<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 12 Sep 2026 06:15:11 +0000</lastBuildDate><item><title>குளத்தில் மீன்பிடிக்க சென்ற விவசாயி வலையில் சிக்கி உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmer-dies-after-being-caught-in-net-while-fishing-in-pond</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmer-dies-after-being-caught-in-net-while-fishing-in-pond#comments</comments><guid isPermaLink="false">9b2cea25-c0e8-42b5-87ee-f7d4e68fcb24</guid><pubDate>Sat, 12 Sep 2026 06:12:32 +0000</pubDate><atom:updated>2026-09-12T06:12:32.632Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,farmer,விவசாயி,net,உயிரிழப்பு,Fishing,pond,குளம்,drowning death,மீன்பிடிக்க,வலை,தண்ணீரில் மூழ்கி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/3qvhf9hf/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மீன் வலையில் சிக்கி, நீரில் மூழ்கி விவசாயி உயிரிழப்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/3qvhf9hf/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், குரும்பூர் அருகே கடம்பா <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">குளத்திற்கு</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95">மீன்பிடிக்க</a>ச் சென்ற <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF">விவசாயி</a> ஒருவர், எதிர்பாராதவிதமாக தனது மீன் வலையிலேயே சிக்கி தண்ணீரில் மூழ்கி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">உயிரிழந்தார்</a>. </p><h2>மீன்பிடிக்க சென்ற விவசாயி</h2><p>தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே உள்ள கீழக்கல்லாம்பாறை கிராமத்தைச் சேர்ந்த பட்டானி மகன் இசக்கிமுத்து (வயது 55). விவசாயியான இவர், நேற்று முன்தினம் தனது குடும்பத்தினரிடம் கடம்பா குளத்தில் மீன்பிடிக்கச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டுச் சென்றுள்ளார். ஆனால் இரவாகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மறுநாள் (நேற்று) கடம்பா குளத்திற்குச் சென்று தீவிரமாகத் தேடினர். </p><h2>வலையில் சிக்கி, நீரில் மூழ்கி உயிரிழப்பு</h2><p>அப்போது குளத்து நீரில் வீசப்பட்ட மீன்வலையில் இசக்கிமுத்து சிக்கிய நிலையில் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து உடனடியாக குரும்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், இசக்கிமுத்துவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து குரும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருச்செந்தூரில் திடீரென 50 அடிக்கு உள்வாங்கிய கடல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sea-recedes-by-50-feet-suddenly-at-tiruchendur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sea-recedes-by-50-feet-suddenly-at-tiruchendur#comments</comments><guid isPermaLink="false">a2f02d91-8053-4c9c-b542-51d60897d65e</guid><pubDate>Sat, 12 Sep 2026 06:08:52 +0000</pubDate><atom:updated>2026-09-12T06:08:52.764Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>sea,கடல்,திருச்செந்தூர்,Tiruchendur</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/y9q0o2p5/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/y9q0o2p5/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்செந்தூர்,</p><p>அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இங்குள்ள கடலில் புனித நீராடிவிட்டு சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். </p><p>இதனிடையே, ஒவ்வொரு மாதமும் வழக்கமாக அமாவாசை, பவுர்ணமி நாட்கள் மற்றும் அதற்கு முன்தினம், மறுதினங்களில் காலையில் கடல் உள்வாங்குவதும், மாலையில் இயல்பு நிலைக்கு திரும்புவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது.</p> <p>இந்நிலையில், திருச்செந்தூரில் இன்று காலை திடீரென கடல் உள்வாங்கியது. சுமார் 50 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியது. கடல் உள்வாங்கியுள்ள பகுதிகளில் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிகின்றன.</p><p>கடல் உள்வாங்கியுள்ள நிலையில் பக்தர்கள் பாதுகாப்பாக கடலில் குளிக்கும்படி கோவில் நிர்வாகம், காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கடமலைக்குண்டு அருகே 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/4000-year-old-rock-paintings-discovered-near-kadamalaikundu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/4000-year-old-rock-paintings-discovered-near-kadamalaikundu#comments</comments><guid isPermaLink="false">572c9813-9ae9-49ae-8620-ff3aaff8d9ac</guid><pubDate>Sat, 12 Sep 2026 06:01:32 +0000</pubDate><atom:updated>2026-09-12T06:01:32.329Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கண்டுபிடிப்பு,Rock,Painting,discovered,கடமலைக்குண்டு,பாறை ஓவியங்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/zqjxmlpt/15.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பாறை ஓவியங்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/zqjxmlpt/15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி,</p><p>கடமலைக்குண்டு அருகே தேன்பாறை மலை அடிவாரத்தில் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பாறை ஓவியங்கள்</a>, புதிய கற்காலச் சாணைத் தடங்கள் மற்றும் பெருங்கற்கால வழிபாட்டு எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளது. </p><p>இங்குள்ள குகைத்தளங்களில் வெண்சாந்தினால் வரையப்பட்ட மனித உருவங்கள், விலங்குகள் மற்றும் வேட்டைச் சடங்குகளை உணர்த்தும் ஓவியங்கள் உள்ளன. பாறையின் சாய்வான பகுதியில் கற்கோடாரிகள், இரும்பு ஆயுதங்களை கூர்மையாக்கப் பயன்படுத்திய 3 சாணைத் தடங்கள் காணப்படுகின்றன.</p><h2>பாறைக்கீறல்</h2><p>மேலும், வழிபாட்டின் போது விளக்கேற்றப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படும் வட்ட வடிவிலான கப்-மார்க் குடைவுகளும், ஒளிக்கதிர்கள் போன்ற பாறைக்கீறல்களும் உள்ளன. வைகை ஆற்றிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள இந்த தளம், புதிய கற்காலம் முதல் சங்க காலம் வரை மனிதர்களின் வாழ்விடமாகவும், தொழிற்கூடமாகவும், வழிபாட்டிடமாகவும் திகழ்ந்துள்ளதை நிரூபிக்கிறது. வருசநாட்டுப் பகுதியின் வரலாற்றை வெளிப்படுத்தும் இந்த குகைத்தளங்களை அரசு தொல்லியல் துறை பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்க வேண்டும். மேற்கண்ட தகவலை தொல்லியல் ஆய்வாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஆந்திராவைப் போல தமிழகத்திலும் விநாயகர் பந்தல்களுக்கு இலவச மின்சாரம் - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/free-electricity-for-vinayagar-pandals-in-tamil-nadu-just-like-in-andhra-pradesh-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/free-electricity-for-vinayagar-pandals-in-tamil-nadu-just-like-in-andhra-pradesh-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">e071bd78-c379-405e-b7b1-9a2b5fa536da</guid><pubDate>Sat, 12 Sep 2026 05:58:21 +0000</pubDate><atom:updated>2026-09-12T05:58:21.175Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Vinayagar Chaturthi,விநாயகர் சதுர்த்தி,Free electricity,இலவச மின்சாரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/lu51frjn/317.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/lu51frjn/317.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஆந்திராவைப் போலத் தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்திப் பந்தல்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.</p><h2>விநாயகர் சதுர்த்தி</h2><p>இது தொடர்பாக, நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>"பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா!" என்று விநாயகப் பெருமானிடம் சங்கத் தமிழையே வரமாகக் கேட்டார் ஔவையார். அப்படித் தமிழ் மொழியோடு பின்னிப் பிணைந்த முழுமுதற் கடவுள்தான் நம் விநாயகப் பெருமான். அந்த வேழமுகத்தோனின் திருவிழாவை உலக மக்கள் அனைவரும் பக்தி பரவசத்துடன் கொண்டாட தயாராகி வரும் வேளையில், அத்திருவிழாவை மறைமுகமாக முடக்கும் வேலையில் முதல்-அமைச்சரின் அரசு ஈடுபடுகிறதோ என்கிற வலுவான ஐயம் எழுகிறது.</p><h2>மின்சாரம்</h2><p>பொதுமக்கள் தங்களின் பக்தி உணர்வோடு அமைக்கும் வழிபாட்டுப் பந்தல்களுக்கு, தற்காலிக மின் இணைப்பு மீட்டருக்கு ரூ.3,800, 'டெபாசிட்' தொகையாக ரூ.4,000 செலுத்த வேண்டியுள்ளது. அதோடு வயரிங் செலவு உள்ளிட்ட பணிகளுக்கென ஒரு விநாயகர் சிலை மின் இணைப்புக்கு மட்டுமே சுமார் ரூ.15,000 வரை செலவாவதோடு, 'கமர்சியல்' கட்டணம் என்ற பெயரில் கூடுதல் சுமை சுமத்தப்படுவதாக விழா அமைப்பாளர்களும் பொதுமக்களும் குற்றம்சாட்டுகின்றனர்.</p><h2>வலியுறுத்தல்</h2><p>அண்டை மாநிலமான ஆந்திராவில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு எவ்விதத் தடையுமின்றி அரசே முன்வந்து இலவச மின்சாரம் வழங்கிப் பக்தர்களை உற்சாகப்படுத்தும் வேளையில், தமிழகத்தில் மட்டும் இந்துக்களின் வழிபாட்டு உரிமைகளை நசுக்கும் வகையில் தவெக அரசு செயல்படுவதாக மக்கள் நினைக்கின்றனர். எனவே, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D">முதல்-அமைச்சர்</a> விஜயின் அரசு வணிகக் கட்டண முறையை ரத்து செய்வதோடு, விநாயகர் சதுர்த்திப் பந்தல்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி இலவச மின்சாரம் வழங்கிட உத்தரவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் யார் யார் தெரியுமா?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madhuranthakam-and-dharapuram-by-elections-do-you-know-who-the-tvk-election-in-charges-are</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madhuranthakam-and-dharapuram-by-elections-do-you-know-who-the-tvk-election-in-charges-are#comments</comments><guid isPermaLink="false">7c361aae-76db-4ca8-b84d-1b8dd715b386</guid><pubDate>Sat, 12 Sep 2026 05:53:15 +0000</pubDate><atom:updated>2026-09-12T05:53:15.450Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,மதுராந்தகம்,தாராபுரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/bkrrjx61/vijay.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/bkrrjx61/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ந் தேதி தொடங்கியுள்ள நிலையில், இடைத்தேர்தலிலும் த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் ஆகிய கட்சிகள் இடையே 4 முனைப்போட்டி நிலவுகிறது.இதில், நாம் தமிழர் கட்சியை தவிர, தேர்தல் களம் காணும் 3 கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. கடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்) ஆகிய 2 பேரும் தற்போது த.வெ.க. சார்பில் அதே தொகுதிகளில் களம் காண்கின்றனர். பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. சார்பில் ஐ.பரந்தாமன் (மதுராந்தகம்), எஸ்.சுகன்யா (தாராபுரம்) ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத் (மதுராந்தகம்), பானுமதி (தாராபுரம்) ஆகியோர் போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை நாளை அறிவிக்க உள்ளது. இடைத்தேர்தல் என்ற போதிலும் கடுமையான போட்டி நிலவுவதால்,  வெற்றி பெற அரசியல் கட்சிகள் பல்வேறு  வியூகம் வகுத்து வருகின்றன. </p><p>அந்த வகையில், தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்து அக்கட்சியின் தலைவரும் முதல் அமைச்சருமான விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:</p><h2>தேர்தல் கண்காணிப்பாளர்கள்:</h2><p>அமைச்சர் என்.ஆனந்த்</p><p>அமைச்சர் செங்கோட்டையன்</p><p> அமைச்சர் நிர்மல் குமார்</p><h2>தேர்தல் பணிக்குழு</h2><p>மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதி:</p><p>பொறுப்பாளர்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</p><p>இணைப் பொறுப்பாளர்கள்:</p><p>அமைச்சர்ராஜ்குமார்</p><p>அமைச்சர் தென்னரசு</p><p>அமைச்சர் வினோத்</p><h2>துணைப் பொறுப்பாளர்கள்:</h2><p>எம்.எல்.ஏ சரவணமூர்த்தி;</p><p>எம்.எல்.ஏ தியாகராஜன் </p><p>எம்.எல்.ஏ விஜயராஜ்</p><p>எம்.எல்.ஏ காமாட்சி</p><p>எம்.எல்.ஏ பாலாஜி (எ) மணிகண்டன்</p><h2>தாராபுரம்; </h2><p>பொறுப்பாளர்:  அமைச்சர் அருண்ராஜ்</p><p>இணைப் பொறுப்பாளர்கள்:</p><p>1. அமைச்சர்  விஜய் பாலாஜி</p><p>2. அமைச்சர்  விஜயலட்சுமி</p><p>3. அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்</p><p><strong>துணைப் பொறுப்பாளர்கள்:</strong></p><p>1..பாலமுருகன்  எம்.எல்.ஏ. -திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி</p><p>2. சத்தியபாமா எம்.எல்.ஏ -திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி</p><p>3. ராம்குமார்  எம்.எல்.ஏ, -பல்லடம் சட்டமன்றத் தொகுதி</p><p>4. திலீப் எம்.எல்.ஏ -நாமக்கல் சட்டமன்றத் தொகுதி</p><p>5. சத்யா எம்.எல்.ஏ, -கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி</p>  <p>மேற்கண்ட குழுவினர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்வார்கள். தேர்தல் கண்காணிப்பாளர்கள், இரண்டு தொகுதிகளின் தேர்தல் பணிகளைக் கண்காணிப்பார்கள். அந்தந்தச் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட கழகத் தோழர்கள் அனைவரும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். விசில் சின்னம், மீண்டும் வாகை சூட வேண்டும். இடைத்தேர்தல் வரலாற்றிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர் என்கிற புதிய வரலாறு படைக்கும் வகையில் அனைவரும் தேர்தல் பணியாற்றிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இந்தத் தொகுதிகளில் நம் வெற்றி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நமது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளைத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விரைவில் முன்னெடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: அனைத்து செலவுகளையும் அரசே ஏற்பதை உறுதி செய்ய வேண்டும் - டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/breakfast-scheme-expansion-government-must-bear-all-costs-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/breakfast-scheme-expansion-government-must-bear-all-costs-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">7aac84f6-217e-405f-81f4-e4e558ae8d42</guid><pubDate>Sat, 12 Sep 2026 05:51:05 +0000</pubDate><atom:updated>2026-09-12T05:51:05.761Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,AMMK,அமமுக,காலை உணவுத் திட்டம்,Kaalai Unavu Thittam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/xsouc79o/Untitled-8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/xsouc79o/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காலை உணவுத் திட்ட விரிவாக்கத்திற்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் வரும் 17-ம் தேதி முதல் விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், அந்நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் பள்ளித் தலைமை ஆசிரியர்களே தங்களது சொந்த செலவில் மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி உட்பட, அரசால் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் நிலையில், அதற்குத் தேவையான பெயர்ப்பலகை, மின்விளக்கு, குடிநீர் உள்ளிட்ட தொடக்க நிகழ்வுக்கான ஏற்பாடுகளுக்கான செலவினங்களைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் தலையில் சுமத்துவது ஏற்புடையதல்ல.