<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 01 Aug 2026 06:06:34 +0000</lastBuildDate><item><title>திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜரானார் செந்தில் பாலாஜி!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/senthil-balaji-appeared-at-the-triplicane-police-station</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/senthil-balaji-appeared-at-the-triplicane-police-station#comments</comments><guid isPermaLink="false">af99b85f-339c-4d9d-9529-e6f1018fa329</guid><pubDate>Sat, 01 Aug 2026 05:54:04 +0000</pubDate><atom:updated>2026-08-01T05:54:04.735Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,Senthil Balaji,செந்தில் பாலாஜி,திருவல்லிக்கேணி,செந்தில் பாலாஜி வழக்கு,Thiruvallikkeni,முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி,காவல் நிலையத்தில் ஆஜர்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/7y9uqlz1/Untitled-7.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/7y9uqlz1/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>ஆட்சி கவிழ்ப்பு சதி வழக்கு</h2><p>த.வெ.க. ஆட்சியை கவிழ்ப்பதற்காக 15 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க 'மேகாலயா புராஜக்ட்' என்ற பெயரில் அரங்கேறிய மிகப்பெரிய சதித்திட்டம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஊத்தங்கரை த.வெ.க. எம்.எல்.ஏ. டாக்டர் இளையராஜா, சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் அளித்த புகார் அடிப்படையில், திருவல்லிக்கேணி போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.</p><p>இளையராஜா எம்.எல்.ஏ.வுக்கு ரூ.35 கோடி பேரம் பேசப்பட்ட தாகவும் திடுக்கிடும் தகவல் வெளியானது. இதுவரை இந்த வழக்கில் 14 பேர் கைது <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">செய்யப்பட்டுள்ளனர்</a>. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் ஆகியோர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றனர்.</p><h2>செந்தில் பாலாஜி ஆஜர்</h2><p>இதனையடுத்து, சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் ஆஜரானார்கள். முறைப்படி, முன்ஜாமீனை செந்தில்பாலாஜியும், அவரது தம்பி அசோக்குமாரும் பெற்றுக்கொண்டனர். முன்ஜாமீன் நிபந்தனையில் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் தினமும் காலையிலும், மாலையிலும் ஆஜராகி, கையெழுத்திடவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்றும் நிபந்தனையில் கூறப்பட்டுள்ளது.</p><p>அதன் அடிப்படையில், செந்தில்பாலாஜியும், அவரது தம்பி அசோக்குமாரும் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தனர். அவர்கள் இருவரிடமும், திருவல்லிக்கேணி போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். வழக்குதொடர்பாக போலீசார் கைப்பற்றியுள்ள ஆவணங்களை காட்டி, 50-க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தப்பட்டது.</p><h2>2 நாட்கள் தலைமறைவு</h2><p>இந்த நிலையில் தான், டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, செந்தில்பாலாஜி மீது புதிய வழக்கு ஒன்றை லஞ்சஒழிப்பு போலீசார் பதிவு செய்தனர். இதன் காரணமாக காவல்துறையினர் கைது செய்வதற்கு வாய்ப்பிருப்பதால், கடந்த 2 நாட்களாக செந்தில் பாலாஜி காவல் நிலையத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.</p><p>இந்த வழக்கில் டாஸ்மாக் நிறுவனத்தின் முன்னாள் மேலாண்மை இயக்குனரான ஐ.ஏ.எஸ். அதிகாரி விசாகன் உள்ளிட்ட 7 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். லஞ்சஒழிப்பு சட்டப்பிரிவு உள்பட 9 சட்டப்பிரிவுகளில் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2021 முதல் 2025-ம் ஆண்டு வரை முறைகேடு நடந்துள்ளதாகவும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.</p><h2>முன்ஜாமீன் தள்ளுபடி</h2><p>இந்த சூழலில் டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.</p><h2>சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு</h2><p>முன் ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்த நிலையில், இதனை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு அவசர வழக்காக நேற்று விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ’ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அரசியல் காழ்ப்புனர்ச்சி காரணமாக பழைய வழக்கை மீண்டும் கையில் எடுக்கிறார்கள். அவர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பார். செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும். மேலும் அவரை கைதுசெய்யக் கூடாது.’ என வாதிட்டார்.</p><p>அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘டாஸ்மாக் வழக்கில் 100 கோடி ஊழல் செய்ததற்கான முகாந்திரம் உள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் வழக்கின் விசாரணைக்கு பல்வேறு வழிகளில் தடையை ஏற்படுத்தினார். அவரை காவலில் எடுத்து விசாரிப்பதற்கான தேவை உள்ளது.’ என வாதிட்டார்.</p><h2>கைது செய்ய தடை</h2><p>இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பதை உறுதி செய்கிறோம். இதற்கு மேல் உங்களுக்கு என்ன வேண்டும்.? என தமிழக அரசு தரப்பு வழக்கறிஞரிடம் கூறினர். அத்துடன், செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். மேலும், அவரை கைது செய்யவும் தடை விதித்த நீதிபதிகள், இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தனர்.</p><p>மேலும், பாஸ்போர்ட்டை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஒப்படைக்க </a>வேண்டும், சாட்சிகளை கலைக்கக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை செந்தில் பாலாஜிக்கு வழங்கிய நீதிபதிகள், நிபந்தனைகளை மீறினால் முன் ஜாமீனை ரத்துசெய்வோம் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.</p><h2>மீண்டும் ஆஜர்</h2><p>செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதையடுத்து அவர் இன்று காலை திருவல்லிக்கேனி காவல் நிலையத்தில் ஆஜரானார். அவருடன் அவரது சகோதரர் அசோக்குமாரும் கையெழுத்திட ஆஜராகி உள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தி.மு.க.வில் தோப்பு வெங்கடாசலம் கட்சி பதவி பறிப்பு: த.வெ.க.வில் இணைய திட்டம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoppu-venkatachalam-stripped-of-party-post-in-dmk-plans-to-join-tvk</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoppu-venkatachalam-stripped-of-party-post-in-dmk-plans-to-join-tvk#comments</comments><guid isPermaLink="false">3d6a70e5-55c6-4dea-9456-b872d08c3703</guid><pubDate>Sat, 01 Aug 2026 05:47:17 +0000</pubDate><atom:updated>2026-08-01T05:47:17.716Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,பதவி பறிப்பு,தி.மு.க.,தோப்பு வெங்கடாசலம்,Venkatachalam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/szk5qtlc/98.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/szk5qtlc/98.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தி.மு.க.வில் தோப்பு வெங்கடாசலம் கட்சி பதவி பறிக்கப்பட்ட நிலையில், அவர் த.வெ.க.வில் இணைய திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.</p><p>அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த தோப்பு வெங்கடாலசம், பின்னர் தி.மு.க.வில் இணைந்தார். தி.மு.க.வில் அவருக்கு ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், அவருக்கும், முன்னாள் தி.மு.க. அமைச்சர் முத்துசாமிக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.  இந்த நிலையில், தி.மு.க.வில் தோப்பு வெங்கடாசலத்தின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ளது. </p><h2>பதவி பறிப்பு</h2><p>இது தொடர்பாக, தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p>ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் தோப்பு வெங்கடாசலத்தை அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஈரோடு மத்திய மாவட்டத்திற்குரிய சட்டமன்ற தொகுதிகளான பெருந்துறை தொகுதி ஈரோடு தெற்கு மாவட்டத்திலும், பவானி தொகுதி ஈரோடு வடக்கு மாவட்டத்திலும் இணைக்கப்பட்டு அந்தந்த மாவட்ட செயலாளர்கள் நிர்வகிப்பார்கள். </p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார். </p><p>விரைவில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D">தோப்பு வெங்கடாசலம்</a> தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகி, த.வெ.க.வில் இணைவார் என்று தெரிகிறது.</p>]]></content:encoded></item><item><title>&quot;ஆவின் பால் பாக்கெட் பிலிம்களில் ரசாயன நெடி... 160 ரோல்களை திருப்பி அனுப்பிய மதுரை ஆவின்!&quot; </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chemical-odor-in-aavin-milk-packet-film-madurai-aavin-returns-160-rolls</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chemical-odor-in-aavin-milk-packet-film-madurai-aavin-returns-160-rolls#comments</comments><guid isPermaLink="false">bfd6562b-4401-497d-8407-65a7c783b29f</guid><pubDate>Sat, 01 Aug 2026 05:40:33 +0000</pubDate><atom:updated>2026-08-01T05:40:33.713Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,Aavin Milk,ஆவின் பால்,Aavin Company,ஆவின் நிர்வாகம்</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/el83qdlx/47.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ மதுரை ஆவின் பால் பண்ணை]]></media:title><media:description type="html"><![CDATA[ "ஆவின் பால் பாக்கெட் பிலிம்களில் ரசாயன நெடி... 160 ரோல்களை மதுரை ஆவின் நிர்வாகம் திருப்பி அனுப்பியது”. ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/el83qdlx/47.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மதுரை</a> மாவட்டத்தில் ஆவின் பால் பாக்கெட்டுகளில் ரசாயன நெடி வீசியதால் 160 ரோல்களை ஒப்பந்த நிறுவனத்திற்கு ஆவின் நிர்வாகம் திருப்பி அனுப்பியது. </p><p>மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விநியோகிக்கப்பட்ட ஆவின் நீல நிறப் பால் பாக்கெட்டுகளில் கடந்த சில நாட்களாக பிளாஸ்டிக் மற்றும் குளோரின் போன்ற ரசாயன நெடி வீசியது. இதையடுத்து பொதுமக்கள் மற்றும் நுகர்வோர்களிடமிருந்து பரவலான புகார்கள் எழுந்தன. குழந்தைகள் மற்றும் நோயாளிகள் தினமும் பயன்படுத்தும் பாலில் இத்தகைய நெடி வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.</p><h2>உடனடி சோதனை -காரணம்</h2><p>இந்தப் புகாரைத் தொடர்ந்து, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சாத்தமங்கலம்<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> ஆவின் பால் பண்ணை </a>மற்றும் பல்வேறு விநியோக மையங்களில் அதிரடி சோதனை நடத்தி பால் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பினர். முதற்கட்ட விசாரணையில், பால் பாக்கெட்டுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பாலித்தீன் பிலிம் பேப்பர் ரோல்களில் ஏற்பட்ட தரம் மற்றும் குறைபாடே இந்த ரசாயன நெடிக்குக் காரணம் என மதுரை ஆவின் நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.</p><h2>அதிரடி நடவடிக்கை</h2><p>இதனைத் தொடர்ந்து, தரமற்ற பிலிம்களை சப்ளை செய்த ஒப்பந்த நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு ஆவின் நிர்வாகம் மற்றும் பால்வளத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும், பண்ணையில் இருப்பில் வைக்கப்பட்டிருந்த ரசாயன நெடி கொண்ட 160 பாலித்தீன் பிலிம் ரோல்களை ஆவின் நிர்வாகம் உடனடியாக ஒப்பந்த நிறுவனத்திற்கே திருப்பி அனுப்பியது.</p><h2>தடையற்ற விநியோகம்</h2><p>தற்போது அந்த தரமற்ற பிலிம்கள் பயன்பாட்டிலிருந்து முற்றிலும் நீக்கப்பட்டு, தனியாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு பொதுமக்களுக்கான ஆவின் பால் விநியோகம் எவ்வித பாதிப்புமின்றி தடையின்றி வழங்கப்பட்டு வருவதாக ஆவின் நிர்வாகம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நகை கொள்ளை வழக்கில் 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/5-people-sentenced-to-7-years-in-prison-in-jewelry-robbery-case</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/5-people-sentenced-to-7-years-in-prison-in-jewelry-robbery-case#comments</comments><guid isPermaLink="false">690ee37e-ed1e-4daa-9762-3c0b0a589179</guid><pubDate>Sat, 01 Aug 2026 05:32:15 +0000</pubDate><atom:updated>2026-08-01T05:32:15.742Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Verdict,தீர்ப்பு,சிறை தண்டனை,Prison sentence,robbery case,கொள்ளை வழக்கு,5 பேர்,5 people</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/o2ewriat/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/o2ewriat/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், ஏரல் பகுதியில் நடந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88">நகை கொள்ளை</a> வழக்கில் சம்பந்தப்பட்ட 5 குற்றவாளிகளுக்கு தலா 7 ஆண்டுகள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">சிறை தண்டனை</a> விதித்து ஸ்ரீவைகுண்டம் சார் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. </p><h2>நகை கொள்ளை வழக்கில் 5 பேர் கைது</h2><p>தூத்துக்குடி மாவட்டம், ஏரல், இடையற்காடு பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த (8 சவரன் தங்க நகை) கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர்களான குணசிங் மகன் டேவிட் (வயது 38), முபாரக் மகன் அப்பாஸ்(30), அப்பாஸ் மகன் முகமதுரபிக்(31), மற்றொரு குணசிங் மகன் சஞ்சய்(44) மற்றும் ஏரல் கோவங்காடு பகுதியைச் சேர்ந்த லிங்கபாண்டியன் மகன் மகேஸ்வரன்(41) ஆகிய 5 பேரையும் ஏரல் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். </p><h2>7 ஆண்டுகள் சிறை தண்டனை</h2><p>இது தொடர்பான வழக்கின் விசாரணை ஸ்ரீவைகுண்டம் சார் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மேற்சொன்ன நீதிமன்ற நீதிபதி பர்ஷாத் பேகம் நேற்று மேற்சொன்ன டேவிட், சஞ்சய், அப்பாஸ், முகமதுரபிக் மற்றும் மகேஸ்வரன் ஆகிய 5 பேரையும் குற்றவாளிகள் என உறுதி செய்து, அவர்களுக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.