர் 1-ந்தேதி முதல் நெல் கொள்முதல் சீசன் தொடங்கப்பட்டது. </p><p>இதை பின்பற்றி தற்போதைய த.வெ.க. அரசு சார்பில் தமிழக உணவுத்துறை செயலர் அமுதா 2026-27 பருவ நெல் கொள்முதலை செப்டம்பர் 1-ந்தேதி தொடங்க அனுமதி கேட்டு மத்திய உணவுத்துறைக்கு கடந்த 8-ந்தேதி கடிதம் எழுதினார்.</p><p>இதை பரிசீலித்த மத்திய அரசு, பருவ நெல் கொள்முதல் காலத்தை செப்டம்பர் 1-ந்தேதி முதல் தொடங்க நேற்று அனுமதி அளித்துள்ளார். நெல் கொள்முதல் அளவு மற்றும் அரவை செய்து அரிசி ஒப்படைக்கும் காலம் ஆகியவை குறித்து வரும் 1-ந்தேதி டெல்லியில் நடக்கும் அனைத்து மாநில உணவுத்துறை செயலர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. </p> ]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு - ஐகோர்ட்டில் இன்று விசாரணை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-challenging-chief-minister-vijays-election-victory-hearing-in-high-court-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-challenging-chief-minister-vijays-election-victory-hearing-in-high-court-today#comments</comments><guid isPermaLink="false">c81992a5-211a-43db-a7e2-d286e3353c79</guid><pubDate>Fri, 28 Aug 2026 01:29:08 +0000</pubDate><atom:updated>2026-08-28T01:29:08.921Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஐகோர்ட்டு,Chennai High Court,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="288" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/7zxa4kd3/State-01.jpg" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/7zxa4kd3/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சட்டசபைத் தேர்தலில் தமிழ்நாடு முதல்-அமைச் சர் விஜய், பெரம்பூர் தொகுதியிலும், திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். </p><p>பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இந்த 2 தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், பெரம்பூர் தொகுதியில் வாக்காளர்கள் லட்சுமி நரசிம்மன், தினேஷ் ஆகியோரும், திருச்சி கிழக்கு தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் இனிகோ இருதயராஜும் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தனர்.</p><p>அதேபோல, வில்லிவாக்கம் தொகுதியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், வாக்காளர் ஆர்.சிவராஜ் என்பவர் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்குகளை நீதிபதி வி.லட்சுமி நாராயணன் விசாரித்து வருகிறார்.</p><p>இதனிடையே இந்த தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக்கோரி மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இதை ஏற்க மறுத்த நீதிபதி, தேர்தல் வழக்கை நிராகரிக்கக்கோரி 27-ந்தேதிக்குள்(நேற்று) மனு தாக்கல் செய்யவேண்டும். இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்.</p><p>இந்த தேர்தல் வழக்குகள் எல்லாம் நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தங்களுக்கு எதிரான தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக விஜய், ஆதவ் அர்ஜுனா தரப்பில் கூறப்பட்டது.</p><p>இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, "முதல்-அமைச்சர் விஜய் தேர்தல் வெற்றியை எதிர்த்து வாக்காளர் தினேஷ் தொடர்ந்த வழக்கும், ஆதவ் அர்ஜுனா வெற்றியை எதிர்த்து சிவராஜ் தொடர்ந்த தேர்தல் வழக்குகளும் இன்று(வெள்ளிக்கிழமை) விசாரிக்கப்படும், விஜய் வெற்றியை எதிர்த்து இனிகோ இருதயராஜ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் தொடர்ந்த தேர்தல் வழக்கு வருகிற 31-ந்தேதி விசாரிக்கப்படும்" என்று உத்தரவிட்டார். இதன்படி முதல்-அமைச்சர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோரின் தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்குகள் இன்று விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>பிரதமராக யார் வருவார்..? கருத்துக்கணிப்பில் 3-வது இடத்தில் தமிழக முதல்-அமைச்சர் விஜய்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/prime-minister-selection-tamil-nadu-cm-vijay-third</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/prime-minister-selection-tamil-nadu-cm-vijay-third#comments</comments><guid isPermaLink="false">4fb76733-1f68-4c3a-8a7b-d37779c9e309</guid><pubDate>Fri, 28 Aug 2026 00:39:45 +0000</pubDate><atom:updated>2026-08-28T00:39:45.272Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>prime minister,பிரதமர்,survey,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/1uq9ovup/tncit.