</p><p>பல ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயன்பெறக்கூடிய ஒரு திட்டத்தை விரிவாக்கம் செய்யும்போது, அதற்கான ஏற்பாட்டுச் செலவுகளுக்குத் தேவையான நிதியை ஒதுக்க மறுப்பதும், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மீது பொருளாதாரச் சுமையை ஏற்றுவதும், அரசு நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள நிர்வாகச் சிக்கல்களையும் அதிகாரக் குளறுபடிகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.</p><p>எனவே, செப்டம்பர் 17-ம் தேதி நடைபெற உள்ள பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்திற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு நிதியின் மூலமாகவே மேற்கொள்ள வேண்டும் என்பதோடு, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மீது தேவையற்ற பொருளாதாரச் சுமையை ஏற்றும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும் தவெக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ganesha-idols-are-being-sold-in-thoothukudi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ganesha-idols-are-being-sold-in-thoothukudi#comments</comments><guid isPermaLink="false">491b029c-9508-4791-807a-27c3ce1623ea</guid><pubDate>Sat, 12 Sep 2026 05:49:16 +0000</pubDate><atom:updated>2026-09-12T05:49:16.481Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,விற்பனை,Sale,விநாயகர் சதுர்த்தி,Ganesha Chaturthi,சிலைகள்,மும்முரம்,Idols,busy</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/qllkvv25/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/qllkvv25/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88">விநாயகர் சதுர்த்தி பண்டிகை</a> நாளை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a>யில் பூஜைக்கான விநாயகர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">சிலைகள்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88">விற்பனை</a> தீவிரமாக நடைபெற்று வருகிறது. </p><h2>விநாயகர் சதுர்த்தி பண்டிகை</h2><p>விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக விநாயகர் சிலைகள் உள்ளிட்ட பூஜைக்கான பல்வேறு பொருட்களையும் வாங்குவதற்காக மக்கள் முக்கிய கடை வீதிகளில் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஒட்டி, தூத்துக்குடி மாநகரில் சிவன் கோவில் அருகே உள்ள கடைகளில் பல்வேறு அளவுகளிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்குக் குவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வைத்துப் பூஜை செய்வதற்காக ஆர்வத்துடன் விநாயகர் சிலைகளை வாங்கிச் செல்கின்றனர்.  </p><h2>விநாயகர் சிலைகள் ரூ.20 முதல் ரூ.3 ஆயிரம் வரை விற்பனை</h2><p>பொதுமக்களின் வசதிக்காக சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் முதல் பெரிய அளவிலான வண்ணச் சிலைகள் வரை விற்பனை செய்யப்படுகின்றன. இந்த கடைகளில் விநாயகர் சிலைகள் ரூ.20 முதல் ரூ.3 ஆயிரம் வரை பல்வேறு விலைகளில் கிடைக்கின்றன. பண்டிகை நாளையொட்டி தூத்துக்குடி மாநகர கடை வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>சென்னையில் கள்ளநோட்டு கொடுத்து பால் வாங்க முயன்ற பெண் கைது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-arrested-in-chennai-for-trying-to-buy-milk-with-counterfeit-notes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-arrested-in-chennai-for-trying-to-buy-milk-with-counterfeit-notes#comments</comments><guid isPermaLink="false">e9cd86a3-0f35-4383-8726-3c5eef82e9bc</guid><pubDate>Sat, 12 Sep 2026 05:37:38 +0000</pubDate><atom:updated>2026-09-12T05:37:38.751Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,பெண் கைது,milk,police enquiry,கள்ளநோட்டு,counterfeit notes</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/6hglnrpy/0.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ அமைந்தகரை காவல் நிலையம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னையில் கள்ளநோட்டு கொடுத்து பால் வாங்க முயன்ற பெண் கைது. ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/6hglnrpy/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை அமைந்தகரை பகுதியில் கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விட முயன்ற பெண் ஒருவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து பல்லாயிரக்கணக்கான  மதிப்பிலான<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"> கள்ள ரூபாய் நோட்டுகள்</a> பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><h2>ஆவின் பூத்தில் சிக்கிய பெண்</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை</a> அமைந்தகரை பகுதியில் உள்ள ஆவின் பால் பூத்திற்கு இன்று (சனிக்கிழமை) அலமேலு என்ற பெண் பால் வாங்குவதற்காக வந்துள்ளார். அவர் பால் வாங்கிவிட்டு அதற்குரிய பணமாக ரூபாய் நோட்டு ஒன்றை அங்குள்ள ஊழியரிடம் கொடுத்தார். அந்த நோட்டின் மீது சந்தேகமடைந்த கடை ஊழியர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர், அது கள்ள நோட்டு என்பதை உறுதி செய்தனர். உடனடியாக இது குறித்து அமைந்தகரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.</p><h2>போலீஸ் விசாரணை – வீட்டில் ரூ.42,000 சிக்கியது</h2><p>தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கள்ள நோட்டு மாற்ற முயன்ற அலமேலுவை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அவரது வீட்டில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.42,000 மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.</p><h2>குப்பைத் தொட்டியில் கிடைத்ததா?</h2><p>போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த பெண் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு இந்த கள்ள நோட்டுகள் அனைத்தும் குப்பைத் தொட்டியில் இருந்துதான் கிடைத்ததாக அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.</p><p>இருப்பினும், இந்த பதிலை ஏற்காத போலீசார், கள்ள நோட்டு கும்பலுடன் அந்த பெண்ணுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா? அல்லது கள்ள நோட்டுகளை அச்சடிக்கும் பெரிய கும்பல் ஏதேனும் இதன் பின்னணியில் செயல்படுகிறதா? என்ற கோணத்தில் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/eAdBMtLsRck"></iframe></figure>]]></content:encoded></item><item><title>
நாளை திருமணம்: விபத்தில் இன்று பலியான மணப்பெண்: மணமகன் கண்முன்னே நடந்த சோகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wedding-tomorrow-bride-dies-in-accident-today-tragedy-unfolds-before-grooms-eyes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wedding-tomorrow-bride-dies-in-accident-today-tragedy-unfolds-before-grooms-eyes#comments</comments><guid isPermaLink="false">ebd087f3-913d-457c-bbae-f79a05c132bb</guid><pubDate>Sat, 12 Sep 2026 05:36:51 +0000</pubDate><atom:updated>2026-09-12T05:36:51.529Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,Madurai,மணப்பெண்,wedding day</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/qagz8359/accident.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/qagz8359/accident.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>திண்டுக்கல் மாவட்டம் வெள்ளோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெபபாஸ்டின். 29 வயதான இவர்  இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் காமலாபுரம் சக்கையா நாயக்கனூரைச் சேர்ந்த மானுவேல் மகள் மரிய வெல்சியா (26)  என்பவருக்கும் நாளை  திருமணம் நடைபெற இருந்தது.வெள்ளோடு கிறிஸ்தவ தேவாலயத்தில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. </p> <p>இந்த நிலையில், இன்று காலை மதுரையில் செவிலியர் தேர்வு எழுதுவதற்காக மணமகள் வெல்சியாவை மணமகன் ஜெப பாஸ்டின் தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு  அதிகாலை சென்று கொண்டிருந்தார்.   அதிகாலை 3 மணிக்கு திண்டுக்கல் - மதுரை தேசிய நான்கு வழிச்சாலையில் இவர்கள் கொண்டிருந்தனர். அப்போது,  வாடிப்பட்டி அருகே சாணாம்பட்டி பிரிவு அருகே அவர்கள் சென்ற போது கோவையில் இருந்து மதுரைக்கு சென்ற காரின் முன்புற டயர் திடீரென வெடித்து தாறுமாறாக ஓடியது. கட்டுப்பாட்டை இழந்த கார்  பைக் மீது மோதியது.</p><p>இதில் ஜெப பாஸ்டினும், மரிய வெல்சியாவும் தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே மரிய வெல்சியா பரிதாபமாக உயிரிழந்தார். இதில் காயமடைந்த மணமகன் ஜெபபாஸ்டின் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில், மணமகன் கண் முன்னே மணப்பெண்  பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஹூப்ளி - திருவனந்தபுரம் இடையே சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக சிறப்பு ரெயில் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-hubli-and-thiruvananthapuram-via-salem-erode-and-tiruppur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-hubli-and-thiruvananthapuram-via-salem-erode-and-tiruppur#comments</comments><guid isPermaLink="false">3e54c9cb-d6e1-45d3-8938-11c8b9767914</guid><pubDate>Sat, 12 Sep 2026 05:26:36 +0000</pubDate><atom:updated>2026-09-12T05:26:36.383Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,Special train,Salem,சேலம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/ye7h0xwd/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/ye7h0xwd/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>ஹூப்ளி - திருவனந்தபுரம் இடையே சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p>கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து கேரளம் மாநிலம் திருவனந்தபுரம் வடக்கிற்கு சிறப்பு ரெயில் (வண்டி எண் 07325) இயக்கப்படுகிறது. ஹூப்ளியில் இருந்து இன்று (செப்.12) காலை 8.30 மணிக்கு புறப்பட்டுள்ள இந்த ரெயில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்தை சென்றடைகிறது.  </p> <p>மறுமார்க்கத்தில், திருவனந்தபுரம் வடக்கில் இருந்து வரும் 14-ந் தேதி மதியம் 2 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07326) மறுநாள் மதியம் 3.45 மணிக்கு ஹூப்ளியை சென்றடைகிறது. 20 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில், தமிழ்நாட்டில் சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.</p><p>திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்தில் இருந்து ஹூப்ளி செல்லும் சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (செப்.13) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருப்பரங்குன்றம் கோவிலில் நாளை ஒரே நாளில் 102 ஜோடிகளுக்கு திருமணம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/102-couples-to-get-married-in-one-day-at-thiruparankundram-temple-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/102-couples-to-get-married-in-one-day-at-thiruparankundram-temple-tomorrow#comments</comments><guid isPermaLink="false">0e8d5beb-4ae4-475e-82f3-2686ef4d3137</guid><pubDate>Sat, 12 Sep 2026 05:19:02 +0000</pubDate><atom:updated>2026-09-12T05:19:02.839Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமணம்,Marriage,Thiruparankundram,திருப்பரங்குன்றம்,couples,ஜோடிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/75e75zgz/tiruparankundram.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருப்பரங்குன்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/75e75zgz/tiruparankundram.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பரங்குன்றம்,</p><p>முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடாக விளங்கும் திருப்பரங்குன்றம் கோவிலில், நாளை ஒரே நாளில் 102 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற உள்ளது.</p><p>திருப்பரங்குன்றம் கோவிலில் முருகப்பெருமான் அமர்ந்த நிலையில் திருமணக் கோலத்தில் அருள்பாலிப்பது சிறப்பாகும். இக்கோவிலில் திருமணம் செய்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் முகூர்த்த நாட்களில் ஏராளமான ஜோடிகள் இங்கு திருமணம் செய்து வருகின்றனர்.</p><h2>102 ஜோடிகள்</h2><p>கடந்த 23-ந்தேதி நடைபெற்ற ஆவணி மாத முதல் வளர்பிறை முகூர்த்த நாளில் ஒரே நாளில் 104 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் முகூர்த்த நாளில் திருமணம் செய்ய 102 ஜோடிகள் பதிவு செய்துள்ளனர். மேலும், வருகிற 17-ந்தேதிக்கான திருமணத்துக்கு இதுவரை 52 ஜோடிகள் பதிவு செய்துள்ள நிலையில், தொடர்ந்து முன்பதிவு நடைபெற்று வருகிறது.</p><h2>20 நாட்களுக்கு முன்பே பதிவு</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D">திருப்பரங்குன்றம் </a>கோவிலில் முதல் திருமணம் செய்ய உள்ள ஜோடிகளுக்கு மட்டுமே திருமணம் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. திருமணத்துக்கு குறைந்தபட்சம் 20 நாட்களுக்கு முன்பாக பதிவு செய்ய வேண்டும்.