<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 23 Aug 2026 06:20:21 +0000</lastBuildDate><item><title>15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-assault-of-15-year-old-girl-young-man-arrested-under-pocso-act</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-assault-of-15-year-old-girl-young-man-arrested-under-pocso-act#comments</comments><guid isPermaLink="false">1059191f-6a15-4eff-bffe-61ee55eea03c</guid><pubDate>Sun, 23 Aug 2026 06:19:01 +0000</pubDate><atom:updated>2026-08-23T06:19:01.420Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>போக்சோ சட்டம்,POCSO act,சமூக வலைதளம்,social media</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/ivblqh1x/10.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/ivblqh1x/10.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி, </p><p>திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்தவர் நாகராஜ்(வயது 20). இளங்கலை பொருளாதாரம் படித்து வந்த இவர், சில காரணங்களுக்காக படிப்பை பாதியில் விட்டார். பின்னர் கிடைக்கும் வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு, சமூக வலைத்தளம் மூலம் நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த 15 வயது சிறுமி அறிமுகம் ஆனார். அவர்கள் நீண்ட நாட்களாக பேசி பழகி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் நாகராஜ் அவ்வப்போது ஊட்டி வந்து அந்த சிறுமியை சந்தித்து வந்தார்.</p><p>இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமி திடீரென வீட்டில் இருந்து மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உட னடியாக ஊட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது செல்போன் சிக்னல் மூலம் நாகராஜ், ஊட்டியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அந்த விடுதியில் சிறுமியும் இருந்தார்.</p> <p>உடனே சிறுமியை போலீசார் மீட்டனர். பின்னர் நடந்த விசாரணையில் திரு மணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை நாக ராஜ் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து நாகராஜை கைது செய்தனர். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.</p> ]]></content:encoded></item><item><title>தேசிய ஆசிரியர்கள் விருது:  மாணவர்களை செதுக்கும் நல்லாசிரியர்கள்.. - மாணிக்கம் தாகூர் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/national-teachers-award-exemplary-teachers-who-mold-students-manickam-tagore-extends-his-wishes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/national-teachers-award-exemplary-teachers-who-mold-students-manickam-tagore-extends-his-wishes#comments</comments><guid isPermaLink="false">06c918a2-d5f1-4cad-bbe8-a5f5b5d84cbb</guid><pubDate>Sun, 23 Aug 2026 06:13:05 +0000</pubDate><atom:updated>2026-08-23T06:13:05.657Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,மாணிக்கம் தாகூர்,Congess,Manickam Tagore MP,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/rjh2vcor/manickam-tagore.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/rjh2vcor/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>​அர்ப்பணிப்புடன் உழைத்து தேசத்தின் எதிர்காலமான மாணவர்களை செதுக்கும் இந்த நல்லாசிரியர்களின் தன்னலமற்ற கல்விச் சேவை மென்மேலும் சிறந்து தொடர மனதார வாழ்த்துகிறேன் என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>செயல்வழிக் கற்றல் முறை</h2><p>தென்காசி மாவட்டம் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் தங்கராஜ், தனது சொந்த செலவில் ரூ.2 லட்சம் மதிப்பில் பள்ளி உள்கட்டமைப்பை மேம்படுத்தி, பொதுமக்கள் பங்களிப்புடன் ஸ்மார்ட் வகுப்பறையை உருவாக்கியுள்ளார். கிராமப்புற மற்றும் தலித் சமூகத்தைச் சேர்ந்த முதல் தலைமுறை மாணவர்களுக்காக கதை சொல்லுதல், பிளாஷ் கார்டுகள், ஆடியோ-விஷுவல் கருவிகள் மற்றும் 'மாணவர் அமைச்சரவை' மூலம் காய்கறித் தோட்டம் அமைத்து சத்துணவுக்குப் பயன்படுத்தும் புதுமையான செயல்வழிக் கற்றல் முறைகளை 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்படுத்தி வருகிறார்.</p><p>​மதுரை திருப்பரங்குன்றம் PM SHRI கேந்திரிய வித்யாலயா (No. 2) பள்ளி முதல்வர் அமுதா, கேந்திரிய வித்யாலயா அமைப்பில் 22 ஆண்டுகளுக்கும் மேலாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார். முன்னாள் என்.சி.சி. மாணவியான இவர், மாணவர்களிடையே சமூகப் பொறுப்புணர்வை வளர்ப்பதோடு, அருகிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளைத் தத்தெடுத்து கற்றல் வாய்ப்புகளையும் நவீன நடைமுறைகளையும் பகிர்ந்தளித்து, முதியோர் இல்லங்களுக்கும் சேவை செய்து முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.</p><h2>புதுமையான கற்பித்தல் பணி</h2><p>​புதுச்சேரி மேட்டுப்பாளையம் வி.வி.ஆர்.எஸ் அரசு உயர்நிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர் கணேசன், தனது 34 ஆண்டுகால கல்விச் சேவையில் அறிவியல் பாடத்தை நாடகம், விளையாட்டு மற்றும் வாட்ஸ்அப், ஸ்மார்ட் இன்டராக்டிவ் டிவி, கூகுள் பார்ம்ஸ் போன்ற நவீன டிஜிட்டல் கருவிகளுடன் இணைத்துக் கற்பித்து வருகிறார். ஏற்கனவே மாநில மற்றும் சர்வதேச நல்லாசிரியர் விருதுகளைப் பெற்ற இவரது புதுமையான கற்பித்தல் பணி போற்றுதலுக்குரியது.</p><p>​அர்ப்பணிப்புடன் உழைத்து தேசத்தின் எதிர்காலமான மாணவர்களைச் செதுக்கும் இந்த நல்லாசிரியர்களின் தன்னலமற்ற <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கல்விச் சேவை</a> மென்மேலும் சிறந்து தொடர மனதார வாழ்த்துகிறேன்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வார விடுமுறையையொட்டி குற்றால அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-flock-to-courtallam-waterfalls-for-the-weekend</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-flock-to-courtallam-waterfalls-for-the-weekend#comments</comments><guid isPermaLink="false">55112192-799d-4855-ae56-6432b9a421e7</guid><pubDate>Sun, 23 Aug 2026 06:10:59 +0000</pubDate><atom:updated>2026-08-23T06:10:59.226Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,சுற்றுலா பயணிகள்,Tenkasi,தென்காசி,Courtala Falls,குற்றாலம்,Courtallam,Weekend,வார விடுமுறை,அருவிகள்</media:keywords><media:content height="820" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/ubdxm5c5/bag.jpg" width="1083"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/ubdxm5c5/bag.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><p>தென்காசி மாவட்டத்தையொட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தற்போது அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்வீழ்ச்சிகள் மற்றும் அணைகளுக்கு தண்ணீர்வரத்து தொடங்கியுள்ளது.</p><h2>அருவிகளில் நீண்ட வரிசை</h2><p>முக்கிய சுற்றுலாத்தலமான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D">குற்றால அருவிகளுக்கும்</a> தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது. குறிப்பாக மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சீராக தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.</p><p>இன்று விடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் <a href="https://www.dailythanthi.com/topic/குற்றாலம்">குற்றாலத்தில்</a> குவிந்துள்ளனர். ஐந்தருவி, மெயின் அருவி பழைய குற்றால அருவிகளில் நீண்ட வரிசையில் நின்று குளித்து மகிழ்ந்தனர்.</p><h2>தென்மேற்கு பருவமழை</h2><p>இந்நிலையில் தென்மேற்கு பருவமழை மீண்டும் வலுப்பெறும் என்றும், நெல்லை, தென்காசியில் நாளை (திங்கட்கிழமை) முதல் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.</p><p>தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இறுதிகட்டத்தை எட்டியதுடன், தற்போது வறண்ட வானிலையே நிலவி வருகிறது. நெல்லையில் தினமும் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் மீண்டும் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று தென்காசி தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் ராஜா தெரிவித்து உள்ளார்.</p><h2>குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு</h2><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மீண்டும் தென்மேற்கு பருவமழை வலுவாக பெய்ய உள்ளது. கேரளம் மற்றும் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அமைந்துள்ள மாவட்டங்களில் 3 நாட்கள் மழை பெய்யும். நாளை (திங்கட்கிழமை) தொடங்கி, 26-ந்தேதி வரை மழை நீடிக்கும். </p><p>கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, வால்பாறை, பொள்ளாச்சி, நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்யும். 25-ந்தேதி <a href="https://www.dailythanthi.com/topic/குற்றாலம்">குற்றாலத்தில்</a> அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதை தொடர்ந்தும் சீசன் களைகட்டும்" என்று தெரிவித்து உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் இல்லையென்றால்... மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/congress-isnt-there-for-tvk-to-form-the-government-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/congress-isnt-there-for-tvk-to-form-the-government-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">b14a9625-de36-4333-a809-a181300b58b5</guid><pubDate>Sun, 23 Aug 2026 05:51:27 +0000</pubDate><atom:updated>2026-08-23T05:51:27.732Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/ab95nnac/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/ab95nnac/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>இந்தியா கூட்டணியில் தவெக இருக்கிறதா? என்ற கேள்விக்கு "எப்போது தவெகவுக்கு எம்.பி.க்கள் கிடைக்கிறார்களோ, அப்போது அவர்களை இந்தியா கூட்டணியில் இணைத்துக் கொள்ள சொல்வோம். எம்.பி. இல்லாதவர்களை நாங்கள் கூட்டணியில் இணைய வரச்சொல்ல முடியாது. தற்போது அவர்களுக்கு எம்.பி.க்கள் கிடையாது. எம்.பி. இருந்தால் இந்தியா கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம்.</p><p>சட்டசபை தேர்தலில் தவெக 106 இடங்களைப் பிடித்து வென்ற பிறகு விஜய் முதலில் போன் செய்தது ராகுல் காந்திக்கு தான். அவர் முதல்-அமைச்சராவதற்கு ராகுல் காந்தியிடம் தான் அவர் ஆதரவு கேட்டார். தவெகவுக்கு முதல் ஆதரவு கடிதம் காங்கிரஸ் கட்சி தான் கொடுத்து. அதனால், தவெகவின் இன்றைய அமைச்சர்கள் அனைவருக்கும் அந்த உண்மை தெரியும். அவர்களெல்லாம் அமைச்சராவதற்கு காங்கிரசின் ஆதரவு முதலில் வந்தது.</p><p>இல்லையென்றால், மத்திய மந்திரி அமித்ஷா தவெகவின் கதையையும் முடித்திருப்பார். இந்நேரம் கட்சியை உடைத்து, எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் ஆக்கியிருப்பார்கள் அவர்களைப் பொறுத்தவரை இந்த நிலை அனைவருக்கும் புரியும். முதலில் தேர்தல் வரட்டும். விஜய் எப்போதும் குறைவாகவேப் பேசுவார். தேர்தல் வரட்டும். பேச வேண்டிய நேரத்தில் அவர் சரியாகப் பேசுவார். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>போலி ஆவணம் மூலம் ரூ.4 கோடி நிலமோசடி.. சகோதரர்கள் உள்பட 3 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-4-crore-land-fraud-using-forged-documents-3-arrested-including-brothers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-4-crore-land-fraud-using-forged-documents-3-arrested-including-brothers#comments</comments><guid isPermaLink="false">f32b2135-0f84-4caa-b215-73d9d56e9080</guid><pubDate>Sun, 23 Aug 2026 05:45:42 +0000</pubDate><atom:updated>2026-08-23T05:45:42.789Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,கைது,arrest,ராமநாதபுரம்,Ramanathapuram,நில மோசடி,Land fraud,போலி ஆவணம்,forged documents</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/p25ff4ky/jafffer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/p25ff4ky/jafffer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமநாதபுரம், </p><p>ரூ.4 கோடி நிலத்தை போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்ததாக சகோதரர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.</p><h2>ரூ.4 கோடி</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/ramanathapuram">ராமநாதபுரம்</a> அருகே உள்ள வாணிகிராமம் உசேனியா தெருவை சேர்ந்தவர் பக்ருதீன். இவருடைய மனைவி ஹாஜரா பானு. இவருக்கு சொந்தமாக வாணி கிராமத்தில் ஒரு நிலம் உள்ளது. இதன் மதிப்பு ரூ.4 கோடி என கூறப்படுகிறது. இந்த நிலத்துக்கு ராமநாதபுரம் வெளிப்பட்டினம் தர்ப்பசயனம் ரோடு பகுதியை சேர்ந்த ஜாபர்அலி (வயது 58) என்பவர் போலியான பவர்பத்திரம் தயாரித்ததாக கூறப்படுகிறது. </p><p>அதன்பேரில் அந்த நிலத்தின் ஒரு பகுதியை ராமேஸ்வரம் பேய்க்கரும்பு பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரது மகன்களான சந்திரகுமார் (47), செந்தில்குமார் (49) ஆகியோருக்கு தனித்தனியாக விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் சந்திரகுமார் அந்த நிலத்தில் வீடு கட்டி உள்ளார். செந்தில்குமார் நிலத்தை சுற்றி வேலி அமைத்துள்ளார்.</p><p>இந்நிலையில் ஹாஜரா பானு தனது நிலத்தை மேற்கண்ட 3 பேரும் மோசடி ஆவணங்கள் மூலம் அபகரித்ததை அறிந்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின்பேரில் ராமநாதபுரம் நிலமோசடி தடுப்புப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்தேவி வழக்குப்பதிவு செய்து ஜாபர்அலி, சந்திரகுமார், செந்தில்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். </p>]]></content:encoded></item><item><title>சென்னை: புதிய டபுள்டெக்கர் பஸ்கள் இயக்க இருக்கும் வழித்தடங்களில் போக்குவரத்து கழகம் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-transport-corporation-inspects-routes-where-new-double-decker-buses-are-set-to-operate</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-transport-corporation-inspects-routes-where-new-double-decker-buses-are-set-to-operate#comments</comments><guid isPermaLink="false">3abd88d8-d603-48d1-9da1-5702e5f09c02</guid><pubDate>Sun, 23 Aug 2026 05:30:53 +0000</pubDate><atom:updated>2026-08-23T05:30:53.241Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,தமிழகம்,State Transport Corporation,போக்குவரத்து கழகம்,டபுள் டக்கர்,பஸ் சேவை,Double Decker Bus</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/j2zy2czd/dd-vd.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/j2zy2czd/dd-vd.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/chennai">சென்னையில்</a> 20 புதிய டபுள்டெக்கர் பஸ்களை இயக்கும் வகையில் உத்தேச வழித்தடங்களை தேர்வு செய்து மாநகர போக்குவரத்து கழகம் ஆய்வு செய்துள்ளது.</p><p>1970ம் ஆண்டுகளில் சென்னையை கலக்கி வந்த டபுள் டக்கர் பஸ்கள், <a href="https://www.dailythanthi.com/topic/chennai">சென்னை</a>யின் அடையாளமாகவே பார்க்கப்பட்டது. இந்த பஸ் தாம்பரத்தில் இருந்து சென்னை ஐகோர்ட்டு வரை இயக்கப்பட்டது. இந்த பஸ்சில் பயணிப்பதற்காகவே அதிகளவில் சுற்றுலா பயணிகள் சென்னைக்கு படையெடுக்க தொடங்கினர். பொதுமக்களின் வரவேற்பு அதிகளவில் இருந்தாலும் பராமரிப்பு செலவு அதிகளவில் இருந்த காரணத்தால் டபுள் டக்கர் பஸ்கள் கடந்த 2008ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.</p><p>இந்த நிலையில் தற்போதைய இளம் தலைமுறைகளை மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஈர்க்கும் வகையில், மாநகர போக்குவரத்து கழகம் பல்வேறு அதிநவீன பஸ்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் மீண்டும் 18 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் டபுள் டக்கர் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.