<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 14 Sep 2026 16:14:36 +0000</lastBuildDate><item><title>சென்னை எண்ணூர் கடலில் குளிக்கச் சென்ற ஆசிரியை அலையில் சிக்கி உயிரிழப்பு - மற்றொருவர் மாயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/teacher-who-went-swimming-in-the-sea-at-ennore-chennai-dies-after-getting-caught-in-the-waves-another-person-is-missing</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/teacher-who-went-swimming-in-the-sea-at-ennore-chennai-dies-after-getting-caught-in-the-waves-another-person-is-missing#comments</comments><guid isPermaLink="false">1ca59949-08cd-46ab-b66c-ee83fbd38884</guid><pubDate>Mon, 14 Sep 2026 16:03:31 +0000</pubDate><atom:updated>2026-09-14T16:03:31.702Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Ennore,எண்ணூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/03n5ism3/State-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/03n5ism3/State-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை தாழங்குப்பத்தைச் சேர்ந்த 26 வயதான கலைச்செல்வி, பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருடன் பணியாற்றும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் மற்றும் வேலூர் ஆரணியை சேர்ந்த கார்த்தி ஆகிய இருவரும் கலைச்செல்வி வீட்டிற்கு மதிய உணவு சாப்பிட வந்திருந்தனர்.  </p><p>பின்னர் மதிய உணவு முடித்து கலைச்செல்வி, நவீன், கார்த்தி மற்றும் கலைச்செல்வியின் தங்கை கவுசல்யா ஆகியோர் தாழங்குப்பம் கடற்கரைக்கு சென்று கடலில் குளித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக கலைச்செல்வியும், நவீனும் ராட்சத அலையில் சிக்கினர்.</p><p>இதனைக் கண்டு அங்கிருந்தவர்கள் கடலில் குதித்து இருவரையும் மீட்க முயன்றனர். இதில் கலைச்செல்வி மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், நவீன் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். மீட்கப்பட்ட கலைச்செல்வி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், வழியிலேயே அவர் உயிரிழந்தார். மாயமான நவீனை எண்ணூர் தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ. ரூ.97 லட்சம் மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/hydroponic-ganja-worth-rs-97-lakh-seized-at-chennai-international-airport</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/hydroponic-ganja-worth-rs-97-lakh-seized-at-chennai-international-airport#comments</comments><guid isPermaLink="false">b3ccc9e7-585a-46bb-9e9a-bd05dc1de819</guid><pubDate>Mon, 14 Sep 2026 15:56:26 +0000</pubDate><atom:updated>2026-09-14T15:56:26.258Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,கஞ்சா,பறிமுதல்,சர்வதேச விமான நிலையம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/hkbytrwg/kanja.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஹைட்ரோபோனிக் கஞ்சா]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ. ரூ.97 லட்சம் மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/hkbytrwg/kanja.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>துபாயில் இருந்து சென்னைக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக சென்னை சுங்கத்துறை விமான புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய உளவுத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, நேற்று துபாயில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமான பயணிகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். </p><p>அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த இந்திய ஆண் பயணி ஒருவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.ரூ.97 லட்சம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE">கஞ்சா</a> சிக்கியது.</p><h2>பச்சை வழித்தடம்</h2><p>அவர் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல், ‘பச்சை வழித்தடம்’ வழியாக நைசாக வெளியேற முயன்றார். உடனே அதிகாரிகள் அவரை மடக்கி பிடித்து, அவரது உடைமைகளை அங்குள்ள தனி அறைக்கு கொண்டு சென்று விரிவாக பரிசோதித்தனர். அப்போது அவரது பைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சில பொட்டலங்கள் சிக்கின. </p><h2>ரூ.97 லட்சம்</h2><p>பொட்டலங்களை அதிகாரிகள் பிரித்து பார்த்தபோது, மண்ணில்லாமல் நீர் மூலம் பயிரிடப்பட்ட உயர் ரக கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போதைப்பொருள் கண்டறியும் நவீன கருவியை கொண்டு சோதித்ததில், அது கஞ்சா தான் என்பது உறுதி செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட 2,794 கிராம் எடையுள்ள இந்த போதைப்பொருளின் சர்வதேச கள்ளச்சந்தை மதிப்பு சுமார் ரூ.97 லட்சம் ஆகும்.</p><h2>பயணி கைது</h2><p>இதனை தொடர்ந்து, போதைப்பொருள் மற்றும் மனநல பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் ரூ.97 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், போதைப்பொருள் கடத்தி வந்த அந்த பயணியை அதிகாரிகள் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இது குறித்த மேல்விசாரணை நடைபெற்று வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த கார் - அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குடும்பம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/car-catches-fire-on-salem-coimbatore-national-highway-family-escapes-unharmed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/car-catches-fire-on-salem-coimbatore-national-highway-family-escapes-unharmed#comments</comments><guid isPermaLink="false">35308985-d77d-45df-997f-efdae7499dd5</guid><pubDate>Mon, 14 Sep 2026 15:47:18 +0000</pubDate><atom:updated>2026-09-14T15:47:18.084Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Fire,Car,கார்,Salem,சேலம்,தீ</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/sxt0i9as/State-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/sxt0i9as/State-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் காரில் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கொண்டிருந்தார். அவர்களது கார் நெய்க்காரப்பட்டி பகுதி அருகே வந்தபோது திடீரென இன்ஜின் சூடாகி தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. </p> <p>இதையடுத்து பாலசுப்பிரமணியம் உடனடியாக காரை நிறுத்தி, தனது குடும்பத்தினரை காரில் இருந்து வெளியேற்றினார். இதனால் இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. </p><p>கார் தீப்பிடித்து எரிவதை பார்த்த வாகன ஓட்டிகள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-dies-after-falling-from-chennais-kathipara-flyover</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-dies-after-falling-from-chennais-kathipara-flyover#comments</comments><guid isPermaLink="false">b7c4a304-c8aa-4fd7-859f-e98281b5b064</guid><pubDate>Mon, 14 Sep 2026 15:34:10 +0000</pubDate><atom:updated>2026-09-14T15:34:10.112Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/7jaxoa24/State-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/7jaxoa24/State-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை கிண்டியில் உள்ள கத்திப்பாரா மேம்பாலத்தில் அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் ஒன்று, பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற இளைஞர், பாலத்தின் மேல் சுமார் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். </p><p>இதில் படுகாயமடைந்த அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் மேலும் ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>விடுமுறை முடிந்து சென்னை நோக்கி திரும்பும் மக்கள்... சிங்கப்பெருமாள் கோவிலில் 2 கி.மீ. தூரத்திற்கு வாகன நெரிசல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/people-returning-to-chennai-after-the-holidays-traffic-jam-for-2-km-at-singaperumal-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/people-returning-to-chennai-after-the-holidays-traffic-jam-for-2-km-at-singaperumal-temple#comments</comments><guid isPermaLink="false">a91c9b47-ed00-412d-99d6-93a7faf0ed6e</guid><pubDate>Mon, 14 Sep 2026 15:25:46 +0000</pubDate><atom:updated>2026-09-14T15:25:46.680Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,விடுமுறை,Holiday,traffic jam,வாகன நெரிசல்,Chennai City,சிங்கப்பெருமாள் கோவில்,Singaperumal Kovil</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/2ra7b8yd/114.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/2ra7b8yd/114.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விடுமுறை முடிந்து சென்னை நோக்கி மக்கள் திரும்பி வருவதால்  சிங்கபெருமாள் கோவிலில் 2 கி.மீ. தூரத்திற்கு வாகன நெரிசல்ஏற்பட்டுள்ளது.</p><h2>போக்குவரத்து நெரிசல்</h2><p>விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையை சொந்த ஊரில் கழிக்கப் பலரும் சென்னையில் இருந்து கிளம்பி சென்றனர். இந்நிலையில் தொடர் விடுமுறை முடிந்து சொந்த ஊர்களுக்கு சென்றிருந்த பொதுமக்கள் சென்னை திரும்பி வருவதால், சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.</p><h2>வாகனங்கள் அணிவகுத்து நின்றன...</h2><p>குறிப்பாக, சிங்கபெருமாள் கோவில் பகுதியில் சென்னை நோக்கி ஏராளமான வாகனங்கள் ஒரே நேரத்தில் வந்ததால் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D">கடும் போக்குவரத்து நெரிசல் </a>ஏற்பட்டது. இதனால் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.</p><p>வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றதால், சென்னை திரும்பும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து - பயணிகள் காயம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-bus-overturns-near-ramanathapuram-passengers-injured</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-bus-overturns-near-ramanathapuram-passengers-injured#comments</comments><guid isPermaLink="false">e467b9d4-bd23-4c5e-b6ed-b4e912f73c42</guid><pubDate>Mon, 14 Sep 2026 15:22:05 +0000</pubDate><atom:updated>2026-09-14T15:22:05.971Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ராமநாதபுரம்,Ramanathapuram</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/kup499tx/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/kup499tx/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமநாதபுரம்,</p><p>ராமநாதபுரம் மாவட்டம் முதுகுலத்தூர் அருகே பூசேரி பகுதியில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று, எதிரே வந்த காருக்கு வழி விடுவதற்காக சாலையோரம் ஒதுங்கியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. </p><p>இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. பயணிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். </p> ]]></content:encoded></item><item><title>மலேசிய உரிமை கட்சி தலைவர் பேராசிரியர் ராமசாமி சென்னை வருகை: வைகோவுடன் சந்திப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/malaysian-rights-party-chief-prof-ramasamy-chennai-visit-meets-vaiko</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/malaysian-rights-party-chief-prof-ramasamy-chennai-visit-meets-vaiko#comments</comments><guid isPermaLink="false">f669cc25-5c1f-4cc4-bebe-92471c07f7ae</guid><pubDate>Mon, 14 Sep 2026 14:58:08 +0000</pubDate><atom:updated>2026-09-14T14:58:08.552Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Malaysia,Chennai,சென்னை,Vaiko,வைகோ,சந்திப்பு,வருகை,visits,ராமசாமி,Ramasamy</media:keywords><media:content height="768" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/iw3l1ssm/d1.jpg" width="1366"><media:title type="html"><![CDATA[ பேராசிரியர் ராமசாமி,வைகோ,துரை வைகோ]]></media:title><media:description type="html"><![CDATA[ மலேசிய உரிமை கட்சி தலைவர் பேராசிரியர் ராமசாமி சென்னை வருகை: வைகோவுடன் சந்திப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/iw3l1ssm/d1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மலேசிய நாட்டின் பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்-மந்திரியும், மலேசிய உரிமை கட்சியின்  நிறுவன தலைவருமான பேராசிரியர் பி. ராமசாமி சென்னைக்கு வருகை தந்துள்ளார். சென்னை அண்ணா நகரிலுள்ள இல்லத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நேரில் சந்தித்து பேசினார். இது தொடர்பாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B">துரை வைகோ</a> வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p> <h2>வரவேற்பு</h2><p>மலேசிய நாட்டின் பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்-மந்திரியும், மலேசிய உரிமை கட்சியின் நிறுவன தலைவருமான பேராசிரியர் ராமசாமி தங்கள் இணையருடன், இன்று  எங்களது அண்ணா நகர் இல்லத்திற்கு வருகை தந்து, தலைவரையும் என்னையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்கள். அவரை பட்டாடை அணிவித்து வரவேற்று மகிழ்ந்தேன்.