<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 27 Aug 2026 12:55:10 +0000</lastBuildDate><item><title>மதுபோதையில் தகராறு செய்த மகன்; அடித்துக் கொன்று, வீட்டின் அருகே புதைத்த தாய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/son-caused-a-disturbance-while-intoxicated-mother-beat-him-to-death-and-buried-him-near-the-house</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/son-caused-a-disturbance-while-intoxicated-mother-beat-him-to-death-and-buried-him-near-the-house#comments</comments><guid isPermaLink="false">d514984d-b7fa-49cf-926e-c63287c8f59c</guid><pubDate>Thu, 27 Aug 2026 12:52:27 +0000</pubDate><atom:updated>2026-08-27T12:52:27.387Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,கொலை,intoxication,போதைப்பழக்கம்,son killed</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/r2vs5zmt/100.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ தாய் ஐயம்மாள்]]></media:title><media:description type="html"><![CDATA[ தாயே, மகனை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்தார்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/r2vs5zmt/100.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p> "தினமும் போதையில் வந்து சித்திரவதை செய்ததால், என் கைகளாலேயே என் மகனை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">அடித்துக் கொன்று </a>புதைத்துவிட்டேன்" என்று மதுரையைச் சேர்ந்த தாய் ஒருவர் கிராம நிர்வாக அலுவலரிடம் அளித்துள்ள வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>போதை பழக்கம்</h2><p>மதுரை மாவட்டம் வரிச்சியூர் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஐயம்மாள். இவருடைய மகன் ராஜா (வயது 32). ராஜாவுக்குத் தீவிர மது மற்றும்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D"> போதைப்பொருள்</a> பழக்கம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக அவரது மனைவியும் குழந்தைகளும் அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டனர். மேலும், ராஜா மீது பல்வேறு குற்ற வழக்குகளும் நிலுவையில் இருந்துள்ளன.</p><h2>இரும்புக் கம்பியால் அடித்துக்கொலை</h2><p>கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ராஜா கடுமையான போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். மேலும், தனது தாய் ஐயம்மாளிடம் பணம் கேட்டு மிரட்டி, அவரைத் தகாத முறையில் நடத்த முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஐயம்மாள், தற்காப்பிற்காக மகனை கீழே தள்ளிவிட்டு, அருகில் கிடந்த இரும்பு கம்பியால் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் ராஜா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.</p><h2>மறைக்கப்பட்ட உடல்</h2><p>மகன் இறந்ததைத் தொடர்ந்து, வீட்டின் அருகே கழிவறைக்காகத் தோண்டப்பட்டிருந்த குழியில் ராஜாவின் உடலைத் தூக்கிப் போட்டு ஐயம்மாள் புதைத்துள்ளார். பின்னர் வீட்டில் இருந்த ரத்தக் கறைகளையும் அடியோடு துடைத்துச் சுத்தப்படுத்தியுள்ளார்.</p><h2>ரகசியக் கண்காணிப்பு</h2><p>சில மாதங்களாக மகன் காணவில்லை என்று நாடகமாடி வந்தார். இந்த நிலையில் போலீசாரின் ரகசியக் கண்காணிப்பு மற்றும் கிராம மக்களின் சந்தேகத்தைத் தொடர்ந்து, மன உளைச்சலுக்கு ஆளான அவர் நேற்று (புதன்கிழமை) கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்து உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">Madurai ``இதே கையால என் புள்ளைய அடிச்சே கொன்று புதைச்சிட்டேன்’’ - பெற்ற தாய் சொன்ன அதிர்ச்சி காரணம் <a href="https://t.co/xVxhZcd6GG">https://t.co/xVxhZcd6GG</a> <a href="https://x.com/hashtag/madurai?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#madurai</a> <a href="https://x.com/hashtag/death?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#death</a> <a href="https://x.com/hashtag/motherandson?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#motherandson</a></p>&mdash; Thanthi TV (@ThanthiTV) <a href="https://x.com/ThanthiTV/status/2092934216636092812?ref_src=twsrc%5Etfw">August 27, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>உரிக்காமலேயே கண்ணீரை வரவைக்கும் வெங்காயம் விலை.. கிலோ ரூ.100க்கு விற்பனை.!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/onion-prices-are-enough-to-bring-tears-to-your-eyes-even-before-you-peel-themselling-at-100-per-kg</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/onion-prices-are-enough-to-bring-tears-to-your-eyes-even-before-you-peel-themselling-at-100-per-kg#comments</comments><guid isPermaLink="false">13cd002e-9ce5-46b7-bd81-aa4b3ebd7312</guid><pubDate>Thu, 27 Aug 2026 12:50:26 +0000</pubDate><atom:updated>2026-08-27T12:50:26.204Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>onion,வெங்காயம்,வெங்காயம் விலை,Onion prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/gum71efb/10.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/gum71efb/10.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>தமிழகத்தில் வெங்காயம் விலை ஒரு வார கால மாகவே உயர்ந்து கொண்டே வந்தது. இந்நிலையில் நேற்று திருச்சி காந்திமார்க்கெட் மற்றும் வெங்காய மண்டியில் முதல் ரக சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதற்கு அடுத்த நிலையில் ஒரு கிலோ ரூ.80, ரூ.90 என்ற நிலையில் விற்பனை ஆகி வருகிறது.</p><p>சின்ன வெங்காயத்திற்கு போட்டியாக பல்லாரி எனப்படும் பெரிய வெங்காயமும் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு கிலோ ரூ.25 மற்றும் ரூ.30-க்கு விற்கப்பட்ட பெரிய வெங்காயம் விலையும் அதிரடியாக உயர்ந்தது. ஒரு கிலோ ரூ.50, ரூ.60, ரூ.70, ரூ.80 என விற்கப்பட்டு வருகிறது. சின்ன வெங்காயம் விலையும், பெரிய வெங்காயம் விலையும் இப்படி போட்டி போட்டுக்கொண்டு உயர்ந்து கொண்டே செல்வது இல்லத்த ரசிகளுக்கு வெங்காயத்தை உரிக்காமலேயே கண்ணீரை வர வைப்பதாக உள்ளது.</p><p>விலை உயர்வு தொடர்பாக வெங்காய வியாபாரிகள் கூறுகையில், வட மாநிலங்களில் இருந்து வெங்காயம் வரத்து முற்றிலுமாக நின்று விட்டது. ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம்தான் தற்போது விற்பனையில் உள்ளது. புது வெங்காயம் வரும் வரை இந்த விலை உயர்வு நீடிக்கும் என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>வானிலை ஆய்வு மைய பிரதிநிதியை பேரிடர் மேலாண்மை குழுவில் நியமிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cpi-urges-appointment-of-a-representative-from-the-meteorological-department-to-the-disaster-management-committee</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cpi-urges-appointment-of-a-representative-from-the-meteorological-department-to-the-disaster-management-committee#comments</comments><guid isPermaLink="false">ce072950-342c-4b82-9818-3d7a3abd162f</guid><pubDate>Thu, 27 Aug 2026 12:38:56 +0000</pubDate><atom:updated>2026-08-27T12:38:56.978Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,Communist Party of India,CPI,மு.வீரபாண்டியன்,M Veerapandian,பேரிடர் மேலாண்மை குழு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/xkmluug4/veerapandiyan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.வீரபாண்டியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/xkmluug4/veerapandiyan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>'எல் நினோ' தாக்கத்தை கணிக்க பேரிடர் மேலாண்மை நிபுணர் குழுவில் வானிலை ஆய்வு மைய பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>எல் நினோ பாதிப்பு</h2><p>வானிலை ஆய்வுகளின்படி, இந்த ஆண்டு தீவிர "&nbsp;&nbsp;எல் நினோ' நிகழ்வு உருவாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. எல் நினோ&nbsp;&nbsp;எனும் காலநிலை மாற்ற நிகழ்வு, உலகளாவிய மழைப் பொழிவு மற்றும் வானிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது என காலநிலை நிபுணர்கள் கூறுகின்றனர். தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் அதிக மழை, வெள்ளம் உள்ளிட்ட தீவிர வானிலை மாற்ற நிகழ்வுகள் "எல் நினோவால் "ஏற்படக்கூடும் என கூறப்படுகிறது.</p><p>அத்தகைய பாதிப்புகளை முன்கூட்டியே மதிப்பீடு செய்து, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பேரிடர் மேலாண்மை நிபுணர் குழுவை தமிழ்நாடு&nbsp;&nbsp;முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் அமைத்துள்ளார். இது வரவேற்பிற்குரியது.</p><p>ஆனால், "எல் நினோவின் " தாக்கத்தை கண்காணிக்க தமிழக அரசு அமைத்துள்ள வல்லுநர் குழுவில் , இந்திய வானிலை ஆய்வு மைய (IMD) பிரதிநிதி இல்லை என்பது அக்குழுவின் நோக்கம் முழுமையடைய உதவாது.</p><h2>வானிலை..பிரதிநிதியை சேர்க்க வேண்டும்</h2><p>தமிழகத்தில் வளிமண்டலத்தைக் கண்காணிக்க பலூன் மூலம் தினமும் கருவிகளை பறக்கவிட்டு, வளிமண்டலக் காற்றின் அழுத்தம், ஈரப்பதம், திசை வேகம் உள்ளிட்ட தரவுகளை இந்திய வானிலை ஆய்வு மையம் சேகரிக்கிறது. தமிழகத்துக்கென பலவேறு இடங்களில் ரேடார்களை நிறுவி அவற்றின் தரவுகளையும் சேகரித்து வருகிறது. <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழகத்தில் </a>56 தானியங்கி வானிலை கருவிகள், 87 தானியங்கி மழைமானிகள், 11 வேளாண் வானிலை கருவிகள் என 154 இடங்களில் கருவிகளை நிறுவி தரவுகளை சேகரித்து வருகிறது.</p><p>ஆனால், தமிழக அரசிடமோ அல்லது இப்போது குழுவில் இருப்போரிடமோ இத்தகைய கட்டமைப்பு வசதிகள் இல்லை. அதனால் நிபுணர் குழுவில் வானிலை ஆய்வு மைய பிரதிநிதியை சேர்ப்பதே சரியான நடவடிக்கையாக இருக்கும் என நிபுணர்கள் பலர் கூறுகின்றனர்.</p><p>எனவே, இந்திய வானிலை ஆய்வு மைய (IMD) பிரதிநிதி ஒருவரை இக்குழுவில் இணைக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/med-admissions-in-government-colleges-of-education-application-deadline-extended</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/med-admissions-in-government-colleges-of-education-application-deadline-extended#comments</comments><guid isPermaLink="false">f16da191-5d30-42b7-b5de-ab2806ca8f2b</guid><pubDate>Thu, 27 Aug 2026 12:36:32 +0000</pubDate><atom:updated>2026-08-27T12:36:32.001Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Application,மாணவர் சேர்க்கை,கால அவகாசம் நீட்டிப்பு,Admissions,கல்வியியல் கல்லூரி,Government Colleges,விண்ணப்பிக்க,Deadline extended</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/mafu06kf/86.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/mafu06kf/86.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட் (M.Ed) 2026-2027-ஆம் கல்வியாண்டிற்கான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">மாணாக்கர் சேர்க்கை</a>க்கான இணையதள விண்ணப்பப் பதிவு  ஆக.11-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதற்காக மாணாக்கர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து வருகின்றனர். ஆக.20-ந் தேதி உடன் கால அவகாசம் முடிவடையும் நிலையில், மாணாக்கர் நலன் கருதி விண்ணப்பப் பதிவு செய்யத் தவறிய மாணாக்கர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் ஆக.31-ந் தேதி முதல் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம்.</p><h2>எம்.எட் மாணாக்கர் சேர்க்கை</h2><p>ஆக.20-ந் தேதி வரை விண்ணப்பித்த மணாக்கர்களுக்கு தர வரிசையின் அடிப்படையில் மாணாக்கர் சேர்க்கை ஆக.27-ந் தேதி முதல் எம்.எட் தொடங்கி நடைபெறும் எனவும். மாணாக்கர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 1-ல் தொடங்கும். மேலும் விண்ணப்பித்த மாணாக்கர்களுக்கு சேர்க்கைக்கான விவரங்கள் SMS மற்றும் மின்னஞ்சல் (E-mail) வாயிலாக அனுப்பப்படும்.</p><h2>கால அளவு நீட்டிப்பு</h2><p>இந்நிலையில், ஏற்கனவே விண்ணப்பிக்கத் தவறிய மாணாக்கர் இரண்டாம் கட்ட சேர்க்கைக்கு தொடர்ந்து விண்ணப்பிக்கும் வகையில் செப்.10-ந் தேதி வரை கால அளவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணாக்கர் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் விண்ணப்பித்து இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தித் தங்கள் எதிர்காலத்தை வளமாக்கிக்கொள்ள வேண்டும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/locations-in-chennai-that-will-experience-power-outages-tomorrow-3</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/locations-in-chennai-that-will-experience-power-outages-tomorrow-3#comments</comments><guid isPermaLink="false">f39ca212-2666-4a63-9c39-5e230c1b8d63</guid><pubDate>Thu, 27 Aug 2026 12:27:13 +0000</pubDate><atom:updated>2026-08-27T12:27:13.344Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,power cut,மின்தடை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/0cgti1ba/ep.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/0cgti1ba/ep.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் பராமரிப்புப் பணிகள் காரணமாக பின்வரும் இடங்கள் மின் தடை செய்யப்பட உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;</p><p>சென்னையில் 29.08.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பிற்பகல் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p>கிண்டி : கிண்டி தொழிற்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், அம்பாள் நகர், லேபர் காலனி, பிள்ளையார் கோயில் தெரு 3, 5 மற்றும் 6வது தெருக்கள், ஏ,பி,சி மற்றும் டி பிளாக், மவுண்ட் ரோடு ஒரு பகுதி, ஜே.என். சாலை, பூமகள் தெரு, தெற்கு கட்டம், பாலாஜி நகர், பாரதியார் தெரு, தனகோட்டி ராஜா தெரு, அச்சுதன் நகர், முனுசாமி தெரு, காந்தி நகர் பகுதி, பூந்தமல்லி சாலை பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.</p><p>சித்தாலபாக்கம்:- புஷ்பா நகர் பூங்கா, சந்தானம் தெரு, வெங்கடேஸ்வரா தெரு, மாம்பாக்கம் மெயின் ரோடு, மகேஸ்வரி நகர், பிரியதர்ஷினி நகர், ஒட்டியம்பாக்கம் மெயின் ரோடு, டி.வி. நகர், ஸ்கைலேப் அவென்யூ, வள்ளுவர் நார், ஜெயா நகர், விவேகானந்தா நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.</p><p>ஈஞ்சம்பாக்கம்:- ஈ.சி.ஆர். ஈஞ்சம்பாக்கம், ஈஞ்சம்பாக்கம் குப்பம், ஈஞ்சம்பாக்கம் முதல் வெட்டுவான்கேணி இணைப்புச் சாலை, வெட்டுவான்கேணி 1 மற்றும் 2வது அவென்யூ, அக்கரை, அல்லிகுளம் அம்பேத்கர் தெரு, அண்ணா என்கிளேவ், பெத்தல் நகர், பாரதி அவென்யூ, பிருந்தாவன் நகர், சோழமண்டலக் கலைஞர்கள் கிராமம், சோழமண்டல தேவி நகர். கடற்கரை சாலை, டாக்டர் நஞ்சுண்டராவ் சாலை, கங்கையம்மன் கோயில் தெரு, குணால் தோட்டம், ஹனுமான் காலனி, ஹரிச்சந்திரா 1 முதல் 4 தெருக்கள், கக்கன் தெரு, கே.கே. சாலை, கே.வி. நகர், கஸ்தூரிபாய் நகர், எல்.ஜி. அவென்யூ, சனிஸ் அவென்யூ, நைனார் குப்பம், உத்தண்டி, நீலாங்கரை குப்பம், ஆலிவ் பீச், பல்லவன் நகர், பனையூர் குப்பம், பனையூர் மற்றும் குப்பம், என்ஆர்ஐ மற்றும் விஜிபி லேஅவுட், பெப்பிள் பீச், பெரியார் மற்றும் பொதிகை மற்றும் பொன்னியம்மன் கோயில் தெரு, பிரெஸ்டீஜ் மற்றும் ராஜ்லிங் தெரு, ராஜ்லிங் &amp; மந்திரி நகர், ராயல் என்கிளேவ், கடல் பாறை, சீ ஷெல் அவென்யூ, சீஷோர் டவுன், செல்வா நகர், ஷாலிமார் கார்டன், ஸ்பார்க்ளிங் சாண்ட் மற்றும் ஷேஷாத்ரி அவென்யூ, ஸ்பிரிங் கார்டன், டி.வி.எஸ். அவென்யூ, டீச்சர்ஸ் காலனி, திருவள்ளுவர் சாலை, தாமஸ் அவென்யூ, வி.ஓ.