<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 28 Aug 2026 22:29:20 +0000</lastBuildDate><item><title>
கோவை குற்றால அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு; குளிக்க தடை விதிப்பு
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kovai-kutralam-waterfalls-floods-again-bathing-ban-imposed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kovai-kutralam-waterfalls-floods-again-bathing-ban-imposed#comments</comments><guid isPermaLink="false">eeb8405d-3cb2-4699-8ee1-0d0e6d7d3e74</guid><pubDate>Fri, 28 Aug 2026 20:44:26 +0000</pubDate><atom:updated>2026-08-28T20:44:26.572Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,குற்றால அருவி,Falls</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/ersrguzt/fwfic.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/ersrguzt/fwfic.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>கோவை</p><p>கோவை குற்றால அருவியில் மீண்டும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.</p><p>கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. கோவையின் பிரதான சுற்றுலாத்தலமான இந்த நீர்வீழ்ச்சிக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.</p> <h2>கோவை குற்றாலம் அருவி</h2><p>இந்த நீர்வீழ்ச்சியில் வாரந்தோறும் திங்கட்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.</p> <h2>குளிக்க தடை</h2><p>இதனால் கோவை குற்றாலம் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து இன்று (சனிக்கிழமை) கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  3 நாட்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்ட நிலையில், நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மீண்டும் இன்று முதல் அருவி மூடப்படுகிறது.  சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவியில் நீர்வரத்து சீராகும் வரை கோவை குற்றாலம் அருவி மூடப்படும் என்று வனத்துறை அறிவித்துள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>காஞ்சீபுரம்:  1 மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய கனமழை
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kanchipuram-heavy-rain-lashes-for-over-an-hour</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kanchipuram-heavy-rain-lashes-for-over-an-hour#comments</comments><guid isPermaLink="false">d9e764b1-2f69-4187-9442-3b7f9a1f6e8c</guid><pubDate>Fri, 28 Aug 2026 19:58:18 +0000</pubDate><atom:updated>2026-08-28T19:58:18.165Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கனமழை,heavy rain,Kanchipuram,காஞ்சீபுரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/qa9lrfx7/swlrft.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/qa9lrfx7/swlrft.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>காஞ்சீபுரம்</p><p>காஞ்சீபுரத்தின் பல்வேறு பகுதிகளில் 1 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று <a href="https://www.dailythanthi.com/">சென்னை வானிலை ஆய்வு மையம் </a>தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில், காஞ்சீபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான வெள்ளைகேட், நத்தப்பேட்டை, களக்காட்டூர், வைய்யாவூர், வாலாஜாபாத், தாமல், பாலுசெட்டி சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு 1 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.  இதனால், நகரில் வெப்பம் சற்று தணிந்தது.  மழையால், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>
நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் 21 பேர் இரவில் சென்னை வந்தடைந்தனர்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/21-tamils-trapped-in-nepal-floods-return-to-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/21-tamils-trapped-in-nepal-floods-return-to-chennai#comments</comments><guid isPermaLink="false">bce89710-11ca-426d-add1-e8a2b5450fdc</guid><pubDate>Fri, 28 Aug 2026 19:07:32 +0000</pubDate><atom:updated>2026-08-28T19:07:32.805Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழர்கள்,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/mvfmk7t0/tnprnt.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/mvfmk7t0/tnprnt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><p>நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட 21 தமிழர்கள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.</p><p>இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பலி எண்ணிக்கை 469 ஆக உயர்ந்து உள்ளது.  ஆயிரம் பேரை காணவில்லை.  தொடர்ந்து மூன்றாவது நாளாக தேடுதல் மற்றும் மீட்புப்பணிகள் தொடரப்பட்டு வருகின்றன.</p> <h2>முதல்-அமைச்சர் விஜய்</h2><p>இந்த சூழலில், நேபாளத்துக்கு சென்று மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க, அமைச்சர்களுக்கு உத்தரவிட்டிருந்த தமிழக முதல்-அமைச்சர் விஜய், மீட்கப்பட்டுள்ள 21 தமிழர்களை தாயகம் அழைத்து வர ஏற்பாடு செய்யவும், தொடர்பு கொள்ள இயலாதவர்களின் நிலையை கண்டறிந்து மீட்புப்பணிகளை துரிதப்படுத்தவும் அறிவுறுத்தியிருந்தார்.</p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/7txep93c/tnprn.jpg" /></figure><h2>21 பேர்</h2><p>இதனிடையே நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிய, கும்பகோணத்தில் இருந்து கைலாஷ் யாத்திரைக்கு சென்ற 57 பேரில் இதுவரை 21 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.  அவர்கள் இரவு சென்னை வருவார்கள் என தகவல் வெளியாகி இருந்தது.</p> <h2>சென்னை வருகை</h2><p>இந்த நிலையில், தமிழக அமைச்சர்கள் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் ராஜ்மோகன், வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் க.தென்னரசு, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத் ஆகியோர் டெல்லியில், மத்திய அரசின் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியை சந்தித்தனர்.</p><p>அப்போது, நேபாளத்திற்கு சுற்றுலா சென்றிருந்த தமிழர்களை மீட்டு பாதுகாப்பாக அழைத்து வருதல் தொடர்பாக மத்திய அரசின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் நேபாளத்திலுள்ள இந்திய தூதரகம் மூலம் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப்பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.</p> <h2>உறவினர்கள் வரவேற்பு</h2><p>இந்நிலையில் காத்மண்டுவில் இருந்து மதியம் 2.15 மணிக்கு, 21 தமிழர்களுடன் புறப்பட்ட இண்டிகோ விமானம் மதியம் 3.45 மணிக்கு புதுடெல்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தது.  இதன்பின்னர் 21 தமிழர்கள் 21 பேரையும் தமிழக அமைச்சர்கள் நேற்று (28.8.2026) நேரில் வரவேற்றனர்.</p><p>இதன்பின்னர் இரவு 8 மணியளவில் டெல்லியில் இருந்து புறப்பட்ட அவர்கள், இன்று இரவு 11.15 மணியளவில் சென்னையை வந்தடைந்தனர்.  விமான நிலையம் வந்த 21 பேரையும் தமிழக அமைச்சர்கள் என்.ஆனந்த், சரத்குமார் ஆகியோர் நேரில் வரவேற்றனர்.  மீட்கப்பட்ட 21 நபர்களும் திருச்சி, மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவர்.  அவர்களை இனிப்புகள் வழங்கி உறவினர்கள் வரவேற்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>தமிழகம் முழுவதும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-actions-were-taken-by-the-singapenn-lioness-special-task-force-across-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-actions-were-taken-by-the-singapenn-lioness-special-task-force-across-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">1d7a227c-849f-4d4c-9981-fd5e3eaed2f0</guid><pubDate>Fri, 28 Aug 2026 16:28:38 +0000</pubDate><atom:updated>2026-08-28T16:28:38.769Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,TN Police,Singapen Athiradi Padai,சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை,சிங்கப்பெண் அதிரடிப்படை,Singapen Special Task Force</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/lspzfpjm/sur.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/lspzfpjm/sur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மாநிலம் முழுவதும் அடையாளம் காணப்பட்ட 12,921 பாதிக்கப்படக்கூடிய இடங்களில் கண்காணிப்பு மற்றும் தடுப்பு ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>சமூக விழிப்புணர்வு</h2><p>இதுதொடர்பாக <a href="https://www.dailythanthi.com/topic/chennai">சென்னை</a> காவல்துறை தலைமை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p>தமிழ்நாடு காவல்துறையின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை (Singappen Special Force SSF), பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், விரைவான தலையீடு, குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், தீவிர ரோந்துப் பணி, சமூக விழிப்புணர்வு மற்றும் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுடன் ஒருங்கிணைந்த செயல்பாடு ஆகியவற்றின் மூலம் மாநிலம் முழுவதும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.</p><h2>3 பெண்கள், 7 குழந்தைகள்</h2><p>21.08.2026 முதல் 27.08.2026 வரை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மாவட்ட களப்பிரிவுகள் 252 புகார்களுக்கு சம்பவ இடம் சென்று விசாரனை மேற்கெள்ளப்பட்டுள்ளது. 15 குற்ற வழக்குகள் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், காணாமல் போன 3 பெண்கள் மற்றும் 7 குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவர்கள் பாதுகாப்பாக அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.</p><h2>3,391 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்</h2><p>பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடையே 3,391 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும், மாநிலம் முழுவதும் அடையாளம் காணப்பட்ட 12,921 பாதிக்கப்படக்கூடிய இடங்களில் கண்காணிப்பு மற்றும் தடுப்பு ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.</p><h2>குழந்தை திருமணங்கள்</h2><p>பாதிக்கப்படக்கூடிய நபர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பல்வேறு தலையீட்டு நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. இவ்வாரத்தில், அறிவுசார் குறைபாடுகள் கொண்ட 5 நபர்கள் மீட்கப்பட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு மற்றும் தேவையான ஆதரவு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், 7 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், பள்ளிப் படிப்பை இடைநிறுத்திய 53 குழந்தைகள் மீண்டும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்படுவதற்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டன.</p><h2>வழக்குகள் பதிவு</h2><p>சென்னை, கள்ளகுறிச்சி, திருப்பூர், தேனி, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, ராமநாதபுரம், திருவள்ளுர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விரைவான தலையீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. </p><p>இந்நடவடிக்கைகளின் அடிப்படையில் (POCSO ACT) தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் (TNPHW), பாரதிய நியாய சன்ஹிதா (BNS), குழந்தைத்திருமணத் தடுப்புச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் (IT Act) உள்ளிட்ட தொடர்புடைய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. </p><p>மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதுடன், குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டது. சம்மந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டனர்.</p><h2>பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு</h2><p>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் தொடர்ச்சியான களப்பணிகள், அதன் அடிப்படை அணுகுமுறையான "தடுப்பு பாதுகாப்பு நம்பிக்கை உருவாக்குதல்" என்பதை பிரதிபலிக்கின்றன.</p><p>களத்தில் கண்கூடாகத் தெரியும் காவல் பணி, புகார்களுக்கு விரைவான நடவடிக்கை, குற்றத்தடுப்பு நடவடிக்கைகள், சமூகப் பங்களிப்பு மற்றும் ஒருங்கிணைந்த சட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம், தமிழகம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பையும், பொதுமக்களின் நம்பிக்கையையும் மேலும் வலுப்படுத்தி, பாதுகாப்பான மற்றும் அச்சமற்ற தமிழகத்தை உருவாக்குவதில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடர்ந்து முக்கிய பங்காற்றி வருகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சட்டசபைக்கு 2 நாள் விடுமுறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/2-day-holiday-for-the-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/2-day-holiday-for-the-assembly#comments</comments><guid isPermaLink="false">c1bc667a-446c-4bf6-8441-4e5e034a8702</guid><pubDate>Fri, 28 Aug 2026 16:08:54 +0000</pubDate><atom:updated>2026-08-28T16:08:54.438Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,விடுமுறை,Holiday,தமிழக சட்டசபை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/473korc6/assambly33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
சட்டசபை]]></media:title><media:description type="html"><![CDATA[ 
