<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 27 Aug 2026 16:36:07 +0000</lastBuildDate><item><title>நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு: டெல்லி புறப்பட்ட தமிழக அமைச்சர்கள் குழு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/floods-in-nepal-tamil-nadu-ministerial-delegation-leaves-for-delhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/floods-in-nepal-tamil-nadu-ministerial-delegation-leaves-for-delhi#comments</comments><guid isPermaLink="false">4be436bd-1cf9-4b35-934b-e440c0958c10</guid><pubDate>Thu, 27 Aug 2026 16:22:15 +0000</pubDate><atom:updated>2026-08-27T16:22:15.987Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டெல்லி,Nepal,நேபாளம்,TN govt,Ministers,அமைச்சர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/xcoinfzq/STate-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/xcoinfzq/STate-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நேபாளம் - திபெத் எல்லையில் நேற்று ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால், பிரமாண்ட பனிப்பாறை சரிந்து போதேகோசி நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த அதிபயங்கர வெள்ளப்பெருக்கில், ஆற்றின் கரையோர கட்டிடங்கள், பாலங்கள், வாகனங்கள் உள்ளிட்டவை கண்இமைக்கும் நேரத்தில் அடித்துச் செல்லப்பட்டன. </p><p>இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-ஐ கடந்திருக்கும் நிலையில், மேற்கொண்டு ஆயிரக்கணக்கானோரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து கொண்டிருக்கிறது. காயம் அடைந்தவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், காணாமல் போனவர்களில் சுமார் 300 பேர் இந்தியர்கள் என நேபாள வெளியுறவுத்துறை மந்திரி ஷிசிர் கனால் தெரிவித்துள்ளார்.</p> <p>இதனிடையே நேபாளத்தில் தமிழர்கள் பலர் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்பதற்கான பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.</p><p>இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய் உத்தரவின்பேரில், நேபாளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்கும் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக தமிழக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், வினோத், தென்னரசு ஆகியோர் இன்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளனர். அதோடு, நேபாளத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்கவும், நிவாரணப் பணிகளைக் கண்காணிக்கவும் ஆஷிஷ் குமார் ஐ.ஏ.எஸ். தலைமையிலான குழுவை காத்மாண்டுவுக்கு அனுப்ப முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>&apos;டான்சி&apos; நிலம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றம் செய்யப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-dansi-land-be-transferred-to-the-corporation-higher-secondary-school-minister-sengottaiyan-responds</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-dansi-land-be-transferred-to-the-corporation-higher-secondary-school-minister-sengottaiyan-responds#comments</comments><guid isPermaLink="false">6182dc1c-c1a1-4b74-b60a-849e8f686a0a</guid><pubDate>Thu, 27 Aug 2026 15:51:39 +0000</pubDate><atom:updated>2026-08-27T15:51:39.657Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,திருப்பூர்,அமைச்சர் செங்கோட்டையன்,Minister Senkottayan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/351j6jwb/kottaiyan33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் செங்கோட்டையன் ]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/351j6jwb/kottaiyan33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சட்டசபையில் கேள்வி நேரத்தில், த.வெ.க. உறுப்பினர் சத்யபாமா (திருப்பூர் வடக்கு), 'திருப்பூர் வடக்கு மாவட்டத்தில் குமார் நகர் மாநகராட்சி மேல்நிலை பள்ளி அமைந்துள்ளது. இங்கே சுமார் 1,475 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். </p><p>அந்த பள்ளிக்கு அருகில் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகம் ('டான்சி') நிலம் அமைந்துள்ளது. பள்ளிக்கு இடப்பற்றாக்குறை இருப்பதால் அந்த நிலத்தை வருவாய்த்துறை மூலம் நிலமாற்றம் செய்யப்படுமா? என துணை கேள்வியை எழுப்பினார்.</p><p>அதற்கு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D">அமைச்சர் செங்கோட்டையன்</a>, 'வருவாய்த் துறை மூலம் டான்சி நிலத்தை பயன்படுத்தவில்லை என்று தெரிந்தால் அவர்களோடு பேசி அதற்கு பிறகு அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்' என்றார்.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபை சுவாரசியம்: 20 வினாடிகள் அனுமதி கேட்டு 14 வினாடிகளில் பேசி முடித்த உறுப்பினர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/assembly-drama-member-asks-20-seconds-speaks-14</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/assembly-drama-member-asks-20-seconds-speaks-14#comments</comments><guid isPermaLink="false">5c2328e7-1bea-4fcb-a847-ff228f36fb1e</guid><pubDate>Thu, 27 Aug 2026 15:43:47 +0000</pubDate><atom:updated>2026-08-27T15:43:47.858Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN Assembly,DMK MLA,வேடசந்தூர் தொகுதி,த.சாமிநாதன்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/p0348qk5/Untitled-11.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/p0348qk5/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது, தி.மு.க. உறுப்பினர் த.சாமிநாதன் (வேடசந்தூர்), வனத்துறை தொடர்பாக துணை கேள்வி கேட்க சபாநாயகரிடம் அனுமதி கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. இதனையடுத்து ஒரு பேப்பரில் 20 வினாடிகளில் பேசிவிடுவேன். அனுமதி கொடுங்கள் என துண்டு சீட்டில் எழுதி சபாநாயகரிடம் கொடுத்தார்.</p><p>இதையடுத்து அனுமதி வழங்கிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், '20 வினாடிகளில் பேசி முடித்துவிடுவேன் என எழுதி கொடுத்திருக்கிறார்' என்றார். அதையடுத்து சாமிநாதன் எழுந்து, "வேடசந்தூர் தொகுதி, சுக்காம்பட்டி ஊராட்சி, வளவி செட்டிபட்டியில் இருந்து சுக்காம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு செல்லும் சாலை, மழைக்காலங்களில் உறுதியாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அது வனத்துறைக்கு சொந்தமானது. இந்த சாலையை செப்பனிட்டுத்தர தங்கள் வாயிலாக கேட்கிறேன்" என்றார்.</p><p>உறுப்பினர் சொன்னபடி, 20 வினாடிகளுக்குள் அதாவது 14 வினாடிகளுக்குள்ளாகவே கேள்வியை கேட்டு முடித்துவிட்டார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ரஞ்சித்குமார், "இதுபோல் தமிழ்நாடு முழுவதும் மண்சாலைகள் இருக்கின்றன. அதை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>டெங்கு, பன்றி காய்ச்சல்களை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? - அமைச்சர் அருண்ராஜ் பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-measures-have-been-taken-to-prevent-dengue-and-swine-flu-minister-arunraj-responds</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-measures-have-been-taken-to-prevent-dengue-and-swine-flu-minister-arunraj-responds#comments</comments><guid isPermaLink="false">c63a4d82-97b5-4389-b7a1-0c15ad80f92b</guid><pubDate>Thu, 27 Aug 2026 15:43:21 +0000</pubDate><atom:updated>2026-08-27T15:43:21.864Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,டெங்கு,Dengue,டெங்கு காய்ச்சல்,Dengue Fever,Legislative Assembly,swine flu,பன்றி காய்ச்சல்,Tamilnadu Assembly,அருண்ராஜ்,Arunraj,Minister Arunraj,அமைச்சர் அருண்ராஜ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/cjrhe2l5/Untitled-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் அருண்ராஜ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/cjrhe2l5/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>டெங்கு, பன்றி காய்ச்சல்களை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து சட்டசபையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அருண்ராஜ் பதிலளித்தார்.</p><h2>டெங்கு, பன்றி காய்ச்சல்கள்</h2><p>சட்டசபையில் நிகழ்வில், டெங்கு, பன்றி காய்ச்சல்கள் விவகாரம் தொடர்பாக அரசின் கவனத்துக்கு உறுப்பினர்கள் கொண்டு வந்தனர். இதுதொடர்பாக நடந்த விவாதம் வருமாறு:-</p><p><strong>தி.மு.க. உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வம் (போடிநாயக்கனூர்)</strong> :- 2026 ஜூன் மாதம் வரை 7,011 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 3 பேர் மரணம் அடைந்திருப்பதாகவும் மத்திய அரசின் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. கடந்த தி.மு.க. ஆட்சியில் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை காரணமாக டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டு, இறப்பு விகிதம் குறைக்கப்பட்டது. 23.8.2026 வரை 12,543 பேர் தமிழ்நாட்டில் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 4 பேர் மரணம் அடைந்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். பருவமழை தொடங்க உள்ளதால் தமிழக அரசு சிறப்பு முகாம்கள் அமைத்தல், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தல், கொசுக்கள் ஒழித்தல் போன்ற போதிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும் என்று அமைச்சரை கேட்கிறேன்.</p><h2>என்ன நடவடிக்கைகள்?</h2><p><strong>சட்டமன்ற அ.தி.மு.க. தலைவர் எடப்பாடி பழனிசாமி</strong>:- <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழ்நாட்டில் </a>டெங்கு காய்ச்சல் அதிகம் பரவுகிறது. டெங்கு காய்ச்சல் பாதிப்பு கடந்த ஆண்டைவிட பாதியாக குறைந்துள்ளது. 4 பேர் மட்டுமே இறந்துள்ளனர். அதேபோல் பன்றி காய்ச்சல் 1,558 பேர் பாதிக்கப்பட்டதாகவும், சிலர் இறந்ததாகவும் அமைச்சர் சொல்லியுள்ளார். டெங்கு, பன்றி காய்ச்சல்களை தடுக்க அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது?</p><p><strong>டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்டு)</strong> :- டெங்கு, மலேரியா காய்ச்சல் தமிழ்நாட்டில் இருக்கிறது. அதனால் பாதிக்கப்பட்டு அரசு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். இந்த நோய்களை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கைகளை அரசு செய்துள்ளது?.</p><p><strong>சிவக்குமார் (பா.ம.க.)</strong> :- பருவமழைக்கு முன்னதாக பன்றிக் காய்ச்சல் அதிகளவில் பரவி வருகிறது. தடுப்பு நடவடிக்கைகளாக அரசு என்ன செய்து இருக்கிறது?</p><h2>ஆயத்தமாக உள்ளது</h2><p><strong>அமைச்சர் அருண்ராஜ்</strong>:- பருவமழை காலத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகமாகவே இருக்கிறது. இந்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் 26.8.2026 வரை 12,856 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 7 உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கிறது. அதிகமாக சென்னையில்தான் பதிவாகியுள்ளது. அரசு தினந்தோறும் டெங்கு காய்ச்சலை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். டெங்கு, பன்றி காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை கண்காணிக்கப்படுகிறது. கொசு உற்பத்தியாகும் இடங்கள் கண்காணிக்கப்பட்டு, கொசு புழுக்கள் ஒழிப்பும் நடக்கிறது. கொசு ஒழிப்பு பணியாளர்களை அதிகளவில் பணியமர்த்தப்பட்டு அதற்கான பணிகள் நடக்கின்றன. மருத்துவமனைகளில் தேவையான சிகிச்சைகளும் தயார்நிலையில் உள்ளது. தினசரி 5,805 மருத்துவமனைகளில் காய்ச்சல் கண்காணிப்பு பணிகள் நடக்கின்றன. டெங்கு, பன்றி காய்ச்சல் தடுப்பு பணிகளில் தமிழக அரசு ஆயத்தமாகவே உள்ளது.</p><p>இவ்வாறு விவாதம் நடந்தது.</p>]]></content:encoded></item><item><title>டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வான 459 பேருக்கு பணி நியமன ஆணை; முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-issues-appointment-orders-to-459-candidates-selected-through-tnpsc</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-issues-appointment-orders-to-459-candidates-selected-through-tnpsc#comments</comments><guid isPermaLink="false">2ff20337-88a6-4c1e-a1ad-ea279cabc506</guid><pubDate>Thu, 27 Aug 2026 15:41:13 +0000</pubDate><atom:updated>2026-08-27T15:41:13.786Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,Vijay,விஜய்,TNPSC,டி.என்.பி.எஸ்.சி. தேர்வு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/rqel1pty/cmvijayone33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வான 459 பேருக்கு பணி நியமன ஆணை]]></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/rqel1pty/cmvijayone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தலைமைச் செயலகத்தில், பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 459 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார்.</p><p>தமிழக அரசின் மனிதவள மேலாண்மைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20">தமிழ்நாடு அரசு</a> பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் பல்வேறு துறைகளுக்கு உதவி பொறியாளர்கள், வேளாண் அலுவலர், இளநிலை அறிவியல் அலுவலர், இளநிலை மேலாளர்கள், முதுநிலை கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு பணி இடங்களுக்கு 459 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.</p><p>அவர்களுக்கு இதற்கான சான்றிதழை வழங்கும் அடையாளமாக 10 பேருக்கு பணிநியமன ஆனைகளை சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய் கொடுத்தார். அப்போது, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார், தலைமைச் செயலாளர் சாய்குமார், மனிதவள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் சி.சமயமூர்த்தி, துணைச் செயலாளர் ருக்மிணி ஆகியோர் உடன் இருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>‘சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும்’ - திருமாவளவன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/constructive-debates-must-take-place-in-the-legislative-assembly-thirumavalavan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/constructive-debates-must-take-place-in-the-legislative-assembly-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">2cae2e70-de72-4e2b-8783-b70f6827903e</guid><pubDate>Thu, 27 Aug 2026 15:28:10 +0000</pubDate><atom:updated>2026-08-27T15:28:10.187Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமாவளவன்,Thirumavalavan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/vhrnf69r/STate-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/vhrnf69r/STate-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, சட்டமன்ற உறுப்பினர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக அவர் கூறியதாவது;-</p> <p>“சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு. அண்மையில் முதல்-அமைச்சர் விஜய்யை நான் சந்தித்தபோது அவரும் இந்த கருத்தை வெளிப்படுத்தினார். சட்டசபையில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்ற விருப்பத்தை அவர் தெரிவித்தார். </p><p>ஒவ்வொருவருக்கும் அதுதான் விருப்பம். சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் அந்த பொறுப்புணர்வோடு சட்டமன்றத்தில் இயங்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய எதிர்பார்ப்பு.