<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 19 Aug 2026 02:25:44 +0000</lastBuildDate><item><title>நாடு தழுவிய அளவில் வெளிநாட்டு பணப் பரிமாற்றங்கள் சரிபார்ப்பு தொடங்கியது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nationwide-verification-of-foreign-money-transfers-has-begun</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nationwide-verification-of-foreign-money-transfers-has-begun#comments</comments><guid isPermaLink="false">88de0dac-ebf7-467c-932a-b23fc574363e</guid><pubDate>Wed, 19 Aug 2026 02:14:26 +0000</pubDate><atom:updated>2026-08-19T02:14:26.766Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Income Tax Department,வருமான வரித்துறை,Money transfer,வெளிநாட்டு பணம்,பணப்பரிமாற்றம்,foreign money</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/67o8u5tq/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/67o8u5tq/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வெளிநாட்டு பணப்பரிமாற்றங்கள் குறித்து வருமான வரித்துறை நாடு தழுவிய அளவில் சரிபார்ப்பு நடவடிக்கையை தொடங்கி உள்ளது.</p><h2>வருமான வரித்துறை</h2><p>சந்தேகத்திற்குரிய வெளிநாட்டு பணப் பரிமாற்றங்கள் குறித்து வருமான வரித்துறை நாடு தழுவிய விரிவான சரிபார்ப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் அதிகப்படியான அந்நிய செலாவணியை வெளிநாடுகளுக்கு அனுப்பிய சந்தேகத்திற்குரிய நிறுவனங்களை உளவுத்துறை மற்றும் தரவு பகுப்பாய்வு மூலம் வருமான வரித்துறை கண்டறிந்துள்ளது.</p><p>போலி அறக்கட்டளைகள் மூலம் நிதி பரிமாற்றம் செய்த நிறுவனங்கள், வருமான வரி தாக்கல் செய்யாதவை அல்லது மிகக்குறைந்த வருவாயைக் காட்டி வருமான வரி தாக்கல் செய்பவை என்பது களஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த நிறுவனங்கள் அறிவிக்கப்பட்ட முகவரிகளில் செயல்படவில்லை என்பதும், சரக்கு போக்குவரத்து. மென்பொருள் இறக்குமதி போன்ற பரிமாற்ற காரணங்கள் உண்மையானவை அல்ல என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.</p><h2>சரிபார்ப்பு நடவடிக்கை</h2><p>குறிப்பிட்ட தொழில் வல்லுநர்களால் அதிக எண்ணிக்கையி லான படிவம் 15 சிபி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதை வருமான வரித்துறை கவனித்துள்ளது. இந்த சான்றிதழ்களை வழங்கும் கணக்காளர்கள் போதிய விடாமுயற்சி மேற்கொள்ள வில்லை. தற்போது சுமார் 394 நிறுவனங்கள் மற்றும் 36 தொழில் வல்லுநர்கள் மீது இந்த சரிபார்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.</p><p>நில எல்லை மாவட்டங்களில் உள்ள நிறுவனங்களும் இதில் அடங்கும். சான்றிதழ்களை வழங்கும் கணக்காளர்கள், பணப் பரிமாற்றங்களைச் சான்றளிக்கும் முன் உண்மைகளை முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று வருமான வரி கமிஷனர் வி.ரஜிதா வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பான விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி:  கள்ளக்காதலனை பிரிந்து குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்த பெண் தீவைத்து எரித்துக்கொலை
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-woman-burned-alive-after-leaving-illicit-lover</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-woman-burned-alive-after-leaving-illicit-lover#comments</comments><guid isPermaLink="false">5db13678-91e6-4e8b-b184-fdb7e5d21da2</guid><pubDate>Wed, 19 Aug 2026 02:12:30 +0000</pubDate><atom:updated>2026-08-19T02:12:30.289Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,Thoothukudi,தூத்துக்குடி,பெண்,Woman</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/ftzgfsx9/tdonw.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/ftzgfsx9/tdonw.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>தூத்துக்குடி</p><p>தூத்துக்குடியில் கள்ளக்காதலனை பிரிந்து குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்த பெண் தீவைத்து எரித்துக்கொல்லப்பட்டார்.</p><p>தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள சால்நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். தொழிலாளியான இவரது மனைவி குருவலட்சுமி (வயது 42). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.  அதே பகுதியை சேர்ந்த சின்ன கெங்குராஜ் (வயது 47), குருவலட்சுமியும் பழகி வந்தனர். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதை அறிந்த சின்ன கெங்குராஜின் மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.</p> <h2>தீ வைப்பு</h2><p>அதுபோல் குருவலட்சுமியும், தனது கணவரை பிரிந்து சென்றார்.  பின்னர் குருவலட்சுமி, சின்ன கெங்குராஜ் வெளியூரில் வாடகை வீட்டில் வசித்தனர். 2 ஆண்டுகளாக ஒன்றாக குடும்பம் நடத்தி வந்த நிலையில், உறவினர்கள் சிலர் குருவலட்சுமியை கண்டித்தனர்.  இதனை தொடர்ந்து குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கள்ளக்காதலனை பிரிந்து மீண்டும் கணவருடன் குருவலட்சுமி சேர்ந்து குடும்பம் நடத்தினார்.</p><p>இதனால் ஆத்திரமடைந்த சின்ன கெங்குராஜ், தொடர்ந்து தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி குருவலட்சுமியிடம் தகராறு செய்து வந்தார். கடந்த 10-ந்தேதி கணவர், குழந்தைகள் வெளியே சென்றிருந்த நிலையில் குருவலட்சுமியின் வீட்டுக்கு சின்ன கெங்குராஜ் சென்றார். தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு மீண்டும் அவர் கூறினார். அதற்கு மறுத்த குருவலட்சுமியை அவர் அடித்து உதைத்தார். மேலும் ஆத்திரம் தீராத அவர் வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை குருவலட்சுமி மீது ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி சென்றுவிட்டார்.</p> <h2>போலீசார் விசாரணை</h2><p>இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து பசுவந்தனை போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து சின்ன கெங்குராஜை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பேரூரணி சிறையில் அடைத்தனர்.</p><p>இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி குருவலட்சுமி பலியானார். இதனையடுத்து போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர்.  தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>தொழிலதிபரிடம் ரூ.2.17 கோடி மோசடி - தொண்டு நிறுவன நிர்வாகிகள் 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/businessman-defrauded-of-217-crore-two-ngo-office-bearers-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/businessman-defrauded-of-217-crore-two-ngo-office-bearers-arrested#comments</comments><guid isPermaLink="false">cc1a705b-b3a2-4308-903a-2ac4d3c0d07a</guid><pubDate>Wed, 19 Aug 2026 01:59:52 +0000</pubDate><atom:updated>2026-08-19T01:59:52.622Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,வேலூர்,arrest,மோசடி,தொழிலதிபர்,businessman,தொண்டு நிறுவனம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/reuxrt2n/275.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/reuxrt2n/275.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வேலூர், </p><p>வேலூரில் தொண்டு நிறுவனத்துக்கு வரும் ரூ.100 கோடியில் இருந்து பங்கு தருவதாக கூறி தொழிலதிபரிடம் ரூ.2 கோடியே 17 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>தொண்டு நிறுவனம்</h2><p>வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் ஆலிவர் சினியோன் கதிரேஷ் (வயது 60). தொழில்அதிபர். இவரின் நண்பரான வேலூர் புது பைபாஸ் ரோடு பகுதியை சேர்ந்த பெருமாள் (53) என்பவர் கிரீன் சர்க்கிள் பகுதியில் தொண்டு நிறுவனம் நடத்தி வந்தார்.</p><p>இந்த நிறுவனத்துக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் ரூ.100 கோடி நிதி திரட்ட உள்ளதாகவும், இந்த நிதியை திரட்டுவதற்கு முன்பணமாக சில கோடி தேவைப்படுவதாகவும், முன்பணம் கொடுத்தால் அதற்கு ரூ.100 கோடியில் இருந்து பங்கு தருவதாக பெருமாள் மற்றும் வள்ளலாரை சேர்ந்த ஷாஜகான் (48), திருச்சி தெப்பக்குளத்தை சேர்ந்த மனோஜ்குமார் (50) ஆகியோர் கடந்த 2024-ம் ஆண்டு ஆலிவர் சினியோன் கதிரேஷிடம் தெரிவித்தனர். இதனை உண்மை என்று நம்பிய அவர் ரூ.2 கோடியே 17 லட்சத்தை ரொக்கமாகவும், வங்கிகள் மூலமாகவும் அவர்களிடம் கொடுத்தார். </p><p>அதன் பின்னர் சில மாதங்கள் ஆகியும் பெருமாள், ஷாஜகான். மனோஜ்குமார் ஆகியோர் தொண்டு நிறுவனத்துக்கு நிதி பெறவில்லை. மேலும் அதற்கான எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆலிவர் சினியோன் கதிரேஷ் இதுபற்றி 3 பேரிடமும் கேட்டபோது விரைவில் தொண்டு நிறுவனத்துக்கு நிதி வந்துவிடும். அதன் பின்னர் பங்கு தருகிறோம் என்று கூறி காலம் கடத்தி வந்துள்ளனர்.</p><h2>புகார்</h2><p>இதுகுறித்து ஆலிவர் சினியோன் கதிரேஷ் கடந்த 14-ந் தேதி வேலூர் போலீஸ் சூப்பிரண்டு சிவராமனிடம் புகார் அளித்தார். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கும்படி அவர், வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு இருதயராஜ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வசந்தி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார்.</p><h2>கைது</h2><p>அதில், பெருமாள், ஷாஜகான், மனோஜ்குமார் ஆகியோர் ஆலிவர் சினியோன் கதிரேஷிடம் இருந்து பெற்ற ரூ.2 கோடியே 17 லட்சத்தை 3 பாகமாக பிரித்து எடுத்துக் கொண்டதும், தொண்டு நிறுவனத்துக்கு வரும் நிதியில் பங்கு தருவதாக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF">மோசடி</a> செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து பெருமாள், ஷாஜகான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மனோஜ்குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தஞ்சையில் நாளை மறுநாள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/private-sector-job-fair-in-thanjavur-the-day-after-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/private-sector-job-fair-in-thanjavur-the-day-after-tomorrow#comments</comments><guid isPermaLink="false">41f3a04a-8e11-4365-ad0f-b66f9fadbb6d</guid><pubDate>Wed, 19 Aug 2026 01:55:58 +0000</pubDate><atom:updated>2026-08-19T01:55:58.541Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thanjavur,தஞ்சை,வேலைவாய்ப்பு முகாம்,job fair</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/kac8q8ru/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/kac8q8ru/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>கல்வி&amp;வேலைவாய்ப்பு (Eduction and Jobs)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர், </p><p>தஞ்சை மாவட்ட கலெக்டர் ரேவதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><h2>வேலைவாய்ப்பு முகாம்</h2><p>தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி அளவில் நடக்கிறது. முகாமில் தஞ்சையில் உள்ள முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.</p><p>முகாமில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தஞ்சை </a>மாவட்டதை சேர்ந்த வேலை தேடும் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ. மற்றும் பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம். முகாமில் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்பவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும். சுய விவர குறிப்பு. கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம்.</p><p>இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வருமா..? பேரவையில் நிதி அமைச்சர் மரிய வில்சன் பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-assured-pension-scheme-be-implemented-finance-minister-maria-wilson-responds-in-the-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-assured-pension-scheme-be-implemented-finance-minister-maria-wilson-responds-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">f7cc9d92-98cd-49fd-830e-e5c337b87ef2</guid><pubDate>Wed, 19 Aug 2026 01:55:09 +0000</pubDate><atom:updated>2026-08-19T01:55:09.145Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,தமிழக சட்டசபை,TN Assembly,Assembly Session,pension,Old Pension Scheme,ஓய்வூதிய திட்டம்,TN Assembly session,தமிழக சட்டசபை செய்திகள்,அமைச்சர் மரிய வில்சன்,Minister Marie Wilson,MarieWilson,சட்டசபை கூட்டத் தொடர்,tvk govt</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/6ui5enld/pes.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/6ui5enld/pes.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>'டாப்ஸ்' என்பது கண்டிப்பாக வரப்போகிற நாட்களில் தயார்படுத்தப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்று நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். </p><h2>தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ.வேலு</h2><p>தமிழக சட்டசபையில் நேற்று பொதுப்பணித்துறை உள்ளிட்ட சில துறைகளின் மானிய கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர் அப்போது பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ.வேலு, 'உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கு அரசு ஊழியர்கள் சங்கங்கள், முதல்-அமைச்சருக்கு பாராட்டு விழாவே நடத்தினார்கள்.</p><h2>உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்</h2><p>தேர்தல் வந்ததும், த.வெ.க.வின் தேர்தல் அறிக்கையில் 25-வது பக்கத்தில், பழைய ஓய்வூதியத்திட்டம் நடைமுறைப்படுத்துதல் என்ற தலைப்பில், தி.மு.க. அரசு கொண்டுவந்துள்ள தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை ஒழித்துவிட்டு, அரசு ஊழியர்களின் கோரிக்கைக்கேற்ப முழுமையான பழைய ஓய்வூதியத் திட்டம் கனிவுடன் பரிசீலிக்கப்படும் என்று சொல்லியிருந்தீர்கள்.</p><h2>மூன்று விஷயங்கள்</h2><p>இப்போது அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் தொடருமா? அல்லது பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொடுக்கப்போகிறதா? என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும் என்று கேட்டார்.</p><p>அவருக்கு நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் அளித்த பதில் வருமாறு:-</p><p>உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் (டாப்ஸ்) தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது. அந்த திட்டம் தொடர்பாக கடந்த தி.மு.க. ஆட்சியில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட் டது. அந்தக் குழு, அரசுக்கு சில பரிந்துரைகளை அளித்தது. அதில் மூன்று விஷயங்கள் முக்கியமானவை. </p><h2>விஜய் நிறைவேற்றுவார்</h2><p>அந்த மூன்று விஷயங்களையும் தமிழ்நாட்டில் கண்டிப்பாக <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> நிறைவேற்றுவார். குழு பரிந்துரை செய்த மூன்று விஷயங்கள் என்னவென்றால், கடைசியாக வாங்கிய சம்பளத்தில் 50 சதவீதம் என்ற அடிப்படையில், அது கண்டிப்பாக உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். </p><p>இரண்டாவதாக, பணிக்கொடை வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தார்கள். அதுவும் இருக்கும். மூன்றாவதாக, குடும்ப ஓய்வூதியம் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்கள். இதில் நாங்கள் தற்போது அதற்கான விதிகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்.</p><h2>நடைமுறைக்கு வரும்</h2><p>அதை செயல்படுத்துவதற்கான வழிகாட்டிகள் தயாரிக்கும் பணியும் நடைபெறுகிறது. அதன்படி 'டாப்ஸ்' திட்டம் விரைவாக, கூடிய சீக்கிரத்தில் நடைமுறைக்கு வரும். மீண்டும் ஒருமுறை சொல்கிறேன், 'டாப்ஸ்' என்பது கண்டிப்பாக வரப்போகிற நாட்களில் தயார்படுத்தப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>
