<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 21 Aug 2026 20:42:41 +0000</lastBuildDate><item><title>
மேட்டூர் அணையில் மத்திய நீர்வள ஆணைய உறுப்பினர் ஆய்வு 
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/central-water-commission-member-inspects-mettur-dam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/central-water-commission-member-inspects-mettur-dam#comments</comments><guid isPermaLink="false">dd5c6a84-2bbb-4f55-9819-6447331e8863</guid><pubDate>Fri, 21 Aug 2026 16:37:16 +0000</pubDate><atom:updated>2026-08-21T16:37:16.172Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur dam,ஆய்வு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/wz7v3vod/Untitled-1.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/wz7v3vod/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p> <p>சென்னை மாமல்லபுரம் அருகே கோவளத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தென்மாநில முதல்-மந்திரிகள் மாநாடு மற்றும் தென்மண்டல குழு கூட்டம் நேற்று நடந்தது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் தமிழக முதல்-அமைச்சர் விஜய், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் உள்பட பல்வேறு மாநில முதல்-மந்திரிகள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் காவிரி நீர் பங்கீடு விவகாரம் மற்றும் மேகதாதுவில் அணை கட்டுவதல் தமிழகம், கர்நாடகாவில் நிலவும் இருமாநில பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.</p><p>இந்நிலையில், மத்திய அரசினன் ஜல் சக்தி திட்டத்தின் கூடுதல் செயலாளரும், மத்திய நீர்வள ஆணைய உறுப்பினருமான யோகேஷ் பைத்தங்கர் மேட்டூர் அணைக்கு வந்தார். பின்னர் அவர் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் அணையின் வலது கரையில் உள்ள பவளவிழா கோபுரத்தின் மீது சென்று அணையை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து மேட்டூர் அணையில் தற்போது உள்ள நீர் மட்டம் எவ்வளவு? அணைக்கு வரும் நீரின் அளவு மற்றும் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் உள்ளிட்டவை குறித்து நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதையடுத்து மத்திய நீர்வள ஆணைய உறுப்பினர் யோகேஷ் பைத்தங்கர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு புறப்பட்டு சென்றார். அதனை தொடர்ந்து அவர் நாளை காலை கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்டுவதாக கூறப்படும் இடத்தை பார்வையிடலாம் என்று திட்டம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுபற்றிய விவரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>பயணிகள் கவனத்திற்கு... சென்னை சென்டிரல் - ஜோத்பூர் இடையே சிறப்பு ரெயில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/attention-passengers-special-train-between-chennai-central-and-jodhpur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/attention-passengers-special-train-between-chennai-central-and-jodhpur#comments</comments><guid isPermaLink="false">db0ee78f-6e9b-4873-b50d-9719087ad0f5</guid><pubDate>Fri, 21 Aug 2026 16:24:54 +0000</pubDate><atom:updated>2026-08-21T16:24:54.663Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,தெற்கு ரெயில்வே,Southern Railway,Special train,Chennai Central,சென்னை சென்டிரல்,ஜோத்பூர்,Jodhpur</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/q4ddfx8l/Untitled-12.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/q4ddfx8l/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக, கூட்டநெரிசலை தவிர்க்கும் வகையில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து சென்னை சென்டிரலுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>ஜோத்பூர் - சென்னை கடற்கரை/சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (வண்டி எண். 04815) வருகிற 29-ந்தேதி (சனிக்கிழமை) இரவு 9.20 மணிக்கு ஜோத்பூரில் இருந்து புறப்பட்டு மூன்றாவது நாள் இரவு 8 மணிக்கு சென்னை வந்தடையும்.</p><p>மறுமார்க்கத்தில் சென்னை சென்டிரல் - ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (வண்டி எண். 04186) வருகிற செப்டம்பர் 1-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5.15 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து புறப்பட்டு மூன்றாவது நாள் இரவு 8.30 மணிக்கு ஜோத்பூர் சென்றடையும்.</p><p>இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை மறுநாள் (23-ந்தேதி) காலை 8 மணிக்கு தொடங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை - கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி  </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rain-and-overflowing-sewage-in-the-tambaram-area-caused-difficulties-for-motorists</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rain-and-overflowing-sewage-in-the-tambaram-area-caused-difficulties-for-motorists#comments</comments><guid isPermaLink="false">7ed0cfb5-a9ef-45da-b46a-3482a0c08b32</guid><pubDate>Fri, 21 Aug 2026 16:24:02 +0000</pubDate><atom:updated>2026-08-21T16:24:02.467Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,மழை,Tambaram,தாம்பரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/06mrsf1s/State-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/06mrsf1s/State-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலான மழை பெய்யத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் சென்னை அடுத்த தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று கனமழை பெய்தது. </p><p>குறிப்பாக தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மீனம்பாக்கம், அனகாபுத்தூர், பம்மல், சிட்லப்பாக்கம், சேலையூர், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. </p><p>இந்நிலையில், இன்று பெய்த மழையில் குரோம்பேட்டை அருகே ஜி.எஸ்.டி. சாலையில் மழை நீருடன் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். </p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/CJOlKPNPy3I"></iframe></figure>]]></content:encoded></item><item><title>தமிழில் வசனங்களை சிறப்பாகப் பேசியவர் சவுகார் ஜானகி - மு.க.ஸ்டாலின் இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/soukar-janaki-was-the-best-at-speaking-dialogues-in-tamil-mk-stalins-condolences</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/soukar-janaki-was-the-best-at-speaking-dialogues-in-tamil-mk-stalins-condolences#comments</comments><guid isPermaLink="false">cbcf6047-9180-40fd-a53d-02908afea059</guid><pubDate>Fri, 21 Aug 2026 16:19:57 +0000</pubDate><atom:updated>2026-08-21T16:19:57.457Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,மு.க.ஸ்டாலின்,MKstalin,சவுகார் ஜானகி,SowcarJanaki</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/3wr3q9kv/stalin33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  மு.க.ஸ்டாலின் இரங்கல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/3wr3q9kv/stalin33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதய நோய் பாதிப்புக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி இன்று (ஆக. 21) மதியம் காலமானார்.</p><p>இதனையடுத்து, சவுகார் ஜானகியின் மறைவுக்கு நாட்டின் மூத்த தலைவர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், </p><p> திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,</p><p>பழம்பெரும் நடிகை 'பத்மஸ்ரீ' திருமதி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D">சவுகார் ஜானகி </a>அம்மையார் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.</p><p>தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்றபோதிலும், தமிழில் அறிமுகமான வளையாபதி திரைப்படத்திலயே பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் வரிகளைச் சிறப்பாக உச்சரித்து, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கவனத்தை ஈர்த்தவர் திருமதி சவுகார் ஜானகி அவர்கள். தலைவர் கலைஞர் அவர்களின் வசனத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் கதாநாயகனாக அறிமுகமான பராசக்தி திரைப்படம் வெளியான அதே சமயத்தில்தான் இத்திரைப்படமும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>380-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த அவரது நீண்ட திரைப்பயணத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல பெரும் நட்சத்திரங்களுடன் நடித்திருக்கிறார்.</p><p>பேரறிஞர் அண்ணா, என்.டி.ஆர். எனப் பல முதலமைச்சர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றிருக்கிறார்.</p><p>தலைவர் கலைஞர் அவர்களின் மீது அளவுகடந்த மரியாதை கொண்டவராக இருந்து, எங்கள் குடும்பத்தினரோடும் நட்போடு பழகிய சிறந்த மனிதப் பண்பைக் கொண்டவராக சவுகார் ஜானகி அவர்கள் திகழ்ந்தார்.</p><p>புதிய பறவை, நீர்க்குமிழி, பாமா விஜயம், மோட்டார் சுந்தரம் பிள்ளை, எதிர்நீச்சல், இரு கோடுகள், தில்லுமுல்லு என நீண்டுகொண்டே போகும் அவர் நடித்த வெற்றிப்படங்களின் மூலமாக தென்னிந்திய மக்களின் மனதில் அவர் என்றும் புகழோடு வாழ்வார்.</p><p>அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என அதில் பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>
 திருச்சி - சிங்கப்பூர் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு:  அரை மணி நேரம் வானில் வட்டமடித்ததால் பரபரப்பு
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/technical-glitch-on-trichy-singapore-flight-panic-as-it-circled-in-the-air-for-half-an-hour</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/technical-glitch-on-trichy-singapore-flight-panic-as-it-circled-in-the-air-for-half-an-hour#comments</comments><guid isPermaLink="false">79bce57b-cb1a-42de-9cda-4066e2cb7f2b</guid><pubDate>Fri, 21 Aug 2026 16:18:39 +0000</pubDate><atom:updated>2026-08-21T16:18:39.570Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தொழில்நுட்ப கோளாறு,திருச்சி,Trichy,சிங்கப்பூர்,Singapore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/abpra1p8/Indigo.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  இண்டிகோ விமானம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/abpra1p8/Indigo.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் விமானங்களை இயக்கி வருகிறது.  எப்போதும் பரபரப்பாக காணப்படும் திருச்சி விமான நிலையத்தில் இன்று மாலை 6:43 மணிக்கு  126 பயணிகளுடன் இண்டிகோ விமானம் சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டது.  இந்த விமானம் சுமார் 20 நிமிட நேரம் வானில் பறந்த பிறகு விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது இதனை அறிந்த விமானி உடனடியாக திருச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறிக்கை தகவல் தெரிவித்தார். </p><p>இதனை தொடர்ந்து அந்த விமானம் மீண்டும் திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டு உடனடியாக திருச்சி விமான நிலையத்திற்கு வருமாறு கட்டுப்பாட்டு அறை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த விமானம் திருச்சி விமான நிலையத்தை நெருங்கிய பிறகு சுமார் 20 நிமிடம் வானில் வட்டமடிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் பெரும் பீதி அடந்தனர். </p><p> அந்த விமானம் சரியாக இரவு 9.02 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது இதனால் பயணிகள் நிம்மதி  அடைந்தனர்.  இதனைத் தொடர்ந்து பொறியியல் தொழில்நுட்ப வல்லுநர்கள் விமானத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படுவது குறித்து விமான நிறுவனத்தினர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்;   டெண்டரை பெற்ற இரண்டு முன்னணி நிறுவனங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thaimaman-gold-ring-scheme-two-leading-companies-awarded-the-tender</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thaimaman-gold-ring-scheme-two-leading-companies-awarded-the-tender#comments</comments><guid isPermaLink="false">5d4feb92-fd01-4455-ad3f-2545f70763f7</guid><pubDate>Fri, 21 Aug 2026 16:11:26 +0000</pubDate><atom:updated>2026-08-21T16:11:26.263Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டெண்டர்,தாய்மாமன்,தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/8f4ueq3u/thaimaman.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/8f4ueq3u/thaimaman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தைத் தமிழக அரசு அறிவித்தது. இந்தத் திட்டத்துக்காக ஆண்டுக்கு 4 லட்சத்து 41 ஆயிரத்து 667 தங்க மோதிரங்களை வாங்குவதற்குத் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் டெண்டர் கோரியது. இந்தத் திட்டத்துக்காக ஆண்டுக்கு சுமார் ரூ.755.83 கோடி செலவிடப்பட உள்ளது. வருகிற செப்டம்பர் 15-ந் தேதி திட்டத்தைத் தொடங்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.</p><p>தங்க மோதிரங்களை வழங்குவதற்கான இந்த டெண்டரில் 11 நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் 0.01 ரூபாய் விலைப்புள்ளியை அளித்து, குறைந்தபட்ச விலைப்புள்ளி நிறுவனமாக முதலிடம் பிடித்துள்ளது. இந்த விலைப்புள்ளி, மோதிரம் தயாரிப்பதற்கான செய்கூலி, பேக்கிங், காப்பீடு, போக்குவரத்து உள்ளிட்ட இதர செலவுகளுக்கானது.</p><p>ஒரு கிராம் 22 காரட் தங்கத்துக்கான விலை, ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்ட முறையின்படி தனியாகக் கணக்கிடப்படும். தங்கத்தின் சந்தை விலையில் ஏற்படும் மாற்றத்துக்கு ஏற்ப, அரசால் செலுத்தப்படும் தொகையும் மாறும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜாய் ஆலுக்காஸ் மட்டுமின்றி கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்திற்கும் ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் 70 சதவீதமும் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்திற்கு 30 சதவீதம் டெண்டரை பெற்றுள்ளன</p>]]></content:encoded></item><item><title>‘எம்.எல்.ஏ.