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>திருச்செந்தூர் கோவிலில் ஆவணித் திருவிழா: 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aavanit-festival-at-thiruchendur-temple-flag-hoisting-on-31st</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aavanit-festival-at-thiruchendur-temple-flag-hoisting-on-31st#comments</comments><guid isPermaLink="false">9c6b8eec-929a-4443-b906-c96d3c0e6879</guid><pubDate>Thu, 27 Aug 2026 15:25:10 +0000</pubDate><atom:updated>2026-08-27T15:25:10.096Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிகச் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514969</atom:uri></atom:author><description></description><media:keywords>தேரோட்டம்,Tiruchendur temple,திருச்செந்தூர் கோவில்,கொடியேற்றம்,ஆவணித் திருவிழா</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/jx9exaa9/Untitled-10.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருச்செந்தூர் கோவில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/jx9exaa9/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>ஆன்மிகம் (Devotional)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது.</p><h2>ஆவணித் திருவிழா</h2><p>முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா வருகிற 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது. இந்த விழா வருகிற 11-ந்தேதி வரை 12 நாட்கள் நடைபெற உள்ளது. முதல் நாளான்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப் பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 5.15 மணிக்கு மேல் 5.40 மணிக்குள் திருவிழா கொடியேற்றப்படும்.</p><p>மாலையில் அப்பர் சுவாமிகள் கோவிலில் இருந்து தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து உழவாரப்பணி செய்யும் நிகழ்ச்சியும், இரவில் ஸ்ரீபெலி நாயகர் அஸ்திரதேவருடன் பல்லக்கில் 9 சந்திகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கும்.</p><h2>சிவப்பு சாத்தி</h2><p>விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வருகிற 4-ந்தேதி மேலக்கோவிலில் இரவு 7.30 மணிக்கு குடைவருவாயில் தீபாராதனை நடக்க இருக்கிறது. பின்னர் சுவாமி, அம்பாள் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்கள்.</p><p>6-ந்தேதி 7-ம் திருநாளன்று அதிகாலை 5 மணிக்கு சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சியும், காலை 9 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் பிள்ளையன் கட்டளை மண்டபத்திற்கும் எழுந்தருளுவார். அங்கு மாலையில் சுவாமிக்கும், அம்பாள்களுக்கும் அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெறும். மாலை 4 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.</p><h2>தேரோட்டம்</h2><p>8-ம் திருநாளான வருகிற 7-ந்தேதி அதிகாலை 6 மணிக்கு சுவாமி சண்முகர் பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளைச் சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருவார். பகல் 12 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவிலை சேர்வார். சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 10-ம் திருநாளான வருகிற 9-ந்தேதி காலை 7 மணிக்கு நடக்கும்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.42 கோடி நீர்வளத்துறை டெண்டரில் குளறுபடிகள்: &apos;நிர்வாக மாற்றம்&apos; இதுதானா? - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/irregularities-in-rs-42-crore-water-resources-department-tender-is-this-what-administrative-change-looks-like-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/irregularities-in-rs-42-crore-water-resources-department-tender-is-this-what-administrative-change-looks-like-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">e5092ea9-f67d-42c4-80bf-11578007d114</guid><pubDate>Thu, 27 Aug 2026 15:18:44 +0000</pubDate><atom:updated>2026-08-27T15:18:44.104Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/px9ep474/Untitled-18.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/px9ep474/Untitled-18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முதல்-அமைச்சர் விஜய் உடனடியாக இந்த முறைகேடுகளை ஆய்வு செய்து, ஆன்லைன் டெண்டர் ஆவணங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>மெகா முறைகேடுகள்</h2><p>பருவமழை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">முன்னெச்சரிக்கை </a>பணிகளுக்காக தவெக அரசின் நீர்வளத்துறை ஒதுக்கியுள்ள ரூ.42 கோடி மதிப்பிலான 202 டெண்டர்களில், மெகா முறைகேடுகள் அரங்கேறி வருவதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. ரூ.10 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு வெறும் 2 நாட்களும், 50-க்கும் மேற்பட்ட பணிகளுக்கு வெறும் 7 நாட்களும் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பது, முறைகேடு குறித்த சந்தேகத்தை மேலும் வலுவாக்குகிறது.</p><p>இந்த டெண்டர் தொடர்பாகப் சில சந்தேகங்கள் எழுகின்றன. அதன்படி:</p><p>1) ரூ.10 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு வெறும் 2 நாட்கள் மட்டும் கால அவகாசம் கொடுப்பது ஏன்?</p><p>2) ஆன்லைன் டெண்டர் முறை அமலில் இருந்தும், குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் "சிறப்பு நிபந்தனைகள்" விதிக்கப்பட்டது ஏன்?</p><h2>டெண்டர்களை ரத்து செய்க</h2><p>போன்ற கேள்விகள் எழுகின்றன. மேலும், தொழில்நுட்ப ஓட்டைகளைப் பயன்படுத்தி அதிகாரிகளும், சில ஆதிக்கம் செலுத்தும் ஒப்பந்ததாரர்களும் கைகோர்த்து 'சிண்டிகேட்' அமைத்து மற்றவர்களைத் தடுப்பதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகள் கண்டனத்திற்குரியவை. எனவே முதல்-அமைச்சர் விஜய் உடனடியாக இந்த முறைகேடுகளை ஆய்வு செய்து, ஆன்லைன் டெண்டர் ஆவணங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவ்வாறு முறைகேடுகள் நடந்தது உறுதியானால், அனைத்து டெண்டர்களையும் ரத்து செய்துவிட்டு, கூடுதல் கால அவகாசத்துடன் முறையான மறு டெண்டர் விட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆணவக் கொலைக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்றப்படும் - வன்னி அரசு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-law-to-be-enacted-against-honor-killings-vanni-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-law-to-be-enacted-against-honor-killings-vanni-government#comments</comments><guid isPermaLink="false">c705b64c-49cf-40e4-8109-55dbe671ff1a</guid><pubDate>Thu, 27 Aug 2026 15:08:17 +0000</pubDate><atom:updated>2026-08-27T15:08:17.843Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,VCK,வன்னி அரசு,Vanni Arasu,ஆணவக்கொலை,அமைச்சர் வன்னி அரசு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/pr8z4ap6/arasu33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
ஆணவக் கொலை]]></media:title><media:description type="html"><![CDATA[ 
ஆணவக் கொலைக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்றப்படும்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/pr8z4ap6/arasu33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கடந்த திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட நீதிபதி கே.என்.பாஷா குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு குழுவின் பரிந்துரைகளை விரைந்து பெற்று ஆணவக் கொலைக்கு எதிராக சிறப்பு  தனிச் சட்டம் இயற்றப்படும் என  அமைச்சர் வன்னி அரசு அறிவித்துள்ளார்.</p><h2>ஆணவக்கொலைக்கு சிறப்பு சட்டம்</h2><p>இதுதொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் வன்னி அரசு.,</p><p>வன்கொடுமைக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும், சமத்துவம் மற்றும் சமூகநீதியை நிலைநாட்டி, அனைவரிடையேயும் இணக்கமான சூழலை உருவாக்க அரசு முயன்றுவருகிறது. இருப்பினும் தங்கள் சொந்தப் பிள்ளைகளையே ஆணவக்கொலை செய்யும் சம்பவல்கள் சமூகத்தில் அரங்கேறி வருகின்றன.</p><h2>பாஷா குழுவின் பதவிக்காலம் நீட்டிப்பு </h2><p>சமூகத்தில் தொடர்ந்து நடந்துவரும் ஆணவப்படுகொலை சம்பவங்களை தடுப்பதற்கு, சிறப்பு சட்டம் இயற்றுவதற்கு அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த திமுக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாட்ஷா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.</p><p>இக்குழு அரசு அலுவலர்களுடனும் கலந்து ஆலோசித்து கருத்துகள் கேட்கப்பட்டு உள்ளது. மேலும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்து கருத்துகளைப் பெற்று அறிக்கை தயார் செய்யவேண்டிய நிலை உள்ளதால், பாஷா குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்தக் குழுவின் பரிந்துரைகள் பெறப்பட்ட உடன், ஆணவப்படுகொலைகளை தடுத்து நிறுத்துவதற்கு சிறப்புச் சட்டம் இயற்றப்படும் என்று திறந்த மனதோடு அறிவிக்கிறேன்." என தெரிவித்தார்.</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%20%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">தவெக ஆட்சி</a>யில் 10 ஆணவக் கொலைகள் நடந்திருப்பதாக திமுக குற்றஞ்சாட்டிய நிலையில் அமைச்சர் வன்னி அரசு அறிவித்துள்ளார்.</p><h2>முதல்-அமைச்சரிடம்  வாழ்த்து</h2><p>இதனிடையே,  சமூக நீதித்துறையின் 2026-2027ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை மற்றும் துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகள் சட்ட பேரவையில் வெளியிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து, முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் அமைச்சர் வன்னிஅரசு.</p>]]></content:encoded></item><item><title>கோவை-ஜபல்பூர் இடையே புதிய வாராந்திர சிறப்பு ரெயில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-weekly-special-train-between-coimbatore-and-jabalpur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-weekly-special-train-between-coimbatore-and-jabalpur#comments</comments><guid isPermaLink="false">7f534bda-a672-4694-b365-4a916ac8918e</guid><pubDate>Thu, 27 Aug 2026 15:00:37 +0000</pubDate><atom:updated>2026-08-27T15:00:37.460Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,சிறப்பு ரெயில்,Special train</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/kepvdxqj/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/kepvdxqj/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p>கோவை-ஜபல்பூர் இடையே இயக்கி வந்த வாராந்திர சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரெயில் புதிய எண்களுடன் நிரந்தர ரெயில்களாக மாற்றப்பட்டுள்ளது. இதன் படி கோவை-ஜபல்பூர் இடையே புதிய விரைவு ரெயிலை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இந்த ரெயில் சேவையில் ஜபல்பூர்-கோவை ரெயில் (எண்:20160) அடுத்த மாதம் 23-ந்தேதி முதல் வெள்ளிக்கிழமைதோறும் இரவு 11.50 மணிக்கு ஜபல்பூர் சந்திப்பில் இருந்து புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.30 மணிக்கு கோவை சந்திப்பை அடையும். </p><p>அதேபோல் வருகிற 26-ந்தேதி கோவை-ஜபல்பூர் ரெயில் (எண்: 20159) திங்கட்கிழமைகளில் மாலை 5.05 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் புதன்கிழமைகளில் காலை 8.45 மணிக்கு ஜபல்பூர் சந்திப்பை அடையும். இந்த ரெயில் பாலக்காடு, சொரணூர், திரூர், கோழிக்கோடு, வடகரா, கண்ணூர், காசர்கோடு, மங்களூரு, தொக்கூர், முல்கி, உடுப்பி, குந்தாப்புரா, மூகாம்பிகா ரோடு பைந்தூர், கும்தா, கார்வார், மட்கான், திவிம், குடால், ரத்னகிரி, சிப்ளுன், கேட், ரோஹா, பன்வெல், நாசிக் ரோடு, புசாவல், கந்தவா, ஹர்தா, இடார்சி, பிபரியா, கதர்வாரா மற்றும் நரசிங்பூர் வழியாக சென்று ஜபல்பூரை அடைகிறது.</p>]]></content:encoded></item><item><title>வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்புக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்..! - சென்னை மாநகராட்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/public-urged-to-cooperate-with-the-house-listing-survey-chennai-corporation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/public-urged-to-cooperate-with-the-house-listing-survey-chennai-corporation#comments</comments><guid isPermaLink="false">ce1126db-1bfc-4259-b140-b5d67b0be351</guid><pubDate>Thu, 27 Aug 2026 14:39:01 +0000</pubDate><atom:updated>2026-08-27T14:39:01.956Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,Chennai Corporation Commissioner</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/wmuwxgo8/Untitled-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை மாநகராட்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/wmuwxgo8/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்புப் பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் கேட்டுக் கொண்டார். இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2027</h2><p>மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது நாட்டின் எதிர்காலத் திட்டமிடலுக்கும், பல்வேறு அரசு நலத்திட்டங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை முறையாகத் திட்டமிடுவதற்கும் முக்கியமான பணியாகும்.</p><p>பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2027 தொடர்பான வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.</p><h2>தகவல் அளிக்கலாம்</h2><p>தங்களது குடும்பம் இதுவரை கணக்கெடுக்கப்படவில்லை எனில், கீழே குறிப்பிட்டுள்ள சம்பந்தப்பட்ட பொறுப்பு அலுவலரை (Charge Officer) தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை அளிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.</p><p>மேலும், மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியை சிறப்பாகவும், முழுமையாகவும் மேற்கொள்ளும் வகையில், கணக்கெடுப்பு அலுவலர்கள் மற்றும் கணக்கெடுப்பாளர்களுக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்குத் தேவையான தகவல்களை வழங்குவது கட்டாயமாகும்.</p><h2>தொடர்பு கொள்ள வேண்டிய மண்டல அலுவலகங்கள்</h2><ul><li><p>மண்டலம் - மண்டலத்தின் பெயர் -தொடர்பு எண்</p></li><li><p>மண்டலம் – 1 திருவொற்றியூர் 9445190201</p></li><li><p>மண்டலம் – 2 மணலி 9445190202</p></li><li><p>மண்டலம் – 3 மாதவரம் 9445190203</p></li><li><p>மண்டலம் – 4 தண்டையார்பேட்டை 9445190204</p></li><li><p>மண்டலம் – 5 ராயபுரம் 9445190205</p></li><li><p>மண்டலம் – 6 திரு.வி.