<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 04 Aug 2026 06:25:43 +0000</lastBuildDate><item><title>
திரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும்: குஷ்பு கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/udhayanidhi-must-apologize-to-trisha-khushbu-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/udhayanidhi-must-apologize-to-trisha-khushbu-condemns#comments</comments><guid isPermaLink="false">69cb2e37-dd34-456c-82bd-e319e4a0d39e</guid><pubDate>Tue, 04 Aug 2026 06:19:43 +0000</pubDate><atom:updated>2026-08-04T06:19:43.304Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Trisha,கண்டனம்,உதயநிதி,குஷ்பு,Kushboo,Controversial speech,திரிஷா,Udhayanidhi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/32ft1uyw/z8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/32ft1uyw/z8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>தஞ்சையில் தி.மு.க. சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது, முதல்-அமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசினார். இது சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையானது.</p><h2>6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு</h2><p>இந்த பேச்சுக்கு தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கடும் கண்டனம் தெரிவித்தது. தொடர்ந்து, தவெக மகளிர் அணி தஞ்சை கிழக்கு காவல் நிலையத்திலும், தேசிய மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்தது. அந்தப் புகாரின் அடிப்படையில், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.</p> <h2>கைது செய்த போலீஸ்</h2><p>இதையடுத்து தஞ்சையில் இருந்து இன்று சென்னை போலீஸ் குழுவினர், சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்து, விசாரணைக்காக தஞ்சைக்கு அழைத்துச் சென்றனர்.</p><h2>குஷ்பு கண்டனம்</h2><p>இதற்கிடையில், நடிகையும் பா.ஜ.க. மாநில துணைத் தலைவருமான குஷ்பு, உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். பொது மேடையில் நடிகை திரிஷாவை அவமதித்ததாக குற்றம்சாட்டிய அவர், "தவறை ஒப்புக்கொண்டு திரிஷாவிடம் மன்னிப்பு கேட்கும் தைரியமும் கண்ணியமும் உதயநிதியிடம் உள்ளதா என்பதை பார்ப்போம்" என்று தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நெல்லையில் 16 வயது சிறுமிக்கு காதல் தொல்லை: வாலிபர் போக்சோவில் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/16-year-old-girl-in-nellai-sexually-harassed-youth-arrested-under-pocso</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/16-year-old-girl-in-nellai-sexually-harassed-youth-arrested-under-pocso#comments</comments><guid isPermaLink="false">e2e0b51f-e254-4f22-8b9b-2b1b8e991fe9</guid><pubDate>Tue, 04 Aug 2026 06:10:21 +0000</pubDate><atom:updated>2026-08-04T06:10:21.902Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Tirunelveli,திருநெல்வேலி,arrest,Youth,வாலிபர்,சிறுமி,girl,போக்சோ,POCSO,love affair,காதல் தொல்லை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/ephf4qa3/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறுமிக்கு பாலியல் தொல்லை, வாலிபர் கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/ephf4qa3/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டத்தில் 16 வயது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF">சிறுமி</a>க்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88">காதல் தொல்லை</a> கொடுத்த வாலிபரை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B">போக்சோ</a> சட்டத்தின் கீழ் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்யப்பட்டார்.</p><h2>16 வயது சிறுமிக்கு காதல் தொல்லை</h2><p>நெல்லை அருகே உள்ள சீதபற்பநல்லூரை சேர்ந்தவர் அசோக் (வயது 27). பெயிண்டரான இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வரும் 16 வயது சிறுமியிடம் பழகி வந்தார். பின்னர் அவர் அந்த சிறுமியை காதலிப்பதாக கூறினார். ஆனால் அவரின் காதலை சிறுமி ஏற்றுக்கொள்ளவில்லை.</p><h2>வாலிபர் போக்சோவில் கைது</h2><p>இதனால் ஆத்திரம் அடைந்த அசோக், அந்த சிறுமிக்கு தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரது செல்போனை பறித்து சாலையில் வீசி உடைத்து ரகளை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அசோக்கை கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு வைகோ கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vaiko-condemns-udhayanidhi-stalins-remarks-at-the-thanjavur-protest</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vaiko-condemns-udhayanidhi-stalins-remarks-at-the-thanjavur-protest#comments</comments><guid isPermaLink="false">61ffbc69-a755-4679-9c7f-cd31c2ad68db</guid><pubDate>Tue, 04 Aug 2026 06:07:36 +0000</pubDate><atom:updated>2026-08-04T06:07:36.050Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Vaiko,வைகோ,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/kss692hv/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/kss692hv/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”தஞ்சையில் திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்  வரம்பு கடந்து முதலமைச்சர் ஜோசப் விஜய்யை விமர்சனம் செய்து பேசி இருப்பது கடுமையான கண்டனத்துக்கு உரியதாகும்.</p><p>"யாகாவராயினும் நா காக்க" எனும் குறள் மொழியை ,எதிர்க்கட்சித் தலைவர்  பொறுப்பில் உள்ள உதயநிதி கடை பிடிக்க வேண்டும். அதை விடுத்து முதலமைச்சர் மீது மலிவான இழி மொழிகளை வீசுவது அவர் வகித்து வரும் பொறுப்பிற்கு உகந்தது அல்ல.</p><p>அரசுக்கு இடையூறு செய்வதற்கும், அரசியல் நடத்துவதற்கும் காவிரி பிரச்சினையை பயன்படுத்தி திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு, நாலாந்தர பேச்சாளர் பட்டியலில் அவரை சேர்த்து இருக்கிறது என்பதை அவர் உணர வேண்டும்.</p><p>காவிரிப் பிரச்சினையில் தமிழ்நாட்டின் குரல் அரசியல் எல்லைகளைத் தாண்டி ஒன்றுபட்டு ஒலிக்க வேண்டும். அப்பொழுதுதான் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட முடியும்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>உதயநிதி ஸ்டாலின் கைது எதிரொலி... தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aftermath-of-udhayanidhi-stalins-arrest-dmk-cadres-stage-protests-across-various-parts-of-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aftermath-of-udhayanidhi-stalins-arrest-dmk-cadres-stage-protests-across-various-parts-of-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">00697dca-146b-4774-8f1d-410f674fce08</guid><pubDate>Tue, 04 Aug 2026 06:01:02 +0000</pubDate><atom:updated>2026-08-04T06:01:02.010Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,கைது,arrested</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/god7owbi/11.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/god7owbi/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தின்போது ஆபாசமாக பேசியதாக எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரை போலீசார் தற்போது தஞ்சைக்கு அழைத்துச்செல்கின்றனர். </p><p>உதயநிதி ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்திலும், கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>முன்னதாக உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் உதயநிதி ஸ்டாலின் வீட்டின் முன் குவிந்தனர். அவர்களை போலீசார் கைதுசெய்தனர். எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. </p> ]]></content:encoded></item><item><title>502 செவிலியர் பணியிடங்கள் நீக்கம்; தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-condemns-tamil-nadu-government-for-abolishing-502-nursing-posts</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-condemns-tamil-nadu-government-for-abolishing-502-nursing-posts#comments</comments><guid isPermaLink="false">923f3db8-7a2e-446a-9ddb-d3224ca4754d</guid><pubDate>Tue, 04 Aug 2026 05:55:19 +0000</pubDate><atom:updated>2026-08-04T05:55:19.476Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி,Anbumani Ramadas,பணியிடங்கள்,posts,நீக்கம்,செவிலியர்,Nursing</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/xbb10d77/anbumani.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/xbb10d77/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><p>பாமக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/anbumani-ramadoss">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகள், பொது சுகாதாரத்துறை ஆகியவற்றில் உள்ள 502 செவிலியர் பணியிடங்களை ஒழித்து விட்டு, அந்த இடங்களில் பணியாற்றி வந்த செவிலியர்களை வேறு இடங்களில் அமர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பப் போவதாக வாக்குறுதி அளித்திருந்த தவெக, ஆட்சிக்கு வந்த பின் காலியிடங்களை ஒழிப்பது அநீதியாகும்.</p><h2>செவிலியர்கள் தட்டுப்பாடு</h2><p>தமிழ்நாட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கி, மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகள் வரை அனைத்து இடங்களிலும் செவிலியர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. அவற்றிலுள்ள காலியிடங்களை நிரப்புவதன் மூலம் தான் இந்த சிக்கலுக்கு தீர்வு காண முடியும். ஆனால், தமிழக அரசோ, ஓரிடத்தில் பணியாற்றும் செவிலியர்களை இன்னொரு இடத்திற்கு மாற்றி நிலைமையை சமாளிக்கும் வித்தையை செயல்படுத்தி வருகிறது. இதனால் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த நோயர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர்.</p><h2>204  அரசாணை</h2><p>சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, சேலம் மருத்துவக் கல்லூரி, திருச்சி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் போதிய அளவில் செவிலியர்கள் இல்லை. புதிய செவிலியர்களை தேர்வு செய்து அந்த இடங்களில் நியமிப்பது தான் இதற்கு தீர்வு ஆகும். ஆனால், அதை செய்யாத தமிழக அரசு நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பூர், நீலகிரி, அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர் ஆகிய 7 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள தலா 30 செவிலியர் பணியிடங்களை ஒழித்து விட்டு, அங்கு பணியாற்றி வந்த 210 செவிலியர்களை ஸ்டான்லி, செங்கல்பட்டு, சேலம், திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நியமித்துள்ளது. இதற்காக கடந்த ஜூலை 21-ஆம் நாள் 204 என்ற அரசாணையை மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை பிறப்பித்திருக்கிறது.</p><p>இன்னொருபுறம், மனநல மருத்துவம் மற்றும் மறுவாழ்வு வழங்குவதற்காக அரசு மருத்துவமனைகளில் இயங்கும் 17 அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையங்களில் பணியமர்த்துவதற்காக 292 செவிலியர்கள் தேவைப்படுகின்றனர். அவர்களை புதிதாக நியமிக்காமல் அரசு மருத்துவமனைகளில் உள்ள 100 செவிலியர் பணியிடங்களையும், பொது சுகாதாரத்துறையில் உள்ள 192 செவிலியர் பணியிடங்களையும் ஒழித்துள்ள அரசு, அந்த பணியிடங்களில் பணியாற்றிய செவிலியர்களை அவசர சிகிச்சை மையங்களில் நியமித்துள்ளது.</p><h2>பணியிடங்களை குறைப்பது நியாயமல்ல</h2><p>தேசிய மருத்துவ ஆணையம் உள்ளிட்ட ஒழுங்குமுறை அமைப்புகள் வரையறுத்துள்ள விதிகளின்படி  தேவைப்படும் செவிலியர்கள் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பங்கு செவிலியர்கள் மட்டும் தான் அரசு  மருத்துவமனைகளில் பணியாற்றுகின்றனர். தமிழ்நாட்டில் 1832 ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்கள், 504 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் என மொத்தம் 2334 நிலையங்கள் செயல்பட்டு வரும் நிலையில்,  அவற்றில் 1400-க்கும் குறைவான செவிலியர்கள் மட்டும் தான் நிரந்தர அடிப்படையில் பணியாற்றுகின்றனர். இந்த எண்ணிக்கை போதுமானதல்ல எனும் போது இருக்கும் பணியிடங்களையும் குறைப்பது நியாயமல்ல.</p><h2>தொகுப்பூதிய செவிலியர்கள்</h2><p>தமிழ்நாடு முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மாவட்ட மருத்துவமனைகள் வரை 6500-க்கும் கூடுதலான செவிலியர்கள் மிகக் குறைந்த ஊதியத்தில்  தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றுகின்றனர். இவர்கள் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் மூலம் தகுதி மற்றும் இட ஒதுக்கீட்டை பின்பற்றி தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆவர். மருத்துவமனைகளில் நிரந்தர செவிலியர் பணியிடங்கள் காலியாகும் போது அந்த இடங்கள் தொகுப்பூதிய செவிலியர்களைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும் என்பது தான் நடைமுறையாகும். ஆனால், இருக்கும் பணியிடங்களையும் தமிழக அரசு ஒழித்து வருவதால், இப்போது  தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் செவிலியர்கள் பணி நிலைப்பு பெற முடியாத நிலை உருவாகியுள்ளது.</p><p>அரசு மருத்துவக் கல்லூரிகளில் 6 செவிலியர் கல்லூரிகள் புதிதாகத்  தொடங்கப்படவுள்ளன. அவற்றில் பணி செய்யவும் ஒப்ப்ந்த அடிப்படையிலான செவிலியர்கள் தான் நியமிக்கப்படவுள்ளனர். இதனால் அரசு மருத்துவமனைகளில் 9 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிலைப்பு என்பது பகல் கனவாக மாறிவிட்டது. இது செவிலியர்களிடம் மனச்சோர்வை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>வாக்குறுதி</h2><p>2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், அரசுத் துறைகளில் ஐந்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்று வரும் தற்காலிக பணியாளர்களுக்கு பணி நிலைப்பு  வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு பதிலாக இருக்கும் பணியிடங்களை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதே நிலை நீடித்தால், தமிழக மருத்துவமனைகளில் சில ஆண்டுகளில் செவிலியர்கள் இருக்க மாட்டார்கள். அத்தகைய நிலை ஏற்படுவதைத்  தடுக்க வேண்டும் என்றால், செவிலியர் பணியிடங்களை ஒழிக்க வகை செய்யும் அரசாணை எண் 204-ஐ ரத்து செய்ய வேண்டும். காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கைதுக்கு பயப்படுபவன் நான் அல்ல - உதயநிதி ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-am-not-one-to-fear-arrest-said-udhayanidhi-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-am-not-one-to-fear-arrest-said-udhayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">b697d095-94d4-47b8-9cfe-c12e6ff46d94</guid><pubDate>Tue, 04 Aug 2026 05:52:48 +0000</pubDate><atom:updated>2026-08-04T05:52:48.468Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,கைது,arrested</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/dvteajjq/10.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/dvteajjq/10.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Breaking-News</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தின்போது ஆபாசமாக பேசியதாக எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரை போலீசார் தஞ்சைக்கு அழைத்துச்செல்கின்றனர். </p><p>இதற்கிடையே செய்தியாளர்கள் சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது; </p><p>தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என ஆர்ப்பாட்டத்தில் பேசினேன். டம்மி முதல்வருக்கு ரீல்ஸ் வெறி முற்றிப் போய் உள்ளது. முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ரீல்ஸ் வெறியில் உள்ளனர். </p><p>நான் பேசாத ஒன்றை பேசியதாக கட், காப்பி, பேஸ்ட் பன்னி பொய் செய்தி பரப்புகின்றனர். என் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன். இதற்கெல்லாம் பயப்படக்கூடிய ஆள் நான் கிடையாது. </p><p>திமுகவின் கடைசி தொண்டன் கூட கைதுக்கு பயப்படுபவர்கள் கிடையாது. காவிரி பிரச்சினையை திசை திருப்ப என் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைது நடவடிக்கையை சட்டப்படி எதிர்கொள்வேன்.”</p><p>இவ்வாறு அவர் பேசினார். </p> ]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய்க்கு எதிரான அவதூறு பேச்சு; உதயநிதி ஸ்டாலின் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் அவசர மனு தாக்கல்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/defamatory-speech-against-chief-minister-vijay-urgent-plea-in-madras-high-court-on-behalf-of-udayanidhi-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/defamatory-speech-against-chief-minister-vijay-urgent-plea-in-madras-high-court-on-behalf-of-udayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">0b39d35f-1aac-42e2-9d55-5a90da38267c</guid><pubDate>Tue, 04 Aug 2026 05:51:26 +0000</pubDate><atom:updated>2026-08-04T05:51:26.381Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை ஐகோர்ட்டு,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,Chennai High Court</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/pebyfyt2/tnolc.