<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 18 Sep 2026 21:36:30 +0000</lastBuildDate><item><title>முல்லை பெரியாறு அணை விவகாரம்: தமிழகத்திடம் இருந்து உரிய பதில் வரவில்லை- கேரள மந்திரி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mullaperiyar-dam-issue-kerala-minister-accuses-tamil-nadu-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mullaperiyar-dam-issue-kerala-minister-accuses-tamil-nadu-government#comments</comments><guid isPermaLink="false">cd12bb65-5548-4e68-9ce8-1fa4cf7ffd7d</guid><pubDate>Fri, 18 Sep 2026 21:35:10 +0000</pubDate><atom:updated>2026-09-18T21:35:10.680Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,முல்லை பெரியாறு அணை,கேரள மந்திரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/s2q73swe/Mullai-periyarr-dam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/s2q73swe/Mullai-periyarr-dam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>திருவனந்தபுரம், </p><p>கேரளம் மாநிலம் கோட்டயத்தில் நீர்வளத்துறை மந்திரி மோன்ஸ் ஜோசப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக தமிழகத்துடன் பேச்சு வார்த்தையை தொடர கேரளம் அரசு விரும்புகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய முதல்-அமைச்சர்கள் மாநாட்டின் போது, முதல்-மந்திரி வி.டி.சதீசனும், தமிழக முதல்-அமைச்சர் விஜய்யும் சிறப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டனர். ஆனால், தமிழகத்திடம் இருந்து இதுவரை உரிய பதில் எதுவும் வரவில்லை. இதனை கேரளம் அரசு தீவிர மாக எடுத்துக்கொள்கிறது.</p> <p>முல்லைப் பெரியாறு விஷயத்தில் கேரளம் மக்களின் பாதுகாப்பைக் கருத் தில் கொண்டு, முல்லைப்பெரியாறில் ஒரு புதிய அணையைக் கட்டுவதே இதற்கான தீர்வு. தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை முழுமையாக வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அவர்களுக்கு தண்ணீர் தேவை. கேரளத்துக்கு மக்களின் பாதுகாப்பு முக்கியமானது.  இரண்டு தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில், இந்த பிரச்சினையில் ஒருமித்த கருத்தை எட்ட முடியுமா? என்பது குறித்து இரு மாநிலங்களும் விவாதிக்கும். நாங்கள் இப்போது உச்ச நீதிமன்றத்தை நம்பி முன்னேறி வருகிறோம். </p><p>அதே நேரத்தில், கேரளத்திற்கு சாதகமான சூழலை உருவாக்கும் பொருட்டு, இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினையை தீர்த்து வைக்க மத்திய அரசை ஒரு மத்தியஸ்தராக கொண்டு வரவும், அதனைச் சம்மதிக்க வைக்கவும் நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர்கள் தொடர்பான வழக்கு தள்ளுபடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-regarding-meenakshi-amman-temple-trustees-dismissed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-regarding-meenakshi-amman-temple-trustees-dismissed#comments</comments><guid isPermaLink="false">a390ec73-b41c-42f4-8bfb-ce5d3c1ae1f8</guid><pubDate>Fri, 18 Sep 2026 21:08:58 +0000</pubDate><atom:updated>2026-09-18T21:08:58.316Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,Meenakshi Amman Temple,மீனாட்சி அம்மன் கோவில்,அறங்காவலர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/c1eraaou/madurai.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/c1eraaou/madurai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை எழுமலையைச் சேர்ந்த கீதாலட்சுமி, மதுரை ஐகோர்ட்டில் தாக் கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தற்போதைய அறங்காவலர் குழுவா னது, அரசியல் கட்சிகளுடன் அதிகம் தொடர்பு கொண்ட நபர்களை கொண்டு அமைக்கப்பட்டு உள்ளது. </p> <p>இது இந்து சமய அறநிலையத்துறையின் சட்டவிதிகளுக்கு முரணானது. அறங்காவலர்களின் நியமனம், அரசியல் கட்சிகளின் விருப்பத்தின் அடிப்படையில் மட்டும் இருக்கக்கூடாது என ஏற்கனவே ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. இதில் பல வழிகாட்டு தல்களையும் வழங்கி இருக்கிறது.அந்த வகையில் மதுரை மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் கோவிலின் அறங்காவலர் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை அரசியல் தலையீடு இன்றி வெளிப்படையாக நியமிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மீனாட்சி அம்மன் கோவிலின் தற்போதைய அறங்காவலர் குழு பதவிக்காலத்தை நீட்டித்ததை எந்த தரப்பினரும் எதிர்க்கவில்லை. அவர்களின் பதவிக்காலம் 2028-ம் ஆண்டு ஜனவரி மாதம்தான் முடிகிறது. அதன்பின்புதான் புதிய அறங்காவலர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.</p><p>இதைபதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர்கள் குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதை எதிர்த்து மனுதாரர் வழக்கு தொடரவில்லை. அரசியல் சார்பற்றவர்களை வெளிப்படை தன்மையோடு நியமிக்குமாறு கோரியிருக்கிறார்.ஆனால் இப்போதைக்கு அறங்காவலர்களின் பதவிக்காலம் முடிய வில்லை. எனவே இந்த மனு முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டதாகவே கருதப்படுகிறது. எனவே இந்த மனுவை தற்போது விசாரிக்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்:-இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-assembly-constituency-by-elections-final-list-of-candidates-to-be-released-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-assembly-constituency-by-elections-final-list-of-candidates-to-be-released-today#comments</comments><guid isPermaLink="false">65c32c40-e64c-48e3-aa67-20e3a6d1e353</guid><pubDate>Fri, 18 Sep 2026 19:06:08 +0000</pubDate><atom:updated>2026-09-18T19:06:08.574Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இடைத்தேர்தல்,By election,வேட்பாளர் பட்டியல்,மதுராந்தகம்,தாராபுரம்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/zzrchhij/Maduranthakam.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மதுராந்தகம், தாராபுரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/zzrchhij/Maduranthakam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தாராபுரம், </p><p>செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதியில் அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இங்கு வேட்பாளர்களாக த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பில் பரந்தா மன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சுகந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமன் உள் ளிட்ட 48 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் 28 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது.</p><h2>தாராரபுரம்</h2><p>அதேபோல் இடைத்தேர்தல் நடைபெறும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் கடந்த 9-ந் தேதி தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தொடங்கியது. கடந்த 16-ந்தேதி வேட்புமனு தாக்கல் முடிந்தது. அதன்படி, த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு மற்றும் நா.த.க. வேட்பாளர்கள் என மொத்தம் 51 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான பரிசீ லனை 17-ந் தேதி நடந்தது.இதில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் சத்தியபாமா, தி.மு.க. வேட்பாளர் சுகன்யா, அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் லட்சுமணன் உள்பட 22 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. மீதமுள்ள 29 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.</p><h2>இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு</h2><p>இன்று (சனிக்கிழமை) மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். எனவே இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. ஏற்கனவே வேட்பாளர்கள் பிரசாரத்தை தொடங்கி விட்ட நிலையில், இனி பிரசாரம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>நீதி கேட்டு போராடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதா? உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/filing-cases-against-those-protesting-for-justice-udhayanidhi-stalin-strongly-condemns-the-move</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/filing-cases-against-those-protesting-for-justice-udhayanidhi-stalin-strongly-condemns-the-move#comments</comments><guid isPermaLink="false">96688f2c-0e9b-4187-b2e6-109da92899dd</guid><pubDate>Fri, 18 Sep 2026 16:49:47 +0000</pubDate><atom:updated>2026-09-18T16:49:47.834Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,Madurai,மதுரை,போராட்டம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/ibivxx3z/Udhayanidhi-stalin.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/ibivxx3z/Udhayanidhi-stalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின்  தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:  மதுரையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவனின் மரணத்துக்கு நீதி கேட்டு போராடிய அவருடைய குடும்பத்தார் மீதே வழக்குப்பதிவு செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.பெற்ற பிள்ளையை இழந்து நீதி கேட்டு போராடினால், வழக்கு போடுவதும், மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் அவரது உறவினரை விசாரணைக்கு வர சொல்லி சம்மன் அனுப்புவதும் எந்த வகையிலும் ஏற்க முடியாதது.</p><h2>மரணத்தில் நடந்தது என்ன?</h2><p>மாணவன் மறைந்து 12 நாட்கள் ஆகியும், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்குப் பதிலாக போராட்டத்தை ஒடுக்குவதிலும் - வழக்குப் பதிவு செய்வதிலும் தான் காவல்துறை குறியாக இருக்கிறது.இந்த பிரச்சினையில் முதலமைச்சர் தலையிட்டு, மாணவன் மரணத்தில் நடந்தது என்ன? அவர் கொலை செய்யப்பட்டாரா? அதற்கு காரணம் யார்? என்பதை எல்லாம் எந்த குறுக்கீடும் இல்லாமல் விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும்.</p> <h2>நீதி கிடைக்க</h2><p>குறிப்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டு குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து உரிய தண்டனையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மரணமடைந்த மாணவனின் குடும்பத்தார் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப்பெற்று, அவர்களுக்கான நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>காவல் துறையினர் என்னிடம் எழுப்பிய 295 கேள்விகளில் 246 கேள்விகளுக்கு பதில் அளித்தேன் - அன்பில் மகேஸ் பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-answered-246-out-of-295-questions-anbil-magesh-interview</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-answered-246-out-of-295-questions-anbil-magesh-interview#comments</comments><guid isPermaLink="false">11b202bc-5286-466d-9a21-1965e2f837aa</guid><pubDate>Fri, 18 Sep 2026 16:07:34 +0000</pubDate><atom:updated>2026-09-18T16:07:34.322Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,அமைச்சர் அன்பில் மகேஸ்,லஞ்ச புகார்,AnbilMahesh</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/cti01k4t/anbilone33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ அன்பில் மகேஸ் ]]></media:title><media:description type="html"><![CDATA[  295 கேள்விகளில் 246 கேள்விகளுக்கு பதில் அளித்தேன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/cti01k4t/anbilone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காவல் துறையினர் என்னிடம் எழுப்பிய 295 கேள்விகளில் 246 கேள்விகளுக்கு பதில் அளித்தேன் என அன்பில் மகேஸ் கூறினார்.</p><p>திமுக ஆட்சியில் தனி யார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி அளவுக்கு லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், முன் னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியி டம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று தீவிர விசாரணை நடத்தினர். </p><p>அன்பில் மகேஷிடம் காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணை மாலை 6 மணியளவில் நிறைவு பெற்றது.  விசாரணையில் பல்வேறு கேள்விகளை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் எழுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  அமைச்சர் அன்பில் மகேஷிடம் 7 மணிநேரத்திற்கு மேலாக நடந்த மத்தியக் குற்றப்பிரிவு  போலீஸ் விசாரணை மேற்கொண்டனர்.</p><p>இந்தநிலையில்,  முன்னாள் அமைச்சர்<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%20"> அன்பில் மகேஸ் </a>பொய்யாமொழி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>செப்.16-ம் தேதியன்று எனது  வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் மத்திய இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இன்றைய விசாரணையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் என்னிடம் 246 கேள்விகள் எழுப்பினர். </p><p>காவல்துறையினர் எழுப்பிய ஒவ்வொரு கேள்விக்கும் நான் பதிலளித்தேன்.  வழக்கு தொடர்புடைய ஆதாரங்கள் எதுவும் சிக்காத நிலையில் என்னை விசாரணைக்கு அழைத்தனர். கேள்விகள் இன்னும் எஞ்சியிருப்பதால் அடுத்தவாரம் மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்புவதாக கூறியுள்ளனர். அரசகுமாரிடம் இதுவரை நான் பேசியதில்லை. இதுசார்ந்து நீங்கள் அவரிடம் தான் கேட்கவேண்டும் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>டெங்கு காய்ச்சல்: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 3 மாணவர்கள் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dengue-fever-3-students-die-at-anna-university-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dengue-fever-3-students-die-at-anna-university-chennai#comments</comments><guid isPermaLink="false">2cebc9fd-559d-45cc-8658-762b17486bc0</guid><pubDate>Fri, 18 Sep 2026 16:03:16 +0000</pubDate><atom:updated>2026-09-18T16:03:16.258Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டெங்கு காய்ச்சல்,Dengue Fever,Anna University,அண்ணா பல்கலைக்கழகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/towomz69/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/towomz69/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகளவில் உள்ளது. வெயில் மற்றும் மழை என காலநிலை மாற்றத்தால், டெங்குவை பரப்பும், 'ஏடிஸ்' வகை கொசுக்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக, மாநிலம் முழுவதும் பரவலாக டெங்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. </p><p>குறிப்பாக தினசரி, 70 முதல் 100 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிகள், மாவட்ட ஆஸ்பத்திரிகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு பிரத்யேக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.</p> <p>தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 244 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் டெங்குவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,577ஆக உயர்ந்துள்ளது. டெங்கு பாதிப்பால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் 87 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>இதனிடையே, சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்து படித்து வரும் மாணவ, மாணவிகள் சிலருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், டெங்கு காய்ச்சலால் அண்ணா பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் 2 பேர் உயிரிழந்த நிலையில், பல்கலைக்கழக வளாகத்திலேயே உள்ள மருத்துவ சிகிச்சை மையத்தில் கடந்த 4 நாட்களாக மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டு வந்த ஹரிஷ்குமார் என்ற மாணவர் இன்று உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பருவமழை: முன்னெச்சரிக்கைப் பணிகள் தொடர்பாக அலுவலர்களுடன் மாநகராட்சி ஆணையாளர் ஆலோசனை..