க. நகர் 9445190206</p></li><li><p>மண்டலம் – 7 அம்பத்தூர் 9445190207</p></li><li><p>மண்டலம் – 8 அண்ணா நகர் 9445190208</p></li><li><p>மண்டலம் – 9 தேனாம்பேட்டை 9445190209</p></li><li><p>மண்டலம் – 10 கோடம்பாக்கம் 9445190210</p></li><li><p>மண்டலம் – 11 வளசரவாக்கம் 9445190211</p></li><li><p>மண்டலம் – 12 ஆலந்தூர் 9445190212</p></li><li><p>மண்டலம் – 13 அடையாறு 9445190213</p></li><li><p>மண்டலம் – 14 பெருங்குடி 9445190214</p></li><li><p>மண்டலம் – 15 சோழிங்கநல்லூர் 9445190215</p></li><li><p>தலைமையிடம் 1913</p></li></ul><h2>பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்</h2><p>எனவே, தங்களது குடும்பம் கணக்கெடுப்பில் விடுபட்டிருந்தால், மேற்கண்ட தொடர்பு எண்களில் சம்பந்தப்பட்ட பொறுப்பு அலுவலரைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p>மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்ய <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பொதுமக்கள் </a>அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விவசாயி வலுக்கட்டாயமாக காரில் கடத்தல் - ஓசூர் அருகே பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmer-forcibly-abducted-in-a-car-sensation-near-hosur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmer-forcibly-abducted-in-a-car-sensation-near-hosur#comments</comments><guid isPermaLink="false">f06ae173-7789-4556-bbe1-a87a90f4d877</guid><pubDate>Thu, 27 Aug 2026 14:38:00 +0000</pubDate><atom:updated>2026-08-27T14:38:00.519Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>farmer,விவசாயி,Hosur,ஓசூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/vxp0kggj/STate-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/vxp0kggj/STate-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ணகிரி,</p><p>கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலமங்கலம் அடுத்த அனுசோனை கிராமத்தை சேர்ந்த கோபால்(வயது 58) என்ற விவசாயி ஆடு, கோழி, முயல் உள்ளிட்டவற்றை ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு கேரள பதிவு எண் கொண்ட காரில் வந்த 4 பேர், அவரை வீட்டிலிருந்து வெளியே வரவழைத்து வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.</p><p>இந்த காட்சி அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து கோபாலின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இது குறித்து விசாரணை நடத்தியபோது, காரில் வந்த நபர்கள் கடந்த சில நாட்களாக கோபாலுக்கு சொந்தமான இடத்தில் சூட்டிங் நடத்த அனுமதி கேட்டு வந்தனர் என்பதும், அதற்கு கோபால் மறுப்பு தெரிவித்து வந்தார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>வேளாங்கண்ணி மாதா ஆலயத் திருவிழா: சிறப்புப் பேருந்துகள் இயக்கம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/velankanni-matha-church-festival-operation-of-special-buses</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/velankanni-matha-church-festival-operation-of-special-buses#comments</comments><guid isPermaLink="false">a43956a2-cfae-4d11-b83f-b817d0647fa5</guid><pubDate>Thu, 27 Aug 2026 14:11:03 +0000</pubDate><atom:updated>2026-08-27T14:11:03.909Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>special buses,Velankanni,வேளாங்கண்ணி,சிறப்புப் பேருந்துகள்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/0os1zpir/13.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/0os1zpir/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு;</p><p>வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக  சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பக்தர்களின் வசதிக்காக  சென்னை, பெங்களூரு தூத்துக்குடி கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ஆகிய ஊர்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்துகள் 27/08/2026 முதல் 10/09/2026 வரை இயக்கப்பட உள்ளன.</p><p>29/09/2028 அன்று வேளாங்கண்ணி மாதா கோவிலில் கொடியேறுவதை முன்னிட்டு 28.08.2028 அன்று சென்னையிலிருந்து வேளாங்கண்ணிக்கு 160 சிறப்பு பேருந்துகளும், 29/08/2028 அன்று வேளாங்கண்ணியிலிந்து சென்னைக்கு 150 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. அதே போல் 08/09/2028 அன்று கொடி இறங்குவதை முன்னிட்டு சென்னையிலிருந்து வேளாங்கண்ணிக்கும் வேளாங்கண்ணியிலிருந்து சென்னைக்கும் 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.</p><p>மற்ற நாட்களில் தேவைக்கேற்ப சென்னையிலிருந்து வேளாங்கண்ணிக்கும், வேளாங்கண்ணியிலிருந்து சென்னைக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பயணிகளின் வசதிக்காக தொலைதூரங்களில் இருந்து இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் wwwtnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து வேளாங்கண்ணி செல்லவும் மற்றும் அங்கிருந்து பயணிகள் திரும்பும் வகையில் பயணம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.</p><p>இதுமட்டுமின்றி குழுவாக பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலும் பேருந்து இயக்கப்படுகின்றன. மேற்படி சேவையை வேளாங்கண்ணி செல்லும் பக்தர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>பி.எம்.எப்.எம்.இ திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தியதற்காக விருது: அமைச்சர் மதன்ராஜா பெற்றுக் கொண்டார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pmfme-scheme-award-for-excellent-implementation-minister-mathanraja-receives</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pmfme-scheme-award-for-excellent-implementation-minister-mathanraja-receives#comments</comments><guid isPermaLink="false">f3b9268b-2cf6-4384-a7e5-ea426201a4cb</guid><pubDate>Thu, 27 Aug 2026 14:10:26 +0000</pubDate><atom:updated>2026-08-27T14:10:26.123Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விருது,Award,சிராக் பஸ்வான்,அமைச்சர் மதன்ராஜா,Minister Madanraja</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/srdeuipf/Untitled-8.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/srdeuipf/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பிரதான் மந்திரி குறு உணவுபதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தினை (PMFME) தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக, மத்திய உணவுப்பதப்படுத்துதல், தொழில் துறை மந்திரி சிராக் பஸ்வானிடம் இருந்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா விருதினை பெற்றுக்கொண்டார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>புதுடெல்லி, இந்தியா ஹாபிடாட் சென்டரில் 24.08.2026 &amp; 25.08.2026 அன்று நடைபெற்ற பிரதம மந்திரி குறு உணவுபதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் (Pradhan Mantri Formalisation of Micro Food Processing Enterprises Scheme) தொடர்பான விருது வழங்கும் விழாவில், PMFME திட்டத்தின் கீழ் சிறப்பாகச் செயல்பட்டதற்காக, பெரிய மாநிலங்கள் பிரிவில் வெற்றி பெற்ற மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்டது. இத்திட்டத்தை தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழ்நாடு அரசிற்கு மத்திய உணவுபதப்படுத்துதல் தொழில்துறை மந்திரி சிராக் பஸ்வான் விருதினை வழங்க, தமிழ்நாடு அரசின் சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா பெற்றுக்கொண்டார்.</p><p>பிரதான் மந்திரி குறு உணவுப்பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் ஒரு மத்திய நிதியுதவித் திட்டமாகும். இத்திட்டத்தில், மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுக்கு இடையே 60:40 என்ற விகிதத்தில் நிதி பகிர்வு முறை பின்பற்றப்படுகிறது. முறைசாரா குறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்துவதையும், விவசாய விளைப்பொருட்களின் மதிப்பு கூட்டுதலை ஊக்குவிப்பதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.</p><p>இத்திட்டத்தை தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழ்நாடு அரசிற்கு மத்திய அரசு விருது வழங்கி சிறப்பித்தது. இந்நிகழ்வில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப்யாதவ் மற்றும் முதன்மைச் செயலர் /தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் உமாநாத் மற்றும் மத்திய, மாநில அரசின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p><p>தமிழ்நாட்டில் PMFME திட்டம் நடப்பு நிதியாண்டில் உணவுப்பதப்படுத்தும் நடவடிக்கைகளைத் தொடங்கவும், விரிவுபடுத்தவும் 1,618 நிறுவனங்களுக்கு ரூ.47 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. உணவுப்பதப்படுத்தல் நடவடிக்கைகளில் மகளிரை ஊக்குவிக்கும் வகையில், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் ரூ.40,000 வீதம் விதை மூலதன மானியமாக 9,569 பெண்களுக்கு மொத்தம் ரூ.38.16 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.</p><p>PMFME திட்டத்தின் கீழ் தமிழ்நாடு இதுவரை மொத்தம் 19,800 நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது இந்தியா முழுமைக்குமான இலக்கில் சுமார் 10 சதவீத பங்களிப்பாகும். மேலும், ஒப்புதல் அளிக்கப்பட்ட அலகுகளில் நிதி விடுவிக்கப்பட்ட விகிதத்தில் (sanction-to-disbursement rate) 92% என்ற சிறப்பான அளவுகோலையும் தமிழ்நாடு மாநிலம் எட்டியுள்ளது.</p><p>தமிழ்நாடு 6 பிராண்டிங் மற்றும் சந்தைப்படுத்தல் திட்ட முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளது. இது உணவுப்பதப்படுத்தல் அமைச்சகத்தால் பெறப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட மிக அதிக எண்ணிக்கையிலான முன்மொழிவுகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இந்தியா - வியட்நாம் கடலோரக் காவல் படைகளின் கூட்டுப் பயிற்சி சென்னையில் நிறைவு..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/joint-exercise-between-the-indian-and-vietnamese-coast-guards-concludes-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/joint-exercise-between-the-indian-and-vietnamese-coast-guards-concludes-in-chennai#comments</comments><guid isPermaLink="false">948438e4-b5b7-401b-a3e8-0b30d3c330a1</guid><pubDate>Thu, 27 Aug 2026 13:33:24 +0000</pubDate><atom:updated>2026-08-27T13:33:24.503Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,India,Chennai,சென்னை,வியட்நாம்,Vietnam,கூட்டுப் பயிற்சி,Joint exercise</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/5y731bwe/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்தியா - வியட்நாம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/5y731bwe/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்தியக் கடலோரக் காவல் படை (ICG) மற்றும் வியட்நாம் கடலோரக் காவல் படை (VCG) இணைந்து நடத்திய ‘சஹ்யோக் ஹாப்-டாக்’ (SAHYOG HOP-TAC) என்ற கடல்சார் கூட்டுப் பயிற்சியின் இரண்டாவது பதிப்பு, இன்று சென்னை கடற்கரைக்கு அப்பால் வெற்றிகரமாக நிறைவடைந்தது.</p><h2>இந்தியா - வியட்நாம் கூட்டுப் பயிற்சி</h2><p>இந்த வியூக முக்கியத்துவம் வாய்ந்த கூட்டு நடவடிக்கையில், இந்தியக் கடலோரக் காவல் படையின் எட்டு கப்பல்கள் மற்றும் ஆறு விமானங்கள் ஆகியவற்றுடன், வியட்நாம் கடலோரக் காவல் படையின் ‘சி எஸ் பி 8002’ என்னும் கப்பலும் பங்கேற்றது. இப்பயிற்சி நடவடிக்கைகள் இந்தியக் கடலோரக் காவல் படையின் தலைமை இயக்குநர் மற்றும் வியட்நாம் கடலோரக் காவல் படையின் துணைத் தளபதி ஆகியோரால் கூட்டாகக் கண்காணிக்கப்பட்டன.</p><h2>முக்கிய மைல்கல்</h2><p>இரு படைகளுக்கிடையே <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">செயல்பாட்டு </a>ரீதியிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளைச் சீரமைக்கவும் இந்தத் தீவிரப் பயிற்சிகள் உருவாக்கப்பட்டன. அவசரகால நடைமுறைகளை செயல்படுத்துதல், கடலில் தடையற்ற ஒருங்கிணைப்பை உருவாக்குதல் போன்ற அம்சங்கள் இப்பயிற்சியில் இடம்பெற்றன. கடல்சார் பாதுகாப்பு வழிமுறைகளை வலுப்படுத்துதல், இரு படைகளுக்கிடையே செயல்பாட்டு திறன்களை பரிமாறிக்கொள்ளுதல் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா மற்றும் வியட்நாம் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றில் இப்பயிற்சி ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பிரசாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தவில்லை... தனக்கு எதிரான தேர்தல் வழக்கில் முதல்-அமைச்சர் விஜய் மனு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/did-not-involve-children-in-campaign-chief-minister-vijay-petition-in-election-case</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/did-not-involve-children-in-campaign-chief-minister-vijay-petition-in-election-case#comments</comments><guid isPermaLink="false">97643737-7601-4535-8b42-86044d2ab448</guid><pubDate>Thu, 27 Aug 2026 13:28:13 +0000</pubDate><atom:updated>2026-08-27T13:28:13.098Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை ஐகோர்ட்டு,Chennai Highcourt,தேர்தல் வழக்கு,election case,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/05fc8pbp/Untitled-7.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/05fc8pbp/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தேர்தல் பிரசாரத்துக்கு குழந்தைகளைப் பயன்படுத்தியதற்காக தனது வெற்றியை செல்லாது என அறிவிக்க முடியாது எனக் கூறி, தனக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்குகளை நிராகரிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><h2>தேர்தல் வழக்கு</h2><p>முதல்-அமைச்சர் விஜய் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் மற்றும் வாக்காளர்கள் லட்சுமி நரசிம்மன், தினேஷ் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.</p><p>இந்த வழக்கு கடந்த 25-ம்தேதி விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக்கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும், அதற்கு இரண்டு வாரம் அவகாசம் வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய் தரப்பில் கேட்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த கோர்ட்டு இன்று (ஆகஸ்ட் 27-க்குள்) தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக்கோரி மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.</p><h2>முதல்-அமைச்சர் விஜய் மனு</h2><p>இந்த நிலையில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் வெற்றி பெற்றதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி முதல்-அமைச்சர் விஜய் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>பிரசாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தவில்லை. குழந்தைகளை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தியதாக கூறுவது தவறு. அவ்வாறு கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மை என்று வைத்துக் கொண்டாலும், அந்த காரணத்துக்காக தனது தேர்தல் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க முடியாது.</p><p>தேர்தல் தொடர்புடைய நடவடிக்கைகளில் குழந்தைகளைப் பயன்படுத்த அரசியல் கட்சிகளுக்கு தடை விதித்து, கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டதா என்பதை தேர்தல் வழக்கு தாக்கல் செய்தவர்கள் நிரூபிக்கவில்லை. தேர்தல் நடத்தை விதிகளை மீறுவது தேர்தல் வெற்றியைச் செல்லாது என அறிவிப்பதற்கான காரணமாக கருத முடியாது.