</p> <h2>மதிய விருந்து</h2><p>அப்போது, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE">மலேசிய</a> நாட்டின் அரசியல், பொருளாதாரம் குறித்தும், தமிழ்நாட்டின் அரசியல் மாற்றம் குறித்தும் பல்வேறு கோணங்களில் உரையாடினோம். அதன்பிறகு, எங்கள் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய விருந்தில் பங்கேற்று சிறப்பித்தார்கள்.</p><figure><img alt="பேராசிரியர் ராமசாமி,வைகோ,துரை வைகோ" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/o2npo85u/d2.jpg" /></figure><p>இந்த சந்திப்பிலும் விருந்து உபசரிப்பிலும் மலேசிய உரிமை கட்சியின் துணை தலைவரும், மலேசிய தமிழர் குரல் அறக்கட்டளையின் தலைவருமான டேவிட் மார்ஷல், பினாங்கு மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மலேசிய உரிமை கட்சியின் பொது செயலாளருமான சதீஷ் முனியாண்டி, மலேசிய உரிமை கட்சியின் பொருளாளர் கிருஷ்ணசாமி மற்றும் மலேசிய உரிமை கட்சியின் அரசியல் ஆலோசகரும் மலேசிய உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான சம்ஷேர் சிங் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">மலேசிய நாட்டின் பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வரும், மலேசிய உரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவருமான பெருமரியாதைக்குரிய பேராசிரியர் இராமசாமி அவர்கள் தங்கள் இணையருடன், இன்று (14.09.2026) எங்களது அண்ணா நகர் இல்லத்திற்கு வருகை தந்து, தலைவர் அவர்களையும் என்னையும் மரியாதை நிமித்தமாகச்… <a href="https://t.co/CWE7M8QrQX">pic.twitter.com/CWE7M8QrQX</a></p>&mdash; Durai Vaiko (@duraivaikooffl) <a href="https://x.com/duraivaikooffl/status/2099507382040801441?ref_src=twsrc%5Etfw">September 14, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: நில பிரச்சினையில் இரு கிராம மக்கள் மோதல்;  40 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-land-dispute-clash-between-two-villages-40-booked</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-land-dispute-clash-between-two-villages-40-booked#comments</comments><guid isPermaLink="false">54db2cdd-7368-42d5-afe1-2c846dfa53b9</guid><pubDate>Mon, 14 Sep 2026 14:33:24 +0000</pubDate><atom:updated>2026-09-14T14:33:24.152Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,தூத்துக்குடி,cases,வழக்குப்பதிவு,clash,மோதல்,கிராம மக்கள்,போலீசார்,Register,In Thoothukudi,நில பிரச்சினை</media:keywords><media:content height="768" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/rnsit765/filght.jpg" width="1366"><media:title type="html"><![CDATA[ கிராம மக்கள் மோதல்]]></media:title><media:description type="html"><![CDATA[ தூத்துக்குடி: நில பிரச்சினையில் இரு கிராம மக்கள் மோதல்;  40 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/rnsit765/filght.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p> விளாத்திகுளம் அருகே உள்ள லெக்கம்பட்டி மற்றும் இலந்தைகுளம் ஆகிய இரு கிராம மக்களுக்கு இடையே குறிப்பிட்ட ஒரு இடத்தில்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF"> கபடி</a> விளையாடும் நிலம் தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, 40 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</p> <h2>கபடி </h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம் விளாத்திகுளம் அருகே, கபடி விளையாடும் நிலம் தொடர்பாக லெக்கம்பட்டி மற்றும் இலந்தைகுளம் கிராம மக்களிடையே நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.</p><h2>வாக்குவாதம் </h2><p>இந்நிலையில், இந்த நில விவகாரம் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, அது பின்னர் பெரிய அளவில் மோதலாக வெடித்தது. ஆத்திரமடைந்த இரு கிராம மக்களும்  கற்களை வீசி ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.</p> <h2>போலீசார் குவிப்பு</h2><p>இந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81">கல்வீச்சு</a> சம்பவத்தில் இரு தரப்பையும் சேர்ந்த சிலர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் விளாத்திகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோதலில் ஈடுபட்டவர்களை கலைந்து போக செய்து, அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.</p><h2>40 பேர் மீது வழக்கு</h2><p>இந்த கலவரம் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தது தொடர்பாக இரு கிராமங்களையும் சேர்ந்த 40 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் காரணமாக விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவி வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் பேன்சி வாகனப்பதிவு எண்கள் பெறுவதற்கு 2,008 முறை பயன்படுத்தப்பட்ட ஒரே செல்போன் நம்பர் - சி.ஏ.ஜி. தகவல் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cag-reveals-a-single-mobile-number-was-used-2008-times-to-obtain-fancy-vehicle-registration-numbers-in-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cag-reveals-a-single-mobile-number-was-used-2008-times-to-obtain-fancy-vehicle-registration-numbers-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">ae242c06-8e6a-4da4-a11d-2ae5aa692f96</guid><pubDate>Mon, 14 Sep 2026 14:22:58 +0000</pubDate><atom:updated>2026-09-14T14:22:58.227Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,Tamil Nadu,CAG,சிஏஜி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/8j2wlzwd/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/8j2wlzwd/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>2024 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலத்துக்கான தமிழக அரசின் வருவாய் தொடர்பான சி.ஏ.ஜி.(இந்திய தலைமை கணக்குத் தணிக்கை அமைப்பு) அறிக்கை, கடந்த செப்டம்பர் 8-ந்தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2019-20 முதல் 2023-24 வரையிலான வாகனப்பதிவு தரவுகளின்படி, 6.75 லட்சம் வாகனங்களுக்கு 'பேன்சி' எண்களை ஒதுக்க 4.16 லட்சம் தனித்தனி செல்போன் நம்பர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  </p><p>மேலும் 53,000 செல்போன் எண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பயன்படுத்தப்பட்டு, 3.12 லட்சம் 'பேன்சி' பதிவு எண்கள் பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இதில் ஒரே தனிநபர் செல்போன் எண் சுமார் 2,008 முறை வரை பயன்படுத்தப்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி.சுட்டிக்காட்டியுள்ளது. </p> <p>ஒரே செல்போன் எண் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டிருப்பதன் மூலம், சில தனி நபர்கள் அல்லது நிறுவனங்கள் 'பேன்சி' பதிவு எண்களை மொத்தமாகப் பெற்று, பின்னர் அவற்றை மறுவிற்பனை செய்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது. மேலும், பதிவு எண்கள் ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மை இல்லாததால், கிடைக்கக்கூடிய ஆனால் ஒதுக்கப்படாத பதிவு எண்களை அறிய பொதுமக்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய நிலை இருப்பதாகவும் சி.ஏ.ஜி அறிக்கை கூறுகிறது. </p><p>இதனால் வாகனப்பதிவு நடவடிக்கைகளுக்காக இடைத்தரகர்கள் அல்லது ஏஜென்சிகளை பொதுமக்கள் அதிகம் சார்ந்திருக்கும் சூழல் உருவாகிறது. இது குறித்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு அளித்த விளக்கத்தில், 'வாஹன்' இணையதளத்தில் 'பேன்சி' பதிவு எண்கள் ஒதுக்கீடு ஆதார் அடையாள சரி பார்ப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஒரே செல்போன் எண்ணைப் பயன்படுத்தி பல பதிவு எண்கள் ஒதுக்கீடு செய்யும் நடைமுறை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. </p> ]]></content:encoded></item><item><title>லண்டனில் மின்சாதன உற்பத்தி ஆலை நிறுவனத்துடன் முதல்-அமைச்சர் விஜய் ரூ.300 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-signs-mou-with-electronics-manufacturer-in-london-for-rs-300-crore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-signs-mou-with-electronics-manufacturer-in-london-for-rs-300-crore#comments</comments><guid isPermaLink="false">6a1dd4bb-de26-4357-bd73-4eb2f43a7b92</guid><pubDate>Mon, 14 Sep 2026 13:58:53 +0000</pubDate><atom:updated>2026-09-14T13:58:53.508Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>புரிந்துணர்வு ஒப்பந்தம்,power plant,London,லண்டன்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,Signs</media:keywords><media:content height="768" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/g159jdpz/300.jpg" width="1366"><media:title type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ லண்டனில் மின்சாதன உற்பத்தி ஆலை நிறுவனத்துடன் முதல்-அமைச்சர் விஜய் ரூ.300 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/g159jdpz/300.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>லண்டனில் மின்சாதன உற்பத்தி ஆலை நிறுவனத்துடன் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a> ரூ.300  கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடபட்டன.இது குறித்து, அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><h2>ரூ.300 கோடி முதலீடு</h2><p>இங்கிலாந்து, லண்டன் நகரில் இன்று, தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தி துறையின் அடுத்த கட்ட வளர்ச்சியாக, திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.300 கோடி முதலீடு செய்து 400 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் ‘வில்சன் பவர் சொல்யூஷன்ஸ்’ நிறுவனத்துடன் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">புரிந்துணர்வு ஒப்பந்தம்</a> மேற்கொள்ளப்பட்டது. </p><h2>பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனம்</h2><p>இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் குழும தொழில்நுட்ப இயக்குநர்  ஹரி கிருஷ்ணா மலேபதி, குழும நிதியியல் இயக்குநர் டென்னிஸ் சோர்பி ஆகியோரும், தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப், ஆகியோரால் கையெழுதிடப்பட்டு, ஒப்பந்தம் பரிமாறி கொள்ளப்பட்டது. </p><p>இந்நிகழ்ச்சியில், இங்கிலாந்து நாட்டிற்கான இந்திய தூதர் குமரன் பெரியசாமி, ஐஎப்எஸ்,  நிறுவன பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் கூறியுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>தமிழகம் மற்றும் புதுச்சேரி இடைத்தேர்தல்: தபால் ஓட்டுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-and-puducherry-by-elections-election-commission-allows-postal-voting</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-and-puducherry-by-elections-election-commission-allows-postal-voting#comments</comments><guid isPermaLink="false">f18a037c-8767-400c-b245-c74709992b38</guid><pubDate>Mon, 14 Sep 2026 13:55:45 +0000</pubDate><atom:updated>2026-09-14T13:55:45.050Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தேர்தல் ஆணையம்,Election Commission,தமிழகம்,அனுமதி,இடைத்தேர்தல்,by-elections,தபால் ஓட்டு,In Tamil Nadu,Postal Voting</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/ne6wrk90/113.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தபால் ஓட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/ne6wrk90/113.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் தபால் ஓட்டு வசதி நடைமுறையில் இருக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.</p><p>மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தபால் ஓட்டு வசதியை பயன்படுத்தி வாக்களிக்கலாம். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் உள்ளிட்டோருக்கும் தபால் ஓட்டு வசதி வழங்கப்படுகிறது.</p><h2>தபால் ஓட்டு</h2><p>மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் குறிப்பிட்ட விதிமுறைகளின்படி தபால் ஓட்டு வசதி வழங்கப்பட்டது.