</p><p>இது குறித்து, <a href="https://www.dailythanthi.com/topic/chennai">சென்னை</a> மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், “சென்னையில் டபுள் டெக்கர் பஸ் சேவையை மீண்டும் தொடங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அதில், அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான, ஒ.எச்.எம்., குளோபல், ஈகிள் கன்ஸ்ட்ரக்ஷன் கோ ஆகிய இரண்டு நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்றன.</p><p>ஒப்பந்ததாரரை தேர்வு செய்து 20 டபுள்டெக்கர் பஸ்கள் அடுத்த மூன்று மாதங்களில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இந்த பஸ்கள் இயக்குவதற்கான வழித்தடம் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.</p><p>கடற்கரை - கோவளம், கோயம்பேடு அண்ணாசதுக்கம், சுங்கச்சாவடி - கலங்கரை விளக்கம், பிராட்வே - டி.எம்.எஸ். அல்லது கிண்டி மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக இரண்டு வழித்தடங்களையும் உத்தேசமாக தேர்வு செய்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இறுதிகட்ட ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்து பின்னர் அறிவிக்கப்படும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>நீலகிரி: குன்னூர் அருகே சிறுத்தைகள் நடமாட்டம் - பொதுமக்கள் அச்சம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-leopards-roaming-near-coonoor-public-fears</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-leopards-roaming-near-coonoor-public-fears#comments</comments><guid isPermaLink="false">4ea50be8-bf67-4ee1-ab68-09b1d7892c3f</guid><pubDate>Sun, 23 Aug 2026 05:28:39 +0000</pubDate><atom:updated>2026-08-23T05:28:39.928Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nilgiris,நீலகிரி,leopard,சிறுத்தைகள்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/o83wg9if/9.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/o83wg9if/9.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களில் சமீபகாலமாக வனவிலங்குகளின் நடமாட் டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிறுத்தைகளின் அச்சுறுத்தல் காரணமாக தேயிலை தோட்ட தொழிலாளர்களும், பொதுமக்களும் அச்சம டைந்து உள்ளனர். </p><p>இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள நல்லப்பன் தெரு பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வருகின்றன. பகல் நேரங்களில் அருகில் உள்ள தேயிலை தோட்டங்களில் ஓய்வெடுப்பதும், இரவில் ஊருக்குள் உலா வருவதும் வழக்கமாகியுள்ளது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>சிறுத்தைகளின் நடமாட்டம் குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும், அவற்றை பிடிக்க இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே விரைவாக இப்பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>இனிய தேசிய விண்வெளி தின வாழ்த்துகள்! - எல். முருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/happy-national-space-day-l-murugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/happy-national-space-day-l-murugan#comments</comments><guid isPermaLink="false">080c6aef-f30a-411b-8d7a-6f08878b91fa</guid><pubDate>Sun, 23 Aug 2026 05:26:15 +0000</pubDate><atom:updated>2026-08-23T05:26:15.789Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வாழ்த்து,தேசிய விண்வெளி தினம்,National Space Day,எல். முருகன்,Union Minister L. Murugan</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/h4hieoz6/l-murugan.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  எல். முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/h4hieoz6/l-murugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 அன்று சந்திரயான்-3 இல் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதன் மூலம் ஒரு வரலாற்று சாதனையை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் படைத்தது. பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக தரையிறங்கிய அந்த இடத்திற்கு 'சிவசக்தி' என்று பெயரிடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.</p><p>இந்தியா, நிலவில் தரையிறக்கும் நான்காவது நாடாகவும், நிலவின் தென் துருவப் பகுதிக்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையும் பெற்றது. மேலும், இந்தத் தேதி அதிகாரபூர்வமாக 'தேசிய விண்வெளி தினமாக' அறிவிக்கப்பட்டது. அதேபோல ஆண்டுதோறும் தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். இதன்படி, சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய ஆகஸ்ட் 23-ஆம் தேதி. தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படுகிறது. </p> <p>இனிய தேசிய விண்வெளி தினத்தையொட்டி மத்திய இணை மந்திரி எல் முருகன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>தேசிய விண்வெளி தினம்</h2><p>இனிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">தேசிய விண்வெளி தின</a> வாழ்த்துகள்! நிலவிலிருந்து சூரியன் வரையிலும், அதற்கும் அப்பாலும், இந்தியாவின் விண்வெளிப் பயணம் என்பது உறுதி, புதுமை மற்றும் தேசியப் பெருமிதத்தின் ஒரு காவியமாகும்.</p><p>சாத்தியங்களின் எல்லைகளைத் தொடர்ந்து விரிவுபடுத்தி, ஒரு புதிய தலைமுறையை வானத்தைத் தாண்டி கனவு காணத் தூண்டும் இஸ்ரோவின் தலைசிறந்த விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் எங்கள் வணக்கங்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Happy National Space Day! <br><br>From the Moon to the Sun and beyond, Bharat’s space journey is a story of determination, innovation and national pride.<br><br>Saluting the brilliant scientists and engineers of ISRO who continue to push the boundaries of possibility and inspire a new… <a href="https://t.co/Of0rvm7FXd">pic.twitter.com/Of0rvm7FXd</a></p>&mdash; Dr.L.Murugan (@DrLMurugan) <a href="https://x.com/DrLMurugan/status/2091375600103456873?ref_src=twsrc%5Etfw">August 23, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்குவதை நிறுத்துவோம்: தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-stop-supplying-milk-to-aavin-tamil-nadu-farmers-association-announces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-stop-supplying-milk-to-aavin-tamil-nadu-farmers-association-announces#comments</comments><guid isPermaLink="false">29271307-f316-4c09-9835-1891e793f210</guid><pubDate>Sun, 23 Aug 2026 05:24:36 +0000</pubDate><atom:updated>2026-08-23T05:24:36.243Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>farmers association,விவசாயிகள் சங்கம்,ஆவின் நிறுவனம்,Aavin Milk,ஆவின் பால்,Aavin Company</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/oett11bt/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/oett11bt/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சின்னசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-</p><p>தமிழக முதல்-அமைச்சர் விஜய், பால் கொள்முதல் விலை உயர்வு குறித்து சட்டசபையில் வெளியிட்டுள்ள அறிவிப்பு பால் உற்பத்தியை நம்பி வாழும் லட்சக்கணக்கான உற்பத்தியாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. கடந்த 5 ஆண்டு களாக உயர்த்தப்படாமல் இருந்த பால் கொள்முதல் விலை தற்போதைய அறிவிப்பின் மூலம் பெரிதும் ஏமாற்றத்தையும், பாதிப்பையும் அளிக்க கூடியதாக உள்ளது.</p><p>தீவனம் விலை உயர்வு, கூலி உயர்வு என உற்பத்தி செலவு உயர்ந்துள்ள நிலையில் பால் கொள்முதல் விலையை வெறும் ரூ.1 மட்டும் உயர்த்தியுள்ளது கண்டனத்துக்கு உரியதாகும். மேலும் கறவை மாடுகளின் நிலையை கருத்தில் கொண்டு பாலின் கொழுப்பு சத்து 4 சதவீதமாகவும், இதர சத்து 8 சத வீதம் அடிப்படையிலும் விலையை நிர்ணயம் செய்ய வேண் டும். கூட்டுறவு சங்கங்கள் நல்லமுறையில் இயங்க 5 சதவீதம் மார்ஜின் தொகை வழங்க வேண்டும்.</p><p>தமிழ்நாட்டில் ஆவின் பால் பற்றாக்குறையை சரி செய்ய வெளிமாநிலங்களில் இருந்து பால் பவுடர், வெண்ணெய் வாங்கி பாலுடன் கலந்து விற்பனை செய்யும் நிலையை போக்கி பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழகத்தில் விற்பனை செய்ய வேண்டும். சட்டமன்ற கூட்டத்தொடரில் பசும் பால் லிட்டருக்கு ரூ.50-ம், எருமை பால் லிட்டருக்கு ரூ.60-ம் வழங்க வேண்டும். கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்குவதை நிறுத்துவோம் என்று தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் திமுகவினர் தேவையின்றி கூச்சலிடுகின்றனர்: அமைச்சர் ரமேஷ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-members-are-shouting-unnecessarily-in-the-assembly-minister-ramesh</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-members-are-shouting-unnecessarily-in-the-assembly-minister-ramesh#comments</comments><guid isPermaLink="false">8524625f-00b0-466b-8302-ba0054a9d470</guid><pubDate>Sun, 23 Aug 2026 05:12:04 +0000</pubDate><atom:updated>2026-08-23T05:12:04.382Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,சட்டசபை,TN Assembly,Minister ramesh,அமைச்சர் ரமேஷ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/p095x4cs/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/p095x4cs/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>திருச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கூறியதாவது:-</p><p>ஜனநாயக முறைப்படி சட்டப்பேரவை நடந்து கொண்டிருக்கிறது. அதில் சில மரபுக்கு மீறிய வார்த்தைகள் வரும் போது அதை நீக்குவது வழக்கம். கடந்த ஆட்சியில் ஜனநாயகத்திற்கு இடமே அளிக்கப்படவில்லை. தவெக ஆட்சியில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதை பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் சரியாக செய்து கொண்டிருக்கிறார். தவெகவை சேர்ந்த எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் மாண்புடன் அமர்ந்துள்ளனர். உரிய நேரத்தில் பேசுகின்றனர்.</p><p>ஆனால் நாங்கள் பேசும் போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள முன்னாள் அமைச்சர்கள் எப்படியாவது சண்டை நடத்தி விட வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகின்றனர். தகாத வார்த்தைகளில் பேசுவது, முன்வரிசைக்கு ஓடி வருவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். சட்டமன்றத்தில் திமுகவினர் தேவையின்றி கூச்சலிடுகின்றனர்; அறநிலையத் துறை அறிவிப்புகள் குறித்து திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்கின்றனர். </p><p>முதல்-அமைச்சரை நோக்கி கேள்வி எழுப்பும்போது அமைச்சர்கள் பதில் சொல்வதில் என்ன தவறு?. அமைச்சர்கள் அனைவரும் அரசின் ஓர் அங்கமாக தான் இருக்கின்றனர். எங்களின் ஆட்சியில் எங்கள் முதல்-அமைச்சரை நோக்கி கேள்விகள் வரும் போது நாங்கள் பதில் சொல்கிறோம். உங்களுக்கு எதிர்க்கருத்துகள் இருந்தாலும் எழுந்து பேசுங்கள். யாரும் பேச வேண்டாம் என தடுக்கவில்லை. துறை சார்ந்த அமைச்சர்களும் பதில் சொல்லி கொண்டு தான் இருக்கிறார்கள். இங்கு பிரச்சினை என்பது கேள்விகள் சரியாக இருக்கிறதா? பதில்கள் சரியாக இருக்கின்றனவா? இதைத் தான் பார்க்க வேண்டும்.</p><p>சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு சட்டப்பேரவையில் பேசும்போது, நாங்கள் எந்தவித தவறும் இல்லை. மிகவும் தூய ஆட்சியை செய்ததாக குறிப்பிடுகிறார். இத்தகைய சூழலில் தற்போதைய ஆட்சியில் இந்து அறநிலையத்துறையில் என்னென்ன அறிவிப்புகள் வெளியாகவுள்ளன என்று வேவு பார்க்க வேண்டிய அவசியம் என்ன? நாங்கள் எந்தெந்த கோயில்களில் என்னென்ன வேலைகளை செய்திருக்கிறோம்? ஆடிட் செய்தது என்ன? போன்றவற்றை அதிகாரிகளை வைத்து கொண்டு தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன? தவறே செய்யாதவர்கள் எதற்காக இந்த நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். அரசின் ரகசியமான ஒரு விஷயத்தை தெரிந்து கொண்டு, அதை சட்டப்பேரவையில் பேசுவதே தவறு இல்லையா?. இவ்வாறு ஆவ்ர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>படிக்க சென்ற இடத்தில் தமிழக வாலிபர் செய்த லீலை; விமானம் பிடித்து வந்து தூக்கிய தைவான் பெண்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/taiwanese-woman-complains-about-plane-crash-in-tears</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/taiwanese-woman-complains-about-plane-crash-in-tears#comments</comments><guid isPermaLink="false">45a1b67f-d1f1-45e8-bfec-f39e72d0e14a</guid><pubDate>Sun, 23 Aug 2026 04:58:22 +0000</pubDate><atom:updated>2026-08-23T04:58:22.150Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விமானம்,கைது,இளம்பெண்,arrest,women</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/l6scjc3t/thaiwan33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ விமானம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக வாலிபர் செய்த வீபரீத செயல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/l6scjc3t/thaiwan33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>உடுமலை.</p><p>படிக்க சென்ற இடத்தில், தைவான் நாட்டு பெண்ணை காதலித்து ஏமாற்றிய தாக தமிழக வாலிபர் கைது செய்யப்பட்டார்.</p> <h2>வெளிநாட்டில் மலர்ந்த காதல்</h2><p>'காதல்' என்ற ஒற்றை வார்த்தையில், ஒட்டுமொத்த உலகமே உழன்று கொண்டிருக்கிறது. சாதி, மத, இன, மொழி, நாடு பாகுபாடின்றி மலர்ந்த சிலரது காதல், திருமணம் என்ற மாலை சூடி மணம் வீசுகிறது. ஆனால் பலருக்கு காதல் என்ற பூ. வாசம் இழந்து வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விடுகிறது.</p><p>அப்படி தான் இங்கே ஒரு காதல், <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">தைவான்</a> நாட்டில் படிக்க சென்ற இடத்தில் மலர்ந்த காதல் பாதியிலேயே கருகியது. தற்போது போலீஸ் நிலையத்தின் படிக்கட்டில் காலடி எடுத்து வைத்து, காதலனை கம்பி எண்ண வைத்திருக்கிறது அந்த காதல். இதுபற்றிய விவரம் வருமாறு:-</p><h2>இந்தியரை திருமணம் செய்ய விரும்பிய தைவான் பெண்</h2><p>திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த போடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த வர் ஜெகதீஷ் (வயது 32), எம்.எஸ்சி. பட்டதாரியான இவர், தத்துவவியல் துறையில் முனைவர் பட்டம் பெற கடந்த 2023-ம் ஆண்டு தைவான் நாட்டுக்குச் சென்றார். அங்குள்ள டேட்டிங் செயலி மூலம் தைச்சுங் நகரத்தைச் சேர்ந்த ஜோயிங்யிங் (35) என்ற பெண்ணுடன் இவருக்கு அறிமுகம் ஏற்பட்டது. </p><p>இந்தியரைத் திருமணம் செய்ய விரும்பிய ஜோயிங்யிங்குக்கு ஜெகதீசுடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மலர்ந்தது. முனைவர் பட்டம் பெற்றதும் திருமணம் செய்வதாக ஜெகதீஷ் உறுதியளித்ததை நம்பி, அவரது படிப்புச் செலவுகள். தங்கும் வசதிகள் மற்றும் அன்றாடத் தேவைகளை ஜோயிங்யிங் கவனித்துக் கொண்டார். தனது பெற்றோரிடம் ஜெக தீஷை அறிமுகப்படுத்தியபோது அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, இருவரும் அந்தப் பகுதியில் தனியாக வீடு எடுத்து கணவன்-மனைவியாக வசித்து வந்தனர்.</p><h2>தொடர்பு துண்டிப்பு</h2><p>சில மாதங்களுக்கு முன்பு முனைவர் படிப்பை முடித்த ஜெகதீஷ், இந்தியாவில் உள்ள பெற்றோரிடம் கூறிவிட்டு வந்து திருமணம் செய்வதாகக் கூறி ஊருக்குத் திரும்பினார். ஆரம்பத்தில் செல்போனில் பேசி வந்த அவர், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஜோயிங்யிங்குடனான தொடர்பை திடீரெனத் துண்டித்தார். இதனால் சந்தேகமடைந்த அந்தப் பெண். ஆன்லைன் மூலம் உடுமலை வக்கீல் சரஸ்வதியைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெற்றார்.