திருவண்ணாமலை கோவிலுக்குள் செப்டம்பர் 1-ந் தேதி முதல் செல்போன்கள் கொண்டு செல்ல தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-carrying-mobile-phones-inside-the-tiruvannamalai-temple-starting-september-1st</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-carrying-mobile-phones-inside-the-tiruvannamalai-temple-starting-september-1st#comments</comments><guid isPermaLink="false">7c0af9cb-f5c5-41ec-8fbf-db1f011234fa</guid><pubDate>Wed, 19 Aug 2026 01:41:37 +0000</pubDate><atom:updated>2026-08-19T01:41:37.864Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,Thiruvannamalai,செல்போன்கள்,செல்போன்களுக்கு தடை,திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்,Thiruvannamalai Arunaseleswarar Temple</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/8ujqowvp/3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/8ujqowvp/3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை,</p><p>திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வருகிற செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் கோவிலுக்குள் உள்ளே செல்போன்கள் எடுத்துச் செல்வது தடை விதிக்கப்பட்டுள்ளது. </p>  <h2>இணை ஆணையர் தகவல்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/tiruvannamalai-temple">திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்</a> இணை ஆணையர் பரணிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் வருகிற செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் கோவிலுக்குள் உள்ளே செல்போன்கள் எடுத்துச் செல்வது தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் செல்போன் எடுத்து வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். </p>  <h2>5 இடங்களில் செல்போன் பாதுகாப்பு மையம்</h2><p>மேலும் பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பாக வைத்து செல்ல ஏதுவாக கோவிலின் கிழக்கு ராஜகோபுரம் அருகில் 2 இடங்களிலும், வடக்கு அம்மணி அம்மன் கோபுரம் அருகில் 2 இடங்களிலும், தெற்கு திருமஞ்சன கோபுரம் அருகில் ஒரு இடத்திலும் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள மையங்களில் பக்தர்கள் தங்களது செல்போன்களை ரூ.5 கட்டணமாக செலுத்தி ஒப்படைத்துவிட்டு டோக்கன் பெற்றுக் கொள்ளலாம்."</p>  <h2>போலீசாரின் மூலம் நடவடிக்கை</h2><p>மேலும், "இந்த உத்தரவினை மீறி கோவிலுக்குள் மறைமுகமாக எடுத்துச் செல்லும் செல்போன்களை உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு போலீசாரின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் இன்றைய நிகழ்வுகள் என்னென்ன...?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-are-the-proceedings-in-the-legislative-assembly-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-are-the-proceedings-in-the-legislative-assembly-today#comments</comments><guid isPermaLink="false">2832a192-45d2-431a-9571-afff793b421e</guid><pubDate>Wed, 19 Aug 2026 01:38:00 +0000</pubDate><atom:updated>2026-08-19T01:38:00.899Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,TN Assembly,Water Resources Department,நீர்வளத்துறை,tourist,சுற்றுலாத்துறை,மானிய கோரிக்கை,Grant request</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/4k64zj1w/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/4k64zj1w/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. கூட்டம் தொடங்கியதும், நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, சுற்றுலா-கலை மற்றும் பண்பாட்டுத்துறை ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.</p><p>இந்த விவா தத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேச இருக்கிறார்கள். அதன்பின்னர், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் என்.ஆனந்த், சுற்றுலா கலை மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் ஆகியோர் பேசுகின்றனர். நிறைவாக, தங்களுடைய துறை சார்பில் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.</p>]]></content:encoded></item><item><title>ஈரோடு அருகே நடுரோட்டில் ஹாயாக படுத்திருந்த சிறுத்தைப்புலி - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/leopard-lies-casually-in-the-middle-of-the-road-near-erode-motorists-shocked</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/leopard-lies-casually-in-the-middle-of-the-road-near-erode-motorists-shocked#comments</comments><guid isPermaLink="false">adc3fb56-8cdf-469d-bd6c-2b54b57ab823</guid><pubDate>Wed, 19 Aug 2026 01:33:17 +0000</pubDate><atom:updated>2026-08-19T01:33:17.136Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>road,வாகன ஓட்டிகள்,Erode,ஈரோடு,சிறுத்தை,A leopard</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/8h9htni0/274.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறுத்தை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/8h9htni0/274.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தாளவாடி, </p><p>ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான சிறுத்தைப்புலிகள் காணப்படுகின்றன. சத்தியமங்க லம் வனப்பகுதி வழியாக திண்டுக்கல்-மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இரவு நேரங்களில் சிறுத்தைப்புலிகள் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்து திம்பம் மலைப்பாதையில் சுற்றுகின்றன.</p><h2>சிறுத்தைப்புலி</h2><p>இதுபோல் வனவிலங்குகள் அடிக்கடி இரவு நேரங்களில் திம்பம் மலைப்பாதைக்கு வந்துவிடுவதால், அதன் பாதுகாப்பு கருதி திம்பம் மலைப்பாதையில் இரவு நேரங்களில் செல்ல கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் வாகனங்கள் மற்றும் காய்கறி ஏற்றி வரும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்தநிலையில் நேற்று அதிகாலை திம்பம் மலைப்பாதையில் நடுரோட்டில் சிறுத்தைப்புலி ஒன்று 'ஹாயாக’ படுத்திருந்தது. அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்து சற்று தூரத்திலேயே வாகனங்களை நிறுத்திக்கொண்டனர்.</p><h2>வனத்துறை</h2><p>சிலர் வாகனங்களில் இருந்தபடியே செல்போனில் வீடியோ எடுத்தனர். சுமார் 10 நிமிடம் படுத்திருந்த சிறுத்தைப்புலி பின்னர் காட்டுக்குள் ஓடிவிட்டது. இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. திம்பம் மலைப்பாதையில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF">சிறுத்தைப்புலி </a>நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சட்டென மாறும் வானிலை.. எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..? வானிலை அலர்ட்</title><link>https://www.dailythanthi.com/news/weather/rapidly-changing-weather-which-districts-are-likely-to-see-heavy-rain-today-weather-alert</link><comments>https://www.dailythanthi.com/news/weather/rapidly-changing-weather-which-districts-are-likely-to-see-heavy-rain-today-weather-alert#comments</comments><guid isPermaLink="false">f43aaea1-21c2-48fe-b6a8-2a4962189e91</guid><pubDate>Wed, 19 Aug 2026 01:23:13 +0000</pubDate><atom:updated>2026-08-19T01:23:13.559Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,சென்னை,Rain,Weather,கனமழை,வானிலை,தமிழகம்,Weather News,WeatherUpdate,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,வானிலை ஆய்வு மையம்,கன மழை,heavy rain,வானிலை அறிக்கை,TN Rains,வானிலை தகவல்,Weather Report,வானிலை முன்னறிவிப்பு,வானிலை அறிவிப்பு,weather center</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/2nddpmwd/tools.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/2nddpmwd/tools.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, பெரம்பலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><h2>கனமழை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><p>இதன் காரணமாக <strong>இன்று (19-08-2026):</strong> செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">கனமழை</a></strong> பெய்யக்கூடும்.</p><p>திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong><a href="https://www.dailythanthi.com/topic/rain"> </a>பெய்யக்கூடும்.</p><h2>மழை</h2><p><strong>நாளை (20-08-2026):</strong> தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்யக்கூடும்.</p><p><strong>21-08-2026 மற்றும் 22-08-2026:</strong> தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்யக்கூடும்.</p><p><strong>23-08-2026 மற்றும் 24-08-2026:</strong> வட கடலோர தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் புதுவை ஏனைய மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong><a href="https://www.dailythanthi.com/topic/rain"> </a>பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong><ins>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</ins></strong></p><p><strong>19-08-2026 முதல் 22-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><p><strong><ins>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</ins></strong></p><p><strong>19-08-2026 முதல் 22-08-2026 வரை:</strong> உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று (19-08-2026):</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>மீனவர்களுக்கான எச்சரிக்கை:</h2><p><strong><ins>தமிழக கடலோரப்பகுதிகள்:</ins></strong></p><p><strong>19-08-2026 முதல் 22-08-2026 வரை:</strong> தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong><ins>வங்கக்கடல் பகுதிகள்:</ins></strong></p><p><strong>19-08-2026 முதல் 22-08-2026 வரை:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong><ins>அரபிக்கடல் பகுதிகள் :</ins></strong></p><p><strong>19-08-2026 முதல் 22-08-2026 வரை:</strong> மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>திருச்செந்தூர் அருகே கல்லால் தாக்கி கூலி தொழிலாளி கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wage-laborer-murdered-by-being-struck-with-a-stone-near-tiruchendur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wage-laborer-murdered-by-being-struck-with-a-stone-near-tiruchendur#comments</comments><guid isPermaLink="false">0a31b2e4-4699-4127-8d1f-a59a6b8b2246</guid><pubDate>Wed, 19 Aug 2026 01:15:06 +0000</pubDate><atom:updated>2026-08-19T01:15:06.085Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்செந்தூர்,murder,கொலை,தொழிலாளி,Tiruchendur,Wage Laborer</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/4ohnw2s2/42.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/4ohnw2s2/42.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்செந்தூர்,</p><p>திருச்செந்தூர் அருகே உள்ள கீழப்பள்ளிபத்து கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் சரவணன் (வயது 40). கூலி தொழிலாளி. இவரும், காயாமொழி தெற்கு தெருவை சேர்ந்த கனகசபாபதி மகன் இசக்கிமுத்து (23) என்பவரும் நண்பர்கள் ஆவார்கள்.</p><h2>தகராறு</h2><p>இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் வன்னிமாநகரம் அருகே துலுக்கன்குளத்து கரை யில் அமர்ந்து மது குடித்தனர். அப்போது அவர்களுக்கு இடையே திடீரென வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. ஒருவரையொருவர் கையால் தாக்கிக்கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த இசக்கிமுத்து அருகில் கிடந்த கல்லால் சரவணனின் தலையில் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. </p><p>சரவணன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட இசக்கி முத்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.</p><h2>வழக்குப்பதிவு</h2><p>இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். சரவணன் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.</p><p>மேலும் இதுகுறித்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார் </a>வழக்குப்பதிவு செய்து தலைமறைவான இசக்கிமுத்துவை வலைவீசி தேடி வருகிறார்கள். திருச்செந்தூர் அருகே கல்லால் தாக்கி தொழிலாளி கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>1 லட்சம் டன் பெட்ரோலை ரஷியாவுக்கு ஏற்றுமதி செய்த இந்தியா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/india-exported-100000-tonnes-of-petrol-to-russia</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/india-exported-100000-tonnes-of-petrol-to-russia#comments</comments><guid isPermaLink="false">4c190e31-c43f-4dba-b4a4-d7e5d1b21cf3</guid><pubDate>Wed, 19 Aug 2026 01:13:42 +0000</pubDate><atom:updated>2026-08-19T01:13:42.655Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,India,petrol,பெட்ரோல்,Russia,ரஷியா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/plfnlo1p/CHENNAI-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/plfnlo1p/CHENNAI-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><p>9 லட்சம் பீப்பாய்களில் 1 லட்சம் டன் பெட்ரோலை ரஷியா வுக்கு இந்தியா ஏற்றுமதி செய்தது. உலக பொருளாதார தடைக்கு மத்தியில் இது ரஷிய எல்லையை சென்றடைந்தது.</p><h2>4 ஆண்டுகால போர்</h2><p>உக்ரைன், ரஷியா இடையே 4 ஆண்டுகளுக்கு மேலாக போர் தாக்குதல் நீடித்து வருகிறது. உக்ரைன் நடத்திய தொடர் டிரோன் தாக்குதல்கள் காரணமாக, ரஷியாவின் உள்நாட்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அந்த நாட்டின் அரசு சுத்திகரிப்பு நிலையங்கள் தாக்கப்பட்டதால், நாட்டில் எரிபொருள் பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது. இது மீண்டும் பழைய நிலைக்கு வர 6 மாதங்கள் வரை ஆகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>பெட்ரோல் தட்டுப்பாடு</h2><p>இதனால் வரலாற்றில் முதல்முறையாக ரஷியா, இந்தியாவிலிருந்து கடல் வழியாக பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது. பொதுவாக ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெயை வாங்கும் நிலையில், தற்போது ரஷியா தனது நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய இந்தியாவிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வாங்கும் ஒரு அரிய தலை கீழ் மாற்றம் நிகழ்ந்துள்ளது.</p><p>உலகளவில் ரஷியாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளான இங்கிலாந்து. பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இத்தகைய சூழலுக்கு மத்தியில் இந்தியா ரஷியாவுக்கு ரகசியமாக பெட்ரோலை ஏற்றுமதி செய்தது.