க்களுக்கு கார் சொந்தமாக வழங்கப்படாது’ - அமைச்சர் ராஜ்மோகன் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cars-will-not-be-provided-to-mlas-for-personal-ownership-minister-rajmohan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cars-will-not-be-provided-to-mlas-for-personal-ownership-minister-rajmohan#comments</comments><guid isPermaLink="false">78f6f931-0244-452b-bee3-262c72039c2c</guid><pubDate>Fri, 21 Aug 2026 16:07:58 +0000</pubDate><atom:updated>2026-08-21T16:07:58.585Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Minister Rajmohan,அமைச்சர் ராஜ்மோகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/z90vebpc/State-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/z90vebpc/State-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நிகழ்வுகள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சட்டமன்றத்தில் இன்று நேரலை குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது;-</p><p>“சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குவது பற்றி எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீண்டும், மீண்டும் பேசினார்கள். அவர்களுக்கு ஒரு விஷயத்தை தெளிவுபத்த விரும்புகிறேன். எந்த எம்.எல்.ஏ.க்களுக்கும் கார் சொந்தமாக வழங்கப்படாது.</p><p>அது யாருடைய சொந்த காரும் கிடையாது. 5 வருடங்கள் பயன்படுத்துவதற்குதான் கார் வழங்கப்படும். 5 ஆண்டுகள் முடிந்ததும் கார் திரும்ப பெறப்படும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>அரசு அலுவலக பணியாளர்கள் காலை 9 மணிக்கு பணிக்கு வர உத்தரவு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-office-employees-ordered-to-report-for-work-at-9-am</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-office-employees-ordered-to-report-for-work-at-9-am#comments</comments><guid isPermaLink="false">b1418b5d-5f5e-4a20-9b70-2f42dfd2472d</guid><pubDate>Fri, 21 Aug 2026 16:05:17 +0000</pubDate><atom:updated>2026-08-21T16:05:17.004Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,அரசு ஊழியர்கள்,தவெக அரசு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/2v4ulusx/teacher33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பணிக்கு வர உத்தரவு ]]></media:title><media:description type="html"><![CDATA[ 
அரசு அலுவலக பணியாளர்கள் காலை 9 மணிக்கு பணிக்கு வர உத்தரவு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/2v4ulusx/teacher33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டசபை கூட்டத்தொடர் முடியும் வரை அலுவலக பணியாளர்கள் காலை 9 மணிக்கு பணிக்கு வர பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.</p><p>தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் 8-ம் தேதி வரை கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் பள்ளிக்கல்வி மானிய கோரிக்கை வருகிற 24-ம் தேதி வருகிறது. அப்போது கல்வித்துறை சார்பில் எம்.எல்.ஏக்களால் எழுப்படும் கேள்விகளுக்கு உடனுக்குடன் விரிவாக பதில் அளிக்கப்படும். </p><p>இதற்காக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் பணியார்கள் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">சட்டசபை கூட்டத்தொடர்</a> முடியும் வரை தினமும் காலை 9 மணிக்கு அலுவலகத்திற்கு வந்து சட்டசபை கேள்விகளுக்கு பதிலை உடனடியாக தயார் செய்து பள்லி கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.</p><p>அலுவலக நேரம் முடிந்த பின்னர் அலுவலரின் அனுமதி பெற்ற பின்பே அலுவலகத்தை விட்டு செல்ல அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது.</p><p>விடுமுறை நாட்களில் சுழற்சி முறையில் பணியாளர்களை அலுவலகத்தில் பணிபுரிய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும் அனைத்து மாவட்ட கல்வி, அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கி பள்ளி கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அமித்ஷா பதிலளிக்க தயாராக இருந்தபோது ஓடி ஒளிந்தது ராகுல் காந்திதான் - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/when-amit-shah-was-ready-to-answer-rahul-gandhi-ran-away-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/when-amit-shah-was-ready-to-answer-rahul-gandhi-ran-away-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">1f2c258f-a3f9-440c-b7ce-113bbf82b99e</guid><pubDate>Fri, 21 Aug 2026 15:57:42 +0000</pubDate><atom:updated>2026-08-21T15:57:42.185Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,அமித்ஷா,நயினார் நாகேந்திரன்,காங்கிரஸ்,Congress,ராகுல் காந்தி,Rahul Gandhi,மாணிக்கம் தாகூர்,Amith sha,Manickam Tagore,Nainar Nagenthran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/qeq91rg7/Untitled-11.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/qeq91rg7/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நீட் வினாத்தாள் கசிவு, மாணவர்கள் மீதான வன்முறை, மற்றும் தொகுதி மறுவரையறை என எதற்குமே அவையில் நின்று நேருக்கு நேர் பதில் சொல்லப் பயந்தவர் மத்திய மந்திரி அமித்ஷா என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் "அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்க உள்துறை மந்திரி அமித்ஷா தயாராக இருந்தபோது, ஓடி ஒளிந்தது ராகுல் காந்திதான்" என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவைப் பார்த்து "நழுவி ஓடுகிறார்" என்று நீங்கள் சொல்வது சாத்தான் வேதம் ஓதுவது போல இருக்கிறது. வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் மாணவர் போராட்டங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்க உள்துறை மந்திரி தயாராக இருந்தபோது, "நேருக்கு நேர் நின்று விவாதிக்கத் தைரியமில்லாமல்" சபைக்கு வரமாட்டேன் என ஓடி ஒளிந்தது உங்கள் 'இளம்' தலைவர் ராகுல் காந்தி தான் என்பதை இந்த நாடே அறியும். (எங்கள் உள்துறை மந்திரி விவாதத்திற்கு அழைப்பு விடுத்த காணொளியை இத்துடன் இணைத்துள்ளேன், பார்த்துத் தெரிந்து கொள்ளவும்).</p><p>நாடாளுமன்றம் நடைபெறும் மிக முக்கியமான நேரத்தில் கூட வெளிநாடுகளுக்கு இன்பச் சுற்றுலா சென்றுவிடும் ‘பார்ட்-டைம்’ அரசியல்வாதியைத் தலைவராக வைத்துக்கொண்டு, நீங்கள் இப்படிப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. காங்கிரஸை மக்கள் வெறுக்கிறார்கள் என்பதை 2014 முதல் 2024 வரையிலான இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை ‘கூகுள்’ செய்து பார்த்தாலே தெரிந்துகொள்ளலாமே தம்பி! அதனை விட ஒரு பெரிய ஆதாரம் வேண்டுமா என்ன?</p><p>'வாள் ஏந்தியவர்கள் அஞ்சப்போவதில்லை' என்று வசனம் பேசுகிறீர்கள். மாணிக்கம் தாகூர் அவர்களே, உங்கள் கையில் இருப்பது எஃகு வாள் அல்ல; அட்டை கத்தி. மேலும், வடிவேலு பாணி நகைச்சுவை பற்றிப் பேசுகிறீர்கள்... ஆனால், ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் 'EVM இயந்திரத்தில் கோளாறு' என்று நீங்கள் சொல்லும் சாக்குப்போக்குகளை விடச் சிறந்த நகைச்சுவை வேறு இருக்க முடியுமா என்ன? இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>‘கலைஞர் ஆட்சியில் ஊராட்சி தலைவர்களுக்கு கார் வழங்கப்பட்டது’ - சட்டசபையில் சுட்டிக்காட்டிய அமைச்சர் ஷாஜகான் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cars-were-provided-to-panchayat-presidents-during-kalaignars-tenure-minister-shahjahan-pointed-out-in-the-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cars-were-provided-to-panchayat-presidents-during-kalaignars-tenure-minister-shahjahan-pointed-out-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">b80f719d-0af7-4a41-90d0-c0bb28164df4</guid><pubDate>Fri, 21 Aug 2026 15:55:47 +0000</pubDate><atom:updated>2026-08-21T15:55:47.576Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அமைச்சர் ஷாஜகான்,Minister Shahjahan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/h7k194ni/State-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/h7k194ni/State-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நிகழ்வுகள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சட்டமன்றத்தில் இன்று நேரலை குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது அமைச்சர் ஷாஜகான் பேசியதாவது;-</p><p>“சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் தேவை என்ற விவகாரம் தற்போது சர்ச்சையாக பேசப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் 300-க்கும் அதிகமான ஊராட்சி தலைவர்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கப்பட்டது. எனவே இது ஒன்றும் புதிது இல்லை.</p><p>அப்போதும் தமிழகத்தின் நிதி நிலைமை இதே போல்தான் இருந்தது. அப்போதெல்லாம் கேள்வி கேட்காமல், இன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்குவதை கேள்வி கேட்பது சரி அல்ல.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>சவுகார் ஜானகி மறைவு திரை உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு  - எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/soukar-janakis-demise-is-an-irreparable-loss-to-the-film-industry-edappadi-palaniswami</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/soukar-janakis-demise-is-an-irreparable-loss-to-the-film-industry-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">c672b49f-04b7-43d9-925b-7339732230e2</guid><pubDate>Fri, 21 Aug 2026 15:39:32 +0000</pubDate><atom:updated>2026-08-21T15:39:32.220Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,எடப்பாடி பழனிசாமி,அதிமுக,EPS,சவுகார் ஜானகி,SowcarJanaki</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/8q7mfnu1/saami33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[  எடப்பாடி பழனிசாமி]]></media:title><media:description type="html"><![CDATA[ 
சவுகார் ஜானகி மறைவு திரை உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு  ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/8q7mfnu1/saami33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சவுகார் ஜானகி மறைவு திரை உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு  என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.</p><p>பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி (வயது 94) இன்று மதியம் (ஆக. 21) காலமானார்.  சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் இதய நோய் பாதிப்புக்காக நடிகை சவுகார் ஜானகி நேற்று அனுமதிக்கப்பட்டார். அந்த மருத்துவமனையில் இதயத் துறை நிபுணர்களின் கண்காணிப்பில் சவுகார் ஜானகிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 2(1-ம் தேதி) உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அவரது மறைவிற்கு  முதல்-அமைச்சர் விஜய், திரை உலகினர், அரசியல் பிரபலங்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட  அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் சவுகார் ஜானகி மறைவிற்கு அதிமுக பொதுச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%20">எடப்பாடி பழனிசாமி</a> வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், </p><p>பழம்பெரும் நடிகை திருமதி. சௌகார் ஜானகி அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.  புரட்சித் தலைவர் எம்ஜிஆர்,  புரட்சித் தலைவி அம்மா ஆகியோரோடு இணைந்து “ஒளி விளக்கு” திரைப்படத்தில் அவர் நடித்தது என்றும் நினைவுகூரத்தக்கது.</p><p>பல்வேறு மொழிகளில் ஏறத்தாழ 400 படங்களில் நடித்து, தனது ஆற்றலை வெளிப்படுத்திய அவருடைய மறைவு என்பது திரை உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.</p><p>அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், திரைத் துறையைச் சார்ந்தோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என அதில் பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சவுகார் ஜானகி மறைவு வேதனை அளிக்கிறது - டிடிவி தினகரன் இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/saukkaar-janaki-demise-causes-grief-ttv-dhinakaran-condolence</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/saukkaar-janaki-demise-causes-grief-ttv-dhinakaran-condolence#comments</comments><guid isPermaLink="false">5758700a-6adb-4830-ba65-75baaee53b75</guid><pubDate>Fri, 21 Aug 2026 15:35:13 +0000</pubDate><atom:updated>2026-08-21T15:35:13.601Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,இரங்கல்,condolences,Sowcar Janaki,சவுகார் ஜானகி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/tc6i6ro5/Untitled-10.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/tc6i6ro5/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 94. இந்த நிலையில் சவுகார் ஜானகியின் மறைவுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்த் திரையுலகின் தனித்துவமிக்க பழம்பெரும் நடிகையும், திரைப்படத் துறையில் மட்டுமின்றி நாடகத் துறையிலும் கோலோச்சி, தனது முத்திரையைப் பதித்தவருமான பத்மஸ்ரீ சவுகார் ஜானகி இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.</p><p>தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல்வேறு மொழிகளில் தான் ஏற்ற கதாபாத்திரங்கள் அனைத்திற்கும் பெருமை சேர்த்த சவுகார் ஜானகியை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், ரசிகர்கள் மற்றும் சக திரையுலகினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>‘சீரியல் பார்ப்பதில்லை, சட்டசபை நேரலைதான் பார்க்கிறோம் என்று மக்கள் சொல்கிறார்கள்’ - அமைச்சர் என்.ஆனந்த்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/people-say-they-dont-watch-tv-serials-instead-they-watch-the-live-broadcast-of-the-assembly-proceedings-says-minister-n-anand</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/people-say-they-dont-watch-tv-serials-instead-they-watch-the-live-broadcast-of-the-assembly-proceedings-says-minister-n-anand#comments</comments><guid isPermaLink="false">d2098dc9-8d0b-44e5-8639-adbd48923179</guid><pubDate>Fri, 21 Aug 2026 15:26:53 +0000</pubDate><atom:updated>2026-08-21T15:26:53.878Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அமைச்சர் ஆனந்த்,Minister Anand</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/gtyg57he/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/gtyg57he/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நிகழ்வுகள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சட்டமன்றத்தில் இன்று நேரலை குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது அமைச்சர் என்.