<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 31 Jul 2026 06:04:24 +0000</lastBuildDate><item><title>நெல்லையில் போலீசாரை தாக்கி தனியார் சொத்துக்கள் சேதம்: 5 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/5-arrested-for-attacking-police-and-damaging-private-property-in-nellai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/5-arrested-for-attacking-police-and-damaging-private-property-in-nellai#comments</comments><guid isPermaLink="false">c2ce53e0-7577-4ef0-b2cd-bfeca54cd46d</guid><pubDate>Fri, 31 Jul 2026 06:01:57 +0000</pubDate><atom:updated>2026-07-31T06:01:57.298Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தாக்குதல்,police,Tirunelveli,திருநெல்வேலி,attack,Damage,சேதம்,private,தனியார்,5 பேர் கைது,போலீசார்,சொத்துக்கள்,Properties,5 arrested</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/zm8jf8ud/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 5 பேர் கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/zm8jf8ud/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>திசையன்விளை பகுதியில் போலீசாரை தாக்கியதோடு, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">தனியார்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">சொத்துக்களை</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">சேதப்படுத்திய</a> வழக்கில் போலீசாரின் துரித நடவடிக்கையால் முக்கிய குற்றவாளி உள்பட <a href="https://www.dailythanthi.com/topic/5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">5 பேர் கைது</a> செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>போலீசார் மீது தாக்குதல்</h2><p>திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் உட்கோட்டம், திசையன்விளை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 24.7.2026 அன்று போலீசாரை தாக்கியதுடன், சொத்துக்களை சேதப்படுத்திய சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க, திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவிட்டார். இதனையடுத்து வள்ளியூர் உட்கோட்ட போலீசார் தனிப்படை அமைத்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.</p><h2>தனியார் சொத்துக்கள் சேதம்</h2><p>விசாரணையில், முக்கிய குற்றவாளியான இசக்கிராஜா என்பவர் மேலும் 8 பேரை திரட்டி, 3 பைக்குகளில் திசையன்விளை மற்றும் இட்டமொழி பகுதிகளுக்குச் சென்று தொடர் சேதப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் திசையன்விளையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பும் மீட்டரை அரிவாளால் சேதப்படுத்தியதுடன், இட்டமொழி சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரையும் சேதப்படுத்தினர். </p><p>அதைத் தொடர்ந்து, இட்டமொழி பகுதியில் ரூ.400-க்கு எரிபொருள் நிரப்பிய பின்னர், அங்குள்ள பெட்ரோல் பங்கின் பெட்ரோல் நிரப்பும் மீட்டரையும் அரிவாளால் சேதப்படுத்தினர். மேலும், இட்டமொழி சாலையில் ஒரு பயணிகள் ஆட்டோ மற்றும் 2 லோடு ஆட்டோக்களையும் சேதப்படுத்தினர்.</p><h2>5 வழக்குகள் பதிவு</h2><p>இந்த சம்பவங்கள் தொடர்பாக திசையன்விளை காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவுகள் மற்றும் தமிழ்நாடு பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்துதல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.</p><h2>5 பேர் கைது</h2><p>இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட இளஞ்சிறார் ஒருவர் உள்பட 4 பேர் முன்னதாகவே கைது செய்யப்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக நேற்று தனிப்படை போலீசார் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையால் முக்கிய குற்றவாளியான மகாதேவன்குளம் பகுதியைச் சேர்ந்த இசக்கிராஜா (வயது 20), அதே பகுதியைச் சேர்ந்தவர்களான முத்துராஜா(18), இசக்கிபாண்டி(23), சுயம்புராஜா(22), தாமரைசெல்வி பகுதியைச் சேர்ந்த சுடலைகண்ணு(23) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.</p><h2>இதுவரை 10-ல் 9 பேர் கைது</h2><p>இந்த வழக்கில் தொடர்புடைய மொத்தம் 10 குற்றவாளிகளில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மீதமுள்ள ஒருவரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவ்வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>தென்அமெரிக்காவில் கட்டப்படும் சமயபுரம் மாரியம்மன் கோவில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/samayapuram-mariamman-temple-to-be-built-in-south-america</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/samayapuram-mariamman-temple-to-be-built-in-south-america#comments</comments><guid isPermaLink="false">af8f0925-3d52-459d-a179-8e9e6b51ac8c</guid><pubDate>Fri, 31 Jul 2026 05:56:26 +0000</pubDate><atom:updated>2026-07-31T05:56:26.576Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>South America,Samayapuram Mariamman Temple,சமயபுரம் மாரியம்மன் கோவில்,Samayapuram,Samayapuram Mariamman,சமயபுரம் மாரியம்மன்,சமயபுரம்,தென்அமெரிக்கா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/s5fq2dux/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/s5fq2dux/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தென் அமெரிக்காவில் ராஜகோபுரம், தெப்பக்குளத்துடன் சமயபுரம் மாரியம்மன் கோவில் கட்டப்பட இருக்கிறது.</p><h2>சமயபுரம் மாரியம்மன் கோவில்</h2><p>சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்வது வழக்கம். </p><p>அந்தவகையில், அமெரிக்க நாட்டை சேர்ந்த ரூபினா அரோன் என்ற இளம்பெண் பக்தர் சமயபுரத்தில் நடக்கும் விழாக்களில் கலந்து கொண்டு தீ மிதிப்பது, அக்கினி சட்டி ஏந்தி தமிழ் பக்தர்கள் மரபில் சாமி தரிசனம் செய்து வருகிறார். இந்த நிலையில், தென் அமெரிக்காவில் உள்ள கயானாவில் சமயபுரம் மாரியம்மன் கோவில் போன்று ஒரு கோவில் கட்ட இருக்கிறார். இதற்காக சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனைகளைப் பெற்றார்.</p><p>52 ஏக்கர் பரப்பில்...</p><p>இதுகுறித்து சென்னையில் ரூபினா அரோன் நிருபர்களிடம் கூறும்போது, "தென்அமெரிக்காவிலுள்ள கயானாவில் வசித்தாலும் சமயபுரம் மாரியம்மன் தான் எங்களுக்குக் காவல் தெய்வம். ஆண்டுதோறும் ஆடிமாதம் சித்திரை தேர் திருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வேன். சென்ற ஆண்டு அம்மனிடம் வைத்த ஒரு வேண்டுதல் நிறைவேறியது. தொடர்ந்து அங்க பிரதிஷ்டை செய்து நேர்த்திக்கடனை அருளும்படி வேண்டிக் கொண்டேன்.</p><p>அமெரிக்கா கயானாவில் 5% ஏக்கர் நிலப்பரப்பில் ராஜகோபு ரத்துடன் சமயபுரம் மாரியம்மன் கோவில் கட்ட முடிவு செய்துள்ளோம். சமயபுரம் மாரியம்மன், விநாயகர், முருகன், சிவன், நவகிரகங்கள், தெப்பக்குளம், யாகசாலை, தீமிதி மைதானம், கலாசார மையம் ஆகியவற்றை அமைக்க இருக்கிறோம். இதற்கு உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான நாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கத்தினர் நிதி உதவி வழங்குகின்றனர்.</p><p>அதற்கு அம்மனின் முழு அருளும் கிடைக்க அங்க பிரதிஷ்டை வழிபாடு செய்தேன். இந்த பிரார்த்தனை நிறைவேறியதும் அடுத்த ஆண்டு தேர் திருவிழாவில் கண்டிப்பாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுப்பேன். எங்கள் நாட்டில் கோவில் கட்டுவதற்காக தமிழக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளையும் சந்தித்து ஆலோசனையும் பெற்றுள்ளேன்' என்றார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழர்களை மது அடிமைகளாக மாற்றப் போகிறோமோ?..மதுக்கடைகளை மூடுங்கள்!  - அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/are-we-going-to-turn-tamils-into-alcohol-slavesshut-down-the-liquor-shops-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/are-we-going-to-turn-tamils-into-alcohol-slavesshut-down-the-liquor-shops-anbumani#comments</comments><guid isPermaLink="false">ec5bc6f1-3d20-4a91-81a3-f540a90a5b0a</guid><pubDate>Fri, 31 Jul 2026 05:54:40 +0000</pubDate><atom:updated>2026-07-31T05:54:40.425Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK,அன்புமணி,Anbumani</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/vnefyska/Untitled-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/vnefyska/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>மிகப்பெரிய ஆபத்து</h2><p>தமிழ்நாட்டில் உடனடியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், தமிழர்களின் மரபணுவிலேயே மது மீதான மோகமும், அடிமைத்தனமும் பதிந்து விடும் என்று  பொது சுகாதார வல்லுனர்கள் கூறியுள்ளனர். இது எந்த வகையிலும் அதிர்ச்சியளிக்கவில்லை. மாறாக, தமிழ்நாடு மிகப்பெரிய ஆபத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் சூழலில், மிகச் சரியான தருணத்தில் ஊதப்பட்டிருக்கும் அபாய சங்காகவே இது தோன்றுகிறது.</p><p>தமிழக அரசின் மருத்துவத் துறையில் பொது சுகாதாரத்துறை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவரான மருத்துவர் குழந்தைசாமி தான் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறார். ‘‘தமிழகத்தில், 1971-ஆம் ஆண்டில்  மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது.  அப்போது  தொடங்கி, இப்போது வரையிலான 55 ஆண்டுகளில் இரண்டு தலைமுறையினர் மது குடிக்கின்றனர். இதனால், மது குடிப்பவர்களின் குழந்தைகளின் மரபணுக்களில் பாதிப்பு ஏற்படுகிறது. இப்போதுள்ள மூன்றாவது தலைமுறையும் மதுவை தொடர்ந்து குடித்தால், அது  தமிழர்களின் மரபணுக்களில் மாற்றத்தை ஏற்படுத்தி, தமிழர்களை மது மீது மோகம் கொண்டவர்களாகவும், மதுவுக்கு அடிமையானவர்களாகவும் மாற்றி விடும். அதற்குபின் பிறக்கும் குழந்தைகள் மதுவுக்கு அடிமைகளாகவே பிறக்க வாய்ப்பு உள்ளது’’ என்று மருத்துவர் குழந்தைசாமி எச்சரித்திருக்கிறார். அவரது எச்சரிக்கை உண்மை தான். இதையே தான் பாட்டாளி மக்கள் கட்சியும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகிறது.</p><h2>200 நோய்கள் வரை தாக்கும்</h2><p>மதுவால்  ஏற்படும் பாதிப்புகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து தான் வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மது குடிப்பவர்களை  60  நோய்கள் தான் தாக்குவதாக எச்சரிக்கப்பட்டு வந்த நிலையில், அண்மைக்காலமாக 200 நோய்கள் தாக்குவதாக உலக சுகாதார நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மது அருந்துபவர்களுக்கு 7 வகையான புற்றுநோய்கள், கல்லீரல் இழைநார் வளர்ச்சி (Liver Cirrhosis), நிமோனியா, காசநோய், ஆண்மையிழப்பு போன்றவை அவற்றில் முக்கியமானவை ஆகும்.</p><p>சங்க இலக்கியங்களில் மட்டுமின்றி, மருத்துவ ஆராய்ச்சிகளிலும் தமிழர்கள் நோய்களை வென்றவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால்,  தொடர்ந்து  55 ஆண்டுகளாக மதுவைக் குடிப்பதால் அவர்களின் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மரபணுக்களில் </a>மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இளம் வயதிலேயே தமிழர்கள் பல்வேறு நோய்களுக்கு அடிமையாகி வருகின்றனர். பொது சுகாதாரத்துறை வல்லுனர்களின் எச்சரிக்கை இந்தக் கருத்தை உறுதி செய்திருக்கிறது.</p><h2>மதுவை வெள்ளமாக ஓட விட்ட திமுக</h2><p>தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்கள் காலத்திலேயே, 1937-38 ஆம் ஆண்டுகளில்  இன்றைய  தமிழ்நாட்டின் அங்கமாக இருக்கும் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை  ஆகிய மாவட்டங்களில் முழு மதுவிலக்கை ராஜாஜி ஏற்படுத்தினார். இந்தியா விடுதலையடைந்த காலத்தில்  சென்னை மாகாணத்தின் முதல்-அமைச்சராக இருந்த  ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஒட்டுமொத்த சென்னை மாகாணத்திற்கும் மதுவிலக்கை நீட்டித்தார். அப்போது தொடங்கி 1971ஆம் ஆண்டு வரை 25 ஆண்டுகள் ஒரு தலைமுறையே மதுவை மறந்திருந்தது. 1971ஆம் ஆண்டில் ராஜாஜியின் எச்சரிக்கையையும் மீறி  சாராயக்கடைகளை திறந்து மதுவை வெள்ளமாக ஓட வைத்தது கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சி தான்.</p><p>கடந்த திமுக ஆட்சியில் மதுப் புழக்கம் புதிய பரிமாணத்தை அடைந்தது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 5000 மதுக்கடைகள் இருந்த நிலையில், அவற்றையொட்டிய பகுதிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சந்துக்கடைகளை திறந்து, தெருவுக்கு தெரு மது கிடைப்பதை திமுக அரசு உறுதி செய்தது. 500 மதுக்கடைகளை மூடியதாக அறிவித்த திமுக அரசு, அதற்கு பதிலாக 1200-க்கும் கூடுதலான மனமகிழ் மன்றங்களைத் திறந்தது. அதுமட்டுமின்றி, மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 284 குடிப்பகங்களிலும் மதுவணிகத்தை திமுக அரசு நடத்தியது. இதனால் திமுக ஆட்சியில் மிகப்பெரிய அளவில் இளைஞர்கள் மதுவுக்கு அடிமையானார்கள்.</p><h2>முழு மதுவிலக்கு வேண்டும்</h2><p>முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத்தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவற்றுக்கு அருகில் செயல்பட்டு வந்த மதுக்கடைகள் மூடப்பட்ட போது, இந்த ஆட்சியில் மது கட்டுப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், ரெஸ்டோ பார்களை திறக்க அனுமதி அளிக்கவும், அரசு மதுக்கடைகளை தனியார்மயமாக்கவும் அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் இந்த நம்பிக்கையை குலைத்துவிட்டன. மதுவைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் தவெகவின் ஆட்சியும் திமுக ஆட்சியின் நீட்சியாகவே திகழுமோ என்ற கவலை தமிழக மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது.</p><p>தமிழர்கள் நோயில்லா வாழ்வுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள். அவர்களின் வரலாற்றில் மதுவுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டதில்லை. அப்படிப்பட்ட தமிழ்ச் சமுதாயத்தை நிரந்தரமான குடிகார சமுதாயமாக மாற்றி விடக் கூடாது. எனவே, மதுவணிகத்தை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஊக்குவிக்கும் </a>வகையிலான திட்டங்களை அரசு கைவிட்டு, படிப்படியாக மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வில் சாதனை படைத்த திருப்பூர் அரசுப் பள்ளி மாணவ-மாணவிகள்: நயினார் நாகேந்திரன் பாராட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendran-praises-tiruppur-government-school-students-for-achieving-success-in-neet-exam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendran-praises-tiruppur-government-school-students-for-achieving-success-in-neet-exam#comments</comments><guid isPermaLink="false">e7d5207b-ef24-4475-9071-bcb5ce6b6337</guid><pubDate>Fri, 31 Jul 2026 05:38:06 +0000</pubDate><atom:updated>2026-07-31T05:38:06.245Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,நீட் தேர்வு,NEET Exam,Achievement,பாராட்டு,Government School Students,மாணவ-மாணவிகள்,அரசுப் பள்ளி,சாதனை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/0wi49i1i/nainar.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/0wi49i1i/nainar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர், </p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>நீட் தேர்வில் தேர்ச்சி</h2><p>அரிய சாதனைகள் எப்போதும் எளிய பின்னணியில் இருந்தே தொடங்குகின்றன என்பதை திருப்பூர் மாவட்டம், இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 10 மாணவ-மாணவிகள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டியுள்ளனர். நடப்பு நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, தங்களது மருத்துவக் கனவை நனவாக்கியுள்ள இந்த இளம் சாதனையாளர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2>மனமார்ந்த பாராட்டுகள்</h2><p>சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வந்து, "முயற்சி திருவினையாக்கும்" என்பதற்கு இலக்கணமாகத் திகழும் இம்மாணவர்களில் 9 பேர், முதல் முயற்சியில் ஏற்பட்ட சறுக்கல்களால் சோர்ந்து போகாமல், விடாமுயற்சியுடன் மறுமுறைத் தேர்வு (Repeaters) எழுதி சாதித்துள்ளனர். இம்மாணவர்களோடு சேர்ந்து அவர்களின் மருத்துவக் கனவுக்கு தோள் கொடுத்த அன்புப் பெற்றோர்களுக்கும், அர்ப்பணிப்புடன் வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">பாராட்டு</a>கள்.