</p><h2>ஆதாரங்கள் இல்லை</h2><p>மேலும், தேர்தல் செலவு கணக்கையும், வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெற்றதையும் மறைத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. யார் செலவு செய்தார்கள், எப்போது பணம் செலுத்தப்பட்டது என்பது போன்ற விவரங்கள் எதுவும் தேர்தல் வழக்குகளில் கூறப்படவில்லை. வழிபாட்டுத் தலங்களில் பிரசாரம் செய்ததாக கூறிய குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரங்கள் இல்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சிறுபான்மையினர் நல மானியக் கோரிக்கை அறிவிப்புகள் ஏமாற்றமளிக்கிறது: எஸ்டிபிஐ</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minority-welfare-grant-request-announcements-disappointing-stbi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minority-welfare-grant-request-announcements-disappointing-stbi#comments</comments><guid isPermaLink="false">2bdf4379-ae4d-44e5-99ac-d94292b9fa5d</guid><pubDate>Thu, 27 Aug 2026 13:07:17 +0000</pubDate><atom:updated>2026-08-27T13:07:17.485Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>STBI,சிறுபான்மையினர்,எஸ்டிபிஐ கட்சி,Grant request,மானியக் கோரிக்கை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/o4zji9we/sdpi-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/o4zji9we/sdpi-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D">நெல்லை முபாரக்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:</p><p>சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை என்பது வெறும் திட்டங்களின் பட்டியல் அல்லது நிதி ஒதுக்கீட்டு அறிக்கை மட்டுமல்ல. அது ஒரு மாநில அரசின் சமூகநீதிப் பார்வையையும், சிறுபான்மையின மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் கொள்கை முடிவுகளையும் வெளிப்படுத்தும் முக்கியமான ஆவணமாகும். சிறுபான்மை சமூக மக்களுக்கான சிறப்பு அறிவிப்புகள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பைச் செல்லும் இடமெல்லாம் ஏற்படுத்தி வந்த சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரின் பேச்சுக்கும், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்கும் எவ்வித தொடர்புமில்லை என்பதை மானியக் கோரிக்கை அறிவிப்புகள் காட்டுகிறது. அந்த வகையில், தற்போதைய சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை, பெரிய அளவிலான சிறுபான்மை சமூகத்தின் முன்னேற்றத்துக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் எதுவுமின்றி, சமூகத்தின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாமல் உப்புச் சப்பில்லாமல் அமைந்திருப்பது பெரும் ஏமாற்றமளிக்கிறது.</p><h2>நிர்வாக மானிய உயர்வு</h2><p>நடப்பு மானியக் கோரிக்கையில் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு பயிலும் முஸ்லிம் மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை விரிவாக்கம், சிறுபான்மையின மாணவிகளுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட உயர்கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் அறிவிப்பு, வழிபாட்டுத் தலங்களின் சொத்துகளைப் பாதுகாக்க, கட்டிடங்களைக் கட்ட வட்டியில்லா சுழல் நிதிக்கடன் மற்றும் வக்ஃப் வாரிய நிர்வாக மானிய உயர்வு ஆகியவை வரவேற்கத்தக்க முடிவுகளாகும்.</p><h2>புதிய தொலைநோக்குத் திட்டங்கள்</h2><p>இருப்பினும், சென்னை மாநகரில் ஏற்கனவே காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி இயங்கி வரும் நிலையில், வக்ஃப் வாரியத்தின் கீழ் மீண்டும் ஒரு மகளிர் கல்லூரியைச் சென்னையிலேயே தொடங்குவது அவசியமற்ற ஒன்றாகும். இத்திட்டத்தை உடனடியாக மாற்றி, சிறுபான்மையின மாணவிகள் அதிகம் வசிக்கும் பிற மாவட்டங்களுக்கு அக்கல்லூரியைக் கொண்டு செல்ல வேண்டும். மேலும், இதில் இடம்பெற்றுள்ள திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் கல்வி உதவிகளும் பெரும்பாலானவை ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களின் மறுவடிவமாகவே உள்ளனவே தவிர, புதிய தொலைநோக்குத் திட்டங்கள் எதுவுமில்லை.</p><h2>வலுவான திட்டம் இடம்பெறவில்லை</h2><p>வக்ஃப் வாரியத்தின் பணிகளை விரைவுபடுத்தவும், சொத்துக்களை முறையாகப் பராமரிக்கவும் கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்படாதது மிகப்பெரிய ஏமாற்றமாகும். அதேபோல், சிறுபான்மையின மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் நேரடியாக உயர்த்தக்கூடிய தொழில்முனைவோர் கடன்கள் அல்லது நிதியுதவி சார்ந்த எந்தவொரு வலுவான திட்டமும் இதில் இடம்பெறவில்லை. குறிப்பாக, ‘தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்’ மூலமாகச் சிறுபான்மையின மக்கள் சுயதொழில் தொடங்கக் கடன் வழங்குவது குறித்து எந்த அறிவிப்பும் இதில் இல்லை.</p><h2>நீண்டகால எதிர்பார்ப்பு</h2><p>இவற்றுடன், முஸ்லிம் சமூகத்தின் பல்லாண்டு கால முக்கியக் கோரிக்கைகளும் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் வாழும் முஸ்லிம்களின் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட வாழ்நிலைகள் குறித்து துல்லியமாக அறிந்துகொள்ள, சச்சார் கமிட்டியைப் போன்றதொரு சுதந்திரமான உயர்நிலைக் கமிட்டியைத் தமிழக அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும், முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு உயர்வு, சிறுபான்மையினர் நலத்துறைக்கெனத் தனி அமைச்சகம் உருவாக்குதல், சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் கோரிக்கை, சிறைவாசிகள் விடுதலை மற்றும் தமிழக அரசுப் பல்கலைக்கழகம் ஒன்றிற்கு முஸ்லிம் தலைவர்கள் அல்லது சான்றோர்களின் பெயரைச் சூட்டுதல்  போன்ற நீண்டகால எதிர்பார்ப்புகளுக்கும் இந்த மானியக் கோரிக்கையில் எந்தப் பதிலுமில்லை.</p><h2>நியாயமான கோரிக்கை</h2><p>எனவே, அமைச்சரின் வெறும் பேச்சுகளையும் பெயரளவில் மட்டுமே உள்ள இந்த அறிவிப்புகளையும் தாண்டி, சிறுபான்மை சமூகத்தின் உண்மையான பொருளாதார மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டிற்குத் தேவையான கூடுதல் திட்டங்களைச் சேர்த்து, அவர்களின் பல்லாண்டு கால நியாயமான கோரிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மதுபோதையில் தகராறு செய்த மகன்; அடித்துக் கொன்று, வீட்டின் அருகே புதைத்த தாய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/son-caused-a-disturbance-while-intoxicated-mother-beat-him-to-death-and-buried-him-near-the-house</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/son-caused-a-disturbance-while-intoxicated-mother-beat-him-to-death-and-buried-him-near-the-house#comments</comments><guid isPermaLink="false">d514984d-b7fa-49cf-926e-c63287c8f59c</guid><pubDate>Thu, 27 Aug 2026 12:52:27 +0000</pubDate><atom:updated>2026-08-27T12:52:27.387Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,கொலை,intoxication,போதைப்பழக்கம்,son killed</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/r2vs5zmt/100.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ தாய் ஐயம்மாள்]]></media:title><media:description type="html"><![CDATA[ தாயே, மகனை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்தார்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/r2vs5zmt/100.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p> "தினமும் போதையில் வந்து சித்திரவதை செய்ததால், என் கைகளாலேயே என் மகனை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">அடித்துக் கொன்று </a>புதைத்துவிட்டேன்" என்று மதுரையைச் சேர்ந்த தாய் ஒருவர் கிராம நிர்வாக அலுவலரிடம் அளித்துள்ள வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>போதை பழக்கம்</h2><p>மதுரை மாவட்டம் வரிச்சியூர் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஐயம்மாள். இவருடைய மகன் ராஜா (வயது 32). ராஜாவுக்குத் தீவிர மது மற்றும்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D"> போதைப்பொருள்</a> பழக்கம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக அவரது மனைவியும் குழந்தைகளும் அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டனர். மேலும், ராஜா மீது பல்வேறு குற்ற வழக்குகளும் நிலுவையில் இருந்துள்ளன.</p><h2>இரும்புக் கம்பியால் அடித்துக்கொலை</h2><p>கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ராஜா கடுமையான போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். மேலும், தனது தாய் ஐயம்மாளிடம் பணம் கேட்டு மிரட்டி, அவரைத் தகாத முறையில் நடத்த முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஐயம்மாள், தற்காப்பிற்காக மகனை கீழே தள்ளிவிட்டு, அருகில் கிடந்த இரும்பு கம்பியால் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் ராஜா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.</p><h2>மறைக்கப்பட்ட உடல்</h2><p>மகன் இறந்ததைத் தொடர்ந்து, வீட்டின் அருகே கழிவறைக்காகத் தோண்டப்பட்டிருந்த குழியில் ராஜாவின் உடலைத் தூக்கிப் போட்டு ஐயம்மாள் புதைத்துள்ளார். பின்னர் வீட்டில் இருந்த ரத்தக் கறைகளையும் அடியோடு துடைத்துச் சுத்தப்படுத்தியுள்ளார்.</p><h2>ரகசியக் கண்காணிப்பு</h2><p>சில மாதங்களாக மகன் காணவில்லை என்று நாடகமாடி வந்தார். இந்த நிலையில் போலீசாரின் ரகசியக் கண்காணிப்பு மற்றும் கிராம மக்களின் சந்தேகத்தைத் தொடர்ந்து, மன உளைச்சலுக்கு ஆளான அவர் நேற்று (புதன்கிழமை) கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்து உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">Madurai ``இதே கையால என் புள்ளைய அடிச்சே கொன்று புதைச்சிட்டேன்’’ - பெற்ற தாய் சொன்ன அதிர்ச்சி காரணம் <a href="https://t.co/xVxhZcd6GG">https://t.co/xVxhZcd6GG</a> <a href="https://x.com/hashtag/madurai?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#madurai</a> <a href="https://x.com/hashtag/death?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#death</a> <a href="https://x.com/hashtag/motherandson?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#motherandson</a></p>&mdash; Thanthi TV (@ThanthiTV) <a href="https://x.com/ThanthiTV/status/2092934216636092812?ref_src=twsrc%5Etfw">August 27, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>உரிக்காமலேயே கண்ணீரை வரவைக்கும் வெங்காயம் விலை.. கிலோ ரூ.100க்கு விற்பனை.!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/onion-prices-are-enough-to-bring-tears-to-your-eyes-even-before-you-peel-themselling-at-100-per-kg</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/onion-prices-are-enough-to-bring-tears-to-your-eyes-even-before-you-peel-themselling-at-100-per-kg#comments</comments><guid isPermaLink="false">13cd002e-9ce5-46b7-bd81-aa4b3ebd7312</guid><pubDate>Thu, 27 Aug 2026 12:50:26 +0000</pubDate><atom:updated>2026-08-27T12:50:26.204Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>onion,வெங்காயம்,வெங்காயம் விலை,Onion prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/gum71efb/10.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/gum71efb/10.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>தமிழகத்தில் வெங்காயம் விலை ஒரு வார கால மாகவே உயர்ந்து கொண்டே வந்தது. இந்நிலையில் நேற்று திருச்சி காந்திமார்க்கெட் மற்றும் வெங்காய மண்டியில் முதல் ரக சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதற்கு அடுத்த நிலையில் ஒரு கிலோ ரூ.80, ரூ.90 என்ற நிலையில் விற்பனை ஆகி வருகிறது.</p><p>சின்ன வெங்காயத்திற்கு போட்டியாக பல்லாரி எனப்படும் பெரிய வெங்காயமும் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு கிலோ ரூ.25 மற்றும் ரூ.30-க்கு விற்கப்பட்ட பெரிய வெங்காயம் விலையும் அதிரடியாக உயர்ந்தது. ஒரு கிலோ ரூ.50, ரூ.60, ரூ.70, ரூ.80 என விற்கப்பட்டு வருகிறது. சின்ன வெங்காயம் விலையும், பெரிய வெங்காயம் விலையும் இப்படி போட்டி போட்டுக்கொண்டு உயர்ந்து கொண்டே செல்வது இல்லத்த ரசிகளுக்கு வெங்காயத்தை உரிக்காமலேயே கண்ணீரை வர வைப்பதாக உள்ளது.</p><p>விலை உயர்வு தொடர்பாக வெங்காய வியாபாரிகள் கூறுகையில், வட மாநிலங்களில் இருந்து வெங்காயம் வரத்து முற்றிலுமாக நின்று விட்டது. ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம்தான் தற்போது விற்பனையில் உள்ளது. புது வெங்காயம் வரும் வரை இந்த விலை உயர்வு நீடிக்கும் என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>வானிலை ஆய்வு மைய பிரதிநிதியை பேரிடர் மேலாண்மை குழுவில் நியமிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cpi-urges-appointment-of-a-representative-from-the-meteorological-department-to-the-disaster-management-committee</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cpi-urges-appointment-of-a-representative-from-the-meteorological-department-to-the-disaster-management-committee#comments</comments><guid isPermaLink="false">ce072950-342c-4b82-9818-3d7a3abd162f</guid><pubDate>Thu, 27 Aug 2026 12:38:56 +0000</pubDate><atom:updated>2026-08-27T12:38:56.978Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,Communist Party of India,CPI,மு.வீரபாண்டியன்,M Veerapandian,பேரிடர் மேலாண்மை குழு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/xkmluug4/veerapandiyan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.வீரபாண்டியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/xkmluug4/veerapandiyan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>'எல் நினோ' தாக்கத்தை கணிக்க பேரிடர் மேலாண்மை நிபுணர் குழுவில் வானிலை ஆய்வு மைய பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>எல் நினோ பாதிப்பு</h2><p>வானிலை ஆய்வுகளின்படி, இந்த ஆண்டு தீவிர "&nbsp;&nbsp;எல் நினோ' நிகழ்வு உருவாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. எல் நினோ&nbsp;&nbsp;எனும் காலநிலை மாற்ற நிகழ்வு, உலகளாவிய மழைப் பொழிவு மற்றும் வானிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது என காலநிலை நிபுணர்கள் கூறுகின்றனர். தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் அதிக மழை, வெள்ளம் உள்ளிட்ட தீவிர வானிலை மாற்ற நிகழ்வுகள் "எல் நினோவால் "ஏற்படக்கூடும் என கூறப்படுகிறது.</p><p>அத்தகைய பாதிப்புகளை முன்கூட்டியே மதிப்பீடு செய்து, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பேரிடர் மேலாண்மை நிபுணர் குழுவை தமிழ்நாடு&nbsp;&nbsp;முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் அமைத்துள்ளார். இது வரவேற்பிற்குரியது.</p><p>ஆனால், "எல் நினோவின் " தாக்கத்தை கண்காணிக்க தமிழக அரசு அமைத்துள்ள வல்லுநர் குழுவில் , இந்திய வானிலை ஆய்வு மைய (IMD) பிரதிநிதி இல்லை என்பது அக்குழுவின் நோக்கம் முழுமையடைய உதவாது.</p><h2>வானிலை..பிரதிநிதியை சேர்க்க வேண்டும்</h2><p>தமிழகத்தில் வளிமண்டலத்தைக் கண்காணிக்க பலூன் மூலம் தினமும் கருவிகளை பறக்கவிட்டு, வளிமண்டலக் காற்றின் அழுத்தம், ஈரப்பதம், திசை வேகம் உள்ளிட்ட தரவுகளை இந்திய வானிலை ஆய்வு மையம் சேகரிக்கிறது. தமிழகத்துக்கென பலவேறு இடங்களில் ரேடார்களை நிறுவி அவற்றின் தரவுகளையும் சேகரித்து வருகிறது. <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழகத்தில் </a>56 தானியங்கி வானிலை கருவிகள், 87 தானியங்கி மழைமானிகள், 11 வேளாண் வானிலை கருவிகள் என 154 இடங்களில் கருவிகளை நிறுவி தரவுகளை சேகரித்து வருகிறது.</p><p>ஆனால், தமிழக அரசிடமோ அல்லது இப்போது குழுவில் இருப்போரிடமோ இத்தகைய கட்டமைப்பு வசதிகள் இல்லை. அதனால் நிபுணர் குழுவில் வானிலை ஆய்வு மைய பிரதிநிதியை சேர்ப்பதே சரியான நடவடிக்கையாக இருக்கும் என நிபுணர்கள் பலர் கூறுகின்றனர்.