<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 30 Aug 2026 16:21:02 +0000</lastBuildDate><item><title>அதிக ஆர்வம் கொண்ட அருணா.. ஒரு கட்டத்தில் முடியல...ஆந்திர பெண் கொலையில் வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youths-sensational-confession-in-andhra-pradesh-womans-murder</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youths-sensational-confession-in-andhra-pradesh-womans-murder#comments</comments><guid isPermaLink="false">498c37d1-0f10-4ec0-aa86-e37c5428b07b</guid><pubDate>Sun, 30 Aug 2026 16:19:05 +0000</pubDate><atom:updated>2026-08-30T16:19:05.914Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,கைது,ஆந்திரா,வாலிபர் கைது,உல்லாசம்,arreste,ஆந்திரா பெண்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/de9o1o7v/arrest33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஆந்திர பெண் கொலை]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/de9o1o7v/arrest33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>ஆந்திரமாநிலம், நகரி அருகே உள்ள நின்றை சவரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அருணா (வயது 48). இவரது கணவர் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகன், மகள் பெங்களூரில் உள்ள ஐ.டி.நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள்.</p><h2>கொடூர கொலை</h2><p>அருணா கடந்த 2 நாட்களுக்கு முன்பு தாமரைப் பாக்கம் அடுத்த வதட்டூர் கிராமத்தில் நடைபெற்ற உறவினர் திருமணத்தில் பங்கேற்க வந்து இருந்தார்.</p><p>இந்த நிலையில் நேற்று முன்தினம் பெரியபாளயைம் அருகே உள்ள தொட்டா ரெட்டி குப்பம் வெள்ளக்குளம், வயல் வெளியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது முகம் ஆசிட் ஊற்றியும், தீயால் எரித்தும் சிதைக்கப்பட்டு இருந்தது.</p><p>இதுகுறித்து ஊத்துக் கோட்டைபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கள்ளக் காதல் விவகாரத்தில் அருணா கொலை செய்யப் பட்டு இருப்பது தெரிந்தது.</p><p>இது தொடர்பாக தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலை அருகே உள்ள வதட்டூர் கிராமத்தைச்சேர்ந்த கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளியான பாரதி ராஜா (44) என்பவரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>செக்ஸ் தொல்லை</h2><p>அவரிடம் நடத்திய விசாரணையில் அருணா அடிக்கடி செக்ஸ் தொல்லை கொடுத்து அழைத்ததால் தீர்த்து கட்டியதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். அவர் கூறியதாவது:-</p><p>அருணா வதட்டூரில் உள்ள தனது தாய்வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற போது எனக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது. <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%20">இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தோம்.</a></p><h2>அதிக ஆர்வம்</h2><p>அருணா இயற்கைக்கு மாறாக உல்லாசமாக இருக்க கூறுவார். இது எனக்கு பிடிக்கவில்லை. செக்சில் அதிக ஆர்வம் கொண்ட அருணா அடிக்கடி என்னை தனிமையில் இருக்க அழைப்பார்.</p><p>நான் சில நேரங்களில் மறுப்பு தெரிவித்தால் எனக்கு குழந்தைகள் இல்லையே..வரவேண்டியது தானே என்று கூறுவார்.</p><p>உல்லாசமாக இருக்கும் போது ரகசியமாக அருணா அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்தும் ரசிப்பார்.</p><p>இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த போது என்னை தனிமையில் சந்திக்க உடனடியாக புறப்பட்டு வருமாறு செல்போனில் அழைத்தார். நான் மறுப்பு தெரிவித்தபோது அவர் கடுமையாக பேசினார். </p><h2>தீர்த்துக்கட்ட முடிவு</h2><p>அருணாவின் செக்ஸ் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்ததால் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தேன்.</p><p>ஆசிட் ஊற்றினேன். இதையடுத்து அருணா விடம் உல்லாசமாக இருக்க லாம் என்று ஆசை வார்த்தை கூறி அவரை மோட்டார் சைக்கிளில் தொட்டாரெட்டி குப்பம் அழைத்து வந்தேன். பின்னர் அவரை கையால் அடித்தும், கழுத்தை நெரித்தும் கொன்றேன்.</p><p>அருணா இறந்ததும் என்ன செய்வது என்று தெரியாமல் சிக்காமல் இருப்பதற்காக அவர முகத் தில் ஆசிட் ஊற்றினேன். மேலும் கொண்டு வந்து இருந்த மோட்டார் சைக்கிள் ஆயிலை முகத்தில் ஊற்றி தீவைத்தேன்.</p><p>ஆனால் தீப்பற்றி எரியாததால் பயந்து போய் அங்கிருந்து தப்பி சென்று விட்டோன். ஆனால் போலீ சார் கைது செய்துவிட்டனர். இவ்வாறு பாரதிராஜா கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.</p><h2>கொலையாளி சிக்கியது எப்படி?</h2><p>அருணா கொலை செய் யப்பட்ட இடத்தில் அவரது செல்போன் கிடந்தது.அதில் கடைசியாக பேசி நபர்களின் விபரங்களை வைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது பாரதிராஜா விடம் விசாரித்தபோதுதான் அவர்களது கள்ளக்காதல் வெளிச்சத்துக்கு வந்தது. போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையின்போது அவர் அருணாவை கொலை செய்ததை கொண்டார். ஒப்புக்கைதான பாரதிராஜாவை போலீசார் ஊத்துக் கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>நேபாள பெருவெள்ளம்: நடந்தது என்ன?  டிராவல்ஸ் உரிமையாளர் கூறும் அதிர்ச்சி தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nepal-floods-what-happened-shocking-information-from-travel-owner</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nepal-floods-what-happened-shocking-information-from-travel-owner#comments</comments><guid isPermaLink="false">7f6edab1-ba0d-4fa6-a193-c39c691c43cd</guid><pubDate>Sun, 30 Aug 2026 15:35:06 +0000</pubDate><atom:updated>2026-08-30T15:35:06.870Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,Flood,flood affected,nepal flood,நேபாள வெள்ளம்,டிரவால்ஸ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/cq6mwqlo/travless33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டிராவல்ஸ் உரிமையாளர் கூறும் அதிர்ச்சி தகவல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/cq6mwqlo/travless33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>குடியுரிமை மையத்தின் வெள்ள பாதிப்பு சிசிடிவி காட்சியில் நீல நிற உடையில் தப்பி ஓடும் நபர்கள் எங்கள் குழுவினர் தான் என டிராவல்ஸ் உரிமையாளர் கூறியுள்ளார்.</p><p>சென்னை குரோம்பேட்டை ராதா நகர் ரங்கநாதன் தெருவில் இயங்கி வரும் மகாதேவ் கைலாஷ் யாத்ரா என்ற தனியார் ஆன்மிக சுற்றுலா நிறுவனம் சார்பில் கடந்த 14ஆம் தேதி சென்னை விமான நிலையத்திலிருந்து 49 பேர் நேபாளம் வழியாக சீன எல்லையில் உள்ள கைலாஷ் யாத்திரைக்குப்புறப்பட்டுச் சென்றனர்.</p><p>சுற்றுலா நிறுவன உரிமையாளரின் மகன் சத்ய நாராயணன் தலைமையில் சென்ற இந்த குழுவில் சிங்கப்பெருமாள் கோவில் செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ராஜாராம் (28) என்ற வாலிபரும் சென்றுள்ளார். மேலும் குரோம்பேட்டை, பெரம்பூர், ஆழ்வார் பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, மதுரை,</p><p>கோவை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் இந்த பயணத்தில் இடம்பெற்றுள்ளனர். </p><p>சுமார் 14 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்றுமுன்தினம் சென்னை திரும்ப வேண்டிய நிலையில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">நேபாள சீன எல்லை</a>ப் பகுதியில் உள்ள குடியேற்ற அலுவலகத்தில் நடைமுறைகளை மேற்கொண்டிருந்த போது எதிர் பாராதவிதமாக சக்திவாய்ந்த காட்டாற்று வெள்ளத்தால் அந்த குடியேற்ற அலுவலக கட்டிடமே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. </p><p>இந்தநிலையில்,  நேபாளத்திற்கு சென்று வந்த சென்னை குரோம்பேட்டை டிராவல்ஸ் உரிமையாளர் மறவேள் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>குடியுரிமை மையத்தின் வெள்ள பாதிப்பு சிசிடிவி காட்சியில் நீல நிற உடையில் தப்பி ஓடும் நபர்கள் எங்கள் குழுவினர் தான். மலை மேல் ஓடியவர்கள் ஒரு சிலர் தப்பியிருக்கலாம். சீன பகுதிக்குள் ஓடியுள்ளனர். அந்த பகுதி முழுவதும் 6 அடி உயர சேற்றால் மூடப்பட்டுள்ளது. எங்கள் 3 குழுவும் இதில் சிக்கி உள்ளனர்.</p><p>வெள்ள பாதிப்பு குறித்து நேபாள அரசின் தகவல் மட்டுமே கிடைக்கிறது. சீன அரசு மூலம் எந்த தகவலும் கிடைக்கவில்லை. எங்கள் குழுவினர் சீன பகுதிக்குள் சிக்கியுள்ளனர் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>திண்டுக்கல் கோர விபத்தில் 4 சிறுவர்கள் உயிரிழப்பு: ஜோதிமணி எம்.பி. வேதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/4-children-die-in-horrific-dindigul-accident-mp-jothimani-expresses-anguish</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/4-children-die-in-horrific-dindigul-accident-mp-jothimani-expresses-anguish#comments</comments><guid isPermaLink="false">728dbe7e-c38a-4fbb-8956-3d9604462030</guid><pubDate>Sun, 30 Aug 2026 15:34:50 +0000</pubDate><atom:updated>2026-08-30T15:34:50.701Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Dindigul,திண்டுக்கல்,காங்கிரஸ்,Congress,ஜோதிமணி,ஜோதிமணி எம்.பி.,Jothimani,jothimani mp</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/r0nntl6t/jothimani.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/r0nntl6t/jothimani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>​விளையாடித் திரியும் வயதில், எந்தத் தவறும் செய்யாத அந்தப் பிஞ்சுப் பிள்ளைகளின் உயிர் இப்படி அநியாயமாகப் பறிக்கப்பட்டிருப்பதை எவராலும் அவ்வளவு எளிதில் கடந்துபோக முடியாது என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>4 சிறுவர்கள் பலி</h2><p>திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்த புத்தூர் கிராமத்தில், சாலையோரம் அமர்ந்திருந்த 4 சின்னஞ்சிறு பிள்ளைகள் மீது வாகனம் மோதி அவர்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர் என்ற கோரச் செய்தி கேட்டு என் நெஞ்சம் பதைபதைக்கிறது.</p><p>என்ன சொல்லி அந்தப் பெற்றோருக்கு ஆறுதல் கூறுவது என்று தெரியாமல் வார்த்தைகளின்றித் தவிக்கிறேன்.</p><p>​விளையாடித் திரியும் வயதில், எந்தத் தவறும் செய்யாத அந்தப் பிஞ்சுப் பிள்ளைகளின் உயிர் இப்படி அநியாயமாகப் பறிக்கப்பட்டிருப்பதை எவராலும் அவ்வளவு எளிதில் கடந்துபோக முடியாது. தங்கள் உலகமாக நினைத்து வளர்த்த பிள்ளைகளை இழந்து, கதறித் துடிக்கும் அந்தக் குடும்பத்தினரின் கண்ணீருக்கு இந்த உலகத்தில் எந்த ஆறுதலும் ஈடாகாது.</p><p>இந்த ஈடுசெய்ய முடியாத பெருந்துயரத்தில் ஒரு சகோதரியாக அவர்களோடு நான் நிற்கிறேன்.</p><h2>மாபெரும் குற்றம்</h2><p>​இந்தக் கொடூர விபத்தை ஏற்படுத்திவிட்டு, வீதியில் உயிருக்குத் துடித்த குழந்தைகளைக் காப்பாற்ற முனையாமல், ஈவிரக்கமின்றித் தப்பியோடிய அந்த மனிதநேயமற்ற செயல் மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமாகும். வடமதுரை காவல்துறை உடனடியாக விசாரணையை மேற்கொண்டு, அந்த வாகனத்தையும் குற்றவாளியையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.</p><p>​மேலும், படுகாயமடைந்து <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மருத்துவமனையில் </a>உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வரும் நபருக்குத் தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் தாமதமின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.</p><p>அவர் விரைவில் முழுமையாக நலம்பெற்றுத் திரும்ப மனதாரப் பிரார்த்திக்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஊட்டி அருகே குடியிருப்புக்குள் புகுந்த கரடி - மக்கள் அச்சம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/midnight-bear-sighting-in-ooty-village-alarms-residents</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/midnight-bear-sighting-in-ooty-village-alarms-residents#comments</comments><guid isPermaLink="false">1bf8dcb8-695e-41a1-8af7-0f57f18f5fc8</guid><pubDate>Sun, 30 Aug 2026 15:32:35 +0000</pubDate><atom:updated>2026-08-30T15:32:35.101Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஊட்டி,Ooty,bear,குடியிருப்புகள்,மக்கள் அச்சம்,fear,Residential Area,கருப்பு கரடி</media:keywords><media:content height="768" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/tnx6imn4/bearss.jpg" width="1366"><media:title type="html"><![CDATA[  கரடி]]></media:title><media:description type="html"><![CDATA[ ஊட்டி அருகே குடியிருப்புக்குள் புகுந்த கரடி - மக்கள் அச்சம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/tnx6imn4/bearss.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஊட்டி,</p><p>ஊட்டி அருகே குடியிருப்பு பகுதிக்குள் நள்ளிரவில் கரடி ஒன்று ஜாலியாக உலா வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மளமளவென பரவி வைரலாகி வருகிறது.</p><h2>வனவிலங்குகள்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF">நீலகிரி</a> மாவட்டம் ஊட்டி நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சமீபகாலமாக கரடி, காட்டுமாடு, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த விலங்குகள் அடர்ந்த காட்டுப்பகுதியை விட்டு வெளியேறி, உணவு மற்றும் தண்ணீருக்காக குடியிருப்பு பகுதிகளில் தஞ்சம் புகுவது வாடிக்கையாகி விட்டது.</p><h2>பொதுமக்கள் அதிர்ச்சி</h2><p>இந்நிலையில், ஊட்டி அருகே உள்ள கோழிப்பண்ணை கிராமத்திற்குள் நள்ளிரவு நேரத்தில் பிரம்மாண்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF">கரடி</a> ஒன்று ஊடுருவியது. தெருக்களில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில், அந்த கரடி அங்குமிங்கும் உலா வந்துள்ளது. நாய் குரைக்கும் சத்தம் கேட்டு ஜன்னல் வழியே பார்த்த பொதுமக்கள், ஊருக்குள் கரடி நிற்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.</p> <p>குப்பை தொட்டியில் வேட்டை</p><p>வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் வரும் கரடிகள், மீண்டும் காட்டுக்குள் செல்லாமல் ஊரை சுற்றியுள்ள புதர்களிலேயே பதுங்கி கொள்கின்றன. குறிப்பாக, குடியிருப்பு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளை கிளறி, அதில் கொட்டப்படும் உணவு கழிவுகளை சாப்பிட்டு இவை பழகிவிட்டன.</p> <h2>மக்கள் கோரிக்கை</h2><p>தற்போது கோழிப்பண்ணை கிராமத்தில் கரடி உலா வந்த சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன்பு, ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தி வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>வளசரவாக்கத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monsoon-precautionary-works-intensifies-in-valasaravakkam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monsoon-precautionary-works-intensifies-in-valasaravakkam#comments</comments><guid isPermaLink="false">da89e785-073e-422c-817e-612a37b12529</guid><pubDate>Sun, 30 Aug 2026 15:29:20 +0000</pubDate><atom:updated>2026-08-30T15:29:20.554Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>work,வளசரவாக்கம்,Valasaravakkam,பணிகள் தீவிரம்,Monsoon Precautions,பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/fu2glmrd/48.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/fu2glmrd/48.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வளசரவாக்கம் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மண்டல கண்காணிப்பு அலுவலர் முனைவர் ஜெ.விஜயா ராணி,  இன்று (30.08.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.</p><h2>பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>வடகிழக்குப்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88"> பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை</a>யாக, வளசரவாக்கம் மண்டலத்தில், வார்டு 148ல் உள்ள விருகம்பாக்கம் கால்வாயில் தடுப்புச் சுவர் கட்டும் பணி, ஆற்காடு சாலையில் மழைநீர் வடிகால் பணி,போரூர் சந்திப்பில் மழைநீர் வடிகால் பணி, மவுண்ட் பூந்தமல்லி சாலையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பில் பணிகள் நடைபெறும் இடத்தில் மீண்டும் மழைநீர் வடிகால் கட்டுதல், நந்தம்பாக்கம் கால்வாயில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளை மண்டல கண்காணிப்பு அலுவலர் தோட்டக் கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை இயக்குநர் முனைவர் ஜெ.