</p><p>சமூக மற்றும் பொருளாதாரப் பின்னணி ஒருவரது கனவுகளுக்குத் தடையல்ல என்பதை இம்மாணவர்களின் வெற்றி நிரூபித்துள்ளது. தங்களது உழைப்பால் உயர்ந்து, எதிர்காலத்தில் ஏழை, எளிய மக்களுக்குச் சேவை செய்யும் சிறந்த மருத்துவர்களாக உருவாக இவர்களை வாழ்த்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பாறைகளாக காட்சியளிக்கும் ஒகேனக்கல் காவிரி ஆறு - குடிநீர் தட்டுப்பாடு அபாயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-river-in-hogenakkal-appears-as-rocks-danger-of-water-shortage</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-river-in-hogenakkal-appears-as-rocks-danger-of-water-shortage#comments</comments><guid isPermaLink="false">800d61b4-e194-487e-a308-8cc6eee86d16</guid><pubDate>Fri, 31 Jul 2026 05:27:56 +0000</pubDate><atom:updated>2026-07-31T05:27:56.573Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Hogenakkal,ஒகேனக்கல்,Hogenakkal Cauvery river,ஒகேனக்கல் காவிரி ஆறு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/7zwy2pve/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/7zwy2pve/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>தர்மபுரி,</p><h2>நீர்வரத்து குறைந்தது</h2><p>கர்நாடக மாநிலம் குடகுமலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு தமிழக எல்லையான தர்மபுரி மாவட்டம் பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வருகிறது. மேலும் கர்நாடக மாநில அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு வெள்ளமாக ஓடும்.</p><p>அப்போது இங்குள்ள மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு அருவிகள், காவிரி கரையோர பகுதிகளில் குளித்து மகிழ்வர். மேலும் குடும்பத்தினருடன் உற்சாகமாக பரிசலில் சென்று காவிரியின் அழகை கண்டு ரசிப்பர்.</p><p>இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடங் காததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அடியோடு குறைந்து விட்டது. இத்தகைய சூழ்நிலையில் கர்நாடக அணையில் இருந்து நீர் திறப்பு முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் கர்நாடக அரசு காவிரி ஆற்றில் தண்ணீரை திறந்து விட மறுக்கிறது. இதனால் நீர்வரத்து முற்றிலுமாக சரிந்துள்ளது.</p><h2>பாறைகளாக காட்சி அளிக்கிறது</h2><p>குறிப்பாக ஒகேனக்கல் காவிரி ஆற்றுப்பகுதி முழுவதும் கடந்த ஆண்டு இதேகாலக்கட்டத்தில் நீர் நிரம்பி இருந்த நிலை மறைந்து தற்போது வெறும் பாறைகளாக மட்டுமே காட்சியளிக்கிறது. ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட பகுதிகள் முழுமையாக வறண்டு கிடக்கின்றன. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28-ந் தேதி காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால் தற்போது நீர்வரத்து குறைந்து பாறைகளாக காட்சியளிக்கிறது. ஆங்காங்கே தண்ணீர் தேங்கி குட்டை போல காட்சியளிக்கிறது.</p><h2>குடிநீர் தட்டுப்பாடு</h2><p>காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதுமான மழை இல்லாததாலும், கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதாலும் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கான தண்ணீர் எடுக்க தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. நீர்வரத்து குறைவால் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் சுற்றுலாவை நம்பி உள்ள பரிசல் ஓட்டிகள், உணவு சமைப்பவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சேலத்தில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-arrested-in-salem-for-sexually-harassing-a-17-year-old-girl</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-arrested-in-salem-for-sexually-harassing-a-17-year-old-girl#comments</comments><guid isPermaLink="false">2f9f162b-70f6-4899-b902-687eac5908c9</guid><pubDate>Fri, 31 Jul 2026 05:24:48 +0000</pubDate><atom:updated>2026-07-31T05:24:48.790Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாலியல் தொல்லை,Youth arrested,வாலிபர் கைது,Salem,சேலம்,police enquiry,sexual abuse</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/wjk5b49l/41.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ ஹரிகரன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பாலியல் தொல்லை வழக்கில் கைதான வாலிபர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/wjk5b49l/41.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம் மாவட்டத்தில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>பாலியல் தொல்லை</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சேலம் மாவட்டம் </a>வாழப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. அந்த சிறுமிக்கு ஹரிகரன் (வயது 28) என்ற வாலிபர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.</p><h2>வாலிபர் கைது</h2><p>சிறுமிக்கு பாலியல் ரீதியான அத்துமீறல் மற்றும் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஹரிகரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> கைது </a>செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>151 முதுநிலை மருத்துவ இடங்களை இழப்பது தமிழக எதிர்கால சுகாதார சேவைக்கும் இழப்பு! - சீமான்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/losing-151-postgraduate-medical-seats-is-a-loss-for-the-future-of-tamil-nadus-healthcare-system-seeman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/losing-151-postgraduate-medical-seats-is-a-loss-for-the-future-of-tamil-nadus-healthcare-system-seeman#comments</comments><guid isPermaLink="false">bd50a8c2-74d4-42e9-b0d3-a88d8eadf99c</guid><pubDate>Fri, 31 Jul 2026 05:19:11 +0000</pubDate><atom:updated>2026-07-31T05:19:11.379Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>நாதக,சீமான்,NTK,Seeman,நாம் தமிழர் கட்சி,Naam Thamilar Katchi,சீமான் கண்டனம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/svy9ov4q/Untitled-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/svy9ov4q/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ்நாட்டு அரசு மருத்துவர்களுக்கு சேர வேண்டிய 151 முதுநிலை மருத்துவ இடங்களை ஒன்றிய ஒதுக்கீட்டிற்கு தாரைவார்த்துட்டு, அதில் 50% மீள கிடைக்கும் என்ற தீர்ப்பை தவெக அரசு வெற்றி என்று கொண்டாடுவது வெட்கக்கேடானது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>151 இடங்கள் பறிகொடுப்பு</h2><p>தமிழ்நாட்டு அரசு மருத்துவர்களுக்கு சேர வேண்டிய 151 முதுநிலை மருத்துவ இடங்களை மத்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தவெக அரசு வலுவான வாதங்களை எடுத்து வைக்கத்தவறி, இடங்களை பறிகொடுத்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு சார்பாக முன்நின்று வாதங்களை முன்வைக்கக்கூட தவறியுள்ளது தமிழ்நாட்டின் உரிமையைத் தாரைவார்க்கும் பெருங்கொடுமையாகும். </p><p>தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு மொத்தம் 415 இடங்கள் உள்ளன. அவற்றில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு, முதுநிலை மற்றும் பல்நோக்கு சிறப்பு மருத்துவப் படிப்புகளில் வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இடஒதுக்கீடானது, நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், இந்திய மத்திய அரசால் தொடுக்கப்பட்ட வழக்கின் காரணமாக, கடந்த 2017ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் நீக்கப்பட்டது. அதனை எதிர்த்து, 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் இந்திய மருத்துவ கழகத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. </p><h2>உரிமை மீண்டும் பறிப்பு</h2><p>நீண்டகால சட்டப்போராட்டத்தின் விளைவாக, கடந்த 2020ஆம் ஆண்டு அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை உச்சநீதிமன்றம் வழங்கியது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு அரசாணை எண் 462ஐ பிறப்பித்து, முதுகலை மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நடைமுறைப்படுத்தியது</a>. ஓய்வு பெறும் வரை அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டிய கட்டுப்பாட்டில் உள்ள அரசு மரு‌த்துவ‌ர்களு‌க்கான இடஒதுக்கீடு என்பது வெறும் கல்வி வாய்ப்பு அல்ல; அது மாநிலத்தின் பொது சுகாதார கட்டமைப்பை பாதுகாக்கும் உயர்நோக்கு கொள்கையாகும்.</p><p>ஆனால், நடப்பு கல்வியாண்டிற்கான முதுநிலை மருத்துவப் படிப்புச் சேர்க்கையில், அரசு மருத்துவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 219 இடங்களில், நிரப்பப்படாத 151 இடங்களை அனைத்திந்திய ஒதுக்கீட்டிற்கு மாற்ற, கடந்த 29.05.2026 அன்று உச்சநீதிமன்றம் இட்ட உத்தரவினால், தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் உயர்கல்வி உரிமை மீண்டும் பறிக்கப்பட்டது. தவெக அரசின் அலட்சியத்தால் 151 மருத்துவ இடங்கள் பறிபோவதை கடுமையாக கண்டித்து கடந்த 03.06.2026 அன்று அறிக்கை வெளியிட்டதோடு, நீட் மதிப்பெண் வரம்பு குறைப்புக்காக தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான அரசு மருத்துவர்கள் காத்திருக்கும் சூழலில், இந்திய மத்திய அரசு மாநில அரசுக்கு சொந்தமான உயர் மருத்துவ இடங்களை நீதிமன்றத்தின் மூலம் பறிக்கும் சூழ்ச்சியை தமிழ்நாடு அரசு சட்டப்போராட்டம் நடத்தி தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தேன். ஆனால் அதன் பிறகும் திறமையான மூத்த வழக்கறிஞர்களை நியமித்து, வழக்கினை திறம்பட தவெக அரசு நடத்தாததன் விளைவே தற்போது மீண்டும் தனது தீர்ப்பினை உச்சநீதிமன்றம் உறுதி செய்ய முதன்மைக்காரணமாகும். </p><h2>கொண்டாடுவது வெட்கக்கேடானது</h2><p>கடந்த சில ஆண்டுகளாக இந்திய மருத்துவ ஆலோசனைக் குழு (MCC) மருத்துவக் கலந்தாய்வு நீட் மதிப்பெண் வரம்பினை (NEET cut-off percentile) தொடர்ந்து குறைத்து வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அது முற்றிலுமாக (Zero percentile) குறைக்கப்பட்டது. ஆனால் இந்திய மருத்துவ ஆலோசனைக் குழு இந்த ஆண்டு திட்டமிட்டு நீட் மதிப்பெண் (cut-off) குறைப்பு அறிவிப்பை வேண்டுமென்றே வெளியிடாமல் தாமதப்படுத்தி, அனைத்திந்திய இரண்டாம் சுற்று கலந்தாய்வையும் நீட்டித்தது. அதன் மூலம் தமிழ்நாட்டில் காலியாக உள்ள சேவை இடங்களை இந்திய ஒதுக்கீட்டில் சேர்க்க முயன்று, அதனை உச்சநீதிமன்ற வழக்கின் மூலம் சாதித்தது. </p><p>அதனை தனது வாதத்தில் சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு கிடைக்க வேண்டிய இடங்களை முழுமையாக மீண்டும் திருப்பித்தர வேண்டும் என்ற உத்தரவை தமிழ்நாடு அரசு பெற்றிருக்க வேண்டும். அதனை விடுத்து, ஒருவேளை இரண்டாம் சுற்று கலந்தாய்வும் முடிந்து, நீட் மதிப்பெண் வரம்பினைக் குறைக்க நேரிட்டால், அப்போது 50 சதவீத இடங்களை அதாவது 151 இல் பாதி இடங்களை மாநில அரசு ஒதுக்கீட்டிற்கு தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏதோ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுபோல அமைச்சர் அருண்ராஜ் கொண்டாடுவது வெட்கக்கேடானது. இதுதான் தவெக அரசு தமிழ்நாட்டு உரிமைகளைக் காக்கும் முறையா? </p><h2>உரிமையை இழந்துள்ளோம்</h2><p>உண்மையில் தமிழ்நாட்டு மருத்துவர்களுக்கு சேர வேண்டிய 151 இடங்கள் பறிபோயுள்ளது. அதில் பாதி, அதாவது 151 இடங்களில் நிரம்பியதுபோக, மீதமுள்ள இடங்களில் பாதி இடங்கள், அதுவும் நீட் மதிப்பெண்ணைக் குறைக்க நேரிட்டால் மட்டுமே கிடைக்கும் சாத்தியம் உள்ளது. ஆனால், NEET SS cut-off குறைப்பு பொதுவாக மூன்றாம் சுற்று கலந்தாய்வின் போது அறிவிக்கப்படுவதால், அதற்குள் இந்த 151 இடங்களில் பெரும்பாலானவை அரசு சாரா (Non-Service) மருத்துவர்களால் நிரப்பப்பட்டிருக்கும். </p><p>எனவே, அவை உச்சநீதிமன்றம் 75 இடங்களை ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தாலும், அதுகூட மீண்டும் கிடைக்கும் வாய்ப்பு மிகமிக குறைவே. தமிழ்நாட்டின் உரிமையை இழந்துள்ளோம் என்பதைக் கூட அறியாமல், அதனை ஏதோ பெரிய சாதனை போல தவெக அரசு கொண்டாடுவதுதான் மிகுந்த வேதனைக்குரியதாகும். 151 உயர் சிறப்பு மருத்துவ இடங்களை இழப்பது என்பது வெறும் அரசு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மருத்துவர்களுக்கான </a>இழப்பு மட்டுமல்ல; எதிர்காலத்தில் தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய 151 உயர்சிறப்பு அரசு மருத்துவர்களை இழப்பதாகும்.</p><p>ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாக உச்சநீதி மன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்து, நம்முடைய அரசு மருத்துவர்களின் உயர் மருத்துவப் படிப்பிற்கான இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆடி அமாவாசை - காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aadi-amavasya-restrictions-on-devotees-to-visit-karaiyaru-sorimuthu-ayyanar-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aadi-amavasya-restrictions-on-devotees-to-visit-karaiyaru-sorimuthu-ayyanar-temple#comments</comments><guid isPermaLink="false">cc2de6f5-0d8d-4b93-9de3-bdefa27ac05b</guid><pubDate>Fri, 31 Jul 2026 05:06:59 +0000</pubDate><atom:updated>2026-07-31T05:06:59.952Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Devotees,Restrictions,aadi amavasai,ஆடி அமாவாசை,Sorimuthu Ayyanar Temple,சொரிமுத்து அய்யனார் கோவில்,கட்டுப்பாடு,பக்தர்களுக்கு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/huouhix1/sorimuthu-ayyanar.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/huouhix1/sorimuthu-ayyanar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>ஆன்மிகம் (Devotional)</category><content:encoded><![CDATA[ <p>பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவுக்கு அரசு பஸ்களில் மட்டுமே சென்று வர பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். வனப்பகுதியில் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><h2>சொரிமுத்து அய்யனார் கோவில்</h2><p>பாபநாசம் காரையாறு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">சொரிமுத்து அய்யனார் கோவில்</a> ஆடி அமாவாசை திருவிழாவிற்காக பக்தர்கள் நலன் கருதி பல்வேறு சிறப்பான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. பக்தர்கள் வனத்துறை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, 4 மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய தாமிரபரணி ஆறு மற்றும் அது உருவாகும் வனத்தில் இயற்கை சூழலை பாதுகாப்பதன் அவசியத்தையும் உணர்ந்து அனைத்து துறை அலுவலர்களுக்கும் நன்முறையில் ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.</p><h2>6 நாட்கள் அனுமதி</h2><p>கூட்ட நெரிசலால் ஏற்படும் பாதிப்பை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் முந்தைய ஆண்டுகள் போலவே இந்த ஆண்டும் பாரம்பரிய முறைப்படி 6 நாட்கள் வரை வழிபாடு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் பொருட்களை எடுத்து செல்ல ஆகஸ்டு 9-ந் தேதி காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டும் பாபநாசம் சோதனைச்சாவடியில் இருந்து வாகனங்கள் அனுமதிக்கப்படும். ஆகஸ்டு 7 மற்றும் 8 ஆகிய நாட்கள் முழுவதும் கோவில் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளும் காரணத்தினால் அரசு பஸ், தனியார் உள்ளிட்ட எந்த வாகனங்களும் பாபநாசம் சோதனைச்சாவடியில் அனுமதிக்கப்படமாட்டாது.</p><h2>அரசு பஸ்களில் மட்டுமே அனுமதி</h2><p>ஆகஸ்டு 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை பக்தர்கள் பாரம்பரிய சடங்குகள் மேற்கொள்ள முந்தைய ஆண்டுகள் போலவே கோவிலில் தங்க அனுமதிக்கப்படுகிறது. பக்தர்கள் அகஸ்தியர்பட்டி தற்காலிக பஸ்நிலையத்தில் இருந்து அரசு பஸ்களில் மட்டுமே கோவிலுக்கு சென்று வர அனுமதிக்கப்படுவார்கள். தனியார் வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படமாட்டாது.