<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 20 Sep 2026 09:47:52 +0000</lastBuildDate><item><title>ஓடும் ரெயிலில் ஏறிய போது விபரீதம்...மின்னல் வேகத்தில் மீட்ட காவலர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/disaster-struck-while-boarding-a-moving-train-a-police-officer-rescued-the-person-with-lightning-speed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/disaster-struck-while-boarding-a-moving-train-a-police-officer-rescued-the-person-with-lightning-speed#comments</comments><guid isPermaLink="false">c280d570-7c53-40db-8a82-531a849ec898</guid><pubDate>Sun, 20 Sep 2026 09:46:42 +0000</pubDate><atom:updated>2026-09-20T09:46:42.108Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,பயணி,Egmore,Railway,எழும்பூர் ரயில் நிலையம்,station,தவறி விழுந்த</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/im23mla4/1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரயிலில் தவறி விழுந்த பயணி மீட்ட காவலர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/im23mla4/1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>எழும்பூர்,</p><p>ஓடும் ரெயிலில் ஏறிய போது தவறி விழுந்த பயணியை மின்னல் வேகத்தில் சென்று காப்பாற்றிய காவலரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன.</p> <h2>உயிர் காப்பாற்றிய காவலர்</h2><p>சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று காலை 8 மணியளவில் 7-வது நடைமேடையில் இருந்து திருச்சி நோக்கி சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டுச் சென்றது. ரெயில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தபோது, ஆண் பயணி ஒருவர் ரெயிலின் பின்புறத்தில் இருந்த முன்பதிவு இல்லாத பொதுப்பெட்டியில் அவசரமாக ஏற முயன்றார். </p><p>அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கால் தவறி, நடைமேடைக்கும் ரெயிலுக்கும் இடையேயான இடைவெளியில் விழுந்தார். <a href="https://www.dailythanthi.com/topic/ரெயில்">ரெயிலுடன்</a> இழுத்துச் செல்லப்பட்ட அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிக்கிக்கொண்டார்.</p><h2>பாராட்டு</h2><p>அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆர்பிஎப் 12-வது பட்டாலியனைச் சேர்ந்த காவலர் தீபக், இதனை கவனித்ததும் உடனடியாக ஓடிச்சென்று, சிறிதும் தாமதிக்காமல் பயணியைப் பிடித்து மேலே இழுத்து பத்திரமாக மீட்டார். காவலர் </p><p>தீபக்கின் துரிதமான மற்றும் துணிச்சலான செயலால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, பயணியின் உயிர் காப்பாற்றப்பட்டது. அவரது துணிச்சலான செயலுக்கு ரயில்வே அதிகாரிகள் மற்றும் சக காவலர்கள் <a href="https://www.dailythanthi.com/topic/பாராட்டு">பாராட்டு</a> தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>
த.வெ.க. ஆட்சி சரியில்லை என்றால், நான் கேள்வி கேட்பேன்:  நடிகர் பிரகாஷ் ராஜ்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-dmk-rule-is-not-right-i-will-question-prakash-raj</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-dmk-rule-is-not-right-i-will-question-prakash-raj#comments</comments><guid isPermaLink="false">71a3152f-4d28-4795-a6a3-0054ec974b59</guid><pubDate>Sun, 20 Sep 2026 09:28:48 +0000</pubDate><atom:updated>2026-09-20T09:28:48.820Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>த.வெ.க.,actor Prakash Raj,நடிகர் பிரகாஷ் ராஜ்,TVK Government</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/f5u7x6bc/tpgap.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/f5u7x6bc/tpgap.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>திருச்சி</p><p>த.வெ.க. ஆட்சி சரியில்லை என்றால், நான் கேள்வி கேட்பேன் என <a href="https://www.dailythanthi.com/news/india">நடிகர் பிரகாஷ் ராஜ்</a> கூறியுள்ளார்.</p><p>தமிழகத்தில் கடந்த ஏப்ரலில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க. ஆட்சியமைத்து உள்ளது.  முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்று உள்ளார்.  இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் திருச்சியில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார்.</p> <p>அப்போது அவரிடம் தமிழக அரசின் செயல்பாடுகள் பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டன.  இதற்கு பதிலளித்து பேசிய அவர், முதல்-அமைச்சர் விஜய், அவருக்கு வாக்களித்தவர்கள் மட்டுமின்றி, வாக்களிக்காதவர்களுக்கும் முதல்-அமைச்சராக இருக்கிறார்.  அவருக்கு காலஅவகாசம் தர வேண்டும்.  அவருடைய அரசின் செயல்பாடுகள் பற்றி விமர்சிக்கும் முன்பு, ஓராண்டாவது அவர்களுக்கு நேரம் தர வேண்டும் என்றார்.</p><h2>பிடிக்கவில்லை என்பதற்காக..</h2><p>எனக்கு விஜய் பற்றி நிறைய சந்தேகங்கள் உள்ளன.  நான், தேர்தலுக்கு முன்பு கூட அதுபற்றி பேசியிருக்கிறேன்.  ஆனால், அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்து உள்ளனர்.  அதன்பின், 120 நாட்களே ஆகியுள்ளன.</p>  <p>அதனால், அதற்குள் எந்த முடிவுக்கும் நாம் வந்து விட முடியாது.  அவர்களுக்கு நாம் நேரம் அளிக்க வேண்டும்.  ஓராண்டுக்கு பின்னரும் அவர்களின் செயல்பாடுகள் சரியில்லை என்றால், அவர்களை நான் கேள்வி கேட்பேன் என்றார்.</p><p>அவர்களை உடனடியாக நாம் விமர்சிக்க வேண்டிய அவசியம் கிடையாது.  ஆட்சியில் இருப்பவர்களை நமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக, உடனே போய் நாம் விமர்சிக்க கூடாது.  ஜனநாயகம் மற்றும் வாக்களித்த மக்களை நாம் மதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>மதுரை அருகே காலை உணவு திட்ட கூடத்தில் லட்சக்கணக்கில் முறைகேடு? தவெக எம்.எல்.ஏ.  ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-breakfast-program-funds-scam-allegations</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-breakfast-program-funds-scam-allegations#comments</comments><guid isPermaLink="false">203e6fd2-f5b6-4d7f-93e3-34409e66bf7d</guid><pubDate>Sun, 20 Sep 2026 09:26:26 +0000</pubDate><atom:updated>2026-09-20T09:26:26.954Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,ஆய்வு,inspection,முறைகேடு,காலை உணவு திட்டம்,tvk mla,Chief Minister Breakfast Scheme,தவெக எம்.எல்.ஏ.</media:keywords><media:content height="360" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/m222w2xn/karupaaiah.jpg" width="640"><media:title type="html"><![CDATA[ தவெக எம்.எல்.ஏ. கருப்பையா]]></media:title><media:description type="html"><![CDATA[ மதுரை அருகே காலை உணவு திட்ட கூடத்தில் லட்சக்கணக்கில் முறைகேடு? தவெக எம்.எல்.ஏ.  ஆய்வு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/m222w2xn/karupaaiah.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே முதல்-அமைச்சரின் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">காலை உணவு திட்ட</a> விரிவாக்க கூட பணிகளில் லட்சக்கணக்கில் நிதியை கையாடல் செய்து பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக அதிர்ச்சி புகார் எழுந்துள்ளது.</p><h2>அதிர்ச்சி தரும் பில்!</h2><p>தமிழக அரசு சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்காக முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தேவசேரி அரசு பள்ளி வளாகத்தில் காலை உணவு திட்டத்திற்காக சமையல் கூடம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தில் மின்சார வசதிகள் செய்வதற்காக போடப்பட்ட பில்கள் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளன.</p><p>அங்கு புதிதாக வெறும் 4 மின் விளக்குகள் மற்றும் 1 எக்சாஸ்ட் பேன் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், இதற்கு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் தரப்பில் ரூ.33,000 பில் போட்டு மோசடி செய்துள்ளதாக பகிரங்க குற்றச்சாட்டு எழுந்துள்ளது.</p><h2>ரூ.10.63 லட்சம் கையாடல்?</h2><p>தேவசேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மொத்தம் 19 மையங்களில் இந்த உள்கட்டமைப்பு மற்றும் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த 19 மையங்களுக்கும் சேர்த்து ஒட்டுமொமாக வெறும் ரூ.3 லட்சம் மட்டுமே உண்மையாக செலவழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், கணக்கு காட்டும் போது ரூ.10.63 லட்சம் வரை போலி பில்கள் தயாரித்து அதிகாரிகள் முறைகேடு செய்துள்ளதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><h2>எம்.எல்.ஏ. ஆய்வு</h2><p>மாணவர்களின் உணவு திட்ட பணியில் லட்சக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாக வந்த தகவலையடுத்து, சோழவந்தான் தொகுதி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95">தமிழக வெற்றி கழகத்தின் </a>சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள மின் விளக்குகள், பேன் மற்றும் கட்டுமான பணிகளின் தரத்தை பார்த்து அதிர்ந்து போன அவர், அதற்குரிய பில்களையும் அதிகாரிகளிடம் கேட்டு ஆய்வு செய்தார். </p><p>இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, தவறு செய்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆசிய விளையாட்டில் இரட்டை வெள்ளி பதக்கம் வென்ற இளவேனில்: வானதி சீனிவாசன் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vanathi-srinivasan-congratulates-elavenil-on-winning-double-silver-medal-at-asian-games</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vanathi-srinivasan-congratulates-elavenil-on-winning-double-silver-medal-at-asian-games#comments</comments><guid isPermaLink="false">55a63411-9c8f-42d0-87ba-20741eb4f2a9</guid><pubDate>Sun, 20 Sep 2026 09:24:29 +0000</pubDate><atom:updated>2026-09-20T09:24:29.587Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Asian Games,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,Silver medal,ஆசிய விளையாட்டு,வெள்ளி பதக்கம்,இரட்டை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/kou6rntd/29.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/kou6rntd/29.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஆசிய விளையாட்டில் இரட்டை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">வெள்ளி பதக்கம்</a> வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முன்னாள் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>2 வெள்ளிப் பதக்கம்</h2><p>ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் மற்றும் இந்திய மகளிர் அணி பிரிவுகளில் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்று, இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள வீராங்கனை இளவேனில் வாலறிவன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2>பதக்க வேட்டை</h2><p>தங்களின் அசாத்திய திறமை, விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்பால் இந்தியாவின் பதக்க வேட்டையை வெற்றிகரமாகத் தொடங்கி வைத்திருப்பது பெருமிதம் அளிக்கிறது.</p><p>தாங்கள் இன்னும் பல உயரங்களைத் தொட்டு, உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தி, எண்ணற்ற சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்!</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஜல்லிக்கட்டு, ரேக்ளாவில் கலக்கும் பாரம்பரிய மலைமாடுகள்!..</title><link>https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/traditional-mountain-cows-mingle-in-jallikattu-and-rekla</link><comments>https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/traditional-mountain-cows-mingle-in-jallikattu-and-rekla#comments</comments><guid isPermaLink="false">5e056512-28bb-42db-9d49-4c9ab7fdd547</guid><pubDate>Sun, 20 Sep 2026 09:24:04 +0000</pubDate><atom:updated>2026-09-20T09:24:04.550Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,தமிழகம்,jallikattu,ஜல்லிக்கட்டு,Theni,தேனி,Rekla races,ரேக்ளா,மலைமாடுகள்,Mountain Cattle</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/kw5gtemz/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜல்லிக்கட்டு, ரேக்ளாவில் கலக்கும் பாரம்பரிய மலைமாடுகள்!...]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/kw5gtemz/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சிறப்புக் கட்டுரைகள் (Sirappukatturaigal)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF">தேனி</a> மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்றான மலைமாடுகள், தமிழகத்தின் தொன்மைமிகு நாட்டு மாட்டு இனங்களில் தனிச்சிறப்பு வாய்ந்தது ஆகும்.</p><h2>'தேனி மலை மாடுகள்'</h2><p>மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மடியில், இயற்கை எழில் கொஞ்சும் தேனி மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்வது 'மலை மாடுகள்' எனப்படும் பாரம்பரிய நாட்டு மாட்டு இனம். பல நூற்றாண்டுகளாக இம்மண்ணின் பாரம்பரிய அடையாளமாக விளங்கும் இந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">மாடுகள்</a>, வெறும் கால்நடைகள் மட்டுமல்ல. அவை அந்தப் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத் தூண்கள். இவை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">தமிழகத்தின்</a> தொன்மைமிகு நாட்டு மாட்டு இனங்களில் தனிச்சிறப்பு வாய்ந்தவை.</p><figure><img alt="மலைமாடுகள்." src="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/9vrcouua/மலைமாடுகள்.jpg" /></figure><h2>நோய் எதிர்ப்பு சக்தி மிக அதிகம்</h2><p>தேனி மலைமாடுகள் மற்ற சாதாரண மாடுகளைப் போன்றவை அல்ல. கடுமையான மலைப் பாதைகளிலும், செங்குத்தான பாறைகளிலும் மிக லாவகமாக ஏறிச் செல்லும் அசாத்திய உடலமைப்பு கொண்டவை. வறட்சி மற்றும் கடுமையான காலநிலையைத் தாங்கி வளரக்கூடியவை. காடுகளில் கிடைக்கும் மூலிகைகளையும், இயற்கையான புற்களையும் மட்டுமே உண்டு வாழ்வதால், இவற்றின் நோய் எதிர்ப்பு சக்தி மிக அதிகம்.</p><h2>சாணம் மிகச்சிறந்த இயற்கை உரம்</h2><p>இந்த மாடுகளின் சாணம் மற்றும் கோமியம் ஆகியவை விவசாய நிலங்களுக்கு மிகச்சிறந்த இயற்கை உரமாகும். ஓடி ஆடி மேயும் சுறுசுறுப்பும், கூர்மையான கொம்புகளும் இவற்றின் முக்கிய குணாதிசயமாகும். பகலில் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும் மாடுகள், மாலையில் பட்டியில் அடைக்கப்படும். அவற்றின் சாணம், பட்டியில் இருந்து சேமிக்கப்பட்டு இயற்கை உரமாக விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு என்று தனி கிராக்கி உள்ளது. இதனை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">விவசாயிகள்</a> போட்டி போட்டு வாங்கிச் செல்கின்றனர். </p><h2>காடு 6 மாதம், நாடு 6 மாதம்</h2><p>காடு 6 மாதம், நாடு 6 மாதம் என்பார்களே, அது இந்த மலைமாடுகளுக்கு சரியாகப் பொருந்தும். இவை 6 மாத காலம் மலைப்பகுதிகளிலும், 6 மாத காலம் ஊர்ப்புற பகுதிகளிலும் வாழ்பவை. தலைமுறை தலைமுறையாக இந்த மலை மாடுகளை வளர்க்கும் கால்நடை வளர்ப்போர், தங்களின் மாடுகளைக் கூட்டமாக மலைக் காடுகளுக்குள் ஓட்டிச் செல்வது வழக்கம். ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் முதலே வனத்துறையினரிடம் முறையான கட்டணம் செலுத்தி 'மேய்ச்சல் அனுமதி' பெற்று, மாடுகளைக் காடுகளுக்குள் கொண்டு சென்று மேய்த்து வந்தனர். மழைக் காலங்களில் ஊர்ப்புற பகுதிகளிலும், கோடை காலங்களில் மலைப்பகுதிகளிலும் இவை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லப்படும். மலைப்பகுதியில் பட்டி அமைத்து மாடுகளை மேய்த்து வந்த காலங்களும் உண்டு. </p><h2>ஜல்லிக்கட்டு, ரேக்ளா</h2><p>தேனி மலைமாடுகளில் இருந்து பெறப்படும் கன்றுகள், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">ஜல்லிக்கட்டு</a>, ரேக்ளா பந்தயங்களில் முத்திரை பதித்து வருகின்றன. இதன் வலிமை, வேகம், ஆக்ரோஷம் போன்றவை ஜல்லிக்கட்டு களத்தை அனல் பறக்க விடுகின்றன. வாடிவாசலில் இருந்து வெளியேறும் முன்பே களத்தையும், வீரர்களையும் இவை கூர்ந்து கவனிக்கும். வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்து வெளியேறும் இதன் அழகும், கம்பீரமும் தனித்துவம் வாய்ந்தவை. </p><p>இந்த கன்றுகளை வாங்குவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தய பிரியர்கள் தேனிக்கு வந்து செல்கின்றனர். இவர்கள் தங்களுக்கு பிடித்த கன்றுகளை நேரில் வந்து பார்த்து வாங்கிச் செல்கின்றனர். சிலர் கன்றுகளை வாங்கி சில ஆண்டுகள் வளர்த்து விற்பனை செய்வதும் உண்டு. தேனி மாவட்ட கால்நடை வர்த்தகத்தில் மலைமாடுகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. </p><h2>அழிவின் விளிம்பில்...</h2><p>பாரம்பரிய மலைமாடுகள் தற்போது அழிவின் விளிம்பில் நிற்கின்றன. இந்த மாடுகளை வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கு அனுமதிப்பதில் வனத்துறைக்கும், மாடுகளை வளர்ப்போருக்கும் இடையே பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வந்தது. 