<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 04 Aug 2026 08:20:01 +0000</lastBuildDate><item><title>
&quot;எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் பேரவையை நடத்த நினைக்கிறது அரசு&quot; - இபிஎஸ் விமர்சனம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-government-intends-to-conduct-the-assembly-proceedings-without-the-leader-of-the-opposition-eps-criticizes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-government-intends-to-conduct-the-assembly-proceedings-without-the-leader-of-the-opposition-eps-criticizes#comments</comments><guid isPermaLink="false">3c6845b9-2d9b-4b94-82f3-8234eb6ed989</guid><pubDate>Tue, 04 Aug 2026 08:19:03 +0000</pubDate><atom:updated>2026-08-04T08:19:03.900Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,எடப்பாடி பழனிசாமி,Udhayanidhi Stalin,arrest,உதயநிதி,இபிஎஸ்,எதிர்க்கட்சித் தலைவர்,Edapadi Palanisamy</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/qabds07e/z11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/qabds07e/z11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடிய உதயநிதி ஸ்டாலின் அவர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது.</p><p>உதயநிதிக்கு நாவடக்கம் தேவை என்பதை நாம் பல ஆண்டுகளாக கூறி வருகிறோம். தான் இருக்கும் பொறுப்பின் மாண்பு அறியாமல் அவர் தொடர்ந்து வாய்க்கு வந்தபடி பேசுவதும், பெண்களை இழிவாக பேசுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.</p><p>அவரது பேச்சுக்கு வழக்கு பதிவது என்பது வேறு. ஆனால், நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கும் நிலையில், இன்றைய தினம் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரை இந்த பொய்க்கால் குதிரை அரசு கைது செய்யத் துடிப்பது என்பது, இது வழக்கைத் தாண்டிய அரசியல் பின்புலம் கொண்டதோ என்ற சந்தேகத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.</p><p>எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பு சட்டமன்றத்தின் முக்கிய அங்கம். அந்த பொறுப்பில் உள்ளவர் இல்லாமல் முடக்கிவிட்டு சட்டப்பேரவை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பொய்க்கால் குதிரை அரசு செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது.</p><p>அதேபோல், நாளை சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மீதான கைது நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>உலகளவில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து டெலிகிராம் செயலி சில மணிநேரம் நீக்கம்! </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/telegram-app-removed-from-apple-app-store-globally-for-hours</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/telegram-app-removed-from-apple-app-store-globally-for-hours#comments</comments><guid isPermaLink="false">9557843b-142f-486f-9145-db53d18c9b70</guid><pubDate>Tue, 04 Aug 2026 08:04:57 +0000</pubDate><atom:updated>2026-08-04T08:04:57.593Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,Tamil Nadu,Apple iPhones,நீக்கம்,ஆப்பிள் நிறுவனம்,டெலிகிராம் செயலி,removed</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/ideum3o0/65.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ டெலிகிராம்- ஆப்பிள் ]]></media:title><media:description type="html"><![CDATA[ டெலிகிராம் செயலி தற்போது ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து  சில மணிநேரம் நீக்கம் செய்யப்பட்டது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/ideum3o0/65.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>உலக அளவில் பலகோடி மக்களால் பயன்படுத்தப்படும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">டெலிகிராம் செயலி</a> ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து  சில மணிநேரம் நீக்கம் செய்யப்பட்டது.</p><h2>ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து டெலிகிராம் செயலி நீக்கம்</h2><p>பிரபல குறுஞ்செய்தி செயலியான டெலிகிராம் உலக அளவில் பல கோடி மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் ஸ்டோரிலிருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் டெலிகிராம் திடீரென நீக்கப்பட்டது. இந்த அதிரடி நடவடிக்கை உலகளாவிய தொழில்நுட்ப உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சில மணி நேரத்திற்கு பின்னர் அந்த செயலி மீண்டும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஆப்பிள் ஆப் </a>ஸ்டோரில் சேர்க்கப்பட்டுள்ளது.</p><h2>விதிமீறல் உள்ளடக்கமே காரணம்</h2><p>ஆப்பிள் நிறுவனத்தின் கடுமையான விதிமுறைகளை மீறும் வகையிலான சில தடைசெய்யப்பட்ட உள்ளடக்கங்கள் (சிறார் பாலியல் வன்கொடுமை தொடர்பானவை) டெலிகிராம் தளத்தில் கண்டறியப்பட்டதாக ஆப்பிள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாகவே ஆப் ஸ்டோரில் இருந்து டெலிகிராம் தற்காலிகமாக நீக்கப்பட்டது.</p><h2>உடனடி நடவடிக்கை</h2><p>இது குறித்து தகவல் அறிந்தவுடன், டெலிகிராம் நிறுவனம் தனது தளத்தில் இருந்த அந்த சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்களை உடனடியாக நீக்கியதுடன், அதற்கு காரணமான பயனரையும் நிரந்தரமாக தடை செய்தது. இந்த துரித நடவடிக்கையை அடுத்து, சில மணிநேரங்களிலேயே டெலிகிராம் செயலியை மீண்டும் ஆப் ஸ்டோரில் ஆப்பிள் நிறுவனம் அனுமதித்தது.</p><h2>பயனர்களுக்கு பாதிப்பா?</h2><p>இந்த தற்காலிக நீக்கத்தால் சில மணிநேரம் புதிய பயனர்கள் செயலியை பதிவிறக்கம் செய்யவோ அல்லது ஏற்கனவே உள்ளவர்கள் அப்டேட் செய்யவோ முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால், ஏற்கனவே ஐபோன்களில் டெலிகிராம் செயலியை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தும் பயனர்களுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி, செய்திகளை அனுப்பும் மற்றும் பெறும் சேவைகள் வழக்கம் போல் தடையின்றி இயங்கின.</p><p>அதே சமயம், ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான கூகுள் பிளே ஸ்டோரில் இந்த செயலி எந்த தடங்கலும் இன்றி தொடர்ந்து நீடித்தது குறிப்பிடத்தக்கது. "என் வீழ்ச்சி குறித்த செய்திகள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவை" என டெலிகிராம் நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் நகைச்சுவையாக பதிவிட்டு இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விக்கிரமசிங்கபுரம் பஸ் நிறுத்தத்தில் வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை: 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-brutally-murdered-at-wickramasinghapuram-bus-stand-police-arrest-4-people-and-investigate</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-brutally-murdered-at-wickramasinghapuram-bus-stand-police-arrest-4-people-and-investigate#comments</comments><guid isPermaLink="false">6e1f440b-a2fe-40f3-86c2-4be04cc1e29d</guid><pubDate>Tue, 04 Aug 2026 07:56:15 +0000</pubDate><atom:updated>2026-08-04T07:56:15.395Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,murder,Youth,police investigation,bus stop,வாலிபர் வெட்டிக்கொலை,விக்கிரமசிங்கபுரம்,போலீசார் விசாரணை,பஸ் நிறுத்தம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/gb3xv6a9/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விக்கிரமசிங்கபுரத்தில் கொலை நடந்த இடத்தில் விசாரணை நடத்திய போலீசார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/gb3xv6a9/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி,  </p><p>நெல்லை மாவட்டம், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">விக்கிரமசிங்கபுரம்</a> பஸ் நிறுத்தத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை</a> செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேரை பிடித்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">போலீசார் விசாரணை</a> நடத்தி வருகின்றனர். </p><h2>வாலிபர்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் டாணா பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மகன் சொரிமுத்து (வயது 30). இவர் விருதுநகரில் தனது மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார். அங்குள்ள ஒரு கூரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மனைவி, குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு வந்தார். அவர்களை பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு சொரிமுத்து மட்டும் நேற்று விருதுநகருக்கு புறப்பட முடிவு செய்தார். </p><h2>வெட்டிக்கொலை</h2><p>நேற்று மாலையில் அவர் விக்கிரமசிங்கபுரம் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது, அங்கு 2 பைக்குகளில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வந்தது. அவர்கள் திடீரென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த சொரிமுத்துவை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டினார்கள். இதில் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக்காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். சிறிது நேரத்தில் துடிதுடித்து சொரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். </p><h2>பயணிகள் அலறியடித்து ஓட்டம்</h2><p>இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது. இதை பார்த்த பஸ் நிறுத்தத்தில் இருந்த பயணிகள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இந்த கொலை குறித்து உடனடியாக விக்கிரமசிங்கபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அம்பை டி.எஸ்.பி. கணேஷ்குமார், விக்கிரமசிங்கபுரம் இன்ஸ்பெக்டர் பிரபு பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சொரிமுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><h2>காரணம் என்ன?</h2><p>முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அங்கு கண்காணிப்பு கேமராக்கள் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்தேகத்தின் பேரில் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விக்கிரமசிங்கபுரம் பஸ் நிறுத்தத்தில் வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நாங்கள் என்ன தீவிரவாதியா?- உதயநிதி கைதுக்கு சென்னை மேயர் பிரியா கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/are-we-terrorists-chennai-mayor-priya-condemns-udhayanidhis-arrest</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/are-we-terrorists-chennai-mayor-priya-condemns-udhayanidhis-arrest#comments</comments><guid isPermaLink="false">8ba7d613-c86e-437e-91fa-d6d205078d8b</guid><pubDate>Tue, 04 Aug 2026 07:45:45 +0000</pubDate><atom:updated>2026-08-04T07:45:45.559Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Trisha,Udhayanidhi Stalin,Mayor Priya,arrest,கண்டனம்,உதயநிதி,சென்னை மேயர் பிரியா,உதயநிதி ஸ்டாலின் கைது,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/up8eoev7/z10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/up8eoev7/z10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[   <p>சென்னை,</p><p>செய்தியாளர்களை சந்தித்த சென்னை மேயர் பிரியா, தி.மு.க. தொண்டர்கள் மீது லத்திச்சார்ஜ் நடத்தும் அளவுக்கு நாங்கள் என்ன தீவிரவாதிகளா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.</p>  <h2>உதயநிதி கைது</h2><p>தஞ்சையில் நடைபெற்ற தி.மு.க. ஆர்ப்பாட்டத்தின்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை மேல் விசாரணைக்காக தஞ்சைக்கு அழைத்துச் சென்றனர்.</p><h2>தமிழகம் முழுவதும் திமுக போராட்டம்</h2><p>உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து, தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் சாலை மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதியின் இல்லம் முன்பும் ஏராளமான திமுக தொண்டர்கள் திரண்ட நிலையில், அவர்களை போலீசார் அப்புறப்படுத்தி கைது செய்தனர்.</p>  <h2>சென்னை மேயர் பிரியா கண்டனம்</h2><p>இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சென்னை மேயர் பிரியா, உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், "தி.மு.க. தொண்டர்கள் மீது லத்திச்சார்ஜ் நடத்தும் அளவுக்கு நாங்கள் என்ன தீவிரவாதிகளா? தியேட்டருக்கு சென்று 'ஜனநாயகன்' படம் பார்த்து அழுகிறார்கள். ஆனால் இன்று போலீசாரை வைத்து ரத்தம் வரும் அளவுக்கு அடிக்கிறார்கள். இதுதான் ஜனநாயகமா? போலீஸ் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்ய முடியாது. இந்த அராஜக அரசியலை கண்டு நாங்கள் ஒருபோதும் அஞ்ச மாட்டோம்" என்று கூறினார்.</p><h2>பரபரப்பான அரசியல் சூழல்</h2><p>உதயநிதி ஸ்டாலின் கைது மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்களால் தமிழகம் முழுவதும் அரசியல் பரபரப்பு நிலவி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>திரிஷா என்ன பிரதமரா? முதல்வரா? - ஆர். எஸ். பாரதி விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-kind-of-prime-minister-is-trisha-is-she-a-chief-minister-r-s-bharathi-review</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-kind-of-prime-minister-is-trisha-is-she-a-chief-minister-r-s-bharathi-review#comments</comments><guid isPermaLink="false">3c25e85a-7255-4045-8535-e4f66095a3ed</guid><pubDate>Tue, 04 Aug 2026 07:44:54 +0000</pubDate><atom:updated>2026-08-04T07:44:54.438Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Trisha,நடிகை திரிஷா,திமுக,DMK,RS Bharathi,ஆர்.எஸ். பாரதி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/qfe177x2/112.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/qfe177x2/112.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தின்போது ஆபாசமாக பேசியதாக எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரை போலீசார் தற்போது தஞ்சைக்கு அழைத்துச்செல்கின்றனர். இந்நிலையில் திமுக அமைப்புச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF">ஆர்.எஸ்.பாரதி</a> செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-</p><h2>திரிஷா என்ன பிரதமரா? முதல்வரா?</h2><p>ஜனநாயகன் படத்தில் நடித்தாரே தவிர, ஜனநாயகம் பற்றி A,B,C அறியாதவராக விஜய் இருக்கிறார். தண்ணீர் வரவில்லை என்கிற வயிற்றெரிச்சலில் யாரோ ஒருவர் திரிஷா பெயரை கூறினார். அது என்ன உலகமகா தப்பா அது. தண்ணீர் என்பது குடிப்பது தானே. அதை நாங்கள் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்கிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது? திரிஷா பற்றி பேசினால் ஏன் இவ்வளவு அவசரம், திரிஷா என்ன பிரதமரா? முதல்வரா? எதற்காக இவ்வளவு அவசரம்? “திரிஷாவை விமர்சித்தால் கைது செய்வார்களா? மக்கள் பிரச்சினையை கவனிப்பதில் தவெக அரசுக்கு நேரமில்லை.</p><h2>இளைய கலைஞர்</h2><p>எதிர்க்கட்சியினரை கைது செய்ய முனைப்பு காட்டுகிறது". மேலும், இப்படி தான் கருணாநிதியை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். இன்று அதே போல உதயநிதியை கைது செய்து வேனில் அழைத்து செல்கின்றனர். இன்று முதல் உதயநிதியை இளைய கலைஞர் என அழைப்பதற்கான வழியை விஜய் வகுத்துவிட்டார்.</p><p>இவ்வாறு அவர் பேசியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>உதயநிதி கைது, கடைகள் அடைப்பு; அறிவாலயத்தில் மு.க. ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/udhayanidhis-arrest-mk-stalins-important-advice-in-arivalayam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/udhayanidhis-arrest-mk-stalins-important-advice-in-arivalayam#comments</comments><guid isPermaLink="false">80c1ad86-3305-4261-8cf9-0b0a7aca3f47</guid><pubDate>Tue, 04 Aug 2026 07:28:07 +0000</pubDate><atom:updated>2026-08-04T07:28:07.721Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Udhayanidhi Stalin,உதயநிதி,மு.