<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 24 Aug 2026 09:26:51 +0000</lastBuildDate><item><title>தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/heavy-rain-forecast-coimbatore-nilgiris-today-and-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/weather/heavy-rain-forecast-coimbatore-nilgiris-today-and-tomorrow#comments</comments><guid isPermaLink="false">91e849a5-f88c-4f57-925f-c449f2b5b45e</guid><pubDate>Mon, 24 Aug 2026 09:25:21 +0000</pubDate><atom:updated>2026-08-24T09:25:21.794Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு,TN weather</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/t4lgxp5m/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/t4lgxp5m/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><p><strong>24-08-2026:</strong> கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் மதுரை மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>25-08-2026:</strong> கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>26-08-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><h3>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</h3><p><strong>24-08-2026 முதல் 26-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.</p><p><strong>27-08-2026 மற்றும் 28-08-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் வட உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><h3>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</h3><p><strong>24-08-2026 முதல் 26-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.</p><p><strong>27-08-2026 மற்றும் 28-08-2026:</strong> வட உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p><strong>நாளை</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title> முதுமலை யானைகள் முகாமில் குவிந்த சுற்றுலா பயணிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-flock-to-mudumalai-elephant-camp</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-flock-to-mudumalai-elephant-camp#comments</comments><guid isPermaLink="false">46605c49-b223-4b6e-bd33-7bb5750c640f</guid><pubDate>Mon, 24 Aug 2026 09:14:14 +0000</pubDate><atom:updated>2026-08-24T09:14:14.346Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tourists,சுற்றுலா பயணிகள்,Elephant Camp,யானைகள் முகாம்,Mudumalai,முதுமலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/jngd1iyb/touristin-muthumalai.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ முதுமலை யானைகள் முகாம்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதுமலை யானைகள் முகாமில் குவிந்த சுற்றுலா பயணிகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/jngd1iyb/touristin-muthumalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற முதுமலை யானைகள் முகாமில், வார இறுதி விடுமுறை நாளான நேற்று வழக்கத்தை விட அதிகமான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">சுற்றுலாப்பயணிகள்</a> திரண்டனர்.</p><h2>யானைகள் முகாம்</h2><p>நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உலக புகழ்பெற்ற முதுமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இதன் ஒரு பகுதியான தெப்பக்காட்டில் ஆசியாவின் பழமையான வளர்ப்பு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D">யானைகள் முகாம்</a> செயல்பட்டு வருகிறது. இங்கு வழக்கமாகவே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். இந்த நிலையில், வார விடுமுறை நாளான நேற்று காப்பகத்தில் வழக்கத்தை விட அதிகமான சுற்றுலா பயணிகள் திரண்டனர்.</p><h2>ஆற்றில் குளித்த யானைகள்</h2><p>அங்கு நிலவிய இதமான தட்பவெப்ப நிலை மற்றும் சாரல் மழையை பயணிகள் வெகுவாக ரசித்தனர். முகாமில் உள்ள வளர்ப்பு யானைகள் அங்குள்ள மாயாற்றில் குதூகலமாக குளிப்பாட்டப்பட்டன.யானைகள் ஆற்றில் தண்ணீரை உறிஞ்சி அடித்துக் கொண்டும், ஒன்றுக்கொன்று விளையாடி கொண்டும் செய்த நளினமான குறும்புகளை கண்டு பயணிகள் வியந்தனர்.</p><h2>ஊட்டச்சத்து உணவுமுகாம்</h2><p> யானைகளுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் ஊட்டச்சத்து உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதற்காகத் தனி சமையல் கூடத்தில் ராகி, கொள்ளு போன்ற தானியங்களால் தயாரிக்கப்பட்ட உணவு உருண்டைகள் தயார் செய்யப்பட்டன.அவற்றைப் பாகன்கள் மற்றும் உதவியாளர்கள் ஒவ்வொரு யானையின் பெயரைக் கூப்பிட்டு வழங்கினர். யானைகள் வரிசையாக நின்று கம்பீரமாக உணவு உட்கொள்ளும் இந்த கண்கொள்ளா காட்சியை சுற்றுலா பயணிகள் தங்களது செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>புதிய விமான நிலையத்திற்கான இடத்தை விரைந்து கண்டறிந்து அறிவிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/identify-and-announce-site-for-new-airport-urgently-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/identify-and-announce-site-for-new-airport-urgently-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">cc3a3f15-30f0-4e0c-bd4d-679bd6a35baf</guid><pubDate>Mon, 24 Aug 2026 09:01:44 +0000</pubDate><atom:updated>2026-08-24T09:01:44.431Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK,சென்னை,Parandur Airport,new airport,புதிய விமான நிலையம்,பரந்தூர் விமானநிலையம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/71td3iq6/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/71td3iq6/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>புதிய விமான நிலையத்திற்கான இடத்தை விரைந்து கண்டறிந்து அறிவிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சென்னைக்கு அருகில் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக முதல்-அமைச்சர் விஜய் அறிவித்திருக்கிறார். தமிழக வளர்ச்சிக்கு சென்னையில் இரண்டாம் விமான நிலையம் அமைக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதால், அதற்கான இடத்தை விரைந்து கண்டறிந்து அறிவிக்க வேண்டும்.</p><p>சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் விரைந்து அமைக்கப்பட வேண்டும் என்பதை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதே நேரத்தில் வேளாண் விளைநிலங்களையும் நீர்நிலைகளையும் அழித்து விமான நிலையம் அமைப்பதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு உடன்பாடு இல்லை. பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படும் என்று முந்தைய திமுக அரசு அறிவித்தவுடனேயே, 4 ஆண்டுகளுக்கு முன் 2022-ம் ஆண்டு இதே ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி பாதிக்கப்படும் மக்களை எனது தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி குழு சந்தித்து கருத்துகளைக் கேட்டறிந்து நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்தது.</p><p>அதே நேரத்தில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சென்னைக்கு அருகில் இன்னொரு விமான நிலையம் அமைக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். மீனம்பாக்கம் விமான நிலையம் வரும் 2031-ம் ஆண்டில் அதன் முழு கொள்ளளவை எட்டி விடும் என்பதால், அதற்கு முன்பாக புதிய விமான நிலையம் கட்டப்பட வேண்டியது அவசியமாகும். சென்னை மாநகருக்கான இரண்டாவது விமான நிலையம் 2007-08ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. அதன்பின் பல்வேறு தடைகளைக் கடந்து 2022-ம் ஆண்டில் தான் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான இடம் இறுதி செய்யப்பட்டது. இப்போது அந்த முடிவில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதால், புதிய விமான நிலையம் அமைக்கும் முயற்சிகள் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுள்ளன.</p><p>பயணிகள் போக்குவரத்தைப் பொறுத்தவரை சென்னை விமான நிலையம் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை டெல்லி, மும்பை ஆகியவற்றுக்கு அடுத்து மூன்றாவது பெரிய விமான நிலையமாக திகழ்ந்து வந்தது. ஆனால், சென்னை விமான நிலையத்தில் போதிய இட வசதி இல்லாததாலும், விரிவாக்கப் பணிகளில் ஏற்பட்ட தொய்வு காரணமாகவும் அந்த இடத்தை இழந்துவிட்ட சென்னை விமான நிலையம் இப்போது டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய விமான நிலையங்களுக்கு அடுத்தபடியாக ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்திற்கு கொல்கத்தா விமான நிலையத்தை விட பின்தங்கி ஆறாம் இடத்தில் இருந்த சென்னை விமான நிலையம் ஜூலை மாதத்தில்தான் மீண்டும் ஐந்தாம் இடத்தை பிடித்தது. எந்த நேரமும் சென்னை விமான நிலையம் மீண்டும் ஆறாம் இடத்திற்கு தள்ளப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p>உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் ஏர்பஸ் 380 ஆகும். ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 853 பேர் பயணிக்கக் கூடிய இந்த விமானங்களை இயக்குவது விமான நிலையங்களின் கவுரவமாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் டெல்லி, மும்பை, பெங்களூரு விமான நிலையங்களில் இருந்து மட்டும்தான் இந்த வகை விமானம் இயக்கப்பட்டு வருகிறது. மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து இந்த வகை விமானங்களை இயக்க கட்டமைப்பு வசதிகள் இல்லை. இந்த விமானங்களை இயக்க 60 மீட்டர் அகலம் கொண்ட ஓடுபாதைகள்  தேவை; ஆனால், சென்னை விமான நிலைய ஓடுபாதையின் அகலம் 45 மீட்டர் தான். அதேபோல், ஏர்பஸ் 350, போயிங் 777 வகை விமானங்களில் வரும் பயணிகளை கையாளுவதற்கான வசதிகள் மட்டும் தான் சென்னை விமான நிலையத்தில் உள்ளது. அதனால், ஏர்பஸ் 380 விமானங்களை சென்னை விமான நிலையத்தில் இருந்து இயக்க முடியாது. புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டால் மட்டும்தான் இந்த வகை விமானங்கள் மற்றும் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்படக் கூடிய புதிய வகை விமானங்களை சென்னையிலிருந்து இயக்க முடியும்.</p><p>2031-ம் ஆண்டுக்குள் புதிய விமான நிலையம் கட்டப்படவில்லை என்றால், சென்னைக்கு புதிய விமானங்கள் வராது. அவை பெங்களூரு, ஐதராபாத் விமான நிலையங்களுக்கு சென்றால், அது ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் பின்னடைவை ஏற்படுத்தி விடும் என்று வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அடுத்த ஐந்தாண்டுகளில் புதிய விமான நிலையம் பயன்பாட்டுக்கு வரவேண்டும். இப்போதே பணிகளைத்  தொடங்கினால் கூட, அது சாத்தியமாக இன்னும் 8 ஆண்டுகள் ஆகக்கூடும். எனவே, அவசர நிலையைக் கருத்தில் கொண்டு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை அரசு விரைந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.</p><p>சென்னை விமான நிலையம் அமைக்கும் விஷயத்தில் இத்தனைக் குழப்பங்கள் ஏற்படுவதற்கு காரணம்  நிலங்களை கையகப்படுத்தும் கொள்கையில் தெளிவு இல்லாததுதான். வேளாண்மை சாராத எந்தப் பணிக்கும் நிலங்களை கையகப்படுத்துவதில்லை என்பதை கொள்கை முடிவாத தமிழ்நாடு அரசு எடுத்திருந்தால், பரந்தூர் விமான நிலையத்திற்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டிருக்காது. எனவே, இனிவரும் காலங்களிலாவது இத்தகைய குழப்பங்கள் ஏற்படுவதைத் தடுக்க தமிழ்நாட்டில் எந்தவொரு திட்டத்திற்காவும் வேளாண் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது என்பதை கொள்கை முடிவாக அரசு அறிவிக்க வேண்டும்.</p><p>அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக மேல்மா உள்ளிட்ட 11 கிராமங்களில் 3,174 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி விரிவாக்கத்திற்காக ஒரு கைப்பிடி மண்ணை கூட கையகப்படுத்திக் கொடுக்க மாட்டோம் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் வாக்குறுதி அளிக்க வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக பரந்தூர் விமான நிலையத்திற்காக இதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சிப்காட் தொழிற்பேட்டை அமைத்தல் உள்ளிட்ட எந்த திட்டத்துக்காகவும் பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா ஏற்கப்பட்டதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி - ஐகோர்ட்டு உத்தரவு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-challenging-acceptance-of-aiadmk-mlas-resignations-dismissed-high-court-order</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-challenging-acceptance-of-aiadmk-mlas-resignations-dismissed-high-court-order#comments</comments><guid isPermaLink="false">6c737a54-5b43-44d2-8977-516ee562b5c1</guid><pubDate>Mon, 24 Aug 2026 08:43:45 +0000</pubDate><atom:updated>2026-08-24T08:43:45.941Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,High Court,ஐகோர்ட்டு,அ.தி.மு.க.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/hp444oj1/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/hp444oj1/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தனர். இதை எதிர்த்து அ.தி.மு.க. கொறடாஅ அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.</p><p>இந்த நிலையில 6 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா ஏற்கப்பட்டதை எதிர்த்து மதுரையை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. </p><p>இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “ஒரே காரணத்துக்காக ஏன் அடுத்தடுத்து வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன? ஏற்கனவே சம்பந்தப்பட்ட கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் வழக்கறிஞர்கள் வாதம் துவங்கியுள்ளது. ஒரு பிரச்சனைக்கு ஒரு வழக்கு போதும். நிலுவையில் இருக்கக்கூடிய வழக்கை நீர்த்துப் போக செய்யக்கூடிய வகையில ஏன் அடுத்தடுத்து வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன?” என்று கேள்வி எழுப்பினர்.</p><p>அது மட்டுமின்றி, இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய போவதாக நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து, இந்த மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டு, மனுவை வாபஸ் பெற அனுமதித்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>அண்ணா நகரில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-dies-after-falling-into-rainwater-drainage-ditch-in-anna-nagar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-dies-after-falling-into-rainwater-drainage-ditch-in-anna-nagar#comments</comments><guid isPermaLink="false">4e279689-8dab-4011-b020-1b62b9b14c54</guid><pubDate>Mon, 24 Aug 2026 08:33:27 +0000</pubDate><atom:updated>2026-08-24T08:33:27.796Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai City,Annanagar,மழைநீர் வடிகால்,அண்ணா நகர்,StormWaterDrain</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/8rm4tc4q/women33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பெண் உயிரிழப்பு]]></media:title><media:description type="html"><![CDATA[ மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் உயிரிழப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/8rm4tc4q/women33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை அண்ணா நகரில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து கலாவதி என்ற பெண் உயிரிழந்தார்.</p><p>சென்னை அண்ணா நகரில் மழைநீர் வடிகால் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. நேற்று பெய்த கனமழையால் பள்ளத்தில் தண்ணீர் முழுவதுமாக தேங்கியிருந்தது.</p><p>இந்நிலையில் அந்த வழியாக வந்த பெண் ஒருவர் கவனிக்காத நிலையில், தண்ணீர் நிரம்பிய பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார். அவர் பெயர் கலாவதி என்று தெரிய வந்துள்ளது.</p><p>அவர் பள்ளத்தில் விழுந்ததை அங்கிருந்தவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த பள்ளத்தின் அடியில் மின் வயர்கள் சென்றதால் மின்சாரத்தைத் துண்டித்த பிறகு அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தபோது அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.</p><p>பள்ளத்தில் மின்கசிவு ஏற்பட்டு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%20">மின்சாரம் தாக்கி </a>இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.</p><p>இந்தநிலையில் இது குறித்து அரசின் அலட்சியத்தால் தாய் உயிரிழந்துவிட்டதாக கண்ணீருடன் மகள் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், </p><p>பள்ளத்தை சுற்றி தடுப்புகள் இல்லை. மின்வாரிய பண் இநடப்பது குறித்து எச்சரிக்கை இல்லை. அரசின் அலட்சியத்தால் எனது தாய் கலாவதி உயிரிழந்துள்ளார் என கண்ணீர் மல்க கூறினார். </p><p>பள்ளத்தை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தால் உயிரிழப்பை தடுத்திருக்கலாம் என மக்கள் வேதனை தெரிவித்தனர். </p>]]></content:encoded></item><item><title>கொளத்தூர் தொகுதி தோல்வியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் வழக்கு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalin-files-case-challenging-kolathur-constituency-defeat</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalin-files-case-challenging-kolathur-constituency-defeat#comments</comments><guid isPermaLink="false">14f7931c-815f-48f5-8aeb-0407d6024c4b</guid><pubDate>Mon, 24 Aug 2026 08:29:59 +0000</pubDate><atom:updated>2026-08-24T08:29:59.743Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,M.K.Stalin,கொளத்தூர்,Kolathur,கொளத்தூர் தொகுதி,Kolathur Constituency,வி.எஸ்.பாபு,VS Babu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/v6lxiyt1/CHENNAI-15.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/v6lxiyt1/CHENNAI-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>கொளத்தூர் தொகுதி தோல்வியை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.