சி. தெரு, விமலா கார்டன் மற்றும் ஜுஹு கடற்கரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.</p>]]></content:encoded></item><item><title>வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை: மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த துணை ஆணையாளர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-precaution-deputy-commissioner-inspects-rainwater-drainage-works</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-precaution-deputy-commissioner-inspects-rainwater-drainage-works#comments</comments><guid isPermaLink="false">0ef6066b-986f-422d-80ec-155d48005098</guid><pubDate>Thu, 27 Aug 2026 12:08:24 +0000</pubDate><atom:updated>2026-08-27T12:08:24.706Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Northeast Monsoon,முன்னெச்சரிக்கை நடவடிக்கை,மழைநீர் வடிகால் பணி,வடகிழக்குப் பருவமழை,Rainwater Drainage Works,Precaution</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/hlamny17/85.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/hlamny17/85.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">சென்னை மாநகராட்சி</a>, வளசரவாக்கம் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை தெற்கு வட்டார துணை ஆணையாளர் அஃதாப் ரசூல், இ.ஆ.ப., இன்று (27.08.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.</p><p>வளசரவாக்கம் மண்டலம், வார்டு-151க்குட்பட்ட ஆற்காடு சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.</p><h2>சமையல் கூடத்தில் ஆய்வு</h2><p>பின்னர், வார்டு-144க்குட்பட்ட சன்னதி தெருவில் பள்ளி மாணவர்களின் காலை உணவுத் திட்டத்திற்கான மைய சமையல் கூடம், மேட்டுக்குப்பம் சாலையில் உள்ள அம்மா உணவகம், அடையாறு மண்டலம், வார்டு-175க்குட்பட்ட ஆதம்பாக்கம், ஏரிக்கரை சாலை மற்றும் வார்டு-172க்குட்பட்ட கிண்டி, மடுவங்கரையில் பள்ளி மாணவர்களின் காலை உணவுத் திட்டத்திற்கான மைய சமையல் கூடம் உள்ளிட்டவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.</p><h2>மழைநீர் வடிகால் அமைக்கும் பணி</h2><p>இந்த ஆய்வின்போது, தெற்கு வட்டார துணை ஆணையாளர் அவர்கள், மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினை விரைந்து முடித்திடவும், அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவின் தரம், உணவுப் பொருட்களின் இருப்பு, குடிநீர் வசதிகள் மற்றும் சமையலறையினைத் தூய்மையாகப் பராமரித்திடவும், பள்ளி மாணவர்களின் காலை உணவுத் திட்டத்திற்கான மைய சமையல் கூடத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், உணவுப் பொருட்களின் இருப்பு, அடிப்படை வசதிகள் மற்றும் சமைக்கும் இடத்தினைத் தூய்மையாகப் பராமரித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கும்மிடிப்பூண்டியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.12 லட்சம் திருட்டு - 2 தனிப்படைகள் அமைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/12-lakhs-stolen-by-breaking-into-an-atm-machine-in-gummidipoondi-2-special-forces-formed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/12-lakhs-stolen-by-breaking-into-an-atm-machine-in-gummidipoondi-2-special-forces-formed#comments</comments><guid isPermaLink="false">0dcbe00a-91cf-47cb-99c8-e49ad9125866</guid><pubDate>Thu, 27 Aug 2026 12:03:10 +0000</pubDate><atom:updated>2026-08-27T12:03:10.959Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,ஏடிஎம்,ATM,தனிப்படை அமைப்பு,போலீசார்,Cash theft</media:keywords><media:content height="410" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/tbflz14w/3.jpg" width="710"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆக்ஸிஸ் வங்கி ஏடிஎம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/tbflz14w/3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>திருவள்ளூர்,</p><p>கும்மிடிப்பூண்டியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.12 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><p>திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியை அடுத்து பைபாஸ் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தில் ஆக்ஸிஸ் வங்கியின் ஏடிஎம் மையம் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D">ஏடிஎம்</a> மையம் உள்ளது. நேற்று முன்தினம் ஆக்ஸிஸ் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.12 லட்சம் போடப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p>நேற்று நள்ளிரவு ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் அப்பகுதி வழியே வந்த மர்ம நபர்கள், ஆக்சிஸ் வங்கி ஏடிஎம் மையம் சென்று கையில் வைத்த ஸ்பிரே மூலமாக அங்கிருந்த கண்காணிப்பு கேமரா மீது அடித்துள்ளனர். பின்னர், ஏடிஎம் இயந்திரத்தை வெல்டிங் கட்டரால் உடைத்து அதிலிருந்த ரூ.12 லட்சம் பணத்தை திருடி சென்றுள்ளனர். இந்தியன் வங்கி ஏடிஎம் இயந்திரத்தையும் உடைக்க முயன்றுள்ளனர். ஆனால், பொதுமக்கள் நடமாட்டம் இருந்ததால் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இந்த சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார் </a>வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திருவள்ளூர் டிஎஸ்பி தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.12 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கும்மிடிப்பூண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளம்: தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 பேர் பத்திரமாக மீட்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nepal-floods-21-people-from-tamil-nadu-rescued-safely</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nepal-floods-21-people-from-tamil-nadu-rescued-safely#comments</comments><guid isPermaLink="false">f94ce177-25b9-401d-8cac-ec6583beaca7</guid><pubDate>Thu, 27 Aug 2026 11:59:19 +0000</pubDate><atom:updated>2026-08-27T11:59:19.717Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,வெள்ளம்,Tamilans,தமிழர்கள்,nepal flood</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/x9cqergd/STate-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/x9cqergd/STate-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நேபாளம் - திபெத் எல்லையில் நேற்று ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால், பிரமாண்ட பனிப்பாறை சரிந்து போதேகோசி நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த அதிபயங்கர வெள்ளப்பெருக்கில், ஆற்றின் கரையோர கட்டிடங்கள், பாலங்கள், வாகனங்கள் உள்ளிட்டவை கண்இமைக்கும் நேரத்தில் அடித்துச் செல்லப்பட்டன. </p><p>இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-ஐ கடந்திருக்கும் நிலையில், மேற்கொண்டு ஆயிரக்கணக்கானோரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து கொண்டிருக்கிறது. காயம் அடைந்தவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. </p><p>இதனிடையே நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கி 288 இந்தியர்கள் மாயமாகி உள்ளதாகவும், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், திபெத்தில் உள்ள சுமார் 200 இந்தியர்களும் இந்தியாவின் உதவியை நாடியுள்ளதாகவும் அவர் கூறினார். </p><p>இந்த நிலையில், நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவு வெள்ளத்தில் சிக்கிய கயிலாய மானசரோவர் யாத்திரை சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. மீட்புப் பட்டியலில் இடம்பெற்ற தமிழர்களின் பெயர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் இடம்பெற்றுள்ள நபர்களின் பெயர்கள் பின்வருமாறு;-</p><p>1. சிவரஞ்சனி முத்துநாதன்</p><p>2. கற்பகம் ராஜமோகன்</p><p>3. மாறன் கோவிந்தசாமி</p><p>4. சாந்தி மாறன்</p><p>5. முத்துக்குமரேசன் ராமலிங்கம்</p><p>6. நாவு கபீர்தாஸ்</p><p>7. விஜயபுவனேஸ்வரி விஸ்வநாதன்</p><p>8. மைதிலி முத்துக்குமரேசன்</p><p>9. தியாகராஜன் ரத்தினம்</p><p>10. கிருபாகரி பாலசுப்ரமணியம்</p><p>11. வள்ளிநாயகி சிவகுமார்</p><p>12. சத்திய ஜெயராமன்</p><p>13. திருமாவளவன் கோவிந்தராசு</p><p>14. கனகசபை நடேசபிள்ளை</p><p>15. ராதை கனகசபை</p><p>16. ரத்தினகுமார் குஞ்சிதபாதம்</p><p>17. பூங்குழலி பொன்னம்பலம்</p><p>18. பழனியப்பன் மைக்கப்பெருமாள்</p><p>19. கலைமதி பழனியப்பன்</p><p>20. ரகுநாதன் முனிராஜ்</p><p>21. கனகசபை நடேச பிள்ளை</p> ]]></content:encoded></item><item><title>ஆசைக்கு இணங்க வேண்டும்... ஆபாச படத்தை காட்டி இளம்பெண்ணை மிரட்டிய முன்னாள் காதலன் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/exboyfriend-arrested-for-threatening-woman-with-obscene-photos</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/exboyfriend-arrested-for-threatening-woman-with-obscene-photos#comments</comments><guid isPermaLink="false">abd15a03-0003-4dde-ac6e-6323a05a582e</guid><pubDate>Thu, 27 Aug 2026 11:59:07 +0000</pubDate><atom:updated>2026-08-27T11:59:07.863Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrest,விழுப்புரம்,Villupuram,மிரட்டல்,threaten</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/p4fsrlp5/Untitled-6.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/p4fsrlp5/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விழுப்புரம்,</p><p>ஆசைக்கு இணங்க வேண்டும் இல்லாவிட்டால் நெருக்கமாக பழகியபோது எடுத்த ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று இளம்பெண்ணை மிரட்டிய முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டார்.</p><h2>இன்ஸ்டாகிராமில் பழக்கம்</h2><p>விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் அமீர்சுகேல் (28 வயது). இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். இன்ஸ்டாகிராம் மூலமாக சென்னை சூளைமேட்டில் வசிக்கும் இளம்பெண் ஒருவரோடு இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. 4 வருடங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் இருவரும் பழகி வந்தனர். பின்னர் நேரடியாக சந்தித்து நெருக்கமாகவும் இருந்துள்ளனர். அந்தப் பெண் ஏற்கெனவே திருமணமாகி, விவாகரத்து பெற்றவர்.</p><h2>2-வது திருமணம்</h2><p>இந்த நிலையில், அமீர்சுகேல் வெளிநாட்டிற்கு வேலை செய்ய போய்விட்டார். வெளிநாட்டிற்கு சென்றாலும் காதலியோடு தொடர்பில் இருந்துள்ளார். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அந்தப் பெண் 2-வது திருமணம் செய்து கொண்டு புதிய வாழ்க்கையை தொடங்கிவிட்டார். தன்னை மறந்துவிடும்படி காதலன் அமீர்சுகேலையும் கேட்டுக்கொண்டார். ஆனால் அமீர்சுகேல் உன்னை மறக்க முடியாது என்றும், என்னுடன் உள்ள தொடர்பை துண்டிக்கக்கூடாது என்றும் வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது.</p><h2>மிரட்டல்</h2><p>இந்த நிலையில், வெளிநாட்டில் இருந்து சென்னை வந்த அமீர்சுகேல் காதலியை சந்தித்துள்ளார். அப்போது தன்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ஏற்கனவே நெருக்கமாக பழகியபோது எடுத்த ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். ஒரு சில படங்களை இணையதளத்தில் அவர் வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.</p><h2>கைது</h2><p>அமீர்சுகேலுக்கு வேறு சில பெண்களுடனும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதனால் அமீர்சுகேல் மீது வெறுப்படைந்த அந்த இளம்பெண் சூளைமேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அமீர்சுகேலை நேற்று முன்தினம் கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் இடம் மாறி அமர்ந்திருக்கும் முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-seated-in-a-different-spot-in-the-legislative-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-seated-in-a-different-spot-in-the-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">31615289-4f62-43f1-a3d5-9e2b21f9a154</guid><pubDate>Thu, 27 Aug 2026 11:41:32 +0000</pubDate><atom:updated>2026-08-27T11:41:32.199Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,Legislative Assembly,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/oe9ba47h/8.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/oe9ba47h/8.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, நேபாளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்பது குறித்த ஆலோசனை உள்ளிட்ட பிற பணிகள் காரணமாக முதல்-அமைச்சர் விஜய் காலையில் சட்டசபைக்கு வருகை தரவில்லை. </p><p>இந்த நிலையில், மாலையில் சட்டசபைக்கு முதல்-அமைச்சர் விஜய் வருகை தந்தார். அப்போது, முதல்-அமைச்சருக்கென ஒதுக்கப்பட்டு இருக்கும் தனது வழக்கமான இடத்தில் அமராமல், அமைச்சர்களுக்கு மத்தியில் அமர்ந்துகொண்டார். குறிப்பாக, அமைச்சர் செங்கோட்டையன் அருகில் அமர்ந்த முதல்-அமைச்சர் விஜய், அவரிடம் சிறிது நேரம் ஏதோ பேசிக்கொண்டு இருந்தார். முதல்-அமைச்சர் விஜய் ஏன் இடம் மாறி அமர்ந்துள்ளார் என அங்கிருந்த பிற அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் உற்று கவனித்துக் கொண்டிருந்தனர். </p>]]></content:encoded></item><item><title>ஒரே குடும்பம்… ஒரே நேரத்தில் 3 சகோதரர்கள் எம்.பி.பி.எஸ். படிக்கத் தேர்வு! - நயினார் நாகேந்திரன் பாராட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/one-family-3-brothers-at-the-same-time-exam-to-study-mbbs-nainar-nagendran-praises</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/one-family-3-brothers-at-the-same-time-exam-to-study-mbbs-nainar-nagendran-praises#comments</comments><guid isPermaLink="false">d7596d63-cd90-442f-a714-35d8c38fb433</guid><pubDate>Thu, 27 Aug 2026 11:33:40 +0000</pubDate><atom:updated>2026-08-27T11:33:40.084Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,சகோதரர்கள்,Brothers,MBBS,ஒரே குடும்பம்,one family,எம்.பி.பி.எஸ். படிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/hh03d7my/nainar.gif" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/hh03d7my/nainar.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>தமிழக பாஜக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன்</a> ஒரே குடும்பத்தில் ஒரே நேரத்தில் 3 சகோதரர்கள் எம்.பி.பி.எஸ். படிக்கத் தேர்வாகியிருப்பதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பு</h2><p>நெல்லை மாவட்டம், வெள்ளாங்குளியைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் வெங்கட்ஸ்ரீ, அருண் மற்றும் தருண் ஆகிய மூவரும் ஒரே நேரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் பயின்று நீட் தேர்வு மூலம் எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பிற்கு தேர்வாகியிருப்பது நம் மாவட்டத்திற்கும், தமிழக மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளது.</p><h2>நீட் தேர்வு</h2><p>திருநெல்வேலி மாவட்டம், வெள்ளாங்குளி என்னும் சிறு கிராமத்தில், நெசவுத் தொழில் செய்து வரும் எளிய குடும்பத்திலிருந்து வந்த இந்த மூன்று சகோதரர்களும் தங்களின் எம்.பி.பி.எஸ். என்ற மிகப்பெரிய கனவை நிறைவேற்ற நீட் தேர்வு உதவி உள்ளது என்பது மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது.</p><h2>பாராட்டு</h2><p>இந்த மகிழ்ச்சியான செய்தியை அறிந்தவுடன், அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று மூன்று சகோதரர்களையும், அவர்களது பெற்றோரையும் சந்தித்து எனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நேபாளத்திற்கு இந்தியா வழங்கிய நிவாரணப் பொருட்கள்: பெட்டிகளில் என்ன எழுதப்பட்டுள்ளது தெரியுமா?