<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 03 Aug 2026 19:27:48 +0000</lastBuildDate><item><title>‘காவிரி விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் விஜய் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டும்’ - நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-must-convene-an-all-party-meeting-regarding-the-cauvery-issue-nainar-nagendran-urges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-must-convene-an-all-party-meeting-regarding-the-cauvery-issue-nainar-nagendran-urges#comments</comments><guid isPermaLink="false">ea478e57-adac-4b1d-b568-572788961a09</guid><pubDate>Mon, 03 Aug 2026 16:34:29 +0000</pubDate><atom:updated>2026-08-03T16:34:29.471Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/g2gnbunv/State-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/g2gnbunv/State-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில், சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை உருவச்சிலைக்கு பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அவர் கூறியதாவது;-</p><p>“மேகதாதுவில் கர்நாடக அரசு ஒருபோதும் அணை கட்ட முடியாது. காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளையும் அழைத்து முதல்-அமைச்சர் விஜய் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். சட்டம் ஒழுங்கை பொறுத்தவரை, தமிழகத்தில் தற்போது த.வெ.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>ஆடிப்பெருக்கு விழா: பவானிசாகர் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aadi-perukku-festival-tourists-flock-to-bhavanisagar-dam-park</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aadi-perukku-festival-tourists-flock-to-bhavanisagar-dam-park#comments</comments><guid isPermaLink="false">6f4247cb-c044-40e3-b1c1-916c05dca184</guid><pubDate>Mon, 03 Aug 2026 16:20:00 +0000</pubDate><atom:updated>2026-08-03T16:20:00.242Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பவானிசாகர்,Aadi festival,ஆடிப்பெருக்கு விழா,Bhavani Sagar Dam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/3wkh2lzw/State-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/3wkh2lzw/State-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>விவசாயம் செழிக்கவும், நாடு வளம்பெறவும் முக்கிய ஆதாரமான நீர்நிலைகளை போற்றி வழிபடும் 'ஆடிப்பெருக்கு விழா', ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான ஆடி 18– ம் தேதி கொண்டாப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் ஆகஸ்டு 3-ந்தேதி (இன்று) ஆடிப்பெருக்கு சீறும் சிறப்புமாக கொண்டாடப்பட்டு வருகிறது.</p><p>ஆடிப்பெருக்கு விழாவையொட்டி ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பவானிசாகர் அணை பூங்காவிற்கு வருகை தந்தனர். பூங்காவில் படகில் சவாரி செய்தும், சிறுவர் ரெயில் உள்ளிட்ட பொழுதுபோக்கு சாதனங்களில் விளையாடியும் குழந்தைகள் உற்சாகமாக பொழுதைக் கழித்தனர். சுற்றுலா பயணிகளின் வருகையால் பவானிசாகர் பூங்கா களைகட்டியது. </p>]]></content:encoded></item><item><title>கடன் தள்ளுபடி: சென்னையில் நாளை 15-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் காத்திருப்பு போராட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/loan-waiver-over-15-farmers-associations-to-hold-sit-in-protest-in-chennai-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/loan-waiver-over-15-farmers-associations-to-hold-sit-in-protest-in-chennai-tomorrow#comments</comments><guid isPermaLink="false">2b81d6d0-09a3-4e9a-8486-75ae86cbe749</guid><pubDate>Mon, 03 Aug 2026 16:10:45 +0000</pubDate><atom:updated>2026-08-03T16:10:45.315Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,காத்திருப்பு போராட்டம்,கடன் தள்ளுபடி,Loan Waiver,விவசாய சங்கங்கள்,From tomorrow</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/04uhpwzw/masilamani.jpg" width="682"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விவசாய சங்கங்கள் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/04uhpwzw/masilamani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சாமி நடராஜன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன் முருகசாமி ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:-</p><h2>தேர்தலல் வாக்குறுதி</h2><p>மாநிலம் முழுவதும் விவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவு பயிர் கடனில் 5 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு முழுகடன் தள்ளுபடியும், 5 ஏக்கருக்கு மேல் கடன் பெற்ற விவசாயிகள் கடனில் பாதி தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதி கொடுத்து, தேர்தலில் வெற்றி பெற்று முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்.</p><h2> ஏமாற்றம்</h2><p> தேர்தல் வாக்குறுதிப்படி கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்யாமல், முதலில் 50 ஆயிரம் வரை கடன் பெற்றவர்களுக்கு முழு தள்ளுபடி என்றும், அதற்கு பின் பல்வேறு விவசாய சங்கங்களின் போராட்டங்களுக்கு பிறகு அடுத்த அறிவிப்பில், 75000 வரை கடன் பெற்ற சிறு-குறு விவசாயிகளுக்கு முழு தள்ளுபடி என்றும், 75 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு கடன் பெற்ற தொகையில் வெறும் ரூ.35000 தள்ளுபடி என்றும் அறிவித்தது விவசாயிகளுக்கு மிகப் பெரிய ஏமாற்றமாகும்.</p> <h2>தள்ளுபடி </h2><p>எனவே, தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிபடி கூட்டுறவு பயிர் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">விவசாயிகள் சங்கங்களின்</a> சார்பில் தினந்தோறும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மாநில முதல்-அமைச்சர் இதனை கணக்கில் எடுத்து பயிர்க்கடனை இதுவரை தேர்தல் கால வாக்குறுதிப்படி தள்ளுபடி செய்வதற்கான எந்த அறிவிப்பும் வெளியிடாதது விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றமளிக்கிறது.</p><h2>காத்திருப்பு போராட்டம் </h2><p>எனவே, 15க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கங்களின் சார்பில் நாளை சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்திடுவதென்று முடிவு செய்துள்ளோம். இந்த பெருந்திரள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் அனைத்து பகுதி விவசாயிகளும், விவசாய சங்கங்களும், பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம். விவசாயிகளுடைய கடன் தள்ளுபடிக்கான <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">காத்திருப்பு போராட்டத்திற்கு</a> அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>லிவ்-இன் உறவுகளுக்கும் 498ஏ சட்டப் பாதுகாப்பு: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/498a-legal-protection-for-live-in-relationships-supreme-court-verdict</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/498a-legal-protection-for-live-in-relationships-supreme-court-verdict#comments</comments><guid isPermaLink="false">d6556504-ee0d-4329-8ed8-846bed74920b</guid><pubDate>Mon, 03 Aug 2026 16:10:26 +0000</pubDate><atom:updated>2026-08-03T16:10:26.257Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமணம்,சுப்ரீம் கோர்ட்டு,SupremeCourt,WomenRights,SupremeCourtRuling</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/0k18kw85/court33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சுப்ரீம் கோர்ட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/0k18kw85/court33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><p>திருமணத்தை போன்ற தன்மையுடைய லிவ்-இன் உறவுகளுக்கும் இந்திய தண்டனை சட்டத்தின் 498ஏபிரிவின் பாதுகாப்பு பொருந்தும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.</p><p>கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர், தான் ஒருவருடன் லிவ்-இன் உறவில் இருந்த போது, அவர் தனது முந்தைய திருமணத்தை மறைத்து தன்னிடம் வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தியதாகவும், உடல்ரீதியான காயம் ஏற்படுத்தியதாகவும் கூறி 498ஏ பிரிவின் கீழ் வழக்கு தொடர்ந்தார்.</p><p>நாங்கள் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதால் இந்த சட்டம் என் மீது பாயாது" எனக் கூறி அந்த நபர் கர்நாடக ஐகோர்ட்டில் அந்த பெண்ணின் மனுவை தள்ளுபடி செய்யக் கோரினார். ஆனால், கர்நாடக ஐகோர்ட்டு அந்த நபரின் கோரிக்கையை நிராகரித்ததை அடுத்து, அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். </p><p>அந்த வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், <a href="https://www.dailythanthi.com/search?q=supreme%20court">சுப்ரீம் கோர்ட்டு</a> நீதிபதிகள் நோங்மெய்கபம் கோதிஸ்வர் சிங் மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.</p><p>அதில், திருமணம் செய்துகொள்ளும் நோக்கம் நிரூபிக்கப்பட்டு 'லிவ்-இன்' உறவில் இருப்பவர்களுக்கு இந்த உத்தரவு கண்டிப்பாகப் பொருந்தும்.</p><p>இதன் பொருள், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 498ஏ-இன் கீழ், அதன் வரம்பு லிவ்-இன் உறவில் இருக்கும் பெண்களையும் உள்ளடக்கும் வகையில் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>அதேபோல, சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்துகொண்ட பெண்ணுக்குக் கொடுமை நேர்ந்தால் அதற்கு எதிரான பாதுகாப்பு கிடைப்பதைப் போன்றே, திருமண உறவைப் போன்ற லிவ்-இன் உறவில் இருக்கும் பெண்ணுக்கு அத்தகைய பாதுகாப்பு கிடைக்காமல் போவது அரசியலமைப்புக்கு முரணானது.அது அரசியலமைப்பின் 14-வது பிரிவை மீறுவதாகும்.</p><p>கணவர் அல்லது கணவரின் குடும்பத்தினரால் மனரீதியான, உடல்ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாவது அல்லது அப்பெண்ணைத் தற்கொலைக்குத் தூண்டுதல் போன்ற குற்றங்களிலிருந்து பாதுகாப்பு அளிப்பதே சட்டப்பிரிவு 498ஏ-வின் நோக்கமாகும். இந்த நிலையில், அதுபோன்ற துன்புறுத்தல்கள் திருமணத்திற்குப் பின் மட்டுமே நிகழும், அதற்கு முன் நிகழாது எனக் கூறுவது மிகைப்படுத்தப்பட்ட கண்ணோட்டம் என்பதே எங்களின் கருத்து.</p><p>திருமணம் செய்யும் நோக்கத்துடன் நீண்டகாலம் இணைந்து வாழ்ந்தது நிரூபிக்கப்பட்டால், கணவர் அல்லது அவரது குடும்பத்தினரின் கொடுமைக்கு எதிரான 498ஏ சட்டப் பாதுகாப்பை லிவ்-இன் உறவில் உள்ள பெண்களும் பெறலாம் என நீதிபதிகள் அதிரடி தீர்ப்பை வழங்கினர்.</p>]]></content:encoded></item><item><title>கபினி அணையில் நீர்திறப்பு வினாடிக்கு 30,000 கன அடியாக அதிகரிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-discharge-from-kabini-dam-increased-to-30000-cubic-feet-per-second</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-discharge-from-kabini-dam-increased-to-30000-cubic-feet-per-second#comments</comments><guid isPermaLink="false">dffee968-f146-40c8-a377-36c1a3eeed9c</guid><pubDate>Mon, 03 Aug 2026 16:04:20 +0000</pubDate><atom:updated>2026-08-03T16:04:20.006Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கபினி அணை,நீர்திறப்பு,Kabini Dam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/lomzmwz4/State-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/lomzmwz4/State-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பெங்களூரு,</p><p>காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், கர்நாடகாவில் உள்ள முக்கிய அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்) அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு மின்னல் வேகத்தில் எகிறியுள்ளது. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>மைசூர் அருகே உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து கடந்த 31-ந்தேதி வரை சீராக இருந்த நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் நீர்வரத்து விநாடிக்கு 15,500 கன அடியாக அதிரடியாக உயர்ந்தது. அணை மிக வேகமாக நிரம்பி வருவதால், அதன் பாதுகாப்பை வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.</p><p>கடல் மட்டத்தில் 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையும் நிரம்பும் தருவாயில் உள்ளது. நேற்று காலை நிலவரப்படி அந்த அணையின் நீர்மட்டம் 2,282 அடியாக இருந்தது. அதாவது இந்த அணையில் 19.52 டி.எம்.சி. நீர் தேக்கி வைக்க முடியும். நேற்றைய நிலவரப்படி அணையில் 18.21 டி.எம்.சி. நீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 27 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் திறக்கப்பட்டது.</p><p>இந்த நிலையில், கபினி அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 30,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கபினி அணைக்கு வரும் நீர் மொத்தமும் திறந்து விடப்படுவதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>5 ஆண்டுகளில் இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் - ஆதவ் அர்ஜுனா நம்பிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-to-become-indias-sports-capital-in-5-years-adhav-arjuna-hope</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-to-become-indias-sports-capital-in-5-years-adhav-arjuna-hope#comments</comments><guid isPermaLink="false">25bb21b1-622a-4645-953f-4075e3ac93a2</guid><pubDate>Mon, 03 Aug 2026 16:03:10 +0000</pubDate><atom:updated>2026-08-03T16:03:10.004Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,இந்தியா,India,ஆதவ் அர்ஜுனா,தலைநகரம்,Capital,விளையாட்டுSports,All over Tamil Nadu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/sy9edhb1/adav.jpg" width="682"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜுனா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/sy9edhb1/adav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்தியாவில் ஊழல் இல்லாத முதல் மாநிலம் தமிழ்நாடு, ஊழல் இல்லா தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அனைத்து முதலீட்டாளர்களும் வரவேண்டும், நாங்கள் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருகிறோம்.