<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 11 Aug 2026 21:05:50 +0000</lastBuildDate><item><title>தொகுதிகள் மறுவரையறைக்கு எதிராக... இன்று சட்டசபையில் தனித் தீர்மானம் கொண்டு வரும் முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-to-move-a-special-resolution-in-the-assembly-today-against-the-delimitation-of-constituencies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-to-move-a-special-resolution-in-the-assembly-today-against-the-delimitation-of-constituencies#comments</comments><guid isPermaLink="false">b15decc2-725c-476b-b14d-41a3c99283d6</guid><pubDate>Tue, 11 Aug 2026 20:07:34 +0000</pubDate><atom:updated>2026-08-11T20:07:34.546Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,Assembly,தொகுதிகள் மறுவரையறை,தனித் தீர்மானம்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/a7d7oipw/vj.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தொகுதிகள் மறுவரையறைக்கு எதிராக இன்று (புதன் கிழமை) சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் தனித் தீர்மானம் கொண்டு வருகிறார். ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/a7d7oipw/vj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தொகுதிகள் மறுவரையறைக்கு எதிராக இன்று (புதன் கிழமை) சட்டசபையில் முதல்-அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">விஜய் </a>தனித் தீர்மானம் கொண்டு வருகிறார். </p><h2>ஆலோசனைக் கூட்டம்</h2><p>தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரம் தொடர்பாக கடந்த 8ம் தேதி தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் சென்னையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாகத் தக்க வைக்க வேண்டும் என்றும், தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.</p><p>இந்நிலையில் தொகுதிகள் மறுவரையறைக்கு எதிராக இன்று (12.08.2026) சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் தனித் தீர்மானம் கொண்டு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>தனித் தீர்மானம்</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சட்டமன்ற பேரவை நிகழ்ச்சி நிரலில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>2026 ஆகஸ்டு 12ம் தேதி, புதன்கிழமை காலை 9.30 மணி </p><p><strong>1. அரசினர் தனித் தீர்மானம்</strong></p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் கீழ்க்காணும் தீர்மானத்தை முன்மொழிவார்:-</p><p>"தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மக்களவை / சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையானது கடந்த 50 ஆண்டுகளாக 1971-ஆம் ஆண்டினுடைய மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்களின்படி நிர்ணயிக்கப்பட்டு தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகிறது. </p><p>ஏப்ரல் 2026-இல் நாடாளுமன்றத்தில் கடந்த 50 ஆண்டு கால தொகுதி மறுவரையறை தடையை நீக்கவும், 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்திடவும், மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 550-லிருந்து 850 ஆக அதிகரிக்கவும் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா தோல்வியடைந்தது.</p><h2>அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா</h2><p>இந்நிலையில் மீளவும் மேற்குறிப்பிட்ட அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்படவுள்ளது எனத் தெரிந்ததன் அடிப்படையில் 1971-க்கு பிறகு உள்ள எந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு தொகுதி மறுவரையறை செய்தாலும், மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் நிரந்தரமாகப் பாதிக்கப்படும் என்பது நிதர்சனமான உண்மை. </p><p>ஒன்றிய அரசு அளித்த உறுதியின்படி மக்கள்தொகை கட்டுப்பாட்டு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி நல்ல பொருளாதார வளர்ச்சி கண்டு, நல்ல சுகாதாரம், மக்கள் நலத் திட்டங்களை மேற்கொண்டு வரும் எந்த ஒரு மாநிலமும் தொகுதி மறுவரையால் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்வது ஒன்றிய அரசின் தலையாய கடமையாகும்.</p><h2>33 சதவீத இடஒதுக்கீடு</h2><p>எனவே, தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையான 543 என்ற அளவிலேயே நிரந்தரமாக வைப்பதற்கும். மாநிலங்களுக்கு இடையேயான எண்ணிக்கை பகிர்வை நிரந்தரமாக வைக்கவும், மேலும், தற்போது மக்களவை மாநிலங்களவையினுடைய விகிதம் 2.2:1 என்ற அளவிலேயே நிலைநிறுத்த வேண்டும் என்றும், அதேவேளையில், பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை காலதாமதமின்றி, தற்போதுள்ள 543 தொகுதிகளின் அடிப்படையிலேயே 2029-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஒன்றிய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, கீழ்க்கண்ட தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றுகிறது. </p><h2>விகிதாச்சார பிரதிநிதித்துவம்</h2><p>i) நாடாளுமன்ற மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்க வேண்டும்.</p><p>ii) தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் இடங்களின் எண்ணிக்கையை மாநிலங்களுக்கிடையே அதாவது விகிதாச்சார பிரதிநிதித்துவம் தற்போதுள்ள அளவிலேயே நிரந்தரமாக்க வேண்டும்.</p><p>iii) வரவிருக்கும் மக்களவை பொதுத்தேர்தலிலும், அதன் பிறகு சட்டமன்ற பொதுத்தேர்தல்களிலும் மூன்றில் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டு பலனை பெண்கள் பெறுவதை உறுதி செய்யவேண்டும் என ஒன்றிய அரசை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.</p><h2>வேளாண்மை திருத்திய நிதிநிலை அறிக்கை</h2><p>2. 2026-2027-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் 2026-2027-ம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை</p><p>2026-2027-ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை மற்றும் 2026-2027-ம் ஆண்டுக்கான வேளாண்மை திருத்திய நிதிநிலை அறிக்கை ஆகியவற்றின் மீதான பொது விவாதத்திற்கு பதிலுரை.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>கோவை: டெங்கு கொசுவை ஒழிக்க மருந்து தெளித்தபோது விபரீதம்... மூச்சுத்திணறி இருவர் பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-tragedy-strikes-during-anti-dengue-mosquito-spraying-two-die-of-suffocation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-tragedy-strikes-during-anti-dengue-mosquito-spraying-two-die-of-suffocation#comments</comments><guid isPermaLink="false">c086f898-e1ba-48f7-84d4-f0c6d78c7cd0</guid><pubDate>Tue, 11 Aug 2026 18:32:54 +0000</pubDate><atom:updated>2026-08-11T18:32:54.997Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,டெங்கு,Dengue</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/mw4sscp6/KO.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கோவை மாவட்டம் அன்னூர் அருகே டெங்கு கொசுக்களை ஒழிப்பதற்காக மருந்து தெளித்தபோது,  இருவர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/mw4sscp6/KO.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p>கோவை மாவட்டம் அன்னூர் அருகே <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">டெங்கு </a>கொசுக்களை ஒழிப்பதற்காக மருந்து தெளித்தபோது,  இருவர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>வீட்டுக்குள் பரவிய கொசு மருந்து</h2><p>அன்னூர் பகுதியில் கொசுக்களை ஒழிப்பதற்காக பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டது. அப்போது வீட்டுக்குள் மருந்து பரவிய நிலையில், வீட்டில் இருந்த மோகன் (65), ராணி (75) ஆகியோருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது.</p><p>இதையடுத்து இருவரும் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில், உயிரிழந்ததாக கூறப்படுகிறது.</p><h2>அதிகளவில் பூச்சிக்கொல்லி </h2><p>கொசு ஒழிப்பு பணியில் பயன்படுத்தப்பட்ட மருந்தில் ‘Pyrephrum’ என்ற பூச்சிக்கொல்லி அதிகளவில் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாகவே வீட்டுக்குள் இருந்த இருவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.</p><h2>போலீஸ் விசாரணை</h2><p>இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொசு ஒழிப்பு பணியில் பயன்படுத்தப்பட்ட மருந்தின் தன்மை, அதன் அளவு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>நாளை மலையேற தடை... சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல மீண்டும் அனுமதி மறுப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-devotees-climbing-the-hill-tomorrow-permission-to-visit-sundara-mahalingam-temple-denied-again</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-devotees-climbing-the-hill-tomorrow-permission-to-visit-sundara-mahalingam-temple-denied-again#comments</comments><guid isPermaLink="false">d3fde334-da20-49e4-8f2c-4c9a4f2eb5e4</guid><pubDate>Tue, 11 Aug 2026 18:10:51 +0000</pubDate><atom:updated>2026-08-11T18:10:51.044Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சதுரகிரி,Sundara Mahalingam Temple,சுந்தர மகாலிங்கம் கோவில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/767nip3y/sun.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு நாளை பக்தர்கள் மலையேறி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/767nip3y/sun.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF">சதுரகிரி </a>சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு நாளை பக்தர்கள் மலையேறி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. </p><h2>மீண்டும் பரவிய காட்டுத்தீ</h2><p>காட்டுத்தீ காரணமாக ஏற்கனவே பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மாலை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இரவு 7 மணியளவில் காட்டுத்தீ மீண்டும் பரவுவதை வனத்துறையினர் கண்டறிந்தனர். இதையடுத்து, பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாளையும் சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.</p><h2>நிலைமை சீரான பிறகே அனுமதி</h2><p>காட்டுத்தீ பரவல் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். “நிலைமை சீரான பிறகு பக்தர்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து அறிவிக்கப்படும்” என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>போலீஸார் லஞ்சம் கேட்டால் இனி தப்ப முடியாது! தனிப்பிரிவு தொடக்கம்... இந்த எண்ணில் புகார் கொடுங்க</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-escaping-if-police-demand-a-bribe-special-wing-launched-lodge-complaints-at-this-number</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-escaping-if-police-demand-a-bribe-special-wing-launched-lodge-complaints-at-this-number#comments</comments><guid isPermaLink="false">e5ff3f54-45d0-463e-bee7-01781b7e7a71</guid><pubDate>Tue, 11 Aug 2026 17:05:50 +0000</pubDate><atom:updated>2026-08-11T17:05:50.993Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,லஞ்சம்,Special wing,சென்னை காவல் ஆணையாளர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/riyjl3nu/la.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை பெருநகர காவல் துறையில் ‘ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு’ புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/riyjl3nu/la.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை பெருநகர காவல் துறையில் ‘ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு’ புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. காவல் துறையினர் தங்களது பணிகளை மேற்கொள்வதற்காக பொதுமக்களிடம் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">லஞ்சம் </a>கேட்டாலோ அல்லது லஞ்சம் வழங்குமாறு நிர்பந்தித்தாலோ, உடனடியாக தகவல் தெரிவிக்கலாம் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.</p><h2>தனிப்பிரிவு தொடக்கம்</h2><p>இதுதொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை பெரும்பாலானோர் நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.</p><p>இருப்பினும், ஒரு சிலரின் தவறான செயல்பாடுகளால் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் அவப்பெயர் ஏற்படுவதாகவும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ‘ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு’ தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>லஞ்சம் கேட்டால்</h2><p>இந்த தனிப்பிரிவு மூலம் காவல்துறையில் லஞ்சம் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்களை உடனுக்குடன் பெற்று, அவற்றை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸார் தங்களது பணிகளை செய்வதற்காக லஞ்சம் கேட்டாலோ அல்லது லஞ்சம் வழங்குமாறு நிர்பந்தித்தாலோ, பொதுமக்கள் <strong>78717-23000</strong> என்ற கைப்பேசி எண்ணில் நேரடியாக தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம்.</p><p>மேலும், இதே எண்ணில் வாட்ஸ்அப் மூலமாகவும் புகார்களை தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>ரகசியமாக வைக்கப்படும்</h2><p>பொதுமக்கள் வழங்கும் தகவல்கள் மற்றும் புகார்கள் ரகசியமாக வைக்கப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், பெறப்படும் அனைத்து தகவல்களும் முறையாக விசாரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திண்டுக்கல்: 30 அடி உயர கூரையில் ஏறி பெற்றோரை கதறவிட்ட 7-ம் வகுப்பு மாணவன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dindigul-boy-sits-on-30-foot-roof-to-avoid-school</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dindigul-boy-sits-on-30-foot-roof-to-avoid-school#comments</comments><guid isPermaLink="false">86239c18-3e4a-453e-8c9c-9ab0e96bab8a</guid><pubDate>Tue, 11 Aug 2026 16:24:01 +0000</pubDate><atom:updated>2026-08-11T16:24:01.420Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Dindigul,திண்டுக்கல்,மாணவன்,student,பெற்றோர்,Parents,fire service,தீயணைப்பு படையினர்,கூரை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/mu2hp7ls/school-student.jpg" width="793"><media:title type="html"><![CDATA[ 7-ம் வகுப்பு மாணவன்]]></media:title><media:description type="html"><![CDATA[ 30 அடி உயர கூரையில் ஏறி பெற்றோரை கதறவிட்ட 7-ம் வகுப்பு மாணவன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/mu2hp7ls/school-student.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>செம்பட்டி, </p><p>பள்ளிக்கு செல்ல மறுத்து 30 அடி உயர வீட்டின் மேற்கூரையில் ஏறி அமர்ந்து 3 மணி நேரத்திற்கும் மேலாக அடம் பிடித்த 7-ம் வகுப்பு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D">மாணவனை</a> தீயணைப்பு துறையினர் சாதுர்யமாக பேசி மீட்டனர்.</p> <h2>பள்ளிக்கு போக மாட்டேன்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D">திண்டுக்கல்</a> மாவட்டம் செம்பட்டி அடுத்த எஸ்.பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் ராமபாலாஜி. கூலித்தொழிலாளி. இவரது மகன் சஞ்சய்ராம் (வயது 12). இவன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று காலை வழக்கம் போல் சஞ்சய்ராமை பள்ளிக்குச் செல்லும்படி அவனது பெற்றோர் வற்புறுத்தியுள்ளனர். ஆனால் படிப்பில் நாட்டமில்லாத அந்த சிறுவன், தான் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று கூறி அடம் பிடித்துள்ளான். அவனுக்கு பெற்றோர் அறிவுரை கூறி சமாதானம் செய்ய முயன்றனர்.</p><h2>கூரை மீது ஏறினான்</h2><p>பெற்றோர் தொடர்ந்து வற்புறுத்தியதால் ஆத்திரமடைந்த சிறுவன் சஞ்சய்ராம், திடீரென ஓடி சென்று தனது வீட்டின் 30 அடி உயர மேற்கூரையின்  மீது ஏறி அமர்ந்து கொண்டான். மேலே ஏறியவன் கீழே இறங்கி வர மறுத்து அடம் பிடித்தான்.இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவனிடம் கீழே இறங்கி வரும்படி கெஞ்சினர். ஆனால் சிறுவன் யாரின் பேச்சையும் கேட்காமல் அங்கேயே பிடிவாதமாக அமர்ந்திருந்தான். </p><h2> 3 மணி நேரம்</h2><p>சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக இந்த இழுபறி நீடித்ததால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உடனடியாக செம்பட்டி போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.அங்கு கூரையின் மீது ஆபத்தான முறையில் அமர்ந்திருந்த சிறுவனை மீட்க, தீயணைப்பு வீரர் அந்த சிறுவனிடம் சாதுர்யமாக பேச்சுவார்த்தை நடத்தினார்.</p><h2>சிறுவனின் மனம் மாறியது</h2><p>சுமார் ஒரு மணி நேர தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு சிறுவனின் மனம் மாறியது. தீயணைப்பு படையினர் சிறுவனை பத்திரமாக கீழே இறக்கினர். சஞ்சய்ராமை தீயணைப்புத்துறையினர் அவனது  பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.</p> <p>பள்ளிக்கு செல்ல மறுத்து 30 அடி உயரக் கூரையில் ஏறி சிறுவன் அடம் பிடித்த சம்பவம் செம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p> ]]></content:encoded></item><item><title>தொகுதிகள் மறுவரையறைக்கு எதிராக.. நாளை சட்டசபையில் தனித் தீர்மானம் கொண்டு வருகிறார் முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-to-move-a-special-resolution-in-the-assembly-tomorrow-against-the-delimitation-of-constituencies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-to-move-a-special-resolution-in-the-assembly-tomorrow-against-the-delimitation-of-constituencies#comments</comments><guid isPermaLink="false">88e93151-b0d6-4278-a580-03634ff5d4be</guid><pubDate>Tue, 11 Aug 2026 16:06:31 +0000</pubDate><atom:updated>2026-08-11T16:06:31.446Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,தமிழ்நாடு அரசு,தமிழக சட்டசபை,TN Assembly,TN government,Assembly Session,சட்டசபை கூட்டத்தொடர்,தொகுதிகள் மறுவரையறை,Delimitation of Constituencies,தனித்தீர்மானம்,தமிழக சட்டசபை கூட்டத்தொடர்,Delimitation,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,Chief Minister Vijay</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/mxe5bjmp/jivae.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சட்டசபையில் தனித் தீர்மானம் கொண்டு வருகிறார் முதல்-அமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/mxe5bjmp/jivae.