<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 09 Aug 2026 02:23:55 +0000</lastBuildDate><item><title>மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-inflow-into-mettur-dam-has-decreased</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-inflow-into-mettur-dam-has-decreased#comments</comments><guid isPermaLink="false">74f5a471-76f1-4bd6-91f4-e191ec28a6e4</guid><pubDate>Sun, 09 Aug 2026 02:17:38 +0000</pubDate><atom:updated>2026-08-09T02:17:38.779Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur dam,நீர்வரத்து,Water inflow</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/2se1k43g/3.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/2se1k43g/3.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைய தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 13 ஆயிரத்து 674 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 10 ஆயிரத்து 808 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.</p><p>தண்ணீர் திறப்பை விட நீர்வரத்து அதிகமாக இருப்பதால் தற்போது அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் மாலையில் 77.57 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலையில் 78.03 அடியாக உயர்ந்தது. அதேநேரத்தில் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறையும் பட்சத்தில் அணை நீர்மட்டம் உயருவதிலும் சிக்கல் ஏற்படும்.</p><p>வருணபகவான் தொடர்ந்து கருணை காட்டினால் தான் காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாய பணிகளுக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் வகையில் நீர்மட்டம் கணிசமாக உயரும் வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் எதிர்பார்ப்புடன் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக அரசின் 100 நாட்கள் சாதனை பட்டியல்; அனைத்து துறைகளும் தயாரிக்க உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-governments-100-day-achievement-list-all-departments-ordered-to-prepare</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-governments-100-day-achievement-list-all-departments-ordered-to-prepare#comments</comments><guid isPermaLink="false">70d3684c-4b54-4ceb-8d98-e3f5eabf9fa4</guid><pubDate>Sun, 09 Aug 2026 02:14:39 +0000</pubDate><atom:updated>2026-08-09T02:14:39.172Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>முதல்-அமைச்சர்,Tamil Nadu Government,தமிழக அரசு,சாதனை பட்டியல்,CM Vijay</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/xawp7jsg/21.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/xawp7jsg/21.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>த.வெ.க. அரசு பதவி ஏற்று 100 நாட்கள் ஆக இருக்கும் நிலையில், அனைத்து துறைகளும் இதுவரை செய்த சாதனையடங்கிய பட்டியல் தயாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.</p><h2>தமிழக வரலாற்றில் முக்கிய மைல்கல்</h2><p>தமிழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சி அமைத்தது. மே 10-ந்தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் கவர்னர் ஆர்.வி.அர்லேகர், விஜய்க்கு முதல்-அமைச்சர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். திராவிட கட்சிகளின் 60 ஆண்டுகால தொடர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த இந்த வெற்றி, தமிழக வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது.</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a> தலைமையிலான அரசு, நிர்வாகத்தில் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. லஞ்சத்தை ஒழிக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை. லஞ்சம் கேட்டால் தன்னிடம் புகார் அளிக்க வலியுறுத்திய அவர், இதற்காக 9498180936 என்ற வாட்ஸ்அப் எண்ணையும் அறிவித்தார்.</p><h2>கனிமக்கொள்ளை தடுப்பு</h2><p>பெண்களின் பாதுகாப்பிற்காக 'சிங்கப்பெண் சிறப்புப்படை', 200 யூனிட் இலவச மின்சாரம், 717 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடல், அம்மா உணவகங்கள் சீரமைப்பு மற்றும் விவசாயிகளுக்கு ரூ.134 கோடியில் சிறப்புத் தொகுப்பு திட்டம் என பல அதிரடி திட்டங்களை அரசு செயல்படுத்தியுள்ளது. மேலும், கூட்டுறவு வங்கிக்கடன் தள்ளுபடிக்கு ரூ.2 ஆயிரத்து 45 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>காஞ்சீபுரம், கோவை, திருவள்ளூர் மாவட்டங்களில் புதிய தொழில்துறை திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி ‘ஜல்ஜீவன் 2.0' குடிநீர்த் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. பத்திரப்பதிவுத் துறையில் முறைகேடுகளை தடுக்க வருகையில்லா ஆவணப்பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. கனிமக் கொள்ளை தடுப்பு மற்றும் சட்டவிரோத கல்குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>த.வெ.க. அரசின் 100 நாட்கள்</h2><p>இவையெல்லாம் மாற்றத்திற்கான தொடக்கம் மட்டுமே என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் பிரகடனம் செய்திருந்தார். த.வெ.க. அரசு பொறுப்பேற்று 100 நாட்களை எட்ட உள்ள நிலையில், அனைத்து துறைகளிலும் கடந்த 100 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட சாதனைப் பட்டியலைத் தயாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.</p><p>அந்தந்த துறை அதிகாரிகள் இந்தப் பட்டியலை தயார் செய்து வருகின்றனர். விரைவில் இந்த சாதனைகள் குறித்த விரிவான அறிவிப்பு வெளியாகும் என்று தலைமைச்செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லஞ்சமில்லாத மற்றும் பெண்களுக்கு முழுப்பாதுகாப்பான முன்மாதிரி தமிழ் நாட்டை உருவாக்குவதே த.வெ.க. அரசின் நோக்கமாக உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆன்லைன் மது விற்பனை திட்டத்தை கைவிட வேண்டும் - டாஸ்மாக் தொ.மு.ச. வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-lpf-urges-abandoning-the-online-liquor-sales-scheme</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-lpf-urges-abandoning-the-online-liquor-sales-scheme#comments</comments><guid isPermaLink="false">0bf40284-f2fb-4a09-ae28-2bf09df52938</guid><pubDate>Sun, 09 Aug 2026 02:09:15 +0000</pubDate><atom:updated>2026-08-09T02:09:15.955Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டாஸ்மாக்,Tasmac,மது விற்பனை,liquor sales,டாஸ்மாக் கடை,tasmac bar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/04j4otpk/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/04j4otpk/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சை, </p><p>தஞ்சை மாவட்ட டாஸ்மாக் தொ.மு.ச.வின் ஆலோசனைக் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட தலைவர் சேவியர் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் கமலநாதன் வரவேற்றார். கூட்டத்தில் வருகின்ற 13-ந் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட மேலாளர் அலுவலகங்களிலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தினை நடத்துவது. </p><h2>ஆன்லைன் மது விற்பனை</h2><p>மேலும் மதுபான சில்லறை விற்பனையை தனியார் மயமாக்கும் முயற்சிக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். ஆன்லைன் மது விற்பனை திட்டத்தை கைவிட வேண்டும். மதுபான சில்லரை விற்பனை கடை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். </p><p>அரசின் கொள்கை முடிவில் மூடப்படும் மதுபான கடை பணியாளர்களுக்கு அரசின் இதர துறைகளில் நிரந்தர பணியாளர்களாக பணியமர்த்த வேண்டும். காலி மதுபான பாட்டில்கள் திரும்பப்பெறும் பணியை தனியார் முகமை மூலம் மேற்கொள்ளப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். காலி அட்டை பெட்டிகளுக்கு 50 சதவீத கழிவு வழங்க வேண்டும். வார விடுமுறை மற்றும் அரசு விடுமுறை நாட்களுக்கு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மதுபானக்கடை </a>பணியாளர்களுக்கு விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் கும்பகோணம் பகுதி செயலாளர் ராமதாஸ் நன்றி கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>அரசு விரைவு பஸ்களில் ரூ.10 குடிநீர் பாட்டில் விற்பனை மீண்டும் தொடக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sale-of-rs-10-drinking-water-bottles-resumes-on-government-express-buses</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sale-of-rs-10-drinking-water-bottles-resumes-on-government-express-buses#comments</comments><guid isPermaLink="false">4263716f-3ba5-4802-8d37-e22a3b061cca</guid><pubDate>Sun, 09 Aug 2026 01:59:36 +0000</pubDate><atom:updated>2026-08-09T01:59:36.325Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசு பஸ்,குடிநீர்,drinking water,govt bus,SETC buses,அரசு விரைவு பஸ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/o9e3qqqs/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/o9e3qqqs/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பயணிகளின் நலன் மற்றும் வசதியை மேம்படுத்தும் நோக்கில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் நீண்ட தூரப் பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தரமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ், ரூ.10-க்கு "பயணி” குடிநீர் பாட்டில் வழங்கும் திட்டத்தை, போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், அறிமுகம் செய்து வைத்தார்.</p><p>நீண்ட தூரப் பயணங்களின் போது, பயணிகளுக்கு தரமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை குறைந்த விலையில் எளிதில் கிடைக்க செய்யும் நோக்கில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2013-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் 'அம்மா' குடிநீர் பாட்டில் (ஒரு லிட்டர்) ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. அம்மா குடிநீர் முக்கிய பஸ் நிலையங்களிலும் விற்பனை செய்யப்பட்டது.</p><p>பின்னர், 2021 தி.மு.க. ஆட்சியின்போது இத்திட்டம் பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், தற்போது அரசு விரைவு பஸ்களில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'பயணி' குடிநீர் பாட்டிலுக்கு பொதுமக்களிடம் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து முக்கிய பஸ் நிலையங்களிலும் விற்பனை செய்யும் வகையில் விரிவாக்கம் செய்யப்படும் என்று போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>ரெயிலில் கடத்திய 3½ கிலோ கஞ்சா பறிமுதல்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/3-kg-of-ganja-smuggled-by-train-seized</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/3-kg-of-ganja-smuggled-by-train-seized#comments</comments><guid isPermaLink="false">fa7a3346-ccd2-4e5e-a1df-a9ac6fabedc3</guid><pubDate>Sun, 09 Aug 2026 01:42:15 +0000</pubDate><atom:updated>2026-08-09T01:42:15.333Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,சேலம்,கஞ்சா பறிமுதல்,ரெயிலில் கஞ்சா கடத்தல்,ganja smuggled</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/honrhtc6/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/honrhtc6/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>கர்நாடகம், ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க சேலம் ரெயில்வே போலீசார் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். </p><h2>கஞ்சா பறிமுதல்</h2><p>இந்த நிலையில் நேற்று காலை காட்பாடி ரெயில் நிலையத்தின் 3-வது நடைமேடைக்கு வந்த மங்களூரு-சென்ட்ரல் விவேக் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 22851) ரெயிலில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் முன்பக்க பொதுப்பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த ஒரு பையில் 3½ கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. </p><p>இதையடுத்து அவற்றை போலீசார் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பறிமுதல் </a>செய்தனர். மேலும் ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>புதிய வரி விதிப்பால் தமிழகத்தில் மதுபானங்கள் விலை உயரும்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-new-tax-will-increase-the-price-of-alcoholic-beverages-in-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-new-tax-will-increase-the-price-of-alcoholic-beverages-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">1b2bbcd8-5e95-4a8f-87cd-9d3f78013131</guid><pubDate>Sun, 09 Aug 2026 01:33:01 +0000</pubDate><atom:updated>2026-08-09T01:33:01.846Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழகம்,tax,வரி விதிப்பு,மதுபானங்கள்,price increase,Alcoholic,விலை உயரும் அபாயம்,For Tamil Nadu</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/602zt3w6/liquor-bottle.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/602zt3w6/liquor-bottle.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>புதிய வரி விதிப்பால் தமிழகத்தில் மதுபானங்களின் விலை உயரும்.</p><h2>சுற்றுச்சூழல் வரி</h2><p>தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. அரசுக்கு மதுபானங்கள் விற்பனை மூலம் வருவாய் அதிகம் கிடைத்து வருகிறது. இந்தநிலையில் த.வெ.க. அரசு மதுபான விற்பனையை ஒழுங்குபடுத்தவும், காலி மதுபாட்டில்களை அகற்றுதல் மற்றும் மறுசுழற்சி செய்வதில் ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்யவும், மதுவிலக்கு மற்றும் மறுவாழ்வு, மதுவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றுக்காக 'சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரி்' எனும் புதிய வரி விதிப்பை கொண்டு வந்துள்ளது.</p><h2>ரூ.20 வரை நிர்ணயம்</h2><p>சட்டசபையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன், தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச் சட்டம், 2006-ல் திருத்தம் செய்து மசோதாவை தாக்கல் செய்தார். இதில் மதுபானங்களின் விற்பனைக்கு கூடுதலாக 'சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரி' விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வரி, ஒரு மதுப்பாட்டிலுக்கு அதிகபட்சம் ரூ.20 என நிர்ணயிக்கப்படும். இது ஏற்கனவே உள்ள வாட் வரிக்கு மேலாக வசூலிக்கப்படும். மதுபானத்தின் வகை, அளவு மற்றும் கொள்கலனின் அளவைப் பொறுத்து வரி விகிதம் மாறுபடும்.