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monsoon-corporation-commissioner-holds-consultation-with-officials-regarding-precautionary-measures</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monsoon-corporation-commissioner-holds-consultation-with-officials-regarding-precautionary-measures#comments</comments><guid isPermaLink="false">59bb4490-87ed-4fe3-aeb4-398e9a39f2de</guid><pubDate>Fri, 18 Sep 2026 15:59:23 +0000</pubDate><atom:updated>2026-09-18T15:59:23.051Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,Corporation Commissioner,சென்னை மாநகராட்சி ஆணையர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/ehpkjsy7/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/ehpkjsy7/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில், சென்னையில் தொடர்ந்து மழை இருப்பதாக தெரிவித்துள்ள இந்திய வானிலை மைய அறிவிப்பின்படி முன்னெச்சரிக்கைப் பணிகள் மேற்கொள்ளுதல் தொடர்பாக அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.</p><h2>வானிலை மையம் எச்சரிக்கை</h2><p>இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>இன்று (18.09.2026) மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில், சென்னையில் தொடர்ந்து மழை இருப்பதாக தெரிவித்துள்ள இந்திய வானிலை மைய அறிவிப்பின்படி முன்னெச்சரிக்கைப் பணிகள் மேற்கொள்ளுதல் தொடர்பாக அலுவலர்களுடனான ஆலோசணைக் கூட்டம் ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.</p><p>இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் பேசும்போது தெரிவித்ததாவது:</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னையில் </a>தொடர்ந்து 5 நாட்களுக்கு மழை இருப்பதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. எனவே, மாநகராட்சி அலுவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பணியாளர்களை தயார் நிலையில் வைத்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து சுரங்கப்பாதைகளிலும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மக்களுக்கு இடையூறின்றி போக்குவரத்து சீராகச் செல்லும் வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மழையினால் விழும் மரங்கள் மற்றும் மரக்கிளைகள் அகற்றுவதற்கான வாகனங்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை தயார் நிலையில் வைத்திட வேண்டும். மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.</p><h2>அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்</h2><p>மழைநீர் தேங்கும் பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மோட்டார் பம்புகளை தயார் நிலையில் வைத்து தேங்கும் மழைநீரை உடனடியாக அகற்றிட வேண்டும். நிவாரண மையங்கள் மற்றும் சமையல் கூடங்களை தயார் நிலையில் வைத்திட வேண்டும். பணியாளர்களை சுழற்சி முறையில் நியமித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். பொது மக்களிடம் இருந்து வரப்பெறும் புகார்கள் மீது உரிய நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ள வேண்டும் என ஆணையாளர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>இக்கூட்டத்தில் இணை ஆணையாளர் (கல்வி) க.கற்பகம், துணை ஆணையாளர் (வருவாய் (ம) நிதி) சித்ரா விஜயன், காணொலிக் காட்சியின் வாயிலாக வட்டார துணை ஆணையாளர்கள் ஸ்வேதா சுமன், (வடக்கு), எச்.ஆர்.கவுஷிக், (மத்தியம்), அதாப் ரசூல், (தெற்கு) மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய்யின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்து சாதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-chief-minister-vijays-instagram-followers-cross-5-million</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-chief-minister-vijays-instagram-followers-cross-5-million#comments</comments><guid isPermaLink="false">436d5780-0b68-4346-9f9b-bf864e8a0e8d</guid><pubDate>Fri, 18 Sep 2026 15:45:22 +0000</pubDate><atom:updated>2026-09-18T15:45:22.172Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இன்ஸ்டாகிராம்,Instagram,Followers,சாதனை,50 லட்சம்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/o36g6hm6/cmvijayinsta.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய்யின் இன்ஸ்டாகிராம்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய்யின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்து சாதனை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/o36g6hm6/cmvijayinsta.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக முதல்-அமைச்சர் விஜய், சமூக வலைத்தளங்களிலும் புதிய சாதனை படைத்து வருகிறார். அவரது அதிகாரப்பூர்வ <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D">இன்ஸ்டாகிராம்</a> பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை தற்போது 50 லட்சத்தை (5 மில்லியன்) கடந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.</p> <h2>4 லட்சமாக மட்டுமே இருந்தது</h2><p>தமிழக முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்பதற்கு முன்பு, தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D">முதல்-அமைச்சர் </a>இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை சுமார் 4 லட்சமாக மட்டுமே இருந்தது. அவர் பதவியேற்ற பிறகு இந்த எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்து, தற்போது 5 மில்லியனை (50 லட்சம்) கடந்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.</p><h2>சமூக வலைத்தளத்தில் சாதனை</h2><p>திரையுலகில் இருந்து அரசியல் களம் புகுந்து, தற்போது தமிழகத்தின் முதல்-அமைச்சராக மக்கள் பணியாற்றி வரும் விஜய், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் பொதுமக்களுடனும், தனது கட்சி தொண்டர்களுடனும் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார். அவரது அரசு அறிவிப்புகள், மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடனுக்குடன் வெளியிடப்பட்டு வருகின்றன.</p><h2>ரசிகர்கள், தொண்டர்கள் உற்சாகம்</h2><p>இந்த நிலையில், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்து, 50 லட்சம் என்ற  இலக்கை எட்டியுள்ளது. இதனை அவரது ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் சமூக வலைத்தளங்களில் விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள். </p> ]]></content:encoded></item><item><title>எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/corporation-commissioner-inspects-egmore-government-maternity-hospital</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/corporation-commissioner-inspects-egmore-government-maternity-hospital#comments</comments><guid isPermaLink="false">37d1f063-898d-4242-8399-4d7183355f34</guid><pubDate>Fri, 18 Sep 2026 15:44:43 +0000</pubDate><atom:updated>2026-09-18T15:44:43.093Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai Corporation,Egmore,எழும்பூர்,அரசு மருத்துவமனை,Chennai Egmore,மாநகராட்சி ஆணையர்,Government Hospitals</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/i0kbw88k/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/i0kbw88k/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் எழும்பூர், அரசு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். </p><h2>மருத்துவமனையில் ஆய்வு</h2><p>இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>இன்று (18.09.2026) பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் எழும்பூர், அரசு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.</p><p>இம்மருத்துவமனையில் தமிழ்நாடு முதல்-அமைச்சரின், தாய்மாமன் தங்க மோதிர திட்டம் செயல்பாட்டிற்கான தங்க மோதிரங்கள் வைக்கும் பாதுகாப்புப் பெட்டகம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள், தாய்மார்கள் பாலூட்டும் அறை உள்ளிட்ட தாய்மார்களுக்கான வசதிகள் குறித்துப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.</p><p>இதன் தொடர்ச்சியாக, ரிப்பன் கட்டட அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கீழ்காணும் முன்னேற்பாட்டு செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.</p><h2>அலுவலர்களுக்கு ஆலோசனை</h2><p>பாதுகாப்பான சேமிப்பு, கணக்கு பராமரிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றுக்காக, 19 பிரசவ மையங்களும் 4 மையங்களுடன் (Hub) இணைக்கப்பட்டுள்ளன. 19 நகர்ப்புற சமுதாய நல மையங்கள், பதிவு, சரிபார்ப்பு மற்றும் பயனாளிகளை ஒருங்கிணைத்தல், தொடர்புடைய மையங்களுடன் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்துதல்.</p><p>பிரசவங்கள் நடைபெறும் CEmONC மையங்களை அலுவலர்கள் ஆய்வு செய்த நடவடிக்கைகள். அனைத்து அரசு பிரசவங்கள், புறநகர் மரூத்துவமனைகள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் நடைபெற்ற பிரசவங்களின் Parturition Register/பிரசவப் பதிவேடு பெறப்பட்டு சரிபார்க்கப்பட்ட விவரம். பயனாளிகள் எண்ணிக்கை தயார் செய்யும் நடவடிக்கைகள். மையம் (Hub) மற்றும் கிளை (Spoke) மையங்களில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தளவாடங்கள் (Infrstructure &amp; Logistics) சரிபார்த்தல் விவரம் உள்ளிட்ட தொடர்புடைய முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து ஆணையாளர் ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.</p><p>இந்த ஆய்வின்போது, எழும்பூர், அரசு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் டாக்டர் குப்புலட்சுமி, மாநகர நல அலுவலர் டாக்டர் எம். ஜெகதீசன் மற்றும் மருத்துவ அலுவலர்கள் உடனிருந்தனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் களைகட்டிய பேஷன் ஷோ: சிறப்பு அழைப்பாளர்களாக ஆதவன் ஆதித்தன்-சம்யுக்தா பங்கேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fashion-show-in-chennai-comes-alive-athavan-adhithan-and-samyuktha-participate-as-special-guests</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fashion-show-in-chennai-comes-alive-athavan-adhithan-and-samyuktha-participate-as-special-guests#comments</comments><guid isPermaLink="false">2155c3aa-e247-4816-bb40-dddf6be140c2</guid><pubDate>Fri, 18 Sep 2026 15:35:26 +0000</pubDate><atom:updated>2026-09-18T15:35:26.503Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,பேஷன் ஷோ,fashion show</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/5t90nst5/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/5t90nst5/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் டைம்ஸ் ஆங்கில நாளிதல் நிறுவனத்தின் சார்பில் பேஷன் ஷோ நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. பிரபல ஆடை வடிவமைப்பாளர் ரகானே தயாரித்த ஆடைகளை அணிந்தபடி மாடல்கள் மேடையில் ரேம்ப் வாக் சென்றனர்.  </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/hipxb1kk/State-07.jpg" /></figure><p>இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பல்வேறு நகரங்களைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக தினத்தந்தி குழும இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன், அவரது மனைவியும் 'நேச்சுரல்லி லைஃப்' (Naturealle Life) நிறுவனருமான சம்யுக்தா ஆகியோர் பங்கேற்றனர். </p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/yiUImDzGmwY"></iframe></figure>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம்-தாராபுரம் இடைத்தேர்தல்: பாமக ஆதரவு யாருக்கு? அன்புமணி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madhurantakam-dharapuram-by-election-who-will-pmk-support-important-announcement-made-by-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madhurantakam-dharapuram-by-election-who-will-pmk-support-important-announcement-made-by-anbumani#comments</comments><guid isPermaLink="false">87e3324e-b5bd-4ef2-9332-dbafa07f1239</guid><pubDate>Fri, 18 Sep 2026 15:33:53 +0000</pubDate><atom:updated>2026-09-18T15:33:53.497Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,Anbumani Ramadas,இடைத்தேர்தல்,மதுராந்தகம்,தாராபுரம்,பாமக அன்புமணி ராமதாஸ்,By-election,Madhuranthakam,Dharapuram</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/e0k9tk01/anbumani.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/e0k9tk01/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு என்பது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.</p><h2>5 முனை போட்டி</h2><p>மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது. த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க.. நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாமக அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது. </p><p>தற்போது நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் அதிமுக பாமக-வின் ஆதரவை எதிர்பார்த்து இருந்து வந்தது. இந்த நிலையில் பாமக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/anbumani-ramadass">அன்புமணி ராமதாஸ்</a> இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு என்பது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். </p><p>அதில் அவர் கூறியிருப்பதாவது:-தமிழ்நாட்டில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் நாள் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுவதில்லை என்று ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு விட்டது. </p><h2>எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை...</h2><p>இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது பற்றி பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள், மற்றும் இரு தொகுதிகள் அடங்கிய மாவட்டங்களின் நிர்வாகிகளுடன் நடத்திய கலந்தாய்வுகளின் முடிவில், எந்தக் கட்சிக்கும் ஆதரவளிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் வேண்டாம் - உதயநிதி ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-navodaya-schools-in-tamil-nadu-udayanidhi-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-navodaya-schools-in-tamil-nadu-udayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">c65a4c9c-e57b-42d1-bee6-7b7db7ad7ccb</guid><pubDate>Fri, 18 Sep 2026 15:12:11 +0000</pubDate><atom:updated>2026-09-18T15:12:11.906Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,All over Tamil Nadu,தமிழ்நாட்டில்,வேண்டாம்,நவோதயா பள்ளிகள்,Navodaya Vidyalaya</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/br62kbgf/udhyanithi.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/br62kbgf/udhyanithi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் வேண்டாம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளர். இது தொடர்பாக, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">உதயநிதி ஸ்டாலின்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><h2>தனித்தன்மையுடன் இயங்குகிறது</h2><p>நவோதயா பள்ளிகளை தமிழ்நாட்டில் அனுமதிப்பது தொடர்பான வழக்கில், "தமிழ்நாடு, இந்திக்கு எதிரான தனது மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்; மாநிலங்கள் தனி நாடுகளாக இயங்க முடியாது" என்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">சுப்ரீம் கோர்ட்டு</a> கருத்து தெரிவித்திருக்கிறது. இந்த நேரத்தில், நாங்கள் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறோம். இந்தி உள்ளிட்ட எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை. தமிழ்நாடு தனி நாடாக இயங்கவில்லை; தனித்தன்மையுடன் இயங்குகிறது.</p><h2>வேற்றுமையில் ஒற்றுமை</h2><p>இந்தியை திணிப்பதுதான் தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து தனித்தீவாக அந்நியப்படுத்தும். 'வேற்றுமையில் ஒற்றுமை' என்பதை மதித்து, அந்தந்த மாநிலங்கள் தங்களுக்கு விருப்பமான மொழி கொள்கையை பின்பற்ற அனுமதிப்பதே இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு மேலும் வலிமை சேர்ப்பதாக அமையும்.