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தொகுதிகள் மறுவரையறைக்கு எதிராக நாளை (புதன் கிழமை) சட்டசபையில் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> தனித் தீர்மானம் கொண்டு வருகிறார். </p><p>தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரம் தொடர்பாக ஆகஸ்டு 8ம் தேதி அன்று <a href="https://www.dailythanthi.com/topic/vijay">தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்</a> தலைமையில் சென்னையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாகத் தக்க வைக்க வேண்டும் என்றும், தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.</p><p>இந்நிலையில் தொகுதிகள் மறுவரையறைக்கு எதிராக நாளை (12.08.2026) சட்டசபையில் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> தனித் தீர்மானம் கொண்டு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>தனித் தீர்மானம்</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சட்டமன்ற பேரவை நிகழ்ச்சி நிரலில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>2026 ஆகஸ்டு 12ம் தேதி, புதன்கிழமை காலை 9.30 மணி </p><p>1. அரசினர் தனித் தீர்மானம்</p><p><a href="https://www.dailythanthi.com/topic/vijay">தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் </a>அவர்கள் கீழ்க்காணும் தீர்மானத்தை முன்மொழிவார்:-</p><p>"தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மக்களவை / சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையானது கடந்த 50 ஆண்டுகளாக 1971-ஆம் ஆண்டினுடைய மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்களின்படி நிர்ணயிக்கப்பட்டு தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகிறது. </p><p>ஏப்ரல் 2026-இல் நாடாளுமன்றத்தில் கடந்த 50 ஆண்டு கால தொகுதி மறுவரையறை தடையை நீக்கவும், 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்திடவும், மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 550-லிருந்து 850 ஆக அதிகரிக்கவும் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா தோல்வியடைந்தது.</p> <h2>அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா</h2><p>இந்நிலையில் மீளவும் மேற்குறிப்பிட்ட அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்படவுள்ளது எனத் தெரிந்ததன் அடிப்படையில் 1971-க்கு பிறகு உள்ள எந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு தொகுதி மறுவரையறை செய்தாலும், மக்கள் தொகையை சிறப்பாகக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் நிரந்தரமாகப் பாதிக்கப்படும் என்பது நிதர்சனமான உண்மை. </p><p>ஒன்றிய அரசு அளித்த உறுதியின்படி மக்கள்தொகை கட்டுப்பாட்டு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி நல்ல பொருளாதார வளர்ச்சி கண்டு, நல்ல சுகாதாரம், மக்கள் நலத் திட்டங்களை மேற்கொண்டு வரும் எந்த ஒரு மாநிலமும் தொகுதி மறுவரையால் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்வது ஒன்றிய அரசின் தலையாய கடமையாகும்.</p> <h2>33 சதவீத இடஒதுக்கீடு</h2><p>எனவே, தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையான 543 என்ற அளவிலேயே நிரந்தரமாக வைப்பதற்கும். மாநிலங்களுக்கு இடையேயான எண்ணிக்கைப் பகிர்வை நிரந்தரமாக வைக்கவும், மேலும், தற்போது மக்களவை மாநிலங்களவையினுடைய விகிதம் 2.2:1 என்ற அளவிலேயே நிலைநிறுத்த வேண்டும் என்றும், அதேவேளையில்,பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை காலதாமதமின்றி, தற்போதுள்ள 543 தொகுதிகளின் அடிப்படையிலேயே 2029-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஒன்றிய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, கீழ்க்கண்ட தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றுகிறது. </p><h2>விகிதாச்சார பிரதிநிதித்துவம்</h2><p>i) நாடாளுமன்ற மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்க வேண்டும்.</p><p>ii) தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் இடங்களின் எண்ணிக்கையை மாநிலங்களுக்கிடையே அதாவது விகிதாச்சார பிரதிநிதித்துவம் தற்போதுள்ள அளவிலேயே நிரந்தரமாக்க வேண்டும்.</p><p>iii) வரவிருக்கும் மக்களவை பொதுத்தேர்தலிலும், அதன் பிறகு சட்டமன்றப் பொதுத்தேர்தல்களிலும் மூன்றில் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டுப் பலனைப் பெண்கள் பெறுவதை உறுதி செய்யவேண்டும் என ஒன்றிய அரசை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.</p><h2>வேளாண்மை திருத்திய நிதிநிலை அறிக்கை</h2><p>2. 2026-2027-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் 2026-2027-ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை</p><p>2026-2027-ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை மற்றும் 2026-2027-ஆம் ஆண்டுக்கான வேளாண்மை திருத்திய நிதிநிலை அறிக்கை ஆகியவற்றின் மீதான பொது விவாதத்திற்குப் பதிலுரை.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title> அதிகாரிகள் நியமனங்களில் நடப்பு நிலையே தொடர வேண்டும் - மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/marxist-party-urges-continuation-of-current-officer-appointment-policy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/marxist-party-urges-continuation-of-current-officer-appointment-policy#comments</comments><guid isPermaLink="false">2c8c9781-cd0c-48a2-a9bf-1f1b17830c61</guid><pubDate>Tue, 11 Aug 2026 15:54:06 +0000</pubDate><atom:updated>2026-08-11T15:54:06.789Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வலியுறுத்தல்,Marxist Communist Party,Appointment,officials,அதிகாரிகள் நியமனம்,insists,மார்க்சிஸ்ட் கம்ப்யூனிஸ்ட் கட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/khua9g39/shunmugam.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பெ.சண்முகம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/khua9g39/shunmugam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்துசமய அறநிலையத் துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் மருத்துவத்துறை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">அதிகாரிகள்</a> நியமனங்களில் நடப்பு நிலையே தொடர மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல். இது தொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D">மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்</a> தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>சட்டம் படித்தவர்கள்</h2><p>இந்து சமய அறநிலைய துறையில் இதுவரை கிரேடு 1 செயல் அலுவலர் மற்றும் உதவி ஆணையர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்தில் சட்டம் படித்தவர்கள் மட்டுமே தேர்வெழுதி அலுவலர்களாக முடியும் என்ற நிலை இருக்கிறது. கோவில் சொத்துக்கள் சம்பந்தமான வழக்குகளை நிர்வகிக்க சட்ட அறிவு அவசியமானதாக இருக்கிறது என்பதால், துறையின் இணை ஆணையர் பதவிக்கு சட்டம் படித்து இருப்பது அவசியமானதாகும்.</p><h2>பூசல்களை தீர்க்கும்</h2><p>நீதிபதியாக இருந்து வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்டு பூசல்களை தீர்க்கும் இடமாக இணை ஆணையர் பொறுப்பு நீதித்துறை சார்ந்து முக்கியமானதாக இருக்கிறது. இந்நிலையில் சட்டம் பயிலாதவர்களும் நேரடி நியமனத்தின் மூலம் உதவி ஆணையர்களாக, கிரேடு 1 செயல் அலுவலர்களாக நியமிப்பதற்கும், மேலும், அவ்விடங்களை வருவாய் துறையினரை வைத்து நிரப்புவதற்கும் தற்போதுள்ள இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் 9வது சட்டப் பிரிவை திருத்தி பிரிவு 2ஐ ரத்து செய்ய உள்ளதாக அறிகிறோம்.</p><h2>அரசு கைவிட வேண்டும்</h2><p> இது பொருத்தமற்றதும், அறநிலையத்துறை செயல்பாடுகளை முடக்குவதுமாகும். எனவே, இந்த சட்டத்திருத்தத்தை அரசு கைவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.</p><h2>பழைய நிலையே தொடர வேண்டும்</h2><p>இதேபோன்று, ஊரக வளர்ச்சித் துறையில் இதுகாரும் திட்ட இயக்குநர் பொறுப்புகள் பதவி உயர்வு மூலமாகவோ அல்லது ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்டோ நிரப்பப்பட்டு கொண்டிருக்கின்றன. தற்போது அந்த பணியிடங்களில் தேனி மற்றும் சுன்னியாகுமரி மாவட்ட திட்ட இயக்குநர்களாக ஐஎப்எஸ் அதிகாரிகளை நியமிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p> <p>இந்த பொறுப்புகளோடு எவ்வித தொடர்பும் இல்லாத அதிகாரிகளை இப்படி நியமிப்பது தங்கள் பொறுப்புகளை சரிவர நிறைவேற்றுவதற்கு உதவாது. எனவே, இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண் 2731 நாள் 28.07.2026ஐ ரத்து செய்து பழைய நிலையே தொடர வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.</p><h2>நிர்வகிக்க வாய்ப்பில்லை</h2><p>இதேபோன்று, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி, ஊரசு மருத்துவ நலத்துறை மற்றும் பொது மருத்துவம் மற்றும் நோய் தடுப்பு துறை ஆகிய துறைகளின் இயக்குநர் பொறுப்புகளுக்கு தற்போதுவரை பதவி உயர்வின் மூலம் மருத்துவர்களால் நிரப்பப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. தற்போது, இந்த பொறுப்புகளுக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை நேரடியாக நியமனம் செய்ய ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. </p><p>இது மருத்துவத்துறையை சார்ந்த பணிகளை வேறு துறையில் பயின்றவர்களால் திறம்பட நிர்வகிக்க வாய்ப்பில்லை. எனவே, மேற்கண்ட 3 துறைகளிலும் தற்போதைய நிலையையே தொடர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சென்னை: முதல்-அமைச்சர் தலைமையில் மாணவர்கள் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-chief-minister-leads-students-anti-drug-pledge</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-chief-minister-leads-students-anti-drug-pledge#comments</comments><guid isPermaLink="false">675a20c5-8753-4f47-8cfb-e030cb23e734</guid><pubDate>Tue, 11 Aug 2026 15:20:43 +0000</pubDate><atom:updated>2026-08-11T15:20:43.461Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,முதல்-அமைச்சர்,உறுதிமொழி ஏற்பு,Chief Minister,மாணவர்கள்,Pledge,போதைப்பொருள் ஒழிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/qhf6ng5g/cm-pledge.jpg" width="793"><media:title type="html"><![CDATA[ முதல்-அமைச்சர்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் தலைமையில் மாணவர்கள் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/qhf6ng5g/cm-pledge.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/topic/chief-minister-vijay">முதல்-அமைச்சர்</a> தலைமையில் இன்று மாநில அளவிலான போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு. இது தொடர்பாக, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p> <h2>பிரசிடென்சி கல்லூரி</h2><p> தமிழ்நாடு முதல்-அமைச்சர் சி. ஜோசப் விஜய். சென்னை பிரசிடென்சி கல்லூரி அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில், 73 கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 2,000 மாணவர்களுக்கு போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்க செய்தார்.</p><h2>போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி</h2><p> இந்நிகழ்ச்சி யூடியூப் இணைப்பு மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதே நேரத்தில், தமிழ்நாடு முழுவதும் 14.000 பள்ளிகள் மற்றும் 4.900 கல்லூரிகளை சேர்ந்த 1 கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது கல்வி நிறுவனங்களில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்றனர்.</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் 'போதைப்பொருள் மற்றும் புகையிலை இல்லா வளாகம்' என்ற முன்னெடுப்பையும் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:</p> <h2>அறிமுக பயிற்சி</h2><p>i) அனைத்து புதிய மாணவர்களுக்கும் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் அபாயங்கள். என்.டி.பி.எஸ். சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் தண்டனைகள். கல்வி நிறுவனங்களின் ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் ஆலோசனை அளிப்பது குறித்த அறிமுக பயிற்சி வழங்கப்படும். மேலும். போதைப்பொருளை பயன்படுத்துவதில்லை என உறுதியளிக்கும் தன்னார்வ உறுதிமொழிப் பத்திரத்திலும் அவர்கள் கையெழுத்திடுவார்கள்.</p><h2>போதைப்பொருள் எதிர்ப்பு மன்றம்</h2><p>ii) கல்வி நிறுவனங்கள் ஆண்டுதோறும் உறுதிமொழி ஏற்பு. தெருக்கூத்து. பல்வேறு போட்டிகள், பேரணிகள் மற்றும் போதைப்பொருள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையங்களுக்கு நேரில் சென்று பார்வையிடுதல் போன்ற போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை, போதைப்பொருள் எதிர்ப்பு மன்றம் கையேட்டின்படி ஏற்பாடு செய்யும்.</p><h2>சக மாணவர் தூதர்கள்</h2><p>iii) <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">போதைப்பொருள் எதிர்ப்பு</a> மன்றங்கள் அதன் உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்குவதன் மூலம் வலுப்படுத்தப்படும். மேலும், மாணவர்களிடையே ஏற்படும் ஆரம்பகட்ட நடத்தை மாற்றங்களை கண்டறிந்து, சக மாணவர் மட்டத்தில் ஆதரவு வழங்குவதற்காக சக மாணவர் தூதர்கள் நியமிக்கப்படுவார்கள்.</p> <h2>சுயாதீன ஆலோசகர் உதவி</h2><p>iv) கல்வி நிறுவனங்கள் ஆண்டுதோறும் மாணவர்களின் உடல்நலம் மற்றும் உளவியல் நிலை தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொள்ளும். போதைப்பொருள் பயன்பாட்டின் ஆரம்ப அறிகுறிகள் காணப்படும் மாணவர்களுக்கு ரகசியமான, பாதிப்பில்லாத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சுயாதீன ஆலோசகர்களின் உதவியும் வழங்கப்படும்.</p><h2>புகையிலை இல்லா மண்டலங்கள்</h2><p>v) கல்வி நிறுவனங்களின் வளாகங்களைச் சுற்றி 100 மீட்டர் வரையிலான பகுதிகள் "புகையிலை இல்லா மண்டலங்கள்" எனக் குறிக்கப்படும். காவல்துறை. உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள் இணைந்து கடைகளில் ஆய்வு மேற்கொண்டு, புகையிலை பொருட்களை விற்பனை செய்வதைத் தவிர்க்குமாறு விற்பனையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள்.</p><h2>சிசிடிவி கேமரா</h2><p>vi) அனைத்து கல்வி நிறுவனங்களின் வளாகங்களுக்குள்ளும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளிலும் போதுமான எண்ணிக்கையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.</p> <h2>போதைப்பொருள் இல்லாத TN செயலி</h2><p>vii) போதைப்பொருள் கடத்தல் தொடர்பான புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதற்காக, காவல்துறை தொடர்பு அலுவலர்கள் கல்வி நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள். மேலும், மாணவர்கள் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான தகவல்களை போதைப்பொருள் இல்லாத TN செயலி மூலம் தெரிவிக்க ஊக்குவிக்கப்படுவார்கள்.</p> <h2>போதைப்பொருள் இல்லா வளாகம்</h2><p>viii) தேவையான அனைத்து போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் செயல்படுத்த கல்வி நிறுவனங்கள் தீவிரமாக ஊக்குவிக்கப்படுவதுடன். தங்களை அதிகாரப்பூர்வமாக "போதைப்பொருள் இல்லா வளாகம்"</p><p> என அறிவிக்கவும் ஊக்குவிக்கப்படும்.</p><h2>1 லட்சம் கிலோ கஞ்சா</h2><p>இந்நிகழ்வின்போது. செங்கல்பட்டு, தஞ்சாவூர், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய நான்கு இடங்களில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டதையும் முதல்-அமைச்சர் காணொலி வாயிலாக பார்வையிட்டார். மொத்தம் 1 லட்சம் கிலோ கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் அழிக்கப்பட்டன.</p><h2>முதல்-அமைச்சரின் காவல் பதக்கம்</h2><p>நடப்பு 2026 ஆம் ஆண்டில் மாநிலத்தில் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோத கடத்தலை தடுப்பதில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய 15 காவல்துறை அதிகாரிகள் / பணியாளர்களுக்கு. அவர்களின் சிறப்பான பணியை பாராட்டும் வகையில் 'தமிழ்நாடு முதல்-அமைச்சரின் காவல் பதக்கம்'  முதல்-அமைச்சரால்  வழங்கப்பட்டது.</p><h2>விருதுகளை வழங்கினார்</h2><p>பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சிறப்பாக செயல்பட்ட மாநில அளவிலான சிறந்த போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள் மற்றும் தன்னார்வ குழுக்களுக்கு முதல்-அமைச்சர் விருதுகளை வழங்கினார். முதல் பரிசாக ரூ. 1,00,000, இரண்டாம் பரிசாக ரூ. 75,000, மூன்றாம் பரிசாக ரூ. 50,000 மற்றும் கோப்பைகள். சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.</p><h2>முதல் பரிசு</h2><p> போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவதில் அவர்களின் சிறப்பான அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில் இவ்விருதுகள் வழங்கப்பட்டன. பள்ளிகளில் சிறந்த போதைப்பொருள் எதிர்ப்பு மன்றத்திற்கான முதல் பரிசை ஈரோடு மாவட்டம் செங்கோட்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றது. கல்லூரிகளில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல் பரிசை பெற்றது. </p><p>அதேபோல், பள்ளிகளில் சிறந்த தன்னார்வ குழுவிற்கான முதல் பரிசை நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பெற்றது. கல்லூரிகளில் ஈரோடு நஞ்சனாபுரம் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல் பரிசை பெற்றது.</p><h2>10,040 வழக்குகள் பதிவு </h2><p>மாநிலத்தில் போதைப்பொருட்களின் விநியோகத்தை தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் தீவிரமான சட்ட அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நடப்பு ஆண்டில் 10.08.2026 வரை. மொத்தம் 10,040 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு. 14,400 குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 17,500 கிலோ உலர் கஞ்சா, 8.9 லட்சம் மாத்திரைகள் மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள். மெத்தாம்பெட்டமைன், ஆம்பெட்டமைன். மெத்தாகுவாலோன் உள்ளிட்ட 200 கிலோ பிற போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p> <h2>13,150 வழக்குகள் பதிவு</h2><p>இதேபோல், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தொடர்பாக மொத்தம் 13,150 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1.61 லட்சம் கிலோ புகையிலைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், ரூ. 8.3 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டதுடன், 2,744 வணிக நிறுவனங்கள் / வளாகங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன.</p><p>இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மு. சாய் குமார். ஐஏஎஸ், உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் கே. மணிவாசன், ஐஏஎஸ், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் காவல்படைத்தலைவர் மகேஷ் குமார் அகர்வால், ஐபிஎஸ். அமலாக்கப் பிரிவு சிஐடி கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் கே. சங்கர், ஐபிஎஸ், சென்னை காவல்துறை ஆணையர்  ஏ. அமல்ராஜ், ஐபிஎஸ். சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன்.