<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 05 Aug 2026 12:25:52 +0000</lastBuildDate><item><title>அடையாறு கோட்டத்தில் நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/consumer-grievance-meeting-in-adayar-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/consumer-grievance-meeting-in-adayar-tomorrow#comments</comments><guid isPermaLink="false">3ee4f716-a4f1-4438-83fa-bface59b7f55</guid><pubDate>Wed, 05 Aug 2026 12:24:26 +0000</pubDate><atom:updated>2026-08-05T12:24:26.401Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அடையாறு,Adyar,electricity consumers,மின்நுகர்வோர்,குறைதீர்க்கும் கூட்டம்,Meet</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/5xly9xrl/eb.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மின்நுகர்வோர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/5xly9xrl/eb.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அடையாறு கோட்டத்தில் வரும் நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம். இது தொடர்பாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>காலை 10.30 மணிக்கு</h2><p>அடையாறு கோட்ட <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்</a> நாளை காலை 10.30 மணிக்கு செயற் பொறியாளர்/இ&amp;ப/அடையாறு, தரைதளம், 110/33-11 கி.வோ, வேளச்சேரி துணை மின் நிலைய வளாகம், வேளச்சேரி மெயின் ரோடு, வேளச்சேரி, சென்னை-42 அமைந்துள்ள விலாசத்தில் நடைபெற உள்ளது.</p><h2>நிவாரணம்</h2><p>பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் மின்சாரத்துறை சார்ந்த குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என மேற்பார்வை பொறியாளர்/ சென்னை மின்பகிர்மான வட்டம்/ அடையாறு (தெற்கு-II)கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்படுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு அரசின் கடன் தொகை ரூ.20 லட்சம் கோடியாக உயரும் - தங்கம் தென்னரசு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-governments-debt-will-rise-to-20-lakh-crore-thangam-thennarasu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-governments-debt-will-rise-to-20-lakh-crore-thangam-thennarasu#comments</comments><guid isPermaLink="false">0eb81dea-24cf-4ba9-8168-d8a97e3b88ae</guid><pubDate>Wed, 05 Aug 2026 12:20:26 +0000</pubDate><atom:updated>2026-08-05T12:20:26.957Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,Tamil Nadu,TN govt,தங்கம் தென்னரசு,Thangam Thenarasu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/5gjobvdw/Thangam-thennarasu.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம் தென்னரசு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/5gjobvdw/Thangam-thennarasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: </p><p>தவெக அரசின் நிதி நிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது. தவெகவின் தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் பட்ஜெட்டில் இல்லை. நிதி அமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கை தொடர்பாக நான் அப்போது தந்த விளக்கம் இப்போதும் சரியாக உள்ளது. அரசின் கடன் உயரும் என்று கூறினேன்;</p><p>தித் துறை செயலர் தனது விளக்கத்திலும் அதையே கூறியுள்ளார் திமுக அரசு என்ன தந்ததோ அதையேதான் தவெக பட்ஜெட்டில் தந்துள்ளது. "மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்குவது குறித்து பட்ஜெட்டில் குறிப்பிடவே இல்லை. தவெக அரசு 3 மாதங்களில் ரூ.22,000 கோடியை கடனாக வாங்கிய நிலையில், 5 ஆண்டுகள் முடியும்போது ஒட்டுமொத்த கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.  "மக்கள் எதிர்பார்ப்பை பட்ஜெட் பொய்யாக்கி விட்டது. </p><p>ரூ.48,000 கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை ரூ.55,000 கோடியாக உயர்ந்துள்ளது.  திமுக ஆட்சியில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ.2.29 லட்சம் கோடி. தற்போது வரி வருவாய் ரூ.2.26 லட்சம் கோடியாக சரிவு. தமிழ் வளர்ச்சித்துறைக்கு வெறும் 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றார். </p>]]></content:encoded></item><item><title>நெல்லையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோவில் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/man-arrested-for-sexually-harassing-girl-in-nellai-under-pocso</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/man-arrested-for-sexually-harassing-girl-in-nellai-under-pocso#comments</comments><guid isPermaLink="false">a0210219-ee33-4d4d-a54c-9fe2a5868032</guid><pubDate>Wed, 05 Aug 2026 12:07:11 +0000</pubDate><atom:updated>2026-08-05T12:07:11.659Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Tirunelveli,திருநெல்வேலி,arrested,Sexual harassment,பாலியல் தொல்லை,சிறுமி,girl,போக்சோ,POCSO,நபர்,Person</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/4lmd4a61/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறுமிக்கு பாலியல் தொல்லை, கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/4lmd4a61/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88">சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை</a>யினர் நடத்திய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">விழிப்புணர்வு நிகழ்ச்சி</a>யில் வெளிச்சத்துக்கு வந்த பாலியல் அத்துமீறல் தொடர்பாக போக்சோ வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை</h2><p>திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் நிலைய எல்லையில் உள்ள வி.கே.புரம், செயின்ட் அசிசி பொதுப்பள்ளியில் நேற்று சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது, 12 வயது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF">சிறுமி</a> தனக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88">பாலியல் தொல்லை</a> ஏற்பட்டதாக தெரிவித்தார்.</p><h2>போக்சோவில் வழக்குப்பதிவு</h2><p>இதையடுத்து, சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணையில், சிறுமிக்கு நீச்சல் கற்றுத் தருவதாகக் கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெற்கு அகஸ்தியர்புரத்தைச் சேர்ந்த ஜார்ஜ் (வயது 50) என்பவர் மீது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B">போக்சோ</a> சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.</p><h2>கைது</h2><p>இதனை தொடர்ந்து, அம்பாசமுத்திரம் காவல் நிலைய போலீசார் ஜார்ஜ் என்பவரை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். மேலும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>காவிரி தண்ணீருக்காக அல்ல..  ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் திரிஷாவிற்காக சண்டை போடுகிறது -  ஆர்.பி. உதயகுமார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/not-for-cauvery-water-the-ruling-party-and-the-opposition-are-fighting-for-trisha-rp-udayakumar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/not-for-cauvery-water-the-ruling-party-and-the-opposition-are-fighting-for-trisha-rp-udayakumar#comments</comments><guid isPermaLink="false">8e3e51f8-15fd-4435-adc4-8b928211a7c9</guid><pubDate>Wed, 05 Aug 2026 11:59:14 +0000</pubDate><atom:updated>2026-08-05T11:59:14.545Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Trisha,காவிரி நீர்,மதுரை,ஆர்.பி. உதயகுமார்,Cauvery water,R.P. Udayakumar,திரிஷா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/dqjog3rk/190.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆர்.பி. உதயகுமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/dqjog3rk/190.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>காவிரி தண்ணீருக்காக அல்ல, ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் திரிஷாவிற்காக சண்டை போடுகிறது என்று ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.</p><p>இது தொடர்பாக, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BF.%20%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">ஆர்.பி.உதயகுமார்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடும்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும், கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட மறுத்துள்ளது. இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சரிடம் உங்கள் நிலைப்பாடு என்ன என்ன செய்ய போகிறீர்கள் என்ற கேள்விகளுக்கு அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பதில் அளிக்காமல் சிரித்துக் கொண்டே சென்று விடுகிறார். இது தான் த.வெ.க அமைச்சரிகளின் பலரது நிலையாக உள்ளது.</p><p>தென்மேற்கு பருவமழை இயல்பை விட 14 சதவீதம் குறைவாக 108.4 மில்லிமீட்டர் மட்டுமே பெய்துள்ளது. மாநில முழுமைக்கான அணைகளின் கொள்ளளவு இந்த ஆண்டு 31.4 சதவீதம் குறைந்துள்ளது. ஓட்டு மொத்த அளவான 2 லட்சத்து 24 ஆயிரம் கன அடியில் தற்போது, வெறும் 70 ஆயிரத்து 439 கன அடி மட்டுமே உள்ளது.</p> <h2>உதயநிதி ஸ்டாலின் கைது</h2><p>விஜய்க்கு கோபம் வராது, வந்தால் என்ன நடக்கும் என்பதைத்தான் நேற்று தமிழ்நாடும், இந்தியாவும் பார்த்தது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்து அவரை சென்னையில் இருந்து தஞ்சாவூர் வரை தேர்தல் பிரசார பவனி போல அழைத்துக்கொண்டு சென்றனர். </p><p>இங்கு அணை நீர்மட்டம் குறைந்து கொண்டு வருகிறது, அரிசி விலை உயர்ந்து வருகிறது, காவிரியில் தண்ணீர் கொடுக்கவில்லை, முதல்-அமைச்சர் வேகமாக நடவடிக்கை எடுப்பாரா என்பது தான் தமிழ்நாடு மக்களின் எதிர்பார்ப்பு. ஆனால் அதை விடுத்து ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் காவிரி தண்ணீருக்காக சண்டை போடவில்லை, நடிகை திரிஷாவுக்காக சண்டை போடுகிறது என்பது தமிழ்நாட்டு மக்களின் சாபக்கேடு,</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகத்தில் குடிநீர் தட்டுப்பாடு: காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்!  </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/drinking-water-shortage-in-maduranthakam-public-stage-road-blockade-with-empty-pots</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/drinking-water-shortage-in-maduranthakam-public-stage-road-blockade-with-empty-pots#comments</comments><guid isPermaLink="false">4df99e09-4089-40a8-bfc3-886c5eadcd73</guid><pubDate>Wed, 05 Aug 2026 11:48:54 +0000</pubDate><atom:updated>2026-08-05T11:48:54.390Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>செங்கல்பட்டு,drinking water,road blockade,police enquiry,குடிநீர் தட்டுப்பாடு,பொதுமக்கள் சாலை மறியல்</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/88g2zmiq/80.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மதுராந்தகம் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/88g2zmiq/80.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>செங்கல்பட்டு,</p><p>மதுராந்தகம் அருகே உள்ள அபிராமிபுரம் பகுதியில், கடந்த 15 நாட்களாக குடிநீர் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் இறங்கி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><h2>துயரத்தில் பொதுமக்கள்</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">செங்கல்பட்டு மாவட்டம் </a>அபிராமிபுரம் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக குடிநீர் சரியாக வழங்கப்படவில்லை. பொதுமக்கள் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அன்றாட தேவைகளுக்கு கூட தண்ணீர் இன்றி <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பொதுமக்கள்</a>, குறிப்பாக பெண்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.</p><h2>போக்குவரத்து பாதிப்பு</h2><p>அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்து, இன்று (புதன்கிழமை) காலை அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் காலி குடங்களை சாலையில் வரிசையாக அடுக்கி வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தங்களுக்கு உடனடியாக சீரான குடிநீர் வழங்க வேண்டும் என கோரி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">போக்குவரத்து</a> சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.</p><h2>அதிகாரிகள் உறுதி</h2><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள், மறியலில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் பற்றாக்குறையை போக்க தற்காலிகமாக லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கவும், குழாய்களில் குடிநீர் விநியோகத்தை உடனடியாக சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.</p>]]></content:encoded></item><item><title>9 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/rain-possible-till-7-pm-in-9-districts</link><comments>https://www.dailythanthi.com/news/weather/rain-possible-till-7-pm-in-9-districts#comments</comments><guid isPermaLink="false">745bde1b-10fd-420b-a6a1-e481f0d606e6</guid><pubDate>Wed, 05 Aug 2026 11:38:08 +0000</pubDate><atom:updated>2026-08-05T11:38:08.829Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு,வானிலை முன்னறிவிப்பு,TN weather</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/v9e8uzn6/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/v9e8uzn6/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுமார் 5.8 கிமீ உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 5.8 கிமீ முதல் 7.6 கிமீ உயரம் வரை தென் தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. வட தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இதன் காரணமாக தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>செப்.8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் - சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அறிவிப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-governments-first-budget-2026-live</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-governments-first-budget-2026-live#comments</comments><guid isPermaLink="false">07b1d6e3-6ab8-4030-a6a8-0ee2266a96fc</guid><pubDate>Wed, 05 Aug 2026 03:56:56 +0000</pubDate><atom:updated>2026-08-05T11:26:07.633Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,விஜய்,தமிழக சட்டசபை,TNAssembly,பட்ஜெட் கூட்டத்தொடர்,CMVijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/jsci65ou/Untitled-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/jsci65ou/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h3>தவெக அரசின் முதல் பட்ஜெட்  தாக்கல்</h3><p>முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. சட்டசபையில் பட்ஜெட் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. 2026-2027-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்ய உள்ளார்.</p><h3>
பலத்த பாதுகாப்பு
</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/ou2byp9l/police33.jpg" /></figure><p>பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், இன்று சட்டப்பேரவையில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அதனை முன்னிட்டு தலைமைச் செயலகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.</p><h2>பட்ஜெட் தாக்கல் - எதிர்க்கட்சி தலைவர் வருகை</h2><p>2026-27 நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவைக்கு வருகை தந்துள்ளார்.</p><h2>பட்ஜெட் தாக்கல் - தமிழக முதல்-அமைச்சர் விஜய் வருகை</h2><p>தனது தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் சட்டசபைக்கு வருகை தந்துள்ளார்.</p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/5uj40573/tncea.jpg" /></figure><h2>பட்ஜெட் தாக்கல் - அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை</h2><p>2026-27 நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவைக்கு வருகை தந்துள்ளார்.</p> <h3>
முண்டகக்கண்ணி அம்மன் கோவிலில் அமைச்சர் என்.ஆனந்த்
</h3><p>தவெக அரசின் முதல் பட்ஜெட் சற்று நேரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், சென்னையில் உள்ள முண்டகக்கண்ணி அம்மன் கோவிலில் அமைச்சர் என்.ஆனந்த் உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்தார்.</p><p>2026-27 நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை முன்னிட்டு, தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், தமிழக முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.</p> <h3>சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது</h3><p>சபாநாயகர் குறிப்பிட்ட திருக்குறள்!</p><p>குறள்:</p><p>வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை</p><p>விளக்கம்:</p><p>வருவாய் வரும் வழிகளைப் பெருக்கி, வந்த செல்வத்தை வளர்த்து, அதற்குக் வரக்கூடிய இடையூறுகளை ஆராய்ந்து நீக்க வல்லவனிடம் ஒரு செயலைச் செய்யச் கொடுக்க வேண்டும்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/ob72t0gl/sabaa33.jpg" /></figure><p>2026-27 நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் தாக்கலையொட்டி சட்டசபை கூட்டம் தொடங்கியது</p><p>2026-27-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். </p><h3>சூழ்ச்சிகளை எதிர்த்து வெற்றி கொண்ட ஜனநாயகன் - மரிய வில்சன்</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/anu0vjv7/wilson33.jpg" /></figure><p>பல்வேறு சூழ்ச்சிகளை வெற்றி கண்டு ஜனநாயகனாக இந்த அவையில் அமர்ந்திருக்கிறார் முதல்-அமைச்சர். அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியே அரசின் லட்சியம்.3 மாதங்களில் ஏராளமான சாதனைகளை செய்துள்ளது விஜய் அரசு.</p><p>எல்லாம் கொடுத்த மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்த மட்டுமே அரசியலுக்கு வந்தவர் முதல்-அமைச்சர் விஜய். சமூகநீதி, சமத்துவம், வறுமை ஒழிப்பு பெண்கள் பாதுகாப்பு ஆகிய கோட்பாடுகளும் ஆட்சி நடக்கிறது என்றார்.</p><p>வறுமை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க, 2026ம் ஆண்டுக்குள் 1.5 ட்ரில்லியன் டாலர் பொளாதாரம் உள்ள மாநிலமாக மாற்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது" - நிதியமைச்சர் மரிய வில்சன்</p><h3>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/tqpgnzf6/mama33.jpg" /></figure><p>தமிழக அரசின் 2026-27-ம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, ஆட்சிப் பொறுப்பில் இருந்த தி.மு.க. அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் வருவாய் வரவுகள் சுமார் ரூ.3 லட்சத்து 44 ஆயிரத்து 575 கோடி என்றும், நிதிப் பற்றாக்குறை சுமார் ரூ.1 லட்சத்து 21 ஆயிரம் கோடி என்றும், வருவாய் பற்றாக்குறை ரூ.48 ஆயிரத்து 696 கோடியே 32 லட்சம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. </p><p>இந்த நிலையில், தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2026-2027-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். </p><p>பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-</p><p>அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு.</p><h3>
மாநிலத்தின் வருவாயை அதிகரிக்க வருவாய் மேம்பாட்டுக் குழு</h3><p>மதுபான உற்பத்தி ஆலைகளுக்கான சிறப்புக் கட்டணம் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.1,000 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் பல்வேறு நடவடிக்கை மூலம் அரசுக்கு ரூ.15,000 கோடி கூடுதலாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தின் வருவாயை அதிகரிக்க வருவாய் மேம்பாட்டுக் குழுவை விரைவில் அரசு அமைக்கவுள்ளது  - நிதியமைச்சர் மரிய வில்சன் </p><h3>காமராஜர் சிறப்பு பள்ளிகள் அமைக்க நிதி ஒதுக்கீடு </h3><p>நவீன உண்டு உறைவிட பள்ளிகள் நிறுவப்படும்</p><p>அரசு பள்ளிகளில் சூப்பர் கிளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம் செயல்படுத்தப்படும். </p><p>10 ஆயிரம் பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ள திட்டத்திற்காக ரூ.139 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. </p><p>தினசரி தூய்மை பணிகள், குடிநீர், கழிப்பறை பராமரிப்பு, 24 மணி நேர பாதுகாப்புக்கு திட்டம்</p><p>குழந்தைகள் படிக்க பள்ளிகளில் தரமான உட்கட்டமைப்பு வசதிகள் அவசியம் என்பதை உணர்ந்து முடிவு. </p><p>3,734 பள்ளிகளில் ரூ.2,132 கோடி செலவில் அரசு பள்ளிகள் நவீனமயமாக்கப்படும்.</p><p>போதைப்பொருள் புழக்கம் குறித்த தகவல்களை தெரிவிக்க சிறப்பு செயலி.</p><h3>