</p><p>சென்னை,</p><h2>மு.க.ஸ்டாலின் தோல்வி</h2><p>தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம், முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என்றும் மீண்டும் சோதனை செய்ய வேண்டும் என்றும் திமுக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.</p><h2>மின்னணு எந்திரங்கள் ஆய்வு</h2><p>நீதிமன்ற உத்தரவுப்படி, கொளத்தூரில் 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு இயந்திரங்களை ஆய்வு செய்யும் பணி கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கின. சென்னை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநாராட்சி ஆணையருமான சமீரன் முன்னிலையில் 3 நாட்கள் ஆய்வுப் பணிகள் நடைபெற்றன.</p><p>இதையடுத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநாராட்சி ஆணையருமான சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி தேர்வு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஆய்வு, சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. மாதிரி வாக்குப்பதிவின் முடிவுகள் மற்றும் விவிபேட் சீட்டுகள் சரிபார்க்கப்பட்டதில், எந்தவித முரண்பாடும் இல்லாமல் அனைத்தும் சரியாக இருந்தது உறுதி செய்யப்பட்டது.</p><p>சரிபார்ப்பு பணியின் போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் முழுமையாக விளக்கிக் காண்பிக்கப்பட்டன. விண்ணப்பதாரர் வேட்பாளரின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் பிற போட்டியிட்ட வேட்பாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் எழுப்பிய அனைத்து சந்தேகங்களுக்கும் உரிய விளக்கங்கள் உடனுக்குடன் அளிக்கப்பட்டன.</p><p>ஆய்வு மற்றும் சரிபார்ப்புக்கு உட்படுத்தப்பட்ட அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், இந்திய தேர்தல் ஆணையம் வகுத்துள்ள சரிபார்ப்பு நடைமுறைகளின்படி முறையாக செயல்படுகின்றன என்று பெல் நிறுவன பொறியாளர்களால் சான்றளிக்கப்பட்டுள்ளது. அச்சான்றிதழின் நகல் விண்ணப்பதாரர் வேட்பாளருக்கு வழங்கப்பட்டது" என்று தெரிவித்தார்.</p><h2>மு.க.ஸ்டாலின் வழக்கு</h2><p>இந்த நிலையில், கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><p>சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தொடர்ந்துள்ள வழக்கில்,</p><p>நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில், தவெக சார்பில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆய்வு செய்ய தேர்தல் ஆணையத்தின் அனுமதி கேட்கப்பட்டது. அனுமதி பெற்றவுடன் அதன் அடிப்படையில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ தலைமையிலான வழக்கறிஞர்கள் சிந்தாதிரிப்பேட்டையில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு எந்திரங்களை ஆய்வு செய்தனர்.</p><h2>பல்வேறு முறைகேடுகள்...</h2><p>குறிப்பாக வாக்கு பதிவு மையங்களான 1, 17,28,32,75,78, 79,84,87,112,122 157,170 உள்ளிட்ட வாக்கு சாவடிகளில் வைக்கப்பட்டிருந்த விவி பேட், வாக்கு பதிவு எந்திரம், கண்ட்ரோல் யூனிட் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன. அப்போது பெல் நிறுவனத்தினால் நியமிக்கப்பட்ட என்ஜினீயர் உடன் இருந்தார். நூறு சதவீத விவி பேட் மற்றும் வாக்கு பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது.</p><p>இதில் ஆறு வாக்கு சாவடிகளில் பதிவான வாக்குகள் மற்றும் விவிபேடுகளை ஒப்புகை சீட்டுகளை ஒப்பிட்டுப் பார்த்ததில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டன. இதையடுத்து அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் பிரதிநிதி சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.</p><p>தேர்தல் எந்திரம் தொடர்பாக புகார் செய்வது தொடர்பான வெளிப்படையான ஒரு நடை முறையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும். பல வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு முறைகேடு நடந்துள்ளது. குறிப்பாக பல வாக்குப்பதிவு எந்திரங்களில் ஹார்டுவேர் என்று சொல்லக்கூடிய மென்பொருள் கோளாறு ஏற்பட்டது.</p><h2>வி.எஸ்.பாபு வெற்றி செல்லாது என அறிவிக்க...</h2><p>தொழில்நுட்ப கோளாறுகளை சுட்டிக்காட்டிய பின்பும் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி உரிய வழிகாட்டு நெறிமுறைகளின்படிதான் சோதனை மற்றும் சரிபார்த்தல் நடைபெற்றுள்ளது.</p><p>எனவே பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதால் அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவி பேடுகளை சரிபார்க்க வேண்டும். மேலும், தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும், நான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும் - மு.க. ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/abandoning-paranthur-airport-will-push-tamil-nadus-development-into-an-abyss-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/abandoning-paranthur-airport-will-push-tamil-nadus-development-into-an-abyss-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">acfefa2e-3733-4d68-95f4-9d3b26de561f</guid><pubDate>Mon, 24 Aug 2026 08:27:28 +0000</pubDate><atom:updated>2026-08-24T08:27:28.251Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,சென்னை,Development,வளர்ச்சி,பரந்தூர் விமான நிலையம்,Paranthur Airport,மு.க. ஸ்டாலின்,M.K. Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/h0ubpyhe/m.k.stailn.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.க. ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/h0ubpyhe/m.k.stailn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>பரந்தூர் விமான நிலையம்</h2><p>பரந்தூர் பன்னாட்டு விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக மாண்புமிகு தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு மாநில வளர்ச்சியைப் பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிடும். </p><p>அற்ப அரசியல் காரணங்களுக்காகத் தமிழ்நாட்டின் நலனை அடகு வைக்கக் கூடாது. மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை விதி எண் 110-ன் கீழ் அறிவித்துவிட்டு விவாதத்துக்கோ கருத்து தெரிவிக்கவோ கூட இடமில்லாமல் செய்திருப்பது சரியல்ல.</p><h2>ஏமாற்றம்</h2><p>மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி, ஆட்டோமொபைல் என சகல துறைகளிலும் முதலிடம் வகிக்கும் தமிழ்நாட்டின் தலைநகரில் உலகத் தரத்திலான ஒரு விமான நிலையம் அமைவது மிக மிக அவசியமானது. அதை வேண்டாம் என மறுத்திருப்பது மாற்றமல்ல; பெருத்த ஏமாற்றம்!</p><p>சாத்தியமுள்ள அனைத்து மாற்று இடங்களையும் கவனமாகப் பரிசீலித்த பின்புதான் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">பரந்தூர்</a> தேர்ந்தெடுக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்தலும் நிறைவடையும் தறுவாயில் உள்ளது. பலகட்டப் பணிகள், ஒப்புதல்கள் நிறைவடைந்த நிலையில் ஆட்சிக்கு வந்ததும் கட்டுமானம் விரைந்து தொடங்கப்பட பல திட்டங்களை நாங்கள் வைத்திருந்தோம். தற்போது அமைந்துள்ள புதிய அரசு மீண்டும் வேறு இடத்தைத் தேர்வு செய்து பணிகள் தொடங்குமுன், தமிழ்நாட்டின் வளர்ச்சியே மொத்தமாக குறைந்துவிடும்.</p><h2>தொழில் வளர்ச்சி</h2><p>முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக திராவிட மாடல் ஆட்சியில் இருந்த தமிழ்நாடு கடைசி இடத்துக்குத் தள்ளப்படும். முதல்-அமைச்சரின் அறிவிப்பு நம் போட்டி மாநிலங்களுக்கு அடித்த ஜாக்பாட். தொழில் வளர்ச்சி இல்லாமல் ஒரு ட்ரில்லியன் டாலர், ஒன்றரை டரில்லியன் டாலர் என்ற பொருளாதார வளர்ச்சி இலக்குகள் சாத்தியமே இல்லை. எந்த யோசனையும் ஆலோசனைகளும் இல்லாமல் த.வெ.க. அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளைத் தகர்க்கும் பேரிடி.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் வெளிப்புற நோயாளிகள் பிரிவு 26-ந்தேதி இயங்காது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-outpatient-department-of-jipmer-hospital-puducherry-will-not-function-on-the-26th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-outpatient-department-of-jipmer-hospital-puducherry-will-not-function-on-the-26th#comments</comments><guid isPermaLink="false">7652d780-2adc-4503-9c00-5eb7e2371bc9</guid><pubDate>Mon, 24 Aug 2026 08:21:27 +0000</pubDate><atom:updated>2026-08-24T08:21:27.881Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Jipmer Hospital,Milad-un-Nabi,மிலாடி நபி,புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/bw3gc7as/15.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/bw3gc7as/15.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுச்சேரி,</p><p>மிலாடி நபியை முன்னிட்டு, வரும் 26-ந்தேதி புறநோயாளிகள் பிரிவு இயங்காது என புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“அரசு விடுமுறை தினமான 26.08.2026 (புதன்கிழமை) அன்று மிலாடி நபியை முன்னிட்டு ஜிப்மர் வெளிப்புற நோயாளி பிரிவுகள் இயங்காது. எனவே இந்த தேதியில் நோயாளிகள் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனினும் அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும்."</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்வதை காங்கிரஸ் ஏன் ஆதரிக்கிறது? - மாணிக்கம் தாகூர் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-does-congress-support-cancellation-of-parantur-airport-project-explanation-by-manikam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-does-congress-support-cancellation-of-parantur-airport-project-explanation-by-manikam-tagore#comments</comments><guid isPermaLink="false">178ae287-5c53-47c6-9087-80a54bb8bf26</guid><pubDate>Mon, 24 Aug 2026 08:14:30 +0000</pubDate><atom:updated>2026-08-24T08:14:30.846Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணிக்கம் தாகூர்,பரந்தூர் விமான நிலையம்,Parandur Airport,Manickam Tagore</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/pkdr1b15/14.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/pkdr1b15/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;</p><p>ஏழு ஆண்டுகளாக ஏகனாபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலத்தையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கப் போராடி வந்தனர். இன்று பரந்தூர் பசுமைவெளி விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இது ஒரு கட்சியின் வெற்றியா, மற்றொரு கட்சியின் தோல்வியா என்பதல்ல கேள்வி. இந்தத் திட்டம் தொடக்கத்திலேயே நியாயப்படுத்தக்கூடியதாக இருந்ததா என்பதே கேள்வி. அரசின் சொந்த ஆய்வுகள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இந்த ரத்துக்கு ஆதரவு அளிப்பதற்கான காரணங்கள் பின்வருமாறு:</p><p>1. அரசின் சொந்த ஆய்வே இதை 2022-ஆம் ஆண்டிலேயே சுட்டிக்காட்டியது.</p><p>இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) மார்ச் 2022-ல் சமர்ப்பித்த சாத்தியக்கூறு அறிக்கையிலேயே, பரந்தூர் நீர்நிலைகளால் சூழப்பட்ட பகுதி என்றும், தேர்வு செய்யப்பட்ட நிலப்பரப்பில் நான்கில் ஒரு பங்குக்கும் அதிகமான பகுதி பாசனக் குளங்களைக் கொண்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 201 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட செயற்கை ஏரி ஒன்று திட்ட எல்லையிலிருந்து வெறும் 1.4 கி.மீ. தொலைவில் இருப்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2026-ல் TVK  அரசு திட்டத்தை ரத்து செய்யக் கூறிய காரணமான தாழ்வான நிலப்பரப்பு மற்றும் நீர் தேங்கும் தன்மை ஆகியவை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அரசின் பதிவில் இருந்தன.</p><p>2. தேர்வு செய்யப்பட்ட இடம், அரசே வகுத்திருந்த அளவுகோல்களில்கூட நிலைத்து நிற்கவில்லை.</p><p>மாற்று இடமான பன்னூருடன் ஒப்பிடும்போது, பரந்தூர் சென்னையிலிருந்து கிட்டத்தட்ட இரண்டரை மடங்கு தொலைவில் இருந்தது - 62 கி.மீ.க்கு எதிராக 27.6 கி.மீ. மேலும், பன்னூரில் சுமார் 250 குடும்பங்கள் இடம்பெயர வேண்டியிருந்த நிலையில், பரந்தூரில் சுமார் 1,005 குடும்பங்கள் பாதிக்கப்பட வேண்டியிருந்தது. அதேபோல், நிலத்தை நிரப்பி சமன்படுத்துவதற்கான பணியும் பரந்தூரில் சுமார் இருமடங்கு அதிகமாக இருந்தது. அரசு முக்கியமானதாகக் கருதிய பெரும்பாலான அளவுகோல்களிலும் பன்னூரே வலுவான மாற்றாக இருந்தது.</p><p>3. ஏழு ஆண்டுகாலப் போராட்டம் உண்மையான, நியாயமான குறையை வெளிப்படுத்தியது.</p><p>ஏகனாபுரம் மக்கள் 1,000 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடினர். இது வளர்ச்சிக்கு எதிரான போராட்டமல்ல ! தங்களது நிலம், நீர், வாழ்வாதாரம் ஆகியவற்றைப் பாதுகாக்க ஒரு சமூகமே நடத்திய நியாயமான போராட்டம். இன்று அரசின் சொந்த ஆவணங்களே அவர்களின் அச்சங்களை உறுதிப்படுத்தியுள்ளன.</p><p>4. ரத்துக்கான காரணங்கள் மூன்று ஆண்டுகளாகவே அரசின் பதிவில் இருந்தன.</p><p>TVK அரசு ரத்துக்கான தொழில்நுட்ப காரணங்களாக முன்வைத்த அம்சங்கள் அனைத்தும் 2022-ஆம் ஆண்டின் ஆய்விலேயே இருந்தன. ஆனால் அவை மூன்று ஆண்டுகளாக நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவில்லை. இது எந்த ஒரு கட்சி அல்லது ஆட்சியையும் மட்டும் சார்ந்த தோல்வி அல்ல் நிர்வாக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பல ஆண்டுகளைக் கடந்து செல்லும் ஒரு தவறாகும்.</p><p>5. இது காங்கிரஸ் கட்சியின் நீண்டகால தேசிய நிலைப்பாட்டுடன் ஒத்துப்போகிறது.</p><p>பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு முன், பாதிக்கப்படும் மக்களின் உண்மையான ஒப்புதலும், சுயாதீனமான சமூக தாக்க மதிப்பீடும் அவசியம் என்பதே காங்கிரஸின் நீண்டகால நிலைப்பாடு. 2013-ஆம் Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act சட்டத்தில் இந்தக் கொள்கைகள் சட்டரீதியாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளன. எனவே, பரந்தூர் ரத்து முடிவுக்கு எங்களது ஆதரவு அந்த அடிப்படைக் கொள்கையிலிருந்தே வருகிறது.</p><p>6. நிலம் கையகப்படுத்தப்பட்ட சட்ட நடைமுறையிலும் தீவிரமான குறைபாடுகள் இருந்தன.</p><p>தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சிறப்புத் திட்டங்கள் சட்டம், 2023 (Tamil Nadu Land Consolidation for Special Projects Act - 2023) மூலமாக, ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் உள்ளிட்ட நிலங்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சட்டம் சட்டப்பேரவையில் ஒரே நாளில் அறிமுகப்படுத்தப்பட்டு, விவாதமின்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. பாதிக்கப்படும் குடும்பங்களின் உண்மையான ஒப்புதல் பெறும் நடைமுறை இல்லாத நிலையில், ஐந்து பேர் கொண்ட குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. சுற்றுச்சூழல் அனுமதிகள், முழுமையான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (NOC), மாநில ஈரநில ஆணையத்தின் தடையின்மைச் சான்று (EIA) ஆகியவை நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதும் நிலுவையில் இருந்தன.</p><p>7. எங்களது நிலைப்பாடு ஒரு அரசியல் அறிவிப்புக்கான எதிர்வினையல்ல் ஆதாரங்களின் அடிப்படையிலானது.</p><p>முந்தைய ஆளும் கட்சியின் அரசியல் முடிவுக்கு பதிலளிக்கும் வகையில் எங்களது நிலைப்பாடு உருவாக்கப்படவில்லை. அரசே நியமித்த ஆய்வு மற்றும் அரசின் ஆவணங்களில் பதிவாகியுள்ள உண்மைகளின் அடிப்படையிலேயே எங்களது ஆதரவு உள்ளது. எனவே, இது கட்சி அரசியலைத் தாண்டிய, கொள்கை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலான நிலைப்பாடாகும்.</p><p>8. மாற்றுத் திட்டத்திற்கும் அரசு தெளிவான காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும்.</p><p>சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை முறையான சமூக தாக்க மதிப்பீடு (Social Impact Assessment) மற்றும் பாதிக்கப்படும் மக்களின் உண்மையான ஒப்புதல் பெறும் நடைமுறை மூலம் கண்டறிந்து, ஆய்வு செய்து, இறுதி அனுமதிகளைப் பெறுவதற்கான தெளிவான காலக்கெடுவை அரசு பொதுவெளியில் அறிவிக்க வேண்டும். ஒரு தவறான முடிவைத் திருத்துவது, சென்னையின் விமான நிலையம் அதன் முழுத் திறனை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், மாற்றுத் திட்டத்தை முடிவில்லாமல் தாமதப்படுத்தும் புதிய காரணமாக மாறக்கூடாது. ஆனால், எங்களது ஆதரவு திட்டம் ரத்து செய்யப்பட்டதுடன் முடிவடையாது.</p><p>நெல்வாய், நாகப்பட்டு, தண்டலம், போடவூர், வாலத்தூர் மற்றும் அக்கம்மாபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, ஏற்கனவே நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களின் பக்கமும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுதியாக நிற்கிறது.</p><p>அவர்களின் நிலம் தொடர்பான நிலைப்பாட்டை மூன்று மாதங்களுக்குள் அரசு தெளிவுபடுத்த வேண்டும். இன்னும் வழங்கப்பட வேண்டியுள்ள சுமார் 30மூ இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அடிப்படை குடிமை வசதிகளை மீண்டும் ஏற்படுத்த வேண்டும். மேலும், சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்காக எதிர்காலத்தில் எந்த இடம் தேர்வு செய்யப்பட்டாலும், பாதிக்கப்படும் மக்களுடன் உண்மையான, வெளிப்படையான ஆலோசனை நடத்தப்பட வேண்டும்.</p><p>சென்னைக்கு கூடுதல் விமானப் போக்குவரத்து திறன் தேவை என்பது உண்மை. ஆனால், எந்த ஒரு நகரத்தின் வளர்ச்சியும் ஒரு சமூகத்தின் நிலம், நீர், வாழ்வாதாரம் மற்றும் கண்ணியத்தை - அவர்களின் உண்மையான ஒப்புதலின்றி - பலிகொடுத்து உருவாகக் கூடாது.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் தவெக அரசு: மு.வீரபாண்டியன் வரவேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-government-fulfilling-election-promises-m-veerapandian-welcomes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-government-fulfilling-election-promises-m-veerapandian-welcomes#comments</comments><guid isPermaLink="false">9de3281b-ca65-4bd8-bcf6-4804d03d609c</guid><pubDate>Mon, 24 Aug 2026 08:12:25 +0000</pubDate><atom:updated>2026-08-24T08:12:25.825Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி,CPI,தேர்தல் வாக்குறுதிகள்,election promises,மு.