</p><p>கோவிலின் திருவாட்சி மண்டப வளாகத்தில் உள்ள முத்துக்குமாரசுவாமி-தெய்வானை அம்பாள் சன்னதியில் திருமணம் நடைபெறும். திருமண ஜோடி மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்ட 20 பேருக்கு கருவறை தரிசனத்துக்கான அனுமதி டிக்கெட், திருமண பதிவு கட்டணம் உள்ளிட்டவற்றுக்காக ஒரு ஜோடிக்கு ரூ.4,500 வசூலிக்கப்படுகிறது. அதன்படி, நாளை 102 ஜோடிகள் திருமணம் செய்ய பதிவு செய்துள்ளதால், கோவிலுக்கு ரூ.4 லட்சத்து 59 ஆயிரம் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>வீடு புகுந்து கந்துவட்டி கேட்டு பல்கலைக்கழக பேராசிரியரை தாக்கியவர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/man-arrested-for-breaking-into-house-assaulting-university-professor-over-extortion</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/man-arrested-for-breaking-into-house-assaulting-university-professor-over-extortion#comments</comments><guid isPermaLink="false">afe6b302-685c-49f4-b756-6bfdc343756f</guid><pubDate>Sat, 12 Sep 2026 05:15:59 +0000</pubDate><atom:updated>2026-09-12T05:15:59.353Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தாக்குதல்,கைது,Tirunelveli,திருநெல்வேலி,arrest,attack,மிரட்டல்,Intimidation,University,Professor,பல்கலைக்கழக பேராசிரியர்,high interest,கந்துவட்டி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/fwhqjygm/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/fwhqjygm/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a>யில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">வீடு புகுந்து</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF">கந்துவட்டி</a> கேட்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D">பல்கலைக்கழகப் பேராசிரியரை</a> தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>ரூ.2 லட்சம் கடன்</h2><p>நெல்லை அருகே உள்ள வி.எம்.சத்திரம் பகுதியைச் சேர்ந்த பாலகுமாரன் (வயது 40), நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வம்(45) என்பவரிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கியிருந்தார். பின்னர் சில மாதங்கள் கழித்து மீண்டும் ரூ.1 லட்சம் கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது. அந்தப் பணத்தில் ரூ.50 ஆயிரத்தை திருப்பிக் கொடுத்த பாலகுமாரன், மீதி பணத்தை விரைவில் தருவதாகக் கூறியுள்ளார். </p><h2>கந்துவட்டி கேட்டு மிரட்டல், தாக்குதல்</h2><p>இந்த நிலையில் சம்பவத்தன்று, செல்வம் வி.எம்.சத்திரத்தில் உள்ள பாலகுமாரன் வீட்டிற்குச் சென்று பாக்கியுள்ள பணத்தைக் கேட்டுள்ளார். அப்போது அதிக கந்துவட்டி கேட்டு மிரட்டியதுடன், பாலகுமாரனை சாதி பெயரைச் சொல்லி திட்டி கொடூரமாகத் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">தாக்கிய</a>தாகக் கூறப்படுகிறது.</p><h2>கைது</h2><p>இந்த தாக்குதலில் காயமடைந்த பேராசிரியர் பாலகுமாரன், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பெருமாள்புரம் போலீசார், பேராசிரியரை தாக்கிய செல்வத்தை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பெயர் மாற்றத்தில் காட்டும் ஆர்வத்தை முறையான நிதி ஒதுக்கீட்டில் அரசு காட்டுவதில்லை - அன்பில் மகேஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-shows-no-interest-in-proper-funding-while-keen-on-name-changes-anbil-mahes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-shows-no-interest-in-proper-funding-while-keen-on-name-changes-anbil-mahes#comments</comments><guid isPermaLink="false">177f61dd-4be0-4e07-b199-22f76b77fb12</guid><pubDate>Sat, 12 Sep 2026 05:15:29 +0000</pubDate><atom:updated>2026-09-12T05:15:29.747Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,Anbil Mahesh,நிதி ஒதுக்கீடு,காலை உணவு திட்டம் விரிவாக்கம்,அன்பில் மகேஸ்,Kaalai Unavu Thittam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/n5v74c8z/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/n5v74c8z/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஆசிரியர்களின் மீது நிதிச் சுமையை ஏற்றுவதும், அவர்களைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் மனநிலையையும் இந்த அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>நிர்வாகத் திறனற்ற டேக் டைவர்ஷன் (Take Diversion) அரசு பெயர் மாற்றத்தில் காட்டும் ஆர்வத்தை முறையான நிதி ஒதுக்கீட்டில் காட்டுவதில்லை!</p><p>முதல்-அமைச்சர் காலை உணவுத் திட்டத்தை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்து, அதற்கான பெயர்ப் பலகை மாற்றுவதற்கான செலவை ஆசிரியர்கள் மீதே சுமத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பலகையை மாற்றச் செலவு செய்வதோடு மட்டுமல்லாமல், மாற்றியதற்கான ஆதாரமாகப் பெயர்ப் பலகையோடு நின்று புகைப்படமும் எடுத்து அனுப்ப வேண்டுமாம்!</p><p>இதுபோல ஆசிரியர்களின் மீது நிதிச் சுமையை ஏற்றுவதும், அவர்களைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் மனநிலையையும் இந்த அரசு உடனடியாக கைவிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">நிர்வாகத் திறனற்ற Take Diversion அரசு பெயர் மாற்றத்தில் காட்டும் ஆர்வத்தை முறையான நிதி ஒதுக்கீட்டில் காட்டுவதில்லை!<br><br>முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்து, அதற்கான பெயர்ப் பலகை மாற்றுவதற்கான செலவை ஆசிரியர்கள் மீதே…</p>&mdash; Dr. Anbil Mahesh (@Anbil_Mahesh) <a href="https://x.com/Anbil_Mahesh/status/2098625073527808259?ref_src=twsrc%5Etfw">September 12, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>திருமூர்த்தி அணை கால்வாய்களை தூர்வார ரூ.14.98 கோடி ஒதுக்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/annamalai-urges-allocation-of-1498-crore-to-desilt-the-thirumoorthy-dam-canals</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/annamalai-urges-allocation-of-1498-crore-to-desilt-the-thirumoorthy-dam-canals#comments</comments><guid isPermaLink="false">9e5fac2b-9508-4641-9d6a-f9c6bf848872</guid><pubDate>Sat, 12 Sep 2026 05:07:22 +0000</pubDate><atom:updated>2026-09-12T05:07:22.712Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Annamalai,அண்ணாமலை,சென்னை,Canal,கால்வாய்,வலியுறுத்தல்,திருமூர்த்தி அணை,தூர்வாரும் பணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/s775bmyu/137.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அண்ணாமலை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/s775bmyu/137.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திருமூர்த்தி அணை கால்வாய்களை தூர்வார ரூ.14.98 கோடி ஒதுக்க வேண்டும் என்று வி தி லீடர்ஸ் இயக்கத்தின் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>திருமூர்த்தி அணை</h2><p>திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையின் 2 மற்றும் 3-ம் மண்டல பாசன வாய்க்கால்களைத் தூர்வாருவதற்காக 1,801.27 கி.மீ. நீளமுள்ள கால்வாய்களில் ரூ.14.98 கோடி மதிப்பீட்டில் சிறப்பு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள முன்மொழிவு பரிசீலனையில் உள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் மானியக் கோரிக்கையில் அறிவித்திருந்தார். </p><p>ஆனால் இதுவரை நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படவில்லை. இந்த நிலையில், நேற்று விவசாயிகள், வாய்க்கால் பாசன அலுவலகத்தில், உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் இந்தப் பாசனத்தை நம்பியுள்ளன. வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் இருந்தால், வறட்சி மற்றும் குறைந்த மழை சூழலில் கடைமடை வரை பாசனத்துக்குத் தண்ணீர் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படும். இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் நேரடியாகப் பாதிக்கப்படும்.</p><h2>வலியுறுத்தல்</h2><p>நிதி ஒதுக்கீட்டிற்குப் பிறகு, பணிகளைத் தொடங்கி முடிக்க குறைந்தது ஒரு மாதம் தேவைப்படும் என்பதால், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF">விவசாயிகளின்</a> வாழ்வாதாரத்தைக் காக்க, தவெக அரசு ரூ.14.98 கோடி நிதியை உடனடியாக ஒதுக்கி, தூர்வாரும் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையின் 2 மற்றும் 3ஆம் மண்டல பாசன வாய்க்கால்களைத் தூர்வாருவதற்காக 1,801.27 கி.மீ. நீளமுள்ள கால்வாய்களில் ₹14.98 கோடி மதிப்பீட்டில் சிறப்பு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள முன்மொழிவு பரிசீலனையில் உள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் மானியக் கோரிக்கையில்…</p>&mdash; K.Annamalai (@annamalai_k) <a href="https://x.com/annamalai_k/status/2098629043562455333?ref_src=twsrc%5Etfw">September 12, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>திடக்கழிவுகளை உருவாகும் இடத்திலேயே தரம் பிரித்து ஒப்படைக்க சென்னை மாநகராட்சி ஆணையாளர் வேண்டுகோள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/segregate-solid-waste-at-source-appeals-chennai-corporation-commissioner</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/segregate-solid-waste-at-source-appeals-chennai-corporation-commissioner#comments</comments><guid isPermaLink="false">560f60e1-c26b-4c89-9bfa-5be1c2e37873</guid><pubDate>Sat, 12 Sep 2026 05:05:16 +0000</pubDate><atom:updated>2026-09-12T05:05:16.157Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,Solid Waste,திடக்கழிவு,திடக்கழிவு மேலாண்மை,மாநகராட்சி ஆணையாளர்,Solid Waste Management</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/68q53l20/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/68q53l20/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகராட்சியில் திடக்கழிவுகளை உருவாகும் இடத்திலேயே பொதுமக்கள் தரம் பிரித்து ஒப்படைத்திட மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>சென்னை மாநகராட்சி, அனைத்து குடியிருப்புவாசிகள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் (Bulk Waste Generators) ஆகியோர் திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-ன் படி திடக்கழிவுகளை உருவாகும் இடத்திலேயே தரம் பிரித்து சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைத்திட அன்புடன் கேட்டுக்கொள்ப்படுகிறார்கள்</p><p>திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-ன் படி, கழிவுகளை பின்வரும் நான்கு வகைகளாகப் பிரித்து வழங்க வேண்டும்:</p><p><strong>மக்கும் கழிவுகள்</strong> (பச்சை நிறக் குப்பைத்தொட்டி): உணவுக் கழிவுகள், காய்கறி மற்றும் பழத்தோல்கள், பூக்கள் மற்றும் பிற மக்கும் கழிவுகள்.</p><p><strong>மக்காத கழிவுகள்</strong> (நீல நிறக் குப்பைத்தொட்டி): காகிதம், பிளாஸ்டிக், உலோகம், அட்டைப்பெட்டிகள், துணி மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள்.</p><p><strong>சுகாதாரக் கழிவுகள்</strong> (சிவப்பு நிறக் குப்பை தொட்டி): பயன்படுத்தப்பட்ட சானிட்டரி நாப்கின்கள், டயப்பர்கள், பயன்படுத்தப்பட்ட மருத்துவக்கட்டுப் பொருட்கள் போன்றவற்றை பாதுகாப்பாக சுற்றி தனியாக வழங்க வேண்டும்.</p><p><strong>வீட்டு அபாயகரக் கழிவுகள் / சிறப்பு கவனம் தேவைப்படும் கழிவுகள்</strong> (கருப்பு நிறக் குப்பைத்தொட்டி): பேட்டரிகள், மின் விளக்குகள், டியூப் லைட்கள், மின்னணுக் கழிவுகள், காலாவதியான மருந்துகள், பெயிண்ட் டப்பாக்கள் உள்ளிட்ட அபாயகரக் கழிவுகளை தனியாக ஒப்படைக்க வேண்டும்.</p><p>கழிவுகளை உருவாகும் இடத்திலேயே தரம் பிரிப்பது ஒவ்வொரு தனிநபரின் பொறுப்பாகும். இதன் மூலம் மக்கும் கழிவுகளை உரமாக மாற்றவும், மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை மீட்டெடுக்கவும், குப்பைக் கிடங்குகளுக்கு அனுப்பப்படும் கழிவுகளின் அளவை குறைக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்தவும் முடியும்.</p><p>சென்னை மாநகராட்சி, 200 வார்டுகளிலும் வீடு தோறும் தரம் பிரிக்கப்பட்ட கழிவுகளை சேகரிக்க அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-ல் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு வகை கழிவு தரம் பிரிப்பு முறையை திறம்பட செயல்படுத்தும் வகையில், மாநகராட்சியின் அனைத்து பேட்டரி மூலம் இயக்கப்படும் கழிவு சேகரிப்பு வாகனங்களிலும் (Battery Operated Vehicles - BOVs), கழிவுகளின் நான்கு வகைகளையும் தனித்தனியாக சேகரிப்பதற்காக நான்கு வண்ண அடையாளங்களுடன் கூடிய தனித்தனி குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.</p><p>எனவே, பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் அனைவரும் உருவாகும் ஈரக் கழிவுகள் மற்றும் உலர் கழிவுகளை உருவாகும் இடத்திலேயே தரம் பிரித்து, தனித்தனியாக ஒதுக்கப்பட்ட ஈரக்கழிவு மற்றும் உலர் கழிவுகளுக்கான குப்பைத் தொட்டிகளில் வைத்து, சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.</p><p>கழிவுகள் உருவாககும் இடத்திலேயே பிரித்தல் மற்றும் அறிவியல் முறையிலான திடக்கழிவு மேலாண்மையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை மாநகராட்சி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தகவல் - கல்வி - தொடர்பு (IEC) நடவடிக்கைகள், பள்ளிகள் மற்றும் சமூக அமைப்புகள் மூலம் தொடர்ச்சியான விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.</p><p>தூய்மையான, ஆரோக்கியமான மற்றும் நிலைத்தன்மை வாய்ந்த சென்னையை உருவாக்குவதில் பொதுமக்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். எனவே, அனைத்து பொதுமக்களும் தங்களது வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் தினந்தோறும் உருவாகும் கழிவுகளை கழிவு உருவாகும் இடத்திலேயே (மூலத்திலேயே) முறையாகத் தரம் பிரித்து, ஈரக் கழிவுகள் மற்றும் உலர் கழிவுகளை தனித்தனி வீட்டு உபயோகக் குப்பைத் தொட்டிகளில் சேகரித்து, சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களிடம் தனித்தனியாக ஒப்படைத்து, சென்னை மாநகராட்சியின் தூய்மை மற்றும் சுகாதாரப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் திடக்கழிவுகளை உருவாகும் இடத்திலேயே தரம் பிரிக்கத் தவறுதல் அல்லது திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026 மற்றும் சென்னை மாநகராட்சியின் விதிமுறைகளை மீறுதல் ஆகியவற்றிற்கு சட்டப்படியாக விதிக்கப்படும் அபராதம் மற்றும் பிற நடவடிக்கைகளைத் தவிர்த்திடுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p>"திடக்கழிவுகளை உருவாகும் இடத்திலேயே தரம் பிரிப்போம் - தூய்மையான, பசுமையான, ஆரோக்கியமான சென்னையை உருவாக்குவோம்." மேற்கண்டவாறு சென்னை மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சமூகநீதி குறித்து திருமாவளவனுக்கு பாடம் எடுக்க யாருக்கும் தகுதி இல்லை! - வன்னி அரசு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-one-is-qualified-to-take-lessons-from-thirumavalavan-on-social-justice-vanni-arasu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-one-is-qualified-to-take-lessons-from-thirumavalavan-on-social-justice-vanni-arasu#comments</comments><guid isPermaLink="false">f14a0c22-e89f-435d-973e-ded9f9a48a51</guid><pubDate>Sat, 12 Sep 2026 04:57:02 +0000</pubDate><atom:updated>2026-09-12T04:57:02.964Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமாவளவன்,Thirumavalavan,வன்னி அரசு,Vanni Arasu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/68ak6h8n/14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வன்னி அரசு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/68ak6h8n/14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சமூகநீதி குறித்து எமது தலைவர் தொல்காப்பியன் திருமாவளவனுக்கு பாடம் எடுக்க யாருக்கும் தகுதி இல்லை! என சமூகநீதித்துறை அமைச்சரும் விசிக துணை பொதுச்செயலாளருமான  <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">வன்னி அரசு</a> கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கு, கடந்த 2019ஆம் ஆண்டு சனவரி 8 அன்று 103வது அரசியலமைப்பு திருத்த மசோதாவை மத்திய அரசு மக்களவையில் அறிமுகப்படுத்தி நிறைவேற்றியது. அடுத்த நாள் சனவரி 9 அன்று மாநிலங்களவையில் கொண்டு வந்து நிறைவேற்றியது. சனவரி 12 இந்த சட்டத்துக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்தார்.