தமிழ்நாடு மாணவர் தங்கும் விடுதி மற்றும் உட்கட்டமைப்பு நிறுவனம் </h3><p>மாநிலம் முழுவதும் மாணவர் தங்கும் வசதிகளை மேம்படுத்திட சிறப்பு நோக்கு நிறுவனம் (Special Purpose Vehicle) அமைக்கப்படும்.</p> <p>12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் அடிப்படையில் நீட் தேர்வு முறையினை உடனடியாக ரத்து செய்து பொதுத்தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கல்விக்கான சேர்க்கையைத் தொடர்ந்திட  மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.</p><h3>மடிக்கணினி திட்டத்தின் பெயர் மாற்றம்
</h3><p>திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட உலகம் உங்கள் கையில் திட்டத்தின் பெயர், வெற்றி மடிக்கணினி திட்டம் என மாற்றி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.  இத்திட்டத்திற்கு ரூ.2,000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><h3>மதுரையில் புதிய சட்டக்கல்லூரி</h3><p>மதுரையில் 300 மாணவர்களின் சேர்க்கையுடன் சட்டக்கல்லூரி தொடங்கப்படும். </p> <h3>
5 தொழிற்பயிற்சி நிலையங்கள்</h3><p>அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் செயற்கை நுண்ணறிவு இயந்திர வழி கற்றல் புதிய தொழிற்பிரிவு தொடக்கம்.  ரூ.90 கோடி மதிப்பீட்டில் 5 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் நிறுவப்படும்.  22,500 மெக்கானிக்குகளுக்கு மின்சார வாகனங்கள் மற்றும் மின்கலம் பராமரிப்பு பயிற்சி அளிக்க ரூ.3 கோடி ஒதுக்கீடு. </p><h3>
 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் உருவாக்கப்படும் - நிதியமைச்சர் மரிய வில்சன்
</h3><p>ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்வதை நோக்கமாகக் கொண்டு, மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் உருவாக்கப்படும். இதற்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு - நிதியமைச்சர் மரிய வில்சன்</p><h3>தொழிலாளர் நலனுக்கு ரூ.2,022 கோடி ஒதுக்கீடு </h3><p>தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறைக்கு ரூ2,022 கோடி ஒதுக்கீடு </p><h3>
பள்ளி நிறைவுத் திட்டம்
</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/6lorr96e/schools33.jpg" /></figure><p>தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் ‘பள்ளி நிறைவுத் திட்டம்' அறிவிக்கப்படும்.</p><p>இத்திட்டத்தின் கீழ் 3,734 அரசுப் பள்ளிகள் ரூ.2,132 கோடி மதிப்பில் நவீனமயமாக்கப்பட உள்ளன.</p><p>மேலும் 2,514 தொடக்கப் பள்ளிகள் மேம்படுத்தப்படவுள்ளன. 855 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இத்திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. நடப்பாண்டிற்கு இத்திட்டத்திற்காக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. </p> <h3>

 பள்ளி நேரத்திற்கு பிறகு தினமும் ஒரு மணி நேரம் விளையாட்டு</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/wmm5xkjw/sports33.jpg" /></figure><p>பள்ளி நேரத்திற்கு பிறகு தினமும் ஒரு மணி நேரம் முறைப்படுத்தப்பட்டு விளையாட்டுப் பயிற்சி வழங்கப்படும்.</p><p>விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி வழங்க கூடுதலாக ரூ.22 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தி</p><h3>மாணவர்களுக்கு சைக்கிள் - ரூ.277 கோடி ஒதுக்கீடு</h3><p>“அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் +1 படிக்கும் மாணவர்களுக்கு ரூ.277 கோடியில் ஹெல்மெட், வாட்டர் பாட்டில் வசதிகளுடன் நவீன BRANDED சைக்கிள் வழங்கப்படும்”</p><h3>அண்ணன் சீர் திட்டம் - ரூ.812 கோடி ஒதுக்கீடு</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/fc9occm8/annansrr33.jpg" /></figure><p>பெண்களுக்கு திருமணத்தின் போது அரசு சார்பில் 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை வழங்கும் 'அண்ணன் சீர்' திட்டத்துக்கு ரூ.812 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு. அனைத்து பெண்களுக்கும் பொருந்துமா? அல்லது யாருக்கெல்லாம் பொருந்தும்? எனக் குறிப்பிடப்படவில்லை.</p><h3>கருவுற்ற பெண்களுக்கான சேவை மற்றும் உதவி மையம்</h3><p>கருவுற்ற பெண்களுக்கான சேவை மற்றும் உதவி மையங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்படும்</p><p>மகப்பேறு நாள் நெருங்கும் வேளையில் தங்கியிருந்து பயன் பெறலாம்; கட்டணமில்லாமல் உணவு மற்றும் மருத்துவ உதவிகள், தொடர் மருத்துவக் கண்காணிப்பு உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும்; ரூ.23 கோடி நிதி ஒதுக்கீடு -நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><h3>
12 மாவட்டங்களில் 12 முதியோர் இல்லங்கள் நிறுவப்படும்</h3><p>12 மாவட்டங்களில் 12 முதியோர் இல்லங்கள் நிறுவப்படும். இதற்காக ரூ.6.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><h3>
5 லட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி</h3><p>2031-ஆம் ஆண்டிற்குள் பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் 5 லட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்கப்படும் - நிதியமைச்சர் மரிய வில்சன்</p><h3>
அரசு நூலகங்களை டிஜிட்டல் நூலகங்களாக மறுவடிவமைக்க 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

</h3><h3>
தமிழ்நாடு கிராமிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் 
</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/60wjiwtn/maadu33.jpg" /></figure><p>தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல தமிழ்நாடு கிராமிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் இதற்காக ரூ.42 கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர் மரிய வில்சன்</p> <h3>
 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள்</h3><p>மூத்த குடிமக்களுக்காக தமிழ்நாடு முழுவதும் 1000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும்</p><p>கிராமப் பஞ்சாயத்துகளுக்கே நேரில் சென்று இலவச உடல் பரிசோதனை மற்றும் மருந்துகள் வழங்கப்படும். 1 மருத்துவர், 1 செவிலியர், 1 இயன்முறை மருத்துவருடன் இந்தச் சேவை வழங்கப்படும். இதற்காக ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு</p><h3>
வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்- ரூ.110 கோடி ஒதுக்கீடு </h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/wvkl0y1e/adu33.jpg" /></figure><p>கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 100% மானியத்தில் 5 ஆடுகள் வழங்கப்படும்; ரூ.110 கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர் மரிய வில்சன்</p><h3>
மூத்த குடிமக்களுக்காக பொழுதுபோக்கு மையங்கள் </h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/0pxf8rur/thathaa33.jpg" /></figure> <p>மூத்த குடிமக்களுக்காக பொழுதுபோக்கு மையங்கள் அமைக்கப்படும். நூலகம், யோகா, தியானம், உள்ளரங்க விளையாட்டு வசதிகளுடன் கூடிய மையங்கள் முதற்கட்டமாக 5 மாவட்டங்களில் நிறுவப்படும் - நிதியமைச்சர் மரிய வில்சன்</p> <h3>
கறவை மாடுகள் வழங்கும் திட்டம் - ரூ.57 கோடி ஒதுக்கீடு
</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/kl5wwhyh/madu33.jpg" /></figure><p>ஒவ்வொரு ஆண்டும் 10,000 தகுதி வாய்ந்த பெண்களுக்கு கறவை மாடுகள் விலையில்லாமல்</p><p>வழங்கப்படும்; ரூ.57 கோடி நிதி ஒதுக்கீடு - நிதியமைச்சர் மரிய வில்சன்</p><h3>
ஆழ்கடல் மீன்பிடித் தொழில் ஊக்குவிப்பு: ரூ. 12 கோடி நிதி ஒதுக்கீடு</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/t3yvv7wi/azaakadal33.jpg" /></figure><p>தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2026-27-ன் கீழ் மீனவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 'ஆழ்கடல் மீன்பிடித் தொழில் ஊக்குவிப்பு' திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>நவீன ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் வாங்க விரும்பும் மீனவர்களுக்கு வட்டி மானிய உதவி வழங்கப்படும். பாரம்பரிய மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படும். </p> <h3>
 புதிய கால்நடை காப்பீட்டுத் திட்டம்
</h3><p>புதிய கால்நடை காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். எதிர்பாராத இழப்புகளில் இருந்து விவசாயிகளுக்கு நிதிப் பாதுகாப்பு வழங்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.31 கோடி நிதி ஒதுக்கீடு - நிதியமைச்சர் மரிய வில்சன்</p><h3>
 மீனவர்களுக்கு உதவித்தொகை உயர்வு</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/s7wypk61/fisherss33.jpg" /></figure> <p>மீன் பிடித் தடைக் காலங்களில் மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000 ஆக உயர்த்தப்படும். 1.93 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ரூ.135 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. </p> <h3>
சென்னையில் அனைவருக்கும் ஸ்மார்ட் மீட்டர்</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/vneoqjl0/meetr33.jpg" /></figure><p>சென்னை மாநகரின் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.  மாநிலத்தில் பிற பகுதிகளில் 50 லட்சம் தொழில் மற்றும் வணிக நுகர்வோருக்கும் விரிவாக்கம் செய்யப்படும். </p><h3>வீட்டுக் கூரை சூரிய மின் மானியத் திட்டம் - ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/6dnv4ojv/murukku33.jpg" /></figure> <p>*வீட்டுக் கூரை சூரிய மின் மானியத் திட்டம் அறிமுகம் செய்யப்படும்</p><p>*சூரிய மின்பலகைக்கு ரூ.1 இலட்சம் வரை மானியம்</p><p>* ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். </p> <h3>கைத்தறி துறைக்கு ரூ.1,678 கோடி ஒதுக்கீடு
</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/6slql0yj/kaithari33.jpg" /></figure><p>கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை - ரூ.1,678 கோடி ஒதுக்கீடு. திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர் - ரூ.10 கோடி ஒதுக்கீடு. தமிழ்நாடு ஆடை வடிவமைப்பு நிறுவனம் - ரூ.60 கோடி ஒதுக்கீடு - நிதி அமைச்சர் மரிய வில்சன்</p> <h3>விண்வெளித் தொழில் முதலீட்டு மண்டலம்: தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் புதிய திட்டம்</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/g04vqw2z/vinivmeli33.jpg" /></figure><p>தமிழ்நாட்டில் விண்வெளித் துறையை ஊக்குவிக்கவும், தொழில் வளர்ச்சியைப் பெருக்கவும் "விண்வெளித் தொழில் முதலீட்டு மண்டலம்" அமைக்கப்படும்.</p><p>தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இந்த விண்வெளித் தொழில் முதலீட்டு மண்டலம் அமைக்கப்படுகிறது.</p><p>இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அனுமதி மையமான (IN-SPACE) இணைந்து விண்கலப் பொதுத் தொழில்நுட்ப வசதி உருவாக்கப்படுகிறது.</p><p>விண்வெளி ஏவுதளத்தின் புவியியல் முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த முதலீட்டு மண்டலம் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்படவுள்ளது - நிதி அமைச்சர் மரிய வில்சன்</p> <h3>இந்தியாவின் முதல்  ஏஐ நகரம் - சாத்தியக்கூறு ஆய்விற்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு</h3><p>இந்தியாவின் முதல் பிரத்யேக செயற்கை நுண்ணறிவு (AI) நகரமாக 'அறிவகம்'</p><p>AI பல்கலைக்கழகம், சர்வதேச திறன் மேம்பாட்டு மையம் &amp; குறைகடத்தி சோதனை ஆய்வகம்</p><p>AI, குவாண்டம் தொழில்நுட்பம் &amp; ஆராய்ச்சிக்கான ஒருங்கிணைந்த மையம்</p><p>சாத்தியக்கூறு ஆய்விற்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு   - நிதி அமைச்சர் மரிய வில்சன்</p> <h3>
திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர்</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/cudz48ef/thirupur33.jpg" /></figure><p>சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை ஆடை உற்பத்திக்கு ஊக்குவிக்க பல கட்டங்களில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்</p><p>&gt; ‘திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர்' அமைக்கப்படும்  இதற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு -நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><h3>
அங்கன்வாடி மேம்பாடு: குழந்தைகளின் எதிர்காலத்தை வளமாக்கும் புதிய திட்டங்கள்</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/4y3gqcsr/angapawadi33.jpg" /></figure><p>தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2026-27 இன் கீழ், குழந்தைகளின் நலன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் அங்கன்வாடி மையங்களை மேம்படுத்தும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது/</p><p>சிதலமடைந்த 500 அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படவுள்ளன.</p><p>அங்கன்வாடி மையங்களில் பாதுகாப்பான குடிநீர், கழிப்பறை மற்றும் மின்சார வசதிகள் உறுதி செய்யப்படுகின்றன.</p><p>குழந்தைகளின் பாதுகாப்பும் ஆரோக்கியமும் முழுமையாக உறுதி செய்யப்படும் வகையில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது - -நிதி அமைச்சர் மரிய வில்சன்</p> <h3>
அனைவருக்கும் தரமான வீடு</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/4tya1vjd/bulidings33.jpg" /></figure><p>தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2026-27 இன் கீழ், பொதுமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான தங்குமிடங்களை வழங்கும் நோக்கில் "அனைவருக்கும் தரமான வீடு" திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக ரூ.1,253 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>இவ்வாண்டில் 24,313 அடுக்குமாடிக் குடியிருப்புகள் முழுமையாகக் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வரவுள்ளன பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினரின் நலனுக்காக 14,194 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. அனைத்துக் குடியிருப்புகளும் அவசியமான அடிப்படை வசதிகளுடன் தரமான முறையில் அமைக்கப்படுகின்றன -நிதி அமைச்சர் மரிய வில்சன்</p> <h3>
சென்னை கூவம் நதியில் படகு சவாரி 
</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/3b7j9ny4/padaku33.jpg" /></figure><p>கூவம் மற்றும் அடையாறு ஆறுகளில் பொதுமக்கள் படகு சவாரி செய்வதையும், குழந்தைகள் ஆனந்தக் குளியல் போடுவதையும் அரசு உறுதி செய்யும். சியோல் நகரத்தின் சென்சியான் நதி, சிங்கப்பூரின் தலாங் நதி போல சென்னையின் அடையாளமாக கூவம் மாற்றப்படும் - நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><h3>விரைவில்  பூந்தமல்லி - போரூர் - வடபழனி மெட்ரோ ரெயில் சேவை </h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/4yjoecdf/metro33.jpg" /></figure><p>பூந்தமல்லி பைபாஸ்-போரூர்-வடபழனி  மெட்ரோ ரெயில் சேவை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படும் - நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><h3>1,000 புதிய ஏசி மின்சாரப் பேருந்துகள் வாங்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/j6thrpp4/bus33.jpg" /></figure><p>சென்னைக்கு 1,000 புதிய ஏசி மின்சாரப் பேருந்துகள் மற்றும் பணிமனை கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு  நிதி அமைச்சர் மரிய வில்சன்</p> <h3>பனை மேம்பாட்டுக் கழகம் நிறுவப்படும்</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/i4jo1kjk/panai33.jpg" /></figure><p>பனை விவசாயிகளின் வாழ்வாதார பாதுகாப்பையும், வருவாயையும் உறுதி செய்யும் வகையில் ரூ.16 கோடி நிதியுடன் தமிழ்நாடு பனை மேம்பாட்டுக் கழகம் நிறுவப்படும் -  நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><h3>
வீட்டு அலகுத் தொகை உயர்வு</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/2mxldtzv/home33.jpg" /></figure> <p>புதிய மாநில வீட்டுவசதித் திட்டமான வெற்றி வீடு திட்டம் அறிமுகம்; வீட்டு அலகுத் தொகை ரூ.3.10 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்வு; ரூ.3,500 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும் -  நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><h3> போதைப்பொருள் இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவது நமது இலக்கு 
</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/cso14cfn/ottam33.jpg" /></figure> <p>SAY NO TO DRUGS சொன்னவர், என்றென்றும் அதைச் சொல்பவர் முதல்-அமைச்சர் விஜய்</p><p>போதைப்பொருள் இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவது நமது இலக்கு. பள்ளிகளில் போதைப்பொருள் எதிர்ப்பு அமைப்புகளும், தன்னார்வ குழுக்களும் அமைக்கப்படும். இது குறித்த விழிப்புணர்வுக்காக 10581 என்ற உதவி எண் பள்ளி வளாகங்களில் தெளிவாக காட்சிப்படுத்தப்படும். இத்திட்டத்தை செயல்படுத்த 7 கோடி ரூபாய் ஒதுக்கீடு - நிதி அமைச்சர் மரிய வில்சன்</p> <h3> 3 புதிய மெட்ரோ வழித்தடங்கள் அமைக்க பரிந்துரை</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/7nz402vn/metro33.jpg" /></figure><p>3 புதிய மெட்ரோ வழித்தடங்கள் அமைக்க மத்திய அரசிடம் மாநில அரசு பரிந்துரைத்துள்ளது.</p><p>விமான நிலையம்-கிளாம்பாக்கம், கோயம்பேடு-பட்டாபிராம், பூந்தமல்லி-சுங்குவார்சத்திரம் இடையே மெட்ரோ - நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/v8238nbh/singapen33.jpg" /></figure><h3>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை மேம்படுத்த ரூ.354 கோடி ஒதுக்கீடு
</h3><h3>காவல்துறையினருக்கு புதிய குடியிருப்பு வளாகங்கள்</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/s8r28uv9/build33.jpg" /></figure><p>காவல்துறையினருக்கு புதிய குடியிருப்பு வளாகங்கள் அமைக்கப்படும். 5000 காவலர் குடும்பங்கள் இதனால் பயன்பெறுவர். இதற்காக ரூ.431 கோடி நிதி ஒதுக்கீடு - நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><h3>

புதிய சாலை பாதுகாப்பு கொள்கை</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/cqfn6h35/road33.jpg" /></figure><p>நிறுவன அமைப்புகள், சாலை வடிவமைப்பு மற்றும் பொறியியல், போக்குவரத்து சட்ட அமலாக்கம், அவசரகால ஆசிகிச்சை மற்றும் விழிப்புணர்வுக் கல்வி ஆகிய 5 முக்கியத் தூண்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும்.</p><p>* முதலமைச்சர் விபத்து நிவாரண நிதிக்கு ரூ.200 கோடி</p><p>* சாலைப் பாதுகாப்புப் பணிகளுக்கு ரூ.130 கோடி</p><p>மொத்தம் ரூ.330 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது - நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><h3>
காயிதே மில்லத் விருது</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/unxxyey1/kayithee33.jpg" /></figure><p>திருவள்ளுவர் திருநாளன்று ஆண்டுதோறும் 'காயிதே மில்லத்’ விருது வழங்கப்படும். காயிதே மில்லத் அவர்களின் வரலாற்றுப் பெருமைக்கு சிறப்பு மரியாதை. தமிழ்மொழி மீதான அவரின் ஆழ்ந்த பற்றை போற்றும் அரசு இதுவாகும் -  - நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><h3>
வெற்றி 150’ திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/0zcs9ma1/work33.jpg" /></figure><p>VB-G RAM G திட்டத்தின் துணை திட்டமாக 'வெற்றி 150' திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு -</p><p>125 நாட்கள் பணி செய்யும் குடும்பங்களுக்கு கூடுதலாக 25 நாட்கள் பணி வழங்க ஏற்பாடு செய்யப்படும் -  நிதி அமைச்சர் மரிய வில்சன்</p> <h3>தரமான கோதுமை மாவு  விநியோகம்</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/udrw83rs/kothumai33.jpg" /></figure> <p>பொட்டலமிடப்பட்ட கோதுமை மாவு வழங்கும் முன்னோடி திட்டம் செயல்படுத்தப்படும். தரமான மற்றும் அளவான அத்தியவசியம் பொருட்கள் விநியோகம் செய்யப்படும். படிப்படியாக மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும். இதற்காக ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது -  நிதி அமைச்சர் மரிய வில்சன்</p> <h3>
