<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 20 Sep 2026 23:56:01 +0000</lastBuildDate><item><title>வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு:  முதல்-அமைச்சர் விஜய் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-preparedness-chief-minister-vijay-to-hold-consultations-with-officials-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-preparedness-chief-minister-vijay-to-hold-consultations-with-officials-today#comments</comments><guid isPermaLink="false">035ebe94-7194-4d8f-9f15-f048747d2ea8</guid><pubDate>Sun, 20 Sep 2026 23:52:56 +0000</pubDate><atom:updated>2026-09-20T23:52:56.981Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,முதல்-அமைச்சர்,வடகிழக்கு பருவமழை,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/4yg93rp1/TN-CM-vijay.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/4yg93rp1/TN-CM-vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க ஆண்டுதோறும் அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்வது வழக்கம்.அந்தவகையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று பகல் 12 மணியளவில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை நடத்துகிறார்.</p><h2>விஜய்</h2><p>டெல்டா மற்றும் கடலோர மாவட்ட கலெக்டர்கள் காணொலி காட்சி வாயிலாக இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை துறை, சுகாதாரத்துறை, மின் துறை, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கி ணைந்து மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் இந்த கூட்டத் தில் ஆலோசிக்கப்படுகிறது.</p><h2>நீர் நிலைகளை தூர்வாருதல்</h2><p>பேரிடர் நிகழ்ந்தால் அதை சமாளிக்க தேவையான மீட்பு உபகரணங்கள் மற்றும் மீட்பு பணியாளர்களை தயார்நிலையில் வைத்தல், பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகள் என கண்டறியப்படும் இடங்களில் முன்கூட்டியே மீட்பு படையினரை பணி அமர்த்துதல், நிவாரண மையங்களில் மின்சாரம், குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதி செய்தல் உள்ளிட்டவை தொடர்பாகவும் ஆலோசனை கள் வழங்கப்படுகிறது.</p><p>வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக நீர்நிலைகளை தூர்வாருதல், ஆகாய தாமரை செடி மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை விரைவுப டுத்துதல், சேதம் அடைந்த மின்கம்பங்கள், மின்கோபுரங்களை உடடி யாக சீரமைத்தல் மற்றும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பது குறித்து முதல்-அமைச்சர் விஜய் இந்த ஆலோ சனை கூட்டத்தின் வாயிலாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திருச்செந்தூரில் பயணிகளை ஏற்றி செல்வதில் பிரச்சினை: அரிவாளால் வெட்டிக் கொண்ட ஆட்டோ டிரைவர்களால் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dispute-over-picking-up-passengers-in-tiruchendur-commotion-as-auto-rickshaw-drivers-hack-each-other-with-sickles</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dispute-over-picking-up-passengers-in-tiruchendur-commotion-as-auto-rickshaw-drivers-hack-each-other-with-sickles#comments</comments><guid isPermaLink="false">e639f4c3-e28e-44ee-8fb4-91d72699d66b</guid><pubDate>Sun, 20 Sep 2026 22:42:04 +0000</pubDate><atom:updated>2026-09-20T22:42:04.210Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்செந்தூர்,அரிவாள் வெட்டு,Tiruchendur,பயணிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/j4a1lfxq/ticuchendur.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/j4a1lfxq/ticuchendur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்செந்தூர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த முருகன் (வயது 51). இவர் கோவில் வாசல் பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். அதேபோல் ஆறுமுகநேரி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மாதவன் தினேஷ் (26). திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள ஸ்டாண்டில் ஆட்டோ ஒட்டி வருகிறார். இவர் நேற்று முன்தினம் பயணிகளை ஏற்றிச்சென்று கோவில் வாசல் அருகே இறக்கி விட்டுள்ளார். அங்கிருந்து வேறு பயணிகளை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு புறப்பட தயாராகி உள்ளார். இதற்கு கோவில் வாசல் ஆட்டோ ஸ்டாண்டு டிரைவர்கள் சேர்ந்து ஆனந்தமுருகன், தங்களுக்கு வாடகை பாதிக்கப்படுவதாக கூறி தினேஷை கண்டித்துள்ளார். இதையடுத்து ஆனந்த முருகனுக்கும், மாதவன் தினேஷூவுக்கும் இடையே வாக்குவா தம் ஏற்பட்டுள்ளது.</p><h2>அரிவாள் வெட்டு</h2><p>இந்த வாக்குவாதம் முற்றியதில், ஆனந்தமுருகன் தான் மறைத்து வைத் திருந்த அரிவாளால் திடீரென மாதவன்தினேஷை சரமாரியாக வெட்டியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் சிதறி ஓடினர். ஆட் டோவில் இருந்தவர்களும் இறங்கி ஓட்டம் பிடித்தனர்.அப்போது, அதே அரிவாளை பிடுங்கிய மாதவன்தினேஷ் சரமாரியாக ஆனந்த முருகனை வெட்டியுள்ளார். இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். </p><p>அங்கிருந்த சக ஆட்டோ டிரைவர்கள், அந்த 2 பேரையும் மீட்டு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு 2பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ஆனந்த முருகன் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கும், மாதவன், தினேஷ் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த ஆஸ்பத்திரிகளில் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு- சுற்றுலா பயணிகள் குளிக்க தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-inflow-to-courtallam-waterfalls-increases-tourists-banned-from-bathing</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-inflow-to-courtallam-waterfalls-increases-tourists-banned-from-bathing#comments</comments><guid isPermaLink="false">0198a6c8-fe5c-401a-8feb-e109283b6e64</guid><pubDate>Sun, 20 Sep 2026 21:21:38 +0000</pubDate><atom:updated>2026-09-20T21:21:38.071Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சுற்றுலா பயணிகள்,நீர்வரத்து,குற்றாலம்,tourist,Couttralam waterfalls</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/ngqv27in/Coutralam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ குற்றாலம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/ngqv27in/Coutralam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் தென்காசி மாவட்டத்தையொட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதன் எதிரொலியாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. நேற்று விடுமுறை தினம் என்ப தால் ஒரு சில சுற்றுலா பணிகள் மற்றும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் குற்றாலம் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.</p> <h2>குளிக்க தடை</h2><p>நேற்று மதியத்திற்கு மேல் மேற்கு தொடர்ச்சி மலையின் வனப்பகுதிக் குள் பலத்த மழை பெய்ததால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிக ளுக்கும் நீர்வரத்து திடீரென அதிகரித்தது. குறிப்பாக ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக்கொட்டியதால் அங்கு மாலை 6 மணி முதல் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.</p><h2>சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்</h2><p>அதேபோன்று மெயின் அருவியிலும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்ட தால் இரவு 8 மணி முதல் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற் றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.இதுதவிர கடையம், பொட்டல்புதூர், ஆழ்வார்குறிச்சி, பாப்பான்குளம், மயிலப்பபுரம், ஆம்பூர், தென்காசி, திரவியநகர், மத்தளம் பாறை ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் வெயில் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.</p>]]></content:encoded></item><item><title>தேனி, சிவகங்கையில் களைகட்டிய மாட்டு வண்டி பந்தயங்கள் - சீறிப் பாய்ந்த காளைகள் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bullock-cart-races-in-full-swing-in-theni-and-sivaganga-bulls-charged-ahead-at-full-speed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bullock-cart-races-in-full-swing-in-theni-and-sivaganga-bulls-charged-ahead-at-full-speed#comments</comments><guid isPermaLink="false">159e75f3-62ec-4e1b-9685-be1d9ba0dd44</guid><pubDate>Sun, 20 Sep 2026 16:37:15 +0000</pubDate><atom:updated>2026-09-20T16:37:15.895Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Theni,தேனி,சிவகங்கை,Sivagangai,மாட்டு வண்டி பந்தயம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/nkpludw6/State-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/nkpludw6/State-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி,</p><p>தேனி மாவட்டம் வைகை அணை அருகே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விறுவிறுப்பான மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஜோடி காளைகள் சீறி பாய்ந்த காட்சியை ஏராளமானோர் சாலையோரம் கண்டு ரசித்தனர். </p><p>இதே போல் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வ.உ.சிதம்பரனாரின் 155-வது பிறந்தநாளை முன்னிட்டு முதலாம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் விறுவிறுப்பாக நடைபெற்றது. சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களிலல் இருந்து 61 ஜோடி மாடுகள் சீறிப் பாய்ந்தன. இதனை பொதுமக்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர். </p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய் லண்டனுக்கு சென்று நடிகர் அஜித்தை சந்தித்ததில் எந்த தவறும் இல்லை - பிரகாஷ்ராஜ் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-nothing-wrong-with-chief-minister-vijay-travelling-to-london-to-meet-actor-ajith-prakash-raj</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-nothing-wrong-with-chief-minister-vijay-travelling-to-london-to-meet-actor-ajith-prakash-raj#comments</comments><guid isPermaLink="false">0ee4f1ba-1f78-4d42-b069-9eb4de0a5c90</guid><pubDate>Sun, 20 Sep 2026 16:28:45 +0000</pubDate><atom:updated>2026-09-20T16:28:45.948Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,பிரகாஷ்ராஜ்,த.வெ.க.,Prakash Raj</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/cafw1rwm/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/cafw1rwm/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நடிகர் பிரகாஷ்ராஜ் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் த.வெ.க. அரசின் செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது;-</p><p>“எல்லா ஆட்சிகளிலும் போராட்டங்கள் நடந்து கொண்டுதான் இருந்துள்ளன. த.வெ.க. ஆட்சி அமைத்து சுமார் 120 நாட்கள்தான் ஆகியிருக்கிறது. அவர்களுக்கு ஓராண்டு காலம் அவகாசம் கொடுத்துவிட்டு, அதன் பிறகு அவர்களின் செயல்பாடுகள் பற்றி கருத்து சொல்லலாம். மக்கள்தான் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். நாம் ஜனநாயகத்தை மதிக்க வேண்டும்.</p><p>கொளத்தூரில் முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தோற்றாரா? அல்லது தோற்கடிக்கப்பட்டாரா? எஸ்.ஐ.ஆர். வேலை செய்ததா? என்பதையெல்லாம் நாம் ஆய்வு செய்ய வேண்டும். மு.க.ஸ்டாலின் போன்ற ஒரு தலைவர் தோற்றது அதிர்ச்சிதான். மதுரையில் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனும் தோல்வியடைந்தார். மக்கள் ஏன் இப்படி செய்தார்கள்? என்பதெல்லாம் போகப்போகத்தான் தெரியும். </p><p>முதல்-அமைச்சர் விஜய் லண்டனுக்கு சென்று நடிகர் அஜித்தை சந்தித்ததில் எந்த தவறும் இல்லை. அவர் முதலீடுகளை ஈர்த்து கொண்டு வந்ததாக சொல்கிறார்கள். அதை எப்படி செயல்படுத்துகிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும். அதற்கு அவர்களுக்கு நாம் அவகாசம் கொடுக்க வேண்டும்.”</p><p>இவ்வாறு பிரகாஷ்ராஜ் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>இருவர் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய புலி: வண்டலூர் பூங்காவில் ஒப்படைப்பு!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiger-involved-in-incident-resulting-in-two-deaths-handed-over-to-vandalur-zoo</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiger-involved-in-incident-resulting-in-two-deaths-handed-over-to-vandalur-zoo#comments</comments><guid isPermaLink="false">912ea0a6-2663-41a6-9d3b-71eb6e6cfb79</guid><pubDate>Sun, 20 Sep 2026 16:24:01 +0000</pubDate><atom:updated>2026-09-20T16:24:01.005Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Tiger,புலி,Vandalur Zoo,Vandalur,வண்டலூர்,வண்டலூர் பூங்கா,tiger attack</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/5nib7qrz/Untitled-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வண்டலூர் பூங்காவில் புலி ஒப்படைப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/5nib7qrz/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>கூடலூர் வனப்பிரிவில் கடந்த 28 நாட்களாக தேடப்பட்டு வந்த ஆண் புலி, சில்வர் கிளவுட் தேயிலைத் தோட்டப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை வனத்துறையினர் அமைத்திருந்த கூண்டில் சிக்கியது. வனத்துறையினர் நடத்திய ஆய்வில், கூடலூர் பகுதியில் இருவர் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய புலி இது என்பது உறுதி செய்யப்பட்டது.</p><h2>தீவிர தேடுதல் வேட்டை</h2><p>புலியைப் பிடிக்கும் நடவடிக்கையில் 200-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டனர். மேலும், கும்கி யானைகள், கேமரா பொறிகள், ஆளில்லா விமானங்கள் மற்றும் கூண்டுகள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டு புலியைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.</p><h2>முதுமலையில் மருத்துவப் பரிசோதனை</h2><p>கூண்டில் சிக்கிய புலி, முதலில் மருத்துவப் பரிசோதனைக்காக முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு புலியின் உடல்நிலை குறித்து மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.</p><h2>வண்டலூர் பூங்காவில் ஒப்படைப்பு</h2><p>பின்னர், அந்த ஆண் புலி பாதுகாப்பாக சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டு, பூங்கா நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.</p><h2>சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளது</h2><p>பூங்கா நிர்வாகத்தின் செய்திக் குறிப்பின்படி, சுமார் 10 வயதுடைய இந்த ஆண் புலி தற்போது சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளது.