<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 09 Sep 2026 02:18:02 +0000</lastBuildDate><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் இன்று மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-today-3</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-today-3#comments</comments><guid isPermaLink="false">667e3b79-a6e2-4919-be06-f225f898875c</guid><pubDate>Wed, 09 Sep 2026 02:16:48 +0000</pubDate><atom:updated>2026-09-09T02:16:48.159Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,monthly maintenance work,power outage,தென்காசி,மாதாந்திர பராமரிப்பு பணி,மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/74i7zgc7/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/74i7zgc7/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p>திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF">தென்காசி</a> மாவட்டத்தில் சங்கரன்கோவில், தென்காசி, திருநெல்வேலி கிராமப்புறம், கடையநல்லூர் ஆகிய கோட்டங்களுக்கு உட்பட்ட துணைமின் நிலையங்களில் இன்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் காரணமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> செய்யப்படும். </p><h2>சங்கரன்கோவில் கோட்டம்</h2><p>சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>சங்கரன்கோவில், பெருமாள்பட்டி துணைமின் நிலையங்களில் இன்று (9.9.2026, புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. </p><h2>காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை</h2><p>இதன் காரணமாக இன்றைய தினம் சங்கரன்கோவில் நகர்பகுதி, என்.ஜி.ஓ.காலனி, களப்பாகுளம், புளியம்பட்டி, வாடிக்கோட்டை, பெரியூர். மணலூர், பெரும்பத்தூர், ராமலிங்கபுரம், வடக்குபுதூர், நகரம் முள்ளிகுளம், சீவலராயனேந்தல், பெருங்கோட்டுர், அழகாபுரி ஆகிய ஊர்களுக்கும், பெருமாள்பட்டி, மாங்குடி, இனாம்கோவில்பட்டி, அருகன்குளம்புதூர், செந்தட்டியாபுரம். </p><p>எட்டிச்சேரி, தென்மலை, அ.சுப்பிரமணியாபுரம், இடையான்குளம், முறம்பு, ஆசிலாபுரம், கூனங்குளம், பருவக்குடி, பந்தபுளி, பி.ரெட்டியாபட்டி, தெற்கு வெங்காநல்லுார், சோலைச்சேரி, வேலாயுதபுரம் ஆகிய ஊர்களுக்கும் மின்விநியோகம் தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p><h2>தென்காசி கோட்டம்</h2><p>தென்காசி கோட்ட செயற்பொறியாளர் ஸ்ரீவனஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>தென்காசி, செங்கோட்டை, சுரண்டை மற்றும் சாம்பவர்வடகரை துணைமின் நிலையங்களில் இன்று (9.9.2026, புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. </p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>அதன்படி தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜர்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூர், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தாளம் பாறை, திரவியநகர், ராமச்சந்திரபட்டணம், மேலமெஞ்ஞானபுரம், செங்கோட்டை, கணக்கப்பிள்ளைவலசை, பெரியபிள்ளைவலசை, பிரானூர், வல்லம், கற்குடி, புளியரை, தெற்குமேடு, பூலாங்குடியிருப்பு, கட்டளைகுடியிருப்பு, சுரண்டை, இடையர்தவணை, குலையனேரி, இரட்டைக்குளம், சுந்தரபாண்டியபுரம், பாட்டாக்குறிச்சி, வாடியூர், ஆனைக்குளம், கரையாளனூர், அச்சங்குன்றம், சாம்பவர்வடகரை, சின்னத்தம்பிநாடானூர், பொய்கை, கோவிலாண்டனூர், கள்ளம்புளி, M.C.பொய்கை, துரைச்சாமிபுரம் ஆகிய இடங்களில் இன்று மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p><h2>திருநெல்வேலி கிராமப்புற கோட்டம்</h2><p>திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>ஊத்துமலை, ஆலங்குளம் மற்றும் கீழப்பாவூர் துணைமின் நிலையங்களில் இன்று (9.9.2026, புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. </p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>அதன்படி ஊத்துமலை, கீழக்கலங்கல், குறிஞ்சான்குளம், மேலமருதப்பப்புரம், சோலைசேரி, கருவந்தா, அமுதாபுரம், மாவிலியூத்து, கல்லத்திக்குளம், கங்கணாங்கிணறு, ருக்குமணியம்மாள்புரம். </p><p>ஆலங்குளம், ஆண்டிபட்டி, நல்லூர், சிவலார்குளம், ஆண்டிபட்டி, ஐந்தான்கட்டளை, துத்திக்குளம், கல்லூத்து, குருவன்கோட்டை. </p><p>குறிப்பின்குளம், அத்தியூத்து, குத்தபாஞ்சான், மாயமான்குறிச்சி, கழநீர்குளம், அடைக்கலப்பட்டிணம், பூலான்குளம், முத்துகிருஷ்னபேரி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p><h2>கடையநல்லூர் கோட்டம்</h2><p>கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பகவிநாயகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>நாரணாபுரம் துணைமின் நிலையத்தில் இன்று (9.9.2026, புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பின்வருமாறு குறிப்பிட்டுள்ள நேரத்தில் மின்விநியோகம் பின்வரும் இடங்களில் இருக்காது. </p><h2>காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை</h2><p>தரணிநகர், வாசுதேவநல்லூர், சங்கனாப்பேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம், கீழப்புதூர், நெல்கட்டும்சேவல், சுப்ரமணியபுரம், உள்ளார், வெள்ளானைகோட்டை, மலையடிக்குறிச்சி மற்றும் தாருகாபுரம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இதேபோல் புளியங்குடி மற்றும் வீரசிகாமணி துணைமின் நிலையங்களில் இன்று (9.9.2026, புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பின்வருமாறு குறிப்பிட்டுள்ள நேரத்தில் மின்விநியோகம் பின்வரும் இடங்களில் இருக்காது. </p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>புளியங்குடி, சிந்தாமணி, அய்யாபுரம், ராஜகோபாலபேரி, ரத்தினபுரி, இந்திராநகர், புன்னையாபுரம், காடுவெட்டி, சிங்கிலிபட்டி, சங்கனாப்பேரி, சிதம்பரபேரி, சுந்தரேசபுரம், திருவேட்டநல்லூர், சொக்கம்பட்டி, திரிகூடபுரம், மேலபுளியங்குடி, முள்ளிகுளம், தலைவன்கோட்டை, துரைசாமியாபுரம், நகரம், மலையடிகுறிச்சி மற்றும் வெள்ளகவுண்டன்பட்டி. </p><p>வீரசிகாமணி, பட்டாடைகட்டி, அருணாச்சலபுரம், அரியநாயகிபுரம், பாம்புகோயில், வென்றிலிங்கபுரம், திருவேட்டநல்லூர், திருமலாபுரம், வடநத்தம்பட்டி, சேர்ந்தமரம் மற்றும் நடுவக்குறிச்சி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இதேபோல் கடையநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட கடையநல்லூர் துணைமின் நிலைய பகுதிகளில் இன்று (9.9.2026, புதன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது. அதன்படி கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், பேட்டை, மாவடிக்கால், குமந்தாபுரம், முத்துச்சாமிபுரம், வலசை, கருப்பாநதி, தார்க்காடு, போகநல்லூர், கண்மணியாபுரம், பாலஅருணாச்சலபுரம், கம்பனேரி, மங்களபுரம், அச்சம்பட்டி,  பொய்கை, ஊர்மேல்அழகியான், வேலாயுதபுரம், இடைகால், சிவராம்பேட்டை கொடிக்குறிச்சி மற்றும் நயினாரகரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்று த.வெ.க. ஆதரவு கட்சிகள் கூட்டம்: கம்யூனிஸ்டு கட்சிகள் புறக்கணிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/meeting-of-parties-supporting-tvk-in-chennai-today-communist-parties-stay-away</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/meeting-of-parties-supporting-tvk-in-chennai-today-communist-parties-stay-away#comments</comments><guid isPermaLink="false">bf67c47a-9087-4676-a8b5-0bb027095e1b</guid><pubDate>Wed, 09 Sep 2026 02:09:33 +0000</pubDate><atom:updated>2026-09-09T02:09:33.812Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,த.வெ.க,கம்யூனிஸ்டு கட்சிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/hillhjpx/Chennai-tvk.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/hillhjpx/Chennai-tvk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஆதரவு கட்சிகள்</p><p>த.வெ.க. தலைமையில் புதிய கூட்டணியை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதற்கான முதல் ஆலோசனை கூட்டம் கடந்த ஜூலை 1-ந்தேதி சென்னை கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் நடந்தது. அந்த கூட்டத்தில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் பங்கேற்றது. வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து வருவதால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆகியவை இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.</p> <h2>2-ம் கட்ட ஆலோசனை</h2><p>இந்த நிலையில், த.வெ.க. ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்த கட்சிகளின் 2-ம் கட்ட ஆலோசனை கூட்டம் இன்று நடக்கிறது. சென்னையை அடுத்த பனையூரில் உள்ள த.வெ.க. கட்சி தலைமை அலுவலகத்தில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் மாலை 4 மணிக்கு இக்கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ள ஏற்கனவே காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆகியவற்றுக்கு த.வெ.க.வின் மூத்த நிர்வாகிகளும், அமைச்சர்களுமான ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் ஆகியோர் நேரில் அழைப்பு விடுத்திருந்தனர். </p><p>இன்று நடைபெறும் கூட்டத்தில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் பங்கேற்க இருக்கிறது. இந்த கூட்டத்தில் கூட்டணிக்கு பெயர் வைக்கப்படுகிறது. இதேபோல கூட்டணிக்கான தலைவராக முதல்-அமைச்சர் விஜய் தேர்வு செய்யப்பட இருக்கிறார். மேலும், ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் உருவாக்கப்பட்டு அதற்கென ஆட்களும் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>பிளஸ்-2 மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த ரவுடிக்கு தூக்கு தண்டனை: 2 பேருக்கு சிறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rowdy-who-gang-raped-a-plus-2-student-gets-death-sentence-2-get-jail</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rowdy-who-gang-raped-a-plus-2-student-gets-death-sentence-2-get-jail#comments</comments><guid isPermaLink="false">82330de6-000b-438f-9241-2a2fd4b7b50a</guid><pubDate>Wed, 09 Sep 2026 02:05:07 +0000</pubDate><atom:updated>2026-09-09T02:05:07.840Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,plus-2 student,பிளஸ்-2 மாணவி,death sentence,தூக்கு தண்டனை,சிறை தண்டனை,Prison sentence,Rowdy,ரவுடி,Gang rape,கூட்டு பாலியல் பலாத்காரம்,2 பேர்,2 people</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/1jdnyib7/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சின்னக்குட்டி, ஜெயில் தண்டனை பெற்ற முருகேசன், முனீஸ்வரன்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/1jdnyib7/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>நிர்வாண <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">படம்</a> எடுத்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF">மிரட்டி</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-2-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF">பிளஸ்-2 மாணவி</a>யை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">கூட்டு பாலியல் பலாத்காரம்</a> செய்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">ரவுடி</a>க்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">தூக்கு தண்டனை </a>விதிக்கப்பட்டது. மேலும் அவரது கூட்டாளி உள்பட 2 பேருக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">சிறை தண்டனை</a> வழங்கி நெல்லை சிறப்பு கோர்ட்டு அதிரடி தீர்ப்பளித்துள்ளது. </p><h2>பிளஸ்-2 மாணவி</h2><p>நெல்லையில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெள்ளை அடிக்கும் பணி நடந்தது. இந்த பணியில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த முனீஸ்வரன் (வயது 26) உள்ளிட்ட சிலர் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஒருவருக்கும், முனீஸ்வரனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. </p><h2>நிர்வாணமாக படம் எடுத்தனர்</h2><p>இது நாளடைவில் காதலாக மாறியது. அவர் அந்த மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார். கடந்த 10.10.2022 அன்று மாணவியை முனீஸ்வரன் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு பாளையங்கோட்டை வீரராகவபுரத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு அவர் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். அப்போது அங்கு 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் அந்த மாணவி நிர்வாணமாக இருந்ததை தங்களது செல்போனில் படம் எடுத்தனர். </p><h2>கூட்டு பலாத்காரம்</h2><p>இந்த புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக முனீஸ்வரனையும், அந்த மாணவியையும் மிரட்டினர். தொடர்ந்து மாணவியை கட்டாயப்படுத்தி 2 பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். </p><h2>3 பேர் அதிரடி கைது</h2><p>விசாரணையில், மாணவியை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது நெல்லை கொக்கிரகுளம் கீழவீரராகவபுரத்தை சேர்ந்த சின்னக்குட்டி(28), முருகேசன்(23) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேர் மற்றும் மாணவியை ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்ற முனீஸ்வரன் ஆகிய 3 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதில் சின்னக்குட்டி, முருகேசன் ஆகியோரை மேலப்பாளையம் போலீசார் ரவுடி பட்டியலில் சேர்த்து கண்காணித்து வந்தனர். </p><h2>தூக்கு தண்டனை</h2><p>இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், குற்றம் சாட்டப்பட்ட சின்னக்குட்டி, முருகேசன், முனீஸ்வரன் ஆகியோர் குற்றவாளிகள் என கடந்த வாரம் தீர்ப்பளித்தார். அவர்களுக்கான தண்டனை விவரம் 8-ந்தேதி (அதாவது நேற்று) அறிவிக்கப்படும் என தெரிவித்து இருந்தார். நேற்று காலையில் 3 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் அதிரடி தீர்ப்பு கூறினார். அதில் மாணவியை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்த சின்னக்குட்டிக்கு தூக்கு தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும் விதித்தார். அதேபோல் அவரது கூட்டாளியான முருகேசனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் மற்றும் முனீஸ்வரனுக்கு 13 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். </p><h2>இதுவரை 10 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கிய நீதிபதி</h2><p>நீதிபதி சுரேஷ்குமார் இதுவரை 10 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளார். அதாவது போக்சோ கோர்ட்டில் மட்டும் சிறுமிகளை பலாத்காரம் செய்த வழக்கில் 4 பேருக்கும், மகளை கர்ப்பமாக்கிய தந்தை என 5 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்துள்ளார். இதுதவிர 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் 3 பேர் கொலை வழக்கில் 4 பேருக்கும், மற்றொரு கொலை வழக்கில் ஒருவருக்கும் என மொத்தம் 10 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து அவர் அதிரடி தீர்ப்பளித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் காற்றாலை மாநாடு: 3 நாட்கள் நடக்கிறது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wind-energy-conference-in-chennai-a-3-day-event</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wind-energy-conference-in-chennai-a-3-day-event#comments</comments><guid isPermaLink="false">62e6f19e-b74b-436e-94d9-82f78cf0f73a</guid><pubDate>Wed, 09 Sep 2026 02:00:22 +0000</pubDate><atom:updated>2026-09-09T02:00:22.388Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,காற்றாலை,காற்றாலை மின்சாரம்,Wind Powers</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/phtq3wkz/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/phtq3wkz/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாட்டின் முதன்மையான காற்றாலை மின்சார வர்த்தக கண்காட்சி மற்றும் விண்டர்ஜி இந்தியா மாநாடான 2026 அக்டோபர் 7-ம் தேதி முதல், 9-ம் தேதி வரை சென்னை வர்த்தக மையத்தில் நடக்கிறது." என, ஐ.