க. ஸ்டாலின்,mk stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/xu8ppqos/tnfcs.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/xu8ppqos/tnfcs.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>உதயநிதி ஸ்டாலின் கைது தொடர்ச்சியாக, அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார்.</p><p>தஞ்சையில் நேற்று தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும் மற்றும் தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார். அப்போது, முதல்-அமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசினார். இது சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையானது. உதயநிதியின் பேச்சுக்கு த.வெ.க. சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் த.வெ.க. மகளிர் அணி சார்பில், தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தேசிய மகளிர் ஆணையத்திடமும் புகார் அளிக்கப்பட்டது.</p>  <h2>9 பிரிவுகளில் வழக்கு</h2><p>த.வெ.க. அளித்த புகாரின் அடிப்படையில் உதயநிதி ஸ்டாலின் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளில் தஞ்சை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தஞ்சையில் இருந்து இன்று சென்னை போலீஸ் குழுவினர், சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்து, விசாரணைக்காக தஞ்சைக்கு அழைத்து சென்றனர்.</p><p>இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க.வினர் பல்வேறு நகரங்களிலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனால், பல்வேறு பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு வருகின்றன.  போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.  இதனால் கலவரம் பரவி விடாமல் இருப்பதற்காக, அதிரடிப்படையினர் இறக்கி விடப்பட்டு உள்ளனர்.</p>  <h2>மு.க. ஸ்டாலின் வருகை</h2><p>இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வருகை தந்துள்ளார்.  அவர் கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார்.  தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனும் வந்துள்ளார்.</p>  <h2>பொய் வழக்கு</h2><p>உதயநிதி கைது தொடர்பாக தி.மு.க. வெளியிட்ட செய்தியில், உதயநிதி கைது நடவடிக்கை ஜனநாயக விரோதம்.  அவர் மீது பொய் வழக்கு போடப்பட்டு உள்ளது.  கைது நடவடிக்கையால், உதயநிதியையோ, தி.மு.க.வையோ முடக்க முடியாது என தெரிவித்து உள்ளது.</p><p>நாளை தமிழக சட்டசபை கூடவுள்ள நிலையில், இன்று கைது நடவடிக்கை ஏன்? என கேட்டுள்ளது.  சட்டசபை கூட்டத்தொடரில் உதயநிதி எழுப்ப உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது என்ற அச்சத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>பதவி உயர்வு, பணியிட மாற்றங்களுக்கு இனி முதல்-அமைச்சர் ஒப்புதல் பெற வேண்டும்: தமிழக அரசு அரசாணை வெளியீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/promotions-and-job-transfers-must-now-be-approved-by-the-chief-minister-tamil-nadu-government-issues-order</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/promotions-and-job-transfers-must-now-be-approved-by-the-chief-minister-tamil-nadu-government-issues-order#comments</comments><guid isPermaLink="false">0e90ac67-65c1-41d1-927c-af89e838a44e</guid><pubDate>Tue, 04 Aug 2026 07:23:39 +0000</pubDate><atom:updated>2026-08-04T07:23:39.206Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,Chennai,சென்னை,முதல்-அமைச்சர்,தமிழக அரசு,Chief Minister,Transfer,பணியிட மாற்றம்,publication,Government Order,Approval,ஒப்புதல்,பதவி உயர்வு,Promotion,அரசாணை வெளியீடு,பெற வேண்டும்,To get</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/sj90nktv/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81.gif" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக அரசு உத்தரவு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/sj90nktv/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">பதவி உயர்வு</a>, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D">பணியிட மாற்றங்களுக்கு</a> இனி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D">முதல்-அமைச்சர்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">ஒப்புதல்</a> பெற வேண்டும் என <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81">தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.</a> </p><p>தமிழ்நாடு அரசு அலுவல் விதிகள், 1978-ன் விதி 35(4)ன் கீழ், கடந்த 2022 முதல் 2025 வரை வெளியிடப்பட்ட அனைத்து நிலை ஆணைகளும், கடந்த ஜனவரி 9-ம் தேதி வெளியிடப்பட்ட நிலை ஆணை எண்-7ம் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவற்றுக்கு பதிலாக பதவி உயர்வு, நியமனம், பணி இடமாற்றம், நிலம் கையகப்படுத்தல், நில மாற்றம் உள்ளிட்டவைக்கு புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இதுதொடர்பாக தலைமை செயலாளர் சாய்குமார் வெளியிட்ட புதிய உத்தரவில் கூறியிருப்பதாவது:</p><p>துறைத் தலைவர்கள், துறைத் தலைவர்களுக்கு அடுத்த நிலை அதிகாரிகள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், கூடுதல் செயலாளர்கள், இணைச் செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆகியோரின் தற்காலிக மற்றும் நிரந்தர பதவி உயர்வு பட்டியல்கள் முதல்-அமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட வேண்டும். மற்ற மாநிலப் பணியாளர் பதவி உயர்வு பட்டியல்களில் சம்பந்தப்பட்ட துறை, மனிதவள மேலாண்மைத் துறை மற்றும் நிதித்துறைக்கு இடையே கருத்து வேறுபாடு இல்லாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சரின் ஒப்புதல் போதுமானதாகும். கருத்து வேறுபாடு ஏற்பட்டால், மனிதவள மேலாண்மை அமைச்சரின் ஒப்புதலுக்கு கோப்புகள் அனுப்பப்பட வேண்டும். மூப்பு அடிப்படையை மீறிய பதவி உயர்வுகள் தொடர்பான கோப்புகள் தலைமைச் செயலாளர் தலைமையிலான உயர்மட்டக் குழுவின் பரிந்துரையுடன் முதல்-அமைச்சரின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.</p><h2>பணி நியமனத்துக்கு முதல்-அமைச்சர் ஒப்புதல்</h2><p>அரசு செயலாளர்கள், துறைத் தலைவர்கள், அகில இந்திய பணியாளர் அதிகாரிகள், கூடுதல் செயலாளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், கூடுதல் பதிவாளர்கள் மற்றும் கூடுதல் இயக்குநர்கள் ஆகியோரின் நியமனம், பணி இடமாற்றம் தொடர்பான அனைத்து கோப்புகளும் முதல்-அமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட வேண்டும். சட்ட அலுவலர்கள் நியமனத்தில், அரசு தலைமை வழக்கறிஞர், கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர், அரசு வழக்கறிஞர், அரசு பிளீடர் உள்ளிட்ட உயர்நிலைப் பதவிகளுக்கான நியமனங்களுக்கு முதல்-அமைச்சரின் ஒப்புதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம் மற்றும் பிற நீதிமன்றங்களுக்கான இதர சட்ட அலுவலர்களின் நியமனங்களை எரிசக்தி வளங்கள் மற்றும் சட்டத்துறை அமைச்சர் முடிவு செய்வார்.</p><h2>துறை அமைச்சரின் ஒப்புதல்</h2><p>நீர்வளத் துறையில் கண்காணிப்பு பொறியாளர்கள் மற்றும் செயற்பொறியாளர்களின் பணியிட மாற்றம் தொடர்பான கோப்புகளை ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் பரிசீலிப்பார். பொதுப்பணித் துறையில் இதே நிலை அதிகாரிகளின் கோப்புகளை பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் முடிவு செய்வார். ஒரு ஹெக்டேருக்கு மேற்பட்ட நிலம் கையகப்படுத்தப்படும் ரெயில்வே, சாலை, தேசிய நெடுஞ்சாலை, பாசன கால்வாய், மின்வழித்தடம், தொழில் வழித்தடம், மலிவு விலை வீட்டு வசதி உள்ளிட்ட திட்டங்களுக்கு முதல்-அமைச்சர், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் வருவாய், பேரிடர் மேலாண்மை அமைச்சரின் ஒப்புதல் பெற வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு மிகாத நிலம் கையகப்படுத்தப்படும் திட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் வருவாய் அமைச்சரின் ஒப்புதல் போதுமானதாகும்.</p><h2>தடையில்லா சான்றிதழ்</h2><p>ஒரு அரசுத் துறையிலிருந்து மற்றொரு அரசுத் துறைக்கு நிலம் மாற்றும் கோப்புகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் வருவாய், பேரிடர் மேலாண்மை அமைச்சரின் ஒப்புதல் பெற வேண்டும். அமைச்சர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் மட்டுமே அந்த கோப்பு முதல்-அமைச்சரின் பரிசீலனைக்கு அனுப்பப்படும். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில், துறைத் தலைவர் மற்றும் இரண்டாம் நிலை அதிகாரிகளை தவிர பிற அதிகாரிகளின் பதவி உயர்வு, இடமாற்றம், பணியமர்த்தல் உள்ளிட்ட கோப்புகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் முடிவு செய்வார். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி நிறுவனங்களை தொடங்குவதற்கான ‘தடையில்லா சான்றிதழ்’ வழங்கும் அதிகாரமும் அந்த அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது. </p><h2>கவர்னரின் ஒப்புதல் வேண்டாம்</h2><p>முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளின் பழைய வாகனங்களை முன்கூட்டியே பயன்பாட்டிலிருந்து நீக்குவது தொடர்பான கோப்புகளுக்கு தலைமைச் செயலாளர் ஒப்புதல் வழங்குவார். மேலும் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம், மாநில தகவல் ஆணையம், தமிழ்நாடு லோக் ஆயுக்தா மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஒம்புட்ஸ்மேன் தலைவர், உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான கோப்புகள் கவர்னரின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதேநேரத்தில், தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் நியமனங்களை இனி கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டியதில்லை. </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பள்ளிக் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு: மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்க - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/human-excreta-found-in-school-drinking-water-tank-ensure-student-safety-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/human-excreta-found-in-school-drinking-water-tank-ensure-student-safety-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">92fc1395-4674-4fe1-991d-2bf3b8487c4b</guid><pubDate>Tue, 04 Aug 2026 07:10:31 +0000</pubDate><atom:updated>2026-08-04T07:10:31.009Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,குடிநீர் தொட்டி,drinking water tank</media:keywords><media:content height="288" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/5elp3q0w/14.gif" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/5elp3q0w/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அரசு நடுநிலைப் பள்ளியில், மாணவர்கள் பருகும் குடிநீர் தொட்டிக்குள் மனித மலக்கழிவு கண்டெடுக்கப்பட்ட செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். கல்வி கற்கும் ஆலயத்தில், பிஞ்சு குழந்தைகளின் உயிருடன் விளையாடும் இத்தகைய மனிதாபிமானமற்ற செயலை எவர் செய்திருந்தாலும் அதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.</p><p>தமிழகத்தையே உலுக்கிய வேங்கைவயல் வடுமறைவதற்கு முன்னரே, மீண்டும் ஒரு கொடுமை நிகழ்ந்திருப்பது கவலை அளிக்கிறது. அரசுப் பள்ளிகளில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததே இதற்கு மிக முக்கிய காரணமாகும். எனவே இனியாவது தவெக அமைச்சர்கள் கேமராக்களுடன் பள்ளிகளில் 'ஆய்வு நாடகம்' நடத்துவதை விடுத்து, மாணவர்களின் பாதுகாப்பிற்கு உருப்படியான (உறுதியான) தீர்வை வழங்க வேண்டும்.</p><p>மேலும், இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாகக் கண்டறிந்து, அவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளி குடிநீர் தொட்டிகளையும் முறையாகப் பரிசோதித்து, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் </p><p> அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>உதயநிதி ஸ்டாலின் கைது - கனிமொழி எம்.பி. கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/arrest-of-udhayanidhi-stalin-mp-kanimozhi-condemns-action</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/arrest-of-udhayanidhi-stalin-mp-kanimozhi-condemns-action#comments</comments><guid isPermaLink="false">4fc390ca-eb67-46f7-9284-638be60f6e7e</guid><pubDate>Tue, 04 Aug 2026 07:04:48 +0000</pubDate><atom:updated>2026-08-04T07:04:48.620Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,கனிமொழி எம்.பி.,MP Kanimozhi</media:keywords><media:content height="288" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/0va8cy7x/13.gif" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/0va8cy7x/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை, </p><p>தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தின்போது ஆபாசமாக பேசியதாக எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரை போலீசார் தற்போது தஞ்சைக்கு அழைத்துச்செல்கின்றனர். </p><p>உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு கன்மொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை தனிப்பட்ட முறையில் பழிவாங்க வேண்டும் என்றால், அரசு வழக்குத் தொடுக்கட்டும். நீதிமன்றம் தீர்ப்பளிக்கட்டும். ஆனால், எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.க-வை எதிர்கொள்ளத் துணிச்சலின்றி, இப்படியான அடக்குமுறைகளில் தவெக அரசு ஈடுபடுவது சட்டத்திற்குப் புறம்பானது. நாளை தொடங்கவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவரைப் பங்கேற்கவிடாமல் தடுப்பதற்காகவே கைது செய்வது அப்பட்டமான கோழைத்தனம்.”</p><p>இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>அரசுப் பள்ளி குடிநீரில் மனிதக் கழிவு கலப்பு; கடும் நடவடிக்கை கோரி மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/human-waste-mixed-in-government-school-drinking-water-manickam-thakur-demands-strict-action</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/human-waste-mixed-in-government-school-drinking-water-manickam-thakur-demands-strict-action#comments</comments><guid isPermaLink="false">5c462b5e-5354-4ea2-a071-d0e70fd43999</guid><pubDate>Tue, 04 Aug 2026 06:51:00 +0000</pubDate><atom:updated>2026-08-04T06:51:00.136Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>குடிநீர்,drinking water,Government School,மனித கழிவு,Human Waste,அரசுப் பள்ளி,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Thakur MP</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/18vkysxy/9.