</p><p>வனவிலங்கு மருத்துவர்கள் மற்றும் விலங்கு பராமரிப்புக் குழுவினர் புலியின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கைவினைப் பொருட்கள் சந்தைப்படுத்துதல்: கோல்கொண்டா விற்பனையகத்தை அமைச்சர் மதன் ராஜா பார்வையிட்டார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/marketing-of-handicrafts-minister-madan-raja-visited-the-golconda-sales-outlet</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/marketing-of-handicrafts-minister-madan-raja-visited-the-golconda-sales-outlet#comments</comments><guid isPermaLink="false">e585d4d4-2d11-48de-885e-f1d2f38239d4</guid><pubDate>Sun, 20 Sep 2026 16:12:45 +0000</pubDate><atom:updated>2026-09-20T16:12:45.143Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Telangana,தெலங்கானா,பூம்புகார்,Handicrafts,கைவினை பொருட்கள்,கைவினை பொருட்கள் கண்காட்சி,அமைச்சர் மதன்ராஜா,Minister Madanraja,மதன்ராஜா,Madan Raja</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/lc9wwsum/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் மதன் ராஜா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/lc9wwsum/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ. மதன் ராஜா, பூம்புகார் கைவினைப் பொருட்களை சந்தைப்படுத்துவது தொடர்பாக தெலங்கானா மாநில கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்தின் (கோல்கொண்டா) விற்பனையகத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.</p><h2>பூம்புகார் கைவினைப் பொருட்கள் கண்காட்சி</h2><p>இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன் ராஜா, ஐதராபாத்தில், அமைந்துள்ள தெலங்கானா மாநில கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்தின் (கோல்கொண்டா) விற்பனையகத்தில் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் (பூம்புகார்) கைவினைப் பொருட்கள் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துவது தொடர்பாக இன்று (20.09.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.</p><p>முன்னதாக, நேற்று (19.09.2026) தெலங்கானா மாநிலத்தில் ஷில்பராமத்தில் பூம்புகார் கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனையை அமைச்சர் தொடங்கி வைத்தார். அந்நிகழ்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்கள் மற்றும் கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி மற்றும் கதர் துறை அலுவலர்களுடன் கலந்துரையாடி, கைவினைக் கலைஞர்கள் எதிர்கொண்டு வரும் தொழில்சார் இடர்பாடுகள், தேவைகள் மற்றும் சந்தை சார்ந்த சவால்கள் குறித்து கேட்டறிந்தார்.</p><p>இதனைத் தொடர்ந்து, கோல்கொண்டா விற்பனையகத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு கைவினைப் பொருட்களின் வகைகள், அவற்றின் சிறப்பம்சங்கள், தரம், விலை நிர்ணயம், காட்சிப்படுத்துதல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் அவற்றை விற்பனை செய்வதற்கான நடைமுறைகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார்.</p><h2>கைவினைக் கலைஞர்களுடன் சந்திப்பு</h2><p>குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தெரிவித்ததாவது:</p><p>தமிழ்நாட்டின் கைவினைக் கலைஞர்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களின் தேவைகள், குறைகள் மற்றும் தொழில்சார் சவால்களைக் கேட்டறிந்தேன். இன்று, கைவினைப் பொருட்கள் எவ்வாறு மதிப்பிடப்படுகின்றன, விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன மற்றும் ஏற்றுமதி சந்தைகளை எவ்வாறு சென்றடைகின்றன என்பதை நேரில் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், சர்வதேச சந்தைகளின் தேவைக்கேற்ப கைவினைப் பொருட்களில் மேற்கொள்ளப்படும் வடிவமைப்பு மாற்றங்கள், பொருட்களின் மதிப்புக்கூட்டல், சந்தைப்படுத்துதல் உத்திகள் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விற்பனையக அலுவலர்களுடன் கலந்துரையாடப்பட்டது.</p><p>புவிசார் குறியீடு பெற்ற தமிழ்நாட்டின் பாரம்பரிய கைவினைப் பொருட்கள், தமிழ்நாடு தொன்மையான கலை, கைவினை மற்றும் பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பெற்ற மாநிலமாகத் திகழ்கிறது. மாநிலத்தின் பல்வேறு பாரம்பரிய கைவினைப் பொருட்கள் அவற்றின் தனித்துவம் மற்றும் புவியியல் தோற்றத்திற்காக புவிசார் குறியீடு (Geographical Indication – GI) அங்கீகாரம் பெற்றுள்ளன.</p><p>தஞ்சாவூர் ஓவியங்கள், சுவாமிமலை வெண்கலச் சிலைகள், நாச்சியார்கோவில் குத்துவிளக்கு, தஞ்சாவூர் கலைத்தட்டு, பட்டமடை பாய்கள், மாமல்லபுரம் கல் சிற்பங்கள் மற்றும் கள்ளக்குறிச்சி மரச்சிற்பங்கள் உள்ளிட்ட கைவினைப் பொருட்கள் தமிழ்நாட்டின் சிறப்புமிக்க கலை மரபுகளையும், தலைமுறை தலைமுறையாக அவற்றைப் பாதுகாத்து வரும் கைவினைக் கலைஞர்களின் திறனையும் பறைசாற்றுகின்றன.</p><h2>சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்த நடவடிக்கை</h2><p>தமிழ்நாட்டின் பாரம்பரிய கைவினைப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்றுத் தருதல், அவற்றின் தனித்துவத்தைப் பாதுகாத்தல் மற்றும் சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்துதல் ஆகிய பணிகளில் பூம்புகார் நிறுவனம் தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வருகிறது.</p><p>கைவினைக் கலைஞர்களின் உழைப்பிற்கும் திறமைக்கும் உரிய மதிப்பு புவிசார் குறியீடு என்பது ஒரு பொருளின் தோற்றப் பகுதியையும் அதன் உண்மைத்தன்மையையும் உறுதி செய்யும் அடையாளமாக மட்டுமின்றி, அந்தப் பொருளை உருவாக்கும் கைவினைக் கலைஞர்களின் பாரம்பரிய அறிவு, திறன் மற்றும் உழைப்பிற்கு உரிய மதிப்பை ஏற்படுத்தும் முக்கியக் கருவியாகவும் விளங்குகிறது.</p><p>எனவே, புவிசார் குறியீடு பெற்ற தமிழ்நாட்டின் கைவினைப் பொருட்களுக்கு உரிய மதிப்பை உறுதி செய்யும் வகையில், அவற்றின் வடிவமைப்பு, தரம், காட்சிப்படுத்துதல், வர்த்தகப் பெயராக்கம் மற்றும் விலை நிர்ணயம் ஆகியவற்றை மேம்படுத்துவதுடன், உள்நாட்டு மற்றும் பன்னாட்டு சந்தைகளில் அவற்றின் சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.</p><p>செயல்பாடுகள் குறித்து ஆய்வு</p><p>தமிழ்நாட்டின் ஒவ்வொரு புவிசார் குறியீடு பெற்ற கைவினைப் பொருளுக்குப் பின்னாலும் நமது கைவினைக் கலைஞர்களின் தலைமுறை தலைமுறையான திறனும் கடின உழைப்பும் உள்ளது. அந்தத் திறமைக்கும் உழைப்பிற்கும் உரிய மதிப்பும், அதற்கேற்ற வருமானமும் கைவினைக் கலைஞர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும்.” பூம்புகாரின் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் கோல்கொண்டா கைவினைப் பொருட்கள் விற்பனையகத்தின் செயல்பாடுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட இன்றைய ஆய்வின் மூலம் பெறப்பட்ட தகவல்கள், தமிழ்நாட்டில் கைவினைப் பொருட்களின் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதலை மேலும் வலுப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும்.</p><p>குறிப்பாக, பூம்புகாரின் கைவினைப் பொருட்களின் வகை மற்றும் தரத்தை மேம்படுத்துதல், விற்பனையகங்களின் செயல்பாடுகளை நவீனப்படுத்துதல், கைவினைப் பொருட்களுக்கு மதிப்புக்கூட்டல் செய்தல், ஏற்றுமதி சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் கைவினைக் கலைஞர்களைத் தேவையான சந்தை இணைப்புகளுடன் ஒருங்கிணைத்தல் ஆகிய நடவடிக்கைகளுக்கு இந்த ஆய்வின் மூலம் பெறப்பட்ட அனுபவங்கள் வழிகாட்டியாக அமையும்.</p><p>மேலும், மாநிலம் முழுவதும் உள்ள கைவினைக் கலைஞர்களுக்கு நவீன வடிவமைப்பு, பொருத்தமான விலை நிர்ணயம், தரமான சந்தைப்படுத்துதல் மற்றும் பன்னாட்டு சந்தை வாய்ப்புகள் தொடர்பான தேவையான ஆதரவினை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.</p><p>இந்த ஆய்வின்போது, கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி, கதர் துறை அலுவலர்கள் மற்றும் கோல்கொண்டா கைவினைப் பொருட்கள் விற்பனையக அலுவலர்கள் உடனிருந்தனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘பிரதமர் மோடியை கேலி செய்யும் வகையில் ராகுல் காந்தி நடந்துகொண்டது கண்டிக்கத்தக்கது’ - வானதி சீனிவாசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rahul-gandhis-conduct-in-mocking-prime-minister-modi-is-condemnable-vanathi-srinivasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rahul-gandhis-conduct-in-mocking-prime-minister-modi-is-condemnable-vanathi-srinivasan#comments</comments><guid isPermaLink="false">e9a5a2be-2d3c-492a-b205-43d61350aa76</guid><pubDate>Sun, 20 Sep 2026 16:10:53 +0000</pubDate><atom:updated>2026-09-20T16:10:53.303Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரதமர் மோடி,PM Modi,ராகுல் காந்தி,Rahul Gandhi,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/rkd1sxpc/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/rkd1sxpc/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் மாணவர்கள் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின்போது நகைச்சுவை நடிகர் புல்கிட் மணி என்பவர், ராகுல் காந்தியிடம் பிரதமர் மோடி பேசுவதுபோல் கிண்டலாக பேசினார்.</p><p>குறிப்பாக, பிரதமர் மோடி, வெளிநாட்டுத் தலைவர்களை கட்டிப்பிடிப்பது போன்றும், அடிக்கடி 'மை ஃபிரண்ட்' என்ற வார்த்தையை கூறியும் புல்கிட் மணி நடித்துக் காட்டினார். தொடர்ந்து, ‘எப்படி இருக்கிறீர்கள்?’ என்று புல்கிட் மணி கேட்டதற்கு, "நான் நன்றாக இருக்கிறேன், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள், மோடி ஜி?" என்று ராகுல் காந்தி பதிலளித்தார். </p><p>இந்நிலையில், பிரதமர் மோடியை கேலி செய்யும் வகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நடந்து கொண்டதாக பா.ஜ.க.வினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இது குறித்து பா.ஜ.க. முன்னாள் தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-</p><p>“மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பிரதமர் நரேந்திர மோடியை கேலி செய்யும் வகையில் ராகுல் காந்தி நடந்து கொண்ட விதம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.</p><p>நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான ஆக்கபூர்வமான கருத்துகளையோ அல்லது அர்த்தமுள்ள மாற்றுத் திட்டங்களையோ முன்வைப்பதற்கு பதிலாக, காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து தனிப்பட்ட தாக்குதல்களிலும், மக்களை பிளவுபடுத்தும் வகையிலான பேச்சுக்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் கண்ணியம் மற்றும் பொறுப்புணர்வில் இருந்து காங்கிரஸ் கட்சி எவ்வளவு தூரம் விலகிச் சென்றுள்ளது என்பதையே இத்தகைய செயல்பாடு வெளிப்படுத்துகிறது.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>குன்னூர் மலை ரெயிலில் பயணிக்க குவியும் சுற்றுலா பயணிகள்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-flock-to-ride-the-coonoor-mountain-railway</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-flock-to-ride-the-coonoor-mountain-railway#comments</comments><guid isPermaLink="false">3778d8d9-ac6b-43d7-9010-72937d824b8b</guid><pubDate>Sun, 20 Sep 2026 15:58:36 +0000</pubDate><atom:updated>2026-09-20T15:58:36.373Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மலை ரெயில்,குன்னூர்,Coonoor,Mountain Railway,சுற்றுலா பயணிகள் குவிந்தனர்,Tourists flock</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/1hhn5gmb/kunnur.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மலை ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/1hhn5gmb/kunnur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>குன்னூர்,</p><p>குன்னூரில் மலை ரெயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.</p><h2>2-ம் கட்ட சீசன்</h2><p>நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது 2-ம் கட்ட சீசன் தொடங்கியுள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு சமவெளி பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மேலும் இவர்கள் குறிப்பாக மலை ரெயிலில் பயணம் மேற்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.குன்னூர் வரும் சுற்றுலா பயணிகள் இங்குள்ள சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, லேம்ஸ் ராக், டால்பின்நோஸ், லாஸ் நீர்வீழ்ச்சி போன்ற பகுதிகளுக்கு செல்வது வழக்கம்.</p><h2>ரெயிலில் பயணிக்க ஆர்வம்</h2><p>இது மட்டுமின்றி ஊட்டி மலை ரெயிலில் பயணிக்கவும் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். குன்னூர் ரெயில் நிலையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் மலை ரெயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் டிக்கெட் எடுத்து நீண்ட நேரமாக காத்திருந்தனர். பின்னர் மலை ரெயில் முன்பு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D"> மலை ரெயிலில் </a>பயணிக்கும் போது இயற்கை காட்சிகள், நீர்வீழ்ச்சிகள், வனவிலங்குகள், குகைகள், பாலங்கள் உள்ளிட்டவைகளை கண்டு ரசித்து சென்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் வேண்டாம்  - எல்.முருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-need-for-a-secretariat-in-pattinapakkam-l-murugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-need-for-a-secretariat-in-pattinapakkam-l-murugan#comments</comments><guid isPermaLink="false">72c61007-9841-474c-8bf3-675eb3403275</guid><pubDate>Sun, 20 Sep 2026 15:42:31 +0000</pubDate><atom:updated>2026-09-20T15:42:31.673Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எல்.முருகன்,Modi,பட்டினப்பாக்கம்,தலைமைச்செயலகம்,LMurugan,BJP ​</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/9idr5m2u/murugan33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[  எல்.முருகன்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/9idr5m2u/murugan33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>வேலூர்,</p><p>வேலூரில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>ஆதவ் அர்ஜுனா சொல்வதை எங்காவது ஏற்றுக் கொள்ளமுடிகிறதா? மீனவர்களை ஏமாற்றக்கூடாது. பட்டினப்பாக்கத்தில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D">புதிய சட்டமன்றம் </a>மற்றும் தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். </p><p>டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தவும், மின்சார பற்றாக்குறையை குறைக்கவும், இந்த அரசு செயல்பட வேண்டும். ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்களாகியும், பழைய அரசையே குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.</p><p>இப்போது, இடைத்தேர்தல் எதற்காக, யாரால் வந்தது? ஒரு கட்சியில் வெற்றி பெற்று விட்டு, ராஜினாமா செய்து. ஆளும் கட்சியில் சேர்ந்து அவர்களே போட்டியிட்டால், மக்களை ஏமாற்றும் செயலாகத்தான் உள்ளது. சென்னையில் ஆளும் கட்சியை சேர்ந்தவரையே ஓட, ஓட வெட்டுகின்றனர். எதையெல்லாம் கட்டுப்படுத்துவோம் என சொல்லி ஆட்சிக்கு வந்தார்களோ, அதில் எதையும் கவனிக்கவில்லை.</p><p>சி.