</p><h2>மதுபானம் விலை உயரும்</h2><p>இந்தத் திருத்தத்தின் மூலம், சட்டத்தில் புதிய பிரிவு 3 (ஏ) சேர்க்கப்படுகிறது. இதன்படி, தமிழகத்தில் மதுபானம் விற்பனை செய்யும் ஒவ்வொரு வணிகர்களும், அரசு அறிவிக்கும் விற்பனை நிலையிலேயே இந்த வரியை செலுத்த வேண்டும். கவர்னரின் ஒப்புதல் பெறப்பட்டு, அரசு அறிவிக்கை வெளியிட்டதும் இந்த புதிய வரி அமலுக்கு வரும். இதன் மூலம் மதுபானங்கள் விலை உயரும். அதேநேரத்தில் டாஸ்மாக்கில் மதுபானங்கள் விலை உயராது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த புதிய வரியால் டாஸ்மாக்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"> மதுபானங்கள்</a> விலை விரைவில் உயரலாம் என்ற நிலை உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>80-வது சுதந்திர தினம்: கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாக தேசிய கொடி ஏற்றுகிறார், முதல்-அமைச்சர் விஜய்! </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/80th-independence-day-chief-minister-vijay-to-hoist-the-national-flag-at-the-fort-ramparts-for-the-first-time</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/80th-independence-day-chief-minister-vijay-to-hoist-the-national-flag-at-the-fort-ramparts-for-the-first-time#comments</comments><guid isPermaLink="false">bfdc2e7c-b05a-4946-a937-e7fa009e2524</guid><pubDate>Sun, 09 Aug 2026 01:32:36 +0000</pubDate><atom:updated>2026-08-09T01:32:36.473Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,தமிழ்நாடு அரசு,Tamil Nadu Government,TN govt,சுதந்திர தினம்,Independece Day,national flag,தேசியக் கொடி,CM Vijay,Chief Minister Vijay,முதல் - அமைச்சர் விஜய்,கோட்டை கொத்தளம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/8u6rllue/kai.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 80-வது சுதந்திர தினம், விஜய், vijay, Independence day]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/8u6rllue/kai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>80-வது சுதந்திர தின நாளில், கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாக, <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a> தேசிய கொடியை ஏற்றிவைக்க இருக்கிறார். </p><h2>சுதந்திர தினம்</h2><p>ஆங்கிலேயர்களின் ஆளுமையின் கீழ் இருந்த இந்தியா, 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திரம் பெற்றது. நாட்டு மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கத் தொடங்கிய நாளை நினைவுகூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. </p><p>ஆரம்பத்தில் குடியரசு தினத்தைப்போல, சுதந்திர தினத்திலும் மாநில கவர்னர்களே தேசிய கொடியை ஏற்றும் வழக்கம் இருந்தது. 1974-ம் ஆண்டு முதல் குடியரசு தினத்தில் மாநில கவர்னர்களும், சுதந்திர தினத்தில் மாநில முதல்-அமைச்சர்களும் தேசிய கொடியை ஏற்றும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது.</p><h2>தேசிய கொடியை ஏற்றுகிறார், விஜய்</h2><p>இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர், அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதிதான். அவர்தான் 1974-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாக தேசிய கொடியை ஏற்றிவைத்தார். அன்று முதல், ஒவ்வொரு மாநில முதல்-மந்திரிகளும் சுதந்திர தினத்தில் தேசிய கொடியை ஏற்றி வருகிறார்கள்.</p><p>அந்த வகையில், நாட்டின் 80-வது சுதந்திர தினம் வரும் 15-ந் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. அதையொட்டி, சென்னை தலைமைச்செயலகம் செயல்பட்டு வரும் புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாக <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a> தேசியக் கொடியை ஏற்ற இருக்கிறார்.</p><h2>தகைசால் தமிழர் விருது</h2><p>முன்னதாக, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொள்கிறார். இந்த விழாவில், <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்,</a> தமிழ்நாட்டுக்கும், தமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்த தகைசால் தமிழர் என்ற பெயரிலான விருதும், ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்க இருக்கிறார். </p><p>அதேபோல், அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு டாக்டர் அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதல்வரின் நல் ஆளுமை விருது, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகள், மகளிர் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும்  சமூகப் பணியாளருக்கான விருதுகள், சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்-அமைச்சர் விருதுகள், முதல்-அமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் உள்ளிட்ட விருதுகளையும் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் ஜோசப் </a>விஜய் வழங்கி கவுரவிக்க உள்ளார். </p><h2>7-வது முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</h2><p>இதற்கு முன்பு சென்னை கோட்டை கொத்தளத்தில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் சுதந்திர தின நாளில் தேசிய கொடியை ஏற்றி வைத்துள்ளனர். அந்த வகையில், 7-வது <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சராக ஜோசப் விஜய்</a> தேசிய கொடியை ஏற்றிவைக்க இருக்கிறார்.</p><p>ஏற்கனவே, சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், சுதந்திர தின விழாவுக்கான அணிவகுப்பு ஒத்திகையும் மெரினா கடற்கரையில் தனியாக நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட தலைமை ஆசிரியை மீது தாக்குதல்: தொழிலாளி கைது!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/attack-on-headmistress-involved-in-census-work-worker-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/attack-on-headmistress-involved-in-census-work-worker-arrested#comments</comments><guid isPermaLink="false">cbe2ee5f-6a54-43ac-8f3f-c5bca479763b</guid><pubDate>Sun, 09 Aug 2026 01:25:42 +0000</pubDate><atom:updated>2026-08-09T01:25:42.962Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,கைது,arrest,attack,மக்கள் தொகை கணக்கெடுப்பு,ஆசிரியர்,Headmistress</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/otloy3r6/109.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கணக்கெடுப்பு பணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/otloy3r6/109.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>நெல்லை மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முதற்கட்ட பணி கடந்த 1-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்கு நியமிக்கப்பட்டு உள்ள தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் வீடு, வீடாக சென்று கணக்கெடுத்து விவரங்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர். </p><h2>கணக்கெடுப்பு பணி</h2><p>இந்த பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நெல்லை அருகே உள்ள கீழநத்தம் கிராமம் செல்விநகர் பகுதியில் நேற்று பகலில் முன்னீர்பள்ளம் யூனியன் பள்ளி தலைமை ஆசிரியை சங்கரேஸ்வரி கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டார்.</p><p>தொழிலாளியான சத்தியமூர்த்தி (வயது 46) என்பவரது வீட்டில் கணக்கெடுப்பு விவரங்களை கேட்டுக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சத்தியமூர்த்தி திடீரென்று சங்கரேஸ்வரியை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதை தடுக்க வந்த தலைமை ஆசிரியையின் கணவருக்கும் லேசாக காயம் ஏற்பட்டது. </p><h2>மத்திய சிறை</h2><p>இதுகுறித்து சங்கரேஸ்வரி பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து சத்தியமூர்த்தியை அதிரடியாக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>3 ஆண்டுகளுக்குப் பின்.. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் கிழக்கு கோபுர நுழைவுவாயில் இன்று திறப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/after-3-years-srirangam-renganathar-temples-east-tower-entrance-is-opening-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/after-3-years-srirangam-renganathar-temples-east-tower-entrance-is-opening-today#comments</comments><guid isPermaLink="false">703f7de2-6dd1-42c9-8a04-735709951f27</guid><pubDate>Sun, 09 Aug 2026 01:16:48 +0000</pubDate><atom:updated>2026-08-09T01:16:48.412Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>ஸ்ரீரங்கம் கோவில்,கோபுரம்,Srirangam Ranganathar Temple,gopuram</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/98p43d2p/2.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/98p43d2p/2.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பல்வேறு சிறப்புகளை கொண்டதாகும். இந்த கோவிலின் கிழக்கு நுழைவுவாயிலில் உள்ள தாமோதர கிருஷ்ணன் கோவில் கோபுரத்தின் ஒரு பகுதி (கொடுங்கை எனப்படும் வளைவுப் பகுதி) கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி நள்ளிரவில் திடீரென இடிந்து விழுந்தது. இதையடுத்து அப்ப குதி மக்கள் மற்றும் பக்தர்கள் கிழக்குவாசல் கோபுரத்தை சீரமைக்க கோரிக்கை விடுத்தனர். அதன்படி பழமை மாறாமல் சிற்ப வல்லுனர்கள், தொல்லியல் துறை அதிகாரிகள், ஸ்தபதிகள் கொண்ட குழுவின் வழிகாட்டுதலின் படி புனரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்றது. </p><p>இந்த கோபுர வாயில் 3 ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்தது. தற்போது சீரமைப்பு பணிகள் முழு மையாக நிறைவடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு, அந்த கோபுரத்தின் நுழைவுவாயில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பா.ஜ.க.வை நெருங்குகிறதா தி.மு.க.? அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை முதல்-அமைச்சர் கூட்டியதன் பின்னணி என்ன?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-dmk-moving-closer-to-the-bjp-what-is-the-backdrop-behind-the-chief-minister-convening-a-meeting-of-all-party-mps</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-dmk-moving-closer-to-the-bjp-what-is-the-backdrop-behind-the-chief-minister-convening-a-meeting-of-all-party-mps#comments</comments><guid isPermaLink="false">62c809fc-0a14-4f36-87db-913f3615fffe</guid><pubDate>Sun, 09 Aug 2026 01:08:01 +0000</pubDate><atom:updated>2026-08-09T01:08:01.194Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,TVK,தவெக,பாஜக,BJP,Vijay,Tamilnadu,விஜய்,அதிமுக,திமுக,DMK,தமிழகம்,All Party Meeting,அனைத்து கட்சிகள் கூட்டம்,MPs meeting,எம்.பி.க்கள் கூட்டம்,தொகுதி மறுவரையறை,CM Vijay,Chief Minister Vijay,முதல் - அமைச்சர் விஜய்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/zql35qkx/vijay.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பா.ஜ.க.வை நெருங்குகிறதா தி.மு.க.?]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/zql35qkx/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> தனது தலைமையில், அனைத்து கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்டியதன் பின்னணி என்ன? என்பது பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><h2>தொகுதி மறுவரையறை</h2><p>மக்களவை தொகுதி மறுவரையறையை மேற்கொள்வதற்காக மத்திய பா.ஜனதா அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்படவுள்ள மசோதாவை, போதிய எம்.பி.க்கள் ஆதரவுடன் நிறைவேற்ற, பா.ஜனதாவுக்கு அதிக எம்.பி.க்களை கொண்ட தி.மு.க.வின் உதவி தேவைப்படுகிறது.</p><h2>தி.மு.க.வை நாடும் பா.ஜ.க.</h2><p>இதில், தி.மு.க.வுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஏற்பட்டுள்ள உறவுப்பிளவை, சிறந்த வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. தற்போது மக்களவை தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற அதிக எம்.பி.க்களை கொண்ட தி.மு.க.வின் உதவியை பா.ஜனதா நாடுகிறது.</p><h2>நிபந்தனையுடன் கூடிய உறவு</h2><p>கூட்டணி உறவை சொல்லாமல் முறித்துக்கொண்ட காங்கிரஸ் கட்சி மீது தி.மு.க. கசப்பில் உள்ளது. காங்கிரசுக்கு கடுமையான நெருக்கடியை கொடுக்கும் சந்தர்ப்பமாக தி.மு.க. இதனை பார்க்கிறது. ஆக, பா.ஜனதாவுடன் தி.மு.க.வுக்கு நிபந்தனையுடன் கூடிய உறவுக்கான பாதி கதவு திறக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.</p><h2>தி.மு.க.வின் மூத்த தலைவர்</h2><p>மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு கோரி பா.ஜனதா. தங்களை அணுகியதை தி.மு.க.வின் மூத்த தலைவர் ஒருவர் உறுதிபடுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. </p><p>தொகுதி மறுவரையறைக்கு தி.மு.க. எதிரானதல்ல என்றும், அந்த நடவடிக்கை நியாயமான முறையில் அமைய வேண்டும் என்பதே தி.மு.க.வின் விருப்பம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.</p><p>மேலும், முன்பு தி.மு.க.வின் கோரிக்கைகள் கவனிக்கப்படவில்லை என்றும், தற்போது மீண்டும் பா.ஜனதா அணுகியபோது எங்கள் கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.</p><h2>பா.ஜ.க.வை நெருங்கும் தி.மு.க.? </h2><p>இந்த சூழ்நிலையில்தான் அனைத்துக்கட்சிகளின் எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டத்தை <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய் </a>திடீரென கூட்டினார். இது, எந்தக் கட்சி பா.ஜனதாவுடன் நெருக்கம் காட்ட உள்ளது என்பதை வெளியுலகத்திற்கு காட்டுவதற்கான த.வெ.க.வின் ஏற்பாடாக இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.</p><p>ஏனென்றால், சட்டசபையில் கடந்த 7-ந்தேதி விவாதம் நடைபெற்றபோது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியிடம் 'எம்.பி.க்கள் கூட்டத்தில் தி.மு.க. பங் கேற்குமா? இல்லையா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கும்படி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேட்டார்.</p><p>அந்த நேரத்தில் அந்த கேள்வி, அவைக்கு சம்பந்தம் இல்லாமல் இருந்தாலும், அரசியலுக்கு தொடர்புடையதாக இருந்தது. இதில் த.வெ.க.வின் நோக்கம், பா.