</p><h2>வழக்கமான நடைமுறை</h2><p>ஆகஸ்டு 13-ந் தேதி காலை குறைவான எண்ணிக்கையில் மட்டுமே பஸ்கள் இயக்கப்படும். பக்தர்கள் பொருட்களை கீழே கொண்டு வருவதற்காக மட்டும் தனியார் வாகனங்களுக்கு ஆகஸ்டு 14-ந் தேதி காலை 6 மணி முதல் மாலை 3 மணிவரையிலும் பாபநாசம் கோவில் பார்க்கிங் பகுதியில் பாஸ் வழங்கப்பட்டு அனுமதிக்கப்படும். கீழே இறங்கும் பக்தர்களுக்காக அரசு பஸ்கள் ஏற்பாடு செய்யப்படும். ஆகஸ்டு 15, 16-ந் தேதிகளில் தூய்மை பணிகள் மற்றும் கோவில் உழவார பணி காரணமாக பொதுமக்கள் பாபநாசம் சோதனை சாவடியை கடந்து செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்டு 17-ந் தேதி முதல் வழக்கமான நடைமுறைப்படி கோவிலுக்கு சென்று வரலாம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-tomorrow-13</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-tomorrow-13#comments</comments><guid isPermaLink="false">bed35c83-222d-4b47-8962-a92d7fbc4767</guid><pubDate>Fri, 31 Jul 2026 05:06:03 +0000</pubDate><atom:updated>2026-07-31T05:06:03.554Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,monthly maintenance work,மாதாந்திர பராமரிப்பு பணி,Power outage tomorrow,நாளை மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/dgrxfs52/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/dgrxfs52/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூர், திருநெல்வேலி நகர்ப்புறம், கல்லிடைக்குறிச்சி ஆகிய கோட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை (1.8.2026, சனிக்கிழமை) <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் காரணமாக பின்வருமாறு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>வள்ளியூர் கோட்டம்</h2><p>வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>பணகுடி துணை மின் நிலையத்தில் நாளை (1.8.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணை மின் நிலையத்தில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் கீழே குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது. </p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>பணகுடி, லெப்பைகுடியிருப்பு, புஷ்பவனம், குமந்தான், காவல்கிணறு, சிவகாமிபுரம், தளவாய்புரம், பாம்பன்குளம், கலந்தபனை, கடம்பன் குளம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம்</h2><p>திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம் செயற்பொறியாளர் ரவிராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>பழையபேட்டை மற்றும் பொருட்காட்சி திடல் துணை மின் நிலையத்தில் நாளை (1.8.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. </p><p>அதன்படி திருநெல்வேலி டவுன், மேலரத வீதி மேல் பகுதிகள், தெற்கு ரத வீதி தெற்கு பகுதிகள், வடக்கு ரத வீதி வடக்கு பகுதிகள், பழையபேட்டை, காந்திநகர் ,திருப்பணி கரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை, தொழிற்பேட்டை கோட்டீஸ்வரன்நகர், சாஸ்திரிநகர், தீன்நகர், திருமங்கைநகர், செந்தமிழ்நகர், பாட்டப்பத்து, அபிஷேகப்பட்டி, பொருட்காட்சிதிடல், திருநெல்வேலி டவுன் SN ஹை ரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம் ,சிவந்தி ரோடு, சுந்தர தெரு, பாரதியார் தெரு, C.N.கிராமம், குறுக்குத்துறை, கருப்பன்துறை, டவுன் கீழ ரத வீதி வீதி, போஸ் மார்க்கெட், A.P. மாடத் தெரு, சாமி சன்னதி தெரு, அம்மன் சன்னதி தெரு, மேல மாடவீதி, கள்ளத்திமுடுக்கு தெரு, நயினார்குளம் ரோடு, சத்தியமூர்த்தி தெரு, போத்தீஸ் நயினார்குளம், மார்க்கெட், வ.உ.சி. தெரு, வையாபுரிநகர், பாரத் இந்துஸ்தான் பெட்ரோலியம், சிவன்கோவில், தெற்கு தெரு, ராம்நகர் மற்றும் ஊர் உடையான் குடியிருப்பு பகுதிகள் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>கல்லிடைக்குறிச்சி கோட்டம்</h2><p>கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும்பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>கல்லிடைக்குறிச்சி கோட்டம், ஓ.துலுக்கப்பட்டி, வீரவநல்லூர், அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, கடையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (1.8.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணை மின் நிலையங்களில் பின்வரும் நேரங்களில் பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம் பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும். </p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>ஆழ்வான்துலூக்கப்பட்டி, ஒ.துலூக்கப்பட்டி, செங்குளம், பாப்பாகுடி, கபாலிபாறை, இடைகால், அணைந்தநாடார்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்தப்பாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை. </p><p>அம்பாசமுத்திரம், ஊர்க்காடு, வாகைகுளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி. </p><p>மணிமுத்தாறு, ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவிகுளம், பொன்மாநகர், தெற்குபாப்பன்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம்.  </p><p>கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், வெள்ளாங்குளி,  ரெங்கசமுத்திரம், கூனியூர், காருகுறிச்சி. </p><p>கடையம், கட்டேரிபட்டி, முதலியார்பட்டி, பண்டாரகுளம், பொட்டல்புதூர், திருமலையப்புரம், ரவணசமுத்திரம், வள்ளியம்மாள்புரம், சிவநாடனூர், மாதாபுரம், மைலப்பபுரம், வெய்காலிப்பட்டி, மேட்டூர், கோவிந்தபேரி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மேற்கு தொடர்ச்சி மலை பகுதி பாதுகாக்கப்படுமா? - மத்திய அரசு வரைவு அறிக்கை வெளியீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-western-ghats-region-be-protected-central-government-releases-draft-report</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-western-ghats-region-be-protected-central-government-releases-draft-report#comments</comments><guid isPermaLink="false">1588b8f6-e653-4094-8781-3b37e7d5ef9e</guid><pubDate>Fri, 31 Jul 2026 04:53:30 +0000</pubDate><atom:updated>2026-07-31T04:53:30.112Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழ்நாடு,மத்திய அரசு,Central Government,மேற்கு தொடர்ச்சி மலை,Western Ghats</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/eme6fk9w/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/eme6fk9w/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><h2>இயற்கையின் அருள்கொடை</h2><p>மேற்கு தொடர்ச்சி மலை இயற்கையின் அருள்கொடை. இதனால் தான் தமிழ்நாட்டின் மேற்கு பகுதியான கோவை, நீலகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் மழையை பெறு வதுடன், பசுமையான பகுதியாக விளங்கி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் மருந்துவாழ் மலையில் தொடங்கி குஜராத், மராட்டிய எல்லையில் உள்ள தபதி ஆற்றுக்கு தெற்கே முடிவடைகிறது. இதனால் குஜராத், மராட்டியம், கோவா, கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு ஆகிய பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலையால் பசுமை பயனை அடைகின்றன.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/ixj5kbpt/Untitled-3.jpg" /></figure><h2>அனைத்தும் அதிசயங்கள்...</h2><p>1 லட்சத்து 29 ஆயிரம் சதுர கிலோ பரப்பளவு கொண்ட இந்த மலைத் தொடர் தென்இந்தியாவுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கி வருகிறது. இது, அரபிகடலில் இருந்து வரும் குளிர்ந்த காற்றை தடுத்து தென் மாநிலங்களுக்கு நல்ல மழையை தருகிறது. மேலும் முள்புதர் காடுகள், புல்வெளி பிரதேசங்கள், சோலை காடுகள் உள்ளிட்ட இயற்கை அன்னையின் அனைத்து அதிசயங்களையும் தன்னகத்தே கொண்டு உள்ளது.</p><p>இந்த மலையில் நீலகிரி வரையாடு, சிங்கவால் குரங்கு, ஆசிய யானைகள். மலபார் அணில், இருவாச்சி பறவைகள், நீலகிரி பறவை, பலவகையான அரிய மர தவளைகள், பாம்புகள், அரிய பறவைகள் என்று ஏராளமான உயிரினங்கள் வசித்து வருகின்றன.</p> <h2>முக்கிய அச்சுறுத்தல்கள்</h2><p>இந்த மலைத்தொடரில் தற்போது பல்வேறு அச்சுறுத்தல்கள் உள்ளன. அதாவது அருகே உள்ள குவாரிகளில் டைன மேட்டை வெடிக்கச் செய்தல், தொழிற்சாலை கழிவுகளை கலத்தல், சட்ட விரோத சுரங்கங்கள் அமைத்தல், கண்மூடித்தனமான மணல் கொள்ளை, ரிசார்ட் பெருக்கம், காடுகள் அழிப்பு உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன.</p><p>மேற்குத் தொடர்ச்சி மலையை பாதுகாப்பது தொடர்பான சர்ச்சை கடந்த 2011-ம் ஆண்டில் இருந்தே நீடிக்கிறது. அப் போது, மறைந்த சூழலியலாளர் மாதவ் காட்கில் தலைமையிலான குழு, இந்த மலைத்தொடர் முழுவதையும் சூழலியல் ரீதியாக உணர்திறன் மிக்க பகுதியாக கருதி, அதற்கு பல் வேறு நிலைகளிலான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.</p><h2>வரைவு அறிக்கை வெளியீடு</h2><p>இந்தநிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் சூழலி யல் ரீதியாக உணர்திறன் மிக்க பகுதியை (எகோ ஸோன்) உருவாக்குவதற்கான வரைவு அறிவிப்பை, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மீண்டும் தற்போது வெளியிட்டு உள்ளது. பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்துக்கு பின் இந்த வரைவு அறிக்கை இறுதி செய்யப்படும்.</p><p>இதையடுத்து அந்த பகுதியில் சுரங்கப் பணிகள், கல்குவாரிகள், மணல் அள்ளுதல், புதிய அனல் மின் நிலையங்கள், குறிப்பிட்ட சில தொழிற்சாலைகள் மற்றும் பெரிய கட்டுமானத் திட்டங்கள் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட உள்ளது. அதேவேளையில் நீர்மின் உற்பத்தி போன்ற செயல்பாடுகள் முறைப்படுத்தப்படும் என்றும் இந்த அறிவிப்பு வலியுறுத்துகிறது.</p><p>சூழலியல் ரீதியாக உணர்திறன் மிக்க பகுதியில் சேர்க்கப்பட வேண்டிய 'கிராமங்களின் சரியான பெயர்கள் மற்றும் பரப்ப ளவு மற்றும் மாநில அரசுகள் சமர்ப்பித்த பிற பரிந்துரைகள் ஆகியவை குறித்து நிபுணர் குழு தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த புதிய அறிவிப்பானது, ஆறு மாநிலங்களில் பரவியுள்ள சூழலியல் உணர்திறன் மிக்க பகுதியின் பரப்பளவை 56,825.7 சதுர கிலோ மீட்டராகவே தக்கவைத்து உள்ளது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/wvs5vhx5/Untitled-4.jpg" /></figure><h2>நாளைய தலைமுறை</h2><p>ஆறு மாநிலங்களில் பரவியுள்ள 56,825.7 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான முன்மொழியப்பட்ட சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியை இந்த அறிவிப்பு அப்படியே தக்கவைத்துள்ளது. இதில் மராட்டியம் மற்றும் கர்நாடகா மாநிலங்கள் இணைந்து 20,668 சதுர கிலோமீட்டர் பரப்பளவையும், கேரளா 9,993.7 சதுர கி.மீ, தமிழ்நாடு 6,914 சதுர கி.மீ, கோவா 1,461 சதுர கி.மீ மற்றும் குஜராத் 449 சதுர கி.மீ பரப்பளவையும் கொண்டுள்ளன.</p><p>கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மானந்தவாடி, சுல்தான்பத்தேரி மற்றும் வைதிரி ஆகிய வட்டங்களைச் சேர்ந்த 13 கிராமங்கள் முந்தைய வரைவில் இடம்பெற்றிருந்தன. அவை தற்போதைய அறிவிப்பிலும் தொடர்ந்து சேர்க்கப்பட்டு உள்ளன. மத்திய அரசின் வரைவு அறிக்கை குறித்து கோவை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறும்போது, மேற்கு தொடர்ச்சி மலைப்பகு தியை காக்க இந்த அறிக்கையின் மூலம் 6 மாநில அரசு களும் கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இல்லாவிட் டால் நாளைய தலைமுறைகள் இயற்கை சூழலை இழக்கும் அபாயம் ஏற்படும். எனவே மேற்கு தொடர்ச்சி மலை பகுதி பாதுகாக்கப்பட வேண்டிய மிகவும் அவசியம் என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மாறப்போகும் வானிலை.. சென்னையில் இன்று மாலை மழை பெய்ய வாய்ப்பு..!</title><link>https://www.dailythanthi.com/news/weather/changing-weather-chance-of-rain-in-chennai-this-evening</link><comments>https://www.dailythanthi.com/news/weather/changing-weather-chance-of-rain-in-chennai-this-evening#comments</comments><guid isPermaLink="false">bfb9cb92-00a1-4261-a315-355b6670cebc</guid><pubDate>Fri, 31 Jul 2026 04:37:42 +0000</pubDate><atom:updated>2026-07-31T04:37:42.495Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,Rain,Weather,வானிலை,தமிழகம்,WeatherUpdate,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,வானிலை ஆய்வு மையம்,வானிலை அறிக்கை,வானிலை தகவல்,Weather Report,தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்,வானிலை முன்னறிவிப்பு,Weather Status,weather conditions,weather center</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/obcjupog/maerer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/obcjupog/maerer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், 2 நாட்கள் <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a>க்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். </p><h2>காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகள்</h2><p>இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>இன்றும் (31.07.2026) நாளையும் (01.08.2026)  மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரவலான தென்மேற்குப் பருவமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக:</p><p><strong>-</strong> <ins>கேரளா</ins></p><p><strong>-</strong> <ins>கர்நாடகா (குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகள்)</ins></p><p><strong>-</strong> <ins>தமிழ்நாட்டின் மலைப்பகுதிகள்</ins> (<strong>வால்பாறை, நீலகிரி, தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்டவை</strong>).</p> <p><strong>இந்த மழை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள நீர் பற்றாக்குறையை சரிசெய்ய உதவுமா?</strong></p><p>இந்த <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> மிகவும் அவசியமானது. இது அணைகளுக்கு வரும் நீர்வரத்தை அதிகரிக்க உதவும் என்றாலும், ஒட்டுமொத்த நீர் பற்றாக்குறையை இது முழுமையாக சரிசெய்ய வாய்ப்பில்லை. ஏனெனில், மேற்குத் தொடர்ச்சி மலையின் பல நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பருவமழைப் பற்றாக்குறை இன்னும் கணிசமாகவே உள்ளது.</p><p>மேலும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், ஆகஸ்ட் மாதத்தின் எஞ்சிய நாட்களில் மழைப்பொழிவு குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்குப் பருவமழைக்குரிய பல நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இயல்பை விடக் குறைவான மழையே பெய்யக்கூடும். </p><h2>மேலும் மோசமாக்கும்</h2><p>பொதுவாக, தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் ஆகஸ்ட் மாதம் அதிக மழை பொழியும் மாதங்களில் ஒன்றாகும், மேலும் இது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள அணைகளுக்குக் கணிசமான நீர்வரத்தை அளிக்கிறது. ஜூன் மாதத்தில் பருவமழை பெருமளவில் ஏமாற்றம் அளித்த நிலையில், தென்மேற்குப் பருவமழைக்கு மிக முக்கியமான மாதமான ஆகஸ்டிலும் மழை குறைவாக இருப்பது, இப்பருவமழையின் நிலையை மேலும் மோசமாக்கும் ஒரு காரணியாக அமைகிறது.</p><p>சென்னை - வானிலை நிலவரம்</p><p>-----------------</p><p>ஈரப்பதம் அதிகரிப்பதாலும், வெப்பச்சலனம் சார்ந்த மேகங்கள் இப்பகுதியைக் கடந்து செல்வதாலும், இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் சென்னையில் வேகமான மழைப்பொழிவுக்கான நல்ல வாய்ப்புகள் உள்ளன.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பா.ஜ.க. பெண் கவுன்சிலர் விஷம் குடித்து தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bjp-woman-councilor-commits-suicide-by-consuming-poison</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bjp-woman-councilor-commits-suicide-by-consuming-poison#comments</comments><guid isPermaLink="false">e2a64285-6612-4261-929d-87a1c68680c9</guid><pubDate>Fri, 31 Jul 2026 04:35:33 +0000</pubDate><atom:updated>2026-07-31T04:35:33.536Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பா.ஜ.க.,Tenkasi,தென்காசி,விஷம் குடித்து தற்கொலை,Female,Councilor,நகராட்சி,municipality,பெண் கவுன்சிலர்,commits suicide by consuming poison</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/bxsfd0lf/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தற்கொலை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/bxsfd0lf/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF">தென்காசி</a> நகராட்சி 23-வது வார்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95">பா.ஜ.க.</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D">பெண் கவுன்சிலர்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">விஷம் குடித்து தற்கொலை</a> செய்து கொண்டார்.</p><h2>நகராட்சி பா.ஜ.