ஆனந்த் பேசியதாவது;-</p><p>“என்னிடம் 70 வயது முதியவர் ஒருவர் சொன்ன விஷயத்தை கூறுகிறேன். ‘இப்போதெல்லாம் நாங்கள் வீட்டில் சீரியல் பார்ப்பதில்லை, சட்டமன்ற நேரலையைதான் பார்க்கிறோம். சட்டமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதை என் மனைவி, பேத்தி என அனைவரும் அதைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.</p><p>தற்போது பயம் எல்லாம் நீங்கி சந்தோஷமாக இருக்கிறோம். இன்றைக்கு எங்களுக்கு ஒரு பிள்ளையாக நம்முடைய முதல்-அமைச்சர் இருக்கிறார்’ என்று அந்த முதியவர் என்னிடம் கூறினார். தமிழ்நாட்டில் முதல் முறையாக நமது முதல்-அமைச்சர் விஜய்தான் தைரியமாக சட்டசபை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்ப அனுமதி அளித்திருக்கிறார்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>கோவில்களில் காலிபணியிடங்களை நிரப்ப பணியாளர் தேர்வு வாரியம் - அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/staff-selection-board-to-fill-vacancies-in-temples</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/staff-selection-board-to-fill-vacancies-in-temples#comments</comments><guid isPermaLink="false">bd6d5fde-c2e2-4722-a6a2-5612eb34eb4e</guid><pubDate>Fri, 21 Aug 2026 15:20:32 +0000</pubDate><atom:updated>2026-08-21T15:20:32.852Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவில்கள்,தமிழக சட்டசபை,TNAssembly,அமைச்சர் ரமேஷ்,MinisterRamesh,LordMuruganTemples</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/d5nuzus2/saminister33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு]]></media:title><media:description type="html"><![CDATA[ காலிபணியிடங்களை நிரப்ப பணியாளர் தேர்வு வாரியம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/d5nuzus2/saminister33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை: </p><p>கோவில் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களில் நேரடி நியமனம் வாயிலாக வெளிப்படையாக பணி நியமனம் செய்ய திருக்கோவில் தேர்வு பணியாளர் தேர்வு வாரியம் இந்தாண்டு அமைக்கப்படும் என சட்டசபையில் <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D">அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் </a>அறிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் சட்டசபையில் பேசியதாவது:-</p><h2>பணியாளர் தேர்வு வாரியம்</h2><p>திருக்கோவில்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் நேரடி நியமனக் காலிப்பணியிடங்களை வெளிப்படைத்தன்மையுடன் தகுதியானவர்களைத் தேர்வு செய்ய புதிய பணியாளர் தேர்வு வாரியம் அமைக்கப்படும்.</p><h2>ஒரு நாள் ஆன்மிகப் பயணம்</h2><p>தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனம் செய்வதற்கு இவ்வாண்டு மொத்தம் 10,000 மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் மண்டல இணை ஆணையர் அலுவலகம் வாரியாக அந்தந்தப் பகுதியில் உள்ள முக்கிய கோவில்களுக்கு ஒரு நாள் ஆன்மிகப் பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்படும்.</p><h2>வெற்றி கலை அறிவுசார் திருக்கோவில் பயணம்</h2><p>தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவில்களில் பழமையும், பெருமையும் மிக்க திருக்கோவில்களின் வரலாற்றுச் சிறப்பையும், கல்வெட்டு, கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை முதலான சிறப்புகளை ஆர்வலர்கள் அறிந்து கொள்ளும் வகையில் முதற்கட்டமாக 2,000 பக்தர்கள் பயன்பெறும் வகையில் வெற்றி கலை அறிவுசார் திருக்கோயில் பயணம் ஏற்பாடு செய்யப்படும்.</p><h2>சிறப்பு விழாக்கள்</h2><p>"ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்ற தத்துவத்தை உணர்த்திய சித்தர்களின் தமிழர் மெய்யியல், மருத்துவம் மற்றும் அறிவியல் பங்களிப்புகளைப் போற்றும் வகையில், அவர்களின் மாதம், நட்சத்திரம் மற்றும் திருத்தலங்களை அடிப்படையாகக் கொண்டு ஆன்மிக நிகழ்ச்சிகள் மற்றும் திருக்கோயில்கள் சார்பில் சிறப்பு விழாக்கள் நடத்தப்படும்.</p><h2>கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பு விழா</h2><p>நாகப்பட்டினம் திருப்புகலூர் அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தன்று தேவரா பாடலின் மெய்ப்பொருளை மக்கள் அறியும் வண்ணம் சொற்பொழிவுகள், இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்தி திருநாவுக்கரசரின் தமிழும் சைவமும் போற்றப்படும் வகையில் சிறப்பு விழாவாக நடத்தப்படும்.</p><h2>'கிராம தெய்வக் கலைவிழா’</h2><p>கிராமப்புறங்களின் தொன்மையான பெண் மற்றும் காவல் தெய்வ வழிபாட்டு மரபுகள் மற்றும் கலைப் பண்பாட்டைப் பாதுகாக்கும் வகையில், அனைத்து மண்டலங்களிலும் ஆண்டுதோறும் கூத்து, நாடகம் உள்ளிட்ட கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் 'கிராம தெய்வக் கலைவிழா' நடத்தப்படும்.</p><h2>அறுபடை வீடு - மேம்படுத்தப் புதிய திட்டம்</h2><p>முருகப்பெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடு திருக்கோவில்களை முன்மாதிரித் திருக்கோவில்களாக மேம்படுத்துவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.</p><p>*பழனி கோவில் கல்வி நிறுவனங்களுக்கு 3.10கோடி ரூபாயில் 9 புதிய பஸ்கள் வாங்கப்படும்.</p><p>* காமராஜர் பிறந்த நாளில் கோவில்களில் பொது விருந்து ஏற்பாடு செய்யப்படும்.</p><p>* மருதமலை, அழகர்கோவில்களுக்கு சொந்தமான பள்ளிகளில் மேம்பாட்டு பணிகள் செய்யப்படும்.</p><p>*மருதமலை கோவில் பள்ளியில் 90 லட்சம் ரூபாயில் கலையரங்கம் சுகாதார வளாகம் அமைக்க நடவடிக்கை.</p><p>*அழகர் சுந்தர்ராசா மேல்நிலை பள்ளியில் 87 லட்சம் ரூபாயில் குடிநீர் உள்ளிட்டவசதிகள் ஏற்பாடு செய்யப்படும்.</p><p>*திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் கலை அறிவியல் கல்லூரிக்கு நிரந்தர கட்டடம் கட்டப்படும்.</p><p>மீனாட்சி அம்மன் கோவில் கருணை இல்லத்தில் கூடுதல் அறை நவீன சமையல் கூடம் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் ரமேஷ் வெளியிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை குடிநீர் விநியோகத்தை நவீனப்படுத்த திட்டம்:  ஆசிய மேம்பாட்டு வங்கியிடம் கடன் ஒப்பந்தம் கையெழுத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-drinking-water-distribution-modernisation-plan-loan-agreement-with-asian-development-bank</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-drinking-water-distribution-modernisation-plan-loan-agreement-with-asian-development-bank#comments</comments><guid isPermaLink="false">45797dad-a6db-4d0a-bd5f-6d897efb51e4</guid><pubDate>Fri, 21 Aug 2026 15:20:01 +0000</pubDate><atom:updated>2026-08-21T15:20:01.213Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,bank,வங்கி,Project,திட்டம்,கடன்,water supply,குடிநீர் விநியோகம்,ஒப்பந்தம் கையெழுத்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/h3ec79li/pipe-line.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ குடிநீர் விநியோகத்தை நவீனப்படுத்த திட்டம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை குடிநீர் விநியோகத்தை நவீனப்படுத்த திட்டம்:  ஆசிய மேம்பாட்டு வங்கியிடம் கடன் ஒப்பந்தம் கையெழுத்து]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/h3ec79li/pipe-line.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">குடிநீர் விநியோகம்</a>, துப்புரவு வசதிக்கான கட்டமைப்பை நவீனமாக்குவதற்கு திட்டத்திற்கு கடனுதவிக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது தொடர்பாக, மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><h2>230 மில்லியன் அமெரிக்க டாலர்</h2><p>சென்னையில் குடிநீர் விநியோகம், துப்புரவு வசதிக்கான கட்டமைப்புகளை நவீனமயமாக்கி விரிவுப்படுத்துவதற்காக 230 மில்லியன் அமெரிக்க டாலர்  (சுமார் ரூ.1,950 கோடி) மதிப்பிலான கடன் ஒப்பந்தம், இந்தியா – ஆசிய வளர்ச்சி வங்கி இடையே கையெழுத்தாகியுள்ளது. </p><h2>நடவடிக்கை</h2><p>மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான இணைச்செயலாளர் பல்தியோ புருஷார்த்தா வழிகாட்டுதலின் கீழ் இந்தியா – ஆசிய வளர்ச்சி வங்கி இடையே கடனுதவியை இறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.</p><h2>கடன் ஒப்பந்தம்</h2><p>இதன்படி, மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான துணைச்செயலாளர் சௌரப் சிங், ஆசிய வளர்ச்சி வங்கியின் இந்தியப் பிரிவு இயக்குநர் மியோ ஓகா ஆகியோர் இந்த கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.</p> <h2>பொது சுகாதாரம்</h2><p>சென்னையில் பருவமழையைத் தாங்கும் திறன் கொண்ட நீர்ப்பாதுகாப்பு, கழிவுநீர் அகற்றும் திட்டம், மாநகர் முழுவதும் பாதுகாப்பான, நம்பகமான குடிநீர் விநியோகம், சிறந்த துப்புரவு சேவைகளுக்கான வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தில் அடங்கும். மேலும், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறனை வலுப்படுத்தவும், பொது சுகாதாரம், வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் திறன் வாய்ந்த நிதி ரீதியாக நீடித்த நகர்ப்புற நீர்க் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கும் இது உதவிடும்.</p><h2>170 கி.மீ நீளத்திற்கு குடிநீர் குழாய்கள்</h2><p>இத்திட்டத்தின் கீழ், 170 கி.மீ நீளத்திற்கு குடிநீர், கழிவுநீர் குழாய்கள் அமைக்கப்படும். ஏழு நீர் இறைப்பு நிலையங்கள், 38 கழிவுநீர் அகற்றும் நிலையங்கள் மேம்படுத்தப்படும். மேலும், செயல்திறன் அடிப்படையிலான ஒப்பந்தங்கள் மூலம் நீர் பயன்பாடு மற்றும் செயல்பாட்டு மேலாண்மை அமைப்புகள் வலுப்படுத்தப்படும். இதன் மூலம், சென்னை நகர்ப்புற குடிநீர் விநியோக அமைப்பில் நம்பகத் தன்மை, சமநிலை, இடர்களை தாங்கும் திறனை மேம்படுத்தி சீரான நீர் அழுத்தத்தை பாராமரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலையில் இளம்பெண் தற்கொலை - போலீசார் விசாரணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-dies-by-suicide-before-engagement-police-investigation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-dies-by-suicide-before-engagement-police-investigation#comments</comments><guid isPermaLink="false">9e7349fb-8567-4bdf-bbab-db162f6e90ee</guid><pubDate>Fri, 21 Aug 2026 15:11:57 +0000</pubDate><atom:updated>2026-08-21T15:11:57.754Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>புதுக்கோட்டை,தற்கொலை,Pudukottai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/jkiojvls/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/jkiojvls/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுக்கோட்டை,</p><p>நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலையில் இளம்பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>நிச்சயதார்த்தம்</h2><p>புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மாங்கோட்டை கீழப்பட்டியை சேர்ந்தவர் சின்னத்துரை. இவரது மகள் சோபனா (25 வயது). இவர்கள் ஆலங்குடி முல்லை நகரில் குடும்பத்தோடு வசித்து வந்தனர். சோபனாவுக்கு கடந்த 19-ந்தேதி நிச்சயதார்த்த விழா நடைபெற இருந்தது.</p><h2>தற்கொலை</h2><p>இந்நிலையில், 18-ந்தேதி இரவு பொருட்கள் வாங்க சின்னத்துரை தனது மனைவியோடு ஆலங்குடிக்கு சென்றிருந்தார். இந்த நிலையில் அன்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சோபனா தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.</p><p>இதைப்பார்த்த அவரது உறவினர்கள் சோபனாவை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோபனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சின்னத்துரை கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>‘அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கார் வழங்கும் முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ - பெ.சண்முகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tamil-nadu-government-should-reconsider-the-decision-to-provide-cars-to-all-mlas-pshanmugam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tamil-nadu-government-should-reconsider-the-decision-to-provide-cars-to-all-mlas-pshanmugam#comments</comments><guid isPermaLink="false">5d3b72e1-80f0-42ad-86a9-6d0415f70fae</guid><pubDate>Fri, 21 Aug 2026 14:49:46 +0000</pubDate><atom:updated>2026-08-21T14:49:46.930Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பெ.சண்முகம்,P.Shanmugam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/pgts73xy/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/pgts73xy/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம் மாநகராட்சி குடிநீரை தனியாருக்கு கொடுக்கும் திட்டத்தை கண்டித்தும், சூயஸ் நிறுவனத்தின் டெண்டரை ரத்து செய்யக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று சேலம் கோட்டை மைதானத்தில், கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பெ.சண்முகம் கூறியதாவது;-</p><p>“தமிழ்நாடு சட்டப்பேரவையில் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கார் வழங்குவது என்ற அறிவிப்பை முதல்-அமைச்சர் வெளியிட்டுள்ளார். சட்டமன்றத்திற்கு புதிய எம்.எல்.ஏ.க்கள் வந்திருக்கிறார்கள், ஏழ்மையான நிலையில் இருக்கக்கூடிய எம்.எல்.ஏ.க்கள் வந்திருக்கிறார்கள் வந்திருக்கிறார்கள், சொந்த கார் இல்லாத எம்.எல்.ஏ.க்களும் இருக்கிறார்கள். </p> <p>அதே சமயம், ஏற்கனவே நான்கைந்து கார்களோ அல்லது 20 கார்களோ வைத்திருப்பவர்கள் கூட எம்.எல்.ஏ.