<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 23 Aug 2026 04:19:14 +0000</lastBuildDate><item><title>தொழில் அதிபரை கடத்தி ரூ.26 லட்சம் பணம், நகை பறிப்பு: உண்மையாக நடந்தது என்ன..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/businessman-kidnapped-and-robbed-of-jewelry-and-cash-worth-26-lakh-what-really-happened</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/businessman-kidnapped-and-robbed-of-jewelry-and-cash-worth-26-lakh-what-really-happened#comments</comments><guid isPermaLink="false">6cb9e694-37f0-4b47-a3ce-d52c4c265430</guid><pubDate>Sun, 23 Aug 2026 04:17:32 +0000</pubDate><atom:updated>2026-08-23T04:17:32.744Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,Tamilnadu,கோவை,தமிழகம்,கடத்தல்,police investigation,போலீஸ் விசாரணை,பணம் பறிப்பு,தொழில் அதிபர்,Kovai,kidnapped,business man</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/pnuqst0x/laj.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/pnuqst0x/laj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p>வடமாநில தொழில் அதிபரை கடத்தி ரூ.26 லட்சம் பணம் மற்றும் நகை பறிக்கப்பட்டது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>ரூ.1 கோடி கடன்</h2><p>மேற்கு வங்காளம் ஹூக்ளி அருகே மாதப்பூர் பகுதியை சேர்ந்தவர் தேப்ஜித் ரானா (வயது 25). தொழில் அதிபர். இவருக்கு கோவையை சேர்ந்த ஆனந்த குமார் என்பவர் இணையதளம் மூலம் அறிமுகம் ஆனார். அவரிடம் தேப்ஜித் ரானா, தான் திருப்பூரில் ஜவுளிக்கடை நடத்தி வருவதாக கூறினார்.</p><p>இந்த நிலையில் கடந்த மாதம் தேப்ஜித் ரானா கோவை வந்தார். அவரை ஆனந்தகுமார், அவருடைய நண்பர் செந்தில்குமார் ஆகியோர் நேரில் சந்தித்தனர். அப்போது, அவரிடம் செந்தில்குமார் ரூ.1 கோடி கடன் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அவர் தன்னிடம் அவ்வளவு தொகை இல்லை என்று கூறிவிட்டதாக தெரிகிறது.</p><h2>கடத்தல்</h2><p>இதையடுத்து கடந்த வாரம் தேப்ஜித் ரானா தனது நண்பர்களுடன் <a href="https://www.dailythanthi.com/topic/coimbatore">கோவை </a>வந்து பீளமேடு அருகே ஒரு நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். இதை அறிந்த செந்தில்குமார், ஆனந்தகுமார் உள்பட 10 பேர் அவரை பார்க்க சென்றனர்.</p><p>அப்போது அந்த அறையில் தேப்ஜித் ரானா மற்றும் அவருடைய நண்பர்களான சித்தார்த், ஆதர்ஷ்குமார் ஆகியோர் இருந்தனர். உள்ளே சென்றதும் அந்த 10 பேரும் சேர்ந்து தொழில் அதிபர் உள்பட 3 பேரையும் காரில் ஏற்றி, திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.</p><h2>தலைமறைவான 8 பேர்</h2><p>பின்னர் அந்த கும்பல் கத்தி முனையில் தேப்ஜித் ரானாவிடம் ரூ.26 லட்சத்து 54 ஆயிரம் மற்றும் ஒரு பவுன் நகை மற்றும் 2 விலை உயர்ந்த செல்போன்களை பறித்துவிட்டு தப்பிச்சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். </p><p>மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய செந்தில்குமார், ஆனந்தகுமார் ஆகியேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான 8 பேர் யார்? அவர்கள் எங்கு உள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.</p><h2>தீவிர விசாரணை</h2><p>இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-</p><p>வடமாநிலத்தை சேர்ந்த தொழில் அதிபர் தேப்ஜித் ரானா மற்றும் பணத்தை பறித்ததாக கூறப்படும் செந்தில்குமார், ஆனந்தகுமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் ஜவுளி வியாபாரம் செய்து வரும் தங்களிடம் முதலீடு செய்தால் இரட்டிப்பாக பணத்தை கொடுப்பதாக தேப்ஜித்ரானா கூறி உள்ளார்.</p><p>அதை நம்பிய செந்தில்குமார், ஆனந்தகுமார் உள்பட 10 பேர் ரூ.80 லட்சத்தை தேப்ஜித் ரானா, சித்தார்த் ஆகியோரிடம் கொடுத்து உள்ளனர். அந்த பணத்தை திரும்ப கொடுக்காமல் 2 பேரும் மேற்கு வங்காளத்துக்கு சென்று விட்டு கோவை வந்து உள்ளனர். </p><h2>உண்மையாக நடந்தது</h2><p>இதை அறிந்த ஆனந்தகுமார், செந்தில்குமார் உள்பட 10 பேரும் சென்று பணத்தை திரும்ப கேட்டு உள்ளனர். அதை கொடுக்காததால் கடத்திச்சென்று பணத்தை பறித்ததாக 2 பேரும் தெரிவித்து உள்ளனர். ஆனால் தேப்ஜித் ரானா, தன்னை கடத்திச்சென்று பணத்தை பறித்ததாக கூறுகிறார். இந்த விவகாரத்தில் உண்மையாக நடந்தது என்ன என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.</p><p>இவ்வாறு அவர்கள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>ரேஷன் கடைகளில் தரமான அரிசி: அதிகாரிகள் குழு ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/quality-rice-in-ration-shops-officials-team-inspects</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/quality-rice-in-ration-shops-officials-team-inspects#comments</comments><guid isPermaLink="false">d359a824-383c-4253-9391-d294efb68ebd</guid><pubDate>Sun, 23 Aug 2026 04:14:20 +0000</pubDate><atom:updated>2026-08-23T04:14:20.532Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>ரேஷன் கடை,Ration shop,அரிசி,rice</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/totuylki/6.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/totuylki/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ரேஷன் கடைகளில் தரமான அரிசி மட்டுமே வழங்குவதை உறுதி செய்ய, மாவட்ட வாரி யாக, கூட்டுறவு மண்டல இணை பதிவாளர், நுகர் பொருள் வாணிப கழக மண்டல மேலாளர், தரக் கட்டுப்பாடு அலுவலர் அடங்கிய குழு அமைக்கப் பட்டுள்ளது. இக்குழுக்கள், நேற்று முதல் அனைத்து கிடங்குகளிலும் அரிசியின் தரத்தை ஆய்வு செய்து வருகின்றன.</p><p>தமிழக ரேஷன் கடை களில், 2.25 கோடி கார்டுதாரர்களுக்கு மாதம் தோறும் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்காக மாதம், 3.75 லட்சம் டன் அரிசி தேவை. இந்த அரிசியை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது. உணவு துறையின் கீழ் செயல்படும் நுகர் பொருள் வாணிப கழகம், அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்களை கொள்முதல் செய்கிறது. அவற்றின் வினியோகத்தை, ரேஷன் கடைகள் வாயிலாக கூட்டுறவு துறை மேற் கொள்கிறது.</p><p>ரேஷன் அரிசி தரம் குறைவாக இருப்பதாக, அவ்வப்போது புகார்கள் எழுகின்றன. இதற்கு காரணம், 'நீங்கள்தான்' என, இரு துறைகளின் பணியாளர்களும் தங்களுக்குள் மாறி மாறி குறைகளை சொல்கின்றனர்.</p><p>இதுதொடர்பாக இம் மாதம், 20ம் தேதி சட்ட சபையில் கூட்டுறவு மற்றும் உணவு துறை மீதான மானிய கோரிக்கையின் போது, ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே காரசாரமான விவாதம் நடந்தது.</p><p>'ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங் கப்படும்' என, உணவு துறை அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்தார். இதையடுத்து, மாவட்ட வாரியாக கூட்டுறவு, உணவு துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப் பட்டுள்ளது.</p> <p>குழுவில், கூட்டுறவு மண்டல இணை பதிவாளர், வாணிப கழக முது நிலை மண்டல மேலாளர், தரக் கட்டுப்பாடு அதிகாரிகள் உள்ளனர். உள்ள வாணிப கழகத்தின் அனைத்து கிடங்கு முதல் மாவட்டங்களில் அக்குழுவினர், நேற்றுகளுக்கும் சென்று, அரிசியின் தரம் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆய்வு நாளை வரை நடக்கிறது.</p> ]]></content:encoded></item><item><title>கால்நடை டாக்டர்கள் தேர்வு முறைகேடு: ஐ.ஏ.எஸ். அதிகாரி ஞானேந்திரகுமார் திடீர் தலைமறைவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/veterinarians-examination-malpractice-ias-officer-gyanendra-kumar-suddenly-disappeared</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/veterinarians-examination-malpractice-ias-officer-gyanendra-kumar-suddenly-disappeared#comments</comments><guid isPermaLink="false">ce2c5d93-9d3f-4b25-9e33-ed86b3d187a6</guid><pubDate>Sun, 23 Aug 2026 04:07:35 +0000</pubDate><atom:updated>2026-08-23T04:07:35.738Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கால்நடை,பெங்களூரு,தலைமறைவு,IAS,Veterinary,தேர்வு முறைகேடு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/tm082t5o/150.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/tm082t5o/150.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பெங்களூரு,</p><p>கால்நடை டாக்டர்கள் தேர்வு முறைகேடு குறித்து அமலாக்கத்துறை சோதனை நடத்தியதை தொடர்ந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி ஞானேந்திரகுமார் திடீரென தலைமறைவாகி உள்ளார். அவரை தேடும் பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது.</p><h2>பணி இடங்களுக்கான தேர்வு</h2><p>கர்நாடகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து வருபவர் ஞானேந்திரகுமார். இவர், கர்நாடக தொழில் துறையில் எம்.எஸ்.எம்.இ. இயக்குனராக தற்போது பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையத்தில் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக பணியாற்றி இருந்தார். இவரது தலைமையில் தான் கால்நடை டாக்டர்கள் பணி இடங்களுக்கான தேர்வு நடைபெற்றிருந்தது.</p><p>இந்த நிலையில், கடந்த 20-ந் தேதியில் இருந்து அதிகாரி ஞானேந்திரகுமார் திடீரென்று தலைமறைவாகி விட்டார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது. இதனால் ஞானேந்திரகுமார் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. அவர் தனது குடும்பத்தினரையோ அல்லது தன்னுடன் வேலை செய்து வரும் அதிகாரிகளுடனோ தொடர்பில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.</p><h2>தலைமறைவு</h2><p>இதற்கிடையே கால்நடை டாக்டர்கள் பணியிடங்களுக்கு நடந்த தேர்வில் முறைகேடு நடந்திருந்தது. இந்த முறைகேடு தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூரு உள்பட 21 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். தேர்வு முறைகேடு தொடர்பாக கால்நடை டாக்டர்கள் தேர்வை எழுதியவர்களிடமும் அதிகாரிகள் விசாரித்து தகவல்களை பெற்றிருந்தனர். இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு பயந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி ஞானேந்திரகுமார் தலைமறைவாகி இருப்பதாக கூறப்படுகிறது.</p><p>இதுதொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த 20-ந் தேதி பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றது தெரியவந்துள்ளது. அதாவது பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்ட அந்த விமானத்தில் பயணிக்க 1 மணி 31 நிமிடங்களுக்கு முன்பாக தான் விமான டிக்கெட்டை அவசரமாக பதிவு செய்துள்ளார். அதற்காக அவர் ரூ.30,253 விமான கட்டணத்தை தனது எச்.டி.எப்.சி. வங்கியின் கிரடிட் கார்டு மூலம் செலுத்தியிருந்ததும் தெரியவந்தது.</p><p>மேலும் டெல்லி விமான நிலையத்தில் வைத்து தான் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததும். அதன் பிறகு தான் ஞானேந்திரகுமார் மாயமாகி இருப்பது தெரியவந்துள்ளது. ஞானேந்திரகுமார் மாயமாகி இருப்பது பற்றி, அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் எதுவும் அளிக்கவில்லை. என்றாலும், <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%90.%E0%AE%8F.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D">ஐ.ஏ.எஸ்</a>. அதிகாரி ஒருவர் திடீரென தலைமறைவாகி இருப்பது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அவரை தேடும் நடவடிக்கையில் போலீசாரும், அமலாக்கத்துறையினரும் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>விடுமுறை தினம்: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-tourists-flock-to-kanyakumari-14</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-tourists-flock-to-kanyakumari-14#comments</comments><guid isPermaLink="false">17fd65c3-1272-451c-a8f2-bf5f5246648b</guid><pubDate>Sun, 23 Aug 2026 04:05:08 +0000</pubDate><atom:updated>2026-08-23T04:05:08.943Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,Tourists,சுற்றுலா பயணிகள்,Kanyakumari,விடுமுறை தினம்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/q62zeegp/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/q62zeegp/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி, </p><p>சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள். </p><p>இந்தநிலையில் இன்று ஞாயிறு விடுமுறையையொட்டி காலையில் இருந்தே கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை, சன்ரைஸ் பாயின்ட் போன்ற பகுதிகளில் நள்ளிரவு முதல் காத்திருந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். </p><p>அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். படகுத்துறையில் இருந்து சுற்றுலா பயணிகள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்த்து ரசித்து வருகின்றனர். காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள தமிழன்னை பூங்கா, சன்செட் பாயிண்ட், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.   </p>]]></content:encoded></item><item><title>வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-low-pressure-area-has-formed-over-the-bay-of-bengal</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-low-pressure-area-has-formed-over-the-bay-of-bengal#comments</comments><guid isPermaLink="false">77deab34-b044-47f0-b3ab-2312dd940cbb</guid><pubDate>Sun, 23 Aug 2026 03:50:42 +0000</pubDate><atom:updated>2026-08-23T03:50:42.442Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Rain,Weather,கனமழை,வானிலை,தமிழகம்,Weather News,WeatherUpdate,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,வானிலை ஆய்வு மையம்,Low pressure area,கன மழை,வானிலை அறிக்கை,weather condition,காற்றழுத்த தாழ்வுப்பகுதி,வங்கக்கடல்,வானிலை முன்னறிவிப்பு,Weather Status,வானிலை அறிவிப்பு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/a70y4if1/sea.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/a70y4if1/sea.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>வானிலை செய்திகள் (Weather)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><h2>மழை</h2><p>முன்னதாக தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. </p><p>மேலும் இதன் காரணமாக இன்று (23-08-2026) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும் என்றும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந் தது.