</p><p>எனவே, இந்திய வானிலை ஆய்வு மைய (IMD) பிரதிநிதி ஒருவரை இக்குழுவில் இணைக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/med-admissions-in-government-colleges-of-education-application-deadline-extended</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/med-admissions-in-government-colleges-of-education-application-deadline-extended#comments</comments><guid isPermaLink="false">f16da191-5d30-42b7-b5de-ab2806ca8f2b</guid><pubDate>Thu, 27 Aug 2026 12:36:32 +0000</pubDate><atom:updated>2026-08-27T12:36:32.001Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Application,மாணவர் சேர்க்கை,கால அவகாசம் நீட்டிப்பு,Admissions,கல்வியியல் கல்லூரி,Government Colleges,விண்ணப்பிக்க,Deadline extended</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/mafu06kf/86.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/mafu06kf/86.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட் (M.Ed) 2026-2027-ஆம் கல்வியாண்டிற்கான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">மாணாக்கர் சேர்க்கை</a>க்கான இணையதள விண்ணப்பப் பதிவு  ஆக.11-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதற்காக மாணாக்கர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து வருகின்றனர். ஆக.20-ந் தேதி உடன் கால அவகாசம் முடிவடையும் நிலையில், மாணாக்கர் நலன் கருதி விண்ணப்பப் பதிவு செய்யத் தவறிய மாணாக்கர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் ஆக.31-ந் தேதி முதல் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம்.</p><h2>எம்.எட் மாணாக்கர் சேர்க்கை</h2><p>ஆக.20-ந் தேதி வரை விண்ணப்பித்த மணாக்கர்களுக்கு தர வரிசையின் அடிப்படையில் மாணாக்கர் சேர்க்கை ஆக.27-ந் தேதி முதல் எம்.எட் தொடங்கி நடைபெறும் எனவும். மாணாக்கர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 1-ல் தொடங்கும். மேலும் விண்ணப்பித்த மாணாக்கர்களுக்கு சேர்க்கைக்கான விவரங்கள் SMS மற்றும் மின்னஞ்சல் (E-mail) வாயிலாக அனுப்பப்படும்.</p><h2>கால அளவு நீட்டிப்பு</h2><p>இந்நிலையில், ஏற்கனவே விண்ணப்பிக்கத் தவறிய மாணாக்கர் இரண்டாம் கட்ட சேர்க்கைக்கு தொடர்ந்து விண்ணப்பிக்கும் வகையில் செப்.10-ந் தேதி வரை கால அளவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணாக்கர் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் விண்ணப்பித்து இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தித் தங்கள் எதிர்காலத்தை வளமாக்கிக்கொள்ள வேண்டும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/locations-in-chennai-that-will-experience-power-outages-tomorrow-3</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/locations-in-chennai-that-will-experience-power-outages-tomorrow-3#comments</comments><guid isPermaLink="false">f39ca212-2666-4a63-9c39-5e230c1b8d63</guid><pubDate>Thu, 27 Aug 2026 12:27:13 +0000</pubDate><atom:updated>2026-08-27T12:27:13.344Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,power cut,மின்தடை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/0cgti1ba/ep.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/0cgti1ba/ep.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் பராமரிப்புப் பணிகள் காரணமாக பின்வரும் இடங்கள் மின் தடை செய்யப்பட உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;</p><p>சென்னையில் 29.08.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பிற்பகல் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p>கிண்டி : கிண்டி தொழிற்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், அம்பாள் நகர், லேபர் காலனி, பிள்ளையார் கோயில் தெரு 3, 5 மற்றும் 6வது தெருக்கள், ஏ,பி,சி மற்றும் டி பிளாக், மவுண்ட் ரோடு ஒரு பகுதி, ஜே.என். சாலை, பூமகள் தெரு, தெற்கு கட்டம், பாலாஜி நகர், பாரதியார் தெரு, தனகோட்டி ராஜா தெரு, அச்சுதன் நகர், முனுசாமி தெரு, காந்தி நகர் பகுதி, பூந்தமல்லி சாலை பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.</p><p>சித்தாலபாக்கம்:- புஷ்பா நகர் பூங்கா, சந்தானம் தெரு, வெங்கடேஸ்வரா தெரு, மாம்பாக்கம் மெயின் ரோடு, மகேஸ்வரி நகர், பிரியதர்ஷினி நகர், ஒட்டியம்பாக்கம் மெயின் ரோடு, டி.வி. நகர், ஸ்கைலேப் அவென்யூ, வள்ளுவர் நார், ஜெயா நகர், விவேகானந்தா நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.</p><p>ஈஞ்சம்பாக்கம்:- ஈ.சி.ஆர். ஈஞ்சம்பாக்கம், ஈஞ்சம்பாக்கம் குப்பம், ஈஞ்சம்பாக்கம் முதல் வெட்டுவான்கேணி இணைப்புச் சாலை, வெட்டுவான்கேணி 1 மற்றும் 2வது அவென்யூ, அக்கரை, அல்லிகுளம் அம்பேத்கர் தெரு, அண்ணா என்கிளேவ், பெத்தல் நகர், பாரதி அவென்யூ, பிருந்தாவன் நகர், சோழமண்டலக் கலைஞர்கள் கிராமம், சோழமண்டல தேவி நகர். கடற்கரை சாலை, டாக்டர் நஞ்சுண்டராவ் சாலை, கங்கையம்மன் கோயில் தெரு, குணால் தோட்டம், ஹனுமான் காலனி, ஹரிச்சந்திரா 1 முதல் 4 தெருக்கள், கக்கன் தெரு, கே.கே. சாலை, கே.வி. நகர், கஸ்தூரிபாய் நகர், எல்.ஜி. அவென்யூ, சனிஸ் அவென்யூ, நைனார் குப்பம், உத்தண்டி, நீலாங்கரை குப்பம், ஆலிவ் பீச், பல்லவன் நகர், பனையூர் குப்பம், பனையூர் மற்றும் குப்பம், என்ஆர்ஐ மற்றும் விஜிபி லேஅவுட், பெப்பிள் பீச், பெரியார் மற்றும் பொதிகை மற்றும் பொன்னியம்மன் கோயில் தெரு, பிரெஸ்டீஜ் மற்றும் ராஜ்லிங் தெரு, ராஜ்லிங் &amp; மந்திரி நகர், ராயல் என்கிளேவ், கடல் பாறை, சீ ஷெல் அவென்யூ, சீஷோர் டவுன், செல்வா நகர், ஷாலிமார் கார்டன், ஸ்பார்க்ளிங் சாண்ட் மற்றும் ஷேஷாத்ரி அவென்யூ, ஸ்பிரிங் கார்டன், டி.வி.எஸ். அவென்யூ, டீச்சர்ஸ் காலனி, திருவள்ளுவர் சாலை, தாமஸ் அவென்யூ, வி.ஓ.சி. தெரு, விமலா கார்டன் மற்றும் ஜுஹு கடற்கரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.</p>]]></content:encoded></item><item><title>வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை: மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த துணை ஆணையாளர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-precaution-deputy-commissioner-inspects-rainwater-drainage-works</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-precaution-deputy-commissioner-inspects-rainwater-drainage-works#comments</comments><guid isPermaLink="false">0ef6066b-986f-422d-80ec-155d48005098</guid><pubDate>Thu, 27 Aug 2026 12:08:24 +0000</pubDate><atom:updated>2026-08-27T12:08:24.706Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Northeast Monsoon,முன்னெச்சரிக்கை நடவடிக்கை,மழைநீர் வடிகால் பணி,வடகிழக்குப் பருவமழை,Rainwater Drainage Works,Precaution</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/hlamny17/85.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/hlamny17/85.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">சென்னை மாநகராட்சி</a>, வளசரவாக்கம் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை தெற்கு வட்டார துணை ஆணையாளர் அஃதாப் ரசூல், இ.ஆ.ப., இன்று (27.08.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.</p><p>வளசரவாக்கம் மண்டலம், வார்டு-151க்குட்பட்ட ஆற்காடு சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.</p><h2>சமையல் கூடத்தில் ஆய்வு</h2><p>பின்னர், வார்டு-144க்குட்பட்ட சன்னதி தெருவில் பள்ளி மாணவர்களின் காலை உணவுத் திட்டத்திற்கான மைய சமையல் கூடம், மேட்டுக்குப்பம் சாலையில் உள்ள அம்மா உணவகம், அடையாறு மண்டலம், வார்டு-175க்குட்பட்ட ஆதம்பாக்கம், ஏரிக்கரை சாலை மற்றும் வார்டு-172க்குட்பட்ட கிண்டி, மடுவங்கரையில் பள்ளி மாணவர்களின் காலை உணவுத் திட்டத்திற்கான மைய சமையல் கூடம் உள்ளிட்டவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.</p><h2>மழைநீர் வடிகால் அமைக்கும் பணி</h2><p>இந்த ஆய்வின்போது, தெற்கு வட்டார துணை ஆணையாளர் அவர்கள், மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினை விரைந்து முடித்திடவும், அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவின் தரம், உணவுப் பொருட்களின் இருப்பு, குடிநீர் வசதிகள் மற்றும் சமையலறையினைத் தூய்மையாகப் பராமரித்திடவும், பள்ளி மாணவர்களின் காலை உணவுத் திட்டத்திற்கான மைய சமையல் கூடத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், உணவுப் பொருட்களின் இருப்பு, அடிப்படை வசதிகள் மற்றும் சமைக்கும் இடத்தினைத் தூய்மையாகப் பராமரித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கும்மிடிப்பூண்டியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.12 லட்சம் திருட்டு - 2 தனிப்படைகள் அமைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/12-lakhs-stolen-by-breaking-into-an-atm-machine-in-gummidipoondi-2-special-forces-formed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/12-lakhs-stolen-by-breaking-into-an-atm-machine-in-gummidipoondi-2-special-forces-formed#comments</comments><guid isPermaLink="false">0dcbe00a-91cf-47cb-99c8-e49ad9125866</guid><pubDate>Thu, 27 Aug 2026 12:03:10 +0000</pubDate><atom:updated>2026-08-27T12:03:10.959Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,ஏடிஎம்,ATM,தனிப்படை அமைப்பு,போலீசார்,Cash theft</media:keywords><media:content height="410" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/tbflz14w/3.jpg" width="710"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆக்ஸிஸ் வங்கி ஏடிஎம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/tbflz14w/3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>திருவள்ளூர்,</p><p>கும்மிடிப்பூண்டியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.12 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><p>திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியை அடுத்து பைபாஸ் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தில் ஆக்ஸிஸ் வங்கியின் ஏடிஎம் மையம் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D">ஏடிஎம்</a> மையம் உள்ளது. நேற்று முன்தினம் ஆக்ஸிஸ் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.12 லட்சம் போடப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p>நேற்று நள்ளிரவு ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் அப்பகுதி வழியே வந்த மர்ம நபர்கள், ஆக்சிஸ் வங்கி ஏடிஎம் மையம் சென்று கையில் வைத்த ஸ்பிரே மூலமாக அங்கிருந்த கண்காணிப்பு கேமரா மீது அடித்துள்ளனர். பின்னர், ஏடிஎம் இயந்திரத்தை வெல்டிங் கட்டரால் உடைத்து அதிலிருந்த ரூ.12 லட்சம் பணத்தை திருடி சென்றுள்ளனர். இந்தியன் வங்கி ஏடிஎம் இயந்திரத்தையும் உடைக்க முயன்றுள்ளனர். ஆனால், பொதுமக்கள் நடமாட்டம் இருந்ததால் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இந்த சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார் </a>வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திருவள்ளூர் டிஎஸ்பி தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.12 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கும்மிடிப்பூண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளம்: தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 பேர் பத்திரமாக மீட்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nepal-floods-21-people-from-tamil-nadu-rescued-safely</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nepal-floods-21-people-from-tamil-nadu-rescued-safely#comments</comments><guid isPermaLink="false">f94ce177-25b9-401d-8cac-ec6583beaca7</guid><pubDate>Thu, 27 Aug 2026 11:59:19 +0000</pubDate><atom:updated>2026-08-27T11:59:19.717Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,வெள்ளம்,Tamilans,தமிழர்கள்,nepal flood</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/x9cqergd/STate-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/x9cqergd/STate-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நேபாளம் - திபெத் எல்லையில் நேற்று ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால், பிரமாண்ட பனிப்பாறை சரிந்து போதேகோசி நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த அதிபயங்கர வெள்ளப்பெருக்கில், ஆற்றின் கரையோர கட்டிடங்கள், பாலங்கள், வாகனங்கள் உள்ளிட்டவை கண்இமைக்கும் நேரத்தில் அடித்துச் செல்லப்பட்டன. </p><p>இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-ஐ கடந்திருக்கும் நிலையில், மேற்கொண்டு ஆயிரக்கணக்கானோரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து கொண்டிருக்கிறது. காயம் அடைந்தவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. </p><p>இதனிடையே நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கி 288 இந்தியர்கள் மாயமாகி உள்ளதாகவும், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், திபெத்தில் உள்ள சுமார் 200 இந்தியர்களும் இந்தியாவின் உதவியை நாடியுள்ளதாகவும் அவர் கூறினார். </p><p>இந்த நிலையில், நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவு வெள்ளத்தில் சிக்கிய கயிலாய மானசரோவர் யாத்திரை சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. மீட்புப் பட்டியலில் இடம்பெற்ற தமிழர்களின் பெயர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் இடம்பெற்றுள்ள நபர்களின் பெயர்கள் பின்வருமாறு;-</p><p>1. சிவரஞ்சனி முத்துநாதன்</p><p>2. கற்பகம் ராஜமோகன்</p><p>3. மாறன் கோவிந்தசாமி</p><p>4. சாந்தி மாறன்</p><p>5. முத்துக்குமரேசன் ராமலிங்கம்</p><p>6. நாவு கபீர்தாஸ்</p><p>7. விஜயபுவனேஸ்வரி விஸ்வநாதன்</p><p>8. மைதிலி முத்துக்குமரேசன்</p><p>9. தியாகராஜன் ரத்தினம்</p><p>10. கிருபாகரி பாலசுப்ரமணியம்</p><p>11. வள்ளிநாயகி சிவகுமார்</p><p>12. சத்திய ஜெயராமன்</p><p>13. திருமாவளவன் கோவிந்தராசு</p><p>14. கனகசபை நடேசபிள்ளை</p><p>15. ராதை கனகசபை</p><p>16. ரத்தினகுமார் குஞ்சிதபாதம்</p><p>17. பூங்குழலி பொன்னம்பலம்</p><p>18. பழனியப்பன் மைக்கப்பெருமாள்</p><p>19. கலைமதி பழனியப்பன்</p><p>20. ரகுநாதன் முனிராஜ்</p><p>21. கனகசபை நடேச பிள்ளை</p> ]]></content:encoded></item><item><title>ஆசைக்கு இணங்க வேண்டும்... ஆபாச படத்தை காட்டி இளம்பெண்ணை மிரட்டிய முன்னாள் காதலன் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/exboyfriend-arrested-for-threatening-woman-with-obscene-photos</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/exboyfriend-arrested-for-threatening-woman-with-obscene-photos#comments</comments><guid isPermaLink="false">abd15a03-0003-4dde-ac6e-6323a05a582e</guid><pubDate>Thu, 27 Aug 2026 11:59:07 +0000</pubDate><atom:updated>2026-08-27T11:59:07.863Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrest,விழுப்புரம்,Villupuram,மிரட்டல்,threaten</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/p4fsrlp5/Untitled-6.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/p4fsrlp5/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விழுப்புரம்,</p><p>ஆசைக்கு இணங்க வேண்டும் இல்லாவிட்டால் நெருக்கமாக பழகியபோது எடுத்த ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று இளம்பெண்ணை மிரட்டிய முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டார்.</p><h2>இன்ஸ்டாகிராமில் பழக்கம்</h2><p>விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் அமீர்சுகேல் (28 வயது). இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். இன்ஸ்டாகிராம் மூலமாக சென்னை சூளைமேட்டில் வசிக்கும் இளம்பெண் ஒருவரோடு இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. 