</p><h2>9 லட்சம் பீப்பாய்கள்</h2><p>இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் நயாரா எனர்ஜி நிறுவனத்தின் வாடினார் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து எகிப்து வழியாக ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு எரிபொருளை மாற்றி, ரகசியக் கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டது. கப்பல் போக்குவரத்துத் தரவுகளின்படி, முதற்கட்டமாக 42 ஆயிரம் டன் பெட்ரோல் அடங்கிய முதல் கப்பல் ரஷியாவைச் சென்றடைந்தது.</p><p>அதைத் தொடர்ந்து மற்றொரு கப்பல் மூலம் 68 ஆயிரம் டன் பெட்ரோல் ரஷியாவின் ஆர்க் டிக் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மொத்தம் 9 லட்சம் பீப்பாய்கள் மூலமாக மொத்தம் 1 லட்சத்து 10 ஆயிரம் டன் பெட்ரோல் இந்தியாவில் இருந்து ரஷியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. ஏற்கனவே ரஷியாவுடன் 80 ஆண்டுகால வெளியுறவு கொண்டாட்டத்தில் திளைக்கும் இந்தியாவின் நட்புறவுக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் அமித் ஷாவை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆர்ப்பாட்டம்..! - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/congress-to-stage-protest-in-chennai-today-condemning-amit-shah-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/congress-to-stage-protest-in-chennai-today-condemning-amit-shah-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">8a00f51a-8ced-4771-8464-3e79fa6e541c</guid><pubDate>Wed, 19 Aug 2026 01:03:09 +0000</pubDate><atom:updated>2026-08-19T01:03:09.006Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,protest,ஆர்ப்பாட்டம்,காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore MP,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/fmyvb795/manickam-tagore.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/fmyvb795/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டின் குரலை நசுக்கும் தொகுதி மறுவரையறையை கைவிடுங்கள் என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>உரிய பதில் அளிக்கவில்லை</h2><p>மாணவர்களுக்கு நீதி! தமிழ்நாட்டின் உரிமைக்கு குரல்!</p><p>இந்திய மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் வகையில் தொடரும் வினாத்தாள் கசிவுகள் குறித்து பதில் சொல்ல வேண்டிய மத்திய அரசு, தங்களது உரிமைக்காக டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறை வன்முறைக்கும் பொறுப்பேற்க வேண்டும்.</p><p>உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்திற்கு நேரடியாக பதிலளிக்க வேண்டிய நிலையில், பல நாட்கள் அவையைத் தவிர்த்து, இறுதி நாளிலும் மாணவர்களின் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கவில்லை. </p><p>கேள்விகளில் இருந்து ஓடலாம்; ஆனால் பொறுப்பிலிருந்து ஓட முடியாது.</p><h2>வாருங்கள்! ஒன்றுபடுவோம்!</h2><p>இன்று சென்னை வரும் உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் நாங்கள் தெளிவாகச் சொல்வோம்:</p><p>வினாத்தாள் கசிவுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்!</p><p>மாணவர்கள் மீதான வன்முறைக்கு பதில் சொல்லுங்கள்!</p><p>தமிழ்நாட்டின் குரலை நசுக்கும் தொகுதி மறுவரையறையை கைவிடுங்கள்!</p><p>நாடாளுமன்றத்தில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழ்நாட்டின் </a>பிரதிநிதித்துவத்தை குறைக்கும் எந்த முயற்சியையும் தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது.</p><p>தமிழ்நாட்டின் உரிமைக்காக</p><p>மாணவர்களின் எதிர்காலத்திற்காக</p><p>நாங்கள் தொடர்ந்து போராடுவோம்!</p><p> சென்னை, எழும்பூர் - ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில்</p><p> இன்று, 19.08.2026 | மாலை 5.00 மணி</p><p>வாருங்கள்! ஒன்றுபடுவோம்!</p><p>தமிழ்நாட்டின் உரிமைக்காக குரல் கொடுப்போம்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>
அமித்ஷா தலைமையில் தென்மாநில முதல்-மந்திரிகள் மாநாடு: முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்கிறார்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/conference-of-southern-state-chief-ministers-chaired-by-amit-shah-chief-minister-vijay-participates</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/conference-of-southern-state-chief-ministers-chaired-by-amit-shah-chief-minister-vijay-participates#comments</comments><guid isPermaLink="false">f38b0b96-7a19-4347-bc6f-154853bb150d</guid><pubDate>Tue, 18 Aug 2026 23:35:21 +0000</pubDate><atom:updated>2026-08-18T23:35:21.017Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>அமித்ஷா,முதல்-அமைச்சர் விஜய்,CMVijay‌</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/rlv72ca9/Untitled-1.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/rlv72ca9/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p> <p>மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தென்மாநில முதல்-மந்திரிகள் மாநாடு நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கடந்த 2022-ம் ஆண்டுக்கு பிறகு இந்த மாநாடு நடைபெறவில்லை. இந்தநிலையில், 31-வது தென்மாநில முதல்-மந்திரிகள் மாநாடு இன்று (புதன்கிழமை) சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொடங்குகிறது.</p>  <p>இந்த மாநாட்டுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை தாங்குகிறார். இதில் தமிழக முதல்-அமைச்சர் விஜய், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், கேரளம் முதல்-மந் திரி சதீசன், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.</p> <p>மேலும், அந்தந்த மாநில தலைமை செயலாளர்கள், உள்துறை செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்துகொள்கிறார்கள்.</p> <p>மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள், கூட்டுறவை பலப்படுத்துவது, கட்டமைப்பு மேம்பாடு, நீர்வள பகிர்வு, கல்வி, சுகாதாரம், தக வல் தொழில்நுட்பம், பேரிடர் மேலாண்மை, குற்றங்கள் தடுப்பு, எல்லை பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.</p> <p>தற்போது காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகம் மற்றும் தமிழகம் இடையே முரண்பாடுகள் எழுந்த நிலையில் இந்த கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.</p> <p>இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய மந்திரி அமித்ஷா இன்று மாலை 4.50 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை புறப்படுகிறார். இரவு 7.40 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்.</p><p>விமான நிலையத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் கட்சியினர் வரவேற்கிறார்கள். பின்னர் அவர், காரில் கோவளம் செல்கிறார்.</p> ]]></content:encoded></item><item><title>கர்நாடகாவில் 3 தமிழர்கள் என்கவுன்ட்டர் விவகாரம்:  பட்டும் படாமல் ஒரு அறிக்கை - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/encounter-involving-three-tamils-in-karnataka-udhayanidhi-stalin-issues-a-lukewarm-statement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/encounter-involving-three-tamils-in-karnataka-udhayanidhi-stalin-issues-a-lukewarm-statement#comments</comments><guid isPermaLink="false">431df1fe-ecb1-4426-9f04-aeade09e830f</guid><pubDate>Tue, 18 Aug 2026 16:42:31 +0000</pubDate><atom:updated>2026-08-18T16:42:31.182Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,விமர்சனம்,என்கவுன்ட்டர்,Encounter</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/9pn8xhrq/122.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/9pn8xhrq/122.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு தமிழக அரசு கண்டனம் தெரிவிக்காதது அதிர்ச்சி அளிக்கிறது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>கர்நாடகாவில் மூன்று தமிழர்களை அம்மாநில வனத்துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக எந்த கண்டனத்தையும் வெளியிடாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. சட்டப்பேரவையில் இந்த விவகாரம் தொடர்பாக பதிலளித்த அமைச்சரும், கர்நாடகத்தின் Version-ஐயே எதிரொலித்தார்.</p><h2>அறிக்கை</h2><p>தமிழ்நாடு அரசு சார்பிலோ, முதல்-அமைச்சர் சார்பிலோ கர்நாடக முதல்-மந்திரி இடம் விளக்கம் கேட்டு எந்தவொரு கடிதமும் இதுவரை எழுதப்படவில்லை. த.வெ.க. தலைவர் என்கிற நிலையில் பட்டும் படாமல் ஒரு அறிக்கையை மட்டும் வெளியிட்டு இருக்கிறார்கள். </p><p>இந்த சூழலில் சென்னையில் நாளைய தினம் தென் மாநில முதல்-அமைச்சர்கள் கூட்டம் கூடுகிறது. அந்தக் கூட்டத்தின் போது, கர்நாடக முதல்-அமைச்சரை சந்தித்து, இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் உரிய விளக்கத்தைக் கேட்டுப் பெற வேண்டும். இந்த வழக்கு விசாரணையை கர்நாடக காவல்துறை விசாரிப்பதற்கு பதிலாக நம்பகமான நீதி விசாரணை நடத்திட தமிழ்நாடு அரசு கோர வேண்டும்.</p><p>இந்த சம்பவத்தில் நடைபெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணைய வழிகாட்டுதல்கள் மற்றும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் அடிப்படையில் இந்த உயிரிழப்புகளுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">தமிழ்நாடு அரசு</a> வலியுறுத்த வேண்டும்.</p><p>மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு கூடுதல் இழப்பீடு தரப்படுவதை உறுதி செய்ய கர்நாடக முதல்-மந்திரி இடம் தமிழ்நாட்டு முதல்-அமைச்சர் வலியுறுத்த வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை முதல்-அமைச்சரின் நிதிக்கு வழங்கிய முதியவர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/elderly-man-donates-rs-10000-alms-to-chief-ministers-relief-fund</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/elderly-man-donates-rs-10000-alms-to-chief-ministers-relief-fund#comments</comments><guid isPermaLink="false">5a316c37-8b19-486e-b774-3a5678919e7a</guid><pubDate>Tue, 18 Aug 2026 16:08:32 +0000</pubDate><atom:updated>2026-08-18T16:08:32.239Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Namakkal,நாமக்கல்,தூத்துக்குடி,முதியவர்,நிவாரண நிதி,Thoothukkudi,யாசகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/rtek8wdo/Untitled-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/rtek8wdo/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல்,</p><p>தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அடுத்த ஆலங்கிணறு கிராமத்தை சேர்ந்தவர் பூல்பாண்டியன் (75 வயது). இவர் யாசகம் எடுத்து அரசு பள்ளிகளுக்கும், முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கும் பணத்தை வழங்கி வருகிறார்.</p><p>இந்த நிலையில் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வருகை தந்த பூல்பாண்டியன், தான் யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை, நாமக்கல் கலெக்டர் மதுபாலனிடம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக வழங்கினார்.</p><p>தொடர்ந்து முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, ரூ.10 ஆயிரம் வழங்கிய முதியவர் பூல்பாண்டியனுக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், பணம் பெற்றதற்கான ஒப்புகை சான்றிதழை வழங்கினார்.</p>]]></content:encoded></item><item><title>இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதைப்பொருள் புழக்கம்: தூக்கத்தில் இருக்கிறதா விஜய் அரசு - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/drug-circulation-ruining-the-future-of-the-youth-is-the-vijay-government-asleep-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/drug-circulation-ruining-the-future-of-the-youth-is-the-vijay-government-asleep-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">595dbb1e-b625-4a61-a6b6-3ff03d58c0b4</guid><pubDate>Tue, 18 Aug 2026 15:49:33 +0000</pubDate><atom:updated>2026-08-18T15:49:33.390Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,இளைஞர்,sleep,போதைப்பொருள் புழக்கம்,tvk govt</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/8cwo848p/112.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/8cwo848p/112.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதைப்பொருள் புழக்கம் தூக்கத்தில் இருக்கிறதா விஜய் அரசு என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>போதை பொருட்களின் கூடாரமாக</h2><p>காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவின்போது, கஞ்சா போதைக் கும்பலால் இரு இளைஞர்கள் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது தமிழகத்தையே உலுக்கியுள்ளது. முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான இந்த ஆட்சியில், தமிழகம் போதைப் பொருட்களின் கூடாரமாக மாறிவிட்டது என்பதையே இந்தச் கொடூரச் சம்பவம் பறைசாற்றுகிறது.</p><p>சமீபத்தில் சென்னை திருவொற்றியூர் பள்ளி மாணவர் தனுஷ், கோவை இந்துஸ்தான் கல்லூரி மாணவர் அமுதன் போன்றவர்களின் அகால மரணங்களுக்கு இந்த கட்டுக்கடங்காத போதைப்பொருள் புழக்கமே முக்கிய காரணமாகும். வருங்காலத் தூண்களாக இருக்க வேண்டிய இளைஞர்களைப் போதைப் பாதைக்குத் தள்ளிவிட்டு, தவெக அரசு மெத்தனமாக செயல்படுவது தமிழகத்திற்குப் பெரும் சாபக்கேடு.</p><h2>போராட்டங்கள்</h2><p>எனவே, இனியாவது கும்பகர்ண தூக்கத்திலிருந்து விடுபட்டு, போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் சமூக விரோதிகள் மீது முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இரும்புக்கரம் கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை காக்க <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">பாரதிய ஜனதா கட்சி</a> சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என எச்சரிக்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 10 இடங்களில் இன்று வெயில் சதமடித்தது</title><link>https://www.dailythanthi.com/news/weather/today-heatwave-crosses-100f-in-10-places-in-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/weather/today-heatwave-crosses-100f-in-10-places-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">b883543a-4e5b-4bec-a4ca-65e12a25bce0</guid><pubDate>Tue, 18 Aug 2026 15:31:11 +0000</pubDate><atom:updated>2026-08-18T15:31:11.815Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Weather,வானிலை,Weather update,heat,வானிலை தகவல்,வெயில் சதம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/mgqgxr0g/Untitled-10.