</p><h2>இடைத்தேர்தலிலும் தொடரும்</h2><p>கடந்த சட்டமன்ற தேர்தலிலும் இந்த வகைகளைச் சேர்ந்தவர்கள் தபால் ஓட்டு மூலம் வாக்களித்தனர். இதற்காக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பே, தற்போது நடைபெற உள்ள மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலிலும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலிலும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">தபால் ஓட்டு</a> வசதி தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: ரேஷன் குடோனில் பயங்கர தீ விபத்து - பழைய ஆவணங்கள் எரிந்து சேதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-massive-fire-at-ration-warehouse-old-documents-destroyed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-massive-fire-at-ration-warehouse-old-documents-destroyed#comments</comments><guid isPermaLink="false">2e957c66-4264-47af-a652-134c2a7f6d96</guid><pubDate>Mon, 14 Sep 2026 13:52:39 +0000</pubDate><atom:updated>2026-09-14T13:52:39.575Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தீ விபத்து,Fire,Thoothukudi,தூத்துக்குடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/3psedc8u/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/3psedc8u/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>தூத்துக்குடி மாவட்டம் மூன்றாவது மைல் பகுதியில் இந்திய உணவுக் கழகத்திற்கு சொந்தமான குடோனில், பயனாளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக ரேஷன் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த ரேஷன் குடோனில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. </p><p>டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த குடோனில் பழைய ஆவணங்கள் மற்றும் சாக்குகள் இருந்த பகுதியில் தீ மளமளவென பரவியது. இது குறித்து தகவலறிந்து தீயணைப்புத் துறையினர் சுமார் 6 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். </p><p>இருப்பினும் இந்த தீ விபத்தில் பழைய ஆவணங்கள் முழுவதும் எரிந்து சாம்பலானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், தீ வேகமாக கட்டுப்படுத்தப்பட்டதால் குடோனில் இருந்த சுமார் 40 டன் ரேஷன் பொருட்கள் தீயில் சிக்காமல் பாதுகாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. </p> ]]></content:encoded></item><item><title>மயிலாடுதுறை அருகே வங்கக்கடலில் எண்ணெய் கிணறு அமைக்க அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-ramadoss-opposes-oil-wells-near-mayiladuthurai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-ramadoss-opposes-oil-wells-near-mayiladuthurai#comments</comments><guid isPermaLink="false">db3918c5-28ee-4671-bc5d-b0dd18666a10</guid><pubDate>Mon, 14 Sep 2026 13:38:39 +0000</pubDate><atom:updated>2026-09-14T13:38:39.920Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani Ramadoss,Mayiladuthurai,மயிலாடுதுறை,Bay of Bengal,வங்கக்கடல்,Construction,எதிர்ப்பு,அன்புமணி ராமதஸ்,Oil well,எண்ணெய் கிணறு,oppose</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/w4fhx1we/anbumani.gif" width="750"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/w4fhx1we/anbumani.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மயிலாடுதுறை அருகே வங்கக்கடலில் எண்ணெய் கிணறு அமைக்க வேண்டாம் என்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>கவலையளிக்கின்றன</h2><p>மயிலாடுதுறை மாவட்டத்தையொட்டிய வங்கக்கடலில் 81 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில்  5 எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகளை அமைப்பதற்கான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D">சுற்றுச்சூழல்</a> அனுமதி கோரி  அமெரிக்காவை சேர்ந்த ஹார்டி எக்ஸ்ப்ளோரேஷன் &amp; புரொடக்‌ஷன்  நிறுவனம் விண்ணப்பித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் கவலையளிக்கின்றன. </p><p>பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள காவிரி பாசன மாவட்டங்களின் சூழலை கெடுப்பதற்கான எந்தத் திட்டமாக இருந்தாலும் அவை முறியடிக்கப்பட வேண்டியவை தான்.</p><h2>எண்ணெய் கிணறுகள்</h2><p>மயிலாடுதுறை மாவட்டத்தையொட்டிய கடல் பகுதியில் 1997-ஆம் ஆண்டில்  <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%81">எண்ணெய் கிணறுகளும்</a>, எரிவாயு கிணறுகளும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தால்  அமைக்கப்பட்டன. பின்னாளில் ஹார்டி எக்ஸ்ப்ளோரேஷன் &amp; புரொடக்‌ஷன் என்ற அமெரிக்க நிறுவனம்  ஓ.என்.ஜி.சி  நிறுவனத்துடன் இணைந்து கூட்டு முயற்சியில்  இந்த எண்ணெய் கிணறுகளை பராமரித்து வந்தது. </p> <h2>அமெரிக்க நிறுவனம்</h2><p> 2011-ஆம் ஆண்டில் கைவிடப்பட்ட இந்த எண்ணெய் கிணறுகளில் கடந்த ஆண்டு மீண்டும் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி தொடங்கப்பட்டது. அந்த எண்ணெய் கிணறுகளை விரிவாக்கம் செய்யும் நோக்குடன் கூடுதலாக 5 புதிய எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகளை அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி அமெரிக்க நிறுவனம் மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளது.</p> <h2>சுற்றுச்சூழல் பாதிப்பு</h2><p>வங்கக் கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகள் அமைக்கப்பட்டால் மீன்வளம் மிகக்கடுமையாக பாதிக்கப்படும்;  ஏற்கனவே அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள  எண்ணெய் கிணறுகளால்  கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகள்  ஏற்பட்டுள்ளன. </p> <p>இப்போது கூடுதலாக எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட்டால் அந்த பகுதியில் மதிப்பிட முடியாத அளவுக்கு சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பது மட்டுமின்றி, மீனவர்களின் வாழ்வாதாரமும் மிக கடுமையாக பாதிக்கப்படும்.</p><h2>வேளாண் மண்டலம்</h2><p>ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் வேளாண்மையும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படக்கூடாது என்பதால் தான்  மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களை காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி சாதித்தது. </p><p>அதனால் இந்தப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த முடியாது என்பதை உணர்ந்து கொண்டு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல எல்லையிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த எண்ணெய் நிறுவனங்கள் முயல்கின்றன. இதை மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கவே கூடாது. அதுமட்டுமின்றி, அப்பகுதியில் ஏற்கனவே இயங்கி வரும் எண்ணெய் கிணறுகளையும் மூட ஆணையிட வேண்டும்.</p><h2>தமிழக அரசு அனுமதி வழங்க கூடாது</h2><p>ஒரு வேளை இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தாலும் கூட,  எண்ணெய் கிணறுகள் அமைக்கப்படவுள்ள பகுதி தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருவதால் அதற்கு தமிழக  அரசு மற்றும் கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின்  அனுமதி  கட்டாயம் ஆகும். இந்த அனுமதியை தமிழக அரசு வழங்கக் கூடாது.</p> <h2>அணுகுமுறை</h2><p>இதேபோல், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஹிந்துஸ்தான் எண்ணெய் கண்டுபிடிப்பு நிறுவனம்  சில மாதங்களுக்கு முன் கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின்  அனுமதி விண்ணப்பித்தது. </p><p>அதற்கு பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் இதுவரை தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. அதே அணுகுமுறையை தான் எதிர்காலத்தில் இந்தத் திட்டத்திற்கும் தமிழக அரசு கடைபிடிக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் கடை வாசலில் இளைஞர் வெட்டி கொலை - மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-hacked-to-death-at-tasmac-shop-entrance-police-launch-net-to-nab-mysterious-persons</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-hacked-to-death-at-tasmac-shop-entrance-police-launch-net-to-nab-mysterious-persons#comments</comments><guid isPermaLink="false">38d80dc5-c3d7-4011-8159-7124e66cf763</guid><pubDate>Mon, 14 Sep 2026 13:35:28 +0000</pubDate><atom:updated>2026-09-14T13:35:28.961Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>mysterious persons,Death,டாஸ்மாக் கடை,Tasmac shop,வெட்டி கொலை,மர்ம நபர்களுக்கு வலைவீச்சு,young boy</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/8176y9j0/10.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/8176y9j0/10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>சமயபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். </p><h2>வெட்டிக் கொலை </h2><p>திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது வாங்குவதற்காக பிரகாஷ் (வயது 30) என்ற இளைஞர் சென்றுள்ளார். அப்போது டாஸ்மாக் கடையில் மது வாங்குவதற்காக வரிசையில் நின்ற போது அங்கு இருந்தவர்களிடம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பாக மாறியது. இதில், ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து டாஸ்மாக் கடை வாசலில் பிரகாஷை சரமாரியாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">வெட்டிக் கொலை</a> செய்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சமயபுரம் போலீசார், பிரகாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>லண்டனில் கார் உதிரி பாக நிறுவனத்துடன் முதல்-அமைச்சர் விஜய் ரூ.11 ஆயிரம் கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cm-vijay-signs-rs-11000-crore-mou-with-london-car-parts-company</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cm-vijay-signs-rs-11000-crore-mou-with-london-car-parts-company#comments</comments><guid isPermaLink="false">fc03914d-a2f9-413e-9ae2-11e57684e83d</guid><pubDate>Mon, 14 Sep 2026 13:21:31 +0000</pubDate><atom:updated>2026-09-14T13:21:31.714Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>புரிந்துணர்வு ஒப்பந்தம்,உதிரி பாகங்கள்,நிறுவனம்,Memorandum of Understanding,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/cxy4hurr/112.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/cxy4hurr/112.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>லண்டனில் கார் உதிரி பாக நிறுவனத்துடன் முதல்-அமைச்சர் விஜய் ரூ.11 ஆயிரம் கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடபட்டன.</p><p>இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:- </p><h2>ரூ.11ஆயிரம் கோடி முதலீடு</h2><p>இங்கிலாந்து, லண்டன் நகரில் இன்று (14.09.2026), சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் (Samvardhana Motherson International Ltd.,) நிறுவனம் அதன் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து,  வழிகாட்டி நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் சுமார் ரூ.11ஆயிரம் கோடி முதலீட்டில், வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி,  கூட்டிணைப்பு (Assembly) மற்றும் தளவாட வசதிகள் ஆகிய துறைகளில் சுமார் 7,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கிடும் வகையில் புரிந்துணர்வு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">ஒப்பந்தம் </a>மேற்கொள்ளப்பட்டது. </p><p>இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்,  சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் குழுமத்தின் உலகளாவிய சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்புத் துறைத் தலைவர் பாரி பெயிண்டர் மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப், இ.ஆ.ப. ஆகியோர் கையெழுத்திட்டு, ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், இங்கிலாந்து நாட்டிற்கான இந்தியத் தூதர் குமரன் பெரியசாமி, IFS, நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்ட மீனவர்கள் எதிர்ப்பு; நாளை ஆலோசனை கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fishermen-oppose-new-secretariat-pattinapakkam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fishermen-oppose-new-secretariat-pattinapakkam#comments</comments><guid isPermaLink="false">99dc28b3-bea3-459f-84e3-d313c17cedf4</guid><pubDate>Mon, 14 Sep 2026 12:57:43 +0000</pubDate><atom:updated>2026-09-14T12:57:43.162Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மீனவர்கள்,Chennai,சென்னை,fishermen,பட்டினப்பாக்கம்,தலைமை செயலகம்,ஆலோசனை கூட்டம்,Pattinapakkam,எதிர்ப்பு</media:keywords><media:content height="768" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/71vv01n5/new.jpg" width="1366"><media:title type="html"><![CDATA[ பட்டினப்பாக்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்ட மீனவர்கள் எதிர்ப்பு; நாளை ஆலோசனை கூட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/71vv01n5/new.