</p> <h2>நாட்டுப்பற்று</h2><p>இந்திய–சீன போர்', 'வங்கதேச விடுதலை போர்', 'கார்கில் போர்', 'குஜராத் நிலநடுக்கம்' என நம் நாடு சந்தித்த ஒவ்வொரு இக்கட்டான சூழலிலும், தமிழர்கள் தங்களுடைய நாட்டுப்பற்றை வேறெந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும் குறைவில்லாத வகையில் வெளிப்படுத்தியுள்ளனர்.</p> <h2>இந்தி மொழி திணிப்பு வேண்டாம்</h2><p>எனவே, 'இந்தி மொழி திணிப்பு வேண்டாம்' என்று கூறுவதாலேயே தமிழர்கள் தனி நாடாக இயங்குவதாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்தியை கற்பதற்கும் நாட்டுப்பற்றுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இருமொழி கொள்கையை பின்பற்றும் தமிழ்நாடுதான் அனைத்து துறைகளிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. </p> <h2>முதலிடம் வகிக்கிறது</h2><p>உயர்கல்வி சேர்க்கையில் முதலிடம் வகிக்கிறது. நாட்டிலேயே தொழிற்சாலைகளில் பெண்கள் அதிகம் பணிபுரியும் மாநிலமாக திகழ்கிறது. நோபல் விருதாளர்கள் முதல் இஸ்ரோவின் முன்னணி அறிவியலாளர்கள் வரை, இந்தி தெரியாமலேயே தமிழர்கள் சாதனைகளை படைத்துள்ளனர்.</p><h2>வளர்ச்சி இன்ஜின்</h2><p>எனவே, இந்தி தெரியாததால் தமிழ்நாடு எந்தவிதத்திலும் பின்னடைவை சந்திக்கவில்லை; மாறாக, தமிழ்நாடு மற்ற மாநிலங்களை காட்டிலும் சிறப்பான வளர்ச்சியை எட்டியிருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சி இன்ஜினாக தமிழ்நாடு விளங்குகிறது.</p><h2>தரமான கல்வி வழங்கப்பட்டுவருகிறது</h2><p>நவோதயா பள்ளிகளை அனுமதிப்பது தொடர்பான வழக்கில், முந்தைய திராவிட மாடல் அரசின் சார்பில் உறுதியான வாதங்களை எடுத்து வைத்தோம். அரசியலமைப்பு சட்டத்தில், கல்வி ஒத்திசைவு பட்டியலில்  இடம் பெற்றுள்ளதால், மத்திய அரசின் கொள்கைகளை அப்படியே நிறைவேற்ற வேண்டிய தேவையில்லை. தமிழ்நாட்டில் ஏற்கனவே மாதிரி பள்ளிகள் எனும் உண்டு-உறைவிட பள்ளிகள் மூலமாக அனைத்து மாவட்டங்களிலும் பின்தங்கிய ஏழை, எளிய மாணவர்களுக்குத் தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது.</p><h2>நவோதயா பள்ளிகள்</h2><p>அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தேசிய அளவிலான நுழைவு தேர்வுகளிலும் சிறந்த முறையில் வெற்றிபெற்று, நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுவருகின்றனர். இந்நிலையில், நவோதயா பள்ளிகளுக்காக தனியாக இடம் ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை. நவோதயா பள்ளிகளுக்கு அளிக்கும் நிதி நிலையை தமிழ்நாடு அரசிடம் அளித்தால், தற்போது நம்மிடம் உள்ள கட்டமைப்பை கொண்டே சிறப்பாக செயல்பட முடியும்.</p><h2>3,548 கோடி நிலுவை தொகை</h2><p> மேலும், மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ளாத காரணத்தாலேயே, 'சமக்ர சிக்ஷா' திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய 3,548 கோடி ரூபாயை மத்திய அரசு நிலுவையில் வைத்துள்ளது. தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு, அந்த நிதியை விடுவிக்க வேண்டும் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தோம்.</p><h2>மகிழ்ச்சியளிக்கிறது</h2><p>தற்போது அந்த வழக்கில், தமிழ்நாட்டில் புதிதாக அமைந்துள்ள அரகம் நமது இருமொழி கொள்கையை பின்பற்றி, நவோதயா பள்ளிகளை தமிழ்நாட்டில் அனுமதிக்க தேவையில்லை என்பதை தெரிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த நிலைப்பாட்டில், தற்போதைய அரசு தொடர்ந்து உறுதியான வாதங்களை எடுத்து வைத்திட வேண்டும். </p><h2>தனி தீர்மானம்</h2><p>மேலும், தேவை எழுந்தால் உடனடியாக சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரை கட்டி, நவோதயா பள்ளிகளை தமிழ்நாட்டில் அனுமதிக்க முடியாது எனும் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை வலியுறுத்தி, தனி தீர்மானம் இயற்றிட வேண்டும் என் கேட்டுக்கொள்கிறேன்.</p> <h2>தடுத்து நிறுத்துவோம்!</h2><p>பேரறிஞர் அண்ணாவால் இம்மண்ணில் விதைக்கப்பட்ட இருமொழி கொள்கையை, அரசியல் வேறுபாடுகளை கடந்து சுப்ரீம் கோர்ட்டில் நிலைநாட்டுவோம்! மும்மொழி கொள்கையை திணிக்கும் நவோதயா பள்ளிகளை தடுத்து நிறுத்துவோம்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காவிரி நீர் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அவசர மனு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-water-issue-tamil-nadu-government-files-urgent-petition-in-supreme-court</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-water-issue-tamil-nadu-government-files-urgent-petition-in-supreme-court#comments</comments><guid isPermaLink="false">ef2e19ba-522b-4a32-97d6-43372c4a8334</guid><pubDate>Fri, 18 Sep 2026 14:26:25 +0000</pubDate><atom:updated>2026-09-18T14:26:25.842Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,சுப்ரீம் கோர்ட்டு,காவிரி நீர்,Tamil Nadu Government,தமிழக அரசு,Petition,மனு,Cauvery Water Issue</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/vx7q045h/supreme-court.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சுப்ரீம் கோர்ட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/vx7q045h/supreme-court.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறந்து விட உத்தரவிடக்கோரி <a href="https://www.dailythanthi.com/topic/supreme-court">சுப்ரீம் கோர்ட்</a>டில் தமிழக அரசு அவசர மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.</p><h2>நடவடிக்கை</h2><p>அந்த மனுவில், ஏற்கனவே பலமுறை அறிவுறுத்தியும் உரிய நீரை வழங்காத கர்நாடகா அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போதிய நீர்வரத்து இருக்கும் போதோ அல்லது அணைகள் நிரம்பி வழியும் போது மட்டுமே கர்நாடகா தண்ணீரை திறக்கிறது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தால் 4 முறை பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை கர்நாடகா பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். </p><p> "உரிய நீரை வழங்காத கர்நாடகா அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய 16.01 டி.எம்.சி. நீரை திறந்தவிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தற்போது மேட்டூர் அணையில் உள்ள நீர் 30 முதல் 35 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவின் பேரில் கர்நாடக அரசு போதுமான நீரை திறந்து விடாத நிலையில், தமிழக அரசு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சேலம்: கரூப்பூர் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி வி.சி.க.வினர் சாலை மறியல் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-vck-members-stage-a-road-blockade-demanding-the-removal-of-the-karuppur-toll-plaza</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-vck-members-stage-a-road-blockade-demanding-the-removal-of-the-karuppur-toll-plaza#comments</comments><guid isPermaLink="false">58f10d2e-a504-4672-89a0-ec506f9d86a4</guid><pubDate>Fri, 18 Sep 2026 14:23:47 +0000</pubDate><atom:updated>2026-09-18T14:23:47.323Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,Salem,சேலம்,VCK,சாலை மறியல்,வி.சி.க.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/c69egwlg/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/c69egwlg/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம் மாவட்டம் கரூப்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் சுங்கச்சாவடியின் உரிமம் காலாவதி ஆகிவிட்டதாகவும், உள்ளூர் மக்களுக்கான சலுகைக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், கரூப்பூர் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் இன்று சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. </p><p>ஓமலூர் தொகுதி வி.சி.க. மாவட்ட செயலாளர் சாம்ராய் குரு தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர், டோல்கேட் சுங்கச்சாவடியின் இருபுற சாலைகளிலும் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் உடன்பாடு ஏற்படாததால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.</p>]]></content:encoded></item><item><title>பெண் தலைவர்களுக்கு எதிரான அவதூறு பிரசாரத்தை உடனடியாக நிறுத்துங்கள் - கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/stop-defamation-campaign-against-women-leaders-immediately-communist-demands</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/stop-defamation-campaign-against-women-leaders-immediately-communist-demands#comments</comments><guid isPermaLink="false">4483e319-f98f-4095-8018-b8ab626f2534</guid><pubDate>Fri, 18 Sep 2026 14:22:11 +0000</pubDate><atom:updated>2026-09-18T14:22:11.144Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பெண்,women,insistence,வலியுறுத்தல்,Communist,அவதூறு கருத்து,கம்யூனிஸ்ட் கட்சி,நிறுத்துங்கள்,அரசியல் கட்சிகளின் தலைவர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/8awoin9a/miruthula.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மிருதுளா,பெ.சண்முகம்]]></media:title><media:description type="html"><![CDATA[ பெண் தலைவர்களுக்கு எதிரான அவதூறு பிரசாரத்தை உடனடியாக நிறுத்துங்கள் - கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/8awoin9a/miruthula.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சமூக வலைதளங்களில் சி. மிருதுளாவை ஆபாசமாகவும், அச்சுறுத்தும் வகையிலும் பதிவிடுவோர்கள் மீது  மீது  நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்</a> தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.</p><p>இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>கண்டனம்</h2><p>இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் மற்றும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டக்குழு உறுப்பினருமான சி. மிருதுளா சமூக வலைதளத்தில் அளித்த பேட்டியை குறிப்பிட்டு அவரை இழிவு செய்யும் மற்றும் அச்சுறுத்தும் வகையில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">சமூக வலைதளத்தில் </a>தொடர்ந்து பதிவிட்டு வருவதை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வன்மையாக கண்டிக்கிறது.</p><h2>இழிசெயலாகும்</h2><p>கடந்த 10 தினங்களாக ஆணாதிக்க, சாதிய வன்மங்களுடன் சி. மிருதுளா சமூக வலைதள பக்கங்களில் தாக்கப்பட்டு வருகிறார். இது கருத்துரிமை மற்றும் போராட்ட நடவடிக்கையை ஒடுக்கும் பிற்போக்கு கருத்தியலை நோக்கமாக கொண்ட இழிசெயலாகும்.</p><h2>ஆபாச சித்தரிப்பு</h2><p>எனவே, உடனடியாக தமிழ்நாடு காவல்துறை தலையீடு செய்வது அவசியம். சமூக வலைதளங்களில் தனிநபர்கள் மீதும், சி. மிருதுளா போன்ற மாநில தலைவர் பொறுப்புகளில் உள்ள பெண்கள் மீதும் நடைபெறும் ஆபாச சித்தரிப்புகளையும், வன்மம் கொண்ட வார்த்தைகளையும் பதிவு செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் மாநில செயற்குழு தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வாகன ஓட்டிகளே உஷார்... நிலுவை இ-சலான்களை செலுத்த சிறப்பு ஏற்பாடு!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/motorists-beware-special-arrangement-to-pay-pending-e-challans</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/motorists-beware-special-arrangement-to-pay-pending-e-challans#comments</comments><guid isPermaLink="false">8d9dd2f0-53f0-4364-b4d4-d20d4dc7bc59</guid><pubDate>Fri, 18 Sep 2026 13:35:07 +0000</pubDate><atom:updated>2026-09-18T13:35:07.320Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Motorists,வாகன ஓட்டிகள்,அபராதம்,சிறப்பு ஏற்பாடு,Special arrangement</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/j6wamb5z/police-fine.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/j6wamb5z/police-fine.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கு கண்காணிப்பு கேமரா மூலம் அபராதம் விதிக்கப்படுகிறது.</p><h2>அபராத தொகை</h2><p>ஹெல்மெட் இல்லாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டி செல்வது, செல்போன் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டுவது மற்றும் லைசென்ஸ் இல்லாமலும், மது அருந்திவிட்டு வாகனங்கள ஓட்டுவதற்காகவும் போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கின்றனர். தானியங்கி எண் பலகை கண்டறிதல் கேமராக்கள் மற்றும் போக்குவரத்து ஒழுங்குமுறை கண்காணிப்பு அமைப்பு போன்றவை மூலம் உருவாக்கப்பட்ட மின் சலான்கள் பற்றி பல வாகன ஓட்டிகளுக்கு தெரியவில்லை. அதனால் அபராத தொகை செலுத்தப்படாமல் நிலுலையில் உள்ளது.</p><p>பல வாகன ஓட்டிகளுக்கு தங்களுக்கு விதிக்கப்பட்ட <a href="http://dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">அபராதம்</a> என்னவென்று தெரியாமல் இருந்து வருகிறார்கள். சென்னையில் பல கோடி ரூபாய் அபராத நிலுவைத் தொகை உள்ளது. இதனை வசூலிக்க போக்குவரத்து போலீசார் புதிய திட்டத்தை வகுத்துள்ளனர்.</p><h2>விழிப்புணர்வு</h2><p>போக்குவரத்து விதி மீறலுக்காக விதிக்கப்பட்டு நிலுவையில் உள்ள மின் சலான்களை வாகன ஓட்டிகள் சரிபார்த்து செலுத்துவதற்கு உதவ சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை நகரம் முழுவதும் 15 சிறப்பு அழைப்பு மையங்களை அமைத்து வசூலிக்க திட்டமிட்டுள்ளது. வருகிற 21-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை இந்த மையங்கள் செயல்படும். இந்த மையங்கள் 10 நாட்களும் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படும். காவல்துறையினர் வாகன ஓட்டிகளை தொடர்பு கொண்டு நிலுவையில் உள்ள சலான்கள் பற்றி தெரிவிப்பார்கள். மொத்தமாக எஸ்.எம்.எஸ். விழிப்புணர்வுகளை அனுப்புவார்கள். </p><h2>அவகாசம்</h2><p>தொலைபேசி அல்லது நேரில் விவரங்களை கேட்பவர்களுக்கு தகவல்கள் வழங்கப்படும். வாகன ஓட்டிகள் நிலுவையில் உள்ள சலான்களை ஆன்லைனில் சரி பார்த்து ஆன்லைன் போர்ட்டல்கள், பேடிஎம், தபால் நிலையங்கள் மற்றும் மின் சேவை மையங்கள் மூலம் செலுத்தலாம். மது போதையில் வாகனம் ஓட்டியதற்கான அபராதங்களை நீதிமன்றம் மூலமாக செலுத்த வேண்டும். வாகன ஓட்டிகள் நிலுவையில் உள்ள செலான்களை சரி பார்த்து அபராதத்தை செலுத்த ஒரு வாரம் அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. </p><p>போக்குவரத்து போலீசார் அமைத்துள்ள 15 மையங்கள் விவரம் வருமாறு:</p><p>1 அயனாவரத்தில் உள்ள ஐ.சி. எப். அனெக்ஸ் போலீஸ் பூத்</p><p>2) ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமி போலீஸ் பூத்</p><p>3) அபிராமபுரத்தில் உள்ள கிரீன்வேஸ் சந்திப்பு போலீஸ் பூத்</p><p>4) அண்ணா சாலையில் உள்ள டவர் க்ளாக் சந்திப்பு போலீஸ் பூத்</p><p>5) அண்ணா நகர் சுழற்சி</p><p>6)  அண்ணா ஆர்.சி. போக்குவரத்து போலீஸ் பூத்</p><p>7) மதுரவாயல் போக்குவரத்து போலீஸ் நிலையம்</p><p>8) மாதவரம் போக்குவரத்து காவல் நிலையம்</p><p>9) பூக்கடை போலீஸ் நிலையம்</p><p>10) வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையம்</p><p>11) புளியந்தோப்பு போலீஸ் நிலையம்</p><p>12) மாம்பலம் போலீஸ் நிலையம்</p><p>13) அடையாறு போலீஸ் நிலையம்</p><p>14) கத்திப்பாரா மேம்பா லத்தின் கீழ் உள்ள போக்கு வரத்து மவுண்ட் சப் டிவிஷன் வளாகம்</p><p>15) வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவ லகத்தில் உள்ள தலைமையகம்.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: பரப்புரையை 24ம் தேதி தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-by-elections-edappadi-palaniswami-to-begin-campaigning-on-the-24th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-by-elections-edappadi-palaniswami-to-begin-campaigning-on-the-24th#comments</comments><guid isPermaLink="false">6e66e6ae-3346-4f9b-9f1d-ff5ee934dd32</guid><pubDate>Fri, 18 Sep 2026 13:24:27 +0000</pubDate><atom:updated>2026-09-18T13:24:27.947Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,எடப்பாடி பழனிசாமி,அதிமுக,Edappadi Palaniswami,Election,இடைத்தேர்தல்,மதுராந்தகம்,தாராபுரம்,Maduranthakam,Dharapuram</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/3zmg89yu/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/3zmg89yu/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையை வரும் 24ம் தேதி தொடங்குகிறார்.