பி.எஸ்.இ., மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் உள்ள வசதிகள், நவோதயா பள்ளிகளில் உள்ளன. தி.மு.க.,வினரில், எத்தனை பேர் சி.பி.எஸ்.இ., பள்ளிகளை நடத்துகின்றனர். நவோதயா பள்ளி வேண்டாம் என்றால், அதே அம்சம் கொண்ட அவர்களின் சி.பி.எஸ்.இ., பள்ளிகளை மூடுவார்களா? வேலுார் விமான நிலைய பணிகள் முடிந்து விட்டன. திறப்பு விழா தேதியை மட்டும் தான் நிர்ணயிக்க வேண்டி உள்ளது.</p><p>2045 வரை நரேந்திர மோடிதான் பிரதமராக இருப்பார். தொடர்ந்து பாஜகதான் ஆட்சி அமைக்கும். </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>சேலம்: பணமோசடி புகாரில் சிக்கியவர் ஜெபக்கூட்டத்தில் பங்கேற்பு - சர்ச்சுக்குள் புகுந்து பொதுமக்கள் முற்றுகை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-person-facing-money-fraud-allegations-attends-prayer-meeting-public-storms-church-and-lays-siege</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-person-facing-money-fraud-allegations-attends-prayer-meeting-public-storms-church-and-lays-siege#comments</comments><guid isPermaLink="false">deddbd5d-690c-41fb-bf4d-24bec46e2460</guid><pubDate>Sun, 20 Sep 2026 15:40:30 +0000</pubDate><atom:updated>2026-09-20T15:40:30.026Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,சேலம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/szbo6b76/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/szbo6b76/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம் மாவட்டம் அம்மாபேட்டையில் பொதுமக்களிடம் டெபாசிட் மற்றும் பல்வேறு பயிற்சிகள் என்ற பெயரில் பணம் பெற்று சிலர் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ள நிறுவனத்தை சேர்ந்த நபர், சர்ச்சில் நடைபெற்ற ஜெபக்கூட்டம் ஒன்றில் பங்கேற்றுள்ளார்.</p><p>இதனை அறிந்த அப்பகுதி மக்கள், சம்பந்தப்பட்ட நபரை சர்ச்சுக்குள் புகுந்து முற்றுகையிட்டனர். இதனிடையே அந்த நபர் அங்கிருந்து வேகமாக புறப்பட்டுச் சென்ற நிலையில் ஆத்திரமடைந்த சிலர் சர்ச்சில் இருந்த நாற்காலிகளை உடைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் ரூ.100 கோடிக்கும் மேல் மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில், சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>“மருத்துவர்கள் மூளை... செவிலியர்கள் இதயம்” - அமைச்சர் அருண்ராஜ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/doctors-are-the-brain-nurses-are-the-heart-minister-arunraj</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/doctors-are-the-brain-nurses-are-the-heart-minister-arunraj#comments</comments><guid isPermaLink="false">1cf2e500-83a1-4538-b195-20d7a8547e89</guid><pubDate>Sun, 20 Sep 2026 15:34:29 +0000</pubDate><atom:updated>2026-09-20T15:34:29.097Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>செவிலியர்கள்,nurses,Minister Arunraj,அமைச்சர் அருண்ராஜ்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/6ct0uir0/35.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் அருண்ராஜ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/6ct0uir0/35.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஒரு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் மூளை என்றால், செவிலியர்கள் இதயமாக செயல்படுகிறார்கள்.</p><p>சுகாதாரத்துறை <a href="https://www.dailythanthi.com/topic/minister-arunraj">அமைச்சர் அருண்ராஜ்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கத்தின் எட்டாவது மாநில மாநாடு, இன்றைய தினம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. சட்டமன்ற பேரவை தலைவருடன் இணைந்து குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து   உரையாற்றினோம்.</p><h2>மிகுந்த அக்கறை</h2><p>மருத்துவர் கட்டமைப்பில் செவிலியர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்களின் பங்கு மிக முக்கியமானது.  ஒரு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் மூளை என்றால், செவிலியர்கள் இதயமாக செயல்படுகிறார்கள். அப்படிப்பட்ட செவிலியர்கள்  நலனில்  இவ்வரசு மிகுந்த அக்கறையுடன் தொடர்ந்து செயல்பட்டு கொண்டு வருகிறது.</p><h2>கூடுதல் இடங்கள்</h2><p>கடந்த 12 வருடங்களாக தமிழ்நாட்டில் செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படாத நிலையில்... நமது முதலமைச்சர் ஏழு செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று சொன்னார். சொன்னதை செய்து விட்டோம்.  மூன்று நாட்களுக்கு முன் அதற்கான அரசாணை வெளியிட்டு விட்டோம். ஏற்கனவே இருக்கும் செவிலியர் கல்லூரிகளில் கூடுதல் இடங்களையும் உருவாக்கப் போகிறோம். மேலும் 896 கிராம சுகாதார செவிலியர்களை விரைவில்  பணி அமர்த்த இருக்கிறோம்</p><h2>பணி நிரந்தரம்</h2><p>செவிலியர் பற்றாக்குறையை  நிவர்த்தி செய்வதற்காக 4,724  புதிய செவிலியர்களை மாவட்ட நல சங்கங்கள் மூலமாக வெளிப்படையான முறையில், நேர்மையாக பணி அமர்த்தப்பட இருக்கிறார்கள்.  மேலும் ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் இருக்கும் 2500 தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான அரசாணையும் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.</p><p> முதலமைச்சர் விஜய் தலைமையிலான இந்த அரசு  செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் பரிசீலித்து உரிய முடிவு எடுக்கப்படும்  என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.</p><p>இவ்வாறு அதில் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பிரதமரின் வெற்று வாக்குறுதியால் தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/unemployment-in-tamil-nadu-due-to-prime-ministers-empty-promises-manikam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/unemployment-in-tamil-nadu-due-to-prime-ministers-empty-promises-manikam-tagore#comments</comments><guid isPermaLink="false">89bacae4-ddcd-4e83-8cd0-81e5d813c359</guid><pubDate>Sun, 20 Sep 2026 15:22:53 +0000</pubDate><atom:updated>2026-09-20T15:22:53.037Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழகம்,அதிகரிப்பு,prime minister,மாணிக்கம் தாகூர்,பிரதமர்,Unemployment,வேலையில்லா திண்டாட்டம்,Manikam Tagore,வாக்குறுதிகள்,promises,All over Tamil Nadu,empty</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/ppejx6ar/manickam.jpg" width="768"><media:title type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/ppejx6ar/manickam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பிரதமரின் வெற்று வாக்குறுதியால் தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது என்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">மாணிக்கம் தாகூர் </a>தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்திருப்பதாவது;- </p><h2>வேலையில்லாத் திண்டாட்டம் </h2><p>2014-ம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF">மோடி</a> அரசு, ஆண்டுதோறும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகளை அள்ளி தருவோம் என்று இளைஞர்களிடம் வெற்று வாக்குறுதிகளை மட்டுமே வழங்கி ஆட்சிக்கு வந்து 12 ஆண்டுகளாகியும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. 12 ஆண்டுகளில் 24 கோடி பேருக்கு கொடுத்த வாக்குறுதியின்படி வேலை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், 45 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் தலைவிரித்தாடுகிறது.</p> <h2>விளம்பர அரசியல்</h2><p>கடந்த ஆகஸ்ட் 2026 இல் நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையில், 15 முதல் 29 வயதுக்குட்பட்ட 8.7 கோடி இளைஞர்கள் கல்வி, வேலை மற்றும் தொழிற்பயிற்சி எதுவுமின்றி முடங்கியுள்ளனர் என்பதும், 79.6 கோடி பேர் உழைக்கும் சந்தைக்கு வெளியே தள்ளப்பட்டுள்ளனர் என்பதும் அதிகாரப்பூர்வமாக அம்பலமானது. படித்த பட்டதாரிகளில் வெறும் 8.25 சதவிகித பேருக்கு மட்டுமே தகுதிக்குரிய வேலை கிடைத்துள்ளது என்ற அதிர்ச்சித் தகவலும், பட்டம் பெற்ற பெண்களிடம் 20.4 சதவிகித வேலையின்மை நிலவுவதும் மோடி அரசின் விளம்பர அரசியலின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது.</p> <h2>சமூக-பொருளாதார நெருக்கடி</h2><p>ஒருபுறம் மருத்துவ கனவை சிதைக்கும் நீட் என்றால், மறுபுறம் இளைஞர்களை வேலைக்கே போகவிடாமல் நடுத்தெருவில் நிறுத்தும் சமூக-பொருளாதார நெருக்கடி. தற்போது செப்டம்பர் 2026-ல் மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள மாவட்ட அளவிலான காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பு அறிக்கை, இந்த அவல நிலையை உள்ளூர் அளவில் மேலும் அம்பலமாக்கியுள்ளது.</p> <h2>எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது</h2><p> நாடு முழுவதும் 250-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 25 சதவிகிதத்திற்கும் அதிகமான இளைஞர்கள் கல்வி அல்லது வேலையின்றி முடங்கி கிடக்கின்றனர். மொத்தமாக ஆய்வு செய்யப்பட்ட மாவட்டங்களில் கிட்டத்தட்ட 23.7 சதவிகித பகுதிகளில் 30 சதவிகிதத்திற்கும் அதிகமான இளைஞர்கள் எவ்வித வேலை வாய்ப்பின்றி எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.</p> <h2>நிர்வாக தோல்வி</h2><p>மோடி அரசின் இந்த நிர்வாக தோல்வியும் புறக்கணிப்பும் தமிழ்நாட்டிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. தென் தமிழ்நாட்டின் முதன்மை நகரான மதுரையில் வேலையின்மை விகிதம் 7.0 சதவிகிதமாக விஸ்வரூபமெடுத்துள்ளது. திருவள்ளூரில் 24.9 சதவிகிதம், திருச்சியில் 23.9 சதவிகிதம், மதுரையில் 23.8 சதவிகிதம், சென்னையில் 22.4 சதவிகிதம் என இளைஞர்கள் முறையான வேலை வாய்ப்பின்றி வாழ்வாதாரத்தை இழந்து முடங்கியுள்ளனர். </p> <h2>வேலைவாய்ப்புகளை உருவாக்க தவறிவிட்டது</h2><p>கிராமப்புற தமிழ்நாட்டில் நிலையான ஊதிய வேலைகள் கிடைக்காமல், 30.4 சதவிகித குடும்பங்கள் முறைசாரா தினக்கூலி வேலைகளையே நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சியை வழங்குவதாக கூறி புதிய கல்வி கொள்கையை திணிக்கும் மத்திய அரசு, களத்தில் அவர்களுக்குக் கண்ணியமான வேலைவாய்ப்புகளை உருவாக்க தவறிவிட்டது.</p> <h2>இந்திய இளைஞர்கள்</h2><p>தேசிய அளவில் 8.7 கோடி இளைஞர்களின் வாழ்வைச் சூறையாடியதோடு, மாவட்ட வாரியாக பல கோடி இளைஞர்களின் உழைப்பையும் ஆற்றலையும் வீணடித்து நடுத்தெருவில் நிறுத்தியுள்ள மோடி அரசின் பொருளாதார துரோகங்களுக்கு, தங்களின் எதிர்காலத்தை இழந்து தவிக்கும் இந்த இளைய தலைமுறை ஒருபோதும் துணை நிற்காது, மோடி அரசில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்திற்கு உரிய பாடத்தை இந்திய இளைஞர்கள் நிச்சயம் புகட்டுவார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் கடைகளில் 25 புதிய வகை மதுபானங்கள் அறிமுகம் செய்ய திட்டம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/plan-to-introduce-25-new-varieties-of-liquor-at-tasmac-shops</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/plan-to-introduce-25-new-varieties-of-liquor-at-tasmac-shops#comments</comments><guid isPermaLink="false">d01b3e0f-d5cb-43be-8643-46bf5c35e1c1</guid><pubDate>Sun, 20 Sep 2026 15:14:55 +0000</pubDate><atom:updated>2026-09-20T15:14:55.526Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டாஸ்மாக்,Tasmac,டாஸ்மாக் கடை,Tasmac shop,டாஸ்மாக் கடைகள்,tasmac bar,new liquor,புதிய மதுபானங்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/juffysv8/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/juffysv8/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் 25 புதிய வகை மதுபானங்களை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><h2>4,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள்</h2><p>தமிழகத்தில் சுமார் 4,000 டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கடைகளில் பிராந்தி, விஸ்கி, வோட்கா உள்ளிட்ட இந்தியத் தயாரிப்பு வெளிநாட்டு மதுவகைகளும், பீர் மற்றும் ஒயின் உள்ளிட்ட மதுபானங்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.</p><p>பீர் வகைகள் 7 மதுபான ஆலைகளிடமிருந்தும், ஒயின் ஒரு ஆலையிடமிருந்தும், இதர மதுபான வகைகள் 11 ஆலைகளிடமிருந்தும் டாஸ்மாக் நிறுவனம் கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறது.</p><h2>பல்வேறு மதுபான வகைகள் விற்பனை</h2><p>தமிழகத்தில் தயாரிக்கப்படும் 174 மதுவகைகள், 40 பீர் வகைகள் மற்றும் 4 ஒயின் வகைகள் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இதுதவிர, பிற மாநிலங்களில் இருந்து 6 மதுவகைகள், 5 பீர் வகைகள் மற்றும் 5 ஒயின் வகைகளும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.</p><p>மேலும், 538 வெளிநாட்டு மதுவகைகளை டாஸ்மாக் நிறுவனம் இறக்குமதி செய்து, வணிக வளாகங்களில் உள்ள மதுக்கடைகளில் விற்பனை செய்து வருகிறது.</p><h2>புதிய மதுவகைகள் அறிமுகம்</h2><p>டாஸ்மாக் கடைகளில் அவ்வப்போது புதிய மதுவகைகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், புதிய மதுவகைகளை அறிமுகம் செய்வது தொடர்பாக மதுபான உற்பத்தியாளர்களுடன் டாஸ்மாக் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.</p><p>இதன் தொடர்ச்சியாக, 25 புதிய மதுவகைகளை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><h2>விலை நிர்ணயம் செய்யும் பணி</h2><p>இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் புதிய வகை மதுபானங்கள் மற்றும் பீர் வகைகளை விற்பனை செய்வது தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிவித்தனர்.</p><p>அதில், 25 புதிய மதுவகைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தற்போது அவற்றுக்கான விலை நிர்ணயம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.</p><h2>விரைவில் விற்பனைக்கு வர வாய்ப்பு</h2><p>புதிய மதுவகைகளுக்கான விலை நிர்ணயம் முடிந்த பிறகு, டாஸ்மாக் இயக்குநர்கள் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும். அதன்பின்னர், புதிய மதுவகைகள் டாஸ்மாக் கடைகளில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை முதல் செங்கோட்டை வரை... 23-வது ஆண்டில் தடம் பதிக்கும் பொதிகை எக்ஸ்பிரஸ்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/from-chennai-to-sengottaipodhigai-express-marks-its-23rd-year</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/from-chennai-to-sengottaipodhigai-express-marks-its-23rd-year#comments</comments><guid isPermaLink="false">00fd7d20-46bf-4eee-8d10-5dbbb12d20b9</guid><pubDate>Sun, 20 Sep 2026 14:35:25 +0000</pubDate><atom:updated>2026-09-20T14:35:25.455Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Sengottai,செங்கோட்டை,Express Rail,பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/ytw722p5/34.jpg" width="768"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ பொதிகை எக்ஸ்பிரஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/ytw722p5/34.