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/relief-supplies-provided-by-india-to-nepal-do-you-know-what-is-written-on-the-boxes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/relief-supplies-provided-by-india-to-nepal-do-you-know-what-is-written-on-the-boxes#comments</comments><guid isPermaLink="false">416377ab-24b9-4146-b7bf-614236405cba</guid><pubDate>Thu, 27 Aug 2026 11:22:20 +0000</pubDate><atom:updated>2026-08-27T11:22:20.074Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nepal,நேபாளம்,relief supplies,நிவாரணப் பொருட்கள்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/bekm0cwl/7.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/bekm0cwl/7.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி, </p><p>நேபாளத்திற்கு  இந்தியா வழங்கிய நிவாரணப் பொருட்கள் அடங்கிய பெட்டிகளில் வாசகம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. அது என்ன? என்பதை பார்ப்போம். </p><h2>நிவாரணப் பொருட்கள்  அனுப்பிவைப்பு</h2><p>பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாள மக்களுக்கு இந்திய அரசு உதவிக்கரம் நீட்டியுள்ளது. இந்திய விமானப்படையின் விமானங்கள் மூலம் அவசர கால நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. </p><p>முதல் கட்டமாக 10 டன்னும், 2-வது கட்டமாக 37.5 டன்னும் என மொத்தம் 47.5 டன் நிவாரணப் பொருட்கள், காசியாபாத்தில் இருந்து நேபாள தலைநகர் காத்மண்டுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. </p><h2>பெட்டிகளில் எழுதப்பட்டுள்ளது என்ன?</h2><p>இதில், தற்காலிக கூடாரங்கள், போர்வைகள் மற்றும் தூக்கப் பைகள், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்கள், உணவுப் பொட்டலங்கள், சூரியசக்தி விளக்குகள், சுகாதாரப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகள், குளோரின் மாத்திரைகள் மற்றும் குடிநீர் பாட்டில்கள் இடம்பெற்றுள்ளன. </p><p>ஒவ்வொரு பொருட்களும் அட்டை பெட்டிகளில் பாதுகாப்பாக அடைத்து அனுப்பப்பட்டுள்ளன. அந்த அட்டை பெட்டியில், வாசகம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. அதாவது, "இந்திய மக்களும், இந்திய அரசும் வழங்கும் பரிசுப் பொருள்" என்று எழுதப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ஆகம குழுவினரால் கண்டறியப்பட்ட கோவில்கள் குறித்து பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-public-may-share-their-views-regarding-the-temples-identified-by-the-agama-committee</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-public-may-share-their-views-regarding-the-temples-identified-by-the-agama-committee#comments</comments><guid isPermaLink="false">dba7a47a-0749-453b-887b-b9895757f513</guid><pubDate>Thu, 27 Aug 2026 11:16:04 +0000</pubDate><atom:updated>2026-08-27T11:16:04.687Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>temples,கோவில்கள்,இந்து சமய அறநிலைத்துறை,Hindu Religious and Charitable Endowments Department</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/d7whk1bd/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/d7whk1bd/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கோவில்கள் குறித்த விவரங்களில், விடுதல் ஏதுமிருப்பின் அதனை குறிப்பிட்டு சொல்வதற்கும், கருத்து இருந்தால் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>கருத்துகளை தெரிவிக்கலாம்</h2><p>மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மாண்பமை உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் உத்தரவுகளின்படி, தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோவில்களில் ஆகமவிதிகளின்படி நிர்மாணிக்கப்பட்ட திருக்கோவில்களை கண்டறிவதற்காக அரசினால் 06.10.2025 அன்று ஐந்து நபர்களை கொண்ட குழு அமைத்து ஆணை வெளியிடப்பட்டது.</p><p>திருக்கோவில்களின் ஆகமம் குறித்த விவரங்கள், தொடர்புடைய இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களால் குழுவின் முன் சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் குழுவினரால் கவனமாக பரிசீலனை செய்யப்பட்டது. இத்திருக்கோவில்கள் குறித்த விவரங்களில், விடுதல் ஏதுமிருப்பின் அதனை குறிப்பிட்டு சொல்வதற்கும், கருத்துரு இருந்தால் தெரிவிப்பதற்கும் பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டுமென குழு கருதுகிறது.</p><h2>34,971 கோவில்கள் பரிசீலினை</h2><p>ஆகம குழுவினால் பரிசீலினை செய்யப்பட்ட 34,971 எண்ணிக்கையிலான திருக்கோவில்கள் இணையதளத்தில் தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. துறையின் www.hrce.tn.gov.in இதுகுறித்த விவரங்களில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பொதுமக்கள் </a>விடுதல் ஏதும் இருப்பின் அல்லது ஏதேனும் கருத்துரு இருப்பின், ஆகம விதிகளின்படி நிர்மாணிக்கப்பட்ட திருக்கோவில்களை கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட குழுவிற்கு தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகம், 119, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-34 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது துறையின் இணையதளம் வாயிலாகவும் அறிவிப்பு வெளியிட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆதவ் அர்ஜுனா பேசாத வரை அவை நல்லாதான் போகுது.. - பிரேமலதா விஜயகாந்த்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/things-are-going-well-until-adhav-arjuna-speaks-premalatha-vijayakanth</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/things-are-going-well-until-adhav-arjuna-speaks-premalatha-vijayakanth#comments</comments><guid isPermaLink="false">8c51a8f0-574d-4b04-878d-8da152db1577</guid><pubDate>Thu, 27 Aug 2026 11:15:20 +0000</pubDate><atom:updated>2026-08-27T11:15:20.534Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Aadhav Arjuna,ஆதவ் அர்ஜுனா,Assembly,Premalatha Vijayakanth,பிரேமலதா விஜயகாந்த்,சட்டப்பேரவை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/3ihp8fjz/84.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/3ihp8fjz/84.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசத் தொடங்கிய பிறகே வாக்குவாதமும், சலசலப்பும் ஏற்படுவதாக தேமுதிக பொதுச் செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D">பிரேமலதா விஜயகாந்த்</a> தெரிவித்துள்ளார்.</p><h2>பேரவை நிகழ்வுகள்</h2><p>சட்டப்பேரவையில் இன்று பேசிய அவர், “மக்களின் பிரச்சினைகளை விவாதிப்பதற்காகத்தான் சட்டப்பேரவை நடைபெறுகிறது. ஆனால் கடந்த 3, 4 நாட்களாக பேரவையில் தொடர்ந்து வாக்குவாதம் நடைபெற்று வருகிறது. ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதால் பேரவை நிகழ்வுகள் நீண்ட நேரம் நடைபெறுகின்றன. இதனால் தமிழக மக்களுக்கு என்ன பயன்?” என்று கேள்வி எழுப்பினார்.</p><h2>உரிய வாய்ப்பு</h2><p>மேலும், “உறுப்பினர்கள் தேர்வுக்கு தயாராவதைப் போல் பேரவையில் பேசுவதற்கு தயாராகி வருகின்றனர். ஆனால் மக்களின் பிரச்சினைகள் குறித்து சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே பேசப்படுகிறது. மீதமுள்ள நேரம் முழுவதும் வாக்குவாதமாகவே செல்கிறது. அனைவருக்கும் பேரவையில் பேசுவதற்கு உரிய வாய்ப்பு வழங்க வேண்டும்” என்றார்.</p><h2>சண்டை மன்றம் அல்ல</h2><p>தொடர்ந்து பேசிய பிரேமலதா, “அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசாத வரை சட்டப்பேரவை அமைதியாக செல்கிறது. அவர் பேசத் தொடங்கியவுடன் பிரச்சினை ஏற்படுகிறது. இது சட்டமன்றம்; சண்டை மன்றம் அல்ல. எனவே அவரை பேச அனுமதிக்கக் கூடாது” என்று தெரிவித்தார்.</p><p>மேலும், தற்போதைய அரசுக்கு மக்கள் நலனுக்காக செயல்பட வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், மக்களுக்காக தங்களால் முடிந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>சீன நாள்காட்டி சிக்கலால் ஆபத்தை சந்தித்தோம் - டிராவல்ஸ் உரிமையாளர் பரபரப்பு தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-faced-danger-due-to-chinese-calendar-problem-travels-owner-sensational-news</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-faced-danger-due-to-chinese-calendar-problem-travels-owner-sensational-news#comments</comments><guid isPermaLink="false">86dc546f-5176-4643-b153-d7d365413c7b</guid><pubDate>Thu, 27 Aug 2026 11:15:09 +0000</pubDate><atom:updated>2026-08-27T11:15:09.375Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nepal,நேபாளம்,கும்பகோணம்,வெள்ள அபாயம்,NepalFlood</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/1kyfzh7w/nepal33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
சீன நாள்காட்டி]]></media:title><media:description type="html"><![CDATA[ டிராவல்ஸ் உரிமையாளர் பரபரப்பு தகவல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/1kyfzh7w/nepal33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கும்பகோணம்,</p><p>சீன நாட்காட்டி சிக்கலால் ஆபத்தை சந்தித்தோம் என டிராவல்ஸ் உரிமையாளர் சையத் சாதிக் கூறியுள்ளார்.</p><p>கும்பகோணம் சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் சையத் சாதிக் அளித்த பேட்டியில்</p><p>கூறியதாவது:-</p><p>சீன நாள்காட்டிவின்படி, ஆகஸ்ட் 1 முதல் 20-ந்தேதி வரை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">குதிரை ஆண்டு</a> என்பதால், ஜெயின் மத பக்தர்கள் மட்டுமே நேபாள கோவில்களில் வழிபாடு நடத்த முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறி ஆகஸ்டு 1-ந்தேதி புறப்படுவதற்கான எங்கள் விண்ணப்பங்களை திருப்பி அனுப்பினார்கள்.</p><p>இதனால்தான், ஆகஸ்ட் 1-ந்தேதி செல்லலிருந்த பயணம் ஆகஸ்ட் 23-ந்தே திக்கு மாற்றப்பட்டது. இந்த தேதி மாற்றத்தால், எங்களுடன் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">நேபாளம்</a> வர வேண்டிய சில பக்தர்களுக்கு வர முடியாமல், அவர்கள் பயணத்தை ரத்து செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டது.</p><p>சில பயணிகளின் பாஸ்போர்ட்கூட என்னிடம்தான் உள்ளது. எங்கள் நிறுவனம் மூலம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 37 பேர் கடந்த 23-ந் தேதி இரவு நேபாளத்துக்கு கைலாய யாத்திரைக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்தோம். அதன்படி அனைவரும் முதலில் சென்னை சென்று அங்கிருந்து டெல்லி சென்று பின்னர் அனைவரும் காத்மாண்டு சென்றோம்.</p><p>அங்கு அவர்கள் அனைவருக்கும் தங்க ஏற்பாடு செய்து கொடுத்தோம். பின்னர் அவர்களுடன் நான் பேசிவிட்டு மறுநாள் தான் எனது மகனை அங்கு அவர்களுடன் விட்டுவிட்டு நான் ஊர் திரும்பினேன். நான் 35-ந் தேதி இரவு வரை அவர்களுடன் தொடர்பில் இருந்தேன்.</p><p>பின்னர் நேற்று காலை 8 மணிக்கு அவர்கள் காலை உணவை முடித்து கொண்டு 3 பஸ்களில் யாத்திரையை தொடர்ந்துள்ளனர்.</p><p>இந்தநிலையில் அவர்களுடன் சென்ற ரகு என்பவர் என்னை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் தாங்கள் காலை 9 மணிக்கு பஸ்சில் சென்றபோது நில அதிர்வு ஏற்பட்டது. எங்களுக்கு பின்னால் வந்த பஸ் திடீரென பள்ளத்தில் உருண்டு விழுந்து விபத்தில் சிக்கியதை பார்த்தோம்.</p><p>ஆனால் அங்கிருந்தால் எங்கள் உயிருக்கும் ஆபத்து என டிரைவர் கூறியதால் எங்களால் இறங்கி பார்க்க முடியவில்லை. பின்னர் நாங்கள் பாதுகாப்பான இடத்துக்கு சென்ற பிறகு ராணுவத்தினரிடம் தகவல் சொன்னோம்.</p><p>ராணுவத்தினர் அனைவரையும் தேடி வருகின்றனர் என கூறினார். நேபாளத்தில் சிக்கி இருப்பவர்களை பத்திரமாக மீட்க வேண்டும். கடவுள் அருளால் அனைவரும் உயிர்ப்பிழைக்க வேண்டும் என வேண்டு கிறேன் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>சம்பா பருவம் முழுமைக்கும் கர்நாடகத்திடமிருந்து நடுவர் மன்ற ஆணைப்படி நீரை பெற வேண்டும் - அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/need-to-secure-water-from-karnataka-for-samba-season-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/need-to-secure-water-from-karnataka-for-samba-season-anbumani#comments</comments><guid isPermaLink="false">b2833844-2b02-4348-be5d-258218072c56</guid><pubDate>Thu, 27 Aug 2026 10:56:39 +0000</pubDate><atom:updated>2026-08-27T10:56:39.300Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,பாமக,மேட்டூர் அணை,Mettur dam,காவிரி நீர்,Karnataka,கர்நாடகா,Anbumani Ramdoss,Cauvery water,சம்பா பருவம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/t7kn28n7/Untitled-5.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/t7kn28n7/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சம்பா பருவம் முழுமைக்கும் நீர் வழங்க கர்நாடகத்திடமிருந்து நடுவர் மன்ற ஆணைப்படி நீரை பெற வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>காவிரி பாசன மாவட்டங்களில் அறுவடையை நெருங்கும் குறுவைப் பயிர்களைக் காப்பாற்றவும், சம்பா சாகுபடியைத் தொடங்கவும் வசதியாக மேட்டூர் அணையிலிருந்து செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனாலும் அணையில் குறைந்த அளவு நீரே இருக்கும் நிலையில், சம்பா பருவம் முழுமைக்கும் நீர் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.</p><p>குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் நாள் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், மேட்டூர் அணையில் நீர் இருப்பு மிகவும் குறைவாக இருந்ததாலும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை காவிரியில் திறக்க கர்நாடக அரசு மறுத்ததாலும் குறித்த நாளில் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க முடியவில்லை. இடைப்பட்ட காலத்தில் கர்நாடக அணைகளிலிருந்து ஓரளவு தண்ணீர் வந்திருப்பதையடுத்து செப்டம்பர் ஒன்றாம் தேதி செவ்வாய்க்கிழமை மேட்டூர் அணையில் இருந்து முதல்-அமைச்சர் விஜய் காவிரியில் தண்ணீரை திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேட்டூர் அணையில் இருந்து எந்தவொரு காலக்கட்டத்தில் நீர் திறக்க வேண்டும் என்றாலும், அணையில் குறைந்தது 90 அடி முதல் 100 அடி வரை, அதாவது 52 டி.எம்.சி முதல் 65 டி.எம்.சி வரை நீர் இருக்க வேண்டும். இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 89.24 அடி, அதாவது 51.78 டி.எம்.சி ஆகும். அணைக்கு வினாடிக்கு 7,454 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இது கடந்த ஜூன் 12-ம் தேதியின் நிலைமையான 79.52 அடி நீர்மட்டம், 41.52 டி.எம்.சி நீர் இருப்புடன் ஒப்பிடும் போது 10 டி.எம்.சி மட்டுமே அதிகமாகும். அணைக்கான நீர்வரத்தும் சுமார் 7,500 கன அடி என்ற நிலையிலேயே இருக்கும்போது, இயல்பான சூழலில் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது சரியானதாக இருக்காது. ஏனென்றால், இனிவரும் காலங்களில் கர்நாடகத்திடமிருந்து தண்ணீர் கிடைப்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லாத சூழலில், இருக்கும் நீரைக் கொண்டு 40 நாள்களுக்கு மட்டுமே நீர் வழங்க முடியும். இதை உணர்ந்துதான் மேட்டூர் அணையில் இருந்து 45 நாள்களுக்கு மட்டும் நீர் திறக்கப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் அறிவித்துள்ளார்.