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/pebyfyt2/tnolc.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>முதல்-அமைச்சர் விஜய்க்கு எதிரான அவதூறு பேச்சு தொடர்பான வழக்கில், உதயநிதி ஸ்டாலின் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.</p><p>தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தி.மு.க. சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.  காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் த.வெ.க. அரசின் மெத்தனப்போக்கை கண்டித்தும், விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டியும், மேகதாது அணை கட்டுவதை தடுக்க தவறிய த.வெ.க. அரசை கண்டித்தும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் தி.மு.க. இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார்.</p>  <h2>அவதூறு பேச்சு</h2><p>அப்போது அவர், காவிரி டெல்டாவில் உள்ள ஆறுகள் அனைத்தும் இன்றைக்கு வறண்டு, கிட்டத்தட்ட ஒரு பாலைவனம்போல் காட்சி அளித்துக்கொண்டு இருக்கிறது. இதே நேரத்தில் நம்முடைய தலைவர் முதல்-அமைச்சராக இருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா? நம் தலைவர் இந்த நிலைமை ஏற்பட விட்டிருப்பாரா? என்றார்.  தொடர்ந்து முதல்-அமைச்சர் விஜய்க்கு எதிராக அவதூறாக அவர் பேசியது சர்ச்சையானது.</p><p>இந்நிலையில், உதயநிதிக்கு எதிராக தஞ்சையில் த.வெ.க. மகளிரணி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.  முதல்-அமைச்சர் விஜய்க்கு எதிராக அவதூறாக பேசியது தொடர்பாக, உதயநிதிக்கு எதிராக ஐ.டி., பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  அவரை கைது செய்ய தஞ்சை போலீசார் இன்று சென்னை வந்தனர்.</p>  <h2>போலீசார் குவிப்பு</h2><p>இதேபோன்று, சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி குடும்பத்தினரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.  எனினும், வழக்கறிஞர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்க காலஅவகாசம் வேண்டும் என அவர்கள் தரப்பில் போலீசிடம் கூறப்பட்டு உள்ளது.</p><p>இதனை தொடர்ந்து, உதயநிதியின் வீட்டுக்கு முன் தி.மு.க. தொண்டர்கள் குவிந்துள்ளனர்.  அவர்கள் கோஷங்கள் எழுப்பியபடி உள்ளனர்.  அவர்களை கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.  உதயநிதி வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.  போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளனர்.</p>  <h2>நீதிபதி உத்தரவு</h2><p>இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய்க்கு எதிரான அவதூறு பேச்சு தொடர்பான வழக்கில், கைது நடவடிக்கையை தவிர்க்க, உதயநிதி ஸ்டாலின் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.  இந்த மனு இன்று 12 மணியளவில் கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது.  அதனால் உதயநிதி மீது மதியம் 12 மணி வரை கைது நடவடிக்கையை தவிர்க்கும்படியும், எந்த நடவடிக்கையும் வேண்டாம் என்றும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.  இதனை காவல் துறையினரிடம் தெரிவிக்கும்படி நீதிபதி தெரிவித்து உள்ளார்.</p>  <h2>உதயநிதி கைது</h2><p>இந்த சூழலில், முதல்-அமைச்சர் விஜய்க்கு எதிரான அவதூறு பேச்சு வழக்கு தொடர்பாக உதயநிதியை போலீசார் கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.  தி.மு.க. தொண்டர்கள் கோஷங்களை எழுப்பியபடி உள்ளனர்.  இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>ரூ.40 லட்சம் லஞ்சப்புகார்: சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs40-lakh-bribe-police-inspector-arrested-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs40-lakh-bribe-police-inspector-arrested-in-chennai#comments</comments><guid isPermaLink="false">715a420c-cd62-47b3-95da-8a3077272b9c</guid><pubDate>Tue, 04 Aug 2026 05:30:22 +0000</pubDate><atom:updated>2026-08-04T05:30:22.001Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,arrested,Bribery,போலீஸ் இன்ஸ்பெக்டர்,Police inspector,அதிரடி கைது,லஞ்சப்புகார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/bf2zd4yx/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ போலீஸ் இ,ன்ஸ்பெக்டர் கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/bf2zd4yx/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a>யில் ரூ.40 லட்சம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">லஞ்சப்புகாரில்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D">போலீஸ் இன்ஸ்பெக்டர் </a><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்யப்பட்டார்.</p><h2>ரூ.40 லட்சம் லஞ்சம்</h2><p>சென்னை பரங்கிமலை போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் புகாரி. இவர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் என்பவரை என்கவுண்ட்டர் செய்தவர். தற்போது இவர் மீது சவுகார்பேட்டையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் தன்னை மிரட்டி ரூ.40 லட்சம் வரை வாங்கி உள்ளார் என்று புகார் கொடுத்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதனையடுத்து நேற்று அவர் பரங்கிமலையில் இருந்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து நேற்று அவரிடம் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். </p><h2>போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது</h2><p>விசாரணையில், அவர் பணம் வாங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் புகாரின் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கமிஷனர் உத்தரவிட்டார். இதன்படி பல மணி நேர விசாரணைக்கு பின் அவர் கைது செய்யப்பட்டார். கடந்த 2008-ம் ஆண்டு இன்ஸ்பெக்டர் புகாரி, தமிழக காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய்க்கு எதிரான அவதூறு பேச்சு; உதயநிதி ஸ்டாலின் கைது
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-filed-against-udayanidhi-in-6-sections</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-filed-against-udayanidhi-in-6-sections#comments</comments><guid isPermaLink="false">9e71b00d-c8c6-4c96-bbd0-fcf76d1ee7bf</guid><pubDate>Tue, 04 Aug 2026 05:21:28 +0000</pubDate><atom:updated>2026-08-04T05:21:28.261Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,உதயநிதி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/0gex0gcc/tnola.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/0gex0gcc/tnola.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தஞ்சை போலீசார் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.</p><p>தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தி.மு.க. சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.  காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் த.வெ.க. அரசின் மெத்தனப்போக்கை கண்டித்தும், விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டியும், மேகதாது அணை கட்டுவதை தடுக்க தவறிய த.வெ.க. அரசை கண்டித்தும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் தி.மு.க. இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார்.</p><p>அப்போது அவர், காவிரி டெல்டாவில் உள்ள ஆறுகள் அனைத்தும் இன்றைக்கு வறண்டு, கிட்டத்தட்ட ஒரு பாலைவனம்போல் காட்சி அளித்துக்கொண்டு இருக்கிறது. இதே நேரத்தில் நம்முடைய தலைவர் முதல்-அமைச்சராக இருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா? நம் தலைவர் இந்த நிலைமை ஏற்பட விட்டிருப்பாரா? என்றார். தொடர்ந்து முதல்-அமைச்சர் விஜய்க்கு எதிராக அவர் இரட்டை அர்த்தத்தில் ஒரு கருத்தை கூறினார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு தவெக நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.</p>  <h2>6 பிரிவுகளில் வழக்கு</h2><p>இதுதொடர்பாக, உதயநிதிக்கு எதிராக தஞ்சை காவல் நிலையத்தில் த.வெ.க. மகளிரணி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து, உதயநிதிக்கு எதிராக 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  </p>  <h2>போலீசார் குவிப்பு</h2><p>இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினை கைது செய்வதற்காக தஞ்சையில் இருந்து போலீஸ் குழு இன்று காலையில் சென்னை வந்தது. சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் வீட்டுக்கு வந்த அவர்கள், தஞ்சையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நடத்தி அவரை கைது செய்ய வந்திருப்பதாக கூறினர். </p><p>இதுபற்றி உதயநிதியன் குடும்பத்தினரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.  எனினும், வழக்கறிஞர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்க காலஅவகாசம் வேண்டும் என அவர்கள் தரப்பில் போலீசிடம் கூறப்பட்டது.</p><h2>உதயநிதி ஸ்டாலின் கைது</h2><p>இதுபற்றி தகவல் அறிந்த தி.மு.க. நிர்வாகிகள் அங்கு குவிந்தனர். நேரம் செல்லச்செல்ல திமுக தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்தனர். கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து முழக்கம்  எழுப்பினர். இதனால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். தொண்டர்களை கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.  கூட்டம் அதிகரித்த நிலையில், தொண்டர்களை வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். </p><p>பின்னர் உதயநிதியை போலீசார் கைது செய்து விசாரணைக்காக தஞ்சைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த சம்பவத்தால் உதயநிதியின் வீட்டின் முன்பு பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவுகிறது. கைது நடவடிக்கைக்கு எதிராக தொண்டர்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பினர். </p> <h2>த.வெ.க. புகார்</h2><p>இதற்கிடையே தஞ்சையில் அவதூறாக பேசினார் என உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தேசிய மகளிர் ஆணையத்தில் த.வெ.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.</p><p>இதுபற்றி கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பழ. செல்வ குமார் தேசிய மகளிர் ஆணைய தலைவருக்கு புகார் மனு அனுப்பினார்.  அதில், உதயநிதியின் பேச்சு, காணொளியை அடிப்படையாக கொண்டு ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.</p><p>உதயநிதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை மற்றும் வழக்கு பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p> <h2>ஆர்ப்பாட்டம்</h2><p>இதேபோன்று, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாட்டில் ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் த.வெ.க. மகளிர் அணி நிர்வாகிகள் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. </p>]]></content:encoded></item><item><title>
பிலிகுண்டுலுவுக்கு வரும் காவிரி உபரிநீரின் அளவு வினாடிக்கு 8,000 கன அடியாக உயர்வு
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-surplus-water-flow-to-biligundlu-rises-to-8000-cusecs</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-surplus-water-flow-to-biligundlu-rises-to-8000-cusecs#comments</comments><guid isPermaLink="false">811ec093-1ffd-4750-82aa-d5df07fdba84</guid><pubDate>Tue, 04 Aug 2026 04:53:35 +0000</pubDate><atom:updated>2026-08-04T04:53:35.309Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,காவிரி நீர்,TN,Cauvery</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/s7wfoonl/cwcort.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/s7wfoonl/cwcort.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>பிலிகுண்டுலு</p><p>தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் காவிரி நீரின் அளவு வினாடிக்கு 8,000 கன அடியாக உயர்வடைந்து உள்ளது.</p><p>தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் விளையும் பயிர்களுக்கான நீர் பாசன தேவையை பூர்த்தி செய்ய கூடிய முக்கிய அணைகளில் ஒன்றாக மேட்டூர் அணை உள்ளது.  இந்த அணையில், 79 அடிக்கும் கீழ் தண்ணீர் குறைந்து போன நிலையில், நடப்பு ஆண்டு ஜூன் 12-ந்தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை.</p><p>இதனால், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி முழுமையாக பாதிக்கப்பட்டது.  இதனையடுத்து, கர்நாடகம் தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி நீரை <a href="https://www.dailythanthi.com/">தமிழகம் </a>கேட்டது. ஆனால், வழக்கம்போல் கர்நாடகம் மறுத்து விட்டது.</p>  <h2>பரவலாக மழை</h2><p>இதற்கிடையில், காவிரி ஒழுங்காற்று குழு, தமிழ்நாட்டுக்கு 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3,500 கன அடி நீர் திறந்து விட கர்நாடகத்துக்கு உத்தரவிட்டது.  இதன்படி மொத்தம் 4% டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) நீர் திறந்து விட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.  காவிரி மேலாண்மை ஆணையமும் இந்த உத்தரவை உறுதிப்படுத்தியது.</p><p>இந்த சூழலில்,  தற்போது குடகு, சிக்கமகளூரு மற்றும் கேரள மாநிலம் வயநாட்டில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.  காவிரி படுகையில் உள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. கபினி அணையும் நிரம்பி வருகிறது.</p>  <h2>கபினி அணை</h2><p>நேற்றைய நிலவரப்படி, கர்நாடகாவின் கே.ஆர்.எஸ். அணையில் 23.078 டி.எம்.சி., கபினியில் 18.610 டி.எம்.சி., ஹாரங்கியில் 7.827 டி.எம்.சி. மற்றும் ஹேமாவதியில் 28.022 டி.எம்.சி. என மொத்தம் 77.537 டி.எம்.சி. மொத்த நீர் இருப்பு (பயன்பாட்டு நீர் இருப்பு 67.517 டி.எம்.சி.) உள்ளது. எனவே, விகிதாச்சார அடிப்படையில் பில்லிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கு நீரை தனது அணைகளில் இருந்து திறந்து விடுவதில் கர்நாடக அரசுக்கு எந்த சிரமமும் இருக்காது.</p><p>இதற்கிடையே, கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளின் நீர் பிடிப்புப்பகுதிகளில் அதிக மழை பெய்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.  மைசூர் அருகே உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து கடந்த 31-ந்தேதி வரை சீராக இருந்த நிலையில், நீர் பிடிப்பு பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் நீர்வரத்து விநாடிக்கு 15,500 கன அடியாக அதிரடியாக உயர்ந்தது. அணை மிக வேகமாக நிரம்பி வருகிறது.  அதன் பாதுகாப்பை முன்னிட்டு அணையில் இருந்து காவிரியில் நீர் திறந்து விடப்படுகிறது.</p>  <h2>விவசாயிகள் மகிழ்ச்சி</h2><p>இதனால், கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து காவிரியில் திறந்துவிடப்பட்ட உபரிநீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு இன்று வந்தடைந்தது.  அணைக்கு வினாடிக்கு 27 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.  இதனால், கபினி அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 30,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.</p><p>பின்னர் அது குறைக்கப்பட்டு, கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறந்துவிடப்படுகிறது.  தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டு, தமிழக எல்லையை வந்தடைந்த உபரிநீரின் அளவு ஆயிரம் கன அடியாக அதிகரித்து உள்ளது என முதல்கட்ட தகவல் தெரிவித்தது.</p> <p>இதனால், தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில், பிலிகுண்டுலுவுக்கு வரும் காவிரி நீரின் அளவு வினாடிக்கு 8,000 கன அடியாக உயர்வடைந்து உள்ளது.