</p><h2>சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு</h2><p>இதனை எதிர்த்து எமது தலைவர் எழுச்சித்தமிழர் தொல்காப்பியன் திருமாவளவன் மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் முனைவர் ரவிக்குமார் இருவரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு (W.P.(C) No. 182/2019) தொடர்ந்தனர். இந்த வழக்கில் நாட்டிலேயே மிகச்சிறந்த அரசியலமைப்பு சட்ட அறிஞரான வழக்கறிஞர் கௌதம் பாட்டியா தலைமையிலான வழக்கறிஞர் குழு EWS சட்டத்தை எதிர்த்து மிகவும் விரிவான 70 பக்க Affidavit தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணைக்கு வந்த போது, மூத்த வழக்கறிஞர் மீனாட்சி அரோரா அவர்கள் தலைவர் எழுச்சித்தமிழர் சார்பில் 34 பக்க எழுத்துப்பூர்வ வாதத்தை சமர்பித்தும், நேரில் வாதாடவும் செய்தார். எமது தலைவர் எழுச்சித்தமிழர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோரின் வழக்கில் 2022 நவ. 11 அன்று பொருளாதார அளவுகோலின்படி இடஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்பு சட்டத்திருத்தம் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு 3:2 என்ற கணக்கில் தீர்ப்பளித்தது.</p><h2>ஓபிசி இடஒதுக்கீடு</h2><p>மருத்துவப் படிப்புக்கான மத்திய தொகுப்பு இடங்களில் ஓபிசி  பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை இந்திய மத்திய அரசு வழங்க வேண்டும் என்று நாட்டிலேயே முதல் கட்சியாக எமது தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் 27.06.2019 அன்று அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்களை சந்தித்து வலியுறுத்தினார். அதற்கு பின்னர் தான் திமுக உள்ளிட்ட தமிழ்நாட்டு கட்சிகள் இந்த விவகாரத்தை கையிலெடுத்து சட்டப் போராட்டம் நடத்தியது. ஓபிசி சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தலைவர் அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.</p><p>கோவிட் பெருந்தொற்று காலகட்டத்தில், 10.07.2020 அன்று கிரிமிலேயர் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இணையவழியில் தலைவர் எழுச்சித்தமிழர் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், அப்போதைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தோழர் முத்தரசன் அவர்கள் பங்கேற்று உரையாற்றினார். இதே கோரிக்கையை வலியுறுத்தி, கோவிட் உச்சம் தொட்ட நிலையிலும் 16.10.2020 அன்று தமிழ்நாடு முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் போராட்டம் நடத்தினர். புதுச்சேரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் பங்கேற்றார்.</p><p> 2021ஆம் ஆண்டு ஒன்றிய அரசு ஓபிசி  பிரிவினருக்கு மருத்துவப் படிப்புக்கான மத்திய தொகுப்பு இடங்களில் இடஒதுக்கீடு வழங்க முன்வந்தது. இது சமூகநீதி இயக்கங்களுக்கு கிடைத்த வெற்றி என்று பிரகடனப்படுத்தினார். அப்போதும் கூடவே முன்னேறிய சாதியினருக்கு தரப்படும் EWS 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை 30.07.2021 அன்று விரிவான கண்டன அறிக்கை மூலமாக விடுதலைச் சிறுத்தைகள் கடுமையாக எதிர்த்தது.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திருநெல்வேலி: இந்த ஆண்டில் இதுவரை 103 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirunelveli-103-people-arrested-under-the-detention-act-so-far-this-year</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirunelveli-103-people-arrested-under-the-detention-act-so-far-this-year#comments</comments><guid isPermaLink="false">a688c07c-5537-4d2b-979f-d3faa2fc84e9</guid><pubDate>Sat, 12 Sep 2026 04:43:54 +0000</pubDate><atom:updated>2026-09-12T04:43:54.997Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Tirunelveli,திருநெல்வேலி,arrests,இந்த ஆண்டு,This year,இதுவரை,so far,தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டம்,Tamil Nadu Detention Act</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/e2bvh0pj/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/e2bvh0pj/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டத்தில், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">இந்த ஆண்டில் </a>இதுவரை மொத்தம் 103 பேர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின்</a> கீழ் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்து, தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். </p><h2>எஸ்.பி. உத்தரவு</h2><p>திருநெல்வேலி மாவட்டத்தில் போதைப்பொருட்களின் புழக்கத்தை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில், மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி உத்தரவின் பேரில், கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது காவல்துறையினர் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். </p><p>மேற்சொன்ன வாலிபர் கஞ்சா விற்பனை போன்ற சட்டவிரோத குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அம்பாசமுத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மேற்சொன்ன வாலிபர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் பரிந்துரை செய்தார். </p><h2>வாலிபர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் கைது</h2><p>அதன்பேரில் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி பரிந்துரையின்பேரில், திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஆனந்த் மோகன் உத்தரவின்படி, மேற்சொன்ன வாலிபர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். </p><h2>இந்த ஆண்டில் இதுவரை 103 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது</h2><p>திருநெல்வேலி மாவட்டத்தில், இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 103 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து, தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் - அன்புமணி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ministers-and-mlas-must-also-disclose-their-asset-details-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ministers-and-mlas-must-also-disclose-their-asset-details-anbumani#comments</comments><guid isPermaLink="false">43aac79c-e47e-427a-94f6-a08ca6dfeab2</guid><pubDate>Sat, 12 Sep 2026 04:37:16 +0000</pubDate><atom:updated>2026-09-12T04:37:16.911Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி,Anbumani,சென்னை,Corruption,government employee,ஆசிரியர்கள்,அமைச்சர்கள்,Politicians,சட்டமன்ற உறுப்பினர்கள்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/8aq41c5i/19.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/8aq41c5i/19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.</p><h2>அரசு ஊழியர்கள்</h2><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழ்நாட்டில் ஆசிரியர்கள், நீதிமன்றப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்களும் அடுத்த மாதத்திற்குள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிப்பதற்கான சிறந்த முயற்சி என்ற வகையில் இந்த நடவடிக்கை  வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளை விடுத்து, அரசு ஊழியர்களுக்கு மட்டும் இக்கட்டுப்பாட்டை விதிப்பது நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்க உதவாது.</p><h2>சொத்துகள்</h2><p>தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளின் 7(3) பிரிவில் முந்தைய திமுக அரசால் கடந்த ஜனவரி மாதம் செய்யப்பட்ட திருத்தத்தின்படி அனைத்து நிலை அரசு ஊழியர்களும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31-ம் தேதியன்று அவர்களின் பெயரிலும், அவர்களால் மற்ற குடும்ப உறுப்பினர்களின் பெயர்களிலும் உள்ள நிலங்கள், கட்டிடங்கள் உள்ளிட்ட அசையா சொத்துகள், வாகனங்கள், நகைகள், வங்கி வைப்பீடுகள் உள்ளிட்ட அசையும் சொத்துகள், கடன்கள் உள்ளிட்ட விவரங்களை அடுத்த ஆண்டின் மார்ச் 31-ம் தேதிக்கு முன்பாக தமிழக அரசின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்புக்கான தளத்தில்  தனித்தனி படிவத்தில் தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2025-ம் ஆண்டு டிசம்பர் 31-ம்  நாள் நிலவரப்படியான அரசு ஊழியர்களின் சொத்து விவரங்கள் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் இதுவரை தாக்கல் செய்யப்படாத நிலையில், அக்டோபர் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது.</p><h2>அரசு ஊழியர்கள்</h2><p>சொத்து விவரங்களை தாக்கல் செய்ய அரசு ஊழியர்கள் தவறினால் அது விதிமீறலாகக் கருதப்படும்;  அது அவர்களின் பதவி உயர்வை பாதிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால், அனைவரும் இந்த விதியை மதித்து சொத்துக் கணக்குகளைத் தாக்கல் செய்வது கட்டாயமாகிவிடும். அரசு ஊழியர்கள் சொத்துக் கணக்குகளை தாக்கல் செய்வது புதிய நடைமுறை அல்ல. கடந்த காலங்களில் பணியில் சேர்ந்த முதல் ஆண்டிலும், அதன்பின் ஐந்தாண்டுக்கு ஒருமுறையும் சொத்துக்கணக்கை தாக்கல் செய்ய வேண்டியிருந்தது. இப்போது இந்த நடைமுறை ஆண்டுக்கு ஒருமுறை என மாற்றப்பட்டிருப்பதால் அரசு ஊழியர்கள் ஊழல் செய்து சொத்து வாங்குவது குறையும்; இதன் மூலம் அரசு நிர்வாகம் படிப்படியாக தூய்மையடையக்கூடும்.</p><p>ஆனால், ஊழல் ஒழிப்புக்கான இந்த நடைமுறைகள் அரசு ஊழியர்களுடன் மட்டும் நின்று விடக்கூடாது. முதல்-அமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சித்  தலைவர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் இந்த  கட்டுப்பாடு நீட்டிக்கப்பட வேண்டும். அப்போது தான் தமிழக அரசு நிர்வாகத்திலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் பல பத்தாண்டுகளாக மலிந்து கிடக்கும் ஊழலை முழுமையாக ஒழிக்க முடியும்.</p><h2>லோக் அயுக்தா</h2><p>அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிப்பதற்காக இந்தியாவின் பல மாநிலங்களில் பல்வேறு நடவடிக்கைகள் கடந்த சில பத்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் முதன்மையானது லோக் அயுக்தா அமைப்பை  ஏற்படுத்துவது ஆகும். எந்தெந்த மாநிலங்களில் எல்லாம் லோக் அயுக்தாவின் அதிகார வரம்புக்குள் மாநில முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்களோ, அந்த மாநிலங்களில் எல்லாம் அரசு நிர்வாகத்தில் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை என்றாலும் கூட, கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் லோக் அயுக்தாவின் அதிகார வரம்புக்குள்ளும் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கொண்டு வரப்படவில்லை, சொத்துக்கணக்குகளைக் காட்ட வேண்டிய கட்டாயத்திற்குள்ளும் கொண்டு வரப்படவில்லை என்றால் ஊழல் ஒழிப்பு என்பது நகைச்சுவையாகவே இருக்கும்.</p><p>ஊழல் ஒழிப்பில் அரசு ஊழியர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டியவர்கள் அரசியல்வாதிகள் தான். அவர்கள் நேர்மையாக இருந்தால் அதிகாரிகளால் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D">ஊழல்</a> செய்ய முடியாது. எனவே, தமிழக அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிப்பதற்கான முன்முயற்சிகளை முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் மேற்கொள்ள வேண்டும்.</p><h2>வலியுறுத்தல்</h2><p>அதற்கான முதல் நடவடிக்கையாக முதல்-அமைச்சர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சித்  தலைவர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் நாளில் அவர்களின் அனைத்து வகையான சொத்துகளையும் பொதுவெளியில் வெளியிடுவதை கட்டாயமாக்கி சமூகத் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். மக்கள் பிரதிநிதிகளின் சொத்து மதிப்பு ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டுக்கும் மேல் அதிகரித்திருந்தால், அதுகுறித்து பொதுமக்களுக்கு சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதி விளக்கம் அளிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். பொது வாழ்வில் தூய்மையை உறுதி செய்வதற்காக இந்நடவடிக்கைகளை கட்டாயமாக்கி விதிகளை வகுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருச்சி கோவில்களில் செல்போன் பாதுகாக்க கட்டணம் வசூலிக்கும் முறை ரத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/system-of-charging-fees-for-mobile-phone-safekeeping-at-trichy-temples-cancelled</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/system-of-charging-fees-for-mobile-phone-safekeeping-at-trichy-temples-cancelled#comments</comments><guid isPermaLink="false">1dcc4bb3-dd15-4a80-929b-d06ee16a2e58</guid><pubDate>Sat, 12 Sep 2026 04:29:15 +0000</pubDate><atom:updated>2026-09-12T04:29:15.432Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்சி,கோவில்,செல்போன்,கட்டணம்,mobile phone,Trichy Temples</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/86baw5jj/9.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/86baw5jj/9.