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/18vkysxy/9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><p>தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">மாணிக்கம் தாகூர் </a>வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது</p><h2>சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு</h2><p>திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், தங்கம்மாபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியின் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்ட செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மலக்கழிவு இருந்ததாக கூறப்படும் பிளாஸ்டிக் கவரில் எச்சரிக்கை துண்டுச் சீட்டு ஒன்றும் எழுதி வைக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதோடு, சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு ஏற்படக் கூடிய நிலையும் ஏற்பட்டுள்ளது. </p><h2>தீவிர விசாரணை</h2><p>இத்தகைய சம்பவங்கள் பள்ளி வளாகத்திலேயே நடைபெறுவது பிஞ்சு உள்ளங்கள் மத்தியில் நஞ்சை விதைப்பதற்கு சமமாகும். இந்தக் கொடூர சம்பவம் குறித்து கரூர் மக்களவை உறுப்பினர்  ஜோதிமணி அவர்கள் சம்பவம் அறிந்தவுடனேயே மாவட்ட ஆட்சித் தலைவரிடமும், மாவட்ட காவல்துறை அதிகாரியிடமும் பேசி, தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டுமென கூறியிருக்கிறார். </p><h2>கடுமையான நடவடிக்கை</h2><p>இதுபோன்ற சமூகவிரோத செயல்களில் எந்தவித சமரசமோ, தயவு தாட்சண்யமோ காட்டாமல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரியிருக்கிறார். மாணவர்கள் படிக்கின்ற பள்ளி வளாகத்திலேயே இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவதை சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிற நாட்டில் அனுமதிக்கவே முடியாது. இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>உதயநிதி ஸ்டாலின் கைது - பிரேமலதா கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/udhayanidhi-stalins-arrest-premalatha-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/udhayanidhi-stalins-arrest-premalatha-condemns#comments</comments><guid isPermaLink="false">e086d4de-0ef5-43f8-a76f-186bc4c7b5c8</guid><pubDate>Tue, 04 Aug 2026 06:31:49 +0000</pubDate><atom:updated>2026-08-04T06:31:49.220Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Udhayanidhi Stalin,arrest,Premalatha Vijayakanth,உதயநிதி ஸ்டாலின் கைது,பிரேமலதா கண்டனம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/jk5q5c8h/111.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/jk5q5c8h/111.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தின்போது ஆபாசமாக பேசியதாக எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரை போலீசார் தற்போது தஞ்சைக்கு அழைத்துச்செல்கின்றனர். இந்நிலையில்</p><p>இது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE">பிரேமலதா </a>விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>அடக்குமுறைச் சட்டங்கள்</h2><p>எதிர்க்கட்சித் தலைவராக உள்ள உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பொதுக்கூட்டத்தில் தெரிவித்த கருத்துகளுக்காக அவரைக் கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு ஜனநாயக நாட்டில் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துவது அடிப்படை ஜனநாயக உரிமையாகும். கருத்துக்கு கருத்தால் பதிலளிப்பதே ஜனநாயகத்தின் மாண்பாகும்; கைது நடவடிக்கையே தீர்வாகக் கருதுவது ஜனநாயக மரபுகளுக்கு ஏற்றதல்ல. கருத்துக்களை ஒடுக்குவதற்காக காலனித்துவ ஆட்சிக் காலத்தில் பல்வேறு அடக்குமுறைச் சட்டங்கள் பயன்படுத்தப்பட்டன.</p> <p>சுதந்திர இந்தியாவில் கருத்து தெரிவித்ததற்காக கைது செய்வது போன்ற நடவடிக்கைகள் பொதுமக்களிடையே அதிருப்தியையும் ஜனநாயகத்தின் மீது அவநம்பிக்கையையும் உருவாக்கும் ஆளுங்கட்சியினர் மற்றும் முதல்-அமைச்சர் உள்ளிட்டோர் அரசியல் மேடைகளில் தங்களது கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்துகின்றனர். அதேபோன்று எதிர்க்கட்சியினருக்கும் தங்களது அரசியல் கருத்துகளை ஜனநாயக முறையில் தெரிவிக்கும் உரிமை உள்ளது. அந்த உரிமையை குறைக்கும் வகையில் கைது நடவடிக்கைகளை மேற்கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. </p><h2>விரைவான நடவடிக்கை</h2><p>அண்மையில் ராணிப்பேட்டையில் செய்தியாளர்கள் தவெக நிர்வாகிகளால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும், குற்றவாளிகள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால், எதிர்க்கட்சியினர் கருத்து தெரிவித்தவுடன் உடனடியாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது சட்டத்தின் சமநிலையான தாக்கம் குறித்து கேள்விகளை எழுப்புகிறது. </p><h2>எதிர்க்கட்சித் தலைவர் கைது</h2><p>நாளை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள இந்த முக்கியமான நேரத்தில், ஒரு பொதுக்கூட்டத்தில் கருத்து தெரிவித்ததாகக் கூறி எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்வது ஜனநாயக உணர்வுக்கும் அரசியல் நாகரிகத்திற்கும் பொருந்தாத செயலாகும். எனவே, ஜனநாயக மரபுகளையும் கருத்துச் சுதந்திரத்தையும் மதித்து, அரசியல் கருத்து வேறுபாடுகளை கைது நடவடிக்கைகள் மூலம் கையாளும் போக்கை கைவிட வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமமாக அமல்படுத்தப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>
திரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும்: குஷ்பு கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/udhayanidhi-must-apologize-to-trisha-khushbu-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/udhayanidhi-must-apologize-to-trisha-khushbu-condemns#comments</comments><guid isPermaLink="false">69cb2e37-dd34-456c-82bd-e319e4a0d39e</guid><pubDate>Tue, 04 Aug 2026 06:19:43 +0000</pubDate><atom:updated>2026-08-04T06:19:43.304Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Trisha,கண்டனம்,உதயநிதி,குஷ்பு,Kushboo,Controversial speech,திரிஷா,Udhayanidhi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/32ft1uyw/z8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/32ft1uyw/z8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>தஞ்சையில் தி.மு.க. சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது, முதல்-அமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசினார். இது சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையானது.</p><h2>6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு</h2><p>இந்த பேச்சுக்கு தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கடும் கண்டனம் தெரிவித்தது. தொடர்ந்து, தவெக மகளிர் அணி தஞ்சை கிழக்கு காவல் நிலையத்திலும், தேசிய மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்தது. அந்தப் புகாரின் அடிப்படையில், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.</p> <h2>கைது செய்த போலீஸ்</h2><p>இதையடுத்து தஞ்சையில் இருந்து இன்று சென்னை போலீஸ் குழுவினர், சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்து, விசாரணைக்காக தஞ்சைக்கு அழைத்துச் சென்றனர்.</p><h2>குஷ்பு கண்டனம்</h2><p>இதற்கிடையில், நடிகையும் பா.ஜ.க. மாநில துணைத் தலைவருமான குஷ்பு, உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். பொது மேடையில் நடிகை திரிஷாவை அவமதித்ததாக குற்றம்சாட்டிய அவர், "தவறை ஒப்புக்கொண்டு திரிஷாவிடம் மன்னிப்பு கேட்கும் தைரியமும் கண்ணியமும் உதயநிதியிடம் உள்ளதா என்பதை பார்ப்போம்" என்று தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நெல்லையில் 16 வயது சிறுமிக்கு காதல் தொல்லை: வாலிபர் போக்சோவில் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/16-year-old-girl-in-nellai-sexually-harassed-youth-arrested-under-pocso</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/16-year-old-girl-in-nellai-sexually-harassed-youth-arrested-under-pocso#comments</comments><guid isPermaLink="false">e2e0b51f-e254-4f22-8b9b-2b1b8e991fe9</guid><pubDate>Tue, 04 Aug 2026 06:10:21 +0000</pubDate><atom:updated>2026-08-04T06:10:21.902Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Tirunelveli,திருநெல்வேலி,arrest,Youth,வாலிபர்,சிறுமி,girl,போக்சோ,POCSO,love affair,காதல் தொல்லை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/ephf4qa3/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறுமிக்கு பாலியல் தொல்லை, வாலிபர் கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/ephf4qa3/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டத்தில் 16 வயது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF">சிறுமி</a>க்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88">காதல் தொல்லை</a> கொடுத்த வாலிபரை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B">போக்சோ</a> சட்டத்தின் கீழ் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்யப்பட்டார்.</p><h2>16 வயது சிறுமிக்கு காதல் தொல்லை</h2><p>நெல்லை அருகே உள்ள சீதபற்பநல்லூரை சேர்ந்தவர் அசோக் (வயது 27). பெயிண்டரான இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வரும் 16 வயது சிறுமியிடம் பழகி வந்தார். பின்னர் அவர் அந்த சிறுமியை காதலிப்பதாக கூறினார். ஆனால் அவரின் காதலை சிறுமி ஏற்றுக்கொள்ளவில்லை.</p><h2>வாலிபர் போக்சோவில் கைது</h2><p>இதனால் ஆத்திரம் அடைந்த அசோக், அந்த சிறுமிக்கு தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரது செல்போனை பறித்து சாலையில் வீசி உடைத்து ரகளை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அசோக்கை கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு வைகோ கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vaiko-condemns-udhayanidhi-stalins-remarks-at-the-thanjavur-protest</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vaiko-condemns-udhayanidhi-stalins-remarks-at-the-thanjavur-protest#comments</comments><guid isPermaLink="false">61ffbc69-a755-4679-9c7f-cd31c2ad68db</guid><pubDate>Tue, 04 Aug 2026 06:07:36 +0000</pubDate><atom:updated>2026-08-04T06:07:36.050Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Vaiko,வைகோ,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/kss692hv/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/kss692hv/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”தஞ்சையில் திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்  வரம்பு கடந்து முதலமைச்சர் ஜோசப் விஜய்யை விமர்சனம் செய்து பேசி இருப்பது கடுமையான கண்டனத்துக்கு உரியதாகும்.</p><p>"யாகாவராயினும் நா காக்க" எனும் குறள் மொழியை ,எதிர்க்கட்சித் தலைவர்  பொறுப்பில் உள்ள உதயநிதி கடை பிடிக்க வேண்டும். அதை விடுத்து முதலமைச்சர் மீது மலிவான இழி மொழிகளை வீசுவது அவர் வகித்து வரும் பொறுப்பிற்கு உகந்தது அல்ல.</p><p>அரசுக்கு இடையூறு செய்வதற்கும், அரசியல் நடத்துவதற்கும் காவிரி பிரச்சினையை பயன்படுத்தி திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு, நாலாந்தர பேச்சாளர் பட்டியலில் அவரை சேர்த்து இருக்கிறது என்பதை அவர் உணர வேண்டும்.</p><p>காவிரிப் பிரச்சினையில் தமிழ்நாட்டின் குரல் அரசியல் எல்லைகளைத் தாண்டி ஒன்றுபட்டு ஒலிக்க வேண்டும். அப்பொழுதுதான் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட முடியும்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>உதயநிதி ஸ்டாலின் கைது எதிரொலி... தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aftermath-of-udhayanidhi-stalins-arrest-dmk-cadres-stage-protests-across-various-parts-of-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aftermath-of-udhayanidhi-stalins-arrest-dmk-cadres-stage-protests-across-various-parts-of-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">00697dca-146b-4774-8f1d-410f674fce08</guid><pubDate>Tue, 04 Aug 2026 06:01:02 +0000</pubDate><atom:updated>2026-08-04T06:01:02.010Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,கைது,arrested</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/god7owbi/11.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/god7owbi/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தின்போது ஆபாசமாக பேசியதாக எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரை போலீசார் தற்போது தஞ்சைக்கு அழைத்துச்செல்கின்றனர். </p><p>உதயநிதி ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்திலும், கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>முன்னதாக உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் உதயநிதி ஸ்டாலின் வீட்டின் முன் குவிந்தனர். அவர்களை போலீசார் கைதுசெய்தனர். எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. </p> ]]></content:encoded></item><item><title>502 செவிலியர் பணியிடங்கள் நீக்கம்; தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-condemns-tamil-nadu-government-for-abolishing-502-nursing-posts</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-condemns-tamil-nadu-government-for-abolishing-502-nursing-posts#comments</comments><guid isPermaLink="false">923f3db8-7a2e-446a-9ddb-d3224ca4754d</guid><pubDate>Tue, 04 Aug 2026 05:55:19 +0000</pubDate><atom:updated>2026-08-04T05:55:19.476Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி,Anbumani Ramadas,பணியிடங்கள்,posts,நீக்கம்,செவிலியர்,Nursing</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/xbb10d77/anbumani.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/xbb10d77/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><p>பாமக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/anbumani-ramadoss">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகள், பொது சுகாதாரத்துறை ஆகியவற்றில் உள்ள 502 செவிலியர் பணியிடங்களை ஒழித்து விட்டு, அந்த இடங்களில் பணியாற்றி வந்த செவிலியர்களை வேறு இடங்களில் அமர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பப் போவதாக வாக்குறுதி அளித்திருந்த தவெக, ஆட்சிக்கு வந்த பின் காலியிடங்களை ஒழிப்பது அநீதியாகும்.</p><h2>செவிலியர்கள் தட்டுப்பாடு</h2><p>தமிழ்நாட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கி, மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகள் வரை அனைத்து இடங்களிலும் செவிலியர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. அவற்றிலுள்ள காலியிடங்களை நிரப்புவதன் மூலம் தான் இந்த சிக்கலுக்கு தீர்வு காண முடியும். ஆனால், தமிழக அரசோ, ஓரிடத்தில் பணியாற்றும் செவிலியர்களை இன்னொரு இடத்திற்கு மாற்றி நிலைமையை சமாளிக்கும் வித்தையை செயல்படுத்தி வருகிறது. இதனால் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த நோயர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர்.</p><h2>204  அரசாணை</h2><p>சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, சேலம் மருத்துவக் கல்லூரி, திருச்சி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் போதிய அளவில் செவிலியர்கள் இல்லை. புதிய செவிலியர்களை தேர்வு செய்து அந்த இடங்களில் நியமிப்பது தான் இதற்கு தீர்வு ஆகும். ஆனால், அதை செய்யாத தமிழக அரசு நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பூர், நீலகிரி, அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர் ஆகிய 7 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள தலா 30 செவிலியர் பணியிடங்களை ஒழித்து விட்டு, அங்கு பணியாற்றி வந்த 210 செவிலியர்களை ஸ்டான்லி, செங்கல்பட்டு, சேலம், திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நியமித்துள்ளது. இதற்காக கடந்த ஜூலை 21-ஆம் நாள் 204 என்ற அரசாணையை மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை பிறப்பித்திருக்கிறது.</p><p>இன்னொருபுறம், மனநல மருத்துவம் மற்றும் மறுவாழ்வு வழங்குவதற்காக அரசு மருத்துவமனைகளில் இயங்கும் 17 அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையங்களில் பணியமர்த்துவதற்காக 292 செவிலியர்கள் தேவைப்படுகின்றனர். அவர்களை புதிதாக நியமிக்காமல் அரசு மருத்துவமனைகளில் உள்ள 100 செவிலியர் பணியிடங்களையும், பொது சுகாதாரத்துறையில் உள்ள 192 செவிலியர் பணியிடங்களையும் ஒழித்துள்ள அரசு, அந்த பணியிடங்களில் பணியாற்றிய செவிலியர்களை அவசர சிகிச்சை மையங்களில் நியமித்துள்ளது.</p><h2>பணியிடங்களை குறைப்பது நியாயமல்ல</h2><p>தேசிய மருத்துவ ஆணையம் உள்ளிட்ட ஒழுங்குமுறை அமைப்புகள் வரையறுத்துள்ள விதிகளின்படி  தேவைப்படும் செவிலியர்கள் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பங்கு செவிலியர்கள் மட்டும் தான் அரசு  மருத்துவமனைகளில் பணியாற்றுகின்றனர். தமிழ்நாட்டில் 1832 ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்கள், 504 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் என மொத்தம் 2334 நிலையங்கள் செயல்பட்டு வரும் நிலையில்,  அவற்றில் 1400-க்கும் குறைவான செவிலியர்கள் மட்டும் தான் நிரந்தர அடிப்படையில் பணியாற்றுகின்றனர். இந்த எண்ணிக்கை போதுமானதல்ல எனும் போது இருக்கும் பணியிடங்களையும் குறைப்பது நியாயமல்ல.