</p><p>ஆற்றின் கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என முன்பே அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் பெண்ணின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/petrol-bomb-thrown-at-womans-house-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/petrol-bomb-thrown-at-womans-house-in-chennai#comments</comments><guid isPermaLink="false">dd36868c-7db9-4bfa-9a96-88c106356d49</guid><pubDate>Tue, 04 Aug 2026 04:43:55 +0000</pubDate><atom:updated>2026-08-04T04:43:55.033Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,mysterious persons,மர்ம நபர்கள்,House,பெண்,Woman,வீடு,போலீசார் வலைவீச்சு,police net sweep,petrol bomb thrown,பெட்ரோல் குண்டு வீச்சு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/oit2ahb7/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81.12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல் குண்டு வீச்சு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/oit2ahb7/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81.12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a> பெரியமேடு நெடுஞ்சாலையில் வசிக்கும் ஒரு பெண்ணின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">பெட்ரோல் குண்டு</a>களை வீசியது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். </p><h2>பெட்ரோல் குண்டு வீச்சால் பரபரப்பு</h2><p>சென்னை நேரு பூங்கா அருகே பெரியமேடு நெடுஞ்சாலையில் வசிக்கும் ஒரு பெண்ணின் வீட்டு முன்பு, நேற்று இரவு 8 மணி அளவில் மர்ம நபர்கள் திடீரென்று 3 பெட்ரோல் குண்டுகளை சரமாரியாக வீசினார்கள். இதில் 3 குண்டுகளும் வெடித்து தீப்பற்றி எரிந்தன. சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்த பெண் அலறியடித்து ஓடிவந்தார். அப்போது 3 மர்ம நபர்கள் பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.</p><h2>மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு</h2><p>இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரியமேடு போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>முட்கள் வெளியே... ஊட்டச்சத்து உள்ளே; துரியன் பழத்தின் ரகசியம்!</title><link>https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/thorns-outside-nutrition-inside-the-secret-of-the-durian-fruit</link><comments>https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/thorns-outside-nutrition-inside-the-secret-of-the-durian-fruit#comments</comments><guid isPermaLink="false">7308996e-88a5-4e4b-a413-1cf8215077e4</guid><pubDate>Tue, 04 Aug 2026 04:17:49 +0000</pubDate><atom:updated>2026-08-04T04:17:49.464Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஊட்டச்சத்து,Nutrition,durian fruit,துரியன் பழம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/phv7chyj/duriyan-fruit.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/phv7chyj/duriyan-fruit.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சிறப்புக் கட்டுரைகள் (Sirappukatturaigal)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2>துரியன் பழம்</h2><p>துரியன் என்பது தாய்லாந்து, ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் கம்போடியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாகக் காணப்படும் ஒரு வகை பழமாகும். இப்பழம் அதன் வலுவான நறுமணத்திற்காகவும், அதே நேரத்தில் அதன் அதிக ஊட்டச்சத்து மதிப்புக்காகவும் நன்கு அறியப்படுகிறது. பழத்தின் வடிவம், அதன் வகையைப் பொறுத்து, நீள்வட்டம் முதல் வட்டம் வரை மாறுபடும். ஒவ்வொரு பழமும் பொதுவாக 1-3 கிலோகிராம் எடை கொண்டிருக்கும். </p><p>பழத்தின் மீது கூர்மையான மற்றும் கடினமான முட்கள் நிறைந்துள்ளன. இப்பழத்தை மிகுந்த கவனத்துடன் கையாளாவிட்டால், அவை உடலுக்குக் காயத்தை ஏற்படுத்தக்கூடும். துரியன் மரம் வளர்ந்து காய்ப்பதற்கு வெப்பமண்டல காலநிலை மிகவும் உகந்தது. சில தென்கிழக்கு ஆசிய நாடுகளில், இப்பழம் அவர்களின் சமையலில் சேர்க்கப்படுகிறது. மரம் முதிர்ச்சியடையும் போது 100 அடிக்கும் மேல் வளரும். இந்த வகையில், ஒட்டுக்கட்டப்பட்ட மரங்கள் சிறந்தவை, ஏனெனில் அவை அதிகபட்சமாக 40 அடி உயரம் வரை வளரும்.</p><h2>கருவுறாமைக்கு சிறந்த தீர்வு</h2><p>பல திருமணமான தம்பதிகள் எதிர் கொள்ளும் பொதுவான பிரச்சனைகளில் கருவுறாமல் போவது முக்கிய பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது. இதற்காக பலர் பணம் செலவழித்து மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். ஆனால் பெண்கள் கருவுறாமல் போகும் பிரச்சினையைத் தீர்க்க ஒரு பழம் உதவும் என்றால் நீங்கள் நம்புவீர்களா? அதுதான் பார்ப்பதற்கு பலாப்பழம் போலவே இருக்கும் துரியன் பழம். இது பெண்கள் கருவுறாமைக்கு சிறந்த தீர்வாக இருக்கும் என சொல்லப்படுகிறது.</p><p>இதய நோய்களுக்கான முதன்மைக் காரணம், ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் அதிக சர்க்கரை அடங்கிய மோசமான உணவுமுறை போன்ற ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறைப் பழக்கங்களே ஆகும். இந்த ஆரோக்கியமற்ற கொழுப்புகளும் எல்.டி.எல் கொலஸ்ட்ராலும் தமனிகளின் சுவர்களில் படிந்துவிடக்கூடும். இதன் விளைவாக, இது ஹைபர்கொலஸ்ட்ரோலீமியா, உயர் இரத்த அழுத்தம் மற்றும் தமனித் தடிப்பு நோய் ஆகியவற்றுக்கு வழிவகுக்கிறது. </p><h2>இதய ஆரோக்கியத்திற்கு நல்லது</h2><p>துரியன் பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது, இது இரத்த ஓட்டத்திற்கும் இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. எனவே, உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது அதனைத் தடுக்கிறது அல்லது குறைக்கிறது. மேலும், துரியன் பழத்திற்கு கொலஸ்ட்ராலைக் குறைக்கும் ஆற்றல் இருப்பதாக பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. எனவே, துரியன் பழத்தை தொடர்ந்து சாப்பிடுவது இரத்தத்தில் உள்ள ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளையும் குறைக்கிறது. இதனால், இதய நோய்களின் அபாயம் குறைகிறது. கூடுதலாக, கல்லீரலில் கொழுப்பு சேர்வதால் ஏற்படும் கல்லீரல் நோய்களின் அபாயத்தையும் இது குறைக்கக்கூடும்.</p><h2>மோசமான மணம்</h2><p>உலகெங்கிலும் பல இடங்களில் பொதுவெளியில் சாப்பிடுவதற்கு தடை செய்யப்பட்ட பழங்களில் துரியன் பழம் முதலிடத்தில் உள்ளது. இதன் சுவை நன்றாக இருந்தாலும் அதிலிருந்து வீசும் மோசமான மணம் காரணமாக, இது பல பகுதிகளில் தடை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இதை விமானங்களில் எடுத்துச் செல்லக்கூடாது. பலாப்பழம் போலவே இந்த பழத்தின் உட்புறம் மென்மையாக இருக்கும். இவை குறிப்பாக இந்தோனேஷியா, மலேசியா மற்றும் தாய்லாந்து போன்ற பகுதிகளில் அதிகம் வளர்க்கப்படுகிறது. </p><h2>ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்</h2><p>ஊட்டச்சத்துக்களின் அடிப்படையில் துரியன் பழம் நம் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக <a href="https://www.dailythanthi.com/topic/durian-fruit">துரியன் பழத்தில் </a>பெண்களுக்குத் தேவையான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உள்ளது. இது பெண்கள் இயற்கையாக கருத்தரிப்பதற்கு உதவும் என்கின்றனர். பெண்கள் கருவுறாமல் போவதற்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனில் உள்ள குறைபாடு காரணமாக இருப்பதால், இந்த பழம் பெண்களுக்கு வரப்பிரசாதம் எனலாம்.</p><h2>சரும ஆரோக்கியம்</h2><p>துரியன் பழத்தில் உள்ள வைட்டமின் சி, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நிறமாற்றத்தைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும், இது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. கொலாஜன் என்பது சருமம், முடி மற்றும் நகங்களில் காணப்படும் ஒரு புரதமாகும். கூடுதலாக, துரியன் பழங்களில் உள்ள பாலிஃபீனால்கள் போன்ற அதிக அளவிலான பிற ஆன்டிஆக்ஸிடன்ட்களும் சருமத்திற்கு உதவுகின்றன. அவை உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ப்ரீ ரேடிக்கல்களின் அளவைக் குறைக்கின்றன. இதனால், இது செல் சேதம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைத் தடுத்து, சுருக்கங்கள் மற்றும் சரும பாதிப்புகளைக் குறைக்கிறது.</p><h2>பாலுணர்வு தூண்டி</h2><p>ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்திற்கு மிகவும் நல்லது. எனவே, அவை சருமத்தில் உள்ள தழும்புகள் அல்லது நிறமாற்றத்தைக் குறைக்க உதவுகின்றன. உடலை நச்சு நீக்கம் செய்வதன் மூலமும், சருமத்தில் உள்ள கறைகளைக் குணப்படுத்துவதன் மூலமும் அவை இதைச் செய்கின்றன. துரியன் பழத்தில் உள்ள சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களுக்காக, மருந்துத் தொழிற்சாலைகளில் அது பயன்படுத்தப்படுவது குறித்து ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. மேலும் இந்த பழம் பாலுணர்வு தூண்டியாக செயல்படுகிறது. எனவே ஆண்களுக்கு பாலியல் உந்துதலை அதிகரித்து விந்தணுவை மேம்படுத்தி ஆண்களின் மலட்டுத்தன்மையையும் போக்கும். பெண்கள் கர்ப்ப காலத்தில் அவர்களின் எடையை ஆரோக்கியமாக பராமரிக்க துரியன் பழம் உதவும். இதில் உடலுக்குத் தேவையான கொழுப்புகள் உள்ளன. இதை சரியான அளவில் உட்கொள்ளும்போது உடலுக்கு நன்மைகளைக் கொடுக்கிறது.</p><h2>குழந்தை பேறு உண்டாகும்</h2><p>துரியன் பழம் சாப்பிடுவதால் இதய ஆரோக்கியம் மேம்பட்டு, புற்றுநோயின் அபாயம் குறைகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து எலும்புகளின் ஆரோக்கியத்தையும் சிறப்பாக மாற்றும் தன்மை உள்ளது. தமிழகத்தில் குன்னூர் மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் துரியன் பழம் அதிகம் கிடைக்கும். துரியன் பழம் ஆண்டுக்கு ஒரு முறை கிடைக்கும் என்பதால் இந்த பழங்கள் சீசன் இல்லாத காலங்களில் 3000 ரூபாய்க்கு கூட விற்கப்படும். சாதாரண நாட்களில் ஒரு பழம் ரூபாய் 1000 முதல் 1500 வரை விற்கப்படும் என சொல்லப்படுகிறது. எனவே குழந்தை பேறு உண்டாக விரும்பும் பெண்கள் நிச்சயம் இந்த பழத்தை வாங்கி சாப்பிடுங்கள்.</p> ]]></content:encoded></item><item><title>விழுப்புரம்: கழிவறைக்கு சென்ற பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/villupuram-4-sovereign-gold-chain-snatched-from-woman-visiting-restroom</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/villupuram-4-sovereign-gold-chain-snatched-from-woman-visiting-restroom#comments</comments><guid isPermaLink="false">0618fa9f-af83-47e9-8a35-ba2e1afee862</guid><pubDate>Tue, 04 Aug 2026 03:54:23 +0000</pubDate><atom:updated>2026-08-04T03:54:23.106Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>விழுப்புரம்,Villupuram,நகை பறிப்பு,jewelry snatching</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/etvn2yxe/chainsnatching.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/etvn2yxe/chainsnatching.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விழுப்புரம்,</p><p>கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மனைவி கோமதி (வயது 45). கணவன்-மனைவி இருவரும் கடந்த 1-ந்தேதி வெளியூருக்கு காரில் சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கம்பியாம்புலியூருக்கு இரவு சுமார் 9 மணி அளவில் வந்ததும் அங்குள்ள டீக்கடையில் காரை நிறுத்திவிட்டு இருவரும் டீ குடித்தனர். பின்னர், கோமதி மட்டும் அங்குள்ள கழிவறைக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். </p><h2>4 பவுன் சங்கிலி பறிப்பு </h2><p>அப்போது கழிவறை அருகில் பதுங்கி இருந்த மர்மநபர் ஒருவர் திடீரென கோமதி அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை பறித்தார். இதை சற்றும் எதிர்பாராத அவர் திருடன்...திருடன்... என்று கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதற்குள் நகையுடன் அந்த மர்மநபர் தப்பிஓடி விட்டார். பறிபோன நகையின் மொத்த மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என்று தெரிகிறது. </p><p>இதுகுறித்து கோமதி விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச் சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>அண்ணா உருவாக்கிய அறிவாலயத்தை ஆபாசக் கூடாரமாக மாற்றிய ஆபாசநிதி: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pornography-fund-that-turned-annas-knowledge-center-into-a-porn-tent-minister-adhav-arjuna-writes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pornography-fund-that-turned-annas-knowledge-center-into-a-porn-tent-minister-adhav-arjuna-writes#comments</comments><guid isPermaLink="false">0476d4f7-f09b-41d9-b6d6-4ecb1177bc62</guid><pubDate>Tue, 04 Aug 2026 03:48:43 +0000</pubDate><atom:updated>2026-08-04T03:48:43.422Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,த.வெ.க.,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,T.V.K.,X Page,எக்ஸ் பதிவு,Controversial speech,சர்ச்சை பேச்சு,தி.மு.க.,அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,Minister Adhav Arjuna,D.M.K.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/fw9il5na/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/fw9il5na/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>அண்ணா உருவாக்கிய அறிவாலயத்தை ஆபாசக் கூடாரமாக மாற்றிய ஆபாசநிதி என்று தமிழக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE">பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81">எக்ஸ் தள பதிவில்</a> தெரிவித்துள்ளார்.</p><h2>உதயநிதி ஸ்டாலின் சர்ச்சை பேச்சு</h2><p>தி.மு.க. எதிர்க்கட்சி தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">உதயநிதி ஸ்டாலின்</a> தலைமையில் நேற்று தஞ்சையில் த.வெ.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலின் முதல்-அமைச்சர் குறித்தும், பெண்கள் குறித்தும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. </p><p>இது தொடர்பாக தமிழக பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: </p><p>அண்ணா உருவாக்கிய அறிவாலயத்தை ஆபாசக் கூடாரமாக மாற்றிய ஆபாசநிதி! </p><p>பேரறிஞர் அண்ணா தனது தமிழ் புலமையால் கட்டியெழுப்பிய இயக்கத்தை, இன்று தனது ஆபாச மொழியாலும் இரட்டை அர்த்தப் பேச்சுக்களாலும் அழித்து வருகிறார் 'ஆபாச'நிதி. </p><p>தமிழ்நாட்டின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராய்கூட அல்ல, அடிப்படை மனித மாண்புகூட கொஞ்சமும் இல்லாமல், தரங்கெட்டத்தனமாக மேடையில் பேசியிருக்கிறார். அண்ணா உருவாக்கிய அறிவாலயமான திமுக-வை ஆபாசத்தின் அடையாளமாக மாற்றிவிட்ட ஆபாசநிதி. </p><p>பெண்கள் பற்றி அவர் கொண்டிருக்கும் வக்கிர சிந்தனையை வெளிப்படுத்தும் விதமாக இன்று அவர் பேசியுள்ள ஆபாசப் பேச்சு கேட்பவர்களைக் காது கூசச் செய்கிறது. இதுபோன்ற இழிவான பேச்சுகளை தமிழ்நாட்டின் எந்தவொரு தாய்மார்களும், அக்கா - தங்கைகளும், பெற்றோர்களும் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். </p><p>இதுபோன்ற நபர்களின் ஆதிக்க சிந்தனையால்தான் தி.மு.க.வை இந்த தேர்தலில் தமிழ்நாட்டுப் பெண்கள் தூக்கியெறிந்தார்கள். ஆனால் இப்போது, பொது மேடைகளிலேயே தனது குரூர எண்ணத்தைக் காட்டிக்கொண்டிருக்கும் ஆபாசநிதியை தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியலிலிருந்தே துடைத்தெறிவார்கள் தமிழ்நாட்டின் தாய்மார்களும், பெண்களும்! </p><p>ஆபாசநிதிக்கு வன்மையான கண்டனங்கள்!. </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஈரோடு - திருச்சி பாசஞ்சர் ரெயில் சேவையில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-the-erodetrichy-passenger-train-service</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-the-erodetrichy-passenger-train-service#comments</comments><guid isPermaLink="false">deb4610f-62b7-4b60-bc55-00dbb56cc94c</guid><pubDate>Tue, 04 Aug 2026 03:43:44 +0000</pubDate><atom:updated>2026-08-04T03:43:44.876Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்சி,Trichy,ரெயில் சேவை,train service,Erode,ஈரோடு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/px69ab8y/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/px69ab8y/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு, </p><p>திருச்சி சந்திப்பு ரெயில்வே யார்டில் மின் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக ஈரோடு -திருச்சி சந்திப்பு பாசஞ்சர் ரெயில் (வண்டி எண் 56106) சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.</p><p>அதன்படி ஈரோடு சந்திப்பிலிருந்து காலை 8.05 மணிக்கு கிளம்பும் ஈரோடு -திருச்சி சந்திப்பு பாசஞ்சர் ரெயில் இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றும் வருகிற 11, 18-ந்தேதிகளில் திருச்சி கோட்டை ரெயில் நிலையத்தில் 40 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும் என்று சேலம் ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அவதூறு பேச்சு:  உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தேசிய மகளிர் ஆணையத்தில் த.வெ.க. புகார்; மகளிர் அணி ஆர்ப்பாட்டம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/defamation-speech-tvk-complaint-against-udayanidhi-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/defamation-speech-tvk-complaint-against-udayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">a5284d77-95e5-405c-9b74-615a05cf0180</guid><pubDate>Tue, 04 Aug 2026 03:26:06 +0000</pubDate><atom:updated>2026-08-04T03:26:06.342Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,Vijay,த.