ஐஏஎஸ் மற்றும் மூத்த அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.</p><h2>பூஜ்ஜிய சகிப்புத்தன்மை</h2><p>போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக 'பூஜ்ஜிய சகிப்புத்தன்மை'  கொள்கையை செயல்படுத்துவதில் தமிழ்நாடு அரசு தனது அசைக்க முடியாத உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது. மேலும், போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான போராட்டத்தில் இளைஞர்களும் பொதுமக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு அழைப்பு விடுக்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>குரூப்-2 மற்றும் குரூப்-2A தேர்வுகள் எப்போது..? தேதியை அறிவித்த டி.என்.பி.எஸ்.சி. </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/when-will-the-group-2-and-group-2a-exams-be-held-tnpsc-has-announced-the-dates</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/when-will-the-group-2-and-group-2a-exams-be-held-tnpsc-has-announced-the-dates#comments</comments><guid isPermaLink="false">32ea7e53-daec-4552-8a22-e03eaadbe297</guid><pubDate>Tue, 11 Aug 2026 15:20:39 +0000</pubDate><atom:updated>2026-08-11T15:20:39.088Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,டிஎன்பிஎஸ்சி,TNPSC,TNPSC Group 2,TNPSC exam,குரூப் 2,டி.என்.பி.எஸ்.சி.,குரூப் 2ஏ,தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/ug7174h7/fkiere.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/ug7174h7/fkiere.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>கல்வி&amp;வேலைவாய்ப்பு (Eduction and Jobs)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகள் வரும் நவம்பர் 1ம் தேதி நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி. (<a href="https://www.dailythanthi.com/topic/tnpsc">TNPSC</a>) அறிவித்துள்ளது. </p><h2>குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகள்</h2><p>சார்பதிவாளர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், நகராட்சி ஆணையர் (கிரேடு2), தொழிலாளர் நல உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், முதுநிலை வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர், பல்வேறு அரசு துறைகளின் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளை நிரப்ப ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2ஏ தேர்வை <a href="https://www.dailythanthi.com/topic/tnpsc">டி.என்.பி.எஸ்.சி.</a> நடத்தி வருகிறது.</p><h2>நவம்பர் 1ம் தேதி</h2><p>வருடாந்திர தேர்வு அட்ட வணையில் குறிப்பிட்டுள்ளவாறு அனைத்து தேர்வுகளுக்கும் குறித்த தேதியில் அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வுகள் நடத்தப்படும் என <a href="https://www.dailythanthi.com/topic/tnpsc">டி.என். பி.ஸ்.சி.</a> தலைவர் எஸ். கே.பிரபாகர் ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதன்படி, ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுக்கான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. </p><p>இந்நிலையில் குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகள் வரும் நவம்பர் 1ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணயம் (டி.என்.பி.எஸ்.சி.) (<a href="https://www.dailythanthi.com/topic/tnpsc">TNPSC</a>) அறிவித்துள்ளது.</p><h2>UPI மூலமாக தேர்வு கட்டணம்</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு II (தொகுதி II மற்றும் IIΑ பணிகள்) க்கான அறிவிக்கை தேர்வாணையத்தின் ஆண்டுத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி இன்று (11.08.2026) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் 11.08.2026 முதல் 09.09.2026 பி.ப. வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தேர்வர்கள் தேர்வு கட்டணத்தை UPI மூலமாகவும் செலுத்தலாம். ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - II (தொகுதி II மற்றும் IIA பணிகள்) க்கான முதல் நிலைத் தேர்வு 01.11.2026 அன்று நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p><h2>புதிய அரசு</h2><p>அரசுதுறைகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இருந்து வரும் நிலையில், த.வெ.க. தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றிருப்பதால் காலிப்பணியிடங்கள் அதிக எண்ணிக்கையில் நிரப்பப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தேர்வர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் போட்டித்தேர்வுகளில் குரூப்-4, குரூப்-2 தேர்வுகளுக்குத்தான் அதிகமானோர் விண்ணப்பிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/68dcgku4/pani.jpg" /></figure><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Link:<a href="https://t.co/i6gXh6Z5zR">https://t.co/i6gXh6Z5zR</a> <a href="https://t.co/ngDRQP6G1K">pic.twitter.com/ngDRQP6G1K</a></p>&mdash; TNPSC (@TNPSC_Office) <a href="https://x.com/TNPSC_Office/status/2087192238027845951?ref_src=twsrc%5Etfw">August 11, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் என்.ஆனந்த் தலைமையில் ஆய்வுக் கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/review-meeting-chaired-by-minister-n-anand-regarding-monsoon-preparedness-measures</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/review-meeting-chaired-by-minister-n-anand-regarding-monsoon-preparedness-measures#comments</comments><guid isPermaLink="false">689bf331-eda0-44e2-8ad1-8e759b271faa</guid><pubDate>Tue, 11 Aug 2026 14:56:35 +0000</pubDate><atom:updated>2026-08-11T14:56:35.068Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,தமிழகம்,தமிழ்நாடு அரசு,வடகிழக்கு பருவமழை,ஆய்வுக்கூட்டம்,முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்,முதல்-அமைச்சர் விஜய்,அமைச்சர் என். ஆனந்த்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/a6z41dbu/anand.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/a6z41dbu/anand.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/vijay">தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்</a>யின் உத்தரவின்படி, வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.</p><h2>அமைச்சர் என்.ஆனந்த்</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p><a href="https://www.dailythanthi.com/topic/vijay">தமிழ்நாடு முதல்-அமைச்சர்</a> அவர்களின் உத்தரவின்படி, இன்று (11.08.2026) செவ்வாய்க்கிழமை, சென்னை தியாகராய நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் தலைமையில், வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.</p><h2>குடிநீர் விநியோகம்</h2><p>இக்கூட்டத்தில், வடகிழக்குப் பருவமழையின்போது பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.</p><p>குறிப்பாக, மழைநீர் தேங்கக்கூடிய பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து, மழைநீர் வடிகால்களை தூர்வாரி சீரமைத்தல், நீர்வழித்தடங்களில் ஏற்படும் அடைப்புகளை அகற்றுதல், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காமல் விரைந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், மழைக்காலங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்காத வகையில் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.</p><h2>பாதுகாப்பு நடவடிக்கைகள்</h2><p>மேலும், மழைக்காலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பேரிடர் காலங்களில் துரிதமாக செயல்படுவதற்கான மீட்புப் பணிகள் மற்றும் தேவையான உபகரணங்கள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்தல், மின்கம்பிகள் மற்றும் மின்சார சாதனங்கள் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், சாலைகளில் ஏற்படும் பள்ளங்களை உடனடியாக சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.</p><p>இக்கூட்டத்தில் சென்னை மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையர் எச்.ஆர்.கௌஷிக், இ.ஆ.ப.. அவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>
சட்டப்பேரவையை மாலை நேரத்தில் நடத்த முடிவா? சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பதில்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/can-assembly-be-held-in-evening-speaker-jct-prabhakar-answers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/can-assembly-be-held-in-evening-speaker-jct-prabhakar-answers#comments</comments><guid isPermaLink="false">37a03311-1112-4830-9226-eaffba267a24</guid><pubDate>Tue, 11 Aug 2026 14:38:22 +0000</pubDate><atom:updated>2026-08-11T14:38:22.031Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Speaker,சபாநாயகர்,Speaker J.C.D. Prabhakar,ஜே.சி.டி. பிரபாகர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/zcpa9zzv/spatna.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/zcpa9zzv/spatna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>தமிழக சட்டப்பேரவையை மாலை நேரத்தில் நடத்துவது பற்றி சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பதில் அளித்துள்ளார்.</p><p>தமிழக சட்டசபையில் 2026-2027-ம் ஆண்டுக்கான <a href="https://www.dailythanthi.com/news/india">பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்</a> மீதான 3-வது நாள் விவாதம் இன்று நடந்தது.  இதில், உறுப்பினர்கள், பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்கள் உள்ளிட்டோர் பேசினர்.</p><p>அப்போது, மருத்துவம், மருத்துவக்கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் கோ.க. அருண்ராஜ், அரசினர் தனித்தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து பேசினார்.</p>  <h2>நீட் நுழைவுத்தேர்வு</h2><p>இதன்படி, நீட் நுழைவுத்தேர்வு முறையை ரத்து செய்யும் வகையில், தமிழக சட்டசபையில் அரசினர் தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது.</p><p>இந்த தனித்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. எம்.எல்.ஏ. வெளிநடப்பு செய்தார். மற்ற கட்சிகள் இந்த அரசினர் தனித்தீர்மானத்துக்கு வரவேற்பு தெரிவித்தனர். இதையடுத்து நீட் தேர்வுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட அரசினர் தனித்தீர்மானம் சட்டசபையின் முடிவுக்கு விடப்பட்டது. மறுப்போரே இல்லை என்பதால் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தார்.</p> <h2>10 நிமிடங்கள்</h2><p>இந்த நிலையில், அவையில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கூறும்போது, சட்டப்பேரவையை தேவைப்பட்டால் மாலை நேரத்தில் கூட நடத்தலாம் என முடிவு எடுத்தோம். ஆனால், மாலை நேரத்தில் அவையை நடத்தினால் சிலருக்கு சிரமம் இருக்கிறது என்பதால், ஒரே அமர்வாக கூட்டம் நடத்தப்படுகிறது என்றார்.</p><p>வரும் திங்கள் முதல் உறுப்பினர்களுக்கு 10 நிமிடங்கள் மட்டுமே அனுமதி வழங்குவேன். நேரம் கடந்தால் அடுத்த உறுப்பினர்களை பேச அழைத்து விடுவேன். அதற்காக யாரும் கோபித்து கொள்ள வேண்டாம் என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>‘போதைப் பொருள் இல்லா தமிழகம்‘ என்று மேடையில் உறுதிமொழி எடுத்துக்கொள்வது மட்டும் தீர்வாகாது - வானதி சீனிவாசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/drug-free-tamil-nadu-pledge-alone-not-the-solution-vanathi-srinivasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/drug-free-tamil-nadu-pledge-alone-not-the-solution-vanathi-srinivasan#comments</comments><guid isPermaLink="false">5b0d6f17-879a-4202-8408-70c7576e85e2</guid><pubDate>Tue, 11 Aug 2026 14:36:34 +0000</pubDate><atom:updated>2026-08-11T14:36:34.242Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>முதல்-அமைச்சர்,drug,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,Pledge,உறுதிமொழி,போதைப் பொருள்,Cheif Minister</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/t2gboqk5/vanathi-srinivasan.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:title><media:description type="html"><![CDATA[ பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/t2gboqk5/vanathi-srinivasan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>போதைப் பொருள் இல்லா தமிழகம்‘ என்று மேடையில் உறுதிமொழி எடுத்துக்கொள்வது மட்டும் தீர்வாகாது என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார். இது தொடர்பாக, பாஜக தேசிய மகளிரணி தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/vanathi-srinivasan">வானதி சீனிவாசன்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>கல்லூரி மாணவர் உயிரிழப்பு</h2><p>போதை இல்லா தமிழகம்’ என்ற முழக்கம் மட்டும் போதாது தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்று முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் ‘<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">போதைப் பொருட்கள்</a> இல்லா தமிழகம்’ என்ற இயக்கத்தை தொடங்கி வைத்த அடுத்த சில மணிநேரங்களிலேயே, கோவையில் 19 வயது பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் என்பவர் போதை பொருள் பழக்கத்திற்கு அடிமையான 20 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக கூறப்படும் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.</p> <h2>போதைப்பொருள் பயன்பாடு</h2><p>மாணவரின் மரணமானது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ள நிலையில், கல்லூரியில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனை தொடர்பாக அவர் தகவல் அளித்ததன் காரணமாகவே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளதாக செய்திகள் தெரிப்பது இன்னும் வருத்தத்திற்குரியது.</p><h2>கொடிய முகம்</h2><p>தமிழக இளைஞர்கள், குறிப்பாக கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து இதுபோன்று போதைப்பொருள் பிடியில் சிக்கி தங்களது எதிர்காலத்தையே பாழாக்கி கொண்டிருப்பது மட்டுமல்லாமல் சமூக விரோதிகளாகவும் மாறிவருவது போதைப்பொருள் பழக்கத்தின் கொடிய முகம்.</p><h2>கடும் நடவடிக்கைகள் மட்டுமே தீர்வு</h2><p>‘போதைப் பொருள் இல்லா தமிழகம்‘ என்று மேடையில் உறுதிமொழி எடுத்துக்கொள்வது மட்டும் தீர்வாகாது. தீவிர பிரச்சாரங்களும், போதைப் பொருள் தடுப்புத் துறையின் கடும் நடவடிக்கைகள் மட்டுமே இதற்குத் தீர்வு.</p><h2>பாதுகாப்பு உறுதி</h2><p>திட்டம் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே இப்படியொரு சம்பவம் நடந்திருக்கிறது என்றால், தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் விழித்துக்கொள்ள வேண்டும். மேலும் போதைப் பொருள்கள் பயன்பாடு, கடத்தல் குறித்து புகார் அளிப்பவர்களுக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை மாநகராட்சியில் திருத்தப்பட்ட சொத்துவரி மதிப்பீடு தொடர்பாக ஆட்சேபனைகளை தெரிவிக்க சிறப்பு ஏற்பாடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-arrangement-to-submit-objections-regarding-the-revised-property-tax-assessment</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-arrangement-to-submit-objections-regarding-the-revised-property-tax-assessment#comments</comments><guid isPermaLink="false">a2403d22-4a34-460b-8a91-15a1a8b1e115</guid><pubDate>Tue, 11 Aug 2026 14:30:23 +0000</pubDate><atom:updated>2026-08-11T14:30:23.926Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,தமிழகம்,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,Property Tax,சொத்துவரி,மாநகராட்சி ஆணையர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/ae1hnb1u/chh.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/ae1hnb1u/chh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பெருநகர சென்னை மாநகராட்சியில் திருத்தப்பட்ட சொத்துவரி மதிப்பீடு தொடர்பாக ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்கான சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><h2><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">சென்னை மாநகராட்சி</a> ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன்</h2><p>சொத்துவரி மதிப்பீட்டு திருத்தம் குறித்து ஏதேனும் குறைபாடுகள் அல்லது ஆட்சேபனைகள் இருப்பின், சொத்து உரிமையாளர்கள் திருத்தப்பட்ட வரிமதிப்பீட்டு ஆணையினை பெற்ற தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வட்டார துணை ஆணையரிடம் தங்கள் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கலாம் என்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">சென்னை மாநகராட்சி</a> ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>பெருநகர <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">சென்னை மாநகராட்சி</a>யின் சொந்த வருவாயின் ஒரு முக்கிய ஆதாரமாக சொத்துவரி உள்ளது. மேலும், இது சென்னை மாநகரின் பல்வேறு குடிமை சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான நிதியளிப்பில் குறிப்பிடத்தக்க பங்காற்றுகிறது.</p><h2>சொத்து வரி மதிப்பீடு</h2><p>கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சுய-அறிவிப்பு (Self-Declaration) நடவடிக்கையின்போது, சொத்து உரிமையாளர்கள் தங்கள் சொத்துக்களின் பயன்பாடு மற்றும் கட்டிடப் பரப்பு குறித்த விவரங்களை வழங்கியதன் அடிப்படையில், சொத்துவரி மதிப்பீட்டில் திருத்தம் செய்யும் பணிகள் ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்டது. கொரோனா பெருந்தொற்று காரணமாக மறுமதிப்பீடு செய்யும் பணிகள் கைவிடப்பட்டது.</p><p>சொத்து உரிமையாளர்கள் வழங்கிய விவரங்கள் மற்றும் கிடைக்கப்பெற்ற மறுஅளவீடு புவிசார் தகவல் அமைப்பு / செயற்கைக்கோள் படத் தரவுகளின் அடிப்படையில் சொத்து வரி மதிப்பீடுகளைத் திருத்தும் பணியை தற்போது பெருநகர சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. அதனடிப்படையில் சொத்து வரி மதிப்பீடானது, சொத்தின் சரியான பயன்பாடு மற்றும் கட்டி பரப்பளவை உறுதி செய்வதற்கும், அனைத்து சொத்துக்களிலும் நியாயமான மற்றும் சரியான மதிப்பீட்டை உறுதி செய்வதற்கும் இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p> <h2>15 நாட்களுக்குள்</h2><p>சொத்து உரிமையாளர்களுக்கு ஏற்படக்கூடிய நிதிச் சுமையை குறைக்கும் முகமாக, கட்டிடமானது கட்டப்பட்ட காலத்தினை கருத்தில் 'கொள்ளாமல் சொத்துவரி மறுமதிப்பீடு கணக்கீடானது 2025-26 ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>சொத்து உரிமையாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் திருத்தப்பட்ட சொத்துவரி மதிப்பீடு தொடர்பாக ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்கான சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சொத்துவரி மதிப்பீட்டு திருத்தம் குறித்து ஏதேனும் குறைபாடுகள் அல்லது ஆட்சேபனைகள் இருப்பின், சொத்து உரிமையாளர்கள் திருத்தப்பட்ட வரிமதிப்பீட்டு ஆணையினை பெற்ற தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வட்டார துணை ஆணையரிடம் (RDC) தங்கள் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கலாம். </p> <h2>துல்லியமான சொத்துவரி மதிப்பீடு</h2><p>அவற்றை பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) பரிசீலினை செய்து, ஆட்சேபனைகள் பெறப்பட்ட தேதியிலிருந்து. ஒருமாத காலத்திற்குள் அவற்றைத் தீர்ப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும். சொத்து உரிமையாளர்கள். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, திருத்தப்பட்ட சொத்துவரி மதிப்பீட்டினை சரிபார்த்து, ஏதேனும் நியாயமான ஆட்சேபனைகளாக இருப்பின், அவற்றை உரிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களுடன் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p>பெருநகர சென்னை மாநகராட்சி தனது சொந்த வருவாய் வலுப்படுத்தி சென்னை மக்களுக்கு திறம்படக் குடிமை சேவைகளை வழங்குவதற்காக, நியாயமான, வெளிப்படையான மற்றும் துல்லியமான சொத்துவரி மதிப்பீட்டை மேற்கொள்வதில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">பெருநகர சென்னை மாநகராட்சி</a> உறுதியுடன் உள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>சென்னை விமான நிலையத்தில் உடலுக்குள் தங்கத்தை  மறைத்து கடத்தி வந்த பெண் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-arrested-for-smuggling-gold-inside-body-at-chennai-airport</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-arrested-for-smuggling-gold-inside-body-at-chennai-airport#comments</comments><guid isPermaLink="false">66e6f3ac-f1cb-426c-b20e-bc0199b1e48c</guid><pubDate>Tue, 11 Aug 2026 14:10:15 +0000</pubDate><atom:updated>2026-08-11T14:10:15.459Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Airport,சென்னை விமான நிலையம்,arrested,Smuggling Gold,கடத்தல்,தங்கம்,பெண் பயணி,A woman</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/qdwcbxs8/gold-smugle.jpg" width="793"><media:title type="html"><![CDATA[ தங்கம் பறிமுதல்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை விமான நிலையத்தில் உடலுக்குள் தங்கத்தை  மறைத்து கடத்தி வந்த பெண் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/qdwcbxs8/gold-smugle.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>துபாயில் இருந்து சென்னைக்கு உடலுக்குள் ரூ.1.38 கோடி மதிப்பிலான 1.08 கிலோ<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D"> தங்கத்தை மறைத்து கடத்தி</a> வந்த பெண் பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.</p><h2>சென்னை விமான நிலையம்</h2><p>துபாயில் இருந்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு</a> விமானம் ஒன்று வந்திறங்கியது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது ஒரு பெண் பயணியின் மீது அதிகாரிகளுக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டது.</p><h2> உடலுக்குள் 'முட்டை' வடிவ காப்ஸ்யூல்கள்</h2><p>அந்த பெண்ணை தனியறைக்கு அழைத்து சென்று சுங்கத்துறை நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது எக்ஸ்ரே சோதனையில் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பெண் தன் உடலுக்குள் ரகசியமாக 3 முட்டை வடிவ காப்ஸ்யூல்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.</p> <h2> 24 காரட் தங்கம்</h2><p>உடனடியாக அவரது உடம்பில் இருந்து அந்த காப்ஸ்யூல்கள் பத்திரமாக வெளியே எடுக்கப்பட்டன. பின்னர் நவீன தொழில்நுட்ப முறையில் அவை பிரிக்கப்பட்டன. அதில் இருந்து 1.08 கிலோ எடையுள்ள தூய 24 காரட் தங்கக்கட்டி கிடைத்தது. பறிமுதல் செய்யப்பட்ட இந்த தங்கத்தின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.1.38 கோடி ஆகும்.</p><h2>பெண் பயணி கைது</h2><p>இதனை தொடர்ந்து, 1962-ம் ஆண்டு சுங்க சட்ட விதிகளின்படி கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட அந்த பெண்ணை அதிகாரிகள் உடனடியாக கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், தற்போது பலத்த காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.</p> <h2>விசாரணை</h2><p>இந்த கடத்தல் கும்பலின் பின்னணியில் உள்ள சர்வதேச கடத்தல் புள்ளிகள் யார், தங்கம் யாருக்காக கடத்தி வரப்பட்டது, என்பது குறித்து சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>சட்ட நடவடிக்கை</h2><p>சட்ட விரோதமாக தங்கம் அல்லது பிற கடத்தல் பொருட்களை தங்களது உடலிலோ, பயண பைகளிலோ மறைத்து எடுத்து வர வேண்டாம் என்று சென்னை சுங்கத்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. இவ்வாறு பொருட்களை கடத்தினால் சுங்க சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனையையும், நீண்டகால சட்ட நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள நேரிடும் என்றும் சுங்கத்துறை தெரிவித்துள்ளது.</p><p> இந்த சம்பவம் விமான நிலைய வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வேளாங்கண்ணி திருவிழா: சிறப்பு ரெயில்களை அறிவித்த தெற்கு ரெயில்வே </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/velankanni-festival-southern-railway-announces-special-trains</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/velankanni-festival-southern-railway-announces-special-trains#comments</comments><guid isPermaLink="false">1b6aae02-ea71-445a-8e6a-f4bfa3ca5ba9</guid><pubDate>Tue, 11 Aug 2026 13:59:09 +0000</pubDate><atom:updated>2026-08-11T13:59:09.265Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,சிறப்பு ரெயில்,தெற்கு ரெயில்வே,Southern Railway,Special train,Velankanni Church,Velankanni,வேளாங்கண்ணி,வேளாங்கண்ணி திருவிழா,Velankanni festival,சிறப்பு ரெயில்கள் இயக்கம்,Charlapalli,சார்லபள்ளி,வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரெயில்,Velankanni Express Train</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/ypbvt0am/karer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/ypbvt0am/karer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வேளாங்கண்ணி திருவிழாவிற்காக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87">தெற்கு மத்திய ரெயில்வே</a> விரைவு சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது.</p><h2>ரெயில் எண் 07125/07126</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>வேளாங்கண்ணி திருவிழாவின் போது ஏற்படும் கூடுதல் பயணிகள் நெரிசலை கருத்தில் கொண்டு, தெற்கு மத்திய ரெயில்வே கீழ்க்கண்டவாறு விரைவு சிறப்பு ரெயில்களை (தேவைக்கேற்ப இயக்கப்படும் ரெயில்கள்) அறிவித்துள்ளது.</p><p>1. ரெயில் எண் 07125/07126 சார்லபள்ளி - வேளாங்கண்ணி – சார்லாபள்ளி விரைவு சிறப்பு ரெயில்கள்:</p><p>ரெயில் எண் 07125 சார்லபள்ளி - வேளாங்கண்ணி விரைவு சிறப்பு ரெயில், 2026 ஆகஸ்ட் 28 மற்றும் செப்டம்பர் 4 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) காலை 7.40 மணிக்கு சார்லபள்ளியிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 9.10 மணிக்கு வேளாங்கண்ணியைச் சென்றடையும் (2 சேவைகள்).</p> <h2>வேளாங்கண்ணி - சார்லாபள்ளி</h2><p>மறுமார்க்கத்தில், ரெயில் எண் 07126 வேளாங்கண்ணி - சார்லபள்ளி விரைவு சிறப்பு ரெயில், 2026 ஆகஸ்ட் 29 மற்றும் செப்டம்பர் 5 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை) மாலை 19.30 மணிக்கு வேளாங்கண்ணியிலிருந்து புறப்பட்டு, மறுநாள் இரவு 22.00 மணிக்கு சார்லபள்ளியை சென்றடையும் (2 சேவைகள்).</p><p>பெட்டிகளின் அமைப்பு: 3 - குளிர்சாதன வசதி கொண்ட இரு அடுக்கு (AC Two Tier) பெட்டிகள், 5 - குளிர்சாதன வசதி கொண்ட மூன்று அடுக்கு (AC Three Tier) பெட்டிகள், 10 - படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் (Sleeper Class), 4 - பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் மற்றும் 2 - சரக்கு மற்றும் பிரேக் வேன்கள்(Luggage cum Brake Vans).</p><p>ரெயில் எண் 07125/07126 சார்லபள்ளி - வேளாங்கண்ணி - சார்லாபள்ளி விரைவு சிறப்பு ரெயில்களின் நேரம் மற்றும் நிறுத்தங்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு (நேரங்கள் 24 மணிநேர அடிப்படையில்):</p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/4ppxys8c/train.jpg" /></figure><h2>ரெயில் எண் 07127/07128</h2><p>2. ரெயில் எண் 07127/07128 சார்லபள்ளி - வேளாங்கண்ணி - சார்லாபள்ளி விரைவுச் சிறப்பு ரெயில்கள்:</p><p>ரெயில் எண் 07127 சார்லபள்ளி - வேளாங்கண்ணி விரைவுச் சிறப்பு ரெயில், 2026 செப்டம்பர் 8 அன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7.40 மணிக்கு சார்லபள்ளியிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 9.10 மணிக்கு வேளாங்கண்ணியைச் சென்றடையும் (1 சேவை).</p><p>மறுமார்க்கத்தில், ரெயில் எண் 07128 வேளாங்கண்ணி - சார்லபள்ளி விரைவுச் சிறப்பு ரெயில், 2026 செப்டம்பர் 9 அன்று (புதன்கிழமை) இரவு 23.00 மணிக்கு வேளாங்கண்ணியிலிருந்து புறப்பட்டு, மறுநாள் இரவு 22.15 மணிக்கு சார்லபள்ளியை சென்றடையும் (1 சேவை).</p> <h2>சார்லபள்ளி - வேளாங்கண்ணி</h2><p>பெட்டிகளின் அமைப்பு: 3 - குளிர்சாதன வசதி கொண்ட இரு அடுக்கு (AC Two-Tier) பெட்டிகள், 5 - குளிர்சாதன வசதி கொண்ட மூன்று அடுக்கு (AC Three-Tier) பெட்டிகள், 10 - படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் (Sleeper Class), 4 - பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் மற்றும் 2 - சரக்கு மற்றும் பிரேக் வேன்கள்.</p><p>ரெயில் எண் 07127/07128 சார்லபள்ளி - வேளாங்கண்ணி - சார்லபள்ளி விரைவு சிறப்பு ரெயில்களின் நேரம் மற்றும் நிறுத்தங்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு (நேரங்கள் 24 மணிநேர அடிப்படையில்):</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/2b1fw7vq/2222.jpg" /></figure><p>மேற்கூறிய சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு, தெற்கு ரெயில்வே தரப்பில் 13.08.2026 (வியாழக்கிழமை) அன்று காலை 8.00 மணிக்குத் தொடங்கும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>
சுதந்திர தின விழா:  முதல்-அமைச்சர் விஜய் செல்லும் வழித்தடம் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு; டிரோன்களுக்கு தடை
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/independence-day-event-chief-minister-vijay-route-declared-red-zone-drone-ban</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/independence-day-event-chief-minister-vijay-route-declared-red-zone-drone-ban#comments</comments><guid isPermaLink="false">5126c384-a364-4ac3-8ab0-385c111beb47</guid><pubDate>Tue, 11 Aug 2026 13:46:50 +0000</pubDate><atom:updated>2026-08-11T13:46:50.840Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சுதந்திர தின விழா,Independence Day celebrations,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/rznk2851/tncrz.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/rznk2851/tncrz.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>சுதந்திர தின விழாவை முன்னிட்டு தலைமை செயலகம், முதல்-அமைச்சர் செல்லும் வழித்தடம் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.</p><p>இந்திய நாடு, 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றது.  அந்த நாளை நினைவுகூரும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் <a href="https://www.dailythanthi.com/">சுதந்திர தினம் </a>கொண்டாடப்பட்டு வருகிறது.  அதையொட்டி, சென்னை தலைமைச்செயலகம் செயல்பட்டு வரும் புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தேசிய கொடியை ஏற்ற இருக்கிறார்.</p>  <h2>அணிவகுப்பு ஒத்திகை</h2><p>இதனையொட்டி, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக்கொள்கிறார்.  தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், சுதந்திர தின விழாவுக்கான அணிவகுப்பு ஒத்திகை மெரினா கடற்கரையில் நடைபெற்று வருகிறது.</p>  <h2>டிரோன்களுக்கு தடை</h2><p>இந்த நிலையில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு தலைமை செயலகம், முதல்-அமைச்சர் விஜய் செல்லும் வழித்தடம் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  இதன்படி, நீலாங்கரை முதல் தலைமை செயலகம் வரை பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.  ஆகஸ்டு 14, 15 ஆகிய நாட்களில் டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.</p>  <h2>விருது</h2><p>சுதந்திர தின விழாவில், முதல்-அமைச்சர் விஜய், தமிழ்நாட்டுக்கும், தமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த தகைசால் தமிழர் என்ற பெயரிலான விருதும், ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழையும் வழங்க இருக்கிறார்.</p><p>அதேபோல், அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு டாக்டர் அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதல்வரின் நல் ஆளுமை விருது, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகள், மகளிர் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூக பணியாளருக்கான விருதுகள், சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்-அமைச்சர் விருதுகள், முதல்-அமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் உள்ளிட்ட விருதுகளையும் முதல்-அமைச்சர் விஜய் வழங்கி கவுரவிக்க உள்ளார்.</p><p>இதற்கு முன்பு சென்னை கோட்டை கொத்தளத்தில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் சுதந்திர தின நாளில் தேசிய கொடியை ஏற்றி வைத்துள்ளனர். அந்த வகையில், 7-வது முதல்-அமைச்சராக விஜய் தேசிய கொடியை ஏற்றிவைக்க இருக்கிறார்.</p> ]]></content:encoded></item><item><title>ஆடி அமாவாசை: சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aadi-amavasai-devotees-permitted-to-visit-sathuragiri-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aadi-amavasai-devotees-permitted-to-visit-sathuragiri-temple#comments</comments><guid isPermaLink="false">9cdd5130-f59a-46cc-b0fc-f150540c3a45</guid><pubDate>Tue, 11 Aug 2026 13:03:58 +0000</pubDate><atom:updated>2026-08-11T13:03:58.785Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Virudhunagar,விருதுநகர்,சதுரகிரி கோவில்,Sathuragiri Temple,sathuragiri hills,Sathuragiri,சதுரகிரி,Chathuragiri,aadi amavasai,ஆடி அமாவாசை,Aadi Amavasai festival,Sundara Mahalingam Temple,சுந்தரமகாலிங்கம் கோவில்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/h66ylwqx/sathu.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/h66ylwqx/sathu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர்,</p><p>விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாணிப்பாறை மலைப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு மலையின் கீழ் பகுதியை நோக்கி பரவி வருகிறது. தீயை கட்டுப்படுத்தும் பணியிலும், மலையில் காற்றின் வேகம் திசை மற்றும் சூழலை கண்காணிக்கும் பணியிலும் களப்பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.</p><h2>தடை</h2><p>தற்போது நிலவும் தீ பரவும் சூழல் பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படக்கூடியதை கருத்தில் கொண்டு நிலைமை பாதுகாப்பானதாகவும், இயல்பானதாகவும் மாறும் வரை இன்று (செவ்வாய்க்கிழமை) பொதுமக்கள் <a href="https://www.dailythanthi.com/topic/sathuragiri">சதுரகிரி</a> மலைக்கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.</p><h2>அனுமதி இல்லை</h2><p>மேலும் தொடர்ந்து எரியும் தீ மற்றும் களநிலவரத்தை கருத்தில் கொண்டு இன்று காலை 8 மணிக்கு முன்னதாக பக்தர்கள் அல்லது பார்வையாளர்கள் <a href="https://www.dailythanthi.com/topic/sathuragiri">சதுரகிரி</a> மலைப்பகுதிக்குள் நுழைய அனுமதி இல்லை. நுழைவு நேரம் மற்றும் கட்டுப்பாடுகள் ஆகியவை அப்பகுதியில் நிலவும் தீ மற்றும் பாதுகாப்பு சூழ்நிலையை பொருத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/pg30fs4n/shivo.jpg" /></figure><h2>ஆடி அமாவாசை</h2><p>எனவே பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையிலும் சதுரகிரிக்கு செல்வதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்திருந்தனர். மேலும் காட்டுத்தீயின் தன்மையைப் பொறுத்து நாளை (புதன்கிழமை) ஆடி அமாவாசை அன்று பக்தர்களை அனுமதிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது.</p><h2>பக்தர்களுக்கு அனுமதி</h2><p>இந்நிலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு <a href="https://www.dailythanthi.com/topic/sathuragiri">சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில்</a> பக்தர்கள் மலையேற நாளையும் (ஆக.12), நாளை மறுநாளும் (ஆக.13) அனுமதி அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னதாக காட்டுத்தீ காரணமாக நேற்றும், இன்றும் சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி தரப்படவில்லை.  </p>]]></content:encoded></item><item><title>நீட்டை ரத்து செய்யக்கோரும் தமிழ்நாடு அரசின் தீர்மானம் மிகவும் வருத்தமளிக்கிறது – தமிழிசை சவுந்தரராஜன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/neet-abolition-move-tamilnadu-government-distressing-says-tamilisai-soundararajan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/neet-abolition-move-tamilnadu-government-distressing-says-tamilisai-soundararajan#comments</comments><guid isPermaLink="false">da80e41a-7112-4e9b-8cd7-00a0f10dbfdc</guid><pubDate>Tue, 11 Aug 2026 13:01:25 +0000</pubDate><atom:updated>2026-08-11T13:01:25.203Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழிசை சவுந்தரராஜன்,Tamilisai Soundararajan,தமிழ்நாடு அரசு,Tamil Nadu Government,ரத்து,Resolution,தீர்மானம்,NEET,நீட்,Abolition,வருத்தமளிக்கிறது</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/e2moeaha/tamilisai-soundarajan.gif" width="768"><media:title type="html"><![CDATA[ தமிழிசை சவுந்தரராஜன்]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/e2moeaha/tamilisai-soundarajan.