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/1uq9ovup/tncit.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>சிறப்புக் கட்டுரைகள் (Sirappukatturaigal)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><p>தமிழக <a href="https://www.dailythanthi.com/">முதல்-அமைச்சர் விஜய்</a>, பிரதமர் பதவிக்கான தேர்வில் 3-வது இடத்தில் உள்ளார்.</p><p>தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், முதல் முறையாக தேர்தலில் களம் கண்ட விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 தொகுதிகளை வென்று முதல் இடம் பிடித்தது.  அக்கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.  கடந்த முறை ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க. கூட்டணி 73 தொகுதிகளில் வெற்றி பெற்று 2-வது இடத்திற்கு சென்றதோடு, அ.தி.மு.க. கூட்டணி 53 தொகுதிகளில் வெற்றி பெற்று 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.</p>  <h2>ஆட்சியமைத்த த.வெ.க.</h2><p>இதனால், ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை இல்லாத போதிலும் அதிக தொகுதிகளை வென்ற த.வெ.க.வுடன் காங்கிரஸ் கைகோர்த்தது.  தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி, த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்தது.  தொடர்ந்து, வி.சி.க., 2 கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க. ஆட்சியமைத்தது.  மே 10-ந்தேதி முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார்.</p><p>சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும் த.வெ.க. வெற்றி பெற்றது.  பின்னர் அக்கட்சியின் முதல் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் ஆகியவையும் தாக்கல் செய்யப்பட்டது.  ஆட்சி பொறுப்புக்கு வந்து 100 நாட்கள் ஆன சூழலில், இதுதொடர்பான சாதனை விளக்க பொதுக்கூட்டங்களை த.வெ.க. நடத்தி வருகிறது.</p> <h2>கருத்துக்கணிப்பு</h2><p>இந்த நிலையில், 2029-ம் ஆண்டு பொது தேர்தலின்போது, மக்களின் பிரதமர் தேர்வாக யார் இருப்பார்? என்று இந்தியா டுடே மற்றும் சி-வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு நடத்தியது.  அதில், நரேந்திர மோடி 48.7 சதவீதம், ராகுல் காந்தி 27.1 சதவீதம், ஜோசப் விஜய் 9.2 சதவீதம், என முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர்.</p><p>திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி (2 சதவீதம்), சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் (1.7 சதவீதம்), கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் மற்றும் ஒருங்கிணைப்பாளரான அபிஜீத் திப்கே (1.3 சதவீதம்), ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் (1.2 சதவீதம்) ஆகியோரை விட விஜய் முன்னிலையில் இருக்கிறார்.</p>  <h2>3-வது இடம்</h2><p>இதனால் கருத்துக்கணிப்பின்படி, அதிக சதவீத ஆதரவுடன் பிரதமராக மோடி தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார்.  எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி 2-வது இடத்தில் உள்ளார்.  தேசிய அளவிலான 3-வது இடத்தில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் உள்ளார்.</p><p>த.வெ.க. ஆட்சியை பிடித்து 3 மாதங்களே ஆகியுள்ளன.  இந்த நிலையில் இன்றைய முதல்-அமைச்சர், நாளைய பிரதமர் என்று கடந்த சில தினங்களாக அமைச்சர்கள் கூறிவரும் நிலையில் இந்த கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.</p><p>சமீப நாட்களாக அடுத்த பிரதமர் முதல்-அமைச்சர் விஜய் என த.வெ.க.வினர் பேசி வருவது, த.வெ.க.வுடன் கூட்டணியில் உள்ள காங்கிரசாருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என தெரிகிறது. இதனை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் த.வெ.க.வினர் ரசிகர் மன்ற மனநிலையில் இருக்கின்றனர் என விமர்சித்துள்ளார். மேலும் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று உறுதியாக கூறினார்.</p>  <h2>த.வெ.க. போஸ்டரால் பரபரப்பு</h2><p>இந்த நிலையில் தூத்துக்குடி மாநகரம் முழுவதும் முதல்-அமைச்சர் விஜய்யை வாழ்த்தி, அ.தி.மு.க.வில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்த சுதாகர் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. அந்த போஸ்டரில், 'இன்றைய முதல்வர், நாளைய பிரதமர் விஜய்' என்றும், தூத்துக்குடி மத்திய மாவட்ட த.வெ.க. என்றும் எழுதப்பட்டு உள்ளது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>  <p>அடுத்த பிரதமர்</p><p>சட்டசபையில், தமிழக மனிதவள மேலாண்மை அமைச்சர் சரத்குமார் கடந்த 18-ந்தேதி பேசும்போது, தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் பணிகளை பாராட்டி பேசினார்.  