அமலில் உள்ள பொதுநலத் திட்டங்கள் தொடரத் திட்டம் </h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/u6qwgibu/freee33.jpg" /></figure> <p>கடந்த 30 ஆண்டுகளாக அமலில் உள்ள பொதுநலத் திட்டங்களில் பெரும்பாலானவற்றை இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்துவதுடன்,அவற்றை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது - நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><h3>
மாநில அரசின் மொத்தக்கடன் ரூ.10.98 லட்சம் கோடி</h3><p>மாநில அரசின் மொத்த கடன் ரூ.10.98 லட்சம் கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது  நிதி அமைச்சர் மரிய வில்சன்.</p><h3>
உள்துறை, மதுவிலக்குத் துறைக்கு நிதி ரூ.17,290 கோடி ஒதுக்கீடு</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/vtmx42xb/wilson33.jpg" /></figure><p>உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைக்கு ரூ.17,290 கோடி ஒதுக்கீடு -  நிதி அமைச்சர் மரிய வில்சன்</p> <h3>
இரண்டரை மணி நேரம் உரையாற்றிய நிதி அமைச்சர் மரிய வில்சன்</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/rv91akjm/three33.jpg" /></figure><p>நிதிநிலை அறிக்கையை தாக்கல்செய்த நிதியமைச்சர் மரிய வில்சன் இரண்டரை மணி நேரம் உரையாற்றினார்</p><p>காலை 10.01 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கிய மரிய வில்சன் 12.31க்கு உரையை நிறைவு செய்தார்.</p><h3>
20,000 பொது இ.வி சார்ஜிங் நிலையங்கள் </h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/v0rpw700/charage33.jpg" /></figure> <p>5 ஆண்டுகளில் 20,000 பொது EV சார்ஜிங் நிலையங்கள் உருவாக்கப்படும். இதற்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>குடியிருப்புகளில் EV சார்ஜிங் நிலையங்களுக்கு அரசு மானியம் வழங்கப்படும். இதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு - நிதி அமைச்சர் மரிய வில்சன்</p> <h3>மூத்த குடிமக்களுக்கு புனிதப் பயணம் திட்டத்திற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு
</h3><p>மூத்த குடிமக்களுக்கு புனிதப் பயணம் திட்டத்திற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது - நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><h3>நாட்டுப்புறக் கலைஞர்கள் வாழ்வாதாரப் பாதுகாப்புத் திட்டம்</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/kdeivnhw/dancer33.jpg" /></figure><p>200 சிறந்த கலைக் குழுக்களுக்கு ஆண்டுதோறும் 100 நாட்கள் நிகழ்ச்சி வாய்ப்பு</p><p>நாட்டுப்புறக் கலைகளும் கலைஞர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும் - ரூ.23 கோடி நிதி ஒதுக்கீடு - நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><h3>
மின் பகிர்மான கட்டமைப்பு மேம்பாடு</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/8papaee2/power33.jpg" /></figure> <p>கோயம்புத்தூர் - அரியலூர் 765 கே.வி. மின் பகிர்மானப் பாதை: ரூ. 4,000 கோடியில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>கோயம்புத்தூர் - அரியலூர் 765 கே.வி. மின் பகிர்மானப் பாதைத் திட்டம் ரூ.4,000 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.</p><p>எதிர்கால மின் தேவைக்கேற்ப மாநிலத்தின் பகிர்மான கட்டமைப்பை வலுப்படுத்தும் முக்கிய திட்டம் அமல்படுத்தப்படும் -  நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><h3>
நதிகள் மீட்புக்கு ரூ.25 கோடி</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/rb7kr26s/river33.jpg" /></figure><p>* காவிரி, வைகை &amp; தாமிரபரணி நதிகள் மறுசீரமைப்பு</p><p>*மாசுபாட்டைத் தடுக்க விரிவான திட்டம்</p><p>* கழிவுநீர் சுத்திகரிப்பு &amp; திடக்கழிவு மேலாண்மை</p><p><strong>நதிச் சுற்றுலா ரூ.53 கோடி நிதி ஒதுக்கீடு</strong></p><p>காவிரி, வைகை &amp; தாமிரபரணி நதிகளில் நதிச் சுற்றுலா</p><p>* சுற்றுலா வளர்ச்சி மற்றும் உள்ளூர் வேலைவாய்ப்புக்கு ஊக்கம்</p><p>* ஓகேனக்கல் திருவரங்கம், மதுரை &amp; பாபநாசம்-திருநெல்வேலி வழித்தடங்கள்</p><p>* நதிக்கரை மேம்பாடு &amp; நதி மேற்பரப்பு சுத்தம் சாத்தியக்கூறு ஆய்விற்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு -  நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><h3>
எல்-நினோ ஆபத்து - ரூ.340 கோடி ஒதுக்கீடு'</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/tmvce7wh/nino33.jpg" /></figure><p>சூப்பர் எல்-நினோ பாதிப்பை சமாளிக்க சிறப்பு நடவடிக்கைகளாக குடிநீர் வழங்கல் &amp; நீர் ஆதாரங்களை பலப்படுத்துதல், கால்நடைகளுக்கான தீவன சேமிப்பு போன்றவற்றுக்கு மாநிலப் பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ரூ.340 கோடி ஒதுக்கீடு - நிதி அமைச்சர் மரிய வில்சன்</p> <h3>
திருக்கோவில் திருப்பணிகள்</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/l2xztz1c/temple33.jpg" /></figure><p>5 ஆண்டுகளில் 3,000 திருக்கோவில்களுக்கு திருப்பணி மற்றும் திருக்குடமுழுக்கு</p><p>250 திருக்குளங்கள் &amp; 75 மரத் தேர்கள் சீரமைப்பு</p><p>பக்தர்களுக்கு குடிநீர், கழிவறை, தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்பாடு</p><p>1,000 ஆண்டுகள் பழமையான 213 திருக்கோயில்கள் புனரமைப்பு - நிதி அமைச்சர் மரிய வில்சன்</p> <h3>

நிலைமை சரி செய்ய 2 ஆண்டுகள் தேவைப்படும் - அமைச்சர் மரிய வில்சன் </h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/ct2i3ki9/three33.jpg" /></figure> <p>நேர்மையான, திறமையான, நல்லாட்சி வழங்க உள்ளோம். நிலைமை சரி செய்ய குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் தேவைபடும். ரூ.15,000 கோடி கூடுதல் வருவாயை அரசால் திரட்ட முடியும் என சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் மரிய வில்சன் கூறினார்</p><h3>2026-27ம் ஆண்டில் 1.73 லட்சம் கோடி கடன் பெற தவெக அரசு திட்டம்
</h3><p>2026-27ம் ஆண்டில் 1.73 லட்சம் கோடி கடன் பெற திட்டம் என தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h3>
செப்.8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர்</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/v0rm07vt/brabaha33.jpg" /></figure><p>தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்தபின் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்  செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>2026-27 நிதிநிலை அறிக்கை மிக அமைதியாக நடந்தது. ஒத்துழைப்பு தந்த உறுப்பினர்களுக்கு நன்றி. </p><p>நாளை வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். செப் 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.  </p><p>ஆகஸ்ட் 7-ல் இரங்கற் குறிப்புகள், இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு பொது விவாதம் தொடங்கும். ஆகஸ்ட் 10,11-ல் நிதிநிலை அறிக்கை, வேளாண் அறிக்கை மீது பொது விவாதம் நடத்தப்படும். ஆகஸ்ட் 12- தேதி பொது விவாதத்துக்கு பதிலுரை அளிக்கப்படும். ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை பேரவை விடுமுறை. ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் மானிய கோரிக்கை, சட்டமன்றம் காலை 9.30 மணிக்கு தொடங்கும். தேவைப்பட்டால் மாலை 6 மணி வரை சட்டசபை கூட்டம் நடைபெறும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தவெக அரசின் தெளிவான திசையை அறிமுகம் காட்டும் பட்ஜெட் - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/budget-introduces-clear-direction-of-tvk-government-manickam-thakur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/budget-introduces-clear-direction-of-tvk-government-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">49e4a68e-aa85-47c6-98c6-7d00df52bc02</guid><pubDate>Wed, 05 Aug 2026 11:24:42 +0000</pubDate><atom:updated>2026-08-05T11:24:42.534Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,மாணிக்கம் தாகூர்,பட்ஜெட்,Budget,Manickam Thakur MP</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/j20v7tes/manickam-tagore.jpg" width="768"><media:title type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:title><media:description type="html"><![CDATA[ பட்ஜெட், மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/j20v7tes/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டின் வறுமையை ஒழித்து, 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவதற்கான தெளிவான திசையை இந்த தமிழ்நாடு அறிமுக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D">பட்ஜெட்</a> காட்டுகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20">மாணிக்கம் தாகூர்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p> <h2>தொலைநோக்கு முதலீடுகள்</h2><p> காமராசர் காலை உணவுத் திட்டம் (ரூ.710 கோடி) மற்றும் மாதிரிப் பள்ளிகள் (ரூ.125 கோடி) மூலம் கல்வியிலும், கல்லூரி மாணவர்களுக்கான 'வெற்றி மடிக்கணினி' (ரூ.2,000 கோடி) திட்டம் மூலம் டிஜிட்டல் கற்றலிலும், பெண்களுக்கு 'அண்ணன் சீர்' (ரூ.812 கோடி) மற்றும் சிங்கப்பெண் படை மூலம் மகளிர் நலனிலும் தொலைநோக்கு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. </p><h2>தென் தமிழ்நாட்டு வளர்ச்சி</h2><p>விவசாயிகள், இளைஞர் நலன், போதைப்பொருள் ஒழிப்பு ஆகியவற்றுடன் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) நகரம் 'அறிவகம்' மற்றும் திருநெல்வேலி-தூத்துக்குடி 'விண்வெளி தொழில் முதலீட்டு மண்டலம்' போன்ற அறிவிப்புகள் மனிதவள மேம்பாட்டிற்கும் தென் தமிழ்நாட்டு வளர்ச்சிக்கும் வலு சேர்க்கின்றன.</p><h2>கவனிக்கத்தக்க அளவு</h2><p>உயர்கல்வி துறைக்கான ஒதுக்கீடு (ரூ.8,393 கோடி), 'வெற்றி மடிக்கணினி' (ரூ.2,000 கோடி) திட்டம் மற்றும் சுற்றுலாத் துறைக்கான நிதி ஒதுக்கீடு போன்றவை மாநிலத்தின் ஒட்டுமொத்த தேவைகளுடன் ஒப்பிடுகையில் கவனிக்கத்தக்க அளவிலேயே உள்ளன.</p> <h2>கால அவகாசம்</h2><p>வருவாய் கசிவுகளை தடுத்து, நிதி நிர்வாகத்தை சீரமைத்து, ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தின் மூலம் மனிதவளத்தில் நீண்டகால முதலீடுகளை செய்ய தமிழ்நாடு அரசுக்கு தேவையான கால அவகாசம் வழங்கி, இத்திட்டங்கள் களத்தில் முழுமையாக செயல்படுத்தப்படுவதை எதிர்நோக்குவோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆட்சிக்கு வந்து 28 மாதங்களுக்கு பிறகு மகளிர் உரிமைத்தொகை அறிவித்தது மறந்து போனதா?  திமுகவுக்கு தவெக பதிலடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/have-they-forgotten-that-the-womens-entitlement-allowance-was-announced-28-months-after-coming-to-power-tvk-hits-back-at-dmk</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/have-they-forgotten-that-the-womens-entitlement-allowance-was-announced-28-months-after-coming-to-power-tvk-hits-back-at-dmk#comments</comments><guid isPermaLink="false">a35f23b0-ccd7-48e6-8e65-fc6e053f7d6b</guid><pubDate>Wed, 05 Aug 2026 11:21:40 +0000</pubDate><atom:updated>2026-08-05T11:21:40.089Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,திமுக,DMK,மகளிர் உரிமை தொகை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/3plvihjk/Stalin.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/3plvihjk/Stalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் வேஸ்ட்..வேஸ்ட் என்று முன்னாள் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள தவெக  கூறியிருப்பதாவது: </p><p>அரசு வாங்கிய கடன் எல்லாம் எங்கே போனது என்று தெரியாமல் அருமையான நிர்வாகத் திறன் ஆட்சி நடத்திய ஸ்டாலின் சார்  தன் ஆட்சியை வேஸ்ட் வேஸ்ட் என்று ஆட்சி போன பிறகு அறிக்கை விட்டுள்ளார்மகளிர் உரிமைத்தொகையை ஆட்சிக்கு வந்த 28 மாதங்கள் வரை தூங்கிவிட்டு அறிவித்ததை மறந்துவிட்டு ஸ்பீட் முதலமைச்சர் போல ஃபேக் நரேட்டிவ் செய்ய முற்படுகிறார்</p><p>.ஆட்சி முடியும்போது அவசர அவசரமாக ஓட்டுக்காக லேப்டாப் வழங்கிய ஸ்டாலின் சார் ஆட்சிக்கு வந்ததும் லேப்டாப் வழங்கப்படப் போவதைப்பொறுக்காமல் சொந்தமாக யோசிக்கத் தெரியாத அரசு தன் அரசு என்பதை சுரத்தே இல்லாமல் ஒரு சூப்பர் சொதப்பல் அறிக்கை விட்டிருக்கிறார்.</p> <p>எங்கே தான் நடத்திய ஊழல் மாடல் உதார் ஆட்சியின் ஊழல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தங்கிலீஷ் மாடல் அறிக்கை விட்டு தடுமாறி இருக்கிறார்.</p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-presents-cash-incentives-to-tamil-nadu-athletes-who-won-medals-at-the-commonwealth-games</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-presents-cash-incentives-to-tamil-nadu-athletes-who-won-medals-at-the-commonwealth-games#comments</comments><guid isPermaLink="false">7f85e786-5c63-42ae-923a-787b8deae49d</guid><pubDate>Wed, 05 Aug 2026 11:21:12 +0000</pubDate><atom:updated>2026-08-05T11:21:12.596Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காமன்வெல்த்,Commonwealth,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/o18kvp9e/vj.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காமன்வெல்த் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/o18kvp9e/vj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>பிற விளையாட்டு (Other sports)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D">காமன்வெல்த் </a>விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த தமிழக வீரர்களை, சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய் நேரில் சந்தித்து பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார்.</p><h2>பதக்கம் வென்ற வீரர்களுக்கு ஊக்கத்தொகை</h2><p>காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டி மற்றும் பிரவீன் ஆகியோருக்கும், வெண்கலப் பதக்கம் வென்ற செல்வபிரபுவுக்கும் முதல்-அமைச்சர்  விஜய் ஊக்கத்தொகை வழங்கினார்.</p><p>அதன்படி, வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டி மற்றும் பிரவீனுக்கு தலா ரூ.30 லட்சமும், வெண்கலப் பதக்கம் வென்ற செல்வபிரபுவுக்கு ரூ.20 லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.</p><h2>வீரர்களுக்கு பாராட்டு</h2><p>சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த வீரர்களின் சாதனையை பாராட்டிய முதல்-அமைச்சர் விஜய், எதிர்காலத்திலும் இதேபோன்ற சாதனைகளை தொடர வாழ்த்துகளை தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் மது வகைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் திட்டம் ஆபத்தானது: அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-liquor-online-prebooking-plan-dangerous-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-liquor-online-prebooking-plan-dangerous-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">1e2f68fc-8fb3-492d-920c-e47fe202bba1</guid><pubDate>Wed, 05 Aug 2026 11:19:47 +0000</pubDate><atom:updated>2026-08-05T11:19:47.810Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,ஆன்லைன் முன்பதிவு,டாஸ்மாக்,Tasmac,Online Booking</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/q3w86ff1/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/q3w86ff1/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுவகைகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் முறை நாளை முதல் நடைமுறைக்கு வரவிருப்பதாகவும், அதற்காக தனி இணையதளம் தொடங்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. மதுவை ஒழிப்பதற்கு பதிலாக மது வாங்குவதை மிகவும் எளிதானதாக மாற்றும் முயற்சி மிகவும் பிற்போக்கானது ஆகும்.</p><p>மதுவகைகளை முன்பதிவு செய்வதற்காக டாஸ்மாக் நிறுவனத்தின் சார்பில்  https://tasmace2e.in/ என்ற இணையதளம் நாளை முதல் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இந்த இணையதளத்தின் வாயிலாக தமிழ்நாட்டின் எந்த மூலையிலிருந்தும் மொத்தமுள்ள 4,048 மதுக்கடைகளிலும் என்னென்ன மதுவகைகள் உள்ளன? அவற்றின் விலை எவ்வளவு என்பதைக் கண்டறிந்து முன்பதிவு செய்ய முடியும். அவ்வாறு முன்பதிவு செய்து பணம் செலுத்தியவர்களுக்கு கியூ.ஆர் கோடுடன் கூடிய கூடிய ரசீது வழங்கப்படும். எந்தக் கடையில் மது வாங்க முன்பதிவு செய்தார்களோ, அந்த கடைக்கு செல்வதற்கான வழிகாட்டும் வரைபடமும் அவர்களுக்கு வழங்கப்படும். அதன்பின் அந்தக் கடைக்கு சென்று கியூ.ஆர் கோடுடன் கூடிய கூடிய ரசீதைக் காட்டி மதுபாட்டிலை பெற்றுக்கொள்ள முடியும்.</p><p>மதுக்கடைகளில் வாடிக்கையாளர்கள் அதிக நேரம் வரிசையில் நிற்பதைத் தவிர்க்கும் வகையிலும், சில்லறை விற்பனைக் கடைகளில் அதிகபட்ச விற்பனை விலைக்கும் கூடுதலாக மது விற்கப்படுவதைத் தடுக்கும் வகையிலும் இந்த புதிய முறை அறிமுகம் செய்யப்படுவதாக டாஸ்மாக் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஓசையின்றி நாளை முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டம் மிகவும் ஆபத்தானது ஆகும். இது மது வணிகத்தையும், மதுப் புழக்கத்தையும் அதிகரிக்கச் செய்யும்.</p><p>தமிழ்நாட்டில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டிய துறைகள் ஏராளமாக உள்ளன. கல்வி, மருத்துவம், வேளாண்மை, உணவுப் பொருள் வழங்கல், மின்சாரம் போன்ற துறைகள் சீர்திருத்தத்திற்காக ஏங்குகின்றன. ஆனால், அவற்றில் அக்கறை காட்டுவதற்கு பதிலாக மது வணிகத்தில் மட்டும் சீர்திருத்தம் என்ற பெயரில் சீரழிவுகளை செய்யத் துடிப்பது சரியல்ல.</p><p>மது மனிதனுக்கு அடிப்படைத் தேவை அல்ல. மது வாங்குவதற்கு எளிதானதாக இருக்கக் கூடாது. அப்போதுதான் மது வணிகம் குறையும்.  ஆனால், மதுவை ஆன்லைனில் முன்பதிவு செய்து மதுக்கடைகளுக்கு சென்று வரிசையில் நிற்காமல் வாங்க வசதி செய்து கொடுப்பது மது வணிகம் அதிகரிப்பதற்குதான் வழிவகுக்கும். தமிழ்நாட்டில் 35,039  நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அந்தக் கடைகள் ஒவ்வொன்றிலும், ஒவ்வொரு நாளும் ஏராளமான மக்கள், குறிப்பாக பெண்கள்  உணவுப் பொருள்களை வாங்குவதற்காக நீண்ட வரிசைகளில் நிற்கிறார்கள். அவர்களின் வாட்டத்தைப் போக்குவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு, மது குடிப்பவர்களின் வசதிக்காக இத்தகைய திட்டங்களை செயல்படுத்துவது சமூகச் சீரழிவுக்குதான் வகை செய்யும்.</p><p>டாஸ்மாக் இணையதளத்தில் பதிவு செய்வதற்கு 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும் என்பதால், அதற்கும் குறைவான வயதுப் பிரிவினர் மது வாங்குவது தடுக்கப்படும் என்றும் டாஸ்மாக் தரப்பில் கூறப்படுகிறது. இதுவும் ஏற்க முடியாத வாதம். 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்கக் கூடாது என்பது விதி. இது குறித்த அறிவிப்பு பலகைகளும் மதுக்கடைகளில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அதையும் மீறி அவர்களுக்கு மது விற்கப்படுகிறது. இப்போது ஆன்லைனில் முன்பதிவு செய்யும் முறை நடைமுறைக்கு வந்தால் ஒருவரின் கணக்கில் முன்பதிவு செய்து பலரும் மது வாங்கிச் செல்லும் நிலை உருவாகும்.</p><p>மாணவர்கள், இளம்பெண்கள் உள்ளிட்ட பலரும் குடிப்பழக்கத்திற்கு ஆளாவதை தடுத்து வருவது  மதுக்கடைகளில் வரிசையில் நின்று மது வாங்கினால் பார்ப்பவர்கள் தவறாக நினைப்பார்கள் என்ற அச்சம்தான். அதுதான் அவர்களை மதுக்கடைகளுக்கு செல்வதைத் தடுக்கிறது. இப்போது ஆன்லைனில் மதுவை முன்பதிவு செய்து மதுக்கடைகளில் சில வினாடிகள் மட்டுமே நின்று மதுவை வாங்கிச் செல்லலாம் என்ற நிலை உருவானால் அவர்கள் மதுப்பழக்கத்திற்கு எளிதில் அடிமையாகி விடுவார்கள்.</p><p>மதுக்கடைகளில் அதிக விலைக்கு மது விற்கப்படுவதைத் தடுக்கவே இந்தத் திட்டம் என்பதும் தவறான வாதம் ஆகும். மதுக்கடைகளில் ஊழலை ஒழிக்க முடியவில்லை என்ற அரசின் தோல்வியையே இது காட்டுகிறது. கள்ளச்சாராய வணிகத்தைத் தடுப்பதற்காகத்தான் மதுக்கடைகளை நடத்துகிறோம் என்று ஆட்சியாளர்கள் கூறுவது எந்த அளவுக்கு அபத்தமானதோ, அதே அளவுக்கு இந்த வாதமும் அபத்தமானது.