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,  </p><p>தமிழகம் முழுவதுமுள்ள 52 கோவில்களில், பக்தர்களின் செல்போன்களை பாதுகாக்க ரூ.5 கட்டணம் வசூலிக்கப்பட்டது. திருச்சியை பொறுத்தவரை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில், உறையூர் வெக்காளியம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகிய 5 கோவில்களில் செல்போன் பாதுகாப்பு வசதியும் செய்யப்பட்டது. </p> <p>இதற்கு பக்தர்களிடையே எதிர்ப்பு கிளம்பியது. ஒரு சில கோவில்களில் டோக்கன் கொடுக்கும் இடத்தில், சில்லரை தட்டுப்பாடு காரணமாக அவ்வப்போது வாக்குவாதமும் ஏற்பட்டது. இந்தநிலையில் திருச்சியில் உள்ள 5 பிரதான கோவில்களிலும், செல்போன் பாதுகாக்க கட்டணம் வசூலிக்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள், பாதுகாப்பு அறை லாக்கரில் செல்போன்களை வைத்து, டோக்கன் மட்டும் பெற்றுச்செல்ல அறிவுறுத்தப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>சாலமன் பாப்பையா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/funeral-rites-with-state-honors-for-solomon-pappaiahs-mortal-remains</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/funeral-rites-with-state-honors-for-solomon-pappaiahs-mortal-remains#comments</comments><guid isPermaLink="false">5a503025-1f44-4c63-9b10-68050e80760b</guid><pubDate>Sat, 12 Sep 2026 04:12:18 +0000</pubDate><atom:updated>2026-09-12T04:12:18.162Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Funeral,இறுதிச்சடங்கு,சாலமன் பாப்பையா,Solomon Pappaiah</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/3modpyz3/8.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/3modpyz3/8.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Breaking-News</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சாலமன் பாப்பையா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>சாலமன் பாப்பையா காலமானார்</h2><p>பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 90. மதுரையை சேர்ந்த சாலமன் பாப்பையா பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றிய இவர், தமிழ் இலக்கியங்கள் குறித்து ஆற்றிய உரைகளாலும் பிரபலமானவர். திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார்.</p><h2>அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு</h2><p>சாலமன் பாப்பையா மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். தமிழக அரசு சார்பில் அமைச்சர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் சாலமன் பாப்பையாவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அப்போது சாலமன் பாப்பையாவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படுமா? என அமைச்சர் நிர்மல் குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.</p><p>அரசு மரியாதை வழங்குவது குறித்து ஆலோசித்து விரைவில் முடிவு வெளியிடப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், சாலமன் பாப்பையா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நிர்மல்குமார் தனது எக்ஸ் தளத்தில் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>பண்டிகை காலங்களில் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் தொடரும் சிக்கல்: டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் அவதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/irctc-website-woes-during-festive-season-passengers-struggle-to-book-tickets</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/irctc-website-woes-during-festive-season-passengers-struggle-to-book-tickets#comments</comments><guid isPermaLink="false">00bf69b6-0b11-4499-8045-1bc87183fe86</guid><pubDate>Sat, 12 Sep 2026 03:53:01 +0000</pubDate><atom:updated>2026-09-12T03:53:01.251Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டிக்கெட் முன்பதிவு,Ticket Booking,பயணிகள் அவதி,&apos;Tatkal&apos; tickets,IRCTC,தட்கல் முறை,ஐ.ஆர்.சி.டி.சி.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/j627sl8s/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/j627sl8s/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பண்டிகை காலங்களில் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் தொடரும் சிக்கல்களால், டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.</p><h2>டிக்கெட் முன்பதிவு</h2><p>விநாயகர் சதுர்த்தி மற்றும் தீபாவளி போன்ற தொடர் பண்டிகை விடுமுறை நாட்களை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ள பொதுமக்களின் வசதிக்காக இந்திய ரெயில்வே சார்பில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.</p><h2>கடும் சர்வர் பிரச்சினை</h2><p>இந்த நிலையில், நேற்று காலை தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஏராளமான பொதுமக்கள் ஒரே நேரத்தில் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் குவிந்தனர். குறிப்பாக, ஏ.சி. அல்லாத சாதாரண வகுப்புகளுக்கான தட்கல் முன்பதிவு காலை 11 மணி அளவில் தொடங்கியதும், ஆயிரக்கணக்கான பயணிகள் ஒரே நேரத்தில் இணையதளத்தைப் பயன்படுத்த முயன்றனர்.</p><p>இதனால் ஏற்பட்ட கடும் சர்வர் பிரச்சினை காரணமாக காலை 11 மணி முதல் 11.20 மணி வரை இணையதளத்தை பயன்படுத்த முடியவில்லை. பெரும்பாலான பயணிகளுக்கு "அதிகப்படியான நெரிசல் காரண மாக கோரிக்கையைச் செயல்படுத்த முடியவில்லை" என்ற செய்தி மட்டுமே திரையில் தோன்றியது. இதனால், 20 நிமிடங்களுக்கும் மேலாக பயணிகள் தங்களின் விபரங்களை உள்ளிடவோ, கட்டணம் செலுத்தவோ முடியாமல் தவித்தனர்.</p><h2>பயணிகள் ஏமாற்றம்</h2><p>இணையதளத்தில் ஏற்பட்ட சிக்கல் சரியாகி மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்குள், பெரும்பாலான ரெயில்களில் தட்கல் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து, காத்திருப்போர் பட்டியலுக்குச் சென்றன. இதனால், நீண்ட நேரம் முன்பாகக் காத்திருந்த ஆயிரக்கணக்கான ரெயில் பயணிகள் கடும் ஏமாற்றமடைந்தனர்.</p><h2>கோரிக்கை</h2><p>ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களின்போது, இந்த தட்கல் டிக்கெட்டில் இணையதளச் சிக்கல் என்பது தொடர்கதையாகி வருவதாகப் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதுபோன்ற பண்டிகை காலங்களில் சர்வர் முடக்கத்தைத் தவிர்க்க, சர்வர் திறனை மேம்படுத்தி தடையற்ற டிக்கெட் முன்பதிவு வழங்க ஐ.ஆர்.சி.டி.சி. நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தண்டவாள பராமரிப்பு பணி:
கடலூர்- சேலம் ரெயில் சேவையில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/track-maintenance-work-between-cuddalore-and-salem-changes-to-train-services</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/track-maintenance-work-between-cuddalore-and-salem-changes-to-train-services#comments</comments><guid isPermaLink="false">d9eb390c-1a90-44bc-ae61-ee313cf17070</guid><pubDate>Sat, 12 Sep 2026 03:42:06 +0000</pubDate><atom:updated>2026-09-12T03:42:06.946Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Cuddalore,train,ரெயில்,Salem,சேலம்,பராமரிப்பு பணி,Track Maintenance Work</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/8tyck3qn/40.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தண்டவாள பராமரிப்பு பணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/8tyck3qn/40.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சூரமங்கலம்,</p><p>சேலம் மார்க்கெட் ரெயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் கடலூர் துறைமுகம்- சேலம் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. </p><h2>தண்டவாள பராமரிப்பு பணி</h2><p>அதன்படி, கடலூர் துறைமுகம்- சேலம் ஜங்ஷன் பயணிகள் ரெயில் (76813) வருகிற 12, 13, 15, 16, 17, 18, 19 மற்றும் 20-ந் தேதிகளில் கடலூர் துறைமுகத்தில் இருந்து வழக்கம்போல் காலை 4.45 மணிக்கு புறப்பட்டு சேலம் டவுன் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">ரெயில்</a> நிலையத்துடன் சேவை நிறுத்தப்படும்.</p><p>தண்டவாள பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர், சேலம் டவுன் ரெயில் நிலையத்தில் இருந்து சேலம் ஜங்ஷன் வரை அதே ரெயிலின் நிறுத்தங்களுடன் முன்பதிவில்லா சிறப்பு ரெயிலாக இயக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காதலி பேச மறுத்ததால் விரக்தி... தனியார் மருத்துவமனை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/desperate-because-his-girlfriend-refused-to-talk-private-hospital-employee-commits-suicide-by-hanging</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/desperate-because-his-girlfriend-refused-to-talk-private-hospital-employee-commits-suicide-by-hanging#comments</comments><guid isPermaLink="false">4721200d-04eb-43e3-bbe1-b363940147d5</guid><pubDate>Sat, 12 Sep 2026 03:25:18 +0000</pubDate><atom:updated>2026-09-12T03:25:18.917Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தூக்குப்போட்டு தற்கொலை,காதலி,Suicide,மறுப்பு,girlfriend,employee,ஊழியர்,private hospital,தனியார் மருத்துவமனை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/ijgitx5h/suicide.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தற்கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/ijgitx5h/suicide.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவட்டார், </p><p>காதலி பேச மறுத்ததால் விரக்தி அடைந்து தனியார் மருத்துவமனை ஊழியர் தூக்குப்போட்டு <a href="https://www.dailythanthi.com/topic/suicide%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">தற்கொலை </a>செய்து கொண்டார்.</p><p>திருவட்டாரை அடுத்த தச்சூர் குன்றுவிளையை சேர்ந்தவர் ஜார்ஜ் மகன் விஷ்ணு நந்தன் (வயது 23). சுங்கான்கடையில் உள்ள தனியார் மருத்துவமனையில் டெக்னீஷியனாக வேலை பார்த்து வந்த இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் விஷ்ணு நந்தன் தனது காதலியிடம் பேச அவரை போனில் அழைத்துள்ளார். ஆனால் அந்த பெண் பேச விருப்பம் இல்லை என்று கூறிவிட்டு விஷ்ணு நந்தனின் செல்போன் அழைப்பை துண்டித்துவிட்டதாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த அவர் இதுபற்றி தனது நண்பரிடம் கூறி உள்ளார். பின்னர் விஷ்ணுநந்தன் இரவில் வீட்டின் அருகில் உள்ள பழைய வீட்டில் தூங்க சென்றார்.</p><h2>தூக்குப்போட்டு தற்கொலை</h2><p>நேற்று காலையில் அவரது தாய் சென்று பார்த்தபோது வீட்டின் கதவு திறக்கவில்லை. பின்னர் ஜன்னல் வழியாக பார்த்தபோது அறையில் விஷ்ணுநந்தன் சேலையில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது பற்றிய தகவல் அறிந்த திருவட்டார் போலீசார் விரைந்து சென்று விஷ்ணுநந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>
ஆசிரியர்கள் மீது தேவையற்ற பொருளாதார சுமையை ஏற்படுத்துவதா?  தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/imposing-an-unnecessary-financial-burden-on-teachers-anbumani-ramadoss-questions-the-tamil-nadu-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/imposing-an-unnecessary-financial-burden-on-teachers-anbumani-ramadoss-questions-the-tamil-nadu-government#comments</comments><guid isPermaLink="false">4eac4e13-1847-4f5a-9b6e-63c073265d48</guid><pubDate>Sat, 12 Sep 2026 03:09:52 +0000</pubDate><atom:updated>2026-09-12T03:09:52.694Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadas,பள்ளிக்கல்வித்துறை,D55,பள்ளி தலைமையாசிரியர்கள்,காமராஜர் காலை உணவுத் திட்டம்,Kamarajar Breakfast Scheme</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/il9dv8v6/6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/il9dv8v6/6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டத்தின் தொடக்க விழாவிற்கு தேவையான அனைத்தையும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அவர்களின் சொந்த செலவில் மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டிருக்கிறது. ஆசிரியர்கள் மீது தேவையற்ற பொருளாதார சுமையை அரசே ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கது. என அன்புமணி ராமதாஸ் தெவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- </p><p>"காலை உணவுத் திட்ட விரிவாக்கத்திற்கான ஏற்பாடுகள், அடிப்படைத் தேவைகளை தலைமை ஆசிரியர்களின் சொந்த செலவில் செய்யுமாறு கட்டாயப்படுத்துவதா?</p><p>தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு எட்டாம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட்ட பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டத்தின் தொடக்க விழா வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான தேவைகள் அனைத்தையும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அவர்களின் சொந்த செலவில் மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டிருக்கிறது. ஆசிரியர்கள் மீது தேவையற்ற பொருளாதார சுமையை அரசே ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கது.</p><p>தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள அரசு தொடக்​கப் பள்​ளி​களில் முதல்​வரின் காலை உணவுத் திட்​டம் கடந்த 2022 செப்​.15-ம் தேதி அண்ணா பிறந்த நாளில் அறிமுகம் செய்யப்பட்டது. 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இந்தத் திட்டம் நீட்டிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இத்திட்டம் எட்டாம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட்டு, பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டம் என்ற பெயரில் தந்தைப் பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் தேதி தொடக்கி வைக்கப்படவுள்ளது.</p><p>பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டத் தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் பள்ளிகளில் புதிய பெயர்ப்பலகைகளை 4க்கு 2 அடி அளவில் ஸ்டீல் குழாய்களில் தயாரித்து நிறுவ வேண்டும்; பள்ளிகளுக்குத் தேவையான சமயலறை, உணவுப் பொருள்கள் இருப்பு வைக்கும் அறை, குடிநீர், மின்விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் சார்ந்த குறைகளை களைய வேண்டும்; மாணவர்களுக்கு தட்டு, டம்ளர் ஆகியவற்றை வாங்கித் தர வேண்டும் என்று பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு ஆணையிட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை, இதற்காக ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை. இந்த வசதிகள் அனைத்தையும் தலைமை ஆசிரியர்கள் அவர்களின் சொந்த செலவில் செய்ய வேண்டும் என்று அரசு ஆணையிட்டிருப்பது தான் அதிர்ச்சியளிக்கிறது.