</p><h2>எடப்பாடி பழனிசாமி பிரசாரம்</h2><p>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரசார சுற்றுப் பயணத்தின் விவரத்தை அதிமுகவின் தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் 6.10.2026 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 24.9.2026 முதல் 3.10.2026 வரை, கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு, கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.</p><h2>பிரசாரம் மேற்கொள்ளும் தொகுதி</h2><p><strong>மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி :</strong> 24.9.2026, 25.9.2026, 3.10.2026</p><p><strong>தாராபுரம் சட்டமன்றத் தொகுதி :</strong> 27.9.2026, 28.9.2026, 2.10.2026</p><h2>விரைவில் வழித் தடங்கள் அறிவிப்பு</h2><p>'கழகப் பொதுச் செயலாளர்' சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கும் வழித் தடங்கள் குறித்த விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.</p><p>சுற்றுப் பயணத் திட்டத்திற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும், சம்பந்தப்பட்ட தொகுதியைச் சேர்ந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தேர்தல் </a>பணிக்குழு பொறுப்பாளர்கள், சிறப்பான முறையில் செய்திடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சீமைக் கருவேல மரங்களை அகற்ற நிதியை விடுவிக்க வேண்டும் - வைகோ தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/funds-must-be-released-to-remove-seemai-karuvelam-trees-high-court-orders-tamil-nadu-government-in-case-filed-by-vaiko</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/funds-must-be-released-to-remove-seemai-karuvelam-trees-high-court-orders-tamil-nadu-government-in-case-filed-by-vaiko#comments</comments><guid isPermaLink="false">89626c72-8a7e-4386-b2ea-7c98c558ecef</guid><pubDate>Fri, 18 Sep 2026 13:21:55 +0000</pubDate><atom:updated>2026-09-18T13:21:55.014Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வைகோ,ஐகோர்ட்டு,தமிழக அரசு,Chennai High Court</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/h42qqxor/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/h42qqxor/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய சீமைக் மரங்களை அகற்றுவதற்கான பணிக்காக மாவட்ட கனிம நிதியை பயன்படுத்த வேண்டும். அதற்காக கனிம நிதியில் இருந்து ரூ.5 கோடியை உடனடியாக ஒதுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு கோர்ட்டு உத்தரவிட்டுருந்தது. </p><p>இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சதீஷ் குமார், நீதிபதி ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில அறிக்கை தாக்கல் செய்த கூடுதல் தலைமை வழக்கறிஞர், “சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கு கனிம நிதியை விடுவிப்பது தொடர்பாக மாவட்ட குழுக்களுடைய ஒப்புதலை பெற்று நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிதியின் பயன்பாடு தொடர்பாக சில கட்டுப்பாடுகள் உள்ளதால், நிதியை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.</p><p>அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த வைகோ தனது தரப்பு வாதத்தின்போது, “சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவு பிறப்பித்த ஐகோர்ட்டுக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஐகோர்ட்டின் உத்தரவுகள் தீவிரமாக அமல்படுத்தப்படுகிறதா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ள மாவட்ட வாரியாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை விடுத்தார். </p><p>இதை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “சீமைக் கருவேல மரங்களை அகற்ற கனிம நிதியை பயன்படுத்துவதற்கு எந்த ஒரு தடையும் இருப்பதாக இந்த நீதிமன்றம் கருதவில்லை. அதனால் விதிகளை காரணம் காட்டி நிதியை விடுவிப்பதில் தாமதம் ஏற்படுத்தக் கூடாது. இன்னும் இரண்டு வாரங்களில் இந்த நிதியை விடுவிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் நீர்நிலைகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தி, இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 9-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். </p>]]></content:encoded></item><item><title>ரூ.100 கோடி லஞ்ச வழக்கு:  அன்பில் மகேஷிடம் 7 மணி நேரம் நடைபெற்ற விசாரணை நிறைவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-100-crore-bribery-case-7-hour-interrogation-of-anbil-mahesh-concludes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-100-crore-bribery-case-7-hour-interrogation-of-anbil-mahesh-concludes#comments</comments><guid isPermaLink="false">e0c20d96-c901-4ec7-8823-978b6524ac3a</guid><pubDate>Fri, 18 Sep 2026 12:55:46 +0000</pubDate><atom:updated>2026-09-18T12:55:46.368Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,சென்னை,police,அன்பில் மகேஷ்,மத்திய குற்றப்பிரிவு போலீசார்,லஞ்ச புகார்,anbil magesh</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/kwgg7vxa/makesh33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
ரூ.100 கோடி லஞ்ச வழக்கு]]></media:title><media:description type="html"><![CDATA[ விசாரணை நிறைவு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/kwgg7vxa/makesh33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் 7 மணிநேரத்திற்கு மேலாக நடந்த மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணை நிறைவு பெற்றது. </p><p>சென்னை தியாகராயநகரில் செயல்படும் தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகார் மனுவில், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுதருவதாக கூறி, ரூ.100 கோடி வரை பணம் வசூலித்து மோசடி நடந்துள்ளது என்றும், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.</p><h2>திருமண மண்டபத்தில் வைத்து பணம் வசூல்</h2><p>இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். தி.மு.க. பிரமுகரான பி.டி.அரசகுமாரும், அவரது உறவினர்களான ஆரோக்கியராஜ், சுரேஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். பி.டி.அரசகுமார் தனியார் பள்ளிகளின் சங்க நிர்வாகிகளை சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் வைத்தும், போரூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைத்தும் சந்தித்து, பணம் வசூலித்ததாக தெரியவந்தது.</p><p>அதன் அடிப்படையில்தான் அவர் கைது செய்யப்பட்டார். அவர் குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில், இதுவரை 177 பேர் புகார் கொடுத்துள்ளனர். 250 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 61 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. இந்த வழக்கில் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாரை போலீசார் தேடிவருகிறார்கள்.</p><h2>அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது வழக்குப்பதிவு</h2><p>அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும் 'லுக்-அவுட்' நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தற்போது, லஞ்ச ஊழல் வழக்காக மாற்றப்பட்டுள்ளது. திமுக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF">அன்பில் மகேஷ் பொய்யாமொழி</a> மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.</p><p>இதனையடுத்து நேற்று முன்தினம் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு தொடர்புடைய இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை, திருச்சியில் 9 இடங்களில் சோதனை நடத்தினார்கள். இதில் சொத்து ஆவணங்கள், வங்கி விவரங்கள், காசோலைகள் ஆகியவற்றுடன் சேர்த்து வழக்கு சம்பந்தமாக 118 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 18 செல்போன்கள், 3 மடிக்கணி னிகள், 8 பென்டிரைவ் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.</p><h2>விசாரணை நிறைவு</h2><p>சோதனை முடிவில் 18-ந்தேதி (அதாவது இன்று) விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு போலீசார் சம்மன் வழங்கி சென்றனர். போலீசாரின் சம்மனின்படி வழக்கு விசாரணைக்காக சென்னை வேப்பேரியில் உள்ள மத்தியக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் அன்பில் மகேஷ் ஆஜரானார். </p><p>அன்பில் மகேசிடம் காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணை மாலை 6 மணியளவில் நிறைவு பெற்றது.  விசாரணையில் பல்வேறு கேள்விகளை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் எழுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.    அமைச்சர் அன்பில் மகேஷிடம் 7 மணிநேரத்திற்கு மேலாக நடந்த</p><p>மத்தியக் குற்றப்பிரிவு  போலீஸ் விசாரணை நிறைவு பெற்றவுடன் வெளியே வந்து காரில் ஏறி புறப்பட்டு சென்றார் அன்பில் மகேஸ். </p><p>தனியார் பள்ளிகளுக்கு அனுமதி, அங்கீகாரம் பெற்றுத்தருவதாக ரூ.100 கோடி வரை வசூலித்து மோசடி என மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>முதல்வர் மருந்தக பெண் ஊழியர் கத்திக்குத்து: “சட்டம்-ஒழுங்கை சீரழிக்கும் தவெக அரசு” - கனிமொழி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-ministers-pharmacy-employee-stabbed-the-government-is-destroying-law-and-order-kanimozhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-ministers-pharmacy-employee-stabbed-the-government-is-destroying-law-and-order-kanimozhi#comments</comments><guid isPermaLink="false">acf573a7-27e3-45e4-95d4-b5a6582d0a73</guid><pubDate>Fri, 18 Sep 2026 12:52:23 +0000</pubDate><atom:updated>2026-09-18T12:52:23.973Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கத்திக்குத்து,Woman,stabbed,Kanimozhi,பெண் ஊழியர்,கனிமொழி எம்பி,Law and order,சட்டம்-ஒழுங்கு,தவெக அரசு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/4l8s2f1h/kanimozhi.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கனிமொழி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/4l8s2f1h/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பண்ருட்டி</p><p>பண்ருட்டியில் முதல்வர் மருந்தகப் பெண் ஊழியர் மீது நடந்துள்ள கத்திக்குத்துச் சம்பவம் குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/kanimozhi">கனிமொழி</a> கருணாநிதி எம்.பி. தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>மிகுந்த அதிர்ச்சி</h2><p>பண்ருட்டியில் முதல்வர் மருந்தகப் பெண் ஊழியர் மீது நடந்துள்ள கத்திக்குத்துச் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பட்டப்பகலில் கொலைகளும், வெட்டுக்குத்துகளும் நடப்பது சர்வசாதாரணாமாகிவிட்டது.</p><h2>சர்வ நாசம்</h2><p>பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள், ஏன் சிறைக் கைதிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை எனும் நிலையைத் தமிழ்நாட்டில் உருவாக்கி சட்டம் ஒழுங்கை தினமும் சர்வ நாசம் செய்துகொண்டிருக்கிறது தவெக அரசு.</p><p>பண்ருட்டி சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு உரிய மருத்துவச் சிகிச்சையும், பாதுகாப்பையும் அரசு வழங்க வேண்டும். குற்றவாளியின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம் - ஒழுங்கைப் பராமரிப்பதில் தாமதிக்காமல் இனியாவது இந்தப் பொறுப்பற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா? இல்லை ரீல்ஸ் விளம்பரங்களில் மூழ்கிக் கிடந்து மக்களின் உயிரோடுதான் விளையாடுமா?</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தாயை இழந்த பூனைக்குட்டிக்கு பாலூட்டி பசியாற்றிய நாய்: அரியலூரில் நெகிழ்ச்சி சம்பவம்! </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dog-nurses-and-feeds-a-motherless-kitten-a-heartwarming-incident-in-ariyalur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dog-nurses-and-feeds-a-motherless-kitten-a-heartwarming-incident-in-ariyalur#comments</comments><guid isPermaLink="false">a86523c5-9ffe-4287-acff-6bfae4e4e8b5</guid><pubDate>Fri, 18 Sep 2026 12:41:58 +0000</pubDate><atom:updated>2026-09-18T12:41:58.615Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அரியலூர்,milk,பால்,Video viral,dog,நாய்,பூனைக்குட்டி,kitten</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/ihvxeysd/12.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ தாயை இழந்த பூனைக்குட்டிக்கு நாய் பால் கொடுத்தது. ]]></media:title><media:description type="html"><![CDATA[ தாயை இழந்த பூனைக்குட்டிக்கு பாலூட்டி பசியாற்றிய நாய்: அரியலூரில் நெகிழ்ச்சி சம்பவம்! ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/ihvxeysd/12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>அரியலூர்,</p><p>அரியலூர் மாவட்டம் நின்னியூர் கிராமத்தில் விலங்கினங்களின் எல்லையைத் தாண்டிய பாசப் பிணைப்பை உணர்த்தும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.</p><h2>தாய்மையின் உச்சம்</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அரியலூர் மாவட்டம்</a> செந்துறையை அடுத்துள்ள நின்னியூர் கிராமத்தில் நாய் ஒன்று வாழ்ந்து வருகிறது. அதே பகுதியில் தாயை இழந்து தவித்த சிறிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF">பூனைக்குட்டி </a>ஒன்று பசியால் வாடியது. பூனைக்குட்டியின் நிலையை உணர்ந்த அந்த நாய், அதற்கு தன் தாயன்பை வெளிப்படுத்தியுள்ளது. பொதுவாக நாயும் பூனையும் எதிரெதிர் துருவங்களாக கருதப்படும் நிலையில், இந்த நாய் தன் குட்டியைப் போலவே அந்த பூனைக்குட்டியையும் பாவித்து, படுத்துக்கொண்டு அதற்கு பால் கொடுத்து பசியாற்றியுள்ளது.</p><h2>வைரலாகும் காட்சி</h2><p>நாயிடம் எந்தவித பயமும் இன்றி அந்த பூனைக்குட்டி மிக உரிமையோடு<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D"> பால் குடிக்கும்</a> நெகிழ்ச்சியான காட்சி, பார்ப்பவர்களின் கண்களைக் குளிரச் செய்துள்ளது. இந்த அரிய மற்றும் பாசப் பிணைப்பைக் கொண்ட காட்சியை அங்குள்ளவர்கள் தங்களது மொபைல் போனில் பதிவு செய்துள்ளனர்.</p><p>இந்த நெகிழ்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி, நெட்டிசன்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. மனிதர்களில் சில சமயங்களில் பாசம் குறைந்து வரும் இந்நாட்களில், முற்றிலும் மாறுபட்ட இரு விலங்கினங்களுக்கு இடையே வெளிப்பட்ட இந்த தூய்மையான தாய்மைப் பாசம் மனிதர்களுக்கு ஒரு மிகச் சிறந்த பாடமாக அமைந்துள்ளதாக பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்துள்ள நின்னியூர் கிராமத்தில் தாயை இழந்த பூனைக்குட்டி.. பால் கொடுத்து பசியாற்றிய நாய்.. நெகிழ்ச்சி காட்சி  <a href="https://x.com/hashtag/ariyalur?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ariyalur</a> <a href="https://x.com/hashtag/dog?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#dog</a> <a href="https://x.com/hashtag/cat?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#cat</a> <a href="https://x.com/hashtag/mother?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#mother</a> <a href="https://x.com/hashtag/thanthitv?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#thanthitv</a> <a href="https://t.co/vCH5fTPUxN">pic.twitter.com/vCH5fTPUxN</a></p>&mdash; Thanthi TV (@ThanthiTV) <a href="https://x.com/ThanthiTV/status/2100833235211309237?ref_src=twsrc%5Etfw">September 18, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>செப்டம்பர் 28-ல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thaimaman-gold-ring-scheme-to-be-launched-on-september-28</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thaimaman-gold-ring-scheme-to-be-launched-on-september-28#comments</comments><guid isPermaLink="false">018fba03-6157-4b1d-807c-21f5da99587d</guid><pubDate>Fri, 18 Sep 2026 12:39:21 +0000</pubDate><atom:updated>2026-09-18T12:39:21.569Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தொடக்கம்,செப்டம்பர்,September,Launched,தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்,Thaimaman Gold Ring Project</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/h7xsvmyb/70.