அடுத்த பிரதமராக நீங்கள் வருவீர்கள்.  பகலிரவு பார்க்காமல் உழைத்து வருகிறீர்கள்.  அதனால், நிச்சயம் நீங்கள் அடுத்த பிரதமராக வருவீர்கள் என்றார்.</p><p>அதற்கு ஒரு நாள் முன்பு பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசும்போது, வருங்காலத்தில் தெற்கில் இருந்து ஒருவர் பிரதமராக வரவேண்டும்.  அந்த தலைவர் தமிழகத்தில் இருந்து வரவேண்டும் என்று கூறினார்.  அந்த தலைவர் ஒவ்வோர் இந்தியரையும் பிரதிபலிப்பதுடன், ஒவ்வோர் இந்தியரையும் சம அளவில் நடத்துவார் என்று கூறினார்.</p>  <p>30 ஆண்டுகள்</p><p>தென்மாநிலங்களில் இருந்து ஒருவர் பிரதமராக வந்து 30 ஆண்டுகள் ஆகின்றன.  கடைசியாக கர்நாடகாவை சேர்ந்த எச்.டி. தேவகவுடா, 1996 முதல் 1997 வரை பிரதமராக பதவி வகித்திருக்கிறார்.  அதன்பின்னர் 3 தசாப்தங்களாக தென்மாநிலங்களில் இருந்து பிரதமராக யாரும் வரவில்லை.</p><p>இந்த சூழலில், 2026 சட்டசபை தேர்தல் வெற்றியை கட்சி பயணத்தின் இறுதி இலக்காக எடுத்து கொள்ளாமல், அதனை கடந்தும் த.வெ.க. பயணிக்க வேண்டிய தேவையை அக்கட்சியினர் வெளிப்படுத்தி உள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை; ரூ.1.18 கோடி பறிமுதல்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/throughout-tamil-nadu-vigilance-police-conduct-raids-in-government-offices-rs-1-18-crore-seized</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/throughout-tamil-nadu-vigilance-police-conduct-raids-in-government-offices-rs-1-18-crore-seized#comments</comments><guid isPermaLink="false">b9c8ccc1-cc60-4b1d-80f9-ba0f226aad07</guid><pubDate>Thu, 27 Aug 2026 21:55:08 +0000</pubDate><atom:updated>2026-08-27T21:55:08.711Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,தமிழகம்,Anti-Corruption Police,லஞ்ச ஒழிப்பு போலீசார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/scv8nm1x/tnpio.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/scv8nm1x/tnpio.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.1.18 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.</p><p>தமிழகம் முழுவதும் நேற்று பிற்பகலில் இருந்து, அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். மொத்தம் 38 அரசு அலுவலகங்களில் இந்த சோதனை வேட்டை நடந்தது. சென்னையை பொறுத்தமட்டில், சென்னை பல்லாவரம் மற்றும் ராயபுரம் சார்பதிவாளர் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.</p><p>இதேபோன்று, பல்லாவரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் காட்டாத ரூ.1% லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. ராயபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.9 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. பூந்தமல்லி ஆர்.டி.ஓ. சோதனை சாவடியில் ரூ.25 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள தலைமை எலக்ட்ரிக்கல் ஆய்வாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையிdல் ஜி-பே மூலம் பரிமாற்றம் செய்யப்பட்ட, ரூ.31.52 லட்சம் கைப்பற்றப்பட்டது.</p> <h2>ரூ.1.18 கோடி</h2><p>ஸ்ரீபெரும்புதூர் பி.டி.ஓ. அலுவலகத்தில் ஜி-பே மூலம் வசூலான ரூ.2.6 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ரொக்கமாக ரூ.4 ஆயிரம் சிக்கியது. தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.1 கோடியே 18 லட்சத்து 14 ஆயிரம் கைப்பற்றப்பட்டு உள்ளது என்றும், அதில் ஜி-பே மூலம் மட்டும் பரிமாறப்பட்ட ரூ.89 லட்சத்து 89 ஆயிரம் சிக்கியுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.</p><p>இதில், ரொக்கமாக மட்டும் ரூ.28 லட்சத்து 24 ஆயிரம் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.  இதுபோன்ற அதிரடி சோதனை வேட்டைகள், அரசு அலுவலகங்களில் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியுள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு: டெல்லி புறப்பட்ட தமிழக அமைச்சர்கள் குழு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/floods-in-nepal-tamil-nadu-ministerial-delegation-leaves-for-delhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/floods-in-nepal-tamil-nadu-ministerial-delegation-leaves-for-delhi#comments</comments><guid isPermaLink="false">4be436bd-1cf9-4b35-934b-e440c0958c10</guid><pubDate>Thu, 27 Aug 2026 16:22:15 +0000</pubDate><atom:updated>2026-08-27T16:22:15.987Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டெல்லி,Nepal,நேபாளம்,TN