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை:</p><p>சென்னை எழும்பூர் - செங்கோட்டை இடையே இயக்கப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் 22 ஆண்டுகளை நிறைவு செய்து, இன்று 23-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.</p><h2>2004-ல் தொடங்கிய பயணம்</h2><p>சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டை வரை இயக்கப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில், கடந்த 2004-ம் ஆண்டு செப்டம்பர் 20-ந் தேதி தனது பயணத்தை தொடங்கியது. தொடங்கப்பட்ட நாள் முதல் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகளின் முக்கிய ரெயில் சேவையாக <a href="https://www.dailythanthi.com/topic/pothigai-express">பொதிகை எக்ஸ்பிரஸ்</a> இருந்து வருகிறது.</p><p>சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் பொதிகை எக்ஸ்பிரஸ் நின்று செல்கிறது.</p><h2>மின்சார ரெயிலாக மாற்றம்</h2><p>பொதிகை எக்ஸ்பிரஸ் தொடங்கப்பட்ட காலத்தில் டீசல் என்ஜின் மூலம் இயக்கப்பட்டு வந்தது. பின்னர் ரெயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டதை தொடர்ந்து, 2023-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி முதல் முழுமையாக மின்சார என்ஜின் மூலம் இயக்கப்பட்டு வருகிறது.</p><p>தற்போது 12661 மற்றும் 12662 என்ற ரெயில் எண்களில் சென்னை–செங்கோட்டை இடையே பொதிகை எக்ஸ்பிரஸ் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.</p><h2>23-வது ஆண்டில்...</h2><p>22 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள பொதிகை எக்ஸ்பிரஸ், 23-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையொட்டி ரெயில் பயணிகள் மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் பயணிகளிடையே மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>5 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியா? ஊழியர்களுக்கு ‘ஷாக்’ கொடுத்த அரசு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-government-gave-a-shock-to-the-employees</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-government-gave-a-shock-to-the-employees#comments</comments><guid isPermaLink="false">05bb0c1d-31bf-436d-8469-54e3220249b8</guid><pubDate>Sun, 20 Sep 2026 14:12:30 +0000</pubDate><atom:updated>2026-09-20T14:12:30.107Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,தமிழக அரசு,அரசு ஊழியர்கள்,tngovt</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/u2gtzuzl/tngovt33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ தவெக அரசு]]></media:title><media:description type="html"><![CDATA[ ‘ஷாக்’ கொடுத்த அரசு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/u2gtzuzl/tngovt33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>ஒரே இடத்தில் 5 ஆண்டுகளுக்குமேல்பணியாற்றுவோரைக் கணக்கெடுத்து பணியிட மாற்றம் செய்ய <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20">தவெக அரசு </a>நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>இதுகுறித்து தமிழக அரசின் பணியாளர் மற்றும் சீர் திருத்தத்துறை சார்பில் அனைத்துத் துறைச் செயலர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:</p><p>நிர்வாக அலுவலர், இளநிலை நிர்வாக அலுவலர், அலுவலகக் கண்காணிப் பாளர், உதவியாளர் ஆகிய பணியிடங்களில் உள்ள ஊழியர்கள், ஒரேஇடத்தில் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேலாகவோ அல்லது 10 ஆண்டுகளுக்கு மேலாகவோ பணியாற்றி வருகிறார்களா என்ற முழு விவரங்களையும் சேகரித்து வரும் செப். 23ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும். </p><p>பதவி உயர்வில் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு, பின்னர் பழைய பணி இடத்துக்கே திரும்பி வந்தவர்கள் யார்?, அவர்கள் எப்போது திரும்பினார்கள்?, அதற்கானகாரணம் என்ன?என்ற விவரங்களையும் கட்டாயம் அறிக்கையில் சேர்க்க வேண்டும் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.</p><p>மேலும், இது மிகவும் அவசரமானது என்றும் சுற்றறிக்கையில்அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. அரசு விதிகளின்படி, பதவி உயர்வு வரும்போது ஊழியர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவது வழக்கம். ஆனால்,சிலர் பதவி உயர்வு பெற்று வேறு ஊருக்குச் சென்று சில நாள்களிலேயே, நிர்வாகக் காரணங் களைக் காட்டி அல்லது தற் காலிகப்பணிமாற்றம் மூலமாக மீண்டும் பழைய இடத்துக்கே திரும்பிவிடுகின்றனர்.</p><h2>ஒரே இடத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு குறி </h2><p> இத்தகைய உத்திகளைக் கையாண்டு பழைய இடத்திலேயே தொடர்ந்து நீடிக்கும் நபர்களையும் அரசு குறிவைத்துள்ளது. ஓர் அரசு ஊழியர் ஒரே இடத்தில், குறிப்பாகக் கணக்கு மற்றும் நிர்வாகப் பிரிவுகளில் பல ஆண்டுகள் தொடர்ந்து நீடித்தால் நிர்வாகத்தில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன.</p><p>ஒரே இடத்தில் நீண்ட காலம் இருப்பதால் புதிய மாற்றங்கள் ஏற்படுவதில்லை. பொதுமக்கள்மற்றும் ஒப் பந்ததாரர்களுடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டு, முறைகேடுகள் மற்றும் ஊழல் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என அரசு கருதுகிறது. எனவே, 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றுவோர் பட்டியலை தயாரித்து உடனடியாக இடமாற்றம் செய்ய தவெக அரசு முடிவு செய்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>
மதுரையில் கனமழை; தரையிறங்குவதில் சிக்கல்.. 1 மணிநேரம் வானில் வட்டமடித்த பயணிகள் விமானம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/heavy-rain-in-madurai-aircraft-circles-for-an-hour</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/heavy-rain-in-madurai-aircraft-circles-for-an-hour#comments</comments><guid isPermaLink="false">c3b3cec8-0cf8-439a-a1c4-9b9dd7ba1391</guid><pubDate>Sun, 20 Sep 2026 13:57:14 +0000</pubDate><atom:updated>2026-09-20T13:57:14.321Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விமானம்,கனமழை,heavy rain,flight</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/m10f5vys/ifiel.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/m10f5vys/ifiel.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>மதுரை</p><p>கனமழையால் மும்பை-மதுரை விமானம் தரையிறங்குவதில் அரை மணிநேரத்திற்கும் மேலாக சிக்கல் ஏற்பட்டது.</p><p>மராட்டியத்தின் மும்பை நகரில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 165 பயணிகளுடன் மதுரை நோக்கி புறப்பட்டு வந்த இண்டிகோ பயணிகள் விமானம், மதுரை சர்வதேச விமான நிலையத்திற்கு மாலை 3.45 மணியளவில் வந்தடைந்தது.</p> <p>அப்போது, மதுரையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வந்தது.  மதுரையில் ஆரப்பாளையம், கோரிப்பாளையம், கே.கே.நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் தெப்பக்குளம், திருப்பரங்குன்றம், வில்லாபுரம், அவனியாபுரம், பெருங்குடி, பசுமலை, தனக்கன்குளம் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்தது.</p><h2>விமானம் தரையிறக்கம்</h2><p>அதனுடன் மேகம் சூழ்ந்து தெளிவற்ற வானிலை காணப்பட்டது, தொழில்நுட்ப கோளாறுகள் ஆகியவற்றால், விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.  </p> <p>இதனை தொடர்ந்து, 1 மணிநேரத்திற்கும் மேலாக மானாமதுரை அருகே வானில் வட்டமடித்தது.  இதனால் பயணிகள் பதற்றமடைந்தனர்.</p><p>இதன்பின்னர் அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, விமானம் தரையிறக்கம் செய்யப்பட்டது.  விமானத்தில், மொத்தம் 165 பயணிகள் இருந்தனர்.  அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.  இதன் பின்னரே, பயணிகள் நிம்மதி அடைந்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் நாளை கோவை வருகை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vice-president-cp-radhakrishnan-to-visit-coimbatore-tomorrow-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vice-president-cp-radhakrishnan-to-visit-coimbatore-tomorrow-2#comments</comments><guid isPermaLink="false">2519b4c5-719c-46ed-a052-84b687bc028d</guid><pubDate>Sun, 20 Sep 2026 13:43:29 +0000</pubDate><atom:updated>2026-09-20T13:43:29.049Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,Vice President,துணை ஜனாதிபதி,நாளை,வருகை,சி.பி. ராதாகிருஷ்ணன்,visit,C.P. Radhakrishnan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/v82thrt2/vicepresident.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்]]></media:title><media:description type="html"><![CDATA[ துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் நாளை கோவை வருகை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/v82thrt2/vicepresident.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D">துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்</a> நாளை கோவைக்கு வருகிறார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடைபெறும் மாநாடு ஒன்றில் அவர் தலைமை விருந்தினராக கலந்துகொள்கிறார்.</p><h2>'உபாசி' நூற்றாண்டு மாநாடு</h2><p>தென்னிந்தியாவின் தேயிலை தொழிலுக்கு சேவையாற்றி வரும் முதன்மையான அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமாக உபாசி தேயிலை ஆராய்ச்சி அறக்கட்டளை திகழ்கிறது. இந்த அறக்கட்டளையின் நூற்றாண்டு மாநாடு குன்னூரில் நாளை நடைபெறுகிறது. இந்த பிரம்மாண்ட மாநாட்டில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தலைமை விருந்தினராக பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்.</p><h2>1926-ல் தொடங்கப்பட்ட நிறுவனம்</h2><p>கடந்த 1926-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF">நீலகிரி </a>மாவட்டம் கூடலூரில் ஒரு சிறிய தேயிலை சோதனை நிலையமாக இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. தற்போது, தென்னிந்திய தேயிலை தோட்ட உரிமையாளர் சங்கத்தின் கீழ், தேயிலை விவசாயம் மற்றும் உற்பத்தி தொழில்நுட்ப மேம்பாட்டிற்காகப் பாடுபடும் சர்வதேச அளவிலான முதன்மை ஆராய்ச்சி நிறுவனமாக இது உருவெடுத்துள்ளது. தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்பட்டு கோவை விமான நிலையத்திற்கு வருகிறார். அவரை கலெக்டர் பவன்குமார் மற்றும் அமைச்சர்கள் வரவேற்க உள்ளனர். </p> <p>இந்த நிலையில் துணை ஜனாதிபதி கோவை வருகையை முன்னிட்டு டிரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-</p><h2>கோவையில் டிரோன்கள் பறக்க தடை</h2><p>துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை கோவைக்கு வருகிறார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு கருதி இன்று மாலை 5 மணி முதல் வருகிற 22-ந் தேதி காலை 11 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. அதன்படி கோவை மாவட்டத்தில் ஏற்கனவே சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளுடன், காளப்பட்டி 4 ரோடு சந்திப்பு, கோவில்பாளையம், அன்னூர் பஸ் நிலையம், தென்திருப்பதி 4 ரோடு ஆகிய இடங்களில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.</p><p>இதுதவிர மேட்டுப்பாளையம் பஸ் நிலையம், வனக்கல்லூரி விருந்தினர் இல்லம், குஞ்சப்பனை மாவட்ட எல்லை. கஞ்சப்பள்ளி, கரியம்பாளையம் சந்திப்பு. கணியூர் சுங்கச்சாவடி, நீலாம்பூர் ஆகிய பகுதிகள் மற்றும் சிங் காநல்லூர், பீளமேடு, சித்ரா, நேரு நகர், சேரன்மாநகர், எஸ்.ஐ.எச்.எஸ். காலனி, சின்னியம்பாளையம், நவ இந்தியா, இருகூர் பகுதிகள் ஆகியவை தற்காலிக சிவப்பு மண்டல பகுதிகளாக அறிவிக்கப்பட்டு டிரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது.</p><p>இந்த பகுதிகளில் தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி ஊர்திகளை பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.</p><h2>குன்னூரிலும் தடை</h2><p>துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வருகையையொட்டி குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் நாளை காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது என நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கடலூர் அருகே சோகம்: மின்னல் தாக்கி பெண் பலி!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-near-cuddalore-woman-killed-by-lightning-strike</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-near-cuddalore-woman-killed-by-lightning-strike#comments</comments><guid isPermaLink="false">c50c3471-e082-47c9-9414-6e6d45a2f75e</guid><pubDate>Sun, 20 Sep 2026 13:39:27 +0000</pubDate><atom:updated>2026-09-20T13:39:27.325Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Cuddalore,கடலூர்,கடலூர் செய்திகள்,Cuddalore district,கடலூர் மாவட்டம்,Cuddalore News</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/kd6a8fvo/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்னல் தாக்கி பெண் பலி!]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/kd6a8fvo/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர்,</p><p>கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே ஆடு மேய்த்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண் ஒருவர் மின்னல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>இரண்டு மகன்களின் தாய்</h2><p>சிதம்பரம் அடுத்த துணிசரமேடு கிராமம், இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கட்டிடத் தொழிலாளி ஆறுமுகம். இவரது மனைவி ஞானசுந்தரி (38). இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.</p><h2>ஆடு மேய்த்துவிட்டு வீடு திரும்பினார்</h2><p>இந்நிலையில், நேற்று மாலை சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்தது. அப்போது ஞானசுந்தரி அப்பகுதியில் ஆடுகளை மேய்த்துவிட்டு, வயல்வெளியில் இருந்து பிரதான சாலை வழியாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.</p><h2>திடீரென தாக்கிய மின்னல்</h2><p>அப்போது எதிர்பாராதவிதமாக ஞானசுந்தரி மீது மின்னல் தாக்கியது. இதில் அவர் சாலையிலேயே சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>மழையின்போது மின்னல் தாக்கி குடும்பத் தலைவி உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கல்லணையில் ஆர்ப்பரிக்கும் காவிரி நீர்... குடும்பம் குடும்பமாக குவியும் சுற்றுலா பயணிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-cauvery-water-gushing-in-the-tomb-tourists-flocking-in-families</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-cauvery-water-gushing-in-the-tomb-tourists-flocking-in-families#comments</comments><guid isPermaLink="false">1fe52ae5-2be7-4823-a02d-7f2f6584dc6e</guid><pubDate>Sun, 20 Sep 2026 13:26:48 +0000</pubDate><atom:updated>2026-09-20T13:26:48.070Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சுற்றுலா பயணிகள்,காவிரி நீர்,Cauvery water,Kallanai,கல்லணை,Tourists flocked</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/ksmc8ch6/kallanai.