<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 24 Jul 2026 13:46:40 +0000</lastBuildDate><item><title>11 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-till-10-pm-in-11-districts</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-till-10-pm-in-11-districts#comments</comments><guid isPermaLink="false">0236b353-891f-4b43-9502-aef924d3c68c</guid><pubDate>Fri, 24 Jul 2026 13:44:28 +0000</pubDate><atom:updated>2026-07-24T13:44:28.701Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/0x6nbeub/Untitled-10.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/0x6nbeub/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சராசரி கடல் மட்டத்தில் குஜராத்திலிருந்து கர்நாடகா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கடலூர், நாமக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சீமை கருவேல மரங்கள் அகற்றம்: தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/removal-of-seemai-karuvelam-trees-madras-high-court-orders-tamil-nadu-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/removal-of-seemai-karuvelam-trees-madras-high-court-orders-tamil-nadu-government#comments</comments><guid isPermaLink="false">7dfc1e40-7a8d-462e-b3f5-26f433dadae9</guid><pubDate>Fri, 24 Jul 2026 13:41:40 +0000</pubDate><atom:updated>2026-07-24T13:41:40.507Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,சென்னை ஐகோர்ட்டு,Vaiko,வைகோ,தமிழ்நாடு அரசு,TN govt,Chennai High Court,சீமை கருவேல மரங்கள்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/frt46jwm/chen.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/frt46jwm/chen.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சீமை கருவேல மரங்களை அகற்ற அனுமதி கோரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு <a href="https://www.dailythanthi.com/topic/சென்னை-ஐகோர்ட்டு">சென்னை ஐகோர்ட்டு</a> உத்தரவிட்டுள்ளது. </p><h2>90 சதவீத மரங்கள் அகற்றம்</h2><p>தமிழகத்தில் சீமை கருவேலம் மரங்களை அகற்றக் கோரி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டு நீதிபதிகள் சிறப்பு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போடு தமிழக அரசு தரப்பில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு நிலங்களில் வளர்ந்திருந்த கருவேலம் மரங்கள் 90 சதவீதம் அகற்றப்பட்டுவிட்டதாகவும், வட மாவட்டங்களில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.</p> <h2>ஜூலை 31-ம் தேதி</h2><p>அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நீதிமன்றம் நியமித்த நீதிபதிகளுடன் அரசு துறை செயலாளர்கள் எந்த கூட்டத்தையும் நடத்தவில்லை என்றும், இதனால் நீதிபதிகளுக்கு யாரை சந்திப்பது என்பது கூட தெரியவில்லை என்றும் அதிருப்தி தெரிவித்தனர்.</p><p>இதையடுத்து, கருவேலம் மரங்களை அகற்றுவது தொடர்பான உத்தரவை அமல்படுத்தும் வகையில், வருவாய்துறை செயலாளரை நோடல் அதிகாரியாக நியமித்த நீதிபதிகள், ஜூலை 31-ம் தேதி அவர் நேரில் ஆஜராகி தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதேபோல, சீமை கருவேல மரங்களை அகற்ற தேவையான நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.</p><h2>24 மணி நேரத்திற்குள்</h2><p>மேலும், அரசு நிலங்களில் சீமை கருவேல மரங்களை அகற்ற அனுமதி கோரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் அனுமதி வழங்க வேண்டும் என வருவாய் துறை அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். </p>]]></content:encoded></item><item><title>சென்னை: திடக்கழிவு மேலாண்மை விதிகளை பின்பற்றாதவர்களுக்கு ரூ.5.10 லட்சம் அபராதம் விதிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-rs-5-10-lakh-fine-for-violating-solid-waste-rules</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-rs-5-10-lakh-fine-for-violating-solid-waste-rules#comments</comments><guid isPermaLink="false">27b877c8-c05b-4c28-9bcd-849d7d20291d</guid><pubDate>Fri, 24 Jul 2026 13:33:21 +0000</pubDate><atom:updated>2026-07-24T13:33:21.364Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Corporation,சென்னை மாநகராட்சி,fine,அபராதம்,திடக்கழிவு மேலாண்மை,Solid Waste Management</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/ogor69t7/Untitled-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/ogor69t7/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகராட்சியில் பெருமளவு திடக்கழிவுகள் உருவாக்குபவர்கள் திடக்கழிவுகளை உருவாகும் இடத்திலேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதாரக் கழிவுகள் மற்றும் அபாயகரமானக் கழிவுகள் என முறையாக தரம்பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கிட வேண்டும். 01.07.2026 முதல் 23.07.2026 வரை திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-ஐ பின்பற்றாத பெருமளவு திடக்கழிவு உற்பத்தியாளர்களுக்கு ரூ.5.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>முதல்-அமைச்சர், தமிழ்நாட்டில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்கு ஏதுவாக, திடக்கழிவுகள் உருவாகும் இடத்திலேயே முறையாக மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதாரக் கழிவுகள் மற்றும் அபாயகரமான கழிவுகள் என தரம் பிரித்து பெற்று அகற்றிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.</p><p>அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி முழுவதும் அறிவியல் முறையிலான திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்தும் நோக்கில், தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டும், மக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.</p><p>இதன் தொடர்ச்சியாக, இன்று (24.07.2026) சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் அண்ணாநகர் மண்டலம், வார்டு - 100, கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள குஷால் கார்டன் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் (Bulk Waste Generators – BWGs) திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-ஐ பின்பற்றுகின்றனரா என்பது குறித்து திடீர் களஆய்வு மேற்கொண்டார்.</p><p>இந்த ஆய்வின்போது, பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) மற்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) ஆகியவற்றின் இணையதளங்களில் கட்டாயப் பதிவை மேற்கொண்டுள்ளனரா, கழிவுகள் உருவாகும் இடத்திலேயே முறையாக தரம் பிரிக்கப்படுகிறதா, பச்சை, நீலம், சிவப்பு மற்றும் கருப்பு ஆகிய நான்கு வண்ணக் குறியீட்டு குப்பைத் தொட்டிகள் முறையாக பயன்படுத்தப்படுகிறதா, மக்கும் கழிவுகளை வளாகத்திலேயே உரமாக்கும் (Composting) அல்லது உயிரி எரிவாயு (Bio-Gas) நிலையங்கள் மூலம் பதப்படுத்தும் வசதிகள் செயல்படுகிறதா, மறுசுழற்சி செய்யக்கூடிய உலர் கழிவுகள் முறையாக சேமிக்கப்படுகிறதா, வளாகத்தின் தூய்மை மற்றும் சுகாதார நிலை ஆகியவற்றையும் நேரில் ஆய்வு செய்தார்.</p><p>பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் தங்களது வளாகங்களில் உருவாகும் கழிவுகளை கட்டாயமாக நான்கு பிரிவுகளாக உருவாகும் இடத்திலேயே தரம் பிரித்து, மக்கும் கழிவுகளை வளாகத்திலேயே உரமாக்கும் நிலையங்கள் அல்லது உயிரி எரிவாயு நிலையங்கள் மூலம் பதப்படுத்த வேண்டும் என்றும், திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026 மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றி, அறிவியல் மற்றும் நிலையான கழிவு மேலாண்மை நடைமுறைகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆணையர் வலியுறுத்தினார்.</p><p>ஆய்வின்போது, அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகள் மற்றும் குடியிருப்பாளர்களுடன் ஆணையர் கலந்துரையாடி, கழிவுகள் உருவாகும் இடத்திலேயே முறையாக தரம் பிரித்தல் மற்றும் வளாகத்திலேயே கழிவு மேலாண்மை மேற்கொள்வது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும், ஆய்வின்போது கண்டறியப்பட்ட குறைபாடுகளை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் சரிசெய்யுமாறு அறிவுறுத்தினார்.</p><p>பெருமளவு திடக்கழிவு உற்பத்தியாளர்கள் தங்களது வளாகங்களிலேயே திடக்கழிவுகளை முறையாக மேலாண்மை செய்வது, மாநகராட்சி கழிவு போக்குவரத்து மற்றும் பதப்படுத்தும் மையங்களின் சுமையை குறைப்பதுடன், வள மீட்பு, மறுசுழற்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் முக்கிய பங்காற்றுகிறது என்று ஆணையர் தெரிவித்தார்.</p><p>பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-ஐ முழுமையாக பின்பற்றுகின்றனரா என்பதை உறுதி செய்ய, பெருநகர சென்னை மாநகராட்சியால் தொடர்ந்து சென்னை நகரம் முழுவதும் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. அனைத்து பெருமளவு கழிவு உற்பத்தியாளர்களிடமும் தகவல், கல்வி மற்றும் தொடர்பு (IEC) நடவடிக்கைகள் மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.</p><p>01.07.2026 முதல் 23.07.2026 வரை திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-ஐ மீறிய பெருமளவு திடக்கழிவு உற்பத்தியாளர்களுக்கு சென்னை மாநகராட்சியால் மொத்தம் ரூ.5,10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது மற்றும் திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-ன் கீழ் சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.</p><p>எனவே, அனைத்து கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், விடுதிகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் மற்றும் இதர பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-ஐ முழுமையாக கடைப்பிடித்து, அபராதத்தை முழுமையாக தவிர்த்திடுமாறும், தூய்மையான, பசுமையான மற்றும் நிலையான சென்னையை உருவாக்குவதில் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து செயல்படுமாறும் மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் கேட்டுக் கொண்டார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் மீதான வழக்கு: மீண்டும் விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு - த.வெ.க. நிர்வாகி புகழேந்தி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-against-pollachi-jayaramans-son-high-court-orders-fresh-inquiry-tvk-functionary-pugazhendhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-against-pollachi-jayaramans-son-high-court-orders-fresh-inquiry-tvk-functionary-pugazhendhi#comments</comments><guid isPermaLink="false">6b256487-aa93-40e5-9b9b-acf4183d7bea</guid><pubDate>Fri, 24 Jul 2026 13:18:13 +0000</pubDate><atom:updated>2026-07-24T13:18:13.498Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Tamilnadu,தமிழகம்,சென்னை ஐகோர்ட்டு,Chennai High Court,பொள்ளாச்சி ஜெயராமன்,Pollachi Jayaraman,புகழேந்தி,Pugazhenthi</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/446bok1m/jhi.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/446bok1m/jhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன் செய்தது திட்டமிட்ட கொலை என்றும், விபத்து வழக்காக பதிவு செய்யப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் <a href="https://www.dailythanthi.com/topic/tvk">த.வெ.க</a>. நிர்வாகி புகழேந்தி பேசியுள்ளார்.</p><h2>ஜனநாயகன்</h2><p>கோவை உடையாம்பாளையம் பகுதியில் அதிமுக, அமமுக, ஓபிஎஸ் அணிகளில் இருந்து விலகி, தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.</p><p>அப்போது அவர் பேசியதாவது:-</p><p>தேர்தலுக்கு முன்பே வர வேண்டிய படத்தை தடை செய்திருந்தனர். ஜனநாயகன் பார்த்து மகிழ்ந்தேன். பல அமைச்சர்கள் கண்ணீர் உருக்கமாக இருந்தது. இப்படி வெளியீட்டை விழாவாக எடுக்க ஆனந்த் கூறியிருந்தார். அடிமைப்பெண் வெளியானபோது ஊர்வலமாக சென்று பார்த்தேன். அந்த நியாபகம் வந்தது. இப்போது படம் வந்துள்ளதால். தடை செய்தவர்களுக்கு வயிறு எரிந்திருக்கும்.</p> <h2>25 எம்எல்ஏக்களும்</h2><p>உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் தெருவில் அலையப்போகிறார்கள். முதல்-அமைச்சர் குறித்து இழிவாகப் பேசுகிறார்கள். அவர்களுக்கு மனநலக் கோளாறா என்று தெரியவில்லை. இதேபோல் பேசினால் சட்டம் அதன் கடமையை செய்யும், சிறை கதவுகளுக்குப் பின் இருக்கும் நிலை ஏற்படும்.</p><p>அதிமுக முற்றிலுமாக அழிந்துவிட்டது. அதிமுகவில் இருந்து வெளியேறுபவர்களை அரவணைத்துக் கொண்டு செல்கிறார் விஜய். அதிமுகவில் யாரும் இருக்கப்போவதில்லை. அதிமுகவில் 25 எம்எல்ஏக்களும் தவெகவுக்கு ஆதரவாகவே உள்ளார்கள். இதனை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.</p> <h2>கொலை வழக்கு</h2><p>நீண்ட ஆண்டுகளுக்கு முன் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன் 4 மாணவிகளுடன் காரில் சென்று விபத்தில் சிக்கினார். அப்போது மற்றவர்களை விட்டுவிட்டு பிரவீன் மட்டும் ஓடிவிட்டார்.</p><p>2 நாட்களுக்குப் பிறகு காவல் நிலையத்தில் சரணடைந்தார். அப்போது ஜெயராமன் துணை சபாநாயகராக இருந்தார். அந்த விபத்தில் சிக்கிய வீரசுரேகா என்ற பெண் கொடுத்த வாக்குமூலத்தை அரசு எடுத்துக்கொள்ளாமல் பிரவீனை தப்பவிட்டார்கள். இது கொலை என்று கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட பிரவீனுக்கு கட்சியில் பொறுப்பு கொடுத்துள்ளனர்.</p> <h2>சகுனிகள்</h2><p>எடப்பாடி பழனிசாமி பக்கத்தில் மதுரை, கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி, திருவண்ணாமலையில் சகுனிகள் உள்ளனர். நேற்று அதிமுக கூட்டத்தில் சி.வி. சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. </p><p>ஜெயராமனுக்கு நாவடக்கம் வேண்டும். கட்சியை தரைமட்டமாக்கிவிட்டீர்கள்.வீர சுரேகா என்று பெண்ணிற்காக நான் பெண்களைத் திரட்டி போராட்டம் நடத்துவேன்.பொள்ளாச்சி சம்பவம், தூத்துக்குடி சம்பவங்களை சி.பி.ஐ. தான் கண்டுபிடித்தது. அப்போது இருந்த அதிமுகவும் செய்யவில்லை, அதன்பிறகு வந்த திமுகவும் செய்யவில்லை இருவரும் கூட்டுகளவாணிகள்.எடப்பாடி பழனிசாமி நாசமாகப் போக பொள்ளாச்சி ஜெயராமன் தான் காரணம்.</p> <h2>மோடிக்கு பெரிய அடி</h2><p>முறைத்துக்கொண்டிருக்கும் எம்எல்ஏக்களின் கால்களில் விழுந்து புதிய தலைமையை உருவாக்கினால் மட்டுமே அதிமுக மீண்டும் உயிர் பெறும்.ஒன்று எடப்பாடி பழனிசாமியை தூக்கி எரிவார்கள் அல்லது அனைவரும் தவெகவுக்கு வருவார்கள். ஜனநாயகன் படத்திற்கு அதிக விலையில் டிக்கெட் விற்கவில்லை. அப்படி ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் நடவடிக்கை எடுப்போம். த.வெ.க.வுக்கு வருவோர்கள் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூப்பிக்க வேண்டும். அதற்கு தவெக அரசு துணை நிற்காது.</p><p>டெல்லியில் நடைபெறும் போராட்டம் பாராட்டிற்கு உரிய விஷயம். இது மோடிக்கு பெரிய அடி. இதில் இருந்து மோடி வெளியே வரமுடியாது. படம் பல தடைகளுக்கு பின் வந்துள்ளதால் அமைச்சர்கள் சென்று பார்த்தனர். மாணவர் போராட்டம் நடந்தால் ரோட்டில் யாரும் நடக்கக்கூடாது என்றால் எப்படி?</p><p>இவ்வாறு புகழேந்தி கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி - ஓகா விவேக் எக்ஸ்பிரஸ் ரத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukkudi-oka-vivek-express-cancelled</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukkudi-oka-vivek-express-cancelled#comments</comments><guid isPermaLink="false">677adf96-f93d-428e-bd41-926e4006396b</guid><pubDate>Fri, 24 Jul 2026 12:18:01 +0000</pubDate><atom:updated>2026-07-24T12:18:01.089Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>குஜராத்,கனமழை,Thoothukudi,தூத்துக்குடி,heavy rain,ரெயில் ரத்து,train canceled,விவேக் எக்ஸ்பிரஸ்,vivek express train</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/oex4hvhr/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/oex4hvhr/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>குஜராத்தில் வரலாறு காணாத வகையில் கனமழை பெய்து வருகிறது. முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. இதனால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக இன்று குஜராத் மாநிலம் ஓகாவில் இருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்பட இருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து செய்யப்பட்டது.