<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 10 Sep 2026 07:31:04 +0000</lastBuildDate><item><title>திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பிரசாதங்கள் விலை உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/price-hike-for-prasadam-at-thiruparankundram-murugan-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/price-hike-for-prasadam-at-thiruparankundram-murugan-temple#comments</comments><guid isPermaLink="false">a851c45f-e933-4a37-9fb7-1e2a008079e3</guid><pubDate>Thu, 10 Sep 2026 07:29:36 +0000</pubDate><atom:updated>2026-09-10T07:29:36.044Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thiruparankundram,திருப்பரங்குன்றம்,திருப்பரங்குன்றம் முருகன் கோவில்,பிரசாதம்,Thiruparankundram Murugan Temple,prasadam traditions</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/v4185vkr/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/v4185vkr/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>திருப்பரங்குன்றம்,</p><h2>திருப்பரங்குன்றம் கோவில்</h2><p>திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்களுக்காக கோவில் நிர்வாகத்தின் கீழ் நேரடியாக தயார் செய்து சர்க்கரை பொங்கல் (100 கிராம்), புளியோதரை (100 கிராம்), ஒரு வடை (50 கிராம்), ஒரு அப்பம் (50 கிராம்), ஒரு லட்டு (50 கிராம்) ஒரு முறுக்கு (50 கிராம்) ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. </p><p>இதற்காக கோவிலுக்குள் 3 இடங்களில் பிரசாதம் விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பிரசாதங்கள் கடந்த பல ஆண்டுகளாக தலா ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தன.</p><h2>திடீர் விலை உயர்வு</h2><p>இந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) முதல் பிரசாதங்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது வழக்கம் போல 50 கிராம் எடை கொண்ட ஒரு லட்டு ரூ.10-ல் இருந்து ரூ.20 ஆகவும், 50 கிராம் முறுக்கு ரூ.10-ல் இருந்து ரூ.25 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இது தவிர 50 கிராம் எடை கொண்ட மெதுவடை முதல் முறையாக மிளகு வடையாக தயாரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.10-ல் இருந்து ரூ.20 ஆக விலை உயருகிறது.</p><p>கடந்த காலங்களில் 100 கிராம் எடைகொண்ட புளியோதரையை 150 கிராமாக உயர்த்தி ரூ.10-ல் இருந்து ரூ.20 ஆக வும், 100 கிராம் பொங்கலை 150 கிராமாக உயர்த்தி ரூ.10-ல் இருந்து ரூ.20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில் துணை கமிஷனர் செல்வி கூறும்போது, தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் பிரசாதங்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பிரசாதங்களில் எள், ஓமம் சேர்க்கப்பட்டு தரமாகவும், ருசியாகவும், எடையின் அளவு சரியாகவும் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் என்றார்.</p><p><strong>இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது,</strong> கோவிலுக்கு வந்து சென்றதற்கு அடையாளமாகவும், கோவிலில் செய்யக்கூடிய பிரசாதம் ருசியாகவும், தரமாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையால் தான் வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு கோவிலில் இருந்து பிரசாதங்கள் வாங்குகிறோம். அதுவும் மிக குறைந்த விலை என்பதால் கூடுதலாக பிரசாதங்கள் வாங்கி செல்கிறோம். ஆனால் பிரசாதத்திற்கு விலை உயர்த்தப்படுகிறது என்பதை கேட்கும்போது வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>திருமண மண்டப உரிமையாளர் வெட்டிக்கொலை: மகள் கண்முன்னே 4 பேர் கும்பல் வெறிச்செயல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wedding-hall-owner-hacked-to-death-gang-of-4-commits-brutal-act-in-front-of-daughter</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wedding-hall-owner-hacked-to-death-gang-of-4-commits-brutal-act-in-front-of-daughter#comments</comments><guid isPermaLink="false">e05ead3e-f723-401b-b556-784aa1680881</guid><pubDate>Thu, 10 Sep 2026 07:23:31 +0000</pubDate><atom:updated>2026-09-10T07:23:31.544Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Tirunelveli,திருநெல்வேலி,arrested,வெட்டிக்கொலை,உரிமையாளர்,murdered,owner,kallidaikurichi,கல்லிடைக்குறிச்சி,மகள்,daughter,Wedding Hall,திருமண மண்டபம்,முன்னர்,in front</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/x75bpjef/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருமண மண்டப உரிமையாளர் வெட்டிக்கொலை, 2 