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கல்லணை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/ksmc8ch6/kallanai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர்:</p><p>தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கல்லணையில் தற்போது காவிரி நீர் ஆர்ப்பரித்து செல்வதால், அதனை காண சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.</p><p>சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு கரிகால சோழனால் கட்டப்பட்ட கல்லணை, காலத்தை கடந்து இன்றளவும் கம்பீரமாக காட்சியளித்து வருகிறது. தமிழக அரசால் சுற்றுலா மையமாக அறிவிக்கப்பட்டுள்ள கல்லணை, டெல்டா மாவட்ட விவசாயிகளின் பாசனத்துக்கு காவிரி நீரை பகிர்ந்தளிப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.</p><p>கடந்த சில நாட்களாக நீர்வரத்து இன்றி வறண்டு காணப்பட்ட கல்லணைக்கு, மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் வந்து சேர்ந்துள்ளது. இதனால் அணையில் தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.</p><h2>குவிந்த சுற்றுலா பயணிகள்</h2><p>கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் மற்றும் கல்லணை கால்வாய் ஆகியவற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீரை காண தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.</p><p>குடும்பத்துடன் வந்துள்ள சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குளித்தும், அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் அழகை ரசித்தும், செல்ஃபி எடுத்தும் உற்சாகமாக பொழுதை கழித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>‘கூட்டணி கட்சிகளிடம் தி.மு.க. பண்ணையார் மனப்பான்மையுடன் நடந்துகொண்டது’ - அமைச்சர் ராஜ்மோகன் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-dmk-behaved-with-a-landlord-like-attitude-towards-its-alliance-partners-minister-rajmohan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-dmk-behaved-with-a-landlord-like-attitude-towards-its-alliance-partners-minister-rajmohan#comments</comments><guid isPermaLink="false">3e54cc24-1ee6-4bf4-b2fa-d266a4fae653</guid><pubDate>Sun, 20 Sep 2026 13:23:16 +0000</pubDate><atom:updated>2026-09-20T13:23:16.580Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Minister Rajmohan,அமைச்சர் ராஜ்மோகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/2tpkdtsl/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/2tpkdtsl/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தி.மு.க.வின் தயவில்தான் த.வெ.க. அரசு ஆட்சி அமைத்திருப்பதாக முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். </p><p>இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், “108 சட்டமன்ற உறுப்பினர்களோடு, கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்களையும் சேர்த்து அமைச்சரவையில் இடம்கொடுத்து முதல்-அமைச்சர் விஜய் த.வெ.க. ஆட்சியை கொண்டு செல்கிறார். இதில் யார் தயவும் யாருக்கும் தேவையில்லை. </p><p>கூட்டணி கட்சிகளிடம் தி.மு.க. பண்ணையார் மனப்பான்மையுடன் நடந்துகொண்டது. காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஓட்டுகள் இல்லாமல் இத்தனை ஆண்டுகளாக தி.மு.க. ஆட்சி அமைத்திருக்க முடியுமா? சுதந்திர இந்தியாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(ஐ.யூ.எம்.எல்.) கட்சிக்கு ஏன் தி.மு.க. அமைச்சரவையில் ஒரு இடம் கூட கொடுக்கவில்லை? </p><p>ஆனால் முதல்-அமைச்சர் விஜய், ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்று சொன்னதை செய்திருக்கிறார். எனவே, மக்களின் தயவில்தான் ஆட்சி நடக்கிறதே தவிர, வேறு யாருடைய தயவும் கிடையாது” என்று தெரிவித்தார். </p> ]]></content:encoded></item><item><title>த.வெ.க. நட்சத்திர பேச்சாளர்கள் விவகாரம்... தேர்தல் விதிகளை சுட்டிக்காட்டி இன்பதுரை எம்.பி. பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-star-speakers-issue-inbadurai-mp-points-out-election-rules-register</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-star-speakers-issue-inbadurai-mp-points-out-election-rules-register#comments</comments><guid isPermaLink="false">07edf392-c78e-428e-8b38-7a6312407eb6</guid><pubDate>Sun, 20 Sep 2026 13:13:54 +0000</pubDate><atom:updated>2026-09-20T13:13:54.783Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,அதிமுக,த.வெ.க,Speaker,இன்பதுரை,நட்சத்திர பேச்சாளர்கள்,AIADMK MP Inbadurai</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/jehsxkza/inbadurai.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இன்பதுரை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/jehsxkza/inbadurai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வைகோ, திருமாவளவன், மாணிக்கம் தாகூர் ஆகியோர் தனித்தனி அரசியல் கட்சிகளின் தலைவர்களாக இருக்கும் நிலையில், அவர்கள் மற்றொரு கட்சியான த.வெ.க.வின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். </p><p>இது குறித்து அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரை தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>வைகோ, திருமாவளவன், மாணிக்கம் தாகூர் ஆகியோர் தனித்தனி அரசியல் கட்சிகளின் தலைவர்களாக இருக்கும் நிலையில், அவர்கள் மற்றொரு கட்சியான த.வெ.க.வின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பது எந்த சட்ட அடிப்படையில்? ஆர்.பி. சட்டம் 1951 பிரிவு 77(1) மற்றும் தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின் படி, ஒரு கட்சி நட்சத்திர பேச்சாளர்களாக தனது சொந்த கட்சியின் உறுப்பினரையே நியமிக்க முடியும்.</p><p>மேலும், நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் தேர்தல் அறிவிப்பில் இருந்து 7 நாட்களுக்குள் தேர்தல் ஆணைய தலைமை ஆணையருக்கு தெரிவிக்கப்பட வேண்டும். தற்சமயம் அந்த காலக்கெடு முடிந்துவிட்ட பிறகு, இனி இவர்கள் தங்களது கட்சிகளின் சார்பில் புதிதாக விண்ணப்பித்து தங்கள் பெயரில் அனுமதி பெற்று பிரிவு 77-ன் செலவு விலக்கைப் பெற முடியாது. தங்களது சொந்த கட்சித் தலைவர்களாக, கூட்டணிக் கட்சி தலைவர்களாக த.வெ.க. வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்ய இவர்கள் அனுமதிக்கப்பட்டால், நட்சத்திர பேச்சாளர்களுக்கான செலவு விலக்கு இனி இவர்களுக்கு பொருந்தாது.</p><p>எனவே, தேர்தல் ஆணைய விதிகளின்படி இவர்களின் சம்பந்தப்பட்ட உரிய பிரசாரச் செலவுகள் மொத்தமும் த.வெ.க. வேட்பாளர்களின் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும் என்பதே சட்டம். ஒரு வழக்கில் தேர்தல் ஆணையம் இதைத்தான் வலியுறுத்தி இருக்கிறது. இவர்களின் பிரசார செலவுகள் த.வெ.க. வேட்பாளர்களின் கணக்கில் அவ்வாறு சேர்க்கப்படாமல் இருந்தாலோ, இதன்மூலம் த.வெ.க. வேட்பாளர்களின் சட்டப்பூர்வ தேர்தல் செலவு வரம்பு மீறப்பட்டாலோ, அது ஊழல் நடைமுறை என்பதே தெளிவான சட்ட நிலை ஆகும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் 100 நாள் செயல்பாடு சிறப்பாக உள்ளது - அமைச்சர் ஜெகதீஸ்வரி பெருமிதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-100-day-performance-of-the-singappen-special-task-force-has-been-excellent-minister-jagadeeswari-expresses-pride</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-100-day-performance-of-the-singappen-special-task-force-has-been-excellent-minister-jagadeeswari-expresses-pride#comments</comments><guid isPermaLink="false">723b61d7-60f4-4e38-ae55-6a451580a97d</guid><pubDate>Sun, 20 Sep 2026 12:59:38 +0000</pubDate><atom:updated>2026-09-20T12:59:38.274Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜெகதீஸ்வரி,அமைச்சர் ஜெகதீஸ்வரி,சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை,​​Minister Jagadeeswari,​​Jagadeeswari</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/u054rlmd/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ஜெகதீஸ்வரி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/u054rlmd/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் 100 நாள் செயல்பாடு சிறப்பாக உள்ளது என அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.</p><h2>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை</h2><p>இது தொடர்பாக, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:</p><p>பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் கடந்த ஜூன் 9, 2026 அன்று சென்னையில் தமிழக முதல்-அமைச்சர் விஜய்யால் தொடங்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, தனது முதல் 100 நாட்களை நிறைவு செய்துள்ளது.</p><h2>100 நாட்கள் நிறைவு</h2><p>தமிழகத்தில் இந்த 100 நாட்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது, புகார்களுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்வது, பாதுகாக்கப்படக்கூடிய பகுதிகளை கண்காணிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p><p>அதன்படி, 4,231 புகார்களுக்கு சம்பவ இடத்திற்கே நேரில் சென்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 58 பெண்கள், 94 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளனர். 111 பாதுகாப்புக்குள்ளாகும் நபர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.</p><h2>செயல்பாடு சிறப்பாக உள்ளது</h2><p>குழந்தைகள் பாதுகாப்பில் முக்கிய நடவடிக்கையாக, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்த 100 நாட்களில் 54 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.</p><p>பெண்களுக்கு அவசர காலங்களில் விரைவான உதவி கிடைக்கும் வகையில் 1091 சிங்கப்பெண் உதவி எண் 24 மணி நேரமும் செயல்படுகிறது. இந்த உதவி எண் 112 அவசர உதவி எண்ணுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, புகார்களுக்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.</p><p>மொத்தத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் 100 நாள் செயல்பாடு சிறப்பாக உள்ளது என அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>என்ன ஒரு திறமை! 1330 திருக்குறளையும் தலைகீழாக எழுதி அசத்திய அரசுப் பள்ளி மாணவர்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-a-talent-a-government-school-student-who-wrote-1330-thirukkurals-upside-down</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-a-talent-a-government-school-student-who-wrote-1330-thirukkurals-upside-down#comments</comments><guid isPermaLink="false">31fc7fa1-f1cb-49c7-b12b-4733d8203ddc</guid><pubDate>Sun, 20 Sep 2026 12:54:24 +0000</pubDate><atom:updated>2026-09-20T12:54:24.937Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>student,Government School,மாணவர்,திருக்குறள்,Thirukkural,அரசுப் பள்ளி,சாதனை,achieved</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/rshm62r3/33.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/rshm62r3/33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கரூர்,</p><p>1330 திருக்குறள்களையும் தலைகீழாக எழுதி அரசுப் பள்ளி மாணவர் ஒருவர் புதிய சாதனை படைத்துள்ளார். </p><h2>மிரர் ரைட்டிங்</h2><p>கரூர் மாவட்டம் கீழவெளியூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவர் சுதர்சன். சிறு வயது முதலே ஏதேனும் ஒரு துறையில் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆர்வம் இவருக்குள் இருந்துள்ளது. இதன் வெளிப்பாடாக, எழுத்துக்களை இடமிருந்து வலமாக மாற்றியமைத்து எழுதும் 'மிரர் ரைட்டிங்' கலையை அவர் கற்றுக்கொண்டார்.</p><h2>கடினமான முறை</h2><p>இந்த முறையில் எழுதப்பட்ட தாள்களைக் கண்ணாடியில் காட்டினால் மட்டுமே அதில் உள்ள எழுத்துக்களை நேராகப் படிக்க முடியும். இத்தகைய கடினமான முறையில், 1333 திருக்குறள்களையும் முழுமையாக எழுதி முடித்து வியப்பில் ஆழ்த்தியுள்ளார் சுதர்சன்.</p><p>இதுகுறித்து மாணவனின் தாய் கூறியதாவது:-</p><p>"கீழவெளியூர் பகுதியில் இருந்து வரும் நாங்கள், எங்கள் மகன் மற்றும் மகளை இங்குள்ள அரசுப் பள்ளியில்தான் படிக்க வைக்கிறோம். என் மகன் எப்போதும் ஏதாவது சாதிக்க வேண்டும் என்றே நினைத்துக் கொண்டிருப்பான். ஒருநாள் அவன் எழுதியதைக் காட்டி, 'அம்மா இதைப் பார்' என்றான். எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. அதன்பின்தான் இது 'மிரர் ரைட்டிங்' என்று விளக்கினான். சாதிக்க வேண்டும் என்று நினைத்தால், நம் தமிழ் மறையான திருக்குறளை இதில் எழுது என்று அவனுக்கு யோசனை கூறினேன். </p><h2>பாராட்டுகள்</h2><p>என் வார்த்தையை ஏற்று, ஒரே வாரத்தில் 1330 திருக்குறள்களையும் இந்த முறையில் எழுதி முடித்துவிட்டான்" என்றார். தன் கடின உழைப்பால் உருவான இந்தத் திருக்குறள் படைப்பை மாணவர் சுதர்சன் தனது பள்ளியில் காட்டியபோது, ஆசிரியர்களும் சக மாணவர்களும் அவரைப் பாராட்டி நெகிழ்ச்சியடைந்தனர். தமிழ் ஆர்வமும் தனித்திறமையும் கொண்ட இந்த அரசுப் பள்ளி மாணவனின் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88">சாதனை</a>க்கு இப்போது பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>எடப்பாடி பழனிசாமியின் மதுராந்தகம் பிரசாரம்... 2 நாள் பயணத் திட்டம் வெளியீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/edappadi-palaniswamis-madhurantakam-campaign-2-day-itinerary-released</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/edappadi-palaniswamis-madhurantakam-campaign-2-day-itinerary-released#comments</comments><guid isPermaLink="false">376a5891-50b1-4abc-9091-a0025ec67264</guid><pubDate>Sun, 20 Sep 2026 12:39:44 +0000</pubDate><atom:updated>2026-09-20T12:39:44.587Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>campaign,எடப்பாடி பழனிசாமி,Edappadi Palaniswami ​,பிரசாரம்,மதுராந்தகம்,Madhurandakam</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/b4hye57q/admk.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/b4hye57q/admk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>எடப்பாடி பழனிசாமியின் மதுராந்தகம் பிரசாரத்திற்கு 2 நாள் பயணத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.</p><p>இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>தேர்தல் பிரசார சுற்றுப் பயணம்</h2><p>மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் 6.10.2026 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் <a href="https://www.dailythanthi.com/topic/edappadi-palaniswami">எடப்பாடி பழனிசாமி</a> மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் 24.9.2026, 26.9.2026 ஆகிய தேதிகளில், கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு, கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து சூறாவளி தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்கள்.</p><p>இதன்படி, செப்டம்பர் 24-ந்தேதி மாமண்டூரில் பிற்பகல் 3 மணிக்கும், பூதூரில் மாலை 4.30 மணிக்கும், தேவத்தூரில் மாலை 6 மணிக்கும், சரவம்பாக்கத்தில் இரவு 7 மணிக்கும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.</p><p>அதேபோல், செப்டம்பர் 26-ந்தேதி எல். எண்டத்தூரில் பிற்பகல் 3 மணிக்கும், ராமாபுரத்தில் மாலை 4.30 மணிக்கும், எலப்பாக்கத்தில் மாலை 6 மணிக்கும், ஒரத்தியில் இரவு 7 மணிக்கும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.</p><p>சுற்றுப் பயணத் திட்டத்திற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும், மதுராந்தகம் தொகுதியைச் சேர்ந்த தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள், சிறப்பான முறையில் செய்திடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் லண்டனுக்கு சென்றது தேவையற்றது - அண்ணாமலை விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-chief-ministers-visit-to-london-was-unnecessary-annamalai-criticises</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-chief-ministers-visit-to-london-was-unnecessary-annamalai-criticises#comments</comments><guid isPermaLink="false">d5d74f4a-3927-4dd4-969b-ef2dc6a140fa</guid><pubDate>Sun, 20 Sep 2026 12:09:48 +0000</pubDate><atom:updated>2026-09-20T12:09:48.856Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,Vijay,Annamalai,அண்ணாமலை,தொழில் முதலீடு,லண்டன்,முதல்-அமைச்சர் விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/tiacm44y/malai33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[  அண்ணாமலை விமர்சனம்]]></media:title><media:description type="html"><![CDATA[ 