</p> <p>முதல்-அமைச்சர் நம்பியுள்ளார்</p><p>கடந்த கால ஆட்சியில் கட்சி நிதி என்ற பெயரில் வாங்கிய ஊழலை நாங்கள் ஒழித்துள்ளோம். தமிழ்நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் தான் என<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D"> முதல்-அமைச்சர்</a> நம்பியுள்ளார் அதன் அடிப்படையில் இளைஞர்களுக்கான பல அறிவிப்புகள் பட்ஜெட்டில் இருக்கும். </p><p>சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்திய தொழில் கூட்டமைப்பின் சி.ஐ.ஐ சார்பில் "தமிழ்நாடு உட்கட்டமைப்பு உச்சி மாநாடு 2026" நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.</p><p>அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மேடையில் பேசியதாவது:-</p><h2>சமூக நீதி</h2><p>அரசியல் ரீதியாக அண்ணாதுரையின் திராவிட நோக்கமான சமத்துவத்தை வைத்து அதிலிருந்து அரசியலாக மாறி அரசு அனைவருக்கும் கல்வி, சமூக நீதி, பொருளாதார விடுதலை அனைவருக்கும் சமமாக கிடைக்க செயல்பட்டு வருகின்றோம். ஜாதி,மத,வேறுபாடு இல்லாமல் அரசு அனைவருக்கும் என்ற சிந்தனையோடு செயல்பட்டு வருகிறோம். எம்ஜிஆர், அண்ணா நோக்கத்தில் இந்த அரசு உருவாகியுள்ளது.</p><h2>அரசியல் சண்டை</h2><p>கர்நாடகாவில் காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் அரசியல் சண்டை நடக்கிறது, ஆனால் நம்மிடம் வளர்ச்சி என்ற நோக்கத்தில் புது மாற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும், சம உரிமைக்காகவும் வாய்ப்பு வழங்கியுள்ளார்கள். ஊழல் இல்லாத ஆட்சியை வழங்க வேண்டும் என மக்கள் வாய்ப்பு வழங்கியுள்ளார்கள். கலைஞர், ஜெயலலிதாவிற்கு பிறகு மக்கள் புது தலைவரை தேர்ந்தெடுத்துள்ளார்கள். </p><h2>உரிமை</h2><p>பெண்கள், இளைஞர்கள் புது மாற்றத்தை தந்துள்ளார்கள். மக்கள் புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளார்கள். புதிய அரசு மக்கள் எதிர்பார்ப்பு என்று சொல்வதை விட மக்களின் உரிமையாக அரசு அமைந்துள்ளது. </p><h2>நோக்கம் தேவை</h2><p>வளர்ச்சியை நோக்கி செல்ல வேண்டுமானால் நமக்கு நோக்கம் தேவை, நோக்கம் இருக்க வேண்டும் என்றால் வெளிப்படை தன்மையான அரசு இருக்க வேண்டும்;நம் அரசு வெளிப்படைத் தன்மையோடு செயல்படும் அரசாக செயல்பட்டு வருகிறது. ஒரு அரசின் செயல்பாட்டிற்கு உள்கட்டமைப்பு மிகவும் முக்கியம். போக்குவரத்து, தொழில்நுட்பம், வணிகம் இது மூன்றும் ஒரு அரசுக்கு மிகவும் முக்கியம்.. இந்த மூன்று துறையிலும் தமிழ்நாடு அரசு வெளிப்படை தன்மையோடு செயல்பட்டு வருகிறது. </p><h2>ஊழல் இல்லாத முதல் மாநிலம் </h2><p>கடந்த கால ஆட்சியில் கட்சி நிதி என்ற பெயரில் வாங்கிய ஊழலை நாங்கள் ஒழித்துள்ளோம். சலுகையின் முக்கிய பிரச்னை ஊழல். கடந்த 80 நாட்களில் அனைத்து வசதிகளையும் இணையவழி மூலமே பெறும் வழிவகையை முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார். இந்தியாவில் ஊழல் இல்லாத முதல் மாநிலம் தமிழ்நாடு; ஊழல் இல்லா தமிழ் நாட்டில் முதலீடு செய்ய அனைத்து முதலீட்டாளர்களும் வரவேண்டும், நாங்கள் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருகிறோம்.</p><h2>தமிழ்நாடு வளர்ச்சி</h2><p>தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களிலோ, அமைச்சரின் அலுவலகங்களிலோ காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அனைத்து கோப்புகளுக்கும் நாங்கள் ஒத்துழைப்பு தருகிறோம். உங்களுடைய முதலீட்டால் தமிழ்நாடு இளைஞர்களுக்கு புது வேலை கிடைக்கும். தமிழ்நாட்டில் 19% வேலை வாய்ப்பு இல்லாதவர்கள் உள்ளார்கள், மூன்று வருடங்களில் சிறந்த முதலீட்டை தமிழ்நாட்டில் செய்தால் 400 சதவீதம் உள்கட்டமைப்பில் தமிழ்நாடு வளர்ச்சி பெறும். </p><h2>கண்டிப்பாக செய்வோம்</h2><p>*இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கிய எங்கள் முதல்-அமைச்சர் அதை தூக்கிப் போட்டுவிட்டு அரசியலுக்கு வந்துள்ளார் என்றால் அவருக்கு பணம் ஒரு முக்கிய விஷயம் இல்லை என்று தான் அர்த்தம். அமைச்சர்களாகிய நாங்கள் ஒரு ரூபாய் தேர்தலுக்கு செலவு செய்யவில்லை. தமிழக தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக சாதி, மதம், பணம் என எதுவும் இன்றி வாக்களித்துள்ளார்கள், என்ன வாக்குறுதி கொடுத்தோமோ அதை மக்களுக்கு கண்டிப்பாக செய்வோம். தவறு செய்தால் மக்கள் தூக்கி எறிந்து விடுவார்கள் என நன்கு அறிவோம்.  </p><h2> பல மாற்றம் </h2><p>80 நாளில் என்ன செய்தீர்கள் என கேள்வி கேட்கிறார்கள், பத்திரப்பதிவுத்துறை, கட்டுமானத் துறை, உணவுத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளில் 50 ஆண்டுகள் இல்லாத பல மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. </p> <h2>ஐஐடியின் ஆய்வு</h2><p>சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம், உள்ளிட்ட எல்லாவற்றையும் பொதுப்பணித்துறை தான் கட்டியுள்ளது. கடந்த 10 முதல் 15 ஆண்டுகளில் கட்டிய கட்டிடங்களை ஆய்வு செய்தால் 10 வருடங்களில் கீழே விழுந்து விடும் என்று ஐஐடியின் ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரிட்டிஷ்காரர்கள் கட்டிய கட்டிடம் எப்படி உள்ளது, இப்போது கட்டிய கட்டிடம் எப்படி உள்ளது என்பதை பார்க்க வேண்டும். எந்தத் திட்டமும் இல்லாமல் கட்டிடத்தை கடந்த கால ஆட்சியாளர்கள் கட்டியுள்ளார்கள். வருகிற பட்ஜெட்டில் முதல்-அமைச்சரும், அமைச்சரவையும் பலவற்றை அறிவிக்க உள்ளோம். ஒரு திட்டத்தை கொண்டு வந்தால் அடுத்த 50 வருடத்திற்கு அது செயல்பட வேண்டும் என திட்டமிட்டு செயல்படுகிறோம்.</p> <h2>ஊழல்</h2><p>நெடுஞ்சாலை துறையில் 21,000 கோடி ஒதுக்கினால், அதில் 30 முதல் 40 சதவீதம் நிதி பேட்ச் வொர்க், பழுதுபார்த்தல் செய்துள்ளார்கள். ஏனென்றால் அதில் தான் ஊழலை கண்டுபிடிக்க முடியாது. தொகுப்புப் பணி என கூறி 35 சதவீதம் அதில் ஊழல் செய்துள்ளார்கள். </p> <h2>ஆறு வருடம்</h2><p>சிங்கப்பூரில் ஒரு சாலை அமைத்தால் அது ஆறு வருடம் இருக்க வேண்டும் என சொல்கிறார்கள், அப்படி இல்லையெனில் அந்த சாலைக்கு ஒப்பந்ததாரர் தான் பொறுப்பு என்று உள்ளது. ஆனால் இங்கு அப்படி இல்லை சில சாலைகள் போடாமலேயே போட்டுள்ளார்கள் என கூறியுள்ளார்கள். </p> <h2>உண்மை</h2><p>கடன் வாங்கி எந்த கேப்பிட்டல் ஒர்க்கும் நடைபெறவில்லை. அமைப்பு முற்றிலும் தவறானது, இதையெல்லாம் கண்டுபிடிக்க கூடாது என்பதால் தான் அரசியல் ரீதியாக பல திசை திருப்பும் வேலையை செய்கிறார்கள். நிச்சயம் தவறை கண்டறிந்து உண்மையை வெளிக்கொண்டு வருவோம். </p><h2>புதிய நோக்கம்</h2><p>*சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு 3 மணி நேரத்தில் செல்லக்கூடிய வகையில் சாலை அமைக்க வேண்டும்.*பெரிய பெரிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இருக்கும், ஒரு புதிய பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் இருக்கும். ஒவ்வொரு துறையும் ஒரு புதிய நோக்கத்தை, இலக்கை நோக்கிய அறிவிப்பாக இருக்கும். </p> <h2>இளைஞர்களுக்கான பல அறிவிப்புகள்</h2><p>தமிழ்நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் தான் என முதல்-அமைச்சர் நம்பியுள்ளார், அதன் அடிப்படையில் இளைஞர்களுக்கான பல அறிவிப்புகள் பட்ஜெட்டில் இருக்கும். கடந்த ஐந்து ஆண்டு<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D"> பட்ஜெட்</a> எடுத்தால் கூறிய பட்ஜெட்டையே மீண்டும் காபி செய்து கூறுவார்கள். </p> <h2>விளையாட்டு தலைநகரம்</h2><p> வடக்கு மற்றும் தென் மாவட்டங்களில் பெண்களின் பங்களிப்பு குறைவாக உள்ளது. தர்மபுரி, கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி இந்தப் பகுதிகளில் பெண்கள் இன்றளவும் உயர்கல்வி படிக்காமல் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் என தெரிவித்தார்.</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஜவ்வாது மலையில் தாழ்வாக பறந்த ஹெலிகாப்டர் - மலைவாழ் மக்கள் அச்சம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/helicopter-flies-low-over-javvadhu-hills-hill-tribe-residents-alarmed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/helicopter-flies-low-over-javvadhu-hills-hill-tribe-residents-alarmed#comments</comments><guid isPermaLink="false">64bfc2f5-1bb9-472a-89fb-a3e04e7650df</guid><pubDate>Mon, 03 Aug 2026 15:52:06 +0000</pubDate><atom:updated>2026-08-03T15:52:06.986Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,ஜவ்வாது மலை,Tiruvannamalai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/kw4ijpq6/State-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/kw4ijpq6/State-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை,</p><p>திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே, கடந்த சில நாட்களாக தாழ்வாக பறந்து வட்டமிட்ட ஹெலிகாப்டரால், மலைவாழ் மக்கள் அச்சமடைந்துள்ளனர். </p><p>அல்லேரி மலைப்பகுதியில் நீர்மின் திட்டம் தொடர்பான சர்ச்சை நீடித்து வரும் நிலையில், ஜவ்வாது மலையின் ஜமுனாமரத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த ஹெலிகாப்டர் பறப்பதற்க்கும் அதற்கும் தொடர்பு உள்ளதா என மக்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். </p><p>ஹெலிகாப்டர் எந்த துறையின் சார்பில், எதற்காக பறக்கிறது என்பது குறித்து, மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை எழும்பூரில் மறுசீரமைப்பு பணி: விரைவு, புறநகர் ரெயில் சேவையில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/renovation-work-at-chennai-egmore-changes-in-rapid-suburban-train-services</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/renovation-work-at-chennai-egmore-changes-in-rapid-suburban-train-services#comments</comments><guid isPermaLink="false">b9564fc9-4860-48fe-8e98-de3ea926e33f</guid><pubDate>Mon, 03 Aug 2026 15:34:58 +0000</pubDate><atom:updated>2026-08-03T15:34:58.654Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Egmore,Chennai Beach,சென்னை எழும்பூர்,புறநகர் மின்சார ரெயில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/2o7cqxnb/train33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
சென்னை எழும்பூரில் மறுசீரமைப்பு பணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/2o7cqxnb/train33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மீண்டும் மறுசீரமைப்பு பணி நடைபெற உள்ளது. ரெயில் சேவையில் மாற்றம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.</p><p>சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, புறநகர் மின்சார ரெயில் சேவைகளில் தற்காலிக மாற்றங்களை சென்னை ரெயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் மின்சார ரெயிலை பயன்படுத்தும் பயணிகள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>ஏற்கனவே எழும்பூர் நிலையத்தில் நடைபெறும் பணிகளால், சில விரைவு ரயில்களின் புறப்பாடு மற்றும் வருகை நிலையங்களில் மாற்றம் செய்யப்பட்டு, குறிப்பிட்ட ரயில்கள் தாம்பரம் நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன. வெளி மாவட்டங்களிலிருந்து வரும் சில ரயில்களும் எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்திலேயே சேவையை நிறைவு செய்கின்றன.</p><p>இந்த நிலையில்,  ஆகஸ்ட் 5 முதல் 20-ம் தேதி வரை 9 விரைவு ரெயில்களின் சேவையில் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக, சேலம் - சென்னை எழும்பூர் விரைவு ரயில் உள்ளிட்ட சில ரயில்கள் ஆகஸ்ட் 5 முதல் 19-ஆம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.</p><p>சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகளின் ஒரு பகுதியாக நடைமேம்பாலத்துக்கான தூண்கள் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதையொட்டி சில ரெயில்களின் இயக்கத்தில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.</p><p>அதன்படி, விருத்தாசலம் வழியாக இயக்கப்படும் சேலம்- சென்னை எழும்பூர் விரைவு ரெயில், ஆகஸ்ட் 5 முதல் 19-ஆம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரெயில் அதிகாலை 3.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.</p> <p>அதேபோல கோவை, ஈரோடு, கரூர், திருச்சி வழியாக இயக்கப்படும் மங்களூரு சென்ட்ரல்- சென்னை எழும்பூர் விரைவு ரெயிலும் ஆகஸ்ட் 5 முதல் 19-ஆம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரெயில் அதிகாலை 3.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.</p><p>மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து மங்களூரு சென்ட்ரலுக்கு இயக்கப்பட வேண்டிய விரைவு rஎயிலும் (ஆக. 5 முதல் 19 ஆம் தேதி வரை) தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 11.40 மணிக்குப் புறப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>புறநகர் ரெயில் சேவை ரத்து </h2><p>ஆகஸ்ட் 22 முதல் 30-ம் தேதி வரை சென்னை கடற்கரை - தாம்பரம் செல்லும் 3 புறநகர் ரெயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. </p><p>ஆகஸ்ட் 22 முதல் 30-ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை கடற்கரை - தாம்பரம் செல்லும் 5 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யபட்டுள்ளது</p><p>ஆகஸ்ட் 22, 23, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரை–தாம்பரம் வழித்தடத்தில் இரவு 11.30, 11.31, 11.50, 11.51, 12.00 மற்றும் 12.09 மணிக்கு கடற்கரை நிலையத்திலிருந்து புறப்படும் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. மேலும், வழக்கமாக அதிகாலை 4.00 மணிக்கு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">சென்னை கடற்கரை</a> நிலையத்திலிருந்து புறப்படும் முதல் மின்சார ரெயில், அந்த நாட்களில் கிண்டி நிலையத்திலிருந்து தாம்பரம் நோக்கி இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த மாற்றங்கள் இரவு நேர பணிகளை முடித்து வீடு திரும்புவோர், தாம்பரம் வழித்தட பயணிகள் மற்றும் அதிகாலை ரயில்களை பயன்படுத்துவோரை பாதிக்கக்கூடும் என்பதால், மாற்று போக்குவரத்து ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து கொள்ளுமாறு ரெயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.