</p><h2>தொகுப்பூதிய செவிலியர்கள்</h2><p>தமிழ்நாடு முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மாவட்ட மருத்துவமனைகள் வரை 6500-க்கும் கூடுதலான செவிலியர்கள் மிகக் குறைந்த ஊதியத்தில்  தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றுகின்றனர். இவர்கள் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் மூலம் தகுதி மற்றும் இட ஒதுக்கீட்டை பின்பற்றி தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆவர். மருத்துவமனைகளில் நிரந்தர செவிலியர் பணியிடங்கள் காலியாகும் போது அந்த இடங்கள் தொகுப்பூதிய செவிலியர்களைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும் என்பது தான் நடைமுறையாகும். ஆனால், இருக்கும் பணியிடங்களையும் தமிழக அரசு ஒழித்து வருவதால், இப்போது  தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் செவிலியர்கள் பணி நிலைப்பு பெற முடியாத நிலை உருவாகியுள்ளது.</p><p>அரசு மருத்துவக் கல்லூரிகளில் 6 செவிலியர் கல்லூரிகள் புதிதாகத்  தொடங்கப்படவுள்ளன. அவற்றில் பணி செய்யவும் ஒப்ப்ந்த அடிப்படையிலான செவிலியர்கள் தான் நியமிக்கப்படவுள்ளனர். இதனால் அரசு மருத்துவமனைகளில் 9 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிலைப்பு என்பது பகல் கனவாக மாறிவிட்டது. இது செவிலியர்களிடம் மனச்சோர்வை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>வாக்குறுதி</h2><p>2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், அரசுத் துறைகளில் ஐந்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்களுக்கு பணி நிலைப்பு  வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு பதிலாக இருக்கும் பணியிடங்களை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதே நிலை நீடித்தால், தமிழக மருத்துவமனைகளில் சில ஆண்டுகளில் செவிலியர்கள் இருக்க மாட்டார்கள். அத்தகைய நிலை ஏற்படுவதைத்  தடுக்க வேண்டும் என்றால், செவிலியர் பணியிடங்களை ஒழிக்க வகை செய்யும் அரசாணை எண் 204-ஐ ரத்து செய்ய வேண்டும். காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கைதுக்கு பயப்படுபவன் நான் அல்ல - உதயநிதி ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-am-not-one-to-fear-arrest-said-udhayanidhi-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-am-not-one-to-fear-arrest-said-udhayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">b697d095-94d4-47b8-9cfe-c12e6ff46d94</guid><pubDate>Tue, 04 Aug 2026 05:52:48 +0000</pubDate><atom:updated>2026-08-04T05:52:48.468Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,கைது,arrested</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/dvteajjq/10.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/dvteajjq/10.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Breaking-News</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தின்போது ஆபாசமாக பேசியதாக எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரை போலீசார் தஞ்சைக்கு அழைத்துச்செல்கின்றனர். </p><p>இதற்கிடையே செய்தியாளர்கள் சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது; </p><p>தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என ஆர்ப்பாட்டத்தில் பேசினேன். டம்மி முதல்வருக்கு ரீல்ஸ் வெறி முற்றிப் போய் உள்ளது. முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ரீல்ஸ் வெறியில் உள்ளனர். </p><p>நான் பேசாத ஒன்றை பேசியதாக கட், காப்பி, பேஸ்ட் பன்னி பொய் செய்தி பரப்புகின்றனர். என் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன். இதற்கெல்லாம் பயப்படக்கூடிய ஆள் நான் கிடையாது. </p><p>திமுகவின் கடைசி தொண்டன் கூட கைதுக்கு பயப்படுபவர்கள் கிடையாது. காவிரி பிரச்சினையை திசை திருப்ப என் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைது நடவடிக்கையை சட்டப்படி எதிர்கொள்வேன்.”</p><p>இவ்வாறு அவர் பேசினார். </p> ]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய்க்கு எதிரான அவதூறு பேச்சு; உதயநிதி ஸ்டாலின் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் அவசர மனு தாக்கல்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/defamatory-speech-against-chief-minister-vijay-urgent-plea-in-madras-high-court-on-behalf-of-udayanidhi-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/defamatory-speech-against-chief-minister-vijay-urgent-plea-in-madras-high-court-on-behalf-of-udayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">0b39d35f-1aac-42e2-9d55-5a90da38267c</guid><pubDate>Tue, 04 Aug 2026 05:51:26 +0000</pubDate><atom:updated>2026-08-04T05:51:26.381Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை ஐகோர்ட்டு,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,Chennai High Court</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/pebyfyt2/tnolc.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/pebyfyt2/tnolc.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>முதல்-அமைச்சர் விஜய்க்கு எதிரான அவதூறு பேச்சு தொடர்பான வழக்கில், உதயநிதி ஸ்டாலின் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.</p><p>தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தி.மு.க. சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.  காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் த.வெ.க. அரசின் மெத்தனப்போக்கை கண்டித்தும், விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டியும், மேகதாது அணை கட்டுவதை தடுக்க தவறிய த.வெ.க. அரசை கண்டித்தும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் தி.மு.க. இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார்.</p>  <h2>அவதூறு பேச்சு</h2><p>அப்போது அவர், காவிரி டெல்டாவில் உள்ள ஆறுகள் அனைத்தும் இன்றைக்கு வறண்டு, கிட்டத்தட்ட ஒரு பாலைவனம்போல் காட்சி அளித்துக்கொண்டு இருக்கிறது. இதே நேரத்தில் நம்முடைய தலைவர் முதல்-அமைச்சராக இருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா? நம் தலைவர் இந்த நிலைமை ஏற்பட விட்டிருப்பாரா? என்றார்.  தொடர்ந்து முதல்-அமைச்சர் விஜய்க்கு எதிராக அவதூறாக அவர் பேசியது சர்ச்சையானது.</p><p>இந்நிலையில், உதயநிதிக்கு எதிராக தஞ்சையில் த.வெ.க. மகளிரணி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.  முதல்-அமைச்சர் விஜய்க்கு எதிராக அவதூறாக பேசியது தொடர்பாக, உதயநிதிக்கு எதிராக ஐ.டி., பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  அவரை கைது செய்ய தஞ்சை போலீசார் இன்று சென்னை வந்தனர்.</p>  <h2>போலீசார் குவிப்பு</h2><p>இதேபோன்று, சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி குடும்பத்தினரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.  எனினும், வழக்கறிஞர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்க காலஅவகாசம் வேண்டும் என அவர்கள் தரப்பில் போலீசிடம் கூறப்பட்டு உள்ளது.</p><p>இதனை தொடர்ந்து, உதயநிதியின் வீட்டுக்கு முன் தி.மு.க. தொண்டர்கள் குவிந்துள்ளனர்.  அவர்கள் கோஷங்கள் எழுப்பியபடி உள்ளனர்.  அவர்களை கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.  உதயநிதி வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.  போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளனர்.</p>  <h2>நீதிபதி உத்தரவு</h2><p>இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய்க்கு எதிரான அவதூறு பேச்சு தொடர்பான வழக்கில், கைது நடவடிக்கையை தவிர்க்க, உதயநிதி ஸ்டாலின் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.  இந்த மனு இன்று 12 மணியளவில் கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது.  அதனால் உதயநிதி மீது மதியம் 12 மணி வரை கைது நடவடிக்கையை தவிர்க்கும்படியும், எந்த நடவடிக்கையும் வேண்டாம் என்றும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.  இதனை காவல் துறையினரிடம் தெரிவிக்கும்படி நீதிபதி தெரிவித்து உள்ளார்.</p>  <h2>உதயநிதி கைது</h2><p>இந்த சூழலில், முதல்-அமைச்சர் விஜய்க்கு எதிரான அவதூறு பேச்சு வழக்கு தொடர்பாக உதயநிதியை போலீசார் கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.  தி.மு.க. தொண்டர்கள் கோஷங்களை எழுப்பியபடி உள்ளனர்.  இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>ரூ.40 லட்சம் லஞ்சப்புகார்: சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs40-lakh-bribe-police-inspector-arrested-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs40-lakh-bribe-police-inspector-arrested-in-chennai#comments</comments><guid isPermaLink="false">715a420c-cd62-47b3-95da-8a3077272b9c</guid><pubDate>Tue, 04 Aug 2026 05:30:22 +0000</pubDate><atom:updated>2026-08-04T05:30:22.001Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,arrested,Bribery,போலீஸ் இன்ஸ்பெக்டர்,Police inspector,அதிரடி கைது,லஞ்சப்புகார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/bf2zd4yx/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ போலீஸ் இ,ன்ஸ்பெக்டர் கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/bf2zd4yx/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a>யில் ரூ.40 லட்சம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">லஞ்சப்புகாரில்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D">போலீஸ் இன்ஸ்பெக்டர் </a><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்யப்பட்டார்.</p><h2>ரூ.40 லட்சம் லஞ்சம்</h2><p>சென்னை பரங்கிமலை போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் புகாரி. இவர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் என்பவரை என்கவுண்ட்டர் செய்தவர். தற்போது இவர் மீது , தன்னை மிரட்டி ரூ.40 லட்சம் வரை வாங்கி உள்ளார் என்று, சவுகார்பேட்டையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதனையடுத்து நேற்று அவர் பரங்கிமலையில் இருந்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து நேற்று அவரிடம் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். </p><h2>போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது</h2><p>விசாரணையில், அவர் பணம் வாங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் புகாரின் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கமிஷனர் உத்தரவிட்டார். இதன்படி பல மணி நேர விசாரணைக்கு பின் அவர் கைது செய்யப்பட்டார். கடந்த 2008-ம் ஆண்டு இன்ஸ்பெக்டர் புகாரி, தமிழக காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய்க்கு எதிரான அவதூறு பேச்சு; உதயநிதி ஸ்டாலின் கைது
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-filed-against-udayanidhi-in-6-sections</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-filed-against-udayanidhi-in-6-sections#comments</comments><guid isPermaLink="false">9e71b00d-c8c6-4c96-bbd0-fcf76d1ee7bf</guid><pubDate>Tue, 04 Aug 2026 05:21:28 +0000</pubDate><atom:updated>2026-08-04T05:21:28.261Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,உதயநிதி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/0gex0gcc/tnola.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின் கைது]]></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/0gex0gcc/tnola.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தஞ்சை போலீசார் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.</p><p>தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தி.மு.க. சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.  காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் த.வெ.க. அரசின் மெத்தனப்போக்கை கண்டித்தும், விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டியும், மேகதாது அணை கட்டுவதை தடுக்க தவறிய த.வெ.க. அரசை கண்டித்தும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும் மற்றும் தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார்.</p><p>அப்போது அவர், காவிரி டெல்டாவில் உள்ள ஆறுகள் அனைத்தும் இன்றைக்கு வறண்டு, கிட்டத்தட்ட ஒரு பாலைவனம்போல் காட்சி அளித்துக்கொண்டு இருக்கிறது. இதே நேரத்தில் நம்முடைய தலைவர் முதல்-அமைச்சராக இருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா? நம் தலைவர் இந்த நிலைமை ஏற்பட விட்டிருப்பாரா? என்றார். தொடர்ந்து முதல்-அமைச்சர் விஜய்க்கு எதிராக அவர் இரட்டை அர்த்தத்தில் ஒரு கருத்தை கூறினார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு தவெக நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.</p>  <h2>6 பிரிவுகளில் வழக்கு</h2><p>இதுதொடர்பாக, உதயநிதிக்கு எதிராக தஞ்சை காவல் நிலையத்தில் த.வெ.க. மகளிரணி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து, உதயநிதிக்கு எதிராக 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  </p>  <h2>போலீசார் குவிப்பு</h2><p>இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினை கைது செய்வதற்காக தஞ்சையில் இருந்து போலீஸ் குழு இன்று காலையில் சென்னை வந்தது. சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் வீட்டுக்கு வந்த அவர்கள், தஞ்சையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நடத்தி அவரை கைது செய்ய வந்திருப்பதாக கூறினர். </p><p>இதுபற்றி உதயநிதியின் குடும்பத்தினரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.  எனினும், வழக்கறிஞர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்க கால அவகாசம் வேண்டும் என அவர்கள் தரப்பில் போலீசிடம் கூறப்பட்டது.</p><h2>உதயநிதி ஸ்டாலின் கைது</h2><p>இதுபற்றி தகவல் அறிந்த தி.மு.க. நிர்வாகிகள் அங்கு குவிந்தனர். நேரம் செல்லச்செல்ல திமுக தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்தனர். கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து முழக்கம்  எழுப்பினர். இதனால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். தொண்டர்களை கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.  கூட்டம் அதிகரித்த நிலையில், தொண்டர்களை வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். </p><p>பின்னர் உதயநிதியை போலீசார் கைது செய்து விசாரணைக்காக தஞ்சைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த சம்பவத்தால் உதயநிதியின் வீட்டின் முன்பு பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவுகிறது. கைது நடவடிக்கைக்கு எதிராக தொண்டர்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பினர். </p> <h2>த.வெ.க. புகார்</h2><p>இதற்கிடையே தஞ்சையில் அவதூறாக பேசினார் என உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தேசிய மகளிர் ஆணையத்தில் த.வெ.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.</p><p>இதுபற்றி கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பழ. செல்வ குமார் தேசிய மகளிர் ஆணைய தலைவருக்கு புகார் மனு அனுப்பினார்.  அதில், உதயநிதியின் பேச்சு, காணொளியை அடிப்படையாக கொண்டு ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.</p><p>உதயநிதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை மற்றும் வழக்கு பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p> <h2>ஆர்ப்பாட்டம்</h2><p>இதேபோன்று, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாட்டில் ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் த.வெ.க. மகளிர் அணி நிர்வாகிகள் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. </p>]]></content:encoded></item><item><title>