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/h7xsvmyb/70.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்  தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை வருகிற 28-ந் தேதிஅன்று தொடங்கி வைக்கிறார்.</p><p>இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (18.9.2026) தலைமைச் செயலகத்தில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத் தொடக்கம் மற்றும் செயல்படுத்துதல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.</p><p>தமிழ்நாடு அரசு தாய்-சேய் நலனை மேம்படுத்துவதற்கு மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி, இலவச பிரசவம் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தை பராமரிப்பு சேவைகள், அவசர மகப்பேறு சிகிச்சை, ஊட்டச்சத்து அளித்தல், பிரசவத்திற்காக மருத்துவமனையைத் திட்டமிடும் முறை, கர்ப்பிணி மற்றும் குழந்தைகள் கூட்டுக் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு மென்பொருள் (PICME) உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு மாநிலத்தில் தாய்-சேய் நலக் குறியீடுகள் குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன.</p> <h2>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்</h2><p>தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்ந்த சேவைகளில் மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும், தமிழர் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தில், தாய்மாமன் சீர்மரபைப் பிரதிபலிக்கும் வகையிலும் வெற்றித் தமிழகம் தொலைநோக்குத் திட்டத்தின்படி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளைச் சிறப்பிக்கும் வகையில் “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” என்ற சிறப்பு நலத்திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், 22.06.2026 அன்று முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்கமோதிரம் வழங்கப்படும். இதற்கான அரசாணை 23.06.2026 அன்று வெளியிடப்பட்டது.</p><p>தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 7.80 இலட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. இவற்றில் 99.9 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன என்று தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு-6ல் (National Family Health Survey-6) பதிவாகியுள்ளது. இவற்றில் 4.20 இலட்சம் பிரசவங்கள் (53%) அரசு மருத்துவமனைகளில் நிகழ்கின்றன. அதில் 90 சதவீதம் சீமாங் மையங்களில் (CEmONC Centres) நடைபெறுகின்றன. இதன்மூலம், பாதுகாப்பான பிரசவம் மற்றும் ஆரோக்கியமான குழந்தைகளின் பிறப்பை உறுதி செய்வதில் பொது சுகாதார அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.</p><h2>தனித்துவமான வரிசை எண்</h2><p>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரு கிராம் எடை கொண்ட தங்க மோதிரம் வழங்கப்படும். அதற்கென தனித்துவமான வரிசை எண்ணும் (Unique Serial Number), சேதப்படுத்த முடியாத பாதுகாப்புப் பெட்டகமும் (Tamper-proof Packaging) வழங்கப்படும். இத்திட்டத்திற்காக முதல் தவணையாக 1,28,000 தங்கமோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள். PICME-யில் பதிவு செய்யப்பட்டு RCH அடையாள எண் (RCHID) பெற்றிருக்க வேண்டும்.</p><h2>தினமும் 100 குழந்தைகள்</h2><p>இத்திட்டம் தமிழ்நாடு முதல்-அமைச்சரால் வருகிற 28-ந் தேதி அன்று தொடங்கி வைக்கப்படவுள்ளது. மேலும், அரசு மருத்துவமனைகளில் 22.06.2026 முதல், திட்டம் தொடங்கப்படும் நாள் வரை பிறக்கும் குழந்தைகளுக்கு 107 மையங்களில் (Hubs) தினமும் 100 குழந்தைகள் வீதம் 28- ந் தேதி முதல் வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்திட்டம் தமிழ்நாடு முதல்-அமைச்சரால் தொடங்கப்படும் நாளிலிருந்து அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும்போது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">தங்கமோதிரம் </a>வழங்கப்படும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்...!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-befalls-a-5-year-old-boy-who-was-playing-near-his-house</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-befalls-a-5-year-old-boy-who-was-playing-near-his-house#comments</comments><guid isPermaLink="false">9255eda9-9d0a-44e8-b12f-4cf0fd0977bf</guid><pubDate>Fri, 18 Sep 2026 12:32:17 +0000</pubDate><atom:updated>2026-09-18T12:32:17.999Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,போலீஸ்,விருதுநகர்,மின்சாரம் தாக்கி சிறுவன் பலி,boy death,Virudhunagar District</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/jacpjf2z/17.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்சாரம் தாக்கி சிறுவன் பலி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/jacpjf2z/17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர்,</p><p>வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்</p><h2>மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு</h2><p>விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வீரச்சாமி தெருவைச் சேர்ந்தவர் செல்வமுருகன். இவரது மகன் ஜெகன் (வயது 5). சிறுவன் நேற்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அப்பகுதியில் அறுந்து கிடந்த மின்சார ஒயரை சிறுவன் மிதித்ததாக தெரிகிறது.</p><p>இதில் எதிர்பாராதவிதமாக<a href="https://www.dailythanthi.com/topic/மின்சாரம்-தாக்கி"> மின்சாரம் தாக்கி</a> சிறுவன் மயங்கி விழுந்தான். இதையடுத்து அங்கிருந்தவர்கள் சிறுவனை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.</p><h2>விசாரணை</h2><p>சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை <a href="https://www.dailythanthi.com/topic/போலீசார்">போலீசார்</a> வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருப்பதி - சென்னை இடையே 20ம் தேதி முன்பதிவில்லா சிறப்பு ரெயில் இயக்கம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/unreserved-special-train-to-run-between-tirupati-and-chennai-on-the-20th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/unreserved-special-train-to-run-between-tirupati-and-chennai-on-the-20th#comments</comments><guid isPermaLink="false">e7b081e9-fe5c-4717-8d76-043f8758c818</guid><pubDate>Fri, 18 Sep 2026 12:31:42 +0000</pubDate><atom:updated>2026-09-18T12:31:42.355Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,சிறப்பு ரெயில்,Tirupati,திருப்பதி,மெமு ரெயில்,Special Train ​,MEMU train</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/fdnb4uen/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முன்பதிவில்லா சிறப்பு ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/fdnb4uen/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> திருப்பதியில் நடைபெறும் கருட சேவையை முன்னிட்டு, பயணிகளின் கூடுதல் நெரிசலை சமாளிக்கும் வகையில் தெற்கு கடற்கரை ரெயில்வே சார்பில் முன்பதிவில்லா மெமு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.</p><h2>திருப்பதி - சென்னை கடற்கரை சிறப்பு ரெயில்</h2><p>ரெயில் எண் 07610 திருப்பதி - சென்னை கடற்கரை முன்பதிவில்லா மெமு சிறப்பு ரெயில், செப்டம்பர் 20-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு திருப்பதியில் இருந்து புறப்படும்.</p><p>இந்த ரெயில் அதிகாலை 4.30 மணிக்கு சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தை சென்றடையும். இந்த சிறப்பு ரெயில் ஒரு சேவை மட்டும் இயக்கப்படும்.</p><h2>சென்னை கடற்கரை - ரேணிகுண்டா சிறப்பு ரெயில்</h2><p>ரெயில் எண் 07609 சென்னை கடற்கரை - ரேணிகுண்டா முன்பதிவில்லா மெமு சிறப்பு ரெயில், செப்டம்பர் 20-ம் தேதி காலை 5 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும்.</p><p>இந்த ரெயில் காலை 8.40 மணிக்கு ரேணிகுண்டாவை சென்றடையும். இதுவும் ஒரு சேவையாக மட்டுமே இயக்கப்படும்.</p>]]></content:encoded></item><item><title>செங்கல்பட்டு நகராட்சி குப்பைக்கிடங்கில் திடீர் தீ விபத்து - நச்சுப்புகையால் பொதுமக்கள் மூச்சுத்திணறல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sudden-fire-at-chengalpattu-municipality-dump-yard-public-suffers-breathlessness-due-to-toxic-smoke</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sudden-fire-at-chengalpattu-municipality-dump-yard-public-suffers-breathlessness-due-to-toxic-smoke#comments</comments><guid isPermaLink="false">64d34da0-1f3d-4335-a147-975b3163cbdf</guid><pubDate>Fri, 18 Sep 2026 12:03:30 +0000</pubDate><atom:updated>2026-09-18T12:03:30.825Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chengalpattu,செங்கல்பட்டு,மூச்சுத்திணறல்,municipality,Toxic Gas,பொதுமக்கள் அவதி,Dump fire,குப்பைக்கிடங்கில் தீ விபத்து</media:keywords><media:content height="542" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/import/Articles/2021/Sep/202109140056027499_Fire_SECVPF.gif" width="794"><media:title type="html"><![CDATA[ செங்கல்பட்டு நகராட்சி குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர் ஒருவர் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்த காட்சி.]]></media:title><media:description type="html"><![CDATA[ செங்கல்பட்டு நகராட்சி குப்பைக்கிடங்கில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது.      ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/import/Articles/2021/Sep/202109140056027499_Fire_SECVPF.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>செங்கல்பட்டு,</p><p>செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட குப்பைக் கிடங்கில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக, அப்பகுதி முழுவதும் நச்சுப்புகை சூழ்ந்து பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.</p><h2>நள்ளிரவில் பரவிய தீ</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">செங்கல்பட்டு</a> நகராட்சிப் பகுதியில் மலைபோல குவிக்கப்பட்டுள்ள குப்பைக் கிடங்கில், நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென தீப்பிடித்தது. குப்பைகளில் பரவிய தீ, காற்றின் வேகம் காரணமாக மளமளவென அடுத்தடுத்த பகுதிகளுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் அடர்ந்த கரும்புகை மூட்டமாக மாறியது.</p><h2>நச்சுப்புகையால் மக்கள் அவதி</h2><p>தீ விபத்தின் காரணமாக வெளியேறிய கடுமையான நச்சுப்புகை, அருகில் உள்ள குடியிருப்புகள் மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளுக்குள் பரவியது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், குறிப்பாக முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு கண் எரிச்சல், தொண்டை வலி மற்றும் கடுமையான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D">மூச்சுத்திணறல்</a> போன்ற சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டன. இதனால் நள்ளிரவில் மக்கள் கடும் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்தனர்.</p><h2>தீயணைப்புத் துறையினர் தீவிரப் போராட்டம்</h2><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு செங்கல்பட்டு தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்தனர். எனினும், தீயின் தீவிரம் அதிகமாக இருந்ததால், தீயைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, மகேந்திரா சிட்டி உள்ளிட்ட பிற தீயணைப்பு நிலையங்களில் இருந்து கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். தண்ணீரைப் பீய்ச்சியடித்தும், ஹி்ட்டாச்சி போன்ற எந்திரங்களைக் கொண்டு குப்பைகளை அப்புறப்படுத்தியும் பல மணி நேர தீவிரப் போராட்டத்திற்கு பிறகு தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.</p><h2>பொதுமக்கள் கோரிக்கை</h2><p>இந்த குப்பைக் கிடங்கில் அடிக்கடி இதுபோன்ற <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">தீ விபத்துகள் </a>ஏற்படுவதால், அப்பகுதி மக்கள் தொடர்ந்து நச்சுப்புகைய சுவாசித்து சுகாதார சீர்கேட்டிற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த குப்பைக் கிடங்கை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் அல்லது பயோ-மைனிங் முறையில் குப்பைகளைத் தரம் பிரித்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து உள்ளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்! - அமைச்சர்கள் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monsoon-precautionary-work-in-chennai-in-full-swing-ministers-review</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monsoon-precautionary-work-in-chennai-in-full-swing-ministers-review#comments</comments><guid isPermaLink="false">67e72672-001d-4de1-97d2-b3339cd612b7</guid><pubDate>Fri, 18 Sep 2026 11:58:09 +0000</pubDate><atom:updated>2026-09-18T11:58:09.622Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,work,அமைச்சர்கள் ஆய்வு,வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள்,Ministers review,Monsoon Precautions</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/071jpmmh/69.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/071jpmmh/69.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கண்காணித்திட மண்டல வாரியாக அமைச்சர் பெருமக்களும், மண்டலக் கண்காணிப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>ஆய்வுக் கூட்டம்</h2><p>இதன் தொடர்ச்சியாக, ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களுக்கான பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள போக்குவரத்துத் துறை அமைச்சர்  விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் குமார் ஆகியோர் முன்னிலையில், ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (18.09.2026) நந்தம்பாக்கம் வர்த்தக மையம் அருகில் உள்ள ஃபின்டெக் டவர் (Fintech Tower) கூட்டரங்கில் நடைபெற்றது.</p><p>இக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர், வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வதற்காக அடையாறு மற்றும் ஆலந்தூர் மண்டலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கடந்த 15-ந் தேதி அன்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">ஆய்வு </a>செய்தார்.</p><p>ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களில், கடந்த பருவ மழைக்காலங்களில் மழைநீர் அதிகமாக தேங்கியதாகக் கண்டறியப்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டமைப்புகளை விரைந்து முடிப்பதோடு, இதர தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காமல் உடனடியாக அகற்றிட மோட்டார் பம்புகளை தயார்நிலையில் வைத்து மழைநீரை அகற்றிட வேண்டும். மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்ளை செப்டம்பர் மாத இறுதிக்குள் முடித்திட வேண்டும் என்று அமைச்சர்கள் அறிவுறுத்தினர்.</p><h2>சீரான போக்குவரத்து</h2><p>இம்மண்டலங்களில் உள்ள சுரங்கப் பாதைகளில் மின் மோட்டார்கள், ஜெனரேட்டர்கள் மற்றும் CCTV கண்காணிப்பு வசதிகள் அனைத்தும் செயல்படும் நிலையில் உள்ளதை உறுதி செய்திட வேண்டும். மழைக்காலத்தில் எப்பொழுதும் பணியாளர்கள் பணியில் இருப்பதை உறுதிசெய்திடும் வகையில் சுழற்சி முறையில் பணியாளர்கள் பணிபுரிவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்காமல் உடனடியாக அகற்றிட வேண்டும். மக்களுக்கு இடையூறின்றியும், சீரான போக்குவரத்து நடைபெறும் வகையிலும் சம்பந்தப்பட்ட துறைகள் காவல்துறையின் ஒருங்கிணைப்புடன் பாதுகாப்பாக பணிகளை மேற்கொள்ள வேண்டும்.</p><p>ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களில் உள்ள கால்வாய்கள் மற்றும் ஓடைகளில் தூர்வாரும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு முழுமையாக முடித்திட வேண்டும். தண்ணீர் வெளியேறும் முக்கிய பகுதிகளைத் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும். குப்பைக் கழிவுகள், வண்டல், ஆகாயத்தாமரை மற்றும் கட்டுமானக் கழிவுகள் ஆகியவற்றினை அகற்றி மழைநீர் தங்குதடையின்றி செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.