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மேய்ச்சல் அனுமதிச்சீட்டு வழங்குவதில் வனத்துறை கெடுபிடி காட்டி வந்தது. வன விலங்குகள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களை முன்னிறுத்தி மலைமாடுகளுக்கான மேய்ச்சல் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. </p><h2>ஐகோர்ட்டின் மதுரை கிளை தீர்ப்பு</h2><p>மேய்ச்சல் அனுமதிச்சீட்டு வழங்கும் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு சென்னை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88">ஐகோர்ட்டின் மதுரை கிளை</a>யில் தொடரப்பட்ட ஒரு வழக்கில், வனப்பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்கக்கூடாது என்று கோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்த தடை, மலைமாடுகள் வளர்ப்போரின் தலையில் பேரிடியாக இறங்கியது. மலைப்பகுதிகளில் மேய்ச்சலுக்கு மாடுகளை அழைத்துச் சென்றால், வனத்துறையின் அபராத நடவடிக்கைக்கு உள்ளாகின்றனர். </p><h2>மேய்ச்சல் நிலம் தேடி...</h2><p>இதன் விளைவாக, மலைமாடுகளின் எண்ணிக்கை வேகமாக சரியத் தொடங்கியதாக மாடுகளை வளர்ப்போர் வேதனை தெரிவிக்கின்றனர். மேய்ச்சல் நிலம் தேடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மாடுகள் இடம்பெயரும் நிலைமை ஏற்பட்டுள்ளது. தனியார் நிலங்களிலும், மலையடிவார பகுதிகளிலும் தற்போது மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றன. ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு தார்ச்சாலைகளில் அழைத்துச் செல்லும்போது வாகன விபத்துகளில் சிக்கி மாடுகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. </p><p>காடும், ஊருமாய் வாழ்ந்த மலைமாடுகள், சில ஆண்டுகளாக மேய்ச்சலுக்காக நாடோடிகளாக ஊர், ஊராய் இடம் பெயரும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்த மாடுகளின் மேய்ச்சலுக்கு இரையும், தண்ணீரும் கிடைக்கும் இடங்களே சிறந்தவை. பட்டியில் இருந்து காலையில் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும்போது நீர்நிலையில் தண்ணீர் குடிக்க அழைத்துச் செல்வார்கள். பின்னர் மாலையில் பட்டியில் அடைக்கும் போது மீண்டும் நீர்நிலைக்கு அழைத்துச் செல்வார்கள். இதனால், மலையடிவாரத்தை ஒட்டிய நீர்நிலைகள் சார்ந்து, சில மாதங்களுக்கு ஓரிடம் என்ற வகையில் இடம் பெயர்ந்து கொண்டே இருக்கின்றன. அவ்வாறு இடம் பெயரும்போது விபத்திலும், புதுப்புது சூழலில் நோய் தாக்கியும் மாடுகள் பலியாவது தொடர்கதையாக உள்ளது. </p><figure><img alt="போடி முந்தல் பகுதியில் மேய்ச்சல் இடம் தேடி மலைமாடுகள் சாலையில் அணிவகுத்துச் சென்ற காட்சி." src="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/v5g4a9b7/போடி-முந்தல்-பகுதியில்-மேய்ச்சல்-இடம்-தேடி-மலைமாடுகள்-சாலையில்-அணிவகுத்துச்-சென்ற-காட்சி.jpg" /></figure><h2>மலைகளில் மேய்ச்சலுக்கு தடை</h2><p>ஒரு காலத்தில் லட்சக்கணக்கில் இருந்த இனம் தற்போது, சில ஆயிரங்களாக குறைந்து அழிவின் விளிம்பில் நிற்கின்றன. மலைகளில் மேய்ச்சலுக்கு தடை உள்ளதால் அந்த தடையை விலக்க அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதும், மாவட்டம் முழுவதும் மேய்ச்சல் தரிசு நிலங்களை மீட்டெடுத்து அவற்றை மேய்ச்சலுக்கு ஏதுவான சூழலை உருவாக்க வேண்டும் என்பதும் கால்நடை வளர்ப்போரின் கோரிக்கையாக உள்ளது. அரசு இந்த மாடுகளை பாதுகாக்க துணை நிற்க வேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர். </p><h2>நிறங்கள் சூட்டும் பெயர்கள்</h2><p>மலைமாடுகளில், அவற்றின் தோலின் நிறம் மற்றும் உடலில் அமைந்திருக்கும் புள்ளிகள், கோடுகளின் வடிவத்தை வைத்து அவை 'போர்' கன்றுகளாக வகை பிரிக்கப்படுகின்றன. கன்றாக இருக்கும்போது லேசான புள்ளிகளாகத் தொடங்கி, வளர வளர உடலின் 'போர்' நிறம் தெளிவுபெற்று அடர்த்தியாக மாறும். அதன் விவரம் வருமாறு: </p><figure><img alt="பல வண்ணங்கள், பல வடிவங்களில் உள்ள தேனி மலைமாடுகள்." src="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/alwnf4bu/பல-வண்ணங்கள்-பல-வடிவங்களில்-உள்ள-தேனி-மலைமாடுகள்.jpg" /></figure><p>செம்போர்: வெள்ளைப் பின்னணி உடலில் அடர்ந்த சிவப்பு அல்லது செவலை நிறத்துடன் ஆங்காங்கே புள்ளிகள் அல்லது வரிகள் கலந்து காணப்படும். </p><p>கரும்போர்: வெள்ளைப் பின்னணி உடலில் ஆங்காங்கே கருப்பு நிற புள்ளிகள் அல்லது வரிகள் கலந்து காணப்படும். </p><p>கருமறை: உடலில் புள்ளிகளாக இல்லாமல், வரைபடம் போலவோ, புள்ளி திட்டுகளாகவோ அமைந்திருக்கும் தோல் வண்ணம் ஆகும். வெள்ளைப் பின்னணி கருப்பு நிறத் திட்டுகள் அமைந்திருந்தால் அது கருமறை. </p><p>செம்மறை: வெள்ளை பின்னணியில் சிவப்பு அல்லது செவலை நிறத் திட்டுகள் அமைந்திருக்கும். </p><p>மைனாப்போர்: உடலில் வெள்ளை புள்ளிகளுடன் சாம்பல் நிறத்தில் இருக்கும். </p><p>வெண்போர்: உடலில் பெரும்பகுதி வெண்மையாகவும் அதில் லேசான சாம்பல் அல்லது சிவப்பு அல்லது கருப்பு புள்ளிகள் பரவி காணப்படும். </p><p>செவலை: உடல் முழுவதும் புள்ளிகள் இல்லாமல் அடர் சிவப்பு அல்லது செம்பட்டை நிறத்தில் இருப்பவை. </p><p>பால்வெள்ளை: உடல் முழுவதும் வெள்ளையாக இருக்கும். அதே பால் வெள்ளையில், உடலின் முன் பகுதியில் சந்தனம் பூசியது போல் லேசான மஞ்சள் நிறம் இருந்தால் அது சந்தனப்பிள்ளை என்று அழைக்கப்படுகிறது. </p><p>காரி: உடல் முழுவதும் ஒரே சீராக அடர் கருப்பு நிறத்தில் இருந்தால் அது காரி. அதுவே, முன்னாடியும், பின்னாடியும் கருப்பாகவும், நடுவில் லேசான செவலை நிறத்திலும் இருந்தால் அது பனங்காரி. </p><p>சாம்பல்: புகை போன்ற மங்கலான சாம்பல் நிறத்தில் இருக்கும். இது மயிலை வகையின் உட்பிரிவு ஆகும். இந்த நிறங்கள் தவிர்த்து முகம் மற்றும் உடல் குறியீடுகளை வைத்தும் வேறு பெயர்களில் குறிப்பிடப்படுகின்றன. அந்த வகையில், நெற்றியில் மட்டும் தனியாக ஒரு வட்டமான வெள்ளைப் பொட்டு போன்ற அடையாளம் இருந்தால் அது பொட்டு என்றும், முகம் மற்றும் கொம்புப் பகுதியில் தனித்துவமான வரிகள் இருந்தால் அது கொம்பன் என்றும் அழைக்கப்படுகிறது. </p><h2>தனித்துவமிக்க செம்போர், கரும்போர்</h2><p>தேனி மலைமாடுகளில் பல வண்ணங்கள் உள்ள போதிலும், செம்போர், கரும்போர் கன்றுகளுக்கே மவுசு அதிகம். ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர், ரேக்ளா பந்தய காளை வளர்ப்போர் இந்த கன்றுகளைத் தான் அதிகம் விரும்புகிறார்கள். ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா பந்தய களங்களில் தனித்துவம் பெற்றது செம்போர் கன்றுகள். இதன் கம்பீர தோற்றம் களத்தில் மிக எடுப்பாக தெரியும். ஜல்லிக்கட்டு வாடிவாசலிலும், ரேக்ளா பந்தயங்களிலும் இந்த காளைகள் சீறிப்பாயும் வீரியம் கொண்டவையாக கருதப்படுகின்றன. அதுபோல், கரும்போர் என்பது அதிக சேட்டைக்கார காளை என பெயர் எடுத்தது. கருப்பும், சாம்பலும் கலந்த மிரட்டலான தோற்றம் கொண்டதோடு, அதிக சுறுசுறுப்பும் முரட்டுத்தனமும் கொண்டவை. இதனால், செம்போரை விடவும் கரும்போருக்கு கிராக்கியும் அதிகம், விலையும் அதிகம். </p><h2>கன்றுகளின் விலை</h2><p>ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயங்களுக்கு தேனி மலைமாடுகளில் இருந்து கன்றுகள் தேர்வு செய்யப்படுகின்றன. கன்றுகளின் வயது, போர் வகைக்கு ஏற்ப அதன் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. சுமார் ஒரு வயதுள்ள கரும்போர் கன்று ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையும், செம்போர் கன்று ரூ.14 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்படுகின்றன. மற்ற கன்றுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்படுகின்றன. 1 முதல் 3 வயது வரையிலான கன்றுகள் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை செல்கிறது. 5 வயது பூர்த்தி அடைந்த காளைக்கு அதன் கொம்பு, முகம் மற்றும் உடல் அமைப்பு, ஆக்ரோஷம், வேகத்தை பொறுத்து அவை விலைபோகிறது. அதிலும் கரும்போர், செம்போருக்கு தான் கிராக்கி. தனித்துவமான சில காளைகளை, சில லட்சம் ரூபாய் முதல் பல லட்சம் ரூபாய் வரை கொடுத்து வாங்குவதற்கு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் போட்டி போடும் நிலைமையும் உள்ளது. </p><figure><img alt="கரும்போர், செம்போர் கன்றுகள்." src="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/efzh4jid/கரும்போர்-செம்போர்-கன்றுகள்.jpg" /></figure><h2>இயற்கை தந்த பலம்!</h2><p>தேனி மலைமாடுகள் தினமும் மேய்ச்சலுக்காக 6 முதல் 12 கி.மீ. வரை நடந்து செல்கின்றன. மலைப்பகுதிகளில் மேய்ச்சலுக்கு செல்வதாலும், இயற்கையான புற்கள், மூலிகைகளை தின்பதாலும் அவற்றுக்கு உடல், மன வலிமை அதிகம். மேய்ச்சலுக்கு சென்ற இடத்திலேயே மாடுகள் கன்றுகளை ஈன்றிவிடும். பிறந்த ஒரு மணி நேரத்தில் கன்றுகள் எழுந்து, நடந்து மாடுகளுடன் சேர்ந்து பட்டிக்கு வந்து விடும். பிறந்த முதல் நாளிலேயே 5 கி.மீ. தூரத்துக்கு நடந்து வரும் இயற்கையான வலிமை இதற்கு உண்டு. சில மாடுகள், கன்றுகள் ஈன்றினால் கன்றுகளை மலைப்பகுதியில் அல்லது புதருக்குள் மறைத்து வைத்துக் கொள்ளும் சம்பவங்களும் உண்டு. சில நாட்கள் வரை அவ்வாறு கன்றுகளை மறைத்து வைத்துக் கொண்டு, தானும் மறைந்து கொண்டு கன்றுகளை பாதுகாக்கும் குணம் கொண்டது. அவை, காடுகளில் உள்ள வேட்டை விலங்குகளில் இருந்து கன்றுகளை பாதுகாக்கும் இயற்கையான தற்காப்பு நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது. </p><h2>மாடுகள் கழுத்தில் மணி</h2><p>மனிதர்களிடம் அவ்வளவு எளிதில் இணக்கமாக பழகாது. அதை கன்றுகளில் இருந்து பிடித்து வந்து அதனோடு பழகுவதற்கே மாதக் கணக்கில் காலம் எடுக்கும். பட்டியில் அடைக்கப்பட்ட மாடுகளில் இருந்து விற்பனைக்காக ஒருபோதும் பால் கறக்கப்படாது. பசுக்களின் பால் முழுவதும் கன்றுகளுக்கு தான். மற்ற மாடுகளை போல் பால் அதிகம் இருக்காது. அதே நேரத்தில் அதிக சத்து நிறைந்தது. இதனால். கன்றுகள் நோய் எதிர்ப்பு சக்தியுடனும், பலமிக்கதாகவும் இருக்கும். கிராமங்களில், பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் போதுமானதாக இல்லாத பட்சத்தில், இங்கிருந்து பால் மாடுகளை வாங்கிச் சென்று தாய்ப்பாலுக்கு நிகராக பயன்படுத்துவதும் உண்டு. மேய்ச்சலுக்கு செல்லும் இடங்களில் மாடுகள் தொலைந்து விடாமல் தடுக்கவும், அவை இருக்கும் இடத்தை அடையாளம் காணவும் அவற்றின் கழுத்தில் மணியை கட்டித் தொங்கவிடுவதும் வழக்கம். </p><figure><img alt="கன்றுகளுக்கு பாலூட்டும் மலைமாடுகள்." src="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/3pdmd2iz/கன்றுகளுக்கு-பாலூட்டும்-மலைமாடுகள்.jpg" /></figure><h2>மீண்டும் வேண்டும் மேய்ச்சல் உரிமை</h2><p>ஜான் பென்னிகுயிக் மலைமாடுகள் வளர்ப்போர் சங்க தலைவர் கென்னடி கூறுகையில், 'தேனி மலைமாடுகளை பல தலைமுறையாக வளர்த்து வருகிறோம். ஜமீன் காலத்திலேயே மாடுகளை மலைப்பகுதியில் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல அனுமதி பெறப்பட்டு வந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மேய்ச்சல் அனுமதிக்கு குறிப்பிட்ட கட்டணம் செலுத்தப்பட்டது. தி.மு.க. ஆட்சிக் காலத்தில் முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி, மேய்ச்சல் அனுமதியை இலவசமாக்கினார். காடு ஆறு மாதம், நாடு ஆறு மாதம் என்பது போல், 6 மாத காலம் மலைப்பகுதியிலும், மீதம் 6 மாத காலம் விவசாய நிலம், தரைப்பகுதியிலும் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று வந்தோம். பின்னர் வனத்துறை கெடுபிடி காரணமாக மேய்ச்சல் அனுமதி சீட்டு வழங்கும் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 2022-ம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டு, மேகமலை புலிகள் காப்பகம் மற்றும் வனவிலங்கு சரணாலயப் பகுதிகளில் மேய்ச்சலுக்குத் தடை விதித்தது. கால்நடைத் துறையின் மேய்ச்சல் தரிசு நிலங்களும் மேய்ச்சலுக்கு பயன்படுத்தும் நிலையில் இல்லை. இந்த தடை உத்தரவில் இருந்து விதிவிலக்கு பெற்றுத் தர அரசு முன்வர வேண்டும். </p><h2>கன்றுகள் விற்பனை</h2><p>வன உரிமைகள் சட்டம் 2006-ன்படி, வனப் பகுதியை நம்பி வாழும் பழங்குடியினர் மற்றும் பாரம்பரியச் சமூகத்தினருக்கு வனங்களில் மேய்ச்சல் உரிமை உண்டு. வனத்துறை இந்தச் சட்டப் பிரிவுகளைப் பயன்படுத்தி. மலைமாடு வளர்ப்போரின் பாரம்பரிய மேய்ச்சல் உரிமையை சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்த வேண்டும். போதிய மேய்ச்சல் நிலமின்றி மாடுகள் அழிவின் விளிம்பில் உள்ளன. ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பிறகு காளைகள் வளர்ப்பில் தமிழகம் முழுவதும் ஆர்வம் அதிகரித்துள்ளதால், கன்றுகள் வாங்க பலர் வருகின்றனர். கன்றுகள் விற்பனை தான் ஓரளவு வாழ்வாதாரமாக உள்ளது' என்றார். </p><figure><img alt="கென்னடி, கண்ணன்." src="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/tcn3smmx/கென்னடி-கண்ணன்.jpg" /></figure><p>தமிழ்நாடு விவசாயிகள் சங்க தேனி மாவட்ட செயலாளர் கண்ணன் கூறுகையில், 'காடுகளுக்குள் சென்று வரும் இந்த மாடுகள், அங்குள்ள அடர்ந்த புற்களை உண்பதால் காடுகளில் காட்டுத்தீ பரவுவது இயற்கையாகவே தடுக்கப்பட்டது. மேலும், மாடுகளின் கொம்புகள் பட்டு மண்ணின் தரம் உயர்ந்து, காடுகளின் சுற்றுச்சூழல் சமநிலை பாதுகாக்கப்பட்டது. வன உரிமைச் சட்டம் 2006, மேய்ச்சல் உரிமையை அங்கீகரிக்கிறது. அந்த சட்டத்தின்படி மேய்ச்சல் அனுமதி பெற்றுக் கொடுக்க அரசு முன்வர வேண்டும். மேய்ச்சல் உரிமையை மீட்க பல போராட்டங்கள் நடத்தியும் தீர்வு இல்லை. </p><p>வனப்பகுதிக்குள் செல்ல தடை இருப்பதால், மாடுகள் பட்டினியால் இறப்பதை தடுக்க மலையடிவாரங்கள், அரசு தரிசு நிலங்கள், மேய்ச்சல் தரிசு நிலங்கள் ஆகியவற்றை உடனடியாக மீட்டு மலைமாடுகளின் மேய்ச்சலுக்கு ஒதுக்கித்தர வேண்டும். தேனி மலைமாடுகளை அழியும் நிலையில் உள்ள பாரம்பரிய நாட்டுமாடு என்று அறிவித்து அவற்றை வளர்ப்போருக்கு மாதாந்திர பராமரிப்பு மானியம், தீவன உதவி வழங்க வேண்டும். இந்த பாரம்பரிய இனம் அழிந்தால், தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு இந்த மலைமாடுகளில் இருந்து வலிமையான காளைகள் கிடைக்காமல் போய்விடும்' என்றார். </p><h2>வன அதிகாரிகள்</h2><p>வன அதிகாரிகள் கூறுகையில், 'மாடுகளை வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு விடுவதற்கு தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த மாடுகளுக்கு ஏற்படும் நோய்கள், வன விலங்குகளுக்கும் பரவி பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே வனத்தை பாதுகாக்க வேண்டியது அவசியமானது' என்றனர். </p>]]></content:encoded></item><item><title>அச்சம் தேவையில்லை: தொடர்ந்து 3 ஆண்டுகளாக டெங்கு பாதிப்பு குறைந்து வருகிறது - அமைச்சர் அருண்ராஜ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-need-for-alarm-dengue-cases-have-been-declining-for-three-consecutive-years-minister-arunraj</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-need-for-alarm-dengue-cases-have-been-declining-for-three-consecutive-years-minister-arunraj#comments</comments><guid isPermaLink="false">e1107556-d1b6-4cb1-be1e-fb76a038b6ba</guid><pubDate>Sun, 20 Sep 2026 09:17:57 +0000</pubDate><atom:updated>2026-09-20T09:17:57.106Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>டெங்கு,Dengue,டெங்கு காய்ச்சல்,Dengue Fever,அருண்ராஜ்,Arunraj,Minister Arunraj,அமைச்சர் அருண்ராஜ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/0hnsvsmi/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/0hnsvsmi/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காய்ச்சல் இருந்தால் உடனே அரசு மருத்துவமனையை அணுகுங்கள் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.</p><h2>காய்ச்சல் பாதிப்பு</h2><p>இது தொடர்பாக, அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D">அருண்ராஜ் </a>வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>தமிழ்நாட்டில் டெங்கு நிலவரம்: தொடர்ந்து 3 ஆண்டுகளாக டெங்கு பாதிப்பு குறைந்து வருகிறது: 56,863 (2023) → 46,971 (2024) → 25,585 (2025) → 17,049 (2026, இதுவரை).</p><p>ஒவ்வொரு காய்ச்சல் பாதிப்பும் கண்காணிக்கப்படுகிறது; காய்ச்சல் முகாம்கள், கொசு ஒழிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன.</p><h2>அலட்சியம் கூடாது</h2><p>அச்சம் தேவையில்லை - ஆனால் அலட்சியமும் கூடாது. வீடுகளில் தேங்கிய நீரை அகற்றுங்கள்; காய்ச்சல் இருந்தால் உடனே அரசு மருத்துவமனையை அணுகுங்கள். இணைந்து செயல்படுவோம், தமிழ்நாட்டை பாதுகாப்போம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நீலகிரி: பாக்கு, நெற்பயிரை சேதப்படுத்திய காட்டு யானைகள் - விவசாயிகள் கவலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-wild-elephants-damage-areca-nut-and-paddy-crops-farmers-concerned</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-wild-elephants-damage-areca-nut-and-paddy-crops-farmers-concerned#comments</comments><guid isPermaLink="false">8fc09a1a-66da-4036-a019-8556f8f456bd</guid><pubDate>Sun, 20 Sep 2026 09:13:57 +0000</pubDate><atom:updated>2026-09-20T09:13:57.601Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nilgiris,நீலகிரி,காட்டு யானைகள்,Wild elephants</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/m2q91gdd/15.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/m2q91gdd/15.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி, </p><p>நீலகிரி மாவட்டம் கூடலூர் புத்தூர் வயலில் இரவில் காட்டு யானைகள் பாக்கு மரங்களை யும், நெற்பயிர்களையும் சேதப்படுத்தியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.</p><h2>காட்டு யானைகள் அட்டகாசம்</h2><p>கூடலூர் புத்தூர்வயல்,மாக்க மூலா, கோடமூலா உள்பட பல பகுதிகளில் 7 காட்டு யானைகள் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக முகாமிட்டு வருகிறது. அங்குள்ள வீடுகளையும் இரவில் முற்றுகையிட்டு வருகிறது. இதேபோல் பாக்கு, வாழை உள்ளிட்ட பயிர்களையும் நாசம் செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.