<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 25 Aug 2026 07:21:59 +0000</lastBuildDate><item><title>தேர்தல் வழக்கு: முதல்-அமைச்சர் விஜய் பதிலளிக்காவிட்டால் ரூ.50 ஆயிரம் அபராதம்: ஐகோர்ட்டு எச்சரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/election-case-high-court-warns-of-50000-fine-if-chief-minister-vijay-fails-to-respond</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/election-case-high-court-warns-of-50000-fine-if-chief-minister-vijay-fails-to-respond#comments</comments><guid isPermaLink="false">283ff3eb-74e0-4ac0-b338-9b653def23bf</guid><pubDate>Tue, 25 Aug 2026 07:16:56 +0000</pubDate><atom:updated>2026-08-25T07:16:56.573Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,சென்னை ஐகோர்ட்டு,Chennai High Court,தேர்தல் வழக்கு,election case,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/mbjjhwyj/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/mbjjhwyj/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>தேர்தல் வழக்கு</h2><p>பெரம்பூர் தொகுதியில் முதல்-அமைச்சர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து அந்தத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். அதேபோல, வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோரும் முதல்-அமைச்சர் விஜய்யின் வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்கு தாக்கல் செய்தனர். </p><p>இதைபோல திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்-அமைச்சர் விஜய் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜும் தேர்தல் வழக்கை தாக்கல் செய்தார். இந்த தேர்தல் வழக்குகள் அனைத்தும் நீதிபதி வி.லட்சுமிநாராயணன் அமர்வில் விசாரணையில் உள்ளன. இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம், முதல்-அமைச்சர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.</p><h2>ரூ.50 ஆயிரம் அபராதம்</h2><p>இந்த நிலையில், இந்த வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. இதையடுத்து, அடுத்தமுறை விசாரணையின் போது முதல்-அமைச்சர் விஜய் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை என்றால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று நீதிபதி வி.லட்சுமிநாராயணன் எச்சரிக்கை விடுத்தார்.</p><p>மேலும் "கடந்த முறையே வழக்குகளை நீராகரிக்கோரி மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் அவகாசம் வழங்கப்படாது எனவும் ஆகஸ்ட் 27-க்குள் மனு தாக்கல் செய்யுங்கள் என்றும் 6 மாதங்களில் தேர்தல் வழக்கை முடிக்க வேண்டும் என்பது விதிமுறை என நீதிபதி தெரிவித்து வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஓணம் பண்டிகை: திருப்பூர் வழியாக திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரெயில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-festival-special-train-to-thiruvananthapuram-via-tiruppur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-festival-special-train-to-thiruvananthapuram-via-tiruppur#comments</comments><guid isPermaLink="false">611670d4-992b-4416-9099-102b0316f115</guid><pubDate>Tue, 25 Aug 2026 07:16:26 +0000</pubDate><atom:updated>2026-08-25T07:16:26.639Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்,சிறப்பு ரெயில்,Special train</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/iuqb7kva/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/iuqb7kva/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,  </p><p>ஓணம் பண்டிகையை முன்னிட்டு அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி, பெங்களூரு-திருவனந்தபுரம் வடக்கு (வண்டி எண்.06579) சிறப்பு ரெயில் வருகிற 28-ந்தேதி மாலை 4.40 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10.30 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கிற்கு சென்றடையும். </p><p>இந்த ரெயில் திருப்பூருக்கு வருகிற 29-ந்தேதி நள்ளிரவு 12.20 மணிக்கு வந்து 12.22 மணிக்கு புறப்படும். திருவனந்தபுரம் வடக்கு-பெங்களூரு (06580) சிறப்பு ரெயில் வருகிற 29-ந்தேதி மதியம் 12.40 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இந்த ரெயில் திருப்பூருக்கு வருகிற 29-ந்தேதி இரவு 9.38 மணிக்கு வந்து 9.40 மணிக்கு புறப்படும். மேற்கண்ட தகவலை, ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஜாதி, மத பேதமின்றி மகிழ்ச்சியுடன் ஓணம் கொண்டாடுவோம் - எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/lets-celebrate-onam-happily-regardless-of-caste-or-religion-edappadi-palaniswami</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/lets-celebrate-onam-happily-regardless-of-caste-or-religion-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">0551b9bc-d306-41a6-99bd-e8369c596e29</guid><pubDate>Tue, 25 Aug 2026 06:58:14 +0000</pubDate><atom:updated>2026-08-25T06:58:14.857Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,எடப்பாடி பழனிசாமி,அதிமுக,Edappadi Palaniswami,Onam festival,ஓணம் பண்டிகை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/cy3dfn74/93.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/cy3dfn74/93.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>பாரம்பரிய சிறப்பு மிக்க பண்டிகையான திருஓணம் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும், மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த 'ஓணம்' திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><h2>வாமனன் அவதாரம்</h2><p>மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அழித்திட, திருமால் வாமனன் அவதாரம் பூண்டு மூன்றடி மண் கேட்க, முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் விண்ணையும் அளந்து, மூன்றாம் அடியை மகாபலி மன்னனின் தலையில் வைத்து பூமிக்குள் புதைக்கும் முன்பு, அம்மன்னனின் வேண்டுகோளை ஏற்று ஆண்டுதோறும் தனது நாட்டு மக்களைக் காண வரம் கொடுத்தார். அதன்படி மக்களைக் காண வரும் மகாபலி மன்னனை வரவேற்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோணத்தன்று ஓணம் திருநாள் கொண்டாடப்படுகிறது.</p> <p>ஜாதி, மத பேதமின்றி மலையாள மொழி பேசும் மக்களால் பத்து நாட்கள் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின்போது, மக்கள் தங்கள் இல்லங்களின் வாயில்களில் வண்ணப் பூக்களால் அத்தப் பூ கோலமிட்டு, புத்தாடை அணிந்து, ஓணம் விருந்துண்டு, மோகினி ஆட்டம், கோலாட்டம் போன்ற நடனங்களை ஆடி உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள்.</p><h2>ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்</h2><p>அன்பு, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றைப் பின்பற்றி அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் கூடி வாழ்ந்திட வேண்டும் என்பதை உலகிற்கு உணர்த்தும் ஓணம் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடும், மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நெஞ்சார்ந்த <a href="https://www.dailythanthi.com/topic/onam">ஓணம் </a>திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மதுபோதையில் தகராறு செய்த மகன் சரமாரியாக வெட்டிக்கொலை: தொழிலாளி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/worker-arrested-for-brutally-stabbing-son-to-death-over-drunken-argument</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/worker-arrested-for-brutally-stabbing-son-to-death-over-drunken-argument#comments</comments><guid isPermaLink="false">cd0e48bb-35e5-4508-92b5-b95a1f5fd006</guid><pubDate>Tue, 25 Aug 2026 06:51:56 +0000</pubDate><atom:updated>2026-08-25T06:51:56.703Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,murder,son,மகன்,வெட்டிக்கொலை,மதுபோதை,alcoholism,Dispute,தகராறு,Father arrested,தந்தை கைது</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/2psrg5nj/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மகன் கொலை, தொழிலாளி கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/2psrg5nj/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி அருகே <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88">மதுபோதை</a>யில் தினமும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81">தகராறில்</a> ஈடுபட்டு வந்த மகனை தந்தையே அரிவாளால் சரமாரியாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">வெட்டிக்கொலை</a> செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><h2>மதுபோதையில் பெற்றோருடன் தகராறு</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், எப்போதும் வென்றான் அருகிலுள்ள ஆதனூர் கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்த மாரிமுத்து (வயது 50), கூலி தொழிலாளி ஆவார். இவரது மகன் கருப்பசாமி(21), சரியாக வேலைக்குச் செல்லாமல், நாள்தோறும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து, பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. </p><h2>மகனை வெட்டிக்கொலை செய்த தந்தை</h2><p>நேற்று இரவும் வழக்கம் போல மதுபோதையில் வீட்டிற்கு வந்த கருப்பசாமி, தந்தை மாரிமுத்துவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மகனின் தொடர் தொந்தரவால் ஆத்திரமடைந்த மாரிமுத்து, தான் பெற்ற மகன் என்றும் பாராமல் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துச் சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த வெட்டுக்காயமடைந்த கருப்பசாமி, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>கைது</h2><p>இந்த சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த எப்போதும் வென்றான் காவல் நிலைய போலீசார், கருப்பசாமியின் உடலை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தந்தை மாரிமுத்துவை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பள்ளிக் காலை உணவில் பல்லி! - தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/lizard-found-in-school-breakfast-nainar-nagendran-condemns-the-tvk-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/lizard-found-in-school-breakfast-nainar-nagendran-condemns-the-tvk-government#comments</comments><guid isPermaLink="false">71b1878f-b766-41e0-be74-dc9848afcc94</guid><pubDate>Tue, 25 Aug 2026 06:41:24 +0000</pubDate><atom:updated>2026-08-25T06:41:24.588Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,தவெக அரசு,TVK Government</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/9j5713mi/nainar.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/9j5713mi/nainar.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”பூந்தமல்லி அரசு உதவிபெறும் பள்ளியில், பல்லி விழுந்த காலை உணவைச் சாப்பிட்ட 17 பிஞ்சுக் குழந்தைகள் வாந்தி மற்றும் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. குழந்தைகளின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய தவெக அரசின் இந்த மெத்தனப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறேன்.</p><p>தவெக அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் பள்ளிகளில் 'ஆய்வு' என்ற பெயரில் செய்யும் போட்டோஷூட் அனைத்தும் வெறும் 'ரீல்' என்பதற்கு மாணவர் உணவில் கிடந்த பல்லியே சாட்சி. விளம்பர மோகத்தை விடுத்து, உணவு தயாரிக்கும் இடங்களில் போதிய சுகாதார ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் இத்தகைய விபரீதங்கள் நடந்திருக்காது.