வெ.க.,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/t4rjmsvo/tnolu.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/t4rjmsvo/tnolu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தேசிய மகளிர் ஆணையத்தில் த.வெ.க. புகார் மனு அளித்துள்ளது.</p><p>தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தி.மு.க. சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.  காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் த.வெ.க. அரசின் மெத்தனப்போக்கை கண்டித்தும், விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டியும், மேகதாது அணை கட்டுவதை தடுக்க தவறிய த.வெ.க. அரசை கண்டித்தும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் தி.மு.க. இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார்.</p><p>அப்போது அவர், காவிரி டெல்டாவில் உள்ள ஆறுகள் அனைத்தும் இன்றைக்கு வறண்டு, கிட்டத்தட்ட ஒரு பாலைவனம்போல் காட்சி அளித்துக்கொண்டு இருக்கிறது. இதே நேரத்தில் நம்முடைய தலைவர் முதல்-அமைச்சராக இருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா? நம் தலைவர் இந்த நிலைமை ஏற்பட விட்டிருப்பாரா?.</p>  <h2>விவசாயிகள் தவிப்பு</h2><p>இன்றைக்கு குறுவையை காப்பாற்ற முடியவில்லை. சம்பா என்ன நிலைமை ஆகும் என்று விவசாயிகள் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள். இது ஏதோ ஒரு சாதாரணமாக நடக்கின்ற விஷயம் கிடையாது.  இன்றைக்கு இருக்கக்கூடிய ஒரு நிர்வாக திறனற்ற முதல்-அமைச்சரால் தான் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது.</p><p>தமிழ்நாட்டில் ஆட்சி நடத்த காங்கிரஸ் ஆதரவு தேவை. அதனால்தான் கர்நாடக காங்கிரஸ் அரசை கேள்வி கேட்கவே முதல்-அமைச்சர் விஜய் பயப்படுகிறார். மத்திய அரசை பகைத்துக்கொண்டால் பிரச்சினை வந்துவிடும் என இதுவரைக்கும் அவர் வாயில் இருந்து பா.ஜ.க. என ஒரு வார்த்தை வந்ததே கிடையாது. அவ்வளவு பெரிய தைரியசாலி என்று பேசினார்.</p>  <h2>அமைச்சர் கண்டனம்</h2><p>தொடர்ந்து அவர், முதல்-அமைச்சர் விஜய் பற்றி அவதூறாக சில விசயங்களை பேசியுள்ளார்.  இது சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையாகி உள்ளது.  அவருடைய இந்த பேச்சுக்கு, த.வெ.க. பொதுச்செயலாளர் மற்றும் தமிழக நீர்வளத்துறை அமைச்சரான ஆனந்த் கண்டனம் தெரிவித்து உள்ளார்.  அவர் வெளியிட்ட செய்தியில், எதிர்க்கட்சித் தலைவர் என்ற மாண்பும் மரபும் மிக்க மிகப்பெரிய பொறுப்பை உணராமல், வாய்க்கு வந்தபடி பேசிய ஒருவரை என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. தன் தாத்தாவும் தந்தையும் வகித்தும் கூடவா முதல்-அமைச்சர் பதவியின் தகுதியும் தராதரமும் தெரியாமல் ஒருவர் இருக்க முடியும்?.</p><p>அவை அடக்கமும் நாவடக்கமும் இல்லாத ஒருவரா நம் தமிழகத்தின் துணை முதல்-அமைச்சராக இருந்திருக்க முடியும்? மக்கள் மத்தியில் இத்தகைய கேள்விகள் இமாலய அளவிற்கு எழுந்துள்ளன. எல்லை மீறி இழிவாக பேசியவர்கள் என்ன பதில் சொல்ல போகிறார்கள்?</p>  <h2>எச்சரிக்கை</h2><p>அமைதி காக்க சொல்லி எங்கள் தலைவர் தளபதியின் நாகரிக வளர்ப்பு எங்களை தடுக்கிறது.  மாண்பும் மரியாதையும் தகுதியும் தராதரமும் மிக்க எங்கள் தலைவர் தளபதி தமிழ்நாடு முதல்-அமைச்சர் சொல்வதுபோல மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். யாரும் மறந்துவிட வேண்டாம் என்று எச்சரிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.</p>  <h2>த.வெ.க. புகார்</h2><p>இந்த நிலையில், தஞ்சையில் அவதூறாக பேசினார் என உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தேசிய மகளிர் ஆணையத்தில் த.வெ.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.</p><p>இதுபற்றி கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பழ. செல்வ குமார் தேசிய மகளிர் ஆணைய தலைவருக்கு புகார் மனு அனுப்பினார்.  அதில், உதயநிதியின் பேச்சு, காணொளியை அடிப்படையாக கொண்டு ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.</p>  <h2>மகளிர் அணி ஆர்ப்பாட்டம்</h2><p>உதயநிதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை மற்றும் வழக்கு பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இதேபோன்று, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் த.வெ.க. மகளிர் அணி நிர்வாகிகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை விரட்டிய காட்டு யானை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-chases-tourists-on-the-coonoor-mettupalayam-hill-road</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-chases-tourists-on-the-coonoor-mettupalayam-hill-road#comments</comments><guid isPermaLink="false">51be82e1-9cf4-48c6-94e8-2da78ebd4d02</guid><pubDate>Tue, 04 Aug 2026 03:20:30 +0000</pubDate><atom:updated>2026-08-04T03:20:30.818Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nilgiris,நீலகிரி,காட்டு யானை,wild elephant</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/lcsvcuj9/7.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/lcsvcuj9/7.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் பலாப்பழ சீசன் என்பதால், பலா மரங்களில் பலாப்ப ழங்கள் காய்த்து உள்ளன. இதனை சாப்பிடுவதற்காக சமவெளி பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் வந்து, குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் முகாமிட்டு உள்ளன. கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை காட்டு யானை கடந்த சில நாட்களாக மரப்பாலம், இச்சி மரம், காட்டேரி பூங்கா சாலையில் உலா வருகிறது.</p><p>இந்தநிலையில் காட்டு யானை காட்டேரி பூங்கா முன்பு உள்ள சாலையை திடீரென கடந்து சென்றது. </p><p>அப்போது அப்பகுதியில் நின்ற சுற்றுலா பயணி களை ஆக்ரோஷமாக யானை விரட்டியது. உடனே சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்து உயிர் தப்பினர். அதோடு வாகனங்களையும் வழிமறித்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த வனத்துறையி னர் காட்டு யானை நடமாட்டத்தை கண்காணித்து விரட்டும் பணியில் ஈடு பட்டு வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் இன்று மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-today-3</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-today-3#comments</comments><guid isPermaLink="false">bd913ca1-4a2c-4a73-bf94-08f61569012b</guid><pubDate>Tue, 04 Aug 2026 03:00:21 +0000</pubDate><atom:updated>2026-08-04T03:00:21.879Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,monthly maintenance work,power outage,மாதாந்திர பராமரிப்பு பணி,மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/cim9w47i/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/cim9w47i/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மின்பகிர்மான வட்டம், திருநெல்வேலி நகர்ப்புற கோட்டத்தில் மேலப்பாளையம், ரெட்டியார்பட்டி, புதிய பேருந்து நிலையம் துணை மின் நிலையங்களில் இன்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் காரணமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம்</h2><p>திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் ரவிராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>மேலப்பாளையம், ரெட்டியார்பட்டி மற்றும் புதிய பேருந்து நிலையம் துணை மின் நிலையங்களில் இன்று (4.8.2026, செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு  பணிகள் நடைபெற இருப்பதால் பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும்.</p><h2>காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை</h2><p>அதன்படி மேலப்பாளையம், கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின் ரோடு, சந்தை பகுதிகள், குலவணிகர்புரம், மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹமீபுரம், மேலக்கருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக்குளம், அன்னை நகர், தருவை, ஓமநல்லூர், கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம், ஆஸ்பத்திரி ரோடு, தெற்கு பைபாஸ் ரோடு, மேலகுலவணிகபுரம், பஜார் திடல், ஜின்னா திடல், டவுன் ரோடு, அண்ணா வீதி, பஷீர் அப்பா தெரு, கணேசபுரம், செல்வகாதர் தெரு, உமறுப்புலவர் தெரு, ஆசாத் ரோடு, PSN கல்லூரி. </p><p>ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கன்தான்பாறை, பொன்னாக்குடி, அடைமிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி  மற்றும் தாமரைச்செல்வி. </p><p>பெருமாள்புரம், பொதிகை நகர், அரசு ஊழியர் குடியிருப்பு, என்.ஜி.ஓ. காலனி, மகிழ்ச்சி நகர், திருநகர், திருமால் நகர், ராமச்சந்திரா கார்டன், ராமச்சந்திரா நகர், பரணி பார்க், அரசு பொறியியல் கல்லூரி பகுதி மற்றும் புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தொழிலாளி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-a-minor-girl-worker-arrested-under-pocso</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-a-minor-girl-worker-arrested-under-pocso#comments</comments><guid isPermaLink="false">4dcd0d8f-4325-4a13-a52c-2db2d2907d56</guid><pubDate>Tue, 04 Aug 2026 02:54:36 +0000</pubDate><atom:updated>2026-08-04T02:54:36.943Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்,போக்சோ சட்டம்,POCSO act</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/svc92wdg/6.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/svc92wdg/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>உடுமலை,  </p><p>திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த கல்லாபுரத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 34). கூலித்தொழிலாளி. இவர் அந்த பகுதியில் கொய்யாப்பழம் பறித்துக் கொண்டிருந்த 8 வயது சிறுமியிடம், கொய்யாப்பழம் கேட்டுள்ளார். இதையடுத்து முருகானந்தத்துக்கு பழத்தை கொடுக்க சிறுமி சென்றார். </p><p>அப்போது அந்த சிறுமியை வீட்டுக்குள் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, உடுமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் முருகானந்தத்தை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>சென்னை:  மின்சார ரெயில் படிக்கட்டு உடைந்து நடைமேடையில் உரசல்; பயணிகள் அதிர்ச்சி
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-electric-train-staircase-breaks-rubs-platform-passengers-shocked</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-electric-train-staircase-breaks-rubs-platform-passengers-shocked#comments</comments><guid isPermaLink="false">4dabf2f2-a21c-44c1-a6fa-243064367578</guid><pubDate>Tue, 04 Aug 2026 02:52:12 +0000</pubDate><atom:updated>2026-08-04T02:52:12.690Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மின்சார ரெயில்,electric train</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/nkvhs79u/crscr.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/nkvhs79u/crscr.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>பெரம்பூர்</p><p>சென்னையில் மின்சார ரெயில் படிக்கட்டு உடைந்து நடைமேடையில் உரசி சென்றது.  இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.</p><p>சென்னை சென்டிரலில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி மின்சார ரெயில் சென்றது. கொருக்குப்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றபோது அங்கிருந்த மேல்நிலை மின்கம்பி அமைப்பின் தாங்கு கம்பியில் ரெயில் பெட்டியின் சிறிய அளவிலான படிக்கட்டு சிக்கியதாக கூறப்படுகிறது.</p>  <h2>பயணிகள் அதிர்ச்சி</h2><p>இதனால் படிக்கட்டு உடைந்து தொங்கியது. தண்டையார்பேட்டை, வ.உ.சி. நகர் ரெயில் நிலைய நடைமேடைகளில் படிக்கட்டு உரசியபடி சென்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து திருவொற்றியூர் ரெயில் நிலையத்தில் ரெயிலை நிறுத்திய டிரைவர், இதுபற்றி ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.</p><p>ரெயில்வே ஊழியர்கள் சேதமடைந்த படிக்கட்டை சீரமைத்தனர். அதன்பிறகு அந்த ரெயில் மீண்டும் கும்மிடிப்பூண்டிக்கு புறப்பட்டு சென்றது.  இதனால், ரெயில் பயணிகள் இடையே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.</p> ]]></content:encoded></item><item><title>ராகுல்காந்தி - முதல் அமைச்சர் விஜய் சந்திப்பு நடைபெறாததற்கு காரணம் என்ன.?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-is-the-reason-for-the-meeting-between-rahul-gandhi-and-chief-minister-vijay-not-taking-place</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-is-the-reason-for-the-meeting-between-rahul-gandhi-and-chief-minister-vijay-not-taking-place#comments</comments><guid isPermaLink="false">26e6acea-904d-4c0c-8de3-8aae2dca636b</guid><pubDate>Tue, 04 Aug 2026 02:47:13 +0000</pubDate><atom:updated>2026-08-04T02:47:13.451Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Rahul Gandhi,ராகுல்காந்தி,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/246rbh1e/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/246rbh1e/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாமல்லபுரத்தில் நடந்த காங்., மாவட்ட தலைவர்களுக்கான பயிற்சி முகாம் நிறைவு விழாவில் பங்கேற்க, தமிழகத்துக்கு ராகுல் வந்தார். சென்னையில் தமிழக முதல்வர் விஜய்யை ராகுல் சந்திப்பார் என தகவல் பரவியது. ஆனால், சென்னைக்கு வந்த ராகுல், முதல்வர் விஜய்யை சந்திக்கவில்லை. இதுகுறித்து தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:</p><p>ராகுலின் சென்னை நிகழ்ச்சி நிரலில், விஜயை சந்திக்கும் திட்டம் இல்லை என்பதை, தமிழக</p><p>காங்., தலைவர் மாணிக் கம் தாகூர் ஏற்கனவே கூறி விட்டார். விஜய், ராகுல் இருவரும் சந்திக்காததற்கு, கருத்து வேறுபாடு காரணமல்ல.</p><p>’இந்தியா’ கூட்டணி யில் இணைவது குறித்து, த.வெ.க., தலைமை எச்சரிக்கையுடன் செயல்படுகிறது. தமிழகத்தில், த.வெ.க., காங்., கூட்டணி அமைந்தாலும், ’இந்தியா’ கூட்ட ணியில் இணைவதாக த.வெ.க., இதுவரை அறிவிக்கவில்லை. தமிழகத்தை மையப்படுத்தி, தனித்த அரசியல் அடையாளத்தைத்தை முன்னிலைப்படுத்த த.வெ.க., விரும்புகிறது.</p><p>மேலும், மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க வேண்டாம் எனவும் த.வெ.க., கருதுவதால், ’இந்தியா’ கூட்டணியில் சேர அவசரம் காட்டவில்லை. ’இந்தியா’ கூட்டணியில், த.வெ.க., இணைவது குறித்து விஜய் முடிவெடுக்காமல் இருப்பதால், சென்னைக்கு வந்த ராகுலை, அவர் சந்திக்க திட்டமிடவில்லை.”</p><p>இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் ஆட்டோ கட்டணம் உயர்வு; அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/auto-fare-hike-in-tamil-nadu-report-submitted-to-the-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/auto-fare-hike-in-tamil-nadu-report-submitted-to-the-government#comments</comments><guid isPermaLink="false">2ee6430e-f106-4bc6-ade6-b5acd0c7f5f0</guid><pubDate>Tue, 04 Aug 2026 02:40:43 +0000</pubDate><atom:updated>2026-08-04T02:40:43.911Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,report,அறிக்கை,உயர்வு,ஆட்டோ கட்டணம்,hike,submitted,To the Government of Tamil Nadu,தமிழக அரசிடம்,Auto fare</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/hw4018su/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆட்டோ கட்டணம் உயர்வு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/hw4018su/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">தமிழ்நாட்டில்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D">ஆட்டோ கட்டணம்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">உயர்வு</a>க்கான அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் திருத்தப்பட்ட புதிய கட்டணம் விரைவில் வெளியாகும் என போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><h2>முத்தரப்பு பேச்சுவார்த்தை</h2><p>தமிழ்நாட்டில் ஆட்டோ கட்டணம் உயர்வுக்கான அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் திருத்தப்பட்ட புதிய கட்டணம் விரைவில் வெளியாகும் என போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் ஓடும் 3.46 லட்சம் ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டன. புதிய கட்டண நிர்ணயம் குறித்து சென்னையில் கடந்த மாதம் 9-ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.