டபிள்யூ. டி.எம்.ஏ. எனப்படும் இந்திய காற்றாலை மின்சாதன உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p><strong>இதுகுறித்து சென்னையில் அதன் துணை தலைவர் சரவணன் மாணிக்கம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-</strong></p><p>இந்தியாவின் காற்றாலை மின்நிலைய நிறுவுதிறன் கடந்த ஐந்து ஆண்டுகளில் வேகமாக வளர்ச்சி கண்டு 58 ஜிகா வாட்டை எட்டியுள்ளது. வரும், 2030-க்குள், 100 ஜிகாவாட் என்ற இலக்கை எட்டுவதற்கு தீவிர கவனம் செலுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக 'விண்டர்ஜி மாநாடு 2026' சென்னை வர்த்தக மையத்தில் வரும் அக்டோபர் 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடக்கிறது.</p><p>இதில் 350 காட்சி மற்றும் மேற்பட்ட கண் அரங்குகள் 30-க்கும் நாடுகளின், 400-க்கும் அதிகமான பிரதிநிதிகள், 20,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்க உள்ளனர். பழைய காற்றாலைகளை புதுப்பிக்கும் திட்டம் வாயிலாக தமிழகத்திற்கு புதிய முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. நாடு முழுதும் மேம்படுத்தப்பட வேண்டிய 25.40 ஜிகா வாட் பழைய காற்றாலைகளில், தமிழகத்தில், 7.40 ஜிகா வாட் காற்றாலைகள் அடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>2026-ன் முதல் பாதியில் அதிக ஏற்றுமதி செய்த இந்திய மாநிலங்கள்: 3-வது இடத்தில் தமிழ்நாடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/indian-states-with-the-highest-exports-in-the-first-half-of-2026-tamil-nadu-ranks-third</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/indian-states-with-the-highest-exports-in-the-first-half-of-2026-tamil-nadu-ranks-third#comments</comments><guid isPermaLink="false">e4613f19-7096-47d2-8209-c65eafc8dcde</guid><pubDate>Wed, 09 Sep 2026 01:45:03 +0000</pubDate><atom:updated>2026-09-09T01:45:03.766Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,இந்தியா,India,Tamil Nadu,ஏற்றுமதி,export</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/x5d35a8i/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/x5d35a8i/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>இந்தியாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு பெட்ரோலிய பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், பொறியியல் பொருட்கள், மருந்துகள் மற்றும் ஜவுளி தயாரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட நாடுகள் இந்திய ஏற்றுமதிக்கான முன்னணி சந்தைகளாக உள்ளன. </p><p>இதனிடையே மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் சூழல் மற்றும் சர்வதேச அரசியல் நெருக்கடிகள் காரணமாக ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது. இருப்பினும், சவாலான சூழலுக்கு மத்தியில் 2026-ம் ஆண்டின் முதல் பாதியில் பல்வேறு இந்திய மாநிலங்கள் அதிக ஏற்றுமதியை செய்துள்ளன. </p><p>இதில் குஜராத் மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. 2026-ம் ஆண்டின் முதல் 6 மாதங்களில்(ஜனவரி முதல் ஜூன் வரை) குஜராத் மாநிலம் 6,02,978 ரூபாய்க்கு ஏற்றுமதி செய்துள்ளது. அடுத்ததாக மராட்டிய மாநிலம் 3,41,297 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்துள்ளது. </p><p>தொடர்ந்து 2,98,109 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்து, தமிழ்நாடு மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இது நம் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 13.46 சதவீதமாகும். இதையடுத்து நான்காம் இடத்தில் கர்நாடகா, ஐந்தாம் இடத்தில் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. </p> ]]></content:encoded></item><item><title>

கோயம்பேட்டில் துணை நடிகருக்கு கத்தி வெட்டு- வீடு புகுந்து மர்ம நபர்கள் துணிகரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/supporting-actor-slashed-with-a-knife-in-koyambedu-unidentified-individuals-brazenly-barged-into-his-home</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/supporting-actor-slashed-with-a-knife-in-koyambedu-unidentified-individuals-brazenly-barged-into-his-home#comments</comments><guid isPermaLink="false">57a4e1ba-68da-42e3-bd48-7881f8f9f175</guid><pubDate>Wed, 09 Sep 2026 01:26:39 +0000</pubDate><atom:updated>2026-09-09T01:26:39.505Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Koyambedu,கோயம்பேடு,மர்ம நபர்கள்,துணை நடிகர்,actor,கத்தி வெட்டு,slashed with a knife</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/v4mlrzm0/z-1-b.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/v4mlrzm0/z-1-b.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கோயம்பேட்டில் வீடு புகுந்து திரைப்பட துணை நடிகரை கத்தியால் 2 மர்ம நபர்கள் வெட்டிவிட்டு தப்பி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p> <h2>வீடு புகுந்து வெட்டு</h2><p>சென்னை கோயம்பேடு, மெட்டுக்குப்பம், கோவர்த்தன் நகரைச் சேர்ந்தவர் ஆண்டனி தாமஸ் (வயது 35). திரைப்பட எழுத்தாளராகவும், பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகராகவும் நடித்து வருகிறார். இவரது தாயார் புஷ்பலதா, டி.வி.தொடர்களில் துணை நடிகையாக நடித்து வரு கிறார்.</p><p>இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ஆண்டனி தாமஸ் வீட்டில் இருந்தபோது, அடையாளம் தெரியாத 2 பேர் கத்தியுடன் வீட்டுக்குள் புகுந்தனர். அவர்கள் ஆண்டனி தாமசின் தலையில் கத்தியால் வெட்டி விட்டு, 'நாளை கோர்ட்டுக்கு வரக்கூடாது. போலீசில் அளித்த புகாரை திரும்பப் பெற வேண்டும்' என மிரட்டியதாக தெரிகிறது. பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த ஆண்டனி தாமஸ், வீட்டின் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>   <h2>பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை</h2><p>போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், கடந்த மே மாதம் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக சதீஷ் சிங் என்பவர் மீது ஆன்டனி தாமஸ் கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தது தெரியவந்தது. மேலும், இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு தொடர்பாக நேற்று ஆண்டனி தாமஸ் கோர்ட்டில் ஆஜராக வேண்டியிருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் வீடு புகுந்து தன்னை தாக்கியதாக ஆண்டனி தாமஸ் போலீசாரிடம் தெரிவித்தார்.</p>  <h2>சமூக வலைதள பதிவு காரணமா?</h2><p>இதற்கிடையே, ஆண்டனி தாமசின் தாயார் புஷ்பலதா கடந்த மாதம் முதல்-அமைச்சர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டதாக கூறப்படுகிறது. அந்த பதிவில் தகாத வார்த்தைகளால் கருத்து தெரிவித்ததாக கூறப்படும் தி.மு.க.வைச் சேர்ந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புஷ்பலதா விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனால், ஆன்டனி தாமஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை காரணமா? அல்லது அவரது தாயார் புஷ்பலதா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு தொடர்பான சர்ச்சை காரணமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை சென்டிரல் -சூலூர்பேட்டை உள்ளிட்ட 5 பயணிகள் ரெயில் ரத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/five-passenger-trains-including-the-chennai-centralsulurpeta-service-have-been-cancelled</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/five-passenger-trains-including-the-chennai-centralsulurpeta-service-have-been-cancelled#comments</comments><guid isPermaLink="false">635acb6a-41f1-401f-a479-5735d08e5cf2</guid><pubDate>Wed, 09 Sep 2026 01:26:19 +0000</pubDate><atom:updated>2026-09-09T01:26:19.452Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/c66wokmz/CHENNAI-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/c66wokmz/CHENNAI-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-</p><p>சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் பெடபரியா-நாயுடுபேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே நாளை (வியாழக்கிழமை) மதியம் 12.20 மணி முதல் மாலை 6.50 மணி வரை (6 மணி நேரம் 30 நிமிடம்) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதையொட்டி சில பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. </p><p><strong>அதன் விவரம் வருமாறு:-</strong></p><p>* சென்னை சென்டிரலில் இருந்து காலை 7.45 மணிக்கு புறப் பட்டு சூலூர்பேட்டை செல்லும் பயணிகள் ரெயிலும் (வண்டி எண்.66039), சூலூர்பேட்டையில் இருந்து மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் பயணிகள் ரெயிலும் (66042) நாளை ரத்து செய்யப்படுகின்றன.</p><p>* சூலூர்பேட்டையில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயிலும் (66041), நெல்லூரில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் பயணிகள் ரெயிலும் (66040) நாளை ரத்து செய்யப்படுகின்றன.</p><p>* சென்னை சென்டிரலில் இருந்து இரவு 9.25 மணிக்கு புறப் பட்டு ஆவடி செல்லும் பயணிகள் ரெயில் (66003) நாளை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>லண்டன் செல்லும் முதல்-அமைச்சர் விஜய், நடிகர் அஜித்தை சந்திக்கிறாரா?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-chief-minister-vijay-who-is-going-to-london-meet-actor-ajith</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-chief-minister-vijay-who-is-going-to-london-meet-actor-ajith#comments</comments><guid isPermaLink="false">86e15ff1-b125-430f-9c5e-10ed71fce19b</guid><pubDate>Wed, 09 Sep 2026 00:22:10 +0000</pubDate><atom:updated>2026-09-09T00:22:10.524Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Ajith,அஜித்,Ajith Kumar,London,லண்டன்,பார்முலா ஒன் கார் ரேஸ்,Actor Ajithkumar,CMVijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/nc4o31y8/ajith33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
லண்டன்]]></media:title><media:description type="html"><![CDATA[  நடிகர் அஜித்தை சந்திக்கிறாரா?]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-09/nc4o31y8/ajith33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டுக்கான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதல்-அமைச்சர் விஜய் வருகிற 10-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை லண்டனில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். இந்த பயணத் தின்போது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன் னணி நிறுவனங்களின் தொழில் அதிபர்கள் மற் றும் முதலீட்டாளர்களைச் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கவுள்ளார்.</p><p>இந்த நிலையில், லண்டன் செல்லும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a>, நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தை நேரில் காண வாய்ப்பு இருப்ப தாக கூறப்படுகிறது. லண்டனில் வருகிற 11, 12-ந்தேதிகளில் மிச்செலின் லீ மென்ஸ் கார் பந்தயம் நடைபெற இருக்கிறது. இதில் அஜித்குமார் அணி பங்கேற்கிறது. இதனால் லண்டனில் தனது நண்பர் அஜித்குமாரை முதல்-அமைச்சர் விஜய் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும், கார் பந்தயத்தை நேரில் பார்க்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.</p><p>சினிமாவில் பரம போட்டியாளர்களாக கருதப்பட்டாலும் விஜய் - அஜித் இடையே நல்ல நட்புறவு நிலவுகிறது. முதல்-அமைச்சர் விஜய்க்கு பல சந் தர்ப்பங்களில் அஜித்குமார் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டிருக் கிறார். சமீபத்தில் கூட சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ் தமிழகத்தில் மோட் டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என்ற விஜய்யின் அறிவிப்புக்கு. அஜித்குமார் நன்றியும், வாழ்த்தும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/filing-of-nominations-begins-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/filing-of-nominations-begins-today#comments</comments><guid isPermaLink="false">a1e684b9-fa9c-497c-a7dd-0bc21bff9317</guid><pubDate>Tue, 08 Sep 2026 23:29:00 +0000</pubDate><atom:updated>2026-09-08T23:29:00.794Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தேர்தல் ஆணையம்,Election Commision,இடைத்தேர்தல்,byelection,வேட்புமனுத்தாக்கல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/gk2cay7z/byelection33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ இடைத்தேர்தல்]]></media:title><media:description type="html"><![CDATA[ வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/gk2cay7z/byelection33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>செங்கல்பட்டு, </p><p>மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட் புமனு தாக்கல் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.</p><p>தமிழக சட்டசபைக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தேர்தல் நடந்தது. இதில், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெற் றார். ஆனால் அவர், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, அந்த தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்தநிலையில், தாராபுரம் தொகுதிக்கு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20">இடைத்தேர்தல்</a> நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.</p><p>தாராபுரம் (தனி) தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் வருகிற 16-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பா டுகளை தேர்தல் நடத்தும் அதிகாரியும், ஆர்.டி.ஓ.வுமான பெலிக்ஸ்ராஜா தலைமையிலான அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இதற்காக தேர்தல் பிரிவு அலுவலகம் அமைக் கப்பட்டு, வேட்புமனு படிவங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. மேலும், பாதுகாப்பு பணிகளுக்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இந்த தொகுதியில் உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும். இதற்காக 9 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><h2>மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி</h2><p>செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதி நிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக் டர் வீரப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.</p><h2>கட்டுப்பாட்டு அறை</h2><p>தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், மதுராந் தகம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (புதன் கிழமை) தொடங்குகிறது. இடைத்தேர்தலை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக் கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான புகார்கள் தொலைபேசி வாயிலாக பெறப்பட்டு, அவற்றின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை 1950, 1800-425-7088, 044-27427412 ஆகிய தொலைபேசி எண்களில் எந்த நேரமும் தெரிவிக்கலாம்.</p><h2>வாக்காளர்கள் விவரம்</h2><p>மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 285 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 886 ஆண் வாக்கா ளர்கள், 1 லட்சத்து 8 ஆயிரத்து 738 பெண் வாக்காளர்கள், 65 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 13 ஆயிரத்து 689 வாக் காளர்கள் உள்ளனர்.