</p><p>எனவே, இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தரமான சிகிச்சை வழங்கப்படுவதை தவெக அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற விபரீதங்கள் நிகழாதவாறு, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் உணவின் தரத்தை சோதிக்கத் தனிக்குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என முதல்-அமைச்சரை வலியுறுத்துகிறேன்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்: சட்டசபையில் காரசார விவாதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-mlas-resignation-issue-heated-debate-in-the-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-mlas-resignation-issue-heated-debate-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">87840fc2-a032-42c4-8ef0-7922f9212a41</guid><pubDate>Tue, 25 Aug 2026 06:34:22 +0000</pubDate><atom:updated>2026-08-25T06:34:22.824Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,எடப்பாடி பழனிசாமி,அதிமுக,Edappadi Palaniswami,செங்கோட்டையன்,Sengottaiyan,சட்டசபை,TN Assembly</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/xbi56xg8/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/xbi56xg8/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையில் இன்று இயற்கை வளங்கள், தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகள் மீதான மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது.</p><p>இதில் திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின் பேசுகையில், 6 தொகுதியில் எம்எல்ஏக்கள் இல்லாத நிலையில் மக்கள் தங்களது பிரச்சினைகளை யாரிடம்? கூறுவர் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், “ராஜினாமா செய்யப்பட்ட 6 தொகுதிகளில் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு, அந்த தொகுதி மக்களின் குறைகள் கேட்கவும், தேவைகளை நிவர்த்தி செய்யவும் முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார் என தெரிவித்தார்.</p><p>"6 தொகுதிகளின் எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்துள்ளதால் அந்த தொகுதி மக்களின் பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளது. அந்த பகுதியில் உள்ள பொறுப்பு அமைச்சரால் தொகுதி பிரச்னையை முழுதுமாக அறிந்துகொள்ள முடியாது என்பதால்தான் சட்டப்பேரவை உறுப்பினர் தேவை" என்றார்.</p><p>அப்போது குறுக்கீட்ட முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொறுப்பு அமைச்சர்கள் மொத்த தொகுதி பிரச்சினைகளையும் அறிந்து கொள்ள முடியாது, எம்.எல்.ஏ.க்கள் தான் அந்த பணியை செய்ய முடியும் என்பதால்தான் சட்டப்பேரவை உறுப்பினர் தேவை" என்றார்.</p><p>இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், “6 சட்டமன்ற தொகுதிகளில் விரைவாக தேர்தல் நடத்த வேண்டும் என்பதுதான் எங்கள் ஆர்வம்; அதில் மாற்று கருத்து கிடையாது; அதில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்பதிலும் மாற்று கருத்து கிடையாது” என்று தெரிவித்தார்.</p><p>அமைச்சர் செங்கோட்டையனின் இந்த பேச்சுக்கு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது குறுக்கீட்ட சபாநாயகர் இபிஎஸ் சொன்னதெல்லாம் வழக்கில் இருக்கிறது. அதை அவைகுறிப்பில் இருந்து நீக்குகிறேன் என்றார். மேலும் எடப்பாடி பழனிசாமி பேசும்போது மைக் அணைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் குதிரை பேரம் பற்றிய பேச்சை அவை முன்னவர் செங்கோட்டையன் தவிர்த்திருக்க வேண்டும் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவுறுத்தினார்.</p><p>தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் வாபஸ் பெற்றது குதிரை பேரம் இல்லையா? என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “ அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அவர் வாபஸ் பெறவில்லை. ஒரு கட்சியில் இருந்து வெற்றி பெற்றுவிட்டு ராஜினாமா செய்துவிட்டு ஏன் தவெகவில் சேர வேண்டும்? என கேள்வி எழுப்பினார்.</p><p>தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அவை மரபை மீறி சத்தமாக பேசவே, உடனே சபாநாயகர் எழுந்து நின்று 'இது என்ன பொதுக்கூட்டமா? இங்கு என்ன பொதுக்கூட்டமா நடத்துகிறோம்? என கோபமாக பேசினார். “பேச அனுமதிக்கவில்லை என்றால் நிற்கதான் செய்வோம் என எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார். பின்னர் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உணர்ச்சிவசப்படாமல் பேச வேண்டும். உங்கள் உடலை வருத்திக்கொள்ளக்கூடாது என்று சொல்கிறேன். ' என்று சபாநாயகர் பேசினார். இவ்வாறு சட்டசபையில் காரசார விவாதம் நடந்தது.</p>]]></content:encoded></item><item><title>ரேஷன்  கடைகளில் 2 கிலோ சர்க்கரை  கூடுதலாக வழங்க வேண்டும்:  அன்புமணி ராமதாஸ்  வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ration-shops-should-provide-2-kg-extra-sugar-anbumani-ramadoss-insists</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ration-shops-should-provide-2-kg-extra-sugar-anbumani-ramadoss-insists#comments</comments><guid isPermaLink="false">2383f6d8-2b74-431d-9ae9-563d49a32865</guid><pubDate>Tue, 25 Aug 2026 06:16:04 +0000</pubDate><atom:updated>2026-08-25T06:16:04.043Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,Sugar,சர்க்கரை,ration shops,ரேஷன்  கடை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/l55gyihw/anbu.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/l55gyihw/anbu.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;</p><p>”தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் இல்லாத வகையில், சீனி எனப்படும் வெள்ளை சர்க்கரையின் விலை கிலோவுக்கு  ரூ.20 முதல்  ரூ.25 வரை அதிகரித்து ரூ.75 முதல் ரூ.80  என்ற அளவை எட்டியுள்ளது. இது அடுத்து வரும் மாதங்களில் மேலும் உயர்ந்து  தீப ஒளி திருவிழா காலத்தின் போது ரூ.100 என்ற உச்சத்தை அடையக்கூடும் என்று வணிகர்கள் தெரிவித்துள்ளனர். ஒருபுறம் கரும்பு விவசாயிகளுக்கு போதிய கொள்முதல் விலை கிடைக்காத நிலையில், இன்னொருபுறம் மக்களை பாதிக்கும் வகையில் சர்க்கரை விலை உயர்ந்து வருவது கவலையளிக்கிறது.</p><p>எரிபொருள் இறக்குமதியை குறைக்கும் வகையில்,  வாகன எரிபொருளில்  அதிக அளவில் எத்தனால் கலப்பதை  மத்திய அரசு ஊக்குவிப்பதாகவும்,  அதற்காக சர்க்கரை ஆலைகள்  வெள்ளை சர்க்கரை உற்பத்தியை விட  மொலாசஸ் எனப்படும்  கரும்பு வெல்லப்பாகு  உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் தருவது தான்  இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.  இதில்  ஓரளவு உண்மை இருப்பதை மறுக்க முடியாது.</p><p>ஆனால், இதையும் தாண்டிய முதன்மைக் காரணம், தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் கரும்பு சாகுபடி பரப்பு அண்மைக்காலங்களில் மிக வேகமாக குறைந்து வருவது தான். தேசிய அளவில் 2022-ஆம் ஆண்டில்  58.85 லட்சம் ஹெக்டேராக இருந்த கரும்பு சாகுபடி பரப்பு, 2024-ஆம் ஆண்டில் 54.49 லட்சம் ஹெக்டேராக குறைந்து விட்டது.</p><p>தமிழ்நாட்டில் 2020-ஆம் ஆண்டுக்கு முன் 15 லட்சம் ஏக்கராக இருந்த கரும்பு சாகுபடி பரப்பு 2025-ஆம் ஆண்டில்  வெறும் 5 லட்சம் ஏக்கராக குறைந்து விட்டது. அதேபோல், தமிழ்நாட்டில்  2018ஆம் ஆண்டில் 2.8 கோடி டன்னாக இருந்த  சர்க்கரை உற்பத்தி 2024-ஆம் ஆண்டில் 1.59 கோடி டன்னாக குறைந்து விட்டது. இதற்கு காரணம் கரும்புக்கான உற்பத்திச் செலவு  அதிகரித்து விட்டதும், அதற்கு ஏற்ற வகையில்  கரும்பின் கொள்முதல் விலை  உயர்த்தப்படாததும் தான்.  இந்த நிலை மாற்றப்பட்டு  சாகுபடி பரப்பு அதிகரிக்கப்பட்டால் தான் சர்க்கரை உற்பத்தி அதிகரித்து விலை குறையும்.</p><p>ஒரு டன் கரும்பிலிருந்து கிடைக்கும் சர்க்கரை, மொலாசஸ், சக்கை உள்ளிட்ட அனைத்து துணைப் பொருள்களின் வாயிலாக சர்க்கரை ஆலைகளுக்கு  ரூ,21 ஆயிரத்திற்கும் கூடுதலாக வருமானம் கிடைக்கும் நிலையில், சர்க்கரை ஆலைகள் ஒரு டன் கரும்புக்கு  ரூ.5000 கூட கொள்முதல் விலையாக வழங்க மறுப்பதும், அதற்கு ஆட்சியாளர்கள் துணை போவதும் அநீதியாகும்.</p><p>ஒரு டன் கரும்பில் சராசரியாக ஒரு குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்ய முடியும். அப்படியானால், ஒரு குவிண்டால் சர்க்கரையின் மொத்த விலை  ரூ.7000 ஆக இப்போது உயர்ந்துள்ள நிலையில், அதே விலை ஒரு டன் கரும்புக்கு கொள்முதல் விலையாக வழங்கப்பட வேண்டும். சர்க்கரை உற்பத்தியில் கிடைக்கும் துணை பொருள்கள் மூலம் ஆலைகளுக்கு கிடைக்கும் வருமானம் இலாபமாக இருக்கும். ஆனால், இயல்பாக வழங்க வேண்டிய விலையில் பாதிக்கும் குறைவாக ரூ..3383  தான் கொள்முதல் விலையாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை குறைந்தபட்சம்  ரூ.5000 என்ற அளவுக்காவது அதிகரிக்க வேண்டும். அப்போது தான் கரும்பு சாகுபடி பரப்பும், சர்க்கரை உற்பத்தியும் அதிகரிக்கும்.</p><p>இவை ஒருபுறமிருக்கு சர்க்கரை விலை உயர்வால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பை  குறைப்பதற்காக பொங்கல் திருநாள் வரை நடப்பு மாதம் தொடங்கி  6 மாதங்களுக்கு நியாயவிலைக் கடைகளில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கு தலா 2 கிலோ கூடுதல் சர்க்கரை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>விஜயகாந்த் பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் புகழாரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vijayakanths-birthday-mkstalins-praise</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vijayakanths-birthday-mkstalins-praise#comments</comments><guid isPermaLink="false">ac552799-3e17-4794-8b19-fe3af015eb54</guid><pubDate>Tue, 25 Aug 2026 06:03:10 +0000</pubDate><atom:updated>2026-08-25T06:03:10.190Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,M.K.Stalin,சென்னை,birthday,பிறந்தநாள்,விஜயகாந்த்,Captain Vijayakanth</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/jq4m9h7e/165.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின் புகழாரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/jq4m9h7e/165.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் பிறந்தநாள் வாழ்த்து மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். </p><p>இது தொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>வாழ்த்து</h2><p>ஏழை மக்களின் மேல் கொண்ட அளவற்ற அன்பால் அவர்களின் நெஞ்சத்தில் நீங்காத நினைவாய் வாழும் எனது அருமை நண்பரும் தே.மு.தி.க. நிறுவனருமான கேப்டன் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D">விஜயகாந்தின்</a> பிறந்தநாள் இன்று.</p><p>அவரின் கனவுகளை நனவாக்க உழைக்கும் தே.மு.தி.க. தோழர்களுக்கும் அவர்களை வழிநடத்தும் அன்புச்சகோதரி பிரேமலதா விஜயகாந்த் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். கேப்டன் அவர்களின் புகழ் நீடுவாழ்க.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஓணம் திருநாளில் அன்பு, அறம், அமைதி, சமூகநீதி தழைத்தோங்கட்டும்: அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/may-love-virtue-peace-and-social-justice-flourish-on-onam-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/may-love-virtue-peace-and-social-justice-flourish-on-onam-anbumani#comments</comments><guid isPermaLink="false">dd8fc2d0-48c2-4892-b9eb-b68f1ac0cac3</guid><pubDate>Tue, 25 Aug 2026 05:39:43 +0000</pubDate><atom:updated>2026-08-25T05:39:43.999Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாமக,Anbumani,சென்னை,Onam festival,ஓணம்,அன்புமணி ராமதஸ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/bsmqeg4a/164.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஓணம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/bsmqeg4a/164.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திருவோணம் திருநாளை கொண்டாடும் மலையாள சொந்தங்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>ஓணம் திருநாள்</h2><p>ஆளப்பட்ட மக்கள் மீது எல்லையில்லா அன்பு காட்டிய மன்னன் மகாபலியின் நினைவாக திருவோணம் திருநாளை கொண்டாடும் மலையாள சொந்தங்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.</p><p>மன்னன் மகாபலியின் வாழ்க்கை மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு ஆகும். இன்றுள்ள கேரளத்தை முன்னொரு காலத்தில் மிகச்சிறப்பாக ஆட்சி செய்து வந்த மகாபலி, கொடை வள்ளலாகவும் விளங்கினார். </p><p>மகாபாரத்தில் கர்ணனின் வள்ளல் குணத்தைப் பயன்படுத்தி அவரது உயிர் எப்படி நயவஞ்சகமாக பறிக்கப்பட்டதோ, அதேபோல் தான் மகாபலியியின் உயிரும் பறிக்கப்பட்டது. </p><h2>மகாபலி</h2><p>வாமன அவதாரம் எடுத்து வந்த விஷ்ணு மூன்றடி மண் கேட்க, மகாபலியும் அதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால், முதல் அடியில் மண்ணையும், இரண்டாம் அடியில் விண்ணையும் அளந்த விஷ்ணு, மூன்றாம் அடியை மகாபலி காலில் வைத்து பாதாள உலகத்திற்குள் தள்ளினார். பாதாள உலகத்தில் தள்ளப்பட்ட மகாபலி ஆண்டுக்கு ஒருமுறை மக்களைக் காண வரும் நாளே திருவோணம் திருநாளாக உலகம் முழுவதும் வாழும் மலையாள மக்களால் மிக உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.