4 வருடங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் இருவரும் பழகி வந்தனர். பின்னர் நேரடியாக சந்தித்து நெருக்கமாகவும் இருந்துள்ளனர். அந்தப் பெண் ஏற்கெனவே திருமணமாகி, விவாகரத்து பெற்றவர்.</p><h2>2-வது திருமணம்</h2><p>இந்த நிலையில், அமீர்சுகேல் வெளிநாட்டிற்கு வேலை செய்ய போய்விட்டார். வெளிநாட்டிற்கு சென்றாலும் காதலியோடு தொடர்பில் இருந்துள்ளார். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அந்தப் பெண் 2-வது திருமணம் செய்து கொண்டு புதிய வாழ்க்கையை தொடங்கிவிட்டார். தன்னை மறந்துவிடும்படி காதலன் அமீர்சுகேலையும் கேட்டுக்கொண்டார். ஆனால் அமீர்சுகேல் உன்னை மறக்க முடியாது என்றும், என்னுடன் உள்ள தொடர்பை துண்டிக்கக்கூடாது என்றும் வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது.</p><h2>மிரட்டல்</h2><p>இந்த நிலையில், வெளிநாட்டில் இருந்து சென்னை வந்த அமீர்சுகேல் காதலியை சந்தித்துள்ளார். அப்போது தன்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ஏற்கனவே நெருக்கமாக பழகியபோது எடுத்த ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். ஒரு சில படங்களை இணையதளத்தில் அவர் வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.</p><h2>கைது</h2><p>அமீர்சுகேலுக்கு வேறு சில பெண்களுடனும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதனால் அமீர்சுகேல் மீது வெறுப்படைந்த அந்த இளம்பெண் சூளைமேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அமீர்சுகேலை நேற்று முன்தினம் கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் இடம் மாறி அமர்ந்திருக்கும் முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-seated-in-a-different-spot-in-the-legislative-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-seated-in-a-different-spot-in-the-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">31615289-4f62-43f1-a3d5-9e2b21f9a154</guid><pubDate>Thu, 27 Aug 2026 11:41:32 +0000</pubDate><atom:updated>2026-08-27T11:41:32.199Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,Legislative Assembly,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/oe9ba47h/8.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/oe9ba47h/8.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, நேபாளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்பது குறித்த ஆலோசனை உள்ளிட்ட பிற பணிகள் காரணமாக முதல்-அமைச்சர் விஜய் காலையில் சட்டசபைக்கு வருகை தரவில்லை. </p><p>இந்த நிலையில், மாலையில் சட்டசபைக்கு முதல்-அமைச்சர் விஜய் வருகை தந்தார். அப்போது, முதல்-அமைச்சருக்கென ஒதுக்கப்பட்டு இருக்கும் தனது வழக்கமான இடத்தில் அமராமல், அமைச்சர்களுக்கு மத்தியில் அமர்ந்துகொண்டார். குறிப்பாக, அமைச்சர் செங்கோட்டையன் அருகில் அமர்ந்த முதல்-அமைச்சர் விஜய், அவரிடம் சிறிது நேரம் ஏதோ பேசிக்கொண்டு இருந்தார். முதல்-அமைச்சர் விஜய் ஏன் இடம் மாறி அமர்ந்துள்ளார் என அங்கிருந்த பிற அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் உற்று கவனித்துக் கொண்டிருந்தனர். </p>]]></content:encoded></item><item><title>ஒரே குடும்பம்… ஒரே நேரத்தில் 3 சகோதரர்கள் எம்.பி.பி.எஸ். படிக்கத் தேர்வு! - நயினார் நாகேந்திரன் பாராட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/one-family-3-brothers-at-the-same-time-exam-to-study-mbbs-nainar-nagendran-praises</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/one-family-3-brothers-at-the-same-time-exam-to-study-mbbs-nainar-nagendran-praises#comments</comments><guid isPermaLink="false">d7596d63-cd90-442f-a714-35d8c38fb433</guid><pubDate>Thu, 27 Aug 2026 11:33:40 +0000</pubDate><atom:updated>2026-08-27T11:33:40.084Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,சகோதரர்கள்,Brothers,MBBS,ஒரே குடும்பம்,one family,எம்.பி.பி.எஸ். படிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/hh03d7my/nainar.gif" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/hh03d7my/nainar.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>தமிழக பாஜக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன்</a> ஒரே குடும்பத்தில் ஒரே நேரத்தில் 3 சகோதரர்கள் எம்.பி.பி.எஸ். படிக்கத் தேர்வாகியிருப்பதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பு</h2><p>நெல்லை மாவட்டம், வெள்ளாங்குளியைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் வெங்கட்ஸ்ரீ, அருண் மற்றும் தருண் ஆகிய மூவரும் ஒரே நேரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் பயின்று நீட் தேர்வு மூலம் எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பிற்கு தேர்வாகியிருப்பது நம் மாவட்டத்திற்கும், தமிழக மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளது.</p><h2>நீட் தேர்வு</h2><p>திருநெல்வேலி மாவட்டம், வெள்ளாங்குளி என்னும் சிறு கிராமத்தில், நெசவுத் தொழில் செய்து வரும் எளிய குடும்பத்திலிருந்து வந்த இந்த மூன்று சகோதரர்களும் தங்களின் எம்.பி.பி.எஸ். என்ற மிகப்பெரிய கனவை நிறைவேற்ற நீட் தேர்வு உதவி உள்ளது என்பது மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது.</p><h2>பாராட்டு</h2><p>இந்த மகிழ்ச்சியான செய்தியை அறிந்தவுடன், அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று மூன்று சகோதரர்களையும், அவர்களது பெற்றோரையும் சந்தித்து எனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நேபாளத்திற்கு இந்தியா வழங்கிய நிவாரணப் பொருட்கள்: பெட்டிகளில் என்ன எழுதப்பட்டுள்ளது தெரியுமா?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/relief-supplies-provided-by-india-to-nepal-do-you-know-what-is-written-on-the-boxes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/relief-supplies-provided-by-india-to-nepal-do-you-know-what-is-written-on-the-boxes#comments</comments><guid isPermaLink="false">416377ab-24b9-4146-b7bf-614236405cba</guid><pubDate>Thu, 27 Aug 2026 11:22:20 +0000</pubDate><atom:updated>2026-08-27T11:22:20.074Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nepal,நேபாளம்,relief supplies,நிவாரணப் பொருட்கள்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/bekm0cwl/7.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/bekm0cwl/7.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி, </p><p>நேபாளத்திற்கு  இந்தியா வழங்கிய நிவாரணப் பொருட்கள் அடங்கிய பெட்டிகளில் வாசகம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. அது என்ன? என்பதை பார்ப்போம். </p><h2>நிவாரணப் பொருட்கள்  அனுப்பிவைப்பு</h2><p>பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாள மக்களுக்கு இந்திய அரசு உதவிக்கரம் நீட்டியுள்ளது. இந்திய விமானப்படையின் விமானங்கள் மூலம் அவசர கால நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. </p><p>முதல் கட்டமாக 10 டன்னும், 2-வது கட்டமாக 37.5 டன்னும் என மொத்தம் 47.5 டன் நிவாரணப் பொருட்கள், காசியாபாத்தில் இருந்து நேபாள தலைநகர் காத்மண்டுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. </p><h2>பெட்டிகளில் எழுதப்பட்டுள்ளது என்ன?</h2><p>இதில், தற்காலிக கூடாரங்கள், போர்வைகள் மற்றும் தூக்கப் பைகள், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்கள், உணவுப் பொட்டலங்கள், சூரியசக்தி விளக்குகள், சுகாதாரப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகள், குளோரின் மாத்திரைகள் மற்றும் குடிநீர் பாட்டில்கள் இடம்பெற்றுள்ளன. </p><p>ஒவ்வொரு பொருட்களும் அட்டை பெட்டிகளில் பாதுகாப்பாக அடைத்து அனுப்பப்பட்டுள்ளன. அந்த அட்டை பெட்டியில், வாசகம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. அதாவது, "இந்திய மக்களும், இந்திய அரசும் வழங்கும் பரிசுப் பொருள்" என்று எழுதப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ஆகம குழுவினரால் கண்டறியப்பட்ட கோவில்கள் குறித்து பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-public-may-share-their-views-regarding-the-temples-identified-by-the-agama-committee</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-public-may-share-their-views-regarding-the-temples-identified-by-the-agama-committee#comments</comments><guid isPermaLink="false">dba7a47a-0749-453b-887b-b9895757f513</guid><pubDate>Thu, 27 Aug 2026 11:16:04 +0000</pubDate><atom:updated>2026-08-27T11:16:04.687Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>temples,கோவில்கள்,இந்து சமய அறநிலைத்துறை,Hindu Religious and Charitable Endowments Department</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/d7whk1bd/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/d7whk1bd/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கோவில்கள் குறித்த விவரங்களில், விடுதல் ஏதுமிருப்பின் அதனை குறிப்பிட்டு சொல்வதற்கும், கருத்து இருந்தால் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>கருத்துகளை தெரிவிக்கலாம்</h2><p>மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மாண்பமை உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் உத்தரவுகளின்படி, தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோவில்களில் ஆகமவிதிகளின்படி நிர்மாணிக்கப்பட்ட திருக்கோவில்களை கண்டறிவதற்காக அரசினால் 06.10.2025 அன்று ஐந்து நபர்களை கொண்ட குழு அமைத்து ஆணை வெளியிடப்பட்டது.</p><p>திருக்கோவில்களின் ஆகமம் குறித்த விவரங்கள், தொடர்புடைய இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களால் குழுவின் முன் சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் குழுவினரால் கவனமாக பரிசீலனை செய்யப்பட்டது. இத்திருக்கோவில்கள் குறித்த விவரங்களில், விடுதல் ஏதுமிருப்பின் அதனை குறிப்பிட்டு சொல்வதற்கும், கருத்துரு இருந்தால் தெரிவிப்பதற்கும் பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டுமென குழு கருதுகிறது.</p><h2>34,971 கோவில்கள் பரிசீலினை</h2><p>ஆகம குழுவினால் பரிசீலினை செய்யப்பட்ட 34,971 எண்ணிக்கையிலான திருக்கோவில்கள் இணையதளத்தில் தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. துறையின் www.hrce.tn.gov.in இதுகுறித்த விவரங்களில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பொதுமக்கள் </a>விடுதல் ஏதும் இருப்பின் அல்லது ஏதேனும் கருத்துரு இருப்பின், ஆகம விதிகளின்படி நிர்மாணிக்கப்பட்ட திருக்கோவில்களை கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட குழுவிற்கு தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகம், 119, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-34 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது துறையின் இணையதளம் வாயிலாகவும் அறிவிப்பு வெளியிட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆதவ் அர்ஜுனா பேசாத வரை அவை நல்லாதான் போகுது.. - பிரேமலதா விஜயகாந்த்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/things-are-going-well-until-adhav-arjuna-speaks-premalatha-vijayakanth</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/things-are-going-well-until-adhav-arjuna-speaks-premalatha-vijayakanth#comments</comments><guid isPermaLink="false">8c51a8f0-574d-4b04-878d-8da152db1577</guid><pubDate>Thu, 27 Aug 2026 11:15:20 +0000</pubDate><atom:updated>2026-08-27T11:15:20.534Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Aadhav Arjuna,ஆதவ் அர்ஜுனா,Assembly,Premalatha Vijayakanth,பிரேமலதா விஜயகாந்த்,சட்டப்பேரவை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/3ihp8fjz/84.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/3ihp8fjz/84.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசத் தொடங்கிய பிறகே வாக்குவாதமும், சலசலப்பும் ஏற்படுவதாக தேமுதிக பொதுச் செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D">பிரேமலதா விஜயகாந்த்</a> தெரிவித்துள்ளார்.</p><h2>பேரவை நிகழ்வுகள்</h2><p>சட்டப்பேரவையில் இன்று பேசிய அவர், “மக்களின் பிரச்சினைகளை விவாதிப்பதற்காகத்தான் சட்டப்பேரவை நடைபெறுகிறது. ஆனால் கடந்த 3, 4 நாட்களாக பேரவையில் தொடர்ந்து வாக்குவாதம் நடைபெற்று வருகிறது. ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதால் பேரவை நிகழ்வுகள் நீண்ட நேரம் நடைபெறுகின்றன. இதனால் தமிழக மக்களுக்கு என்ன பயன்?” என்று கேள்வி எழுப்பினார்.</p><h2>உரிய வாய்ப்பு</h2><p>மேலும், “உறுப்பினர்கள் தேர்வுக்கு தயாராவதைப் போல் பேரவையில் பேசுவதற்கு தயாராகி வருகின்றனர். ஆனால் மக்களின் பிரச்சினைகள் குறித்து சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே பேசப்படுகிறது. மீதமுள்ள நேரம் முழுவதும் வாக்குவாதமாகவே செல்கிறது. அனைவருக்கும் பேரவையில் பேசுவதற்கு உரிய வாய்ப்பு வழங்க வேண்டும்” என்றார்.</p><h2>சண்டை மன்றம் அல்ல</h2><p>தொடர்ந்து பேசிய பிரேமலதா, “அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசாத வரை சட்டப்பேரவை அமைதியாக செல்கிறது. அவர் பேசத் தொடங்கியவுடன் பிரச்சினை ஏற்படுகிறது. இது சட்டமன்றம்; சண்டை மன்றம் அல்ல. எனவே அவரை பேச அனுமதிக்கக் கூடாது” என்று தெரிவித்தார்.</p><p>மேலும், தற்போதைய அரசுக்கு மக்கள் நலனுக்காக செயல்பட வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், மக்களுக்காக தங்களால் முடிந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>சீன நாள்காட்டி சிக்கலால் ஆபத்தை சந்தித்தோம் - டிராவல்ஸ் உரிமையாளர் பரபரப்பு தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-faced-danger-due-to-chinese-calendar-problem-travels-owner-sensational-news</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-faced-danger-due-to-chinese-calendar-problem-travels-owner-sensational-news#comments</comments><guid isPermaLink="false">86dc546f-5176-4643-b153-d7d365413c7b</guid><pubDate>Thu, 27 Aug 2026 11:15:09 +0000</pubDate><atom:updated>2026-08-27T11:15:09.375Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nepal,நேபாளம்,கும்பகோணம்,வெள்ள அபாயம்,NepalFlood</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/1kyfzh7w/nepal33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