</p><p>இந்த நிலையில் அதன் இணை ரெயிலான தூத்துக்குடியில் இருந்து ஓகா செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>தூத்துக்குடியில் இருந்து ஓகாவுக்கு ஜூலை 26-ந்தேதி இரவு 11.40 மணிக்கு புறப்பட வேண்டிய விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 19567) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதற்கான இணை ரெயில் (19568) ரத்து செய்யப்பட்டுள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கெலவரப்பள்ளி அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-release-from-kelavarapalli-dam-from-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-release-from-kelavarapalli-dam-from-tomorrow#comments</comments><guid isPermaLink="false">c6ce24bc-896b-4fce-b6a6-84b3f4df1a11</guid><pubDate>Fri, 24 Jul 2026 12:03:42 +0000</pubDate><atom:updated>2026-07-24T12:03:42.591Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கிருஷ்ணகிரி,கிருஷ்ணகிரி அணை,கெலவரப்பள்ளி அணை,ஓசூர் கெலவரப்பள்ளி,கெலவரப்பள்ளி,Kelavarapalli,Kelavarapalli Dam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/9897zi49/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/9897zi49/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>தண்ணீர் திறப்பு</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் உத்தரவிற்கிணங்க, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து தற்போது நீர் இருப்பை கருத்தில் கொண்டு, பருவகால புன்செய் பயிரிடுவதற்கு வலது மற்றும் இடதுபுற பாசன கால்வாய்களில் 25.07.2026 முதல் 21.11.2026 வரை மொத்தம் 120 நாட்களுக்கு முதல் போக புன்செய் பயிர் சாகுபடி பாசனத்திற்கு சுழற்சி முறையில் முதல் மண்டலத்திற்கு 5 நாட்களுக்கும், இரண்டாவது மண்டலத்திற்கு 5 நாட்களுக்கும், மொத்தம் 10 நாட்களுக்கு தண்ணீர் விட்டும், 5 நாட்களுக்கு தண்ணீர் நிறுத்தியும், தவணை ஒன்றுக்கு 76.23 மில்லியன் கனஅடி வீதம் 8 தவணையாக மொத்தம் 609.84 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் வரத்து மற்றும் இருப்பைப் பொறுத்து தண்ணீர் திறந்துவிட <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழ்நாடு </a>அரசு ஆணையிட்டுள்ளது.</p><h2>8000 ஏக்கர் நிலங்கள் </h2><p>இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மற்றும் சூளகிரி வட்டத்திலுள்ள 8000 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பரந்தூர் விமான நிலையம் அமைப்பது குறித்த தவெக அரசின் உண்மையான நிலைப்பாடு என்ன? - சீமான் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-is-the-dmk-governments-true-stand-on-parandur-airport-seeman-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-is-the-dmk-governments-true-stand-on-parandur-airport-seeman-asks#comments</comments><guid isPermaLink="false">ace20037-48a1-4095-ac27-2c95c4e40239</guid><pubDate>Fri, 24 Jul 2026 11:58:32 +0000</pubDate><atom:updated>2026-07-24T11:58:32.640Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,Seeman,பரந்தூர்,பரந்தூர் விமான நிலையம்,Parandur Airport</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/klhwugl3/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சீமான்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/klhwugl3/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க முன்மொழியப்பட்ட இடத்தை மாற்றுமாறு தமிழ்நாடு அரசு, இதுவரை மத்திய அரசிடம் எவ்வித கோரிக்கையும் முன்வைக்கவில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. </p><p>சட்டமன்றத் தேர்தலில் வென்று  ஆட்சி, அதிகாரத்தை அடைந்த தவெக அரசு,  பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படாது என்றும், அந்த இடத்தில் தொழிற்பேட்டை அமைக்க முடிவெடுத்திருப்பதாகவும் அறிவித்தது. ஆனால், இந்திய நாடாளுமன்றத்தில் நடப்பு கூட்டத்தொடரில் பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய விமான போக்குவரத்துத்துறை இணை மந்திரி முரளிதர் மோஹோல் பரந்தூரிலிருந்து விமான நிலைய திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற தமிழ்நாடு அரசிடமிருந்து எவ்வித கோரிக்கையும் வரவில்லை என்று தெரிவித்துள்ளது, பரந்தூர் புதிய விமான நிலைய விவகாரத்தில் தவெக அரசு இரட்டை வேடம் போடுகிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. </p><p>பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதை தவெக தற்போது ஆதரிக்கிறதா? அல்லது எதிர்க்கிறதா? எதிர்க்கிறது என்றால் இடத்தை மாற்ற வேண்டுமென்று தவெக அரசு இதுவரை மத்திய பாஜக அரசிடம் கோரிக்கை விடுக்காதது ஏன்? முந்தைய திமுக ஆட்சியின்போது விளைநிலங்களை அழித்து புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக பரந்தூருக்கே தான் நேரில் சென்றதாவது முதல்வர் விஜய்க்கு நினைவிருக்கிறதா அல்லது அதுவும் மறந்து போனதா? என்ற கேள்விகளுக்கு தவெக அரசின் பதிலென்ன?</p><p>ஆகவே, பரந்தூர் புதிய விமான நிலையம் அமைப்பது குறித்த தவெக அரசின் உண்மையான நிலைப்பாடு என்ன? என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு உடனடியாக உரிய விளக்கமளிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>விவசாயத்திற்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறதா..? தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-free-three-phase-electricity-provided-for-agriculture-tamil-nadu-electricity-board-clarifies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-free-three-phase-electricity-provided-for-agriculture-tamil-nadu-electricity-board-clarifies#comments</comments><guid isPermaLink="false">c94968fe-dbb0-464c-a07e-e1ec895dbee4</guid><pubDate>Fri, 24 Jul 2026 11:57:25 +0000</pubDate><atom:updated>2026-07-24T11:57:25.438Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Tamil Nadu Electricity Board,தமிழ்நாடு மின்சார வாரியம்,electricity,விவசாயம்,agriculture,இலவச மின்சாரம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/mbfs0xct/minsar.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/mbfs0xct/minsar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விவசாய பம்ப் செட்டுகளுக்கு தொடர்ந்து இலவச மும்முனை மின்சாரம் நாளொன்றுக்கு 18 மணி நேரம் வழங்கப்பட்டு வருவதாக <a href="https://www.dailythanthi.com/topic/தமிழ்நாடு-மின்சார-வாரியம்">தமிழ்நாடு மின்சார வாரியம்</a> தெரிவித்துள்ளது. </p><h2>இலவச மின் விநியோகம்</h2><p>இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p>24.07.2026 அன்று The New Indian Express நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள "Ground water depletion, cut in 18-hr free power supply deal blow to delta farmers" என்ற தலைப்பிலான செய்தியின் முதல் இரண்டு பத்திகளில், வேளாண் மின் பம்புகளுக்கான 18 மணி நேர இலவச மின் விநியோகம் இனிமேல் 14 மணி நேரமாகக் குறைக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p> <h2>18 மணி நேரம்</h2><p>மேற்கண்ட செய்தி தொடர்பாக, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL) சார்பில் தெரிவிக்கப்படுவதுயாதெனில், தமிழக விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் நாளொன்றுக்கு 18 மணி நேரம் வழங்கப்பட்டுவருகிறது.</p><h2>பராமரிப்புப் பணிகள்</h2><p>மேலும், மின் கட்டமைப்பில் எதிர்பாராமல் ஏற்படும் தொழில்நுட்ப சவால்கள், அவசரப் பராமரிப்புப் பணிகள் காரணங்களினால் மட்டுமே ஒரு சில மணி நேரங்களுக்கு தற்காலிக மின் தடை ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தகைய தற்காலிக இடையூறுகளைத் தவிர, விவசாயிகளுக்கு நாளொன்றுக்கு 18 மணி நேர இலவச மும்முனை மின்சாரம் வழங்கும் நடைமுறையில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்பதும், இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் எந்தவிதமான உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்பதும் இதன் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஒருபக்கம் காதலன், மறுபக்கம் திருமணமானவருடன் பழக்கம்; பெண் போலீஸ் தற்கொலையில் திடுக்கிடும் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/shocking-information-about-the-suicide-of-a-female-police-officer</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/shocking-information-about-the-suicide-of-a-female-police-officer#comments</comments><guid isPermaLink="false">7d6411bc-590b-4111-8959-e260fb60520f</guid><pubDate>Fri, 24 Jul 2026 11:43:06 +0000</pubDate><atom:updated>2026-07-24T11:43:06.436Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமணம்,police,Thiruvannamalai,பெண் போலீஸ்,women</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/ujc3agqn/police33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
பெண் போலீஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/ujc3agqn/police33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர், </p><p>திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரஞ்சனி (வயது 24). இவர் கடந்த 2022-ம் ஆண்டு காவல் துறையில் பணியில் சேர்ந்தார். தற்போது திருப்பூர் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வந்த அவர், காங்கேயம் சாலையில் உள்ள நல்லூர் போலீஸ் குடியிருப்பில் தங்கி பணிபுரிந்து வந்தார். </p><h2>தற்கொலை</h2><p>நேற்று காலை நீண்ட நேரமாக அவரது அறை தறக்கப்படாமல் பூட்டியே இருந்தது. இதனால் சந்தேக மடைந்த சக போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, ரஞ்சனி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.</p><p>இதுகுறித்து தகவல் அறிந்த நல்லூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரஞ்சனியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு ப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><h2>ஆண் போலீஸ் ஒருவருடன் பழக்கம்</h2><p>போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ரஞ்சனிக்கு மாநகர ஆயுதப்படையில் பணியாற்றும் ஆண் போலீஸ் ஒருவருடன் பழக்கம் இருந்ததாகவும், இவர்களது காதல் தொடர்பு குறித்து இரு தரப்பு குடும்பத்தினருக்கும் தெரிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அண்மையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏதேனும் ஏற்பட்டதா? என்ற பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>செல்போனுக்கு 3 அழைப்புகளிலும் வேறு வெவேறு நபர்கள்</h2><p>தற்கொலைக்கான உண்மை  காரணத்தை அறிய,  உயிரிழந்த ரஞ்சனியின் செல்போனை பறிமுதல் செய்த நல்லூர் போலீசார், அதில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். ரஞ்சனி இறப்பதற்கு முன்பு கடைசியாக எந்தெந்த எண்களில் இருந்து போன் வந்துள்ளது. எங்கிருந்து பேசி இருக்கிறார்கள் மற்றும் எவ்வளவு நேரம் பேசியுள்ளார் என்ற அழைப்பு விவரங்களை சேகரித்தனர். அதில், பெண் போலீஸ் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவரது போனுக்கு 3 அழைப்புகள் வந்துள்ளதும், அந்த 3 அழைப்புகளிலும் வேறு வேறு  நபர்களிடம் அவர் பேசியிருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து, அந்த செல்போன் எண்களை வைத்து ஆய்வு செய்த நல்லூர் போலீசார், ரஞ்சனியிடம் கடைசியாகப் பேசிய 3 போலீசாரை</p><p>கண்டறிந்து, அவர்களை உடனடியாக நல்லூர் காவல் நிலையத்திற்கு வரவழைத்து தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளி யாகியுள்ளன. </p><h2>திருமணத்திற்கு சம்மதம்</h2><p>ரஞ்சனியும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%20">திருவண்ணாமலை</a>யைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். இவர்க ளது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து, இரு வீட்டாரும் பேசி திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். திருமணத்திற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வந்துள்ளன. இந்த நிலையில் திருப்பூரில் பணியாற்றி வரும் திருமணமான போலீஸ்காரர் ஒருவருடன் ரஞ்சினிக்கு பழக்கம் இருந்தாக கூறப்படுகிறது. மேலும் செல்போனில் இருவரும் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது. </p><p>இந்த விவகாரம் ரஞ்சனியின் காதலனுக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த காதலன் ரஞ்சனியுடன் பேசி வந்த அந்த திருமணமான போலீஸ்காரரை நேரில் சென்று மிரட்டியுள்ளார். "எங்களுக்குத் திருமணம் நிச்சயமாகி உள்ளது. இனி ரஞ்சனியுடன் பேசுவதையும் தொடர்புகொள்வதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும்" எனக் கண்டிப்புடன் கூறியுள்ளார்.</p><h2>காதலனுடன் சண்டை</h2><p>இதன் தொடர்ச்சியாக, ரஞ்சனிக்கும் அவரது காதலனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்றும் ரஞ்சனி தனது காதலனுடன் செல்போனில் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவ்வாறு காதலனுடன் போனில் சண்டைபோட்டபடியே வீட்டிற்குள் சென்ற ரஞ்சனி,மன உளைச்சலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காசிமேடு மீனவர்களின் 7 விசைப்படகுகளை விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை - எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/immediate-action-needed-to-release-7-mechanized-boats-belonging-to-kasimedu-fishermen-edappadi-palaniswami</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/immediate-action-needed-to-release-7-mechanized-boats-belonging-to-kasimedu-fishermen-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">fe8f9943-85fb-43d8-84c0-db8548698825</guid><pubDate>Fri, 24 Jul 2026 11:34:41 +0000</pubDate><atom:updated>2026-07-24T11:34:41.364Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,TVK,தவெக,Vijay,Tamilnadu,விஜய்,மீனவர்கள்,அதிமுக,தமிழகம்,fisherman,காசிமேடு,Kasimedu,விசைப்படகுகள்,fishing boats,Edappadi Palaniasamy,எடப்பாடி  பழனிசாமி,CM Vijay</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/hp2jijzp/nkvie.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/hp2jijzp/nkvie.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><p>ஆந்திர மாநில காவல்துறை மற்றும் மீன்வளத் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட காசிமேடு மீனவர்களின் 7 விசைப் படகுகளை விடுவிப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று த.வெ.க. அரசை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/edappadi-palaniswami">எடப்பாடி பழனிசாமி</a> வலியுறுத்தி உள்ளார். </p><h2>தமிழக மீனவர்கள்</h2><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் சுமார் 800 விசைப்படகுகளும், 2 ஆயிரம் பைபர் படகுகளும் தங்குதளமாகக் கொண்டு ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார்கள். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கான மீன் இறைச்சி தேவையை இவர்கள்தான் பூர்த்தி செய்து வருகின்றனர். </p><h2>மீன்பிடித் தொழில்</h2><p>இங்கு பிடிக்கப்படும் மீன்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு, நமது நாட்டிற்கு அந்நிய செலவாணியை ஈட்டித் தருகின்றனர். நாளொன்றுக்கு சுமார் 30,000 வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் காசிமேடு மீனவர்களின் மீன்களை நம்பியுள்ளனர்.</p><p>சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திரா தனி மாநிலமாக பிரிந்து சென்றாலும், இவர்களது வாழ்விடம் ஆந்திராவை ஒட்டி இருப்பதால், எப்போதும்போல் தமிழ்நாடு மற்றும் ஆந்திர கடல் பகுதிகளில் அமைதியாக மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். கடந்த 50 வருடங்களாக ஆந்திர மீனவர்களும், தமிழக மீனவர்களும் சகோதரர்களாக மீன்பிடித் தொழிலை செய்து வருகின்றனர். தமிழக மீன்பிடி படகுகளில் ஆந்திராவைச் சேர்ந்த மீனவத் தொழிலாளர்கள் பெருமளவு பணிபுரிந்து வருகின்றனர்.