</p><p>தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்ற சில நாள்களிலேயே தமிழ்நாட்டில் 717 மதுக்கடைகளை மூடுவதற்கு ஆணையிட்டார். அது மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், அதை சிதைக்கும் வகையில் மதுக்கடைகளை தனியார் மயமாக்குதல், ரெஸ்டோ பார்களை அனுமதித்தல் போன்ற செய்திகள் வெளிவருவதும், ஆன்லைனில் மதுவை முன்பதிவு செய்வதை அனுமதிப்பதும் அரசுக்கு பெருமை சேர்க்காது. எனவே, மதுப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்யும் மது முன்பதிவு திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>‘புதுப் பானையில் பழைய சோறு&apos; - தமிழக பட்ஜெட்டை விமர்சித்த எஸ்டிபிஐ</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/old-rice-in-a-new-pot-stbi-criticizes-tamil-nadu-budget</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/old-rice-in-a-new-pot-stbi-criticizes-tamil-nadu-budget#comments</comments><guid isPermaLink="false">8b8b71fe-dfd4-4062-8f6f-e1cc497747fa</guid><pubDate>Wed, 05 Aug 2026 11:13:16 +0000</pubDate><atom:updated>2026-08-05T11:13:16.536Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,சென்னை,STPI,நெல்லை முபாரக்,Tamil Nadu Budget,எஸ்டிபிஐ கட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/da9dsixf/189.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எஸ்டிபிஐ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/da9dsixf/189.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> ‘புதுப் பானையில் பழைய சோறு' என்று தமிழக பட்ஜெட்டை எஸ்டிபிஐ கட்சி விமர்சித்துள்ளது.</p><p>இது தொடர்பாக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90">எஸ்டிபிஐ </a>கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:</p><p>தமிழக முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான முதல் மாநில பட்ஜெட்டை, நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார். புதிய அரசு அமைந்த பிறகு தாக்கல் செய்யப்பட்டுள்ள முதல் பட்ஜெட் என்பதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இருப்பினும், இந்த நிதிநிலை அறிக்கை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது ஏமாற்றத்தையே அளிக்கிறது.</p><h2>நிதிநிலை அறிக்கை</h2><p>அதேவேளையில், இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில சாதகமான அம்சங்களை எஸ்டிபிஐ கட்சி வரவேற்கிறது. குறிப்பாக, புதுமணப் பெண்களுக்கு 8 கிராம் (1 பவுன்) தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை வழங்கும் 'அண்ணன் சீர்' திட்டம், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டம், ரூ.3,200 கோடி மதிப்பீட்டில் 1 லட்சம் படுக்கை வசதிகளுடன் கூடிய 'TN சுடர்' ஒருங்கிணைந்த நவீன மாணவர் விடுதிகள் அமைக்கும் திட்டம், ரூ.50 கோடியில் 10 சிறப்பு ஒலிம்பிக் மையங்கள் மற்றும் பொதுமக்களுக்கான 'சேவை உரிமைச் சட்டம்' போன்ற அறிவிப்புகள் பாராட்டத்தக்கவை.</p><p>இருப்பினும், இந்த பட்ஜெட்டில் கவனிக்கப்பட வேண்டிய பெருமளவிலான குறைகளும் ஏமாற்றங்களும் நிறைந்துள்ளன. குறிப்பாக, சிறுபான்மை சமூக மக்களுக்கான சிறப்பான அறிவிப்புகள் எதுவும் இதில் இடம்பெறவில்லை. சிறுபான்மை மக்களின் கல்வி, பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக நலனுக்கான தனிப்பட்ட திட்டங்களோ, சிறப்பு நிதி ஒதுக்கீடுகளோ அறிவிக்கப்படாமல் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.</p><p>மேலும், தவெகவின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட இந்த பட்ஜெட் அறிவிப்பில் இடம் பெறவில்லை. மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.2,500, ஆண்டுக்கு 6 இலவச எரிவாயு சிலிண்டர்கள், முதியோர் உரிமைத்தொகை ரூ.3,000 மற்றும் முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி போன்ற எந்தவொரு முக்கிய வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.</p><h2>மீன்பிடித் தடைக்கால நிவாரணம்</h2><p>இது தவிர, பள்ளிக்கல்வித் துறைக்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.4,007 கோடி நிதி குறைக்கப்பட்டு, ரூ.44,527 கோடியாக அறிவிக்கப்பட்டிருப்பது அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பைப் பெருமளவில் பாதிக்கும். மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ஏற்கனவே ரூ.8,000 ஆக உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது பட்ஜெட்டில் ரூ.7,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, கர்ப்பிணிப் பெண்களின் குழந்தைகளுக்கான தங்க மோதிரத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.560 கோடி நிதியானது, மாநிலத்தின் தற்போதைய அரசு மருத்துவமனை பிறப்பு விகிதக் கணக்கீட்டின்படி போதுமானதாக இல்லை.</p><p>அரசுத்துறைகளில் காலியாக உள்ள சுமார் 6 லட்சம் பணியிடங்களை நிரப்புவது குறித்தோ, புதிய தொழிற்சாலைகளைத் தொடங்கி வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்தோ எந்தவொரு தெளிவான திட்டமும் இதில் இல்லை. 'புதுப் பானையில் பழைய சோறு' என்பது போல, முந்தைய அரசின் திட்டங்களுக்குப் புதிய பெயர்களைச் சூட்டி விளம்பரம் செய்வதால் மட்டுமே மக்களின் பசி ஆறிவிடாது.</p><h2>வலியுறுத்தல்</h2><p>ஆகவே, வெறும் 3 மாத கால ஆட்சியில் சாதனைகள் செய்துவிட்டதாகக் கூறும் தவெக அரசு, பட்ஜெட்டில் வெறும் பெயர் மாற்றங்களாலும் கவர்ச்சி அறிவிப்புகளாலும் மட்டுமே மக்களைத் திருப்திப்படுத்திவிட முடியாது என்பதை உணர வேண்டும். சிறுபான்மை மக்கள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பு ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், அரசு உடனடியாகத் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் - உதயநிதி பரஸ்பர வணக்கம் தெரிவித்தனர் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-and-udhayanidhi-exchanged-greetings-in-the-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-and-udhayanidhi-exchanged-greetings-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">c9d61f2d-d994-48ec-956d-2e319dfb8c3f</guid><pubDate>Wed, 05 Aug 2026 11:10:18 +0000</pubDate><atom:updated>2026-08-05T11:10:18.303Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,DMK,உதயநிதி ஸ்டாலின்,சட்டசபை,UdhayanidhiStalin,முதல்-அமைச்சர் விஜய்,TNBudget</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/3febj6x1/vijaytwo33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/3febj6x1/vijaytwo33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் - உதயநிதி பரஸ்பர வணக்கம் தெரிவித்துக்கொண்ட சம்பவம் உறுப்பினர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.</p><p>முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று காலையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. </p><p>முன்னதாக முதல்-அமைச்சர் விஜய் காலை 9.57 மணிக்கு சட்டசபைக்குள் வந்தார். அப்போது அவர் உறுப்பினர்களுக்கு வணக்கம் தெரிவித்தார். காலை 9.58 மணிக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சபைக்கு வந்து தனது இருக்கையில் அமர்ந்தார். </p><p>அப்போது<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D"> முதல்-அமைச்சர் விஜய்</a>யும், எதிர்கட்சி தலைவர் உதயநிதியும் ஒருவொருக்கொருவர் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக்கொண்டனர். </p><p>உதயநிதி ஸ்டாலின் நேற்று கைதாகி விடுதலையான நிலையில் இன்று சட்டசபைக்குள் வந்ததும் எப்போதும் போல இருவரும் ஒருவொருக்கொருவர் வணக்கம் தெரிவித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர்கள் 24 பேர் கைது: ரூ.1.3 கோடி பறிமுதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/24-government-employees-arrested-for-accepting-bribe-in-tamil-nadu-rs-13-crore-seized</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/24-government-employees-arrested-for-accepting-bribe-in-tamil-nadu-rs-13-crore-seized#comments</comments><guid isPermaLink="false">8eb62b27-4034-4879-98ca-00d700d15d6c</guid><pubDate>Wed, 05 Aug 2026 11:01:28 +0000</pubDate><atom:updated>2026-08-05T11:01:28.746Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,Chennai,சென்னை,தமிழகம்,கைது,Action,arrest,நடவடிக்கை,அரசு ஊழியர்கள்,Government Employees,பணம் பறிமுதல்,Anti-Corruption Department,money seizure,லஞ்ச ஒழிப்பு துறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/am5wnp5g/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ லஞ்சம் வாங்கி அரசு ஊழியர்கள் கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/am5wnp5g/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">தமிழகத்தில்</a> கடந்த ஒரு மாதத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">லஞ்சம்</a> வாங்கிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">அரசு ஊழியர்கள்</a> 24 பேரை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவர்களிடமிருந்து ரூ.1.3 கோடி பறிமுதல் செய்துள்ளனர்.</p><h2>24 பொறிவைப்பு நடவடிக்கைகள்</h2><p>தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>தமிழகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையால் கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையில் 24 பொறிவைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அலுவல் ரீதியான பணிகளைச் செய்வதற்காக ரூ.500 முதல் ரூ.1 லட்சம் வரை லஞ்சம் கேட்டு பெற்ற அரசு ஊழியர்கள் (இணை ஆணையாளர் அறநிலையத்துறை, வட்டாட்சியர், இளநிலை உதவியாளர், உதவி மின் பொறியாளர், மின்வாரிய வணிக ஆய்வாளர், சமூகநல விரிவாக்க அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், இரண்டாம் நிலை காவலர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட் டோர்) 24 பேர் கைது செய்யப்பட்டனர்.</p><h2>'ஜி-பே' மூலம் ரூ.94 லட்சம்</h2><p>மேலும் கிருஷ்ணகிரி, திருவள்ளூர், தேனி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தஞ்சை, ராணிப்பேட்டை, சென்னை மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் 13 அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட ஊழல் தடுப்பு சோதனையில் கணக்கில் வராத ரொக்கம் ரூ.13 லட்சத்து 39 ஆயிரத்து 80 கைப்பற்றப்பட்டது. மேலும் மாநில எல்லைகளில் அமைந்துள்ள 6 வாகன சோதனை சாவடிகளில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் கணக்கில் வராத ரொக்கம் ரூ.9 லட்சத்து 87 ஆயிரத்து 890 கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><h2>மொத்தம் ரூ.1.31 கோடி பறிமுதல்</h2><p>மேலும் கடந்த மாதம் 17-ந்தேதி தமிழகம் முழுவதும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலர்கள், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர்களுடன் இணைந்து தமிழகத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ரூ.13 லட்சத்து 88 ஆயிரத்து 750 கைப்பற்றப்பட்டது. சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் 'ஜி-பே' பரிவர்த்தனைகள் ரூ.94 லட்சத்து 69 ஆயிரத்து 887 என மொத்தம் ரூ.1 கோடியே 31 லட்சத்து 85 ஆயிரத்து 607 <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">பணம் பறிமுதல்</a> செய்யப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாற்றத்திற்கான பட்ஜெட்டாக இருக்குமா? மக்களின் கடன் சுமை குறையுமா? -வேல்முருகன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-it-be-a-budget-for-change-will-peoples-debt-burden-be-reduced-velmurugan-question</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-it-be-a-budget-for-change-will-peoples-debt-burden-be-reduced-velmurugan-question#comments</comments><guid isPermaLink="false">63a14542-cf8a-4662-ba22-ab8a18dd8de4</guid><pubDate>Wed, 05 Aug 2026 10:57:32 +0000</pubDate><atom:updated>2026-08-05T10:57:32.401Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Velmurugan,பட்ஜெட்,கேள்வி,Budget,தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்,அமைச்சர் மரிய வில்சன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/ijie2j3f/Untitled-4.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வேல்முருகன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ வேல்முருகன் கேள்வி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/ijie2j3f/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாற்றத்திற்கான பட்ஜெட்டாக. இருக்குமா? மக்களின் கடன் சுமை குறையுமா? என்று வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழக வாழ்வுரிமைக் கட்சி</a> தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நிதியமைச்சர்</a> திரு. மரிய வில்சன் அவர்கள் தாக்கல் செய்துள்ள 2026–27 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்றும் ஆவணமாக இல்லை.</p><p>இந்த நிதிநிலை அறிக்கையில் பல புதிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தாலும், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைய வேண்டிய வேலைவாய்ப்பு உருவாக்கம், உற்பத்தித் துறை விரிவாக்கம், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களை மீட்டெடுக்கும் திட்டங்கள், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் உறுதியான நடவடிக்கைகள் ஆகியவற்றில் தெளிவான செயல்திட்டம் காணப்படவில்லை.</p><p>மக்களின் வரிப்பணத்தில் செயல்படும் அரசு, புதிய திட்டங்களை அறிவிப்பது மட்டுமே போதாது. அந்தத் திட்டங்களுக்கு தேவையான நிதி ஆதாரம் என்ன? அவை எப்போது நடைமுறைக்கு வரும்? எந்தக் காலக்கெடுவில் நிறைவேற்றப்படும்? என்பதற்கானத் தெளிவான விளக்கமும் இருக்க வேண்டும்.</p><p>தமிழ்நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் கடன் சுமையை எதிர்கொண்டு வரும் நிலையில், அரசின் வருவாயை உயர்த்தும் உற்பத்தி சார்ந்தப் பொருளாதாரக் கொள்கைகள், புதிய முதலீடுகள், நிரந்தர வேலைவாய்ப்புகள் மற்றும் மாவட்ட வாரியான சமச்சீர் வளர்ச்சிக்கான வலுவான திட்டங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் எதிர்பார்த்த அளவில் இடம்பெறவில்லை.</p><p>விவசாயம், மீன்வளம், கைத்தறி, சிறு தொழில்கள் போன்ற வாழ்வாதாரத் துறைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்காமல், அறிவிப்புகளால் மட்டுமே வளர்ச்சியை உருவாக்க முடியாது.மக்கள் எதிர்பார்ப்பது விளம்பரங்களை அல்ல. வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் செயல்பாடுகளையே.</p><p>எனவே, இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை, அரசு உரியக் காலக்கெடுவுக்குள் முழுமையாக நிறைவேற்றுவதுடன், வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி, விவசாயம் மற்றும் பொருளாதாரத் தன்னிறைவு ஆகிய துறைகளில் தனித்துவமான செயல் திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நாகை நீலாயதாட்சி அம்மன் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா தொடங்கியது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aadi-pooram-festival-begins-at-neelayadakshi-amman-temple-in-nagai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aadi-pooram-festival-begins-at-neelayadakshi-amman-temple-in-nagai#comments</comments><guid isPermaLink="false">effec3db-6a96-49a4-b18d-ea4160ee0b0d</guid><pubDate>Wed, 05 Aug 2026 10:52:44 +0000</pubDate><atom:updated>2026-08-05T10:52:44.087Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Aanmigam,Devotional,ஆன்மிகம்,Nagapattinam,நாகப்பட்டினம்,Aadi Pooram Festival,ஆடிப்பூர திருவிழா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/5kot2jh2/nagai-aadi-puram-festival.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றம், சிறப்பு அலங்காரத்தில் அம்மன்]]></media:title><media:description type="html"><![CDATA[ நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/5kot2jh2/nagai-aadi-puram-festival.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாகப்பட்டினம்,</p><p>நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.</p><p>நாகப்பட்டினத்தில் அருள்மிகு காயாரோகணேஸ்வரர் உடனுறை நீலாயதாட்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு எழுந்தருளியிருக்கும் அம்மன், பெண்மையின் ஐந்து முக்கிய வளர்ச்சி நிலைகளில் 15 வயது "பருவ மங்கை"  வடிவமாக அருள்பாலிக்கிறார். இந்து சமய வழிபாட்டில் பெண் தெய்வங்களின் வாழ்க்கை நிலைகளை விளக்கும் ஐந்து முக்கிய ஆட்சி பீடங்களில் இத்தலமும் ஒன்றாகும்.</p><p>இக்கோவிலில் ஒவ்வொரு ஆடி மாதமும் <a href="https://www.dailythanthi.com/topic/aadi-pooram-festival">ஆடிப்பூரம் விழா</a> வெகு விமரிசையாக நடைபெறும். பூரம் நட்சத்திர நாளில் சீப்பு, கண்ணாடி, வளையல், குங்குமம், முளைப்பயிர் உள்பட பொருட்களை வைத்து ஆகம முறைப்படி பூஜை செய்து பக்தர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். </p><h2>ஆடிப்பூர விழா கொடியேற்றம்</h2><p>அவ்வகையில் இந்த ஆண்டின் <a href="https://www.dailythanthi.com/topic/aadi-pooram-festival">ஆடிப்பூர விழா</a> இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிறப்பு பூஜைகளுக்கு பின், அம்மன் சன்னதியில் உள்ள கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. கொடிமரத்திற்கு மஞ்சள், திரவியம், மாப்பொடி, பச்சரிசி, இளநீர், தேன், பால் தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு <a href="https://www.dailythanthi.com/topic/worship">மகா தீபாரதனை</a> காண்பிக்கப்பட்டது. </p><p>இதில் கோவில் செயல் அலுவலர் தனலட்சுமி மற்றும் கோயில் பணியாளர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். </p><p>விழா நாட்களில் பூத வாகனம், மகாலட்சுமி அவதாரம், சிம்ம வாகனம், கிளி வாகனம், வேணுகோபால் அவதாரம், சிவலிங்க பூஜை என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் ஆடிப்பூர அம்மன் வீதியுலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான பூரம் கழித்தல் 14-ம் தேதியும், ஊஞ்சல் உற்சவம் 15-ம் தேதியும் நடைபெறும்.</p>]]></content:encoded></item><item><title>வாணியம்பாடி அருகே ஏரியில் அனுமதியின்றி மண் கடத்தல்: 9 டிராக்டர்கள், 2 ஜே.சி.பி. இயந்திரங்கள் பறிமுதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/illegal-soil-smuggling-in-a-lake-near-vaniyambadi-9-tractors-2-jcb-machines-seized</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/illegal-soil-smuggling-in-a-lake-near-vaniyambadi-9-tractors-2-jcb-machines-seized#comments</comments><guid isPermaLink="false">60dfc7b0-236c-4f03-85ec-cb1c74cfad38</guid><pubDate>Wed, 05 Aug 2026 10:52:40 +0000</pubDate><atom:updated>2026-08-05T10:52:40.526Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருப்பத்தூர்,tractor,டிராக்டர்,Vaniyambadi,பறிமுதல்seized,Soil smuggling,மண் கடத்தல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/xkq5rgqz/188.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/xkq5rgqz/188.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பத்தூர்,</p><p>திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள சின்ன வேப்பம்பட்டு ஏரியில் அனுமதியின்றி மண் கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் வருவாய்த் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.</p><h2>பறிமுதல்</h2><p>சோதனையின் போது, உரிய அனுமதியின்றி ஏரியில் இருந்து மண் எடுத்து கடத்தியது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்தில் இருந்த 9 டிராக்டர்கள் மற்றும் 2 ஜே.சி.பி. இயந்திரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.</p><p>வாணியம்பாடி வட்டாட்சியர் சுதாகர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், சட்டவிரோதமாக மண் கடத்தியவர்களிடம் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">விசாரணை </a>நடத்தப்பட்டு வருகிறது. மேலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தங்கம் விலை ஒரே நாளில் 2-வது முறையாக உயர்வு... நிலவரம் என்ன..?</title><link>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-rises-second-time-in-a-day-whats-the-status</link><comments>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-rises-second-time-in-a-day-whats-the-status#comments</comments><guid isPermaLink="false">fab4e169-ec97-463c-83a6-fbe1da046133</guid><pubDate>Wed, 05 Aug 2026 10:47:14 +0000</pubDate><atom:updated>2026-08-05T10:48:18.925Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Gold Rate,தங்கம் விலை,வெள்ளி விலை,Gold Price,Silver Price,விலை நிலவரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/y2w69hjn/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/y2w69hjn/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தங்கம் (Gold Rate)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்த நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,05,600-க்கும், ஒரு கிராம் ரூ.13,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.