பிலிகுண்டுலுவுக்கு வரும் காவிரி உபரிநீரின் அளவு வினாடிக்கு 8,000 கன அடியாக உயர்வு
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-surplus-water-flow-to-biligundlu-rises-to-8000-cusecs</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-surplus-water-flow-to-biligundlu-rises-to-8000-cusecs#comments</comments><guid isPermaLink="false">811ec093-1ffd-4750-82aa-d5df07fdba84</guid><pubDate>Tue, 04 Aug 2026 04:53:35 +0000</pubDate><atom:updated>2026-08-04T04:53:35.309Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,காவிரி நீர்,TN,Cauvery</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/s7wfoonl/cwcort.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/s7wfoonl/cwcort.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>பிலிகுண்டுலு</p><p>தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் காவிரி நீரின் அளவு வினாடிக்கு 8,000 கன அடியாக உயர்வடைந்து உள்ளது.</p><p>தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் விளையும் பயிர்களுக்கான நீர் பாசன தேவையை பூர்த்தி செய்ய கூடிய முக்கிய அணைகளில் ஒன்றாக மேட்டூர் அணை உள்ளது.  இந்த அணையில், 79 அடிக்கும் கீழ் தண்ணீர் குறைந்து போன நிலையில், நடப்பு ஆண்டு ஜூன் 12-ந்தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை.</p><p>இதனால், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி முழுமையாக பாதிக்கப்பட்டது.  இதனையடுத்து, கர்நாடகம் தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி நீரை <a href="https://www.dailythanthi.com/">தமிழகம் </a>கேட்டது. ஆனால், வழக்கம்போல் கர்நாடகம் மறுத்து விட்டது.</p>  <h2>பரவலாக மழை</h2><p>இதற்கிடையில், காவிரி ஒழுங்காற்று குழு, தமிழ்நாட்டுக்கு 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3,500 கன அடி நீர் திறந்து விட கர்நாடகத்துக்கு உத்தரவிட்டது.  இதன்படி மொத்தம் 4% டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) நீர் திறந்து விட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.  காவிரி மேலாண்மை ஆணையமும் இந்த உத்தரவை உறுதிப்படுத்தியது.</p><p>இந்த சூழலில்,  தற்போது குடகு, சிக்கமகளூரு மற்றும் கேரள மாநிலம் வயநாட்டில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.  காவிரி படுகையில் உள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. கபினி அணையும் நிரம்பி வருகிறது.</p>  <h2>கபினி அணை</h2><p>நேற்றைய நிலவரப்படி, கர்நாடகாவின் கே.ஆர்.எஸ். அணையில் 23.078 டி.எம்.சி., கபினியில் 18.610 டி.எம்.சி., ஹாரங்கியில் 7.827 டி.எம்.சி. மற்றும் ஹேமாவதியில் 28.022 டி.எம்.சி. என மொத்தம் 77.537 டி.எம்.சி. மொத்த நீர் இருப்பு (பயன்பாட்டு நீர் இருப்பு 67.517 டி.எம்.சி.) உள்ளது. எனவே, விகிதாச்சார அடிப்படையில் பில்லிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கு நீரை தனது அணைகளில் இருந்து திறந்து விடுவதில் கர்நாடக அரசுக்கு எந்த சிரமமும் இருக்காது.</p><p>இதற்கிடையே, கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளின் நீர் பிடிப்புப்பகுதிகளில் அதிக மழை பெய்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.  மைசூர் அருகே உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து கடந்த 31-ந்தேதி வரை சீராக இருந்த நிலையில், நீர் பிடிப்பு பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் நீர்வரத்து விநாடிக்கு 15,500 கன அடியாக அதிரடியாக உயர்ந்தது. அணை மிக வேகமாக நிரம்பி வருகிறது.  அதன் பாதுகாப்பை முன்னிட்டு அணையில் இருந்து காவிரியில் நீர் திறந்து விடப்படுகிறது.</p>  <h2>விவசாயிகள் மகிழ்ச்சி</h2><p>இதனால், கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து காவிரியில் திறந்துவிடப்பட்ட உபரிநீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு இன்று வந்தடைந்தது.  அணைக்கு வினாடிக்கு 27 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.  இதனால், கபினி அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 30,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.</p><p>பின்னர் அது குறைக்கப்பட்டு, கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறந்துவிடப்படுகிறது.  தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டு, தமிழக எல்லையை வந்தடைந்த உபரிநீரின் அளவு ஆயிரம் கன அடியாக அதிகரித்து உள்ளது என முதல்கட்ட தகவல் தெரிவித்தது.</p> <p>இதனால், தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில், பிலிகுண்டுலுவுக்கு வரும் காவிரி நீரின் அளவு வினாடிக்கு 8,000 கன அடியாக உயர்வடைந்து உள்ளது.</p><p>ஆற்றின் கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என முன்பே அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் பெண்ணின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/petrol-bomb-thrown-at-womans-house-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/petrol-bomb-thrown-at-womans-house-in-chennai#comments</comments><guid isPermaLink="false">dd36868c-7db9-4bfa-9a96-88c106356d49</guid><pubDate>Tue, 04 Aug 2026 04:43:55 +0000</pubDate><atom:updated>2026-08-04T04:43:55.033Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,mysterious persons,மர்ம நபர்கள்,House,பெண்,Woman,வீடு,போலீசார் வலைவீச்சு,police net sweep,petrol bomb thrown,பெட்ரோல் குண்டு வீச்சு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/oit2ahb7/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81.12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல் குண்டு வீச்சு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/oit2ahb7/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81.12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a> பெரியமேடு நெடுஞ்சாலையில் வசிக்கும் ஒரு பெண்ணின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">பெட்ரோல் குண்டு</a>களை வீசியது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். </p><h2>பெட்ரோல் குண்டு வீச்சால் பரபரப்பு</h2><p>சென்னை நேரு பூங்கா அருகே பெரியமேடு நெடுஞ்சாலையில் வசிக்கும் ஒரு பெண்ணின் வீட்டு முன்பு, நேற்று இரவு 8 மணி அளவில் மர்ம நபர்கள் திடீரென்று 3 பெட்ரோல் குண்டுகளை சரமாரியாக வீசினார்கள். இதில் 3 குண்டுகளும் வெடித்து தீப்பற்றி எரிந்தன. சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்த பெண் அலறியடித்து ஓடிவந்தார். அப்போது 3 மர்ம நபர்கள் பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.</p><h2>மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு</h2><p>இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரியமேடு போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>முட்கள் வெளியே... ஊட்டச்சத்து உள்ளே; துரியன் பழத்தின் ரகசியம்!</title><link>https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/thorns-outside-nutrition-inside-the-secret-of-the-durian-fruit</link><comments>https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/thorns-outside-nutrition-inside-the-secret-of-the-durian-fruit#comments</comments><guid isPermaLink="false">7308996e-88a5-4e4b-a413-1cf8215077e4</guid><pubDate>Tue, 04 Aug 2026 04:17:49 +0000</pubDate><atom:updated>2026-08-04T04:17:49.464Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஊட்டச்சத்து,Nutrition,durian fruit,துரியன் பழம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/phv7chyj/duriyan-fruit.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/phv7chyj/duriyan-fruit.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சிறப்புக் கட்டுரைகள் (Sirappukatturaigal)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2>துரியன் பழம்</h2><p>துரியன் என்பது தாய்லாந்து, ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் கம்போடியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாகக் காணப்படும் ஒரு வகை பழமாகும். இப்பழம் அதன் வலுவான நறுமணத்திற்காகவும், அதே நேரத்தில் அதன் அதிக ஊட்டச்சத்து மதிப்புக்காகவும் நன்கு அறியப்படுகிறது. பழத்தின் வடிவம், அதன் வகையைப் பொறுத்து, நீள்வட்டம் முதல் வட்டம் வரை மாறுபடும். ஒவ்வொரு பழமும் பொதுவாக 1-3 கிலோகிராம் எடை கொண்டிருக்கும். </p><p>பழத்தின் மீது கூர்மையான மற்றும் கடினமான முட்கள் நிறைந்துள்ளன. இப்பழத்தை மிகுந்த கவனத்துடன் கையாளாவிட்டால், அவை உடலுக்குக் காயத்தை ஏற்படுத்தக்கூடும். துரியன் மரம் வளர்ந்து காய்ப்பதற்கு வெப்பமண்டல காலநிலை மிகவும் உகந்தது. சில தென்கிழக்கு ஆசிய நாடுகளில், இப்பழம் அவர்களின் சமையலில் சேர்க்கப்படுகிறது. மரம் முதிர்ச்சியடையும் போது 100 அடிக்கும் மேல் வளரும். இந்த வகையில், ஒட்டுக்கட்டப்பட்ட மரங்கள் சிறந்தவை, ஏனெனில் அவை அதிகபட்சமாக 40 அடி உயரம் வரை வளரும்.</p><h2>கருவுறாமைக்கு சிறந்த தீர்வு</h2><p>பல திருமணமான தம்பதிகள் எதிர் கொள்ளும் பொதுவான பிரச்சனைகளில் கருவுறாமல் போவது முக்கிய பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது. இதற்காக பலர் பணம் செலவழித்து மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். ஆனால் பெண்கள் கருவுறாமல் போகும் பிரச்சினையைத் தீர்க்க ஒரு பழம் உதவும் என்றால் நீங்கள் நம்புவீர்களா? அதுதான் பார்ப்பதற்கு பலாப்பழம் போலவே இருக்கும் துரியன் பழம். இது பெண்கள் கருவுறாமைக்கு சிறந்த தீர்வாக இருக்கும் என சொல்லப்படுகிறது.</p><p>இதய நோய்களுக்கான முதன்மைக் காரணம், ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் அதிக சர்க்கரை அடங்கிய மோசமான உணவுமுறை போன்ற ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறைப் பழக்கங்களே ஆகும். இந்த ஆரோக்கியமற்ற கொழுப்புகளும் எல்.டி.எல் கொலஸ்ட்ராலும் தமனிகளின் சுவர்களில் படிந்துவிடக்கூடும். இதன் விளைவாக, இது ஹைபர்கொலஸ்ட்ரோலீமியா, உயர் இரத்த அழுத்தம் மற்றும் தமனித் தடிப்பு நோய் ஆகியவற்றுக்கு வழிவகுக்கிறது. </p><h2>இதய ஆரோக்கியத்திற்கு நல்லது</h2><p>துரியன் பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது, இது இரத்த ஓட்டத்திற்கும் இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. எனவே, உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது அதனைத் தடுக்கிறது அல்லது குறைக்கிறது. மேலும், துரியன் பழத்திற்கு கொலஸ்ட்ராலைக் குறைக்கும் ஆற்றல் இருப்பதாக பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. எனவே, துரியன் பழத்தை தொடர்ந்து சாப்பிடுவது இரத்தத்தில் உள்ள ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளையும் குறைக்கிறது. இதனால், இதய நோய்களின் அபாயம் குறைகிறது. கூடுதலாக, கல்லீரலில் கொழுப்பு சேர்வதால் ஏற்படும் கல்லீரல் நோய்களின் அபாயத்தையும் இது குறைக்கக்கூடும்.</p><h2>மோசமான மணம்</h2><p>உலகெங்கிலும் பல இடங்களில் பொதுவெளியில் சாப்பிடுவதற்கு தடை செய்யப்பட்ட பழங்களில் துரியன் பழம் முதலிடத்தில் உள்ளது. இதன் சுவை நன்றாக இருந்தாலும் அதிலிருந்து வீசும் மோசமான மணம் காரணமாக, இது பல பகுதிகளில் தடை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இதை விமானங்களில் எடுத்துச் செல்லக்கூடாது. பலாப்பழம் போலவே இந்த பழத்தின் உட்புறம் மென்மையாக இருக்கும். இவை குறிப்பாக இந்தோனேஷியா, மலேசியா மற்றும் தாய்லாந்து போன்ற பகுதிகளில் அதிகம் வளர்க்கப்படுகிறது. </p><h2>ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்</h2><p>ஊட்டச்சத்துக்களின் அடிப்படையில் துரியன் பழம் நம் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக <a href="https://www.dailythanthi.com/topic/durian-fruit">துரியன் பழத்தில் </a>பெண்களுக்குத் தேவையான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உள்ளது. இது பெண்கள் இயற்கையாக கருத்தரிப்பதற்கு உதவும் என்கின்றனர். பெண்கள் கருவுறாமல் போவதற்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனில் உள்ள குறைபாடு காரணமாக இருப்பதால், இந்த பழம் பெண்களுக்கு வரப்பிரசாதம் எனலாம்.</p><h2>சரும ஆரோக்கியம்</h2><p>துரியன் பழத்தில் உள்ள வைட்டமின் சி, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நிறமாற்றத்தைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும், இது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. கொலாஜன் என்பது சருமம், முடி மற்றும் நகங்களில் காணப்படும் ஒரு புரதமாகும். கூடுதலாக, துரியன் பழங்களில் உள்ள பாலிஃபீனால்கள் போன்ற அதிக அளவிலான பிற ஆன்டிஆக்ஸிடன்ட்களும் சருமத்திற்கு உதவுகின்றன. அவை உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ப்ரீ ரேடிக்கல்களின் அளவைக் குறைக்கின்றன. இதனால், இது செல் சேதம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைத் தடுத்து, சுருக்கங்கள் மற்றும் சரும பாதிப்புகளைக் குறைக்கிறது.</p><h2>பாலுணர்வு தூண்டி</h2><p>ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்திற்கு மிகவும் நல்லது. எனவே, அவை சருமத்தில் உள்ள தழும்புகள் அல்லது நிறமாற்றத்தைக் குறைக்க உதவுகின்றன. உடலை நச்சு நீக்கம் செய்வதன் மூலமும், சருமத்தில் உள்ள கறைகளைக் குணப்படுத்துவதன் மூலமும் அவை இதைச் செய்கின்றன. துரியன் பழத்தில் உள்ள சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களுக்காக, மருந்துத் தொழிற்சாலைகளில் அது பயன்படுத்தப்படுவது குறித்து ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. மேலும் இந்த பழம் பாலுணர்வு தூண்டியாக செயல்படுகிறது. எனவே ஆண்களுக்கு பாலியல் உந்துதலை அதிகரித்து விந்தணுவை மேம்படுத்தி ஆண்களின் மலட்டுத்தன்மையையும் போக்கும். பெண்கள் கர்ப்ப காலத்தில் அவர்களின் எடையை ஆரோக்கியமாக பராமரிக்க துரியன் பழம் உதவும். இதில் உடலுக்குத் தேவையான கொழுப்புகள் உள்ளன. இதை சரியான அளவில் உட்கொள்ளும்போது உடலுக்கு நன்மைகளைக் கொடுக்கிறது.</p><h2>குழந்தை பேறு உண்டாகும்</h2><p>துரியன் பழம் சாப்பிடுவதால் இதய ஆரோக்கியம் மேம்பட்டு, புற்றுநோயின் அபாயம் குறைகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து எலும்புகளின் ஆரோக்கியத்தையும் சிறப்பாக மாற்றும் தன்மை உள்ளது. தமிழகத்தில் குன்னூர் மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் துரியன் பழம் அதிகம் கிடைக்கும். துரியன் பழம் ஆண்டுக்கு ஒரு முறை கிடைக்கும் என்பதால் இந்த பழங்கள் சீசன் இல்லாத காலங்களில் 3000 ரூபாய்க்கு கூட விற்கப்படும். சாதாரண நாட்களில் ஒரு பழம் ரூபாய் 1000 முதல் 1500 வரை விற்கப்படும் என சொல்லப்படுகிறது. எனவே குழந்தை பேறு உண்டாக விரும்பும் பெண்கள் நிச்சயம் இந்த பழத்தை வாங்கி சாப்பிடுங்கள்.</p> ]]></content:encoded></item><item><title>விழுப்புரம்: கழிவறைக்கு சென்ற பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/villupuram-4-sovereign-gold-chain-snatched-from-woman-visiting-restroom</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/villupuram-4-sovereign-gold-chain-snatched-from-woman-visiting-restroom#comments</comments><guid isPermaLink="false">0618fa9f-af83-47e9-8a35-ba2e1afee862</guid><pubDate>Tue, 04 Aug 2026 03:54:23 +0000</pubDate><atom:updated>2026-08-04T03:54:23.106Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>விழுப்புரம்,Villupuram,நகை பறிப்பு,jewelry snatching</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/etvn2yxe/chainsnatching.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/etvn2yxe/chainsnatching.