</p><h3>7 விசைப்படகுகள்</h3><p>இந்நிலையில், ஆந்திர மாநில அரசு தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் ஆந்திர கடற்கரைப் பகுதியில் மீன்பிடித் தொழில் செய்யக்கூடாது என்று கூறி, 17.6.2026 அன்று காசிமேடு துறைமுகத்தைச் சேர்ந்த 7 விசைப்படகுகளை பறிமுதல் செய்துள்ளனர். இன்றுவரை அந்த 7 விசைப்படகுகளை ஆந்திர அரசு விடுவிக்கவில்லை. </p><h2>வாழ்வாதாரம் பாதிப்பு</h2><p>காசிமேடு மீனவர்கள், த.வெ.க. அரசு மற்றும் தமிழக மீன்வளத் துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை தமிழக அரசு, பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று காசிமேடு மீனவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால், பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகு உரிமையாளர்களும், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவத் தொழிலாளர்களும், மீன்பிடித் தொழிலுக்குச் செல்ல இயலாமல், அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.</p><h2>உடனடி நடவடிக்கை</h2><p>எனவே, ஆந்திர அரசு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட காசிமேடு மீனவர்களின் 7 விசைப் படகுகளை விடுவிக்க த.வெ.க. அரசின் முதல்-அமைச்சர் உடனடியாக முயற்சிக்க வேண்டும். இனியும் காசிமேடு மீனவர்களை, ஆந்திர அரசு அதிகாரிகளால் துன்புறுத்தப்படாமல் இருப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த த.வெ.க. அரசை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணை விவகாரத்தில் மேலும், மேலும் தவறுகளை செய்கிறது தவெக அரசு - அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tavega-arasu-megathadu-anai-thavaraigal-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tavega-arasu-megathadu-anai-thavaraigal-anbumani#comments</comments><guid isPermaLink="false">f023e036-5d7e-47bc-9ddc-9e87771352e1</guid><pubDate>Fri, 24 Jul 2026 11:09:14 +0000</pubDate><atom:updated>2026-07-24T11:09:14.562Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,கர்நாடக அரசு,Karnataka,மேகதாது அணை,Mekedatu dam,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,தவெக அரசு,TVK Government</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/4jr03eg1/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/4jr03eg1/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>மேகதாது அணை குறித்து விவாதிக்க கர்நாடகத்தில் வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளதாகவும், அந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் விஜய் கர்நாடகம் செல்லவிருப்பதாகவும்  வேளாண்துறை அமைச்சர் வினோத் தெரிவித்திருக்கிறார். மேகதாது சிக்கல் குறித்து பேச்சு நடத்த தமிழக அரசு ஒப்புக்கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது; இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.</p><p>கும்பகோணத்தில் இன்று மதியம் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக் கட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. காவிரி நமது உரிமை. அதை விட்டுக் கொடுக்க மாட்டோம், கர்நாடகாவில் ஆகஸ்ட் 3-ம்தேதி மேகதாது அணை தொடர்பாக நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில், முதல்வர் விஜய் கலந்து கொண்டு அம்மாநில முதல்வர் டி.கே.சிவகுமாரிடம் பேசவுள்ளார்" என்று தெரிவித்தார்.</p><p>கர்நாடகத்தில் ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தை ஏற்பாடு செய்வது யார்? மத்திய அரசா, கர்நாடக அரசா? என்பது குறித்து எந்த விவரமும் தெரியவில்லை. ஆனால், மேகதாது குறித்து பேச்சு நடத்த முதல்-அமைச்சர் விஜய்க்கு  கர்நாடக அதிகாரிகள் மின்னஞ்சல் வாயிலாக அழைப்பு விடுத்திருக்கிறார்கள் என்று நேற்று ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் பார்த்தால் கர்நாடக அரசின் அழைப்பை ஏற்றுத்தான் முதல்-அமைச்சர் விஜய் அம்மாநிலத்திற்கு பேச்சு நடத்த செல்வதாகத் தோன்றுகிறது. இது மிகவும் தவறு.</p><p>பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும், மீண்டும் கூறி வருவது என்னவென்றால், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது என்பது தமிழ்நாட்டிற்கும், கர்நாடகத்திற்கும் இடையிலான பிரச்சினை அல்ல.... அது கர்நாடக அரசின் ஒரு சார்பான கோரிக்கை மட்டும்தான். அதுகுறித்து அந்த மாநில அரசுடன் நாம் எந்த பேச்சுகளையும் நடத்தத் தேவையில்லை என்பதுதான்.</p><p>மேகதாது அணை குறித்து கர்நாடக அரசுடன் நாம் பேச்சு நடத்தினால் அதை இரு தரப்பு பிரச்சினையாக ஏற்றுக்கொண்டு விட்டோம் என்று பொருளாகி விடும். அதன் பின்னர் மேகதாது அணையை கட்டக்கூடாது என்பது தீர்வாக இருக்காது. மாறாக, மேகதாது அணையின் கொள்ளளவு எவ்வளவு டி.எம்.சியாக இருக்க வேண்டும்?  அந்த அணையிலிருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கான நடைமுறைகள் என்னென்ன? என்பதுதான் தீர்வாக இருக்கும். இது காவிரியில் தமிழ்நாட்டுக்கு  உரிய  உரிமைகளை மொத்தமாக கர்நாடகத்திடம் தாரைவார்ப்பதற்கு ஒப்பானது ஆகும்.</p><p>மேகதாது அணை குறித்து சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இந்த சிக்கலுக்கு தீர்வு காண்பதற்காக புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற வாசகம் சேர்க்கப்பட்டபோதே  அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேகதாது அணை விவகாரத்திற்கு தீர்வு காண நடுவர் மன்றம் அமைக்கப்பட்டால் அது தமிழ்நாட்டிற்கு எந்த அளவுக்கு பின்னடைவை ஏற்படுத்துமோ, அதை விட மோசமான பின்னடைவை மேகதாது விவகாரம் குறித்து கர்நாடக அரசுடன் முதல்-அமைச்சர் விஜய் பேச்சு நடத்துவது ஏற்படுத்தி விடும்.</p><p>மேகதாது போன்ற சர்ச்சைக்குரிய விவகாரங்களில் தமிழக அரசு தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. அதில் சம்பந்தப்பட்ட உழவர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் போன்றவற்றுடன்  ஆலோசனை நடத்திய பிறகு தான் நிலைப்பாட்டை தீர்மானிக்க வேண்டும். மேகதாது சிக்கல் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பாமக பல வாரங்களாக வலியுறுத்தி வரும் நிலையில், அதை ஏற்காத அரசு, கர்நாடக அரசுடன் பேசும் முடிவை தன்னிச்சையாக எடுத்திருப்பது இவ்விவகாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.</p><p>எனவே, மேகதாது அணை குறித்து பேச்சு நடத்துவதற்காக கர்நாடகத்திற்கு செல்லும் முடிவை முதல்-அமைச்சர் விஜய் கைவிட வேண்டும். மாறாக, சட்டப் போராட்டங்களின் மூலம் மேகதாது அணை கட்டுவதற்கான சதித் திட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மத்திய கல்வி மந்திரி பதவி விலக வலியுறுத்தி 27-ந்தேதி விசிக ஆர்ப்பாட்டம் - திருமாவளவன் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/viduthalai-chiruthaigal-protest-demanding-education-minister-resignation-july-27</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/viduthalai-chiruthaigal-protest-demanding-education-minister-resignation-july-27#comments</comments><guid isPermaLink="false">2f402d43-585c-4a93-8729-7b0f996492ba</guid><pubDate>Fri, 24 Jul 2026 10:55:02 +0000</pubDate><atom:updated>2026-07-24T10:55:02.158Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,ஆர்ப்பாட்டம்,திருமாவளவன்,Thirumavalavan,VCK,தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,மத்திய கல்வி மந்திரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/t5pfplvl/Untitled-4.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருமாவளவன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/t5pfplvl/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதிவு விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து புதுடெல்லியில் மாணவர்களும், இளைஞர்களும் போராடி வருகின்றனர். இது தொடர்பாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்திய பேரணியில் மோடி அரசின் காவல்துறை கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது. ஏராளமான மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.  நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்கள், இளைஞர்கள் மீது ஏவப்பட்ட கண்மூடித்தனமான வன்முறையைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதி மாவட்டங்களிலும் ஜூலை 27 திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம். </p><p>தர்மேந்திர பிரதான் கல்வி மந்திரி ஆனதற்குப் பிறகு நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகள் மற்றும் தகுதித் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் 152 முறை கசிந்து, பலமுறை தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு சுமார் ஏழரை கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்குப் பொறுப்பேற்க வேண்டிய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.</p><p>"கல்வித் துறையைச் சீரழிக்கும் மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்” என்று மாணவர்கள் தன்னெழுச்சியாகக் கிளர்ந்தெழுந்து போராடி வருகின்றனர். அண்மையில் புதிதாகத் துவக்கப்பட்டுள்ள கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நாடாளுமன்றம் நோக்கி பேரணி ஒன்றை அறிவித்தது. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் ஆரம்பித்த ஜூலை 20-ம் நாள் டெல்லியில் அந்தப் பேரணி அறிவிக்கப்பட்டது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும், இளைஞர்களும் அதில் பங்கேற்றனர். அந்தப் பேரணியைத் தடுப்பதற்கு வரலாறு காணாத அளவில் டெல்லியின் வீதி தோறும் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். பேரணியில் பங்கேற்ற மாணவர்களையும், இளைஞர்களையும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும், தடியால் அடித்தும் காவல்துறையினர் தாக்கியுள்ளனர். சீருடை அணியாத சில குண்டர்கள் தடிகளை ஏத்தி மாணவர்களைத் தாக்கிய காட்சிகள் ஊடகங்களில் வெளியாயின. காயம்பட்ட மாணவர்களை நேரில் சென்று விசாரித்தபோது அவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை மாணவர்கள் தெரிவித்தனர்.</p><p>மாணவர்களை சிவில் உடையில் வந்து யார் தாக்கியது என்பதைப் பற்றி இதுவரை டெல்லி காவல்துறை விளக்கம் அளிக்கவில்லை. பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் பலர் கை, கால்களில் முறிவு ஏற்பட்டும், தலையில் காயம் அடைந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறு காயங்களோடு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் மீண்டும் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். </p><p>பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் பலர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். எத்தனை பேர் கைது செய்யப்பட்டார்கள் என்பதை இதுவரை காவல் துறை தெரிவிக்கவில்லை. அவர்களைச் சந்திப்பதற்கு யாரும் அனுமதிக்கப்படவும் இல்லை. இதற்காக நீதி கேட்டு பிரதமர் இல்லத்துக்கு முன்பு கூடி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் காங்கிரஸ் எம்பிக்களும் காவல்துறையினரால் மோசமாக நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். மோடி அரசு முற்றிலும் ஒரு சர்வாதிகார அணுகுமுறையைக் கையாண்டு வருகிறது. ஜனநாயக மாண்புகள் படுகொலை செய்யப்பட்டுள்ளன. </p><p>போராடிவரும் மாணவர்களின் கோரிக்கைகளான கல்வி மந்திரி தர்மேந்தர பிரதான் பதவி விலக வேண்டும்; போராடிய மாணவர்கள் மீது வன்முறைத் தாக்குதலை நடத்தியவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்; இது தொடர்பாக பிரதமர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் ஆகியவற்றை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரிக்கிறது.  நீட் தேர்வை முற்றாக ரத்து செய்ய வேண்டும்; மாநில அரசுகளே மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.</p><p>மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்தும், அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஜூலை 27-ம் தேதி திங்களன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள சட்டமன்றத் தொகுதி மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துக்கொள்கிறோம். அதில் ஜனநாயக சக்திகளும் திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன விரிவுரையாளர்களுக்கு பதவி உயர்வு: ஆணைகளை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-rajmohan-issues-orders-for-promotion-of-lecturers-at-state-educational-research-institute</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-rajmohan-issues-orders-for-promotion-of-lecturers-at-state-educational-research-institute#comments</comments><guid isPermaLink="false">5f7aecb1-318b-41a6-b88b-f76210ab03ec</guid><pubDate>Fri, 24 Jul 2026 10:50:05 +0000</pubDate><atom:updated>2026-07-24T10:50:05.897Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ராஜ்மோகன்,Minister Rajmohan,பள்ளிக் கல்வி அமைச்சர் ராஜ்மோகன்,School Education Minister  Rajmohan,அமைச்சர் ராஜ்மோகன்,Rajmohan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/850criqu/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/850criqu/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் முதுநிலை விரிவுரையாளர்களாக பணிபுரிந்து வந்த 7 பேர் இணை இயக்குநர் மற்றும் முதல்வராகப் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதேபோல், விரிவுரையாளர்களாக பணிபுரிந்து வந்த 12 பேர் முதுநிலை விரிவுரையாளர்களாகப் பதவி உயர்வு பெற்றுள்ளனர். </p><p>இவர்களுக்கான பதவி உயர்வு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஆணைகளை </a>பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார். </p><p>இந்த நிகழ்வில், பள்ளிக் கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் பி.சந்திர மோகன், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநர் ந.லதா மற்றும் இணை இயக்குநர் எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளே கவனம்: சென்னை - மும்பை ரெயில் 4 நாட்கள் ரத்து </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/attention-passengers-with-booked-tickets-chennai-mumbai-train-cancelled-for-4-days</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/attention-passengers-with-booked-tickets-chennai-mumbai-train-cancelled-for-4-days#comments</comments><guid isPermaLink="false">50950ca5-fc2c-49f0-9e4c-3a13570a2625</guid><pubDate>Fri, 24 Jul 2026 10:48:05 +0000</pubDate><atom:updated>2026-07-24T10:48:05.215Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,சென்னை,தமிழகம்,டிக்கெட் முன்பதிவு,தெற்கு ரெயில்வே,Southern Railway,மும்பை,Train Ticket,Reservation,ரெயில்கள் ரத்து,ரெயில் டிக்கெட் முன்பதிவு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/ahzsvqb2/ch.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/ahzsvqb2/ch.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மும்பை கோட்டத்தில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமான சென்னை எழும்பூர் - மும்பை இடையே இயக்கப்படும் ரெயில் 4 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக மத்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.</p><h2>முழுவதுமாக ரத்து</h2><p>இது தொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/topic/தெற்கு-ரெயில்வே">தெற்கு ரெயில்வே</a> வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p>சென்னை எழும்பூரில் இருந்து மும்பைக்கு ஜூலை 25 முதல் ஜூலை 28-ந் தேதி வரை காலை 6.35 மணிக்கு புறப்பட வேண்டிய எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 22158) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. </p><p>மறுமார்க்கத்தில், மும்பையில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஜூலை 25 முதல் ஜூலை 28-ந் தேதி வரை இரவு 10.52 மணிக்கு புறப்பட வேண்டிய ரெயில் (22157) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அரசுப்பள்ளி மாணவர்களை ஊழியர்களாக நடத்தும் அவலம் எப்போது தான் மாறும்? - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/when-will-the-plight-of-government-school-students-being-treated-as-employees-change-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/when-will-the-plight-of-government-school-students-being-treated-as-employees-change-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">59ebe69e-afc1-455e-bb50-631d0206d994</guid><pubDate>Fri, 24 Jul 2026 10:32:53 +0000</pubDate><atom:updated>2026-07-24T10:32:53.163Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/kk7s472b/Untitled-22.