</p><h2>கடல் சீற்றம்</h2><p>இந்நிலையில் வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக மேற்கு வங்காளம், ஒடிசா, வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நாளை வரை கடல் சீற்றமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>தமிழ்நாட்டுக்கு பாதிப்பு இல்லை</h2><p>மேலும் மேற்கு வங்காளம், ஒடிசா, வடக்கு ஆந்திரப்பிரதேச கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>திருவண்ணாமலையில் 28-ந்தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வு கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-grievance-redressal-meeting-for-differently-abled-persons-to-be-held-in-tiruvannamalai-on-the-28th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-grievance-redressal-meeting-for-differently-abled-persons-to-be-held-in-tiruvannamalai-on-the-28th#comments</comments><guid isPermaLink="false">18027616-b299-4a8f-b3f1-af32f1965a91</guid><pubDate>Sun, 23 Aug 2026 03:44:32 +0000</pubDate><atom:updated>2026-08-23T03:44:32.237Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,Tiruvannamalai,மாற்றுத்திறனாளிகள்,குறைதீர்வு கூட்டம்,A collector- கலெக்டர்,differently-abled persons</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/7e7svpmi/149.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருவண்ணாமலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/7e7svpmi/149.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை, </p><p>திருவண்ணாமலையில் 28-ந்தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வு கூட்டம் நடைபெறும்.</p><h2>சிறப்பு குறைதீர்வு கூட்டம்</h2><p>திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி அவர்களின் தேவைகளை கேட்டறிந்து நிறைவேற்றும் வகையில் வருகிற 28-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் கலெக்டர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வு கூட்டம் நடத்தப்பட உள்ளது. </p><p>கூட்டத்தில் அனைத்து துறை அலு வலர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளி நபர்களும் அன்றைய தினம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்து உள்ள புதிய குறைதீர்வு கூட்ட அரங்கில் நடைபெறும் சிறப்பு குறை தீர்வு கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என <a href="https://www.dailythanthi.com/topic/collector-orders">கலெக்டர்</a> வந்தனா கார்க் தெரிவித்து உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கூட்டுறவு வங்கிகளில் தங்க நகைக்கடன் ரூ.10 ஆயிரமாக உயருகிறது?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-gold-loan-limit-in-cooperative-banks-being-raised-to-10000</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-gold-loan-limit-in-cooperative-banks-being-raised-to-10000#comments</comments><guid isPermaLink="false">a005c922-55da-4fbd-b280-e5cbd384a528</guid><pubDate>Sun, 23 Aug 2026 03:44:22 +0000</pubDate><atom:updated>2026-08-23T03:44:22.937Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நகைக்கடன்,கூட்டுறவு வங்கி,தங்க நகைக்கடன்கள்,Cooperative Bank,கூட்டுறவு வங்கிகள்,cooperative banks,gold loan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/n5d7hybs/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/n5d7hybs/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் தங்க நகைகளை அடமானம் வைத்து பெறப்படும் கடன் தொகையை உயர்த்த கூட்டுறவுத் துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கத்திற்கு அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் வரை கடன் வழங்கப்பட உள்ளது.</p><h2>ரூ.8 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது</h2><p>தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் தங்க நகைகளை அடமானம் வைத்தால், ஒரு கிராம் தங்கத்திற்கு தற்போது அதிகபட்சமாக ரூ.8 ஆயிரம் வரை கடன் வழங்கப்படுகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்தக் கடன் தொகையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>தங்கம் விலை தொடர்ந்து உயர்வு</h2><p>சர்வதேச சந்தை நிலவரங்களின் தாக்கத்தால் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. நேற்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 600 ஆக இருந்தது. இதனால், தங்கத்தை அடமானம் வைத்து அதிகளவில் கடன் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.</p><h2>தனியார் நிறுவனங்களுடன் போட்டி</h2><p>தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் ஒரு கிராம் தங்கத்திற்கு அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் வரை கடன் வழங்கப்படுகிறது. இதனால், அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் கூட்டுறவு நிறுவனங்களிலும் தங்க நகைக்கடன் தொகையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><h2>விரைவில் அதிகாரப்பூர்வ ஒப்புதல்</h2><p>கூட்டுறவு நிறுவனங்களில் ஒரு கிராம் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தங்கத்திற்கு </a>ரூ.9 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கடன் வழங்கும் வகையில் புதிய வரம்பை நிர்ணயிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வரும் வாரம் நடைபெற உள்ள கூட்டுறவுத் துறை உயரதிகாரிகள் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்பதில் குழப்பம் இல்லை: ஜோதிமணி எம்.பி.</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-no-confusion-that-rahul-gandhi-is-the-prime-ministerial-candidate-mp-jothimani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-no-confusion-that-rahul-gandhi-is-the-prime-ministerial-candidate-mp-jothimani#comments</comments><guid isPermaLink="false">7e8f3d88-2aa2-4b76-8585-5a22017152d2</guid><pubDate>Sun, 23 Aug 2026 03:25:04 +0000</pubDate><atom:updated>2026-08-23T03:25:04.451Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Rahul Gandhi,ராகுல்காந்தி,ஜோதிமணி எம்.பி.,jothimani mp,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/26hfm5fr/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/26hfm5fr/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>நாடாளுமன்ற மழைக்காலக்கூட்டத்தொடரில் நடந்தது என்ன? என்பது தொடர்பான விளக்கக்கூட்டம் காங்கிரஸ் கட்சி சார்பில் கோவையில் நடைபெற்றது. இதற்கு கோவை மாநகர் மாவட்ட தலைவர் பி.விஜயகுமார் தலைமை தாங்கினார். வி.எம்.சி.மனோகரன், மாவட்ட தலைவர்கள் ரங்கராஜன் (வடக்கு), சக்திவேல் (தெற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். </p><p>கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் விஜய் வசந்த், ஜோதிமணி மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சுப்பராயன் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு விளக்கம் அளித்தனர். </p><p><strong>அதைத்தொடர்ந்து கரூர் எம்.பி. ஜோதிமணி நிருபர்களிடம் கூறியதாவது:-</strong></p><p>நாடாளுமன்றத்தில் நடக்கக்கூடிய விஷயங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தொகுதி மறுவரையறை விவகாரத்தில் 543 தொகுதிகள் தான் இருக்க வேண்டும், இதில் 33 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பதில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் தெளிவாக உள்ளார். அதன் அடிப்படையில் தான் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.</p><p>மத்தியில் பா.ஜனதா ஆட்சி முடிவுக்கு வந்து கொண்டு இருக்கிறது. இந்தியா கூட்டணியில் ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர். அதில் எந்த குழப்பமும் இல்லை. ராகுல் காந்தியால் மட்டுமே பிரதமர் மோடியை வீழ்த்த முடியும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் த.வெ.க. தலைமையிலான கூட்டணி தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.</p><p>தமிழகத்தில் எம்.பி.க்களுக்கு என தனியாக அலுவலகம் இல்லை. இதனால் பொதுமக்களை சந்திப்பதில் சிரமம் உள்ளது. எனவே ஒவ்வொரு தொகுதியிலும் எம்.பி.க்களுக்கு தனி அலுவலகத்தை தமிழக அரசு கட்டிக்கொடுக்க வேண்டும். மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட ஒரு கல்லை கூட வைக்க விடமாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>‘ஜே.சி.டி. பிரபாகர் சட்டசபையை சிறப்பாக நடத்துகிறார்’ மு.க.ஸ்டாலின் புகழாரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/jcd-prabhakar-is-running-the-assembly-well-praises-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/jcd-prabhakar-is-running-the-assembly-well-praises-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">8b0d33ba-9f95-495c-a2ae-758c3a099d63</guid><pubDate>Sun, 23 Aug 2026 03:15:01 +0000</pubDate><atom:updated>2026-08-23T03:15:01.177Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,Vijay,விஜய்,மு.க.ஸ்டாலின்,தமிழக சட்டசபை,TNAssembly,mk stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/v3nar6hs/stalinone33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஜே.சி.டி. பிரபாக]]></media:title><media:description type="html"><![CDATA[ 

‘ஜே.சி.டி. பிரபாகர் சட்டசபையை சிறப்பாக நடத்துகிறார்’ ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/v3nar6hs/stalinone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><p>ஜே.சி.டி. பிரபாகர் சட்டசபையை சிறப்பாக நடத்துகிறார் என மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டி உள்ளார்.</p><p>சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடர்ச்சியாக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. 21-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் எம்எல்ஏக்களுக்கு கார் வழங்குவது உள்ளிட்ட விவகாரம் குறித்து ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்குக் இடையே காரசாரமாக பேசப்பட்டது. இதனிடையில் சட்டமன்ற நிகழ்வுகள் நேரலை செய்யப்படுவதால், அனைவரும் ஆர்வமுடன் அதனை உன்னிப்பாக வருகின்றனர். இந்நிலையில் பேரவையை வழிநடத்தும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9C%E0%AF%87.%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%9F%E0%AE%BF.%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D">சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் </a>குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.</p><h2>பேரவையை உன்னிப்பாக கவனிக்கும் மு.க.ஸ்டாலின்</h2><p>திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சட்டமன்ற நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கிறார். பேரவையில் திமுக எம்எல்ஏக்களின் செயல்பாடுகள், ஆளுங்கட்சியை நோக்கி அவர்கள் முன்வைக்கும் கேள்விகள் உள்ளிட்டவை பற்றியும் அவர் கவனித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் நேற்றைய தினம் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்ற நிலையில், அதனை நேரலையில் கண்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>மு.க.ஸ்டாலின் - வைரமுத்து சந்திப்பு</h2><p>இந்தநிலையில், முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை கவிஞர் வைரமுத்து சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் பேசிய விஷயங்கள் குறித்து எக்ஸ் வலைத்தளத்தில் கவிஞர் வைரமுத்து பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-</p><h2>அவையை சிறப்பாக நடத்தும் ஜே.சி.டி. பிரபாகர் </h2><p>சட்டசபை நேரடி ஒளிபரப்பை முக்கால் மணி நேரம் இருவரும் கண்டு கொண்டிருந்தோம். 'ஜே.சி.டி. பிரபாகர் அவையை சிறப்பாக நடத்துகிறார்' என்றார் தி.மு.க. தலைவர்.</p><p>"சட்டசபையின் ஆட்ட நாயகன் என்று சமூக ஊடகங்கள் சபாநாயகரை பேசுகின்றன' என்றேன். அப்படியா? என்றார். ஒரு அழகான காபி குடித்து முடித்து வாழ்த்தி விடை கொண்டேன்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>எண்ணூர் அருகே பாம்பு கடித்து மாணவி உயிரிழப்பு: வீட்டில் படுத்திருந்த போது நேர்ந்த சோகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-dies-after-being-bitten-by-a-snake-near-ennore-tragedy-struck-while-she-was-lying-at-home</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-dies-after-being-bitten-by-a-snake-near-ennore-tragedy-struck-while-she-was-lying-at-home#comments</comments><guid isPermaLink="false">73f567d2-f410-44d4-b330-b0bc63d20aa6</guid><pubDate>Sun, 23 Aug 2026 03:08:13 +0000</pubDate><atom:updated>2026-08-23T03:08:13.617Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,மாணவி,student,Snake,உயிரிழப்பு,Ennore,பாம்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/usdch0ts/108.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பாம்பு கடித்து மாணவி உயிரிழப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/usdch0ts/108.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>எண்ணூர், </p><p>சென்னை எண்ணூரை அடுத்த எர்ணாவூர் ஜெய்ஹிந்த் நகர் பசும்பொன் தெருவை சேர்ந்தவர் பாபு. கட்டிடத்தொழிலாளி. இவரது மகள் யாஷினி (வயது 16). இவர், திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். </p><p>இவர்கள் குடியிருந்த பழைய வீட்டை இடித்துவிட்டு புதிதாக வீடு கட்டி வருகிறார்கள். இதனால் அருகில் உள்ள ஓட்டு வீட்டில் ஒரு அறையில் குடும்பத்தோடு தங்கி இருந்தனர்.</p><h2>பாம்பு</h2><p>நேற்று முன்தினம் இரவு யாஷினி தரையில் படுத்து இருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பு ஒன்று யாஷினியின் வலது கையில் இருமுறை கடித்துவிட்டது. இதனால் அலறி துடித்த மாணவியை அவரது பெற்றோர் மீட்டு திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். </p><p>பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை மாணவி யாஷினி பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>தீயணைப்பு நிலைய வீரர்கள்</h2><p>இந்த சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரித்து வருகின்றனர். மாணவி குடும்பத்தினர் தங்கி இருந்த வீட்டின் அருகே புதர் மண்டி காணப்படுகிறது. </p><p>அதிலிருந்து வீட்டுக்குள் புகுந்த நல்ல <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">பாம்பு </a>மாணவியை கடித்திருப்பது தெரியவந்தது. இதற்கிடையில் திருவொற்றியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், வீட்டில் பதுங்கி இருந்த நல்ல பாம்பை லாவகமாக பிடித்து காட்டில் கொண்டுவிட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>உரிய நேரத்தில் தேர்வு நடத்தாததால் பாதிப்பு: பாரதியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் முறையீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/students-complain-to-bharathiar-university-about-being-affected-by-not-conducting-exams-on-time</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/students-complain-to-bharathiar-university-about-being-affected-by-not-conducting-exams-on-time#comments</comments><guid isPermaLink="false">ebf4eefe-619e-40b7-ae74-92d374d98b19</guid><pubDate>Sun, 23 Aug 2026 03:02:41 +0000</pubDate><atom:updated>2026-08-23T03:02:41.724Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>student,exam,மாணவர்கள்,தேர்வு,முறையீடு,Bharathiar University,பாரதியார் பல்கலைக்கழகம்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/x90c0n7l/bharathyar-iniversity.