<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 04 Aug 2026 23:16:39 +0000</lastBuildDate><item><title>தமிழகத்தில் பொது இடங்களில் புகைப்பிடித்தால் சிறை தண்டனை- தமிழக அரசு பரிசீலனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-considering-jail-term-for-smoking-in-public-places</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-considering-jail-term-for-smoking-in-public-places#comments</comments><guid isPermaLink="false">f271759e-cc52-404d-8a6c-3baed01027b1</guid><pubDate>Tue, 04 Aug 2026 22:47:56 +0000</pubDate><atom:updated>2026-08-04T22:47:56.396Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,சிறை தண்டனை,imprisonment,TN government,புகைப்பிடித்தல்,Smoking ban</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/otdctgip/11a.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/otdctgip/11a.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்களுக்கு சிறை தண்டனை விதிப்பது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.</p><h2>சட்டம்</h2><p>பஸ் நிலையம், ரெயில் நிலையம், ஆஸ்பத்திரி, சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட பொது இடங்களில் புகைப்பிடிப்பதால், அவர்கள் மட்டுமின்றி அருகில் இருப்பவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் மற்றவர்கள் விடும் சிகரெட் புகையை சுவாசிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.</p><p>பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடுக்க ஏற்கனவே சட்டம் இருக் கிறது. தடையை மீறி புகைப்பிடித்தால் தற்போது அபராதம் விதிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் பொது இடங்களில் புகைப்பிடிப்பதை முழுமையாக கட்டுப்ப டுத்த முடியாத நிலை தொடர்கிறது. இதனால் அபராதம் மட்டும் போதாது, தண்டனையை கடுமையாக்கினால்தான் பொது இடங்களில் புகைப்பிடிப்பதை கட்டுப்படுத்த முடியும் என்று தமிழக அரசு கருதுகிறது.</p><h2>கடுமையான நடவடிக்கை</h2><h2>இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-</h2><p>தமிழகத்தில் பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்கள் மீது ஏற்கனவே தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2025-26-ம் நிதி யாண்டில் மட்டும் பொது இடங்களில் புகைப்பிடித்ததாக 47 ஆயிரத்து 941 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.69 லட்சத்து 57 ஆயிரத்து 500 வசூலிக்கப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/deputy-area-development-officer-arrested-for-accepting-a-bribe-of-rs-20-thousand</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/deputy-area-development-officer-arrested-for-accepting-a-bribe-of-rs-20-thousand#comments</comments><guid isPermaLink="false">420c98e3-20ae-4acb-9df7-c32b93ad2cf8</guid><pubDate>Tue, 04 Aug 2026 16:28:51 +0000</pubDate><atom:updated>2026-08-04T16:28:51.935Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருப்பூர்,லஞ்சம்,Court,bribe,கைதுArrest</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/lyunysom/183.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/lyunysom/183.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><p>திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொது) செந்தில்குமார், ரூ.20 ஆயிரம் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">லஞ்சம்</a> வாங்கியதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.</p> <p>கோவில்பாளையம், காங்கேயம் தாலுகாவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் ஒப்பந்ததாரராக செயல்பட்டு வருகிறார். அவர் வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத்து உட்பட்ட குவாலிபாளையம் மற்றும் சேனாதிபாளையம் சி.எஸ்.ஐ. அரசு உதவி பெறும் பள்ளிகளில் சமையலறை கட்டுமானப் பணிகள் மற்றும் சேனாதிபாளையம்  பகுதிகளில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிகளை மேற்கொண்டிருந்தார். </p><p>இந்த பணிகளுக்கான பில் தொகையை அனுமதித்து வழங்கியதற்காக, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொது) செந்தில்குமார் ரூ.20 ஆயிரம் கமிஷன் வழங்குமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.</p><h2>கைது</h2><p>லஞ்சம் கொடுக்க விரும்பாத ரவிச்சந்திரன், இதுகுறித்து திருப்பூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில், அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, இன்று பொறிவைப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது, புகார்தாரரிடம் இருந்து ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் செந்தில்குமாரை, <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">ஊழல் தடுப்பு</a> மற்றும் கண்காணிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர்.</p><p>பின்னர் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>போக்குவரத்து சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை -  ரூ.3.36 லட்சம் பறிமுதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anti-corruption-raid-at-transport-checkpost-krishnagiri</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anti-corruption-raid-at-transport-checkpost-krishnagiri#comments</comments><guid isPermaLink="false">1b5990de-4f2c-4ad6-a624-e4f51246a6d0</guid><pubDate>Tue, 04 Aug 2026 16:19:48 +0000</pubDate><atom:updated>2026-08-04T16:19:48.561Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பறிமுதல்,கிருஷ்ணகிரி,Krishnagiri,சோதனை சாவடி,சோதனை,லஞ்ச ஒழிப்பு துறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/46urtffo/Untitled-11.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/46urtffo/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ணகிரி,</p><p>ஓசூர் ஜுஜுவாடி போக்குவரத்து சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.3,36,200 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><p>ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை கிருஷ்ணகிரி பிரிவு அலுவலர்கள் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர்களுடன் இணைந்து இன்று ஜுஜுவாடி போக்குவரத்து சோதனை சாவடியில் திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் மோட்டார் வாகன ஆய்வாளர் சுமதியிடம், கணக்கில் வராத பணம் ரூ.1,52,800, அலுவலகத்தில் தனிநபரிடமிருந்து கணக்கில் வராத பணம் ரூ.50,000, மோட்டார் வாகன ஆய்வாளர் மகாலட்சுமியிடம் கணக்கில் வராத பணம் ரூ.50,000 கைப்பற்றப்பட்டது.</p><p>மேலும் மோட்டார் வாகன ஆய்வாளரின் அலுவலக அறையில் உள்ள கணினி மேஜையில் கணக்கில் வராத பணம் ரூ.83,400 இருந்தது. ஆகமொத்தம் இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.3,36,200 கைப்பற்றப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/worker-commits-suicide-by-poison-after-wife-criticises-drinking-habit</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/worker-commits-suicide-by-poison-after-wife-criticises-drinking-habit#comments</comments><guid isPermaLink="false">22b26f44-ffa0-4f2e-b142-9e0b461d1260</guid><pubDate>Tue, 04 Aug 2026 16:17:12 +0000</pubDate><atom:updated>2026-08-04T16:17:12.232Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தொழிலாளி,wife,தற்கொலை,Suicide,மது பழக்கம்,Labour,Drinking alcohol,மனைவி கண்டித்ததால்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/b8u7wlw7/sucide.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/b8u7wlw7/sucide.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி,</p><p>நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே, ஒரு வயது மகனின் பிறந்தநாளை கொண்டாடிய அடுத்த நாளே, மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த தொழிலாளி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">விஷம் குடித்து தற்கொலை</a> செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.</p><h2>தொழிலாளி</h2><p>நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள முனைஞ்சிப்பட்டியை அடுத்த கீரன்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் சங்கர் (வயது 23). தொழிலாளி. இவருக்கும் நந்தினி (21) என்ற பெண்ணுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இலங்கேஸ்வரன் என்ற ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.</p><h2>பிறந்தநாள் கொண்டாட்டம்</h2><p>இந்த நிலையில், சங்கர் கடந்த 1-ந் தேதி தனது மகன் இலங்கேஸ்வரனின் முதலாவது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்ந்தார். அப்போது சங்கர், தனது நண்பர்களுக்கு மது வாங்கி கொடுத்துவிட்டு, அவரும் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்த பின்னரும் சங்கர் நேற்று முன்தினமும் தொடர்ந்து மது அருந்தியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி நந்தினி, கணவரின் குடிப்பழக்கத்தை கடுமையாகக் கண்டித்ததாக தெரிகிறது.</p><h2>விஷம் குடித்த  சங்கர் </h2><p> இதனால் கடும் மனவேதனையில் இருந்த சங்கர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலிபாசானம் (விஷம்) குடித்து மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். </p> <h2>போலீசார் வழக்குப்பதிவு</h2><p>இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரு வயது மகனின் பிறந்தநாளை கொண்டாடிய அடுத்த நாளே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த கிராமத்தையே கண்ணீரில் மூழ்கடித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தீவிரவாதி போல் என்னை அழைத்து சென்று விசாரணை - உதயநிதி பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/they-took-me-away-and-interrogated-me-like-a-terrorist-udhayanidhi-interview</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/they-took-me-away-and-interrogated-me-like-a-terrorist-udhayanidhi-interview#comments</comments><guid isPermaLink="false">d32a5844-18e8-478a-bc59-89c9077fbb97</guid><pubDate>Tue, 04 Aug 2026 16:12:56 +0000</pubDate><atom:updated>2026-08-04T16:12:56.329Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,உதயநிதி ஸ்டாலின்,கர்நாடகா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/xwoy4qz6/dmkydaione33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/xwoy4qz6/dmkydaione33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் யாரையும் நான் தவறாக பேசவில்லை; காவிரி பிரச்சினையை அவையில் எழுப்பக்கூடாது என்பதற்காக இந்த அரசு டைவர்ட் செய்துள்ளது என  உதயநிதி ஸ்டாலின் கூறினார்.</p><h2>தவெக அரசு</h2><p>திருச்சி விமான நிலையத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது:-</p><p>திமுக தலைவரின் உத்தரவை ஏற்று தஞ்சையில் நேற்று விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினோம். </p><p>விவசாயிகளுக்கு தவெக அரசு செய்த துரோகங்கள், பொய் வாக்குறுதிகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் பேசினேன்.</p><p>நான் யாரையும் தவறாக பேசவில்லை, பேசாத ஒன்றை கட் காபி செய்து பரப்பி உள்ளனர்.  திசை திருப்பும் முயற்சியாக, நான் பேசாத ஒன்றை பேசியதாக திரித்து வீடியோவை பரப்பி உள்ளனர். <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">காவிரி பிரச்சினை</a>யை அவையில் எழுப்பக்கூடாது என்பதற்காக இந்த அரசு டைவர்ட் செய்துள்ளது.</p><h2>இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை</h2><p>தீவிரவாதியை போல், என்னை 400 கி.மீ.க்கு அழைத்து சென்று செங்கிப்பட்டியில் வைத்து விசாரணை நடத்தினர். </p><p>விவசாயிகளுக்கு ஆதரவாக பேசியதற்கு தரம்கெட்ட அரசு கைது செய்துள்ளது. இதற்கு நான் அஞ்சவில்லை. </p><p>எனக்கு மனைவி, மகள் உள்ளனர்.  தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெண்களையும் எனது தாயாக, சகோதரிகளாக நான் பார்க்கிறேன்.எந்த தவறான எண்ணத்திலும் பெண்களை தரம் தாழ்த்தி பேச வேண்டும் என்று நான் எண்ணவில்லை. ஆர்ப்பாட்டத்தில் இரட்டை அர்த்தத்தில் நான் பேசவில்லை, சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன். பேசுவேன். ஒருசில தலைவர்கள் நான் பேசியதை ஆராயாமல் கண்டனம் தெரிவித்தது எனக்கு வருத்தம் தருகிறது. </p><h2>நான் முதல்-அமைச்சரை போல ஓடுகாலி அல்ல </h2><p>அரசின் பொய் வழக்கு போட்டு பயமுறுத்து பார்க்கின்றனர். இதற்கெல்லாம் பயப்படும் ஆள் நான் இல்லை. இதே திருச்சி விமான நிலையத்தில் புறமுதுகு காட்டினார் முதல்-அமைச்சர் விஜய். வழக்கு போட்டால் தன்னை போல பயப்படுவேன் என நினைத்துவிட்டார்.  பொய் வழக்கை சட்டமுறைப்படி எதிர்கொள்வேன்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>கீழே தவறி விழுந்த 10-ம் வகுப்பு மாணவிக்கு பிரசவம்; சிசு இறந்தது - காதலன் மீது போக்சோ வழக்கு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tenth-grade-girl-delivery-after-fall-baby-dies-pocso-case-on-lover</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tenth-grade-girl-delivery-after-fall-baby-dies-pocso-case-on-lover#comments</comments><guid isPermaLink="false">2f10d62e-dcaa-4be8-8e20-181351ef11ed</guid><pubDate>Tue, 04 Aug 2026 15:57:41 +0000</pubDate><atom:updated>2026-08-04T15:57:41.883Z</atom:updated><atom:author><atom:name>Yogan kanagaraj P</atom:name><atom:uri>/api/author/2406198</atom:uri></atom:author><description></description><media:keywords>POCSO case,போக்சோ,Sivakasi,சிவகாசி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/m3piyzwu/Untitled-10.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/m3piyzwu/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகாசி,</p><p>கீழே தவறி விழுந்த 10-ம் வகுப்பு மாணவிக்கு பிரசவம் ஏற்பட்டு வயிற்றில் இருந்த சிசு இறந்தது. அந்த மாணவியை கர்ப்பமாக்கிய காதலன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><h2>10-ம் வகுப்பு மாணவி</h2><p>விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார். அங்கு ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இதனிடையே மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சிவகாசி போஸ் காலனியை சேர்ந்த விஸ்வமணி (25 வயது) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. வாலிபரும், மாணவியும் பலமுறை தனிமையில் சந்தித்துள்ளனர். இதில் மாணவி கர்ப்பம் அடைந்தார்.</p><h2>தடுமாறி விழுந்தார்</h2><p>சம்பவத்தன்று பள்ளியில் இருந்து மாணவி வீடு திரும்பியபோது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்ததில் மாணவியின் வயிற்றில் கடும் வலி ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவரது பாட்டி அழைத்து சென்றார். மாணவியை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, அவர் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மாணவியை வீட்டுக்கு அழைத்து வந்தனர்.</p><p>வீட்டில் வைத்து மாணவிக்கு குறைபிரசவம் ஆனதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து வீட்டில் உள்ளவர்கள் மாணவியையும், சிசுவையும் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிசுவை பரிசோதனை செய்தபோது இறந்துவிட்டது தெரிய வந்தது.</p><h2>போக்சோ சட்டத்தில் வழக்கு</h2><p>இதுகுறித்து மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். மாணவியின் காதலனான விஸ்வமணி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தேடிவருகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>விசாரணை நிறைவு - உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/investigation-complete-udhayanidhi-stalin-released</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/investigation-complete-udhayanidhi-stalin-released#comments</comments><guid isPermaLink="false">58f1e7ec-2707-4c5e-9687-437b68c88c21</guid><pubDate>Tue, 04 Aug 2026 15:16:05 +0000</pubDate><atom:updated>2026-08-04T15:16:05.286Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,police,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,arrest,தஞ்சை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/mqs4tgas/udaitwo33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/mqs4tgas/udaitwo33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சை</p><p>விசாரணை நிறைவடைந்த நிலையில் காவல் நிலைய ஜாமீனில் உதயநிதி விடுவிக்கப்பட்டார். </p><h2>சர்ச்சை பேச்சு</h2><p>தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நடிகை திரிஷா குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக தவெக மகளிர் அணி சார்பில் மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி சங்கர்ராமன் மற்றும் நிர்வாகிகள் புகார் அளித்தனர்.</p><p>தஞ்சை பொதுக்கூட்டத்தில் பேசியது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் குற்ற எண் 287/2026-ன் கீழ் 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டன. அதாவது, பகைமை, கலவரத்தை தூண்டும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.</p><h2>நீலங்கரையில் கைது</h2><p>இதையடுத்து, சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைத்து உதயநிதியை தஞ்சை மாவட்ட போலீசார் இன்று காலை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூருக்கு அழைத்து செல்ல புறப்பட்டனர். இதனிடையே உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து  தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே உதயநிதி ஸ்டாலினை இன்றே விசாரித்துவிட்டு விடுதலை செய்ய வேண்டும் என்று <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">சென்னை ஐகோர்ட்டு</a> அறிவுறுத்தியது.</p><h2>திமுக தொண்டர்கள் போராட்டம்</h2><p>இதனிடையே உதயநிதி ஸ்டாலினின் கைதை தொடர்ந்து திருச்சி, மதுரை, தஞ்சை, கோவை எனப் பல்வேறு இடங்களில் திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், பல இடங்களில் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டது. தஞ்சையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிக்கப்பட்டது.