</p><p>இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு புத்தூர்வயல் மகாவிஷ்ணு கோவில் அருகே 3 காட்டு யானைகள் விவசாய நிலத்துக்குள் நுழைந்தது. பின்னர் முகமது என்பவரது தோட்டத்துக்குள் புகுந்து பாக்கு, வாழை உள்ளிட்ட பயிர்களை முறித்து சேதப்படுத்தியது. இதில் குலைக ளுடன் கூடிய வாழைகள் சரிந்து விழுந்தது. சில வாரங்களில் அறுவடை செய்ய வேண்டிய குலைகள் சேதமடைந்து இருப்பதை கண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை அடைந்தனர்.</p><h2></h2><h2>நெல் நாற்றுகளை மிதித்து</h2><p>இதேபோல் சைலஜா என்பவரது வயலுக்குள் புகுந்த காட்டு யானைகள் நடவு செய்திருந்த நெல் நாற்றுகளை மிதித்து நாசம் செய்தது. இதனால் நஷ்டம் அடைந்திருப்பதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் புலம்பினர். எனவே சேதமடைந்த பயிர்களுக்கு ஏற்ற இழப்பீடு தொகையை வழங்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><h2>இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-</h2><p>பாக்கு, நெல் நாற்றுகள் மட்டுமின்றி வாழைகளை அடிக்கடி காட்டு யானைகள் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் வனவிலங்குகள் அட்டகா சத்தால் விவசாயத்தை கைவிடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறோம். தற்போது விவசாய பயிர் மட்டுமின்றி நீர்ப்பாசன குழாய்கள், மோட்டாரை யும் காட்டு யானைகள் சேதப்படுத்தி உள்ளன. எனவே சேதத்துக்கு ஏற்ப இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-a-minor-girl-young-man-arrested-under-pocso-act</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-a-minor-girl-young-man-arrested-under-pocso-act#comments</comments><guid isPermaLink="false">817434da-8a32-4b5d-aebd-035b09e8bffd</guid><pubDate>Sun, 20 Sep 2026 09:05:00 +0000</pubDate><atom:updated>2026-09-20T09:05:00.054Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Thanjavur,தஞ்சாவூர்,போக்சோ சட்டம்,POCSO case</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/sz0o61qg/14.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/sz0o61qg/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சை, </p><p>தஞ்சையை அடுத்த செங்கிப்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது ஆச்சாம் பட்டி மேலத்தெருவை சேர்ந்த முருகேசன் மகன் மணிகண்டன் (33) சிறுமியின் வீட்டுக்குள் புகுந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. </p> <p>இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி அச்சத்தில் அலறினாள். உடனே மணிகண்டன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து செங்கிப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p>  ]]></content:encoded></item><item><title>சிப்காட், என்.எல்.சி சுரங்கத்திற்கு கூடுதல் நிலங்களை கையகப்படுத்த துடிப்பதா? - அன்புமணி கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-sipcot-rushing-to-acquire-more-land-for-nlc-mine-anbumani-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-sipcot-rushing-to-acquire-more-land-for-nlc-mine-anbumani-asks#comments</comments><guid isPermaLink="false">5d4ef270-5d49-4d95-ba66-6193bb1828d0</guid><pubDate>Sun, 20 Sep 2026 09:03:42 +0000</pubDate><atom:updated>2026-09-20T09:03:42.925Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,என்.எல்.சி,சுரங்கம்,சிப்காட்,கேள்வி,NLC,Sipcot,நிலங்கள்</media:keywords><media:content height="360" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/6ms4lwfd/anubumani.jpg" width="640"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/6ms4lwfd/anubumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சிப்காட், என்.எல்.சி சுரங்கத்திற்கு கூடுதல் நிலங்களை கையகப்படுத்த துடிப்பதா? மக்களை பாதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-</p><h2> புதிய சிப்காட் வளாகம்</h2><p>கடலூர் மாவட்டத்தில் புதிய சிப்காட் வளாகம் அமைப்பதற்காக தியாகவல்லி, குடிக்காடு பகுதிகளில் ஏற்கனவே அறிவிக்கை செய்யப்பட்ட 1097 ஏக்கருடன் மேலும் 164 ஏக்கர் நிலங்களையும், என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காக கையகப்படுத்துவதற்கான அறிவிக்கையை அரசு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நிலப்பறிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளால் ஒட்டுமொத்த கடலூர் மாவட்டமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும். மீண்டும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D">சிப்காட்</a> வளாகங்களையும், நிலக்கரி சுரங்கங்களையும் திணிப்பதும், நிலங்களை பறிப்பதும் கண்டிக்கத்தக்கவை.</p><h2>மக்கள் தொடர் போராட்டங்கள்</h2><p>கடலூர் மாவட்டத்தின் தலைநகரமான கடலூரில் 2625 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் வளாகம் செயல்பட்டு வருகிறது. அதற்கு அருகிலேயே குடிக்காடு மற்றும் தியாகவல்லி பகுதிகளில் 1119 ஏக்கரில் இன்னொரு சிப்காட் வளாகத்தை உருவாக்க முடிவு செய்த திமுக அரசு அப்பகுதிகளில், 1097 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்துவகான அரசாணையை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 28-ம் தேதி பிறப்பித்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள மக்கள் தொடர் போராட்டங்களை நிகழ்த்தி வரும் நிலையில், இப்போது குடிக்காடு, தியாகவல்லி கிராமங்களில் மொத்தம் 164.20 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவதற்கான அறிவிக்கையை தமிழக அரசு கடந்த ஒன்றாம் தேதி வெளியிட்டுள்ளது.</p><h2>தவெக அரசு </h2><p> இந்த நிலங்கள் அனைத்தும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடமிருந்து கடந்த காலங்களில் இரு தனியார் பெரு நிறுவனங்களால் குறைந்த விலையில் பறிக்கப்பட்டவை ஆகும். அந்த நிலங்களை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்த நிலையில், அவற்றை அரசே பறிக்க துடிப்பதை ஏற்க முடியாது.</p> <p>புதிய அறிவிக்கையின் மூலம் கையகப்படுத்தப்படும் நிலங்களில் 75 சதவீதம் பெரு நிறுவனங்களுக்கு சொந்தமானவை என்றாலும், இதன் மூலம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 1119 ஏக்கர் பரப்புடன் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள 164.20 ஏக்கரையும் சேர்த்து, மொத்தம் 1,283 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் வளாகம் அமைக்கப்படவுள்ளதை தவெக அரசு உறுதி செய்துள்ளது.</p><h2> 3,968 ஏக்கர்</h2><p> தமிழ்நாட்டின் மிகப்பெரிய சிப்காட் வளாகம் ஓரகடத்தில் 3157 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக செய்யாறில் 2937 ஏக்கர் பரப்பளவில் இரண்டாவது பெரிய சிப்காட் அமைந்துள்ளது. இந்த இரண்டுக்கும் அடுத்த நிலையில் தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய சிப்காட் 2625 ஏக்கரில் கடலூரில் தான் உள்ளது. அத்துடன் 1283 ஏக்கரில் புதிய சிப்காட் அமைக்கப்பட்டால் 3,968 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாட்டின் மிகப்பெரிய சிப்காட் வளாகம் கடலூரில் தான் செயல்படும். </p><h2>வளர்ச்சி அல்ல</h2><p>இது கடலூர் மாவட்டத்திற்கான வளர்ச்சி அல்ல.... மாறாக பேரழிவு ஆகும். இது கடலூருக்குத் தேவையில்லை. அதேபோல், என்.எல்.சி நிறுவனத்தின் சுரங்கம் 1 விரிவாக்கத்திற்காக கங்கைகொண்டான் கிராமத்தில் 12.60 ஏக்கர் பரப்பளவிலான 68 துண்டு நிலங்களும், சுரங்கம் 1ஏ விரிவாக்கத்திற்காக வானதிராயபுரம் கிராமத்தில் 3.21 ஏக்கர் பரப்பளவிலான 77 துண்டு நிலங்களும் கையகப்படுத்தப்படும் என்று தமிழக அரசு வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. </p><p>இவை அனைத்தும் வீட்டுமனை நிலங்களாகும். இவை கையகப்படுத்தப்பட்டால் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வதற்கு இடமில்லாத நிலை ஏற்படக்கூடும்.</p> <h2>ரசாயன ஆலைகள்</h2><p>கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள ரசாயன ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்படாத கழிவுகளால் நிலம், நீர், காற்று ஆகிய அனைத்தும் மாசுபடுகின்றன. தொழிற்சாலைக் கழிவுகள் நீரிலும், நிலத்திலும் கலந்ததால் கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்களின் தாய்ப்பாலிலும், அங்கு விளையும் இளநீரிலும் டையாக்சின் எனப்படும் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய நச்சுப்பொருள்கள் அதிகமாக கலந்திருக்கின்றன. </p><p>இன்னொருபக்கம், கடலூர் மாவட்டத்தில் உள்ள என்.எல்.சி நிலக்கரி சுரங்கங்களால் கடலூர் மாவட்டத்தில் உள்ள 30 லட்சம் மக்களும் ஏதேனும் ஒரு வகையில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இத்தகைய சூழலில் மேலும் 1.283 ஏக்கரில் புதிய சிப்காட் வளாகம் அமைப்பட்டால் கடலூர் மாவட்டம் முழுவதும் நச்சுக்காடாக மாறிவிடும்.</p><h2>மக்கள் வாழ்வாதாரம் </h2><p>அதுமட்டுமின்றி, சிப்காட் வளாகம் அமைக்கப்படுவதால் உழவர்கள் மற்றும் பொதுமக்களால் வாழ்வாதாரம் பறிக்கப்படுகிறது. குடிக்காடு. தியாகவல்லி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் வளம் மிகுந்தவை. அவற்றின் மூலம் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வருமானம் ஈட்டப்படுகிறது. ஆனால், சில இடங்களில் அடிப்படையான வழிகாட்டி மதிப்பாக ஏக்கருக்கு ரூ.3.31 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு. அதனடிப்படையில் தான் இழப்பீடு கணக்கிடப்படுகிறது. </p> <h2>கூடுதல் தொகை இழப்பீடு</h2><p>வழிகாட்டி மதிப்பை விட சுமார் 3 முதல் 4 மடங்கு வரை கூடுதல் தொகை இழப்பீடாக வழங்கப்படுவதாக தமிழக அரசின் சார்பில் கூறப்பட்டாலும், இழப்பீடாக வழங்கப்படும் தொகை அப்பகுதியின் சந்தை மதிப்பில் மூன்றில் ஒரு பங்கு கூட இல்லை என்பது தான் உண்மையாகும். அதையும் தாண்டி. குடிக்காடு, தியாகவல்லி பகுதியில் உள்ள மக்களின் ஒற்றை ஆதாரம் விவசாயம் மட்டும் தான். இந்த நிலங்களை குறைந்த விலை கொடுத்து அரசு பறிப்பதன் மூலம் மக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் சூறையாடுகிறது. இதனால், நிலத்தை இழக்கும் மக்கள் சொந்த மண்ணிலேயே கூலிகளாக மாறி விடுவார்கள்.</p><h2>வாய்மூடி மவுனமாகிவிடுவார்</h2><p>முந்தைய திமுக ஆட்சியில் காவிரி பாசன மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கப்படுவதற்காவும், மதுரை பகுதியில் டங்க்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்காகவும் நிலங்கள் கையகப்படுத்துவதாக இருந்தால், அதை தடுப்பதற்காக பதவி விலகவும் தயங்க மாட்டேன் என்று அப்போதைய முதல்-அமைச்சர் வீர வசனம் பேசினார். கடலூர் மாவட்ட மக்களின் நிலம் பறிக்கப்படுவதாக இருந்தால் மட்டும் வாய்மூடி மவுனமாகிவிடுவார். இப்போதைய முதலமைச்சரோ பரந்தூர் மக்களுக்காக விமான நிலையத் திட்டத்தையே கைவிடுவார்; ஆனால், கடலூர் மாவட்ட மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் மீண்டும். மீண்டும் நிலம் எடுக்க ஆணையிடுகிறார்.</p><h2>திமுக அரசின் நீட்சியா?</h2><p>இவற்றையெல்லாம் பார்க்கும் போது தமிழ்நாட்டில் நடப்பது தவெக ஆட்சியா. திமுக அரசின் நீட்சியா? என்று தமிழ்நாட்டு மக்கள் ஐயம் எழுப்புகிறார்கள். தமிழ்நாட்டில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பது தான் உண்மை. கடலூர் மாவட்டத்தில் புதிய சிப்காட் அமைக்கும் திட்டம். என்.எல்.சி சுரங்கம் 1. 1ஏ விரிவாக்கத் திட்டங்கள் ஆகியவற்றையும், அவற்றுக்காக மொத்தம் 1277 ஏக்கர் நிலங்களை கையகப் படுத்துவதற்கான அறிவிக்கைகளையும் தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். இல்லாவிட்டால் பாதிக்கப்படும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் என எச்சரிக்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>பிரதமரை இழிவுபடுத்தும் ‘பார்ட் டைம்’ அரசியல்வாதி - ராகுல் காந்திக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/part-time-politician-who-insults-the-prime-minister-nainar-nagendran-condemns-rahul-gandhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/part-time-politician-who-insults-the-prime-minister-nainar-nagendran-condemns-rahul-gandhi#comments</comments><guid isPermaLink="false">9441db68-2884-464c-9df4-ae8bfd369cd3</guid><pubDate>Sun, 20 Sep 2026 08:48:15 +0000</pubDate><atom:updated>2026-09-20T08:48:15.887Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,ராகுல் காந்தி,Rahul Gandhi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/ggxndz92/nainar.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/ggxndz92/nainar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தன்னைத்தானே ஒரு கேலிப்பொருளாக மாற்றிக்கொண்டுள்ள ராகுல் காந்தி, இனியாவது தனது நாடக அரசியலைக் கைவிட வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.</p><h2>'பார்ட் டைம் அரசியல்வாதி'</h2><p>இது தொடர்பாக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழக </a>பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தி வரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை, நேற்று ஒரு பொது மேடையில் கேலி, கிண்டல் செய்து, மிமிக்ரி நடிகரைப் போலக் கேலிக்கூத்துகளை அரங்கேற்றியிருக்கும் அரசியல் கோமாளி ராகும் காந்தியின் செயலுக்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>ராகுல் காந்தி இதுபோல் பொது மேடைகளில் நடந்துகொள்வது முதல் முறையல்ல; தொடர் தேர்தல் தோல்விகளால் ஏற்பட்ட கடுமையான விரக்தியின் வெளிப்பாடாகத் தொடர்ச்சியாக இவ்வாறு செய்து வருகிறார். உண்மையில் ராகுல் காந்தி என்பவர் ஒரு முழுநேர மக்கள் தலைவரே கிடையாது; அவர் ஒரு 'பார்ட் டைம் அரசியல்வாதி'. ஒவ்வொரு தேர்தல் முடிவின்போதும் வெளிநாடுகளுக்குச் சென்று உல்லாசப் பயணம் மேற்கொள்வதையே வழக்கமாகக் கொண்டவர்.</p><h2>நாடக அரசியலைக் கைவிட வேண்டும்</h2><p>எப்போதாவது அரசியல் மேடைகளுக்கு வந்து இதுபோன்று மலிவான நாடகங்களை அரங்கேற்றிவிட்டு, அடுத்த நாளே தனது உல்லாச வாழ்க்கைக்குத் திரும்பிவிடும் ஒருவரை இந்திய மக்கள் எப்படித் தங்கள் தலைவராக ஏற்பார்கள்? அதைக்கூடப் புரிந்துகொள்ள முடியாமல், அந்த விரக்தியையும் வெறுப்பையும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீது இம்முறையில் காட்டிக்கொண்டிருக்கிறார் ராகுல் காந்தி.</p><p>நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படைக் கண்ணியத்தை மறந்து, தன்னைத்தானே ஒரு கேலிப்பொருளாக மாற்றிக்கொண்டுள்ள ராகுல் காந்தி, இனியாவது தனது நாடக அரசியலைக் கைவிட வேண்டும். மேடைகளில் அரங்கேற்றும் மலிவான கேலிக்கூத்துகள் மூலம் மக்களைத் திசைதிருப்பிவிடலாம் என்ற அவரின் பகற்கனவு ஒருபோதும் பலிக்காது. எனவே இனியாவது சுயபரிசோதனை செய்துகொண்டு அவர் பொறுப்புடன் செயல்படத் தவறினால், அவரது அரசியல் வாழ்க்கையில் இதுபோன்ற கோமாளி வேடங்களே மிஞ்சும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வார விடுமுறை: திருவண்ணாமலையில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/weekend-devotees-wait-for-three-hours-for-darshan-in-tiruvannamalai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/weekend-devotees-wait-for-three-hours-for-darshan-in-tiruvannamalai#comments</comments><guid isPermaLink="false">4dbb8517-d997-4521-b618-f6e0f4bc27c5</guid><pubDate>Sun, 20 Sep 2026 08:45:57 +0000</pubDate><atom:updated>2026-09-20T08:45:57.018Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,பக்தர்கள்,Devotees,Tiruvannamalai</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/w0spj8ac/13.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/w0spj8ac/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை,</p><p>திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்கள் மற்றும் விஷேச நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும்.</p><h2></h2> <h2>வாரவிடுமுறை நாள்</h2><p>அந்த வகையில், இன்று வார விடுமுறை நாளையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் வருகை தந்திருந்தனர்.</p><h2>பக்தர்கள் சாமி தரிசனம்</h2><p>இன்று அதிகாலை முதல் திருவண்ணாலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில், அவர்கள் நீண்ட வரிசையில் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை நாட்களில் திருவண்ணாமலைக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>அதிர்ச்சி சம்பவம்: டிஜிட்டல் கைது செய்ததாக கூறி என்ஜினீயரிடம் ரூ.45 லட்சம் மோசடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/shocking-incident-engineer-defrauded-of-45-lakh-in-digital-arrest-scam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/shocking-incident-engineer-defrauded-of-45-lakh-in-digital-arrest-scam#comments</comments><guid isPermaLink="false">7a2b2be6-7c78-4a03-a4a5-970243ba389b</guid><pubDate>Sun, 20 Sep 2026 08:30:03 +0000</pubDate><atom:updated>2026-09-20T08:30:03.643Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,மோசடி,Erode,ஈரோடு,fraud,Digital arrest,டிஜிட்டல் கைது,சைபர் கிரைம்,cyber crime</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/qbufwad6/kler.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/qbufwad6/kler.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு, </p><p>கோபியில் டிஜிட்டல் கைது செய்ததாக கூறி என்ஜினீயரிடம் ரூ.45 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.