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விழுப்புரம்,</p><p>கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மனைவி கோமதி (வயது 45). கணவன்-மனைவி இருவரும் கடந்த 1-ந்தேதி வெளியூருக்கு காரில் சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கம்பியாம்புலியூருக்கு இரவு சுமார் 9 மணி அளவில் வந்ததும் அங்குள்ள டீக்கடையில் காரை நிறுத்திவிட்டு இருவரும் டீ குடித்தனர். பின்னர், கோமதி மட்டும் அங்குள்ள கழிவறைக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். </p><h2>4 பவுன் சங்கிலி பறிப்பு </h2><p>அப்போது கழிவறை அருகில் பதுங்கி இருந்த மர்மநபர் ஒருவர் திடீரென கோமதி அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை பறித்தார். இதை சற்றும் எதிர்பாராத அவர் திருடன்...திருடன்... என்று கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதற்குள் நகையுடன் அந்த மர்மநபர் தப்பிஓடி விட்டார். பறிபோன நகையின் மொத்த மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என்று தெரிகிறது. </p><p>இதுகுறித்து கோமதி விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச் சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>அண்ணா உருவாக்கிய அறிவாலயத்தை ஆபாசக் கூடாரமாக மாற்றிய ஆபாசநிதி: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pornography-fund-that-turned-annas-knowledge-center-into-a-porn-tent-minister-adhav-arjuna-writes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pornography-fund-that-turned-annas-knowledge-center-into-a-porn-tent-minister-adhav-arjuna-writes#comments</comments><guid isPermaLink="false">0476d4f7-f09b-41d9-b6d6-4ecb1177bc62</guid><pubDate>Tue, 04 Aug 2026 03:48:43 +0000</pubDate><atom:updated>2026-08-04T03:48:43.422Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,த.வெ.க.,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,T.V.K.,X Page,எக்ஸ் பதிவு,Controversial speech,சர்ச்சை பேச்சு,தி.மு.க.,அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,Minister Adhav Arjuna,D.M.K.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/fw9il5na/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/fw9il5na/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>அண்ணா உருவாக்கிய அறிவாலயத்தை ஆபாசக் கூடாரமாக மாற்றிய ஆபாசநிதி என்று தமிழக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE">பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81">எக்ஸ் தள பதிவில்</a> தெரிவித்துள்ளார்.</p><h2>உதயநிதி ஸ்டாலின் சர்ச்சை பேச்சு</h2><p>தி.மு.க. எதிர்க்கட்சி தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">உதயநிதி ஸ்டாலின்</a> தலைமையில் நேற்று தஞ்சையில் த.வெ.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலின் முதல்-அமைச்சர் குறித்தும், பெண்கள் குறித்தும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. </p><p>இது தொடர்பாக தமிழக பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: </p><p>அண்ணா உருவாக்கிய அறிவாலயத்தை ஆபாசக் கூடாரமாக மாற்றிய ஆபாசநிதி! </p><p>பேரறிஞர் அண்ணா தனது தமிழ் புலமையால் கட்டியெழுப்பிய இயக்கத்தை, இன்று தனது ஆபாச மொழியாலும் இரட்டை அர்த்தப் பேச்சுக்களாலும் அழித்து வருகிறார் 'ஆபாச'நிதி. </p><p>தமிழ்நாட்டின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராய்கூட அல்ல, அடிப்படை மனித மாண்புகூட கொஞ்சமும் இல்லாமல், தரங்கெட்டத்தனமாக மேடையில் பேசியிருக்கிறார். அண்ணா உருவாக்கிய அறிவாலயமான திமுக-வை ஆபாசத்தின் அடையாளமாக மாற்றிவிட்ட ஆபாசநிதி. </p><p>பெண்கள் பற்றி அவர் கொண்டிருக்கும் வக்கிர சிந்தனையை வெளிப்படுத்தும் விதமாக இன்று அவர் பேசியுள்ள ஆபாசப் பேச்சு கேட்பவர்களைக் காது கூசச் செய்கிறது. இதுபோன்ற இழிவான பேச்சுகளை தமிழ்நாட்டின் எந்தவொரு தாய்மார்களும், அக்கா - தங்கைகளும், பெற்றோர்களும் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். </p><p>இதுபோன்ற நபர்களின் ஆதிக்க சிந்தனையால்தான் தி.மு.க.வை இந்த தேர்தலில் தமிழ்நாட்டுப் பெண்கள் தூக்கியெறிந்தார்கள். ஆனால் இப்போது, பொது மேடைகளிலேயே தனது குரூர எண்ணத்தைக் காட்டிக்கொண்டிருக்கும் ஆபாசநிதியை தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியலிலிருந்தே துடைத்தெறிவார்கள் தமிழ்நாட்டின் தாய்மார்களும், பெண்களும்! </p><p>ஆபாசநிதிக்கு வன்மையான கண்டனங்கள்!. </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஈரோடு - திருச்சி பாசஞ்சர் ரெயில் சேவையில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-the-erodetrichy-passenger-train-service</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-the-erodetrichy-passenger-train-service#comments</comments><guid isPermaLink="false">deb4610f-62b7-4b60-bc55-00dbb56cc94c</guid><pubDate>Tue, 04 Aug 2026 03:43:44 +0000</pubDate><atom:updated>2026-08-04T03:43:44.876Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்சி,Trichy,ரெயில் சேவை,train service,Erode,ஈரோடு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/px69ab8y/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/px69ab8y/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு, </p><p>திருச்சி சந்திப்பு ரெயில்வே யார்டில் மின் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக ஈரோடு -திருச்சி சந்திப்பு பாசஞ்சர் ரெயில் (வண்டி எண் 56106) சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.</p><p>அதன்படி ஈரோடு சந்திப்பிலிருந்து காலை 8.05 மணிக்கு கிளம்பும் ஈரோடு -திருச்சி சந்திப்பு பாசஞ்சர் ரெயில் இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றும் வருகிற 11, 18-ந்தேதிகளில் திருச்சி கோட்டை ரெயில் நிலையத்தில் 40 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும் என்று சேலம் ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அவதூறு பேச்சு:  உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தேசிய மகளிர் ஆணையத்தில் த.வெ.க. புகார்; மகளிர் அணி ஆர்ப்பாட்டம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/defamation-speech-tvk-complaint-against-udayanidhi-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/defamation-speech-tvk-complaint-against-udayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">a5284d77-95e5-405c-9b74-615a05cf0180</guid><pubDate>Tue, 04 Aug 2026 03:26:06 +0000</pubDate><atom:updated>2026-08-04T03:26:06.342Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,Vijay,த.வெ.க.,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/t4rjmsvo/tnolu.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/t4rjmsvo/tnolu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தேசிய மகளிர் ஆணையத்தில் த.வெ.க. புகார் மனு அளித்துள்ளது.</p><p>தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தி.மு.க. சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.  காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் த.வெ.க. அரசின் மெத்தனப்போக்கை கண்டித்தும், விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டியும், மேகதாது அணை கட்டுவதை தடுக்க தவறிய த.வெ.க. அரசை கண்டித்தும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் தி.மு.க. இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார்.</p><p>அப்போது அவர், காவிரி டெல்டாவில் உள்ள ஆறுகள் அனைத்தும் இன்றைக்கு வறண்டு, கிட்டத்தட்ட ஒரு பாலைவனம்போல் காட்சி அளித்துக்கொண்டு இருக்கிறது. இதே நேரத்தில் நம்முடைய தலைவர் முதல்-அமைச்சராக இருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா? நம் தலைவர் இந்த நிலைமை ஏற்பட விட்டிருப்பாரா?.</p>  <h2>விவசாயிகள் தவிப்பு</h2><p>இன்றைக்கு குறுவையை காப்பாற்ற முடியவில்லை. சம்பா என்ன நிலைமை ஆகும் என்று விவசாயிகள் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள். இது ஏதோ ஒரு சாதாரணமாக நடக்கின்ற விஷயம் கிடையாது.  இன்றைக்கு இருக்கக்கூடிய ஒரு நிர்வாக திறனற்ற முதல்-அமைச்சரால் தான் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது.</p><p>தமிழ்நாட்டில் ஆட்சி நடத்த காங்கிரஸ் ஆதரவு தேவை. அதனால்தான் கர்நாடக காங்கிரஸ் அரசை கேள்வி கேட்கவே முதல்-அமைச்சர் விஜய் பயப்படுகிறார். மத்திய அரசை பகைத்துக்கொண்டால் பிரச்சினை வந்துவிடும் என இதுவரைக்கும் அவர் வாயில் இருந்து பா.ஜ.க. என ஒரு வார்த்தை வந்ததே கிடையாது. அவ்வளவு பெரிய தைரியசாலி என்று பேசினார்.</p>  <h2>அமைச்சர் கண்டனம்</h2><p>தொடர்ந்து அவர், முதல்-அமைச்சர் விஜய் பற்றி அவதூறாக சில விசயங்களை பேசியுள்ளார்.  இது சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையாகி உள்ளது.  அவருடைய இந்த பேச்சுக்கு, த.வெ.க. பொதுச்செயலாளர் மற்றும் தமிழக நீர்வளத்துறை அமைச்சரான ஆனந்த் கண்டனம் தெரிவித்து உள்ளார்.  அவர் வெளியிட்ட செய்தியில், எதிர்க்கட்சித் தலைவர் என்ற மாண்பும் மரபும் மிக்க மிகப்பெரிய பொறுப்பை உணராமல், வாய்க்கு வந்தபடி பேசிய ஒருவரை என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. தன் தாத்தாவும் தந்தையும் வகித்தும் கூடவா முதல்-அமைச்சர் பதவியின் தகுதியும் தராதரமும் தெரியாமல் ஒருவர் இருக்க முடியும்?.</p><p>அவை அடக்கமும் நாவடக்கமும் இல்லாத ஒருவரா நம் தமிழகத்தின் துணை முதல்-அமைச்சராக இருந்திருக்க முடியும்? மக்கள் மத்தியில் இத்தகைய கேள்விகள் இமாலய அளவிற்கு எழுந்துள்ளன. எல்லை மீறி இழிவாக பேசியவர்கள் என்ன பதில் சொல்ல போகிறார்கள்?</p>  <h2>எச்சரிக்கை</h2><p>அமைதி காக்க சொல்லி எங்கள் தலைவர் தளபதியின் நாகரிக வளர்ப்பு எங்களை தடுக்கிறது.  மாண்பும் மரியாதையும் தகுதியும் தராதரமும் மிக்க எங்கள் தலைவர் தளபதி தமிழ்நாடு முதல்-அமைச்சர் சொல்வதுபோல மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். யாரும் மறந்துவிட வேண்டாம் என்று எச்சரிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.</p>  <h2>த.வெ.க. புகார்</h2><p>இந்த நிலையில், தஞ்சையில் அவதூறாக பேசினார் என உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தேசிய மகளிர் ஆணையத்தில் த.வெ.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.</p><p>இதுபற்றி கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பழ. செல்வ குமார் தேசிய மகளிர் ஆணைய தலைவருக்கு புகார் மனு அனுப்பினார்.  அதில், உதயநிதியின் பேச்சு, காணொளியை அடிப்படையாக கொண்டு ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.</p>  <h2>மகளிர் அணி ஆர்ப்பாட்டம்</h2><p>உதயநிதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை மற்றும் வழக்கு பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இதேபோன்று, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் த.வெ.க. மகளிர் அணி நிர்வாகிகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை விரட்டிய காட்டு யானை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-chases-tourists-on-the-coonoor-mettupalayam-hill-road</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-chases-tourists-on-the-coonoor-mettupalayam-hill-road#comments</comments><guid isPermaLink="false">51be82e1-9cf4-48c6-94e8-2da78ebd4d02</guid><pubDate>Tue, 04 Aug 2026 03:20:30 +0000</pubDate><atom:updated>2026-08-04T03:20:30.818Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nilgiris,நீலகிரி,காட்டு யானை,wild elephant</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/lcsvcuj9/7.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/lcsvcuj9/7.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் பலாப்பழ சீசன் என்பதால், பலா மரங்களில் பலாப்ப ழங்கள் காய்த்து உள்ளன. இதனை சாப்பிடுவதற்காக சமவெளி பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் வந்து, குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் முகாமிட்டு உள்ளன. கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை காட்டு யானை கடந்த சில நாட்களாக மரப்பாலம், இச்சி மரம், காட்டேரி பூங்கா சாலையில் உலா வருகிறது.</p><p>இந்தநிலையில் காட்டு யானை காட்டேரி பூங்கா முன்பு உள்ள சாலையை திடீரென கடந்து சென்றது. </p><p>அப்போது அப்பகுதியில் நின்ற சுற்றுலா பயணி களை ஆக்ரோஷமாக யானை விரட்டியது. உடனே சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்து உயிர் தப்பினர். அதோடு வாகனங்களையும் வழிமறித்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த வனத்துறையி னர் காட்டு யானை நடமாட்டத்தை கண்காணித்து விரட்டும் பணியில் ஈடு பட்டு வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் இன்று மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-today-3</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-today-3#comments</comments><guid isPermaLink="false">bd913ca1-4a2c-4a73-bf94-08f61569012b</guid><pubDate>Tue, 04 Aug 2026 03:00:21 +0000</pubDate><atom:updated>2026-08-04T03:00:21.879Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,monthly maintenance work,power outage,மாதாந்திர பராமரிப்பு பணி,மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/cim9w47i/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/cim9w47i/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மின்பகிர்மான வட்டம், திருநெல்வேலி நகர்ப்புற கோட்டத்தில் மேலப்பாளையம், ரெட்டியார்பட்டி, புதிய பேருந்து நிலையம் துணை மின் நிலையங்களில் இன்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் காரணமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம்</h2><p>திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் ரவிராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>மேலப்பாளையம், ரெட்டியார்பட்டி மற்றும் புதிய பேருந்து நிலையம் துணை மின் நிலையங்களில் இன்று (4.8.2026, செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு  பணிகள் நடைபெற இருப்பதால் பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும்.</p><h2>காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை</h2><p>அதன்படி மேலப்பாளையம், கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின் ரோடு, சந்தை பகுதிகள், குலவணிகர்புரம், மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹமீபுரம், மேலக்கருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக்குளம், அன்னை நகர், தருவை, ஓமநல்லூர், கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம், ஆஸ்பத்திரி ரோடு, தெற்கு பைபாஸ் ரோடு, மேலகுலவணிகபுரம், பஜார் திடல், ஜின்னா திடல், டவுன் ரோடு, அண்ணா வீதி, பஷீர் அப்பா தெரு, கணேசபுரம், செல்வகாதர் தெரு, உமறுப்புலவர் தெரு, ஆசாத் ரோடு, PSN கல்லூரி. </p><p>ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கன்தான்பாறை, பொன்னாக்குடி, அடைமிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி  மற்றும் தாமரைச்செல்வி. </p><p>பெருமாள்புரம், பொதிகை நகர், அரசு ஊழியர் குடியிருப்பு, என்.ஜி.ஓ. காலனி, மகிழ்ச்சி நகர், திருநகர், திருமால் நகர், ராமச்சந்திரா கார்டன், ராமச்சந்திரா நகர், பரணி பார்க், அரசு பொறியியல் கல்லூரி பகுதி மற்றும் புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தொழிலாளி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-a-minor-girl-worker-arrested-under-pocso</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-a-minor-girl-worker-arrested-under-pocso#comments</comments><guid isPermaLink="false">4dcd0d8f-4325-4a13-a52c-2db2d2907d56</guid><pubDate>Tue, 04 Aug 2026 02:54:36 +0000</pubDate><atom:updated>2026-08-04T02:54:36.943Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்,போக்சோ சட்டம்,POCSO act</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/svc92wdg/6.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/svc92wdg/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>உடுமலை,  </p><p>திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த கல்லாபுரத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 34). கூலித்தொழிலாளி. இவர் அந்த பகுதியில் கொய்யாப்பழம் பறித்துக் கொண்டிருந்த 8 வயது சிறுமியிடம், கொய்யாப்பழம் கேட்டுள்ளார். இதையடுத்து முருகானந்தத்துக்கு பழத்தை கொடுக்க சிறுமி சென்றார். </p><p>அப்போது அந்த சிறுமியை வீட்டுக்குள் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, உடுமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் முருகானந்தத்தை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>சென்னை:  மின்சார ரெயில் படிக்கட்டு உடைந்து நடைமேடையில் உரசல்; பயணிகள் அதிர்ச்சி