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/kk7s472b/Untitled-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>வேலை செய்யும் மாணவர்கள்</h2><p>கடந்த சில தினங்களுக்கு முன்பு, தவெக அமைச்சர் தமிழன் பார்த்திபன் “குழந்தைகள் பள்ளிகளை சுத்தம் செய்வதில் எந்தவொரு தவறும் இல்லை” என்ற ரீதியில் பேசியது கடும் விமர்சனத்திற்குள்ளான நிலையில், தற்போது திருப்பத்தூர் மாவட்டம் கேதாண்டப்பட்டி, அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏற்பட்ட கழிவுநீர் அடைப்பை சரி செய்யும் பணியில், அங்கு படிக்கும் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. </p><p>அதிலும் தாங்கள் சுரண்டப்படுகிறோம் என்பது கூட தெரியாமல், “ எங்கள் தலைமை ஆசிரியர் தான் செய்ய சொன்னார், பள்ளியில் எப்போதுமே இந்த வேலையை நாங்கள் தான் செய்வோம்” என அப்பாவித்தனமாகக் கூறும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அம்மாணவர்களைக் </a>காண்கையில் ஒரு தந்தையாக நெஞ்சம் கனத்துப் போகிறது. படிக்கும் பிள்ளைகளை, இப்படி துப்புரவுப் பணிகளில் ஈடுபடுத்துவது, மனிதாபிமானமற்றது மட்டுமன்றி குழந்தைகளின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. </p><h2>நடவடிக்கை எடுக்க வேண்டும்!</h2><p>எனவே, “உங்கள் விஜய் மாமா” என்று தன்னைத் தானே விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும்  முதல்-அமைச்சர் விஜய், அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் தேவையான துப்புரவுப் பணியாளர்களை நியமித்து, அரசுப் பள்ளி மாணவர்களின் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்! மேலும், தனியார் பள்ளிகளை மட்டும் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அரசுப்பள்ளிகளில் இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-buses-operate-for-the-weekend-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-buses-operate-for-the-weekend-2#comments</comments><guid isPermaLink="false">3c1a35e0-aeb8-4ebe-8cc2-7491f273b6c4</guid><pubDate>Fri, 24 Jul 2026 10:02:52 +0000</pubDate><atom:updated>2026-07-24T10:02:52.180Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு பஸ்கள்,special buses,சிறப்பு பேருந்துகள்,State Transport Corporation,சிறப்பு பேருந்துகள் இயக்கம்,அரசு போக்குவரத்து கழகம்,Operation of special buses,சிறப்பு பஸ்கள் இயக்கம்,tamilnadu State Transport Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/h8b6mt8o/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/h8b6mt8o/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>வார விடுமுறை</h2><p>24/07/2026 (வெள்ளிக்கிழமை) 25/07/2026 [சனிக்கிழமை) மற்றும் 26/07/2026 (ஞாயிறுக்கிழமை) மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2>சிறப்பு பேருந்துகள்</h2><p>சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 24/07/2026 [வெள்ளிக்கிழமை) அன்று 395 பேருந்துகளும், 25/07/2026 (சனிக்கிழமை) 330 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 24/07/2026 வெள்ளிக் கிழமை அன்று 120 பேருந்துகளும் 25/07/2026 சனிக்கிழமை அன்று 120 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்திலிருந்து 24/07/2026 மற்றும் 25/07/2026 ஆகிய நாட்களில் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, போளூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு ஒவ்வொரு நாளும் 25 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 26/07/2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 420 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2>முன்பதிவு </h2><p>இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 6487 பயணிகளும் சனிக்கிழமை 2387 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 7089 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் TNSTC Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p>இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>நில நிர்வாக ஆணையராக ராஜேஷ் லக்கானி நியமனம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rajesh-lakhoni-appointed-as-commissioner-of-land-administration-tamil-nadu-government-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rajesh-lakhoni-appointed-as-commissioner-of-land-administration-tamil-nadu-government-announcement#comments</comments><guid isPermaLink="false">842cedb4-cad5-4105-8789-f7d87a66c254</guid><pubDate>Fri, 24 Jul 2026 09:50:52 +0000</pubDate><atom:updated>2026-07-24T09:50:52.139Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,TN govt,தலைமைச் செயலாளர்,ராஜேஷ் லக்கானி,நில நிர்வாகம்,Rajesh Lakhani</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/may9bczz/lakoe.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/may9bczz/lakoe.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மத்திய அரசின் பள்ளிக் கல்வி துறையின் கீழ் இயங்கும், நவோதயா வித்யாலயா சமிதியின் ஆணையராக பணியாற்றி வரும் மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ராஜேஷ் லக்கானி, மீண்டும் தமிழக அரசு பணிக்கு மாற்றம் செய்து, மத்திய பணியாளர் நலத்துறை அறிவித்திருந்தது.</p><p>இந்நிலையில் நில நிர்வாக ஆணையராக ராஜேஷ் லக்கானி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.  </p><p>இதுதொடர்பாக அரசுத் தலைமைச் செயலாளர் எம்.சாய் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p>ஐ.ஏ.எஸ். (பணியிட ஒதுக்கீடு) விதிகள், 1954-இன் விதி 4(2)-இன் கீழ், 'கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையர், நில நிர்வாகம்' என்ற தற்காலிகப் பணியிடத்தை உருவாக்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இப்பணியிடம், பணியில் சேரும் நாளிலிருந்து ஓராண்டு காலத்திற்கோ அல்லது இப்பணியிடத்தின் தேவை முடிவுக்கு வரும் வரையோ - இவ்விரண்டில் எது முந்தையதோ - அதுவரை செயல்பாட்டில் இருக்கும்.</p> <p>2. பின்வரும் பணி நியமனம் அறிவிக்கப்படுகிறது:-</p><p>மத்திய அரசுப் பணி deputation-லிருந்து திரும்பும் ராஜேஷ் லக்கானி, ஐ.ஏ.எஸ், ஏற்கனவே பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆர்.கஜலட்சுமி, ஐ.ஏ.எஸ்-க்கு பதிலாக, மேலே பத்தி 1-இல் உருவாக்கப்பட்ட 'கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையர், நில நிர்வாகம்' என்ற பணியிடத்தில் நியமிக்கப்படுகிறார்.</p><p>3. ஐ.ஏ.எஸ். (ஊதியம்) விதிகள், 2016-இன் விதி 12(1)-இன் கீழ், மேலே பத்தி 1-இல் உருவாக்கப்பட்ட 'கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையர், நில நிர்வாகம்' என்ற பணியிடமானது, ஐ.ஏ.எஸ். (ஊதியம்) விதிகள், 2016-இன் அட்டவணை II-A-இல் குறிப்பிடப்பட்டுள்ள 'தலைமைச் செயலாளர்' (Chief Secretary) என்ற பணியிடத்திற்கு இணையான அந்தஸ்து மற்றும் பொறுப்புகளைக் கொண்டதாக இருக்கும் என்று அரசு அறிவிக்கிறது.</p><p>(கவர்னரின் ஆணையின்படி)</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <p>கடந்த 1992ம் ஆண்டு பிரிவு ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ராஜேஷ் லக்கானி, கடந்த பிப்ரவரியில், தமிழக அரசு பணியில் இருந்து, மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/udsxv5mb/lajo.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் காவல்துறையினரால் விசாரணைக் கைதி படுகொலை - சீமான் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/custody-death-of-remand-prisoner-in-thoothukudi-police-station-seeman-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/custody-death-of-remand-prisoner-in-thoothukudi-police-station-seeman-condemns#comments</comments><guid isPermaLink="false">6835158e-eeae-4bd6-8268-c7cc28b577e5</guid><pubDate>Fri, 24 Jul 2026 09:39:46 +0000</pubDate><atom:updated>2026-07-24T09:39:46.961Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,Seeman,Thoothukudi,தூத்துக்குடி,விசாரணை கைதி,Lockup Death</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/mdj9qrmc/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சீமான்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/mdj9qrmc/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தூத்துக்குடி, தென்பாகத்தில் அருணாச்சலம் எனும் சிறைவாசி காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இறப்பதற்கு முன்பு, மரண வாக்குமூலமாகத் தான் தாக்கப்பட்டது குறித்து அருணாச்சலம் கூறும் காணொளி நெஞ்சை பதைபதைக்கச் செய்கிறது. சிறைக்குள் சபரிவர்மன் எனும் சிறைவாசி அடித்துக் கொல்லப்பட்ட ரணத்தின் சுவடு மறைவதற்குள்ளாகவே, அருணாச்சலம் எனும் விசாரணை சிறைவாசி காவல்நிலையத்தில் வைத்து அடித்துக் கொல்லப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.</p><p>மூன்று மாதத்தைக்கூட நிறைவுசெய்யாத தவெகவின் ஆட்சியில் நான்கு சிறைவாசிகளின் காவல் மரணங்கள் நிகழ்ந்திருப்பது மாநில அரசின் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது. முந்தைய திமுகவின் ஆட்சியில், காவல்துறை மரணங்களின்போது ஆளும் வர்க்கத்துக்கு எதிராகச் சீறிய இன்றைய முதல்வரான விஜய், தனது ஆட்சியில் நடக்கும் காவல்நிலைய மரணங்களுக்குத் தார்மீகப் பொறுப்பேற்று வருத்தம் தெரிவிக்கவோ, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்கவோ செய்யாதிருப்பது அதிகாரத்திமிரின்றி வேறென்ன? இது வாக்குச் செலுத்தி, ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களுக்குச் செய்யப்படும் ஜனநாயகத் துரோகமில்லையா?</p><p>தன்னுடைய ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டுக்காக ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் நிறுத்தி வைத்த முதல்வர் விஜய்க்கு, அநியாயமாய் போன ஒரு உயிருக்கான நீதியைப் பெற்றுத்தர மனமில்லையா? ஆட்சியதிகாரமும், பதவி மமதையும் கண்ணை மறைக்கிறதா முதல்வரே? ஏழை எளிய மக்களின் அழுகுரல்களும், ஒப்பாரியும், ஓலமும் உங்கள் செவிகளுக்கு வந்து சேரவில்லையா? திமுகவின் ஆட்சியில் காவல்நிலைய மரணங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குக்கூட நீதியைப் பெற்றுத் தருவதாகத் தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் பேசிவிட்டு, உங்களது ஆட்சியில் பறிபோன உயிருக்கான நீதியைப் பெற்றுத் தராது, குற்றவாளிகளைக் காப்பாற்றுவதுதான் மிக இழிவான செயல் இல்லையா? ஆளும் தவெக அரசின் இத்தகையப் போக்கு ஒருபோதும் ஏற்புடையதில்லை. இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன். </p><p>எப்பேர்ப்பட்ட குற்றவாளியாக, கொலையாளியாக இருந்தாலும் அரிதினும் அரிதான வழக்குகளுக்கே மரணத்தைத் தண்டனையாக நீதிமன்றங்கள் விதிக்கின்றன. அப்படியிருக்க, காவல்துறை எதேச்சதிகாரப்போக்கோடு குற்றஞ்சாட்டப்பட்டவரின் மீது கோரத் தாக்குதல் தொடுத்து, அடித்தே கொன்று, மரணிக்கச் செய்வதை ஒருநாளும் ஏற்க முடியாது. எந்தக் குற்றமிழைத்தவராயினும் அவருக்கான தண்டனையை நீதிமன்றத்தின் மூலம் பெற்றுத் தர வேண்டுமே ஒழிய, காவல்துறையினரே குற்றஞ்சாட்டப்பட்டவரின் கை, கால்களை உடைப்பதும், உயிரைப் போக்குவதுமான கொடுஞ்செயல்கள் குடிமைச்சமூகத்தில் நிகழக்கூடாத அவலம்!</p><p>ஆகவே, காவல்நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறைவாசி அருணாச்சலம் மரணத்தைக் கொலைவழக்காகப் பதிவுசெய்து, அதில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைதுசெய்ய வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 50 லட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சேவலை ரத்தகாவு கொடுத்த விஜய் ரசிகர்: இதெல்லாம் என்ன மனநிலை..? - வானதி சீனிவாசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vijay-fan-who-gave-a-rooster-a-bloody-nose-what-is-this-mentality-vanathi-srinivasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vijay-fan-who-gave-a-rooster-a-bloody-nose-what-is-this-mentality-vanathi-srinivasan#comments</comments><guid isPermaLink="false">e915464a-f80f-471a-8f74-af82bd6223ed</guid><pubDate>Fri, 24 Jul 2026 09:36:22 +0000</pubDate><atom:updated>2026-07-24T09:36:22.430Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/d03m8hb9/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/d03m8hb9/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>சேவலை அறுத்து ரத்தகாவு </h2><p>திருச்சியில், தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஜனநாயகன் திரைப்படம் காண வந்த ரசிகர் ஒருவர் கட்அவுட் முன்பாக சேவலை அறுத்து ரத்தம் தெறிக்க அதனை பேனரில் படும்படி செய்த காணொளியானது கடும் அதிர்ச்சியை அளிக்கிறது.</p><p>தவெக அரசு பதவியேற்ற நாளிலிருந்து நடைபெறுகிற சம்பவங்களைப் பார்த்தால் இதுபோன்ற செய்கைகளில் ஈடுபடுவர்கள் எல்லாம் உண்மையாகவே அறிவு முதிர்ச்சி பெற்றவர்கள்தானா என்ற சந்தேகம் எழுகிறது. தமிழ்நாட்டில் சினிமா நடிகர்களுக்கு பால் அபிஷேகம் செய்வது, மதுபானத்தில் அபிஷேகம் செய்வது போன்ற செயல்கள் காலங்காலமாக தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் நேற்று கொண்டாட்டத்தின் உச்சமாக சேவலை அறுத்து குருதி தெறிக்க பலியிடுவது கடும் கண்டனத்திற்குரியது.</p><h2>சினிமா வேறு, நிஜம் வேறு</h2><p>ரசிகர்கள் தங்கள் அபிமான நட்சத்திரங்களின் படங்களைக் கொண்டாடுவதற்கு மரம் நடுவது, ஏழைகளுக்கு உதவுவது, அன்னதானம் கொடுப்பது என எத்தனையோ வழிகள் உள்ளன. ஆனால் அதையெல்லாம் விடுத்து தமிழ்நாட்டு கலாச்சாரத்தில் கடவுள்களுக்கு உகந்த சில செயல்களை, நம்பிக்கைகளை நடிகர்கள் முன் திணிப்பது நாளடைவில் மற்றவர்களும் பின்பற்றத் தொடங்கும் தவறான உதாரணமாகி விடும்.</p><p>இவர்களைப் போன்றவர்கள் சினிமா வேறு, நிஜம் வேறு என்பதை எப்போது உணரப் போகிறார்களோ?  இனி இதுபோன்ற செயல்களை அனுமதிக்கா வண்ணம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க அரசையும், திரைத்துறை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சார்ந்தவர்களையும் </a>வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விசாரணைக் கைதி சபரிவர்மன் கொலை வழக்கு: சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/murder-case-of-undertrial-prisoner-sabarivarman-cb-cid-police-investigation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/murder-case-of-undertrial-prisoner-sabarivarman-cb-cid-police-investigation#comments</comments><guid isPermaLink="false">d2bb3a89-2ae7-471f-bc81-9f753257ba81</guid><pubDate>Fri, 24 Jul 2026 09:22:21 +0000</pubDate><atom:updated>2026-07-24T09:22:21.270Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Crime News,கன்னியாகுமரி,தமிழகம்,Murder case,கொலை வழக்கு,Kanyakumari,கிரைம் செய்திகள்,சிறை,CBCID,சிபிசிஐடி போலீசார்,விசாரணைக் கைதி,prisoner death</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/ceieac1s/casdu.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/ceieac1s/casdu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி,</p><p>கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள ஈத்தங்காட்டை சேர்ந்தவர் சபரிவர்மன் (வயது 33). மாற்றுத்திறனாளி வியாபாரியான இவர் தனது வீட்டின் அருகே பெட்டிக்கடை நடத்தி வந்தார். அவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்ததாக கூறி, தென்தாமரைக்குளம் போலீசார் கடந்த 9-ந்தேதி சபரிவர்மனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.