</p>  <p>ஒவ்வொரு பள்ளியிலும் அரசால் பட்டியலிடப்பட்டுள்ள பணிகளை செய்வதற்கு மாணவர்களின் எண்ணிக்கை ஏற்ப ரூ.8000 முதல் ரூ.10 ஆயிரம் வரை செலவாகக் கூடும். இந்த செலவுகளை ஒட்டுமொத்தமாக தலைமை ஆசிரியர்களின் தலையில் சுமத்துவது அநீதியாகும். காலை உணவுத் திட்டத்திற்காக பல நூறு கோடியை ஒதுக்கீடு செய்துள்ள தமிழக அரசு, இந்த வசதிகளை செய்து கொடுப்பதற்காக கூடுதலாக சில லட்சங்களை ஒதுக்குவதற்கு எந்தத் தடையும் இல்லை. அதை செய்யாமல், அச்செலவுகளை தலைமை ஆசிரியர்கள் மீது திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதை ஆசிரியர்களால் சமாளிக்க முடியாது.</p><p>நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், அரசு மதுக்கடைகள் போன்றவற்றில் அடிப்படை வசதிகளை செய்து கொள்வதற்காக அரசு நிதி ஒதுக்காமல், அதை பணியாளர்களின் தலையில் சுமத்தியதால் தான் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு 60 ரூபாயும், அரசு மதுக்கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாயும் வசூலிக்கும் நிலை உருவானது. அந்த கலாச்சாரத்தை ஒழிக்க முடியாமல் அரசு திண்டாடிக் கொண்டிருக்கிறது. அதே கலாச்சாரத்தை பள்ளிகளுக்கும் நீட்டித்தால் அங்கும் தவறுகள் நடக்க வாய்ப்பு ஏற்பட்டு விடும். நேர்மையையும், ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டிய பள்ளிகளில் தவறுகள் கற்பிக்கப்படக்கூடாது.</p><p>எனவே, காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ள பள்ளிகளுக்கு மாவட்டக் கல்வி அலுவலரால் அனுப்பப்பட்டுள்ள இது தொடர்பான சுற்றறிக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். காலை உணவுத் திட்டத்திற்கான பெயர்ப்பலகைகள், தட்டுகள், டம்ளர்கள் மற்றும் பிற வசதிகளுக்கான செலவை அரசே ஏற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். "</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு இன்று முடிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cpim-to-decide-on-by-election-stance-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cpim-to-decide-on-by-election-stance-today#comments</comments><guid isPermaLink="false">211e3e27-18d3-4411-bf8f-e1e03ce1b287</guid><pubDate>Sat, 12 Sep 2026 03:06:49 +0000</pubDate><atom:updated>2026-09-12T03:06:49.389Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>இடைத்தேர்தல்,By-election,CPI(M),மார்க்சிஸ்டு மார்க்சிஸ்டு கட்சி</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/717sdwsr/7.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/717sdwsr/7.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்லுக்கு த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. இதில் ஆளும் த.வெ.க. தலைமையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி என்ற பெயரில் ஒரு அணியை உருவாக்கி உள்ளது. இந்த அணியில் உள்ளவர்கள் த.வெ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவை தெரிவித்துள்ளனர்.</p><p>அதே நேரம் அரசை வெளியில் இருந்து ஆதரிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இந்தநிலையில் மார்க்சிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. அதில் சட்டசபை இடைத்தேர்தலில் என்ன நிலைப்பாட்டை எடுப்பது என்று முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது. </p>]]></content:encoded></item><item><title>விழுப்புரம்: சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/villupuram-six-sovereigns-of-jewelry-snatched-from-a-woman-walking-on-the-road</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/villupuram-six-sovereigns-of-jewelry-snatched-from-a-woman-walking-on-the-road#comments</comments><guid isPermaLink="false">58f7c4f8-cef5-416c-8de1-8cd0105e8e54</guid><pubDate>Sat, 12 Sep 2026 02:48:29 +0000</pubDate><atom:updated>2026-09-12T02:48:29.031Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>விழுப்புரம்,Villupuram,நகை பறிப்பு,jewelry snatching</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/6t4ojbbw/chainsnatching.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/6t4ojbbw/chainsnatching.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>விழுப்புரம்,  </p><p>விழுப்புரத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகையை பறித்துச்சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p><h2>பெண்ணிடம் நகை பறிப்பு</h2><p>விழுப்புரம் வண்டிமேடு வள்ளலார் நகரில் வசித்து வருபவர் பாலமுருகன். இவருடைய மனைவி நித்யா (வயது 28). இவர் நேற்று காலை 10.30 மணியளவில் வண்டிமேடு பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், திடீரென நித்யாவின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்தார்.</p> <h2>வாலிபருக்கு வலைவீச்சு</h2><p>உடனே அவர், திருடன் ... திருடன்.... என கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டதும் அக்கம், பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அங்கு விரைந்து ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த வாலிபர் நகையுடன் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டார். பறிபோன நகையின் மதிப்பு ரூ.5 லட்சமாகும்.</p><p>இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச்சென்ற வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இன்று சரிபார்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurantakam-dharapuram-bypolls-evms-verification-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurantakam-dharapuram-bypolls-evms-verification-today#comments</comments><guid isPermaLink="false">707ecf80-5d5e-4755-bcde-be3aebfbaf57</guid><pubDate>Sat, 12 Sep 2026 02:34:55 +0000</pubDate><atom:updated>2026-09-12T02:34:55.855Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இடைத்தேர்தல்,மதுராந்தகம்,தாராபுரம்,மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்,Madurantakam,EVM Machine,சரிபார்ப்பு,byelection</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/pputiyvd/Untitled-4.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/pputiyvd/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் இன்று நடக்கிறது.</p><h2>இடைத்தேர்தல்</h2><p>மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ந்தேதி நடைபெற உள்ளது. தற்போது வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது. வேட்புமனு தாக்கலுக்கு 16-ந்தேதி கடைசி நாளாகும்.</p><h2>சரிபார்க்கும் பணி</h2><p>இந்த தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்காளர்கள் தாங்கள் செலுத்திய வாக்கினை உறுதி செய்யும் 'விவிபேட்' கருவிகள் தயார் நிலையில் உள்ளன. இந்த எந்திரங்களை சரிபார்க்கும் பணி இன்று (சனிக்கிழமை) தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலரால் மேற்கொள்ளப்படுகிறது.</p><h2>தொகுதி வாரியாக ஒதுக்கீடு</h2><p>இதைத்தொடர்ந்து, தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபேட் கருவிகள் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்கப்படும். பின்னர் அவை தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளின் காப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்படும்.</p><p>வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்த பின்னர், அவர்களது பெயர் மற்றும் விவரங்களுடன் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும். மேற்கண்ட தகவலை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>
பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவின் நிறைவேறாத கடைசி ஆசை
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pattimandram-naduvar-salomon-pappaiyaavin-niraiveraatha-kadaisi-aasai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pattimandram-naduvar-salomon-pappaiyaavin-niraiveraatha-kadaisi-aasai#comments</comments><guid isPermaLink="false">0d353fa7-a39d-43e3-af86-40f569799182</guid><pubDate>Sat, 12 Sep 2026 02:19:50 +0000</pubDate><atom:updated>2026-09-12T02:19:50.946Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>judge:,சாலமன் பாப்பையா,Solomon Papaiah,பட்டிமன்ற நடுவர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/1zxl2hq1/tpspw.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/1zxl2hq1/tpspw.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>மதுரை</p><p>பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவின் நிறைவேறாத கடைசி ஆசை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.</p><p>பட்டிமன்ற நடுவர் மற்றும் தமிழ் அறிஞரான சாலமன் பாப்பையா வயது முதிர்வு மற்றும் உடல்நல குறைவால் நேற்று காலமானார்.  அவருக்கு வயது 90.</p><p>சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்காக பட்டிமன்றத்தில் நடுவராக கலந்து கொண்டு பேசினார். அதன்பின் வீட்டில் இருந்த அவருக்கு திடீரென மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார்.  மக்களின் அஞ்சலிக்காக சாலமன் பாப்பையா உடல் ஞானஒளிவுபுரம் பகுதியில் உள்ள அவருடைய வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.</p>  <h2>உயில்</h2><p>அவருக்கு நிறைவேறாத ஆசை இருந்துள்ளது.  இதுபற்றி சாலமன் பாப்பையாவின் உதவியாளர் ராஜா கூறுகையில், சாலமன் பாப்பையா கிறிஸ்தவராக பிறந்தாலும், சாதி, மத வேறுபாடுகளை கடந்து வாழ்ந்தவர். தனது உடலை தகனம் செய்ய வேண்டும் என அவர் உயில் எழுதி வைத்துள்ளார்.</p><p>அதன்படி, மதுரை தத்தனேரி மின்மயானத்தில் தகனம் நடைபெறும் வகையில் ஏற்பாடு நடந்து வருகிறது. பாரதியார் குறித்த புத்தகத்தை வெளியிட வேண்டும் என நினைத்தார். அது தான் அவரது கடைசி ஆசையாகவும் இருந்தது. அந்த ஆசை நிறைவேறும் முன்பு மறைந்து விட்டார் என கூறினார்.</p>  <h2>பேராசிரியர்</h2><p>சாலமன் பாப்பையாவின் சொந்த ஊர், மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடி. 22.2.1936 அன்று பிறந்தவர். தமிழில் முதுகலை பட்டம் பெற்ற அவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றினார்.</p><p>பட்டிமன்றங்களில் பேச்சாளராக கலந்து கொண்டு பேசிய அவர், பின்னாளில் நடுவராகவும் உயர்ந்ததுடன், சிவாஜி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.</p>  <h2>பிரபலங்கள் இரங்கல்</h2><p>அவர் இலக்கியக்கட்டுரைகள், திறனாய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார். திருக்குறள், புறநானூறு, அகநானூறு இலக்கியங்களுக்கு உரையும், கம்பன் கழக சொற்பொழிவுகளை நூலாகவும் தொகுத்தவர். தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டுக்காக 2000-ம் ஆண்டில் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ளார். 2021-ம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் பெற்றவர்.</p><p>சாலமன் பாப்பையா மறைவுக்கு தமிழ் அறிஞர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.  அவரது இறுதிச்சடங்குகள் இன்று (சனிக்கிழமை) பகல் 11 மணிக்கு மேல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>
சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசியதாக வழக்கு: திருச்சி சாதனாவின் யூடியூப் சேனல் முடக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-filed-over-obscene-remarks-on-social-media-trichy-sadhanas-youtube-channel-suspended</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-filed-over-obscene-remarks-on-social-media-trichy-sadhanas-youtube-channel-suspended#comments</comments><guid isPermaLink="false">66a78e01-efa2-4bb8-a5f9-861c55102a65</guid><pubDate>Sat, 12 Sep 2026 02:19:39 +0000</pubDate><atom:updated>2026-09-12T02:19:39.210Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>social media,சமூக வலைதளங்கள்,யூடியூப்,Obscene Video,ஆபாச பேச்சு,திருச்சி சாதனா,Trichy Sathana</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/u1bvi3ig/3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/u1bvi3ig/3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசிய வழக்கில் திருச்சி சாதனாவின் யூடியூப் சேனல் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரை கைது செய்ய சேலம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.</p> <h2>ஆபாச பதிவு</h2><p>சேலம் குகை லைன்மேடு பகுதியை சேர்ந்தவர் வக்கீல் அஜித். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் அளித்துள்ள புகார் மனுவில், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் 18 வயதிற்கும் கீழ் உள்ளவர்களை சீரழிக்கும் வகையில் ஆபாசமான உடை அணிந்து கொண்டு பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையில் பெண்கள் சிலர் ஈடுபடுகின்றனர். குறிப்பாக திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா உள்பட 12 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். அதன்பேரில், சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார், திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா உள்பட 12 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி சாதனா உள்ளிட்ட சிலர் பல்வேறு ஐ.டி.க்கள் மூலமாக ஆபாச வீடியோக்களை பதிவிட்டு வந்தது தெரியவந்தது.</p>  <h2>முன்ஜாமீன் மனு தள்ளுபடி</h2><p>இதனிடையே, இந்த வழக்கு சம்பந்தமாக திருச்சி சாதனா தரப்பில் முன்ஜாமீன் கேட்டு சேலம் மாவட்ட முதன்மை கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அவருக்கு முன்ஜாமீன் வழங்க அரசு வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நீதிபதி சொர்ணம் நடராஜன், திருச்சி சாதனாவின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால் சமூக வலைதள நிறுவனங்களுக்கு சைபர் கிரைம் போலீசார் ஒரு புகார் மனுவை அனுப்பியுள்ளனர்.</p>  <h2>கைது செய்ய தீவிரம்</h2><p>மேலும், திருச்சி சாதனாவை கண்டுபிடித்து அவரை கைது செய்யவும் தனிப்படை போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதேபோல், முதற்கட் டமாக திருச்சி சாதனாவின் யூடியூப் சேனல் முடக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தான் செய்தது தவறு என்பதை உணராமல் யூடியூப் சேனலை முடக்கியது தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அவரை கைது செய்ய சேலம் சைபர் கிரைம் போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>கள்ளக்குறிச்சி: பாலியல் தொல்லையால் விஷம் குடித்த மாணவி உயிரிழப்பு - கைதான ஆசிரியர் பணியிடை நீக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kallakurichi-schoolgirl-dies-after-sexual-harassment</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kallakurichi-schoolgirl-dies-after-sexual-harassment#comments</comments><guid isPermaLink="false">33623d6d-e6d5-4b62-857f-a4a0ef32d4cc</guid><pubDate>Sat, 12 Sep 2026 02:18:51 +0000</pubDate><atom:updated>2026-09-12T02:18:51.111Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கள்ளக்குறிச்சி,Kallakurichi,suspend,பாலியல் தொல்லை,பணியிடை நீக்கம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/mxc21e9a/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/mxc21e9a/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சி,</p><p>கள்ளக்குறிச்சி அருகே பாலியல் தொல்லையால் விஷம் குடித்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து கைதான பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.