விஜயா ராணி,  பார்வையிட்டு, வடகிழக்குப் பருவ மழைக்கு முன்னதாக இப்பணிகளை முடித்திடவும், மோட்டார் பம்புகள், இயந்திரங்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வுகளின் போது, மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திண்டுக்கல் கோர விபத்தில் 4 குழந்தைகள் பலி; தலா ரூ.3 லட்சம் நிவாரணம் - முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dindukkal-fatal-accident-4-children-dead-cm-vijay-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dindukkal-fatal-accident-4-children-dead-cm-vijay-announcement#comments</comments><guid isPermaLink="false">4354e2c3-0692-4365-838b-e447088a5ea4</guid><pubDate>Sun, 30 Aug 2026 15:20:21 +0000</pubDate><atom:updated>2026-08-30T15:20:21.308Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Dindigul,திண்டுக்கல்,Relief,குழந்தைகள் பலி,நிவாரணம் அறிவிப்பு,கோர விபத்து,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,fatal accident</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/ldp9kbyp/cmvijayone33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/ldp9kbyp/cmvijayone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், கொல்லப்பட்டி-புத்தூர் சாலையில் நிகழ்ந்த வாகன விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்</a> அறிவிப்பு. இது தொடர்பாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;- </p><h2>வருத்தமும், வேதனையுமடைந்தேன்</h2><p>திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், கொல்லப்பட்டி கிராமத்தில் இன்று சாலையின் ஓரத்தில் அமர்ந்திருந்த புத்தூர் கிராமத்தை சேர்ந்த அஞ்சலையம்மாள் (வயது 60) க/பெ. பழனிச்சாமி, அய்யலூர் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் யோகவர்ஷினி (வயது 11) த/பெ. நாகராஜ், அனன்யா (வயது 6) த/பெ. நாகராஜ், தனுஸ்ரீ (வயது 7) த/பெ. ஜெகதீஷ் மற்றும் போஸ்கிரண் (வயது 6) த/பெ. சின்னத்தம்பி ஆகியோர் மகேந்திரா தோஸ்த் வாகனம் எதிர்பாராத விதமாக மோதிய விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். </p><p>இவர்களில் நான்கு குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையுமடைந்தேன்.</p><h2>சிறப்பு சிகிச்சை</h2><p>இவ்விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அஞ்சலையம்மாள் அவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.</p><h2> நிவாரண நிதி</h2><p>இவ்விபத்தில் உயிரிழந்த நான்கு குழந்தைகளின் பெற்றோர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு 1 லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">பொது நிவாரண நிதியிலிருந்து</a> வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>வடமதுரை அருகே 4 குழந்தைகள் பலி: விபத்தை ஏற்படுத்திய பால் வேன் ஓட்டுநர் போலீசில் சரண்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/4-children-killed-near-vadamadurai-milk-van-driver-who-caused-the-accident-surrenders-to-police</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/4-children-killed-near-vadamadurai-milk-van-driver-who-caused-the-accident-surrenders-to-police#comments</comments><guid isPermaLink="false">86a2dced-d9f9-45c8-b08b-e4dcb77ced4a</guid><pubDate>Sun, 30 Aug 2026 15:14:31 +0000</pubDate><atom:updated>2026-08-30T15:14:31.905Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>driver,ஓட்டுநர்,குழந்தைகள் பலி,வடமதுரை,Surrender,சரண்,vadamadurai,children die</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/thnbkqgn/47.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/thnbkqgn/47.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><p>விபத்தை ஏற்படுத்திய பால் வேன் ஓட்டுநர் போலீசில் சரணடைந்துள்ளார்.</p><p>திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகேயுள்ள கொல்லம்பட்டி பிரிவில் சாலையோரத்தில் தனுஸ்ரீ(5), யோக வர்ஷி(11). அனன்யா(6) மற்றும் மோசிகீரன்(6) ஆகியோர் ஆடுமேய்த்துக் கொண்டிருந்தனர். </p><h2>சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு</h2><p>அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வேன் ஒன்று, சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த  சிறுவர்கள் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிறுத்தாமல் சென்றுள்ளது. இதில் 4 குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.</p><h2>போலீசில் சரண்</h2><p>இச்சம்பவம் குறித்து வடமதுரை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய வாகனத்தையும் அதன் ஓட்டுநரையும் தீவிரமாகத் தேடிவந்தனர். இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய பால் வேன் ஓட்டுநர் போலீசில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D">சரணடைந்தார்</a>.</p>]]></content:encoded></item><item><title>ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் ஏற்காவிட்டால், தவெக அமைச்சரவையில் இருந்து விலகுவோம் - காங்கிரஸ் பகிரங்க அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-rahul-does-not-accept-the-pm-candidate-we-will-resign-from-the-tdp-cabinet-congress-makes-a-public-statement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-rahul-does-not-accept-the-pm-candidate-we-will-resign-from-the-tdp-cabinet-congress-makes-a-public-statement#comments</comments><guid isPermaLink="false">ad4045ca-0c76-4928-9825-554b14c0709b</guid><pubDate>Sun, 30 Aug 2026 15:08:53 +0000</pubDate><atom:updated>2026-08-30T15:08:53.529Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,காங்கிரஸ்,RahulGandhi,Congress Alliance,CMVijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/al65rel0/vijayone33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ தவெக அமைச்சரவை]]></media:title><media:description type="html"><![CDATA[ காங்கிரஸ் பகிரங்க அறிவிப்பு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/al65rel0/vijayone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என ஏற்காவிட்டால் தவெக அமைச்சராஇயில் இருந்து விலகுவோம் என   தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.</p><h2>2029 மக்களவை தேர்தல்</h2><p>'வரும் 2029ம் ஆண்டு மக்களவை தேர்தலில், தமிழகம், கேரளம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில், 40 தொகுதிகளில், த.வெ.க., தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும்.</p><p>'தெலுங்கானாவில் கவிதா, ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, உபி.,யில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான அணிகளுக்கு, 50 தொகுதிகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இப்படி மொத்தம், 130 எம்.பி.,க்கள் அணியை உருவாக்கி, அதற்கு விஜய் தலைமை வகிப்பார். காங்கிரஸ் ஆதரவுடன் விஜய் பிரதமராவார் என முதல்-அமைச்சர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் ரத்தன் பண்டிட் கணித்துள்ளார்.</p><h2>விஜய் பிரதமர் </h2><p>அவரது கணிப்பு தகவல்களை, த.வெ.க.,வுக்கு ஆதரவாக செயல்படுகிற, 'வெற்றி டிவி' நிர்வாக இயக்குநர் சிங்காரவேலன் வெளியிட்டுள்ளார். தமிழக அரசியலில் இருந்து, தேசிய அரசியலுக்கு விஜயின் பயணம் விரிவடையுமா என்ற விவாதத்தை, ஜோதிடரின் கணிப்பு உருவாக்கி, காங்கிரசாரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இதனிடையே இன்றைய முதல்-அமைச்சர் விஜய், நாளைய பிரதமர்' என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்கள், துாத்துக்குடி மாவட்ட த.வெ.க.,வினரால் ஒட்டப்பட்டு உள்ளன. அதற்கு பதிலடியாக, 'ராகுல் தான் பிரதமர் வேட்பாளர் என, சமூக வலைதளங்களில் காங்கிரசார் தங்களது எதிர்ப்பு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.</p><h2>அமைச்சரவையில் இருந்தே வெளியேறுவோம்</h2><p>இந்தநிலையில், குமரியில் காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார்,</p><p>"2029  நாடாளுமன்ற தேர்தலில் பாரத பிரதமர் வேட்பாளர் எங்களுடைய தலைவர்<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF"> ராகுல்காந்தி</a> தான். ஒருவேளை தமிழக வெற்றிக்கழகம் அதற்கு உடன்படவில்லை என்றால், தமிழக வெற்றி கழக அமைச்சரவையில் இருக்கும் இரண்டு அமைச்சர்களும் எங்கள் பொறுப்புகளை துறப்போம் என்றார்.</p><p> ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என ஏற்காவிட்டால் தவெக அமைச்சரவையில் இருந்து விலகுவோம் என தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் பேசி உள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 14 சிறப்பு ரெயில் சேவைகள் நீட்டிப்பு!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/extension-of-14-special-train-services-to-southern-districts</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/extension-of-14-special-train-services-to-southern-districts#comments</comments><guid isPermaLink="false">2b4416bc-1255-432c-9f9b-87e00733386e</guid><pubDate>Sun, 30 Aug 2026 14:39:59 +0000</pubDate><atom:updated>2026-08-30T14:39:59.246Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,சிறப்பு ரெயில்,Special trains,தெற்கு ரெயில்வே,Southern Railway,Special train,சிறப்பு ரெயில்கள்,சிறப்பு ரெயில் இயக்கம்,சிறப்பு ரெயில் சேவை,Special Train Service</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/srnxv4w0/rail.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/srnxv4w0/rail.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தாம்பரத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் வாராந்திர 14 சிறப்பு ரெயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருக்கும் முக்கிய ரெயில் சேவைகள் குறித்த தகவல்கள் பின்வருமாறு;-</p><p>தாம்பரத்தில் இருந்து போடிநாயக்கனூருக்குச் செல்லும் சிறப்பு விரைவு ரெயில் (எண்: 06059) வரும் செப்டம்பர் 12 முதல் 26 ஆம் தேதி வரையிலும், போடிநாயக்கனூர் தாம்பரம் இடையேயான வாராந்திர விரைவு ரெயில் (எண்: 06060) செப்டம்பர் 13 முதல் 27 ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><p>சென்னை எழும்பூர் கன்னியாகுமரி (வெள்ளிக்கிழமை) விரைவு ரெயில் (எண்: 06045) செப்டம்பர் 4 முதல் 25 ஆம் தேதி வரையிலும், கன்னியாகுமரி எழும்பூர் நிலையம் வரையிலான (ஞாயிற்றுக்கிழமை) விரைவு ரெயில் (எண்: 06046) செப்டம்பர் 6 முதல் 27 ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><p>மங்களூரு சென்னை சென்ட்ரல் இடையேயான விரைவு ரெயில் (எண்: 06126) வரும் செப்டம்பர் முதல் 28 ஆம் தேதி வரையிலும், சென்னை எழும்பூர் மங்களூரு இடையிலான விரைவு ரெயில் (எண்: 06125) மற்றும் போத்தனூர் சென்னை சென்ட்ரல் இடையேயான விரைவு ரெயில் (எண்:06028) ஆகியவை செப்டம்பர் 8 முதல் 29 ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளன.</p><p>திருநெல்வேலி மேட்டுப்பாளையம் விரைவு ரெயில் (எண்: 06030) செப்டம்பர் 6 முதல் 27 ஆம் தேதி வரையிலும், மேட்டுப்பாளையம் திருநெல்வேலி விரைவு ரெயில் (எண்: 06029) செப்டம்பர் 7 முதல் 28 ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><p>திருநெல்வேலி <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தாம்பரம் </a>விரைவு ரெயில் (எண்: 06166) செப்டம்பர் 6 முதல் 27 ஆம் தேதி வரையிலும், திருநெல்வேலி தாம்பரம் விரைவு ரெயில் (எண்: 06070) செப்டம்பர் 3 முதல் 24 ஆம் தேதி வரையிலும், தாம்பரம் திருநெல்வேலி விரைவு ரெயில் (எண்: 06069) செப்டம்பர் 4 முதல் 25 ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பொதுமக்களுக்காக சென்னை போர் நினைவிடத்தில் ஒலி-ஒளி நிகழ்ச்சி தொடக்கம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sound-and-light-show-begins-at-chennai-war-memorial-for-the-public</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sound-and-light-show-begins-at-chennai-war-memorial-for-the-public#comments</comments><guid isPermaLink="false">d3e7070e-bab7-498d-aa58-ecd9b492e0fe</guid><pubDate>Sun, 30 Aug 2026 14:33:55 +0000</pubDate><atom:updated>2026-08-30T14:33:55.245Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பொதுமக்கள்,Chennai,சென்னை,Public,நிகழ்ச்சி,War Memorial,போர் நினைவிடம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/351bsnhm/43.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/351bsnhm/43.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>முப்படைகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே பிணைப்பை வலுப்படுத்தும் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்திய ராணுவத்தின் தெற்குப்பகுதி தலைமையகம், சென்னை போர் நினைவுச் சின்னத்தில் 29 ஆகஸ்ட் 2026 அன்று காணொலிக்காட்சிக்கு <a href="https://www.dailythanthi.com/Topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">நிகழ்ச்சி</a>யை ஏற்பாடு செய்தது.</p><p>இந்த தொடக்க நிகழ்ச்சிக்குக் கிடைத்த உற்சாகமான வரவேற்பைத் தொடர்ந்து, இனி ஒவ்வொரு சனிக்கிழமையும் பொதுமக்களுக்காக போர் நினைவுச் சின்னத்தில் இந்த ஒளி மற்றும் ஒலி நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்படவுள்ளது. இந்த முயற்சியானது, சென்னை மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள், என்.சி.சி வீரர்கள், சுற்றுலாப் பயணிகள், முன்னாள் ராணுவத்தினர்,  குடிமக்கள் ஆகியோருக்கு நாட்டின் ராணுவ வரலாற்றை உணர்வுப்பூர்வமான முறையில் புரிந்துகொள்வதற்கான  வாய்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>ஒலி-ஒளி நிகழ்ச்சி</h2><p>தமிழ் வசனங்களுடன் கூடிய இந்த சிறப்பான ஒலி-ஒளி நிகழ்ச்சி, தமிழ்நாட்டு மக்களுடன் ஆழமான பிணைப்பை உருவாக்கவும், இந்தியாவின் ராணுவ வரலாற்றின் உத்வேகம் தரும் நிகழ்வுகளைப் பார்வையாளர்கள் அனுபவிக்கவும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p>முப்படைகளை இளைய தலைமுறையினருக்கு நெருக்கமாக்குவதற்கும், நாட்டுப்பற்று, தேசியப் பெருமிதம் ஆகியவற்றை வளர்ப்பதற்கும் சென்னையை தலைமையிடமாகக்கொண்ட இந்திய ராணுவத்தின் 'தெற்குப்பகுதி' மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முயற்சி அமைந்துள்ளது. இத்தகைய முயற்சிகள் மூலம், முப்படைகளின் தன்னலமற்ற சேவை, உயரிய தியாகம் ஆகியவற்றை அறிந்துகொள்ளவும், பாதுகாப்புப் படைகளின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தைப் புரிந்துகொள்ளவும், முப்படை வீரர்களின் துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பிலிருந்து உத்வேகம் பெறவும் பொதுமக்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/605ipjrs/45.jpg" /></figure><h2>உணர்வுப்பூர்வமான வரலாறு</h2><p>இந்த ஒலி-ஒளிக்காட்சியானது, இந்தியாவின் முப்படைகளின் வீரம், தியாகம் மற்றும் நீடித்த பாரம்பரியம் குறித்த உணர்வுப்பூர்வமான வரலாற்றை எடுத்துரைக்கிறது; நாட்டின் ராணுவ வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை, நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் முப்படைகள் வகிக்கும் தற்போதைய பங்கை இது காட்டுகிறது. வரலாற்றை வெறும் தகவலாக விவரிப்பது மட்டுமல்லாமல், துணிச்சல் மற்றும் தியாகம் சார்ந்த வரலாற்றை அடுத்த தலைமுறையினருக்கு உயிர்ப்புடன் கொண்டு சேர்ப்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.</p><p>பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், ராணுவ வீரர்களின் குடும்பத்தினர், என்.சி.சி கேடட்டுகள், சுற்றுலாப் பயணிகள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பார்வையாளர்கள் இந்த நிகழ்ச்சியையும், அதில் இடம்பெற்ற தமிழ் வசனங்களையும் பாராட்டினர். இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பு, இந்தியாவின் இராணுவப் பாரம்பரியத்தையும், தேசத்தின் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிசெய்வதற்கான தியாகங்களையும் புரிந்துகொள்வதில் அதிகரித்து வரும் பொது ஆர்வத்தை பிரதிபலிக்கிறது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/8wuvi0u1/46.jpg" /></figure><p>குடிமக்களுக்கும் ஆயுதப் படைகளுக்கும் இடையேயான பிணைப்பை வலுப்படுத்துவதையும் இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்திய வீரர்களின் வீரவரலாறுகளை மக்களுக்கு, குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு கொண்டு சேர்ப்பதன் மூலம், பொதுமக்களிடையே கடமை, பொறுப்பு, தேசத்தின் மீதான பெருமிதம் ஆகிய உணர்வுகளைத் தூண்ட இயலும். அதே நேரத்தில், இளையோர் ஆயுதப் படைகளில் சேர்வதற்கான ஆர்வத்தை தூண்டவும், தேசத்தைக் கட்டியெழுப்புவதற்குப் பங்களிக்கவும் ஊக்குவிக்கின்றன.