<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 20 Sep 2026 05:45:09 +0000</lastBuildDate><item><title>25 ஆண்டுகள் காத்திருந்து தந்தை கொலைக்கு பழிதீர்த்த மகன்... மதுரையில் நடந்த பயங்கரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/son-waits-25-years-to-avenge-fathers-murder-horror-in-madurai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/son-waits-25-years-to-avenge-fathers-murder-horror-in-madurai#comments</comments><guid isPermaLink="false">50c99098-3b70-4246-b668-87988b5d9ba2</guid><pubDate>Sun, 20 Sep 2026 05:43:03 +0000</pubDate><atom:updated>2026-09-20T05:43:03.957Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,murder,கொலை,Rowdy,ரவுடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/0q1gqnig/7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சப்பாணி சரவணன் கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/0q1gqnig/7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரையைச் சேர்ந்த நபர் ஒருவர், 25 ஆண்டுகளாக காத்திருந்து தந்தையை கொன்றவரை பழி தீர்த்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை</h2><p>மதுரை மாநகர் சோலைஅழகுபுரம் சப்பாணி கோவில் தெருவை சேர்ந்தவர் சப்பாணி சரவணன் (வயது 50). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், சில வழக்குகளில் சிறை சென்றுவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று அதிகாலை அவர் டீக்கடைக்கு வந்துள்ளார்.</p><p>அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரைத் துரத்தியது. உயிருக்கு பயந்து அவர் அங்கிருந்து ஓடினார். அவரை விடாமல் துரத்திய கும்பல், ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.</p><h2>விசாரணை</h2><p>இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெய்ஹிந்த்புரம் <a href="https://www.dailythanthi.com/topic/போலீசார்">போலீசார்</a>, சரவணனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி, குற்றவாளிகளை தேடி வந்தனர்.</p><h2>பழிக்கு பழி</h2><p>இந்த நிலையில், அவரை கொலை செய்ததாகக் கூறப்படும் 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய <a href="https://www.dailythanthi.com/topic/விசாரணை">விசாரணையில்</a>, கடந்த 2001ஆம் ஆண்டு மேலராஜ வீதியை சேர்ந்த புஷ்பராஜ் என்பவர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் சப்பாணி சரவணன் முக்கிய குற்றவாளியாக இருந்ததாக தெரியவந்தது.</p><p>புஷ்பராஜின் கொலைக்கு பழிவாங்க காத்திருந்த அவரது மகன் பாலமுருகன், சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அவரை கொலை செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த பழிக்குப் பழி கொலை சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மழை இல்லாத நிலையிலும் டெங்கு காய்ச்சல் பரவுவது ஏன்? - நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-is-dengue-fever-spreading-despite-the-lack-of-rain-experts-reveal-startling-information</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-is-dengue-fever-spreading-despite-the-lack-of-rain-experts-reveal-startling-information#comments</comments><guid isPermaLink="false">44da3316-ffae-4c07-8b8b-d6b03a3ce2e7</guid><pubDate>Sun, 20 Sep 2026 05:39:07 +0000</pubDate><atom:updated>2026-09-20T05:39:07.333Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Dengue,டெங்கு காய்ச்சல்,Dengue Fever,டெங்கு கொசு,Dengue mosquito</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/gq4je5bd/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/gq4je5bd/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மழைக்காலம் என்றாலே டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கும் என்ற எண்ணம் பொதுமக்களிடம் உள்ளது. ஆனால் தற்போது பல இடங்களில் பெரிய அளவில் மழை பெய்யாத நிலையிலும் டெங்கு பாதிப்பு ஏற்படுவது ஏன் என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.</p><p><strong>இதுகுறித்து சுகாதார நிபுணர்கள் கூறியதாவது:-</strong></p><p>மழை இல்லாத காலங்களில் பொதுமக்கள் குடிநீருக்காக தண்ணீரை சேமித்து வைப்பது வழக்கம். குடங்கள், வாளிகள், தண்ணீர் தொட்டிகள், பிளாஸ்டிக் பாத்திரங்கள் உள்ளிட்டவற்றில் தண்ணீர் திறந்து வைக்கப்பட்டிருந்தால் அவற்றிலும் ஏடிஸ் கொசுக்கள் முட்டையிட வாய்ப்பு உள்ளது. </p><p>மேலும், பூந்தொட்டிகளின் அடிப்பகுதியில் தேங்கும் தண்ணீர், பழைய டயர்கள், தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் ஓடுகள், கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்டவற்றில் சிறிதளவு தண்ணீர் தேங்கினாலும் அவை கொசு உற்பத்தி இடங்களாக மாறிவிடும்.</p><p>ஏடிஸ் கொசுக்கள் பெருகுவதற்கு அதிக அளவு தண்ணீர் தேவையில்லை. பெண் ஏடிஸ் கொசு தண்ணீர் உள்ள பாத்திரத்தின் உட்புறச்சுவரில், தண்ணீர் மட்டத்திற்கு சற்று மேலே முட்டைகளை இடுகிறது. அந்த முட்டைகள் பாத்திரத்தின் சுவரில் ஒட்டிக்கொண்டு இருக்கும். பின்னர் அந்தப்பாத்திரத்தில் இருந்த தண்ணீர் வற்றிவிட்டாலும் முட்டைகள் உடனடியாக அழிந்து விடுவதில்லை. </p><p>அவை வறண்ட நிலையிலும் பல மாதங்கள் உயிருடன் இருக்கக்கூடும். மீண்டும் அந்தப் பாத்திரத்தில் தண்ணீர் தேங்கும்போதுமுட்டைகள் பொரிந்து புழுக்களாக மாறுகின்றன. பின்னர் அவை வளர்ந்து கொசுக்களாக உருவாகின்றன. இதனால், “இப்போது மழை பெய்யவில்லை; எனவே டெங்கு கொசு உற்பத்தியாகாது" என்று நினைப்பது தவறாகும். </p><p>எனவே, மழை இல்லாத காலங்களிலும் டெங்கு தடுப்பில் வீடு களில் சேமித்து வைக்கப்படும் தண்ணீருக்கு அதிக முக்கியத் துவம் அளிக்க வேண்டும். தண்ணீர் தொட்டிகளை முழுமை யாக மூடி வைக்க வேண்டும். குடங்கள், வாளிகள் உள்ளிட்ட பாத்திரங்களில் தண்ணீர் சேமித்து வைத்திருந்தால் அவற்றையும் மூடி வைக்க வேண் டும். தண்ணீர் காலியானதும் பாத்திரங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு சுகாதார நிபுணர்கள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>ராமநாதபுரம்: மின்னல் தாக்கி 10 ஆடுகள் பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ramanathapuram-10-goats-killed-by-lightning</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ramanathapuram-10-goats-killed-by-lightning#comments</comments><guid isPermaLink="false">4f0474b7-5e1d-470e-99f5-0c0c4ee630a6</guid><pubDate>Sun, 20 Sep 2026 05:36:46 +0000</pubDate><atom:updated>2026-09-20T05:36:46.958Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ராமநாதபுரம்,Ramanathapuram,Lightning strike,மின்னல் தாக்கி,killed,goats,ஆடுகள் பலி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/lvjyhx49/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்னல் தாக்கி 10 ஆடுகள் பலி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/lvjyhx49/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமநாதபுரம், </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">ராமநாதபுரம்</a> மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF">மின்னல் தாக்கி</a>யதில் 10 ஆடுகள் பலியாகின. </p><h2>இடி-மின்னலுடன் பலத்த மழை</h2><p>ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள சடையனேரி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 45). இவர் 30-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று ராஜ்குமார் தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக விட்டு இருந்தார். அப்போது அந்த பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.</p><h2>மின்னல் தாக்கி 10 ஆடுகள் பலி</h2><p>இதில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை மின்னல் தாக்கியது. இதில் 10 <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">ஆடுகள்</a> பரிதாபமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">உயிரிழந்தன</a>. ராஜ்குமார் லேசான காயம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து வருவாய் துறையினர் விசாரணை நடத்தினர். </p>]]></content:encoded></item><item><title>போத்தனூரில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரெயில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-from-podanur-to-bihar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-from-podanur-to-bihar#comments</comments><guid isPermaLink="false">13547edb-d8a1-402d-bcdd-35d30f76c307</guid><pubDate>Sun, 20 Sep 2026 05:29:44 +0000</pubDate><atom:updated>2026-09-20T05:29:44.315Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,Special train,போத்தனூர்,Podanur</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/hqh46rgv/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/hqh46rgv/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p>சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:- கோவை போத்தனூரில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதாவது, அடுத்த மாதம் (அக்டோ பர்) 4-ந் தேதி முதல் நவம்பர் மாதம் 1-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை களில் காலை 6.15 மணிக்கு போத்தனூரில் இருந்து பீகார் மாநிலத்திற்கு புறப்படும் போத்தனூர்-பரவுனி சிறப்பு ரெயில் (எண்: 06021) செவ்வாய்க்கிழ மைகளில் மதியம் 1.30 மணிக்கு பரவுனி ரெயில் நிலையத்தை சென்றடையும். </p> <p>மறுமார்க்கமாக அடுத்த மாதம் 7-ந் தேதி முதல் நவம்பர் மாதம் 4-ந் தேதி வரை புதன்கிழமைகளில் காலை 10.30 மணிக்கு பரவுனி நிலையத் தில் இருந்து புறப்படும் பரவுனி-போத்தனூர் சிறப்பு ரெயில் (எண்: 06022) வெள்ளிக்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு போத்தனூர் ரெயில் நிலை யத்தை வந்தடையும். இந்த ரெயிலானது திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், கூடூர், நெல்லூர், ஓங்கோல், விஜய வாடா, கம்மம், வாரங்கல், பல்ஹார்ஷா, சந்திரப்பூர், நாக்பூர், ஜபல்பூர், சாட்னா, மானிக்பூர், டானாபூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: முதல்-அமைச்சர் விஜய் நாளை ஆலோசனை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-precautionary-measures-chief-minister-vijay-to-hold-consultations-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-precautionary-measures-chief-minister-vijay-to-hold-consultations-tomorrow#comments</comments><guid isPermaLink="false">a1144360-40a8-4e74-9d5b-e60362b9236e</guid><pubDate>Sun, 20 Sep 2026 05:27:14 +0000</pubDate><atom:updated>2026-09-20T05:27:14.693Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,வடகிழக்கு பருவமழை,North East Monsoon,முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்,Secretariat,தலைமைச் செயலகம்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/z86pmq35/pore.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/z86pmq35/pore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நாளை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> ஆலோசனை நடத்துகிறார். </p><h2>வடகிழக்கு பருவமழை</h2><p>தமிழகத்திற்கு அதிக மழை தரும் காலமாக வடகிழக்கு பருவமழை காலம் உள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை நிலவுகிறது. இந்த பருவமழை காலத்தின் புயலால் பாதிப்புகளும் ஏற்படுகின்றன. பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க ஆண்டுதோறும் அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்துவருகிறது.</p><h2>ஆலோசனைக் கூட்டம்</h2><p>இந்நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நாளை (செப்.21) அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தமிழக <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டம், தலைமைச் செயலகத்தில் நாளை நண்பகல் 12 மணியளவில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>டெல்டா மற்றும் கடலோர மாவட்ட  கலெக்டர்கள் காணொலி வாயிலாக பங்கேற்கின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் நீர்நிலைகளை தூர்வாருதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, பலவீனமான மின்கம்பங்களை சீரமைத்தல் குறித்து ஆலோசனை நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. </p>]]></content:encoded></item><item><title>நாளை கோவை வருகிறார் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் - டிரோன்கள் பறக்க தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vice-president-cp-radhakrishnan-is-visiting-coimbatore-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vice-president-cp-radhakrishnan-is-visiting-coimbatore-tomorrow#comments</comments><guid isPermaLink="false">6f3b4c92-16cd-4e3d-a700-018e9915c179</guid><pubDate>Sun, 20 Sep 2026 05:14:17 +0000</pubDate><atom:updated>2026-09-20T05:14:17.996Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,CP Radhakrishnan,சி.பி.ராதாகிருஷ்ணன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/w4ra7f9k/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/w4ra7f9k/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நாளை (திங்கட்கிழமை) கோவை வருகிறார். தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்பட்டு கோவை விமான நிலையத்திற்கு வருகிறார். அவரை கலெக்டர் பவன்குமார் மற்றும் அமைச்சர்கள் வரவேற்க உள்ளனர். துணை ஜனாதிபதி கோவை வருகையை முன்னிட்டு டிரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது. </p><p><strong>இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-</strong></p><p>துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை கோவைக்கு வருகிறார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு கருதி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி முதல் வருகிற 22-ந் தேதி காலை 11 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. அதன்படி கோவை மாவட்டத்தில் ஏற்கனவே சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளுடன், காளப்பட்டி 4 ரோடு சந்திப்பு, கோவில்பாளையம், அன்னூர் பஸ் நிலையம், தென்திருப்பதி 4 ரோடு ஆகிய இடங்களில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.