</p>]]></content:encoded></item><item><title>மாமல்லபுரத்தில்  காங்கிரஸ் பயிற்சி முகாம்: சென்னை வந்த ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/congress-training-camp-in-mamallapuram-enthusiastic-welcome-for-rahul-gandhi-upon-his-arrival-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/congress-training-camp-in-mamallapuram-enthusiastic-welcome-for-rahul-gandhi-upon-his-arrival-in-chennai#comments</comments><guid isPermaLink="false">a8e7a84a-49d3-482b-9bfd-eea6e05f092d</guid><pubDate>Sat, 01 Aug 2026 05:09:33 +0000</pubDate><atom:updated>2026-08-01T05:09:33.672Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,ராகுல் காந்தி,Rahul Gandhi,சென்னை மாமல்லபுரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/5d3bpofx/Rahul-gandhi.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல் காந்தி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/5d3bpofx/Rahul-gandhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு சொந்தமான கடற்கரை விடுதியில் கடந்த 23-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பயிற்சி முகாமின் நிறைவுநாளான இன்று (சனிக்கிழமை) நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு காலை 10.05 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.  சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ்  தலைவர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் ராகுல் காந்திக்கு வரவேற்பு அளித்தனர்.  தொண்டர்களும் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். </p><h2>நிர்வாகிகளை சந்திக்கிறார்</h2><p>பின்னர் மாவட்டத் தலைவர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்க மாமல்லபுரத்திற்கு ராகுல் காந்தி புறப்பட்டு சென்றார்.  பயிற்சி முகாமில் ராகுல் காந்தி உரையாற்றுகிறார்.  பின்னர், மாவட்டத் தலைவர்களின் குடும்பத்தினரை சந்திக்கிறார். மாலை 4 மணியளவில் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து உரையாடுகிறார். </p><p>அதேபோன்று, கோவை மற்றும் சேலம் பகுதிகளில் நீட் தேர்வால் பலியான 4 மாணவ-மாணவிகளின் பெற்றோரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. பின்னர் சென்னை வந்து இரவு 7 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். ராகுல் காந்தி வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>தீரன் சின்னமலை நினைவு தினம்: ஈரோட்டில் 13 டாஸ்மாக் கடைகள் நாளை மறுநாள் மூடல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiran-chinnamalai-memorial-day-13-tasmac-shops-in-erode-to-be-closed-the-day-after-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiran-chinnamalai-memorial-day-13-tasmac-shops-in-erode-to-be-closed-the-day-after-tomorrow#comments</comments><guid isPermaLink="false">5260ff4c-5149-4a47-8476-01aa2888ceca</guid><pubDate>Sat, 01 Aug 2026 05:08:49 +0000</pubDate><atom:updated>2026-08-01T05:08:49.734Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Erode,ஈரோடு,Tasmac Shops,Memorial Day,closed,நினைவு தினம்,தீரன் சின்னமலை,Theeran Chinnamalai,டாஸ்மாக் கடைகள் மூடல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/4ow5he2h/96.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/4ow5he2h/96.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு. </p><p>அறச்சலூர் அருகே உள்ள ஓடாநிலையில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) அரசு விழாவாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி விழா நடைபெறும் பகுதியில் 3 கி.மீ. சுற்றளவில் செயல்படும் டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் விழாவுக்கு ஊர்வலமாக செல்லும் வழியில் உள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">டாஸ்மாக் கடைகள் </a>மற்றும் அதனுடன் இயங்கும் மதுக்கூடங்கள் அன்று மூடப்பட்டிருக்க வேண்டும். அதன்படி ஈரோடு மூலப்பாளையம், அசோகபுரம், ஈரோடு ரெயில் நிலையம் எதிரில் உள்ள எலைட் மதுபான கடைகள் நாளை மறுநாள் மாலை 6 மணி வரை செயல்படாது.</p><h2>மதுபானக்கடைகள் மூடல்</h2><p>மேலும் வடபழனி, அறச்சலூர், வாங்கலாம்வலசு, அவல்பூந்துறை, அனுமன்பள்ளி, முள்ளாம்பரப்பு, கந்தசாமிபாளையம், முத்தூர்ரோடு மாரப்பம்பாளையம், சோலார், ஆனைக்கல்பாளையம், பச்சப்பாளி, ஈரோடு நாடார்மேடு, பெருந்துறை ஆர்.எஸ். ஆகிய பகுதிகளில் செயல்படும் 13 மதுபானக்கடைகளும் அன்று மூடப்பட்டு இருக்கும். அன்றைய தினம் மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது என்றும், மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மாவட்ட கலெக்டர் கந்தசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசனத்துக்கு திடீர் நேரக்கட்டுப்பாடு: பக்தர்கள் அதிர்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sudden-time-restriction-for-darshan-at-tiruchendur-murugan-temple-devotees-shocked</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sudden-time-restriction-for-darshan-at-tiruchendur-murugan-temple-devotees-shocked#comments</comments><guid isPermaLink="false">ae6117e8-29ed-4917-9d4f-76076c4d4384</guid><pubDate>Sat, 01 Aug 2026 05:07:14 +0000</pubDate><atom:updated>2026-08-01T05:07:14.990Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Devotees,Thoothukudi,தூத்துக்குடி,திருச்செந்தூர் முருகன் கோவில்,shock,Thiruchendur Murugan Temple,Darshan,தரிசனம்,பக்தர்கள் அதிர்ச்சி,நேரக்கட்டுப்பாடு,Time control</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/wh2kar9z/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருச்செந்தூர் முருகன் கோவில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/wh2kar9z/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்செந்தூர், </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">திருச்செந்தூர் முருகன் கோவிலில் </a>தரிசனத்துக்கு திடீர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81">நேரக்கட்டுப்பாடு</a> விதிக்கப்பட்டுள்ளதால் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">பக்தர்கள் அதிர்ச்சி</a> அடைந்தனர்.</p><h2>திருச்செந்தூர் கோவில்</h2><p>திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு திடீரென நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தற்போது பின்பற்றப்பட்டு வரும் வழக்கத்தின்படி, இரவு 9 மணிக்கு நடை சாற்றப்பட வேண்டும். பக்தர்கள் அதிகளவில் வருகை தரும் நாட்களில், கட்டண தரிசன வரிசையில் மாலை 6.30 மணிக்கு பின்னரும், பொது தரிசன வரிசையில் இரவு 7 மணிக்கு பின்னரும் பக்தர்கள் தொடர்ந்து அனுமதிக்கப்படுவதால், சாமி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">தரிசனம் </a>செய்து முடித்த பின்னர் நடை சாற்றுவதற்கு நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஆகிவிடுகிறது.</p><h2>நேரக்கட்டுப்பாடு</h2><p>கோவிலின் நடை இரவு 9 மணிக்கு சாற்றப்படும் என அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளதால், இரவு 9 மணி வரை கோவில் கிரிப்பிரகாரங்களில் காத்திருக்கும் பக்தர்கள் தங்களையும் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கக்கோரி அவ்வப்போது வாக்குவாதங்களில் ஈடுபடும் சூழ்நிலையும் ஏற்படுகிறது. எனவே, பக்தர்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கோவில் நுழைவு வாயில் வழியாக கட்டண தரிசனத்திற்கு இனிமேல் மாலை 6.30 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்றும், பொது தரிசனத்திற்கு இரவு 7 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் விசேஷ மற்றும் விடுமுறை நாட்களில் தரிசன <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">நேரம் </a>மாறுதலுக்கு உட்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><h2>நோக்கம் என்ன?</h2><p>உண்மையில், இதன் நோக்கம், கூட்ட நெரிசலான நாட்களில் கட்டண தரிசன வரிசையில் மாலை 6.30 மணியளவிலும், பொது தரிசன வரிசையில் இரவு 7 மணியளவிலும் உள்நுழையும் பக்தர்கள், இரவுநேர அபிஷேகத்தின்போது கருவறை திரையிடப்படுவதால் ஏற்படும் தாமதத்தை கடந்து தரிசனம் செய்வார்கள். அவர்கள் தரிசனம் முடிந்து திரும்புவதற்கு குறைந்தபட்சம் இரவு 9 மணி ஆகிவிடும் என்பதையும், அதன் பின்னரே பள்ளியறை பூஜை நடைபெற்று கோவிலின் நடையை திருக்காப்பிட இயலும் என்பதையும் கருத்தில் கொண்டுதான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே, தரிசன வரிசைகளில் பக்தர்களின் உள்நுழைவை முறைப்படுத்துவதற்கான நிர்வாக நடைமுறை குறித்து பக்தர்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. </p><h2>பக்தர்கள் அதிர்ச்சி</h2><p>திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதலீடுகளை ஈர்ப்பதில் முதல்-அமைச்சர் தனிக் கவனம் செலுத்த வேண்டும்! - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-chief-minister-must-pay-special-attention-to-attracting-investments-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-chief-minister-must-pay-special-attention-to-attracting-investments-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">2c6d5e58-cd54-4d66-ac29-65dc1fb12de3</guid><pubDate>Sat, 01 Aug 2026 05:03:31 +0000</pubDate><atom:updated>2026-08-01T05:03:31.154Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/4ua6a0b8/Untitled-22.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/4ua6a0b8/Untitled-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்ட அனுமதிகள் ஆகியவற்றை எளிதாக்கி, மேம்படுத்தி புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டுமென முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>டாப் 10 மாநிலங்கள்</h2><p>தற்போதைய 2025-2026 ஆம் ஆண்டிற்கான அதிக புதிய முதலீடுகளை ஈர்த்த டாப் 10 மாநிலங்களின் பட்டியலில், தமிழகம் 10 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள ஊடகச் செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது. நமது மாநிலத்தின் தொழில் முதலீடுகள் எந்தளவிற்கு நலிவடைந்துள்ளன என்பதற்கான சான்றாக விளங்கும் இந்த தகவலை, தற்போதைய தவெக அரசாவது சற்று தீவிரமாகக் கையாள வேண்டும். </p><p>“ஒரு காலத்தில் நாங்கள் இப்படி இருந்தோம், அப்படி இருந்தோம்” என்ற கடந்த கால வெற்றியையே பேசிக் கொண்டிருந்தால், நிகழ்கால வளர்ச்சியும் எதிர்கால லட்சியமும் கேள்விக்குறியாகிவிடும் என்பதைத் தான் தமிழக பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. புதிய தொழில் முதலீடுகளுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தாமல், பழங்கதைகளைப் பேசியும், வெற்று பேப்பரில் மட்டுமே பதிவாகிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் மட்டுமே வைத்து, தங்களது ஐந்து ஆண்டுகளையும் ஒப்பேற்றி விட்டது திமுக. அதன் விளைவால் தான், புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் சோடை போயுள்ளது. பெரிய பெரிய நிறுவனங்களும் பிற மாநிலங்களை நோக்கி படையெடுக்கின்றனர். </p><h2>கவனம் செலுத்த வேண்டும்</h2><p>எனவே, முந்தைய திமுக ஆட்சியில் இருந்தாவது தற்போதைய தவெக அரசு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். பரந்தூர் விமான நிலையம் உள்ளிட்ட மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களை கண்ணை மூடிக் கொண்டு எதிர்க்கும் போக்கை கைவிட வேண்டும்! இணைப்பு வசதிகள், உட்கட்டமைப்பு வசதிகள், கடன் வசதிகள், மானியங்கள், சட்ட அனுமதிகள் ஆகியவற்றை எளிதாக்கி, மேம்படுத்தி புதிய <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">முதலீடுகளை </a>ஈர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டுமென முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>