பேர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/x75bpjef/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>டியூஷன் சென்டருக்கு மகளை அழைக்கச் சென்ற <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D">திருமண மண்டப</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D">உரிமையாளர்</a>, மகள் கண்முன்னே 4 பேர் கொண்ட மர்ம கும்பலால் சரமாரியாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">வெட்டிக்கொலை</a> செய்யப்பட்ட சம்பவம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">கல்லிடைக்குறிச்சி</a>யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><h2>திருமண மண்டப உரிமையாளர்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் கண்ணன் (வயது 52). இவர் அம்பாசமுத்திரத்தில் திருமண மண்டபம் நடத்தி வந்தார். தற்போது மனைவி சாந்தி மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மகளுடன் கல்லிடைக்குறிச்சி அகஸ்தியர் கோவில் சன்னதி தெரு பகுதியில் வசித்து வந்தார். இவரது மகள் அருகில் உள்ள ஒரு தெருவில் இயங்கி வரும் டியூஷன் சென்டரில் படித்து வருகிறார். </p><h2>மகள் கண்முன்னே தந்தை வெட்டிக்கொலை</h2><p>நேற்று இரவில் தனது மோட்டார் சைக்கிளில் மகளை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக கண்ணன் சென்றுள்ளார். டியூஷன் சென்டர் வாசலில் நின்று கொண்டிருந்த மகளை அவர் அழைத்தபோது, அங்கு மறைந்திருந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென கண்ணனை சூழ்ந்து கொண்டு, தாங்கள் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த வெட்டுக்காயமடைந்த கண்ணன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தந்தை தனது கண்முன்னே கொல்லப்பட்டதைக் கண்டு அவரது மகள் அலறித் துடித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அக்கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது.</p><h2>போலீசார் ஆய்வு</h2><p>இதுகுறித்த தகவலறிந்து திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஸ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி மற்றும் கல்லிடைக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குற்றவாளிகளைக் கண்டறிய, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். </p><h2>2 பேர் கைது</h2><p>இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இருப்பினும் முன்விரோதம், இடப்பிரச்சினை, சொத்து தகராறு அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பிச் சென்ற 4 பேர் கொண்ட மர்ம கும்பலை தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக தற்போது வெங்கடேஷ், சூர்யா இசக்கி ஆகிய 2 பேரை, 10 மணி நேரத்திற்குள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>பேரறிஞர் அண்ணா 118-வது பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/perarignar-annas-118th-birth-anniversary-mk-stalin-pays-tribute-by-garlanding-the-statue</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/perarignar-annas-118th-birth-anniversary-mk-stalin-pays-tribute-by-garlanding-the-statue#comments</comments><guid isPermaLink="false">64b73dcf-a171-4618-a47d-a3528b850ebf</guid><pubDate>Thu, 10 Sep 2026 07:06:35 +0000</pubDate><atom:updated>2026-09-10T07:06:35.611Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,Arignar Anna,பேரறிஞர் அண்ணா,M.K. Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/qmzga3cp/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/qmzga3cp/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பேரறிஞர் அண்ணா 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளதாக சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>மாலை அணிவித்து மரியாதை</h2><p>பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணாவின் 118வது ஆண்டு பிறந்த நாளான 15.9.2026 அன்று காலை 9.00 மணி அளவில் சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவச் சிலைக்கு கழகத் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின்</a> மற்றும் கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட கழக முன்னணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.