</p><p>எழும்பூர் ரெயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளை விரைவாக நிறைவு செய்வதற்காக இந்த தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வேலூரில் டாக்டர் வீட்டில் கொள்ளை: ரூ.1.50 லட்சம், 40 பவுன் நகை மாயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/doctors-house-robbed-in-vellore-rs-150-lakh-40-pounds-of-jewelry-missing</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/doctors-house-robbed-in-vellore-rs-150-lakh-40-pounds-of-jewelry-missing#comments</comments><guid isPermaLink="false">b7273ace-8bf3-47ff-80c4-a510916877b2</guid><pubDate>Mon, 03 Aug 2026 14:31:31 +0000</pubDate><atom:updated>2026-08-03T14:31:31.256Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vellore,வேலூர்,கொள்ளை,robbed of jewelry,The magic of jewelry - நகை மாயம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/47v3fjpw/173.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நகை கொள்ளை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/47v3fjpw/173.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வேலூர், </p><p>வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி ஏரியூரை சேர்ந்தவர் முனிரத்தினம். ஐ-கோர்ட்டில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி அம்பிகா (வயது 70). கணவர் இல்லாததால் தனியாக வசித்து வருகிறார். தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பெங்களூரில் சேல்ஸ் மேனாகவும், 2-வது மகன் புருஷோத்தமன் செங்கல்பட்டில் டாக்டராக பணியாற்றி வருகின்றனர்.</p><p>அம்பிகா நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு மகளை பார்ப்பதற்காக செங்கல்பட்டிற்கு சென்றார். அன்று அன்று இரவு அப்பகுதிக்கு வந்த மர்ம நபர்கள் அம்பிகாவின் வீடு பூட்டப்பட்டு இருந்ததை கண்டனர். மர்ம நபர்கள் முன்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். </p><h2>நகை கொள்ளை</h2><p>பூஜை அறையில் பையில் இருந்த 40 நகைகள் மற்றும் ரூ.1.50 லட்சம் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி சென்றனர். நேற்று காலை அம்பிகாவின் வீட்டு மாடியில் வாடகைக்கு குடியிருக்கும் பாலாஜி என்பவர் கீழே வந்தார். வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து அம்பிகாவிற்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். அம்பிகா மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த நகை, பணம் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88#google_vignette">கொள்ளை</a> போனது தெரியவந்தது.</p> ]]></content:encoded></item><item><title>தஞ்சை சிலிண்டர் விபத்து: பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thanjavur-cylinder-accident-compensation-3-lakh-rupees-each</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thanjavur-cylinder-accident-compensation-3-lakh-rupees-each#comments</comments><guid isPermaLink="false">9c8e5805-888c-4e8f-a68e-6723309a43b5</guid><pubDate>Mon, 03 Aug 2026 14:29:50 +0000</pubDate><atom:updated>2026-08-03T14:29:50.799Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thanjavur,தஞ்சை,சிலிண்டர் விபத்து,CM Public Relief Fund,நிவாரணம் அறிவிப்பு,cylinder explosion,Order உத்தரவு,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/ciue5y19/cm-vijay.03.jpg" width="682"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/ciue5y19/cm-vijay.03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தஞ்சாவூர் சிலிண்டர் விபத்தில் பலியான 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண உதவி வழங்க <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a> உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-</p><h2>வேதனை அடைந்தேன்</h2><p>தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் வட்டம், சின்ன அம்மங்குடி கிராமத்தில் 30.07.2026 அன்று காலையில் .முருகையன் த/பெ. சின்னையன் என்பவரது வீட்டின் கூரை வேய்ந்த சமையலறை கொட்டகை தீப்பற்றி எரிந்ததில், வீட்டினுள் இருந்த எரிவாயு சிலிண்டர் எதிர்பாராதவிதமாக வெடித்ததினால் ஏற்பட்ட விபத்தில், பலத்த தீக்காயமடைந்த பழனிவேல் (வயது-36), த/பெ. அப்புராசு, காசிநாதன் (வயது-39) த/பெ. வீரையன் மற்றும்  வேம்பையன், (வயது-52) த/பெ. வீரையன் ஆகியோர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.</p><h2>சிறப்பு சிகிச்சை</h2><p>இவ்விபத்தில், பலத்த தீக்காயங்களுடன் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ராஜசேகர் (வயது-32), த/பெ. செல்வராசு, செல்வி (வயது-41), க/பெ. முருகையன், அபிநயா, (வயது-15), த/பெ. முருகையன், கலையரசி, (வயது-39) க/பெ. வேம்பையன், புவனேஷ் (வயது-16), த/பெ. ரமேஷ் ஆகிய ஐந்து நபர்களுக்கும், லேசான தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்றுவரும் செல்வராசு, (வயது-64), த/பெ. சின்னையன் என்பவருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.</p> <h2>நிவாரணம்</h2><p>இந்த விபத்தில், உயிரிழந்த மூன்று நபர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், பலத்த தீக்காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நபர்களுக்குத் தலா ஒரு 1 லட்சம் ரூபாயும், லேசான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நபருக்கு 50,000 ரூபாயும் முதல்-அமைச்சரின் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">பொது நிவாரண நிதியிலிருந்து</a> வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கரூர்:தலைமை ஆசிரியை மீது தாக்குதல் - ஆசிரியை சஸ்பெண்ட்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-attack-on-headmistress-teacher-suspended</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-attack-on-headmistress-teacher-suspended#comments</comments><guid isPermaLink="false">1abb65db-0604-4df2-bd0e-9d728237febe</guid><pubDate>Mon, 03 Aug 2026 14:28:31 +0000</pubDate><atom:updated>2026-08-03T14:28:31.814Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர்,சஸ்பெண்ட்,தலைமை ஆசிரியை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/4jkg6kem/karur33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆசிரியை சஸ்பெண்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/4jkg6kem/karur33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கரூர்,</p><p>அரசு பள்ளி தலைமை ஆசிரியையை தாக்கியதாக இடைநிலை ஆசிரியை கலைமதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.</p> <p>கரூர் மாவட்டம் ண்டாங்கோவில் கிழக்கு அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்குத் தலைமை ஆசிரியராக புவனா என்பவரும், இடைநிலை ஆசிரியராக கலைமதி என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.</p> <p>இந்தநிலையில், கலைமதி சரியாக வேலை செய்யவில்லை என, தலைமை ஆசிரியை புவனா அளித்த புகாரால், வட்டார கல்வி அலுவலர் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த கலைமதி, ஜூலை 30ல் வகுப்பறையில் வைத்து, மாணவர்கள் மத்தியில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">தலைமை ஆசிரியை</a> புவனாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தை, தன் செல்போனில் மற்றொரு ஆசிரியை பதிவு செய்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.</p><p>இந்தநிலையில்,  கரூரில் அரசு பள்ளி தலைமை ஆசிரியையை தாக்கியதாக இடைநிலை ஆசிரியை கலைமதியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அரசு பள்ளி தலைமை ஆசிரியை மீது தாக்குதல் - சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு உத்தரவிட்ட அதிகாரிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/attack-on-government-school-headmistress-officials-order-suspension</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/attack-on-government-school-headmistress-officials-order-suspension#comments</comments><guid isPermaLink="false">91c7e2ad-ea0d-48df-a759-6a45f04011be</guid><pubDate>Mon, 03 Aug 2026 14:21:17 +0000</pubDate><atom:updated>2026-08-03T14:21:17.965Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர்,சஸ்பெண்ட்,suspend,Karur,Teacher</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/c36de386/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/c36de386/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கரூர்,</p><p>கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னாண்டாள் கோவில் பகுதியில் இயங்கி வரும் அரசு துவக்கப் பள்ளியில் புவனா என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அதே பள்ளியில் கலைமதி என்பவர் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். </p> <p>இதனிடையே, கலைமதி பள்ளிக்கு சரியாக வருவதில்லை என உயர் அதிகாரிகளிடம் தலைமை ஆசிரியர் புவனா புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த புகாரின் அடிப்படையில் உயர் அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் வந்து விசாரணையும் நடத்தியுள்ளனர். இதனால் கலைமதிக்கு புவனா மீது ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. </p><p>இதையடுத்து கடந்த 30-ந்தேதி, தலைமை ஆசிரியர் புவனா வகுப்பில் இருந்தபோது உள்ளே நுழைந்த இடைநிலை ஆசிரியர் கலைமதி, மாணவர்களின் கண் முன்னால் புவனாவை கடுமையாக தாக்கியுள்ளார். இது தொடர்பான சி.சி.டி.வி. காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இடைநிலை ஆசிரியை கலைமதியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>திமுக ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சைக்குள்ளான உதயநிதி ஸ்டாலினின் பேச்சு 

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/udayanidhi-stalin-controversial-speech-at-dmk-protest</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/udayanidhi-stalin-controversial-speech-at-dmk-protest#comments</comments><guid isPermaLink="false">7847253b-74f0-4a61-83d0-a43bec78f8e0</guid><pubDate>Mon, 03 Aug 2026 14:18:39 +0000</pubDate><atom:updated>2026-08-03T14:18:39.767Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/r06dqxbv/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/r06dqxbv/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சை,</p><p>கர்நாடகா மேகதாதுவில் அணை கட்டுவதை தவெக அரசு தடுக்க தவறியதாகவும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வலியுறுத்தியும் தஞ்சையில் திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை <a href="https://www.dailythanthi.com/">திமுக</a> இளைஞரணி செயலாளரும், சட்டசபை எதிர்க்கடை தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தினார். </p><h2>ஆர்ப்பாட்டத்தின்போது உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, </h2><p> கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் வந்திருக்க வேண்டும். காவிரியில் ஒருசொட்டு தண்ணீர் கூட வரவில்லை. ஆனால் இதுபற்றி இன்று இருக்கும் முதல்-அமைச்சர் வாயை திறந்து பேசவில்லை.</p><p>முதல்-அமைச்சருக்கு இருக்கும் ஒரே கவலை திமுக மீது என்ன பொய் வழக்கு போடலாம் என்பதுதான்’ என்றார்.</p><p>அப்போது அங்கு கூடியிருந்த திமுகவினர், நடிகை ஒருவரின் பெயரை கூறி கூச்சலிட்டனர். </p><p>அப்போது தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், எங்கே தண்ணீர் வருகிறதோ இல்லையோ அங்கே தண்ணீர் வர வேண்டும்... நான் காவிரியை கூறினேன்’ என்றார். </p><p>இந்த பேச்சு இரட்டை அர்த்தம் கொண்டதாகவும், சர்ச்சைக்குரிய வகையிலும், ஆபாசமாகவும் இருப்பதாக உதயநிதி ஸ்டாலினுக்கு பாஜக உள்பட அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Would the Leader of the Opposition, Mr. Udhayanidhi Stalin, <a href="https://x.com/Udhaystalin?ref_src=twsrc%5Etfw">@Udhaystalin</a>  play this part of his speech to his own daughter and son? Such disgusting taste.<a href="https://x.com/arivalayam?ref_src=twsrc%5Etfw">@arivalayam</a>  <a href="https://x.com/CMOTamilnadu?ref_src=twsrc%5Etfw">@CMOTamilnadu</a> <a href="https://x.com/TVKPartyHQ?ref_src=twsrc%5Etfw">@TVKPartyHQ</a> <a href="https://t.co/yr4JvrLPSE">pic.twitter.com/yr4JvrLPSE</a></p>&mdash; Felix Gerald (@FelixGerald_TVK) <a href="https://x.com/FelixGerald_TVK/status/2084248023115477365?ref_src=twsrc%5Etfw">August 3, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>கிணறு ஆக்கிரமிப்பு புகார்: தவெக அமைச்சர் மீது கிராம மக்கள் குற்றச்சாட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-minister-accused-of-encroaching-60-year-old-public-well</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-minister-accused-of-encroaching-60-year-old-public-well#comments</comments><guid isPermaLink="false">a84a7181-386a-4a8b-9aca-c57fb24a0cf3</guid><pubDate>Mon, 03 Aug 2026 13:47:20 +0000</pubDate><atom:updated>2026-08-03T13:47:20.292Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,குற்றச்சாட்டு,allegation,புகார்,well,கிணறு,encroachment,ஆக்கிரமிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/0akk120g/jagadeshwari.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ஜெகதீஸ்வரி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/0akk120g/jagadeshwari.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>தூத்துக்குடி மாவட்டம் சத்தான்குளம் அருகே உள்ள பனைவிளை கிராமத்தில், 60 ஆண்டு கால பொது கிணற்றை ஆக்கிரமித்ததாக தமிழக வெற்றிக் கழக பிரமுகர் மீது கிராம மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>60 ஆண்டு கால பொதுக்கிணறு</h2><p>ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பனைவிளை கிராமத்தில், சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விளங்கும் பழமையான<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%81%20"> ஊர் கிணறு </a>ஒன்று உள்ளது. இந்த நிலத்தடி நீர் ஆதாரத்தை அந்த பகுதி மக்கள் தலைமுறை தலைமுறையாக பயன்படுத்தி வருகின்றனர். </p> <h2>தவெக பிரமுகர் மீது புகார்</h2><p>இந்த நிலையில், பொதுமக்களுக்கு சொந்தமான அந்த பழமையான கிணற்றை, தமிழக வெற்றிக் கழகத்தின்  முக்கிய பிரமுகரான அமைச்சர் ஜெகதீஸ்வரி என்பவர் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கேட்ட போது, இந்தக் கிணற்றை ஊர் பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக எங்கள் முன்னோர்கள் எந்தவொரு பத்திரமும் எழுதித் தரவில்லை. </p><p>இது எங்களுக்குச் சொந்தமானது" என்று <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF">அமைச்சர் ஜெகதீஸ்வரி</a> தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, "இனிமேல் இந்த ஊரில் யாரும் இந்தக் கிணற்றுப் பக்கமே வரக்கூடாது, தண்ணீரும் எடுக்கக் கூடாது" என தெரிவித்துள்ளனர்.