</p><p>இந்நிலையில் தஞ்சை தெற்கு காவல் நிலையத்தில் திமுகவினர் ஏராளமானோர் திரண்டிருந்த நிலையில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF">உதயநிதி</a> செங்கிப்பட்டி அழைத்து செல்லப்பட்டார். ஆனால் செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்குள் உதயநிதி வர மறுப்பு தெரிவித்தார். மேலும் என் மீது தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு போடப்பட்டுள்ளதால் அங்கு தான் விசாரிக்க வேண்டும் என்று கூறினார்.</p><p>இதனைத்தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபின், செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஒப்புக்கொண்டார்.</p><p>உதயநிதியை போலீசார் செங்கிப்பட்டி காவல் நிலையம் அழைத்து வருவதற்கு முன்பு திமுக முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் ஏராளமான தொண்டர்கள் செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் குவிந்தனர்.</p><h2>தஞ்சை காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் விசாரணை</h2><p>விசாரணைக்காக காவல் வாகனத்தில் இருந்து இறங்கிய உதயநிதி, அங்கு கூடியிருந்த தொண்டர்களிடையே கையசைத்தார். தொடர்ந்து விசாரணைக்காக காவல்நிலையம் உள்ளே சென்றார். </p><p>தஞ்சை காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் முன்னிலையில் ஆய்வாளர் மணிகண்டன் உதயநிதியிடம் விசாரணை நடத்தினார்.</p><h2>ஜாமீனில் விடுவிப்பு </h2><p>காலை 11 மணிக்கு கைது செய்யப்பட்ட உதயநிதியிடம் மாலை 6.45 முதல் விசாரணை நடைபெற்றது.செங்கிப்பட்டியில் வைத்து உதயநிதியிடம் மாலை 6.45 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 8.10 மணி வரை நடைபெற்றது.</p><p>விசாரணை முடிவடைந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் காவல்நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.</p><p>சென்னையில் இருந்து காவல் வாகனத்தில் அழைத்து வரப்பட்ட உதயநிதி தற்போது காரில் புறப்பட்டார். காவல்நிலையம் முன்பு கூடியிருந்த தொண்டர்களை பார்த்து கையசைத்தவாறு சென்றார். காரில் இருந்து திருச்சி செல்லும் உதயநிதி ஸ்டாலின் விமானம் மூலம் சென்னை வந்தடைகிறார். நாளை பட்ஜெட் கூட்டத்தொடரில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>விசாரணையை இன்றே முடித்து உதயநிதியை விடுவிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் 8,9 தேதிகளில் கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-ekyc-camp-at-all-ration-shops-in-tamil-nadu-on-8th-and-9th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-ekyc-camp-at-all-ration-shops-in-tamil-nadu-on-8th-and-9th#comments</comments><guid isPermaLink="false">ab17d50b-9f89-4381-974e-e439d6db72ba</guid><pubDate>Tue, 04 Aug 2026 15:06:39 +0000</pubDate><atom:updated>2026-08-04T15:06:39.064Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Special camp,சிறப்பு முகாம்,ரேசன் கடை,ration shops,கைவிரல் ரேகை பதிவு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/hsvk0ptg/Untitled-8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/hsvk0ptg/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் வருகிற 8, 9 தேதிகளில் இகேஒய்சி (eKYC) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் விரல் ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை (eKYC) மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதும் இடையூறுமின்றி இப்பணியினை செய்திட அறிவுறுத்தப்பட்டு கடந்த அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் விரல் ரேகை சரிபார்ப்பு (eKYC) பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 95.86% eKYC பணியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>இந்த eKYC பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு 08.08.2026 மற்றும் 09.08.2026 ஆகிய நாட்களில் தமிழகத்திலுள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும் சிறப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.</p><p>ஆகவே, நியாயவிலைக்கடைகளில் கைரேகை பதிவு (eKYC) செய்யப்படாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் கைரேகை விரல் (eKYC) பதிவு செய்ய வருகின்ற 08.08.2026 மற்றும் 09.08.2026 ஆகிய இரண்டு நாட்கள் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும் நடைபெறும் சிறப்பு முகாமினை பயன்படுத்தி விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் eKYC பதிவினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய் ஆட்சியில் பெண்களை விமர்சிப்பவர்கள் கைது செய்யப்படுவர் - ஆதவ் அர்ஜுனா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/critics-of-women-will-be-arrested-under-chief-minister-vijay-rule-aadav-arjuna</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/critics-of-women-will-be-arrested-under-chief-minister-vijay-rule-aadav-arjuna#comments</comments><guid isPermaLink="false">5e5363f8-28b0-494b-8aaa-034b0a668702</guid><pubDate>Tue, 04 Aug 2026 14:35:10 +0000</pubDate><atom:updated>2026-08-04T14:44:37.660Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,Aadhav Arjuna,ஆதவ் அர்ஜுனா,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/bs95yr2w/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆதவ் அர்ஜுனா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/bs95yr2w/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முதல்-அமைச்சர் விஜய் ஆட்சியில் பெண்களை விமர்சிப்பவர்கள் கைது செய்யப்படுவர் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். பனையூரில் நடைபெற்ற தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியதாவது:-</p><p>திமுகவுக்கு பாடம் எடுத்துள்ளார் முதல்-அமைச்சர் விஜய். தவெக ஆட்சி அமைத்த கடந்த 80 நாட்களில் திமுகவின் ஒரே கொள்கையே தவெக ஆட்சியை எப்படி கவிழ்ப்பது என்பதுதான். தவெக எம்எல்ஏக்களிடம் ரூ.50 கோடி, ரூ.100 கோடி தருவதாக செந்தில் பாலாஜி தரப்பு விலை பேசியது. எதிர்காலமே இல்லாத திமுக எங்கள் கட்சி எம்எல்ஏக்களை விலை பேச முயற்சித்து மாட்டிக் கொண்டது. </p><p>கொளத்தூர் மக்கள் தன்னை ஏன் தூக்கி எறிந்தார்கள் என்பதை மு.க.ஸ்டாலின் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. கொளத்தூர் சென்ற முதல் அமைச்சர் விஜய்யால் அன்று சேப்பாக்கம் செல்ல முடியாமல் போனது. அதனால் சேப்பாக்கம் மிஸ் ஆகி விட்டது. மு.க.ஸ்டாலின் குடும்பத்தில் இருந்து இனி ஒருவர் முதல்-அமைச்சர் ஆக முடியாது. திமுகவின் சாம்ராஜ்யம் முடிந்து விட்டது என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்வதற்கு 6 மாதம் எடுத்துக் கொள்ளும். </p><p>சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் விஜய் பேசத் தொடங்கி பார்ட்டி பண்ட் என்று கூறியவுடன் திமுகவினர் ஓடிவிட்டனர். சட்டப்பேரவையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமைதியாக இருந்தார். திமுகவினர் அம்பலப்பட்டு விட்டனர். ஆட்சியில் இருந்த திமுக 2028 வரை பொதுப்பணித்துறையில் டெண்டர் போட்டுள்ளனர்.</p><p>வாய்ப்புகள் இல்லாதபோது இருப்பது நேர்மை அல்ல. வாய்ப்புகள் இருக்கும்போதும் தவெகவினர் நேர்மையாக உள்ளனர். இன்று கூட ரூ.10 ஆயிரம் கோடி கலெக்சன் செய்ய முடியும்; ஆனால் அதை நாங்கள் செய்ய மாட்டோம்.</p><p>பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவதை வழக்கமாக வைத்திருந்தவர் கருணாநிதி. பெண்களை சக மனுஷியாக உதயநிதி நினைக்க வேண்டும். பெண்களை சம மனுஷியாக பார்க்கும் சிந்தனை உதயநிதிக்கு இல்லை. தான் பேசியது தவறு என்று தற்போது வரை உதயநிதி உணரவில்லை.</p><p>ஆட்சியில் இருந்தபோது துணை முதல்-அமைச்சர் என உதயநிதிக்கு பட்டாபிஷேகம், தற்போது எதிர்க்கட்சித் தலைவர் என பட்டாபிஷேகம். முன்னாள் முதல்-அமைச்சரின் பேரன், மகன் என்ற திமிர் உதயநிதியிடம் உள்ளது. மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினின் திமிர் தான் தற்போது திமுகவை எதிர்க்கட்சியாக மாற்றியுள்ளது. </p><p>ஒரு முறை கூட மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சர் விஜய் ஒருமையில் பேசியதில்லை. அங்கிள் என கூறியதற்கு கூட வருந்தினார். ஒரு இடத்திலாவது ஒரு பெண்ணை முதல்-அமைச்சர் விஜய் விமர்சித்து பேசியிருக்கிறாரா?  தவெகவுக்கு வெற்றியை ஈட்டித் தந்தது பெண்கள் தான். விஜய் ஆட்சியில் பெண்களை விமர்சிப்பவர்கள் கைது செய்யப்படுவர். ஜோசப் விஜய் முதல்-அமைச்சராக இருக்கும் இந்த ஆட்சியில் பெண்கள் குறித்து அவதுறாக பேசினால் சும்மா இருக்க முடியாது.</p><p>கூட்டணி பலத்தால் தான் திமுகவுக்கு 57 தொகுதிகள் கிடைத்தது. கூட்டணி இல்லையென்றால் திமுகவால் 10 தொகுதிகளை கூட வெல்ல முடியாது. நாங்கள் ஏன் உதயநிதியை பழிவாங்க வேண்டும். விஜய்க்கு எதிரியாக இருக்க ஒரு தகுதி வேண்டும். சேப்பாக்கத்தில் உதயநிதி மீண்டும் போட்டியிட்டால் டெபாசிட் கூட வாங்க மாட்டார். சேப்பாக்கம் தொகுதியில் சாமானிய பெண் ஒருவரை நிறுத்துவோம். உதயநிதியால் டெபாசிட் கூட வாங்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>எல் நினோ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் நிபுணர்கள் ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/el-nino-precautionary-measures-first-meeting-of-expert-committee-led-by-minister</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/el-nino-precautionary-measures-first-meeting-of-expert-committee-led-by-minister#comments</comments><guid isPermaLink="false">6302cd26-3c0d-4904-8540-bd32c1dd7477</guid><pubDate>Tue, 04 Aug 2026 13:46:57 +0000</pubDate><atom:updated>2026-08-04T13:46:57.006Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அமைச்சர் செங்கோட்டையன்,Minister Sengottaiyan,El Nino,எல் நினோ,ஆலோசனைக் குழு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/gms176o7/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/gms176o7/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>எல் நினோ தாக்கத்தை தடுக்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கிட அமைக்கப்பட்டுள்ள நிபுணர்கள் ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டம் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>எல் நினோ எனும் காரணியால் தமிழ்நாட்டில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து கண்காணித்து அவ்வப்பொழுது எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கிட, முதல்-அமைச்சரின் அறிவுரைப்படி பல்வேறு துறைகளில் அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் ஆலோசனைக்குழு, கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையரின் தலைமையில் 28.07.2026 அன்று அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.</p><p>இதனைத் தொடர்ந்து, மேற்படி குழுவின் முதல்கூட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில், கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர், நா.முருகானந்தம் முன்னிலையில், இன்று (04.08.2026) சென்னை, எழிலகத்தில் அமைந்துள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையக் கூட்ட அரங்கில் நடைபெற்றது.</p><p>தென்மேற்குப் பருவமழை காலக்கட்டங்களான ஜூன், ஜூலை மாதங்களில், வழக்கமாக 133.75 மி.மீ. மழை பொழியும். இந்தாண்டு (2025-2026) மழைப் பொழிவு 111.19 மி.மீ. மட்டுமே பெய்து, வழக்கத்தை விட 16.68% குறைவாக உள்ளது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், சுமார் 24 மாவட்டங்களில், வழக்கத்தை விட குறைவாகவே தென்மேற்கு பருவமழைப் பொழிந்துள்ளது. இதில், செங்கல்பட்டு, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் இயல்பைவிட 60% மேல் குறைவாக தென்மேற்கு பருவமழைப் பொழிந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அணைகளின் கொள்ளளவும், இக்காலக்கட்டத்தில் வழக்கமாக 85% நிரம்பியிருக்கும். ஆனால், இந்தாண்டு வழக்கத்தை விட குறைவான மழைப் பொழிவால், சுமார் 31% மட்டுமே நிரம்பி உள்ளது.</p><p>மேலும், தமிழ்நாட்டில் பாதுகாப்பான குடிநீர் மற்றும் நீர் ஆதாரங்களை மேம்படுத்தும் பணிகளைத் துரிதமாகச் செயல்படுத்திட, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைகள் வாயிலாக நீர் ஆதாரங்களை மேம்படுத்திட மற்றும் லாரிகள் மூலமாகக் குடிநீர் விநியோகம் செய்திட, 330 கோடி ரூபாயும், கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன் வளம் - மீனவர் நலத் துறைக்கு 10 கோடி ரூபாயும் என ஆக மொத்தம் 340 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திட, முதல்-அமைச்சர் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார்.</p><p>இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்களிடம் இருந்து, முன்மொழிவுகள் வரப்பெற்று, அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படாவண்ணமும், அதிக வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக, கால்நடைகளுக்கு தீவனம் உடனடியாக கிடைக்கும் வண்ணமும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p>இக்கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர், கே.எஸ். பழனிசாமி, பேரிடர் மேலாண்மை ஆணையர் அ. சிவஞானம், நிபுணர் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் பேராசிரியர் எஸ். கண்மணி, முனைவர் பாலாஜி நரசிம்மன், முனைவர் அறிவுடை நம்பி அப்பாதுரை, முனைவர். ரமேஷ் ராமச்சந்திரன், முனைவர். ஆர். வெங்கடேசன், முனைவர். ஜா. க. பேட்டர்சன் எட்வர்ட், ஆர். பிரதீப் ஜான் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நடந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல்திட்ட மாநில மன்றக்கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-chairs-adidravidar-tribal-development-council-meeting</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-chairs-adidravidar-tribal-development-council-meeting#comments</comments><guid isPermaLink="false">87694700-bad6-48d0-b6eb-063df263964f</guid><pubDate>Tue, 04 Aug 2026 13:38:51 +0000</pubDate><atom:updated>2026-08-04T13:38:51.886Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திட்டம்,Development,பழங்குடியினர்,ஆதிதிராவிடர்,action plan,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/lg5rasuj/cm.04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல்திட்ட மாநில மன்றக்கூட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/lg5rasuj/cm.04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல்திட்ட மாநில மன்றக்கூட்டம் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்றது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-</p> <p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில், <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல்திட்ட மாநில மன்றக்கூட்டம்</a> நடைபெற்றது.</p> <h2>மாநில மன்றம்</h2><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படும் நிதியானது முழுமையாகச் சென்றடைவதை உறுதிசெய்ய மேம்பாட்டுச் செயல்திட்டச் சட்டம் (தமிழ்நாடு அரசு சட்டம் 20/2024) 29.05.2024 அன்று இயற்றப்பட்டது. அதன்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல்திட்டத்தின்கீழ் ஒதுக்கப்படும் நிதி முறையாக சென்றடைகிறதா என்பதை கண்காணித்திட  தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையில் மாநில மன்றம் அமைக்கப்பட்டது.</p><h2>வெற்றி தமிழகம்</h2><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படும் நிதியானது அவர்களுக்கு முழுமையாக வழங்கப்படவேண்டும் என்ற அரசின் "வெற்றித் தமிழகம்" தொலைநோக்கு திட்டத்தின்படி, அம்மாநில மன்றத்தின் 2026-27ஆம் நிதியாண்டிற்கான முதல் கூட்டம் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%20">தமிழ்நாடு முதல்-அமைச்சர்  </a>தலைமையில் இன்று நடைபெற்றது.</p><h2>நலத்திட்டங்கள்</h2><p>2026-27ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு செலவு மதிப்பீட்டில் அரசின் 23 துறைகள் மூலம் 48 துறைத் தலைமையகத்தால் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், ஆதிதிராவிடர் நலத்திட்டத்திற்காக 5,903.51 கோடி ரூபாய் செலவினமும், பழங்குடியினர் நலத்திட்டத்தற்காக 349 கோடி ரூபாய் செலவினமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், பயனாளிகளின் விவரம், பயன்படுத்தப்பட்ட தொகை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.</p><h2>செயல்திட்டத்திற்கு ஒப்புதல்</h2><p>நிதியாண்டிற்கான இம்மாநில மன்ற கூட்டத்தில், 2026-27ஆம் மேம்பாட்டு செயல்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், மேம்பாட்டுச் செயல்திட்டத்தின்கீழ் ஒதுக்கப்படும் நிதியானது அவர்களின் பயன்பாட்டிற்கு முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் எனவும், திட்டத்தின் செயல்பாடுகளை முழுமையாகக் கண்காணித்திட வேண்டும் எனவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.</p><h2>வளர்ச்சி செயல் திட்டம்</h2><p>மற்றும் பழங்குடியினரின் ஆதிதிராவிடர் செயல்திட்டத்தின்கீழ், குறித்தொதுக்கப்பட்ட நிதியை மேம்பாட்டுச் செயல்படுத்தும் துறைகளின் மாதாந்திர செலவின விவரம், பணி முன்னேற்ற அறிக்கை மற்றும் பயனாளர்களின் விவரம் போன்றவற்றை வளர்ச்சி செயல் திட்டம் (Development Action Plan) வலைதளத்தில் என்ற (https://www.adtwdap.tn.gov.in) தவறாமல் பதிவேற்றம் செய்யப்படுவதை உறுதிபடுத்தப்பட வேண்டும் எனவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.</p><h2>உரிய பரிந்துரைகள்</h2><p>மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் முன்னேற்றத்திற்கு இடையூறாகவுள்ள தடைகளை கண்டறிந்து அவற்றை களைந்திட உரிய பரிந்துரைகளை தெரிவிக்கவும், அதற்குரிய திட்டங்களை விரைந்து தீட்டவும் அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் துறை தலைவர்களுக்கும் தமிழ்நாடு முதல்-அமைச்சர்  அறிவுறுத்தப்பட்டது.</p><h2>அலுவலர்கள் கலந்து கொண்டனர்</h2><p>இம்மாநில மன்றக் கூட்டத்தில், சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு, நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் நெ. மரிய வில்சன், வனத்துறை அமைச்சர் ஆர்.வி. இரஞ்சித்குமார், நாடாளுமன்ற உறுப்பினர்  து.ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் த. லதா, க. மாரிமுத்து, பொ. சந்திரசேகர், வி.பி. தமிழ்ச்செல்வி, தலைமைச் செயலாளர் மு. சாய்குமார், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மு.அ. சித்திக், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தியா வேணுகோபால் சர்மா, சமூக நீதித்துறை செயலாளர் டாக்டர் என். சுப்பையன், மாநில மன்ற உறுப்பினர்கள் டாக்டர் வி.