எம்.எல்.ஏ. மகனை போல பேசியதற்கு எதிர்ப்பு... சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கிய பரிதாபங்கள் குழு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/backlash-over-imitating-an-mlas-son-parithabangal-team-removes-controversial-scene</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/backlash-over-imitating-an-mlas-son-parithabangal-team-removes-controversial-scene#comments</comments><guid isPermaLink="false">431a3a32-8e59-4769-9037-33a2d77c7d22</guid><pubDate>Sat, 01 Aug 2026 04:49:51 +0000</pubDate><atom:updated>2026-08-01T04:49:51.960Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Gopi,suthakar,கோபி,சுதாகர்,YouTube channel,DMK MLA,திமுக எம்.எல்.ஏ.,மார்க்கண்டேயன்,பரிதாபங்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/hdj61ef6/5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/hdj61ef6/5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனின் மகனை கிண்டல் செய்யும் வகையில் பரிதாபங்கள் யூடியூப் சேனலில் கோபி, சுதாகர் வெளியிட்டதாக கூறப்படும் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p>மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மகன் உருக்கமாக பேசிய வீடியோவை நகைச்சுவை வடிவில் மாற்றி வெளியிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.</p> <h2>கலைஞர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது</h2><p>இந்த விவகாரம் குறித்து அமைச்சர் டிஆர்பி ராஜா, "வேதனையில் இருந்த ஒரு சிறுவனை கேலி செய்வது ஏற்க முடியாதது. திறமையான கலைஞர்களாக அறியப்படும் அவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது" என்று தனது சமூக வலைதள பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் சிறுவனின் உணர்வுகளை நகைச்சுவைக்காக பயன்படுத்தியதை விமர்சித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.</p><h2>யாரையும் புண்படுத்துவது நோக்கம் அல்ல</h2><p>இந்த நிலையில், பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர் அதற்கு மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர். அதில், சமீபத்தில் எங்களது சேனலில் வெளியான "ஆடி மாச பாவங்கள்" வீடியோவில் இடம்பெற்ற ஒரு குறிப்பிட்ட காட்சி, சமூக வலைதளங்களில் சிலரின் மனதை புண்படுத்தியதாக அறிகிறோம். அந்தக் காட்சி யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இருப்பினும், அது சிலரின் மனதை காயப்படுத்தியிருப்பதால், அந்தக் காட்சிகளை வீடியோவிலிருந்து நீக்கியுள்ளோம். பரிதாபங்களின் நோக்கம் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்துவது அல்ல. என்று தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பயங்கரம்:  சொத்து தகராறில் பல் டாக்டர்-தாய் கொலை; சகோதரர்களே தீர்த்து கட்டிய கொடூரம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/terror-in-chennai-dentist-and-mother-killed-over-property-dispute</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/terror-in-chennai-dentist-and-mother-killed-over-property-dispute#comments</comments><guid isPermaLink="false">7d4b4ec4-b1d4-4f69-bd63-8792f8ec1d4e</guid><pubDate>Sat, 01 Aug 2026 04:06:47 +0000</pubDate><atom:updated>2026-08-01T04:06:47.197Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,Chennai,சென்னை,சொத்து தகராறு,property dispute</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/ximkxw4m/rocpc.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ அஷ்ரப் அகமது]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/ximkxw4m/rocpc.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>சென்னையில் சொத்து தகராறில் பல் டாக்டர் மற்றும் தாய் என இருவரையும், 2 சகோதரர்கள் திட்டமிட்டு கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.</p><p><a href="https://www.dailythanthi.com/">சென்னை அண்ணாநகர் கிழக்கு</a>, முதல் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் அஷ்ரப் நிஷா (வயது 68). கடந்த சில ஆண்டுகளாக முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இவருக்கு 3 மகன்கள். மூத்த மகன் அப்ரார் அகமது (வயது 50). இவருக்கு திருமணமாகி பாத்திமா என்ற மனைவி உள்ளார். 2-வது மகன் அஸ்ரார் அகமது (வயது 48).  திருமணம் ஆகி கருத்துவேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார்.</p><p>3-வது மகன் அஷ்ரப் அகமது (வயது 42). பல் டாக்டரான இவர், அதே பகுதியில் கிளினிக் நடத்தி வந்தார். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்தனர்.  நேற்று முன்தினம் இரவு அப்ரார் அகமது, தனது மனைவியுடன் வெளியே சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் அஸ்ரார் அகமதுவும் வெளியே சென்று விட்டார். வீட்டில் இவர்களது தாய் மற்றும் தம்பி மட்டும் தனியாக இருந்தனர்.</p>  <p>சொத்து தகராறு</p><p>நேற்று அதிகாலையில் வெளியே சென்றிருந்த சகோதரர்கள் வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் உள்ளே தாய் அஷ்ரப் நிஷா மற்றும் தம்பி அஷ்ரப் அகமது இருவரும் பலத்த காயங்களுடன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த அண்ணா நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தாய்-மகன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.</p><p>மர்மநபர்கள் யாராவது நகை, பணத்துக்காக வீடு புகுந்து இருவரையும் கொலை செய்து இருக்கலாம் என போலீசாரிடம் சகோதரர்கள் இருவரும் கூறினர். ஆனால் போலீசாரின் விசாரணையில் வெளி நபர்கள் யாரும் வீட்டுக்குள் வந்து சென்றதற்கான தடயங்கள் எதுவும் இல்லை.  எனவே சகோதரர்கள் மீது ஏற்பட்ட சந்தேகத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் சொத்து தகராறில் தாய் மற்றும் தம்பியை சகோதரர்களே குடும்பத்துடன் சேர்ந்து அடித்துக்கொன்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.</p>  <p>ரூ.1 கோடி சொத்து</p><p>இதுபற்றி போலீசார் கூறும்போது, அஷ்ரப் நிஷா தனது மகன்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். அந்த வீட்டின் மதிப்பு சுமார் ரூ.1 கோடிக்கு மேல் இருக்கும் என தெரிகிறது. அந்த வீட்டை விற்றுவிட்டு வேறு இடத்துக்கு செல்லலாம் என முதல் 2 மகன்களும் அடிக்கடி தங்களது தாயாரிடம் கூறி வந்தனர். அதற்கு அஷ்ரப் நிஷா மறுத்து வந்தார்.</p><p>சமீபத்தில் கட்டுமான நிறுவனர் ஒருவரை அணுகியபோது, அவர் அந்த இடத்தை வாங்கிக்கொள்வதாகவும், அந்த இடத்தில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டி அதில் 2 வீடுகளை உரிமையாளருக்கு கொடுத்துவிட்டு கூடுதலாக பணமும் தருவதாகவும், மீதம் உள்ள வீட்டை கட்டி விற்பனை செய்து கொள்வதாகவும் கூறி உள்ளார்.</p>  <p>தாய் மறுப்பு</p><p>இதுகுறித்து அப்ரார் அகமது, அஸ்ரார் அகமது இருவரும் தங்கள் தாய் அஷ்ரப் நிஷாவிடம் தெரிவித்தனர். ஆனால் அதற்கு அவர்களது தாய், இடத்தை விற்றால் வீடுகள் மட்டுமே கிடைக்கும். அதில் 2 மகன்கள் அந்த வீட்டுக்கு சென்றாலும் 3-வது மகனுக்கு சொத்தில் பங்கு அல்லது இடம் கிடைக்காது. மேலும் தனது கணவர் கஷ்டப்பட்டு சம்பாதித்த வீட்டை விற்கக்கூடாது என மறுத்துவிட்டார்.</p><p>அவர்களது தம்பியான பல் டாக்டர் அஷ்ரப் அகமதுவும் தாய்க்கு ஆதரவாக சகோதரர்களின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இந்த சொத்து தொடர்பாக தாய் மற்றும் மகன்கள் இடையே கடந்த சில மாதங்களாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.</p>  <p>மருமகள் உடந்தை</p><p>இந்த நிலையில், நேற்று முன்தினம் சொத்தை விற்பதற்கு அனுமதி கேட்டு மகன்கள் இருவரும் தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  வாக்குவாதம் முற்றியதால் தாய் என்றும் பாராமல் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த அஷ்ரப் நிஷாவை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரது கை. கால்களை பிடித்துக்கொண்டு தலையணையால் முகத்தில் அழுத்தி கொலை செய்தனர். இதற்கு மூத்த மகன் அப்ரார் அகமதுமின் மனைவி உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.</p><p>பின்னர் பல் டாக்டரான தம்பி அஷ்ரப் அகமதுவையும் சரமாரியாக தாக்கி கொலை செய்தனர். அதன்பிறகு யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க தாய்-தம்பியின் உடல்களை வீட்டில் போட்டுவிட்டு சகோதரர்கள் இருவரும் வெளியே சென்றுவிட்டு மறுநான் அதிகாலையில் வந்து, நகை, பணத்துக்காக தங்களது தாய் மற்றும் தம்பியை மர்மநபர்கள் கொலை செய்து விட்டதாக போலீசார் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் கூறி நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது.</p>  <p>5 பேர் கைது</p><p>இதுபற்றி கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்ரார் அகமது, அவரது மனைவி பாத்திமா மற்றும் 2-வது மகன் அஸ்ரார் அகமது உள்பட 5 பேரை கைது செய்தனர்.  அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-banned-from-bathing-at-suruli-falls</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-banned-from-bathing-at-suruli-falls#comments</comments><guid isPermaLink="false">bc466e83-a7d6-43ae-9c65-cbff72fe5e9e</guid><pubDate>Sat, 01 Aug 2026 03:37:32 +0000</pubDate><atom:updated>2026-08-01T03:37:32.153Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tourists,சுற்றுலா பயணிகள்,குளிக்க தடை,Suruli Falls,சுருளி அருவி,banned</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/9hjkk1jq/suruli-falls.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/9hjkk1jq/suruli-falls.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>உத்தமபாளையம், </p><p> தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சுருளி அருவியும் ஒன்றாகும். இது, புண்ணிய தலமாகவும் விளங்குகிறது. ஹைவேவிஸ் மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் அடர்ந்த வனப்பகுதியின் வழியாக வந்து அருவியாக கொட்டுகிறது. இதுதவிர சுருளி மலைப்பகுதியில் பெய்யும் மழைநீரும் வருகிறது. இந்த அருவியில் குளித்தால் நோய் தீரும் என்பது ஐதீகம். இங்குள்ள மலைக்குகைகளில் முப்பத்து முக்கோடி தேவர்களும், என்பத்து மூன்றாயிரம் ரிஷிகளும் தங்கியிருந்ததாக கருதப்படுகிறது. இதனால் இங்கு புண்ணியாதானம் செய்தால் இறந்தவரின் ஆன்மா சாந்தியடைய அவர்கள் உதவுவார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது. இதன் எதிரொலியாக சுருளி அருவி அடிவாரப்பகுதியில் புண்ணியாதானம் செய்யும் நிகழ்வுகள் அதிக அளவில் நடைபெறுகிறது.</p><h2>நீர்வரத்து அதிகரிப்பு</h2><p>குறிப்பாக சித்திரை முதல் நாள், தைப்பூசம், தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இதேபோல் அருவியில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகளும் வருகை தருவர். குறிப்பாக திண்டுக்கல், மதுரை மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் ஹைவேவிஸ் மலைப்பகுதியில் பெய்து வரும் பலத்தமழையால் சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் வெள்ளியை உருக்கியது போல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.</p><h2>சுற்றுலா பயணிகள் குளிக்க தடை</h2><p>இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ஹைவேவிஸ் மலைப்பகுதியில் பெய்யும் பலத்த மழையால் சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">சுற்றுலா பயணிகள் குளிக்க தடை </a>விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சோதனைச்சாவடி அருகே அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. தண்ணீரின் அளவு குறைந்தவுடன் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு: 2வது நாளாக குளிக்க தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/flash-floods-at-courtallam-falls-bathing-banned</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/flash-floods-at-courtallam-falls-bathing-banned#comments</comments><guid isPermaLink="false">32f12879-80dc-4ed8-b68f-76100c975950</guid><pubDate>Sat, 01 Aug 2026 02:58:20 +0000</pubDate><atom:updated>2026-08-01T02:58:20.172Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,தென்காசி,குற்றால அருவி,குற்றாலம்,Courtallam,Courtallam Falls,Courtallam fivefalls,குற்றால அருவிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/spo7grt1/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/spo7grt1/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><p>குற்றால அருவிகளில் கடந்த சில வாரங்களாக நீர்வரத்து மிகக்குறைந்த அளவிலேயே இருந்தது. இதற்கிடையே, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த இரு நாட்களாக மழை பெய்து வருகிறது. </p><h2>குற்றாலம்</h2><p>இதனால் நேற்று முன்தினம் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டது. இதனையடுத்து அன்று மாலையில் நீர்வரத்து சீரானதை தொடர்ந்து குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.</p><h2>குளிக்க தடை</h2><p>இதனையடுத்து, குற்றாலம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நேற்று மழை பெய்தது. இதனால் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்ததையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>ஏமாற்றம்</h2><p>இந்த நிலையில், தொடர்மழை காரணமாக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வெள்ளப்பெருக்கு </a>ஏற்பட்டுள்ளதால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க 2வது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினமான என்பதால் ஆவலுடன் நீராட வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>நீலகிரி மாவட்டத்தில் 2 புலிகள் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/2-tigers-killed-in-nilgiris-district</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/2-tigers-killed-in-nilgiris-district#comments</comments><guid isPermaLink="false">80efb837-7496-4115-8d7f-df44cf920a03</guid><pubDate>Sat, 01 Aug 2026 02:44:59 +0000</pubDate><atom:updated>2026-08-01T02:44:59.308Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Forest Department,வனத்துறை,arson,உயிரிழப்பு,Nilgiris,நீலகிரி,loss of life,புலிகள்,Tigers,தீ வைத்து எரிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/9hawpxka/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 2 புலிகள் உயிரிழப்பு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/9hawpxka/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF">நீலகிரி</a> மாவட்டத்தில் உயிரிழந்த 2 புலிகளின் உடல்களை வனத்துறையினர் தீ வைத்து எரித்தனர்.</p><h2>2 புலிகள் உயிரிழப்பு</h2><p>நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே மார்லிமந்து அணை காப்புக்காடு பகுதியில் உடல் அழுகிய நிலையில் புலி ஒன்று நேற்று இறந்து கிடந்தது. இதே போல், பைக்காரா வனச்சரகம் நடுவட்டம் காப்புக்காடு பகுதியில் மற்றொரு பெண் புலியும் இறந்து கிடந்தது. இந்த 2 <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">புலிகளின் இறப்பு</a>க்கான காரணம் தெரியவில்லை. </p><h2>உடல்கள் தீ வைத்து எரிப்பு</h2><p>இறந்த 2 புலிகளின் உடல் பாகங்களும் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்ட நிலையில், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழி காட்டுதலின்படி அவற்றின் உடல்களை வனத்துறையினர் தீ வைத்து எரித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>அரசு விரைவு பஸ் செயலியில் நிறம் மாற்றம்... த.வெ.க. கொடி வண்ணத்தில் புதிய வடிவமைப்பு!