முதல்-அமைச்சர் லண்டனுக்கு சென்றது தேவையற்றது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/tiacm44y/malai33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p>முதல்-அமைச்சரின் லண்டன் பயணம் தேவையில்லாதது என அண்ணாமலை கூறியுள்ளார்.</p> <p>மதுரை காமராஜர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி மகா சுசீந்திரன் தலைமையில் நடந்தது. ஜி.ராஜ்குமார் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-</p><p>தமிழக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a> லண்டன் சென்று முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு பதிலாக கோவை, மதுரை உள்ளிட்ட மாணவர்களுக்கு வந்து இங்கு இங்குள்ள தொழில் அதிபர்களை சந்தித்து தொழிலை விரிவு படுத்த என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும், அதற்காக அரசு 50 சதவீதம் மானியம் வழங்கும் என்றெல்லாம் உறுதி அளித்தாலே தொழில் மேம்படும். பொருளாதார வளர்ச்சி மிக்க நாடாக நம் நாடு உருவெடுக்கும்.</p><p>முதல்-அமைச்சர் லண்டனுக்கு சென்றது தேவையற்றது. மேலும் நாம் ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலைத்துறையை  எடுப்போம். மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா சினிமா தியேட்டரில் பிளாக் டிக்கெட் விற்பது போன்று நிலையில் இருந்தது. பச்சை டோக்கன் வைத்திருப்பவர்கள் அங்கே அமருங்கள். சிவப்பு டோக்கன் வைத்திருப்பவர்கள் இங்கே அமருங்கள் என்று நிலை இருந்தது. மாட வீதிகள் வி.ஐ.பி.க்களின் வாகன காப்பகமாக தான் இருந்தது. ஸ்ரீரங்கம் கோவில் முன்பாக கடவுள் இல்லை. கடவுள் இல்லவே இல்லை என்றெல்லாம் வாசகம் இருக்கிறது. இதை உடனடியாக எடுக்க வேண்டும் என்பதே நமது குரல், நாம் இயக்கத்தில் இருப்பவர்கள் அனைவரும் லீடரே. இது தான் உண்மையான புரட்சி.</p><p>'வீ த லீடர்ஸ்' அமைப்பு விரைவில் அரசியல் கட்சியாக மாறும். ஜல்லிக்கட்டு தொடர்பாக எம்.எல்.ஏ. பேசிய விவகாரத்தில் முதல்-அமைச்சர் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். விரைவில் மகளிருக்காண பாதுகாப்பு குறித்து மகளிர் மாநாடு நமது இயக்கத்தின் சார்பில் நடைபெற இருக்கிறது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tenkasi-power-outage-due-to-monthly-maintenance</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tenkasi-power-outage-due-to-monthly-maintenance#comments</comments><guid isPermaLink="false">65de69e8-6df9-47e2-88e6-5eba513d1844</guid><pubDate>Sun, 20 Sep 2026 12:06:30 +0000</pubDate><atom:updated>2026-09-20T12:06:30.416Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,monthly maintenance work,power outage,தென்காசி,மாதாந்திர பராமரிப்பு பணி,நாளை மறுநாள்,மின்தடை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/9yvowqvg/powercutnellai.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பராமரிப்பு பணிகள்]]></media:title><media:description type="html"><![CDATA[ மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/9yvowqvg/powercutnellai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF">தென்காசி</a> மாவட்டம் கடையநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள்  மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.</p><p>இதுகுறித்து கடையநல்லூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் பா.கற்பக விநாயக சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p> <h2>காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை</h2><p>விஸ்வநாதபேரி துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்பு பணிகள்</a> நடைபெற உள்ளது. இதனால் இந்த துணைமின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் கீழ்க்கண்ட இடங்களில் காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்சாரம் இருக்காது.</p> <h2>மின்தடை படும் இடங்கள்</h2><p>சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், வழிவழிக்குளம், மேல கரிசல்குளம், ராயகிரி, கொத்தாடைப்பட்டி, சொக்கநாதன்புத்தூர், மேலூர் துரைச்சாமிபுரம் மற்றும் வடுகப்பட்டி.</p><h2>சங்கரன்கோவில் கோட்டம்</h2><p>இதேபோல், சங்கரன்கோவில் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>மலையாங்குளம், கலிங்கப்பட்டி, திருவேங்கடம், நக்கலமுத்தன்பட்டி ஆகிய உபமின் நிலையங்களில் வரும் நாளை மறுநாள் காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு வேலைகள் நடைபெற உள்ளது. இதனால் கீழ்க்கண்ட கிராமங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படும்.</p><p><strong>மின்தடை படும் இடங்கள்</strong></p><h2>மலையாங்குளம் உபமின் நிலையம்</h2><p>மலையாங்குளம், சிதம்பராபுரம், செவல்குளம், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி.கலிங்கப்பட்டி உபமின் நிலையம்: கலிங்கப்பட்டி, சத்திரப்பட்டி, ஆலடிப்பட்டி, மலையடிப்பட்டி, சுப்புலாபுரம், செள்ளிகுளம், பாறைப்பட்டி, பருவக்குடி, கரிசல்குளம் மற்றும் ரெங்கசமுத்திரம்.</p><h2>திருவேங்கடம் உபமின் நிலையம்</h2><p>திருவேங்கடம், உமையத்தலைவன்பட்டி, ஆலமநாயக்கம்பட்டி, மகாதேவர்பட்டி, ஆலடிப்பட்டி, கரிசல்குளம், குறிஞ்சாகுளம், வெள்ளாகுளம், சங்குப்பட்டி, புதுப்பட்டி, ஆவுடையார்புரம் மற்றும் குண்டம்பட்டி.</p><h2>நக்கலமுத்தன்பட்டி உபமின் நிலையம்</h2><p>நக்கலமுத்தன்பட்டி, இளையரசனேந்தல், கொம்பன்குளம், வெங்கடாசலபுரம், புளியங்குளம், அய்யனேரி, அப்பனேரி, ஆண்டிப்பட்டி மற்றும் மைப்பாறை.</p><p>இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மதுரை: இடத்தகராறில் பெண் அடித்துக் கொலை - 5 பேர் கைது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-woman-beaten-to-death-in-land-dispute-5-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-woman-beaten-to-death-in-land-dispute-5-arrested#comments</comments><guid isPermaLink="false">2cd29af1-53dc-4745-9ba5-f9d06b1a7b8e</guid><pubDate>Sun, 20 Sep 2026 12:02:01 +0000</pubDate><atom:updated>2026-09-20T12:02:01.412Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/epv3f3m5/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/epv3f3m5/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரை மாவட்டம் திருமோகூர் அருகே பெருங்குடியை சேர்ந்தவர் 49 வயதான அன்னமயில். கணவர் உயிரிழந்த நிலையில் மகனுடன் வசித்து வந்துள்ளார். அன்னமயிலுக்கும், அவரது கொழுந்தன் மற்றும் நாத்தனார் குடும்பத்தினருக்கும் இடையே நீண்ட காலமாக இடத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.</p><p>இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அன்னமயிலுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால் இருதரப்பினரிடையே தகராறு மேலும் அதிகரித்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த 18-ந்தேதி அன்னமயிலுடன் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உறவினர்கள் அன்னமயிலை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.</p><p>இந்த நிலையில் நேற்று தனது சகோதரியுடன் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த அன்னமயிலை ஒரு கும்பல் கல்லால் தாக்கியுள்ளது. அன்னமயில் தப்பி ஓட முயன்றபோது, அவரை பின்தொடர்ந்து சென்று கடப்பாறையால் தாக்கி உள்ளனர். அன்னமயிலை காப்பாற்ற முயன்ற அவரது சகோதரியிடம், கடப்பாறையை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். </p> <p>அடுத்த சில நிமிடங்களில் கம்பி மற்றும் செங்கற்களால் அன்னமயிலின் தலையில் பலமாக தாக்கி அவரை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஒத்தக்கடை காவல்துறையினர், சம்பவத்தில் தொடர்புடைய ராஜ்குமார் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>உல்லாசத்திற்கு அழைத்த 3 இளம்பெண்கள்...ஆசையாக சென்ற வாலிபருக்கு நேர்ந்த சோகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-young-man-who-was-about-to-go-to-town-invited-3-young-women-for-fun</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-young-man-who-was-about-to-go-to-town-invited-3-young-women-for-fun#comments</comments><guid isPermaLink="false">b218edda-ccb8-45f3-8aee-002943886525</guid><pubDate>Sun, 20 Sep 2026 11:56:31 +0000</pubDate><atom:updated>2026-09-20T11:56:31.300Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,வாலிபர்,உல்லாசம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/xtu71ljn/womneone33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ உல்லாசத்திற்கு அழைத்த 3 இளம்பெண்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ அடுத்து நடந்த சம்பவம் 
]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/xtu71ljn/womneone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தொழிலாளி ஒருவர் சென்னை கோயம்பேட்டில் பஸ்சில் சொந்த ஊருக்கு செல்வதற்காக காத்திருந்தபோது அங்கு வந்த 3 அழகிகள் அவரை உல்லாசத்திற்கு அழைத்தனர். </p><h2>கோயம்பேடு மார்க்கெட்</h2><p>விருத்தாசலத்தை சேர்ந்த 34 வயது வாலிபர் ஒருவர் சென்னை தரமணியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சொந்த ஊரில் உள்ள தோட்டத்தில் உற்பத்தியான கரும்பு கட்டுகளை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து தந்தையுடன் சேர்ந்து விற்பனை செய்தார். பின்னர் அவரது தந்தை வாரி மூலம் சொந்த ஊருக்கு திரும்பி சென்று விட்டார்.</p><h2>உல்லாசத்திற்கு அழைத்த இளம்பெண்</h2><p>தொழிலாளி போதையில் கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வந்து பஸ்சில் சொந்த ஊருக்கு செல்வதற்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த இளம்பெண் ஒருவர் வாலிபரிடம் பேச்சு கொடுத்து உல்லாசமாக இருக்கலாம் என்று  ஆசைவார்த்தை கூறி அழைத்துள்ளார். வாலிபர் பேச்சில் மயங்கி உள்ளார். மேலும் 2 பெண்களும் இருப்பதாக கூறி உள்ளார். அவர்களும் வாலிபரை பார்த்து அழைத்துள்ளனர். செம குஷியான தொழிலாளி  சம்மதித்து ஆட்டோவில் இளம்பெண்ணுடன் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள லாட்ஜிக்கு சென்றார். ஏற்கனவே அந்த ஆட்டோவின் உள்ளே 2 இளம் பெண்கள் இருந்தனர்.</p><h2>பணம் கேட்டு தகராறு</h2><p>லாட்ஜிக்கு சென்றபோது இளம்பெண்ணையும் அந்த  2 பெண்களையும் அனுமதிக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து தொழிலாளி வெளியே வந்த போது இளம்பெண் அவரிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டார்.</p><p>மேலும் அந்த பெண்ணுடன் வந்த ஆட்டோ டிரைவர் மற்றும் 2 இளம்பெண்களும் சேர்ந்து தொழிலாளி மீது பாய்ந்து அடித்து உதைத்து கல்லால் தாக்கினர். அவரிடம் இருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் செல்போனை பறித்து விட்டு இளம்பெண்களும், ஆட்டோ டிரைவரும் அங்கிருந்து ஆட்டோவில் தப்பி சென்று விட்டனர். இந்த தாக்குதலில் தொழிலாளியின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. </p><h2>உல்லாசம் அனுபவிக்க ஆசைப்பட்டு அடிவாங்கிய சம்பவம்</h2><p>அழகிகளுடன்  உல்லாசம் அனுபவிக்க ஆசைப்பட்டு அடிவாங்கியதுடன் பணம், செல்போனை இழந்து நொந்துபோன தொழிலாளி இதுகுறித்து கோயம்பேடு பஸ் நிலைய போலீசில் புகார் அளித்தார். இன்ஸ் பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். </p><p>இதில் உல்லாசத்துக்கு அழைத்து தொழிலாளியிடம் பணம், செல்போனை பறித்து தப்பியது எம்.ஜி. ஆர்.நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரவீன் மற்றும் செம்மஞ்சேரி பகுதியை சேர்ந்த இளம்பெண்கள் 3 பேர் என்பது தெரிந்தது. இதையடுத்து பிரவீன் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் இதேபோல் உல்லாசத்துக்கு அழைத்து மேலும் பலரிடம் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது பற்றி விசாரணை நடந்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>மயிலாடுதுறையில் பயங்கர சத்தத்துடன் வீட்டில் விழுந்த இடி!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thunder-struck-a-house-in-mayiladuthurai-with-a-terrifying-sound</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thunder-struck-a-house-in-mayiladuthurai-with-a-terrifying-sound#comments</comments><guid isPermaLink="false">db092e0f-23b9-4808-a382-24fcd4f0da1b</guid><pubDate>Sun, 20 Sep 2026 11:49:22 +0000</pubDate><atom:updated>2026-09-20T11:49:22.646Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Mayiladuthurai,மயிலாடுதுறை,பொருட்கள் சேதம்,Thunder,இடி மின்னலுடன் பலத்த மழை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/jlto1j6l/20.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இடியின் தாக்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/jlto1j6l/20.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மயிலாடுதுறை,</p><p>நேற்று இரவு பெய்த கனமழையில் பயங்கர சத்தத்துடன் கூடிய இடி வீட்டின் வாசலில் விழுந்து தூண்கள் மற்றும் மின்சாதன பொருட்கள் சேதமடைந்துள்ளது.