சீன நாள்காட்டி]]></media:title><media:description type="html"><![CDATA[ டிராவல்ஸ் உரிமையாளர் பரபரப்பு தகவல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/1kyfzh7w/nepal33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கும்பகோணம்,</p><p>சீன நாட்காட்டி சிக்கலால் ஆபத்தை சந்தித்தோம் என டிராவல்ஸ் உரிமையாளர் சையத் சாதிக் கூறியுள்ளார்.</p><p>கும்பகோணம் சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் சையத் சாதிக் அளித்த பேட்டியில்</p><p>கூறியதாவது:-</p><p>சீன நாள்காட்டிவின்படி, ஆகஸ்ட் 1 முதல் 20-ந்தேதி வரை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">குதிரை ஆண்டு</a> என்பதால், ஜெயின் மத பக்தர்கள் மட்டுமே நேபாள கோவில்களில் வழிபாடு நடத்த முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறி ஆகஸ்டு 1-ந்தேதி புறப்படுவதற்கான எங்கள் விண்ணப்பங்களை திருப்பி அனுப்பினார்கள்.</p><p>இதனால்தான், ஆகஸ்ட் 1-ந்தேதி செல்லலிருந்த பயணம் ஆகஸ்ட் 23-ந்தே திக்கு மாற்றப்பட்டது. இந்த தேதி மாற்றத்தால், எங்களுடன் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">நேபாளம்</a> வர வேண்டிய சில பக்தர்களுக்கு வர முடியாமல், அவர்கள் பயணத்தை ரத்து செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டது.</p><p>சில பயணிகளின் பாஸ்போர்ட்கூட என்னிடம்தான் உள்ளது. எங்கள் நிறுவனம் மூலம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 37 பேர் கடந்த 23-ந் தேதி இரவு நேபாளத்துக்கு கைலாய யாத்திரைக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்தோம். அதன்படி அனைவரும் முதலில் சென்னை சென்று அங்கிருந்து டெல்லி சென்று பின்னர் அனைவரும் காத்மாண்டு சென்றோம்.</p><p>அங்கு அவர்கள் அனைவருக்கும் தங்க ஏற்பாடு செய்து கொடுத்தோம். பின்னர் அவர்களுடன் நான் பேசிவிட்டு மறுநாள் தான் எனது மகனை அங்கு அவர்களுடன் விட்டுவிட்டு நான் ஊர் திரும்பினேன். நான் 35-ந் தேதி இரவு வரை அவர்களுடன் தொடர்பில் இருந்தேன்.</p><p>பின்னர் நேற்று காலை 8 மணிக்கு அவர்கள் காலை உணவை முடித்து கொண்டு 3 பஸ்களில் யாத்திரையை தொடர்ந்துள்ளனர்.</p><p>இந்தநிலையில் அவர்களுடன் சென்ற ரகு என்பவர் என்னை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் தாங்கள் காலை 9 மணிக்கு பஸ்சில் சென்றபோது நில அதிர்வு ஏற்பட்டது. எங்களுக்கு பின்னால் வந்த பஸ் திடீரென பள்ளத்தில் உருண்டு விழுந்து விபத்தில் சிக்கியதை பார்த்தோம்.</p><p>ஆனால் அங்கிருந்தால் எங்கள் உயிருக்கும் ஆபத்து என டிரைவர் கூறியதால் எங்களால் இறங்கி பார்க்க முடியவில்லை. பின்னர் நாங்கள் பாதுகாப்பான இடத்துக்கு சென்ற பிறகு ராணுவத்தினரிடம் தகவல் சொன்னோம்.</p><p>ராணுவத்தினர் அனைவரையும் தேடி வருகின்றனர் என கூறினார். நேபாளத்தில் சிக்கி இருப்பவர்களை பத்திரமாக மீட்க வேண்டும். கடவுள் அருளால் அனைவரும் உயிர்ப்பிழைக்க வேண்டும் என வேண்டு கிறேன் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>சம்பா பருவம் முழுமைக்கும் கர்நாடகத்திடமிருந்து நடுவர் மன்ற ஆணைப்படி நீரை பெற வேண்டும் - அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/need-to-secure-water-from-karnataka-for-samba-season-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/need-to-secure-water-from-karnataka-for-samba-season-anbumani#comments</comments><guid isPermaLink="false">b2833844-2b02-4348-be5d-258218072c56</guid><pubDate>Thu, 27 Aug 2026 10:56:39 +0000</pubDate><atom:updated>2026-08-27T10:56:39.300Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,பாமக,மேட்டூர் அணை,Mettur dam,காவிரி நீர்,Karnataka,கர்நாடகா,Anbumani Ramdoss,Cauvery water,சம்பா பருவம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/t7kn28n7/Untitled-5.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/t7kn28n7/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சம்பா பருவம் முழுமைக்கும் நீர் வழங்க கர்நாடகத்திடமிருந்து நடுவர் மன்ற ஆணைப்படி நீரை பெற வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>காவிரி பாசன மாவட்டங்களில் அறுவடையை நெருங்கும் குறுவைப் பயிர்களைக் காப்பாற்றவும், சம்பா சாகுபடியைத் தொடங்கவும் வசதியாக மேட்டூர் அணையிலிருந்து செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனாலும் அணையில் குறைந்த அளவு நீரே இருக்கும் நிலையில், சம்பா பருவம் முழுமைக்கும் நீர் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.</p><p>குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் நாள் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், மேட்டூர் அணையில் நீர் இருப்பு மிகவும் குறைவாக இருந்ததாலும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை காவிரியில் திறக்க கர்நாடக அரசு மறுத்ததாலும் குறித்த நாளில் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க முடியவில்லை. இடைப்பட்ட காலத்தில் கர்நாடக அணைகளிலிருந்து ஓரளவு தண்ணீர் வந்திருப்பதையடுத்து செப்டம்பர் ஒன்றாம் தேதி செவ்வாய்க்கிழமை மேட்டூர் அணையில் இருந்து முதல்-அமைச்சர் விஜய் காவிரியில் தண்ணீரை திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேட்டூர் அணையில் இருந்து எந்தவொரு காலக்கட்டத்தில் நீர் திறக்க வேண்டும் என்றாலும், அணையில் குறைந்தது 90 அடி முதல் 100 அடி வரை, அதாவது 52 டி.எம்.சி முதல் 65 டி.எம்.சி வரை நீர் இருக்க வேண்டும். இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 89.24 அடி, அதாவது 51.78 டி.எம்.சி ஆகும். அணைக்கு வினாடிக்கு 7,454 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இது கடந்த ஜூன் 12-ம் தேதியின் நிலைமையான 79.52 அடி நீர்மட்டம், 41.52 டி.எம்.சி நீர் இருப்புடன் ஒப்பிடும் போது 10 டி.எம்.சி மட்டுமே அதிகமாகும். அணைக்கான நீர்வரத்தும் சுமார் 7,500 கன அடி என்ற நிலையிலேயே இருக்கும்போது, இயல்பான சூழலில் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது சரியானதாக இருக்காது. ஏனென்றால், இனிவரும் காலங்களில் கர்நாடகத்திடமிருந்து தண்ணீர் கிடைப்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லாத சூழலில், இருக்கும் நீரைக் கொண்டு 40 நாள்களுக்கு மட்டுமே நீர் வழங்க முடியும். இதை உணர்ந்துதான் மேட்டூர் அணையில் இருந்து 45 நாள்களுக்கு மட்டும் நீர் திறக்கப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் அறிவித்துள்ளார்.</p><p>மேட்டூர் அணையின் நிலவரம் இத்தகையதாக இருந்தாலும், இன்றைய சூழலில் அணையிலிருந்து தண்ணீர்  திறப்பதைத் தவிர வேறு வழியில்லை. காவிரி பாசன மாவட்டங்களில் காவிரி, கல்லணைக் கால்வாய், வெண்ணாறு ஆகிய ஆறுகளில் இருந்து கால்வாய்கள் மூலம் தண்ணீர் பெறும் 737 நீர்நிலைகளில் 694 நீர்நிலைகள், அதாவது 95% தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன. இன்னொருபுறம் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்துவிட்டதால் தண்ணீர் எடுக்க முடியாமல் குறுவைப் பயிர்கள் கருகி வருகின்றன. அந்தப் பயிர்களைக் காக்கவும், வறண்டு கிடக்கும் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வழங்கவும் மேட்டூர் அணையைத் திறப்பது கட்டாயம் ஆகும். அந்த வகையில் மேட்டூர் அணையைத் திறக்கும் தமிழக அரசின் முடிவு வரவேற்கத்தக்கது.</p><p>ஆனால், சம்பா பருவ சாகுபடியை உறுதி செய்ய தமிழக அரசு என்ன செய்யப் போகிறது? என்பதுதான்  அடுத்தக்கட்ட வினா ஆகும். காவிரி பாசன மாவட்டங்களில் 14 லட்சம் ஏக்கரில் சம்பா, 4 லட்சம் ஏக்கரில் தாளடி என மொத்தம் 18 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படும். இந்தப் பயிர்களைக் காப்பாற்றுவதற்கு தொடக்கத்தில் தினமும் 1.75 டி.எம்.சி வீதமும், அடுத்து வரும் நாள்களில் சுமார் 1 டி.எம்.சி வீதமும் மொத்தம் 160 டி.எம்.சி தண்ணீர்  தேவைப்படும். இதில் வடகிழக்கு பருவமழை இயல்பான அளவில் பெய்தால் 50 முதல் 60 டி.எம்.சி வரை தண்ணீர் கிடைக்கும். அத்தகைய சூழலில் 100 முதல் 110 டி.எம்.சி நீர் மேட்டூர் அணையில் இருந்து தான் விடுவிக்கப்பட வேண்டும். அதை கர்நாடகத்திடமிருந்து பெறுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்.</p><p>காவிரி நடுவர் மன்றம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி, ஜூலை மாதம் 31.24 டி.எம்.சி, ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்பட வேண்டிய 45.95 டி.எம்.சியில் முதல் 26 நாள்களுக்கு 38.58 டிஎம்சி என நேற்று வரை 79.01 டி.எம்.சி நீரை கர்நாடகம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், இப்போது வரை எவ்வளவு நீர் தமிழகத்திற்கு வந்தது என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வரவில்லை. கடந்த 25-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் தமிழகத்திற்கு இன்னும் 28 டி.எம்.சி நீரை கர்நாடகம் வழங்க வேண்டியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி ஆகஸ்ட் மாதத்தில் மீதமுள்ள நாள்களுக்கும் சேர்த்து 36 டி.எம்.சி, செப்டம்பரில் 36.76  டி.எம்.சி, அக்டோபரில் 20.22 டி.எம்.சி, நவம்பரில் 13.78 டி.எம்.சி, டிசம்பர் மாதத்தில் 7.35  டி.எம்.சி என டிசம்பர் மாதம் வரை கர்நாடகத்திடமிருந்து நமக்கு கிடைக்க வேண்டிய 114.11 டி.எம்.சி நீரை பெற்றால் மட்டுமே சம்பா, தாளடி பருவங்களை காவிரி பாசன மாவட்ட விவசாயிகளால் வெற்றிகரமாக செய்து முடிக்க இயலும்.</p><p>கர்நாடக அணைகளில் இன்றைய நிலவரப்படி 82.11 டி.எம்.சி நீர் இருப்பு உள்ளது. 4 அணைகளுக்கும் சேர்த்து வினாடிக்கு 20,877 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் கர்நாடக அணைகளில் இருந்து தினமும் 2 டி.எம்.சி நீர் வழங்கப்பட்டால் செப்டம்பர் மாத இறுதிக்குள் கர்நாடகம் நமக்கு வழங்க வேண்டிய நிலுவை நீரை வழங்கி விட முடியும். எனவே, கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம், சுப்ரீம் கோர்ட்டு ஆகியவறின் வாயிலாக அழுத்தம் கொடுத்து தமிழகத்திற்கான தண்ணீரை அரசு பெற வேண்டும். அதன் மூலம் காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடியும் வெற்றிகரமாக செய்யப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>‘கார்ப்பரேட் கூட்டாளிகளுக்கு சலுகைகளை வாரி வழங்கும் பா.ஜ.க. அரசு’ - மாணிக்கம் தாகூர் விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bjp-government-showers-concessions-on-corporate-allies-manickam-tagores-criticism</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bjp-government-showers-concessions-on-corporate-allies-manickam-tagores-criticism#comments</comments><guid isPermaLink="false">c0843cf9-75ea-4e39-bb43-e40a9c1075c5</guid><pubDate>Thu, 27 Aug 2026 10:43:48 +0000</pubDate><atom:updated>2026-08-27T10:43:48.926Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பா.ஜ.க.,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/cc1cbo8j/STate-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/cc1cbo8j/STate-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி., தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் தொழிலதிபர் சுபாஷ் சந்திராவின் புகைப்படத்தை பதிவிட்டு, பா.ஜ.க. அரசை விமர்சிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-</p><p>“ரூ.22,006 கோடி கடன் பாக்கிக்கு வெறும் ரூ.6.5 கோடி தட்சிணை. “ஒரே போடு... 99.97% அபேஸ்!" "நண்பேண்டா..." என்று கட்டிப்பிடித்து கார்ப்பரேட் சகாக்களுக்கு கதகதப்பூட்டும் மோடி அரசு, பொதுத்துறை வங்கிகளுக்கும் மக்களின் சேமிப்புப் பணத்திற்கும் கூசாமல் அடித்திருக்கிறது ஒரு 'பட்டை நாமம்'! </p><p>இவ்வளவு பெரிய சலுகை இன்று இவருக்கு வாரி வழங்கப்பட்டிருப்பதன் பின்னணியை அறிய, சுபாஷ் சந்திரா எழுதிய 'The Z Factor' சுயசரிதை புத்தகத்தில் அவரே ஒப்புக்கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் பிணைப்பைப் பார்த்தாலே போதும்: </p><p>1. “எனக்கு 10 வயது இருந்தபோது ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) உறுப்பினர் ஒருவரை நான் சந்தித்தேன். என் தந்தை ஒரு ஸ்வயம்சேவகராக இருந்தவர் என்பது எனக்குத் தெரியும். நான் பிறந்த இடமான ஆதம்பூரில் அவர் ஒரு 'சாகா'வை (கிளை அமைப்பை) நடத்தி வந்தார். 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை நான் அதில் தவறாமல் கலந்துகொண்டேன்.”</p><p>2. அதுமட்டுமல்ல, அதே புத்தகத்தில் வாஜ்பாய் காலம் தொடங்கி நாக்பூர் ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் வரை தான் நடத்திய லாபியிங் விவகாரங்களையும் விவரித்திருப்பார்: “தேசியவாதக் கொள்கைக்காக அறியப்படும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை நாங்கள் அணுகினோம். நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் ரஜ்ஜு பய்யாவை நான் சந்தித்தேன். டெல்லியில் உள்ள ஆர்.எஸ்..எஸ்.-ன் ஜண்டேவாலன் அலுவலகத்தில் 4 முதல் 5 மணி நேரம் வரை நடைபெற்ற கூட்டத்தில், அந்தப் பிரச்சினையை நான் அவருக்கு விளக்கினேன்.”</p><p>3. அரசாங்கத்தையும் சட்டத்தையும் எப்படி வளைக்கலாம் என்று அவர் எழுதியிருக்கும் வரிகள்: “முடியாது அல்லது இல்லை என்ற பதிலை நான் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. உங்கள் லட்சியத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்து, உங்கள் நோக்கங்களும் நேர்மையாக இருந்தால், உங்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே என் எண்ணம். அதிகபட்சமாக சில நபர்களோ அல்லது அமைப்போ உங்கள் முன்னேற்றத்தை தற்காலிகமாக தடுத்து நிறுத்துவதில் மட்டுமே வெற்றி பெறக்கூடும்; அவ்வளவுதான்.”</p><p>அவர் சொன்னது உண்மைதான்! பா.ஜ.க. ஆட்சியில் பிரதமரின் 'நண்பர்களுக்கு' சிஸ்டம் ஒருபோதும் தடையாக இருக்காது; வெறும் 6.5 கோடியை விட்டெறிந்து 22,006 கோடியை ஆட்டையப் போட அது வழியமைத்துக் கொடுக்கும்! </p><p>4. அவரது தாத்தா சொன்ன கடன் தீர்க்கும் தாரக மந்திரம்: “அசல் தொகையை மட்டும் பெற்றுக்கொண்டு வட்டித் தொகையை விட்டுவிடுங்கள். தாமதமாக முழுத் தொகையையும் பெறுவதை விட, உடனடியாக ஒரு பகுதியைத் திரும்பப் பெறுவதே சிறந்தது.” தாத்தா அசலையாவது கொடு என்றார்; ஆனால் அசலையும் கொடுக்காமல், அசால்ட்டாக ஏமாற்றிய நீங்க அசல் ஆர்.எஸ்.எஸ்.காரர்தான்! </p><p>சில ஆயிரம் ரூபாய் விவசாயக் கடனுக்கோ, ஏழை மாணவர்களின் கல்விக் கடனுக்கோ ஜப்தி நோட்டீஸ் ஒட்டி மிரட்டும் இந்த பா.ஜ.க. அரசு, தன் 'சங் பரிவார்' சகாவுக்கு மட்டும் சிவப்புக் கம்பளம் விரிக்கிறது! எளிய மக்களின் சேமிப்பையும் பொதுத்துறை வங்கிகளையும் பணையம் வைத்து, கார்ப்பரேட் கூட்டாளிகளுக்கு சலுகைகளை வாரி வழங்கும் இந்த மக்கள் விரோதக் கூட்டுக்கொள்ளைக்கு மக்கள் மன்றத்தில் தக்க பாடம் புகட்டப்படும்.”</p><p>இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>நேபாளப் பெருவெள்ளத்தில் சிக்கி காணாமல்போன தமிழர்களை பாதுகாப்பாக மீட்டு வர வேண்டும் - சீமான்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-people-missing-in-nepal-floods-must-be-rescued-seeman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-people-missing-in-nepal-floods-must-be-rescued-seeman#comments</comments><guid isPermaLink="false">c9fae35a-75e2-427e-ace6-e907b988cb03</guid><pubDate>Thu, 27 Aug 2026 10:42:23 +0000</pubDate><atom:updated>2026-08-27T10:42:23.921Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,Seeman,நாம் தமிழர் கட்சி,nepal flood,நேபாளம் வெள்ளம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/4m9t9tj2/Untitled-4.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சீமான்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/4m9t9tj2/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நேபாளப் பெருவெள்ளத்தில் சிக்கி காணாமல்போன தமிழர்கள் உட்பட இந்திய மக்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு, தாயகம் கொண்டுவர தமிழ்நாடு அரசும், இந்திய ஒன்றிய அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>நேபாள நாட்டில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் சிக்கி சுற்றுலா பயணிகள் உட்பட 150-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததுடன், 700-க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர் எனும் பெருந்துயரச் செய்தி அதிர்ச்சியையும், மிகுந்த மனவலியையும் தருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதலைத்தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.</p><p>திடீரென பெருக்கெடுத்த ஆற்று வெள்ளம் இருகரைகளில் இருந்த வீடுகளையும், அவற்றில் வசித்த மக்களையும், செயற்கை கட்டுமானங்களையும் மூழ்கடிக்கும் காட்சிகள் நெஞ்சைப் பதறச்செய்கிறது. எத்தனை அறிவியல் வளர்ச்சியை ஏற்படுத்தி, விண்வெளிக்கே சென்றாலும் மனிதன் எவ்வளவு சிறியவன் என்பதை அவ்வப்போது இயற்கை நமக்கு உணர்த்தி வருகிறது.