</p><p>தேர்தல் பணிகளை கண்காணிக்க 9 பறக்கும் படைகள், 9 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.</p><h2>சுவர் விளம்பரங்கள் அகற்றம்</h2><p>தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், அரசு மற்றும் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள், விளம் பர பதாகைகள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணிகள் நடைபெற்று வரு கின்றன.</p><p>மேலும், வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சிகள் பிரசார கூட்டங்கள் நடத்துதல், ஒலிபெருக்கி பயன்படுத்துதல், வாகன ஊர்வலம் நடத்துதல், தற்காலிக கட்சி அலுவலகம் அமைத்தல் உள்ளிட்டவற்றுக்கு தேர்தல் ஆணையத்தின் இணையதள செயலி மூலம் விண்ணப்பித்து முன் அனு மதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சட்டசபையில் அதிக கேள்விகளுக்கு பதில் அளித்த ஆதவ் அர்ஜுனா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/adhav-arjuna-answered-the-most-questions-in-the-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/adhav-arjuna-answered-the-most-questions-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">f55e5da0-9ab3-4c6f-88fc-467fd3e53185</guid><pubDate>Tue, 08 Sep 2026 18:03:15 +0000</pubDate><atom:updated>2026-09-08T18:03:15.823Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆதவ் அர்ஜுனா,சட்டசபை,TNAssembly,Adhav Arjuna</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/wx0tluna/adav33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/wx0tluna/adav33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><p>தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம், 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், அடுத்த நாள் (6-ந் தேதி) வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன.</p><p>தொடர்ந்து, 7, 10, 11 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதமும், 12-ந் தேதி நிதி அமைச்சர் மரியவில்சன், வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோரின் பதில் உரையும் இடம் பெற்றது.</p><p>இதனைத் தொடர்ந்து, ஆகஸ்டு 17-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. மொத்தம் 55 துறைகள் இருப்பதால், தினமும் 3, 4 துறைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன.</p><p>முக்கியமாக, கடந்த 3-ந் தேதி முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் கைவசம் உள்ள காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதால், சட்டசபையில் அனல் பறந்தது.</p><p>இந்த நிலையில், நேற்று <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய், </a>மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரத்துடன் பதில் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.</p><p>இந்த நிலையில், சட்டசபையில் இன்று 11 சட்ட மசோதாக்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த 21 நாட்களாக நடைபெற்று வந்த சட்டசபை கூட்டத் தொடர் நிறைவடைந்தது. பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்.</p><p>இந்தநிலையில், சட்டப்பேரவை ஹைலட் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில்,</p><p>* சட்டபேரைவையில் 8 அரசினர் தனி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. பேரவையில் 14,399 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன</p><p>*  அதிக கேள்விகளுக்கு அமைச்சர் ஆதவ் பதிலளித்துள்ளார். மானிய கோரிக்கைகள் மீது 165 எம்எல்ஏக்கள் உரையாற்றியுள்ளனர்.</p><p>*  திமுக எம்எல்ஏக்கள் 23.35 மணிநேரமும், தவெக எம்எல்ஏக்கள் 13.28 மணிநேரமும், அதிமுக எம்எல்ஏக்கள் 12.58 மணி நேரமும் உரையாற்றியுள்ளனர். </p><p> மொத்தமாக 170 மணி நேரம் பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது. அடுத்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தின் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - அரசு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/transfer-of-senior-ias-officers-in-tamil-nadu-government-order</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/transfer-of-senior-ias-officers-in-tamil-nadu-government-order#comments</comments><guid isPermaLink="false">db2dd99e-30f8-44c3-937a-c7895ddb984c</guid><pubDate>Tue, 08 Sep 2026 16:36:02 +0000</pubDate><atom:updated>2026-09-08T16:36:02.668Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,தமிழ்நாடு அரசு,Transfer,பணியிட மாற்றம்,Tamilnadu government,IAS Officers,ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/a8uwoyvy/kier.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/a8uwoyvy/kier.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டில் பல்வேறு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">தமிழ்நாடு அரசு</a> உத்தரவிட்டுள்ளது.</p><p>அதன்படி, ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறையின் முதன்மைச் செயலாளராக பிரதாப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். </p><p>கைத்தறி, ஜவுளி மற்றும் காதி துறையின் செயலாளராக லில்லி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>பள்ளிக்கல்வித்துறை செயலாளராக இன்னசென்ட் திவ்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமைச் செயலாளராக சந்திர மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.</p> <p>அச்சு மற்றும் எழுதுபொருள் துறையின் ஆணையராக சரவண செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் ஆணையராக அஜய் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>பால் உற்பத்தி மற்றும் பால் வளத்துறை இயக்குநராக சிவராசு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராக சிவநந்தம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.</p> <p>டான்சி நிறுவன கூடுதல் தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி நிறுவன முதன்மைச் செயலாளராக வெங்கடேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>தமிழ்நாடு கனிமவள நிறுவன நிர்வாக இயக்குநராக கந்தசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநராக கவிதா ராமு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>தாட்கோ நிறுவன நிர்வாக இயக்குநராக செந்தில் ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.</p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/1c4tbej2/aaaaa.jpg" /></figure><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/htd0fapj/bbbb.jpg" /></figure><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/ylpklh9y/cccc.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தலில் ஆதரவு கோரி அதிமுகவினர் நயினார் நாகேந்திரனுடன் சந்திப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-seeks-bjp-support-by-election-meet-with-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-seeks-bjp-support-by-election-meet-with-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">49aa13da-222f-4228-a5df-ca2c3b65ea07</guid><pubDate>Tue, 08 Sep 2026 16:26:18 +0000</pubDate><atom:updated>2026-09-08T16:26:18.608Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,பாஜக,BJP,அதிமுக,நயினார் நாகேந்திரன்,இடைத்தேர்தல்,By election,ஆதரவு,Nainar Nagenthran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/x1plv8wx/Untitled-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/x1plv8wx/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்), ஜெயக்குமார் (பெருந்துறை), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்) ஆகிய 6 பேர் அடுத்தடுத்து தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தனர். இதனால், அந்த 6 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.</p><p>அதே நேரத்தில், பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால், அந்தத் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.</p><p>இதனால் தமிழகத்தில் 7 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது. இதில், திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய 5 தொகுதிகளின் தேர்தல் முடிவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதனை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><p>இதனிடையே தமிழகத்தில் காலியாக உள்ள 7 தொகுதிகளில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் நாளை (புதன்கிழமை) தொடங்க உள்ளது.</p><p>இந்த நிலையில் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கக் கோரி, அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்து தங்களது ஆதரவு கோரும் கடிதத்தை வழங்கினர். இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>இன்று சென்னை கமலாலயத்தில் அஇஅதிமுக சார்பில் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி, முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ். மணியன், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சொரத்தூர் ராஜேந்திரன் ஆகியோர் வருகை தந்தனர்.</p><p>வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அஇஅதிமுகவிற்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவை கோரி, அவர்கள் தங்களது ஆதரவு கோரும் கடிதத்தை வழங்கினர். இந்த நிகழ்வில் நம் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">இன்று சென்னை கமலாலயத்தில் அஇஅதிமுக சார்பில் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு. அக்ரி கிருஷ்ணமூர்த்தி <a href="https://x.com/AgriSSKrishnam1?ref_src=twsrc%5Etfw">@AgriSSKrishnam1</a> MLA அவர்கள், முன்னாள் அமைச்சர் திரு. கே.பி. முனுசாமி அவர்கள், முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு.… <a href="https://t.co/0rBfey12l5">pic.twitter.com/0rBfey12l5</a></p>&mdash; Nainar Nagenthran (@NainarBJP) <a href="https://x.com/NainarBJP/status/2097335176418435305?ref_src=twsrc%5Etfw">September 8, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயணியிடம் 3 சவரன் தங்க சங்கிலி திருட்டு:   2 பெண்கள் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/gold-chain-theft-at-chennai-central-two-women-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/gold-chain-theft-at-chennai-central-two-women-arrested#comments</comments><guid isPermaLink="false">75a1b752-4fed-4861-b5df-cba9c7e558af</guid><pubDate>Tue, 08 Sep 2026 16:24:43 +0000</pubDate><atom:updated>2026-09-08T16:24:43.598Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Central Railway Station,கைது,திருட்டு,2 women arrested,பயணி,பெண்கள்,chain theft,சென்டிரல் ரெயில்நிலையம்,தங்க சங்கிலி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/bnig1ad0/theif.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பாரதி, பூஜா]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயணியிடம் 3 சவரன் தங்க சங்கிலி திருட்டு:   2 பெண்கள் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/bnig1ad0/theif.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை சென்டீரல் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">ரெயில் நிலையத்தில்</a> கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண் பயணியிடம் 3 சவரன் தங்க சங்கிலியை பறித்த  2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.</p><h2>நெரிசலில் கைவரிசை</h2><p>ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் பாப்பாத்தி ராமசாமி. இவர் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு வந்து, ஊருக்கு செல்வதற்காக பொது பெட்டியில் ஏறியுள்ளார். ரெயில் புறப்பட தயாரான நேரத்தில், பெட்டியில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. </p><p>இந்த நெரிசலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட பர்தா அணிந்த இரு பெண்கள், பாப்பாத்தியின் கழுத்தில் இருந்த 3 சவரன் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF">தங்க சங்கிலியை </a>கண் இமைக்கும் நேரத்தில் பறித்து கொண்டு தப்பினர்.</p><h2>பர்தா திருடிகள் சிக்கினர்</h2><p>இது குறித்து சென்டடிரல் ரெயில்வே போலீஸில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து,ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், பர்தா அணிந்தபடி கூட்ட நெரிசலை பயன்படுத்தி இரண்டு பெண்கள், மூதாட்டியிடம் செயின் திருடியது தெரியவந்தது.</p><p>இதையடுத்து கர்நாடகாவை சேர்ந்த பாரதி (70), பூஜா (28) ஆகிய இருவரை் சென்டடிரல் ரெயில்வே போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்:  தமிழ்நாடு அரசு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ias-officers-transfers-tamil-nadu-government-order</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ias-officers-transfers-tamil-nadu-government-order#comments</comments><guid isPermaLink="false">74cba2a9-ab34-4a01-9b14-d9600b68b23d</guid><pubDate>Tue, 08 Sep 2026 15:52:26 +0000</pubDate><atom:updated>2026-09-08T15:52:26.940Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,தமிழ்நாடு அரசு,Tamilnadu government,IAS Officers,IAS,ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்,ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/411d4gk0/adiser.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/411d4gk0/adiser.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டில் பல்வேறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. </p><p>அதன்படி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். </p><p>பள்ளிக் கல்வித்துறை இணை கூடுதல் செயலாளராக ஷ்ரேயா பி சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மேலாண் இயக்குநராக ராஜ கோபால் சுங்காரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். </p><p>விருதுநகர் ஆட்சியராக சரண்யா அரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் ஆட்சியராக அப்துல் ராஸிக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் ஆட்சியராக நல்லசிவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.</p> <p>வேளாண் துறை இணை செயலாளராக ரவிக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வணிக வரித்துறை இணை செயலாளராக சங்கீதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநராக ஜெயசீலன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>சென்னை குடிநீர் வடிகால் வாரிய செயல் இயக்குநராக சுகபுத்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி இணை ஆணையராக (சுகாதாரம்) தாகரே சுபம் தந்தியோரோ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>சிப்காட்  நிறுவனத்தின் செயல் இயக்குநராக வீர் பிரதாப் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாநகராட்சி ஆணையராக பொன்மணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாநகராட்சி ஆணையராக கேத்ரீன் சரண்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/qafyt2je/suoe.jpg" /></figure><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/dzsqn1gn/two222.jpg" /></figure><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/5cw52uve/ploe.