ஏ. ரமேஷ்நாதன், டி. நவநீத சிவக்குமார்,  ம. ஷோபா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கடலூர்: நிலத்தகராறில் 2 சகோதரர்கள் வெட்டிக்கொலை: 5 பேர் கைது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cuddalore-2-brothers-hacked-to-death-over-land-dispute-5-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cuddalore-2-brothers-hacked-to-death-over-land-dispute-5-arrested#comments</comments><guid isPermaLink="false">9ef786da-1dcc-4b34-8e8e-9181fef6fffc</guid><pubDate>Tue, 04 Aug 2026 13:32:39 +0000</pubDate><atom:updated>2026-08-04T13:32:39.801Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Cuddalore,கடலூர்,கொலை,brother,Land dispute,நிலத்தகராறில்,கைது Arrest</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/kd1q8jcy/182.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/kd1q8jcy/182.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர், </p><p>கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள பால்வார்த்துண்ணான் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 44). இவர் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார்.</p><p>இவரது சித்தப்பா மகன் ராமகிருஷ்ணன்(36). விவசாயி. இவர்கள் 2 பேரும் நேற்று இரவு வீட்டிற்கு அருகே உள்ள விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றனர். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று பாலகிருஷ்ணனை அரிவாளால் வெட்டினர். இதனை பார்த்து அதிர்ச்சியான ராமகிருஷ்ணன் அவர்களை தடுக்க முயன்றார். அந்த கும்பல் அவரையும் அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதில் பாலகிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் சம்பல இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். ராமகிருஷ்ணன் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.</p><h2>தீவிர சிகிச்சை</h2><p>இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் விரைந்து வந்து பலத்த காயத்துடன் கிடந்த ராமகிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலை நகர் அரசு கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழ்ந்தார்.</p><p>இதுபற்றிய தகவல் அறிந்ததும் பேரின் 2 குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். அவர்களை போலீசார் உள்ளே விட மறுத்ததால், உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சகோதரர்கள் அரிவாளால் வெட்டப்பட்ட இடம், அவர்களது வீடுகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தா சுக்லாவும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து புதுச்சத்திரம் வழக்குப்பதிவு போலீசார் செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் சகோதரர்களை வெட்டிக்கொலை செய்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார், சகோதரர்களை கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.</p><h2>விசாரணை</h2><p>போலீசாரின் விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் தெரியவந்துள்ளன. <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">கொலை</a> செய்யப்பட்டவர்களுக்கும், அதே கிராமத்தை சேர்ந்த கனகசபை என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்துள்ளது.</p><p>நேற்றிரவு சகோதரர்கள் வயலுக்கு மோட்டார் போடுவதற்காக செல்வதை அறிந்ததும், கனகசபை, அவரது மகன் பாண்டியன் என்ற கனகராஜ் ஆகியோர் 8 பேர் கும்பலுடன் அங்கு சென்று சகோதரர்களை வெட்டி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. </p><h2>கைது</h2><p>இதையடுத்து போலீசார் அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக கனகசபையின் மகன் பாண்டியன் என்ற கனகராஜ்(30), தேவராஜ்(30), துரை என்ற யுவராஜ், மணிக்கொல்லையை சேர்ந்த யுவராஜ்(30), வில்லியனூரை சேர்ந்த ராமஜெயம் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கனகசபை உள்பட 3 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தஞ்சை: செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் உதயநிதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/udhayanidhi-stalin-refuses-to-come-to-chengipatti-police-station</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/udhayanidhi-stalin-refuses-to-come-to-chengipatti-police-station#comments</comments><guid isPermaLink="false">d5425d7e-03e5-4b8a-8c0f-cdd787dae027</guid><pubDate>Tue, 04 Aug 2026 13:23:34 +0000</pubDate><atom:updated>2026-08-04T13:23:34.688Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,உதயநிதி ஸ்டாலின்,Thanjavur,தஞ்சை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/kawwdtcr/one33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/kawwdtcr/one33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சை, </p><p>தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து சர்ச்சையாக பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது தவெக மகளிரணி நிர்வாகி ஒருவர் புகார் அளித்தார். அந்த புகார் அடிப்படையில் உதயநிதி ஸ்டாலினை அவரின் வீட்டிற்கே சென்று போலீசார் இன்று காலை கைது செய்தனர்.</p><h2>உதயநிதி ஸ்டாலின் கைது</h2><p>காலை 11 மணியளவில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF">உதயநிதி ஸ்டாலினை </a>கைது செய்த போலீசார், அங்கிருந்து தஞ்சாவூர் அழைத்து செல்ல புறப்பட்டனர். இதனிடையே உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தமிழ்நாடு முழுக்க திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே உதயநிதி ஸ்டாலினை இன்றே விசாரித்துவிட்டு விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தியது.</p><h2>மதிய உணவு சாப்பிட்ட உதயநிதி</h2><p>2 மணியளவில் விழுப்புரம் அருகே ஒலப்பூர் காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் உணவு சாப்பிட்டார். தொடர்ந்து 4 மணியளவில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை போலீசார் வாகனம் கடந்து சென்றது. திருச்சி சென்று அங்கிருந்து தஞ்சாவூர் செல்ல காவல்துறையினர் திட்டமிட்டனர். தஞ்சையில் ஏராளமானோர் திரண்டு கூட்டம் அதிகமானதால் செங்கிப்பட்டியில் விசாரணை நடத்த திட்டமிட்டனர்.கிட்டத்தட்ட 8 மணி நேரத்திற்கும் அதிகமாக உதயநிதி ஸ்டாலின் வேனிலேயே பயணம் செய்தார்.</p><p>இந்தநிலையில்,  சென்னையில் இருந்து தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்த வாகனம் திருச்சி வழியாக செங்கிப்பட்டியை தாண்டி சென்றபோது திடீரென யூடர்ன் எடுத்து கந்தர்வகோட்டை அருகே உள்ள செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு உதயநிதியை போலீசார் அழைத்து சென்றனர். </p><h2>வாகனத்தை விட்டு இறங்க மறுப்பு</h2><p>தஞ்சை தெற்கு காவல் நிலையத்தில் திமுகவினர் ஏராளமானோர் திரண்டிருந்த நிலையில் உதயநிதி செங்கிப்பட்டி அழைத்தனர்.  விசாரணைக்காக அழைத்துவரப்பட்டுள்ள காவல் வாகனத்தை விட்டு இறங்க எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி மறுப்பு தெரிவித்தார். </p><p>செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்க கூடாது. வழக்கு பதியப்பட்டுள்ள தஞ்சை கிழக்கு காவல்நிலையத்தில் தான் விசாரிக்க வேண்டும் என கூறினார். </p><h2>ஐஜி பாலகிருஷ்ணன் பேச்சுவார்த்தை</h2><p>செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட உதயநிதி போலீஸ் வாகனத்தை விட்டு இறங்க மறுப்பு தெரிவித்ததால் சம்பவ இடத்திற்கு ஐஜி பாலகிருஷ்ணன் வருகை தந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்து விசாரணைக்கு ஒத்துழைப்பதாக உதயநிதி தெரிவித்தார்.</p><p>சென்னையில் கைது செய்யப்பட்ட உதயநிதியிடம் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  காலை 11 மணிக்கு கைது செய்யப்பட்ட உதயநிதியிடம் மாலை 6.45 மணி முதல் விசாரணை நடைபெற்று வருகிறது. </p><h2>தஞ்சை எஸ்.பி. சுந்தரவதனம் முன்னிலையில் விசாரணை </h2><p>தஞ்சை காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் முன்னிலையில் ஆய்வாளர் மணிகண்டன் உதயநிதியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.  உதயநிதி மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. </p><p>முன்னதாக, செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட உதயநிதி ஸ்டாலின் போலீஸ் வாகனத்தை விட்டு இறங்கி தொண்டர்களை நோக்கி கையசைத்தார்.</p><p>உதயநிதியை அழைத்துவந்த நிலையில் செங்கிபட்டி காவல் நிலையம் முன்பு போலீசாரோடு திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. </p><p>முன்னதாக,திட்டத்தை மாற்றி வேறொரு காவல் நிலையத்திற்கு அழைத்து செல்வது ஏற்புடையதல்ல. தஞ்சை காவல் நிலையத்துக்கு அழைத்து செல்ல வேண்டுமென்பதுதான் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது என மா.சுப்பிரமணியன் கூறினார்.  தஞ்சை நகர காவல் நிலையம் மற்றும் வாகனங்கள் மீது திமுகவினர் கல்வீச்சு தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.  </p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜயை சந்தித்த தமிழ்நாடு டென்னிஸ் சங்க நிர்வாகிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-tennis-association-executives-met-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-tennis-association-executives-met-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">7f827e5d-524d-4a4f-9d62-930dfa2add93</guid><pubDate>Tue, 04 Aug 2026 13:03:37 +0000</pubDate><atom:updated>2026-08-04T13:03:37.746Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Tennis,டென்னிஸ்,சந்திப்பு,Association,முதல்-அமைச்சர்Chief Minister,சங்க நிர்வாகி,Chief Minister Vijay,</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/qzmvxafj/181.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/qzmvxafj/181.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>முதல்-அமைச்சர் விஜயை தமிழ்நாடு டென்னிஸ் சங்க நிர்வாகிகள் சந்தித்தனர்.</p><p>தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a> இன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு டென்னிஸ் சங்க நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, 2026 சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் (WTA-250) போட்டியை சென்னை நகரில் நடத்துவது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.</p><h2>பங்கேற்பு</h2><p>இந்த சந்திப்பில், தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் தலைவர் விஜய் அமிர்தராஜ், முதன்மைச் செயல் அலுவலர்  ஹில்டன் ஜோஷி, போட்டி ஒருங்கிணைப்பாளர் பிரசாந்த் மற்றும் கௌரவ செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டு, போட்டிக்கான ஏற்பாடுகள் மற்றும் தமிழக அரசின் ஒத்துழைப்பு குறித்து முதல்-அமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டனர்.</p> ]]></content:encoded></item><item><title>காதல் திருமணம் செய்த ஒன்றரை மாதத்தில் தீயணைப்பு வீரர் தற்கொலை - போலீசார் விசாரணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/firefighter-dies-by-suicide-one-and-a-half-months-after-love-marriage-police-investigation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/firefighter-dies-by-suicide-one-and-a-half-months-after-love-marriage-police-investigation#comments</comments><guid isPermaLink="false">e921d289-dd40-49fe-9a7b-c74abaaf46e3</guid><pubDate>Tue, 04 Aug 2026 12:55:37 +0000</pubDate><atom:updated>2026-08-04T12:55:37.438Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,Theni,தேனி,காதல் திருமணம்,தற்கொலை,கோயம்புத்தூர்,தீயணைப்பு வீரர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/310sh30b/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/310sh30b/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோயம்புத்தூர்,</p><p>காதல் திருமணம் செய்த ஒன்றரை மாதத்தில் தீயணைப்பு வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>காதல் திருமணம்</h2><p>தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்தவர் அழகேசன் (25 வயது). கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் வீரராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. தான் காதலித்து வந்த இளம்பெண்ணை இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.</p><h2>வாடகை வீடு</h2><p>பின்னர் தனது மனைவியை பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு கோவைக்கு பணிக்காக திரும்பினார். மேலும் தனது மனைவியுடன் வசிக்க வாடகைக்கு வீடு பார்த்து வந்தார். கவுண்டம்பாளையம் தீயணைப்பு நிலையம் அருகே வாடகைக்கு ஒரு வீடு கிடைத்தது. அந்த வீட்டில் அழகேசன் தங்கி இருந்தார். ஓரிரு நாட்களில் சொந்த ஊருக்கு சென்று மனைவியை கோவைக்கு அழைத்து வர திட்டமிட்டு இருந்தார்.</p><h2>செல்போன் சுவிட்ச்-ஆப்</h2><p>இந்த நிலையில் நேற்று காலை அழகேசன் தங்கி இருந்த வீடு நீண்டநேரம் ஆகியும் திறக்கப்படவில்லை. அத்துடன் அழகேசனின் மனைவி அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து அவருடன் வேலை செய்து வரும் சக ஊழியர்கள் அந்த வீட்டுக்கு வந்து கதவை தட்டினர். பலமுறை தட்டியும் கதவு திறக்கப்படாததால், சந்தேகம் அடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>அப்போது மின்விசிறியில் அழகேசன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இந்த சம்பவம் குறித்து கவுண்டம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீயணைப்பு வீரர் தற்கொலை செய்ய குடும்ப பிரச்சினை காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மீனாட்சி அம்மன் கோவில் நில முறைகேடு வழக்கு: முக்கிய குற்றவாளி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/meenakshi-amman-temple-land-scam-case-main-accused-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/meenakshi-amman-temple-land-scam-case-main-accused-arrested#comments</comments><guid isPermaLink="false">b18ab6d0-823f-4f74-8221-41e604364fb6</guid><pubDate>Tue, 04 Aug 2026 12:44:42 +0000</pubDate><atom:updated>2026-08-04T12:44:42.560Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மதுரை,குற்றவாளி,Meenakshi Amman Temple,மீனாட்சி அம்மன் கோவில்,நில முறைகேடு,land scam,கைதுArrest</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/pz1qa9o4/180.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/pz1qa9o4/180.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ரூ.100 கோடி நிலம் போலியான ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கை விசாரித்து வரும் நிலையில் அதில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>நில முறைகேடு</h2><p>இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மதுரை மீனாட்சி அம்மன் கோலிலுக்கு சொந்தமான சுமார் ரூ.60 கோடி கோடி மதிப்பிலான 179 ஏக்கர் நிலம் முறைகேடாக பட்டா மாற்றம் செய்யப்பட்டு, பத்திரப்பதிவு மூலம் ஆக்கிரமித்துள்ளது அரங்கேறியுள்ளது. அறநிலையத்துறையையை அதிரவைக்கும் அளவுக்கு நடந்துள்ள இந்த மோசடி தொடர்பாக விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. </p><p>இந்த வழக்கில், முனனாள் தாசில்தார் அன்பழகள், முன்னாள் கிராமி நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) அரசன், சார்பதிவாளர்கள் பிரகாஷ். அனந்தராமன், தங்கள் பெயருக்கு பட்டா மாற்றம் செய்த ராமாயி ஆயியார், செந்தமிழ்ச் செல்வி உள்ளிட்ட 19 பேர் மீது, கோவில் இணை ஆணையர் செல்லத்துரை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.</p><h2>முக்கிய நபர் கைது</h2><p>விசாரணையில், போலிஆவணங்கள் தாக்கல் செய்து பட்டா பெற்றதாக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 40) என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும், நில மோசடிக்கு மூளையாக செயல்பட்ட தாகக் கூறப்படும் இளையராஜா (52) என்பவரை, தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் அவர் பெங்களுருவில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று இளையராஜாவை கைது செய்தனர். பின்னர் அவரை மதுரைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்யும் நடவடிக்கையும் தீவிரமாக நடைபெற்று வருவதாக மத்திய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>வலிப்பு வந்தது போல் நடித்து பணம் பறித்த பாட்டி: வீடியோவில் வசமாக சிக்கினார்! </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/elderly-woman-who-faked-a-seizure-to-extort-money-caught-red-handed-on-video</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/elderly-woman-who-faked-a-seizure-to-extort-money-caught-red-handed-on-video#comments</comments><guid isPermaLink="false">db78cc09-4ea0-4ad1-9bc8-c46ed1cb2d69</guid><pubDate>Tue, 04 Aug 2026 12:34:06 +0000</pubDate><atom:updated>2026-08-04T12:34:06.371Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவை,Elderly woman,பணம் பறிப்பு,grandmother,பாட்டி,Kovai</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/eossvln9/73.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ மர்ம பாட்டி]]></media:title><media:description type="html"><![CDATA[ நடுரோட்டில் திடீரென வலிப்பு வந்தது போல் நடித்து பொதுமக்களிடம் நூதன முறையில் பாட்டி பணம் பறித்தார்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/eossvln9/73.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p>கோவையில் நடுரோட்டில் திடீரென வலிப்பு வந்தது போல் நடித்து பொதுமக்களிடம் நூதன முறையில் பணம் பறித்து வந்த பாட்டி குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><h2>நடுரோட்டில் நாடகம்</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கோவை மாவட்டம் </a>ரத்தினபுரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஒரு பாட்டி சுற்றித் திரிந்தார். அவர் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலைகளில் செல்லும்போது, திடீரென தரையில் விழுந்து தனக்குக் கடுமையான வலிப்பு ஏற்பட்டது போலக் கைகால்களை உதறி நடித்துள்ளார்.</p><h2>பரிதாபப்பட்டுப் பணம் கொடுத்த மக்கள்</h2><p>இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், மனிதாபிமான அடிப்படையில் ஓடிவந்து அவருக்கு முதலுதவி செய்துள்ளனர். பின்னர், மருத்துவச் செலவிற்காகப் பரிதாபப்பட்டுத் தங்களால் இயன்ற பணத்தையும் அவரிடம் கொடுத்து அனுப்பியுள்ளனர்.</p><h2>கையும் களவுமாகச் சிக்கிய வீடியோ</h2><p>இந்நிலையில், அந்தப் பாட்டி இதே பாணியில் வெவ்வேறு இடங்களில் தொடர்ந்து நாடகமாடிப் பணம் பறிப்பதைச் சில பொதுமக்கள் கவனித்துள்ளனர். திரைப்படப் பாணியில் மக்களை ஏமாற்றி வந்த அந்தப் பாட்டியின் உண்மை முகத்தை வெளிக்கொண்டு வரும் வகையில், அவர் வலிப்பு வருவது போல் நடிக்கும் காட்சிகளைப் பொதுமக்கள் தங்களது மொபைல் போனில் ரகசியமாகப் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். தற்போது அந்தப் பாட்டியின் "ஆக்டிங்" வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/LFi0DdSGG9o"></iframe></figure><h2>போலீசார் விசாரணை</h2><p>பொதுமக்களை ஏமாற்றிப் பணம் பறித்த அந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மர்ம பாட்டி </a>யார், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரங்கள் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. இது குறித்து தகவல் அறிந்த உள்ளூர் போலீசார், வைரல் வீடியோ ஆதாரங்களை வைத்துக் கொண்டு அந்தப் பாட்டியை தேடி வருகின்றனர். சாலையில் யாராவது ஆபத்தில் இருந்தால் உதவுவது நல்லது என்றாலும், இதுபோன்ற மோசடிப் பேர்வழிகளிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>உதயநிதி ஸ்டாலினை விசாரிக்கும் இடத்தை மாற்றிய காவல்துறை..என்ன காரணம்?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/traffic-banned-in-thanjavur-south-5-district-sps-summoned</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/traffic-banned-in-thanjavur-south-5-district-sps-summoned#comments</comments><guid isPermaLink="false">706f7253-ed96-4eb8-9514-958d7244d240</guid><pubDate>Tue, 04 Aug 2026 12:10:58 +0000</pubDate><atom:updated>2026-08-04T12:10:58.441Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,arrest,தஞ்சை,காவல் நிலையம்,போக்குவரத்து தடை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/5cvh5duy/police33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