</p><p>மண்ணுக்குள் மறைந்தாலும் தமது மக்களின் மீது கொண்ட அன்பை மறைக்காத மகாபலியை போன்ற  ஆட்சியாளர்கள் கிடைத்தால் அது மக்களின் வரம். அந்த வரம் வாய்க்க வேண்டும் என்ற மக்களின் விருப்பம் சில ஆண்டுகளில் நிறைவேறும் என்பது உறுதி. </p><h2>வாழ்த்து</h2><p>ஓணம் திருநாளைக் கொண்டாடும் மக்கள், எப்போதும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பது தான் எனது விருப்பம். <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%93%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D">ஓணம்</a> திருநாளைப் போலவே எல்லா நாட்களிலும் மக்கள் மகிழ்ச்சியாக வாழவும், அன்பு, அறம், அமைதி, வளம், சகோதரத்துவம், சமத்துவம், சமூகநீதி, மனிதநேயம் ஆகியவை தழைத்தோங்கவும் வேண்டும் என்று வேண்டி திருவோணம் கொண்டாடும் மக்களுக்கு மீண்டும் ஒருமுறை ஓணம் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ராணிப்பேட்டை: லாரி மீது கார் மோதி புதுப்பெண் பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ranipet-newlywed-dies-after-car-hits-lorry</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ranipet-newlywed-dies-after-car-hits-lorry#comments</comments><guid isPermaLink="false">7ebf777f-83b2-417b-b24e-0397ed8bf1f3</guid><pubDate>Tue, 25 Aug 2026 05:35:40 +0000</pubDate><atom:updated>2026-08-25T05:35:40.235Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,ராணிப்பேட்டை,Car,கார்,பலி,Death,lorry,லாரி,கிருஷ்ணகிரி,Krishnagiri,Ranipet</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/srwopp5d/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ லாரி மீது கார் மோதி புதுப்பெண் பலி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/srwopp5d/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராணிப்பேட்டை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88">ராணிப்பேட்டை</a> மாவட்டத்தில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">விபத்தில்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF">புதுப்பெண் பலி</a>யானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.</p><h2>காதல் திருமணம்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF">கிருஷ்ணகிரி</a> மாவட்டம், குன்னத்தூரைச் சேர்ந்த நவீன் (வயது 23), பெற்றோர் எதிர்ப்பை மீறி சத்யா(19) என்ற இளம்பெண்ணை 2 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்தார். பின்னர் இந்த தம்பதியினர் சென்னையில் வசித்து வந்தனர். </p><h2>விபத்தில் புதுப்பெண் பலி</h2><p>இந்த நிலையில் இந்த தம்பதியரை பெற்றோர் சமரசமாக அழைத்ததால் நேற்று அதிகாலை சொந்த ஊருக்கு காரில் சென்றனர். அப்போது ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அருகே சென்னசமுத்திரத்தில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் சத்யா உயிரிழந்தார். நவீன் லேசான காயமடைந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மிலாதுநபி திருநாள் -அன்புமணி ராமதாஸ் வாழ்த்து </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/milad-un-nabi-greetings-from-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/milad-un-nabi-greetings-from-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">de3800b1-925f-436d-9ee4-9909c4ea0587</guid><pubDate>Tue, 25 Aug 2026 05:33:17 +0000</pubDate><atom:updated>2026-08-25T05:33:17.476Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,Greetings,வாழ்த்து,Milad-un-Nabi,மிலாடி நபி,திருநாள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/g4khbo5o/92.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/g4khbo5o/92.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>மிலாது நபி திருநாள்</h2><p>இஸ்லாமியர்களால் உயிரினும் மேலாக நேசிக்கப்படும் இறைத்தூதர் முகமது நபியின் பிறந்த நாளை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF">மிலாது நபி </a>திருநாளாக கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>ஆறு வயதில் தாயை இழந்த நபிகள் தமது இளம் வயதில் வறுமையின் கொடுமைகளை அனுபவித்தார். நாற்பது வயதில் இறைத்தூதுகளை பெறத் தொடங்கிய அவர், அடுத்த 23 ஆண்டுகளுக்கு அற்புதங்களை நிகழ்த்தினார். வறுமையிலும் அவர் செம்மையாகவும், தூய்மையாகவும், அழுக்காறு இன்றியும், உண்மை மட்டுமே  உரைத்தும், எவரிடத்தும் கோபம் கொள்ளாமலும், பேராசையின்றியும், அன்பு செலுத்தியும் வாழ்ந்தார். அதனால் தான் அவரது வாழ்க்கை வரலாறாக மாறியிருக்கிறது. உலகில் உள்ள அனைவரும் பின்பற்றத்தக்க உன்னதமான பாடமாக இறைதூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கைப் போற்றப்படுகிறது.</p><h2>போற்றத்தக்க பாடம்</h2><p>போதனையும், பின்பற்றலும் இணைந்து செல்வது மிகவும் அரிது. ஆனால், தாம் கடைபிடித்ததை மட்டுமே போதனையாக வழங்கினார் நபிகள் நாயகம். இறை நம்பிக்கை, பாவமன்னிப்பு கோருதல், தொழுதல், உதவி புரிதல், பிறரை ஏமாற்றாமல் இருத்தல் மற்றும் செல்வத்தில் நாட்டம் இல்லாமல் இருத்தல், கற்பு மற்றும் பெண் சிசுவதைக்குத் தடை என்ற வழியில் பயணித்த நபிகள் நாயகத்தின் வாழ்க்கை என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்குமே போற்றத்தக்க பாடம் ஆகும்.</p><p>நபிகள் நாயகம் கற்பித்த உண்மையையும், ஒழுக்கத்தையும் அனைவரும் கடைபிடிக்க வேண்டும். உலகில் அமைதி, வளம், மனநிறைவு, மகிழ்ச்சி, ஒற்றுமை, சகோதரத்துவம், பிறருக்கு உதவும் குணம், கொடை ஆகியவையும் நிறைய வேண்டும் என்று கூறி, மீண்டும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ராமநாதபுரம்: தடை செய்யப்பட்ட 38 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்  

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ramanathapuram-38-kg-banned-sea-cards-seized</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ramanathapuram-38-kg-banned-sea-cards-seized#comments</comments><guid isPermaLink="false">c0a47538-766e-445c-a382-273423d72390</guid><pubDate>Tue, 25 Aug 2026 05:31:45 +0000</pubDate><atom:updated>2026-08-25T05:31:45.322Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ராமநாதபுரம்,Ramanathapuram,கடல் அட்டைகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/wgmoft43/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/wgmoft43/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>ராமநாதபுரம்,</p><p><a href="https://www.dailythanthi.com/">ராமநாதபுரம் </a>மாவட்டம் ராமேஸ்வரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.</p><p>தகவலின் அடிப்படையில் ராமஸ்வரம் அருகே உள்ள கரையூர் பகுதியில் போலீசார்,  தமிழ்நாடு வனம் மற்றும் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பணியக அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.</p><h2>38 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்</h2><p>இந்த சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட 38 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் மதிப்பு ரூ. 2 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கடல் அட்டைகள் இலங்கைக்கு கடத்த திட்டமிடப்பட்டதா? கடல் அட்டைகளை பதுக்கி வைத்தது யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  </p>  ]]></content:encoded></item><item><title>மின்சார பேருந்து சேவை; முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/electric-bus-service-chief-minister-vijay-launched</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/electric-bus-service-chief-minister-vijay-launched#comments</comments><guid isPermaLink="false">df7e1810-2d90-4ae2-ac00-3763636c24c3</guid><pubDate>Tue, 25 Aug 2026 05:24:35 +0000</pubDate><atom:updated>2026-08-25T05:24:35.740Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Chennai,மின்சார பேருந்து,மின்சார பேருந்துகள்,MTC,தவெக அரசு,GovtBus,CMVijay‌</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/x7si59oe/vijayone33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
மின்சார பேருந்து சேவை]]></media:title><media:description type="html"><![CDATA[  முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/x7si59oe/vijayone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னையில் 2-ம் கட்டமாக 750 ஏ.சி. மின்சார பஸ் சேவையை முதல்-அமைச்சர் விஜய் இன்று (செவ்வாய்கிழமை) தொடங்கி வைத்தார்.</p><p>சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கத்தில், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் முதல் கட்டமாக ரூ.697 கோடி மதிப்பீட்டில் 625 தாழ்தள மின்சார பஸ்கள் வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, சென்டிரல் பணிமனை மற்றும் தண்டையார்பேட்டை-1 ஆகிய 5 பணிமனைகளில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.</p><p>இதனைத் தொடர்ந்து, 2-ம் கட்டமாக 750 புதிய தாழ்தள குளிர்சாதன மின்சார பஸ்கள் ஆலந்தூர், சென்டிரல் பணிமனை-2, பெரம்பூர், பாடியநல்லூர், ஆவடி, கே.கே.நகர் மற்றும் அய்யப்பன்தாங்கல் ஆகிய 7 பணிமனைகளில் இருந்து இயக்கப்பட உள்ளது.</p><p>இந்தநிலையில், இந்த மின்சார பஸ்கள் இயக்கத்தை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய் </a>சென்னை தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.போக்குவரத்துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன், தலைமை செயலாளர் சாய்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். மின்சார ஏசி பேருந்தில் பயணித்த முதல்-அமைச்சர் விஜய் பேருந்தின் ஓட்டுநர், நடத்துநரிடம் கலந்துரையாடினார். </p> ]]></content:encoded></item><item><title>எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவது போல் முதல்-அமைச்சர் விஜய் கூறுவது சரியானதல்ல: பெ.சண்முகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-not-right-for-chief-minister-vijay-to-speak-in-a-manner-that-intimidates-opposition-parties-shanmugam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-not-right-for-chief-minister-vijay-to-speak-in-a-manner-that-intimidates-opposition-parties-shanmugam#comments</comments><guid isPermaLink="false">dfce9e44-5cb3-477f-b98c-012264265123</guid><pubDate>Tue, 25 Aug 2026 05:21:04 +0000</pubDate><atom:updated>2026-08-25T05:21:04.578Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,p shanmugam,CM Vijay,சண்முகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/5chc3g4q/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/5chc3g4q/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>மயிலாடுதுறை,</p><p>மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பெ.சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-</p><p>சம்பா சாகுபடியை டெல்டா விவசாயிகள் தொடங்குவதற்கு மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும் என்பதை தமிழக அரசு அறிவிக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி மாத வாரியாக திறந்துவிடப்பட வேண்டிய தமிழக உரிமையான நீர் வரவில்லை.</p><p>தமிழகத்தின் உரிமை நீரை பெறக்கூடிய வகையில் தமிழக முதல்-அமைச்சர் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளார். அனைத்துக்கட்சி தலைவர்கள், எம்.பி.க்களை அழைத்துச் சென்று பிரதமரை சந்தித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி தண்ணீரை பெறவேண்டும்.</p><p>பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டதாக முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். முதல்-அமைச்சர் விஜய் தன்னிடம் 3 கோப்புகள் இருப்பதாக கூறுகிறார். கையில் இருக்கும் கோப்புகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவதை போல கூறும் விதம் சரியானதல்ல. சவுதியில் இறந்த சீர்காழி மீனவர்களின் உடலை தாமதமின்றி சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மேகமலை வன ஆக்கிரமிப்பாளர் பட்டியலில் இடம்பெற்ற அரசு ஊழியர்கள் 118 பேர் யார்?