</p><p>இந்த நிலையில் இன்று காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280-ம், கிராமுக்கு ரூ.160-ம் அதிரடியாக உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,06,880-க்கும் ஒரு கிராம் ரூ.13,360-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை 2-வது முறையாக ஏற்றம் கண்டுள்ளது.</p><p>அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்று மாலையில் சவரனுக்கு ரூ.960 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,07,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,240 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p>வெள்ளி விலை இன்று காலையில் கிராமுக்கு ரூ.5 உயர்ந்த நிலையில், மாலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.240-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>மதுபான பிரியர்களுக்கு அதிர்ச்சி: &quot;ஓல்ட் மங்க், ராயல் சேலஞ்ச் உள்ளிட்ட சில பிராண்டுகளுக்கு தடை&quot; </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/shock-for-liquor-enthusiasts-ban-on-certain-brands-including-old-monk-and-royal-challenge</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/shock-for-liquor-enthusiasts-ban-on-certain-brands-including-old-monk-and-royal-challenge#comments</comments><guid isPermaLink="false">e6e25283-b76a-4005-9699-6cfa5068e885</guid><pubDate>Wed, 05 Aug 2026 10:26:49 +0000</pubDate><atom:updated>2026-08-05T10:26:49.029Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Delhi,புதுடெல்லி,மதுபானம்,உணவு பாதுகாப்பு துறை,தடை உத்தரவு,wine,liquor ban</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/hiaozw1q/78.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ நாட்டின் முன்னணி மதுபான பிராண்டுகளின் குறிப்பிட்ட சில வகைகளை விற்பனை செய்ய அதிரடியாக தடை விதித்தது. ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/hiaozw1q/78.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><p>இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், நாட்டின் முன்னணி மதுபான பிராண்டுகளின் குறிப்பிட்ட சில வகைகளை விற்பனை செய்ய அதிரடியாக<a href="https://www.dailythanthi.com/news/india"> தடை</a> விதித்தது. </p><h2>தடை செய்யப்பட்டுள்ள முக்கிய பிராண்டுகள்</h2><p>சந்தையில் மிகவும் பிரபலமான ஓல்ட் மாங்க் ரம், ராயல் சேலஞ்ச் விஸ்கி, ஆன்டிகுயூட்டி ப்ளூ விஸ்கி, பேக்பைப்பர் டீலக்ஸ் விஸ்கி, மெக்டொவல்ஸ் எண்.1 ரம் மற்றும் ஓல்ட் காஸ்க் டீலக்ஸ் ரம் ஆகிய பிராண்டுகளின் குறிப்பிட்ட சில தயாரிப்புகளுக்கு இந்த தடை விதிக்கப்பட்டது.</p><h2>செயற்கை சுவையூட்டிகள் பயன்பாடு</h2><p>மதுபானங்களில் இயற்கையான தயாரிப்பு முறைக்கு மாறாக, செயற்கையான சுவையூட்டும் பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பது ஆய்வக சோதனைகளில் கண்டறியப்பட்டது. ரம்மில் ரம் சுவையையும், விஸ்கியில் விஸ்கி சுவையையும் செயற்கையாகச் சேர்ப்பது உணவுப் பாதுகாப்பு விதிகளுக்கு முரணானது என்று <a href="https://www.dailythanthi.com/news/india">உணவு பாதுகாப்புத்துறை</a> தெரிவித்துள்ளது.</p><h2>நுகர்வோரை திசைதிருப்பும் லேபிள்</h2><p>குறிப்பாக 'ஓல்ட் மங்க்' ரம் பாட்டில்களில் '7 ஆண்டுகள் பழமையானது' என நுகர்வோரை திசைதிருப்பும் வகையில் தவறான வாசகங்கள் அச்சிடப்பட்டிருந்தது. இதுவே இந்த தடைக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த தடை உத்தரவை அடுத்து, குறிப்பிட்ட தரமற்ற தயாரிப்புகளை சந்தையிலிருந்து உடனடியாக திரும்பப் பெற சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பயணிகளுக்கு குட் நியூஸ்: முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/good-news-for-passengers-additional-coach-on-muthunagar-express</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/good-news-for-passengers-additional-coach-on-muthunagar-express#comments</comments><guid isPermaLink="false">587e1734-9c13-48e6-8485-a71d2e4753d4</guid><pubDate>Wed, 05 Aug 2026 10:23:15 +0000</pubDate><atom:updated>2026-08-05T10:23:15.292Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தெற்கு ரெயில்வே,Southern Railway,தூத்துக்குடி,Chennai Egmore,சென்னை எழும்பூர்,Thoothukkudi,கூடுதல் பெட்டி இணைப்பு,முத்துநகர் எக்ஸ்பிரஸ்,Pearlcity Express</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/rh3xo0ht/Untitled-4.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/rh3xo0ht/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு சென்னை எழும்பூர் - தூத்துக்குடி இடையே இயக்கப்படும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் குறிப்பிட்ட காலத்திற்கு கூடுதலாக ஒரு 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி இணைக்கப்படுகிறது.</p><p>இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தூத்துக்குடி - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண் 12694/12693) தூத்துக்குடியில் இருந்து இன்று (ஆகஸ்ட் 4) முதல் ஆகஸ்ட் 30-ந்தேதி வரையும், சென்னை எழும்பூரில் இருந்து நாளை (ஆகஸ்ட் 5) முதல் ஆகஸ்ட் 31-ந்தேதி வரையும் கூடுதலாக ஒரு 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி இணைக்கப்படுகிறது. அதாவது, 5 பெட்டிகளில் இருந்து 6 பெட்டிகளாக உயர்த்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம் எப்போது? - நிதியமைச்சர் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/when-will-election-promises-be-fulfilled-finance-ministers-clarification</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/when-will-election-promises-be-fulfilled-finance-ministers-clarification#comments</comments><guid isPermaLink="false">4abfe097-4a65-4fc2-aaf0-1eb9461a21b9</guid><pubDate>Wed, 05 Aug 2026 10:17:38 +0000</pubDate><atom:updated>2026-08-05T10:17:38.021Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Election,Assembly,தேர்தல் வாக்குறுதி,Budget,நிதியமைச்சர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/yxsmk0fl/CM-Vijay.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நிதியமைச்சர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/yxsmk0fl/CM-Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தவெக அரசு கடந்த மே மாதம் ஆட்சி பொறுப்பேற்ற நிலையில்,தனது  முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தது. மகளிருக்கு மாதம் ரூ.2,500, 5 ஏக்கருக்கு கீழ் உள்ள சிறு விவசாயிகள் பெற்ற கடன்கள் முழுவதும் தள்ளுபடி, ஆண்டுக்கு 6  சிலிண்டர்கள் இலவசம், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதம் ரூ 4 ஆயிரம் உதவித்தொகை உள்ளிட்ட கவர்ச்சிகர அறிவிப்புகளை தவெக தனது தேர்தல் வாக்குறுதியாக  கொடுத்து இருந்தது.</p><p>எனவே, தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் இந்த அறிவிப்புகள் இடம் பெறுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், இன்று நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த , மக்கள் எதிர்பார்த்த முக்கிய இலவச திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.</p><p>எதிர்க்கட்சிகளும் எந்த புதிய அறிவிப்பும் இல்லை என்று விமர்சித்து வரும் நிலையில், படிப்படியாக திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று மரிய வில்சன் கூறியுள்ளார். இது தொடர்பாக மரிய வில்சன், “மாநிலத்தின் நிதி நிலையை இயல்பு நிலைக்கு கொண்டு வர குறைந்தது இரண்டு ஆண்டுகள் தேவைப்படும். குறுகிய கால அரசியல் ஆதாயங்களில் கவனம் செலுத்தப்போவது இல்லை. நிதி நிலையை சீராக்கியபிறகு படிப்படியாக தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்” என்றார்.</p>]]></content:encoded></item><item><title>செப்டம்பர் 8-ந்தேதி வரை சட்டசபை கூட்டத் தொடர்: எந்தெந்த நாளில் என்னென்ன மானியக் கோரிக்கை?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/assembly-session-to-continue-till-september-8-what-subsidy-demands-will-be-made-on-which-days</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/assembly-session-to-continue-till-september-8-what-subsidy-demands-will-be-made-on-which-days#comments</comments><guid isPermaLink="false">00e08294-a999-4cc5-a4db-f88873351f5d</guid><pubDate>Wed, 05 Aug 2026 10:13:04 +0000</pubDate><atom:updated>2026-08-05T10:13:04.857Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,தமிழக சட்டசபை,Request,Tamil Nadu Legislative Assembly,Budget Session,மானிய கோரிக்கை,பட்ஜெட் கூட்டத் தொடர்,grant</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/375fza5k/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக சட்டசபை கூட்டத் தொடர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/375fza5k/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a>யில் செப்டம்பர் 8-ந்தேதி வரை நடைபெற உள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">தமிழக</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D">சட்டசபை கூட்டத் தொடர்</a> மற்றும் எந்தெந்த நாளில் என்னென்ன <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">மானியக் கோரிக்கை</a>? என்பது குறித்த விரிவான தகவல்களை இங்கு பார்ப்போம்.</p><h2>அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்</h2><p>தமிழக சட்டசபையில் இன்று 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நாளை (வியாழக்கிழமை) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், சட்டசபை கூட்டத் தொடரை எத்தனை நாள் நடத்துவது என்பதை முடிவு செய்வதற்காக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம் தேதி வாரியாக வருமாறு: </p><h2>நாளை வேளாண் பட்ஜெட்</h2><p>6-8-2026 - 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கலாகிறது. </p><p>7-8-2026 - 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீது பொது விவாதம் தொடங்குகிறது. </p><p>10-8-2026 - 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான 2-வது நாள் விவாதம் நடக்கிறது. </p><p>11-8-2026 - 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான 3-வது நாள் விவாதம் நடக்கிறது. </p><p>12-8-2026 - 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்கப்படுகிறது. </p><p>தொடர்ந்து மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது.</p><h2>17-ந்தேதி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை</h2><p>17-8-2026 - வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை. </p><p>18-8-2026 - நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, கட்டிடங்கள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, மனித வள மேலாண்மை துறை. </p><p>19-8-2026 - நீர்வளத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சுற்றுலா - கலை மற்றும் பண்பாடு. </p><p>20-8-2026 - உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவு. </p><p>21-8-2026 - சிறப்பு திட்ட செயலாக்கத் துறை, நீதி நிர்வாகம், எரிசக்தித் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள், சட்டத்துறை, இந்து சமய அறநிலையத் துறை. </p><p>24-8-2026 - நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, பள்ளி கல்வித் துறை, தமிழ் வளர்ச்சி, உயர் கல்வித் துறை.</p><h2>25-ந்தேதி தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை</h2><p>25-8-2026 - இயற்கை வளங்கள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை. </p><p>27-8-2026 - சமூக நீதித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை. </p><p>28-8-2026 - இயக்கூர்திகள் குறித்த சட்டங்கள் - நிர்வாகம், போக்குவரத்து துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை. </p><p>31-8-2026 - மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை.</p><h2>செப்டம்பர் 1-ந்தேதி தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை</h2><p>1-9-2026 - கைத்தறி மற்றும் துணிநூல், கதர், கிராமத் தொழில்கள் மற்றும் கைவினைப் பொருட்கள், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை. </p><p>2-9-2026- பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலன், கால்நடை பராமரிப்பு. </p><p>3-9-2026 - காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள். </p><p>7-9-2026 - காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், வணிக வரிகள், முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவு, வனம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம். </p><p>8-9-2026 - பொதுத்துறை, மாநில சட்டமன்றம், கவர்னர் மற்றும் அமைச்சரவை, நிதித்துறை, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை, ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுக்கால நன்மைகளும்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-moderate-rain-in-12-districts-including-chennai-today</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-moderate-rain-in-12-districts-including-chennai-today#comments</comments><guid isPermaLink="false">d44a8691-3ac9-41d5-8691-58ae41696613</guid><pubDate>Wed, 05 Aug 2026 10:02:06 +0000</pubDate><atom:updated>2026-08-05T10:02:06.856Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/v53tf271/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/v53tf271/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>சுமார் 5.8 கிமீ உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 5.8 கிமீ முதல் 7.6 கிமீ உயரம் வரை தென் தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. வட தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><p><strong>05-08-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, கரூர், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>06-08-2026 மற்றும் 07-08-2026:</strong> கோயம்புத்தூர், தேனி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, கரூர், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><h3>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</h3><p><strong>05-08-2026 முதல் 09-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.</p><h3>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</h3><p><strong>05-08-2026 முதல் 09-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p><strong>நாளை</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கொலைக்கு பழிக்குப்பழி வாங்க தவறான முகவரியில் பெட்ரோல் குண்டு வீசிய 3 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/3-arrested-for-throwing-petrol-bomb-at-wrong-address-to-avenge-murder</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/3-arrested-for-throwing-petrol-bomb-at-wrong-address-to-avenge-murder#comments</comments><guid isPermaLink="false">5e9323d7-0cfd-4e2d-bcc7-31227ff63e24</guid><pubDate>Wed, 05 Aug 2026 09:58:10 +0000</pubDate><atom:updated>2026-08-05T09:58:10.756Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,கைது,arrest,House,பெண்,Woman,வீடு,revenge,பழிக்குப்பழி,wrong,தவறான,address,petrol bomb,பெட்ரோல் குண்டு வீச்சு,முகவரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/9frvtbr5/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல் குண்டு வீசிய 3 பேர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/9frvtbr5/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a>யில் கொலைக்கு பழிக்குப்பழி வாங்க தவறான முகவரியில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81">பெட்ரோல் குண்டு வீசிய</a> 3 பேரை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். </p><h2>பெட்ரோல் குண்டு வீச்சு</h2><p>சென்னை பெரியமேடு நேவல் மருத்துவமனை சாலை 4-வது தெருவில் வசிக்கும் ஒரு பெண்ணின் வீட்டின் முன்பு நேற்று முன்தினம் இரவு பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள். பின்னர் அவர்கள் தப்பி சென்றுவிட்டனர். </p><h2>3 பேர் கைது</h2><p>இந்த சம்பவம் தொடர்பாக பெரியமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பெட்ரோல் குண்டு வீசியதாக டைசன், ஆளவந்தான், ஜிவேஷ் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.</p><h2>கொலைக்கு பழிக்குப்பழி</h2><p>கடந்த ஆண்டு ஜூன் மாதம் டைசனின் அண்ணன் பிரேம்குமார் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் விஜயநாராயணன் என்பவர் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவரை பழிக்குப்பழி வாங்குவதற்காக அவரது அக்காள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச இவர்கள் வந்துள்ளனர். ஆனால் தவறுதலாக வேறு வீட்டில் பெட்ரோல் குண்டை வீசி சென்றுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>குண்டத்து மாகாளியம்மன் கோவிலில் அதிமுக பொதுச்செயலாளராக எஸ்பி வேலுமணி வர வேண்டி தீ மிதித்த தொண்டர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/devotee-fire-walks-for-sp-velumani-leadership-in-aiadmk</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/devotee-fire-walks-for-sp-velumani-leadership-in-aiadmk#comments</comments><guid isPermaLink="false">52834198-8e70-4435-bd70-a30c5292c6a4</guid><pubDate>Wed, 05 Aug 2026 09:50:45 +0000</pubDate><atom:updated>2026-08-05T09:50:45.409Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,demand,SP Velumani,எஸ்பி வேலுமணி,தீ மிதி விழா,தொண்டர்,அதிமுக பொதுச்செயலாளர்,Volunteer,AIADMK General Secretary</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/x8pkyebt/velumani.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எஸ்பி வேலுமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/x8pkyebt/velumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோயம்புத்தூர்,</p><p>அதிமுக பொதுச்செயலாளராக எஸ்பி வேலுமணி வரவேண்டும் என குறிச்சியில் உள்ள குண்டத்து மாகாளியம்மன் கோயிலில் தீ மிதித்த அதிமுக தொண்டர்</p><h2>நேர்த்திக்கடன்</h2><p>கோவை குறிச்சி பகுதியில் பிரசித்தி பெற்ற குண்டத்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">மாகாளியம்மன் கோவில்</a> உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பூக்குண்டம் இறங்கும் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழாவில், அதிமுகவை சேர்ந்த தீவிர தொண்டர் ஒருவர் தீ மிதித்தார்.</p> <h2>வேலுமணிக்கு பதவி </h2><p>இந்த நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், தற்போதைய கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF">எஸ்பி வேலுமணி</a>, கட்சியின் பொதுச்செயலாளராக உயர்வு பெற வேண்டும் என்று வேண்டி, அந்த தொண்டர் இந்த நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளார். எஸ்பி வேலுமணியின் உருவப் படத்தை கைகளில் ஏந்தியபடி பக்தி பரவசத்துடன் பூக்குண்டத்தில் இறங்கினார்.  </p> <h2>பதவிகளை ஏற்கப்போவதில்லை</h2><p> கடந்த சில நாட்களாகவே அதிமுக தலைமைக்கும் எஸ்பி வேலுமணி தரப்புக்கும் இடையே உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.  தற்போதைய <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி</a> அறிவித்த புதிய கட்சி பதவிகளை ஏற்கப்போவதில்லை என்று எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பகிரங்கமாக மறுத்துள்ளனர். </p><p>இந்த பரபரப்பான அரசியல் சூழல்கட்சியின் தலைமை பொறுப்புக்கு எஸ்பி வேலுமணி வரவேண்டும் என தொண்டர் ஒருவர் தீ மிதித்து பிரார்த்தனை செய்துள்ள சம்பவம், கோவை மாவட்ட அதிமுகவினர் மற்றும் அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>பட்ஜெட் 2026-27 ; ஒரு ரூபாயில் வரவு, செலவு எவ்வளவு  தெரியுமா?