</p><h2>மாணவிக்கு பாலியல் தொல்லை</h2><p>கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி 10-ம்வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் அந்த பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரியும் கச்சிராயப்பாளையத்தை சேர்ந்த கலையழகன் மகன் ஜெகதீசன் (46 வயது) என்பவர், பள்ளியில் வைத்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.</p><p>இதனால் பாதிக்கப்பட்ட மாணவி, சம்பவத்தன்று தனது வீட்டில் வைத்து விஷம் குடித்து விட்டார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.</p><h2>சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு</h2><p>தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக மாணவி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆசிரியர் ஜெகதீசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து நேற்று முன்தினம் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், சேலம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மாணவி, சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.</p><h2>பணியிடை நீக்கம்</h2><p>இச்சம்பவம் தொடர்பாக மாணவியின் ஊரில், ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. அருளரசு மேற்பார்வையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் ஜெகதீசனை துறைரீதியாக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை: கன்டெய்னர் லாரி மோதி வாலிபர் பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-youth-dies-after-being-hit-by-container-lorry</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-youth-dies-after-being-hit-by-container-lorry#comments</comments><guid isPermaLink="false">28c56893-18da-4f76-88d0-2981f7c237eb</guid><pubDate>Sat, 12 Sep 2026 02:16:30 +0000</pubDate><atom:updated>2026-09-12T02:16:30.423Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,Chennai,சென்னை,bike,பைக்,Youth dies,வாலிபர் பலி,container lorry,கன்டெய்னர் லாரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/c2esvj6a/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விபத்து,பலி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/c2esvj6a/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a> அருகே மாதவரம் பகுதியில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF">கன்டெய்னர் லாரி</a> மோதிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">விபத்தில்</a> வாலிபர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF">பலி</a>யானார். </p><h2>பைக் மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து</h2><p>சென்னையை அடுத்த மாதவரம் பொன்னியம்மன்மேடு பகுதியைச் சேர்ந்த அஜய் அரவிந்த் (வயது 27), பூந்தமல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்துவிட்டு தனது பைக்கில் மதுரவாயல்-வண்டலூர் மேம்பாலம் வழியாக வந்து கொண்டிருந்தார். புழல் ரெட்டேரி அருகே இறக்கத்தில் இறங்கியபோது, புழலில் இருந்து மாதவரம் நோக்கி சென்றுகொண்டிருந்த கன்டெய்னர் லாரி, அவரது பைக் மீது மோதியது. </p><h2>வாலிபர் பலி</h2><p>இதில் பலத்த காயம் அடைந்த அஜய் அரவிந்த், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கன்டெய்னர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>கடலூர்- சேலம் ரெயில் சேவையில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-cuddalore-salem-train-service</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-cuddalore-salem-train-service#comments</comments><guid isPermaLink="false">0eaf3d6e-f933-4573-a3d7-a7c851e03a5e</guid><pubDate>Sat, 12 Sep 2026 02:08:57 +0000</pubDate><atom:updated>2026-09-12T02:08:57.566Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Cuddalore,கடலூர்,Salem,ரெயில் சேவை,train service,சேலம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/hcnv3vph/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/hcnv3vph/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சேலம்,</p><p>சேலம் மார்க்கெட் ரெயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் கடலூர் துறைமுகம்- சேலம் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கடலூர் துறைமுகம் - சேலம் ஜங்ஷன் (வண்டி எண்: 76813) 12, 13, 15, 16, 17, 18, 19, தேதிகளில் கடலூர் துறைமுகத்தில் இருந்து வழக்கம்போல் காலை 4.45 மணிக்கு புறப்பட்டு சேலம் டவுன் ரெயில் நிலையத்துடன் சேவை நிறுத்தப்படும். </p><p>தண்டவாள பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர், சேலம் டவுன் ரெயில் நிலையத்தில் இருந்து சேலம் ஜங்ஷன் வரை அதே ரெயிலின் நிறுத்தங்களுடன் முன்பதிவில்லா சிறப்பு ரெயிலாக இயக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மின்சாரம் தாக்கி தந்தை உயிரிழப்பு: 3 வயது மகன் படுகாயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/father-dies-of-electrocution-3-year-old-son-critically-injured</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/father-dies-of-electrocution-3-year-old-son-critically-injured#comments</comments><guid isPermaLink="false">93062ee3-474d-4b97-9fef-ca0875bdd0ed</guid><pubDate>Sat, 12 Sep 2026 01:57:08 +0000</pubDate><atom:updated>2026-09-12T01:57:08.947Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,மின்சாரம்,உயிரிழப்பு,injured,electrocution,Die</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/qnaz76l8/53.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உயிரிழப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/qnaz76l8/53.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வாணாபுரம், </p><p>தச்சம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராமன் விநாயகம் (வயது 45) விவசாயி. குடிநீரை சுத்திகரிப்பு செய்து கேன்களில் தண்ணீர் விற்பனையும் செய்து வந்தார். </p><p>இந்த நிலையில் நேற்று மாலை குடிநீர் சுத்திகரிப்பு செய்யும் எந்திரம் அருகில் விநாயகம் மற்றும் அவருடைய மகன் ஜீவின் (3) ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது தந்தை, மகன் இருவரையும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். </p><h2>அரசு மருத்துவமனை</h2><p>அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு காட்டாம்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை டாக்டர் பரிசோதித்து பார்த்து விநாயகம் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். </p><p>சிறுவன் ஜீவினுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவன் ஜீவினுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் குறித்து தச்சம்பட்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார் </a>வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>திருவொற்றியூரில் போலி சித்த மருத்துவர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fake-siddha-doctor-arrested-in-thiruvotriyur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fake-siddha-doctor-arrested-in-thiruvotriyur#comments</comments><guid isPermaLink="false">d815b064-9c67-4c87-b048-c530b863f879</guid><pubDate>Sat, 12 Sep 2026 01:50:11 +0000</pubDate><atom:updated>2026-09-12T01:50:11.977Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,கைது,arrested,fake,போலி,திருவொற்றியூர்,சித்த மருத்துவர்,Siddha Doctor,Thiruvottriyur</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/rnpt3ois/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ போலி சித்த மருத்துவர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/rnpt3ois/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவொற்றியூர், </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">திருவொற்றியூரில்</a> 10-ம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாத போலி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D">சித்த மருத்துவரை</a> போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். </p><h2>போலி சித்த மருத்துவர்</h2><p>சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை சேஷாசல கிராமணி தெருவில் அகத்தீஸ்வரர் பஞ்சகர்மா என்ற பெயரில் சித்த மருத்துவம் பார்த்து வந்தவர் சஜிகுமார் (வயது 59). இவர் போலியாக சித்த மருத்துவ தொழில் செய்து வருவதாக மருத்துவ மற்றும் ஊரக நலப் பணித்துறைக்கு தகவல் கிடைத்தது. </p><h2>கைது</h2><p>அதன்பேரில் அதிகாரிகள் சோதனை செய்தபோது, அவர் 10-ம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாத போலி சித்த மருத்துவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து சஜிகுமாரை திருவொற்றியூர் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்ற ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். </p>]]></content:encoded></item><item><title>முதல் அமைச்சர் விஜய் பேச்சை கண்டித்து திமுக இன்று கண்டன ஆர்ப்பாட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-to-hold-a-protest-today-condemning-chief-minister-vijays-remarks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-to-hold-a-protest-today-condemning-chief-minister-vijays-remarks#comments</comments><guid isPermaLink="false">dba01883-96a2-41e0-9005-9c2ce3669230</guid><pubDate>Sat, 12 Sep 2026 01:42:01 +0000</pubDate><atom:updated>2026-09-12T01:42:01.751Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,திமுக,DMK</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/0mm45pkm/Anna-arivalayam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/0mm45pkm/Anna-arivalayam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>தமிழக முதல் அமைச்சர்  விஜய்யின் சட்டப்பேரவை பேச்சை கண்டித்து இன்று  திமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் தலைமையில் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற உள்ளது. காலை 10.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “திரையுலக மோகம், கவர்ச்சி மூலமாக மக்களை மயக்கி, போலியான பிம்பத்தை சமூக ஊடகங்களின் மூலமாகக் கட்டமைத்து, குழந்தைகளை ஏமாற்றி குடும்பத்துக்குள் குழப்பங்களை ஏற்படுத்தி , போலி வாக்குறுதிகள் அளித்து ஆட்சியைக் கைப்பற்றி, அதுவும் ஆட்சி அமைக்கும் வலிமையைப் பெறமுடியாத மைனாரிட்டி நிலைமை என்பதால் திமுக கூட்டணியில் வென்றவர்களுக்கு அமைச்சர்கள் பொறுப்புகளைக் கொடுத்து அவர்களது ஆதரவைப் பெற்று, அதிமுக சார்பில் வென்றவர்களுக்கும் அமைச்சர் பதவி தருவதாக ஏமாற்றி குதிரை பேரம் நடத்தி, முதல்வராகி இருக்கிறார் நடிகர் விஜய்.</p><h2>பாலியல் வன்முறை</h2><p>இப்பொறுப்புக்கு வந்த பிறகு பொறுப்பை உணர்ந்து செயல்பட்டாரா? என்றால் இல்லை. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஒரு சில வாக்குறுதிகளை அரைகுறையாகச் செய்து ஏமாற்றி வருகிறார். திமுக ஆட்சியில் மு.க.ஸ்டாலினால் கொண்டு வரப்பட்ட திட்டங்களை நிறுத்தினார். நிறுத்த முடியாத திட்டங்களுக்கு பெயரை மாற்றி, ஸ்டிக்கர் ஒட்டும் வேலையைச் சிறப்பாகச் செய்து வருகிறார்.கொலை - கொள்ளை அதிகமாகிவிட்டது. போதைப் பொருள் நடமாட்டமும் - பாலியல் வன்முறையும் அதிகமாகிவிட்டது. பல்வேறு குற்றச்செயல்களில் தவெக நிர்வாகிகளே சிக்கி வருகிறார்கள். அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அவர்களை பாதுகாக்கும் வேலையில் ஈடுபடுகிறார்கள். 'தெரியாமல் ஓட்டுப் போட்டுவிட்டோம்' என்று மக்கள் வருந்திச் சொல்லி வருகிறார்கள். இதில் இருந்து திசை திருப்புவதற்காக தனது டயலாக் சூட்டிங் மேடையாக தமிழ்நாடு சட்டப்பேரவையை முதல்வர் மாற்றி விட்டார்.</p><h2>கடுமையான கண்டனத்துக்குரியது</h2><p>திமுகவையும், ஐந்து முறை இந்த நாட்டை ஆண்ட முதல்வர் கருணாநிதியையும், இந்தியாவின் புகழை தோகா மாநாட்டில் நிலைநாட்டிய பொருளாதார மேதை முரசொலி மாறனையும், திருமணம் ஆன ஐந்தே மாதத்தில், 23 வயதில் MISA (Maintenance of Internal Security Act) அவசரநிலைச் சட்டத்தில் கைதாக்கப்பட்டு சிறைச்சாலை சித்திரவதைகளை அனுபவித்து, ஓராண்டு காலம் சிறையில் இருந்த மு.க.ஸ்டாலினின் தியாகத்தை கொச்சைப்படுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் விஜய் பேசிய பேச்சு கடுமையான கண்டனத்துக்குரியது. அரசியல் உலகில் இத்தகைய அருவெறுப்பான உரையை சட்டமன்றம் கண்டிருக்காது.</p><h2>கொச்சையான பேச்சு</h2><p>அவரது உரை மூலமாக சட்டமன்றத்தின் மாண்பு, மரபு, வரலாறு இவை அனைத்தும் காற்றில் பறக்கிறது. படங்களாக அந்த அவையில் நிற்கிறவர்கள் தலைகவிழ்ந்து கண்ணீர் வடித்திருப்பார்கள். சில அமைச்சர்கள் சட்டமன்றத்தில் தான் பேசுவது தவறு என்று தெரிந்தே பேசி, 'மீம்ஸ்', 'ரீல்ஸ்'-ஐ வெளியிடுகிறார்கள். நேரலை மூலமாக மக்களை சென்றடைந்த பிறகு அதை ஒப்புக்கு அவைக்குறிப்பில் இருந்து நீக்கிக் கொள்கிறார்கள். இப்படியாக தந்திர மேடையாக சட்டப்பேரவையை தவெக அரசு பயன்படுத்துகிறது.ஆட்சியின் தோல்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தப்பித்துக் கொள்ள, கொச்சையான பேச்சுகளைப் பேசும் தரமற்ற மனிதராக முதல்வர் விஜய் மாறியிருக்கிறார். இவரது இப்பேச்சைக் கண்டிக்கும் வகையில், திமுக சார்பில் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில்12.09.2026 சனிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.