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/x90c0n7l/bharathyar-iniversity.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>உரிய நேரத்தில் தேர்வு நடத்தாததால் தொலைநிலைக்கல்வியில் படிப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக பாரதியார் பல்கலைக்கழகத்தில் புகார் அளிக்கப்பட்டது.</p><h2>மாணவ- மாணவிகள்</h2><p>தமிழகம் முழுவதும் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரம், இணையவழி மற்றும் சான்றிதழ் படிப்புகள் என 14 ஆயிரம் பேர் படித்து வருகின்றனர். இதில் தொலைநிலைக் கல்வி முறையில்  முதுநிலை பாடத்தில் சேர்ந்த பலருக்கும் உரிய காலத்துக்குள் தேர்வுகளை நடத்தப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகள், <a href="https://www.dailythanthi.com/topic/bharathiar-university">பாரதியார் பல்கலைக் கழக </a>தேர்வுத்துறை அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை அளித்தனர். இது குறித்து மாணவர்கள் கூறியதாவது:-</p><p>நாங்கள் தொலைநிலைக்கல்வி திட்டத்தில் 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் முதுநிலை படிப்பில் சேர்ந்தோம். எங்களுக்கு 14 மாதங்கள் கழித்து 2025-ம் ஆண்டு முதல் பருவத்தேர்வு நடத்தப்பட்டது. அதன்பிறகு கடந்த ஜூலை மாதம் 2-ம் பருவத்தேர்வு நடந்தது.</p> <h2>தேர்வு நடத்த வேண்டும்</h2><p>தேர்வு அறிவிப்பில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது. அடுத்த மாதம் (செப்டம்பர்) 5-ந் தேதி 3-ம் பருவத்தேர்வு நடைபெறும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த காலங்களில் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு, பின்னர் ஒத்தி வைத்தனர். மீண்டும் அதுபோன்று நடைபெறாமல் அறிவித்தபடி தேர்வு நடத்த வேண்டும். இதனால் 2 ஆண்டுகளில் முடிக்க வேண்டிய முதுநிலை படிப்பை 2.5 ஆண்டுகளாக படித்து வருகிறோம். இணையவழி வகுப்புகளும் சரிவர நடத்தப்படுவது இல்லை. இது குறித்து புகார் அளித்தாலும், பல்கலைக் கழக நிர்வாகத்தினர் முறையாக பதில் அளிப்பது இல்லை. இதனால் பலரும் கல்வியில் தங்களின் இலக்கை அடைய முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.</p><p>இவ்வாறு அவர்கள் கூறினர்.</p><h2>அறிவித்தபடி தேர்வு</h2><p>இது பற்றி பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி இயக்குனர் ப.செல்லச்சாமி கூறுகையில், பாரதியார் பல்கலைக்கழகத்தில் 14 முதுநிலை படிப்புகள் உள்ளன. அதில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி தேர்வுகள் நடத்தப்படும். கடந்த கால குளறுபடிகள் சரி செய்யப்பட்டு உள்ளன. 2026-ம் ஆண்டுக்குள் முதுநிலையில் தாமதம் ஏற்பட்ட படிப்புக்கான தேர்வுகள் முடிக்கப்பட்டு விடும். இணையவழி வகுப்புகளை அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறேன் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>குன்னூர் அருகே சிறுத்தைகள் நடமாட்டம்..! - பொதுமக்கள் பீதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/leopard-sightings-near-coonoor-public-in-a-state-of-panic</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/leopard-sightings-near-coonoor-public-in-a-state-of-panic#comments</comments><guid isPermaLink="false">11522be5-9b7b-4b50-ac09-acfdb72fbd4a</guid><pubDate>Sun, 23 Aug 2026 02:57:50 +0000</pubDate><atom:updated>2026-08-23T02:57:50.624Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நீலகிரி,Nilgiri,குன்னூர்,Coonoor,Leopard movement,சிறுத்தைகள் நடமாட்டம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/r5ukozxa/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/r5ukozxa/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சமீபகால மாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிறுத்தைகளின் அச்சுறுத்தல் காரணமாக தேயிலை தோட்ட தொழிலாளர்களும், பொதுமக்களும் அச்சமடைந்து உள்ளனர். </p><h2>இரவில் உலா வரும் சிருத்தை</h2><p>இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள நல்லப்பன் தெரு பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வருகின்றன. பகல் நேரங்களில் அருகில் உள்ள தேயிலை தோட்டங்களில் ஓய்வெடுப்பதும், இரவில் ஊருக்குள் உலா வருவதும் வழக்கமாகியுள்ளது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>சிறுத்தைகளின் நடமாட்டம் குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும், அவற்றை பிடிக்க இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே விரைவாக இப்பகுதியில் சுற்றித்திரியும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88">சிறுத்தைகளை </a>கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>திமுகவில் வயதானவர்களுக்கும் வாய்ப்பு உண்டு: துரைமுருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/opportunities-exist-for-the-elderly-in-the-dmk-too-duraimurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/opportunities-exist-for-the-elderly-in-the-dmk-too-duraimurugan#comments</comments><guid isPermaLink="false">00335ff3-1807-46ba-88ad-1145a960f2d2</guid><pubDate>Sun, 23 Aug 2026 02:53:03 +0000</pubDate><atom:updated>2026-08-23T02:53:03.471Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,Duraimurugan,துரைமுருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/yroiua13/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/yroiua13/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>காட்பாடி,</p><p>வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பல் வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-</p><p><strong>கேள்வி:-</strong> கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது குறித்து?</p><p><strong>பதில்:-</strong> தி.மு.க.வில் இளைஞர்களுக்கும் வாய்ப்பு, வயதானவர்களுக்கும் வாய்ப்பு உண்டு.</p><p><strong>கேள்வி:-</strong> த.வெ.க ஆட்சியின் 100 நாள் ஆட்சி குறித்து உங்கள் கருத்து?</p><p><strong>பதில்:-</strong> என்னுடைய அரசியல் வாழ்வில் இந்த ஆட்சி 100 நாட்களில் எதையும் செய்யவில்லை. கடந்த ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களுக்கு பெயர்களை மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். புதியதாக எதையும் செய்யவில்லை. அவர்கள் தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதம் ரூ.2,500, ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசம் என பல தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றுகூட 100 நாட்களில் வரவில்லை.</p><h2>சம்பந்தமில்லாமல்...</h2><p>சட்டமன்றத்தில் மானிய கோரிக்கையில் சம்பந்தமில்லாமல் பேசுகிறார்கள். எழுதி தருவதை தான் படிக்கிறார்கள். கோரிக்கைகள் குறித்தும், அந்த துறைகள் குறித்தும் எதுவுமே பேசுவதில்லை. மானிய கோரிக்கை விவாதத்தில் 10 எம்.எல்.ஏ.க்கள் பேசுவார்கள், குறைகளை கூறுவார்கள். அதை அமைச்சர்கள் குறித்துக் கொண்டு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு பதில் அளிக்க வேண்டும், அதுதான் முறை. நான் வகித்த இலாகாவான நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் தன்னுடைய இலாகா குறித்து ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை, அவரது தலைவர் குறித்து மட்டுமே பேசுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்கள் போராட்டங்களில் பங்கேற்க தடை விதித்த விவகாரம்: விளக்கம் கேட்டு பறந்த நோட்டீஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/issue-regarding-the-ban-on-students-participating-in-protests-notice-issued-seeking-an-explanation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/issue-regarding-the-ban-on-students-participating-in-protests-notice-issued-seeking-an-explanation#comments</comments><guid isPermaLink="false">0bb9a930-1453-4555-983a-afa07ee20924</guid><pubDate>Sun, 23 Aug 2026 02:48:59 +0000</pubDate><atom:updated>2026-08-23T02:48:59.280Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,தடை,Notice,நோட்டீஸ்,மாணவர்கள் போராட்டம்,Students protest,கல்லூரி கல்வி ஆணையர்,Commissioner of Collegiate Education</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/266x4hhp/stude.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/266x4hhp/stude.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>கல்லூரி மாணவர்கள் போராட்டங்களில் பங்கேற்பதை தடுப்பது குறித்த சுற்றறிக்கை அனுப்பிய விவகாரத்தில் கல்லூரி கல்வி ஆணையர் பொன்னையா, இணை இயக்குனரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.</p><h2>போராட்டங்களில் ஈடுபடுவதை தடுக்க</h2><p>தமிழக அரசின் <a href="https://www.dailythanthi.com/topic/சாய்குமார்">தலைமைச் செயலாளர் சாய்குமார் </a>தலைமையில் சட்டம், ஒழுங்கு குறித்த மாதந்திர ஆலோசனைக் கூட்டம் கடந்த ஜூலை 27-ந்தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாணவர்கள், இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதை தடுக்க, பள்ளிக்கல்வி, உயர்கல்வி, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து கூட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.</p><h2>சுற்றறிக்கை</h2><p>இதையடுத்து, உயர்கல்வித்துறை சார்பில் கல்லூரிக் கல்வி ஆணையர், தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் மற்றும் அனைத்து பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று கடந்த 14-ந்தேதி அனுப்பப்பட்டது. அதில், 'கம்யூனிஸ்டுகள் மற்றும் கரப்பான் பூச்சி கட்சி நடத்தும் போராட்டங்களில் மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்பதை தடுக்க வேண்டும். இதற்காக காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.</p><h2>கல்லூரிக்கல்வி இணை இயக்குனர்</h2><p>இதைத்தொடர்ந்து, கல்லூரி மாணவர்கள் போராட்டங்களில் பங்கேற்பதை தடுப்பது குறித்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு, கல்லூரிக்கல்வி இணை இயக்குனர் பா.சிந்தியா செல்வி கடந்த 17-ந்தேதி சுற்றறிக்கை வாயிலாக உத்தரவிட்டிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதனால் அந்த சுற்றறிக்கையை 19-ந்தேதி உயர்கல்வித்துறை திரும்ப பெற்றது.</p><h2>நோட்டீஸ்</h2><p>இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, கல்லூரிக் கல்வி ஆணையர் பா.பொன்னையா, இணை இயக்குனர் சிந்தியா செல்விக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.</p><p>அதில், 'அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் போராட்டங்களில் கலந்துகொள்வது தொடர்பாக கல்லூரிக் கல்வி ஆணையர் வழியாக அல்லாமல் தங்கள் அளவிலேயே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.</p><h2>ஒரு வார காலத்திற்குள்</h2><p>மிகவும் முக்கியமான கடிதம் மற்றும் பதற்றம் ஏற்படுத்தக் கூடிய கடிதமானது கல்லூரிக் கல்வி ஆணையரின் முன் அனுமதி மற்றும் ஒப்புதல் பெறாமல் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, கல்லூரி கல்வி ஆணையர் வழியாக அல்லாமல் தங்கள் அளவில் அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு கடிதம் அனுப்பியது தொடர்பாக தங்களது விளக்கத்தினை ஒரு வார காலத்திற்குள் அளிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் மீண்டும் முதலை நடமாட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/crocodile-presence-in-bhavanisagar-dam-reservoir-area-again</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/crocodile-presence-in-bhavanisagar-dam-reservoir-area-again#comments</comments><guid isPermaLink="false">3d2ee103-8c26-4a60-8743-07d5cc3e9504</guid><pubDate>Sun, 23 Aug 2026 02:34:30 +0000</pubDate><atom:updated>2026-08-23T02:34:30.086Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Crocodile,Bhavanisagar Dam,பவானிசாகர் அணை,முதலை நடமாட்டம்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/a4imh1ng/3.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/a4imh1ng/3.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,   </p><p>பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் மீண்டும் முதலை நட மாட்டம் உள்ளதால், பொதுமக்களுக்கு பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><h2>முதலைகள் நடமாட்டம்</h2> <p>ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக இருப்பது பவானிசாகர் அணை. நீலகிரி மலைப்பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து தெங்குமர ஹாடா வழியாக வரும் மாயாரும் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக உள்ளன.</p><p>இந்த நிலையில் அணையின் நீர்த்தேக்க பகுதியில் ஆறுகள் வந்து கலக் கும் இடத்தில் முதலைகள் நடமாட்டம் காணப்படுகிறது. அவ்வப்போது தண்ணீரில் இருந்து வெளியே வரும் முதலைகள் மணல் திட்டுகளில் படுத்திருக்கின்றன. </p><h2>வெயிலில் காய்வதற்காக...</h2><p>இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-</p><p>பவானிசாகர் அணையில் பவானி ஆறும், மாயாறும் கலக்கும் பகுதியில் முதலைகள் நடமாட்டம் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் மணல் திட்டில் முதலை இருப்பதை மீன் பிடிக்க சென்றவர்கள் பார்த்துள்ளனர். தற்போது மீண்டும் முதலை நடமாட்டம் காணப்படுகிறது. தண்ணீருக்குள் இருக்கும் முதலைகள் வெயிலில் காய்வதற்காக அவ்வப்போது வெளியே வந்து மணல் திட்டுகளில் படுத்து கிடக்கின்றன. அதனால் அந்த பகுதி யில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்லவேண்டாம். சுற்றுலா பயணிகள் நீர்த்தேக்க பகுதிகளுக்கு வீடியோ எடுக்கவோ. செல்பி எடுக்கவோ செல்லவேண்டாம். கவனமாக இருக்கவேண்டும்.</p><p>இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>இன்ஸ்பெக்டரின் பாலியல் தொல்லை பிடியில் இருந்து காப்பாற்றுங்கள்; பெண் போலீஸ் பரபரப்பு புகார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/save-me-from-the-inspectors-sexual-harassment-female-police-officer-makes-sensational-complaint</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/save-me-from-the-inspectors-sexual-harassment-female-police-officer-makes-sensational-complaint#comments</comments><guid isPermaLink="false">41aff494-1962-43de-9235-478f841ad647</guid><pubDate>Sun, 23 Aug 2026 02:28:58 +0000</pubDate><atom:updated>2026-08-23T02:28:58.298Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,Chennai,சென்னை,பெண் போலீஸ்,பாலியல் தொல்லை,கிரைம் செய்திகள்,Inspector,இன்ஸ்பெக்டர்,Chennai police,woman police,சென்னை போலீஸ்,Sexual harassement</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/fadaa54s/CHENNAI-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/fadaa54s/CHENNAI-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இன்ஸ்பெக்டர்பாலியல் தொல்லை பிடியில் இருந்து காப்பாற்றுங்கள் என்று பெண் போலீஸ் பரபரப்பு புகாரின் பேரில் விசாகா கமிட்டி விசாரணை நடைபெற்று வருகிறது.