</p><h2>மாதிரிப் பிரதிகள்</h2><p>செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அருகில் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள போர் நினைவிடம், இராணுவப் பாரம்பரியம் தொடர்பான ஒரு மையமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த வளாகம் இப்போது குடிமக்களுக்கு வீரமரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பிரதிநிதித்துவ இராணுவக் கலைப்பொருட்களைக் காணவும், இந்தியாவின் ஆயுதப் படைகளின் பரிணாம வளர்ச்சியைப் புரிந்துகொள்ளவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. பயன்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட டி-55 முதன்மை போர்க் டாங்கி,  புகழ்பெற்ற இந்திய கடற்படைக் கப்பல்களான ஐ.என்.எஸ் அஞ்சதீப், ஐ.என்.எஸ் விக்ராந்த் ஆகியவற்றின் மாதிரிப் பிரதிகள் ஆகியவை இங்கு நிறுவப்பட்டுள்ளன. இவை இந்தியாவின் இராணுவ வரலாறு, தொழில்நுட்பப் பரிணாம வளர்ச்சி மற்றும் கடல்சார் பாரம்பரியத்துடனான  தொடர்பை விளக்குகின்றன.</p><p>ஐ.என்.எஸ் அஞ்சதீப்பின் மாடலானது இந்தியாவின் உள்நாட்டு கப்பல் கட்டும் திறனையும், நாட்டின் கடற்படை மற்றும் பாதுகாப்பு உற்பத்திச் சூழலுக்குத் தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் எடுத்துக்காட்டுகிறது. நினைவிடத்துடன் இந்தக் கலைப்பொருட்கள் இருப்பது, கல்வி மற்றும் பொது ஈடுபாடு ஆகியவை ஒன்றிணையும் ஓர் இடமாக இந்த வளாகத்தை மேம்படுத்துகிறது. போர் நினைவிடத்தை, எளிதில் அணுகக்கூடிய ஓர் இராணுவப் பாரம்பரிய வளாகமாக மாற்றுவது என்பது, ராணுவ தெற்குப்பகுதித் தலைமையகத்தின் பரந்த அணுகுமுறையின் ஒரு பகுதியாகும்—அதாவது, வீரமரணம் அடைந்தவர்களை நினைவுகூருதல், சேவையாற்றுபவர்களைக் கௌரவித்தல், நிகழ்காலத்திற்குக் கல்வி புகட்டுதல் மற்றும் எதிர்காலத்திற்கு உத்வேகம் அளித்தல் ஆகியவையே அவையாகும்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/mnko9ntb/44.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>காஞ்சிபுரத்தில் சோகம்: கிரிக்கெட் பந்து தலையில் விழுந்து 11 வயது சிறுவன் உயிரிழப்பு..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-in-kanchipuram-11-year-old-boy-dies-after-cricket-ball-hits-his-head</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-in-kanchipuram-11-year-old-boy-dies-after-cricket-ball-hits-his-head#comments</comments><guid isPermaLink="false">bd2b9f86-902d-492f-a198-bfa99ea61b29</guid><pubDate>Sun, 30 Aug 2026 14:17:03 +0000</pubDate><atom:updated>2026-08-30T14:17:03.787Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கிரிக்கெட்,Cricket,Kanchipuram,காஞ்சிபுரம்,Kanchipuram District,காஞ்சிபுரம் மாவட்டம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/qhl332tk/Untitled-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/qhl332tk/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>காஞ்சிபுரம், </p><p>காஞ்சிபுரத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது, வேகமாக வந்த பந்து தலையில் பலமாக தாக்கியதில் 11 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.</p><h2>கிரிக்கெட் விளையாடியபோது விபரீதம்</h2><p>காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள என்.ஜி.ஓ. நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுகிர்தா லட்சுமி. இவரது 11 வயது மகன் சாய் மோத்தீஸ்வரன். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.</p><p>கடந்த 26-ம் தேதி அரசு விடுமுறையையொட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க விளையாட்டு மைதானத்தில் சாய் மோத்தீஸ்வரன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்.</p><h2>தலையில் பலமாக தாக்கிய பந்து</h2><p>மைதானத்தில் பலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது, எங்கிருந்தோ வேகமாக வந்த கிரிக்கெட் பந்து எதிர்பாராதவிதமாக சாய் மோத்தீஸ்வரனின் தலையில் பலமாக தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.</p><h2>செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை</h2><p>இதையடுத்து, சிறுவனை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.</p><h2>சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு</h2><p>இரண்டு நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சாய் மோத்தீஸ்வரன், திடீரென சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கிரிக்கெட் </a>விளையாடச் சென்ற 11 வயது சிறுவன் எதிர்பாராத விதமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஜல்லிக்கட்டு குறித்து சர்ச்சை பேச்சு: தவெக அரசை கண்டித்து செப்.3-ல் மதுரையில் அதிமுக ஆர்ப்பாட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/controversial-talk-about-jallikattu-aiadmk-protest-in-madurai-on-september-3-condemning-the-tvk-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/controversial-talk-about-jallikattu-aiadmk-protest-in-madurai-on-september-3-condemning-the-tvk-government#comments</comments><guid isPermaLink="false">cdc062ce-776f-4987-9e69-bf9e1a75a072</guid><pubDate>Sun, 30 Aug 2026 13:29:39 +0000</pubDate><atom:updated>2026-08-30T13:29:39.202Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அதிமுக,AIADMK,protest,ஆர்ப்பாட்டம்,தவெக அரசு,TVK Government</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/8wfe1yh5/eps.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/8wfe1yh5/eps.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் 'ஜல்லிக்கட்டு போட்டி இளைஞர்களை சீரழிக்கிறது" என்று அநாகரீகமாக கொச்சைப்படுத்திப் பேசி இருக்கின்ற சோழவந்தான் தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரையும், த.வெ.க அரசையும் கண்டித்து. ஒருங்கிணைந்த மதுரை மாவட்டக் கழகங்களின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் செப்லம்பர் 3-ந் தேதி நடைபெறும் என <a href="https://www.dailythanthi.com/topic/eps">எடப்பாடி பழனிசாமி </a>கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்  தெரிவித்திருப்பதாவது:-</p><h2>கடும் கண்டனம்</h2><p>சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அளித்துவிட்டு ஆட்சியில் அமர்ந்த ரீல்ஸ் மாடல் தவெக. அரசு, மக்கள் நிம்மதியுடன் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தித் தருவதற்கு பதிலாக பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி வருகிறது. இதனை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். அந்த வகையில், தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில், சோழவந்தான் தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா அவர்கள், தமிழர்களுடைய பாரம்பரியத்தின், கலாசாரத்தின், நாகரீகத்தின், வீரத்தின் அடையாளமான ஜல்லிக்கட்டு வீர விளையாட்டுப் போட்டி இளைஞர்களை சீரழிக்கிறது என்று அநாகரீகமாக, கொச்சைப்படுத்திப் பேசியிருப்பது இளைஞர்களிடையேயும், பொதுமக்களிடையேயும் மிகுந்த கொந்தளிப்பையும், வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது. தவெ.க-வினர் இதுபோன்று தான்தோன்றித்தனமாக பேசி வருவது கடும் கண்டனத்திற்குரியது.</p><h2>ஜல்லிக்கட்டுப் போட்டிகள்</h2><p>தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இடையிலான அரசியல் மற்றும் சட்டப் போராட்ட வரலாறு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், உச்சநீதிமன்றம் 2014ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு முற்றிலுமாகத் தடை விதித்தது. அப்போதைய முதலமைச்சர் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தோடு கலந்தது என்பதால் இந்தத் தடையை நீக்க வேண்டும் என மத்திய அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததோடு, உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தார். தொடர்ந்து, 2017 ஜனவரியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்களும் மாணவர்களும் வாலாற்றுச் சிறப்பு மிக்க அறப் போராட்டத்தை நடத்தினர். அப்போதைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசின் ஒப்புதலுடன் 21.1.2017 அன்று ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இதன்மூலம் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மீண்டும் நடத்தப்பட்டு வருகிறது.</p><h2>கலாசார பாரம்பரியம்</h2><p>அவசரச் சட்டத்தைத் தொடர்ந்து. எனது தலைமையிலான அப்போதைய அம்மா அரசு தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் விலங்கு வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு நிரந்தர சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் ஐல்லிக்கட்டு என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது தமிழர்களின் கலாசார பாரம்பரியம் என சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது. 2017-ஆம் ஆண்டு கழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து விலங்கு அமைப்புகள் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், 18.5.2023 அன்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, தமிழக அரசு கொண்டுவந்த சட்டம் செல்லும் என்றும், ஜல்லிக்கட்டு தடையின்றி நடக்கலாம் என்றும் இறுதித் தீர்ப்பு அளித்தது. இவ்வாறு ஐல்லிக்கட்டுப் போட்டி தடையின்றி நடைபெறுவதற்கு கழக அரசு மேற்கொண்ட சட்டப் போராட்டங்களே காரணம் என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு கட்டிக்காட்ட விரும்புகிறேன்.</p><h2>கண்டன ஆர்ப்பாட்டம்</h2><p>இந்நிலையில், 'தமிழர்களின் வீர விளையாட்டான பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டி, இளைஞர்களை அழிக்கிறது என்று தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் அநாகரீகமாக, கொச்சைப்படுத்திப் பேசிய சோழவந்தான் தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரையும். மக்களின் நலனில் அக்கறையில்லாமல் தான்தோன்றித் தனமாக செயல்பட்டு வரும் ரீல்ஸ் மாடல் தவெக அரசையும் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு ஆகிய மாவட்டக் கழகங்களின் சார்பில் 3.9.2026 வியாழக் கிழமை காலை 9.30 மணியளவில் 'அலங்காநல்லூர் வாடிவாசல் அருகில்' மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்</p><p>இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் கழக அமைப்புச் செயலாளரும் மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமானசெல்லூர் K ராஜூ கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளரும். மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான R.B. உதயகுமார், அழக அமைப்புச் செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளருமான V.V. ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமையில், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் மாணிக்கம் Ex M.LA, அவர்கள் முன்னிலையில் நடைபெறும்.</p><p>இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள். முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி பகுதிக் கழகச் செயலாளர்கள். நிர்வாகிகள் கழக சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகள் சார்பு அமைப்புகளின் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் உட்பட மாவட்டங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும் கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஐல்லிக்கட்டு காளைபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், ஐல்லிக்கட்டு நலச் சங்கத்தினர் மற்றும் இளைஞர்கள், இளம் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுளது அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-arunraj-inspects-krishnagiri-government-medical-college-hospital</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-arunraj-inspects-krishnagiri-government-medical-college-hospital#comments</comments><guid isPermaLink="false">877c4b74-73d2-4159-bb52-9af923edd143</guid><pubDate>Sun, 30 Aug 2026 13:20:05 +0000</pubDate><atom:updated>2026-08-30T13:20:05.285Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கிருஷ்ணகிரி,Krishnagiri,மருத்துவக் கல்லூரி,Medical College Hospital,medical college,அருண்ராஜ்,Arunraj,Minister Arunraj,அமைச்சர் அருண்ராஜ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/hdb23hio/Untitled-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/hdb23hio/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ணகிரி,</p><p>கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் அருண்ராஜ் இன்று ஆய்வு செய்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>மருத்துவமனையில் ஆய்வு</h2><p>இன்றைய தினம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் நேரடி ஆய்வு மேற்கொண்டோம். </p><p>மருத்துவமனையின் பல்வேறு சிகிச்சை பிரிவுகள் மற்றும் கழிவறை பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தோம். மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக பராமரிக்க  அலுவலர்கள் மற்றும் பராமரிப்பு ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினோம். </p><p>கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இருதய அவசர சிகிச்சைக்காக Cath Lab வசதியை கொண்டு வருவதற்கான அறிவிப்பை நாம் ஏற்கனவே மருத்துவத்துறையின் மானிய கோரிக்கையில் வெளியிட்டோம்.</p><h2>பணியிடங்கள் விரைவில் உருவாக்கப்படும்</h2><p>மேலும் இம்மருத்துவமனை அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை NH 44 விபத்து அதிகம் நடக்கும் பகுதியாக இருப்பதால், விபத்துக்குள்ளானவர்களுக்கான அவசர சிகிச்சைக்காக நரம்பியல் அறுவை சிகிச்சை ( Neurosurgery) மருத்துவர்களுக்கான பணியிடங்கள் விரைவில் உருவாக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர், மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவர்களுடன்... முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் மருத்துவமனை வளாகத்தில் செய்ய வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்தும் விரிவாக ஆலோசித்தோம்.</p><p>இந்த ஆய்வின்போது <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கிருஷ்ணகிரி </a>சட்டமன்ற உறுப்பினர் முகுந்தன், ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இளையராஜா, மாவட்ட ஆட்சித் தலைவர் ச. தினேஷ் குமார், மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் சத்தியபாமா ஆகியோர் உடன் இருந்தனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவாக்க தமிழக அரசு பரிசீலனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-considering-expanding-meenambakkam-airport</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-considering-expanding-meenambakkam-airport#comments</comments><guid isPermaLink="false">c22e432f-6ea2-467b-9908-99776b21ab40</guid><pubDate>Sun, 30 Aug 2026 13:11:10 +0000</pubDate><atom:updated>2026-08-30T13:11:10.376Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,விஜய்,மீனம்பாக்கம்,airpot</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/fi1pcxck/airport33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