</p><p>இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் - நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் - மாநில - மாவட்ட நிர்வாகிகள் - ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழகச் செயலாளர்கள் - நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளில் உள்ள நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், திமுக தொண்டர்கள் கலந்து கொண்டு முதல்வரின் ஆணவப் பேச்சைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>ஒரே பிரசவத்தில் 17 குட்டிகளை ஈன்ற சிப்பிப்பாறை இன நாய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-chippiparai-dog-gave-birth-to-17-puppies-in-one-delivery</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-chippiparai-dog-gave-birth-to-17-puppies-in-one-delivery#comments</comments><guid isPermaLink="false">f9fe61d4-df1b-473d-b943-fbe4260e0f27</guid><pubDate>Sat, 12 Sep 2026 01:32:44 +0000</pubDate><atom:updated>2026-09-12T01:32:44.336Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>delivery,dog,நாய் இனங்கள்,குட்டிகள்,cubs</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/auxi6q4a/10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிப்பிப்பாறை இன நாய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/auxi6q4a/10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><p>திண்டுக்கல் - நத்தம் ரோட்டில் உள்ள அபிராமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் தனது வீட்டில் சிப்பிப்பாறை இன வகை பெண் நாய் வளர்த்து வருகிறார். இந்த நாய் நேற்று 17 குட்டிகளை ஈன்றது. இதில் 10 ஆண், 7 பெண் குட்டிகள் பிறந்தன. இதனையறிந்த அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.</p><p>இதுகுறித்து அதன் பராமரிப்பாளர் கூறுகையில், கொரோனா ஊரடங்கு நேரத்தில் சிறுமலை அடிவாரத்தில் பராமரிப்பு இன்றி சுற்றித்திரிந்த சிப்பிப்பாறை இன நாய் ஒன்றை எடுத்து வளர்த்தேன். இது கடந்த 2023-ம் ஆண்டு 11 குட்டிகளை ஈன்றது. தற்போது மீண்டும் கருவுற்று, 17 குட்டிகளை ஈன்றுள்ளது.</p><h2>17 குட்டிகள்</h2><p>அழிவின் விளிம்பில் உள்ள சிப்பிப்பாறை இன நாய்களை அதிகரிக்கும் நோக்கத்தோடு, உறவினர்கள், நண்பர்களுக்கு இதனை வழங்க உள்ளோம் என்றார். இந்த நாய்களை பரிசோதித்த சிறுகுடி கால்நடை உதவி டாக்டர் சிங்கமுத்து கூறும்போது, சிப்பிப்பாறை இன நாய்கள் அதிகப்படியாக 4 முதல் 8 குட்டிகள் வரை ஈன்றெடுக்கும். இது 17 குட்டிகள் ஈன்றுள்ளது என்பது ஆச்சர்யம் தான். <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D">நாய்</a> மற்றும் குட்டிகள் அனைத்தும் ஆரோக்கியமாக உள்ளன என்றார்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-murder-case-convict-gets-life-imprisonment</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-murder-case-convict-gets-life-imprisonment#comments</comments><guid isPermaLink="false">0d7b4776-fc23-43ab-af10-453ba99899e7</guid><pubDate>Sat, 12 Sep 2026 01:29:50 +0000</pubDate><atom:updated>2026-09-12T01:29:50.728Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Murder case,கொலை வழக்கு,குற்றவாளி,life imprisonment,ஆயுள் தண்டனை,convict</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/13i36z2e/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/13i36z2e/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> தெற்கு காவல் நிலைய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">கொலை வழக்கில்</a> சம்பந்தப்பட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF">குற்றவாளிக்கு</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">ஆயுள் தண்டனை</a> விதித்து மாவட்ட கூடுதல் நீதிமன்றம் - I தீர்ப்பளித்துள்ளது.</p><h2>கொலை வழக்கு</h2><p>தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கால்டுவெல் காலனி பகுதியில் வைத்து கடந்த 2017-ம் ஆண்டு, தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சேர்ந்த ஆசிர்வாதம் மகன் அந்தோணிராஜ் (வயது 43) என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி 3 சென்ட், அந்தோணியார்புரம் பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் மதன்குமார்(எ) குட்டிஜேசு(39) என்பவரை தெற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.</p><h2>குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை</h2><p>இந்த வழக்கு விசாரணை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் - I (ADJ - I) நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மேற்சொன்ன நீதிமன்ற நீதிபதி தாண்டவம், நேற்று (11.9.2026) மேற்சொன்ன நபரான மதன்குமார்(எ) குட்டி ஜேசு என்பவரை குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். </p>]]></content:encoded></item><item><title>தாம்பரம் ரெயில் நிலையத்தில் ‘லிப்ட்’ பழுதானதால் ரூ.500 கொடுத்து டிராலியில் சென்ற மூதாட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/elderly-woman-pays-rs-500-trolley-tambaram-station-broken-lift</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/elderly-woman-pays-rs-500-trolley-tambaram-station-broken-lift#comments</comments><guid isPermaLink="false">840cbd59-3462-42af-86bd-e044354ba536</guid><pubDate>Sat, 12 Sep 2026 01:25:23 +0000</pubDate><atom:updated>2026-09-12T01:25:23.518Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tambaram,தாம்பரம்,தாம்பரம் ரெயில் நிலையம்,Tambaram Railway Station</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/76xt1wf0/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/76xt1wf0/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தாம்பரம் ரெயில் நிலையத்தில் 'லிப்ட்' பழுதானதால் ரூ.500 கொடுத்து டிராலியில் மூதாட்டி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p><p>சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து புறப்படும் தாம்பரம் - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்ய வந்த மூதாட்டி ஒருவர், நடைமேடைக்கு செல்ல 'லிப்ட்' வசதி இல்லாததால் கடும் சிரமத்துக்கு உள்ளானார். பின்னர் வேறு வழியின்றி ரூ.500 கொடுத்து டிராலியில் சென்றார்.</p><h2>'லிப்ட்' பழுது</h2><p>இதுகுறித்து அவரது மகளான சிட்லப்பாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீவித்யா கூறியதாவது:- என் தாயார் சமீபத்தில் முதுகெலும்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். கடுமையான முழங்கால் வலியால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் படிக்கட்டுகளை பயன்படுத்த முடியாது. தாம்பரம்-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலை பிடிக்க, சக்கர நாற்காலி, மின்சார வாகனம், லிப்ட் போன்ற வசதிகள் கிடைக்கும் என எதிர்பார்த்து அழைத்து வந்தோம். ஆனால் தாம்பரம் ரெயில் நிலையத்தில் லிப்ட் பழுதடைந்து இருந்தது.</p><h2>அதிகாரிகள் அலட்சியம்</h2><p>இதனால் 10-வது நடைமேடைக்கு எனது தாயை அழைத்துச் செல்ல முடியாத நிலையில், அங்கிருந்த பணியாளரை நாடினோம். அவர் உடைமைகளை ஏற்றிச்செல்லும் டிராலியில் எனது தாயை அமர வைத்து நடைமேடைக்கு அழைத்துச் செல்ல ரூ.500 கேட்டார். பின்னர் வேறு வழியின்றி ரூ.500 கொடுத்து எனது தாயை டிராலியில் வைத்து அழைத்து சென்றோம். இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் புகார் அளித்த போது, 'லிப்ட்' சரிசெய்ய இன்னும் 2 மாதங்கள் ஆகும் என அலட்சியமாக பதிலளித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.</p><h2>கோரிக்கை</h2><p>சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன் கூறுகையில், "தாம்பரம் நிலையத்தில் 'லிப்ட்', எஸ்கலேட்டர் வசதிகளை ஏற்படுத்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வருகிறோம். புதிய மேம்பால பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. முதியோர் மற்றும் ஊனமுற்றோருக்காக பேட்டரி கார், மோட்டார் சக்கர நாற்காலி வசதிகளை உடனடியாக ஏற்படுத்தவேண்டும்" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>விசைத்தறி தொழிலாளி ஜீப்பை ஏற்றி கொலை: பேரூராட்சி தலைவருக்கு ஆயுள் தண்டனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/power-loom-worker-killed-by-jeep-town-panchayat-chairman-gets-life-sentence</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/power-loom-worker-killed-by-jeep-town-panchayat-chairman-gets-life-sentence#comments</comments><guid isPermaLink="false">1e89df2c-092b-4fb5-acbf-ed4ba224b847</guid><pubDate>Sat, 12 Sep 2026 01:22:55 +0000</pubDate><atom:updated>2026-09-12T01:22:55.085Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்,President,Murder case,கொலை வழக்கு,life imprisonment,ஆயுள் தண்டனை,Worker,தொழிலாளி,town panchayat,பேரூராட்சி தலைவர்,power loom,விசைத்தறி,ஜீப்,Jeep</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/7mt65bf9/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விசைத்தறி தொழிலாளி ஜீப்பை ஏற்றி கொலை: பேரூராட்சி தலைவருக்கு ஆயுள் தண்டனை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/7mt65bf9/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர், </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">திருப்பூரை </a>அடுத்த சாமளாபுரம் பேரூராட்சி பகுதியில் ஜீப்பை ஏற்றி விசைத்தறி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">தொழிலாளி கொலை</a> செய்யப்பட்ட வழக்கில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D">பேரூராட்சி தலைவருக்கு</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">ஆயுள் தண்டனை</a> விதித்து திருப்பூர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. </p><h2>தார் சாலை அமைக்கும் பணி</h2><p>திருப்பூரை அடுத்த சாமளாபுரம் பேரூராட்சி கருகம்பாளையம் லட்சுமிகார்டன் தெருவை சேர்ந்த பழனிசாமி (வயது 57), விசைத்தறி தொழிலாளி. இவர் குடியிருந்த பகுதியில் சாமளாபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த 2 பேர் வந்து, சாலை அமைய உள்ள இடம், தங்களுக்கு சொந்தமானது என்று கூறி ஆட்சேபனை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தொழிலாளி பழனிசாமி கடந்த 4-7-2025 அன்று சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிசாமியை(60) சந்தித்தார்.</p><h2>மிரட்டல்</h2><p>அப்போது தார்சாலை அமைய உள்ள ஆட்சேபனைக்குரிய இடத்தை பேரூராட்சி நிர்வாகம் விலைக்கு வாங்கிவிட்டு, அதன்பிறகு தார் சாலை அமைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். ஆனால் இந்த பிரச்சினையில், நீங்கள் தலையிடக்கூடாது என தொழிலாளி பழனிசாமியை, பேரூராட்சி தலைவர் மிரட்டினார். </p><h2>ஜீப்பை ஏற்றி தொழிலாளி கொலை</h2><p>இந்த நிலையில் கடந்த 10-9-2025 அன்று தொழிலாளி பழனிசாமி, கருகம்பாளையம் அரசு பள்ளி அருகே ஸ்கூட்டரில் சென்றார். அப்போது அந்த வழியாக ஜீப்பை ஓட்டி வந்த பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிசாமி, ஸ்கூட்டரில் சென்ற பழனிசாமியின் மீது மோதினார். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளி பழனிசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். </p><h2>பேரூராட்சி தலைவருக்கு ஆயுள் தண்டனை</h2><p>இதுகுறித்து தொழிலாளி பழனிசாமியின் மகன் சுகுமார் அளித்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை, திருப்பூர் 2-வது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. கொலை குற்றத்துக்காக பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிசாமிக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கனகராஜ் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு வக்கீல் பிரபாகரன் ஆஜராகி வாதாடினார். </p>]]></content:encoded></item><item><title>சென்னை: ஜாமீனில் வெளியே வந்த ரவுடி... கத்திகளுடன் துரத்திய கும்பல்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-rowdy-released-on-bail-gang-chases-him-with-knives</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-rowdy-released-on-bail-gang-chases-him-with-knives#comments</comments><guid isPermaLink="false">014bce08-17a8-435b-816f-fab735ea5e8f</guid><pubDate>Sat, 12 Sep 2026 01:19:34 +0000</pubDate><atom:updated>2026-09-12T01:19:34.451Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,Bail,ஜாமீன்,கும்பல்,Rowdy,ரவுடி,புழல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/qjh2tx37/314.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கத்திகளுடன் துரத்திய கும்பல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/qjh2tx37/314.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புழல்,</p><p>புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த ரவுடியை சினிமா பாணியில் காரை விரட்டிச் சென்று கொலை செய்ய முயன்ற கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது.</p><p>சென்னையை அடுத்த ராஜமங்கலம் 8-வது தெருவைச் சேர்ந்தவர் மாசி என்ற மாசிலாமணி (வயது 38). ரவுடியான இவரை அடிதடி வழக்கு தொடர்பாக ராஜமங்கலம் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இவருக்கு நேற்று முன்தினம் ஜாமீன் கிடைத்தது. இதையடுத்து மாலையில் புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த மாசிலாமணியை அழைத்துச் செல்வதற்காக அவரது நண்பர்கள் 4 பேர் அங்கு இருந்தனர். அப்போது மாசிலாமணியை தீர்த்துக்கட்ட ஒரு கும்பலும் அங்கு தயாராக காத்திருந்தது.</p><h2>கொலை முயற்சி</h2><p>மாசிலாமணி காரில் ஏறியதும். கார் புறப்பட்டு சென்னைக்கு கிளம்பியது. உடனே 2 மோட்டார் சைக்கிள்களில் 5 பேர் கொண்ட கும்பல் காரை பின்தொடர்ந்து விரட்டிச் சென்றது. திடீரென அந்த கும்பல், சினிமா பாணியில் காரை வழிமறித்து. கத்திகளால் கண்ணாடியை வெட்டி சேதப்படுத்தியது.</p><p>இதனால் அதிர்ச்சி அடைந்த மாசிலாமணி, கார் டிரைவரிடம் உடனடியாக காரை திருப்பி புழல் போலீஸ் நிலையத்துக்கு செல்லுமாறு கூறினார். உடனடியாக டிரைவர், புழல் போலீஸ் நிலையத்துக்கு காரை ஓட்டிச்சென்றார். இதனால் மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் கத்திகளுடன் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனால் மாசிலாமணி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். </p><h2>கைது</h2><p>இது குறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜமங்கலம் பகுதியைச் சேர்ந்த வாழ் வேந்தன் (20), நரேஷ் (23) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தப்பி ஓடிய மேலும் 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சினிமா காட்சி போல் காரை கத்திகளால் வெட்டி ரவுடி கொலை செய்ய விரட்டிய சம்பவம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D">புழல்</a> பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item></channel></rss>