ஜனதாவை தி.மு.க. நெருங்குகிறதாக காட்டுவதாக உள்ளது என்றே கருதப்படுகிறது.</p><h2>விவாதம்</h2><p>ஆனால், அப்போதைய விவாதத்திற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் கேள்வி தொடர்பில்லாதது என்று உதயநிதி பதில் அளித்திருந்தார். என்றாலும், மேகதாது விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை த.வெ.க. அரசு கூட்டினால், எம்.பி.க்கள் கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்கும் என்று பந்தை த.வெ.க. பக்கம் தி.மு.க. தள்ளிவிட்டது.</p><h2>அரசியல் நாடகம்</h2><p>மேலும், தொகுதி மறுவரையறையில் தி.மு.க. தனது நிலைப்பாட்டை மாற்றவில்லை என்றும், எம்.பி.க்கள் கலந்தாய்வு என்று த.வெ.க. நடத்தும் அரசியல் நாடகத்தில் தி.மு.க. பங்கேற்காது என்றும் கனிமொழி எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.</p><p>எம்.பி.க்கள் கூட்டத்தில் அ.தி.மு.க.வும் பங்கேற்கவில்லை. அ.தி.மு.க. தரப்பில் இதுபற்றி கேட்டபோது, 'எம்.பி.க்களை அழைப்பதற்கு முன்பாக, கட்சித் தலைவர்களை முதல்-அமைச்சர் அழைத்து பேசியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டனர்.</p><h2>மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவா..?</h2><p>இந்த கூட்டத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் பங்கேற்காதது, மத்திய அரசின் மறுவரையறை மசோதாவை ஆதரிக்கும் நிலையை நோக்கி அக்கட்சி நகர்வதை காட்டுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு பிறகு காங்கிரசுடன் தி.மு.க.கூட்டணி முறிந்துள்ள நிலையில், இந்த நகர்வு முக்கியத்துவம் பெறுகிறது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-44</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-44#comments</comments><guid isPermaLink="false">3416e1d8-6c86-42e8-b2bd-8f8b6eb13d70</guid><pubDate>Sun, 09 Aug 2026 01:00:09 +0000</pubDate><atom:updated>2026-08-09T01:00:09.655Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல் டீசல் விலை,Petrol and diesel prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/wtt9ffwv/petrol.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/wtt9ffwv/petrol.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.</p> <p>பெட்ரோல், டீசல் விலை</p><p>இந்நிலையில், சென்னையில் இன்று (09.08.2026 ஞாயிற்றுக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ. 99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியருக்கு கருணை படி என்பது சலுகைதான்; உரிமை இல்லை - ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mercy-pay-is-a-privilege-for-dismissed-employees-not-a-right-high-court-order</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mercy-pay-is-a-privilege-for-dismissed-employees-not-a-right-high-court-order#comments</comments><guid isPermaLink="false">464f8ea2-5be7-45ca-8522-52615f458c8f</guid><pubDate>Sun, 09 Aug 2026 00:56:52 +0000</pubDate><atom:updated>2026-08-09T00:56:52.661Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பணி நீக்கம்,ஐகோர்ட்டு,Chennai High Court,Dismissed,கருணைத்தொகை</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/g7egggsy/highcourt.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/g7egggsy/highcourt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மத்திய அரசின் தபால் துறையில், கடந்த 1996-ம் ஆண்டு பணியில் சேர்ந்த தபால்காரர் பழனி என்பவர், 2010-ம் ஆண்டு முதல் பணிக்கு வரவில்லை. அவருக்கு பலமுறை அதிகாரிகள் கடிதம் அனுப்பியும் வராததால். துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதற்கும் அவர் ஆஜராகாததால், 2014-ம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டார். </p><p>இதன்பின்னர் 2 ஆண்டுகள் கழித்து, 14 ஆண்டுகள் பணியாற்றியுள்ளதால், ஓய்வூதியத்தில் ஒரு பகுதியை கருணை படியாக வழங்கக்கோரி  அதிகாரிகளுக்கு பழனி மனு அனுப்பினார். அந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படாததையடுத்து, மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த தீர்ப்பாயம், அவருக்கு கருணை படி வழங்கும்படி உத்தரவிட்டது.</p><h2>கருணை படி</h2><p>இந்த உத்தரவை எதிர்த்து <a href="https://www.dailythanthi.com/topic/madras-high-court">சென்னை ஐகோர்ட்டில்</a> தபால் துறை மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், என்.செந்தில்குமார் ஆகியோர், "பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியருக்கு கருணை படி வழங்குவது குறித்து அதிகாரிகள் தான் பரிசீலிக்க வேண்டும். அது சலுகைதானே தவிர உரிமை இல்லை. அதனால் கருணை படி வழங்கும்படி தீர்ப்பாயம் உத்தரவிட முடியாது. அப்படி உத்தரவு பிறப்பித்தால், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் அனைவரும் தங்களுக்கும் கருணை படி வழங்க வேண்டும் என்று வரக்கூடும். அதனால், மத்திய நிர்வாக தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்கிறோம்" என்று உத்தரவிட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>கேரளத்தில் இருந்து ஒற்றை சக்கர சைக்கிளில் ராமேசுவரம் வந்த என்ஜினீயர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/engineer-from-kerala-reaches-rameswaram-on-unicycle</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/engineer-from-kerala-reaches-rameswaram-on-unicycle#comments</comments><guid isPermaLink="false">9be422b8-15e8-45fe-ab84-21112d28b8a5</guid><pubDate>Sun, 09 Aug 2026 00:55:59 +0000</pubDate><atom:updated>2026-08-09T00:55:59.947Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rameswaram,ராமேசுவரம்,என்ஜினீயர்,Engineer,சைக்கிள்,cycle,கேரளம்,keralam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/uih3e4zr/CHENNAI-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/uih3e4zr/CHENNAI-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>ராமேசுவரம்,</p><p>கேரளம் மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் சனித் (வயது 25). என்ஜினீயர். இவர் போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கேரளத்தில் இருந்து கடந்த மே மாதம் 25-ந்தேதி சைக்கிளில் முன் பக்க சக்கரம் இன்றி பின்பக்க சக்க ரத்தை மட்டும் பயன்படுத்தி ஒரு சக்கரத்தில் தனது பிரசார பயணத்தை தொடங்கினார். </p><p>கேரளத்தில் இருந்து புறப்பட்ட இவர் கோவை வழியாக பழனி, மதுரை, ராமநாதபுரம், மண்டபம், பாம்பன் ரோடு பாலம் வழியாக ராமேசுவரம் வந்தடைந்தார். பின்னர் தனுஷ்கோடி சென்று அங்கு சுற்றுலா பயணிகளிடம் போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரங்களை செய்தார்.</p><p>அங்கிருந்து புறப்பட்டு புதுச்சேரி, சென்னை வழியாக நேபாளத்தில் தனது விழிப்புணர்வு பிரசாரத்தை முடிக்கவுள்ளதாக தெரிவித்தார். 1 நாளைக்கு 30 முதல் 40 கிலோமீட் டர் வரை ஒற்றை சக்கரத்தில் சைக்கிள் பயணம் செய்து வருவதாகவும் தெரிவித்தார். சைக்கிளில் முன்பக்க சக்கரம் இன்றி பின்பக்க சக்கரத்தை மட்டுமே வைத்து சாலைகளில் நூதன முறையில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யும் வாலிபரை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சேலம் போஸ் மைதானத்தில் அரசு பொருட்காட்சி தொடக்கம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-exhibition-begins-at-salem-bose-maidan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-exhibition-begins-at-salem-bose-maidan#comments</comments><guid isPermaLink="false">df059293-a877-46dd-b8ed-51767c49ea1c</guid><pubDate>Sun, 09 Aug 2026 00:54:11 +0000</pubDate><atom:updated>2026-08-09T00:54:11.032Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,சேலம்,Exhibition,அரசு பொருட்காட்சி,Government exhibition</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/iftq31np/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/iftq31np/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள போஸ் மைதானத்தில் மாவட்ட செய்தி-மக்கள் தொடர்பு துறை சார்பில் அரசு பொருட்காட்சி தொடக்க விழா நேற்று மாலை நடந்தது. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/pbv0x82p/Untitled-3.jpg" /></figure><p>இதில், போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி பொருட்காட்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளையும் திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து நடைபெற்ற விழாவில், அமைச்சர் கலந்து கொண்டு ரூ.7 கோடியே 72 லட்சம் மதிப்பில் 227 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.</p><h2>45 நாட்கள் நடைபெறும்</h2><p>அரசு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பொருட்காட்சியில் </a>அரசின் திட்டங்கள், சாதனைகளை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் 26 அரசு துறைகள், 5 அரசு சார்பு நிறுவனங்கள் என மொத்தம் 31 துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர பல்வேறு பொழுதுபோக்கு கடைகளும் உள்ளன. தினமும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. </p><p>இந்த அரசு பொருட்காட்சி 45 நாட்கள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். விழாவில் கலெக்டர் இளம்பகவத், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமணன், சிவக்குமார். பழனிவேல், மாநகராட்சி ஆணையாளர் லலித் ஆதித்யநீலம், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>மேட்டுப்பாளையம் அருகே பூட்டிய காருக்குள் மூச்சுத்திணறி 9 வயது சிறுவன் பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/9-year-old-boy-dies-after-suffocating-in-locked-car-near-mettupalayam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/9-year-old-boy-dies-after-suffocating-in-locked-car-near-mettupalayam#comments</comments><guid isPermaLink="false">8ffc250f-ea84-422c-9cf3-a94257b416d8</guid><pubDate>Sun, 09 Aug 2026 00:49:49 +0000</pubDate><atom:updated>2026-08-09T00:49:49.263Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டுப்பாளையம்,Mettupalayam,சிறுவன் பலி,Die,மூச்சுத்திணறி,கார்car</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/jxv5e5pn/108.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/jxv5e5pn/108.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மேட்டுப்பாளையம்,</p><p>கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பெத்திக்குட்டை கருப்பராயன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் வேலுமணி (வயது 39). குடிநீர் வடிகால் வாரியத்தில் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சுமதி(31). இவர்களது மகன் முகுந்த்(9). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தான்.</p><h2>கார்</h2><p>இந்த நிலையில் நேற்று மதியம் வேலுமணியின் வீட்டுக்கு முன்பு ஆசிரியர் ஒருவரின் கார் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த காருக்குள் ஏறி முகுந்த் விளையாடிக் கொண்டு இருந்தான்.</p><p>அப்போது காரின் கதவுகள் திடீரென மூடிக்கொண்டன. முகுந்த், எவ்வளவோ முயற்சித்தும் காரின் கதவுகளை திறக்க முடியவில்லை. இதனால் சிறிது நேரத்தில் காரிலேயே அவன் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தான்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் இன்று எந்தெந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு..? </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/which-areas-in-tamil-nadu-are-likely-to-receive-rain-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/which-areas-in-tamil-nadu-are-likely-to-receive-rain-today#comments</comments><guid isPermaLink="false">b5542914-335a-424f-b2b6-99a4c9b5696f</guid><pubDate>Sun, 09 Aug 2026 00:27:36 +0000</pubDate><atom:updated>2026-08-09T00:27:36.358Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,Rain,Weather,வானிலை,தமிழகம்,Weather News,WeatherUpdate,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,வானிலை ஆய்வு மையம்,வானிலை அறிக்கை,weather condition,வானிலை தகவல்,Weather Report,Weather Status,weather conditions,வானிலை அறிவிப்பு,weather center</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/ru4jh021/kantha.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rain, மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/ru4jh021/kantha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>வானிலை செய்திகள் (Weather)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.</p><h2>மழை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>சுமார் 5.8 கிமீ முதல் 7.6 கிமீ உயரம் வரை வட கடலோர தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.</p><p>இதன் காரணமாக <strong>இன்று (09-08-2026):</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.</p><h2>பலத்த தரைக்காற்று</h2><p><strong>10-08-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.</p><p><strong>11-08-2026 முதல் 14-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong><ins>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</ins></strong></p><p><strong>09-08-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.</p><p><strong>10-08-2026 முதல் 12-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் வட உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><p><strong><ins>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</ins></strong></p><p><strong>09-08-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.</p><p><strong>10-08-2026 முதல் 12-08-2026 வரை:</strong> வட உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p> <h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று (09-08-2026)</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.