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/budget-2026-27-do-you-know-the-breakdown-of-income-and-expenditure-for-every-rupee</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/budget-2026-27-do-you-know-the-breakdown-of-income-and-expenditure-for-every-rupee#comments</comments><guid isPermaLink="false">b336c89e-49f9-45bf-b5a0-ac642a457e30</guid><pubDate>Wed, 05 Aug 2026 09:48:00 +0000</pubDate><atom:updated>2026-08-05T09:48:00.680Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,பட்ஜெட்,நிதி அமைச்சர்,மரிய வில்சன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/ispai90c/selavu.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பட்ஜெட் 2026-27]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/ispai90c/selavu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் கடந்த மே 10-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது. பொறுப்பேற்ற இரண்டரை மாதங்களுக்குப் பிறகு தங்களது முதல் பட்ஜெட்டை சட்டசபையில் இன்று தாக்கல் செய்தது தவெக அரசு. இதன்படி நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கலைத் தொடங்கினார். சுமார் இரண்டரை மணி நேரம் பட்ஜெட் தாக்கல் செய்த அமைச்சர் மதியம் 12:31 மணிக்கு முடித்தார். இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ஒரு ரூபாயின் வரவு மற்றும் செலவு விவரங்களை இப்போது தெரிந்து கொள்வோம்.</p> <h2>ஒரு ரூபாயில் வரவு</h2><p>* பொதுக்கடன் -33.1%</p><p>* கடன்களின் வசூல் மற்றும் மூலதன வரவு -0.1%</p><p>* மத்திய அரசிடம் இருந்து பெறும் உதவி மானியங்கள்- 6.3%</p><p>* மத்திய வரிகளில் பங்கு - 11.9%</p><p>* மாநிலத்தின் சொந்த வரி வருவாய் -43.3%</p><p>* மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாய் - 5.3%</p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/awsuq9rp/icnome.jpg" /></figure><h2>செலவு: </h2><p>* மூலதனச் செலவு -10.9%</p><p>* வட்டி செலுத்துதல் -15.0%</p><p>* உதவித் தொகைகளும் மானியங்களும் - 33.2%</p><p>* கடன்களை திருப்பிச் செலுத்துதல் -9.9%</p><p>* சம்பளங்கள் - 17.3%</p><p>* ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகால பலன்கள் - 8.0%</p><p>* கடன் வழங்குதல் - 1.9%</p><p>* செயல்பாடுகளும் பராமரிப்புகளும் -3.8%</p>]]></content:encoded></item><item><title>பட்ஜெட்டில் பாசனத் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்: அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-funds-should-be-allocated-for-irrigation-projects-in-the-budget-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-funds-should-be-allocated-for-irrigation-projects-in-the-budget-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">d782e316-8b25-478c-9679-4f4331852ffc</guid><pubDate>Wed, 05 Aug 2026 09:42:19 +0000</pubDate><atom:updated>2026-08-05T09:42:19.473Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,சென்னை,Additional,பட்ஜெட்,fund,TN Budget,பாசனத்திற்காக</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/tsdhf7w3/186.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/tsdhf7w3/186.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பட்ஜெட்டில் பாசனத் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக, பா.ம.க. தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF">அன்புமணி ராமதாஸ்</a> வெளிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>முதல் நிதிநிலை அறிக்கை</h2><p>தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள த.வெ.க. அரசு தாக்கல் செய்திருக்கும் அதன் முதல் நிதிநிலை அறிக்கையில் சேவை உரிமைச் சட்டம், நீர்ப்பாசனத் திட்டங்கள், செயற்கை நுண்ணறிவுத் திறன் நகரம், முதியோர் பொழுதுபோக்கு மையங்கள் ஆகியவற்றுக்கான அறிவிப்புகள் வெளியாகியிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.</p><p>இந்தியாவில் 21 மாநிலங்களில் சேவை உரிமைச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் இத்தகைய சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று 13 ஆண்டுகளுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்தது. இப்போது அந்த சட்டம் இயற்றப்படும் என அரசு அறிவித்திருப்பதன் மூலம்  எங்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு 1 பவுன் தங்கம், பட்டுப்புடவை வழங்கும் திட்டம், முதியோர் நலனைக் கருத்தில் கொண்டு முதல் கட்டமாக 5 மாவட்டங்களில்  நூலகம், தியான மையம், உள்ளரங்க விளையாட்டுகள் உள்ளிட்ட வசதிகளுடன் மூத்த குடிமக்கள் பொழுதுபோக்கு மையங்கள் அமைக்கப்படும், அறிவகம் என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவுத்திறன் நகரம் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அறிவிக்கப்பட்ட திட்டங்களாகும்.</p><h2>சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு</h2><p>வேளாண்துறை வளர்ச்சிக்காக நீர்ப்பாசனத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று நீண்டகாலமாக பாமக வலியுறுத்தி வருகிறது. புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து பாசனத் திட்டங்களை செயல்படுத்தும்படி வலியுறுத்தினேன். அதற்கு ஓரளவு பயன் கிடைத்திருக்கிறது. காவிரி மற்றும் குண்டாறு இணைப்புத் திட்டம் விரைவுபடுத்தப்படும், தென்பெண்ணையாறு மற்றும் பாலாறு இணைப்புத் திட்டம்,  தென்பெண்ணையாறு மற்றும் செய்யாறு இணைப்புத் திட்டம் ஆகியவற்றுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு, காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் தடுப்பணைகள் கட்டுவது குறித்து திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.10 கோடி, காவிரி பாசன மாவட்டங்களில் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு குறித்து திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.10 கோடி, காவிரி மற்றும் கோதாவரி இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த  மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கிறது.</p><p>அதே நேரத்தில் தருமபுரி மற்றும் காவிரி உபரி நீர் திட்டம், அரியலூர் மற்றும் சோழர் பாசனத் திட்டம், காவிரி மற்றும் சரபங்கா மற்றும் திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டம் ஆகியவை குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது பெரும்  ஏமாற்றம் அளிக்கிறது. காவிரி மற்றும் குண்டாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த குறைந்தது 15,000 கோடி தேவைப்படும் நிலையில், அதற்கு வெறும் ரூ.150 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டிருப்பது எந்த வகையிலும் போதாது. பாசனத் திட்டங்களை செயல்படுத்த ஆண்டுக்கு குறைந்தது ரூ.25,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.</p><p>தவெக தேர்தல் அறிக்கையில், மகளிருக்கு மாதம் ரூ.2500, மாநிலம் முழுவதும் பேருந்துகளில் இலவச பயணம், மாதம் ஒருமுறை மின்சாரம் கணக்கெடுப்பு உள்ளிட்ட சுமார் 400 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு இருந்தன. ஆனால், அவற்றில் 40 வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அறிவிப்புகள் கூட இந்த நிதி நிலை அறிக்கையில் வெளியிடப்படவில்லை. தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் உள்ள அனைத்து காலியிடங்களும் நிரப்பப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி பார்த்தால் குறைந்தது 6 லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். ஆனால், அது குறித்த எந்த அறிவிப்பும்  நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை.</p><h2>பயிர்க்கடன்</h2><p>உழவர்கள் வாங்கிய பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்பது தான் அனைத்துத்  தரப்பினரின் கோரிக்கை ஆகும். ஆனால், அதற்கான அறிவிப்புகளும் இல்லை. பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவு ரூ.44,527 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. திமுக அரசு தாக்கல் செய்த  நடப்பாண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில் இது ரூ.48,534 கோடியாகவும், கடந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ரூ.46,767 கோடியாகவும் இருந்தது. இடைக்கால நிதிநிலை அறிக்கையை விட ரூ.4007 கோடி நிதி  குறைவாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை நிதி ஒதுக்கீடு குறைப்பாக மட்டும் பார்க்க முடியாது. மாறாக பள்ளிக் கல்வித்துறை வேகமாக சீரழிந்து வருவதையே இந்த நிதிக்குறைப்பு காட்டுகிறது.</p><p>பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் 85% முதல் 90% நிதி ஊதியத்திற்காக மட்டும் தான்  செலவு செய்யப்படுகிறது. இத்தகைய சூழலில் அத்துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பது ஆசிரியர்கள் எண்ணிக்கை பெருமளவில் குறைந்திருக்கக் கூடும் என்பதையே காட்டுகிறது. ஏற்கனவே அரசு பள்ளிகளில் ஒரு லட்சம் வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லாத நிலையில், இது நிலைமையை மேலும் மோசமாக்கும். அரசு பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க பெற்றோர்கள் தயங்கும் நிலையை உருவாக்கும்.</p><h2>மின்துறையை தனியார்மயமாக்கும்</h2><p>அதேபோல், தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே நடத்தப்படும் என்று ஆளுனர் உரையில் அறிவித்த தமிழ்நாடு அரசு, அதற்கான நிதியை இந்த அறிக்கையில் ஒதுக்கீடு செய்யவில்லை. கோவை மற்றும் அரியலூர் இடையே  ரூ.4000 கோடி மதிப்பிலான மின்வழித்தடம் அமைக்கும் திட்டம் தனியார் கூட்டு முயற்சியில் செயல்படுத்தப் படும் என்று கடந்த 2024-ம் ஆண்டில் திமுக அரசில் அறிவிக்கப்பட்டது. மின்துறையை தனியார்மயமாக்கும் இந்த திட்டத்திற்கு பாமக எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. ஆனால், இப்போது அத்திட்டம் தனியார் முதலீட்டில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதை ஏற்க முடியாது.</p><p>இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ரூ.10.71 லட்சம் கோடியாக இருந்த அரசின் கடன், திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் 10.98 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. வருவாய்ப் பற்றாக்குறை ரூ.48,696 கோடியிலிருந்து 55,775 கோடியாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் மூலதன செலவுளுக்கான ஒதுக்கீடு சுமார் ரூ.3000 கோடி குறைக்கப்பட்டுள்ளது. பலவீனமான நிதி மேலாண்மையையே இது வெளிப்படுத்துகிறது.</p><p>அரசு வேலைவாய்ப்புகள், நீர்ப்பாசனத் திட்டங்கள், வேளாண்துறைக்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பது உள்ளிட்ட மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அறிவிப்புகளை பதிலுரையிலாவது அரசு வெளியிட வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>தவெக அரசின் நிதிநிலை அறிக்கை சமச்சீரான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் - வைகோ பாராட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-government-financial-status-report-paves-way-for-balanced-growth-vaiko-praise</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-government-financial-status-report-paves-way-for-balanced-growth-vaiko-praise#comments</comments><guid isPermaLink="false">dd28069a-bbf1-41fa-8662-77f85b11d827</guid><pubDate>Wed, 05 Aug 2026 09:37:13 +0000</pubDate><atom:updated>2026-08-05T09:37:13.925Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Vaiko,வைகோ,மதிமுக,தமிழக பட்ஜெட்,TN Budget,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,அமைச்சர் மரிய வில்சன்,MDMK |</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/ihtsuc3b/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ வைகோ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/ihtsuc3b/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தவெக அரசின் நிதிநிலை அறிக்கை சமச்சீரான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழக வெற்றிக் கழக அரசு, ஜோசப் விஜய் தலைமையில் பொறுப்பேற்ற பிறகு, 2026 - 27ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையை, இன்று (05.08.2026) நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்துள்ளார். சமூக நீதி, சமத்துவம், வறுமை ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு ஆகிய கோட்பாடுகளுடன் விஜய் அரசின் முதல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>வறுமை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க, 2036ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் உள்ள மாநிலமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதும், மாநிலத்தின் வருவாயை அதிகரிக்க வருவாய் மேம்பாட்டுக் குழு பொருளாதார நிபுணர் மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் நம்பிக்கை தருகிறது.</p><p>தமிழ்நாட்டின் கடன் சுமை கடந்த 5 ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்ந்து உள்ளது என்றாலும், அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கமாக கொண்டு நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.</p><p>மாநில அரசின் வருவாய் பற்றாக்குறை 55,775 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தாலும், மதுபான உற்பத்தி ஆலைகளுக்கான சிறப்புக் கட்டணம் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.1,000 கோடி வருவாய் கிடைக்கும் என்றும், அரசின் பல்வேறு நடவடிக்கை மூலம் அரசுக்கு ரூ.15,000 கோடி கூடுதலாக வருவாய் கிடைக்கும் என்றும் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது தவெக அரசின் நிதி மேலாண்மையை வெளிப்படுத்துகிறது.</p><p>பள்ளிகளில் போதைப்பொருள் எதிர்ப்பு அமைப்புகளும், தன்னார்வ குழுக்களும் அமைக்கப்படும். போதைப்பொருள் புழக்கம் குறித்த தகவல்களை தெரிவிக்க சிறப்பு செயலி உருவாக்கப்படுவது போன்றவை போதைப்பொருள் இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவது என்ற இலக்கை அடைய உதவும்.</p><p>இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) நகரமாக ‘அறிவகம்' AI பல்கலைக்கழகம், சர்வதேச திறன் மேம்பாட்டு மையம், குறை கடத்தி சோதனை ஆய்வகம், AI, குவாண்டம் தொழில்நுட்பம் &amp; ஆராய்ச்சிக்கான ஒருங்கிணைந்த மையம் போன்ற புதிய திட்டங்கள் தமிழ்நாட்டில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வித்திடும்.</p><p>தமிழ்நாட்டில் விண்வெளித் துறையை ஊக்குவிக்கவும், தொழில் வளர்ச்சியைப் பெருக்கவும் “விண்வெளித் தொழில் முதலீட்டு மண்டலம்” தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு தென் மாவட்டங்கள் முன்னேற வழிவகுக்கும்.</p><p>கடந்த 30 ஆண்டுகளாக அமலில் உள்ள பொது நலத் திட்டங்களில் பெரும்பாலானவற்றை இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்துவதுடன், அவற்றை மேலும் விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவித்துள்ள நிதியமைச்சர், புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார்.</p><p>வீட்டுக் கூரை சூரிய மின் மானியத் திட்டம் அறிமுகம் செய்யப்படும்.</p><p>சூரிய மின் பலகைக்கு ரூ.1 லட்சம் வரை மானியம் அளித்தல்.</p><p>ஒவ்வொரு ஆண்டும் 10,000 தகுதி வாய்ந்த பெண்களுக்கு கறவை மாடுகள் விலையில்லாமல் வழங்குதல்.</p><p>கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநங்கையர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 100% மானியத்தில் 5 ஆடுகள் வழங்குதல்.</p><p>மூத்த குடிமக்களுக்காக தமிழ்நாடு முழுவதும் 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும்.</p><p>12 மாவட்டங்களில் 12 முதியோர் இல்லங்கள் நிறுவப்படும்.</p><p>பெண்களுக்கு திருமணத்தின்போது அரசு சார்பில் 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை வழங்கும் ‘அண்ணன் சீர்' திட்டம்.</p><p>அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் +1 படிக்கும் மாணவர்களுக்கு ரூ.277 கோடியில் ஹெல்மெட், வாட்டர் பாட்டில் வசதிகளுடன் மிதிவண்டிகள் வழங்குதல்.</p><p>மதுரையில் 300 மாணவர்களின் சேர்க்கையுடன் புதிய சட்டக் கல்லூரி.</p><p>அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு.</p><p>பெருந்தலைவர் காமராஜர் பெயரில் நவீன உண்டு உறைவிடப் பள்ளிகள் நிறுவப்படும்.</p><p>அரசு பள்ளிகளில் சூப்பர் கிளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம் செயல்படுத்தப்படும்.</p><p>மீனவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ‘ஆழ்கடல் மீன்பிடித் தொழில் ஊக்குவிப்பு' திட்டம்.</p><p>‘திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர்' அமைக்கப்படும்.</p><p>திருவள்ளுவர் திருநாளன்று ஆண்டுதோறும் ‘காயிதே மில்லத்’ விருது வழங்கப்படும்.</p><p>உள்ளாட்சி அமைப்புகளில் உடற்பயிற்சி கூடங்கள்.</p><p>மண்ணின் மகள் திட்டம்.</p><p>வெற்றி தொழில் முனைவோர் திட்டம்.</p><p>அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்.</p><p>அயோத்திதாச பண்டிதர் வாழ்விட மேம்பாட்டு திட்டம் - 300 கோடி ஒதுக்கீடு.</p><p>ஆன்றோர் மேம்பாட்டு திட்டம்.</p><p>ஐந்து மண்டலங்களில் புற்றுநோய் பராமரிப்பு சிகிச்சை மையங்கள்.</p><p>இவையெல்லாம் தவெக அரசின் புதிய திட்டங்களாக நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதாகும்.</p><p>மாநில அரசின் மொத்த கடன் ரூ.10.98 லட்சம் கோடி என மதிப்பீடு செய்யப்பட்டிருக்கும் நிலையிலும், நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசின் பாரபட்சமான அணுகுமுறை தொடரும் நிலையிலும் விஜய் தலைமையிலான அரசு மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுத்துச் சென்று, வெற்றித் தமிழகம் என்ற இலக்கை அடைவதை உறுதி செய்து இருப்பதற்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தவெக அரசின் முதல் பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை - இந்திய தவ்ஹீத் ஜமாஅத்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-first-budget-of-the-tvk-government-did-not-meet-the-expectations-of-the-people-indian-thowheed-jamaat</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-first-budget-of-the-tvk-government-did-not-meet-the-expectations-of-the-people-indian-thowheed-jamaat#comments</comments><guid isPermaLink="false">bdf793e9-9a8f-4607-8bd3-39f1c3f20885</guid><pubDate>Wed, 05 Aug 2026 09:18:03 +0000</pubDate><atom:updated>2026-08-05T09:18:03.219Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,சென்னை,பட்ஜெட்,Budget,இந்திய தவ்ஹீத் ஜமாஅத்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/7mlhfhit/185.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்திய தவ்ஹீத் ஜமாஅத்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/7mlhfhit/185.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தவெக அரசின் முதல் பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D">இந்திய தவ்ஹீத் ஜமாஅத்</a> கூறியுள்ளது.</p> <p>இது தொடர்பாக, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>முதல் பட்ஜெட்</h2><p>தமிழக அரசின் முதல் பட்ஜெட், தேர்தலுக்கு முன்பு மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், வெளியிடப்பட்டுள்ள பட்ஜெட்டை பார்க்கும்போது அது மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத பட்ஜெட்டாகவே அமைந்துள்ளது.</p><h2>தேர்தல் முழக்கங்கள்</h2><p>கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு புதிய பெயர்கள் சூட்டப்பட்டிருப்பதைத் தவிர, புதிய சிந்தனையோ, தொலைநோக்கு வளர்ச்சித் திட்டங்களோ இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. பெயர் மாற்றம் மட்டுமே வளர்ச்சியாகாது என்பதை அரசு உணர வேண்டும்.</p><p>மேலும்,தேர்தல் காலத்தில் தவெக மக்களுக்கு அளித்த முக்கிய வாக்குறுதிகள் குறித்து இந்த பட்ஜெட்டில் எந்தவிதமான அறிவிப்புகளும் இடம்பெறாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. தேர்தல் நேரத்தில் மக்களிடம் கூறப்பட்ட வாக்குறுதிகள் வெறும் தேர்தல் முழக்கங்களாகவே இருந்தனவா என்ற சந்தேகம் இயல்பாக எழுகிறது.