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>சீரமைப்பு பணிகள்: நாகப்பட்டினம் - இலங்கை கப்பல் போக்குவரத்து 11-ந்தேதி வரை ரத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/repair-works-nagapattinam-sri-lanka-ship-services-cancelled-till-11th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/repair-works-nagapattinam-sri-lanka-ship-services-cancelled-till-11th#comments</comments><guid isPermaLink="false">154dd3e7-0285-49cb-a292-89c97e8b534a</guid><pubDate>Tue, 08 Sep 2026 15:51:02 +0000</pubDate><atom:updated>2026-09-08T15:51:02.838Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nagapattinam,SriLanka,இலங்கை,நாகப்பட்டினம்,சீரமைப்பு பணிகள்,கப்பல் போக்குவரத்து,கப்பல் சேவை,ship</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/xkyo4iuy/Untitled-11.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/xkyo4iuy/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாகப்பட்டினம்,</p><p>சீரமைப்பு பணிகள் காரணமாக நாகப்பட்டினம்- இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து 11-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.</p><h2>கப்பல் போக்குவரத்து</h2><p>நாகப்பட்டினம் - இலங்கை காங்கேசன்துறை இடையிலான கப்பல் சேவை கடந்த 2023-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது பயணிகள் இடையே போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் கப்பல் சேவை நிறுத்தப்பட்டது. அதன்பின் 2024-ம் ஆண்டு சிவகங்கை என்ற பெயரில் சுபம் என்ற தனியார் கப்பல் நிறுவனம் மீண்டும் சேவையை தொடங்கியது.</p><p>பயணிகள் இடையே வரவேற்பை பெற்றதால் வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் கப்பல் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக நேற்று முன்தினம் ஒருநாள் மட்டும் நாகப்பட்டினம் - இலங்கை இடையேயான கப்பல் சேவை நிறுத்தப்பட்டது.</p><h2>கடல்சார் துறை அதிகாரிகள் ஆய்வு</h2><p>நேற்று விடுமுறை என்பதால் இன்று (புதன்கிழமை) கப்பல் சேவை தொடங்கப்படும் என பயணிகள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில் கப்பல் போக்குவரத்து தொடர்பான பாதுகாப்பு, ஆய்வு சான்றிதழ்கள் மற்றும் விதிமுறை குறித்து ஆய்வு செய்யும் வணிக கடல்சார் துறை அதிகாரிகள் சென்னையில் இருந்து நாகப்படினம் வந்து இலங்கைக்கு இயக்கப்படும் கப்பல்களை ஆய்வு செய்தனர்.</p><p>இந்த ஆய்வில் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டதாகவும், இந்த குறைபாடுகளை சரிசெய்யும் வரை கப்பல் சேவையை ரத்து செய்ய சென்னை வணிக கடல்சார் துறை சார்பில் கடிதம் வழங்கப்பட்டதாகவும் தெரிகிறது. இதனையடுத்து கப்பல்களில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.</p><h2>11-ந்தேதி வரை சேவை ரத்து</h2><p>இந்த சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றவுடன் 11-ந்தேதிக்கு பின்னர் பயணிகள் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை நாகப்பட்டினம் - இலங்கை காங்கேசன் துறை வரையிலான திட்டமிடப்பட்ட பயணங்கள் அனைத்தும் 11-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. குறைபாடுகள் தொடர்பான பணிகள் அனைத்தும் நிறைவடைந்தவுடன் கப்பல் சேவை மீண்டும் தொடங்கப்படும்.</p><p>பணிகளின் நிலை மற்றும் கப்பல் சேவை மீண்டும் தொடங்குவது குறித்த கூடுதல் தகவல்கள் வருகிற 11-ந் தேதிக்கு பின்னர் அறிவிக்கப்படும் என கப்பல் நிர்வா கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>“நீட் ஆட்கொல்லித் தேர்வுக்கு இன்னும் எத்தனை குழந்தைகளை இழப்பது?” - உதயநிதி ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-many-more-children-must-we-lose-to-the-killer-neet-exam-udhayanidhi-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-many-more-children-must-we-lose-to-the-killer-neet-exam-udhayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">6ab29a33-398e-4b8c-b9d5-ef764a180edf</guid><pubDate>Tue, 08 Sep 2026 15:44:10 +0000</pubDate><atom:updated>2026-09-08T15:44:10.377Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,NEET Exam,Central Government,நீட்தேர்வு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/74i2bfr0/201.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/74i2bfr0/201.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நீட் ஆட்கொல்லித் தேர்வுக்கு இன்னும் எத்தனை குழந்தைகளை இழப்பது என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-</p><h2>தற்கொலை</h2><p>நீட் தேர்வின் அச்சம் காரணமாக பல்லாவரத்தைச் சேர்ந்த சாய் அபினவ் என்கிற மாணவர் தற்கொலை செய்துகொண்ட செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். ஏற்கெனவே இரண்டு முறை நீட் தேர்வு எழுதி இருந்த நிலையில், மீண்டும் கோச்சிங் சென்டரில் இணைந்து நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த மாணவர் சாய் அபினவ், இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். ஈடு செய்ய முடியாத இழப்பை எதிர்கொண்டு நிற்கும் மாணவர் சாய் அபினவின் பெற்றோருக்கு என் ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். </p><h2>ரத்து</h2><p>நீட் ஆட்கொல்லித் தேர்வுக்கு இன்னும் எத்தனை குழந்தைகளை இழப்பது?. குளறுபடிகளும் - மோசடிகளும் நிறைந்த நீட் தேர்வை ரத்து செய்வதற்காக கழக அரசு மேற்கொண்ட சட்டப் போராட்டங்களை, இன்றைய ஆட்சியாளர்கள் இன்னும் வேகத்துடன் மேற்கொள்ள வேண்டும். <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D">நீட்</a> தேர்வை ரத்து செய்ய மத்திய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்: பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/incident-of-boy-recovered-dead-shocking-details-in-post-mortem-report</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/incident-of-boy-recovered-dead-shocking-details-in-post-mortem-report#comments</comments><guid isPermaLink="false">2b0aee93-77cc-4736-a9fc-07cc49561e51</guid><pubDate>Tue, 08 Sep 2026 15:26:18 +0000</pubDate><atom:updated>2026-09-08T15:26:18.556Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Madurai,மதுரை,போலீஸ் விசாரணை,பிரேத பரிசோதனை அறிக்கை,சிறுவன் உயிரிழப்பு,post mortem report</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/yzrgd0uu/madurierer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/yzrgd0uu/madurierer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p>மாயமான பிளஸ்-1 மாணவன் கண்மாயில் பிணமாக மீட்கப்பட்டான். மாணவியுடன் பழகியதால் கடத்திச்சென்று கொலையா? என்பது பற்றியும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.</p><h2>பிளஸ்-1 மாணவர்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/madurai">மதுரை</a> ஆனையூர் அருகே உள்ள வள்ளலார் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி. காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி யோகலட்சுமி. இவர்களுடைய மகன் தமிழ்ச்செல்வன் (வயது 16). இவன் ஆரப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தான்.</p><p>நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கு விடுமுறை என்பதால், நண்பர்களுடன் சேர்ந்து வீட்டை விட்டு வெளியே சென்றான். நீண்ட நேரமாகியும் அவன் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில், அவரது நண்பர்கள் வீட்டில் என பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.</p><p>இதைதொடர்ந்து, கூடல்புதூர் போலீஸ் நிலையத்தில் யோகலட்சுமி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர்.</p><h2>கண்மாயில் பிணமாக மீட்பு</h2><p>இந்தநிலையில், கூடல்நகர் பகுதியில் அப்துல்கலாம் நகரில் உள்ள கண்மாய் தண்ணீரில் மாணவன் தமிழ்ச்செல்வன் பிணமாக மிதந்தது தெரியவந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மாணவனின் உடலை மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். </p><p>முதற்கட்ட விசாரணை குறித்து போலீசார் கூறும்போது, நண்பர்களுடன் சேர்ந்து குளிக்கச்சென்றபோது, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம். வீட்டுக்கு தெரிந்தால் சிக்கிக்கொள்வோம் என கருதி அவருடன் சென்ற நண்பர்கள் இதை மறைத்து இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. மேலும், மாணவனை யாராவது கடத்தி கொலை செய்தார்களா என்ற கோணத்திலும் விசாரித்து வருகிேறாம் என போலீசார் தெரிவித்தனர்.</p><h2>கடத்திக்கொலை?</h2><p>பின்னர் மாணவனின் குடும்பத்தினர், உறவினர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரி பிணவறை முன்பு திரண்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தமிழ்ச் செல்வன் வேறொரு சமூகத்தை சேர்ந்த மாணவியை காதலிப்பதாக கூறி பழகியதாக தெரிகிறது. </p><p>அந்த மாணவியின் தந்தை தமிழ்ச்செல்வனை கண்டித்து மிரட்டி உள்ளார். ஒருமுறை நண்பர்களுடன் சென்றபோது, அவர் தமிழ்ச்செல்வன் கையை பிடித்து திருகி தாக்கியுள்ளார். அந்த நபர் மீது எங்களுக்கு சந்தேகம் உள்ளது. அவரது மகளுடன் பழகிய ஆத்திரத்தில் தமிழ்ச்செல்வனை கடத்திக் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம், அவரிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் கொடுத்துள்ளோம். </p><p>மேலும், சம்பவத்தன்று தமிழ்ச்செல்வனுடன் இருந்த நண்பர்களையும் விசாரிக்க வேண்டும். போலீஸ் முறையாக விசாரிக்கவில்லை என்றால், உடலை வாங்கமாட்டோம். பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்கவேண்டும் என ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் வலியுறுத்தி உள்ளோம்" என்றனர்.</p><p>மாணவியுடன் பழகியதால் இந்த சம்பவம் நடந்ததா? என்பது பற்றியும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருவதாக தெரிவித்திருந்தனர். </p><h2>பிரேத பரிசோதனை அறிக்கை</h2><p>இந்நிலையில் <a href="https://www.dailythanthi.com/topic/madurai">மதுரை</a> ஆனையூர் கழிவுநீர் குட்டையில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், அவனது பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. </p><p>இதன்படி சிறுவனின் வயிற்றில் வெளிர் பழுப்பு நிற திரவம் இருந்தாகவும், மார்பில் கடித்ததற்கான அடையாளம் மற்றும் சிறுவனின் கைகள், முட்டியில் சிராய்ப்பு காயங்கள் உள்ளதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நீட் அச்சத்தால் மேலும் ஒரு மாணவர் தற்கொலை - மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/another-student-commits-suicide-due-to-fear-of-neet-cpim-condemns-the-central-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/another-student-commits-suicide-due-to-fear-of-neet-cpim-condemns-the-central-government#comments</comments><guid isPermaLink="false">81d71e38-7a95-4aab-8fa8-f0bd4d5f11b0</guid><pubDate>Tue, 08 Sep 2026 14:54:18 +0000</pubDate><atom:updated>2026-09-08T14:54:18.377Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,student,கண்டனம்,தற்கொலை,Suicide,நீட்,CPI(M),மார்க்சிஸ்ட் கம்ப்யூனிஸ்ட் கட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/e01adaot/200.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெ.சண்முகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/e01adaot/200.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்</a> தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். </p><p>இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>மாணவர் தற்கொலை</h2><p>நீட் தேர்வு காரணமாக அனிதா முதல் சாய் அபிநோவ் வரை அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது நெஞ்சை உலுக்குகிறது. பல்லாவரம் சாய் அபிநோவ் ஏற்கனவே இரண்டு முறை தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத நிலையில் பயிற்சி மையத்தில் சேர்ந்து மீண்டும் தேர்வெழுதத் தயாராகி வந்துள்ளார். இந்த முறையும் தோல்வியடைந்து விடுவோமோ என்ற பயத்தில் இன்று வீட்டில் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போயுள்ளார். அவருடைய பெற்றோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.</p><h2>விலக்கு அளிக்க வேண்டும்</h2><p>நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்று மத்திய அரசை வற்புறுத்தித் தமிழகம் ஒன்றுபட்டு குரலை வலிமையாக எழுப்ப வேண்டும். இதற்காக இனி ஒரு மாணவனின் மரணமும் நிகழக் கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>28 நாட்களில்.. தமிழ்நாடு சட்டசபை செயல்பாட்டை காண 32,555 பேர் வருகை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/32555-people-visited-to-witness-the-tamil-nadu-legislative-assembly-proceedings-over-28-days</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/32555-people-visited-to-witness-the-tamil-nadu-legislative-assembly-proceedings-over-28-days#comments</comments><guid isPermaLink="false">63fe3110-4652-45f9-a073-58ad1e887a80</guid><pubDate>Tue, 08 Sep 2026 14:45:59 +0000</pubDate><atom:updated>2026-09-08T14:45:59.307Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,தமிழக சட்டசபை,TN Assembly,Assembly Session,சட்டசபை கூட்டத்தொடர்,TN Assembly session,தமிழக சட்டசபை கூட்டத்தொடர்,JCD Prabhakar,சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/b02ptqdy/dd.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/b02ptqdy/dd.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ்நாடு சட்டசபையின் செயல்பாட்டை காண கடந்த 28 நாட்களில் 32,555 பேர் வருகை புரிந்துள்ளதாக சபாநாயகர் <a href="https://dailythanthi.com/topic/jcd-prabhakar">ஜே.சி.டி.பிரபாகர்</a> தெரிவித்தார்.</p><h2>பட்ஜெட் தாக்கல்</h2><p>தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம், 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், அடுத்த நாள் (6-ந் தேதி) வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. தொடர்ந்து, 7, 10, 11 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதமும், 12-ந் தேதி நிதி அமைச்சர் மரியவில்சன், வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோரின் பதில் உரையும் இடம் பெற்றது. </p><h2>அனல் பறந்த சட்டசபை</h2><p>இதனைத் தொடர்ந்து, ஆகஸ்டு 17-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. மொத்தம் 55 துறைகள் இருப்பதால், தினமும் 3, 4 துறைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. முக்கியமாக, கடந்த 3-ந் தேதி முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் கைவசம் உள்ள காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதால், சட்டசபையில் அனல் பறந்தது. </p><h2>கூட்டத்தொடர் நிறைவு</h2><p>இந்த நிலையில், நேற்று முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரத்துடன் பதில் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில், சட்டசபையில் இன்று 11 சட்ட மசோதாக்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது.</p><p>இதனைத்தொடர்ந்து த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் (செவ்வாய் கிழமை) நிறைவடைந்தது. 28 நாட்களாக, மொத்த அலுவல் 170 மணி நேரம் நடைபெற்றது. சட்டசபை நிறைவு நாளான இன்று, உரிமைக்குழு, மனுக்கள் குழு, விதிகள் குழு என்பன உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்பட்டன. </p><h2>32,555 பேர் வருகை</h2><p>இந்நிலையில்  28 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத் தொடரின் செயல்பாட்டை காண 32,555 பேர் வருகை புரிந்ததாக சட்டசபை தலைவர் <a href="https://dailythanthi.com/topic/jcd-prabhakar">ஜே.சி.டி.பிரபாகர்</a> தெரிவித்தார். </p><p>முன்பு ஆண்டுக்கு சராசரியாக 20 பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் வந்ததாகவும், இம்முறை 75 பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வமாக வந்திருந்ததாகவும் சுட்டிக்காட்டினார். மேலும் முந்தைய ஆண்டுகளில் ஒரு ஆண்டிற்கு சுமார் 20 ஆயிரம் பேர் மட்டுமே சட்டசபையை நேரில் பார்க்க வந்த நிலையில், இந்த முறை பார்வையாளர்களின் வருகையும் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.