</p><h2>இடியின் தாக்கம்</h2><p>மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா அருகே பெருஞ்சேரி பகுதியில் வசித்து வருபவர் பார்த்தசாரதி. இவர் மின்வாரியத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த நிலையில், நேற்று நள்ளிரவு சுமார் 11.30 மணியளவில் பார்த்தசாரதியின் வீட்டின் வாசல் பகுதியில் பயங்கர சத்தத்துடன் இடி விழுந்தது. இதன் தாக்கத்தால், அவரது வீட்டில் இருந்த மின்சார சர்வீஸ் லைனின் இரும்பு கம்பி இரண்டு துண்டுகளாக உடைந்து கீழே விழுந்தது</p><p>மேலும், வீட்டின் வாசலில் இருந்த கான்கிரீட் தூண் பெயர்ந்து நாலாபுறமும் சிதறியது. இந்த இடியின் வீரியம் பார்த்தசாரதியின் வீட்டை மட்டுமன்றி, அவருக்கு எதிர் வரிசையில் உள்ள வீடுகளையும் பதம் பார்த்துள்ளது. இடி தாக்கிய வேகத்தில் எதிரே உள்ள வீட்டின் சுவர்களில் பலத்த விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.</p><h2>ரூ.5 லட்சம் மதிப்பு பொருட்கள் சேதம்</h2><p>இந்த திடீர் இடி விபத்தினால், பார்த்தசாரதியின் வீட்டில் இருந்த மின்சார மீட்டர் பாக்ஸ், எல்.இ.டி தொலைக்காட்சி, ஏசி , வாஷிங் மெஷின் மற்றும் மின்விசிறிகள் உள்ளிட்ட அனைத்து மின்சாதனப் பொருட்களும், வீட்டிற்கான சர்வீஸ் வயரிங் அமைப்புகளும் முற்றிலுமாக கருகி சேதமடைந்தன. </p><p>இதேபோல், அந்த வடக்கு வீதியில் உள்ள மற்ற சில வீடுகளிலும் மின்சாதனப் பொருட்கள் பெருமளவில் பழுதடைந்துள்ளதாக அப்பகுதி<a href="https://www.dailythanthi.com/topic/மக்கள்-வேதனை"> மக்கள் வேதனை</a>யுடன் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் ஒட்டுமொத்தமாக ரூ.5 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.</p><h2>கோரிக்கை</h2><p>நள்ளிரவில் நேர்ந்த இந்த இடி விபத்தால் பெருஞ்சேரி கிராம மக்கள் பெரும் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்ந்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளும், வருவாய்த்துறையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் வந்து <a href="https://www.dailythanthi.com/topic/ஆய்வு">ஆய்வு</a> நடத்த வேண்டும் என்றும், இடி விழுந்து வாழ்வாதாரப் பொருட்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தேனியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி - ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anti-drug-awareness-rally-in-theni-mla-jaganath-mishra-flags-it-off</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anti-drug-awareness-rally-in-theni-mla-jaganath-mishra-flags-it-off#comments</comments><guid isPermaLink="false">7dcaffab-5d6b-4b8d-8b86-38e962121e94</guid><pubDate>Sun, 20 Sep 2026 11:43:14 +0000</pubDate><atom:updated>2026-09-20T11:43:14.522Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Theni,தேனி,பேரணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/v9a7l2dg/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/v9a7l2dg/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி,</p><p>தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் ‘போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி’ இன்று நடைபெற்றது. இதனை கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா தொடங்கி வைத்ததோடு, பேரணியிலும் பங்கேற்றார்.  </p><p>உத்தமப்பாளையம் நகர் முழுவதும் நடைபெற்ற இந்த போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில், பள்ளி மாணவர்கள், ஸ்கேட்டிங் மாணவர்கள், ரோட்டரி கிளப் மற்றும் செவிலியர் பயிற்சி பள்ளியை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். </p><p>பேரணியில் பங்கேற்றவர்கள், இளைஞர்கள் போதை பழக்கத்தை கைவிட வேண்டும் என்றும், போதைக்கு அடிமையாக கூடாது, சிறுவர்கள் செல்போன் பயன்பாட்டை குறைக்க வேண்டும், விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மோசமான வானிலை... அமைச்சர் வன்னி அரசு பயணித்த விமானம் மதுரையில் தரையிறக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bad-weather-minister-vannis-plane-lands-in-madurai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bad-weather-minister-vannis-plane-lands-in-madurai#comments</comments><guid isPermaLink="false">c0f7a3b6-d764-4fcf-97a0-4d02f43981c8</guid><pubDate>Sun, 20 Sep 2026 11:39:42 +0000</pubDate><atom:updated>2026-09-20T11:39:42.299Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>plane,விமானம்,Madurai,மதுரை,தரையிறக்கம்,மோசமான வானிலை,Bad weather,minister vanni arasu,அமைச்சர் வன்னி அரசு</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/piox5maf/32.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/piox5maf/32.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>கோவையில் மோசமான வானிலை  காரணமாக வானில் வட்டமடித்த விமானம் மதுரையில் தரையிறக்கப்பட்டது.</p><p> அமைச்சர் வன்னிஅரசு உட்பட 165 பயணிகளுடன் பயணித்த சென்னை - கோவை இண்டிகோ விமானம் மோசமான வானிலையால் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து வந்தது. அதன்பின்பு கோவையில் தரையிறங்குவதற்கு சாதகமான சூழல் இல்லாததால் மதுரைக்கு திருப்பி விடப்பட்டு அங்கு தரையிறங்கியது.</p><h2>45 நிமிடங்களுக்கும் மேலாக...</h2><p>இதேபோல மும்பையில் இருந்து மதுரை வந்த மற்றொரு இண்டிகோ <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">விமானம்</a> 45 நிமிடங்களுக்கும் மேலாக வானில் வட்டமடித்து வருகிறது. அந்த வகையில் மானாமதுரை அருகே 3 முறைக்கு மேலும், தற்போது மேலூர் அருகே 2 முறைக்கு மேலும் வட்டமடித்து கொண்டிருக்கிறது. அதில் 125 பயணிகள் பயணித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-power-cut-tirunelveli</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-power-cut-tirunelveli#comments</comments><guid isPermaLink="false">813e6bfc-2fa1-4b1c-b699-59c53f68f12f</guid><pubDate>Sun, 20 Sep 2026 11:38:15 +0000</pubDate><atom:updated>2026-09-20T11:38:15.820Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,monthly maintenance work,power outage,மாதாந்திர பராமரிப்பு பணி,நாளை,மின்தடை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/7fw5gkf8/powercutnellai.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பராமரிப்பு பணி]]></media:title><media:description type="html"><![CDATA[ மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/7fw5gkf8/powercutnellai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மின்பகிர்மான வட்டம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சீதபற்பநல்லூர் துணைமின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும்.</p><p>திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் ஜி.குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை </h2><p>சீதபற்பநல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்பு பணிகள்</a> செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட உபமின் நிலையத்தில்  காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை  கீழ்கண்ட ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம் பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும்.</p><p> புதூர், சீதபற்பநல்லூர், உகந்தான்பட்டி, சுப்பிரமணியபுரம், சமத்துவபுரம், சிறுக்கன்குறிச்சி, காங்கேயன் குளம், வல்லவன் கோட்டை, வெள்ளாளங்குளம், முத்தன்குளம், மாறாந்தை, கல்லத்திகுளம், நாலான்குறிச்சி, கீழகரும்புளியூத்து பகுதிகள் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>”தமக” என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கிய அஜித் ரசிகர்கள்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ajith-fans-have-started-a-new-political-party-called-tmk</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ajith-fans-have-started-a-new-political-party-called-tmk#comments</comments><guid isPermaLink="false">c792e9b7-4489-4bff-84d5-86429728358d</guid><pubDate>Sun, 20 Sep 2026 11:09:11 +0000</pubDate><atom:updated>2026-09-20T11:09:11.476Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Kallakurichi,அஜித்,நடிகர் அஜித்குமார்,Actor Ajithkumar,புதிய அரசியல் கட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/0nuk3cbg/ajithone33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ புதிய அரசியல் கட்சி]]></media:title><media:description type="html"><![CDATA[ அஜித் ரசிகர்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/0nuk3cbg/ajithone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>உளுந்தூர்பேட்டை அருகே தமிழக மக்கள் கழகம் என்ற புதிய கட்சியை  நடிகர் அஜித்குமார் ரசிகர்கள் தொடங்கி உள்ளனர்.</p><h2>அரசியலில் ஈடுபடும் எண்ணம் துளியளவும் இல்லை </h2><p>நடிகரும் ரேஸருமான<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D"> அஜித் குமார்</a>, திரைப்படங்களில் நடித்துக் கொண்டும், இடையில் கார் பந்தயங்களிலும் பங்கேற்று வருகிறார்.  நடிகர் அஜித் அரசியலுக்கு வர மாட்டேன் என்றும், தமக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் துளியளவும் இல்லை என்றும் பல முறை பொதுவெளியில் தெளிவுபடுத்தியுள்ளார். எனினும் அவரது அரசியல் பிரவேசம் குறித்தான விவாதங்கள் தமிழ்நாட்டில் அவ்வப்போது எதிரொலித்து வருகிறது.  ஆனால் இதுவரை அஜித் எந்தவொரு அரசியல் சார்ந்த கருத்தையும் வெளிப்படுத்தியதில்லை. </p><h2>அஜித் - விஜய் சந்திப்பு </h2><p>சினிமாவில், ஒரு கால கட்டத்தில் அஜித் குமாருக்கு பரம எதிரியாக இருந்த விஜய், கடந்த 2024ல் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கி, தற்போது தமிழ்நாட்டில் ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளது.  அஜித் ரசிகர்கள் பலரும், தங்கள் அபிமான நடிகரான அஜித்தும் அரசியலில் களமிறங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.</p><p>சமீபத்தில், முதல்-அமைச்சர் விஜய் லண்டன் சென்று அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தைத் தொடங்கி வைத்த நிகழ்வு மற்றும் அவர்களின் சந்திப்பு அரசியல் அரங்கில் பெரும் பேசுபொருளானது. முன்னதாக, முதல்-அமைச்சர் விஜய், மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையின் வளர்ச்சிக்கு ஆற்றும் பங்கு குறித்து பாராட்டி இருந்தார் அஜித். </p><h2>புதிய கட்சி உதயம்</h2><p>இந்நிலையில் நடிகர் அஜித் ரசிகர்கள் ஒருங்கிணைந்து 'தமிழக மக்கள் கழகம்' என்ற புதிய கட்சியை தொடங்கி, கட்சிக்கு புதிய கொடியையும் அறிமுகம் செய்துள்ளனர். இந்த நிகழ்வு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அரங்கேறியுள்ளது.</p><p>தமிழக மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவராக ஆபித், மாநில செயலாளராக ராம்குமார், மாநில பொருளாளராக முகம்மது ஷா மற்றும், மாநில அமைப்புச் செயலாளர், கொள்கை பரப்புச் செயலாளர், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். </p><h2>அஜித்திற்காக பொதுச்செயலாளர் பதவி காலி </h2><p>அஜித் ரசிகர்கள் தொடங்கியுள்ள தமிழக மக்கள் கழகம் கட்சி கொடி மஞ்சள், வெள்ளை, சிவப்பு நிறத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. கொடியில் இரண்டு புறமும் சிறுத்தைகள் இடம்பெற்றுள்ளன. தவெக கொடியில் இரட்டை யானை இடம்பெற்றிருக்கும். கிட்டத்தட்ட தவெக கொடியைப் போலவே இந்தக் கட்சிக் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அஜித் ரசிகர்கள் இதில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p>கட்சி தொடங்கி செய்தியாளர்களைச் சந்தித்த நிர்வாகிகள்,</p><p>அஜித் சார் அரசியலுக்கு வரவில்லை. கட்சியை ஆரம்பிக்க சொல்லவில்லை. நாங்கள் தான் ஆரம்பித்திருக்கிறோம்.</p><p>அஜித் சார் ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் ஒருங்கிணைந்து தமிழக மக்கள் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கி உள்ளோம். அஜித் சார் அரசியலுக்கு வரவேண்டும் என விரும்புகிறோம். மாநில பொது செயலாளர் என்ற பதவியை அவருக்காக நாங்கள் காலியாக வைத்துள்ளோம்." எனத் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி மறைவு:  பிரேமலதா விஜயகாந்த் இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/death-of-sivaji-ganesans-elder-daughter-santhi-premalatha-vijayakanth-condoles</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/death-of-sivaji-ganesans-elder-daughter-santhi-premalatha-vijayakanth-condoles#comments</comments><guid isPermaLink="false">031b9d79-5fbf-4806-922b-9749f29c4a6d</guid><pubDate>Sun, 20 Sep 2026 11:06:55 +0000</pubDate><atom:updated>2026-09-20T11:06:55.173Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இரங்கல்,சிவாஜி கணேசன்,Premalatha Vijayakanth,பிரேமலதா விஜயகாந்த்,condolences,மகள்,Actor Sivaji Ganesan,daughter,மறைவு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/hm2oei10/prema.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ சாந்தி, பிரேமலதா விஜயகாந்த்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி மறைவு:  பிரேமலதா விஜயகாந்த் இரங்கல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/hm2oei10/prema.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி மறைவிற்கு  பிரேமலதா விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, தேமுதிக பொதுச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D">பிரேமலதா விஜயகாந்த்</a> அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>வருத்தம்</h2><p>மறைந்த நடிகர்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D"> சிவாஜி கணேசனின்</a> மூத்த மகளும், திரைப்பட தயாரிப்பாளருமான சாந்தி நாராயணசாமி (71)  காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையும் வருத்தமும் அடைந்தேன்.</p> <h2>இனிமையானவர்</h2><p>நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடைய மூத்த மகள் சாந்தி பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். அவரது மறைவு குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அவரை நேசித்த அனைவருக்கும் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.