தஞ்சை தெற்கில் போக்குவரத்துக்கு தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/5cvh5duy/police33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சை </p><p>தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களின் எஸ்.பி.க்கள் தஞ்சைக்கு வருகை தந்துள்ளனர்.</p><p>தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து சர்ச்சையாக பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது தவெக மகளிரணி நிர்வாகி ஒருவர் புகார் அளித்தார். அந்த புகார் அடிப்படையில் உதயநிதி ஸ்டாலினை அவரின் வீட்டிற்கே சென்று போலீசார் இன்று காலை கைது செய்தனர்.</p><h2>உதயநிதி ஸ்டாலின் கைது</h2><p>காலை 11 மணியளவில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">உதயநிதி ஸ்டாலினை</a> கைது செய்த போலீசார், அங்கிருந்து தஞ்சாவூர் அழைத்து செல்ல புறப்பட்டனர். இதனிடையே உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தமிழ்நாடு முழுக்க திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே உதயநிதி ஸ்டாலினை இன்றே விசாரித்துவிட்டு விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தியது.</p><h2>மதிய உணவு சாப்பிட்ட உதயநிதி</h2><p>2 மணியளவில் விழுப்புரம் அருகே ஒலப்பூர் காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் உணவு சாப்பிட்டார். தொடர்ந்து 4 மணியளவில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை போலீசார் வாகனம் கடந்து சென்றது. திருச்சி சென்று அங்கிருந்து தஞ்சாவூர் செல்ல காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். கிட்டத்தட்ட 8 மணி நேரத்திற்கும் அதிகமாக உதயநிதி ஸ்டாலின் வேனிலேயே பயணம் செய்து வருகிறார். </p><p>பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு பிளாஸ்க்கில்  முன்னாள் அமைச்சர் சி.வி.கணேசன் தேனீர் வழங்கினர்.</p><h2>போலீஸ் குவிப்பு</h2><p>இந்தநிலையில்,  உதயநிதி விசாரணைக்காக தஞ்சை தெற்கு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உதயநிதி மீது தஞ்சை கிழக்கு சரக காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது.</p><p>திமுகவினர் அதிகளவு கூடாத வண்ணம் தஞ்சை தெற்கில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெரியகோவில் மேம்பாலம் வழியாக போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.  சாலை இருபுறங்களிலும் தடுப்புகள் அமைத்து திருப்பி அனுப்பப்படும் வாகனங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. தஞ்சை தெற்கு காவல் நிலைய பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>5 மாவட்ட எஸ்.பி.க்கள் வருகை</h2><p>எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விசாரணைக்கு அழைத்து வரப்பட இருக்கும் நிலையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள் தஞ்சை வருகை தந்துள்ளனர். தஞ்சை தெற்கு காவல் நிலையத்தைச் சுற்றியும் பேரிகார்டுகள் மூலம் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>என்ன காரணம்</h2><p>தஞ்சை கிழக்கு காவல் நிலையம் அமைந்துள்ள பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி என்பதால், உதயநிதி ஸ்டாலினை தஞ்சை மணிமண்டபம் உள்ள தெற்கு காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து விசாரிக்க காவல்துறை முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமிக்கு, எல்.முருகன் பிறந்தநாள் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/happy-birthday-to-puducherry-chief-minister-rangasamy-l-murugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/happy-birthday-to-puducherry-chief-minister-rangasamy-l-murugan#comments</comments><guid isPermaLink="false">dd1c83b1-8c7c-41fc-b1a3-82e515a7096c</guid><pubDate>Tue, 04 Aug 2026 12:09:32 +0000</pubDate><atom:updated>2026-08-04T12:09:32.928Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எல்.முருகன்,சென்னை,L. Murugan,புதுச்சேரி,puducherry,வாழ்த்து,பிறந்தநாள்,புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/v1alvp23/179.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எல்.முருகன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/v1alvp23/179.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமிக்கு, எல்.முருகன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><p>புதுச்சேரி முதல்-அமைச்சர் என். ரங்கசாமி இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதனையொட்டி, அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.</p><h2>வாழ்த்து</h2><p>அந்த வகையில் மத்திய பாராளுமன்ற விவகாரத் துறை மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை இணை மந்திரி<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D.%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D"> எல்.முருகன்</a>, புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமிக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>எளிமை, நேர்மை மற்றும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட அவரது பொதுவாழ்க்கைப் பணி மேலும் சிறக்கவும், அவர் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் தொடர்ந்து மக்கள் சேவையாற்றிட எல்லாம் வல்ல இறைவனை மனமாரப் பிரார்த்திக்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடக்கம்

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tavega-mla-meeting-begins</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tavega-mla-meeting-begins#comments</comments><guid isPermaLink="false">5b652bd3-bee8-4a8e-8762-141de64f597b</guid><pubDate>Tue, 04 Aug 2026 12:02:43 +0000</pubDate><atom:updated>2026-08-04T12:02:43.662Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,எம்.எல்.ஏ.,MLA,தமிழக சட்டசபை,TN Assembly,தமிழக பட்ஜெட்,TN Budget,TN Assembly session,தமிழக சட்டசபை கூட்டத்தொடர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/q475nop8/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/q475nop8/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான <a href="https://www.dailythanthi.com/">தவெக </a>அரசின் முதல் சட்டசபை கூட்டம் கடந்த  ஜூன் 18ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட சட்டசபை நாளை கூட உள்ளது.</p><p>சட்டசபையில்  2026-27ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தவெக அரசு  நாளை தாக்கல் செய்ய உள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடக்கம்</h2><p>இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. </p><p>இந்த கூட்டத்தில் நாளை தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் சட்டசபையில் எவ்வாறு  செயல்படுவது என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. </p>]]></content:encoded></item><item><title>நத்தம் அருகே தென்னை நார் குடோனில் பயங்கர தீ விபத்து </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/massive-fire-at-a-coir-warehouse-near-natham</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/massive-fire-at-a-coir-warehouse-near-natham#comments</comments><guid isPermaLink="false">e587d395-7e14-4119-94ed-8ec60c95b85c</guid><pubDate>Tue, 04 Aug 2026 11:54:37 +0000</pubDate><atom:updated>2026-08-04T11:54:37.323Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திண்டுக்கல்,Fire accident,தீ விபத்து,தீயணைப்பு வீரர்கள்,police enquiry,Dindugal</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/sxiabs18/natham-fire-accident.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ தீ விபத்து]]></media:title><media:description type="html"><![CDATA[ திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் தென்னை நார் குடோனில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/sxiabs18/natham-fire-accident.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><p>திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் தென்னை நார் குடோனில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.</p><h2>தீ விபத்து</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">திண்டுக்கல் மாவட்டம்</a> நத்தம் அருகே உள்ள உலுப்பகுடி பகுதியில் தனியார் தென்னை நார் குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. வழக்கம்போல் இன்று (செவ்வாய்க்கிழமை) குடோனில் பணிகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக ஒரு பகுதியில் புகை மூட்டம் ஏற்பட்டு திடீரென தீப்பற்றி எரிந்தது.</p><h2>தொழிலாளர்கள் அலறல்</h2><p>நார் கழிவுகள் அதிகம் இருந்ததால், மளமளவென தீ குடோன் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த, தொழிலாளர்கள் அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர்.</p><h2>தீயணைப்புத் துறை நடவடிக்கை</h2><p>இது குறித்து உடனடியாக நத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தீயணைப்பு வீரர்கள்</a>, தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இருப்பினும், வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் கடுமையாகப் போராடி தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.</p><h2>சேத விவரங்கள்</h2><p>அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் ஊழியர்கள் யாருக்கும் எந்தவித உயிர்ச்சேதமோ அல்லது காயமோ ஏற்படவில்லை. ஆனால், குடோனில் வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான தேங்காய் நார் கழிவுகள் மற்றும் அங்கிருந்த 2 எந்திரங்கள் தீயில் கருகின. சேதமதிப்பு சுமார் ரூ.10 லட்சம் இருக்கும் என தெரிகிறது.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இச்சம்பவம் குறித்து நத்தம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற பல கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>கரூர்: காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி 

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-kaveri-river-drowning-3-killed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-kaveri-river-drowning-3-killed#comments</comments><guid isPermaLink="false">424bbd03-76ea-4b4e-a999-97a1dc133daa</guid><pubDate>Tue, 04 Aug 2026 11:44:30 +0000</pubDate><atom:updated>2026-08-04T11:44:30.671Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர்,Karur,Cauvery River,காவிரி ஆறு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/q0w3ly7u/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/q0w3ly7u/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[   <p>கரூர்,</p><p><a href="https://www.dailythanthi.com/">கரூர் </a>மாவட்டம் நெரூரில் காவிரி ஆற்றில் இன்று முன்னோருக்கு திதி கொடுக்க பலர் குவித்திருந்தனர். அப்போது, அப்பகுதியை சேர்ந்த 3 அர்ச்சகர்கள் திதி கொடுப்பதற்காக காவிரி ஆற்றில் இறங்கியுள்ளனர்.</p><h2>3 பேர் பலி</h2><p>ஆற்றில் இறங்கி சடங்குகளில் ஈடுபட்டிருந்தபோது 3 பேரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், விரைந்து சென்று 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். </p> ]]></content:encoded></item><item><title>ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஆக்கப்பூர்வ அரசியலை முன்னெடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ruling-and-opposition-parties-must-pursue-constructive-politics-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ruling-and-opposition-parties-must-pursue-constructive-politics-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">5ec98a1e-23eb-4749-997b-d73731be8481</guid><pubDate>Tue, 04 Aug 2026 11:26:37 +0000</pubDate><atom:updated>2026-08-04T11:26:37.179Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/o17b1888/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/o17b1888/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>மேகதாது அணை கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது முதல்-அமைச்சர் விஜய் குறித்து தெரிவித்த சில கருத்துகளுக்காக  எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை கைது செய்யப்பட்டிருக்கிறார்.  உதயநிதி ஸ்டாலினின் பேச்சும், கைது  நடவடிக்கையும் கண்டிக்கத்தக்கவை; இரண்டும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.</p><p>தஞ்சாவூர் போராட்டத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத கண்ணியமற்றதாகும்.  இது கண்டிக்கத்தக்கது. துணை முதல்-அமைச்சர் பொறுப்பு வகித்த, எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பு வகிக்கும் ஒருவர் கண்ணியமான முறையில் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும்.</p><p>அதே நேரத்தில், உதயநிதி ஸ்டாலினை இவ்வளவு அவசரமாக கைது செய்ய வேண்டிய தேவை இல்லை. நண்பகல் 12 மணி வரை அவரை கைது செய்வதைத் தவிர்க்கும்படி ஐகோர்ட்டே அறிவுறுத்திய பிறகும்  எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் இருக்கும் ஒருவரை, அதுவும் நாளை சட்டப்பேரவைக் கூடவுள்ள நிலையில் கைது செய்ய வேண்டிய அவசரம் இல்லை. தமிழகத்தின் தலையாய பிரச்சினைகளில் கூட காட்டப்படாத அவசரத்தை இந்த கைது நடவடிக்கையில் அரசும், காவல்துறையும் காட்டியதன் பின்னணியில் இருப்பது அரசியல் மட்டும்தான்.</p><p>தமிழ்நாட்டில் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் ஏராளமாக உள்ளன. அவற்றைத்  தீர்ப்பதில்தான் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் அக்கறை காட்ட வேண்டுமே தவிர இது போன்ற செயல்களில் அல்ல. இனியாவது ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஆக்கப்பூர்வ அரசியல் செய்ய முன்வர வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டிருப்பதால் சட்டம் - ஒழுங்கு எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஆயிரம் சிறைச்சாலைகளை சந்திக்க திமுக தொண்டர்கள் தயார் -  திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-workers-ready-to-visit-a-thousand-prisons-dmk-mla-markandeyan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-workers-ready-to-visit-a-thousand-prisons-dmk-mla-markandeyan#comments</comments><guid isPermaLink="false">dbbeae47-600d-453e-b6c3-4c54399a93ec</guid><pubDate>Tue, 04 Aug 2026 11:20:06 +0000</pubDate><atom:updated>2026-08-04T11:20:06.080Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,முதல்-அமைச்சர் விஜய்,CMVijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/k2i6dmhi/mla22.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திமுக தொண்டர்கள் தயார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/k2i6dmhi/mla22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>ஆயிரம் சிறைச்சாலைகளை சந்திக்க திமுக தொண்டர்கள் தயாராக உள்ளனர் என திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கூறியுள்ளார்.</p><p>முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும், இழிவாகவும் பேசியதாக திமுகவை சார்ந்தவர்கள் மீது தொடர்ச்சியாக புகார் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏவான மார்க்கண்டேயன் முதல்-அமைச்சரை மிரட்டும் தொனியில் பேசியதாக கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.</p> <p>இந்தநிலையில்,  பாளையங்கோட்டை சிறையில் இருந்து வெளியே வந்த விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>ஆயிரம் சிறைச்சாலைகளை சந்திக்க <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">திமுக தொண்டர்கள் </a>தயாராகவே உள்ளனர். சிறையில் அடைப்பதால் என்னை ஒடுக்கிவிட முடியாது. எத்தனை வருடங்கள் சிறையில் இருந்தாலும் ஜனநாயகத்தை காப்பாற்றுவோம்.</p><p>சட்டப்பேரவையில் கடுமையான எதிர்வினைகளை திமுக கொடுக்கும் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>&quot;போராட்டம் என்கிற பெயரில் திமுக அராஜகம்&quot; - வானதி சீனிவாசன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-anarchy-in-the-name-of-protest-vanathi-srinivasan-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-anarchy-in-the-name-of-protest-vanathi-srinivasan-condemns#comments</comments><guid isPermaLink="false">64180f25-d2d3-49a4-b49d-a10cecb872a9</guid><pubDate>Tue, 04 Aug 2026 11:10:55 +0000</pubDate><atom:updated>2026-08-04T11:10:55.392Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவை,திமுக,protest,உதயநிதி ஸ்டாலின்,Vanathi Srinivasan,Condemn,கைதுArrest</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/gjncba3o/vanathi-srinivasan-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/gjncba3o/vanathi-srinivasan-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையை கண்டித்து போராட்டம் என்ற பெயரில் இன்று திமுகவினர் அரங்கேற்றும் அராஜகங்கள் கடும் கண்டனத்திற்குரியவை என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.</p><p>இது தொடர்பாக, தேசிய பாஜக மகளிரணி தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D">வானதி சீனிவாசன்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>கண்டனம்</h2><p>உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையை கண்டித்து போராட்டம் என்ற பெயரில் இன்று திமுகவினர் அரங்கேற்றும் அராஜகங்கள் கடும் கண்டனத்திற்குரியவை. பொதுமக்கள், வாகன ஓட்டிகள், காவல்துறையினரையே அச்சுறுத்தும் வகையில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் இந்த செயல்கள் ஜனநாயகத்திற்கு எதிரானவை.</p><p>சட்டம் தனது கடமையைச் செய்யும் போது அதற்கு மதிப்பளிக்காமல் வன்முறை மற்றும் அச்சுறுத்தல் அரசியலை முன்னிறுத்துவது திமுக இன்னும் திருந்தவில்லை என்பதற்கே சான்று. பெண்களை தொடர்ந்து இழிவுபடுத்திப் பேசும் தங்களது கட்சியினரைக் கண்டிக்காமல் மௌனம் காக்கும் திமுக மகளிர் அணி, பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் தார்மீக உரிமையையே இழந்து விட்டது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஜாமீனில் விடுதலை