சட்டசபைக்கு 2 நாள் விடுமுறை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/473korc6/assambly33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபை கூட்டம் கடந்த 5ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் 2026-27ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் 6ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து சட்டசபை கூட்டத்தொடரில் தற்போது மானியக்கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. </p><p>இந்த நிலையில், <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">சட்டசபை</a>க்கு நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் விடுமுறை ஆகும். 31-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை ஆகிய துறைகள் மீதான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.</p><p>துறையின் அமைச்சர்கள் விக்னேஷ், ஜெகதீஷ்வரி, வினோத் ஆகியோர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டவுடன் எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். அதன்பின்னர் அவர்களுடைய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலுரை வழங்குவார்கள்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் கேட்பாரற்று கிடந்த 5,543 வாகனங்கள் மின்னணு முறையில் ஏலம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/5543-abandoned-vehicles-auctioned-online-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/5543-abandoned-vehicles-auctioned-online-in-chennai#comments</comments><guid isPermaLink="false">459dd2fb-eb48-4d3d-beed-5bfdfd08570a</guid><pubDate>Fri, 28 Aug 2026 16:04:32 +0000</pubDate><atom:updated>2026-08-28T16:04:32.886Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,auction,வாகனங்கள்,ஏலம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/lllmvnpg/Untitled-11.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/lllmvnpg/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை நகரில் கேட்பாரற்று சாலையில் கிடக்கும் வாகனங்களை, போலீசார் கைப்பற்றி வருகிறார்கள். அவ்வாறு கைப்பற்றப்பட்ட 5 ஆயிரத்து 543 வாகனங்கள், சென்னை மாநகராட்சி மூலம் ஏலத்தில் விடப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.</p><p>இவற்றில் மதிப்பீடு செய்யப்பட்ட 1,936 வாகனங்கள் முதல்கட்டமாக இன்று மின்னணு முறையில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. மீதி உள்ள 3,607 வாகனங்களும் முறையாக மதிப்பீடு செய்யப்பட்டு அடுத்தகட்டமாக ஏலத்தில் விடப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.</p><p>இதேபோல, போதைப்பொருள் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 81 மோட்டார் சைக்கிள்கள், 12 ஆட்டோக்கள் உள்ளிட்ட 102 வாகனங்களும், கோர்ட்டில் முறையாக அனுமதி பெற்று மின்னணு வாயிலாக விரைவில் ஏலத்தில் விடப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ஓணம் பண்டிகை: திருவனந்தபுரம்-சந்திரகாச்சி இடையே நாளை சிறப்பு ரெயில் இயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-festival-special-train-to-run-between-thiruvananthapuram-and-santragachi-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-festival-special-train-to-run-between-thiruvananthapuram-and-santragachi-tomorrow#comments</comments><guid isPermaLink="false">4713da02-ae37-43fd-9fa3-9fef3d6c7c3e</guid><pubDate>Fri, 28 Aug 2026 15:56:48 +0000</pubDate><atom:updated>2026-08-28T15:56:48.187Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thiruvananthapuram,திருவனந்தபுரம்,சந்திரகாச்சி,Santragachi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/esyuol0t/Untitled-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/esyuol0t/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>ஓணம் பண்டிகையையொட்டி பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.</p><p>அதன்படி, திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்தில் இருந்து நாளை (சனிக்கிழமை) மதியம் 2.15 மணிக்கு மேற்குவங்க மாநிலம் சந்திகாச்சிக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண்-06058) இயக்கப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வால்பாறை அருகே ருசிகரம்: பலா மரத்தில் இருந்து பழத்தை பறிக்க போராடிய காட்டு யானை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/delicious-struggle-near-valparai-wild-elephant-plucks-jackfruit-from-tree</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/delicious-struggle-near-valparai-wild-elephant-plucks-jackfruit-from-tree#comments</comments><guid isPermaLink="false">daffc091-7c01-4905-b83d-7927dc13c8d3</guid><pubDate>Fri, 28 Aug 2026 15:38:40 +0000</pubDate><atom:updated>2026-08-28T15:38:40.029Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வால்பாறை,Valparai,காட்டு யானை,wild elephant,Jackfruit,பலாப்பழம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/ahj1zlgq/Untitled-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/ahj1zlgq/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வால்பாறை,</p><p>கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை அருகே சின்னக்கல்லாறு, பெரியகல்லாறு, சிங்கோனா ஆகிய எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.</p><p>இந்த நிலையில் இன்று மதியம் ஆண் காட்டு யானை ஒன்று சின்னக்கல்லாறு நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் உள்ள குடியிருப்பு பகுதியில் புகுந்தது. அங்குள்ள பலா மரத்தில் இருந்து பழத்தை பறிக்க முயற்சித்தது. ஆனால் எப்படி பறிப்பது என தெரியாமல் சிறிது நேரம் பலா மரத்தின் அடியிலேயே சுற்றி வந்தது.</p><p>பின்னர் பலா மரத்தை தலையால் முட்டி ஆட்டிப்பார்த்தது. அப்படியாவது மரத்தில் இருந்து பலாப்பழம் கீழே விழும் என்று எதிர்பார்த்தது. ஆனால் பலாப்பழம் கீழே விழவில்லை. இதனால் பொறுமையை இழந்த காட்டு யானை பலா மரத்தின் மீது முன்னங்கால்களை தூக்கி வைத்து துதிக்கையால் எட்டி பலாப்பழத்தை பறித்தது. தொடர்ந்து பசியாற அந்த பழத்தை ருசித்து தின்றது. இறுதியாக அந்த யானையின் ஒரு மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது.</p><p>இதை அந்த பகுதியில் தோட்ட பணியில் இருந்த தொழிலாளர்கள், பாதுகாப்பு பணியில் இருந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் கண்டு மெய்சிலிர்த்து போயினர்.</p>]]></content:encoded></item><item><title>இரவில் வடமாநில நபர்களுக்கு பொருட்கள் வினியோகம் ; ரேஷன் கடை பணியாளர் பணியிடை நீக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ration-shop-worker-suspended</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ration-shop-worker-suspended#comments</comments><guid isPermaLink="false">d496c3a5-62d0-4ce9-87e7-b92837d8619b</guid><pubDate>Fri, 28 Aug 2026 15:37:34 +0000</pubDate><atom:updated>2026-08-28T15:37:34.954Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thiruvallur,பணியிடை நீக்கம்,suspended,ரேஷன் கடை ஊழியர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/xksbrgwd/susupend33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/xksbrgwd/susupend33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை, </p><p>திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், உளுந்தை கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் கடந்த 23-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தில் ரேஷன் கடையை இரவு 8 மணியளவில் திறந்து வைத்து அப்பகுதியில் தங்கி இருக்கும் வடமாநில நபர்களுக்கு சட்ட விரோதமாக ரேஷன் பொருட்களை கடை விற்பனையாளர் வினியோகம் செய்ததாகவும், இவர் தொடர்ச்சியாக அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்து சட்டவிரோதமாக வடமாநில நபர்களுக்கு விற்பனை செய்வதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது.</p><p>இது குறித்து துறை ரீதியிலான நடவடிக்கை மேற்கொண்ட கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகள் உளுந்தை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%20">ரேஷன் கடை </a>விற்பனையாளர் அருள் என்பவரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பரந்தூருக்கு ஒரு நியாயம்; ஓசூருக்கு ஒரு நியாயமா?; முதல்-அமைச்சருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/justice-for-paranthur-justice-for-hosur-nainar-nagendran-questions-the-chief-minister</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/justice-for-paranthur-justice-for-hosur-nainar-nagendran-questions-the-chief-minister#comments</comments><guid isPermaLink="false">9d87b9db-8684-4449-9f36-1280dcc4c536</guid><pubDate>Fri, 28 Aug 2026 15:26:20 +0000</pubDate><atom:updated>2026-08-28T15:26:20.070Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/gd9j1gv0/29.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/gd9j1gv0/29.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை.</p><p>தமிழக பாஜக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/nainar-nagendran">நயினார் நாகேந்திரன்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தனது தனிப்பட்ட காரணங்களுக்காக தமிழகத்தின் வளர்ச்சியை முதல்-அமைச்சர் முடக்குவது நியாயமல்ல!</p><p>கடந்த சில நாட்களுக்கு முன்பு, பரந்தூரில் விமான நிலையம் கொண்டு வந்தால் "விவசாய நிலங்கள் பாதிக்கப்படும்" என்று கூறி, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதாக சட்டமன்றத்தில் அறிவித்தார். முதல்-அமைச்சர் விஜய் அவர்கள். ஆனால், இன்று அதே சட்டமன்றத்தில், விவசாய நிலங்களை அழித்து ஓசூரில் விமான நிலையம் அமைக்க வேண்டாம் என்ற அதிமுக எம்.எல்.ஏ.  பாலகிருஷ்ண ரெட்டி அவர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளித்த வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், "ஓசூரில் விமான நிலையம் அமைக்க வேண்டுமென்றால், விவசாய நிலங்களை எடுத்துத்தான் ஆக வேண்டும்: வேறு வழியில்லை"என்று கூறியுள்ளார்.</p><h2>உண்மைக் காரணம் என்ன....</h2><p>எதற்கு இத்தனை பித்தலாட்டங்கள்? எதற்கு இந்த இரட்டை வேடம்? வளர்ச்சித் திட்டங்களுக்காக தமிழகத்தின் மற்ற விவசாய நிலங்களை கையகப்படுத்த தயாராக இருக்கும் தவெக அரசு, பரந்தூர் விவசாய நிலங்கள் மீது மட்டும் தனிக் கரிசனம் காட்டுவது போல நாடகமாடுவது ஏன்? ஏற்கனவே 1700 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட பரந்தூரில் விமான நிலையம் அமையவே கூடாது என முதல்-அமைச்சர் விஜய் அவர்கள் பிடிவாதம் பிடிப்பதன் உண்மைக் காரணம் என்ன? விவசாய நிலங்கள் காரணமாகவே பரந்தூர் திட்டம் நிராகரிக்கப்படுகிறது என்றால். ஓசூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கும் அதே விதி பொருந்தும் தானே?</p><p>இரும்புக்காட்டுக்கோட்டை சிப்காட ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் உள்ளிட்ட பெரும் தொழில் நகரங்களை இணைக்கும் படியாகவும், சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகிலேயும் உள்ள பரந்தூரில், விமான நிலையம் அமைப்பதில் தவெக அரசுக்கு என்ன சிக்கல்? அனைத்து வகைகளிலும் பொருத்தமாக இருக்கும் பரந்தூரை ஓரம்கட்டிவிட்டு, ஓசூரில் புதிதாக விமான நிலையம் அமைத்தே தீருவோம் என கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி சட்டமன்றத்தில் சபதம் எடுக்கிறார் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அவர்கள். இது என்ன கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலையும் கதை? எனவே. தனது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்காக தமிழகத்தின் வளர்ச்சியை முடக்குவது துளியும் நியாயமல்ல என்பதை முதல்-அமைச்சர் விஜய் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வி.சி.க. நிர்வாகி கொலை:  குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு - தாம்பரம் போலீசார் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/murder-of-vck-functionary-5-special-teams-formed-to-apprehend-the-culprits-tambaram-police</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/murder-of-vck-functionary-5-special-teams-formed-to-apprehend-the-culprits-tambaram-police#comments</comments><guid isPermaLink="false">67185860-468f-4345-be44-04777745d9e9</guid><pubDate>Fri, 28 Aug 2026 15:24:35 +0000</pubDate><atom:updated>2026-08-28T15:24:35.291Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,தமிழகம்,Tambaram,தாம்பரம்,Murder case,VCK,கொலை சம்பவம்,விசிக நிர்வாகி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/ihws17h3/tambara.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/ihws17h3/tambara.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வி.சி.க. நிர்வாகி கொல்லப்பட்ட சம்பவத்தில், தடயவியல் குழுவினர் மூலம் சம்பவ இடத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>வெட்டிக்கொலை</h2><p>இதுதொடர்பாக <a href="https://www.dailythanthi.com/topic/tambaram">தாம்பரம்</a> மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>திருநீர்மலை பிரதான சாலையில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை</p><p>28.08.2026 அன்று மதியம் சுமார் 14.15 மணியளவில், சங்கர் நகர் காவல் எல்லைக்குட்பட்ட திருநீர்மலை பிரதான சாலையில் உள்ள மன்ற கட்டிடத்திற்குள், அன்பழகன் (எ) மைனகுட்டி, வ/40, என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். </p><h2>கொலை வழக்குகள்</h2><p>நாகல்கேணியை சேர்ந்த இவர், தற்போது குடும்பத்தினருடன் கே.