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நீட்டை ரத்து செய்யக்கோரும் தமிழ்நாடு அரசின் தீர்மானம் மிகவும் வருத்தமளிக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். இது தொடர்பாக, தமிழக முன்னாள் பாஜக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D">தமிழிசை சவுந்தரராஜன்</a> தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>தேசிய நுழைவுத்தேர்வு</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D">நீட்</a> சமூகநீதிக்கு தடையல்ல. தரமான கல்விக்கான சமமற்ற அணுகல்தான் உண்மையான சவால் - அதை சரி செய்ய அரசாங்கம் முயற்சி செய்ய வேண்டும். பல்வேறு பள்ளிகள், கல்வி வாரியங்கள், மாவட்டங்கள் மற்றும் சமூக-பொருளாதார பின்னணிகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு ஒரே தேசிய நுழைவுத்தேர்வு ஒரு பொதுவான அளவுகோலை வழங்குகிறது.</p><h2> நீட் பயிற்சி</h2><p>பயிற்சி குறித்த கவலை இருந்தால், அதற்கான தீர்வு அரசு பள்ளி மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு இலவசமான, தரமான நீட் பயிற்சி வழங்குவதாக இருக்க வேண்டும். தேர்வுத்தாள் கசிவு குறித்த கவலை இருந்தால், பிரதமர் மோடி தேர்வு முறையை மேலும் வலுப்படுத்தி, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்.</p><p>மாணவர்களின் மன அழுத்தம் குறித்த கவலை இருந்தால், ஆலோசனை, வழிகாட்டுதல் மற்றும் கல்வி ஆதரவை வழங்க வேண்டும். ஆனால் நீட்டை ரத்து செய்வது தீர்வல்ல.</p> <h2>மருத்துவ கல்வி</h2><p>தமிழ்நாட்டில் மருத்துவ கல்வி குறிப்பிடத்தக்க அளவில் விரிவடைந்துள்ளது. பல மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளும் எம்.பி.பி.எஸ். இடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. தேசிய மருத்துவ ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தரவுகளும் இந்த மருத்துவ கல்வி விரிவாக்கத்தின் அளவை வெளிப்படுத்துகின்றன.</p> <h2>எப்படி ஒப்பிட முடியும்?</h2><p>இந்நிலையில், இந்த வாய்ப்புகளுக்கான பொதுவான தேசிய நுழைவு தேர்வை ஏன் ரத்து செய்ய வேண்டும்? தமிழ்நாடு அரசு மீண்டும் 12ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ சேர்க்கையை கொண்டு வர முன்வருகிறது. ஆனால் பல்வேறு கல்வி வாரியங்கள், மாறுபட்ட மதிப்பீட்டு முறைகள் மற்றும் கல்வி தரநிலைகளில் பெறப்படும் மதிப்பெண்களை ஒரே அளவுகோலில் நியாயமாக எப்படி ஒப்பிட முடியும்?</p><h2>மாணவர்களின் தேவை</h2><p>நமது கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பு வேண்டும். நமது ஏழை மாணவர்களுக்கு வாய்ப்பு வேண்டும். ஒவ்வொரு மாணவருக்கும் நியாயமான மற்றும் வெளிப்படையான போட்டிக்கான வாய்ப்பு வேண்டும். அரசியல் காரணங்களுக்காக ஒரு தேர்வை நீக்குவதை விட, மாணவர்களின் தேவைகள் மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும்.</p><h2>இலவச நீட் பயிற்சி</h2><p>அவர்களுக்கு சிறந்த பள்ளிகளை வழங்குங்கள். இலவச நீட் பயிற்சி வழங்குங்கள்.உதவித்தொகைகள் வழங்குங்கள். நம்பிக்கையை வழங்குங்கள். ஆனால் நீட் என்ற பொதுவான தேசிய வாய்ப்பை அவர்களிடமிருந்து பறிக்காதீர்கள். தமிழ்நாடு சட்டமன்றம், நமது குழந்தைகளை போட்டியிட தயார்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்; போட்டியிலிருந்து அவர்களை விலக்குவதில் அல்ல.</p><h2>பாராட்டுகிறேன்</h2><p>நீட்டை ரத்து செய்ய வேண்டாம். நீட்டை சீர்திருத்தி, வலுப்படுத்தி, அனைவருக்கும் எளிதில் அணுகக்கூடியதாக மாற்றுவோம். கல்வி நமது குழந்தைகளை நாட்டுடன் போட்டியிட வலிமைப்படுத்த வேண்டும்; அவர்களை நாட்டிலிருந்து தனிமைப்படுத்த கூடாது. தொடர்ந்து அரசியல் கட்சிகளால் ஊக்கமிழக்க செய்யப்படும் சூழலிலும், தமிழ்நாட்டின் மாணவர்கள் நீட் தேர்வில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் என்பதை நான் பாராட்டுகிறேன்.</p> <p><strong>தமிழ்நாட்டு மாணவர்களின் சாதனைகள்:</strong></p><p> அதிகபட்ச மதிப்பெண் பெற்ற 17 மாணவர்களில், 12ஆம் இடத்தை தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடபதி வேலாயுதம் பெற்றுள்ளார்.</p><p> நாடு முழுவதும் 138 மாணவர்கள் 720-க்கு 690 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அவர்களில் 12 மாணவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.</p> <p> அகில இந்திய அளவில் முதல் 100 இடங்களுக்குள் 9 மாணவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.</p><p>இவை வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல — தமிழ்நாட்டு மாணவர்களின் திறமை, உழைப்பு மற்றும் தேசிய அளவில் போட்டியிடும் திறனுக்கான சான்றுகள்.</p><h2>எதிர்கால லட்சியங்கள்</h2><p>தமிழ்நாட்டு மாணவர்கள் நீட்டை சிறப்பாக செயல்பட்டு, தேசிய அளவில் போட்டியிடும் திறன் தங்களுக்கு இருப்பதை நிரூபித்து வருகின்றனர். அவர்களின் எதிர்கால லட்சியங்களை அரசியல் கருத்துகளால் மறைத்துவிடாமல், அவர்களின் சாதனைகளை கொண்டாடுவோம். அவர்களின் வெற்றி கதைகளை அடுத்த தலைமுறைக்கு முன்மாதிரியாக காட்டுவோம்.</p><h2>சிறந்த பயிற்சி</h2><p>சவால்கள் இருந்தால் அவற்றை சிறந்த பயிற்சி, வழிகாட்டுதல் மற்றும் ஆதரவின் மூலம் எதிர்கொள்வோம்; நமது மாணவர்களின் கனவுகளையும் இலட்சியங்களையும் பலவீனப்படுத்த வேண்டாம். நமது குழந்தைகளை அவர்களின் சாதனைகள் ஊக்குவிக்கட்டும், அரசியல் கருத்துகள் அவர்களை ஊக்கமிழக்கச் செய்ய வேண்டாம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>40 ஆண்டுகளாக அரசு புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் மக்களுக்கு பட்டா: த.வெ.க. பெண் எம்.எல்.ஏ. கோரிக்கை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-woman-mla-urges-issuance-of-land-titles-to-people-living-on-government-poramboke-land-for-40-years</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-woman-mla-urges-issuance-of-land-titles-to-people-living-on-government-poramboke-land-for-40-years#comments</comments><guid isPermaLink="false">096406cb-6e5e-4eaf-a51f-10eec3197f31</guid><pubDate>Tue, 11 Aug 2026 12:41:37 +0000</pubDate><atom:updated>2026-08-11T12:41:37.616Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Tamilnadu,எம்.எல்.ஏ.,MLA,தமிழகம்,தமிழக சட்டசபை,TN Assembly,Assembly Session,சட்டசபை கூட்டத்தொடர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/prr2p527/veet.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/prr2p527/veet.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>40 ஆண்டுகளாக அரசு புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று <a href="https://www.dailythanthi.com/topic/tvk">த.வெ.க.</a> பெண் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.</p><h2>கனிமொழி சந்தோஷ்</h2><p>தமிழக சட்டசபையில் இன்று 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று த.வெ.க. உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் (கவுண்டம்பாளையம்) பேசினார். அப்போது, அவர் தொகுதி சார்ந்த பிரச்சினைகளை முன்வைத்து பேசியதாவது:- </p><p> அரசு புறம்போக்கு நிலங்களில் கடந்த 40–50 ஆண்டுகளாக வசித்து வரும் மக்கள், மின் கட்டண ரசீதுகள் உள்ளிட்ட ஆவணங்களை முறையாக வைத்திருந்தும் இதுவரை வீட்டு மனைப் பட்டா கிடைக்காமல் உள்ளனர். பட்டா இல்லாததால் வங்கிக் கடன் பெற முடியாமலும், தாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து வெளியேற்றப்படுவோம் என்ற அச்சத்துடனும் வாழ்ந்து வருகின்றனர்.</p><h2>வீட்டு மனைப் பட்டா</h2><p>எனவே, நீண்டகாலமாக வசித்து வரும் தகுதியான மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கி, அவர்களின் வாழ்வுரிமையையும் பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்பையும் உறுதி செய்ய வேண்டும். </p><p>மேலும், பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையை மேம்படுத்தி, அறுவை சிகிச்சை மையம், விபத்து சிகிச்சை மையம், அவசர சிகிச்சை மையம் ஆகியவற்றை ஏற்படுத்துவதுடன், தேவையான நவீன மருத்துவ உபகரணங்களையும் வழங்க வேண்டும். </p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>கள்ளக்குறிச்சி: ஆசிரியர்கள் அலட்சியத்தால் மாணவர்கள் செய்த ஆபத்தான செயல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kallakurichi-dangerous-act-by-students-due-to-teachers-negligence</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kallakurichi-dangerous-act-by-students-due-to-teachers-negligence#comments</comments><guid isPermaLink="false">9ba49f92-abb0-4f1f-8659-40dc98889d69</guid><pubDate>Tue, 11 Aug 2026 12:34:51 +0000</pubDate><atom:updated>2026-08-11T12:34:51.136Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கள்ளக்குறிச்சி,Kallakkurichi,Teacher,School,மாணவர்கள்,அலட்சியம்,பொதுமக்கள் கோரிக்கை</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/wxiqwqwt/203.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆசிரியர் வருவதற்கு தாமதமானதால் பள்ளியின் நுழைவு வாயில் பூட்டியிருந்தது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/wxiqwqwt/203.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சி,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கள்ளக்குறிச்சி </a>மாவட்டத்தில் ஆசிரியரின் அலட்சியத்தால் மாணவர்கள் செய்த செயல் அருகிலிருந்த பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p><h2>மாணவ, மாணவிகள் செய்த ஆபத்தான செயல்</h2><p>கள்ளக்குறிச்சி மாவட்டம் பொரசக்குறிச்சி கிராமத்தில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி</a> அமைந்துள்ளது. அங்கு படித்து வரும் மாணவ, மாணவிகள் வழக்கம் போல் இன்று (செவ்வாய்க்கிழமை) பள்ளிக்கு சென்றனர். ஆனால் ஆசிரியர் வருவதற்கு தாமதமானதால் பள்ளியின் நுழைவு வாயில் பூட்டியிருந்தது.</p><p>இதனால் காத்திருந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மாணவர்கள்</a> சிறிது நேரத்தில் நுழைவாயிலில் இருந்த இரும்பு கேட் மீது ஆபத்தான முறையில் ஏறி குதித்து பள்ளி வளாகத்திற்குள் சென்றனர். இந்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p><h2>ஆசிரியர் மீது நடவடிக்கை</h2><p>இது குறித்து தாமதமாக பள்ளிக்கு வருகை தரும் ஆசிரியர் மீது பள்ளி கல்வித் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றம்: ”இந்த ஒற்றுமைப்போக்கு தொடரவேண்டும்” - கமல்ஹாசன் எம்.பி.</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/resolutions-passed-unanimously-this-spirit-of-unity-must-continue-kamal-haasan-mp</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/resolutions-passed-unanimously-this-spirit-of-unity-must-continue-kamal-haasan-mp#comments</comments><guid isPermaLink="false">36764e7c-f30b-4e92-88f5-67471db139d5</guid><pubDate>Tue, 11 Aug 2026 12:19:02 +0000</pubDate><atom:updated>2026-08-11T12:19:02.626Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,கமல்ஹாசன்,தமிழக சட்டசபை,தமிழக அரசு,TN govt,TN Assembly,Kamal Haasan,Assembly Session,சட்டசபை கூட்டத்தொடர்,Makkal Needhi Maiam,மக்கள் நீதி மய்யம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/msf00j7k/mi.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/msf00j7k/mi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட், FCRA என இரு தீர்மானங்கள் ஒரே மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது மகிழ்வளிப்பதாக ம.நீ.ம .தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/kamal-haasan">கமல்ஹாசன்</a> எம்.பி. தெரிவித்துள்ளார்.</p><h2>நீட் நுழைவுத் தேர்வு</h2><p>இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ்வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரு தீர்மானங்கள் ஒரே மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளமை மகிழ்வளிக்கிறது. </p><p>நீட் நுழைவுத் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்பதும், ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்பதுமே அத்தீர்மானங்கள். </p><h2>அரசுக்கு பாராட்டுகள்</h2><p>பா.ஜ.க. நீங்கலாக, தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளின் ஒருமித்த ஆதரவோடும் இந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பது  வரவேற்கப்பட வேண்டிய விஷயம். தமிழ்நாடு அரசுக்குப் பாராட்டுகள். </p><p>தமிழ்நாட்டின் நலனுக்கான இந்த ஒற்றுமைப் போக்கு தொடரவேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு; ஈரோட்டில் பரிதாபம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/school-student-dies-of-electrocution-tragic-incident-in-erode</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/school-student-dies-of-electrocution-tragic-incident-in-erode#comments</comments><guid isPermaLink="false">d999f3ba-ff7f-4531-9f71-5f3ba0ab1900</guid><pubDate>Tue, 11 Aug 2026 12:04:17 +0000</pubDate><atom:updated>2026-08-11T12:04:17.529Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Erode,ஈரோடு,மின்சாரம் தாக்கி,school student,பள்ளி மாணவன் பலி,electrocution death</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/tppq6p4g/201.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ பள்ளியை முற்றுகையிட்ட ஊர்மக்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/tppq6p4g/201.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள அரசுப் பள்ளியில், மதிய உணவு இடைவேளையின் போது அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியை மிதித்த பள்ளி மாணவன் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மின்சாரம் தாக்கி </a>பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p><h2>அரசு உயர்நிலைப்பள்ளி</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஈரோடு மாவட்டம்</a> பவானி அடுத்த குப்பிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த சிறுவன் யோகேஷ் (வயது 11). அந்த சிறுவன் அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதிய உணவு இடைவேளையின் போது,<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> மாணவன்</a> யோகேஷ் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்ததான்.</p><h2>மின்சாரம் தாக்கி மாணவன் பலி</h2><p>அப்போது, பள்ளி வளாகத்தில் எதிர்பாராத விதமாக அறுந்து கிடந்த உயர் அழுத்த மின்சார ஒயரை சிறுவன் யோகேஷ் மிதித்தான். இதில் பலத்த மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளான சிறுவன், தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>தகவலறிந்து வந்த போலீசாரும், அதிகாரிகளும் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பள்ளி வளாகத்திற்குள் மின்சாரக் கம்பி அறுந்து கிடந்தது குறித்து பள்ளி நிர்வாகமும், மின்வாரியமும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காததே இந்த துயர சம்பவத்திற்குக் காரணம் என பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு - சென்னையில் ஆசிரியர்கள், மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/drug-free-tamil-nadu-teachers-students-take-pledge-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/drug-free-tamil-nadu-teachers-students-take-pledge-in-chennai#comments</comments><guid isPermaLink="false">740897d2-2d15-4799-8d4b-5d1b7d69dcbb</guid><pubDate>Tue, 11 Aug 2026 12:03:34 +0000</pubDate><atom:updated>2026-08-11T12:03:34.802Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,Chennai,சென்னை,உறுதிமொழி ஏற்பு,மாணவர்கள்,students,ஆசிரியர்கள்,school teachers,Pledge,Drug free Tamil Nadu,போதை பொருள்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/xtub1wri/pledge.jpg" width="749"><media:title type="html"><![CDATA[ ஆசிரியர்கள், மாணவர்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆசிரியர்கள், மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/xtub1wri/pledge.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> சென்னை மாநகராட்சியில் அலுவலர்கள், பணியாளர்கள், சென்னை பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், கல்வி அலுவலர்கள் “<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF">போதைப்பொருள்கள்</a> இல்லாத தமிழ்நாடு” உறுதிமொழியினை இன்று ஏற்றனர். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-</p><h2>“போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு”</h2><p> தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையில் சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” - மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.</p> <h2>அலுவலர்கள், பணியாளர்கள்</h2><p>இதன் தொடர்ச்சியாக, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">சென்னை மாநகராட்சி</a> ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகை கூட்டரங்கில் இணை ஆணையாளர்கள் ஸ்ரேயா பி. சிங், (சுகாதாரம்), செ.சரவணன், (பணிகள்) உள்ளிட்ட அலுவலர்கள், பணியாளர்கள், சென்னை பள்ளிகளின் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், கல்வி அலுவலர்கள் “போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” உறுதிமொழியினை ஏற்றனர்.</p><h2>உறுதிமொழி</h2><p>மேலும், சென்னை மாநகராட்சியில் உள்ள வட்டார அலுவலகங்கள், மண்டல அலுவலகங்கள் மற்றும் சென்னை மாநகராட்சியை சார்ந்த அலுவலகங்களில் உள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 81 சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் இன்று “போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு” உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.</p> <h2>அறிவுரை</h2><p>போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதை பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும், எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன்.