</p><h2>நிர்வாகிகளுக்கு அழைப்பு</h2><p>கழக முன்னாள் அமைச்சர் பெருமக்கள், முன்னாள் - இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழக, பகுதிக் கழக, வட்டக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, இலக்கிய அணி, மாற்றுத் திறனாளிகள் அணி, தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, தொண்டர் அணி, விவசாய அணி, விவசாயத் தொழிலாளர் அணி, மீனவர் அணி, ஆதிதிராவிடர் நலக்குழு, மகளிர் தொண்டர் அணி, கலை,இலக்கிய பகுத்தறிவு பேரவை, மருத்துவர் அணி, பொறியாளர் அணி, சிறுபான்மையினர் நலஉரிமைப் பிரிவு, வர்த்தகர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, சுற்றுச்சூழல் அணி, அயலக அணி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி, கல்வியாளர்கள் அணி ஆகிய அனைத்து அணி நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஈரோடு: வாகனங்களை துரத்தி காட்டு யானை அட்டகாசம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-wild-elephant-rampages-chasing-vehicles</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-wild-elephant-rampages-chasing-vehicles#comments</comments><guid isPermaLink="false">4d895125-ba65-4f2a-9eef-2310d2694110</guid><pubDate>Thu, 10 Sep 2026 07:04:44 +0000</pubDate><atom:updated>2026-09-10T07:04:44.675Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Erode,ஈரோடு,காட்டு யானை,wild elephant</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/oh2j2tib/13.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/oh2j2tib/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>ஈரோடு,</p><p>ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானைகள், சிறுத்தைப்புலிகள், கரடிகள், காட்டெருமைகள், புலிகள் போன்ற விலங்குகள் உள்ளன. இதில் யானைகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகே உள்ள சாலையில் உலா வருவதும் வாகனங்களை வழிமறித்து உணவு ஏதாவது உள்ளதா என தேடுவதும் தொடர்கதையாகி வருகிறது.</p><p>இந்த நிலையில் நேற்று காலை ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை சாலையில் சுற்றித்திரிந்தது. மேலும் அந்த வழியாக வந்த வாகனங்களை துரத்தியது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை பின்னோக்கி இயக்கி அங்கிருந்து சென்றனர். அதன்பின்னர் யானை அங்கிருந்து காட்டுக்குள் சென்றது. </p> ]]></content:encoded></item><item><title>சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தனியார் கேண்டீன் உரிமம் ரத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/private-canteen-license-cancelled-at-rajiv-gandhi-government-hospital-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/private-canteen-license-cancelled-at-rajiv-gandhi-government-hospital-chennai#comments</comments><guid isPermaLink="false">ed434a0f-a735-4dfe-8f27-a1b013f7196e</guid><pubDate>Thu, 10 Sep 2026 07:03:33 +0000</pubDate><atom:updated>2026-09-10T07:03:33.442Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,canteen,கேண்டீன்,ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி,Rajiv Gandhi Hospital</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/ud39kami/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/ud39kami/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் செயல்பட்டு வரும் தனியார் கேண்டீன் மற்றும் டீ கடைகளில் உணவின் தரம் குறித்து புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி டாக்டர் தமிழ்ச்செல்வன் தலைமை யில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.</p><p>கேண்டீன் சமையலறை துர்நாற்றத்துடனும், சுகாதாரமின்றியும் இருந்தது. உடைந்த பாத்திரங்களில் உணவு சமைக்கப்பட்டதுடன், சுவர்கள் மற்றும் தரைப்பகுதிகளும் அசுத்தமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கேண்டீனின் உணவு உரிமம் ரத்து செய்யப்பட்டது. மேலும் உணவு வினியோகிக்கவும் தடை விதிக்கப்பட்டது.</p><p>இதேபோல் டீ கடையில் சர்க்கரையில் ஈக்கள், எறும்புகள் மொய்த்திருந்தன. பிரெட், சாண்ட்விச் உள்ளிட்டவற்றில் தயாரிப்பு, காலாவதி தேதிகள் குறிப்பிடப்படவில்லை. குறைந்த தரப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து டீ கடைக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. குறைகளை உடனடியாக சரிசெய்யாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சர்வதேச சந்தையில் இந்திய ஏலக்காய் ஏற்றுமதி 16,399 டன்னாக அதிகரிப்பு: விலை உயர வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/indian-cardamom-exports-to-the-international-market-increased-to-16399-tonnes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/indian-cardamom-exports-to-the-international-market-increased-to-16399-tonnes#comments</comments><guid isPermaLink="false">e1398c6c-12c3-42b4-9806-6e94ffb33d8f</guid><pubDate>Thu, 10 Sep 2026 06:37:48 +0000</pubDate><atom:updated>2026-09-10T06:37:48.216Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,India,cardamom,ஏலக்காய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/70do44c5/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/70do44c5/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>ஏலக்காய் ஏற்றுமதி</h2><p>இந்தியாவில் ஏலக்காய் சாகுபடியில் கேரளம் மாநிலம் சுமார் 70 சதவீத உற்பத்தியை வழங்கி வருகிறது. கேரளாவில் இடுக்கி, வயநாடு, பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களில் ஏலக்காய் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் சாகுபடி நடைபெற்று வருகிறது. </p><p>இந்திய ஏலக்காய்க்கு சர்வதேச சந்தையில் தொடர்ந்து நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஏனென்றால் இந்திய ஏலக்காயின் அளவு, நிறம், மணம் மற்றும் தரம் ஆகியவை பிற நாடுகளில் விளையும் ஏலக்காயை விட சிறப்பாக இருப்பதே காரணம் ஆகும். சர்வதேச சந்தையில் இந்திய ஏலக்காய்க்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஏற்றுமதியும் கணிசமாக உயர்ந்துள்ளது.</p><h2>விலை உயர வாய்ப்பு</h2><p>கடந்த 2023-24-ம் ஆண்டில் 7,083 டன்னாக இருந்த இந்திய ஏலக்காய் ஏற்றுமதி, 2025-26-ம் ஆண்டில் 16,399 டன்னாக உயர்ந்துள்ளது. இந்திய ஏலக்காயை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா ஆகியவை முன்னிலையில் உள்ளன. ஐக்கிய அரபு அமீரகம் 135.22 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலும், சவுதி அரேபியா 125.16 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலும் இந்திய ஏலக்காயை இறக்குமதி செய்துள்ளன.</p><p>இதுதவிர வங்காளதேசம், ஈராக், குவைத், மலேசியா உள்ளிட்ட நாடுகளும் இந்திய ஏலக்காயை இறக்குமதி செய்து வருகின்றன. இந்திய ஏலக்காய் ஏற்றுமதி புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ள வரவேற்பு காரணமாக உள்ளூர் சந்தையிலும் ஏலக்காய் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது ஏலக்காய் சராசரி விலை கிலோ ரூ.3 ஆயிரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை இளைஞர் கொலை: முதல்-அமைச்சர் சொல்லப்போகும் காரணம் என்ன? - டிடிவி தினகரன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/murder-of-a-youth-in-chennai-what-reason-will-the-chief-minister-give-ttv-dhinakaran-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/murder-of-a-youth-in-chennai-what-reason-will-the-chief-minister-give-ttv-dhinakaran-asks#comments</comments><guid isPermaLink="false">4deddac8-9a92-4c67-b27e-f7f2f7b968cf</guid><pubDate>Thu, 10 Sep 2026 06:29:22 +0000</pubDate><atom:updated>2026-09-10T06:29:22.303Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,சட்டம் ஒழுங்கு,Law and order</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/id9v4jiy/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/id9v4jiy/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”புகார் அளிக்க வந்த இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் காவல் ஆய்வாளர்; புகார் அளித்த மறுநாளே படுகொலை செய்யப்பட்ட இளைஞர் – ஒவ்வொரு குற்றச் சம்பவத்திற்கும் ஒவ்வொரு காரணம் கூறும் முதலமைச்சர் ஜோசப் விஜய், இக்கொலைக்கு சொல்லப்போகும் காரணம் என்ன?</p><p>சென்னை, திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் தன்னை அழைத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும், பொய் வழக்குப் பதிவு செய்து தன்னை கைது செய்யவுள்ளதாகவும் இளைஞர் பிரதீப் ராஜ் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு மறுநாளே அவர் அடையாளம் தெரியாத கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.</p><p>”சட்டத்தை மதித்து நடப்பவர்களுக்கு உற்ற நண்பனாகவும், சட்டத்தை மீறுவோருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் எதிரியாகவும் காவல்துறை இருக்க வேண்டும்” என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் காவல்துறையைப் பாராட்டிப் பேசிய இரண்டு நாட்கள்கூட முழுமையாக நிறைவடையாத நிலையில், காவல்துறை ஆய்வாளர் ஒருவர் மிரட்டியதாகப் புகார் தெரிவித்த நபர் அடுத்த நாளே படுகொலை செய்யப்பட்டிருப்பது, காவல்துறை முதலமைச்சரின் முழுமையான கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறதா என்ற கேள்வியையும், காவல்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது.</p><p>குடும்பப் பிரச்னை, சொத்துத் தகராறு, முன்விரோதம், பழிவாங்கும் மனநிலை என தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு நிகழும் ஒவ்வொரு குற்றச் சம்பவத்திற்கும் வெவ்வேறு காரணங்களைக் கூறி, அவை சட்டம் ஒழுங்குடன் தொடர்பில்லாதவை என்பது போல் சித்தரிக்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய் இளைஞர் பிரதீப் ராஜ் படுகொலை செய்யப்பட்ட இந்தச் சம்பவத்திற்கும் சொல்லப்போகும் காரணம் என்ன?