கே.நகரில் வசித்து வந்ததுடன், உள்ளூர் குவாரியில் கட்டிட வேலைக்கான சரளை மணலை (Gravel) கையாளும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது 2009 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட இரண்டு கொலை வழக்குகள் உட்பட மொத்தம் 14 குற்ற வழக்குகள் உள்ளன. </p><h2>அடையாளம் தெரியாத நபர்கள்</h2><p>முதற்கட்ட விசாரணையில், அன்பழகன் காலை சுமார் 9 மணியளவில் பணிக்காக திருநீர்மலை பிரதான சாலைக்கு வந்து, மதியம் 13.45 மணி வரை தனது நண்பர்களான பிரபு மற்றும் பாலாஜியுடன் மன்றக் கட்டிடத்தில் இருந்துள்ளார். அவர்கள் மதிய உணவிற்காக வெளியே சென்ற நிலையில், பிரபு சுமார் 14.30 மணியளவில் மீண்டும் அங்கு வந்தபோது, கத்திகளுடன் வந்த 4 முதல் 5 பேர் கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் கட்டிடத்திற்குள் செல்வதைக் கண்டு சத்தமிட்டுள்ளார்.</p><p>அக்கும்பல் பிரபுவை மிரட்டி தடுத்துவிட்டு, கட்டிடத்திற்குள் இருந்த அன்பழகனை கொடூரமாகத் தாக்கி கொலை செய்துவிட்டு, ஆட்டோ ரிக்ஷா மற்றும் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது.</p><h2>5 தனிப்படைகள்</h2><p>இச்சம்பவம் குறித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தடயவியல் குழுவினர் மூலம் சம்பவ இடத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளையும் அவர்கள் பயன்படுத்திய வாகனங்களையும் அடையாளம் காணவும், கொலையாளிகளை விரைந்து கைது செய்யவும் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சமூகநீதி கணக்காய்வை தமிழ்நாடு அரசு நடத்தும் - அமைச்சர் சம்பத்குமார் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-to-conduct-social-justice-audit-minister-sampath-kumar-informs</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-to-conduct-social-justice-audit-minister-sampath-kumar-informs#comments</comments><guid isPermaLink="false">b32d09d1-1491-4176-a607-df4e7641e1b7</guid><pubDate>Fri, 28 Aug 2026 15:21:00 +0000</pubDate><atom:updated>2026-08-28T15:21:00.434Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,சாதி வாரி கணக்கெடுப்பு,அமைச்சர் சம்பத்குமார்,minister sambathkumar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/8i3wiru8/smabathakumar33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் சம்பத்குமார் ]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/8i3wiru8/smabathakumar33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டசபையில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிக பிற்படுத்தப்பட்டோர் நலன் துறை அமைச்சர் வே.சம்பத்குமார் பேசியதாவது:-</p><p>இடஒதுக்கீடு சம்பந்தமாக விவாதம் சென்றது. பெரியார் வழியில் எல்லோருக்கும் எல்லாம் என்ற அணுகுமுறையை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு சமூகத்தினருக்கும் விகிதாசார இடப்பங்கீடு உறுதி செய்து, உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதே உண்மையான சமூகநீதி என்பது இந்த அரசின் அடிப்படை கொள்கை ஆகும்.</p><p>இதனை நிறைவேற்ற சாதிவாரி கணக்கெடுப்பை மக்கள் தொகை கணக்கெடுப்புடன் இணைந்து விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறது. மத்திய அரசின் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20">சாதி வாரி கணக்கெடுப்பு </a>முடிந்த பிறகு, நம்முடைய அரசு சமூகநீதி கணக்காய்வை நடத்தும்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>16 வயது சிறுமிக்கு திருமணம்: வாலிபர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/marriage-of-a-16-year-old-girl-case-registered-against-five-individuals-including-a-young-man</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/marriage-of-a-16-year-old-girl-case-registered-against-five-individuals-including-a-young-man#comments</comments><guid isPermaLink="false">2dd3ae18-a207-4bab-8142-79f77bd5d10c</guid><pubDate>Fri, 28 Aug 2026 15:18:55 +0000</pubDate><atom:updated>2026-08-28T15:18:55.392Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>வழக்குப்பதிவு,case registered,குழந்தை திருமணம்,child marriage</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/apbxzndi/13.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/apbxzndi/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே 16 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் நடந்ததாக கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றிய சமூக நலத்துறை அலுவலர் தனத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசாருடன் அலுவலர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுமியை பெற்றோர் கட்டாயப்படுத்தி கடந்த ஜூலை 5-ந்தேதி கோவிலில் வைத்து முருகன் என்பவ ருக்கு திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது. இதுகுறித்து சமூக நலத்துறை அலுவலர் தனம் சங்ககிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>அதேபோல,  திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா மாமண்டூர் முத்துமாரியம்மன் கோவிலில் கடந்த ஜூன் மாதம் 18-ந்தேதி ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை வந்தவாசி தாலுகாவை சேர்ந்த ஞானமுருகனின் மகன் பெருமாள் (வயது 22) திருமணம் செய்து கொண்டார்.</p><p>குழந்தை திருமணம் குறித்து ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா ஊரக அலுவலர் சித்ரா என்பவருக்கு தகவல் வந்தது. உடனே அவர் அரக்கோணம் அனைத்து மகளிர் போலீசில் பெருமாள், அவரின் திருமணத்துக்கு ஏற்பாடு செய்த பெற்றோர் மீது புகார் செய்தார். தொடர்ந்து சிறுமியை மீட்டு வாலாஜா ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தங்க வைத்தார். இந்த வழக்கை திருமணம் நடந்த போலீஸ் எல்லையான செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.</p>]]></content:encoded></item><item><title>சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு 31-ந்தேதி சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-tokens-allotted-at-subamuhurtha-day-on-31st</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-tokens-allotted-at-subamuhurtha-day-on-31st#comments</comments><guid isPermaLink="false">5e3d915e-9e5d-412d-b411-174d7188d818</guid><pubDate>Fri, 28 Aug 2026 14:47:32 +0000</pubDate><atom:updated>2026-08-28T14:47:32.826Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சுபமுகூர்த்த தினம்,கூடுதல் டோக்கன்கள்,சார்பதிவாளர் அலுவலகம்,Sub-Registrar&apos;s Office</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/grtkkw7n/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சார்பதிவாளர் அலுவலகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/grtkkw7n/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று பதிவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினமான 31.08.2026 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.</p><p>எனவே, ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினமான 31.08.2026 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகள், கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>புதுப்பொலிவுடன் குளிரூட்டப்பட்ட சென்னை கதர் அங்காடி: அமைச்சர் விஜய் பாலாஜி ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/air-conditioned-chennai-khadi-emporium-gets-a-facelift-minister-vijayabaskar-inspects-the-facility</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/air-conditioned-chennai-khadi-emporium-gets-a-facelift-minister-vijayabaskar-inspects-the-facility#comments</comments><guid isPermaLink="false">57edc855-5a93-4b08-b098-abcc1cb146c4</guid><pubDate>Fri, 28 Aug 2026 14:25:22 +0000</pubDate><atom:updated>2026-08-28T14:25:22.741Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Vijayabaskar,Minister C. Vijayabaskar,விஜய் பாலாஜி,அமைச்சர் விஜய் பாலாஜி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/5vs0ki71/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/5vs0ki71/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>புதுப்பொலிவுடன் குளிரூட்டப்பட்ட சென்னை கதர் அங்காடியை மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் ம. விஜய் பாலாஜி பார்வையிட்டார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>சென்னை கதர் அங்காடி</h2><p>சென்னை குறளகத்தின் தரைத்தளத்தில் செயல்பட்டு வந்த கதர் அங்காடி (காதி கிராப்ட்), தற்போது குறளகம் அருகிலுள்ள சென்னை இல்லம் முதல் தளத்தில் கடந்த ஓராண்டாக செயல்பட்டு வருகிறது.</p><p>வாடிக்கையாளர்களின் வசதியையும், சிறந்த விற்பனைச் சூழலையும் ஏற்படுத்தும் வகையில், இக்கதர் அங்காடி தற்போது குளிரூட்டப்பட்டு, புதுப்பொலிவுடன் நவீன முறையில் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.</p><p>இக்கதர் அங்காடியில் அனைத்து வகையான கதர், பாலியஸ்டர் மற்றும் பட்டு ரகங்களும் 30 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.</p><h2>அங்காடியில் ஆய்வு</h2><p>மேலும், கிராமத் தொழில் பொருட்களான பல்வேறு வகையான சோப்புகள், மார்த்தாண்டம் தேன், காலணி வகைகள், பூஜைப் பொருட்கள், சுகப்பிரியா வலி நிவாரண தைலம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும், ஒவ்வொரு மாவட்டத்தின் சிறப்பையும் எடுத்துக்காட்டும் வகையிலான பொருட்களும் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.</p><p>கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் ம. விஜய் பாலாஜி 27.08.2026 அன்று <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை </a>கதர் அங்காடியைப் பார்வையிட்டு, அங்காடியின் விற்பனையை மேலும் பன்மடங்கு உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.</p><p>இந்நிகழ்வின்போது, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை அரசு முதன்மைச் செயலாளர் தி.ந. வெங்கடேஷ், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் தலைமைச் செயல் அலுவலர் முனைவர் சீ. சுரேஷ்குமார், கைத்தறித் துறை ஆணையர் பி. உமா மகேஸ்வரி மற்றும் வாரிய அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய் புழல் சிறையில் ஆய்வு மேற்கொண்டது ஏன்? - வேல்முருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-did-chief-minister-vijay-conduct-an-inspection-at-puzhal-prison-velmurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-did-chief-minister-vijay-conduct-an-inspection-at-puzhal-prison-velmurugan#comments</comments><guid isPermaLink="false">72faddcd-007c-4fcf-acc4-134aba424523</guid><pubDate>Fri, 28 Aug 2026 14:12:16 +0000</pubDate><atom:updated>2026-08-28T14:12:16.891Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Velmurugan,வேல்முருகன்,தி.வேல்முருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/x4d57ior/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/x4d57ior/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டின் சிறைகளில் வாடும் இஸ்லாமிய மற்றும் அரசியல் சிறைவாசிகள், ஈழத் தமிழ்ச் சிறைவாசிகள் உள்ளிட்ட நீண்டகால சிறைவாசிகளின் விடுதலைக்கான சட்டரீதியான நடவடிக்கைகளின் தொடக்கமாக முதல்-அமைச்சர் மாற்ற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>புழல் சிறையில் ஆய்வு</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் புழல் சிறையில் மேற்கொண்ட ஆய்வு, சிறையின் நிர்வாகம், பாதுகாப்பு, உணவு, மருத்துவம் உள்ளிட்ட வசதிகளைப் பார்வையிட்டதோடு நின்றுவிடக் கூடாது. அந்தச் சிறைக்குள் நீண்டகாலமாக வாடும் சிறைவாசிகளின் நிலை, அவர்களின் விடுதலை மற்றும் மறுவாழ்வு குறித்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கும் இந்த ஆய்வு வழிவகுக்க வேண்டும்.</p><p>ஆண்டுகளைக் கடந்து சிறைக்குள் வாழ்வைத் தொலைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களின் எதிர்காலத்திற்கான முடிவாகவும் இந்த ஆய்வு அமைய வேண்டும்.</p><p>சிறைவாசிகளும் இந்தச் சமூகத்தின் மனிதர்கள்தான். குற்றச்சாட்டோ, தண்டனையோ ஒருவரின் மனித உரிமையையும், மீண்டும் சமூகத்தில் வாழ்வதற்கான வாய்ப்பையும் நிரந்தரமாகப் பறித்துவிடக் கூடாது.</p><h2>ஆக்கப்பூர்வமான நடவடிக்கை தேவை</h2><p>10 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை மற்றும் ஆயுள் தண்டனை சிறைவாசிகளாக சிறையில் உள்ள இஸ்லாமிய மற்றும் அரசியல் சிறைவாசிகளை, எந்தவித நிபந்தனைகளும் இன்றி உடனடியாக விடுதலை செய்வதற்குத் தேவையான சட்டரீதியிலான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று, பல ஆண்டுகளாகத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தி வருகின்றது.</p><p>விசாரணை முடிவடையாமலேயே பல ஆண்டுகள் சிறையில் கழிப்பது, சட்டத்தின் பார்வையில் விசாரணைக் காவலாக இருந்தாலும், அந்த மனிதரின் வாழ்க்கையில் அது மறைமுகத் தண்டனையாகவே மாறுகிறது.</p><p>எனவே, இத்தகைய வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான சட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.