</p><p>வக்கீலின் அறிவுரைப்படி, தைவானில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த ஜோயிங்யிங், அங்கிருந்து கார் மூலம் உடுமலை சென்றடைந்தார். </p><p>பின்னர் உடுமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அவர் கண்ணீர் மல்க புகார் அளித்தார். தன்னைத் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக் கூறி உல்லாசம் அனுபவித்துவிட்டு, தைவானில் தன்னைத் தாக்கியதாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டிருந்தார். மேலும், ஜெகதீசுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் ஆதாரமாகச் சமர்ப்பித்தார்.</p><p>கைது</p><p>விசாரணைக்குப் பிறகு ஜோயிங்யிங்கை ஏமாற்றியது உறுதியானதால், உடுமலை போலீசார் ஜெகதீஷ் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் உடுமலை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத் தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ஜோயிங்யிங் மருத்துவப் பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.</p>]]></content:encoded></item><item><title>அனைவருக்கும் தேசிய விண்வெளி தின நல்வாழ்த்துகள்! - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/best-wishes-to-everyone-on-national-space-day-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/best-wishes-to-everyone-on-national-space-day-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">ca38bdd7-116c-4757-8c8b-389b8563e819</guid><pubDate>Sun, 23 Aug 2026 04:54:45 +0000</pubDate><atom:updated>2026-08-23T04:54:45.533Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,தேசிய விண்வெளி தினம்,National Space Day</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/9l8fgd8b/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/9l8fgd8b/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 அன்று சந்திரயான்-3 இல் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதன் மூலம் ஒரு வரலாற்று சாதனையை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் படைத்தது. பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக தரையிறங்கிய அந்த இடத்திற்கு 'சிவசக்தி' என்று பெயரிடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.</p><h2>தேசிய விண்வெளி தினம்</h2><p>இந்தியா, நிலவில் தரையிறக்கும் நான்காவது நாடாகவும், நிலவின் தென் துருவப் பகுதிக்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையும் பெற்றது. மேலும், இந்தத் தேதி அதிகாரபூர்வமாக 'தேசிய விண்வெளி தினமாக' அறிவிக்கப்பட்டது. அதேபோல ஆண்டுதோறும் தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.</p><p>இந்த நிலையில், <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழக </a>பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>நயினார் நாகேந்திரன் வாழ்த்து</h2><p>விண்மீன்களை ரசித்த தலைமுறையிலிருந்து, விண்வெளியை ஆராய்ந்து உலகையே வியக்க வைக்கும் தலைமுறையாக நம் பாரத தேசம் உயர்ந்து நிற்கிறது! நம் விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பும், அறிவின் மீதான தாகமும் இந்தியாவின் விண்வெளிப் பயணத்திற்கு புதிய சிறகுகளை அளித்து வருகின்றன.</p><p>சந்திரனைத் தொட்ட சந்திரயான் முதல் சூரியனை நோக்கிய ஆதித்யா-L1 வரை, ஒவ்வொரு சாதனையும் இந்தியாவின் அறிவியல் ஆற்றலையும், கனவுகளின் உயரத்தையும் உலகுக்கு எடுத்துக்காட்டுகிறது!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விழிப்புணர்வு நிகழ்ச்சியில் துணிச்சலாக பேசிய மாணவி: பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-speaks-out-bravely-at-awareness-event-worker-arrested-for-sexually-harassing-her</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-speaks-out-bravely-at-awareness-event-worker-arrested-for-sexually-harassing-her#comments</comments><guid isPermaLink="false">911a4f63-7b5b-44bb-916d-f5b54c77da9d</guid><pubDate>Sun, 23 Aug 2026 04:48:02 +0000</pubDate><atom:updated>2026-08-23T04:48:02.760Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணவி,கைது,Worker arrested,பாலியல் தொல்லை,student,தொழிலாளி,Awareness,sexually harassing,event,விழிப்புணர்வு நிகழ்ச்சி</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/w6o0jr6p/suicide.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/w6o0jr6p/suicide.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>குழித்துறை, </p><p>பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை பற்றி, பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவி அம்பலப்படுத்தினார். இதனை தொடர்ந்து போலீசாரால் அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.</p><h2>மாணவிக்கு தொல்லை</h2><p>குமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்த ஒரு மாணவி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவியின் தாய் இறந்து விட்டார். தந்தையும் மாணவியை கவனிக்கவில்லை.</p><p>இதனை தொடர்ந்து பாட்டியின் பராமரிப்பில் மாணவி இருந்தார். அப்போது பாட்டியின் வீட்டுக்கு மர வேலை பார்க்கும் தொழிலாளியான படந்தாலுமூடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 50) என்பவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அந்த சமயத்தில் அவர் வீட்டில் தனியாக இருந்த மாணவியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தை யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டியுள்ளார்.</p><h2>பள்ளி நிகழ்ச்சியில் அம்பலம்</h2><p>இந்தநிலையில் மாணவி படிக்கும் பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலியல் அத்துமீறல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அதில் அந்த மாணவியும் பங்கேற்றார். அப்போது அங்கு பேசிய அதிகாரிகளின் நம்பிக்கையான பேச்சைக் கேட்டு அந்த மாணவி தனக்கு நடந்த அவலத்தை துணிச்சலாக எடுத்துக் கூறி இருக்கிறார். தொழிலாளி கொடுத்த தொல்லையால் மனஉளைச்சலில் இருப்பதாக கூறி அழுதுள்ளார்.</p><h2>தொழிலாளி கைது</h2><p>இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த நிகழ்ச்சியை நடத்திய 'சைல்டு லைன்' அதிகாரிகள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் மகளிர் போலீசார் மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து அவரை <a href="https://www.dailythanthi.com/topic/arrest-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். தொழிலாளியால் பாலியல் தொல்லைக்கு உள்ளானதை பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவி அம்பலப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் பொறுப்பில் வனப்பணி அலுவலர்களை நியமிப்பதா? - அன்புமணி கேள்வி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/appointing-forest-service-officers-to-the-post-of-rural-development-project-director-anbumani-questions</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/appointing-forest-service-officers-to-the-post-of-rural-development-project-director-anbumani-questions#comments</comments><guid isPermaLink="false">4fa35d32-531a-4d85-b627-c005fadfc38c</guid><pubDate>Sun, 23 Aug 2026 04:37:03 +0000</pubDate><atom:updated>2026-08-23T04:37:03.251Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK,அன்புமணி,Anbumani</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/ibnyeimf/anbumani.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/ibnyeimf/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் பொறுப்பில் வனப்பணி அலுவலர்களை நியமிப்பதா? ஊரகப்பகுதிகளில் மக்கள் சேவை பாதிக்கப்படும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>வனப்பணி அலுவலர்களை நியமனம்</h2><p>தமிழ்நாட்டில் தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களின் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்களாக இந்திய வனப்பணி அலுவலர்களை (Indian Forest Service - IFS) நியமித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மக்களுக்கு நேரடியாக சேவை வழங்க வேண்டிய பொறுப்புகளில், அத்துறைக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத வனப்பணி அலுவலர்களை நியமிப்பது ஊரக மக்களுக்கான சேவையை சீர்குலைத்து விடும்.</p><p>தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் வருவாய்த்துறைக்கு அடுத்தபடியாக மக்களுடன் நேரடியாக தொடர்புள்ள துறை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தான், கிராமப்பகுதிகளில் சாலைகள், பாலங்கள், வீட்டு வசதி, குடிநீர், கழிப்பிடங்கள் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இந்தத் துறை தான் ஏற்படுத்தித் தருகிறது. இவை அனைத்தையும் விட, கடந்த காலங்களில் 100 நாள் வேலைத் திட்டத்தையும், இப்போது அறிவிக்கப்பட்டுள்ள 150 நாள் வேலைத் திட்டத்தையும் இந்தத் துறை தான் செயல்படுத்துகிறது. இந்தத் துறையின் மாவட்ட அளவிலான தலைமை அதிகாரிகள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரும், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனரும் தான். வனப் பணி அலுவலர்களுக்கும் இந்தப் பணிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில், அவர்களை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர்களாக நியமித்தால் ஊரக வளர்ச்சித் துறையின் செயல்பாடுகள் மெச்சத்தக்கதாக அமையாது.</p><p>ஊரக வளர்ச்சித் துறைக்காக தனியாக பணியாளர் படிநிலைகள் உள்ளன. இந்தத் துறையின் தொடக்க நிலை பணி என்பது இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் தான். இந்தப் பணிகளுக்கு தகுதியானவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அடுத்தடுத்த நிலைகளில் அவர்கள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் என பதவி உயர்வு பெறுகிறார்கள். இந்தப் பணிகளில் 20 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றுபவர்கள் ஊரக வளர்ச்சித் துறையில் உதவி இயக்குனர் நிலைக்கு உயர்த்தப்படுகிறார்கள்.</p><h2>மக்களுக்கு வழங்கப்படும் தண்டனை</h2><p>இதுதவிர தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் முதல் தொகுதி பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் மூலம் ஊரக வளர்ச்சித் துறைக்கு நேரடியாக உதவி இயக்குனர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் ஊரக வளர்ச்சித் துறையில் இணை இயக்குனர் நிலைக்கு உயரும் போது ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர்களாக நியமிக்கப்படலாம். அவ்வாறு நியமிக்கப்படும் போது ஊரக வளர்ச்சித் துறை, ஊராட்சிகள், கிராமப்புற மக்களின் தேவைகள் ஆகியவற்றை மிகவும் நன்றாக அறிந்திருப்பார்கள் என்பதால் சிறப்பாக பணியாற்ற முடியும். ஆனால், அந்த வாய்ப்பை அவர்களுக்கு வழங்காமல் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை நேரடியாக திட்ட இயக்குனர்களாக நியமிப்பதை தமிழக அரசு வாடிக்கையாக வைத்திருந்தது.</p><p>இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் இப்பணிக்கு நியமிக்கப்பட்டதற்குக் கூட ஓரளவு ஏற்கத்தக்க வகையில் ஒரு காரணம் கற்பிக்கப்பட்டது. இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் பிற்காலத்தில் மாவட்ட ஆட்சியர்களாக பணி செய்ய வேண்டியிருக்கும் என்பதால், அதற்கு இந்தப் பணி சிறந்த பயிற்சிக் களமாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், இப்போது இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை நியமிப்பதை விட்டு விட்டு, இந்திய வனப்பணி அதிகாரிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர்களாக நியமிப்பதற்கு எந்த நியாயமான காரணங்களும் இல்லை. இது ஊரக வளர்ச்சித் துறையில் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்கும், ஊரகப் பகுதிகளில் வாழும் மக்களுக்கும் வழங்கப்படும் தண்டனையாகவே அமையும்.</p><p>ஊரகப்பகுதி மக்களின் தேவைகள் என்னவென்பதை அறிந்து அவற்றை நிறைவேற்றுவதற்கு தேவையான அனுபவம் இந்திய வனப்பணி அலுவலர்களுக்கு இருக்காது. அதனால் ஊரக வளர்ச்சி கடுமையாக பாதிக்கப் படும். இந்த நியமனங்களுக்கு ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அவர்களுக்கும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைகளின் திட்ட இயக்குனர்களுக்கும் இடையே சரியான ஒத்துழைப்பு இல்லாத நிலை உருவாகி அது ஒட்டுமொத்த துறையின் செயல்பாடுகளையும் முடக்கி விடும்.</p><h2>பதவி உயர்வு பாதிப்பு</h2><p>இன்னொருபுறம், தமிழக அரசின் இந்த முடிவால் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளின் பதவி உயர்வு வாய்ப்புகள் கடுமையாக பாதிக்கப்படும். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் பதவி என்பது ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் பதவிக்கு ஒப்பானதாகும். இந்தப் பணிக்கு ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளை பதவி உயர்வின் மூலம் நியமித்தால் தான் அவர்களுக்கு உதவி இயக்குனர், துணை இயக்குனர், இனை இயக்குனர், கூடுதல் இயக்குனர் என பல்வேறு நிலைகளுக்கு பதவி உயர்வு பெற முடியும். மாறாக, திட்ட இயக்குனர் பணிக்கு அகில இந்திய பணி அலுவலர்களை தொடர்ந்து நியமித்து வருவதால், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் 35 ஆண்டுகள் என பணி செய்தாலும் அவர்களுக்கு இயல்பாகக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வுகள் கிடைப்பதில்லை. இந்த அநீதி போக்கப்பட வேண்டும்.</p><p>எனவே, ஊரகப் பகுதிகளின் வளர்ச்சி, மக்களுக்கு கிடைக்க வேண்டிய சேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், ஊரகவளர்ச்சித் துறை அதிகாளுக்கு பதவி உயர்வு கிடைப்பதை உறுதி செய்யவும் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர்களாக இந்திய வனப்பணி அதிகாரிகளை நியமிக்கும் முடிவை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழக அரசு</a> கைவிட வேண்டும். அதற்கு பதிலாக திட்ட இயக்குனர் பதவியை ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதன் மூலம் நிரப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தொழில் அதிபரை கடத்தி ரூ.26 லட்சம் பணம், நகை பறிப்பு: உண்மையாக நடந்தது என்ன..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/businessman-kidnapped-and-robbed-of-jewelry-and-cash-worth-26-lakh-what-really-happened</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/businessman-kidnapped-and-robbed-of-jewelry-and-cash-worth-26-lakh-what-really-happened#comments</comments><guid isPermaLink="false">6cb9e694-37f0-4b47-a3ce-d52c4c265430</guid><pubDate>Sun, 23 Aug 2026 04:17:32 +0000</pubDate><atom:updated>2026-08-23T04:17:32.744Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,Tamilnadu,கோவை,தமிழகம்,கடத்தல்,police investigation,போலீஸ் விசாரணை,பணம் பறிப்பு,தொழில் அதிபர்,Kovai,kidnapped,business man</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/pnuqst0x/laj.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/pnuqst0x/laj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p>வடமாநில தொழில் அதிபரை கடத்தி ரூ.26 லட்சம் பணம் மற்றும் நகை பறிக்கப்பட்டது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>ரூ.1 கோடி கடன்</h2><p>மேற்கு வங்காளம் ஹூக்ளி அருகே மாதப்பூர் பகுதியை சேர்ந்தவர் தேப்ஜித் ரானா (வயது 25). தொழில் அதிபர். இவருக்கு கோவையை சேர்ந்த ஆனந்த குமார் என்பவர் இணையதளம் மூலம் அறிமுகம் ஆனார். அவரிடம் தேப்ஜித் ரானா, தான் திருப்பூரில் ஜவுளிக்கடை நடத்தி வருவதாக கூறினார்.</p><p>இந்த நிலையில் கடந்த மாதம் தேப்ஜித் ரானா கோவை வந்தார். அவரை ஆனந்தகுமார், அவருடைய நண்பர் செந்தில்குமார் ஆகியோர் நேரில் சந்தித்தனர். அப்போது, அவரிடம் செந்தில்குமார் ரூ.1 கோடி கடன் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அவர் தன்னிடம் அவ்வளவு தொகை இல்லை என்று கூறிவிட்டதாக தெரிகிறது.