</p><p>இச்சம்பவம் ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதியில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>4 அமைச்சர்கள் மாற்றம்? முதல்-அமைசர் விஜய் முடிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/4-ministers-to-be-changed-chief-minister-vijays-decision</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/4-ministers-to-be-changed-chief-minister-vijays-decision#comments</comments><guid isPermaLink="false">18787ca6-38f9-49c2-918f-480dcfd36d8b</guid><pubDate>Mon, 03 Aug 2026 13:45:49 +0000</pubDate><atom:updated>2026-08-03T13:45:49.067Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,Chennai,தமிழக அமைச்சரவை,முதல்-அமைசர் விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/olozynpm/cmvijayone33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  முதல்-அமைசர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/olozynpm/cmvijayone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்ய முதல்-அமைச்சர் விஜய் திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. </p><p>தவெக ஆட்சி</p><p>தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சியை பிடித்தது. முதல்வராக விஜய் பதவியேற்றார். அவரது கேபினட்டில் விஜய்யுடன் சேர்த்து 35 பேர் அமைச்சர்களாக உள்ளனர். இதில் செங்கோட்டையனை தவிர அனைவருமே முதல் முறை அமைச்சர்கள் ஆவர். இதனால், அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து உளவுத்துறை மூலமாக தகவல்களை முதல்-அமைச்சர் விஜய் பெற்று வருவதாக கூறப்படுகிறது.</p><h2>தமிழக அமைச்சரவை</h2><p>இந்தநிலையில்,  தமிழக அமைச்சரவையில் மிக முக்கியமான மாற்றங்களை செய்ய முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாக கோட்டை வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதில் 4 அமைச்சர்கள் நீக்கப்படலாம் என தெரிகிறது.</p><h2>லஞ்சம் இல்லாத ஆட்சி</h2><p>திராவிட கட்சிகளின் 59 ஆண்டு கால அரசியல் ஆதிக்கத்தை உடைத்து, தமிழகத்தில் ஒரு மாற்று ஆட்சியை அமைத்துள்ள முதல்-அமைச்சர் விஜய் லஞ்சம் இல்லாத ஆட்சியை நடத்த பாடுபட்டு வருகிறார்.</p><p>பொதுமக்கள் யாரும் லஞ்சம் கொடுக்காதீர்கள். அதையும் மீறி அரசு அலுவலகங்களில் யாரேனும் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுங்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.</p><p>ஆட்சி அமைத்ததில் இருந்தே முதல்-அமைச்சர் விஜய் இதை வலியுறுத்தி வருவதால் மேல்மட்ட அளவில் உயர் அதிகாரிகள் யாரும் இப்போது லஞ்சம் வாங்குவதில்லை. அரசு அலுவலகங்களில் இப்போது கீழ்மட்ட அளவிலும் லஞ்சம் கேட்க பயப்படுகின்றனர்.</p><p>தூய்மையான ஆட்சியை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள முதல்-அமைச்சர் விஜய், தனது அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் யாரையும் சகித்துக் கொள்ள மாட்டேன் என்று அமைச்சரவை கூட்டத்தின் போதே அறிவுறுத்தினார்.</p><h2>போலீஸ் கண்காணிப்பு</h2><p>அதுமட்டுமின்றி சென்னை கோட்டையில் ஒவ்வொரு அமைச்சர்களின் அறையிலும் போலீஸ் கண்காணிப்பு இருந்து கொண்டே இருக்கிறது. யார்-யார் சந்திக்க வருகிறார்கள். டிரான்ஸ்பர்களுக்கு யாரேனும் பணம் வாங்குகிறார்களா? என்பதை கண்காணித்து கொண்டே இருக்கிறார்கள்.</p><p>சிபாரிசு கடிதம் பெறுவதற்கு பணம் பெறுகிறார்களா? என்பதையும் கண்காணித்து கொண்டே இருக்கிறார்கள். மொத்தத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பிலேயே உள்ளனர். இதையறிந்து யாரும் இப்போது பணம் வாங்குவதில்லை. ஆனாலும் ஒரு சில அமைச்சர்கள் மீதான மறைமுக குற்றச்சாட்டு புகார்கள் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் என்பதால் ஆரம்பத்திலேயே 'களை' எடுக்க முதல்-அமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளார்.</p><p>இதற்காக தனது அமைச்சர்களின் செயல்திறன் மற்றும் செயல்பாடுகளை ஆய்வு செய்த ரகசிய ஆய்வறிக்கையின் அடிப்படையில் முதல்-அமைச்சர் விஜய் தனது முதல் அமைச்சரவையை மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளார்.</p><h2>பட்ஜெட் கூட்டத் தொடர்</h2><p>இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு அமைச்சர் உள்பட 4 அமைச்சர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக உயர்மட்ட வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சரால் நியமிக்கப்பட்டு தலைமைச் செயலாளர் எம்.சாய்குமார் தயாரித்த ரகசிய செயல் திறன் மதிப்பாய்வின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>இதற்காக ஒவ்வொரு அமைச்சரின் செயல்திறன் குறித்தும்  <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a> விரிவான அறிக்கையை கோரியிருந்தார். அந்த அறிக்கையின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையிலேயே இந்த அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற 5-ந்தேதி தொடங்க இருப்பதால் அடுத்த மாதம் சட்டசபை கூட்டம் முடிந்ததும் அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று தெரிய வருகிறது. இதனால் அமைச்சர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>‘கொள்கை முடிவு எடுக்கப்படும் வரை பைக் டாக்சிகளுக்கு அனுமதி கிடையாது&apos; - கோர்ட்டில் தமிழக அரசு பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-permission-for-bike-taxis-until-a-policy-decision-is-made-tamil-nadu-governments-reply-in-court</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-permission-for-bike-taxis-until-a-policy-decision-is-made-tamil-nadu-governments-reply-in-court#comments</comments><guid isPermaLink="false">39b2668e-c9ff-43b3-b351-30a0e9f206e1</guid><pubDate>Mon, 03 Aug 2026 13:30:58 +0000</pubDate><atom:updated>2026-08-03T13:30:58.289Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt,பைக் டாக்சி,bike taxi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/ttnysotb/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/ttnysotb/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>தமிழகத்தில் பைக் டாக்சிகளுக்கு அனுமதி கிடையாது என்றும், விதிகளை மீறி யாரேனும் பைக் டாக்சி இயக்கினால் தொடர்ந்து அபராதம் மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கை தொடரும் என்றும் தமிழக அரசு மதுரை ஐகோர்ட்டு கிளையில் பதிலளித்துள்ளது. </p><p>மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.நவீன்குமார் என்பவர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘தமிழகத்தில் ராபிடோ, ஓலா, உபர் உள்ளிட்ட செயலி அடிப்படையிலான பைக் டாக்சி சேவைகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை சாமானிய மக்கள், மாணவர்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்களுக்குப் பகுதிநேர வாழ்வாதாரமாகவும், பயணிகளுக்குக் குறைந்த கட்டணத்தில் இலக்கை அடையும் வசதியாகவும் செயல்படுகின்றன.</p><p>இருப்பினும், இதற்கென மாநில அரசு தெளிவான விதிகளை வகுக்காததால், காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பைக் ஓட்டுநர்களுக்கு ரூ.10,000 வரை அபராதம் விதித்து வாகனங்களைப் பறிமுதல் செய்கின்றனர். ஆனால், பைக் டாக்சி நிறுவனங்களை கட்டுப்படுத்தாமல், ஓட்டுநர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது நியாயமற்றது. மத்திய அரசின் மோட்டார் வாகனத் திருத்தச் சட்டத்தின் வழிகாட்டுதலின்படி, தமிழக அரசு பைக் டாக்சிகளுக்கான கட்டுப்பாட்டு விதிகளை (Motor Vehicle Aggregator Guidelines) உடனடியாக உருவாக்க வேண்டும்’ என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.</p><p>இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், “பைக் டாக்சிகளை முறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய போக்குவரத்துத் துறை, நிதித் துறை மற்றும் 'கும்டா' (CUMTA) பிரதிநிதிகள் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த விவகாரத்தில் அரசு விரிவான கொள்கை முடிவு எடுக்க வேண்டியுள்ளது. கொள்கை முடிவு எடுக்கப்படும் வரை தமிழகத்தில் பைக் டாக்சிகளுக்கு அனுமதி கிடையாது. விதிகளை மீறி யாரேனும் பைக் டாக்சி இயக்கினால் தொடர்ந்து அபராதம் மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கை தொடரும்” என்று தெரிவித்தார். </p><p>அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “பைக் டாக்சிகளுக்குத் தற்போது அனுமதி இல்லை என்றால், அதை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் அரசு ஏன் விளம்பரப்படுத்தவோ அல்லது விழிப்புணர்வு ஏற்படுத்தவோ கூடாது? பைக் டாக்சிகளில் பயணத்தின்போது விபத்து ஏதும் ஏற்பட்டால், அதற்கு யார் பொறுப்பேற்பது? பயணிகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. பைக் டாக்சிகளுக்கு அனுமதி வழங்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்பது குறித்து அரசு விரைந்து கொள்கை முடிவெடுக்க வேண்டும்” என்று தெரிவித்தனர். </p> ]]></content:encoded></item><item><title>திரிஷாவுக்கு நற்பணி மன்றம்... மதுரையில் ரசிகர்கள் போஸ்டர்..அரசியலுக்கு அழைப்பா? </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-poster-has-veeramangai-velunachiyars-picture-and-trishas-pictures-printed-on-it</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-poster-has-veeramangai-velunachiyars-picture-and-trishas-pictures-printed-on-it#comments</comments><guid isPermaLink="false">132b6f1b-55db-4965-bd2f-8d7feb0b9c73</guid><pubDate>Mon, 03 Aug 2026 13:24:18 +0000</pubDate><atom:updated>2026-08-03T13:24:18.087Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Trisha,Madurai,மதுரை,அரசியல்,திரிஷா,வேலூநாச்சியார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/xyl6b2cg/thirishaa33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
திரிஷாவுக்கு நற்பணி மன்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/xyl6b2cg/thirishaa33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மதுரையில் திரிஷா நற்பணி மன்றம் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறி, நகரின் பல்வேறு பகுதிகளில் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.</p><p>அரசியலாக இருந்தாலும் சரி, ஆன்மிகமாக இருந்தாலும் சரி, மதுரையில் ஒட்டப்படும் பிரமாண்ட போஸ்டர்கள் தமிழ்நாடு முழுவதும் பேசுபொருளாக மாறுவது காலங்காலமாக நடந்து வருகிறது.</p><h2>அரசியலுக்கு அழைப்பு</h2><p>அதிலும் பல மீட்டர் அளவுக்கு இடம்பெறும் போஸ்டர்கள் அரசியல் மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன. அந்தவகையில் திரிஷா தொடர்பான போஸ்டரும் இடம்பெற்றுள்ளது.</p><p>தமிழ் சினிமா உலகின் பிரபல நடிகையாக வலம் வரும் திரிஷா தற்போது பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் நிலையில் அவரை அரசியலுக்கு அழைக்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அதேபோல் திரிஷா அரசியலுக்கு வரவேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவித்தும் வருகிறார்கள்.</p><h2>திரிஷா நற்பணி மன்றம் </h2><p>இந்தநிலையில், மதுரையில் முதன்முறையாக திரிஷா நற்பணி மன்றம் தொடங்கப்பட்டு ரசிகர் மன்றத்தின் சார்பில் மதுரை முழுவதிலும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் திரிஷா அரசியலுக்கு வருமாறு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.</p><h2>மதுரை மீனாட்சி தாய்</h2><p>அந்த போஸ்டரில் தமிழக வீரமங்கை வேலுநாச்சியார் வழியில் தமிழக சங்க வரலாற்றில், முதல் முறையாக எங்கள் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE">அன்பு அக்கா திரிஷா</a>வுக்கு தமிழக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் சங்கம் என்ற வாசகத்தோடும், எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆரம்பிக்கும் முதல் மண் எங்கள் மதுரை என்றும், மதுரை மீனாட்சி தாய் ஆசிர்வாதத்தால்... என்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.</p><p>அந்த போஸ்டரில் வீரமங்கை வேலுநாச்சியாரின் படம் மற்றும் திரிஷா படங்களும் அச்சிடப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம்: பட்ஜெட்டில் அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/part-time-teachers-permanent-employment-announcement-in-the-budget-part-time-teachers-request-to-the-tamil-nadu-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/part-time-teachers-permanent-employment-announcement-in-the-budget-part-time-teachers-request-to-the-tamil-nadu-government#comments</comments><guid isPermaLink="false">9583a907-2ec7-4f2c-8b7c-860208b284f5</guid><pubDate>Mon, 03 Aug 2026 13:05:48 +0000</pubDate><atom:updated>2026-08-03T13:05:48.983Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Tamil Nadu Government,தமிழக அரசு,பட்ஜெட்,பகுதிநேர ஆசிரியர்கள்,part-time teachers,Budget,கோரிக்கை Request</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/jgg8rq53/172.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பகுதிநேர ஆசிரியர்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/jgg8rq53/172.