</p><h2>குறைந்தபட்ச கட்டணம் ரூ.50; பயணியர் அமைப்புகள் வலியுறுத்தல்</h2><p>இந்த பேச்சுவார்த்தையில் 30-க்கும் மேற்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகளும், பயணியர் அமைப்புகளில் இருந்து 90 பேரும் பங்கேற்றனர். தொழிற்சங்கங்கள் தரப்பில் குறைந்தபட்ச கட்டணத்தை, 70 ரூபாயாக உயர்த்த வலியுறுத்தினர். பயணியர் அமைப்புகளின் நிர்வாகிகள் தரப்பில், குறைந்தபட்ச கட்டணம் 50 ரூபாயாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தினர்.</p><p>இதுகுறித்து தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது: </p><p>முத்தரப்பு பேச்சுவார்த்தையில் நடந்த முக்கிய அம்சங்களை ஆராய்ந்தும், தற்போதுள்ள எரிபொருள் செலவு, மற்ற நகரங்களில் உள்ள ஆட்டோகட்டணம் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களை முன்வைத்தும் ஒரு அறிக்கை தயாரித்தோம். இந்த அறிக்கை தமிழக உள்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஆய்வு செய்து, தமிழக அரசு விரைவில் ஆட்டோ கட்டண உயர்வை அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம். </p><p>இவ்வாறு அவர்கள் கூறினர்.</p><h2>ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.22 முதல் ரூ.25 கட்டணம் எதிர்பார்ப்பு</h2><p>சென்னை, கோவை போன்ற பெரிய நகரங்களில் குறுகிய தூர பயணத்துக்கு ஆட்டோவை லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். குறைந்தபட்ச கட்டணத்தை 50 ரூபாயாக நிர்ணயம் செய்ய வேண்டும். ஒவ்வொரு கி.மீ. பயணத்திற்கும் 22 முதல் 25 ரூபாய் வரை கட்டணம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது குறைந்தபட்ச கட்டணம் 25 ரூபாயாகவும், ஒவ்வொரு கி.மீ.க்கும் 12 ரூபாயாகவும் கட்டணம் இருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை:  இன்று மாலை 4 மணியளவில் த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-budget-discussion-tvk-mla-meet</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-budget-discussion-tvk-mla-meet#comments</comments><guid isPermaLink="false">fb5590e6-e122-47fe-a024-92e2be5b8c30</guid><pubDate>Tue, 04 Aug 2026 02:23:00 +0000</pubDate><atom:updated>2026-08-04T02:23:00.724Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>த.வெ.க.,T.V.K.,எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்,MLAs meeting</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/clb1hq4j/tnpat.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/clb1hq4j/tnpat.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4 மணியளவில் <a href="https://www.dailythanthi.com/news/world">த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் </a>கூட்டம் நடைபெற உள்ளது.</p><p>தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த த.வெ.க. அரசின் முதல் சட்டசபை கூட்டம் கடந்த மாதம் (ஜூன்) 18-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.</p><p>கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜூன் 19, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது. நிறைவு நாளில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பதிலுரை வழங்கினார்.</p>  <h2>பொது பட்ஜெட்</h2><p>அதனை தொடர்ந்து, 4 நாட்கள் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், 2026-27-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது.</p><p>இதன்படி, 2026-27-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக நாளை (புதன்கிழமை) சட்டசபை மீண்டும் கூடுகிறது.  பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்கிறார். த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் என்பதால், புதிய அறிவிப்புகள், திட்டங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>  <h2>வேளாண் பட்ஜெட் தாக்கல்</h2><p>அடுத்த நாள், 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. வேளாண் துறை அமைச்சர் வினோத், இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.</p><p>தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதமும், அமைச்சர்களின் பதிலுரையும் இடம்பெறும். அதன்பின்னர், துறை வாரியாக மானியக்கோரிக்கை விவாதம் நடைபெறும். மொத்தத்தில், இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் சுமார் 1½ மாதங்கள் நடைபெறும் என தெரிகிறது.</p><p>இதனை முன்னிட்டு, சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4 மணியளவில் த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.  இதில், அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள்.  இந்த கூட்டத்தில், தமிழக பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் குறித்து விரிவான அளவில் ஆலோசனை நடைபெறும்.</p>  <h2>தேர்தல் அறிக்கை</h2><p>தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இது என்பதால், தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளில் பல்வேறு அறிவிப்புகள் இதில் இடம்பெறும் என்று தெரிகிறது.</p><p>த.வெ.க. தேர்தல் அறிக்கையில், "குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும். ஆண்டுக்கு 6 இலவச எல்.பி.ஜி. சிலிண்டர்கள் கொடுக்கப்படும். திருமணத்திற்கு 1 சவரன் தங்கம் மற்றும் பட்டுச்சேலை வழங்கப்படும். ரூ.20 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்படும். குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கப்படும். ஆண்டுதோறும் இலவச முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படும். வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும்" என்பது உள்பட பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன.</p>  <h2>தங்க மோதிரம் திட்டம்</h2><p>ஏற்கனவே, த.வெ.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற, பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் திட்டம் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.</p><p>இதேபோல், தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெற்ற 200 யூனிட் இலவச மின்சாரம் ஒரு மாதம் வழங்கப்பட்டுள்ளது. ரூ.75 ஆயிரம் வரையிலான பயிர் கடனும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள அறிவிப்புகளில் முக்கியமானவை பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதன்படி, கூட்டத்தில் துறை சார்ந்த அமைச்சர்களின் ஆலோசனைகளும், கருத்து கேட்புகளும் நடைபெறும் என கூறப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>நாவடக்கம் இல்லாதவர் தான் உதயநிதி ஸ்டாலின் -  அமைச்சர் ஆனந்த் விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/udhayanidhi-stalin-is-a-person-without-manners-minister-anand-criticizes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/udhayanidhi-stalin-is-a-person-without-manners-minister-anand-criticizes#comments</comments><guid isPermaLink="false">ea1c5de6-6ee9-474e-812f-974efd5b1134</guid><pubDate>Tue, 04 Aug 2026 02:11:25 +0000</pubDate><atom:updated>2026-08-04T02:11:25.603Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,திமுக,DMK,உதயநிதி ஸ்டாலின்,Udayanithi Stalin,அமைச்சர் ஆனந்த்,Minister Anand</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/cozy1y4z/108.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/cozy1y4z/108.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p> <p>திமுக எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று தஞ்சையில் தவெக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில் குறுவை பாதிக்கப்பட்டதற்கு டம்மி முதல்-அமைச்சர்தான் காரணம். விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்-அமைச்சர் விஜய் இதுபற்றி வாய்திறந்து பேசவில்லை. ஆடி 18-ம் நாள் இன்று, ஆடிப்பெருக்கில் ஆறு முழுவதும் தண்ணீர் வழிந்து ஓடும். ஆனால், இப்போது டெல்டா நீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. "திமுக ஆட்சி இருந்திருந்தல் இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா?" நிர்வாகத் திறனற்ற ஒரு டம்மி முதல்-அமைச்சரால் இந்த நிலைமை தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது.</p><p>கர்நாடகா முதல்-அமைச்சரை பாக்குறது இருக்கட்டும்.. நம்ம ஊரு விவசாயிகளை முதல்-அமைச்சர் விஜய் சந்தித்தாரா?. தயவு செய்து இந்த பக்கம் வந்து விடாதீர்கள் என முதல்-அமைச்சர் விஜயிடம் கர்நாடக முதல்-மந்திரி கூறி விட்டார். ஆட்சி அமைத்து 3 மாதங்கள் ஆகியும் பாஜக என்ற சொல்லைக் கூட உச்சரிக்காத தைரியசாலி நமது முதல்-அமைச்சர் விஜய். கர்நாடகாவில் உள்ள காங்கிரஸை எதிர்த்துப் பேச முதல்-அமைச்சருக்கு திராணி இல்லை என பேசினார். இந்நிலையில் இது குறித்துதவெக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D">அமைச்சருமான ஆனந்த்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p> <p>எதிர்க்கட்சித் தலைவர் என்ற மாண்பும் மரபும் மிக்க மிகப்பெரிய பொறுப்பை உணராமல், வாய்க்கு வந்தபடி பேசிய ஒருவரை என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. தன் தாத்தாவும் தந்தையும் வகித்தும் கூடவா முதல்-அமைச்சர் பதவியின் தகுதியும் தராதரமும் தெரியாமல் ஒருவர் இருக்க முடியும்?.</p><h2>நாவடக்கம் இல்லாதவர்</h2><p>அவை அடக்கமும் நாவடக்கமும் இல்லாத ஒருவரா நம் தமிழகத்தின் துணைமுதல்-அமைச்சராக இருந்திருக்க முடியும்?. மக்கள் மத்தியில் இத்தகையக் கேள்விகள் இமாலய அளவிற்கு எழுந்துள்ளன. எல்லை மீறி இழிவாகப் பேசியவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் ?.</p><h2>தளபதியின் நாகரிக வளர்ப்பு</h2><p>Decent Approach - Decent Attack கற்றுக்கொடுத்து எங்களைக் கட்டுப்படுத்தி வளர்க்கும் மக்கள் விரும்பும் நம் வெற்றித் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை இப்படி அநாவசியமாகவும் அநாகரிகமாகவும் தொட்டவர்கள் நிலை என்னவாயிற்று என்பதை யாராக இருந்தாலும் உணர்ந்தே ஆக வேண்டும். மக்கள் உணர்த்தியே தீருவர். அதில் மாற்றமும் இல்லை. மாற்றுக் கருத்தும் இல்லை. அமைதி காக்கச் சொல்லி எங்கள் தலைவர் தளபதியின் நாகரிக வளர்ப்பு எங்களைத் தடுக்கிறது. வேறு என்ன சொல்ல?. அறிஞர் அண்ணா பாணியில் ‘வசவாளர்கள் வாழ்க’ என்று சொல்லலாம். ஆனால், ஆபாசநிதிகளை?. மாண்பும் மரியாதையும் தகுதியும் தராதரமும் மிக்க எங்கள் தலைவர் தளபதி தமிழ்நாடு முதல்-அமைச்சர் சொல்வதுபோல மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். யாரும் மறந்துவிட வேண்டாம் என்று எச்சரிக்கிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கு குட் நியூஸ்; விரைவில் புதிய சேவை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/good-news-for-villages-without-bus-facilities-new-service-coming-soon</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/good-news-for-villages-without-bus-facilities-new-service-coming-soon#comments</comments><guid isPermaLink="false">a170554b-b9c1-4e82-9e32-e653abf092de</guid><pubDate>Tue, 04 Aug 2026 01:53:56 +0000</pubDate><atom:updated>2026-08-04T01:53:56.040Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>villages,கிராமங்கள்,Bus facility,பஸ் வசதி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/ex312no5/bus.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/ex312no5/bus.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><h2>பயணியர் புகார்</h2><p>தமிழகம் முழுதும் அரசு பஸ் இயக்கம் இல்லாத, அல்லது முன்பு இயக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்ட வழித்தடங்கள் குறித்த விபரங்களை, கோட்டம் வாரியாக சேகரித்து, அறிக்கை அனுப்பும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 20,000க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டாலும், சில கிராமங்களுக்கு இன்னும் அரசு பஸ் வசதி இல்லை. சில வழித்தடங்களில் காலை, மாலை அல்லது இரவில் ஒரு சுற்று மட்டுமே பஸ் இயக்கப்படுவதாகவும், வார விடுமுறை நாட்களில் டவுன் பஸ் சேவை குறைவதாகவும் பயணியர் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.</p><h2>மீண்டும் பஸ் சேவை</h2><p>இதையடுத்து, வரும் செப்டம்பர் மாத தொடக்கத்தில் புதிய பஸ்களை இயக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, இதுவரை பஸ் செல்லாத மற்றும் இயக்கப்பட்டு, பின்னர் கைவிடப்பட்ட வழித்தடங்களில் மீண்டும் பஸ் சேவையை தொடங்க அரசு முடிவு செய்து உள்ளது. இதற்காக, கோட்டம் அளவில் அறிக்கை தயாரித்து அனுப்பும்படி, மேலாண்மை இயக்குநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.</p><p>போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், 'பஸ் வசதி இல்லாத கிராமங்கள் மற்றும் வழித்தடங்கள் தொடர்பான விபரங்கள், வட்டார போக்குவரத்துத் துறை மூலம் சேகரிக்கப்பட்டு, கலெக்டர்கள் வழியாக அரசுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. புதிய வழித்தடங்களில் <a href="https://www.dailythanthi.com/topic/bus-service">பஸ் சேவை</a> தொடங்கினால், மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதால், மாநிலம் முழுதும் தற்போது விரிவான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன' என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ஊரப்பாக்கம் அருகே சாலையை கடந்த 12 அடி நீள ராஜநாகம்: வாகன ஓட்டிகள் அச்சம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/12-foot-long-cobra-crosses-road-near-oorapakkam-motorists-in-fear</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/12-foot-long-cobra-crosses-road-near-oorapakkam-motorists-in-fear#comments</comments><guid isPermaLink="false">2095f844-f4db-4235-a90b-bdf71fd58c93</guid><pubDate>Tue, 04 Aug 2026 01:49:31 +0000</pubDate><atom:updated>2026-08-04T01:49:31.904Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>road,Motorists,சாலை,Chengalpattu,செங்கல்பட்டு,fear,ராஜநாகம்,வாகன ஓட்டிகள் அச்சம்,ஊரப்பாக்கம் அருகே,Rajanagam,Oorapakkam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/tnrc9zca/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சாலையைக் கடந்த ராஜநாகம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/tnrc9zca/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>செங்கல்பட்டு, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">செங்கல்பட்டு</a> மாவட்டம், ஊரப்பாக்கம் அருகே சாலையை கடந்த 12 அடி நீள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">ராஜநாகம்</a> படம் எடுத்து ஆடியதால் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">வாகன ஓட்டிகள் அச்சம் </a>அடைந்தனர்.</p><p>செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து நல்லம்பாக்கம் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி இருபுறமும் தொடர்ச்சியாக அடர்ந்த வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் ஏராளமான மான்கள் உள்ளிட்ட பல்வேறு சிறிய வனவிலங்குகள் வசித்து வருகின்றன.</p><h2>படம் எடுத்து ஆடிய ராஜநாகம்</h2><p>நேற்று காலை நல்லம்பாக்கத்தில் இருந்து ஊனைமாஞ்சேரி கிரஷர் பகுதிக்குச் செல்லும் சாலையை ஒட்டியுள்ள காப்புக்காட்டில் இருந்து சுமார் 12 அடி நீளமுள்ள ராஜநாகம் ஒன்று சாலையை கடக்க வந்தது. அப்போது ராஜநாகம் திடீரென படம் எடுத்து ஆடியதால் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.</p><h2>புகைப்படம் எடுத்த வாகன ஓட்டிகள்</h2><p>உடனே வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை சாலையோரம் நிறுத்திவிட்டு, ராஜநாகத்தை செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். சில நிமிடங்கள் படம் எடுத்து ஆடிய ராஜநாகம் பின்னர் சாலையை கடந்து மீண்டும் காப்புக்காட்டுக்குள் சென்றுவிட்டது.</p>]]></content:encoded></item><item><title>தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்த காவிரி உபரிநீர்; விவசாயிகள் மகிழ்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-water-reaches-border-farmers-rejoice-as-surplus-water-flows-to-tamil-nadu-karnataka-border</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-water-reaches-border-farmers-rejoice-as-surplus-water-flows-to-tamil-nadu-karnataka-border#comments</comments><guid isPermaLink="false">6b422ece-a488-4856-80c6-c6f05f3518aa</guid><pubDate>Tue, 04 Aug 2026 01:29:33 +0000</pubDate><atom:updated>2026-08-04T01:29:33.461Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Farmers,விவசாயிகள்,கபினி அணை,Kabini Dam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/h5n08z8v/cwcor.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/h5n08z8v/cwcor.