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vilaathikulam-dmk-mla-markandeyan-released-on-bail</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vilaathikulam-dmk-mla-markandeyan-released-on-bail#comments</comments><guid isPermaLink="false">434c1879-afa8-44f8-97db-fe45d81c6216</guid><pubDate>Tue, 04 Aug 2026 11:07:59 +0000</pubDate><atom:updated>2026-08-04T11:07:59.033Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,எம்.எல்.ஏ.,MLA,மார்க்கண்டேயன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/ompaingj/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/ompaingj/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>நெல்லை,</p> <p><a href="https://www.dailythanthi.com/">தூத்துக்குடி </a>மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த 18-ந் தேதி தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கு  மிரட்டல் விடுக்கும் வகையிலும், அவதூறாகவும் பேசினார். </p><p>இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை போலீசார் கடந்த 20ம் தேதி கைது செய்தனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மார்க்கண்டேயனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க கோர்ட்டு உத்தவிட்டது. இதையடுத்து அவர் நெல்லை பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.  </p><h2>ஜாமீன் மனு தள்ளுபடி</h2><p>இதையடுத்து, தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தாக்கல் செய்த மனுவை தூத்துக்குடி கோர்ட்டு கடந்த 22ம் தேதி தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி தூத்துக்குடி கோர்ட்டில் 2வது முறையாக மார்க்கண்டேயன் மீண்டும் மனு தாக்கல் செய்தார். அதை 30ம் தேதி விசாரித்த கோர்ட்டு அந்த ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்தது.</p><h2>மீண்டும் மனு</h2><p>இதனை தொடர்ந்து, முதல்-அமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுத்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். </p><p>இந்த மனுவை நேற்று விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.</p><h2>விடுதலை</h2><p>இந்நிலையில், ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியதையடுத்து பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் விடுதலை செய்யப்பட்டார்.  சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட மார்க்கண்டேயனை திமுகவினர் வரவேற்றனர். </p><h2>மார்க்கண்டேயன் பேசியது என்ன?</h2><p>மானங்கெட்ட தமிழ்நாட்டினுடைய முதல் அமைச்சர்.. உன்னைய சட்டமன்றத்திற்குள் வைத்து பார்த்துகுறோம்.. நாங்க என்ன கோமாளி பயல்கள்னு நினைக்கிறீங்களா.. சட்டமன்றத்தை பூட்டுவாராம்.. பூட்டினால் எலும்பு இருக்காது உடைத்துவிட்டுதான் உன்னை அனுப்பி விடுவோம். இவ்வளவு ஒரு கேவலமான ஒரு முதல்வரை தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய வரலாறே பெற்றது இல்லை என மார்க்கண்டேயன் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>கைதுக்கு முன் மகனை பார்த்ததும்   கட்டி தழுவிய உதயநிதி ஸ்டாலின் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/udayanidhi-stalin-hugs-son-ahead-of-arrest</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/udayanidhi-stalin-hugs-son-ahead-of-arrest#comments</comments><guid isPermaLink="false">2065034d-a0bc-4336-8a83-6daea78fb363</guid><pubDate>Tue, 04 Aug 2026 10:59:41 +0000</pubDate><atom:updated>2026-08-04T10:59:41.434Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,கைது,arrest,son,கிருத்திகா உதயநிதி,மகனை,Kiruthiga Udhayanidhi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/89sig1xz/stalinson.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/89sig1xz/stalinson.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கைதுக்கு முன் தனது மகன் இன்பநிதியை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்</a> பாசத்தோடு  கட்டி தழுவினார்.</p><h2>கைது செய்யப்பட்டார்</h2><p>தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய பேச்சு தொடர்பாக, தமிழக எதிர்க்கட்சி தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று காலை சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து தஞ்சாவூர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.</p><h2>கட்டி தழுவினார்</h2><p>போலீசார் அவரது வீட்டு வாசலில் குவிக்கப்பட்டு, கைது நடவடிக்கைகள் தீவிரமடைந்த வேளையில் வீட்டில் பெரும் பரபரப்பு நிலவியது. அப்போது, வீட்டை விட்டு வெளியேறி போலீஸ் வாகனத்தில் ஏறுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பாக, தனது மகன் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%20">இன்பநிதியை</a> உதயநிதி ஸ்டாலின் பாசத்தோடு  கட்டி தழுவினார். மகனை அனைத்துவிட்டு இன்முகத்தோடு போலீசாருடன் சென்ற காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில்  பரவி வருகிறது.</p><h2>காரசார விவாதம்</h2><p> உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய போலீசார் வீட்டுக்குள்ளே நுழைய முயன்றபோது, அவரது மனைவி கிருத்திகா உதயநிதி மற்றும் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் போலீசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எவ்வித முகாந்திரமும் இன்றி இந்த அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை அரங்கேற்றப்படுவதாக திமுகவினர் குற்றம் சாட்டினர்.</p><h2>தொண்டர்கள் திரண்டதால் பதற்றம்</h2><p>கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலினை போலீசார் காரில் ஏற்றி அழைத்து செல்ல முயன்றபோது, நீலாங்கரை இல்லத்தின் முன்பு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள் போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் குதித்தனர். இதனால் அந்த பகுதியே ஸ்தம்பித்தது. </p><p>தொண்டர்களை கலைத்துவிட்டு போலீசார் தற்பொழுது அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து சென்றுள்ளனர். உதயநிதி ஸ்டாலின் கைதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தற்பொழுது உச்சகட்ட பதற்றமும் பரபரப்பும் தொற்றிக்கொண்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எல்எல்ஏவாக இருக்கக்கூட உதயநிதிக்கு தகுதியில்லை
- அமைச்சர் நிர்மல்குமார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/udhayanidhi-is-not-even-qualified-to-be-an-lla-minister-nirmal-kumar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/udhayanidhi-is-not-even-qualified-to-be-an-lla-minister-nirmal-kumar#comments</comments><guid isPermaLink="false">dc030d3c-ce16-4d0f-9c9a-652c536944c0</guid><pubDate>Tue, 04 Aug 2026 10:59:06 +0000</pubDate><atom:updated>2026-08-04T10:59:06.077Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,திமுக,DMK,உதயநிதி ஸ்டாலின்,Nirmalkumar,அமைச்சர் நிர்மல் குமார்,CMVijay‌</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/lwofk86u/nirmal33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார்|]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/lwofk86u/nirmal33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>எதிர்க்கட்சித் தலைவர் அல்ல, ஒரு எல்எல்ஏவாக நிற்கக்கூட உதயநிதிக்கு தகுதியில்லை என அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.</p><h2>ஜெயலலிதா இருந்திருந்தால்...</h2><p>எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டது குறித்து, தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா  உயிருடன் இருந்திருந்தால் இத்தகைய சூழலில் என்ன நடவடிக்கை எடுத்திருப்பாரோ, அதைத்தான் இன்று முதல்-அமைச்சர் விஜய் அவர்கள் துணிச்சலாகச் செய்திருக்கிறார்.</p><h2>இபிஎஸ் வேடிக்கை</h2><p>தான் ஆட்சியில் இருக்கும்போதே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா குறித்து உதயநிதி ஸ்டாலின் கொச்சையாகப் பேசியபோதும், அன்றைய முதல்-அமைச்சராக இருந்த இபிஎஸ் அவர் மீது எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.</p><p>ண்களுக்கு எதிராக இன்று யார் அநாகரீகமாகப் பேசினாலும், அவர்கள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் சரி, அவர்கள் மீது இந்தத் தவெக அரசு எந்தவித தயவுதாட்சண்யமும் இன்றிச் சட்டப்பூர்வமான கடுமையான நடவடிக்கையைத் தொடர்ந்து எடுக்கும்.</p><h2>திமுகவினர் வீடுகளில் போட்டுக் காட்டவேண்டும்</h2><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி</a> பேசியதில் ஏதாவது ஒரு வார்த்தை ஏற்புடையதாக இருக்கிறதா? என்பதை திமுகவினர் தங்கள் வீடுகளில் போட்டுக் காட்டவேண்டும்.  இவ்வளவு கீழ்த்தரமாக, கேவலமாக பேச உதயநிதிக்கு என்ன அவசியம் இருக்கிறது? எதிர்க்கட்சித் தலைவர் அல்ல, ஒரு எல்எல்ஏவாக இருக்கக்கூட உதயநிதிக்கு தகுதியில்லை.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>‘டிஜிட்டல் கைது’ மிரட்டல்: முதிய தம்பதியிடம் ரூ.1.53 கோடி மோசடி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/digital-arrest-threat-elderly-couple-defrauded-of-153-crore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/digital-arrest-threat-elderly-couple-defrauded-of-153-crore#comments</comments><guid isPermaLink="false">bea51f82-5555-46ce-83a8-9c3b25bd61f7</guid><pubDate>Tue, 04 Aug 2026 10:46:49 +0000</pubDate><atom:updated>2026-08-04T10:46:49.434Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவை,Money fraud,elderly couple,வயதான தம்பதி,Kovai,மிரட்டி பணம் பறிப்பு</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/adzsfuc2/71.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ முதிய தம்பதி]]></media:title><media:description type="html"><![CDATA[  70 வயது முதிய தம்பதியை, மர்ம நபர்கள் 'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்வதாக மிரட்டி ரூ.1.53 கோடி பறித்துள்ளனர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/adzsfuc2/71.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கோவை </a>மாவட்டத்தில் 70 வயது முதிய தம்பதியை, மர்ம நபர்கள் 'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்வதாக மிரட்டி ரூ.1.53 கோடி பறித்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><h2>முதிய தம்பதி</h2><p>கோவையில் உள்ள முதியோருக்கான பிரத்யேக அடுக்குமாடி குடியிருப்பில் 70 வயது <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">முதிய தம்பதி </a>வசித்து வந்தனர். அந்த தம்பதியின் 2 மகள்களும் வெளிநாட்டில் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி மர்ம நபர்கள் தொலைபேசி வாயிலாக அந்த தம்பதியினரை தொடர்பு கொண்டனர். அவர்கள் மத்திய புலனாய்வு அமைப்பு மற்றும் மும்பை குற்றப்பிரிவு போலீசார் என தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.</p><h2>மர்ம நபர்களின் மிரட்டல்</h2><p>முதியவர்களின் வங்கி கணக்குகள் மூலம் சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் நடந்துள்ளதாகக் கூறி மிரட்டியுள்ளனர். வழக்கில் இருந்து தப்பிக்க வேண்டுமானால், தங்களது வங்கி கணக்கில் உள்ள பணத்தை விசாரணைக்காகக் கூறப்படும் கணக்கிற்கு மாற்ற வேண்டும் என கட்டாயப்படுத்தினர். மேலும், ஆன்லைன் வீடியோ அழைப்பு மூலம் அவர்களைக் கண்காணித்து, 'டிஜிட்டல் முறையில் கைது' செய்து வைப்பதாகக் கூறி <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மர்ம நபர்கள் </a>பயமுறுத்தினர்.</p><h2>ரூ.1.53 கோடி பறிப்பு</h2><p>அவர்களின் மிரட்டலுக்கு பயந்த முதிய தம்பதியினர், தங்கள் வாழ்நாள் சேமிப்பான ரூ.1.53 கோடியை மோசடி கும்பல் தெரிவித்த குறிப்பிட்ட பல்வேறு வங்கி கணக்குகளுக்குப் பிரித்து அனுப்பியுள்ளனர். பணம் அனுப்பிய பிறகு, தங்களை ஏமாற்றியதை உணர்ந்த தம்பதியினர் இது குறித்து கோவை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>போலீசார் முக்கிய எச்சரிக்கை</h2><p>எந்தவொரு அரசு விசாரணை அமைப்பும் ஆன்லைன் வீடியோ அழைப்பு மூலம் யாரையும் 'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்யாது. இது போன்ற மிரட்டல் அழைப்புகள் வந்தால் பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம். பணத்தை உடனடியாக அனுப்பாமல், குடும்பத்தினரிடமோ அல்லது காவல்துறைக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும்.</p><p>சைபர் மோசடிக்கு ஆளானால் உடனடியாக 1930 என்ற உதவி எண்ணையோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தையோ தொடர்பு கொள்ள வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>உதயநிதி கைது நியாயமான நடவடிக்கையே: அமைச்சர் அருண்ராஜ் பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/udhayanidhis-arrest-is-a-fair-move-minister-arunraj</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/udhayanidhis-arrest-is-a-fair-move-minister-arunraj#comments</comments><guid isPermaLink="false">43a84999-aaf5-4a81-9772-3d3fe0b1d278</guid><pubDate>Tue, 04 Aug 2026 10:35:43 +0000</pubDate><atom:updated>2026-08-04T10:35:43.604Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,TNPolice,UdhayanidhiStalin,அமைச்சர் அருண்ராஜ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/biqm8zzw/arun33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் அருண்ராஜ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/biqm8zzw/arun33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திமுக ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்,  முதல்-அமைச்சர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக 9 பிரிவுகளின் கீழ் தஞ்சாவூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.</p><p>சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி இல்லத்துக்கு இன்று காலை சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்து தஞ்சாவூருக்கு அழைத்து சென்றுள்ளனர்.  உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>இந்தநிலையில்,  <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D">அமைச்சர் அருண்ராஜ்</a> சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>சட்டமன்றத்துக்கு வரக்கூடாது என நினைத்து உதயநிதி அப்படி பேசியிருப்பார்.பெண்களுக்கு எதிரான குற்றங்களை யார் செய்தாலும் தவெக அரசு பார்த்துக்கொண்டிருக்காது. அரசியலை அரசியலாக மட்டுமே பார்க்க வேண்டும். பெண்கள் குறித்து தவறாக பேசக்கூடாது என்றார்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.710 கோடி மதிப்பிலான 4 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் அடிக்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-laid-the-foundation-stone-for-4-new-projects-worth-rs-710-crore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-laid-the-foundation-stone-for-4-new-projects-worth-rs-710-crore#comments</comments><guid isPermaLink="false">05d287a5-daa1-45ab-8db7-88836b552ac0</guid><pubDate>Tue, 04 Aug 2026 10:32:21 +0000</pubDate><atom:updated>2026-08-04T10:32:21.382Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,தலைமைச் செயலகம்,அடிக்கல் நாட்டினார்,புதிய திட்டப் பணிகள்,New Project,முதல்-அமைச்சர் விஜய்,Tamil Nadu Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/ttsa3okv/178.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/ttsa3okv/178.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>ரூ.710 கோடி மதிப்பிலான 4 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டினார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் நகராட்சி நிருவாக இயக்குநரகத்தின் சார்பில் காணொலிக் காட்சி வாயிலாக 112.85 கோடி ரூபாய் செலவில் 4 முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, 710.50 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 4 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.</p><h2>திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற பணிகளின் விவரங்கள்</h2><p><strong>திருப்பூர்</strong> மாநகரின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தவும், வடக்கு மற்றும் தெற்கு திருப்பூர் பகுதிகளுக்கு இடையேயான இணைப்பை வலுப்படுத்தவும், மழைக்காலங்களில் வெள்ளத்தால் ஏற்படும் போக்குவரத்துத் தடைகளைத் தவிர்ப்பதற்காகவும் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதியின் கீழ், 18 கோடி ரூபாய் செலவில் திருப்பூர் மாநகராட்சி, வார்டு 44-க்குட்பட்ட ஈஸ்வரன் கோவில் சாலையில், ஸ்ரீ சக்தி தியேட்டர் சாலை மற்றும் யூனியன் மில் சாலையை இணைக்கும் வகையில் நொய்யல் ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த உயர்மட்டப் பாலம் நகரின் வளர்ந்துவரும் மக்கள்தொகை, தொழில் வளர்ச்சி மற்றும் எதிர்காலப் போக்குவரத்துத் தேவைகளைக் கருத்தில்கொண்டு. முக்கியமான உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டமாக வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.