மீனம்பாக்கம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக அரசு பரிசீலனை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/fi1pcxck/airport33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பரந்தூர் விமான நிலையத்திட்டம் கைவிடப்பட்ட நிலையில் மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரி வாக்கம் செய்ய தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது.</p><h2>த.வெ.க ஆட்சி </h2><p>பரந்தூர் பசுமை வெளி விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதை அடுத்து இதுவரை கையகப்படுத்தப் பட்டுள்ள நிலங்கள்தொழில்துறை செயல்பாடுகளுக்கு பயன்படுத்தவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழக அரசு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a> தலைமையிலான த.வெ.க ஆட்சி அமைந்த பிறகு பல்வேறு திட்டங்கள் குறித்து எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. </p><h2>பரந்தூர் விமான நிலையம்</h2><p>இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ள நிலத்தில் விமான நிலையம் அமைப்பதற்கான முயற்சிகள் கடந்த திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டது.</p><p>இதற்கிடையில் ஏராளமான நிலங்களும் அரசால் கையகப்படுத்தப்பட்டுவிவசாயிகளுக்கு இழப்பீடு தொகையும் வழங்கப்பட் டது.ஆனால் விவசாயிகளும், அந்தபகுதிமக்களும் சுற்றுச்சூழல் அமைப்புகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தன.</p><h2>சட்டப்பேரவையில் மிகப்பெரிய விவாதம்</h2><p>ஏற்கனவே, அந்த பகுதி மக்களுக்கு ஆதரவு தெரிவித்து விஜய் அங்கு செல்ல முயன்றது மிகப் பெரிய கவனத்தை எல்லோராலும் ஈர்க்கப்பட்டது. இந்தநிலையில் சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தின் போது பரந்தூர் விமான நிலையத்திட்டம்கைவிடப் படுகிறது என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தார். இது சட்டபேரவையில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.</p><p>இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தொழில் வளர்ச்சி தமிழகத் தில் பாதிக்கும் என்று தெரி வித்தது.இந்த சூழலில் பரத் தூர்மக்கள்விமானநிலையத் திட்டம் கைவிடப்பட்டதை ஆதரித்தனர். மகிழ்ச்சி தெரி வித்தனர். இந்நிலையில் பரந்தூரில் தமிழக அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று அனைத்துதரப்பினரின்எதிர் பார்ப்பாக இருந்தது.</p><h2>விரிவாக்க பரிசீலனை</h2><p>இப்போது பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதால் மீனம் பாக்கம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. அதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு நடத்தி விரைவில் டெண்டர்விடப்படும் தெரிகிறது. பொழிச்சலூர், தாராப்பாக்கம் அணுகு சாலை அமைக்கவும் தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது.</p><h2>5-ஆவது முனையம்</h2><p>சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை 5-ஆவது முனையம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை தமிழக அரசு ஆய்வு நடத்தி வருகிறது. ஓடுபாதை திறன் பணிகளும் நடை பெற்று வருகின்றன. இந்த விரிவாக்கத்தின் மூலம் பல்வேறு நன்மைகள் ஏற்படும். பரந்தூர் திட்டத்திற்கான மாற்றாக சென்னை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படுவதால் தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் பெருகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.</p><p>மீனம்பாக்கம் 5-ஆவது முனையம் அமைக்கப்படுவதால் துரித ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. ஏர்போர்ட், தாம்பரம், மதுரவாயல் வழியாக புறவழி அணுகு சாலை அமைக்க திட்டப்பணிகள் பரிசீலணை நடைபெற்று வருவதாக தெரிகிறது. அதே நேரத்தில் குடியிருப்பு பகுதிகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்தபணிகள்நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தலை துண்டிக்கப்பட்டு பெயிண்டர் கொலை; நெல்லையில் பதற்றம்; அதிரடி படையினர் குவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/painter-beheaded-murder-tension-in-nellai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/painter-beheaded-murder-tension-in-nellai#comments</comments><guid isPermaLink="false">ab3a1cba-d3b2-4e6f-b056-68c1986c5476</guid><pubDate>Sun, 30 Aug 2026 12:58:45 +0000</pubDate><atom:updated>2026-08-30T12:58:45.985Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,கொலை,killed,Painter,பெயிண்டர்,Rise,பதற்றம்,tension</media:keywords><media:content height="768" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/687o3tqu/baskar.jpg" width="1366"><media:title type="html"><![CDATA[ பாஸ்கர்]]></media:title><media:description type="html"><![CDATA[ தலை துண்டிக்கப்பட்டு பெயிண்டர் கொலை; நெல்லையில் பதற்றம்; அதிரடி படையினர் குவிப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/687o3tqu/baskar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி,</p><p>நெல்லை உடையார்பெட்டி அருகே உள்ள மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில், வாலிபர் ஒருவர் தலை துண்டித்து கொடூரமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">படுகொலை </a>செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p> <h2>நடந்தது என்ன? </h2><p>மணிமூர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவர் இன்று வழக்கம் போல் தனது வீட்டிலிருந்து குளிப்பதற்காக தாமிரபரணி ஆற்றுக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் இருவர், பாஸ்கரை வழிமறித்து திடீரென தாக்கியுள்ளனர். </p><h2>படுகொலை</h2><p>கண் இமைக்கும் நேரத்தில், அவர்கள் கொண்டு வந்திருந்த பயங்கர ஆயுதங்களால் பாஸ்கரின் தலையை துண்டாக வெட்டி எடுத்தனர். அதோடு நிறுத்தாமல், படுகொலை செய்யப்பட்ட அந்த இளைஞரின் தலையை அறுத்து, அவரது வீட்டின் முன்பே வீசி சென்றனர் அந்த மர்ம நபர்கள்.</p><h2> கொலையாளிகள் சரண்</h2><p>ஆற்றங்கரைக்கு சென்றவர்கள் பாஸ்கர் ரத்த வெள்ளத்தில் தலை துண்டிக்கப்பட்டு கிடப்பதை கண்டு பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தச்சநல்லூர் போலீசார் பாஸ்கரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதற்கிடையே, கொலையை அரங்கேற்றிய அந்த இரு நபர்களும் நேராக காவல் நிலையம் சென்று போலீசாரிடம்  சரணடைந்தனர்.</p><h2>முன்விரோதமே காரணம்?</h2><p>போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பாஸ்கருக்கும் சரணடைந்த நபர்களுக்கும் இடையே இருந்த முந்தைய பகை மற்றும் முன்விரோதம் காரணமாகவே இந்த கொடூரக்கொலை அரங்கேறியுள்ளதா, அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்ற கோணத்தில் இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>அதிரடி படையினர் குவிப்பு</h2><p>இந்த நிலையில், பாஸ்கரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அப்பகுதி முழுவதிலும் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு பதற்றமான சூழல் நிலவுவதன் காரணமாக, பாதுகாப்பு பணியில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>பிரதமர் மோடிக்கு உஸ்பெகிஸ்தானின் உயரிய விருது; இந்தியாவுக்கு பெருமை - எல்.முருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/uzbekistans-highest-award-for-pm-modi-pride-for-india-l-murugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/uzbekistans-highest-award-for-pm-modi-pride-for-india-l-murugan#comments</comments><guid isPermaLink="false">61f3bd80-283e-40be-ae3b-fd5fd10b3f38</guid><pubDate>Sun, 30 Aug 2026 12:30:52 +0000</pubDate><atom:updated>2026-08-30T12:30:52.495Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எல்.முருகன்,பிரதமர் மோடி,PM Modi,L. Murugan,Award,உஸ்பெகிஸ்தான்,Uzbekistan,உயரிய விருது</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/nls2f7cb/41.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/nls2f7cb/41.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பிரதமர் மோடிக்கு உஸ்பெகிஸ்தானின் உயரிய விருது; இந்தியாவுக்கு பெருமை மத்திய இணை-மந்திரி <a href="https://www.dailythanthi.com/topic/l-murugan">எல்.முருகன் </a>தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>உயரிய அரச விருது</h2><p>இந்தியாவுக்குப் பெருமைக்குரிய தருணம்! உஸ்பெகிஸ்தான் குடியரசின் மிக உயரிய அரச விருதான 'ஒலிய தராஜலி தோஸ்த்லிக்' விருதை  பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு வழங்குவது, தேசத்திற்கு ஒரு பெரும் கௌரவமாகும். </p><h2>பெருமிதம் தரும் தருணம்</h2><p>இந்த மதிப்புமிக்க அங்கீகாரம், பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், இந்தியாவுக்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையே வலுப்பெற்று வரும் நட்புறவு, நம்பிக்கை மற்றும் உத்திசார் கூட்டாண்மைப் பிணைப்புகளைப் பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு இந்தியருக்கும் இது அளவற்ற பெருமிதம் தரும் தருணம்!.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை: கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றபோது சோகம்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-tragedy-strikes-while-visiting-a-temple-for-worshipthree-members-of-the-same-family-lose-their-lives</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-tragedy-strikes-while-visiting-a-temple-for-worshipthree-members-of-the-same-family-lose-their-lives#comments</comments><guid isPermaLink="false">991f175d-40b5-482c-bced-73777c08b4a2</guid><pubDate>Sun, 30 Aug 2026 12:22:02 +0000</pubDate><atom:updated>2026-08-30T12:22:02.275Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சாலை விபத்து,Chennai,சென்னை,Periyapalayam,பெரியபாளையம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/ougqach2/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/ougqach2/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெரியபாளையம் அருகே ஆட்டோ மீது லாரி மோதிய பயங்கர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றபோது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.</p><h2>லாரி-ஆட்டோ மோதி விபத்து</h2><p>சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்தவர் லோகநாதன் (42). ஆட்டோ ஓட்டுநராக இருந்தார். இவரது மனைவி பூங்கொடி (39), மகள் தனலட்சுமி (10), மாமியார் ராதா (65), மைத்துனர் மகன்கள் கோகுல் (10), பிரசாந்த் (15) ஆகியோர் நேற்று இரவு பெரியபாளையம் கோவிலுக்கு சாமி கும்பிட ஒரே ஆட்டோவில் சென்றனர்.</p><p>லோகநாதன் ஆட்டோவை ஓட்டிச் சென்றார். அவர்களது ஆட்டோ பன்பாக்கம் பகுதியில் உள்ள எம்.டி.சி. பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, முன்னால் சென்றுகொண்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோ கவிழ்ந்தது.</p><h2>சம்பவ இடத்திலேயே பெண் பலி</h2><p>இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் லோகநாதனின் மனைவி பூங்கொடி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆட்டோவில் பயணம் செய்த மற்றவர்கள் படுகாயம் அடைந்தனர்.</p><p>விபத்து குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.</p><h2>மேலும் 2 பேர் உயிரிழப்பு</h2><p>அங்கு படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி ஆட்டோ ஓட்டுநர் லோகநாதனின் மாமியார் ராதா மற்றும் மைத்துனர் மகன் கோகுல் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.</p><p>இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்தது.</p><h2>3 பேருக்கு தீவிர சிகிச்சை</h2><p>விபத்தில் படுகாயம் அடைந்த மேலும் 3 பேருக்கு பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இந்த விபத்து குறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">திருவள்ளூர் </a>அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><p>பெரியபாளையம் கோவிலுக்கு வழிபாட்டுக்காகச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரூ.1 லட்சத்திற்கு பச்சிளம் பெண் குழந்தையை விற்ற பெற்றோர்..! - திருப்பத்தூரில் அதிர்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/parents-sell-baby-girl-for-rs-1-lakh-shock-in-tirupattur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/parents-sell-baby-girl-for-rs-1-lakh-shock-in-tirupattur#comments</comments><guid isPermaLink="false">a2f343f8-c0a3-472a-b68a-0d304425b92d</guid><pubDate>Sun, 30 Aug 2026 12:14:55 +0000</pubDate><atom:updated>2026-08-30T12:14:55.729Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>போலீஸ் விசாரணை,hospital,ஆஸ்பத்திரி,குழந்தை விற்பனை,Police action,Thiruppathur</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/0gkarurr/2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பச்சிளம் குழந்தை விற்பனை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/0gkarurr/2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>திருப்பத்தூர்,</p><p>திருப்பத்தூரில் பச்சிளம் குழந்தையை ரூ.1 லட்சத்திற்கு விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p><h2>குழந்தை விற்பனை</h2><p>திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த தம்பதியினர் ரஹ்மத்துல்லா - ஹவாமா. இவர்களுக்கு கடந்த 14-ந்தேதி வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் இருந்த நிலையில் 4-வதாக தொடர்ந்து பெண் குழந்தை பிறந்தது அவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் அந்த குழந்தையை விற்க முடிவு செய்து அதற்கான ஏற்பாட்டை செய்துள்ளனர்.</p><p>இந்த தகவலறிந்து பெங்களூருவில் இருந்து செய்யது - சம்ரின் தாஜ் தம்பதியினர் திருப்பத்தூர் வந்துள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகளாக குழந்தை இல்லை. இதன் காரணத்தால் ரஹ்மத்துல்லா - ஹவாமா தம்பதியரின் குழந்தையை ரூ.1,00,000 கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளனர்.</p><h2>விசாரணை</h2><p>இந்த சம்பவம் தொடர்பாக ஆம்பூர் அடுத்த உமராபாத் போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது. புகாரின் பேரில்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D"> போலீசார் </a>வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, குழந்தையை விற்ற ரஹ்மத்துல்லா - ஹவாமா மற்றும் வாங்கிய செய்யது - சம்ரின் தாஜ் ஆகிய 4 பேரையும் சட்டவிரோதமாக செயல்பட்ட குற்றத்திற்காக கைது செய்தனர். மேலும், குழந்தையை சட்டவிரோதமாக விற்றதில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF">ஆஸ்பத்திரி</a> ஊழியர்கள் மற்றும் புரோக்கர்கள் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பெரியார், அண்ணா, அம்பேத்கர் பெயர்கள் நீக்கம்: இயக்குநர் அமீர் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/removal-of-periyar-anna-ambedkar-names-director-ameer-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/removal-of-periyar-anna-ambedkar-names-director-ameer-condemns#comments</comments><guid isPermaLink="false">0047829e-b6b4-4762-9212-8d3d5b928775</guid><pubDate>Sun, 30 Aug 2026 12:03:23 +0000</pubDate><atom:updated>2026-08-30T12:03:23.167Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Director,இயக்குநர்,அமீர்,Ameer</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/kblykogm/ameer.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/kblykogm/ameer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பேட்டில், இடஒதுக்கீடு மற்றும் சமூக நீதி வரலாற்றைக் கூறும் பகுதியில் இடம்பெற்றிருந்த முக்கியத் தலைவர்களின் பெயர்கள் விடுபட்டிருந்தன. சமூக நீதி சார்ந்த கருத்துகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் <a href="https://www.dailythanthi.com/topic/director-ameer">இயக்குநர் அமீர்</a>, இந்த வரலாற்றுத் தலைவர்களின் பெயர்கள் விடுபட்டதை வன்மையாகக் கண்டித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-</p><h2>தமிழர்களின் கடமை</h2><p>"பெரியார், அண்ணா, அம்பேத்கர் என்பது பெயர்கள் அல்ல... தமிழ்நாட்டின் அடையாளங்கள். அதை அழிக்கவோ மறைக்கவோ எந்த முகமூடியோடு வந்தாலும் அதை எதிர்க்க வேண்டியது தமிழர்களின் கடமையாகும். </p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>போதை கலாச்சாரத்திற்கு முதல்-அமைச்சர் விஜய்  முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்;  நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-must-end-drug-culture-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-must-end-drug-culture-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">b09a0bc3-a520-47ca-afdf-2884f8b65536</guid><pubDate>Sun, 30 Aug 2026 11:24:17 +0000</pubDate><atom:updated>2026-08-30T11:24:17.832Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,drug,போதை,முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/hoje5tnz/nainar-nagendheran.new.gif" width="752"><media:title type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/hoje5tnz/nainar-nagendheran.new.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இளைஞர்களின் எதிர்காலத்தையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும் போதை கலாச்சாரம் முதல்-அமைச்சர் விஜய்  முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நயினார் நாகேர்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக, இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- </p> <h2>கொலை</h2><p>ராஜபாளையம் பழைய பஸ் நிலையம் அருகே பேருந்திற்காக காத்து கொண்டிருந்த இந்து முன்னணி நிர்வாகியான தணிகாசலம் என்பவரை, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88">போதையில்</a> இருந்த இளைஞர்கள் ஓட ஓட விரட்டி சென்று, புறக் காவல் நிலையம் முன்பே கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி நெஞ்சை பதற செய்கிறது. உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் கனத்த இதயத்துடன் தெரிவித்து கொள்கிறேன். </p><h2>போதை சக்தி</h2><p>“தூய சக்தி” என்று தங்களை விளம்பரப்படுத்திக் கொண்ட முதல்-அமைச்சர் விஜய் முதல்அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து, தமிழகம் “போதை சக்தி”யின் பிடியில் சிக்கி கொண்டதாக தான் தெரிகிறது. ஆட்சிக்கு வந்தவுடன் 717 டாஸ்மாக்குகளை மூடிவிட்டதாக தவெக அரசு தம்பட்டம் அடித்து கொண்டாலும், இளைஞர்களிடையேயான மதுப்பழக்கமோ, சமூகத்தில் போதையால் உண்டாகும் குற்றச்செயல்களோ குறைந்தபாடில்லை.