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/color-change-in-the-government-express-bus-app-new-design-in-the-colors-of-the-tvk-flag</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/color-change-in-the-government-express-bus-app-new-design-in-the-colors-of-the-tvk-flag#comments</comments><guid isPermaLink="false">03a8bdf4-9894-4fc8-a410-b040edad69da</guid><pubDate>Sat, 01 Aug 2026 02:32:42 +0000</pubDate><atom:updated>2026-08-01T02:32:42.017Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மாற்றம்,செயலி,app,government express buses,அரசு விரைவு பஸ்,நிறம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/6r92hl3t/tnstc.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/6r92hl3t/tnstc.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>அரசு விரைவு பஸ் டிக்கெட் முன்பதிவுக்கான மொபைல் போன் செயலியின் வடிவமைப்பு. சிவப்பு, மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.</p><p>அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், 1,100க்கும் மேற்பட்ட சொகுசு மற்றும் 'ஏசி' பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதர போக்குவரத்து கழகங்களும், 1,500க்கும் மேற்பட்ட விரைவு பஸ்களை இயக்குகின்றன.</p><h2>மொபைல் போன் செயலி</h2><p>இந்த விரைவு பஸ்களுக்கு, 90 நாட்களுக்கு முன்பே www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் <a href="https://www.dailythanthi.com/topic/cell-phone-app">மொபைல் போன் செயலி </a>வாயிலாக, டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. இந்த செயலியை, மொபைல் போன்களில் பதிவிறக்கம் செய்து, முன் பதிவு வசதியை பயன்படுத்தலாம்.</p><h2>சிவப்பு, மஞ்சள் நிறத்தில் மாற்றம்</h2><p>த.வெ.க., அரசு வந்த பின், புதிதாக தயாராகி வரும் அரசு பஸ்களுக்கு, த.வெ.க., கொடி நிறத்தில் வண்ணம் பூசப்பட்டு வருகிறது. தற்போது, அரசு விரைவு பஸ் டிக்கெட் முன்பதிவுக்கான மொபைல் போன் செயலியின் வடிவமைப்பும். சிவப்பு, மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பொதுமக்கள் தரும் மனு மீது 30 நாட்களுக்குள் தீர்வு - அரசு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-order-no-petition-submitted-by-the-public-should-remain-pending-for-more-than-30-days</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-order-no-petition-submitted-by-the-public-should-remain-pending-for-more-than-30-days#comments</comments><guid isPermaLink="false">c63435ff-bc28-4243-b69c-13caa2cba310</guid><pubDate>Sat, 01 Aug 2026 02:21:41 +0000</pubDate><atom:updated>2026-08-01T02:21:41.299Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,Government Order,Petition,TamilNadu Goverment,பொதுமக்கள் மனு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/ja16pcbu/tamilnadu.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/ja16pcbu/tamilnadu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>'பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் அனைத்து மனுக்களும், 30 நாட்களுக்கு மேல் நிலுவையில் இருக்கக்கூடாது. தங்களது துறை சார்ந்த முக்கிய விவகாரங்கள் குறித்து, அமைச்சர்களுக்கு அவ்வப்போது தகவல்கள் வழங்க வேண்டும்' என, அனைத்து துறை செயலர்கள் மற்றும் துறைகளின் தலைவர்களுக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக அரசின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:</p><p>ஒவ்வொரு துறையிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக, அனைத்து துறை செயலர்களுடன், தலைமை செயலர் சாய்குமார் சமீபத்தில் ஆய்வு கூட்டம் நடத்தினார். அதில், பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். </p><h2>அதன் விபரம்</h2><p>பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் அனைத்து மனுக்களுக்கும் உரிய முறையில் தீர்வு காண வேண்டும். மனுக்களின் தீர்வு நிலை குறித்து, துறை தலைவர்கள் வாரம் தோறும் ஆய்வு செய்ய வேண்டும். எந்த மனுவும், 30 நாட்களுக்கு மேல் நிலுவையில் இருக்கக் கூடாது.</p><p>ஏற்கனவே, அரசால் வழங்கப்பட்டுள்ள வழி துறை காட்டுதலின்படி, தலைவர்கள் ஒவ்வொரு மாதமும் மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்வதுடன், ஆய்வு அறிக்கைகளை உடனுக்குடன் அனுப்ப வேண்டும். கண்காணிப்பு அதிகாரிகள் மாதம்தோறும் களப்பணிகளை மேற்கொண்டு, தங்களது அறிக்கைகளை, பொதுத்துறை வாயிலாக, தலைமை செயலருக்கு அனுப்ப வேண்டும். அனைத்து அரசாணைகளும் எந்தவித தாமதமும் இன்றி, சம்பந்தப்பட்ட துறைகளின் இணைய தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.</p><p>கவர்னர் உரை அறிவிப்புகளுக்கான அரசாணைகள் உடனே வெளியிடப்பட வேண்டும். ஒவ்வொரு துறை தலைவரும், 'உங்கள் அரசை தெரிந்து கொள்ளுங்கள்' திட்டத்திற்காக தகவல் தொழில் நுட்ப துறையுடன் ஒருங்கிணைந்து செயல்பட, ஒரு தொடர்பு அலுவலரை நியமிக்க வேண்டும்.</p><p>'எல் நினோ' என்ற காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் ஏற்படக்கூடிய வறட்சி நிலையை எதிர்கொள்ள தேவையான, அனைத்து முன் ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். இதுதொடர்பாக, மாவட்ட அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.</p><h2>தகவல்கள்</h2><p>மத்திய அரசிடம் இருந்து பெறப்பட வேண்டிய மானியங்கள் மற்றும் நிலுவை தொகைகளை பெறுவதற்கான <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நடவடிக்கைகளை</a>, செயலர்கள் மற்றும் துறை தலைவர்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.</p><p>துறை தலைவர்கள், செயலர்கள் தங்களது துறை சார்ந்த முக்கிய விவகாரங்கள் குறித்து, சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு, அவ்வப்போது தகவல்களை வழங்க வேண்டும். இவ்வாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக, அந்த உயரதிகாரி கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தேனி: மாணவர்களுக்கான உதவித்தொகை மோசடி- 12 பேருக்கு ஓராண்டு சிறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/theni-student-scholarship-scam-12-people-jailed-for-one-year</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/theni-student-scholarship-scam-12-people-jailed-for-one-year#comments</comments><guid isPermaLink="false">1840f22f-d2c0-4aab-b9cc-0ed54c546e2c</guid><pubDate>Sat, 01 Aug 2026 02:19:32 +0000</pubDate><atom:updated>2026-08-01T02:19:32.265Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Theni,தேனி,மோசடி,Verdict,தீர்ப்பு,சிறை தண்டனை,Prison sentence,fraud,Scholarship,மாணவர்கள்,students,உதவித்தொகை,12 பேர்,12 people</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/mp929am4/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 12 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/mp929am4/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF">தேனி</a> மாவட்டத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">மாணவர்களுக்கான</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88">உதவித்தொகை </a>மோசடி தொடர்பான வழக்கில் 12 பேருக்கு ஓராண்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">சிறை தண்டனை</a> விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.</p><h2>மாணவர்களுக்கான உதவித்தொகையில் ரூ.4 லட்சத்து 2 ஆயிரம் மோசடி</h2><p>தேனி மாவட்டத்தில் கடந்த 1989 முதல் 1992 வரை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கியதில் போலி சான்றிதழ்கள் மூலம் ரூ.4 லட்சத்து 2 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது.</p><h2>12 பேர் மீது வழக்குப்பதிவு</h2><p>இது தொடர்பான வழக்கில் அப்போதைய வருவாய் ஆய்வாளர் சுருளிராஜ், போடிநாயக்கனூர் கிராம நிர்வாக அலுவலர் சங்கரநாராயணன், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்கள் கோவிந்தராஜன், விவேகானந்தன், ஆசிரியை அமராவதி உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.</p><h2>12 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை</h2><p>இந்த வழக்கு மதுரை லஞ்ச ஒழிப்பு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. முடிவில் 12 பேருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி பாரதிராஜா தீர்ப்பளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>சேலம்: மின் இணைப்பு வழங்க லஞ்சம்- பெண் உதவி பொறியாளர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-female-assistant-engineer-arrested-for-accepting-bribe-to-provide-electricity-connection</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-female-assistant-engineer-arrested-for-accepting-bribe-to-provide-electricity-connection#comments</comments><guid isPermaLink="false">1ed08948-4c30-45a0-b47b-f6986afa6858</guid><pubDate>Sat, 01 Aug 2026 01:56:24 +0000</pubDate><atom:updated>2026-08-01T01:56:24.771Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrested,Salem,லஞ்சம்,பெண்,சேலம்,Female,bribe,மின் இணைப்பு,Electricity connection,Assistant Engineer,உதவி பொறியாளர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/h5r9glpk/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெண் உதவி பொறியாளர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/h5r9glpk/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,  </p><p>சேலத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">மின் இணைப்பு</a> வழங்க <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">லஞ்சம்</a> கேட்ட பெண் உதவி பொறியாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர்.</p><h2>ரூ.7 ஆயிரம் லஞ்சம் கேட்ட உதவி பொறியாளர்</h2><p>சேலத்தை சேர்ந்த ஒருவர் தேங்காய் நார் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலைக்கு மின் இணைப்பு கொடுக்கும்படி சேலம் கே.ஆர்.தோப்பூரில் உள்ள மின்சார வாரிய அலுவலக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D">உதவி பொறியாளர்</a> கவிதா (வயது 43) என்பவரிடம் விண்ணப்பித்தார். அப்போது அவர் மின் இணைப்பு வழங்க ரூ.7 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.</p><h2>கைது</h2><p>இதையடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர், லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தலின்படி ரசாயன பவுடர் தடவிய ரூ.7 ஆயிரத்தை உதவி பொறியாளர் கவிதாவிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கவிதாவை கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் எப்போது? அமைச்சர் காந்திராஜ் பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/when-will-elections-for-cooperative-societies-be-held-minister-gandhiraj-responds</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/when-will-elections-for-cooperative-societies-be-held-minister-gandhiraj-responds#comments</comments><guid isPermaLink="false">2dc1a0f1-7ad6-489b-9abc-e7a39c337b26</guid><pubDate>Sat, 01 Aug 2026 01:44:51 +0000</pubDate><atom:updated>2026-08-01T01:44:51.342Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Govt of Tamil Nadu,கூட்டுறவு சங்கம்,Co operative banks,அமைச்சர் காந்திராஜ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/39dy3qmk/Minister-Gandhi-raj.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் காந்திராஜ் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/39dy3qmk/Minister-Gandhi-raj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் கடந்த 2018-ம் ஆண்டு கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு 2023-ம் ஆண்டு கூட்டுறவு சங்கங்களின் தேர்தலை நடத்துவதற்கான முன்னெடுப்புப் பணிகள் நடத்தப்பட்டது. ஆனால் கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் நடத்தப்படவில்லை. எனவே கூட்டுறவு சங்கங்களில் நிர்வாகிகள் இல்லாத நிலை நிலவுகிறது. அரசு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நிர்வாகம் நடத்தப்பட்டு வருகிறது.</p><p>இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் காந்திராஜிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- த.வெ.க. அரசு அமைந்த பிறகு கூட்டுறவு சங்கங்களில் உள்ள போலி உறுப்பினர்கள், மறைந்த உறுப்பினர்களின் பெயர்களை கண்டறிந்து நீக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் விரைந்து முடிக்கப்பட்ட பிறகு இந்த மாதம் (ஆகஸ்டு) கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.கூட்டுறவு சங்க தேர்தலை தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் தேர்தல் ஆணையம் வெளிப்படைத்தன்மையோடு நடத்த தயாராக உள்ளது.</p> <p>தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, பால் உற்பத்தியாளர்கள் கூட்டு றவு சங்கம், வேளாண் கூட்டுறவு மற்றும் விற்பனை சங்கம், மாவட்ட மத் திய கூட்டுறவு வங்கி, கூட்டுறவு மொத்த விற்பனை சங்கம், வீட்டு வசதி கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சங்கங்கள் மூலம் 2 லட்சம் பேர் தேர்வாகி பணியாற்றுவார் கள்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது - எவ்வளவு தெரியுமா..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/price-of-commercial-cylinders-reduced-do-you-know-by-how-much</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/price-of-commercial-cylinders-reduced-do-you-know-by-how-much#comments</comments><guid isPermaLink="false">359285f3-5fda-49d4-84f8-a5061e1048b1</guid><pubDate>Sat, 01 Aug 2026 01:32:52 +0000</pubDate><atom:updated>2026-08-01T01:32:52.350Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,சிலிண்டர் விலை,Commercial Cylinder,வணிக சிலிண்டர் விலை,Cylinders,சிலிண்டர் விலை குறைப்பு,கியாஸ் சிலிண்டர் விலை,LPG Cylinder,LPG,Commercial cylinder price</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/uxcvgz9a/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/uxcvgz9a/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இன்று மாதத்தின் முதல் நாள் என்பதால், சிலிண்டர் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.