</p><p>இதுதவிர மேட்டுப்பாளையம் பஸ் நிலையம், வனக்கல்லூரி விருந்தினர் இல்லம், குஞ்சப்பனை மாவட்ட எல்லை, கஞ்சப் பள்ளி, கரியம்பாளையம் சந்திப்பு, கணியூர் சுங்கச்சாவடி, நீலாம்பூர் ஆகிய பகுதிகள் மற்றும் சிங்காநல்லூர், பீளமேடு. சித்ரா, நேரு நகர், சேரன்மாநகர், எஸ்.ஐ.எச்.எஸ். காலனி, சின்னியம்பாளையம், நவ இந்தியா, இருகூர் பகுதிகள் ஆகியவை தற்காலிக சிவப்பு மண்டல பகுதிகளாக அறிவிக்கப்பட்டு டிரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த பகுதிகளில் தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி ஊர்திகளை பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இலங்கைக்கு கடத்திய 800 கிலோ பீடி இலைகள் பறிமுதல்: 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/800-kg-of-beedi-leaves-smuggled-to-sri-lanka-seized-2-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/800-kg-of-beedi-leaves-smuggled-to-sri-lanka-seized-2-arrested#comments</comments><guid isPermaLink="false">f424cb38-92fa-43cc-b54f-0beef517a887</guid><pubDate>Sun, 20 Sep 2026 05:09:46 +0000</pubDate><atom:updated>2026-09-20T05:09:46.996Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rameswaram,ராமேசுவரம்,Seizure,பறிமுதல்,Sri Lanka,beedi leaves,smuggling,2 arrested,இலங்கை,பீடி இலைகள்,கடத்தல்,2 பேர் கைது</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/2yyaa0iw/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இலங்கைக்கு கடத்திய 800 கிலோ பீடி இலைகள் பறிமுதல்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/2yyaa0iw/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமேசுவரம், </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">இலங்கை</a> நீர்க்கொழும்பு கடலில் ரோந்து பணியில் இருந்த இலங்கை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88">கடற்படை</a>யினர், இலங்கைக்கு கடத்திய 800 கிலோ பீடி இலைகளை பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.  </p><h2>கடல் வழியாக கடத்தல்</h2><p>ராமேசுவரம், தனுஷ்கோடி உள்பட ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி வழியாக இலங்கைக்கு கஞ்சா, ஹெராயின், பீடி இலை, கடல் அட்டை, மஞ்சள், ஏலக்காய், மருந்து என பலவிதமான பொருட்கள் கடத்தப்படுகின்றன. </p><h2>800 கிலோ பீடி இலைகள் பறிமுதல்; 2 பேர் கைது</h2><p>இந்த நிலையில் இலங்கை நீர்க்கொழும்பு கடலில் ரோந்து பணியில் இருந்த இலங்கை கடற்படையினர் படகு ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த படகில் 21 சாக்கு பைகளில் இருந்த 800 கிலோ <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88">பீடி இலை</a> மூட்டைகளை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">பறிமுதல்</a> செய்தனர். அந்த மூட்டைகளை இலங்கைக்கு கடத்தி வந்ததாக அந்நாட்டை சேர்ந்த 2 பேரை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>பீடி இலை மூட்டைகள் ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் இருந்து கடத்தப்பட்டதா? அல்லது தூத்துக்குடியில் இருந்து கடத்தப்பட்டதா? என்பது குறித்து உளவு பிரிவு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">போலீசார் விசாரணை </a>நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>கடலூரில் புதிய சிப்காட், என்.எல்.சி. விரிவாக்கம்... நிலம் கையகப்படுத்தும் திட்டங்களை கைவிட வேண்டும்: அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-sipcot-nlc-expansion-in-cuddalore-land-acquisition-plans-should-be-abandoned-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-sipcot-nlc-expansion-in-cuddalore-land-acquisition-plans-should-be-abandoned-anbumani#comments</comments><guid isPermaLink="false">880dffab-ddc9-4d7a-b21f-a68f500c2e3a</guid><pubDate>Sun, 20 Sep 2026 05:02:03 +0000</pubDate><atom:updated>2026-09-20T05:02:03.631Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Cuddalore,கடலூர்,Anbumani Ramadas,என்.எல்.சி,அன்புமணி ராமதஸ்,சிப்காட்,NLC,Sipcot,Expansion</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/b532sjkr/19.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/b532sjkr/19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கடலூரில் புதிய சிப்காட், என்.எல்.சி. கூடுதல் நிலங்களை கையகப்படுத்தும் திட்டங்களை கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>புதிய சிப்காட் வளாகம்</h2><p>கடலூர் மாவட்டத்தில் புதிய சிப்காட் வளாகம் அமைப்பதற்காக தியாகவல்லி, குடிக்காடு பகுதிகளில்  ஏற்கனவே அறிவிக்கை செய்யப்பட்ட 1097 ஏக்கருடன் மேலும் 164 ஏக்கர் நிலங்களையும்,  என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காக  கையகப்படுத்துவதற்கான அறிவிக்கையை அரசு வெளியிட்டுள்ளது. </p><p>ஏற்கனவே நிலப்பறிப்பு மற்றும்  சுற்றுச்சூழல் பாதிப்புகளால் ஒட்டுமொத்த கடலூர் மாவட்டமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும், மீண்டும் சிப்காட் வளாகங்களையும், நிலக்கரி சுரங்கங்களையும் திணிப்பதும், நிலங்களைப் பறிப்பதும் கண்டிக்கத்தக்கவை.</p><h2>விளைநிலங்களை கையகப்படுத்தும் அரசாணை</h2><p>கடலூர் மாவட்டத்தின் தலைநகரமான கடலூரில் 2625 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் வளாகம் செயல்பட்டு வருகிறது. அதற்கு அருகிலேயே குடிக்காடு மற்றும் தியாகவல்லி பகுதிகளில் 1119 ஏக்கரில் இன்னொரு சிப்காட் வளாகத்தை உருவாக்க முடிவு செய்த திமுக அரசு அப்பகுதிகளில், 1097 ஏக்கர் விளைநிலங்களைக் கையகப்படுத்துவகான அரசாணையை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 28-ம் தேதி பிறப்பித்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள மக்கள் தொடர் போராட்டங்களை நிகழ்த்தி வரும் நிலையில், இப்போது குடிக்காடு, தியாகவல்லி கிராமங்களில் மொத்தம் 164.20 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவதற்கான அறிவிக்கையை தமிழக அரசு கடந்த ஒன்றாம் தேதி வெளியிட்டுள்ளது. </p><p>இந்த நிலங்கள் அனைத்தும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடமிருந்து கடந்த காலங்களில் இரு தனியார் பெரு நிறுவனங்களால் குறைந்த விலையில் பறிக்கப்பட்டவை ஆகும். அந்த நிலங்களை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும்  என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்த நிலையில், அவற்றை அரசே பறிக்கத் துடிப்பதை ஏற்க முடியாது.</p><h2>தவெக அரசு</h2><p>புதிய அறிவிக்கையின் மூலம் கையகப்படுத்தப்படும் நிலங்களில் 75 சதவீதம் பெரு நிறுவனங்களுக்கு சொந்தமானவை என்றாலும், இதன் மூலம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 1119 ஏக்கர் பரப்புடன் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள 164.20 ஏக்கரையும் சேர்த்து, மொத்தம் 1,283 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் வளாகம் அமைக்கப்படவுள்ளதை தவெக அரசு உறுதி செய்துள்ளது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய சிப்காட் வளாகம் ஓரகடத்தில் 3157 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக செய்யாறில் 2937 ஏக்கர் பரப்பளவில் இரண்டாவது  பெரிய சிப்காட் அமைந்துள்ளது. </p><p>இந்த இரண்டுக்கும் அடுத்த நிலையில் தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய சிப்காட் 2625 ஏக்கரில் கடலூரில் தான் உள்ளது. அத்துடன் 1283 ஏக்கரில் புதிய சிப்காட் அமைக்கப்பட்டால்  3,968 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாட்டின் மிகப்பெரிய சிப்காட் வளாகம் கடலூரில் தான் செயல்படும். இது கடலூர் மாவட்டத்திற்கான வளர்ச்சி அல்ல.... மாறாக பேரழிவு ஆகும். இது கடலூருக்குத் தேவையில்லை.</p><h2>என்.எல்.சி நிறுவனம்</h2><p>அதேபோல், என்.எல்.சி நிறுவனத்தின் சுரங்கம் 1 விரிவாக்கத்திற்காக கங்கைகொண்டான் கிராமத்தில் 12.60 ஏக்கர் பரப்பளவிலான 68 துண்டு நிலங்களும், சுரங்கம் 1ஏ விரிவாக்கத்திற்காக வானதிராயபுரம் கிராமத்தில் 3.21 ஏக்கர் பரப்பளவிலான 77 துண்டு நிலங்களும் கையகப்படுத்தப்படும் என்று தமிழக அரசு வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் வீட்டுமனை நிலங்களாகும். இவை கையகப்படுத்தப்பட்டால் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வதற்கு இடமில்லாத நிலை ஏற்படக்கூடும்.</p><h2>நிலம், நீர், காற்று ஆகிய அனைத்தும் மாசு</h2><p>கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள இரசாயன ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்படாத கழிவுகளால் நிலம், நீர், காற்று ஆகிய அனைத்தும் மாசுபடுகின்றன. தொழிற்சாலைக் கழிவுகள் நீரிலும், நிலத்திலும் கலந்ததால் கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்களின் தாய்ப்பாலிலும், அங்கு விளையும் இளநீரிலும் டையாக்சின் எனப்படும் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய நச்சுப்பொருள்கள் அதிகமாக கலந்திருக்கின்றன. இன்னொருபக்கம், கடலூர் மாவட்டத்தில் உள்ள என்.எல்.சி  நிலக்கரி சுரங்கங்களால் கடலூர் மாவட்டத்தில் உள்ள 30 லட்சம் மக்களும் ஏதேனும் ஒரு வகையில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இத்தகைய சூழலில் மேலும் 1,283 ஏக்கரில் புதிய சிப்காட் வளாகம் அமைப்பட்டால் கடலூர் மாவட்டம் முழுவதும் நச்சுக்காடாக மாறிவிடும்.</p><p>அதுமட்டுமின்றி, சிப்காட் வளாகம் அமைக்கப்படுவதால் உழவர்கள் மற்றும் பொதுமக்களால் வாழ்வாதாரம் பறிக்கப்படுகிறது. குடிக்காடு, தியாகவல்லி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் வளம் மிகுந்தவை. அவற்றின் மூலம் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வருமானம் ஈட்டப்படுகிறது. ஆனால், சில இடங்களில் அடிப்படையான வழிகாட்டி மதிப்பாக ஏக்கருக்கு ரூ.3.31 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு, அதனடிப்படையில் தான் இழப்பீடு கணக்கிடப்படுகிறது. வழிகாட்டி மதிப்பை விட சுமார் 3 முதல் 4 மடங்கு வரை கூடுதல் தொகை இழப்பீடாக வழங்கப்படுவதாக தமிழக அரசின் சார்பில் கூறப்பட்டாலும், இழப்பீடாக வழங்கப்படும் தொகை அப்பகுதியின் சந்தை மதிப்பில் மூன்றில் ஒரு பங்கு கூட இல்லை என்பது தான் உண்மையாகும். அதையும் தாண்டி, குடிக்காடு, தியாகவல்லி பகுதியில் உள்ள மக்களின் ஒற்றை ஆதாரம் விவசாயம் மட்டும் தான். இந்த நிலங்களை குறைந்த விலை கொடுத்து அரசு பறிப்பதன் மூலம்  மக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் சூறையாடுகிறது. இதனால், நிலத்தை இழக்கும் மக்கள் சொந்த மண்ணிலேயே கூலிகளாக மாறி விடுவார்கள்.</p><h2>பரந்தூர் விமான நிலையத் திட்டம்</h2><p>முந்தைய திமுக ஆட்சியில் காவிரி பாசன மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கப்படுவதற்காவும், மதுரை பகுதியில் டங்க்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்காகவும் நிலங்கள் கையகப்படுத்துவதாக இருந்தால், அதைத் தடுப்பதற்காக பதவி விலகவும் தயங்க மாட்டேன் என்று அப்போதைய முதல்-அமைச்சர் வீர வசனம் பேசினார். கடலூர் மாவட்ட மக்களின் நிலம் பறிக்கப்படுவதாக இருந்தால் மட்டும் வாய்மூடி மவுனமாகிவிடுவார். இப்போதைய முதல்-அமைச்சரோ பரந்தூர் மக்களுக்காக விமான நிலையத் திட்டத்தையே கைவிடுவார்; ஆனால், கடலூர் மாவட்ட மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் மீண்டும், மீண்டும் நிலம் எடுக்க ஆணையிடுகிறார்.</p><p>இவற்றையெல்லாம் பார்க்கும் போது தமிழ்நாட்டில் நடப்பது தவெக ஆட்சியா, திமுக அரசின் நீட்சியா? என்று தமிழ்நாட்டு மக்கள் ஐயம் எழுப்புகிறார்கள். தமிழ்நாட்டில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பது தான் உண்மை. கடலூர் மாவட்டத்தில் புதிய சிப்காட் அமைக்கும் திட்டம்,  என்.எல்.சி சுரங்கம் 1, 1ஏ விரிவாக்கத் திட்டங்கள் ஆகியவற்றையும், அவற்றுக்காக மொத்தம் 1277 ஏக்கர் நிலங்களை கையகப் படுத்துவதற்கான அறிவிக்கைகளையும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81">தமிழக அரசு</a> உடனடியாக கைவிட வேண்டும். இல்லாவிட்டால் பாதிக்கப்படும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் என எச்சரிக்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இருமல் மருந்து பாட்டில்களில் எச்சரிக்கை வாசகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/warning-message-on-cough-syrup-bottles</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/warning-message-on-cough-syrup-bottles#comments</comments><guid isPermaLink="false">3e26b10e-9f07-4314-95ed-2c34ad882695</guid><pubDate>Sun, 20 Sep 2026 04:57:30 +0000</pubDate><atom:updated>2026-09-20T04:57:30.041Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இருமல் மருந்து,குழந்தைகள்,childrens,Cough syrups</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/4vfos742/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/4vfos742/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>இருமல் மற்றும் சளி மருந்துகளை இளம் குழந்தைகளுக்கு விவேகத்துடன் பரிந்துரைக்க வேண்டும் எனவும் குறிப்பாக 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பரிந்துரைப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் சுகாதாரப்பணிகள் இயக்குனரகம் கடந்த ஆண்டு பரிந்துரைத்தது. </p><p>இதைத்தொடர்ந்து 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சில குறிப்பிட்ட கலவை மருந்துகள் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்தது. இந்த நிலையில் இருமல் மற்றும் சளி மருந்துகளை 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பயன்படுத்துவதற்கு எதிரான எச்சரிக்கை வாசகத்தை அந்த மருந்து பாட்டில் லேபிள்களில் அச்சிட மருந்து ஆலோசனைக் கமிட்டியிடம் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.