</p><h2>டிஜிட்டல் கைது</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/erode">ஈரோடு</a> மாவட்டம் கோபியை சேர்ந்த 65 வயதான ஓய்வு பெற்ற என்ஜினீயர் ஒருவரின் செல்போனுக்கு ஒரு வாட்ஸ்-அப் அழைப்பு வந்தது. அதில் பேசிய வர், தன்னை மும்பை போலீஸ் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். மேலும், ஓய்வு பெற்ற என்ஜினீயரது அடையாள அட்டைகளை வைத்து செல்போன் சிம் கார்டு வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், அதனால் அவரை டிஜிட்டல் கைது செய்து வைத்திருப்பதாக கூறி உள்ளார். </p><h2>மும்பை போலீசார்</h2><p>இதனால் பதற்றம் அடைந்த அவர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார். மேலும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றால் பணம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். </p><p>அவர் செல்போனில் பேசிக்கொண்டிருக்கும்போதே அவரது செல்போனுக்கு ஒரு 'லிங்க்' வந்தது. பின்னர் அவர் அதை திறந்து பார்த்தார். மீண்டும் மும்பை போலீசார் என அறிமுகம் செய்து அவருக்கு வாட்ஸ்-அப் அழைப்பு வந்தது. அவர் அவர்கள் கூறியபடி லிங்கில் விவரங்கள் பதிவு செய்துள்ளார். </p><p>அப்போது வந்த ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல்லை (ஓ.டி.பி.) அவர் பதிவு செய்தார். சிறிது நேரத்தில் ஓய்வு பெற்ற என்ஜினீயரின் வங்கிக்கணக்கில் இருந்த ரூ.45 லட்சம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. மேலும் அவர் கணக்கை சோதனை செய்தபோது பணம் மாயமாகி இருந்தது. </p><p>இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சம்பந்தப்பட்ட எண்ணில் தொடர்பு கொண்டபோது அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. தான் மோசடி நபர்களால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் <a href="https://www.dailythanthi.com/topic/erode">ஈரோடு</a> போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். அதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>ஈரோடு மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 72 சைபர் கிரைம் வழக்குகள்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/erode">ஈரோடு</a> மாவட்டத்தில் சைபர் குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. பல்வேறு வடிவங்களில் மோசடியாளர்கள் பொதுமக்களுக்கு வலை விரிக்கிறார்கள். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் தொடர்ந்து பொதுமக்கள் ஏமாந்து வருகிறார்கள். </p><p>இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-</p><p>தற்போது ரூ.1 லட்சத்துக்கு மேல் மோசடி செய்யப்பட்டால் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த மாதத்தில் மட்டும் இதுவரை 72 சைபர் கிரைம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். போலி செயலிகளை திறக்க வேண்டாம். இணையதளம் மூலமாக யாருடனும் தங்கள் விவரங்களை பகிர வேண்டாம். டிஜிட்டல் கைது என்று யாராவது மிரட்டினால் பயப்படாமல் உடனடியாக போலீசில் புகார் தெரிவிக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>திருப்பூர்: குடிபோதையில் அலுவலகத்துக்கு வந்த ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruppur-panchayat-secretary-suspended-for-reporting-to-work-drunk</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruppur-panchayat-secretary-suspended-for-reporting-to-work-drunk#comments</comments><guid isPermaLink="false">924d0823-e397-4ee5-a39d-73f13d52dee8</guid><pubDate>Sun, 20 Sep 2026 08:25:41 +0000</pubDate><atom:updated>2026-09-20T08:25:41.374Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்,குடிபோதை,Drunk,Panchayat Secretary,ஊராட்சி செயலர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/99432and/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/99432and/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><p>திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள இச்சிப்பட் டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 52). இவர், பல்லடம் ஊராட்சி ஒன்றியத் துக்கு உட்பட்ட மல்லேகவுண்டம்பாளையம் கிராம ஊராட்சியின் செயலராக உள்ளார். நேற்று இவர், ஊராட்சி அலுவலகத்துக்கு பணிக்கு வந்தார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது.</p><p>ஊராட்சி அலுவலகத்தில் வரி செலுத்த வந்த பொதுமக்கள் சிலர் இதை கவனித்தனர். இதையடுத்து அவர்கள் ஊராட்சி செயலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இதுகுறித்து பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.</p><p>மேலும் இது தொடர்பாகவட்டார வளர்ச்சி அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரசீதா பேகத்தை அனுப்பி விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார். அவர் நடத்திய விசாரணையில், ஊராட்சி செயலர் ராஜேந்திரன் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. போலீசார் விசாரணையிலும் அவர் குடிபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஊராட்சி செயலர் ராஜேந்திரனை பணியிடை நீக்கம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் இருக்கிற அரசியல் குப்பைகளை அள்ளிதான் ஆக வேண்டும்: அண்ணாமலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-political-filth-in-tamil-nadu-must-be-cleared-away-annamalai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-political-filth-in-tamil-nadu-must-be-cleared-away-annamalai#comments</comments><guid isPermaLink="false">e766a598-8914-4091-871b-2c58b9ca74df</guid><pubDate>Sun, 20 Sep 2026 08:09:40 +0000</pubDate><atom:updated>2026-09-20T08:09:40.894Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Annamalai,அண்ணாமலை,அரசியல்,politics</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/tqgy3edg/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/tqgy3edg/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரையில் வீ த லீடர்ஸ் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-</p><p>“ஜூன் 5-ம் தேதி ஆரம்பித்து 15-வது நாளில் 20 லட்சம் உறுப்பினர்களை வீ த லீடர்ஸ் அமைப்பு நடவு செய்துள்ளது. தமிழகத்தில் 5 கோடி 60 லட்சம் பேர் வாக்காளர்களாக உள்ளனர். ஒன்றரை கோடிக்கு மேல் மக்கள் எந்த கட்சியிலும் அடிப்படை உறுப்பினராக இல்லை. தமிழகத்தில் இருக்கிற அரசியல் குப்பைகளை அள்ளிதான் ஆக வேண்டும் அதற்கான காலம் வந்து கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் மொழியையும் பாரம்பரியத்தையும் காப்பாற்ற வேண்டும்.</p><p>நாம் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரும்போது இந்து சமய அறநிலையத்துறை எனும் அமைப்பை எடுப்போம். உதாரணத்திற்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த கும்பாபிஷேகம் நிகழ்வைப் பற்றி சொல்லலாம். தவெக அரசு சினிமாவில் ப்ளாக் டிக்கெட் விற்பது போல, கும்பாபிஷேக டிக்கெட்டுகளை விற்றார்கள்.</p><p>தான் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்பதை சட்டமன்றத்தில் சபாநாயகர் முதல் ஒவ்வொரு உறுப்பினர்களும் காண்பித்துக் கொள்கிறார்கள். சட்டமன்றத்தில் பேசக்கூடிய விசயமா அது, இங்கு எல்லா மதமும் சமம் தான். பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையையும், பிராமண துவேஷத்தையும் நான் ஏற்கமாட்டேன்; பெரியாரின் பெண் இன விடுதலை, சாதி ஒழிப்பை ஏற்கிறேன்.</p><p>முதலீட்டை ஈர்க்க வெளிநாடுகளுக்கு செல்வது பழைய காலத்து அரசியல். லண்டன்லேயே பொருளாதாரம் இல்ல, அவன் எப்படி நம்மகிட்ட போடுவான்?. இந்திய நிறுவனங்கள் தான் இங்கிலாந்தில் முதலீடு செய்கின்றன. இந்தியாவில் தொழிலதிபர்களிடம் பேசி முதலீட்டை ஈர்க்கலாம்.. உள்ளூர் தொழிலதிபர்களே தயாரா இருக்காங்க. முதல்-அமைச்சர் லண்டனுக்கே போயிருக்க வேண்டாம். முதல்-அமைச்சர் இங்கு இருக்கக்கூடிய நிறுவனங்களை அணுக வேண்டும். உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்த முதல்-அமைச்சர் முயற்சி எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஓட்டுநர் உரிமம் பணியாளர்கள் 280 பேர் பணி நீக்கம்... மீண்டும் வழங்க இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/280-driving-license-employees-dismissed-communist-party-of-india-insists-on-reinstatement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/280-driving-license-employees-dismissed-communist-party-of-india-insists-on-reinstatement#comments</comments><guid isPermaLink="false">9c862c56-7da1-4365-80fb-2e93c456d239</guid><pubDate>Sun, 20 Sep 2026 08:05:01 +0000</pubDate><atom:updated>2026-09-20T08:05:01.985Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பணி நீக்கம்,சென்னை,இந்திய கம்யூனிஸ்டு கட்சி,Driving License,Dismissed,வாகன ஓட்டுநர் உரிமம்,மு.வீரபாண்டியன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/on0zan8g/251.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.வீரபாண்டியன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/on0zan8g/251.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் எடுக்கும் பணியில்  ஈடுபட்ட பணியாளர்களின் பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின், தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>1998 முதல் எல்கார்ட் மூலம் பணியாளர்களாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் எடுக்கும் பணியில் சுமார் 280 பணியாளர்கள் வேலை செய்து வந்தனர். 2019 முதல் பாண்டன் நிறுவனம் மூலம் தொடர்ந்து ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், எடுக்கும் பணி மற்றும் ஓட்டுநர் உரிமம் பதிவுச்சான்று, ஸ்மார்ட் கார்டு பிரிண்ட் எடுக்கும் பணி போன்றவற்றில் குறைவான ஊதியத்தில் ஈடுபடுத்தப்பட்டனர்.</p><h2>பணி நீக்கம்</h2><p>இந்நிலையில், 15.09.2026 முதல் ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவுச்சான்று  இணையதளம் மற்றும் எண்ம முறையில் பதிவிறக்கம் செய்யும் முறை கொண்டுவரப்படும் என அரசு அறிவித்தது. இந்நிலையில் கடந்த  12.09.2026 அன்று இந்த 280 பணியாளர்களும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">பணி நீக்கம்</a> செய்யப்பட்டுள்ளனர்.</p><p>ஐந்து வருடங்கள் முதல் இருபத்தெட்டு வருடங்கள் வரை போக்குவரத்து துறையில் பணிபுரிந்து வந்த இப்பணியாளர்களுக்கு  பணிநிரந்தரம் வழங்குவோம் என கடந்த ஆட்சியில் உறுதி வழங்கப்பட்டது. கருணை அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென நீதிமன்றமும் பரிந்துரை செய்தது. ஆனாலும், பணிநிரந்தரம் வழங்கப்படவில்லை. தற்போது அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுளனர். இது கடும் கண்டனத்திற்குரியது. இது அப்பட்டமான தொழிலாளர் விரோதப் போக்காகும்.</p><h2>வலியுறுத்தல்</h2><p>பணி நீக்கம் செய்யப்பட்ட இப்பணியாளர்களுக்கு, போக்குவரத்துத் துறையில் பொறுத்தமான வேறு பணியை மீண்டும் வழங்கிட வேண்டும் எனவும், 5 ஆண்டுகள் பணியை முடித்தவர்களுக்கு, தவெக தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும் எனவும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>குலசை தசரா திருவிழா: வேடம் அணியும் பக்தர்கள் இரும்பு ஆயுதங்கள் எடுத்து வரக்கூடாது.. ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kulasei-dasara-2026-devotees-donning-costumes-must-not-bring-iron-weapons</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kulasei-dasara-2026-devotees-donning-costumes-must-not-bring-iron-weapons#comments</comments><guid isPermaLink="false">82f21563-b70f-4429-81d2-4b87188d3f9e</guid><pubDate>Sun, 20 Sep 2026 07:47:00 +0000</pubDate><atom:updated>2026-09-20T07:47:00.722Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாதுகாப்பு ஏற்பாடுகள்,குலசை தசரா திருவிழா,Kulasai Dasara,Kulasai Mutharamman Temple,குலசை முத்தாரம்மன் கோவில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/l6n5ok6w/tirupati-meeting.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ தசரா திருவிழா ஆலோசனை கூட்டத்தில் பேசிய உதவி கலெக்டர் கவுதமன்]]></media:title><media:description type="html"><![CDATA[ குலசை தசரா திருவிழா, பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம், வேடம் அணியும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/l6n5ok6w/tirupati-meeting.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>ஆன்மிகம் (Devotional)</category><content:encoded><![CDATA[ <p>குலசேகரன்பட்டினம்,</p><p>குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவின்பாது, வேடம் அணியும் பக்தர்கள் இரும்பாலான ஆயுதங்கள் எடுத்து வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>தசரா திருவிழா ஆலோசனை கூட்டம்</h2><p>உலக புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் <a href="https://www.dailythanthi.com/topic/kulasai-dasara">தசரா திருவிழா</a> அடுத்த மாதம் (அக்டோபர்) மாதம் 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அக்டோபர் 20-ந்தேதி சிகர நிகழ்ச்சியான மகிஷாசுர சம்ஹாரம் நடக்கிறது. </p><p>இந்நிலையில், தசரா குழுக்கள் திருவிழா நாட்களில் கடைபிடிக்கும் முறைகள் குறித்தும், பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்படும் முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசனை கூட்டம், கோவில் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.</p><p>திருச்செந்தூர் உதவி கலெக்டர் கவுதமன் தலைமை தாங்கினார். உதவி போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், கோவில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், குலசேகரன்பட்டினம் இன்ஸ்பெக்டர் இன்னோஸ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில் செயல் அலுவலர் வள்ளிநாயகம் வரவேற்று பேசினார்.</p><p>கூட்டத்தில் சிவலூர், கொட்டங்காடு, சந்தையடியூர், சோமநாதபுரம், கரிசல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட தசரா குழுவினர் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.</p><h2>இரும்பு ஆயுதங்கள்</h2><p>கூட்டத்தில் உதவி கலெக்டர் கவுதமன் பேசுகையில், "கடந்த ஆண்டை விட கூடுதலாக கழிப்பறைகள், குடிநீர் வசதி, மருத்துவ முகாம்கள், வாகன நிறுத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் வேடம் அணியும் பக்தர்கள் இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்கள், சாதி அடையாளம் கொண்ட கொடிகள் கொண்டு வரக்கூடாது. இவ்வாறு கொண்டு வரும் <a href="https://www.dailythanthi.com/topic/kulasai-dasara">தசரா</a> குழுவினர் அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அக்டோபர் 21-ந்தேதி பள்ளிகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து உயர் அதிகாரிகள் முடிவு செய்வார்கள்” என்று தெரிவித்தார்.</p><h2>4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு</h2><p>கூட்டத்தில் திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் பேசுகையில், "பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக, கடந்த ஆண்டை விட கூடுதலாக இந்த ஆண்டு 250 ஏக்கர் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. <a href="https://www.dailythanthi.com/topic/பாதுகாப்பு-ஏற்பாடுகள்">பாதுகாப்பு பணியில்</a> 3 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் இன்ஸ்பெக்டர்கள் என 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். கருங்காளி அம்மன் கோவில் அருகில் சிறிய நடைபாலம் அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 3 மாவட்ட எல்லையிலும் வாகனங்கள் ஆய்வு செய்யப்படும். இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்கள் கொண்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும்.</p><p>போலீஸ் வேடம் அணியும் பக்தர்கள் கண்டிப்பாக முகத்தில் பவுடர் பூச வேண்டும். சாதி அடையாள கொடி, பனியன் போன்றவற்றை கோவிலுக்கு கொண்டு வரக்கூடாது. அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்டும்" என்று தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>23-ம் தேதி வரை மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/paid-darshan-at-madurai-meenakshi-amman-temple-cancelled-until-the-23rd</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/paid-darshan-at-madurai-meenakshi-amman-temple-cancelled-until-the-23rd#comments</comments><guid isPermaLink="false">1b8ea8b9-37e5-448a-9d72-8b7360decf3c</guid><pubDate>Sun, 20 Sep 2026 07:46:25 +0000</pubDate><atom:updated>2026-09-20T07:46:25.471Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Kumbabhishekam,கும்பாபிஷேகம்,தமிழகம்,Madurai,மதுரை,TN govt,Madurai Meenakshi Amman Temple,மதுரை மீனாட்சி அம்மன் கோவில்,கட்டண தரிசனம்,Paid darshan</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/ymj9w8ij/amman.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/ymj9w8ij/amman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p>மீனாட்சி அம்மன் கோவிலில் வரும் 23ம்தேதி வரை கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>கும்பாபிஷேகம்</h2><p>உலகப் புகழ் பெற்ற <a href="https://www.dailythanthi.com/topic/மதுரை">மதுரை</a> மீனாட்சி அம்மன் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் கடந்த 17ம் தேதி நடந்தது. கடந்த 6-ந்தேதி மகா கணபதி ஹோமத்தோடு நிகழ்ச்சி தொடங்கியது. தினமும் ஒரு மங்கல நிகழ்ச்சி நடைபெற்றது. 