govt,Ministers,அமைச்சர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/xcoinfzq/STate-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/xcoinfzq/STate-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நேபாளம் - திபெத் எல்லையில் நேற்று ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால், பிரமாண்ட பனிப்பாறை சரிந்து போதேகோசி நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த அதிபயங்கர வெள்ளப்பெருக்கில், ஆற்றின் கரையோர கட்டிடங்கள், பாலங்கள், வாகனங்கள் உள்ளிட்டவை கண்இமைக்கும் நேரத்தில் அடித்துச் செல்லப்பட்டன. </p><p>இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-ஐ கடந்திருக்கும் நிலையில், மேற்கொண்டு ஆயிரக்கணக்கானோரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து கொண்டிருக்கிறது. காயம் அடைந்தவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், காணாமல் போனவர்களில் சுமார் 300 பேர் இந்தியர்கள் என நேபாள வெளியுறவுத்துறை மந்திரி ஷிசிர் கனால் தெரிவித்துள்ளார்.</p> <p>இதனிடையே நேபாளத்தில் தமிழர்கள் பலர் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்பதற்கான பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.</p><p>இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய் உத்தரவின்பேரில், நேபாளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்கும் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக தமிழக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், வினோத், தென்னரசு ஆகியோர் இன்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளனர். அதோடு, நேபாளத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்கவும், நிவாரணப் பணிகளைக் கண்காணிக்கவும் ஆஷிஷ் குமார் ஐ.ஏ.எஸ். தலைமையிலான குழுவை காத்மாண்டுவுக்கு அனுப்ப முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>&apos;டான்சி&apos; நிலம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றம் செய்யப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-dansi-land-be-transferred-to-the-corporation-higher-secondary-school-minister-sengottaiyan-responds</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-dansi-land-be-transferred-to-the-corporation-higher-secondary-school-minister-sengottaiyan-responds#comments</comments><guid isPermaLink="false">6182dc1c-c1a1-4b74-b60a-849e8f686a0a</guid><pubDate>Thu, 27 Aug 2026 15:51:39 +0000</pubDate><atom:updated>2026-08-27T15:51:39.657Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,திருப்பூர்,அமைச்சர் செங்கோட்டையன்,Minister Senkottayan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/351j6jwb/kottaiyan33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் செங்கோட்டையன் ]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/351j6jwb/kottaiyan33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சட்டசபையில் கேள்வி நேரத்தில், த.வெ.க. உறுப்பினர் சத்யபாமா (திருப்பூர் வடக்கு), 'திருப்பூர் வடக்கு மாவட்டத்தில் குமார் நகர் மாநகராட்சி மேல்நிலை பள்ளி அமைந்துள்ளது. இங்கே சுமார் 1,475 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். </p><p>அந்த பள்ளிக்கு அருகில் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகம் ('டான்சி') நிலம் அமைந்துள்ளது. பள்ளிக்கு இடப்பற்றாக்குறை இருப்பதால் அந்த நிலத்தை வருவாய்த்துறை மூலம் நிலமாற்றம் செய்யப்படுமா? என துணை கேள்வியை எழுப்பினார்.</p><p>அதற்கு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D">அமைச்சர் செங்கோட்டையன்</a>, 'வருவாய்த் துறை மூலம் டான்சி நிலத்தை பயன்படுத்தவில்லை என்று தெரிந்தால் அவர்களோடு பேசி அதற்கு பிறகு அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்' என்றார்.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபை சுவாரசியம்: 20 வினாடிகள் அனுமதி கேட்டு 14 வினாடிகளில் பேசி முடித்த உறுப்பினர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/assembly-drama-member-asks-20-seconds-speaks-14</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/assembly-drama-member-asks-20-seconds-speaks-14#comments</comments><guid isPermaLink="false">5c2328e7-1bea-4fcb-a847-ff228f36fb1e</guid><pubDate>Thu, 27 Aug 2026 15:43:47 +0000</pubDate><atom:updated>2026-08-27T15:43:47.858Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN Assembly,DMK MLA,வேடசந்தூர் தொகுதி,த.