</p><p>இது ஏற்கப்பட்டால் விரைவில் இந்த வாசகங்களுடன் இருமல் மற்றும் சளி மருந்து பாட்டில்கள் விற்பனைக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சில மாதங்களுக்கு முன்னர் மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் கலப்படம் செய்யப்பட்ட இருமல் மருந்துகளால் குழந்தைகள் உயிரிழந்த சம்பவங்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>கோவில் கொடைவிழாவில் தகராறு: வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை: மர்ம கும்பல் வெறிச்செயல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/clash-at-temple-festival-young-man-hacked-to-death-savage-act-by-unidentified-gang</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/clash-at-temple-festival-young-man-hacked-to-death-savage-act-by-unidentified-gang#comments</comments><guid isPermaLink="false">db2ce2a4-acac-47fa-87da-03e7e930c1af</guid><pubDate>Sun, 20 Sep 2026 04:49:49 +0000</pubDate><atom:updated>2026-09-20T04:49:49.896Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Crime News,நெல்லை,Nellai,தமிழகம்,murder,கொலை,கிரைம் செய்திகள்,police investigation,போலீஸ் விசாரணை,களக்காடு,Kalakkadu</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/9v8eaxlc/rr.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/9v8eaxlc/rr.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>களக்காடு, </p><p>களக்காடு அருகே நேற்று இரவு வாலிபரை சரமாரி வெட்டிக்கொலை செய்த 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.</p><h2>விவசாயி</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/nellai">நெல்லை</a> மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழ தேவநல்லூரை சேர்ந்த சங்கர சுப்பிரமணியன் மகன் ரமேஷ் ராம் (வயது 33). விவசாயி. நேற்று இரவு இவர் அங்குள்ள மணிமுத்தாறு கால்வாய் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கும்பல் அவரை வழிமறித்தது.</p><h2>கொலை</h2><p>பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ரமேஷ் ராமை சரமாரி வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.</p><p>இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த களக்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ரமேஷ் ராம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.</p><h2>மர்மகும்பலுக்கு வலைவீச்சு</h2><p>கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அதே பகுதியில் உள்ள கோவில் கொடைவிழாவில் ரமேஷ் ராம் தரப்பினருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. அதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக ரமேஷ்ராம் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>மேலும் 4 பேர் கொண்ட மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்வு: 23-ந்தேதி மாவட்டங்களில் கருத்து கேட்பு கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/auto-fare-hike-in-tamil-nadu-opinion-poll-to-be-held-in-districts-on-23rd</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/auto-fare-hike-in-tamil-nadu-opinion-poll-to-be-held-in-districts-on-23rd#comments</comments><guid isPermaLink="false">43bbb1f2-4403-4369-a5f5-de6de98b62cc</guid><pubDate>Sun, 20 Sep 2026 04:35:11 +0000</pubDate><atom:updated>2026-09-20T04:35:11.591Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,Chennai,சென்னை,தமிழகம்,order,உத்தரவு,உயர்வு,consultation meeting,ஆட்டோ கட்டணம்,hike,கருத்து கேட்பு கூட்டம்,Auto fare</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/r5hw9dki/pg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாட்டில் ஆட்டோ கட்டணம் உயர்வு: 23-ந்தேதி கருத்து கேட்பு கூட்டம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/r5hw9dki/pg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">தமிழகத்தில்</a> ஆட்டோ <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">கட்டணம் உயர்வு</a> தொடர்பாக வரும் 23-ந்தேதி அனைத்து மாவட்டங்களிலும் கருத்து கேட்பு கூட்டம் நடத்த போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது. </p><h2> 23-ந்தேதி கருத்து கேட்பு கூட்டம்</h2><p>தமிழகத்தில் ஓடும் 3.46 லட்சம் ஆட்டோக்களுக்கு 2013-ம் ஆண்டு 1.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.25-ம், அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் தலா ரூ.12-ம் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. புதிய கட்டணம் நிர்ணயம் குறித்து, அனைத்து மாவட்டங்களிலும், நுகர்வோர் அமைப்புகளுடன் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">கருத்து கேட்பு கூட்டம்</a>, வரும் 23-ந் தேதி நடத்த வேண்டும் என, கலெக்டர்களுக்கு போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது. </p><h2>குறைந்தபட்ச கட்டணமாக ரூ.45 நிர்ணயம்</h2><p>தமிழக முற்போக்கு நுகர்வோர் மையத் தலைவர் சடகோபன் கூறியதாவது: </p><p>ஆயுத பூஜை, தீபாவளி போன்ற பண்டிகை நாட்கள் அடுத்தடுத்து வருவதால், இனியும் தாமதம் இன்றி, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B">ஆட்டோ </a>கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். குறைந்தபட்ச கட்டணமாக ரூ.45 நிர்ணயம் செய்ய வேண்டும். ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.20 வரை வசூலிக்க வேண்டும். அனைத்து ஆட்டோக்களிலும் 'டிஜிட்டல் மீட்டர்' மற்றும் ஜி.பி.எஸ். கருவிகள் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சார்லப்பள்ளி - நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-charlapalli-and-nagercoil</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-charlapalli-and-nagercoil#comments</comments><guid isPermaLink="false">0a179522-4e95-4f75-a657-97bd50ab6370</guid><pubDate>Sun, 20 Sep 2026 04:19:20 +0000</pubDate><atom:updated>2026-09-20T04:19:20.863Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,Nagercoil,நாகர்கோவில்,Special train</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/n3upxr93/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/n3upxr93/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,  </p><p>ஆயுதபூஜை பண்டிகையின் போது பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சார்லப்பள்ளி -நாகர்கோவில் இடையே திருச்சி வழியாக சிறப்பு ரெயிலை தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. அதன்படி, சார்லப்பள்ளி நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 07535) வருகிற 25 மற்றும் அடுத்த மாதம் (அக்டோபர்) 2, 9, 16, 23-ந்தேதிகளில் (வெள்ளிக்கிழமை) சார்லப்பள்ளியில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 10.45 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். </p> <p>இந்த ரெயிலானது திருச்சி ஜங்ஷனுக்கு மதியம் 3.25 மணிக்கு வந்து 3.30 மணிக்கு புறப்பட்டு செல்லும். மறுமார்க்கத்தில் நாகர்கோவில் சார்லப்பள்ளி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 07536) வருகிற 27-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் 4, 11, 18, 25-ந்தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) நாகர்கோவிலில் இருந்து நள்ளிரவு 12.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சார்லப்பள்ளி சென்றடையும். இந்த ரெயிலானது திருச்சிக்கு காலை 6.35 மணிக்கு வந்து 6.40 மணிக்கு புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ரெயிலுக்கான முன்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>சில்லறை விற்பனை கடைகளுக்கு மது வகைகளை அனுப்பும் நடைமுறையில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/change-in-the-procedure-for-supplying-liquor-to-retail-outlets</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/change-in-the-procedure-for-supplying-liquor-to-retail-outlets#comments</comments><guid isPermaLink="false">660a9314-8d69-45ec-867a-0edc4d789a7c</guid><pubDate>Sun, 20 Sep 2026 04:15:37 +0000</pubDate><atom:updated>2026-09-20T04:15:37.814Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டாஸ்மாக்,Tasmac,மதுபான கடை,Tasmac shop</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/hwbtlrvy/CHENNAI-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/hwbtlrvy/CHENNAI-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தால் 4,765 மதுபான சில்லறை விற்பனை கடைகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. சில்லறை விற்பனை வாயிலாக ஒரு நாளைக்கு சராசரியாக 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கும் நிலையில் வார விடுமுறை மற்றும் தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் பல மடங்கு விற்பனை அதிகரிக்கும்.</p><p>அதே நேரத்தில் குறிப்பிட்ட ஒரு சில நிறுவனங்களின் மதுபானங்கள் மட்டுமே சில்லறை விற்பனை கடைகளில் விற்பனைக்கு வருவதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து தவெக அரசு ஆட்சியில் அனைத்து மதுபான நிறுவனங்களிடம் இருந்தும் சம அளவில் மதுபானம் வாங்கப்பட்டு அனைத்து வகை மதுக்களும் விற்கப்படும் என அமைச்சர் விக்னேஷ் கூறியிருந்தார். இதுதொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருந்தது.</p><p>இந்த நிலையில், டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளுக்கு மது வகைகளை அனுப்பும் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் ஒவ்வொரு கடையின் உண்மையான தேவை மற்றும் கோரிக்கையின் அடிப்படையில் மட்டுமே மது பாட்டில்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அமலில் இருந்த அனைத்து சப்ளையர்களின் பொருட்களையும் கடைகளுக்கு சமமாக பிரித்து வழங்கும் முறை நிறுத்தப்படுகிறது.</p><p>மூத்த மண்டல மேலாளர்கள் மாவட்ட மேலாளர்கள், கிடங்கு மேலாளர்கள், உத்தரவை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் புதிய முறையின் மூலம் கடைகளில் தேங்கும் விற்பனையாகாத மதுக்கள் குறையும் என்றும் விற்பனை அதிகம் உள்ள பிராண்டுகள் தேவைக்கேற்ப கிடைக்கும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: ரூ.500-க்கு மேல் ரொக்கம் கொடுத்து சரக்கு வாங்க முடியாது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/shocking-news-for-liquor-enthusiasts-cash-payments-exceeding-500-will-not-be-accepted-for-liquor-purchases</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/shocking-news-for-liquor-enthusiasts-cash-payments-exceeding-500-will-not-be-accepted-for-liquor-purchases#comments</comments><guid isPermaLink="false">e5e5136b-6322-4ce2-b4f4-49db3b240df2</guid><pubDate>Sun, 20 Sep 2026 04:14:25 +0000</pubDate><atom:updated>2026-09-20T04:14:25.663Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>customers,டாஸ்மாக் கடை,Tasmac shop,மதுபிரியர்கள்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/kqxaf2i0/7.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/kqxaf2i0/7.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>தமிழகத்தில், மதுபான ஆலை முதல், மது கடைகளில் விற்பது வரை கணினிமயமாக்கும் திட்டம், 2024ல் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், கடையில் விற்கப்படும் ஒவ்வொரு மது பாட் டிலும், கையடக்க வடிவில் உள்ள கருவியில், 'ஸ்கேன்' செய்து விற்கப்படுகிறது. இதன் வாயிலாக, 'கியூ.ஆர். குறியீடை ஸ்கேன்' செய்து, டிஜிட்டல் முறையிலும் பணம் செலுத்தலாம்.</p><p>இருப்பினும், மது கடைகளில் தினமும் சராசரியாக, 150 கோடி ரூபாய்க்கும், வார, விசேஷ விடுமுறை நாட்களில், அதை விட அதிகமாகவும் விற்பனை உள்ள நிலையில், 80 சதவீதத்திற்கு மேல் ரொக்க பணம் தான் வசூலாகிறது. அந்த பணத்தை பணியாளர்கள், கடை களில் இருப்பு வைத்து, அடுத்த நாள் வங்கியில் செலுத்துகின்றனர். அவ்வாறு எடுத்துச் செல்லும் பணத்தை கொள்ளை அடிப்பதும் நடக்கிறது.</p> <p>தற்போது, மதுபிரி யர்கள் தாங்கள் விரும்பும் மது வகைகளை, டாஸ்மாக் இணையதளத்தில் தேர்வு செய்து, அதன் வாயிலாகவே பணமும் செலுத்தி, அதற்கான குறியீட்டை கடைகளில் காட்டி, மது வகைகள் வாங்கலாம். இந்த முறையில் வாங்குவோருக்கு, மது பாட்டில்களை வழங்க தாமதம் செய்யப்படுவதாக புகார்கள் எழுகின்றன. இதற்கு, ரொக்க பணம் வசூலிக்க, பணியாளர்கள் ஆர்வம் காட்டுவதே முக்கிய காரணமாக இருப்பதாக, டாஸ்மாக் கண்டறிந்துள்ளது.</p><p>எனவே, ரொக்க பணப் புழக்கத்தை குறைத்து, டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:</p><p>கடைகளில் மது பாட்டிலை கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்கவும், சில்லரை தட்டுப்பாட்டு போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரிக்கப்பட உள்ளது. இதற்காக, 500 ரூபாய் வரை மட்டுமே ரொக்க பணமாகவும், அதற்கு மேல் டிஜிட்டல் முறையில் வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக, விரைவில் கடை களுக்கு அறிவுரைகள் வழங்கப்படும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>வெயில் தாக்கத்தால் சென்னையில் மின் தேவை 1,000 மெகா வாட் அதிகரிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennais-power-demand-increases-by-1000-mw-due-to-heatwave</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennais-power-demand-increases-by-1000-mw-due-to-heatwave#comments</comments><guid isPermaLink="false">a7e24664-db62-4232-963d-cf20d7160623</guid><pubDate>Sun, 20 Sep 2026 04:13:16 +0000</pubDate><atom:updated>2026-09-20T04:13:16.824Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Increase,அதிகரிப்பு,மின் தேவை,Power Demand,மின் தடை power cut,மெகாவாட்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/l3bimj00/376.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின் தேவை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/l3bimj00/376.