</p><h2>கடத்தல்</h2><p>இதையடுத்து கடந்த வாரம் தேப்ஜித் ரானா தனது நண்பர்களுடன் <a href="https://www.dailythanthi.com/topic/coimbatore">கோவை </a>வந்து பீளமேடு அருகே ஒரு நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். இதை அறிந்த செந்தில்குமார், ஆனந்தகுமார் உள்பட 10 பேர் அவரை பார்க்க சென்றனர்.</p><p>அப்போது அந்த அறையில் தேப்ஜித் ரானா மற்றும் அவருடைய நண்பர்களான சித்தார்த், ஆதர்ஷ்குமார் ஆகியோர் இருந்தனர். உள்ளே சென்றதும் அந்த 10 பேரும் சேர்ந்து தொழில் அதிபர் உள்பட 3 பேரையும் காரில் ஏற்றி, திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.</p><h2>தலைமறைவான 8 பேர்</h2><p>பின்னர் அந்த கும்பல் கத்தி முனையில் தேப்ஜித் ரானாவிடம் ரூ.26 லட்சத்து 54 ஆயிரம் மற்றும் ஒரு பவுன் நகை மற்றும் 2 விலை உயர்ந்த செல்போன்களை பறித்துவிட்டு தப்பிச்சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். </p><p>மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய செந்தில்குமார், ஆனந்தகுமார் ஆகியேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான 8 பேர் யார்? அவர்கள் எங்கு உள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.</p><h2>தீவிர விசாரணை</h2><p>இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-</p><p>வடமாநிலத்தை சேர்ந்த தொழில் அதிபர் தேப்ஜித் ரானா மற்றும் பணத்தை பறித்ததாக கூறப்படும் செந்தில்குமார், ஆனந்தகுமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் ஜவுளி வியாபாரம் செய்து வரும் தங்களிடம் முதலீடு செய்தால் இரட்டிப்பாக பணத்தை கொடுப்பதாக தேப்ஜித்ரானா கூறி உள்ளார்.</p><p>அதை நம்பிய செந்தில்குமார், ஆனந்தகுமார் உள்பட 10 பேர் ரூ.80 லட்சத்தை தேப்ஜித் ரானா, சித்தார்த் ஆகியோரிடம் கொடுத்து உள்ளனர். அந்த பணத்தை திரும்ப கொடுக்காமல் 2 பேரும் மேற்கு வங்காளத்துக்கு சென்று விட்டு கோவை வந்து உள்ளனர். </p><h2>உண்மையாக நடந்தது</h2><p>இதை அறிந்த ஆனந்தகுமார், செந்தில்குமார் உள்பட 10 பேரும் சென்று பணத்தை திரும்ப கேட்டு உள்ளனர். அதை கொடுக்காததால் கடத்திச்சென்று பணத்தை பறித்ததாக 2 பேரும் தெரிவித்து உள்ளனர். ஆனால் தேப்ஜித் ரானா, தன்னை கடத்திச்சென்று பணத்தை பறித்ததாக கூறுகிறார். இந்த விவகாரத்தில் உண்மையாக நடந்தது என்ன என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.</p><p>இவ்வாறு அவர்கள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>ரேஷன் கடைகளில் தரமான அரிசி: அதிகாரிகள் குழு ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/quality-rice-in-ration-shops-officials-team-inspects</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/quality-rice-in-ration-shops-officials-team-inspects#comments</comments><guid isPermaLink="false">d359a824-383c-4253-9391-d294efb68ebd</guid><pubDate>Sun, 23 Aug 2026 04:14:20 +0000</pubDate><atom:updated>2026-08-23T04:14:20.532Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>ரேஷன் கடை,Ration shop,அரிசி,rice</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/totuylki/6.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/totuylki/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ரேஷன் கடைகளில் தரமான அரிசி மட்டுமே வழங்குவதை உறுதி செய்ய, மாவட்ட வாரி யாக, கூட்டுறவு மண்டல இணை பதிவாளர், நுகர் பொருள் வாணிப கழக மண்டல மேலாளர், தரக் கட்டுப்பாடு அலுவலர் அடங்கிய குழு அமைக்கப் பட்டுள்ளது. இக்குழுக்கள், நேற்று முதல் அனைத்து கிடங்குகளிலும் அரிசியின் தரத்தை ஆய்வு செய்து வருகின்றன.</p><p>தமிழக ரேஷன் கடை களில், 2.25 கோடி கார்டுதாரர்களுக்கு மாதம் தோறும் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்காக மாதம், 3.75 லட்சம் டன் அரிசி தேவை. இந்த அரிசியை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது. உணவு துறையின் கீழ் செயல்படும் நுகர் பொருள் வாணிப கழகம், அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்களை கொள்முதல் செய்கிறது. அவற்றின் வினியோகத்தை, ரேஷன் கடைகள் வாயிலாக கூட்டுறவு துறை மேற் கொள்கிறது.</p><p>ரேஷன் அரிசி தரம் குறைவாக இருப்பதாக, அவ்வப்போது புகார்கள் எழுகின்றன. இதற்கு காரணம், 'நீங்கள்தான்' என, இரு துறைகளின் பணியாளர்களும் தங்களுக்குள் மாறி மாறி குறைகளை சொல்கின்றனர்.</p><p>இதுதொடர்பாக இம் மாதம், 20ம் தேதி சட்ட சபையில் கூட்டுறவு மற்றும் உணவு துறை மீதான மானிய கோரிக்கையின் போது, ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே காரசாரமான விவாதம் நடந்தது.</p><p>'ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங் கப்படும்' என, உணவு துறை அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்தார். இதையடுத்து, மாவட்ட வாரியாக கூட்டுறவு, உணவு துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப் பட்டுள்ளது.</p> <p>குழுவில், கூட்டுறவு மண்டல இணை பதிவாளர், வாணிப கழக முது நிலை மண்டல மேலாளர், தரக் கட்டுப்பாடு அதிகாரிகள் உள்ளனர். உள்ள வாணிப கழகத்தின் அனைத்து கிடங்கு முதல் மாவட்டங்களில் அக்குழுவினர், நேற்றுகளுக்கும் சென்று, அரிசியின் தரம் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆய்வு நாளை வரை நடக்கிறது.</p> ]]></content:encoded></item><item><title>விடுமுறை தினம்: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-tourists-flock-to-kanyakumari-14</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-tourists-flock-to-kanyakumari-14#comments</comments><guid isPermaLink="false">17fd65c3-1272-451c-a8f2-bf5f5246648b</guid><pubDate>Sun, 23 Aug 2026 04:05:08 +0000</pubDate><atom:updated>2026-08-23T04:05:08.943Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,Tourists,சுற்றுலா பயணிகள்,Kanyakumari,விடுமுறை தினம்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/q62zeegp/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/q62zeegp/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி, </p><p>சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள். </p><p>இந்தநிலையில் இன்று ஞாயிறு விடுமுறையையொட்டி காலையில் இருந்தே கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை, சன்ரைஸ் பாயின்ட் போன்ற பகுதிகளில் நள்ளிரவு முதல் காத்திருந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். </p><p>அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். படகுத்துறையில் இருந்து சுற்றுலா பயணிகள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்த்து ரசித்து வருகின்றனர். காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள தமிழன்னை பூங்கா, சன்செட் பாயிண்ட், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.   </p>]]></content:encoded></item><item><title>வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-low-pressure-area-has-formed-over-the-bay-of-bengal</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-low-pressure-area-has-formed-over-the-bay-of-bengal#comments</comments><guid isPermaLink="false">77deab34-b044-47f0-b3ab-2312dd940cbb</guid><pubDate>Sun, 23 Aug 2026 03:50:42 +0000</pubDate><atom:updated>2026-08-23T03:50:42.442Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Rain,Weather,கனமழை,வானிலை,தமிழகம்,Weather News,WeatherUpdate,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,வானிலை ஆய்வு மையம்,Low pressure area,கன மழை,வானிலை அறிக்கை,weather condition,காற்றழுத்த தாழ்வுப்பகுதி,வங்கக்கடல்,வானிலை முன்னறிவிப்பு,Weather Status,வானிலை அறிவிப்பு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/a70y4if1/sea.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/a70y4if1/sea.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>வானிலை செய்திகள் (Weather)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><h2>மழை</h2><p>முன்னதாக தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. </p><p>மேலும் இதன் காரணமாக இன்று (23-08-2026) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும் என்றும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந் தது.</p><h2>கடல் சீற்றம்</h2><p>இந்நிலையில் வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக மேற்கு வங்காளம், ஒடிசா, வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நாளை வரை கடல் சீற்றமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>தமிழ்நாட்டுக்கு பாதிப்பு இல்லை</h2><p>மேலும் மேற்கு வங்காளம், ஒடிசா, வடக்கு ஆந்திரப்பிரதேச கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>திருவண்ணாமலையில் 28-ந்தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வு கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-grievance-redressal-meeting-for-differently-abled-persons-to-be-held-in-tiruvannamalai-on-the-28th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-grievance-redressal-meeting-for-differently-abled-persons-to-be-held-in-tiruvannamalai-on-the-28th#comments</comments><guid isPermaLink="false">18027616-b299-4a8f-b3f1-af32f1965a91</guid><pubDate>Sun, 23 Aug 2026 03:44:32 +0000</pubDate><atom:updated>2026-08-23T03:44:32.237Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,Tiruvannamalai,மாற்றுத்திறனாளிகள்,குறைதீர்வு கூட்டம்,A collector- கலெக்டர்,differently-abled persons</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/7e7svpmi/149.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருவண்ணாமலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/7e7svpmi/149.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை, </p><p>திருவண்ணாமலையில் 28-ந்தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வு கூட்டம் நடைபெறும்.</p><h2>சிறப்பு குறைதீர்வு கூட்டம்</h2><p>திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி அவர்களின் தேவைகளை கேட்டறிந்து நிறைவேற்றும் வகையில் வருகிற 28-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் கலெக்டர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வு கூட்டம் நடத்தப்பட உள்ளது. </p><p>கூட்டத்தில் அனைத்து துறை அலு வலர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளி நபர்களும் அன்றைய தினம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்து உள்ள புதிய குறைதீர்வு கூட்ட அரங்கில் நடைபெறும் சிறப்பு குறை தீர்வு கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என <a href="https://www.dailythanthi.com/topic/collector-orders">கலெக்டர்</a> வந்தனா கார்க் தெரிவித்து உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கூட்டுறவு வங்கிகளில் தங்க நகைக்கடன் ரூ.10 ஆயிரமாக உயருகிறது?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-gold-loan-limit-in-cooperative-banks-being-raised-to-10000</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-gold-loan-limit-in-cooperative-banks-being-raised-to-10000#comments</comments><guid isPermaLink="false">a005c922-55da-4fbd-b280-e5cbd384a528</guid><pubDate>Sun, 23 Aug 2026 03:44:22 +0000</pubDate><atom:updated>2026-08-23T03:44:22.937Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நகைக்கடன்,கூட்டுறவு வங்கி,தங்க நகைக்கடன்கள்,Cooperative Bank,கூட்டுறவு வங்கிகள்,cooperative banks,gold loan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/n5d7hybs/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/n5d7hybs/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் தங்க நகைகளை அடமானம் வைத்து பெறப்படும் கடன் தொகையை உயர்த்த கூட்டுறவுத் துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கத்திற்கு அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் வரை கடன் வழங்கப்பட உள்ளது.</p><h2>ரூ.8 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது</h2><p>தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் தங்க நகைகளை அடமானம் வைத்தால், ஒரு கிராம் தங்கத்திற்கு தற்போது அதிகபட்சமாக ரூ.8 ஆயிரம் வரை கடன் வழங்கப்படுகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்தக் கடன் தொகையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>தங்கம் விலை தொடர்ந்து உயர்வு</h2><p>சர்வதேச சந்தை நிலவரங்களின் தாக்கத்தால் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. நேற்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 600 ஆக இருந்தது. இதனால், தங்கத்தை அடமானம் வைத்து அதிகளவில் கடன் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.</p><h2>தனியார் நிறுவனங்களுடன் போட்டி</h2><p>தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் ஒரு கிராம் தங்கத்திற்கு அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் வரை கடன் வழங்கப்படுகிறது. இதனால், அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் கூட்டுறவு நிறுவனங்களிலும் தங்க நகைக்கடன் தொகையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><h2>விரைவில் அதிகாரப்பூர்வ ஒப்புதல்</h2><p>கூட்டுறவு நிறுவனங்களில் ஒரு கிராம் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தங்கத்திற்கு </a>ரூ.9 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கடன் வழங்கும் வகையில் புதிய வரம்பை நிர்ணயிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வரும் வாரம் நடைபெற உள்ள கூட்டுறவுத் துறை உயரதிகாரிகள் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்பதில் குழப்பம் இல்லை: ஜோதிமணி எம்.பி.</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-no-confusion-that-rahul-gandhi-is-the-prime-ministerial-candidate-mp-jothimani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-no-confusion-that-rahul-gandhi-is-the-prime-ministerial-candidate-mp-jothimani#comments</comments><guid isPermaLink="false">7e8f3d88-2aa2-4b76-8585-5a22017152d2</guid><pubDate>Sun, 23 Aug 2026 03:25:04 +0000</pubDate><atom:updated>2026-08-23T03:25:04.451Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Rahul Gandhi,ராகுல்காந்தி,ஜோதிமணி எம்.பி.,jothimani mp,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/26hfm5fr/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/26hfm5fr/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>நாடாளுமன்ற மழைக்காலக்கூட்டத்தொடரில் நடந்தது என்ன? என்பது தொடர்பான விளக்கக்கூட்டம் காங்கிரஸ் கட்சி சார்பில் கோவையில் நடைபெற்றது. இதற்கு கோவை மாநகர் மாவட்ட தலைவர் பி.விஜயகுமார் தலைமை தாங்கினார். வி.எம்.சி.மனோகரன், மாவட்ட தலைவர்கள் ரங்கராஜன் (வடக்கு), சக்திவேல் (தெற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். </p><p>கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் விஜய் வசந்த், ஜோதிமணி மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சுப்பராயன் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு விளக்கம் அளித்தனர். </p><p><strong>அதைத்தொடர்ந்து கரூர் எம்.பி. ஜோதிமணி நிருபர்களிடம் கூறியதாவது:-</strong></p><p>நாடாளுமன்றத்தில் நடக்கக்கூடிய விஷயங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தொகுதி மறுவரையறை விவகாரத்தில் 543 தொகுதிகள் தான் இருக்க வேண்டும், இதில் 33 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பதில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் தெளிவாக உள்ளார். அதன் அடிப்படையில் தான் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.</p><p>மத்தியில் பா.ஜனதா ஆட்சி முடிவுக்கு வந்து கொண்டு இருக்கிறது. இந்தியா கூட்டணியில் ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர். அதில் எந்த குழப்பமும் இல்லை. ராகுல் காந்தியால் மட்டுமே பிரதமர் மோடியை வீழ்த்த முடியும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் த.வெ.க. தலைமையிலான கூட்டணி தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.</p><p>தமிழகத்தில் எம்.பி.க்களுக்கு என தனியாக அலுவலகம் இல்லை. இதனால் பொதுமக்களை சந்திப்பதில் சிரமம் உள்ளது. எனவே ஒவ்வொரு தொகுதியிலும் எம்.பி.க்களுக்கு தனி அலுவலகத்தை தமிழக அரசு கட்டிக்கொடுக்க வேண்டும். மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட ஒரு கல்லை கூட வைக்க விடமாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>‘ஜே.சி.டி. பிரபாகர் சட்டசபையை சிறப்பாக நடத்துகிறார்’ மு.க.ஸ்டாலின் புகழாரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/jcd-prabhakar-is-running-the-assembly-well-praises-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/jcd-prabhakar-is-running-the-assembly-well-praises-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">8b0d33ba-9f95-495c-a2ae-758c3a099d63</guid><pubDate>Sun, 23 Aug 2026 03:15:01 +0000</pubDate><atom:updated>2026-08-23T03:15:01.177Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,Vijay,விஜய்,மு.க.ஸ்டாலின்,தமிழக சட்டசபை,TNAssembly,mk stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/v3nar6hs/stalinone33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஜே.சி.டி. பிரபாக]]></media:title><media:description type="html"><![CDATA[ 