</p> <h2>ஆழ்ந்த இரங்கல்</h2><p>அன்பு சகோதரி சாந்தி நாராயணசாமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p> <p>அவரது ஆன்மா சாந்தியடையவும், இந்தப் பேரிழப்பைத் தாங்கும் மனவலிமையை அவரது குடும்பத்தினருக்கு எல்லாம் வல்ல இறைவன் வழங்கிடவும் பிரார்த்திக்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பண்ருட்டியை அச்சுறுத்தும் மர்ம காய்ச்சல்... மருத்துவமனையில் குவிந்த நூற்றுக்கணக்கான மக்கள்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mysterious-fever-threatening-panruti-hundreds-of-people-gathered-at-the-hospital</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mysterious-fever-threatening-panruti-hundreds-of-people-gathered-at-the-hospital#comments</comments><guid isPermaLink="false">88f3fb5e-5778-4ce1-817f-77f9b627ff9a</guid><pubDate>Sun, 20 Sep 2026 11:04:57 +0000</pubDate><atom:updated>2026-09-20T11:04:57.987Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>doctor,hospital,மருத்துவமனை,மர்ம காய்ச்சல்,Nurse,Fever,பண்ருட்டி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/osus6a6u/19.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நூற்றுக்கணக்கான மக்கள் மருத்துவமனையில் சூழ்ந்தனர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/osus6a6u/19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர்,</p><p>மர்ம காய்ச்சலால் இன்று பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக நூற்றுக்கணக்கான மக்கள் வந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><h2>மர்ம காய்ச்சல்</h2><p>கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் தீவிர பருவநிலை மாற்றம் காரணமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.</p><p>காய்ச்சல் பாதிப்பு திடீரென அதிகரித்ததால், பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டனர். இதனால் நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதில் அங்குள்ள மருத்துவர்களும் செவிலியர்களும் திணறும் சூழ்நிலை ஏற்பட்டது.</p><p>இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-</p><p>தற்போது ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் மற்றும் பெய்த மழையினால் குடியிருப்புப் பகுதிகளில் பெருமளவில் மழைநீர் தேங்கியுள்ளது.</p><p>இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி, அவை கடிப்பதன் மூலமே இந்த மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. எனவே, குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><h2>கோரிக்கை</h2><p>மேலும், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் தற்காலிகமாக கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமித்து தடையற்ற சிகிச்சை வழங்க <a href="https://www.dailythanthi.com/topic/தமிழக-அரசு">தமிழக அரசு</a> ஏற்பாடு செய்ய வேண்டும்.</p><p>பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த <a href="https://www.dailythanthi.com/topic/மர்ம-காய்ச்சல்">மர்ம காய்ச்சல்</a> மேலும் பரவாமல் தடுக்க மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் தமிழக அரசு உடனடியாக தீவிர முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>திருப்பத்தூரில் கனமழை: ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/heavy-rain-in-tirupattur-water-cascading-vigorously-at-jalagamparai-falls</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/heavy-rain-in-tirupattur-water-cascading-vigorously-at-jalagamparai-falls#comments</comments><guid isPermaLink="false">bb972b5f-1c76-4dc3-aa02-d9b20e40ef17</guid><pubDate>Sun, 20 Sep 2026 10:46:32 +0000</pubDate><atom:updated>2026-09-20T10:46:32.594Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirupattur,திருப்பத்தூர்,நீர்வீழ்ச்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/u3lfmwdg/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/u3lfmwdg/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பத்தூர்,</p><p>ஜவ்வாது மலையை ஒரு பகுதியாகவும், மேற்கு தொடர்ச்சி மலையை மறுபகுதியாகவும் எல்லையாக கொண்டு அமைந்த திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏலகிரி மலை, ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி ஆகியவை சுற்றுலா பயணிகளை கவரும் இடங்களாக உள்ளன. </p> <p>ஏலகிரி மலைப்பகுதியில் பெய்யும் மழையின் காரணமாக இயற்கை மூலிகைகளுடன் தண்ணீர் கலந்து ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் அருவியாய் கொட்டுறது. இந்த அருவியில் குளித்து விட்டு சென்றால் தீராத நோயும் தீர்ந்துவிடும் என்று நம்பப்படுகிறது. வனத்துறையின் கட்டுபாட்டில் உள்ள ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில், விடுமுறை நாட்களின்போது சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும். </p> <p>இதனிடையே கடந்த சில நாட்களாக தண்ணீர் இன்றி ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி வறட்சியாக காணப்பட்டது. இந்நிலையில், நேற்று இரவு திருப்பத்தூரில் கனமழை பெய்ததை தொடர்ந்து, ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் இன்று தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகையும் இன்று அதிகரித்து காணப்பட்டது. தொடர்ந்து மழை பெய்தால் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளிலும் நீர்வரத்து அதிகரிக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>தருமபுரி: பாறை உருண்டு விழுந்து, ரெயில் சக்கரம் சேதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dharmapuri-rock-fall-damages-train-wheel</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dharmapuri-rock-fall-damages-train-wheel#comments</comments><guid isPermaLink="false">942bcd0c-81ac-4237-921b-6dcfdf5ff52b</guid><pubDate>Sun, 20 Sep 2026 10:43:00 +0000</pubDate><atom:updated>2026-09-20T10:43:00.576Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>train,ரெயில்,Dharmapuri,Damage,சேதம்,தருமபுரி,பாறை,fall,giant rock</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/v5jk5av4/traindharmapuri.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ரெயிலின் சக்கர பகுதி சேதம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தருமபுரி: பாறை உருண்டு விழுந்து, ரெயிலின் சக்கர பகுதி சேதம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/v5jk5av4/traindharmapuri.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தருமபுரி, </p><p> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF">தருமபுரி</a> மாவட்டம் தொப்பூர் - முத்தம்பட்டி இடையே இன்று காலை பெய்த கனமழை காரணமாகத் திடீரெனப் பலத்த மண்சரிவு ஏற்பட்டது. இதனால் பாறை உருண்டு விழுந்ததில் ரயிலின் சக்கரம் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.</p> <h2>கனமழை </h2><p>நாகர்கோவிலில் இருந்து பெங்களூரு நோக்கி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">எக்ஸ்பிரஸ் ரெயில்</a> சென்று கொண்டிருந்தது. இந்த ரெயில் இன்று காலை தொப்பூர் - முத்தம்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள மலைப்பாதையில் கடந்து சென்றபோது, அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக திடீரென பலத்த மண் சரிவு ஏற்பட்டது. </p> <h2>ரெயிலில் மோதிய பாறை</h2><p>மண் சரிவின் வேகம் தாங்காமல் மலையின் உச்சியிலிருந்து ஒரு ராட்சத பாறை பயங்கர சத்தத்துடன் தண்டவாளத்தை நோக்கி உருண்டு வந்தது. கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்த பெரிய பாறை, வேகமாகச் சென்று கொண்டிருந்த நாகர்கோவில் - பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலின் பக்கவாட்டு பகுதியிலும், சக்கரத்திலும் பயங்கரமாக மோதியது.</p><h2>பயணிகள் அலறல் </h2><p>பாறை மோதிய வேகத்தில் ரெயிலின் சக்கர பகுதியில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டது. பயங்கர சத்தம் கேட்டு ரெயிலில் இருந்த பயணிகள் அனைவரும் பயத்தில் அலறினர். எனினும், லோகோ பைலட் சாமர்த்தியமாக செயல்பட்டு ரெயிலை உடனடியாக நிறுத்தினார். இதனால் ரெயில் தடம் புரளாமல் பெரும் விபத்து  தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை; அனைவரும் பத்திரமாக உயிர் தப்பினர்.</p><h2> பழுது நீக்கம்</h2><p>இதனை தொடர்ந்து, விபத்துக்குள்ளான ரெயில் மிக குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு அருகில் உள்ள தருமபுரி ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு தயார் நிலையில் இருந்த ரெயில்வே தொழில்நுட்பக் குழுவினர், சேதமடைந்த சக்கர பகுதியை முழுமையாக பழுது நீக்கி சரிசெய்தனர்.ரெயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் ரெயிலை முழுமையாக ஆய்வு செய்து அனுமதி அளித்த பின், ரெயில் மீண்டும் பெங்களூரு நோக்கி தனது பயணத்தை தொடர்ந்தது. </p> <p>மலைப்பாதையில் ஓடும் ரெயில் மீது பாறை உருண்டு விழுந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோவில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் விரைவில் ஏற்படுத்தப்படும்: அமைச்சர் ரமேஷ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/facilities-for-differently-abled-persons-will-soon-be-provided-in-temples-minister-ramesh</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/facilities-for-differently-abled-persons-will-soon-be-provided-in-temples-minister-ramesh#comments</comments><guid isPermaLink="false">fdbd32ee-2b3f-4622-a524-6273ddb14941</guid><pubDate>Sun, 20 Sep 2026 10:40:56 +0000</pubDate><atom:updated>2026-09-20T10:40:56.796Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,temples,கோவில்,இந்து சமய அறநிலைத்துறை,Ramesh,Minister ramesh,அமைச்சர் ரமேஷ்,அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/f42r5dhe/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ரமேஷ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/f42r5dhe/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாற்றுத்திறனாளிகள் கோவில்களில் தடையின்றி தரிசனம் செய்ய அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும் என அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.</p><h2>விரைவில் வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்</h2><p>இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu/why-is-a-5-fee-charged-at-temples-minister-ramesh-explains">அமைச்சர் ரமேஷ்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>தமிழக மாற்றுத்திறனாளிகள் சட்டப் பாதுகாப்புச் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கையை அரசு சார்பில் உரிய முறையில் பரிசீலித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் விரைவாக ஆலோசனை மேற்கொண்டு, மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமும் இன்றி கோவில்களுக்குள் சென்று இறைவனை சுமுகமாக தரிசனம் செய்து திரும்புவதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>மேலும், தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய்யின் வழிகாட்டுதலின்படி, ஏற்கனவே நமது மானியக் கோரிக்கையின் அறிவிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் பயன்பாட்டிற்காக தானியங்கி மூன்று சக்கர வாகனங்கள் உள்ளிட்ட தேவையான வசதிகள் கோவில்களில் மிக விரைவில் ஏற்படுத்தித் தரப்படும்.</p><h2>எவ்வித தடையுமின்றி தரிசனம்</h2><p>மாற்றுத்திறனாளிகளும் அனைத்து பக்தர்களைப் போலவே எவ்வித தடையுமின்றி, பாதுகாப்பாகவும் மரியாதையுடனும் இறைவனை தரிசிக்க வேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கம். அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னுரிமையுடன் மேற்கொள்ளப்படும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சுடுகாட்டுக்கு வழியில்லாத அவலம்: சடலத்துடன் சாலை மறியல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-way-to-the-crematorium-road-blocked-with-corpse</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-way-to-the-crematorium-road-blocked-with-corpse#comments</comments><guid isPermaLink="false">6e2f9d99-db86-4fdf-80ac-bb774dae8282</guid><pubDate>Sun, 20 Sep 2026 10:38:50 +0000</pubDate><atom:updated>2026-09-20T10:38:50.955Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பொதுமக்கள்,சாலை,பாதை,மறியல்,தர்மபுரி,Dharmapuri,குறித்து,Road block,சுடுகாடு,Crematorium</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/l57wydcm/18.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பொதுமக்கள் சாலை மறியல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/l57wydcm/18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தர்மபுரி,</p><p>சுடுகாட்டிற்குச் செல்ல வழிப்பாதை இல்லாததைக் கண்டித்து, முதியவரின் சடலத்தை நடுரோட்டில் வைத்து பொதுமக்கள் தீவிர சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p><h2>சாலை மறியல்</h2><p>தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே அம்மாப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த வேடியப்பன் (வயது 85) என்ற முதியவர் நேற்று இரவு வயது முதிர்வு காரணமாக காலமானார். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்களும் பொதுமக்களும் சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல முயன்றனர்.</p><p>ஆனால், மயானத்திற்குச் செல்லும் பாதையைத் தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து பட்டா வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, இறந்தவரின் உடலைச் சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல வழி இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.</p><p>இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மயானத்திற்குச் செல்ல முறையான வழிப்பாதை அமைத்துத் தர வேண்டும் என்று அரூர் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியரிடம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து மனு அளித்து வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்தனர். ஆனால், இதுவரை அதிகாரிகள் தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.</p><h2>போக்குவரத்து பாதிப்பு</h2><p>அதிகாரிகளின் அலட்சியத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், உயிரிழந்த வேடியப்பனின் சடலத்தை மாநில நெடுஞ்சாலை செங்கம் செல்லும் சாலையில் நடுரோட்டில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டது.</p><p>இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த <a href="https://www.dailythanthi.com/topic/காவல்-துறை">காவல் துறை</a>யினர், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். </p><p>இருப்பினும், "அரூர் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் நேரில் வந்து உடனடியாக மயானப் பாதையை மீட்டுத் தர வேண்டும்; அதுவரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம்" எனக் கூறி பொதுமக்கள் தொடர்ந்து சடலத்துடன் <a href="https://www.dailythanthi.com/topic/சாலை-மறியல்">சாலை மறியலி</a>ல் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அம்மாப்பேட்டை பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.</p>]]></content:encoded></item></channel></rss>