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னையில் கடும் வெயில் வாட்டி வரும் நிலையில், வீடுகளில் இரவு நேரம் மட்டுமின்றி பகல் நேரத்திலும் ஏசி பயன்பாடு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சென்னையின் மின் தேவை கடந்த ஆண்டை காட்டிலும் தினமும் 500 முதல் 1,000 மெகாவாட் வரை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>மின் தேவை</h2><p>தமிழகத்தில் வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ள நகரமாக சென்னை விளங்குகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 38.80 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. இவற்றுக்கு 253 துணை மின் நிலையங்கள், 40,798 டிரான்ஸ்பார்மர்கள், 55 ஆயிரம் கி.மீ. தாழ்வழுத்த மின் வழித்தடங்கள் மற்றும் 16,600 கி.மீ. உயரழுத்த மின் வழித்தடங்கள் மூலம் மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. சென்னையின் தினசரி சராசரி மின் தேவை 3,500 மெகாவாட்டாக உள்ளது. கோடை காலத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88">மின் தேவை</a> தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், இந்த ஆண்டு ஜூன் 10-ந் தேதி இதுவரை இல்லாத அளவாக 5,014 மெகாவாட் உச்சத்தை எட்டியது.</p><p>கோடை காலம் முடிந்த பிறகும் சென்னையில் வெயிலின் தாக்கம் குறையவில்லை. இதனால் வீடுகளில் பகல் நேரத்திலும் ஏசி பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தற்போது சென்னையின் தினசரி மின் தேவை சராசரியாக 4,200 முதல் 4,500 மெகாவாட் வரை உள்ளது.</p><h2>மின் தடை</h2><p>மின் தேவை அதிகரிப்பால் பல்வேறு பகுதிகளில் உள்ள மின் சாதனங்களில் அதிக சுமை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக மயிலாப்பூர், எழும்பூர், ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஓவர்லோடு காரணமாக மின் சாதனங்களில் பழுது ஏற்பட்டு, அவ்வப்போது மின்தடை ஏற்படும் நிலையும் தொடர்கிறது.</p>]]></content:encoded></item><item><title>விடுமுறை தினம்: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-tourists-flock-to-kanyakumari-17</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-tourists-flock-to-kanyakumari-17#comments</comments><guid isPermaLink="false">edf148e8-0086-47c4-bd75-5342e3be37f7</guid><pubDate>Sun, 20 Sep 2026 04:06:12 +0000</pubDate><atom:updated>2026-09-20T04:06:12.278Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,Tourists,சுற்றுலா பயணிகள்,Kanyakumari</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/cnja0qbn/6.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/cnja0qbn/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>கன்னியாகுமரி,</p><p>சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள்.</p><p>இந்தநிலையில் இன்று ஞாயிறு விடுமுறையையொட்டி காலையில் இருந்தே கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை, சன்ரைஸ் பாயின்ட் போன்ற பகுதிகளில் நள்ளிரவு முதல் காத்திருந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். </p><p>அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். படகுத்துறையில் இருந்து சுற்றுலா பயணிகள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்த்து ரசித்து வருகின்றனர். காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள தமிழன்னை பூங்கா, சன்செட் பாயிண்ட், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>சமூக வலைதள பதிவால் மோதல்: 7 மாணவர்கள் கைது; 4 பேர் மீது வழக்குப்பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/clash-over-social-media-post-7-students-arrested-cases-registered-against-4</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/clash-over-social-media-post-7-students-arrested-cases-registered-against-4#comments</comments><guid isPermaLink="false">9091bb6b-5446-4a50-8900-3b28172c0703</guid><pubDate>Sun, 20 Sep 2026 03:59:45 +0000</pubDate><atom:updated>2026-09-20T03:59:45.739Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,நெல்லை,Nellai,தமிழகம்,திருநெல்வேலி,வழக்குப்பதிவு,case registration,Thirunelveli,மாணவர்கள் கைது,students arrested</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/janv7czp/arre.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/janv7czp/arre.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை, </p><p>ரெயில் நிலையத்தில் சமூக வலைதள பதிவால் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><h2>வாக்குவாதம்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/nellai">நெல்லை </a>சந்திப்பு பஸ் நிலையத்திற்கு நேற்று முன்தினம் சுமார் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீரென திரண்டு நின்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தகராறு செய்தனர்.</p><p>இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் தங்கதுரை மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மாணவர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், மானூர் அருகே உள்ள மேட்டு பிராஞ்சேரி கிராமத்தை சேர்ந்த மாணவர், ஒருவருக்கு ஆதரவாக சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் ஒரு கருத்தை பதிவிட்டார். </p><h2>இன்ஸ்டாகிராமில் கிண்டல்</h2><p>அந்த பதிவிற்கு, நெல்லை சந்திப்பு துவரை ஆபீஸ் பகுதியைச் சேர்ந்த மற்றொரு மாணவர் கிண்டலடிக்கும் வகையில் பதில் பதிவு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த மேட்டு பிராஞ்சேரி மாணவர், தான் படிக்கும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து தனது நண்பர்கள் சிலரை அழைத்துக் கொண்டு நேற்று முன்தினம் மாலை சந்திப்பு பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார்.</p><p>அவர்கள் அனைவரும் ஒரு குழுவாக சேர்ந்து, இன்ஸ்டாகிராமில் கிண்டல் செய்த துவரை ஆபீஸ் பகுதி மாணவரை தாக்குவதற்காக அங்கு திரண்டிருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.</p><h2>7 மாணவர்கள் கைது</h2><p>இதையடுத்து, மோதலில் ஈடுபட முயன்றதாக 7 மாணவர்கள் மற்றும் ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>விடுதியில் புகுந்து பெண்களின் உள்ளாடைகளை திருடிய வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-breaking-into-hostel-and-stealing-womens-underwear</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-breaking-into-hostel-and-stealing-womens-underwear#comments</comments><guid isPermaLink="false">0af3ffa7-76ab-43f7-b815-0f21e893c579</guid><pubDate>Sun, 20 Sep 2026 03:41:25 +0000</pubDate><atom:updated>2026-09-20T03:41:25.822Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,Youth arrested,வாலிபர் கைது,திருட்டு,women,உள்ளாடை,underwear,பெண்கள்,Theft,விடுதி,hostel</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/yhvq7qko/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வாலிபர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/yhvq7qko/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88">நெல்லை</a>, பெருமாள்புரம் பகுதியில் உள்ள விடுதியில் புகுந்து பெண்களின் உள்ளாடைகளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>மகளிர் விடுதிக்குள் புகுந்த வாலிபர்</h2><p>நெல்லை பாளையங்கோட்டை பெருமாள்புரம் பகுதியில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF">மகளிர் விடுதி</a> ஒன்று இயங்கி வருகிறது. இங்கு கடந்த 13-ந்தேதி அதிகாலை சுமார் 4 மணியளவில் இந்த விடுதிக்குள் ஒரு வாலிபர் சுற்றுச்சுவர் ஏறி குதித்து, வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்தார். </p><h2>பெண்கள் உள்ளாடைகள் திருட்டு</h2><p>அந்த வாலிபர், அங்குள்ள கொடியில் பெண்கள் காயப்போட்டிருந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88">உள்ளாடை</a>களை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">திருடி</a>, அந்த துணிகளை ஒரு மூட்டையாக கட்டிக்கொண்டு மீண்டும் சுவரை ஏறி குதித்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. </p><h2>வாலிபர் கைது</h2><p>இதுகுறித்த புகாரின்பேரில் பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் இந்த திருட்டில் ஈடுபட்டது நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த தமீமுன் அன்சாரி (வயது 27) என்பது தெரியவந்தது. இதையடுத்து பெருமாள்புரம் போலீசார் அந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">வாலிபரை கைது</a> செய்தனர். </p>]]></content:encoded></item><item><title>சேலம்: ஆடு, நாய், கோழிகளை வேட்டையாடும் சிறுத்தை... 5 இடங்களில் கூண்டுகள் அமைத்த வனத்துறையினர்..</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-leopard-hunting-goats-dogs-chickens-forest-department-officials-set-up-cages-at-5-places</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-leopard-hunting-goats-dogs-chickens-forest-department-officials-set-up-cages-at-5-places#comments</comments><guid isPermaLink="false">c8d37269-f108-4c42-8e9f-6753a3594d11</guid><pubDate>Sun, 20 Sep 2026 03:33:05 +0000</pubDate><atom:updated>2026-09-20T03:33:05.616Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Forest Department,வனத்துறை,Salem,சேலம்,சிறுத்தை,கண்காணிப்பு பணி,hunting</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/vrq8y8ha/375.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறுத்தை பிடிக்க கூண்டுகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/vrq8y8ha/375.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம், </p><p>கொளத்தூர் அருகே சிறுத்தையை பிடிக்க 5 இடங்களில் கூண்டுகள் அமைத்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p>சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா கொளத்தூர் அருகே கண்ணாமூச்சி கிராமம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்தநிலையில் கடந்த ஒரு மாதமாக சிறுத்தை ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமத்தில் நடமாடி வருகிறது. அவ்வாறு வரும் சிறுத்தை அதிகாலை நேரங்களில் ஊருக்குள் புகுந்து விவசாயிகளின் ஆடு, நாய், கோழி போன்றவற்றை வேட்டையாடி வருகிறது.</p><h2>சிறுத்தை உலா</h2><p>இதுவரை 10-க்கும் மேற்பட்ட ஆடுகள், கன்று குட்டிகள், வளர்ப்பு நாய்கள், கோழிகள் உள்ளிட்டவற்றை சிறுத்தை கொன்றுள்ளது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிராமத்தில் சிறுத்தை உலா வந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இதில் சிலர் தங்களது செல்போன்களில் வீடியோவாக எடுத்தனர். அது தற்போது சமூக வலைத்த ளங்களில் வைரலாகி வருகிறது.</p><p>இதனால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகிறார்கள். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறையினர் கண்ணாமூச்சி கிராமத்திற்கு வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், சிறுத்தை நடமாட் டத்தால் நாங்கள் பீதியில் இருந்து வருகிறோம். எனவே உயிர்பலி ஏற்படும் முன்பு சிறுத்தையை இரும்பு கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்றனர்.</p><h2>இரும்பு கூண்டுகள்</h2><p>அவர்களின் கோரிக்கையை ஏற்று கண்ணாமூச்சி கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ள 5 இடங்களில் சிறுத்தையை பிடிக்க இரும்பு கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் ஆட்டுக் குட்டிகள் வைத்துள்ளனர்.</p><p>மேலும், அந்த பகுதிகளில் கேமராக்களை பொருத்தி வனத்துறை யினர் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88">சிறுத்தையை</a> பிடிக்கும் வரை இரவு 7 மணிக்கு மேல் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: தூய்மை பணி மேற்பார்வையாளர் போக்சோவில் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cleaning-supervisor-arrested-under-pocso-for-sexually-assaulting-10-year-old-girl</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cleaning-supervisor-arrested-under-pocso-for-sexually-assaulting-10-year-old-girl#comments</comments><guid isPermaLink="false">ebe66649-231b-4ecd-b859-51a90398ca1c</guid><pubDate>Sun, 20 Sep 2026 02:30:10 +0000</pubDate><atom:updated>2026-09-20T02:30:10.644Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,கைது,arrest,Sexual harassment,பாலியல் சீண்டல்,சிறுமி,cleaning work,போக்சோ,POCSO,minor,தூய்மை பணி,மேற்பார்வையாளர்,Supervisor</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/7cc16emi/1jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறுமியிடம் பாலியல் சீண்டல், கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/7cc16emi/1jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a>யில் 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தூய்மை பணி மேற்பார்வையாளரை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். </p><h2>10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்</h2><p>சென்னை சைதாப்பேட்டை டோபிகானா பகுதியை சேர்ந்த ஜெயச்சந்திரன் (வயது 50), தனியார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">தூய்மை பணி</a> நிறுவனத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D">மேற்பார்வையாளராக</a> பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு கோதமேடு பகுதியில் கடைக்கு தயிர் வாங்க வந்திருந்த 10 வயது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF">சிறுமி</a>யிடம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D">பாலியல் சீண்டலில் </a>ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. </p><h2>தூய்மை பணி மேற்பார்வையாளர் போக்சோவில் கைது</h2><p>சிறுமி சத்தம் போட்டதால் அக்கம்பக்கத்தினர் திரண்டனர். ஜெயச்சந்திரனை பிடித்து சரமாரியாக தாக்கி போலீசாருக்கு தகவல் தெரிவித்து ஒப்படைத்தனர். ஜெயச்சந்திரனை சைதாப்பேட்டை மகளிர் போலீசார் '<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">போக்சோ' சட்டத்தில் கைது</a> செய்தனர். பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த ஜெயச்சந்திரன் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். </p>]]></content:encoded></item><item><title>மதுரையில் ஒரே நாளில் நடந்த 3 கொலைகள்: அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவங்களால் மக்கள் அதிர்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-murders-in-madurai-in-a-single-day-public-shocked-by-the-series-of-incidents</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-murders-in-madurai-in-a-single-day-public-shocked-by-the-series-of-incidents#comments</comments><guid isPermaLink="false">80eaeac8-eaa1-458a-beba-9aed3b603b03</guid><pubDate>Sun, 20 Sep 2026 02:08:15 +0000</pubDate><atom:updated>2026-09-20T02:08:15.982Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Crime News,தமிழகம்,Madurai,மதுரை,murder,கிரைம் செய்திகள்,கொலை சம்பவம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/62g4iexj/thi.