‘ஜே.சி.டி. பிரபாகர் சட்டசபையை சிறப்பாக நடத்துகிறார்’ ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/v3nar6hs/stalinone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><p>ஜே.சி.டி. பிரபாகர் சட்டசபையை சிறப்பாக நடத்துகிறார் என மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டி உள்ளார்.</p><p>சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடர்ச்சியாக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. 21-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் எம்எல்ஏக்களுக்கு கார் வழங்குவது உள்ளிட்ட விவகாரம் குறித்து ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்குக் இடையே காரசாரமாக பேசப்பட்டது. இதனிடையில் சட்டமன்ற நிகழ்வுகள் நேரலை செய்யப்படுவதால், அனைவரும் ஆர்வமுடன் அதனை உன்னிப்பாக வருகின்றனர். இந்நிலையில் பேரவையை வழிநடத்தும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9C%E0%AF%87.%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%9F%E0%AE%BF.%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D">சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் </a>குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.</p><h2>பேரவையை உன்னிப்பாக கவனிக்கும் மு.க.ஸ்டாலின்</h2><p>திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சட்டமன்ற நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கிறார். பேரவையில் திமுக எம்எல்ஏக்களின் செயல்பாடுகள், ஆளுங்கட்சியை நோக்கி அவர்கள் முன்வைக்கும் கேள்விகள் உள்ளிட்டவை பற்றியும் அவர் கவனித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் நேற்றைய தினம் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்ற நிலையில், அதனை நேரலையில் கண்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>மு.க.ஸ்டாலின் - வைரமுத்து சந்திப்பு</h2><p>இந்தநிலையில், முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை கவிஞர் வைரமுத்து சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் பேசிய விஷயங்கள் குறித்து எக்ஸ் வலைத்தளத்தில் கவிஞர் வைரமுத்து பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-</p><h2>அவையை சிறப்பாக நடத்தும் ஜே.சி.டி. பிரபாகர் </h2><p>சட்டசபை நேரடி ஒளிபரப்பை முக்கால் மணி நேரம் இருவரும் கண்டு கொண்டிருந்தோம். 'ஜே.சி.டி. பிரபாகர் அவையை சிறப்பாக நடத்துகிறார்' என்றார் தி.மு.க. தலைவர்.</p><p>"சட்டசபையின் ஆட்ட நாயகன் என்று சமூக ஊடகங்கள் சபாநாயகரை பேசுகின்றன' என்றேன். அப்படியா? என்றார். ஒரு அழகான காபி குடித்து முடித்து வாழ்த்தி விடை கொண்டேன்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>எண்ணூர் அருகே பாம்பு கடித்து மாணவி உயிரிழப்பு: வீட்டில் படுத்திருந்த போது நேர்ந்த சோகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-dies-after-being-bitten-by-a-snake-near-ennore-tragedy-struck-while-she-was-lying-at-home</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-dies-after-being-bitten-by-a-snake-near-ennore-tragedy-struck-while-she-was-lying-at-home#comments</comments><guid isPermaLink="false">73f567d2-f410-44d4-b330-b0bc63d20aa6</guid><pubDate>Sun, 23 Aug 2026 03:08:13 +0000</pubDate><atom:updated>2026-08-23T03:08:13.617Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,மாணவி,student,Snake,உயிரிழப்பு,Ennore,பாம்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/usdch0ts/108.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பாம்பு கடித்து மாணவி உயிரிழப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/usdch0ts/108.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>எண்ணூர், </p><p>சென்னை எண்ணூரை அடுத்த எர்ணாவூர் ஜெய்ஹிந்த் நகர் பசும்பொன் தெருவை சேர்ந்தவர் பாபு. கட்டிடத்தொழிலாளி. இவரது மகள் யாஷினி (வயது 16). இவர், திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். </p><p>இவர்கள் குடியிருந்த பழைய வீட்டை இடித்துவிட்டு புதிதாக வீடு கட்டி வருகிறார்கள். இதனால் அருகில் உள்ள ஓட்டு வீட்டில் ஒரு அறையில் குடும்பத்தோடு தங்கி இருந்தனர்.</p><h2>பாம்பு</h2><p>நேற்று முன்தினம் இரவு யாஷினி தரையில் படுத்து இருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பு ஒன்று யாஷினியின் வலது கையில் இருமுறை கடித்துவிட்டது. இதனால் அலறி துடித்த மாணவியை அவரது பெற்றோர் மீட்டு திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். </p><p>பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை மாணவி யாஷினி பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>தீயணைப்பு நிலைய வீரர்கள்</h2><p>இந்த சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரித்து வருகின்றனர். மாணவி குடும்பத்தினர் தங்கி இருந்த வீட்டின் அருகே புதர் மண்டி காணப்படுகிறது. </p><p>அதிலிருந்து வீட்டுக்குள் புகுந்த நல்ல <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">பாம்பு </a>மாணவியை கடித்திருப்பது தெரியவந்தது. இதற்கிடையில் திருவொற்றியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், வீட்டில் பதுங்கி இருந்த நல்ல பாம்பை லாவகமாக பிடித்து காட்டில் கொண்டுவிட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>உரிய நேரத்தில் தேர்வு நடத்தாததால் பாதிப்பு: பாரதியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் முறையீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/students-complain-to-bharathiar-university-about-being-affected-by-not-conducting-exams-on-time</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/students-complain-to-bharathiar-university-about-being-affected-by-not-conducting-exams-on-time#comments</comments><guid isPermaLink="false">ebf4eefe-619e-40b7-ae74-92d374d98b19</guid><pubDate>Sun, 23 Aug 2026 03:02:41 +0000</pubDate><atom:updated>2026-08-23T03:02:41.724Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>student,exam,மாணவர்கள்,தேர்வு,முறையீடு,Bharathiar University,பாரதியார் பல்கலைக்கழகம்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/x90c0n7l/bharathyar-iniversity.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/x90c0n7l/bharathyar-iniversity.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>உரிய நேரத்தில் தேர்வு நடத்தாததால் தொலைநிலைக்கல்வியில் படிப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக பாரதியார் பல்கலைக்கழகத்தில் புகார் அளிக்கப்பட்டது.</p><h2>மாணவ- மாணவிகள்</h2><p>தமிழகம் முழுவதும் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரம், இணையவழி மற்றும் சான்றிதழ் படிப்புகள் என 14 ஆயிரம் பேர் படித்து வருகின்றனர். இதில் தொலைநிலைக் கல்வி முறையில்  முதுநிலை பாடத்தில் சேர்ந்த பலருக்கும் உரிய காலத்துக்குள் தேர்வுகளை நடத்தப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகள், <a href="https://www.dailythanthi.com/topic/bharathiar-university">பாரதியார் பல்கலைக் கழக </a>தேர்வுத்துறை அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை அளித்தனர். இது குறித்து மாணவர்கள் கூறியதாவது:-</p><p>நாங்கள் தொலைநிலைக்கல்வி திட்டத்தில் 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் முதுநிலை படிப்பில் சேர்ந்தோம். எங்களுக்கு 14 மாதங்கள் கழித்து 2025-ம் ஆண்டு முதல் பருவத்தேர்வு நடத்தப்பட்டது. அதன்பிறகு கடந்த ஜூலை மாதம் 2-ம் பருவத்தேர்வு நடந்தது.</p> <h2>தேர்வு நடத்த வேண்டும்</h2><p>தேர்வு அறிவிப்பில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது. அடுத்த மாதம் (செப்டம்பர்) 5-ந் தேதி 3-ம் பருவத்தேர்வு நடைபெறும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த காலங்களில் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு, பின்னர் ஒத்தி வைத்தனர். மீண்டும் அதுபோன்று நடைபெறாமல் அறிவித்தபடி தேர்வு நடத்த வேண்டும். இதனால் 2 ஆண்டுகளில் முடிக்க வேண்டிய முதுநிலை படிப்பை 2.5 ஆண்டுகளாக படித்து வருகிறோம். இணையவழி வகுப்புகளும் சரிவர நடத்தப்படுவது இல்லை. இது குறித்து புகார் அளித்தாலும், பல்கலைக் கழக நிர்வாகத்தினர் முறையாக பதில் அளிப்பது இல்லை. இதனால் பலரும் கல்வியில் தங்களின் இலக்கை அடைய முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.</p><p>இவ்வாறு அவர்கள் கூறினர்.</p><h2>அறிவித்தபடி தேர்வு</h2><p>இது பற்றி பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி இயக்குனர் ப.செல்லச்சாமி கூறுகையில், பாரதியார் பல்கலைக்கழகத்தில் 14 முதுநிலை படிப்புகள் உள்ளன. அதில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி தேர்வுகள் நடத்தப்படும். கடந்த கால குளறுபடிகள் சரி செய்யப்பட்டு உள்ளன. 2026-ம் ஆண்டுக்குள் முதுநிலையில் தாமதம் ஏற்பட்ட படிப்புக்கான தேர்வுகள் முடிக்கப்பட்டு விடும். இணையவழி வகுப்புகளை அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறேன் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>குன்னூர் அருகே சிறுத்தைகள் நடமாட்டம்..! - பொதுமக்கள் பீதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/leopard-sightings-near-coonoor-public-in-a-state-of-panic</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/leopard-sightings-near-coonoor-public-in-a-state-of-panic#comments</comments><guid isPermaLink="false">11522be5-9b7b-4b50-ac09-acfdb72fbd4a</guid><pubDate>Sun, 23 Aug 2026 02:57:50 +0000</pubDate><atom:updated>2026-08-23T02:57:50.624Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நீலகிரி,Nilgiri,குன்னூர்,Coonoor,Leopard movement,சிறுத்தைகள் நடமாட்டம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/r5ukozxa/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/r5ukozxa/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சமீபகால மாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிறுத்தைகளின் அச்சுறுத்தல் காரணமாக தேயிலை தோட்ட தொழிலாளர்களும், பொதுமக்களும் அச்சமடைந்து உள்ளனர். </p><h2>இரவில் உலா வரும் சிருத்தை</h2><p>இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள நல்லப்பன் தெரு பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வருகின்றன. பகல் நேரங்களில் அருகில் உள்ள தேயிலை தோட்டங்களில் ஓய்வெடுப்பதும், இரவில் ஊருக்குள் உலா வருவதும் வழக்கமாகியுள்ளது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>சிறுத்தைகளின் நடமாட்டம் குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும், அவற்றை பிடிக்க இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே விரைவாக இப்பகுதியில் சுற்றித்திரியும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88">சிறுத்தைகளை </a>கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>திமுகவில் வயதானவர்களுக்கும் வாய்ப்பு உண்டு: துரைமுருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/opportunities-exist-for-the-elderly-in-the-dmk-too-duraimurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/opportunities-exist-for-the-elderly-in-the-dmk-too-duraimurugan#comments</comments><guid isPermaLink="false">00335ff3-1807-46ba-88ad-1145a960f2d2</guid><pubDate>Sun, 23 Aug 2026 02:53:03 +0000</pubDate><atom:updated>2026-08-23T02:53:03.471Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,Duraimurugan,துரைமுருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/yroiua13/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/yroiua13/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>காட்பாடி,</p><p>வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பல் வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-</p><p><strong>கேள்வி:-</strong> கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது குறித்து?</p><p><strong>பதில்:-</strong> தி.மு.க.வில் இளைஞர்களுக்கும் வாய்ப்பு, வயதானவர்களுக்கும் வாய்ப்பு உண்டு.</p><p><strong>கேள்வி:-</strong> த.வெ.க ஆட்சியின் 100 நாள் ஆட்சி குறித்து உங்கள் கருத்து?</p><p><strong>பதில்:-</strong> என்னுடைய அரசியல் வாழ்வில் இந்த ஆட்சி 100 நாட்களில் எதையும் செய்யவில்லை. கடந்த ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களுக்கு பெயர்களை மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். புதியதாக எதையும் செய்யவில்லை. அவர்கள் தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதம் ரூ.2,500, ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசம் என பல தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றுகூட 100 நாட்களில் வரவில்லை.</p><h2>சம்பந்தமில்லாமல்...</h2><p>சட்டமன்றத்தில் மானிய கோரிக்கையில் சம்பந்தமில்லாமல் பேசுகிறார்கள். எழுதி தருவதை தான் படிக்கிறார்கள். கோரிக்கைகள் குறித்தும், அந்த துறைகள் குறித்தும் எதுவுமே பேசுவதில்லை. மானிய கோரிக்கை விவாதத்தில் 10 எம்.எல்.ஏ.க்கள் பேசுவார்கள், குறைகளை கூறுவார்கள். அதை அமைச்சர்கள் குறித்துக் கொண்டு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு பதில் அளிக்க வேண்டும், அதுதான் முறை. நான் வகித்த இலாகாவான நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் தன்னுடைய இலாகா குறித்து ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை, அவரது தலைவர் குறித்து மட்டுமே பேசுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்கள் போராட்டங்களில் பங்கேற்க தடை விதித்த விவகாரம்: விளக்கம் கேட்டு பறந்த நோட்டீஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/issue-regarding-the-ban-on-students-participating-in-protests-notice-issued-seeking-an-explanation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/issue-regarding-the-ban-on-students-participating-in-protests-notice-issued-seeking-an-explanation#comments</comments><guid isPermaLink="false">0bb9a930-1453-4555-983a-afa07ee20924</guid><pubDate>Sun, 23 Aug 2026 02:48:59 +0000</pubDate><atom:updated>2026-08-23T02:48:59.280Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,தடை,Notice,நோட்டீஸ்,மாணவர்கள் போராட்டம்,Students protest,கல்லூரி கல்வி ஆணையர்,Commissioner of Collegiate Education</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/266x4hhp/stude.