</p>]]></content:encoded></item><item><title>கூடுதல் தொகை வசூலை தடுக்கவே ஆன்லைன் முறையில் மது விற்பனை - அமைச்சர் விக்னேஷ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/online-liquor-sales-to-prevent-extra-charges-minister-vignesh</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/online-liquor-sales-to-prevent-extra-charges-minister-vignesh#comments</comments><guid isPermaLink="false">f0a01a47-a611-49d3-98ce-818bd3a43c38</guid><pubDate>Sat, 08 Aug 2026 16:29:44 +0000</pubDate><atom:updated>2026-08-08T16:29:44.621Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டாஸ்மாக்,Tasmac,Minister Vignesh,அமைச்சர் விக்னேஷ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/wctza5lh/Untitled-12.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் விக்னேஷ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/wctza5lh/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு கூடுதல் தொகை வசூலிப்பதை தடுக்கவே ஆன்லைன் முறை கொண்டு வரப்பட்டுள்ளது என்று அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் விக்னேஷ் கூறியதாவது:-</p><p>வெளிநாட்டு மதுபானங்கள், ஏற்கெனவே மதுக்கடைகளில் கிடைக்கின்றன. வாடிக்கையாளர்கள் என்ன விரும்புகின்றனரோ அதை கொடுக்க வேண்டியது கடமை. சட்டப்பேரவையிலேயே ஆன்லைன் முறை குறித்து விளக்கமாக பேசியிருக்கிறேன். டாஸ்மாக் கடைகளில் பணப் பரிவர்த்தனை இருக்கக் கூடாது என்பதற்காகவும், கூடுதல் தொகை வசூலிப்பதை தடுக்கவும் ஆன்லைன் விற்பனை நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.</p><p>சில மதுக் கடைகளில் சில பிராண்ட் மது வகைகள் மட்டுமே விற்கப்படுவதாக புகார்கள் வந்தன. ஆன்லைன் மூலம் எந்தெந்த கடையில் என்னென்ன மது வகைகள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். ஆன்லைன் ஆர்டர் அமலுக்கு வந்த பிறகு 700 பேர் வரை ஆர்டர் செய்து மதுபானங்கள் பெற்றுள்ளனர். இதில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன என்பதையும் கவனித்து வருகிறோம். கடந்த காலங்களில் இந்த துறையை சீர்படுத்த முயற்சி எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சில எதிர்க்கட்சிகள் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்க திட்டம்; துரை வைகோ</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/some-opposition-parties-plan-to-support-the-constituency-delimitation-bill-durai-vaiko</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/some-opposition-parties-plan-to-support-the-constituency-delimitation-bill-durai-vaiko#comments</comments><guid isPermaLink="false">63cf631b-3aba-4c1b-8677-2273a35f3888</guid><pubDate>Sat, 08 Aug 2026 16:28:06 +0000</pubDate><atom:updated>2026-08-08T16:28:06.537Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,DMK,Durai Vaiko,துரை வைகோ,தொகுதி மறுவரையறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/34ygr0yc/Durai-vaiko.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ துரை வைகோ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/34ygr0yc/Durai-vaiko.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக முதல் அமைச்சர் விஜய் தலைமையில் இன்று தமிழக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு மதிமுக எம்பி துரைவைகோ செய்தியாளர்களிடம் பேசியதாவது: </p><p> 39 எம்.பி.க்களை வைத்துக் கொண்டே நமது உரிமைகளை பேச முடியவில்லை. ஏற்கனவே உள்ள எண்ணிக்கை தொடர வேண்டும் என்பதுதான் இந்த கூட்டத்தின் முடிவு. சில எதிர்க்கட்சிகள் பா.ஜனதாவுக்கு ஆதரவாக இருப்பதாக தெரிகிறது. இப்போதுள்ள நிலைப்பாடுதான் தொடர வேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய் பேசினார்.</p> <p>சிறுபான்மையினருக்கும் இந்த மறுவரையறையினால் ஆபத்து வரும். அதற்கு அசாம் உதாரணம். அவசர அவசரமாக மசோதாவை நிறைவேற்ற முனைப்பு காட்டுகின்றனர். இதில் பா.ஜனதாவின் கருத்தைதான் தி.மு.க. கூறி வருகிறது. சமூகவலைதளத்தில் அதை காண முடிகிறது. 50 சதவீத உயர்வு ஏற்கக்கூடியதுதான் என்று கருத்து கூறி வருகின்றனர். மறுவரையறைக்கான ஆணையம் அமைத்துவிட்டால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் நினைத்ததை செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>திருச்செந்தூரில் கஞ்சா விற்றவர் கைது: 880 கிராம் பறிமுதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ganja-seller-arrested-in-tiruchendur-880-grams-seized</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ganja-seller-arrested-in-tiruchendur-880-grams-seized#comments</comments><guid isPermaLink="false">4bf38ea1-ca4e-42c2-864f-6a2485951967</guid><pubDate>Sat, 08 Aug 2026 16:27:18 +0000</pubDate><atom:updated>2026-08-08T16:27:18.112Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,திருச்செந்தூர்,Thoothukudi,தூத்துக்குடி,arrest,Seizure,பறிமுதல்,Tiruchendur,sale of ganja,கஞ்சா விற்பனை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/8lmfm6bx/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கஞ்சா விற்றவர் கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/8lmfm6bx/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">திருச்செந்தூர்</a> பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE">கஞ்சா</a> வைத்திருந்த தூத்துக்குடியைச் சேர்ந்த நபரை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர்.</p><h2>போலீஸ் ரோந்து பணி</h2><p>தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். </p><h2>கஞ்சா விற்பனை</h2><p>விசாரணையில் அவர் தூத்துக்குடி, தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் மணிகண்டன்(எ) மொட்டை மணி (வயது 37) என்பதும்,  அவர் விற்பனை செய்வதற்காக சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. </p><h2>880 கிராம் கஞ்சா பறிமுதல், கைது</h2><p>அதைத் தொடர்ந்து திருச்செந்தூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சோனியா வழக்குப்பதிவு செய்து, மேற்சொன்ன நபரை கைது செய்தார். மேலும் அவரிடமிருந்த 880 கிராம் கஞ்சாவை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">பறிமுதல் </a>செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி சிவன் கோவிலில் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடி ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/officials-of-the-idol-theft-prevention-unit-conduct-a-thorough-inspection-at-the-thoothukudi-shiva-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/officials-of-the-idol-theft-prevention-unit-conduct-a-thorough-inspection-at-the-thoothukudi-shiva-temple#comments</comments><guid isPermaLink="false">f5e63c49-3d42-4fd1-bab1-0608ca29e607</guid><pubDate>Sat, 08 Aug 2026 16:07:33 +0000</pubDate><atom:updated>2026-08-08T16:07:33.071Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>raid,police,போலீஸ்,பக்தர்கள்,Devotees,Thoothukudi,தூத்துக்குடி,ஆய்வு,Theft,Excitement,பரபரப்பு,statue,shiva temple,சிவன் கோவில்,சிலைகள் திருட்டு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/zttk5iuw/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூத்துக்குடி சிவன் கோவிலில் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடி ஆய்வு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/zttk5iuw/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">சிவன் கோவிலில்</a> நெல்லை மண்டல <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">சிலை திருட்டு</a> தடுப்புப் பிரிவு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D">போலீஸ் இன்ஸ்பெக்டர் </a>தலைமையிலான  போலீசார் அதிரடி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">ஆய்வு </a>செய்தனர்.</p><h2>சிவன் கோவிலில் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீசார் ஆய்வு</h2><p>தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பின், கோவில் சிலைகளை பாதுகாக்கும் வகையில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டார். அதன்படி நெல்லை மண்டல சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா ராணி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் திருவளவன் மற்றும் தலைமைக் காவலர் செல்லப்பா ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று காலை தூத்துக்குடியில் பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.</p><h2>மொத்தம் 34 உலோகச் சிலைகள்</h2><p>ஆய்வின் முதற்கட்டமாக கோவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமசுப்பிரமணியன், செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி மற்றும் கோவில் பணியாளர்களிடம் கோவிலில் உள்ள சுவாமி சிலைகள் மற்றும் அதன் விவரங்களை அதிகாரிகள் சேகரித்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், கோவிலில் மொத்தம் 34 உலோகச் சிலைகள் இருப்பதும், அதற்கான முறையான ரசீதுகள் மற்றும் ஆவணங்கள் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. அந்த சிலைகள் சேதமின்றி பராமரிக்கப்பட்டு வருகிறதா என்றும் ஆய்வு செய்யப்பட்டது. </p><h2>சிலைகள் சேதம் குறித்து ஆய்வு</h2><p>மேலும் கடந்த 2002-ம் ஆண்டு மூக்குப் பகுதியில் சேதமடைந்ததால் தனியாக பிரித்து வைக்கப்பட்டிருந்த முருகன் சிலையை இன்ஸ்பெக்டர் வனிதா ராணி பார்வையிட்டு சோதனை செய்தார். அந்த சிலை எதிர்பாராத விதமாகக் கீழே தவறி விழுந்ததால் சேதமடைந்தது சோதனையில் தெரியவந்தது. இதன்பின் கோவிலில் உள்ள அனைத்துக் கற்சிலைகளையும் ஆய்வு செய்ததில் அவை அனைத்தும் சேதமன்றி சரியாக இருப்பது கண்டறியப்பட்டது. </p><h2>பக்தர்களிடம் விசாரணை</h2><p>ஆய்வின் ஒரு பகுதியாக, கோவிலுக்கு வருகை தந்த சுமார் 25 பக்தர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். "தினமும் கோவிலுக்கு வரும் உங்களுக்குச் சிலைகளில் ஏதேனும் மாற்றம் அல்லது சேதம் ஏற்பட்டிருப்பது தெரியுமா?" என கேட்டறிந்தனர். அதற்கு பக்தர்கள், "நாங்கள் பல வருடங்களாக பார்த்து வரும் அதே சிலைகள்தான் எந்த மாற்றமுமின்றி உள்ளன" என தெரிவித்தனர்.</p><h2>பக்தர்களிடையே பரபரப்பு</h2><p>நேற்று காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நீண்ட இந்த விரிவான ஆய்வின் முடிவில், கோவிலில் உள்ள அனைத்து சிலைகளும் அதற்கான ஆவணங்களும் சரியாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிவன் கோவிலில் நாள் முழுவதும் நடைபெற்ற இந்த ஆய்வுப் பணி பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>புதிய எம்.பி.பி.எஸ். இடங்களில் தனியார் கல்லூரிகளின் ஆதிக்கம் அதிகரிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/private-colleges-dominance-in-new-mbbs-seats-increases</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/private-colleges-dominance-in-new-mbbs-seats-increases#comments</comments><guid isPermaLink="false">c41d7474-75b4-4f9e-b7df-468b873554b8</guid><pubDate>Sat, 08 Aug 2026 16:03:11 +0000</pubDate><atom:updated>2026-08-08T16:03:11.093Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அதிகரிப்பு,MBBS,Private College,தனியார் கல்லூரி,எம்.பி.பி.எஸ். படிப்பு,ஆதிக்கம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/nmrjdrpj/mbbs.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/nmrjdrpj/mbbs.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதை ஒட்டுமொத்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இந்த நிலையில் தற்போது அவ்வாறு உயர்த்தப்பட்டு வரும் இடங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான சதவீதம் குறைந்து வருவதாக ஒரு புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகிறது. அதன்படி, 2023-ல் 1 லட்சத்து 7 ஆயிரத்து 948 <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D">எம்.பி.பி.எஸ். </a>இடங்கள் இருந்தது. அதில் அரசு கல்லூரிகளில் 52 சதவீதமும், தனியார் மற்றும் நிகர்நிலை கல்லூரிகளில் 48 சதவீதமும் இடங்கள் இருந்தன.</p><h2>தனியார் கல்லூரிகளின் ஆதிக்கம்</h2><p>2024-ல் 1 லட்சத்து 17 ஆயிரத்து 750 இடங்கள் இருந்த நிலையில், அரசு கல்லூரிகளில் 51 சதவீதமும், தனியார் கல்லூரிகளில் 49 சதவீதமும் இருந்தன. 2025-ல் 1 லட்சத்து 23 ஆயிரத்து 700 எம்.பி.பி.எஸ். இடங்கள் இருந்த சூழலில், அரசு கல்லூரிகளில் 51 சதவீதமும், தனியார் கல்லூரிகளில் 49 சதவீதமும் என இருந்தன. 2026-ல் 1 லட்சத்து 36 ஆயிரத்து 939 இடங்களாக உயர்ந்திருந்த நிலையிலும், அரசு கல்லூரிகளில் 46 சதவீதமும், தனியார் கல்லூரிகளில் 54 சதவீதமும் என உள்ளன.அதாவது. ஒட்டுமொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் அதிகரித்தாலும் அதில் தனியார் கல்லூரிகளின் ஆதிக்கமே இருக்கிறது. புதிய எம்.பி.பி.எஸ். இடங்கள் உருவாக்கப்படுவதில் அரசுத்துறையைவிட தனியார் துறை மிகவேகமாக செயல்பட்டுள்ளதை இந்த புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை தொகுதி மறுவரையறை பாதிக்கும்: முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/delimitation-to-affect-tamil-nadus-representation-says-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/delimitation-to-affect-tamil-nadus-representation-says-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">f225d245-ad1f-4001-bb6b-b0a69ddcc80b</guid><pubDate>Sat, 08 Aug 2026 15:59:58 +0000</pubDate><atom:updated>2026-08-08T15:59:58.378Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தொகுதி மறுவரையறை,Delimitation,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/w9bi58ze/Untitled-11.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/w9bi58ze/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்ற தொகுதி மறுவரையறை தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>முதல்-அமைச்சர் விஜய் தலைமையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்ற தொகுதி மறுவரையறை தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் இன்று (8.8.2026) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.