17ம் தேதி அதிகாலை 3.45 மணிக்கு யாகசாலை பூஜை நடந்தது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கலசங்கள் 4 ராஜகோபுரங்கள் உள்பட 12 கோபுரங்கள், விமானங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட பிறகு, சடங்குகளின்படி 7.40 மணிக்கு கோபுரங்களுக்கும், 8.10 மணிக்கு மூலவர் மீனாட்சி அம்மனுக்கும், 8.50 மணிக்கு சுந்தரேசுவரருக்கும் புனித நீரால் மகா கும்பாபிஷேகம் நடந்தது.</p><h2>பக்தர்கள் கூட்டம்</h2><p>கும்பாபிஷேகத்தின்போது மேல்தளத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அனும திக்கப்பட்டனர். கோவிலின் சுற்றுப்பகுதியில் உள்ள வீதிகளில் ஏராளமானவர்கள் திரண்டு தரிசித்தனர். சுவாமி, அம்மன் சன்னதிகளில் தரிசன அனுமதி தொடங்கியபின்பு, வீதிகள் எங்கும் அலைகடலாக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.</p><h2>கட்டண தரிசனம் ரத்து</h2><p>மகா கும்பாபிஷேக நிகழ்வுக்காக கோவில் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து விரிவான முன்னேற்பாடுகளை செய்திருந்தன. பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்யும் வகையில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டிருந்தது. இதன்படி செப்டம்பர் 17ம் தேதி முதல் 20-ம் தேதி (இன்று) வரை அனைத்து வரிசைகளிலும் இலவச தரிசனம் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் எந்தவித கட்டணமும் செலுத்தாமல் மீனாட்சி அம்மனையும், சுந்தரேசுவரரையும் தரிசித்து வருகின்றனர். </p><p>இந்நிலையில் <a href="https://www.dailythanthi.com/topic/மதுரை">மதுரை</a> மீனாட்சியம்மன் கோவிலில் வரும் புதன்கிழமை (செப்.23ம்தேதி) வரை கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>விழுப்புரம்: பேனரை அகற்றும்போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/villupuram-youth-dies-after-being-electrocuted-while-removing-banner</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/villupuram-youth-dies-after-being-electrocuted-while-removing-banner#comments</comments><guid isPermaLink="false">9ca7ca5e-99c5-4d0b-9173-cd1f1eaf8c6b</guid><pubDate>Sun, 20 Sep 2026 07:32:32 +0000</pubDate><atom:updated>2026-09-20T07:32:32.646Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,விழுப்புரம்,மின்சாரம் தாக்கி,Viluppuram,இளைஞர் பலி,youth death</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/iyi6kj5r/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/iyi6kj5r/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விழுப்புரம்,</p><p>விழுப்புரத்தில் பேனரை அகற்றும் பணியில் ஈடுபட்டபோது மின்சாரம் தாக்கி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.</p><h2>பிறந்தநாள் விழா</h2><p>விழுப்புரம் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த சரண் என்பவரது மகனுக்கு தனியார் திருமண மண்டபத்தில் பிறந்தநாள் விழா கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இதற்காக, கே.கே. சாலை பகுதியில் பிறந்தநாள் பேனர் வைக்கும் பணியில் சரண் மற்றும் அவரது நண்பர்கள் ஈடுபட்டு வந்தனர். ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த மதன் குமார், பூவரசன், வாஞ்சிநாதன் உள்ளிட்ட 4 பேர், பேனர் வைப்பதற்காகச் சென்றுள்ளனர்.</p><p>பேனர் வைக்க திட்டமிட்டிருந்த இடத்தில், ஏற்கனவே விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்று இருந்துள்ளது. புதிய பேனரை வைப்பதற்காக, அங்கிருந்த விநாயகர் சதுர்த்தி பேனரை 4 பேரும் இணைந்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, எதிர்பாராதவிதமாக அந்த பேனர் மேலே சென்ற உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் உரசியது.</p><h2>மின்சாரம் தாக்கி பலி</h2><p>இதில் பேனரில் மின்சாரம் பாய்ந்து, 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த கொடூர விபத்தில், மதன் குமார் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே <a href="https://www.dailythanthi.com/topic/மின்சாரம்-தாக்கி">மின்சாரம் தாக்கி</a> பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்ற 3 பேரையும் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் மீட்டு, உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி <a href="https://www.dailythanthi.com/topic/மருத்துவமனை">மருத்துவமனைக்கு</a> கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><h2>விசாரணை </h2><p>இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அரிச்சல்முனைக்கு சுற்றுலா வாகனங்கள், அரசு பஸ்கள் செல்ல விரைவில் தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-soon-on-tourist-vehicles-and-government-buses-going-to-arichal-munai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-soon-on-tourist-vehicles-and-government-buses-going-to-arichal-munai#comments</comments><guid isPermaLink="false">fa823afd-3181-459a-bedb-46e7451c6b33</guid><pubDate>Sun, 20 Sep 2026 07:26:04 +0000</pubDate><atom:updated>2026-09-20T07:26:04.844Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rameswaram,ராமேசுவரம்,சுற்றுலா வாகனங்கள்,தனுஷ்கோடி,Dhanushkodi,அரிச்சல்முனை,tourist vehicles,Arichal Munai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/9bgt6n0t/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/9bgt6n0t/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>ராமேசுவரம்,</p><h2>அரிச்சல் முனை</h2><p>இந்தியாவில் உள்ள முக்கிய ஆன்மிக தலங்களில் ஒன்றாக ராமேசுவரம் கோவில் விளங்குகிறது. தனுஷ்கோடி அரிச்சல் முனையானது சிறந்த சுற்றுலா தலமாகும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ராமேசுவரம். தனுஷ்கோடி வந்து செல்கின்றனர். சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் தனுஷ்கோடியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.</p><p>அத்துடன் சுற்றுலா பயணிகள் தாங்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பை, தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட குப்பைகளை கடற்கரையில் ஆங்காங்கே வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் கடல் மாசுபடுவதுடன், மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி கடல் பகுதி யில் வாழும் அரியவகை கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது.</p><h2>வாகனங்களுக்கு தடை</h2><p>எனவே தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை சுற்றுலா வாகனங்கள் செல்வதற்கு விரைவில் தடை விதிக்கப்படுகிறது. அரசு பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும், புயலால் அழிந்துபோன கட்டிட சிதிலங்கள் உள்ள கம்பிப்பாடு வரை மட்டுமே அனுமதிக்கப்படும். அதிலிருந்து வனத்துறை மூலம் இயக்கப்படும் சிறப்பு பஸ்களில் சுற்றுலா பயணிகள் 5 கிலோ மீட்டர் தூரமுடைய கடைக்கோடி பகுதியான அரிச்சல்முனை வரை அழைத்து செல்லப்பட்டு மீண்டும் அதே பஸ்சில் கம் பிப்பாடுக்கு அழைத்து வரப்படுவார்கள்.</p><h2>விரைவில் அமல்</h2><p>இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- சுற்றுச்சூழல், கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்கும் வகை யிலும், கடற்கரை பகுதியை தூய்மையாக வைப்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த 7 பஸ்களும் இயற்கை எரிவாயு மூலம் இயங்கும். சுற்றுலா வாகனங்கள், அரசு பஸ்களுக்கு அரிச்சல்முனை வரை அனுமதிஇல்லை.</p><p>அதேநேரம் அனுமதி உள்ள எரிவாயுவில் இயங்கும் ஆட்டோக்கள் மட்டும் சுற்றுலா பயணிகளுடன் அரிச்சல்முனை வரை செல்ல அனுமதிக்கப்படும். வனத்துறை பஸ்களில் அழைத்து செல்லப்படும் சுற்றுலா பய ணிகளுக்கான கட்டணம் விரைவில் நிர்ணயம் செய்யப்படும். ஒரு பஸ்சில் 35 பேர் அமர்ந்து பயணம் செய்யலாம். சுற்றுலா வாகனங்களை நிறுத்தும் வகையில் கம்பிப்பாடு பகுதியில் வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பிளஸ்-2 மாணவியை அடித்துக்கொன்ற வாலிபர்: போலீஸ் விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-beats-class-12-student-to-death-sensational-confession-during-police-interrogation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-beats-class-12-student-to-death-sensational-confession-during-police-interrogation#comments</comments><guid isPermaLink="false">9a2ba6e5-37a5-4b0a-b03e-b0d6c55df8cd</guid><pubDate>Sun, 20 Sep 2026 07:12:40 +0000</pubDate><atom:updated>2026-09-20T07:12:40.549Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர்,Tamilnadu,Crime News,தமிழகம்,Karur,கிரைம் செய்திகள்,police investigation,போலீஸ் விசாரணை,பிளஸ் 2 மாணவி,Plus 2 student</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/q63pjdwl/kloer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/q63pjdwl/kloer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கரூர், </p><p>கரூரில் பிளஸ்-2 மாணவியை அடித்துக்கொன்றது ஏன்? என்பது குறித்து வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.</p><h2>அடித்துக்கொலை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/karur">கரூர்</a> வெங்கமேடு திட்டசாலை பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் மகள் தர்ஷினி (வயது 17). இவர் கரூரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த 25 நாட்களுக்கு முன்பு தர்ஷினி திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தாய் கீதா அளித்த புகாரின் பேரில் வெங்கமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை வலைவீசி தேடி வந்தனர். </p><p>இந்தநிலையில், மாணவியின் சகோதரியுடன் பழகி வந்த கரூர் மாவட்டம் நெரூர் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் (32) என்பவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் தர்ஷினியை அடித்துக்கொலை செய்து உடலை கரூர் வெங்கமேட்டில் இருந்து வாங்கல் செல்லும் சாலையில் அடர்ந்த காட்டுப்பகுதியில் வீசியதாக கூறினார். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>திருமணமானதை மறைத்து காதல்</h2><p>இந்த சம்பவம் தொடர்பாக மோகன்ராஜ் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-</p><p>மோகன்ராஜ் தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்து தர்ஷினியின் சகோதரியை காதலித்து வந்துள்ளார். இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் மோகன்ராஜூக்கு திருமணமானதை அறிந்த தர்ஷினியின் சகோதரி, அவருடன் பழகுவதை நிறுத்தி விட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மோகன்ராஜ் சம்பவத்தன்று தர்ஷினியின் வீட்டிற்கு சென்று அவரிடம் தகராறு செய்துள்ளார். அப்போது மோகன்ராஜை தர்ஷினி கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர் தர்ஷினியை சரமாரியாக தாக்கியதில் அவர் பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடலை மோகன்ராஜ் பாயில் சுருட்டிக்கொண்டு காட்டுப்பகுதியில் வீசி விட்டு சென்றுள்ளார். </p><p>இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.</p><h2>பிரேத பரிசோதனை</h2><p>இதையடுத்து உடல் வீசப்பட்டதாக கூறப்பட்ட இடத்தில் போலீசார், தீயணைப்பு வீரர்கள் தர்ஷினியின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டு அவரது உடலை கண்டறிந்தனர். இதில் உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால் உடல் வீசப்பட்ட இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று மதியம் 2 மணியளவில் டாக்டர் மகேஷ்குமார் தலைமையிலான 5 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் அங்கு வந்தனர்.</p><p>பின்னர் <a href="https://www.dailythanthi.com/topic/karur">கரூர்</a> போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜராஜன் உள்ளிட்ட போலீசார் உதவியுடன் பிரேத பரிசோதனை செய்து தர்ஷினியின் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அப்போது தர்ஷினியின் பெற்றோர் கதறி அழுதது அனைவரையும் கண்கலங்க செய்தது.</p>]]></content:encoded></item><item><title>குற்றாலம் ஐந்தருவியில் மிதமான தண்ணீர் வரத்து: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/moderate-water-flow-at-courtallam-five-falls-tourists-delighted</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/moderate-water-flow-at-courtallam-five-falls-tourists-delighted#comments</comments><guid isPermaLink="false">066ab043-491b-4a0c-a5f2-7fff8c9d39d0</guid><pubDate>Sun, 20 Sep 2026 07:07:11 +0000</pubDate><atom:updated>2026-09-20T07:07:11.386Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tourists,சுற்றுலா பயணிகள்,Courtallam Falls,குற்றாலம் ஐந்தருவி</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/wdg9mrrn/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/wdg9mrrn/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>தென்காசி,</p><p>தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் பொதுவாக ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மிகச்சிறப்பாகவும் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும்படியும் இருக்கும். மழை தொடர்ந்து பெய்யும் பட்சத்தில் சீசன் மேலும் சில நாட்கள் வரை இருக்கும்.</p><p>எல் நினோ காரணமாக இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாகவே பெய்தது. இதனால் குற்றால அருவிகளில் சீசன் நாட்களிலும் குறைந்த அளவே நீர்வரத்து இருந்தது. இதற்கிடையே கடந்த வாரம் பழைய அருவில், புலியருவியில் தண்ணீர் வரத்து இன்றி முற்றிலும் வறண்டு காணப்பட்டது. இதனால் அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். </p><p>இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளுக்கு மிதமான அளவில் தண்ணீர் வரத்து உள்ளது. ஐந்தருவியில் மிதமான அளவில் தண்ணீர் வருவதால், சுற்றுலா பயணிகள் தற்போது உற்சாகத்துடன் குளித்து வருகின்றனர். </p> ]]></content:encoded></item><item><title>ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள்: அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/congratulations-to-the-indian-team-for-winning-silver-at-the-asian-games-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/congratulations-to-the-indian-team-for-winning-silver-at-the-asian-games-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">6cb72768-95ea-4999-abb0-19925039cefc</guid><pubDate>Sun, 20 Sep 2026 06:53:49 +0000</pubDate><atom:updated>2026-09-20T06:53:49.988Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,Asian Games,ஆசிய விளையாட்டு போட்டி</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/vczd5akh/11.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/vczd5akh/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”ஆசிய விளையாட்டுப் போட்டி: துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளி வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள்!</p><p>ஜப்பான் நாட்டின் அய்ச்சி நகோயா நகரில் நடைபெற்று வரும் 20-ஆம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபில் அணி பிரிவு துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்று சாதனைப் பயணத்தை தொடங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. </p><p>இதற்காக அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன், சோனம் மாஸ்கர், விதர்ஷா ஆகியோருக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அணியின் பதக்க வேட்டை தொடரட்டும்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பழைய இரும்பு குடோனில் தீவிபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fire-in-old-iron-warehouse-goods-worth-several-lakhs-destroyed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fire-in-old-iron-warehouse-goods-worth-several-lakhs-destroyed#comments</comments><guid isPermaLink="false">c4fcf913-9b01-4ec4-a834-59dd6e567e1a</guid><pubDate>Sun, 20 Sep 2026 06:49:47 +0000</pubDate><atom:updated>2026-09-20T06:49:47.664Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Fire,Thoothukudi,தூத்துக்குடி,goods,damaged by fire,பல லட்சம் ரூபாய்,இரும்பு,குடோன்,தீவிபத்து,Iron,warehouse,பொருட்கள் எரிந்து சேதம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/c8fbj0t8/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆறுமுகனேரி அருகே பழைய இரும்பு குடோனில் தீவிபத்து. ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/c8fbj0t8/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், ஆறுமுகனேரி அருகே புறவழிச் சாலையில் இயங்கி வரும் பழைய இரும்பு குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின. </p><h2>பழைய பொருட்கள் உள்ள குடோன்</h2><p>தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் புறவழிச் சாலையில் டேவிட்ராஜா என்பவருக்குச் சொந்தமான பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D">குடோன்</a> இயங்கி வருகிறது. இந்த குடோனின் பின்புறத்தில் பைபர் பிளாஸ்டிக் பொருட்கள், இரும்பு சாமான்கள் மற்றும் வாகன டயர்கள் ஆகியவை பெருமளவில் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன. </p><h2>திடீர் தீவிபத்து</h2><p>இந்த நிலையில் நேற்று காலையில் அப்பகுதியில் திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்திலேயே தீ வேகமாக பரவி, அப்பகுதி முழுவதையும் அடர்ந்த கருப்புப் புகை மண்டலம் சூழ்ந்தது. இந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">தீ விபத்தை</a>க் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். </p><h2>தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தினர்</h2><p>சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் தீயணைப்பு வாகனம் மற்றும் திருச்செந்தூர் தீயணைப்புத் துறையினர் இணைந்து அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். </p><h2>பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்</h2><p>இருப்பினும் இந்த தீ விபத்தில் குடோனில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">எரிந்து சேதமாகின</a>. இச்சம்பவம் குறித்து ஆறுமுகனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>22-ந்தேதி முதல் பழனியில்  மீண்டும் ரோப் கார் சேவை தொடக்கம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rope-car-service-in-palani-to-resume-from-the-22nd</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rope-car-service-in-palani-to-resume-from-the-22nd#comments</comments><guid isPermaLink="false">9335059a-eff4-4cb3-a9dd-358ddaae44e8</guid><pubDate>Sun, 20 Sep 2026 06:37:08 +0000</pubDate><atom:updated>2026-09-20T06:37:08.362Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Dindigul,திண்டுக்கல்,பழனி,தமிழகம்,Palani Murugan Temple,பழனி முருகன் கோவில்,Palani,Rope Car Service,ரோப்கார் சேவை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/3ocvrad0/klere.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/3ocvrad0/klere.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><p>பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததால் செப்.22ம் தேதி முதல் மீண்டும் ரோப் கார் சேவை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>ரோப்கார் சேவை</h2><p>உலக புகழ்பெற்ற <a href="https://www.dailythanthi.com/topic/palani">பழனி</a> முருகன் கோவில், மலை மீது அமைந்துள்ளது. அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை பிரதான வழிகளாக உள்ளன. இதுதவிர பக்தர்கள் மலைக்கோவிலுக்கு எளிதில் சென்றுவர ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகள் பயன்பாட்டில் உள்ளது. </p><p>இதில் ரோப்கார் வழியாக விரைவாகவும், பழனி மலையின் இயற்கை அழகை பார்த்து ரசித்தபடியும் செல்லலாம் என்பதால் பெரும்பாலானோர் ரோப்காரில் செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் இந்த ரோப்கார் சேவை பக்தர்களுக்கு சிறந்த சுற்றுலா அனுபவத்தை கொடுக்கிறது.</p><h2>தற்காலிகமாக நிறுத்தம்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/palani">பழனி</a> ரோப்கார் நிலையத்தில் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாதாந்திர, வருடாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவது வழக்கம். அப்போது ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டு பணி மேற்கொள்ளப்படும். </p><p>அதன்படி பழனி முருகன் கோவில் ரோப்கார் நிலையத்தில், வருடாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்த 64 நாட்களாக ரோப் கார் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த காலகட்டத்தில் பக்தர்கள் மின்இழுவை ரெயில், படிப்பாதையை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு சென்று வந்தனர்.</p><h2>22-ந்தேதி முதல்</h2><p>பராமரிப்புப் பணியின் முக்கிய பணிகளான புதிய பெட்டி பொருத்தம், சோதனை ஓட்டம் மற்றும் புனரமைப்புப் பணிகள் போன்றவை நடைபெற்றன. தற்போது பணிகள் அனைத்தும் நிறைவுபெற்றுள்ளநிலையில், வருகிற 22-ந்தேதி முதல் மீண்டும் ரோப் கார் சேவை தொடங்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இறைச்சி விற்பனை மந்தம்.. வியாபாரிகள் கவலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/meat-sales-slow-down-traders-worried</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/meat-sales-slow-down-traders-worried#comments</comments><guid isPermaLink="false">d7de1714-1615-495b-bb0f-d64f467353e7</guid><pubDate>Sun, 20 Sep 2026 06:30:06 +0000</pubDate><atom:updated>2026-09-20T06:30:06.199Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ராணிப்பேட்டை,Ranipettai,இறைச்சி,விற்பனை மந்தம்,meal,traders worried</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/py2kghse/8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இறைச்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/py2kghse/8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>இராணிப்பேட்டை,</p><p>இறைச்சி வாங்க மக்கள் ஆர்வம் காட்டாததால் விற்பனை சரிவை நோக்கி செல்வதாக வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.</p><h2>வியாபாரிகள் கவலை</h2><p>புரட்டாசி மாதம் தொடங்கியுள்ள நிலையில், பெருமாளை வழிபடும் பொதுமக்கள் மற்றும் மாலை அணிந்து கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் அசைவ உணவுகளைத் தவிர்க்கின்றனர். </p><p>இதன் காரணமாக மீன், சிக்கன், மட்டன் விற்பனை பாதிக்கப்பட்டு, வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமையான இன்று இராணிப்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள<a href="https://www.dailythanthi.com/topic/இறைச்சி"> இறைச்சி</a>க் கடைகளில் வழக்கத்தைவிட பொதுமக்கள் வருகை குறைந்து காணப்பட்டது. </p><p>இதனால் கடைகள் வெறிச்சோடியதுடன், எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை நடைபெறவில்லை என வியாபாரிகள் தெரிவித்தனர். விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட இறைச்சிகள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதால், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">வியாபாரிகள்</a> கவலை அடைந்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ஈரோடு அரசு பள்ளியில் தமிழ் கற்கும் வடமாநில மாணவர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/students-from-north-indian-states-learning-tamil-at-a-government-school-in-erode</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/students-from-north-indian-states-learning-tamil-at-a-government-school-in-erode#comments</comments><guid isPermaLink="false">8011773c-7b46-44f0-bc81-9cf265d6c075</guid><pubDate>Sun, 20 Sep 2026 06:27:40 +0000</pubDate><atom:updated>2026-09-20T06:27:40.684Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Erode,ஈரோடு,தமிழ்,அரசு பள்ளி,tamil,Govt school,North State,வடமாநில மாணவர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/h9gq7spe/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/h9gq7spe/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>இந்தியாவில் வடமாநிலங்களை விட தென் மாநிலங்களே கல்வியில் சிறந்து விளங்குகின்றன. குறிப்பாக தமிழகம் கல்வி வளர்ச்சியில் பிறமாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது. இதற்கு விதை போட்டவர் முன்னாள் முதல்- அமைச்சர் காமராஜர். சத்துணவு திட்டத்தை தொடங்கி வைத்த காமராஜரால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தது.</p><p>அவரை தொடர்ந்து வந்த அனைத்து முதல்-அமைச்சர்களும் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தனர். இதன்காரணமாக மற்ற மாநிலங்கள்&nbsp;வியந்து பார்க்கும் அளவுக்கு கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இதற்கு சாட்சியாக ஈரோடு மாநகராட்சியில் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதுகுறித்த விவரங்களை தற் போது பார்க்கலாம்.</p><p>ஈரோடு காமராஜ் வீதியில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. தொடக்கத்தில் தமிழ் வழி கல்வி கற்பிக்கப்பட்டது. பெற்றோரின் கோரிக்கையின் அடிப்படையில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி கற்பிக்கப்படுகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியை (பொறுப்பு) மோகனாம் பாள், ஆசிரியர் பெனினாள், இந்தி ஆசிரியர் சத்யா என்று 3 பேர் பணியாற்றுகின்றனர்.</p><p>ஈரோடு மாவட்டத்தில் ஏராளமான பள்ளிகள் இருந்தாலும் இந்த தொடக்கப்பள்ளி ஏன் தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு சாட்சி என்று நினைக்கலாம். அதற்கு காரணம் இருக்கிறது. இந்த பள்ளியில் படிக்கும் 46 பேரில் 44 மாணவ- மாணவிகள் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள்.</p><p><strong>இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியை (பொறுப்பு) மோகனாம்பாள் கூறியதாவது:-</strong></p><p>எங்கள் பள்ளியில் மொத்தம் 46 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் 3-ம் வகுப்பில் ஒரு மாணவி, 4-ம் வகுப்பில் ஒரு மாணவனையும் தவிர மற்ற அனைவரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள். பீகார், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களை சேர்ந்த ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவ- மாணவிகள் இங்கு படிக்கின்றனர். ஈரோட்டிலேயே எங்கள் பள்ளியில் தான் தமிழ்மொழி கற்போம் என்ற திட்டத்தின் கீழ் இந்தி ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>பெற்றோரின் கோரிக்கையின்பேரில் வடமாநிலத்தை சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கு இந்தி மொழி கற்பிக்கப்படுகிறது. ஆனால் இந்தி ஒரு பாடமாக சேர்க்கப்படாமல் அவர்களுக்கு பேச, எழுத மட்டும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. 1-ம் வகுப்பிலேயே தமிழ்மொழி கற்றுக்கொடுக்கப்படுவதால் வடமாநில குழந்தைகள் எளிதாக புரிந்து கொள்கின்றனர். எங்கள் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை மூலம் கற்றுக்கொடுக்கப் படுகிறது. இதனால் பார்த்தும், கேட்டும் எளிதாக தமிழை புரிந்துகொள்கின்றனர். அவர்கள் 3-ம் வகுப்பில் இருந்து 4-ம் வகுப்பு செல்லும்போது தமிழை சரளமாக பேச, எழுத கற்றுக்கொள்கின்றனர்.</p><p>மேலும் படிப்பை முடித்து பள்ளியை விட்டு செல்லும் போது தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய 3 மொழிகளையும் கற்றுக் கொள்கின்றனர். அரசு பள்ளி என்பதால் காலை உணவு. மதிய உணவு, இலவச சீருடை, புத்தகங்கள், நோட்டு-புத்த கங்கள் என அனைத்து சலுகைகளும் அவர்களுக்கு வழங்கப் படுகிறது. இதனால் வடமாநில பெற்றோர்களும் மகிழ்ச்சியுடன் தங்களது குழந்தைகளை எங்கள் பள்ளியில் சேர்க்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>திமுக முப்பெரும் விழாவா? ஒப்பாரி விழாவா? - தவெக ஐடி விங் விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-triple-gem-oppari-gem-tvk-it-wing-review</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-triple-gem-oppari-gem-tvk-it-wing-review#comments</comments><guid isPermaLink="false">c6ca165c-bf2f-4e85-96b6-9a64895873cf</guid><pubDate>Sun, 20 Sep 2026 06:07:42 +0000</pubDate><atom:updated>2026-09-20T06:07:42.842Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,திமுக,DMK,சென்னை,விமர்சனம்,முப்பெரும் விழா,ஐடி விங்,IT wing</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/561wr30f/377.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/561wr30f/377.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திமுக முப்பெரும் விழாவா, ஒப்பாரி விழாவா என்று தவெக ஐடி விங் விமர்சனம் செய்துள்ளது. இது தொடர்பாக தவெக ஐடி விங் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>பேரறிஞர் அண்ணா</h2><p>பேரறிஞர் அண்ணா பற்றி ஒற்றை வார்த்தைகூட உதிர்க்காத மேடையில், எங்கள் தலைவரின் நடை, உடை, பாவனை பற்றி விரிவாக அலசியிருக்கிறார் கொளத்தூரின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். முதல்-அமைச்சரின் ஒவ்வொரு அசைவுகளையும் வீட்டில் அமர்ந்து நீலாம்பரி போல repeat mode-ல் ஓட்டிப் பார்த்து ரசிக்கிறார் போல, முன்னாள்... இந்நாள் ரசிகர்.</p><p>கொத்துப் பரோட்டா போட்டதற்காக கொளத்தூர் மக்களுக்கு நன்றி தெரிவித்தவர், எதற்காக 3 முறை revaluation போட்டார்?. மிசா கைதைப் பற்றி யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்று இப்போது சொல்லும் பொய்ப் பிம்பம், 9 நிமிடக் காணொளியை ஏன் வெளியிட்டாராம்? பதற்றம் பற்றியதில் புலம்பிவிட்டாரோ? Detention copy காணாமல் போய்விட்டதோ?</p><p>அன்று “வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா?” என்று வெற்றித் தலைவர் கேட்டபோது, வெற்று வெள்ளைத்தாளைத் தூக்கிக் காண்பித்த மங்காப்புகழ் கொண்ட வரலாறு அவர் ஆட்சியில் தான் நடந்தது என்பதை மறந்தாரோ?</p><p>Image buildup-ற்காக Walking with Harry Potter stick (எந்த ஜோசியர் சொன்னாரோ, கையில் குச்சியை எடுத்துப் போகச் சொல்லி), Mini vlog with Insta kids, cycle ride during foreign visits, monovlog videos என நித்தம் ஒரு விளம்பர shooting நடத்தி வந்த Shooting நாயகன், நடிப்பைத் துறந்துவிட்டு மக்கள் பணியாற்ற வந்த நம் வெற்றித் தலைவரைப் பார்த்து “நடிக்கிறார்” என்பது உச்சபட்ச நகைமுரண்!</p><p>“ரீல்ஸ் வெறிபிடித்த ஆளுங்கட்சி” என்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D">ரீல்ஸ்களாக</a> வெளியிட்டு ஒப்பாரி வைக்கிறார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருந்து மீண்டு வாருங்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">முப்பெரும் விழாவா? ஒப்பாரி விழாவா?<br><br>பேரறிஞர் அண்ணா பற்றி ஒற்றை வார்த்தைகூட உதிர்க்காத மேடையில், எங்கள் வெற்றித் தலைவரின் நடை, உடை, பாவனை பற்றி விரிவாக அலசியிருக்கிறார் கொளத்தூரின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.<br><br>மாண்புமிகு முதலமைச்சரின் ஒவ்வொரு அசைவுகளையும் வீட்டில் அமர்ந்து…</p>&mdash; TVK IT Wing Official (@TVKHQITWingOffl) <a href="https://x.com/TVKHQITWingOffl/status/2101538421823213974?ref_src=twsrc%5Etfw">September 20, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>25 ஆண்டுகள் காத்திருந்து தந்தை கொலைக்கு பழிதீர்த்த மகன்... மதுரையில் நடந்த பயங்கரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/son-waits-25-years-to-avenge-fathers-murder-horror-in-madurai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/son-waits-25-years-to-avenge-fathers-murder-horror-in-madurai#comments</comments><guid isPermaLink="false">50c99098-3b70-4246-b668-87988b5d9ba2</guid><pubDate>Sun, 20 Sep 2026 05:43:03 +0000</pubDate><atom:updated>2026-09-20T05:43:03.957Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,murder,கொலை,Rowdy,ரவுடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/0q1gqnig/7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சப்பாணி சரவணன் கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/0q1gqnig/7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரையைச் சேர்ந்த நபர் ஒருவர், 25 ஆண்டுகளாக காத்திருந்து தந்தையை கொன்றவரை பழி தீர்த்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை</h2><p>மதுரை மாநகர் சோலைஅழகுபுரம் சப்பாணி கோவில் தெருவை சேர்ந்தவர் சப்பாணி சரவணன் (வயது 50). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், சில வழக்குகளில் சிறை சென்றுவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று அதிகாலை அவர் டீக்கடைக்கு வந்துள்ளார்.</p><p>அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரைத் துரத்தியது. உயிருக்கு பயந்து அவர் அங்கிருந்து ஓடினார். அவரை விடாமல் துரத்திய கும்பல், ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.</p><h2>விசாரணை</h2><p>இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெய்ஹிந்த்புரம் <a href="https://www.dailythanthi.com/topic/போலீசார்">போலீசார்</a>, சரவணனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி, குற்றவாளிகளை தேடி வந்தனர்.</p><h2>பழிக்கு பழி</h2><p>இந்த நிலையில், அவரை கொலை செய்ததாகக் கூறப்படும் 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய <a href="https://www.dailythanthi.com/topic/விசாரணை">விசாரணையில்</a>, கடந்த 2001ஆம் ஆண்டு மேலராஜ வீதியை சேர்ந்த புஷ்பராஜ் என்பவர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் சப்பாணி சரவணன் முக்கிய குற்றவாளியாக இருந்ததாக தெரியவந்தது.</p><p>புஷ்பராஜின் கொலைக்கு பழிவாங்க காத்திருந்த அவரது மகன் பாலமுருகன், சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அவரை கொலை செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த பழிக்குப் பழி கொலை சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மழை இல்லாத நிலையிலும் டெங்கு காய்ச்சல் பரவுவது ஏன்? - நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-is-dengue-fever-spreading-despite-the-lack-of-rain-experts-reveal-startling-information</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-is-dengue-fever-spreading-despite-the-lack-of-rain-experts-reveal-startling-information#comments</comments><guid isPermaLink="false">44da3316-ffae-4c07-8b8b-d6b03a3ce2e7</guid><pubDate>Sun, 20 Sep 2026 05:39:07 +0000</pubDate><atom:updated>2026-09-20T05:39:07.333Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Dengue,டெங்கு காய்ச்சல்,Dengue Fever,டெங்கு கொசு,Dengue mosquito</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/gq4je5bd/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/gq4je5bd/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மழைக்காலம் என்றாலே டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கும் என்ற எண்ணம் பொதுமக்களிடம் உள்ளது. ஆனால் தற்போது பல இடங்களில் பெரிய அளவில் மழை பெய்யாத நிலையிலும் டெங்கு பாதிப்பு ஏற்படுவது ஏன் என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.