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ வெயில் சதம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/mgqgxr0g/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்தாலும், பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 10 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p>அதன்படி தமிழகத்தில் இன்று அதிகமாக வெப்பநிலை பதிவான இடங்கள் வருமாறு:-</p><p>திருச்சி - 104.18° பாரன்ஹீட் (40.1° செல்சியஸ்)</p><p>வேலூர் - 103.64° பாரன்ஹீட் (39.8° செல்சியஸ்)</p><p>நாமக்கல் - 102.56° பாரன்ஹீட் (39.2° செல்சியஸ்)</p><p>பாளையங்கோட்டை - 102.38° பாரன்ஹீட் (39.1° செல்சியஸ்)</p><p>ஈரோடு - 102.2° பாரன்ஹீட் (39.0° செல்சியஸ்)</p><p>கரூர் பரமத்தி - 101.3° பாரன்ஹீட் (38.5° செல்சியஸ்)</p><p>மதுரை விமான நிலையம் - 101.3° பாரன்ஹீட் (38.5° செல்சியஸ்)</p><p>நாகப்பட்டினம் - 100.4° பாரன்ஹீட் (38.0° செல்சியஸ்)</p><p>தஞ்சாவூர் - 100.4° பாரன்ஹீட் (38.0° செல்சியஸ்)</p><p>திருத்தணி - 100.4° பாரன்ஹீட் (38.0° செல்சியஸ்)</p>]]></content:encoded></item><item><title>ரீல்ஸ்க்காக பெட்ரோல் குண்டு தயாரித்து வக்கீல் வீட்டில் வீசிய வாலிபர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youths-make-petrol-bomb-for-reels-and-hurl-it-at-lawyers-house</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youths-make-petrol-bomb-for-reels-and-hurl-it-at-lawyers-house#comments</comments><guid isPermaLink="false">7b40b7f5-f588-4925-8079-5715be6ac450</guid><pubDate>Tue, 18 Aug 2026 15:15:24 +0000</pubDate><atom:updated>2026-08-18T15:15:24.884Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விழுப்புரம்,House,ரீல்ஸ்,வாலிபர்கள்,Reels,lawyer,பெட்ரோல் குண்டு,petrol bomb,போலீசார்,கைதுArrest</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/e0rzb40k/209.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல் குண்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/e0rzb40k/209.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விழுப்புரம், </p><p>விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவில் வசித்து வருபவர் காளிதாஸ்(வயது 48). இவர் விழுப்புரம் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார்.</p><h2>பெட்ரோல் குண்டு</h2><p>இந்த நிலையில் காளிதாஸ், விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை இந்திரா நகரில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த கட்டிடத்தின் அருகில் சம்பவத்தன்று இரவு 4 வாலிபர்கள் அமர்ந்து மது குடித்தனர். மதுபோதை தலைக்கேறிய நிலையில் இந்த அந்த வாலிபர்கள், தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலை ஒரு கேனில் பிடித்து அதனை காலி மது பாட்டிலில் நிரப்பி திரி போட்டு பற்ற வைத்து அந்த வீட்டின் முன்புற சுவற்றில் வீசி தப்பி சென்று விட்டனர்.</p><p>இதில் அந்த பெட்ரோல் குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் அந்த பகுதியே புகைமூட்டமாக காட்சியளித்தது. சத்தம் கேட்டதும் அருகில் இருந்த மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாரவையிட்டனர். </p><p>உடனடியாக இது குறித்து அவர்கள் விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.</p><h2>கைது</h2><p>போலீசாரின் விசாரணையில், வக்கில் வீட்டின முன்பு பெட்ரோல் குண்டை வீசியது அதே பகுதியை சேர்ந்த தயா(21) மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் என்பது தெரியவந்தது. இவர்கள் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்காக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">பெட்ரோல் குண்டை</a> தயாரித்ததும், பின்னர் அதனை வெடிக்க செய்ததும் தெரிய வந்தது. </p><p>இதையடுத்து போலீசார் தயா உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, தயாவை கைது செய்தனர். தொடர்ந்து தப்பியோடிய மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மெட்ரோவுடன் இணைகிறது சென்னை பறக்கும் ரெயில் திட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-flying-train-project-to-be-connected-with-metro</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-flying-train-project-to-be-connected-with-metro#comments</comments><guid isPermaLink="false">6719c624-e904-44b3-9a45-4c2dbc7315d2</guid><pubDate>Tue, 18 Aug 2026 14:47:11 +0000</pubDate><atom:updated>2026-08-18T14:47:11.572Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,Indian Railways,Metro,MetroRail,ChennaiMetroRail</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/f9dbczci/metro33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
மெட்ரோவுடன் இணைகிறது சென்னை பறக்கும் ரெயில் திட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/f9dbczci/metro33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை பறக்கும் ரெயில் சேவையை மெட்ரோ ரெயில் நிறுவனத்துடன் இணைக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.</p><p>சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துடன் சென்னை பறக்கும் ரெயில் சேவையை இணைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசால் முதல்முறையாக கடந்த 2011 ஆம் ஆண்டில் அனுப்பப்பட்ட முன்மொழிவுக்கு, 15 ஆண்டுகால காத்திருப்புக்கு பிறகு அனுமதி கிடைத்துள்ளது. இதன்மூலம்  எம்.ஆர்.டி.எஸ் ன் சொத்துக்கள், இயக்கம், பராமரிப்பு ஆகியவை சென்னை மெட்ரோவுக்கு கைமாறுகிறது.</p><p>இதையடுத்து மெட்ரோ ரெயில் கட்டமைப்புகளுக்கு ஏற்றவாறு எம்ஆர்டிஎஸ் ரெயில் சேவை மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்படும். </p><p>எம்ஆர்டிஎஸ் ரெயில் நிலையத்தில் வணிக வளாகங்கள் அமைத்தல் சிக்னல் மேம்பாடு செய்தல், எம்ஆர்டிஎஸ் தண்டவாளங்களுக்கு ஏற்ப <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%20%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20">மெட்ரோ ரெயில் </a>பெட்டிகளைத் தயாரித்தல், ரெயில் நிலையத்தில் மின்தூக்கி அமைத்தல், நகரும் மின்படிக்கட்டு உள்ளிட்டவையுடன் 2028-ம் ஆண்டு இறுதிக்குள் எம்ஆர்டிஎஸ் வழித்தடத்தை மெட்ரோ ரெயில் சேவைக்கு நிகராக மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 15 ஆண்டு கால காத்திருப்புக்கு பிறகு மெட்ரோ ரயிலுடன் இணைகிறது சென்னை பறக்கும் ரயில் சேவை</p>]]></content:encoded></item><item><title>தஞ்சாவூர் சாலை மறியல்: இளைஞரை விசிகவினரும், காவல் துறையும் தாக்கியது கண்டிக்கதக்கது - ஈ.ஆர். ஈஸ்வரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thanjavur-road-blockade-the-assault-on-the-young-man-by-vck-members-and-the-police-is-condemnable-er-eswaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thanjavur-road-blockade-the-assault-on-the-young-man-by-vck-members-and-the-police-is-condemnable-er-eswaran#comments</comments><guid isPermaLink="false">f0e7c628-4a7f-48e3-9064-b46b68cd879d</guid><pubDate>Tue, 18 Aug 2026 14:31:51 +0000</pubDate><atom:updated>2026-08-18T14:31:51.982Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thanjavur,தஞ்சாவூர்,விசிக,சாலை மறியல்,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி,DMK road blockade,ஈ.ஆர்.ஈஸ்வரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/k92748i1/208.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஈ.ஆர். ஈஸ்வரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/k92748i1/208.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர்,</p><p>தஞ்சாவூர் சாலை மறியல் போது இளைஞரை விசிகவினரும், காவல் துறையும் தாக்கியது கண்டிக்கதக்கது என்று ஈ.ஆர். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தஞ்சாவூர் மாநகராட்சியில் தங்களுடைய விளம்பர பேனர்களை அரசு தரப்பில் எடுத்துவிட்டார்கள் என்பதற்காக கண்டனம் தெரிவித்து விசிகவினர் சாலை மறியலில் திடீரென்று ஈடுபட்டு இருக்கிறார்கள். அந்த சாலையில் அவசர வேலையாக சென்று கொண்டிருந்த ஆகாஷ் என்ற இளைஞனை மறியலில் ஈடுபட்டிருந்த விசிகவினர் தாக்க ஆரம்பிக்கிறார்கள்.  </p><h2>காவல்துறை அதிகாரி</h2><p>அங்கு வந்த காவல்துறை விசிகவினரை பார்த்து நீங்கள் விடுங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று ஆளுங்கட்சியாக இருக்கின்ற விசிகவினருக்கு ஆதரவாக நின்று அந்த அப்பாவி இளைஞனை அடிக்கிறார்கள். இது எப்படி இருக்கிறது என்று சொன்னால் காவல்துறை விசிகவினரை பார்த்து “நீங்கள் அடித்தால் அது குற்றம் நாங்கள் அடித்தால் அது சட்டம்" என்று சொல்லியது போல இருந்தது. தன்மானம் உள்ள ஆகாஷ் தொடர்ந்து போராடி பார்க்கிறார் ஆனால் ஒரு காவல்துறை அதிகாரி ஓங்கி கன்னத்தில் அடிக்கிறார்.</p><p> ஒரு இளைஞனாக கோபம் வந்ததால் திருப்பி அறைந்திருக்கிறார். தற்போது திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டு போக்குவரத்துக்கு தடையை ஏற்படுத்தி ஆகாஷை போகாமல் தடுத்தவர்கள் மீது வழக்கு கிடையாது. </p><h2>கண்டனம்</h2><p>பேசிக் கொண்டிருந்த போது கன்னத்தில் அறைந்த காவல்துறை அதிகாரி மீது வழக்கு கிடையாது ஆனால் விசிகவினரால் தடுத்து தாக்கப்பட்டு தொடர்ந்து காவல்துறை அதிகாரியால் தாக்கப்பட்டு அதனால் பாதிப்புக்குள்ளான ஆகாஷ் மீது ஆறு பிரிவுகளில் வழக்கு போடப்பட்டு இருப்பது கண்டனத்திற்குரியது. </p><p>முழுமையான வீடியோ ஆதாரம் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு விட்டது. அனைத்து தரப்பின் மீது வழக்கு போட்டு விசாரிப்பது தான் ஜனநாயகமாக இருக்கும். காவல்துறை உயர் அதிகாரிகள் சார்பு இல்லாத ஒரு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">விசாரணையை</a> நடத்தி தவறு இழைத்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>17 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-till-10-pm-in-17-districts</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-till-10-pm-in-17-districts#comments</comments><guid isPermaLink="false">5d0a8ca2-05f8-4f22-aa1b-6d37156b9ac5</guid><pubDate>Tue, 18 Aug 2026 14:21:28 +0000</pubDate><atom:updated>2026-08-18T14:21:28.502Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/a1452xdp/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/a1452xdp/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், சென்னை, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, நாமக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, பெரம்பலூர், கோயம்புத்தூர், மதுரை, திருவள்ளூர், சிவகங்கை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>போக்குவரத்து கழகத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களையே அரசு நியமிக்க வேண்டும் - இந்திய கம்யூ. கட்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-must-appoint-only-tamils-in-transport-corporation-indian-communist-party</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-must-appoint-only-tamils-in-transport-corporation-indian-communist-party#comments</comments><guid isPermaLink="false">e3e8da11-08e0-4b32-83b9-4611539397bc</guid><pubDate>Tue, 18 Aug 2026 14:08:40 +0000</pubDate><atom:updated>2026-08-18T14:08:40.476Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,Transport,CPI,போக்குவரத்து கழகம்,மு.வீரபாண்டியன்,M Veerapandian</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/sn7mt7xc/Untitled-8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.வீரபாண்டியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/sn7mt7xc/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>போக்குவரத்து கழகத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களையே நடத்துனர்களாகவும், ஓட்டுநர்களாகவும், நிரந்தர அடிப்படையில் தமிழ்நாடு அரசு நியமிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 1,800 நடத்துநர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதற்கு, உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அத்தனியார் நிறுவனம், வடமாநிலத்தவர்களை நடத்துநர்களாக சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் நியமித்துள்ளது. இது கண்டனத்திற்குரியது.</p><p>தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் ஏராளமானோர் வேலையில்லா திண்டாட்டத்தில் வாடும் பொழுது, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில், வேறு மாநிலத்தவர்களுக்கு வேலை வழங்குவது தமிழக மக்களுக்கு எதிரானதாகும். இத்தகைய முயற்சியை சென்னை மாநகர போக்குவரத்து கழகமும், தமிழ்நாடு அரசும் கைவிட வேண்டும்.</p><p>சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கும், தமிழ்நாடு போக்குவரத்து கழகத்திற்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களையே, நடத்துனர்களாகவும், ஓட்டுநர்களாகவும், நிரந்தர அடிப்படையில் தமிழ்நாடு அரசு நியமிக்க வேண்டும்.</p><p>ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றக்கூடிய நடத்துனர்கள், ஓட்டுநர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டுமென, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title> மதுரையில் தவெக அரசின் 100-வது நாள் கொண்டாட்டம்: இனிப்பு மழையில் நனைந்த பொதுமக்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvks-100th-day-celebration-in-madurai-public-showered-with-sweets</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvks-100th-day-celebration-in-madurai-public-showered-with-sweets#comments</comments><guid isPermaLink="false">7d97cb20-1f50-48ea-84d4-2a9aaae48975</guid><pubDate>Tue, 18 Aug 2026 14:07:13 +0000</pubDate><atom:updated>2026-08-18T14:07:13.874Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,பொதுமக்கள்,Madurai,மதுரை,கொண்டாட்டம்,இனிப்புகள்,celebration,general public,Celebration with sweets,தவெக ஆட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/k2cbgcb3/sweet.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ தவெக 100-வது நாள்]]></media:title><media:description type="html"><![CDATA[ மதுரையில் தவெக அரசின் 100-வது நாள் கொண்டாட்டம்:]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/k2cbgcb3/sweet.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">தமிழக வெற்றிக் கழகம்</a> ஆட்சி தொடங்கப்பட்டு 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் தவெக கட்சியினர் மற்றும் நிர்வாகிகள் திரண்டு வந்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இனிப்பு மழையில் நனைந்தனர் பொதுமக்கள்.</p> <h2>இனிப்பு வழங்கி உற்சாகம்</h2><p>மதுரையின் முக்கிய சந்திப்புகள் மற்றும் பொது இடங்களில் தவெக நிர்வாகிகள் இன்று ஒன்று கூடினர். விண்ணதிரும் வகையில் பட்டாசுகளை வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பொதுமக்களுக்கும், பேருந்து பயணிகள் மற்றும் பாதசாரிகளுக்கும் தவெகவினர் லட்டுகள் மற்றும் இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். </p> <p>மக்கள் பாராட்டு</p><p>கட்சியின் கொள்கைகள் மற்றும் மக்கள் நல பணிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களிடம் விநியோகித்தனர். ஊழலற்ற நிர்வாகம், இலவச மின்சாரம் மற்றும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களால் இந்த 100 நாள் ஆட்சி தங்களுக்கு பெரும் பயன் தந்துள்ளதாக பொதுமக்கள் பலரும் தவெகவினரிடம் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்த விழா மதுரையில் பரபரப்பையும், தவெக தொண்டர்களிடையே மிகுந்த எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>படகுப் போக்குவரத்து - சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/boat-transport-minister-adhav-arjunas-announcement-in-the-legislative-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/boat-transport-minister-adhav-arjunas-announcement-in-the-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">60019432-a29d-4dc7-8178-2f1c267637df</guid><pubDate>Tue, 18 Aug 2026 14:04:44 +0000</pubDate><atom:updated>2026-08-18T14:04:44.271Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,படகுப் போக்குவரத்து,பாராலிம்பிக் போட்டி,AdhavArjuna,BoatService</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/qc8gkztr/vijayone33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