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-electric-train-staircase-breaks-rubs-platform-passengers-shocked</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-electric-train-staircase-breaks-rubs-platform-passengers-shocked#comments</comments><guid isPermaLink="false">4dabf2f2-a21c-44c1-a6fa-243064367578</guid><pubDate>Tue, 04 Aug 2026 02:52:12 +0000</pubDate><atom:updated>2026-08-04T02:52:12.690Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மின்சார ரெயில்,electric train</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/nkvhs79u/crscr.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/nkvhs79u/crscr.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>பெரம்பூர்</p><p>சென்னையில் மின்சார ரெயில் படிக்கட்டு உடைந்து நடைமேடையில் உரசி சென்றது.  இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.</p><p>சென்னை சென்டிரலில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி மின்சார ரெயில் சென்றது. கொருக்குப்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றபோது அங்கிருந்த மேல்நிலை மின்கம்பி அமைப்பின் தாங்கு கம்பியில் ரெயில் பெட்டியின் சிறிய அளவிலான படிக்கட்டு சிக்கியதாக கூறப்படுகிறது.</p>  <h2>பயணிகள் அதிர்ச்சி</h2><p>இதனால் படிக்கட்டு உடைந்து தொங்கியது. தண்டையார்பேட்டை, வ.உ.சி. நகர் ரெயில் நிலைய நடைமேடைகளில் படிக்கட்டு உரசியபடி சென்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து திருவொற்றியூர் ரெயில் நிலையத்தில் ரெயிலை நிறுத்திய டிரைவர், இதுபற்றி ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.</p><p>ரெயில்வே ஊழியர்கள் சேதமடைந்த படிக்கட்டை சீரமைத்தனர். அதன்பிறகு அந்த ரெயில் மீண்டும் கும்மிடிப்பூண்டிக்கு புறப்பட்டு சென்றது.  இதனால், ரெயில் பயணிகள் இடையே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.</p> ]]></content:encoded></item><item><title>ராகுல்காந்தி - முதல் அமைச்சர் விஜய் சந்திப்பு நடைபெறாததற்கு காரணம் என்ன.?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-is-the-reason-for-the-meeting-between-rahul-gandhi-and-chief-minister-vijay-not-taking-place</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-is-the-reason-for-the-meeting-between-rahul-gandhi-and-chief-minister-vijay-not-taking-place#comments</comments><guid isPermaLink="false">26e6acea-904d-4c0c-8de3-8aae2dca636b</guid><pubDate>Tue, 04 Aug 2026 02:47:13 +0000</pubDate><atom:updated>2026-08-04T02:47:13.451Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Rahul Gandhi,ராகுல்காந்தி,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/246rbh1e/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/246rbh1e/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாமல்லபுரத்தில் நடந்த காங்., மாவட்ட தலைவர்களுக்கான பயிற்சி முகாம் நிறைவு விழாவில் பங்கேற்க, தமிழகத்துக்கு ராகுல் வந்தார். சென்னையில் தமிழக முதல்வர் விஜய்யை ராகுல் சந்திப்பார் என தகவல் பரவியது. ஆனால், சென்னைக்கு வந்த ராகுல், முதல்வர் விஜய்யை சந்திக்கவில்லை. இதுகுறித்து தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:</p><p>ராகுலின் சென்னை நிகழ்ச்சி நிரலில், விஜயை சந்திக்கும் திட்டம் இல்லை என்பதை, தமிழக</p><p>காங்., தலைவர் மாணிக் கம் தாகூர் ஏற்கனவே கூறி விட்டார். விஜய், ராகுல் இருவரும் சந்திக்காததற்கு, கருத்து வேறுபாடு காரணமல்ல.</p><p>’இந்தியா’ கூட்டணி யில் இணைவது குறித்து, த.வெ.க., தலைமை எச்சரிக்கையுடன் செயல்படுகிறது. தமிழகத்தில், த.வெ.க., காங்., கூட்டணி அமைந்தாலும், ’இந்தியா’ கூட்ட ணியில் இணைவதாக த.வெ.க., இதுவரை அறிவிக்கவில்லை. தமிழகத்தை மையப்படுத்தி, தனித்த அரசியல் அடையாளத்தைத்தை முன்னிலைப்படுத்த த.வெ.க., விரும்புகிறது.</p><p>மேலும், மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க வேண்டாம் எனவும் த.வெ.க., கருதுவதால், ’இந்தியா’ கூட்டணியில் சேர அவசரம் காட்டவில்லை. ’இந்தியா’ கூட்டணியில், த.வெ.க., இணைவது குறித்து விஜய் முடிவெடுக்காமல் இருப்பதால், சென்னைக்கு வந்த ராகுலை, அவர் சந்திக்க திட்டமிடவில்லை.”</p><p>இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் ஆட்டோ கட்டணம் உயர்வு; அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/auto-fare-hike-in-tamil-nadu-report-submitted-to-the-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/auto-fare-hike-in-tamil-nadu-report-submitted-to-the-government#comments</comments><guid isPermaLink="false">2ee6430e-f106-4bc6-ade6-b5acd0c7f5f0</guid><pubDate>Tue, 04 Aug 2026 02:40:43 +0000</pubDate><atom:updated>2026-08-04T02:40:43.911Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,report,அறிக்கை,உயர்வு,ஆட்டோ கட்டணம்,hike,submitted,To the Government of Tamil Nadu,தமிழக அரசிடம்,Auto fare</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/hw4018su/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆட்டோ கட்டணம் உயர்வு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/hw4018su/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">தமிழ்நாட்டில்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D">ஆட்டோ கட்டணம்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">உயர்வு</a>க்கான அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் திருத்தப்பட்ட புதிய கட்டணம் விரைவில் வெளியாகும் என போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><h2>முத்தரப்பு பேச்சுவார்த்தை</h2><p>தமிழ்நாட்டில் ஆட்டோ கட்டணம் உயர்வுக்கான அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் திருத்தப்பட்ட புதிய கட்டணம் விரைவில் வெளியாகும் என போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் ஓடும் 3.46 லட்சம் ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டன. புதிய கட்டண நிர்ணயம் குறித்து சென்னையில் கடந்த மாதம் 9-ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.</p><h2>குறைந்தபட்ச கட்டணம் ரூ.50; பயணியர் அமைப்புகள் வலியுறுத்தல்</h2><p>இந்த பேச்சுவார்த்தையில் 30-க்கும் மேற்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகளும், பயணியர் அமைப்புகளில் இருந்து 90 பேரும் பங்கேற்றனர். தொழிற்சங்கங்கள் தரப்பில் குறைந்தபட்ச கட்டணத்தை, 70 ரூபாயாக உயர்த்த வலியுறுத்தினர். பயணியர் அமைப்புகளின் நிர்வாகிகள் தரப்பில், குறைந்தபட்ச கட்டணம் 50 ரூபாயாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தினர்.</p><p>இதுகுறித்து தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது: </p><p>முத்தரப்பு பேச்சுவார்த்தையில் நடந்த முக்கிய அம்சங்களை ஆராய்ந்தும், தற்போதுள்ள எரிபொருள் செலவு, மற்ற நகரங்களில் உள்ள ஆட்டோகட்டணம் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களை முன்வைத்தும் ஒரு அறிக்கை தயாரித்தோம். இந்த அறிக்கை தமிழக உள்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஆய்வு செய்து, தமிழக அரசு விரைவில் ஆட்டோ கட்டண உயர்வை அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம். </p><p>இவ்வாறு அவர்கள் கூறினர்.</p><h2>ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.22 முதல் ரூ.25 கட்டணம் எதிர்பார்ப்பு</h2><p>சென்னை, கோவை போன்ற பெரிய நகரங்களில் குறுகிய தூர பயணத்துக்கு ஆட்டோவை லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். குறைந்தபட்ச கட்டணத்தை 50 ரூபாயாக நிர்ணயம் செய்ய வேண்டும். ஒவ்வொரு கி.மீ. பயணத்திற்கும் 22 முதல் 25 ரூபாய் வரை கட்டணம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது குறைந்தபட்ச கட்டணம் 25 ரூபாயாகவும், ஒவ்வொரு கி.மீ.க்கும் 12 ரூபாயாகவும் கட்டணம் இருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை:  இன்று மாலை 4 மணியளவில் த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-budget-discussion-tvk-mla-meet</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-budget-discussion-tvk-mla-meet#comments</comments><guid isPermaLink="false">fb5590e6-e122-47fe-a024-92e2be5b8c30</guid><pubDate>Tue, 04 Aug 2026 02:23:00 +0000</pubDate><atom:updated>2026-08-04T02:23:00.724Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>த.வெ.க.,T.V.K.,எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்,MLAs meeting</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/clb1hq4j/tnpat.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/clb1hq4j/tnpat.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4 மணியளவில் <a href="https://www.dailythanthi.com/news/world">த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் </a>கூட்டம் நடைபெற உள்ளது.</p><p>தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த த.வெ.க. அரசின் முதல் சட்டசபை கூட்டம் கடந்த மாதம் (ஜூன்) 18-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.</p><p>கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜூன் 19, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது. நிறைவு நாளில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பதிலுரை வழங்கினார்.</p>  <h2>பொது பட்ஜெட்</h2><p>அதனை தொடர்ந்து, 4 நாட்கள் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், 2026-27-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது.</p><p>இதன்படி, 2026-27-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக நாளை (புதன்கிழமை) சட்டசபை மீண்டும் கூடுகிறது.  பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்கிறார். த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் என்பதால், புதிய அறிவிப்புகள், திட்டங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>  <h2>வேளாண் பட்ஜெட் தாக்கல்</h2><p>அடுத்த நாள், 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. வேளாண் துறை அமைச்சர் வினோத், இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.</p><p>தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதமும், அமைச்சர்களின் பதிலுரையும் இடம்பெறும். அதன்பின்னர், துறை வாரியாக மானியக்கோரிக்கை விவாதம் நடைபெறும். மொத்தத்தில், இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் சுமார் 1½ மாதங்கள் நடைபெறும் என தெரிகிறது.</p><p>இதனை முன்னிட்டு, சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4 மணியளவில் த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.  இதில், அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள்.  இந்த கூட்டத்தில், தமிழக பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் குறித்து விரிவான அளவில் ஆலோசனை நடைபெறும்.</p>  <h2>தேர்தல் அறிக்கை</h2><p>தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இது என்பதால், தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளில் பல்வேறு அறிவிப்புகள் இதில் இடம்பெறும் என்று தெரிகிறது.</p><p>த.வெ.க. தேர்தல் அறிக்கையில், "குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும். ஆண்டுக்கு 6 இலவச எல்.பி.ஜி. சிலிண்டர்கள் கொடுக்கப்படும். திருமணத்திற்கு 1 சவரன் தங்கம் மற்றும் பட்டுச்சேலை வழங்கப்படும். ரூ.20 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்படும். குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கப்படும். ஆண்டுதோறும் இலவச முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படும். வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும்" என்பது உள்பட பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன.</p>  <h2>தங்க மோதிரம் திட்டம்</h2><p>ஏற்கனவே, த.வெ.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற, பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் திட்டம் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.</p><p>இதேபோல், தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெற்ற 200 யூனிட் இலவச மின்சாரம் ஒரு மாதம் வழங்கப்பட்டுள்ளது. ரூ.75 ஆயிரம் வரையிலான பயிர் கடனும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள அறிவிப்புகளில் முக்கியமானவை பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதன்படி, கூட்டத்தில் துறை சார்ந்த அமைச்சர்களின் ஆலோசனைகளும், கருத்து கேட்புகளும் நடைபெறும் என கூறப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>நாவடக்கம் இல்லாதவர் தான் உதயநிதி ஸ்டாலின் -  அமைச்சர் ஆனந்த் விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/udhayanidhi-stalin-is-a-person-without-manners-minister-anand-criticizes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/udhayanidhi-stalin-is-a-person-without-manners-minister-anand-criticizes#comments</comments><guid isPermaLink="false">ea1c5de6-6ee9-474e-812f-974efd5b1134</guid><pubDate>Tue, 04 Aug 2026 02:11:25 +0000</pubDate><atom:updated>2026-08-04T02:11:25.603Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,திமுக,DMK,உதயநிதி ஸ்டாலின்,Udayanithi Stalin,அமைச்சர் ஆனந்த்,Minister Anand</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/cozy1y4z/108.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/cozy1y4z/108.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p> <p>திமுக எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று தஞ்சையில் தவெக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில் குறுவை பாதிக்கப்பட்டதற்கு டம்மி முதல்-அமைச்சர்தான் காரணம். விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்-அமைச்சர் விஜய் இதுபற்றி வாய்திறந்து பேசவில்லை. ஆடி 18-ம் நாள் இன்று, ஆடிப்பெருக்கில் ஆறு முழுவதும் தண்ணீர் வழிந்து ஓடும். ஆனால், இப்போது டெல்டா நீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. "திமுக ஆட்சி இருந்திருந்தல் இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா?" நிர்வாகத் திறனற்ற ஒரு டம்மி முதல்-அமைச்சரால் இந்த நிலைமை தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது.</p><p>கர்நாடகா முதல்-அமைச்சரை பாக்குறது இருக்கட்டும்.. நம்ம ஊரு விவசாயிகளை முதல்-அமைச்சர் விஜய் சந்தித்தாரா?. தயவு செய்து இந்த பக்கம் வந்து விடாதீர்கள் என முதல்-அமைச்சர் விஜயிடம் கர்நாடக முதல்-மந்திரி கூறி விட்டார். ஆட்சி அமைத்து 3 மாதங்கள் ஆகியும் பாஜக என்ற சொல்லைக் கூட உச்சரிக்காத தைரியசாலி நமது முதல்-அமைச்சர் விஜய். கர்நாடகாவில் உள்ள காங்கிரஸை எதிர்த்துப் பேச முதல்-அமைச்சருக்கு திராணி இல்லை என பேசினார். இந்நிலையில் இது குறித்துதவெக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D">அமைச்சருமான ஆனந்த்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p> <p>எதிர்க்கட்சித் தலைவர் என்ற மாண்பும் மரபும் மிக்க மிகப்பெரிய பொறுப்பை உணராமல், வாய்க்கு வந்தபடி பேசிய ஒருவரை என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. தன் தாத்தாவும் தந்தையும் வகித்தும் கூடவா முதல்-அமைச்சர் பதவியின் தகுதியும் தராதரமும் தெரியாமல் ஒருவர் இருக்க முடியும்?.