</p><p>அதேபோல், நீண்டகாலமாக சிறையில் இருப்பவர்களின் வழக்குகள் மற்றும் விடுதலைக்கான தகுதிகளைப் பாரபட்சமின்றி மறுபரிசீலனை செய்வதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதிகள், சட்ட வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் அடங்கிய சுயாதீன மறுபரிசீலனை ஆணையம் அமைக்கப்பட வேண்டும். ஆதாரங்கள் வலுவற்ற நிலையில் உள்ளவர்கள், நீண்டகால விசாரணைக் காவலில் இருப்பவர்கள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை அளித்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.</p><h2>வழக்குகளை ரத்து செய்க..</h2><p>அதேபோல், பல்வேறு வழக்குகளின் கீழ் நீண்டகாலமாக சிறையில் வாடும் ஈழத் தமிழர்களின் நிலையும் மனிதநேயக் கண்ணோட்டத்துடன் பரிசீலிக்கப்பட வேண்டும். பல ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் அவர்களின் வாழ்க்கையை மேலும் சிறைக்குள் முடக்காமல், நல்லெண்ணத்தின் அடிப்படையில் உரிய சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து, அவர்கள் தங்களுடைய குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்து கண்ணியமான வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்பை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.</p><p>குறிப்பாக, வயது மூப்பை அடைந்து, உடல் வலிமையை இழந்து, தங்களுடைய அன்றாடத் தேவைகளைக்கூட தாங்களே நிறைவேற்ற முடியாத நிலையில் இருக்கும் சிறைவாசிகளின் நிலை மனிதநேயக் கண்ணோட்டத்தில் உடனடியாகப் பரிசீலிக்கப்பட வேண்டும்.</p><p>ஒரு மனிதன் பத்து, பதினைந்து ஆண்டுகளைச் சிறையில் கழிப்பது என்பது நாட்காட்டியில் கடந்துபோகும் காலம் மட்டுமல்ல. அந்தக் காலத்துடன் அவரது இளமை, குடும்ப உறவுகள், குழந்தைகளின் வளர்ச்சி, பெற்றோரின் முதுமை என ஒரு வாழ்க்கையின் பெரும்பகுதியே அவரை விட்டு நகர்ந்துவிடுகிறது.</p><h2>சிறைவாசத்தை நீட்டிப்பது சரியானதல்ல</h2><p>எனவே, தண்டனையின் நோக்கம் நிறைவேறிய பின்னரும் சிறைவாசத்தை நீட்டிப்பது சரியானதல்ல. சட்டத்தின் வரம்புக்குள் மனிதநேயத்துடன் மீண்டும் சமூகத்தில் வாழ்வதற்கான வாய்ப்பை வழங்குவதுதான் நாகரிகமான அணுகுமுறை.</p><p>விடுதலை பெறுபவர்கள் சமூகத்தில் கண்ணியத்துடன் மீண்டும் நிலைபெறுவதற்கான வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி, குடும்பத்துடன் மீளிணைதல், ஆலோசனை மற்றும் முழுமையான மறுவாழ்வுத் திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.</p><p>முதலமைச்சர் விஜய் அவர்கள் புழல் சிறையில் நேரில் பார்த்த நிலைமைகள், அரசு கோப்புகளில் முடங்கிக் கிடக்கும் எண்ணிக்கைகளாக மட்டும் மாறக்கூடாது. அவை மனிதர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் அரசின் முடிவுகளாக மாற வேண்டும்.</p><h2>சட்டரீதியான நடவடிக்கை..</h2><p>எனவே, புழல் சிறை ஆய்வை ஒரு சம்பிரதாய நிகழ்வாகக் கடந்து செல்லாமல், 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டின் சிறைகளில் வாடும் இஸ்லாமிய மற்றும் அரசியல் சிறைவாசிகள், ஈழத் தமிழ்ச் சிறைவாசிகள் உள்ளிட்ட நீண்டகால சிறைவாசிகளின் விடுதலைக்கான சட்டரீதியான நடவடிக்கைகளின் தொடக்கமாக முதல்-அமைச்சர் மாற்ற வேண்டும் என்று <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழக </a>வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம் – ரூ.100 கோடி ஒதுக்கீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monsoon-preparedness-work-intensifies-in-chennai-rs-100-crore-allocated</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monsoon-preparedness-work-intensifies-in-chennai-rs-100-crore-allocated#comments</comments><guid isPermaLink="false">64a13da1-4b0e-4d32-8d72-65a63b839d94</guid><pubDate>Fri, 28 Aug 2026 14:05:10 +0000</pubDate><atom:updated>2026-08-28T14:05:10.377Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,பருவமழை முன்னெச்சரிக்கை,Monsoon Precautions</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/04zur98c/28.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/04zur98c/28.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>பெருநகர <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">சென்னை மாநகராட்சி</a> ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டர் இன்று (28.08.2026) ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.</p><p>இக்கூட்டத்தில் இணை ஆணையாளர் (பணிகள்) சரவணன், துணை ஆணையாளர்கள் சித்ரா விஜயன், (வருவாய் (ம) நிதி), அஃதாப் ரசூல், (தெற்கு வட்டாரம்), ஸ்வேதா சுமன், (வடக்கு வட்டாரம்) மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது:</p><p>பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை மற்றும் எல் நினோ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால் கட்டுதல், மழைநீர் வடிகால் இணைப்பு இல்லாத இடங்களில் இணைப்பினை ஏற்படுத்துதல், மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய்களில் தூர்வாருதல், ஆகாயத் தாமரைச் செடிகள் அகற்றுதல், நீர் நிலைகள் மேம்பாடு, ஆபத்தான நிலையில் உள்ள மரங்களின் கிளைகளைக் கத்திரித்து அகற்றுதல், நீர்த் தேக்கத் தொட்டிகள், நீர் வெளியேற்றும் மோட்டார்கள் பராமரிப்புப் பணிகள், வாகனங்கள் இயந்திரங்களை தயார்ப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><h2>ரூ.100 கோடி ஒதுக்கீடு</h2><p>இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, வடகிழக்குப் பருவமழை மற்றும் எல் நினோ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரூ.22.46 கோடி மதிப்பீட்டில் 1,671 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகாலில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p>பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்காக வார்டு ஒன்றுக்கு ரூ.5 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாலை ஒட்டுப் பணிகள் மற்றும் சாலையை சீர்செய்வதற்காக பகுதி வாரியாக ஒப்பம் கோரப்பட்டுள்ளது. இதற்காக ரூ.22 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெளியேற்றுவதற்கு ஏதுவாக 150 எண்ணிக்கையிலான 100 HP பம்புகள் மற்றும் வாடகை 500 ட்ராக்டர் மீது பொறுத்தப்பட்ட பம்புகள் அடிப்படையில் பயன்படுத்துவதற்கு மொத்தம் ரூ.26.53 கோடி மதிப்பீட்டில் ஒப்பங்கள் கோரப்பட்டுள்ளன.</p><p>பெருநகர சென்னை மாநகராட்சியின் மின்சார மோட்டார்களில் ஏதேனும் பழுது இருந்தால் சரிசெய்வதற்கு மண்டலத்திற்கு ஒரு இலட்சம் வீதம் ரூ.15 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பருவமழையால் பாதிக்கப்பட்ட மக்களின் பயன்பாட்டிற்காக அத்தியாவசியப் பொருட்களை உள்ளடக்கிய 15000 எண்ணிக்கையிலான Emergency kit ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும் .</p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>ரூ.4.65 கோடி மதிப்பில் பம்ப் மற்றும் நீர்த்தேக்கத் தொட்டியை இயக்குவதற்கான தற்காலிக பணியாளர்கள் நியமித்தல். பருவமழை தொடர்பான பணிகளுக்காக, ஒரு வார்டுக்கு 5 பணியாளர்கள் வீதம் கூடுதலாக 1,000 பணியாளர்கள் நியமிக்கப்படுவர். ரூ.15 இலட்சம் மதிப்பில் ட்ரோன் மூலம் கால்வாய்களில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு பணிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பணிகளுக்காக ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p>பெருநகர சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு மண்டலத்திலும் நடைபெற்று வரும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை அலுவலர்கள் கண்காணித்து விரைந்து மேற்கொள்ள வேண்டும். நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத் துறை, சென்னை குடிநீர் வாரியம், மின்சாரத் துறை, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், ரெயில்வே துறை உள்ளிட்ட சேவைத் துறைகளுடன் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொண்டு செப்டம்பர் மாதம் இறுதிக்குள் அனைத்துப் பணிகளையும் முடித்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>12 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-till-10-pm-in-12-districts-2</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-till-10-pm-in-12-districts-2#comments</comments><guid isPermaLink="false">073acfb1-2152-42ff-ba63-e344c9fa451e</guid><pubDate>Fri, 28 Aug 2026 13:47:15 +0000</pubDate><atom:updated>2026-08-28T13:47:15.375Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/xxapnxnk/Untitled-8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/xxapnxnk/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தருமபுரி, ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, நீலகிரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பவுர்ணமி: திருவண்ணாமலையில் விடிய, விடிய கிரிவலம் சென்ற பக்தர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/full-moon-day-devotees-undertook-the-girivalam-circumambulation-at-tiruvannamalai-throughout-the-night</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/full-moon-day-devotees-undertook-the-girivalam-circumambulation-at-tiruvannamalai-throughout-the-night#comments</comments><guid isPermaLink="false">6585cd4f-3fe1-4f5f-b5cf-cb17d18ac86a</guid><pubDate>Fri, 28 Aug 2026 13:41:03 +0000</pubDate><atom:updated>2026-08-28T13:41:03.260Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,Tiruvannamalai,Girivalam,கிரிவலம்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/w6n62be7/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/w6n62be7/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை,</p><p>கிரிவலம் செல்வதற்காக பக்தர்கள் பஸ்களிலும், ரெயில்களிலும் கூட்டம், கூட்டமாக வந்தனர்.</p><h2>பவுர்ணமி கிரிவலம்</h2><p>திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட் களில் லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கிரிவலப்பாதையில் நடந்தே கிரிவலம் செல்கின்றனர். இந்த நிலையில் ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி நேற்று காலை 9.52 மணிக்கு தொடங்கியது.</p><p>பவுர்ணமியை முன்னிட்டு நேற்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் செல்லத்தொடங்கினர். பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கிரிவலம் சென்ற பக்தர்களின் கூட்டம் குறைந்து காணப்பட்டது. பின்னர் மாலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.</p><h2>லட்சக்கணக்கான பக்தர்கள்</h2><p>குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் வந்திருந்தனர். முன்னதாக நேற்று காலை முதல் அருணாசலேஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் பக்தர்கள் விரைந்து சாமி தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. மாலையில் கிரிவலம் செல்வதற்காக பக்தர்கள் பஸ்களிலும், ரெயில்களிலும் கூட்டம், கூட்டமாக வந்தனர்.</p><p>இதனால் இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. பவுர்ணமி கிரிவலம் இன்று காலை 10.59 மணிக்கு நிறைவடைந்தது. இதனால் பக்தர்கள் தொடர்ந்து விடிய, விடிய கிரிவலம் சென்றனர். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.</p><h2>சிறப்பு ரெயில்</h2><p>மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உதயகுமார் தலைமையில் போலீசார் தொடர்ந்து ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அத்துடன் சிங்கப்பெண் அதிரடிப்படையினர் கிரிவலப்பாதையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.</p><p>மேலும் சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டன. இதனை பயன்படுத்தி கிரிவலம் சென்ற பக்தர்கள் தங்கள் பகுதிக்கு எந்தவித சிரமமுமின்றி திரும்பி சென்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சிறந்த நூல் பரிசுத் திட்டம்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/best-book-prize-scheme-application-deadline-extended</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/best-book-prize-scheme-application-deadline-extended#comments</comments><guid isPermaLink="false">fc3c50e6-ba70-4557-82c6-7029f3121c16</guid><pubDate>Fri, 28 Aug 2026 13:37:20 +0000</pubDate><atom:updated>2026-08-28T13:37:20.790Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விண்ணப்பம்,Application,திட்டம்,Book,கால அவகாசம் நீட்டிப்பு,பரிசு,நூல்,Deadline extended</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/l1lf8roa/27.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/l1lf8roa/27.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சிறந்த நூல் பரிசு திட்டத்திற்கணை விண்ணப்பங்களைப் பெற அக்டோபர் 5-ந் தேதி வரை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">கால நீட்டிப்பு</a> வழங்கப்படுகிறது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>கால நீட்டிப்பு</h2><p>தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாகச் செயற்படுத்தப்படும் சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டத்தில் 2025ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நூல்களுக்கான நூலாசிரியர்களுக்கும், பதிப்பகத்தார்களுக்கும் கூடுதல் வாய்ப்பு வழங்கும் வகையில் விண்ணப்பங்கள் நிறைவுசெய்து அளிக்கப் பெறும் நாள் அக்டோபர் 5-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பெறுகிறது.