</p><p>அங்கு விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்த அவர், கடந்த 13-ந்தேதி சிறையில் வைத்தே அடித்துக் கொல்லப்பட்டார். அவரை சிறை வார்டன்கள் 3 பேர் மற்றும் 8 விசாரணை கைதிகள் சேர்ந்து கை கால்களை கட்டிப்போட்டு கொடூரமான முறையில் அடித்து கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. </p><p>இதுகுறித்து நேசமணிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகர்கோவில் சிறையின் வார்டன், தலைமை வார்டன், சிறைக் காவலர் மற்றும் 8 கைதிகள் என மொத்தம் 11 பேரை கைது செய்தனர்.</p><h2>காவலர்கள் பணியிடை நீக்கம்</h2><p>கைது செய்யப்பட்ட சிறை காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, நாங்குநேரி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். நாகர்கோவில் சிறையில் இருந்த 8 கைதிகளிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அந்த 8 கைதிகளும், பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.</p><p>இந்த நிலையில் சபரிவர்மன் கொலையில் கைது செய்யப்பட்டிருக்கும் கைதிகளில் அரவிந்த், அஜய் மற்றும் ஜெகன் ஆகிய 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர். இதற்காக போலீசார் தரப்பில் நாகர்கோவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதே நேரத்தில் சபரிவர்மன் கொலை நடந்த நாகர்கோவில் சிறையில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் சபரிநாதன் கொலை நடந்த அறையில் இருந்து தடயங்கள் மற்றும் ரேகைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/w2kzm6uf/kankal.jpg" /></figure><h2>செல்போன் மாயம்</h2><p>இதற்கிடையே சபரிவர்மனின் செல்போன் மாயமாகியிருக்கும் விவரம் வெளியானது. அந்த செல்போனில் சில முக்கிய வீடியோ ஆதாரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அவரது செல்போன் யாரிடம் உள்ளது? என்பது தெரியாத நிலையில், அதை தேடி கண்டுபிடிக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டனர்.</p><h2>சி.பி.சி.ஐ.டி. விசாரணை</h2><p>இந்த நிலையில் சபரிவர்மன் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. உத்தரவு பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து சபரிவர்மன் கொலை வழக்கு விசாரணை உடனடியாக கன்னியாகுமரி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. சபரிவர்மன் கொலை வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம், நேசமணி நகர் போலீசார் ஒப்படைத்தனர். </p> <h2>விசாரணை தொடக்கம்</h2><p>இந்தநிலையில் அதனை பெற்றுக்கொண்ட  சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை நேற்று தொடங்கியது. துணை போலீஸ் சூப்பிரண்டு நவராஜ் ராஜ்குமார் தலைமையில் நெல்லை இன்ஸ்பெக்டர்கள் மரிய பிரான்சிகா, உலகராணி மற்றும் போலீசார் குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்த ஆயத்தமானார்கள்.</p><p>அதன்படி கொலை சம்பவம் நடந்த நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறைக்கு சென்று விசாரித்தனர். சபரிவர்மன் அடைக்கப்பட்டிருந்த அறையை பார்வையிட்ட அவர்கள், அங்கு சில தகவல்களை கேட்டறிந்தனர். சிறைச்சாலையில் விசாரணை மற்றும் சம்பவம் நடைபெற்ற சிறை அறையில் கேமரா மூலமும் பதிவு செய்தனர்.</p><p>இதைத்தொடர்ந்து சபரிவர்மனின் மனைவி ஆனந்தவல்லி மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வியாபாரி கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கையிலெடுத்ததால், மீண்டும் இந்த வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாவட்டந்தோறும் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைகளை அமைக்க வேண்டும் - டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/districtwise-medical-waste-treatment-plants-needed-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/districtwise-medical-waste-treatment-plants-needed-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">92ff4b87-ab43-4f61-a431-053a91e730fb</guid><pubDate>Fri, 24 Jul 2026 09:17:26 +0000</pubDate><atom:updated>2026-07-24T09:17:26.123Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,Medical Waste,மருத்துவக் கழிவுகள்,சுத்திகரிப்பு ஆலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/sgqak5bh/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/sgqak5bh/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழகத்தில் அண்மைக்காலமாகவே மருத்துவக் கழிவுகள் திறந்த வெளிகளில் கொட்டப்படுதல், மருத்துவமனைகளிலேயே கழிவுகள் தேங்கி கிடத்தல், உரிய நேரத்தில் உரிய முறையில் அகற்றப்படாமல் இருத்தல் என அடுத்தடுத்து வெளியாகும் புகார்கள், தமிழகத்தின் பொது சுகாதாரம், சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் மற்றும் காற்றின் தரத்தை பாதிக்கும் அபாயகரமான சூழலை உருவாக்கியுள்ளது.</p><p>உதாரணத்திற்கு மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி மற்றும் ராமநாதபுரத்தில் உள்ள மருத்துவமனைகளில் மூலமாக மட்டும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 6 ஆயிரம் கிலோ மருத்துவக்கழிவுகள் உற்பத்தியாகும் நிலையில், குறிப்பிட்ட 5 மாவட்டங்களுக்கும் சேர்த்து விருதுநகரில் செயல்படும் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையில் நாள் ஒன்றுக்கு 2,800 கிலோ கழிவுகள் மட்டுமே சுத்திகரிக்க முடியும் என்ற நிலையில் மீதமுள்ள மருத்துவக் கழிவுகள் எங்கே செல்கின்றன? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுகிறது.</p><p>மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 60 டன் மருத்துவக் கழிவுகள் உற்பத்தியாகும் நிலையில், அவற்றை பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்கு போதுமான அளவிற்கு மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைகள் இல்லை என்பதும், தற்போது இருக்கும் மிகக் குறைவான ஆலைகளிலும் மருத்துவக் கழிவுகளை முழுமையாக சுத்திகரிக்கும் வசதிகள் இல்லாததுமே ஆங்காங்கே மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதற்கான பிரதான காரணம் என பொதுநல ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><p>தமிழகத்தில் உயிரி மருத்துவக் கழிவுகள் எந்தெந்த இடங்களில் எவ்வளவு உற்பத்தி ஆகிறதோ, அதற்கு ஏற்றவாறு அவை மேலாண்மை செய்யப்படுவதை ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மருத்துவக் கழிவுகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுநல ஆர்வலர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு கூட உரிய பதிலை அளிக்காமல் தட்டிக் கழிப்பதும், காலம் தாழ்த்துவதும் ஏற்புடையதல்ல.</p><p>எனவே, பொதுமக்களின் உயிர், உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் அல்லாத இடங்களை தேர்ந்தெடுத்து மாவட்டந்தோறும் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைகளை அமைப்பதோடு, அவற்றின் செயல்பாடுகளை தனி குழுக்களை அமைத்து கண்காணித்திட வேண்டும் எனவும் தவெக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நீட் விவகாரம்: பிரதமரின் வாக்குறுதிகளை வரவேற்கிறேன்! - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/neet-issue-i-welcome-the-prime-ministers-promises-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/neet-issue-i-welcome-the-prime-ministers-promises-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">c622724a-e77c-4c91-9ad8-4318d9a1baa8</guid><pubDate>Fri, 24 Jul 2026 09:09:43 +0000</pubDate><atom:updated>2026-07-24T09:09:43.815Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,பிரதமர் மோடி,PM Modi,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,நீட் விவகாரம்,NEET issue</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/9fqx5mn1/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/9fqx5mn1/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நீட் விவகாரத்தில் மாணவர் நலன் காக்கும் வகையிலான பிரதமரின் வாக்குறுதிகளை வரவேற்கிறேன் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>நீட் மறுதேர்வு</h2><p>வினாத்தாள் கசிவு (Paper Leak) விவகாரத்தில், மாணவர்களின் வேதனையைப் போக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ள உறுதியான வாக்குறுதிகளையும், அதன் பின்னர் மத்திய அரசு எடுத்து வரும் தொடர் துரித நடவடிக்கைகளையும் முழுமனதாக வரவேற்கிறேன்.</p><p>வினாத்தாள் கசிவுக்குக் காரணமான குற்றவாளிகளை உடனடியாகச் சிறையிலடைத்ததோடு, மாணவர்களின் கல்வியாண்டு வீணாகாமல் தடுக்கத் துரிதமாக மறுதேர்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டிருப்பது மத்திய அரசின் சிறப்பான செயல்பாட்டைக் காட்டுகிறது. அதன் தொடர்ச்சியாக, தேர்வு முறைகளில் முழுமையான வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வர மத்திய அரசு எடுத்துள்ள படிநிலைகள் (Process) இதோ:</p><h2>நடவடிக்கைகள்</h2><p>* தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்குக் கடுமையான தண்டனை விரைவாகக் கிடைப்பதை உறுதி செய்ய ‘விரைவு நீதிமன்றங்கள்’ (Fast-track courts) அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>* இந்த விரைவு நீதிமன்றத்துக்கு சிறப்பு நீதிபதியாக அனு குரோவர் பாலிகா நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>* நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடரிலேயே தேர்வு முறைகேடுகளுக்குக் கடுமையான தடையையும் தண்டனையையும் வழங்கும் புதிய மசோதா கொண்டுவரப்பட்டு சட்டமாக்கப்பட உள்ளது.</p><h2>உண்ணாவிரதப் போராட்டம் முடிவு</h2><p>மேலும், கல்விச் சீர்திருத்தங்களுக்காகப் போராடிய சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மத்திய அமைச்சர்கள் </p><p>ஜெ.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் முன்னிலையில் அரசு வழங்கிய புதிய உத்தரவாதங்களை ஏற்றுத் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துள்ளார். மாணவர்களின் குரலுக்கு மதிப்பளித்து அரசு வழங்கி வரும் இந்தத் தீர்வுகள் மற்றும் துரித சீர்திருத்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நடவடிக்கைகளுக்கு </a>மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது முழு ஒத்துழைப்பை வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கீழடியில்  மீன் உருவம் பொறித்த பானை கண்டெடுப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-pot-engraved-with-a-fish-image-was-discovered-in-keezhadi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-pot-engraved-with-a-fish-image-was-discovered-in-keezhadi#comments</comments><guid isPermaLink="false">3610112a-5201-4aa4-8872-fbe0c303e0d8</guid><pubDate>Fri, 24 Jul 2026 09:02:26 +0000</pubDate><atom:updated>2026-07-24T09:02:26.409Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கீழடி,Keeladi,Keezhadi Museum,keezhadi excavation,பானை,கீழடி அகழ்வாராய்ச்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/selpt7e5/pot33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
கீழடி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/selpt7e5/pot33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்புவனம்,</p><p>சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடி பகுதியில் மத்திய-மாநில அரசுகள் சார்பில் ஏற்கனவே 10 கட்ட அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளது. 2,600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழங்கால மக்கள் பயன்படுத்திய பொருட்கள் கிடைக்கப்பெற்று கீழடியில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.</p><p>பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், பள்ளி மாணவ-மாணவி கள் என தினமும் ஏராளமானோர் வந்து பார்வையிட்டும், 'செல்பி' எடுத்தும் மகிழ்கின்றனர். இதேபோல் கீழடியில் அகழாய்வு நடைபெற்ற இடத்திலேயே திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திறந்தவெளி அருங்காட்சியகத்தை தினமும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், மாணவ, மாணவிகள், வெளிநாட்டினர் என பார்வையிட்டு வருகின்றனர்.</p><h2>11-வது கட்ட அகழாய்வு </h2><p><a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%9F%E0%AE%BF%20">கீழடி</a> 11ஆம் கட்ட அகழாய்வில் மீன் உருவம் பொறித்த பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p>இதுவரை 9 குழிகள் தோண்டப்பட்டு உறை கிணறுகள், சுடுமண பானைகள், சுருள வடிவ, பீப்பாய் வடிவ, மூடிய நிலையில், திறந்த நிலையில் வடிகால் அமைப்புகள், செங்கல் கட்டுமானங்கள் உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.</p> <h2>கல்வியில் சிறந்து விளங்கிய சமுதாயம்</h2><p>முதன் முதலில் தோண்டப்பட்ட குழியில் 160 செ.மீ., ஆழத்தில் 20 செ.மீ., விட்டமும், ஒரு அடி உயரமும் கொண்ட இரு நிற சுடுமண் பானை முழுமையாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. பானையின் மேற்பகுதியில் மீன் உருவம் கோட்டு சித்திரமாக வரையப்பட்டுள்ளது. ஏற்கனவே கீழடியில் மீன் உருவம் பதித்த உறை கிணறு, பானை ஓடு உள்ளிட்ட பொருட்கள் கிடைத்தன.</p><p>2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன் கல்வியில் சிறந்து விளங்கிய சமுதாயமாக கீழடி மக்கள் விளங்கி இருக்க கூடும் என்பதற்கு சான்றாக இவை கருதப்படுகின்றன.</p>]]></content:encoded></item><item><title>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-moderate-rain-in-western-ghats-districts-today</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-moderate-rain-in-western-ghats-districts-today#comments</comments><guid isPermaLink="false">71da8af0-06e4-40c8-b780-bddd2a01e3fd</guid><pubDate>Fri, 24 Jul 2026 09:01:15 +0000</pubDate><atom:updated>2026-07-24T09:01:15.408Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/yxp3di9n/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/yxp3di9n/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சராசரி கடல் மட்டத்தில் குஜராத்திலிருந்து கர்நாடகா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><p><strong>24-07-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.</p><p><strong>25-07-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><h3>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</h3><p><strong>24-07-2026 முதல் 28-07-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.</p><h3>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</h3><p><strong>24-07-2026 முதல் 28-07-2026 வரை:</strong> அதிகபட்ச வெப்பநிலை வேலூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று மற்றும் நாளை</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: ஆக., 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/disproportionate-assets-case-against-former-minister-c-vijayabaskar-adjourned-to-august-24</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/disproportionate-assets-case-against-former-minister-c-vijayabaskar-adjourned-to-august-24#comments</comments><guid isPermaLink="false">622d99f0-b682-46fc-bf02-5e451a6a0db9</guid><pubDate>Fri, 24 Jul 2026 08:50:25 +0000</pubDate><atom:updated>2026-07-24T08:50:25.623Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,புதுக்கோட்டை,Pudukottai,சொத்துக்குவிப்பு வழக்கு,சி.விஜயபாஸ்கர்,Assets,C.Vijayabaskar</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/4soy8ft3/kaval.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/4soy8ft3/kaval.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுக்கோட்டை, </p><p>புதுக்​கோட்டை மாவட்​டம் விராலிமலை சட்​டமன்ற தொகு​தி​யில் வெற்றி பெற்ற முன்​னாள் அமைச்​சர் சி.​விஜய​பாஸ்​கர், 2016-ல் இருந்து 2021 வரை அமைச்​ச​ராக இருந்த காலக்​கட்​டத்​தில் தனது மனைவி ரம்யா பெயரிலும், தனது பெயரிலும் வரு​மானத்​துக்கு அதி​க​மாக சொத்து சேர்த்​த​தாக, புதுக்​கோட்டை மாவட்ட ஊழல் தடுப்பு மற்​றும் கண்​காணிப்பு பிரிவு போலீ​சார் கடந்த 2021-ல் வழக்​குப் பதிவு செய்​தனர்.