</p><p>புவிவெப்பமயமாதல் உள்ளிட்ட காலநிலை மாற்றம், திபெத்தில் ஏற்பட்ட  நிலநடுக்கம்,  பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா கட்டி வரும் உலகின் மிகப்பெரிய அணை கட்டமைப்பிற்காக அழிக்கப்பட்ட மரங்களால் ஏற்பட்ட சூழலியல் பாதிப்புகள் என்பன உள்ளிட்ட அடுக்கடுக்கான காரணங்களை இயற்கை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எப்படி பார்த்தாலும் இயற்கைக்கு எதிராக மனிதன் முன்னெடுக்கும் எந்தவொரு நடவடிக்கையும் மனித இனத்திற்கு எதிராகத் திரும்பும், பேரழிவை ஏற்படுத்தும் என்பதை அவ்வப்போது நிகழும் இதுபோன்ற இயற்கை சீற்றங்கள் மூலம் நமக்கு உணர்த்தி வருகிறது.</p><p>மலையும், மரமும், மணலும், மழையும், ஆறும், அருவியும், காடும், கடலும் நன்றாக இருந்தால்தான் மனித இனம் நன்றாக இருக்க முடியும் என்ற பேருண்மையை, வளர்ச்சி என்ற பெயரில் அவற்றை அழித்து தொழிற்சாலைகளையும், வானூர்தி நிலையங்களையும் அமைக்க முயலும், நாட்டின் ஆட்சியாளர்கள் இனியாவது உணர்ந்து திருந்த வேண்டும். இல்லையென்றால் அதற்காக மிகப்பெரிய விலையை உலகில் மானுட இனம் கொடுக்க நேரிடும்.</p><p>நேபாளப் பெருவெள்ளத்தில் சிக்கி காணாமல்போன தமிழர்கள் உட்பட இந்திய மக்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு, தாயகம் கொண்டுவர தமிழ்நாடு அரசும், இந்திய ஒன்றிய அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். நேபாளப் பெருவெள்ளப் பாதிப்பில் உயிரிழந்தவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நெல்லை: மேல்சுவர் இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி உயிரிழப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-construction-worker-dies-after-upper-wall-collapses</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-construction-worker-dies-after-upper-wall-collapses#comments</comments><guid isPermaLink="false">2ad2f130-5f23-45b3-b43f-683ea09e8a07</guid><pubDate>Thu, 27 Aug 2026 10:32:22 +0000</pubDate><atom:updated>2026-08-27T10:32:22.426Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Accident,நெல்லை,உயிரிழப்பு,police enquiry,Construction worker,கட்டிட தொழிலாளி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/go90uaq9/66.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கட்டிட தொழில் ]]></media:title><media:description type="html"><![CDATA[ மேல்சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/go90uaq9/66.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>நெல்லை அருகே பழைய வீட்டை இடிக்கும் பணியின் போது எதிர்பாராதவிதமாக மேல்சுவர் மற்றும் கூரை இடிந்து விழுந்ததில், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF">கட்டிட தொழிலாளி</a> ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>மேல்சுவர் இடிந்து விழுந்து விபத்து</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">நெல்லை மாவட்டம் </a>பாளையங்கோட்டை பகுதியில் பழமையான வீடு ஒன்றை இடிக்கும் பணி இன்று (வியாழக்கிழமை) நடைபெற்று வந்தது. அப்பணியில் நெல்லையைச் சேர்ந்த தளவாய் (வயது 40) உள்ளிட்ட சில கட்டிட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். தொழிலாளர்கள் வீட்டின் ஒரு பகுதியை இடித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக வீட்டின் மேல்சுவர் மற்றும் கூரைப்பகுதி பலத்த சத்தத்துடன் திடீரென இடிந்து விழுந்தது.</p><h2>தொழிலாளி உயிரிழப்பு</h2><p>இதில், அங்கு வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளி தளவாய் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அருகில் இருந்த மற்ற தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இடிபாடுகளை அகற்றி தளவாயின் உடலை மீட்டனர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இதனைத் தொடர்ந்து பாளையங்கோட்டை போலீசார் தளவாயின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாதுகாப்பு குறைபாடுகள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>புதுச்சேரியில் இருந்து மதுபானம் கடத்தி வந்த இருவர் கைது - 269 பாட்டில்கள் பறிமுதல்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-arrested-for-smuggling-liquor-from-puducherry-269-bottles-seized</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-arrested-for-smuggling-liquor-from-puducherry-269-bottles-seized#comments</comments><guid isPermaLink="false">12e99d0b-a167-4e04-afe7-b4c3d5ffe811</guid><pubDate>Thu, 27 Aug 2026 10:30:33 +0000</pubDate><atom:updated>2026-08-27T10:30:33.419Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>புதுச்சேரி,puducherry,விழுப்புரம்,Viluppuram,liquor bottles,மதுபானம் கடத்தல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/xcetrs9c/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/xcetrs9c/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விழுப்புரம்,</p><p>விழுப்புரம் மாவட்டம், மயிலம் காவல் நிலைய போலீசார் நடத்திய வாகனத் தணிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மதுபானங்களை கடத்தி வந்த இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 269 மதுபான பாட்டில்கள் மற்றும் புதுச்சேரி மாநில பாக்கெட் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.</p><h2>வாகனத் தணிக்கை</h2><p>மயிலம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பாலாஜி, உதவி ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் காவலர்கள் தலைமையில், ஐவேலி முருகன் கோவில் அருகே வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.</p><p>சோதனையின்போது, இருசக்கர வாகனத்தில் புதுச்சேரி மாநில மதுபானங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, வாகனத்தில் வந்த இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.</p><h2>இருவர் கைது</h2><p>விசாரணையில், பேரணி அஞ்சல் கெண்டியாம்பாக்கம் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரின் மகன் திருநாவுக்கரசு (42) மற்றும் புதுச்சேரி மாநிலம் மண்ணாடிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திருமால் என்பவரின் மகன் சுரேஷ் (47) ஆகியோர் என்பது தெரியவந்தது.</p><p>இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.</p><h2>நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைப்பு</h2><p>கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் 269 மதுபான பாட்டில்கள் மற்றும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">புதுச்சேரி </a>மாநில பாக்கெட் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>ஆன்லைன் மது விற்பனை விவகாரம்: தமிழக அரசு பதிலளிக்க  சென்னை ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/online-liquor-sales-issue-chennai-high-court-orders-tamil-nadu-government-to-respond</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/online-liquor-sales-issue-chennai-high-court-orders-tamil-nadu-government-to-respond#comments</comments><guid isPermaLink="false">e5940d22-e1b7-4b92-a6ff-d3c7c37361ff</guid><pubDate>Thu, 27 Aug 2026 10:22:44 +0000</pubDate><atom:updated>2026-08-27T10:22:44.418Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Online,ஆன்லைன்,issue,Tamil Nadu Government,தமிழக அரசு,மது விற்பனை,liquor sales,Chennai High Court orders,விவகாரம்,சென்னை ஐகோர்ட்டு உத்தரவு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/zejmejpf/highcourt.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/zejmejpf/highcourt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஆன்லைன் மூலம் டாஸ்மாக் கடைகளில் மது பானங்களை வாங்கும் வசதியை தொடங்கி வைத்து டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் சுற்றறிக்கை பிறப்பித்துள்ளார். இதை ரத்து செய்யக்கோரியும், ஆன்லைன் மூலம் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கக்கோரியும், வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் தலைவர் கே.பாலு <a href="https://www.dailythanthi.com/topic/madras-high-court">சென்னை ஐகோர்ட்</a>டில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.</p><h2>சிறுவர்களும் மதுவாங்க வாய்ப்பு</h2><p>அந்த மனுவில், ஆன்லைன்மூலம் மது வாங்கும் போது, 21 வயதுக்கு உட்பட்டவர்கள் மதுவகைகளை வாங்கமுடியாது என்று டாஸ்மாக் நிறுவனம் தரப்பில் விளக்கம் அளித்தாலும், பெரியவர்கள் மது வாங்கிய ஆன்லைன் முகவரியை கொண்டு சிறுவர்களும் மதுவாங்க வாய்ப்பு உள்ளது. ரேஷன் கடை அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் கால் வலிக்க வரிசையில் நிற்கும் முதியோர், பெண்களுக்கு இதுபோல ஆன்லைன் பதிவுகள் செய்ய எந்த வசதியும் இல்லாத நிலையில், மது குடிப்பவர்களுக்கு தமிழக அரசு இந்த வசதியை செய்து கொடுத்துள்ளது.</p><h2>மிகப்பெரிய தீங்கு</h2><p>இதனால் தமிழ்நாட்டில் மிகப்பெரிய தீங்கு ஏற்படும் என்பதால், ஆன்லைனில் மது விற்பனை செய்வது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும். வழக்கில் தீர்வு காணப்படும் வரை அவற்றுக்கு தடை விதிக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.  இந்த வழக்கு தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கே.பாலு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.எல்.ராஜா, 'அரசின் இந்த அறிவிப்பு இந்திய அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. மதுவிற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.</p><h2>4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு</h2><p>அரசு நியமித்துள்ள குழுவின் விசாரணை வரம்பில் மது விற்பனை மூலம் வருவாயை  அதிகரிப்பது குறித்து பரிந்துரைகளை வழங்க கோரியுள்ளது. ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்யும் விவகாரத்தில் எந்த வயது வரம்பும் நிர்ணயிக்கப்படாததால் இளைஞர்கள் எளிதில் மது வாங்க வாய்ப்புள்ளது என்பதால் ஆன்லைன் மது விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார். இதையடுத்து, மனுவுக்கு 4 வாரங்களில் பதில் அளிக்கும்படி, தமிழக அரசு, டாஸ்மாக் நிர்வாகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>மக்கள் பிரச்சினைகளை விவாதிக்கும் மன்றமாக சட்டமன்றம் இருக்க வேண்டும் -  அண்ணாமலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-legislative-assembly-should-be-a-forum-for-discussing-peoples-issues-annamalai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-legislative-assembly-should-be-a-forum-for-discussing-peoples-issues-annamalai#comments</comments><guid isPermaLink="false">d45d43e2-e175-4d10-b742-4d8be8120f29</guid><pubDate>Thu, 27 Aug 2026 10:14:13 +0000</pubDate><atom:updated>2026-08-27T10:14:13.169Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>அண்ணாமலை,சட்டமன்றம்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/reyotifd/3.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/reyotifd/3.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>வி த லீடர்ஸ் அமைப்பு தலைவர் அண்ணாமலை, கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;</p><p>கல்லூரிகளில் மாணவர்கள் குழுக்களை அமைத்து அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், அரசியல் குறித்து பேசுவது, அரசு அதிகாரிகளிடம் தங்களது பிரச்சினைகளை எடுத்துரைப்பது உள்ளிட்டவை மாணவர்களுக்கு தெரியாமல் போய்விடும். கல்லூரி அரசியல் சரியாக இருந்தால் பல்வேறு பிரச்சினைகளுக்கு அதுவே தீர்வாக அமையும்.</p><p>உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்த போதிலும், தமிழகத்தில் கல்லூரி அரசியல் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் அரசியல் கட்சிகளுக்கு வரக்கூடிய இளம் தலைவர்கள் உருவாகாமல் போய்விடுவார்கள்ர்.</p><p>திரைத்துறையை பொறுத்தவரை சென்சார் போர்டு விதிமுறைகள் மேலும் கடுமையாக இருக்க வேண்டும். சென்சார் குறியீடுகளை திரைப்படங்கள் முறையாக பின்பற்ற வேண்டும். சமீபத்தில் வெளியாகும் சில திரைப்படங்கள் மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக இல்லை. பெண்களை வல்கரான முறையில் காட்சிப்படுத்தும் திரைப்படங்களும் உள்ளன.</p><p>சமூக வலைதளங்களை பயன்படுத்துவதிலும் கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். சமூக வலைதளங்களால் நல்ல விஷயங்கள் நடைபெறுவதுடன், பல்வேறு தவறுகளும் நடைபெறுகின்றன. மற்ற நாடுகள் சமூக வலைதளங்களுக்கு கடுமையான சட்டங்களை கொண்டு வரும் நிலையில், இந்தியா ஏன் தயங்குகிறது.</p><p>சட்டமன்றம் டிராமா மன்றமாக இருக்கக்கூடாது. ஆக்கப்பூர்வமாக மக்கள் பிரச்சினைகளை விவாதிக்கும் மன்றமாக இருக்க வேண்டும். ஆனால் தற்போது பழைய பஞ்சாயத்துகளை தீர்த்துக்கொள்ளும் இடமாக சட்டமன்றம் மாறி வருகிறது. அரசியலுக்கு வருவதற்கு முன்பு இருந்த பஞ்சாயத்துகள் கூட சட்டமன்றத்தில் தீர்க்கப்படுகின்றன. சட்டமன்ற உறுப்பினர்களுக்குள் இருக்கும் பஞ்சாயத்துகளும் அங்கேயே தீர்க்கப்படுகின்றன.</p><p>ஆளும் கட்சி சார்பில் உள்ள உறுப்பினர்கள் பலரும் புதியவர்கள், அவர்களும் வேகமாக முன்னேறி வருகின்றனர். இன்றைக்கு தமிழக சட்டமன்றம் டிராமா மன்றமாக மாறிவிடுமோ என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.”</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>தங்கம் விலை ஒரே நாளில் 2-வது முறையாக குறைந்தது... நிலவரம் என்ன..?</title><link>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-drops-twice-in-a-single-day-whats-the-status</link><comments>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-drops-twice-in-a-single-day-whats-the-status#comments</comments><guid isPermaLink="false">b7a120f0-acb7-45f3-ad13-21cc9c6932da</guid><pubDate>Thu, 27 Aug 2026 09:59:14 +0000</pubDate><atom:updated>2026-08-27T09:59:14.279Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Gold Rate,தங்கம் விலை,வெள்ளி விலை,Silver rate,Gold Price,Silver Price,விலை நிலவரம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/bfvg6dm2/Untitled-3.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/bfvg6dm2/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தங்கம் (Gold Rate)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தங்கம் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.1,20,080-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று தங்கம் விலையில் மாற்றமின்றி அதே விலையில் நீடித்தது.</p><p>இந்த நிலையில் இன்று காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560-ம், கிராமுக்கு ரூ.70-ம் குறைந்து, ஒரு சவரன் ரூ.1,19,520-க்கும், ஒரு கிராம் ரூ.14,940-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 2-வது முறையாக தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.</p><p>அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பிற்பகலில் சவரனுக்கு ரூ.1,720 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,17,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.215 குறைந்து, ஒரு கிராம் 14,725-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,280 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p>வெள்ளியை பொறுத்த வரையில் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.265-க்கும் ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item></channel></rss>