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கொலை செய்யப்பட்ட சரவணன்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/62g4iexj/thi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p>மதுரையில் போலீஸ் நிலையம் அருகே ஓட, ஓட விரட்டி ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p><a href="https://www.dailythanthi.com/topic/madurai">மதுரை</a> ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சோலையழகுபுரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் என்ற சப்பாணி சரவணன் (வயது 50). பிரபல ரவுடியான இவர் மீது மதுரை மாநகரில் உள்ள போலீஸ் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. </p><p>வழக்கு ஒன்றில் சிறைக்கு சென்ற சரவணன், சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். சோலையழகுபுரம் பிரதான சாலையில் உள்ள டீக்கடைக்கு சரவணன் சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலையிலும் அவர் டீக்கடைக்கு சென்று இருந்தார். அவர் டீ குடித்தபோது மோட்டார் சைக்கிள்களில் 5 பேர் வந்தனர். பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் திடீரென சரவணனிடம் தகராறில் ஈடுபட்டு, தாங்கள் வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர்.</p><p>உடனே உயிரை காப்பாற்றிக்கொள்ள சரவணன் அங்கிருந்து ஓட முயன்றார். இருப்பினும், அந்த கும்பல் அவரை ஓட, ஓட விரட்டிச்சென்று மேலும் சரமாரி யாக வெட்டினர். நடுரோட்டில் நடந்த இந்த பயங்கர சம்பவத்தில் சரவணன் ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார். அவர் கொலை செய்யப்பட்ட இடத்தின் அரு கில்தான் ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் நிலையம் உள்ளது. கொலையாளிகள் அங்கிருந்து வேகவேகமாக தப்பிச்சென்றனர்.</p><p>ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த படுகொலை, அப் பகுதி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. சம்பவ இடத்திற்கு வந்த ஜெய்ஹிந்த்புரம் போலீசார், சரவணனின் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். துணை கமிஷனர் இனிகோ திவ்யன் நேரில் விசாரணை மேற்கொண்டார்.</p><h2>காரணம் என்ன?</h2><p>இதுகுறித்து போலீசார் கூறுகையில், கொலை செய்யப்பட்ட சரவணன் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தீவிரமாக விசாரித்து வருகிறோம். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் கொலையாளிகளை தேடிவருகிறோம் என்றனர்.</p><h2>ஒரேநாளில் 3 கொலைகள்</h2><p>நேற்று <a href="https://www.dailythanthi.com/topic/madurai">மதுரை</a> மாநகரில் சரவணன் என்ற ரவுடி கொலை செய்யப்பட்டார். புறநகரான மேலூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மெக்கானிக் செல்லதுரை என்பவரும், ஒத்தக்கடை அருகே அன்னமயில் என்ற பெண்ணும் கொலை செய்யப்பட்டனர். ஒரேநாளில் மதுரை மாவட்டத்தில் 3 கொலைகள் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருப்பூர்: கோவிலில் துப்பாக்கி ஏந்திய வீரனின் கற்சிலை கண்டெடுப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruppur-stone-statue-of-a-warrior-holding-a-gun-discovered-at-a-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruppur-stone-statue-of-a-warrior-holding-a-gun-discovered-at-a-temple#comments</comments><guid isPermaLink="false">ad6d7eb8-8bfc-4df6-9847-4036b9f71fd4</guid><pubDate>Sun, 20 Sep 2026 02:04:57 +0000</pubDate><atom:updated>2026-09-20T02:04:57.221Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்,துப்பாக்கி,gun,கற்சிலைகள்,Stone statue</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/prynqnio/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/prynqnio/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><p>திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கோவிலில் காணப்படும் துப்பாக்கி ஏந்திய வீரனின் கற்சிலை மூலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே துப்பாக்கியை தமிழர்கள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><h2>துப்பாக்கி ஏந்திய வீரன்</h2><p>உடுமலையை அடுத்த குறிஞ்சேரியில் குறிஞ்சேரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு துப்பாக்கி ஏந்திய வீரனின் கற்சிலை காணப்படுகிறது. ஆங்கிலேயர் இந்தியாவுக்கு வந்த பிறகு தான் துப்பாக்கி பயன்பாட்டுக்கு வந்தது என்ற தவறான எண்ணத்தை உடைக்கும் வகையில் கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய கல் வெட்டுகளில் வீரர்களின் கையில் துப்பாக்கி இடம் பிடித்துள்ளது. இந்த துப்பாக்கி ஏந்திய சிற்பம் குறித்து தொல்லியல் ஆய்வாளர் மூர்த்தீஸ்வரி, உடுமலை அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் மதியழகன் மற்றும் ஆசிரி யர் விஜயலட்சுமி ஆகியோர் கூறியதாவது:-</p> <p>'16-ம் நூற்றாண்டின் இறுதியில் உடுமலை பகுதிக்கு வந்த தளி எத்தலப்ப மன்னரின் முன்னோர்கள் குறிஞ்சேரியில் தான் தங்கியுள்ளனர். அதன் பின்னர் தளியில் அரண்மனை அமைத்து ஆட்சி செய்துள்ளனர்.</p><h2></h2><h2>எத்தலப்ப மன்னர்</h2><p>தளி எத்தலப்ப மன்னரின் கட்டுப்பாட்டில், மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள தளிஞ்சி அருகே துப்பாக்கி தொழிற்சாலை இருந்ததாகவும் ஆய்வுகளில் தெரியவருகிறது. மேலும் திருமூர்த்தி மலை, ஜிலோப்பநாயக்கன்பாளையம், பண்ணக்கிணறு, நல்லாம்பள்ளி, வாகைத்தொழுவு செலவநாயக்கன்பட்டி பகுதிகளில் இதுபோன்ற புடைப்புக் கற்சிற்பங்கள் உள்ளன. கல் சிற்பத்தில் ஒரு ஆண் இடது கையில் துப்பாக்கியும், வலது கையில் குறுவாளும், இடுப்பில் குத்துவாளும் காணப்படுகிறது. அதுபோல காரத்தொழுவு அழகுநாச்சியம்மன் கோவிலில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு பெண் துப்பாக்கி வைத்திருப்பது போன்ற கற்சிற்பம் இருந்துள்ளது தெரிய வருகிறது.</p><p>இது போன்ற புடைப்புக் கற்சிற்பங்கள் இந்த பகுதியில் பரவலாக இருந்துள்ளது. அதுவும் குறிஞ்சேரியில் தளி பாளையப்பட்டு முன்னோர்கள் தங்கியிருந்ததாக ஆங்கிலேயரின் வருவாய்த்துறை ஆவணங்கள் தெரிவிக்கிறது. இதன் மூலம் குறிஞ்சேரி அம்மன் கோவிலில் இருக்கும் கற்சிலை 18-ம் நூற்றாண்டில் பாளையக்காரர் காலத்தைச் சேர்ந்தது என்பதும், இது தளி எத்தலப்ப மன்னர் காலத்துக்குப் பொருந்தும்' என்று தெரிகிறது. அன்றைய கால துப்பாக்கிகள் ஒருமுறை பயன்படுத்திய பிறகு மறுமுறை மருந்து நிரப்பி பயன்ப டுத்துவதற்கு அதிக நேரம் பிடித்தது. இதனால் வாள், குறுவாள் போன்ற ஆயுதங்களையும் கூடவே வைத்துள்ளதை இந்த சிற்பங்கள் மூலம் அறிய முடிகிறது.</p> ]]></content:encoded></item><item><title>திருப்பூர், சேலம் வழியாக போத்தனூர்-பரவுனி இடையே சிறப்பு ரெயில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-pothanur-and-barauni-via-tiruppur-and-salem</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-pothanur-and-barauni-via-tiruppur-and-salem#comments</comments><guid isPermaLink="false">424869e3-f606-4f11-bd09-e14a8d39c288</guid><pubDate>Sun, 20 Sep 2026 01:51:08 +0000</pubDate><atom:updated>2026-09-20T01:51:08.654Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்,சிறப்பு ரெயில்,Special Train ​</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/ugjk9iqs/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/ugjk9iqs/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,  </p><p>திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக போத்தனூர்-பரவுனி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, போத்த னூர்-பரவுனி (வண்டி எண்.06022) வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 4-ந்தேதி முதல் நவம்பர் 1-ந்தேதி வரை (5 சேவைகள்) ஞாயிற்றுக்கிழமை களில் காலை 6.15 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்பட்டு செவ்வாய்க் கிழமைகளில் மதியம் 1.30 மணிக்கு பரவுனியை சென்றடையும். </p> <p>இந்த ரெயில் திருப்பூருக்கு காலை 7.08 மணிக்கு வந்து 7.13 மணிக்கு புறப்படும். பரவுனி-போத்தனூர் (06022) வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 7-ந்தேதி முதல் நவம்பர் 4-ந்தேதி வரை (5 சேவைகள்) புதன்கிழமைகளில் காலை 10.30 மணிக்கு பரவுனியில் இருந்து புறப்பட்டு வெள்ளிக்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு போத்தனூரை சென்றடையும். இந்த ரெயில் திருப்பூருக்கு வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை 4 மணிக்கு வந்து 4.05 மணிக்கு புறப்படும். மேற்கண்ட தகவலை ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>ஸ்ரீரங்கம் கோவில் சொத்து மோசடி பின்னணியில் யார் இருந்தாலும் கடும் நடவடிக்கை - அமைச்சர் ரமேஷ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/strict-action-will-be-taken-against-anyone-involved-in-the-srirangam-temple-property-fraud-minister-ramesh</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/strict-action-will-be-taken-against-anyone-involved-in-the-srirangam-temple-property-fraud-minister-ramesh#comments</comments><guid isPermaLink="false">fd85674b-4dcc-43b6-909f-24f22d04fcac</guid><pubDate>Sun, 20 Sep 2026 01:37:52 +0000</pubDate><atom:updated>2026-09-20T01:37:52.153Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,திமுக,DMK,தமிழகம்,திருச்சி,Trichy,மோசடி,இந்து சமய அறநிலையத்துறை,ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்,Land fraud,நிலம் அபகரிப்பு,கோவில் சொத்துகள்,Minister ramesh,அமைச்சர் ரமேஷ்,Srirangam Ranganathar Temple</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/8y30nw0u/yar.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/8y30nw0u/yar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்ரீரங்கம், </p><p>சிவன் சொத்து குலநாசம் என்றால், பெருமாள் சொத்துகளை தி.மு.க.வினருக்கும், கட்சி அலுவலகம் நடத்தவும் விட்டுக் கொடுக்கலாமா? என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><h2>தி.மு.க. ஆட்சி</h2><p>இதுதொடர்பாக அமைச்சர் ரமேஷ் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அருகில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். </p><p>அப்போது அவர் கூறியதாவது:- </p><p>தமிழ்நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டு கால <a href="https://www.dailythanthi.com/topic/dmk">தி.மு.க.</a> ஆட்சியில் பல இடங்களில் தி.மு.க.வினர் கோவில் நிலங்கள், சொத்துக்களை அபகரித்துள்ளனர். இதுதொடர்பான ஆதாரங்கள் தற்போது கிடைத்து வருகிறது.</p><h2>போலி ஆவணம்</h2><p>அந்த வகையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலம் போலி ஆவணம் மூலம் முறைகேடாக பதிவு செய்யப்பட்டு மோசடி நடந்து இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சொந்தமாக கடந்த 1866-ம் ஆண்டு 329 ஏக்கர் நிலங்கள் உள்ளதாக ஆவணங்கள் உள்ளன. மேலும், 1910 மற்றும் 1930-ம் ஆண்டு பதிவேடுகளிலும் இவை கோவில் சொத்துக்களாகவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. </p><h2>சந்தை மதிப்பு ரூ.50 கோடி</h2><p>ஸ்ரீரங்கம் <a href="https://www.dailythanthi.com/topic/dmk">தி.மு.க. </a>பகுதி செயலாளர் ராம்குமார் என்பவர் முறையான மூலப்பத்திரங்கள் ஏதுமின்றி, போலி ஆவணங்களை தயாரித்து கோவில் நிலத்தை தன் பெயருக்கு மாற்றி அங்கு கட்சி அலுவலகம் நடத்தி வந்து உள்ளார். முறைகேடு செய்யப்பட்டுள்ள இந்த நிலத்தின் இன்றைய சந்தை மதிப்பு சுமார் ரூ.50 கோடி ஆகும். </p><p>இதுதொடர்பாக கிடைக்கப்பெற்றுள்ள உறுதியான ஆதாரங்களின் அடிப்படையில், ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மூலம் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, தற்போது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>மோசடியில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக முதல்-அமைச்சர் விஜய் கோவில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என்பதில் மிகத்தெளிவாக உள்ளார்.</p><h2>தி.மு.க.வினர் மீது..</h2><p>சட்டசபையில் சிவன் சொத்து குலநாசம் என்று வாய் கிழிய முன்னாள் அமைச்சர் சேகர்பாபு பேசுகிறார். சிவன் சொத்து குலநாசம் என்றால், பெருமாள் சொத்தை தி.மு.க.வினருக்கு, <a href="https://www.dailythanthi.com/topic/dmk">தி.மு.க.வினர்</a> கட்சி அலுவலகம் நடத்த விட்டுக் கொடுக்கலாமா?</p><p>ஸ்ரீரங்கம் பகுதி மக்களிடம் இருந்து எனக்கு வந்த புகாரின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல, தமிழகம் முழுவதும் கோவில் நிலங்களை ஆக்கிமித்துள்ள தி.மு.க.வினர் மீது பொதுமக்கள் தைரியமாக புகார் கொடுக்கலாம். அவர்களிடம் இருந்து நிச்சயம் கோவில் சொத்துகள் மீட்கப்படும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><p>பேட்டியின்போது, அமைச்சர் ரமேஷ் போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டு <a href="https://www.dailythanthi.com/topic/dmk">தி.மு.க.</a> அலுவலகம் செயல்படுவதாக கூறி ஆதாரங்களை நிருபர்களிடம் காட்டினார்.</p> ]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: சீமான் நாளை முதல் பிரசாரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-by-elections-seeman-to-campaign-starting-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-by-elections-seeman-to-campaign-starting-tomorrow#comments</comments><guid isPermaLink="false">09c11c38-61d3-4553-b005-5aedad32380f</guid><pubDate>Sun, 20 Sep 2026 01:37:43 +0000</pubDate><atom:updated>2026-09-20T01:37:43.525Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/8olj5g2q/3.