</p><h2>பரிசுத்தொகை</h2><p>அவ்வகையில், 33 வகைப்பாடுகளின் வாயிலாகப் பரிசுப்போட்டிக்கு நூல்கள் வரவேற்கப்படுகின்றன. ஒவ்வொரு வகைப்பாட்டிலும் சிறந்த நூலாக ஒரு நூல் தெரிவு செய்யப்பட்டு, நூலாசிரியருக்குப் பரிசுத்தொகையாக ரூ.50,000/- அந்நூலைப் பதிப்பித்த பதிப்பகத்தாருக்குப் பாராட்டுத்தொகையாக ரூ.25,000/- என ஒரு நூலுக்கு ரூ. 75,000/- பரிசுத்தொகைகள் வழங்கப்பெறும்.</p><h2>கடைசி நாள்</h2><p>விண்ணப்பங்களை துறையின் வலைதளத்திலிருந்து (tamilvalarchithurai.tn.gov.in) இலவசமாகப் பதிவிறக்கம்செய்து பரிசுக்குரிய விதிமுறைகளின்படி விண்ணப்பங்களை நிறைவு செய்து நூல்களுடன் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாக அனுப்பப்பெற வேண்டும். விண்ணப்பங்களை அஞ்சல் வாயிலாகப் பெற 23X10 செ.மீ அளவிலான தன் முகவரியிட்ட உறையில் ரூ.10 அஞ்சல்வில்லை ஒட்டி அனுப்பியும் பெற்றுக்கொள்ளலாம்.</p><p>போட்டிக்கான விண்ணப்பத்துடன் 5 நூற்படிகளும் போட்டிக் கட்டணம் ரூ.100/- “தமிழ் வளர்ச்சி இயக்குநர், சென்னை“ (Director of Tamil Development, Chennai) என்ற பெயரில் வங்கிக் கேட்புக் காசோலை (Demand Draft) சேர்த்து அளிக்க வேண்டும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெற அக்டோபர் 5-ந் தேதி கடைசி நாளாகும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 9 இடங்களில் இன்று வெயில் சதமடித்தது</title><link>https://www.dailythanthi.com/news/weather/heatwave-in-nine-tamil-nadu-towns-today</link><comments>https://www.dailythanthi.com/news/weather/heatwave-in-nine-tamil-nadu-towns-today#comments</comments><guid isPermaLink="false">39866fa3-7657-4ff9-89b7-79c8ba8e3499</guid><pubDate>Fri, 28 Aug 2026 13:30:50 +0000</pubDate><atom:updated>2026-08-28T13:30:50.925Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Weather,வானிலை,Weather update,heat,வானிலை தகவல்,வெப்பம்,வெயில் சதம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/01r2vy1v/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ வெயில் சதம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/01r2vy1v/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்தாலும், பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. </p><p>இந்த நிலையில், தமிழகத்தில் 9 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று அதிகமாக வெப்பநிலை பதிவான இடங்கள் வருமாறு:-</p><p>மதுரை விமான நிலையம் - 104° பாரன்ஹீட் (40.0° செல்சியஸ்)</p><p>மதுரை நகரம் - 103.28° பாரன்ஹீட் (39.6° செல்சியஸ்)</p><p>வேலூர் - 102.92° பாரன்ஹீட் (39.4° செல்சியஸ்)</p><p>திருச்சி - 102.38° பாரன்ஹீட் (39.1° செல்சியஸ்)</p><p>பாளையங்கோட்டை - 102.02° பாரன்ஹீட் (38.9° செல்சியஸ்)</p><p>பரங்கிப்பேட்டை - 101.12° பாரன்ஹீட் (38.4° செல்சியஸ்)</p><p>திருத்தணி - 100.76° பாரன்ஹீட் (38.2° செல்சியஸ்)</p><p>நாகப்பட்டினம் - 100.4° பாரன்ஹீட் (38.0° செல்சியஸ்)</p><p>தஞ்சாவூர் - 100.4° பாரன்ஹீட் (38.0° செல்சியஸ்)</p>]]></content:encoded></item><item><title>வைகை அணைக்கான நீர்வரத்து நிறுத்தம்: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-inflow-to-vaigai-dam-halted-risk-of-drinking-water-shortage</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-inflow-to-vaigai-dam-halted-risk-of-drinking-water-shortage#comments</comments><guid isPermaLink="false">823598ed-f64a-4d6c-9293-2fe23176a5e3</guid><pubDate>Fri, 28 Aug 2026 13:29:31 +0000</pubDate><atom:updated>2026-08-28T13:29:31.848Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>வைகை அணை,drinking water,Vaigai River,குடிநீர் தட்டுப்பாடு</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/2r2sqa3b/11.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/2r2sqa3b/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மானாமதுரை,  </p><p>போதிய மழை இல்லாததால் வைகை ஆற்றுப்படுகை பாலைவனம் போல் காட்சியளிக்கிறது. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.</p><h2>வறட்சியின் பிடியில் வைகை</h2><p>கடந்த சில நாட்களாக போதிய மழை இல்லாத காரணத்தினாலும், தென் மாவட்டங்களில் கோடை வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருவதாலும் வைகை அணைக்கான நீர்வரத்து முற்றிலும் நின்றுபோனது. 71 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் சரிந்துள்ளதால், ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய நீராதாரமான வைகை ஆறு வறட்சியின் பிடியில் சிக்கி உள்ளது. </p><p>குறிப்பாக மழைக்காலங்களில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளமென ஆர்ப்பரித்து ஓடும் மானாமதுரை அருகே கீழப்பசலை மதகு அணை பகுதி, தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு வறண்டு பாலை வனமாக காட்சியளிக்கிறது. தடுப்பணையின் மதகுகள் அனைத்தும் துருப்பிடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. தடுப்பணையை ஒட்டியுள்ள ஆற்றுப்பகுதிகள் முழுவதும் ஆழமான வெடிப்புகளுடன் தரிசு நிலம் போல் காட்சியளிக்கின்றன.</p><h2>விவசாய பணிகள் முடக்கம்</h2><p>வழக்கமாக மதகு அணையில் மீன்பிடிக்கவும், தண்ணீரின் அழகைக் காணவும் குவியும் மக்கள் கூட்டம் இன்றி, அப்பகுதி முழுவதுமாக ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.</p><p>வைகை ஆற்று நீரை மட்டுமே பிரதான வாழ்வாதாரமாகக் கொண்ட சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களின் பாசன கண்மாய்கள், ஏரிகள் மற்றும் குளங்கள் அனைத்தும் நீர்வரத்து இன்றி வறண்டு கிடக்கின றன. இதனால் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடைபெற வேண்டிய விவசாய பணிகள் முற்றிலுமாக முடங்கியுள்ளன. நிலத்தடி நீர்மட்டம் பல நூறு அடிகள் கீழே சென்றுவிட்டதால், ஆழ்துளை கிணறுகளும் செயலிழந்து வருகின்றன.</p><h2>குடிநீர் தட்டுப்பாடு</h2><p>ஆற்றுப்படுகையில் உள்ள குடிநீர் திட்டக்கிணறுகளில் நீர்மட்டம் வற்றிவிட்டதால், கிராமப்புறங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு தலை தூக்க தொடங்கியுள்ளது. ஆற்றங்கரையோர கிராமங்களில் உள்ள ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் தவிப்பிற்கு உள்ளாகியுள்ளன.</p><p>தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு, வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மானாமதுரை மற்றும் தென் மாவட்டக் கிராமங்களுக்கு லாரிகள் மூலம் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு உரிய வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை: விசிக நிர்வாகி பட்டப்பகலில் வெட்டிக்கொலை..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-vck-functionary-hacked-to-death-in-broad-daylight</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-vck-functionary-hacked-to-death-in-broad-daylight#comments</comments><guid isPermaLink="false">0f5197b5-8534-49d3-bef9-a0d1274b6ee7</guid><pubDate>Fri, 28 Aug 2026 13:25:41 +0000</pubDate><atom:updated>2026-08-28T13:25:41.277Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,வெட்டிக்கொலை,VCK,விசிக நிர்வாகி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/g07jwyna/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/g07jwyna/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விசிக நிர்வாகி பட்டப்பகலில் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><h2>விசிக நிர்வாகி கொலை</h2><p>சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பகுதியை சேர்ந்த அன்பழகன் என்ற மைனாக்குட்டி இவர் விசிக நிர்வாகியாக இருந்து வருகிறார் . இவர் இன்று அதே பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே தலைக்கவசம் அணிந்து வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி தப்பி ஓடிவிட்டனர். உடனே அங்கிருந்த பொதுமக்கள் 108-க்கு அழைப்பு விடுத்தனர். இதனையடுத்து அங்கு ஆம்புலன்சில் வந்த மருத்துவர்கள் அவரை பரிசோதித்து உயிரிழந்ததாக தெரிவித்தனர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இது குறித்து தகவல் அறிந்த சங்கர் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலையில் ஈடுபட்ட மர்ம நபர்களை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">போலீசார் </a>வலைவீசி தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட அன்பழகன் மீது 3 கொலை வழக்குகள் உள்ளதாகவும், இதன் காரணமாக முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>காமராஜர் பெயரிலான விரிவாக்க காலை உணவு திட்டம்: விருதுநகரில் செப்.17-ல் தொடங்கி வைக்கிறார் முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kamarajar-named-expanded-breakfast-scheme-chief-minister-vijay-to-launch-it-in-virudhunagar-on-september-17</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kamarajar-named-expanded-breakfast-scheme-chief-minister-vijay-to-launch-it-in-virudhunagar-on-september-17#comments</comments><guid isPermaLink="false">bca2f77f-9e73-4c69-a5f3-f455cce739cf</guid><pubDate>Fri, 28 Aug 2026 13:23:08 +0000</pubDate><atom:updated>2026-08-28T13:23:08.758Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,Tamilnadu,விஜய்,திமுக,தமிழகம்,தமிழ்நாடு அரசு,TN govt,Kamarajar,காமராஜர்,தமிழக முதல்-அமைச்சர்,காமராஜர் காலை உணவுத் திட்டம்,Kamarajar Breakfast Scheme</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/jk6onzpt/peyar.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/jk6onzpt/peyar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>காமராஜர் பெயரிலான விரிவாக்க காலை உணவு திட்டத்தை விருதுநகரில் செப்டம்பர் 17-ந் தேதி <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a> தொடங்கி வைக்கிறார்.</p><h2>தி.மு.க. ஆட்சியில் அறிமுகம்</h2><p>கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 1.45 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றனர். </p><p>அதன்பிறகு, இந்த திட்டம் நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. அதன்பின்னர், 19.34 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். </p><h2>காமராஜர் காலை உணவுத் திட்டம்</h2><p>தற்போது, த.வெ.க. அரசு புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், இத்திட்டத்தை 6 முதல் 8-ம் வகுப்பு வரை செப்டம்பர் 17-ந் தேதி முதல் விரிவாக்கம் செய்வதாக அறிவித்த <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a>, திட்டத்திற்கான பெயரையும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என்று மாற்றினார்.</p><h2>ரூ.343 கோடி</h2><p>இதன் மூலம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 15.14 லட்சம் மாணவர்கள் கூடுதலாக பயன்பெறுவார்கள். இந்த திட்டத்திற்காக ரூ.343 கோடி நிதி செலவிடப்பட உள்ளது. நடப்பு நிதியாண்டில் (2026-27) ரூ.217 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையும் கடந்த மாதம் (ஜூலை) 22-ந் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><h2>விருதுநகர் செல்கிறார், முதல்-அமைச்சர் விஜய்</h2><p>இந்த நிலையில், விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள காலை உணவுத் திட்டத்தை செப்டம்பர் 17-ந் தேதி விருதுநகரில் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a> தொடங்கிவைக்க இருக்கிறார். </p><p>இதற்காக விருதுநகருக்கு நேரில் செல்லும் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a>, காமராஜருக்கு பெருமை சேர்க்கும் வகையில், அவர் படித்த கே.வி.எஸ்.நடுநிலைப் பள்ளியில், விரிவாக்க காலை உணவு திட்டத்தை தொடங்கிவைக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் செய்யப்பட்டு வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 6 இடங்களில் இன்று வெயில் சதம்</title><link>https://www.dailythanthi.com/news/weather/six-places-in-tamil-nadu-scorched-by-heat-today</link><comments>https://www.dailythanthi.com/news/weather/six-places-in-tamil-nadu-scorched-by-heat-today#comments</comments><guid isPermaLink="false">ab258054-1754-4ce3-8a49-f9c90a9f4723</guid><pubDate>Sat, 22 Aug 2026 14:07:10 +0000</pubDate><atom:updated>2026-08-28T13:21:39.172Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Weather,வானிலை,Weather update,வெயில்,heat,வானிலை தகவல்,வெயில் சதம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/jyylyc6k/Untitled-8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ வெயில் சதம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/jyylyc6k/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்தாலும், பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது.</p><p>இந்த நிலையில், தமிழகத்தில் 6 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று அதிகமாக வெப்பநிலை பதிவான இடங்கள் வருமாறு:-</p><p>மதுரை நகரம் - 100.76° பாரன்ஹீட் (38.2° செல்சியஸ்)</p><p>திருச்சி - 100.58° பாரன்ஹீட் (38.1° செல்சியஸ்)</p><p>மதுரை விமான நிலையம் - 100.4° பாரன்ஹீட் (38.0° செல்சியஸ்)</p><p>தஞ்சாவூர் - 100.4° பாரன்ஹீட் (38.0° செல்சியஸ்)</p><p>பாளையங்கோட்டை - 100.22° பாரன்ஹீட் (37.9° செல்சியஸ்)</p><p>வேலூர் - 100.04° பாரன்ஹீட் (37.8° செல்சியஸ்)</p>]]></content:encoded></item><item><title>பூலித்தேவனின் 311-ஆவது பிறந்தநாள்: தென்காசியில் அதிமுக சார்பில் மரியாதை..