</p><h2>சட்டம் ஒழுங்கு</h2><p> காவல்துறையினர் மீதோ தமிழகத்தின் சட்டம் ஒழுங்கின் மீதோ குற்றவாளிகளுக்கு துளியும் பயமில்லை. கடந்த மூன்று மாதங்களில் ஆண்கள், பெண்கள், பள்ளி மாணவர்கள் என அனைவரது கைகளிலும் மது புட்டிகளும், போதை பொருட்களும் மிக சரளமாக புழங்குகின்றன என்பதை சமூக வலைத்தளங்களில் உலா வரும் வீடியோக்களை பார்த்தாலே அறிந்து கொள்ளலாம். </p><h2>முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்</h2><p>ஆனால், முதல்-அமைச்சரும் அவரது அமைச்சர்களும் “<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D">ரீல்ஸ்</a>” எடுப்பதில் காட்டும் ஆர்வத்தை, “யதார்த்தம்”-இல் உள்ள மக்கள் பிரச்சினைகளில் காட்டுவதில்லை. இனியாவது எதிர்க்கட்சிகளிடம் எதுகை மோனை வசனம் பேசி காலத்தை கடத்தாமல், இளைஞர்களின் எதிர்காலத்தையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும் போதை கலாச்சாரத்திற்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a> முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பிகிலுக்கு ஓட்டுப் போட்டல்ல... இப்ப திகில் திகில்னு விலை ஏறுது - ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dont-vote-for-bigil-now-the-price-is-going-up-like-crazy-rs-bharathis-criticism</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dont-vote-for-bigil-now-the-price-is-going-up-like-crazy-rs-bharathis-criticism#comments</comments><guid isPermaLink="false">920e49ff-fd3c-451d-ab72-2e50bdfccee9</guid><pubDate>Sun, 30 Aug 2026 11:20:39 +0000</pubDate><atom:updated>2026-08-30T11:20:39.976Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,விஜய்,திமுக,DMK,ஆர்.எஸ்.பாரதி,CMVijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/g17oc3qj/barathi33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/g17oc3qj/barathi33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வேலூர்,</p><p>பிகிலுக்கு ஓட்டுப் போட்டல... இப்ப திகில் திகில்னு விலை ஏறுது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.</p><p>வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஆர்.எஸ். பாரதி, தி.மு.க.-வைப் பார்த்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">விஜய் சவால் விடுகிறார்</a>. பைல்ஸ் எல்லாம் தயாராகத் டேபிளில் இருக்கின்றன, நான் அவிழ்த்தால் என்ன ஆகும் என்று சட்டசபையில் சொல்கிறார். அவிழ்ப்பதுதான் உன்னுடைய வேலை; இந்த பூச்சாண்டி காட்டுவதெல்லாம் எங்களிடம் வேண்டாம். தணிக்கை செய்யப்பட்டது என்று கூறுகிறார். ஒன்றும் தெரியாதவர்கள்தான் அமைச்சராகவும், எம்.எல்.ஏ.-வாகவும் இருக்கிறார்கள்.</p><p>ஒவ்வொரு வருடமும் சிஏஜி (CAG) அறிக்கை தயாரிக்கப்பட்டு நாடாளுமன்றத்திலும், சட்டசபையிலும் தாக்கல் செய்யப்படுவது வழக்கமான நடைமுறை. அந்த சிஏஜி ரிப்போர்ட்தான் இந்த 3 பைல்ஸ் எந்தவொரு சி.ஏ.ஜி அறிக்கையும் அரசாங்கத்தைப் பாராட்டியிருக்காது. ஆடிட் என்பது மாநகராட்சி முதல் அரசாங்கம் வரை அனைத்துத் தளங்களிலும் வழக்கமாக நடக்கக் கூடியது. ஆனால், ஊடகங்களும் பத்திரிகைகளும் உடனே 3 பைல்கள் இருக்கின்றன என்று பரபரப்பாக்குகின்றன.</p><p>பிகிலுக்கு ஓட்டுப் போட்டீர்கள்... இப்போது திகில் திகில் என விலைவாசி ஏறுகிறது. இன்றைக்கு மக்களுக்கு இது தெரியாது. இன்னும் 6 மாதம் ஆகட்டும். இதே மக்கள் வந்து துரைமுருகனின் வீட்டு வாசலில் நின்று, 'காவல் தெய்வமே. நீங்கதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும்' என்று கையேந்தி நிற்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>உசிலம்பட்டி அருகே 16 வயது சிறுமி தற்கொலை - கனிமொழி எம்.பி. வேதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/suicide-of-16-year-old-girl-near-usilampatti-kanimozhi-mp-expresses-anguish</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/suicide-of-16-year-old-girl-near-usilampatti-kanimozhi-mp-expresses-anguish#comments</comments><guid isPermaLink="false">de3ca988-1e08-4cd0-a08b-2744ba22b689</guid><pubDate>Sun, 30 Aug 2026 11:19:51 +0000</pubDate><atom:updated>2026-08-30T11:19:51.334Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,கனிமொழி எம்.பி.,Kanimozhi MP,கனிமொழி,Kanimozhi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/xdmteshv/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/xdmteshv/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>16 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>சிறுமி தற்கொலை</h2><p>உசிலம்பட்டி அருகே 16 வயது தலித் சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. தனது எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடன் பள்ளிச் சேர்க்கைக்காகச் சென்ற அந்தச் சிறுமி, அங்கு அவமானப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், மனவேதனையில் அச்சிறுமி உயிரை மாய்த்து கொண்டதால், அவரது குடும்பம் நிலை குலைந்து போயுள்ளது.</p><p>ஒவ்வொரு குழந்தைக்கும் மரியாதையும், கண்ணியமும், பாதுகாப்பான கல்விச்சூழலும் கிடைப்பது அவர்களின் உரிமை.</p><h2>தகுந்த தண்டனை</h2><p>இது போன்ற மனவேதனைக்கு எந்தக் குழந்தையும் தள்ளப்படக் கூடாது. இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விசாரணை </a>நடத்தி, குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை வழங்கி, நீதி நிலைநாட்டப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திண்டுக்கல்; அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் 4 சிறுவர்கள் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dindigul-4-children-killed-in-accident-involving-unidentified-vehicle</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dindigul-4-children-killed-in-accident-involving-unidentified-vehicle#comments</comments><guid isPermaLink="false">008c816b-1c3d-4c74-b937-d1a2ef4ceb7c</guid><pubDate>Sun, 30 Aug 2026 11:15:45 +0000</pubDate><atom:updated>2026-08-30T11:15:45.845Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,Dindigul,திண்டுக்கல்,சிறுவர்கள் உயிரிழப்பு,children die</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/1r1b6akt/40.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/1r1b6akt/40.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><p>திண்டுக்கல் மாவட்டம்  வடமதுரை அருகே  அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் 4  சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.</p><h2>சிறுவர்கள் உயிரிழப்பு</h2><p>திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகேயுள்ள கொல்லம்பட்டி பிரிவில் சாலையோரத்தில் தனுஸ்ரீ(5), யோக வர்ஷி(11). அனன்யா(6) மற்றும் மோசிகீரன்(6) ஆகியோர் ஆடுமேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வேன் ஒன்று, சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த  சிறுவர்கள் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிறுத்தாமல் சென்றுள்ளது. இதில் 4 குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">உயிரிழந்தனர்</a>.</p><h2>பெரும் அதிர்ச்சி</h2><p>இச்சம்பவம் குறித்து வடமதுரை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய வாகனத்தையும் அதன் ஓட்டுநரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இக்கோர விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>2029ல் பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்திதான் - அமைச்சர் விஸ்வநாதன் பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rahul-gandhi-will-be-the-prime-ministerial-candidate-in-2029-minister-viswanathan-replies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rahul-gandhi-will-be-the-prime-ministerial-candidate-in-2029-minister-viswanathan-replies#comments</comments><guid isPermaLink="false">72bdc0ac-c37d-43a9-b5a3-93c3043022ff</guid><pubDate>Sun, 30 Aug 2026 11:09:52 +0000</pubDate><atom:updated>2026-08-30T11:09:52.557Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,ராகுல் காந்தி,RahulGandhi,உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/ujv2n37a/viswanathan33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[  ராகுல்காந்தி]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் விஸ்வநாதன் பதில்
]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/ujv2n37a/viswanathan33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>முதல்-அமைச்சர்விஜய்தான் அடுத்த பிரதமர் என சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளிவருவது குறித்து காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.</p><p>இதுகுறித்து, திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பதிலளித்துப் பேசியதாவது, </p><p>காங்கிரசை பொருத்தவரையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்திதான், 2029-ல் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார்.</p><p>கடந்த 15 ஆண்டுகளாக மக்கள் வெறுப்பில் இருக்கின்றனர். மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். மோடி அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.</p><p>2029-ல் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">ராகுல் காந்தி</a>தான் பிரதமர். அவர் பிரதமராவதற்கு நாங்கள் அனைவரும் ஒத்த குரலில் பணியாற்றுவோம் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து தெற்கு வட்டார துணை ஆணையர் ஆய்வு..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/deputy-commissioner-south-zone-inspects-stormwater-drain-works-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/deputy-commissioner-south-zone-inspects-stormwater-drain-works-in-chennai#comments</comments><guid isPermaLink="false">94be9ae8-768a-495a-afab-f65b11d65ac1</guid><pubDate>Sun, 30 Aug 2026 11:08:35 +0000</pubDate><atom:updated>2026-08-30T11:08:35.082Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/om45trxz/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/om45trxz/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வளசரவாக்கம், ஆலந்தூர் மண்டலங்களில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் ஆதம்பாக்கம் ஏரியில் நடைபெற்று வரும் ஆகாயத்தாமரைகளை அகற்றி தூர்வாரும் பணிகளை தெற்கு வட்டார துணை ஆணையர் அதாப் ரசூல் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>மழைநீர் வடிகால் பணிகள்</h2><p>வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால் பணிகள், மழைநீர் வடிகால், கால்வாய்கள் ஆறுகளில் தூர்வாருதல், மழைநீர் வடிகால் இணைப்பு இல்லாத இடங்களில் இணைப்பினை ஏற்படுத்துதல், நீர்நிலைகளில் தூர்வாரி மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>இதன் ஒரு பகுதியாக, வளசரவாக்கம், ஆலந்தூர் மண்டலங்களில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் நந்தம்பாக்கம் வடிகால்வாய், ஆதம்பாக்கம் ஏரியில் நடைபெற்று வரும் ஆகாயத்தாமரைகளை அகற்றி தூர்வாரும் பணிகளை தெற்கு வட்டார துணை ஆணையர் அதாப் ரசூல் இன்று (30.08.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.</p><h3>தெற்கு வட்டார துணை ஆணையர் ஆய்வு</h3><p>வளசரவாக்கம் மண்டலத்தில், ஆற்காடு சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்திடவும், வார்டு-153க்குட்பட்ட மவுண்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பில் நடைபெற்று வரும் பணிகளைத் தொடர்ந்து, இப்பகுதியில் மழைநீர் வடிகால்வாய் இணைப்பு ஏற்ப்படுத்துவது தொடர்பாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, இணைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>பின்னர், வார்டு-155க்குட்பட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்வாய் சேருமிடமான நந்தம்பாக்கம் கால்வாயினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, இக்கால்வாயில் மழைநீர் தங்குதடையின்றி செல்லும் வகையில் தூர்வாரிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><h2>அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்</h2><p>இதனைத் தொடர்ந்து, ஆலந்தூர் மண்டலம், வார்டு-162க்குட்பட்ட வேளச்சேரி உள்வட்டச் சாலையில் உள்ள ஆதம்பாக்கம் ஏரி அருகில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சார்பில் நடைபெற்று வரும் பாலப்பணிகளையும், அப்பகுதியில் உள்ள மழைநீர் ஆதம்பாக்கம் கால்வாயில் சேரும் வகையில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளுதல் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், ஆதம்பாக்கம் ஏரியில் மாநகராட்சியின் சார்பில் நடைபெற்று வரும் ஆகாயத்தாமரைகளை அகற்றி தூர்வாரும் பணிகளை விரைந்து முடித்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>இந்த ஆய்வின் போது, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மாநகராட்சி</a>, நெடுஞ்சாலைத்துறை, நீர்வளத்துறை, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் அலுவலர்கள் உடனிருந்தனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அரக்கோணம்: 2 மகன்களுடன் தாய் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/arakkonam-mother-dies-by-suicide-with-two-sons-in-front-of-train</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/arakkonam-mother-dies-by-suicide-with-two-sons-in-front-of-train#comments</comments><guid isPermaLink="false">635a86e0-f706-4b62-aaca-1535be2916e3</guid><pubDate>Sun, 30 Aug 2026 10:59:48 +0000</pubDate><atom:updated>2026-08-30T10:59:48.224Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>train,ரெயில்,தற்கொலை,Suicide,Mother,தாய்,Arakkonam,அரக்கோணம்,Sons,மகன்கள்</media:keywords><media:content height="768" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/vxeaf45z/sucidewithchildren.jpg" width="1366"><media:title type="html"><![CDATA[ வள்ளி,பரத், சந்தோஷ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அரக்கோணம்: 2 மகன்களுடன் தாய் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/vxeaf45z/sucidewithchildren.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>அரக்கோணம், </p><p>அரக்கோணத்தில் கணவரின் மரணம், மீளமுடியாத துயரத்தில் இரு பிள்ளைகளுடன் ரெயில் முன் பாய்ந்த தாய் தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p> <h2>திடீரென மரணம்</h2><p>ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மங்கம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வள்ளி (27). இவருடைய கணவர் கோட்டையா (30). அம்மிக்கல் செதுக்கும் தொழிலாளி. இவர்களுக்கு பரத் (7), சந்தோஷ் (3) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோட்டையா உடல்நலக்குறைவால் திடீரென மரணமடைந்தார்.</p><h2>வறுமை</h2><p>கணவரின் மறைவால் வள்ளி மீளமுடியாத துயரத்தில் மூழ்கினார். மேலும் குடும்பத்தை நடத்த வருமானம் இன்றியும், பிள்ளைகளை காப்பாற்ற வழியின்றியும் கடும் வறுமையில் தவித்து வந்துள்ளார்.</p> <h2>ரெயில் முன் பாய்ந்தனர்</h2><p>கணவரை இழந்த சோகமும், வறுமையும் வாட்டியதால் வள்ளி வாழ்க்கையில் விரக்தியடைந்தார். இதனால் தன் பிள்ளைகளுடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். இன்று காலை சுமார் 9 மணியளவில், மங்கம்மாபேட்டை ரெயில் தண்டவாள பகுதிக்கு தன் 2 மகன்களையும் வள்ளி அழைத்து சென்றார். அப்போது சென்னையிலிருந்து திருப்பதி நோக்கி சென்ற <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">மின்சார ரெயில்</a> வருவதை கண்ட வள்ளி, தன் இரு குழந்தைகளையும் கட்டியணைத்தபடி ஓடும் ரெயில் முன்பு திடீரென பாய்ந்தார்.