வீரபாண்டியன்,M. Veerapandian,தவெக அரசு,TVK Government</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/r9p74wnm/veerapandian.gif" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.வீரபாண்டியன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/r9p74wnm/veerapandian.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>விமான போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு புதிய கூடுதலான விமான நிலையம் ஒன்றை சென்னையில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நீடித்து வருகிறது. அதற்கான முறையில் பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்காக நிலமும் கையகப்படுத்தப்பட்டன. ஆனால், இத்திட்டத்தை எதிர்த்து அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் தொடர்ந்து போராடி வந்தனர். இத்திட்டதால் விவசாய நிலங்கள் நீர் நிலைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர் .</p><h2>110 விதி</h2><p>இந்நிலையில் பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது, புதிய விமான நிலையத்திற்கான இடம் விரைவில் இறுதி செய்யப்படும் என தவெக தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில்  முதல்-அமைச்சர் விஜய்  சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளது வரவேற்பிற்குரியது. புதிய விமான நிலையத்தை அதிக அளவில் சுற்றுச்சூழலுக்கும் விவசாய நிலங்களுக்கும், குடியிருப்புகளுக்கும் பாதிப்பில்லாமல் உருவாக்கிட தகுந்த இடத்தை உடனடியாக தமிழ்நாடு அரசு தேர்வு செய்ய வேண்டும் . விமான நிலையம் அமைக்கும் பணியை துரிதப் படுத்திட வேண்டும் .</p><h2>6 சமையல் எரிவாயு சிலிண்டர்</h2><p>ஆண்டு தோறும் 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கட்டணமில்லாமல் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் தவெக தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில் தற்பொழுது முதற்கட்டமாக ஆண்டுக்கு ரூ. 2.5 லட்சம் வரை வருமானம் உள்ள குடும்பங்களுக்கு வரும் பொங்கல் நாளிலிருந்து மூன்று சிலிண்டருக்கான பணம் வங்கியில் செலுத்தப்படும் என அறிவித்துள்ளது வரவேற்பிற்குரியது. இருப்பினும் தேர்தல் வாக்குறுதி அடிப்படையில் 6 சிலிண்டர்களை வழங்கிட வேண்டும். ஆண்டு குடும்ப வருமானம் ரூ 5 லட்சம் வரை உள்ள குடும்பங்களுக்கும் இத்திட்டத்தின் பயன் கிடைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.</p><h2>வெற்றிப் பயணத் திட்டம்</h2><p>தேர்தல் வாக்குறுதிபடி, மகளிர் கட்டணமில்லா பயண திட்டம் வரும் அக்.2 முதல், விரிவாக்கம் செய்யப்படுவதாக சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். முதல் கட்டமாக மாநகரம், நகரங்களில் சாதாரணப் பேருந்துகள் மட்டுமின்றி, எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் அரசுப் பேருந்துகளிலும், மகளிர் கட்டணமில்லாப் பயணங்கள் மேற்கொள்ளலாம். மாவட்டங்களுக்கிடையே பயணம் மேற்கொள்ள, புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில், சாதாரணக் கட்டணப் பேருந்துகளிலும், கட்டணமில்லாப் பயணங்கள் மேற்கொள்ளலாம் என அறிவித்துள்ளார். “இத்திட்டத்தில் பயன்பெற, வருமான உச்சவரம்போ, பயண எண்ணிக்கையில் கட்டுப்பாடுகளோ இல்லை, ‘வெற்றிப் பயணத் திட்டம்’, இதர சேவைகளிலும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்” என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புகளை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி</a>யின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>பரந்தூர் விமான நிலையம் ரத்து! மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி - வேல்முருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/paranthur-airport-cancelled-a-victory-for-the-peoples-struggle-velmurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/paranthur-airport-cancelled-a-victory-for-the-peoples-struggle-velmurugan#comments</comments><guid isPermaLink="false">021acd57-29be-4864-bf16-73e9f5d52312</guid><pubDate>Mon, 24 Aug 2026 08:09:52 +0000</pubDate><atom:updated>2026-08-24T08:09:52.242Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,போராட்டம்,cancelled,வெற்றி,Velmurugan,பரந்தூர் விமான நிலையம்,Paranthur Airport,தமிழக வாழ்வுரிமைக் கட்சி,Cancel. ரத்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/ov0ifria/159.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/ov0ifria/159.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பரந்தூர் விமான நிலையம் ரத்து! மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். </p><p>இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>பரந்தூர் விமான நிலையம்</h2><p>பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடுவதாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்  அறிவித்திருப்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வரவேற்கிறேன். ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்களின் விடாப்பிடியான போராட்டம், அவர்களின் மண்ணையும் வாழ்வாதாரத்தையும் காப்பதற்கான நீண்ட நெடிய போராட்டம் இன்று வெற்றியைப் பெற்றிருக்கிறது.</p><h2>வாழ்த்துகள்</h2><p>வீடுகளையும், விளைநிலங்களையும், தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்த வாழ்விடங்களையும் இழக்க மறுத்து, அதிகாரத்தின் அழுத்தங்களுக்கு அஞ்சாமல் களத்தில் நின்ற அந்த மக்களின் உறுதிதான் இந்த வெற்றியின் அடித்தளம். </p><p>அதேபோல், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">பரந்தூர் </a>மக்களின் நியாயமான கோரிக்கைக்கு துணைநின்று, களத்தில் குரல் கொடுத்து, போராட்டங்களுக்கு ஆதரவாக நின்ற அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் போராட்டத் தோழர்களுக்கும், எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இது ஒரு விமான நிலையத்திட்டம் கைவிடப்பட்ட வெற்றி மட்டுமல்ல. மக்களின் விருப்பத்திற்கு எதிராக எந்தத் திட்டத்தையும் திணிக்க முடியாது என்பதையும், மண்ணுக்காக மக்கள் ஒன்றுபட்டால் அதிகாரத்தையே பணிய வைக்க முடியும் என்பதையும் நிரூபித்துள்ள வெற்றி.</p><h2>திருப்பி ஒப்படைக்கப்பட வேண்டும்</h2><p>இந்த அறிவிப்போடு அரசின் பொறுப்பு முடிந்துவிடவில்லை. விமான நிலையம் அமைப்பதற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள், இனி வேறு எந்தத் திட்டத்திற்காகவும், குறிப்பாக சிப்காட் அமைக்கும் திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படக் கூடாது. அந்த நிலங்கள் அவற்றின் உண்மையான உரிமையாளர்களான விவசாயிகளிடமே உடனடியாகவும் முழுமையாகவும் திருப்பி ஒப்படைக்கப்பட வேண்டும்.</p><p>பல ஆண்டுகளாக தங்களது நிலத்திற்காகப் போராடிய மக்களிடம், திட்டம் கைவிடப்பட்டது என்ற அறிவிப்பை மட்டும் கொடுத்துவிட்டு அரசு நின்றுவிடக்கூடாது. நிலத்தைப் பறிப்பது எவ்வளவு வேகமாக நடந்ததோ, அதே வேகத்தில் நிலத்தை மக்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையும் நடைபெற வேண்டும்.</p><h2>வலியுறுத்தல்</h2><p>தமிழ்நாடு அரசு, கையகப்படுத்தப்பட்ட நிலங்களை வேறு எந்தத் திட்டத்திற்கும் மாற்றாமல், சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து முடித்து, உரிய உரிமையாளர்களிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். </p><p>அத்துடன், கையகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து இது நாள் வரையிலும் இந்த விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து உரிய நிவாரணமும் வழங்கப்பட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தாய்லாந்து சைபர் மோசடி கும்பலிடம் சிக்கிய தமிழக இளைஞர்கள்: ஏஜெண்டுகள் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-youths-trapped-by-thai-cyber-scam-gang-agents-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-youths-trapped-by-thai-cyber-scam-gang-agents-arrested#comments</comments><guid isPermaLink="false">f5aae2c6-59d8-4854-987d-089cd287e19d</guid><pubDate>Mon, 24 Aug 2026 08:02:48 +0000</pubDate><atom:updated>2026-08-24T08:02:48.412Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Thailand,தாய்லாந்து,சைபர் கிரைம் மோசடி,இளைஞர்கள்,Alert,cyber crime</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/ym68a0va/101.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஏஜெண்டுகள் கைது]]></media:title><media:description type="html"><![CDATA[ சைபர் குற்ற கும்பலிடம் சிக்கிய, தமிழக இளைஞர்கள் மீட்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/ym68a0va/101.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தாய்லாந்து நாட்டில் அதிக சம்பளத்தில் கணினி வேலை வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் செல்லப்பட்ட தமிழக இளைஞர்கள், மியான்மர் எல்லைப் பகுதியில் உள்ள சர்வதேச<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D"> சைபர் </a>குற்ற கும்பல்களிடம் சிக்கி தவித்து வரும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தங்களை மீட்கக் கோரி அனுப்பிய ரகசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.</p><h2>வேலை மோசடி</h2><p>சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் டெலிகிராம் வழியாக "தாய்லாந்தில் டேட்டா என்ட்ரி மற்றும் வாடிக்கையாளர் சேவைக்கு ஆட்கள் தேவை என்றும் மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளம்" என கவர்ச்சிகரமான விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. அந்த விளம்பரங்களை நம்பி அணுகும் பட்டதாரி இளைஞர்களிடம், வேலைக்கான<a href="https://www.dailythanthi.com/topic/visa"> விசா</a> பெற தாமதமாகும் எனக் கூறி, அவசரமாக சுற்றுலா விசாவில் தாய்லாந்திற்கு ஏஜெண்டுகள் அழைத்துச் செல்கின்றனர்.</p><h2>தாய்லாந்தில் இருந்து மியான்மருக்கு கடத்தல்</h2><p>பாங்காக் விமான நிலையத்தில் இறங்கும் இளைஞர்களை வரவேற்கும் உள்ளூர் ஏஜெண்டுகள், அவர்களை காரில் அழைத்துச் செல்கின்றனர். ஆனால், அவர்கள் வேலை செய்யும் இடத்திற்குச் செல்லாமல், <a href="https://www.dailythanthi.com/news/world">தாய்லாந்து-மியான்மர்</a> எல்லையைக் கடந்து, ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள 'கே.கே. பார்க்' மற்றும் 'மயாவடி' போன்ற மிக அபாயகரமான முகாம்களுக்குள் வலுக்கட்டாயமாக கொண்டு செல்லப்படுகின்றனர்.</p><h2>'சைபர் அடிமைகளாக' அனுபவிக்கும் சித்திரவதைகள்</h2><p>முகாமிற்குள் நுழைந்தவுடன் இளைஞர்களின் பாஸ்போர்ட், செல்போன் மற்றும் அடையாள அட்டைகள் பறிக்கப்படுகின்றன. மேலும் இந்தியர்கள் மற்றும் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்களை குறிவைத்து 'கிரிப்டோகரன்சி முதலீட்டு மோசடி', 'டேட்டிங் ஆப் மோசடி' மற்றும் 'டிஜிட்டல் அரெஸ்ட்' போன்ற ஆன்லைன் ஏமாற்று வேலைகளை செய்ய அவர்கள் வற்புறுத்தப்படுகிறார்கள்.</p><p>தினசரி நிர்ணயிக்கப்படும் இலக்குகளை முடிக்கத் தவறினால் அல்லது இந்த வேலைகளை செய்ய மறுத்தால், இளைஞர்கள் கொடூரமான உடல் ரீதியான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். பட்டினியாக போடுதல், இரும்பு கம்பிகளால் தாக்குதல் மற்றும் மின்சார அதிர்வு கொடுப்பது போன்ற அத்துமீறல்கள் அங்கு தினசரி நடப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.</p><h2>தமிழக போலீஸ் மற்றும் அரசின் அதிரடி நடவடிக்கை</h2><p>பாதிக்கப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், தமிழக சைபர் கிரைம் போலீசாரும் மத்திய அரசும் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். தமிழகத்தில் இளைஞர்களை ஏமாற்றி அனுப்பிய ஏஜெண்டுகளை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி மணவாளன் (35 வயது), ராஜ்குமார் (36 வயது), தீபக் டோனா (27 வயது) மற்றும் ஜோவின் அபிஷேக் ராஜன் (28 வயது) ஆகியோரை கைது செய்தனர்.</p><p>இவர்களுக்கு பின்னணியில் செயல்படும் சர்வதேச கடத்தல் கும்பலின் நெட்வொர்க்கை உடைக்க விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகங்கள் வழியாக, அந்த நாட்டு ராணுவ மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து முகாம்களில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.</p><h2>வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியத்தின் முக்கிய எச்சரிக்கை</h2><p>வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்ல விரும்பும் இளைஞர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அரசு எச்சரித்துள்ளது. சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வது சட்டவிரோதமானது. கண்டிப்பாக 'வேலை விசா' மூலமாக மட்டுமே செல்ல வேண்டும். மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மூலம் மட்டுமே வேலைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.</p><p>இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது தகவல்களைப் பகிர விரும்புபவர்கள், தமிழக அரசின் மறுவாழ்வு மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை உடனே தொடர்பு கொள்ளலாம் என எச்சரிக்கை விடுத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>பூந்தமல்லி: அரசு பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி- மயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/poonamallee-students-suffer-vomiting-and-dizziness-after-eating-breakfast-at-a-government-school</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/poonamallee-students-suffer-vomiting-and-dizziness-after-eating-breakfast-at-a-government-school#comments</comments><guid isPermaLink="false">53ab4fd6-0b2b-44e7-8b6a-c4818c6c6d2d</guid><pubDate>Mon, 24 Aug 2026 08:01:25 +0000</pubDate><atom:updated>2026-08-24T08:01:25.530Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Breakfast,மாணவர்கள்,Government School,Lizard,பல்லி விழுந்த உணவு,காலை உணவுத்திட்டம்,வாந்தி மயக்கம்</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/kvehiab1/42.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ ஆஸ்பத்திரியில் மாணவர்கள் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட மாணவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/kvehiab1/42.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பூந்தமல்லி அருகே உள்ள ஒரு அரசுப் பள்ளியில் காலை வழங்கப்பட்ட பொங்கல் உணவைச் சாப்பிட்ட 17 மாணவர்களுக்கு திடீரென<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D"> வாந்தி, மயக்கம் </a>மற்றும் தலைசுற்றல் ஏற்பட்டதால், அவர்கள் அவசரமாக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>காலை உணவில் பல்லி</h2><p>சென்னை, பூந்தமல்லி அருகே உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழக்கம் போல பொங்கல் வழங்கப்பட்டது. <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">மாணவர்கள்</a> அந்த உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ஒரு மாணவனின் தட்டில் இருந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF">பொங்கலில் பல்லி</a> ஒன்று கிடப்பதைக் கண்டு ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.</p><p>இதையடுத்து உடனடியாக உணவு விநியோகம் நிறுத்தப்பட்டது. அதற்குள் உணவைச் சாப்பிட்ட 17 மாணவர்களுக்கு அடுத்தடுத்து வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக மாணவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள பூந்தமல்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.</p><h2>ஆஸ்பத்திரியில் அனுமதி</h2><p>ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது மாணவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர்கள் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இச்சம்பவத்தை அறிந்த பெற்றோர்கள் பதற்றத்துடன் ஆஸ்பத்திரியில் குவிந்து வருகின்றனர்.</p><h2>அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை</h2><p>இச்சம்பவம் குறித்த தகவல் பரவியதும், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்த குறிப்பிட்ட மைய சமையல் கூடத்திலிருந்து மற்ற பள்ளிகளுக்கு அனுப்பவிருந்த காலை உணவுகளும் உடனடியாக நிறுத்தப்பட்டன.</p><p>சமையல் கூடத்தில் இருந்த உணவின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அலட்சியமாகச் செயல்பட்ட சமையல் ஊழியர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பெற்றோர்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">Chennai | Students | காலை உணவில் பல்லி.. மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் <a href="https://x.com/hashtag/middaymeal?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#middaymeal</a> <a href="https://x.com/hashtag/cmvijay?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#cmvijay</a> <a href="https://x.com/hashtag/school?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#school</a> <a href="https://x.com/hashtag/students?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#students</a> <a href="https://x.com/hashtag/chennai?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#chennai</a> <a href="https://x.com/hashtag/thanthitv?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#thanthitv</a><a href="https://t.co/pIiVZ1IlYu">https://t.co/pIiVZ1IlYu</a></p>&mdash; Thanthi TV (@ThanthiTV) <a href="https://x.com/ThanthiTV/status/2091777281094226014?ref_src=twsrc%5Etfw">August 24, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்த எஸ்.பி.வேலுமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sp-velumani-thanked-annamalai-in-the-legislative-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sp-velumani-thanked-annamalai-in-the-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">902c63f2-0a8f-49a8-9506-04cb064e7bda</guid><pubDate>Mon, 24 Aug 2026 07:57:44 +0000</pubDate><atom:updated>2026-08-24T07:57:44.624Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Annamalai,அண்ணாமலை,சட்டசபை,TN Assembly,எஸ்.பி.வேலுமணி,SP Velumani</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/ckprwsaj/CHENNAI-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/ckprwsaj/CHENNAI-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டசபையில் 6 துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-</p><p>மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் என குறிப்பிட்டு எஸ்.பி.வேலுமணி தனது உரையை தொடங்கினார். மேலும் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த திட்டங்களை குறிப்பிட்டு நன்றி கூறினார். உட்கட்சி பூசலில் இபிஎஸ் மீது எஸ்.பி.வேலுமணி அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவரது இன்றைய பேச்சு பேசுபொருளாகியுள்ளது.</p><p>தொடர்ந்து அவர் கூறியதாவது, “அம்மா உணவகம் உட்பட அம்மாவின் திட்டங்களை தொடர் திட்டங்களாக அறிவித்த முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அமைச்சர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். திமுக ஆட்சியில் யாரெல்லாம் பவரில் இருந்தார்களோ, அவர்களும் இன்று பவரில் தொடர்கிறார்கள். அவர்கள் நல்ல அதிகாரிகளுக்கு உரிய பணியை வழங்கவில்லை என்றார்.</p><p>அப்போது "அவர் எந்த கட்சி சார்பில் பேசியுள்ளார்?" என்று திமுக எம்எல்ஏ ஆஸ்டின் கேள்வி எழுப்ப, "அவர் அதிமுக என்று தான் பட்டியலில் குறிப்பிட்டுள்ளேன், வீணான குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்" என சபாநாயகர் பதிலளித்தார். வேலுமணி பதிலளிக்க எழுந்த போது, "வேண்டாம்... நான் கூறிவிட்டேன்" என்று அவரை சபாநாயகர் அமர வைத்தார்.</p><p>திமுக ஆட்சியில் நாங்கள் வாய்ப்பு கேட்கும் போது கொடுக்கமாட்டார்கள், நீங்கள் மிகவும் பெருந்தன்மையாக இருக்கிறீர்கள் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச, அதை கேட்டு முதல்-அமைச்சர் விஜய் உள்ளிட்ட அனைவரும் சிரித்தனர்.</p><p>தொடர்ந்து என் வெற்றிக்காக பணியாற்றிய கூட்டணி கட்சி தலைவர்களான பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் தலைவர் தம்பி அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று எஸ்.பி.வேலுமணி கூறினார்.</p><p>கோவை மாவட்டத்தில் அதிமுக ஆட்சியில் மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தியதுடன், அனைத்து முக்கியத் திட்டங்களையும் கொண்டு வந்ததாகவும். மேலும், கோவையில் மனித, வனவிலங்கு மோதல்கள் அதிகரித்துள்ளதாகவும், காட்டுப்பன்றிகளால் விளைநிலங்கள் சேதமடைவதாகவும் கூறினார். ஊருக்குள் வரும் காட்டுப்பன்றிகளை சுடுவதற்கு உரிய அனுமதி பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தினார். கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வரவும், கோவை விமான நிலையத்தை விரிவாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஓணம் ஸ்பெஷல்: மங்களூரு - கொல்லம் இடையே நாளை சிறப்பு ரெயில் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-special-special-train-between-mangaluru-and-kollam-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-special-special-train-between-mangaluru-and-kollam-tomorrow#comments</comments><guid isPermaLink="false">de3a10e0-114f-4c34-b4e2-d8280b3dbe01</guid><pubDate>Mon, 24 Aug 2026 07:22:14 +0000</pubDate><atom:updated>2026-08-24T07:22:14.733Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Mangaluru,மங்களூரு,சிறப்பு ரெயில்,Kollam,Special train,கொல்லம்,Onam festival,ஓணம் பண்டிகை,Onam,ஓணம்,சிறப்பு ரெயில் சேவை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/ctj0tb5h/Untitled-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/ctj0tb5h/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>ஓணம் பண்டிகையையொட்டி, மங்களூரு - கொல்லம் இடையே நாளை (செவ்வாய்கிழமை) சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. </p><p>இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><h2>மங்களூரு - கொல்லம்</h2><p>மங்களூரு ஜங்ஷனில் இருந்து நாளை (செவ்வாய்கிழமை) காலை 8 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06052) மாலை 6.45 மணிக்கு கொல்லத்தை சென்றடைகிறது.</p><h2>கொல்லம் - மங்களூரு</h2><p>மறுமார்க்கத்தில், <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கொல்லத்தில </a>இருந்து நாளை இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06051) மறுநாள் காலை 9.30 மணிக்கு மங்களூரு ஜங்ஷனை சென்றடையும்.</p><p>20 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு இன்று (24-ந் தேதி) பகல் 12 மணிக்கு தொடங்கிவிட்டது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சில உறுப்பினர்கள் பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-do-not-wish-to-mention-the-names-of-certain-members-speaker-jcd-prabhakar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-do-not-wish-to-mention-the-names-of-certain-members-speaker-jcd-prabhakar#comments</comments><guid isPermaLink="false">cf931074-73a0-4dd9-b35a-98ccfdcbaa6b</guid><pubDate>Mon, 24 Aug 2026 07:18:37 +0000</pubDate><atom:updated>2026-08-24T07:18:37.846Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,TN Assembly,ஜே.சி.டி.பிரபாகர்,JCD Prabhakar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/5n3lrgto/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/5n3lrgto/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கூறியதாவது:-</p><p>பேரவைக்கு ஒரு அறிவிப்பை வெளியிட நான் விரும்புகிறேன். சட்டப்பேரவை விதி எண் 55, 56 போன்ற அறிவிப்புகள் பேரவையின் செயலாளர் அல்லது சபாநாயகர் அனுமதித்து பிறகு விவாதிக்கலாம். ஆனால், சில உறுப்பினர்கள் பெயரை இங்கு நான் குறிப்பிட விரும்பவில்லை. அறிவிப்புகளை எழுதி உடனடியாக யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களுக்குக் கொடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.</p><p>பேரவை உறுப்பினர்கள் தங்களது தனிப்பட்ட பெயரில் உள்ள சமூக வலைத்தளத்தில் அவற்றை வெளியிடுகிறார்கள். பேரவைத் தலைவரை அனுமதிக்கப்படும் வரை அவற்றை வெளியிடுவது விதிகளுக்கு முரணானது. அது குறித்து பேரவை விதி எண் 36 உள்பிரிவு 5 தெளிவாகக் குறிப்பிடுகிறது. அதன்படி, சபாநாயகர் அனுமதித்து உறுப்பினர்களுக்கு அனுப்பாத வரை அதனை உறுப்பினரோ, வேறு யாரும் வெளியிடக்கூடாது.</p><p>எனவே இன்று முதல் தொலைக்காட்சி, ஊடகங்கள் உள்பட அனைத்துக்கும் சேர்த்தே சொல்கிறேன், அவ்வாறு இதில் பேரவை உறுப்பினர்கள் யாராவது இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டால் பிரசுரிக்கவும் கூடாது, வெளியிடவும் கூடாது. எனவே அனைவரும் பேரவை விதிக்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பெண் அரசியல்வாதிகளை விமர்சிக்கலாம்... ஆனால் தனிப்பட்ட தாக்குதல் கூடாது: தமிழிசை சவுந்தரராஜன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/women-politicians-can-be-criticized-but-personal-attacks-should-not-be-made-tamilisai-soundararajan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/women-politicians-can-be-criticized-but-personal-attacks-should-not-be-made-tamilisai-soundararajan#comments</comments><guid isPermaLink="false">dff286b6-2f87-4e15-8c5b-975887278b9d</guid><pubDate>Mon, 24 Aug 2026 07:02:08 +0000</pubDate><atom:updated>2026-08-24T07:02:08.751Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழிசை சவுந்தரராஜன்,Tamilisai Soundararajan,பெண்,Woman,Politicians,அரசியல்வாதிகள்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/dla1finq/tamizhisai.gif" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழிசை சவுந்தரராஜன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/dla1finq/tamizhisai.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக முன்னாள் பாஜக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/tamilisai-soundararajan">தமிழிசை சவுந்தரராஜன் </a>தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>ஒரு இளம் பெண் அமைச்சரை இழிவுபடுத்தும் வகையிலும், தனிப்பட்ட முறையிலும் குறிவைத்து நடத்தப்படும் ட்ரோல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அரசியல் வேறுபாடுகளும், கொள்கை முரண்பாடுகளும் ஒரு பெண்ணின் தனிப்பட்ட கண்ணியத்தை காயப்படுத்துவதற்கான காரணமாக ஒருபோதும் மாறக்கூடாது.</p><h2>தனிப்பட்ட தாக்குதல்</h2><p>தன்னைப் பற்றிய தனிப்பட்ட தாக்குதல்களுக்கு பதில் சொல்லவும், தன்னை தற்காத்துக் கொள்ளவும் ஒரு பெண் அமைச்சர் தனது பொன்னான நேரத்தை செலவிட வேண்டிய நிலை மிகவும் வேதனையானது. இத்தகைய ட்ரோல்கள் ஒரு பெண்ணின் மன அமைதியையும், தன்னம்பிக்கையையும், கவனத்தையும் பாதிக்கலாம். அவர் தனது பொறுப்பில் கவனம் செலுத்தி மக்களுக்காக பணியாற்ற வேண்டிய நேரத்தையும் சக்தியையும் இவை பறித்துவிடுகின்றன. அதே நேரத்தில், நான் ஒன்றை மிகத் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன்.</p><h2>ட்ரோல்கள்</h2><p>நான் ஒரு அசைக்க முடியாத பாஜக பெண் தலைவர். என் கொள்கையிலும், என் கட்சியிலும் நான் உறுதியாக நிற்கிறேன். இந்த விஷயத்தில் ஒரு பெண்ணின் கண்ணியத்திற்காக நான் குரல் கொடுத்தால், உடனே என்னை “ஏ டீம்”, “பி டீம்” என்று கூறி ட்ரோல் செய்ய வேண்டாம். நானும் இத்தகைய ட்ரோல்களை எதிர்கொண்டிருக்கிறேன். அந்த வார்த்தைகள் ஒரு பெண்ணின் மனதை எவ்வளவு பாதிக்கக்கூடும் என்பதை நான் அனுபவித்திருக்கிறேன். ஆனால் அவற்றால் நான் அசைந்து போகவில்லை. இன்னும் உறுதியுடன், இன்னும் நம்பிக்கையுடன் நிற்கிறேன்.</p><h2>மனிதநேயத்தின் அடையாளம்</h2><p>ஒரு பெண்ணின் கண்ணியத்திற்காக குரல் கொடுப்பது எந்த “டீம்”-ஐச் சேர்ந்தது என்பதல்ல. அது மனிதநேயத்தின் அடையாளம். ஒரு பெண் அரசியல்வாதியை எதிர்க்க விரும்பினால் அரசியல் ரீதியாக எதிர்கொள்ளுங்கள். அவரது கொள்கைகளை கேள்வி கேளுங்கள். அவரது செயல்பாடுகளை விமர்சியுங்கள். அவரது கருத்துகளுக்கு உண்மையான தரவுகளாலும், வலுவான வாதங்களாலும் பதிலளியுங்கள். அரசியலை அரசியலால் எதிர்கொள்ளுங்கள். கருத்தை கருத்தால் எதிர்கொள்ளுங்கள். உண்மைக்கு உண்மையால் பதிலளியுங்கள். ஆனால் ஒரு பெண்ணின் கண்ணியத்தை மட்டும் காயப்படுத்தாதீர்கள். </p><p>ட்ரோல்கள் எத்தனை வந்தாலும், நாங்கள் பெண்கள் அசைந்து போக மாட்டோம். அஞ்ச மாட்டோம். அமைதியாக பின்வாங்க மாட்டோம். உறுதியுடன் நிற்போம். மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம், என்ற உறுதிப்பாட்டை பெண் தலைவர்கள் பெற வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உடனடித் தேவை ‘கார்&apos; அல்ல - டாக்டர் கிருஷ்ணசாமி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mlas-immediate-need-is-not-a-car-krishnasamy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mlas-immediate-need-is-not-a-car-krishnasamy#comments</comments><guid isPermaLink="false">6e90d548-dba2-4010-aaa6-214f01efdf1e</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:50:31 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:50:31.985Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Car,கார்,டாக்டர் கிருஷ்ணசாமி,புதிய தமிழகம்,Office,கிராம நிர்வாக அலுவலகம்,சட்டமன்ற உறுப்பினர்,Krishnasamy</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/lruvd62q/Krishnasamy.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கிருஷ்ணசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/lruvd62q/Krishnasamy.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உடனடித் தேவை 'கார்' அல்ல, காரியாலயம் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>கார் வழங்கும் திட்டம்</h2><p>சில சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் முன்வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் கார் வழங்கும் திட்டம் ’110 விதியின் கீழ்’ சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இத்திட்டத்திற்கு கடும் கண்டனங்கள் எழுகின்றன. எதையும் ஆராயாமல் திட்டங்களை அறிவிக்கும்போது இவ்வாறே நிகழும்.</p><p>தொகுதி முழுக்க பயணம் செய்து மக்கள் குறைகளைக் கேட்க இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் வாகனம் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அந்த வசதி கூட இல்லாதவர்கள் எத்தனை பேர் என்பதே முக்கியம்.</p><h2>நிர்வாக அலுவலகம்</h2><p>தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் உள்ள பொழுது, இத்திட்டம் ஆடம்பரமானது அல்லது ஊதாரித்தனமானது என்றே விமர்சிக்கப்படுகிறது. ஆனால், 200 முதல் 300 கிராமங்கள் உள்ள தங்கள் தொகுதி மக்களின் தேவைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்க “ஒரு நிர்வாக அலுவலகம்” தேவை என்பதை ஏன் எந்த சட்டமன்ற உறுப்பினரும் வலியுறுத்தவில்லை எனத் தெரியவில்லை.</p><p>சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சராகிவிட்டால் அவர்களின் அதிகாரம் தமிழக அளவில் பரவுகிறது. ஆனால், சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற ஒவ்வொரு அலுவலகப் படிக்கட்டுகளிலும் ஏறி இறங்கும் நிலையே உள்ளது.</p><p>எனவே, <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">சட்டமன்ற உறுப்பினர்கள்</a> மதிப்பும் மரியாதையோடும் சுதந்திரமாகவும் தங்களது சட்டமன்றத் தொகுதிக்குள் கடமையாற்ற தேவைப்படுவது குறைந்தபட்சம் ஒரு தட்டச்சர், உதவி பி.டி.ஓ, துணை வட்டாட்சியர், ஒரு பொறியாளர் உள்ளடங்கிய தனிக் காரியாலயம் - நிர்வாக அலுவலகமே! - கார் அல்ல.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மக்கள் தவறு செய்துவிட்டனர்; திருமண நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேச்சு

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/people-have-made-a-mistake-mk-stalin-speech-at-wedding-event</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/people-have-made-a-mistake-mk-stalin-speech-at-wedding-event#comments</comments><guid isPermaLink="false">81f6fde2-267d-4a67-aac5-830606b569f0</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:36:52 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:36:52.739Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,M.K.Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/hkd2ahkj/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/hkd2ahkj/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை, </p><p>தமிழக சட்டசபை தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றிய தவெக கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மாநில முதல்-அமைச்சராக <a href="https://www.dailythanthi.com/">விஜய் </a>செயல்பட்டு வருகிறார்.</p><p>அதேவேளை, தேர்தலில் தோல்வியடைந்த திமுக 59 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் தோல்வியடைந்தார்.  </p><h2>மக்கள் தவறு செய்துவிட்டனர்</h2><p>இந்நிலையில், சென்னை திருவான்மையூரில் கட்சி நிர்வாகியின் இல்ல திருமண நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.</p><p>திருமண நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,</p><p>ஒருகாலத்தில் ஒரு குடும்பத்தின் படித்தவர்கள், பட்டதாரிகள் அத்திப்பூ பூத்தார் போல் இருப்பார்கள். ஆனால் தற்போது ஊருக்கு ஊர் கிராமத்திற்கு கிராமம் பட்டதாரிகள், டாக்டர்கள் இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் திராவிட இயக்கங்கள் தான். இந்த நிலைக்கு வருவதற்கு யார் காரணம் என்பதை இன்றைக்கு இருக்கும் இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், இன்றைய இளைஞர்களுக்கு அது புரியவுமில்லை, தெரியவுமில்லை.</p><p>ஒரு மாற்றம் தமிழ்நாட்டில் ஏற்பட்டு அது ஏமாற்றமாக மாறியுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் தவறு செய்துவிட்டனர். அது கோடிக்கணக்கான மக்களை துன்புறுத்திக்கொண்டிருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். மணமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்ட வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு எதிராக தவெக அரசு செயல்படுகிறதா? - முத்தரசன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-government-acting-against-communist-parties-mutharasan-questions</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-government-acting-against-communist-parties-mutharasan-questions#comments</comments><guid isPermaLink="false">f13cb568-a456-49c9-afca-371d705b7c00</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:28:40 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:28:40.464Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,Communist Party of India,முத்தரசன்,Mutharasan,கம்யூனிஸ்டு கட்சி,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/835kknho/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/835kknho/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>கும்பகோணம்,</p><p>தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>இந்திய கம்யூனிஸ்டு கட்சி. தொடங்கப்பட்டபோதே தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு 2 முறை தடை விதிக்கப்பட்டது. தற்போது 4-வது முறையும் தடை விதிக்கப்படுமோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தலைநகர் டெல்லியில் நடைபெறும் செப்டம்பர் 1 பேரணியில் பங்கேற்பதற்காக பதிவு செய்யப்பட்ட சிறப்பு ரெயில்களை ரத்து செய்துள்ளனர். பேரணியை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.