</p><h2>தடுப்பு நடவடிக்கை</h2><p> போதை பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன். போதை பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைளின் மூலம் போதை பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதி கூறுகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் அதிகரிக்கும் காய்ச்சல்: சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rising-fever-cases-in-tamil-nadu-health-department-issues-advisory</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rising-fever-cases-in-tamil-nadu-health-department-issues-advisory#comments</comments><guid isPermaLink="false">abccf324-72ed-4260-addb-cc728e9395f4</guid><pubDate>Tue, 11 Aug 2026 11:59:05 +0000</pubDate><atom:updated>2026-08-11T11:59:05.245Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>hospital,மருத்துவமனை,Fever,காய்ச்சல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/rkzi0mc0/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/rkzi0mc0/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>பருவமழை காலம் என்பதால் தமிழகத்தில் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக பொதுமக்களுக்கு தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது. </p><h2>காய்ச்சல் - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்</h2><p>அதன்படி, குறையாத <a href="https://www.dailythanthi.com/">காய்ச்சல்</a>, வயிற்று வலி, திடீர் அதிக காய்ச்சல், கடுமையான தசைவலி, கண்கள் சிவத்தல்,  கடுமையான தலைவலி, கண்களுக்குப் பின்னால் வலி, மூட்டு வலி, தோலில் சிவப்பு தடிப்புகள், முதுகு வலி, உடல் சோர்வு,  பசியின்மை உள்ளிட்ட அறிகுறிகள் தெரிந்தால் அருகில் உள்ள மருந்தகத்தில் மாத்திரை வாங்கி சாப்பிடாமல் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று டாக்டர்களை அணுகி பரிசோதனை செய்ய வேண்டுமென பொதுமக்களுக்கு  சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.</p><p>பருவ மழை நோய் அதிகரிப்பை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான வார்டு அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காய்ச்சலுக்கு  ஏற்ப தனித்தனி பரிசோதனை செய்து நோயின் தீவிரத்தை தீவிர காய்ச்சல், நடுத்தர காய்ச்சல், லேசான காய்ச்சல் என பகுப்பாய்வு செய்து அதற்கு ஏற்ப நோயாளிக்கு மருந்து கொடுக்க வேண்டும் என மருத்துவ அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.  </p><p>மழைக்காலம் என்பதால் எலி காய்ச்சல், டெங்கு காய்ச்சல், சிக்கன் குனியா, டைபாய்டு உள்ளிட்ட பருவமழை நோய்கள் தமிழ்நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளதாகவும் வீட்டையும் சுற்றியுள்ள பகுதிகளையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் பொது சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>அதேபோல் மாவட்ட மருத்துவ அதிகாரிகள் மாவட்ட அளவிலான மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி உள்ளிட்ட நிர்வாக அமைப்போடு ஒருங்கிணைந்து நோய் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிர படுத்தவும் அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>பொதுமக்கள் கவனத்திற்கு.. சென்னையில் நாளை மறுநாள் மின் தடை: எந்த பகுதிகளில் தெரியுமா..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/attention-public-power-outage-in-chennai-the-day-after-tomorrowdo-you-know-which-areas-are-affected</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/attention-public-power-outage-in-chennai-the-day-after-tomorrowdo-you-know-which-areas-are-affected#comments</comments><guid isPermaLink="false">a08eaebb-d71e-41db-9ca2-01f39c78548c</guid><pubDate>Tue, 11 Aug 2026 11:21:23 +0000</pubDate><atom:updated>2026-08-11T11:21:23.747Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,தமிழகம்,மின் தடை,power cut</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/71l40x2r/minthad.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/71l40x2r/minthad.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் முக்கிய இடங்களில் நாளை மறுநாள் மின் தடை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>மின் விநியோகம் நிறுத்தம்</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a>யில் நாளை மறுநாள் (13.08.2026) அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><h2>கே.கே. நகர்: </h2><p>காவேரி ரங்கன் நகர், கே.கே.சாலை, லோகையா காலனி, தசரதபுரம், ஆற்காடு சாலை, பாலாஜி நகர், பாஸ்கர் காலனி, மதியழகன் நகர், அருணாச்சலம் சாலை, குமரன் காலனி, காந்தி நகர், தேவராஜ் நகர், எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் சாலை, பரணி காலனி, காவேரி மருத்துவமனை தெரு, சூர்யா தெரு, 80 அடி சாலை, எம்.ஜி. சக்கரபாணி தெரு, பிக் பஜார், பாஸ்போர்ட் அலுவலகம், என்.எஸ்.கே. லேன், சியாமளா டவர், முனுசாமி தெரு, கஸ்தூரி தெரு, விநாயகம் தெரு, காமராஜர் சாலை, வெங்கடேச நகர்.</p><h2>பாலவாக்கம்: </h2><p>காமராஜர் சாலை பிரதான சாலை, கரீம் நகர், மகாத்மா காந்தி நகர், சங்கம் காலனி 1வது மற்றும் 2வது தெரு, கந்தசாமி நகர் 1 வது முதல் 7வது தெரு வரை, மணியம்மை தெரு, திருவான்மியூர் அவ்வை நகர், வெங்கடேசபுரம், கண்ணப்பன் நகர், பாரதி நகர்.</p><h2>பல்லாவரம்: </h2><p>பம்மல் பிரதான சாலை, ஆடுத்தொட்டி, கிருஷ்ணா நகர், முத்தமிழ் நகர், என்.எஸ்.கே. தெரு, நடராஜன் தெரு, பிருந்தாவன் காலனி, கென்னடி தெரு, மூங்கலேரி.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய்யை கவர்ந்த குட்டி போலீஸ் - யார் அவர்?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-little-police-officer-who-impressed-chief-minister-vijay-who-is-he</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-little-police-officer-who-impressed-chief-minister-vijay-who-is-he#comments</comments><guid isPermaLink="false">60dafb74-388b-4856-ac52-cc8ad41de177</guid><pubDate>Tue, 11 Aug 2026 10:59:58 +0000</pubDate><atom:updated>2026-08-11T10:59:58.702Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,தமிழக அரசு,TN govt,TN Police,போலீஸ் அதிகாரிகள்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/i87ma68x/maria.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விஜய்யை கவர்ந்த குட்டி போலீஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/i87ma68x/maria.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற பெயரில் மாநில அளவில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. </p><h2>முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</h2><p>மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a> கலந்துகொண்டு, அனைவரையும் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழியை ஏற்கச் செய்தார். </p><p>அதனைத் தொடர்ந்து, போதைப் பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தலை தடுத்து ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்றிய 15 போலீஸ் அதிகாரிகளுக்கு 2026-ம் ஆண்டுக்கான காவல் பதக்கங்கள் வழங்கப்பட்டன. </p><h2>போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்</h2><p>அதில், ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் எஸ்.பி.யான  சந்தீஷ் ஐ.பி.எஸ்.-ம் ஒருவர். பதக்கம் பெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க இவர் தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். பள்ளி செல்லும் அவருடைய மகன் ஷன் முக் (4) உடன் வந்திருந்தார். போலீஸ் சீருடையில் வந்த அந்த சிறுவன், முதல்-அமைச்சர் விஜயை பார்த்தவுடன், தானும் மேடைக்கு வருவதாக தந்தையிடம் அடம்பிடித்தார். </p><h2>முதல்-அமைச்சருக்கு சிறுவன் சல்யூட்</h2><p>மகனுடன் மேடை ஏறிய எஸ்.பி.சந்தீஷிடம் விசாரித்த முதல்-அமைச்சர் விஜய், அவருடைய மகனை கையில் தூக்கிக் கொண்டார். சில வினாடிகள் சிறுவனிடம் பேசிய அவர், பின்னர் கீழே இறக்கிவிட்டார். அந்த சிறுவனும் ஏனைய போலீஸ் அதிகாரிகள் போல், முதல்-அமைச்சர் விஜய்க்கு நேர் எதிரில் நின்று அவருக்கு சல்யூட் அடித்தார். பதிலுக்கு சிரித்துக்கொண்டே முதல்-அமைச்சர் விஜய்யும் சல்யூட் அடித்தார். அதன்பின்னர், சிறுவன் உற்சாகமாக தனது தந்தையுடன் மேடையை விட்டு கீழே இறங்கினார். </p><p>குட்டி போலீஸ் மேடை ஏறிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. </p>]]></content:encoded></item><item><title>திமுக - பாஜக கூட்டணி? வானதி சீனிவாசன் பதில் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-bjp-alliance-vanathi-srinivasans-response</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-bjp-alliance-vanathi-srinivasans-response#comments</comments><guid isPermaLink="false">38ce1145-6eb9-4530-94ff-7ab4798c2744</guid><pubDate>Tue, 11 Aug 2026 10:48:23 +0000</pubDate><atom:updated>2026-08-11T10:48:23.615Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,திமுக,DMK,வானதி சீனிவாசன்,பாஜக.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/671okizl/vanathi33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
திமுக - பாஜக கூட்டணி?]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/671okizl/vanathi33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் திமுக - பாஜக கூட்டணி  உருவாகிறதா? என்ற கேள்வி பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் பதில் அளித்துள்ளார்.</p><p>தமிழகத்தில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்தபிறகு தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் உள்பட பலரும் தவெகவில் இணைந்தனர். மேலும் திமுகவும் பாஜகவும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே இணையும் என்று <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">தவெக தரப்பில் பலர் கூறி வருகின்றனர்.</a></p><p>இந்நிலையில் அரசியலில் எதிரி, நண்பர் என்று யாருமே கிடையாது. தமிழகத்துக்கு எது நல்லதோ, அது எங்கிருந்து வந்தாலும் நாங்கள் அதை கண்டிப்பாக ஆமோதிப்போம், வரவேற்போம்" என்று திமுக எம்.பி. கனிமொழி சோமு கூறியிருந்தார்.</p><p>தொடர்ந்து இதுபற்றிய கேள்விக்கு பதிலளித்த பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன், 'அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை' என்றார்.</p><p>மேலும், "திமுக - பாஜக கூட்டணி உருவாகும்போது சொல்வார்கள். உருவாகும் முன்பே நீங்களே கூட்டணியை உருவாக்கிவிடுவீர்கள்போல" என்று தெரிவித்துவிட்டு சென்றார்/ </p>]]></content:encoded></item><item><title>தமிழக சட்டசபையில் கிறிஸ்தவ மயமாக்க முயற்சி: நிதியமைச்சருக்கு இந்துமுன்னணி கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/attempt-to-christianize-the-tamil-nadu-legislative-assembly-hindu-munnani-condemns-finance-minister</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/attempt-to-christianize-the-tamil-nadu-legislative-assembly-hindu-munnani-condemns-finance-minister#comments</comments><guid isPermaLink="false">14d24efa-7dd8-42a6-968d-b4018e2c1679</guid><pubDate>Tue, 11 Aug 2026 10:47:27 +0000</pubDate><atom:updated>2026-08-11T10:47:27.820Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Tamilnadu,இந்து முன்னணி,தமிழகம்,தமிழக சட்டசபை,TN Assembly,Assembly Session,சட்டசபை கூட்டத்தொடர்,Finance Minister,Hindu Munani,நிதி அமைச்சர்,Mariawilson</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/sfjpkt5j/maria.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/sfjpkt5j/maria.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ் மொழியின் மாண்பினை இழிவுபடுத்திய <a href="https://www.dailythanthi.com/topic/mariawilson">நிதியமைச்சர் மரியவில்சனுக்கு</a> இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><h2>அரசியல் பண்பாடு</h2><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் நா.மரிய வில்சன் அவர்கள் வெளிப்படுத்திய கோபமும், அதனுடன் இணைந்த மதச்சார்புடைய கருத்துக்களும் மாநிலத்தின் அரசியல் பண்பாட்டிற்கே அவமானமாக ஆகும்.</p><p>பட்ஜெட் விவாதத்தின் போது கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், நிதியமைச்சர் தமிழில் பிழையின்றி பேச முயற்சிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இது தமிழ் ஆர்வலர் என்ற முறையில் எழுப்பப்பட்ட நியாயமான விமர்சனமே. ஆனால் அதற்கு பதிலளித்த அமைச்சர், "நான் பிறப்பால் கிறிஸ்தவன். எனக்கு கிறிஸ்தவம் அன்பு மொழி, அமைதி மொழி, இரக்கத்தின் மொழியை கற்றுக்கொடுத்திருக்கிறது என பேசியிருக்கிறார். </p> <h2>அமைச்சர் மரிய வில்சன்</h2><p>கிறிஸ்துவ மொழி அன்பு கருணை இரக்கம் சொல்லித் தந்தது என்றால், தமிழ் மொழி எதுவும் சொல்லித் தரவில்லை என்பதே பொருளாக அமையும். சனாதன தர்மமும் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு வழிமுறைகளை போதிக்கிறது. ஒவ்வொரு மதமும் அன்பை, இரக்கத்தை, பொறுமையை வலியுறுத்துகிறது. ஆனால் தன் மதம் மட்டும் தான் இவற்றை கற்றுக்கொடுத்தது என்ற உணர்வை உருவாக்குவது மத நல்லிணக்கத்திற்கு எதிரானது.</p><p>கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி என்பதை உலகே அறியும். கிறிஸ்தவ மதம் தோன்றுவதற்கு முன்னாலேயே தமிழ் மொழி தோன்றியது. தான் சார்ந்த கிறிஸ்தவ மதத்தை உயர்த்திப் பிடிக்கிறேன் என்ற நோக்கில் தமிழ் மொழியை சிறுமைப்படுத்தி இருக்கிறார் அமைச்சர் மரிய வில்சன்.</p> <h2>தமிழ் மொழி</h2><p>எனக்கு தமிழ் சரியாக வராது அதை பேச முயற்சிக்கிறேன் எனும் பொருள்படும்படி பேசி இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம். அதை விடுத்து அமைச்சர் என்பதே அவையில் மறந்து காட்டுக்கூச்சல் போட்டிருக்கிறார்.</p><p>சட்டசபை கூட்டத் தொடரில் நிதிநிலை அறிக்கையை கொண்டு வரும் பொழுது ஜெபமாலையை கொண்டு வந்தார். அது மத நம்பிக்கை என்பதாக எடுத்துக் கொள்ளலாம், ஆனால் தமிழில் பிழை இல்லாமல் பேசுங்கள் என சட்டமன்ற உறுப்பினர் கூற உடனடியாக கிறிஸ்துவத்தை அவர் உயர்த்திப் பிடிக்க வேண்டிய அவசியம் என்ன என்பது பற்றி கேள்வி எழுகிறது.</p><p>இதிகாசங்களும், காப்பியங்களும், தேவாரமும், திருவாசகமும், திருவருட்பாவும், திருவெம்பாவையும் இன்னும் பல இலக்கியங்கள் பக்தியை உள்ளடக்கியது தமிழ் மொழி. தமிழ்மொழி தெரியாத ஒரு தலைமுறை உருவாகி வந்துள்ளது தான் திராவிட அரசியல் ஆட்சி செய்ததன் சாதனை எனும் வேதனை என்பதை தமிழக மக்கள் உணர வேண்டும்.</p> <h2>ஆணவத்தின் உச்சம்</h2><p>தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ் மொழியின் அருமை தெரியாமல் நிதியமைச்சர் இருப்பது வேதனைக்குரிய விஷயமாகும்.</p><p>பாதி பேருக்கு எவ்வளவு தமிழ் படித்தாலும் தெரியாது என்று கூறியது மட்டுமல்லாமல், தனது பேச்சு நடையை யாருக்காகவும் மாற்ற மாட்டேன் என்று ஆவேசமாக அறிவித்ததோடு, சபை மாண்பு என்பதே சிறிதும் இன்றி ஒலிபெருக்கியை தள்ளி விடுவது அவர் ஏற்றுக் கொண்டுள்ள அமைச்சரின் பொறுப்புக்கு அழகல்ல. </p><p>சபாநாயகரே அவரை அமைதிப்படுத்த வேண்டிய நிலை உருவானது. தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பதவி வகிப்பவர். தமிழை இழிவுபடுத்தி தனது மதத்தை உயர்த்திப் பேசுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. கல்வித்துறையில் 25 முதல் 30 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர் என்று அவரே கூறியிருக்கிறார். ஆங்கிலத்தில் பேசுவதற்குப் பழக்கப்பட்டவர் என்பதால் தமிழில் சில பிழைகள் ஏற்படலாம். ஆனால் அதை ஒப்புக்கொண்டு சரி செய்ய முயற்சி செய்வதற்குப் பதிலாக, தமிழ் படித்தவர்களுக்கே அன்பு தெரியாது என்று சொல்வது ஆணவத்தின் உச்சம்.</p> <h2>அன்பு மொழி</h2><p>மேலும், சொத்து தகராறில் தனது சொந்த அண்ணன் குடும்பத்தினரைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், "அன்பு மொழி" பற்றி பேசுவது இரட்டை வேடமாகவே தென்படுகிறது.</p><p>சட்டப்பேரவை என்பது அனைத்து மக்களின் பிரதிநிதித்துவ அரங்கம். அங்கு மதத்தை முன்னிறுத்தி தமிழை இழிவுபடுத்துவது மாநிலத்தின் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தானது. நிதியமைச்சர் பதவி என்பது பொறுப்பானது. கோபத்தைக் கட்டுப்படுத்தி, தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பதே அந்தப் பதவிக்கு அழகு. தமிழ்நாட்டின் மொழி, பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றை மதிக்கும் மனப்பான்மையை அமைச்சர் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் இதுபோன்ற நிகழ்வுகள் அரசியல் விவாதங்களை மதரீதியாக மாற்றி, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும்.</p> <h2>கிறிஸ்துவ தாஜா அரசியல்</h2><p>தமிழுக்காக எதையும் செய்வோம், தமிழ் எங்கள் உயிர் எனவெல்லாம் போலி அறிக்கைகளை விடும் தி.மு.கவினரும், போலி தமிழ் ஆர்வலர்களும் அமைச்சரின் இந்த பேச்சுக்கு இதுவரை கண்டனம் தெரிவிக்காததன் காரணம் சிறுபான்மை கிறிஸ்துவ தாஜா அரசியல் தான். இதனை உணர்ந்துதான் யாரும் எதிர்த்து குரல் கொடுக்கக் கூடாது என்பதற்காகவே உரையில் கிறிஸ்துவத்தை இடைச்செருகலாக அமைச்சர் கொண்டு வந்தாரோ என மக்கள் சந்தேகிக்கிறார்கள்.</p><p>உலகம் போற்றும் தமிழ் மொழியை குறைத்து மதிப்பிட்டதற்காக நிதி அமைச்சர் மரியவில்சன் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், இனிமேல் இது போன்று ஆணவ பேச்சை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>நவோதயா பள்ளிகளை தடுக்கும் தவெக அரசு: நயினார் நாகேந்திரன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendran-condemns-tvk-government-for-blocking-navodaya-schools</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendran-condemns-tvk-government-for-blocking-navodaya-schools#comments</comments><guid isPermaLink="false">d3504b10-2d3c-441b-9f61-366c32f8941f</guid><pubDate>Tue, 11 Aug 2026 10:42:14 +0000</pubDate><atom:updated>2026-08-11T10:42:14.805Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,கண்டனம்,condemns,CBSE school,தவெக அரசு,TVK Government,நவோதயா பள்ளிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/8pf1fp9y/nainar-nagendheran.new.gif" width="752"><media:title type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/8pf1fp9y/nainar-nagendheran.new.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நவோதயா பள்ளிகளை தடுக்கும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அரசுக்கு கண்டனம் என தமிழக பாஜக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன்</a> தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>நவோதயா பள்ளிகள்</h2><p>தமிழகத்தை தவிர இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் நவோதயா பள்ளிகள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. ஊரக பகுதி மாணவர்களுக்கு உயர்தரமான சிபிஎஸ்இ  கல்வியை முற்றிலும் இலவசமாக வழங்கும் நவோதயா பள்ளிகளை தடுக்கும் நோக்கில், விஜய் தலைமையிலான <a href="https://www.dailythanthi.com/topic/tvk">த.வெ.க அரசு</a> உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.</p> <h2>பி-டீமாக</h2><p>நவோதயா பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தங்குமிடம், சத்தான உணவு, சீருடை மற்றும் புத்தகங்கள் என அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன. அத்தகைய பள்ளிகளை தடுப்பதன் மூலம், தவெக அரசு திமுகவின் அதே மாணவர் விரோத பாதையையே பின்பற்றி, அதன் ‘பி-டீமாக’ செயல்படுவது ஏமாற்றமளிக்கிறது.