</p><p><strong>பெருந்துறை</strong> நகராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்கு, நாள்தோறும் நபர் ஒருவருக்கு 73 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள குடிநீர் விநியோகக் குழாய்கள் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டுள்ளதாலும்,அவை அனைத்தும் பழுதடைந்து அடிக்கடி உடைப்பு ஏற்படுவதாலும், நகராட்சிப் பகுதிகள் வளர்ச்சி அடைந்த பகுதிகளாக உள்ளதாலும், தற்போதைய மக்கள்தொகை மற்றும் குடிநீரின் தேவையினைப் பூர்த்தி செய்யும் நோக்கில், இப்பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யும் பொருட்டு அம்ரூத் 2.0 திட்டத்தின்கீழ் 22.65 கோடி ரூபாய் செலவில் குடிநீர் அபிவிருத்தி மேம்பாட்டுப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. மேலும், எல்லைமேடு பகுதியில் 1.5 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கக் தொட்டி, 117.26 கி.மீ நீளமுள்ள பகிர்மானக் குழாய்கள் மற்றும் 2.010 கி.மீ நீளமுள்ள பிரதான குழாய்கள் அமைக்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம் 10,080 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு நகரம் முழுவதும் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும்.</p> <p><strong>கோத்தகிரி</strong> நகராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கு, நாள்தோறும் நபர் ஒருவருக்கு 70 லிட்டர் (LPCD) சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள குடிநீர் விநியோகக் குழாய்கள் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டுள்ளதால் அவை அனைத்தும் பழுதுதடைந்து அடிக்கடி உடைப்பு ஏற்படுவதாலும், நகராட்சிப் பகுதிகள் வளர்ச்சி அடைந்த பகுதிகளாக உள்ளதாலும், தற்போதைய மக்கள்தொகை மற்றும் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டும், இந்நகர்ப் பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யும் பொருட்டும் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் 42.69 கோடி ரூபாய் செலவில் குடிநீர் அபிவிருத்தி மேம்பாட்டுப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. ஈளாடா தடுப்பணையிலிருந்து 11.40 கி.மீ குடிநீர் பிரதான விநியோகக் குழாய்கள் (Feeder main) மற்றும் 48.64 கி.மீ பிரதான பகிர்மானக் குழாய்கள் (Distribution main) பதிக்கும் பணிகள், 6 தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள், 40 கி.மீ நீளத்திற்கு சாலை மறுசீரமைப்புப் பணிகள் நிறைவுற்றுள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம் 3,596 எண்ணிக்கையிலான வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கப்படுவதால் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு நாள்தோறும் நபர் ஒருவருக்கு 100 லிட்டர் (LPCD) அளவிற்குக் குடிநீர் விநியோகம் வழங்கப்படும்.</p><p><strong>விக்கிரமசிங்கபுரம்</strong> நகராட்சியில் 21 வார்டுகளை உள்ளடக்கிய இப்பகுதி மக்களுக்கு நாள்தோறும் நபர் ஒருவருக்கு 95 லிட்டர் (LPCD) சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது பயன்பாட்டில் உள்ள குடிநீரேற்று நிலையம் மற்றும் குடிநீர் விநியோகக் குழாய்கள் சுமார் 56 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டவையாகும். நகராட்சிப் பகுதி விரிவடைந்து, மக்கள்தொகை அதிகரித்ததாலும் தற்போதைய குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்து, பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் வழங்கும் நோக்கில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் 29.51 கோடி ரூபாய் செலவில் குடிநீர் அபிவிருத்தி மேம்பாட்டுத் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளன.</p><p>இத்திட்டத்தின்கீழ், தரைமட்ட நீரேற்று நிலையம், பொதிகையடி பகுதியில் நாளொன்றுக்கு 4 மில்லியன் லிட்டர் (MLD) கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், 81.748 கி.மீ நீளமுள்ள பகிர்மானக் குழாய்கள், 6.252 கி.மீ நீளமுள்ள குடிநீர் பிரதான விநியோகக் (Feeder Main) குழாய்கள் அமைத்தல், 1.50 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 1 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் 1 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் என மொத்தம் 3 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கும் பணிகள், 12,890 வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணிகள் ஆகியன நிறைவு செய்யப்பட்டுள்ளன. இத்திட்டம் நிறைவு பெற்றதால் தற்போது அனைத்து வீடுகளுக்கும் நாள்தோறும் நபர் ஒருவருக்கு 135 லிட்டர் (LPCD) அளவிற்குக் குடிநீர் வழங்கப்படும்.</p><p>தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D">முதல்-அமைச்சர்</a> நகராட்சி நிருவாக இயக்குநரகம் சார்பில் மொத்தம் 112 கோடியே 85 இலட்சம் ரூபாய் செலவிலான 4 முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார்.</p><h2>அடிக்கல் நாட்டப்பட்ட புதிய திட்டப் பணிகளின் விவரங்கள்</h2><p><strong>திண்டுக்கல்</strong> மாநகராட்சியில் 74.89 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஜெர்மன் வங்கி நிதியுதவியுடன், நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது. இப்புதிய பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 60 பேருந்துகள் நிறுத்தும் வசதி. 81 வணிகக் கடைகள், உணவகங்கள். இருசக்கர வாகன நிறுத்துமிடம்.சுற்றுச்சுவர். 2 5 கழிப்பிடங்கள், கண்காணிப்புக் கேமரா (CCTV) வசதி. சோலார் மின்சக்தி அமைப்பு, மழைநீர் சேகரிப்பு அமைப்பு. கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் நீர் மறுபயன்பாட்டு வசதி, பசுமைப் பூங்கா உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இத்திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், திண்டுக்கல் மாநகரில் பேருந்துப் போக்குவரத்து மேலாண்மை மேம்படுவதுடன், பயணிகளுக்குப் பாதுகாப்பான, சுத்தமான மற்றும் அனைத்து நவீன வசதிகளுடனும் கூடிய பேருந்து நிலைய சேவை கிடைக்கும். மேலும், நகரின் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, பொதுமக்களின் பயண வசதியும் கணிசமாக மேம்படும்.</p><p><strong>கரூர்</strong> மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 245.07 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜெர்மன் வங்கி (K1W) நிதியுதவியுடன், குடிநீர்த் திட்டப்பணிகள் அமைக்கப்பட உள்ளன. இத்திட்டப் பணியில் காவிரி ஆற்றில் கூடுதல் குடிநீர் ஆதாரம் நாளொன்றுக்கு 26.83 மில்லியன் லிட்டர் (MLD) பெறுவதற்கான ஊடுருவல் கிணறு 2 எண்ணிக்கை. புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 3 எண்ணிக்கை, பழைய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 10 எண்ணிக்கை மாற்றி அமைத்தல், தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகள் 2 எண்ணிக்கை மற்றும் 126 கிலோ மீட்டர் நீளத்திற்கு குடிநீர் விநியோகக் குழாய்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இத்திட்டப்பணி முடிவுறும்போது, கரூர் மாநகராட்சியில் பொதுமக்கள் பயனடையும் வகையில் அனைத்துக் குடியிருப்புகளுக்கும் குடிநீர்க் குழாய் வீட்டு இணைப்புகள் வழங்கப்பட்டு குடிநீர் விநியோகம் தினசரி வழங்கப்படும்.</p><p><strong>திருவேற்காடு</strong> நகராட்சியில் 165.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜெர்மன் வங்கி (KIW) நிதி உதவியுடன் ஒருங்கிணைந்த பாதுகாக்கப்பட்ட குடிநீர்த் திட்டத்தின் கீழ், பொதுமக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன.</p><p><strong>சென்னை</strong> பெருநகர குடிநீர் வாரியத்தின் மூலம் செம்பரம்பாக்கம் ஏரியின் நீராதாரத்திலிருந்து குடிநீர் பெற்று, நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் (LPCD) என்ற அளவில் மொத்தம் நாளொன்றுக்கு 16.34 மில்லியன் லிட்டர் (MLD) பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 98,499 மக்கள் பயன்பெறுவதுடன், 23,368 வீட்டுக் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. மேலும், நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 17.80 கிலோ மீட்டர் நீளத்திற்கு பிரதான குடிநீர்க் குழாய்களும், 208 கிலோ மீட்டர் நீளத்திற்குப் பகிர்மானக் குழாய்களும் அமைக்கப்பட உள்ளன. மொத்தம் 91.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 12 புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்படவுள்ளன. அவற்றில் 10 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 7 தொட்டிகள், 7.50 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 1 தொட்டி, 5 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 தொட்டிகள், 2.50 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 1 தொட்டி மற்றும் 1.50 இவட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 1 தொட்டி மற்றும் 20 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியும் அமைக்கப்படவுள்ளது. இத்திட்டப் பணிகள் 2 ஆண்டுகளில் நிறைவு செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், திருவேற்காடு நகராட்சியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் மேலும் மேம்பட்டு, பொதுமக்களுக்கு சீரான மற்றும் பாதுகாப்பான குடிநீர் வழங்கும் வசதி உறுதி செய்யப்படும்.</p><p><strong>மாங்காடு</strong> நகராட்சியில் 225.06 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜெர்மன் வங்கி (KIW) நிதியுதவியுடன், பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்தி. நவீன கழிவுநீர் மேலாண்மை வசதியை ஏற்படுத்தும் நோக்கில், பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 68,700 மக்கள் பயன்பெறும் வகையில் 20,258 வீட்டுக் கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. இத்திட்டத்தின் கீழ் மாங்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 84.19 கிலோ மீட்டர் நீளத்திற்கு பகிர்மானக் கழிவுநீர் குழாய்களும், 5.52 கிலோ மீட்டர் நீளத்திற்கு பிரதான கழிவுநீர் குழாய்களும் அமைக்கப்படவுள்ளன. மேலும், 3,667 இயந்திரத் துளைகள் (Machine Holes), 3 கழிவுநீர் உந்து நிலையங்கள் (Pumping Stations) மற்றும் 3 கழிவுநீர் ஏற்று நிலையங்கள் (Lift Stations) அமைக்கப்படவுள்ளன.</p><p>இத்திட்டம் செயல்படுத்தப்படுவதன் மூலம் நகரின் சுகாதாரத் தரம் மேம்படுவதுடன், கழிவுநீர்த் தேக்கம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு குறைக்கப்பட்டு, பொதுமக்களுக்குப் பாதுகாப்பான மற்றும் நிலையான கழிவுநீர் மேலாண்மை வசதி ஏற்படுத்தப்படும்.</p><p>தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D">முதல்-அமைச்சர்</a> நகராட்சி நிருவாக இயக்குநரகம் சார்பில் மொத்தம் 710 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 4 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.</p><h2>பங்கேற்பு</h2><p>இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, நகராட்சி நிர்வாக இயக்குநர் மதுசூதன் ரெட்டி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p><p>திருப்பூரிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக சட்டமன்ற உறுப்பினர்கள் சத்யபாமா, பாலமுருகன்,  ராம்குமார், திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு. மனிஷ் நாரணவரே. திருப்பூர் மாநகராட்சி மேயர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியம். திருப்பூர் மாநகராட்சி ஆணையர் எம்.பி. அமித், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை எந்தவித முகாந்திரமுமின்றி கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது - கி.வீரமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/arrest-of-opposition-leader-udayanidhi-without-due-process-condemnable-ki-veeramani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/arrest-of-opposition-leader-udayanidhi-without-due-process-condemnable-ki-veeramani#comments</comments><guid isPermaLink="false">63afe3d2-694c-49c2-b312-36b14fef5609</guid><pubDate>Tue, 04 Aug 2026 10:28:19 +0000</pubDate><atom:updated>2026-08-04T10:28:19.370Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,K. Veeramani,எதிர்க்கட்சி தலைவர்,Opposition Leader,கி.வீரமணி அறிக்கை,கைது Arrest</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/mn7ibkq9/veeramani.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திராவிட கழக தலைவர் கி.வீரமணி ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/mn7ibkq9/veeramani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை எந்தவித முகாந்திரமுமின்றி கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திராவிட கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது;-</p><h2>பழிவாங்கும் போக்கு என்பது ஜனநாயக விரோதமே!</h2><p>தமிழ்நாடு அரசு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை எந்தவித முகாந்திரமுமின்றி, திடீர் என்று கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது - ஜனநாயக விரோதமானது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-</p> <h2>உதயநிதி ஸ்டாலின் கைது </h2><p>தஞ்சையில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆட்சேபகரமாக பேசியதாகக் கூறி, தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">உதயநிதி ஸ்டாலின் கைது</a> செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியதாகும். </p><h2>அவசியம் என்ன?</h2><p>இன்று மதியம் 12 மணி வரை கைது நடவடிக்கையை நிறுத்தி வைக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியும் கூட, காவல்துறையினர் "அதிவிரைவாக” கைது செய்திருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவ்வளவு அவசரமாக கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? </p><h2>பட்ஜெட் தாக்கல்</h2><p>அவதூறு பேச்சு என்று கருதினால், அதற்கு உரிய சட்ட முறையில் வழக்குத் தொடுத்து, விசாரணை நடத்தி, பிறகு உரிய சட்ட நடவடிக்கைகளை எடுப்பதுதானே முறையானது! அதுவும், நாளை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D">தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல்</a> செய்யப்படவுள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவரை எப்படியாவது அதில் பங்கேற்க செய்யவிட கூடாது என்ற அவசரமே இதற்கு காரணமா என்ற சந்தேகம்தான் பரவலாக எழுகிறது.</p><h2>ஜனநாயக ஆட்சி</h2><p>அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்க முடியாது. ஆனால், எதிர்ப்பையோ, பொதுவானவர்களின் கருத்தையோ கொஞ்சமும் கருத்தில் கொள்ளாமல், பழிவாங்கும் நடவடிக்கையை தொடர்ந்து செயல்படுத்திவரும் தமிழ்நாடு அரசின் போக்கு கண்டனத்திற்குரியது; இந்தப் போக்கு ஒருபோதும் ஜனநாயக ஆட்சியின் அம்சமும் ஆகாது. இத்தகைய போக்குகள் எதிர்வினையைத்தான் ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உதயநிதி தவறுதலாகப் பேசுகிறவர் அல்ல: மிரட்டப் பார்க்கிறார்கள் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/udayanidhi-is-not-speaking-by-mistake-they-are-trying-to-threaten-him-dmk-chief-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/udayanidhi-is-not-speaking-by-mistake-they-are-trying-to-threaten-him-dmk-chief-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">3d28b1fc-ed20-491a-a598-f45a250b33bf</guid><pubDate>Tue, 04 Aug 2026 10:25:40 +0000</pubDate><atom:updated>2026-08-04T10:27:48.947Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,கைது நடவடிக்கை,MKstalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/w8xlhpok/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/w8xlhpok/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>உதயநிதி தவறுதலாகப் பேசுகிறவர் அல்ல. அப்படியே தவறுதலாகப் பேசினாலும், உடனடியாக மன்னிப்பு கேட்கும் இயல்புடையவர் என்று முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>காவிரியில் தமிழ்நாட்டுக்கான உரிமையை நிலைநாட்ட துப்பு இல்லாத, மேகதாது அணையைத் தடுக்க முதுகெலும்பு இல்லாத த.வெ.க. அரசின் அலட்சிய ஆணவப் போக்கைக் கண்டித்து தஞ்சையில் தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தின் எழுச்சி ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கொந்தளிப்பை உணர்த்துவதாக அமைந்திருந்தது.</p><p>கழக உடன்பிறப்புகளோடு உழவர் பெருமக்களும் பொதுமக்களும் பங்கெடுத்து தங்களது உணர்ச்சியை வெளிப்படுத்தினார்கள். கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, த.வெ.க. அரசின் கையாலாகாத்தனத்தை மிகக்கடுமையாக அம்பலப்படுத்தி விமர்சித்தார்.</p><p>"நிர்வாகத் திறனற்ற டம்மி முதல்-அமைச்சரால் காவிரி நீரைக் கொண்டுவர முடியவுமில்லை, மேகதாது அணையைத் தடுக்க பேசவும் முடியவில்லை, விவசாயிகள் வேதனையில் கண்ணீர் வடித்துக் கொண்டு இருக்கிறார்கள், ஆனால் அமைச்சர்களோ முதல்-அமைச்சர் நடித்த படத்தை பார்த்து கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள், ஜோக்கர் அமைச்சரவை தமிழ்நாட்டில் அமைந்திருக்கிறது" என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சித் தலைவர் வைத்தார். இதற்கு இதுவரை ஆட்சியாளர்களால் பதில் சொல்ல முடியவில்லை.</p><p>காவிரி பிரச்னையில் அரசின் தோல்வி வெளிச்சத்துக்கு வந்துவிட்டதை மறைக்கும் வகையில், பிரச்சினையையே திசை திருப்பும் வகையில் இன்று காலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வீட்டுக்கு வந்த போலீஸ் படை அவரை அராஜகமாக கைது செய்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அவரைக் கைது செய்து தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றுள்ளது த.வெ.க. அரசு. பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருப்பதன் மூலமாக உதயநிதியை மிரட்டப் பார்க்கிறார்கள்.</p><p>நாளை சட்டமன்றம் கூட இருக்கிறது. நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறார்கள். அப்போது கேபினட் தகுதி பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் அவையில் இருக்க வேண்டும். ஆனால் இருக்கக் கூடாது என்று நினைத்து இந்த நடவடிக்கையைத் தொடங்கி இருக்கிறார்கள்.</p><p>நாடு முழுவதும் கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் காட்டிய எதிர்ப்புக்குப் பிறகு, 'கைது செய்யும் எண்ணம் இல்லை, விசாரணை முடிந்ததும் விடுவித்து விடுவோம்' என்று நீதிமன்றத்தில் த.வெ.