</p><h2>உடல் சிதறி பலி</h2><p>இதில் ரெயிலில் அடிபட்டு தூக்கி வீசப்பட்ட வள்ளி மற்றும் அவரது மகன்கள் பரத், சந்தோஷ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த அரக்கோணம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><h2>வழக்குப்பதிவு</h2><p> இந்த நெஞ்சை உருக்கும் துயர சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வறுமை காரணமாக 2 பிள்ளைகளுடன் தாய் ரெயில் முன் பாய்ந்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">தற்கொலை</a> செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சத்தியமூர்த்தி பவனை பற்றி குறை பேசவும், பெயர் மாற்ற சொல்லவும் உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? திமுகவிற்கு ரூபி ஆர். மனோகரன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-has-what-right-to-criticise-and-rename-sathyamoorthi-bhavan-asks-ruby-r-manoharan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-has-what-right-to-criticise-and-rename-sathyamoorthi-bhavan-asks-ruby-r-manoharan#comments</comments><guid isPermaLink="false">5650141d-f34d-4e4d-8c7a-b992658e3d8d</guid><pubDate>Sun, 30 Aug 2026 10:34:28 +0000</pubDate><atom:updated>2026-08-30T10:34:28.935Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,கேள்வி,தகுதி,Questions,Ruby Manoharan,ரூபி மனோகரன்,சத்தியமூர்த்தி பவன்,Sathyamoorthy Bhavan</media:keywords><media:content height="768" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/bkyy5n7e/ruby.jpg" width="1366"><media:title type="html"><![CDATA[ ரூபி ஆர். மனோகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ரூபி ஆர்.மனோகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/bkyy5n7e/ruby.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D">சத்தியமூர்த்தி பவனை</a> பற்றிக்குறை பேசவும், பெயர் மாற்ற சொல்லவும் உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? திமுகவிற்கு ரூபி ஆர். மனோகரன் கேள்வி. இது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ரூபி ஆர்.மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>விரக்தியின் உச்சம்</h2><p>மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் விரக்தியின் உச்சத்தில் நின்று பிதற்றி கொண்டிருக்கும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">திமுகவும்</a> அதன் செய்தித் தொடர்பாளர்களும் முதலில் தங்களின் கடந்த கால கொள்கை விளக்க குறிப்புகளைத் திறந்து பார்க்க வேண்டும்.</p><h2>நிதர்சனமான உண்மை</h2><p>இ.பரந்தாமன், மூக்கு புடைப்பா இருந்தா இப்படித்தான் கண்மூடித்தனமா யோசிக்க தோணும் போல! பேசுவதற்கு முன்னாடி கொஞ்சம் ஆதாரங்களை எடுத்து உண்மை சரிபார்ப்பு பண்ணிட்டு வாங்க. 2022-2023, 2023-2024, 2024-2025 ஆகிய முந்தைய திமுக ஆட்சி காலங்களில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தாக்கல் செய்த அதிகாரப்பூர்வ கொள்கை விளக்க குறிப்புகளில் நேரு மற்றும் அம்பேத்கர் பெயர்கள் எங்குமே இடம்பெறவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.</p><h2>உங்கள் சமூக நீதி?</h2><p>அந்த காலகட்டத்தில் நீங்களும் சட்டமன்ற உறுப்பினராகத்தானே இருந்தீர்கள்? அப்போதெல்லாம் உங்கள் துறை அமைச்சர் சட்டமன்றத்தில் கொள்கை விளக்க குறிப்பை படிக்கும்போது அவையிலேயே தூங்கி கொண்டு இருந்தீர்களா? ஆட்சி அதிகாரத்தில் இருந்த பல வருடங்களாக அம்பேத்கர் பெயரையும், நேருவின் பெயரையும் கொள்கை விளக்க குறிப்பில் சேர்க்காமல் திட்டமிட்டுப் புறக்கணித்தீர்களா? அப்போது எங்கே போனது உங்கள் சமூக நீதி? அன்று நீங்களே சமூக நீதி வரலாற்றையே இருட்டடிப்பு செய்து, சமூக நீதியின் வேர்களையே வெட்டத் துணிந்துவிட்டு, இப்போது வந்து வெட்கம், மானம், ரோஷம் என்று பேசுகிறீர்களே... அதே கேள்வியை நான் இப்போது உங்களிடம் திருப்பிக் கேட்கிறேன்-இன்று இதையெல்லாம் பற்றிப் பேசும் உங்களுக்கு வெட்கம், மானம், ரோஷம், சொரணை எதுவும் துளியாவது இருக்கிறதா?</p><h2>கபட நாடகம்</h2><p>2026 தேர்தல் நேரத்தில் மட்டும் திடீரென அரசியல் லாபத்திற்காகவும் கூட்டணி கணக்குகளுக்காகவும் மெய்யநாதன் மூலமாக பெயர்களை சேர்த்த உங்கள் கபட நாடகத்தை மக்கள் அறியாதவர்களா? இந்த முறை திமுகவில் உங்களுக்கு எம்.எல்.ஏ சீட் கூட கிடைக்காத விரக்தியா, இல்லை 'நல்லா கூவி பேசுனாத்தான் அடுத்த முறையாவது சீட் தருவோம்' என்று அறிவாலயம் சொல்லிவிட்டதா என்று தெரியவில்லை.</p><h2>அரசியல் நாடகம்</h2><p>சத்தியமூர்த்தி பவனை பற்றி குறை பேசவும், பெயர் மாற்றச் சொல்லவும் உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? அன்று நேருவையும் அம்பேத்கரையும் வசதியாக மறந்துவிட்டு, இன்று தேர்தல் தோல்வி பயத்தில் மட்டும் அவர்களை கையில் எடுக்கும் உங்கள் ‘அறிவாலயத்தின்’ பெயரை என்னவென்று மாற்ற போகிறீர்கள் என்று முதலில் சொல்லுங்கள். மக்கள் வழங்கிய புதிய மாற்றத்தை ஜீரணிக்க முடியாமல், சொந்த கட்சியின் இரட்டை வேடத்தை மறைத்துவிட்டு பிறர் மீது பழிபோடும் இந்த மலிவான அரசியல் நாடகம் இனியும் எடுபடாது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரத்தில் மாற்றம்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/change-in-departure-time-of-chennai-howrah-express-train</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/change-in-departure-time-of-chennai-howrah-express-train#comments</comments><guid isPermaLink="false">b531f4c6-5d8a-4a4e-9acb-301e8c37bed6</guid><pubDate>Sun, 30 Aug 2026 10:33:40 +0000</pubDate><atom:updated>2026-08-30T10:33:40.294Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,West Bengal,மேற்கு வங்கம்,ஹவுரா,Howrah</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/p11kvp65/rail.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/p11kvp65/rail.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட பெடபரியா–நாயுடுபேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள 237-வது பாலத்தில், தற்போதுள்ள இரும்பு பாலத்தை அகற்றி கான்கிரீட் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி, சில ரெயில்களின் சேவை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.</p><h2>1 மணி நேரம் தாமதம்</h2><p>சென்னை சென்ட்ரல் – மேற்கு வங்க மாநிலம் ஹவுரா இடையே இயக்கப்படும் 12840-வது எண் எக்ஸ்பிரஸ் ரெயில், ஆகஸ்ட் 31, செப்டம்பர் 3 மற்றும் 10-ம் தேதிகளில் மாலை 7 மணிக்கு பதிலாக இரவு 8 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும். இதனால் ரெயில் புறப்படும் நேரம் 1 மணி நேரம் தாமதமாகும்.</p><h2>2 மணி நேரம் தாமதம்</h2><p>இதேபோல், செப்டம்பர் 5 மற்றும் 12-ம் தேதிகளில் புறப்பட வேண்டிய 12840-வது எண் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை </a>சென்ட்ரல்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில், மாலை 7 மணிக்கு பதிலாக இரவு 9 மணிக்கு புறப்படும். அன்று ரெயில் சேவை 2 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும்.</p><h2>பயணிகள் கவனிக்க வேண்டுகோள்</h2><p>பாலம் மாற்றும் பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், மேற்கண்ட தேதிகளில் பயணம் செய்யும் பயணிகள் மாற்றப்பட்ட ரெயில் புறப்படும் நேரத்தை கவனத்தில் கொண்டு பயணத்தை திட்டமிடுமாறு ரெயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வளர்ந்த பாரதம்; போதைப்பொருள் இல்லாத பாரதம்! - நயினார் நாகேந்திரன் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-developed-bharat-a-drug-free-bharat-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-developed-bharat-a-drug-free-bharat-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">6acb1e24-2c29-4b2d-b2de-ca062c8204d1</guid><pubDate>Sun, 30 Aug 2026 09:58:26 +0000</pubDate><atom:updated>2026-08-30T09:58:26.323Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Man Ki Baat,மனதின் குரல் நிகழ்ச்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/ly072pj9/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/ly072pj9/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>மனதின் குரல் நிகழ்ச்சி</h2><p>நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியின் இன்றைய 137-வது அத்தியாயமானது, தேசிய உணர்வு, சமூக அக்கறை, இளைஞர் நலன், பெண்கள் முன்னேற்றம், தற்சார்பு பொருளாதாரம் உள்ளிட்ட பல நல்ல தகவல்களை உள்ளடக்கிய கலவையாக இருந்தது. </p><p>தேசிய கைத்தறி தினம், சுதந்திர தினம், தேசிய விண்வெளி தினம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் துவங்கப்பட்ட நாள், பிரிவினை கொடுமைகள் நினைவு நாள் உள்ளிட்டவைகளை கொண்ட இந்த ஆகஸ்ட் மாதம், ஒவ்வொரு இந்திய குடிமகனின் நெஞ்சிலும் தேசிய உணர்வை விதைப்பதாகவும், “வந்தே மாதரம்” பாடல் உருவாக்கப்பட்டு இந்த ஆண்டுடன் 150 ஆண்டுகள் நிறைவடைந்ததையும் குறிப்பிட்டுப் பேசினார் நமது பாரதப் பிரதமர். மேலும், “ஹர் கர் திரங்கா” மற்றும் “சூர்யபத் திரங்கா” உள்ளிட்ட பிரசாரங்கள் உலகெங்கிலும் உள்ள இந்தியர்களின் மத்தியில் தேசப்பற்றையும் ஒற்றுமையுணர்வையும் வலுப்படுத்தி உள்ளதாகவும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். </p><h2>போதைப்பொருள் இல்லாத பாரதம்</h2><p>அதுமட்டுமன்றி, இளைஞர்களின் எதிர்காலத்தையும், நமது சமூகக் கட்டமைப்பையும் முற்றிலுமாக சீர்குலைக்கும் போதைப்பொருளுக்கு எதிராக, நமது மத்திய அரசால் முன்னெடுக்கப்பட்ட “வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான, போதைப்பொருள் இல்லாத இளைஞர்கள்” என்ற பிரசாரத்தில், இளைஞர்கள் அதிதீவிரமாக தங்களை இணைத்துக் கொள்வதை பெருமிதத்துடன் குறிப்பிட்டார் நமது பாரதப் பிரதமர். அதுமட்டுமன்றி, போதைப்பொருளின் ஆபத்துக்களை எடுத்துரைத்து, போதைப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் அனைவரும் உதவ முன்வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.</p><p>மேலும், நாடு முழுவதிலுமுள்ள 35 லட்சம் பெண் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தொழில் முனைவோர்கள்</a> தங்கள் தொழில்களை மேலும் விரிவாக்க உதவும் “PM ஸ்வநிதி யோஜனா” திட்டம் குறித்தும், எந்த ஆண்டில் எந்தப் பகுதியை யார் ஆண்டார்கள் என்பதை துல்லியமாக விளக்கும் http://bharatrajya.com என்ற இணையதளம் குறித்தும் விரிவாகப் பேசிய நமது பாரதப் பிரதமர், பண்டிகை காலங்களில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதிலும், நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதிலும் மக்கள் கூடுதல் ஆர்வம் காட்ட வேண்டும் என நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.</p><h2>தேசத்திற்கு கிடைத்த வரம்!</h2><p>மொத்தத்தில் இன்றைய மனதின் குரல் நிகழ்ச்சியானது, நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இந்நாட்டின் மீதும் நாட்டு மக்கள் மீதும் கொண்டுள்ள அளவற்ற அன்பின் வடிகாலாக இருந்ததை நம்மால் உணர முடிந்தது. நாட்டின் ஒவ்வொரு அசைவையும் உற்று நோக்கி, மக்களின் ஒவ்வொரு உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் நரேந்திர மோடி, தேசத்திற்கு கிடைத்த வரம்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கும்பகோணம்: பேருந்து நிலையத்தில் வாலிபர் தீக்குளிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-attempts-self-immolation-kumbakonam-bus-stand</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-attempts-self-immolation-kumbakonam-bus-stand#comments</comments><guid isPermaLink="false">cabebb75-2c93-430f-84c5-e7b1ddbfe367</guid><pubDate>Sun, 30 Aug 2026 09:44:53 +0000</pubDate><atom:updated>2026-08-30T09:44:53.142Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வாலிபர்,தீக்குளிப்பு,பேருந்து நிலையம்,bus stand,கும்பகோணம்,Kumbakonam,A young man</media:keywords><media:content height="768" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/lqney1xo/sumanraj.jpg" width="1366"><media:title type="html"><![CDATA[ சுமன் ராஜ்]]></media:title><media:description type="html"><![CDATA[ கும்பகோணம்: பேருந்து நிலையத்தில் வாலிபர் தீக்குளிப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/lqney1xo/sumanraj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கும்பகோணம், </p><p>தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் கண் முன்னே வாலிபர் ஒருவர் திடீரென <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற</a> சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>சுமன் ராஜ் ஒரு தலை காதல்</h2><p> கேரள மாநிலம் காசர்கோட்டைச் சேர்ந்தவர் சுமன் ராஜ் (வயது 28). இவர் அங்கு உடற்பயிற்சிக்கூடம் நடத்தி வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கும்பகோணம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் பணிபுரியும் பெண் ஒருவரை சுமன் ராஜ் தீவிரமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த பெண் இவருடைய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">காதலை</a> ஏற்க மறுத்ததோடு, தனக்கு வேறொரு நபருடன் திருமணம் நிச்சயமாகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.</p><h2>மக்களை உலுக்கிய அலறல் சத்தம்</h2><p> இதனால் கடும் மனமுடைந்த சுமன் ராஜ், இன்று காலை கும்பகோணம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். திடீரென தான் மறைத்து வைத்திருந்த எரிபொருளை உடல் மீது ஊற்றிக்கொண்டு தீ வைத்து கொண்டார். உடல் கருகி அவர் அலறியதை கண்டு அதிர்ச்சியடைந்த பேருந்து நிலைய பொதுமக்களும், அங்கிருந்த புறக்காவல் நிலைய போலீசாரும் ஓடிவந்து தீயை அணைத்து அவரை மீட்டனர். </p><h2>மருத்துவமனையில் தீவிர சிகிச்சை</h2><p>பலத்த தீக்காயமடைந்த சுமன் ராஜ், உடனடியாக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பொது இடத்தில் அரங்கேறிய இந்த தற்கொலை முயற்சி குறித்து கும்பகோணம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, காதல் விவகாரம் மற்றும் பொது பாதுகாப்பு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை ஐசிஎப்-பில் தயாரிக்கப்பட்ட 2 அம்ரித் பாரத் ரெயில்கள் தெற்கு ரெயில்வேயிடம் ஒப்படைப்பு..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-amrit-bharat-trains-manufactured-at-chennais-icf-handed-over-to-southern-railway</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-amrit-bharat-trains-manufactured-at-chennais-icf-handed-over-to-southern-railway#comments</comments><guid isPermaLink="false">66715a31-60cb-43d8-b96c-79b5b14004e8</guid><pubDate>Sun, 30 Aug 2026 09:41:48 +0000</pubDate><atom:updated>2026-08-30T09:41:48.738Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,தெற்கு ரெயில்வே,Southern Railway,அம்ரித் பாரத் ரெயில்,Amrit Bharat,அம்ரித் பாரத்,Amrit Bharat train</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/zifmuyso/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/zifmuyso/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை ஐ.சி.எப்.-ல் தயாரிக்கப்பட்ட 2 புதிய அம்ரித் பாரத் ரெயில்கள் தெற்கு ரெயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த ரெயில்களை தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் கோவை வழித்தடங்களில் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><h2>130 கி.மீ. வேகத்தில் இயக்கம்</h2><p>சென்னை ஐ.சி.எப்.-ல் தற்போது வந்தே பாரத், அம்ரித் பாரத் உள்ளிட்ட பல்வேறு வகையான ரெயில்கள் தயாரிப்பில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரெயிலுக்கு இணையான வேகம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் அம்ரித் பாரத் ரெயில்கள் 'புஷ்-புல்' தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படுகின்றன.</p><p>இந்த ரெயிலின் இருபுறங்களிலும் என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளதால், மணிக்கு 130 கி.மீ. வேகம் வரை இயக்க முடியும். ஒரே நேரத்தில் 1,834 பயணிகள் பயணம் செய்யும் வகையில், 12 முன்பதிவு பெட்டிகள் உள்பட மொத்தம் 22 எல்.எச்.பி. பெட்டிகள் இதில் இடம்பெற்றுள்ளன.</p><h2>தமிழகத்தில் இயக்க பயணிகள் கோரிக்கை</h2><p>இந்நிலையில், ஐ.சி.எப்.-ல் சமீபத்தில் தயாரிக்கப்பட்ட 2 அம்ரித் பாரத் ரெயில்கள் தெற்கு ரெயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த ரெயில்களை தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கும், கோவை வழித்தடத்திலும் இயக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.</p><h2>‘ஏசி’ வசதி இல்லாததால் கட்டணம் குறையும்</h2><p>இதுகுறித்து தெற்கு ரெயில்வே பயனாளர் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜாபர் அலி கூறியதாவது:</p><p>நாடு முழுவதும் தற்போது 30 வழித்தடங்களில் 60 அம்ரித் பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரெயிலுக்கு இணையான வேகம் மற்றும் வசதிகளுடன் 2 புதிய ரெயில்கள் தெற்கு ரெயில்வேயிடம் வழங்கப்பட்டுள்ளன.