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை <a href="https://www.dailythanthi.com/topic/pattinapakkam">பட்டினப்பாக்கம்</a> பகுதியில் தமிழக அரசின் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமை செயலக வளாகம் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1,200 கோடி மதிப்பீட்டில், சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் இந்த பிரம்மாண்ட கட்டடம் அமைய உள்ளது.</p> <h2>மக்கள் அச்சம்</h2><p>இந்நிலையில், இந்த திட்டத்திற்கு அப்பகுதி மீனவர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடலோர பகுதியில் இத்திட்டம் வருவதால், தங்களின் பாரம்பரிய மீன்பிடி தொழில் மற்றும் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்று அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.</p> <h2>கலந்தாய்வு கூட்டம்</h2><p>அரசின் இந்த முடிவை எதிர்த்து அடுத்தகட்டமாக போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து விவாதிக்க, மயிலாப்பூர் மற்றும் பட்டினப்பாக்கம் பகுதியை சேர்ந்த 9 மீனவ கிராம மக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் சார்பில் நாளை மாலை 4 மணிக்கு கலந்தாய்வு கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு.</p> <h2>மாற்று இடம்</h2><p>நாளை நடைபெறும் இந்த முக்கியக் கலந்தாய்வுக் கூட்டத்தின் முடிவில், புதிய தலைமை செயலகத்தை மாற்று இடத்தில் அமைக்க அரசை வலியுறுத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மீனவர்களின் அடுத்தகட்ட போராட்டம் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என்பதால், சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருவள்ளூர்: மைனர் சிறுமிக்கு திருமணம் - வரவேற்பு நிகழ்ச்சியை அதிரடியாக நிறுத்திய காவல்துறையினர் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvallur-police-abruptly-halt-reception-for-minor-girls-marriage</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvallur-police-abruptly-halt-reception-for-minor-girls-marriage#comments</comments><guid isPermaLink="false">8f811af5-df3e-4d91-932e-45ea39d49b8c</guid><pubDate>Mon, 14 Sep 2026 12:35:19 +0000</pubDate><atom:updated>2026-09-14T12:35:19.305Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thiruvallur,திருவள்ளூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/pn3kig7v/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/pn3kig7v/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர்,</p><p>திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள குமரஞ்சேரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று காலை ஒரு இளம் ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து மாலை பொன்னேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. </p><p>இதனிடையே மணப்பெண் இன்னும் திருமண வயது எட்டவில்லை என்றும், மைனர் பெண்ணிற்கு திருமணம் நடத்தி வைக்கப்படுவதாகவும் காவல்துறைக்கு சிலர் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் பெயரில் திருமண மண்டபத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். </p><p>மணப்பெண்ணின் ஆவணங்களை காவல்துறையினர் சோதனை செய்தபோது, அவருக்கு 16 வயது மட்டுமே நிரம்பி உள்ளது என்பதும், மைனர் சிறுமியான அவருக்கு 24 வயது இளைஞருடன் திருமண ஏற்பாடுகள் நடந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நிறுத்துமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக குழந்தைகள் நல அலுவலர் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-mous-signed-in-the-presence-of-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-mous-signed-in-the-presence-of-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">f157207f-1b16-4950-80a7-40aa9470a7a0</guid><pubDate>Mon, 14 Sep 2026 12:32:15 +0000</pubDate><atom:updated>2026-09-14T12:32:15.825Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கையெழுத்து,புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்,MoU signed,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/76giepq8/111.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/76giepq8/111.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை விரிவுபடுத்துவதற்கும், நிறுவுவதற்கும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் அமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டன.</p><p>இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட முன்னணி உலகளாவிய தகவல் தொடர்பு நிறுவனம் ஒன்று, தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையத்தை (GCC) அமைப்பதற்கு ஏதுவாக, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம், ஏர்ன்ஸ்ட் &amp; யங் (Ernst &amp; Young)  நிறுவனத்துடன் புரிந்துணர்வு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">ஒப்பந்தம்</a> ஒன்றை மேற்கொண்டது. சுமார் 1,000 கோடி ரூபாய் முதலீட்டையும், 2,000-க்கும் மேற்பட்ட உயர் மதிப்புடைய புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் வகையில் அமையவுள்ள இந்த மையம், சென்னையில் உள்ள மவுண்ட் பூந்தமல்லி சாலையில் புதிதாக அறிவிக்கப்பட்ட 'GCC காரிடார்' (GCC corridor) பகுதியில் அமைக்கப்படவுள்ளது.</p><h2>புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து</h2><p>ஸ்வீடனைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி குரூப், தமிழ்நாட்டில் எம்பெடட் சிஸ்டம்ஸ், மின்மயமாக்கல் மற்றும் தொழில்துறை டிஜிட்டல்மயமாக்கல் ஆகிய துறைகளில் 600 உயர் மதிப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னையில் உள்ள தனது உலகளாவிய திறன் மையங்களை, தனது இந்திய நிறுவனமான ஸ்ரியா சொல்யூஷன்ஸ் மூலம் விரிவாக்குவதற்கு உறுதியளித்து, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில், சிக்மா டெக்னாலஜி குரூப் (Sigma Technology Group) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் கார்ல்சன் மற்றும் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், தலைமை நிர்வாக அதிகாரி, ஸ்ரியா (Sigma AB Pvt Ltd-இன் ஒரு பகுதி)மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி (Guidance) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப், IAS ஆகியோருக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில், இங்கிலாந்து நாட்டிற்கான இந்திய தூதர் குமரன் பெரியசாமி, IFS,  நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>‘செயற்கை நுண்ணறிவு அனைத்து துறைகளிலும் உலகை ஆட்டிப் படைக்கிறது’ - ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/artificial-intelligence-is-dominating-the-world-across-all-sectors-high-court-judge-anand-venkatesh</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/artificial-intelligence-is-dominating-the-world-across-all-sectors-high-court-judge-anand-venkatesh#comments</comments><guid isPermaLink="false">a50585c6-feeb-4083-b6c7-a417ecb7796d</guid><pubDate>Mon, 14 Sep 2026 12:24:46 +0000</pubDate><atom:updated>2026-09-14T12:24:46.677Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Artificial Intelligence,செயற்கை நுண்ணறிவு,நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,Justice Anand Venkatesh</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/hm0w7584/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/hm0w7584/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>டி.வி.எம். சேவா பாலம் தொண்டு நிறுவனத்தின் 29 ஆம் ஆண்டு கல்வி விருதுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள்  வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சேவா பாலம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் எம்.இருளப்பன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கலந்து கொண்டு பல்வேறு தேர்வுகளில் சிறப்பிடங்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.மேலும் சிறந்த மருத்துவர், சிறந்த பள்ளி முதல்வர், சிறந்த சமூக சேவகர் உள்ளிட்ட பலருக்கும், நலிவடைந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் நீதிபதி வழங்கினார். அப்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசியதாவது;-</p><p>“தமிழ் மொழி, தமிழர் நாகரிகம் என்பது உலகெங்கிலும் காணக் கிடைக்காத தொன்மையான பொக்கிஷங்களை உள்ளடக்கியது என்பதில் பெருமை கொள்ளலாம். நான் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் தமிழ் இலக்கியத்தில் இருந்து சில முக்கிய அம்சங்களை தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். தியாகமும், நற்பண்புகளும் நிறைந்த சேவை மனப்பான்மை கொண்ட மனிதர்களே மிக அழகானவர்கள் என்று அவ்வையார் தெரிவித்துள்ளார். </p><p>வள்ளுவர் ஒப்புரவு, ஈகை ஆகிய அதிகாரங்களில் சமுதாயத்தில் நலிவடைந்தவர்களின் சேவைகளை பூர்த்தி செய்வது, ஒவ்வொரு மனிதனும் தன்னால் இயன்ற உதவிகளை மற்றவர்களுக்கு செய்வதற்கான ஈகை குண நலன்கள் குறித்தும் தெளிவாக தெரிவித்துள்ளார். கல்லால் கட்டப்பட்ட கோவில்களில் காணிக்கை செலுத்துவதற்கு முன்பாக நடமாடும் கோவில்களாக விளங்கும் நலிவடைந்தவர்களுக்கு ஈதல் வேண்டும் என்பதை திருமூலர் விளக்கமாகவே கூறியுள்ளார். </p><p>அதிக மதிப்பெண், உயர்ந்த பதவி, அளவற்ற செல்வங்களை பெறுவதுதான் உண்மையான வெற்றி என போற்றுகிறோம். ஆனால் வாழ்வில் நாம் செய்யும் சேவைகளின் மூலம் பெறப்படும் மன நிறைவுதான் வாழ்க்கையில் உண்மையான வெற்றியை நிர்ணயிக்கும் என்பதை குழந்தைகளுக்கு தொடர்ந்து வலியுறுத்தி போதிக்க வேண்டும்.</p><p>இன்று நமது தலைமுறையினர் அனைவரும் அலைபேசியில் மூழ்கி கிடக்கின்றனர். ஒரு நிமிடம் கூட அலைபேசி இல்லாமல் இருக்க இயலாது நிலை ஏற்பட்டுவிட்டது. செயற்கை நுண்ணறிவு அனைத்து துறைகளிலும் உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. இருப்பினும் செயற்கை நுண்ணறிவுக்கு ஆன்மா ஒன்று கிடையாது. செயற்கை நுண்ணறிவு மூலம் சேவைகளை செய்திட இயலாது என்பதுதான் எதார்த்த உண்மை. எனவே சமூக சேவை ஆற்றுபவர்கள் தான் மக்கள் மனதில் என்றும் நிலைத்திருப்பார்கள்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தலில் அதிமுக வெல்லும் - எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-will-win-the-by-elections-edappadi-palaniswami</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-will-win-the-by-elections-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">1c4fd72e-6cb0-4630-854f-a8ba9469858a</guid><pubDate>Mon, 14 Sep 2026 12:09:46 +0000</pubDate><atom:updated>2026-09-14T12:09:46.755Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,அதிமுக,AIADMK,இடைத்தேர்தல்,Edappadi Palaniswami ​,by-elections</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/7i5270rh/eps.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/7i5270rh/eps.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இடைத்தேர்தலில் அதிமுக வெல்லும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்,</p><p>சென்னை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-</p><h2>அதிமுக வெற்றி பெறும்</h2><p>மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">அதிமுக</a> நிச்சயமாக வெற்றி பெறும் என்றார். மேலும் முதல்-அமைச்சர் விஜய் லண்டன் பயணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். </p><p>இதற்கு தமிழக முதல்-அமைச்சர் லண்டம் சென்றிருப்பதாக பத்திரிகைகள் மற்றும் சேனல்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அவர் தொழில் ஈர்ப்பு குறித்து இன்னும் ஏதும் செய்திகள் வெளியாகவில்லை. அதன்பின் தான் அது குறித்து கருத்து கூற முடியும். </p><p>இவ்வாறு அவர் பேசியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நீலகிரி: குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள் கூட்டம் - மக்கள் அச்சம்