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/who-are-the-118-government-employees-in-the-meghamalai-forest-encroachment-list</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/who-are-the-118-government-employees-in-the-meghamalai-forest-encroachment-list#comments</comments><guid isPermaLink="false">ad8d9ca0-b20e-432c-a055-0327ced372c0</guid><pubDate>Tue, 25 Aug 2026 05:13:36 +0000</pubDate><atom:updated>2026-08-25T05:13:36.906Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Theni,தேனி,மேகமலை,Meghamalai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/llfhhcdw/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/llfhhcdw/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>தேனி,</p><h2>மேகமலை விவகாரம்</h2><p>தேனி மாவட்டம் மேகமலை, வருசநாடு, தும்மக்குண்டு உள்ளிட்ட 9 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 98 கிராமங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளாக உள்ளன. இந்த புலிகள் காப்பக பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. பல தலைமுறைகளாக வாழும் தங்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி வெளியேற்றக் கூடாது என 98 கிராம மக்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>இதற்கிடையே இந்த ஆக்கிரமிப்பாளர்கள் பட்டியலில் அரசுத் துறைகளில் பணியாற்றுவோர் மற்றும் ஓய்வூதியர்கள் 118 பேரின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்த அரசு ஊழியர்கள் மீது துறை வாரியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து துறை வாரியான ஒழுங்கு நடவடிக்கை எடுத்த விவரங்களை சமர்ப்பிக்க துறை வாரியான அதிகாரிகளுக்கு தேனி கலெக்டர் ஆர்.வைத்திநாதன் உத்தரவிட்டார்.</p><h2>118 பேர் யார்?</h2><p>ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளுக்கு துணை ராணுவத்தை அனுப்ப நேரிடும் என்று சுப்ரீம் கோர்ட்டு எச்சரித்து இருந்தது. அதே நேரத்தில், வனத்துறை தயாரித்த இந்த ஆக்கிரமிப்பாளர்கள் பட்டியலில் ராணுவ வீரர்கள், துணை ராணுவ வீரர்கள், போலீசார் உள்பட பலரின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள 47 பேர் ராணுவம் மற்றும் துணை ராணுவத்தில் (சி.ஆர்.பி.எப்.) பணியாற்றுபவர்கள்.</p><p>மேலும், போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையை சேர்ந்த 19 பேர், மின்வாரியத்தில் பணியாற்றுவோர் 11 பேர், அங்கன்வாடி, சத்துணவு திட்ட ஊழியர்கள் 13 பேர், கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர், பணியாளர்கள் 7 பேர், வனத்துறையில் பணியாற்றும் 5 பேர், வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் 5 பேர், தபால் துறை, மருத்துவத்துறை, டாஸ்மாக் உள்ளிட்ட இதர துறைகளில் பணியாற்றும் 8 பேர், முன்னாள் ராணுவ வீரர்கள் 3 பேர் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.</p><h2>நோட்டீஸ்</h2><p>முன்னாள் ராணுவ வீரர்களில் ஒருவர் சார்பதிவாளராக உள்ளதாகவும், போலீசாரில் ஒருவர் உளவுப்பிரிவில் பணியாற்றுவதாகவும் அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உள்ள நபர்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>தேசிய ஊரக வேலை திட்டத்தில் ரூ.2,087 கோடி விடுவிக்க மறுப்பு - மத்திய அரசுக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/refusal-to-release-2087-crore-for-the-national-rural-employment-scheme-manickam-tagore-condemns-the-central-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/refusal-to-release-2087-crore-for-the-national-rural-employment-scheme-manickam-tagore-condemns-the-central-government#comments</comments><guid isPermaLink="false">b35b9f63-5c86-43c9-9b6d-b6e8c448eed7</guid><pubDate>Tue, 25 Aug 2026 05:08:29 +0000</pubDate><atom:updated>2026-08-25T05:08:29.690Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,மாணிக்கம் தாகூர்,Central Government,Manickam Tagore</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/yp6l41kz/11.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/yp6l41kz/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;</p><p>”மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.2,087 கோடி நிதியை விடுவிக்காமல் வஞ்சிக்கும் பாஜக மத்திய அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்!</p><p>தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் வெளிவந்துள்ள இந்த உண்மை, மோடி அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை எவ்வாறு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் புறக்கணிக்கிறது என்பதை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது.</p><p>2026-27 நிதியாண்டில் ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை மட்டுமே 29.83 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 31.47 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கி, 3.22 கோடி மனித சக்தி நாட்களை உருவாக்கி ரூ.1,804 கோடியை தமிழக அரசு செலவிட்டுள்ளது. புதிய விபி-ஜி ராம் ஜி (VB-G RAM G) 60:40 திட்டத்தின் கீழும் 81.39 லட்சம் குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டு, 103.18 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசு உரிய நிதியைத் தராமல் இழுத்தடிப்பதால் தமிழ்நாடு அரசு கடுமையான நிதிச் சுமைக்கு ஆளாகியுள்ளது.</p><p>மத்திய அரசு வழங்கிய நிதி 2023-24 இல் ரூ.13,395 கோடியாக இருந்து, 2024-25 இல் ரூ.10,744 கோடியாகக் குறைந்து (19.79% சரிவு), 2025-26 இல் வெறும் ரூ.6,254 கோடியாக (முந்தைய ஆண்டை விட 41.79% சரிவு; 2023-24 உடன் ஒப்பிடுகையில் 53.31% பெரும் சரிவு) திட்டமிட்டு வெட்டப்பட்டுள்ளது.</p><p>மழைப்பொழிவு குறைந்து வாழ்வாதாரம் இழந்து நிற்கும் ஏழை, எளிய, உழைக்கும் மக்களின் வயிற்றிலடிக்கும் இந்த அநீதிக்கு மத்திய மந்திரி சிவராஜ்சிங் சவுகானும், பிரதமர் மோடியும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? ஊரக வளர்ச்சியை முடக்கும் துரோகத்தை நிறுத்தி, நிலுவையில் உள்ள ரூ.2,087 கோடியை உடனடியாக விடுவிக்கக் கோரி மத்திய அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளேன்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>கர்நாடகத்தில் 3 தமிழர்கள் சுட்டுக் கொலை: சட்டசபையில் கேள்வி எழுப்பிய உதயநிதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/3-tamils-shot-dead-in-karnataka-udhayanidhi-raises-question-in-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/3-tamils-shot-dead-in-karnataka-udhayanidhi-raises-question-in-assembly#comments</comments><guid isPermaLink="false">ff159f43-7946-41a2-800e-dd548098ed63</guid><pubDate>Tue, 25 Aug 2026 05:00:51 +0000</pubDate><atom:updated>2026-08-25T05:00:51.276Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,சட்டசபை,dies,Question,Assembly,சுட்டுக் கொலை,தமிழர்கள்,கர்நாடகம்,Tamils,In Karnataka,UdhayanidhiStalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/orgyu6gv/91.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/orgyu6gv/91.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/udhayanidhi-stalin">உதயநிதி ஸ்டாலின்</a> சட்டசபையில் இன்று (ஆக. 25) கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.</p><p>கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயத்தை ஒட்டிய வனப்பகுதியில் மான் வேட்டையாடியதாக குற்றச்சாட்டி, அப்பகுதியைச் சேர்ந்த 3 தமிழர்களை கர்நாடக வனத்துறையினர் கொடூரமான முறையில் சுட்டுக்கொலை செய்தனர். இதுதொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்த உதயநிதி பேசியதாவது:</p><h2>போதுமான நிதி உதவி</h2><p>இறந்த தமிழர்களின் உடற்கூராய்வு விவரங்கள் வெளியே வந்துள்ளது. அதில் கொடூரமாக, சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து உயர்நிலை நீதி விசாரணை மேற்கொள்ள வேண்டும். </p><p>இது தொடர்பாக அந்த மாநில முதல்-மந்திரியிடமிருந்து ஏதேனும் தகவல் பெறப்பட்டுள்ளதா? மூன்று தமிழர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அவர்களுடைய குடும்பத்துடன் துணை நிற்க வேண்டும். அந்தக் குடும்பங்களுக்கு போதுமான நிதி உதவிகளை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் பேசியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>விஜய்காந்தின் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்: முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/may-the-fame-of-vijay-kanth-last-forever-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/may-the-fame-of-vijay-kanth-last-forever-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">71c4140a-01d7-4ead-a64f-7ad6183c5e52</guid><pubDate>Tue, 25 Aug 2026 05:00:12 +0000</pubDate><atom:updated>2026-08-25T05:00:12.426Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,விஜய்காந்த்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/ufpk0s6j/163.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/ufpk0s6j/163.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விஜய்காந்தின் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும் என்று முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.</p><p>இது குறித்து, தமிழக முதல்-அமைச்சர் விஜய் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- </p><h2>புகழ் வணக்கம்</h2><p>மனிதநேயம், துணிச்சல், தன்னலமற்ற சேவை ஆகியவற்றை அடையாளமாகக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D">விஜயகாந்த் </a>அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன்.</p><p>திரைத்துறையில் தனக்கெனத் தனி முத்திரை பதித்ததோடு, அரசியலில் மக்கள் நலனை முன்னிறுத்திய தலைவராகவும் திகழ்ந்து, ஏழை, எளிய மக்களின் மீது அன்பும், அக்கறையும் கொண்டு கொடையுள்ளத்தோடு உதவிய புரட்சிக் கலைஞரின் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தாம்பரம்: வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை -  2 தனிப்படைகள் அமைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bank-atm-machine-broken-and-money-looted-2-special-forces-formed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bank-atm-machine-broken-and-money-looted-2-special-forces-formed#comments</comments><guid isPermaLink="false">66c76cf4-bb1e-4379-a410-76d28fea7487</guid><pubDate>Tue, 25 Aug 2026 04:51:39 +0000</pubDate><atom:updated>2026-08-25T04:51:39.035Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,தாம்பரம்,ATM,Robbery,காவல் துறை,போலீசார் விசாரணை,ஏடிஎம் கொள்ளை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/88mnqatm/atm33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பணம் கொள்ளை]]></media:title><media:description type="html"><![CDATA[ 2 தனிப்படைகள் அமைப்பு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/88mnqatm/atm33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சோமங்கலம் அருகே புதுப்பேர் பகுதியில் தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மர்ம நபர்களால் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.</p><p>காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அருகே புதுப்பேர் பகுதியில் தனியார் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%8F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D">வங்கி ஏடிஎம்</a> இயந்திரத்தை உடைத்து  மர்ம நபர்களால் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பணம் கொள்ளை தொடர்பான வழக்கில் 2 தனிப்படைகள் அமைத்து மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.</p><p>எச்சரிக்கை அலாரம் ஒலிக்கும் இணைப்பை துண்டித்துவிட்டு பணத்தை கொள்ளையடித்து தப்பியோடியது  போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.  