க்கள் ஆகியிருக்கின்றனர். அவர்கள் காரை எங்கே நிறுத்துவது என்று தெரியாமல், அதற்காக பல ஏக்கர் நிலத்தை வாங்கி அங்கே காரை நிறுத்துகிறார்கள். எனவே, அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கார் என்பது ஏற்புடையது அல்ல. </p><p>தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்கள் பணி ஆற்றுவதற்கு கார் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் ஏற்கனவே சொந்தமாக பல கார்களை வைத்திருக்கக்கூடிய நபர்களுக்கு எதற்காக அரசாங்க செலவில் கார் வழங்க வேண்டும்? உண்மையிலேயே சொந்தமாக கார் வாங்க முடியாத எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு அரசு கடன் உதவி வழங்கி கார் வாங்குவதற்கு உதவி செய்யலாமே தவிர, அரசாங்க பணத்தை எடுத்து அவர்களுக்கு கார் வாங்கிக் கொடுப்பது ஏற்புடையது ஆகாது. </p><p>அரசாங்கம் ஏற்கனவே நீதி நெருக்கடியில் இருப்பதாகவும், கஜானா காலியாக இருப்பதாகவும் பல அமைச்சர்களும், முதல்-அமைச்சரும் பலமுறை சொல்லியிருக்கிறார்கள். இத்தகைய சூழலில் இவ்வளவு பெருந்தொகையை செலவிட்டு அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கார் வழங்குவது என்ற முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. எனவே அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் இலவசமாக கார் வழங்குவது என்ற முடிவை தமிழ்நாடு அரசாங்கம் மறுபரிசனை செய்ய வேண்டும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>ராமநாதபுரம், மதுரை உள்பட 6 மாவட்டங்களில் வருங்கால வைப்பு நிதி குறை தீர்க்கும் முகாம்- 27-ந்தேதி நடக்கிறது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/epfo-esic-grievance-camp-six-districts-august-27</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/epfo-esic-grievance-camp-six-districts-august-27#comments</comments><guid isPermaLink="false">f8babf08-47b8-4fcc-8ff2-28c99eaf6e8b</guid><pubDate>Fri, 21 Aug 2026 14:43:02 +0000</pubDate><atom:updated>2026-08-21T14:43:02.961Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,ராமநாதபுரம்,Ramanathapuram,Redressal Camp,குறை தீர்க்கும் முகாம்,வருங்கால வைப்பு நிதி,Grievance,Employees&apos; Provident Fund</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/6topawxu/epfo.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வருங்கால வைப்பு நிதி குறை தீர்க்கும் முகாம்]]></media:title><media:description type="html"><![CDATA[ ராமநாதபுரம், மதுரை உள்பட 6 மாவட்டங்களில் வருங்கால வைப்பு நிதி குறை தீர்க்கும் முகாம்- 27-ந்தேதி நடக்கிறது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/6topawxu/epfo.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/epfo">இபிஎப்ஒ</a>, இஎஸ்ஐசி தொடர்பான குறைகளுக்கு தீர்வு காணும் முகாம் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் நடைபெறவுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p> <h2>ஆகஸ்ட் 27யில் குறைதீர்ப்பு முகாம்</h2><p>மத்திய அரசின் தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் , தொழிலாளர் மாநில ஈட்டுறுதிக் கழகம் இணைந்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்களின் குறைகளை விரைவாக தீர்க்கவும், "நிதி உங்கள் அருகில்", “சுவிதா சமகம்" என்ற பெயரில் ஒருங்கிணைந்த பொதுமக்கள் தொடர்பு ,<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D">குறைதீர்ப்பு முகாமை</a> நடத்துகின்றன. </p><p>இந்த முகாம், 2026 ஆகஸ்ட் 27 அன்று காலை 9.15 மணி முதல் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, விருதுநகர் திண்டுக்கல் மாவட்டங்களில் நடைபெற உள்ளது.</p><h2>இணைய தளம்</h2><p>தொழிலாளர்கள், ஓய்வூதியதாரர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் தங்களுடைய இபிஎப்ஒ, இஎஸ்ஐசி தொடர்பான கோரிக்கைகள், குறைகள், சந்தேகங்களை இந்த முகாமில் நேரடியாக முன்வைத்து தீர்வு பெறலாம். https://t.ly/nPTt என்ற இணைய இணைப்பின் மூலம் விவரங்களைப் பதிவு செய்து முகாமில் கலந்து கொள்ளலாம்.</p><h2>முகாம் நடைபெறும் இடங்கள்</h2><p>மதுரை    பாரதி இன்பினிட்டி மருத்துவமனை, 19/28, வளார் நகர் பின்புறம், இலந்தைக்குளம், மதுரை 625 023</p><p>சிவகங்கை செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி, கிளங்காட்டூர் மானாமதுரை சிவகங்கை -630606</p><p>இராமநாதபுரம்  நேஷனல் அகாடமி மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பட்டினம்காத்தான், ராமநாதபுரம் 623503</p><p>தேனி     தி கிரசன்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி,, பேருந்து நிலையம் அருகில், உத்தமபாளையம் 625533, தேனி மாவட்டம்</p><p>விருதுநகர் செயின்ட் பால்ஸ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, 15, காமராஜ் நகர், பழைய பேருந்து நிலையம் அருகில், ராஜபாளையம் 626117</p><p>திண்டுக்கல்    பாரத் பொதுப் பள்ளி (சிபிஎஸ்இ), மேற்கு ஆயக்குடி, பழனி தாலுகா, திண்டுக்கல்-624 613</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று வெயில் சதமடித்தது</title><link>https://www.dailythanthi.com/news/weather/heatwave-in-5-districts-of-tamil-nadu-today</link><comments>https://www.dailythanthi.com/news/weather/heatwave-in-5-districts-of-tamil-nadu-today#comments</comments><guid isPermaLink="false">f3c001d7-d2ba-48bd-acb3-2735ec95e596</guid><pubDate>Fri, 21 Aug 2026 14:26:01 +0000</pubDate><atom:updated>2026-08-21T14:26:01.723Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Weather,வானிலை,Weather update,வெயில்,heat,வானிலை தகவல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/dok1akcp/Untitled-8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ வெயில் சதம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/dok1akcp/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்தாலும், பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது.</p><p>இந்த நிலையில், தமிழகத்தில் 5 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று அதிகமாக வெப்பநிலை பதிவான இடங்கள் வருமாறு:-</p><p>திருச்சி - 103.1° பாரன்ஹீட் (39.5° செல்சியஸ்)</p><p>மதுரை விமான நிலையம் - 102.92° பாரன்ஹீட் (39.4° செல்சியஸ்)</p><p>ஈரோடு - 101.12° பாரன்ஹீட் (38.4° செல்சியஸ்)</p><p>வேலூர் - 100.94° பாரன்ஹீட் (38.3° செல்சியஸ்)</p><p>மதுரை நகர் - 100.76° பாரன்ஹீட் (38.2° செல்சியஸ்)</p>]]></content:encoded></item><item><title>பா.ம.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வேண்டாம்- சவுமியா அன்புமணி பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pmk-mlas-do-not-need-cars-sowmya-anbumanis-statement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pmk-mlas-do-not-need-cars-sowmya-anbumanis-statement#comments</comments><guid isPermaLink="false">f7f8fcaa-9862-43ac-9abb-05303c4fcc29</guid><pubDate>Fri, 21 Aug 2026 14:15:18 +0000</pubDate><atom:updated>2026-08-21T14:15:18.470Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,MLA,பா.ம.க,சவுமியா அன்புமணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/22eapug4/savumia.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  சவுமியா அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/22eapug4/savumia.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>எம்.எல்.ஏ.களுக்கு கார் வழங்கப்படுவது தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வேண்டாம் என்று ஏற்கனவே எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் பா.ம.க. எம்.எல்.ஏ.க்களுக்கும் கார் வேண்டாம் என்று சவுமியா அன்புமணி தெரிவித்துள்ளார்இது குறித்து சவுமியா அன்புமணி எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தும் அந்த அறிவிப்பு மின்சாரத் துறையில் வரவில்லை. எதற்கு விவசாயிகள் இலவச மின்சாரத்தைக் கேட்கிறார்கள்?. எங்குமே இப்போது தண்ணீர் இல்லை. அவர்கள் நம்பி இருப்பது நிலத்தடி நீரை மட்டும் தான். மோட்டார் போட்டு தான் தண்ணீர் எடுக்கிறார்கள். அதற்காகத்தான் இலவச மின்சாரம் கேட்கிறார்கள்.</p>  <p>வெறும் 50 ஆயிரம் பேருக்கு தான் இலவச மின்சாரம் என்றால், மீதி பேருக்கு என்ன ஆனது?. ஒவ்வொரு வருடமும் மின் கட்டணத்தை ஏற்றுகிறார்கள். நிச்சயமாக மின்சாரத் துறைக்கு வருமானம் வருகிறது. எனவே அவர்கள் இலவச மின்சாரத்தை விவசாயிகளுக்கு கொடுக்கலாம்.எங்களிடம் ஏற்கனவே கார் உள்ளது. அதனால் எங்களுக்கு கார் வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளோம். அதற்கு மாற்றாக வாகனப் பராமரிப்பு தொகையில் எங்கள் தொகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டிக்கொடுத்தால் நன்றாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>எம்.எல்.ஏக்களுக்கு கார்..எங்களுக்கு பைக் வேணும் ...மனு அளித்த ஊராட்சி மன்ற தலைவர்கள் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/panchayat-leaders-petition-mlas-for-carswe-want-bikes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/panchayat-leaders-petition-mlas-for-carswe-want-bikes#comments</comments><guid isPermaLink="false">59b2f084-edda-4bdb-bde4-456d7dccdd4f</guid><pubDate>Fri, 21 Aug 2026 13:59:17 +0000</pubDate><atom:updated>2026-08-21T13:59:17.526Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>MLA,Car,Actor Vijay,bike taxi,Villupuram District,ஊராட்சி மன்ற தலைவர்கள்,Villupuram - விழுப்புரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/9fu0bdet/bike33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஊராட்சி மன்ற தலைவர்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ எம்.எல்.ஏக்களுக்கு கார்..எங்களுக்கு பைக் வேணும்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/9fu0bdet/bike33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விழுப்புரம்,</p><p>சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்க உத்தரவிட்டுள்ள முதல்-அமைச்சர், தங்களுக்கும் பைக் வழங்க வேண்டும் என ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பினர், விழுப்புரம்  மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><p>எம்.எல்.ஏக்களுக்கு கார்</p><p>தமிழகத்தில் எம்.எல்.ஏ.க்களின் தொகுதிப் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள கார், ஓட்டுநர் உதவியாளர் மற்றும் மாதம் ரூ.75,000 பராமரிப்புத் தொகை வழங்கப்படும் என <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a> சமீபத்தில் சட்டபேரவையில் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. நிதிச்சுமையைக் கருத்தில் கொண்டு, பொருளாதாரத்தில் நலிவடைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டுமே இந்தச் சலுகையை வழங்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்தனர்.</p><h2>ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பைக்</h2><p>இதனிடையே, எதிர்க்கட்சியான திமுக, ” இந்த கார் சலுகை தங்கள் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் யாருக்கும் தேவையில்லை” என அதிகாரப்பூர்வமாக மறுத்து அறிவித்தது.</p><p>இந்தச் சூழலில், “கிராமப்புறங்களில் தினமும் களப்பணியாற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கே வாகன வசதி மிகவும் அவசியமானது” என வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட  கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பினர், தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.</p><h2>தினமும் மக்களை சந்திக்க</h2><p>கிராமப்புற மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றவும், ஊராட்சிகளுக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் தினமும் சென்று வரவும் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு அரசு சார்பில் இருசக்கர வாகனம் (பைக்) வழங்க வேண்டும். வாகன பராமரிப்பு மற்றும் எரிபொருள் செலவுகளுக்காகத் தகுந்த மாதாந்திர தொகையை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.</p><p>மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ.க்களுக்கு  கார் வழங்கும் அரசு, கடைக்கோடி கிராமங்களில் நேரடியாகச் செயல்படும் ஊராட்சி தலைவர்களுக்கும் குறைந்தபட்ச வாகன வசதியைச் செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>மேலும் எம்.எல்.ஏ.க்களுக்கான கார் சலுகை குறித்து  சட்டப்பேரவையில் காரசார விவாதங்கள் நடந்து வரும் வேளையில், ஊராட்சி மன்றத் தலைவர்கள் ‘பைக்’ கேட்டு மனு அளித்துள்ள சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>‘சவுகார் ஜானகியின் மறைவு கலைத்துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு’ - வானதி சீனிவாசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-passing-of-sowcar-janaki-is-an-irreparable-loss-to-the-world-of-art-vanathi-srinivasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-passing-of-sowcar-janaki-is-an-irreparable-loss-to-the-world-of-art-vanathi-srinivasan#comments</comments><guid isPermaLink="false">cf04bf75-fa03-4bfb-b2f5-083b7dcac396</guid><pubDate>Fri, 21 Aug 2026 13:56:00 +0000</pubDate><atom:updated>2026-08-21T13:56:00.428Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,Sowcar Janaki,சவுகார் ஜானகி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/cdi2pbym/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/cdi2pbym/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகியின் மறைவுக்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-</p><p>“தென்னிந்திய சினிமாவின் பழம் பெரும் திரைக்கலைஞரான சவுகார் ஜானகி அம்மையார் வயது மூப்பால் காலமானார் என்ற செய்தி ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது.</p><p>7 தலைமுறைகளுக்கும் மேலாக சினிமா, நாடகத்துறையில் கோலோச்சி, தான் ஏற்ற கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற அம்மையாரின் மறைவு கலைத் துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>செங்கல்பட்டு: வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் ஏ.சி. வெடித்து விபத்து </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chengalpattu-accident-involving-an-exploding-ac-unit-at-the-block-development-officers-office</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chengalpattu-accident-involving-an-exploding-ac-unit-at-the-block-development-officers-office#comments</comments><guid isPermaLink="false">fa8599df-468d-4f74-8b4f-b5330e569004</guid><pubDate>Fri, 21 Aug 2026 13:18:07 +0000</pubDate><atom:updated>2026-08-21T13:18:07.203Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chengalpattu,செங்கல்பட்டு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/68u2yciu/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/68u2yciu/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>செங்கல்பட்டு,</p><p>செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று வழக்கம் போல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அந்த அலுவலகத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலரின் அறையில் இருந்து புகை வெளியேறுவதை கண்டனர்.</p><p>அந்த சமயத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகலை செல்வன் தனது அறையில் இருந்து வெளியேறிவிட்டார். அதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் அறையில் இருந்த ஏ.