</p><p>ஆலந்தூர் மண்டலத்தில் 12 நிவாரண மையங்களும், 3 சமையல் கூடங்களும் மற்றும் அடையாறு மண்டலத்தில் 19 நிவாரண மையங்களும், 10 சமையல் கூடங்களும் தயாராக உள்ள நிலையில், இம்மையங்களில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின்சாரம், ஜெனரேட்டர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.</p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>முதியவர்கள், கர்ப்பிணிகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் ஆகியோரின் விவரங்களை முன்கூட்டியே அறிந்து அவர்கள் மீது தனிக்கவனம் செலுத்தி தேவையான சேவைகளை மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்கக்கூடிய சூழலை உருவாக்கும் வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.</p><p>அறுந்து விழக்கூடிய நிலையில் உள்ள மின் கம்பிகள், கேபிள்கள், பலம் குறைந்த மின்கம்பங்கள் ஆகியவற்றை உடனடியாக சீரமைக்க வேண்டும். மழைக் காலங்களில் மின் கம்பிகளால் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சாலையில் தேங்கும் வெள்ள நீரை உடனடியாக வெளியேற்ற மின் மோட்டார்கள் மற்றும் சாலைகளில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்த மின் ரம்பங்கள், ஜே.சி.பி. இயந்திரங்கள் மற்றும் வாகனங்களையும், மழைநீர் தேங்கும் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் வகையில் படகுகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து முழு ஈடுபாட்டுடன் போர்க்கால அடிப்படையில் பணியாற்றிட வேண்டும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, அமைச்சர் பெருமக்கள் ஆலந்தூர் மண்டலம், தில்லை கங்கா நகர் சுரங்கப்பாதையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினர்.</p><p>இக்கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.அருள் பிரகாசம் (சைதாப்பேட்டை), விஜய்பாபு (இராயபுரம்), ஹரிஷ் (ஆலந்தூர்), மண்டலக் கண்காணிப்பு அலுவலர்கள் வாகே சங்கேத் பல்வந்த், (ஆலந்தூர்), டாக்டர் கே.செந்தில் ராஜ், (அடையாறு), மாமன்ற உறுப்பினர்கள், மண்டல அலுவலர்கள், மாநகராட்சி, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, சென்னைக் குடிநீர் வாரியம், மின்சாரத்துறை, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம், காவல்துறை உள்ளிட்ட சேவைத்துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>16 ஆயிரம் பேரை பாதித்த டெங்கு காய்ச்சல்: நிர்வாக சீர்கேட்டின் உச்சம்! - சீமான் குற்றச்சாட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dengue-fever-affects-16000-people-the-height-of-administrative-mismanagement-seemans-allegation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dengue-fever-affects-16000-people-the-height-of-administrative-mismanagement-seemans-allegation#comments</comments><guid isPermaLink="false">173b10c1-9709-49b0-9ba5-beafa0198c60</guid><pubDate>Fri, 18 Sep 2026 11:55:12 +0000</pubDate><atom:updated>2026-09-18T11:55:12.736Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>நாதக,சீமான்,NTK,Seeman,நாம் தமிழர் கட்சி,Naam tamilar katchi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/tvdi2j81/seeman.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சீமான் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/tvdi2j81/seeman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>16 ஆயிரம் பேர் பாதிக்கப்படும் அளவிற்கு தமிழ்நாட்டில் வேகமாகப் பரவிவரும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காத தவெக அரசின் அலட்சியப்போக்கு நிர்வாக சீர்கேட்டின் உச்சம் என சீமான் குற்றம் சாட்டி உள்ளார்.</p><h2>வேகமாக பரவிவரும் டெங்கு காய்ச்சல்</h2><p>இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">சீமான் </a>வெளியிடுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வேகமாகப் பரவிவரும் டெங்கு காய்ச்சலால் பல நூற்றுக்கணக்கான மக்கள் நாள்தோறும் பாதிக்கப்பட்டு வருவது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் 244 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் சென்னையில் மட்டும் 87 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வேகமாக அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலால் தற்போதுவரை, தமிழ்நாட்டில் 16,577 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனைத் தடுக்க எவ்வித ஆக்கப்பூர்வமான நோய்த்தடுப்பு நடவடிக்கையையும் எடுக்காத தவெக அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.</p><p>சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 9 பேர் உயிரிழந்த துயரச்செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.</p><h2>என்ன செய்கிறது சுகாதாரத்துறை?</h2><p>மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், பருவநிலை மாறுதல் காரணமாக சளி, காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுநோய்கள் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரிடமும் வேகமாகப் பரவுகிறது. குறிப்பாக கொசுக்களின் மூலம் பரவக்கூடிய டெங்கு காய்ச்சல், தலைநகர் சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதால் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் 300 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவதால், டெங்கு காய்ச்சல் குறித்த பயமும், பீதியும் மக்களிடத்தில் ஏற்பட்டுள்ள நிலையில், நிகழும் உயிரிழப்புகள் அச்சத்தை இன்னும் அதிகமாக்குகின்றது. டெங்கு காய்ச்சலிலிருந்து தங்களை தற்காக்க முடியாமல் தமிழ்நாட்டு மக்கள் தத்தளித்து வருகிறார்கள்.</p><p>டெங்கு காய்ச்சல் பாதித்தவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் குவியத் தொடங்கியுள்ள நிலையில், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தாமல், என்ன செய்துகொண்டிருக்கிறது தமிழ்நாடு சுகாதாரத்துறை? மிக மெத்தனமாக செயல்பட்டு மக்களின் உயிரோடு விளையாடும் தமிழ்நாடு சுகாதாரத்துறையின் அலட்சிய அணுகுமுறை நிர்வாக சீர்கேட்டின் உச்சம். தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தி, அதனால் நிகழும் உயிரிழப்புகளைத் தடுக்க, தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை இனியாவது விழித்துக்கொண்டு சிறப்பு மருத்துவர் குழுவை அமைத்து, டெங்கு காய்ச்சல் குறித்த விளக்கங்களையும், முன்னெச்சரிக்கை தகவல்களையும், பாதுகாப்பு வழிமுறைகளையும் உடனடியாக வெளியிட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.</p><h2>நாம் தமிழர் கட்சி வலியுறுத்தல்</h2><p>மேலும், நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலம் தமிழ்நாட்டின் மாநகரங்கள் முதல் சிற்றூர்கள் வரை டெங்கு பரவல் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிடுவதோடு, மக்களை டெங்கு பாதிப்பிலிருந்து பாதுகாக்க அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் மக்கள் அதிகம் கூடுமிடங்களில் நிலவேம்பு கசாயம் கபசுர குடிநீர், உள்ளிட்ட நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் தமிழர் பாரம்பரிய மருந்துகளைப் போர்க்கால அடிப்படையில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஒரே இரவில் 6 மாடுகள் திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/6-cows-stolen-in-one-night-police-hunt-down-mysterious-individuals</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/6-cows-stolen-in-one-night-police-hunt-down-mysterious-individuals#comments</comments><guid isPermaLink="false">19d7d6c8-8cbc-44bf-b2e1-cef5865497f2</guid><pubDate>Fri, 18 Sep 2026 11:52:12 +0000</pubDate><atom:updated>2026-09-18T11:52:12.117Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருட்டு,கிருஷ்ணகிரி,Krishnagiri,Theft,cow,மாடுகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/gy9m1p1s/16.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாடுகள் கடத்தல்
]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/gy9m1p1s/16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ணகிரி,</p><p>ஒரே இரவில் 6 மாடுகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p><h2>மாடுகள் மாயம்</h2><p>கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள கீழ் சோமார்பேட்டை மற்றும் சின்ன ஏரிக்கரை பகுதிகளில் பொது மக்கள் மாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை மாடுகளை பார்க்க சென்ற போது வினோத், மாலா, புஷ்பா, அம்பிகா மற்றும் ராஜ்குமார் ஆகியோருக்கு சொந்தமான 6 மாடுகள் காணாமல் போனது தெரியவந்தது.</p><h2>சிசிடிவி காட்சிகளில் சிக்கிய மர்ம நபர்கள்</h2><p>மாடுகள் மாயமானதை தொடர்ந்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த <a href="https://www.dailythanthi.com/topic/கண்காணிப்பு-கேமரா">கண்காணிப்பு கேமரா</a> காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிலர் மாடுகளை இழுத்துச் சென்று, தயார் நிலையில் இருந்த வேனில் ஏற்றி கடத்திச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருப்பது தெரியவந்துள்ளது.</p><h2>விசாரணை</h2><p>இது குறித்து மாடுகளின் உரிமையாளர்கள் கிருஷ்ணகிரி நகர் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளனர். இதனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மாடுகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை <a href="https://www.dailythanthi.com/topic/போலீசார்">போலீசார்</a> தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>2 தொகுதி இடைத்தேர்தல்; அதிமுகவின் 40 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி - தேர்தல் ஆணையம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ec-approves-40-aiadmk-star-campaigners-for-two-byelections</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ec-approves-40-aiadmk-star-campaigners-for-two-byelections#comments</comments><guid isPermaLink="false">7c46f191-bfaa-4220-94d9-c859aa539254</guid><pubDate>Fri, 18 Sep 2026 11:49:41 +0000</pubDate><atom:updated>2026-09-18T11:49:41.141Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அதிமுக,தேர்தல் ஆணையம்,Election Commission,AIADMK,இடைத்தேர்தல்,Permission,நட்சத்திர பேச்சாளர்கள்,Star Campaigners</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/0srfw6lg/aiadmk.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ அதிமுக]]></media:title><media:description type="html"><![CDATA[ 2 தொகுதி இடைத்தேர்தல்; அதிமுகவின் 40 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி - தேர்தல் ஆணையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/0srfw6lg/aiadmk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>2 தொகுதி இடைத்தேர்தலில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">அ.தி.மு.க.வின்</a> 40 நட்சத்திரப் பேச்சாளர்களுக்குத் தேர்தல் ஆணையம் அனுமதியளித்துள்ளது. தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தொகுதிகளுக்கு அக்டோபர் மாதம் 6-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. </p><h2>40 பேருக்கு அனுமதி</h2><p>இந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">இடைத்தேர்தலில்</a> அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்வதற்காக, 40 பேர் கொண்ட நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை கட்சியின் தலைமை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்திருந்தது. இந்த பட்டியலுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தற்போது அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.</p> <h2>40 முக்கிய நிர்வாகிகள்</h2><p>இந்த முக்கிய பட்டியலில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை, தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட 40 முக்கிய நிர்வாகிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.</p> <h2>பெயர்கள் விடுபட்டன</h2><p> அதே நேரத்தில், அ.தி.மு.க.வின் முக்கிய மூத்த தலைவர்களும், முன்னாள் அமைச்சர்களுமான சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி பெயர்கள் இடம் பெறவில்லை.</p><h2>கருத்து வேறுபாடுகள்</h2><p>கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, தமிழகத்தில் புதிய ஆட்சிக்கு ஆதரவளிப்பது தொடர்பாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், வேலுமணி-சி.வி.சண்முகம் தரப்புக்கும் இடையே நீடித்து வரும் கடுமையான உட்கட்சி மற்றும் கருத்து வேறுபாடுகள் காரணமாகவே இவர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. முன்னதாக இவர்களின் மாவட்டச் செயலாளர் பதவிகளும் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p><h2>5 முனை போட்டி</h2><p>இந்த இடைத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத்தும், தாராபுரத்தில் பானுமதியும் இரட்டை இலை சின்னத்தில் களம் காண்கிறார்கள். தி.மு.க., த.வெ.க., நாம் தமிழர், கம்யூனிஸ்டு என இரு தொகுதிகளிலும் 5 முனை போட்டி நிலவுவதால், தேர்தல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வியாசர்பாடியில் 3 நாட்களாக அடிக்கடி மின்தடை: பொதுமக்கள் சாலை மறியல் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/frequent-power-outages-in-vyasarpadi-for-three-days-public-stages-road-blockade</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/frequent-power-outages-in-vyasarpadi-for-three-days-public-stages-road-blockade#comments</comments><guid isPermaLink="false">751ce9e5-de40-42d0-b1a6-69ad0f28bdcf</guid><pubDate>Fri, 18 Sep 2026 11:42:42 +0000</pubDate><atom:updated>2026-09-18T11:42:42.290Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>people,road blockade,power cut,வியாசர்பாடி,மின்தடை,பொதுமக்கள் அவதி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/import/h-upload/2023/04/10/1230314-0.webp" width="750"><media:title type="html"><![CDATA[ மின்தடை]]></media:title><media:description type="html"><![CDATA[ வியாசர்பாடியில் 3 நாட்களாக அடிக்கடி மின்தடை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/import/h-upload/2023/04/10/1230314-0.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையின் பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வியாசர்பாடியில் </a>கடந்த 3 நாட்களாக நீடித்து வரும் கடுமையான மின்தடையைக் கண்டித்து, அப்பகுதி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.</p><h2>பகலிலும் இரவிலும் மின்தடை</h2><p>பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடியின் முக்கிய குடியிருப்பு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பகல் மட்டுமின்றி, இரவு நேரங்களிலும் அடிக்கடி மிக நீண்ட நேரம் அறிவிக்கப்படாத <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> ஏற்பட்டுள்ளது. அண்மைக்காலமாக நிலவும் கடுமையான வெயிலின் தாக்கம் மற்றும் நிலவி வரும் உயர் மின்னழுத்த மாறுபாடு காரணமாக குழந்தைகள், முதியவர்கள் தூங்க முடியாமல் அவதிக்குள்ளாகினர். மேலும், அடிக்கடி ஏற்படும் வோல்டேஜ் மாற்றத்தால் வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்கள் பழுதடைவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.</p><h2>முடங்கிய போக்குவரத்து</h2><p>மின்சார வாரிய அவசர உதவி எண்களைத் தொடர்பு கொண்டும் முறையான தீர்வு கிடைக்காததால் ஆத்திரமடைந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் இன்று (வெள்ளிக்கிழமை) வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். வியாசர்பாடியின் முக்கியச் சாலையில் அமர்ந்து அவர்கள் மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.</p><h2>போலீசார் சமரசம்</h2><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வியாசர்பாடி போலீசார், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மின்சார வாரிய அதிகாரிகளிடம் பேசி, பழுதடைந்த கேபிள்கள் மற்றும் மின்மாற்றிகளை உடனடியாக சரிசெய்து தடையின்றி மின்சாரம் வழங்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.