</p><h2>பிடிவாத போக்கு</h2><p>எனவே, மாநில உரிமை என்ற பெயரில் அரசியல் செய்யாமல், மாணவர் நலனை கருதி, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நவோதயா பள்ளிகளுக்கு தேவையான நிலங்களை தவெக அரசு உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழக மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் இந்த பிடிவாத போக்கை அரசு கைவிடாவிட்டால், பாரதிய ஜனதா கட்சி மாணவர்களுக்காக தொடர்ந்து வீதிக்கு வந்து போராடும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இல்லை...வருவாயை பெருக்க நடவடிக்கை இல்லை: எடப்பாடி பழனிசாமி பேச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-new-schemes-in-budget-no-measures-to-boost-revenue-edappadi-palaniswami</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-new-schemes-in-budget-no-measures-to-boost-revenue-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">1f648522-a272-4ca0-9ab2-fd5642b4935f</guid><pubDate>Tue, 11 Aug 2026 10:32:18 +0000</pubDate><atom:updated>2026-08-11T10:32:18.569Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,எடப்பாடி பழனிசாமி,தமிழக சட்டசபை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/mkbpk53t/Untitled-1.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/mkbpk53t/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p> <p>தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் முன்னாள் முதல்-அமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் பேசியதாவது,</p> <p>புதிய அரசு பொறுப்பேற்ற முதல் 100 நாட்கள் நிதி மேலாண்மையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். புதிய அரசின் பாதையை தீர்மானிப்பது முதல் 100 நாட்கள் தான். 100 நாள் செயல்திட்டங்களை புதிய அரசு வெளியிடுவது வழக்கம், அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் முதலீடுகள் கிடைக்கும். தவெகவை போல் ஏற்கெனவே வெள்ளை அறிக்கையை அதிமுக, திமுகவும் வெளியிட்டுள்ளது.</p><p>பள்ளிக்கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் குளறுபடி. ஒதுக்கப்பட்ட நிதியில் முரண்பாடு உள்ளதால் ஓய்வூதியம் முறையாக தரப்படுமா என விளக்கம் அளிக்க வேண்டும். வருவாயை பெருக்க நடவடிக்கை இல்லை, வருவாய் பற்றாக்குறையை குறைக்கவும் நடவடிக்கை இல்லை. நிதி மேலாண்மைக்கு சரியான பாதை போடப்படவில்லை என்பதையே இந்த பட்ஜெட் காட்டுகிறது. 3 மாதங்களில் 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் 5 ஆண்டுகளில் 20 லட்சம் கோடியாக உயர்த்திவிடுவீர்கள் என்பதில் சந்தேகமில்லை.</p><p>பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இல்லை. அதிமுக கொண்டுவந்த திட்டங்களுக்கு வெற்றி என பெயர் மாற்றி உள்ளீர்கள். தமிழ்நாட்டில் உள்ள 40,000 அரசு பள்ளிகளிலும் தரமும் உயர்த்தப்பட வேண்டும். அதற்கு உரிய நிதி ஒதுக்கப்பட வேண்டும். அவையில் திறம்பட பேசும் அமைச்சர் ராஜ்மோகன், 40,000 பள்ளிகளுக்கு தேவையான நிதியை கேட்டுப் பெறுவார் என நம்புகிறேன்.</p> <p>பேசாமல் செயல்படுவோம் என்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் சில இடங்களில் பேசினால்தான் தீர்வு காண முடியும்.தமிழகத்திற்கு நிதியை பெற மத்திய அரசுக்கு கடிதம் எழுதினால் மட்டும் போதாது, பேச வேண்டும்.</p> <p>தமிழ்நாட்டில் உள்ள அரசு துறைகளில் 13.30 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது.காலி பணியிடங்களை படிப்படியாக நிரப்பினால்தான் அரசின் திட்டங்களை நிறைவேற்ற முடியும்.</p> <p>ஆட்சிக்கு வந்த உடன் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் எனக் கூறினீர்கள், அதனை செயல்படுத்த வேண்டும். பொதுப்பணித்துறை நிறுவனங்களில் ஒன்றரை லட்சம் காலிப்பணியிடம், மின்சாரத்துறையிலும் பல காலிப்பணியிடங்கள் உள்ளன.மின்துறையில் அதிக காலிப்பணியிடங்கள் இருப்பதன் காரணமாகத்தான் அதிக மின்தடைகள் ஏற்படுகிறது.</p> <p>கொரோனா காலத்தில் சிறப்பான ஆட்சியை கொடுத்த அரசு அதிமுக. பல்வேறு திட்டங்கள் செயல்படுத்திய அதிமுக ஆட்சி காலத்தில் கடன் சுமை குறைவாக இருந்தது. சொத்து வரி குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p> <p>அதிமுக கொண்டு வந்த உழவன் செயலி திட்டத்தை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.விவசாயிகள் நலன் கருதி ஓசூரில் உள்ள சர்வதேச மலர் ஏல மையத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாம்பழ விளைச்சல் அதிகம், விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கடுமையாக பாதிப்பு, தேவையான நிவாரணம் தரப்பட வேண்டும்.தட்கல் முறையில் விண்ணப்பித்து காத்திருக்கும் 65,000 விவசாயிகளுக்கு உடனடியாக பம்பு செட் தரப்பட வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>ஈரோடு: பள்ளி வளாகத்தில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு - அதிர்ச்சி சம்பவம்

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-school-campus-electrocution-student-death-shocking-incident</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-school-campus-electrocution-student-death-shocking-incident#comments</comments><guid isPermaLink="false">6e50728a-41ff-4dae-9256-9b12773c4bef</guid><pubDate>Tue, 11 Aug 2026 10:30:07 +0000</pubDate><atom:updated>2026-08-11T10:30:07.778Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Erode,ஈரோடு,School,பள்ளி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/wjis10gy/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/wjis10gy/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>ஈரோடு,</p><p><a href="https://www.dailythanthi.com/">ஈரோடு </a>மாவட்டம் பவானி அருகே குப்பிச்சிபாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் யோகேஷ் (வயது 11) என்ற மாணவன் 6ம் வகுப்பு படித்து வந்தான்.</p><h2>மின்சாரம் தாக்கி மாணவன் பலி</h2><p>இந்நிலையில், மாணவன் யோகேஷ் இன்று மதிய உணவு இடைவேளையின்போது  பள்ளி வளாகத்தில் நடந்து சென்றுள்ளான். அப்போது, வளாகத்தின் அறுந்து கிடந்த மின்சார ஒயரை மாணவன் யோகேஷ் மிதித்துள்ளான். இதில் மின்சாரம் பாய்ந்த மாணவன் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்தான். </p><p>உடனடியாக மாணவனை மீட்ட பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் யோகேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். </p><h2>உறவினர்கள் போராட்டம்</h2><p>இதனால் ஆத்திரமடைந்த சிறுவனின் உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   </p> ]]></content:encoded></item><item><title>கோவை: 70 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் சிமெண்ட் ஆலையால் பாதிப்பு- பொதுமக்கள் புகார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-public-complain-about-the-impact-of-a-cement-plant-operating-for-70-years</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-public-complain-about-the-impact-of-a-cement-plant-operating-for-70-years#comments</comments><guid isPermaLink="false">215370c1-ca56-4d60-817d-247cdae56610</guid><pubDate>Tue, 11 Aug 2026 10:27:15 +0000</pubDate><atom:updated>2026-08-11T10:27:15.836Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,Air pollution,பொதுமக்கள் புகார்,public complaint,சிமெண்டு ஆலை</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/6am6m52g/200.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ ஏ.சி.சி சிமெண்ட் ஆலை]]></media:title><media:description type="html"><![CDATA[ கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வரும் ஏ.சி.சி சிமெண்ட் ஆலை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/6am6m52g/200.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கோவை மாவட்டம்</a> மதுக்கரையில் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வரும் ஏ.சி.சி சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் புகை மற்றும் சாம்பல் துகள்களால் கடுமையான சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் புகார் அளித்தனர்.</p><h2>பொதுமக்கள் குமுறல்</h2><p>கோவை மாவட்டம் மதுக்கரை அருகே குரும்பபாளையம் பகுதியில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஏ.சி.சி சிமெண்ட் ஆலை </a>கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது. மதுக்கரை மற்றும் மேட்டாங்காடு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், தங்கள் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களில் உள்ள மரங்களின் இலைகளில் சிமெண்ட் துகள்கள் தடிமனாகப் படிந்திருப்பதை ஆதாரமாகக் காட்டி கலெக்டரிடம் முறையிட்டனர்.</p><p>இதனால் அப்பகுதியில் வசிக்கும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கு மூச்சுத்திணறல், தொடர் இருமல், கண் எரிச்சல் போன்ற உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதாகவும், காற்றின் தரம் முற்றிலும் சீர்கெட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.</p><h2>அதிகாரிகளின் அதிரடி உத்தரவு</h2><p>மக்களின் தொடர் புகார்களைத் தொடர்ந்து, வருவாய்த்துறை மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில், ஆலையிலிருந்து வெளியேறும் புகை மற்றும் சாம்பல் துகள்களின் அளவைக் கட்டுப்படுத்தும் வரை ஆலை இயங்கக் கூடாது என்றும், மாசு கட்டுப்பாட்டு விதிகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் ஆலை நிர்வாகத்திற்கு அதிகாரிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.</p><h2>தொழிலாளர்கள் போராட்டம்</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சுற்றுச்சூழல் </a>மாசுப் பிரச்சினை ஒருபுறமிருக்க, இந்த ஆலையின் தற்போதைய நிர்வாகமான அதானி குழுமம், உள்ளூர் தொழிலாளர்களைப் புறக்கணிப்பதாகக் கூறி ஆலைத் தொழிலாளர்களும் அங்கு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மதுக்கரை பகுதியில் தற்பொழுது பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>கரும்பு விவசாயிகளுக்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லையா..?  த.வெ.க. அரசுக்கு முன்னாள் அமைச்சர் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/has-the-dmk-government-done-nothing-for-sugarcane-farmers-former-minister-questions-the-tvk-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/has-the-dmk-government-done-nothing-for-sugarcane-farmers-former-minister-questions-the-tvk-government#comments</comments><guid isPermaLink="false">08d2f6bb-e8d4-4fb0-a793-bfb839673ed1</guid><pubDate>Tue, 11 Aug 2026 10:11:19 +0000</pubDate><atom:updated>2026-08-11T10:11:19.650Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Tamilnadu,திமுக,DMK,தமிழகம்,தமிழக சட்டசபை,TN Assembly,Assembly Session,சட்டசபை கூட்டத்தொடர்,கரும்பு விவசாயிகள்,sugarcane farmers</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/dgrd66qp/rr.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/dgrd66qp/rr.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/vijay">தமிழ்நாடு முதல்-அமைச்சர்</a> நேற்றைய தினம் (10.08.2026) சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் கரும்பு விவசாயிகளுக்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யாதது போன்ற தோற்றத்தினை உருவாக்கும் வகையில் சட்டமன்றத்தில் படிக்கப்பட்டு செய்திகுறிப்பாக வெளியிடப்பட்டுள்ளது உண்மைக்கு மாறான தகவல் என்று முன்னாள் அமைச்சர்  ரா.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். </p><h2>தவறான செய்தி </h2><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- </p><p>முன்னாள் முதல்-அமைச்சரும், கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் கடந்த 5 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் கரும்பு விவசாயிகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றையதினம் 10.08.2026ல் சட்டப்பேரவையில் 110விதியின் கீழ் முதல்-அமைச்சர் அவர்கள் அறிவித்ததை நாளிதழ்களில் த.வெ.க அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது :-</p><p>கரும்பு விவசாயிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளில் கரும்பிற்கான சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.156 மட்டுமே உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதாகவும், மாநில அரசால் கரும்பு சிறப்பு ஊக்கத்தொகையாக மெட்ரிக் டன் ஒன்றுக்கு ஓராண்டில் 134 ரூபாய்க்கு மேல் வழங்கப்படுவது வரலாற்றில் இதுவே முதல்முறையாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறான செய்தியாகும்.</p> <h2>திராவிட மாடல் ஆட்சி</h2><p>கரும்பு விவசாயிகளின் நலன்மீது மிகுந்த அக்கறை கொண்ட திராவிட மாடல் ஆட்சியில் கரும்பு விலை டன் ஒன்றுக்கு ரூ.2,750லிருந்து ரூ.750 உயர்த்தி டன் ஒன்றுக்கு ரூ.3,500ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.</p><p>மாநில அரசால் கரும்புக்கு வழங்கப்படும் சிறப்பு ஊக்கத் தொகையாக    2020–2021 அரவைப்பருவத்திற்கு டன் ஒன்றுக்கு ரூ.192.50 எனவும், 2021–2022 அரவைப்பருவத்திற்கு டன் ஒன்றுக்கு ரூ.195 எனவும், 2022–2023 அரவைப்பருவத்திற்கு டன் ஒன்றுக்கு ரூ.195 எனவும், 2023–2024 அரவைப்பருவத்திற்கு டன் ஒன்றுக்கு ரூ.215 எனவும், 2024–2025 அரவைப்பருவத்திற்கு டன் ஒன்றுக்கு ரூ.349 எனவும் சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் கரும்பிற்கான சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.156 மட்டுமே உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது என்பதும், சிறப்பு ஊக்கத்தொகையாக மெட்ரிக் டன் ஒன்றுக்கு ஓராண்டில் 134 ரூபாய்க்கு மேல் வழங்கப்படுவது வரலாற்றில் இதுவே முதல்முறை என்பதும் முற்றிலும் தவறான செய்தி என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.</p> <h2>கடந்த 5 ஆண்டுகளில் மட்டும்</h2><p>2021 முதல் 2026 வரையிலான கழக ஆட்சியில் 5,77,755 கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக அவர்களது வங்கி கணக்கில் ரூ.1,094.27 கோடி வழங்கப்பட்டுள்ளது, மேலும் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு கரும்பு கிரையத் தொகையை உடனடியாக வழங்குவதற்காக ஆண்டுதோறும் வழிவகைக் கடனாக கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.937.20 கோடி கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கப்படுள்ளது.</p><h2>விவசாயிகளின் நலன்காத்தவர்</h2><p>இவ்வாறாக கடந்த 5 ஆண்டுகளில் கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை மற்றும் கரும்பு கிரையத் தொகையை தாமதமின்றி வழங்குவதற்காக மட்டுமே ரூ.2,031.47 கோடி கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டும் மற்றும் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டும் கரும்பு விவசாயிகளின் நலன்காத்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் கழகத் தலைவர் அவர்கள் ஆவார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>மு.க.ஸ்டாலினுடன் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் திரையுலகினர் சந்திப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/meeting-with-mk-stalin-by-pepsi-chief-rk-selvamani-and-film-fraternity</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/meeting-with-mk-stalin-by-pepsi-chief-rk-selvamani-and-film-fraternity#comments</comments><guid isPermaLink="false">a040bda2-f115-41d8-897e-219293b0877d</guid><pubDate>Tue, 11 Aug 2026 10:11:01 +0000</pubDate><atom:updated>2026-08-11T10:11:01.528Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,சந்திப்பு,ஆர்கே செல்வமணி,Meet,திரையுலகினர்,M.K. Stalin</media:keywords><media:content height="904" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/56snan22/PEPSI.jpg" width="1600"><media:title type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலினுடன் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் திரையுலகினர் திடீர் சந்திப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/56snan22/PEPSI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மு.க.ஸ்டாலினை பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் திரையுலகினர் சந்தித்தனர்.இது தொடர்பாக, தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p> <h2>திரையுலகினர் நேரில் சந்தித்தனர்</h2><p>இன்று தி.மு.க. தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க. ஸ்டாலின்</a>, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில், பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ஜி.கே.எம். தமிழ் குமரன், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க நிர்வாகி சித்ரா லட்சுமணன் உள்ளிட்ட திரையுலகினர் நேரில் சந்தித்தனர்.</p><h2>விழா அழைப்பிதழ்</h2><p>அப்போது, தமிழ் திரையுலகில் இயக்கம் மற்றும் திரைக்கதை துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கிய இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் கே. பாக்யராஜ் ஆகியோரின் கலைப்பயணத்தையும் சாதனைகளையும் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “ராஜகோபுரங்களின் நினைவு உற்சவம்” விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>  கிராமசபை கூட்டத்தில் மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-urges-grama-sabha-to-pass-resolution-against-mekedatu-dam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-urges-grama-sabha-to-pass-resolution-against-mekedatu-dam#comments</comments><guid isPermaLink="false">a22bcac1-5173-4f85-9bb6-c63fa52fa562</guid><pubDate>Tue, 11 Aug 2026 09:33:28 +0000</pubDate><atom:updated>2026-08-11T09:33:28.203Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani Ramadoss,Gram Sabha Meeting,கிராமசபை கூட்டம்,தீர்மானம்,மேகதாது அணை,அன்புமணி ராமதஸ்,நிறைவேற்ற வேண்டும்,Mekedatu Dam Issue</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/1toqj0yw/anbumani.20.gif" width="750"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/1toqj0yw/anbumani.20.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஆகஸ்ட் 15 விடுதலை நாள் கிராமசபை கூட்டத்தில் மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இது தொடர்பாக, பா.ம.க. தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/anbumani-ramadoss">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>மேகதாது அணை திட்டம்</h2><p>காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக்கும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேகதாது அணை</a> திட்டத்திற்கு தமிழ்நாட்டில் கடும்  எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அதை சிறிதும் பொருட்படுத்தாமல் அணை கட்டுவதற்கான ஆயத்த பணிகளை  கர்நாடக அரசு மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி, இந்த விவகாரத்தில், மொழி&amp;இனவெறி அமைப்புகளால் தமிழ்நாட்டுக்கு எதிரான போராட்டங்களையும் கர்நாடக அரசு ஊக்குவித்து வருகிறது. இரு மாநிலங்களுக்கு  எதிரான நல்லுறவை சிதைக்கும் வகையிலான கர்நாடக அரசின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.</p><h2>குடிநீர் தேவை</h2><p>காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட வேண்டும் என்பதற்கு ஒரே ஒரு நியாயமான காரணத்தை கூட கர்நாடக அரசால் கூற முடியாது. கர்நாடக தலைநகர் பெங்களூரின் குடிநீர் தேவையை நிறைவேற்றவே  மேகதாது அணையை கட்ட முடிவு செய்திருப்பதாக கர்நாடக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. </p><h2>கிருஷ்ணராஜசாகர் அணை</h2><p>மேகதாது அணைக்காக கர்நாடக அரசின் முன்வைக்கப்படும் ஒரே வாதம் இது மட்டும் தான். ஆனால், இந்த வாதம் தவறு என்பதற்கு பல காரணங்களை பாட்டாளி மக்கள் கட்சி ஏற்கனவே முன்வைத்துள்ளது. பெங்களூருக்கு தேவையான அளவு குடிநீரை இப்போதுள்ள கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து எடுத்துக் கொள்ள முடியும்.</p><h2>கர்நாடக அதிகாரி</h2><p>மேகதாது அணை கட்டப்பட்டால், அதிலிருந்து 4 டி.எம்.சி நீரை பெங்களூருக்கு எடுத்து கொள்ளலாம் என்பது தான் கர்நாடக அரசின் திட்டமாகும். ஆனால், அதுவே தேவையில்லை என்ற குரல்கள் கர்நாடக  அதிகாரிகள் மத்தியிலேயே எழுந்துள்ளன. மேகதாது அணை கட்ட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">பெங்களூர் </a>நகரத்திலிருந்து 90 கி.மீ  தொலைவில் உள்ளது. </p><h2>கர்நாடக அரசின் திட்டம்</h2><p>பெங்களூரில் இருந்து 35 கி.மீ தொலைவில் உள்ள டி.ஜி.ஹள்ளி எனப்படும் திப்பகன்டன ஹள்ளி அணையில் இன்றைய நிலையில் 2.2 டி.எம்.சி நீர் உள்ளது. 74 அடி உயரம் கொண்ட இந்த அணையில் அதிகபட்சமாக 3.4 டி.எம்.சி நீரை தேக்கி வைக்க முடியும். இந்த நீரை பெங்களூருக்கு கொண்டு செல்ல ஏற்கனவே குழாய் பாதைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அணையின் நீரை பயன்படுத்திக் கொள்ள கூடுதலாக எந்த செலவும் செய்யத் தேவையில்லை.</p><h2>முறியடிக்கப்பட்டு விட்டது</h2><p>அதனால், மேகதாது அணை கட்டுவதை கைவிட்டு, டி.ஜி. அள்ளி அணையின் நீரை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அம்மாநில அதிகாரிகளே தெரிவித்திருக்கிறார்கள். இதன்மூலம் மேகதாது அணையை கட்டுவதற்காக  கர்நாடக அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட ஒற்றை வாதமும் முறியடிக்கப்பட்டு விட்டது. ஆனால், மேகதாது அணைக்கு எதிராக தமிழ்நாட்டின் சார்பில் முன்வைக்கப்பட்ட அனைத்து நியாயங்களும் அப்படியே உள்ளன.</p><h2>பாலைவனமாகி விடும்</h2><p>மேகதாது அணை கட்டப்பட்டால், கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே ஏற்கனவே கட்டப்பட்டுள்ள  அணைகளின் கொள்ளளவான 114.57 டி.எம்.சியுடன், புதிய அணையின் 70 டி.எம்.சி கொள்ளளவையும்  சேர்த்து மொத்தம் 184.57 டி.எம்.சி நீரை கர்நாடகத்தில் தேக்கி வைக்க முடியும். அவ்வளவு நீர் தேக்கி வைக்கப்பட்டால் தமிழ்நாட்டுக்கு ஒரு துளி நீர் கூட வராது. அப்போது காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். தமிழ்நாட்டில் 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரம் முற்றிலுமாக அழிந்து விடும்.</p><h2> 5 கோடி தமிழக மக்கள்</h2><p>அதுமட்டுமின்றி, மேகதாது அணை கட்டப்பட்டால், கர்நாடகத்தில் 12500 ஏக்கர் பரப்பளவிலான வனப் பகுதிகள் மூழ்கி விடும்; இதனால் அந்த பகுதிகளில் வாழும் வனவிலங்குகள், மீன்கள், பறவைகள் உள்ளிட்ட அரிய விலங்குகள் அனைத்து அழிந்து விடும். 5 கோடி தமிழக மக்களையும், பெருமளவிலான அரியவகை உயிரினங்களையும் பாதிக்க கூடிய மேகதாது அணையை கட்ட ஒருபோதும் அனுமதிக்க கூடாது.</p><h2>உச்சநீதிமன்றத்தில் வழக்கு</h2><p>மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக மத்திய அரசிடமும், கர்நாடக அரசிடமும்  தமிழக அரசு இன்னும் வலிமையாக வாதாட வேண்டும். மேகதாது அணை கட்டுவது குறித்து கர்நாடக அரசுடன் ஒருபோதும்  பேச்சு நடத்தக்கூடாது. மேகதாது அணைக்கு எதிராகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை நடத்தி புதிய அணை கட்டும் முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பில் அழுத்தம் கொடுக்க வேண்டும். அதற்கான வலிமையான அவை   அடித்தட்டு மக்களும் பங்கேற்க கூடிய கிராம அவைகள் தான் என்று பாட்டாளி மக்கள் கட்சி கருதுகிறது.</p> <h2>கிராமசபை கூட்டங்கள்</h2><p>இந்தியாவின் 80-ம் ஆண்டு விடுதலை நாள் விழா வரும் ஆகஸ்ட் 15-ம் நாள் கொண்டாடப்பட இருப்பதையொட்டி, தமிழ்நாடு முழுவதும் அந்த நாளில் கிராமசபை கூட்டங்கள் நடைபெறவுள்ளன.அந்தக்  கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினர் பெருமளவில் கலந்து கொண்டு,‘‘ காவிரி பாசன மாவட்டங்களில் விவசாயத்தையும், தமிழ்நாடு முழுவதும் 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரத்தையும் அழிக்கக் கூடிய மேகதாது அணையை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும். </p> <h2>தீர்மானம்</h2><p>மேகதாது அணை தொடர்பாக கர்நாடக அரசால் தாக்கல் செய்யப்படவுள்ள திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு ஏற்று கொள்ளக்கூடாது. மாறாக, மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசால் கர்நாடக அரசுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை உடனடியாக திரும்ப பெற வேண்டும்’’ என்ற தீர்மானத்தை மக்கள் ஆதரவுடன் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>அமைச்சர் விஸ்வநாதன் பேச்சால் எழுந்த சலசலப்பு.. உடனே சபாநாயகர் சொன்ன வார்த்தை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-stir-caused-by-minister-viswanathans-remarks-and-the-immediate-words-spoken-by-the-speaker</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-stir-caused-by-minister-viswanathans-remarks-and-the-immediate-words-spoken-by-the-speaker#comments</comments><guid isPermaLink="false">6fd2c93f-27da-425f-8cdd-ee2bf156052d</guid><pubDate>Tue, 11 Aug 2026 09:11:20 +0000</pubDate><atom:updated>2026-08-11T09:11:20.577Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Tamilnadu,திமுக,DMK,தமிழகம்,காங்கிரஸ்,Congress,தமிழக சட்டசபை,TN Assembly,சட்டசபை கூட்டத்தொடர்,TN Assembly session</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/6n88tjtg/skoer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/6n88tjtg/skoer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,.</p><p>தமிழக சட்டசபையில் பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 3-வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. அப்போது நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து ஆதரவு தெரிவித்தனர்.</p><h2>அமைச்சர் விஸ்வநாதன்</h2><p>நீட் தேர்வு விலக்கு தீர்மானம் தொடர்பாக அமைச்சர் விஸ்வநாதன் பேசிக் கொண்டிருந்தபோது தி.மு.க. எம்.எல்.ஏக்கள் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர்; அதன் எதிர்வினையாக த.வெ.க. மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் ஆவேசமாக முழக்கமிட்டனர். </p><p>அப்போது குறுக்கீட்ட சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் "ஒழுங்கீனமாக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் நின்றால் நடவடிக்கை எடுப்பேன்" என தி.மு.க. மற்றும் த.வெ.க. எம்.எல்.ஏக்களை எச்சரித்தார்.</p><h2>ராகுல் காந்தி</h2><p>தொடர்ந்து அமைச்சர் விஸ்வநாதன் பேசுகையில், நீட் எதிர்ப்பு போராட்டக்களத்தில் ராகுல் காந்தி நிற்கிறார் என புகழ்ந்து பேசினார். மீண்டும் அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் முழக்கமிட்டதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. </p><p>தி.மு.க. எம்.எல்.ஏக்கள் எழுந்து நின்று ஆவேசமாக பேசியதை அடுத்து (என்ன அவரோடு அமைச்சர்) சண்டைக்கு வர்றீங்களா என்று கேட்டு சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அமரச் சொன்னார். இதனையடுத்து அனைவரும் அவர்களது இருக்கையில் அமர்ந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>நெல், கரும்புக்கான ஊக்கத்தொகை உயர்வு -  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-incentive-for-paddy-and-sugarcane-marxist-communist-party-welcomes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-incentive-for-paddy-and-sugarcane-marxist-communist-party-welcomes#comments</comments><guid isPermaLink="false">d1d86dde-faac-4176-abe5-6638734ba46f</guid><pubDate>Tue, 11 Aug 2026 09:07:24 +0000</pubDate><atom:updated>2026-08-11T09:07:24.198Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஊக்கத்தொகை,Paddy,நெல்,வரவேற்பு,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,sugarcane,கரும்பு,CPI(M),welcomes</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/w36ehlay/communist.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/w36ehlay/communist.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நெல், கரும்புக்கான ஊக்கத்தொகை உயர்வு! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு ! இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p> <h2> வரவேற்பு</h2><p> தமிழ்நாடு அரசு 2026-27 ஆம் ஆண்டுக்கு நெல், கரும்புக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி அறிவித்துள்ளது. குறிப்பாக, கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ. 710 உயர்த்தி 4000 ரூபாயாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.</p> <h2>சன்ன ரக நெல்</h2><p>மத்திய அரசு இந்த ஆண்டு சன்ன ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2461, பொது ரக நெல்லுக்கு ரூ.2441 என்று விலை அறிவித்தது. இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர்  சட்டப்பேரவையில் சன்ன ரக நெல்லுக்கு ரூ.289 மற்றும் பொது ரக நெல்லுக்கு ரூ.159 உயர்த்தி முறையே ரூ.2750, ரூ.2600 என்று உயர்த்தப்பட்டுள்ளதை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி </a>வரவேற்கிறது.</p><h2>விலை வித்தியாசம் </h2><p>அதே நேரத்தில், சன்ன ரகத்துக்கும், பொது ரகத்துக்குமான ஊக்கத்தொகை வித்தியாசம் என்பது மிகவும் அதிகமாக உள்ளதை சுட்டிக்காட்டுகிறோம். தமிழ்நாட்டில் பொதுவான ரக நெல் தான் அதிகமாக உற்பத்தியாகிறது. கடந்த ஆண்டு இரண்டு ரகத்துக்குமான விலை வித்தியாசம் ரூ. 45 ஆக இருந்தது. மத்திய அரசு அறிவித்துள்ள விலை வித்தியாசம் ரூ. 20 ஆக இருக்கிறது என்பதையும், வருங்காலத்தில் இந்த விலை வித்தியாசம் தவறான முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளப்படும் வாய்ப்புள்ளது என்பதையும் கவனத்தில் கொண்டு, பொது ரகத்துக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.</p><h2>சேமிப்பு கிடங்குகள் </h2><p> கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைப்பதற்கு போதுமான சேமிப்பு கிடங்குகள் துரிதமாக உருவாக்கப்பட வேண்டும்; அதற்குரிய திட்டமிடுதலையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும், தவெக தேர்தல் வாக்குறுதிப்படி நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3000, கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ. 4500 என்பதையும் படிப்படியாக உயர்த்தி வழங்க முன்வர வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>2 லட்சம் தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி - சென்னை மாநகராட்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rabies-vaccination-for-2-lakh-stray-dogs-chennai-corporation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rabies-vaccination-for-2-lakh-stray-dogs-chennai-corporation#comments</comments><guid isPermaLink="false">07e113ba-2e6b-44be-9629-cc78485c5022</guid><pubDate>Tue, 11 Aug 2026 08:31:42 +0000</pubDate><atom:updated>2026-08-11T08:31:42.214Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,தெருநாய்கள்,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,வெறிநாய் கடி,event,தடுப்பூசி Vaccine</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/bp5zgdjg/125.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தடுப்பூசி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/bp5zgdjg/125.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>2 லட்சம் தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி மருந்து செலுத்தும் முகாம் இன்று தொடங்கியது.</p><p>இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சென்னை மாநகராட்சியின் சார்பில் 2 லட்சம் தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி (Anti Rabies Vaccination) மற்றும் அக, புற ஒட்டுண்ணி மருந்து செலுத்தும் மாபெரும் அளவிலான முகாம் முதற்கட்டமாக திருவொற்றியூர், மணலி மற்றும் தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்களில் இன்று தொடங்கியது. </p><h2>பங்கேற்பு</h2><p>இதன் ஒரு பகுதியாக, தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடிநோய் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF">தடுப்பூசி </a>மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தும் பணிக்கான வாகனத்தினை இணை ஆணையாளர் (சுகாதாரம்) ஸ்ரேயா பி. சிங், வடக்கு வட்டார துணை ஆணையாளர் ஸ்வேதா சுமன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் வி.சிவா ஆகியோர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் முன்புற பகுதியில் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மனைவியுடன் பேசியதால் ஆத்திரம்: பால் பண்ணை உரிமையாளர் வெட்டிக்கொலை - விவசாயி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anger-over-talking-to-wife-dairy-farm-owner-hacked-to-death-farmer-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anger-over-talking-to-wife-dairy-farm-owner-hacked-to-death-farmer-arrested#comments</comments><guid isPermaLink="false">24ccb988-b61c-47c0-85b3-361370201f15</guid><pubDate>Tue, 11 Aug 2026 08:30:53 +0000</pubDate><atom:updated>2026-08-11T08:30:53.268Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Theni,தேனி,murder,கொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/4xeaqxly/Untitled-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/4xeaqxly/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி,</p><p>தேனி அருகே உப்புக்கோட்டை மேலத்தெருவை சேர்ந்தவர் நாகபாண்டி (45 வயது). இவர் சொந்தமாக அப்பகுதியில் பால்பண்ணை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (45 வயது). விவசாயி. இந்த நிலையில் ரமேசின் மனைவியிடம், நாகபாண்டி அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனை அறிந்த ரமேஷ் தனது மனைவி மற்றும் நாகபாண்டியை பலமுறை கண்டித்துள்ளார். இருப்பினும் அவர்கள் கேட்காமல் தங்களது பேச்சை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது.</p><p>இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி அதிகாலை 4 மணியளவில் நாகபாண்டி டீக்கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த ரமேஷ், தனது மனைவியுடன் பேசி வருவது தொடர்பாக தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து நாகபாண்டியை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.</p><p>இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து நாகபாண்டியை மீட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் பரிதாபமாக இறந்தார். இந்த கொலை தொடர்பாக வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் சரணடைந்த ரமேசை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>எப்.சி.ஆர்.ஏ மசோதா; பாஜக ஆதரவு இல்லை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fcra-bill-bjp-does-not-support-it</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fcra-bill-bjp-does-not-support-it#comments</comments><guid isPermaLink="false">fc7d15fd-6496-421e-b2a3-4a2f11a886f0</guid><pubDate>Tue, 11 Aug 2026 08:28:22 +0000</pubDate><atom:updated>2026-08-11T08:28:22.569Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,பாஜக,தமிழக சட்டசபை,TNAssembly,CMVijay,CMJosephVijay‌</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/gp4tks1h/bjp33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
எப்.சி.ஆர்.ஏ மசோதா; பாஜக ஆதரவு இல்லை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/gp4tks1h/bjp33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>`எப்.சி.ஆர்.ஏ  மசோதாவிற்கு பாஜக ஆதரவு இல்லை என <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95">பாஜக </a>எம்எல்ஏ போஜராஜன் கூறினார்.</p><p>தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், தமிழக சட்டசபையில், வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தை அமைச்சர் ராஜ்மோகன் முன்மொழிந்தார். </p><p>மத்திய அரசு கொண்டுவரும் எப்.சி.ஆர்.ஏ திருத்தங்கள் வெளிநாட்டு நிதியைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுத்து, அறக்கட்டளைகளை முறையாக நிர்வகிக்கவே உதவுகிறது. சமூக நலத் திட்டங்களுக்காகப் பெறப்படும் நிதி சரியாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யவே இந்தச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தத் திருத்தங்கள் மிகவும் அவசியமானது. எனவே மாநில அரசு கொண்டுவரும் இத்தீர்மானத்திற்கு ஆதரவு இல்லை.</p><p>தவறாக பயன்படுத்த கூடாது என்பதற்காக <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88">எப்.சி.ஆர்.ஏ  மசோதா</a>வில்  சில திருத்தங்களை தான் மத்திய அரசு செய்கிறது. அறக்கட்டளை சரியாக நிர்வகிக்க வேண்டும். சமூக திட்டங்களுக்கு பெறும் நிதி சரியாக பயன்படுத்த வேண்டும் என்று தான் மத்திய அரசு கொண்டு வருகிறது. இந்த திருத்தம் அவசியம் என்று தான் பா.ஜ.க நினைக்கிறது. மாநில அரசு கொண்டு வரும் தீர்மானத்திற்கு ஆதரவு இல்லை என  மசோதாவுக்கு எதிரான தமிழக அரசின் தனி தீர்மானத்தின் மீது பாஜக எம்.எல்.ஏ போஜராஜன் கூறினார்.</p><h2>வெளிநடப்பு செய்து திரும்பி வந்த பாஜக எம்.எல்.ஏ</h2><p>"பாஜக எம்எல்ஏ போஜராஜன் வெளிநடப்பு செய்கிறேன் என்று சொல்லிவிட்டு மீண்டும் பேரவைக்கு வந்துள்ளார்.. முடிவில் ஏதேனும் மாற்றம் உள்ளதா?" என சபாநாயகர் கேள்வி எழுப்பியதால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.</p>]]></content:encoded></item></channel></rss>