</p><p>மேட்டூர் அணையின் நிலவரம் இத்தகையதாக இருந்தாலும், இன்றைய சூழலில் அணையிலிருந்து தண்ணீர்  திறப்பதைத் தவிர வேறு வழியில்லை. காவிரி பாசன மாவட்டங்களில் காவிரி, கல்லணைக் கால்வாய், வெண்ணாறு ஆகிய ஆறுகளில் இருந்து கால்வாய்கள் மூலம் தண்ணீர் பெறும் 737 நீர்நிலைகளில் 694 நீர்நிலைகள், அதாவது 95% தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன. இன்னொருபுறம் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்துவிட்டதால் தண்ணீர் எடுக்க முடியாமல் குறுவைப் பயிர்கள் கருகி வருகின்றன. அந்தப் பயிர்களைக் காக்கவும், வறண்டு கிடக்கும் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வழங்கவும் மேட்டூர் அணையைத் திறப்பது கட்டாயம் ஆகும். அந்த வகையில் மேட்டூர் அணையைத் திறக்கும் தமிழக அரசின் முடிவு வரவேற்கத்தக்கது.</p><p>ஆனால், சம்பா பருவ சாகுபடியை உறுதி செய்ய தமிழக அரசு என்ன செய்யப் போகிறது? என்பதுதான்  அடுத்தக்கட்ட வினா ஆகும். காவிரி பாசன மாவட்டங்களில் 14 லட்சம் ஏக்கரில் சம்பா, 4 லட்சம் ஏக்கரில் தாளடி என மொத்தம் 18 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படும். இந்தப் பயிர்களைக் காப்பாற்றுவதற்கு தொடக்கத்தில் தினமும் 1.75 டி.எம்.சி வீதமும், அடுத்து வரும் நாள்களில் சுமார் 1 டி.எம்.சி வீதமும் மொத்தம் 160 டி.எம்.சி தண்ணீர்  தேவைப்படும். இதில் வடகிழக்கு பருவமழை இயல்பான அளவில் பெய்தால் 50 முதல் 60 டி.எம்.சி வரை தண்ணீர் கிடைக்கும். அத்தகைய சூழலில் 100 முதல் 110 டி.எம்.சி நீர் மேட்டூர் அணையில் இருந்து தான் விடுவிக்கப்பட வேண்டும். அதை கர்நாடகத்திடமிருந்து பெறுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்.</p><p>காவிரி நடுவர் மன்றம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி, ஜூலை மாதம் 31.24 டி.எம்.சி, ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்பட வேண்டிய 45.95 டி.எம்.சியில் முதல் 26 நாள்களுக்கு 38.58 டிஎம்சி என நேற்று வரை 79.01 டி.எம்.சி நீரை கர்நாடகம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், இப்போது வரை எவ்வளவு நீர் தமிழகத்திற்கு வந்தது என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வரவில்லை. கடந்த 25-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் தமிழகத்திற்கு இன்னும் 28 டி.எம்.சி நீரை கர்நாடகம் வழங்க வேண்டியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி ஆகஸ்ட் மாதத்தில் மீதமுள்ள நாள்களுக்கும் சேர்த்து 36 டி.எம்.சி, செப்டம்பரில் 36.76  டி.எம்.சி, அக்டோபரில் 20.22 டி.எம்.சி, நவம்பரில் 13.78 டி.எம்.சி, டிசம்பர் மாதத்தில் 7.35  டி.எம்.சி என டிசம்பர் மாதம் வரை கர்நாடகத்திடமிருந்து நமக்கு கிடைக்க வேண்டிய 114.11 டி.எம்.சி நீரை பெற்றால் மட்டுமே சம்பா, தாளடி பருவங்களை காவிரி பாசன மாவட்ட விவசாயிகளால் வெற்றிகரமாக செய்து முடிக்க இயலும்.</p><p>கர்நாடக அணைகளில் இன்றைய நிலவரப்படி 82.11 டி.எம்.சி நீர் இருப்பு உள்ளது. 4 அணைகளுக்கும் சேர்த்து வினாடிக்கு 20,877 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் கர்நாடக அணைகளில் இருந்து தினமும் 2 டி.எம்.சி நீர் வழங்கப்பட்டால் செப்டம்பர் மாத இறுதிக்குள் கர்நாடகம் நமக்கு வழங்க வேண்டிய நிலுவை நீரை வழங்கி விட முடியும். எனவே, கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம், சுப்ரீம் கோர்ட்டு ஆகியவறின் வாயிலாக அழுத்தம் கொடுத்து தமிழகத்திற்கான தண்ணீரை அரசு பெற வேண்டும். அதன் மூலம் காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடியும் வெற்றிகரமாக செய்யப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>‘கார்ப்பரேட் கூட்டாளிகளுக்கு சலுகைகளை வாரி வழங்கும் பா.ஜ.க. அரசு’ - மாணிக்கம் தாகூர் விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bjp-government-showers-concessions-on-corporate-allies-manickam-tagores-criticism</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bjp-government-showers-concessions-on-corporate-allies-manickam-tagores-criticism#comments</comments><guid isPermaLink="false">c0843cf9-75ea-4e39-bb43-e40a9c1075c5</guid><pubDate>Thu, 27 Aug 2026 10:43:48 +0000</pubDate><atom:updated>2026-08-27T10:43:48.926Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பா.ஜ.க.,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/cc1cbo8j/STate-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/cc1cbo8j/STate-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி., தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் தொழிலதிபர் சுபாஷ் சந்திராவின் புகைப்படத்தை பதிவிட்டு, பா.ஜ.க. அரசை விமர்சிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-</p><p>“ரூ.22,006 கோடி கடன் பாக்கிக்கு வெறும் ரூ.6.5 கோடி தட்சிணை. “ஒரே போடு... 99.97% அபேஸ்!" "நண்பேண்டா..." என்று கட்டிப்பிடித்து கார்ப்பரேட் சகாக்களுக்கு கதகதப்பூட்டும் மோடி அரசு, பொதுத்துறை வங்கிகளுக்கும் மக்களின் சேமிப்புப் பணத்திற்கும் கூசாமல் அடித்திருக்கிறது ஒரு 'பட்டை நாமம்'! </p><p>இவ்வளவு பெரிய சலுகை இன்று இவருக்கு வாரி வழங்கப்பட்டிருப்பதன் பின்னணியை அறிய, சுபாஷ் சந்திரா எழுதிய 'The Z Factor' சுயசரிதை புத்தகத்தில் அவரே ஒப்புக்கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் பிணைப்பைப் பார்த்தாலே போதும்: </p><p>1. “எனக்கு 10 வயது இருந்தபோது ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) உறுப்பினர் ஒருவரை நான் சந்தித்தேன். என் தந்தை ஒரு ஸ்வயம்சேவகராக இருந்தவர் என்பது எனக்குத் தெரியும். நான் பிறந்த இடமான ஆதம்பூரில் அவர் ஒரு 'சாகா'வை (கிளை அமைப்பை) நடத்தி வந்தார். 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை நான் அதில் தவறாமல் கலந்துகொண்டேன்.”</p><p>2. அதுமட்டுமல்ல, அதே புத்தகத்தில் வாஜ்பாய் காலம் தொடங்கி நாக்பூர் ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் வரை தான் நடத்திய லாபியிங் விவகாரங்களையும் விவரித்திருப்பார்: “தேசியவாதக் கொள்கைக்காக அறியப்படும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை நாங்கள் அணுகினோம். நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் ரஜ்ஜு பய்யாவை நான் சந்தித்தேன். டெல்லியில் உள்ள ஆர்.எஸ்..எஸ்.-ன் ஜண்டேவாலன் அலுவலகத்தில் 4 முதல் 5 மணி நேரம் வரை நடைபெற்ற கூட்டத்தில், அந்தப் பிரச்சினையை நான் அவருக்கு விளக்கினேன்.”</p><p>3. அரசாங்கத்தையும் சட்டத்தையும் எப்படி வளைக்கலாம் என்று அவர் எழுதியிருக்கும் வரிகள்: “முடியாது அல்லது இல்லை என்ற பதிலை நான் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. உங்கள் லட்சியத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்து, உங்கள் நோக்கங்களும் நேர்மையாக இருந்தால், உங்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே என் எண்ணம். அதிகபட்சமாக சில நபர்களோ அல்லது அமைப்போ உங்கள் முன்னேற்றத்தை தற்காலிகமாக தடுத்து நிறுத்துவதில் மட்டுமே வெற்றி பெறக்கூடும்; அவ்வளவுதான்.”</p><p>அவர் சொன்னது உண்மைதான்! பா.ஜ.க. ஆட்சியில் பிரதமரின் 'நண்பர்களுக்கு' சிஸ்டம் ஒருபோதும் தடையாக இருக்காது; வெறும் 6.5 கோடியை விட்டெறிந்து 22,006 கோடியை ஆட்டையப் போட அது வழியமைத்துக் கொடுக்கும்! </p><p>4. அவரது தாத்தா சொன்ன கடன் தீர்க்கும் தாரக மந்திரம்: “அசல் தொகையை மட்டும் பெற்றுக்கொண்டு வட்டித் தொகையை விட்டுவிடுங்கள். தாமதமாக முழுத் தொகையையும் பெறுவதை விட, உடனடியாக ஒரு பகுதியைத் திரும்பப் பெறுவதே சிறந்தது.” தாத்தா அசலையாவது கொடு என்றார்; ஆனால் அசலையும் கொடுக்காமல், அசால்ட்டாக ஏமாற்றிய நீங்க அசல் ஆர்.எஸ்.எஸ்.காரர்தான்! </p><p>சில ஆயிரம் ரூபாய் விவசாயக் கடனுக்கோ, ஏழை மாணவர்களின் கல்விக் கடனுக்கோ ஜப்தி நோட்டீஸ் ஒட்டி மிரட்டும் இந்த பா.ஜ.க. அரசு, தன் 'சங் பரிவார்' சகாவுக்கு மட்டும் சிவப்புக் கம்பளம் விரிக்கிறது! எளிய மக்களின் சேமிப்பையும் பொதுத்துறை வங்கிகளையும் பணையம் வைத்து, கார்ப்பரேட் கூட்டாளிகளுக்கு சலுகைகளை வாரி வழங்கும் இந்த மக்கள் விரோதக் கூட்டுக்கொள்ளைக்கு மக்கள் மன்றத்தில் தக்க பாடம் புகட்டப்படும்.”</p><p>இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>நேபாளப் பெருவெள்ளத்தில் சிக்கி காணாமல்போன தமிழர்களை பாதுகாப்பாக மீட்டு வர வேண்டும் - சீமான்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-people-missing-in-nepal-floods-must-be-rescued-seeman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-people-missing-in-nepal-floods-must-be-rescued-seeman#comments</comments><guid isPermaLink="false">c9fae35a-75e2-427e-ace6-e907b988cb03</guid><pubDate>Thu, 27 Aug 2026 10:42:23 +0000</pubDate><atom:updated>2026-08-27T10:42:23.921Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,Seeman,நாம் தமிழர் கட்சி,nepal flood,நேபாளம் வெள்ளம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/4m9t9tj2/Untitled-4.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சீமான்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/4m9t9tj2/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நேபாளப் பெருவெள்ளத்தில் சிக்கி காணாமல்போன தமிழர்கள் உட்பட இந்திய மக்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு, தாயகம் கொண்டுவர தமிழ்நாடு அரசும், இந்திய ஒன்றிய அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>நேபாள நாட்டில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் சிக்கி சுற்றுலா பயணிகள் உட்பட 150-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததுடன், 700-க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர் எனும் பெருந்துயரச் செய்தி அதிர்ச்சியையும், மிகுந்த மனவலியையும் தருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதலைத்தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.</p><p>திடீரென பெருக்கெடுத்த ஆற்று வெள்ளம் இருகரைகளில் இருந்த வீடுகளையும், அவற்றில் வசித்த மக்களையும், செயற்கை கட்டுமானங்களையும் மூழ்கடிக்கும் காட்சிகள் நெஞ்சைப் பதறச்செய்கிறது. எத்தனை அறிவியல் வளர்ச்சியை ஏற்படுத்தி, விண்வெளிக்கே சென்றாலும் மனிதன் எவ்வளவு சிறியவன் என்பதை அவ்வப்போது இயற்கை நமக்கு உணர்த்தி வருகிறது.</p><p>புவிவெப்பமயமாதல் உள்ளிட்ட காலநிலை மாற்றம், திபெத்தில் ஏற்பட்ட  நிலநடுக்கம்,  பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா கட்டி வரும் உலகின் மிகப்பெரிய அணை கட்டமைப்பிற்காக அழிக்கப்பட்ட மரங்களால் ஏற்பட்ட சூழலியல் பாதிப்புகள் என்பன உள்ளிட்ட அடுக்கடுக்கான காரணங்களை இயற்கை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எப்படி பார்த்தாலும் இயற்கைக்கு எதிராக மனிதன் முன்னெடுக்கும் எந்தவொரு நடவடிக்கையும் மனித இனத்திற்கு எதிராகத் திரும்பும், பேரழிவை ஏற்படுத்தும் என்பதை அவ்வப்போது நிகழும் இதுபோன்ற இயற்கை சீற்றங்கள் மூலம் நமக்கு உணர்த்தி வருகிறது.</p><p>மலையும், மரமும், மணலும், மழையும், ஆறும், அருவியும், காடும், கடலும் நன்றாக இருந்தால்தான் மனித இனம் நன்றாக இருக்க முடியும் என்ற பேருண்மையை, வளர்ச்சி என்ற பெயரில் அவற்றை அழித்து தொழிற்சாலைகளையும், வானூர்தி நிலையங்களையும் அமைக்க முயலும், நாட்டின் ஆட்சியாளர்கள் இனியாவது உணர்ந்து திருந்த வேண்டும். இல்லையென்றால் அதற்காக மிகப்பெரிய விலையை உலகில் மானுட இனம் கொடுக்க நேரிடும்.</p><p>நேபாளப் பெருவெள்ளத்தில் சிக்கி காணாமல்போன தமிழர்கள் உட்பட இந்திய மக்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு, தாயகம் கொண்டுவர தமிழ்நாடு அரசும், இந்திய ஒன்றிய அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். நேபாளப் பெருவெள்ளப் பாதிப்பில் உயிரிழந்தவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நெல்லை: மேல்சுவர் இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி உயிரிழப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-construction-worker-dies-after-upper-wall-collapses</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-construction-worker-dies-after-upper-wall-collapses#comments</comments><guid isPermaLink="false">2ad2f130-5f23-45b3-b43f-683ea09e8a07</guid><pubDate>Thu, 27 Aug 2026 10:32:22 +0000</pubDate><atom:updated>2026-08-27T10:32:22.426Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Accident,நெல்லை,உயிரிழப்பு,police enquiry,Construction worker,கட்டிட தொழிலாளி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/go90uaq9/66.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கட்டிட தொழில் ]]></media:title><media:description type="html"><![CDATA[ மேல்சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/go90uaq9/66.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>நெல்லை அருகே பழைய வீட்டை இடிக்கும் பணியின் போது எதிர்பாராதவிதமாக மேல்சுவர் மற்றும் கூரை இடிந்து விழுந்ததில், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF">கட்டிட தொழிலாளி</a> ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>மேல்சுவர் இடிந்து விழுந்து விபத்து</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">நெல்லை மாவட்டம் </a>பாளையங்கோட்டை பகுதியில் பழமையான வீடு ஒன்றை இடிக்கும் பணி இன்று (வியாழக்கிழமை) நடைபெற்று வந்தது. அப்பணியில் நெல்லையைச் சேர்ந்த தளவாய் (வயது 40) உள்ளிட்ட சில கட்டிட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். தொழிலாளர்கள் வீட்டின் ஒரு பகுதியை இடித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக வீட்டின் மேல்சுவர் மற்றும் கூரைப்பகுதி பலத்த சத்தத்துடன் திடீரென இடிந்து விழுந்தது.</p><h2>தொழிலாளி உயிரிழப்பு</h2><p>இதில், அங்கு வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளி தளவாய் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அருகில் இருந்த மற்ற தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இடிபாடுகளை அகற்றி தளவாயின் உடலை மீட்டனர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இதனைத் தொடர்ந்து பாளையங்கோட்டை போலீசார் தளவாயின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாதுகாப்பு குறைபாடுகள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>புதுச்சேரியில் இருந்து மதுபானம் கடத்தி வந்த இருவர் கைது - 269 பாட்டில்கள் பறிமுதல்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-arrested-for-smuggling-liquor-from-puducherry-269-bottles-seized</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-arrested-for-smuggling-liquor-from-puducherry-269-bottles-seized#comments</comments><guid isPermaLink="false">12e99d0b-a167-4e04-afe7-b4c3d5ffe811</guid><pubDate>Thu, 27 Aug 2026 10:30:33 +0000</pubDate><atom:updated>2026-08-27T10:30:33.419Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>புதுச்சேரி,puducherry,விழுப்புரம்,Viluppuram,liquor bottles,மதுபானம் கடத்தல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/xcetrs9c/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/xcetrs9c/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விழுப்புரம்,</p><p>விழுப்புரம் மாவட்டம், மயிலம் காவல் நிலைய போலீசார் நடத்திய வாகனத் தணிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மதுபானங்களை கடத்தி வந்த இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 269 மதுபான பாட்டில்கள் மற்றும் புதுச்சேரி மாநில பாக்கெட் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.</p><h2>வாகனத் தணிக்கை</h2><p>மயிலம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பாலாஜி, உதவி ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் காவலர்கள் தலைமையில், ஐவேலி முருகன் கோவில் அருகே வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.