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/266x4hhp/stude.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>கல்லூரி மாணவர்கள் போராட்டங்களில் பங்கேற்பதை தடுப்பது குறித்த சுற்றறிக்கை அனுப்பிய விவகாரத்தில் கல்லூரி கல்வி ஆணையர் பொன்னையா, இணை இயக்குனரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.</p><h2>போராட்டங்களில் ஈடுபடுவதை தடுக்க</h2><p>தமிழக அரசின் <a href="https://www.dailythanthi.com/topic/சாய்குமார்">தலைமைச் செயலாளர் சாய்குமார் </a>தலைமையில் சட்டம், ஒழுங்கு குறித்த மாதந்திர ஆலோசனைக் கூட்டம் கடந்த ஜூலை 27-ந்தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாணவர்கள், இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதை தடுக்க, பள்ளிக்கல்வி, உயர்கல்வி, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து கூட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.</p><h2>சுற்றறிக்கை</h2><p>இதையடுத்து, உயர்கல்வித்துறை சார்பில் கல்லூரிக் கல்வி ஆணையர், தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் மற்றும் அனைத்து பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று கடந்த 14-ந்தேதி அனுப்பப்பட்டது. அதில், 'கம்யூனிஸ்டுகள் மற்றும் கரப்பான் பூச்சி கட்சி நடத்தும் போராட்டங்களில் மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்பதை தடுக்க வேண்டும். இதற்காக காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.</p><h2>கல்லூரிக்கல்வி இணை இயக்குனர்</h2><p>இதைத்தொடர்ந்து, கல்லூரி மாணவர்கள் போராட்டங்களில் பங்கேற்பதை தடுப்பது குறித்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு, கல்லூரிக்கல்வி இணை இயக்குனர் பா.சிந்தியா செல்வி கடந்த 17-ந்தேதி சுற்றறிக்கை வாயிலாக உத்தரவிட்டிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதனால் அந்த சுற்றறிக்கையை 19-ந்தேதி உயர்கல்வித்துறை திரும்ப பெற்றது.</p><h2>நோட்டீஸ்</h2><p>இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, கல்லூரிக் கல்வி ஆணையர் பா.பொன்னையா, இணை இயக்குனர் சிந்தியா செல்விக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.</p><p>அதில், 'அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் போராட்டங்களில் கலந்துகொள்வது தொடர்பாக கல்லூரிக் கல்வி ஆணையர் வழியாக அல்லாமல் தங்கள் அளவிலேயே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.</p><h2>ஒரு வார காலத்திற்குள்</h2><p>மிகவும் முக்கியமான கடிதம் மற்றும் பதற்றம் ஏற்படுத்தக் கூடிய கடிதமானது கல்லூரிக் கல்வி ஆணையரின் முன் அனுமதி மற்றும் ஒப்புதல் பெறாமல் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, கல்லூரி கல்வி ஆணையர் வழியாக அல்லாமல் தங்கள் அளவில் அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு கடிதம் அனுப்பியது தொடர்பாக தங்களது விளக்கத்தினை ஒரு வார காலத்திற்குள் அளிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் மீண்டும் முதலை நடமாட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/crocodile-presence-in-bhavanisagar-dam-reservoir-area-again</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/crocodile-presence-in-bhavanisagar-dam-reservoir-area-again#comments</comments><guid isPermaLink="false">3d2ee103-8c26-4a60-8743-07d5cc3e9504</guid><pubDate>Sun, 23 Aug 2026 02:34:30 +0000</pubDate><atom:updated>2026-08-23T02:34:30.086Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Crocodile,Bhavanisagar Dam,பவானிசாகர் அணை,முதலை நடமாட்டம்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/a4imh1ng/3.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/a4imh1ng/3.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,   </p><p>பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் மீண்டும் முதலை நட மாட்டம் உள்ளதால், பொதுமக்களுக்கு பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><h2>முதலைகள் நடமாட்டம்</h2> <p>ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக இருப்பது பவானிசாகர் அணை. நீலகிரி மலைப்பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து தெங்குமர ஹாடா வழியாக வரும் மாயாரும் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக உள்ளன.</p><p>இந்த நிலையில் அணையின் நீர்த்தேக்க பகுதியில் ஆறுகள் வந்து கலக் கும் இடத்தில் முதலைகள் நடமாட்டம் காணப்படுகிறது. அவ்வப்போது தண்ணீரில் இருந்து வெளியே வரும் முதலைகள் மணல் திட்டுகளில் படுத்திருக்கின்றன. </p><h2>வெயிலில் காய்வதற்காக...</h2><p>இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-</p><p>பவானிசாகர் அணையில் பவானி ஆறும், மாயாறும் கலக்கும் பகுதியில் முதலைகள் நடமாட்டம் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் மணல் திட்டில் முதலை இருப்பதை மீன் பிடிக்க சென்றவர்கள் பார்த்துள்ளனர். தற்போது மீண்டும் முதலை நடமாட்டம் காணப்படுகிறது. தண்ணீருக்குள் இருக்கும் முதலைகள் வெயிலில் காய்வதற்காக அவ்வப்போது வெளியே வந்து மணல் திட்டுகளில் படுத்து கிடக்கின்றன. அதனால் அந்த பகுதி யில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்லவேண்டாம். சுற்றுலா பயணிகள் நீர்த்தேக்க பகுதிகளுக்கு வீடியோ எடுக்கவோ. செல்பி எடுக்கவோ செல்லவேண்டாம். கவனமாக இருக்கவேண்டும்.</p><p>இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>இன்ஸ்பெக்டரின் பாலியல் தொல்லை பிடியில் இருந்து காப்பாற்றுங்கள்; பெண் போலீஸ் பரபரப்பு புகார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/save-me-from-the-inspectors-sexual-harassment-female-police-officer-makes-sensational-complaint</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/save-me-from-the-inspectors-sexual-harassment-female-police-officer-makes-sensational-complaint#comments</comments><guid isPermaLink="false">41aff494-1962-43de-9235-478f841ad647</guid><pubDate>Sun, 23 Aug 2026 02:28:58 +0000</pubDate><atom:updated>2026-08-23T02:28:58.298Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,Chennai,சென்னை,பெண் போலீஸ்,பாலியல் தொல்லை,கிரைம் செய்திகள்,Inspector,இன்ஸ்பெக்டர்,Chennai police,woman police,சென்னை போலீஸ்,Sexual harassement</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/fadaa54s/CHENNAI-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/fadaa54s/CHENNAI-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இன்ஸ்பெக்டர்பாலியல் தொல்லை பிடியில் இருந்து காப்பாற்றுங்கள் என்று பெண் போலீஸ் பரபரப்பு புகாரின் பேரில் விசாகா கமிட்டி விசாரணை நடைபெற்று வருகிறது.</p><h2>கமிஷனரிடம் பரபரப்பு புகார்</h2><p>சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போலீஸ் குறைதீர்ப்பு முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது. போலீ சாரிடம் கமிஷனர் அமல்ராஜ் மனுக்களை பெற்றார். அப் போது அவரிடம் ஆயிரம் விளக்கு கொச்சின் ஹவுஸ் போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் 37 வயதுடைய பெண் போலீஸ் ஒரு வர் சைபர் கிரைம்' இன்ஸ்பெக்டர் ஒருவர் மீது பரபரப்பு புகார் மனு அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் பெண் போலீஸ் கூறியிருப்பதாவது:-</p><p>நான் போலீஸ்காரர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து குடும்பத்துடன் வசித்து வருகிறேன். நான் தியாகராயநகர் போலீஸ் சரகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றினேன். அப்போது இன்ஸ்பெக்டர் ஒருவருடன் திருமணம் கடந்த உறவில் நெருக்கமாக இருந்தேன். பின்னர், தாலி கட்டிய காதல் கணவருக்கு துரோகம் செய்து விட்டதை உணர்ந்து மனம் வருந்தினேன். அதன்பின்னர் இன்ஸ்பெக்டருடனான ரகசிய உறவை கைவிட்டேன்.</p><h2>காப்பாற்றுங்கள்...</h2><p>அந்த இன்ஸ்பெக்டர் தன்னுடன் நெருக்கமாக எடுத்துகொண்ட புகைப்படங்களை செல்போனில் வைத்துள்ளார். அந்த புகைப் படங்களை வைத்து மிரட்டி தனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வருகிறார். எனவே அவரது பாலியல் தொல்லை பிடியில் இருந்து என்னை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அந்த பெண் போலீஸ் புகாரில் தெரிவித்துள்ளார்.</p><p>இந்த புகார் மனு தகுந்த நடவடிக்கை எடுப்பதற்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் தலைமை யில் இயங்கும் விசாகா கமிட்டி விசாரணைக்கு கமிஷனர் அமல்ராஜ் பரிந்துரைத்துள்ளார். அதன்பேரில் விசாகா கமிட்டி அதிரடி விசாரணையில் இறங்கி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வீடுகளில் சோலார் பேனல் அமைக்க ரூ.78 ஆயிரம் வரை மானியம்..! - மின்வாரியம் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/subsidy-of-up-to-rs-78000-for-installing-solar-panels-in-homes-electricity-board-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/subsidy-of-up-to-rs-78000-for-installing-solar-panels-in-homes-electricity-board-announcement#comments</comments><guid isPermaLink="false">2e4e3a83-cbf0-46c2-8071-2dfd9988fb40</guid><pubDate>Sun, 23 Aug 2026 02:15:41 +0000</pubDate><atom:updated>2026-08-23T02:15:41.363Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவை,மின்வாரியம்,Electricity Board,சோலார் பேனல்,தமிழ்நாடு மின்வாரியம்,சோலார் திட்டம்,Tamilnadu Electricity Board</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/cn1bro4v/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/cn1bro4v/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p>பிரதம மந்திரியின் வீடுகளுக்கான சூரிய மின் திட்டத்தில் விண்ணப்பம் செய்வது தொடர்பான சிறப்பு முகாம் கோவை மின் பகிர்மான வட்டம் சார்பில் வரதராஜபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. முகாமிற்கு மேற்பார்வை பொறியாளர் சாந்தநாயகி தலைமை தாங்கினார். இதில் ஒண்டிப்புதூர் செயற்பொறியாளர் பிந்து மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.</p><h2>ரூ.78 ஆயிரம் வரை மானியம்</h2><p>இது குறித்து மின்சார வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-</p><p>இந்த திட்டத்தில் 1 கிலோ வாட்டுக்கு ரூ.30 ஆயிரம், 2 கிலோவாட்டுக்கு ரூ.60 ஆயிரம் மற்றும் 3 கிலோ வாட் மற்றும் அதற்கு மேல் ரூ.78 ஆயிரம் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மானியமாக </a>வழங்கப்படுகிறது. மேலும் வங்கிகள் மூலம் உடனடியாக கடன் வழங்கப்படும். சூரிய திட்ட பணிகள் முடிவுற்ற 7 நாட்களில் இருந்து 30 நாட்களுக்குள் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் மானியம் செலுத்தப்படும்.</p><p>1 கிலோவாட் சோலார்பேனல் ஒரு நாளில் 4 முதல் 5 யூனிட் வரை மின் உற்பத்தி செய்யும். நுகர்வோர் செய்யும் முதலீட்டை உடனடியாக திரும்ப பெறலாம். கோவை மாவட்டத்தில் 9 ஆயிரம் குடும்பங்கள் சூரிய ஒளி மின் திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்தில் registration.pmsuryaghar.gov.in, www.pmsuryaghar.gov.in செய்யலாம்.</p><p>இவ்வாறு அவர்கள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>ஆசிரியர்கள் திட்டியதால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை: உடலை பெற மறுத்து உறவினர்கள் போராட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-commits-suicide-by-hanging-after-being-scolded-by-teachers-relatives-protest-refusing-to-receive-body</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-commits-suicide-by-hanging-after-being-scolded-by-teachers-relatives-protest-refusing-to-receive-body#comments</comments><guid isPermaLink="false">5a32c7ab-23eb-4c54-ae87-e9c317bba92a</guid><pubDate>Sun, 23 Aug 2026 02:15:30 +0000</pubDate><atom:updated>2026-08-23T02:15:30.849Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நாகர்கோவில்,protest,போராட்டம்,தற்கொலை,Suicide,ஆசிரியர்கள்,relative,மாணவர்student</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/kplqmel6/148.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உறவினர்கள் போராட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/kplqmel6/148.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாகர்கோவில், </p><p>நாகர்கோவிலில் ஆசிரியர்கள் திட்டியதால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.</p><p>குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள குறத்தியறை கீரன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் விக்டர் தாமஸ். இவருடைய மனைவி லென்சி. இவர்களுடைய மகன் கவின் ஜெனில் (வயது 16). நாகர்கோவிலில் உள்ள எஸ்.எல்.பி. பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.</p><h2>தற்கொலை</h2><p>இந்தநிலையில், விக்டர் தாமஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் ரத்தினபுரம் வடக்கு தெருவுக்கு குடிபெயர்ந்தனர். நேற்று முன்தினம் விக்டர் தாமஸ் வழக்கம் போல் வேலைக்குச் சென்ற நிலையில், கவின் ஜெனில் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளான். மேலும் அவனது தாயாரும் வீட்டில் இல்லை. வீட்டின் முன்பக்கக் கதவை வெளிப்பக்கமாகப் பூட்டிவிட்டுப் பாட்டியிடம் வெளியே செல்வதாகக்கூறிச் சென்றவன், சிறிது நேரத்தில் பின்பக்க வழியாக மீண்டும் உள்ளே வந்துள்ளான். அங்கு திடீரென அவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டான்.</p><p>அதிர்ச்சியடைந்த பாட்டி கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு பூதப்பாண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.</p><h2>பிரேத பரிசோதனை</h2><p>இறந்த மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே, வகுப்பில் மாணவி ஒருவருடன் சிரித்துப் பேசியதற்காக ஆசிரியர்கள் தனது மகனைக் கண்டித்ததாகவும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சலாலேயே அவன் தற்கொலை செய்துகொண்டதாகவும் தாயார் லென்சி பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.</p> <h2>போராட்டம்</h2><p>இதற்கிடையே கவின் ஜெனிலின் தற்கொலையை அறிந்த சக மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துச்சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை வாயிலில் உறவினர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் திடீர் மறியலில் ஈடுபட்டு, மாணவனின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலைப்பெற மாட்டோம் எனத் தெரிவித்தனர். </p><p>போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுக்கட்டாகத் தூக்கி வாகனங்களில் ஏற்றி அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a> தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தெற்கு ரெயில்வேயில் களைகட்டிய ஓணம் பண்டிகை: கேரள பாரம்பரிய உடையில் அதிகாரிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-festival-in-southern-railway-officials-in-traditional-kerala-attire</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-festival-in-southern-railway-officials-in-traditional-kerala-attire#comments</comments><guid isPermaLink="false">62336a64-ea77-4829-a9c2-44dde128ccd0</guid><pubDate>Sun, 23 Aug 2026 02:02:49 +0000</pubDate><atom:updated>2026-08-23T02:02:49.328Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தெற்கு ரெயில்வே,Southern Railway,அதிகாரிகள்,Onam festival,ஓணம் பண்டிகை,traditional,பாரம்பரிய உடை</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/fg2b11dp/26.