சி. பலத்த சத்தத்துடன் வெடித்து தீப்பற்றி எரியத் தொடங்கியது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், அங்கு பற்றி எறிந்த தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். </p><p>மின்கசிவு காரணமாக ஏ.சி. வெடித்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஏ.சி. வெடித்து விபத்து ஏற்பட்ட சம்பவம் காட்டாங்குளத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>‘தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக்கொடுப்பதற்கு நாங்கள் துணைபோக மாட்டோம்’ - தமிழிசை சவுந்தரராஜன் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-not-be-a-party-to-compromising-tamil-nadus-rights-tamilisai-soundararajan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-not-be-a-party-to-compromising-tamil-nadus-rights-tamilisai-soundararajan#comments</comments><guid isPermaLink="false">d160c087-e5be-410a-be02-9a15ef4966ff</guid><pubDate>Fri, 21 Aug 2026 12:40:59 +0000</pubDate><atom:updated>2026-08-21T12:40:59.856Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழிசை சவுந்தரராஜன்,Tamilisai Soundararajan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/pynucw2r/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/pynucw2r/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“தொகுதி மறுவரையறை மூலம் நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் எண்ணிக்கை 39-ல் இருந்து 59 ஆக மாறும். மேலும் நாடாளுமன்றத்தில் 200 பெண்கள் எம்.பி.க்களாக வருவதற்கு வாய்ப்பு கிடைக்கும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு சொல்கிறேன், பெண்களுக்கான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். ஏற்கனவே இருக்கும் 543 இடங்களிலேயே கொடுக்க வேண்டும் என்று கேட்டால் கொடுக்க மாட்டார்கள். </p><p>தொகுதி மறுவரையறை காரணமாக நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் சதவீதம் குறையாது என உள்துறை மந்திரி அமித்ஷா உறுதியளித்துள்ளார். அதைத்தான் தமிழக முதல்-அமைச்சர் விஜய்யும், தமிழகத்தின் சதவீதம் குறையக்கூடாது என வலியுருத்தி இருக்கிறார். நமது சகோதரிகளுக்கு இப்போதுதான் இரு வாய்ப்பு கிடைக்கிறது. பெண்கள் அதிகமாக வரும்போது பெண்களுக்கான குரல் வலுவாக ஒலிக்கும். </p><p>அதுமட்டுமின்றி, சட்டப்படி தொகுதி மறுவரையறை நிறைவேற்றப்பட வேண்டும். நிச்சயமாக தமிழ்நாட்டின் உரிமையை மத்திய அரசு விட்டுக்கொடுக்காது. தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக்கொடுப்பதற்கு நாங்கள் துணைபோக மாட்டோம். எனவே, காவிரியும் வேண்டும், தொகுதி மறுவரையும் வேண்டும், பெண்களுக்கான இட ஒதுக்கீடும் வேண்டும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p> ]]></content:encoded></item><item><title>கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை, விவசாயிகளுக்கான நிதியைக் கொண்டு சேர்ப்பதில் காட்ட வேண்டும் - உதயநிதி ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/show-the-speed-you-show-in-buying-cars-in-bringing-funds-to-farmers-udayanidhi-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/show-the-speed-you-show-in-buying-cars-in-bringing-funds-to-farmers-udayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">b7875b7f-c1b4-4b3f-a772-6b1583b02e6d</guid><pubDate>Fri, 21 Aug 2026 12:24:22 +0000</pubDate><atom:updated>2026-08-21T12:24:22.273Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,எதிர்க்கட்சித் தலைவர்,குறுவை சிறப்புத் தொகுப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/rhyrs26k/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/rhyrs26k/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>எம்.எல்.ஏ.க்களுக்குக் கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை, விவசாயிகளுக்கான நிதியைக் கொண்டு சேர்ப்பதில் அரசு காட்டியிருக்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>குறுவை சிறப்புத்தொகுப்பு அறிவிக்கப்பட்டு 2 மாதங்கள் கடந்துவிட்ட பிறகும், விவசாயிகளை அது சென்று சேராமல் இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்காத காரணத்தால், குறுவை சாகுபடி பொய்த்துவிட்டது. விவசாயிகளுக்கு அரசு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று பேரவையில் பேசி இருந்தேன்.</p><p>வறட்சி நிவாரணம் பற்றிக் கேட்டதற்கு, குறுவை சிறப்புத்தொகுப்புக்காக நிதி ஒதுக்கியதைப் பற்றி முதல்-அமைச்சர் விளக்கினார். ஆனால், அவர் ஒதுக்கியதாக சொன்ன அந்த நிதியும் இன்று வரை விவசாயிகளைச் சென்றடையவில்லை. இது தொடர்பான செய்திகள்  ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அவற்றை இந்த Inefficient அரசு கவனித்ததா? அல்லது வழக்கம்போல விவசாயிகள் பிரச்சினையில் அலட்சியம் காட்டுகிறதா?</p><p>எம்.எல்.ஏ.க்களுக்குக் கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை, விவசாயிகளுக்கான நிதியைக் கொண்டு சேர்ப்பதில் இந்த அரசு காட்டியிருக்க வேண்டும். விவசாயிகள் நலனில் அக்கறையின்றி தொடர்ந்து மெத்தனப் போக்கோடு நடந்து கொள்வது ஏற்புடையது அல்ல. குறுவை சிறப்புத்தொகுப்பு நிதி விவசாயிகளுக்குச் சென்று சேர இந்த விவசாயிகள் விரோத அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கூடலூர் அருகே புலி தாக்கி விவசாயி பலி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmer-killed-in-tiger-attack-near-gudalur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmer-killed-in-tiger-attack-near-gudalur#comments</comments><guid isPermaLink="false">7c0a663d-07b7-448b-b3e5-f1a9a2aaa586</guid><pubDate>Fri, 21 Aug 2026 12:11:18 +0000</pubDate><atom:updated>2026-08-21T12:11:18.355Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விவசாயி பலி,Farmer killed,public complaint,கூடலூர் அருகே,புலி தாக்கி,tiger attack</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/qeik5k2l/33.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ புலி தாக்கி விவசாயி பலி]]></media:title><media:description type="html"><![CDATA[ கூடலூர் அருகே விவசாயி ஒருவரை புலி தாக்கி, கொன்று தின்றது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/qeik5k2l/33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே விவசாயி ஒருவரை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF">புலி தாக்கி</a>, கொன்று தின்றது. அந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.</p><h2>புலி தாக்கி விவசாயி பலி</h2><p>நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட லாரஸ்டன் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 54) <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF">விவசாயி</a>. அவர் வழக்கம் போல் இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் தனது விளை நிலத்தில் விவசாயப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, புதருக்குள் மறைந்திருந்த புலி ஒன்று, திடீரென பாய்ந்து அவரை பயங்கரமாகத் தாக்கியது. எதிர்பாராத அந்த கொடூரத் தாக்குதலில் நிலைகுலைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>உடல் பாகங்களை தின்ற புலி</h2><p>ரவிச்சந்திரன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினரும், அக்கம் பக்கத்தினரும் விளை நிலத்திற்குச் சென்று தேடினர். அப்போது அங்கு கண்ட காட்சி அவர்களை உறைந்து போகச் செய்தது. ரவிச்சந்திரனைக் கொன்ற புலி, அவரது உடல் பாகங்களை கொடூரமாகத் தின்ற நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கூடலூர் வனத்துறையினர் மற்றும் போலீசார், ரவிச்சந்திரனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><h2>12 நாட்களில் 2வது பலி</h2><p>அதே ஓவேலி லாரஸ்டன் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 9-ந்தேதி பாலகிருஷ்ணன் (வயது 58) என்ற மற்றொரு விவசாயி தண்ணீர் பாய்ச்ச சென்றபோது புலி தாக்கி, உடல் பாதியளவு தின்னப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அந்த சோகம் மறைவதற்குள், வெறும் 12 நாட்கள் இடைவெளியில் அதே பகுதியில் மீண்டும் ஒரு மனித உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் கடும் கோபத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது.</p><h2>மக்கள் போராட்டம் - கோரிக்கை</h2><p>தொடர்ந்து புலி தாக்கும் சம்பவம் நடப்பதால் ஆத்திரமடைந்த ஓவேலி பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த புலி மனிதர்களை வேட்டையாடப் பழகிவிட்டதால் , உடனடியாக அதனை ஆட்கொல்லி புலியாக அறிவிக்க வேண்டும். வனத்துறையினர் உடனடியாக அப்பகுதியில் அதிநவீன கூண்டுகள் மற்றும் கேமராக்களைப் பொருத்தி புலியைப் பிடிக்க வேண்டும்.</p><p>தேயிலைத் தோட்டங்கள் மற்றும் விளை நிலங்களுக்குச் செல்லும் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தற்போது வனத்துறையினர் ட்ரோன் கேமராக்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் அந்த புலியைத் தீவிரமாகக் கண்காணித்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நடிகை சவுகார் ஜானகி மறைவு - காங்கிரஸ் கட்சி இரங்கல் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/demise-of-actress-sowcar-janaki-congress-party-offers-condolences</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/demise-of-actress-sowcar-janaki-congress-party-offers-condolences#comments</comments><guid isPermaLink="false">86ced2f5-3690-483c-9c8e-e709e6e7a30f</guid><pubDate>Fri, 21 Aug 2026 12:08:19 +0000</pubDate><atom:updated>2026-08-21T12:08:19.017Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,Sowcar Janaki,சவுகார் ஜானகி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/4xsqa8e6/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/4xsqa8e6/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகியின் மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது;-</p><p>“பழம்பெரும் திரைப்பட நடிகை சவுகார் ஜானகி அவர்கள் தமது 94-வது வயதில் காலமான செய்தி அறிந்து மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன். 1950-களில் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து தனக்கென தனியிடத்தை பிடித்தவர். </p><p>சிவாஜிகணேசன், எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் நடித்துள்ளார். கலைத்துறையில் ஆற்றிய பங்களிப்பிற்காக பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார். சவுகார் ஜானகி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கலையுலக நண்பர்களுக்கும ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>டி.என்.பி.எஸ்.சி. குரூப்1, 2, 2ஏ தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் - அறிவிப்பு வெளியீடு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/training-classes-have-been-conducted-at-the-state-vocational-guidance-centre-since-august-14</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/training-classes-have-been-conducted-at-the-state-vocational-guidance-centre-since-august-14#comments</comments><guid isPermaLink="false">70e24c40-4a1b-4a68-bebf-3f131acc484b</guid><pubDate>Fri, 21 Aug 2026 11:55:10 +0000</pubDate><atom:updated>2026-08-21T11:55:10.140Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TNPSC,டி.என்.பி.எஸ்.சி.,பயிற்சி வகுப்புகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/edx11txx/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/edx11txx/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், உளவியல் பகுப்பாய்வு சோதனைகளுடன் கூடிய வழிகாட்டுதல், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல், போட்டித் தேர்வுகளுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகள் நடத்துதல், கல்வி தொலைக்காட்சி வாயிலாக போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.</p><p>இதனில் போட்டி தேர்வுகளுக்கு, திறமையான, அனுபவமிக்க பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பாடக்குறிப்புகள், தினசரி, மாத இதழ்கள், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் ஆகியவை வழங்கப்படுவதுடன் பாடவாரியான துணைத் தேர்வுகள், மாதிரித் தேர்வுகள் ஆகியவையும் நடத்தப்பட்டு வருகின்றன. மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஆகஸ்ட் 14-ந்தேதி முதல் பின்வரும் போட்டித்தேர்விற்கான பயிற்சி வகுப்பானது நடத்தப்பட்டு வருகிறது.</p><p>TNPSC - Group 1, 2, &amp; 2A முதல் நிலை தேர்விற்கான ஒருங்கிணைந்த நேரடி பயிற்சி வகுப்பு (Offline Class) - திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை </p><p>மேற்காணும் போட்டித்தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் இப்பயிற்சி வகுப்பில் நேரடியாக கலந்து கொண்டு பயனடையுமாறு மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் முதன்மை செயல் அலுவலர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் இயக்குநர் டாக்டர்.சி.பழனி.இ.அ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். </p><p>எனவே, விருப்பமுள்ள போட்டித் தேர்வர்கள் தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் புகைப்படத்துடன் (Passport Size Photo) கீழ்க்கண்ட முகவரியில் நேரில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p>அலுவலக முகவரி: மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம், A-28, முதல் தளம், டான்சி கட்டிடம், திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-32. தொலைபேசி எண்: 044-22500134, 9361566648.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>2026 தேர்தலும் ஒரு சூரசம்ஹாரம் தான்  - அமைச்சர் ரமேஷ் பேச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-2026-election-will-also-be-a-soorasamharam-triumph-over-evil-minister-rameshs-remarks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-2026-election-will-also-be-a-soorasamharam-triumph-over-evil-minister-rameshs-remarks#comments</comments><guid isPermaLink="false">43e73121-a467-4591-9136-540b9259e1a3</guid><pubDate>Fri, 21 Aug 2026 11:41:51 +0000</pubDate><atom:updated>2026-08-21T11:41:51.836Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,soorasamharam,சூரசம்ஹாரம்,Ramesh,அமைச்சர் ரமேஷ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/6h2lifds/Minister.