</p><p>பட்ஜெட் என்பது அரசின் பொருளாதாரக் கொள்கையை மட்டுமல்ல, மக்களின் எதிர்கால நம்பிக்கையையும் பிரதிபலிக்க வேண்டிய ஆவணமாகும். ஆனால் இந்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D">பட்ஜெட்</a> அந்த நம்பிக்கையை ஏற்படுத்தத் தவறியுள்ளது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பைக்கில் வேகமாக சென்றதால் தகராறு: சென்னை வாலிபர் கத்தியால் குத்திக்கொலை- 8 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-youth-stabbed-to-death-over-speeding-on-bike-8-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-youth-stabbed-to-death-over-speeding-on-bike-8-arrested#comments</comments><guid isPermaLink="false">834c97db-018c-4552-9d3f-3e138688e498</guid><pubDate>Wed, 05 Aug 2026 09:11:24 +0000</pubDate><atom:updated>2026-08-05T09:11:24.632Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,Chennai,சென்னை,கைது,arrested,bike,பைக்,Youth,Stabbed to death,Dispute,தகராறு,Speed,வேகம்,வாலிபர் கத்தியால் குத்திக்கொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/xo3t81b4/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-8-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வாலிபர் கொலை, 8 பேர் கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/xo3t81b4/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-8-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88">கோவை</a>யில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D">பைக்</a>கில் வேகமாக சென்றதால் ஏற்பட்ட தகராறில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">வாலிபர் கத்தியால் குத்திக்கொலை</a> செய்யப்பட்ட சம்பவத்தில் 8 பேரை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர்.</p><h2>பட்டதாரி வாலிபர்</h2><p>சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் நவீன் (வயது 24). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்தார். படித்து முடித்ததும் சென்னை சென்று விட்டார். அவ்வப்போது கோவை வந்து தனது நண்பர்களை சந்தித்து செல்வது வழக்கம். அதன்படி அவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவை வந்தார். பின்னர் அவர் உடையாம்பாளையத்தில் உள்ள அசோக்நகரில் நண்பர்கள் தங்கி இருக்கும் அறைக்கு சென்று தங்கி இருந்தபடி கோவையில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு சென்று வேலை தேடி வந்தார். நவீனின் நண்பர்கள் பைக்கில் அந்தப்பகுதியில் உள்ள வீதிகளில் வேகமாக செல்வதை வாடிக்கையாக வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.</p><h2>பைக்கில் வேகமாக சென்றதால் தகராறு</h2><p>அதன்படி நேற்று முன்தினம் நவீனின் நண்பர்கள் 2 பேர் பைக்கில் வேகமாக சென்றுள்ளனர். உடனே அந்தப்பகுதியை சேர்ந்த சந்தோஷ்(20) என்பவர் அந்த நபர்களை பிடித்து தாக்கியதுடன் எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த 2 பேரும் நவீனிடம் சென்று நடந்ததை கூறி உள்ளனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவில் சந்தோஷ் தனியாக அந்தப்பகுதியில் நடந்து சென்றார். அதை நவீன் மற்றும் நண்பர்கள் பார்த்ததுடன், அவரை தங்களுடைய அறைக்கு அழைத்துச்சென்று சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.</p><h2>வாலிபர் கத்தியால் குத்திக்கொலை</h2><p>இதனால் ஆத்திரம் அடைந்த சந்தோஷ், தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விக்னேஷ்(26) உள்பட 9 பேர் வந்தனர். பின்னர் அவர்கள் 9 பேரும் சேர்ந்து நவீன் தங்கி இருக்கும் அறைக்கு சென்றனர். அந்த அறையில் நவீன் உள்பட 5 பேர் இருந்தனர். அந்த 9 பேரும் சேர்ந்து நவீன் மற்றும் அவருடைய நண்பர்களை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்கள் தங்களிடம் இருந்த கத்தியை எடுத்து நவீனின் நெஞ்சில் குத்திவிட்டு தப்பி ஓடினர். கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த நவீன், மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.</p><h2>8 பேர் கைது</h2><p>இதையடுத்து போலீசார் சந்தோஷ், விக்னேஷ் உள்பட 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் தலைமறைவாக உள்ள நபரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>புஸ்வாண பட்ஜெட்டாக ‘ரீல் அரசின்’ முதல் பட்ஜெட் அமைந்திருக்கிறது - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-first-budget-of-the-reel-government-is-a-pushwana-budget-dmk-president-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-first-budget-of-the-reel-government-is-a-pushwana-budget-dmk-president-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">b15543d9-9292-4cfb-9299-7797f71818c3</guid><pubDate>Wed, 05 Aug 2026 09:10:26 +0000</pubDate><atom:updated>2026-08-05T09:10:26.992Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,விமர்சனம்,தமிழக பட்ஜெட்,Tamilnadu Budget,TN Budget,MKstalin,திமுக தலைவர்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,அமைச்சர் மரிய வில்சன்,Minister Maria Wilson</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/az0nvmor/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/az0nvmor/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுரத்தில்லாத புஸ்வாண பட்ஜெட்டாக ‘ரீல் அரசின்’ முதல் பட்ஜெட் அமைந்திருக்கிறது என்று முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>இன்று சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட தமிழக பட்ஜெட் 2026 பற்றி Reels CM-க்குப் புரியும் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், 'Blast Blast'-ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, ‘Waste Waste' எனச் சொல்லும்படிதான் இருக்கு! அதுமட்டுமல்ல, இது திராவிட மாடல் அரசின் திட்டங்களின் Remake Version budget! </p><p>மக்கள் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், விவசாயிகள் பிரச்சினை, மின் கட்டணக் குளறுபடி பிரச்சினை, விலைவாசி உயர்வுப் பிரச்சினை என எதைப் பற்றியும் கவலையின்றி, மாநிலத்திற்குத் தேவையான புதிய தொலைநோக்குத் திட்டங்களையும் அறிவிக்காத பட்ஜெட்!</p><p>அதுமட்டுமல்ல, </p><p>- ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை,</p><p>- வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ. 4 ஆயிரம்,</p><p>- ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்,</p><p>- முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி, என முக்கிய வாக்குறுதிகள் எதைப் பற்றியும் மூச்சே விடாத பட்ஜெட்!</p><p>மொத்தத்தில், சொந்தமாகவும் யோசிக்காத, சொன்னதையும் செய்யாத, சுரத்தில்லாத புஸ்வாண பட்ஜெட்டாகத்தான் ‘ரீல் அரசின்’ முதல் பட்ஜெட் அமைந்திருக்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">இன்று சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட <a href="https://x.com/hashtag/TNBudget2026?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TNBudget2026</a> பற்றி Reels CM-க்குப் புரியும் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், <br><br>&#39;Blast Blast&#39;-ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, ‘Waste Waste&#39; எனச் சொல்லும்படிதான் இருக்கு!<br><br>அதுமட்டுமல்ல, இது <a href="https://x.com/hashtag/DravidianModel?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#DravidianModel</a>-அரசின் திட்டங்களின் Remake… <a href="https://t.co/5PxxbNlKbL">pic.twitter.com/5PxxbNlKbL</a></p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2084925490494861739?ref_src=twsrc%5Etfw">August 5, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>தவெக அரசு பட்ஜெட்: பெரும் ஏமாற்றத்தை மட்டுமே அளித்திருக்கிறது - வானதி சீனிவாசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-government-budget-it-has-only-given-a-big-disappointment-vanathi-srinivasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-government-budget-it-has-only-given-a-big-disappointment-vanathi-srinivasan#comments</comments><guid isPermaLink="false">ed7282f9-4ef2-46f5-be98-61c9e9d3a199</guid><pubDate>Wed, 05 Aug 2026 09:07:33 +0000</pubDate><atom:updated>2026-08-05T09:07:33.280Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வானதி சீனிவாசன்,பட்ஜெட்,ஏமாற்றம்,தவெக அரசு</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/iiocspu6/vanathi-seenivasan.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/iiocspu6/vanathi-seenivasan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தவெக அரசு சார்பில்&nbsp;தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் பெரும் ஏமாற்றத்தை மட்டுமே அளித்திருக்கிறது என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார். இது தொடர்பாக, தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- முதல்-அமைச்சர் புகழ்பாடிய கடந்த ஆட்சிகளின் காப்பி-பேஸ்ட் ஆன தவெக-வின் முதல் பட்ஜெட்</p><h2> காப்பி-பேஸ்ட் பட்ஜெட்</h2><p>இன்று தமிழக சட்டசபையில் <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D"> நிதியமைச்சர் மரிய வில்சன்</a> தாக்கல் செய்யப்பட்ட தவெக அரசின் முதல் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D">பட்ஜெட்</a> கடந்த ஆட்சிக் காலங்களில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை அப்படியே காப்பி-பேஸ்ட் செய்து பெயர்களை மட்டும் மாற்றி நிதி ஒதுக்கீட்டினை குறைத்தும், சில திட்டங்களுக்கு கூடுதலாகவும் ஒதுக்கியிருக்கிறது. தவெக அரசின் பட்ஜெட்டில் மாற்றம் கிடைக்கும் மக்கள் காத்திருந்த நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் பெரும் ஏமாற்றத்தை மட்டுமே அளித்திருக்கிறது.</p><h2>காற்றடைத்த பலூன்</h2><p>புதிய சிந்தனைகள், புதிய பொருளாதார கொள்கைகள், வருவாயை பெருக்கும் தொலைநோக்கு திட்டங்கள், வேலைவாய்ப்பை உருவாக்கும் முதலீட்டு அறிவிப்புகள் என தமிழக மக்கள் எதிர்பார்த்த நிலையில் பட்ஜெட் உரையில் ஒன்றும் இல்லாமல் வெறும் காற்றடைத்த பலூனாக மட்டுமே இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p> <h2>புதுமை இடம்பெறவில்லை</h2><p>இலவச மடிக்கணினி, திருமண நிதி உதவி, மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டம், திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் அனைத்தும் கடந்த அரசுகளின் திட்டங்களின் தொடர்ச்சியே தவிர, இந்த அரசின் புதிய சிந்தனையை வெளிப்படுத்தும் வகையில் எந்தவிதமான புதுமையும் இதில் இடம்பெறவில்லை.</p> <h2>முக்கியமான வாக்குறுதி</h2><p>குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,500, குடும்பத்திற்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வாங்குவதற்கான தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும், அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம், 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் 50 சதவீதமும் தள்ளுபடி செய்யப்படும், விவசாயிகளின் குழந்தைகளுக்கு இலவச உயர் கல்வி, பால் கொள்முதல் விலை உயர்வு போன்ற வாக்குறுதிகளை அளித்துதான் தவெக ஆட்சியை பிடித்தது. ஆனால், இந்த முக்கியமான வாக்குறுதிகள் குறித்து நிதிநிலை அறிக்கையில் எந்த அறிவிப்பும் இல்லை.</p> <h2>வருத்தமளிக்கிறது</h2><p>தமிழகத்தின் நிதிநிலை ஏற்கனவே கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகிறது. கடன் சுமை அதிகரித்து வரும் இந்த சூழலில், மாநிலத்தின் வருவாயை உயர்த்துவதற்கான வலுவான பொருளாதார திட்டங்கள், தொழில் முதலீட்டை ஈர்க்கும் நடவடிக்கைகள், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சீர்திருத்தங்கள் ஆகியவற்றிற்கு இந்த பட்ஜெட்டில் போதிய முக்கியத்துவம் வழங்கப்படாதது வருத்தமளிக்கிறது. இதனால் எதிர்கால தலைமுறையின் மீது கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும் வகையிலான தவெக அரசின் நிதி நிர்வாக அணுகுமுறை தமிழகத்தின் வளர்ச்சிக்கு உகந்ததாக அமையாது.</p><h2>புகழ்பாடும் உரையா?</h2><p>மேலும், பட்ஜெட் உரையின் பெரும்பாலான பகுதிகளில் முதல்-அமைச்சரை புகழ்ந்து பேசுவதற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது கவலையளிக்கிறது. மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிகாட்ட வேண்டிய பட்ஜெட் உரை, முதலமைச்சரின் புகழைப் பாடும் உரையாக மாறியிருப்பது நல்ல ஜனநாயக மரபு அன்று. மொத்தத்தில் இது மக்களுக்கான பட்ஜெட் உரையா? அல்லது முதல்-அமைச்சரின் புகழ்பாடும் உரையா? என்ற கேள்வி எழுகிறது.</p><h2>தவெக அரசு தவறவிட்டுள்ளது</h2><p>மொத்தத்தில், தமிழகத்தின் பொருளாதாரத்திற்கு புதிய வழியைக் காட்டும் தொலைநோக்கு பார்வையோ, மாநில வளர்ச்சிக்கான புதிய திட்டங்களோ, இளைஞர்கள், விவசாயிகள், தொழில் முனைவோர் மற்றும் நடுத்தர மக்களின் எதிர்கால நம்பிக்கையை உயர்த்தும் செயல்திட்டங்களோ இல்லாத வெற்று நிதிநிலை அறிக்கையாகவே இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. மாற்றத்திற்கான சிறப்பான தருணமாக கருதப்பட்ட தமிழகத்தின் முதல் பட்ஜெட் என்ற வரலாற்று வாய்ப்பை தவெக அரசு முழுமையாக தவறவிட்டுள்ளது என்பது ஏமாற்றத்திற்குரியது.</p><h2>சோலார் மின் உற்பத்தி</h2><p>எனினும் கடந்த அரசை போல் அல்லாமல் மத்திய அரசுடனான மோதல் போக்கினை கைவிட்டு, மத்திய அரசின் திட்டங்களான சோலார் மின் உற்பத்தி உள்ளிட்ட சில திட்டங்கள் வாயிலாக கைகோர்த்து திட்டங்களை அறிவித்திருப்பதை வரவேற்கலாம். மத்திய மாநில அரசுகளுடன் இணைந்த வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி என்பதை உணர்ந்து தவெக அரசு இன்னும் பல மக்கள் நல திட்டங்களை செயலாற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>தவெக அரசின் பட்ஜெட் மிகப்பெரிய பூஜ்ஜியம் பட்ஜெட் - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-governments-budget-is-a-huge-zero-budget-udhayanidhi-stalin-criticizes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-governments-budget-is-a-huge-zero-budget-udhayanidhi-stalin-criticizes#comments</comments><guid isPermaLink="false">fc1a437a-21a7-4cb1-9304-783d6e1c2034</guid><pubDate>Wed, 05 Aug 2026 09:06:29 +0000</pubDate><atom:updated>2026-08-05T09:06:29.932Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,உதயநிதி ஸ்டாலின்,tngovt,பட்ஜெட்,TNBudget</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/oz0anjjq/udayi33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/oz0anjjq/udayi33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திமுகவின் சாதனைகளை இப்போதாவது ஒத்துகொண்ட முதலமைச்சருக்கு நன்றி  என உதயநிதி ஸ்டாலின்  கூறியுள்ளார்.</p><p>தவெக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் பூஜ்ஜியமாக இருக்கிறது.  தவெக ஆட்சியால் விவசாயிகள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். முந்தைய திமுக அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் அரசாகத்தான் இருக்கிறது. </p><p>தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றுவார்கள் என்ற தெளிவு இல்லை. </p><h2>தங்க மோதிரம் திட்டம் </h2><p>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் வாக்குறுதியில் சொன்னபடி நிறைவேற்றப்படவில்லை. தமிழ்நாட்டில் பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் தருவதாக முதல்வர் தேர்தல் பிரசாரத்தில் சொன்னார். ஆனால் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது"</p><p>ஆட்சிக்கு வரும்முன் மாற்றம் என்றனர். என்ன மாற்றம் எனப்பார்த்தால் பெயர் மாற்றம் மட்டும்தான் நடந்திருக்கிறது. முந்தைய திமுக அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் அரசாகத்தான் இருக்கிறது. <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">திமுக</a> கொண்டு வந்த பெரும்பாலான திட்டங்களுக்கு வெற்றி என பெயர் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>பெயரைத்தான் மாற்றியிருக்கிறார்கள்</h2><p>அம்பேத்கர் கல்வி திட்டம், ஒலிம்பிக் திட்டம், முதல்-அமைச்சர் படைப்பகம் உள்ளிட்டவை திமுகவின் திட்டங்கள் தான்.மடிக்கணினி, வீடு வழங்கும் திட்டங்கள் என திமுகவின் பல்வேறு திட்டங்களுக்கு பெயர் மாற்றி உள்ளனர்.</p><p> `அன்பு சோலை' என நாங்கள் கொண்டு வந்த திட்டத்துக்கு `முதியோர் பொழுதுபோக்கு மையங்கள்' என்றும் `உலகம் உங்கள் கையில்' என்ற லேப்டாப் திட்டத்துக்கு `வெற்றி மடிக்கணினி திட்டம்' என்றும் `கலைஞர் கனவு இல்லம்' திட்டத்துக்கு `வெற்றி வீடு திட்டம்' என்றும் `முதல்வர் படிப்பகங்கள்' திட்டத்துக்கு `டிஜிட்டல் நூலகம்' என்றும் `நன்னிலம்' திட்டத்துக்கு  `மண்ணின் மகள் திட்டம்’ என்றும் பெயரை மாற்றியிருக்கிறார்கள்"</p><p>திமுக கொண்டு வந்த திட்டத்துக்கு பெயரை மாற்றுவதற்கு எதற்காக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்கள்?  </p><p>மேகதாது அணையை கட்டும் கர்நாடகாவை கண்டிக்க இந்த ஆட்சிக்கு வக்கில்லை.  எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் சொல்ல தீர்மானம் கொண்டுவருவார்களாம்.பதில் சொல்லாத முதல்-அமைச்சர் எதற்காக சட்டமன்றத்துக்கு வர வேண்டும் என தெரியவில்லை.</p><h2>வீடு புகுந்து கைது செய்தார்கள்</h2><p>"காவிரியில் தண்ணீர் வரவில்லை, ஆடிப்பெருக்கில் கூட தண்ணீர் வரவில்லை. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஜூலையில் காவிரியில் நீர் இல்லை என நாளிதழில் வந்துள்ளது. இந்த ஆட்சி அமைந்ததில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது விவசாயிகள் தான். தஞ்சையில் நடந்த ஆர்பாட்டத்தில் இந்த பிரச்சினைகளை நான் பேசினேன், அதற்காக என்னை வீடு புகுந்து கைது செய்தார்கள். விவசாய பிரச்சினைகளை மடைமாற்றவே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>சந்தி சிரிக்கிறது</h2><p>தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. கடந்த 5 வாரங்களில் 4 காவல் மரணங்கள் நடந்துள்ளன. 5 ஜாதி ஆணவக் கொலைகள் நடந்துள்ளன.</p><h2>ரெடியா இருங்க</h2><p>நடக்கும் கூட்டத்தொடர் முழுவதும், உறுதியாக மக்கள் பிரச்சினைகளை கேள்வி எழுப்ப ரெடியாக இருக்கிறோம். பதில் சொல்ல இந்த அரசு ரெடியாக இருக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சத்தியமங்கலம் அருகே கரும்பு லாரியை வழிமறித்த ஒற்றை யானை: வாகன ஓட்டிகள் பீதி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/lone-elephant-intercepts-sugarcane-lorry-near-sathyamangalam-motorists-panic</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/lone-elephant-intercepts-sugarcane-lorry-near-sathyamangalam-motorists-panic#comments</comments><guid isPermaLink="false">817fa151-5ccd-4e32-8f94-31018282b4f2</guid><pubDate>Wed, 05 Aug 2026 09:03:44 +0000</pubDate><atom:updated>2026-08-05T09:03:44.245Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஈரோடு,lorry,காட்டு யானை அட்டகாசம்,A wild elephant,வாகன ஓட்டிகள் அச்சம்,motorists panic</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/67ozz0e0/79.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ ஒற்றை காட்டு யானை]]></media:title><media:description type="html"><![CDATA[ சாலையில் சென்று கொண்டிருந்த கரும்பு லாரியை ஒற்றைக் காட்டு யானை வழிமறித்தது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/67ozz0e0/79.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஈரோடு மாவட்டம் </a>சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி சாலையில் சென்று கொண்டிருந்த கரும்பு லாரியை ஒற்றைக் காட்டு யானை வழிமறித்து, தும்பிக்கையால் கரும்புத் துண்டுகளைக் கத்தையாக அள்ளி ருசித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>கரும்பு கட்டுகள்</h2><p>கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மற்றும் தாளவாடி மலைப்பகுதிகளில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகள் கரும்பு கட்டுகளை ஏற்றிக்கொண்டு திம்பம் மலைப்பாதை வழியாக சத்தியமங்கலத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்குச் செல்வது வழக்கம். லாரிகளில் இருந்து கீழே விழும் கரும்புகளைத் தின்று பழகிய <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">காட்டு யானைகள்</a>, கரும்பு வாசனைக்காகவே அடிக்கடி இந்த சாலையில் காத்துக்கிடக்கின்றன.