</p><h2>கமிஷனரிடம் பரபரப்பு புகார்</h2><p>சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போலீஸ் குறைதீர்ப்பு முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது. போலீ சாரிடம் கமிஷனர் அமல்ராஜ் மனுக்களை பெற்றார். அப் போது அவரிடம் ஆயிரம் விளக்கு கொச்சின் ஹவுஸ் போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் 37 வயதுடைய பெண் போலீஸ் ஒரு வர் சைபர் கிரைம்' இன்ஸ்பெக்டர் ஒருவர் மீது பரபரப்பு புகார் மனு அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் பெண் போலீஸ் கூறியிருப்பதாவது:-</p><p>நான் போலீஸ்காரர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து குடும்பத்துடன் வசித்து வருகிறேன். நான் தியாகராயநகர் போலீஸ் சரகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றினேன். அப்போது இன்ஸ்பெக்டர் ஒருவருடன் திருமணம் கடந்த உறவில் நெருக்கமாக இருந்தேன். பின்னர், தாலி கட்டிய காதல் கணவருக்கு துரோகம் செய்து விட்டதை உணர்ந்து மனம் வருந்தினேன். அதன்பின்னர் இன்ஸ்பெக்டருடனான ரகசிய உறவை கைவிட்டேன்.</p><h2>காப்பாற்றுங்கள்...</h2><p>அந்த இன்ஸ்பெக்டர் தன்னுடன் நெருக்கமாக எடுத்துகொண்ட புகைப்படங்களை செல்போனில் வைத்துள்ளார். அந்த புகைப் படங்களை வைத்து மிரட்டி தனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வருகிறார். எனவே அவரது பாலியல் தொல்லை பிடியில் இருந்து என்னை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அந்த பெண் போலீஸ் புகாரில் தெரிவித்துள்ளார்.</p><p>இந்த புகார் மனு தகுந்த நடவடிக்கை எடுப்பதற்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் தலைமை யில் இயங்கும் விசாகா கமிட்டி விசாரணைக்கு கமிஷனர் அமல்ராஜ் பரிந்துரைத்துள்ளார். அதன்பேரில் விசாகா கமிட்டி அதிரடி விசாரணையில் இறங்கி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வீடுகளில் சோலார் பேனல் அமைக்க ரூ.78 ஆயிரம் வரை மானியம்..! - மின்வாரியம் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/subsidy-of-up-to-rs-78000-for-installing-solar-panels-in-homes-electricity-board-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/subsidy-of-up-to-rs-78000-for-installing-solar-panels-in-homes-electricity-board-announcement#comments</comments><guid isPermaLink="false">2e4e3a83-cbf0-46c2-8071-2dfd9988fb40</guid><pubDate>Sun, 23 Aug 2026 02:15:41 +0000</pubDate><atom:updated>2026-08-23T02:15:41.363Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவை,மின்வாரியம்,Electricity Board,சோலார் பேனல்,தமிழ்நாடு மின்வாரியம்,சோலார் திட்டம்,Tamilnadu Electricity Board</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/cn1bro4v/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/cn1bro4v/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p>பிரதம மந்திரியின் வீடுகளுக்கான சூரிய மின் திட்டத்தில் விண்ணப்பம் செய்வது தொடர்பான சிறப்பு முகாம் கோவை மின் பகிர்மான வட்டம் சார்பில் வரதராஜபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. முகாமிற்கு மேற்பார்வை பொறியாளர் சாந்தநாயகி தலைமை தாங்கினார். இதில் ஒண்டிப்புதூர் செயற்பொறியாளர் பிந்து மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.</p><h2>ரூ.78 ஆயிரம் வரை மானியம்</h2><p>இது குறித்து மின்சார வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-</p><p>இந்த திட்டத்தில் 1 கிலோ வாட்டுக்கு ரூ.30 ஆயிரம், 2 கிலோவாட்டுக்கு ரூ.60 ஆயிரம் மற்றும் 3 கிலோ வாட் மற்றும் அதற்கு மேல் ரூ.78 ஆயிரம் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மானியமாக </a>வழங்கப்படுகிறது. மேலும் வங்கிகள் மூலம் உடனடியாக கடன் வழங்கப்படும். சூரிய திட்ட பணிகள் முடிவுற்ற 7 நாட்களில் இருந்து 30 நாட்களுக்குள் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் மானியம் செலுத்தப்படும்.</p><p>1 கிலோவாட் சோலார்பேனல் ஒரு நாளில் 4 முதல் 5 யூனிட் வரை மின் உற்பத்தி செய்யும். நுகர்வோர் செய்யும் முதலீட்டை உடனடியாக திரும்ப பெறலாம். கோவை மாவட்டத்தில் 9 ஆயிரம் குடும்பங்கள் சூரிய ஒளி மின் திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்தில் registration.pmsuryaghar.gov.in, www.pmsuryaghar.gov.in செய்யலாம்.</p><p>இவ்வாறு அவர்கள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>ஆசிரியர்கள் திட்டியதால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை: உடலை பெற மறுத்து உறவினர்கள் போராட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-commits-suicide-by-hanging-after-being-scolded-by-teachers-relatives-protest-refusing-to-receive-body</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-commits-suicide-by-hanging-after-being-scolded-by-teachers-relatives-protest-refusing-to-receive-body#comments</comments><guid isPermaLink="false">5a32c7ab-23eb-4c54-ae87-e9c317bba92a</guid><pubDate>Sun, 23 Aug 2026 02:15:30 +0000</pubDate><atom:updated>2026-08-23T02:15:30.849Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நாகர்கோவில்,protest,போராட்டம்,தற்கொலை,Suicide,ஆசிரியர்கள்,relative,மாணவர்student</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/kplqmel6/148.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உறவினர்கள் போராட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/kplqmel6/148.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாகர்கோவில், </p><p>நாகர்கோவிலில் ஆசிரியர்கள் திட்டியதால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.</p><p>குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள குறத்தியறை கீரன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் விக்டர் தாமஸ். இவருடைய மனைவி லென்சி. இவர்களுடைய மகன் கவின் ஜெனில் (வயது 16). நாகர்கோவிலில் உள்ள எஸ்.எல்.பி. பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.</p><h2>தற்கொலை</h2><p>இந்தநிலையில், விக்டர் தாமஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் ரத்தினபுரம் வடக்கு தெருவுக்கு குடிபெயர்ந்தனர். நேற்று முன்தினம் விக்டர் தாமஸ் வழக்கம் போல் வேலைக்குச் சென்ற நிலையில், கவின் ஜெனில் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளான். மேலும் அவனது தாயாரும் வீட்டில் இல்லை. வீட்டின் முன்பக்கக் கதவை வெளிப்பக்கமாகப் பூட்டிவிட்டுப் பாட்டியிடம் வெளியே செல்வதாகக்கூறிச் சென்றவன், சிறிது நேரத்தில் பின்பக்க வழியாக மீண்டும் உள்ளே வந்துள்ளான். அங்கு திடீரென அவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டான்.</p><p>அதிர்ச்சியடைந்த பாட்டி கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு பூதப்பாண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.</p><h2>பிரேத பரிசோதனை</h2><p>இறந்த மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே, வகுப்பில் மாணவி ஒருவருடன் சிரித்துப் பேசியதற்காக ஆசிரியர்கள் தனது மகனைக் கண்டித்ததாகவும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சலாலேயே அவன் தற்கொலை செய்துகொண்டதாகவும் தாயார் லென்சி பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.</p> <h2>போராட்டம்</h2><p>இதற்கிடையே கவின் ஜெனிலின் தற்கொலையை அறிந்த சக மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துச்சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை வாயிலில் உறவினர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் திடீர் மறியலில் ஈடுபட்டு, மாணவனின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலைப்பெற மாட்டோம் எனத் தெரிவித்தனர். </p><p>போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுக்கட்டாகத் தூக்கி வாகனங்களில் ஏற்றி அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a> தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தெற்கு ரெயில்வேயில் களைகட்டிய ஓணம் பண்டிகை: கேரள பாரம்பரிய உடையில் அதிகாரிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-festival-in-southern-railway-officials-in-traditional-kerala-attire</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-festival-in-southern-railway-officials-in-traditional-kerala-attire#comments</comments><guid isPermaLink="false">62336a64-ea77-4829-a9c2-44dde128ccd0</guid><pubDate>Sun, 23 Aug 2026 02:02:49 +0000</pubDate><atom:updated>2026-08-23T02:02:49.328Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தெற்கு ரெயில்வே,Southern Railway,அதிகாரிகள்,Onam festival,ஓணம் பண்டிகை,traditional,பாரம்பரிய உடை</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/fg2b11dp/26.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/fg2b11dp/26.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தெற்கு ரெயில்வே தலைமையகத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%93%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88">ஓணம் பண்டிகை</a> கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், தெற்கு ரெயில்வே பொது மேலாளர் சுப்பா ராவ், கூடுதல் பொதுமேலாளர் விபின்குமார், துறைத் தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர். ஓணம் பண்டிகையை முன்னிட்டு தலைமையகத்தின் பிரதான நுழைவாயில் மற்றும் உள் வளாகங்கள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. </p><h2>கேரள பாரம்பரிய உடை</h2><p>குறிப்பாக, பெண் ஊழியர்கள் இணைந்து மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும்விதமாக அமைத்திருந்த பிரமாண்ட 'அத்தப்பூக்கோலம்' அனைவரையும் கவர்ந்தது. ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கேரள பாரம்பரிய உடைகளான கசவு புடவை மற்றும் முண்டு (வேட்டி) அணிந்து வந்து ஒருவருக்கொருவர் ஓணம் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். கேரளாவின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் பியூஷன் திருவாதிரை நடனம் மற்றும் ஓணம் குழுப் பாடல் போன்ற பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. செழிப்பு. மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமையின் பண்டிகையை அனைவரும் இணைந்து கொண்டாடி மகிழ்ந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>பெண்ணைக் கொன்று துண்டு துண்டாக்கிய வடமாநில தம்பதிக்கு போலீஸ் வலைவீச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-launch-manhunt-for-north-indian-couple-who-killed-a-woman-and-chopped-her-body-into-pieces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-launch-manhunt-for-north-indian-couple-who-killed-a-woman-and-chopped-her-body-into-pieces#comments</comments><guid isPermaLink="false">65cb9f2a-b0f7-4700-aa67-a3114ba25e07</guid><pubDate>Sun, 23 Aug 2026 02:02:05 +0000</pubDate><atom:updated>2026-08-23T02:02:05.313Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,Chennai,சென்னை,கிரைம் செய்திகள்,வடமாநில தம்பதி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/lm2o2h3f/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/lm2o2h3f/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்</h2><p>சென்னை சென்டிரலில் இருந்து கடந்த 5-ந்தேதி ஆக்ரா சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் யாரும் உரிமை கோராத நிலையில் கிடந்த டிராலி சூட்கேசை ஆக்ரா ரெயில்வே போலீசார் திறந்து பார்த்தபோது அதில் தலையில்லாத மனித எலும்புக்கூடு மற்றும் உடல் உறுப்புகள் இருந்தது. கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தியதில் அந்த சூட்கேஸ் சென்னை சென்டிரலில் இருந்து ரெயிலில் வைக்கப்பட்டது தெரியவந்தது. </p><p>சூட்கேசை வைத்த இருவரும் அங்கிருந்து புறப்பட்டு எங்கு இறங்கினர் என்பதை கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு ஆய்வு செய்தனர். இதில் அவர்கள் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் இறங்கியது தெரியவந்தது. அவர்கள் எங்கு தங்கியுள்ளனர் என்று விசாரணை நடத்தி செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். </p><p>அப்போது பெரிய அண்டாவில் மைதாமாவுடன் துண்டு துண்டாக வெட்டப்பட்ட மனித சதைப்பகுதிகள் இருப்பது தெரியவந்தது. இந்த மனித சதைப்பகுதிகள் ரெயிலில் சிக்கிய எலும்புகள் மற்றும் உடல் உறுப்புகள், கூடுவாஞ்சேரி வீட்டில் மீட்கப்பட்ட சதைப்பகுதிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.</p><h2>வடமாநில தம்பதி</h2><p>போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஹயாத் நிஷா (38) என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது. மீட்கப்பட்ட உடல் பாகங்கள் அவருடையதுதானா என்பது குறித்து உறுதி செய்ய தடயவியல் பரிசோதனை நடைபெற்று வருகிறது. உடல் பாகங்களின் மாதிரிகள் உள்ளிட்டவை ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், பரிசோதனை முடிவுகள் கிடைத்த பிறகே உயிரிழந்த பெண்ணின் அடையாளம் குறித்து முழுமையாக உறுதி செய்ய முடியும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்த நிலையில் ஹயாத் நிஷாவுடன் சுமார் 2 மாதங்களாக ஒரே வீட்டில் தங்கி இருந்த வடமாநிலத்தை சேர்ந்த தம்பதி தற்போது தலைமறைவாகி இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலையை கண்டுபிடிக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.</p><h2>அனைத்து கோணங்களிலும் விசாரணை</h2><p>கண்காணிப்பு கேமராவில் சிக்கிய காட்சிகளை அடிப்படையாக கொண்டு கொலை செய்யப்பட்ட பெண்ணுடன் கடந்த 2 மாதங்களாக தங்கி இருந்த வடமாநிலத்தை சேர்ந்த தம்பதியை பிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த கொலை நகைக்காக நடைபெற்றதா? அல்லது தகாத உறவு காரணமாக நடைபெற்றதா? என்பது உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது.</p><p>சந்தேகத்துக்குரிய வடமாநில தம்பதியை பிடிப்பதற்காக தனிப்படை போலீசாரை அசாம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அவர்களை பிடித்த பிறகுதான், உடன் தங்கி இருந்த பெண்ணை கொலை செய்து தலையை துண்டித்து, உடலை துண்டு துண்டாக வெட்டி எலும்புகளை தனியாக பிரித்து சூட்கேசில் வைத்து ரெயில் மூலம் ஆக்ராவுக்கு அனுப்பியது ஏன் என்பது குறித்து முழுமையான விவரங்கள் தெரியவரும்.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய்யின் மேஜையில் உள்ள ஊழல் &apos;பைல்கள்&apos; எப்போது வெளிவரும்?: இடைத்தேர்தலை சந்திக்க த.வெ.க. போடும் &apos;ஸ்கெட்ச்&apos;</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/when-will-the-corruption-files-on-chief-minister-vijays-desk-be-revealed-tvks-blueprint-for-facing-the-by-election</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/when-will-the-corruption-files-on-chief-minister-vijays-desk-be-revealed-tvks-blueprint-for-facing-the-by-election#comments</comments><guid isPermaLink="false">44d6aa24-44c2-499f-83a2-3198b59c0a05</guid><pubDate>Sun, 23 Aug 2026 01:52:47 +0000</pubDate><atom:updated>2026-08-23T01:52:47.252Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,TVK,தவெக,Vijay,Tamilnadu,விஜய்,அதிமுக,திமுக,DMK,தமிழகம்,தமிழக அரசு,TN govt,By election,அரசியல் களம்,இடைத் தேர்தல்,tn politics,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/agp39nw3/thik.