படகுப் போக்குவரத்து]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/qc8gkztr/vijayone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது. அப்போது விளையாட்டுக்கான முக்கிய அறிவிப்புகளையும் பல்வேறு முக்கிய கோரிக்கைகளையும் விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது:-</p><h2>படகுப் போக்குவரத்து</h2><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">இராமேஸ்வரம் </a>அக்னிதீர்த்தத்தில் இருந்து பாம்பன் கால்வாய் வழியாக மண்டபம் வரை உள்நாட்டு பயணிகள் படகுப் போக்குவரத்து சேவை தொடங்கப்படும்.</p><h2>தடையற்ற போக்குவரத்து</h2><p>வடசென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தி தடையற்ற போக்குவரத்தை உறுதிசெய்யும் வகையில், வியாசர்பாடி இரயில்வே மேம்பாலத்தின் மாதவரம் நோக்கிய கரம் நீட்டிக்கப்பட உள்ள நிலையில், முதற்கட்டமாக ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.</p><p>அதே போல சென்னையில் வியாசர்பாடி, கொருக்குப்பேட்டை மற்றும் வடசென்னை பகுதிகளை நகரின் மத்தியப் பகுதிகளுடன் இணைக்கும் பேசின் பிரிட்ஜ் சந்திப்பில் அமைந்துள்ள குறுகலான பாலங்கள் அகலப்படுத்தப்படும்.</p><p>பொதுப்பணித்துறை திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் தரக் கட்டுப்பாட்டைப் பொதுமக்கள் நேரடியாகப் பார்வையிடும் வகையிலும், 100% வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையிலும் புதிய "TN.PWD" செயலி உருவாக்கப்படும்.</p><h2>பல்நோக்கு உள்விளையாட்டரங்கம்</h2><p>"இறகுப்பந்து, கூடைப்பந்து, வாள்வீச்சு, ஜூடோ, கையுந்துபந்து, கபாடி, மேசைப்பந்து உள்ளிட்ட பல்வேறு உள்விளையாட்டுகளில் வீரர், வீராங்கனைகள் அனைத்துப் பருவ காலங்களிலும் தடையின்றிப் பயிற்சி பெறும் வகையில் கரூர், கடலூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் தலா ரூ.14 கோடியில் புதிய பல்நோக்கு உள்விளையாட்டரங்கங்கள் அமைக்கப்படும்.</p><h2>ஏஐ கட்டட மேலாண்மை அமைப்பு</h2><p>அரசு மருத்துவமனைகளின் பராமரிப்புப் பணிகளை நவீனப்படுத்தும் நோக்கில் IIT தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் முதற்கட்டமாகச் சென்னை இராசீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் AI தொழில்நுட்பம் சார்ந்த கட்டட மேலாண்மை அமைப்பு (BMS) அறிமுகப்படுத்தப்பட்டு, படிப்படியாகத் தமிழ்நாட்டின் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் இந்த நவீன முறை விரிவுபடுத்தப்படும்.</p><h2>ஊக்கத் தொகை உயர்வு</h2><p>ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கான உயரிய ஊக்கத் தொகை உயர்வு அதிகரிக்கப்படும்.</p><p>அதன்படி, தங்கப் பதக்கம் வெல்வோருக்கான ஊக்கத்தொகை ரூ.3 கோடியிலிருந்து ரூ.5 கோடியாகவும், வெள்ளிப் பதக்கத்திற்கு ரூ.2 கோடியிலிருந்து ரூ.3 கோடியாகவும், வெண்கலப் பதக்கத்திற்கு ரூ.1 கோடியிலிருந்து ரூ.2 கோடியாகவும் உயர்த்தி வழங்கப்படும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: விடுபட்ட பணிகளை துரிதப்படுத்த சென்னை மாநகராட்சி உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-preparedness-chennai-corporation-orders-acceleration-of-pending-works</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-preparedness-chennai-corporation-orders-acceleration-of-pending-works#comments</comments><guid isPermaLink="false">5c157fe1-20d6-4de6-ac19-ad39c198b6e8</guid><pubDate>Tue, 18 Aug 2026 14:00:23 +0000</pubDate><atom:updated>2026-08-18T14:00:23.734Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,வடகிழக்கு பருவமழை,Northeast Monsoon,முன்னெச்சரிக்கை,monsoon,மாநகராட்சி உத்தரவு,Northeast</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/kiinjpp9/207.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாநகராட்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/kiinjpp9/207.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கைகாக விடுபட்ட பணிகளை துரிதப்படுத்த சென்னை மாநாகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>முன்னெச்சரிக்கை பணிகள்</h2><p>பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, மழைநீர் வடிகால் கட்டும் பணிகள், கால்வாய்கள், மழைநீர்வடிகால் மற்றும் வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் தூர்வாரும் பணிகள், நீர்நிலைகளைத் தூர்வாருதல், அபாயகரமான மரக்கிளைகளை வெட்டி அகற்றுதல், மோட்டார் பம்புகள் உள்ளிட்ட அனைத்து இயந்திரங்களையும் தயார்நிலையில் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p>இந்நிலையில், வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகளுக்காக கூடுதலாக ரூ.58.15 கோடி மதிப்பீட்டிலான பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் உள்ள ஒவ்வொரு வார்டுகளிலும் பருவமழைக்கான முன்னெச்சரிக்கை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதற்கு வார்டு வாரியாக தலா ரூ.5 லட்சம் வீதம் 200 வார்டுகளுக்கு மொத்தம் ரூ.10 கோடி வழங்கப்பட்டுள்ளது.</p><h2>நிர்வாக அனுமதி</h2><p>மேலும் ஒவ்வொரு மண்டலங்களிலும் உடனடி சாலை சீரமைப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்காக, 15 மண்டலங்களுக்கும் மொத்தம் ரூ. 22 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மின்சார மற்றும் இயந்திர உபகரணங்களை பழுதுபார்ப்பதற்காக ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள மழைநீரை உடனுக்குடன் அகற்றுவதற்காக 150 உயர் திறன் மோட்டார்கள் (100 HP மோட்டார்களுக்கு - ரூ.10 கோடி) மற்றும் 500 டிராக்டர் மூலம் இயக்கப்படும் மோட்டார்கள் மற்றும் பம்புகள் வாங்குவதற்காக (ரூ.16 கோடி) என மொத்தம் ரூ.26 கோடி மதிப்பீட்டில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p>பருவமழை தொடர்பான பணிகளுக்காக, ஒரு வார்டுக்கு 5 பணியாளர்கள் வீதம் கூடுதலாக 1,000 பணியாளர்கள் நியமிக்கப்படுவர். இவர்கள் மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளுதல், அபாயகரமான மரக்கிளைகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வர். மேற்கண்ட தகவலை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">மாநகராட்சி</a> ஆணையாளர் ஜி.எஸ். சமீரன் தெரிவித்துள்ளார்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஜென் ஸி  குறித்து பதிவிட்ட பெண்...இணையத்தில் வைரல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/womans-post-about-gen-z-goes-viral-online</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/womans-post-about-gen-z-goes-viral-online#comments</comments><guid isPermaLink="false">680bfc30-0a32-4c4a-9f59-5395b22631a4</guid><pubDate>Tue, 18 Aug 2026 13:27:56 +0000</pubDate><atom:updated>2026-08-18T13:27:56.872Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,High Court,உயர்நீதிமன்றம்,மாதவிடாய் விடுமுறை,period pain</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/wisia81x/14.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ ஜென் ஸி - பெண்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஜென் ஸி- பெண்கள் மாதவிடாய் விடுப்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/wisia81x/14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பணியிடங்களில் மாதவிடாய் விடுப்பு எடுப்பது குறித்த விவாதங்கள் தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், தங்களது உடல்நலப் பிரச்சினைகளைத் தயக்கமின்றி வெளிப்படையாகப் பேசும் 'Gen Z' (90-களின் இறுதி மற்றும் 2000-களில் பிறந்தவர்கள்) தலைமுறையினரின் நேர்மைக்குச் சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.</p><h2>மாறிவரும் அலுவலகக் கலாசாரம்</h2><p>முந்தைய தலைமுறையினர் உடல்நலக் குறைவு அல்லது மாதவிடாய் வலியை மறைத்து, வேறு காரணங்களைக் கூறி விடுப்பு எடுத்த நிலையை Gen Z ஊழியர்கள் மாற்றியுள்ளனர். "மாதவிடாய் வலி காரணமாக இன்று பணிக்கு வர இயலாது" என நேரடியாகவும் நேர்மையாகவும் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி அனுப்பும் இவர்களின் அணுகுமுறை, பணியிடங்களில் நிலவிவந்த தேவையற்ற தயக்கங்களை உடைத்துள்ளதாகப் பாராட்டப்படுகிறது.</p><h2>இந்தியாவில் சட்டப்பூர்வ நிலை</h2><p>தேசிய அளவில் இந்தியாவில் மாதவிடாய் விடுப்புக்கான தனிச் சட்டம் இன்னும் இயற்றப்படவில்லை. எனினும், பீகார், ஒடிசா, <a href="https://www.dailythanthi.com/news/india">கர்நாடகா</a> மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் சில கட்டுப்பாடுகளுடன் இந்த விடுப்பை நடைமுறைப்படுத்தியுள்ளன. அனைத்து மாநிலங்களிலும் இதைக் கட்டாயமாக்கக் கோரிய வழக்கில், "இது பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில் பின்னடைவை ஏற்படுத்தலாம்" என்ற கவலையையும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><h2>தமிழக அரசின் தீவிரம்</h2><p>தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் துறை பெண் ஊழியர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D">மாதவிடாய் விடுப்பு </a>வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் விதிகளை வகுக்க ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, பெண்களின் ஆரோக்கியம் மற்றும் வேலைவாய்ப்பு இரண்டையும் பாதிக்காத வகையில் முறையான கொள்கையை உருவாக்கத் தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி இடையே வாரந்திர சிறப்பு ரெயில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/weekly-special-train-between-thiruvananthapuram-and-velankanni</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/weekly-special-train-between-thiruvananthapuram-and-velankanni#comments</comments><guid isPermaLink="false">af0079d6-c2e2-4e56-99cc-515678d13a2c</guid><pubDate>Tue, 18 Aug 2026 13:24:35 +0000</pubDate><atom:updated>2026-08-18T13:24:35.169Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,தெற்கு ரெயில்வே,Southern Railway,Special train,Thiruvananthapuram,திருவனந்தபுரம்,Velankanni,வேளாங்கண்ணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/ps1e2yu4/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/ps1e2yu4/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வேளாங்கண்ணியில் நடைபெறும் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா ஆலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி இடையே வாரந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>திருவனந்தபுரம் வடக்கு - வேளாங்கண்ணி (வண்டி எண் 06115) வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 29-ந்தேதி மற்றும் செப்டம்பர் 5-ந்தேதி சனிக்கிழமைகளில் (2 சேவைகள்) திருவனந்தபுரம் வடக்கில் இருந்து இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.40 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.</p><p>மறுமார்க்கத்தில் வேளாங்கண்ணி - திருவனந்தபுரம் வடக்கு (வண்டி எண் 06116) வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 30-ந்தேதி மற்றும் செப்டம்பர் 6-ந்தேதி ஞாயிற்றுக்கிழமைகளில் (2 சேவைகள்) வேளாங்கண்ணியில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கை சென்றடையும்.</p><p>இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை மறுநாள் (20-ந்தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>யானைகள் வருவதை தடுக்க புதிய அகழி தோண்டும் பணி தொடக்கம்; பொதுமக்கள் வரவேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-ditches-to-stop-elephants-public-welcome</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-ditches-to-stop-elephants-public-welcome#comments</comments><guid isPermaLink="false">a2447387-8224-4754-8ad2-2d03a1d8f378</guid><pubDate>Tue, 18 Aug 2026 13:19:41 +0000</pubDate><atom:updated>2026-08-18T13:19:41.044Z</atom:updated><atom:author><atom:name>K.Sakthivel</atom:name><atom:uri>/api/author/2422436</atom:uri></atom:author><description></description><media:keywords>DIG,Elephants,யானைகள்,அகழி,பணி தொடக்கம்,general public,பொதுமக்கள் வரவேற்பு,welcomes</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/cxswmnz9/jcb.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ புதிய அகழி தோண்டும் பணிதொடக்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ யானைகள் வருவதை தடுக்க புதிய அகழி தோண்டும் பணிதொடக்கம்; பொதுமக்கள் நிம்மதி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/cxswmnz9/jcb.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கூடலூர், </p><p>நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பாடந்தொரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">காட்டு யானைகளின்</a> நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இந்த காட்டு யானைகள் நள்ளிரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள விவசாய பயிர்களை காலால் மிதித்தும், தின்றும் நாசம் செய்து வருகின்றன.</p><h2>காட்டு யானை</h2><p>மேலும், வழியில் எதிரே வரும் பொதுமக்களையும் ஓட ஓட விரட்டுவதால், அந்த பகுதி மக்கள் கடும் பீதியிலும், உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழலிலும் வசித்து வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். </p><h2>கும்கி யானைகள் வருகை</h2><p>பொதுமக்களின் போராட்டத்தை தொடர்ந்து, வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். முதுமலை தப்பக்காடு யானைகள் முகாமில் இருந்து 'சுஜய்', 'வசீம்' உள்ளிட்ட 2 கும்கி யானைகள் பாடந்தொரை பகுதிக்கு வரவழைக்கப்பட்டன. இந்த கும்கி யானைகளின் உதவியுடன், காடுகளிலிருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>தற்போது கொட்டாய் மட்டம் உள்ளிட்ட சில பகுதிகளில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை நேற்றும் வனத்துறையினர் கும்கி யானைகள் மூலம் விரட்டியடித்தனர்.