</p><p>சோதனையின்போது, இருசக்கர வாகனத்தில் புதுச்சேரி மாநில மதுபானங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, வாகனத்தில் வந்த இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.</p><h2>இருவர் கைது</h2><p>விசாரணையில், பேரணி அஞ்சல் கெண்டியாம்பாக்கம் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரின் மகன் திருநாவுக்கரசு (42) மற்றும் புதுச்சேரி மாநிலம் மண்ணாடிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திருமால் என்பவரின் மகன் சுரேஷ் (47) ஆகியோர் என்பது தெரியவந்தது.</p><p>இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.</p><h2>நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைப்பு</h2><p>கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் 269 மதுபான பாட்டில்கள் மற்றும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">புதுச்சேரி </a>மாநில பாக்கெட் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>ஆன்லைன் மது விற்பனை விவகாரம்: தமிழக அரசு பதிலளிக்க  சென்னை ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/online-liquor-sales-issue-chennai-high-court-orders-tamil-nadu-government-to-respond</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/online-liquor-sales-issue-chennai-high-court-orders-tamil-nadu-government-to-respond#comments</comments><guid isPermaLink="false">e5940d22-e1b7-4b92-a6ff-d3c7c37361ff</guid><pubDate>Thu, 27 Aug 2026 10:22:44 +0000</pubDate><atom:updated>2026-08-27T10:22:44.418Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Online,ஆன்லைன்,issue,Tamil Nadu Government,தமிழக அரசு,மது விற்பனை,liquor sales,Chennai High Court orders,விவகாரம்,சென்னை ஐகோர்ட்டு உத்தரவு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/zejmejpf/highcourt.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/zejmejpf/highcourt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஆன்லைன் மூலம் டாஸ்மாக் கடைகளில் மது பானங்களை வாங்கும் வசதியை தொடங்கி வைத்து டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் சுற்றறிக்கை பிறப்பித்துள்ளார். இதை ரத்து செய்யக்கோரியும், ஆன்லைன் மூலம் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கக்கோரியும், வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் தலைவர் கே.பாலு <a href="https://www.dailythanthi.com/topic/madras-high-court">சென்னை ஐகோர்ட்</a>டில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.</p><h2>சிறுவர்களும் மதுவாங்க வாய்ப்பு</h2><p>அந்த மனுவில், ஆன்லைன்மூலம் மது வாங்கும் போது, 21 வயதுக்கு உட்பட்டவர்கள் மதுவகைகளை வாங்கமுடியாது என்று டாஸ்மாக் நிறுவனம் தரப்பில் விளக்கம் அளித்தாலும், பெரியவர்கள் மது வாங்கிய ஆன்லைன் முகவரியை கொண்டு சிறுவர்களும் மதுவாங்க வாய்ப்பு உள்ளது. ரேஷன் கடை அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் கால் வலிக்க வரிசையில் நிற்கும் முதியோர், பெண்களுக்கு இதுபோல ஆன்லைன் பதிவுகள் செய்ய எந்த வசதியும் இல்லாத நிலையில், மது குடிப்பவர்களுக்கு தமிழக அரசு இந்த வசதியை செய்து கொடுத்துள்ளது.</p><h2>மிகப்பெரிய தீங்கு</h2><p>இதனால் தமிழ்நாட்டில் மிகப்பெரிய தீங்கு ஏற்படும் என்பதால், ஆன்லைனில் மது விற்பனை செய்வது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும். வழக்கில் தீர்வு காணப்படும் வரை அவற்றுக்கு தடை விதிக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.  இந்த வழக்கு தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கே.பாலு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.எல்.ராஜா, 'அரசின் இந்த அறிவிப்பு இந்திய அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. மதுவிற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.</p><h2>4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு</h2><p>அரசு நியமித்துள்ள குழுவின் விசாரணை வரம்பில் மது விற்பனை மூலம் வருவாயை  அதிகரிப்பது குறித்து பரிந்துரைகளை வழங்க கோரியுள்ளது. ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்யும் விவகாரத்தில் எந்த வயது வரம்பும் நிர்ணயிக்கப்படாததால் இளைஞர்கள் எளிதில் மது வாங்க வாய்ப்புள்ளது என்பதால் ஆன்லைன் மது விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார். இதையடுத்து, மனுவுக்கு 4 வாரங்களில் பதில் அளிக்கும்படி, தமிழக அரசு, டாஸ்மாக் நிர்வாகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>மக்கள் பிரச்சினைகளை விவாதிக்கும் மன்றமாக சட்டமன்றம் இருக்க வேண்டும் -  அண்ணாமலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-legislative-assembly-should-be-a-forum-for-discussing-peoples-issues-annamalai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-legislative-assembly-should-be-a-forum-for-discussing-peoples-issues-annamalai#comments</comments><guid isPermaLink="false">d45d43e2-e175-4d10-b742-4d8be8120f29</guid><pubDate>Thu, 27 Aug 2026 10:14:13 +0000</pubDate><atom:updated>2026-08-27T10:14:13.169Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>அண்ணாமலை,சட்டமன்றம்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/reyotifd/3.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/reyotifd/3.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>வி த லீடர்ஸ் அமைப்பு தலைவர் அண்ணாமலை, கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;</p><p>கல்லூரிகளில் மாணவர்கள் குழுக்களை அமைத்து அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், அரசியல் குறித்து பேசுவது, அரசு அதிகாரிகளிடம் தங்களது பிரச்சினைகளை எடுத்துரைப்பது உள்ளிட்டவை மாணவர்களுக்கு தெரியாமல் போய்விடும். கல்லூரி அரசியல் சரியாக இருந்தால் பல்வேறு பிரச்சினைகளுக்கு அதுவே தீர்வாக அமையும்.</p><p>உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்த போதிலும், தமிழகத்தில் கல்லூரி அரசியல் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் அரசியல் கட்சிகளுக்கு வரக்கூடிய இளம் தலைவர்கள் உருவாகாமல் போய்விடுவார்கள்ர்.</p><p>திரைத்துறையை பொறுத்தவரை சென்சார் போர்டு விதிமுறைகள் மேலும் கடுமையாக இருக்க வேண்டும். சென்சார் குறியீடுகளை திரைப்படங்கள் முறையாக பின்பற்ற வேண்டும். சமீபத்தில் வெளியாகும் சில திரைப்படங்கள் மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக இல்லை. பெண்களை வல்கரான முறையில் காட்சிப்படுத்தும் திரைப்படங்களும் உள்ளன.</p><p>சமூக வலைதளங்களை பயன்படுத்துவதிலும் கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். சமூக வலைதளங்களால் நல்ல விஷயங்கள் நடைபெறுவதுடன், பல்வேறு தவறுகளும் நடைபெறுகின்றன. மற்ற நாடுகள் சமூக வலைதளங்களுக்கு கடுமையான சட்டங்களை கொண்டு வரும் நிலையில், இந்தியா ஏன் தயங்குகிறது.</p><p>சட்டமன்றம் டிராமா மன்றமாக இருக்கக்கூடாது. ஆக்கப்பூர்வமாக மக்கள் பிரச்சினைகளை விவாதிக்கும் மன்றமாக இருக்க வேண்டும். ஆனால் தற்போது பழைய பஞ்சாயத்துகளை தீர்த்துக்கொள்ளும் இடமாக சட்டமன்றம் மாறி வருகிறது. அரசியலுக்கு வருவதற்கு முன்பு இருந்த பஞ்சாயத்துகள் கூட சட்டமன்றத்தில் தீர்க்கப்படுகின்றன. சட்டமன்ற உறுப்பினர்களுக்குள் இருக்கும் பஞ்சாயத்துகளும் அங்கேயே தீர்க்கப்படுகின்றன.</p><p>ஆளும் கட்சி சார்பில் உள்ள உறுப்பினர்கள் பலரும் புதியவர்கள், அவர்களும் வேகமாக முன்னேறி வருகின்றனர். இன்றைக்கு தமிழக சட்டமன்றம் டிராமா மன்றமாக மாறிவிடுமோ என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.”</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>தங்கம் விலை ஒரே நாளில் 2-வது முறையாக குறைந்தது... நிலவரம் என்ன..?</title><link>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-drops-twice-in-a-single-day-whats-the-status</link><comments>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-drops-twice-in-a-single-day-whats-the-status#comments</comments><guid isPermaLink="false">b7a120f0-acb7-45f3-ad13-21cc9c6932da</guid><pubDate>Thu, 27 Aug 2026 09:59:14 +0000</pubDate><atom:updated>2026-08-27T09:59:14.279Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Gold Rate,தங்கம் விலை,வெள்ளி விலை,Silver rate,Gold Price,Silver Price,விலை நிலவரம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/bfvg6dm2/Untitled-3.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/bfvg6dm2/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தங்கம் (Gold Rate)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தங்கம் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.1,20,080-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று தங்கம் விலையில் மாற்றமின்றி அதே விலையில் நீடித்தது.</p><p>இந்த நிலையில் இன்று காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560-ம், கிராமுக்கு ரூ.70-ம் குறைந்து, ஒரு சவரன் ரூ.1,19,520-க்கும், ஒரு கிராம் ரூ.14,940-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 2-வது முறையாக தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.</p><p>அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பிற்பகலில் சவரனுக்கு ரூ.1,720 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,17,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.215 குறைந்து, ஒரு கிராம் 14,725-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,280 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p>வெள்ளியை பொறுத்த வரையில் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.265-க்கும் ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>நேபாளத்தில் வெள்ள பாதிப்பு: டெல்லி செல்லும் தமிழக அமைச்சர்கள் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/flood-impact-in-nepal-tamil-nadu-ministers-heading-to-delhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/flood-impact-in-nepal-tamil-nadu-ministers-heading-to-delhi#comments</comments><guid isPermaLink="false">a7de067c-065a-4cfb-8121-85a69777ed86</guid><pubDate>Thu, 27 Aug 2026 09:52:50 +0000</pubDate><atom:updated>2026-08-27T09:52:50.897Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nepal,நேபாளம்,TN govt,Ministers,தமிழக அமைச்சர்கள்,Flood,வெள்ள பாதிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/cz564fhv/STate-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/cz564fhv/STate-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நேபாளம் - திபெத் எல்லையில் நேற்று ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால், பிரமாண்ட பனிப்பாறை சரிந்து போதேகோசி நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த அதிபயங்கர வெள்ளப்பெருக்கில், ஆற்றின் கரையோர கட்டிடங்கள், பாலங்கள், வாகனங்கள் உள்ளிட்டவை கண்இமைக்கும் நேரத்தில் அடித்துச் செல்லப்பட்டன. </p> <p>இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-ஐ கடந்திருக்கும் நிலையில், மேற்கொண்டு ஆயிரக்கணக்கானோரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து கொண்டிருக்கிறது. காயம் அடைந்தவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், காணாமல் போனவர்களில் சுமார் 300 பேர் இந்தியர்கள் என நேபாள வெளியுறவுத்துறை மந்திரி ஷிசிர் கனால் தெரிவித்துள்ளார்.</p><p>இதனிடையே நேபாளத்தில் தமிழர்கள் பலர் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்பதற்கான பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.</p><p>அதோடு, நேபாளத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்கவும், நிவாரணப் பணிகளைக் கண்காணிக்கவும் ஆஷிஷ் குமார் ஐ.ஏ.எஸ். தலைமையிலான குழுவை காத்மாண்டுவுக்கு அனுப்ப முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மேலும், முதல்-அமைச்சர் விஜய் உத்தரவின்பேரில், நேபாளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்கும் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக தமிழக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், வினோத், தென்னரசு ஆகியோரை டெல்லி செல்ல உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>மணல் கொள்ளையைத் தடுக்க உருப்படியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்! - டிடிவி தினகரன் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/effective-measures-must-be-taken-to-curb-sand-mining-ttv-dhinakaran-urges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/effective-measures-must-be-taken-to-curb-sand-mining-ttv-dhinakaran-urges#comments</comments><guid isPermaLink="false">9f7842cc-61e7-4ee4-89a8-118533dc42fb</guid><pubDate>Thu, 27 Aug 2026 09:51:50 +0000</pubDate><atom:updated>2026-08-27T09:51:50.314Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,AMMK,அமமுக,மணல் கொள்ளை,Sand Mining</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/kyrtjvbj/ttv.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/kyrtjvbj/ttv.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகம் முழுவதும் நடைபெறும் மணல் கொள்ளைக்கு கடந்த திராவிட ஆட்சிகளைக் குறைகூறிக் காலம் கடத்துவதை விடுத்து, மணல் கொள்ளையைத் தடுக்க உருப்படியான நடவடிக்கைகளை தவெக அரசு மேற்கொள்ள வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>மணல் கொள்ளை</h2><p>திருவாரூர், திருப்பத்தூர், சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை நடைபெறுவதாக அடுத்தடுத்து புகார்கள் குவிந்து வருகின்றன. அதிலும், உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற மணல் கொள்ளை தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்த கல்லூரி மாணவி உள்ளிட்ட இரு பெண்கள் மீது அடையாளம் தெரியாத கும்பல் நடத்தியுள்ள கண்மூடித்தனமான தாக்குதல், பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கொள்ளைச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்த வேண்டிய காவல்துறையே, பொதுமக்கள் தாமாக முன்வந்து அளிக்கும் புகார்கள் மீது அலட்சியம் காட்டி வருவதன் பின்னணியில், ஆளுங்கட்சியினர் மற்றும் அரசு அதிகாரிகள் சிலரின் தலையீடு இருப்பதாகவும், மணல் கொள்ளையில் சில சட்டமன்ற உறுப்பினர்களே நேரடியாக ஈடுபட்டு வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.</p><h2>இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும்</h2><p>எனவே, கடந்த திராவிட ஆட்சிகளைக் குறைகூறிக் காலம் கடத்துவதை விடுத்து, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழகத்தின் </a>பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் சட்டவிரோத மணல் கொள்ளையை அரசியல் பாரபட்சமின்றி இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதோடு, மணல் கொள்ளையைத் தடுக்கும் வகையில் ரோந்து மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-moderate-rain-in-western-ghats-districts-today-2</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-moderate-rain-in-western-ghats-districts-today-2#comments</comments><guid isPermaLink="false">d825f9e9-7724-4f19-ad77-159508573c5d</guid><pubDate>Thu, 27 Aug 2026 09:42:59 +0000</pubDate><atom:updated>2026-08-27T09:42:59.227Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/i40dwwut/Untitled-2.