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/agp39nw3/thik.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a>யின் மேஜையில் உள்ள ஊழல் 'பைல்கள்' எப்போது வெளிவரும்? என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இடைத்தேர்தலை சந்திக்க ஆளுங்கட்சியான <a href="https://www.dailythanthi.com/topic/tvk">த.வெ.க.</a> 'ஸ்கெட்ச்' போட்டு வருகிறது. </p><h2>காலியாக உள்ள 7 தொகுதிகள்</h2><p>தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில், திருச்சி கிழக்கு, பெருந்துறை, மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை ஆகிய 7 தொகுதிகள் காலியாக உள்ளன. </p><p>இந்த தொகுதிகளில், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் மீது தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், இடைத்தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/yxoi1y6s/loeee.jpg" /></figure><h2>இடைத்தேர்தல் எப்போது?</h2><p>இந்த நிலையில், மேற்கண்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த சென்னை ஐகோர்ட்டு விதித்த தடை நாளையுடன் (ஆகஸ்டு 24) முடிவடைய இருக்கிறது. விரைவில், இந்த 5 தொகுதிகள் உள்பட மொத்தம் காலியாக உள்ள 7 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது என்பது ஆளுங்கட்சியான த.வெ.க.வுக்கு மிகவும் தேவையாக உள்ளது. காரணம், நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று <a href="https://www.dailythanthi.com/topic/tvk">த.வெ.க. ஆட்சி</a> அமைத்தாலும், தனி மெஜாரிட்டி அந்த கட்சிக்கு கிடைக்கவில்லை. </p><h2>த.வெ.க.வுக்கு மெஜாரிட்டி இல்லை</h2><p>மெஜாரிட்டிக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில், 107 இடங்களே <a href="https://www.dailythanthi.com/topic/tvk">த.வெ.க.</a>வுக்கு கிடைத்தன. அதன்பின்னர், காங்கிரஸ் (5), விடுதலை சிறுத்தைகள் கட்சி (2), இந்திய கம்யூனிஸ்டு கட்சி (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) ஆகிய கட்சிகளின் ஆதரவுடனேயே த.வெ.க. ஆட்சி அமைத்துள்ளது.  </p><p>இதில், இரு கம்யூனிஸ்டு கட்சிகளை தவிர ஏனைய 3 கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளதால், அந்த கட்சிகளால் த.வெ.க. அரசுக்கு ஆபத்து வராது என்று நம்பலாம். ஆனால், மக்கள் பிரச்சினையை முன்வைத்து இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் எந்த நேரத்திலும் கூட்டணியை விட்டு வெளியேறும் சூழ்நிலை உள்ளது. </p><h2>இடைத்தேர்தல் வெற்றி முக்கியம்</h2><p>அவ்வாறு நடந்தால், த.வெ.க. அரசு ஆட்டம் கண்டுவிடும். அதனால், இடைத்தேர்தல் வெற்றி என்பது த.வெ.க.வுக்கு முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இடைத்தேர்தல் நடைபெறும் 7 தொகுதிகளிலும் <a href="https://www.dailythanthi.com/topic/tvk">த.வெ.க.</a> வெற்றி பெற்றால், அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் பலம் 114 ஆக உயரும். </p><p>இது மெஜாரிட்டுக்கு தேவையான 118-ஐ விட 4 குறைவுதான் என்றாலும், கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் ஆதரவோ, அல்லது ஏனைய கட்சிகளில் 2 கட்சிகளின் ஆதரவோ த.வெ.க.வுக்கு கிடைத்தாலே போதும், 5 ஆண்டு கால ஆட்சிக்கு பிரச்சினை எதுவும் வராது. </p><p>பொதுவாக, இடைத்தேர்தல் முடிவுகள் என்பது ஆளுங்கட்சிக்கு சாதகமாகவே இருந்து வந்தாலும், இந்த முறை அந்த சாதகம் த.வெ.க. அரசுக்கு தேவையாக உள்ளது. அதற்கு த.வெ.க. ஆயத்தமாகி வருவதும் சமீபத்திய <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின்</a> சட்டசபை பேச்சில் வெளிப்பட்டது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/ifdxu35q/viji.jpg" /></figure><h2>முதல்-அமைச்சர் விஜய் பேச்சு </h2><p>அதாவது, கடந்த 19-ந் தேதிய சட்டசபை நிகழ்வில், அமைச்சர்கள் ஆதாரத்துடன் பேச வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அந்த நேரத்தில் எழுந்து <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் </a>பேசியதாவது:- </p><p> நான் இதை சொல்ல வேண்டாம் என நினைத்தேன். ஆதாரம், ஆதாரம் என கேட்கின்றனர். ஒரு வாரத்திற்கு முன், இங்கு நிதி அமைச்சர் பேசும்போது, 3 துறை தொடர்பாக ஆய்வு செய்து, அது தொடர்பான விபரம் எனது மேஜையில் இருக்கிறது என சொன்னார். </p><h2>இடைத்தேர்தலில் நல்லது நடக்க வேண்டாமா?</h2><p>அவர் போகிற போக்கில், அதை சொல்லவில்லை. உண்மையிலேயே என் மேஜையில் அத்தனையும் ஆதாரத்துடன் இருக்கின்றன. அதை 'ஓபன்' பண்ண வைத்துவிடாதீர்கள். எதை, எப்போது 'ஓபன்' பண்ண வேண்டுமோ, அப்போது, அது கரெக்டாக 'ஓபன்' செய்யப்படும். </p><p>மக்களிடம் எப்போ பேசணும். என்ன பேசணும். எப்படி பேசணும். எல்லாம் பேசிவிட்டு தான், அன்பா.. ஆசையா.. எங்க எல்லாரையும் கொண்டு வந்து இங்கே உட்கார வைத்துள்ளார்கள். நான் பேசுவேன், பேசக்கூடாது என்றெல்லாம் ஒன்றுமில்லை. இடைத்தேர்தலிலாவது ஒரு சிலருக்கு நல்லது நடக்க வேண்டும் இல்லையா?.</p><p>இவ்வாறு அவர் பேசினார். </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/enowsv5f/koe.jpg" /></figure><h2>த.வெ.க. போடும் 'ஸ்கெட்ச்'</h2><p>இதன் மூலம் இடைத்தேர்தலை சந்திக்க <a href="https://www.dailythanthi.com/topic/tvk">த.வெ.க.</a> 'ஸ்கெட்ச்' போட்டு தயாராகிவருவது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இதற்கிடையே, சட்டசபையில் நேற்று முன்தினம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், "மேஜையில் இருக்கும் பைல்களை சீக்கிரம் திறந்து பாருங்கள். உருட்டல், மிரட்டலுக்கு எல்லாம் தி.மு.க. உறுப்பினர்கள் பயப்படமாட்டார்கள்" என்று பேசினார். </p><p>இதனால், அந்த 3 பைல்களில் உள்ள விவரங்கள் எப்போது வெளிவரும்? என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்கள் மத்தியில் நிலவுகிறது. ஆனால், எப்போது?, எப்படி? அந்த பைல்களை வெளியிடுவது என்பது குறித்து ஏற்கனவே <a href="https://www.dailythanthi.com/topic/tvk">த.வெ.க.</a> திட்டம் வகுத்துள்ளதாம்.</p><h2>இடைத்தேர்தல் தேதி அறிவித்த பிறகு..!</h2><p>அதாவது, இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும்போது, முதல்-அமைச்சர் மேஜையில் உள்ள ஊழல் பைல்களில் உள்ள விவரங்கள் வெளிவரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அவ்வாறு வரும்போது, மக்கள் மத்தியில் த.வெ.க.வின் செல்வாக்கு மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. </p><p>இடைத்தேர்தலில் <a href="https://www.dailythanthi.com/topic/tvk">த.வெ.க.</a> வெற்றியை எதிர்க்கட்சிகளான தி.மு.க.,  அ.தி.மு.க. ஆகியவை எப்படி தடுக்கப்போகின்றன? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>கணவருடன் செல்பி எடுத்த இளம்பெண்...திடீரென வந்து தாக்கிய 3 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-men-arrested-for-attacking-young-woman-who-took-selfie-with-her-husband</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-men-arrested-for-attacking-young-woman-who-took-selfie-with-her-husband#comments</comments><guid isPermaLink="false">1959ac2c-d758-40e7-9bd5-3719c1efcc0d</guid><pubDate>Sun, 23 Aug 2026 01:44:20 +0000</pubDate><atom:updated>2026-08-23T01:44:20.771Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கணவர்,husband,young woman,arrested,இளம்பெண்,செல்பி,selfie,3 பேர் கைது</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/8o2h5fqi/arest.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/8o2h5fqi/arest.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஆலந்தூர், </p><p>வேளச்சேரி மேம்பாலத்தில் கணவருடன் 'செல்பி' எடுத்த இளம் பெண்ணை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>கணவருடன் 'செல்பி'</h2><p>சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது பிறந்தநாளையொட்டி கணவர் மற்றும் நாத்தனாருடன் காரில் பெசன்ட் நகர் கடற்கரைக்கு சென்றார். பின்னர் தேவாலயத்துக்கு சென்று வழிபட்டுவிட்டு நள்ளிரவில் காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். வேளச்சேரி டான்சி நகர் மேம்பாலத்தில் சென்றபோது, காரை ஓரமாக நிறுத்திவிட்டு கணவர் மற்றும் நாத்தனாருடன் சேர்ந்து செல்போனில் 'செல்பி' மற்றும் புகைப்படம் எடுத்து கொண்டிருந்தார்.</p><h2>தாக்குதல்</h2><p>அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் மேம்பாலத்தில் சென்றனர். அவர்களில் 3 பேர் மட்டும் மோட்டார் சைக்கிள்களில் இருந்து இறங்கி இளம்பெண்ணின் அருகே சென்றனர். பின்னர் அவரை பார்த்து எங்களை பார்த்து ஏன் ஆபாச சைகை செய்தாய்? என்று கேட்டு தகாத வார்த்தைகளால் பேசினர். அதற்கு அந்த பெண், தான் எந்த சைகையும் காட்டவில்லை என்று கூறினார். ஆனால் அவர்கள் மீண்டும் தகாத வார்த்தைகளால் பேசி இளம் பெண்ணை தாக்கிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். இதில் இளம்பெண்ணின் வலது கை நடுவிரலில் சிறிய காயம் ஏற்பட்டது.</p><h2>3 பேர் கைது</h2><p>அவர் தனியார் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்ற பிறகு வேளச்சேரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து வேளச்சேரி காமராஜபுரம் காந்தி தெருவைச் சேர்ந்த தீபக் ராஜா (19), எம்.ஜி.ஆர். நகர் 2-வது தெருவைச் சேர்ந்த விக்னேஷ் (19) மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 3 பேரை <a href="https://www.dailythanthi.com/topic/arrest-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்தனர். விசாரணையில், தீபக் ராஜா, தண்ணீர் கேன் வினியோகம் செய்யும் வேலை செய்து வருவதும், மற்ற இருவரும் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யும் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி அருகே நிலக்கரி ஏற்றிச்சென்ற சரக்கு ரெயிலில் திடீர் தீ</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-sudden-fire-broke-out-in-a-coal-laden-freight-train-near-thoothukudi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-sudden-fire-broke-out-in-a-coal-laden-freight-train-near-thoothukudi#comments</comments><guid isPermaLink="false">e33c7f8e-1739-42ed-b893-7d9cef2b04ad</guid><pubDate>Sun, 23 Aug 2026 01:39:48 +0000</pubDate><atom:updated>2026-08-23T01:39:48.959Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>train,Thoothukudi,தூத்துக்குடி,சரக்கு ரெயில்,நிலக்கரி,fire தீ</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/vfswsil5/147.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தீ விபத்து]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/vfswsil5/147.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து மீளவிட்டான் வழியாக நேற்று அதி காலை 3.20 மணியளவில், அரியானா மாநிலம் பானிபட் பகுதிக்கு 25 பெட்டிகளுடன் நிலக்கரி ஏற்றி சரக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. </p><h2>கரும்புகை</h2><p>அந்த ரெயில் தட்டப்பாறை ரெயில் நிலையத்தை கடந்தபோது, அதன் என்ஜினுக்கு அடுத்த பெட்டியில் திடீரென கரும்புகை கிளம்பியது. இதனை கவனித்த தட்டப்பாறை ரெயில் நிலைய அதிகாரி, கைலாசபுரம் மற்றும் வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையங்களுக்கு அவசரமாக தகவல் கொடுத்தார். உடனடியாக சிவப்பு நிற சிக்னல் கொடுக்கப்பட்டதை அடுத்து, ரெயில் என்ஜின் டிரைவர் வாஞ்சி மணியாச்சிக்கு முன்பாகவே நடுவழியில் ரெயிலை நிறுத்தினார். </p><h2>தீயணைப்பு வீரர்கள்</h2><p>அதற்குள் நிலக்கரி தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனே மின் பொறியாளர்கள் உயர் அழுத்த மின்சாரத்தை துண்டித்தனர். ஓட்டப்பிடாரத்தில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. </p><p>மின் இணைப்பு சீரமைக்கப்பட்ட பின், அதிகாலை 5 மணியளவில் சரக்கு ரெயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. இந்த <a href="https://www.dailythanthi.com/topic/fire-accident-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">தீ விபத்து</a> குறித்து வாஞ்சி மணியாச்சி ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கிருஷ்ணகிரி: லாரி மோதி கார் கவிழ்ந்து 2 வாலிபர்கள் பலி - 3 பேர் படுகாயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/krishnagiri-two-youths-killed-three-critically-injured-after-car-overturns-following-collision-with-lorry</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/krishnagiri-two-youths-killed-three-critically-injured-after-car-overturns-following-collision-with-lorry#comments</comments><guid isPermaLink="false">2218d589-769f-4b37-a733-0f976955e5a5</guid><pubDate>Sun, 23 Aug 2026 01:32:12 +0000</pubDate><atom:updated>2026-08-23T01:32:12.739Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சாலை விபத்து,கிருஷ்ணகிரி,Krishnagiri,கிருஷ்ணகிரி செய்திகள்,பர்கூர்,Krishnagiri news</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/07f8nsni/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/07f8nsni/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ணகிரி, </p><p>லாரி மோதியதில் கார் கவிழ்ந்து 2 வாலிபர்கள் பலியானார்கள். அவர்களது நண்பர்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.</p><h2>லாரி மோதியது</h2><p>கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் முருகன் மகன் சதீஷ் (வயது 22). கார் டிரைவர். அதேபகுதியை சேர்ந்தவர்கள் கிருஷ்ணன் மகன் அசோக்குமார் (24), முருகன் மகன் திவாகர் (18), குமார் மகன் திருப்பதி (22), அச்சமங்கலம் அன்பழகன் மகன் திருப்பதி (22). நண்பர்க ளான 5 பேரும் நேற்று முன்தினம் இரவு காரில் கிருஷ்ணகிரி நோக்கி சென்றனர்.</p><p>அப்போது அரசு பொறியியல் கல்லூரி மேம்பாலத்தில் சென்ற போது பின்னால் வந்த லாரி, காரின் பின்பகுதியில் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் தடுப்பு சுவர் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சதீஸ் உள்பட 5 பேரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.</p><h2>2 பேர் சாவு</h2><p>இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் 5 பேரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில் அன்பழகன் மகன் திருப்பதி செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். தொடர்ந்து மற்ற 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அசோக்குமார் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.