</p><p>மறு​நாள் விஜய​பாஸ்​கருக்கு சொந்​த​மான வீடு, கல்​கு​வாரி, அலு​வல​கம் உள்பட தமிழகம் முழு​வதும் 56 இடங்​களில் ஊழல் தடுப்பு போலீ​சார் சோதனை நடத்​தினர். இந்த வழக்கு புதுக்​கோட்டை மாவட்ட முதன்மை நீதி​மன்​றத்​தில் விசா​ரிக்​கப்​பட்டு வந்​தது. வழக்கு விசா​ரணை​யின்​போது, விஜய​பாஸ்​கர், ரம்யா ஆகியோர் அவ்​வப்​போது நீதி​மன்​றத்​தில் ஆஜராகி வந்​தனர்.</p><p>இதன்படி சி.விஜயபாஸ்கர் மற்றும் அவர் மனைவி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்துவரும் நிலையில், இன்றைக்கு வழக்கு விசாரணையில் இருவரும் ஆஜராகவில்லை. இதனை அடுத்து வழக்கு விசாரணை அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. </p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் இளைஞர்கள் மீதான தாக்குதல்: மன்னார்குடியில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/attack-on-youths-in-delhi-college-students-in-mannargudi-boycott-classes-and-stage-a-protest</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/attack-on-youths-in-delhi-college-students-in-mannargudi-boycott-classes-and-stage-a-protest#comments</comments><guid isPermaLink="false">62e31f40-4f2d-4126-9c86-ed9ae872e074</guid><pubDate>Fri, 24 Jul 2026 08:25:46 +0000</pubDate><atom:updated>2026-07-24T08:25:46.063Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Delhi,போராட்டம்,கல்லூரி மாணவர்கள்,மன்னார்குடி,Mannargudi,College students protest</media:keywords><media:content height="300" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/import/Images/Article/201701122034172160_Jallikattu-seeking-permissionRain-is-trying-to-stirWe_SECVPF.gif" width="375"><media:title type="html"><![CDATA[ மாணவர்கள் போராட்டம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மன்னார்குடியில் மாணவர்கள் போராட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/import/Images/Article/201701122034172160_Jallikattu-seeking-permissionRain-is-trying-to-stirWe_SECVPF.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவாரூர்,</p><p>டெல்லியில் இளைஞர்கள் மீதான தாக்குதலை கண்டித்து <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">திருவாரூர் மாவட்டம் </a>மன்னார்குடியில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.</p><h2>டெல்லி வன்முறை</h2><p>டெல்லியில் நீட் தேர்வு முறைகேடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகள் மற்றும் தடியடி போன்ற தாக்குதல்கள் நடத்தினர். </p><p>இதனைக் கண்டிக்கும் விதமாக பல்வேறு இடங்களில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மாணவர்கள் போராட்டம் </a>நடத்தி வருகின்றனர். இதையடுத்து மத்திய அரசின் செயலுக்கு மன்னார்குடி மாணவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.</p><h2>வகுப்புகள் புறக்கணிப்பு- போராட்டம்</h2><p>மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் வகுப்புகளைப் புறக்கணித்தனர். மேலும் கல்லூரி வளாகத்திற்கு வெளியே திரண்ட மாணவர்கள், டெல்லி போலீசாருக்கு எதிராகவும், மாணவர் நலனைப் பாதுகாக்கக் கோரியும் கோஷங்களை எழுப்பினர்.</p><h2>நாடு தழுவிய ஆதரவு</h2><p>பல்வேறு மாணவர் அமைப்புகள் விடுத்துள்ள நாடு தழுவிய போராட்ட அழைப்பின் ஒரு பகுதியாகவே மன்னார்குடியில் இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் மன்னார்குடி கல்வி நிறுவனப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை: அரசு மனநல காப்பகத்தில் மாற்றுத்திறனாளி கைதிக்கு நேர்ந்த கொடூரம்..</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-atrocity-faced-by-a-prisoner-treated-at-the-government-institute-of-mental-health-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-atrocity-faced-by-a-prisoner-treated-at-the-government-institute-of-mental-health-in-chennai#comments</comments><guid isPermaLink="false">bda168b1-df67-45a9-bffb-7d12b019ee16</guid><pubDate>Fri, 24 Jul 2026 08:23:59 +0000</pubDate><atom:updated>2026-07-24T08:23:59.380Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,படுகொலை,மனநலம் பாதிக்கப்பட்டவர்,prisoner death,மாற்றுத்திறனாளி கைதி,Mental Health hospital</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/f6041zvo/10.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ கீழ்ப்பாக்கம் மனநல ஆஸ்பத்திரி]]></media:title><media:description type="html"><![CDATA[ கீழ்ப்பாக்கம் மனநல ஆஸ்பத்திரியில் கைதி படுகொலை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/f6041zvo/10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கொலை வழக்கில் கைதாகி <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை கீழ்ப்பாக்கம்</a> அரசு மனநலக் காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்த மாற்றுத்திறனாளி கைதி படுகொலை செய்யப்பட்டார்.</p><p>கோவையை அடுத்த ஆழியார் பகுதியில் கடந்த 2024-ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் ஜாகீர் (வயது 27) என்ற இளைஞர் கைதானார். வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவர், மனநலமும் பாதிக்கப்பட்டிருந்ததால் நீதிமன்ற உத்தரவுப்படி பொள்ளாச்சி கிளைச் சிறையிலிருந்து மாற்றப்பட்டு, சென்னை கீழ்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.</p><h2>காப்பகத்தில் நடந்த கொடூரம்</h2><p>கடந்த ஜூலை 20-ந்தேதி, அதே காப்பகத்தில் மற்றொரு குற்றவழக்கில் கைதாகி அரவிந்தசாமி என்ற <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மனநலன் பாதிக்கப்பட்ட கைதி </a>சிகிச்சை பெற்று வந்தார். </p><p>அவர் ஜாகீரை திடீரென கைகளால் கொடூரமாகத் தாக்கினார். மேலும் கண்ணில் குத்தி, காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தினார். இதில் ஜாகீர் படுகாயமடைந்து உயிருக்கு போராடினார்.</p><h2>கைதி உயிரிழப்பு</h2><p>பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய ஜாகீரை, காப்பக ஊழியர்கள்  மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஜாகீர் பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p>அரசு காப்பகத்திற்குள் பாதுகாப்பில் இருந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கைதி</a>, சக கைதியால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் சென்னை வட்டாரத்தில் பெரும் சட்டம் ஒழுங்கு கேள்வியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து கீழ்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சிவந்தாகுளம் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி சி.பி.எம். காத்திருப்பு போராட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cpm-holds-protest-demanding-relocation-of-sivanthakulam-tasmac-shop</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cpm-holds-protest-demanding-relocation-of-sivanthakulam-tasmac-shop#comments</comments><guid isPermaLink="false">fdb51194-4569-4e7c-86cf-07f4ac20bb55</guid><pubDate>Fri, 24 Jul 2026 08:17:53 +0000</pubDate><atom:updated>2026-07-24T08:17:53.442Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Relocation,இடமாற்றம்,insistence,வலியுறுத்தல்,டாஸ்மாக் கடை,Tasmac shop,காத்திருப்பு போராட்டம்,சிபிஎம்,CPM,waiting protest</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/th53lbw8/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூத்துக்குடியில் சி.பி.எம். காத்திருப்பு போராட்டம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/th53lbw8/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி சிவந்தாகுளம் குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88">டாஸ்மாக் கடை</a>யை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடை முன்பு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%20">காத்திருப்பு போராட்டம் </a>நடந்தது.</p><h2>சிவந்தாகுளம் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய கோரிக்கை</h2><p>தூத்துக்குடி சிவந்தாகுளம் 5-வது தெருவில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானக் கடையால், அப்பகுதியில் சென்று வரும் பள்ளி மாணவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்களுக்குத் தொடர்ச்சியாக பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதால், அந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். </p><h2>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போராட்டம்</h2><p>இந்த கோரிக்கையை வலியுறுத்தி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி</a>யின் சார்பில் டாஸ்மாக் கடை முன்பு நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி நகரக் குழு உறுப்பினர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் முத்து கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அர்ச்சுனன், ராஜா, மூத்த நிர்வாகிகள் பொன்ராஜ், மணவாளன் உள்ளிட்ட திரளான கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோசங்களை எழுப்பினர். </p><h2>அதிகாரிகள் பேச்சுவார்த்தை</h2><p>போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வருவாய்த்துறையினர் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் போது, இந்த பிரச்சினை தொடர்பாக வரும் 27-ம் தேதி உதவி கலெக்டர் தலைமையில் சமாதான கூட்டம் நடத்தி, உரிய தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதிகாரிகளின் இந்த உறுதியை ஏற்றுக்கொண்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்களது காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தர்மேந்திர பிரதானை நீக்கினால் அரசு கவிழ்ந்துவிடுமா? - பிரதமருக்கு பெ. சண்முகம் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-government-fall-if-dharmendra-pradhan-is-removed-p-shanmugam-questions-the-prime-minister</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-government-fall-if-dharmendra-pradhan-is-removed-p-shanmugam-questions-the-prime-minister#comments</comments><guid isPermaLink="false">4980b59a-4764-4009-8ac5-c43336cad8a1</guid><pubDate>Fri, 24 Jul 2026 08:03:57 +0000</pubDate><atom:updated>2026-07-24T08:03:57.329Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Modi,P. Shanmugam,தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,மோடி,பெ. சண்முகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/mavzomi6/67.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/mavzomi6/67.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் பெ. சண்முகம் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>பிரதமர் மோடி அவர்களே, மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, பல்லாயிரக்கணக்கான காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினரைக் கொண்டு கொலைவெறித் தாக்குதல் நடத்துவது, இணையதள இணைப்பைத் துண்டிப்பது, மெட்ரோ ரயில் நிலையங்களை மூடுவது எனத் வேண்டாத வேலைகளையெல்லாம் செய்துகொண்டிருக்கிறீர்கள்.</p><h2>தண்டனை</h2><p>தர்மேந்திர பிரதான் என்கிற ஓர் மந்திரியை நீக்குவதால் உங்கள் அரசு கவிழ்ந்துவிட போகிறதா என்ன? “உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் தீரவேண்டும்” என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81"> நீட் தேர்வு</a> குளறுபடிகளுக்கும் மாணவர்களின் தற்கொலைகளுக்கும் காரணமானவர் அதற்குரிய தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும். எனவே, தர்மேந்திர பிரதானைப் பதவியிலிருந்து நீக்கிப் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர முடிவெடுங்கள் பிரதமரே!</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மன்னார்குடி எம்.எல்.ஏ காமராஜை தகுதி நீக்கம் செய்க: சபாநாயகரிடம் அமமுக மனு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ammk-petitions-speaker-to-disqualify-mannargudi-mla-kamaraj</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ammk-petitions-speaker-to-disqualify-mannargudi-mla-kamaraj#comments</comments><guid isPermaLink="false">38b529ff-f375-416b-b5c1-8ce122800de6</guid><pubDate>Fri, 24 Jul 2026 07:54:00 +0000</pubDate><atom:updated>2026-07-24T07:54:00.732Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>AMMK,அமமுக,மன்னார்குடி,Mannargudi,காமராஜ் எம்.எல்.ஏ,Kamaraj MLA</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/q0qlhg42/15.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/q0qlhg42/15.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் காமராஜ். மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். அமமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஒரே எம்.எல்.ஏ. இவர்தான்.</p><p>தவெக ஆட்சி அமைக்க பல்வேறு கட்சிகளிடம் ஆதரவு கோரி இருந்த நிலையில், மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ், விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு கடிதம் எழுதி இருந்தார். அதன் பின்னர், கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில், தனது ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்துவிட்டு, மீண்டும், தவெகவுக்கு ஆதரவு அளித்தார். </p><p>சட்டப்பேரவையில் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்ததால் அதிருப்தியடைந்த டிடிவி தினகரன், அமமுகவிலிருந்து காமராஜை நீக்கம் செய்வதாக அதிரடியாக அறிவித்தார். தற்போது வரை தவெக அரசுக்கு காமராஜ் எம்.எல்.ஏ. ஆதரவு தெரிவித்து வருகிறார். </p><p>இந்த நிலையில், மன்னார்குடி எம்.எல்.ஏ காமராஜை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக்கோரி அமமுக சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது. காமராஜை தகுதி நீக்கம் செய்யக்கோரி அம‌முக பொருளாளர் கரிகாலன் சபாநாயகரிடம் நேரில் சென்று மனு அளித்துள்ளார். தங்கள் கட்சிக்கு எதிராக செயல்பட்டதுடன், கட்சி விதிகளை மீறியதால் அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அந்த மனுவில் கரிகாலன் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: கடைகளில் 240 கிலோ தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்- ரூ.13 ஆயிரம் அபராதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-240-kg-of-banned-plastic-products-seized-from-shops-rs-13-thousand-fine-imposed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-240-kg-of-banned-plastic-products-seized-from-shops-rs-13-thousand-fine-imposed#comments</comments><guid isPermaLink="false">c0021893-464b-4389-bb52-1d5d361f793f</guid><pubDate>Fri, 24 Jul 2026 07:43:39 +0000</pubDate><atom:updated>2026-07-24T07:43:39.584Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Corporation,மாநகராட்சி,Seizure,fine,அபராதம்,inspection,warning,எச்சரிக்கை,அதிகாரிகள்,plastic items,சோதனை,officials,பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/zmmv7f1d/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/zmmv7f1d/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி கிழக்கு மண்டலப் பகுதி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88">கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய சோதனை</a>யில் 240 கிலோ தடை செய்யப்பட்ட <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்</a> செய்யப்பட்டு ரூ.13 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. </p><h2>கடைகளில் சோதனை</h2><p>சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனரின் உத்தரவின் பேரில், கிழக்கு மண்டல சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அடங்கிய குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.</p><h2>240 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்</h2><p>குறிப்பாக வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் அதிகம் நிறைந்த மட்டக்கடை, டபிள்யூ.ஜி.