</p><h2>கியாஸ் சிலிண்டர்</h2><p>பாரத், இந்துஸ்தான், இந்தியன் ஆயில் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும், சமையல் கியாஸ் சிலிண்டர்களை நாடு முழுவதும் வினியோகம் செய்து வருகின்றன.</p><p>சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலைகளை நிர்ணயித்து வருகின்றன. இதில் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலைகளை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைத்து வருகிறது.</p><h2>விலை குறைவு</h2><p>இந்த நிலையில், இன்று மாதத்தின் முதல் நாள் என்பதால், சிலிண்டர் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.200 குறைந்து ரூ.2,906-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 14.2 கிலோ எடை கொண்ட சமையில் சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமுமின்றி ரூ.957.50-க்கு விற்பனையாகிறது.</p>]]></content:encoded></item><item><title>தென்காசி: ஆசிரியைக்கு பாலியல் தொல்லை; உதவி தலைமை ஆசிரியர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tenkasi-teacher-sexually-harassed-assistant-principal-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tenkasi-teacher-sexually-harassed-assistant-principal-arrested#comments</comments><guid isPermaLink="false">14c98c75-6d12-4764-9750-52ddaf86d117</guid><pubDate>Sat, 01 Aug 2026 01:29:58 +0000</pubDate><atom:updated>2026-08-01T01:29:58.031Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Tenkasi,தென்காசி,arrest,Sexual harassment,பாலியல் தொல்லை,Teacher,ஆசிரியை,Complaint,புகார்,உதவி தலைமை ஆசிரியர்,Assistant Headmaster</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/6q9zc3z8/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பாலியல் தொல்லை, கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/6q9zc3z8/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,  </p><p>தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியில் ஒரு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88">பள்ளி ஆசிரியை</a>க்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88">பாலியல் தொல்லை</a> கொடுத்த புகாரில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D">உதவி தலைமை ஆசிரியரை</a> போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர்.</p><h2>பள்ளி ஆசிரியைக்கு பாலியல் தொல்லை </h2><p>தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள பெரிய கோவிலாங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் பஞ்சராஜா (வயது 56). இவர் அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.</p><h2>உதவி தலைமை ஆசிரியர் கைது</h2><p>இதையடுத்து பாதிக்கப்பட்ட ஆசிரியை அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உதவி தலைமை ஆசிரியர் பஞ்சராஜாவை கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை: காங்கிரஸ் பயிற்சி முகாமில் பங்கேற்கிறார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rahul-gandhi-visits-tamil-nadu-today-to-participate-in-a-congress-training-camp</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rahul-gandhi-visits-tamil-nadu-today-to-participate-in-a-congress-training-camp#comments</comments><guid isPermaLink="false">55f281bf-8c01-4ef4-82bd-b31edce7bd8e</guid><pubDate>Sat, 01 Aug 2026 01:28:05 +0000</pubDate><atom:updated>2026-08-01T01:28:05.577Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழகம்,காங்கிரஸ்,ராகுல் காந்தி,Rahul Gandhi</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/xsxjx1sm/Rahul-Gandhi-PTI.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல் காந்தி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/xsxjx1sm/Rahul-Gandhi-PTI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு சொந்தமான கடற்கரை விடுதியில் கடந்த 23-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பயிற்சி முகாமின் நிறைவுநாளான இன்று (சனிக்கிழமை) நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு காலை 10.05 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். </p><h2> முகாமில் பங்கேற்பு</h2><p>அவரை காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் வரவேற்கிறார்கள். பின்னர் மாவட்டத் தலைவர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்று உரையாற்றுகிறார். பின்னர், மாவட்டத் தலைவர்களின் குடும்பத்தினரை சந்திக்கிறார். மாலை 4 மணியளவில் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து உரையாடுகிறார். அதேபோன்று, கோவை மற்றும் சேலம் பகுதிகளில் நீட் தேர்வால் பலியான 4 மாணவ-மாணவிகளின் பெற்றோரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. பின்னர் சென்னை வந்து இரவு 7 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.</p> ]]></content:encoded></item><item><title>கோவில் பூஜையை அவமதித்ததாக புகார்; நடிகர் ஜி.பி.முத்து மீது வழக்குப்பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/complaint-filed-against-actor-gpmuthu-for-insulting-temple-worship</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/complaint-filed-against-actor-gpmuthu-for-insulting-temple-worship#comments</comments><guid isPermaLink="false">92f72262-3a20-4954-a242-116081c13639</guid><pubDate>Sat, 01 Aug 2026 01:01:41 +0000</pubDate><atom:updated>2026-08-01T01:01:41.103Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>worship,Thoothukudi,தூத்துக்குடி,கோவில்,Temple,வழக்குப்பதிவு,பூஜை,Complaint,புகார்,actor,case registered,அவமதிப்பு,Insult,நடிகர் ஜி.பி.முத்து,G.P.Muthu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/lclet6xz/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நடிகர் ஜி.பி.முத்து]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/lclet6xz/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், உடன்குடி பெருமாள்புரம் பகுதியில் உள்ள கோவிலின் பூஜையை அவமதித்த புகார் தொடர்பாக குலசேகரன்பட்டினம் போலீசார் நடிகர் ஜி.பி.முத்து மீது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81">வழக்குப்பதிவு</a> செய்தனர்.</p><h2>சமூக வலைதளங்களில் வீடியோ</h2><p>தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பெருமாள்புரம் பகுதியில் உச்சினிமகாளி அம்பாள்-ஸ்ரீபட்டறை அம்பாள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">கோவில்</a> உள்ளது. இந்த கோவில் கட்டுமானப் பணிகள் குறித்த சிறப்பு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88">பூஜை</a>யை, மாந்திரீகம் செய்வது போல் சித்தரித்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D">நடிகர் </a>ஜி.பி.முத்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டதாக கூறப்படுகிறது.</p><h2>கோவில் பூஜையை அவமதித்த நடிகர் ஜி.பி.முத்து மீது வழக்குப்பதிவு</h2><p>மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் வீடியோ வெளியிட்டதாக கோவில் கமிட்டி தலைவர் பாலகிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில், குலசேகரன்பட்டினம் போலீசார் நடிகர் ஜி.பி.முத்து மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>வணிகம் செய்வது அரசின் கடமை அல்ல!</title><link>https://www.dailythanthi.com/others/thalayangam/vanikam-seyvathu-arasin-kadamai-alla</link><comments>https://www.dailythanthi.com/others/thalayangam/vanikam-seyvathu-arasin-kadamai-alla#comments</comments><guid isPermaLink="false">e3508a42-0b86-4f4b-b5b3-03c458c5b3b5</guid><pubDate>Fri, 31 Jul 2026 23:50:04 +0000</pubDate><atom:updated>2026-07-31T23:50:04.537Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தலையங்கம்,Thalayangam,தமிழக அரசு,TN govt,டாஸ்மாக்,Tasmac,வணிகம்,மது விற்பனை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/u3yji82v/Untitled-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/u3yji82v/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலையங்கம் (Thalayangam)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>"குடி குடியைக் கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும்" என்று கூறி மதுவிலக்கு அமல்படுத்தப்படவேண்டும் என்பது பொதுவான கருத்தாக இருந்தாலும், அது இன்றைய காலத்துக்கு சாத்தியமா என்றால், நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் தமிழ்நாட்டில் இதுவரை மதுவிலக்கை அமல்படுத்திய அரசாங்கங்களுக்கு தோல்வியே கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலில் இருந்தபோது நமது அண்டை மாநிலமான புதுச்சேரியில் பலதரப்பட்ட மதுவகைகள் தாராளமாக கிடைத்தன. அந்த நேரத்தில் சனிக்கிழமைதோறும் மாலை சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் ரெயிலிலும், பஸ்களிலும் கூட்டம் அலைமோதும். தாகத்தை தணித்து தன்னிலை மறக்க குடிமகன்கள் அங்கு படையெடுப்பார்கள். அந்த கூட்டம் போதை தெளிந்து ஞாயிற்றுக்கிழமை மாலை மீண்டும் சென்னை திரும்பும்.</p><p>1948 முதல் 1971 வரை தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு நடைமுறையில் இருந்தது. ஆனால் ஊருக்கு ஊர் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது அமோகமாக நடந்தது. அண்டை மாநிலங்களில் இருந்து அதிகமாக மது கடத்தி கொண்டு வரப்பட்டது. இதை தடுக்கவேண்டிய காவல் துறையிலும், கலால் துறையிலும் லஞ்சம் புரையோடியது. இதனால் 1971-ல் தி.மு.க. அரசு இருந்தபோது மதுவிலக்கு தளர்த்தப்பட்டது. கள், சாராயம், இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களான பிராந்தி, விஸ்கி, பீர் போன்ற மதுவகைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பின்பு 1973-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியிலேயே அனைத்து கடைகளும் மூடப்பட்டு பூரண மதுவிலக்கு கொண்டு வரப்பட்டது. எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது 1981-ம் ஆண்டு மீண்டும் மதுவிலக்கு தளர்த்தப்பட்டு தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டது.</p><p>1983-ல் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் நிறுவனம் உருவாக்கப்பட்டது. தொடக்கத்தில் இதன் பணி மொத்த விற்பனையை தனியார் கடைகளுக்கு கொடுப்பதாக மட்டுமே இருந்தது. 1987-ல் கள், சாராய கடைகளுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டதே தவிர பிராந்தி, விஸ்கி கடைகள் தொடர்ந்து இயங்கி வந்தன. 1989-90-ல் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது கள், சாராய விற்பனைக்கு அனுமதி அளித்தாலும், அடுத்து வந்த ஜெயலலிதா தலைமையிலான அரசு அந்த கடைகளுக்கு மட்டும் தடைவிதித்து பிராந்தி, விஸ்கி கடைகளுக்கான அனுமதியை தொடர்ந்தது. ஆனால் 2003-ம் ஆண்டு முதல் தனியார் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டு பிராந்தி, விஸ்கி, பீர், ரம் போன்ற இந்தியாவில் தயாராகும் மது வகைகளின் சில்லரை விற்பனையை அரசின் டாஸ்மாக் நிறுவனமே மேற்கொண்டு வருகிறது. 4,048 மதுக்கடைகளை டாஸ்மாக் நிறுவனம் நடத்துகிறது. இந்த கடைகள் மூலம் அரசுக்கு வரி வருவாயாக ஆண்டுக்கு ரூ.48,344 கோடி கிடைக்கிறது.</p><p>தற்போது மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் இயங்கிவரும் டாஸ்மாக் கடைகளை முதல் கட்டமாக தனியாரிடம் ஒப்படைக்க அரசு பரிசீலித்து வருவதாக வெளியாகிய செய்திகள் மிகவும் வரவேற்புக்குரியது. அரசின் கடமை சட்டம் இயற்றுவதும், நிர்வாகத்தை நடத்துவதும்தானே தவிர வணிகம் செய்வது அல்ல. வணிகத்தை தனியார் நடத்தினால்தான் புதுப்புது தொழில் முனைவோர் உருவாகுவார்கள். அரசுக்கு ஒவ்வொரு கடைக்கும் லைசென்சு கட்டணம் தனியாகவும், பிற வரி வருவாயும் கிடைக்கும். தனியார் கடைகளுக்கு இடையே நடக்கும் வியாபார போட்டியால் மக்களுக்கும் பலன் கிடைக்கும். மொத்தத்தில் ஊழலற்ற அரசை நடத்த தொடங்கியிருக்கும் அரசு, அந்த பாதையில் நிர்வாகத்தை மட்டும் நடத்தட்டும். மதுக்கடைகளை தனியாருக்கு கொடுத்து விடுவதே சாலச்சிறந்ததாகும்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி- தாம்பரம் சிறப்பு ரெயில் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு - தெற்கு ரெயில்வே</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-tambaram-special-train-extended-by-one-more-month-southern-railway</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-tambaram-special-train-extended-by-one-more-month-southern-railway#comments</comments><guid isPermaLink="false">7cfca2f6-2dfa-49ef-a00e-ec6ae9eadae1</guid><pubDate>Fri, 31 Jul 2026 22:21:26 +0000</pubDate><atom:updated>2026-07-31T22:21:26.940Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,Tambaram,தாம்பரம்,தெற்கு ரெயில்வே,Southern Railway,Special train,தூத்துக்குடி,Thoothukkudi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/z3f739c6/Untitled-8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/z3f739c6/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>தூத்துக்குடி- சென்னை தாம்பரம் இடையிலான கோடை கால சிறப்பு ரெயில் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக, தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.</p><h2>சிறப்பு ரெயில்</h2><p>கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் தெற்கு ரெயில்வே சார்பில் சென்னை தாம்பரம் - தூத்துக்குடி இடையே ஒரு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் திங்கட்கிழமைகளில் இரவு 11.