</p><p>இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கந்திகுப்பம் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விசாரணை </a>நடத்தினர். பின்னர் இறந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கோவை: கல்லூரி மாணவர்கள் அறைகளில் போலீசார் அதிரடி சோதனை; போதைப்பொருள், ஆயுதங்கள் பறிமுதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-police-conduct-surprise-raids-on-college-students-rooms-drugs-and-weapons-seized</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-police-conduct-surprise-raids-on-college-students-rooms-drugs-and-weapons-seized#comments</comments><guid isPermaLink="false">7987264c-c35b-4b27-8cfa-dfcc6994725b</guid><pubDate>Sun, 23 Aug 2026 01:14:52 +0000</pubDate><atom:updated>2026-08-23T01:14:52.372Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,Tamilnadu,கோவை,தமிழகம்,College student,drugs,கல்லூரி மாணவர்கள்,போதைப்பொருட்கள்,Kovai,போலீசார் சோதனை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/muhk30dz/thonthi.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/muhk30dz/thonthi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p>போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க, கோவையில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள 50-க்கும் மேற்பட்ட இடங்களில் 400 போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.</p><h2>போதைப்பொருள் இல்லாத கோவை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/coimbatore">கோவை</a> மாவட்டத்தில் போதைப்பொருட்களின் பயன்பாடு மற்றும் விற்பனையை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவை என்ற இலக்கை உருவாக்கும் வகையில் போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி தலைமையில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.</p><h2>தனியாக அறைகள்</h2><p>இந்த நிலையில் கோவில்பாளையம், சூலூர், செட்டிபாளையம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 30 கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், கல்லூரிகளுக்கு வெளியே தனியாக அறைகள் மற்றும் வீடுகளில் தங்கி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அங்கு சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.</p><p>அதன்படி நேற்று அதிகாலை 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 10 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 400 போலீசார் 50 குழுக்களாக பிரிந்து கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் வீடுகள் மற்றும் அறைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.</p><h2>போலீசார் சோதனை</h2><p>அப்போது மாணவர்கள் தங்கி இருக்கும் வீடுகளில் உள்ள அனைத்து அறைகள், பைகள், சூட்கேஸ்கள் என அனைத்தையும் போலீசார் சோதனை செய்தனர். அத்துடன் சந்தேகத்துக்குரிய மாணவர்களின் செல்போன்களும் சோதனை செய்யப்பட்டன.</p><h2>கத்தி, அரிவாள்</h2><p>சோதனையின்போது மாணவர்களுடன் தங்கி இருந்த 2 பேரிடம் போதை பொருட்களும், ஒருவரின் பையில் கத்தி, அரிவாள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர், தச்சுத் தொழிலாளி என்பதால், வேலைக்கு கொண்டு செல்ல பையில் அரிவாள் மற்றும் கத்தி வைத்து இருப்பது தெரியவந்தது.</p><p>அத்துடன் மாணவர்கள் தங்கி இருந்த அறைகளில் இருந்து சந்தேகப்படும்படி நிறுத்தப்பட்டு இருந்த 14 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.</p>]]></content:encoded></item><item><title>விமானத்தை பார்க்கும் ஆசையில் உயிரை பறிகொடுத்த 2 வாலிபர்கள்... மதுரையில் சோகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-young-men-lose-their-lives-while-trying-to-catch-a-glimpse-of-an-airplane-tragedy-in-madurai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-young-men-lose-their-lives-while-trying-to-catch-a-glimpse-of-an-airplane-tragedy-in-madurai#comments</comments><guid isPermaLink="false">313b0d61-0cf1-497a-ae2a-4702bddab8e7</guid><pubDate>Sun, 23 Aug 2026 01:04:20 +0000</pubDate><atom:updated>2026-08-23T01:04:20.752Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,விமானம்,Madurai,மதுரை,கிரைம் செய்திகள்,flight,வாலிபர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/ksvnaswg/CHENNAI-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/ksvnaswg/CHENNAI-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>விமானம் புறப்பட்டு செல்வதை பார்க்கும் ஆசையில், மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><p>மதுரை,</p><h2>நண்பர்கள்</h2><p>விருதுநகர் மாவட்டம் பரளச்சி பகுதியை சேர்ந்தவர் பாண்டித்துரை (வயது 22). திருச்சுழி உடைய சேவைக்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனீஸ்வரன் (24). இருவரும் நண்பர்கள். கட்டிட தொழிலாளர்கள். சில நாட்களாக இருவரும் மதுரை திருப்பாலை பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்தனர். கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்காக, பாண்டித்துரை, முனீஸ்வரன் ஆகியோர் திருப்பாலையில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டனர்.</p><p>மதுரை விமான நிலையம் பகுதியில் சின்னஉடைப்பு தேசிய நெடுஞ்சாலையில் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது விமான நிலையத்தில் நின்றிருந்த விமானம் புறப்பட்டு. ஓடுபாதையில் வருகிறதா? என எட்டிப்பார்த்தபடி இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.</p><h2>சாலையோர தடுப்பில் மோதியது</h2><p>இதில் நிலைதடுமாறிய மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அந்த பகுதியில் இருந்த சாலையோர தடுப்பில் வேகமாக மோதியது. இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். சிறிது நேரத்திலேயே பாண்டித்துரை, முனீஸ்வரன் பரிதாபமாக இறந்தனர்.</p><p>இதுகுறித்து அறிந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் பெருங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சோக சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நீட் வேண்டாம் என தமிழகம் போராடும் போது,  நீட் பயிற்சிக்கு வடமாநில ஆசிரியர்களா? - வேல்முருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/while-tamil-nadu-is-protesting-against-neet-are-teachers-from-north-indian-states-being-brought-in-for-neet-coaching-velmurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/while-tamil-nadu-is-protesting-against-neet-are-teachers-from-north-indian-states-being-brought-in-for-neet-coaching-velmurugan#comments</comments><guid isPermaLink="false">68834bee-60bc-4d23-a7aa-ff3d7d89327b</guid><pubDate>Sun, 23 Aug 2026 00:55:50 +0000</pubDate><atom:updated>2026-08-23T00:55:50.624Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Velmurugan,வேல்முருகன்,NEET,நீட்,தமிழக வாழ்வுரிமைக் கட்சி,தி.வேல்முருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/74izcwoa/velmurugan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/74izcwoa/velmurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தின் அறிவாற்றல் வளத்தைப் பயன்படுத்தாமல் வெளியிலிருந்து மனிதவளத்தை இறக்குமதி செய்வது சரியான அணுகுமுறையா? என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>வடமாநில ஆசிரியர்கள் ஏன்?</h2><p>நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாட்டில் தொடர்ந்து வலுப்பெற்று வரும் நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே குப்பூர் அரசு மாதிரிப் பள்ளியில், நீட் மற்றும் ஜே.இ.இ. போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சியை வழங்க ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சியையும், ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்துகிறது.</p><p>நீட் தேவையில்லை என தமிழகம் உறுதியாகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும்போது, அதற்கான பயிற்சியை வழங்க வெளிமாநிலங்களில் இருந்து ஆசிரியர்களைத் தேடி அழைத்து வருவது ஏன்?</p><p>தமிழகத்தில் கல்வித் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட ஆசிரியர்கள், பேராசிரியர்கள், போட்டித் தேர்வு நிபுணர்கள் என பெரும் மனிதவளம் உள்ளது. அப்படியிருக்க, இந்தப் பொறுப்பை ஏற்கும் திறமை கொண்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்களை அரசு முதலில் அடையாளம் காணாதது ஏன்?</p><h2>தேர்ந்தெடுத்தது யார்?</h2><p>இது வெளிமாநிலத்தவர்களுக்கு எதிரான நிலைப்பாடு அல்ல. ஆனால், தமிழகத்தின் அரசுப் பள்ளியில் உருவாகும் வாய்ப்பில், தமிழகத்தில் உள்ள தகுதியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டாமா? என்பதே அடிப்படையான கேள்வி.</p><p>மேலும், அந்த 5 பேரைத் தேர்ந்தெடுத்தது யார்?</p><p>எந்த விதிமுறையின் கீழ் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது?</p><p>அவர்களின் கல்வித் தகுதி மற்றும் கற்பித்தல் அனுபவம் என்ன?</p><p>அவர்களுக்கான ஊதியத்தை வழங்குவது யார்?</p><p>தமிழகத்தில் உள்ள தகுதியானவர்களைப் பரிசீலிக்கும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டதா?</p><p>இந்த விவரங்கள் அனைத்தையும் பொதுமக்கள் அறியும் வகையில் அரசு வெளிப்படுத்த வேண்டும்.</p><p>மாணவர்களின் நலனுக்காக உடனடி பயிற்சி தேவைப்படலாம் என்பதை ஏற்றுக்கொண்டாலும், நீட் தொடர்பான தமிழகத்தின் அரசியல் மற்றும் கல்விக் கொள்கை நிலைப்பாடு என்ன என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.</p><p>அதிலும் குறிப்பாக, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழகத்தின் </a>அறிவாற்றல் வளத்தைப் பயன்படுத்தாமல் வெளியிலிருந்து மனிதவளத்தை இறக்குமதி செய்வது சரியான அணுகுமுறையா? என்ற கேள்விக்கும் விடை தேவை.</p><h2>தமிழர்களுக்கு வாய்ப்பு..</h2><p>எனவே, குப்பூர் பள்ளி விவகாரத்தில் உண்மையை மறைக்காமல் முழுமையான விளக்கத்தை அரசு வெளியிட வேண்டும். தமிழகத்தில் தகுதி பெற்றுள்ள ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுநர்களை மாவட்ட வாரியாக அடையாளம் கண்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற கல்விசார் பணிகளுக்கு அவர்களுக்கு உரிய வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்.</p><p>நீட் வேண்டாம் என்ற தமிழகத்தின் உரிமைக் குரலுக்கும், நீட் பயிற்சியை முன்னெடுக்கும் நடைமுறைக்கும் இடையிலான முரண்பாட்டை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-flow-to-okenakkal-increases-to-12000-cubic-feet-per-second</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-flow-to-okenakkal-increases-to-12000-cubic-feet-per-second#comments</comments><guid isPermaLink="false">167ac9d9-cb8e-43dd-af49-7c46fca6c69a</guid><pubDate>Sun, 23 Aug 2026 00:49:29 +0000</pubDate><atom:updated>2026-08-23T00:49:29.807Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஒகேனக்கல்,Increase,அதிகரிப்பு,நீர்வரத்து,water flow,பென்னாகரம்,Okenakkal</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/s0cqy0gs/146.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  ஒகேனக்கல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/s0cqy0gs/146.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பென்னாகரம், </p><p>கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறந்து விடப் படும் தண்ணீரின் அளவை பொறுத்து தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதும் வழக்கம். நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.</p><h2>காவிரி ஆறு</h2><p>இந்த நீர்வரத்து நேற்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இருப்பினும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. </p><p>இதனால் ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ், உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. </p><h2>நீர்வரத்து</h2><p>இந்த நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இதனிடையே கர்நாடக அணைகளில் இருந்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81">காவிரியில்</a> வினாடிக்கு 15 ஆயிரத்து 174 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. </p><p>இதையடுத்து நேற்று மாலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக மீண்டும் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>இன்ஸ்டா பழக்கம்: சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/insta-habit-teenager-arrested-for-kidnapping-and-sexually-harassing-girl</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/insta-habit-teenager-arrested-for-kidnapping-and-sexually-harassing-girl#comments</comments><guid isPermaLink="false">4e92f1ce-a079-4550-8744-7307a6d2665f</guid><pubDate>Sun, 23 Aug 2026 00:42:45 +0000</pubDate><atom:updated>2026-08-23T00:42:45.796Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>போக்சோ சட்டம்,POCSO act,இன்ஸ்டாகிராம்,Instagram</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/xehkgm58/2.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/xehkgm58/2.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த ஆந்திர வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.</p><h2>17 வயது சிறுமி மாயம்</h2><p>சேலத்தை சேர்ந்த 17 வயது சிறுமி பிளஸ்-2 முடித்துவிட்டு, என்ஜினீயரிங் கலந்தாய்விற்காக காத்திருக்கிறாள். இந்த நிலையில் அந்த சிறுமி கடந்த 17-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றாள். பின்னர் அவள் வீடு திரும்பவில்லை. சிறுமியை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.</p><p>பின்னர் மாயமான சிறுமி குறித்து சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமியை ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அருகே உள்ள ஜருகு பகுதியை சேர்ந்த கஜேந்திரன் (வயது 19) பெங்களூருவுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. </p><h2>பாலியல் தொல்லை</h2><p>இதையடுத்து போலீசார் பெங்களூரு விரைந்து சென்று சிறுமியை மீட்டதுடன் அவரை கடத்தி சென்ற வாலிபரை பிடித்து சேலத்திற்கு அழைத்து வந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், சிறுமிக்கும், கஜேந்திரன் என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.