</p><p>இந்தக் கூட்டத்தில் பங்கேற்க, தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் (57) அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், இந்திய தேசிய காங்கிரஸ் (11), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (2), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (1) மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (1) ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 19 மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.</p><p>இந்தக் கூட்டத்தில் மத்திய அரசால் உத்தேசிக்கப்பட்ட தொகுதி மறுவரையறை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மக்கள்தொகை கட்டுப்பாடு திட்டத்தினைச் சிறப்பாக செயல்படுத்திய தமிழ்நாடு மற்றும் இதர தென் மாநிலங்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதிக்கப்படாமல் காப்பது குறித்தும், தமிழ்நாட்டின் தற்போதைய பாராளுமன்ற பிரதிநிதித்துவம் தொடர்ந்து நீடிப்பது குறித்தும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.</p><p>இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆக இருக்கும்போதே, ஒவ்வொரு உறுப்பினருக்கும் பாராளுமன்றத்தில் பேசக் கிடைக்கும் நேரம் குறைவாக உள்ளது எனவும், உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், தங்களது கருத்துக்களை முழுமையாக எடுத்துக்கூறுவதில் உள்ள சிக்கல்கள் பற்றி கூறினர். மேலும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில், பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை மக்கள்தொகைக்கேற்ப அதிகப்படுத்தப்படவில்லை எனவும் கூறினர்.</p><p>தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மற்றும் முக்கியத்துவம், தொகுதி மறுவரையறை செய்வதின் மூலம் பாதிக்கும் என்பதால் இந்த மத்திய அரசின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் தொகுதி மறுவரையறையினை இப்போதுள்ள எண்ணிக்கையிலேயே நிரந்தரமாக நிலைநிறுத்திடவும், தற்போதுள்ள நிலையே தொடரவும், தமிழ்நாட்டின் உரிமையினை பாராளுமன்றத்தில் நிலை நிறுத்துவதற்கும், அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், தொகுதி மறுவரையறை குறித்த மத்திய அரசின் அரசமைப்பு சட்டத் திருத்தம் மற்றும் புதிய மசோதாவை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.</p><p>மேலும், 2026-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பிற்குப் பின் அரசமைப்பு பிரிவு 81(2)(a)-ன் கீழ் தென் மாநிலங்களின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதால், சட்ட முன்மொழிவை பாராளுமன்றத்தில் எதிர்க்க வேண்டும். சர்வ வல்லமை பெற்றதாக தொகுதி மறுவரையறை ஆணையம் உள்ளது. இந்த அதிகாரத்தை குறித்து பாராளுமன்றத்திற்கே இறுதிசெய்யும் அதிகாரம் இருக்க வேண்டும் உள்ளிட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.</p><p>அனைத்து மாநிலங்களின் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையினை 50% வரை உயர்த்தலாம் என்ற கருத்து மக்களை திசைதிருப்பும் ஆசை வார்த்தை (50% increase of existing Lok Sabha seats is an illusion to sweeten the pill) என்ற கருத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுத்து வைத்தனர்.</p><p>இந்தக் கூட்டத்தின்போது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் உத்தேசிக்கப்பட்ட தொகுதி மறுவரையறை முன்மொழிவு செயல்படுத்தப்பட்டால், மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டத்தினை சிறப்பாகச் செயல்படுத்திய தமிழ்நாடு மற்றும் இதர தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவ உரிமை பாதிக்கப்படுமென்பதால், தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையான 543 என்ற அளவிலேயே நிரந்தரமாக வைப்பதற்கும், மாநிலங்களுக்கு இடையேயான எண்ணிக்கை பகிர்வை நிரந்தரமாக வைக்கவும், அதற்குத் தேவையான மற்றும் உரிய சட்ட திருத்தங்கள் பாராளுமன்றத்தில் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினார்கள்.</p><p>மேலும், தற்போது மக்களவை, மாநிலங்களவையினுடைய விகிதம் 2.2:1 என்ற அளவிலேயே நிலைநிறுத்த வேண்டும் என்றும், இதில் ஏதேனும் மாற்றம் ஏற்படின் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் கடுமையாகப் பாதிக்கும் என்றும் தெரிவித்தார்கள்.</p><p>இதனைத் தொடர்ந்து இறுதியாக தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் உரிமையை நிரந்தரமாகப் பாதுகாத்திட தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்றிட ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.</p><p>கூட்டத்தின் இறுதியில், முதல்-அமைச்சர், தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் மற்றும் முக்கியத்துவம், தொகுதி மறுவரையறை செய்வதின் மூலம் பாதிக்கும் என்பதால் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் தொகுதி மறுவரையறையினை கைவிடவும், தற்போதுள்ள நிலையே தொடரவும், தமிழ்நாட்டின் உரிமையினை நிலைநிறுத்துவதற்கும், அனைத்துக் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்றும் அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கோரிக்கை விடுத்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மதுரை: சைக்கிளை பற்களால் தூக்கியபடி 100 அடி நடந்து சென்று ராணுவ வீரர் சாதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-ex-soldier-sets-record-carrying-35kg-cycle-with-teeth</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-ex-soldier-sets-record-carrying-35kg-cycle-with-teeth#comments</comments><guid isPermaLink="false">2cbe1146-efe6-4276-b7f8-06c5dac1f2c2</guid><pubDate>Sat, 08 Aug 2026 15:38:36 +0000</pubDate><atom:updated>2026-08-08T15:38:36.173Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,சைக்கிள்,Bicycle,Ex-Servicemen&apos;s-முன்னாள் ராணுவ வீரர்கள்,Achievement - சாதனை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/f8b3znyu/miltary.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ராணுவ வீரர்]]></media:title><media:description type="html"><![CDATA[ சைக்கிளை பற்களால் தூக்கியபடி 100 அடி நடந்து சென்று ராணுவ வீரர் சாதனை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/f8b3znyu/miltary.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p> பற்களால் சைக்கிளை கவ்வி பிடித்து முன்னாள் ராணுவ வீரர் செய்த சாதனை அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D">முன்னாள் ராணுவ வீரர் </a>ஒருவர், தனது அசாத்திய உடல் பலத்தை நிரூபிக்கும் வகையில் விநோத சாதனை முயற்சி ஒன்றில் ஈடுபட்டார். </p> <h2>35 கிலோ எடை</h2><p>பொதுவாக மனிதர்கள் கைகளால் தூக்குவதற்கே திணறும் 35 கிலோ எடை கொண்ட இரும்பு சைக்கிளை, அவர் கைகளைப் பயன்படுத்தாமல் தனது பற்களால் மட்டுமே கவ்விப் பிடித்தார். சைக்கிளை பற்களால் கவ்வித் தூக்கியவாறே, சற்றும் தடுமாறாமல் 100 அடி தூரத்திற்கு நேராக நடந்து சென்று அவர் சாதனை படைத்தார்.</p> <h2>பாராட்டு மழை</h2><p>முன்னாள் ராணுவ வீரரின் இந்த அசாத்தியமான பற்களின் உறுதியையும், உடல் வலிமையையும் நேரில் பார்த்த திருமங்கலம் பொதுமக்கள் கைதட்டி தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர். இந்த வியத்தகு சாதனை வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>காங்கோவில் மேலாளர் வேலை செய்பவரிடம் ரூ.75.2 லட்சம் மோசடி: தூத்துக்குடி வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-youth-arrested-for-defrauding-a-manager-working-in-congo-of-rs752-lakh</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-youth-arrested-for-defrauding-a-manager-working-in-congo-of-rs752-lakh#comments</comments><guid isPermaLink="false">1598a0ed-8756-4b27-87ac-b256623089ba</guid><pubDate>Sat, 08 Aug 2026 15:33:06 +0000</pubDate><atom:updated>2026-08-08T15:33:06.019Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>South Africa,தென் ஆப்பிரிக்கா,கைது,Thoothukudi,தூத்துக்குடி,Online,ஆன்லைன்,பணம் மோசடி,arrest,money laundering,சைபர் கிரைம்,Complaint,புகார்,cybercrimes,Congo,காங்கோ,manager,மேலாளர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/tum39elf/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பணம் மோசடி, கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/tum39elf/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தென்ஆப்பிரிக்க நாடான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B">காங்கோ</a>வில் வேலை பார்த்து வரும் தனியார் நிறுவன மேலாளரிடம் ஆன்லைன் முதலீட்டு மோசடி மூலம் ரூ.75.2 லட்சம் சுருட்டிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">வாலிபர் கைது </a>செய்யப்பட்டுள்ளார். </p><h2>காங்கோவில் தனியார் நிறுவன மேலாளர்</h2><p>தூத்துக்குடியைச் சேர்ந்த நபர் ஒருவர் தென்ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆண்டின் இறுதியில் இவரது பேஸ்புக் பக்கத்திற்கு வந்த விளம்பர லிங்க் ஒன்றில், "குறைந்த முதலீட்டில் 200 சதவீதம் அதிக லாபம் பெறலாம்" என கவர்ச்சிகரமான விளம்பரம் வந்துள்ளது. </p><h2>ரூ.75 லட்சத்து 25 ஆயிரம்</h2><p>இதனை நம்பி அவர் அந்த எண்ணைத் தொடர்பு கொண்டபோது, அவரை ஒரு வாட்ஸ்அப் குழுவில் இணைத்துள்ளனர். அக்குழுவில் பலர் ஆன்லைன் மார்க்கெட்டிங் மூலம் அதிக லாபம் பெற்றது போன்ற போலி தோற்றத்தை உருவாக்கியுள்ளனர். இதனை உண்மையென நம்பிய, அந்த பாதிக்கப்பட்ட மேலாளர் சிறுகச் சிறுக மொத்தம் ரூ.75 லட்சத்து 25 ஆயிரம் பணத்தை அனுப்பியுள்ளார். </p><h2>சைபர் கிரைம் பிரிவில் புகார்</h2><p>சில நாட்களுக்கு பிறகு லாபத் தொகை எதுவும் வராததால், தனது கணக்கிலிருந்த பணத்தை எடுக்க முயன்றபோது, பணம் எதுவும் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் உடனடியாக சைபர் கிரைம் பிரிவில் ஆன்லைன் மூலம் புகார் அளித்தார். </p><h2>வாலிபர் கைது</h2><p>இந்த புகாரின் பேரில் தூத்துக்குடி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்த மோசடி கும்பலுக்கு உடந்தையாகவும், வங்கி கணக்குகளைச் செயல்படுத்த உதவியாகவும் இருந்த ஏரல் அருகே பள்ளிப்பத்து பகுதியைச் சேர்ந்த அர்ஜூன் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர். </p><h2>வடமாநில நபர்கள் 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு</h2><p>மேலும் இந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF">பண மோசடி</a> வழக்கில் தொடர்புடைய வடமாநிலத்தைச் சேர்ந்த 5 பேரை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை ஆலோசனைக் கூட்டம்: “ஓடும் நீரில் கோலம் போடும் வீண் முயற்சி” – இன்பதுரை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/constituency-redelineation-consultation-meeting-a-futile-attempt-to-cast-a-shadow-on-running-water-inbadurai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/constituency-redelineation-consultation-meeting-a-futile-attempt-to-cast-a-shadow-on-running-water-inbadurai#comments</comments><guid isPermaLink="false">655d33b6-bbbf-4a35-b381-067e41946a8f</guid><pubDate>Sat, 08 Aug 2026 15:10:25 +0000</pubDate><atom:updated>2026-08-08T15:10:25.743Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இன்பதுரை,consultation meeting,ஆலோசனைக் கூட்டம்,admk அ.தி.மு.க.,தொகுதி மறுவரையறை,Constituency redelineation,Inpadurai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/7qrybqb9/inpadurai-mp.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/7qrybqb9/inpadurai-mp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தொகுதி மறுவரையறை ஆலோசனைக் கூட்டம் “ஓடும் நீரில் கோலம் போடும் வீண் முயற்சி” என்று அதிமுக எம்.பி. இன்பதுரை விமர்சித்துள்ளார்.</p><h2>ஆலோசனைக் கூட்டம்</h2><p>தொகுதி மறுவரையறை மசோதாவை விரைவில் மத்திய அரசு தாக்கல் செய்யலாம் என்று பேசப்படும் நிலையில், இதற்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இது தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சி எம்பிக்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு முதல் அமைச்சர் விஜய் அழைப்பு விடுத்திருந்தார். இந்த கூட்டத்தை திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன. இந்நிலையில், இது குறித்து அதிமுக எம்.பி. <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88">இன்பதுரை</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>வீண் முயற்சி</h2><p>உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் வருடா வருடம் தமிழ்நாடு பெற்றுவரும் காவிரி உரிமை நீரை, இந்த ஆண்டு பெற்றுத் தரும் திறன் இல்லாத முதல்-அமைச்சர் விஜய்யால் கூட்டப்பட்ட, தொகுதி மறுவரையறை ஆலோசனைக் கூட்டம்  என்பது ஓடும் நீரில் கோலம் போடும் வீண் முயற்சியாகும். </p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பழனி நில மோசடி வழக்கில் கைதானவர் சிறைக்குள் உயிரிழந்தது ஏன்? - வேல்முருகன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-land-fraud-case-death-in-jail-raises-questions-velmurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-land-fraud-case-death-in-jail-raises-questions-velmurugan#comments</comments><guid isPermaLink="false">5e21320a-2fe6-4fe0-b2e8-bf1f8ffcb5b8</guid><pubDate>Sat, 08 Aug 2026 14:32:54 +0000</pubDate><atom:updated>2026-08-08T14:32:54.670Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பழனி,Question,சிறை,Velmurugan,வேல்முருகன்,நில மோசடி வழக்கு,Prison,கேள்வி,Land fraud case</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/lq9u18xb/velmurugan.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வேல்முருகன்]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/lq9u18xb/velmurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/velmurugan">வேல்முருகன் </a>வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF">பழனி நில மோசடி</a> வழக்கில் கைதானவர் சிறைக்குள் உயிரிழந்தது ஏன்? சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன்? குற்றவாளிகளை காப்பாற்ற நினைப்பது யார்?</p> <h2>சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.</h2><p>பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சொந்தமானதாக கூறப்படும் சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் முறைகேடாகப்பதிவு செய்யப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அன்வர்தீன் மதுரை மத்திய சிறையில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும், பலத்த சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.