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ரமேஷ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/6h2lifds/Minister.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்  சட்டசபையில் இன்று பேசியதாவது:  அண்ணாவின் தம்பிகள் எப்படி சட்டமன்றத்தில் இருந்தார்களோ..அதேபோலத்தான் இன்று அண்ணணின் தம்பிகள் சட்டமன்றத்தில் செயல்பட்டு கொண்டு இருக்கிறோம்.  இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சராக இருக்கும் போது தமிழர் கடவுளாகிய தமிழர்களின் அடையாளம் ஆகிய  கடவுள் முருகரை பற்றி பேசமல் கடந்துவிட முடியாது.</p><p> முருகர் என்று சொன்னாலே சூரசம்ஹாரம் தான் எல்லோருக்கும் நியாபகம் வரும். அந்த சூரன் யார் என்றால், நான்  மட்டும்தான் ஆட்சி செய்வேன். நான் மட்டும்தான் நிரந்தர ஆட்சியாளர் மற்ற எல்லோரும் அடிமைகள் என்ற மனநிலையில் இருந்த சூரனை ஒரு சாதாரண பாலகன் கையில் வேல் ஏந்தி வந்து எதிர்த்து நின்றான் அப்போது  சூரன் சொன்னாராம்.. இந்த சின்னபையனா என்னை எதிர்த்து போர் செய்ய போகிறான். இந்த சின்ன பையனா என்னை எதிர்த்து  வென்றுவிட போகிறான் என்று ஏளனமாக பேசினாராம். </p><p>ஆனால் அந்த சின்ன பையன் தான் வேல் ஏந்தி சூரனுடைய அந்த ஆட்சிக்கு முடிவுரை கொண்டு வந்தார்..  2026 தேர்தலும் கிட்டத்தட்ட  ஒரு சூரசம்ஹாரம்தான். உடனே யாரை சூரன் என்று சொல்கிறேன் என்று யாரும் கூச்சல் போடவேண்டாம். நான் சொல்லும் சூரன் ஊழல், லஞ்சம், மக்களை  பிரித்தாளக்கூடிய சாதி அரசியல், மத அரசியல் என்ற சூரனை வீழ்த்தி எங்களுடைய வேலன் ஒரு ஜனநாயக ஆட்சியை தமிழ்நாட்டில் நிறுவியிருக்கிறார்' இவ்வாறு அவர் கூறினார்.</p>  ]]></content:encoded></item><item><title>நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி எழுப்பிய பிரச்சினைகள் குறித்த விளக்க கூட்டங்கள் - மாணிக்கம் தாகூர் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/explanatory-meetings-on-issues-raised-by-india-alliance-in-parliament</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/explanatory-meetings-on-issues-raised-by-india-alliance-in-parliament#comments</comments><guid isPermaLink="false">a617ffae-fe40-426a-b262-c7d8c0e09106</guid><pubDate>Fri, 21 Aug 2026 11:41:05 +0000</pubDate><atom:updated>2026-08-21T11:41:05.375Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>India Alliance,இந்தியா கூட்டணி,காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,Parliament,நாடாளுமன்ற கூட்டத்தொடர்,Manickam Tagore,விளக்க கூட்டங்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/qh027pyl/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/qh027pyl/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இந்தியா கூட்டணி கட்சியினர் எழுப்பிய பிரச்சினைகள் குறித்தும் அதற்காக நடத்தப்பட்ட போராட்டங்கள் குறித்தும் விளக்க கூட்டங்கள் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 20ம்தேதி தொடங்கி ஆகஸ்ட் 13ம்தேதி வரை நடைபெற்றபோது, மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து தலைவர் ராகுல்காந்தி எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடியோ, உள்துறை மந்திரி அமித்ஷாவோ பதில் தர முன்வரவில்லை.</p><p>குறிப்பாக, தலைநகர் டெல்லியில், நீட் வினாத்தாள் கசிவு குறித்த போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது காவல்துறையினர் பெல்லட் துப்பாக்கி குண்டுகளை ஏவி, தடியடி நடத்திட யார் உத்தரவிட்டார்கள் என்ற கேள்விக்கு நாடாளுமன்ற கூட்டத் தொடர் முழுவதும் பிரதமரோ, உள்துறை மந்திரியோ பதில் தர முன்வரவில்லை. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் இந்தியா கூட்டணி கட்சியினர் எழுப்பிய பிரச்சினைகள் குறித்தும் அதற்காக நடத்தப்பட்ட போராட்டங்கள் குறித்தும் தமிழக மக்களிடையே விளக்குவதற்கு, மாநகரங்களில் ‘டவுன் ஹால்” என்ற தலைப்பில் விளக்க கூட்டங்கள் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. இதன்படி, 7 மாநகரங்களில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த கீழ்க்கண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பார்கள்.</p><p>22.08.2026 அன்று காலை 11 மணிக்கு கோவையில் நடைபெறும் கூட்டத்தில் கே. சுப்பராயன், எஸ். ஜோதிமணி, விஜய் வசந்த்</p><p>23.08.2026 அன்று மாலை 3 மணிக்கு திருச்சியில் நடைபெறும் கூட்டத்தில் துரை வைகோ, செல்வராஜ், கிறிஸ்டோபர் திலக்</p><p>24.08.2026 அன்று காலை 11 மணிக்கு திருநெல்வேலியில் நடைபெறும் கூட்டத்தில் கார்த்தி ப. சிதம்பரம், துரை வைகோ, சி. ராபர்ட் புரூஸ்</p><p>27.08.2026 அன்று பிற்பகல் 3.30 மணிக்கு சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் ப. சிதம்பரம், எஸ். ரவிக்குமார், பிரவீன் சக்கரவர்த்தி</p><p>28.08.2026 அன்று காலை 11 மணிக்கு வேலூரில் நடைபெறும் கூட்டத்தில் சசிகாந்த் செந்தில், வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன்</p><p>29.08.2026 அன்று காலை 11 மணிக்கு சேலத்தில் நடைபெறும் கூட்டத்தில் சச்சிதானந்தம், டாக்டர் எம்.கே. விஷ்ணுபிரசாத்</p><p>29.09.2026 அன்று காலை 11 மணிக்கு மதுரையில் நடைபெறும் கூட்டத்தில் ப. சிதம்பரம், சு. வெங்கடேசன், நவாஸ்கனி </p><p>மாநகரங்களில் நடைபெறும் டவுன் ஹால் கூட்டங்களை அந்தந்த மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் இந்தியா கூட்டணி கட்சியினரோடு இணைந்து கூட்டம் சிறப்பாக நடத்திட ஒருங்கிணைப்புப் பணிகளை செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இக்கூட்டங்களை வெற்றிகரமாக நடத்துவதன் மூலம் நாட்டின் நலனிலும், மக்கள் பிரச்சினைகளிலும் நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி கட்சியினர் எந்த அளவிற்கு சர்வாதிகார, ஜனநாயக உணர்வில்லாத பா.ஜ.க.வினரோடு எத்தகைய போராட்டங்களை நடத்தினார்கள் என்பதை தமிழக மக்கள் அறிவதற்கு மிகச் சிறந்த வாய்ப்பாக இக்கூட்டங்கள் அமைய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பெண் தூய்மைப் பணியாளர் படுகொலை: திருவேற்காட்டில் பயங்கரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/female-sanitation-worker-murdered-horror-in-thiruverkadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/female-sanitation-worker-murdered-horror-in-thiruverkadu#comments</comments><guid isPermaLink="false">a61b13fe-84c7-479b-9e7a-516dd72e4d50</guid><pubDate>Fri, 21 Aug 2026 11:28:07 +0000</pubDate><atom:updated>2026-08-21T11:28:07.181Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>arrest,கொலை,திருவேற்காடு,Thiruverkadu,நகை கொள்ளை,murdered,தூய்மைப் பணியாளர்</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/qua6rrc4/32.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ கோவிலை ஒட்டியுள்ள ஹேமாவதியின் வீடு]]></media:title><media:description type="html"><![CDATA[ 8 சவரன் நகைகள் கொள்ளை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/qua6rrc4/32.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையை அடுத்த திருவேற்காட்டில் மாநகராட்சி பெண் தூய்மைப் பணியாளர் தலையணையால் முகத்தை அமுக்கிக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, அவரிடமிருந்த 8 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஒரு வாலிபரைப் போலீசார்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81"> கைது</a> செய்துள்ளனர்.</p><h2>துர்நாற்றம் வீசிய வீடு</h2><p>சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்த ஹேமாவதி (வயது 45). கணவனை இழந்த அவர் திருவேற்காடு பகுதியில் தனியாக வசித்து வந்தார். கடந்த 2 நாட்களாக அவரது வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில், அங்கிருந்து பலத்த துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக திருவேற்காடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.</p><h2>தலையணையால் அமுக்கிக் கொலை</h2><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஹேமாவதி படுக்கையறையில் சடலமாகக் கிடந்தார். அவரது முகம் தலையணையால் அமுக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்தன. மேலும், அவர் அணிந்திருந்த 8 சவரன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தன. நகைகளுக்காக அவர் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டதை போலீசார் உறுதி செய்தனர்.</p><h2>விசாரணையும் கைதும்</h2><p>இக்கொலை வழக்கு குறித்து தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நித்திஷ் என்ற வாலிபரைப் பிடித்துப் போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவரும் அவரது நண்பரான ஆகாஷ் என்பவரும் சேர்ந்து, ஹேமாவதி தனியாக இருப்பதைத் தெரிந்துகொண்டு வீட்டிற்குள் புகுந்து அவரைக்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88"> கொலை</a> செய்து நகைகளைக் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார்.</p><p>இதையடுத்து நித்திஷைக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளைப் பறிமுதல் செய்தனர். மேலும், இக்கொலையில் முதன்மைக் குற்றவாளியாகத் தலைமறைவாக இருக்கும் ஆகாஷைப் பிடிக்க போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">Breaking | Chennai | பெண் கொடூர கொ*லை..சென்னை அருகே நடுங்க வைத்த சம்பவம்  <br> <a href="https://x.com/hashtag/breakingnews?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#breakingnews</a> <a href="https://x.com/hashtag/chennai?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#chennai</a> <a href="https://x.com/hashtag/crimenews?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#crimenews</a> <a href="https://x.com/hashtag/thanthitv?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#thanthitv</a> <a href="https://t.co/QPA7UcOm0L">pic.twitter.com/QPA7UcOm0L</a></p>&mdash; Thanthi TV (@ThanthiTV) <a href="https://x.com/ThanthiTV/status/2090711909381423148?ref_src=twsrc%5Etfw">August 21, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>நடைபயிற்சி சென்றபோது பழக்கம்: வாலிபரிடம் ஆசைக்காட்டி நூதன முறையில் நகை, பணத்தை சுருட்டிய இளம்பெண்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-rolls-up-jewelry-and-money-in-a-novel-way-to-show-her-desire</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-rolls-up-jewelry-and-money-in-a-novel-way-to-show-her-desire#comments</comments><guid isPermaLink="false">37926960-6c68-422e-9639-42cf9a808e84</guid><pubDate>Fri, 21 Aug 2026 11:16:36 +0000</pubDate><atom:updated>2026-08-21T11:16:36.173Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,இளம்பெண்,Walking,Marriage,நடைபயிற்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/k1u32kyv/dressone33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வாலிபர்]]></media:title><media:description type="html"><![CDATA[ 
நடைபயிற்சியின் போது அழகில் மயங்கிய வாலிபர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/k1u32kyv/dressone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை போரூரில் வாலிபரிடம் திருமண ஆசைக்காட்டி ரூ.14 லட்சம் நகை சுருட்டிய இளம்பெண்ணால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. </p><h2>அழகில் மயங்கிய வாலிபர்</h2><p>போரூரை அடுத்த காரம்பாக்கம் பகுதியை சேர்ந்த வாலிபர் திருமணம் உள்ளிட்ட விஷேசங்களுக்கு நிகழ்ச்சிகள் நடத்தும் நிறுவனம் நடத்தி வருகிறார்.  இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாநகர் டவர் பூங்காவில் நடைப்பயிற்சி சென்றபோது திரிபுரா மாநிலத்தை சேர்ந்த 32 வயது இளம்பெண் அறிமுகம் ஆனார். தினமும் பூங்காவில் நடைப்பயிற்சி சென்றபோது இருவரும் நெருங்கி பழகி வந்தனர். அந்த இளம்பெண் நடைப்பயிற்சியின் போது அவரது அழகில் மயங்கிய வாலிபர் கேட்கும்போதெல்லாம் பணம் உதவி செய்து வந்துள்ளார். </p><h2>திருமணம்</h2><p>இந்தநிலையில் கணவரை பிரிந்து இருப்பதாக கூறிய இளம்பெண் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் பின்னர் திருமணம் செய்துகொள்ளலாம் என்று தெரிவித்தார். இதனையடுத்து அந்த வாலிபர் இளம்பெண்ணை காரம்பாக்கத்தில் உள்ள வீட்டில் தங்க வைத்து ரகசியமாக குடும்பம் நடத்தி வந்தார். இருவரும் அவ்வபோது உல்லாசமாக இருந்து வந்தனர்.</p><p>இந்தநிலையில் கடந்த மாதம்17-ம் தேதி தனது தாயாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக திரிபுராவுக்கு புறப்பட்டு சென்றுவிட்டார். இதனால் சந்தேகம் அடைந்த பாரதி வீட்டில் உள்ள பீரோவை சரிபார்த்தபோது அதில் இருந்த 25 பவுன் நகை, ரூ.14 லட்சம் ரொக்கம் மாயமாகி இருந்தன.</p><h2>பணத்தை சுருட்டி தப்பிய இளம்பெண்</h2><p>இதுகுறித்து வாலிபர் இளம்பெண்ணின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது சரியாக பதில் அளிக்காமல் வேலையாக உள்ளேன் பின்னர் பேசுகிறேன் என கூறி தொடர்பை துண்டித்துவிட்டார். பின்னர் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு விட்டது.</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%20%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF">திருமண ஆசை காட்டி</a> இளம்பெண் நூதன முறையில் நகை, பணத்தை சுருட்டி தப்பி சென்று இருப்பது தெரியவந்தது.</p><p>இது குறித்து அந்த வாலிபர் வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>முகத்தில் தேனீக்களுடன் 5 மணி நேரம் இருந்து நெல்லை வாலிபர் சாதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-youth-sets-record-with-bees-on-face-for-5-hours</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-youth-sets-record-with-bees-on-face-for-5-hours#comments</comments><guid isPermaLink="false">26df0ad3-61ff-4574-b736-b333e71d3d8c</guid><pubDate>Fri, 21 Aug 2026 11:16:01 +0000</pubDate><atom:updated>2026-08-21T11:16:01.266Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Tirunelveli,Youth,வாலிபர்,record,தேனீக்கள்,சாதனை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/bggp4gno/honeybee.jpg" width="752"><media:title type="html"><![CDATA[  இசக்கிமுத்து என்ற முருகன்]]></media:title><media:description type="html"><![CDATA[ முகத்தில் தேனீக்களுடன் 5 மணி நேரம் இருந்து நெல்லை வாலிபர் சாதனை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/bggp4gno/honeybee.