க. அரசு வழக்கறிஞர் சொல்லி இருக்கிறார். விசாரணை நடத்துவதுதான் நோக்கம் என்றால் சென்னையிலேயே வைத்து நடத்தி இருக்கலாமே? எதற்காக தஞ்சாவூர் அழைத்துச் செல்ல வேண்டும்? எதற்கு ஜாமீனில் விடுவிக்க முடியாத பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்?  மக்கள் எதிர்ப்பால் பின் வாங்கியது தெரியாமல் பூசி மெழுகுகிறது அரசு. 'உதயநிதியை இன்றே விடுதலை செய்ய வேண்டும்' என்று சென்னை ஐகோர்ட்டு வழங்கி இருக்கும் உத்தரவு, த.வெ.க.வின் பாசிசத் தன்மைக்கு விழுந்த அடி!</p><p>ஆட்சிக்கு வந்தது முதல் தன்னையும் தனது அமைச்சர்களையும், ஆட்சியையும் விமர்சிப்பவர்களைக் கைது செய்யும் ஒரே வேலையைத்தான் முதல்-அமைச்சர் விஜய் பார்த்து வருகிறார். டுவீட் போட்டால், வீடியோ பேசினால் கைது செய்து வருகிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்கண்டேயன் ஆகியோர் மீதும் கைது நடவடிக்கை பாய்ந்தது. நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், இளைஞர்களைப் போராட விடவில்லை. போராட்டம் நடத்தியவர்கள் மீது அராஜகமான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. சென்னை மெரினா கடற்கரையே பூட்டி வைக்கப்பட்டது பாசிசத்தின் உச்சம். விவசாயிகள் தன்னெழுச்சியாகப் போராடியதை எதிர்க்கட்சிகளின் தூண்டுதலின் பேரில் போரடியதாகச் சொல்லப்பட்டது. நீட் தேர்வு எதிர்ப்பு பரப்புரை செய்யச் சென்ற திராவிடர் கழக வாகனப் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகத்தான் விவசாயிகளுக்காக ஆர்ப்பாட்டம் நடத்திய, அதில் பங்கெடுத்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மீது கைது நடவடிக்கையைப் பாய்ச்சியது த.வெ.க. அரசு.</p><p>இதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் சில தலைவர்கள், உண்மை என்னவென்று தெரிந்து கொள்ளாமல் உதயநிதிக்குக் கண்டனம் தெரிவித்திருப்பது வருந்தத்தக்கது. உதயநிதி தனது உரையில் ஆபாசமாக ஏதும் பேசவில்லை. யாரையும் குறிப்பிடவில்லை. அவர் பேசாத ஒன்றை பேசியதாகச் சிலர் பரப்பியதைச் சரிபார்க்காமல் அரசியல் தலைவர்கள் சிலர் உதயநிதியைக் கண்டிப்பது பிரச்சினையை திசைதிருப்புவது ஆகும். உதயநிதி தவறுதலாகப் பேசுகிறவர் அல்ல. அப்படியே தவறுதலாகப் பேசினாலும், உடனடியாக மன்னிப்பு கேட்கும் இயல்புடையவர்.</p><p>ஆட்சிக்கு வந்தது முதல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நினைக்காமல், ரீல்ஸ் கிரியேட்டராக மட்டுமே வலம் வரும் முதலமைச்சர் விஜய், தனது பொறுப்பை உணர்ந்து இனியாவது செயல்பட வேண்டும். தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகக் கைது செய்துள்ள கழக உடன்பிறப்புகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்! ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்!<br><br>-⁠  ⁠கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை.<br><br>காவிரியில் தமிழ்நாட்டுக்கான உரிமையை நிலைநாட்ட துப்பு இல்லாத, மேகதாது அணையைத் தடுக்க முதுகெலும்பு இல்லாத த.வெ.க. அரசின் அலட்சிய ஆணவப் போக்கைக்… <a href="https://t.co/vAxxv41Jfw">pic.twitter.com/vAxxv41Jfw</a></p>&mdash; DMK (@arivalayam) <a href="https://x.com/arivalayam/status/2084583007516811455?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>நெல்லை: ஸ்கூட்டரில் சென்றவர் மீது  திமுகவினர் சரமாரி தாக்குதல் - அதிர்ச்சி வீடியோ

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-dmk-cadres-brutally-attack-youth-on-bike</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-dmk-cadres-brutally-attack-youth-on-bike#comments</comments><guid isPermaLink="false">aebe8942-270e-4dec-aba1-bf6bb2136ce1</guid><pubDate>Tue, 04 Aug 2026 10:21:17 +0000</pubDate><atom:updated>2026-08-04T10:21:17.120Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,நெல்லை,Nellai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/cjkrjxz6/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/cjkrjxz6/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>தஞ்சையில் நேற்று நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற <a href="https://www.dailythanthi.com/">உதயநிதி ஸ்டாலின்</a> இரட்டை அர்த்தத்திலும், சர்ச்சைக்குரிய வகையிலும் பேசினார்.  இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.</p><p>புகாரையடுத்து, உதயநிதி ஸ்டாலினை சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் வைத்து தஞ்சை போலீசார் இன்று கைது செய்தனர். அதேவேளை, உதயநிதியை விசாரணைக்குப்பின் இன்றே விடுதலை செய்வோம் என்றும் அவரை சிறையில் அடைக்கும் எண்ணமில்லை என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனிடையே, உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை, பல இடங்களில் திமுகவினர் வன்முறை சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.</p><h2>திமுகவினர் தாக்குதல்</h2><p>இந்நிலையில், நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள சாலையில் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சாலையில் ஸ்கூட்டரில் சென்ற இளைஞரிடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், அந்த இளைஞரை திமுகவினர் சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்கூட்டரில் சென்ற இளைஞரை திமுகவினர் தாக்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">உதயநிதி கைதுக்கு எதிராக வன்முறையில் ஈடுப்பட்ட திமுகவினர் , மருத்துவமனைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞரை தாக்கி அராஜகம். <a href="https://t.co/EAZn20tVEb">pic.twitter.com/EAZn20tVEb</a></p>&mdash; Prasanna OG (@OGprasanna) <a href="https://x.com/OGprasanna/status/2084538718388686863?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>முன்னதாக தஞ்சையில் நேற்று உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது</h2> <p>கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் வந்திருக்க வேண்டும். காவிரியில் ஒருசொட்டு தண்ணீர் கூட வரவில்லை. ஆனால் இதுபற்றி இன்று இருக்கும் முதல்-அமைச்சர் வாயை திறந்து பேசவில்லை.</p><p>முதல்-அமைச்சருக்கு இருக்கும் ஒரே கவலை திமுக மீது என்ன பொய் வழக்கு போடலாம் என்பதுதான்’ என்றார்.</p><p>அப்போது அங்கு கூடியிருந்த திமுகவினர், நடிகை ஒருவரின் பெயரை கூறி கூச்சலிட்டனர்.</p><p>அப்போது தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், எங்கே தண்ணீர் வருகிறதோ இல்லையோ அங்கே தண்ணீர் வர வேண்டும்... நான் காவிரியை கூறினேன்’ என்றார்.</p>]]></content:encoded></item><item><title>பெண் பற்றி உதயநிதி கண்ணியக்குறைவாக பேசியிருப்பதை இந்திய கம்யூ. கட்சி கண்டிக்கிறது - மு.வீரபாண்டியன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cpi-condemns-udayanidhi-remarks-on-women-says-m-veerapandian</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cpi-condemns-udayanidhi-remarks-on-women-says-m-veerapandian#comments</comments><guid isPermaLink="false">6ef4c224-6070-4496-a54f-86123906a75a</guid><pubDate>Tue, 04 Aug 2026 10:01:32 +0000</pubDate><atom:updated>2026-08-04T10:01:32.903Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,CPI,மு.வீரபாண்டியன்,M Veerapandian</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/mc31e3fz/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.வீரபாண்டியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/mc31e3fz/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>நேற்றைய தினம் தஞ்சாவூரில் காவிரி நதி நீர் உரிமை மற்றும் மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக, திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், பெண் பற்றி கண்ணியக்குறைவாக பேசியிருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது.</p><p>அவர் வகித்து வரும் எதிர்கட்சித் தலைவர் என்ற உயரிய பொறுப்புக்கு அது உகந்ததல்ல. அவர் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்து, இன்று (04.08.2026) கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>நாளை (05.08.2026) கூடும் தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2026-27ம்  ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போது, எதிர்க்கட்சித் தலைவர் அவையில் இருந்து, ஜனநாயக கடமை ஆற்றும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட வேண்டும் என்பதையும் அரசு கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.113 கோடியில் புதிய மருத்துவக் கட்டடங்கள்; முதல்-அமைச்சர்  விஜய் திறந்து வைத்தார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-medical-buildings-worth-rs-113-crore-cm-vijay-inaugurated</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-medical-buildings-worth-rs-113-crore-cm-vijay-inaugurated#comments</comments><guid isPermaLink="false">047c9536-3a32-4596-b181-2abb68c5ec17</guid><pubDate>Tue, 04 Aug 2026 09:56:32 +0000</pubDate><atom:updated>2026-08-04T09:56:32.118Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,inaugurated,புதிய,மருத்துவ உபகரணங்கள்,திறந்து வைத்தார்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister S.Joseph Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/oljqgg3m/177.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர்  விஜய் திறந்து வைத்தார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/oljqgg3m/177.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ரூ.113 கோடியில் புதிய மருத்துவக் கட்டடங்களை முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-</p><p>தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a> இன்று தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் காணொலிக் காட்சி வாயிலாக 113 கோடி ரூபாய் செலவில் அறந்தாங்கி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை. பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை, ஆத்தூர், மரக்காணம் மற்றும் வளவனூர் அரசு மருத்துவமனைகளில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடங்கள், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கதிரியக்க சிகிச்சை மையம், புதிதாகக் கட்டப்பட்டுள்ள 4 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 12 துணை சுகாதார நிலையங்கள் மற்றும் 2 வட்டார பொது சுகாதார அலகுகள் ஆகியவற்றைத் திறந்து வைத்து, நவீன மருத்துவ உபகரணங்களின் பயன்பாட்டையும் தொடங்கி வைத்தார்.</p><h2>முதல்-அமைச்சர் திறந்து வைக்கப்பட்ட மருத்துவ கட்டடங்களின் விவரங்கள்</h2><p><strong>புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை</strong></p><p>புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசு மருத்துவமனை தற்போது 174 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனைக்கு 46 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் ஆறு தளங்களுடன் கூடுதல் கட்டடமும், 2.81 கோடி ரூபாய் செலவில் அதிநவீன உபகரணங்களும் கொள்முதல் செய்யப்பட்டு, அடிப்படைக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு மாவட்ட தலைமை மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.</p><p>இக்கூடுதல் கட்டடத்தின் தரைத்தளத்தில் வெளி மருத்துவப் பயனாளர்கள் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, இசிஜி, எக்கோ, எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், முதல் தளத்தில் அறுவை அரங்கு, இரத்த சுத்திகரிப்புப் பிரிவு, காது, மூக்கு, தொண்டைப் பிரிவு, இரண்டாம் தளத்தில் குழந்தைகள் நலப்பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, ONE STOP CENTRE, மூன்றாம் தளத்தில்பெண்கள் மற்றும் ஆண்கள் உள்பயனாளர்கள் பிரிவு, இரத்த வங்கி, நான்காம் தளத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட சிகிச்சைப் பிரிவு, விஷமுறிவு சிகிச்சைப் பிரிவு, ஐந்தாம் தளத்தில் உள்மருத்துவப் பயனாளர்கள் சிறப்பு சிகிச்சைப் பிரிவு, மருந்துப் பொருட்கள் அறை, நிர்வாக அலுவலகம், ஆறாம் தளத்தில் அறுவை அரங்கு, அறுவை சிகிச்சைக்குப்பின் கவனிப்புப் பகுதி ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.</p> <p><strong>விருதுநகர் மாவட்டம், சிவகாசி அரசு மருத்துவம</strong>னை</p><p>விருதுநகர் மாவட்டம், சிவகாசி அரசு மருத்துவமனையானது. தற்போது 140 படுக்கை வசதிகளுடன் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, திறன்மிகு தீக்காய சிகிச்சைப் பிரிவு மற்றும் பச்சிளங்குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சைப் பிரிவுகளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இம்மருத்துவமனையைத் தரம் உயர்த்திடும் வகையில் 28.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தீவிர சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு (Maternal Child Health Wing) இரண்டையும் ஒருங்கிணைத்து ஒரே கட்டடமாகத் தரை மற்றும் ஆறு தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும், 3.85 கோடி ரூபாய் செலவில் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளன.</p><p>மேலும், இக்கட்டடத்தில் புறக்காவல்நிலையம், மைய ஆக்சிஜன் அமைப்பு, சிசிடிவி கேமராக்கள், LAN இணைப்புகள், தீத்தடுப்பு உபகரணங்கள், மின்தூக்கி போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு கூடுதலாக 50 படுக்கைகளும், மகப்பேறு பிரிவிற்கு கூடுதலாக 100 படுக்கைகளும் அதிகரித்து, ஏற்கனவே உள்ள 140 படுக்கைகளுடன் கூடுதலாக இந்த 150 படுக்கை வசதிகளையும் சேர்த்து மொத்தம் 290 படுக்கை வசதிகள் கொண்டதாக சிவகாசி அரசு மருத்துவமனை மேம்படுத்தப்பட்டுள்ளது.</p><p><strong>திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனை</strong></p><p>திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனை தற்போது 38 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் 1.75 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தில், விபத்து மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு. செவிலியர் அறை, காவலர் விசாரணை அறை, புறமருத்துவப் பயனாளர்கள் பதிவு செய்யும் இடம், காத்திருப்பு அறை, மருந்தகம், நுண்கதிர் பதிவு, பல்மருத்துவ ஆலோசனை, பெண்கள் மருத்துவ ஆலோசனை, ஆண்கள் மருத்துவ ஆலோசனை, ஆய்வகம், கருப்பைவாய் மற்றும் மார்பகப் பரிசோதனை மையம், மக்களைத்தேடி மருத்துவம், முதன்மை மருத்துவ அலுவலர் அறை, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம். ஆண்கள் மற்றும் பெண்களுக்கான உள்மருத்துவப் பயனாளர்கள் பிரிவு ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.</p><p><strong>திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனை</strong></p><p>திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனை தற்போது 36 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் 1.05 கோடி ரூபாய் செலவில் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இக்கூடுதல் கட்டடத்தில், காத்திருப்பு அறை, மருத்துவக் கிடங்கு, நுண்கதிர் பிரிவு, பல் மருத்துவப் பிரிவு, ஆய்வகம், முதன்மை மருத்துவ அலுவலர் அறை. உள் மருத்துவப் பயனாளர்கள் அறை, கழிவறைகள் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.</p><p><strong>திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் அரசு மருத்துவமனை</strong></p><p>திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர், அரசு மருத்துவமனை தற்போது 60 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் 3.50 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் முதல் தளத்துடன் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இக்கூடுதல் கட்டடத்தின் தரைத்தளத்தில் நுண்கதிர் அறை, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டப் பிரிவு, ஆய்வகம். மருத்துவப் பயனாளிகள் கழிப்பறை, மருந்துக்கிடங்கு. முதல் தளத்தில் அறுவை அரங்கம், மருத்துவர் அறை. அறுவை சிகிச்சைக்குப்பின் கவனிப்பு அறை ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.</p><p><strong>விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அரசு மருத்துவமனை</strong></p><p>விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அரசு மருத்துவமனை தற்போது 60 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் 3.50 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் முதல் தளத்துடன் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இக்கூடுதல் கட்டடத்தின் தரைத்தளத்தில் அவசர சிகிச்சைப் பிரிவு, நுண்கதிர் பிரிவு, கட்டுகட்டும் பிரிவு, அறுவை சிகிச்சைப் பிரிவு, மருந்தகம் மற்றும் காத்திருப்பு அறை, முதல் தளத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சைப்பின் கவனிப்புப் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, மருத்துவர் மற்றும் செவிலியர் அறை ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.</p><p><strong>விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அரசு மருத்துவமனை</strong></p><p>விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அரசு மருத்துவமனை தற்போது 28 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் 3.50 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் முதல் தளத்துடன் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இக்கூடுதல் கட்டடத்தின் தரைத்தளத்தில் வெளிமருத்துவப் பயனாளிகள் பிரிவு, ஆய்வுக்கூடம், தொற்றாநோய்ப் பிரிவு, குடும்பநலப் பிரிவு, முதல் தளத்தில் அறுவை அரங்கம், அறுவை சிகிச்சைப்பின் கவனிப்புப் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, மருத்துவர் மற்றும் செவிலியர் அறை ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.</p><p>கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை மையம் புற்றுநோய்க்கு முழுமையான சிகிச்சை வழங்கும் நோக்கில், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 கோடி ரூபாய் செலவில் 20 உள்நோயாளிகள் படுக்கை வசதிகளுடன் கூடிய கதிர்வீச்சு புற்றநோய் பங்கர் கட்டடம் மற்றும் 2.78 கோடி ரூபாய் செலவில் கதிர்வீச்சு சிகிச்சை இயந்திரம் என மொத்தம் 6.78 கோடி ரூபாய் செலவில் புதிதாகக் கதிரியக்க சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. உலக வங்கி உதவியுடன் தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின் மூலமாக அமைக்கப்பட்டுள்ள இம்மையமானது புற்றுநோய் கதிரியக்க சிகிச்சையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இப்புதிய வசதி மூலம் கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மருத்துவப் பயனாளர்கள் உயர் சிகிச்சைக்காக திருவனந்தபுரம். மதுரை, திருநெல்வேலி, சென்னை போன்ற தொலைதூர மருத்துவமனைகளுக்குச் செல்லவேண்டிய அவசியமும், காலவிரயமும் குறைவதுடன் உரிய நேரத்தில் தரமான சிகிச்சைபெறும் வாய்ப்பும் அதிகரிக்கும்.