க. பெண் கவுன்சிலர்</h2><p>தென்காசி பகுதியைச் சேர்ந்தவர் முத்து கோபாலகிருஷ்ணன். இவரும் சென்னையில் உள்ள அனாதை ஆசிரமத்தில் வளர்ந்ததாக கூறப்படும் சுனிதா (வயது 45) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சுனிதா தென்காசி நகராட்சி 23-வது வார்டு பா.ஜ.க. கவுன்சிலராக இருந்து வந்தார்.</p><h2>விஷம் குடித்து தற்கொலை</h2><p>கடந்த 2 நாட்களுக்கு முன் தென்காசியில் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்க்க சென்றபோது சுனிதாவுக்கும், அவரது மூத்த மகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சுனிதாவை, முத்துகோபாலகிருஷ்ணன் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் இருந்த சுனிதா நேற்று முன்தினம் தனது வீட்டின் மாடியில் வைத்து வயலுக்கு தெளிக்கும் களைக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணை விவகாரம்: முதல்-அமைச்சர் விஜய் இன்று முக்கிய ஆலோசனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mekedatu-dam-issue-chief-minister-vijay-to-hold-important-meeting-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mekedatu-dam-issue-chief-minister-vijay-to-hold-important-meeting-today#comments</comments><guid isPermaLink="false">29cd8921-b2d4-4fb7-9d5f-ab39b3e14b97</guid><pubDate>Fri, 31 Jul 2026 04:24:05 +0000</pubDate><atom:updated>2026-07-31T04:24:05.782Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,மேகதாது அணை,Mekedatu dam,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/lcn9668f/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/lcn9668f/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>காவிரி நீர்</h2><p>கர்நாடகம்-தமிழகம் இடையே காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக நீண்டகாலமாக பிரச்சினை நீடித்து வருகிறது. குறிப்பாக மழை பொய்த்து போகும் காலங்களில் இந்த பிரச்சினை தலை தூக்கி வருகிறது. நடப்பாண்டும் கர்நாடகத்தில் போதிய மழை பெய்யாததால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்குவதில் பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது.</p><h2>டி.கே.சிவக்குமாருடன் சந்திப்பு</h2><p>இதற்கிடையே காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டவும் கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என முதல்-அமைச்சர் விஜய் கருதுகிறார். எனவே அவர் காவிரி நதி நீர் விவகாரம், மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரை சந்தித்து பேச முடிவு செய்து கடிதம் அனுப்பியுள்ளார். </p><p>இதற்காக முதல்-அமைச்சர் விஜய் வருகிற 3-ந்தேதி (திங்கட்கிழமை) பெங்களூருவுக்கு செல்கிறார். பெங்களூரு விதானசவுதா (சட்டசபை வளாகத்தில்) மாநாட்டு அரங்கில் டி.கே.சிவக்குமார், விஜய்யை சந்தித்து பேச உள்ளார்.  இந்த பேச்சுவார்த்தைக்கு தமிழ்நாடு விவசாயிகளும், அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதுபோல் கர்நாடக விவசாயிகளும், கன்னட அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.</p><h2>விஜய் ஆலோசனை</h2><p>இதற்கிடையில், தமிழகத்துக்கு 15 நாட்கள் வினாடிக்கு 3,500 கன அடி வீதம் மொத்தம் 4½ டி.எம்.சி. தண்ணீரை காவிரியில் திறந்துவிட மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு தற்போது வரை செயல்படுத்தவில்லை.</p><p>இந்த நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார், தலைமைச் செயலாளர், துறைகளின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இந்த ஆலோசனையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>இன்று கடைசி நாள்: வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் எவ்வளவு அபராதம்?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/itr-filing-last-day-what-if-you-miss-the-july-31-deadline-today-know-the-penalty-and-consequences</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/itr-filing-last-day-what-if-you-miss-the-july-31-deadline-today-know-the-penalty-and-consequences#comments</comments><guid isPermaLink="false">21347045-e395-4b79-bd8f-c9d0bdd26d34</guid><pubDate>Fri, 31 Jul 2026 04:10:59 +0000</pubDate><atom:updated>2026-07-31T04:10:59.627Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Income Tax Department,மத்திய அரசு,Central Govt,Income Tax,New Income Tax,வருமானவரி,IncomeTax,Income Tax Check,வருமானவரி கணக்கு தாக்கல்,Income tax filing,income taxes,புதிய வருமானவரி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/vkrcenkm/fikli.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/vkrcenkm/fikli.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாத ஊதியதாரர்கள் உள்ளிட்டோர் <a href="https://www.dailythanthi.com/topic/income-tax">வருமான வரிக்கணக்கு தாக்கல்</a> செய்ய இன்று (ஜூலை 31) கடைசி நாள் ஆகும். தவறவிட்டால் டிச.31ம் தேதி வரை ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை அபராதம் செலுத்தி கணக்கு தாக்கல் செய்யலாம்.</p><h2>கிராஷ் ஆகாது</h2><p>தனிநபர்கள், வரி செலுத்தும் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் வரி தணிக்கை தேவைப்படாதோர் (ஐடிஆர் 1 அல்லது ஐடிஆர் 2) மதிப்பீட்டு ஆண்டு 2026-27-க்கான (நிதியாண்டு 2025-26) <a href="https://www.dailythanthi.com/topic/income-tax">வருமான வரி கணக்கை</a> இன்றிரவு 12 மணிக்குள் (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்ய வேண்டும்.</p><p>மத்திய அரசு இந்த தேதியை நீட்டிப்பதாக எந்த ஒரு பரிசீலனையும் இல்லை என அறிவித்து விட்டது. மேலும் கடைசி நேரத்தில் எத்தனை பேர் ஐடிஆர் இணையதளத்தை பயன்படுத்தினாலும் இணையதளம் கிராஷ் ஆகாது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.</p><h2>அபராதம் எவ்வளவு..?</h2><p>சுமார் 5 கோடிக்கும் அதிகமானவர்கள் இதுவரை கணக்கு தாக்கல் செய்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று கடைசி நாள் என்பதால் லட்சக்கணக்கான சம்பளதாரர்கள் ஒரே சமயத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>ஒருவேளை இன்று இரவு 12 மணிக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தவறுபவர்கள், தாமதமான வருமான வரி தாக்கல் (Belated Return) முறையை பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், இதற்கு அபராதம் விதிக்கப்படும். உங்களின் ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம். வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருந்தால் 1,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்.</p><h2>அக்டோபர் 31ம் தேதி கடைசி நாள்</h2><p>வணிகம் அல்லது தொழில் வருமானம் ஈட்டும் நபர்கள் மற்றும் தணிக்கை தேவையில்லாத நபர்கள் ஐடிஆர் 3 மற்றும் ஐடிஆர் 4 படிவங்களை தாக்கல் செய்ய வேண்டும். இவர்களுக்கு ஆகஸ்ட் 31ம் தேதி கடைசி நாள் ஆகும். அதே போல கணக்கு தணிக்கை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள வணிகம் அல்லது தொழில் செய்பவர்களுக்கு அக்டோபர் 31ம் தேதி கடைசி நாள் ஆகும்.</p><h2>இரண்டு வழிமுறை</h2><p>பழைய வரி கணக்கு நடைமுறை, புதிய வரி கணக்கு நடைமுறை என இரண்டு வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து வருமான வரியை தாக்கல் செய்யலாம். புதிய வரி கணக்கு நடைமுறையில் பல்வேறு வரி சலுகைகள் கிடைக்காது என்றாலும் இதில் வருமான வரி உச்சவரம்பு அதிகம், ஆனால் பழைய வரி முறையில் பல்வேறு முதலீடுகளை குறிப்பிட்டு வரி சேமிப்பு செய்யலாம். உங்களுக்கு எது பொருத்தமானதோ அதனை பயன்படுத்தி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். </p><p>வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் இறுதியில் e- verification கண்டிப்பாக செய்ய வேண்டும். அப்போதுதான் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்பட்டது உறுதி செய்யப்படும்.</p> ]]></content:encoded></item><item><title>தேனியில் 400 ஆண்டுகள் பழமையான் 4 நடுகற்கள் கண்டுபிடிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/400-year-old-center-stones-discovered-in-theni</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/400-year-old-center-stones-discovered-in-theni#comments</comments><guid isPermaLink="false">668eba76-3800-4d3b-9aa5-6d7271411212</guid><pubDate>Fri, 31 Jul 2026 03:50:14 +0000</pubDate><atom:updated>2026-07-31T03:50:14.760Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Theni,தேனி,கண்டுபிடிப்பு,discovered,Stones,நடுகற்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/wktfdn3e/92.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/wktfdn3e/92.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி, </p><p>சின்னமனூர் அருகே வேப்பம்பட்டியில் அரிய துப்பாக்கி வீரன் உள்பட 4 நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.</p><h2>நடுகற்கள்</h2><p>சின்னமனூர் அருகே வேப்பம்பட்டி பகுதியில், தொல்லியல் ஆய்வாளரும், கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியருமான செல்வம், பழமையான நடுகற்கள் தொடர்பாக கள ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதியில் 4 அரிய நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் செல்வம் கூறியதாவது:-</p><p>வேப்பம்பட்டியை சேர்ந்த ஆசிரியர் ராமமூர்த்தி அளித்த தகவலின் அடிப்படையில் இந்த கள ஆய்வு நடத்தப்பட்டது. வேப்பம்பட்டி சீப்பாலக்கோட்டைச் சாலையில் 500 மீட்டர் இடைவெளியில் 2 வெவ்வேறு இடங்களில் இந்த வரலாற்றுச் சின்னங்கள் அமையப்பெற்றுள்ளன. ஸ்ரீரெங்கன் குளக்கரையில், முதன்மைப் படைத்தலைவன் சிற்பம் உள்ளது. 3 அடி உயரமுள்ள அது கி.பி. 16-ம் நூற்றாண்டை சேர்ந்தது. அதில், வீரன் தனது வலது கையில் நீண்ட வாளையும், இடது தோளில் இருந்து தொங்கும் வில்லை இடது கையாலும் ஒருசேரப் பற்றியது போல் இது உள்ளது.</p><h2>துப்பாக்கி வீரன்</h2><p>நடராஜ் என்பவருடைய வீட்டின் அருகில் 6 அடி ஆழத்தில் புதைந்திருந்து கண்கெடுக்கப்பட்ட மற்றொரு சிற்பம் 2 அடி உயரம் கொண்டது. அது 16, 17-ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு வாள் வீரனின் நடுகல். வலது கையில் ஓங்கிய வாளுடனும், இடது தோளில் தொங்கும் வில்லுடனும், மற்றொரு கையை இடுப்பில் ஊன்றியவாறும் போர்க்கோலத்தில் அமைந்துள்ளது. அதே பகுதியில், அரிய திணிப்பு துப்பாக்கி வீரனின் நடுகல் கண்டறியப்பட்டது. அது 17 அல்லது 18-ம் நூற்றாண்டை சேர்ந்தது. 2 அடி உயரமுள்ள அந்த நடுகல்லில், வீரன் தனது இடது கையில் நீண்ட திணிப்புத் துப்பாக்கியை தலைகீழாகத் தரையில் ஊன்றிப் பிடித்துள்ளான். வலது கையில் கூரிய உடைவாள் கீழ்நோக்கிப் பாயும் நிலையில் உள்ளது. தமிழகத் தொல்லியலில் துப்பாக்கி ஏந்திய வீரர்களின் நடுகற்கள் மிக அரிது என்பதால், இது ஆயுதப் பரிணாமத்தின் முதன்மைச் சான்றாகக் கருதப்படுகிறது. இந்த இரு நடுகற்களையும் உள்ளூர் மக்கள் 'கோட்டை கருப்பன்', 'கொத்தால முத்து' ஆகிய சிறுதெய்வப் பெயர்களில் வழிபாட்டில் வைத்துள்ளனர். அதே பகுதியில் கிடைமட்ட நடுகற்பலகை ஒன்றும் உள்ளது.</p><h2>வரலாற்று உண்மைகள்</h2><p>இந்த நடுகற்கள் தென் தமிழகத்தின் 400 ஆண்டுகால ராணுவ மற்றும் சமூக வரலாற்றை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளன. 500 மீட்டர் இடைவெளியில் இவை பரவியிருப்பதால், இங்கு ஒரு பிரம்மாண்டமான பாளையக் கோட்டை அரணும் காவற்சாவடியும் இருந்திருக்க வேண்டும். இப்பகுதியில் தொல்லியல் துறை முறையான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">அகழாய்வு</a> மற்றும் பாதுகாக்கப்பட்ட வரலாற்று மண்டலம் சார்ந்த களஆய்வுகளை மேற்கொண்டால் மேலும் பல வரலாற்று உண்மைகள் வெளிவர வாய்ப்புள்ளன.</p>]]></content:encoded></item><item><title>மக்கள் பணம் எங்கே? - பிரதமர் மோடியிடம் மாணிக்கம் தாகூர் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/where-is-the-peoples-money-manickam-thakur-asks-prime-minister-modi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/where-is-the-peoples-money-manickam-thakur-asks-prime-minister-modi#comments</comments><guid isPermaLink="false">99315dc2-5667-416c-bb2f-2a607778b2fc</guid><pubDate>Fri, 31 Jul 2026 03:30:06 +0000</pubDate><atom:updated>2026-07-31T03:30:06.821Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,பிரதமர் மோடி,PM Modi,காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,பிரதமர்,பிரதமர் நரேந்திர மோடி,Manickam Tagore MP,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Narendra Modi ‏,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/fz8fkh5n/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/fz8fkh5n/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>பணம் எங்கே?</h2><p>மக்கள் பணம் எங்கே பிரதமர் நரேந்திர மோடியே? ZERO ACCOUNTABILITY </p><p>பொதுமக்களின் வியர்வைச் சிந்திய பணமும், அரசு ஊழியர்களின் சம்பளப் பங்களிப்பும் இணைந்து உருவாக்கப்பட்டது தான் இந்த PMCARES நிதி! </p><p>2022-23 ஆம் நிதியாண்டில் மட்டும் ரூ.909.64 கோடி நன்கொடை உட்பட ரூ.6,723.07 கோடி வரவு வந்த நிலையில், அதில் வெறும் ரூ.439.38 கோடி மட்டுமே செலவழிக்கப்பட்டு, மீதம் ரூ.6,283.68 கோடி கையிருப்பில் உள்ளது.</p><h2>வெளியிடப்படாதது ஏன்?</h2><p>1. 2022-23க்கு பின் ஆடிட் ஸ்டேட்மெண்ட்ஸ் வெளியிடப்படாதது ஏன்?</p><p>2. அமைச்சர்கள் இருக்கும் அமைப்பிற்கு ஆர்.டி.ஐ. (RTI) பொருந்தாது எனக் கூறித் தப்பிப்பது ஏன்?</p><p>மத்திய அமைச்சர்களே இதன் அறங்காவலர்களாக பொறுப்பில் இருக்கும் போது, சட்டப்படி பொது ஊழியர்களான அவர்கள் மக்களுக்குப் பதில் சொல்லியே தீர வேண்டும்! எனவே, PM CARES நிதி நிச்சயம் ஆர்.டி.ஐ. <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வரம்பிற்குள் </a>(Ambit of RTI Act) தான் வருகிறது. </p><p>மக்கள் பணத்தின் கணக்கை மறைக்காமல் உடனடியாக வெளியிட வேண்டும்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆடிப்பெருக்கு அன்று பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதிக்கு செல்ல தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/entry-to-bhavanisagar-dam-reservoir-area-prohibited-on-aadi-perukku</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/entry-to-bhavanisagar-dam-reservoir-area-prohibited-on-aadi-perukku#comments</comments><guid isPermaLink="false">7ba7ff0c-b96b-479e-97a0-25eca359a4bd</guid><pubDate>Fri, 31 Jul 2026 03:14:02 +0000</pubDate><atom:updated>2026-07-31T03:14:02.590Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Bhavanisagar Dam,பவானிசாகர் அணை,ஆடிப்பெருக்கு,aadi perukku,Prohibited,செல்ல தடை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/lgqdsu8k/bavani-dam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/lgqdsu8k/bavani-dam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தளமாக பவானிசாகர் அணை மற்றும் பூங்கா உள்ளது. இதில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">பவானிசாகர் அணை</a>யின் மேல்பகுதிக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆடி 18-ந்தேதி அதாவது ஆடிப்பெருக்கு தினத்தில் மட்டும் பொதுமக்கள் அணையின் நீர்த்தேக்க பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆடிப்பெருக்கு அன்றும் பொதுமக்கள் அணையின் நீர்த்தேக்க பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. </p><h2>சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்</h2><p>இதனால் இந்த ஆண்டு ஆடிப்பெருக்குக்கு அணையின் மேல் பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்படும் என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் இந்த ஆண்டும் அணையின் மேல் பகுதிக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அணையின் பூங்காவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாட ஊஞ்சல், படகுசவாரி உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. எனவே ஆடிப்பெருக்கை முன்னிட்டு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அணையின் முன்பு உள்ள பூங்காவில் பண்டிகையை கொண்டாடலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>அரசு பஸ்களில் பார்சல் வசதி.. நஷ்டத்தை போக்க புதிய முடிவு..