</p> <h2>புதிதாக அகழி தோண்டும் பணி</h2><p>இதற்கிடையே, காட்டு யானைகள் மீண்டும் ஊருக்குள் வராதபடி அவை வரும் வழித்தடங்களை கண்டறிந்து புதிய அகழிகளை தோண்ட வேண்டும் எனவும், ஏற்கனவே உள்ள அகழிகளை தூர்வார வேண்டும் எனவும் வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று, தற்போது 4-ம் மைல், கோல்கேட், செளுக்காடி ஆகிய முக்கிய இடங்களில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் புதியதாக ஆழமான அகழிகள் தோண்டும் பணியை வனத்துறையினர் போர்க்கால அடிப்படையில் தொடங்கி உள்ளனர். </p><p> பல கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏற்கனவே தோண்டப்பட்டு, மண் மூடி போயிருந்த பழைய அகழிகளை தூர்வாரும் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நடவடிக்கையால் காட்டு யானைகள் ஊருக்குள் வருவது முற்றிலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><h2>பொதுமக்கள் கோரிக்கை</h2><p>இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறும்போது, "காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் புதிய அகழி தோண்டுவது வரவேற்கத்தக்கது. ஆனால், இதே பகுதியில் உள்ள சில தனியார் எஸ்டேட்களில் புதர்கள் மண்டி கிடக்கின்றன. இந்த புதர்களை அகற்ற வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.</p><h2>முகாமிட அதிக வாய்ப்பு</h2><p>எஸ்டேட் நிர்வாகத்தினர் பெயரளவுக்கு மட்டுமே புதர்களை அகற்றும் பணியை தொடங்கிவிட்டு, பின்னர் அப்படியே கைவிட்டுவிட்டனர். இதனால் மண்டியுள்ள புதர்களுக்குள் காட்டு யானைகள் மறைந்து முகாமிட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, மாவட்ட அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>3-வது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியர்களுக்கு குட் நியூஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/good-news-for-female-government-employees-expecting-their-third-child</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/good-news-for-female-government-employees-expecting-their-third-child#comments</comments><guid isPermaLink="false">411dd0f7-de0f-499f-afd0-5d4960d10415</guid><pubDate>Tue, 18 Aug 2026 13:12:15 +0000</pubDate><atom:updated>2026-08-18T13:12:15.595Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,தமிழக அரசு,அரசு ஊழியர்கள்,TNAssembly,pregnancy,கர்பிணிப்பெண்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/xkculmbe/tngovt33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெண் ஊழியர்களுக்கு குட் நியூஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/xkculmbe/tngovt33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசு பெண் ஊழியர்களின் 3வது குழந்தைக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">அமைச்சர் சரத்குமார் </a>அறிவித்தார்.</p><p>தமிழக அரசு பெண் பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்கும் வகையில்,  மிக முக்கியமான மற்றும் முற்போக்கான அறிவிப்பை தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசு வெளியிட்டுள்ளது. அரசுப் பெண் ஊழியர்களின் மூன்றாவது பிரசவத்திற்கும் இனி 365 நாட்கள் (ஓராண்டு) முழுமையான மகப்பேறு விடுப்பு சம்பளத்துடன் வழங்கப்படும் என்பதே அந்த அறிவிப்பு ஆகும் இது அனைத்து அரசு பெண் ஊழியர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுளது. இதற்கு முன் 2 குழந்தைகளுக்கு சம்பளத்துடன் கூடிய ஓராண்டு விடுப்பு வழங்கப்பட்டு வந்தது.</p><p>தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது. அப்போது மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் சரத்குமார் பதிலளித்துப் பேசியதாவது:</p><p>AM, PM என நேரம் பார்க்காமல் வேலை பார்க்கும் முதல்-அமைச்சரே நாளைய பாரதத்தின் PM நீங்கள் தான். தற்போதைய விடுப்பு முறையை 12 வாரங்களில் இருந்து அப்படியே நீட்டித்து, முதல் இரு குழந்தைகளைப் போலவே மூன்றாவது குழந்தைக்கும் முழுமையாக 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்க தவெக அரசு முடிவெடுத்துள்ளது.</p><p>போட்டித் தேர்வுக்கு தயாராகும் ஆர்வலர்களுக்காக வெற்றி பாதை செயலி உருவாக்கப்படும்.</p><p>அரசு பணியிடங்களை நிரப்ப தனி செயலி உருவாக்கப்படும். டிஎன்பிஎஸ்சி கூடுதல் இணைப்பு கட்டிடம் ரூ.5.12 கோடி செலவில் கட்டப்படும் என்றார்.</p><p>மூன்றாவது குழந்தையின் போதான பிரசவ வலியும், பராமரிப்புத் தேவையும் மற்ற பிரசவங்களைப் போன்றதே என்பதால், இந்தச் சலுகை மறுக்கப்படக் கூடாது என்று அண்மைக் காலங்களில் சென்னை ஐகோர்ட்டும் சில முக்கிய வழக்குகளில் சுட்டிக்காட்டியிருந்தது. </p><p>நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களையும், பெண் ஊழியர்களின் குடும்ப நலனையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி முடிவிற்கு அரசு ஊழியர் சங்கங்களும், பெண் பணியாளர்களும் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளையும் வரவேற்பையும் தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>முதுமலை வனப்பகுதியில் கடும் வறட்சி: 3 யானைகள் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/severe-drought-in-mudumalai-forest-area-3-elephants-die</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/severe-drought-in-mudumalai-forest-area-3-elephants-die#comments</comments><guid isPermaLink="false">82d13036-eba5-4890-b2ba-a1bb527b58e9</guid><pubDate>Tue, 18 Aug 2026 12:31:23 +0000</pubDate><atom:updated>2026-08-18T12:31:23.510Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நீலகிரி,water,கடும் வறட்சி,elephant death,யானைகள் உயிரிழப்பு,Forest Officer,Nilgiris District</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/55gih9zt/13.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ யானை உயிரிழப்பு]]></media:title><media:description type="html"><![CDATA[ ஒரே மாதத்தில் 3 யானைகள் உயிரிழப்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/55gih9zt/13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நீலகிரி மாவட்டம்</a> முதுமலை புலிகள் காப்பகப் பகுதியில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக, கடந்த 10 நாட்களில் மட்டும் 3 காட்டு யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p><h2>தொடர் மரணங்கள்</h2><p>நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகப் பகுதியில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88">யானைகள்</a> முகாம் அமைந்துள்ளது. பருவமழை இல்லாத காரணத்தால் அந்தப் பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால் மசினகுடி வனச்சரகத்தில் கடந்த 8-ந்தேதி ஒரு யானையும், நேற்று முன்தினம் குதிரைப்பாறை பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் யானையும் உயிரிழந்தன. இந்நிலையில், இன்றும் (செவ்வாய்க்கிழமை) அதே பகுதியில் மற்றொரு பெண் யானையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>வறட்சியின் வீரியம்</h2><p>நடப்பு (ஆகஸ்ட்) மாதத்தில் போதிய மழையின்றி காடுகளில் உள்ள நீர்நிலைகள் மற்றும் குட்டைகள் முற்றிலும் வறண்டுவிட்டன. இதனால் உணவும் குடிநீரும் கிடைக்காமல் காட்டு விலங்குகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றன.</p><h2>வனத்துறை அதிரடி</h2><p>வனவிலங்குகளின் தாகத்தைத் தணிக்க, லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீரைச் செயற்கைத் தொட்டிகளில் நிரப்பும் அவசரப் பணிகளை வனத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். இறந்த யானைகளின் உடற்கூறுகள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. வறட்சி அல்லது வேறு ஏதேனும் நோய் பாதிப்பு காரணமா என்பது குறித்து<a href="https://www.dailythanthi.com/topic/வனத்துறை"> வனத்துறை அதிகாரிகள்</a> தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>3 தமிழர்கள் துப்பாக்கிச்சூட்டில் பலி: கர்நாடக முதல்-மந்திரி பேச்சுக்கு வேல்முருகன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-tamils-killed-in-firing-velmurugan-condemns-karnataka-chief-ministers-remarks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-tamils-killed-in-firing-velmurugan-condemns-karnataka-chief-ministers-remarks#comments</comments><guid isPermaLink="false">74ca6bdc-ff62-4cb4-beee-2a4a6766b301</guid><pubDate>Tue, 18 Aug 2026 12:25:07 +0000</pubDate><atom:updated>2026-08-18T12:25:07.877Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,பலி,Velmurugan,வேல்முருகன்,துப்பாக்கிச்சூடு,கர்நாடக முதல்-மந்திரி,தமிழக வாழ்வுரிமைக் கட்சி,Condemn,Chief Minister of Karnataka</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/02rfzntk/206.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/02rfzntk/206.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கர்நாடக முதல்-மந்திரி பேச்சுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திப்பதாவது:-</p><h2>3 தமிழர்கள் மீது துப்பாக்கிச்சூடு</h2><p>கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ள நிலையில், அந்த மரணங்களுக்குப் பொறுப்பானவர்கள் யார்? என்பதை விசாரிப்பதற்குப் பதிலாக, தமிழகத்திலிருந்து எழும் நீதிக்குரலை அடக்க முயலும் கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவகுமாரின் ஆணவப் பேச்சைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.</p><p>மூன்று தமிழர்களின் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது. மூன்று குடும்பங்கள் நிராதரவாக இருக்கின்றன. ஒருவர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். சம்பவம் குறித்து அடுக்கடுக்கான சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன. இந்நிலையில், தமிழக அரசு தனது வேலையைப் பார்க்கட்டும். கர்நாடக நிர்வாகத்தில் தலையிடக்கூடாது என்ற பொருளில், கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவகுமார் பேசுவது, பதில் சொல்ல வேண்டிய பொறுப்பிலிருந்து தப்பிக்கும் அரசியல் திமிராகவே பார்க்க வேண்டியுள்ளது.</p><h2>வெளிப்படையான பதில்</h2><p>தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டால், தமிழ்நாடு அமைதியாக வேடிக்கை பார்க்க வேண்டுமா? கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் யார்? அவர்கள் எந்த நோக்கத்திற்காக அப்பகுதிக்குச் சென்றார்கள்? துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய அளவுக்கு என்ன நடந்தது? அவர்களிடம் ஆயுதம் இருந்ததா? இருந்தால் அதை அவர்கள் பயன்படுத்தினார்களா? கைது செய்யும் வாய்ப்பு ஏன் ஏற்படுத்தப்படவில்லை? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் வெளிப்படையான பதில் அளிக்க வேண்டிய கர்நாடக அரசு, எங்கள் மாநில விவகாரம் என்று கதவை மூடிக்கொள்வது ஏன்?</p> <p>கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவகுமார் அவர்களே!, தமிழ்நாட்டை நோக்கி விரலை நீட்டுவதற்கு முன், உங்கள் அரசின் வனத்துறையினரை நோக்கி கேள்வி எழுப்புங்கள். தமிழர்களின் மரணத்தைப் பற்றி கேட்கும் தமிழக தலைவர்களிடம் தலையிடாதீர்கள் என்று சொல்வதற்கு முன், மூன்று தமிழர்களின் உயிர்கள் ஏன் பறிக்கப்பட்டன?  வேறு மாநிலங்களில் அல்லது பிற நாடுகளில் கன்னடரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், நீங்கள் கேள்வி கேட்பீர்களா? மாட்டீர்களா?</p><p>சிபிஐ விசாரணை கோரிக்கையையும் நிராகரிக்கும் நீங்கள், உண்மை வெளிவர வேண்டும் என்பதில் ஏன் தயக்கம் காட்டுகிறீர்கள்? சுதந்திரமான விசாரணைக்கு அஞ்சுவது ஏன்? விசாரணையின் மூலம் உண்மை வெளிவந்துவிடக் கூடாது என்று நினைக்கிறீர்களா? இவை அரசியல் கேள்விகள் அல்ல. உயிரிழந்த மூன்று தமிழர்களின் குடும்பங்கள் கேட்கும் நியாயமான கேள்விகள்.</p><h2>நீதிக்காகக் குரல் கொடுப்பது எங்கள் கடமை</h2><p>மேலும், கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், தமிழ் அமைப்புகள் மீதான தாக்குதல்கள், தமிழகத் தலைவர்களின், குறிப்பாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு விஜய் அவர்களின் திரைப்படப் பதாகைகள் மற்றும் உருவப்படங்கள் அவமதிக்கப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்தபோது, கர்நாடக அரசு எத்தனை வழக்குகளைப் பதிவு செய்தது? எத்தனை குற்றவாளிகளைத் தண்டித்தது? தமிழர்களின் பாதுகாப்புக்காக என்ன உறுதியான நடவடிக்கை எடுத்தது? அப்போது அமைதியாக இருந்தவர்கள், இப்போது மட்டும் கூட்டாட்சி என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது ஏன்? காவிரி நீரில் தமிழகத்தின் உரிமைகளை மறுக்கும் கர்நாடக முதல்-மந்திரி, கூட்டாட்சி தத்துவத்தைக் குறித்து பேசலாமா? தமிழ்நாட்டின் குரலை நீங்கள் கட்டளையிட்டு அடக்க முடியாது. தமிழர்களின் உயிர் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாட்டில் இருந்து கேள்வி கேட்பது எங்கள் உரிமை. நீதிக்காகக் குரல் கொடுப்பது எங்கள் கடமை. எல்லையில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்துவது எங்கள் பொறுப்பு.</p><h2>சிபிஐ விசாரணை</h2><p>எனவே, ஆணவமான அரசியல் பதில்களைத் தவிர்த்து, சம்பவத்தின் முழு உண்மையையும் கர்நாடக அரசு, மக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். மூன்று தமிழர்களின் மரணம் குறித்து ஐகோர்ட் நீதிபதி தலைமையிலான சுதந்திரமான நீதித்துறை விசாரணை அல்லது சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்.</p><p>துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய வனத்துறை அதிகாரிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">விசாரணை</a> முடியும் வரை அவர்கள் மீது சட்டப்படி தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.</p><p>உயிரிழந்த மூன்று தமிழர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்பட வேண்டும். முழுமையான விசாரணைக்குப் பிறகு, இந்த குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் அதிகாரிகள் என்றாலும் கூட, அவர்களுக்கு கடுமையான தண்டனை நீதித்துறையால் வழங்கப்பட வேண்டும். தமிழர்களின் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு கேள்வி கேட்கும். நீதி கிடைக்கும் வரை கேள்வி கேட்கும். உண்மை வெளிவரும் வரைப் போராடும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழர்கள் படுகொலைக்கு, <br>நீதி கேட்டால் ஆணவப் பேச்சா?<br>கர்நாடக முதலமைச்சரே, இரட்டை வேடம் ஏன்?<br><br>கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ள நிலையில், அந்த மரணங்களுக்குப் பொறுப்பானவர்கள் யார்? என்பதை விசாரிப்பதற்குப் பதிலாக, தமிழகத்திலிருந்து எழும்… <a href="https://t.co/8me7xK5leQ">pic.twitter.com/8me7xK5leQ</a></p>&mdash; Velmurugan.T (@VelmuruganTVK) <a href="https://x.com/VelmuruganTVK/status/2089673994924650550?ref_src=twsrc%5Etfw">August 18, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>டெண்டர் விதிமீறல்கள் குறித்த மக்களின் கேள்விகளுக்கு தவெக அரசு பதிலளிக்க வேண்டும் - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tender-violations-questions-people-tavega-government-must-answer-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tender-violations-questions-people-tavega-government-must-answer-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">ac3058cc-d89f-46a3-b925-61bc14631ea7</guid><pubDate>Tue, 18 Aug 2026 12:02:34 +0000</pubDate><atom:updated>2026-08-18T12:24:55.708Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,நயினார் நாகேந்திரன்,tender,டெண்டர்,Nainar Nagenthran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/5gug64mk/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/5gug64mk/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>டெண்டர் விதிமீறல்கள் குறித்த மக்களின் கேள்விகளுக்கு தவெக அரசு பதிலளிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து, நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு மாற்றப்படும் முதல்வர் அலுவலகத்திற்கான டெண்டர்களில், ஏகப்பட்ட விதிமீறல்கள் இருப்பதாகவும் முறைகேடுகள் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.