</p><p>இந்த நிலையில் கஜேந்திரன், சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பெங்களூருவுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதுதொடர்பாக கஜேந்திரனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். மேலும் சிறுமி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டாள். இந்த சம் பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி நகைக்கடை அதிபரிடம் ரூ.10.30 கோடி பறிமுதல்: வருமான வரித்துறை அதிரடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/income-tax-department-seizes-rs1030-crore-from-thoothukudi-jewellery-shop-owner-action-taken</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/income-tax-department-seizes-rs1030-crore-from-thoothukudi-jewellery-shop-owner-action-taken#comments</comments><guid isPermaLink="false">260f28ec-8284-4663-9f33-a8e0d94b617b</guid><pubDate>Sat, 22 Aug 2026 17:17:30 +0000</pubDate><atom:updated>2026-08-22T17:17:30.821Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பெங்களூரு,Bengaluru,Thoothukudi,தூத்துக்குடி,Income Tax Department,அதிரடி,owner,jewelry store,money seized,பணம் பறிமுதல்,வருமான வரித்துறை அதிகாரிகள்,நகைக்கடை அதிபர்,officials action</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/8vp07ya1/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பணம் பறிமுதல்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/8vp07ya1/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81">பெங்களூரு</a> எலெக்ட்ரானிக் சிட்டியில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கடத்தி வரப்பட்ட ரூ.9 கோடி பணத்தை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> நகைக்கடை அதிபரிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்தனர். அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் மேலும் ரூ.1.30 கோடி சிக்கியது. </p><h2>வாகன சோதனை</h2><p>வருமான வரித்துறை துணை இயக்குநர் ஜெகீஷ் அளித்த தகவலின் பேரில், பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி மண்டல துணை போலீஸ் கமிஷனர் நாராயண் வழிகாட்டலில், எலெக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ள ஓசூர் மெயின் ரோடு, வீரசந்திரா சிக்னல் பகுதியில் கடந்த 18-ம் தேதி இரவில் கேரள பதிவு எண் கொண்ட காரை போலீசார் வழிமறித்துச் சோதனையிட்டனர். </p><h2>ரூ.9 கோடி பறிமுதல், 2 பேர் கைது</h2><p>அப்போது காரில் இருந்த 2 பெட்டிகளில் கட்டுக்கட்டாக ரூ.9 கோடி ரொக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பணத்திற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால், காரில் வந்த சச்சின் உள்பட 2 பேரையும் போலீசார் மடக்கிப் பிடித்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்து பணத்தை பறிமுதல் செய்தனர். முன்னதாக, தூத்துக்குடியில் உள்ள சச்சினின் வீட்டில் தமிழக வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.</p><h2>ரூ.1.30 கோடி பறிமுதல்</h2><p>அந்த சோதனையின் போது வீட்டில் இருந்து ரூ.1.30 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது. வருமான வரித்துறை சோதனையிலிருந்து தப்பிப்பதற்காகவே சச்சின் பல கோடி ரூபாய் பணத்துடன் காரில் பெங்களூரு நோக்கி தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ரூ.9 கோடி ரொக்கம், கார் மற்றும் பிடிபட்ட சச்சின் உள்ளிட்ட 2 பேரையும் எலெக்ட்ரானிக் சிட்டி போலீசார், வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். </p><h2>போலீஸ் விசாரணை</h2><p>ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு மற்றும் கர்நாடக வருமான வரித்துறை அதிகாரிகள் இணைந்த இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.10.30 கோடி ரொக்கப் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">பணம் பறிமுதல்</a> செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பணம் ஹவாலா முறையிலானது தானா என்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>‘3 மாதங்களில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு’ - அமைச்சர் கீர்த்தனா பெருமிதம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/1-lakh-crore-investment-in-3-months-minister-keerthana-expresses-pride</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/1-lakh-crore-investment-in-3-months-minister-keerthana-expresses-pride#comments</comments><guid isPermaLink="false">ffe5740e-7370-4ef6-9ce2-a79a10bc0c5d</guid><pubDate>Sat, 22 Aug 2026 16:41:52 +0000</pubDate><atom:updated>2026-08-22T16:41:52.596Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அமைச்சர் கீர்த்தனா,Minister Keerthana</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/tchqrrr6/State-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/tchqrrr6/State-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர்,</p><p>தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைந்த 3 மாதங்களில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு மாநிலத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் கீர்த்தனா பெருமிதம் தெரிவித்துள்ளார். இது குறித்து விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-</p><p>“இத்தனை காலமாக ஆண்கள் மட்டுமே நிர்வகித்து வந்த தொழில்துறையை முதல் முறையாக ஒரு பெண்ணை நம்பி, எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த முதல்-அமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பிற்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என்பதை த.வெ.க.வின் தேர்தல் அறிக்கையிலேயே நாம் சொல்லியிருக்கிறோம். அதற்கு தேவையான முயற்சிகளையும் நாம் செய்தோம். </p><p>நமது முயற்சிகள் குறித்து எத்தனையோ பேர் ஏளனமாக பேசினார்கள், கேலி செய்தார்கள். ஆனால் அனைத்தையும் தாண்டி 3 மாதங்களில் ‘வெற்றி தமிழ்நாடு’ என்ற பெரிய முதலீடாக, ரூ.1 லட்சம் கோடி முதலீட்டை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்துள்ளோம். விருதுநகர் மாவட்டத்திற்கு ரூ.1,500 கோடியில் 2 நிறுவனங்கள் வரப்போகின்றன. படித்த இளைஞர்களுக்கு வருடத்திற்கு 6 முதல் 12 லட்சம் வரை சம்பளம் வழங்கக் கூடிய பெரு நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்கு வரப்போகின்றன. </p><p>அதுவும் விருதுநகர் போன்ற மாவட்டங்களுக்கு இத்தகைய வேலைவாய்ப்புகளை கொண்டு வர வேண்டும் என்பதுதான் தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் கனவு. எத்தனை விமர்சனங்கள் வந்தாலும், ‘மக்களுக்காக நான் வேலை செய்ய வந்திருக்கிறேன்’ என்ற உறுதியோடு முதல்-அமைச்சர் விஜய் அமைதியாக வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். அவரை பின்பற்றியே நானும் செயலாற்றி வருகிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>‘எளிய நிலையில் இருந்து நாட்டின் உயர்ந்த பொறுப்புகளை அடைவது பா.ஜ.க.வில் மட்டுமே சாத்தியம்’ - தமிழிசை சவுந்தரராஜன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rising-from-humble-beginnings-to-hold-the-countrys-highest-offices-is-possible-only-in-the-bjp-tamilisai-soundararajan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rising-from-humble-beginnings-to-hold-the-countrys-highest-offices-is-possible-only-in-the-bjp-tamilisai-soundararajan#comments</comments><guid isPermaLink="false">7e3bc099-2667-40f8-b0a4-2074d95dd0b2</guid><pubDate>Sat, 22 Aug 2026 16:05:47 +0000</pubDate><atom:updated>2026-08-22T16:05:47.488Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழிசை சவுந்தரராஜன்,Tamilisai Soundarajan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/avb1udi3/State-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/avb1udi3/State-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>எளிய நிலையில் இருந்து நாட்டின் மிக உயர்ந்த பொறுப்புகளை அடைவது என்பது பா.ஜ.க.வில் மட்டுமே சாத்தியமாகும் என தமிழிசை சவுந்தரராஜன் பெருமிதம் தெரிவித்துள்ளார். </p><p>பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில், இந்தியாவின் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 23 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருப்பதாவது;-</p><p>“23 ஆண்டுகளுக்கு முன்பு, திருவள்ளூர் மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமத்தில் நடைபெற்ற எளிமையான கொடியேற்ற விழாவின்போது எடுக்கப்பட்ட புகைப்படம். தற்போது இந்தியாவின் துணை ஜனாதிபதியாக பொறுப்பு வகிக்கும் சி.பி. ராதாகிருஷ்ணனுடன் இணைந்து, நான் மாவட்டப் பொறுப்பாளராகப் பணியாற்றிய காலத்தின் ஒரு தருணம் இது. எளிய நிலையில் இருந்து நாட்டின் மிக உயர்ந்த பொறுப்புகளை அடைவது என்பது பா.ஜ.க.வில் மட்டுமே சாத்தியம்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>திருநெல்வேலி: 6 கிலோ கஞ்சா பறிமுதல்; 4 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirunelveli-6-kg-of-ganja-seized-4-people-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirunelveli-6-kg-of-ganja-seized-4-people-arrested#comments</comments><guid isPermaLink="false">79cc6378-dd42-42d4-af31-d890d57f83c1</guid><pubDate>Sat, 22 Aug 2026 16:02:35 +0000</pubDate><atom:updated>2026-08-22T16:02:35.431Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>போலீஸ்,Tirunelveli,திருநெல்வேலி,ரோந்து பணி,4 arrested,4 பேர் கைது,கஞ்சா பறிமுதல்,Police patrol,Ganja seized</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/spl0eq05/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கஞ்சா பறிமுதல், 4 பேர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/spl0eq05/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்ட போலீசாரின் தீவிர கண்காணிப்பு மற்றும் நடவடிக்கையால் தாழையூத்து அருகே 6 கிலோ <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">கஞ்சா பறிமுதல்</a> செய்து, <a href="https://www.dailythanthi.com/topic/4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">4 பேர் கைது</a> செய்யப்பட்டுள்ளனர். </p><h2>போலீசார் சோதனை</h2><p>திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சுதன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தாழையூத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு அரிசி ஆலை அருகே, சந்தேகப்படும்படி பைக்கில் வந்த நபர்களை பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.</p><p>அந்த சோதனையில், தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரத்தைச் சேர்ந்த சுடலை மணிகண்டன் (வயது 25), முத்துராமன்(28), உதயா(20) மற்றும் முத்துராஜ்(23) ஆகிய 4 பேரும், அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 6 கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.</p><h2>6 கிலோ கஞ்சா பறிமுதல், 4 பேர் கைது</h2><p>இதுகுறித்து தாழையூத்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் NDPS Act-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து, மேற்சொன்ன 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். </p>]]></content:encoded></item><item><title>‘எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்குவதை வி.சி.க. வரவேற்கிறது’ - திருமாவளவன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vck-welcomes-the-provision-of-cars-to-mlas-thirumavalavan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vck-welcomes-the-provision-of-cars-to-mlas-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">295b0bd7-53d1-46fc-b92c-9fe609f747b3</guid><pubDate>Sat, 22 Aug 2026 15:54:03 +0000</pubDate><atom:updated>2026-08-22T15:54:03.307Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமாவளவன்,Thirumavalavan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/evvrucrr/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/evvrucrr/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் எம்.எல்.ஏ.க்களின் தொகுதிப் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள கார், ஓட்டுநர் உதவியாளர் மற்றும் மாதம் ரூ.75,000 பராமரிப்புத் தொகை வழங்கப்படும் என முதல்-அமைச்சர் விஜய் சமீபத்தில் சட்டபேரவையில் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. நிதிச்சுமையைக் கருத்தில் கொண்டு, பொருளாதாரத்தில் நலிவடைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டுமே இந்தச் சலுகையை வழங்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்தனர்.</p><p>இதனிடையே, எதிர்க்கட்சியான திமுக, ” இந்த கார் சலுகை தங்கள் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் யாருக்கும் தேவையில்லை” என அதிகாரப்பூர்வமாக மறுத்தது. அதே போல், பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் 2 பேருக்கும் கார் தேவையில்லை எனவும், அதற்கு பதிலாக தங்கள் ஊரில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும் எனவும் சவுமியா அன்புமணி எம்.எல்.ஏ. தெரிவித்திருந்தார். </p><p>இந்த நிலையில், எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்குவதை வி.சி.க. வரவேற்கிறது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கும் முடிவை வி.சி.க. வரவேற்கிறது. விருப்பமில்லாதவர்கள் வாங்க மறுத்தால் அது அவர்களின் தனிப்பட்ட முடிவு. கார் வழங்கும் அரசின் முடிவு நியாயமானது” என்று தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>சென்னையில் அமைச்சர்கள் தலைமையில் வேலை வாய்ப்பு முகாம்: 3,289 பேர் பயன் பெற்றனர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/employment-camp-led-by-ministers-in-chennai-3289-people-benefited</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/employment-camp-led-by-ministers-in-chennai-3289-people-benefited#comments</comments><guid isPermaLink="false">b6cf5c5d-01a1-46a0-a945-541455092424</guid><pubDate>Sat, 22 Aug 2026 15:50:20 +0000</pubDate><atom:updated>2026-08-22T15:50:20.800Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,private,Job placement camp,தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்,அமைச்சர் ஆனந்த்,அமைச்சர் முகமது பர்வேஸ்,Minister Anand,Minister Mohammed Parvez</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/p425962u/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னையில் அமைச்சர்கள் தலைமையில் வேலை வாய்ப்பு முகாம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/p425962u/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக அமைச்சர்கள் என்.ஆனந்த், முகமது பர்வேஸ் தலைமையில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a> அசோக் நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தனியார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D">வேலை வாய்ப்பு முகாம்</a> மூலம் மொத்தம் 3,289 பேர் பயன் பெற்றனர்.</p><h2>அமைச்சர்கள் என்.ஆனந்த், முகமது பர்வேஸ் தலைமையில் வேலை வாய்ப்பு முகாம்</h2><p>தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் செயல்படும் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக இன்று (22.8.2026) சென்னை அசோக் நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர் வளத்துறை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D">அமைச்சர் என்.ஆனந்த்</a> மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D">அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ்</a> ஆகியோர்களின் தலைமையில் நடைபெற்றது.