சி. சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது, விதிகளை மீறி பயன்படுத்த வைக்கப்பட்டிருந்த 240 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.</p><h2>ரூ.13 ஆயிரம் அபராதம்</h2><p>மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களை பயன்படுத்திய வணிகர்களுக்கு மொத்தம் ரூ.13,000 அபராதம் விதிக்கப்பட்டு உடனடியாக வசூலிக்கப்பட்டது. பொதுமக்களும், வணிகர்களும் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்த்து, சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பு அளிக்கும் துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்றும், விதிகளை மீறினால் கடுமையான நடவடிக்கை தொடரும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>தென் மாவட்டங்களில் கடற்கரை தூய்மைப்படுத்தும் இயக்கம் - அண்ணாமலை தொடங்கி வைக்கிறார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/beach-cleanup-drive-in-southern-districts-annamalai-to-inaugurate-it</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/beach-cleanup-drive-in-southern-districts-annamalai-to-inaugurate-it#comments</comments><guid isPermaLink="false">a0c352f6-50f8-48d5-9041-5df9d0db221a</guid><pubDate>Fri, 24 Jul 2026 07:31:28 +0000</pubDate><atom:updated>2026-07-24T07:31:28.809Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Annamalai,அண்ணாமலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/ve1yo53w/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/ve1yo53w/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி,</p><p>தமிழக பா.ஜனதா தலைவராக இருந்த அண்ணாமலை கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு அந்த பதவியில் இருந்து விலக்கப்பட்டார். சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. பா.ஜனதா கூட்டணி தேர்தல் பிரசாரத்தில் பெரிய அளவில் அண்ணாமலை தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. இந்தநிலையில், கடந்த மாதம் பா.ஜனதாவில் இருந்து அண்ணாமலை விலகினார்.</p><p>தொடர்ந்து, அவர் ஏற்கனவே நடத்தி வந்த 'வீ த லீடர்ஸ்' என்ற அமைப்பை அரசியல் களத்தில் இறக்கினார். அந்த அமைப்பில் ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கையும் நடத்தினார். முதல் நாளில் சுமார் 10 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்தனர். தொடர்ந்து முகாம் மூலம் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது.</p><p>இதற்கிடையே, பொள்ளாச்சியில் கடந்த 12-ந்தேதி அண்ணாமலை நடத்திய மாநாட்டில் திரளான இளைஞர்கள் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து, தூத்துக்குடியில் 2-வது மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. இதற்கிடையே, உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் புதிய கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்க அண்ணாமலை திட்டமிட்டு இருக்கிறார். இதற்கான பணிகளில் அவர் முழு வீச்சில் இறங்கியுள்ளார். </p><p>இந்த நிலையில், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடற்கரை தூய்மைப்படுத்தும் இயக்கத்தை அண்ணாமலை தொடங்கி வைக்க உள்ளார். மாநிலம் தழுவிய இந்த முன்னெடுப்பை வரும் ஆகஸ்ட் 2-ந்தேதி கன்னியாகுமரியில் அண்ணாமலை தொடங்கி வைக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரியை தொடர்ந்து நெல்லை மாவட்டம் உவரி, மணப்பாடு மற்றும் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஆகிய கடற்கரைகளிலும் இந்த தூய்மைப்படுத்தும் இயக்கத்தை அண்ணாமலை தொடங்கி வைக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. </p> ]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் கொடூரம்: குடிபோதை தகராறில் தொழிலாளி வெட்டிக்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/brutal-incident-in-thoothukudi-worker-hacked-to-death-in-a-drunken-argument</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/brutal-incident-in-thoothukudi-worker-hacked-to-death-in-a-drunken-argument#comments</comments><guid isPermaLink="false">d7745911-f751-48ec-b488-f466032b73f3</guid><pubDate>Fri, 24 Jul 2026 07:13:44 +0000</pubDate><atom:updated>2026-07-24T07:13:44.187Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>குடிபோதை,drunkenness,stabbing,Thoothukudi,தூத்துக்குடி,Worker,தொழிலாளி,வெட்டிக்கொலை,Dispute,தகராறு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/tgxsxzwi/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தொழிலாளி வெட்டிக்கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/tgxsxzwi/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் பகுதியில் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில், டைல்ஸ் ஒட்டும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">தொழிலாளி வெட்டிப் படுகொலை</a> செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>மது அருந்தும்போது தகராறு</h2><p>தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே உள்ள கச்சேரி தளவாய்புரம் கிராமம், மேற்கு தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மலைராஜ் (வயது 30). திருமணம் ஆகாத இவர், டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வந்தார். நேற்று இரவு மலைராஜ், கச்சேரி தளவாய்புரம் கிராமத்தின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறாக மாறியுள்ளது. </p><h2>தொழிலாளி வெட்டிக்கொலை</h2><p>அந்த தகராறின்போது ஆத்திரமடைந்த 3 பேரும், தங்களிடம் இருந்த அரிவாளால் மலைராஜை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மலைராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கொலையாளிகள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். </p><p>இதற்கிடையே, இரவில் வீட்டிற்கு வராத மகனைத் தேடி இன்று காலை தந்தை மாரியப்பன் சென்றுள்ளார். அப்போது காட்டுப்பகுதியில் மலைராஜ் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். உடனடியாக இதுகுறித்து ஒட்டப்பிடாரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.</p><h2>3 பேருக்கு போலீசார் வலைவீச்சு</h2><p>இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார், மலைராஜின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஒட்டப்பிடாரம் போலீசார், தப்பி ஓடிய 3 பேரையும் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘படித்த இளைஞர்களின் கனவுகளை நனவாக்க ஓராண்டில் 1.5 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்’ - அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/to-realize-the-dreams-of-educated-youth-the-government-must-provide-jobs-to-15-lakh-people-within-a-year-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/to-realize-the-dreams-of-educated-youth-the-government-must-provide-jobs-to-15-lakh-people-within-a-year-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">7169f552-cdbf-40d9-95d9-7e8fb39bd296</guid><pubDate>Fri, 24 Jul 2026 07:11:08 +0000</pubDate><atom:updated>2026-07-24T07:11:08.402Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/oslmfg24/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/oslmfg24/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“கர்நாடக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 72,186 பணியிடங்களை 6 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும் என்று அம்மாநில முதல்-அமைச்சர் ஆணையிட்டிருப்பதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் போர்க்கால வேகத்தில் ஆள்தேர்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் அனைத்து காலி இடங்களும் நிரப்பப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த த.வெ.க., இன்று வரை ஒரே ஒரு புதிய ஆள்தேர்வு அறிவிக்கையைக் கூட வெளியிடாதது இளைஞர்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>கர்நாடகத்தில் அரசுத் துறைகளில் காலியிடங்கள் அதிகரித்து வந்ததைத் தொடர்ந்து பல்வேறு துறைகளில்  மொத்தம் 72,186 பணியிடங்களை அடுத்த 6 மாதங்களில் நிரப்ப வேண்டும் என்று அம்மாநில முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆணையிட்டுள்ளார். அதற்கான நிதித்துறை ஒப்புதல்  சில நாள்களுக்கு முன் வழங்கப்பட்ட நிலையில், 15 ஆள்தேர்வு அறிவிக்கைகள் கடந்த சில நாள்களில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளன. இதனால் அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருந்த கர்நாடக இளைஞர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அதேபோன்ற மகிழ்ச்சி தங்களுக்கு எப்போது கிடைக்கும்? என்பது தான் தமிழக இளைஞர்களின் வினாவாக உள்ளது.</p> <p>இந்தியாவில் அரசுத்துறைகளில் அதிக காலி பணியிடங்களைக் கொண்டுள்ள மாநிலங்களில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தரவுகளை தமிழகத்தை அடுத்தடுத்து ஆட்சி செய்த எந்த அரசும்  வெளியிடாத நிலையில், அரசுத்துறை, பொதுத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் ஆகிய  3 பிரிவுகளிலும் சேர்த்து குறைந்தபட்சம் 6 லட்சம் பணியிடங்கள் காலியாக இருக்கும் என்று அரசு பணியாளர் அமைப்புகள் தெரிவித்திருக்கின்றன. இதற்கு காரணம் அரசு பணிகளுக்கு ஆள்தேர்வு நடத்தப்படாதது தான்.</p><p>2021&amp;ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள மூன்றரை லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்; 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும்; அதன் மூலம் ஐந்தரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், 5 ஆண்டுகளில் 50 ஆயிரத்திற்கும் குறைவானவர்களுக்கு மட்டும் தான் நிரந்தர அரசுப் பணிகள் வழங்கப்பட்டன. உறுதியளிக்கப்பட்ட 2 லட்சம் புதிய பணியிடங்களில் ஒரே ஒரு  பணியிடம் கூட ஏற்படுத்தப்படவில்லை. அதுமட்டுமின்றி, ஐந்தாண்டுகளில் ஒன்றரை முதல் 2 லட்சம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற நிலையில், அதனால் ஏற்பட்ட காலியிடங்களும் கூட முழுமையாக நிரப்பப்படவில்லை. அதன் விளைவு தான் அரசுத் துறைகளில் காலியிடங்களின் எண்ணிக்கை இந்த அளவுக்கு அதிகரித்துள்ளது.</p><p>தி.மு.க. ஆட்சியில் உறுதியளிக்கப்பட்டவாறு அரசு வேலைகள் வழங்கப்படாததால், திமுக அரசுக்கு எதிராக இளைஞர்களிடம் மிகப்பெரிய கொந்தளிப்பு நிலவியது. அதைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்குடன், தவெக ஆட்சிக்கு வந்தால், அரசுத் துறைகளில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களும் விரைந்து நிரப்பப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி (எண்: பொருள்/4/ஏ/3)  அளிக்கப்பட்டிருந்தது. அதை நம்பி இளைஞர்கள் வாக்களித்த நிலையில், அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய கடமை த.வெ.க. அரசுக்கு உண்டு.</p><p>ஆனால், த.வெ.க. ஆட்சிக்கு வந்த இரண்டரை மாதங்களில் அரசுத்துறை காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக ஒரே ஒரு புதிய ஆள்தேர்வு அறிவிக்கை கூட வெளியிடப்படவில்லை. டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு வெளியிட்ட 2026-க்கான ஆண்டு திட்டத்தின்படி, பட்டப்படிப்பை தகுதியாகக் கொண்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் - 461 இடங்கள், பட்டயப்படிப்பை தகுதியாகக் கொண்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் - 839 இடங்கள்,  தொகுதி 1 பணிகள் - 26 என 1326 பணியிடங்களுக்கு மட்டும் தான் மூன்று ஆள்தேர்வு அறிவிக்கைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.</p><p>தமிழக அரசுத் துறைகளில் இன்றைய நிலையில் 6 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக வைத்துக் கொண்டால், அடுத்த ஐந்தாண்டுகளில் குறைந்தது 2 லட்சம் பணியிடங்கள் காலியாகக் கூடும். அவற்றையும் சேர்த்தால் புதிய அரசு ஐந்தாண்டுகளில் 8 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டியிருக்கும். தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து 31.38 லட்சம் பேரும், பதிவு செய்யாமல் ஒரு கோடி பேரும் அரசு வேலைக்காக காத்திருக்கும் நிலையில், இது தவிர்க்க முடியாதது ஆகும். அதன்படி பார்த்தால் ஆண்டுக்கு சராசரியாக ஒன்றரை லட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட வேண்டியிருக்கும்.</p><p>இதைக் கருத்தில் கொண்டு, அடுத்த ஓராண்டில் 1.50 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அதற்கான அறிவிப்பை வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ள 2026-27ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு வெளியிட வேண்டும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>இலங்கை கடற்படையினர் பிடித்து சென்ற மீனவர்களை மீட்டுத் தருக - முதல்-அமைச்சருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/communist-party-of-india-appeals-to-the-chief-minister-to-release-the-fishermen-captured-by-the-sri-lankan-navy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/communist-party-of-india-appeals-to-the-chief-minister-to-release-the-fishermen-captured-by-the-sri-lankan-navy#comments</comments><guid isPermaLink="false">7baccec4-9cc1-4f2e-8587-621e1e1c7d17</guid><pubDate>Fri, 24 Jul 2026 07:00:38 +0000</pubDate><atom:updated>2026-07-24T07:00:38.630Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Sri Lankan Navy,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி,இலங்கை கடற்படையினர்,கைது Arrest,fishermen- மீனவர்கள்,மு. வீரபாண்டியன்,M. Veerapandian</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/v23gsdq8/m-veerapandian.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/v23gsdq8/m-veerapandian.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>இராமேஸ்வரம்  துறைமுகத்தில் இருந்து 469 விசைப்படகுகளில், மீனவர்கள் நேற்று முன்தினம் (22.07.2026) கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். இவர்களில் 9 <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20">மீனவர்கள் </a>கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர் 9 மீனவர்களையும் கைது செய்து, அவர்களது உடைமைகளையும் பறிமுதல் செய்து கொண்டு சென்றுள்ளனர்.</p><h2>மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும்</h2><p>இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மாலிக்தினார், கயாஸ், செந்தில், கிரித்திசன், பிரவீன், அருள்லயோலா, சவுரி வினோத்வின், தேவசகாயம், இன்பென்ட்  பிரசாத் ஆகிய 9 மீனவர்களையும் விடுவித்து, அவர்களது உடைமைகளையும் மீட்டு தர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தை வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதுடன், தமிழ்நாடு முதல்-அமைச்சர், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மீனவர்களை விடுதலை செய்ய உதவ வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணை விவகாரம்: 3-ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mekedatu-dam-issue-chief-minister-vijay-to-visit-karnataka-on-the-3rd</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mekedatu-dam-issue-chief-minister-vijay-to-visit-karnataka-on-the-3rd#comments</comments><guid isPermaLink="false">9bcd6d7d-d643-4122-83cf-3cbc264f3d5b</guid><pubDate>Fri, 24 Jul 2026 06:42:56 +0000</pubDate><atom:updated>2026-07-24T06:42:56.191Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Karnataka,கர்நாடகா,மேகதாது அணை,மேகதாது,Mekedatu dam,Mekedatu Dam Issue,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/9iimo8u4/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/9iimo8u4/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>மேகதாது அணை</h2><p>காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகம் எடுக்கும் முயற்சிகளுக்கு தமிழ்நாடு அரசு எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யவில்லை. </p><p>இதனால் கே.ஆர்.