கேஸ் கட்டர் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து சுமார் ரூ.9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. கொள்ளை தொடர்பாக நிகழ்விடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>சமீப நாட்களாக தாம்பரம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நகை பறிப்பு, வீடு புகுந்து கொள்ளையடித்தல் சம்பவம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது தனியார் வங்கி ஏடிஎம்மையதிலிருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விஜயகாந்த் பிறந்தநாள் - எடப்பாடி பழனிசாமி புகழாரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vijayakanths-birthday-edappadi-palaniswamis-tribute</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vijayakanths-birthday-edappadi-palaniswamis-tribute#comments</comments><guid isPermaLink="false">230b0611-dc6d-4010-b88f-1d3a578504f5</guid><pubDate>Tue, 25 Aug 2026 04:45:48 +0000</pubDate><atom:updated>2026-08-25T04:45:48.004Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,பிறந்தநாள்,விஜயகாந்த்,புகழாரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/6tnh3xp5/90.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/6tnh3xp5/90.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>விஜயகாந்த் பிறந்தநாள்</h2><p>தமிழ்த் திரைத்துறை ஆளுமையும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனரும், முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான மறைந்த அன்புச் சகோதரர் “பத்ம பூஷன்” <a href="https://www.dailythanthi.com/topic/vijaykanth">விஜயகாந்த்</a> அவர்களின் பிறந்தநாளான இன்று, </p><p>அவர்தம் கலைத்துறைச் சாதனைகளையும் பொதுவாழ்வில் அவர் தமிழக மக்கள் மீது காட்டிய பேரன்பையும் நினைவுகூர்கிறேன்.</p><p>மண்ணை விட்டு மறைந்தாலும், ‘கேப்டன்’ என்ற பெயரும், உங்கள் புகழும் காலம் கடந்து நிலைத்திருக்கும்..!!!”</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஆசிரியர் தகுதித்தேர்வு; சட்டசபையில் அரசினர் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/teacher-eligibility-test-government-resolution-unanimously-passed-in-the-legislative-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/teacher-eligibility-test-government-resolution-unanimously-passed-in-the-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">4861e00f-3d1d-4eaa-a646-1dfaa7830c6a</guid><pubDate>Tue, 25 Aug 2026 04:41:45 +0000</pubDate><atom:updated>2026-08-25T04:41:45.249Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,TN Assembly,TET exam,ஆசிரியர் தகுதித்தேர்வு,Teacher Eligibility Test,அமைச்சர் ராஜ்மோகன்,Rajmohan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/txte4v4t/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/txte4v4t/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக சட்டசபையில் தனித் தீர்மானத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கொண்டு வந்தார். 2010 ஆகஸ்ட் 23-ம் தேதிக்கு முன்பாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி தீர்மானம் கொண்டு வரப்பட்டது.</p><p><strong>இதுகுறித்து அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது:-</strong></p><p>கட்டாய டெட் தேர்வு தேர்ச்சி என்ற உத்தரவால் 3.28 லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2010 ஆகஸ்ட் 23க்கு முன்பாக நியமனம் செய்யப்பட்ட ஆசியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து முழுமையான விலக்கு வேண்டும்; இதற்கு மத்திய அரசு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் உரிய திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என கூறினார்.</p><p>அரசின் தனித் தீர்மானத்துக்கு திமுக, அதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதனையடுத்து அரசின் தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>கடமானை வேட்டையாடிய 6 பேர் கைது: நாட்டு துப்பாக்கி பறிமுதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/6-arrested-for-hunting-deer-country-made-gun-seized</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/6-arrested-for-hunting-deer-country-made-gun-seized#comments</comments><guid isPermaLink="false">b6077d7e-7571-4e72-b479-5b5095fb3399</guid><pubDate>Tue, 25 Aug 2026 04:21:11 +0000</pubDate><atom:updated>2026-08-25T04:21:11.832Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrest,பறிமுதல்,seized,நீலகிரி,நாட்டு துப்பாக்கி,hunt,வேட்டை,கடமான்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/wnx5f5hp/162.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/wnx5f5hp/162.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோத்தகிரி, </p><p>கோத்தகிரி அருகே வனப்பகுதியில் துப்பாக்கியால் சுட்டு கடமானை வேட்டையாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.</p><h2>கடமான்</h2><p>நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட கக்குச்சி அருகே உள்ள கனாகம்பை வனப்பகுதியில் வனச்சரகர் ஜெயகுமார் தலைமையிலான வனத்துறையினர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். </p><p>அப்போது அங்கு கடமானின் தோல் கிடந்ததை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">வனத்துறையினர்</a> பார்த்து ஆய்வு செய்தனர். இதில், மர்ம நபர்கள் கடமானை வேட்டையாடி விட்டு, அதன் இறைச்சியை கொண்டு சென்றது தெரியவந்தது.</p><h2>விசாரணை</h2><p>இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் கோவை மாவட்டம் காரமடை திம்மம்பாளையம் புதூரை சேர்ந்த வேலு (வயது 36), சூர்யா (32), மாணிக்கம் (36), ஊட்டி கனாக்கம்பையை சேர்ந்த செந்தில்குமார் (45), விஸ்வநாதன் (38), சின்னதுரை (43) ஆகிய 6 பேர் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து கடமானை நாட்டு துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடியது தெரியவந்தது.</p><h2>சிறை</h2><p>இதையடுத்து அவர்கள் 6 பேரையும் நேற்று வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்கள் வேட்டைக்கு பயன்படுத்திய நாட்டு துப்பாக்கி, கத்தி மற்றும் கடமானின் தோல் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட 6 பேரையும் வனத்துறையினர் நேற்று இரவு கோத்தகிரி மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.</p><h2>வனத்துறை</h2><p>இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், கடமான், வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்ட, மிக உயரிய பாதுகாப்பு கொண்ட விலங்காகும். இவற்றை வேட்டையாடுவது பிணையில் வெளிவர முடியாத கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, வனவிலங்குகளை வேட்டையாடுவதோ அல்லது அவற்றின் இறைச்சியை வாங்குவதோ சட்டப்படி குற்றம். எனவே, யாரும் இத்தகைய செயல்களில் ஈடுபடக்கூடாது என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>3 தமிழர்கள் மீதும் மிக அருகில் இருந்து துப்பாக்கியால் சுட்டது அம்பலம்; பிரேத பரிசோதனையில் &apos;பகீர்&apos; தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/revelation-that-the-three-tamils-were-shot-at-from-very-close-range-shocking-details-emerge-from-the-post-mortem</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/revelation-that-the-three-tamils-were-shot-at-from-very-close-range-shocking-details-emerge-from-the-post-mortem#comments</comments><guid isPermaLink="false">e23c9a8a-11f8-4d72-b6e5-72974b62ba77</guid><pubDate>Tue, 25 Aug 2026 04:18:52 +0000</pubDate><atom:updated>2026-08-25T04:18:52.055Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Encounter,துப்பாக்கி,Tamilans,தமிழர்கள்,என்கவுண்ட்டர்,சாம்ராஜ்நகர்,பிரேத பரிசோதனை அறிக்கை,postmortem,Samrajnagar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/6y7b2wjk/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/6y7b2wjk/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சாம்ராஜ்நகரில் நடந்த என்கவுண்ட்டரில் 3 தமிழர்கள் பலியான வழக்கில் பிரேத பரிசோதனை அறிக்கையில் பகீர் தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் 3 பேர் மீதும் மிக அருகில் இருந்து துப்பாக்கியால் சுடப்பட்டது தெரியவந்துள்ளது.</p><h2>3 தமிழர்கள்</h2><p>கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் காவேரி வனப்பகுதிக்கு உட்பட்ட சாக்கியா கிராமத்தையொட்டிய வனப்பகுதி யில் கடந்த 15-ந் தேதி வனத்துறையினரால் அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர் மற்றும் செபஸ்டின் டேவிட் குமார் ஆகிய 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் வனவிலங்குகளை வேட்டையாடியதாக வனத்துறையினர் கூறியிருந்தனர். ஆனால் இது ஒரு திட்டமிட்ட கொலை என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டினர்.</p><p>இதுகுறித்து சாம்ராஜ்நகர் மாவட்ட உதவி கலெக்டர் தினேஷ் குமார் மீனா தலைமையிலான அதிகாரிகள் குழுவினரும், போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று என்கவுண்ட்டரில் பலியான 3 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.</p><h2>திடீர் திருப்பம்</h2><p>அதாவது என்கவுண்ட்டரில் பலியான செபஸ்டின் டேவிட் குமாரின் உடலில் இருந்த துப்பாக்கி குண்டுகள் மிகவும் அருகில் இருந்து சுடப்பட்டவை என்றும், அவரது உடலில் உள்காயங்கள் இருந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உடலில் நெஞ்சு, தொடை, வயிற்றுப் பகுதிகளில் துப்பாக்கி குண்டுகள் துளைத்ததற்கான காயங்களும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p><p>மேலும் அந்த தோட்டாக்களின் அளவும், ஏற்கனவே சம்பவம் நடந்த இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட தோட்டாக்களின் அளவும் சரியாக இருப்பதாகவும், அதனால் அவரை மிகவும் அருகில் இருந்தே என்கவுண்ட்டர் செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதேபோல்தான் அந்தோணிசாமி மற்றும் ஜான் ரோஸ் பீட்டர் ஆகியோரின் உடல்களிலும் துப்பாக்கி குண்டுகள் துளைத்திருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p><p>அதுமட்டுமின்றி 3 பேரின் உடல்களிலும் 8.5 சென்டி மீட்டர் அகலத்தில், 6 சென்டி மீட்டர் ஆழத்துக்கு காயங்கள் உள்ளன. அவை எப்படி ஏற்பட்டது என்பது குறித்து தெரியவில்லை என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன்காரணமாக இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மிலாது நபி: நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-shops-to-be-closed-tomorrow-on-account-of-milad-un-nabi-chennai-collector-announces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-shops-to-be-closed-tomorrow-on-account-of-milad-un-nabi-chennai-collector-announces#comments</comments><guid isPermaLink="false">01b2dcca-9c29-4a23-9f0f-ef8272daa51d</guid><pubDate>Tue, 25 Aug 2026 04:13:53 +0000</pubDate><atom:updated>2026-08-25T04:13:53.853Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Tasmac,Shops closed,மிலாது நபி,collector announcement,கலெக்டர் அறிவிப்பு,டாஸ்மாக் கடைகள் மூடல்,milad-e-nabi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/53a2by96/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/53a2by96/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF">மிலாது நபி</a>யை முன்னிட்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">டாஸ்மாக் கடைகள் </a>நாளை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D">மூடப்படும்</a> என்று சென்னை கலெக்டர் மாலதி ஹெலன் அறிவித்துள்ளார்.</p><h2>நாளை மிலாது நபி; டாஸ்மாக் கடைகள் மூடல்</h2><p>மிலாது நபியை முன்னிட்டு நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக சென்னை மாவட்ட கலெக்டர் மாலதி ஹெலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>மிலாது நபியை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், எப்.எல்.2 உரிமம் கொண்ட பார்கள், எப்.எல்.3 உரிமம் கொண்ட ஓட்டல்களை சேர்ந்த பார்கள் மற்றும் எப்.எல்.3 (ஏ), எப்.எல்.3 (ஏ.ஏ.) முதல் எப்.எல்.11 வரை உரிமம் கொண்ட மதுபான விற்பனையகங்கள், மதுபான கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும். மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப்படுகிறது. தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>விஜய்-ஐ சந்தித்து தவெகவில் இணையும் பிரபல மலையாள நடிகர்; கேரளாவில் முக்கிய பொறுப்பு?