</p><h2>பொறுப்புடன் அணுக வேண்டும்</h2><p>பெரும் சொத்து முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவர், நீதிமன்ற காவலில் இருந்தபோதே சிறைக்குள் உயிரிழந்திருப்பது சாதாரண நிகழ்வாக கடந்து செல்லக்கூடியதல்ல. இதே வழக்கில் கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த இரு நிகழ்வுகளையும் அரசு மிகுந்த பொறுப்புடன் அணுக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.</p><h2>தீர்மானிக்க முடியாது</h2><p>அன்வர்தீனின் மரணத்திற்கான காரணத்தை விசாரணை முடிவதற்கு முன்பே எவரும் தீர்மானிக்க முடியாது. ஆனால், சிறைக் காவலில் நிகழ்ந்த மரணம் என்பதால், அரசு கூறும் விளக்கம் மட்டுமே இறுதியான உண்மையாக ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.</p><h2>தமிழக அரசின் கடமை</h2><p>மரணத்திற்கு முன்பு அவரது உடல்நிலை எப்படி இருந்தது? சிறையில் அவருக்கு முறையான மருத்துவக் கண்காணிப்பு இருந்ததா? உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டதா? சிறை வளாகத்தின் கண்காணிப்பு காட்சிகள் என்ன சொல்கின்றன? அவருடன் இருந்தவர்கள் யார்? அவரது இறுதி நேரங்களில் நடந்தது என்ன? இந்தக் கேள்விகளுக்கு பொதுமக்களுக்கு தெளிவான பதில் அளிக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.</p><h2>அதிகார சங்கிலி</h2><p>அதேவேளையில், இந்த மரணத்தை மட்டும் முன்னிறுத்தி பழனி கோவில் நில மோசடியின் அடிப்படை குற்றச்சாட்டை மறந்துவிடவும் கூடாது. கோவிலுக்கு சொந்தமானதாக கூறப்படும் பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் எவ்வாறு முறைகேடான ஆவணங்களின் மூலம் கைமாறியது? அதற்கு துணை நின்ற அதிகாரிகள் யார்?</p><p>பத்திரப்பதிவு நடைமுறையில் விதிமீறல்கள் எவ்வாறு நடைபெற்றன? இதன் பின்னணியில் அதிகார மையங்களின் தலையீடு இருந்ததா? ஆவணத்தில் கையெழுத்திட்டவர்களை மட்டும் விசாரிப்பது போதாது. அந்த ஆவணத்தின் பின்னால் இருந்த முழு அதிகார சங்கிலியையும் விசாரணை சென்றடைய வேண்டும்.</p> <h2>வன்மையாக கண்டிக்கிறது</h2><p>சிறை காவலில் இருந்த ஒருவரின் உயிரிழப்பை சுற்றி எழும் சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் அளிக்காமல் இருப்பதையும், கோவில் சொத்து முறைகேட்டின் பின்னணியில் உள்ள பெரிய வலையமைப்பை தொடாமல் இருப்பதையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.</p><h2>பிரேதப்பரிசோதனை அறிக்கை</h2><p>எனவே தமிழக அரசு, அன்வர்தீன் மரணம் குறித்து சுயாதீனமான, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும். பிரேதப்பரிசோதனை அறிக்கையை வெளிப்படையாக வெளியிட வேண்டும். சிறை மருத்துவப் பதிவுகள் மற்றும் கண்காணிப்பு காட்சிகளைப் பாதுகாத்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனின் உடல்நிலை குறித்த முழுமையான மருத்துவத் தகவல்களையும் உரிய முறையில் பதிவு செய்ய வேண்டும்.</p><h2>சட்டப்படி நடவடிக்கை</h2><p>பழனி கோவில் நில முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகள் அனைவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும். அரசியல் அல்லது அதிகார பின்னணி எதுவாக இருந்தாலும், குற்றத்தில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><h2>கொள்ளை பொருள் அல்ல</h2><p>கோவில் சொத்து என்பது தனிநபர்களின் கொள்ளை பொருள் அல்ல. அது மக்களின் நம்பிக்கையால் ஒப்படைக்கப்பட்ட பொதுச்சொத்து. அந்த சொத்தின் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள முறைகேட்டையும், சிறைக் காவலில் நிகழ்ந்துள்ள மரணத்தையும் தனித்தனி சம்பவங்களாக பார்க்காமல், இரண்டின் பின்னணியிலும் உள்ள உண்மையை முழுமையாக வெளிக்கொணர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சாராயம் காய்ச்சி விற்ற 2 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-people-who-sold-liquor-were-jailed-under-the-detention-act</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-people-who-sold-liquor-were-jailed-under-the-detention-act#comments</comments><guid isPermaLink="false">c9193916-5dc3-4597-9af3-4b0b0c812079</guid><pubDate>Sat, 08 Aug 2026 14:26:58 +0000</pubDate><atom:updated>2026-08-08T14:26:58.581Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Thoothukudi,தூத்துக்குடி,arrest,விற்பனை,Sale,imprisonment,சிறையில் அடைப்பு,Liquor,சாராயம்,2 பேர்,2 people,தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டம்,Tamil Nadu Detention Act</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/dm8tf6jb/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 2 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைப்பு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/dm8tf6jb/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டத்தில் சட்ட விரோதமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">சாராயம்</a> காய்ச்சி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88">விற்பனை</a> செய்த வழக்கில் தொடர்புடைய 2 பேர் தமிழ்நாடு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். </p><h2>சாராயம் காய்ச்சிய 2 பேர்</h2><p>தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ வல்லநாடு பகுதியில், சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதற்காக வைத்திருந்த வழக்கில் வடக்கு காரசேரி பகுதியைச் சேர்ந்த காசி மகன் இசக்கிபாண்டி (வயது 42) மற்றும் வல்லநாடு பகுதியைச் சேர்ந்த மனோகரன் மகன் வேல்துரை(27) ஆகிய 2 பேரையும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.</p><h2>தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைப்பு</h2><p>அதைத் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த மேற்சொன்ன 2 பேரின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ்</a> 2 பேரையும் கைது செய்ய தூத்துக்குடி மாவட்டக் எஸ்.பி. பரிந்துரை செய்தார். அதனடிப்படையில் மாவட்ட கலெக்டர் பிறப்பித்த உத்தரவின் பேரில், அந்த 2 பேர் மீதும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, திருநெல்வேலியில் உள்ள பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க.வில் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு பதவிகள்; முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vijay-announces-roles-for-c-vijayabaskar-mr-vijayabaskar-in-tvka</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vijay-announces-roles-for-c-vijayabaskar-mr-vijayabaskar-in-tvka#comments</comments><guid isPermaLink="false">b3e0d632-c009-4a44-8ea9-de8a72130b4f</guid><pubDate>Sat, 08 Aug 2026 14:08:57 +0000</pubDate><atom:updated>2026-08-08T14:08:57.639Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,த.வெ.க.,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/gs3bxd33/tpfap.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/gs3bxd33/tpfap.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>அ.தி.மு.க.வில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்த சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு, <a href="https://www.dailythanthi.com/news/world">முதல்-அமைச்சர் விஜய் </a>கட்சியில் பதவிகளை அறிவித்து உள்ளார்.</p><p>தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களை த.வெ.க. கைப்பற்றியது.  தி.மு.க.வுக்கு 59 இடங்களும், அ.தி.மு.க.வுக்கு 47 இடங்களும், கிடைத்தன.  இதனால், ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.  அப்போது, தி.மு.க. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் (5), விடுதலை சிறுத்தைகள் கட்சி (2), இந்திய கம்யூனிஸ்டு கட்சி (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) ஆகியவற்றின் ஆதரவுடன் த.வெ.க. ஆட்சியமைத்தது.</p> <h2>த.வெ.க.வுக்கு ஆதரவு</h2><p>இதனை தொடர்ந்து, கடந்த மே மாதம் 10-ந் தேதி, தமிழகத்தின் 12-வது முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் பதவி ஏற்றுக்கொண்டார்.  இந்த சூழலில், தமிழக சட்டசபையில் த.வெ.க. அரசு மீது நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், அ.தி.மு.க.வை சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள், த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.</p><p>இதனையடுத்து அவர்களை தகுதிநீக்கம் செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்பு சபாநாயகரிடம் மனு கொடுத்தது. இதற்கிடையே 4 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் ஐக்கியமானார்கள்.  நீண்ட இழுபறிக்கு பின்னர் மற்ற 21 எம்.எல்.ஏ.க்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்தனர்.  இதனால் அவர்கள் மீதான நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமி திரும்ப பெற நடவடிக்கை எடுத்தார். </p> <h2>எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா</h2><p>எனினும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்யபாமா (தாராபுரம்), ஜெயக்குமார் (பெருந்துறை), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), டாக்டர் சி.விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்) ஆகிய 6 பேர், அடுத்தடுத்து தங்களுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தனர்.</p> <h2>முக்கிய பொறுப்புகள்</h2><p>அவர்களுக்கு த.வெ.க.வில் பெரிய அளவில் கட்சி பொறுப்புகள் வழங்கப்படாமல் இருந்தது.  இந்த நிலையில், அவர்களில் சிலருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.  இதன்படி, புதுக்கோட்டை மாவட்ட அமைப்பு செயலாளராக சி.விஜயபாஸ்கர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.  கரூர் மாவட்ட அமைப்பு செயலாளராக எம்.ஆர். விஜயபாஸ்கர், தென்காசி மாவட்ட அமைப்பு செயலாளராக இசக்கி சுப்பையா நியமிக்கப்பட்டு உள்ளனர்.</p><p>இதேபோன்று, மதுராந்தகம் மரகதம் குமரவேலுக்கு துணை பொதுச்செயலாளர் பதவி அளிக்கப்பட்டு உள்ளது.  எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு கூடுதலாக துணை பொதுச்செயலாளர் பதவியும் அளிக்கப்பட்டு உள்ளது.  அவர் இரட்டை பதவிகளை வகிப்பார்.</p><p>இதேபோல், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி.சம்பத், எஸ்.வளர்மதி, எம்.எஸ்.எம்.ஆனந்தன் உள்பட அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பலரும் த.வெ.க.வில் ஐக்கியமானார்கள். முன்னாள் அமைச்சர் பென்ஜமின் தி.மு.க.வில் இணைந்தார். இதுபோக, அ.தி.மு.க.வுக்குள்ளேயே இன்னும் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் அதிருப்தியில் உள்ளனர்.  இதனால், தமிழக அரசியலில் அடுத்தடுத்து திருப்பம் ஏற்பட்டு வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>21 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-till-10-pm-in-21-districts</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-till-10-pm-in-21-districts#comments</comments><guid isPermaLink="false">d7cbf142-bf64-4467-bfab-7f2dd553a7a2</guid><pubDate>Sat, 08 Aug 2026 14:06:11 +0000</pubDate><atom:updated>2026-08-08T14:06:11.425Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு,வானிலை முன்னறிவிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/mqj5i24h/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/mqj5i24h/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுமார் 5.8 கி.மீ. முதல் 7.6 கி.மீ. உயரம் வரை வட கடலோர தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், தர்மபுரி, ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, நீலகிரி, திருவள்ளூர், திருநெல்வேலி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம்; கணவர் தூக்குப்போட்டு தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/angry-over-not-being-given-money-to-drink-alcohol-husband-commits-suicide-by-hanging-himself</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/angry-over-not-being-given-money-to-drink-alcohol-husband-commits-suicide-by-hanging-himself#comments</comments><guid isPermaLink="false">a763a443-facc-4479-9e61-3d75e632398b</guid><pubDate>Sat, 08 Aug 2026 13:51:51 +0000</pubDate><atom:updated>2026-08-08T13:51:51.520Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கணவர்,Thoothukudi,husband,தூத்துக்குடி,தூக்குப்போட்டு தற்கொலை,money,commits suicide by hanging,மதுகுடிக்க பணம் தராததால்,Anger,ஆத்திரம்,Drinking alcohol</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/yngumd7p/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூக்குப்போட்டு தற்கொலை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/yngumd7p/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடியில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95">மது குடிக்க</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D">பணம்</a> தராததால் மனைவியுடன் தகராறு செய்து, வீட்டின் கதவை உட்புறமாக பூட்டிக்கொண்டு வாலிபர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">தூக்குப்போட்டு தற்கொலை</a> செய்து கொண்டார். </p><h2>மது குடிக்க பணம் கேட்டு மனைவியிடம் சண்டை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> முத்துக்கிருஷ்ணாபுரம், அய்யாதுரை காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (வயது 40). வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்த இவர், தீவிர குடிப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அவர் தனது மனைவி முத்துலட்சுமியிடம் மது குடிக்க பணம் கேட்டு சண்டையிட்டுள்ளார். </p><p>அதற்கு மனைவி பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த இசக்கிமுத்து, மனைவியையும் குழந்தைகளையும் வீட்டை விட்டு வெளியே தள்ளிவிட்டு உள்ளே கதவை பூட்டிக் கொண்டார். நீண்ட நேரமாகியும் கணவர் கதவைத் திறக்காததால், முத்துலட்சுமி தனது குழந்தைகளுடன் அருகில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றுவிட்டார். மீண்டும் இன்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோதும் கதவு உட்புறமாகப் பூட்டப்பட்டே இருந்தது. </p><h2>கணவர் தூக்குப்போட்டு தற்கொலை</h2><p>சந்தேகமடைந்து அருகிலிருந்த ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, இசக்கிமுத்து வீட்டில் உள்ள சீலிங் கம்பியில் சேலையால் தூக்குப்போட்டு தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக வீட்டின் பின்பக்க கதவைத் தள்ளி உள்ளே சென்று பார்த்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. </p><p>இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>நியாயமான தொகுதி மறுவரையறை தேவை: கனிமொழி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fair-delimitation-of-constituencies-is-needed-kanimozhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fair-delimitation-of-constituencies-is-needed-kanimozhi#comments</comments><guid isPermaLink="false">37465d75-6a7d-4159-8c45-c18451904e02</guid><pubDate>Sat, 08 Aug 2026 13:51:35 +0000</pubDate><atom:updated>2026-08-08T13:51:35.692Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,Kanimozhi,கனிமொழி எம்பி,தொகுதி மறுவரையறை,Delimitation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/lk37zmnk/kanimozhi.