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>பிலிகுண்டுலு</p><p>கபினி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி உபரிநீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது.</p><p>கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு பற்றாக்குறையாக பெய்துள்ளது.  இதனால் காவிரி படுகையில் ஹாரங்கியை தவிர மற்ற 3 அணைகளும் நிரம்பாமல் இருந்தன.  இந்நிலையில், தமிழகத்தில் முக்கிய அணைகளில் ஒன்றான மேட்டூர் அணையில் 79 அடிக்கும் கீழ் தண்ணீர் குறைந்து போன நிலையில், நடப்பு ஆண்டு ஜூன் 12-ந்தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை.  இதனால், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி முழுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, கர்நாடகம் தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி நீரை தமிழகம் கேட்டது. ஆனால், வழக்கம் போல் கர்நாடகம் மறுத்து விட்டது.</p>  <h2>நீர் வரத்து அதிகரிப்பு</h2><p>இதற்கிடையில், காவிரி ஒழுங்காற்று குழு, தமிழ்நாட்டுக்கு 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3,500 கனஅடி நீர் திறந்து விட கர்நாடகத்துக்கு உத்தரவிட்டது.  இதன்படி மொத்தம் 4% டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) நீர் திறந்து விட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கு விவசாயிகள், கன்னட அமைப்பினர் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அத்துடன் பெங்களூரு, மண்டியா, மைசூருவில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களும் நடத்தப்பட்டன.</p><p>இந்த சூழலில்,  தற்போது குடகு, சிக்கமகளூரு மற்றும் கேரள மாநிலம் வயநாட்டில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.  காவிரி படுகையில் உள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. கபினி அணையும் நிரம்பி வருகிறது.</p>  <h2>கபினி அணை</h2><p>நேற்றைய நிலவரப்படி, கர்நாடகாவின் கே.ஆர்.எஸ். அணையில் 23.078 டி.எம்.சி., கபினியில் 18.610 டி.எம்.சி., ஹாரங்கியில் 7.827 டி.எம்.சி. மற்றும் ஹேமாவதியில் 28.022 டி.எம்.சி. என மொத்தம் 77.537 டி.எம்.சி. மொத்த நீர் இருப்பு (பயன்பாட்டு நீர் இருப்பு 67.517 டி.எம்.சி.) உள்ளது. எனவே, விகிதாச்சார அடிப்படையில் பில்லிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கு நீரை தனது அணைகளில் இருந்து திறந்து விடுவதில் கர்நாடக அரசுக்கு எந்த சிரமமும் இருக்காது.</p><p>இதற்கிடையே, கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளின் நீர் பிடிப்புப்பகுதிகளில் அதிக மழை பெய்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.  மைசூர் அருகே உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து கடந்த 31-ந்தேதி வரை சீராக இருந்த நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் நீர்வரத்து விநாடிக்கு 15,500 கன அடியாக அதிரடியாக உயர்ந்தது. அணை மிக வேகமாக நிரம்பி வருகிறது.  அதன் பாதுகாப்பை முன்னிட்டு அணையில் இருந்து காவிரியில் அதிக அளவு நீர் திறந்து விடப்படுகிறது.</p>   <h2>விவசாயிகள் மகிழ்ச்சி</h2> <p>இதனால், கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து காவிரியில் திறந்துவிடப்பட்ட உபரிநீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது.  கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறந்துவிடப்படுகிறது.  தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டு, தமிழக எல்லையை வந்தடைந்த உபரிநீரின் அளவு ஆயிரம் கனஅடியாக அதிகரித்து உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.  இதனால், தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.</p><p>ஆற்றின் கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என முன்பே அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>  ]]></content:encoded></item><item><title>கரூரில் வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு; நெகிழ்ச்சி சம்பவம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/baby-shower-for-pet-dog-in-karur-resilience-incident</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/baby-shower-for-pet-dog-in-karur-resilience-incident#comments</comments><guid isPermaLink="false">fda3f8cf-ae94-49af-8de2-65874b5da000</guid><pubDate>Tue, 04 Aug 2026 01:27:50 +0000</pubDate><atom:updated>2026-08-04T01:27:50.427Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர்,Karur,உறவினர்கள்,Relatives,party,விருந்து,வளர்ப்பு நாய்,pet dog,Baby shower,Resilience,நெகிழ்ச்சி சம்பவம்,incident,வளைகாப்பு நிகழ்ச்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/okqpekrc/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நிகழ்ச்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/okqpekrc/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கரூர், </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">கரூர் </a>மாவட்டம், சோமூர் பகுதியில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D">வளர்ப்பு நாய்</a>க்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">வளைகாப்பு நிகழ்ச்சி</a> நடத்தி, உறவினர்களுக்கு விருந்து அளித்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D">நெகிழ்ச்சி சம்பவம்</a> நடந்தது.</p><h2>செல்ல நாய் சாராவுக்கு வளைகாப்பு</h2><p>கரூர் மாவட்டம், சோமூர் பகுதியை சேர்ந்தவர் கோமதி. இவர் தனது வீட்டில் சாரா என்னும் சிட்சு வகையிலான நாயை செல்லமாக வளர்த்து வருகிறார். சாராவின் மீது வீட்டில் உள்ள அனைவருக்கும் பாசம் அதிகம். இந்த நிலையில் சாராவிற்கு வருகிற 15 முதல் 20-ந் தேதிக்குள் குட்டி பிறக்க உள்ளது. இதையொட்டி கோமதி குடும்பத்தினர் நேற்று முன்தினம் அவர்களது வீட்டில் செல்ல நாய் சாராவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினர்.</p><h2>உறவினர்களுக்கு விருந்து</h2><p>அப்போது பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்படுவதுபோல. நாய் சாராவிற்கு தட்டுகளில் மிக்சர், பிஸ்கட், பழங்கள், பூக்கள், நாய்களுக்கென பிரத்யேகமாக வழங்கப்படும் உணவுகள் உள்ளிட்டவற்றை சீர்வரிசைகளாக கொண்டு வந்து வளைகாப்பு நடத்தப்பட்டது. இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கோமதியின் உறவினர்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு விருந்தும் அளிக்கப்பட்டது. வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சி அடைய செய்தது.</p>]]></content:encoded></item><item><title>நெல்லை: விக்கிரமசிங்கபுரம் அருகே தோட்டத்தில் இறந்து கிடந்த பெண் கரடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-female-bear-found-dead-in-an-orchard-near-vikramasingapuram</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-female-bear-found-dead-in-an-orchard-near-vikramasingapuram#comments</comments><guid isPermaLink="false">1d3bdfc4-f1b8-4292-bafe-e8b0e440e17d</guid><pubDate>Tue, 04 Aug 2026 01:26:53 +0000</pubDate><atom:updated>2026-08-04T01:26:53.720Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,கரடி,bear</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/yn1cvua6/3.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/yn1cvua6/3.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வனக்கோட்டம் வடமலைசமுத்திரம் கிராமம், இந்தியன் பெட்ரோல் நிலையம் பின்புறம் அமைந்துள்ள செய்யது சுலைமான் என்பவரின் தோட்டப்பகுதியில் சுமார் 8 வயதுடைய பெண் கரடி நேற்று மாலை 5 மணியளவில் திடீரென இறந்து கிடந்தது.</p><p>இதுகுறித்த தகவல் அறிந்தவுடன், துணை இயக்குனர் மற்றும் வன கால் நடை மருத்துவக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, விதிமுறைகளின்படி கரடியின் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. உடற்கூறு ஆய்வு மற்றும் ஆய்வகப் பரிசோதனை அறிக்கைகள் கிடைத்த பின்னர் கரடியின் உயிரிழப்பிற்கான காரணம் உறுதி செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலப்பு: மாணவர்கள் அதிர்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/human-waste-mixed-in-government-school-drinking-water-tank-students-shocked</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/human-waste-mixed-in-government-school-drinking-water-tank-students-shocked#comments</comments><guid isPermaLink="false">439e0c7e-f8b6-4232-91b7-ab4695ba29be</guid><pubDate>Tue, 04 Aug 2026 01:16:10 +0000</pubDate><atom:updated>2026-08-04T01:16:10.389Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசு பள்ளி,குடிநீர் தொட்டி,Government School,மனித கழிவு,Human Waste,drinking water tank</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/7pj23b5v/107.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/7pj23b5v/107.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><p>திண்டுக்கல் அருகே அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விஷமிகள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>அரசுப் பள்ளி</h2><p>திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அருகே தங்கம்மாபட்டியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.  இப்பள்ளியின் மாடியில் மாணவர்கள் பயன்படுத்துவதற்காக சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி உள்ளது. நேற்று மதியம் மாணவர்கள் தற்செயலாக மாடிக்கு சென்றுள்ளனர். அப்போது குடிநீர்  தொட்டியின் மேல் பகுதியில் எச்சரிக்கை என்ற தலைப்பில் ஒரு துண்டு சீட்டு ஒட்டப்பட்டு இருந்தது.</p><p>அதில், 'என் குடியை கெடுத்தால் பள்ளிக்கூடத்தில் அத்தனை பிள்ளைகளின் குடியை எல்லாம் கெடுத்துவிடுவேன். சும்மாவிடமாட்டேன். பள்ளி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை  கம்யூனிஸ்ட் காலீஸ்' என்று எழுதப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த மாணவர்கள் குடிநீர் தொட்டிக்குள் எட்டி பார்த்தனர். அப்போது. தொட்டிக்குள் பிளாஸ்டிக் கவரில் மனித கழிவு வைக்கப்பட்டு அது குடிநீரில் கலந்து இருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் உடனடியாக ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்தனர்.</p><h2>தீவிர விசாரணை</h2><p>பின்னர் பள்ளியின் தலைமையாசிரியை சந்திரபிரபா வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நிதிக்குமார் மற்றும் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்து குடிநீர் தொட்டியை பார்வையிட்டனர். மேலும், போலீசார் அங்கிருந்த ஆசிரியர்கள், மாணவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் குடிநீர் தொட்டியை மோப்பம் பிடித்தப்படி சிறிது தூரம் ஓடி சென்று படுத்துக்கொண்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">குடிநீர் தொட்டி</a>யில் பதிவாகி இருந்த கைரேகை பதிவுகள் சேகரிக்கப்பட்டன. மேலும் தொட்டியில் இருந்த குடிநீர் மாதிரியை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் செயலில் ஈடுபட்ட விஷமிகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-experiencing-power-outages-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-experiencing-power-outages-today#comments</comments><guid isPermaLink="false">e128cd64-86b6-4997-afed-5f6abe566be8</guid><pubDate>Tue, 04 Aug 2026 01:04:12 +0000</pubDate><atom:updated>2026-08-04T01:04:12.842Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மின் தடை,power cut</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/8xnyqjhs/ep.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/8xnyqjhs/ep.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னையில் 04.08.2026 (இன்று) காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். </p><h2>வேளச்சேரி</h2><p>சாரதி நகர், தாம்பரம் வேளச்சேரி பிரதான சாலை, மாதவமணி அவென்யூ, சீதாராம் நகர்.</p><h2>அடையாறு</h2><p>காந்தி மண்டபம் சாலை, சர்தார் பட்டேல் சாலை, கோட்டூர்புரம், ஸ்ரீ நகர் காலனி, வெங்கடாபுரம், சின்னமலை, தரமணி, எல்லையம்மன் கோயில் தெரு, காணகம், கலிகுன்றம், பள்ளிப்பட்டு, ஸ்ரீராம் நகர், நேரு நகர் 1வது முதல் 4வது தெருக்கள் வரை, கே.பி. நகர் 1 வது முதல் 5வது பிரதான சாலைகள், அடையாறு 6வது பிரதான சாலை, கோவிந்தராஜபுரம், பக்தவத்சலம் நகர் 1வது முதல் 5வது சாலைகள்.</p><h2>முடிச்சூர்</h2><p>அஷ்டலட்சுமி நகர், மகாலட்சுமி நகர், குமரன் நகர், ஏ.என். காலனி, மணிமங்கலம் பிரதான சாலை, சாஸ்திரி நகர், கணேசபுரம் பிரதான சாலை.</p><h2>மேடவாக்கம்</h2><p>பெரும்பாக்கம் சேகரன் மால், கைலாஷ் நகர், ஸ்ரீ பெருமாள் நகர், அந்தோணி நகர், பஜனை கோயில் தெரு, நுக்கம்பாளையம் சாலை, மாடம்பாக்கம் கண்ணதாசன் தெரு, கருணாநிதி 1வது முதல் 7வது தெருக்கள் வரை, விசாலாட்சி நகர், ஜான் தெரு, தாமஸ் தெரு, விக்னராஜபுரம் 6வது தெரு, கோபாலபுரம் நகர், விக்னராஜபுரம் மோஹி ப்ளோரன்ஸ், குரு கணேஷ் நகர், பார்த்தசாரதி நகர், பள்ளிக்கரணை, ராஜலட்சுமி நகர், வள்ளல் பாரி நகர், சாய் பாலாஜி நகர்,கிருஷ்ணா நகர், துளுக்காத்தம்மன் கோயில் பிரதான சாலை, அருண் நகர், வெங்கடேஸ்வரா நகர், ஜெயபால் நகர், மல்லிகேஸ்வரன் நகர், ஆதிசாமி நகர்.</p><h2>செயின்ட் தாமஸ் மவுண்ட்</h2><p>ராமர் கோயில் தெரு, மவுண்ட் பூந்தமல்லி சாலை, நசரத்புரம், கணபதி காலனி, வசந்தம் நகர், கலைஞர் நகர், தண்டுமா நகர், போலீஸ் குடியிருப்பு, செவன் ஹில்ஸ் தெரு, மீனம்பாக்கம், பாண்டியன் தெரு, மாரிசன் 1வது முதல் 6வது தெரு வரை, திருவள்ளுவர் நகர், எம்.கே.என் சாலை, குமரன் நகர், குளத்துமேடு, மாங்காளியம்மன் கோயில் தெரு, டிபன்ஸ் காலனி, பர்மா காலனி, கரையார் கோயில் தெரு, நார்த் பரேட் சாலை, இந்திரா நகர், அதிகாரி பயிற்சி அகாடமி, நேவி ரெசிடென்சி பகுதி, வுட்கிரீக் கன்ட்ரி, துளசிங்கபுரம், மாரியாபுரம், மாத்தியாஸ் நகர், ஐரோப்பியன் லைன், பஜார் சாலை, மேட்டு தெரு, ஆர்காட் பேட்டை, ஹாப்மேன் 1வது மற்றும் 2வது தெரு, வி.ஜி.பி முர்பி சதுக்கம், நோபல் தெரு, கண்ணன் காலனி, ஆசிரியர் காலனி, எம்.ஜி.ஆர் நகர்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.  </p> ]]></content:encoded></item><item><title>காரைக்குடியில் முதியோர் இல்லத்துக்கு ரூ.4.3 லட்சம் மின்கட்டணம் வந்ததால் அதிர்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/shocked-as-karaikudi-nursing-home-receives-rs43-lakh-electricity-bill</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/shocked-as-karaikudi-nursing-home-receives-rs43-lakh-electricity-bill#comments</comments><guid isPermaLink="false">338f686d-5e0c-4e08-a6bb-f836b0b794a3</guid><pubDate>Tue, 04 Aug 2026 01:03:38 +0000</pubDate><atom:updated>2026-08-04T01:03:38.533Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Karaikudi,காரைக்குடி,electricity bill,சிவகங்கை,Sivagangai,shock,அதிர்ச்சி,முதியோர் இல்லம்,அதிகம்,மின்கட்டணம்,high,Old age home</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/obyttbto/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்கட்டணம் குறித்த குறுஞ்செய்தி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/obyttbto/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை, </p><p>சிவகங்கை மாவட்டம், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">காரைக்குடி</a>யில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D">முதியோர் இல்லத்துக்கு </a>ரூ.4.3 லட்சம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D">மின்கட்டணம்</a> வந்ததால் அந்த இல்ல பொறுப்பாளர்கள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">அதிர்ச்சி</a> அடைந்தனர்.</p><h2>ரூ.4.3 லட்சம் மின்கட்டணம் வந்ததால் அதிர்ச்சி</h2><p>சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பர்மா காலனி பகுதியில் ஆதரவற்றவர்களுக்காகவும், முதியோர்களுக்காகவும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த முதியோர் இல்லத்திற்கான இந்த மாத மின்கட்டணம் ரூ.4 லட்சத்து 39 ஆயிரத்து 743 கட்ட வேண்டும் என குறுஞ்செய்தி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த காலங்களில் ரூ.7 ஆயிரம் வரை மின்கட்டணம் செலுத்தி வந்த நிலையில் தற்போது வந்த மின்கட்டண குறுஞ்செய்தி நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய செய்தது.