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/parcel-service-in-government-buses-a-new-decision-to-overcome-losses</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/parcel-service-in-government-buses-a-new-decision-to-overcome-losses#comments</comments><guid isPermaLink="false">21f2786e-4afd-460e-a9af-0ed065532800</guid><pubDate>Fri, 31 Jul 2026 03:04:01 +0000</pubDate><atom:updated>2026-07-31T03:04:01.566Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,அரசு பஸ்,Tamil Nadu Government,TN govt,தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்,Govt Buses,Parcel Service,பார்சல் வசதி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/iu16slfb/buyse.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/iu16slfb/buyse.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/tamil-nadu-government">தமிழ்நாடு அரசு</a> போக்குவரத்து கழகங்களில் பார்சல் அனுப்பும் வசதி விரைவில் ஏற்படுத்தப்பட உள்ளது.</p><h2>வருவாயை பெருக்க புதிய திட்டம்</h2><p>அரசு போக்குவரத்து கழகங்களின் வருவாயை பெருக்க, தமிழ்நாடு அரசு புதிய திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதற்காக, பார்சல்கள் ஏற்றிச் செல்லும் வசதியுடன் புதிய பஸ்கள் தயாரிக்கப்படுகின்றன. அதுபோன்ற பஸ்சை போக்குவரத்துதுறை அமைச்சர் பார்த்திபன் ஆய்வு செய்தார்.</p><h2>வணிக வளாகம்</h2><p>இது குறித்து, அரசு போக்குவரத்துகழக அதிகாரிகள் கூறுகையில், “கட்டண உயர்வு இன்றி இதர வழிகளில் வருவாயை பெருக்க புதிய திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள காலி இடங்களை தனியாருக்கு நீண்ட நாட்களுக்கு குத்தகைக்கு விடுவது, சூரியசக்தி மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்துவது, பஸ் நிலையங்களில் வணிக வளாகம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.</p><h2>'பார்சல்' புக்கிங்</h2><p>உடனடியாக செயல்படுத்தும் வகையில் வெளியூர் செல்லும் அரசு விரைவு பஸ்களில் பார்சல் எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை தொடங்க முடிவு செய்துள்ளோம். பயணிகள் தங்களது பயணத்தின்போது, கையில் எடுத்து செல்ல முடியாத பெரிய பொருட்கள், லக்கேஜ்களை, 'பார்சல்' என புக்கிங் செய்து அதற்கான கட்டணம் செலுத்தி எடுத்து செல்லலாம்.</p><p>இதற்காக, புதிய பஸ் பின்பகுதியில், பிரத்யேக இடம் ஒதுக்கீடு செய்யப்படும்.  நியாயமான முறையில் கட்டணம் இருக்கும். முதல் கட்டமாக, சென்னை உட்பட முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் ஆயிரம் அரசு விரைவு பஸ்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டு உள்ளோம்” என்று அவர்கள் கூறினர். </p>]]></content:encoded></item><item><title>சிவகங்கை: வீடு புகுந்து பிரபல ரவுடி வெட்டிக்கொலை- காரில் வந்த கும்பல் வெறிச்செயல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sivagangai-famous-rowdy-hacked-to-death-after-breaking-into-house-gang-in-car-commits-brutal-act</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sivagangai-famous-rowdy-hacked-to-death-after-breaking-into-house-gang-in-car-commits-brutal-act#comments</comments><guid isPermaLink="false">37fdb821-c464-42d1-af06-d28b3c6b13e7</guid><pubDate>Fri, 31 Jul 2026 02:53:23 +0000</pubDate><atom:updated>2026-07-31T02:53:23.400Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Car,கார்,கும்பல்,சிவகங்கை,Sivagangai,Rowdy murder,வெறிச்செயல்,Gang,வீடு புகுந்து,Enter the house,பிரபல ரவுடி வெட்டிக்கொலை,madness</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/2358yswp/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஊர்க்காவலன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/2358yswp/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">சிவகங்கை</a> மாவட்டத்தில் 30 வழக்குகளில் தொடர்புடைய பிரபல <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">ரவுடி</a>யை காரில் வந்த கும்பல் வீடு புகுந்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">வெட்டிக்கொலை</a> செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. </p><h2>ஜாமீனில் வந்த ரவுடி</h2><p>சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே உள்ள மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஊர்க்காவலன் (வயது 31). பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது 3 கொலை வழக்குகள், 2 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. ஊர்க்காவலனை வழக்கு ஒன்றில் கைது செய்ய கடந்த மார்ச் மாதம் திருப்பாச்சேத்தி போலீசார் தேடிச்சென்றனர்.  அப்போது அவர் போலீசாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்றார். இதையடுத்து அவரை துப்பாக்கியால் காலில் சுட்டுப் பிடித்தனர். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஊர்க்காவலன், சிறையில் அடைக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.</p><h2>வீடு புகுந்து வெட்டிக்கொலை</h2><p>இந்த நிலையில் நேற்று காலை ஊர்க்காவலன் தனது வீட்டையொட்டி உள்ள ஒரு கடையில் அமர்ந்து இருந்தார். அப்போது ஒரு காரில் வந்து இறங்கிய 5 பேர் திடீரென ஊர்க்காவலனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். அவர்களிடம் இருந்து காயங்களுடன் ஊர்க்காவலன் தப்பி தனது வீட்டுக்குள் ஓடினார். இருப்பினும் அந்த கும்பல் பின்தொடர்ந்து சென்று வீட்டுக்குள் புகுந்து ஊர்க்காவலனை கொடூரமாக வெட்டிக்கொன்றது. மேலும் ஊர்க்காவலனின் முகத்தை முழுமையாக சிதைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது.</p><p>இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஊர்க்காவலனை வெட்டிக்கொன்ற கும்பலை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் சிவகங்கையில் அம்பேத்கர் சிலை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>திராவிடர் கழகத்தின் பரப்புரைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் - திருமாவளவன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-should-allow-dravidar-kazhagams-campaign-thirumavalavan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-should-allow-dravidar-kazhagams-campaign-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">1ee7de3f-9d4c-4f46-87be-f381851ec19b</guid><pubDate>Fri, 31 Jul 2026 02:42:23 +0000</pubDate><atom:updated>2026-07-31T02:42:23.221Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமாவளவன்,Thirumavalavan,Dravidar Kazhagam,திராவிடர் கழகம்,பரப்புரை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/bxz5un3c/thiruma.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/bxz5un3c/thiruma.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D">திருமாவளவன் </a>தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>‘நீட்’ தேர்வையும், முன்னேறிய சமூகத்தினருக்கான (EWS) இட ஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டுமென 30-07-2026 முதல் 02-08-2026 வரை மத்திய அரசை வலியுறுத்தி, திராவிடர் கழகத்தின்  இளைஞரணி,  மாணவர் அணி, மற்றும் மகளிர் பாசறை ஆகியவற்றின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இரு சக்கர வாகன பரப்புரைப் பயணம் மேற்கொள்ள அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தனர். </p><h2>அனுமதி</h2><p>உரிய முறைப்படி முன்கூட்டியே விண்ணப்பித்திருந்தும் அதற்கு காவல்துறை அனுமதி மறுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமையைப் பறிக்கும் சனநாயக விரோத நடவடிக்கை ஆகும். 'நீட்' தேர்வு வேண்டாமென்பதுதான் தவெக அரசின் கொள்கை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு வலு சேர்க்கக்கூடிய திராவிடர் கழகத்தின் பரப்புரைக்கு அனுமதி மறுப்பது வியப்பளிக்கிறது. திராவிடர் கழகத்தின் இந்தப் பரப்புரைக்கு அனுமதி வழங்குமாறு தமிழ்நாடு முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன். </p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>புதிதாக  93 ஊராட்சிகள், 9 ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/93-new-panchayats-and-9-panchayat-unions-formed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/93-new-panchayats-and-9-panchayat-unions-formed#comments</comments><guid isPermaLink="false">4870452f-115c-4ddc-8e6d-557a88d9dea1</guid><pubDate>Fri, 31 Jul 2026 02:32:01 +0000</pubDate><atom:updated>2026-07-31T02:32:01.828Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,panchayat,ஊராட்சிகள்,TamilNadu Goverment,Panchayat Office,ஊராட்சி ஒன்றியம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/scc1gavp/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/scc1gavp/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழகத்தில் புதிதாக ஒன்பது ஊராட்சி ஒன்றியங்கள், 93 ஊராட்சிகள் உருவாக்கப்பட்டு உள்ளன.</p><p>மக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, நிர்வாக வசதிக்காக, புதிய ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. கடந்த தி.மு.க., ஆட்சியில், புதிய ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க, ஊரக வளர்ச்சித் துறை சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.</p><h2>93 ஊராட்சிகள்</h2><p>இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, புதிதாக ஒன்பது ஊராட்சி ஒன்றியங்கள், 93 ஊராட்சிகளை உருவாக்கி உள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் செயலர் பிரசாந்த் வடநேரே, இதற்கான அரசாணையை வெளியிட்டு உள்ளார்.</p><p>அதன்படி, நீலகிரி மாவட்டத்தில், குந்தா, பண்டலுார்; திருவள்ளூரில் மாதர்பாக்கம்; காஞ்சிபுரத்தில் சாலவாக்கம்; விழுப்புரத்தில் கிளியனுார், கஞ்சனுார்; திருவண்ணாமலையில் மழையூர்; கிருஷ்ணகிரியில் அஞ்செட்டி; கள்ளக்குறிச்சியில் வானபுரம் ஆகிய, ஒன்பது ஊராட்சி ஒன்றியங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.</p><h2>சிறப்பு அதிகாரிகள் நியமனம்</h2><p>இப்புதிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு, மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால், நிர்வாக பணிகளை மேற்கொள்ள துணை இயக்குநர் அந்தஸ்தில், சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.</p><p>அதேபோல், நீலகிரி மாவட்டத்தில் 61; ஈரோட்டில் 9; கோவையில் 7; கள்ளக்குறிச்சி, திருச்சியில் தலா 4; திண்டுக்கல், வேலுாரில் தலா 2; தென்காசி, தர்மபுரி, சிவகங்கை, கரூர் ஆகிய <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மாவட்டங்களில்</a>, தலா ஒரு ஊராட்சி என, புதிதாக 93 ஊராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>ஆடிப்பெருக்கு: பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aadi-perukku-additional-tokens-allocated-for-document-registration</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aadi-perukku-additional-tokens-allocated-for-document-registration#comments</comments><guid isPermaLink="false">282394a7-1820-4b4c-acb7-25a077d9ad65</guid><pubDate>Fri, 31 Jul 2026 02:23:43 +0000</pubDate><atom:updated>2026-07-31T02:23:43.576Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,தமிழ்நாடு அரசு,பத்திரப்பதிவு,பத்திரப்பதிவுத்துறை,ஆடிப்பெருக்கு,Aadiperukku,பத்திரப்பதிவு அலுவலகம்,Additional Tokens,Document Registration</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/w5sb1myf/token.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/w5sb1myf/token.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுபமுகூர்த்த மற்றும் விசேஷ தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.</p> <h2>ஆடிப்பெருக்கு</h2><p>இந்நிலையில் ஆடிப்பெருக்கை ஒட்டி, வரும் 3ம் தேதி, அனைத்து சார்-பதிவாளர் அலுவலகங்களில், கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று பதிவுத்துறை அறிவித்துள்ளது.</p><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>ஆடிப்பெருக்கு தினத்தன்று, <a href="https://www.dailythanthi.com/topic/பத்திரப்பதிவு">பத்திரப் பதிவு</a>களுக்கான தேவை அதிகரிக்கும் நிலையில், பொதுமக்களுக்கான, 'டோக்கன் ' எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><h2>கூடுதல் டோக்கன்கள்</h2><p>அதன்படி, ஒரு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களில், 100க்கு பதிலாக, 150 பத்திரங்கள் பதிவு செய்யும் வகையில் டோக்கன்களும், இரண்டு சார் பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில், 200க்கு பதில் 300 டோக்கன்களும் வழங்கப்படும்.</p><p>மேலும், அதிகளவில் ஆவண பதிவுகள் நடக்கும் 100 அலுவலகங்களில், 150 டோக்கன்களும், ஏற்கனவே வழங்கப்படும், 12 தத்கால் பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக நான்கு டோக்கன்களும் வழங்கப்படும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மும்பை பிரபல தாதா சோட்டா ராஜனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை: சென்னை சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mumbais-famous-dada-chhota-rajan-sentenced-to-7-years-in-prison-chennai-cbi-court-verdict</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mumbais-famous-dada-chhota-rajan-sentenced-to-7-years-in-prison-chennai-cbi-court-verdict#comments</comments><guid isPermaLink="false">42ce36ad-e45a-45e3-a78e-9c16e4f06c28</guid><pubDate>Fri, 31 Jul 2026 02:13:20 +0000</pubDate><atom:updated>2026-07-31T02:13:20.108Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மும்பை,Mumbai,சிறை தண்டனை,Prison sentence,சோட்டா ராஜன்,Chhota Rajan,CBI Court,போலி பாஸ்போர்ட் வழக்கு,Fake passport case,சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/62xy8m14/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மும்பை பிரபல தாதா சோட்டா ராஜன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/62xy8m14/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>போலி பாஸ்போர்ட் வழக்கில் மும்பை பிரபல தாதா <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D">சோட்டா ராஜனுக்கு</a> 7 ஆண்டுகள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">சிறை தண்டனை</a> விதித்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை </a><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">சி.பி.ஐ. கோர்ட்டு</a> தீர்ப்பளித்துள்ளது. </p><h2>பிரபல தாதா சோட்டா ராஜன் கைது</h2><p>பிரபல தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளியான மும்பையைச் சேர்ந்த சோட்டா ராஜன் மீது 50-க்கும் மேற்பட்ட கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. போலீஸ் பிடியில் 27 ஆண்டுகளாக சிக்காமல் இருந்த சோட்டா ராஜன், கடந்த 2015-ம் ஆண்டு இந்தோனேஷியாவின் பாலி தீவில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.</p><h2>போலி பாஸ்போர்ட் வழக்கு</h2><p>இந்த நிலையில், மத்திய மும்பை காம்தேவி பகுதியில் 'கோல்டன் கிரவுன்' ஓட்டல் உரிமையாளர் ஜெயா ஷெட்டியை கொலை செய்த வழக்கு, பத்திரிகையாளர் ஜே.டே கொலை வழக்கு ஆகியவற்றில் சோட்டா ராஜனுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.</p><p>கடந்த 2002-ம் ஆண்டு, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில், ஆள்மாறாட்டம் செய்து போலியான ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்றதாக சோட்டா ராஜன் மீது சென்னை சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.</p><h2>7 ஆண்டு சிறை தண்டனை</h2><p>இந்த வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் கோர்ட்டில் உள்ள பெருநகர கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நீதிபதி சிவசக்தி, சோட்டா ராஜனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.55 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜராகவில்லை: செந்தில்பாலாஜி தலைமறைவு?