</p><h2>நாவடக்கம் இல்லாதவர்</h2><p>அவை அடக்கமும் நாவடக்கமும் இல்லாத ஒருவரா நம் தமிழகத்தின் துணைமுதல்-அமைச்சராக இருந்திருக்க முடியும்?. மக்கள் மத்தியில் இத்தகையக் கேள்விகள் இமாலய அளவிற்கு எழுந்துள்ளன. எல்லை மீறி இழிவாகப் பேசியவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் ?.</p><h2>தளபதியின் நாகரிக வளர்ப்பு</h2><p>Decent Approach - Decent Attack கற்றுக்கொடுத்து எங்களைக் கட்டுப்படுத்தி வளர்க்கும் மக்கள் விரும்பும் நம் வெற்றித் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை இப்படி அநாவசியமாகவும் அநாகரிகமாகவும் தொட்டவர்கள் நிலை என்னவாயிற்று என்பதை யாராக இருந்தாலும் உணர்ந்தே ஆக வேண்டும். மக்கள் உணர்த்தியே தீருவர். அதில் மாற்றமும் இல்லை. மாற்றுக் கருத்தும் இல்லை. அமைதி காக்கச் சொல்லி எங்கள் தலைவர் தளபதியின் நாகரிக வளர்ப்பு எங்களைத் தடுக்கிறது. வேறு என்ன சொல்ல?. அறிஞர் அண்ணா பாணியில் ‘வசவாளர்கள் வாழ்க’ என்று சொல்லலாம். ஆனால், ஆபாசநிதிகளை?. மாண்பும் மரியாதையும் தகுதியும் தராதரமும் மிக்க எங்கள் தலைவர் தளபதி தமிழ்நாடு முதல்-அமைச்சர் சொல்வதுபோல மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். யாரும் மறந்துவிட வேண்டாம் என்று எச்சரிக்கிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கு குட் நியூஸ்; விரைவில் புதிய சேவை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/good-news-for-villages-without-bus-facilities-new-service-coming-soon</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/good-news-for-villages-without-bus-facilities-new-service-coming-soon#comments</comments><guid isPermaLink="false">a170554b-b9c1-4e82-9e32-e653abf092de</guid><pubDate>Tue, 04 Aug 2026 01:53:56 +0000</pubDate><atom:updated>2026-08-04T01:53:56.040Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>villages,கிராமங்கள்,Bus facility,பஸ் வசதி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/ex312no5/bus.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/ex312no5/bus.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><h2>பயணியர் புகார்</h2><p>தமிழகம் முழுதும் அரசு பஸ் இயக்கம் இல்லாத, அல்லது முன்பு இயக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்ட வழித்தடங்கள் குறித்த விபரங்களை, கோட்டம் வாரியாக சேகரித்து, அறிக்கை அனுப்பும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 20,000க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டாலும், சில கிராமங்களுக்கு இன்னும் அரசு பஸ் வசதி இல்லை. சில வழித்தடங்களில் காலை, மாலை அல்லது இரவில் ஒரு சுற்று மட்டுமே பஸ் இயக்கப்படுவதாகவும், வார விடுமுறை நாட்களில் டவுன் பஸ் சேவை குறைவதாகவும் பயணியர் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.</p><h2>மீண்டும் பஸ் சேவை</h2><p>இதையடுத்து, வரும் செப்டம்பர் மாத தொடக்கத்தில் புதிய பஸ்களை இயக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, இதுவரை பஸ் செல்லாத மற்றும் இயக்கப்பட்டு, பின்னர் கைவிடப்பட்ட வழித்தடங்களில் மீண்டும் பஸ் சேவையை தொடங்க அரசு முடிவு செய்து உள்ளது. இதற்காக, கோட்டம் அளவில் அறிக்கை தயாரித்து அனுப்பும்படி, மேலாண்மை இயக்குநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.</p><p>போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், 'பஸ் வசதி இல்லாத கிராமங்கள் மற்றும் வழித்தடங்கள் தொடர்பான விபரங்கள், வட்டார போக்குவரத்துத் துறை மூலம் சேகரிக்கப்பட்டு, கலெக்டர்கள் வழியாக அரசுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. புதிய வழித்தடங்களில் <a href="https://www.dailythanthi.com/topic/bus-service">பஸ் சேவை</a> தொடங்கினால், மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதால், மாநிலம் முழுதும் தற்போது விரிவான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன' என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ஊரப்பாக்கம் அருகே சாலையை கடந்த 12 அடி நீள ராஜநாகம்: வாகன ஓட்டிகள் அச்சம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/12-foot-long-cobra-crosses-road-near-oorapakkam-motorists-in-fear</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/12-foot-long-cobra-crosses-road-near-oorapakkam-motorists-in-fear#comments</comments><guid isPermaLink="false">2095f844-f4db-4235-a90b-bdf71fd58c93</guid><pubDate>Tue, 04 Aug 2026 01:49:31 +0000</pubDate><atom:updated>2026-08-04T01:49:31.904Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>road,Motorists,சாலை,Chengalpattu,செங்கல்பட்டு,fear,ராஜநாகம்,வாகன ஓட்டிகள் அச்சம்,ஊரப்பாக்கம் அருகே,Rajanagam,Oorapakkam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/tnrc9zca/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சாலையைக் கடந்த ராஜநாகம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/tnrc9zca/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>செங்கல்பட்டு, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">செங்கல்பட்டு</a> மாவட்டம், ஊரப்பாக்கம் அருகே சாலையை கடந்த 12 அடி நீள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">ராஜநாகம்</a> படம் எடுத்து ஆடியதால் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">வாகன ஓட்டிகள் அச்சம் </a>அடைந்தனர்.</p><p>செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து நல்லம்பாக்கம் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி இருபுறமும் தொடர்ச்சியாக அடர்ந்த வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் ஏராளமான மான்கள் உள்ளிட்ட பல்வேறு சிறிய வனவிலங்குகள் வசித்து வருகின்றன.</p><h2>படம் எடுத்து ஆடிய ராஜநாகம்</h2><p>நேற்று காலை நல்லம்பாக்கத்தில் இருந்து ஊனைமாஞ்சேரி கிரஷர் பகுதிக்குச் செல்லும் சாலையை ஒட்டியுள்ள காப்புக்காட்டில் இருந்து சுமார் 12 அடி நீளமுள்ள ராஜநாகம் ஒன்று சாலையை கடக்க வந்தது. அப்போது ராஜநாகம் திடீரென படம் எடுத்து ஆடியதால் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.</p><h2>புகைப்படம் எடுத்த வாகன ஓட்டிகள்</h2><p>உடனே வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை சாலையோரம் நிறுத்திவிட்டு, ராஜநாகத்தை செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். சில நிமிடங்கள் படம் எடுத்து ஆடிய ராஜநாகம் பின்னர் சாலையை கடந்து மீண்டும் காப்புக்காட்டுக்குள் சென்றுவிட்டது.</p>]]></content:encoded></item><item><title>தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்த காவிரி உபரிநீர்; விவசாயிகள் மகிழ்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-water-reaches-border-farmers-rejoice-as-surplus-water-flows-to-tamil-nadu-karnataka-border</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-water-reaches-border-farmers-rejoice-as-surplus-water-flows-to-tamil-nadu-karnataka-border#comments</comments><guid isPermaLink="false">6b422ece-a488-4856-80c6-c6f05f3518aa</guid><pubDate>Tue, 04 Aug 2026 01:29:33 +0000</pubDate><atom:updated>2026-08-04T01:29:33.461Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Farmers,விவசாயிகள்,கபினி அணை,Kabini Dam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/h5n08z8v/cwcor.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/h5n08z8v/cwcor.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>பிலிகுண்டுலு</p><p>கபினி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி உபரிநீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது.</p><p>கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு பற்றாக்குறையாக பெய்துள்ளது.  இதனால் காவிரி படுகையில் ஹாரங்கியை தவிர மற்ற 3 அணைகளும் நிரம்பாமல் இருந்தன.  இந்நிலையில், தமிழகத்தில் முக்கிய அணைகளில் ஒன்றான மேட்டூர் அணையில் 79 அடிக்கும் கீழ் தண்ணீர் குறைந்து போன நிலையில், நடப்பு ஆண்டு ஜூன் 12-ந்தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை.  இதனால், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி முழுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, கர்நாடகம் தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி நீரை தமிழகம் கேட்டது. ஆனால், வழக்கம் போல் கர்நாடகம் மறுத்து விட்டது.</p>  <h2>நீர் வரத்து அதிகரிப்பு</h2><p>இதற்கிடையில், காவிரி ஒழுங்காற்று குழு, தமிழ்நாட்டுக்கு 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3,500 கனஅடி நீர் திறந்து விட கர்நாடகத்துக்கு உத்தரவிட்டது.  இதன்படி மொத்தம் 4% டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) நீர் திறந்து விட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கு விவசாயிகள், கன்னட அமைப்பினர் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அத்துடன் பெங்களூரு, மண்டியா, மைசூருவில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களும் நடத்தப்பட்டன.</p><p>இந்த சூழலில்,  தற்போது குடகு, சிக்கமகளூரு மற்றும் கேரள மாநிலம் வயநாட்டில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.  காவிரி படுகையில் உள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. கபினி அணையும் நிரம்பி வருகிறது.</p>  <h2>கபினி அணை</h2><p>நேற்றைய நிலவரப்படி, கர்நாடகாவின் கே.ஆர்.எஸ். அணையில் 23.078 டி.எம்.சி., கபினியில் 18.610 டி.எம்.சி., ஹாரங்கியில் 7.827 டி.எம்.சி. மற்றும் ஹேமாவதியில் 28.022 டி.எம்.சி. என மொத்தம் 77.537 டி.எம்.சி. மொத்த நீர் இருப்பு (பயன்பாட்டு நீர் இருப்பு 67.517 டி.எம்.சி.) உள்ளது. எனவே, விகிதாச்சார அடிப்படையில் பில்லிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கு நீரை தனது அணைகளில் இருந்து திறந்து விடுவதில் கர்நாடக அரசுக்கு எந்த சிரமமும் இருக்காது.</p><p>இதற்கிடையே, கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளின் நீர் பிடிப்புப்பகுதிகளில் அதிக மழை பெய்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.  மைசூர் அருகே உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து கடந்த 31-ந்தேதி வரை சீராக இருந்த நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் நீர்வரத்து விநாடிக்கு 15,500 கன அடியாக அதிரடியாக உயர்ந்தது. அணை மிக வேகமாக நிரம்பி வருகிறது.  அதன் பாதுகாப்பை முன்னிட்டு அணையில் இருந்து காவிரியில் அதிக அளவு நீர் திறந்து விடப்படுகிறது.</p>   <h2>விவசாயிகள் மகிழ்ச்சி</h2> <p>இதனால், கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து காவிரியில் திறந்துவிடப்பட்ட உபரிநீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது.  கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறந்துவிடப்படுகிறது.  தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டு, தமிழக எல்லையை வந்தடைந்த உபரிநீரின் அளவு ஆயிரம் கனஅடியாக அதிகரித்து உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.  இதனால், தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.</p><p>ஆற்றின் கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என முன்பே அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>  ]]></content:encoded></item><item><title>கரூரில் வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு; நெகிழ்ச்சி சம்பவம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/baby-shower-for-pet-dog-in-karur-resilience-incident</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/baby-shower-for-pet-dog-in-karur-resilience-incident#comments</comments><guid isPermaLink="false">fda3f8cf-ae94-49af-8de2-65874b5da000</guid><pubDate>Tue, 04 Aug 2026 01:27:50 +0000</pubDate><atom:updated>2026-08-04T01:27:50.427Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர்,Karur,உறவினர்கள்,Relatives,party,விருந்து,வளர்ப்பு நாய்,pet dog,Baby shower,Resilience,நெகிழ்ச்சி சம்பவம்,incident,வளைகாப்பு நிகழ்ச்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/okqpekrc/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நிகழ்ச்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/okqpekrc/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கரூர், </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">கரூர் </a>மாவட்டம், சோமூர் பகுதியில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D">வளர்ப்பு நாய்</a>க்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">வளைகாப்பு நிகழ்ச்சி</a> நடத்தி, உறவினர்களுக்கு விருந்து அளித்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D">நெகிழ்ச்சி சம்பவம்</a> நடந்தது.</p><h2>செல்ல நாய் சாராவுக்கு வளைகாப்பு</h2><p>கரூர் மாவட்டம், சோமூர் பகுதியை சேர்ந்தவர் கோமதி. இவர் தனது வீட்டில் சாரா என்னும் சிட்சு வகையிலான நாயை செல்லமாக வளர்த்து வருகிறார். சாராவின் மீது வீட்டில் உள்ள அனைவருக்கும் பாசம் அதிகம். இந்த நிலையில் சாராவிற்கு வருகிற 15 முதல் 20-ந் தேதிக்குள் குட்டி பிறக்க உள்ளது. இதையொட்டி கோமதி குடும்பத்தினர் நேற்று முன்தினம் அவர்களது வீட்டில் செல்ல நாய் சாராவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினர்.</p><h2>உறவினர்களுக்கு விருந்து</h2><p>அப்போது பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்படுவதுபோல. நாய் சாராவிற்கு தட்டுகளில் மிக்சர், பிஸ்கட், பழங்கள், பூக்கள், நாய்களுக்கென பிரத்யேகமாக வழங்கப்படும் உணவுகள் உள்ளிட்டவற்றை சீர்வரிசைகளாக கொண்டு வந்து வளைகாப்பு நடத்தப்பட்டது. இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கோமதியின் உறவினர்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு விருந்தும் அளிக்கப்பட்டது. வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சி அடைய செய்தது.</p>]]></content:encoded></item><item><title>நெல்லை: விக்கிரமசிங்கபுரம் அருகே தோட்டத்தில் இறந்து கிடந்த பெண் கரடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-female-bear-found-dead-in-an-orchard-near-vikramasingapuram</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-female-bear-found-dead-in-an-orchard-near-vikramasingapuram#comments</comments><guid isPermaLink="false">1d3bdfc4-f1b8-4292-bafe-e8b0e440e17d</guid><pubDate>Tue, 04 Aug 2026 01:26:53 +0000</pubDate><atom:updated>2026-08-04T01:26:53.720Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,கரடி,bear</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/yn1cvua6/3.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/yn1cvua6/3.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வனக்கோட்டம் வடமலைசமுத்திரம் கிராமம், இந்தியன் பெட்ரோல் நிலையம் பின்புறம் அமைந்துள்ள செய்யது சுலைமான் என்பவரின் தோட்டப்பகுதியில் சுமார் 8 வயதுடைய பெண் கரடி நேற்று மாலை 5 மணியளவில் திடீரென இறந்து கிடந்தது.</p><p>இதுகுறித்த தகவல் அறிந்தவுடன், துணை இயக்குனர் மற்றும் வன கால் நடை மருத்துவக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, விதிமுறைகளின்படி கரடியின் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. உடற்கூறு ஆய்வு மற்றும் ஆய்வகப் பரிசோதனை அறிக்கைகள் கிடைத்த பின்னர் கரடியின் உயிரிழப்பிற்கான காரணம் உறுதி செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.</p> ]]></content:encoded></item></channel></rss>