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கனிமொழி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/lk37zmnk/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தொகுதி மறுவரையறை மசோதா குறித்து விவாதிக்க,  முதல் அமைச்சர்  விஜய் இன்று அனைத்துக்கட்சி எம்பிக்களின் கூட்டத்தை கூட்டியிருந்தார். இதில் திமுக பங்கேற்கவில்லை. இந்நிலையில், இது குறித்து பேட்டியளித்துள்ள திமுக எம்பி கனிமொழி நியாயமான தொகுதி மறுவரையறை நடத்த வேண்டும் என திமுக கோரியது என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: தொகுதி மறுவரையறை குறித்து கூட்டம் நடத்தியதற்கான காரணம் தெளிவாக இல்லை தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதே திமுகவின் எண்ணம்.</p><p>பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு, நியாயமான தொகுதி மறுவரையறையை கொண்டுவர வேண்டும் என்பதே திமுகவின் கோரிக்கை. தொகுதி மறுவரையறையை ஆதரிப்பவர்கள் எட்டப்பர்கள் என்று காங்கிரஸ் கூறியிருந்தது. தேர்தல் ரிசல்ட் வந்த பிறகு எட்டப்பர்கள் யார் என்பது தெரிந்தது” என்றார். </p>]]></content:encoded></item><item><title>அம்ரித் பாரத் திட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட பழனி ரெயில் நிலையம் விரைவில் திறப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-railway-station-renovated-under-amrit-bharat-scheme-to-open-soon</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-railway-station-renovated-under-amrit-bharat-scheme-to-open-soon#comments</comments><guid isPermaLink="false">83f3a62c-3677-40ee-8227-7596690c218d</guid><pubDate>Sat, 08 Aug 2026 13:36:10 +0000</pubDate><atom:updated>2026-08-08T13:36:10.753Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பழனி,railway station,ரெயில் நிலையம்,Palani,விரைவில் திறக்கப்படும்,Amrit Bharat scheme,அம்ரித் பாரத் திட்டம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/9sop6pk9/palani-railstation.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/9sop6pk9/palani-railstation.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பழனி,</p><p>பழனி ரெயில்நிலையத்தில் அம்ரித் பாரத் திட்ட பணிகள் நிறைவடைந்துள்ளதால் விரைவில் திறப்பு விழா காண்கிறது.</p><h2>அம்ரித் பாரத் திட்ட பணிகள்</h2><p>பழனி ரெயில்நிலையத்தை 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் புதுப்பித்து நவீனப்படுத்தும் பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதில் ரெயில்நிலைய நடைமேடை, பயணிகள் காத்திருப்பு அறைகள், வாகன நிறுத்தம், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான நகரும் படிக்கட்டு, உணவக வசதி, ரெயில்கள் குறித்த அறிவிப்பு பலகை, நவீன மயமாக்கப்பட்ட வளாகம், கழிப்பறைகள், நுழைவு வாயில் என சுமார் ரூ.20 கோடியில் கட்டுமான பணிகள் நடந்தன. தற்போது 95 சதவீத பணிகள் நிறைவு பெற்றன.</p><p>எனினும் திட்ட பணிகளை பொறியாளர் குழு, அதிகாரிகள் குழுவினர் அவ்வப்போது ஆய்வு செய்து வந்தனர். இதனிடையே புதுப்பிக்கப்பட்ட ரெயில்நிலைய பணிகள் ஏறக்குறைய முடிவடைந்ததால் எப்போது திறக்கப்படும் என்று பயணிகள் எதிர்ப்பார்த்து இருந்தனர். இந்நிலையில் மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா சிறப்பு வசதிகளுடன் கூடிய ரெயிலில் நேற்று இரவு பழனி வந்தார்.</p><h2>கோட்ட மேலாளர் ஆய்வு</h2><p>பின்னர் பழனி ரெயில் நிலையத்தில் நிறைவு பெற்ற 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் நடந்து முடிந்த பணிகளை பார்வையிட்டார். குறிப்பாக நடை மேடைகள், ரெயில்நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்ட பூங்கா, நுழைவு வாயில், கழிப்பிட கட்டிடம் உள்பட அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது முடியும் தருவாயில் உள்ள பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது பொறியாளர்கள் குழுவினர், ரெயில்வே பாதுகாப்பு படையினர் உடனிருந்தனர்.</p><p>இந்த ஆய்வு குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, மதுரை கோட்டத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட <a href="https://www.dailythanthi.com/topic/palani">பழனி</a> உள்பட சில ரெயில்நிலையங்கள் திறக்கப்பட உள்ளன. இதை முன்னிட்டு பணிகள் முழுமை பெற்றதா? என ஆய்வு செய்தார். இந்த ஆய்வு குறித்து தெற்கு ரெயில்வே பொதுமேலாளருக்கு தெரியப்படுத்தி திறப்பு விழாவுக்கான தேதி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு உதவ வேண்டும் - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/need-central-help-to-rescue-tamil-nadu-fishermen-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/need-central-help-to-rescue-tamil-nadu-fishermen-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">ada7d6a9-14b4-4ecd-8570-96d3c49d68ab</guid><pubDate>Sat, 08 Aug 2026 13:14:47 +0000</pubDate><atom:updated>2026-08-08T13:14:47.788Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,தமிழக மீனவர்கள்,மத்திய அரசு,Central Government,Tamilnadu fishermen</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/20prlgq1/nainar-nagendran.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/20prlgq1/nainar-nagendran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">தமிழக மீனவர்களை</a> மீட்க மத்திய அரசு உதவ வேண்டும் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- </p> <h2> 11 மீனவர்கள் கைது</h2><p>கடந்த 5 ஆம் தேதி, வானிலை மாற்றங்களாலும், படகுகளின் என்ஜின்கள் பழுதான காரணத்தினாலும் எதிர்பாரா விதமாக நெடுந்தீவு கடற்பகுதிக்குள் சென்று விட்ட, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது மிகுந்த மன வேதனையளிக்கிறது. </p><h2>கைது நடவடிக்கை</h2><p>தங்களது வாழ்வாதாரத்திற்காக மீன்பிடி தொழிலையே சார்ந்துள்ள அவர்களது குடும்பங்களுக்கு, இந்த கைது நடவடிக்கை கடும் துயரத்தையும் பொருளாதார நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது. </p><h2>இலங்கை கடற்படை</h2><p>எனவே, மீனவ சமுதாயத்தை என்றும் தாயுள்ளத்துடன் அணுகும் நமது மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர், உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி சார்பாக கடிதம் எழுதியுள்ளோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: சாலையோரம் நடந்து சென்ற வடமாநில வாலிபர் கார் மோதி பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-a-northern-state-youth-walking-along-the-road-was-hit-by-a-car-and-died</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-a-northern-state-youth-walking-along-the-road-was-hit-by-a-car-and-died#comments</comments><guid isPermaLink="false">8bdc9237-3b76-4724-8e66-4518ee9cb276</guid><pubDate>Sat, 08 Aug 2026 13:09:55 +0000</pubDate><atom:updated>2026-08-08T13:09:55.888Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Walking,dies,road,சாலை,Car,hit,வடமாநில வாலிபர்,கார் மோதி பலி,northern state youth,நடந்து சென்றவர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/w7aedosy/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வடமாநில வாலிபர் கார் விபத்தில் பலி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/w7aedosy/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> அருகே சாலையில் நடந்து சென்ற போது கார் மோதிய விபத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D">வடமாநில வாலிபர்</a> சம்பவ இடத்திலேயே <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF">பலி</a>யானார். </p><h2>உத்தரப்பிரதேச மாநில வாலிபர்</h2><p>உத்தரப்பிரதேச மாநிலம், பீச்சபூர், அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த மாயராம் மகன் போலநாத் (வயது 30). இவர் தூத்துக்குடி பகுதியில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணியில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு இவர் பணி முடிந்து சாலையின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். </p><h2>கார் மோதி பலி</h2><p>அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த ஒரு கார், போலநாத் மீது மோதியது. இந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">விபத்தில்</a> பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற புதுக்கோட்டை போலீசார், அவரது உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்ற கார் மற்றும் ஓட்டுநர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>அண்ணாமலையார் கோவிலில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/union-home-minister-amit-shah-offers-prayers-at-the-annamalaiyar-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/union-home-minister-amit-shah-offers-prayers-at-the-annamalaiyar-temple#comments</comments><guid isPermaLink="false">22295051-d84c-4d57-afde-0ef23992a326</guid><pubDate>Sat, 08 Aug 2026 12:43:06 +0000</pubDate><atom:updated>2026-08-08T12:43:06.457Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>அமித்ஷா,Amit Shah,அண்ணாமலையார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/i01mv7y5/amit-sha.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமித்ஷா ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/i01mv7y5/amit-sha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p> திருவண்ணாமலை: </p><p>2 நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழகம் வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் அருணாச்சலேசுவரர் அபிஷேக பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் மற்றும் புதுவையில் இன்று மற்றும் நாளை என 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்ட அமித்ஷா, இன்று தனி விமானத்தில் சென்னை வந்தடைந்தார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. </p> <p>இதையடுத்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவண்ணாமலை புறப்பட்டார். மாலை 5 மணியளவில் அவர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் வந்தடைந்தார். திருவண்ணாமலை அரசு கலை கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டு இருந்த ஹெலிபேடில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். பின்னர் அங்கிருந்து கார் மூலமாக ரமண மகரிஷி ஆசிரமம் வந்தடைந்தார்.  </p><p>ரமண மகரிஷி ஆசிரமத்தில் நடைபெற்ற பூஜையில் அமித்ஷா கலந்துகொண்டார். இதன்பின்ன மாலை 5.40 மணியளவில் அருணாச்சலேசுவரர் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலில் நடைபெற்ற அபிஷேக பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். இதையொட்டி கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.</p> ]]></content:encoded></item><item><title>தபால் அலுவலகங்களில் தேசியக் கொடி விற்பனை: சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sale-of-national-flags-at-post-offices-special-arrangements-made-on-the-occasion-of-independence-day</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sale-of-national-flags-at-post-offices-special-arrangements-made-on-the-occasion-of-independence-day#comments</comments><guid isPermaLink="false">ce2a40f9-b755-4ecd-b1d9-7c636e9ff05f</guid><pubDate>Sat, 08 Aug 2026 12:35:29 +0000</pubDate><atom:updated>2026-08-08T12:35:29.933Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,விற்பனை,Indian national flag,சுதந்திர தினம்,Independence Day,sales,தபால் அலுவலகங்கள்,Post Offices,சிறப்பு ஏற்பாடு,இந்திய தேசியக் கொடி,Special arrangement</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/a9yglfig/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தபால் அலுவலகங்களில் தேசியக் கொடி விற்பனை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/a9yglfig/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>இந்திய நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">தபால் அலுவலகங்களில்</a> தேசியக் கொடி விற்பனை செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. </p><p>தூத்துக்குடி அஞ்சல் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>இந்திய நாட்டின் 80-வது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE">சுதந்திர தின விழா</a> வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு தபால் அலுவலகங்களில் தேசியக் கொடி விற்பனை நடைபெற்று வருகிறது. </p><h2>ஒரு தேசியக் கொடியின் விலை ரூ.25</h2><p>ஒரு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF">தேசியக் கொடி</a>யின் விலை ரூ.25 ஆகும். பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும், அரசு மற்றும் தனியார் துறை அலுவலர்களும், வணிகர்களும் எளிதாக மூவர்ணக்கொடியை வாங்கி பயன் பெறும் வகையில் கிராமப்புற தபால் அலுவலகங்கள் உள்பட அனைத்து தபால் அலுவலகங்களிலும் செய்யப்பட்டுள்ள இந்த சிறப்பு ஏற்பாட்டை அனைவரும் பயன்படுத்தி கொள்ளலாம். </p><h2>தபால் அலுவலகங்களில் சிறப்பு ஏற்பாடு</h2><p>கிராமப்புற தபால் அலுவலகங்கள் உள்பட தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும் ஒரு தேசியக் கொடி ரூ.25 என்ற விலையில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88">விற்பனை</a> செய்யப்படுகிறது. தேசியக் கொடிகளுக்கான மொத்தத் தேவை ஏதேனும் இருப்பின், 9841875710, 9791655030 என்ற தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ளலாம். </p><p>எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த சிறப்பு ஏற்பாட்டைப் பயன்படுத்தி தேசியக் கொடிகளை வாங்கி தங்கள் வீடுகளிலும், அலுவலகங்களிலும் ஏற்றி சுதந்திர தினத்தைக் கொண்டாடுங்கள். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>செம்மஞ்சேரி முதல் பக்கிங்ஹாம் கால்வாய் வரை மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி ஆணையர் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-corporation-commissioner-inspects-stormwater-drainage-works-from-chemmancherry-to-buckingham-canal</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-corporation-commissioner-inspects-stormwater-drainage-works-from-chemmancherry-to-buckingham-canal#comments</comments><guid isPermaLink="false">c147f96d-fab6-4fe6-b9de-76684d273498</guid><pubDate>Sat, 08 Aug 2026 12:29:07 +0000</pubDate><atom:updated>2026-08-08T12:29:07.839Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Corporation,சென்னை மாநகராட்சி,மழைநீர் வடிகால் பணிகள்,Rainwater Drainage Works,Commissioner inspection,ஆணையர் ஆய்வு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/h332z859/81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/h332z859/81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>செம்மஞ்சேரி முதல் பக்கிங்ஹாம் கால்வாய் வரை மழைநீர் வடிகால் பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார். </p><p>இது குறித்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">சென்னை மாநகராட்சி </a>வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>பெருநகர சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர் மண்டலத்தில் செம்மஞ்சேரியில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுக்க KfW நிதியின் கீழ், செம்மஞ்சேரி-அரசன் கழனி கால்வாயிலிருந்து பக்கிங்ஹாம் கால்வாய் வரை ரூ.184.88 கோடி மதிப்பீட்டில் 4,235 மீட்டர் நீளத்தில் OMR மற்றும் TNHB பிரதான சாலை வழியாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.</p><h2>மழைநீர் வடிகால் பணி</h2><p>செம்மஞ்சேரி-அரசன் கழனி கால்வாயிலிருந்து பக்கிங்ஹாம் கால்வாய் வரை ரூ.184.88 கோடி மதிப்பீட்டில் 4,235 மீட்டர் நீளத்தில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணியின் ஒரு பகுதியாக, நூக்கம்பாளையம் இணைப்புச் சாலை மற்றும் டி.என்.எச்.பி “ஏ” சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி. எஸ். சமீரன், ஐ.ஏ.எஸ்.,  இன்று (08.08.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணியினை செப்டம்பர் மாத இறுதிக்குள் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><h2>நவீன ஒப்பனை அறை</h2><p>இதனைத் தொடர்ந்து, சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஈ.சி.ஆர். ப. சரவணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி. எஸ். சமீரன், ஐ.ஏ.எஸ்., ஆகியோர் சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-192க்குட்பட்ட நீலாங்கரை கடற்கரைப் பகுதியில் பொது-தனியார் பங்களிப்புடன் புதிதாக கட்டப்பட்ட நவீன ஒப்பனை அறையினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்துப் பார்வையிட்டனர். இந்த நவீன கழிப்பறையில் ஆண்களுக்கான 4 கழிப்பறை இருக்கைகளும், பெண்களுக்கான 4 கழிப்பறை இருக்கைகளும், மாற்றுத்திறனாளிகளுக்கான 1 கழிப்பறை இருக்கையும் அமைக்கப்பட்டுள்ளது.</p><p>தொடர்ச்சியாக, சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர், மாநகராட்சி ஆணையாளர், நீலாங்கரை கடற்கரைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், ஆணையாளர் நீலாங்கரை சாலையில் உள்ள சாலை மையத்தடுப்பில் பசுமைப் பரப்பினை அதிகரிக்கும் வகையில் நடப்பட்டுள்ள செடிகளைப் பார்வையிட்டு, தொடர்ந்து பசுமையாக பராமரித்திட நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வுகளின் போது, தலைமைப் பொறியாளர் (மழைநீர் வடிகால்) டி.ஞானவேல், மேற்பார்வைப் பொறியாளர் (மழைநீர் வடிகால்) ஆர்.ஏ.பிரபாகர், மண்டல அலுவலர் ஜி.லோகேஸ்வரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பயிர்க்கடன் தள்ளுபடி, மேகதாது விவகாரம்: த.வெ.க. அரசைக் கண்டித்து 14-ந்தேதி ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/farm-loan-waiver-mekedatu-issue-aiadmk-protest-august-14-edappadi-palaniswami</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/farm-loan-waiver-mekedatu-issue-aiadmk-protest-august-14-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">722705fd-0992-4230-a7c6-6d118bd495d5</guid><pubDate>Sat, 08 Aug 2026 12:25:02 +0000</pubDate><atom:updated>2026-08-08T12:25:02.432Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,எடப்பாடி பழனிசாமி,அதிமுக,Edappadi Palaniswami,protest,ஆர்ப்பாட்டம்,Crop loan,மேகதாது விவகாரம்,பயிர்க்கடன் தள்ளுபடி,Mekedatu Dam Issue,தவெக அரசு,TVK Government</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/owgign8l/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/owgign8l/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் வஞ்சித்து வருவதோடு; மேகதாது பிரச்சனையில் மெத்தனம் காட்டி வரும் த.வெ.க. அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும் வருகிற 14-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>2026, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, த.வெ.க. தனது தேர்தல் அறிக்கையில் ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும்; 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும்" என்று அறிவித்திருந்த நிலையில், ஆட்சிக்கு வந்த த.வெ.க. அரசு குறு, சிறு விவசாயிகள் ரூ.75,000 வரை பயிர்க்கடன் பெற்றிருந்தால் அவை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும்; ரூ.75,000-க்குமேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ. 35,000/- மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும், விவசாயிகளை தரம் பிரித்து ஒரு பகுதி கடனை தள்ளுபடி செய்து அறிவித்தது. இது, தமிழக விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>மேலும், கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முழு வேகத்துடன் முயற்சிகள் மேற்கொண்டு, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முடக்கப் பார்க்கிறது.</p><p>மேற்கண்டவாறு, பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமலும்; மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் செயலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமலும் மெத்தனப் போக்கோடு இருந்து வரும் த.வெ.க. கூட்டணி அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் சார்பிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.</p><p>த.வெ.க. அரசு சட்டமன்றத்தில் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும்போது, விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை இந்த அரசு வெளியிட வேண்டும் என்றும்; அப்படி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்றால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்றும், ஏற்கெனவே நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன். இந்நிலையில், த.வெ.க. கூட்டணி அரசு 6.8.2026 அன்று தாக்கல் செய்துள்ள வேளாண் நிதிநிலை அறிக்கையில், பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கவில்லை.</p><p>எனவே, விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் அவர்களை வஞ்சித்து வருவதோடு; மேகதாது பிரச்சனையில் மெத்தனம் காட்டி வரும் த.வெ.க. அரசைக் கண்டித்தும், காவிரியில் நமக்குரிய பங்கு நீரை உரிய முறையில் பெறுவதற்கு முயற்சி எடுக்காத த.வெ.க. பொய்க்கால் குதிரை அரசைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், வருகின்ற 14.8.2026 - வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில், தமிழகம் முழுவதும் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.</p><p>தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நான் தலைமையேற்க உள்ளேன். சென்னை மாவட்டம் நீங்கலாக, ஏனைய வருவாய் மாவட்டங்களில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களுக்குத் தலைமையேற்போர் பட்டியல் இத்துடன் வெளியிடப்படுகிறது.</p><p>சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதிக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், கழக சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகள், சார்பு அமைப்புகளின் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், கிளை, வார்டு, வட்டக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>விவசாயிகள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட, கழக அமைப்பு ரீதியான மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஒன்றிணைந்து, இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களை மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து நடத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>விஜய் தலைமையில் நடந்த எம்.பிக்கள் கூட்டத்தில் பேசப்பட்டது என்ன? திருமாவளவன் பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-was-discussed-at-the-meeting-of-mps-led-by-vijay-thirumavalavan-speaks-to-the-press</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-was-discussed-at-the-meeting-of-mps-led-by-vijay-thirumavalavan-speaks-to-the-press#comments</comments><guid isPermaLink="false">e49cde3d-9e97-4cdd-bfe1-0f3d29cc13c4</guid><pubDate>Sat, 08 Aug 2026 12:10:57 +0000</pubDate><atom:updated>2026-08-08T12:10:57.421Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,திருமாவளவன்,Thirumavalavan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/h8uzc0ki/Thirumalvanv.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருமாவளவன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/h8uzc0ki/Thirumalvanv.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தொகுதி மறுவரையறை மசோதாவை விரைவில் மத்திய அரசு தாக்கல் செய்யலாம் என்று பேசப்படும் நிலையில், இதற்கு   தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.  இது தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சி எம்பிக்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு முதல் அமைச்சர்  விஜய் அழைப்பு விடுத்திருந்தார்.இந்த கூட்டத்தை திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன.  சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் முதல் அமைச்சர்  விஜய் தலைமையில் அனைத்துக் கட்சி எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. </p><p> இந்தக் கூட்டத்தில், தவெகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், மதிமுகவைச் சேர்ந்த  எம்பிக்கள் 19 பேர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியின் எம்பி சுதா, கர்நாடகாவில் கட்சி கூட்டத்தில் பங்கேற்றிருப்பதால், இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை எனத் சுதெரிவித்துள்ளார். </p><p>சுமார் 2 மணி நேரம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தொகுதி மறுவரையறையை கைவிட வேண்டும். தொகுதிகளின் எண்ணிக்கை தற்போதைய அளவிலேயே தொடர வேண்டும். அதாவது 543 ஆகவே தொடர வேண்டும். எம்பிக்கள் அனைவரும் ஒரே குரலில் வலியுறுத்தினோம்” என்றார். மாணிக்கம் தாகூர் கூருகையில், தொகுதி மறுவரையறை தமிழகத்தை பாதிக்கும். இது பாஜக, ஆர்.எஸ்.எஸ்சின் சதி” என்றார்.</p>]]></content:encoded></item><item><title>பிளஸ்-2 மாணவி தீக்குளித்து தற்கொலை - போலீசார் விசாரணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/plus-2-student-immolates-self-police-investigate</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/plus-2-student-immolates-self-police-investigate#comments</comments><guid isPermaLink="false">0f1873c0-4003-4e3e-80bb-a885c34075cb</guid><pubDate>Sat, 08 Aug 2026 11:56:41 +0000</pubDate><atom:updated>2026-08-08T11:56:41.221Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Cuddalore,கடலூர்,தற்கொலை,திட்டக்குடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/douolg5s/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/douolg5s/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர்,</p><p>பிளஸ்-2 மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவருடைய சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>பிளஸ்-2 மாணவி</h2><p>கடலூர் மாவட்டம் திட்டக்குடி கோழியூர் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் மகள் துர்கா (16 வயது). திட்டக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் துர்கா, நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று குளித்துவிட்டு வருவதாக பெற்றோரிடம் கூறிச் சென்றார். பின்னர் அவர், நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.</p><h2>தீக்குளித்து தற்கொலை</h2><p>இதனால் பெற்றோர், உறவினர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, உடல் கருகிய நிலையில் துர்கா இறந்து கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து திட்டக்குடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து துர்காவின் உடலை பார்வையிட்டனர். அப்போது துர்கா உறவினர் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தன்மீது ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.</p><h2>சோகம்</h2><p>இதையடுத்து போலீசார், துர்காவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து துர்கா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item></channel></rss>