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/puli-thevars-311th-birth-anniversary-aiadmk-pays-tribute-in-tenkasi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/puli-thevars-311th-birth-anniversary-aiadmk-pays-tribute-in-tenkasi#comments</comments><guid isPermaLink="false">43543401-2990-4530-9db7-a750bb40e55f</guid><pubDate>Fri, 28 Aug 2026 13:06:49 +0000</pubDate><atom:updated>2026-08-28T13:06:49.967Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,எடப்பாடி பழனிசாமி,அதிமுக,Tenkasi,தென்காசி,பூலித்தேவர்,பூலித்தேவர் பிறந்த நாள்,Puli Thevar,Edapadi Palanisamy</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/5jxxwnht/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/5jxxwnht/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாமன்னர் பூலித்தேவனின் 311-ஆவது பிறந்த நாளையொட்டி தென்காசி மாவட்டம், நெற்கட்டும்செவலில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>பூலித்தேவன் பிறந்த நாள்</h2><p>இந்திய விடுதலை வரலாற்றில் 'வெள்ளையனே வெளியேறு' என்று சுதந்திரத்திற்காக முதன்முதலில் முழக்கமிட்ட போராட்ட மாவீரரும், வீர உணர்ச்சியும், இறை உணர்வும் மிகுந்தவருமான மாமன்னர் பூலித்தேவனின் 311-ஆவது பிறந்த நாளான 1.9.2026 செவ்வாய்க் கிழமை காலை 10.30 மணிக்கு, 'தென்காசி வடக்கு மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதி, நெற்கட்டும்செவல்' என்ற இடத்தில் அமைந்துள்ள மாமன்னர் பூலித்தேவனுடைய திருஉருவச் சிலைக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் </p><p>திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, என். தளவாய்சுந்தரம், உதயகுமார், ராஜேந்திரபாலாஜி , சுதா கே. பரமசிவன், சி.த. செல்லப்பாண்டியன், என். சின்னத்துரை, ராஜன் செல்லப்பா, பாஸ்கரன், சண்முகநாதன், ராஜேந்திரன், இன்பதுரை, ராஜலெட்சுமி, சுப்பையா பாண்டியன், சுசீகரன், கிருஷ்ணமுரளி, , அய்யாத்துரைபாண்டியன், கணேசராஜா, செல்வமோகன்தாஸ் பாண்டியன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.</p><h2>நிர்வாகிகளுக்கு அழைப்பு</h2><p>இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, தென்காசி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் சுசீகரன் மிகச் சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.</p><p>மாமன்னர் பூலித்தேவனுக்கு மரியாதை செலுத்தும் இந்நிகழ்ச்சியில், <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தென்காசி </a>வடக்கு, தென்காசி தெற்கு, திருநெல்வேலி மாநகர் ஆகிய மாவட்டங்களில், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அமைச்சர் ஷாஜகானின் அடிமைத்தனமான பேச்சு கண்டிக்கத்தக்கது - இயக்குனர் அமீர் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-shahjahans-servile-speech-is-condemnable-director-aamir</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-shahjahans-servile-speech-is-condemnable-director-aamir#comments</comments><guid isPermaLink="false">04e9e9ec-a34d-4f50-8040-0a617f294269</guid><pubDate>Fri, 28 Aug 2026 13:05:09 +0000</pubDate><atom:updated>2026-08-28T13:05:09.721Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இயக்குனர் அமீர்,Director Aamir,அமைச்சர் ஷாஜகான்,Minister Shahjahan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/s6kijjyr/26.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/s6kijjyr/26.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><p>அமைச்சர் ஷாஜகானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, இயக்குநர் அமீர் தனது வாட்ஸ்அப் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.</p><p>அதில் , “முஸ்லிம் லீக் தான் தவெகவுடன் கூட்டணி வைத்துள்ளது; முஸ்லிம்கள் அல்ல என்பதை உணர்ந்து பேசுங்கள். <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">அமைச்சர் ஷாஜகானின்</a> அடிமைத்தனமான பேச்சு கண்டிக்கத்தக்கது”.</p><p>மேலும், அரசியல் கூட்டணியையும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும் ஒன்றாக கருதாமல் பேச வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் தனது கருத்தை அவர் பதிவு செய்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலம் - தமிழக அரசு அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-5000-crore-bond-auction-tamil-nadu-government-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-5000-crore-bond-auction-tamil-nadu-government-announcement#comments</comments><guid isPermaLink="false">81f80b95-b855-4939-869a-ed8f3d3622b9</guid><pubDate>Fri, 28 Aug 2026 12:40:37 +0000</pubDate><atom:updated>2026-08-28T12:40:37.795Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt,auction,ஏலம்,பிணையப் பத்திரங்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/xzld4xq0/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக அரசு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/xzld4xq0/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ.5,000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 7.49 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள் 2036 ரூ.1,000 கோடி மறுவெளியீடு, 7.62 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள் 2041 ரூ.2,000 கோடி மறுவெளியீடு மற்றும் 7.70 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள் 2051 ரூ.2,000 கோடி மறுவெளியீடு ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.</p><p>இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் செப்டம்பர் 01, 2026 அன்று நடத்தப்படும். போட்டி ஏலக்கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.00 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் [Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System] மின்னணு படிவத்தில் (Electronic format) செப்டம்பர் 01, 2026 அன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழக சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்பு – ஜெய்சங்கருக்கு நன்றி தெரிவித்த நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-tourists-safely-rescued-nainar-nagendran-thanks-jaishankar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-tourists-safely-rescued-nainar-nagendran-thanks-jaishankar#comments</comments><guid isPermaLink="false">d530c52d-ff93-446a-9131-a7c6e13b508f</guid><pubDate>Fri, 28 Aug 2026 12:40:13 +0000</pubDate><atom:updated>2026-08-28T12:40:13.843Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழகம்,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Tourists,சுற்றுலா பயணிகள் Tourists,பத்திரமாக மீட்பு,In Tamil Nadu,Foreign Minister Jaishankar,மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/68fyazna/25.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/68fyazna/25.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நேபாளத்தில் இருந்து பத்திரமாக தமிழக சுற்றுலா பயணிகள் தாயகம் திரும்பியதற்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக பாஜக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன்</a> நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>கடந்த சில தினங்களுக்கு முன்பு நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அனைவரும் பத்திரமாக தாயகம் திரும்பிட, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தோம்.</p><h2>தமிழக சுற்றுலாப் பயணிகள்</h2><p>அந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து, பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்,  மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரின்  துரிதமான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால், நேபாளத்தில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இன்று டெல்லி விமான நிலையத்திற்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டுள்ளனர்.</p><p>அவர்களை மத்திய வெளியுறவுத்துறை மந்திரியுடன் இணைந்து நேரில் வரவேற்றது மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளிக்கிறது.</p><h2>மனமார்ந்த நன்றி</h2><p>நெருக்கடியான சூழ்நிலையில் உரிய நேரத்தில் தலையிட்டு, தமிழகத்தைச் சேர்ந்த நமது சகோதர, சகோதரிகள் அனைவரும் பாதுகாப்பாக தாயகம் திரும்புவதற்கு விரைந்து நடவடிக்கை மேற்கொண்ட பாரதப் பிரதமர்நரேந்திர மோடி அவர்களுக்கும், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அவர்களுக்கும் தமிழக மக்கள் சார்பாகவும், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாகவும், பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சார்பாகவும் எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஆணவப் படுகொலையை தடுக்க விரைவில் சிறப்பு சட்டம்: அமைச்சரின் அறிவிப்புக்கு இந்திய கம்யூ. கட்சி வரவேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-law-to-prevent-honour-killings-soon-indian-communist-party-welcomes-ministers-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-law-to-prevent-honour-killings-soon-indian-communist-party-welcomes-ministers-announcement#comments</comments><guid isPermaLink="false">2b12ef0f-8b98-4b98-b997-5612cc018766</guid><pubDate>Fri, 28 Aug 2026 12:32:02 +0000</pubDate><atom:updated>2026-08-28T12:32:02.539Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,honour killing,CPI,ஆணவ படுகொலை,சிறப்பு சட்டம்,மு.வீரபாண்டியன்,M Veerapandian,அமைச்சர் வன்னியரசு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/19eqnj69/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.வீரபாண்டியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/19eqnj69/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஆணவப் படுகொலையை தடுக்க விரைவில் சிறப்பு சட்டம் கொண்டு வரப்படும் என அமைச்சா் வன்னி அரசு அறிவித்துள்ளது வரவேற்பிற்குரியது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்து ஓய்வு பெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையிலான குழுவின் பரிந்துரை கிடைத்தவுடன் ஆணவப் படுகொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் இயற்றப்படும் என தமிழ்நாடு சட்டமன்றத்தில் சமூக நீதித்துறை அமைச்சர் நேற்று (27.08.2026) அறிவித்துள்ளார்.</p><p>தமிழ்நாட்டில் சாதி கடந்து கலப்புத் திருமணங்கள் (சாதிமறுப்பு திருமணங்கள்) செய்துகொள்வோர், சாதி கடந்து காதலிப்போர் தாக்கப்படுவதும் கொடூரமாக கொலை செய்யப்படுவதும் இன்றைய நாகரீக சமூகத்திலும் தொடர்வது மிகுந்த வருத்தத்தை தருகிறது.</p><p>தனது வாழ்க்கை இணையரை தேர்ந்தெடுப்பதும், இணைந்து வாழ்வதும் ஒவ்வொரு தனிநபருக்கும் நமது அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படையான உரிமையாகும். அந்த உரிமையை மதிக்காமல் மீறுவதும், தனிநபர் உரிமைகளில் தலையிடுவதும் மனித உரிமை மீறலாகும்.</p><p>சாதி ஆதிக்க மனநிலையும், இந்திய மக்களின் மனங்களில் இன்றளவும் ஆதிக்கம் செலுத்தும் சனாதனதர்ம முற்போக்குக் கோட்பாடுகளும், சாதி கடந்த புறமனத்திருமணங்களை சகித்துக் கொள்ள முடியாத நிலையை உருவாக்குகின்றன. இதன் கோர வடிவமாக, சாதி ஆணவப் படுகொலைகள் அரங்கேறுகின்றன.</p><p>இத்தகைய படுகொலைகளை தடுப்பதும், கலப்புமணம் செய்து கொள்வோரை பாதுகாப்பதும் ஜனநாயகக்&nbsp;&nbsp;கடமையாகும். நாட்டின் முன்னேற்றத்திற்கு, சாதியற்ற சமூகத்தை படைப்பதற்கு கலப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்திட வேண்டும். கலப்புமணம் புரிவோருக்கு எதிரான வன்முறைகளை தடுத்திட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டே வலியுறுத்தியுள்ளது.</p><p>கலப்புத் திருமணங்கள் மட்டுமே சாதியற்ற, சமத்துவமான சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதில் அண்ணல் அம்பேத்கர் மிக உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். "சாதியை ஒழிக்கும் வழி" (Annihilation of Caste) என்ற தனது புகழ்பெற்ற நூலில் இதை வலியுறுத்தியுள்ளார். "ரத்தக் கலப்பே&nbsp;&nbsp;நாம் அனைவரும் ஒன்றே என்ற மனநிலையை உருவாக்கும்" என டாக்டர் அம்பேத்கர் கூறியுள்ளார்.</p><p>அந்த வகையில் கலப்பு மணங்களை ஊக்கப்படுத்துவதும்,&nbsp;சாதி ஆணவ படுகொலைகளை தடுப்பதும் அவசியமாகும். சாதி ஆணவ படுகொலைகளை தடுத்திட சிறப்பு சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வருவது வரவேற்பிற்குரியது. பாராட்டுக்குரியது . இந்தச் சட்டத்தை கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல், கலப்புத் திருமணத்தை ஊக்கப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.