</p><p>தலா ரூ.2.41 கோடி, ரூ.2.01 கோடி மற்றும் ரூ.1.12 கோடி என மொத்தம் ரூ.5.54 கோடி மதிப்பீட்டில், ஏ, பி, சி என மூன்று பிரிவுகளை உள்ளடக்கிய 3 டெண்டர்களுக்கான அறிவிப்பு, கடந்த 13-ம் தேதியே தினசரி நாளிதழ்களில் விளம்பரப்படுத்தப்பட்டுவிட்டது. விதிகளின்படி அடுத்த நாளே இணையத்திலும் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்க வேண்டும். ஆனால், நான்கு நாட்கள் கழித்து 17-ம் தேதி தான் டெண்டருக்குரிய ஆவணங்கள் அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. எதற்கு இந்த காலதாமதம்? அதிலும், இணையத்தில் பதிவேற்றப்பட்ட டெண்டர் ஆவணங்களில் மதிப்பீடுகள் குறித்த விவரங்கள் எதுவும் இடம்பெறாதது ஏன்?</p><p>"நாங்கள் ஊழலுக்கு எதிரானவர்கள்" என்று கூறிக் கொள்ளும் முதல்வர் விஜய், இந்த டெண்டர் விவகாரத்தில் வெளிப்படைத் தன்மையை கடைபிடிக்காதது ஏன்? ரூ. 2 கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட டெண்டர் ஆவணங்களை சமர்ப்பிக்க, 30 நாட்கள் வரை கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்ற நிலையில், இந்த டெண்டர்களுக்கு மட்டும் எதற்காக வெறும் 15 நாட்கள் மட்டுமே அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது? ஒப்பந்ததாரர் யார் என்பதை முடிவு செய்வதற்குள்ளாகவே, எதன் அடிப்படையில் கட்டிடப் பணிகள் துவங்கப்பட்டன? டெண்டர் குறித்த இக்கேள்விகள் எல்லாம் வீண் வதந்திகள் என்று சட்டசபையில் கூறும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அதற்கான ஆதாரங்களையும் மக்கள் மன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அரசுப் பேருந்து நடத்துனர்களை குத்தகை அடிப்படையில் நியமிப்பதா? - டிடிவி தினகரன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/arecu-peruntu-nadaththunaralai-kuththakai-adippadaiyil-niyamippathaa-ttv-dhinakaran-kandhanam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/arecu-peruntu-nadaththunaralai-kuththakai-adippadaiyil-niyamippathaa-ttv-dhinakaran-kandhanam#comments</comments><guid isPermaLink="false">c8e7fcb8-9909-4691-a661-bf2436d051f2</guid><pubDate>Tue, 18 Aug 2026 12:19:45 +0000</pubDate><atom:updated>2026-08-18T12:19:45.926Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,govt bus,அரசுப் பேருந்து,Lease,நடத்துனர்,குத்தகை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/7xu5w071/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/7xu5w071/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகரப் போக்குவரத்து கழகங்கள் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளுக்கான நடத்துனர்களை குத்தகை அடிப்படையில் நியமிப்பதா? என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தேர்தலுக்கு முன்பாக தனியார்மயத்திற்கு எதிராக குரல் எழுப்பிய தவெக, ஆட்சிக்கு வந்தவுடன், அதே தனியார்மயமாக்கும் முறையை பின்பற்றியிருப்பதோடு, அந்த ஒப்பந்தத்தை உத்திரபிரதேச மாநிலம் ரபேரலியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு கொடுக்க முன்வந்திருப்பது தான் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் சொன்ன மாற்றமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.</p><p>ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் கடந்துள்ள நிலையில், போக்குவரத்துக் கழகங்களில் நிலவும் பல ஆயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப துளியளவும் நடவடிக்கை எடுக்காத தவெக அரசு, அரசுப் பேருந்துகளுக்கு குத்தகை அடிப்படையில் நடத்துனர் நியமனம் செய்யும் பணியை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்திருப்பது வேலைக்காக காத்திருக்கும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு இழைக்கும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.</p><p>பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய போக்குவரத்துத்துறையில் போதுமான அளவில் பணியாளர்கள் இல்லாத நிலையில், நிரந்தர பணியாளர்களை நியமிக்காமல் குத்தகை அடிப்படையில் ஊழியர்களை நியமிப்பதற்கு தவெக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு போக்குவரத்து தொழிற்சங்கத்தினரும் தங்களது கடும் எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர்.</p><p>எனவே, மாநகரப் போக்குவரத்து கழகங்கள் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளுக்கான நடத்துனர்களை குத்தகை அடிப்படையில் நியமிப்பதற்கு உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சார்ந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஆணையை உடனடியாக ரத்து செய்வதோடு, போக்குவரத்துத்துறையில் நிலவும் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்களுக்கான விளையாட்டு இடஒதுக்கீடு உயர்த்தப்படும்  - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sports-quota-for-students-will-be-increased-minister-adhav-arjuna</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sports-quota-for-students-will-be-increased-minister-adhav-arjuna#comments</comments><guid isPermaLink="false">26925eb3-7300-41b7-8bc5-afcbe97be253</guid><pubDate>Tue, 18 Aug 2026 12:19:09 +0000</pubDate><atom:updated>2026-08-18T12:19:09.334Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TNAssembly,அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,TNHighways</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/jzyf3msy/athav33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/jzyf3msy/athav33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாணவர்களுக்கான விளையாட்டு இடஒதுக்கீடு உயர்த்தப்படும் என சட்டசபையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார்.</p><p>தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது. அப்போது விளையாட்டுக்கான முக்கிய அறிவிப்புகளையும் பல்வேறு முக்கிய கோரிக்கைகளையும் விளையாட்டு துறை அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE">ஆதவ் அர்ஜுனா </a>கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது:-</p><h2>41 கட்சிகளை எதிர்த்து வெற்றி</h2><p>2016-ல் புரட்சித்தலைவி ஜெயலலிதா தனித்து நின்று வெற்றி பெற்றார். அதேபோல் 2026-ல் 41 எதிர்கட்சிகளை எதிர்த்து நின்று முதல்-அமைச்சர் விஜய் வெற்றி பெற்றுள்ளார். மக்கள் துணையுடன், இளைஞர்கள் துணையுடன், தமிழக மக்கள் துணையுடன் ஆட்சியை பிடித்துள்ளார் முதல்-அமைச்சர் விஜய்.</p><p>3 வருடத்தில் கட்சி ஆரம்பித்து வெற்றி பெற முடியுமா, பூத் இருக்கா, ஏஜெண்ட் இருக்கா என கேட்டார்கள். ஆனால் 41 எதிர்கட்சிகளை எதிர்த்து இந்த வெற்றி சாத்தியமானது.</p><p>அண்ணாவை போல் ஒரு இளைஞர் கூட்டத்தை உருவாக்கி வெற்றி பெற்றுள்ளார் முதல்-அமைச்சர் விஜய். அண்ணா கூறியதை போல இளைஞர்களுக்கு வேகமும் அதிகம், விவேகமும் அதிகம்.</p><h2>அண்ணா கண்ட கனவு </h2><p>"சாதி, மதம், ஏழை, பணக்காரர் என்ற எந்த வித்தியாசமும் இல்லாத அண்ணா கண்ட கனவு இன்று நிறைவேறியுள்ளது. இன்று சட்டப்பேரவையில் இருப்பவர்கள் பண்ணையாரின் பிள்ளைகள் அல்ல, மன்னர் ஆட்சியின் பிள்ளைகள் அல்ல. அம்பேத்கர் கண்ட கனவு இன்று தமிழக சட்டமன்றத்தில் நிறைவேறி உள்ளது.</p><p>21 பட்டியிலன  உறுப்பினர்கள் அமர்ந்துள்ளனர். 1 ரூபாய் காசு செலவு செய்யாமல் இங்குள்ள தவெக எம்எல்ஏக்கள் அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர்.</p><p>விளையாட்டுதான் என்னுடைய சாதி, மதம், மொழி, குடும்பம். புரட்சித்தலைவி அம்மாவின் Sports Development Authority திட்டத்தின் கீழ் திருச்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 3 மாணவர்களில் ஒருவராக தான் இருந்தேன், நேரு ஸ்டேடியத்தில் மாநிலத்திற்காக விளையாடிய தேசிய அளவிலான பாஸ்கெட்பால் வீரர்.</p><p>இங்கேயே 3 பாஸ்கெட்பால் வீரர்கள் உள்ளனர். நிதியமைச்சர் மரிய வில்சன், முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி, சபாநாயகர் ஜெ.எஸ்.டி பிரபாகர் உட்பட பலரும் விளையாட்டு பின்னணியில் இருந்து வந்தவர்கள் தான்.</p><p>100 ஆண்டுகளில் தமிழர்கள் யாரும் ஒலிம்பிக் பதக்கம் வாங்கவில்லை. இதை மாற்ற '8 to 18' என்ற புதிய திட்டத்தை கொண்டு வரப்போகிறோம். விளையாட்டு வீரர்களுக்கு என தனி கல்விக்கொள்கை உருவாக்கப்பட வேண்டும்.</p><h2>விளையாட்டில் இடஒதுக்கீடு உயர்த்தப்படும்</h2><p>விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறப்பு கல்வி வழங்கப்படும். அவர்கள் எங்கு சென்றாலும் அவர்களுக்கான செலவுகளை அரசே ஏற்கும்.</p> <p>விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியருக்கு தொழில்முறைக் கல்லூரிகளில் விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் தற்போது நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு உயர்த்தப்படும்.</p> <h2>தொழில் விரைவுச்சாலை</h2><p>சென்னை, தூத்துக்குடி, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களை தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளுடன் திறன்மிக்க வகையில் இணைத்து விரைவுச் சாலை அமைக்கப்படும். முதற்கட்டமாக, ரூ.5 கோடி மதிப்பில் திட்டத்திற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்.</p> ]]></content:encoded></item><item><title>பள்ளியில் தண்ணீர் குடித்த மாணவிகள் மயக்கம்...  மருத்துவமனையில் அனுமதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/school-girls-fainted-after-drinking-water-at-school-admitted-to-hospital</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/school-girls-fainted-after-drinking-water-at-school-admitted-to-hospital#comments</comments><guid isPermaLink="false">496da18b-f7db-4085-ac01-43fbbc3eeef6</guid><pubDate>Tue, 18 Aug 2026 12:10:50 +0000</pubDate><atom:updated>2026-08-18T12:10:50.060Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவை,மயக்கம்,water,மாணவிகள்,Government School,police enquiry</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/6xlwab8q/12.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ மாணவிகள் ஆஸ்பத்திரியில் அனுமதி]]></media:title><media:description type="html"><![CDATA[ மயங்கிய மாணவிகள் ஆஸ்பத்திரியில் அனுமதி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/6xlwab8q/12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பொள்ளாச்சி</a> அருகே உள்ள அரசுப் பள்ளியில் இருந்த குடிநீரை குடித்த 9 மாணவிகள் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p><h2>மாணவிகள் மயக்கம்</h2><p>கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல் பள்ளி வகுப்புகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது, பள்ளி இடைவேளையில் அங்கிருந்த குடிநீரை மாணவிகள் சிலர் குடித்தனர். தண்ணீர் குடித்த சில நிமிடங்களிலேயே, அடுத்தடுத்து மாணவிகளுக்கு திடீர் மயக்கமும் உடல்நலக் குறைவும் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவர்களும், ஆசிரியர்களும் உடனடியாகப் பள்ளி நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.</p><h2>ஆஸ்பத்திரியில் அனுமதி</h2><p>மயக்கமடைந்த 9 மாணவிகளையும் உடனடியாக மீட்டு, அவசர சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது மாணவிகளின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><h2>உயரதிகாரிகள் விசாரணை</h2><p>இந்தச் சம்பவம் காட்டுத்தீ போல பரவியதை அடுத்து, பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி மற்றும் ஆஸ்பத்திரி வளாகத்தில் திரண்டதால் பதற்றமான சூழல் நிலவியது. பள்ளிக்கு வழங்கப்பட்ட குடிநீரில் ஏதேனும் நச்சுத்தன்மை கலந்திருந்ததா அல்லது தண்ணீர் தொட்டி முறையாகப் பராமரிக்கப்படாமல் இருந்ததே இதற்குக் காரணமா என்பது குறித்து கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">விசாரணை</a> மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஆய்வகப் பரிசோதனைக்காக அந்தப் பள்ளியின் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">Pollachi | பள்ளியில் தண்ணீர் குடித்த மாணவிகள்.. மயங்கி விழுந்து ஹாஸ்பிடலில் அனுமதி <a href="https://t.co/Iz0zGJLwQd">https://t.co/Iz0zGJLwQd</a> <a href="https://x.com/hashtag/drinkingwater?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#drinkingwater</a> <a href="https://x.com/hashtag/water?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#water</a> <a href="https://x.com/hashtag/school?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#school</a> <a href="https://x.com/hashtag/students?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#students</a> <a href="https://x.com/hashtag/hospital?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#hospital</a> <a href="https://x.com/hashtag/pollachi?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#pollachi</a> <a href="https://x.com/hashtag/coimbatore?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#coimbatore</a> <a href="https://x.com/hashtag/thanthitv?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#thanthitv</a></p>&mdash; Thanthi TV (@ThanthiTV) <a href="https://x.com/ThanthiTV/status/2089657429013504412?ref_src=twsrc%5Etfw">August 18, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>