</p><h2>முதல்-அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்</h2><p>தமிழகத்தில் கம்யூனிஸ்டு கட்சியினரை கணக்கெடுக்க வேண்டும் என தாசில்தார் சுற்றறிக்கை அனுப்ப உள்ளார். அதற்கான நகல்கள் மாவட்ட கலெக்டர், வருவாய் அலுவலர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு இடதுசாரி கட்சிகள் கண்டனம் தெரிவித்தவுடன் தாசில்தார் இடமாற்றப்படுகிறார்.</p><p>இதுதொடர்பாக சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த பின்பு வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட் டையன் போகிற போக்கில் அந்த சுற்றறிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது என்கிறார். தமிழகத்தில் 2 கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க. ஆட்சி நடக்கிறது. கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு எதிராக குறி வைத்து மோடி செயல்படுகிறார். அதேபோல தமிழகத்தில் த.வெ.க. ஆட்சியும் அவ்வாறு செயல்படுகிறதா? என்கிற கேள்விக்கு முதல்-அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்.</p><h2>மோசடி இருக்க கூடாது</h2><p>குறுவை தொகுப்பு மற்றும் பயிர்க்காப்பீட்டு தொகையை உட னடியாக வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி வருகிற 28-ந் தேதி டெல்டா மாவட்டங்களில் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி முற்றுகை போராட்டம் நடத்தும். தாய்மாமன் திட்டத்தில் தங்க மோதிரம் வழங்குவதற்கான அரசின் டெண்டரில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். தாய்மாமன் விஷயத்தில் மோசடி இருக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஈரோடு ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் தீவிரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/development-works-at-erode-railway-station-are-in-full-swing</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/development-works-at-erode-railway-station-are-in-full-swing#comments</comments><guid isPermaLink="false">75ca8a7c-6423-4a2d-9829-607192f4c0e5</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:28:18 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:28:18.880Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Development Works,Erode Railway Station,மேம்பாட்டு பணிகள்,ஈரோடு ரெயில் நிலையம்</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/229tq6lw/11.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/229tq6lw/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,  </p><p>ஈரோடு ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p><h2>ஈரோடு ரெயில் நிலையம்</h2><p>ஈரோடு ரெயில் நிலையம் வழியாக தினமும் 100-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. இங்கு 4 நடைமேடைகள் உள்ளன. சுரங்கப் பாதை வழியாக பயணிகள் சென்று நகரும் படிக்கட்டில் ஏறி நடைமேடைக்கு சென்று வருகின்றனர். இதனால் ரெயில் நிலையத்தின் முகப்பு பகுதியில் இருந்து அனைத்து நடைமேடைகளுக்கும் செல்லும் வகையில் நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர்.</p><p>இதற்கிடையில் மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ஈரோடு ரெயில் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.38 கோடியே 9 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஈரோடு ரெயில் நிலையத்தில் நடைமேம்பாலம், நிலைய விரிவாக்க பணி, நடைமேடை சீரமைக்கும் பணி, வாகனங்கள் நிறுத்தும் வசதி உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகள் தொடங்கப்பட்டது.</p><h2>பயணிகள் அச்சம்</h2><p>இதில் வாகன நிறுத்துமிடம் புதுப்பொலிவுடன் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. புதிதாக நுழைவாயில் வளைவும் அமைக்கப்பட்டு உள்ளன. நடைமேம்பாலம் அமைக்கும் பணி தற்போது 80 சதவீதம் வரை நிறைவு பெற்றுள்ளது. மேலும் நடைமேம்பாலத்தில் ஏறி செல்வதற்கு வசதியாக படிக்கட்டு, 'லிப்ட்' மற்றும் நகரும் படிக்கட்டு போன்றவை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதற்கான எந்திரங்கள் ரெயில் நிலைய வளாக பகுதியில் வைக்கப்பட்டுள்ளன.</p><p>இதற்கிடையில் ரெயில் நிலையத்தின் முன்புள்ள பழைய கட்டிடம் இடிக்கும் பணியும் தற்போது வேகமாக நடந்து வருகிறது. பாதுகாப்பாக இந்த பணிகள் நடைபெற்றாலும், ரெயில் நிலையத்துக்குள் செல்லும் பயணிகள் ஒருவித அச்சத்துடன் உள்ளே சென்று வருகின்றனர். பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு புதிதாக காத்திருப்போர் அறை, டிக்கெட் கவுன்டர், அதிகாரிகள் அலுவலகங்கள் போன்றவை கட்டப்பட உள்ளதாகவும், அனைத்து பணிகளும் 8 மாதங்களில் முடிக்கப்படும் என்றும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>“6 சிலிண்டர் வாக்குறுதி... 3 ஆக குறைப்பா?” - தவெக அரசை விமர்சித்த டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-6-cylinder-promise-will-it-be-reduced-to-3-ttv-dhinakaran-criticizes-the-tvk-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-6-cylinder-promise-will-it-be-reduced-to-3-ttv-dhinakaran-criticizes-the-tvk-government#comments</comments><guid isPermaLink="false">2c5f3e5e-240a-42f3-90ae-c5f3757057cb</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:23:17 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:23:17.582Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,TTV Dhinakaran,டிடிவி தினகரன்,cylinder,சிலிண்டர்,வாக்குறுதி,promise</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/zpu71r9y/ttv-dhinakaran.gif" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/zpu71r9y/ttv-dhinakaran.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அன்னப்பூரணி சூப்பர் 6 திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஆண்டிற்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இது குறித்துஅமமுக பொதுச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/ttv-dhinakaran">டிடிவி தினகரன்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம்</h2><p>தவெகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட ஆறு சிலிண்டர்கள் மூன்றாக குறைப்பா? முதல்-அமைச்சர் மூன்று சிலிண்டர்கள் அறிவித்துள்ள நிலையில், மீதமுள்ள மூன்று கேள்விக்குறிதானா?</p><p>அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம் எனும் தலைப்பில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு ஆறு கேஸ் சிலிண்டர்கள் கட்டணமின்றி வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி கொடுத்த தவெக, ஆட்சிக்கு வந்தபின்பு முதற்கட்டம் எனக்கூறி லாவகமாக மக்களை ஏமாற்ற முனைந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.</p><h2>ஆண்டு வருமானம் 2.5 லட்சம் என்ற கட்டுப்பாடு</h2><p>ஏற்கனவே, பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதியளித்துவிட்டு, விவசாயிகளின் போராட்டங்களின் வீரியத்திற்கு ஏற்ப படிப்படியாகத் தள்ளுபடித் தொகையை அதிகரித்துக் கொண்டிருக்கும் தவெக அரசு, தற்போது ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் வழங்கப்படும் என்ற வாக்குறுதியைப் பாதியாகக் குறைத்ததோடு, ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு மிகாமல் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்ற கட்டுப்பாட்டை விதித்திருப்பதும், மீதி எப்போது கிடைக்கும் என்ற தகவலை அறிவிக்காததும் பொதுமக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>வாழைப்பழ காமெடி</h2><p>ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு, ஆட்சிக்கு வந்தபின்பு எந்தவொரு வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றாமல், அரைகுறையாக நிறைவேற்றுவதைப் பார்க்கும்போது, பிரபல வாழைப்பழ காமெடியைப் போல, மூன்று வந்துவிட்டது, மீதமுள்ள மூன்று எங்கே என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.</p><p>எனவே, தவெக கொடுத்த வாக்குறுதியின்படி ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்களை கட்டணமில்லாமல் வழங்கும் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்திட முன்வர வேண்டும் என முதல்-அமைச்சர் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் 10,000 ஏரிகளில் நீர் இல்லை: வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்! -  அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/10000-lakes-in-tamil-nadu-are-dry-state-must-be-declared-drought-hit-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/10000-lakes-in-tamil-nadu-are-dry-state-must-be-declared-drought-hit-anbumani#comments</comments><guid isPermaLink="false">fef13c7c-d319-4c3c-983c-bde9a403ff44</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:18:09 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:18:09.807Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK,அன்புமணி,Anbumani</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/rwdhgmmi/anbumani.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/rwdhgmmi/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>டெல்டாவில் 95% நீர்நிலைகள் வறண்டனதாகவும், தமிழ்நாட்டில் 10,000 ஏரிகளில் நீர் இல்லை எனவும் குறிப்பிட்டு தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>95 சதவீத நீர்நிலைகள் வறட்சி</h2><p>காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள கால்வாய்கள் மூலம் காவிரி நீரைப் பெறும் 737 நீர்நிலைகளில் 694 நீர்நிலைகள் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் வறண்டு கிடக்கின்றன. தமிழகம் முழுவதும் மொத்தமுள்ள 14,141 நீர்நிலைகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவற்றில் தண்ணீரே இல்லை. மிக மோசமான இச்சூழலில் இருந்து தமிழக விவசாயிகளை பாதுகாப்பதற்காக தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும்.</p><p>தமிழ்நாடு நீர்வளத்துறையின் புள்ளிவிவரங்கள்படி, தமிழகத்தில் நீர்வளத்துறையின் பராமரிப்பில் உள்ள மொத்தம் உள்ள 14,141 நீர்நிலைகளில், 4208 நீர்நிலைகள், அதாவது 29.25% நீர்நிலைகள் முற்றிலுமாக வறண்டு விட்டன. மேலும், 5,814 நீர்நிலைகளில் 1% முதல் 25% வரை மட்டுமே நீர் உள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் பயனளிக்கும் வகையில் தண்ணீர் இல்லை. இதில் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பவை காவிரி பாசன மாவட்டங்கள் தான். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் காவிரி, கல்லணைக் கால்வாய், வெண்ணாறு ஆகிய ஆறுகளில் இருந்து கால்வாய்கள் மூலம் தண்ணீர் பெறும் 737 நீர்நிலைகளில் 694 நீர்நிலைகள், அதாவது 95% தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன. இவை தவிர ஆறுகள் மூலம் தண்ணீர் பெறாத 27 தனித்த நீர்நிலைகளில் 26 நீர்நிலைகள் வறண்டு கிடக்கின்றன. ஒட்டுமொத்தமாக காவிரி பாசன மாவட்டங்களில் 764 நீர்நிலைகளில் 720 நீர்நிலைகளில் ஒரே ஒரு சொட்டு நீர் கூட இல்லை.</p><h2>பயிர்கள் நீரின்றி கருகி விட்டன</h2><p>காவிரி பாசன மாவட்டங்களில் நீர்வளத்துறையின் பராமரிப்பில் இருக்கும் நீர்நிலைகளின் மொத்தக் கொள்ளளவு 6.7 டி.எம்.சி ஆகும். அதில் வெறும் 0.17 டி.எம்.சி, அதாவது 2.62% அளவுக்கு மட்டுமே நீர் உள்ளது. தென்மேற்கு பருமழை பொய்தது, மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படாதது ஆகியவை தான் இந்த நிலைக்கு காரணமாகும். ஆனால், இதன் விளைவுகள் மிகக் கொடுமையானவை. காவிரி பாசன மாவட்டங்களின் பல பகுதிகளில் 100 அடி ஆழத்திற்குள்ளாக நிலத்தடி நீர் கிடைத்து வந்த நிலையில், இப்போது நிலத்தடி நீர்மட்டம் 200 அடிக்கும் கீழாக சென்று விட்டது. அதனால், நிலத்தடி நீரை நம்பி குறுவை சாகுபடி செய்ய முடியவில்லை; அதுமட்டுமின்றி, போர்வெல் எனப்படும் ஆழ்துளை கிணறுகளை மேலும் ஆழப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர். இதற்கான ஒவ்வொரு விவசாயிக்கும் குறைந்தது ஒரு லட்சம் முதல் பல லட்சம் ரூபாய் வரை செலவாவதாக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">உழவர்கள் </a>கவலை தெரிவிக்கின்றனர்.</p><p>காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த ஆண்டு 6.31 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. ஆனால், நடப்பாண்டில் அது சுமார் 2 லட்சம் ஏக்கர் என்ற நிலையில் குறுகி விட்டது. அவற்றிலும் பல்லாயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த குறுவைப் பயிர்கள் நீரின்றி கருகி விட்டன. சம்பா பருவத்திலும் இதே நிலை தான் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சம்பா சாகுபடிக்காக விதைக்கும் பணிகள் ஆகஸ்ட் மத்தியில் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், நெல் விதைப்புக்கான அறிகுறிகள் கூட இன்று வரை தென்படவில்லை.</p><h2>70 சதவீத விவசாயம் பாதிப்பு</h2><p>மேட்டூர் அணையிலிருந்து செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டால் தான் சம்பா சாகுபடியை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும். ஆனால், மேட்டூர் அணையில் சுமார் 85 அடி அளவுக்கு மட்டுமே தண்ணீர் இருக்கும் நிலையில், அதைக் கொண்டு அணையை திறப்பதோ, தொடர்ந்து தண்ணீர் விடுவதோ சாத்தியமல்ல. அணை திறக்கப்படுமா? என்பதைக் கணிக்கவே இன்னும் சில வாரங்கள் ஆகும் எனும் நிலையில் காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடியும் வினாக்குறியாகியுள்ளது.</p><p>கடந்த ஆண்டில் காவிரி பாசன மாவட்டங்களில் சுமார் 14 லட்சம் ஏக்கர் உள்பட தமிழ்நாடு முழுவதும் 26.25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. ஆனால், நடப்பாண்டில் காவிரி பாசன மாவட்டங்களில் இந்த அளவு 4 முதல் 5 லட்சம் ஏக்கர் என்ற அளவுக்கு குறைந்து விடும் என அஞ்சப்படுகிறது. இதனால், 16 முதல் 17 லட்சம் டன் நெல் உற்பத்தி குறையும். 60 முதல் 70% அளவுக்கு விவசாயம் பாதிக்கப்படுவதால் காவிரி பாசன மாவட்ட உழவர்கள் கடுமையான பொருளாதார இழப்புக்கு ஆளாவார்கள். அதுமட்டுமின்றி, வேளாண் கூலித் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி வருவாய் இழப்புக்கு ஆளாவார்கள்.</p><h2>வறட்சி பாதித்த மாநிலம்</h2><p>பருவமழை பொய்த்ததாலும், கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் இந்த அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், அதை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. இந்த பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான முதல் நடவடிக்கை தமிழ்நாட்டு வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிப்பது தான். அதன்படி <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழ்நாட்டை </a>வறட்சி பாதித்த மாநிலமாக தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.</p><p>அத்துடன் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்; குறுவை சாகுபடி செய்யாத விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 வீதமும், குறுவை சாகுபடி செய்து நீரின்றி பயிர்கள் வாடியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதமும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். சம்பா சாகுபடி செய்யமுடியாத நிலை உருவாகும் சூழலில் அதனால் பாதிக்கப்படும் உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.10000 உதவி வழங்க வேண்டும். நிலமில்லா தொழிலாளர்களுக்கு ஒருமுறை உதவியாக ரூ.25,000 வழங்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மதுக்கடையை ஆய்வு செய்த சி.வி.சண்முகம்; சாகும் வரை குடிப்போம் என முழங்கிய மதுப்பிரியர்களால் பரபரப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cv-shanmugam-inspected-the-liquor-store</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cv-shanmugam-inspected-the-liquor-store#comments</comments><guid isPermaLink="false">d8ae91c2-edc0-4fe7-a322-dca673a28a37</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:17:11 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:17:11.064Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சி.வி.சண்முகம்,மதுக்கடை,மதுபிரியர்கள்,CVShanmugam,Thindivanam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/lajqs5dq/sanmugam33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ சி.வி.சண்முகம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மதுக்கடையை ஆய்வு செய்த சி.வி.சண்முகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/lajqs5dq/sanmugam33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>விழுப்புரம்,</p><p> திண்டிவனம் அருகே மதுக்கடையை ஆய்வு செய்தார் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்.</p><p>விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே  நடுவனந்தல் புதூரில் ஆக.18-ஆம் தேதி புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு, அங்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மதுக்கடை திறப்புக்கு கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் ஆதரவும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து கடந்த சில நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அதே பகுதியைச் சேர்ந்த சிலர் டாஸ்மாக் கடையை மூடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>இந்நிலையில், மயிலம் தொகுதி எம்எல்ஏ சி.வி சண்முகம் நேற்று  நடுவனந்தல் கிராமத்துக்குச் சென்று, மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.</p><p>இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: -</p><p>கிராமங்கள் நிறைந்த நடுவனந்தல் பகுதியில் புதியதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப் பேரவையில் பேசியுள்ளேன். டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம சபைக் கூட்டத்திலும் தீர்மானம் நிறவேற்றப்பட்டுள்ளது.