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/8olj5g2q/3.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>மதுராந்தகம், தாராபுரம், புதுச்சேரி தட்டாஞ்சாவடி ஆகிய 3 தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது. இந்த தொகுதி களில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை (திங்கட்கிழமை) முதல் பிரசாரத்தை தொடங்குகிறார்.</p><p>இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், '21, 22, 23, அக்டோபர் 3, 4 ஆகிய 5 நாட்கள் தாராபுரம் தொகுதியிலும், 26, 27, 30, அக்டோபர் 1-ந்தேதி ஆகிய 4 நாட்கள் மதுராந்தகம் தொகுதியிலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொள்கிறார்' என்று தெரிவித்துள்ளார். வாகனம் மூலமாகவும், பொதுக்கூட்டம் வாயிலாகவும் அவருடைய பிரசார பயணத்திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>நவம்பர் 15-ந்தேதி முதல் அனைத்து டாஸ்மாக் பணியாளர்களுக்கும் சீருடை: தமிழக அரசு அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/uniforms-for-all-tasmac-employees-from-november-15-tamil-nadu-government-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/uniforms-for-all-tasmac-employees-from-november-15-tamil-nadu-government-announcement#comments</comments><guid isPermaLink="false">2ebe5ffe-c5d7-4dd3-a934-a49ad1028577</guid><pubDate>Sun, 20 Sep 2026 01:33:41 +0000</pubDate><atom:updated>2026-09-20T01:33:41.927Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Tamil Nadu Government,டாஸ்மாக்,Tasmac,Announcement,employees,பணியாளர்கள்,தமிழக அரசு அறிவிப்பு,uniform,சீருடை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/ligb26lg/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழகத்தில் டாஸ்மாக் பணியாளர்களுக்கான சீருடைகளின் நிறங்கள்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/ligb26lg/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>அனைத்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">டாஸ்மாக் பணியாளர்களும்</a> வரும் நவம்பர் 15-ந்தேதியில் இருந்து சீருடை அணிய வேண்டும் என்றும், அதற்கான வண்ணத்தை நிர்ணயித்தும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81">தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது</a>. </p><h2>சட்டசபையில் அமைச்சரின் அறிவிப்பு</h2><p>இதுகுறித்து அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள், அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் நந்தகுமார் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டடிருப்பதாவது: </p><p>டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவது தொடர்பாக, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் கடந்த ஆகஸ்டு 31-ந்தேதியன்று சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டார்.</p><h2>3 செட் சீருடைகளுக்கு படி ரூ.6 ஆயிரம்</h2><p>அதன்படி, டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88">சீருடை</a> முறையை அமல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஆண்டுக்கு ஒருவருக்கு மூன்று செட் சீருடைகள் வழங்க ஒப்புதல் அளிக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் சீருடைகளை கொள்முதல் செய்தல், அளவு எடுத்தல், தைத்தல் மற்றும் வினியோகம் செய்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, சீருடை படி வழங்கப்படும். துணி மற்றும் தைப்புக் கட்டணம் உள்பட ஒரு செட்டிற்கு ரூ.2 ஆயிரம் வீதம், ஒரு பணியாளருக்கு ஆண்டுக்கு மூன்று செட் சீருடைகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும்.</p><h2>நவம்பர் 15-ந்தேதி முதல் சீருடை கட்டாயம்</h2><p>மேற்பார்வையாளரின் சீருடை, சட்டை இளம் நீலம் வண்ணத்திலும், பேண்ட் கடற்படை நீலத்திலும் இருக்கும். விற்பனையாளர், உதவி விற்பனையாளரின் சீருடை சட்டை-இளம்பழுப்பு நிறத்திலும், பேண்ட்-கரும் சாம்பல் நிறத்திலும் இருக்கும். 15.11.2026 முதல் அனைத்து டாஸ்மாக் பணியாளர்களும் நிர்ணயிக்கப்பட்ட சீருடையை வேலை நேரத்தில் கட்டாயம் அணிய வேண்டும். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ராமநாதபுரம்: ரூ.5 கோடி மதிப்பிலான தங்கம், பணம் பறிமுதல்... ‘சாலையில் கிடந்தது’ என பரபரப்பு வாக்குமூலம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ramanathapuram-gold-and-cash-worth-rs-5-crore-seized-shocking-confession-that-it-was-left-on-the-road</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ramanathapuram-gold-and-cash-worth-rs-5-crore-seized-shocking-confession-that-it-was-left-on-the-road#comments</comments><guid isPermaLink="false">0731b070-7407-4a69-9f2b-2ac6f1f45638</guid><pubDate>Sun, 20 Sep 2026 01:25:05 +0000</pubDate><atom:updated>2026-09-20T01:25:05.153Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ராமநாதபுரம்,Ramanathapuram,தங்கம்,gold,Confession - வாக்குமூலம்,money seized பணம் பறிமுதல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/q7bwnzl0/371.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பறிமுதல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/q7bwnzl0/371.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமநாதபுரம், </p><p>ராமநாதபுரத்தில் ரூ.5 கோடி தங்கம் மற்றும் பணத்துடன் 5 பேர் போலீசாரிடம் சிக்கினர். இது கடத்தி வரப்பட்டதா, கொள்ளையடித்ததா அல்லது சாலையில் கிடந்ததா? என்ற கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>போலீசார் ரோந்து</h2><p>ராமநாதபுரத்தில் போதைப்பொருள் தடுப்பு தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். குடிசை மாற்று வாரியம் அருகே முடுக்குத் தரவை செல்லும் சாலையில் சந்தேகப்படும் வகையில் 5 பேர் நின்றிருந்தனர், உடனே அங்கு போலீசார் விரைந்து சென்றனர்.</p><p>உடனே 5 பேரும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் இருந்த பையை சோதித்தபோது தங்கக்கட்டிகளும், தங்க நகைகளும், கட்டுக்கட்டாக பணமும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.</p><p>இது தொடர்பாக விசாரித்தபோது, தங்களுக்கு ஒன்றும் தெரியாது எனவும், எம்.ஜி.ஆர். நகர் அருகே குப்பை கிடங்கு வழியாக நடந்து வந்தபோது அங்கு கேட்பாரற்று கிடந்த வெள்ளை நிற பிளாஸ்டிக் பையில் இந்த தங்கக்கட்டிகள், நகைகள், பணம் இருந்ததை பார்த்தோம். அவற்றை சமமாக பங்கிட்டு கொள்வதற்காக ஆள்நடமாட்டம் இல்லாத முடுக்குத்தரவை செல்லும் ரோட்டில் உள்ள இந்த பகுதிக்கு வந்ததாக கூறினர்.</p><p>தங்கம், பணத்தை பறிமுதல் செய்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a>, 5 பேரையும் ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். மொத்தம் 3 1/4 கிலோ எடை கொண்ட 38 தங்கக்கட்டிகள், 28 பவுன் நகைகள், ரூ.12 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கம் பிடிபட்டு இருந்தது. அதாவது இந்த நகை, பணத்தின் மொத்த மதிப்பு ரூ.5 கோடி என தெரியவந்தது.</p><h2>விசாரணை</h2><p>சிக்கியவர்களிடம் மேலும் நடத்திய விசாரணையில், ராமநாதபுரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த குப்புசாமி (வயது 45), செல்வராஜ் (62), பாலுகுட்டி என்ற சரவணன் (50), மாரிமுத்து (27), வேலாயுதம் (40) என்று தெரியவந்தது.</p><p>இந்த தங்கக்கட்டிகள், நகைகள், பணம் ஆகியவற்றை இவர்களுக்கு கொடுத்தது யார்? எங்கேயும் கொள்ளையடித்து வந்தார்களா? அல்லது கடத்தல்காரர்கள் போலீசாரை கண்டதும் பையுடன் தூக்கி வீசிச்சென்றதில் சாலையில் கிடந்ததா? என்ற கோணங்களில் 5 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>வெளியில் மின்சாரம் வாங்கினாலும் மின்கட்டண உயர்வு இருக்காது: அமைச்சர் நிர்மல்குமார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-will-be-no-hike-in-electricity-charges-minister-nirmal-kumar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-will-be-no-hike-in-electricity-charges-minister-nirmal-kumar#comments</comments><guid isPermaLink="false">02b8d82f-8c37-4e9e-a59b-29213023a174</guid><pubDate>Sun, 20 Sep 2026 01:23:08 +0000</pubDate><atom:updated>2026-09-20T01:23:08.383Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மின் கட்டணம்,electricity bill,Electricity Charges,அமைச்சர் நிர்மல்குமார்,Minister Nirmal Kumar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/8mwd8jwn/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/8mwd8jwn/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>ராமநாதபுரம்,</p><p>ராமநாதபுரத்தில் அமைச்சர் நிர்மல்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- </p><p>தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் நவோதயா பள்ளிகள் அனுமதிக்கப்பட மாட்டாது. தமிழகத்திற்கான மாநில கல்வி கொள்கை தவறாமல் பின்பற்றப்படும். தற்போதைய தலைமை செயலகத்தில் போதிய இடவசதி இல்லாததால் புதிய தலைமை செயலகம் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு, சுற்றுச்சூழலுக்கு, இயற்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தலைமைச் செயலகம் அமையும்.</p><p>மின்சார தட்டுப்பாட்டை போக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது இந்த ஆண்டு காற்றாலை மின் உற்பத்தி மிக கணிசமாக குறைந்ததால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டது. இருப்பினும் இதனை போக்க மின்சாரத்தை கொள்முதல் செய்து தட்டுப்பாட்டை சமாளித்து வருகிறோம். வெளியில் இருந்து மின்சாரத்தை வாங்கி வினியோகம் செய்வதாலும் எக்காரணம் கொண்டும் மின் கட்டணம் உயராது.</p><p>தமிழக அரசின் நோக்கம் கொள்முதல் செய்து வினியோகம் செய்வதைவிட உற்பத்தி செய்து பற்றாக்குறையை சமாளிப்பதுதான். அதற்கு ஏற்ப நீண்டகால ஒப்பந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. உப்பூர் பகுதியில் 2010-ம் ஆண்டு அனல்மின் நிலைய திட்டப்பணிகள் ரூ.6 ஆயிரம் கோடியில் தொடங்கப்பட்டது. ஆனால் இந்த பணிகள் 2021-ம் ஆண்டு எந்த முன்அறிவிப்பும் இன்றி திடீரென மூடப்பட்டது.</p><p>மக்களின் வரிப்பணம் வீணாகியுள்ளது. இந்த திட்டத்திற்காக வாங்கப்பட்ட கடன் அடைக்கப்பட்டது. அப்படி பார்க்கும்போது ரூ.12 ஆயிரம் கோடி வரை மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. நேரடியாக ஆய்வுசெய்து விசாரணை நடத்தி இந்த திட்டத்தை மறுஉருவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-62</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-62#comments</comments><guid isPermaLink="false">52e86e58-67e0-4a33-a078-6328be225ab1</guid><pubDate>Sun, 20 Sep 2026 01:17:28 +0000</pubDate><atom:updated>2026-09-20T01:17:28.276Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல் விலை,டீசல் விலை,Petrol and diesel prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/reou69ta/petrol.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/reou69ta/petrol.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.</p> <h2></h2> <h2>பெட்ரோல், டீசல் விலை</h2><p>இந்நிலையில், சென்னையில் இன்று (20.09.2026 ஞாயிற்றுக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ. 99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்க வந்தபோது நெஞ்சுவலியால் விவசாயி உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmer-dies-of-chest-pain-while-participating-in-sit-in-protest</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmer-dies-of-chest-pain-while-participating-in-sit-in-protest#comments</comments><guid isPermaLink="false">a0b39a98-66e8-4e40-a1a7-7a13bc4b65ce</guid><pubDate>Sun, 20 Sep 2026 01:06:09 +0000</pubDate><atom:updated>2026-09-20T01:06:09.205Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Farmers,திருச்சி,Trichy,விவசாயிகள்,Waiting Struggle,காத்திருப்பு போராட்டம்,chest pain,நெஞ்சுவலி,விவசாயி உயிரிழப்பு,Farmer&apos;s death</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/d4kx19ke/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நெஞ்சுவலியால் விவசாயி உயிரிழப்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/d4kx19ke/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">திருச்சி</a> மாவட்டம் சமயபுரத்தில் விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்பதற்காக கரூரில் இருந்து ஒரு வேனில் வந்தபோது, நெஞ்சுவலி ஏற்பட்டு விவசாயி உயிரிழந்தார்.</p><h2>காத்திருப்பு போராட்டம்- நேற்று 5-வது நாள்</h2><p>விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய முழு பயிர்க்கடன்களையும் எந்தவித நிபந்தனையும் இன்றி தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரி திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே விவசாயிகள் கடந்த 15-ந்தேதி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">காத்திருப்பு போராட்டம் </a>தொடங்கினார்கள். அவர்களது காத்திருப்பு போராட்டம் நேற்று 5-வது நாளாக நீடித்தது. </p><h2>காத்திருப்பு போராட்டம் ஒத்தி வைக்கப்படுதாக அறிவிப்பு</h2><p>நேற்று மதியம் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத், கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் ஆகியோர் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு நேரடியாக வந்தனர். விவசாய சங்க தலைவர்களுடன் அவர்களது கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் நேற்று மாலை காத்திருப்பு போராட்டம் திடீரென அக்டோபர் 22-ந்தேதி வரை ஒத்தி வைக்கப்படுதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. </p><h2>நெஞ்சுவலியால் விவசாயி உயிரிழப்பு</h2><p>இதற்கிடையில் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்பதற்காக கரூர் மாவட்டம் வாங்கல் அருகே உள்ள முனியப்பனூரை சேர்ந்த கந்தசாமி (வயது 73) என்ற <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF">விவசாயி</a> ஒரு வேனில் நேற்று திருச்சிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF">நெஞ்சுவலி</a> ஏற்பட்டதால் பரிதாபமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">உயரிழந்தார்</a>.