</p><h2>மின்வாரிய அதிகாரி நடவடிக்கை</h2><p>இதுகுறித்து முதியோர் இல்ல காப்பாளர் பூங்கோதை மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக காரைக்குடி மின்வாரிய செயற்பொறியாளர் லதாதேவி உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில் மின்வாரிய கணக்கீட்டு பிரிவு அதிகாரிகள் முதியோர் இல்லத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது கணக்கீட்டு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்ட மென்பொருளில் (சாப்ட்வேர்) ஏற்பட்ட குளறுபடியே இந்த தவறுக்கு காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து முதியோர் இல்லத்திற்கான மின்கட்டணம் ரூ.15 ஆயிரத்து 205 என்று கணக்கிடப்பட்டு முதியோர் இல்ல காப்பாளருக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>தமிழக சட்டசபை நாளை கூடுகிறது: த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் - முக்கிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-legislative-assembly-convenes-tomorrow-tvk-government-to-present-its-first-budget-key-announcements-likely</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-legislative-assembly-convenes-tomorrow-tvk-government-to-present-its-first-budget-key-announcements-likely#comments</comments><guid isPermaLink="false">e404b42d-d8a5-4011-8950-35cf814e23f5</guid><pubDate>Tue, 04 Aug 2026 00:57:20 +0000</pubDate><atom:updated>2026-08-04T00:57:20.289Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,Legislative Assembly,பட்ஜெட்,Budget,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,தவெக அரசு,TVK Government</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/ed393rsz/1.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/ed393rsz/1.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>நாளை கூட இருக்கும் தமிழக சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><h2>தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி</h2><p>தமிழகத்தில் நடந்து முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. மே மாதம் 10-ந் தேதி, முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார். </p><p>இந்த நிலையில், த.வெ.க. அரசின் முதல் சட்டசபை கூட்டம் கடந்த ஜூன் மாதம் 18-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜூன் 19, 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. நிறைவு நாளில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பதிலுரை வழங்கினார். </p><h2>சட்டசபையில் நாளை பட்ஜெட் தாக்கல் </h2><p>4 நாட்கள் நடைபெற்ற சட்டசபை கூட்டம் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், 2026-2027-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக நாளை (புதன்கிழமை) சட்டசபை மீண்டும் கூடுகிறது. </p><p>காலை 10 மணிக்கு கூடும் சட்டசபை கூட்டத்தில், 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்கிறார். த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இதுவென்பதால், புதிய அறிவிப்புகள், திட்டங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><h2></h2><h2>வேளாண்மைக்கு தனி பட்ஜெட்</h2><p>நாளை மறுநாள் (6-ந் தேதி) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில் வேளாண்மைக்கு என்று தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அது த.வெ.க. ஆட்சியிலும் தொடர்கிறது. வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் வினோத் தாக்கல் செய்ய இருக்கிறார்.</p><p>அடுத்த சில நாட்கள், இரு பட்ஜெட் மீதான விவாதமும், அமைச்சர்களின் பதிலுரையும் இடம்பெறும். எத்தனை நாட்கள் என்பது, நாளை மதியம் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தலைமையில் நடைபெறும் அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.</p><h2>தேர்தல் அறிக்கையில் சொன்னது என்ன?</h2><p>பட்ஜெட் மீதான விவாதம் முடிந்தவுடன், தொடர்ந்து துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதமும் நடைபெற இருக்கிறது. மொத்தம் 55 துறைகள் இருப்பதால், ஒவ்வொரு நாளும் 2, 3 வீதம் எடுத்துக்கொள்ளப்பட்டு, சுமார் 1½ மாதங்கள் சட்டசபை கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது.</p><p>ஏற்கனவே, த.வெ.க. தேர்தல் அறிக்கையில், "குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500, ஆண்டுக்கு 6 இலவச எல்.பி.ஜி. சிலிண்டர்ககள், திருமணத்திற்கு 1 சவரன் தங்கம் மற்றும் பட்டுச்சேலை, ரூ.20 லட்சம் வரை கல்விக்கடன், குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் மருத்துவ காப்பீடு, ஆண்டுதோறும் இலவச முழு உடல் பரிசோதனை, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.4 ஆயிரம்" என பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.</p><h2></h2><h2>குழந்தைகளுக்கு தங்க மோதிரம் திட்டம்</h2><p>ஏற்கனவே, த.வெ.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற, பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் திட்டம் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.</p><p>இதேபோல், தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெற்ற 200 யூனிட் மின்சாரம் ஒரு மாதம் வழங்கப்பட்டுள்ளது. ரூ.75 ஆயிரம் வரையிலான பயிர் கடனும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மீதமுள்ள அறிவிப்புகளில் முக்கியமானவை பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>என்ஜினீயரிங்  முதல் சுற்று கலந்தாய்வு நிறைவு: 146 கல்லுாரிகளில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/engineering-first-round-consultation-completednot-a-single-seat-was-filled-in-146-colleges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/engineering-first-round-consultation-completednot-a-single-seat-was-filled-in-146-colleges#comments</comments><guid isPermaLink="false">e9d09156-1f18-4cd3-9cd0-c467f9532477</guid><pubDate>Mon, 03 Aug 2026 21:50:39 +0000</pubDate><atom:updated>2026-08-03T21:50:39.996Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>என்ஜினீயரிங் படிப்பு,Engineering Admissions,TNEA,TN engineering counselling,என்ஜினீயரிங்  கலந்தாய்வு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/9wv3dyfu/6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/9wv3dyfu/6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான முதல் சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. 26,851 இடங்களில் மாணவ-மாணவிகள் சேர்ந்திருக்கின்றனர். முதல் சுற்று நிறைவில் 146 கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பாத நிலை இருக்கிறது.</p><h2>என்ஜினீயரிங் கலந்தாய்வு</h2><p>என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் கலந்தாய்வு கடந்த மாதம் (ஜூலை) 20-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் சுற்று கலந்தாய்வு நேற்றுடன் நிறைவு பெற்றது. தற்காலிக ஒதுக்கீடு ஆணையை உறுதி செய்து கல்லூரிகளில் சேர்ந்தவர்கள் வாயிலாக எவ்வளவு இடங்கள் நிரம்பின என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, பொதுப்பிரிவில் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட 37,976 பேரில் 24,674 மாணவ-மாணவிகள் என்ஜினீயரிங் படிப்புகளை தேர்வு செய்து சேர்ந்திருக்கின்றனர்.</p><p>பொதுப்பிரிவில் மொத்தம் உள்ள 1 லட்சத்து 81 ஆயிரத்து 434 இடங்களில் 24 ஆயிரத்து 674 இடங்கள் நிரம்பியுள்ளன. அதாவது 13.6 சதவீ தம் இடங்களில் சேர்ந்துள்ளனர். அந்த வகையில் தற்போது 1 லட்சத்து 56 ஆயிரத்து 760 இடங்கள் காலியாக இருக்கின்றன.</p><p>முதல் சுற்று கலந்தாய்வில் பெரும்பாலும் கணினி அறிவியல் என்ஜினீயரிங் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் ஆகிய படிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இடங்களை தேர்வு செய்திருக்கின்றனர். அதேபோல் கோர் என்ஜினீயரிங் படிப்புகளிலும் மாணவ-மாணவிகள் சேர்ந்துள்ளனர். இதுதவிர, சுமார் 20 என்ஜினீயரிங் சார்ந்த பாடப்பிரிவுகளில் எந்த ஒரு இடத்தையும் மாணவ- மாணவிகள் தேர்வு செய்யாத நிலையும் இருக்கத்தான் செய்கிறது.</p><h2>146 கல்லூரிகளில்...</h2><p>கல்லூரிகளை பொறுத்தவரையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கிண்டி என்ஜினீயரிங் கல்லூரியில் 1,138 இடங்களும், சுய நிதி கல்லூரிகளில் கோவை கிருஷ்ணா கல்லூரியில் 1,638 இடங்களும் அதிகபட்சமாக நிரம்பியுள்ளன. 422 கல்லூரிகளில் 146 கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பாத நிலையையும் பார்க்க முடிகிறது.</p> <p>கட்-ஆப் மதிப்பெண்ணில் 200-க்கு 200 மதிப்பெண் எடுத்த 52 பேரில் 38 பேரும், 195 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்த 2,151 பேரில் 1,506 பேரும், 190 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்த 6,627 பேரில் 4,409 பேரும் முதல் சுற்றில் இடங்களை தேர்வு செய்துள்ளனர்.</p><p>இதில் 190 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தவர்களில் 2,218 பேர் இடங் களை தேர்வு செய்யாமல் இருந்துள்ளனர்.</p><p>பொதுப்பிரிவில் முதல் சுற்றில் வேகம் குறைந்துள்ள நிலையில், அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கான முதல் சுற்று கலந்தாய்வு விறுவிறுப்பாக நடந்திருக்கிறது. முதல் சுற்றில் பங் கேற்க தரவரிசையில் 1 முதல் 2,570 வரை இடம்பெற்றிருந்த அரசு பள்ளி மாணவ-மாணவிகள் அழைக்கப்பட்டனர். அவர்களில் 2,177 பேர் இடங்களை தேர்வு செய்து என்ஜினீயரிங் படிப்பை உறுதி செய்துள்ளனர். இவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே செலுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.</p><h2>26,851 இடங்கள் நிரம்பின</h2><p>ஆக மொத்தத்தில் முதல் சுற்றில் பொதுப்பிரிவில் 24,674 இடங்களும், 7.5 சதவீத ஒதுக்கீட்டில் 2,177 இடங்களும் என மொத்தம் 26 ஆயிரத்து 851 இடங்கள் நிரம்பியிருக்கின்றன.</p><p>இதனைத்தொடர்ந்து 2-வது சுற்று கலந்தாய்வு நேற்று முதல் ஆன்லைனில் தொடங்கியுள்ளது. பொதுப்பிரிவு தரவரிசையில் 37,977 முதல் 1,31,093 வரை இடம்பெற்றுள்ளவர்கள், 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கான தரவரிசையில் 2,571 முதல் 18,036 வரையில் இடம்பெற்றுள்ளவர்கள் அழைக் கப்பட்டிருக்கின்றனர். விருப்ப இடங்களைதேர்வு செய்ய நாளை (புதன்கிழமை) அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்பின்னர், தற்காலிக ஒதுக்கீடு பெறுவது. அதனை உறுதி செய்வது, கல்லூரிகளில் சேருவது என வருகிற 17-ந்தேதி வரை இந்த 2-வது சுற்று கலந்தாய்வு நடக்கிறது.</p> <h2>என்ஜினீயரிங் படிப்புகளுக்கான இடங்கள் அதிகரிப்பு</h2><p>என்ஜினீயரிங் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வில் கடந்த ஆண்டு (2025) இருந்த இடங்களை காட்டிலும் நடப்பாண்டில் (2026) இடங்கள் அதிகரிக்கப்பட்டு இருக்கின்றன. கடந்த ஆண்டு 425 கல்லூரிகளில் இருந்து 1 லட்சத்து 73 ஆயிரத்து 241 இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டன. நடப்பாண்டில் 422 கல்லூரிகளில் 1 லட்சத்து 81 ஆயிரத்து 436 இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப் பட்டு வருகிறது.</p><p>அதாவது கடந்த ஆண்டைவிட 8 ஆயிரத்து 195 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள் ளன. இதில் முக்கிய பாடப்பிரிவுகளான கணினி அறிவியல் மற்றும் என்ஜினீய ரிங், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங், கணினி அறிவியல் மற்றும் என்ஜினீயரிங் (ஏ.ஐ. மற்றும் மெஷின் லேனிங்), செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல், தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் போன்றவற்றில் இடங்கள் உயர்த்தப்பட்டிருக்கின்றன.</p><p>கணினி அறிவியல் மற்றும் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் என் ஜினீயரிங், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் போன்ற பாடப்பிரிவு களில் கடந்த ஆண்டைவிட அதிகபட்சமாக சுமார் 2 ஆயிரம் இடங்கள் வரை உயர்த்தியிருக்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>‘காவிரி விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் விஜய் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டும்’ - நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-must-convene-an-all-party-meeting-regarding-the-cauvery-issue-nainar-nagendran-urges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-must-convene-an-all-party-meeting-regarding-the-cauvery-issue-nainar-nagendran-urges#comments</comments><guid isPermaLink="false">ea478e57-adac-4b1d-b568-572788961a09</guid><pubDate>Mon, 03 Aug 2026 16:34:29 +0000</pubDate><atom:updated>2026-08-03T16:34:29.471Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/g2gnbunv/State-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/g2gnbunv/State-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில், சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை உருவச்சிலைக்கு பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அவர் கூறியதாவது;-</p><p>“மேகதாதுவில் கர்நாடக அரசு ஒருபோதும் அணை கட்ட முடியாது. காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளையும் அழைத்து முதல்-அமைச்சர் விஜய் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். சட்டம் ஒழுங்கை பொறுத்தவரை, தமிழகத்தில் தற்போது த.வெ.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>ஆடிப்பெருக்கு விழா: பவானிசாகர் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aadi-perukku-festival-tourists-flock-to-bhavanisagar-dam-park</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aadi-perukku-festival-tourists-flock-to-bhavanisagar-dam-park#comments</comments><guid isPermaLink="false">6f4247cb-c044-40e3-b1c1-916c05dca184</guid><pubDate>Mon, 03 Aug 2026 16:20:00 +0000</pubDate><atom:updated>2026-08-03T16:20:00.242Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பவானிசாகர்,Aadi festival,ஆடிப்பெருக்கு விழா,Bhavani Sagar Dam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/3wkh2lzw/State-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/3wkh2lzw/State-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>விவசாயம் செழிக்கவும், நாடு வளம்பெறவும் முக்கிய ஆதாரமான நீர்நிலைகளை போற்றி வழிபடும் 'ஆடிப்பெருக்கு விழா', ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான ஆடி 18– ம் தேதி கொண்டாப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் ஆகஸ்டு 3-ந்தேதி (இன்று) ஆடிப்பெருக்கு சீறும் சிறப்புமாக கொண்டாடப்பட்டு வருகிறது.</p><p>ஆடிப்பெருக்கு விழாவையொட்டி ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பவானிசாகர் அணை பூங்காவிற்கு வருகை தந்தனர். பூங்காவில் படகில் சவாரி செய்தும், சிறுவர் ரெயில் உள்ளிட்ட பொழுதுபோக்கு சாதனங்களில் விளையாடியும் குழந்தைகள் உற்சாகமாக பொழுதைக் கழித்தனர். சுற்றுலா பயணிகளின் வருகையால் பவானிசாகர் பூங்கா களைகட்டியது. </p>]]></content:encoded></item><item><title>கடன் தள்ளுபடி: சென்னையில் நாளை 15-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் காத்திருப்பு போராட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/loan-waiver-over-15-farmers-associations-to-hold-sit-in-protest-in-chennai-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/loan-waiver-over-15-farmers-associations-to-hold-sit-in-protest-in-chennai-tomorrow#comments</comments><guid isPermaLink="false">2b81d6d0-09a3-4e9a-8486-75ae86cbe749</guid><pubDate>Mon, 03 Aug 2026 16:10:45 +0000</pubDate><atom:updated>2026-08-03T16:10:45.315Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,காத்திருப்பு போராட்டம்,கடன் தள்ளுபடி,Loan Waiver,விவசாய சங்கங்கள்,From tomorrow</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/04uhpwzw/masilamani.jpg" width="682"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விவசாய சங்கங்கள் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/04uhpwzw/masilamani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சாமி நடராஜன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன் முருகசாமி ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:-</p><h2>தேர்தலல் வாக்குறுதி</h2><p>மாநிலம் முழுவதும் விவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவு பயிர் கடனில் 5 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு முழுகடன் தள்ளுபடியும், 5 ஏக்கருக்கு மேல் கடன் பெற்ற விவசாயிகள் கடனில் பாதி தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதி கொடுத்து, தேர்தலில் வெற்றி பெற்று முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்.