</p><h2>ஆண்டு வாரியாக பார்வையாளர்கள் (28 நாட்களில்) </h2><p>2021 ஆண்டு -22,651 பேர், </p><p>2023 ஆண்டு -20,137 பேர், </p><p>2024 ஆண்டு - 10,754 பேர், </p><p>2025 ஆண்டு - 20, 123 பேர், </p><p><strong>2026 ஆண்டு</strong> - <strong><ins>32,055 பேர்</ins></strong></p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 9 இடங்களில் இன்று வெயில் சதமடித்தது</title><link>https://www.dailythanthi.com/news/weather/heatwave-in-9-locations-in-tamil-nadu-today</link><comments>https://www.dailythanthi.com/news/weather/heatwave-in-9-locations-in-tamil-nadu-today#comments</comments><guid isPermaLink="false">d5401f58-b8a6-4574-bee6-008889fc63b1</guid><pubDate>Tue, 08 Sep 2026 14:21:57 +0000</pubDate><atom:updated>2026-09-08T14:21:57.114Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Weather,வானிலை,Weather update,வெயில்,heat,வானிலை தகவல்,வெப்பம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/4lbo7z8t/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ வெயில் சதம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/4lbo7z8t/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்தாலும், பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 6 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p>அதன்படி தமிழகத்தில் இன்று அதிகமாக வெப்பநிலை பதிவான இடங்கள் வருமாறு:-</p><p>வேலூர் - 104.72° பாரன்ஹீட் (40.4° செல்சியஸ்)</p><p>திருச்சி - 104.18° பாரன்ஹீட் (40.1° செல்சியஸ்)</p><p>ஈரோடு - 103.28° பாரன்ஹீட் (39.6° செல்சியஸ்)</p><p>பாளையங்கோட்டை - 102.92° பாரன்ஹீட் (39.4° செல்சியஸ்)</p><p>தஞ்சாவூர் - 102.2° பாரன்ஹீட் (39.0° செல்சியஸ்)</p><p>கரூர் பரமத்தி - 101.66° பாரன்ஹீட் (38.7° செல்சியஸ்)</p><p>நாமக்கல் - 100.76° பாரன்ஹீட் (38.2° செல்சியஸ்)</p><p>மதுரை விமான நிலையம் - 100.4° பாரன்ஹீட் (38.0° செல்சியஸ்)</p><p>திருத்தணி - 100.4° பாரன்ஹீட் (38.0° செல்சியஸ்)</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையின் மதிப்பீட்டுக் குழுவை அறிவித்தார் ஜே.சி.டி. பிரபாகர் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/jcd-prabhakar-announced-the-legislative-assemblys-estimates-committee</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/jcd-prabhakar-announced-the-legislative-assemblys-estimates-committee#comments</comments><guid isPermaLink="false">2089018b-6450-4ee5-8dd4-4a9fb2cdf75c</guid><pubDate>Tue, 08 Sep 2026 14:14:58 +0000</pubDate><atom:updated>2026-09-08T14:14:58.393Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,தமிழக சட்டசபை,TN Assembly,Assembly Session,தமிழக சட்டசபை கூட்டத்தொடர்,JCD Prabhakar,சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்,Speaker J.C.D. Prabhakar,சட்டசபை கூட்டத் தொடர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/iq8j2i44/kliere.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/iq8j2i44/kliere.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ்நாடு சட்டசபையின் 14 பேர் கொண்ட மதிப்பீட்டுக் குழுவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் இன்று (செவ்வாய் கிழமை) அறிவித்தார். </p><p>இதன்படி மதிப்பீட்டுக் குழுவின் தலைவராக அருள்பிரகாசம், அவை உரிமை குழு தலைவராக துணை சபாநாயகர் ரவிசங்கர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். </p><p>மேலும் சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவின் தலைவராக ஐ.யூ.எம்.எல். (IUML) சட்டமன்ற உறுப்பினர் சையத் பாரூக் பாஷா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவைக்குழு தலைவராக பத்மநாபபுரம் தொகுதியின் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., ஆர்.செல்லசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நூலகக்குழுத் தலைவராக காட்டுமன்னார்கோவில் விசிக சட்டமன்ற உறுப்பினர் ஜோதிமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். </p><p>மேலும் சிந்து, முகுந்தன், இளையராஜா, ரகுபதி, தியாகராஜன், செல்வம், ரேவந்த் சரண், ஜெகந்நாத் மிஸ்ரா, தளவாய் சுந்தரம், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோரும் உரிமை குழுவில் இடம் பெற்றுள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>  காற்று  தூய்மையாக உள்ள நகரங்களின் பட்டியல்; லக்னோ முதலிடம்; சென்னை 35-வது இடம் - சமூக ஆர்வலர்கள் கவலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/list-of-cities-with-clean-air-lucknow-ranks-first-chennai-35th-social-activists-express-concern</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/list-of-cities-with-clean-air-lucknow-ranks-first-chennai-35th-social-activists-express-concern#comments</comments><guid isPermaLink="false">e5806856-7f04-40a9-8c7e-41de12da5e29</guid><pubDate>Tue, 08 Sep 2026 14:09:41 +0000</pubDate><atom:updated>2026-09-08T14:09:41.911Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,முதலிடம்,லக்னோ,Lucknow,காற்று,Clean air,In Chennai,Cities</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/sd9ho95o/fresh-city.jpg" width="768"><media:title type="html"><![CDATA[ தூய்மையான நகரங்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[  காற்று  தூய்மையாக உள்ள நகரங்களின் பட்டியல்; லக்னோ முதலிடம்; சென்னை 35-வது இடம் - சமூக ஆர்வலர்கள் கவலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/sd9ho95o/fresh-city.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மத்திய அரசு வெளியிட்டுள்ள 2026-ம் ஆண்டின் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88">காற்று தூய்மையாக</a> உள்ள நகரங்களின் தேசிய தரவரிசை பட்டியல் தற்பொழுது வெளியாகியுள்ளது. 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாட்டின் 48 முக்கிய நகரங்கள் இந்த ஆய்வில் எடுத்துக்கொள்ளப்பட்டன.</p><h2>முதல் முன்று இடம்</h2><p>தேசிய அளவில் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் பிரிவில், லக்னோ 198 புள்ளிகளுடன் முதலிடத்திலும், அதை தொடர்ந்து இந்தூர் (197) மற்றும் ஜபல்பூர் (195) ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் இடம்பெற்றன.</p><h2>சென்னைக்கு 35-வது இடம்</h2><p>தமிழ்நாட்டை பொறுத்தவரை, மூன்று நகரங்கள் மட்டுமே இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. திருச்சி சிறப்பாக செயல்பட்டு, 183 புள்ளிகளுடன் தேசிய அளவில் 12-வது இடத்தை பிடித்தது. தமிழகத்தின் தலைநகரான சென்னை 35-வது இடத்தை பிடித்துள்ளது. மதுரை, 132.1 புள்ளிகளுடன் 39-வது இடத்தை பிடித்தது. </p> <h2>மூன்று லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை</h2><p>மிக குறைந்த மக்கள் தொகை கொண்ட பிரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு நகரம் மட்டுமே இடம் பெற்றுள்ளது. ஆய்வின் வகைப்பாட்டின்படி மூன்று லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகையை கொண்ட தூத்துக்குடி நகரம், 142.2 புள்ளிகளை பெற்று, அப்பிரிவில் உள்ள 40 நகரங்களுக்குள் 35-வது இடத்தை பிடித்தது.</p> <h2>மக்களின் பங்களிப்பு அவசியம்</h2><p>தமிழக நகரங்களின் இந்த பின்னடைவு குறித்து சமூக ஆர்வலர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், "<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">நகரங்களை</a> தூய்மையாக வைத்திருக்க அரசு எத்தனை திட்டங்களை கொண்டு வந்தாலும், என்னதான் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தாலும் அது மட்டுமே முழுமையான பலனை தராது. பொதுமக்களாகிய நாமும் முழு பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். </p><p>வீடுகளிலேயே குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது, பொது இடங்களில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை வீசாமல் இருப்பது போன்ற சுயக்கட்டுப்பாட்டை மக்கள் கடைப்பிடித்தால் மட்டுமே, தமிழக நகரங்கள் இப்பட்டியலில் முன்னணி இடத்தை பிடிக்க முடியும்" என தெரிவித்துள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>நாடகக்கலையில் முதுகலை பட்டப்படிப்பு: தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையில் தொடங்கப்படுகிறது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nadagakkalaiyil-mudugalai-pattapadippu-tamilnadu-arasin-saarbil-chennaiyil-thodangapadugirathu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nadagakkalaiyil-mudugalai-pattapadippu-tamilnadu-arasin-saarbil-chennaiyil-thodangapadugirathu#comments</comments><guid isPermaLink="false">c44e3234-8499-4585-81b7-291725e054d6</guid><pubDate>Tue, 08 Sep 2026 13:54:41 +0000</pubDate><atom:updated>2026-09-08T13:54:41.304Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,தமிழக அரசு,விண்ணப்பம்,Admission,நாடகக்கலை,முதுகலை பட்டப்படிப்பு,Theatre Art</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/iq137ejg/Untitled-8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/iq137ejg/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தில் நாடக கலைகளுக்கான இரண்டாண்டு கால முதுகலை முழுநேர பட்டப்படிப்பு தொடங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு அரசு “இளைஞர்களுக்கு நடிப்பு திறனை மேம்படுத்தி நாடக கலையினை வளர்த்திடும் நோக்கில்” தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தில் நாடக கலைகளுக்கான இரண்டாண்டு கால முதுகலை முழுநேர பட்டப்படிப்பு தொடங்க உள்ளது. தமிழை முத்தமிழாக வகைப்படுத்தி வளர்த்தனர் தமிழர்கள். முத்தமிழில் மூன்றாம் தமிழாக உள்ள நாடக்கலையின் வரலாறு கூத்து, இசை நாடகம், வரலாற்று நாடகம், புராண இதிகாச நாடகம், சமூக நாடகம், மௌன நாடகம் என பல பரிமாணங்கள் கண்டுள்ளது.</p><p>நாடகக்கலையின் முதுகலை பட்டப்படிப்புகள் தொடங்கப்படுவதன் மூலம் நடிப்பின் பல பரிமாணங்களை இளைஞர்கள் பெற முடியும் என்ற அடிப்படையில் கலை பண்பாட்டுத்துறை நாடகப்படிப்பில் முதுகலை பட்டப்படிப்பு தொடங்க அரசிடம் அனுமதி பெற்றது. இதன் அடிப்படையில் சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அரசு இசைக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தில் நாடகக்கலையில் முதுகலை பட்டப்படிப்பு 2026-2027ம் கல்வியாண்டு முதல் தொடங்கப்பட உள்ளது.</p><p>இப்பட்டப்படிப்புக்கான ஆசிரியர் பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமாக மாதம் ரூ.25,000/- தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நாடகக்கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி, இதர தகுதிகள் உள்ளிட்ட விவரங்கள் தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 21.09.2026 அன்று மாலை 5 மணிக்குள் பல்கலைக்கழகத்திற்கு நேரடியாகவோ, தபால் மூலமாகவோ வந்து சேர வேண்டும்.</p><p>முதுகலை பட்டப்படிப்பு (MTA – Master of Theatre Arts) மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அளிப்பதற்கான கடைசி நாள் 21.09.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பில் சேர ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பு இல்லை. இப்படிப்பிற்கான விண்ணப்பம் மற்றும் இதர விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் (இணையதள முகவரி www.tnjjmfau.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் விதிகளை மீறியதாக முதல்-அமைச்சர் விஜய் மீது தி.மு.க. உரிமை மீறல் புகார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-files-breach-of-privilege-complaint-against-chief-minister-vijay-for-violating-assembly-rules</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-files-breach-of-privilege-complaint-against-chief-minister-vijay-for-violating-assembly-rules#comments</comments><guid isPermaLink="false">5415237d-4270-4bb8-b053-d6fcdf9267e6</guid><pubDate>Tue, 08 Sep 2026 13:48:04 +0000</pubDate><atom:updated>2026-09-08T13:48:04.628Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,திமுக,DMK,தமிழகம்,தமிழக சட்டசபை,TN Assembly,Assembly Session,சட்டசபை கூட்டத்தொடர்,உரிமை மீறல் பிரச்சினை,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,சட்டசபை கூட்டத் தொடர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/ydt3t2qy/budget.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/ydt3t2qy/budget.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சட்டப்பேரவையில் விதிகளை மீறியதாக <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> மீது தி.மு.க.வின் துணைக் கொறடா கோவி. செழியன் சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் அளித்துள்ளார்.</p><h2>முதல்-அமைச்சர் விஜய்</h2><p>காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரையாற்றிய <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a>, திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இதையடுத்து இன்றைய பேரவைக் கூட்டத்தொடரில் பேசிய திமுக கொறடா எ.வ.வேலு, “என்னுடைய சட்டமன்ற அனுபத்தில் எத்தனையோ முதல்-அமைச்சர்களை பார்த்துள்ளேன்..! அவர்கள் எல்லாரும் கண்ணியமாக தான் பேசினார்கள். நேற்று 26 நிமிடங்கள் அமைதியாக காத்திருந்தோம். ஆனால், நீதிமன்ற விசாரணையில் இருக்கும் வழக்குகள் குறித்து முதல்-அமைச்சர் பேசியிருக்கிறார். பலமுறை இதே மன்றத்தில் பேசப்பட்ட சர்க்காரிய அறிக்கை குறித்தும் அவதூறாக பேசியிருக்கார். முதல்-அமைச்சர் ஆதாரமில்லாமல் பேசி இருக்கிறார். காவல்துறை மானியம் தொடர்பான தகவல் தவிர்த்து, மிசா, மாறன் குறித்து அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றார்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/u4pbrj94/2025.jpg" /></figure><h2>நீக்க முடியாது - சபாநாயகர் திட்டவட்டம்</h2><p>இருப்பினும் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய் </a>பேசியதில் இருந்து எந்த பகுதியையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் திட்டவட்டமாக கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுகவினர் அவையின் மையப்பகுதிக்கு வந்து சபாநாயகர் முன்பு முழக்கங்களை எழுப்பினர். அப்போது பேசிய அவை முன்னவர் செங்கோட்டையன், சட்டப்பேரவைக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடும் திமுகவினரை அவையில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார். </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/23vg5c6h/dmmk.jpg" /></figure><h2>தி.மு.க.வினர் வெளியேற்றம்</h2><p>இந்த சூழலில் தி.மு.க.வினர் இருக்கைக்கு சென்று அமருமாறு சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார். ஆனால், திமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவையில் இருந்து அவர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் உத்தரவிட்டார். இதனையடுத்து தி.மு.க.வினரை காவலர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.</p><h2>உரிமை மீறல் புகார்</h2><p>இந்நிலையில் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரை அவருடைய அறையில் சந்தித்த திமுக துணை கொறடா கோவி.