</p><p>கலப்புத் திருமணம் புரிந்து கொண்டோரின்&nbsp;&nbsp;சமூகப் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்திட வேண்டும். கலப்புத்&nbsp;&nbsp;திருமணம் செய்து கொண்டோரின் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் தனி இட ஒதுக்கீட்டை கொண்டு வருவதற்கும் முயல வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளத்தில் பலியானவர்களுக்கு சென்னை பள்ளி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-school-students-pay-tribute-to-nepal-flood-victims-by-holding-candles</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-school-students-pay-tribute-to-nepal-flood-victims-by-holding-candles#comments</comments><guid isPermaLink="false">3121ca8d-e7af-46dc-9420-d45cab4b3963</guid><pubDate>Fri, 28 Aug 2026 12:22:07 +0000</pubDate><atom:updated>2026-08-28T12:22:07.141Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,தமிழகம்,Nepal,நேபாளம்,Tribute,பள்ளி மாணவர்கள்,அஞ்சலி,school student,nepal flood,நேபாளம் வெள்ளம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/4hd4474c/sri.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/4hd4474c/sri.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>நேபாள வெள்ளத்தில் சிக்கி பலியானர்களுக்கு சென்னை பள்ளி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள்.</p><p>நேபாளத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி 469 பேர் பலியானார்கள். 977 பேரை இன்னும் காணவில்லை. 21 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 82 தமிழர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.</p><p>இந்த நிலையில், <a href="https://www.dailythanthi.com/topic/chennai">சென்னை</a> தியாகராயநகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலயா பள்ளியில் இன்று நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. </p><p>இதில், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள். உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி மௌன அஞ்சலியும் செலுத்தினர். </p>]]></content:encoded></item><item><title>காலையில் குறைந்து, மாலையில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... நிலவரம் என்ன..?</title><link>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-drops-in-morning-surges-in-evening-whats-the-status</link><comments>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-drops-in-morning-surges-in-evening-whats-the-status#comments</comments><guid isPermaLink="false">b194d44f-1570-4318-b7dd-bf61ddea77df</guid><pubDate>Fri, 28 Aug 2026 11:48:02 +0000</pubDate><atom:updated>2026-08-28T11:48:02.816Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Gold Rate,தங்கம் விலை,வெள்ளி விலை,Silver rate,Gold Price,Silver Price,விலை நிலவரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/oofzqz0h/Untitled-4.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/oofzqz0h/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தங்கம் (Gold Rate)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை 2 முறை குறைந்தது. காலையில் சவரனுக்கு ரூ.560-ம், பிற்பகலில் சவரனுக்கு ரூ.1,720-ம் குறைந்து ஒரு சவரன் ரூ.1,17,800-க்கு விற்பனை செய்யப்பட்டது.</p><p>இதன் தொடர்ச்சியாக இன்று காலையிலும் தங்கம் விலை குறைந்தது. சவரனுக்கு ரூ.600-ம், கிராமுக்கு ரூ.75-ம் குறைந்து ஒரு சவரன் 1,17,200-க்கும், ஒரு கிராம் ரூ.14,650-க்கும் விற்பனை செய்யப்பட்டது.</p><p>இந்த நிலையில் இன்று மாலையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மாலையில் சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,18,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>வெள்ளி விலை இன்று காலையில் கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.260-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் மாலையில் கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் உயர்ந்து, வெள்ளி ஒரு கிராம் ரூ.265-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>பெரம்பூர் மக்களின் 30 ஆண்டு கோரிக்கை நிறைவேற்றம்: முதல்-அமைச்சர் விஜய்க்கு பொதுமக்கள் நன்றி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fulfillment-of-30-year-old-demand-of-perambur-people-public-thanks-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fulfillment-of-30-year-old-demand-of-perambur-people-public-thanks-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">5e53da25-fa8e-4750-b51f-9b701f654ad1</guid><pubDate>Fri, 28 Aug 2026 11:37:51 +0000</pubDate><atom:updated>2026-08-28T11:37:51.166Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>people,demand,கோரிக்கை,பெரம்பூர்,Perambur,முதல்-அமைச்சர் விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/mx3hgw9y/24.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/mx3hgw9y/24.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட கணபதி தெரு மற்றும் ராமகிருஷ்ணன் தெரு இடையே புதிய சாலை வசதி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதி மக்களின் 30 ஆண்டுகால நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.</p><h2>பல ஆண்டு கோரிக்கை</h2><p>கணபதி தெரு மற்றும் ராமகிருஷ்ணன் தெரு இடையே இதுவரை போதிய சாலை வசதி இல்லாததால், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. இதனால், இரு தெருக்களையும் இணைக்கும் வகையில் பாதை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">கோரிக்கை</a> விடுத்து வந்தனர்.</p><p>இந்நிலையில், பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், முதல்-அமைச்சர் விஜய்யின் உத்தரவின்படி கணபதி தெரு–ராமகிருஷ்ணன் தெரு இடையே பாதை ஏற்படுத்தப்பட்டு, புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது.</p><h2>மக்கள் வரவேற்பு</h2><p>புதிய சாலை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால், மாணவர்கள் பள்ளிக்குச் செல்லவும், பொதுமக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காக சென்று வரவும் சிரமம் குறைந்துள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.</p><h2>முதல்-அமைச்சர் விஜய்க்கு நன்றி</h2><p>இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “கணபதி தெரு மற்றும் ராமகிருஷ்ணன் தெரு இடையே சாலை வசதி அமைக்க வேண்டும் என்பது எங்களது 30 ஆண்டுகால கோரிக்கையாக இருந்தது. தற்போது அந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதால் மகிழ்ச்சி அடைகிறோம். முதல்-அமைச்சர் விஜய்க்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றனர்.</p><p>மேலும், பெரம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், கழிவுநீர் தேங்கும் பிரச்சினைக்கு தீர்வு காணுதல், பழுதடைந்த அல்லது எரியாத தெருவிளக்குகளை கண்டறிந்து சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் தேவையான சாலை வசதிகள் ஏற்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பெண் துணை மேயர் சஸ்பெண்ட்: சேலம் மேயரின் நடவடிக்கைக்கு ஜோதிமணி எம்.பி. கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/female-deputy-mayor-suspended-mp-jothimani-condemns-salem-mayors-action</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/female-deputy-mayor-suspended-mp-jothimani-condemns-salem-mayors-action#comments</comments><guid isPermaLink="false">baf9b772-1a0f-4788-bc80-92b86bd294b9</guid><pubDate>Fri, 28 Aug 2026 11:31:49 +0000</pubDate><atom:updated>2026-08-28T11:31:49.654Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,சேலம்,ஜோதிமணி,ஜோதிமணி எம்.பி.,Jothimani,jothimani mp</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/ho13wwsb/jothimani-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜோதிமணி எம்.பி. ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/ho13wwsb/jothimani-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஒரு பெண் பிரதிநிதியை மாமன்றத்தில் இவ்வாறாக அவமதிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என காங்கிரஸ் எம்.பி. <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF">ஜோதிமணி </a>தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திப்பதாவது;-</p><h2>துணை மேயர் சஸ்பெண்ட்</h2><p>சக மக்கள் பிரதிநிதி என்றும் பாராமல், சேலம் மாநகராட்சி காங்கிரஸ் துணை மேயர் சாரதா தேவியின் இருக்கையை மாற்றுவதற்காக, மேயரே கவுன்சிலர்களுடன் சென்று நெருக்கடி கொடுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.</p><p>தனது உரிமைக்காகத் தரையில் அமர்ந்து முழக்கமிட்டு தர்ணாவில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் பெண் துணை மேயரை, 2 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்துள்ள மேயரின் சர்வாதிகார நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.</p><h2>ஏற்றுக்கொள்ள முடியாது</h2><p>ஜனநாயகத்தின் மாண்பு மக்கள் பிரதிநிதிகளுக்கு அளிக்கப்படும் மரியாதையில்தான் அடங்கியுள்ளது. ஒரு பெண் பிரதிநிதியை மாமன்றத்தில் இவ்வாறாக அவமதிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் துணை மேயரை சஸ்பெண்ட் செய்வதா? - மாணிக்கம் தாகூர் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/suspending-a-democratically-elected-female-deputy-mayor-manickam-tagore-condemns-the-move</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/suspending-a-democratically-elected-female-deputy-mayor-manickam-tagore-condemns-the-move#comments</comments><guid isPermaLink="false">6a70e6e2-932f-4bd6-b425-8c90754661c7</guid><pubDate>Fri, 28 Aug 2026 11:28:51 +0000</pubDate><atom:updated>2026-08-28T11:28:51.569Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணிக்கம் தாகூர்,Deputy Mayor,துணை மேயர்,Manickam Tagore</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/56brle7f/mani.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/56brle7f/mani.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”சென்னை மாநகராட்சியில் மேயர் அருகில் துணை மேயர் மகேஷ் குமார் அமர வைக்கப்படும் போது, சேலம் மாநகராட்சியில் மட்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் துணை மேயர் சகோதரி சாரதா தேவியின் இருக்கையை மேடையை விட்டு மாற்றி, அவரை சஸ்பெண்ட் செய்த செயல் திமுக மேயர் ராமச்சந்திரனின் மற்றும் திமுகவின் அப்பட்டமான பெண் பிரதிநிதித்துவத்திற்கு எதிரான போக்கை வெளிப்படையாகக் காட்டுகிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!</p><p>பெண்கள் அதிகாரப் பொறுப்புகளுக்கு வரும்போது அவர்களை ஒடுக்கி அவமதிப்பதுதான் திமுக மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் உண்மையான மனநிலையா? மக்களுக்கு ஆக்கப்பூர்வமாகப் பணியாற்றாமல் நாற்காலியை வைத்து பழிவாங்கும் அரசியல் செய்யும் இவர்களின் அப்பட்டமான பெண் விரோதப் போக்கை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சேலம் திமுக மேயரின் இந்த செயலை வண்மையாக கண்டிக்கிறேன்.</p><p>மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட துணை மேயர் சகோதரி திருமதி சாரதா தேவி அவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை நிற்கும்; எத்தனை தடைகள் வந்தாலும் மக்களுக்கான மக்கள் பணியைத் தொடர்ந்து உறுதியோடு முன்னெடுக்கும்!”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை எங்கெல்லாம் கரைக்கலாம்?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/locations-for-the-immersion-of-vinayagar-idols-in-tiruvannamalai-district</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/locations-for-the-immersion-of-vinayagar-idols-in-tiruvannamalai-district#comments</comments><guid isPermaLink="false">b053d087-584f-44ea-a4e6-26c6b5b65b54</guid><pubDate>Fri, 28 Aug 2026 11:16:00 +0000</pubDate><atom:updated>2026-08-28T11:16:00.833Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிகச் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514969</atom:uri></atom:author><description></description><media:keywords>Aanmigam,Devotional,ஆன்மிகம்,விநாயகர் சதுர்த்தி,விநாயகர் சிலைகள்,விநாயகர் சிலைகள் கரைப்பு,Vinayagar Idols,Vinayagar Chathurthi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/zkctjm7j/Vinayagar-Chaturthi-idols.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ விநாயகர் சிலைகள்]]></media:title><media:description type="html"><![CDATA[ விநாயகர் சதுர்த்தி விழா, விநாயகர் சிலைகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/zkctjm7j/Vinayagar-Chaturthi-idols.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>ஆன்மிகம் (Devotional)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை, </p><p>திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகளை கரைக்கும் இடங்கள் குறித்த விவரம் மற்றும் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.</p><h2>விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்</h2><p>இந்த ஆண்டு <a href="https://www.dailythanthi.com/topic/vinayagar-chathurthi">விநாயகர் சதுர்த்தி</a> செப்டம்பர் 14-ஆம் தேதி திங்கட்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை மற்றும் சிலைகளை கரைக்கும் வழிமுறைகள் தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் வந்தனா கார்க் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்று தொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி (www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது) மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.