</p><p>எனவே, விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதியதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நடவடிக்கைக்காக 5 நாள்கள் காத்திருப்போம். தவறும் பட்சத்தில் போராட்டம் நடத்தப்படும் என்று <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">சி.வி.சண்முகம்</a>. கூறினார்.</p><p>இந்நிலையில், மதுக்கடை முன் திரண்ட அதே பகுதியைச் சேர்ந்த சிலர் டாஸ்மாக் கடையை மூடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து "சாகும் வரை குடிப்போம்" என சிலர் முழக்கமிட்டதால் பரப்பான சூழல் நிலவியது.  இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார் இரு தரப்பைச் சேர்ந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைத்தனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>நெல்லை: சொகுசு காரில் கஞ்சா விற்பனை - 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-ganja-sold-from-luxury-car-2-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-ganja-sold-from-luxury-car-2-arrested#comments</comments><guid isPermaLink="false">3b367fd8-43bc-41dc-9a6c-7219dd7c09e7</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:13:55 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:13:55.273Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Tirunelveli,Cannabis smuggling,சொகுசு கார்,luxury car,கஞ்சா கடத்திய 2 பேர் கைது</media:keywords><media:content height="410" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/fol4m29o/raja-2026.jpg" width="710"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ போலீஸ் அதிகாரி மற்றும் அவரது நண்பர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/fol4m29o/raja-2026.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை, </p><p>நெல்லை மாவட்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா கடத்தி விற்பனை செய்த வழக்கில் இரண்டாம் நிலை சிறைப் போலீஸ் அதிகாரி மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டனர்.</p><h2>கஞ்சா கடத்தல்</h2><p>நெல்லை மாவட்ட பகுதிகளில் சொகுசு காரைப் பயன்படுத்தி பெருமளவில்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"> போதைப்பொருட்கள்</a> விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நெல்லை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த சொகுசு காரை மறித்து சோதனை செய்தனர். சோதனையில் காரில் கஞ்சா கடத்தியது கண்டுப்பிடிக்கப்பட்டது . அதிலிருந்த 2 கிலோ கஞ்சா, 7 லட்சம் ரொக்க பணம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். உடனடியாக இருவரையும் கைது செய்து, விசாரணை மேற்கொண்டதில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் தூத்துக்குடியை சேர்ந்த இரண்டாம் நிலை சிறைப் போலீஸ் அதிகாரி தமிழரசன் மற்றொருவர் அவரது நண்பர் என்பது தெரிய வந்தது.</p><h2>வழக்குப்பதிவு</h2><p>சட்டவிரோதமாகக் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்த குற்றத்திற்காக சிறைப் போலீஸ் அதிகாரி தமிழரசன் மற்றும் அவரது நண்பர் மீது 1985 போதைப்பொருட்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் நெல்லை மாநகர <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a> வழக்குப் பதிவு செய்துள்ளனர். போலீசார் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டது பொது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>5 கோவில்களில் உண்டியல்களை உடைத்து திருட்டு: 3 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/3-arrested-for-stealing-money-by-breaking-bank-notes-in-5-temples</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/3-arrested-for-stealing-money-by-breaking-bank-notes-in-5-temples#comments</comments><guid isPermaLink="false">d10c8250-0968-4869-8d41-40bdf4453369</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:12:44 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:12:44.210Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrest,திருட்டு,கோவில்,Temple,உண்டியல்,ஆலங்குடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/ppxm0sph/160.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/ppxm0sph/160.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஆலங்குடி, </p><p>ஆலங்குடி அருகே 5 கோவில்களில் உண்டியலை உடைத்து  திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.</p><h2>மர்ம நபர்கள்</h2><p>ஆலங்குடி அருகே கல்லாலங்குடி முத்துமாரியம்மன் கோவில், கலிபுல்லா நகர் சித்தி விநாயகர் கோவில், ஆண்டிகுளம் மங்கள விநாயகர் கோவில் மற்றும் மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோவில், மழை மாரியம்மன் கோவில்களில் கடந்த ஒரு வாரத்திற்குள் உண்டியல்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.</p><h2>தீவிர விசாரணை</h2><p>இதுகுறித்து கோவில் நிர்வாகிகள், கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பூசாரிகள் ஆலங்குடி மற்றும் கீரமங்கலம் போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தனர். இதையடுத்து ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">விசாரணை</a> நடத்தி வந்தனர்.</p><p>விசாரணையில், கோவில்களில் உண்டியல்களை உடைத்து பணத்தை திருடியது மணமேல்குடி தாலுகா வேதியன்குடியை சேர்ந்த ஆனந்தன் மகன் காளிதாஸ் (வயது 24), தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் கலச்சங்காட்டை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் நாகராஜ் (28), அறந்தாங்கி தாலுகா திருநாளூர் வடக்கை சேர்ந்த கண்ணையா மகன் விஜய் (32) ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது. </p><h2>கைது</h2><p>இதையடுத்து தனிப்படை போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரையும் ஆலங்குடி, கீரமங்கலம் போலீசார் அறந்தாங்கி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>விசிக பிரமுகரை கொன்று உடல் கிணற்றில் வீச்சு: கள்ளக்காதலனுடன் மனைவி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vck-functionary-murdered-and-body-dumped-in-well-wife-and-her-lover-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vck-functionary-murdered-and-body-dumped-in-well-wife-and-her-lover-arrested#comments</comments><guid isPermaLink="false">56691f0d-3045-435c-88f4-08015389dafe</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:01:08 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:01:08.361Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,Cuddalore,கடலூர்,கள்ளக்காதல்,கிரைம் செய்திகள்,fake love,wife,மனைவி,விசிக</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/822r501b/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/822r501b/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>கடலூர்,</p><h2>காதல் திருமணம்</h2><p>கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள ஒரங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி மகன் இளையராஜா (வயது 39). விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒரங்கூர் முகாம் செயலாளராக இருந்து வந்தார். இவரும், பட்டாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த அஸ்வினிதா(30) என்ப வரும் காதலித்து கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு விஷ்ணு(10), மிதுன்(8) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.</p><p>இந்நிலையில் கடந்த 12-ந்தேதி ஒரங்கூர் கிராமத்தில் உள்ள பெரியசாமி என்பவரது விவசாய கிணற்றில் இளையராஜா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்த புகாரின் பேரில் சிறுபாக்கம் போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.</p><h2>மனைவி மீது சந்தேகம்</h2><p>ஆனால் அஸ்வினிதாவின் நடவடிக்கையும், பேச்சும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அஸ்வினிதாவின் செல்போன் எண்ணை பெற்றுக்கொண்டு போலீசார் ரகசியமாக ஆராய்ந்தனர். அதேபோல் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் பார்வையிட்டனர்.</p><p>அஸ்வினிதாவும், இளையராஜாவின் சித்தி மகனான பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள இனாம் அகரம் கிராமத்தை சேர்ந்த கனகராஜ் மகன் வெங்கடேசன்(32) என்பவரும் தினமும் செல்போனில் மணிக்கணக்கில் பேசியது தெரிந்தது. இதையடுத்து அஸ்வினிதா, வெங்கடேசன் ஆகிய 2 பேரையும் போலீசார் தங்களது விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். முதலில் இருவரும் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர்.</p><h2>கள்ளக்காதல்</h2><p>போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-</p><p>அண்ணன் என்ற முறையில் இளையராஜாவின் வீட்டுக்கு வெங்கடேசன் அடிக்கடி வந்துள்ளார். அப்போது அவருக்கும், அஸ்வினிதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் தங்களது செல்போன் எண்ணை பரிமாறி மணிக்க ணக்கில் பேசி வந்தனர். இதுவே நாளடைவில் கள்ளக்காத லாக மாறியது. இந்த விவகாரம் தெரிந்ததும் இளையராஜா அதிர்ச்சி அடைந்தார். மேலும் மனைவியையும், தம்பியையும் கண்டித்துள்ளார். ஆனாலும் இருவரும் கள்ளத்தொடர்பை கைவிடவில்லை.</p><h2>அடித்துக் கொலை</h2><p>இந்தநிலையில் கடந்த 11-ந்தேதி இளையராஜா, வெங்கடேசனை செல்போனில் தொடர்பு கொண்டு மது குடிக்க அழைத்துள்ளார். இதையடுத்து அவர், தனது நண்பரான அதே ஊரை சேர்ந்த செல்லையா மகன் செல்வம் (23) என்பவருடன் காரில் கீழ்கல்பூண்டிக்கு வந்துள்ளார். அங்குள்ள டாஸ்மாக் கடையில் 3 பேரும் மதுபாட்டில்கள் வாங்கிக்கொண்டு ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றனர்.</p><p>அங்குள்ள ஒரு மரத்தடியில் அமர்ந்து 3 பேரும் மதுகுடித்தனர். போதை தலைக்கு ஏறியதும் இளையராஜா, இனிமேல் தனது மனைவியுடன் பழகக்கூடாது என்று கூறி வெங்கடேசனை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன் சரமாரியாக அடித்து இளையரா ஜாவை கொலை செய்தார்.</p><h2>நாடகமாட திட்டம்</h2><p>பின்னர் கொலையை மறைக்க வெங்கடேசன் திட்டமிட்டார். அதன்படி இருவரும் சேர்ந்து உடலை காரில் தூக்கிப் போட்டு இனாம் அகரம் கிராமத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் இளையராஜா விபத்தில் இறந்ததுபோல் நாடகமாட திட்டமிட்டனர். எனவே மீண்டும் அவரது உடலை கீழ்கல்பூண்டியில் மது குடித்த இடத்துக்கு கொண்டு வந்தனர். அங்கு கிடந்த இளையராஜா ஓட்டி வந்த ஸ்கூட்டரை எடுத்தனர்.</p><p>அதை செல்வம் ஓட்டி வர, அவருக்கு முன்னால் வெங்கடேசன் காரில் இளையராஜாவின் உடலுடன் ஒரங்கூருக்கு சென்றார். அங்கு ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள பெரியசாமியின் கிணற்றில் இளையராஜாவின் உடலை வீசினர். பின்னர் ஸ்கூட்டரை கிணற்றின் மீது மோதி விழுந்து கிடப்பதுபோன்று செய்து விட்டு சென்று விட்டனர். மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரிந்தது.</p><h2>3 பேர் கைது</h2><p>இதையடுத்து சந்தேக மரண வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி வெங்கடேசன், செல்வம் ஆகியோரையும், கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அஸ்வினிதாவையும் கைது செய்தனர். விசிக பிரமுகரை அடித்துக் கொலை செய்து விட்டு உடலை கிணற்றில் வீசிய வழக்கில் மனைவி, கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆணாதிக்க அரசியலை கடந்து பெண்கள் வெற்றி பெற வேண்டும்! - கனிமொழி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/women-must-overcome-patriarchal-politics-and-win-kanimozhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/women-must-overcome-patriarchal-politics-and-win-kanimozhi#comments</comments><guid isPermaLink="false">2fa0877a-f6bc-41d5-a710-68db1317e783</guid><pubDate>Mon, 24 Aug 2026 05:53:48 +0000</pubDate><atom:updated>2026-08-24T05:53:48.764Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசியல்,politics,கனிமொழி,பெண்கள்,Kanimozhi Karunanidhi,A woman,Patriarchy,ஆணாதிக்கம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/ypw78vfs/kanimozhi.gif" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/ypw78vfs/kanimozhi.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திமுக துணைப்பொதுச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/kanimozhi">கனிமொழி</a> கருணாநிதி தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>காலம் காலமாக, கட்சி வேறுபாடின்றி பொதுவாழ்வில் இருக்கும் பெண்கள் மீது அநாகரிகமான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.</p><h2>ஆணாதிக்க அரசியல்</h2><p>ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் களத்தில் துணிச்சலுடன் செயலாற்றும் பெண்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல், அவர்களின் உடை, தோற்றம், தனிப்பட்ட வாழ்க்கை போன்றவற்றை வைத்து விமர்சிப்பது மலினமான அரசியலின் வெளிப்பாடாகும். இத்தகைய தாக்குதல்களில் ஈடுபடுபவர்களின் பிற்போக்குத்தனமான மனநிலையே இதன் மூலம் வெளிப்படுகிறது. பெண்கள் இதையெல்லாம் கடந்தே வெற்றி பெற வேண்டும்.</p><p>இவ்வாறு அதில்  தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பிரதமர் வேட்பாளர் ராகுலா?, விஜய்யா?: காங்கிரஸ் - த.வெ.க. கூட்டணியில் வெடித்தது மோதல்! 

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/congress-tvk-pm-candidate-row-rahul-or-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/congress-tvk-pm-candidate-row-rahul-or-vijay#comments</comments><guid isPermaLink="false">adb8fc24-1fc3-4232-aa43-619d0ab6b5fd</guid><pubDate>Mon, 24 Aug 2026 05:40:12 +0000</pubDate><atom:updated>2026-08-24T05:40:12.264Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,Vijay,விஜய்,காங்கிரஸ்,Congress,ராகுல் காந்தி,Rahul Gandhi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/73czh01m/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/73czh01m/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தியா?, விஜய்யா? என்ற விஷயத்தில் காங்கிரஸ் - த.வெ.க. கூட்டணியில் <a href="https://www.dailythanthi.com/">மோதல் </a>வெடித்துள்ளது. </p>   <h2>கூட்டணி ஆட்சி அமைத்துள்ள த.வெ.க.</h2> <p>தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க.வுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தேவை 118 ஆக இருக்க, அக்கட்சிக்கு 107 இடங்களே கிடைத்தன. இதனால், காங்கிரஸ் (5), விடுதலை சிறுத்தைகள் கட்சி (2), இந்திய கம்யூனிஸ்டு கட்சி (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க. கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.</p><p>தமிழகத்தில் 'மைனாரிட்டி' அரசாக த.வெ.க. இருந்து வரும் நிலையில், ஆட்சிக்கு எப்போதும் ஆபத்து வரலாம் என்ற நிலையே தொடர்கிறது. குறிப்பாக, அமைச்சரவையில் பங்குபெறாத இரு கம்யூனிஸ்டு கட்சிகளால், எப்போது வேண்டுமானாலும் த.வெ.க. அரசு ஆட்டம் காணலாம் என்ற நிலையே இருக்கிறது.</p> <h2>ரசிகர் மன்ற மனநிலை</h2><p>சூழ்நிலை இவ்வாறு இருக்க, த.வெ.க. <a href="https://www.dailythanthi.com/">அமைச்சர்கள் </a>ஆதவ் அர்ஜூனா, ஜெகதீஸ்வரி, ஸ்ரீநாத் உள்ளிட்டோர், நாட்டின் அடுத்த பிரதமர் விஜய் என்ற அளவில் பேசிவருகின்றனர். இது கூட்டணியில் உள்ள தேசிய கட்சியான காங்கிரஸ் நிர்வாகிகளை கொதிப்படைய செய்துள்ளது.</p><p>இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி., "பிரதமர் வேட்பாளர் தொடர்பாக த.வெ.க.வினர் வெளியிடும் கருத்துகள் ரசிகர் மன்ற மனநிலையிலேயே உள்ளது. 'இந்தியா' கூட்டணியில் தற்போது 23 கட்சிகள் உள்ளன. த.வெ.க.வுக்கு எம்.பி.க்கள் இல்லை. எனவே, அவர்களுக்கு எம்.பி.க்கள் கிடைத்ததும் 'இந்தியா' கூட்டணியில் இணைக்கப்படுவர். த.வெ.க.வுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கவில்லை என்றால், மத்திய மந்திரி அமித்ஷா கதையை முடித்திருப்பார். எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராகி இருப்பார்" என்று கூறியிருக்கிறார்.</p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/wntehtvi/1.jpg" /></figure><h2>கூட்டணியில் மோதல்</h2><p>இதன் மூலம் காங்கிரஸ் - த.வெ.க. கூட்டணியில் மோதல் போக்கு ஆரம்பித்துவிட்டது என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 ஆண்டுகள் இருக்கின்றன. தற்போதைய நிலையில் த.வெ.க.வுக்கு ஒரு எம்.பி. கூட கிடையாது. நிலைமை இவ்வாறு இருக்க, இப்போதே ஏன் பிரதமர் வேட்பாளர் குறித்த பேச்சு தேவையா? என்ற கேள்வி எழுகிறது.</p><p>அரசியலில் தற்போதைய நிலையில் த.வெ.க. ஒரு குழந்தை. 2½ வயதுதான் ஆகிறது. தமிழகத்தில் ஆட்சிக்கு வந்து 100 நாட்களை இப்போதுதான் கடந்திருக்கிறது. இன்னும் பயணிக்க வேண்டியது வெகுதூரம் உள்ளது. தமிழகத்திலேயே இன்னும் சரியாக கால் ஊன்றவில்லை. அப்படி இருக்கும்போது, தேசிய அரசியலை இப்போதே த.வெ.க. முன்னெடுப்பது தேவையில்லாதது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.</p> <h2>3-வது முறை பிரதமராக நரேந்திரமோடி</h2><p>2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது, பா.ஜ.க.வுக்கு பிரதமர் வேட்பாளர் தேவையாக இருந்தது. அந்த நேரத்தில், குஜராத் மாநிலத்தை முன்னேற்றப் பாதைக்கு அழைத்து வந்த முதல்-மந்திரி நரேந்திரமோடியை நாடே அறிந்து இருந்ததால், அவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.</p><p>தேர்தலில் பா.ஜ.க.வும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தொடர்ந்து, 3-வது முறை பிரதமராக <a href="https://www.dailythanthi.com/">நரேந்திரமோடி </a>இருந்து வருகிறார். பா.ஜ.க.வுக்கு மாற்றாக இருந்து வரும் காங்கிரஸ் கட்சியில் ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளராக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளார்.</p>  <h2>தற்போதைக்கு தேவையில்லாதது</h2><p>காங்கிரஸ் தலைமையிலான 'இந்தியா' கூட்டணியில் 23 கட்சிகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இருந்து த.