சாமிநாதன்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/p0348qk5/Untitled-11.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/p0348qk5/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது, தி.மு.க. உறுப்பினர் த.சாமிநாதன் (வேடசந்தூர்), வனத்துறை தொடர்பாக துணை கேள்வி கேட்க சபாநாயகரிடம் அனுமதி கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. இதனையடுத்து ஒரு பேப்பரில் 20 வினாடிகளில் பேசிவிடுவேன். அனுமதி கொடுங்கள் என துண்டு சீட்டில் எழுதி சபாநாயகரிடம் கொடுத்தார்.</p><p>இதையடுத்து அனுமதி வழங்கிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், '20 வினாடிகளில் பேசி முடித்துவிடுவேன் என எழுதி கொடுத்திருக்கிறார்' என்றார். அதையடுத்து சாமிநாதன் எழுந்து, "வேடசந்தூர் தொகுதி, சுக்காம்பட்டி ஊராட்சி, வளவி செட்டிபட்டியில் இருந்து சுக்காம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு செல்லும் சாலை, மழைக்காலங்களில் உறுதியாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அது வனத்துறைக்கு சொந்தமானது. இந்த சாலையை செப்பனிட்டுத்தர தங்கள் வாயிலாக கேட்கிறேன்" என்றார்.</p><p>உறுப்பினர் சொன்னபடி, 20 வினாடிகளுக்குள் அதாவது 14 வினாடிகளுக்குள்ளாகவே கேள்வியை கேட்டு முடித்துவிட்டார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ரஞ்சித்குமார், "இதுபோல் தமிழ்நாடு முழுவதும் மண்சாலைகள் இருக்கின்றன. அதை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>டெங்கு, பன்றி காய்ச்சல்களை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? - அமைச்சர் அருண்ராஜ் பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-measures-have-been-taken-to-prevent-dengue-and-swine-flu-minister-arunraj-responds</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-measures-have-been-taken-to-prevent-dengue-and-swine-flu-minister-arunraj-responds#comments</comments><guid isPermaLink="false">c63a4d82-97b5-4389-b7a1-0c15ad80f92b</guid><pubDate>Thu, 27 Aug 2026 15:43:21 +0000</pubDate><atom:updated>2026-08-27T15:43:21.864Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,டெங்கு,Dengue,டெங்கு காய்ச்சல்,Dengue Fever,Legislative Assembly,swine flu,பன்றி காய்ச்சல்,Tamilnadu Assembly,அருண்ராஜ்,Arunraj,Minister Arunraj,அமைச்சர் அருண்ராஜ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/cjrhe2l5/Untitled-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் அருண்ராஜ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/cjrhe2l5/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>டெங்கு, பன்றி காய்ச்சல்களை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து சட்டசபையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அருண்ராஜ் பதிலளித்தார்.</p><h2>டெங்கு, பன்றி காய்ச்சல்கள்</h2><p>சட்டசபையில் நிகழ்வில், டெங்கு, பன்றி காய்ச்சல்கள் விவகாரம் தொடர்பாக அரசின் கவனத்துக்கு உறுப்பினர்கள் கொண்டு வந்தனர். இதுதொடர்பாக நடந்த விவாதம் வருமாறு:-</p><p><strong>தி.மு.க. உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வம் (போடிநாயக்கனூர்)</strong> :- 2026 ஜூன் மாதம் வரை 7,011 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 3 பேர் மரணம் அடைந்திருப்பதாகவும் மத்திய அரசின் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. கடந்த தி.மு.க. ஆட்சியில் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை காரணமாக டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டு, இறப்பு விகிதம் குறைக்கப்பட்டது. 23.8.2026 வரை 12,543 பேர் தமிழ்நாட்டில் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 4 பேர் மரணம் அடைந்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். பருவமழை தொடங்க உள்ளதால் தமிழக அரசு சிறப்பு முகாம்கள் அமைத்தல், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தல், கொசுக்கள் ஒழித்தல் போன்ற போதிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும் என்று அமைச்சரை கேட்கிறேன்.</p><h2>என்ன நடவடிக்கைகள்?</h2><p><strong>சட்டமன்ற அ.தி.மு.க. தலைவர் எடப்பாடி பழனிசாமி</strong>:- <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழ்நாட்டில் </a>டெங்கு காய்ச்சல் அதிகம் பரவுகிறது. டெங்கு காய்ச்சல் பாதிப்பு கடந்த ஆண்டைவிட பாதியாக குறைந்துள்ளது. 