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு சென்னைக்கும், செவ்வாய்க்கிழமைகளில் சென்னை தாம்பரத்தில் இருந்து மாலை 3.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு தூத்துக்குடிக்கும் வந்து சேருகிறது.</p><p>இந்த ரெயில் தூத்துக்குடி மேலூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிபுலியூர், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ஊர்களில் நின்று செல்கிறது.</p><h2>நீட்டிப்பு</h2><p>இந்த சிறப்பு ரெயில் சேவையை மேலும் ஒரு மாதம் நீட்டித்து தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தூத்துக்குடியில் இருந்து சென்னை தாம்பரத்துக்கு வருகிற 3, 10, 17, 24, 31-ந்தேதிகளிலும், சென்னை தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு வருகிற 4, 11, 18, 25 மற்றும் செப். 1 ஆகிய தேதிகளிலும் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தற்போது நடந்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம் - மத்திய அரசு அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamilnadu-muzhuvadhum-makkal-thogai-kanakkeduppu-panigal-indru-thodakkam-maththiya-arasu-arivippu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamilnadu-muzhuvadhum-makkal-thogai-kanakkeduppu-panigal-indru-thodakkam-maththiya-arasu-arivippu#comments</comments><guid isPermaLink="false">384d0115-a739-4a35-8915-e5f2086c091f</guid><pubDate>Fri, 31 Jul 2026 21:44:05 +0000</pubDate><atom:updated>2026-07-31T21:44:05.587Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மக்கள் தொகை கணக்கெடுப்பு,Census,மத்திய அரசு,கணக்கெடுப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/gvd0mr5n/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/gvd0mr5n/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டு வசதிக் கணக்கெடுப்பு பணிகள் ஆகஸ்ட் 1-ந் தேதி (இன்று) தொடங்கி வருகிற 30-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இப்பணியில் 19 ஆயிரம் அதிகாரிகளின் மேற்பார்வையில் 1.15 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் ஈடுபட உள்ளனர்.</p><p>அனைத்து வீடுகளுக்கும் நேரில் சென்று, 33 கேள்விகளைக் கொண்ட படிவத்தைப் பயன்படுத்தி தகவல்கள் திரட்டப்பட உள்ளன. இந்தியாவில் முதல்முறையாக இக்கணக்கெடுப்பில் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக பிரத்யேக செல்போன் செயலி மூலம் தரவுகள் பதிவு செய்யப்படும். 1948-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் சட்டப்படி, சேகரிக்கப்படும் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும்.</p><p>சுய-கணக்கெடுப்பு செய்தவர்கள் தங்கள் சுய கணக்கெடுப்பு அடையாள எண்ணை கணக்கெடுப்பாளர்களிடம் காட்ட வேண்டும். இந்த வசதியைப் பயன்படுத்தாத குடும்பங்களும் களப்பணியின்போது கணக்கெடுக்கப்படுவார்கள். வீட்டுவசதி நிலை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த தரவுகளைச் சேகரிக்கும் இந்த தேசியப் பணியில் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை மண்டல திரைப்பட சென்சார் போர்டு அதிகாரியாக சஞ்சய் கோஷ் நியமனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-mandala-thiraippada-censor-boardu-adhigariyaga-sanjay-ghosh-niyamanam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-mandala-thiraippada-censor-boardu-adhigariyaga-sanjay-ghosh-niyamanam#comments</comments><guid isPermaLink="false">786b8fe5-fd12-46c8-8772-c6b303100a59</guid><pubDate>Fri, 31 Jul 2026 21:30:35 +0000</pubDate><atom:updated>2026-07-31T21:30:35.672Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,Censor Board,சென்னை மண்டலம்,சென்சார் போர்டு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/rh2yfv67/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/rh2yfv67/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மண்டல திரைப்பட சென்சார் போர்டு அதிகாரியாக சஞ்சய் கோஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச் சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>இந்திய தகவல் சேவை பிரிவை (ஏ பிரிவு) சேர்ந்த மூத்த அதிகாரியான சஞ்சய் கோஷ், தற்போது சென்னை புத்தக வெளியீட்டு பிரிவின் (டி.பி.டி.) துணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர், டெல்லி புத்தக வெளியீட்டு பிரிவின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ், சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் (பி.ஐ.பி.) கூடுதல் பொறுப்பையும் வகித்து வருகிறார்.</p><p>இந்த நிலையில், தற்போது வகித்து வரும் பொறுப்புகளுடன் சேர்த்து, சென்னை மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியத்தின் (சென்சார் போர்டு) மண்டல அதிகாரி பொறுப்பிலும் சஞ்சய் கோஷ் நியமனம் செய்யப்படுகிறார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆபாச வீடியோவை கணவருக்கு அனுப்பி விடுவதாக மிரட்டி இளம்பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/man-threatens-to-send-obscene-video-to-husband-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/man-threatens-to-send-obscene-video-to-husband-arrested#comments</comments><guid isPermaLink="false">b233c449-b6fd-4f36-aa1a-a7d1dd83a488</guid><pubDate>Fri, 31 Jul 2026 19:19:25 +0000</pubDate><atom:updated>2026-07-31T19:19:25.466Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,ஆபாச வீடியோ,Otteri,ஓட்டேரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/qfos7w17/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/qfos7w17/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த திருமணமான 35 வயது இளம்பெண் ஒருவர், ஓட்டேரி போலீசில் புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-</p><p>நான், 2024-ம் ஆண்டு திருவள்ளூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தேன். என்னுடன் வேலை செய்த கோகுல்நாத் (26 வயது) என்பவருடன் நண்பராக பழகி வந்தேன். எங்கள் அலுவலகம் சம்பந்தமாக ஓட்டலில் விருந்து நடந்தபோது கோகுல் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து என்னை ஆபாசமாக படம் பிடித்தார்.</p><p>பின்னர் அதை காட்டி மிரட்டி என்னை திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட வைத்தார். அதையும் எனக்கு தெரியாமல் செல்போனில் வீடியோவாக பதிவு செய்திருந்தார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான நான், அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறி எனது செல்போன் எண்ணையும் மாற்றி விட்டேன். 2 வருடங்களுக்குப் பிறகு கோகுல்நாத் எனது செல்போன் எண்ணை கண்டுபிடித்து என்னை தொடர்பு கொண்டு மீண்டும் தனது ஆசைக்கு இணங்குமாறு மிரட்டி வருகிறார்.</p><p>தன்னுடன் உல்லாசமாக இருக்க மறுத்தால் இருவரும் சேர்ந்து இருக்கும் ஆபாச வீடியோவை, எனது கணவருக்கும், சமூக வலைதளங்களிலும் வெளியிட்டு விடுவேன் என மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார். இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>29 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/29-mavattangalil-nalliravu-1-mani-varai-mazhaikku-vaippu</link><comments>https://www.dailythanthi.com/news/weather/29-mavattangalil-nalliravu-1-mani-varai-mazhaikku-vaippu#comments</comments><guid isPermaLink="false">1e015e23-4637-4475-bd8a-63831995ee22</guid><pubDate>Fri, 31 Jul 2026 17:09:33 +0000</pubDate><atom:updated>2026-07-31T17:09:33.901Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/9jm607mf/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/9jm607mf/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது. சராசரி கடல் மட்டத்தில் தெற்கு குஜராத்திலிருந்து வடக்கு கேரளா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 29 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தேனி, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், மதுரை, விழுப்புரம், நாமக்கல், புதுக்கோட்டை, சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், தர்மபுரி, காஞ்சிபுரம், பெரம்பலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>குழந்தைகளுக்கு புரதம் தேவை; சிக்கன் பிரியாணி விஷயத்தில் அரசியலை திணிக்க வேண்டாம் - அமைச்சர் ராஜ்மோகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/children-need-protein-do-not-politicize-the-issue-of-chicken-biryani-minister-rajmohan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/children-need-protein-do-not-politicize-the-issue-of-chicken-biryani-minister-rajmohan#comments</comments><guid isPermaLink="false">3ad760ad-04c2-44b7-860b-fcd98f76ec7e</guid><pubDate>Fri, 31 Jul 2026 16:45:32 +0000</pubDate><atom:updated>2026-07-31T16:45:32.228Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chicken Biryani,சிக்கன் பிரியாணி,Minister Rajmohan,அமைச்சர் ராஜ்மோகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/yebcpgsk/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/yebcpgsk/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்து கருத்துகள் பெறப்பட்டு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் முடிவை அறிவிப்பார் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்திருந்தார்.</p><p>இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வந்த நிலையில், ஈரோட்டில் இன்று அமைச்சர் ராஜ்மோகன் இது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“தமிழகத்தில் கல்வி புரட்சியோடு உணவு புரட்சியும் கலந்தே வந்துள்ளது. அந்த வகையில் எனக்கு ஒரு ஆசை இருந்தது. அதன்படி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் வாரம் ஒருமுறை சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் விஜய்யிடம் கோரிக்கை வைத்திருக்கிறேன். </p><p>அரசு பள்ளி மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இது பரிசீலனையில் உள்ளது. சைவம் சாப்பிடுபவர்கள் சைவம் சாப்பிடட்டும். அசைவம் சாப்பிடும் குழந்தைகள் சிக்கன் பிரியாணி சாப்பிடட்டும். குழந்தைகளுக்கு புரதம் தேவை. சிக்கன் பிரியாணி சாப்பிட்டால் குழந்தைகள் கெட்டுப் போகாது. இந்த விஷயத்தில் அரசியலை திணிக்க வேண்டாம்.”</p><p>இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>கர்நாடக அரசை கண்டித்து 3-ந்தேதி தி.மு.க. போராட்டம் - எஸ்.டி.பி.ஐ. கட்சி பங்கேற்கும் என அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-to-protest-against-the-karnataka-government-on-the-3rd-sdpi-announces-it-will-participate</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-to-protest-against-the-karnataka-government-on-the-3rd-sdpi-announces-it-will-participate#comments</comments><guid isPermaLink="false">d6caa583-9863-447c-8e86-a12889f177f8</guid><pubDate>Fri, 31 Jul 2026 16:27:25 +0000</pubDate><atom:updated>2026-07-31T16:27:25.393Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,sdpi,எஸ்.டி.பி.ஐ.,தி.மு.க.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/lb0h6s3e/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/lb0h6s3e/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ந்தேதி தி.மு.க. சார்பில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி பங்கேற்க உள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் முகமது முபாரக் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“​காவிரி உரிமை, மேகதாது அணை விவகாரம் மற்றும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி, எதிர்வரும் ஆகஸ்ட் 3-ந்தேதி தஞ்சாவூரில் தி.மு.க. சார்பில் நடைபெறவுள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், எஸ்.டி.பி.ஐ. கட்சி பங்கேற்கும்.</p><p>தமிழகத்தின் நெற்களஞ்சியத்தைக் காக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வென்றெடுக்கவும் நடைபெறும் இப்போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகிகள், களப்பணியாளர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்று காவிரிக்கான நமது உரிமைக் குரலை வலுப்படுத்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-fraud-case-two-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-fraud-case-two-arrested#comments</comments><guid isPermaLink="false">81d09314-11b3-4652-a5cd-8a0d5d1dba6c</guid><pubDate>Fri, 31 Jul 2026 16:16:58 +0000</pubDate><atom:updated>2026-07-31T16:16:58.174Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர்,DMK,கைது,arrest,டாஸ்மாக்,Tasmac,செந்தில் பாலாஜி,டாஸ்மாக் முறைகேடு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/485tieow/balaji33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