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/fg2b11dp/26.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தெற்கு ரெயில்வே தலைமையகத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%93%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88">ஓணம் பண்டிகை</a> கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், தெற்கு ரெயில்வே பொது மேலாளர் சுப்பா ராவ், கூடுதல் பொதுமேலாளர் விபின்குமார், துறைத் தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர். ஓணம் பண்டிகையை முன்னிட்டு தலைமையகத்தின் பிரதான நுழைவாயில் மற்றும் உள் வளாகங்கள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. </p><h2>கேரள பாரம்பரிய உடை</h2><p>குறிப்பாக, பெண் ஊழியர்கள் இணைந்து மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும்விதமாக அமைத்திருந்த பிரமாண்ட 'அத்தப்பூக்கோலம்' அனைவரையும் கவர்ந்தது. ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கேரள பாரம்பரிய உடைகளான கசவு புடவை மற்றும் முண்டு (வேட்டி) அணிந்து வந்து ஒருவருக்கொருவர் ஓணம் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். கேரளாவின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் பியூஷன் திருவாதிரை நடனம் மற்றும் ஓணம் குழுப் பாடல் போன்ற பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. செழிப்பு. மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமையின் பண்டிகையை அனைவரும் இணைந்து கொண்டாடி மகிழ்ந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>பெண்ணைக் கொன்று துண்டு துண்டாக்கிய வடமாநில தம்பதிக்கு போலீஸ் வலைவீச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-launch-manhunt-for-north-indian-couple-who-killed-a-woman-and-chopped-her-body-into-pieces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-launch-manhunt-for-north-indian-couple-who-killed-a-woman-and-chopped-her-body-into-pieces#comments</comments><guid isPermaLink="false">65cb9f2a-b0f7-4700-aa67-a3114ba25e07</guid><pubDate>Sun, 23 Aug 2026 02:02:05 +0000</pubDate><atom:updated>2026-08-23T02:02:05.313Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,Chennai,சென்னை,கிரைம் செய்திகள்,வடமாநில தம்பதி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/lm2o2h3f/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/lm2o2h3f/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்</h2><p>சென்னை சென்டிரலில் இருந்து கடந்த 5-ந்தேதி ஆக்ரா சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் யாரும் உரிமை கோராத நிலையில் கிடந்த டிராலி சூட்கேசை ஆக்ரா ரெயில்வே போலீசார் திறந்து பார்த்தபோது அதில் தலையில்லாத மனித எலும்புக்கூடு மற்றும் உடல் உறுப்புகள் இருந்தது. கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தியதில் அந்த சூட்கேஸ் சென்னை சென்டிரலில் இருந்து ரெயிலில் வைக்கப்பட்டது தெரியவந்தது. </p><p>சூட்கேசை வைத்த இருவரும் அங்கிருந்து புறப்பட்டு எங்கு இறங்கினர் என்பதை கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு ஆய்வு செய்தனர். இதில் அவர்கள் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் இறங்கியது தெரியவந்தது. அவர்கள் எங்கு தங்கியுள்ளனர் என்று விசாரணை நடத்தி செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். </p><p>அப்போது பெரிய அண்டாவில் மைதாமாவுடன் துண்டு துண்டாக வெட்டப்பட்ட மனித சதைப்பகுதிகள் இருப்பது தெரியவந்தது. இந்த மனித சதைப்பகுதிகள் ரெயிலில் சிக்கிய எலும்புகள் மற்றும் உடல் உறுப்புகள், கூடுவாஞ்சேரி வீட்டில் மீட்கப்பட்ட சதைப்பகுதிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.</p><h2>வடமாநில தம்பதி</h2><p>போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஹயாத் நிஷா (38) என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது. மீட்கப்பட்ட உடல் பாகங்கள் அவருடையதுதானா என்பது குறித்து உறுதி செய்ய தடயவியல் பரிசோதனை நடைபெற்று வருகிறது. உடல் பாகங்களின் மாதிரிகள் உள்ளிட்டவை ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், பரிசோதனை முடிவுகள் கிடைத்த பிறகே உயிரிழந்த பெண்ணின் அடையாளம் குறித்து முழுமையாக உறுதி செய்ய முடியும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்த நிலையில் ஹயாத் நிஷாவுடன் சுமார் 2 மாதங்களாக ஒரே வீட்டில் தங்கி இருந்த வடமாநிலத்தை சேர்ந்த தம்பதி தற்போது தலைமறைவாகி இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலையை கண்டுபிடிக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.</p><h2>அனைத்து கோணங்களிலும் விசாரணை</h2><p>கண்காணிப்பு கேமராவில் சிக்கிய காட்சிகளை அடிப்படையாக கொண்டு கொலை செய்யப்பட்ட பெண்ணுடன் கடந்த 2 மாதங்களாக தங்கி இருந்த வடமாநிலத்தை சேர்ந்த தம்பதியை பிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த கொலை நகைக்காக நடைபெற்றதா? அல்லது தகாத உறவு காரணமாக நடைபெற்றதா? என்பது உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது.</p><p>சந்தேகத்துக்குரிய வடமாநில தம்பதியை பிடிப்பதற்காக தனிப்படை போலீசாரை அசாம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அவர்களை பிடித்த பிறகுதான், உடன் தங்கி இருந்த பெண்ணை கொலை செய்து தலையை துண்டித்து, உடலை துண்டு துண்டாக வெட்டி எலும்புகளை தனியாக பிரித்து சூட்கேசில் வைத்து ரெயில் மூலம் ஆக்ராவுக்கு அனுப்பியது ஏன் என்பது குறித்து முழுமையான விவரங்கள் தெரியவரும்.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய்யின் மேஜையில் உள்ள ஊழல் &apos;பைல்கள்&apos; எப்போது வெளிவரும்?: இடைத்தேர்தலை சந்திக்க த.வெ.க. போடும் &apos;ஸ்கெட்ச்&apos;</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/when-will-the-corruption-files-on-chief-minister-vijays-desk-be-revealed-tvks-blueprint-for-facing-the-by-election</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/when-will-the-corruption-files-on-chief-minister-vijays-desk-be-revealed-tvks-blueprint-for-facing-the-by-election#comments</comments><guid isPermaLink="false">44d6aa24-44c2-499f-83a2-3198b59c0a05</guid><pubDate>Sun, 23 Aug 2026 01:52:47 +0000</pubDate><atom:updated>2026-08-23T01:52:47.252Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,TVK,தவெக,Vijay,Tamilnadu,விஜய்,அதிமுக,திமுக,DMK,தமிழகம்,தமிழக அரசு,TN govt,By election,அரசியல் களம்,இடைத் தேர்தல்,tn politics,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/agp39nw3/thik.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/agp39nw3/thik.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a>யின் மேஜையில் உள்ள ஊழல் 'பைல்கள்' எப்போது வெளிவரும்? என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இடைத்தேர்தலை சந்திக்க ஆளுங்கட்சியான <a href="https://www.dailythanthi.com/topic/tvk">த.வெ.க.</a> 'ஸ்கெட்ச்' போட்டு வருகிறது. </p><h2>காலியாக உள்ள 7 தொகுதிகள்</h2><p>தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில், திருச்சி கிழக்கு, பெருந்துறை, மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை ஆகிய 7 தொகுதிகள் காலியாக உள்ளன. </p><p>இந்த தொகுதிகளில், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் மீது தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், இடைத்தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/yxoi1y6s/loeee.jpg" /></figure><h2>இடைத்தேர்தல் எப்போது?</h2><p>இந்த நிலையில், மேற்கண்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த சென்னை ஐகோர்ட்டு விதித்த தடை நாளையுடன் (ஆகஸ்டு 24) முடிவடைய இருக்கிறது. விரைவில், இந்த 5 தொகுதிகள் உள்பட மொத்தம் காலியாக உள்ள 7 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது என்பது ஆளுங்கட்சியான த.வெ.க.வுக்கு மிகவும் தேவையாக உள்ளது. காரணம், நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று <a href="https://www.dailythanthi.com/topic/tvk">த.வெ.க. ஆட்சி</a> அமைத்தாலும், தனி மெஜாரிட்டி அந்த கட்சிக்கு கிடைக்கவில்லை. </p><h2>த.வெ.க.வுக்கு மெஜாரிட்டி இல்லை</h2><p>மெஜாரிட்டிக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில், 107 இடங்களே <a href="https://www.dailythanthi.com/topic/tvk">த.வெ.க.</a>வுக்கு கிடைத்தன. அதன்பின்னர், காங்கிரஸ் (5), விடுதலை சிறுத்தைகள் கட்சி (2), இந்திய கம்யூனிஸ்டு கட்சி (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) ஆகிய கட்சிகளின் ஆதரவுடனேயே த.வெ.க. ஆட்சி அமைத்துள்ளது.  </p><p>இதில், இரு கம்யூனிஸ்டு கட்சிகளை தவிர ஏனைய 3 கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளதால், அந்த கட்சிகளால் த.வெ.க. அரசுக்கு ஆபத்து வராது என்று நம்பலாம். ஆனால், மக்கள் பிரச்சினையை முன்வைத்து இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் எந்த நேரத்திலும் கூட்டணியை விட்டு வெளியேறும் சூழ்நிலை உள்ளது. </p><h2>இடைத்தேர்தல் வெற்றி முக்கியம்</h2><p>அவ்வாறு நடந்தால், த.வெ.க. அரசு ஆட்டம் கண்டுவிடும். அதனால், இடைத்தேர்தல் வெற்றி என்பது த.வெ.க.வுக்கு முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இடைத்தேர்தல் நடைபெறும் 7 தொகுதிகளிலும் <a href="https://www.dailythanthi.com/topic/tvk">த.வெ.க.</a> வெற்றி பெற்றால், அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் பலம் 114 ஆக உயரும். </p><p>இது மெஜாரிட்டுக்கு தேவையான 118-ஐ விட 4 குறைவுதான் என்றாலும், கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் ஆதரவோ, அல்லது ஏனைய கட்சிகளில் 2 கட்சிகளின் ஆதரவோ த.வெ.க.வுக்கு கிடைத்தாலே போதும், 5 ஆண்டு கால ஆட்சிக்கு பிரச்சினை எதுவும் வராது. </p><p>பொதுவாக, இடைத்தேர்தல் முடிவுகள் என்பது ஆளுங்கட்சிக்கு சாதகமாகவே இருந்து வந்தாலும், இந்த முறை அந்த சாதகம் த.வெ.க. அரசுக்கு தேவையாக உள்ளது. அதற்கு த.வெ.க. ஆயத்தமாகி வருவதும் சமீபத்திய <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின்</a> சட்டசபை பேச்சில் வெளிப்பட்டது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/ifdxu35q/viji.jpg" /></figure><h2>முதல்-அமைச்சர் விஜய் பேச்சு </h2><p>அதாவது, கடந்த 19-ந் தேதிய சட்டசபை நிகழ்வில், அமைச்சர்கள் ஆதாரத்துடன் பேச வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அந்த நேரத்தில் எழுந்து <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் </a>பேசியதாவது:- </p><p> நான் இதை சொல்ல வேண்டாம் என நினைத்தேன். ஆதாரம், ஆதாரம் என கேட்கின்றனர். ஒரு வாரத்திற்கு முன், இங்கு நிதி அமைச்சர் பேசும்போது, 3 துறை தொடர்பாக ஆய்வு செய்து, அது தொடர்பான விபரம் எனது மேஜையில் இருக்கிறது என சொன்னார். </p><h2>இடைத்தேர்தலில் நல்லது நடக்க வேண்டாமா?</h2><p>அவர் போகிற போக்கில், அதை சொல்லவில்லை. உண்மையிலேயே என் மேஜையில் அத்தனையும் ஆதாரத்துடன் இருக்கின்றன. அதை 'ஓபன்' பண்ண வைத்துவிடாதீர்கள். எதை, எப்போது 'ஓபன்' பண்ண வேண்டுமோ, அப்போது, அது கரெக்டாக 'ஓபன்' செய்யப்படும். </p><p>மக்களிடம் எப்போ பேசணும். என்ன பேசணும். எப்படி பேசணும். எல்லாம் பேசிவிட்டு தான், அன்பா.. ஆசையா.. எங்க எல்லாரையும் கொண்டு வந்து இங்கே உட்கார வைத்துள்ளார்கள். நான் பேசுவேன், பேசக்கூடாது என்றெல்லாம் ஒன்றுமில்லை. இடைத்தேர்தலிலாவது ஒரு சிலருக்கு நல்லது நடக்க வேண்டும் இல்லையா?.</p><p>இவ்வாறு அவர் பேசினார். </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/enowsv5f/koe.jpg" /></figure><h2>த.வெ.க. போடும் 'ஸ்கெட்ச்'</h2><p>இதன் மூலம் இடைத்தேர்தலை சந்திக்க <a href="https://www.dailythanthi.com/topic/tvk">த.வெ.க.</a> 'ஸ்கெட்ச்' போட்டு தயாராகிவருவது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இதற்கிடையே, சட்டசபையில் நேற்று முன்தினம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், "மேஜையில் இருக்கும் பைல்களை சீக்கிரம் திறந்து பாருங்கள். உருட்டல், மிரட்டலுக்கு எல்லாம் தி.மு.க. உறுப்பினர்கள் பயப்படமாட்டார்கள்" என்று பேசினார். </p><p>இதனால், அந்த 3 பைல்களில் உள்ள விவரங்கள் எப்போது வெளிவரும்? என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்கள் மத்தியில் நிலவுகிறது. ஆனால், எப்போது?, எப்படி? அந்த பைல்களை வெளியிடுவது என்பது குறித்து ஏற்கனவே <a href="https://www.dailythanthi.com/topic/tvk">த.வெ.க.</a> திட்டம் வகுத்துள்ளதாம்.</p><h2>இடைத்தேர்தல் தேதி அறிவித்த பிறகு..!</h2><p>அதாவது, இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும்போது, முதல்-அமைச்சர் மேஜையில் உள்ள ஊழல் பைல்களில் உள்ள விவரங்கள் வெளிவரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அவ்வாறு வரும்போது, மக்கள் மத்தியில் த.வெ.க.வின் செல்வாக்கு மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. </p><p>இடைத்தேர்தலில் <a href="https://www.dailythanthi.com/topic/tvk">த.வெ.க.</a> வெற்றியை எதிர்க்கட்சிகளான தி.மு.க.,  அ.தி.மு.க. ஆகியவை எப்படி தடுக்கப்போகின்றன? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>கணவருடன் செல்பி எடுத்த இளம்பெண்...திடீரென வந்து தாக்கிய 3 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-men-arrested-for-attacking-young-woman-who-took-selfie-with-her-husband</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-men-arrested-for-attacking-young-woman-who-took-selfie-with-her-husband#comments</comments><guid isPermaLink="false">1959ac2c-d758-40e7-9bd5-3719c1efcc0d</guid><pubDate>Sun, 23 Aug 2026 01:44:20 +0000</pubDate><atom:updated>2026-08-23T01:44:20.771Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கணவர்,husband,young woman,arrested,இளம்பெண்,செல்பி,selfie,3 பேர் கைது</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/8o2h5fqi/arest.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/8o2h5fqi/arest.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஆலந்தூர், </p><p>வேளச்சேரி மேம்பாலத்தில் கணவருடன் 'செல்பி' எடுத்த இளம் பெண்ணை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>கணவருடன் 'செல்பி'</h2><p>சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது பிறந்தநாளையொட்டி கணவர் மற்றும் நாத்தனாருடன் காரில் பெசன்ட் நகர் கடற்கரைக்கு சென்றார். பின்னர் தேவாலயத்துக்கு சென்று வழிபட்டுவிட்டு நள்ளிரவில் காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். வேளச்சேரி டான்சி நகர் மேம்பாலத்தில் சென்றபோது, காரை ஓரமாக நிறுத்திவிட்டு கணவர் மற்றும் நாத்தனாருடன் சேர்ந்து செல்போனில் 'செல்பி' மற்றும் புகைப்படம் எடுத்து கொண்டிருந்தார்.</p><h2>தாக்குதல்</h2><p>அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் மேம்பாலத்தில் சென்றனர். அவர்களில் 3 பேர் மட்டும் மோட்டார் சைக்கிள்களில் இருந்து இறங்கி இளம்பெண்ணின் அருகே சென்றனர். பின்னர் அவரை பார்த்து எங்களை பார்த்து ஏன் ஆபாச சைகை செய்தாய்? என்று கேட்டு தகாத வார்த்தைகளால் பேசினர். அதற்கு அந்த பெண், தான் எந்த சைகையும் காட்டவில்லை என்று கூறினார். ஆனால் அவர்கள் மீண்டும் தகாத வார்த்தைகளால் பேசி இளம் பெண்ணை தாக்கிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். இதில் இளம்பெண்ணின் வலது கை நடுவிரலில் சிறிய காயம் ஏற்பட்டது.</p><h2>3 பேர் கைது</h2><p>அவர் தனியார் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்ற பிறகு வேளச்சேரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து வேளச்சேரி காமராஜபுரம் காந்தி தெருவைச் சேர்ந்த தீபக் ராஜா (19), எம்.