</p><p>இந்த ரெயில்களில் 12 முன்பதிவு பெட்டிகள் உள்ளன. இதில் 'ஏசி' பெட்டிகள் இடம்பெறவில்லை. இதனால் சாதாரண முன்பதிவு கட்டணத்தில் அதிகமான பயணிகள் பயணம் செய்ய முடியும். புதிய அம்ரித் பாரத் ரெயில்களை தமிழகத்துக்குள் இயக்குவது தொடர்பாக ரெயில்வே நிர்வாகத்திடம் பரிந்துரை செய்யப்படும்.</p><h2>மேம்படுத்தப்பட்ட புதிய பெட்டிகள் தயாரிப்பு</h2><p>மேலும், அம்ரித் பாரத் ரெயில்களில் கணிசமான அளவில் 'ஏசி' பெட்டிகள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட புதிய வகை பெட்டிகளும் ஐ.சி.எப்.-ல் தயாரிக்கப்பட்டு வருகின்றன.</p><p>இந்த புதிய பெட்டிகளில் தரை, இருக்கை மற்றும் படுக்கைகளில் ரெக்சின், சிற்றுண்டி மேசைகள், திரைச்சீலைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன. பயணிகளை கவரும் வகையில் நவீன உள்அலங்காரமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த புதிய வகை<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> அம்ரித் பாரத்</a> ரெயில்களையும் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பெரியார், அம்பேத்கர், நேரு பெயர்கள் நீக்கம்: காரணத்தை தமிழக அரசு விளக்க வேண்டும் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/removal-of-names-of-periyar-ambedkar-nehru-tamil-nadu-government-should-explain-the-reason-communist-party-of-india</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/removal-of-names-of-periyar-ambedkar-nehru-tamil-nadu-government-should-explain-the-reason-communist-party-of-india#comments</comments><guid isPermaLink="false">7e02d7d3-2627-4360-82c7-3db9d15e1ece</guid><pubDate>Sun, 30 Aug 2026 09:04:17 +0000</pubDate><atom:updated>2026-08-30T09:04:17.045Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,Communist Party of India,Tamil Nadu Government,தமிழக அரசு,மு.வீரபாண்டியன்,M Veerapandian</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/c8xc876a/veerapandian.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/c8xc876a/veerapandian.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பண்டிட் ஜவஹர்லால் நேரு பெயர்கள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் நீக்கப்பட்டதன் காரணத்தை தமிழ்நாடு அரசு விளக்க வேண்டும். இது குறித்து , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D">மு.வீரபாண்டியன் </a>வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பேட்டில், இடஒதுக்கீடு மற்றும் சமூகநீதி வரலாற்றைக் கூறும் பகுதியில் இடம் பெற்றிருந்த தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், மற்றும் பண்டிட் ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன. இது கடும் கண்டனத்திற்கு உள்ளானது. கண்டனக் கணைகளின் தாக்கத்திற்குப் பிறகு, தற்பொழுது அத்தலைவர்களின் பெயர்கள் குறிப்பேட்டில் சேர்க்கப்படும் என அமைச்சர் வி.சம்பத்குமார் கூறியுள்ளார். எனினும் , இதற்குக் காரணமானவர்கள் யார் என்ற கேள்விக்கு விடை அளிக்கப்படவில்லை.</p><h2>மதச்சார்பின்மை கொள்கை</h2><p>தந்தை பெரியார்,டாக்டர் அம்பேத்கர் , நவீன இந்தியாவின் சிற்பி ஜவஹர்லால் நேரு ஆகியோர் மதச்சார்பின்மை கொள்கையில் உறுதியாக நின்றவர்கள் ஆவர். பிற்போக்குத் தனங்களை, இந்துத்துவ மதவெறி அரசியலை ,வகுப்புவாதத்தை வாழ்நாள் முழுவதும் எதிர்த்துப் போராடியவர்கள் ஆவர். நவீன இந்தியாவை உருவாக்குவதில் மகத்தான பங்களிப்பை தத்தம் வழிகளில் செலுத்தியவர்கள் ஆவர். அவர்களை சமூக நீதிக்காகப் போராடியவர்கள் என்று மட்டுமே  பார்த்து விட முடியாது.  அதற்கும் மேலாக உண்மையான சுதந்திரம் ,சமத்துவம் ,சகோதரத்துவம் என்ற உன்னதக் கோட்பாட்டை இந்திய மண்ணில்  நடைமுறைப்படுத்த வேண்டும் என அயராது பாடுபட்டவர்கள் ஆவர் .</p><p>அப்படிப்பட்ட மகத்தானத் தலைவர்களின் பெயர்கள்  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பேட்டிலிருந்து நீக்கப்பட்டது  என்பதை, தற்செயலானதாக, சாதாரண ஒரு தவறாக பார்க்க முடியாது. அதை ஒரு திட்டமிட்டச் செயலாகவே கருதவேண்டியுள்ளது. இந்த மாபெரும் தலைவர்களின் பெயர்கள் இந்துத்துவா சக்திகளுக்கு, மத அடிப்படை வாதிகளுக்கு ,பிற்போக்குச் சக்திகளுக்கு எப்பொழுதுமே எட்டிக்காய் போன்று கசப்பதாகும். அவர்கள் மீது வெறுப்பு எனும் நெருப்பை இச்சக்திகள்  தொடர்ந்து அள்ளி வீசுகின்றன. அத்தலைவர்களை இழிவு படுத்தி வருகின்றன.</p><h2>கடுமையான நடவடிக்கை</h2><p>எனவே , இந்நிலையில், இத்தலைவர்கள்  பெயர்கள் ஏன் நீக்கப்பட்டன? இந்த நீக்கத்துக்குப் பின்னால்  உள்ள சக்திகள் எவை ?  என்பவை குறித்து முழுமையான ,நேர்மையான விசாரணையை தமிழ்நாடு அரசு நடத்த வேண்டும். இத்தலைவர்களின் பெயர் நீக்கத்திற்குக் காரணமானவர்களை கண்டறித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென ,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு , தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கரூர் மக்களின் குடிநீர் நெருக்கடிக்கு உடனடி தீர்வு வேண்டும் - ஜோதிமணி எம்.பி. கோரிக்கை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/immediate-solution-needed-for-the-drinking-water-crisis-faced-by-the-people-of-karur-mp-jothimanis-demand</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/immediate-solution-needed-for-the-drinking-water-crisis-faced-by-the-people-of-karur-mp-jothimanis-demand#comments</comments><guid isPermaLink="false">597b0126-402a-4c41-b565-37f4d28fb13e</guid><pubDate>Sun, 30 Aug 2026 08:51:15 +0000</pubDate><atom:updated>2026-08-30T08:51:15.080Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர்,Karur,ஜோதிமணி,ஜோதிமணி எம்.பி.,Jothimani,jothimani mp</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/mqedzzb3/jothimani-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/mqedzzb3/jothimani-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>உரிய அளவு நீரை அமராவதி அணையிலிருந்து கரூர் மாவட்டத்திற்கு உடனடியாக  திறந்து விட வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>குடிநீர் நெருக்கடி</h2><p>கரூர் மாவட்ட மக்கள் இன்று மிகக் கடுமையான குடிநீர் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். இதுவரை கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக அமராவதி அணையிலிருந்து உரிய அளவில் ஒரு முறைகூட நீர் திறக்கப்படவில்லை.</p><p>மழையின்றி விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு நிற்கும் நிலையில், குடிநீருக்கே மக்கள் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த அவசர நிலையை கருத்தில் கொண்டு, நீர்வளத்துறையிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், விவசாயிகள் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது.</p><p>மதுரை உயர்நீதிமன்றம், கரூர் மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு 29.08.2026 அன்று  அமராவதி அணையிலிருந்து படிப்படியாக 10 நாட்களுக்கு நீர் திறக்க உத்தரவிட்டது. அதன்படி,</p><h2>10 நாட்களுக்கு நீர் திறப்பு</h2><p>முதல் நாள் - 3,000 கனஅடி இரண்டாம் நாள் - 3,000 கனஅடி மூன்றாம் நாள் - 2,000 கனஅடி நான்காம் நாள் - 2,000 கனஅடி ஐந்தாம் நாள் - 1,500 கனஅடி ஆறாம் நாள் - 1,500 கனஅடி ஏழாம் நாள் - 1,000 கனஅடி எட்டாம் நாள் - 1,000 கனஅடி ஒன்பதாம் நாள் - 750 கனஅடி பத்தாம் நாள் - 750 கனஅடி என்ற முறையில் நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>ஆனால், தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்டுள்ள அரசாணையில், தினமும் 1,000 கனஅடி வீதம் மட்டுமே நீர் திறப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>நீதிமன்றம் முதல் இரண்டு நாட்களிலேயே 3,000 கனஅடி வீதம் நீர் திறக்க உத்தரவிட்டுள்ள நிலையில், அரசு தற்போது 1,000 கனஅடி என்ற அளவில் நீர் திறப்பது கரூர் மக்களின் அவசர குடிநீர் தேவையை நிறைவேற்றாது.</p><h2>குடிநீருக்கான அவசர நிலை</h2><p>ஏற்கனவே நீர் கிடைக்காமல் தவிக்கும் கரூர் மக்களுக்கு இது மீண்டும் ஒரு அநீதியாக அமையும். 1,000 கனஅடி நீர் திறப்பதால் கரூர் மாவட்டத்திற்கு தேவையான அளவு நீர் சென்றடையாது. காவிரியில் மட்டுமல்ல கடைமடைப் பகுதியில் இருக்கும் கரூர் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் அமராவதியிலும் தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருவது ஏற்புடையதல்ல. நாங்கள் கேட்பது கரூர் மாவட்டத்திற்கு உரிமையுள்ள நீர்ப்பகிர்வை மட்டுமே.</p><p>கரூர் மாவட்டத்தில் குடிநீருக்கான அவசர நிலையை அரசு புரிந்துகொள்ள வேண்டும். <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">முதல்-அமைச்சர் </a>ஜோசப் விஜய் உடனடியாகத் தலையிட்டு, உயர்நீதிமன்ற உத்தரவின்படி புதிய அரசாணை வெளியிட்டு, உரிய அளவு நீரை அமராவதி அணையிலிருந்து கரூர் மாவட்டத்திற்கு உடனடியாக திறந்து விட வேண்டும். கரூர் மக்களின் குடிநீர் உரிமையை பாதுகாக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்ட மக்கள் 3-வது நாளாக புகார்: திணறும் போலீசார் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/victims-of-online-fraud-file-complaints-for-the-third-consecutive-day-police-struggle-to-cope</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/victims-of-online-fraud-file-complaints-for-the-third-consecutive-day-police-struggle-to-cope#comments</comments><guid isPermaLink="false">f09b8675-db4e-4e2b-a0bf-898be8bb47e2</guid><pubDate>Sun, 30 Aug 2026 08:16:26 +0000</pubDate><atom:updated>2026-08-30T08:16:26.981Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,police,தமிழகம்,ஆன்லைன் மோசடி,Melur,மேலூர்,online scam,போலீசார்,புகார் மனுக்கள்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/mp82km55/badriu.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/mp82km55/badriu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மேலூர், </p><p>மேலூர் பகுதியில் ஆன்லைன் செயலி மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் புகார் அளிக்க குவிந்தனர்.</p><h2>ஆன்லைன் செயலியில் மோசடி</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/madurai">மதுரை</a> மாவட்டம் மேலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பொதுமக்களிடம் பலர், எப்.கியூ..எல். நிறுவனம் என்ற நிதி நிறுவனம் சார்பில் செல்போன் செயலிகள் மூலம் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக நேரில் வந்து ஆசைவார்த்தை கூறியுள்ளனர். குறிப்பாக பெண்களிடம் பேசினர். </p><p>இதற்காக ஏஜெண்டுகள் செயல்பட்டனர். இந்த செயலிகளை நம்பி ஆயிரக்கணக்கானோர் கடன் வாங்கி முதலீடு செய்தனர். ஆனால் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு பணத்தை இரட்டிப்பு செய்து தரவில்லை என கூறப்படுகிறது.</p><h2>போராட்டம்</h2><p>இதனால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று முன்தினம் மேலூரில் மதுரை- சென்னை நான்கு வழிச்சாலையில் 4 மணி நேரம் மறியல் போராட்டம் நடத்தினர். மற்றொரு இடத்திலும் பெருமளவில் திரண்டு போராட்டம் நடத்தினர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.</p><h2>25 ஆயிரம் பேர் மனு</h2><p>இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் நேரடி மேற்பார்வையில் நேற்று 3 இடங்களில் பொதுமக்கள் புகார் அளிக்க சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, செட்டியார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, வெள்ளலூர் நாடு கோட்டநத்தம்பட்டி ஆகிய பகுதிகளில் முகாம் நடந்தது.</p><p>இதில் மேலூரில் நடந்த முகாமில் 18,500-க்கும் மேற்பட்ட மனுக்களும், செட்டியார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முகாமில் 1,450-க்கும் மேற்பட்ட மனுக்களும், வெள்ளலூர்நாடு கோட்டனத்தம்பட்டி தனியார் திருமண மண்டப முகாமில் <strong>3 ஆயிரத்திற்கும்&nbsp;</strong>மேற்பட்ட மனுக்களும் பொதுமக்கள் அளித்தனர். </p><p>குறிப்பாக ஆயிரக்கணக்கான பெண்கள் வரிசையாக நின்று புகார் அளித்தனர். நேற்று ஒரே நாளில் இந்த முகாம்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் புகார் மனுக்கள் அளித்துள்ளனர். இவ்வாறு பெறப்பட்ட புகார் மனுக்களை கட்டுக்கட்டாக மலை போல போலீசார் அடுக்கி வைத்திருந்தனர்.</p><h2>கூட்டம் கூட்டமாக</h2><p>இந்நிலையில் <a href="https://www.dailythanthi.com/topic/madurai">மதுரை</a>, மேலூரை சுற்றியுள்ள பகுதிகளில் ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் 3வது நாளாக இன்றும் புகார் கொடுக்க கூட்டம் கூட்டமாக வருகை தந்த வண்ணம் உள்ளனர்.  இதனால் போலீசார் திணறி வருகின்றனர். </p><p>இன்று மட்டும் இதுவரை 1,200 பேர் தங்களது புகார் மனுக்களை அளித்துள்ள நிலையில், தலா ரூ.5 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளதாக புலம்பி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை மீண்டும் வழங்க வேண்டும்: திருமாவளவன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/security-previously-provided-to-mk-stalin-must-be-restored-thirumavalavan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/security-previously-provided-to-mk-stalin-must-be-restored-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">397d239a-00ba-4123-8da1-fbb41f0fa8ba</guid><pubDate>Sun, 30 Aug 2026 08:00:34 +0000</pubDate><atom:updated>2026-08-30T08:00:34.935Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,M.K.Stalin,திருமாவளவன்,Thirumavalavan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/rui25kn8/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/rui25kn8/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>திருச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>சட்டசபை கொள்கை விளக்கக் குறிப்பேடுகளில் வழக்கமாக இடம்பெறும் புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் மற்றும் பண்டித ஜவஹர்லால் நேரு போன்ற மாபெரும் தலைவர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளது இது உள்நோக்கத்தோடு நடந்துள்ளதா என கேள்வி எழுகிறது. இதற்குப் பொறுப்புள்ள அதிகாரிகளும், அமைச்சர்களும் உரிய விளக்கத்தை அளிப்பார்கள் என்று நம்புகிறேன். </p><p>இனி வரும் காலங்களில் அது போன்ற பிழைகள் நடைபெறாத வகையில் பார்த்து கொள்ள வேண்டும். முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டது ஏற்புடையதல்ல; இதுவரை வழங்கி வந்த பாதுகாப்பை அவருக்கு வழங்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.</p><p>தவெக தலைமையிலான இந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் தலித் மக்களுக்கு இன்னும் பல சட்டப்பூர்வ உரிமைகள் நிறைவேற்றப்பட வேண்டி உள்ளன. குறிப்பாக, வன்கொடுமை தடுப்புச் சட்டம் இந்தியா முழுவதும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்ற அதிகாரிகளின் கருத்துக்களால் பல நல்ல திட்டங்கள் முடங்குகின்றன. ஆட்சியாளர்கள் விரும்பினாலும் அதிகாரிகள் சில இடங்களில் முட்டுக்கட்டை போடுகின்றனர்.</p><p>தற்போதைய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் தோழமைக் கட்சியாக, தலித் மக்களின் மேம்பாட்டிற்காக அரசு செய்ய வேண்டிய அவசியமான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை அவ்வப்போது சுட்டிக்காட்டியும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் உரிய தீர்வுகளைப் பெற விசிக தொடர்ந்து குரல் கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>அமைச்சர் மரிய வில்சனின் எம்.எல்.ஏ. சான்றிதழை திரும்ப பெற வேண்டும்-தேர்தல் கமிஷனுக்கு வக்கீல் நோட்டீஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-maria-wilsons-mla-certificate-must-be-revoked-legal-notice-sent-to-the-election-commission</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-maria-wilsons-mla-certificate-must-be-revoked-legal-notice-sent-to-the-election-commission#comments</comments><guid isPermaLink="false">5902f7c8-f33a-4ac8-85a8-46cf563a710b</guid><pubDate>Sun, 30 Aug 2026 07:48:35 +0000</pubDate><atom:updated>2026-08-30T07:48:35.474Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Election Commission,தேர்தல் கமிஷன்,chennaihighcourt,வக்கீல் நோட்டீஸ்,மரிய வில்சன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/rg3028kk/maria-wislon.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/rg3028kk/maria-wislon.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தன்னுடைய கல்வி நிறுவனத்துக்காக லஞ்சம் கொடுத்ததாக சட்டசபை யில் பேசிய அமைச்சர் மரிய வில்சன் மீது ஊழல் வழக்குப்பதிவு செய்வதுடன், அவருடைய எம்.