டாஸ்மாக் முறைகேடு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/485tieow/balaji33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக், அவரது கூட்டாளி ரமேஷ் கைது செய்யப்பட்டார்.</p> <h2>செந்தில்பாலாஜி முதல் குற்றவாளி</h2><p>முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, புதிய வழக்கு ஒன்றை லஞ்சஒழிப்புபோலீசார் பதிவுசெய்துள்ளனர். இந்த வழக்கையொட்டி தமிழகம் முழுவதும் செந்தில்பாலாஜி தொடர்புடைய 45 இடங்களில், லஞ்சஒழிப்புபோலீசார் சோதனையும் மேற்கொண்டனர்.</p><p>இந்த புதிய வழக்கில், செந்தில்பாலாஜி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். 2-வது குற்றவாளியாக டாஸ்மாக் நிறுவனத்தின் முன்னாள் மேலாண்மை இயக்குனர், ஐ.ஏ.எஸ். அதிகாரி விசாகன் இருக்கிறார். 3-வது மற்றும்4-வது குற்றவாளிகளாக சீனியர் மண்டல மேலாளர்கள் ராமதுரைமுருகனும், பன்னீர்செல்வமும் இணைக்கப்பட்டுள்ளனர்.</p><p>5-வது குற்றவாளியாக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF">செந்தில்பாலாஜி</a>யின் தனிப்பட்டஉதவியாளர் பாஸ்கர் உள்ளார். இவர்களை தொடர்ந்து 6-வது மற்றும் 7-வதுகுற்றவாளிகளாக செந்தில்பாலாஜிக்கு நெருக்கமான ரத்தேஷ்ராஜ் சண்முகவேல் என்பவரும், கார்த்திக் என்ற மூலநூர் கார்த்திக் என்பவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.</p><h2>செந்தில்பாலாஜிக்கு முன்ஜாமீன்</h2><p>ரத்தேஷ் ராஜ் சண்முகவேலும், மூலநூர் கார்த்திக் என்பவரும்தான் 'கரூர் கேங்' என்ற பெயரில் வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் செந்தில்பாலாஜிக்கு முன்ஜாமீன் மறுக்கப்பட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனைகளுடன், அவருக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ளது. முன்ஜாமீன் கிடைத்துவிட்டதால், இந்த வழக்கில் செந்தில்பாலாஜி விரைவில் லஞ்சஒழிப்பு போலீசில் விசாரணைக்கு ஆஜராவார். </p><h2>நெருங்கிய நண்பர்கள் கைது</h2><p>இந்த நிலையில் அவருக்கு நெருக்கமான நண்பர்களாக கூறப்படும், கரூரை சேர்ந்த கார்த்திக் என்பவரும், ரமேஷ் என்பரும் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்களில் கார்த்திக்கின் பெயர்ஏற்கனவே போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில், 7-வதாக இடம்பெற்றுள்ளது. கைதான ரமேஷ் என்பவர் புதிதாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக, லஞ்சஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு: குளிக்க தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/flash-flood-at-courtallam-falls-bathing-prohibited</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/flash-flood-at-courtallam-falls-bathing-prohibited#comments</comments><guid isPermaLink="false">ac025f71-9356-4504-92c6-9747e70c0edb</guid><pubDate>Fri, 31 Jul 2026 16:04:44 +0000</pubDate><atom:updated>2026-07-31T16:04:44.684Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>குற்றால அருவி,வெள்ளப்பெருக்கு,Courtallam Falls</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/3qn3j5za/15.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/3qn3j5za/15.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>தென்காசி, </p><p>குற்றால அருவிகளில் கடந்த சில வாரங்களாக நீர்வரத்து மிகக்குறைந்த அளவிலேயே இருந்தது. குறிப்பாக, புலியருவியில் தண்ணீர் வரத்து இன்று வறண்டு காணப்பட்டது. </p><p>இதற்கிடையே,மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த இரு நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அருவிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று அருவிகளில் நீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டது. மாலையில் நீர்வரத்து சீரானதை தொடர்ந்து குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.</p><p>இந்த நிலையில், குற்றாலம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் தற்போது மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. எனவே பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>‘மதிக்காத கர்நாடக அரசிடம் பேசுவதில் எந்த பயனும் இல்லை’ - அன்புமணி ராமதாஸ் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-no-point-in-talking-to-the-karnataka-government-which-shows-no-respect-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-no-point-in-talking-to-the-karnataka-government-which-shows-no-respect-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">c7abc5c0-396b-43dd-bdd6-9760541f679c</guid><pubDate>Fri, 31 Jul 2026 16:01:44 +0000</pubDate><atom:updated>2026-07-31T16:01:44.852Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/kqb9oaf6/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/kqb9oaf6/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பையும், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பையும் கர்நாடக அரசு மதிக்கவில்லை என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அவர் கூறியதாவது;-</p><p>“தமிழக முதல்-அமைச்சர் விஜய் தற்போது கர்நாடகத்திற்கு வர வேண்டாம் என அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கோரிக்கை வைத்துள்ளார். கடந்த 20 நாட்களில் கர்நாடக அரசிடம் தண்ணீர் திறந்துவிடுமாறு காவிரி மேலாண்மை வாரியம் 2 முறை வலியுறுத்தியது. ஆனாலும் கர்நாடக அரசு அதை கேட்கவில்லை. </p> <p>கடந்த ஜூன் மாதம் தமிழகத்திற்கு 9.1 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால் நமக்கு கிடைத்ததோ 2.1 டி.எம்.சி. மட்டுமே. அதே போல் ஜூலை மாதம் நமக்கு 3.2 டி.எம்.சி. தண்ணீருக்கு பதிலாக 0.4 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே திறந்துவிடப்பட்டுள்ளது. காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பையும், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பையும் கர்நாடக அரசு மதிக்கவில்லை. </p><p>இப்படி மதிக்காத கர்நாடக அரசிடம் சென்று பேசுவதில் எந்த பயனும் கிடையாது. காவிரியில் தண்ணீர் வரவில்லை, மேட்டூர் அணை ஜூன் 12-ந்தேதி திறந்திருக்க வேண்டும், ஆனால் இன்றுவரை திறக்கப்படவில்லை. குறுவை சாகுபடி முடிந்துவிட்டது, சம்பாவுக்கு தண்ணீர் இருக்குமா என்று தெரியவில்லை. மேட்டூர் அணையில் சுத்தமாக தண்ணீர் இல்லை. </p><p>ஆனால் கர்நாடக அணைகளில் 67 டி.எம்.சி. தண்ணீர் இருக்கிறது. ஒரு நல்லெண்ணத்திற்காக தமிழகத்திற்கு 10 டி.எம்.சி. தண்ணீராவது திறந்துவிடுகிறார்களா என்றால் அதுவும் இல்லை. இந்த சூழலில் கர்நாடக முதல்-மந்திரியை சந்தித்து தமிழக முதல்-அமைச்சர் என்ன பேசப்போகிறார்?”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p> ]]></content:encoded></item><item><title>திருச்சி விமான நிலையத்தில் உள்நாட்டு சரக்கு சேவைக்கு ஒப்புதல் - துரை வைகோ வரவேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/approval-for-domestic-cargo-service-at-trichy-airport-durai-vaiko-welcomes-move</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/approval-for-domestic-cargo-service-at-trichy-airport-durai-vaiko-welcomes-move#comments</comments><guid isPermaLink="false">34d4a36d-6339-4d34-830a-91b88c8ea748</guid><pubDate>Fri, 31 Jul 2026 15:47:34 +0000</pubDate><atom:updated>2026-07-31T15:47:34.450Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>airport,விமான நிலையம்,Durai Vaiko,துரை வைகோ,Approval,ஒப்புதல்,திருச்சிTrichy,வரவேற்புwelcome</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/hw3jxse9/durai-vaiko.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மறுமலர்ச்சி திமுக எம்.பி. துரை வைகோ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/hw3jxse9/durai-vaiko.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">திருச்சி விமான நிலையத்தில்</a> உள்நாட்டுச் சரக்கு சேவைக்கு ஒப்புதல் வழங்கியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்க முன்னேற்றமாகும் என்று <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B">துரை வைகோ</a> தெரிவித்தார். இது தொடர்பாக, மறுமலர்ச்சி திமுக எம்பி துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>சரக்கு சேவை</h2><p>திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் முனையம் வழியாக உள்நாட்டு சரக்கு சேவையை தொடங்குவதற்கு, சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்புப் பணியகம் ஒப்புதல் வழங்கியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்க முன்னேற்றமாகும்.</p><h2>பலனளிக்கும்</h2><p>தற்போது திருச்சி விமான நிலையத்தில் சர்வதேச சரக்குகள் பயணிகள் விமானங்கள் (Passenger Flights) மூலமாகவே கையாளப்பட்டு வருகின்றன. அதேபோன்று, இந்த புதிய ஒப்புதலின் மூலம் இனி உள்நாட்டு சரக்குகளும் பயணிகள் விமானங்கள் மூலமாகவே அனுப்பப்படுவதற்கு வழிவகை ஏற்பட்டுள்ளது. இது திருச்சி மற்றும் மத்திய தமிழ்நாட்டின் தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள், வணிகர்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு குறிப்பிடத்தக்க பலனளிக்கும்.</p><h2>கோரிக்கை</h2><p>அதே நேரத்தில், திருச்சி விமான நிலையத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சர்வதேச ஏர் கூரியர் சரக்கு முனையத்தை முழுமையாக செயல்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை நான் தொடர்ந்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் வலியுறுத்தி வருகிறேன். குறிப்பாக 08.08.2025 மற்றும் 03.06.2026 ஆகிய தேதிகளில் நேரிலும் இதுகுறித்து  கோரிக்கை வைத்துள்ளேன்.</p> <h2> நடவடிக்கை</h2><p>மேலும், எதிர்காலத்தில் பிரத்யேக சரக்கு விமானங்கள் திருச்சி விமான நிலையத்தில் நேரடியாக இயக்கப்படுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதும் எனது வலியுறுத்தலாகும். அதற்கான உட்கட்டமைப்பு மற்றும் தேவையான அனுமதிகளை விரைவாக ஏற்படுத்தி, திருச்சியை தென்னிந்தியாவின் முக்கிய சரக்கு மற்றும் ஏற்றுமதி மையமாக உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p> <h2> வரவேற்பு</h2><p>இந்த உள்நாட்டு சரக்கு சேவைக்கான ஒப்புதலை மனமார வரவேற்கிறேன். இதனைத் தொடர்ந்து சர்வதேச ஏர் கூரியர் சரக்கு முனையமும் செயல்பாட்டிற்கு வந்து, எதிர்காலத்தில் பிரத்யேக சரக்கு விமானங்களும் திருச்சியில் இயக்கப்படும் நாள் விரைவில் வர வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>நாளை தமிழகம் வருகிறார் ராகுல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rahul-to-arrive-in-tamil-nadu-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rahul-to-arrive-in-tamil-nadu-tomorrow#comments</comments><guid isPermaLink="false">97c8a1d6-7351-4205-8156-79858b329b2a</guid><pubDate>Fri, 31 Jul 2026 15:40:37 +0000</pubDate><atom:updated>2026-07-31T15:40:37.289Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,காங்கிரஸ்,Congress,Ragul Gandhi,Rahul Gandhi- ராகுல்காந்தி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/qnkz35o3/ragul33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/qnkz35o3/ragul33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாளை தமிழகம் வரும் ராகுல் காந்தி, நீட்டால் உயிரிழ்ந்தோர் குடும்பத்தை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. </p><h2>ராகுல் காந்தி</h2><p>தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கான 10 நாள் பயிற்சி முகாம் மகாபலிபுரத்தில் கடந்த 23-ந்தேதி தொடங்கியது. இதில் மாநிலம் முழுவதும் உள்ள 77 மாவட்டத் தலைவர்கள் பங்கேற்று உள்ளார்கள்.</p><p>இந்த முகாமில் முக்கியத் தலைவர்களின் உரைகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு உள்ளன. இந்த முகாம் நாளை (1-ந்தேதி) நிறைவடைகிறது.</p><p>முகாமில் பங்கேற்பதற்காக  <a href="https://www.dailythanthi.com/search?q=ragul%20gandhi">நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி</a> நாளை சென்னை வருகிறார். டெல்லியில் இருந்து பயணிகள் விமானத்தில் வரும் அவர் காலை 10.05 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கு அவருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள், முன்னாள் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு அளிக்கின்றனர்.</p><h2>நீட்டால் உயிரிழந்தோர் குடும்பத்தை சந்திக்கும் ராகுல்</h2><p>அதை தொடர்ந்து கோவை மற்றும் சேலம் பகுதிகளில் இருந்து நீட் தேர்வால் பலியான 4 மாணவ-மாணவிகளின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.</p><p>அதன் பிறகு விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் மகாபலிபுரம் புறப்படுகிறார். தாம்பரம், வண்டலூர், கேளம்பாக்கம் வழியாக செல்லும் அவர் பகல் 11.30 மணிக்கு பயிற்சி முகாம் நடைபெறும் தமிழக சுற்றுலா வளர்ச்சி கழக விடுதியை சென்றடைகிறார்.</p><p>அங்கு மாவட்டத் தலைவர்களுடன் சிறிது நேரம் உரையாடுகிறார். பின்னர் ஒவ்வொரு மாவட்டத் தலைவரின் குடும்பத்தினருடனும் குழுப்புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். மகாபலிபுரம் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு சென்னை திரும்பி 7 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.</p><p>ராகுல்காந்தி செல்லும் வழிகளில் தாம்பரம், வண்டலூர், கேளம்பாக்கம் ஆகிய இடங்களில் காங்கிரஸ் சார்பில் பிரமாண்ட வரவேற்பு கொடுப்பது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் சத்தியமூர்த்தி பவனில் கூடி விவாதிக்கப்பட்டது.</p><h2>போராட்டம்</h2><p>ராகுல்காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் போராட்டம் நடத்தலாம் என்று உளவுத்துறைக்கு கிடைத்துள்ள தகவலை அடுத்து வழிநெடுக பலத்த பாதுகாப்பு மற்றும் ரகசிய கண்காணிப்பு பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பள்ளிக் கல்வித் துறை இயக்குனராக பணிபுரிந்த கண்ணப்பன் ஓய்வு; லதாவிற்கு கூடுதலாக ஒதுக்கீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kannappan-who-served-as-the-director-of-school-education-retires-additional-allocation-for-latha</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kannappan-who-served-as-the-director-of-school-education-retires-additional-allocation-for-latha#comments</comments><guid isPermaLink="false">f70c2a9f-06df-4ec3-b835-90be159b5d25</guid><pubDate>Fri, 31 Jul 2026 15:19:37 +0000</pubDate><atom:updated>2026-07-31T15:19:37.898Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>tngovt,பள்ளிக் கல்வித் துறை,கண்ணப்பன்,School Educiton</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/fwbpnma5/lathaa33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பள்ளிக் கல்வித் துறை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/fwbpnma5/lathaa33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பள்ளிக் கல்வி இயக்குனராக பணிபுரிந்த கண்ணப்பன் இன்று பிற்பகலுடன் ஓய்வு பெற்றார். </p><p>பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பணியிலிருந்து முனைவர்.