எஸ். அணை உள்ளிட்ட காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள அணைகள் நிரம்பவில்லை. குடிநீர் தேவைக்கு மட்டுமே நீரை பயன்படுத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அணைகளுக்கு நீர்வரத்து இல்லாததால், காவிரியில் தமிழகத்துக்கு தேவையான நீரை திறந்து விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்திலும், 'பாசனத்திற்காக தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது' என கர்நாடக அரசு தெரிவித்துவிட்டது.</p><h2>அழைப்பு</h2><p>இந்த நிலையில், கர்நா டகா - தமிழகம் இடையில் உள்ள நீண்ட கால பிரச்சினையான காவிரி நதி நீர் பங்கீடு பற்றியும்; மேகதாதுவில் அணை கட்டுவது பற்றியும் விவாதிக்க கர்நாடக அரசின் நீர்ப்பாசன துறை அதிகாரிகள், தமிழக அரசின் நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.</p><p>அதில், ‘நதிநீர் பங்கீடு, மேகதாது அணை பற்றி பெங்களூரில் வருகிற 3-ம் தேதி, கர்நாடக - தமிழக முதல்-மந்திரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தலாம்' என, அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாகவும் இதற்கு தமிழக அரசிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்றும் கூறப்பட்டது.</p><h2>கர்நாடகம் செல்லும் விஜய்</h2><p>இந்த நிலையில், மேகதாது அணை விவகராம் தொடர்பாக முதல்-அமைச்சர் விஜய் வருகிற 3-ம் தேதி கர்நாடகம் செல்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வேளாண்துறை அமைச்சர் வினோத் கூறுகையில், “கர்நாடகாவில் 3 -ம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்கிறார். கூட்டத்தில் தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீரை காவிரியில் திறக்க வலியுறுத்தப்படும் மேகதாது அணையை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம், அது நமது உரிமை.</p><p>மழை பெய்யவில்லை. அதனால், காவிரியில் தண்ணீர் திறக்கவில்லை என்று கர்நாடகா தரப்பில் சொல்கிறார்கள்; இருந்தாலும், நமது உரிமைக்காக முதல்-அமைச்சர் விஜய் காவிரி தண்ணீரை கேட்டு பெறுவார் என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>‘காவல் மரணங்கள் தொடர்வதை அரசு அனுமதிக்கக் கூடாது’ - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-government-must-not-allow-custodial-deaths-to-continue-communist-party-of-india</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-government-must-not-allow-custodial-deaths-to-continue-communist-party-of-india#comments</comments><guid isPermaLink="false">74c46278-9378-49bc-ac11-23b6467c9b54</guid><pubDate>Fri, 24 Jul 2026 06:38:20 +0000</pubDate><atom:updated>2026-07-24T06:38:20.662Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Communist Party of India,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி,காவல் மரணம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/ijn66a3b/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/ijn66a3b/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“சில வாரங்களுக்கு முன்பு  கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளி சபரிவர்மன், காவல் துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட அதிர்வலைகள் இன்னும் அடங்கவில்லை. அதற்குள் தூத்துக்குடி காவல்துறையினர் கடந்த 17.07.2026 ஆம் தேதி விசாரணைக்கு அழைத்துச் சென்ற அருணாசலம் என்பவரின் காவல் மரணம் நிகழ்ந்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. </p><p>காவல்துறையினர் விசாரணைக்கு ஒருவரை அழைத்துச் செல்ல வேண்டும் எனில், என்னென்ன விதிமுறைகள் கடைப்பிடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டும், ஐகோர்ட்டுகளும் பல தீர்ப்புகளில் வலியுறுத்தியுள்ளன. பி.என்.எஸ்.எஸ்.  சட்டத்தின் சில பிரிவுகளும் விசாரணை நடைமுறை குறித்து வழிகாட்டியுள்ளன.  </p><p>இவைகள் எதனையும் கருத்தில் கொள்ளாமல், காவல் துறையினர் அதிகார அத்துமீறலில் தொடர்ந்து  ஈடுபடுவதும், இதில் மனித உயிர்கள் பலியாவதுமான கொடூர சம்பவங்கள் நிகழ்ந்து வருவதும் கவலையளிக்கிறது. அது, தமிழ்நாடு காவல்துறை தனது துறையை வழிநடத்தும் நிர்வாகத் திறனை இழந்து விட்டதோ? என்ற ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. </p><p>சாத்தான்குளம் காவல் துறையினரால் தந்தையும், மகனும் கொல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பு காவல்துறையின் மனப் போக்கிலும், நடைமுறையிலும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதையே கன்னியாகுமரி, தூத்துக்குடி சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன. விசாரணைக்கு அழைத்துச் செல்வோர் உயிருக்கும், கண்ணியத்திற்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் காவல்துறையினருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க வேண்டும். </p> <p>தவறு செய்த காவல் துறையினர் மீது மேலும் கடுமையான நடவடிக்கை எடுத்து, தண்டனையும் விதிக்க தக்க விதிமுறைகள் உருவாக்க வேண்டும். </p><p>காவல் மரணங்களை முற்றிலுமாக தடுக்கும் வகையில் காவல்துறை நிர்வாகத்தை சீரமைக்க தமிழ்நாடு முதல்-அமைச்சர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதுடன், தூத்துக்குடி காவல் மரணத்தில் பலியான அருணாசலம் குடும்பத்திற்கு இழப்பீடும், நீதியும் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறது.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்த வழக்கு: மேலும் இருவர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/private-school-administrators-defrauded-of-rs-100-crore-two-more-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/private-school-administrators-defrauded-of-rs-100-crore-two-more-arrested#comments</comments><guid isPermaLink="false">92eff580-b502-4758-9ad9-6d1ce6b080b7</guid><pubDate>Fri, 24 Jul 2026 06:28:47 +0000</pubDate><atom:updated>2026-07-24T06:28:47.525Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>fraud case,தனியார் பள்ளி,private school,மோசடி வழக்கு</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/neck3ysg/13.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/neck3ysg/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>’பி.டி.அரசகுமார் மற்றும் அவருடன் சேர்ந்த சிலர் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்' என்ற பெயரில் பதிவு செய்யப்படாத சங்கத்தை நடத்தி வந்துள்ளனர். இவர்கள் தனியார் பள்ளிகளில் நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தர உயர்வு, டிடிசிபி மற்றும் சிஎம்டிஏ ஒப்புதல், ஆர்டிஇ உள்ளிட்ட அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பள்ளி நிர்வாகிகளிடம் சுமார் ரூ.100 கோடி வசூலித்து மோசடி செய்ததாக கூறி தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலர் டி.சி.இளங்கோவன் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.</p><p>இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட திமுக பிரமுகரான பி.டி.அரசகுமார் கடந்த ஜூன் 27-இல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. விசாரணையில், 2024 முதல் பள்ளி நிர்வாகிகளைச் சந்தித்து பணம் வசூலித்தது தெரிய வந்தது. இதையடுத்து, இந்த வழக்கில் தொடர்புடைய 61 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதுவரை பாதிக்கப்பட்ட 120 பள்ளி நிர்வாகிகள் உள்பட 190 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. </p><p>தொடர் விசாரணையில், மதுரை, சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் (எ) ராஜா (39), திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த சுரேஷ் (49) ஆகியோர் அரசகுமாருக்கு உடந்தையாக இருந்து, பள்ளி நிர்வாகிகளிடம் பணம் வசூலித்தது தெரிய வந்தது. இருவரையும் போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த மோசடியில் தொடர்புடைய மேலும் சிலரைத் தேடும் பணியில் போலீஸார் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>இறுதி வடிவம் பெறும் தமிழக பட்ஜெட் - தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெறுமா...?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-budget-taking-final-shape-will-election-promises-be-fulfilled</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-budget-taking-final-shape-will-election-promises-be-fulfilled#comments</comments><guid isPermaLink="false">326e9e73-a508-4793-b86a-e1c5813fbb89</guid><pubDate>Fri, 24 Jul 2026 06:02:33 +0000</pubDate><atom:updated>2026-07-24T06:02:33.609Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,விஜய்,தமிழக சட்டசபை,TN Assembly,பட்ஜெட் தாக்கல்,தேர்தல் வாக்குறுதி,தமிழக பட்ஜெட்,TN Budget,பட்ஜெட் 2026,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,Chief Minister Vijay,தவெக அரசு,TVK Government,Budget 2026</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/2k8wwjjj/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/2k8wwjjj/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><h2>தவெக அரசு மீது எதிர்பார்ப்பு</h2><p>தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று த.வெ.க. அரசு ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. 59 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து புதிதாக ஆட்சி அரியணை ஏறியுள்ள த.வெ.க. அரசு மீது பல்வேறு எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது. </p><p>இந்த நிலையில், 2026-2027-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் ஆகஸ்டு 5-ந் தேதி (புதன்கிழமை) சட்டசபையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இதுவென்பதால், பொதுமக்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. </p><h2>தேர்தல் அறிக்கை</h2><p>தேர்தலுக்கு முன்பு வெளியிடப்பட்ட த.வெ.க. தேர்தல் அறிக்கையில், "குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்.ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு ஒரு பவுன் தங்கம் மற்றும் உதவி வழங்கப்படும். விலையில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும். ரேஷன் பொருட்கள் வீடு தேடி விநியோகிக்கப்படும். வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.4 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்" என்பது உள்பட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.</p><h2>துறை வாரியாக ஆலோசனை</h2><p>இந்த நிலையில், முதல் பட்ஜெட்டை முத்தான பட்ஜெட்டாக தாக்கல் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில், கடந்த 20 நாட்களுக்கு மேலாக, துறை வாரியாக ஆலோசனை கூட்டங்களை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் நடத்தினார். ஒவ்வொரு துறை சார்பிலும் பட்ஜெட்டில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்பது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்பட்டது.</p><p>தற்போது, இந்த ஆலோசனை கூட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 2026-2027-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இறுதி வடிவம் பெற்று வருகிறது. இந்தப் பணி முடிவடைந்ததும், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யிடம் ஒப்புதல் பெறப்படும்.</p><h2>இறுதிக்கட்ட பணிகள் மும்முரம்</h2><p>பட்ஜெட் தாக்கல் செய்ய இன்னும் 11 நாட்களே இடைவெளி இருப்பதால், இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றது. நிதித்துறை அதிகாரிகள் அந்தப் பணியில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளனர். தற்போதைய அரசுக்கு கடன் சுமை தான் பெரிய தலைவலியாக உள்ளது. ரூ.13 லட்சம் கோடிக்கு மேல் கடன் இருக்கும் சூழ்நிலையில், கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியிலேயே பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.</p><h2>பட்ஜெட் எப்படி இருக்கும்?</h2><p>கடந்த ஆண்டு (2025-26) தி.மு.க. ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், அரசின் மொத்த செலவினம் ரூ.4,39,293 கோடியாகவும், வருவாய் வரவுகள் ரூ.3,31,569 கோடியாகவும் இருந்தது. அதாவது, நிதி பற்றாக்குறை ரூ.1,06,968 கோடி என்ற அளவில் இருந்தது.</p><p>இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட 2026-27-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில், மொத்த செலவினம் ரூ. 4,67,264 கோடியாகவும், வருவாய் வரவுகள் ரூ.3,44,575 கோடியாகவும் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு இருந்தது. நிதி பற்றாக்குறை ரூ.1.21 லட்சம் கோடியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.</p><p>எனவே, இந்த கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் த.வெ.க. அரசு எப்படி சிறப்பான பட்ஜெட்டை தாக்கல் செய்யப்போகிறது என்று ஆண்ட கட்சிகள் மட்டுமல்லாது, நாட்டு மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>திருப்பூர்: காவலர் குடியிருப்பில் பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruppur-female-police-officer-commits-suicide-by-hanging-herself-in-police-quarters</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruppur-female-police-officer-commits-suicide-by-hanging-herself-in-police-quarters#comments</comments><guid isPermaLink="false">186763c6-8d8c-4207-89ee-fea0e86d3660</guid><pubDate>Fri, 24 Jul 2026 06:01:49 +0000</pubDate><atom:updated>2026-07-24T06:01:49.706Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்,பெண் போலீஸ்,female police officer,police station,Suicide by hanging,தூக்குப்போட்டு தற்கொலை,police investigation,போலீசார் விசாரணை,காவலர் குடியிருப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/i7lx0bxd/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெண் போலீஸ் ரஞ்சனி ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/i7lx0bxd/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர், </p><p>திருப்பூர் ஆயுதப்படையில் பணிபுரிந்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D">பெண் போலீஸ்</a>, காவலர் குடியிருப்பில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">தூக்குப்போட்டு தற்கொலை</a> செய்துகொண்டதற்கு பணிச்சுமை காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>பெண் போலீஸ்</h2><p>திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தைச் சேர்ந்த ராஜாவின் மகள் ரஞ்சனி (வயது24). கடந்த 2022-ம் ஆண்டு போலீஸ் வேலையில் சேர்ந்தார். கடந்த 4 ஆண்டுகளாக திருப்பூர் ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார். அங்குள்ள நல்லூர் காவலர் குடியிருப்பில் தங்கி பணிபுரிந்து வந்த ரஞ்சனி, நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு சென்றார். பின்னர் 10.30 மணியளவில் வீட்டுக்கு வந்த அவர் திடீரென சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். </p><h2>ஆவேசமாக பேசினார்</h2><p>அதற்கு முன்னதாக, குடியிருப்புக்கு திரும்பிய ரஞ்சனி, யாருடனோ செல்போனில் ஆவேசமாகப் பேசியபடி வந்துள்ளார். பின்னர், தன் அறைக்குச் சென்று கதவை உள்புறமாகப் பூட்டிக்கொண்டவர், முன் பழகிய பெண் போலீஸ் ஒருவருக்குத் தொடர்பு கொண்டு தற்கொலை செய்யப்போவதாகக் கூறியுள்ளார். இதனால் பதறிய அந்த பெண் போலீஸ், குடியிருப்புவாசிகளுக்குத் தகவல் தெரிவித்தார். அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ரஞ்சனி தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். </p><h2>பணிச்சுமை காரணமா?</h2><p>இந்த சம்பவம் குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரஞ்சனியின் அறை அலங்கோலமாகக் கிடந்தது. அங்கிருந்த பொம்மைகள் மற்றும் பொருட்கள் உடைக்கப்பட்டிருந்தன. இதனால் அவர் கடும் மன உளைச்சலில் இருந்தது தெரியவந்தது.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>ரஞ்சனியின் செல்போன் பூட்டப்பட்டுள்ளதால், அதை ஆய்வு செய்ய நிபுணர்களின் உதவி நாடப்பட்டுள்ளது. அவருடன் ஒரே ஆண்டில் பணியில் சேர்ந்த ஒரு காவலருடன் அவருக்குப் பழக்கம் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், காதல் தகராறு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதா? அல்லது பணிச்சுமையா? என்ற கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item></channel></rss>