4 பேர் மட்டுமே இறந்துள்ளனர். அதேபோல் பன்றி காய்ச்சல் 1,558 பேர் பாதிக்கப்பட்டதாகவும், சிலர் இறந்ததாகவும் அமைச்சர் சொல்லியுள்ளார். டெங்கு, பன்றி காய்ச்சல்களை தடுக்க அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது?</p><p><strong>டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்டு)</strong> :- டெங்கு, மலேரியா காய்ச்சல் தமிழ்நாட்டில் இருக்கிறது. அதனால் பாதிக்கப்பட்டு அரசு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். இந்த நோய்களை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கைகளை அரசு செய்துள்ளது?.</p><p><strong>சிவக்குமார் (பா.ம.க.)</strong> :- பருவமழைக்கு முன்னதாக பன்றிக் காய்ச்சல் அதிகளவில் பரவி வருகிறது. தடுப்பு நடவடிக்கைகளாக அரசு என்ன செய்து இருக்கிறது?</p><h2>ஆயத்தமாக உள்ளது</h2><p><strong>அமைச்சர் அருண்ராஜ்</strong>:- பருவமழை காலத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகமாகவே இருக்கிறது. இந்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் 26.8.2026 வரை 12,856 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 7 உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கிறது. அதிகமாக சென்னையில்தான் பதிவாகியுள்ளது. அரசு தினந்தோறும் டெங்கு காய்ச்சலை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். டெங்கு, பன்றி காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை கண்காணிக்கப்படுகிறது. கொசு உற்பத்தியாகும் இடங்கள் கண்காணிக்கப்பட்டு, கொசு புழுக்கள் ஒழிப்பும் நடக்கிறது. கொசு ஒழிப்பு பணியாளர்களை அதிகளவில் பணியமர்த்தப்பட்டு அதற்கான பணிகள் நடக்கின்றன. மருத்துவமனைகளில் தேவையான சிகிச்சைகளும் தயார்நிலையில் உள்ளது. தினசரி 5,805 மருத்துவமனைகளில் காய்ச்சல் கண்காணிப்பு பணிகள் நடக்கின்றன. டெங்கு, பன்றி காய்ச்சல் தடுப்பு பணிகளில் தமிழக அரசு ஆயத்தமாகவே உள்ளது.</p><p>இவ்வாறு விவாதம் நடந்தது.</p>]]></content:encoded></item><item><title>டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வான 459 பேருக்கு பணி நியமன ஆணை; முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-issues-appointment-orders-to-459-candidates-selected-through-tnpsc</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-issues-appointment-orders-to-459-candidates-selected-through-tnpsc#comments</comments><guid isPermaLink="false">2ff20337-88a6-4c1e-a1ad-ea279cabc506</guid><pubDate>Thu, 27 Aug 2026 15:41:13 +0000</pubDate><atom:updated>2026-08-27T15:41:13.786Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,Vijay,விஜய்,TNPSC,டி.என்.பி.எஸ்.சி. தேர்வு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/rqel1pty/cmvijayone33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வான 459 பேருக்கு பணி நியமன ஆணை]]></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/rqel1pty/cmvijayone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தலைமைச் செயலகத்தில், பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 459 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார்.</p><p>தமிழக அரசின் மனிதவள மேலாண்மைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20">தமிழ்நாடு அரசு</a> பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் பல்வேறு துறைகளுக்கு உதவி பொறியாளர்கள், வேளாண் அலுவலர், இளநிலை அறிவியல் அலுவலர், இளநிலை மேலாளர்கள், முதுநிலை கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு பணி இடங்களுக்கு 459 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.</p><p>அவர்களுக்கு இதற்கான சான்றிதழை வழங்கும் அடையாளமாக 10 பேருக்கு பணிநியமன ஆனைகளை சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய் கொடுத்தார். அப்போது, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார், தலைமைச் செயலாளர் சாய்குமார், மனிதவள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் சி.