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilagiri-kudiyiruppu-pagudikkul-pugundha-kattu-yanai-kootam-makkal-achcham</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilagiri-kudiyiruppu-pagudikkul-pugundha-kattu-yanai-kootam-makkal-achcham#comments</comments><guid isPermaLink="false">fa1d570d-3ef6-4c55-8ef9-b3cac2177184</guid><pubDate>Mon, 14 Sep 2026 11:56:43 +0000</pubDate><atom:updated>2026-09-14T11:56:43.662Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nilgiris,நீலகிரி,Elephants,யானைகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/f8fkrzfp/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/f8fkrzfp/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[   <p>நீலகிரி,</p><p>நீலகிரியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள் கூட்டத்தால் மக்கள் அச்சமடைந்தனர்.</p> <p>நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் தீவன பற்றாக்குறை, குறைந்த எல்லைக்குள் அதிக வனவிலங்குகள் உள்பட பல்வேறு காரணங்களால் வனவிலங்குகள் ஊருக்குள் புகும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன.</p> <h2>குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள்</h2><p>இந்நிலையில், <a href="https://www.dailythanthi.com/sports/நீலகிரி">நீலகிரி </a>மாவட்டம் குன்னூர் அருகே முத்த நாடு எஸ்டேட் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நேற்று இரவு காட்டு யானைகள் கூட்டம் நுழைந்தது. இதனால் மக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து, குட்டிகளுடன் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த யானைகளை மக்கள் சத்தம் போட்டு விரட்டியடித்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>பைக்கில் சென்ற பெண்ணை வேண்டுமென்றே இடித்து தள்ளிவிட்டு நிற்காமல் சென்ற கார் - அரியானாவில் அதிர்ச்சி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/car-deliberately-rams-into-woman-on-a-bike-and-speeds-away-shocking-incident-in-haryana</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/car-deliberately-rams-into-woman-on-a-bike-and-speeds-away-shocking-incident-in-haryana#comments</comments><guid isPermaLink="false">b5d96d60-3d87-4a04-93c5-25cf05eee690</guid><pubDate>Mon, 14 Sep 2026 11:38:49 +0000</pubDate><atom:updated>2026-09-14T11:38:49.473Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அரியானா,bike,பைக்,girl,Haryana</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/4wn4k81f/National-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/4wn4k81f/National-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சண்டிகர்,</p><p>அரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் உள்ள கோல்ப் கோர்ஸ் சாலையில், சியா என்ற இளம்பெண் தனது ஸ்போர்ட்ஸ் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அவருடன் மேலும் சில ரைடர்கள் தங்களது பைக்கில் சென்று கொண்டிருந்தனர். </p><p>அப்போது சியா அருகே ஒரு வெள்ளை நிற கார் வந்துள்ளது. அந்த காரில் இருந்தவர்கள் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் சியாவிடம் தவறான செய்கைகளை செய்து அத்துமீறிய நிலையில், சியா அவர்களை கண்டித்துவிட்டு பைக்கை வேகமாக முன்னோக்கி ஓட்டிச் சென்றார். </p><p>இந்நிலையில், சியாவை பின்தொடர்ந்து வந்த கார், கண்ணிமைக்கும் நேரத்தில் சியாவின் பைக்கை இடித்து தள்ளிவிட்டு நிற்காமல் அங்கிருந்து சென்றது. இதில் பைக்கில் இருந்து சியா தூக்கி வீசப்பட்டார். அவரது பைக் காருக்கு அடியில் சிக்கி சில மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டது. </p><p>சியாவுடன் வந்த அவரது நண்பர்கள் சம்பந்தப்பட்ட காரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த நபர் நிற்காமல் அங்கிருந்து தப்பியுள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் சியா மற்றும் அவரது நண்பர்களின் ஹெல்மெட்டுகளில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களில் பதிவாகியுள்ளன. </p><p>இந்த சம்பவத்திற்கு பிறகு சியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டிருந்த நிலையில், சிகிச்சைக்குப் பிறகு அவர் வீடு திரும்பினார். இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகளை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக காவல் நிலையத்திலும் அவர் புகார் அளித்துள்ளார்.</p> <p>போலீசார் இது குறித்து விசாரணை நடத்தியபோது, சியா மீது மோதிய கார் மணீஷ் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. ஆனால் மணீஷை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, தான் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருவதாகவும், சம்பவத்தின்போது தனது காரை நண்பர் ஒருவர் வாங்கி ஓட்டிச் சென்றதாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். </p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/-xI2ExpHRXs"></iframe></figure>]]></content:encoded></item><item><title>மாணவன் மரணத்திற்கு நீதி கேட்டு போராடுபவர்களை கைது செய்வதா..? - கனிமொழி கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/should-we-arrest-those-who-are-fighting-for-justice-for-the-students-death-kanimozhi-question</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/should-we-arrest-those-who-are-fighting-for-justice-for-the-students-death-kanimozhi-question#comments</comments><guid isPermaLink="false">bcb93a96-2e97-46ed-a42a-c2fb81da3dd5</guid><pubDate>Mon, 14 Sep 2026 11:23:09 +0000</pubDate><atom:updated>2026-09-14T11:23:09.180Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,கனிமொழி,Kanimozhi Karunanidhi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/xp7wwsw8/110.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/xp7wwsw8/110.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாணவன் மரணத்திற்கு நீதி கேட்டு போராடுபவர்களை காவல்துறையை ஏவி அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது தவெக அரசு என திமுக எம்பி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF">கனிமொழி</a> தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில்  கூறி இருப்பதாவது:-</p><p>மாணவன் தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடும் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மீது காவல்துறையை ஏவி அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது தவெக அரசு.</p><h2>கடும் கண்டனம்</h2><p>உடற்கூறு ஆய்வில் அம்மாணவன் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், குற்றத்தை விசாரித்து உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டிய காவல்துறை, நீதி கேட்கும் மக்களை கைது செய்வது கடும் கண்டனத்திற்குரியது.</p><p>குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்கிவிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையே ஒடுக்கும் கேடுகெட்ட ஆட்சியாக இந்த தவெக ஆட்சி உள்ளது.</p><p>இவ்வாறு அதில் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் அடகு கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சி - ஐ.டி. ஊழியர் கைது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/attempt-to-break-into-and-rob-a-pawn-shop-in-chennai-it-employee-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/attempt-to-break-into-and-rob-a-pawn-shop-in-chennai-it-employee-arrested#comments</comments><guid isPermaLink="false">137580ae-08b9-42ba-b6c0-08673c7ff137</guid><pubDate>Mon, 14 Sep 2026 11:20:59 +0000</pubDate><atom:updated>2026-09-14T11:20:59.198Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/lebae2a2/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/lebae2a2/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை திருவான்மியூர் அடுத்த இந்திராநகர் பகுதியில், அதிகாலை நேரத்தில் அடகு கடையின் பூட்டை உடைக்க முயன்ற நபரை அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். </p><p>அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த ஸ்ரீராம் ஸ்ரீனு பாபு(வயது 25) என்பதும், சாப்ட்வேர் இன்ஜினியரான அவர் சென்னை பெருங்குடியில் தங்கியிருந்து தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. </p><p>அவரிடமிருந்து செல்போன், கட்டிங் மெஷின், சுத்தியல் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து ஸ்ரீராமை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், கோர்ட்டு உத்தரவின்படி அவரை சிறையில் அடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>வாக்குச்சாவடி வடிவில் விநாயகர் பந்தல்: அசத்திய வேலூர் இளைஞர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-chaturthi-polling-station-pandal-chennai-youth</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-chaturthi-polling-station-pandal-chennai-youth#comments</comments><guid isPermaLink="false">c9908e3b-d135-4005-b5cf-865ff69a0f4f</guid><pubDate>Mon, 14 Sep 2026 11:05:53 +0000</pubDate><atom:updated>2026-09-14T11:05:53.734Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Election,Youth,வாக்குச்சாவடி,இளைஞர்கள்,விநாயகர்,vinayagar,தேர்தல் விழிப்புணர்வு,polling booths</media:keywords><media:content height="768" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/u7u4flho/pilyar.jpg" width="1366"><media:title type="html"><![CDATA[ வாக்குச்சாவடி]]></media:title><media:description type="html"><![CDATA[ வாக்குச்சாவடி வடிவில் விநாயகர் பந்தல்: அசத்திய இளைஞர்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/u7u4flho/pilyar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> வேலூர் தொரப்பாடி பாலாஜி நகர் பகுதி இளைஞர்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அரசுப் பள்ளி வாக்குச்சாவடி வடிவில் விழிப்புணர்வு பந்தல் அமைத்து பொதுமக்களின் பாராட்டை பெற்று வருகிறார்கள். </p><h2>ஜனநாயக கடமையை உணர்த்திய இளைஞர்கள்</h2><p>ஒவ்வொரு ஆண்டும்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF"> விநாயகர் சதுர்த்தி</a> விழாவின் போது விதவிதமான கருப்பொருள்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு காவல் நிலையம் வடிவில் வடிவமைத்திருந்தனர். </p> <p>அந்த வகையில், இந்த ஆண்டு ஒரு படி மேலே சென்ற சில பகுதி இளைஞர்கள், ஆன்மீகத்தோடு சமூக விழிப்புணர்வையும் புகுத்த முடிவு செய்தனர். நமது நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வாக்களிப்பதன் அவசியத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் இந்த விழிப்புணர்வு பந்தலை அவர்கள் அமைத்துள்ளனர்.</p><h2>அச்சு அசல் அரசு பள்ளி</h2><p>பொதுவாக தேர்தல் காலங்களில் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் அரசு பள்ளிகளே <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF">வாக்குச்சாவடிகளாக</a> மாற்றப்படும். அதனை அச்சு அசல் பிரதிபலிக்கும் வகையில், ஒரு அரசு பள்ளியின் முகப்பு தோற்றத்தை பந்தலாக வடிவமைத்துள்ளனர். </p><p>அங்கு வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலையானது, பொதுமக்கள் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றுவதை மேற்பார்வையிடுவது போலவும், வாக்களித்ததன் அடையாளமாக விரலில் மை வைக்கப்பட்டிருப்பது போலவும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><h2>பொதுமக்கள் பாராட்டு </h2><p>திருவிழா கொண்டாட்டத்தை வெறும் பொழுதுபோக்காக மட்டுமில்லாமல், ஒரு தேர்தல் விழிப்புணர்வு மையமாக மாற்றிய அந்த இளைஞர்களின் ஆக்கப்பூர்வமான சிந்தனைக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பந்தலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த வித்தியாசமான முயற்சியை பாராட்டி வருகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>எந்த அழுத்தத்திற்கும் அடிபணியமாட்டேன்... சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-will-not-bow-to-any-pressure-speaker-jct-prabhakar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-will-not-bow-to-any-pressure-speaker-jct-prabhakar#comments</comments><guid isPermaLink="false">195cdaf4-6158-435c-811c-2c04ab145698</guid><pubDate>Mon, 14 Sep 2026 10:55:20 +0000</pubDate><atom:updated>2026-09-14T10:55:20.085Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சபாநாயகர்,Assembly Speaker,J.C.T. Prabhakar,ஜே.சி.டி. பிரபாகர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/v7wuh1mz/jcd-prabakar.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/v7wuh1mz/jcd-prabakar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>எந்த துண்டிற்கும் நான் பயந்தவன் அல்ல என்று சபாநாயகர்<a href="https://www.dailythanthi.com/topic/jcd-prabhakar"> </a>ஜேசிடி பிரபாகர் கூறியுள்ளார்.