செழியன் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> நேற்று காவல்துறை மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய பதில் உரையில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் பற்றி பேசியது, அவையில் இல்லாதவர்களான முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மற்றும் முரசொலி மாறன் பற்றி பேசியது, நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றி பேசியது ஆகியவை சட்டப்பேரவை விதிகளுக்கு எதிரானது எனவே தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அவை உரிமை மீறல் புகார் அளித்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>தாம்பரம் ரெயில் நிலையத்தில் தண்டவாளங்களின் எண்ணிக்கையை 15 ஆக அதிகரிக்க திட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/plan-to-increase-the-number-of-railway-tracks-at-tambaram-railway-station-to-15</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/plan-to-increase-the-number-of-railway-tracks-at-tambaram-railway-station-to-15#comments</comments><guid isPermaLink="false">db568b9a-c394-4fa7-a34b-5fe318d69255</guid><pubDate>Tue, 08 Sep 2026 13:39:35 +0000</pubDate><atom:updated>2026-09-08T13:39:35.822Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Tambaram,தாம்பரம்,Track,ரெயில் நிலையம்,Railway,திட்டம்,தண்டவாளங்கள்,station,அதிகரிக்க</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/ar0jzgzv/199.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தாம்பரம் ரெயில் நிலையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/ar0jzgzv/199.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>எழும்பூர் நிலையத்தின் நெரிசலைக்குறைக்க தாம்பரம் ரெயில் நிலைய தண்ட வாளங்களின் எண்ணிக்கையை 10-ல் இருந்து 15 ஆக உயர்த்த தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.</p><h2>தாம்பரம் ரெயில் நிலையம்</h2><p>சென்னை தாம்பரத்தில் அமைந்துள்ள ரெயில் நிலையம் இரண்டாவது பெரிய முனையமாக உள்ளது. தாம்பரம் ரெயில் நிலையம் ஆண்டுக்கு 3.50 கோடிக்கும் அதிகமான பயணிகளைக் கையாளுகிறது. இருப்பினும், இந்த நிலையத்தில் உள்ள நூற்றுக்கணக்கான மக்கள், தொலைதூர ரெயில்கள் இயக்கப்படும் நடைமேடைகளை அடைவதில் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். எனவே தண்டவாளங்களின் எண்ணிக்கையை 10-ல் இருந்து 15 உயர்த்த நீட்டமிடப்பட்டுள்ளது.</p><p>தற்போது, தண்டவாள மேம்பாடு மற்றும் நடைபாதை அமைக்கும் பணிகள் திட்டமிடப்பட்டு வருகின்றன. மேலும் அவை அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெற்கு ரெயில் நிலையத்தில் நீண்ட தூர ரெயில்களை இயக்குவதற்காக தண்டவாளங்களின் எண்ணிக்கையை 10லிருந்து 15ஆக அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன் இது முக்கிய நிலையமாகச் செயல்பட தொடங்கும். இந்த நிலையத்தின் வடக்குப்பகுதியில் உள்ள பாலம் மற்றும் வழித்தட நிலையத்தின் கட்டுமானப் பணிகளும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடைந்து, இரு புறங்களிலும் போக்குவரத்து வசதிகளுடன் கூடிய புதிய சாலைகள் அமைக்கப்படும்.</p><p>மேலும் காத்திருப்பு அரங்குகள் கட்டுதல், நகரும் படிக்கட்டுகள் பொருத்துதல் மற்றும் அனைத்து நடைமேடைகளுடனும் இணைக்கும் படிக்கட்டுகள் அமைத்தல்.</p><h2>எழும்பூர் ரெயில் நிலையம்</h2><p>இந்த அனைத்து உள்வேலைகளும் நடத்தப்படுகின்றன. புதிய நிலையத்தில், பயணச்சீட்டுகளுக்காக ஒரு மேம்படுத்தப்பட்ட முன்பதிவு மையம் மற்றும் ஒரு தங்கும் வசதி கொண்ட அறை அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எழும்பூர் நிலையத்தின் நெரிசலைக் குறைக்கவும்,  தாம்பரத்திலிருந்து தென் மாவட்டங்கள் மற்றும் வட பகுதி நகரங்களுக்குச் செல்லும் தொலைதூரம் செல்லும் ரெயில்களை கூடுதலாக இயக்கவும் இத்திட்டம் வழிவகுக்கும்.</p><p>இத்திட்டம் நிறைவேறினால், சென்னை எழும்பூரை விடப் பெரிய போக்குவரத்து மையமாகவும் உருவெடுக்கும். ரூ.19 கோடி செலவில் புதிய நடை மேம்பாலம், மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள் மற்றும் காத்திருப்போர் அறைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.</p><p>வடக்கு பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய நடை மேம்பாலத்தில் நவீன பயணச்சீட்டு வழங்கும் மையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ரெயில் நில மேம்பாட்டு ஆணையம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">தாம்பரம்</a> முனையத்தை முழுமையாக மறுசீரமைப்பதற்கான திட்ட அறிக்கையை தயாரித்து வருகிறது என அதிகாரிகள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய்-யின் இங்கிலாந்து பயணம் தள்ளிவைப்பு?

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-uk-trip-postponed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-uk-trip-postponed#comments</comments><guid isPermaLink="false">2791fd3b-5c9e-44de-8f08-23b470e2a47a</guid><pubDate>Tue, 08 Sep 2026 13:21:05 +0000</pubDate><atom:updated>2026-09-08T13:21:05.585Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,இங்கிலாந்து,முதல்-அமைச்சர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/62wo6uaj/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/62wo6uaj/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p> <p>முதல்-அமைச்சர் விஜய் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது. அந்த பயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.</p>  <h2>இங்கிலாந்து பயணம்</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் வெளிநாட்டு பயணமாக இங்கிலாந்து செல்ல <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">விஜய் </a>திட்டமிட்டிருந்தார். வரும் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை முதல்-அமைச்சர் விஜய் இங்கிலாந்து செல்ல திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியானது.</p><p>இங்கிலாந்தில் தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீட்டு வாய்ப்புகளை எடுத்துரைப்பதுடன், புதிய முதலீடுகளை ஈர்க்கும் பணிகளையும் ஒப்பந்தங்களையும் நேரில் கண்காணிக்க முதல்-அமைச்சர் விஜய் திட்டமிட்டிருந்தார்.</p> <h2>மலேசிய பிரதமர் வருகை</h2><p>இதனிடையே, வரும் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை தலைநகர் டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இதில் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் பங்கேற்க உள்ளார். பிரிக்ஸ் மாநாட்டிற்குப்பின் அன்வர் இப்ராஹிம் சென்னை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இந்நிலையில், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் சென்னை வருவதால் அவரை சந்திப்பதை முதல்-அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">விஜய் </a>தவிர்ப்பது சரியாக இருக்காது என கவர்னர் அர்லேகர் தரப்பில் அறுவுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.</p> <h2>முதல்-அமைச்சர் விஜய் பயணம் தள்ளிவைப்பு</h2><p>இதையடுத்து, சென்னை வரும் மலேசிய பிரதமர் இப்ராஹிமை சந்திக்கும் வகையில் கவர்னரின் அறுவுத்தலின்பெயரில் முதல்-அமைச்சர் விஜய் இங்கிலாந்து பயணத்தை தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>மலேசிய பிரதமர் இப்ராஹிம் சென்னையில் இருந்து மீண்டும் மலேசியா புறப்பட்டப்பின் முதல்-அமைச்சர் விஜய் இங்கிலாந்து பயணத்தை மேற்கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது. முதல்-அமைச்சர் விஜய்-யின் இங்கிலாந்து பயண தேதி விவரம் விரைவில் அறிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>21 நாட்கள் நடைபெற்ற சட்டசபை கூட்டத் தொடர் நிறைவு: 11 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/21-day-assembly-session-concludes-11-bills-passed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/21-day-assembly-session-concludes-11-bills-passed#comments</comments><guid isPermaLink="false">8ca5a121-ca86-4843-a5e4-c0d85803292e</guid><pubDate>Tue, 08 Sep 2026 13:02:09 +0000</pubDate><atom:updated>2026-09-08T13:02:09.033Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,தமிழக சட்டசபை,TN Assembly,சபாநாயகர்,Assembly Session,சட்டசபை கூட்டத்தொடர்,மசோதாக்கள்,bills,CM Vijay,ஜேசிடி பிரபாகர்,JCD Prabhakar,Speaker J.C.D. Prabhakar,சட்டசபை கூட்டத் தொடர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/k693oem9/gaja.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/k693oem9/gaja.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>21 நாட்கள் நடைபெற்ற சட்டசபை கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. 11 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/gi7fqabc/uruva.jpg" /></figure><h2>பட்ஜெட் தாக்கல்</h2><p>தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம், 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், அடுத்த நாள் (6-ந் தேதி) வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. </p><p>தொடர்ந்து, 7, 10, 11 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதமும், 12-ந் தேதி நிதி அமைச்சர் மரியவில்சன், வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோரின் பதில் உரையும் இடம் பெற்றது. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/18jmyusq/udhay.jpg" /></figure><h2>மானியக் கோரிக்கை விவாதம்</h2><p>இதனைத் தொடர்ந்து, ஆகஸ்டு 17-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. மொத்தம் 55 துறைகள் இருப்பதால், தினமும் 3, 4 துறைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. </p><p>முக்கியமாக, கடந்த 3-ந் தேதி முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் கைவசம் உள்ள காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதால், சட்டசபையில் அனல் பறந்தது. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/p5hl0u43/2025.jpg" /></figure><h2>11 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம் </h2><p>இந்த நிலையில், நேற்று <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a>, மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரத்துடன் பதில் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். </p><p>இந்த நிலையில், சட்டசபையில் இன்று 11 சட்ட மசோதாக்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த 21 நாட்களாக நடைபெற்று வந்த சட்டசபை கூட்டத் தொடர் நிறைவடைந்தது. பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்.</p><p>அடுத்து, நவம்பர் மாதம் மழைக்கால கூட்டத் தொடர் சுமார் 3 நாட்கள் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. தொடர்ந்து, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கும் என தெரிகிறது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/mwm4jkho/budget.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>பஞ்சமி நிலங்களை கண்டறிய ஆணையம்: மார்க்சிஸ்ட் கம்யூ. வரவேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/commission-to-identify-panchami-lands-cpi-m-welcomes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/commission-to-identify-panchami-lands-cpi-m-welcomes#comments</comments><guid isPermaLink="false">9cfe6bb2-736c-4f77-8d2f-8ad3d0e1908f</guid><pubDate>Tue, 08 Sep 2026 13:01:15 +0000</pubDate><atom:updated>2026-09-08T13:01:15.455Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பெ.சண்முகம்,பஞ்சமி நிலங்கள்,CPM,p shanmugam,மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/ne0xrt3w/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ பெ.சண்முகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/ne0xrt3w/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பஞ்சமி நிலங்களை உடனடியாக பட்டியல் சாதி மக்களுக்கு மறு விநியோகம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>பஞ்சமி நிலங்களை கண்டறிய தனியாக ஆணையம் அமைக்கப்படும் என்ற சமூக நீதித்துறை அமைச்சரின் அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. ஏற்கனவே, பல்வேறு காலக்கட்டத்தில் அரசால் ஆணையங்கள், கமிட்டிகள் அமைக்கப்பட்ட பிறகும் பஞ்சமி நில மீட்பில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.</p><p>12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களில் தற்போது 1.86 லட்சம் ஏக்கர் நிலம் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சமி நிலம் என்று கண்டறியப்பட்ட நிலங்களை உடனடியாக பட்டியல் சாதி மக்களுக்கு மறு விநியோகம் செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.</p><p>புதிதாக அமைக்கப்பட இருக்கும் ஆணையம், பஞ்சமி நிலங்களை கண்டறிவதுடன், அதை மீட்டு தகுதியான குடும்பங்களுக்கு ஒப்படைக்கச் செய்வது உள்ளிட்ட பணிகளை முழுமையாக செய்வதற்கான அதிகாரம் கொண்டதாக அமைக்கப்பட வேண்டுமென்றும் இப்பணிகளை நிறைவேற்ற காலவரையறை தீர்மானிக்கப்பட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தின் காற்று மாசுபடுதலை அரசு கட்டுப்படுத்த வேண்டும்! - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-government-must-curb-air-pollution-in-tamil-nadu-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-government-must-curb-air-pollution-in-tamil-nadu-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">9f9e8a10-b22e-4379-90bf-a6c9ba59d066</guid><pubDate>Tue, 08 Sep 2026 12:41:00 +0000</pubDate><atom:updated>2026-09-08T12:41:00.218Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காற்று மாசு,Air pollution,Chennai,சென்னை,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/ansff8c8/47.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/ansff8c8/47.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தின் காற்று மாசுபடுதலை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>காற்று மாசுபாடு</h2><p>தேசிய தூய்மையான காற்றுத் திட்டத்தின் கீழ், முக்கிய நகரங்களில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தி, காற்றின் தரத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை மதிப்பீடு செய்யும் “ஸ்வச் வாயு சர்வேக்ஷன்” என்ற தேசிய மதிப்பீட்டில், தமிழகத்தின் தலைநகரான சென்னை 35-ஆவது இடத்திற்குப் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. </p><p>இந்தியாவிலேயே மக்கள் நெருக்கமும், போக்குவரத்து நெரிசலும் அதிகமுள்ள முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றான சென்னையில், வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளால் காற்றின் தரம் ஆண்டுக்கு ஆண்டு மாசடைந்து வருவதை தற்போது ஆட்சியில் உள்ள தவெக அரசாவது கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். நுரையீரல் நோய்கள், இதய நோய்கள் உள்ளிட்ட ஆரோக்கியக் குறைபாடுகளையும், புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பருவமழை மாற்றத்தையும் தூண்டிவிடும் இந்த காற்று மாசடைதல் தொடர்வது, ஆரோக்கியமான சமூகத்திற்கு நல்லதல்ல.</p><h2>ஆய்வு</h2><p>எனவே, தமிழகம் முழுவதிலுமுள்ள தொழிற்சாலைகளிலும் மக்கள் பயன்படுத்தும் வாகனங்களிலும் நச்சு புகையைக் கட்டுப்படுத்தும் “மாசுக் கட்டுப்பாட்டு சாதனங்கள்" பொருத்தப்பட்டுள்ளனவா என்பதை ஆளும் அரசு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டுமென <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D">முதல் -அமைச்சரை</a> கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எனது உடல்மொழி உள்நோக்கம் கொண்டதில்லை: முதல்-அமைச்சர் விஜய் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/my-body-language-was-not-intentional-says-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/my-body-language-was-not-intentional-says-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">1feda47f-323d-4445-bd94-4f1e5dae153b</guid><pubDate>Tue, 08 Sep 2026 12:28:55 +0000</pubDate><atom:updated>2026-09-08T12:29:39.152Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,தமிழக சட்டசபை,TN Assembly,விளக்கம்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,சைகை மொழி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/tnm8c40h/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/tnm8c40h/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம் காவல்துறை மானிய கோரிக்கை மீதான பதிலுரையில் உரையாற்றிய முதல்-அமைச்சர் விஜய், "திமுகவினர் என்ன பேசினாலும், மிசாவைப் பார்த்தவர்கள், மிசாவைப் பார்த்தவர்கள் என்று கூறுகிறார்கள். எல்லாருக்கும் அந்த மிசாவைப் பற்றிய வரலாறு நன்றாக தெரியும்" என்று கூறி ஒரு சைகையை காட்டினார். இந்த சைகை கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.