</p><h2>லாரியை முற்றுகையிட்ட யானை</h2><p>இந்நிலையில், தாளவாடி மற்றும் திம்பம் மலைப்பாதை வழியே கரும்பு கட்டுகளை லாரி ஒன்று ஏற்றி வந்தது. அப்போது, திடீரென அடர்ந்த வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை அந்த லாரியை தடுத்து நிறுத்தியது. யானையைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் லாரியை சாலையிலேயே நிறுத்தினார். அப்போது அந்த யானை, லாரியின் முன்பகுதிக்கு வந்து தனது தும்பிக்கையை நீட்டி, லாரியில் அடுக்கப்பட்டிருந்த கரும்புத் துண்டுகளைக் கத்தையாக அள்ளி இழுத்துப் போட்டு சுவைக்கத் தொடங்கியது.</p><h2>போக்குவரத்து பாதிப்பு</h2><p>யானை சாலையின் நடுவே நின்று கரும்புகளை ருசித்துக் கொண்டிருந்ததால், திம்பம் மலைப்பாதை மற்றும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் வாகனங்கள் மேற்கொண்டு செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் அச்சத்துடன் தங்களது வாகனங்களுக்குள்ளேயே முடங்கினர்.</p><h2>வனத்துறை நடவடிக்கை</h2><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சத்தியமங்கலம் வனத்துறையினர், சத்தம் எழுப்பி யானையை மெதுவாக அடர் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். அதன் பின்னரே லாரி ஓட்டுநரும், மற்ற வாகன ஓட்டிகளும் நிம்மதிப் பெருமூச்சுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். யானைகளின் இந்தத் தொடர் வழிமறிப்பு போக்கைத் தடுக்க, கரும்பு லாரிகளைத் தார்ப்பாய் கொண்டு மூடி எடுத்துச் செல்லவும், யானைகள் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் வனத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>கோவை - ஜெய்ப்பூர் இடையே சிறப்பு ரெயில்: திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-coimbatore-jaipur-operation-via-tiruppur-erode-salem</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-coimbatore-jaipur-operation-via-tiruppur-erode-salem#comments</comments><guid isPermaLink="false">efd96c25-89f8-4e19-a4b1-17a38cedc020</guid><pubDate>Wed, 05 Aug 2026 08:50:10 +0000</pubDate><atom:updated>2026-08-05T08:50:10.737Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவை,சென்னை,Tiruppur,சிறப்பு ரெயில்,Special train,Salem,Erode,ஜெய்ப்பூர்,Jaipur</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/64u7aek9/184.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/64u7aek9/184.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பயணிகளுக்கான தேவையை கருத்தில் கொண்டு கோவை - ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. </p><p>இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><h2>சிறப்பு ரெயில்</h2><p>கோவையில் இருந்து ஆகஸ்டு - 13, 20, 27, செப்டம்பர் 3 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண் 06181) 3-வது நாள் மதியம் 1.25 மணிக்கு ஜெய்ப்பூரை சென்றடையும். </p><p>மறுமார்க்கத்தில், ஜெய்ப்பூரில் இருந்து ஆகஸ்டு 16, 23, 30, செப்டம்பர் 6 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10.05 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் (06182) 4-வது நாள் காலை 8.30 மணிக்கு கோவையை வந்தடையும். 20 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில், தமிழ்நாட்டில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D#google_vignette">சிறப்பு ரெயிலுக்கான</a> முன்பதிவு நாளை (6-8-2026) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>
நேர்மையான, திறமையான, நல்லாட்சியை வழங்குவோம் - நிதியமைச்சர் மரிய வில்சன்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-provide-honest-efficient-good-governance-finance-minister-maria-wilson</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-provide-honest-efficient-good-governance-finance-minister-maria-wilson#comments</comments><guid isPermaLink="false">6ab885cb-f14e-41f4-b86c-82f97a8e1fdc</guid><pubDate>Wed, 05 Aug 2026 08:30:58 +0000</pubDate><atom:updated>2026-08-05T08:30:58.693Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu Assembly,தமிழக சட்டசபை,பட்ஜெட்,Budget,பட்ஜெட் 2026,Budget 2026</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/h0enscs7/tnceae.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பொது பட்ஜெட், நிதியமைச்சர் மரிய வில்சன்
]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/h0enscs7/tnceae.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>பட்ஜெட் உரையானது காலை 10.01 மணிக்கு தொடங்கி, நண்பகல் 12.32 மணிக்கு நிறைவடைந்தது.</p><p>தமிழகத்தில் நேர்மையான, திறமையான, நல்லாட்சியை வழங்குவோம் என நிதியமைச்சர் மரிய வில்சன் கூறியுள்ளார்.</p>  <h2>பொது பட்ஜெட் தாக்கல்</h2><p>தமிழக சட்டசபையில், 2026-27 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனை முன்னிட்டு, தமிழக முதல்-அமைச்சர் விஜய், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, துறை சார்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரும் அவைக்கு வருகை தந்தனர்.</p><p>பொது பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு, தமிழக முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் வாழ்த்து பெற்றார். இதன்பின்னர் சபாநாயகர் பிரபாகர் அவைக்கு வருகை தந்ததும், உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை தந்தனர்.</p><p>இதனை தொடர்ந்து, தமிழக சட்டசபையில், 2026-27 நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்து பேசினார்.</p>  <h2>இரண்டு மடங்கு</h2><p>அப்போது அவர், த.வெ.க.வின் வெற்றி தமிழக மக்களின் வெற்றி. பிறப்பால் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டுடன் தமிழக முதல்-அமைச்சர் விஜய் ஆட்சி நடத்துகிறார். ஊழலற்ற அரசை தமிழக முதல்-அமைச்சர் விஜய் நடத்துகிறார். தமிழக அரசின் நிதிச்சுமை இரண்டு மடங்காக அதிகரித்து உள்ளது. திட்டங்களை செயல்படுத்த நிதி ஆதாரம் குறைவாக உள்ளது.</p><p>நிதி நெருக்கடியில் இருந்து தமிழ்நாட்டை மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று கூறினார்.  தொடர்ந்து அவர் பல்வேறு துறை சார்ந்த நிதி ஒதுக்கீடுகள், பல்வேறு திட்டங்கள் தொடர்பான நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட விவரங்களை பற்றி அவையில் உரையாற்றினார்.</p>  <h2>கூடுதல் வருவாய்</h2><p>இந்த நிலையில், 2026-27 நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட் உரை வாசிப்பு நிறைவடைந்தது.  பட்ஜெட் உரையானது காலை 10.01 மணிக்கு தொடங்கி, நண்பகல் 12.32 மணிக்கு நிறைவடைந்தது.  இதன்படி, மொத்தம் 2 மணிநேரம் 31 நிமிடங்கள் வரை தமிழக பொது பட்ஜெட் உரை நீடித்தது.</p><p>பட்ஜெட் உரையின்போது, அரசு, குறுகிய கால அரசியல் ஆதாயங்களில் கவனம் செலுத்தப்போவதில்லை என அவர் கூறினார்.  தமிழக நிதி நிலையை சீராக்க 2 வருடங்கள் தேவையாக உள்ளது.  முந்தைய அரசு போல் இல்லாமல் நேர்மையான, திறமையான, நல்லாட்சி வழங்க உள்ளோம்.  கூடுதல் வருவாயை ஈட்ட அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது என்று கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யவில்லை - மு.வீரபாண்டியன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-budget-has-not-met-the-peoples-expectations-m-veerapandian</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-budget-has-not-met-the-peoples-expectations-m-veerapandian#comments</comments><guid isPermaLink="false">7ebab017-82df-409f-a3bf-223f38426b6c</guid><pubDate>Wed, 05 Aug 2026 08:26:32 +0000</pubDate><atom:updated>2026-08-05T08:26:32.942Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,Communist Party of India,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி,CPI,கம்யூனிஸ்ட் கட்சி,மு.வீரபாண்டியன்,M. Veerapandian</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/lg4qctuh/veerapandiyan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/lg4qctuh/veerapandiyan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யவில்லை என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>இளைஞர்கள் மத்தியில் அதிருப்தி</h2><p>தமிழ்நாட்டில் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2026- 27ம் ஆண்டுக்கான இந்த பட்ஜெட் கல்வி, மகளிர் நலம் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொடர்பான பயிற்சியை மாணவர்கள் இளைஞர்களுக்கு வழங்கிட அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. </p><p>ஆயினும் வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதை பற்றிய திட்டவட்டமான அறிவிப்புகள் இல்லை. வேலை இல்லா பட்டதாரிகளுக்கு மாதம்தோறும் ரூபாய் 4000  நிவாரண உதவி வழங்கப்படும் என தவெக தேர்தல் வாக்குறுதி வழங்கியது. அது குறித்த அறிவிப்பு இல்லை என்பது வேலை இல்லா இளைஞர்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கும்.</p><h2>ஏமாற்றம் அளிக்கிறது</h2><p>ஒப்பந்தப்பணியாளர்கள், தற்காலிக பணியாளர்களின் பணிநிரந்தரம் குறித்த அறிவிப்பு இல்லை என்பது பெரும் பகுதி தொழிலாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் ஏமாற்றம் அளிக்கும். குடும்பத் தலைவிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.2,500-ஆக உயர்த்தப்படும்; ஆண்டுதோறும் வீடுகளுக்கு 6 சமையல் எரிவாயு உருளை இலவசமாக வழங்கப்படும் என தவெக அளித்த தேர்தல் வாக்குறுதி குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என்பதும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்.</p><p>காலை உணவுத் திட்டத்தை அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 5 ஆம் வகுப்புவரை படிக்கும் மாணவர்கள் பெற்று வந்தனர். அதை ஆறு முதல் எட்டாம் வகுப்புவரை நீட்டிப்பது வரவேற்பிற்குரியது. மூத்த குடிமக்களுக்காக ஆயிரம் நடமாடும் மருத்துவ மையங்கள் அறிவிப்பு வரவேற்பிற்குரியது. பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகள் போராடி வரும் நிலையில், அது குறித்த அறிவிப்பு ஏதும் இல்லை என்பது விவசாயிகளை ஆத்திரமூட்டும்.</p><h2>கடந்த ஆண்டை விட குறைவு</h2><p>அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் குறித்த தவெகவின் வாக்குறுதி குறித்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. சென்ற 2025-26 பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.46,767 கோடி ஒதுக்கிய நிலையில் இந்த பட்ஜெட்டில் அது ரூ.44,527 கோடியாக குறைத்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்தது சரியல்ல. அதே போல் உயர் கல்வித்துறைக்கு 2025-26 ல் ரூ.8,494 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அது இந்த பட்ஜெட்டில் ரூ.8,393 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இது வருந்தத்தக்கது.</p><p>அரசு மற்றும் அரசு சார்ந்த பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தம் கோருவதில் நிலவி வந்த ஊழல் முறைகேடுகளை தடுத்து, வெளிப்படை தன்மை நடைமுறைகளை உறுதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பதை விளக்கியுள்ளது. இதில், ஒப்பந்தப் பணி நிறுவனங்கள் எந்தத் துறையில் பதிவு செய்து இருந்தாலும், அரசின் அனைத்துத்துறை ஒப்பந்தப் பணிகள் ஏலத்திலும் பங்கேற்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய முறையால் ஏலம் கோரும் ஒப்பந்த நிறுவனங்கள் குறைந்த மதிப்பீட்டை குறைத்துக் கொண்டு ஏலம் கோரும் வாய்ப்புகள் உருவாகும் எனினும், அவர்கள் மேற்கொள்ளும் பணிகளின் தரமும், உறுதியும் குறையாமல் இருப்பதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்.</p><h2>கவனம் செலுத்தியுள்ளது</h2><p>கடந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக மக்களுக்கு உறுதி அளித்தபடி, அரசு மருத்துவ மனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்கத்தில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், 8 கிராம் தங்கம், மற்றும் ஒரு பட்டுப்புடவை வழங்கும் திட்டம், உயர் கல்விக்கு செல்லும் போது எதிர் கொள்ளும் போட்டித் தேர்வுகளை எதிர் கொள்ள பயிற்சி மையங்கள், தொழில்நுட்ப வளர்ச்சியை கருத்தில் கொண்டு, தொழில் பயிற்சி நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில் பிரிவு தொடங்குவது, மின்சார வாகன விற்பனைக்கு ஊக்கமளிப்பது <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">போன்றவற்றில் </a>நிதிநிலை அறிக்கை கவனம் செலுத்தியுள்ளது.</p><p>இரு மாதங்களில் 500 யுனிட் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு 200 யுனிட் விலையில்லா மின்சாரம் வழங்குவது, நீண்ட கால சவாலாக நீடித்து வரும் கூவம் மற்றும் அடையாறு நதிகளை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்க உறுதி அளித்துள்ளது.</p><h2>போதுமானதல்ல</h2><p>மத்திய அரசு அண்மையில் அறிமுகம் செய்துள்ள விபி ஜி ராம்ஜி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் ஆண்டுக்கு 125 நாள் வேலை வழங்க உறுதியளித்துள்ளது. இத்திட்டத்திற்கு மாநில அரசு ரூ.5,057 கோடி நிதிப் பங்களிப்பு செலுத்த வேண்டும். இந்த நிலையில் மாநில அரசு கூடுதலாக 25 நாட்களை சேர்த்து ஆண்டுக்கு 150 நாட்களாக வேலை வழங்கும் என கூறும் நிதிநிலை அறிக்கை, அதற்காக ரூ.100 கோடி மட்டுமே நிதி ஒதுக்கி இருப்பது போதுமானதல்ல.</p><p>தவெக அரசின் நிதிநிலை அறிக்கை சில பிரிவுகளில் முன்னேற்றம் காண வழிவகுக்கும் எனினும் பெரும் பகுதி, மக்களின் எதிர்பார்ப்புகளை கருத்தில் கொள்ளவில்லை.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>
பயணிகள் கவனத்திற்கு.. திருநெல்வேலி - தாம்பரம் இடையே சிறப்பு ரெயில்  </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/attention-passengers-special-train-between-tirunelveli-and-tambaram</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/attention-passengers-special-train-between-tirunelveli-and-tambaram#comments</comments><guid isPermaLink="false">01ffbd8f-fc84-400f-a3f6-d42b34262a1d</guid><pubDate>Wed, 05 Aug 2026 08:23:47 +0000</pubDate><atom:updated>2026-08-05T08:23:47.380Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,Tambaram,தாம்பரம்,தெற்கு ரெயில்வே,Southern Railway,திருநெல்வேலி,Special train,Thirunelveli</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/yxs905i6/12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/yxs905i6/12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பயணிகளுக்கான தேவையை கருத்தில் கொண்டு திருநெல்வேலி - தாம்பரம் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. </p> <p>இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p>திருநெல்வேலியில் இருந்து ஆகஸ்டு 13, 20, 27 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) இரவு 11.35 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண் 06070) மறுநாள் காலை 10.15 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். </p><p>மறுமார்க்கத்தில், தாம்பரத்தில் இருந்து ஆகஸ்டு 14, 21, 28 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) மதியம் 1.55 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் (06069) மறுநாள் அதிகாலை 1 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். </p> <p>22 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடை ரோடு, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். </p><p>இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (6-8-2026) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதில் முன்னுரிமை: புதிய குற்றவியல் சட்டத்தில் சிறப்பு விதிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/priority-given-to-preventing-crimes-against-women-and-children-special-provisions-included-in-the-new-criminal-laws</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/priority-given-to-preventing-crimes-against-women-and-children-special-provisions-included-in-the-new-criminal-laws#comments</comments><guid isPermaLink="false">dd79bfc7-90dd-4079-99dd-2b4f73c7fbb7</guid><pubDate>Wed, 05 Aug 2026 08:20:51 +0000</pubDate><atom:updated>2026-08-05T08:20:51.240Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>New Criminal Laws,புதிய குற்றவியல் சட்டங்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/8yiptnkx/National-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/8yiptnkx/National-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><p>புதிய குற்றவியல் சட்டத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் சிறப்பு விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை இணை மந்திரி பண்டி சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது;- </p><p>“பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் மத்திய அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. புதிதாக அமல்படுத்தப்பட்ட 'பாரதிய நியாய சன்ஹிதா 2023'  சட்டத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான குற்றங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, அவை அனைத்தும் ஒரே அத்தியாயத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. </p><p>இந்த சட்டத்தில், 18 வயதிற்குட்பட்ட சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், திருமண ஆசை காட்டி, வேலைவாய்ப்பு அல்லது பதவி உயர்வு தருவதாகக் கூறி அல்லது அடையாளத்தை மறைத்து ஏமாற்றி பாலியல் உறவு கொள்வது புதிய குற்றமாக சேர்க்கப்பட்டுள்ளது. </p> <p>பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலங்களை ஆடியோ-வீடியோ வடிவில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதோடு, மருத்துவ பரிசோதனை அறிக்கையை 7 நாட்களுக்குள் விசாரணை அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இலவச முதலுதவி மற்றும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பதும் இச்சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>சட்டசபை கூட்டத் தொடர் செப்டம்பர் 8-ந் தேதி வரை நடைபெறும் - சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/assembly-session-to-be-held-until-september-8-speaker-jcd-prabhakar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/assembly-session-to-be-held-until-september-8-speaker-jcd-prabhakar#comments</comments><guid isPermaLink="false">8baf1a37-ffd5-49a3-a346-291f17913df1</guid><pubDate>Wed, 05 Aug 2026 08:02:55 +0000</pubDate><atom:updated>2026-08-05T08:02:55.192Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Tamilnadu,தமிழக அரசு,Assembly Session,TN Assembly session,TamilNadu Goverment,ஜே.சி.டி.பிரபாகர்,சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்,தவெக அரசு,TVK Government,Speaker J.C.D. Prabhakar,J.C.D. Prabhakar,சட்டசபை கூட்டத் தொடர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/kp43j35f/Untitled-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/kp43j35f/Untitled-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக சட்டசபையில் இன்று 2026-27-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் மரிய வில்சன், 2 மணி நேரம் 31 நிமிடங்கள் பட்ஜெட் உரை நிகழ்த்தினார். </p><h2>செப்டம்பர் 8-ந் தேதி வரை</h2><p>அதனைத் தொடர்ந்து இன்றைய சட்டசபை கூட்டம் நிறைவடைந்தது. நாளை (வியாழக்கிழமை) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பட்ஜெட் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் ஆகியவற்றை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்வதற்காக, இன்று சட்டசபை கூட்டம் முடிந்ததும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தலைமையில் அலுவல் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஆய்வுக்குழு </a>கூட்டம் நடைபெற்றது. </p><p>கூட்டத்தில், சட்டசபை கூட்டத் தொடரை செப்டம்பர் 8-ந் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது. </p>]]></content:encoded></item></channel></rss>