</p><p>நெல்லையில் சட்டபேரவை சபாநாயகர்<a href="https://www.dailythanthi.com/topic/jcd-prabhakar"> ஜேசிடி பிரபாகர் </a>செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது அவர் பேசியதாவது:-</p><p>எந்த துண்டிற்கும், எந்த சீட்டுக்கும் நான் அடிபணிய மாட்டேன். எனக்கு இருக்கும் சந்தேகங்களை என்னுடைய துறை சார்ந்த சட்டப்பேரவை அலுவலர்களிடம் இருந்து சில குறிப்புகளை கேட்டு வாங்குவேன். சர்க்காரியா கமிஷன் எந்த ஆண்டில் சட்டப்பேரவை பேசப்பட்டது என்பது குறித்த குறிப்புகளை எடுத்து தாருங்கள் என்று கூறினேன். ஏனென்றால், விவாதத்திற்கு உடனடியாக தயாராக வேண்டும் என்பதால் அவைக்குறிப்பில், அவை இருப்பது எனக்கு தெரிந்தும், அவற்றின் தேதிகளை பற்றி கேட்டேன். அதைப்பற்றிய துண்டுச்சீட்டைத்தான் கொடுத்தார்கள்.</p><h2>ராஜினாமா கடிதங்கள் பரிசீலணை</h2><p>சபையை எப்படி நடத்தவேண்டும் என்றும் யாரை  பேசுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும், எனக்கு நன்றாக தெரியும்.  என்னை பொறுத்தவரையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்ட நேரமும், ஒதுக்கப்பட்ட நேரமும் அவர்களுக்கு போதும் என்று நான் எண்ணுகிறேன். மேலும், அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 4 தொகுதிகளுக்கான ராஜினாமா கடிதங்கள் பரிசீலணையில் உள்ளன. </p><p>இவ்வாறு அவர் பேசியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சேலம்:  தவெக கொடி நிறத்தில் புதிய அரசு பேருந்துகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-thamizhaga-vetri-kazhagam-kodi-colour-buses</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-thamizhaga-vetri-kazhagam-kodi-colour-buses#comments</comments><guid isPermaLink="false">0ac18fb5-f6ed-4319-ae3b-b5bd8b4ea3e7</guid><pubDate>Mon, 14 Sep 2026 10:37:27 +0000</pubDate><atom:updated>2026-09-14T10:37:27.632Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Government bus,சேலம்,அரசு பேருந்துகள்,party flag,கட்சி கொடி,In Salem</media:keywords><media:content height="768" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/bkn8whyz/gbus.jpg" width="1366"><media:title type="html"><![CDATA[ புதிய அரசு பேருந்துகள்]]></media:title><media:description type="html"><![CDATA[ சேலம்:  தவெக கொடி நிறத்தில் புதிய அரசு பேருந்துகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/bkn8whyz/gbus.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம் புதிய பேருந்து நிலையத்தில், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95">தவெக</a> கட்சி கொடி நிறமான மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம் பூசப்பட்ட 25 புதிய அரசு பேருந்துகள் அணிவகுத்து நிறுத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>புதிய அரசு பேருந்துகள்</h2><p>தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சேலம் மாவட்டத்திற்கு புதிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பேருந்துகள்</a> ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த பேருந்துகள் சேலம் ஜான்சன்பேட்டை அரசு போக்குவரத்து பணிமனையில் புதிய பேருந்துகள் தயார் நிலையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. </p> <h2>தவெக கொடி நிறம்</h2><p>இந்த புதிய பேருந்துகளின் மேல் பகுதி மஞ்சள் நிறத்திலும், கீழ் பகுதி சிவப்பு நிறத்திலும் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் அதிகாரப்பூர்வ கட்சி கொடியும் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தை கொண்டுள்ளதால், இப்பேருந்துகள் தவெக கொடி நிறத்திலேயே இருப்பதாக பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.</p> <h2>புறநகர் பகுதிகளுக்கு இயக்கம்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D">சேலம்</a> புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு புறநகர் பகுதிகளுக்கு இந்த புதிய பேருந்துகளை இயக்குவதற்கு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். </p><h2>தமிழ்நாடு அரசு</h2><p>மேலும், கடந்த காலங்களை போல இல்லாமல், இந்த பேருந்துகளில் "தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்" என்று முழுமையாக எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அரசு பேருந்துகளின் இந்த திடீர் நிற மாற்றம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சிறப்பாக பணியாற்றிய 180 பேருக்கு ‘அண்ணா சிறப்புப் பதக்கங்கள்’ - தமிழக அரசு அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anna-special-medals-to-180-people-for-outstanding-service-tamil-nadu-government-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anna-special-medals-to-180-people-for-outstanding-service-tamil-nadu-government-announcement#comments</comments><guid isPermaLink="false">80053cf9-d5d9-4dff-90c5-50eb3d627350</guid><pubDate>Mon, 14 Sep 2026 10:25:16 +0000</pubDate><atom:updated>2026-09-14T10:25:16.782Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,Anna,அண்ணா,அண்ணா பதக்கம்,Anna Medal,Tamil Nadu government announcement</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/a1adtrph/cmvijay-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/a1adtrph/cmvijay-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சிறப்பாக பணியாற்றிய 180 பேருக்கு ‘அண்ணா சிறப்புப் பதக்கங்கள்’ வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.</p><p>இது குறித்து வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ் நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை. சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை. ஊர்க்காவல் படை விரல்ரேகைப் கூடம் மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் சார்நிலை அலுவலர்களிள் சிறப்பான பணிகளை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் நாள் தமிழக முதல்-அமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. </p><h2>அண்ணா சிறப்புப் பதக்கங்கள்</h2><p>இந்த ஆண்டு, காவல் துறையில், தலைமைக் காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 138 நபர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில், தீயணைப்பு வீரர் முதல் துணை இயக்குநர் வரையிலான 20 நபர்களுக்கும். சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையில், முதல்நிலை சிறைக்காவலர் முதல் துணை சிறை அலுவலர் வரையிலான 10 நபர்களுக்கும் ஊர்க்காவல் படையில், ஊர்க்காவல் படைவீரர் முதல் படைத்தளபதி வரையிலான 5 நபர்களுக்கும், விரல்ரேகைப் பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கும் மற்றும் தடய அறிவியல் துறையில் 4 அலுவலர்களுக்கும். அவர்களின் மெச்சத்தக்க பணியினை அங்கீகரிக்கும் வகையில் 'தமிழக முதல்-அமைச்சரின் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">அண்ணா சிறப்புப் பதக்கங்கள்</a>" வழங்கிட தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். </p><p>மேலும், 19.05.2026 அன்று காலை சுமார் 09.45 மணியளவில், நாகர்கோவில் லெமூரியா கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த கணபதிபுரத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் ராட்சத கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு, அதில் 9 வயதுடைய வைஷ்ணவி என்ற சிறுமியை மட்டும் பொதுமக்கள் காப்பாற்றிய நிலையில், 9 வயதுடைய சிறுவன் சைலேஷ் கடலுக்குள் சுமார் 100 அடி தொலைவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான். இந்நிலையில், தனது இரவுப் பணியை முடித்துவிட்டு, வீடு திரும்பி கொண்டிருந்த நாகர்கோவில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு ஓட்டுநர் ஆர். ராஜசேகர் மேற்படி தகவலை கேள்விப்பட்டவுடன் ராஜாக்கமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டு, உடனடியாக கடற்கரைக்கு விரைந்து சென்று அங்கிருந்த உயிர்காக்கும் மிதவையை பயன்படுத்தி, தன் சொந்த பாதுகாப்பை பற்றி கவலைப்படாமல் கடலில் நீந்தி சென்று அச்சிறுவனை மீட்டுக் கரைக்கு கொண்டு வந்து அச்சிறுவனின் உயிரை காப்பாற்றினர்.</p><h2>அண்ணா வீரதீர் பதக்கம்</h2><p>கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர்,மாவட்ட ஆட்சியர், ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் அன்னாரது துணிச்சலான செயலை வெகுவாக பாராட்டியுள்ளார்கள். இவரின் துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பு செயலை பாராட்டி இவருக்கு 'தமிழக முதல்-அமைச்சரின் தீயணைப்பு பணிக்கான அண்ணா வீரதீர் பதக்கம் வழங்கிட  தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். மேற்கண்ட பதக்கங்கள், தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>2,900 கண் திருஷ்டி யந்திரங்கள்; 42 அடி உயரம் - கவனம் பெற்ற கொளத்தூர் விநாயகர் சிலை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/2900-evil-eye-yantras-42-feet-tall-the-kolathur-vinayagar-idol-that-grabbed-attention</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/2900-evil-eye-yantras-42-feet-tall-the-kolathur-vinayagar-idol-that-grabbed-attention#comments</comments><guid isPermaLink="false">e910a2c7-fe69-428d-bb31-f3e33ed42362</guid><pubDate>Mon, 14 Sep 2026 10:16:32 +0000</pubDate><atom:updated>2026-09-14T10:16:32.426Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chathurthi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/t45jvj9a/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/t45jvj9a/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான், ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி தினத்தில் அவதரித்தார். இந்த நாள் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று (14.9.2026) விநாயகர் சதுர்த்தி விழா, நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.</p><p>விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில்களில் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இதனால் கோவில்களில் இன்று கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. வீடுகளில் விநாயகர் வழிபாடு மேற்கொள்ளும் மக்கள், விநாயகர் சிலைகளை வைத்து அலங்கரித்து, கொழுக்கட்டை, மோதகம், லட்டு, அப்பம், அவல், பொரி, கடலை, சுண்டல் போன்ற நைவேத்யங்களை படைத்து பூஜை செய்கின்றனர்.</p><p>இதேபோல் கோவில்கள் சார்பிலும், பல்வேறு இந்து அமைப்புகள் சார்பிலும் பொது இடங்களில் பிரமாண்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் சுமார் 1 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. தலைநகர் சென்னையில் மட்டும் 1,562 சிலைகளை வைத்து வழிபட காவல்துறை அனுமதி வழங்கியிருக்கிறது.</p> <p>அந்த வகையில் சென்னை கொளத்தூரில் 2,900 கண் திருஷ்டி கணபதி யந்திரங்கள் மற்றும் 2,800 கண் திருஷ்டி சூரிய சக்கரங்களால் விநாயகர் சிலை அலங்கரிக்கப்பட்டுள்ளது. 42 அடி உயரம் கொண்ட இந்த பிரம்மாண்ட விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதை தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. </p> ]]></content:encoded></item><item><title>இயற்கையின் அரணாக விளங்கும் கொடைக்கானல் மலையை சிதைத்து கல் எடுப்பது வளர்ச்சியா? - வேல்முருகன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-quarrying-kodaikanal-hills-development-or-destruction-velmurugan-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-quarrying-kodaikanal-hills-development-or-destruction-velmurugan-asks#comments</comments><guid isPermaLink="false">adcfe1a5-f74d-426d-ab4c-dc2055253a36</guid><pubDate>Mon, 14 Sep 2026 10:13:41 +0000</pubDate><atom:updated>2026-09-14T10:13:41.847Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கொடைக்கானல்,Kodaikanal,Velmurugan,வேல்முருகன்,மலை,hill,வளர்ச்சி,இயற்கை,கேள்வி,stone,கல்,Questions,Natural</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/8xw00zs1/velmurugan.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வேல்முருகன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/8xw00zs1/velmurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இயற்கையின் அரணாக விளங்கும் கொடைக்கானல் மலையைச் சிதைத்துக் கல் எடுப்பது வளர்ச்சியா? அல்லது அழிவுக்கான தொடக்கமா? என்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் </a>வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- </p> <h2>குவாரி பணி</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D">கொடைக்கானல்</a> மலைப்பகுதியில் பாறைகள் பெருமளவில் உடைக்கப்பட்டு கற்கள் எடுக்கப்படுவதாக வெளியாகியுள்ள காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. குவாரி பணிகளுக்கு அரசு அனுமதி வழங்கியிருந்தால், அதன் எல்லை, காலக்கெடு, வெட்டியெடுக்கப்பட வேண்டிய கனிமத்தின் அளவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிபந்தனைகள் ஆகியவை முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்பதை அரசு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்.