</p><h2> ஏமாற்றம்</h2><p> தேர்தல் வாக்குறுதிப்படி கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்யாமல், முதலில் 50 ஆயிரம் வரை கடன் பெற்றவர்களுக்கு முழு தள்ளுபடி என்றும், அதற்கு பின் பல்வேறு விவசாய சங்கங்களின் போராட்டங்களுக்கு பிறகு அடுத்த அறிவிப்பில், 75000 வரை கடன் பெற்ற சிறு-குறு விவசாயிகளுக்கு முழு தள்ளுபடி என்றும், 75 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு கடன் பெற்ற தொகையில் வெறும் ரூ.35000 தள்ளுபடி என்றும் அறிவித்தது விவசாயிகளுக்கு மிகப் பெரிய ஏமாற்றமாகும்.</p> <h2>தள்ளுபடி </h2><p>எனவே, தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிபடி கூட்டுறவு பயிர் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">விவசாயிகள் சங்கங்களின்</a> சார்பில் தினந்தோறும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மாநில முதல்-அமைச்சர் இதனை கணக்கில் எடுத்து பயிர்க்கடனை இதுவரை தேர்தல் கால வாக்குறுதிப்படி தள்ளுபடி செய்வதற்கான எந்த அறிவிப்பும் வெளியிடாதது விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றமளிக்கிறது.</p><h2>காத்திருப்பு போராட்டம் </h2><p>எனவே, 15க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கங்களின் சார்பில் நாளை சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்திடுவதென்று முடிவு செய்துள்ளோம். இந்த பெருந்திரள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் அனைத்து பகுதி விவசாயிகளும், விவசாய சங்கங்களும், பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம். விவசாயிகளுடைய கடன் தள்ளுபடிக்கான <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">காத்திருப்பு போராட்டத்திற்கு</a> அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>லிவ்-இன் உறவுகளுக்கும் 498ஏ சட்டப் பாதுகாப்பு: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/498a-legal-protection-for-live-in-relationships-supreme-court-verdict</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/498a-legal-protection-for-live-in-relationships-supreme-court-verdict#comments</comments><guid isPermaLink="false">d6556504-ee0d-4329-8ed8-846bed74920b</guid><pubDate>Mon, 03 Aug 2026 16:10:26 +0000</pubDate><atom:updated>2026-08-03T16:10:26.257Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமணம்,சுப்ரீம் கோர்ட்டு,SupremeCourt,WomenRights,SupremeCourtRuling</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/0k18kw85/court33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சுப்ரீம் கோர்ட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/0k18kw85/court33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><p>திருமணத்தை போன்ற தன்மையுடைய லிவ்-இன் உறவுகளுக்கும் இந்திய தண்டனை சட்டத்தின் 498ஏபிரிவின் பாதுகாப்பு பொருந்தும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.</p><p>கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர், தான் ஒருவருடன் லிவ்-இன் உறவில் இருந்த போது, அவர் தனது முந்தைய திருமணத்தை மறைத்து தன்னிடம் வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தியதாகவும், உடல்ரீதியான காயம் ஏற்படுத்தியதாகவும் கூறி 498ஏ பிரிவின் கீழ் வழக்கு தொடர்ந்தார்.</p><p>நாங்கள் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதால் இந்த சட்டம் என் மீது பாயாது" எனக் கூறி அந்த நபர் கர்நாடக ஐகோர்ட்டில் அந்த பெண்ணின் மனுவை தள்ளுபடி செய்யக் கோரினார். ஆனால், கர்நாடக ஐகோர்ட்டு அந்த நபரின் கோரிக்கையை நிராகரித்ததை அடுத்து, அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். </p><p>அந்த வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், <a href="https://www.dailythanthi.com/search?q=supreme%20court">சுப்ரீம் கோர்ட்டு</a> நீதிபதிகள் நோங்மெய்கபம் கோதிஸ்வர் சிங் மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.</p><p>அதில், திருமணம் செய்துகொள்ளும் நோக்கம் நிரூபிக்கப்பட்டு 'லிவ்-இன்' உறவில் இருப்பவர்களுக்கு இந்த உத்தரவு கண்டிப்பாகப் பொருந்தும்.</p><p>இதன் பொருள், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 498ஏ-இன் கீழ், அதன் வரம்பு லிவ்-இன் உறவில் இருக்கும் பெண்களையும் உள்ளடக்கும் வகையில் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>அதேபோல, சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்துகொண்ட பெண்ணுக்குக் கொடுமை நேர்ந்தால் அதற்கு எதிரான பாதுகாப்பு கிடைப்பதைப் போன்றே, திருமண உறவைப் போன்ற லிவ்-இன் உறவில் இருக்கும் பெண்ணுக்கு அத்தகைய பாதுகாப்பு கிடைக்காமல் போவது அரசியலமைப்புக்கு முரணானது.அது அரசியலமைப்பின் 14-வது பிரிவை மீறுவதாகும்.</p><p>கணவர் அல்லது கணவரின் குடும்பத்தினரால் மனரீதியான, உடல்ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாவது அல்லது அப்பெண்ணைத் தற்கொலைக்குத் தூண்டுதல் போன்ற குற்றங்களிலிருந்து பாதுகாப்பு அளிப்பதே சட்டப்பிரிவு 498ஏ-வின் நோக்கமாகும். இந்த நிலையில், அதுபோன்ற துன்புறுத்தல்கள் திருமணத்திற்குப் பின் மட்டுமே நிகழும், அதற்கு முன் நிகழாது எனக் கூறுவது மிகைப்படுத்தப்பட்ட கண்ணோட்டம் என்பதே எங்களின் கருத்து.</p><p>திருமணம் செய்யும் நோக்கத்துடன் நீண்டகாலம் இணைந்து வாழ்ந்தது நிரூபிக்கப்பட்டால், கணவர் அல்லது அவரது குடும்பத்தினரின் கொடுமைக்கு எதிரான 498ஏ சட்டப் பாதுகாப்பை லிவ்-இன் உறவில் உள்ள பெண்களும் பெறலாம் என நீதிபதிகள் அதிரடி தீர்ப்பை வழங்கினர்.</p>]]></content:encoded></item><item><title>கபினி அணையில் நீர்திறப்பு வினாடிக்கு 30,000 கன அடியாக அதிகரிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-discharge-from-kabini-dam-increased-to-30000-cubic-feet-per-second</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-discharge-from-kabini-dam-increased-to-30000-cubic-feet-per-second#comments</comments><guid isPermaLink="false">dffee968-f146-40c8-a377-36c1a3eeed9c</guid><pubDate>Mon, 03 Aug 2026 16:04:20 +0000</pubDate><atom:updated>2026-08-03T16:04:20.006Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கபினி அணை,நீர்திறப்பு,Kabini Dam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/lomzmwz4/State-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/lomzmwz4/State-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பெங்களூரு,</p><p>காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், கர்நாடகாவில் உள்ள முக்கிய அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்) அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு மின்னல் வேகத்தில் எகிறியுள்ளது. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>மைசூர் அருகே உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து கடந்த 31-ந்தேதி வரை சீராக இருந்த நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் நீர்வரத்து விநாடிக்கு 15,500 கன அடியாக அதிரடியாக உயர்ந்தது. அணை மிக வேகமாக நிரம்பி வருவதால், அதன் பாதுகாப்பை வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.</p><p>கடல் மட்டத்தில் 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையும் நிரம்பும் தருவாயில் உள்ளது. நேற்று காலை நிலவரப்படி அந்த அணையின் நீர்மட்டம் 2,282 அடியாக இருந்தது. அதாவது இந்த அணையில் 19.52 டி.எம்.சி. நீர் தேக்கி வைக்க முடியும். நேற்றைய நிலவரப்படி அணையில் 18.21 டி.எம்.சி. நீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 27 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் திறக்கப்பட்டது.</p><p>இந்த நிலையில், கபினி அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 30,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கபினி அணைக்கு வரும் நீர் மொத்தமும் திறந்து விடப்படுவதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>5 ஆண்டுகளில் இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் - ஆதவ் அர்ஜுனா நம்பிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-to-become-indias-sports-capital-in-5-years-adhav-arjuna-hope</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-to-become-indias-sports-capital-in-5-years-adhav-arjuna-hope#comments</comments><guid isPermaLink="false">25bb21b1-622a-4645-953f-4075e3ac93a2</guid><pubDate>Mon, 03 Aug 2026 16:03:10 +0000</pubDate><atom:updated>2026-08-03T16:03:10.004Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,இந்தியா,India,ஆதவ் அர்ஜுனா,தலைநகரம்,Capital,விளையாட்டுSports,All over Tamil Nadu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/sy9edhb1/adav.jpg" width="682"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜுனா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/sy9edhb1/adav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்தியாவில் ஊழல் இல்லாத முதல் மாநிலம் தமிழ்நாடு, ஊழல் இல்லா தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அனைத்து முதலீட்டாளர்களும் வரவேண்டும், நாங்கள் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருகிறோம்.</p> <p>முதல்-அமைச்சர் நம்பியுள்ளார்</p><p>கடந்த கால ஆட்சியில் கட்சி நிதி என்ற பெயரில் வாங்கிய ஊழலை நாங்கள் ஒழித்துள்ளோம். தமிழ்நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் தான் என<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D"> முதல்-அமைச்சர்</a> நம்பியுள்ளார் அதன் அடிப்படையில் இளைஞர்களுக்கான பல அறிவிப்புகள் பட்ஜெட்டில் இருக்கும். </p><p>சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்திய தொழில் கூட்டமைப்பின் சி.ஐ.ஐ சார்பில் "தமிழ்நாடு உட்கட்டமைப்பு உச்சி மாநாடு 2026" நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.</p><p>அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மேடையில் பேசியதாவது:-</p><h2>சமூக நீதி</h2><p>அரசியல் ரீதியாக அண்ணாதுரையின் திராவிட நோக்கமான சமத்துவத்தை வைத்து அதிலிருந்து அரசியலாக மாறி அரசு அனைவருக்கும் கல்வி, சமூக நீதி, பொருளாதார விடுதலை அனைவருக்கும் சமமாக கிடைக்க செயல்பட்டு வருகின்றோம். ஜாதி,மத,வேறுபாடு இல்லாமல் அரசு அனைவருக்கும் என்ற சிந்தனையோடு செயல்பட்டு வருகிறோம். எம்ஜிஆர், அண்ணா நோக்கத்தில் இந்த அரசு உருவாகியுள்ளது.</p><h2>அரசியல் சண்டை</h2><p>கர்நாடகாவில் காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் அரசியல் சண்டை நடக்கிறது, ஆனால் நம்மிடம் வளர்ச்சி என்ற நோக்கத்தில் புது மாற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும், சம உரிமைக்காகவும் வாய்ப்பு வழங்கியுள்ளார்கள். ஊழல் இல்லாத ஆட்சியை வழங்க வேண்டும் என மக்கள் வாய்ப்பு வழங்கியுள்ளார்கள். கலைஞர், ஜெயலலிதாவிற்கு பிறகு மக்கள் புது தலைவரை தேர்ந்தெடுத்துள்ளார்கள். </p><h2>உரிமை</h2><p>பெண்கள், இளைஞர்கள் புது மாற்றத்தை தந்துள்ளார்கள். மக்கள் புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளார்கள். புதிய அரசு மக்கள் எதிர்பார்ப்பு என்று சொல்வதை விட மக்களின் உரிமையாக அரசு அமைந்துள்ளது. </p><h2>நோக்கம் தேவை</h2><p>வளர்ச்சியை நோக்கி செல்ல வேண்டுமானால் நமக்கு நோக்கம் தேவை, நோக்கம் இருக்க வேண்டும் என்றால் வெளிப்படை தன்மையான அரசு இருக்க வேண்டும்;நம் அரசு வெளிப்படைத் தன்மையோடு செயல்படும் அரசாக செயல்பட்டு வருகிறது. ஒரு அரசின் செயல்பாட்டிற்கு உள்கட்டமைப்பு மிகவும் முக்கியம். போக்குவரத்து, தொழில்நுட்பம், வணிகம் இது மூன்றும் ஒரு அரசுக்கு மிகவும் முக்கியம்.. இந்த மூன்று துறையிலும் தமிழ்நாடு அரசு வெளிப்படை தன்மையோடு செயல்பட்டு வருகிறது. </p><h2>ஊழல் இல்லாத முதல் மாநிலம் </h2><p>கடந்த கால ஆட்சியில் கட்சி நிதி என்ற பெயரில் வாங்கிய ஊழலை நாங்கள் ஒழித்துள்ளோம். சலுகையின் முக்கிய பிரச்னை ஊழல். கடந்த 80 நாட்களில் அனைத்து வசதிகளையும் இணையவழி மூலமே பெறும் வழிவகையை முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார். இந்தியாவில் ஊழல் இல்லாத முதல் மாநிலம் தமிழ்நாடு; ஊழல் இல்லா தமிழ் நாட்டில் முதலீடு செய்ய அனைத்து முதலீட்டாளர்களும் வரவேண்டும், நாங்கள் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருகிறோம்.</p><h2>தமிழ்நாடு வளர்ச்சி</h2><p>தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களிலோ, அமைச்சரின் அலுவலகங்களிலோ காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அனைத்து கோப்புகளுக்கும் நாங்கள் ஒத்துழைப்பு தருகிறோம். உங்களுடைய முதலீட்டால் தமிழ்நாடு இளைஞர்களுக்கு புது வேலை கிடைக்கும். தமிழ்நாட்டில் 19% வேலை வாய்ப்பு இல்லாதவர்கள் உள்ளார்கள், மூன்று வருடங்களில் சிறந்த முதலீட்டை தமிழ்நாட்டில் செய்தால் 400 சதவீதம் உள்கட்டமைப்பில் தமிழ்நாடு வளர்ச்சி பெறும். </p><h2>கண்டிப்பாக செய்வோம்</h2><p>*இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கிய எங்கள் முதல்-அமைச்சர் அதை தூக்கிப் போட்டுவிட்டு அரசியலுக்கு வந்துள்ளார் என்றால் அவருக்கு பணம் ஒரு முக்கிய விஷயம் இல்லை என்று தான் அர்த்தம். அமைச்சர்களாகிய நாங்கள் ஒரு ரூபாய் தேர்தலுக்கு செலவு செய்யவில்லை. தமிழக தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக சாதி, மதம், பணம் என எதுவும் இன்றி வாக்களித்துள்ளார்கள், என்ன வாக்குறுதி கொடுத்தோமோ அதை மக்களுக்கு கண்டிப்பாக செய்வோம். தவறு செய்தால் மக்கள் தூக்கி எறிந்து விடுவார்கள் என நன்கு அறிவோம்.  </p><h2> பல மாற்றம் </h2><p>80 நாளில் என்ன செய்தீர்கள் என கேள்வி கேட்கிறார்கள், பத்திரப்பதிவுத்துறை, கட்டுமானத் துறை, உணவுத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளில் 50 ஆண்டுகள் இல்லாத பல மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. </p> <h2>ஐஐடியின் ஆய்வு</h2><p>சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம், உள்ளிட்ட எல்லாவற்றையும் பொதுப்பணித்துறை தான் கட்டியுள்ளது. கடந்த 10 முதல் 15 ஆண்டுகளில் கட்டிய கட்டிடங்களை ஆய்வு செய்தால் 10 வருடங்களில் கீழே விழுந்து விடும் என்று ஐஐடியின் ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரிட்டிஷ்காரர்கள் கட்டிய கட்டிடம் எப்படி உள்ளது, இப்போது கட்டிய கட்டிடம் எப்படி உள்ளது என்பதை பார்க்க வேண்டும். எந்தத் திட்டமும் இல்லாமல் கட்டிடத்தை கடந்த கால ஆட்சியாளர்கள் கட்டியுள்ளார்கள். வருகிற பட்ஜெட்டில் முதல்-அமைச்சரும், அமைச்சரவையும் பலவற்றை அறிவிக்க உள்ளோம். ஒரு திட்டத்தை கொண்டு வந்தால் அடுத்த 50 வருடத்திற்கு அது செயல்பட வேண்டும் என திட்டமிட்டு செயல்படுகிறோம்.</p> <h2>ஊழல்</h2><p>நெடுஞ்சாலை துறையில் 21,000 கோடி ஒதுக்கினால், அதில் 30 முதல் 40 சதவீதம் நிதி பேட்ச் வொர்க், பழுதுபார்த்தல் செய்துள்ளார்கள். ஏனென்றால் அதில் தான் ஊழலை கண்டுபிடிக்க முடியாது. தொகுப்புப் பணி என கூறி 35 சதவீதம் அதில் ஊழல் செய்துள்ளார்கள். </p> <h2>ஆறு வருடம்</h2><p>சிங்கப்பூரில் ஒரு சாலை அமைத்தால் அது ஆறு வருடம் இருக்க வேண்டும் என சொல்கிறார்கள், அப்படி இல்லையெனில் அந்த சாலைக்கு ஒப்பந்ததாரர் தான் பொறுப்பு என்று உள்ளது. ஆனால் இங்கு அப்படி இல்லை சில சாலைகள் போடாமலேயே போட்டுள்ளார்கள் என கூறியுள்ளார்கள். </p> <h2>உண்மை</h2><p>கடன் வாங்கி எந்த கேப்பிட்டல் ஒர்க்கும் நடைபெறவில்லை. அமைப்பு முற்றிலும் தவறானது, இதையெல்லாம் கண்டுபிடிக்க கூடாது என்பதால் தான் அரசியல் ரீதியாக பல திசை திருப்பும் வேலையை செய்கிறார்கள். நிச்சயம் தவறை கண்டறிந்து உண்மையை வெளிக்கொண்டு வருவோம். </p><h2>புதிய நோக்கம்</h2><p>*சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு 3 மணி நேரத்தில் செல்லக்கூடிய வகையில் சாலை அமைக்க வேண்டும்.*பெரிய பெரிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இருக்கும், ஒரு புதிய பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் இருக்கும். ஒவ்வொரு துறையும் ஒரு புதிய நோக்கத்தை, இலக்கை நோக்கிய அறிவிப்பாக இருக்கும். </p> <h2>இளைஞர்களுக்கான பல அறிவிப்புகள்</h2><p>தமிழ்நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் தான் என முதல்-அமைச்சர் நம்பியுள்ளார், அதன் அடிப்படையில் இளைஞர்களுக்கான பல அறிவிப்புகள் பட்ஜெட்டில் இருக்கும். கடந்த ஐந்து ஆண்டு<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D"> பட்ஜெட்</a> எடுத்தால் கூறிய பட்ஜெட்டையே மீண்டும் காபி செய்து கூறுவார்கள். </p> <h2>விளையாட்டு தலைநகரம்</h2><p> வடக்கு மற்றும் தென் மாவட்டங்களில் பெண்களின் பங்களிப்பு குறைவாக உள்ளது. தர்மபுரி, கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி இந்தப் பகுதிகளில் பெண்கள் இன்றளவும் உயர்கல்வி படிக்காமல் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் என தெரிவித்தார்.</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>