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/popular-malayalam-actor-to-join-tvk-after-meeting-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/popular-malayalam-actor-to-join-tvk-after-meeting-vijay#comments</comments><guid isPermaLink="false">f85c4d96-16dd-4c67-ac13-567516b25b2e</guid><pubDate>Tue, 25 Aug 2026 04:11:35 +0000</pubDate><atom:updated>2026-08-25T04:11:35.036Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,cinema News,Vijay,விஜய்,கேரளா,Kerala,சினிமா செய்தி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/mbjm8tii/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/mbjm8tii/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[   <p>சென்னை,</p><p>தமிழகத்தில் முதல்-அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/">விஜய் </a>தலைமையிலான தவெக அரசின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே, கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற பிற தென்மாநிலங்களில் கட்சியை வளர்க்க தவெக திட்டமிட்டு வருகிறது. அதற்கான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. </p><p>இதனிடையே, பிரபல மலையாள நடிகர் தேவன். இவர் மலையாளத்தில் 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் பாட்ஷா, வாத்தியார், ஆதி, சிவகாசி போன்ற படங்களிலும் நடித்து புகழ்பெற்றுள்ளார்.</p><h2>பாஜகவில் இருந்து விலகல்</h2><p>இதனிடையே, இவர் கேரளா மக்கள் கட்சி என்ற கட்சியை கடந்த 2024ம் தொடங்கினார். இதனை தொடர்ந்து அவர் பாஜகவில் இணைந்தார். அவருக்கு பாஜக மாநில துணைப்பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக பாஜகவில் இருந்த தேவன் கடந்த 17ம் தேதி  பதவியை ராஜினாமா செய்தார். மேலும், பாஜகவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். கடினமான உழைத்தும் பாஜகவில் தனக்கு போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று கூறி அவர் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். </p><h2>தவெகவில் இணையும் நடிகர் தேவன்</h2><p>இந்நிலையில், பாஜகவில் இருந்து விலகிய நடிகர் தேவன் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் தேவன் வரும் 10ம் தேதி சென்னைக்கு வந்து முதல்-அமைச்சர் விஜய்-ஐ சந்தித்து தவெகவில் இணைய உள்ளார். அவருக்கு கேரளாவில் தவெக மாநிலத்தலைவர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>கோவை குற்றாலம் அருவியில் குளிக்க தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bathing-prohibited-at-coimbatore-courtallam-falls</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bathing-prohibited-at-coimbatore-courtallam-falls#comments</comments><guid isPermaLink="false">cae957a1-133d-4c79-85de-59cd0117fdc7</guid><pubDate>Tue, 25 Aug 2026 04:00:29 +0000</pubDate><atom:updated>2026-08-25T04:00:29.444Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Covai,குளிக்க தடை,Courtallam Falls,அருவி,bathing prohibited,கோவை குற்றாலம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/ruv3qxo8/covai-cutralam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/ruv3qxo8/covai-cutralam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை</p><p>கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. கோவையின் பிரதான சுற்றுலாத்தலமான இந்த நீர்வீழ்ச்சிக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.</p><h2>கோவை குற்றாலம் அருவி</h2><p>இந்த நீர்வீழ்ச்சியில் வாரந்தோறும் திங்கட்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D">கோவை குற்றாலம்</a> அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.</p><h2>குளிக்க தடை</h2><p>இதனால் கோவை குற்றாலம் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து இன்று கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவியில் நீர்வரத்து சீராகும் வரை கோவை குற்றாலம் அருவி மூடப்படும் என்றும், மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகள் கோவை குற்றாலத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் வனத்துறை அறிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நீலகிரியில் சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை பலி: விவசாயி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/leopard-dies-after-getting-stuck-in-barbed-wire-in-nilgiris-farmer-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/leopard-dies-after-getting-stuck-in-barbed-wire-in-nilgiris-farmer-arrested#comments</comments><guid isPermaLink="false">62b475ec-4e08-49fa-bc32-7678ee85c0c5</guid><pubDate>Tue, 25 Aug 2026 03:53:28 +0000</pubDate><atom:updated>2026-08-25T03:53:28.202Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,farmer,விவசாயி,arrest,நீலகிரி,Nilgiri,சிறுத்தை உயிரிழப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/i8gza26z/161.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/i8gza26z/161.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஊட்டி, </p><p>ஊட்டி அருகே சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை இறந்தது. இதுதொடர்பாக சுருக்கு வைத்த விவசாயியை வனத்துறையினர் கைது செய்தனர்.</p><p>நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளன. இதனால் வனவிலங்குகள் தாக்கி மனிதர்கள் பலியாவதும். நாட்டு வெடி மற்றும் சுருக்கு வைத்து காட்டுப்பன்றிகள், மான், முயல் போன்றவற்றை வேட்டையாடும் சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக காடுகள், தேயிலை தோட்டங்கள். தனியார் பட்டா நிலங்களின் எல்லைகளில் சுருக்கு அதிகளவில் வைக்கப்படுகின்றன. இதில் சிறுத்தை, புலி போன்ற வனவிலங்குகளும் சிக்கி உயிரிழக்கின்றன.</p><h2>சிறுத்தை</h2><p>இந்தநிலையில் நீலகிரி வன கோட்டத்திற்கு உட்பட்ட ஊட்டி தெற்கு வனச்சரகம் இத்த லார் அருகே அட்டுபாயில் கரிக்காடு பகுதியில். இத்தலார் பகுதியை சேர்ந்த ரகுநாத் என்பவர் தனியார் விளைநிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். இந்த நிலம், காப்பு காட்டுக்கு மிக அருகில் உள்ளது. இதற்கிடையே இந்த விளைநிலத்தில் உள்ள வேலியில் சிறுத்தை சிக்கி உயிருக்கு போராடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது பெண் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88">சிறுத்தை</a> சுருக்கு கம்பியில் சிக்கி இருந்தது கண்டறியப் பட்டது.</p><p>இதைத்தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் கஷ்யப் ஷஷாங் ரவி தலைமையில் வன கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு சுருக்கு கம்பியில் சிக்கிய சிறுத்தையை மீட்க மயக்க ஊசி செலுத்தப்பட்டது. பின்னர் அதன் வயிற்றில் சுற்றியிருந்த சுருக்கு கம்பியை வெட்டியெடுத்து மீட்கப்பட்டது. சிறுத்தையின் உடலில் ஏற்பட்டிருந்த காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தது.</p><h2>கைது</h2><p>இதுதொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விவசாயியான சண்முகநாதன் (வயது 57) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தோட்டத்தில் கேரட் பயிரிட்டு வருவதால், அங்கு மான், காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகமாக இருந்துள்ளது. அதனை தடுக்கவும், அச்சுறுத்தவும் கிளச் வயர் மூலமாக சண்முகநாதன் சுருக்கு வைத்ததும், எதிர்பாராதவிதமாக சிறுத்தை சிக்கி கொண்டதும் தெரியவந்தது. அவரை வனத்துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500-வழங்காதது ஏன்? பிரேமலதா கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-is-the-womens-entitlement-of-rs-2500-not-being-provided-premalatha-questions</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-is-the-womens-entitlement-of-rs-2500-not-being-provided-premalatha-questions#comments</comments><guid isPermaLink="false">7f3c2111-b4e9-49ba-92be-be27233ef9f0</guid><pubDate>Tue, 25 Aug 2026 03:35:36 +0000</pubDate><atom:updated>2026-08-25T03:35:36.514Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,விஜய்,மகளிர் உரிமைத்தொகை,பிரேமலதா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/u3b6gybc/lathaa33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
மகளிர் உரிமைத்தொகை]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரேமலதா கேள்வி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/u3b6gybc/lathaa33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளை அவரது கட்சியினர் ஒவ்வொரு ஆண்டும் வறுமை ஒழிப்பு தினமாக கடைப்பிடித்து வருகின்றனர். இதை யொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நேற்று வறுமை ஒழிப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமை தாங்கினார். </p><p>இதில் பொருளாளர் எல்.கே.சுதீஷ் எம்.பி., உயர்மட்டக்குழு உறுப்பினர் நல்லதம்பி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது, ராமாபுரம் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார்.</p><p>பின்னர் நிருபர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:-</p><p>வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு டெல்லி தமிழ் சங் கத்துக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்குகிறோம். தேர்தலில் வாக் குறுதி அளித்தால் அதை நிறைவேற்ற வேண்டும். நிறை வேற்ற முடியாது என்றால் ஏன் வாக்குறுதி கொடுக்கிறீர் கள்? த.வெ.க. அரசு இன்றுவரை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%20">மகளிர் உரிமைத்தொகை </a>ரூ.2,500 வழங்காதது ஏன்? 'மாற்றம், மாற்றம்' என்று கூறி எந்தவிதமான மாற்றமும் தமிழ்நாட்டில் இல்லை. </p><p>தே.மு.தி.க., தி.மு.க.வுடன்தான் கூட்டணி என்பதில் உறுதியாக உள்ளது. ஒரு கட்சியில் 2 பேர் வெற்றி பெற்றதும் அமைச்சர் பதவிக்காக கூட்டணி மாறி சென்று விட்டார்கள். எனக்கும் அழைப்பு வந்தது, ஆனால் நான் செல்ல வில்லை. எங்களுடைய கூட்டணி நிலைப்பாட்டில் என்றைக்கும் மாற்றம் இருக்காது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>அஞ்செட்டி அருகே வனப்பகுதியில் கிடந்த மண்டை ஓடு, எலும்பு;
கொலையா? போலீசார் விசாரணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/skull-and-bones-found-in-forest-near-anchetty-murder-police-investigating</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/skull-and-bones-found-in-forest-near-anchetty-murder-police-investigating#comments</comments><guid isPermaLink="false">737d4d3b-77dc-431c-98f3-12186a0d1ade</guid><pubDate>Tue, 25 Aug 2026 03:33:07 +0000</pubDate><atom:updated>2026-08-25T03:33:07.053Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வனப்பகுதி,Forest,Police investigating,போலீசார் விசாரணை,Bones,மண்டை ஓடு,அஞ்செட்டி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/aigu5p28/89.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/aigu5p28/89.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேன்கனிக்கோட்டை,</p><p>அஞ்செட்டி அருகே வனப்பகுதியில் மண்டை ஓடு, தொடை எலும்பு மற்றும் நொறுங்கிய செல்போன் கண்டெடுக்கப்பட்டது. அவற்றை போலீசார் கைப்பற்றி யாரேனும் கொலை செய்யப்பட்டார்களா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>மண்டை ஓடு</h2><p>கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே பனையூர் கிராமத்தையொட்டி, அடர்ந்த காப்பு காடு உள்ளது. இங்குள்ள குந்துக்கோட்டை வனப்பகுதியில் வனக்காப்பாளர் சிவக்குமார் ரோந்து சென்றார். அப்போது அங்கு மனித மண்டை ஓடு மற்றும் தொடை எலும்பு, ஒரு ஜோடி செருப்பு மற்றும் உடைந்த செல்போனின் உதிரி பாகங்கள் கிடந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.</p><p>அதன்பேரில், வனத்துறையினர் அஞ்செட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று வனப்பகுதியில் கிடந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%81">மண்டை ஓடு</a> மற்றும் பொருட்களை கைப்பற்றி பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இறந்து போன நபர் யார்? அவர் கொலை செய்யப்பட்டரா? என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே பனையூர் கிராமத்தை சேர்ந்த சின்னசாமி என்பவர் சுமார் 4 மாதங்களுக்கு முன்பு காணாமல் போய் உள்ளார். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது. இறந்தவர் அவராக இருக்கலாமா? என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.</p><p>இறந்தவரின் எலும்பு மற்றும் மண்டை ஓட்டை பரிசோதனை செய்த பின்பு தான் அவரது வயது மற்றும் விவரங்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். வனப்பகுதியில் மண்டை ஓடு, எலும்பு கிடந்த சம்பவம் அஞ்செட்டி அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நீலகிரி: ஓவேலியை தொடர்ந்து கூடலூரிலும் புலி நடமாட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-after-oveli-tigers-also-roam-in-gudalur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-after-oveli-tigers-also-roam-in-gudalur#comments</comments><guid isPermaLink="false">6b774cd3-c11e-48ce-bdfd-8b6bd05b0612</guid><pubDate>Tue, 25 Aug 2026 03:30:04 +0000</pubDate><atom:updated>2026-08-25T03:30:04.141Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>நீலகிரி,Tiger,புலி,Nilgiri</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/8qkp4nff/6.