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பகுதிநேர ஆசிரியர்கள் 11,773 பேருக்கு பணி நிரந்தர அறிவிப்பை பட்ஜெட்டில் வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. </p><p>இது தொடர்பாக, தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- </p><h2>பகுதிநேர ஆசிரியர்கள்</h2><p>ஆகஸ்டு 5-ந்தேதி சமர்ப்பிக்க உள்ள முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் முதலாவது பட்ஜெட் அறிவிப்பில் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் அறிவிப்பையும் சேர்த்து அறிவிக்க முதல்-அமைச்சர் விஜய் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என தமிழக அரசுப் பள்ளிகளில் 16 கல்வி ஆண்டுகளாக தற்காலிகமாக பணிபுரிகின்ற <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%20%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பகுதிநேர ஆசிரியர்கள்</a> சார்பில் கோரிக்கை விடுக்கிறோம். </p><p>உடற்கல்வி(3,843), ஓவியம்(3,721), கணினிஅறிவியல் (2,033), தையல்(1,584), இசை(329), தோட்டக்கலை(22), கட்டடக்கலை(49), வாழ்க்கைக்கல்வி(192) ஆகிய எட்டு பாடங்களில் தற்போது 11,773 பகுதிநேர ஆசிரியர்கள் 16 கல்வி ஆண்டுகளாக தற்காலிமாக பணிபுரிந்து வருகின்றார்கள்.</p><h2>பட்ஜெட்</h2><p>தற்போது சம்பளம் ரூ.15 ஆயிரம் தொகுப்பூதியத்தை கைவிட்டு, காலமுறை சம்பளம் வழங்க அதற்கான ஊதிய நிலை 10-ன்படி ரூ.20,600 அடிப்படை சம்பளம், அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி, மருத்துவப்படி ஆகியவற்றுடன் காலமுறை சம்பளம் வழங்க வேண்டும். இதற்கு தேவையான நிதியை சுமார் ரூ.300 கோடி இந்த பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். த.வெ.க. தேர்தல் அறிக்கையில் 5 ஆண்டு தற்காலிகமாக பணிபுரிந்த ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.</p><p>எனவே, பகுதிநேர ஆசிரியர்களை பொறுத்தவரை 15 கல்வி ஆண்டுகளை கடந்து தற்காலிகமாக பணிபுரிந்து வருவதால் முன்னுரிமை முக்கியத்துவம் கொடுத்து பணிநிரந்தரம் செய்ய வேண்டும். பட்ஜெட்டுக்கான அரசின் அறிவிப்பில் பணி நிரந்தரம் அறிவிப்பை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a> அறிவிக்க வேண்டும் என 11,773 பகுதிநேர ஆசிரியர்கள் எதிர்பார்த்து காத்துள்ளார்கள். </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அண்டை மாநிலங்களில் குவியும் தொழில் முதலீடுகள்; தவெக ஆட்சியில் பெரும் வீழ்ச்சியில் தமிழகம் -  நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/industrial-investments-are-flocking-to-neighboring-states-tamil-nadu-is-witnessing-a-massive-decline-under-the-tvk-government-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/industrial-investments-are-flocking-to-neighboring-states-tamil-nadu-is-witnessing-a-massive-decline-under-the-tvk-government-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">c61ea844-8bbd-4512-a35f-fa74a6987759</guid><pubDate>Mon, 03 Aug 2026 13:03:52 +0000</pubDate><atom:updated>2026-08-03T13:03:52.732Z</atom:updated><atom:author><atom:name>K.Sakthivel</atom:name><atom:uri>/api/author/2422436</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,தொழில் முதலீடுகள்,decline,வீழ்ச்சி,Industrial Investments</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/037lqfr3/nainar-nagendheran.new.gif" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/037lqfr3/nainar-nagendheran.new.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அண்டை மாநிலங்களில் குவியும் தொழில் முதலீடுகள்; <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95">தவெக</a> ஆட்சியில் பெரும் வீழ்ச்சியில் தமிழகம். இது தொடர்பாக, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:-</p><h2>முதலீட்டு தரவுகள் </h2><p>சமீபத்தில் வெளியாகியிருக்கும் 2027-ஆம் நிதியாண்டுக்கான முதல் காலாண்டின் முதலீட்டு தரவுகள் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள பெரிய வீழ்ச்சியை காட்டுகின்றன. மற்ற மாநிலங்களில் புதிய ஆட்சிகள் தொடங்கியவுடன் முதலீடுகள் பல மடங்கு உயர்ந்துள்ள வேளையில், தமிழகத்தில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் அரசு பொறுப்பேற்ற பிறகு ஒட்டுமொத்த முதலீடுகள் முந்தைய காலாண்டை காட்டிலும் 74.5 சதவீதமும், தனியார் முதலீடுகள் 77.63 சதவீதமும் மிக கடுமையான சரிவை சந்தித்துள்ளன.</p><h2>17-வது இடம்</h2><p>முன்மொழியப்பட்ட திட்டங்களில் வெறும் ரூ. 11,237 கோடியை மட்டுமே பெற்று, தேசிய அளவில் தமிழகம் 17-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யிடம் போதிய திட்டமிடல் இல்லாததும், புதிய முதலீட்டாளர்களை கவரும் கொள்கைகள் தவெக அரசிடம் இல்லாததுமே இத்தகைய வீழ்ச்சிக்கு காரணம். இதனால், தமிழகத்திற்கு வர வேண்டிய வெளிநாட்டு தனியார் முதலீடுகளும் ரூ. 2,080 கோடியிலிருந்து ரூ. 720 கோடியாக குறைந்துள்ளன.</p><h2>தொழில் கொள்கை</h2><p>வெறும் விளம்பர பேச்சுகளாலும், ரீல்ஸ்களாலும் மட்டும் புதிய முதலீடுகளை கொண்டுவர முடியாது என்பதை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் அரசுக்கு இந்த தரவுகள் தெளிவாக உணர்த்தியிருக்கின்றன. எனவே, <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%20">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் </a>உடனடியாக சரியான தொழில் கொள்கைகளை உருவாக்கி, சரிந்துவரும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும்; இல்லையேல், நமது இளைஞர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகிவிடும் என்பதை தவெக அரசுக்கு எச்சரிக்கையாக தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தலைமை செயலக வளாகத்தில் சுற்றி திரிந்த தெருநாய்களை பிடித்து சென்ற மாநாகராட்சி ஊழியர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/corporation-workers-rounded-up-and-removed-stray-dogs-that-were-roaming-the-secretariat-complex</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/corporation-workers-rounded-up-and-removed-stray-dogs-that-were-roaming-the-secretariat-complex#comments</comments><guid isPermaLink="false">cbc6e3ae-3153-4b3e-a511-1d9ad927d19b</guid><pubDate>Mon, 03 Aug 2026 12:55:48 +0000</pubDate><atom:updated>2026-08-03T12:55:48.080Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,street dogs,தெரு நாய்கள்,Head Office,தலைமைச் செயலகம்</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/wjapv5s7/63.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ மாநகராட்சி ஊழியர்கள்- தெரு நாய்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை தலைமைச் செயலகத்தில் சுற்றித் திரிந்த தெரு நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துச் சென்றனர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/wjapv5s7/63.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை தலைமைச் செயலகத்தில் சுற்றித் திரிந்த தெரு நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துச் சென்றனர்.</p><h2>தலைமைச் செயலகம்</h2><p>சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் சுற்றித் திரிந்த தெரு நாய்களைப் பெருநகர சென்னை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மாநகராட்சி ஊழியர்கள் </a>அதிரடியாகப் பிடித்துச் சென்றனர். சமீபகாலமாகத் தலைமைச் செயலக வளாகத்திற்குள் தெரு நாய்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகப் பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் எழுந்தன.</p><h2>தெரு நாய்கள் பத்திரமாக மீட்பு</h2><p>மேலும், இன்னும் இரண்டு நாட்களில் தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இதனால், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தலைமைச் செயலக வளாகத்திற்குள் வலைகளுடன் நுழைந்த சென்னை<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> மாநகராட்சி ஊழியர்கள்</a>, அங்கிருந்த தெரு நாய்களைப் பாதுகாப்பான முறையில் பிடித்து, வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.</p>]]></content:encoded></item><item><title>28 கிராம் தங்கம் வெல்ல தயாரா…ஜி.டி.என் மற்றும் டி.என்.ஏ கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் இணைந்து நடத்தும் கோல்டு ரஷ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ready-to-win-28-grams-of-goldgold-rush-jointly-organized-by-gdn-and-dna-gold-and-diamonds</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ready-to-win-28-grams-of-goldgold-rush-jointly-organized-by-gdn-and-dna-gold-and-diamonds#comments</comments><guid isPermaLink="false">b0f07e47-2ebb-4468-8bbb-2eccb292b941</guid><pubDate>Mon, 03 Aug 2026 12:52:52 +0000</pubDate><atom:updated>2026-08-03T12:52:52.677Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தங்கம்,gold,ஜி.டி.நாயுடு,நடிகர் மாதவன்,நடிகர் சத்யராஜ்,G.D.Naidu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/lzes6kia/naidu33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
28 கிராம் தங்கம் வெல்ல தயாரா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/lzes6kia/naidu33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஜி.டி.நாயுடு அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9C%E0%AE%BF.%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81">ஜி.டி.என் திரைப்படம் </a>எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் 7-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் ஜி.டி.நாயுடு கதாபாத்திரத்தில் <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D">நடிகர் மாதவன்</a> நடித்திருக்கிறார். </p><p>மேலும் இந்தப் படத்தில் சத்யராஜ், தம்பி ராமையா, ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன், கருணாகரன், அதிதி பாலன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். கிருஷ்ணா இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D">டிரைகலர் பிக்சர்ஸ்</a> மற்றும் வர்க்கீஸ் மூலன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். </p><p>படத்தின் வெளியீட்டை ஒட்டி ஜி.டி.என் படக்குழு மற்றும் டி.என்.ஏ கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் இணைந்து கோல்டு ரஷ் எனும் போட்டியை நடத்துகிறார்கள். போட்டியின் மொத்தப் பரிசு 28 கிராம் தங்கம் ஆகும். <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81">முதல் பரிசு</a> பெறும் வெற்றியாளருக்கு 10 கிராம் தங்கமும், அடுத்த 9 இடங்களைப் பிடிப்பவர்களுக்குத் தலா 2 கிராம் தங்கம் வீதமும் பரிசளிக்கப்படுகிறது. </p><h2>போட்டியில் கலந்துகொள்வது எப்படி?</h2><p>போட்டியில் கலந்துகொள்ள கீழே இருக்கும் இணைப்பை கிளிக் செய்து கொடுக்கப்பட்டிருக்கும்<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D"> டாஸ்குகளை முடிக்க வேண்டும். </a>டாஸ்குகளை அதிகம் முடித்து, உங்கள் ஸ்கோரை அதிகப்படுத்தி வெற்றி வாய்ப்பைப் பிரகாசப்படுத்திக் கொள்ளுங்கள். </p><p>இந்தப் போட்டி ஆகஸ்ட் 6-ம் தேதி முடிவடைகிறது. அதற்குப் பின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.</p><p><a href="https://app.viralsweep.com/sweeps/full/575186-233081?framed=1" rel="noopener noreferrer">https://app.viralsweep.com/sweeps/full/575186-233081?framed=1</a></p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-power-outage-in-tirunelveli-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-power-outage-in-tirunelveli-tomorrow#comments</comments><guid isPermaLink="false">a13ea4aa-72bc-4fd0-a547-a6776349589a</guid><pubDate>Mon, 03 Aug 2026 12:46:28 +0000</pubDate><atom:updated>2026-08-03T12:46:28.328Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,maintenance work,safety,மின் தடை power cut,பராமரிப்பு  பணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/4t4k1ew0/pwer-cut.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின் தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/4t4k1ew0/pwer-cut.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>திருநெல்வேலியில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்தடை ஏற்படும் என திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம் செயற்பொறியாளர் ரவிராமதாஸ் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக, வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>110/33-11KV மேலப்பாளையம் , 33/11 KV ரெட்டியார்பட்டி , மற்றும் 33/11 KV புதிய பேருந்து நிலையம் துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய் கிழமை) மாதாந்திர <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">பராமரிப்பு  பணிகள்</a> நடை பெறயிருப்பதால்  கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9:00 மணி முதல் மாலை 05.00 மணி வரை பாதுகாப்பு கருதி மின் விநியோகம்  நிறுத்தி வைக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.</p><h2><strong>மின் தடை ஏற்படும் இடங்கள்</strong></h2><p><strong>*</strong> மேலப்பாளையம், கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின் ரோடு, சந்தை பகுதிகள், குல வணிகர் புரம்,   மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹமீபுரம், மேலக்கருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக்குளம், அன்னை நகர், தருவை, ஓமநல்லூர்,  கண்டித்தான் குளம், ஈஸ்வரியா புரம், ஆஸ்பத்திரி ரோடு,  தெற்கு பைபாஸ் ரோடு, மேலகுல வணிகபுரம், பஜார் திடல், ஜின்னா திடல், டவுன் ரோடு, அண்ணா வீதி,  பஷீர் அப்பா தெரு,  கணேசபுரம், செல்வ காதர் தெரு, உமறுப்புலவர் தெரு, ஆசாத் ரோடு,  PSN கல்லூரி.</p><p><strong>*</strong> ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம்,  கொங்கன் தான் பாறை, பொன்னாக்குடி, அடை மிதிப்பான் குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி  மற்றும் தாமரைச்செல்வி.