</p><p>இந்த முகாமில் ΚALEESWARI REFINERY PVT LTD, MRF LIMITED, ASHOK LEYLAND, BANDHAN BANK, BHARTHI AIRTEL, TAFE, MIOT INTERNATIONAL HOSPITAL, AXLES INDIA, L&amp;T, ZF COMMERCIAL VEHICLE CONTROL SYSTEM, AXES BANK, TECH MAHINDRA FOUNDATION MFT, ROYAL ENFIELD, WHEELS INDIA LIMITED, RAMRAJ COTTON போன்ற முன்னணி நிறுவனங்கள் உள்ளிட்ட 283 தனியார் துறை வேலையளிக்கும் நிறுவனங்களும் 10 திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்களும் கலந்து கொண்டனர். </p><h2>மொத்தம் 3,289 பேர் பயன் பெற்றனர்</h2><p>இந்த முகாமில் பங்கேற்றதில் 9,671 வேலைநாடுநர்கள் பதிவு செய்து பல்வேறு நிறுவனங்களின் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டனர். இதில் 25 மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 2,973 (ஆண்கள் 1,828, பெண்கள் 1,145) வேலைநாடுநர்கள் பணிநியமனமும்,  முதற்கட்ட நேர்முகத் தேர்வில் 316 நபர்கள் (ஆண்கள் 190, பெண்கள் 126) தேர்ச்சி பெற்று இரண்டாம் கட்ட தேர்வுக்குமென தகுதிபெற்று மொத்தம் 3,289 நபர்கள் பயன் பெற்றனர். திறன் பயிற்சிக்காக 57 வேலைநாடுநர்களும், அயல் நாட்டு வேலைவாய்ப்பிற்காக 97 வேலைநாடுநர்களும் பதிவு செய்து பயன்பெற்றனர். மேலும் உள அளவை மதிப்பீட்டு சோதனையில் 21 நபர்கள் பயன்பெற்றுள்ளனர். </p><h2>பணி நியமன ஆணைகள் வழங்கல்</h2><p>தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ் ஆகிய 2 அமைச்சர்களும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி விழா பேருரையாற்றினர். </p><p>இந்த முகாமில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் அரசு செயலாளர் வீரராகவராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இயக்குநர் டாக்டர் பழனி, சென்னை மாவட்ட கலெக்டர் துறைஸ்.மாலதி ஹெலன், சென்னை மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) அனிதா, சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் மகேஸ்வரி மற்றும் துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். </p>]]></content:encoded></item><item><title>‘தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது’ - த.வெ.க. எம்.எல்.ஏ. முஸ்தபா </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-is-playing-a-double-game-regarding-constituency-delimitation-tvk-mla-mustafa</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-is-playing-a-double-game-regarding-constituency-delimitation-tvk-mla-mustafa#comments</comments><guid isPermaLink="false">4f9607cd-2d4a-4c8a-8143-bfa8b9840b12</guid><pubDate>Sat, 22 Aug 2026 15:39:52 +0000</pubDate><atom:updated>2026-08-22T15:39:52.858Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>த.வெ.க.,தி.மு.க.,தொகுதி மறுவரையறை,Mustafa,முஸ்தபா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/q29fubzg/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/q29fubzg/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரையில் அமைச்சர் முஸ்தபா இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் நாடாளுமன்றத்தில் 543 பேர் மக்களவை உறுப்பினர்களாக தொடர வேண்டும் என முதல்-அமைச்சர் ஏன் பேசவில்லை? என எதிர்க்கட்சிகள் விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்தபோது அமைச்சர் முஸ்தபா கூறியதாவது;-</p><p>“மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் தொகுதி மறுவரையறைக்கு தமிழக அரசாங்கம் சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது. முதல்-அமைச்சருக்கு தெரியாமலா தீர்மானம் போட்டிருப்பார்கள்? </p><p>தொகுதி வரையறை விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது. கடந்த காலத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தொகுதி மறுவரையறை தொடர்பான தாள்களை கிழித்துப் போட்டார். ஆனால் இன்று படித்து சொல்ல வேண்டும் என்கிறார். </p><p>தி.மு.க. தொடர்ச்சியாகவே பா.ஜ.க.வுடன் கள்ளக் கூட்டணி வைத்திருந்தது. இன்று தி.மு.க.வின் நிலைப்பாடு மத்திய பா.ஜ.க. அரசை நோக்கி செல்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p> ]]></content:encoded></item><item><title>வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு தாம்பரம் - திருவாரூர் இடையே சிறப்பு ரெயில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/velankanni-festival-special-train-tambaram-tiruvarur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/velankanni-festival-special-train-tambaram-tiruvarur#comments</comments><guid isPermaLink="false">c0ed1804-9c27-4279-a974-7e5f12a406b0</guid><pubDate>Sat, 22 Aug 2026 15:25:30 +0000</pubDate><atom:updated>2026-08-22T15:25:30.517Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவாரூர்,சிறப்பு ரெயில்,தாம்பரம்,தெற்கு ரெயில்வே,Velankanni,வேளாங்கண்ணி திருவிழா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/7k26z2al/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/7k26z2al/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வேளாங்கண்ணியில் நடைபெறும் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா ஆலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக தாம்பரம் - திருவாரூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>தாம்பரம் - திருவாரூர் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (வண்டி எண். 06067) வருகிற 28-ந்தேதி தாம்பரத்தில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 7.45 மணிக்கு திருவாரூர் சென்றடையும்.</p><p>மறுமார்க்கத்தில் திருவாரூர் - தாம்பரம் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (வண்டி எண். 06068) 29-ந்தேதி திருவாரூரில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 8.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.</p><p>இந்த சிறப்பு ரெயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், மயிலாடுதுறை, திருநள்ளாறு, காரைக்கால், நாகூர், நாகப்பட்டினம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை (23-ந்தேதி) காலை 8 மணிக்கு தொடங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘என் தந்தைக்கு அடுத்து என்னை வழிநடத்தும் ஒரே நபர் என்.ஆனந்த்’ - அமைச்சர் பர்வேஸ் நெகிழ்ச்சி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/n-anand-is-the-only-person-who-guides-me-after-my-father-minister-parvez-speaks-with-emotion</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/n-anand-is-the-only-person-who-guides-me-after-my-father-minister-parvez-speaks-with-emotion#comments</comments><guid isPermaLink="false">55311886-bc4b-4cbd-a07c-79922d532e88</guid><pubDate>Sat, 22 Aug 2026 15:22:11 +0000</pubDate><atom:updated>2026-08-22T15:22:11.277Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அமைச்சர் முகமது பர்வேஸ்,Minister Mohammad Parvez</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/bwncw971/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/bwncw971/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை தி.நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ், த.வெ.க. பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான என்.ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பர்வேஸ் பேசியதாவது;-</p><p>“தி.நகர் சட்டமன்ற தொகுதிக்கு ஒரு அன்பான ஒரு செய்தியை சொல்கிறேன். உங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த சட்டமன்ற உறுப்பினர்(என்.ஆனந்த்), நேரம் தவறாமை, பொறுப்புணர்ச்சி, விசுவாசம் மற்றும் தெய்வ பக்தி ஆகிய நான்கையும் கொண்டவர் ஆவார். </p><p>கடந்த 15 வருட காலமாக அவருடன் நான் பயணித்து, அவருடனேயே வளர்ந்து இந்த இடத்தில் இன்று நிற்கிறேன். என் தந்தைக்கு அடுத்து என்னை வழிநடத்தக்கூடிய ஒரே நபர் த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தான். </p><p>நான் இன்று அமைச்சராக நிற்கிறேன் என்றால் அதற்கு அதுக்கு ஒரே காரணம் தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய். என்னுடைய உழைப்பை கொண்டு போய் தமிழ்நாடு முதல்-அமைச்சரிடம் எடுத்துச் சொன்னவர் அண்ணன் என்.ஆனந்த் தான். அவரை இந்த தொகுதி மக்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில ஜெயிக்க வைத்ததற்காக அவர் சார்பாக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>நான் கேட்ட கேள்விக்கு கடைசி வரை பதில் சொல்லவே இல்லை: நிர்மல் குமாருக்கு செந்தில் பாலாஜி பதிலடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/he-never-answered-the-question-i-asked-senthil-balaji-hits-back-at-nirmal-kumar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/he-never-answered-the-question-i-asked-senthil-balaji-hits-back-at-nirmal-kumar#comments</comments><guid isPermaLink="false">d3a34dcd-5049-4127-8544-26338f296d5c</guid><pubDate>Sat, 22 Aug 2026 15:12:44 +0000</pubDate><atom:updated>2026-08-22T15:12:44.573Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Senthil Balaji,செந்தில் பாலாஜி,நிர்மல் குமார்,Nirmal Kumar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/nsq71x9j/Senthil-balaji.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/nsq71x9j/Senthil-balaji.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>டாஸ்மாக் முறை கேடு தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அதிரடி சோதனையும் நடைபெற்றது.இந்த நிலையில் சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று காலை 11 மணியளவில் ஆஜர் ஆனார். அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தினர்.</p><p>விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி கூறியதாவது: -தவெக அரசு அமைந்த பிறகு ஆட்சி நடத்துவதை விட எதிர்க்கட்சிகள் மீது வழக்கு பதிவு செய்வதில் தான் சிறப்பு கவனங்களை செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் ஒரு வழக்கல்ல 10 வழக்குகள் அல்ல எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை சந்திப்பதற்கும் , சட்டப்படி எதிர்கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.</p> <p>நான் நேற்று என்ன கேட்டேன்.  மின்சாரத்துறை அமைச்சரிடம் 18 ஹார்ட் டிஸ்க் காணாம போயிடுச்சு கண்டுபிடிச்சது 38 ஹார்ட் டிஸ்க்ன்னு சொன்னீங்க மீதி இருக்கற 20 ஹார்ட் டிஸ்க் எங்க இருந்து கண்டுபிடிச்சது உரிய விளக்கம் என்ன.? என கேள்வி கேட்டா அது கடைசி வரைக்கும் அவர் பதிலே சொல்லல.ஒரு கேள்விக்கு பதில் தெரியாமல் சட்டமன்றத்தில் பதிலளிக்க திறமை இல்லாமல் திராணி இல்லாமல் இதுபோன்ற குதர்க்கமான வார்த்தைகளை பயன்படுத்தி சட்டமன்றத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். உரிய நேரத்தில் மக்கள் அவர்களுக்கு உரிய பதிலை தருவார்கள். இந்த ஆட்சி 100 நாள் கடந்து போயிருக்கு மக்களுக்கு எந்தவிதமான ஒரு பயனும் இல்லாத அரசாக இந்த தவெக அரசு உள்ளது” என்றார். </p>]]></content:encoded></item><item><title>அரசு பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் - எஸ்டிபிஐ வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fill-vice-chancellor-posts-in-state-universities-immediately-sdpi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fill-vice-chancellor-posts-in-state-universities-immediately-sdpi#comments</comments><guid isPermaLink="false">81f4ee08-f1ac-4df1-9436-1abd7b4d0644</guid><pubDate>Sat, 22 Aug 2026 15:01:55 +0000</pubDate><atom:updated>2026-08-22T15:01:55.113Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Universities,நெல்லை முபாரக்,sdpi,துணை வேந்தர்கள் நியமனம்,பல்கலைக்கழகங்கள்,Vice-Chancellor post,எஸ்டிபிஐ வலியுறுத்தல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/mcksbtyk/nellai-mubark.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ நெல்லை முபாரக்]]></media:title><media:description type="html"><![CDATA[ எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/mcksbtyk/nellai-mubark.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>அரசு பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் - எஸ்டிபிஐ வலியுறுத்தல். இதுதொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90">எஸ்டிபிஐ</a> கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><h2>துணை வேந்தர்கள்</h2><p>தமிழ்நாட்டில் உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கி வரும் 14 முதன்மை அரசு<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"> பல்கலைக்கழகங்களில்</a> நீண்டகாலமாக நிரந்தர துணை வேந்தர்கள் நியமிக்கப்படாத சூழல் நிலவுவது மிகுந்த கவலையளிக்கிறது. உயர்கல்வி துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வரும் இந்த சூழலில், தமிழ்நாடு அரசு இப்பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு, காலியிடங்களை நிரப்புவது குறித்த தெளிவான கொள்கை அறிவிப்பை வெளியிட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன்.</p><h2>தற்காலிக அமைப்பு</h2><p>தற்போது பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் பொறுப்பு பதிவாளர்கள் மூலமாகவும், தற்காலிக கன்வீனர் கமிட்டிகள்  மூலமாகவும் மட்டுமே நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. கன்வீனர் கமிட்டி என்பது ஒரு தற்காலிக அமைப்பாகும்; அதை கொண்டு கொள்கை சார்ந்த முக்கிய முடிவுகளையோ, புதிய ஆராய்ச்சி திட்டங்களையோ அல்லது நிதி ஒதுக்கீடுகளையோ முழுமையாக மேற்கொள்ள முடியாது.</p> <h2>நிர்வாக செயல்பாடு</h2><p>துணை வேந்தர்கள் இல்லாததால் புதிய பாடத்திட்ட அறிமுகம், பன்னாட்டு ஆராய்ச்சி நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் மற்றும் கல்வி தொலைநோக்கு திட்டங்கள் முற்றிலும் முடங்கியுள்ளன. மேலும், சிண்டிகேட் கூட்டங்கள் முறையாக கூடாததால் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம், பதவி உயர்வு மற்றும் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாக்கள் தாமதமாகின்றன. பொறுப்பு பதிவாளர்கள் தங்களது வழக்கமான பணிகளுடன் கூடுதல் பொறுப்புகளை கவனிப்பதால் அன்றாட நிர்வாக செயல்பாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.</p> <h2>மாநில அரசின் தலையாய கடமை</h2><p>பல்கலைக்கழகங்களின் சுயாட்சியையும், தமிழ்நாட்டின் உயர்கல்வி தரத்தையும் பாதுகாப்பது மாநில அரசின் தலையாய கடமையாகும். சட்ட மற்றும் நிர்வாக ரீதியான தடைகளைத் தாண்டி, வெளிப்படைத்தன்மையுடன் தகுதியான கல்வியாளர்களை தேர்வு செய்ய தேவையான தேடுதல் குழுக்களை விரைவாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><h2>நடவடிக்கை </h2><p>எனவே, நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரின் மானிய கோரிக்கை விவாதத்திலேயே உயர்கல்வித் துறை அமைச்சர் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு, குறிப்பிட்ட காலவரையறைக்குள் 14 பல்கலைக்கழகங்களுக்கும் நிரந்தர துணை வேந்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>