வெ.க.வும் அந்தக் கூட்டணியில் இணைந்தால், நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான தொகுதிகளில் போட்டியிட முடியும்.</p><p>நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் த.வெ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான 'இந்தியா' கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும். அவ்வாறு நடந்தால்தான், அந்தக் கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் குறித்த பேச்சுக்கே தேவை ஏற்படும். அதுவும், ராகுல்காந்தி ஏற்கனவே முன்னிறுத்தப்பட்டுள்ள நிலையில், விஜய்யை த.வெ.க. அமைச்சர்கள் முன்மொழிந்து வருவது தற்போதைக்கு தேவையில்லாதது.</p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/hmd7k8n1/0.jpg" /></figure><h2>கடந்து செல்ல வேண்டிய தூரம் அதிகம்</h2><p>தேசிய அரசியலை <a href="https://www.dailythanthi.com/">த.வெ.க.</a> இப்போதே முன்னெடுத்தால், இன்னும் கடந்து செல்ல வேண்டிய தூரம் அதிகம் உள்ளது. முதலில், தமிழகத்தில் வலுவாக கால் ஊன்ற வேண்டும். நல்லாட்சியை இங்கு கொடுத்தால் தான், த.வெ.க. புகழ் நாடு முழுவதும் பரவும்.</p><p>அடுத்தக்கட்டமாக, த.வெ.க.வை அண்டை மாநிலங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும். கேரளம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களில் விஜய்க்கு ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன. இந்த மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி, அதில் வெற்றி பெற்றால்தான், த.வெ.க.வால் அங்கு கால் ஊன்ற முடியும். இவை எல்லாம் ஒரே நாளில் நடந்துவிடாது.</p> <h2>பின்னடைவை ஏற்படுத்தும்</h2><p>எனவே, முதலில் தமிழ்நாட்டில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் த.வெ.க. கவனம் செலுத்தி, மொத்தம் உள்ள 7 இடங்களில் வெற்றி பெற்றாகவேண்டும். அவ்வாறு வெற்றி பெற்றாலும், பெரும்பான்மைக்கு 4 தொகுதிகள் குறைவாகத்தான் இருக்கும்.</p><p>எனவே, தேவையில்லாமல் இப்போது தேசிய அரசியலை பேசி கூட்டணிக்குள் குதர்க்கத்தை ஏற்படுத்துவது த.வெ.க.வுக்குத்தான் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ஊழல் பெருச்சாளிகள் நிரம்பிய கூடாரமாக மாறி வருகிறதா தவெக? - விசிக கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-tvk-turning-into-a-den-of-corrupt-giant-rats-vck-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-tvk-turning-into-a-den-of-corrupt-giant-rats-vck-asks#comments</comments><guid isPermaLink="false">3f1023be-d309-4dc7-991c-a239ccc59f2b</guid><pubDate>Mon, 24 Aug 2026 05:34:55 +0000</pubDate><atom:updated>2026-08-24T05:34:55.567Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,ஊழல்,விசிக</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/padt1yli/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/padt1yli/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் சா.ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><p>ஜென்சி எனப்படும் புதிய தலைமுறை நிரம்பிய ஒரு பேரியக்கம் என்று நம்பப்பட்ட முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஊழலை ஒழித்து தூயமையான ஆட்சி நிர்வாகத்தை கொடுப்பதுதான் தமது முதன்மையான நோக்கம் என்று கூறி வருகிறது. அதனை தமிழக மக்களும் பெரிதாக நம்பி வருகிறார்கள். ஆனால் தமிழக வெற்றிக் கழகத்தின் இன்றைய செயல்பாடுகள் அந்த நம்பிக்கையை தகர்க்கும் விதமாக அமைந்துள்ளது .</p><p>ஏற்கனவே ஊழலில் திளைத்து வழக்குகளை சந்தித்து வரும் முன்னாள் அமைச்சர்களையும், ஊழல் சக்தி என்று முதல்-அமைச்சர் விஜயால் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்ட கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ-க்களையும் தங்கள் கட்சியில் பெருமளவில் சேர்த்து வருவதும், அதனை அமைச்சர் செங்கோட்டையன் போன்றவர்கள் பெருமையாக பேசிவருவதும் தமிழக வெற்றிக் கழகம் ஊழல் பேர்வழிகள் நிரம்பிய கூடாரமாக மாறி வருகிறதோ என்ற அய்யத்தை மக்களுக்கு ஏற்படுத்தத் தொடங்கியிருக்கிறது.</p><p>அமைச்சர் செங்கோடையன் அதிமுகவைச் சேர்ந்த இன்னும் 10 பேர் விரைவில் தவெகவில் இணைய உள்ளனர், அந்த எண்ணிக்கை 25-ஐ தாண்டும் என்று சொல்லியிருப்பது இதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது. எத்தகைய மக்கள் சிந்தனையும் இல்லாமல் பதவியும், பணமும் மட்டுமே தங்களது குறிக்கோள் என்று செயல்பட்டுவரும் ஊழல் பெருச்சாளிகள் தவெகவில் இணைந்ததும் வாஷிங் மெஷினில் துவைக்கப்பட்டு தூய்மையானவர்களாக மாறிவிடுகிறார்களா? என்ற எதிக்கட்சிகளின் கேள்விக்கு வலு சேர்ப்பதாக உள்ளது.</p><p>அதே போன்று தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டும் உண்மையே என்ற எண்ணத்தையும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. ஆகவே, தமிழக வெற்றிக் கழகம் இத்தகைய நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். இவை தொடருமேயானால் தமிழக வெற்றிக் கழகம் மக்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும் என்பதில் ஐயமில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விருத்தாசலம்: வந்தே பாரத் ரெயில் மீது கல்வீச்சு - 2 சிறுவர்களிடம் விசாரணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vriddhachalam-stone-pelting-on-vande-bharat-train-2-boys-questioned</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vriddhachalam-stone-pelting-on-vande-bharat-train-2-boys-questioned#comments</comments><guid isPermaLink="false">0a8a962e-05be-4264-85aa-38950df8e02a</guid><pubDate>Mon, 24 Aug 2026 05:29:12 +0000</pubDate><atom:updated>2026-08-24T05:29:12.854Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>வந்தே பாரத் ரெயில்,Vande Bharat Express,கல்வீச்சு,Stone-pelting</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/3vg11tbc/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/3vg11tbc/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர், </p> <p>சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்தே பாரத் ரெயில் நேற்று புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் காலை 8.30 மணி அளவில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பூவனூர் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது மர்மநபர்கள் திடீரென வந்தே பாரத் ரெயில் மீது கல்வீசி தாக்கினர். இதில் ரெயிலின் 2 ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. இது குறித்து ரெயில்வே ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் மற்றும் விருத்தாசலம் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தினர். </p><p>தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் ரெயிலில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் ரெயிலில் கல்வீசி கண்ணாடியை உடைத்தது 2 சிறுவர்கள் என் பது தெரிந்தது. இதையடுத்து அவர்களை பிடித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>ஆவின் பால் கொள்முதல்: சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aavin-milk-procurement-calling-attention-motion-in-the-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aavin-milk-procurement-calling-attention-motion-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">0ffa8373-28a6-4ece-9997-6e431e9e2158</guid><pubDate>Mon, 24 Aug 2026 05:15:34 +0000</pubDate><atom:updated>2026-08-24T05:15:34.353Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,TN Assembly,Aavin Milk,Milk procurement,பால் கொள்முதல்,ஆவின் பால்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/vjh7ua8h/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/vjh7ua8h/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஆவின் பால் கொள்முதல் விலை தொடர்பாக சட்டசபையில் முக்கிய கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. </p><h2>இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-</h2><p>ஆவினுக்கு பால் வழங்குவது ஒரு கேள்விக்குறியாக மாறியுள்ளது. தீவனங்கள் விலை உயர்வால் பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை கட்டுப்படியாகவில்லை. கேரளத்தில் ஒரு லிட்டர் ரூ.45க்கு பாலை கொள்முதல் செய்கின்றனர். அதைபோல தமிழகத்திலும் பால் கொள்முதல் விலையை ரூ.45 ஆக உயர்த்த வேண்டும் என்று அவர் கூறினார்.</p><p><strong>தொடர்ந்து முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில்,</strong> கால்நடைகளின் தீவனங்கள் விலையும் பராமரிப்பு செலவும் அதிகரித்துள்ளது; அரசு அறிவித்த விலை போதாது என தமிழ்நாடு முழுவதும் பால் முகவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். அரசு அறிவித்துள்ள பால் கொள்முதல் விலை கூடுதலாக உயர்த்தப்பட வேண்டும் என தமிழ்நாடு முழுவதும் பால் முகவர்கள், பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்துகின்றனர். 1 லிட்டர் பசும்பால் ரூ.50, எருமை பால் ரூ.60 என கொள்முதல் விலை கொடுக்க வேண்டும் என்றார்.</p><p><strong>இதற்கு பதில் அளித்த பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி,</strong> “பால் கொள்முதல் விலை உயர்த்தி வழங்குவது மிக முக்கியமானது என்பதில் மாற்றுக்கருத்துகள் இல்லை. திமுக அரசால் 2021-ம் ஆண்டு ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டதால் ஆவின் நிறுவனத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ. 270 கோடி கூடுதல் நஷ்டம் ஏற்பட்டது. விலை குறைப்பினால் ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்யவும், பால் கொள்முதல் மற்றும் விற்பனையை அதிகரிக்க எந்த முயற்சியும் எடுக்காமல் திமுக அரசு மெத்தன போக்கில் செயல்பட்டது; இதனால் ஆவின் நிறுவனம் கூடுதல் நிதிசுமையை எதிர்க்கொண்டு வருகிறது.</p><p>தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகளுக்கு பிறகே பால் கொள்முதல் விலையை உயர்த்தினார்கள்.. ஆனால் முதல்வர் விஜய் ஆட்சி பொறுப்பேற்று மூன்றே மாதத்தில் கொள்முதல் விலையை உயர்த்தியுள்ளார். அதைபோல பால் கொள்முதல் விலையை ரூ.44 ஆக உயர்த்த முதல்-அமைச்சருடன் ஆலோசித்து பரிசீலிக்கப்படும்” என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டால் தொழில் வளர்ச்சி பாதிக்கும்: தங்கம் தென்னரசு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/industrial-growth-would-be-affected-if-the-parandur-airport-project-were-abandoned-thangam-thennarasu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/industrial-growth-would-be-affected-if-the-parandur-airport-project-were-abandoned-thangam-thennarasu#comments</comments><guid isPermaLink="false">a2fb5304-bada-47d6-aa17-9fbe903e2c8d</guid><pubDate>Mon, 24 Aug 2026 05:14:12 +0000</pubDate><atom:updated>2026-08-24T05:14:12.790Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>தங்கம் தென்னரசு,Thangam thennarasu,பரந்தூர் விமான நிலையம்,Parandur Airport</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/enqg6881/10.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/enqg6881/10.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்படுவதாக முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தார். அப்போது திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கோஷங்களை எழுப்பினர். அத்துடன் இதுகுறித்து விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுத்ததாக கூறி திமுகவினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதன் பின்னர் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;</p><p>”பரந்தூர் விமான நிலையம் குறித்து 55 விதியிண் கீழ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்திருந்தோம். கவன ஈர்ப்பு தீர்மானம் இன்று ஏற்கபப்டும் என கூறி இருந்தனர். முதல்-அமைச்சர்110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்தால் பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து விவாதிக்க மறுத்துவிட்டனர். கவன ஈர்ப்பு தீர்மானத்தை சபாநாயகர் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவில்லை. </p><p>தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு சென்னையில் 2-வது விமான நிலையம் தேவை. பரந்தூர் விமான நிலையம் மிகவும் அவசியமானது. விமான நிலையம் தொழில் வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியமானது. சென்னையை சுற்றி மற்ற இடங்களில் விமான நிலையம் அமைவதில் சிக்கல்கள் உள்ளன. பல இடங்களில் ஆய்வு செய்த பின்னர்தான் பரந்தூரை விமான நிலையத்துக்காக தேர்வு செய்தோம். </p><p>ஸ்ரீபெரும்புதூரில் அதிகளவில் தொழிற்சாலைகள் அமைந்துள்ளதால் பரந்தூர் விமான நிலையம் கட்டாய தேவையாக உள்ளது. பரந்தூர் விமான நிலையத்தை நம்பியே எலக்ட்ரானிக் நிறுவனங்கள் ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் வந்தன. பரந்தூர் விமான நிலையம் கைவிடப்பட்டால் எத்தகைய பொருளாதாரா விளைவு ஏற்படும் என்பது குறித்து விவாதிக்க மறுத்துவிட்டனர். அரசியல் நோக்கம் தாண்டி செயல்படுவது அவசியம்.”</p><p>இவ்வாறு அவர் பேசினார். </p> ]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டின் கனிமவளத்தை அழிக்கத்தான் ஆட்சிக்கு வந்தீர்களா? - வேல்முருகன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/did-you-come-to-power-to-destroy-the-mineral-resources-of-tamil-nadu-velmurugan-question</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/did-you-come-to-power-to-destroy-the-mineral-resources-of-tamil-nadu-velmurugan-question#comments</comments><guid isPermaLink="false">f78ce880-9e38-43ef-b15d-78fb3a22da97</guid><pubDate>Mon, 24 Aug 2026 04:55:20 +0000</pubDate><atom:updated>2026-08-24T04:55:20.839Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,கேரளா,Velmurugan,வேல்முருகன்,Mineral resources,For Tamil Nadu,கனிமவளங்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/2ca5fnfn/159.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/2ca5fnfn/159.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கேரளாவில் மலைகள் இல்லையா? தமிழ்நாட்டின் கனிமவளத்தை அழிக்கத்தான் ஆட்சிக்கு வந்தீர்களா? என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.  </p><p>இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>கனிமப் பொருட்கள்</h2><p>கேரளாவின் கட்டுமானத் தேவைக்காக தமிழ்நாட்டிலிருந்து கல், ஜல்லி, எம்சாண்ட் உள்ளிட்ட கனிமப் பொருட்களை எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.</p><p>குறிப்பாக, மாமல்லபுரத்தில் நடைபெற்ற தென் மண்டல முதல்வர்கள் மாநாட்டின் போது, கேரள முதல்-மந்திரி சதீசன், தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கான கட்டுப்பாடுகளில் கேரளாவுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் இடம் கோரிக்கை வைத்துள்ளார். </p><p>அதற்கு, கேரளாவை இந்தக் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்குவது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலிக்கும் என்று முதல்-அமைச்சர் விஜய் உறுதியளித்துள்ளதாக கேரள முதல்-மந்திரி அலுவலகமே தெரிவித்துள்ளது. இது உண்மையா ?</p><h2>தமிழ்நாட்டின் இயற்கை</h2><p>இத்தகைய சூழலில், தமிழ்நாட்டிற்குள்ளேயே சாலை, பாலம், வீடமைப்பு, தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிப் பணிகளுக்கு கட்டுமான மூலப்பொருட்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நமது தேவையை முழுமையாக உறுதி செய்யாமல் பிற மாநிலங்களின் கட்டுமானத் தேவைக்காக தமிழ்நாட்டின் இயற்கைச் செல்வத்தை அனுப்புவது எந்த வகையிலும் தொலைநோக்கான நிர்வாகமாக இருக்க முடியாது. </p><p>அண்டை மாநிலங்களுடன் நல்லுறவு வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் நல்லுறவு என்ற பெயரில் தமிழ்நாட்டின் மலைகளை இழக்க முடியாது.</p><p>கேரளமாக இருந்தாலும், கர்நாடகமாக இருந்தாலும், ஆந்திரமாக இருந்தாலும், எந்த மாநிலத்தின் கட்டுமானத் தேவையை நிறைவேற்றுவதற்காகவும், தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறைகளின் வாழ்வுரிமையை அழிப்பதை ஏற்க முடியாது.</p><p>எனவே, கேரளாவுக்கு தனிப்பட்ட விலக்கு அளிப்பது குறித்த பரிசீலனையை, தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். தமிழ்நாட்டின் உள்நாட்டுத் தேவையை முதலில் முழுமையாகக் கணக்கில் கொண்டு, இயற்கை வளத்தின் இருப்பு, சுற்றுச்சூழல் தாக்கம், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வருங்காலத் தலைமுறைகளின் தேவைகளை உறுதி செய்த பின்னரே கனிமவளப் பயன்பாடு தொடர்பான எந்த முடிவும் எடுக்கப்பட வேண்டும்.</p><h2>வலியுறுத்தல்</h2><p>வெளிமாநிலங்களுக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">கனிமவளங்களை</a> எடுத்துச் செல்வதில் விதிவிலக்குகளுக்கு இடமளிக்காமல், சட்டவிரோதக் குவாரிகள், அதிகப்படியான அகழ்வுகள் மற்றும் கனிமவளக் கடத்தலை முற்றாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">கேரளாவில் மலைகள் இல்லையா? தமிழ்நாட்டின் கனிமவளத்தை அழிக்கத்தான் ஆட்சிக்கு வந்தீர்களா?<br><br>கேரளாவின் கட்டுமானத் தேவைக்காக தமிழ்நாட்டிலிருந்து கல், ஜல்லி, எம்சாண்ட் உள்ளிட்ட கனிமப் பொருட்களை எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து… <a href="https://t.co/8SnGpyynS9">pic.twitter.com/8SnGpyynS9</a></p>&mdash; Velmurugan.T (@VelmuruganTVK) <a href="https://x.com/VelmuruganTVK/status/2091735870361788619?ref_src=twsrc%5Etfw">August 24, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-members-walk-out-of-the-legislative-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-members-walk-out-of-the-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">980c3ed1-91ce-4189-8843-07d04b4591bf</guid><pubDate>Mon, 24 Aug 2026 04:47:21 +0000</pubDate><atom:updated>2026-08-24T04:47:21.018Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,சட்டசபை,Legislative Assembly</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/0irb9r5k/9.