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/8qkp4nff/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி, </p><p>நீலகிரி மாவட்டம் ஓவேலி லாரஸ்டன் பகுதியில் புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். இருப்பினும், புலியை பிடிக்கும் வரை பொதுமக்கள் வெளியே தனியாக நடமாடக்கூடாது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட புத்தூர் வயல் கவலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள தேயிலை தோட் டத்தில் நேற்று மதியம் செடிகள் அசைவதை பெண்கள் கண்டனர். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் புலி ஒன்று தேயிலை செடிகளுக்கு இடையே நடமாடுவதை கண்டு பீதி அடைந்து கூச்சலிட்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. </p><p>மதிய வேளை என்பதால் வீட்டில் இருந்த பெண்கள் சத்தம் எழுப்பினர். இதனால் புலி அங்கிருந்து சென்றது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, புத்தூர்வயல் கவலை, விமல கிரி, மார்த்தோமா நகர் பகுதியில் நீண்ட காலமாக புலி ஒன்று நடமாடு கிறது. வழக்கமாக இரவில் உலா வரும் நிலையில் பட்டப்பகலில் வீட்டின் அருகே வந்து உள்ளதால் பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, புலியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>காங்கிரஸ் அமைச்சர்களின் இடம் ஆட்டம் காணுமோ என்ற சந்தேகம் எழுகிறது: நடிகை கஸ்தூரி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/doubts-arise-as-to-whether-the-positions-of-congress-ministers-are-shaky-actress-kasthuri</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/doubts-arise-as-to-whether-the-positions-of-congress-ministers-are-shaky-actress-kasthuri#comments</comments><guid isPermaLink="false">d8478929-f573-4606-9158-35b564be33bc</guid><pubDate>Tue, 25 Aug 2026 03:28:21 +0000</pubDate><atom:updated>2026-08-25T03:28:21.513Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,காங்கிரஸ்,Congress,நடிகை கஸ்தூரி,Actress Kasthuri,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/1ha14b7k/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/1ha14b7k/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>கும்பகோணம்,</p><p>கும்பகோணத்தில் கோவில்களில் சாமி தரிசனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் நடிகை கஸ்தூரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-</p><p>சட்டமன்றத்திலும் பொதுவெளியிலும் நாகரிகமான பேச்சுவழக்கை பின்பற்ற வேண்டும். அரசியல் காரணங்களுக்காக பெண்களையும் அவர்களின் குடும்பத்தாரையும் தரக்குறைவாக பேசுவது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அரசியல் லாபத்திற்காக ஒருவரை இழிவுபடுத்த நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களின் சுதந்திரத்தையும் முடக்க முயல்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.</p><p>த.வெ.க. அரசு 100 நாட்களை கடந்துள்ள நிலையில், மக்கள் பொறுமையுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள். பாலியல் பிரச்சினைகள் மற்றும் போதை கலாசாரத்திற்கு முந்தைய ஆட் சியை காரணம் காட்டாமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பரந்தூர் திட்டம் கைவிடப்படுவதாக முதல்-அமைச்சர் விஜய் அறிவித்திருப்பது தமிழகத்தின் மிகப்பெரிய பின்னடைவு. திமுக அரசு கொண்டுவந்த ஒரே காரணத்துக்காக தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகளை தவெக அரசு கைவிடும் என்றால் அது மிகப்பெரிய தவறு.</p><p>சேலம் விவசாயிகளுக்கு நீதி கிடைத்தது போல், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் பரந்தூரிலும் என்ன செய்ய முடி யும் என்பது குறித்து முதல்-அமைச்சர் விஜய் மறுபரிசீலனை செய்ய வேண்டும். த.வெ.க. காங்கிரஸ் கூட்டணி நல்ல முறையில் இருக்கும் போதே மேகதாது அணை விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண் டும்.</p><p>த.வெ.க.வுடன் காங்கிரஸ் கட்சிக்கு மோதல் போக்கு ஏற்பட்டு விட்டதோ? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இன்றைய முதல்-அமைச்சர் நாளயை பிரதமர் என்ற த.வெ.க.வினர் கருத்துவிற்கும், பேறுகால விடுப்பு அறிவிப்பிற்கும் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இடைத்தேர்தலில் த.வெ.க. தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றால் காங்கிரஸ் அமைச்சர்களின் இடம் ஆட்டம் காணுமோ? என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>போதைப்பொருள் வழக்கில் முன்னாள் அமைச்சரின் உறவினர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/former-ministers-relative-arrested-in-drug-case</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/former-ministers-relative-arrested-in-drug-case#comments</comments><guid isPermaLink="false">08f666eb-fe18-455b-9378-88a90c3c95de</guid><pubDate>Tue, 25 Aug 2026 03:24:41 +0000</pubDate><atom:updated>2026-08-25T03:24:41.671Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,போதைப்பொருள்,former minister,முன்னாள் அமைச்சர்,வழக்கு,drug case,உறவினர் கைது,relative arrested</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/c45mincw/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/c45mincw/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னையில் போதைப்பொருள் வழக்கில் முன்னாள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D">அமைச்சரின்</a> உறவினர் ஒருவரை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்தனர்.  </p><h2>போதைப்பொருள் பறிமுதல்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a> அயனாவரத்தை சேர்ந்த சாய்தீபக் (வயது 25), கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D">போதைப்பொருள்</a> பதுக்கி விற்ற வழக்கில் திரு.வி.க. நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 20 கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. </p><h2>அமைச்சரின் உறவினர் கைது</h2><p>விசாரணையில், பெங்களூருவை சேர்ந்த துளசிராமிடம் இருந்து போதைப் பொருளை வாங்கி, 'ஜில்லு' கணேசுக்கு விற்றதாக தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த துளசிராம் மற்றும் 'ஜில்லு' கணேசை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், தனிப்படை போலீசார் நேற்று ஓட்டேரியில் நம்மாழ்வார்பேட்டையை சேர்ந்த 'ஜில்லு' கணேஷ்(33) என்பவரை கைது செய்தனர். இவர், முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவின் உறவினர் என கூறப்படுகிறது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், தலைமறைவாக உள்ள துளசிராமை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>ஓணம் பண்டிகை: தோவாளை மார்க்கெட்டில் ஒரே நாளில் 1,000 டன் பூக்கள் விற்பனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-festival-1000-tonnes-of-flowers-sold-in-a-single-day-at-thovalai-market</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-festival-1000-tonnes-of-flowers-sold-in-a-single-day-at-thovalai-market#comments</comments><guid isPermaLink="false">a8f0cdbf-8427-45a8-ae99-b70cead7161f</guid><pubDate>Tue, 25 Aug 2026 03:17:06 +0000</pubDate><atom:updated>2026-08-25T03:17:06.320Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Onam festival,ஓணம் பண்டிகை,Thovalai,தோவாளை,தோவாளை மலர் சந்தை,Thovalai flower market</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/ltoixz4w/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/ltoixz4w/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>குமரி,</p><h2>தோவாளை மார்க்கெட்</h2><p>தோவாளையில் புகழ்பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. தினமும் இந்த மார்க்கெட்டில் பல விதமான பூக்கள் பல்வேறு இடங்களிலிருந்து வந்து குவிகின்றன. சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை பூக்களை வாங்கி விற்பனை செய்து வருகின்றனர். இங்கிருந்து பூக்கள் உள்ளூர் மட்டுமன்றி வெளி மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலமான கேரளத்திற்கும் விற்பனையாகின்றன.</p><p>இங்கு பண்டிகை, கோவில் திருவிழா, முகூர்த்தம் உள்ளிட்ட நாட்களில் பூக்களின் விலை உயர்ந்தும், விழாக்கள் இல்லாத நாட்களில் குறைவாகவும் இருக்கும். குறிப்பாக ஓணம் மற்றும் சரஸ்வதி பூஜை நாட்களில் பூக்களின் விலை மிக அதிகமாக இருக்கும். மேலும், ஓணம் பண்டிகையையொட்டி வெளியூர்களிலிருந்து ஆயிரக்கணக்கான டன் பூக்கள் வந்து குவியும். அவை அனைத்தும் 2 நாட்களில் விற்று தீர்ந்துவிடும். வருடத்தில் ஒரு நாள் மட்டும் இந்த மார்கெட்டில் இரவு ஓணம் பண்டிகை சிறப்பு விற்பனை நடை பெறும்.</p><h2>1,000 டன் பூக்கள் விற்பனை</h2><p>இந்த ஆண்டு ஓணம் பண்டிகை நாளை (புதன்கிழமை) கொண்டாப்படுகிறது. இதனால் தோவாளை மார்க்கெட் களை கட்டி உள்ளது. பூக்கள் வெளியூர்களிலிருந்து டன் கணக்கில் வந்து விற்பனையாகி கொண்டிருக்கிறது. இதையொட்டி ஆண்டுக்கு ஒருநாள் நடைபெறும் ஓணம் சிறப்பு விற்பனை நேற்று இரவு 11 மணிக்கு தொடங்கி விடிய விடிய நடைபெற்றது.</p><p><strong>இதுகுறித்து பூ வியாபாரிகள் சங்கத்தலைவர் கிருஷ்ணகுமார் கூறியதாவது:-</strong></p><p>ஓணம் பண்டிகையையொட்டி வெளியூர்களில் இருந்து முன்பதிவு செய்யப்பட்ட கிரேந்தி, செவ்வந்தி, ரோஜா, அரளி உள்ளிட்ட கலர் பூக்கள் 2 நாட்களாக 1,000 டன் வந்து மார்க்கெட் டில் வந்து குவிந்தன. அவை அனைத்தும் நேற்று ஒரே நாளில் விற்பனையானது. மேலும் உள்ள பூக்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) பகல் முழுவதும் விற்பனையாகிவிடும். கேரளத்தில் இருந்து வருகை தந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பூக்களை வாங்கி செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>இறைச்சி சமைத்து சாப்பிட்டபோது விபரீதம்: கிணற்றில் விழுந்த தொழிலாளி உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-worker-died-after-accidentally-falling-into-a-well-while-washing-a-vessel-used-to-cook-meat</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-worker-died-after-accidentally-falling-into-a-well-while-washing-a-vessel-used-to-cook-meat#comments</comments><guid isPermaLink="false">e3d489ed-0e52-432d-bdf6-ecbad96be920</guid><pubDate>Tue, 25 Aug 2026 02:44:14 +0000</pubDate><atom:updated>2026-08-25T02:44:14.917Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,ஆரணி,Die,தொழிலாளிWorker,கிணறுwell</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/yqvgucio/294.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பலி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/yqvgucio/294.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஆரணி, </p><p>ஆரணி அருகே விவசாய நிலத்தில் மது அருந்திய நண்பர்கள் கறிசமைத்து சாப்பிட்டனர். அதன்பின் பாத்திரத்தை கழுவுவதற்காக போதையில் கிணற்றில் இறங்கிய தொழிலாளி தவறி விழுந்து பலியானார்.</p> <h2>தொழிலாளி</h2><p>ஆரணி பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்த பூங்காவனம் (வயது 35). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இவர் மற்றும் இவரது 3 நண்பர்கள் சேவூர் பைபாஸ் சாலையையொட்டி உள்ள விவசாய நிலத்தில் மது அருந்தி உள்ளனர். அப்போது அவர்களே கோழி மற்றும் ஆட்டு இறைச்சி எடுத்துச் சென்றதாகவும் அந்த இடத்திலேயே கல்லால் அடுப்பு மூட்டி போதையிலேயே சமைத்து சாப்பிட்டு உள்ளனர். </p><p>அதன்பிறகு 4 பேரும் உணவு பாத்திரங்களை கழுவி உள்ளனர். கடாயை கழுவுவதற்காலிக பூங்காவனம் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் இறங்கி தண்ணீரை எடுக்க முயன்றார். அப்போது அவர் கால் தவறி கிணற்றில் விழுந்து விட்டார். வெகு நேரமாகியும் வெளியே வராததால் உடன் வந்த நண்பர்கள் கிணற்றில் குதித்து அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.</p><h2>மீட்பு பணி</h2><p>இது குறித்து அவர்கள் 108 அவசர ஆம்புலன்ஸ்க்கும். ஆரணி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலர் ஏழுமலை தலைமையில் படைவீரர்கள் சென்று சுமார் 2 மணி நேரம் போராடி பூங்காவனத்தின் உடலை பிணமாக மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து ஆரணி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">விசாரணை</a> நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சாலையில் நடந்து சென்ற பெண்ணை கீழே தள்ளி பாலியல் தொல்லை: ரவுடி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rowdy-arrested-for-pushing-down-and-sexually-harassing-a-woman-walking-on-the-road</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rowdy-arrested-for-pushing-down-and-sexually-harassing-a-woman-walking-on-the-road#comments</comments><guid isPermaLink="false">41bd9dc9-fb3a-405f-a1db-b39c94365486</guid><pubDate>Tue, 25 Aug 2026 02:37:30 +0000</pubDate><atom:updated>2026-08-25T02:37:30.569Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Walking,Woman,rowdy arrested,ரவுடி கைது,sexually harassing,நடந்து சென்ற பெண்,பாலியல் தொல்லை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/8dnpjg6y/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெண்ணுக்கு பாலியல் தொல்லை; கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/8dnpjg6y/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை ராயப்பேட்டை பகுதியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை கீழே தள்ளி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88">பாலியல் தொல்லை</a> கொடுத்த ரவுடியை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர்.  </p><h2>பெண்ணுக்கு பாலியல் தொல்லை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a> ராயப்பேட்டை, பீட்டர்ஸ் சாலை மேம்பாலத்திற்குக் கீழே நேற்று முன்தினம் மாலையில் பெண் ஒருவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் அந்த பெண்ணை பின்தொடர்ந்து சென்று போதை ஆசாமி ஒருவர், தகராறில் ஈடுபட்டுள்ளார். அந்த பெண் சத்தம்போடவே, அந்த பெண்ணின் கழுத்தைப் பிடித்து கீழே தள்ளி கொலை மிரட்டலிலும் ஈடுபட்டுள்ளார். அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரிகிறது.</p><h2>ரவுடி கைது</h2><p>இதுதொடர்பாக அந்த பெண் கொடுத்த புகாரின்பேரில் அண்ணாசாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ், வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். இதையடுத்து பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சென்னை மயிலாப்பூர், அம்பேத்கர் பாலம் பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது 36) கைது செய்யப்பட்டார். ரவுடியான அவர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். </p>]]></content:encoded></item><item><title>மரபணு நோயால் உயிருக்கு போராடும் 6 மாத குழந்தை: அரசு உதவி கோரி பெற்றோர் மனு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/parents-petition-government-for-help-for-six-month-old-infant-battling-a-genetic-disease</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/parents-petition-government-for-help-for-six-month-old-infant-battling-a-genetic-disease#comments</comments><guid isPermaLink="false">33af504a-1ff7-476c-ab3b-5d523b8ec314</guid><pubDate>Tue, 25 Aug 2026 02:23:13 +0000</pubDate><atom:updated>2026-08-25T02:23:13.408Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Government,ஊட்டி,நீலகிரி,அரசு,Parents,ஊசி,Help,கலெக்டர் அலுவலக</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/nahsshrt/293.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெற்றோர் மனு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/nahsshrt/293.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஊட்டி, </p><p>மரபணு நோயால் உயிருக்கு போராடும் ஆறு மாத குழந்தைக்கு தமிழக அரசு உதவ வேண்டும் எனக் கோரி பெற்றோர், குழந்தையுடன் நீலகிரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.</p> <h2>குழந்தை</h2><p>ஊட்டி அருகே ஆறு குச்சி கிராமத்தைச் சேர்ந்த முருகன் - பிரேமலதா தம்பதியின் 6 மாத குழந்தை லக்ஸ்வின், மரபணு குறைபாட்டால் முதுகெலும்பு தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது, குழந்தை மூன்று மாதங்களாக உயிருக்கு போராடி வரும் நிலையில், அந்த நோயை குணப்படுத்த உடனடியாக, 16 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டில் இருந்து வரவழைக்கும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8A%E0%AE%9A%E0%AE%BF">ஊசி</a> மருந்தை செலுத்த வேண்டும். இல்லாவிட்டால், குழந்தை உயிருக்கு ஆபத்து ஏற்படும்' என, கர்நாடக மாநிலம், பெங்களூருவில் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><h2>மனு</h2><p>கூலி வேலை செய்யும் தங்களால் இத்தொகையை செலுத்த முடியாத நிலையில், தமிழக அரசு உதவ வேண்டும் எனக் கோரி பெற்றோர், குழந்தையுடன் நீலகிரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். </p><p>குழந்தையின் உயிரைக் காப்பாற்ற வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று வருவதாகவும், சிகிச்சைக்கான மருத்துவச்சான்றுகளை அரசிடம் அளித்துள்ளதாகவும் தந்தை முருகன் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஒசூர் -பொம்மசந்திரா இரு மாநில மெட்ரோ ரெயில் சேவை சாத்தியமில்லை: பெங்களூரு மெட்ரோ அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/inter-state-metro-rail-service-between-hosur-and-bommasandra-is-not-feasible-bengaluru-metro-announces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/inter-state-metro-rail-service-between-hosur-and-bommasandra-is-not-feasible-bengaluru-metro-announces#comments</comments><guid isPermaLink="false">f634295d-5d83-42ea-b081-d146ab394fd1</guid><pubDate>Tue, 25 Aug 2026 02:22:15 +0000</pubDate><atom:updated>2026-08-25T02:22:15.654Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Hosur,ஓசூர்,Metro Rail service,மெட்ரோ ரெயில் சேவை</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/49os408j/6.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/49os408j/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பெங்களூரு,</p><p>கர்நாடக மாநிலம், பொம்மசந்திராவிலிருந்து, மாநில எல்லையான அத்திப்பள்ளி வரை, 11.7 கி.மீ., தூரத்திற்கு மெட்ரோரயில் சேவையை நீட்டிக்க, அம்மாநில அரசு ஆலோசிக்கிறது. அங்கிருந்து, தமிழகத்தின் ஒசூர் வரை, 11 கி.மீ., தூரத்திற்கு இந்த சேவையை நீட்டிக்க கோரிக்கை வலுத்துள்ளது.</p><p>இது சாத்தியமானால், தென்னிந்தியாவில் இரு மாநிலங்களுக்கு இடையே, முதல் மெட்ரோ ரயில் சேவை என்ற அந்தஸ்து கிடைக்கும். அதற்காக, சென்னை மெட்ரோரயில் நிறுவனம், பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.</p><p>கடந்தாண்டு அக்டோபரில், பொம்மசந்திரா -ஒசூர் மெட்ரோ ரயில் நேரடி இணைப்பு, தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமில்லை' என, கர் நாடகா மாநில அரசிற்கு, பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிக்கை அளித்தது. இந்நிலையில், தமிழக முதல்வர் விஜய், தென்னிந்திய முதல்வர்கள் -மாநாட்டில், ஒசூர் பொம்மசந்திரா மெட்ரோ ரயில் சேவை குறித்து வலியுறுத்தியதாக தகவல் வெளியானது.</p><p>இச்சூழலில், பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம், 'இணைப்பு திட்டம் மீண்டும் சாத்தியமில்லை' என்ற அறிக்கையை, கர்நாடகா மாநில அரசுக்கு வழங்கி யுள்ள தகவல் வெளியாகி உள்ளது.</p><p>சென்னை, பெங்களூரு இரு மெட்ரோ நிறுவனங்களும் வெவ்வேறு தொழில்நுட்ப கட்ட மைப்புகளை கொண்டது. இவற்றை, ஒரே பாதையில் இணைத்து இயக்குவது பெரும் தொழில்நுட்ப சவாலாக இருக்கும்.</p><p>மேலும், நிர்வாக அனுமதி, நிதி,வருவாய் பங்கீடு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள், உயர் மின் அழுத்த வேறுபாடு, சிக்னல் கட்டமைப்புகள் போன்றவையும் வேறுபட்டிருப்பதால், இத்திட்டம் சாத்தியமில்லை என, கர்நாடகா அரசிற்கு, பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் அறிக்கை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பவானிசாகர் அணையின் நீர்மட்டம் சரிவு: குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bhavanisagar-dam-water-level-declines-risk-of-water-shortage</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bhavanisagar-dam-water-level-declines-risk-of-water-shortage#comments</comments><guid isPermaLink="false">bc141f7d-0fbe-4525-8b90-784424d23bdb</guid><pubDate>Tue, 25 Aug 2026 02:21:19 +0000</pubDate><atom:updated>2026-08-25T02:21:19.217Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Bhavanisagar Dam,பவானிசாகர் அணை,நீர்மட்டம் குறைவு,drinking water shortage,குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்,low water level</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/rd24u1hp/88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/rd24u1hp/88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பவானிசாகர், </p><p>நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 53 அடிக்கு கீழ் சரிந்துள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.</p><h2>பவானிசாகர் அணை</h2><p>தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழ்நாட்டின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. நீலகிரி மலைப்பகுதியில் இருந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வழியாக வரும் பவானி ஆறும், கூடலூர் பகுதியில் இருந்து தெங்குமரஹாடா வழியாக வரும் மாயாறும் பவானிசாகர் அணையின் நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகின்றன.</p><p>இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 120 அடி. ஆனால் சேறு, சகதிகள் போக 105 அடி மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்க முடியும். அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன.</p><h2>நீர்வரத்து குறைவு</h2><p>அதேபோல் பவானி ஆற்றில் திறக்கப்படும் நீரின் மூலம் அரக்கன்கோட்டை- தடப்பள்ளி மற்றும் காலிங்கராயன் பாசனப்பகுதியைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுமட்டுமின்றி ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யாத காரணத்தால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. அதே நேரத்தில் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைய தொடங்கியது. நேற்று காலை 10 மணி அளவில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 52.60 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,661 கன அடி தண்ணீர் மட்டுமே வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 750 கன அடியும், கீழ் பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடியும் என மொத்தம் வினாடிக்கு 3 ஆயிரத்து 50 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.</p><h2>குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">பவானிசாகர் அணை</a>யின் நீர்மட்டம் 53 அடிக்கு கீழ் சென்றதாலும், அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருவதாலும் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>சென்னை: மூளைச்சாவு அடைந்த ஒன்றரை வயது குழந்தையின் உடல் உறுப்புகள் தானம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-organs-of-a-brain-dead-one-and-a-half-year-old-child-donated</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-organs-of-a-brain-dead-one-and-a-half-year-old-child-donated#comments</comments><guid isPermaLink="false">9faf420a-2e5b-4bab-aacb-a921b6711398</guid><pubDate>Tue, 25 Aug 2026 02:08:35 +0000</pubDate><atom:updated>2026-08-25T02:08:35.623Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>குழந்தை,child,மூளைச்சாவு,உடல் உறுப்புகள்,body organs,Brain-Dead</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/mfp37geo/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/mfp37geo/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், 19 மாத குழந்தை, முளை பாதிப்பு தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆறு நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்தாலும், குழந்தையின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. தொடர் கண்காணிப்பு மற்றும் அதிதீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன.</p><p>ஆனால், குழந் தையின் உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை குழந்தை மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய, பெற்றோர் முன்வந்தனர். அதன்படி, இதயம், கல்லீரல், இரண்டு சிறுநீரகம் தானமாக பெறப்பட்டன.</p><p>இதன் வாயிலாக, 'தமிழகத்தில், மிகவும் குறைந்த வயதுடைய உடல் உறுப்பு கொடையாளார்' என்ற பெருமையை அக்குழந்தை பெற்றது. இதற்கு முன், 20 மாத குழந்தையின் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டிருந்தது. இந்த உறுப்பு தானச் செயலுக்கு, அரசு சார்பில், குழந்தை உடலுக்கு மரியாதை செய்யப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>திருவள்ளூர்: சிமெண்டு கல்லால் தாக்கப்பட்ட வடமாநில தொழிலாளி உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvallur-northern-state-worker-dies-after-being-hit-by-cement-stone</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvallur-northern-state-worker-dies-after-being-hit-by-cement-stone#comments</comments><guid isPermaLink="false">5e5ff865-e545-4322-baa3-38feb54905b4</guid><pubDate>Tue, 25 Aug 2026 02:07:35 +0000</pubDate><atom:updated>2026-08-25T02:07:35.521Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தாக்குதல்,Thiruvallur,திருவள்ளூர்,Murder case,கொலை,Death,attack,உயிரிழப்பு,வழக்குப்பதிவு,வடமாநில தொழிலாளர்கள்,Northern State workers,registered</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/7an89z6v/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வடமாநில தொழிலாளி உயிரிழப்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/7an89z6v/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர், </p><p>திருவள்ளூர் மாவட்டம், ஆவடி பகுதியில் சிமெண்டு கல்லால் தாக்கப்பட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF">வடமாநில தொழிலாளி</a> ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை தொடர்ந்து, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">கொலை</a> வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  </p><h2>வடமாநில தொழிலாளர்கள்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">திருவள்ளூர்</a> மாவட்டம், ஆவடி அடுத்த பட்டாபிராம் கரிமேடு அண்ணாநகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த சமீம் (வயது 23), நசீம்(29), ஜார்கண்டை சேர்ந்த இஸ்மாயில்ஷேக்(20) ஆகியோர் தங்கி வேலை செய்து வந்தனர். </p><h2>கல்லால் தாக்குதல்</h2><p>சமையல் செய்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், கடந்த 16-ந்தேதி இரவு தூங்கிக் கொண்டிருந்த சமீம், நசீம் ஆகியோரை இஸ்மாயில்ஷேக் சிமெண்டு கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர். </p><h2>கொலை வழக்குப்பதிவு</h2><p>சமீம், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">உயிரிழந்தார்.</a> இதையடுத்து பட்டாபிராம் போலீசார் இஸ்மாயில்ஷேக்கை கைது செய்து, இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item></channel></rss>