</p><h2>பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்ககம்</h2><p>பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்ககத்தின் சார்பில் 11 கோடியே 45 இலட்சம் ரூபாய் செலவில் கள்ளக்குறிச்சி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 4 ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்கள், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, சேலம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் திருப்பத்தூர், கட்டப்பட்டுள்ள 12 கிராமப்புற மற்றும் நகர்ப்புற துணை சுகாதார நிலையங்கள் மற்றும் சேலம் மாவட்டத்தில் 2 வட்டார பொது சுகாதார அலகுகள் கட்டப்பட்டுள்ளன. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மொத்தம் 113 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவக் கட்டடங்களைத் திறந்து வைத்து, நவீன மருத்துவ உபகரணங்களின் பயன்பாட்டினை தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D">முதல்-அமைச்சர் </a> இன்று தொடங்கி வைத்தார்.</p><p>இந்த நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்த், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் அருண்ராஜ், தலைமைச் செயலாளர் முனைவர் சாய்குமார்,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் மரு. தாரேஸ் அகமது,  தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் மரு. எஸ். உமா, தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநர் மரு.அனீஷ் சேகர்,மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவர் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை துணைச் செயலாளர் அழகுமீனா, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் மரு.அ. ராஜ்மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p><p>புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் முகமது பர்வேஸ், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள 4,260 அடுக்குமாடி குடியிருப்புகள் - முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/4260-urban-apartments-inaugurated-by-chief-minister</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/4260-urban-apartments-inaugurated-by-chief-minister#comments</comments><guid isPermaLink="false">9cd4ba04-c3ed-4e3d-bfff-8646db910ad9</guid><pubDate>Tue, 04 Aug 2026 09:53:04 +0000</pubDate><atom:updated>2026-08-04T09:53:04.740Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>முதல்-அமைச்சர்,Chief Minister,apartment building,அடுக்குமாடி குடியிருப்புகள்,Urban Habitat Development Board,நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்,திறந்து வைத்தார்,inaugurates</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/xohyg6ie/v2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/xohyg6ie/v2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள 4,260 <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20-%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.">அடுக்குமாடி குடியிருப்புகள் - முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.</a>இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-</p><h2>முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய்</h2><p>தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.525.75 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4,260 அடுக்குமாடிக் குடியிருப்புகள், சென்னை வளர்ச்சி குழுமத்தின் சார்பில் பெரம்பூரில் ரூ.1.43 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கர் கல்லூரி குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தம் ஆகியவற்றை  தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A.%20%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய்</a> திறந்து வைத்தார். </p> <h2>காணொலி காட்சி</h2><p> தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் கீழ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 525.75 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4,260 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் சென்னை வளர்ச்சி குழுமத்தின் சார்பில் பெரம்பூரில் 1.43 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கர் கல்லூரி குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தம் ஆகியவற்றைக் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.</p><p><strong>தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய புதிய குடியிருப்புகளைத் திறந்து வைத்தல்</strong></p><h2>500 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்</h2><p>தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்தின்கீழ், சென்னை மாவட்டத்தில் மறுகட்டுமான திட்டத்தின்கீழ், காந்தி நகர் திட்டப்பகுதியில் 85.55 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 500 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள்.</p><p>திருவள்ளூர் மாவட்டம், பூச்சி அத்திப்பேடு திட்டப்பகுதியில் 156.14 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1,152 அடுக்குமாடிக் குடியிருப்புகள்; ஈரோடு மாவட்டம், மோதூர் திட்டப்பகுதியில் 45.46 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 516 அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் ஒடையாக்கவுண்டன்பாளையம் திட்டப்பகுதியில் 40.52 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 384 அடுக்குமாடிக் குடியிருப்புகள்.</p><p>தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை நல்லம்பள்ளி திட்டப்பகுதியில் 57.67 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 528 அடுக்குமாடிக் குடியிருப்புகள்: புதுக்கோட்டை மாவட்டம், ரெங்கம்மாள் சத்திரம் திட்டப்பகுதியில் 60.19 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 528 அடுக்குமாடிக் குடியிருப்புகள்; தேனி மாவட்டம், உத்தமபுரம் திட்டப்பகுதியில் 39.14 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 336 அடுக்குமாடிக் குடியிருப்புகள்.</p> <p>நீலகிரி மாவட்டம், நடுஹட்டி திட்டப்பகுதியில் 22.16 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 164 அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் சேரங்கோடு திட்டப்பகுதியில் 18.92 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 152 அடுக்குமாடிக் குடியிருப்புகள்.</p><h2>9 திட்டப்பகுதிகள்</h2><p>என மொத்தம் 9 திட்டப்பகுதிகளில் 525.75 கோடி ரூபாய் செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 4,260 அடுக்குமாடிக் குடியிருப்புகளை  தமிழ்நாடு முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.</p><p>இப்புதிய குடியிருப்புகள், ஒவ்வொன்றும் தலா 400 சதுர அடி பரப்பளவுடன், ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை மற்றும் கழிவறை போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும், அனைத்து குடியிருப்பு வளாகங்களும், தார் சாலை வசதி, குடிநீர்வசதி, கழிவு நீரகற்று வசதி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.</p><p><strong>பெரம்பூரில் புதிய குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தம் திறந்து வைத்தல்</strong></p><h2>பேருந்து நிறுத்தம்</h2><p>சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் பெரம்பூரில் 1.43 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கர் கல்லூரி குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் திறந்து வைத்தார். இப்பேருந்து நிறுத்தத்தில் 45 நபர்கள் அமரும் வகையில் காத்திருப்பு அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நவீன கண்காணிப்பு கேமராக்கள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கழிவறைகள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.</p><h2>அமைச்சர்கள் கலந்து கொண்டனர்</h2><p>இந்நிகழ்ச்சியில்,  ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்த், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவர் கு.ப.கிருஷ்ணன், தலைமைச் செயலாளர் மு. சாய்குமார், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் இரா. கிர்லோஷ் குமார், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் ஏ.ஆர். ராகுல்நாத், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் பெ.ரமண சரஸ்வதி, ஆகியோர் கலந்து கொண்டனர்.</p> <h2>உயர் அலுவலர்கள்</h2><p>திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக சட்டமன்ற உறுப்பினர் ஆர். ரமேஷ் குமார், திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ச. கவிதா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குநர் அனாமிகா ரமேஷ். மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-heavy-rain-in-11-districts-of-tamil-nadu-today</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-heavy-rain-in-11-districts-of-tamil-nadu-today#comments</comments><guid isPermaLink="false">f8eaaf61-cee9-4529-ad0b-3b796f6b80cb</guid><pubDate>Tue, 04 Aug 2026 09:33:00 +0000</pubDate><atom:updated>2026-08-04T09:33:00.230Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,heavy rain,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/396vh5hv/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/396vh5hv/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் நீலகிரி, தேனி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>சுமார் 5.8 கி.மீ. உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 5.8 கி.மீ. உயரத்தில் இலங்கையின் தென்மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.</p><p>சுமார் 4.5 கி.மீ. உயரத்தில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. வட தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><p><strong>04-08-2026:</strong> கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>05-08-2026:</strong> திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், திருச்சி, கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>06-08-2026 மற்றும் 07-08-2026:</strong> தேனி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><h3>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</h3><p><strong>04-08-2026 முதல் 08-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.</p><h3>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</h3><p><strong>04-08-2026 முதல் 08-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று</strong> மற்றும் <strong>நாளை</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உயர்கல்வித்துறை சார்பில் ரூ.274.46 கோடி செலவில் கல்விசார் கட்டடங்கள்: முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/education-buildings-inaugurated-by-chief-minister-at-cost-of-rs-274-46-crore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/education-buildings-inaugurated-by-chief-minister-at-cost-of-rs-274-46-crore#comments</comments><guid isPermaLink="false">e46e77f3-7aa0-4638-a006-b3ed3fc773af</guid><pubDate>Tue, 04 Aug 2026 09:30:07 +0000</pubDate><atom:updated>2026-08-04T09:30:07.287Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>முதல்-அமைச்சர்,Higher Education Department,Chief Minister,Buildings,உயர்கல்வித்துறை,திறந்து வைத்தார்,கட்டடங்கள்,inaugurates</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/e6eoj66z/v1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/e6eoj66z/v1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>உயர்கல்வி துறை சார்பில் ரூ.274.46 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் திறந்து வைத்தார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-</p> <h2>முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்</h2><p> தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A.%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்</a> இன்று தலைமைச் செயலகத்தில், உயர்கல்வி துறை சார்பில், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் 274 கோடியே 46 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக்கட்டடங்கள், பணிமனை கட்டடங்கள், திறன்மிகு மையங்களுக்கான பணிமனைகள், நூலகங்கள், மின்னணு நூலகங்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களை திறந்து வைத்தார்.</p> <p><strong>திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற பணிகளின் விவரங்கள்</strong></p><p>சென்னை மாவட்டம் மாவட்டம் தரமணி, செங்கல்பட்டு செங்கல்பட்டு மற்றும் குரோம்பேட்டை, திருவள்ளுர் மாவட்டம் செவ்வாய்பேட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டம் - சங்கராபுரம், தருமபுரி மாவட்டம் பூமண்டஹள்ளி மற்றும் பாலக்கோடு, கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம், பர்கூர் மற்றும் ஊத்தங்கரை, திருவண்ணாமலை மாவட்டம் நாகப்பாடி, நீலகிரி மாவட்டம் பெருந்துறை, திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மற்றும் ஸ்ரீரங்கம், நாமக்கல் மாவட்டம் -உதகமண்டலம், ஈரோடு மாவட்டம் மோகனூர், புதுக்கோட்டை மாவட்டம் சிவகங்கை கந்தர்வகோட்டை மற்றும் அறந்தாங்கி, தஞ்சாவூர் மாவட்டம்- ரகுநாதபுரம், திருவாரூர் மாவட்டம் வலங்கைமான், சிவகங்கை மாவட்டம் மற்றும் காரைக்குடி, தேனி மாவட்டம் கோட்டூர் மற்றும் ஆண்டிப்பட்டி, மதுரை மாவட்டம் மதுரை, அம்பலக்காரன்பட்டி மற்றும் உசிலம்பட்டி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி மற்றும் எட்டயபுரம், வேலூர் மாவட்டம் மாதனூர், கடலூர் மாவட்டம் கடலூர் மற்றும் விருதாச்சலம், இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, கோயம்புத்தூர், அரியலூர், பெரம்பலூர், கரூர், நாகர்கோவில், மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ள அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் 226 கோடியே 98 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், பணிமனைக் கட்டடங்கள், திறன்மிகு மையங்களுக்கான பணிமனைகள், நூலகம், மின்னணு நூலகம், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் கட்டடங்கள்.</p> <h2>ஆய்வகங்கள்</h2><p>சேலம் மற்றும் ஈரோடு அரசு பொறியியல் கல்லூரிகளில் 6 கோடியே 8 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகக் கட்டடங்கள்; சென்னை, செங்கல்பட்டு, திருப்பூர், சிவகங்கை, வேலூர் மாவட்டம் மாதனூர், கடலூர் மாவட்டம் கடலூர் மற்றும் விருதாச்சலம், இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆகிய இடங்களில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 35 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், ஆய்வகங்கள், மின்னணு நூலக கட்டடங்கள்; ஆய்வகங்கள், மின்னணு நூலகக் கட்டடங்கள்.</p><h2>வகுப்பறை கட்டடங்கள்</h2><p>வேலூர் மாவட்டம் - திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 6 கோடி ரூபாய் செலவில் சமூகவியல், சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் நுண்ணுயிர் அறிவியல் ஆகிய மூன்று துறைகளுக்கு கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடங்கள்; என மொத்தம் 274.46 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித்துறை சார்ந்த 51 கட்டடங்களை  தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.">முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.</a></p><h2>கலந்து கொண்டனர்</h2><p>இந்த நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்த், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, உயர்கல்வித் துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன், தலைமைச் செயலாளர் மு. சாய்குமார், உயர்கல்வி துறை கூடுதல் தலைமைச் செயலாளர்  தீரஜ் குமார், கல்லூரிக் கல்வி ஆணையர் திரு. பொன்னையா, தொழில்நுட்பக் கல்வி ஆணையர்  பொ. இரத்தினசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரங்கசாமிக்கு பிறந்தநாள்: முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/birthday-wishes-for-rangaswamy-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/birthday-wishes-for-rangaswamy-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">93d9d3d3-a738-4333-acb0-e42e83673aa2</guid><pubDate>Tue, 04 Aug 2026 09:25:51 +0000</pubDate><atom:updated>2026-08-04T09:25:51.577Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,சென்னை,பிறந்தநாள் வாழ்த்து,Birthday Wish,புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி,Rangaswamy,Chief Minister S.Joseph Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/sc4xf5jm/176.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/sc4xf5jm/176.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு பிறந்தநாளை முன்னிட்டு,  தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் முதல்-அமைச்சர் விஜய்.</p><p>புதுச்சேரி முதல்-அமைச்சர் என். ரங்கசாமி இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதனையொட்டி, அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.</p><p>இந்நிலையில் தமிழக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a>, தொலைபேசி வாயிலாக புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- </p><h2>பிறந்தநாள் வாழ்த்து</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் இன்று, புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி பிறந்தநாளை முன்னிட்டு, அவரைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து.<a href="https://x.com/hashtag/CMJosephVijay%E2%80%8C?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CMJosephVijay‌</a> <a href="https://t.co/Krw25Tvzz6">pic.twitter.com/Krw25Tvzz6</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2084560904654631341?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item></channel></rss>