</p>]]></content:encoded></item><item><title>இளங்கலை பிசியோதெரபி படிப்பின் காலஅளவு அதிகரிப்பு: பல்கலைக்கழக மானியக்குழு தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/extension-of-duration-of-undergraduate-physiotherapy-course-university-grants-commission-information</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/extension-of-duration-of-undergraduate-physiotherapy-course-university-grants-commission-information#comments</comments><guid isPermaLink="false">e0a50d28-6fc8-4bcd-902e-448abf5e2665</guid><pubDate>Sun, 20 Sep 2026 00:58:20 +0000</pubDate><atom:updated>2026-09-20T00:58:20.955Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Information,தகவல்,சுகாதாரத்துறை,course,பிசியோதெரபி,Physiotherapy,Duration</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/jisq6v6v/370.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிசியோதெரபி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/jisq6v6v/370.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சுகாதாரத்துறை சார்ந்த படிப்புகளின் தரத்தை உயர்த்த பாடப்பிரிவுகள் சீரமைக்கப்பட்டு, படிப்பு காலஅளவுகள் மாற்றப்பட்டுள்ளன. இதுதொடர்பான அரசிதழை பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) வெளியிட்டுள்ளது.</p><h2>கால அளவு</h2><p>அதன்படி, ஆப்டோமெட்ரி (பி.ஆப்டோம்) ஆக்குபேஷனல் தெரபி (பி.ஓடி) மற்றும் பிசியோதெரபி (பி.பிடி) ஆகிய இளங்கலை படிப்புகளின் கால அளவு 4 மற்றும் 4.5 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.</p><p>மேலும், 2026-27 கல்வி ஆண்டு முதல், முதுகலை படிப்புகளான பிசியோதெரபி மற்றும் ஆக்குபேஷனல் தெரபி ஆகியவை பொதுவான பட்டமாக வழங்கப்படாமல், குறிப்பிட்ட துறை சார்ந்த சிறப்புப் பிரிவுகளுடன் மட்டுமே வழங்கப்படும்.</p><p>2026-27 கல்வி ஆண்டிற்கு முன் சேர்ந்த மாணவர்களுக்கு முந்தைய விதிமுறைகளின்படியே பட்டங்கள் வழங்கப்படும். இதுமட்டுமல்லாமல், மருத்துவ பரிசோதனை, அவசர சிகிச்சை, மயக்கவியல், ஊட்டச்சத்து. ரேடியோலஜி போன்ற பல துறைகளில் புதிய இளங்கலை மற்றும் முதுகலை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">பட்டப்படிப்புகள்</a> அங்கீகரிக்கப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>காந்தி ஜெயந்தி: அனைத்து ஊராட்சிகளிலும் அக்டோபர் 2-ந் தேதி கிராமசபை கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/gandhi-jayanti-gram-sabha-meetings-in-all-village-panchayats-on-october-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/gandhi-jayanti-gram-sabha-meetings-in-all-village-panchayats-on-october-2#comments</comments><guid isPermaLink="false">3bb91c72-d050-4dbc-b6ea-898c86949008</guid><pubDate>Sun, 20 Sep 2026 00:53:24 +0000</pubDate><atom:updated>2026-09-20T00:53:24.218Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கிராமசபை கூட்டம்,Gandhi Jayanti,காந்தி ஜெயந்தி,Grama Sabha Meetings</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/u962bpza/CHENNAI-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/u962bpza/CHENNAI-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>காந்தி ஜெயந்தியான அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும். இதில் கிராம ஊராட்சியின் நிர்வாகம், நிதிநிலை, வளர்ச்சிப்பணிகள், குடிநீர், தூய்மை, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்க வேண்டும்.</p><p>கிராமசபை கூட்டம் காலை 11 மணியளவில் நடத்த வேண்டும். கூட்டம் நடைபெறும் இடம், நேரம் மற்றும் விவாதிக்கப்படும் பொருட்கள் குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களையும் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.</p><p>அரசின் திட்டங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். கிராமசபையின் ஒப்புதலுடன் பிற முக்கிய பொருட்களையும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை முறையாக பதிவு செய்து, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>15 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை..!</title><link>https://www.dailythanthi.com/news/weather/weather-department-warns-of-heavy-rain-set-to-lash-15-districts</link><comments>https://www.dailythanthi.com/news/weather/weather-department-warns-of-heavy-rain-set-to-lash-15-districts#comments</comments><guid isPermaLink="false">9f703123-757a-4ed7-9f9a-d1394b897e93</guid><pubDate>Sun, 20 Sep 2026 00:51:31 +0000</pubDate><atom:updated>2026-09-20T00:51:31.561Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Rain,Weather,கனமழை,வானிலை,தமிழகம்,Weather News,WeatherUpdate,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,வானிலை ஆய்வு மையம்,கன மழை,heavy rain,வானிலை அறிக்கை,வானிலை தகவல்,Weather Report,வானிலை முன்னறிவிப்பு,Weather Status,Tamilnadu weather condition,வானிலை அறிவிப்பு,weather center,TN Rain,வானிலை அப்டேட்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/6mno74kh/vadi.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கனமழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/6mno74kh/vadi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று (ஞாயிறு) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><h2>கனமழை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>சுமார் 0.9 கிமீ உயரத்தில் வடக்கு கடலோர ஆந்திரா முதல் மன்னார் வளைகுடா வரை, தமிழக பகுதிகள் வழியாக ஒரு வடக்கு தெற்கு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இதன்காரணமாக இன்று (20-09-2026) மற்றும் நாளை (21-09-2026): நீலகிரி, கோயம்புத்தூர், கடலூர், கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">கனமழை</a></strong> பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சிவகங்கை, ஈரோடு, ராமநாதபுரம், நாமக்கல், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், கரூர், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p> <h2>மழை</h2><p><strong>22-09-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>23-09-2026 முதல் 25-09-2026 வரை:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் லேசான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong><a href="https://www.dailythanthi.com/topic/rain"> </a>பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong><ins>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</ins></strong></p><p><strong>20-09-2026 முதல் 23-09-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.</p><p><strong><ins>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</ins></strong></p><p><strong>20-09-2026 முதல் 23-09-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>(20-09-2026):</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p> <h2>மீனவர்களுக்கான எச்சரிக்கை:</h2><p><strong><ins>தமிழக கடலோரப்பகுதிகள்:</ins></strong></p><p><strong>20-09-2026:</strong> எச்சரிக்கை ஏதுமில்லை.</p><p><strong>21-09-2026:</strong> தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>22-09-2026 மற்றும் 23-09-2026:</strong> தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong><ins>வங்கக்கடல் பகுதிகள்:</ins></strong></p><p><strong>20-09-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் தென் பகுதிகள், அந்தமான் கடலின் சில பகுதிகள், மத்தியகிழக்கு-தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடலின் அநேக பகுதிகள் மற்றும் இதர தென்கிழக்கு- மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>21-09-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் தென் பகுதிகள், மத்தியகிழக்கு-தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் இதர தென்கிழக்கு-மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>22-09-2026:</strong> மத்தியமேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும், இதர வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகள், இதர வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>23-09-2026:</strong> வடக்கு ஆந்திர கடலோர பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும், வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p><strong><ins>அரபிக்கடல் பகுதிகள்:</ins></strong> எச்சரிக்கை ஏதுமில்லை.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்று  விநாயகர் சிலைகள் ஊர்வலம்- 4 இடங்களில் கரைக்க ஏற்பாடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-idol-procession-in-chennai-today-arrangements-made-for-immersion-at-four-locations</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-idol-procession-in-chennai-today-arrangements-made-for-immersion-at-four-locations#comments</comments><guid isPermaLink="false">bb4a7f3c-a6f0-49e3-b31c-04842bb183d1</guid><pubDate>Sat, 19 Sep 2026 23:40:33 +0000</pubDate><atom:updated>2026-09-19T23:40:33.507Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,விநாயகர் சிலை,சிலைகள் ஊர்வலம்,Vinayagar Chathurthi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/7elpoce9/vinayagar.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/7elpoce9/vinayagar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2>1,562 விநாயகர் சிலைகள்</h2><p>விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 14-ந்தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் போலீசார் அனுமதி பெற்று பொது இடங்களில் 37 ஆயிரம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. சென்னை யில் 1,562 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இவ் வாறு பூஜிக்கப்பட்ட சில சிலைகள் ஏற்கனவே கரைக்கப்பட்டு விட்டன. இந்த நிலையில் பெரும்பாலான பிரமாண்டமான விநாயகர் சிலைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலை களில் கரைக்கப்படுகின்றன. இதையொட்டி போலீசார் விரிவான ஏற்பாடு களை செய்துள்ளனர்.</p><h2>4 இடங்களில் கரைக்க ஏற்பாடு</h2><p>இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னையில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்க, மாநகராட்சி அலுவலர்களுடன் இணைந்து சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போலீசாரால் அனுமதிக்கப்பட்ட வழித்த டங்களில் மட்டுமே, விநாயகர் சிலைகளை வாகனங்களில் கொண்டு சென்று அவர்களுக்குரிய சிலை கரைக்கும் இடங்களில் கரைக்கப்பட வேண்டும்.</p> <p>சிலை கரைக்கும் இடங்களில் தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டறைகள் மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சிலைகளை கரைப்ப தற்கு உபகரணங்கள் மட்டுமின்றி, படகுகள் உதவி கொண்டும் சிலை களை கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், சிலைகள் கரைக்கும் இடங்களில் அவசர உதவிக்கு தீயணைப்பு வாகனங்கள், ஆம் புலன்ஸ் வாகனங்கள், மோட்டார் படகுகள், நீச்சல் தெரிந்த தன்னார்வலர் கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அங்கு கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு பைனாகுலர் கள் மற்றும் டிரோன் மூலம் கண்காணித்தும், குதிரைப்படைகள் மூலம் தீவிர ரோந்து பணிகள் மேற்கொண்டு கண்காணித்தும் குற்ற நிகழ்வுகள் மற்றும் அசம்பாவிதங்கள் நிகழாமல் கண்காணிக்க தக்க பாதுகாப்பு ஏற் பாடுகள் செய்யப்பட்டுள்ளது.</p><h2>சட்டப்படி நடவடிக்கை</h2><p>அமைதியான முறையிலும், எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லவும், சிலைகளை நீர் நிலை களில் கரைக்கவும் சென்னையில் 16,500 போலீசார், 2,000 ஊர்க்காவல் படையினர் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகளை மீறுவோர் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் நம்பிக்கை நகர் பகுதியில் இந்த ஆண்டு விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகள் ஊர்வலம் கடற்கரையை நெருங்கும் சமயத்தில் போக்குவரத்து மாற்றத்தையும் போலீசார் அமல்படுத்தி உள்ளனர்.</p><h2>பாலவாக்கம்</h2><p>இந்தநிலையில் சிவசேனா சார்பில் தாம்பரம், குரோம்பேட்டை, பள்ளிக்க ரணை, பல்லாவரம், வேளச்சேரி, கோவிலம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டு இருந்த 75-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று மேளதாளத்துடன் வேன்களில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன. பின்னர் அந்த விநாயகர் சிலைகள், பாலவாக்கம் பல்கலை நகர் கடலில் 2 டிராலிகள், 2 கிரேன்கள் உதவியுடன் கடலில் கரைக்கப்பட்டன. இதை யொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.</p> ]]></content:encoded></item><item><title>மாணவர் பாரதிதாசன் குடும்பத்தை மிரட்டியதாக கூறுவது திட்டமிட்ட அவதூறு-அமைச்சர் வன்னி அரசு பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/allegations-that-student-bharathidasan-threatened-a-family-are-a-calculated-act-of-slander-minister-vanni-arasu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/allegations-that-student-bharathidasan-threatened-a-family-are-a-calculated-act-of-slander-minister-vanni-arasu#comments</comments><guid isPermaLink="false">f7a9f0b0-a365-4a73-a13e-16d4f3828a53</guid><pubDate>Sat, 19 Sep 2026 22:04:12 +0000</pubDate><atom:updated>2026-09-19T22:04:12.976Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அமைச்சர் வன்னி அரசு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/i2swzejf/vanni-arasu.