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை, </p><p>நெல்லை மாவட்டத்தை சேர்ந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D">வாலிபர்</a>  இசக்கிமுத்து என்ற முருகன், தனது முகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தேனீக்களை 5 மணி நேரத்திற்கும் மேலாக மொய்க்கவிட்டு, புதிய  சாதனை படைத்துள்ளார். அவரது இந்த துணிச்சலான முயற்சி,  ‘சீனா உலக சாதனை புத்தகம்’  மற்றும் ‘சோழன் உலக சாதனை புத்தகத்தில்’ பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><h2>நெல்லை வாலிபர்</h2><p>நெல்லை மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து என்ற முருகன் (வயது 27). இவர் விவசாயம் மற்றும் வேளாண்மை தொடர்பான படிப்பை முடித்தவர் ஆவார். படிப்பை முடித்த பின், அவர் மாற்று பணிகளை தேடி செல்லாமல் முழுநேரமாகத் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">தேனீ வளர்ப்பு</a> தொழிலில் ஈடுபட்டு வருகிறார். தற்பொழுது 18-க்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட தேன் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வரும் இவர், பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் இலவசமாக தேனீ வளர்ப்பு பயிற்சிகளையும் வழங்கி வருகிறார்.</p><h2>மெய்சிலிர்க்க வைத்த சாதனை</h2><p>இந்த நிலையில், தேனீக்கள் மனித குலத்திற்கும் விவசாயத்திற்கும் எவ்வளவு முக்கியம் என்பதை உலகிற்கு உணர்த்த முருகன் முடிவு செய்தார். இதற்காக, அவர் ஒரு வினோதமான சாதனை முயற்சிக்கு திட்டமிட்டார். அதன்படி, நெல்லை மாரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்களின் முன்னிலையில், முருகன் தனது முகம் மற்றும் தலைப்பகுதி முழுவதும் ஆயிரக்கணக்கான இந்திய தேனீக்களை மொய்க்கவிட்டார். கண்கள், மூக்கு, வாய் என முகம் தெரியாத அளவுக்கு தேனீக்கள் அவரது முகத்தை முழுமையாக மூடி ஆக்கிரமித்தன.</p><h2>5 மணி நேரம்</h2><p>தேனீக்கள் கடித்தால் கடுமையான வலி மற்றும் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்ற சூழலிலும், முருகன் எதற்கும் அஞ்சாமல், துளியும் பதற்றமின்றி, சிலையை போல அசையாமல் அமர்ந்திருந்தார்.தொடர்ந்து 5 மணி நேரம் 3 நிமிடங்கள் வரை தேனீக்களை தனது முகத்திலேயே அமரவைத்து, பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் புதிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88">சாதனையை</a> படைத்து அசத்தினார். இதற்கு முன்பு கேரளாவை சேர்ந்த ஒருவர் படைத்திருந்த சாதனையை இதன் மூலம் முருகன் முறியடித்துள்ளார். </p><h2>சீன புத்தகத்தில் அங்கீகாரம்</h2><p>முருகனின் இந்த அசாத்திய சாதனை முயற்சியானது ‘சீனா உலக சாதனைப் புத்தகம்’  மற்றும் ‘சோழன் உலக சாதனை புத்தகத்தில்’ அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ்களும், விருதுகளும் அவருக்கு வழங்கப்பட்டன.</p> <p><strong>இதுகுறித்து சாதனையாளர் முருகன் தெரிவித்ததாவது:-</strong></p><p> "தேனீக்கள் மனிதர்களின் எதிரிகள் அல்ல, அவை நம் நண்பர்கள். தேனீ வளர்ப்பு  என்பது விவசாயிகளுக்கு ஒரு சிறந்த சுயதொழில் வாய்ப்பு ஆகும். இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த ஆபத்தான முயற்சியை நான் மேற்கொண்டேன். யாரும் தகுந்த பயிற்சியின்றி இதுபோன்ற ஆபத்தான முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டார். </p><p>முகத்தில் ஆயிரக்கணக்கான தேனீக்களுடன் நெல்லை வாலிபர் முருகன் அமைதியாக அமர்ந்திருக்கும் இந்த மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ காட்சிகள், தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல பரவி, உலக அளவில் வைரலாகி வருகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title> சவுகார் ஜானகி மறைவு: அன்புமணி ராமதாஸ்  இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/south-indian-actress-saukar-janaki-dies-anbumani-ramadoss-pays-tribute</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/south-indian-actress-saukar-janaki-dies-anbumani-ramadoss-pays-tribute#comments</comments><guid isPermaLink="false">fe8f6515-7d11-4be2-bbca-9fed7fe32c6d</guid><pubDate>Fri, 21 Aug 2026 10:56:33 +0000</pubDate><atom:updated>2026-08-21T10:56:33.848Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,இரங்கல்,condolences,மறைவு,Sowcar Janaki,சவுகார் ஜானகி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/olt0p5tz/janaki.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ சவுகார் ஜானகி,அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ சவுகார் ஜானகி மறைவு: அன்புமணி ராமதாஸ்  இரங்கல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/olt0p5tz/janaki.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> சவுகார் ஜானகி மறைவுக்கு <a href="https://www.dailythanthi.com/topic/anbumani-ramadoss">அன்புமணி ராமதாஸ்</a> தனது இரங்கலை தெரிவித்தார்.</p><h2> சவுகார் ஜானகி</h2><p>1931-ம் ஆண்டு பிறந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF">சவுகார் ஜானகி</a>, 1950-களில் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர். சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், கலைத்துறையில் ஆற்றிய பங்களிப்புக்காக 2022-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார். ஆந்திர மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் இவர்.</p><h2>400-வது படம்</h2><p>கடந்த 1950ஆம் ஆண்டு, 'சவுகார்' என்ற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமான சவுகார்ஜானகி, 70 ஆண்டுகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக, 2020ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான 'பிஸ்கோத்' படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் சவுகார் ஜானகிக்கு 400-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.</p> <p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தென்னிந்தியாவின் பழம்பெரும் திரைப்பட நடிகை சவுகார் ஜானகி அம்மையார் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன்.</p><h2>இரங்கல்</h2><p>1952-ஆம் ஆண்டில்  திரையுலகில் அறிமுகமாகி  எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன் தொடங்கி தமிழ்த் திரையுலகின் அனைத்து நடிகர்களுடனும் நடித்தவர். ஏராளமான விருதுகளை வென்றவர். நடிகை சவுகார் ஜானகியை இழந்து வாடும்  அவரது குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சென்னை: கால்வாய்களில் குப்பைக் கழிவுகளை டிரோன் மூலம் கணக்கெடுக்கும் பணிகள் தொடக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-drone-survey-of-canal-waste-begins</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-drone-survey-of-canal-waste-begins#comments</comments><guid isPermaLink="false">25409c8a-4aff-449d-9a3a-4c32600f8b71</guid><pubDate>Fri, 21 Aug 2026 10:49:51 +0000</pubDate><atom:updated>2026-08-21T10:49:51.039Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Drone,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,Canal,கால்வாய்,டிரோன்,குப்பைகள்,கணக்கெடுக்கும் பணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/kv4onnsc/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/kv4onnsc/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 44 கால்வாய்களில் வண்டல்கள், குப்பைக் கழிவுகள் உள்ளிட்டவற்றை டிரோன் மூலம் நவீன தொழில்நுட்பத்துடன் கணக்கெடுப்பு மேற்கொள்ளும் பணிகளை கொடுங்கையூர் வடக்கு கால்வாயில் மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் இன்று தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 44 கால்வாய்களில் வண்டல்கள், குப்பைக் கழிவுகள், தோட்டக் கழிவுகள் மற்றும் ஆகாயத்தாமரைகள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணிகளை விஞ்ஞானபூர்வமாக மேற்கொள்ளும் வகையில் டிரோன் மூலம் நவீன தொழில்நுட்பத்துடன் கணக்கெடுப்பு மேற்கொள்ளும் பணிகளை இன்று (21.08.2026) தண்டையார்பேட்டை மண்டலம், முத்தமிழ் நகர் 2-வது பிளாக்கில் உள்ள கொடுங்கையூர் வடக்கு கால்வாயின் தொடக்க இடத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன், தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். இந்நிகழ்வில், மண்டல அலுவலர் ஏ.ராஜ்குமார், செயற்பொறியாளர் எஸ்.ஹரிநாத் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.</p><p>முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கொடுங்கையூர், வீராங்கல் ஓடை, மாம்பலம் கால்வாய், ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம், கேப்டன் காட்டன், டிரஸ்ட்புரம், ரெட்டிகுப்பம், பள்ளிக்கரணை, செக்ரடரியேட் காலனி உள்ளிட்ட 81.81 கி.மீ. நீளத்திலான 44 கால்வாய்களில் வண்டல்கள், குப்பைக் கழிவுகள், தோட்டக் கழிவுகள் மற்றும் ஆகாயத்தாமரைகள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணிகளை விஞ்ஞானபூர்வமாக மேற்கொள்ளும் வகையில் டிரோன் மூலம் நவீன தொழில்நுட்பத்துடன் கணக்கெடுப்பு மேற்கொள்ளும் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது.</p><p>இன்று (21.08.2026) கொடுங்கையூர் வடக்கு கால்வாய், வீராங்கல் ஓடை மற்றும் மேற்கு மாம்பலம் கால்வாயில் இந்த டிரோன் மூலம் கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. களஆய்வை விரைவாகவும் திறம்படவும் மேற்கொள்ள, தினசரி சுமார் 4 முதல் 5 டிரோன்கள் பயன்படுத்தப்பட்டு, கால்வாய்கள் கட்டம் வாரியாக ஆய்வு செய்யப்படும். ஒவ்வொரு டிரோனுக்கும் குறிப்பிட்ட கால்வாய் பகுதிகள் ஒதுக்கப்பட்டு, ஆய்வின் முன்னேற்றம் மற்றும் பெறப்படும் தரவுகள் முறையாக கண்காணிக்கப்படும்.</p><p>ஆய்வின் மூலம் பெறப்படும் அனைத்து படங்கள், காணொலிகள் மற்றும் புவியியல் தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, கால்வாய்களின் தற்போதைய நிலையை பிரதிபலிக்கும் GIS அடிப்படையிலான தரவுத்தளம் மற்றும் வரைபடங்கள் தயாரிக்கப்படும். இதனடிப்படையில், பருவமழைக்கு முன்னதாக கால்வாய்களில் மேற்கொள்ள வேண்டிய தூர்வாருதல், அடைப்புகளை அகற்றுதல், சேதமடைந்த பகுதிகளைச் சீரமைத்தல் மற்றும் நீரோட்டத்தைத் தடையின்றி உறுதி செய்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் ஆக. 23 முதல் ஈஷா கிராமோத்சவ போட்டிகள்: செப். 6-ல் கோவையில் மகா இறுதிப்போட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/grand-isha-gramotsavam-finals-in-coimbatore-on-september-6</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/grand-isha-gramotsavam-finals-in-coimbatore-on-september-6#comments</comments><guid isPermaLink="false">d3e3f827-13d5-4b05-846e-c04ee3c41f68</guid><pubDate>Fri, 21 Aug 2026 10:39:42 +0000</pubDate><atom:updated>2026-08-21T10:39:42.981Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவை,தமிழகம்,Isha Centre,ஈஷா,Competitions,போட்டிகள்,விளையாட்டு,In Tamil Nadu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/8lq795gh/isha-sports.jpg" width="752"><media:title type="html"><![CDATA[  டாக்டர் சுந்தர்,மகேந்திரன், தீபா,மகேஷ்]]></media:title><media:description type="html"><![CDATA[ 
தமிழகத்தில் ஆக. 23 முதல் ஈஷா கிராமோத்சவ போட்டிகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/8lq795gh/isha-sports.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டில் ஆக.23-ஆம் தேதி<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%88%E0%AE%B7%E0%AE%BE"> ஈஷா</a> கிராமோத்சவ மண்டல அளவிலான போட்டிகள் செப். 6-ஆம் தேதி சத்குரு முன்னிலையில் கோவையில் மாபெரும் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.</p><h2>10 மாநிலங்கள்</h2><p>சத்குருவின் ஈஷா அமைப்பால் ஆண்டுதோறும் நடத்தப்படும் பாரதத்தின் மாபெரும் கிராமப்புற விளையாட்டுத் திருவிழாவான 'ஈஷா கிராமோத்சவம்', இந்தாண்டு வட மாநில கிராமங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு, 10 மாநிலங்களில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. </p> <h2>செப்டம்பர் 6 ஆம் தேதி</h2><p>தமிழ்நாட்டின் 6 முக்கிய இடங்களில் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி ஈஷா கிராமோத்சவத்தின் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் பங்கேற்கும் மாபெரும் இறுதிப்போட்டி, வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி கோவை ஆதியோகி வளாகத்தில் சத்குரு அவர்களின் முன்னிலையில் நடைபெறவுள்ளது.</p><h2> பத்திரிகையாளர் சந்திப்பு</h2><p>இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இதில் ஈஷா கிராமோத்சவத்தின் தன்னார்வலர்கள் பிரபல எலும்பியல் நிபுணர் டாக்டர் சுந்தர், மகேந்திரன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் தீபா, வாலிபால் விளையாட்டு வீரர் மகேஷ் ஆகியோர் பங்கேற்று பேசினர்.</p> <p><strong>டாக்டர் சுந்தர் பேசுகையில்,</strong></p><h2>கிராமோத்சவம்</h2><p> “நம் கிராமங்களில் 60 சதவீத மக்கள் உழைக்கும் வயதில் இருந்தாலும், வேலை வாய்ப்பின்மை மற்றும் நலிவடையும் விவசாயம் போன்ற காரணங்களால் இளைஞர்கள் வறுமையின் பிடியில் சிக்குவதும் போதை பழக்கங்களுக்கு அடிமையாவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதேபோல், பெண்களுக்கு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு விளையாடுவதற்கான வாய்ப்புகளே இல்லாமல் போகிறது. இந்த சூழலை மாற்றி, "கிராமப்புற மக்களின் அன்றாட வாழ்வில் விளையாட்டை ஒர் அங்கமாக மாற்ற வேண்டும்" என்ற சத்குருவின் தொலைநோக்குப் பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் 'ஈஷா கிராமோத்சவம்' 2004-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மேலும் இளைஞர்களுக்கு உத்வேகம், பெண்கள் சுயமுன்னேற்றம், அனைத்து வயதினரும் விளையாடும் வாய்ப்பு, ஆரோக்கியம், சமூக ஒற்றுமை மற்றும் கிராமப்புறத் திறமைகளை வெளிக்கொணரும் ஒரு சிறந்த தளமாக கிராமோத்சவம் விளங்கி வருகிறது.</p> <h2>வாலிபால் மற்றும்  த்ரோபால் போட்டிகள்</h2><p> இப்போட்டி தொடரில் ஆண்களுக்கான வாலிபால் மற்றும் பெண்களுக்கான த்ரோபால் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் தொழில்முறை விளையாட்டு வீரர்கள் பங்கேற்க அனுமதி இல்லை. கிராமப்புறங்களை சேர்ந்த மீனவர்கள், விவசாயிகள், பெண்கள் மற்றும் தினசரி கூலித் தொழிலாளர்கள் மட்டுமே இப்போட்டிகளில் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p> <h2> புதிதாக 5 மாநிலங்களில் போட்டி</h2><p>இந்தாண்டு புதிதாக உத்தரப் பிரதேசம், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஒடிசா மற்றும் மராட்டியம் ஆகிய வட மாநிலங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரி இணைந்து மொத்தம் 10 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் போட்டிகள் நடைபெறுகின்றன. </p><p>தமிழ்நாட்டில் சுமார் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் முதற்கட்ட கிளஸ்டர் போட்டிகள் நடைபெற்றன. இதில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆகஸ்ட் 1 மற்றும் 2 தேதிகளிலும், அதனை தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளிலும் போட்டிகள் நடத்தப்பட்டன.