</p><p><strong>*</strong> பெருமாள்புரம், பொதிகை நகர், அரசு ஊழியர் குடியிருப்பு,  என் ஜி ஓ காலனி, மகிழ்ச்சி நகர், திருநகர், திருமால் நகர், ராமச்சந்திரா கார்டன், ராமச்சந்திரா நகர் , பரணி பார்க், அரசு பொறியியல் கல்லூரி பகுதி மற்றும் புதிய பேருந்து நிலையம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சுதந்திர தினத்தில் வழங்கப்படும் தகைசால் தமிழர் விருது இந்த ஆண்டு யாருக்கு? </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/who-will-receive-the-thagaisaal-tamilar-award-this-year-on-independence-day</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/who-will-receive-the-thagaisaal-tamilar-award-this-year-on-independence-day#comments</comments><guid isPermaLink="false">3b50b8a6-6def-4376-b183-cbe43b682172</guid><pubDate>Mon, 03 Aug 2026 12:45:43 +0000</pubDate><atom:updated>2026-08-03T12:45:43.653Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சுதந்திர தினம்,Independence Day,தகைசால் தமிழர் விருது</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/qti1k0cy/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/qti1k0cy/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>நாட்டின் 80-வது சுதந்திர தினம் இம்மாதம் (ஆகஸ்டு) 15-ந் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு வரும் முதல் சுதந்திர தினம் இதுவாகும். சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தேசிய கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்க உள்ளார். </p><p>சுதந்திர தின விழாவின் முக்கிய நிகழ்வாக தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் இந்த விருதினை இதுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் சங்கரைய்யா, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் ஆகியோர் பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு பாராட்டு சான்றிதழும், ரூ.10 லட்சம் பரிசுத் தொகுப்பும் வழங்கப்பட்டது. </p><p>இந்த ஆண்டு, சுதந்திர தினத்திற்கு இன்னும் 10 நாட்களே இடைவெளி உள்ள நிலையில், தகைசால் தமிழர் விருது யாருக்கு வழங்கப்பட இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. </p><p>முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல் தலைவருமான பண்ருட்டி ராமச்சந்திரன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை மறுதினம் மின்தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-the-day-after-tomorrow-6</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-the-day-after-tomorrow-6#comments</comments><guid isPermaLink="false">99ee6c07-0709-4df6-9aaa-f188619bd8fb</guid><pubDate>Mon, 03 Aug 2026 12:26:53 +0000</pubDate><atom:updated>2026-08-03T12:26:53.787Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மின்தடை,shut down</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/iupicwe6/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/iupicwe6/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் ஒரு சில இடங்களில் நாளை மறுதினம் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“சென்னையில் 05.08.2026 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p>பெரம்பூர்: திருமலை நகர் பிரதான சாலை, திருமலை நகர் 1 வது முதல் 3வது தெரு வரை மற்றும் விரிவாக்கம்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>புதிய பதவிகள் வேண்டாம்; மீண்டும் போர்க்கொடி தூக்கிய  எஸ்.பி.வேலுமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-new-posts-sp-velumani-raises-the-war-flag-again</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-new-posts-sp-velumani-raises-the-war-flag-again#comments</comments><guid isPermaLink="false">6a94576f-1906-4665-bb27-3c40cfaf4682</guid><pubDate>Mon, 03 Aug 2026 12:18:14 +0000</pubDate><atom:updated>2026-08-03T12:18:14.678Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அதிமுக,எஸ்.பி.வேலுமணி,EPS,SPVelumani</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/wbf6degv/mani33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  எஸ்.பி.வேலுமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/wbf6degv/mani33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><p>எங்களுக்கு வழங்கப்பட்ட துணை பொதுச்செயலாளர் உள்ளிட்ட புதிய பொறுப்புகளை ஏற்க முடியாது என எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.</p><p>அதிமுக பிளவு</p><p>தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு பின் ஒவ்வொரு நாளும் அரசியலில் பரபரப்பாக இருந்து வருகிறது. அதிலும் தேர்தலில் 47 இடங்களை வென்ற அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் மற்றொரு அணியும் என 2 ஆக பிரிந்தது.</p><p>சட்டசபையில் த.வெ.க. ஆட்சி அமைக்க பெரும்பான்மையை நிரூபிக்க நடந்த வாக்கெடுப்பில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பு அணியில் 25 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர். எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு அணியில் 22 எம்.எல்.ஏ.க்கள் வாக்கெடுப்பில் பங்கேற்றனர்.</p><h2>கட்சி பதவி பறிப்பு </h2><p>த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் கட்சி பதவியை பறித்து எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தார். மேலும் கட்சி கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சபாநாயகரிடம் மனு அளித்தனர். இதேபோல எஸ்.பி.வேலுமணி தரப்பிலும் கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை கோரி சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது.</p><p>அதன் பின்னர் இரு தரப்பிற்கும் இடையே சமாதானம் ஏற்பட்டு, கடந்த ஜூன் 25 அன்று எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணியை கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக நியமித்து உத்தரவிட்டார். </p><p>இந்த சூழலில் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் அதிமுக கொடிகள், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் படங்கள் ஏதுமின்றி  தனது ஆதரவாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார். </p><h2>கட்சி பதவி ஏற்கபோவதில்லை</h2><p>அப்போது தனது ஆதரவாளர்களிடம் பேசிய வேலுமணி, “தேர்தல் முடிந்து அடுத்த 25 நாட்கள் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியும். என்னை நம்பி 30 மாவட்டச் செயலாளர்கள் போர்க்கொடி தூக்கி வந்த நிலையில், அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் வழங்காமல் தனக்கு மட்டும் பதவி கொடுப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.</p><p>சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர், தங்கமணி மற்றும் வீரமணி போன்ற கட்சியின் வளர்ச்சிக்கு உழைத்த மூத்த தலைவர்களைப் புறக்கணித்துவிட்டு தமக்கு மட்டும் பதவி தருவது அநீதியானது. எனவே  <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">எடப்பாடி பழனிசாமி </a> கொடுத்த துணைப் பொது செயலாளர் பதவியை ஏற்கப் போவதில்லை. அதிமுகவை திமுகவுடன் இணைப்பது அல்லது கூட்டணி வைப்பது போன்ற பேச்சுக்கள் எழுந்ததாலேயே உள்கட்சிப் பூசல் வெடித்தது. எம்.ஜி.ஆர் திமுகவை எதிர்ப்பதற்காகவே கட்சியைத் தொடங்கினார் என்பதால் திமுகவுடன் சமரசம் ஆவதை ஒருபோதும் ஏற்க முடியாது அதேநேரம் தான் அதிமுகவிலேயே நீடித்து திமுகவை தொடர்ந்து எதிர்ப்பேன்” என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். </p><p>இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><h2>புதிய பதவிகள் புறக்கணிப்பு </h2><p>இதனிடையே,  பழனியில் எம்.எல்.ஏ அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து புதிய பதவிகளைப் புறக்கணிப்பதாக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சி.வி. சண்முகம் கூட்டாக பேட்டி அளித்தனர். எஸ்.பி. வேலுமணி கூறுகையில்,</p><p>எங்களுக்கு வழங்கப்பட்ட துணை பொதுச்செயலாளர் உள்ளிட்ட புதிய பொறுப்புகளை ஏற்க முடியாது.  கட்சியை விட்டு நீக்கப்பட்ட சசிகலா, டிடிவி தினகரனை சேர்த்து கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>சிவகங்கை:  அரசு பஸ் - சுற்றுலா வேன் மோதி விபத்து - 20 பேர் படுகாயம்

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sivagangai-government-bus-tourist-van-accident-20-injured</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sivagangai-government-bus-tourist-van-accident-20-injured#comments</comments><guid isPermaLink="false">3eb62945-65e7-4438-869d-53ec176132c5</guid><pubDate>Mon, 03 Aug 2026 12:14:27 +0000</pubDate><atom:updated>2026-08-03T12:14:27.632Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,bus,பஸ்,சிவகங்கை,Sivagangai,சுற்றுலா வேன்,Tourist van</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/5t6949l3/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/5t6949l3/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சிவகங்கை,</p><p>சிவகங்கையில் அரசு பஸ், சுற்றுலா வேன் மோதிய விபத்தில் 20 பேர் படுகாயமடைந்தனர்.</p><p>மதுரை - பரமக்குடி நான்கு வழி சாலையில் இன்று மதியம் சுற்றுலா <a href="https://www.dailythanthi.com/">வேன் </a>சென்றுகொண்டிருந்தது. அந்த சுற்றுலா வேனில் 15க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.</p><h2>விபத்து</h2><p>இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே இன்று மதியம் சுற்றுலா வேன் சென்றபோது திடீரென சாலையின் மறுபுறத்தில் இருந்து அரசு பஸ் திரும்பியுள்ளது. அப்போது, அரசு பஸ் மீது  சுற்றுலா வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சுற்றுலா வேன், அரசு பஸ்சில் பயணித்தவர்கள் என மொத்தம் 20 பேர் படுகாயமடைந்தனர்.</p><p>இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு திருப்புவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதேவேளை, இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/president-draupadi-murmu-congratulates-medal-winners-at-commonwealth-games</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/president-draupadi-murmu-congratulates-medal-winners-at-commonwealth-games#comments</comments><guid isPermaLink="false">931a63e2-0a40-45a2-ae20-11317d2322d2</guid><pubDate>Mon, 03 Aug 2026 12:02:29 +0000</pubDate><atom:updated>2026-08-03T12:02:29.475Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>புதுடெல்லி,ஜனாதிபதி திரவுபதி முர்மு,காமன்வெல்த்,Commonwealth,congratulate,President Draupadi Murmu</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/fhwgyfys/43.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜனாதிபதி திரவுபதி முர்மு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/fhwgyfys/43.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><p>காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81">ஜனாதிபதி திரவுபதி முர்மு</a> வாழ்த்து தெரிவித்துள்ளார். </p><p>இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்திய விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மிகச் சிறப்பான திறனை வெளிப்படுத்தியதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். </p><h2>வாழ்த்து</h2><p>இந்தியா வென்ற 13 தங்கப்பதக்கங்களில் 8-ஐ பெண்கள் பெற்று தந்துள்ளனர் என்பதைக் குறிப்பிடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். பதக்கம் வென்ற 39 பேருக்கும், இப்போட்டிகளின் போது பங்களித்த இந்தியக் குழுவின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். </p><p>எதிர்காலத்தில் நடைபெறவுள்ள சர்வதேசப் போட்டிகளிலும் இந்திய விளையாட்டு வீரர்கள் நாட்டிற்கு மேலும் பெருமை சேர்ப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title> மதுரை: ஜேசிபி மீது கார் மோதி விபத்து - டிரைவர் பலி

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-jcb-meethu-car-mothi-vibathu-driver-bali</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-jcb-meethu-car-mothi-vibathu-driver-bali#comments</comments><guid isPermaLink="false">38f91e03-fb35-4bf9-98c3-a7e6e1002cea</guid><pubDate>Mon, 03 Aug 2026 11:46:24 +0000</pubDate><atom:updated>2026-08-03T11:46:24.631Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,car accident,கார் விபத்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/sbk42xmu/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/sbk42xmu/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>மதுரை,</p><p>மதுரையில் ஜேசிபி மீது கார் மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p><a href="https://www.dailythanthi.com/">மதுரை </a>மாவட்டம் மேலூர் அருகே தனியாமங்கலத்தில் நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வந்தன. இந்த பணியில் ஜேசிபி வாகனம் ஈடுபட்டப்பட்டிருந்தது. </p><h2>விபத்து - டிரைவர் பலி</h2><p>இந்நிலையில்,   அந்த சாலையில் வேகமாக வந்த கார் சாலையில் பணிகள் மேற்கொண்டிருந்த ஜேசிபி வாகனம் மீது  மோதியது.  இந்த கோர விபத்தில் காரை ஓட்டி வந்த டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அறிந்த போலீசார்,விரைந்து சென்று உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி - ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/census-work-new-order-for-teachers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/census-work-new-order-for-teachers#comments</comments><guid isPermaLink="false">7c10e619-855f-4325-9e13-e5adf2bd394c</guid><pubDate>Mon, 03 Aug 2026 11:38:38 +0000</pubDate><atom:updated>2026-08-03T11:38:38.218Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மக்கள் தொகை கணக்கெடுப்பு,Census,ஆசிரியர்கள்,Teachers</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/6aj3oj4y/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/6aj3oj4y/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பள்ளி வேலை நேரம் தவிர்த்து, காலை மற்றும் மாலை நேரங்களில் ஆசிரியர்கள் வீடு, வீடாக சென்று மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>தமிழகத்தில் கடந்த ஒன்றாம் தேதியில் இருந்து மாநிலம் முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கியது. இதன்படி, வரும் 31-ந்தேதி வரை இந்த பணிகள் நடைபெற உள்ளன. இந்த பணிக்காக நியமனம் செய்யப்பட்ட அலுவலர்கள் வீடு, வீடாக சென்று மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக இந்த பணியில் ஆசிரியர்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.