</p><p>இதையடுத்து, பொதுமக்கள் தங்களது<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D"> சாலை மறியல் </a>போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சென்னையின் வியாசர்பாடி மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலும் இதேபோன்ற கேபிள் பழுதுகள் காரணமாக மின் விநியோகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாகத் தமிழ்நாட்டு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>வி.எஸ். பாபுவின் உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம் - மருத்துவமனை அறிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vs-babus-condition-is-being-closely-monitored-hospital-report</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vs-babus-condition-is-being-closely-monitored-hospital-report#comments</comments><guid isPermaLink="false">c9be230a-2683-4eee-970a-dba79aaad309</guid><pubDate>Fri, 18 Sep 2026 11:15:27 +0000</pubDate><atom:updated>2026-09-18T11:15:27.954Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>உடல்நிலை,health condition,report,மருத்துவமனை அறிக்கை,வி.எஸ். பாபு,V.S. Babu MLA</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/myewwcgq/vsbapu.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வி.எஸ். பாபு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/myewwcgq/vsbapu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81">வி.எஸ். பாபு</a> சுவாசக் கோளாறு காரணமாக கடந்த 9- ந்தேதி அன்று சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.</p><p>இந்நிலையில் இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- </p><h2>தீவிர கண்காணிப்பு</h2><p>பல்வேறு மருத்துவத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய சிறப்புக் குழுவினர் அவரது உடல்நிலையைத் தீவிரமாகக் கண்காணித்து, தகுந்த சிகிச்சைகளை வழங்கி வருகின்றனர்.</p><p>தற்போது சிகிச்சைகளுக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு அளித்து வருகிறார் மற்றும் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னைக்கு வந்த 35 புதிய மெட்ரோ ரெயில்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/35-new-metro-trains-arrive-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/35-new-metro-trains-arrive-in-chennai#comments</comments><guid isPermaLink="false">b63dfca5-878b-4c32-a976-e7664d86d145</guid><pubDate>Fri, 18 Sep 2026 10:54:48 +0000</pubDate><atom:updated>2026-09-18T10:54:48.379Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மெட்ரோ ரெயில்,Metro</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/vlmk05sw/metro33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
சென்னை]]></media:title><media:description type="html"><![CDATA[ புதிய மெட்ரோ ரெயில்கள்
]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/vlmk05sw/metro33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னையில் மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டப் பணிகள் 5 வழித்தடங்களில் நடை பெற்று வருகிறது. இதில் ஒரு வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் இயக்க தயாராக உள்ளது. </p><p>பூந்தமல்லி கலங்கரை விளக்கம் வரை உள்ள இந்த வழித்தடத்தில் பூந்தமல்லி முதல் போரூர் வரை அனைத்து பணிகளும் முடிந்து ரெயில்களை இயக்குவதற்கு அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசிடம் இருந்து<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%20%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%20"> மெட்ரோ ரெயில் சேவை </a>தொடங்குவதற்கான உத்தரவு வரவில்லை. இதனால் 4 மாதமாக வழித்தடத்தில் சேவையை தொடங்க முடியாமல் பொது மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். </p><p>இந்த வழித்தடத்தில் போரூர் சந்திப்பு முதல் பவர் ஹவுஸ் வரையிலான உயர் மட்ட பாதையில் 91 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன. தற்போது கட்டிட அலங்காரப் பணிகள் மற்றும் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகின்றன. சுரங்கப்பாதையில் 54 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. அங்கு ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. </p><p>இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரெயில்களை இயக்குவதற்கு தேவையான 35 ரெயில்கள் சென்னைக்கு வந்துள்ளன. பூந்தமல்லியில் உள்ள பணிமனையில் இந்த ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. சோதனை ஓட்டங்களும் நடைபெற்று வருகிறது. </p>]]></content:encoded></item><item><title> ‘விழித்திரை காப்போம்’... பார்வையை பாதுகாக்க தமிழக அரசின் புதிய திட்டம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/lets-protect-the-retina-tamil-nadu-governments-new-scheme-to-protect-eyesight</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/lets-protect-the-retina-tamil-nadu-governments-new-scheme-to-protect-eyesight#comments</comments><guid isPermaLink="false">5cbea35e-c338-4c94-914d-0ffd86f706d0</guid><pubDate>Fri, 18 Sep 2026 10:53:45 +0000</pubDate><atom:updated>2026-09-18T10:53:45.288Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>புதிய திட்டம்,new scheme,பார்வை,பாதுகாக்க,Minister Arunraj,அமைச்சர் அருண்ராஜ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/sjum1mby/68.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/sjum1mby/68.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கோ. க. அருண்ராஜ்  இன்று (18.09.2016) சென்னை மண்டல கண் மருத்துவமனையில் விழித்திரை காப்போம் திட்டம் குறித்த முன் வெளியீட்டு நிகழ்வை தொடங்கி வைத்தார். இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தொடர்ந்து இம்மருத்துவமனையில் விழித்திரை அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவ பயனாளிகளிடம் சிகிச்சை குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D">அமைச்சர் அருண்ராஜ் </a>தெரிவித்ததாவது,</p><h2>'விழித்திரை காப்போம் திட்டம்'</h2><p>இன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, எழும்பூரில் உள்ள மண்டல கண் மருத்துவமனையில் 'விழித்திரை காப்போம் திட்டம்' என்ற நாட்டிலேயே ஒரு முன்னோடி திட்டத்திற்கான முன் வெளியீட்டு நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.</p><h2>உயர் சிறப்பு சிகிச்சை</h2><p>இத்திட்டத்தின் நோக்கம் ஆண்டுக்கு ஒருமுறை 30 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் சர்க்கரை வியாதி, இரத்தக் கொதிப்பு போன்ற நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விழித்திரை பரிசோதனை மேற்கொண்டு, ஆரம்ப நிலையிலேயே விழித்திரை மற்றும் பார்வையை பாதிக்கக்கூடிய நோயைக் கண்டறிந்து, அதற்குத் தேவையான உயர் சிறப்பு சிகிச்சை வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்பதுதான்.</p><p>தமிழ் நாட்டில் உள்ள 385 வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 37 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 150 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு பொது மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த மண்டல கண் மருத்துவமனை ஒட்டுமொத்த திட்டத்திற்கும் ஒரு தலைமையாக செயல்படும். இதற்குத் தேவையான தொழில்நுட்ப ஆதரவு, அதற்கான பயிற்சி மற்றும் மருத்துவ உபகரணங்கள் அனைத்தையும் வழங்குவதில் இந்த மண்டல கண் மருத்துவமனை முக்கிய பங்கு வகிக்கும். இத்திட்டம் பொதுமக்களை பார்வை பாதிக்கக்கூடிய நோயிலிருந்து பாதுகாக்க உதவும் என மருத்துவம் மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கோ. க. அருண்ராஜ் தெரிவித்தார். தொடர்ந்து  மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, நேற்றைய முன்தினம் 4 அரசாணைகள் மருத்துவத்துறையின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.  முதலமைச்சர் அவர்கள் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.</p><h2>புதிய செவிலியர் கல்லூரிகள்</h2><p>அதில் புதிய 7 அரசு செவிலியர் கல்லூரிகள் மற்றும் ஏற்கனவே உள்ள செவிலியர் கல்லூரிகளில் கூடுதல் மாணாக்கர் இடங்கள் மற்றும் 12 துணை மருத்துவப் படிப்புகளில் 2,788 மாணாக்கர் இடங்கள், மருந்தியல் (Pharmacy) படிப்புகளில் 735 கூடுதல் இடங்கள் என மொத்தம் 6,000-க்கும் மேற்பட்ட கூடுதல் மாணாக்கர் இடங்கள் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டிருந்தது. இதை உடனடியாக செயல்படுத்தும் விதமாக மருத்துவத்துறையின் சார்பில் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இதற்கான அரசாணையை வெளியிடப்பட்டுள்ளது. 16.09.2026 அன்று வெளியிடப்பட்ட அரசாணை எண் 261-ன் படி, திருநெல்வேலி, திருச்சி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை மற்றும் நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.270.26 கோடி செலவில் புதிய செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளது.</p><h2>கூடுதல் மாணாக்கர் இடங்கள்</h2><p>அரசாணை எண் 262-ன் படி, கோயம்புத்தூர் ESI மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 60 இடங்கள் கொண்ட செவிலியர் கல்லூரி மற்றும் ஏற்கனவே உள்ள அரசு செவிலியர் கல்லூரிகளில் டிப்ளமோ நர்சிங் (Diploma in Nursing) படிப்பிற்கு 1,290 கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும். B.Sc. நர்சிங் படிப்பிற்கு 440 கூடுதல் இடங்கள், M.Sc. நர்சிங் படிப்பிற்கு 75 கூடுதல் இடங்கள் மற்றும் Post Basic B.Sc. நர்சிங் படிப்பிற்கு 120 கூடுதல் மாணாக்கர் இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அரசாணை எண் 263-ன் படி, B.Pharm படிப்பிற்கு 600 கூடுதல் மாணாக்கர் இடங்களை உருவாக்கப்பட்டுள்ளது.</p><p>அரசாணை எண் 264-ன் படி, 12 வகையான துணை மருத்துவப் படிப்புகளான Bachelor of Optometry, Bachelor of Emergency Medical Technologist, Bachelor of Medical Laboratory Science, Bachelor of Dialysis Therapy Technology, Bachelor of Anaesthesia and Operation Theatre Technology, Bachelor of Medical Radiology and Imaging Technology, Bachelor of Radiation Therapy Technology, Bachelor of Respiratory Technology, Bachelor of Occupational Therapy, Bachelor of Physiotherapy, Bachelor of Physician Associates, Bachelor of Nutrition and Dietetics (Honours) போன்ற 12 துணை மருத்துவப் படிப்புகளுக்காக 1,646 கூடுதல் இடங்களை உருவாக்கப்பட்டுள்ளது.</p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>டெங்கு காய்ச்சலை பொருத்தவரை கடந்த 7 நாட்களில் டெங்கு பாதிப்பு, 14 ஆம் தேதி அன்று 61, 15-ஆம் தேதி 133, 16-ஆம் தேதி 283-ஆக உயர்ந்துள்ளது, 17-ஆம் தேதி 244-ஆகக் குறைந்திருக்கிறது. இது ஒரு பருவகால மாற்றம் தான். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, மற்ற மாநிலங்களிலும் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. மக்கள் அச்சப்படத் தேவையில்லை. மருத்துவத்துறை மற்றும் சுகாதாரத்துறை இதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.</p><p>டெங்கு கொசு ஒழிப்பு பணிகளில் பொதுமக்கள் ஒத்துழைப்பும் கண்டிப்பாகத் தேவை. மழைநீர் தேங்கும் வகையில் உள்ள தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. மீறினால் அபராதம் விதிக்கப்படும். தமிழ்நாட்டில் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 9 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. தினமும் காய்ச்சல் பதிவு விவரங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.உள்ளாட்சி அமைப்புகளில் கொசு ஒழிப்பு பணிகளில் ஆட்கள் குறைவு என்றால், கூடிய விரைவில் தேவையான பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.</p><h2>பணி நிரந்தரம்</h2><p>டெங்கு போன்ற சூழலில் உடனடியாகப் பணியாளர்களின் தேவை இருப்பதால், மாவட்ட நலச்சங்கம் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஏற்கனவே முதற்கட்டமாக 2,500 செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி வழங்கப்பட்டுள்ளது. படிப்படியாக அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். சர்க்கரை நோயாளிகளுக்கு விழித்திரை பரிசோதனை (Fundus screening) கட்டாயமாக்கப்படுவது குறித்து பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறிந்து முடிவு செய்யப்படும் என மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கோ.க. அருண்ராஜ்  தெரிவித்தார்.</p><p>இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் (பொ) டாக்டர் வ. லோகநாயகி, மண்டல அரசு கண் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் விநாயகமூர்த்தி, மாநில கண் பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட இயக்குநர் டாக்டர் சந்திரகுமார் , அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் டாக்டர் சாந்தாராம் (ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை), டாக்டர் அரவிந்தன் (ஸ்டான்லி அரசு பொது மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை), டாக்டர் ஹரிகரன் (ஓமந்தூரார் அரசு பொது மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை), டாக்டர் கவிதா (கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை) உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருச்செந்தூர் முருகன் கோவிலில் தோகை விரித்தாடிய மயில்: பக்தர்கள் பரவசம்! </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/peacock-spreads-its-plumage-and-dances-at-thiruchendur-murugan-temple-devotees-overjoyed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/peacock-spreads-its-plumage-and-dances-at-thiruchendur-murugan-temple-devotees-overjoyed#comments</comments><guid isPermaLink="false">235ae72d-49b0-451f-adb2-c33d8694535c</guid><pubDate>Fri, 18 Sep 2026 10:48:11 +0000</pubDate><atom:updated>2026-09-18T10:48:11.549Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பக்தர்கள்,நடனம்,திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்,Thiruchendur Murugan Temple,peacock,Joy,மயில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/07jla9ui/11.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மயில் நடனம்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருச்செந்தூர் முருகன் கோவிலில் தோகை விரித்தாடிய மயிலைக் கண்டு பக்தர்கள் பரவசம்! ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/07jla9ui/11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் மயில் ஒன்று தோகை விரித்தாடிய காட்சி பக்தர்களைப் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.</p><h2>திருச்செந்தூர் முருகன் கோவிலில் மயில் நடனம்</h2><p>தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்</a> அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) கோவில் வளாகத்தில், ஆண் மயில் ஒன்று தனது வண்ணமயமான தோகையை முழுமையாக விரித்து பெண் மயிலின் முன்னால் கம்பீரமாக நடனமாடிய நெகிழ்ச்சியான நிகழ்வு நடந்தது.</p><h2>பக்தர்கள் வீடியோ எடுத்து பரவசம்</h2><p>முருகப் பெருமானின் வாகனமான மயிலே, அவரது திருத்தலத்தின் பிரகாரப் பகுதியில் தோகை விரித்து ஆடியதைக் கண்டு, கோவிலுக்கு வந்திருந்த ஆன்மீக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பக்தர்கள் </a>பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். அங்கிருந்த திரளான பக்தர்கள் இந்த மனோகரமான காட்சியைக் கண்டு ரசித்ததுடன், தங்களது மொபைல் போன்களில் புகைப்படங்களும் வீடியோக்களும் எடுத்து சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து மகிழ்ந்தனர். கோவில் வளாகத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">மயில் தோகை</a> விரித்தாடிய இந்த தெய்வீக காட்சி, அங்கு கூடியிருந்த பக்தர்களிடையே நெகிழ்ச்சியையும் பரவசத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஓவிய ஆசிரியர் கைது!