</p><h2>உண்மை நிலை</h2><p>அனுமதிக்கப்பட்ட பரப்பை தாண்டி பணிகள் நடைபெறுகின்றனவா? நிர்ணயிக்கப்பட்ட அளவை காட்டிலும் கூடுதலாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளனவா? இயற்கையான நில அமைப்பில் ஆபத்தான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா? இவற்றின் உண்மை நிலையை அரசு மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். </p><p>தமிழ்நாட்டில் உள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF">கல் குவாரிகளில்</a> அளவுக்கு அதிகமாக கனிமங்கள் எடுக்கப்படுவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து, மாநில அளவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பல இடங்களில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.</p><h2>கேள்வி எழுகிறது</h2><p>இந்நிலையில், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த கொடைக்கானல் மலைத்தொடரில் அதிகாரிகளின் கண்காணிப்பு எந்த அளவுக்கு உள்ளது என்ற கேள்வி எழுகிறது.</p> <h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>கனமழை பெய்து நிலச்சரிவு அல்லது வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பிறகா நடவடிக்கை எடுக்க போகிறோம்? மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே மிக அவசியம். இயற்கை  சமநிலையை  பாதிக்கும் திட்டங்கள் குறித்து முறையான அறிவியல் ஆய்வு நடத்தாமல் தொடர்ந்து அனுமதிப்பது, எதிர்காலத்தில் மீள முடியாத பேரிடரை உருவாக்கக்கூடும்.</p> <h2>அலட்சியம் காட்டக்கூடாது</h2><p>தமிழ்நாடு அரசு, சம்பந்தப்பட்ட இடத்தில் உடனடியாக கள ஆய்வு நடத்தி, அனுமதி ஆவணங்கள் மற்றும் குத்தகை நிபந்தனைகளை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும். விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் பொறுப்பற்ற அதிகாரிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் உயிர்  பாதுகாப்பை விட எந்த  குவாரியும் முக்கியமல்ல. கொடைக்கானல் மலையை பாதுகாப்பதில் அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது.</p><p>மலை வளத்தை பாதுகாத்து, எதிர்கால தலைமுறைக்கான இயற்கைச் செல்வத்தை நிலைநிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>செல்போன் வெளிச்சத்தில் அமைச்சர் பேட்டி அளிக்கும் நிலை; மின்வெட்டு குறித்து அன்புமணி கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-giving-interview-in-cell-phone-light-anbumani-condemns-power-cuts</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-giving-interview-in-cell-phone-light-anbumani-condemns-power-cuts#comments</comments><guid isPermaLink="false">0174bff1-a92c-41e5-b485-720007a131c0</guid><pubDate>Mon, 14 Sep 2026 09:55:19 +0000</pubDate><atom:updated>2026-09-14T09:55:19.431Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,cell phone,செல்போன்,மின்வெட்டு,அமைச்சர் பேட்டி,light,Minister Interview,Anbumani Ramadas MP</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/t4fguyby/anbumani.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/t4fguyby/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>செல்போன் வெளிச்சத்தில் அமைச்சர் பேட்டி அளிக்கும் நிலை உருவாகியுள்ளது குறித்து அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>செல்போன் வெளிச்சத்தில் அமைச்சர் பேட்டி</h2><p>வேலூர் மாநகரில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேர்காணல் அளித்துக் கொண்டிருந்த போது  திடீரென மின்தடை ஏற்பட்டதால்  செல்போன் வெளிச்சத்தில் நேர்காணல் அளிக்க வேண்டிய  சூழல் ஏற்பட்டிருக்கிறது.  சென்னை முதல் கன்னியாகுமரி வரை  அனைத்து இடங்களிலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக   அறிவிக்கப்படாத கடுமையான மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதையே  இந்த நிகழ்வு காட்டுகிறது. இவ்வளவுக்குப் பிறகும் மின்வெட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.</p><p>தமிழ்நாட்டில் கோடைக்காலத்தில் 20,500 மெகாவாட் - 21,000 மெகாவாட் என்ற உச்சத்தைத் தொட்ட தமிழகத்தின் மின் தேவை,  வெப்பத்தின் அளவு குறையாததால் இப்போதும் அதே அளவிலேயே நீடிக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது இது 4000 மெகாவாட் அதிகம் ஆகும். இந்தக் கூடுதல் தேவையை சமாளிக்கத் தேவையான அளவுக்கு மின்சாரத்திற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்யாதது  தான் மின்வெட்டுக்கு காரணம் ஆகும்.</p><h2>மின்சாரப்பற்றாக்குறை</h2><p>சென்னை முதல் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் வரை அனைத்து இடங்களிலும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்டித்து மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனாலும், மின்வெட்டு இன்னும் நீக்கப்படவில்லை. பொதுவாக அமைச்சர்கள் கலந்து கொள்ளும் பகுதிகளில் மின் தடை ஏற்படாமல் அதிகாரிகள் பார்த்துக் கொள்வார்கள். ஆனால்,  அதிகாரிகளின் முயற்சிகளையும் தாண்டி மின்சாரம் தடை படுகிறது என்றால் சமாளிக்க முடியாத அளவுக்கு மின்சாரப்பற்றாக்குறை நிலவுகிறது என்று தான் பொருள்.</p><p>சென்னை பருத்திப்பட்டு பகுதியில் பூமிக்கு அடியில் மின்சாரம் கொண்டு செல்லும் வயர்கள் எரிந்து விட்டதால் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின் தடை </a>செய்யப்பட்டுள்ளது. ஆனால், போதிய பணியாளர்கள் இல்லாததால் அதை சரி செய்ய 8 மணி நேரத்திற்கும் மேலாகியுள்ளது. அதனால், அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள்  8 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லாமல் அவ்திப்பட்டுள்ளனர்.</p><h2>அரசு நடவடிக்கை</h2><p>மின்வெட்டை சமாளிக்க 2000 மெகாவாட் மின்சாரம் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், களத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மின்வெட்டால் மக்கள் படும் அவதிகளை உணர்ந்து கொண்டு உடனடியாக மின்வெட்டைப் போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மயிலாடுதுறை அருகே வங்கக்கடலில் எண்ணெய், எரிவாயு கிணறுகளுக்கு அனுமதிக்கோரி விண்ணப்பம் 

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/application-for-oil-gas-wells-near-mayiladuthurai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/application-for-oil-gas-wells-near-mayiladuthurai#comments</comments><guid isPermaLink="false">c6647cf1-e1ef-404a-92f7-843ce48c5883</guid><pubDate>Mon, 14 Sep 2026 09:52:37 +0000</pubDate><atom:updated>2026-09-14T09:52:37.709Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மயிலாடுதுறை,வங்கக்கடல்,எண்ணெய் கிணறு,எரிவாயு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/x0ipsmt4/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/x0ipsmt4/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மயிலாடுதுறை, </p><p>மயிலாடுதுறை அருகே வங்கக்கடலில் 5 எண்ணெய், எரிவாயு கிணறுகளுக்கு அனுமதிக்கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. </p> <h2>வங்கக்கடலில் எரிவாயு கிணறு</h2><p><a href="https://www.dailythanthi.com/sports/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">மயிலாடுதுறை </a>மாவட்டம் அருகே வங்கக் கடலில் 5 எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி கிணறுகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஹார்டி எக்ஸ்ப்ளோரேஷன் அண்ட் புரொடக்ஷன் இந்தியா நிறுவனம் விண்ணப்பம் செய்துள்ளது.</p><p>மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கிழக்கே வங்கக்கடலில் 81 சதுர கி.மீ. பரப்பளவில் எண்ணெய் வயல் அமைந்துள்ள நிலையில் அதே பகுதியில் மேலும் புதிய எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகளை அமைக்கக் கோரி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு விண்ணப்பம் செய்துள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சென்னை பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.3.15 கோடி நகைகள் மாயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-punjab-national-bank-rs-3-15-crore-jewellery-missing</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-punjab-national-bank-rs-3-15-crore-jewellery-missing#comments</comments><guid isPermaLink="false">154e44d4-ddad-4310-be3b-7b282e54a78e</guid><pubDate>Mon, 14 Sep 2026 09:48:17 +0000</pubDate><atom:updated>2026-09-14T09:48:17.339Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,நகைகள்,jewellery,missing,மாயம்,பஞ்சாப் நேஷனல் வங்கி,Punjab National Bank</media:keywords><media:content height="768" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/c9harr9r/pnb.jpg" width="1366"><media:title type="html"><![CDATA[ பஞ்சாப் நேஷனல் வங்கி]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.3.15 கோடி நகைகள் மாயம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/c9harr9r/pnb.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர் சாலையில் இயங்கி வருகிறது பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை. இந்த வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த, வாடிக்கையாளர்களின் அசல் தங்க நகைகளை எடுத்து கொண்டு, அதற்கு பதிலாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88">போலி நகைகளை</a> மாற்றி வைத்து 3.15 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்துள்ளனர் வங்கியின் ஊழியர்கள்.</p> <h2>நகை மாயம்</h2><p>வங்கிக்கு கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி கணேஷ் சந்திரபாண்டா என்பவர் புதிய முதன்மை மேலாளராக பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற சில நாட்களிலேயே வாடிக்கையாளர் ஒருவரின் நகை பாக்கெட் மாயமானதை கண்டு அதிர்ச்சிடைந்த மேலாளர். உடனே வங்கியின் தூய்மை பணி உதவியாளர் புருஷோத்தமன் நகை பெட்டி லாக்கருக்கு அடியில கிடந்துச்சு என்று எடுத்து கொடுத்துள்ளார். </p><h2>மறு ஆய்வு</h2><p>இதில் மேலாளருக்கு சந்தேகம் வர, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF">வங்கியின்</a> கட்டுப்பாட்டு அலுவலக அனுமதி பெற்று, அங்கீகரிக்கப்பட்ட நகை மதிப்பீட்டாளர் ரமேஷ் குமார் மூலமாக பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த அனைத்து அடகு நகைகளையும்ஆராய்ந்து மறு ஆய்வு செய்தனர்.</p> <h2>மாட்டிக்கொண்ட ஊழியர்கள்</h2><p>வாங்கியில் நடைபெற்ற இந்த தணிக்கையில் தான் மொத்தமும் வெளிவந்தது. பல்வேறு வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த 24 தங்க நகை கடன் கணக்குகளில் இருந்த அசல் தங்க நகைகள் அனைத்தும் திருடப்பட்டு, அதற்கு பதிலாக போலி நகைகள் மாற்றப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கணக்குப்படி 2,137.800 கிராம் தங்கம் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் 1,919 கிராம் மட்டுமே இருந்துள்ளது.</p> <h2>மத்திய குற்றப்பிரிவு </h2><p>வங்கி மேலாளர் கொடுத்த புகாரின் பேரில், மத்திய குற்றப்பிரிவு மோசடி தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இந்த கூட்டு சதியில் வங்கியின் முன்னாள் மூத்த கிளை மேலாளர் சரவண பாபு, அலுவலக உதவியாளர் புருஷோத்தமன், மற்றும் பாதுகாப்பு பெட்டக சாவி பொறுப்பாளர்கள் என 4 பேர் மீது வழக்கு பாய்ந்துள்ளது.