</p> <p>இந்த சூழலில், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த முதன்மை கல்வி அலுவலர்கள், ஆசிரியர்களுக்கான சுற்றறிக்கைகளை அனுப்பி உள்ளனர். அதில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு எந்த ஆசிரியர்கள் எல்லாம் நியமிக்கப்பட்டுள்ளார்களோ, அவர்கள் அனைவரும் காலை மற்றும் மாலை நேரங்களில் வீடு, வீடாக சென்று மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>அதே சமயம், இந்த பணிகளால் பள்ளி வகுப்புகள் எதுவும் பாதிக்கப்படக் கூடாது எனவும், பள்ளி வேலை நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. எனவே, ஆசிரியர்கள் அனைவரும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும், மாணவர்களின் வகுப்புகள் பாதிக்காத வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>திருவள்ளூர் அருகே தீ மிதித்தபோது அக்னி குண்டத்தில் தவறி விழுந்த பக்தர் காயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/theemithi-festival-near-tiruvallur-devotee-injured</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/theemithi-festival-near-tiruvallur-devotee-injured#comments</comments><guid isPermaLink="false">7c9ef30b-a0f0-4cb7-82c4-9c0eed364801</guid><pubDate>Mon, 03 Aug 2026 11:33:44 +0000</pubDate><atom:updated>2026-08-03T11:33:44.434Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Festival,திருவிழா,Thimithi Festival,தீமிதி திருவிழா,தீக்காயம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/s3cp7rp8/tiruvallur.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ அக்னி குண்டத்தில் இருந்து மீட்கப்பட்ட பக்தர்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருவள்ளூர் அருகே தீமித்தபோது அக்னி குண்டத்தில் தவறி விழுந்த பக்தர் காயமடைந்தார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/s3cp7rp8/tiruvallur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர், </p><p>மப்பேடு ஓசூரம்மன் ஆலய திருவிழாவில், தீமிதித்த பக்தர் ஒருவர் கால் தவறி அக்னி குண்டத்தில் விழுந்தார். அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.</p><p>திருவள்ளூர் அடுத்த மப்பேடு கிராமத்தில் அமைந்துள்ள ஓசூரம்மன் ஆலயத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/thimithi-festival">தீமிதி திருவிழா</a> கடந்த மாதம் 24ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று முன்தினம் சனிக்கிழமை கூழ் ஊற்றுதல் அக்னி சட்டி புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. </p><p>விழாவின் சிகர நிகழ்வான தீமிதித்தல் நேற்று நடைபெற்றது. விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள், சாமி ஊர்வலத்துடன் கரகங்கள் ஏந்தி ஊர்வலமாக வந்து, கோவிலில் முன்பு உள்ள அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்து ஓசூரம்மனை தரிசனம் செய்தனர். </p><h2>காயமடைந்த பக்தர்</h2><p>தீ மிதிக்கும்போது முதியவர் ஒருவர் அக்னி குண்டத்தில் கால் தவறி விழுந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் விழா நடத்துபவர்கள் உடனடியாக அவரை மீட்டனர். நெருப்பில் விழுந்ததால் அந்த முதியவருக்கு தோள்பட்டையில் தீக்காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அவர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. </p><p><a href="https://www.dailythanthi.com/topic/thimithi-festival">தீமிதி திருவிழாவின்போது</a> பக்தர் ஒருவர், அக்னி குண்டத்தில் தவறி விழுந்து காயமடைந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>குருவாயூர் எக்ஸ்பிரஸ் பயண நேரத்தில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/change-in-travel-time-of-guruvayur-express</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/change-in-travel-time-of-guruvayur-express#comments</comments><guid isPermaLink="false">291acf35-abde-45b8-b392-4bfb51c66fe4</guid><pubDate>Mon, 03 Aug 2026 11:23:28 +0000</pubDate><atom:updated>2026-08-03T11:23:28.177Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>maintenance work,பராமரிப்பு பணி,Change,Guruvayur Express train,குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில்,Time,நேரம் மாற்றம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/uidgjlcv/train.03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ குருவாயூர் எக்ஸ்பிரஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/uidgjlcv/train.03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>திருவனந்தபுரம் கோட்டத்தில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதால், சென்னை எழும்பூர் - <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D">குருவாயூர் எக்ஸ்பிரஸ்</a> ரெயிலின் பயண நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. </p> <p>இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><h2>தாமதமாக செல்லும்</h2><p>சென்னை எழும்பூரில் இருந்து காலை 10.40 மணிக்கு குருவாயூர் புறப்பட்டு செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16127), ஆகஸ்டு 9, 10 ஆகிய தேதிகளில் வழியில் 40 நிமிடம் தாமதமாக செல்லும். </p> <p>அதேபோல், இந்த ரெயில் ஆகஸ்டு 11, 12 தேதிகளில் 45 நிமிடங்கள் தாமதமாகவும், ஆகஸ்டு 27, 31 ஆகிய தேதிகளில் 30 நிமிடங்கள் தாமதமாகவும், ஆகஸ்டு 28, 29, செப்டம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் 50 நிமிடங்கள் தாமதமாகவும் செல்லும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருமாவளவன் எம்.பி சென்ற காரில் தொங்கியபடி பயணித்த வி.சி.க நிர்வாகி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vck-executive-who-was-hanging-from-the-car-in-which-thirumavalavan-mp-was-travelling</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vck-executive-who-was-hanging-from-the-car-in-which-thirumavalavan-mp-was-travelling#comments</comments><guid isPermaLink="false">d7b81bee-5a59-4d08-a1f2-1cf95af81fe4</guid><pubDate>Mon, 03 Aug 2026 11:17:09 +0000</pubDate><atom:updated>2026-08-03T11:17:09.158Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Cuddalore,கடலூர்,Thirumavalavan,வி.சி.க.,நிர்வாகி,தொல் திருமாவளவன்,கார்car</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/jquvoxqb/171.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருமாவளவன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/jquvoxqb/171.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர், </p><p>கடலூர் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் சுட்சி தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D.%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D">தொல். திருமாவளவன்</a> எம்.பி. கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.</p><h2>தொல். திருமாவளவன்</h2><p>அவர் கடலூர் உள்பட பல்வேறு மாவட்ட நிர்வாகிகளுடன் உளுந்தூர்பேட்டையில் நடக்க உள்ள மாநாடு சம்பந்தமாக விரிவான ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில் கடலூர் அடுத்த உண்ணாமலை செட்டி சாவடி விழுப்புரம் -  நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில்  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை வரவேற்க நிர்வாகிகள் திரண்டு இருந்தனர்.</p><h2>தொங்கியவாறு பயணம்</h2><p>அப்போது அங்கு நின்றிருந்த கடலூரை சேர்ந்த வி.சி.க. நிர்வாகி ஒருவர், கட்சி தொடர்பாக தலைவர் திருமாவளவனிடம் பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் கார் டிரைவர் காரை இயக்கி விட்டார். திருமாவளவனிடம் பேசி கொண்டிருந்த நிர்வாகி, உடனே காரின் ஜன்னலை கையால் பிடித்து கொண்டு அதில் தொங்கியவாறு சென்றார். </p><p>கார் மணிக்கு 60 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. நிர்வாகி, காரில் தொங்கியபடியே திருமாளவனிடம் பேசிக் கொண்டே சென்றார். சுமார் 100 மீட்டர் தொலைவு வரை கார் சென்று கொண்டிருந்த நிலையில், உடனடியாக திருமாவளவன் கார் டிரைவரிடம் காரை நிறுத்துமாறு உத்தரவிட்டார்.</p><p>இதை தொடாந்து சாலை ஓரமாக கார் நிறுத்தப்பட்டு அந்த நிர்வாகியை அங்கு இறக்கி விட்டனர். இந்த வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. </p>]]></content:encoded></item><item><title>காவிரி விவகாரத்தில் தவெக அரசின் சிறுபிள்ளைத்தனம்&quot;: டிடிவி தினகரன் பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvks-approach-to-the-cauvery-issue-is-childish-ttv-dhinakarans-interview</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvks-approach-to-the-cauvery-issue-is-childish-ttv-dhinakarans-interview#comments</comments><guid isPermaLink="false">24312672-f766-4636-b807-a3370c182219</guid><pubDate>Mon, 03 Aug 2026 11:08:32 +0000</pubDate><atom:updated>2026-08-03T11:08:32.635Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,Cauvery issue,காவிரி விவகாரம்,பேட்டி Interview,தவெக அரசு,Tvk  government</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/1qdxhtul/ttv-dinakaran.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/1qdxhtul/ttv-dinakaran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> தவெக அரசு தன்னிச்சையாக செயல்படுவது சிறுபிள்ளைத்தனமானது" என்று தெரிவித்தார். காவிரி நதிநீர் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில்<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D"> டிடிவி தினகரன்</a>, பேசியதாவது:-</p><h2>சிறுபிள்ளைத்தனமானது</h2><p>தமிழகத்தில் 40 முதல் 50 ஆண்டுகள் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறையில் அமைச்சர்களாக இருந்து அரிய அனுபவம் பெற்ற மூத்த தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் ஆலோசனைகளை கேட்டு, கூட்டு விவாதம் நடத்தி முடிவெடுக்காமல் தவெக அரசு தன்னிச்சையாக செயல்படுவது சிறுபிள்ளைத்தனமானது.</p><h2>எதிர்க்கட்சிகளை சந்திக்க பயம்</h2><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">தவெக அரசுக்கு</a> எதிர்க்கட்சிகளையோ அல்லது மற்ற அரசியல் கட்சி தலைவர்களையோ நேரில் சந்தித்து பேச ஒருவித தயக்கமும் அச்சமும் உள்ளது. இதனால்தான் அவர்கள் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட மறுக்கிறார்கள்.</p> <h2>தில்லுமுல்லு ஆட்சி</h2><p>ஆட்சி அமைப்பதற்காகவே தவெக தரப்பினர் பல தில்லுமுல்லுகளையும் செய்துள்ளனர். அதன் காரணமாகவே திமுக தலைவரையோ அல்லது அதிமுக பொதுச்செயலாளரையோ நேரில் சந்திக்க முதல்-அமைச்சர் விஜய் பயப்படுகிறார்.</p><p>இவ்வாறு அதில் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தவெகவில் இணைந்த அதிமுக மாவட்ட செயலாளர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-district-secretary-joins-tvkg</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-district-secretary-joins-tvkg#comments</comments><guid isPermaLink="false">01e2a668-6c1c-4e6e-adc6-42578f3e26db</guid><pubDate>Mon, 03 Aug 2026 10:57:48 +0000</pubDate><atom:updated>2026-08-03T10:57:48.350Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,TVK,தவெக,அதிமுக</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/e6fd8xnz/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/e6fd8xnz/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபை தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றிய <a href="https://www.dailythanthi.com/">தவெக</a>, காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. முதல்-அமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார்.</p><h2>தவெகவில் இணையும் பிரமுகர்கள்</h2><p>இதனிடையே, தேர்தலில் தவெக வெற்றிபெற்ற நிலையில் திமுக, அதிமுக, பாஜக உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், தொண்டர்கள் என பலரும் தவெகவில் இணைந்த வண்ணம் உள்ளனர்.</p><p>இந்நிலையில், வட சென்னை அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ். இவர் கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டவர். </p><p>அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் இன்று தவெகவில் இணைந்தார். தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்த ராஜேஷ் தன்னை தவெகவில் இணைத்துக்கொண்டார். </p> ]]></content:encoded></item><item><title>பாளையங்கோட்டை சிறையில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை சந்தித்த கனிமொழி எம்.பி. </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mp-kanimozhi-met-vilathikulam-mla-markandeyan-at-palayamkottai-prison</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mp-kanimozhi-met-vilathikulam-mla-markandeyan-at-palayamkottai-prison#comments</comments><guid isPermaLink="false">4617b2a6-3649-47f0-9ee4-5b2cdf4c0faf</guid><pubDate>Mon, 03 Aug 2026 10:57:24 +0000</pubDate><atom:updated>2026-08-03T10:57:24.202Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கனிமொழி எம்.பி.,Prison,palayamkottai,Kanimozhi,பாளையங்கோட்டை சிறை,மார்க்கண்டேயன்,Markandeyan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/c0aum67a/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/c0aum67a/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>பாளையங்கோட்டை  சிறையில் அடைக்கப்பட்டுள்ள தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை தி.மு.க. எம்.பி. கனிமொழி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். </p><p>தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த 18-ந்தேதி தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற விளாத்திகுளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், அவதூறாகவும் பேசினார் என்று கூறப்படுகிறது. </p><p>இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை போலீசார் கடந்த 20-ந்தேதி கைது செய்தனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மார்க்கண்டேயனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் நெல்லை பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.