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/i40dwwut/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><h2>அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:</h2><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (feeble Trough) நிலவுகிறது.</p><p><strong>27-08-2026 மற்றும் 28-08-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.</p><p><strong>29-08-2026 முதல் 31-08-2026 வரை:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>01-09-2026 மற்றும் 02-09-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><h3>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</h3><p><strong>27-08-2026 முதல் 31-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><h3>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</h3><p><strong>27-08-2026 முதல் 31-08-2026 வரை:</strong> உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p>இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை விரைந்து மீட்க வேண்டும் – சு.வெங்கடேசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamils-including-indians-trapped-in-nepal-floods-must-be-rescued-quickly-su-venkatesan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamils-including-indians-trapped-in-nepal-floods-must-be-rescued-quickly-su-venkatesan#comments</comments><guid isPermaLink="false">4845e76a-14a0-4d66-bac3-b685f9f882ae</guid><pubDate>Thu, 27 Aug 2026 09:41:25 +0000</pubDate><atom:updated>2026-08-27T09:41:25.759Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வெள்ளம்,floods,தமிழர்கள்,சு.வெங்கடேசன் எம்பி,Tamils,Su. Venkatesan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/aw3yoqp8/su.-vengatesan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/aw3yoqp8/su.-vengatesan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மதுரை நாடாளுமன்ற தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D">சு.வெங்கடேசன்</a> 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-</p><h2>முன்னெச்சரிக்கை கட்டமைப்பு</h2><p>நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது உயிரைப் பறித்து உடைமைகளை அழித்துள்ளது.  வெள்ளப்பெருக்கு ஓய்ந்த பிறகு வெளியான பேரழிவின் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன. இயற்கைப் பேரிடர்கள் தீவிரமடைந்த காலத்தில் நாம் உள்ளோம். நமது முன்னெச்சரிக்கை கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை இது உணர்த்துகிறது.</p><h2>ஆழ்ந்த இரங்கல்</h2><p>உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்க அரசு விரைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>குவாரிகளின் லாபத்திற்காக, கூடங்குளம் மக்களின் உயிரோடு விளையாடுவதா? - வேல்முருகன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/are-the-lives-of-the-people-of-kudankulam-being-gambled-with-for-the-sake-of-quarry-profits-velmurugan-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/are-the-lives-of-the-people-of-kudankulam-being-gambled-with-for-the-sake-of-quarry-profits-velmurugan-asks#comments</comments><guid isPermaLink="false">61d55817-703c-42f2-8743-dce633f528ee</guid><pubDate>Thu, 27 Aug 2026 09:31:42 +0000</pubDate><atom:updated>2026-08-27T09:31:42.963Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Velmurugan,வேல்முருகன்,கூடங்குளம்,Kudankulam,கூடங்குளம் அணுமின் நிலையம்,Kudankulam Nuclear Power Plant,தி.வேல்முருகன்,கூடங்குளம் அணு உலை,Kudankulam Nuclear Reactor</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/3czgjd07/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேல்முருகன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/3czgjd07/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அணுமின் நிலையத்திற்கு அருகாமையில் குவாரிகளுக்கு அனுமதி வழங்குவதும், வெடிமருந்து பயன்படுத்தும் நடவடிக்கைகளுக்கு வழிவகுப்பதும் மிகவும் பொறுப்பற்ற நிர்வாக அணுகுமுறை என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>வெடிமருந்து பயன்படுத்த அனுமதி</h2><p>நாட்டின் அணுப் பாதுகாப்புடன் நேரடியாகத் தொடர்புடைய கூடங்குளம் அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியில் குவாரிகளில் வெடிமருந்து பயன்படுத்தும் வெடிப்பு முறை இடம்பெற்றிருப்பது குறித்தத் தகவல்கள் கடும் அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்துகின்றன.</p><p>இது வெறும் செய்தி அல்ல. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் இடம்பெற்றுள்ள அதிகாரப்பூர்வ EIA ஆவணமே, திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டம், இருக்கன்துறை Part-II பகுதியில் 4.87.80 ஹெக்டேர் பரப்பிலான குவாரித் திட்டத்தில் துளையிடுதல் மற்றும் வெடிமருந்து மூலம் பாறைகளை உடைக்கும் வெடிப்பு முறை திட்டமிடப்பட்டிருப்பதைப் பதிவு செய்துள்ளது. மேலும், கூடங்குளம், இருக்கன்துறை,எருக்கந்துறை பகுதிகளில் குவாரி விதிமீறல்கள் மற்றும் அனுமதியற்ற வெடிப்பு முறை குறித்தப் புகார்களும் வெளியாகியுள்ளன.</p><p>இத்தகைய சூழலில் அணுமின் நிலையத்திற்கு அருகாமையில் குவாரிகளுக்கு அனுமதி வழங்குவதும், வெடிமருந்து பயன்படுத்தும் நடவடிக்கைகளுக்கு வழிவகுப்பதும் மிகவும் பொறுப்பற்ற நிர்வாக அணுகுமுறையாகும். தமிழ்நாடு அரசின் இந்த அலட்சியப் போக்கை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.</p><h2>அணுமின் நிலையத்திற்கு பாதிப்பு?</h2><p>அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு என்பது ஒரு துறை சார்ந்த அலுவல் பிரச்சினை மட்டுமல்ல. அப்பகுதியில் வாழும் மக்களின் உயிர், உடைமை, எதிர்காலம் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய மிகப்பெரிய பொறுப்பு. ஒரு குவாரியில் வெடிக்கப்படும் வெடி பாறையைச் சிதைக்கலாம். ஆனால் அதன் அதிர்வு அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு கட்டமைப்பில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து முழுமையான அறிவியல் மதிப்பீடு செய்யாமல் நடவடிக்கை எடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. குவாரி முதலாளிகளின் கல் வியாபாரத்திற்காக மக்களின் உயிரைப் பணயம் வைக்கக் கூடாது.</p><p>எனவே, கூடங்குளம் அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள அனைத்து குவாரிகளின் செயல்பாடுகளையும் தமிழ்நாடு அரசு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக அணுமின் நிலையத்திலிருந்து ஒவ்வொரு குவாரியும் எவ்வளவு தொலைவில் உள்ளது, அதன் சுற்றுச்சூழல் மற்றும் சுரங்க அனுமதிகள் என்ன, வெடிமருந்து பயன்படுத்துவதற்கான சட்டபூர்வ அனுமதி உள்ளதா?, வெடிப்பு முறை அதிர்வுகள் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பை பாதிக்காது என்பதை உறுதி செய்யும் அறிவியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்பதையெல்லாம் வெளிப்படையாக வெளியிட வேண்டும். அணு உலைக்கு அருகில் உள்ள பாதுகாப்பு மண்டல எல்லையை (Buffer / Sterile Zone) மீறி எந்தவொரு குவாரிக்கும் அனுமதி வழங்கப்படக் கூடாது என்பதோடு, இதில் ஒன்றிய அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் (AERB) மற்றும் சுரங்கப் பாதுகாப்பு இயக்குநரகம் (DGMS) ஆகியவற்றின் முன் அனுமதி பெறப்பட்டதா? என்பதையும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழ்நாடு </a>அரசு தெளிவுபடுத்த வேண்டும்.</p><p>அனுமதி வழங்கப்பட்டுவிட்டது என்பதற்காக ஆபத்து இல்லையென்று அர்த்தமல்ல. கூடங்குளம் மக்களின் பாதுகாப்பு குறித்து எந்தச் சமரசத்திற்கும் இடமில்லை. குவாரி லாபத்தைவிட மக்களின் உயிர் மேலானது என்பதைத் தமிழ்நாடு அரசு உணர வேண்டும். அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியில் விதிமீறல் அல்லது அனுமதியற்ற வெடிப்பு முறை நடைபெறுவது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட குவாரிகளை உடனடியாக மூடி, அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீதும், விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><h2>மறுஆய்வு செய்ய வேண்டும்</h2><p>கூடங்குளம் அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள குவாரி நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக முழுமையாக மறுஆய்வு செய்து, ஆபத்து ஏற்படுத்தக்கூடிய வெடிப்பு முறை நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அப்பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழ்நாடு அரசை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மானியக் கோரிக்கை: சபாநாயகரின் கருத்துக்கு நகைச்சுவையாக பதிலளித்த தங்கம் தென்னரசு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/demand-for-grants-thangam-thennarasu-responds-humorously-to-the-speakers-remark</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/demand-for-grants-thangam-thennarasu-responds-humorously-to-the-speakers-remark#comments</comments><guid isPermaLink="false">cdda2c92-a325-425d-8659-38c739d2ead1</guid><pubDate>Thu, 27 Aug 2026 09:28:20 +0000</pubDate><atom:updated>2026-08-27T09:28:20.200Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>தங்கம் தென்னரசு,Thangam thennarasu,மானியக் கோரிக்கை</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/hbycsd3v/2.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/hbycsd3v/2.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கூட்டத்தின்போது, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெற்ற மானியக் கோரிக்கை மீதான விவாதம் சிறப்பாக நடைபெற்றதாகத் தெரிவித்தார். மேலும், முதன்முறையாக 9 மணி 43 நிமிடங்கள் தொடர்ந்து அவை நடைபெற்றதாகவும் குறிப்பிட்டார். எனினும், அவை நேரத்தை கருத்தில்கொண்டு, அறிவிப்புகளை வெளியிடும் அமைச்சர்கள் இனி முதலில் அறிவிப்புகளை வெளியிட்ட பின்னர், அதனைத் தொடர்ந்து பதிலுரை வழங்கும் நடைமுறை கடைப்பிடிக்கப்படும் என அறிவித்தார்.</p><p>இதற்கு பதிலளித்த திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு, அமைச்சர்கள் அறிவிப்புகளை வெளியிட்ட பிறகு பதிலுரை வழங்குவது என்பது, திரைப்படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியை முதலில் போடுவது போல இருக்கும். தவெகவின் க்ளைமாக்ஸை அனைவரும் நிச்சயமாகப் பார்ப்போம். உங்களுடைய க்ளைமாக்ஸையும் கட்டாயம் காத்திருந்து பார்ப்போம் எனக் குறிப்பிட்டார்.</p><p>தொடர்ந்து பேசிய அவர், இன்று காலையிலிருந்தே எதை முதலில் சொல்வது, எதை பின்னால் சொல்வது என்பதில் தொடர்ந்து மாற்றம் செய்து கொண்டிருக்கிறீர்கள். காலையில் வந்தவுடனே, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதில் சொல்லட்டும்; அதற்குப் பிறகு நீங்கள் பேசுங்கள் என்று சொன்னீர்கள். இப்போது அறிவிப்புகளை எல்லாம் முன்னதாக வெளியிட்டுவிட்டு, பின்னர் அதுகுறித்து பேசுங்கள் என்கிறீர்கள்.</p><p>மொத்தத்தில் பேரவைத் தலைவர் படுத்துக்கட்டும், போர்த்திக்கலாம்; போர்த்திவிட்டும் படுத்துக்கலாம் என்ற ஒரு முடிவுக்கு வந்துவிட்டாரா என்பதை நான் அறிய விரும்புகிறேன் என நகைச்சுவையாகக் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>விலைவாசி  உயர்வை கட்டுப்படுத்தக் கோரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/protest-on-behalf-of-the-communist-party-of-india-demanding-control-over-price-hikes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/protest-on-behalf-of-the-communist-party-of-india-demanding-control-over-price-hikes#comments</comments><guid isPermaLink="false">136f3f8d-ff0e-43d1-b1dc-ddf852318c9d</guid><pubDate>Thu, 27 Aug 2026 09:26:05 +0000</pubDate><atom:updated>2026-08-27T09:26:05.720Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Communist Party of India,ஆர்ப்பாட்டம்,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி,price hike,விலைவாசி உயர்வு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/megwgn4b/83.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/megwgn4b/83.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விலைவாசி  உயர்வை கட்டுப்படுத்தக் கோரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (27.08.2026) நடைபெற்றது</p><p>இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D">மு.வீரபாண்டியன் </a>வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>அரிசி, சர்க்கரை, பருப்பு வகைகள், எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் கிலோ ரூ 48 க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சர்க்கரை விலை, தற்பொழுது  ரூபாய் 70 வரை விலை உயர்ந்துள்ளது. எத்தனால் தயாரிப்பிற்காக அதிக அளவில் கரும்பு பயன்படுத்தப்படுவதால் சர்க்கரை உற்பத்தி குறைந்து அதனால்  விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.சுமார் 25 லட்சம் டன் கரும்பு எத்தனால் உற்பத்திக்கு திருப்பிவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனால் கலக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கொள்கையே இதற்கு முக்கியக் காரணம். சர்க்கரை விலை உயர்வால் டீ ,காபி விலை மீண்டும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.</p><h2>விலைவாசி உயர்வு</h2><p>ஏற்கனவே,  வணிக நிறுவனங்களுக்கான  சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடுமையாக  உயர்த்தப்பட்டது. அதன் காரணமாக சாலையோர தேநீர் கடைகளில் கூட, டீ விலை ரூ. 15 வரை உயர்ந்தது. காபி விலை ரூ. 20 வரை உயர்ந்தது. தற்போது மீண்டும் டீ, காபி விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அரிசி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.  கர்நாடகத்தில் ஏற்பட்ட விளைச்சல் பாதிப்பு, தமிழகத்தில் குறுவை சாகுபடி பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் பொன்னி அரிசி ரூ. 80க்கு விற்பனை ஆகிறது. இட்லி அரிசி ரூ. 35 வரை அதிகரித்துள்ளது. அதேபோல் உளுத்தம் பருப்பு கிலோ ரூ.120 லிருந்து 150 ஆகவும், கடலைப் பருப்பு ரூ.80 லிருந்து 100 ஆகவும், தனியா 160 லிருந்து ரூ. 250 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.</p><h2>கண்டன ஆர்ப்பாட்டம்</h2><p>இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய - மாநில அரசுகள் தவறிவிட்டன. விலைவாசியை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் நியாய விலை கடைகள் மூலமாக குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க வேண்டும். ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு இலவசமாக அரிசி, சர்க்கரை, பருப்பு வகைகள் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை தேனாம்பேட்டை ஆலயம்மன் கோவில் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (27.08.2026) காலை நடைபெற்றது. தென் சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சிவா தலைமை தாங்கினார். மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் மு.வரதன், வடசென்னை மாவட்டச் செயலாளர் த.கு.வெங்கடேஷ் வேம்புலி முன்னிலை வகித்தனர்.</p><p>இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு செயலாளர் மு.வீரபாண்டியன் கண்டன உரையாற்றினார். அரிசி, கரும்பு போன்றவற்றை எத்தனால் உற்பத்திக்கு பயன்படுத்திடக் கூடாது. உணவுப் பொருட்களின் பதுக்கலையும், ஆன்லைன் வர்த்தகத்தையும் தடுத்திட வேண்டும். அத்தியாவசிய உணவுப் பொருட்களை நியாய விலை கடைகள் மூலம் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கிட வேண்டும். ஏழைகளுக்கு இலவசமாக வழங்கிட வேண்டும். விலைவாசியை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசுக்குத்தான் கூடுதல் பொறுப்பு உள்ளது. அந்த பொறுப்பை உணர்ந்து மத்திய பாஜக அரசு செயல்பட வேண்டும் என்று மு.