சமயமூர்த்தி, துணைச் செயலாளர் ருக்மிணி ஆகியோர் உடன் இருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>‘சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும்’ - திருமாவளவன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/constructive-debates-must-take-place-in-the-legislative-assembly-thirumavalavan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/constructive-debates-must-take-place-in-the-legislative-assembly-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">2cae2e70-de72-4e2b-8783-b70f6827903e</guid><pubDate>Thu, 27 Aug 2026 15:28:10 +0000</pubDate><atom:updated>2026-08-27T15:28:10.187Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமாவளவன்,Thirumavalavan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/vhrnf69r/STate-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/vhrnf69r/STate-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, சட்டமன்ற உறுப்பினர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக அவர் கூறியதாவது;-</p> <p>“சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு. அண்மையில் முதல்-அமைச்சர் விஜய்யை நான் சந்தித்தபோது அவரும் இந்த கருத்தை வெளிப்படுத்தினார். சட்டசபையில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்ற விருப்பத்தை அவர் தெரிவித்தார். </p><p>ஒவ்வொருவருக்கும் அதுதான் விருப்பம். சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் அந்த பொறுப்புணர்வோடு சட்டமன்றத்தில் இயங்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய எதிர்பார்ப்பு.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>திருச்செந்தூர் கோவிலில் ஆவணித் திருவிழா: 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aavanit-festival-at-thiruchendur-temple-flag-hoisting-on-31st</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aavanit-festival-at-thiruchendur-temple-flag-hoisting-on-31st#comments</comments><guid isPermaLink="false">9c6b8eec-929a-4443-b906-c96d3c0e6879</guid><pubDate>Thu, 27 Aug 2026 15:25:10 +0000</pubDate><atom:updated>2026-08-27T15:25:10.096Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிகச் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514969</atom:uri></atom:author><description></description><media:keywords>தேரோட்டம்,Tiruchendur temple,திருச்செந்தூர் கோவில்,கொடியேற்றம்,ஆவணித் திருவிழா</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/jx9exaa9/Untitled-10.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருச்செந்தூர் கோவில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/jx9exaa9/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>ஆன்மிகம் (Devotional)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது.</p><h2>ஆவணித் திருவிழா</h2><p>முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா வருகிற 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது. இந்த விழா வருகிற 11-ந்தேதி வரை 12 நாட்கள் நடைபெற உள்ளது. முதல் நாளான்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப் பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 5.15 மணிக்கு மேல் 5.40 மணிக்குள் திருவிழா கொடியேற்றப்படும்.</p><p>மாலையில் அப்பர் சுவாமிகள் கோவிலில் இருந்து தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து உழவாரப்பணி செய்யும் நிகழ்ச்சியும், இரவில் ஸ்ரீபெலி நாயகர் அஸ்திரதேவருடன் பல்லக்கில் 9 சந்திகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கும்.</p><h2>சிவப்பு சாத்தி</h2><p>விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வருகிற 4-ந்தேதி மேலக்கோவிலில் இரவு 7.30 மணிக்கு குடைவருவாயில் தீபாராதனை நடக்க இருக்கிறது. பின்னர் சுவாமி, அம்பாள் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்கள்.</p><p>6-ந்தேதி 7-ம் திருநாளன்று அதிகாலை 5 மணிக்கு சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சியும், காலை 9 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் பிள்ளையன் கட்டளை மண்டபத்திற்கும் எழுந்தருளுவார். அங்கு மாலையில் சுவாமிக்கும், அம்பாள்களுக்கும் அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெறும். மாலை 4 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.</p><h2>தேரோட்டம்</h2><p>8-ம் திருநாளான வருகிற 7-ந்தேதி அதிகாலை 6 மணிக்கு சுவாமி சண்முகர் பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளைச் சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருவார். பகல் 12 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவிலை சேர்வார். சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 10-ம் திருநாளான வருகிற 9-ந்தேதி காலை 7 மணிக்கு நடக்கும்.</p>]]></content:encoded></item></channel></rss>