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/failed-to-appear-at-the-triplicane-police-station-has-senthil-balaji-gone-into-hiding</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/failed-to-appear-at-the-triplicane-police-station-has-senthil-balaji-gone-into-hiding#comments</comments><guid isPermaLink="false">2f900b86-3079-4b2c-a67e-82c4e0d5de68</guid><pubDate>Fri, 31 Jul 2026 01:57:46 +0000</pubDate><atom:updated>2026-07-31T01:57:46.140Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Delhi,Tamilnadu,திமுக,DMK,Supreme Court,சுப்ரீம்கோர்ட்டு,தமிழகம்,சென்னை ஐகோர்ட்டு,தலைமறைவு,former minister,முன்னாள் அமைச்சர்,புதுடெல்லி,Chennai High Court,முன் ஜாமீன்,Senthil Balaji,செந்தில் பாலாஜி,bail plea</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/cf36u07l/sehtin.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ செந்தில்பாலாஜி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/cf36u07l/sehtin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழக ஊழல் தடுப்பு- கண்காணிப்புத்துறை விரைவில் கைது செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.</p><h2>செந்தில் பாலாஜி</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/senthilbalaji">தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி</a> அடுக்கடுக்கான வழக்குகளை சந்தித்து வருகிறார். அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி, டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு, டிரான்ஸ்பார்மர்கள் வாங்கியதில் ரூ.397 கோடி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.</p><p>த.வெ.க. அரசை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியது தொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி சகோதரர் அசோக்குமாரும் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட்டு வருகின்றனர்.</p><h2>டாஸ்மாக் முறைகேடு</h2><p>இந்த நிலையில், பரபரப்பாக பேசப்படும் இந்த வழக்கு ஒருபுறம் இருக்க, இன்னொரு புறம் டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, செந்தில்பாலாஜி மீது புதிய வழக்கு ஒன்றை லஞ்சஒழிப்பு போலீசார் பதிவு செய்தனர்.</p><p>இந்த வழக்கில் டாஸ்மாக் நிறுவனத்தின் முன்னாள் மேலாண்மை இயக்குனரான ஐ.ஏ.எஸ். அதிகாரி விசாகன் உள்ளிட்ட 7 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். லஞ்சஒழிப்பு சட்டப்பிரிவு உள்பட 9 சட்டப்பிரிவுகளில் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2021 முதல் 2025-ம் ஆண்டு வரை முறைகேடு நடந்துள்ளதாகவும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.</p><h2>முன்ஜாமீன்</h2><p>இந்த சூழலில் டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வக்கீல், முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகளில் எந்தவிதமான ஆதரமும் இல்லை; பொத்தம் பொதுவாக செந்தில்பாலாஜி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டாஸ்மாக் நிர்வாகிகள் செய்த குற்றத்திற்காக செந்தில் பாலாஜி மீது குற்றம் சாட்டுவது சரியல்ல என வாதிட்டார்.</p><p>இதனையடுத்து காவல் துறை தரப்பில் ஆஜரான வக்கீல், "100 கோடி முறைகேடு புகாரின் புலன் விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளதால் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கினால் விசாரணை முற்றிலுமாக பாதிக்கப்படும்; வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டிய இருப்பதால் அவருக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது" என வாதிட்டார்.</p><h2>விரைவில் கைது?</h2><p>இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஜி.கே. இளந்திரையன், "டாஸ்மாக் முறைகேடு நடந்ததற்கும், அரசுக்கு இழப்பு ஏற்பட்டதற்கும் ஆதாரங்கள் உள்ளன. குற்றம்சாட்டப்பட்டவர் அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்கான முகாந்திரம் இருக்கிறது. எனவே செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அவசியம் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்வதாக நீதிபதி தெரிவித்து செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.</p><p>முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜியை தமிழக ஊழல் தடுப்பு- கண்காணிப்புத்துறை விரைவில் கைது செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.</p><h2>செந்தில்பாலாஜி தலைமறைவு?</h2><p>இதனிடையே 'குதிரைபேர' வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள செந்தில் பாலாஜியும், அவரது சகோதரர் அசோக்குமாரும் சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் தினமும் காலையும், மாலையும் நேரில் ஆஜராக வேண்டும்.</p><p>ஆனால் நேற்று செந்தில்பாலாஜி ஆஜராகவில்லை. அசோக்குமார் மட்டும் ஆஜரானார். காலையில் ஆஜரானபோது நிருபர்கள் செந் தில்பாலாஜி பற்றி அவரிடம் கேட்டபோது, 'அவருக்கு உடல்நிலை சரியில்லை. ஆஸ்பத்திரிக்கு போயிருக்கிறார்' என்று தெரிவித்தார். அதே சமயம் மாலையில், ஆஜராக வந்த அவரிடம், செந்தில்பாலாஜி பற்றி நிருபர்கள் கேட்டபோது, 'அவரை பற்றி எனக்கு தெரியவில்லை' என்று பதில் அளித்துவிட்டு போனார்.</p><p>எனவே செந்தில்பாலாஜி தலைமறைவாகிவிட்டாரா? அல்லது ஏதாவது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறாரா? என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. சுப்ரீம் கோர்ட்டில் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு, இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது. நீதிபதியின் உத்தரவை பொறுத்தே போலீசாரின் அடுத்தக்கட்ட நகர்வு இருக்கும்.</p><p>அதே நேரத்தில் முன்ஜாமீன் நிபந்தனைப்படி, செந்தில்பாலாஜி திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜராகாமல் இருப்பதால், அவரது முன்ஜாமீனை ரத்து செய்ய சென்னை ஐகோர்ட்டில், திருவல்லிக்கேணி போலீசார் மனுதாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லஞ்சஒழிப்பு போலீசாரும், சுப்ரீம் கோர்ட்டின் முடிவை எதிர்பார்த்துள்ளனர்.</p> <h2>சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு - இன்று விசாரணை</h2><p>ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து முன்ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி சார்பில் வக்கீல் மிஷா ரோத்தகி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விரைந்து விசாரிக்க கோரி மூத்த வக்கீல் கபில்சிபல், தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன் நேற்று முறையிட்டார். </p><p>முறையீட்டை பரிசீலித்த தலைமை நீதிபதி, மேல்முறையீட்டு மனு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். இந்தநிலையில், முன்ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனுவை விசாரிக்கும்போது தங்களது தரப்பு கருத்தையும் கேட்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை விட மாணவர் சேர்க்கை அதிகரிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-enrollment-in-government-schools-increases-compared-to-last-year</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-enrollment-in-government-schools-increases-compared-to-last-year#comments</comments><guid isPermaLink="false">b16ffabf-32e8-4228-be07-20561a011eb6</guid><pubDate>Fri, 31 Jul 2026 01:55:08 +0000</pubDate><atom:updated>2026-07-31T01:55:08.394Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அதிகரிப்பு,பள்ளிகள்,அரசு,Government School,Increased,Student Admission மாணவர் சேர்க்கை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/0qzpd1ne/students.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/0qzpd1ne/students.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>அரசு தொடக்கப் பள்ளிகளில், கடந்த ஆண்டை காட்டிலும், நடப்பாண்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">மாணவர் சேர்க்கை </a>சற்று அதிகரித்துள்ளது.தமிழக பள்ளி கல்வித் துறையின் கீழ், 37,863 அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. அதில், 31,936 தொடக்கப் பள்ளிகள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை, கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கியது. நடப்பு கல்வியாண்டில், 5 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.</p><h2>மாணவர் சேர்க்கை அதிகரிப்பு</h2><p>இந்நிலையில், அரசு தொடக்கப் பள்ளிகளில், கடந்த 28-ம் தேதி நிலவரப்படி, 4 லட்சத்து, 23,955 மாணவ, மாணவியர் புதிதாக சேர்ந்துள்ளனர். ஒன்றாம் வகுப்பில், 2 லட்சத்து 94,209 மழலையர் வகுப்பில் 41,231 பேர், இரண்டாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, 88,518 பேர் சேர்ந்துள்ளனர். கடந்த கல்வி ஆண்டில், 4.13 லட்சம் பேர் மட்டுமே சேர்ந்திருந்த நிலையில், இந்த கல்வியாண்டில் சேர்க்கை அதிகரித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான்... - மு.க.ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/electricity-supply-has-been-disrupted-since-the-formation-of-the-tvk-government-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/electricity-supply-has-been-disrupted-since-the-formation-of-the-tvk-government-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">6074e2df-1000-4e96-83c7-09194c4dbef2</guid><pubDate>Fri, 31 Jul 2026 01:46:59 +0000</pubDate><atom:updated>2026-07-31T01:46:59.704Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,மின் கட்டணம்,electricity bill,electricity consumer,மின்வெட்டு,மின்வெட்டு பிரச்சினை,M.K. Stalin,TVK Government</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/qprgeeq8/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/qprgeeq8/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>த.வெ.க. ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- </p><h2>மின்கட்டணத்தில் பிரச்சினை</h2><p>முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை. 3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாகப் புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. </p><p>சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குமுறலைப் பார்க்கும்போது, மொத்தம் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு இருக்கக் கூடும் என்பது உறுதியாகிறது.</p><h2>அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும்</h2><p>இந்தக் குளறுபடிகள் ஆய்வு செய்யப்பட்டுத் தீர்வு காணப்படும் வரை, மின்கட்டணம் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">செலுத்துவதற்கான </a>கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும்.</p><p>இனி வரும் காலங்களில், மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் reading சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்திட வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய் பாதுகாப்பு பணி; சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 11 காவலர்கள் மயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijays-security-duty-11-policemen-fainted-after-eating-chicken-biryani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijays-security-duty-11-policemen-fainted-after-eating-chicken-biryani#comments</comments><guid isPermaLink="false">200e7cb1-1afa-4c52-9147-5995c526ebc8</guid><pubDate>Fri, 31 Jul 2026 01:40:59 +0000</pubDate><atom:updated>2026-07-31T01:40:59.507Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மயக்கம்,காவலர்கள்,policemen,Chicken Biryani,சிக்கன் பிரியாணி,fainted</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/jt2n51fm/91.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/jt2n51fm/91.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>கிழக்கு கடற்கரை சாலையில், முதல்-அமைச்சர்  விஜய் செல்லும் வழியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 11 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால், அப்பகுதி பரபரப்பானது. முதல்-அமைச்சர் விஜய் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில், பாதுகாப்பு பணிக்காக, 53 போலீசார் நேற்று, பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுக்கு, மதிய உணவாக பட்டாலியன் கம்பெனி உணவகத்திலிருந்து, சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.</p><h2>வாந்தி, மயக்கம்</h2><p>அதை சாப்பிட்ட நிலையில், 11 போலீஸ் காரர்களுக்கு திடீரென தலைச்சுற்றல், <a href="https://www.dailythanthi.com/topic/vomiting-dizziness">வாந்தி, மயக்கம்</a> ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, திருவான்மியூர் மாநகராட்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து, அனைவரும் சகஜ நிலைக்கு திரும்பினர். முதற்கட்ட விசாரணையில் அந்த உணவில் பல்லி விழுந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>இந்திய கோர்ட்டுகளில் 5.64 கோடி வழக்குகள் தேக்கம்: 9-வது இடத்தில் தமிழகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/564-crore-cases-pending-in-indian-courts-tamil-nadu-ranks-9th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/564-crore-cases-pending-in-indian-courts-tamil-nadu-ranks-9th#comments</comments><guid isPermaLink="false">f57e3ac4-9895-4175-8887-f43332e6377a</guid><pubDate>Fri, 31 Jul 2026 01:35:06 +0000</pubDate><atom:updated>2026-07-31T01:35:06.152Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,India,Tamil Nadu,Chennai,சென்னை,தமிழகம்,cases,வழக்குகள்,Courts,தேக்கம்,கோர்ட்டுகள்,எத்தனையாவது இடம்,backlog,9th place</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/7ky1prqz/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வழக்குகள் தேக்கம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/7ky1prqz/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>இந்திய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">கோர்ட்டுகளில்</a> 5.64 கோடி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">வழக்குகள்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88">நிலுவை</a>யில் உள்ளன. அதிக வழக்குகள் நிலுவையில் இருக்கும் மாநிலங்களில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">தமிழகம்</a> 9-வது இடத்தில் இருக்கிறது.</p><h2>நம்பிக்கையை இழக்க நேரிடுகிறது</h2><p>'தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்' என்பது மிக ஆழமான சட்ட மற்றும் தார்மீக கோட்பாடாகும். நீதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும்போது பாதிக்கப்பட்டவர், நீதியின் மீதான நம்பிக்கையை இழக்க நேரிடுகிறது. குற்றம் செய்தவர்களுக்குத் தண்டனையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் சரியான நேரத்தில் கிடைத்தால்தான் நீதி நிலைநாட்டப்படும். இதை வலியுறுத்தும் வகையில், இந்திய நீதித்துறை பல முக்கிய வழக்குகளில் உரிய காலத்தில் வழக்குகளை முடிக்கவும், தீர்ப்புகளை வழங்கவும் நீதிமன்றங்களுக்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.</p><h2>5 கோடியே 64 லட்சம் வழக்குகள்</h2><p>ஆனாலும், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது. அந்தவகையில், தற்போது இந்தியாவில் சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு, மாவட்ட நீதிமன்றங்களில் மொத்தம் 5 கோடியே 64 லட்சத்து 79 ஆயிரத்து 821 வழக்குகள் நிலுவையில் உள்ளன. சுப்ரீம் கோர்ட்டில் மட்டும் 95 ஆயிரத்து 825 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதில் 30 ஆண்டுகளுக்கு மேலாக 26 வழக்குகளும், 20 ஆண்டுகளுக்கு மேலாக 558 வழக்குகளும், 10 ஆண்டுகளுக்கு மேலாக 10 ஆயிரத்து 94 வழக்குகளும் உள்ளன. தமிழகத்தைப் பொறுத்தமட்டில் சென்னை மற்றும் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மொத்தம் 5 லட்சத்து 69 ஆயிரத்து 436 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதில் 3 ஆயிரத்து 513 வழக்குகள் 30 ஆண்டுகளுக்கு மேலாகவும், 76 ஆயிரத்து 298 வழக்குகள் 20 ஆண்டுகளுக்கு மேலாகவும் நிலுவையில் இருந்து வருகின்றன.