</p><p><strong>இதுகுறித்து சுகாதார நிபுணர்கள் கூறியதாவது:-</strong></p><p>மழை இல்லாத காலங்களில் பொதுமக்கள் குடிநீருக்காக தண்ணீரை சேமித்து வைப்பது வழக்கம். குடங்கள், வாளிகள், தண்ணீர் தொட்டிகள், பிளாஸ்டிக் பாத்திரங்கள் உள்ளிட்டவற்றில் தண்ணீர் திறந்து வைக்கப்பட்டிருந்தால் அவற்றிலும் ஏடிஸ் கொசுக்கள் முட்டையிட வாய்ப்பு உள்ளது. </p><p>மேலும், பூந்தொட்டிகளின் அடிப்பகுதியில் தேங்கும் தண்ணீர், பழைய டயர்கள், தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் ஓடுகள், கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்டவற்றில் சிறிதளவு தண்ணீர் தேங்கினாலும் அவை கொசு உற்பத்தி இடங்களாக மாறிவிடும்.</p><p>ஏடிஸ் கொசுக்கள் பெருகுவதற்கு அதிக அளவு தண்ணீர் தேவையில்லை. பெண் ஏடிஸ் கொசு தண்ணீர் உள்ள பாத்திரத்தின் உட்புறச்சுவரில், தண்ணீர் மட்டத்திற்கு சற்று மேலே முட்டைகளை இடுகிறது. அந்த முட்டைகள் பாத்திரத்தின் சுவரில் ஒட்டிக்கொண்டு இருக்கும். பின்னர் அந்தப்பாத்திரத்தில் இருந்த தண்ணீர் வற்றிவிட்டாலும் முட்டைகள் உடனடியாக அழிந்து விடுவதில்லை. </p><p>அவை வறண்ட நிலையிலும் பல மாதங்கள் உயிருடன் இருக்கக்கூடும். மீண்டும் அந்தப் பாத்திரத்தில் தண்ணீர் தேங்கும்போதுமுட்டைகள் பொரிந்து புழுக்களாக மாறுகின்றன. பின்னர் அவை வளர்ந்து கொசுக்களாக உருவாகின்றன. இதனால், “இப்போது மழை பெய்யவில்லை; எனவே டெங்கு கொசு உற்பத்தியாகாது" என்று நினைப்பது தவறாகும். </p><p>எனவே, மழை இல்லாத காலங்களிலும் டெங்கு தடுப்பில் வீடு களில் சேமித்து வைக்கப்படும் தண்ணீருக்கு அதிக முக்கியத் துவம் அளிக்க வேண்டும். தண்ணீர் தொட்டிகளை முழுமை யாக மூடி வைக்க வேண்டும். குடங்கள், வாளிகள் உள்ளிட்ட பாத்திரங்களில் தண்ணீர் சேமித்து வைத்திருந்தால் அவற்றையும் மூடி வைக்க வேண் டும். தண்ணீர் காலியானதும் பாத்திரங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு சுகாதார நிபுணர்கள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>ராமநாதபுரம்: மின்னல் தாக்கி 10 ஆடுகள் பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ramanathapuram-10-goats-killed-by-lightning</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ramanathapuram-10-goats-killed-by-lightning#comments</comments><guid isPermaLink="false">4f0474b7-5e1d-470e-99f5-0c0c4ee630a6</guid><pubDate>Sun, 20 Sep 2026 05:36:46 +0000</pubDate><atom:updated>2026-09-20T05:36:46.958Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ராமநாதபுரம்,Ramanathapuram,Lightning strike,மின்னல் தாக்கி,killed,goats,ஆடுகள் பலி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/lvjyhx49/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்னல் தாக்கி 10 ஆடுகள் பலி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/lvjyhx49/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமநாதபுரம், </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">ராமநாதபுரம்</a> மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF">மின்னல் தாக்கி</a>யதில் 10 ஆடுகள் பலியாகின. </p><h2>இடி-மின்னலுடன் பலத்த மழை</h2><p>ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள சடையனேரி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 45). இவர் 30-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று ராஜ்குமார் தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக விட்டு இருந்தார். அப்போது அந்த பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.</p><h2>மின்னல் தாக்கி 10 ஆடுகள் பலி</h2><p>இதில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை மின்னல் தாக்கியது. இதில் 10 <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">ஆடுகள்</a> பரிதாபமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">உயிரிழந்தன</a>. ராஜ்குமார் லேசான காயம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து வருவாய் துறையினர் விசாரணை நடத்தினர். </p>]]></content:encoded></item><item><title>போத்தனூரில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரெயில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-from-podanur-to-bihar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-from-podanur-to-bihar#comments</comments><guid isPermaLink="false">13547edb-d8a1-402d-bcdd-35d30f76c307</guid><pubDate>Sun, 20 Sep 2026 05:29:44 +0000</pubDate><atom:updated>2026-09-20T05:29:44.315Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,Special train,போத்தனூர்,Podanur</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/hqh46rgv/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/hqh46rgv/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p>சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:- கோவை போத்தனூரில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதாவது, அடுத்த மாதம் (அக்டோ பர்) 4-ந் தேதி முதல் நவம்பர் மாதம் 1-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை களில் காலை 6.15 மணிக்கு போத்தனூரில் இருந்து பீகார் மாநிலத்திற்கு புறப்படும் போத்தனூர்-பரவுனி சிறப்பு ரெயில் (எண்: 06021) செவ்வாய்க்கிழ மைகளில் மதியம் 1.30 மணிக்கு பரவுனி ரெயில் நிலையத்தை சென்றடையும். </p> <p>மறுமார்க்கமாக அடுத்த மாதம் 7-ந் தேதி முதல் நவம்பர் மாதம் 4-ந் தேதி வரை புதன்கிழமைகளில் காலை 10.30 மணிக்கு பரவுனி நிலையத் தில் இருந்து புறப்படும் பரவுனி-போத்தனூர் சிறப்பு ரெயில் (எண்: 06022) வெள்ளிக்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு போத்தனூர் ரெயில் நிலை யத்தை வந்தடையும். இந்த ரெயிலானது திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், கூடூர், நெல்லூர், ஓங்கோல், விஜய வாடா, கம்மம், வாரங்கல், பல்ஹார்ஷா, சந்திரப்பூர், நாக்பூர், ஜபல்பூர், சாட்னா, மானிக்பூர், டானாபூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: முதல்-அமைச்சர் விஜய் நாளை ஆலோசனை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-precautionary-measures-chief-minister-vijay-to-hold-consultations-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-precautionary-measures-chief-minister-vijay-to-hold-consultations-tomorrow#comments</comments><guid isPermaLink="false">a1144360-40a8-4e74-9d5b-e60362b9236e</guid><pubDate>Sun, 20 Sep 2026 05:27:14 +0000</pubDate><atom:updated>2026-09-20T05:27:14.693Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,வடகிழக்கு பருவமழை,North East Monsoon,முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்,Secretariat,தலைமைச் செயலகம்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/z86pmq35/pore.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/z86pmq35/pore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நாளை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> ஆலோசனை நடத்துகிறார். </p><h2>வடகிழக்கு பருவமழை</h2><p>தமிழகத்திற்கு அதிக மழை தரும் காலமாக வடகிழக்கு பருவமழை காலம் உள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை நிலவுகிறது. இந்த பருவமழை காலத்தில் புயலால் பாதிப்புகளும் ஏற்படுகின்றன. பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க ஆண்டுதோறும் அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்துவருகிறது.</p><h2>ஆலோசனைக் கூட்டம்</h2><p>இந்நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நாளை (செப்.21) அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தமிழக <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டம், தலைமைச் செயலகத்தில் நாளை நண்பகல் 12 மணியளவில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>டெல்டா மற்றும் கடலோர மாவட்ட  கலெக்டர்கள் காணொலி வாயிலாக பங்கேற்கின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் நீர்நிலைகளை தூர்வாருதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, பலவீனமான மின்கம்பங்களை சீரமைத்தல் குறித்து ஆலோசனை நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. </p>]]></content:encoded></item><item><title>நாளை கோவை வருகிறார் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் - டிரோன்கள் பறக்க தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vice-president-cp-radhakrishnan-is-visiting-coimbatore-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vice-president-cp-radhakrishnan-is-visiting-coimbatore-tomorrow#comments</comments><guid isPermaLink="false">6f3b4c92-16cd-4e3d-a700-018e9915c179</guid><pubDate>Sun, 20 Sep 2026 05:14:17 +0000</pubDate><atom:updated>2026-09-20T05:14:17.996Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,CP Radhakrishnan,சி.பி.ராதாகிருஷ்ணன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/w4ra7f9k/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/w4ra7f9k/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நாளை (திங்கட்கிழமை) கோவை வருகிறார். தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்பட்டு கோவை விமான நிலையத்திற்கு வருகிறார். அவரை கலெக்டர் பவன்குமார் மற்றும் அமைச்சர்கள் வரவேற்க உள்ளனர். துணை ஜனாதிபதி கோவை வருகையை முன்னிட்டு டிரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது. </p><p><strong>இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-</strong></p><p>துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை கோவைக்கு வருகிறார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு கருதி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி முதல் வருகிற 22-ந் தேதி காலை 11 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. அதன்படி கோவை மாவட்டத்தில் ஏற்கனவே சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளுடன், காளப்பட்டி 4 ரோடு சந்திப்பு, கோவில்பாளையம், அன்னூர் பஸ் நிலையம், தென்திருப்பதி 4 ரோடு ஆகிய இடங்களில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.</p><p>இதுதவிர மேட்டுப்பாளையம் பஸ் நிலையம், வனக்கல்லூரி விருந்தினர் இல்லம், குஞ்சப்பனை மாவட்ட எல்லை, கஞ்சப் பள்ளி, கரியம்பாளையம் சந்திப்பு, கணியூர் சுங்கச்சாவடி, நீலாம்பூர் ஆகிய பகுதிகள் மற்றும் சிங்காநல்லூர், பீளமேடு. சித்ரா, நேரு நகர், சேரன்மாநகர், எஸ்.ஐ.எச்.எஸ். காலனி, சின்னியம்பாளையம், நவ இந்தியா, இருகூர் பகுதிகள் ஆகியவை தற்காலிக சிவப்பு மண்டல பகுதிகளாக அறிவிக்கப்பட்டு டிரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த பகுதிகளில் தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி ஊர்திகளை பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இலங்கைக்கு கடத்திய 800 கிலோ பீடி இலைகள் பறிமுதல்: 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/800-kg-of-beedi-leaves-smuggled-to-sri-lanka-seized-2-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/800-kg-of-beedi-leaves-smuggled-to-sri-lanka-seized-2-arrested#comments</comments><guid isPermaLink="false">f424cb38-92fa-43cc-b54f-0beef517a887</guid><pubDate>Sun, 20 Sep 2026 05:09:46 +0000</pubDate><atom:updated>2026-09-20T05:09:46.996Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rameswaram,ராமேசுவரம்,Seizure,பறிமுதல்,Sri Lanka,beedi leaves,smuggling,2 arrested,இலங்கை,பீடி இலைகள்,கடத்தல்,2 பேர் கைது</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/2yyaa0iw/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இலங்கைக்கு கடத்திய 800 கிலோ பீடி இலைகள் பறிமுதல்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/2yyaa0iw/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமேசுவரம், </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">இலங்கை</a> நீர்க்கொழும்பு கடலில் ரோந்து பணியில் இருந்த இலங்கை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88">கடற்படை</a>யினர், இலங்கைக்கு கடத்திய 800 கிலோ பீடி இலைகளை பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.  </p><h2>கடல் வழியாக கடத்தல்</h2><p>ராமேசுவரம், தனுஷ்கோடி உள்பட ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி வழியாக இலங்கைக்கு கஞ்சா, ஹெராயின், பீடி இலை, கடல் அட்டை, மஞ்சள், ஏலக்காய், மருந்து என பலவிதமான பொருட்கள் கடத்தப்படுகின்றன. </p><h2>800 கிலோ பீடி இலைகள் பறிமுதல்; 2 பேர் கைது</h2><p>இந்த நிலையில் இலங்கை நீர்க்கொழும்பு கடலில் ரோந்து பணியில் இருந்த இலங்கை கடற்படையினர் படகு ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த படகில் 21 சாக்கு பைகளில் இருந்த 800 கிலோ <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88">பீடி இலை</a> மூட்டைகளை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">பறிமுதல்</a> செய்தனர். அந்த மூட்டைகளை இலங்கைக்கு கடத்தி வந்ததாக அந்நாட்டை சேர்ந்த 2 பேரை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>பீடி இலை மூட்டைகள் ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் இருந்து கடத்தப்பட்டதா? அல்லது தூத்துக்குடியில் இருந்து கடத்தப்பட்டதா? என்பது குறித்து உளவு பிரிவு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">போலீசார் விசாரணை </a>நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>கடலூரில் புதிய சிப்காட், என்.எல்.சி. விரிவாக்கம்... நிலம் கையகப்படுத்தும் திட்டங்களை கைவிட வேண்டும்: அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-sipcot-nlc-expansion-in-cuddalore-land-acquisition-plans-should-be-abandoned-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-sipcot-nlc-expansion-in-cuddalore-land-acquisition-plans-should-be-abandoned-anbumani#comments</comments><guid isPermaLink="false">880dffab-ddc9-4d7a-b21f-a68f500c2e3a</guid><pubDate>Sun, 20 Sep 2026 05:02:03 +0000</pubDate><atom:updated>2026-09-20T05:02:03.631Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Cuddalore,கடலூர்,Anbumani Ramadas,என்.எல்.சி,அன்புமணி ராமதஸ்,சிப்காட்,NLC,Sipcot,Expansion</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/b532sjkr/19.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/b532sjkr/19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கடலூரில் புதிய சிப்காட், என்.எல்.சி. கூடுதல் நிலங்களை கையகப்படுத்தும் திட்டங்களை கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>புதிய சிப்காட் வளாகம்</h2><p>கடலூர் மாவட்டத்தில் புதிய சிப்காட் வளாகம் அமைப்பதற்காக தியாகவல்லி, குடிக்காடு பகுதிகளில்  ஏற்கனவே அறிவிக்கை செய்யப்பட்ட 1097 ஏக்கருடன் மேலும் 164 ஏக்கர் நிலங்களையும்,  என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காக  கையகப்படுத்துவதற்கான அறிவிக்கையை அரசு வெளியிட்டுள்ளது. </p><p>ஏற்கனவே நிலப்பறிப்பு மற்றும்  சுற்றுச்சூழல் பாதிப்புகளால் ஒட்டுமொத்த கடலூர் மாவட்டமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும், மீண்டும் சிப்காட் வளாகங்களையும், நிலக்கரி சுரங்கங்களையும் திணிப்பதும், நிலங்களைப் பறிப்பதும் கண்டிக்கத்தக்கவை.</p><h2>விளைநிலங்களை கையகப்படுத்தும் அரசாணை</h2><p>கடலூர் மாவட்டத்தின் தலைநகரமான கடலூரில் 2625 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் வளாகம் செயல்பட்டு வருகிறது. அதற்கு அருகிலேயே குடிக்காடு மற்றும் தியாகவல்லி பகுதிகளில் 1119 ஏக்கரில் இன்னொரு சிப்காட் வளாகத்தை உருவாக்க முடிவு செய்த திமுக அரசு அப்பகுதிகளில், 1097 ஏக்கர் விளைநிலங்களைக் கையகப்படுத்துவகான அரசாணையை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 28-ம் தேதி பிறப்பித்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள மக்கள் தொடர் போராட்டங்களை நிகழ்த்தி வரும் நிலையில், இப்போது குடிக்காடு, தியாகவல்லி கிராமங்களில் மொத்தம் 164.20 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவதற்கான அறிவிக்கையை தமிழக அரசு கடந்த ஒன்றாம் தேதி வெளியிட்டுள்ளது. </p><p>இந்த நிலங்கள் அனைத்தும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடமிருந்து கடந்த காலங்களில் இரு தனியார் பெரு நிறுவனங்களால் குறைந்த விலையில் பறிக்கப்பட்டவை ஆகும். அந்த நிலங்களை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும்  என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்த நிலையில், அவற்றை அரசே பறிக்கத் துடிப்பதை ஏற்க முடியாது.