</p><p>முதல்-அமைச்சரின் இந்த சைகைக்கு கண்டனம் தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம், "அவசரநிலை காலத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டு அவரது தாடை உடைக்கப்பட்டது. உருவக் கேலி செய்யும் விதமாக பேசுவது யாராக இருந்தாலும் கண்டனத்திற்குரியது. அதை முதல்-அமைச்சரே செய்திருப்பது பொறுப்பற்ற செயலாகும்" என்று தெரிவித்திருந்தார்.</p><p>இந்த நிலையில் எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது உள்நோக்கம் கொண்டதில்லை என்று முதல்-அமைச்சர் விஜய் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை…</p>&mdash; TVK Vijay (@TVKVijayHQ) <a href="https://x.com/TVKVijayHQ/status/2097291431081877776?ref_src=twsrc%5Etfw">September 8, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>எட்டயபுரத்தில் தலைமை ஆசிரியர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/100-pounds-of-jewelry-stolen-from-the-principals-house-in-ettayapuram</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/100-pounds-of-jewelry-stolen-from-the-principals-house-in-ettayapuram#comments</comments><guid isPermaLink="false">338da3e1-42d3-48a4-9f0a-24d26a7e771b</guid><pubDate>Tue, 08 Sep 2026 12:27:16 +0000</pubDate><atom:updated>2026-09-08T12:27:16.616Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>jewelry stolen,bike,எட்டயபுரம்,நகை கொள்ளை,police enquiry,தலைமை ஆசிரியர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/qj1uimv1/000000001.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ தலைமை ஆசிரியரின் வீடு]]></media:title><media:description type="html"><![CDATA[ எட்டயபுரத்தில் தலைமை ஆசிரியர் வீட்டில் 100 பவுன் நகைகள் கொள்ளை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/qj1uimv1/000000001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் மேல ரத வீதியில், பூட்டியிருந்த அரசுப் பள்ளி<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D"> தலைமை ஆசிரியர்</a> வீட்டின் பூட்டை உடைத்து சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான 100 பவுன் தங்க நகைகள் மற்றும் பைக்கை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.</p><h2>வெளியூர் சென்ற குடும்பம்</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தூத்துக்குடி மாவட்டம்</a> எட்டயபுரம் மேல ரத வீதியைச் சேர்ந்தவர் முத்துமாரி (வயது 50). இவரது மனைவி தேன்மொழி (வயது 46). இந்த தம்பதியர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த 5-ந்தேதியன்று குடும்பத்துடன், ராமநாதபுரத்திலுள்ள தனது மகளின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.</p><h2>100 பவுன் நகை கொள்ளை</h2><p>இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள், வீட்டின் முன்பக்கப் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த பீரோவை உடைத்து, அதில் வைக்கப்பட்டிருந்த 100 சவரன் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">தங்க நகைகள்</a> மற்றும் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.</p><h2>போலீசில் புகார்</h2><p>முத்துமாரி குடும்பத்தினர் நேற்று (திங்கட்கிழமை) வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகைகள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88">கொள்ளையடிக்கப்பட்டது</a> தெரியவந்தது. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக எட்டயபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மோப்ப நாயும் அங்கு வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><h2>சாலையோரத்தில் மீட்கப்பட்ட பைக்</h2><p>இதற்கிடையே, கொள்ளையடிக்கப்பட்ட பைக் மட்டும் பிதப்புரம் பகுதி சாலையோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டு, போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/iNf-AfkCRLU"></iframe></figure>]]></content:encoded></item><item><title>தி.மு.க. ஆட்சியில் மின் வாரியத்துக்கு ரூ.342 கோடி இழப்பு;  சட்டசபையில் ஆய்வறிக்கை தாக்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-audit-report-rs-342-crore-loss-tangedco</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-audit-report-rs-342-crore-loss-tangedco#comments</comments><guid isPermaLink="false">094fd069-edd8-4068-b722-9f0b02909f8a</guid><pubDate>Tue, 08 Sep 2026 11:39:25 +0000</pubDate><atom:updated>2026-09-08T11:39:25.902Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,மின் வாரியம்,இழப்பு,தி.மு.க.,ஆய்வறிக்கை,தாக்கல்</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/37pyv8k0/eb.jpg" width="768"><media:title type="html"><![CDATA[ மின் வாரியம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தி.மு.க. ஆட்சியில் மின் வாரியத்துக்கு ரூ.342 கோடி இழப்பு;  சட்டசபையில் ஆய்வறிக்கை தாக்கல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/37pyv8k0/eb.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையில் இன்று எரிசக்தி துறை சம்பந்தமாக, இந்திய தணிக்கை தலைவரின் ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மின் உற்பத்தி நிலையங்களின் உண்மையான மின் உற்பத்தியை கணக்கிடாமல், அவற்றின் 'நிறுவுதிறன்' அடிப்படையில் டான்ஜெட்கோ கட்டணம் செலுத்தியதால், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">மின் வாரியத்துக்கு</a> ரூ.342 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><strong>அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–</strong></p><h2>ரூ.342 கோடி இழப்பு</h2><p>மின் உற்பத்தி நிலையங்கள் உற்பத்தி செய்யும் உண்மையான மின்சார அளவை கணக்கில் கொள்ளாமல், அவற்றின் நிறுவுதிறன் அடிப்படையில் டான்ஜெட்கோ கட்டணம் செலுத்தி உள்ளது.உண்மையான உற்பத்தி திறனுக்கு ஏற்ப கட்டணம் செலுத்தாமல், நிறுவு திறன் அடிப்படையில்  கட்டணம் செலுத்தியதால் மின் வாரியத்துக்கு ரூ.342 கோடி  இழப்பு ஏற்பட்டுள்ளது.</p><p>மேலும், மின்நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை 'மின் இணைப்புகள்' வழியே கொண்டு செல்வதற்கும் டான்ஜெட்கோ தனியாக கட்டணம் செலுத்தியுள்ளது.</p> <h2>வேலை செய்யாததற்கு கட்டணமா?</h2><p>தமிழகத்தில் உள்ள பல மின் உற்பத்தி நிலையங்கள் அவற்றின் மொத்த உற்பத்தி திறனில் 26 சதவீதம் முதல் அதிகபட்சமாக 87 சதவீதம் வரை மட்டுமே மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளன. ஆனால், மின் உற்பத்தி மிக குறைவாகவே இருந்தபோதும், 100 சதவீத முழு உற்பத்தி திறனும் நடந்தது போன்ற  டான்ஜெட்கோ  கட்டணம் செலுத்தி உள்ளது.இப்படி வெறும் 4 மின் உற்பத்தி நிலையங்களில் மட்டும் மின்வாரியத்திற்கு ரூ.342 கோடி அளவுக்கு இமாலய கட்டண இழப்பு ஏற்பட்டு உள்ளது. </p><h2>தனியாரிடம் கூடுதல் விலைக்கு கொள்முதல்</h2><p>கடந்த ஆட்சி காலங்களில் மாநிலத்தின் மின் தேவை அதிகரித்தது. ஆனால், அதற்கு ஏற்ப தமிழக அரசின் சொந்த மின் உற்பத்தி திறன் தொடர்ந்து குறைந்தபடியே இருந்துள்ளது. இந்த மின்தேவை இடைவெளியை பூர்த்தி செய்ய, தனியாரிடம் இருந்து கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அரசின் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">மின் உற்பத்தி</a> நிலையங்களை முறையாக பராமரித்து, முழு உற்பத்தி திறனை பயன்படுத்த தவறியதே இதற்கு காரணம் என தணிக்கையில் சாடப்பட்டுள்ளது. </p><p>சொந்த நிலையங்களை பராமரிக்காமல், தனியாருக்கு சாதகமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88">கூடுதல் விலைக்கு</a> கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 2018 முதல் 2023 மார்ச் வரையிலான 5 ஆண்டு காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தணிக்கை ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மிசா வரலாற்றை மறைக்க முடியாது; மறுக்கவும் முடியாது! - தமிழச்சி தங்கபாண்டியன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-history-of-misa-cannot-be-concealed-nor-can-it-be-denied-thamizhachi-thangapandian</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-history-of-misa-cannot-be-concealed-nor-can-it-be-denied-thamizhachi-thangapandian#comments</comments><guid isPermaLink="false">5abf7864-4946-415b-8e87-e1daef21456d</guid><pubDate>Tue, 08 Sep 2026 11:17:05 +0000</pubDate><atom:updated>2026-09-08T11:17:05.908Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,history,தமிழச்சி தங்கபாண்டியன்,மு.க. ஸ்டாலின்,MISA,முதல் - அமைச்சர் விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/u3owkl0j/197.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழச்சி தங்கபாண்டியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/u3owkl0j/197.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மிசா வரலாற்றை மறைக்க முடியாது; மறுக்கவும் முடியாது என்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF">தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி</a> தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>முதல் - அமைச்சர்</h2><p>சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், சட்டம் - ஒழுங்கு, குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்து விவாதித்து, எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு ஆதாரத்தோடு பதிலளித்து, காவல்துறை நிர்வாகம் - காவல்துறையினருக்கு ஆற்றப்போகும் புதிய திட்டங்களை எடுத்துரைத்து, மக்கள் பணியாற்றிட வேண்டிய இடத்தில், முதல்-அமைச்சர், வெற்று அரசியல் மேடை போல் பேசியிருப்பது வருந்தத்தக்கது.</p><h2>மிசா</h2><p>ஜனநாயகத்தை காப்பாற்ற மிசாவில் ஆயிரக்க்கணக்கான திமுக - தோழமை இயக்கத்தினர் கைது செய்யப்பட்டபோது, அவர்கள் எங்கே இருக்கின்றார்கள், எப்படி இருக்கின்றார்கள், உயிரோடுதான் இருக்கின்றார்களா? என்பது கூட தெரியாமல், பதைபதைப்போடும் தவிப்போடும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில், நாள் கணக்கில் குடும்பம் குடும்பமாக காத்துக்கிடந்த வரலாறு , நாடறியும்.  ஜனநாயகத்திற்காக சிறை சென்று அடக்குமுறையை, அரச பயங்கரவாதத்தை எதிர்கொண்ட வரலாறு அது.</p><h2>மிசா வரலாறு நாடறியும்</h2><p>திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெற்றிருப்பது வெறும் தழும்பல்ல; ஜனநாயகம் காக்கும் போராட்டத்தில், அவர் ஏற்றுக்கொண்ட வலியின் வீர அடையாளம்;  'தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே !' என்ற புறநானூற்றுத் தாயின் வீரவரிகளுக்கு, வாழும் இலக்கணமான வரலாறு. அந்த வீரவரலாற்றைக் கேலி செய்வது,  ஜனநாயகம் காக்கப் போராடிய ஒரு தலைமுறையின் தியாகத்தையே கேலி செய்வதாகும். மிசா வரலாறு நாடறியும், வரலாறு ஒருபோதும் மறக்காது; மறுக்காது; மறைக்காது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காட்பாடி அருகே பூட்டிய வீட்டில் 36 சவரன் நகை கொள்ளை: தம்பதி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/couple-arrested-for-stealing-36-sovereigns-of-jewellery-from-locked-house-near-katpadi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/couple-arrested-for-stealing-36-sovereigns-of-jewellery-from-locked-house-near-katpadi#comments</comments><guid isPermaLink="false">fac06d73-051a-4b3e-b970-1d2bbeb3b2c4</guid><pubDate>Tue, 08 Sep 2026 11:10:44 +0000</pubDate><atom:updated>2026-09-08T11:10:44.262Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வேலூர்,நகை கொள்ளை,police enquiry,Couple arrested,தம்பதி கைது,Jewellery robbery</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/yai9p43m/-01.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ முத்துவேல் கார்த்திக் - பிரபாவதி ]]></media:title><media:description type="html"><![CDATA[ காட்பாடி அருகே பூட்டிய வீட்டில் 36 சவரன் நகையை கொள்ளையடித்த தம்பதி கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/yai9p43m/-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வேலூர்,</p><p>வேலூர் மாவட்டம் காட்பாடியில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து 36 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில், முத்துவேல் கார்த்திக் - பிரபாவதி தம்பதியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். </p><h2>நகைகள் கொள்ளை</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வேலூர் மாவட்டம்</a> காட்பாடி திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் பக்கத்து தெருவில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இவர்களது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 36 சவரன் தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்து சென்றனர்.</p><h2>தனிப்படை அமைப்பு</h2><p>வீடு திரும்பிய ராஜ்குமார், கதவு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளை போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காட்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வேலூர் எஸ்பி பழனி உத்தரவின் பேரில், குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.</p><h2>தம்பதி கைது</h2><p>அப்போது, கொள்ளையர்கள் சொகுசு காரில் வந்து இறங்கி திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட அதிரடி தேடுதல் வேட்டையில், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட முத்துவேல் கார்த்திக் மற்றும் அவரது மனைவி பிரபாவதி ஆகிய 2 பேரை இன்று (செவ்வாய்க்கிழமை) போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், இந்த தம்பதியினர் பல்வேறு இடங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி, பூட்டியிருக்கும் வீடுகளைக் குறிவைத்து தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><h2>நகைகள் மீட்பு</h2><p>கைது செய்யப்பட்ட தம்பதியிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 36 சவரன் தங்க நகைகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சொகுசு கார் கொள்ளைத் தம்பதியின் பின்னணி குறித்தும், இவர்களுக்கு வேறு ஏதேனும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88">கொள்ளை</a> சம்பவங்களில் தொடர்புள்ளதா என்பது குறித்தும் காட்பாடி போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>போத்தனூர் - சென்னை சிறப்பு ரெயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-coach-attached-to-the-podanurchennai-special-train</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-coach-attached-to-the-podanurchennai-special-train#comments</comments><guid isPermaLink="false">294c547f-4175-4d11-b569-76545541202c</guid><pubDate>Tue, 08 Sep 2026 11:08:18 +0000</pubDate><atom:updated>2026-09-08T11:08:18.644Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,சிறப்பு ரெயில்,Special train,ஏ.சி. பெட்டி,போத்தனூர்,Additional coach,கூடுதல் பெட்டி இணைப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/svyhj33p/train.