ஜி.ஆர். நகர் 2-வது தெருவைச் சேர்ந்த விக்னேஷ் (19) மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 3 பேரை <a href="https://www.dailythanthi.com/topic/arrest-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்தனர். விசாரணையில், தீபக் ராஜா, தண்ணீர் கேன் வினியோகம் செய்யும் வேலை செய்து வருவதும், மற்ற இருவரும் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யும் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி அருகே நிலக்கரி ஏற்றிச்சென்ற சரக்கு ரெயிலில் திடீர் தீ</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-sudden-fire-broke-out-in-a-coal-laden-freight-train-near-thoothukudi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-sudden-fire-broke-out-in-a-coal-laden-freight-train-near-thoothukudi#comments</comments><guid isPermaLink="false">e33c7f8e-1739-42ed-b893-7d9cef2b04ad</guid><pubDate>Sun, 23 Aug 2026 01:39:48 +0000</pubDate><atom:updated>2026-08-23T01:39:48.959Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>train,Thoothukudi,தூத்துக்குடி,சரக்கு ரெயில்,நிலக்கரி,fire தீ</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/vfswsil5/147.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தீ விபத்து]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/vfswsil5/147.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து மீளவிட்டான் வழியாக நேற்று அதி காலை 3.20 மணியளவில், அரியானா மாநிலம் பானிபட் பகுதிக்கு 25 பெட்டிகளுடன் நிலக்கரி ஏற்றி சரக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. </p><h2>கரும்புகை</h2><p>அந்த ரெயில் தட்டப்பாறை ரெயில் நிலையத்தை கடந்தபோது, அதன் என்ஜினுக்கு அடுத்த பெட்டியில் திடீரென கரும்புகை கிளம்பியது. இதனை கவனித்த தட்டப்பாறை ரெயில் நிலைய அதிகாரி, கைலாசபுரம் மற்றும் வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையங்களுக்கு அவசரமாக தகவல் கொடுத்தார். உடனடியாக சிவப்பு நிற சிக்னல் கொடுக்கப்பட்டதை அடுத்து, ரெயில் என்ஜின் டிரைவர் வாஞ்சி மணியாச்சிக்கு முன்பாகவே நடுவழியில் ரெயிலை நிறுத்தினார். </p><h2>தீயணைப்பு வீரர்கள்</h2><p>அதற்குள் நிலக்கரி தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனே மின் பொறியாளர்கள் உயர் அழுத்த மின்சாரத்தை துண்டித்தனர். ஓட்டப்பிடாரத்தில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. </p><p>மின் இணைப்பு சீரமைக்கப்பட்ட பின், அதிகாலை 5 மணியளவில் சரக்கு ரெயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. இந்த <a href="https://www.dailythanthi.com/topic/fire-accident-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">தீ விபத்து</a> குறித்து வாஞ்சி மணியாச்சி ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கிருஷ்ணகிரி: லாரி மோதி கார் கவிழ்ந்து 2 வாலிபர்கள் பலி - 3 பேர் படுகாயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/krishnagiri-two-youths-killed-three-critically-injured-after-car-overturns-following-collision-with-lorry</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/krishnagiri-two-youths-killed-three-critically-injured-after-car-overturns-following-collision-with-lorry#comments</comments><guid isPermaLink="false">2218d589-769f-4b37-a733-0f976955e5a5</guid><pubDate>Sun, 23 Aug 2026 01:32:12 +0000</pubDate><atom:updated>2026-08-23T01:32:12.739Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சாலை விபத்து,கிருஷ்ணகிரி,Krishnagiri,கிருஷ்ணகிரி செய்திகள்,பர்கூர்,Krishnagiri news</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/07f8nsni/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/07f8nsni/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ணகிரி, </p><p>லாரி மோதியதில் கார் கவிழ்ந்து 2 வாலிபர்கள் பலியானார்கள். அவர்களது நண்பர்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.</p><h2>லாரி மோதியது</h2><p>கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் முருகன் மகன் சதீஷ் (வயது 22). கார் டிரைவர். அதேபகுதியை சேர்ந்தவர்கள் கிருஷ்ணன் மகன் அசோக்குமார் (24), முருகன் மகன் திவாகர் (18), குமார் மகன் திருப்பதி (22), அச்சமங்கலம் அன்பழகன் மகன் திருப்பதி (22). நண்பர்க ளான 5 பேரும் நேற்று முன்தினம் இரவு காரில் கிருஷ்ணகிரி நோக்கி சென்றனர்.</p><p>அப்போது அரசு பொறியியல் கல்லூரி மேம்பாலத்தில் சென்ற போது பின்னால் வந்த லாரி, காரின் பின்பகுதியில் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் தடுப்பு சுவர் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சதீஸ் உள்பட 5 பேரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.</p><h2>2 பேர் சாவு</h2><p>இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் 5 பேரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில் அன்பழகன் மகன் திருப்பதி செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். தொடர்ந்து மற்ற 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அசோக்குமார் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.</p><p>இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கந்திகுப்பம் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விசாரணை </a>நடத்தினர். பின்னர் இறந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கோவை: கல்லூரி மாணவர்கள் அறைகளில் போலீசார் அதிரடி சோதனை; போதைப்பொருள், ஆயுதங்கள் பறிமுதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-police-conduct-surprise-raids-on-college-students-rooms-drugs-and-weapons-seized</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-police-conduct-surprise-raids-on-college-students-rooms-drugs-and-weapons-seized#comments</comments><guid isPermaLink="false">7987264c-c35b-4b27-8cfa-dfcc6994725b</guid><pubDate>Sun, 23 Aug 2026 01:14:52 +0000</pubDate><atom:updated>2026-08-23T01:14:52.372Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,Tamilnadu,கோவை,தமிழகம்,College student,drugs,கல்லூரி மாணவர்கள்,போதைப்பொருட்கள்,Kovai,போலீசார் சோதனை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/muhk30dz/thonthi.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/muhk30dz/thonthi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p>போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க, கோவையில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள 50-க்கும் மேற்பட்ட இடங்களில் 400 போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.</p><h2>போதைப்பொருள் இல்லாத கோவை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/coimbatore">கோவை</a> மாவட்டத்தில் போதைப்பொருட்களின் பயன்பாடு மற்றும் விற்பனையை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவை என்ற இலக்கை உருவாக்கும் வகையில் போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி தலைமையில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.</p><h2>தனியாக அறைகள்</h2><p>இந்த நிலையில் கோவில்பாளையம், சூலூர், செட்டிபாளையம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 30 கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், கல்லூரிகளுக்கு வெளியே தனியாக அறைகள் மற்றும் வீடுகளில் தங்கி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அங்கு சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.</p><p>அதன்படி நேற்று அதிகாலை 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 10 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 400 போலீசார் 50 குழுக்களாக பிரிந்து கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் வீடுகள் மற்றும் அறைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.</p><h2>போலீசார் சோதனை</h2><p>அப்போது மாணவர்கள் தங்கி இருக்கும் வீடுகளில் உள்ள அனைத்து அறைகள், பைகள், சூட்கேஸ்கள் என அனைத்தையும் போலீசார் சோதனை செய்தனர். அத்துடன் சந்தேகத்துக்குரிய மாணவர்களின் செல்போன்களும் சோதனை செய்யப்பட்டன.</p><h2>கத்தி, அரிவாள்</h2><p>சோதனையின்போது மாணவர்களுடன் தங்கி இருந்த 2 பேரிடம் போதை பொருட்களும், ஒருவரின் பையில் கத்தி, அரிவாள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர், தச்சுத் தொழிலாளி என்பதால், வேலைக்கு கொண்டு செல்ல பையில் அரிவாள் மற்றும் கத்தி வைத்து இருப்பது தெரியவந்தது.</p><p>அத்துடன் மாணவர்கள் தங்கி இருந்த அறைகளில் இருந்து சந்தேகப்படும்படி நிறுத்தப்பட்டு இருந்த 14 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.</p>]]></content:encoded></item><item><title>விமானத்தை பார்க்கும் ஆசையில் உயிரை பறிகொடுத்த 2 வாலிபர்கள்... மதுரையில் சோகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-young-men-lose-their-lives-while-trying-to-catch-a-glimpse-of-an-airplane-tragedy-in-madurai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-young-men-lose-their-lives-while-trying-to-catch-a-glimpse-of-an-airplane-tragedy-in-madurai#comments</comments><guid isPermaLink="false">313b0d61-0cf1-497a-ae2a-4702bddab8e7</guid><pubDate>Sun, 23 Aug 2026 01:04:20 +0000</pubDate><atom:updated>2026-08-23T01:04:20.752Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,விமானம்,Madurai,மதுரை,கிரைம் செய்திகள்,flight,வாலிபர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/ksvnaswg/CHENNAI-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/ksvnaswg/CHENNAI-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>விமானம் புறப்பட்டு செல்வதை பார்க்கும் ஆசையில், மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><p>மதுரை,</p><h2>நண்பர்கள்</h2><p>விருதுநகர் மாவட்டம் பரளச்சி பகுதியை சேர்ந்தவர் பாண்டித்துரை (வயது 22). திருச்சுழி உடைய சேவைக்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனீஸ்வரன் (24). இருவரும் நண்பர்கள். கட்டிட தொழிலாளர்கள். சில நாட்களாக இருவரும் மதுரை திருப்பாலை பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்தனர். கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்காக, பாண்டித்துரை, முனீஸ்வரன் ஆகியோர் திருப்பாலையில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டனர்.</p><p>மதுரை விமான நிலையம் பகுதியில் சின்னஉடைப்பு தேசிய நெடுஞ்சாலையில் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது விமான நிலையத்தில் நின்றிருந்த விமானம் புறப்பட்டு. ஓடுபாதையில் வருகிறதா? என எட்டிப்பார்த்தபடி இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.</p><h2>சாலையோர தடுப்பில் மோதியது</h2><p>இதில் நிலைதடுமாறிய மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அந்த பகுதியில் இருந்த சாலையோர தடுப்பில் வேகமாக மோதியது. இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். சிறிது நேரத்திலேயே பாண்டித்துரை, முனீஸ்வரன் பரிதாபமாக இறந்தனர்.</p><p>இதுகுறித்து அறிந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் பெருங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சோக சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நீட் வேண்டாம் என தமிழகம் போராடும் போது,  நீட் பயிற்சிக்கு வடமாநில ஆசிரியர்களா? - வேல்முருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/while-tamil-nadu-is-protesting-against-neet-are-teachers-from-north-indian-states-being-brought-in-for-neet-coaching-velmurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/while-tamil-nadu-is-protesting-against-neet-are-teachers-from-north-indian-states-being-brought-in-for-neet-coaching-velmurugan#comments</comments><guid isPermaLink="false">68834bee-60bc-4d23-a7aa-ff3d7d89327b</guid><pubDate>Sun, 23 Aug 2026 00:55:50 +0000</pubDate><atom:updated>2026-08-23T00:55:50.624Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Velmurugan,வேல்முருகன்,NEET,நீட்,தமிழக வாழ்வுரிமைக் கட்சி,தி.வேல்முருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/74izcwoa/velmurugan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/74izcwoa/velmurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தின் அறிவாற்றல் வளத்தைப் பயன்படுத்தாமல் வெளியிலிருந்து மனிதவளத்தை இறக்குமதி செய்வது சரியான அணுகுமுறையா? என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>வடமாநில ஆசிரியர்கள் ஏன்?</h2><p>நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாட்டில் தொடர்ந்து வலுப்பெற்று வரும் நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே குப்பூர் அரசு மாதிரிப் பள்ளியில், நீட் மற்றும் ஜே.இ.இ. போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சியை வழங்க ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சியையும், ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்துகிறது.</p><p>நீட் தேவையில்லை என தமிழகம் உறுதியாகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும்போது, அதற்கான பயிற்சியை வழங்க வெளிமாநிலங்களில் இருந்து ஆசிரியர்களைத் தேடி அழைத்து வருவது ஏன்?</p><p>தமிழகத்தில் கல்வித் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட ஆசிரியர்கள், பேராசிரியர்கள், போட்டித் தேர்வு நிபுணர்கள் என பெரும் மனிதவளம் உள்ளது. அப்படியிருக்க, இந்தப் பொறுப்பை ஏற்கும் திறமை கொண்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்களை அரசு முதலில் அடையாளம் காணாதது ஏன்?</p><h2>தேர்ந்தெடுத்தது யார்?</h2><p>இது வெளிமாநிலத்தவர்களுக்கு எதிரான நிலைப்பாடு அல்ல. ஆனால், தமிழகத்தின் அரசுப் பள்ளியில் உருவாகும் வாய்ப்பில், தமிழகத்தில் உள்ள தகுதியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டாமா? என்பதே அடிப்படையான கேள்வி.</p><p>மேலும், அந்த 5 பேரைத் தேர்ந்தெடுத்தது யார்?</p><p>எந்த விதிமுறையின் கீழ் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது?</p><p>அவர்களின் கல்வித் தகுதி மற்றும் கற்பித்தல் அனுபவம் என்ன?</p><p>அவர்களுக்கான ஊதியத்தை வழங்குவது யார்?</p><p>தமிழகத்தில் உள்ள தகுதியானவர்களைப் பரிசீலிக்கும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டதா?</p><p>இந்த விவரங்கள் அனைத்தையும் பொதுமக்கள் அறியும் வகையில் அரசு வெளிப்படுத்த வேண்டும்.</p><p>மாணவர்களின் நலனுக்காக உடனடி பயிற்சி தேவைப்படலாம் என்பதை ஏற்றுக்கொண்டாலும், நீட் தொடர்பான தமிழகத்தின் அரசியல் மற்றும் கல்விக் கொள்கை நிலைப்பாடு என்ன என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.</p><p>அதிலும் குறிப்பாக, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழகத்தின் </a>அறிவாற்றல் வளத்தைப் பயன்படுத்தாமல் வெளியிலிருந்து மனிதவளத்தை இறக்குமதி செய்வது சரியான அணுகுமுறையா? என்ற கேள்விக்கும் விடை தேவை.</p><h2>தமிழர்களுக்கு வாய்ப்பு..</h2><p>எனவே, குப்பூர் பள்ளி விவகாரத்தில் உண்மையை மறைக்காமல் முழுமையான விளக்கத்தை அரசு வெளியிட வேண்டும். தமிழகத்தில் தகுதி பெற்றுள்ள ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுநர்களை மாவட்ட வாரியாக அடையாளம் கண்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற கல்விசார் பணிகளுக்கு அவர்களுக்கு உரிய வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்.</p><p>நீட் வேண்டாம் என்ற தமிழகத்தின் உரிமைக் குரலுக்கும், நீட் பயிற்சியை முன்னெடுக்கும் நடைமுறைக்கும் இடையிலான முரண்பாட்டை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>