ச.கண்ணப்பன் இன்றுடன் ஓய்வு பெற்றார்.பள்ளிக்  கல்வித்துறை சார்பாக நன்றியும், வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது. சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் க.அன்பழகன் கல்வி வளாகத்தில் இயங்கும் பள்ளிக் கல்வி இயக்ககத்தில் இவர் பணியாற்றி வந்தார். </p><p>இந்த நிலையில், புதிய இயக்குநர் நியமனம் பற்றி அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில், பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் பொறுப்பு, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் லதாவிற்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>இது தொடர்பாக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">பள்ளிக்கல்வித்துறை</a> வெளியிட்டுள்ள அறிவிப்பில்,</p><p>பள்ளிக்கல்வி இயக்குநராகப் பணிபுரியும் முனைவர் ச.கண்ணப்பன் அவர்கள் 31.07.2026 பிற்பகல் வயது முதிர்வு காரணமாக ஓய்வுபெறுவதால், பள்ளிக்கல்வி இயக்குநரின் பணிகளை கவனிக்கும் பொருட்டு நிர்வாக நலன் கருதி, தற்போது மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநராக பணிபுரியும் திருமதி. ந. லதாஅவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடத்திற்கான முழு கூடுதல் பொறுப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ராமேசுவரம்-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-coach-added-to-rameswaram-tirupati-express-train</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-coach-added-to-rameswaram-tirupati-express-train#comments</comments><guid isPermaLink="false">a89ec958-f74d-4b32-9ad6-5446576974cf</guid><pubDate>Fri, 31 Jul 2026 15:19:25 +0000</pubDate><atom:updated>2026-07-31T15:19:25.449Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Express train,எக்ஸ்பிரஸ் ரெயில்,Additional coach,கூடுதல் பெட்டி இணைப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/4eq7aht3/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/4eq7aht3/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தெற்கு ரெயில்வேயில் அதிகரித்து வரும் பயணிகளின் வசதிக்காக சில எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்பட உள்ளது. இதில் நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்.22667), நாளை (1-ந்தேதி முதல்) வருகிற செப்டம்பர் 29-ந்தேதி வரையிலும், மறுமார்க்கமாக, கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (22668), இன்று (31-ந்தேதி) முதல் செப்டம்பர் 28-ந்தேதி வரையிலும் தற்காலிகமாக ஒரு படுக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைத்து இயக்கப்பட உள்ளது. </p><p>ராமேசுவரம்-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயிலில் (16780), நாளை மறுநாள் (2-ந்தேதி) முதல் செப்டம்பர் 29-ந்தேதி வரையிலும், மறுமார்க்கமாக, திருப்பதி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (16779), ஆகஸ்டு 3-ந்தேதி முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரையிலும் தற்காலிகமாக ஒரு 3-வது வகுப்பு ஏ.சி. பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளது.</p><p>இந்த தகவலை தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை - தமிழக அரசு அறிவிப்பு வெளியீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/direct-admission-of-trainees-in-industrial-training-institutes-tamil-nadu-government-issues-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/direct-admission-of-trainees-in-industrial-training-institutes-tamil-nadu-government-issues-announcement#comments</comments><guid isPermaLink="false">05ce96d1-2a9a-4ab2-96c6-0a83f843004c</guid><pubDate>Fri, 31 Jul 2026 15:13:36 +0000</pubDate><atom:updated>2026-07-31T15:13:36.260Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/s8fwdibh/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/s8fwdibh/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும் 277 தனி யார் நொழிற்பயிற்சி நிலையங்களும் இயங்கி வருகின்றன. இத்தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026–2027 ம் ஆண்டு கலந்தாய்வுக்கான கால அவகாசம் 31.07.2026 உடன் நிறைவடைந்த நிலையில் மாணவர்களின் நலன் கருதி தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் 14.08.2026 வரை வழங்கப்பட்டிருக்கிறது.</p><p>சென்ற ஆண்டுகளில் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களில் 95% பேர் பல முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைாய்ப்பை பெற்றுள்ளனர். தொழிற்சாலைகளில் திறன் பெற்ற தொழிலாளர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.</p><p>இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அதிக அளவில் தொழிற்சாலைகள் உள்ளதாலும், பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் செயல்படுவதாலும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்றவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கிறது.குறைந்த பட்சம் ரூ.20,000 முதல் மாணவர்களின் திறனுக்கேற்றவாறு ரூ.30,000 வரை மாதச் சம்பளம் கிடைக்கிறது.</p><p>எட்டாம் வகுப்பு/ பத்தாம் வகுப்பு முடித்து விட்டு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்கள் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் போதே தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தனித் தேர்வராக தேர்ச்சி பெற்றால் பத்தாம் வகுப்பு/பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழையும் பெறலாம்.</p><p>தொழிற்பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பாலிடெக்னிக்குகளில் இரண்டாமாண்டு டிப்ளமோ படிப்பிலும் சேரலாம். சம்பாதித்துக்கொண்டே மேற்படிப்புகளை தொடரலாம். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் இன்றைய தொழிற்சாலைகளுக்கு தேவையான அனைத்து தொழிற்பிரிவுகளிலும் பயிற்சி வழங்கப்படுவதோடு தொழில் 4.0 உள்ளிட்ட பல நவீன தொழிற்பிரிவுகளிலும் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. </p><p>தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் இல்லை. கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.750/- வழங்கப்படும். அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கு தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டங்களின் கீழ் ரூ.1,000/- கூடுதலாக வழங்கப்படும். தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி, விலையில்லா சீருடை, விலையில்லா மூடூ காலணிகள் (Shoes), விலையில்லா பயிற்சிக்கான கருவிகள், கட்டணமில்லா பேருந்து வசதி ஆகிய அனைத்தும் வழங்கப்படும். குறிப்பிட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் விடுதி வசதியும் உள்ளது.</p><p>இந்த அரிய வாய்ப்பை நன்கு பயன்படுத்தி மாணவர்கள் தாம் விரும்பும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் சென்று தாம் விரும்பும் தொழிற்பிரிவை தெரிவு செய்து தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரலாம் இது தொடர்பாக ஏதேனும் ஐயம் ஏற்படும் நேர்வில் கீழ்காணும் அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.</p><p>அலைபேசி எண் : 9499055642</p><p>வாட்ஸ்அப் எண் : 9499055612”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>உணவு வழங்கல் துறை: 9 கணினி மேலாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் வெங்கடரமணன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-food-supply-minister-venkataramanan-appoints-9-computer-managers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-food-supply-minister-venkataramanan-appoints-9-computer-managers#comments</comments><guid isPermaLink="false">8cf01e94-45e8-44f3-991b-eb31688979bf</guid><pubDate>Fri, 31 Jul 2026 15:12:04 +0000</pubDate><atom:updated>2026-07-31T15:12:04.550Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பணிநியமன ஆணைகள்,appointment orders,has been issued,வழங்கினார்,அமைச்சர் வெங்கடரமணன்,Minister Venkataramanan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/7qj01eoe/jobs.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 9 கணினி மேலாளர்களுக்கு பணிநியமன ஆணை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/7qj01eoe/jobs.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன்  உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையில் கணினி மேலாளர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட 9 நபர்களுக்கு கணினி மேலாளர் பதவிக்கான <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பணிநியமன ஆணைகள்</a> வழங்கும் விழா நடைபெற்றது.</p><h2>பணிநியமன ஆணை</h2><p>உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையில், குடும்ப அட்டைகளை அச்சிட்டு வழங்கும் பணிக்காகவும். குடும்ப அட்டை தொடர்பான தொழில்நுட்பப் பணிகளை மேற்கொள்ளவும். கணினி மயமாக்கப்பட்ட இத்துறையின் சேவைகள் தடையின்றி செயல்படுவதை உறுதி செய்யவும். காலியாக உள்ள 9 கணினி மேலாளர் பணியிடங்களை நிரப்பும்வண்ணம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வின் மூலம் தெரிவு செய்யப்பட்ட பணியாளர்களுக்கான ஒதுக்கீடு ஆணை பெறப்பட்டது. </p><p>அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட 9 நபர்களுக்கு இன்று தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சரால் எழிலகம். இயக்குநர், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.</p><h2>புகார்களுகான தொலைபேசி எண்களை</h2><p>மேலும், நெல் கொள்முதல் மற்றும் உணவுப் பொருள் விநியோகம் தொடர்பான புகார்களுக்கு குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் விவசாயிகள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்,நேரடி கொள்முதல் நிலையங்கள் தொடர்பாக புகார் தெரிவிக்க 1800-599-3540 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.</p><h2>இணையதளம்</h2><p>அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் தொடர்பாக புகார் தெரிவிக்க 1967 அல்லது 1800-425-5901 கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். மேலும் www.tnpds.gov.in என்ற இணையதளம் வழியாகவும் புகார்களை பதிவு செய்யலாம்.</p><h2>குறுஞ்செய்தி</h2><p>நியாயவிலைக் கடையில் உள்ள அத்தியாவசியப் பொருள் இருப்பு விவரங்கள் அறிய பிடிஎஸ் (PDS) 101, நியாயவிலைக் கடையின் நிலை அறிய பிடிஎஸ்  (PDS) 106 மற்றும் போலிப் பட்டியல் / அத்தியாவசியப் பொருட்கள் குறித்த கட்டண தொகை புகார் பிடிஎஸ் (PDS) 107 என்ற குறியீட்டை 8939922990 / 9773904050 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தியாக தங்களது பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிலிருந்து அனுப்பலாம். </p><h2>புகார் அளிக்க எண்கள்</h2><p>மாநில அளவிலான சேவைகளுக்கு 044-28592828 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். அத்தியாவசியப் பொருட்கள் கடத்தல்/ பதுக்கல் தொடர்பாக புகார் அளிக்க 1800-599-5950 / 96777 36557எண்களை தொடர்பு கொள்ளவும்.</p><h2>கைரேகை பதிவு சிறப்பு முகாம்</h2><p>நியாயவிலைக் கடைகளில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%88%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81">கைரேகை பதிவு</a> (eKYC) செய்யப்படாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் கைரேகை விரல் (eKYC) பதிவுசெய்ய வரும் 02.08.2026 அன்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளிலும் சிறப்பு முகாம் நடைபெறும் என்றும், இதுகுறித்து அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் தொலைபேசி எண்ணிற்குக் குறுஞ்செய்தி அனுப்பப்படும் எனவும் இந்த வாய்ப்பினை குடும்ப அட்டைதாரர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அமைச்சர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pocso-case-registered-against-a-young-man-who-married-a-minor-girl</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pocso-case-registered-against-a-young-man-who-married-a-minor-girl#comments</comments><guid isPermaLink="false">42b14c6c-9ae4-44d7-a772-c014c104a141</guid><pubDate>Fri, 31 Jul 2026 15:00:54 +0000</pubDate><atom:updated>2026-07-31T15:00:54.505Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>வாலிபர்,POCSO case,போக்சோ வழக்கு</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/eg9j9few/13.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/eg9j9few/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை,  </p><p>திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய வாலிபருக்கும், திருவண்ணாமலையை சேர்ந்த 17 வயதுடைய சிறுமிக்கும் கடந்த பிப்ரவரி மாதம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்று உள்ளது. தற்போது அந்த சிறுமி கர்ப்பமாக இருக்கிறாள்.</p><p>திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற போது சிறுமிக்கு குழந்தை திருமணம் நடைபெற்றதாக கிடைத்த தகவலின் பேரில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் இதுகுறித்து சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர். மேலும் இந்த குழந்தை திருமணம் நடைபெறுவதற்கு உடந்தையாக இருந்த வாலிபரின் பெற்றோர் மற்றும் சிறுமியின் தாய் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p> ]]></content:encoded></item></channel></rss>