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/i2swzejf/vanni-arasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>திண்டிவனம், </p><p>விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த தைலாபுரத்தில் அமைச்சர் வன்னி அரசு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ".வேங்கைவயலில் பாதிக்கப்பட்ட மக்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்தது தி.மு.க. அரசுதான். திருநெல்வேலி கவின் படுகொலை வழக்கில் விடுதலை சிறுத்தைகள் போராட்டம் நடத்திய பிறகுதான் குற்றவாளி கைது செய்யப்பட் டார். அவரது மனைவி கிருஷ்ணகுமாரி இன்னும் கைது செய்யப்படவில்லை. </p> <p>வேங்கைவயல் விவகாரத்தில் தி.மு.க. அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். மலேசியாவில் முனைவர் பட்டம் படிக்கும் மாணவர் பாரதிதாசன், தனது 2-ம் ஆண்டு படிப்பிற்கு கல்வி உதவித்தொகையை தமிழக அரசு வழங்கவில்லை என்று கூறி வீடியோ வெளியிட்டார். இதற்காக பாரதிதாசன் குடும்பத்தை உளவுத்துறை போலீஸ் மூலம் மிரட்டி யதாக கூறுவது திட்டமிட்ட அவதூறு. அவரது பாதுகாப்புக்கும், படிப்புக்கும் நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். அவர் செலவு செய்த தொகைக்கு உரிய ரசீது அனுப்பாவிட்டாலும் கல்வி நலனை கருதி அவர் கேட்ட முழு தொகையையும் அனுப்பி வைத்துள்ளோம்" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>2 தொகுதிகளில் இடைத்தேர்தல்: அக்டோபர் 6-ந்தேதி பொது விடுமுறை-தலைமைச்செயலாளர் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/by-elections-in-two-constituencies-october-6-declared-a-public-holiday-chief-secretary-announces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/by-elections-in-two-constituencies-october-6-declared-a-public-holiday-chief-secretary-announces#comments</comments><guid isPermaLink="false">d2059d5b-b69b-425b-a94c-267fe24e244b</guid><pubDate>Sat, 19 Sep 2026 21:23:07 +0000</pubDate><atom:updated>2026-09-19T21:23:07.825Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இடைத்தேர்தல்,By election,தலைமைச்செயலாளர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/zlmkdk0v/maduranthakam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/zlmkdk0v/maduranthakam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><p>தமிழக அரசின் தலைமைச்செயலாளர் எம்.சாய் குமார் வெளியிட்டுள்ள அர சாணையில் கூறியிருப்பதாவது:-செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, இந்த 2 சட்டமன்ற தொகுதிகள் அமைந்துள்ள பகுதிகளில் அக்டோபர் 6-ந் தேதி பொது விடு முறை அளிக்கப்படுகிறது.</p> <p>மேலும், செங்கல்பட்டு, திருப்பூர் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் பணிபுரிந்து வந்தாலும், மதுராந்தகம் (தனி) அல்லது தாராபுரம் (தனி) தொகுதிகளில் வாக்காளர்களாக பதிவு செய்துள்ள அனைத்து ஊழியர்க ளுக்கும் அக்டோபர் 6-ந் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும். இந்த 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் அரசு கட்டுப் பாட்டில் உள்ள நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவ னங்கள் அன்றைய தினம் மூடப்பட்டு இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை - நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் பேச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/lack-of-transparency-in-the-appointment-of-judges-justice-anand-venkatesh-speaks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/lack-of-transparency-in-the-appointment-of-judges-justice-anand-venkatesh-speaks#comments</comments><guid isPermaLink="false">537b1460-ab69-458c-8a85-a7c51946ccf3</guid><pubDate>Sat, 19 Sep 2026 19:58:16 +0000</pubDate><atom:updated>2026-09-19T19:58:16.183Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Court,நீதிமன்றம்,நீதிபதி,Judge,கொலிஜியம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/72m5mkxv/vengkadesan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/72m5mkxv/vengkadesan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p> <p>கோவை குனியமுத்தூரில் இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் 9-வது மாநில மாநாடு நடைபெற்றது. இதில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது கூறியதாவது:-நீதி துறையும், வழக்கறிஞர் துறையும் சந்தித்து வரும் கட்டமைப்பு பிரச்சினைகள் குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நீதித்துறை, வரலாற்றில் இல்லாத அளவிற்கு பலவீனப்படுத்தப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் சட்டக்கல்லூரிகள் காளான்கள் போல் உருவாகி வருகின்றன. இதனால் சட்டக்கல்வி பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. பல சட்டக்கல்லூரிகளில் பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதால், சில முக்கிய பாடங்கள் கற்பிக்கப்படுவதும் இல்லை. போதிய பயிற்சியும் வழங்கப்படுவதில்லை. பார் கவுன்சில் சட்டக்கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கும் அதிகாரத்தை விட்டு, அதை சுயேச்சையான ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும்.</p> <p>ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நியமிக்கப்படும் கொலீஜியம் முறையிலும் வெளிப்படைத்தன்மை இல்லை. நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக கொலீஜியம் முறை கொண்டுவரப்பட்டதாக கூறப்பட்டாலும், நீதிபதிகள் தேர்வு செய்யப்படும் நடைமுறை வெளிப்படையாக இல்லை. மாவட்ட நீதிபதிகள் தேர்வுக்கு நடைமுறை உள்ள நிலையில், ஐகோர்ட்டு நீதிபதிகள் தேர்வுக்கு தெளிவான நடைமுறை இல்லை. எனவே ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் தகுதி புள்ளிகள் மற்றும் வெளிப்படையான மதிப்பீட்டு முறைகளை உருவாக்க வேண்டும்</p><p>நீதித்துறையில் ஏ.ஐ.யால் பெரிய மாற்றம் ஏற்படலாம். இப்போது பல பணிகளை ஏ.ஐ. செய்து வருகிறது. நீதித்துறைதான் ஏழை, எளிய மக்களின் கடைசி நம்பிக்கை. நீதிமன்ற தீர்ப்புகளை அரசியல் நிலைப்பாடுகளின் அடிப்படையில் பார்க்கக்கூடாது. சமூக வலைதளங்களில் நீதித்துறை குறித்து போதிய அறிவு இல்லாமல் பலர் கருத்துகளை பதிவிடுகின்றனர். இதனை பார்ப்பவர்கள் உண்மை என்று நம்பிவிடுகிறார்கள். இது மிகப்பெரிய ஆபத்து. வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே நீதித்துறை இழந்த கண்ணியத்தை மீட்டெடுக்க முடியும் இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>&quot;த.வெ.க. ஆட்சியில் ஊழல் குறைந்துள்ளது&quot;- ஜி.கே.வாசன் பாராட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/corruption-has-decreased-under-the-tvk-government-gk-vasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/corruption-has-decreased-under-the-tvk-government-gk-vasan#comments</comments><guid isPermaLink="false">43f99594-8c53-4647-81d7-280ea6b791cf</guid><pubDate>Sat, 19 Sep 2026 17:06:22 +0000</pubDate><atom:updated>2026-09-19T17:06:22.511Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,த.வெ.க,GK Vasan,ஜி.கே.வாசன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/1oyx6mt5/GK-vasan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/1oyx6mt5/GK-vasan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.கா தலைமை அலுவலகத்தில், 60 ஆண்டுகளுக்குப்பின் தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் குறித்து நேற்று சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார்.துணை தலைவர் விடியல் சேகர், அமைப்பு செயலாளர் சாதிக் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கொள்கை பரப்பு செயலாளர்கள் ஜெ.லூயிஸ்ராஜன், கே.ஆர்.டி.ரமேஷ், மாவட்ட தலைவர்கள் மால்மருகன், ஆர்.கே.நகர் மாரி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.</p> <p>கருத்தரங்கில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேசியதாவது:- கடந்த 60 ஆண்டுகளாகத் தமிழகத்தை திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆட்சி புரிந்துள்ளன. இத்தனை ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கான 'பொதுநலனை' விட 'சுயநலமே' மேலோங்கி நின்றது. தற்போது த.வெ.க. ஆட்சியில் ஊழல் குறையத் தொடங்கியுள்ளது. போதைப் பொருட்கள் நடமாட்டத்தைக் குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளையும் ஆட்சியாளர்கள் நிறைவேற்றத் தொடங்கியுள்ளனர். </p><p>தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து த.மா.கா. வலியுறுத்தும். த.வெ.க. அரசின் நல்முயற்சிகளுக்கு த.மா.கா. என்றும் ஆதரவு அளிக்கும். மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் ஆட்சியாளர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் பாலமாக தொடர்ந்து செயல்படுவோம். இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் 20-வது ரோஜ்கார் மேளா - பணி நியமன ஆணைகளை வழங்கிய எல்.முருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/20th-rozgar-mela-in-chennai-l-murugan-hands-over-appointment-letters</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/20th-rozgar-mela-in-chennai-l-murugan-hands-over-appointment-letters#comments</comments><guid isPermaLink="false">ab7e8dbd-5802-45f5-85b5-d113a0b9eaf0</guid><pubDate>Sat, 19 Sep 2026 16:33:01 +0000</pubDate><atom:updated>2026-09-19T16:33:01.306Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எல்.முருகன்,L.Murugan,சென்னை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/53ih8mx7/State-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/53ih8mx7/State-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் உள்ள டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரியில் நடைபெற்ற 20-வது ரோஜ்கார் மேளா நிகழ்வில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கலந்துகொண்டு, இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-</p><p>“நாடு முழுவதும் 45 இடங்களில் நடைபெற்ற 20-வது ரோஜ்கார் மேளா நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்று, 51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்கி, புதிதாக அரசுப் பணியில் இணையவுள்ள இளைஞர்களிடம் உரையாற்றினார்.</p><p>சென்னையில் உள்ள டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரியில் நடைபெற்ற 20-வது ரோஜ்கார் மேளா நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினேன்.</p> <p>இந்நிகழ்வில் பணி நியமன ஆணைகளைப் பெற்றுக்கொண்ட இளைஞர்கள், வருமான வரித் துறை, ESIC, இந்திய விமான நிலையங்கள் ஆணையம், பாதுகாப்புத் துறை, அஞ்சல் துறை, ஜிப்மர் (JIPMER), தெற்கு ரயில்வே உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் தங்களது பணியைத் தொடங்க உள்ளனர்.</p><p>புதிய பொறுப்புடன் அரசுப் பணியில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு இளைஞருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். தங்களது அறிவு, திறமை மற்றும் அர்ப்பணிப்பின் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் சிறப்பான பங்களிப்பை வழங்கிட வாழ்த்துகிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்க தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-filed-in-high-court-seeking-to-halt-the-construction-of-the-new-secretariat-at-pattinapakkam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-filed-in-high-court-seeking-to-halt-the-construction-of-the-new-secretariat-at-pattinapakkam#comments</comments><guid isPermaLink="false">89ad827f-f6c2-468f-a9aa-7417284cf0dd</guid><pubDate>Sat, 19 Sep 2026 16:23:53 +0000</pubDate><atom:updated>2026-09-19T16:23:53.378Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>High Court,பட்டினப்பாக்கம்,தலைமை செயலகம்,ஐகோர்ட்,Pattinapakkam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/0t8sqln7/State-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/0t8sqln7/State-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை பட்டினம்பாக்கத்தில வீட்டு வசதி வாரியம், சென்னை மாநகராட்சி ஆகியவற்றுக்கு சொந்தமான 25 ஏக்கர் பரப்பிலான இடத்தில் புதிய தலைமை செயலகம் கட்ட இருப்பதாக முதல்-அமைச்சர் விஜய் சட்டசபையில் அறிவித்தார். இது தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டது.</p><p>இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், மீனவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், புதிய தலைமை செயலகம் கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் கோடம்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் வேந்தன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். </p><p>அந்த மனுவில், நிதி நெருக்கடியில் இருப்பதாக அரசு அறிவித்திருக்கக்கூடிய சூழலில், 1,200 கோடி ரூபாய் செலவு செய்து புதிய தலைமை செயலகம், கட்டுவதற்கு பதிலாக ஜார்ஜ் கோட்டையில் தற்போது இயங்கி வரும் தலைமை செயலக கட்டிடத்தை புதுப்பித்து பயன்படுத்தினால் மக்களுடைய வரிப்பணம் சேமிக்கப்படும் என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். </p> <p>மேலும் சென்ட்ரல் ரெயில் நிலையம், ஐகோர்ட்டு, பேருந்து நிலையம், அரசு பொது மருத்துவமனை ஆகிய இடங்களுக்கு பக்கத்தில் இருக்கக்கூடிய தலைமை செயலகத்தை இடமாற்றம் செய்தால் பொதுமக்கள் வந்து செல்வது கடினமாக இருக்கும் எனவும், பட்டினப்பாக்கத்தில் புதிய வீடுகள் கட்டுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் புதிய தலைமை செயலகத்தை கட்டினால், ஏழை, எளிய மக்களுக்கு வீடு வழங்கக்கூடிய திட்டம் பாதிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். </p><p>அதோடு மீனவர்களின் நலனும் பாதிக்கப்படும் என்பதால், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்டும் திட்டத்தை கைவிட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், இந்த வழக்கின் முடிவு வரும் வரை தலைமை செயலக கட்டுமான பணிகளுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item></channel></rss>