</p><h2> 7,005 அணிகள்</h2><p>இதில் வாலிபால் பிரிவில் 2,246 அணிகளை சேர்ந்த 26,952 வீரர்களும், த்ரோபால் பிரிவில் 31 இடங்களில் 744 அணிகளைச் சேர்ந்த 7,440 வீரர்களும் பங்கேற்றனர். இம்முதற்கட்டப் போட்டிகளில் மொத்தம் சுமார் 34,392 கிராமப்புற மக்கள் பங்கேற்று விளையாடினர். அடுத்த கட்டமாக தமிழ்நாட்டில் கோவை, சேலம், வேலூர், மதுரை, திருநெல்வேலி, கடலூர் உள்ளிட்ட 6 இடங்களில் மண்டல அளவிலானப் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளன. இந்த மாபெரும் விளையாட்டு திருவிழாவில், சுமார் 7,005 அணிகள் மூலம் 40,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து கிட்டத்தட்ட 20,000 பெண்கள் உட்பட 80,352 கிராமப்புற மக்கள் பங்கேற்றுள்ளனர். </p><h2>பரிசுத்தொகை</h2><p>ஈஷா கிராமோத்சவம் 2026-இன் பிரம்மாண்ட இறுதிப்போட்டிகள் செப்டம்பர் 6 அன்று கோவை ஆதியோகி வளாகத்தில் சத்குரு அவர்களின் முன்னிலையில் நடைபெறும். இந்த இறுதிப் போட்டியில் வெல்லும் கைப்பந்து மற்றும் எறிபந்து அணிகளுக்கு தலா ரூ.5 லட்சமும், இரண்டாம் இடத்திற்கு ரூ.3 லட்சமும் பரிசாக வழங்கப்படும். மேலும், மூன்று மற்றும் நான்காம் இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.1 லட்சமும், ரூ.50,000-மும் பரிசாக வழங்கப்படவுள்ளது.</p> <h2>இருசக்கர வாகனம் பரிசு</h2><p>இதுமட்டுமின்றி, கிளஸ்டர் மற்றும் டிவிஷனல் போட்டிகளிலும் வெற்றியாளர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், “6 மண்டலங்களிலும் தேர்வு செய்யப்படும் சிறந்த பெண் த்ரோபால் வீராங்கனைகளுக்கு எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்படவுள்ளது.”</p><h2> கிராமிய கலாச்சார கொண்டாட்டம்</h2><p>மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறும் அணிகளுக்கு பிரத்யேகப் பரிசுகள் வழங்கப்படும். கிராமப்புற இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த விளையாட்டுத் திருவிழாவில் மொத்தம் ரூ.1 கோடிக்கும் மேல் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. கிராமிய கலாச்சார கொண்டாட்டம்.</p> <h2> பண்பாட்டு திருவிழா</h2><p>கிராமோத்சவம் என்பது வெறும் விளையாட்டு போட்டிகளோடு நின்றுவிடாமல், பாரம்பரிய நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள், இசை, நடனம், பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் கிராமத்து உணவுகள் என நம் கிராமத்து மரபுகளை முழுமையாக கொண்டாடும் பண்பாட்டு திருவிழாவாக திகழ்கிறது. அந்த வகையில், தற்போது நடைபெறவுள்ள மண்டல அளவிலான போட்டி நடைபெறும் இடங்களிலும், கோவையில் நடைபெறும் இறுதிப்போட்டி வளாகத்திலும் இத்தகைய கலை மற்றும் பண்பாட்டுக் கொண்டாட்டங்கள் வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளன  எனக் கூறினார்.</p><h2>கவனம் செலுத்த முடியும்</h2><p>தனிநபர்களையும் சமூகங்களையும் வடிவமைப்பதில் விளையாட்டின் ஆழமான பங்களிப்பு பற்றி சத்குரு கூறுகையில், “வாழ்க்கையை விளையாட்டுத்தனத்தோடு எதிர்கொள்வதே நாம் வாழ்வதற்கான ஆகச்சிறந்த பொறுப்பான வழியாகும். எப்போதும் வாடிய முகத்தோடு இந்த பூமியில் உலா வருவது முற்றிலும் பொறுப்பற்ற செயல். வாழ்க்கையில் விளையாட்டுத்தனத்தோடு இருப்பது என்பது பொறுப்பான மற்றும் சரியான செயலாற்றும் நிலையில் இருப்பதை குறிக்கிறது. நீங்கள் எப்போது விளையாட்டுத்தனத்தோடு இருக்கிறீர்களோ, அப்போதுதான் உங்களால் எல்லாவற்றின் மீதும் முழு கவனம் செலுத்த முடியும்.</p> <h2>பிட் இந்தியா அமைப்பின் அங்கீகாரம் </h2><p>www.instagram.com/reel/DZJnYsWzCWn பிட் இந்தியா (FIT India) அமைப்பின் அங்கீகாரம் பெற்றுள்ள ஈஷா கிராமோத்சவம், இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தால் ‘தேசிய விளையாட்டு மேம்பாட்டு அமைப்பாக’ (NSPO) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், கிராமப்புறங்களில் விளையாட்டை ஊக்குவித்ததற்காக 2018-ஆம் ஆண்டு ‘ராஷ்ட்ரிய கேல் ப்ரோத்சாஹன் புரஸ்கார்’ விருதையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.” எனக் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சவுகார் ஜானகி மறைவுக்கு முதல்-அமைச்சர் விஜய் இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-condoles-death-of-sowcar-janaki</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-condoles-death-of-sowcar-janaki#comments</comments><guid isPermaLink="false">8ad431f9-ef0c-4690-845d-12c08bbe582c</guid><pubDate>Fri, 21 Aug 2026 10:25:17 +0000</pubDate><atom:updated>2026-08-21T10:25:17.496Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இரங்கல்,condolences,Sowcar Janaki,சவுகார் ஜானகி,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/pa4ab1bz/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/pa4ab1bz/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்-அமைச்சர் விஜய் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 94. இந்த நிலையில் சவுகார் ஜானகியின் மறைவுக்கு முதல்-அமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>பழம்பெரும் திரைப்பட நடிகையும், தனது தனித்துவமான நடிப்பால் பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவருமான சவுகார் ஜானகி உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.</p><p>திரைத்துறையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து, எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டிய அவரது கலைப்பணி என்றும் போற்றத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல்வேறு மொழிப் படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளதோடு, பத்மஸ்ரீ விருது, கலைமாமணி விருது, நந்தி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள சவுகார் ஜானகியின் மறைவு திரையுலகத்திற்கு பேரிழப்பாகும்.</p><p>சவுகார் ஜானகியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடிகளில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி - நரசப்பூர் இடையே சிறப்பு ரெயில்: சென்னை எழும்பூர் வழியாக இயக்கம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-tuticorin-and-narsapur-to-run-via-chennai-egmore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-tuticorin-and-narsapur-to-run-via-chennai-egmore#comments</comments><guid isPermaLink="false">ccd2cc7a-7df2-4b93-95fb-72d20f72d6a7</guid><pubDate>Fri, 21 Aug 2026 10:08:04 +0000</pubDate><atom:updated>2026-08-21T10:08:04.338Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,Special train,தூத்துக்குடி,Tuticorin,Chennai Egmore,சென்னை எழும்பூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/o87e0w1m/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/o87e0w1m/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு தூத்துக்குடி - ஆந்திர மாநிலம் நரசப்பூர் இடையே சிறப்பு ரெயில் சென்னை எழும்பூர் வழியாக இயக்கப்படுகிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p>“தூத்துக்குடியில் இருந்து செப்டம்பர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை) இரவு 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி  எண் 06019) 3-வது நாள் இரவு 12.20 மணிக்கு நரசப்பூரை சென்றடையும்.</p><p>மறுமார்க்கத்தில், நரசப்பூரில் இருந்து செப்டம்பர் 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) காலை 4 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06020) மறுநாள் காலை 4.30 மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும். </p><p>18 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில், தமிழகத்தில் மேலூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்), விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (ஆகஸ்டு 22-ந் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மூலம் ஒரு வார காலத்தில் 272 புகார்கள் மீது உடனடி நடவடிக்கை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/immediate-action-taken-on-272-complaints-within-a-week-through-the-singappenn-special-task-force</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/immediate-action-taken-on-272-complaints-within-a-week-through-the-singappenn-special-task-force#comments</comments><guid isPermaLink="false">6792cf34-53a6-4d9a-8121-50087a50bc4e</guid><pubDate>Fri, 21 Aug 2026 09:50:29 +0000</pubDate><atom:updated>2026-08-21T09:50:29.151Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை,Singapen Special Task Force</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/5vyi9yd6/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/5vyi9yd6/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மூலம் ஒரே வாரத்தில் 272 புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“தமிழ்நாடு காவல்துறையின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மாநிலம் முழுவதும் துரிதமான கள நடவடிக்கைகள் சமூக பங்களிப்புடன் கூடிய காவல் பணிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.</p><p>கடந்த ஒரு வாரகாலத்தில் 14.08.2026 முதல் 20.08.2026 வரை, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மாவட்ட களப்பிரிவுகள் 272 புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுத்து 20 குற்றவழக்குகள் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், காணாமல் போன 2 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாக அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த காலகட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இடையே 3,519 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும், மாநிலம் முழுவதும் அடையாளம் காணப்பட்ட 12,577 குற்றம் நடைபெற வாய்ப்புள்ள பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் தீவிர ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன.</p> <p>இந்த காலகட்டத்தில், அறிவுசார் குறைபாடுடைய 5 நபர்கள் மீட்கப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. 3 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டது. மேலும், 53 பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் மீண்டும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டனர். கடந்த வாரத்தின் போது, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை (SSF) களப்பிரிவுகள் சென்னை, திருநெல்வேலி, மதுரை, கள்ளக்குறிச்சி, தேனி, தூத்துக்குடி, மயிலாடுதுறை, பெரம்பலூர், ராணிப்பேட்டை, விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர், தாம்பரம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் பதிவான வழக்குகளுக்கு விரைவாகச் செயல்பட்டு, குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம் (POCSO Act), தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் (TNPHW), பாரதிய நியாய சன்ஹிதா (Bharatiya Nyaya Sanhita BNS), குழந்தைத் திருமண தடுப்புச்சட்டம்மற்றும்சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் உள்ளிட்ட தொடர்புடைய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதுடன், குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.</p> <p>இத்தகைய துரிதமான மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்தி வரும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு, தமிழகத்தை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாநிலமாக உருவாக்குவதில் முக்கிய பங்காற்றி வருகிறது.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.26.5 லட்சம் மோசடி - அச்சக ஊழியர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-job-scam-26-5-lakh-printing-employee-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-job-scam-26-5-lakh-printing-employee-arrested#comments</comments><guid isPermaLink="false">eab351ef-4629-422b-b610-fbe3fc0770e4</guid><pubDate>Fri, 21 Aug 2026 09:41:43 +0000</pubDate><atom:updated>2026-08-21T09:41:43.346Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மோசடி,Duping,கொடுங்கையூர்,Kodungaiyur</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/vn9jmcol/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மோசடி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/vn9jmcol/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.26.5 லட்சம் மோசடி செய்த அரசு அச்சக ஊழியரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>அரசு வேலை</h2><p>சென்னை கொடுங்கையூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் முரளி (39 வயது). இவர், தொழிலாளர் நலத்துறையில் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்திருந்தார். இதை அறிந்த தமிழ்நாடு அரசு அச்சகத்தில் பணிபுரியும் தாவீத் ராஜா (34 வயது) என்பவர், முரளியை தொடர்புகொண்டு, தனக்கும், நிதித்துறையில் பணிபுரியும் தனது தாயாருக்கும் பல அரசு அதிகாரிகளை தெரியும் என்றும், பலருக்கு அரசு வேலை வாங்கிக் கொடுத்துள்ளதாகவும் கூறினார்.</p><p>மேலும், முரளிக்கு கல்வித்துறையில் டிரைவர் பணியும், அவரது மனைவிக்கு லேப் டெக்னீசியன் பணியும் வாங்கி தருவதாக கூறினார். இதற்காக இருவருக்கும் தலா ரூ.6.5 லட்சம் வீதம் ரூ.13 லட்சம் கேட்டுள்ளார். இதை நம்பிய முரளி, 2 தவணைகளாக ரூ.13 லட்சத்தை தாவீத் ராஜாவிடம் கொடுத்தார்.</p><h2>ரூ.26.5 லட்சம் மோசடி</h2><p>இதையடுத்து, முரளியின் தம்பி சிவா மற்றும் அவரது மனைவிக்கும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மேலும் ரூ.13.5 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், தாவீத் ராஜா சொன்னபடி யாருக்கும் வேலை வாங்கி தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முரளி, இதுபற்றி புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.</p><p>விசாரணையில் புகார் உண்மை என தெரியவந்தது. இதையடுத்து தாவீத் ராஜாவை போலீசார் கைது செய்தனர். மேலும், மோசடி செய்த பணத்தில் பல்லாவரத்தில் நிலம் வாங்கியிருந்ததும் தெரிய வந்தது. அந்த நிலத்துக்கான பத்திரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான தாவீத் ராஜாவை சிறையில் அடைத்தனர்.</p>]]></content:encoded></item></channel></rss>