எல்.ஏ. சான்றிதழை திரும்ப பெற வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கும், லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  இந்திய தேர்தல் கமிஷனர், தமிழ்நாடு மாநில தேர்தல் கமிஷனர், மாநில தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீஸ் இயக்குனர் ஆகியோருக்கு சென்னை ஐகோர்ட்டு வக்கீல் சி.ஜெனிபர் என்பவர் தன் வக்கீல் பி.விஜயேந்திரன் மூலம் அனுப்பியுள்ள வக்கீல் நோட்டீசில் கூறியிருப்பதாவது:-</p> <p>தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் த.வெ.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மரிய வில்சன். இவர், தற்போது மாநில நிதி அமைச்சராக உள்ளார். சமீபத்தில் சட்டசபையில் அவர் பேசும்போது தனது கல்வி நிறுவனத்துக்கு அனுமதி தொடர்பாக முன்னாள் அமைச்சருக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளார். இது அரசியலமைப்புக்கு எதிரானது மட்டுமல்லாமல் ஊழல் தடுப்பு சட்டத்தின்படி குற்றமாகும் எனவே, அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும்.</p> <p>அவர் அமைச்சராக பதவியேற்றபோது எடுத்த பதவி பிரமாணத்திற்கு முரணாகவும், தேர்தல் ஜனநாயகத்திற்கு விரோதமாகவும் செயல்பட்டுள்ளார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியின் பதவியை திரும்ப பெற முடியாது. அதேநேரத்தில் அவர் தேர்தலில் வெற்றி பெற்று தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்வானதற்காக வழங்கப்பட்ட சான்றிதழை திரும்ப பெற தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது.எனவே, அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் கோர்ட்டு வாயிலாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மேகதாது அணைக்கு அவசரம் காட்டும் கர்நாடகா: தமிழக அரசு காவிரி உரிமையை இழக்கக் கூடாது - அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/karnataka-shows-urgency-for-mekedatu-dam-tamil-nadu-government-must-not-lose-its-cauvery-rights-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/karnataka-shows-urgency-for-mekedatu-dam-tamil-nadu-government-must-not-lose-its-cauvery-rights-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">7b204ffe-d1f9-41bc-b1fb-76b2be1ceb72</guid><pubDate>Sun, 30 Aug 2026 07:42:10 +0000</pubDate><atom:updated>2026-08-30T07:42:10.744Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK,தமிழகம்,மேட்டூர் அணை,Mettur dam,Karnataka,கர்நாடகா,தமிழக அரசு,TN govt,AnbumaniRamadoss</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/6u51mjda/tnmere.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/6u51mjda/tnmere.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மேகதாது அணை கட்டப்பட்டால், அதில் தேக்கி வைக்கப்படும் நீரை கர்நாடகம் பயன்படுத்தும். அதனால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கிடைக்காது என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். </p><h2>மேகதாது அணை</h2><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: -</p><p>காவிரி ஆற்றின் குறுக்கே <a href="https://www.dailythanthi.com/topic/mekedatu">மேகதாது அணை</a> கட்டுவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்றும், மேகதாது அணையை கட்டுவதற்கான அனுமதி கோரி மத்திய அரசை கர்நாடக அரசு விரைவில் அணுக இருப்பதாகவும், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக மக்கள் மத்தியிலும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இடையேயும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அணையை கட்ட கர்நாடக அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கது.</p><p>கர்நாடக மாநிலம் மைசூர் நகரில் நேற்று நடைபெற்ற சுத்தூர் மடத்தின் மறைந்த ஆதீனம் ஸ்ரீ இராஜேந்திர சுவாமிகளின் 111ஆம் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றுப் பேசிய டி.கே.சிவக்குமார் அவர்கள், "கர்நாடக மாநில விவசாயிகளின் நலனுக்கு கிருஷ்ணராஜசாகர் அணை எந்த அளவுக்கு உதவியதோ, அதேபோல் மேகதாது அணையும் உதவும். மேகதாது அணை தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டு அண்மையில் அளித்த தீர்ப்பு கர்நாடகத்திற்கு சாதகமாக இருப்பதால், அதன்படி அணை கட்ட அனுமதி அளிக்கும்படி மத்திய அரசை கர்நாடக அரசு கோர உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.</p><h2>தண்ணீர் கிடைக்காது</h2><p>கர்நாடக முதல்-மந்திரியின் கூற்றுப்படி இரு விஷயங்கள் அம்பலமாகியுள்ளன. முதலாவது மேகதாது கர்நாடக உழவர்களை மேலும் வலிமைப்படுத்த உதவும் என்று அவர் கூறியிருப்பதன் மூலம், அதில் தேக்கி வைக்கப்படும் நீரை கர்நாடக அரசு, விவசாயத்திற்குப் பயன்படுத்த உள்ளது என்பது தெளிவாகிறது. </p><p><a href="https://www.dailythanthi.com/topic/mekedatu">மேகதாது அணையில்</a> தேக்கி வைக்கப்படும் நீரில் இருந்து குடிநீர் தேவைக்கு தவிர, பாசனத்திற்காக ஒரு வாளி நீரைக்கூட கர்நாடகம் எடுக்காது என்று இதுவரை கர்நாடக அரசு கூறி வந்த நிலைப்பாட்டுக்கு இது முற்றிலும் மாறாக உள்ளது. மேகதாது அணை கட்டப்பட்டால், அதில் தேக்கி வைக்கப்படும் நீரை கர்நாடகம் பயன்படுத்தும்; அதனால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கிடைக்காது என்று பாட்டாளி மக்கள் கட்சி கூறிவந்த குற்றச்சாட்டை கர்நாடக அரசின் இந்தப் புதிய நிலைப்பாடு உறுதி செய்துள்ளது.</p><h2>சுற்றுச்சூழலுக்கு ஆபத்து</h2><p>மேலும் குடிநீர் தேவைக்காக மட்டும் தான் மேகதாது அணையை கட்டப்போவதாக கூறிவந்த கர்நாடக அரசு, இப்போது அதன் நீரை பாசனத்திற்கும் பயன்படுத்தப்போவதாக கூறியிருப்பது மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள நோக்கங்களுக்கு எதிரானது. இந்த ஒற்றைக் காரணமே மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை நிராகரிப்பதற்கு போதுமானது. இதை மத்திய அரசின் கவனத்திற்கும், சுப்ரீம்கோர்ட்டின் கவனத்திற்கும் தமிழக அரசு கொண்டு செல்ல வேண்டும்.</p><p><a href="https://www.dailythanthi.com/topic/mekedatu">மேகதாது அணையின்</a> நீர்த்தேக்கப்பகுதி எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகமாக இருக்கும் என்பதும் கர்நாடக முதல்-மந்திரியின் உரை மூலம் தெரியவந்துள்ளது. மேகதாது அணையின் நீர்த்தேக்கப்பகுதி 5,000 ஹெக்டேர், அதாவது 12,500 ஏக்கராக இருக்கும் என்று கூறப்பட்டது. </p><p>ஆனால் நீர்த்தேக்கப் பகுதி 5,400 ஹெக்டேர், அதாவது 13,500 ஏக்கராக இருக்கும் என்று கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார். இதன் மூலம் விரிவான திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள 67 டிஎம்சியை விட அதிக நீரை மேகதாது அணையில் தேக்கி வைக்க முடியும். அதுமட்டுமின்றி மேகதாது அணை கட்டுவதால் சுற்றுச்சூழலுக்கும், வனவிலங்குகளுக்கும் ஏற்படும் ஆபத்து மிகவும் அதிகமாக இருக்கும். இதை அனுமதிக்கக் கூடாது.</p><h2>சுப்ரீம்கோர்ட்டு அனுமதியா..?</h2><p>கர்நாடகத்தின் முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் பதவியேற்ற நாளில் இருந்தே மேகதாது அணையை கட்டுவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறார். மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் பரிசீலிக்கலாம் என்று தான் சுப்ரீம்கோர்ட்டு கூறியிருக்கிறதே தவிர, மேகதாது அணையைக் கட்ட அனுமதி அளிக்கவில்லை. </p><p>ஆனால்,  <a href="https://www.dailythanthi.com/topic/mekedatu">மேகதாது அணையை</a> கட்ட சுப்ரீம்கோர்ட்டு அனுமதி அளித்துவிட்டதாக கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் அவர்கள் தொடர்ந்து பொய்யான பரப்புரை செய்து வருகிறார். இதை மறுத்து, உண்மை நிலையை நாட்டுக்கு தெரிவிக்க வேண்டிய தமிழக அரசோ, எதையும் செய்யாமல் அமைதியாக இருக்கிறது.</p><p>நேபாளத்தில் இமயமலையில் உருவாகியிருந்த ஏரிகள் உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அதேபோல், இயற்கை சீற்றங்களால் எதிர்காலத்தில் மேகதாது அணைக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், அதன்கீழ் பகுதியில் உள்ள தமிழக பகுதிகள் பேரழிவை சந்திக்கும் ஆபத்தும் உள்ளது.</p><h2>அலட்சியம் காட்டக்கூடாது</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/mekedatu">மேகதாது அணை</a> கட்டப்பட்டால், தமிழ்நாட்டிற்கு, குறிப்பாக, காவிரி பாசன மாவட்டங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் நினைத்துப்பார்க்க முடியாதவை. மேகதாது அணையை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வரும் நிலையில், தமிழ்நாடு அமைதியாக இருப்பது நல்லதல்ல. தமிழக அரசின் அலட்சியம் காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை தாரைவார்ப்பதாக அமைந்துவிடும்.</p><p>எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது. மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். இது குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய சித்தப்பா..  குண்டர் சட்டத்தில் கைது செய்த போலீசார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/uncle-who-impregnated-class-12-student-arrested-under-the-goondas-act</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/uncle-who-impregnated-class-12-student-arrested-under-the-goondas-act#comments</comments><guid isPermaLink="false">f371b0ce-a986-49a4-bc36-3367ca4893e0</guid><pubDate>Sun, 30 Aug 2026 07:10:58 +0000</pubDate><atom:updated>2026-08-30T07:10:58.917Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,கைது,arrest,Goondas act,குண்டர் சட்டம்,ராமநாதபுரம்,Ramanathapuram,பாலியல் பலாத்காரம்,sexual abuse</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/r64d13it/schi.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/r64d13it/schi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தொண்டி, </p><p>பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய சித்தப்பாவை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். </p><h2>பிளஸ்-2 மாணவி</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/ramanathapuram">ராமநாதபுரம்</a> மாவட்டம் திருவாடானை தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி, தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார். இவர் தேவகோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். மாணவி வசித்து வந்த வீட்டில் அவரது சித்தி குடும்பத்தினரும் வசித்து வந்தனர்.</p><h2>3 மாத கர்ப்பம்</h2><p>இந்தநிலையில் சம்பவத்தன்று அந்த மாணவியை அவருடைய சித்தப்பா மகேந்திரன் (வயது 39) பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் மாணவியின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் தேவகோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது மாணவி, 3 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. </p><h2>குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது</h2><p>இதுகுறித்த தகவலின் பேரில் ராமநாதபுரம் குழந்தைகள் நல அலுவலர்கள் உரிய விசாரணை நடத்தி திருவாடானை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மகேந்திரனை கைது செய்தனர். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஸ், இதுகுறித்து விசாரித்தார். </p><p>மாணவியை கர்ப்பமாக்கிய மகேந்திரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதைதொடர்ந்து அதற்கான உத்தரவை கலெக்டர் சிவகுரு பிரபாகரன் பிறப்பித்தார். இதையடுத்து மகேந்திரன், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.</p>]]></content:encoded></item><item><title>தீவிரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? - நயினார் நாகேந்திரன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-does-mustafa-shed-tears-when-terrorists-are-punished-nainar-nagendran-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-does-mustafa-shed-tears-when-terrorists-are-punished-nainar-nagendran-asks#comments</comments><guid isPermaLink="false">ffb44495-36cb-4f79-b5c3-06ecd89a27cb</guid><pubDate>Sun, 30 Aug 2026 06:50:00 +0000</pubDate><atom:updated>2026-08-30T06:50:00.808Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>terrorists,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,தீவிரவாதிகள்,Mustafa,முஸ்தபா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/urvfgcjh/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/urvfgcjh/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><p>தவெக சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா அண்மையில் 'அமரன்' திரைப்படம் குறித்து வெளியிட்டுள்ள கருத்துக்கள் அதிர்ச்சியையும், கடும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளன. பாரதத் தாயின் மண்ணைக் காக்கத் தன் இன்னுயிரைத் தியாகம் செய்த மேஜர்  முகுந்த் வரதராஜனின் வீர வரலாற்றைப் போற்றும் 'அமரன்' திரைப்படத்தை, ஏதோ ஒரு சமூகத்திற்கு எதிரானது போலச் சித்தரிக்க முயலும் முஸ்தபாவின் வஞ்சக அரசியல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.</p><p>பாகிஸ்தான் தீவிரவாதிகளைப் பற்றிய உண்மைக்கதையைப் படமாக எடுத்தால், அது எப்படி இஸ்லாமியர்களை இழிவுபடுத்துவதாக அமையும்?. ஒரு பயங்கரவாதி தண்டிக்கப்படுவதை முஸ்தபா ஏன் சகித்துக்கொள்ள மறுக்கிறார்?. பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்படுவதைக் கண்டு ஒரு இந்தியக் குடிமகனுக்கு மகிழ்ச்சிதான் ஏற்பட வேண்டுமே தவிர, முஸ்தபாவைப் போலக் கண்ணீர் வரக்கூடாது. உங்களது அனுதாபம் இந்திய ராணுவத்திற்கா அல்லது எல்லையைத் தாண்டி வரும் பயங்கரவாதிகளுக்கா?.</p><p>மேலும், முதல்-அமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'துப்பாக்கி' திரைப்படத்திலும் தீவிரவாதிகள் தொடர்பான காட்சிகளை நீக்க வைத்ததாகத் தம்பட்டம் அடித்துக்கொள்கிறார் முஸ்தபா. திரையில் தீவிரவாதி தண்டிக்கப்படுவதை ஒரு சமூகத்திற்கு எதிரானதாகக் காட்டி, தமிழகத்தின் அமைதியைச் சீர்குலைக்கத் துடிக்கும் முஸ்தபாவின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. </p><p>முஸ்தபா போன்றவர்களின் இத்தகைய நச்சுப் பேச்சுக்களை முதல்-அமைச்சர் விஜய் உடனடியாகக் கண்டிக்க வேண்டும். இல்லையெனில், இதுதான் தவெகவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்பதாக தமிழக மக்கள் புரிந்துகொள்வார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை: சுடுகாட்டில் ரவுடி வெட்டி கொலை - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-rowdy-hacked-to-death-in-crematorium-police-launch-net-to-nab-mysterious-persons</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-rowdy-hacked-to-death-in-crematorium-police-launch-net-to-nab-mysterious-persons#comments</comments><guid isPermaLink="false">dffd2d78-ac44-4a20-ae41-1aee3e457e10</guid><pubDate>Sun, 30 Aug 2026 06:49:44 +0000</pubDate><atom:updated>2026-08-30T06:49:44.848Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,murder,கொலை,Kelambakkam,போலீசார்,கேளம்பாக்கம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/iwjb2p1g/1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கொலை வழக்கில் சுடுகாட்டில் விசாரணை நடத்திய போலீசார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/iwjb2p1g/1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுடுகாட்டில் ரவுடியை வெட்டி கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p><h2>வெட்டி கொலை   </h2><p>சென்னை கேளம்பாக்கம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் ஒருவரின் சடலம் ரத்த வெள்ளத்தில் கிடந்தது. இதனை அந்த வழியே சென்றவர் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த கேளம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த நபரின் வெட்டு காயங்களை பார்த்ததும் வெட்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">கொலை</a> செய்யப்பட்டவர் யார் என்பது குறித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் ரவுடி சாஹூல் ஹமீது (வயது 29) என்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.</p><h2>போலீசார் விசாரணை </h2><p>மேலும் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்ட நபர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாகவும் தெரிவித்தனர். இந்த கொலை முன்விரோதம் காரணமாக நடந்ததா என்பதை <a href="https://www.dailythanthi.com/topic/போலீசார்">போலீசார் </a>பல்வேறு கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>