வீரபாண்டியன் கூறினார்.</p><p>ஆர்ப்பாட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர்கள் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத், மு .கண்ணகி, மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் த.லெனின், மாநிலக் குழு உறுப்பினர்கள் டாக்டர் ஏ.ஆர். சாந்தி, லி.உதயகுமார், இரா.திருமலை, பா.தினேஷ், க.இப்ராஹிம், மற்றும் மாணவர்மன்ற நிர்வாகிகள் மணிகண்டன், சௌமியா உட்பட 150க்கும் மேற்பட்டோர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விராலிமலை: வெறிநாய் கடித்ததில் ஒன்றரை வயது குழந்தை உட்பட 10 பேர் காயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/viralimalai-10-people-including-a-one-and-a-half-year-old-child-injured-in-a-rabid-dog-attack</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/viralimalai-10-people-including-a-one-and-a-half-year-old-child-injured-in-a-rabid-dog-attack#comments</comments><guid isPermaLink="false">6c98aeef-e2ba-4c42-8697-9a73b633ed6f</guid><pubDate>Thu, 27 Aug 2026 09:13:15 +0000</pubDate><atom:updated>2026-08-27T09:13:15.914Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>street dogs,புதுக்கோட்டை,injured,நாய் கடி,Viralimalai,ஆஸ்பத்திரியில் அனுமதி</media:keywords><media:content height="176" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/import/h-upload/2023/10/17/1572582-download.webp" width="286"><media:title type="html"><![CDATA[ வெறிநாய்க்கடி]]></media:title><media:description type="html"><![CDATA[ ஒன்றரை வயது குழந்தை உட்பட 10 பேர் காயம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/import/h-upload/2023/10/17/1572582-download.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுக்கோட்டை,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">புதுக்கோட்டை மாவட்டம் </a>விராலிமலையில் தெருநாய் ஒன்று பொதுமக்களை ஓட ஓட விரட்டி கடித்ததில், ஒன்றரை வயது குழந்தை உட்பட 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். </p><h2>வெறிநாய் கடியால் படுகாயம்</h2><p>புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D">வெறி பிடித்த நாய் </a>ஒன்று சுற்றித் திரிந்தது. அப்போது தெருவில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது சிறு குழந்தையை, அந்த நாய் கடித்து தாக்கியது. மேலும் சாலையில் நடந்து சென்ற பொதுமக்களை திடீரெனத் தாக்கியது. </p><p>நாயின் கடியில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இருப்பினும், அந்த நாய் பலரைக் கடித்துக் குதறியது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் 7 பேர் விராலிமலை அரசு ஆஸ்பத்திரியில் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><h2>பொதுமக்கள் கோரிக்கை</h2><p>விராலிமலை பகுதியில் சமீபகாலமாக தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். உள்ளாட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, ஆபத்தான முறையில் சுற்றும் தெருநாய்களைப் பிடித்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81">பொதுமக்கள் கோரிக்கை </a>விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட வீரதீரச் செயலுக்கான விருது: முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/gallantry-award-announced-by-union-government-chief-minister-vijay-presents</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/gallantry-award-announced-by-union-government-chief-minister-vijay-presents#comments</comments><guid isPermaLink="false">fa82151d-b4c4-40f0-b95e-26ae7e5c3641</guid><pubDate>Thu, 27 Aug 2026 09:10:15 +0000</pubDate><atom:updated>2026-08-27T09:10:15.938Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விருது,Award,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,வீரதீரச் செயலுக்கான விருது</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/ex9zg86v/Untitled-1.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/ex9zg86v/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட வீரதீரச் செயலுக்கான சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா விருதை முதல்-அமைச்சர் விஜய் இன்று வழங்கிச் சிறப்பித்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>முதல்-அமைச்சர் விஜய் இன்று (27.8.2026) தலைமைச் செயலகத்தில், மத்திய அரசின் 2025-ம் ஆண்டுக்கான வீரதீரச் செயலுக்கான ‘சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா’ விருதினைப் பெற்ற கிருஷ்ணகிரி மாவட்டம், எலுவப்பள்ளி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் காலஞ்சென்ற தலைமை ஆசிரியர் பி.எஸ். கெளரிசங்கர் ராஜாவின் மனைவியிடம் ‘சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா’ (மிகச்சிறந்த உயிர்ப் பாதுகாப்பு) விருதுக்கான பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கிச் சிறப்பித்தார்.</p><p>ஆண்டுதோறும் வீரதீரச் செயலுக்கான ‘சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா’ விருதுக்கான பரிந்துரைகள் அனைத்து மாநில அரசுகளிடமிருந்தும் மத்திய அரசால் பெறப்பட்டு, ஜனாதிபதியால் விருதாளர்கள் தெரிவுசெய்யப்பட்டு அறிவிக்கப்படுவர்.</p><p>கடந்த 5.3.2025 அன்று, கிருஷ்ணகிரி மாவட்டம், எலுவப்பள்ளி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், மதிய உணவு இடைவேளையின்போது, மூன்றாம் வகுப்புப் படிக்கும் 8 வயதான சிறுவன் நிதின், பள்ளி வளாகத்திற்கு அருகில் அமைந்திருந்த விவசாயப் பண்ணைக் குட்டையில் தற்செயலாக வழுக்கி விழுந்தான். அச்சிறுவன் ஆபத்தான நிலையில் தத்தளித்து, நீரில் மிதக்கப் போராடுவதைக்கண்ட பி.எஸ்.கெளரிசங்கர் ராஜா, அச்சிறுவனைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளை மேற்கொண்டபோதிலும், இருவரும் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தனர்.</p><p>மறைந்த பி.எஸ்.கௌரிசங்கர் ராஜாவின் வீரதீரச் செயல், அசாதாரண துணிச்சல், உன்னத தியாகம் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, அவர் மரணத்திற்குப் பிந்தைய ‘சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா’ விருதுக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி கொ. சிரிஷாவிடம், தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய், வீரதீரச் செயலுக்கான மத்திய அரசின் ‘சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா’ விருதிற்கான பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கிச் சிறப்பித்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விடுதி மாணாக்கர்களுக்கான உணவுக் கட்டணம் உயர்வு - அமைச்சர் சம்பத்குமார் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-mess-fees-for-hostel-students-minister-sampathkumar-announces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-mess-fees-for-hostel-students-minister-sampathkumar-announces#comments</comments><guid isPermaLink="false">aa79b3ae-1b51-4547-8e84-aa97d94a7008</guid><pubDate>Thu, 27 Aug 2026 09:06:55 +0000</pubDate><atom:updated>2026-08-27T09:06:55.296Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணவர்கள்,students,அமைச்சர் சம்பத்குமார்,Minister Sampathkumar</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/suy287kv/1.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/suy287kv/1.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டசபையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் விபரம் பின்வருமாறு;</p><p>”மாணவர்களுக்கு தரமான மற்றும் சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், சமூகநீதி விடுதிகளில் பள்ளி விடுதி மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் உணவுக் கட்டணம் ரூ.1,400/-லிருந்து ரூ.1,800/-ஆகவும், கல்லூரி விடுதி மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் உணவுக் கட்டணம் ரூ.1,500/-லிருந்து ரூ.2,000/-ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். இத்திட்டத்திற்காக கூடுதலாக ரூ.32.53 கோடி செலவாகும்.</p><p>தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் மிகப்பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த, சென்னையில் பயிலும் ஏழ்மை நிலையில் உள்ள மாணவியர்களுக்காக, 100 கல்லூரி மாணவியர்கள் பயன்பெறும் வகையில் உணவு மற்றும் தங்கும் வசதியுடன் சென்னையில் ஒரு சமூகநீதி கல்லூரி மாணவியர் விடுதி ரூ. 54 இலட்சம் செலவில் புதிதாக தொடங்கப்படும்.</p><p>பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 1,238 சமூகநீதி பள்ளி, கல்லூரி விடுதிகளில் சுகாதாரமான வாழ்விடச் சூழலை உறுதி செய்யும் நோக்கில், விடுதிகளில் உள்ள அனைத்து ஜன்னல்களுக்கும் ரூ.26.85 கோடியில் தரமான கொசுவலைகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p> ]]></content:encoded></item><item><title>காரணங்களைச் சொல்லி தப்பிக்க வேண்டாம்… விலைவாசியை கட்டுப்படுத்துங்கள் – வேல்முருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/who-failed-to-control-price-hikes-velmurugan-questions</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/who-failed-to-control-price-hikes-velmurugan-questions#comments</comments><guid isPermaLink="false">f3882502-e76c-4d51-8062-78054f8b2f34</guid><pubDate>Thu, 27 Aug 2026 08:55:55 +0000</pubDate><atom:updated>2026-08-27T08:55:55.838Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Velmurugan,வேல்முருகன்,price hike,விலைவாசி உயர்வு,தமிழக வாழ்வுரிமைக் கட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/2afwbdxd/velmurugan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/2afwbdxd/velmurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D"> வேல்முருகன் </a>தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறியது யார்? மக்கள் தலையில் பொருளாதாரச் சுமைகளை, சுமத்துவது யார்?</p><p>தமிழ்நாட்டில் சமையல் எண்ணெய், தனியா, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து மக்களின் மாதாந்திர பட்ஜெட்டை நிலைகுலைய வைத்துள்ளது. இது வெறும் அரசியல் குற்றச்சாட்டு அல்ல. மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத்துறையின் (Price Monitoring Division) அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களே இதை உறுதிப்படுத்துகின்றன.</p><p>2024 ஆகஸ்ட் முதல் 2026 ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில், சூரியகாந்தி எண்ணெய் கிலோ ரூ.115.71-லிருந்து ரூ.193.58 ஆக உயர்வு (67.3%). மல்லி (தனியா) கிலோ ரூ.23.82-லிருந்து ரூ. 46.11 ஆக உயர்வு (93.6%). சர்க்கரை கிலோ ரூ.44.28-லிருந்து ரூ.53.58 ஆக உயர்வு (21%). அரிசி கிலோ ரூ.55.75-லிருந்து ரூ.60.25 ஆக உயர்வு (8.1%). உப்பு விலை 11% வரை அதிகரித்துள்ளது. அதேவேளையில், துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், மஞ்சள் போன்ற சில பொருட்களின் விலை குறைந்துள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.</p><h2>செயற்கை தட்டுப்பாடு</h2><p>ஆனால், எளிய மக்களுக்கு கையில் நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு, மறுகையில் கட்டுக்கடங்காத விலைவாசி மூலம் அவர்களின் சேமிப்பைப் பறிக்கும் சூழல் நீடிக்கக் கூடாது. வெளிச்சந்தை விலை உயர்வுக்கு காரணங்களை அடுக்கித் தட்டிக்கழிக்காமல், இடைத்தரகர்களின் ஆதிக்கம், பதுக்கல் மற்றும் செயற்கை தட்டுப்பாடுகளைத் தகர்க்க வேண்டும். </p><h2>விலை நிலைப்படுத்தும் நிதி</h2><p>ஏற்கனவே உள்ள ‘விலை நிலைப்படுத்தும் நிதியை’ (Price Stabilisation Fund) மத்திய அரசு முறையாகப் பயன்படுத்த வேண்டும்.  அதேபோல் தமிழ்நாடு அரசும் வெளிப்படையான சந்தைத் தலையீடுகளை முன்னெடுத்து, சாமானிய மக்களுக்கு மலிவு விலையில் மளிகைப் பொருட்கள் தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வரலாற்றை திரித்து முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மாண்பை கொச்சைப்படுத்துவதா? -  நயினார் நாகேந்திரன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/distorting-history-to-disparage-the-dignity-of-former-prime-minister-vajpayee-nainar-nagendran-condemns-the-act</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/distorting-history-to-disparage-the-dignity-of-former-prime-minister-vajpayee-nainar-nagendran-condemns-the-act#comments</comments><guid isPermaLink="false">8e5a0960-a59d-4225-8a10-40353254c2f4</guid><pubDate>Thu, 27 Aug 2026 08:48:11 +0000</pubDate><atom:updated>2026-08-27T08:48:11.117Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,கீர்த்தனா,அமைச்சர் கீர்த்தனா,Minister Keerthana,Keerthana</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/6gv5cie5/Untitled-18.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/6gv5cie5/Untitled-18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அன்னை சின்னப்பிள்ளையின் வரலாறு மற்றும் வாஜ்பாயின் மாண்பு குறித்துத் தனது முந்தைய பேச்சில் இருந்த பிழைகளை வெளிப்படையாக சபையில் ஒப்புக்கொண்டு, தவறான தகவல்களைப் பதிவு செய்த அமைச்சர் கீர்த்தனா உடனடியாக மன்னிப்புக் கோர வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>அமைச்சரின் கற்பனைக் கதை</h2><p>மதுரையைச் சேர்ந்த அன்னை சின்னப்பிள்ளை, 'களஞ்சியம்' சுயஉதவிக் குழுக்கள் மூலம் பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர். இவரது உன்னதப் பணியைப் பாராட்டி, அன்றைய பாரதப் பிரதமர், பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய், கடந்த 2001-ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற 'ஸ்த்ரீ சக்தி' விருது வழங்கும் மேடையில், அன்னை சின்னப்பிள்ளையின் காலில் விழுந்து வணங்கிக் கவுரவித்தார். இது இந்தியாவே வியந்த ஒரு பண்பாட்டுத் தருணம்.</p><p>ஆனால், நேற்று சட்டமன்றத்தில் பேசிய <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தொழில்துறை </a>அமைச்சர் கீர்த்தனா, அன்னை சின்னப்பிள்ளையை ஹைட்ராலிக் அமைப்பில் (Hydraulic System) ஆயில் கசியாமல் இருக்க 'O-Ring' கண்டுபிடித்தார் என்றும், அதற்காக முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அன்னை சின்னப்பிள்ளையின் வீட்டிற்கே சென்று காலில் விழுந்தார் என்றும் ஒரு கற்பனைக் கதையைக் கூறியுள்ளார். வாஜ்பாய் மற்றும் அன்னை சின்னப்பிள்ளை ஆகியோர் குறித்து அவர் கூறியுள்ள தகவல்கள் நகைப்பிற்குரியவை மட்டுமல்ல, கடும் கண்டனத்திற்குரியது.</p><h2>மன்னிப்புக் கோர வேண்டும்</h2><p>இந்நிலையில், நேற்று சட்டமன்றத்தில் ஒரு தவறான தகவலைப் பதிவு செய்துவிட்டு, அது சமூக வலைதளங்களில் அம்பலமானவுடன், "நேரம் கருதி சுருக்கமாகச் சொன்னேன்" என்று அமைச்சர் கீர்த்தனா இன்று அளித்துள்ள விளக்கம், "முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும்" முயற்சியாகும்.