</p><h2>அலகாபாத் ஐகோர்ட்டு முதலிடம்</h2><p>மதுரை ஐகோர்ட்டு கிளையில் மட்டும் 1 லட்சத்து 89 ஆயிரத்து 959 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்த வரிசையில் அலகாபாத் ஐகோர்ட்டு 12 லட்சத்து 28 ஆயிரத்து 353 வழக்குகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. சிக்கிம் ஐகோர்ட்டில் மிக குறைவாக 318 வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளன. </p><p>கீழமை நீதிமன்றங்கள் எனப்படும் மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் தாலுகா அளவிலான நீதிமன்றங்களை பொறுத்தமட்டில் தமிழகத்தில் மொத்தம் 17 லட்சத்து 89 ஆயிரத்து 467 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதில் 30 ஆண்டுகளுக்கு மேலாக 450 வழக்குகளும், 20 ஆண்டுகளுக்கு மேலாக 4 ஆயிரத்து 173 வழக்குகளும், 10 ஆண்டுகளுக்கு மேலாக 63 ஆயிரத்து 962 வழக்குகளும் நிலுவையில் இருக்கின்றன.</p><h2>9-வது இடத்தில் தமிழகம்</h2><p>கீழமை நீதிமன்றங்களில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 1 கோடியே 19 லட்சத்து 46 ஆயிரத்து 397 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அதிக வழக்குகள் நிலுவையில் இருப்பதை பொறுத்தமட்டில் இந்தியாவில் உள்ள பிற ஐகோர்ட்டுகளை ஒப்பிடும்போது சென்னை ஐகோர்ட்டு 4-வது இடத்தில் இருக்கிறது. அதேவேளையில் ஐகோர்ட்டு மற்றும் மாவட்ட நீதிமன்றங்களை சேர்த்து பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகம் 9-வது இடத்தில் இருக்கிறது. நீதித்துறை கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் நிலுவையில் உள்ள வழக்குகளை குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.</p><h2>நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க நீதிபதிகள் குழு</h2><p>5 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளில் விரைந்து தீர்வு காண அனைத்து ஐகோர்ட்டு மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் நீதிபதிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழு அவ்வப்போது ஆய்வு நடத்தி, வழக்குகள் நிலுவையில் இருப்பதற்கான காரணங்களை கண்ட றிந்து அவற்றுக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது தவிர, மாற்றுமுறை தகராறு தீர்வு முறைகள் மற்றும் மக்கள் நீதிமன்றங்கள் (லோக் அதாலத்), சமரச தீர்வு மையங்கள் மூலமாகவும் வழக்குகளை சுமூகமாக தீர்க்க அரசு ஊக்குவித்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>நாளை தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; முதல்-அமைச்சர் விஜயுடன் சந்திப்பு?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rahul-gandhi-is-coming-to-tamil-nadu-tomorrow-will-he-meet-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rahul-gandhi-is-coming-to-tamil-nadu-tomorrow-will-he-meet-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">b2461b03-0678-44fa-b6f8-455835e0c641</guid><pubDate>Fri, 31 Jul 2026 01:28:42 +0000</pubDate><atom:updated>2026-07-31T01:28:42.543Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,விஜய்,காங்கிரஸ்,Congress,ராகுல் காந்தி,Rahul Gandhi,சந்திப்பு,ராகுல் காந்தி வருகை,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/8boegwf3/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/8boegwf3/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p>லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், நாளை தமிழகம் வருகிறார். தமிழக காங்கிரஸ், தலைவராக மாணிக்கம் தாகூர் பதவியேற்றதும், ஒரு கோடி ரூபாய் செலவில், 'இயக்க மறுசீரமைப்பு திட்டம்' என்ற பெயரில், மாமல்லபுரத்தில், காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கு பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்தார்.</p><h2>ராகுல் தமிழகம் வருமை</h2><p>கடந்த 23ம் தேதி முதல் ஆகஸ்டு, 1 வரை நடைபெறும் இந்த பயிற்சி முகாமில், நாளை ராகுல் பங்கேற்கிறார். இதற்காக, நாளை தமிழகம் வரும் அவர், பயிற்சி முகாமில் மூன்று மணி நேரம் செலவிடும் வகையில், பயண திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் மாவட்ட தலைவர்களின் குடும்பத்தினருடன் ராகுல் காந்தி கலந்துரையாடுகிறார்.</p><h2>முதல்-அமைச்சருடன் சந்திப்பு</h2><p>காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஒருவர் கூறுகையில், முகாமில் விவசாயிகள், நுாறு நாள் திட்டப் பணியாளர்கள் உள்ளிட்டோருடன் சந்திப்பு போன்ற <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">களப்பயிற்சி </a>அளிக்கப் பட்டது. "எங்களுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தும் வகையில் ராகுல் எங்களை சந்திக்கிறார். முதல்-அமைச்சர் விஜயையும் ராகுல் காந்தி சந்திப்பார்," என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடக அரசுக்கு, மத்திய அரசு துணை போகிறதா? - வேல்முருகன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-central-government-support-the-karnataka-government-velmurugan-questions</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-central-government-support-the-karnataka-government-velmurugan-questions#comments</comments><guid isPermaLink="false">310b4153-f984-4179-8ce6-f540472a4be6</guid><pubDate>Fri, 31 Jul 2026 01:11:24 +0000</pubDate><atom:updated>2026-07-31T01:11:24.096Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடக அரசு,மத்திய அரசு,Central Government,Velmurugan,வேல்முருகன்,Karnataka government,தமிழக வாழ்வுரிமைக் கட்சி,தி.வேல்முருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/hu5vl0xc/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/hu5vl0xc/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>தனி சொத்தல்ல</h2><p>காவிரி ஒழுங்காற்றுக் குழு (CWRC), தமிழ்நாட்டிற்கு ஜூலை 29 முதல் 15 நாட்களுக்கு தினமும் 3,500 கனஅடி (cusecs) காவிரி நீரைத் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்ட பிறகும், கர்நாடக முதல்-மந்திரியும், நீர்வளத்துறை மந்திரியுமான டி.கே. சிவக்குமார், தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறக்க முடியாது. இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்று அறிவித்திருப்பது, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும், காவிரி மேலாண்மை அமைப்புகளுக்கும், இந்திய கூட்டாட்சித் தத்துவத்திற்கும் வெளிப்படையான சவாலாகும். இதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.</p><p>காவிரி என்பது கர்நாடகத்தின் தனிச் சொத்தல்ல. அது தமிழ்நாட்டின் வாழ்வாதார நதி. நீதிமன்றமும், சட்டமும், காவிரி நீர்ப் பங்கீட்டுத் திட்டமும் தமிழ்நாட்டின் உரிமையை ஏற்கும்போது, கர்நாடக அரசு மட்டும் அதை மறுப்பது அரசியல் ஆணவத்தின் உச்சக்கட்டமாகும்.</p><h2>குறுவைச் சாகுபடி பாதிப்பு</h2><p>தமிழ்நாட்டின் விவசாயத்தையும், உணவுப் பாதுகாப்பையும் திட்டமிட்டு நெருக்கடிக்குள் தள்ளும் மோசமான செயலாகும். மேட்டூர் அணைக்கு உரிய அளவில் நீர் வராததால் குறுவைச் சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. </p><p>தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், கடலூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீருக்காகக் காத்திருக்கின்றன. காவிரி டெல்டாதான் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம். அந்த நெற்களஞ்சியத்தை வறட்சிக்குத் தள்ளுவது தமிழர்களின் வயிற்றில் அடிப்பதற்கு சமம்.</p><h2>3.5 டி.எம்.சி. மட்டுமே</h2><p>ஏற்கனவே இந்த ஆண்டு ஜூன் 1 முதல் ஜூலை 22 வரை, உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி கிடைக்க வேண்டிய 31 டி.எம்.சி. நீருக்கு பதிலாக, தமிழ்நாட்டிற்கு சுமார் 3.5 டி.எம்.சி. மட்டுமே கிடைத்துள்ளதாகத் தமிழக அரசு சுட்டிக்காட்டியுள்ளது. </p><p>இந்நிலையில், தற்போது வழங்கப்பட்டுள்ள குறைந்தபட்ச 3,500 கனஅடி நீரைக்கூட திறக்க மறுப்பது தமிழ்நாட்டின் உரிமையை முற்றிலுமாக நிராகரிக்கும் செயலாகும்.</p><p>மத்திய அரசு இனியும் மவுனம் காக்க முடியாது. காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு, உச்சநீதிமன்றம் என அனைத்து சட்ட அமைப்புகளின் உத்தரவுகளையும் ஒரு மாநில அரசு தொடர்ந்து புறக்கணிக்கும்போது, அதைத் தடுக்கத் தவறும் மத்திய அரசும் இந்த அநீதிக்குப் பொறுப்பேற்க வேண்டும்.</p><h2>அவசரக் கூட்டம்</h2><p>தமிழக அரசு வெறும் கண்டன <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அறிக்கைகளிலும்</a>, கடித அரசியலிலும் நிற்காமல், உடனடியாகக் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டத்தைக் கோர வேண்டும். உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு நடவடிக்கையைத் தொடுக்க வேண்டும். தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகள், விவசாயிகள் அமைப்புகள் மற்றும் தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைத்து காவிரி உரிமைக்கான மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மின்சார வாரியத்தில் 700 உதவி பொறியாளர்களுக்கு
பதவி உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/700-assistant-engineers-promoted-in-electricity-board</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/700-assistant-engineers-promoted-in-electricity-board#comments</comments><guid isPermaLink="false">1b11fcdd-0a75-4f21-b04d-660998389507</guid><pubDate>Fri, 31 Jul 2026 01:06:14 +0000</pubDate><atom:updated>2026-07-31T01:06:14.565Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு மின்சார வாரியம்,Electricity Board,பதவி உயர்வு,Promotion,Assistant Engineer,உதவி பொறியாளர்</media:keywords><media:content height="270" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/6y11tt1f/eb.jpg" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/6y11tt1f/eb.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மின்சார வாரியத்தில் 700 உதவி பொறியாளர்களுக்கு. உதவி செயற்பொறியாளர் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.</p><h2>மின்சார வாரியத்தில் பதவி உயர்வு</h2><p>முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு பதவி ஏற்றவுடன், மின்சாரத்துறை வரலாற்றில் முதல்முறையாக ஒரேநேரத்தில் 300 பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது கடந்த 2012-ம் ஆண்டு உதவி பொறியாளர்களாக பணியில் சேர்ந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி 700 உதவி பொறியாளர்களுக்கு. உதவி செயற்பொறியாளர் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. அதற்கான கோப்பில் துறை அமைச்சர் நிர்மல் குமார் கையெழுத்திட உள்ளார்.</p><p>அதற்கு பிறகு பதவி உயர்வு பெற்றவர்களுக்கு காலியாக உள்ள உதவி செயற்பொறியாளர் பணியிடங்கள் ஒதுக்கப்படும். அவரவர் விரும்பும் இடங்களில் பணிகளை ஒதுக்கவும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">மின்சார வாரியம்</a> திட்டமிட்டுள்ளது. இதற்கான பதவி உயர்வு உத்தரவுகளை முதல்-அமைச்சர் விஜய் கையால் வழங்குவதற்கான விழாவை நடத்தி அதன் மூலம் வழங்கலாமா? என்றும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.</p><h2>பணியிட மாறுதல்</h2><p>அதேபோல், மின்சார வாரியத்தில் பணியாற்றி வரும் 200 உதவி செயற்பொறியாளர்களுக்கு. ஊர் மாறுதல் உத்தரவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதியில் இருந்து 20-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் கேட்ட இடத்திற்கு விருப்பு ஊர் மாறுதல் அளிக்கப்பட்டு உள்ளது. இது ஏற்கனவே இருந்த வாரிய விதிகளின் படி வழங்கப்பட்டு உள்ளது. வெளிப்படைத்தன்மையுடன் கவுன்சிலிங் முறையில் வழங்கப்பட்ட இந்த பணியிட மாற்றம் கோருபவர்களிடம் 3 இடங்களை தேர்வு செய்து விண்ணப்பிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. அதில் காலியாக இருக்கும் இடத்திற்கு பணி மாறுதல்கள் வழங்கப்பட்டு உள்ளன.</p><p>வெளிப்படைத்தன்மையுடன், எந்தவித சிபாரிசுகளும், பரிசு பொருட்கள் எவையும் பெறாமல் நேர்மையுடன் பணியிட மாற்றம் வழங்கப்பட்டு உள்ளது. பொதுமக்களுக்கு தரமான சேவை கிடைப்பதற்காக இந்த பணியிட மாற்றம் அளிக்கப்படுகிறது என்று வாரிய அதிகாரிகள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/places-in-chennai-that-will-experience-power-outages-today-5</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/places-in-chennai-that-will-experience-power-outages-today-5#comments</comments><guid isPermaLink="false">fef89cee-1fcf-4036-ae7f-ed34c4a7a95e</guid><pubDate>Fri, 31 Jul 2026 00:51:18 +0000</pubDate><atom:updated>2026-07-31T00:51:18.869Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மின் தடை,power cut</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/4gd1zyk5/Untitled-1.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/4gd1zyk5/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>சென்னையில் 31.07.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><h2>மின் தடை</h2><p><strong>வேளச்சேரி</strong>: டி.ஏ. கோவில், காந்தி சாலை, கோகிலம் தெரு, நியூ காலனி, கபாலி தெரு, ஆண்டாள் அவென்யூ, சோனி நகர், புறவழி பிரதான சாலை , லட்சுமி நகர் 1 வது முதல் 8வது தெருக்கள் வரை, வடுவாம்பாள் நகர், எம்.ஜி.ஆர். நகர் 1 வது முதல் 10வது தெருக்கள் வரை.</p><p><strong>அடையாறு</strong>: வெங்கடேஸ்வரா நகர் 1 வது முதல் வது தெருக்கள் வரை, ஜீவரத்தினம் நகர் 1 வது மற்றும் 2ஆம் தெருக்கள், கற்பகம் கார்டன் 1 வது முதல் 7 வது குறுக்குத் தெருக்கள் மற்றும் 1 வது பிரதான சாலை, பெசன்ட் நகர் பென்கோ காலனி, பீச் ஹோம் அவென்யூ, சி.பி.டபிள்யூ பழைய குடியிருப்புகள், 4வது அவென்யூ, சுங்கத்துறை காலனி, தாமோதரபுரம்.</p><p><strong>பல்லாவரம்</strong>: காந்தி சாலை, காமாட்சி நகர், அலிக்விப்பா நகர், ஏ.ஆர்.ஜி. நகர், மகாலட்சுமி சாலை, ஜெயலட்சுமி நகர், பிராமின் தெரு.</p><p><strong>திருவான்மியூர்</strong>: சாஸ்திரி நகர் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">திருவள்ளுவர் </a>சாலை, 1 வது முதல் 4 வது கிழக்கு தெருக்கள், வால்மீகி தெரு, சிவசுந்தரா அவென்யூ 1 வது மற்றும் 2 வது தெருக்கள், கலாக்ஷேத்ரா சாலை, பாலு அவென்யூ.</p><p><strong>நசரத்பேட்டை</strong>:மெட்ரோ வாட்டர் உயர் மின் அழுத்த மின் இணைப்பு 661, மடவிளாகம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..? வானிலை மையம் அப்டேட் </title><link>https://www.dailythanthi.com/news/weather/which-districts-in-tamil-nadu-are-likely-to-receive-heavy-rain-today-meteorological-centre-update</link><comments>https://www.dailythanthi.com/news/weather/which-districts-in-tamil-nadu-are-likely-to-receive-heavy-rain-today-meteorological-centre-update#comments</comments><guid isPermaLink="false">47d3f2a7-573c-4512-890d-e4fee6ad98cd</guid><pubDate>Fri, 31 Jul 2026 00:45:14 +0000</pubDate><atom:updated>2026-07-31T00:45:14.604Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,Rain,Weather,கனமழை,வானிலை,தமிழகம்,Weather News,WeatherUpdate,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,வானிலை ஆய்வு மையம்,heavy rain,வானிலை அறிக்கை,weather condition,வானிலை தகவல்,Weather Report,வானிலை முன்னறிவிப்பு,Weather Status,வானிலை அறிவிப்பு,weather center,weather update news,TN Rain</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/66hkjan5/raind.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rain, மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/66hkjan5/raind.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><h2>கனமழை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><p>சராசரி கடல் மட்டத்தில் தெற்கு குஜராத்திலிருந்து வடக்கு கேரளா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இதன் காரணமாக <strong>இன்று (31-07-2026):</strong> கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <a href="https://www.dailythanthi.com/topic/கனமழை">கனமழை</a> பெய்யக்கூடும்.