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/svyhj33p/train.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>போத்தனூர் - சென்னை சிறப்பு ரெயிலில் கூடுதல் பெட்டி இணைக்கப்படுகிறது. </p><h2>கூடுதல் பெட்டி இணைப்பு</h2><p>பயணிகள் எண்ணிக்கை உயர்வை கருத்தி கொண்டு போத்தனூர் - சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் இடையே வாரம் 3 முறை இயக்கப்படும் சிறப்பு ரெயிலில் வரும் 11-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல், கூடுதலாக ஒரு ஏ.சி. இருக்கை வசதி பெட்டி இணைக்கப்படுகிறது. </p><p>மேற்கண்ட தகவலை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87">தெற்கு ரெயில்வே </a>தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-constituency-bypoll-dmk-chief-stalin-consultation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-constituency-bypoll-dmk-chief-stalin-consultation#comments</comments><guid isPermaLink="false">d4e4cf49-84be-4a72-8cf5-ed7bd9eef3c1</guid><pubDate>Tue, 08 Sep 2026 11:03:08 +0000</pubDate><atom:updated>2026-09-08T11:03:08.387Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,இடைத்தேர்தல்,By election,ஆலோசனை,MKstalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/vrw0ryl2/Untitled-4.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/vrw0ryl2/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்), ஜெயக்குமார் (பெருந்துறை), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்) ஆகிய 6 பேர் அடுத்தடுத்து தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தனர். இதனால், அந்த 6 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.</p><p>அதே நேரத்தில், பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால், அந்தத் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.</p><p>இதனால் தமிழகத்தில் 7 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது. இதில், திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய 5 தொகுதிகளின் தேர்தல் முடிவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதனை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><p>இதனிடையே தமிழகத்தில் காலியாக உள்ள 7 தொகுதிகளில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் நாளை (புதன்கிழமை) தொடங்க உள்ளது.</p><p>இந்த நிலையில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இடைத்தேர்தலில் போட்டியிடுவது, வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து மதுராந்தகம், தாராபுரம் தொகுதி திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசிக்கிறார்.</p>]]></content:encoded></item><item><title>அம்பத்தூர் பாடி பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/stormwater-drain-works-ambattur-padi-inspected-by-corporation-commissioner</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/stormwater-drain-works-ambattur-padi-inspected-by-corporation-commissioner#comments</comments><guid isPermaLink="false">799462fd-a5d7-4098-b3f8-74ee74b9fb32</guid><pubDate>Tue, 08 Sep 2026 10:37:44 +0000</pubDate><atom:updated>2026-09-08T10:37:44.357Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Corporation,சென்னை மாநகராட்சி,Northeast Monsoon,ஆய்வு,inspection,முன்னெச்சரிக்கை நடவடிக்கை,வடகிழக்குப் பருவமழை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/gijlb2lx/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/gijlb2lx/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அம்பத்தூர் பாடி பகுதியில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மாநகராட்சி, அம்பத்தூர் மண்டலத்திற்குட்பட்ட பாடி பகுதியில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன், ஆசிய வளர்ச்சி வங்கியின் ஆலோசகர்களுடன் இன்று (08.09.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.</p><p>கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதியில் அம்பத்தூர் மண்டலம், கொரட்டூர் கிழக்கு அவென்யூவில் தொடங்கும் இந்த மழைநீர் வடிகால் பணியானது 2.50 கிலோ மீட்டர் நீளத்தில் சென்னை - திருவள்ளூர் நெடுஞ்சாலை, பாடி மேம்பாலம் பகுதி வழியாக அண்ணாநகர் மண்டலத்தில் உள்ள ஓட்டேரி நல்லா கால்வாயில் சென்றடைகிறது.</p><p>இதில் 1.90 கிலோ மீட்டர் நீளத்திற்கு பணி முடிக்கப்பட்டுள்ளது. 600 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. பாடி மேம்பாலம் அருகில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணியினை மாநகராட்சி ஆணையாளர் பார்வையிட்டு, பணிகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>இந்த ஆய்வின்போது, மண்டல அலுவலர் எம்.பி.தணிகைவேலன், மேற்பார்வைப் பொறியாளர்கள் திருமுருகன், பிரபாகரன், ஆசிய வளர்ச்சி வங்கியின் ஆலோசகர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தலை சந்திக்கும் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகள்: கள நிலவரம் எப்படி?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-constituencies-facing-by-elections-what-is-the-ground-situation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-constituencies-facing-by-elections-what-is-the-ground-situation#comments</comments><guid isPermaLink="false">8e05679a-b216-4563-bb42-f408e7944a45</guid><pubDate>Tue, 08 Sep 2026 10:32:26 +0000</pubDate><atom:updated>2026-09-08T10:32:26.052Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,Election,இடைத்தேர்தல்,தேர்தல் களம்,மதுராந்தகம்,தாராபுரம்,Madurantakam,tharapuram,byelection,CM Vijay</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/2liuynbt/madu.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/2liuynbt/madu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">இடைத்தேர்தல்</a> அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இரு தொகுதிகளிலும் கள நிலவரம் எப்படி இருக்கிறது? என்பதை பற்றி பார்ப்போம். </p><h2>தேர்தல் அரசியல் நகர்வு</h2><p>'ஆட்சி' மாறினால் 'காட்சி'யும் மாறும் என்று பொதுவாக அரசியலில் சொல்வார்கள். அதை மெய்ப்பிக்கும் வகையிலேயே இந்தத் தேர்தலின்போது அரசியல் நகர்வுகளும் இருந்தன. </p><p>புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காததால், தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவுடன் அரியணை ஏறியது.</p><h2>7 தொகுதிகள் காலியானது </h2><p>இதைத் தாண்டி, அ.தி.மு.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பலரும் த.வெ.க. ஆட்சியமைக்க வெளிப்படையாக ஆதரவு அளித்தனர். இதனால் கடும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம் தொகுதி), சத்தியபாமா (தாராபுரம்), ஜெயக்குமார் (பெருந்துறை), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), டாக்டர் விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்) ஆகிய 6 பேர் அடுத்தடுத்து தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தனர். இதனால், அந்த 6 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. </p><p>அதே நேரத்தில், பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால், அந்தத் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/ui60l6jp/voiter.jpg" /></figure><h2>2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் </h2><p>இதனால், தமிழகத்தில் 7 தொகுதிகள் காலியானது. இதில், திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய 5 தொகுதிகளின் தேர்தல் முடிவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. </p><p>இதனை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இந்த 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை உத்தரவு பிறப்பித்தது. </p><p>இந்த நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள 7 தொகுதிகளில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் அக்டோபர் 6-ந் தேதி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">இடைத்தேர்தல்</a> நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. வேட்புமனு தாக்கல் நாளை (புதன்கிழமை) தொடங்க உள்ள நிலையில், மேற்கண்ட 2 தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.</p><h2>மதுராந்தகம் தொகுதி</h2><p>கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலின்போது, 4 முனைப்போட்டி நிலவியது. மதுராந்தம் (தனி) தொகுதியில் தி.மு.க. சார்பில் அமுலு பொன்மலர், அ.தி.மு.க. சார்பில் மரகதம் குமரவேல், த.வெ.க. சார்பில் எழில் கேத்தரின், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் ஆகியோர் போட்டியிட்டனர். </p><p>மொத்தம் பதிவான 1 லட்சத்து 96 ஆயிரத்து 268 வாக்குகளில், அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் 69,284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்டவர்களில், த.வெ.க. வேட்பாளர் எழில் கேத்தரின் 62,090 வாக்குகள் பெற்று 2-வது இடம்பிடித்தார். இருவருக்குமான வித்தியாசம் 7,194 வாக்குகள் ஆகும். தி.மு.க. வேட்பாளர் அமுலு பொன்மலர் 59,838 வாக்குகள் பெற்று 3-வது இடம் பிடித்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகி ராமன் 4,950 வாக்குகள் பெற்றார்.   </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/q56czvno/pal.jpg" /></figure><h2>தாராபுரம் தொகுதி</h2><p>இதேபோல், தாராபுரம் (தனி) தொகுதியில் தி.மு.க. சார்பில் இந்திராணி, அ.தி.மு.க. சார்பில் சத்யபாமா, த.வெ.க. சார்பில் கவுரி சித்ரா, நாம் தமிழர் கட்சி சார்பில் திவ்யா ஆகியோர் போட்டியிட்டனர். </p><p>மொத்தம் பதிவான 1 லட்சத்து 99 ஆயிரத்து 944 வாக்குகளில், அ.தி.மு.க. வேட்பாளர் சத்யபாமா 81,100 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்டவர்களில், தி.மு.க. வேட்பாளர் இந்திராணி 64,373 வாக்குகள் பெற்று 2-வது இடம்பிடித்தார். இருவருக்குமான வித்தியாசம் 16,727 வாக்குகள் ஆகும். த.வெ.க. வேட்பாளர் கவுரி சித்ரா 46,438 வாக்குகள் பெற்று 3-வது இடம் பிடித்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திவ்யா 6,026 வாக்குகள் பெற்றார்.  </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/utzfaqj7/525.jpg" /></figure><h2>யாருக்கு வெற்றி வாய்ப்பு?</h2><p>கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்யபாமா (தாராபுரம்) ஆகியோர் மீண்டும் அதே தொகுதியில் த.வெ.க. சார்பில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. </p><p><a href="https://www.dailythanthi.com/topic/இடைத்தேர்தல்">இடைத்தேர்தலை</a> எதிர்க்கட்சியான தி.மு.க. புறக்கணிக்கும் என்று கூறப்படும் நிலையில், அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி ஆகியவை களம் காண இருக்கின்றன. சட்டசபை தேர்தலுக்கு முன்பு இருந்ததைவிட த.வெ.க.வுக்கு தற்போது செல்வாக்கு அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதுபோக, இரு பெண் வேட்பாளர்களுக்கும் தொகுதியில் சொந்த செல்வாக்கு அதிகம் இருப்பதால், நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்றே அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.  </p><h2>பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் தேர்தல் முடிவு</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/இடைத்தேர்தல்">இடைத்தேர்தல்</a> வெற்றி என்பது கூட்டணி ஆட்சி நடத்தி வரும் த.வெ.க.வுக்கு முக்கிய தேவை என்பதால், தேர்தல் முடிவு இப்போதே பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் - மு.வீரபாண்டியன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-permanent-solution-must-be-found-for-the-attacks-on-tamil-nadu-fishermen-by-the-sri-lankan-navy-m-veerapandian</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-permanent-solution-must-be-found-for-the-attacks-on-tamil-nadu-fishermen-by-the-sri-lankan-navy-m-veerapandian#comments</comments><guid isPermaLink="false">8df5dba5-6889-49ee-8544-8a212bb2a2fd</guid><pubDate>Tue, 08 Sep 2026 10:25:08 +0000</pubDate><atom:updated>2026-09-08T10:25:08.093Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,தமிழக மீனவர்கள்,Sri Lankan Navy,fishermen,இலங்கை,மு.வீரபாண்டியன்,M. Veerapandian</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/fx71bw9d/37.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.வீரபாண்டியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/fx71bw9d/37.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். </p><p>இதுகுறித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:-</p><h2>மந்திரி ராஜ்நாத்சிங்</h2><p>இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் செப்டம்பர் 8 முதல் 10 வரை 3 நாள் அதிகாரப்பூர்வ பயணமாக இலங்கை சென்றுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு, கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துதல் என்ற நோக்கத்தோடு இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார் என அரசுத்தரப்பு செய்திகள் கூறுகின்றன.</p><h2>தமிழ்நாடு மீனவர்கள்</h2><p>இலங்கை தலைவர்களைச் சந்தித்து முக்கியப் பிரச்சினைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் எனத் தெரிகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழ்நாடு மீனவர்கள், இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படுவதற்கும், கைது செய்யப்படுவதற்கும், சிறையில் அடைக்கப்படுவதற்கும் அவர்களது படகுகள் உட்பட தனிப்பட்ட உடைமைகள் பறிக்கப்படுவதற்கும், கைப்பற்றப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களின் படகுகளைத் திரும்ப ஒப்படைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும், இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்</a> தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் அவர்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வடகிழக்கு பருவமழை: முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-chief-minister-vijay-consultation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-chief-minister-vijay-consultation#comments</comments><guid isPermaLink="false">65d4f827-84b0-49c3-96a5-1a6cc1541843</guid><pubDate>Tue, 08 Sep 2026 10:12:33 +0000</pubDate><atom:updated>2026-09-08T10:12:33.332Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,முதல்-அமைச்சர்,வடகிழக்கு பருவமழை,Northeast Monsoon,Chief Minister</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/et4goa08/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/et4goa08/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>வடகிழக்கு பருவமழை நெருங்கி வரும் நிலையில் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார்.</p>  <h2>வடகிழக்கு பருவமழை</h2><p>தமிழகத்திற்கு அதிக மழை தரும் காலமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88">வடகிழக்கு பருவமழை</a> காலம் உள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை நிலவுகிறது. இந்த பருவமழை காலத்தின் புயலால் பாதிப்புகளும் ஏற்படுகின்றன. பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க ஆண்டுதோறும் அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்துவருகிறது.</p> <h2>முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை</h2><p>இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் விஜய் இன்று ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.</p>]]></content:encoded></item></channel></rss>