</p><h2>தவெக அரசு</h2><p>புதிய அறிவிக்கையின் மூலம் கையகப்படுத்தப்படும் நிலங்களில் 75 சதவீதம் பெரு நிறுவனங்களுக்கு சொந்தமானவை என்றாலும், இதன் மூலம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 1119 ஏக்கர் பரப்புடன் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள 164.20 ஏக்கரையும் சேர்த்து, மொத்தம் 1,283 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் வளாகம் அமைக்கப்படவுள்ளதை தவெக அரசு உறுதி செய்துள்ளது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய சிப்காட் வளாகம் ஓரகடத்தில் 3157 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக செய்யாறில் 2937 ஏக்கர் பரப்பளவில் இரண்டாவது  பெரிய சிப்காட் அமைந்துள்ளது. </p><p>இந்த இரண்டுக்கும் அடுத்த நிலையில் தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய சிப்காட் 2625 ஏக்கரில் கடலூரில் தான் உள்ளது. அத்துடன் 1283 ஏக்கரில் புதிய சிப்காட் அமைக்கப்பட்டால்  3,968 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாட்டின் மிகப்பெரிய சிப்காட் வளாகம் கடலூரில் தான் செயல்படும். இது கடலூர் மாவட்டத்திற்கான வளர்ச்சி அல்ல.... மாறாக பேரழிவு ஆகும். இது கடலூருக்குத் தேவையில்லை.</p><h2>என்.எல்.சி நிறுவனம்</h2><p>அதேபோல், என்.எல்.சி நிறுவனத்தின் சுரங்கம் 1 விரிவாக்கத்திற்காக கங்கைகொண்டான் கிராமத்தில் 12.60 ஏக்கர் பரப்பளவிலான 68 துண்டு நிலங்களும், சுரங்கம் 1ஏ விரிவாக்கத்திற்காக வானதிராயபுரம் கிராமத்தில் 3.21 ஏக்கர் பரப்பளவிலான 77 துண்டு நிலங்களும் கையகப்படுத்தப்படும் என்று தமிழக அரசு வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் வீட்டுமனை நிலங்களாகும். இவை கையகப்படுத்தப்பட்டால் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வதற்கு இடமில்லாத நிலை ஏற்படக்கூடும்.</p><h2>நிலம், நீர், காற்று ஆகிய அனைத்தும் மாசு</h2><p>கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள இரசாயன ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்படாத கழிவுகளால் நிலம், நீர், காற்று ஆகிய அனைத்தும் மாசுபடுகின்றன. தொழிற்சாலைக் கழிவுகள் நீரிலும், நிலத்திலும் கலந்ததால் கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்களின் தாய்ப்பாலிலும், அங்கு விளையும் இளநீரிலும் டையாக்சின் எனப்படும் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய நச்சுப்பொருள்கள் அதிகமாக கலந்திருக்கின்றன. இன்னொருபக்கம், கடலூர் மாவட்டத்தில் உள்ள என்.எல்.சி  நிலக்கரி சுரங்கங்களால் கடலூர் மாவட்டத்தில் உள்ள 30 லட்சம் மக்களும் ஏதேனும் ஒரு வகையில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இத்தகைய சூழலில் மேலும் 1,283 ஏக்கரில் புதிய சிப்காட் வளாகம் அமைப்பட்டால் கடலூர் மாவட்டம் முழுவதும் நச்சுக்காடாக மாறிவிடும்.</p><p>அதுமட்டுமின்றி, சிப்காட் வளாகம் அமைக்கப்படுவதால் உழவர்கள் மற்றும் பொதுமக்களால் வாழ்வாதாரம் பறிக்கப்படுகிறது. குடிக்காடு, தியாகவல்லி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் வளம் மிகுந்தவை. அவற்றின் மூலம் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வருமானம் ஈட்டப்படுகிறது. ஆனால், சில இடங்களில் அடிப்படையான வழிகாட்டி மதிப்பாக ஏக்கருக்கு ரூ.3.31 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு, அதனடிப்படையில் தான் இழப்பீடு கணக்கிடப்படுகிறது. வழிகாட்டி மதிப்பை விட சுமார் 3 முதல் 4 மடங்கு வரை கூடுதல் தொகை இழப்பீடாக வழங்கப்படுவதாக தமிழக அரசின் சார்பில் கூறப்பட்டாலும், இழப்பீடாக வழங்கப்படும் தொகை அப்பகுதியின் சந்தை மதிப்பில் மூன்றில் ஒரு பங்கு கூட இல்லை என்பது தான் உண்மையாகும். அதையும் தாண்டி, குடிக்காடு, தியாகவல்லி பகுதியில் உள்ள மக்களின் ஒற்றை ஆதாரம் விவசாயம் மட்டும் தான். இந்த நிலங்களை குறைந்த விலை கொடுத்து அரசு பறிப்பதன் மூலம்  மக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் சூறையாடுகிறது. இதனால், நிலத்தை இழக்கும் மக்கள் சொந்த மண்ணிலேயே கூலிகளாக மாறி விடுவார்கள்.</p><h2>பரந்தூர் விமான நிலையத் திட்டம்</h2><p>முந்தைய திமுக ஆட்சியில் காவிரி பாசன மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கப்படுவதற்காவும், மதுரை பகுதியில் டங்க்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்காகவும் நிலங்கள் கையகப்படுத்துவதாக இருந்தால், அதைத் தடுப்பதற்காக பதவி விலகவும் தயங்க மாட்டேன் என்று அப்போதைய முதல்-அமைச்சர் வீர வசனம் பேசினார். கடலூர் மாவட்ட மக்களின் நிலம் பறிக்கப்படுவதாக இருந்தால் மட்டும் வாய்மூடி மவுனமாகிவிடுவார். இப்போதைய முதல்-அமைச்சரோ பரந்தூர் மக்களுக்காக விமான நிலையத் திட்டத்தையே கைவிடுவார்; ஆனால், கடலூர் மாவட்ட மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் மீண்டும், மீண்டும் நிலம் எடுக்க ஆணையிடுகிறார்.</p><p>இவற்றையெல்லாம் பார்க்கும் போது தமிழ்நாட்டில் நடப்பது தவெக ஆட்சியா, திமுக அரசின் நீட்சியா? என்று தமிழ்நாட்டு மக்கள் ஐயம் எழுப்புகிறார்கள். தமிழ்நாட்டில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பது தான் உண்மை. கடலூர் மாவட்டத்தில் புதிய சிப்காட் அமைக்கும் திட்டம்,  என்.எல்.சி சுரங்கம் 1, 1ஏ விரிவாக்கத் திட்டங்கள் ஆகியவற்றையும், அவற்றுக்காக மொத்தம் 1277 ஏக்கர் நிலங்களை கையகப் படுத்துவதற்கான அறிவிக்கைகளையும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81">தமிழக அரசு</a> உடனடியாக கைவிட வேண்டும். இல்லாவிட்டால் பாதிக்கப்படும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் என எச்சரிக்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இருமல் மருந்து பாட்டில்களில் எச்சரிக்கை வாசகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/warning-message-on-cough-syrup-bottles</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/warning-message-on-cough-syrup-bottles#comments</comments><guid isPermaLink="false">3e26b10e-9f07-4314-95ed-2c34ad882695</guid><pubDate>Sun, 20 Sep 2026 04:57:30 +0000</pubDate><atom:updated>2026-09-20T04:57:30.041Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இருமல் மருந்து,குழந்தைகள்,childrens,Cough syrups</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/4vfos742/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/4vfos742/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>இருமல் மற்றும் சளி மருந்துகளை இளம் குழந்தைகளுக்கு விவேகத்துடன் பரிந்துரைக்க வேண்டும் எனவும் குறிப்பாக 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பரிந்துரைப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் சுகாதாரப்பணிகள் இயக்குனரகம் கடந்த ஆண்டு பரிந்துரைத்தது. </p><p>இதைத்தொடர்ந்து 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சில குறிப்பிட்ட கலவை மருந்துகள் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்தது. இந்த நிலையில் இருமல் மற்றும் சளி மருந்துகளை 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பயன்படுத்துவதற்கு எதிரான எச்சரிக்கை வாசகத்தை அந்த மருந்து பாட்டில் லேபிள்களில் அச்சிட மருந்து ஆலோசனைக் கமிட்டியிடம் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.</p><p>இது ஏற்கப்பட்டால் விரைவில் இந்த வாசகங்களுடன் இருமல் மற்றும் சளி மருந்து பாட்டில்கள் விற்பனைக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சில மாதங்களுக்கு முன்னர் மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் கலப்படம் செய்யப்பட்ட இருமல் மருந்துகளால் குழந்தைகள் உயிரிழந்த சம்பவங்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>கோவில் கொடைவிழாவில் தகராறு: வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை: மர்ம கும்பல் வெறிச்செயல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/clash-at-temple-festival-young-man-hacked-to-death-savage-act-by-unidentified-gang</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/clash-at-temple-festival-young-man-hacked-to-death-savage-act-by-unidentified-gang#comments</comments><guid isPermaLink="false">db2ce2a4-acac-47fa-87da-03e7e930c1af</guid><pubDate>Sun, 20 Sep 2026 04:49:49 +0000</pubDate><atom:updated>2026-09-20T04:49:49.896Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Crime News,நெல்லை,Nellai,தமிழகம்,murder,கொலை,கிரைம் செய்திகள்,police investigation,போலீஸ் விசாரணை,களக்காடு,Kalakkadu</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/9v8eaxlc/rr.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/9v8eaxlc/rr.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>களக்காடு, </p><p>களக்காடு அருகே நேற்று இரவு வாலிபரை சரமாரி வெட்டிக்கொலை செய்த 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.</p><h2>விவசாயி</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/nellai">நெல்லை</a> மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழ தேவநல்லூரை சேர்ந்த சங்கர சுப்பிரமணியன் மகன் ரமேஷ் ராம் (வயது 33). விவசாயி. நேற்று இரவு இவர் அங்குள்ள மணிமுத்தாறு கால்வாய் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கும்பல் அவரை வழிமறித்தது.</p><h2>கொலை</h2><p>பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ரமேஷ் ராமை சரமாரி வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.</p><p>இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த களக்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ரமேஷ் ராம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.</p><h2>மர்மகும்பலுக்கு வலைவீச்சு</h2><p>கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அதே பகுதியில் உள்ள கோவில் கொடைவிழாவில் ரமேஷ் ராம் தரப்பினருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. அதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக ரமேஷ்ராம் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>மேலும் 4 பேர் கொண்ட மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்வு: 23-ந்தேதி மாவட்டங்களில் கருத்து கேட்பு கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/auto-fare-hike-in-tamil-nadu-opinion-poll-to-be-held-in-districts-on-23rd</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/auto-fare-hike-in-tamil-nadu-opinion-poll-to-be-held-in-districts-on-23rd#comments</comments><guid isPermaLink="false">43bbb1f2-4403-4369-a5f5-de6de98b62cc</guid><pubDate>Sun, 20 Sep 2026 04:35:11 +0000</pubDate><atom:updated>2026-09-20T04:35:11.591Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,Chennai,சென்னை,தமிழகம்,order,உத்தரவு,உயர்வு,consultation meeting,ஆட்டோ கட்டணம்,hike,கருத்து கேட்பு கூட்டம்,Auto fare</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/r5hw9dki/pg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாட்டில் ஆட்டோ கட்டணம் உயர்வு: 23-ந்தேதி கருத்து கேட்பு கூட்டம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/r5hw9dki/pg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">தமிழகத்தில்</a> ஆட்டோ <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">கட்டணம் உயர்வு</a> தொடர்பாக வரும் 23-ந்தேதி அனைத்து மாவட்டங்களிலும் கருத்து கேட்பு கூட்டம் நடத்த போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது. </p><h2> 23-ந்தேதி கருத்து கேட்பு கூட்டம்</h2><p>தமிழகத்தில் ஓடும் 3.46 லட்சம் ஆட்டோக்களுக்கு 2013-ம் ஆண்டு 1.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.25-ம், அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் தலா ரூ.12-ம் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. புதிய கட்டணம் நிர்ணயம் குறித்து, அனைத்து மாவட்டங்களிலும், நுகர்வோர் அமைப்புகளுடன் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">கருத்து கேட்பு கூட்டம்</a>, வரும் 23-ந் தேதி நடத்த வேண்டும் என, கலெக்டர்களுக்கு போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது. </p><h2>குறைந்தபட்ச கட்டணமாக ரூ.45 நிர்ணயம்</h2><p>தமிழக முற்போக்கு நுகர்வோர் மையத் தலைவர் சடகோபன் கூறியதாவது: </p><p>ஆயுத பூஜை, தீபாவளி போன்ற பண்டிகை நாட்கள் அடுத்தடுத்து வருவதால், இனியும் தாமதம் இன்றி, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B">ஆட்டோ </a>கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். குறைந்தபட்ச கட்டணமாக ரூ.45 நிர்ணயம் செய்ய வேண்டும். ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.20 வரை வசூலிக்க வேண்டும். அனைத்து ஆட்டோக்களிலும் 'டிஜிட்டல் மீட்டர்' மற்றும் ஜி.பி.எஸ். கருவிகள் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சார்லப்பள்ளி - நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-charlapalli-and-nagercoil</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-charlapalli-and-nagercoil#comments</comments><guid isPermaLink="false">0a179522-4e95-4f75-a657-97bd50ab6370</guid><pubDate>Sun, 20 Sep 2026 04:19:20 +0000</pubDate><atom:updated>2026-09-20T04:19:20.863Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,Nagercoil,நாகர்கோவில்,Special train</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/n3upxr93/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/n3upxr93/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,  </p><p>ஆயுதபூஜை பண்டிகையின் போது பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சார்லப்பள்ளி -நாகர்கோவில் இடையே திருச்சி வழியாக சிறப்பு ரெயிலை தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. அதன்படி, சார்லப்பள்ளி நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 07535) வருகிற 25 மற்றும் அடுத்த மாதம் (அக்டோபர்) 2, 9, 16, 23-ந்தேதிகளில் (வெள்ளிக்கிழமை) சார்லப்பள்ளியில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 10.45 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். </p> <p>இந்த ரெயிலானது திருச்சி ஜங்ஷனுக்கு மதியம் 3.25 மணிக்கு வந்து 3.30 மணிக்கு புறப்பட்டு செல்லும். மறுமார்க்கத்தில் நாகர்கோவில் சார்லப்பள்ளி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 07536) வருகிற 27-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் 4, 11, 18, 25-ந்தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) நாகர்கோவிலில் இருந்து நள்ளிரவு 12.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சார்லப்பள்ளி சென்றடையும். இந்த ரெயிலானது திருச்சிக்கு காலை 6.35 மணிக்கு வந்து 6.40 மணிக்கு புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ரெயிலுக்கான முன்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>சில்லறை விற்பனை கடைகளுக்கு மது வகைகளை அனுப்பும் நடைமுறையில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/change-in-the-procedure-for-supplying-liquor-to-retail-outlets</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/change-in-the-procedure-for-supplying-liquor-to-retail-outlets#comments</comments><guid isPermaLink="false">660a9314-8d69-45ec-867a-0edc4d789a7c</guid><pubDate>Sun, 20 Sep 2026 04:15:37 +0000</pubDate><atom:updated>2026-09-20T04:15:37.814Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டாஸ்மாக்,Tasmac,மதுபான கடை,Tasmac shop</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/hwbtlrvy/CHENNAI-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/hwbtlrvy/CHENNAI-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தால் 4,765 மதுபான சில்லறை விற்பனை கடைகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. சில்லறை விற்பனை வாயிலாக ஒரு நாளைக்கு சராசரியாக 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கும் நிலையில் வார விடுமுறை மற்றும் தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் பல மடங்கு விற்பனை அதிகரிக்கும்.</p><p>அதே நேரத்தில் குறிப்பிட்ட ஒரு சில நிறுவனங்களின் மதுபானங்கள் மட்டுமே சில்லறை விற்பனை கடைகளில் விற்பனைக்கு வருவதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து தவெக அரசு ஆட்சியில் அனைத்து மதுபான நிறுவனங்களிடம் இருந்தும் சம அளவில் மதுபானம் வாங்கப்பட்டு அனைத்து வகை மதுக்களும் விற்கப்படும் என அமைச்சர் விக்னேஷ் கூறியிருந்தார். இதுதொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருந்தது.</p><p>இந்த நிலையில், டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளுக்கு மது வகைகளை அனுப்பும் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் ஒவ்வொரு கடையின் உண்மையான தேவை மற்றும் கோரிக்கையின் அடிப்படையில் மட்டுமே மது பாட்டில்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அமலில் இருந்த அனைத்து சப்ளையர்களின் பொருட்களையும் கடைகளுக்கு சமமாக பிரித்து வழங்கும் முறை நிறுத்தப்படுகிறது.</p><p>மூத்த மண்டல மேலாளர்கள் மாவட்ட மேலாளர்கள், கிடங்கு மேலாளர்கள், உத்தரவை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் புதிய முறையின் மூலம் கடைகளில் தேங்கும் விற்பனையாகாத மதுக்கள் குறையும் என்றும் விற்பனை அதிகம் உள்ள பிராண்டுகள் தேவைக்கேற்ப கிடைக்கும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>