</p><h2>மழை</h2><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p> <p><strong>நாளை (01-08-2026)</strong> கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <a href="https://www.dailythanthi.com/topic/கனமழை">கனமழை</a> பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். </p><p>வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a>யும் பெய்யக்கூடும்.</p> <p><strong>நாளை மறுநாள் (02-08-2026):</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p>03-08-2026 முதல் 05-08-2026 வரை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p> <h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong><ins>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</ins></strong></p><p><strong>31-07-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.</p><p><strong>01-08-2026 முதல் 03-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று குறையக்கூடும்.</p><p><strong><ins>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</ins></strong></p><p><strong>31-07-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.</p><p><strong>01-08-2026 முதல் 03-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று  (31-07-2026)</strong> : வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>மீனவர்களுக்கான எச்சரிக்கை:</h2><p><strong>தமிழக கடலோரப்பகுதிகள்:</strong></p><p><strong>31-07-2026:</strong> தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>01-08-2026:</strong> குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>02-08-2026 மற்றும் 03-08-2026:</strong> தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p> <h2>வங்கக்கடல் பகுதிகள்:</h2><p><strong>31-07-2026 முதல் 02-08-2026 வரை:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வீசக்கூடும்.</p><p><strong>03-08-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வீசக்கூடும்.</p> <h2>அரபிக்கடல் பகுதிகள் :</h2><p><strong>31-07-2026:</strong> மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>01-08-2026 மற்றும் 02-08-2026:</strong> மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>03-08-2026:</strong> மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வீசக்கூடும்.</p><p>மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>12-ம் வகுப்பு மாணவி கர்ப்பம்: சித்தப்பா மீது போக்சோ வழக்கு - போலீசார் விசாரணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/class-12-girl-pregnant-uncle-booked-under-pocso</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/class-12-girl-pregnant-uncle-booked-under-pocso#comments</comments><guid isPermaLink="false">66687147-e3d0-4b12-a9bc-fbc347a0dff2</guid><pubDate>Fri, 31 Jul 2026 00:16:16 +0000</pubDate><atom:updated>2026-07-31T00:16:16.668Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ராமநாதபுரம்,Ramanathapuram,POCSO case,போக்சோ வழக்கு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/voikv18r/Untitled-12.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/voikv18r/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமநாதபுரம்,</p><p>ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாய், தந்தை கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் சிறுமி தனது தாயுடன், அவரது பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். சிறுமியின் சித்தியும் கணவரை பிரிந்து சிறுமியின் பாட்டி வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.</p><p>சித்தியின் கணவர் தனது குழந்தைகளை பார்க்க அவ்வப்போது அங்கு வந்து சென்றுள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சித்தியின் கணவர் அங்கு வந்துள்ளார். அப்போது அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் பலமுறை சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.</p><p>இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்தனர். அப்போது சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையறிந்த ராமநாதபுரம் சைல்டு ஹெல்ப்லைன் அலுவலர்கள் விசாரணை நடத்தி சிறுமியுடன் திருவாடானை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர்.</p><p>அதன்பேரில் போலீசார், சிறுமியின் சித்தியின் கணவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மனைவி இறந்த துக்கத்தில் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/painter-commits-suicide-after-wifes-death</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/painter-commits-suicide-after-wifes-death#comments</comments><guid isPermaLink="false">826b2250-178b-43ff-9f83-d6ece8d1e27d</guid><pubDate>Thu, 30 Jul 2026 22:02:21 +0000</pubDate><atom:updated>2026-07-30T22:02:21.783Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Manali,மணலி,தற்கொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/hezaa9ea/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/hezaa9ea/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மணலி அரிகிருஷ்ணாபுரம் அம்மன் நகர் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் (43 வயது). பெயிண்டர். இவரது மனைவி சுந்தரி (37 வயது). இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தைகள் இல்லை. கடந்த 27-ந்தேதி சுந்தரி உடல்நலம் சரியில்லாமல் இறந்துவிட்டார்.</p><p>இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக மனைவி இறந்த சோகத்தில் இருந்த ராஜசேகர், நேற்று காலை வீட்டின் கதவை உட்புறமாக தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி மணலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.</p><p>மனைவி இறந்த துக்கம் தாங்காமல், அவர் இறந்த 3-வது நாளில் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவர்களது உறவினர் மற்றும் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அ.தி.மு.க.வில் தொடரும் உட்கட்சி பூசல்: எடப்பாடி பழனிசாமி அழைப்பை வேலுமணி, தங்கமணி ஏற்பார்களா?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/internal-feud-continues-in-aiadmk-will-velumani-and-thangamani-accept-edappadi-palanisamis-invite</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/internal-feud-continues-in-aiadmk-will-velumani-and-thangamani-accept-edappadi-palanisamis-invite#comments</comments><guid isPermaLink="false">cd138e67-775a-4bb1-9153-e7b12871696a</guid><pubDate>Thu, 30 Jul 2026 21:34:02 +0000</pubDate><atom:updated>2026-07-30T21:34:02.215Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,எடப்பாடி பழனிசாமி,அதிமுக,Edappadi Palaniswami,எஸ்.பி.வேலுமணி,SP Velumani,தங்கமணி,Thangamani</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/niblxsib/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/niblxsib/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது. அதில் கோவை மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணியும் பங்கேற்கவில்லை.</p><p>அதாவது இருவரும் எடப்பாடி பழனிசாமி மீதுள்ள அதிருப்தி காரணமாக பங்கேற்கவில்லை என்று அ.தி.மு.க.வினர் கூறுகின்றனர். இந்த சூழ்நிலையில் இருவருக்கும் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.</p><p>சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள் வருகிற 3-ந்தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அ.தி.மு.க. சார்பில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்துகின்றனர். சென்னை கிண்டியில் தீரன் சின்னமலை சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்துகிறார்.</p><p>அதேபோல், ஈரோடு மாவட்டம் அறச்சலூரில் உள்ள தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் அமைந்துள்ள திருவுருவச்சிலைக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், சேலம் மாவட்டம் சங்ககிரி - ஈரோடு பிரிவு சாலையில் அமைந்துள்ள தீரன் சின்னமலை நினைவுச்சின்னத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணியும் மரியாதை செலுத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ளார்.</p><p>இந்த அழைப்பை ஏற்று வேலுமணி, தங்கமணி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்களா? அல்லது புறக்கணிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>6 மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/rain-possible-till-4-am-in-6-districts</link><comments>https://www.dailythanthi.com/news/weather/rain-possible-till-4-am-in-6-districts#comments</comments><guid isPermaLink="false">6d127e34-7a61-4fde-870e-eecb3f1a1c4e</guid><pubDate>Thu, 30 Jul 2026 20:18:21 +0000</pubDate><atom:updated>2026-07-30T20:18:21.203Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/0o164u8e/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/0o164u8e/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது. சராசரி கடல் மட்டத்தில் தெற்கு குஜராத்திலிருந்து வடக்கு கேரளா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், தென்காசி, தேனி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை சென்டிரல் - திருப்பதி இடையிலான சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-central-tirupati-saptagiri-express-additional-coach</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-central-tirupati-saptagiri-express-additional-coach#comments</comments><guid isPermaLink="false">1a6a634a-60d8-4b2c-a39f-4ee5d2a7a309</guid><pubDate>Thu, 30 Jul 2026 19:09:29 +0000</pubDate><atom:updated>2026-07-30T19:09:29.643Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தெற்கு ரெயில்வே,திருப்பதி,Chennai Central,சென்னை சென்டிரல்,Tirupathi,கூடுதல் பெட்டி இணைப்பு,சப்தகிரி எக்ஸ்பிரஸ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/meun0qvp/Untitled-4.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/meun0qvp/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை சென்டிரல் - திருப்பதி இடையிலான சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் தற்காலிகமாக கூடுதல் பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>தெற்கு ரெயில்வேயில் அதிகரித்து வரும் பயணிகளின் வசதிக்காக சில எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்பட உள்ளது. அதன்படி சென்னை சென்டிரலில் இருந்து திருப்பதி செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் (16057), மறுமார்க்கமாக திருப்பதியில் இருந்து சென்னை சென்டிரல் வரும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் (16058) நாளை (1-ந்தேதி) முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரையில் தற்காலிகமாக ஒரு இருக்கை வசதி கொண்ட பெட்டி (சேர் கார்) இணைத்து இயக்கப்பட உள்ளது.</p><p>சென்னை சென்டிரல் - கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் (12679) கோவை - சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் (12680) இன்று (வெள்ளிக்கிழமை) முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரை கூடுதலாக ஒரு சேர் கார் பெட்டி இணைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வள்ளலார் மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது வரவேற்கத்தக்கது - அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/plan-to-build-vallalar-centre-dropped-welcome-move-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/plan-to-build-vallalar-centre-dropped-welcome-move-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">c44269e6-5067-4687-ba60-9be65a0e8f1f</guid><pubDate>Thu, 30 Jul 2026 17:46:12 +0000</pubDate><atom:updated>2026-07-30T17:46:12.698Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,வள்ளலார்,Vallalar,Vadalur,வடலூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/414xbzym/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/414xbzym/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>வடலூர் பார்வதிபுரத்தில் உள்ள சத்தியஞான சபை வளாகத்தில் உள்ள பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. பார்வதிபுரம் மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவும், வள்ளலாரின் நோக்கங்களுக்கு எதிராகவும் முந்தைய திமுக அரசால் மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டம் கைவிடப்பட்டது வரவேற்கத்தக்கது.</p><p>வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பெருமை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும். அதற்காக அவருக்கு பன்னாட்டு மையம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச நாளில் ஜோதி தரிசனம் காண சத்தியஞான சபை வளாகத்தில் பல லட்சம் பக்தர்கள் கூடும் பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையம் அமைக்கப்படும் என்று முந்தைய திமுக அரசு அறிவித்தபோது தான் அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. பல போராட்டங்களை நடத்தியது. பெருவெளியைக் காக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் நானும் பங்கேற்றேன். மக்கள் உரிமை பயணத்தின் போதும் அங்கு சென்று வழிபட்டு வந்தேன்.</p><p>ஆனால், முந்தைய திமுக அரசு சில சுயநல நோக்கங்களுக்காக அங்கு தான் வள்ளலார் மையம் அமைக்கப்படும் என்பதில் உறுதியாக இருந்தது. அதற்கு எதிராக போராடிய மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டது. பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடத்த முயன்றபோது அதற்கு அனுமதி கூட கொடுக்காமல் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டது.</p><p>ஆனால், புதிய அரசு பதவியேற்ற பிறகு பாமக மற்றும் பார்வதிபுரம் மக்களின் கோரிக்கையை ஏற்று அத்திட்டத்தை கைவிடுவதாக அறிவித்திருப்பது சிறந்த முடிவு. பெருவெளியியில் வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்கக் கூடாது என்பதுதான் பாமகவின் நிலைப்பாடு. அதே நேரத்தில் பெருவெளியை பாதிக்காத வகையில் பன்னாட்டு மையம் அமைக்கப்படுவதை எதிர்க்கவில்லை.</p><p>எனவே, வள்ளலாருடன் தொடர்புடைய வடலூரில் வேறு இடத்திலோ, அருகில் உள்ள வள்ளலாருடன் தொடர்புடைய இடங்களிலோ வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஓணம் பண்டிகை: ஈரோடு வழியாக சிறப்பு ரெயில் இயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-festival-special-train-operation-through-erode</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-festival-special-train-operation-through-erode#comments</comments><guid isPermaLink="false">56ba596e-4cd9-4fc1-99ab-e4c2bd88b81d</guid><pubDate>Thu, 30 Jul 2026 17:23:43 +0000</pubDate><atom:updated>2026-07-30T17:23:43.613Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,ஈரோடு,ஓணம் பண்டிகை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/4nq8nbb9/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/4nq8nbb9/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,  </p><p>ஓணம் பண்டிகையை முன்னிட்டு அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஈரோடு வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் -கொல்லம் வாரத்திற்கு இருமுறை இயங்கும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06117) அடுத்த மாதம் (ஆகஸ்டு) 13-ந்தேதி முதல் செப்டம்பர் மாதம் 5-ந்தேதி வரை வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் நள்ளிரவு 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மாலை 4.20 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.</p><p>அதேபோல் கொல்லம் சென்னை சென்ட்ரல் வாரத்திற்கு இருமுறை இயங்கும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06118) அடுத்த மாதம் (ஆகஸ்டு) 14-ந்தேதி முதல் செப்டம்பர் மாதம் 6-ந்தேதி வரை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.45 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும் என்று சேலம் ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item></channel></rss>