அடுத்தடுத்து 3 வீடுகளில் திருட முயற்சி... ஆயுதங்களுடன் வந்த நபரால் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/attempted-robbery-at-3-houses-in-a-row-a-man-with-weapons-caused-a-stir</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/attempted-robbery-at-3-houses-in-a-row-a-man-with-weapons-caused-a-stir#comments</comments><guid isPermaLink="false">9cdb98b5-16b0-44d0-8cf4-004858fa859c</guid><pubDate>Tue, 18 Aug 2026 12:04:54 +0000</pubDate><atom:updated>2026-08-18T12:04:54.394Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருட்டு,weapons,Crime,CCTV camera,மர்ம நபர்,சிசிடிவி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/qo1spcwq/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மர்ம நபர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/qo1spcwq/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல்,</p><p>பரமத்தி வேலூரில் அடுத்தடுத்து 3 வீடுகளில் மர்ம நபர் திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.</p>  <h2>மர்ம நபர் திருட முயற்சி</h2><p>நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் கைகோளார் தெருவில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 16) இரவு முகத்தை முழுவதுமாக துணியால் மூடியபடி, கையில் ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர் ஒருவர், வீடுகளில் திருட முயன்றதாக கூறப்படுகிறது. பூட்டை உடைக்க முயன்றதுடன், அங்கிருந்த <a href="https://www.dailythanthi.com/topic/cctv-camera">சிசிடிவி கேமராவையும் </a>ஆயுதத்தால் தாக்கி சேதப்படுத்தியுள்ளார்.</p><p>இந்த சத்தத்தைக் கேட்டு எழுந்த அப்பகுதி பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்து பார்த்துள்ளனர். அப்போது மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.</p><p>பின்னர் அச்சத்தில் இருந்த மக்கள் அருகில் உள்ள மற்றொரு சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, மர்ம நபர் வீடுகளில் திருட முயன்றதும், பொருட்களை சேதப்படுத்தியதும் பதிவாகியிருந்தது.</p> <h2>போலீசார் விசாரணை</h2><p>இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபரை விரைந்து கைது செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p> <p>ஆயுதங்களுடன் முகத்தை மூடியபடி மர்ம நபர் நடமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த திருட்டு முயற்சி தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.</p> ]]></content:encoded></item><item><title>மேகமலை வனப்பகுதி மக்களை ஆக்கிரமிப்பாளர்களாக கருதக்கூடாது: வன உரிமை சட்டத்தின்கீழ் பாதுகாப்பு வழங்க வேண்டும் - திருமாவளவன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/people-in-the-megamalai-forest-area-should-not-be-viewed-as-encroachers-protection-must-be-provided-under-the-forest-rights-act-thirumavalavan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/people-in-the-megamalai-forest-area-should-not-be-viewed-as-encroachers-protection-must-be-provided-under-the-forest-rights-act-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">9f60f783-f90b-4a14-a7f9-7212446a886c</guid><pubDate>Tue, 18 Aug 2026 11:56:46 +0000</pubDate><atom:updated>2026-08-18T11:56:46.703Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,திருமாவளவன்,Thirumavalavan,பாதுகாப்பு,வனப்பகுதி,மேகமலை,Megamalai,fforest</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/izxqr96q/205.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருமாவளவன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/izxqr96q/205.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மேகமலை - வருசநாடு வனப்பகுதியில் பல தலைமுறைகளாக வசித்து வரும் மக்களை ஆக்கிரமிப்பாளர்களாக கருதி அப்புறப்படுத்தக் கூடாது என்றும், அவர்களுக்கு வன உரிமைச் சட்டத்தின்கீழ் உரிய சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>மேகமலை - வருசநாடு வனப்பகுதி கடந்த 2012ஆம் ஆண்டு மேகமலை வன உயிரின சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. தேனி மாவட்டத்தின் கடமலைகுண்டு - மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வண்டியூர் உள்பட 50க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள், கடந்த 2021ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலைப் புலிகள் காப்பகத்தின் பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. </p><p>இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து கடந்த நூறாண்டுகளாக இப்பகுதிகளில் வசித்து வரும் சுமார் 6000 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் அங்கே தொடர்ந்து வாழ்வதற்கும், விவசாயத்தை மேற்கொள்வதற்கும் வனத்துறையினரால் நெருக்கடிகள் உருவாகியுள்ளன. </p><h2>பொதுநல வழக்கு</h2><p>இந்த நிலையில் தான் தேனி மாவட்டத்தைச் சார்ந்த கண்டமனூர், வருசநாடு, மயிலாடும்பாறை, மேகமலை, சின்னமனூா், ஆகிய வனசரகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் நடைபெற்று வருவதாக சுப்ரீம் கோர்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.</p><p>அதனடிப்படையில், கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி, மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழு (Central Empowered Committee - CEC) ஒன்று அமைக்கப்பட்டது. அது 2025 மார்ச் முதல் 2026 ஜனவரி வரை தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளது.</p><h2></h2><h2>சுப்ரீம் கோர்ட்</h2><p>இந்த குழு அளித்த இரண்டு அறிக்கைகளின் அடிப்படையில், கடந்த 29.05.26 அன்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வு இறுதி தீர்ப்பை அளித்தது.</p><p>கண்டமனூர், மேகமலை, வருசநாடு, சின்னமனூர் ஆகிய பகுதிகளில் ஶ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பக பகுதியில் உள்ள 5072.653 ஹெக்டேர் நிலப்பரப்பை 4601 பேர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு பதில் அறிக்கை தாக்கல் செய்துள்ள தகவல் நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>காலங்காலமாக இப்பகுதிகளில் வசித்து வரும்  மண்ணின் மைந்தர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று சொல்லி அவர்களை உடனே அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டுமென்றும்; மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மத்திய துணை ராணுவப்படையை மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழு பயன்படுத்தலாம் என்றும் தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது.</p><p>மேலும், சுப்ரீம் கோர்ட் ஆணை நடைமுறைப்படுத்தப்பட்டது தொடர்பாக வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி முத்திரையிடப்பட்ட உறையில் அறிக்கையை மத்திய குழு சமர்ப்பிக்கும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><h2>சீராய்வு மனு</h2><p>நேற்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், 'மக்களை ஆக்கிரமிப்பாளர்கள்' என்று அப்புறப்படுத்த சொன்ன சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு 'சீராய்வு மனு' தாக்கல் செய்யப்படும் என்ற அறிவிப்பு அம்மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.</p> <p>மூன்று தலைமுறைகளாக அங்கு வசிக்கும் மக்களை ஆக்கிரமிப்பாளர்களாக கருதாமல், 2006 வன உரிமைகள் சட்டத்தின்கீழ் அவர்களுக்கு பட்டா, வன உரிமை சட்ட சான்றிதழ் உள்ளிட்ட உரிய சட்ட பாதுகாப்பு வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.</p><p>தமிழ்நாடு முழுவதும் 'வன உரிமைகள் சட்டம்-(2006)' -ஐ நடைமுறைப்படுத்துவதற்குத் தடையாகவுள்ள சிக்கல்களைக் களைந்து அதனை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும். வனங்களில் வாழும் பழங்குடியினர் மற்றும் பல தலைமுறைகளாக அங்கு வசிக்கும் பழங்குடியினரல்லாதவர்களுக்கும் இச்சட்டத்தின்படி உரிய பாதுகாப்பு அளித்திட வேண்டும் என <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">விடுதலை சிறுத்தைகள் </a>கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சொத்து தகராறில் பயங்கரம்: தந்தை மீது மினி லாரியை ஏற்றி கொன்ற மகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/son-kills-father-mini-lorry-property-row-turns-deadly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/son-kills-father-mini-lorry-property-row-turns-deadly#comments</comments><guid isPermaLink="false">95c7db9c-874f-46f2-897c-6253845c690b</guid><pubDate>Tue, 18 Aug 2026 11:27:45 +0000</pubDate><atom:updated>2026-08-18T11:27:45.000Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>son,மகன்,Father,தந்தை கொலை,சொத்து தகராறு,காஞ்சீபுரம்,property dispute,died</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/5wemrt46/munusamy.jpg" width="752"><media:title type="html"><![CDATA[  முனுசாமி]]></media:title><media:description type="html"><![CDATA[ சொத்து தகராறில் பயங்கரம்: தந்தை மீது மினி லாரியை ஏற்றி கொன்ற மகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/5wemrt46/munusamy.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்ரீபெரும்புதூர், </p> <p>சொத்து தகராறில் பயங்கரம்: தந்தை மீது மினி லாரியை ஏற்றி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">கொன்ற</a> மகன்.</p><p>காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் ஊராட்சிக்குட்பட்ட ராம்ஜி தெருவை சேர்ந்தவர் சத்யா (வயது 50). இவரது மனைவி நாகம்மாள். இவர்களுக்கு சந்துரு, முனுசாமி (25), சதீஷ் என 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களில் முனுசாமி அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். </p><p>பின்னர் பெற்றோர் எதிர்ப்பை மீறி, அந்த பெண்ணை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். தற்போது அவர் தனது காதலித்த மனைவியுடன் அதே பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.</p><h2>தந்தையுடன் தகராறு</h2><p>முனுசாமி தனியாக வசித்து வந்தாலும், தனக்கு சொந்தமாக வீடு கட்டுவதற்கு இடம் அல்லது பணம் தருமாறு தனது தந்தை சத்யாவிடம் அடிக்கடி கேட்டு வந்துள்ளார். ஆனால், சத்யா பணம் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் தந்தைக்கும், மகனுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கடுமையான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81">குடும்ப தகராறு</a> ஏற்பட்டு வந்தது. </p><h2>வாக்குவாதம்</h2><p>நேற்று முன்தினமும் இது தொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் முற்றியது. இதில் முனுசாமிக்கும் அவரது தம்பி சதீஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் அது கைகலப்பாக மாறியது.</p><h2>மினி லாரி </h2><p>இந்த நிலையில், சம்பவத்தன்று கஞ்சா மற்றும் போதைப்பொருள் தலைக்கேறிய நிலையில் முனுசாமி தெருவிற்கு வந்துள்ளார். அங்கு நின்றிருந்த தம்பி சதீஷுயை பார்த்ததும் அவருக்குள் மீண்டும் ஆத்திரம் அடைந்த முனு சாமி, சதீஷை நோக்கி மினி சரக்கு லாரியை வேகமாக ஓட்டி வந்தார். இதை பார்த்த சத்யா, தனது மகன் சதீஷை காப்பாற்றுவதற்காக அவரை தள்ளிவிட்டார்.  </p> <h2>கொலை</h2><p>கண்ணிமைக்கும் நேரத்தில், தான் ஓட்டி வந்த மினி சரக்கு வாகனத்தை தனது தந்தை சத்யா மீது முனுசாமி ஏற்றி தள்ளினார். இதில் வண்டியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கிய சத்யா, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.</p><h2>வழக்குப்பதிவு</h2><p>இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சத்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொடூர கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து,  விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p><p>பெற்ற தந்தையையே மகன் வாகனத்தை ஏற்றி படுகொலை செய்த சம்பவம் அந்த பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>தவெக ஆட்சி இடையூறின்றி தொடர வேண்டும் - திருமாவளவன் பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvkrule-should-continue-without-interruption-thirumavalavan-interview</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvkrule-should-continue-without-interruption-thirumavalavan-interview#comments</comments><guid isPermaLink="false">5a9a735e-0650-4188-bd21-7cd6d2a877d6</guid><pubDate>Tue, 18 Aug 2026 11:20:16 +0000</pubDate><atom:updated>2026-08-18T11:20:16.818Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,திருமாவளவன்,tnpolitics,tvk vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/qxeodwyg/thirumaa33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
தவெக ஆட்சி இடையூறின்றி தொடர வேண்டும்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/qxeodwyg/thirumaa33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தவெக ஆட்சி இடையூறின்றி தொடர வேண்டும். தவெக அரசுக்கு, விசிக எப்போதும் உறுதுணையாக இருக்கும் என திருமாவளவன் கூறினார்.</p><p>சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜயை சந்தித்தபின் விசிக தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%20">திருமாவளவன் </a>செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>தவெக ஆட்சி வெற்றிகரமாக 100 நாட்களை கடந்திருக்கிறது. முதல்-அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தோம். 5 ஆண்டுகள் இடையூறு இல்லாமல் தவெக ஆட்சி தொடர வேண்டும். கூட்டணி அரசில் அங்கம் வகிப்பதன் மூலம் நாங்களும் ஆளுங்கட்சியில் இருக்கிறோம்.  தவெக அரசுக்கு, விசிக எப்போதும் உறுதுணையாக இருக்கும். </p><p>சாதி ஒழிப்பு, மதச்சார்பின்மை உள்ளிட்டவை அடங்கிய தமிழ்த் தேசியம் மாநாடு முக்கியமானது. மாநில சுயாட்சி ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 125 தீர்மானங்களை முதல்-அமைச்சரிடம் வழங்கினோம் மேகமலை, அமுதன் கொலை விவகாரத்தை முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு கட்சியோ, ஆட்சியோ மட்டும் பொறுப்பல்ல.அனைவருக்கும் பொறுப்பு உள்ளது.</p><p>மேகமலை தீர்ப்புக்கு எதிராக தாமதமின்றி சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தினேன். தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானத்திற்கு நன்றி.  தற்போதைய தவெக ஆட்சியுடன் திமுக ஆட்சியை ஒப்பிடுவது தேவை இல்லாதது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஸ்ரீபெரும்புதூர் அருகே தாய் கண்முன்னே லாரி சக்கரத்தில் சிக்கி 12-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/near-sriperumbudur-a-class-12-student-died-after-getting-caught-under-a-wheel-right-before-her-mothers-eyes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/near-sriperumbudur-a-class-12-student-died-after-getting-caught-under-a-wheel-right-before-her-mothers-eyes#comments</comments><guid isPermaLink="false">5e1382c1-07e2-4687-a3fb-4896eabf68c8</guid><pubDate>Tue, 18 Aug 2026 11:13:51 +0000</pubDate><atom:updated>2026-08-18T11:13:51.944Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணவி,உயிரிழப்பு,hospital,Sriperumbudur,ஸ்ரீபெரும்புதூர்,போலீசார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/use164un/204.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விபத்து]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/use164un/204.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்ரீபெரும்புதூர்,</p><p>ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பாடிச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவி சாந்தி. இவர்களது 2-வது மகள் அர்ச்சனா (வயது 16). இவர் ஸ்ரீபெரும்புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். </p><h2>விபத்து</h2><p>நேற்று இரவு அர்ச்சனா தனது தாய் சாந்தியுடன் பைக்கில் ஸ்ரீபெரும்புதூர் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். சாந்தி வண்டியை ஓட்டினார். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கலவை லாரி திடீரென மொபட் மீது மோதியது. இதில் தாய்-மகள் இருவரும் பைக் உடன் சாலையில் விழுந்தனர். அப்போது லாரியின் சக்கரத்தில் சிக்கிய அர்ச்சனா பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு ஸ்ரீபெரும்புதூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அர்ச்சனா உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.</p><h2>வழக்குப்பதிவு</h2><p>தகவல் அறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a> விரைந்து வந்து, அர்ச்சனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விபத்து நடந்ததும் தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். தாய் கண்முன்பே மகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>