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/art-teacher-arrested-for-sexually-harassing-female-students</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/art-teacher-arrested-for-sexually-harassing-female-students#comments</comments><guid isPermaLink="false">07d03ca5-2b0f-429b-b557-fad96c8eb73d</guid><pubDate>Fri, 18 Sep 2026 10:41:57 +0000</pubDate><atom:updated>2026-09-18T10:41:57.526Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Teacher Arrested,ஆசிரியர் கைது,உடுமலை,Udumalai,மாணவிகளுக்கு பாலியல் தொல்லை,Sexual harassment of female students</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/uqonbio8/15.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/uqonbio8/15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><p>மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஓவிய ஆசிரியரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>மாணவிகளுக்கு பாலியல் தொல்லை</h2><p>திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஜூன் மாதம் பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாணவிகள் அளித்த புகாரின் பேரில் பள்ளி நிர்வாகம் விசாரணை மேற்கொண்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.</p><h2>போக்சோவில் கைது</h2><p>இதனைத் தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் பள்ளிக்கு சென்று, மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது <a href="https://www.dailythanthi.com/topic/ஓவிய-ஆசிரியர்">ஓவிய ஆசிரியர் </a>மதன்குமார் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததாக தெரிகிறது. இதையடுத்து, பள்ளி தலைமை ஆசிரியர் அளித்த எழுத்துப்பூர்வமான புகாரின் பேரில், உடுமலைப்பேட்டை அனைத்து மகளிர் <a href="https://www.dailythanthi.com/topic/போலீசார்">போலீசார் </a>மதன்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>போலி இணையதளம் மூலம் ரூ.23 லட்சம் மோசடி; பெண் வங்கி ஊழியர் கைது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-23-lakh-fraud-via-fake-website-female-bank-employee-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-23-lakh-fraud-via-fake-website-female-bank-employee-arrested#comments</comments><guid isPermaLink="false">8687afb8-ca8d-4d42-9c5d-63b6ee9491fe</guid><pubDate>Fri, 18 Sep 2026 10:41:08 +0000</pubDate><atom:updated>2026-09-18T10:41:08.023Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,கைது</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/nk8ohi1g/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/nk8ohi1g/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் போலி இணையதளம் மூலம் ரூ.23 லட்சம் மோசடி செய்த பெண் வங்கி ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.</p><h2>அதிக வட்டிக்கு முதலீடு</h2><p>சென்னையை சேர்ந்த ஹேமா பிரியதர்ஷினி (வயது 40) என்பவருக்கு, கடந்த 2024-ம் ஆண்டு அவரது உறவினர் மூலம் பூஜா ஜெயின்(வயது 39) என்ற பெண் அறிமுகமானார். தனியார் வங்கிகளில் ரிலேஷன்ஷிப் மேனேஜராக பணியாற்றி வந்த பூஜா ஜெயின், 'ஐ.பி.எல். பண்ட்' என்ற திட்டத்தில் பணத்தை முதலீடு செய்தால் 30 சதவீதம் அதிக வட்டி கிடைக்கும் என்று பிரியதர்ஷினியிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். </p><p>இதனை நம்பி ரூ.15 லட்சம் பணத்தை ஹேமா பிரியதர்ஷினி முதலீடு செய்தார். அந்த பணத்திற்கு வட்டி தொகையும் கிடைத்துள்ளது. சில மாதங்களுக்குப் பிறகு, மேலும் பணத்தை முதலீடு செய்யுமாறு ஹேமா பிரியதர்ஷினியிடம் பூஜா ஜெயின் வற்புறுத்தியுள்ளார். இதையடுத்து கடந்த 2025-ம் ஆண்டு ஆண்டு மார்ச் மாதம் ரூ.8 லட்சம் பணத்தை ஹேமா முதலீடு செய்தார். ஆனால் இந்த முறை வட்டி பணம் எதுவும் அவருக்கு வரவில்லை. </p><h2>மோசடி</h2><p>இது குறித்து விசாரித்தபோது, சம்பந்தப்பட்ட நிறுவனம் நஷ்டமடைந்துவிட்டதாக பூஜா ஜெயின் கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த ஹேமா, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சென்னை மேற்கு மண்டல சைபர்கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. </p><p>பூஜா ஜெயின் தனியார் வங்கியில் பணியாற்றிய அனுபவத்தை பயன்படுத்தி, வங்கி வாடிக்கையாளர்களின் தகவல்களை சேகரித்துள்ளார். பின்னர், 'இந்தியா பாண்ட்ஸ் லிமிடெட்' என்ற பெயரில் ஒரு போலி இணையதளத்தைத் தொடங்கியதோடு, முதலீட்டாளர்களை நம்ப வைக்க "ஐ.பி.எல். அன்ட் கோ" என்ற பெயரில் போலியாக நடப்புக் கணக்கையும் தொடங்கியுள்ளார். முதலீட்டாளர்களிடம் இருந்து பெறப்படும் பணத்தை அந்த கணக்கில் பெற்றுக்கொண்டு, பின்னர் அதனை தனது சொந்த வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளார் என்பது தெரியவந்தது. </p><h2>கைது</h2><p>இதையடுத்து, சென்னை பார்க் டவுன், மின்ட் தெருவைச் சேர்ந்த பூஜா ஜெயினை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து மோசடிக்கு பயன்படுத்தப் பட்ட 2 செல்போன்கள் மற்றும் ஒரு லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைதான பூஜா ஜெயின் மீது ஏற்கனவே நுங்கம்பாக்கம், கொளத்தூர் காவல் நிலையங்கள் மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவில் மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் மட்டுமில்லை,அனைத்து மாநிலங்களிலும் மின்சார தட்டுப்பாடு நிலவுகிறது - அமைச்சர் நிர்மல் குமார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-a-power-shortage-in-all-states-minister-nirmal-kumar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-a-power-shortage-in-all-states-minister-nirmal-kumar#comments</comments><guid isPermaLink="false">ef0eeff0-2057-4c0e-8694-b3212c08835a</guid><pubDate>Fri, 18 Sep 2026 10:30:24 +0000</pubDate><atom:updated>2026-09-18T10:30:24.019Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மதுரை,அமைச்சர் நிர்மல் குமார்,மின்சார உற்பத்தி,Ministernirmalkumar,MaduraiTemple</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/dityu84j/nirmalakumar33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
தமிழ்நாட்டில் மட்டுமில்லை]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல் குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/dityu84j/nirmalakumar33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>என் சார்பாக என் குடும்பத்தினர் கூட குடமுழுக்கில் கலந்து கொள்ளவில்லை என அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.</p><h2>கோவில் குட முழுக்கு </h2><p>சென்னையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>இதுவரை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">மதுரை கோவிலில்</a> தரிசனம் செய்யவில்லை. நான் குடமுழுக்கு விழாவில் தலையிடவில்லை. என் சார்பாக என் குடும்பத்தினர் கூட குடமுழுக்கில் கலந்து கொள்ளவில்லை. பொதுமக்களுக்கு ஆன்லைன் மூலமாக பாஸ் விநியோகம் செய்யப்பட்டது. பாஸ் என்ன நிறம் என்பதே முந்தைய நாள் தான் எனக்கு தெரியவந்தது.</p><p>மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக நல்லப்படியாக முடிந்தது. இதனை தாங்கி கொள்ள முடியாமல் திமுகவினர் அவதூறு பரப்புகின்றனர்.</p><h2>பி.எஸ் என்.எல் பணியால் மின் தட்டுப்பாடு</h2><p>பல மாநிலங்களில் மின் வெட்டு இருக்கிறது; பஞ்சாபில் 14 மணி நேர மின் வெட்டு இருக்கிறது. கேரளா, பஞ்சாப் மாநிலத்தில் மின்சாரம் வாங்க முடியவில்லை என்று மின்வெட்டு அறிவிப்பு வெளியிட்டு பவர் கட் செய்து விட்டார்கள்.</p><p>தமிழகத்தில் மின்சார பற்றாக்குறையை சமாளிக்க வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் வாங்குகிறோம். பஞ்சாப் மாநிலம் உள்ளிட்டவற்றுடன் ஒப்பிடும் போது நமது மாநிலத்தில் மின்சார பிரச்னையை சமாளித்து இருக்கிறோம்.</p><p>.பி.எஸ் என்.எல் லைன் பணியின் போது மின்சார லைன்கள் பாதிக்கப்பட்டுள்ளது.  இதனால் சென்னையில் ஒருசில இடங்களில் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமில்லை. அனைத்து மாநிலங்களிலும் மின்சார தட்டுப்பாடு நிலவுகிறது.</p><h2>தினகரனை ஒதுக்கி வைத்தவர் ஜெயலலிதா</h2><p>மிசாவில் தான் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் என்று டிடிவி தினகரன் கூறுவதற்கு கூச்சமாக இல்லையா? ஸ்டாலினுக்கு வக்காலத்து வாங்கி பேசி கொண்டிருக்கிறார். 10 ஆண்டு காலமாக தினகரனை ஜெயலலிதா ஒதுக்கி வைத்திருந்தார்.</p><p>எடப்பாடி பழனிசாமியை துரோகி என கூறியவர். அவர் நேற்று பேசுவது ஒன்றாக இருக்கும்; இன்று பேசுவது ஒன்றாக இருக்கும்..</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>சோழிங்கநல்லூர் பகுதியில் 10 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்! - ஏன் தெரியுமா?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/drinking-water-supply-to-be-suspended-in-the-sholinganallur-area-for-10-days-do-you-know-why</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/drinking-water-supply-to-be-suspended-in-the-sholinganallur-area-for-10-days-do-you-know-why#comments</comments><guid isPermaLink="false">70185d47-1dc1-427b-9bd1-047dcf5fd891</guid><pubDate>Fri, 18 Sep 2026 10:29:45 +0000</pubDate><atom:updated>2026-09-18T10:29:45.418Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,water supply stopped,குடிநீர் விநியோகம் நிறுத்தம்,சோழிங்கநல்லூர்,Sholinganallur</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/3seug0vo/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ குடிநீர் விநியோகம் நிறுத்தம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/3seug0vo/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சோழிங்கநல்லூர் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக பிரதான குடிநீர் குழாய் வழித்தடத்தை மாற்றியமைக்கும் பணிகள் நடைபெறுவதால், செப்டம்பர் 20 முதல் 29-ஆம் தேதி வரை சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.</p><h2>மழைநீர் வடிகால் பணிக்காக குழாய் மாற்றம்</h2><p>பெருநகர <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை </a>மாநகராட்சியின் சார்பில், சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு 199-க்கு உட்பட்ட டி.என்.எச்.பி.ஏ. பிரதான சாலையில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக அப்பகுதியில் உள்ள பிரதான குடிநீர் குழாய் வழித்தடத்தை மாற்றியமைக்கும் பணிகள் செப்டம்பர் 20 முதல் 29-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட உள்ளன.</p><h2>சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிப்பு</h2><p>இந்தப் பணிகளின் காரணமாக மண்டலம் 13 மற்றும் மண்டலம் 14-க்கு உட்பட்ட சில பகுதிகளில் குடிநீர் விநியோகத்தில் தற்காலிக மாற்றம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அடையாறு மண்டலத்துக்குட்பட்ட வேளச்சேரி மற்றும் மண்டலம் 14-க்கு உட்பட்ட உள்ளகரம், புழுதிவாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, ஜல்லடியம்பேட்டை ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட உள்ளன.</p><h2>மாற்று குடிநீர் ஏற்பாடுகள்</h2><p>பொதுமக்களின் குடிநீர் தேவையை சமாளிக்கும் வகையில், செம்பரம்பாக்கத்தில் உள்ள 530 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் மாற்று குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.</p><h2>குடிநீரை சேமித்து வைக்க அறிவுறுத்தல்</h2><p>குடிநீர் விநியோகத்தில் தற்காலிக மாற்றம் ஏற்பட உள்ளதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள சென்னை குடிநீர் வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாணவர் பாரதிதாசனின் கல்விக்கு துணை நிற்போம்! - கனிமொழி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/lets-support-student-bharathidasans-education-kanimozhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/lets-support-student-bharathidasans-education-kanimozhi#comments</comments><guid isPermaLink="false">f7bdbc4e-2f99-48a0-a3fc-774c1f69a2e5</guid><pubDate>Fri, 18 Sep 2026 10:28:03 +0000</pubDate><atom:updated>2026-09-18T10:28:03.001Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>student,மாணவர்,Kanimozhi,கனிமொழி எம்பி,பாரதிதாசன்,Bharathidasan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/w1s2tqa0/67.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/w1s2tqa0/67.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருபவர் மாணவர் பாரதிதாசன். தனக்கு கடந்த சில மாதங்களாக கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என்றும். கல்லூரியிலிருந்து வெளியேற்றும் நிலை உருவாகியுள்ளதாகவும் கூறி அவர் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் தலைவர்கள் பலரும் கவலை தெரிவித்து அரசை வலியுறுத்தினர்.</p><p>இது குறித்து திமுக துணைப்பொதுச்செயலாளர்<a href="https://www.dailythanthi.com/topic/kanimozhi"> கனிமொழி </a>கருணாநிதி தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>மாணவர் பாரதிதாசனுக்கு உறுதியளிக்கப்பட்ட கல்வி உதவித்தொகையை வழங்குவதற்கு இவ்வளவு கெடுபிடிகளை தவெக அரசு விதிப்பதற்கான தேவை என்ன?</p><p>கல்விக்காக இந்த 2026-லும், ஒரு மாணவர் கண்ணீர் சிந்த வேண்டிய நிலை ஏற்படுமானால், கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நிலையை எட்ட நாம் மேற்கொண்ட போராட்டங்களின் நோக்கத்தையே இந்த அரசு சிதைத்து விட்டது என்றுதான் பொருள்.</p><h2>உறுதுணை</h2><p>அரசு தனது பொறுப்பைத் தட்டிக்கழித்தாலும், ஒரு மாணவரின் கல்விக் கனவு அரசின் பிடிவாதத்திற்குப் பலியாவதை இனியும் அனுமதிக்க முடியாது. என்றும், தி.மு.கழகமும் தமிழ்நாட்டு மக்களும் பாரதிதாசனின் கல்விக்கு உறுதுணையாக நிற்கும் என்றும் அண்ணன் தளபதி உறுதியளித்துள்ளார்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>முதல்வர் மருந்தகத்தில் இளம் பெண்ணுக்கு கத்திக்குத்து... இளைஞர் கைது!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-stabbed-at-chief-ministers-dispensary-youth-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-stabbed-at-chief-ministers-dispensary-youth-arrested#comments</comments><guid isPermaLink="false">f1cdcd75-d4c3-4aaa-931f-ea7b936d8258</guid><pubDate>Fri, 18 Sep 2026 09:56:52 +0000</pubDate><atom:updated>2026-09-18T09:56:52.006Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,கத்திக்குத்து,முதல்வர் மருந்தகம்,பண்ருட்டி,medical,knife attack</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/xvuss95r/14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/xvuss95r/14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பண்ருட்டி,</p><p>முதல்வர் மருந்தகத்தில் நுழைந்து இளம்பெண்ணை கத்தியால் குத்தி அங்கிருந்து தப்பிக்க முயன்ற இளைஞரை போலீசார்&nbsp;கைது செய்துள்ளனர்.</p><h2>இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து</h2><p>கடலூர் மாவட்டம் பண்ருட்டி காமராஜ் நகரில் உள்ள முதல்வர் மருந்தகத்தில் 23 வயதுடைய இளம் பெண் ஊழியர் பணியாற்றி வருகிறார். இன்று வழக்கம்போல் அவர் மருந்தகத்தில் பணியில் இருந்தபோது, அங்கு வந்த சந்தோஷ் என்ற இளைஞர் திடீரென அவரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.</p><p>இதில் பலத்த காயமடைந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, படுகாயமடைந்த இளம்பெண்ணை மீட்டு பண்ருட்டி அரசு<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88"> மருத்துவமனை</a>க்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><h2>குற்றவாளி கைது</h2><p>இதற்கிடையே, இளம்பெண்ணை கத்தியால் குத்திய பின்னர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற சந்தோஷை பொதுமக்கள் பிடித்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசாரி</a>டம் ஒப்படைத்தனர்.</p><p>இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு சந்தோஷ் வற்புறுத்தியதாகவும், அவர் திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரமடைந்து கத்தியால் குத்தியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p>பட்டப்பகலில் முதல்வர் மருந்தகத்துக்குள் புகுந்து இளம் பெண் ஊழியரை கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>