</p><p>எனவே, அன்னை சின்னப்பிள்ளையின் வரலாறு மற்றும் வாஜ்பாயின் மாண்பு குறித்துத் தனது முந்தைய பேச்சில் இருந்த பிழைகளை வெளிப்படையாக சபையில் ஒப்புக்கொண்டு, தவறான தகவல்களைப் பதிவு செய்த அமைச்சர் கீர்த்தனா உடனடியாக மன்னிப்புக் கோர வேண்டும். இனி இதுபோல் ஆதாரமற்ற தகவல்களை வழங்குவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: அறநிலையத்துறை அலுவலகத்தில் புகுந்த சுருட்டை விரியன் பாம்பு பிடிபட்டது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-a-coiled-viper-snake-was-caught-after-entering-the-charities-department-office</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-a-coiled-viper-snake-was-caught-after-entering-the-charities-department-office#comments</comments><guid isPermaLink="false">584ac153-9878-4f21-8966-6bbd46ff1a76</guid><pubDate>Thu, 27 Aug 2026 08:28:45 +0000</pubDate><atom:updated>2026-08-27T08:28:45.944Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Snake,Charities Department,அறநிலையத்துறை,அலுவலகம்,caught,Office,பாம்பு பிடிபட்டது</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/nut6ni59/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூத்துக்குடியில் சுருட்டை விரியன் பாம்பு பிடிபட்டது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/nut6ni59/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடியில் இந்து சமய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">அறநிலையத் துறை</a>க்குச் சொந்தமான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">அலுவலகத்தில்</a> கொடிய விஷம் கொண்ட சுருட்டை விரியன் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81">பாம்பு ஒன்று பிடிபட்டது</a>.</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> 2-ஆவது கேட் அருகில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான அலுவலக வளாகத்தில் பாம்பு ஒன்று இருப்பதாகத் தீயணைப்புத்துறை அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. </p><h2>சுருட்டை விரியன் பாம்பு பிடிபட்டது</h2><p>அந்த தகவலை தொடர்ந்து, தூத்துக்குடி தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் கோமதி அமுதா தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குழுவினர் அந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் அலுவலகத்தில் புகுந்த கொடிய விஷம் உள்ள சுருட்டை விரியன் பாம்பைத் தீயணைப்புப் பணியாளர்கள் பாதுகாப்பாக பிடித்து, பின்னர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>விவசாயிகளுக்கு ‘நம்மாழ்வார் விருது’: முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nammalvar-award-for-farmers-chief-minister-vijay-presented-the-award</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nammalvar-award-for-farmers-chief-minister-vijay-presented-the-award#comments</comments><guid isPermaLink="false">6d6b789d-1828-4dd3-ade2-0e74fe6cd049</guid><pubDate>Thu, 27 Aug 2026 08:23:54 +0000</pubDate><atom:updated>2026-08-27T08:23:54.858Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,Farmers,தமிழக அரசு,விவசாயிகள்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,நம்மாழ்வார் விருது</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/ijd1t83h/namma.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/ijd1t83h/namma.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>உயிர்ம வேளாண்மையில் சிறப்பாக செயல்படும் மூன்று உழவர்களுக்கு 2025-2026ஆம் ஆண்டிற்கான சிறந்த உயிர்ம உழவர்க்கான நம்மாழ்வார் விருதுகளை <a href="https://www.dailythanthi.com/topic/vijay">தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a> அவர்கள் வழங்கினார்.</p><h2>நம்மாழ்வார் விருதுகள்</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p><a href="https://www.dailythanthi.com/topic/vijay">தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a> இன்று (27.8.2026) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் 2025-2026ஆம் ஆண்டிற்கான சிறந்த உயிர்ம உழவர்க்கான நம்மாழ்வார் விருதுகளை செ.நல்லசிவம், அ.சுப்பிரமணியன் மற்றும் சாதனா ஆகியோருக்கு வழங்கி சிறப்பித்தார்.</p><p>உயிர்ம வேளாண்மையில் நம்மாழ்வார் அவர்கள் ஆற்றிய பெரும் பங்களிப்பைச் சிறப்பிக்கும் வகையிலும், உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும் உழவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், அதில் சிறப்பாகச் செயல்பட்டு இதர உழவர்களையும் உத்வேகத்துடன் ஈடுபடச்செய்யும் உழவர்களைக் கௌரவிக்கும் வகையிலும் சிறந்த உயிர்ம உழவர்க்கான நம்மாழ்வார் விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.</p><p>அந்த வகையில் 2025-2026ஆம் ஆண்டில், உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த செ.நல்லசிவம், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அ.சுப்பிரமணியன் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சாதனா ஆகியோருக்குத் தலா 2 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு மற்றும் பதக்கத்துடன் கூடிய நம்மாழ்வார் விருதுகளை <a href="https://www.dailythanthi.com/topic/vijay">தமிழ்நாடு முதல்-அமைச்சர்</a> அவர்கள் இன்று வழங்கிச் சிறப்பித்தார்.</p><p>நம்மாழ்வார் விருது பெற்றுள்ள செ. நல்லசிவம் அவர்கள் கடந்த 4 ஆண்டுக்கும் மேலாக இயற்கை இடுபொருட்களைக் கொண்டு சோளம், கரும்பு, மா, தென்னை மற்றும் காய்கறிகளை உற்பத்தி செய்தும், இயற்கை வேளாண் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்தும் வருவதோடு, 2000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும் வகையில் விழிப்புணர்வும் பயிற்சியும் வழங்கியுள்ளார்.</p><p>அ.சுப்பிரமணியன் அவர்கள் கடந்த 10 ஆண்டு காலமாக உயிர்ம வேளாண்மை முறையில் நெல் வகைகள், நிலக்கடலை, குறுமிளகு, தென்னை, வால்நட் போன்றவற்றைச் சாகுபடி செய்தும், அவற்றை மதிப்புக்கூட்டி விற்பனை செய்தும் வருகிறார். மேலும், 675-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு உயிர்ம வேளாண்மை மற்றும் மதிப்புக்கூட்டுதல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.</p><p>சாதனா அவர்கள் கடந்த 11 ஆண்டுகளாக உயிர்ம வேளாண்மை முறையில் கம்பு, கேழ்வரகு, உளுந்து, நிலக்கடலை, பச்சைப்பயிறு, வாழை, தென்னை, மா, பலா, கீரை வகைகள் போன்றவற்றை சாகுபடி செய்து வருவதுடன், சிறுதானியம் மற்றும் எண்ணெய் வகைகள் போன்றவற்றை மதிப்புக்கூட்டியும் விற்பனை செய்து வருகிறார். மேலும், 472-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு உயிர்ம வேளாண்மை குறித்த விழிப்புணர்வும் பயிற்சியும் வழங்கியுள்ளார்.</p><p>இந்நிகழ்ச்சியில், வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத், தலைமைச் செயலாளர் முனைவர் மு.சாய்குமார், இ.ஆ.ப., வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை – உழவர் நலத்துறை செயலாளர் முனைவர் பொ.சங்கர்,  இ.ஆ.ப., வேளாண்மைத்துறை இயக்குநர் முனைவர் க.வீ.முரளீதரன், இ.ஆ.ப. ஆகியோர் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சினிமா கிளைமாக்ஸ் விவாதம்: சட்டசபையில் கலகலப்பான உரையாடல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/debate-on-cinema-climaxe-lively-discussion-in-the-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/debate-on-cinema-climaxe-lively-discussion-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">8a4dad6d-ebc5-4f77-8357-9def2e78cda8</guid><pubDate>Thu, 27 Aug 2026 08:13:26 +0000</pubDate><atom:updated>2026-08-27T08:13:26.901Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,சினிமா,TN Assembly,Cinema,கிளைமாக்ஸ்,climax</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/vhxa1vkn/CHENNAI-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/vhxa1vkn/CHENNAI-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையில் இன்றைய அவை நடவடிக்கையின்போது சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், “சென்ற ஆகஸ்ட் 25-ஆம் தேதி மானியக் கோரிக்கை விவாதம் சிறப்பாக நடந்தது. முதன்முறையாக 9:43 மணி நேரம் தொடர்ந்து அவை நடந்தது. இருப்பினும், நேரம் காரணமாக அறிவிப்பவர்களுக்கு, அவையில் இருப்பவர்களுக்கு ஏற்படும் பதற்றத்தைப் போக்கும் வகையில், இனி அறிவிப்புகளை வெளியிட்ட பிறகு அமைச்சர்கள் பேசும் நடைமுறை கொண்டுவரப்படும்” என அறிவித்தார்.</p><p>இதுகுறித்து திமுக எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு பேசுகையில், "அமைச்சர்கள் அறிவிப்புகளை வெளியிட்ட பிறகு பதிலுரை வழங்குவது என்பது, திரைப்படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியை முதலில் போடுவது போல இருக்கும். அது சரியா? என கேள்வி எழுப்பினார்.</p><p>இதற்கு பதிலளித்த சபாநாயகர்"என்னுடைய கருத்து, க்ளைமாக்ஸை மக்கள் பார்க்காமல் போய்விடுவார்களோ என்கிற கவலை" என தெரிவித்தார்.</p><p>தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "படம் நன்றாக இருந்தால், பொறுமையாக இருந்து மக்கள் கடைசி வரை க்ளைமாக்ஸ் பார்ப்பார்கள். நீங்கள் சொல்வதைப் பார்த்தால், இந்தப் படம் ஓடாது, நன்றாக இருக்காது. எனவே, முன்பே க்ளைமாக்ஸ் போட்டுவிடுவோம் என்பது போல இருக்கிறது" என்றார்.</p><p>இதற்கு பதிலளித்த் அமைச்சர் வன்னி அரசு, “இப்போதெல்லாம் படத்திற்கு இரு க்ளைமாக்ஸ் இருக்கிறது. படத்தின் துவக்கத்திலும், இறுதியிலும் அவை வருகிறது. மாற்றத்தை விரும்ப வேண்டும். நீங்கள் ஆட்சி மாற்றத்தையும் விரும்புவதில்லை, நடைமுறை மாற்றத்தையும் விரும்புவதில்லை” என்றார். இவ்வாறு சட்டசபையில் கலகலப்பான உரையாடல் நடந்தது.</p>]]></content:encoded></item><item><title>நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை என்ன? முதல் அமைச்சர் விஜய் அவசர ஆலோசனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-is-the-situation-of-tamils-stranded-in-nepal-chief-minister-vijay-holds-an-urgent-consultation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-is-the-situation-of-tamils-stranded-in-nepal-chief-minister-vijay-holds-an-urgent-consultation#comments</comments><guid isPermaLink="false">b6eeed2c-4acd-4faa-ab49-1c7e363d53ca</guid><pubDate>Thu, 27 Aug 2026 08:11:44 +0000</pubDate><atom:updated>2026-08-27T08:11:44.735Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,Nepal,நேபாளம்,Flood,வெள்ளம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/ngnsv0j6/cmone33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/ngnsv0j6/cmone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நேபாளத்தின் வடக்கு எல்லையான ரசுவா மாவட்டத்தில், இமயமலைப் பகுதிகளில் பனிமலைகள் உடைப்பு காரணமாக கோசி, திரிசூலி நதிகளில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கில் சிக்கி 175 பேர் உயிரிழந்துள்ளனர். 300 இந்தியர்கள் உட்பட சுமார் ஆயிரம் பேரைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது.</p><p>நேபாளப் பெருவெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் நிலை குறித்து சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் விளக்கமளித்தார். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த 103 பேர் நேபாளம் சென்றிருந்தனர். இவர்களில், கும்பகோணத்தில் இருந்து சென்ற 57 பேரில் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் கூறினார்.</p><p>நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் விஜய் இன்று அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பிறகு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையிலான குழு நேபாளம் செல்ல விஜய் உத்தரவிட்டுள்ளார். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல ஆணையர் ஆஷிஷ் குமார் தலைமையிலான அதிகாரிகள் குழு காத்மாண்டு சென்று, தமிழர்களின் நிலை குறித்து அறிந்து, நேபாள அரசுடன் இணைந்து மீட்புப் பணியை ஒருங்கிணைக்கும் என்று விஜய் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>காவிரி டெல்டா பகுதிகளை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்: மு.வீரபாண்டியன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-delta-areas-should-be-declared-drought-affected-districts-mveerapandian</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-delta-areas-should-be-declared-drought-affected-districts-mveerapandian#comments</comments><guid isPermaLink="false">e8c65ce1-427f-40ff-baac-67f7a57a232e</guid><pubDate>Thu, 27 Aug 2026 08:01:15 +0000</pubDate><atom:updated>2026-08-27T08:01:15.462Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,Communist Party of India,காவிரி,impact,பாதிப்பு,blockade protest,முற்றுகை போராட்டம்,Cauvery Delta,டெல்டா மாவட்டங்கள்,Drought,வறட்சி,மு.வீரபாண்டியன்,M.Veerapandian</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/8bot9tc1/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/8bot9tc1/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE">காவிரி டெல்டா</a> பகுதிகளை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">வறட்சி</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">பாதித்த </a>மாவட்டங்களாக அறிவிக்க கோரி கலெக்டர் அலுவலகங்கள் முன்பு நாளை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">முற்றுகை போராட்டம்</a> நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D">மு.வீரபாண்டியன்</a> தெரிவித்துள்ளார். </p><p>இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: </p><h2>கலெக்டர் அலுவலகங்கள் முன்பு நாளை முற்றுகை போராட்டம்</h2><p>காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கக் கோரி தமிழ்நாடு அரசை வலியுறுத்தி நாளை (28.08.2026) காலை 10 மணிக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">இந்திய கம்யூனிஸ்ட் கட்சி</a>யின் சார்பில் முற்றுகைப் போராட்டம் டெல்டா மாவட்டங்களின் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பாக நடைபெறுகிறது.</p><h2>முற்றுகை போராட்டத்திற்கான கோரிக்கைகள்</h2><p>1. காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். </p><p>2. தேவையான தண்ணீர் காவிரி நதியில் வராத காரணத்தால் குறுவை சாகுபடி செய்ய முடியவில்லை. எனவே, விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்கிட வேண்டும். </p><p>3. விவசாய வேலைகள் இல்லாததால் விவசாய தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ரூ.10 ஆயிரம் நிவாரணமாக வழங்கிட வேண்டும். </p><p>4. விவசாயிகளின் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.</p><p>5. டெல்டா மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. எனவே, அதை போக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>6. அரிசி, சர்க்கரை, பருப்பு வகைகள், எண்ணெய் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. எனவே வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை விலையில்லாமல் வழங்கிடவேண்டும். </p><h2>முற்றுகைப் போராட்டங்களில் கலந்து கொள்ளும் தலைவர்கள்</h2><p>திருவாரூர்- மு.வீரபாண்டியன், வை.செல்வராஜ் எம்.பி., க.மாரிமுத்து எம்.எல்.ஏ., எஸ். கேசவராஜ். </p><p>நாகப்பட்டினம்- ரா.முத்தரசன், சிவகுரு, பாண்டியன். </p><p>தஞ்சாவூர்- பி.எஸ்.மாசிலாமணி, மு.அ.பாரதி, கோ.சக்திவேல். </p><p>மயிலாடுதுறை- வை.சிவபுண்ணியம் முன்னாள் எம்.எல்.ஏ., கோ.பழனிச்சாமி முன்னாள் எம்.எல்.ஏ., அ.சீனிவாசன். </p><p>கடலூர்- டி.எம்.மூர்த்தி, பி.துரை. </p><p>திருச்சி- பி.பத்மாவதி முன்னாள் எம்.எல்.ஏ., எம்.செல்வராஜ், எஸ்.சிவா, செ.ராஜ்குமார். </p><p>புதுக்கோட்டை- அ.பாஸ்கர், முத்து உத்திராபதி, த.செங்கோடன். </p><p>இந்த முற்றுகைப் போராட்டங்களுக்கு அனைத்து பகுதி மக்களும் ஆதரவு தர வேண்டுமென, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item></channel></rss>