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/0irb9r5k/9.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்படுவதாக முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தார். அப்போது திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கோஷங்களை எழுப்பினர். அத்துடன், பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து திமுக பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி கொடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். </p><p>ஆனால் சபாநாயகர் திமுகவினருக்கு உடனடியாக பேச வாய்ப்பு மறுத்துவிட்டார். முதல்-அமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டதால், அதுகுறித்து பேச திமுகவினருக்கு அனுமதி அளிக்க முடியாது என தெரிவித்தார். அப்போது திமுகவினர் அனைவரும் எழுந்து நின்று கோஷமிட்டதால், அனைவரும் வெளியே சென்று கோஷமிடுங்கள் என சபாநாயகர் கூறினார். </p><p>இதையடுத்து திமுகவினர் உடனடியாக சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செந்தனர். மேலும், வெளியே செல்லும்போது 'அனுமதி கொடு, அனுமதி கொடு' என கோஷங்களை எழுப்பினர். </p>]]></content:encoded></item><item><title>கரூர்: சமூக நீதி விடுதியில் தரமற்ற உணவு வழங்குவதாக மாணவர்கள் புகார் - டிடிவி தினகரன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-students-complain-about-substandard-food-at-the-social-justice-hostel-ttv-dhinakaran-condemns-the-situation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-students-complain-about-substandard-food-at-the-social-justice-hostel-ttv-dhinakaran-condemns-the-situation#comments</comments><guid isPermaLink="false">1c77e55b-896d-43d7-b4a6-3bd905043cf6</guid><pubDate>Mon, 24 Aug 2026 04:34:27 +0000</pubDate><atom:updated>2026-08-24T04:34:27.990Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர்,TTV Dhinakaran,டிடிவி தினகரன்,Karur,AMMK,அமமுக</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/8qvgw5at/ttv.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/8qvgw5at/ttv.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கரூர்,</p><p>ஆட்சியை சமூகவலைதளத்தில் நடத்தாமல், கொஞ்சம் களத்தில் மக்களுக்கு பயன்படும் படி நடத்தவேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>தரமற்ற உணவு</h2><p>கரூர் மாவட்டம், காந்தி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு சமூகநீதி விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமற்ற நிலையிலும், மிகவும் மோசமான நிலையிலும் இருப்பதாக வெளியாகியிருக்கும் காணொளி தவெக அரசின் சமூக நீதி கொள்கையையும், அக்கறையையும் தோலுரித்து காட்டியுள்ளது.</p><p>பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய ஏழை, எளிய விளிம்பு நிலை குடும்பங்களைச் சார்ந்த மாணவர்கள் தங்கி கல்வி பயிலும் சமூகநீதி விடுதியில் தரமான மற்றும் சுகாதாரமான உணவைக் கூட வழங்க முடியாத தவெக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.</p><h2>வெற்று விளம்பரத்திற்காகவா?</h2><p>சென்னை சைதாப்பேட்டை எம்.சி.ராஜா சமூகநீதி விடுதியில் நேரடியாக திடீரென ஆய்வு செய்து மாணவர்களுக்கு தரமான உணவை வழங்க உத்தரவு பிறப்பித்த முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழகம் </a>முழுவதும் உள்ள சமூகநீதி விடுதிகளின் அவலநிலைகளை நேரடியாக ஆய்வு செய்வாரா? என்ற கேள்வி மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும், இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்வது முதல்-அமைச்சர் மற்றும் அதிகாரிகள் நடத்தும் ஆய்வுகளும், அவர்கள் அமைக்கும் கண்காணிப்புக் குழுக்களும் வெற்று விளம்பரத்திற்காகவா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.</p><p>எனவே, ஆட்சியை சமூகவலைதளத்தில் நடத்தாமல், கொஞ்சம் களத்தில் மக்களுக்கு பயன்படும் படி நடத்தவேண்டும் என தவெக அரசை வலியுறுத்துவதோடு, சமூகநீதி விடுதிகளில் மாணவர்களுக்கு தரமற்ற உணவு வழங்கும் விடுதி நிர்வாகத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, மாணவர்களுக்கு தரமான உணவு, பாதுகாப்பான தங்குமிடம், சுகாதாரமான சூழல் ஆகியவற்றை உறுதிபடுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என சமூகநீதித்துறையையும், தவெக அரசையும் வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆண்டுக்கு 3 சிலிண்டர், அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம்; முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு  </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/3-cylinders-free-per-year-chief-minister-vijay-announces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/3-cylinders-free-per-year-chief-minister-vijay-announces#comments</comments><guid isPermaLink="false">f087b6e2-99b9-4b1d-9f43-851ca10c60cb</guid><pubDate>Mon, 24 Aug 2026 04:28:06 +0000</pubDate><atom:updated>2026-08-24T04:28:06.869Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,சட்டசபை,TNAssembly,முதல்-அமைச்சர் விஜய்,TamilnaduAssembly2026,சிலிண்டர் இலவசம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/f2q30ykx/vijayone33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/f2q30ykx/vijayone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அன்னப்பூரணி சூப்பர் 6 திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஆண்டிற்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.</p><p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. 2 நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று நடைபெறும் சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரம் ஆகிய துறைகளின் மீதான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது. இந்தநிலையில், </p><p>சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ் முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், </p><h2>விலையில்லா சிலிண்டர்</h2><p>போர் சூழல் காரணமாக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88">சிலிண்டர் விலை</a> உயர்வு ஏற்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை முதல் அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் செயல்படுத்தப்படும். சிலிண்டர் வழங்கும் திட்டம் பொங்கல் பண்டிகை முதல் செயல்பாட்டுக்கு வரும். அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும்.   </p><p>வரும் பொங்கல் பண்டிகை முதல் இந்த திட்டம் அமலுக்கு வரும். இதற்காக ஆண்டுக்கு 4,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.  எரிவாயு சிலிண்டருக்கான விலை நேரடியாக பயனாளியின் கணக்கில் வரவு வைக்கப்படும்.  ஆண்டுக்கு 2.50 லட்சம் வரை வருமானம் பெறுவோரின் குடும்பத்தினருக்கு சிலிண்டருக்கு நிதி வழங்கப்படும்.</p><h2>பரந்தூர் விமான நிலையம்</h2><p>பரந்தூர் விமான நிலையம் அமைக்க கூடாது என போராடிய மக்களுடன் உறுதியாக நிற்கிறேன். நீண்ட நாட்களுக்கு மேலாக இந்த திட்டத்திற்கு எதிராக போராடிவரும் விவசாயிகளுக்கு எனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு, இந்த விவசாய நிலங்களை பாதுகாக்க இந்த மக்கள் போராடி வருகிறார்கள். விக்கிரவாண்டியில் அக்டோபர் 2024 நடந்த பொதுக் கூட்டத்திலேயே பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறேன். தொழில் வளர்ச்சி மற்றும் அதற்கான விமான நிலையங்களின் பங்கு பற்றி நான் நன்கு அறிவேன். அதற்கான என்னுடைய முழு ஆதரவும் உண்டு. ஆனால் பரந்தூரில் இந்த திட்டம் அமையக்கூடாது. </p><p>இந்த திட்டம் குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும், குறைவான விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் வகையிலும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையிலும் மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என தெரிவித்தேன். மக்கள் மத்தியிலே நான் அன்று அறிவித்ததை நிறைவேற்றும் பொருட்டு புதிய விமான நிலையம் அமைப்பது குறித்து உயர் அதிகாரிகளிடமும், துறை வல்லுனர்களிடமும் விரிவாக ஆலோசனை நடத்தினேன். ஏற்கனவே நான் உறுதி அளித்தவாறு பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்த அரசால் கைவிடப்படும். புதிய விமான நிலையம் அமைப்பதற்கு புதிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். </p><h2>வெற்றிப் பயணம்</h2><p>மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டம் 'வெற்றிப் பயணம்' என்ற பெயரில் காந்தியடிகள் பிறந்த நாளான அக்.2ம் தேதி முதல் விரிவாக்கம் செய்யப்படும். முதற்கட்டமாக மாநகரம், நகரப் பகுதிகளில் இயங்கும் Express, LSS, டீலக்ஸ் (Deluxe) அரசுப் பேருந்துகளிலும், மகளிர் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம். மாவட்டங்களுக்கிடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் (Mofussil) மற்றும் மலைப் பகுதிகளில், சாதாரணக் கட்டண பேருந்துகளிலும், மகளிர் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம். வருமான உச்சவரம்போ மற்றும் மேற்கொள்ளவிரும்பும் பயண எண்ணிக்கையிலோ கட்டுப்பாடுகள் இல்லை. திருநரும் (Transgender) கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>10 ஆண்டுகளுக்கு பிறகு வறண்ட ரேலியா அணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rallia-dam-runs-dry-after-10-years</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rallia-dam-runs-dry-after-10-years#comments</comments><guid isPermaLink="false">67b89d62-3843-435f-832c-8fedc2ea9850</guid><pubDate>Mon, 24 Aug 2026 04:09:23 +0000</pubDate><atom:updated>2026-08-24T04:09:23.213Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nilgiris,நீலகிரி,ரேலியா அணை,Rallia Dam</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/p3nbhjw8/8.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/p3nbhjw8/8.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>நீலகிரி மாவட்டம் குன்னூர் நகருக்கு குடிநீர் வழங்கும் ரேலியா அணை 10 ஆண்டுகளுக்கு பிறகு வறண்டு உள்ளது. அணை பகுதியில் தண்ணீரை உறிஞ்சும் யூக லிப்டஸ் மரங்கள் வெட்டி அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.</p><h2>ரேலியா அணை</h2><p>நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளது. இங்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். குன்னூர் நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக ரேலியா அணை உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் இந்த அணை அமைக்கப்பட்டது. தற்போது தென்மேற்கு பருவ மழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் ரேலியா அணையில் நீர் வரத்து குறைந்ததோடு,நீர்மட்டம் வேகமாக சரிய தொடங்கியது.</p><p>மழை பெய்யாததால், தற்போது அணை வறண்டு சேறும், சகதியுமாக காணப்படுகிறது. அணை பகுதியில் பாளம், பாளமாக வெடித்து இருக்கிறது. அணையின் முழு கொள்ளளவான 46.7 அடியில், 10 அடிக்கும் குறைவாக நீர்மட்டம் உள்ளது. இதனால் குன்னூர் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் எமரால்டு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குன்னூர் பகுதிக்கு குடிநீர் வழங்கப்படுவதால், 5 நாட்களுக்கு ஒரு முறை 30 வார்டுகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு ரேலியா அணை வறண்டு சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>வக்கீல்கள் தகுதித்தேர்வு: நீண்ட பயணத்தை தவிர்க்க கூடுதல் மையங்கள் அமைக்க வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/lawyers-qualifying-examination-urge-to-set-up-additional-centers-to-avoid-long-journeys</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/lawyers-qualifying-examination-urge-to-set-up-additional-centers-to-avoid-long-journeys#comments</comments><guid isPermaLink="false">6a925431-5d7b-468e-9ad3-a8d3d50b3a2a</guid><pubDate>Mon, 24 Aug 2026 03:54:11 +0000</pubDate><atom:updated>2026-08-24T03:54:11.875Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>lawyers,Additional,வக்கீல்கள்,தேர்வு மையம்,qualifying examination,கூடுதல்,தகுதித்தேர்வு,Examination Centers</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/q0br5imy/lawyer.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/q0br5imy/lawyer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டப்படிப்பை முடித்து பார் கவுன்சிலில் பதிவு செய்தவர்கள் வக்கீலாக பணியாற்றுவதற்காக இந்திய பார் கவுன்சில் அகில இந்திய வக்கீல்கள் தேர்வை அவ்வப்போது நடத்தி வருகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்தியாவில் உள்ள எந்தவொரு நீதிமன்றத்திலும் வக்கீலாக பணியாற்றும் தகுதியைப் பெறுகிறார்கள். </p><h2>தகுதித்தேர்வு</h2><p>வக்கீல்களுக்கான இந்த தகுதித்தேர்வு நவம்பர் 29-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு தொடங்கிய நிலையில் அக்டோபர் 27-ந் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி ஆகிய 3 நகரங்கள் மட்டுமே தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.</p><h2>நீண்ட தூர பயணம்</h2><p>இத்தேர்வில், அனைத்து மாவட்டங்களை சேர்ந்த இளம் <a href="https://www.dailythanthi.com/topic/lawyers-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">வக்கீல்கள்</a> பங்கேற்கும் நிலையில் தமிழகத்தில் 3 நகரங்களில் மட்டும் தேர்வு மையங்களை அமைத்திருப்பதன் மூலம் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் நீண்ட தூரம் பயணம் செய்து தேர்வு மையங்களுக்கு செல்ல வேண்டியது உள்ளது.</p><h2>கூடுதல் தேர்வு மையங்கள்</h2><p>எனவே, இந்தத் தேர்வை எழுதவிருக்கும் இளம் வக்கீல்களின் நலனைக் கருத்தில் கொண்டு மதுரை, சேலம், நெல்லை, தஞ்சாவூர் மற்றும் வேலூர் போன்ற முக்கிய நகரங்களிலும் கூடுதல் தேர்வு மையங்களை அமைக்க தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர்கள், இந்திய பார் கவுன்சிலிடம் முறையிட்டு, தேர்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பணம் இரட்டிப்பாக தருவதாக ரூ.80 லட்சம் மோசடி... தொழில் அதிபரை கடத்திய 4 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/4-arrested-for-kidnapping-businessman-in-rs-80-lakh-fraud-case-claiming-to-double-the-money</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/4-arrested-for-kidnapping-businessman-in-rs-80-lakh-fraud-case-claiming-to-double-the-money#comments</comments><guid isPermaLink="false">da4d584e-41f2-4453-9ab5-1d947e15d8b8</guid><pubDate>Mon, 24 Aug 2026 03:43:06 +0000</pubDate><atom:updated>2026-08-24T03:43:06.759Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவை,கைது,arrest,மோசடி,money,kidnap,தொழில் அதிபர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/my3mwlvo/111.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/my3mwlvo/111.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவையில் நடந்த கடத்தல் வழக்கில் திடீர் திருப்பமாக ரூ.80 லட்சம் மோசடி செய்ததாக தொழில் அதிபர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.</p><p>மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியை சேர்ந்தவர் தேப்ஜித் ரானா (வயது 25). தொழில் அதிபரான இவர் திருப்பூரில் ஜவுளிக்கடை நடத்தி வருவதாகவும், தனது ஜவுளிக்கடையில் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பாக திரும்ப கொடுப்பதாகவும் அறிவித்து இருந்தார். அதை நம்பி கோவையை சேர்ந்த ஆனந்தகுமார். அவருடைய நண்பர் செந்தில்குமார் உள்பட 10 பேர் தேப்ஜித் ரானாவிடம் ரூ.80 லட்சம் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. </p><p>பணத்தை பெற்றுக்கொண்ட அவர், கூடுதல் லாபமோ அல்லது அவர்கள் முதலீடு செய்த பணத்தையோ திரும்ப கொடுக்கவில்லை என்று தெரிகிறது.</p><h2>வழக்குப்பதிவு</h2><p>இந்த நிலையில் தேப்ஜித் ரானா தனது நண்பர் சித்தார்த், ஆதர்ஷ் குமார் ஆகியோருடன் கோவை வந்தார். பின்னர் கோவையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தார். அதை அறிந்த ஆனந்தகுமார். செந்தில்குமார் உள்பட 10 பேரும் அங்கு சென்றனர். </p><p>பின்னர் தேப்ஜித் ரானா உள்பட 3 பேரையும் காரில் கடத்திச்சென்று ரூ.26 லட்சம் மற்றும் 1 பவுன் நகை ஆகியவற்றை பறித்தனர். இது குறித்து தேப்ஜித் ரானா பீளமேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.</p><h2>மோசடி</h2><p>அதில் தேப்ஜித் ரானா, இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி ரூ.80 லட்சத்தை பெற்றுக்கொண்டு, லாபத்தை கொடுக்க மறுத்ததுடன் முதலீடு செய்த பணத்தையும் கொடுக்காமல் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF">மோசடி </a>செய்ததும், இதனால்தான் ஆனந்தகுமார் உள்பட 10 பேரும் அவரை கடத்தி பணம், நகையை பறித்ததும் தெரியவந்தது. </p><p>எனினும் தேப்ஜித் ரானாவை கடத்தி சென்று பணத்தை பறித்த வழக்கில் திண்டுக்கல்லை சேர்ந்த வினோத் (37). வினோத்குமார் (39), திருச்சியை சேர்ந்த சண்முகராஜ் (44), மயிலாடுதுறையை சேர்ந்த செந்தில்குமார் (45) ஆகிய 4 பேரை பீளமேடு போலீசார் கைது செய்தனர். மீதமுள்ள 6 பேரை தேடி வருகின்றனர். இதற்கிடையே செந்தில்குமார் தான் உள்பட 10 பேரிடம் தேப்ஜித் ரானா, சித்தார்த் சர்மா ஆகியோர் ரூ.80 லட்சத்தை மோசடி செய்துவிட்டதாக ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தனர்.</p><h2>கைது</h2><p>அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேப்ஜித் ரானா, சித்தார்த் சர்மா ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item></channel></rss>