</p><p>எனவே, களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது.</p><h2>சிலைகளை கரைக்கும் இடங்கள்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/vinayagar-idols">சிலைகளின் ஆபரணங்கள் </a>தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள். வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும் சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக. இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.</p><p>திருவண்ணாமலை மாவட்டத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/vinayagar-idols">விநாயகர் சிலைகள்</a> கரைப்பதற்காக கண்டறியப்பட்ட தாமரைக்குளம், சிங்காரப்பேட்டை ஏரி, செங்கம் பச்சை யம்மன் கோவில் குளம், கோனேரிராயன் குளம், ஐந்து கண் வாராவதி குளம், பூமா செட்டிகுளம், போளூர் ஏரி, கூர் ஏரி ஆகிய இடங்களில் மட்டும் கரைக்க வேண்டும். விநாயக சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சோனியா காந்தியின் புத்தகத்தை தடுத்து நிறுத்துவது கருத்துச் சுதந்திரத்தை படுகொலை செய்வதற்கு ஒப்பானது - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/blocking-sonia-gandhi-book-is-like-killing-freedom-of-expression-manickam-thakur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/blocking-sonia-gandhi-book-is-like-killing-freedom-of-expression-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">63e33390-c787-4180-aa05-f2e915418c43</guid><pubDate>Fri, 28 Aug 2026 11:15:51 +0000</pubDate><atom:updated>2026-08-28T11:15:51.792Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,Book,புத்தகம்,Sonia Gandhi,சோனியா காந்தி,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/9m3ocbso/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/9m3ocbso/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சோனியா காந்தியின் புத்தகத்தை அழுத்தம் கொடுத்து தடுத்து நிறுத்துவது கருத்துச் சுதந்திரத்தை படுகொலை செய்வதற்கு ஒப்பானது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>பெங்குயின் வேர்ல்ட்வைட் நிறுவனம், சோனியா காந்தியின் வரவிருக்கும் புத்தகத்தை எந்தவித மாற்றமும் செய்யாமல், உலகம் முழுவதும் அதன் அசல் வடிவிலேயே வெளியிடத் தயாராக உள்ளது. ஆனால், இந்தியாவில் அதை வெளியிடுவதற்கு Penguin Random House India சில மாற்றங்களைச் செய்ய விரும்புகிறது.</p><p>உலகம் முழுவதும் அசல் வடிவில் வெளியிடப்படும் ஒரு புத்தகத்தை இந்தியாவில் மட்டும் அப்படியே வெளியிட முடியாத அளவுக்கு என்ன காரணம்? அல்லது எந்த அழுத்தம் அவர்களைத் தடுக்கிறது? </p><p>சோனியா காந்தியின் வாழ்க்கை தியாகத்திற்கும் அர்ப்பணிப்பிற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அவர் நாட்டிற்காக ஆற்றிய பணியின் தூய்மையும் கண்ணியமும் போற்றத்தக்கது. இப்படிப்பட்ட சிறப்புமிக்க, மூத்த அரசியல் தலைவர் மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரான சோனியா காந்தியின் புத்தகத்தை அழுத்தம் கொடுத்து தடுத்து நிறுத்துவது கருத்துச் சுதந்திரத்தையே படுகொலை செய்வதற்கு ஒப்பானது. </p><p>உண்மையான பிரச்சினை என்னவென்றால், மோடி ஆட்சிக் காலத்தில் இந்தியப் பகுதிகளை மோடி, ஆர்.எஸ்.எஸ். மற்றும் சீனா ஆக்கிரமித்தது தொடர்பான பகுதிகளை புத்தகத்திலிருந்து நீக்குமாறு Penguin India மீது அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p>இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். இந்த உண்மையை இந்திய மக்களிடமிருந்து ஏன் மறைக்க வேண்டும்? அழுத்தத்தின் பேரில் உண்மைகளை மாற்றுமாறு பதிப்பகங்களையும் மோடி அரசு நிர்பந்திக்குமா? இந்தியாவில் அச்சிடப்படும் ஒரு புத்தகத்தில் உண்மையை எழுதுவதற்குக்கூட அனுமதி பெற வேண்டிய நிலை ஏன் உருவாக வேண்டும்? இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு குறித்த செய்திகள் கவலையளிக்கின்றன - ஈ.ஆர்.ஈஸ்வரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/reports-of-the-floods-in-nepal-are-concerning-er-eswaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/reports-of-the-floods-in-nepal-are-concerning-er-eswaran#comments</comments><guid isPermaLink="false">48023fb7-fdb3-4ead-a75a-110b69b033c8</guid><pubDate>Fri, 28 Aug 2026 11:11:16 +0000</pubDate><atom:updated>2026-08-28T11:11:16.409Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Nepal,நேபாளம்,ஈ.ஆர்.ஈஸ்வரன்,E.R. Eswaran,nepal flood,நேபாளம் வெள்ளம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/d9dnjaez/nepa.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/d9dnjaez/nepa.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/nepal">நேபாள </a>பெரு வெள்ளவிபத்தில் சிக்கியவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வீடு திரும்ப இறைவனை பிராத்திக்கிறோம் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். </p><h2>எதிர்பாராத விபத்து</h2><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>இதுவரை கேள்விப் படாத அளவிற்கு இமயமலை அடிவாரத்தில் எதிர்பாராத விபத்தும், பெரும் சேதமும் நடந்திருக்கிறது. ஏன் நடந்தது என்பதற்கான பல்வேறு விமர்சனங்களும், விவாதங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரசு அதற்கான விஞ்ஞானபூர்வமான ஆதாரங்களை கண்டறிந்து மக்களுக்கு விளக்க வேண்டும். </p><h2>இதுவரை தெளிவுபடுத்தவில்லை</h2><p>அங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்கள் மட்டுமில்லாமல் ஆன்மீக பயணம் சென்ற பல மாநில மக்களும் விபத்தில் சிக்கி பேராபத்தில் உள்ளார்கள். ஆன்மீகப் பயணம் சென்ற தமிழர்களும் மிகப்பெரிய எண்ணிக்கையில் அங்கே சிக்கிக் கொண்டுள்ளார்கள். இன்றைக்கு 3வது நாளாக பலரிடமிருந்தும் தகவல்கள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை. மத்திய, மாநில அரசுகளும் யார் தப்பித்தார்கள் யார் சிக்கிக் கொண்டார்கள் என்ற விவரத்தையும் இதுவரை தெளிவுபடுத்தவில்லை. </p><h2>மாவட்ட கலெக்டர்கள்</h2><p>தகவல் கிடைக்காத குடும்பத்தினர் மிகவும் வேதனையில் உள்ளார்கள். உயிரோடு இருப்பவர்களை மீட்டு அவரவர் மாநிலத்துக்கு அனுப்புவதும், துரதிஷ்டவசமாக உயிரிழந்தவர்களுடைய விபரங்களையும் தாமதமில்லாமல் கண்டுபிடித்து தர வேண்டும். அந்தந்த மாவட்டத்திலே இருக்கின்ற மாவட்ட கலெக்டர்கள் இதுவரை பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்திக்கவில்லை. </p><h2>கூட்டுப் பிரார்த்தனை</h2><p>இப்படிப்பட்ட இந்த சூழலில் ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும்  பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தையும் நேரில் சென்று சந்தித்து அரசு எடுக்கின்ற முயற்சிகளை தெளிவுபடுத்தி நம்பிக்கையூட்ட வேண்டும். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் AKP சின்ராஜ் மூலமாகவும், இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் VS மாதேஸ்வரன் மூலமாகவும் வெளியுறவுத்துறை அமைச்சரையும், இந்திய துணை ஜனாதிபதியையும் தொடர்பு கொண்டு விபரங்களை அறிய முயற்சித்து வருகிறோம்.</p><p>நேற்றைய தினம், விபத்தில் சிக்கியவர்கள் பத்திரமாக வீடு திரும்ப வேண்டுமென்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக அனைத்து குடும்பங்களும் கூட்டுப் பிரார்த்தனை செய்திருக்கிறோம். நேபாளத்தில் விபத்தில் சிக்கியவர்கள் பத்திரமாக வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>பிரக்ஞானந்தா மேலும் பல உலக சாதனைகளைப் படைக்க வேண்டும்: உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pragnananda-to-achieve-many-more-world-records-udhayanidhi-stalin-wishes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pragnananda-to-achieve-many-more-world-records-udhayanidhi-stalin-wishes#comments</comments><guid isPermaLink="false">3e2796a1-df53-4622-a251-43ea4873520f</guid><pubDate>Fri, 28 Aug 2026 11:08:16 +0000</pubDate><atom:updated>2026-08-28T11:08:16.665Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,பிரக்ஞானந்தா,Praggnanandhaa</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/u2fzoxbj/7.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/u2fzoxbj/7.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமெரிக்காவில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில், பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்து எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>அமெரிக்காவில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற, முதல் இந்திய வீரர் என்ற புதிய வரலாறு படைத்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் தம்பி பிரக்ஞானந்தாவுக்கு எனது பாராட்டுகள்!</p><p>உலகின் முன்னணி வீரர்களை எதிர்கொண்டு, தனது அபாரமான திறமை மற்றும் தன்னம்பிக்கையால் இந்த வெற்றியை அவர் பெற்றிருப்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெருமை.  தம்பி பிரக்ஞானந்தா மென்மேலும் பல உலக சாதனைகளைப் படைக்க என் அன்பும், வாழ்த்தும்!”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>திருவள்ளூர் அருகே முகத்தில் ஆசிட் ஊற்றி பெண் கொடூர கொலை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-brutally-murdered-by-pouring-acid-on-her-face-near-thiruvallur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-brutally-murdered-by-pouring-acid-on-her-face-near-thiruvallur#comments</comments><guid isPermaLink="false">4b48a228-68b2-44b1-a7af-146271156823</guid><pubDate>Fri, 28 Aug 2026 11:07:10 +0000</pubDate><atom:updated>2026-08-28T11:07:10.408Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவள்ளூர்,women,Tiruvallur,பெண் கொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/nhb9he5r/one33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/nhb9he5r/one33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பெரியபாளையம்,</p><p>திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே தொட்டாரெட்டிக்குப்பம் பகுதியில் மர்ம நபர்களால் முகத்தில் ஆசிட் ஊற்றி ஆந்திர பெண் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>முகத்தில் ஆசிட் வீச்சு</h2><p>பெரியபாளையம் அருகே உள்ள குப்பம் தொட்டாரெட்டி கிராமம். வெள்ளக் குளம் அருகில் உள்ள வயல் வெளி அருகே இன்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%20%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">பெண் ஒருவர் கொலை </a>செய்யப்பட்டு கிடந்தார். அவரது முகம் ஆசிட் ஊற்றி சிதைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஊதுக்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் தேவராஜ் தலைமையில் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.</p><h2>பெண் கொடூர கொலை</h2><p>இதில் கொலையுண்ட பெண் ஆந்திர மாநிலம், நாகலாபுரம் அருகே நின்ரை,சவரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அருணா (40) என்பது தெரிந்தது. அவர் தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலை அருகே உள்ள பதட்டூர் கண்டிகை கிரா மத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். இந்நிலையில் அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளார். </p><h2>கொலையாளிகள் யார்? </h2><p>அவரது கழுத்து நெரிக்கப்பட்டதற்கான தடயம் இருந்தது. அவரது முகம் முழுவதும் எரிக்கப்பட்டது போல் கருப்பு கிரீஸ் பூசப்பட்டு இருந்தது, அவர் அணிந்து இருந்த  தாலி மற்றும் கம்மல் உள்ளிட்டவை அப்படியே உள்ளன.</p><p>கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது மர்மமாக உள்ளது. சம்பவ இடத்தில் செல்போன் ஒன்று கிடந்தது.</p><p>அதனை கைப்பற்றி போலீ சார் பல்வேறு கோணங்க ளில் விசாரணை செய்து வருகிறார்கள். பெண் கொடூரமாக ஆசிட் ஊற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><h2>கொலையாளிகள் யார்? </h2><p>அவரது கழுத்து நெரிக்கப்பட்டதற்கான தடயம் இருந்தது. அவரது முகம் முழுவதும் எரிக்கப்பட்டது போல் கருப்பு கிரீஸ் பூசப்பட்டு இருந்தது, அவர் அணிந்து இருந்த  தாலி மற்றும் கம்மல் உள்ளிட்டவை அப்படியே உள்ளன.</p><p>கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது மர்மமாக உள்ளது. சம்பவ இடத்தில் செல்போன் ஒன்று கிடந்தது.</p><p>அதனை கைப்பற்றி போலீ சார் பல்வேறு கோணங்க ளில் விசாரணை செய்து வருகிறார்கள். பெண் கொடூரமாக ஆசிட் ஊற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><h2>திருவள்ளூரில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள்</h2><p>திருவள்ளூர் மாவட்டத் தில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் நடைபெற்று வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.</p><p>கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெங்கல் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த நபர் நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்யப் பட்டார். இதேபோல் கடம் பத்தூர் பகுதியில் இறுதி ஊர்வலத்தில் நடனமாடிய தகராறில் வாலிபர் கொல்லப்பட்டார். </p><p>தற்போது ஊத்துக் கோட்டை அருகே பெண் ஒருவர் முகத்தில் ஆசிட் ஊற்றி கொலை செய்யப் பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதே போல் நேற்று முன்தினம் இரவு ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.12 லட்சத்தை கொள்ளையர்கள் அள்ளி சென்று உள்ளனர்.</p>]]></content:encoded></item></channel></rss>