</p><p>இதையடுத்து, தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தாக்கல் செய்த மனுவை தூத்துக்குடி கோர்ட்டு கடந்த 22ம் தேதி தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி தூத்துக்குடி கோர்ட்டில் 2வது முறையாக மார்க்கண்டேயன் மீண்டும் மனு தாக்கல் செய்தார். அந்த ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.</p><p>இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அவருக்கு கொடுக்கப்பட்ட நிபந்தனைகளின்படி, “இனிமேல் இதுபோன்று பேசமாட்டேன் என்று உத்தரவாதம் அளிக்க வேண்டும். தூத்துக்குடி காவல் நிலையத்தில் நாள்தோறும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். சட்டமன்றம் நடைபெறும் நாளில் மட்டும் கையெழுத்திடுவதில் விலக்கு அளிக்கப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.</p><p>இந்த நிலையில், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி., பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு நேரில் சென்று, விரைவில் விடுதலையாக உள்ள மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வை சந்தித்து நலம் விசாரித்தார். இதற்கு முன்னர் கடந்த மாதம் ஜூலை 21-ந்தேதி பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு நேரில் சென்று மார்க்கண்டேயனை கனிமொழி சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>கருகிய குறுவை பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/compensation-of-rs-25000-per-acre-should-be-provided-for-scorched-paddy-crops-edappadi-palaniswami-insists</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/compensation-of-rs-25000-per-acre-should-be-provided-for-scorched-paddy-crops-edappadi-palaniswami-insists#comments</comments><guid isPermaLink="false">392542d6-71ed-4372-91b0-1ac49b52795f</guid><pubDate>Mon, 03 Aug 2026 10:56:55 +0000</pubDate><atom:updated>2026-08-03T10:56:55.389Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இழப்பீடு,Compensation,எடப்பாடி பழனிசாமி,சென்னை,வலியுறுத்தல்,குறுவை சாகுபடி,To Edappadi Palanisamy</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/kzrodza8/170.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/kzrodza8/170.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அதிமுக பொதுச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">எடப்பாடி பழனிசாமி</a> வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ஆம் தேதி குறுவை சாகுபடிக்கு மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும். ஆனால், இந்த ஆண்டு மேட்டூரில் இருந்து த.வெ.க. அரசு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடவில்லை.</p><h2>குறுவை சாகுபடி</h2><p>காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படாத நிலையில், ஆற்றுப் பாசனத்தை நம்பியுள்ள சுமார் 1.85 லட்சம் ஏக்கர் நிலத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை சாகுபடி செய்யாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளைப் பயன்படுத்தி டெல்டா மாவட்ட விவசாயிகள் இந்த ஆண்டு குறுவை சாகுபடி மேற்கொண்டனர். ஒரு ஏக்கர் நிலத்தில் நெற்பயிர் சாகுபடி செய்வதற்கு உடல் உழைப்போடு சுமார் ரூ. 25,000/- விவசாயிகளுக்கு செலவாகி உள்ளது. இந்நிலையில், தண்ணீர் இல்லாமல் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம், குடவாசல் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் முழுவதும் சுமார் 1 லட்சம் ஏக்கரில் பயிர் செய்த குறுவை நெற்பயிர்கள் கருகியதால் விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து பாதிப்படைந்துள்ளனர்.</p><h2>இழப்பீடு</h2><p>த.வெ.க. கூட்டணி அரசு உடனடியாக வருவாய் மற்றும் வேளாண்துறை அதிகாரிகளை டெல்டா மாவட்டங்களுக்கு நேரில் அனுப்பி, நெற்பயிர்கள் கருகி பாதிப்படைந்துள்ள விவசாய நிலங்களை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 25,000 -த்தை நஷ்ட ஈடாக வழங்குவதுடன், மீதமுள்ள நெற்பயிர்களைப் பாதுகாக்கும் வகையில், விவசாயத்திற்கு 24 மணிநேரமும் விலையில்லா மும்முனை மின்சாரத்தை தொடர்ந்து தடையின்றி வழங்க வேண்டும் என்றும் பொய்க்கால் குதிரை த.வெ.க. கூட்டணி அரசை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆலமரத்திற்கு 107-வது பிறந்தநாள்... கேக் வெட்டி கொண்டாடிய மாணவர்கள் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/students-in-madurai-celebrated-the-107th-birthday-of-banyan-tree</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/students-in-madurai-celebrated-the-107th-birthday-of-banyan-tree#comments</comments><guid isPermaLink="false">c8c46913-bcaf-406b-9be7-50c8f30352e7</guid><pubDate>Mon, 03 Aug 2026 10:42:41 +0000</pubDate><atom:updated>2026-08-03T10:42:41.671Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,birthday celebration,பிறந்தநாள் கொண்டாட்டம்,பழமையான ஆலமரம்,banyan tree</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/l6jyf02r/24.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ 107 வயது ஆலமரம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மதுரையில் ஆலமரத்திற்கு 107 பிறந்தநாள் விழா.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/l6jyf02r/24.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மதுரை மாவட்டம் </a>செல்லூர் கண்மாய்க்கரையில் அமைந்துள்ள ஆலமரத்திற்கு 107-வது பிறந்தநாளை மாணவர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கேக் வேட்டி கொண்டாடினர். </p><h2>பசுமை திருவிழா கொண்டாட்டம்</h2><p>மதுரை மாவட்டம் மீனாம்பாள்புரம் செல்லூர் கண்மாய்க்கரை பகுதியில் நூற்றாண்டு கடந்து கம்பீரமாக காட்சியளிக்கிறது ஒரு ஆலமரம். இந்த மரத்தின் 107-வது ஆண்டைக் குறிக்கும் வகையில் சமீபத்தில், "இயற்கை பசுமை திருவிழா" என்ற பெயரில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பிறந்தநாள் விழா</a> ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. </p><p>இந்த விழாவில், நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனர் அபுபக்கர், மதுரை காமராஜ் பல்கலைக்கழக பேராசிரியர் நாகரத்தினம், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் மீனாம்பாள்புரம் ராஜாஜி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.</p><h2>கேக் வெட்டி கொண்டாட்டம்</h2><p>மரத்தின் முன்பாக 107 வயது எனக் குறிப்பிடப்பட்ட <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பெரிய கேக் </a>வைக்கப்பட்டு, மாணவர்கள் வாழ்த்துப் பாடல்களைப் பாடி உற்சாகமாகக் கேக் வெட்டி கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.</p><h2>பாதுகாக்க கோரிக்கை</h2><p>மதுரை நகரில் சாலை விரிவாக்கம் மற்றும் பல்வேறு காரணங்களால் பல பெரிய மரங்கள் வெட்டப்பட்டு வரும் நிலையில், எஞ்சியிருக்கும் இந்த ஆலமரம் பல அரிய வகை பறவைகளின் புகலிடமாக விளங்கி வருகிறது. நகரின் வெப்பம் மற்றும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இத்தகைய மரங்களைப் பாதுகாப்பது அவசியம் என விழாவில் வலியுறுத்தப்பட்டது.</p><p>மேலும், இந்த பழமையான மரத்தைச் சுற்றி குப்பைகள் கொட்டுவதைத் தடுத்து, அதன் வேர்களை மண்ணிட்டு மூடி முறையான தடுப்பு வேலி அமைத்து அரசு பாதுகாக்க வேண்டும் என்றும் இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மரங்களை வெறும் மரமாகப் பார்க்காமல், மனித குலத்தைக் காக்கும் உயிர் நாடியாக மதித்து நடத்தப்பட்ட இந்த பிறந்தநாள் விழா மதுரை மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தீரன் சின்னமலை நினைவு தினம்:  மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiran-chinnamalai-memorial-day-mk-stalin-pays-tribute</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiran-chinnamalai-memorial-day-mk-stalin-pays-tribute#comments</comments><guid isPermaLink="false">81169be1-b2f9-46f4-895a-bedb4b342cb3</guid><pubDate>Mon, 03 Aug 2026 10:36:01 +0000</pubDate><atom:updated>2026-08-03T10:36:01.150Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Tribute,நினைவு தினம்,மு.க. ஸ்டாலின்,தீரன் சின்னமலை சிலை,M.K. Stalin,புகழஞ்சலி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/994geqes/169.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.க. ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/994geqes/169.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>தீரன் சின்னமலை நினைவு தினத்தை முனிட்டு மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.</p><p>இது தொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க. ஸ்டாலின்</a> தனது எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>புகழஞ்சலி</h2><p>ஆங்கிலேய ஆதிக்கத்தை அசரடித்த வீர வித்து தீரன் சின்னமலை நினைவு நாள். எத்தனை முறை எத்தகு படைகளைக் கொண்டு தாக்கியும் வெற்றி கொள்ள முடியாத பெருவீரனாகப் போரிட்டவர் தீரன் சின்னமலை.</p><p>திப்பு சுல்தானுடன் கூட்டணி அமைத்து பிரிட்டிஷாருக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய விடுதலைப் போராளி. நேரடியாக எதிர்கொள்ள இயலாத எதிரிகள் சூழ்ச்சியால் அவரைத் தூக்கிலிட்டாலும் அவர் புகழைத் தமிழ்நாடு போற்றிக் கொண்டே இருக்கும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மாணவர்கள் மத்தியில் தலைமை ஆசிரியையை சரமாரியாக தாக்கிய ஆசிரியை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/teacher-attacks-headmistress-in-front-of-students</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/teacher-attacks-headmistress-in-front-of-students#comments</comments><guid isPermaLink="false">71bd5009-fc16-4602-8c22-47a67a3b0900</guid><pubDate>Mon, 03 Aug 2026 10:33:46 +0000</pubDate><atom:updated>2026-08-03T10:33:46.955Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர்,Karur,Teacher,ஆசிரியை,மாணவர்கள்,studensts</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/2yoigd3c/teacher33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மத்தியில் தலைமை ஆசிரியை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/2yoigd3c/teacher33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>அரசு பள்ளி தலைமை ஆசிரியை புவனா  என்பவரை, ஆசிரியை கலைமதி  என்பவர் தாக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.</p><p>கரூர்,</p><p>கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை ஊராட்சி ஆண்டாங்கோவில் கிழக்கு அரசு தொடக்கப்பள்ளி <a href="https://www.dailythanthi.com/search?q=teacher">தலைமை ஆசிரியை</a> புவனா. இதே பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக கலைமதி என்பவர் பணியாற்றி வருகிறார்.</p><p>கலைமதி சரியாக வேலை செய்யவில்லை என, புவனா அளித்த புகாரால், வட்டார கல்வி அலுவலர் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.இதில் ஆத்திரமடைந்த கலைமதி, ஜூலை 30ல் வகுப்பறையில் வைத்து, மாணவர்கள் மத்தியில் தலைமை ஆசிரியை புவனாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தை, தன் செல்போனில் மற்றொரு ஆசிரியை பதிவு செய்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.</p><p>மாவட்ட கல்வி அலுவலர் சண்முகவேல் கூறுகையில், தலைமை ஆசிரியை புவனா மீது, ஆசிரியை கலைமதி தாக்குதல் நடத்தியது குறித்து, விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில்  நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.</p><p>இந்த சம்பவம் மாணவர்கள், பெற்றோர்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>காஞ்சிபுரம் தொழில் வளாகத்தில் முதல்-அமைச்சர் விஜய் ஆய்வு  </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-inspects-kanchipuram-industrial-complex</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-inspects-kanchipuram-industrial-complex#comments</comments><guid isPermaLink="false">3a8f5600-917b-4fa3-a5c8-725bf16918ff</guid><pubDate>Mon, 03 Aug 2026 10:23:16 +0000</pubDate><atom:updated>2026-08-03T10:23:16.980Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,விஜய்,காஞ்சிபுரம்,Actor Vijay,தொழிற்சாலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/hco1kctm/174.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/hco1kctm/174.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>ஸ்ரீபெரும்புதூர், ஒரகடத்தில் தனியார் தொழிற்சாலைகளை முதல்-அமைச்சர் விஜய்  நேரில் ஆய்வு செய்தார்.</p><p>காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடத்தில் அமைந்துள்ள சிப்காட் தொழிற் வளர்ச்சி மையத்தில், 'டெய்ம்லர் பஸஸ் இந்தியா' என்ற நிறுவனம் சார்பில் 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிர மாண்டமான 'டெய்ம்லர் இந்தியா வர்த்தக வாகனங்கள்' உற் பத்தி செய்யும் தொழிற்சாலை இயங்குகிறது. இந்த நிறுவனம் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.</p><h2>விஜய்</h2><p>'பாரத்பென்ஸ்' மற்றும் 'மெர்சிடிஸ்-பென்ஸ்' முத்திரையிடப் பட்ட பஸ்களையும், 'பஸ் சேஸ்'களையும் உற்பத்தி செய்கிறது. வணிக வாகன உற்பத்தியில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனத்தை இன்று <a href="https://www.dailythanthi.com/search?q=vijay">முதல்-அமைச்சர் விஜய் </a>பார்வையிட்டு ஆய்வு செய்தார்.</p><h2>கண்ணாடி தொழிற்சாலை</h2><p>முன்னதாக  ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கத்தில் செயல்படும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான செயின்ட் கோபின் நிறுவனமும், தமிழக அரசுடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.</p><p>இந்த நிறுவனம் உலகத்தரத்திலான கண்ணாடி தயாரிப்பு வளாகத்தை விரிவுபடுத்தி உள்ளது. இதனை முதல்-அமைச்சர் விஜய் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து நிசான் கார் கம்பெனியையும் முதல்-அமைச்சர் விஜய் பார்வையிட்டார்.</p>]]></content:encoded></item></channel></rss>