</p> <p>திருடப்பட்ட அசல் தங்க நகைகளை மீட்கவும், தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை பிடிக்கவும் போலீசார் தற்போது தீவிரமாக தேடி வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>செங்கல்பட்டு அருகே அடுத்தடுத்து 7 கார்கள் மோதி விபத்து - போக்குவரத்து பாதிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/accident-involving-7-cars-colliding-in-succession-near-chengalpattu-traffic-disrupted</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/accident-involving-7-cars-colliding-in-succession-near-chengalpattu-traffic-disrupted#comments</comments><guid isPermaLink="false">2d7f7180-b640-40e0-bbc6-973709d6257f</guid><pubDate>Mon, 14 Sep 2026 09:45:51 +0000</pubDate><atom:updated>2026-09-14T09:45:51.327Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Chengalpattu,செங்கல்பட்டு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/80cmp8t8/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/80cmp8t8/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>செங்கல்பட்டு,</p><p>தொடர் விடுமுறையை கொண்டாட சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள், தற்போது விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், செங்கல்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் புலிப்பாக்கம் என்ற இடத்தில் சாலையில் சென்ற ஒரு கார் திடீரென பிரேக் பிடித்து நின்றதால், பின்னால் வந்த கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. </p><p>இந்த சம்பவத்தில் 7 கார்கள் சேதமடைந்தன. கார்களில் இருந்தவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், காயமடைந்த வாகன ஓட்டிகளை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. </p> ]]></content:encoded></item><item><title>தேனியில் 4,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/4000-year-old-rock-paintings-discovered-in-theni</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/4000-year-old-rock-paintings-discovered-in-theni#comments</comments><guid isPermaLink="false">235f0183-4c21-4c09-aa02-e782ab0b92c7</guid><pubDate>Mon, 14 Sep 2026 09:16:24 +0000</pubDate><atom:updated>2026-09-14T09:16:24.173Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Theni,தேனி,பாறை ஓவியங்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/0vmg8u3b/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/0vmg8u3b/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி,</p><p>தேனி மாவட்டம் கடமலை குண்டு மலைப்பகுதியில் சுமார் 4,000 ஆண்டுகள் பழமையான வெள்ளை நிற பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சங்கிலி கரடு பகுதியில் கண்டறியப்பட்ட ஓவியங்களில் மனித உருவங்கள், வேட்டை காட்சிகள் மற்றும் சடங்கு நிகழ்வுகளை பிரதிபலிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.</p><p>மேலும் இரும்பு உருக்கு எச்சங்கள், சுடுமண் குழாய்கள் உளிட்ட தொல்பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எனவே பகுதியில் முழுமையான தொல்பொருள் ஆய்வு நடத்த வேண்டும் என்று தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>8-வது முறையாக ஆசியக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணி! - வானதி சீனிவாசன் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/indian-womens-team-wins-asia-cup-for-the-8th-time-vanathi-srinivasan-congratulations</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/indian-womens-team-wins-asia-cup-for-the-8th-time-vanathi-srinivasan-congratulations#comments</comments><guid isPermaLink="false">349412d1-aea0-43f0-9f4d-5e333fce62b5</guid><pubDate>Mon, 14 Sep 2026 09:15:48 +0000</pubDate><atom:updated>2026-09-14T09:15:48.835Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Asia Cup,இந்திய மகளிர் அணி,வாழ்த்து,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,வெற்றி,Indian Women&apos;s Team,ஆசியக் கோப்பை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/mbrg5ckk/vanathi.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/mbrg5ckk/vanathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> 8-வது முறையாக ஆசியக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு வானதி சீனிவாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><p>துபாயில் நடைபெற்ற 2026 மகளிர் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி ஆசிய கோப்பையை கைப்பற்றுவது இது 8-வது முறையாகும். இது குறித்து முன்னாள் பாஜக தேசிய மகளிரணி தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/vanathi-srinivasan">வானதி சீனிவாசன் </a>தனதி எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>மனமார்ந்த வாழ்த்துகள்</h2><p>இலங்கையை வீழ்த்தி, 8-வது முறையாக மகளிர் டி20 ஆசியக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! உங்களின் கடின உழைப்பு, தளராத உறுதி மற்றும் தேசத்திற்கான எழுச்சியூட்டும் அர்ப்பணிப்பு ஆகியவை இந்த மகத்தான வெற்றியைச் சாத்தியமாக்கியுள்ளன. உங்களைப் பற்றிப் பெருமைப்படுகிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திராவிட கழக பேரணிக்கு அனுமதி மறுப்பு - டிடிவி தினகரன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dravida-kazhagam-rally-denied-permission-ttv-dhinakaran-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dravida-kazhagam-rally-denied-permission-ttv-dhinakaran-condemns#comments</comments><guid isPermaLink="false">04c9f91a-8830-4761-8b7c-ba80a95edca1</guid><pubDate>Mon, 14 Sep 2026 08:47:54 +0000</pubDate><atom:updated>2026-09-14T08:47:54.547Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டிடிவி தினகரன்,Dravidar Kazhagam,திராவிடர் கழகம்,பேரணி,Cycle Rally,அனுமதி மறுப்பு,permission denied</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/iej9ndwu/ttv1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/iej9ndwu/ttv1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழிப்புணர்வு பேரணிக்கு அனுமதி மறுத்துள்ளதற்கு அமமுக பொதுச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/ttv-dhinakaran">டிடிவி தினகரன்</a> கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>அனுமதி மறுப்பு</h2><p>தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி, அவர் பிறந்த ஈரோட்டில் உள்ள பன்னீர்செல்வம் பூங்காவில் இருந்து பெரியார் இல்லம் வரை திராவிடர் கழகம் சார்பில் திட்டமிடப்பட்டிருந்த விழிப்புணர்வு பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>ஏற்கனவே, கடந்த ஜூலை மாதம் நீட் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகம் நடத்தவிருந்த இருசக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி மறுத்தும், பெரியார் திடலில் காவல்துறையினரைக் குவித்தும் அடக்குமுறையைக் கையாண்ட தவெக அரசு, தற்போது அவரது பிறந்தநாளை முன்னிட்டு திட்டமிடப்பட்டிருந்த விழிப்புணர்வு பேரணிக்கும் அனுமதி மறுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.</p><h2>அம்பலம்</h2><p>சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு, சாதி ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம் எனப் பல்வேறு கொள்கைகளுக்காகத் தனது வாழ்நாள் முழுவதும் போராடிய தந்தை பெரியாரின் பிறந்தநாளில், அவரது சொந்த மண்ணிலேயே அவரது கொள்கைகளை வலியுறுத்தி நடத்தப்படவிருந்த பேரணிக்கு அனுமதி மறுத்திருப்பதன் மூலம், பெரியாரை அரசியலுக்காக மட்டுமே தவெக தனது கொள்கைத் தலைவராக முன்வைத்திருப்பது அம்பலமாகியுள்ளது.</p><p>ஒவ்வொரு ஆண்டும் பெரியாரின் பிறந்தநாளையொட்டி நடைபெறும் விழிப்புணர்வு பேரணிக்கு, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை காரணம் காட்டி அனுமதி மறுத்திருப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.</p><p>எனவே, பெரியாரை கொள்கைத் தலைவராக முன்மொழிந்திருக்கும் தவெக, அவரையும் அவரது பெயரையும் வெறும் அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தும் நாடகத்தைக் கைவிட்டு, பெரியாரின் பிறந்தநாளன்று திராவிடர் கழகம் திட்டமிட்டிருந்த விழிப்புணர்வு பேரணிக்கு உடனடியாக அனுமதி வழங்கி, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்திட வேண்டும் என்று இந்நேரத்தில் வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தி: நயினார் நாகேந்திரன் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayaka-chaturthi-greetings-from-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayaka-chaturthi-greetings-from-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">778298cf-3405-4020-8a35-7a2d8f3da91b</guid><pubDate>Mon, 14 Sep 2026 08:19:46 +0000</pubDate><atom:updated>2026-09-14T08:19:46.897Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,greeting,விநாயகர் சதுர்த்தி,Vinayaka Chaturthi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/qvgata9e/332.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/qvgata9e/332.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>வாழ்த்து</h2><p>பாரத மக்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். நம் வாழ்வில் ஏற்படும் தடைகளையும் துயரங்களையும் நீக்கி, நம் வினைகள் அனைத்தையும் தீர்த்து, வெற்றி, வளம், மகிழ்ச்சி மற்றும் நிம்மதியை அருளும் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை போற்றி வணங்கும் இப்புனித நன்னாளில், அனைவரது வாழ்விலும் புதிய நம்பிக்கையும், நல்ல சிந்தனையும், மகிழ்ச்சியும் நிறைந்து, தொடங்கும் ஒவ்வொரு செயலும் வெற்றியடையவும், இல்லங்கள் அனைத்திலும் அன்பும் அமைதியும் செழிக்கவும் விநாயகப் பெருமானை பிரார்த்திப்போம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது: அமைச்சர் அருண்ராஜ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kolathur-mla-vs-babus-health-condition-is-stable-minister-arunraj</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kolathur-mla-vs-babus-health-condition-is-stable-minister-arunraj#comments</comments><guid isPermaLink="false">72c8b231-fa87-4832-b300-665165f2e65d</guid><pubDate>Mon, 14 Sep 2026 08:13:20 +0000</pubDate><atom:updated>2026-09-14T08:13:20.857Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கொளத்தூர்,Kolathur,வி.எஸ்.பாபு,VS Babu,Minister Arunraj,அமைச்சர் அருண்ராஜ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/o13u07gi/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/o13u07gi/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து த.வெ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வி.எஸ்.பாபு. இவர் தனது குடும்பத்துடன் கொளத்தூரில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். </p><p>இந்த நிலையில், வி.எஸ்.பாபுவுக்கு கடந்த 9-ம் தேதி அதிகாலை திடீரென கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே அவரை குடும்பத்தினர் அவரை சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் குழு, உடனடியாக அவரை தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்து அவசர சிகிச்சைகளை தொடங்கினர்.</p><p>சுவாசக்கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு. தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் பல்துறை நிபுணர்கள் அடங்கிய மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் உள்ளார். அவருக்கு தேவையான மருத்துவ மேலாண்மை மற்றும் சுவாச ஆதரவு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து தீவிர மருத்துவ மேற்பார்வையின் கீழ் வி.எஸ்.பாபு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.</p><p>இந்த நிலையில், உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிகப்பட்டுள்ள எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவை சுகாதரத்துறை அமைச்சர் அருண்ராஜ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.</p><p>அதன்பின்னர் அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>நுரையீரல் தொற்று காரணமாக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு சிகிச்சை பெற்று வருகிறார். வி.எஸ்.பாபு நலமுடன் உள்ளார், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். எம்.எல்.ஏ.வின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>19 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/rain-possible-till-4-pm-in-19-districts</link><comments>https://www.dailythanthi.com/news/weather/rain-possible-till-4-pm-in-19-districts#comments</comments><guid isPermaLink="false">35e53d54-ea8f-48fb-ad8a-d02d66fbdff6</guid><pubDate>Mon, 14 Sep 2026 08:12:32 +0000</pubDate><atom:updated>2026-09-14T08:12:32.543Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/m8tfygw7/Untitled-12.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/m8tfygw7/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுமார் 1.5 கி.மீ. உயரம் வரை தென்மேற்கு மத்தியப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு விதர்பா பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து மன்னார் வளைகுடா வரை மராத்வாடா, வடக்கு உள் கர்நாடகா, ராயலசீமா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், நாகப்பட்டினம், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, கடலூர், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>