</p><p>எனவே, தமிழகத்தில் அரங்கேறும் ஒவ்வொரு குற்றச் சம்பவத்திற்குப் பின்னரும் புதுப்புது காரணங்களைத் தேடாமல், குற்றச் சம்பவங்கள் நிகழ்வதற்கு முன்பாகவே அவற்றைத் தடுக்கும் வகையில் காவல்துறையைச் செயல்படச் செய்து, சட்டம் ஒழுங்கைப் பேணிக் காத்து, தமிழக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட முன்வர வேண்டும் முதலமைச்சர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>&apos;த.வெ.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு இன்னும் படுபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது&apos; - வானதி சீனிவாசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/law-and-order-is-plunging-into-an-abyss-under-the-tvk-government-vanathi-srinivasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/law-and-order-is-plunging-into-an-abyss-under-the-tvk-government-vanathi-srinivasan#comments</comments><guid isPermaLink="false">cbead928-9543-4803-b255-5b3784408fcf</guid><pubDate>Thu, 10 Sep 2026 06:24:16 +0000</pubDate><atom:updated>2026-09-10T06:24:16.863Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,த.வெ.க. ஆட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/8dg12sjn/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/8dg12sjn/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பா.ஜ.க. முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-</p><p>"சென்னை திருவொற்றியூரில் கந்துவட்டி தகராறில் தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி காவல் துறையில் புகார் கொடுத்த பிரதீப் ராஜ் என்ற இளைஞர் நேற்று வெட்டிக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் செய்தி கடும் அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் இவ்வழக்கில் உயிரிழந்த இளைஞர், காவல் ஆய்வாளர் மீதும் குற்றச்சாட்டு வைத்திருப்பதாகக் கூறப்படுவதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.</p><p>தனது உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்று புகார் கொடுத்தும் அதனை அலட்சியமாகக் கருதியதன் விளைவாக ரவுடிகளால் ஓர் உயிர் பலியாக்கப்பட்டிருப்பது காவல்துறை, பொதுமக்களையும், சட்டம் ஒழுங்கையும் எந்த அளவிற்கு பாதுகாக்கிறது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><p>இச்சூழலில் சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கு குறித்து சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீது முதல்-அமைச்சர் விஜய் பதிலளிப்பார் என்று எதிர்பார்த்தால் மக்கள் பிரச்சினைகளை விடுத்து 50 வருட பழங்கதைகளைப் பேசிக் கொண்டிருக்கிறார்.</p><p>இப்படி தினந்தோறும் ரவுடிகளின் அட்டகாசமும், ஆயுதக் கலாச்சாரமும் மாநிலத்தில் பெருகிவரும் சூழ்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு என்பது முற்றிலும் கேள்விக்குறியாகி உள்ளது கவலையளிக்கிறது. </p><p>ஆனால் ஒன்று மட்டும் நன்றாகத் தெரிகிறது. முன்பிருந்த ஆட்சியை விட த.வெ.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு இன்னும் படுபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது என்பது புலனாகிறது. மக்கள் எதிர்பார்த்த மாற்றம் இதுவல்ல முதல்-அமைச்சர் அவர்களே..! முற்றிலும் ஏமாற்றம் தான் மிஞ்சியிருக்கிறது."</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நீர்நிலைகளைச் சீரழித்து, மண் சுரண்டலுக்கு அனுமதிப்பதா? - வேல்முருகன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/allowing-the-degradation-of-water-bodies-and-sand-mining-velmurugan-questions</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/allowing-the-degradation-of-water-bodies-and-sand-mining-velmurugan-questions#comments</comments><guid isPermaLink="false">b171963f-4397-403f-adb2-03f82765f447</guid><pubDate>Thu, 10 Sep 2026 06:23:53 +0000</pubDate><atom:updated>2026-09-10T06:23:53.087Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Velmurugan,வேல்முருகன்,தமிழக வாழ்வுரிமைக் கட்சி,தி.வேல்முருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/pvcl2ep2/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேல்முருகன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/pvcl2ep2/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மக்களின் நீராதாரத்தைக் காக்க வேண்டிய அரசு, இயற்கை வளங்களைச் சுரண்டும் செயல்களுக்குத் துணை நிற்கக் கூடாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/velmurugan">வேல்முருகன் </a>தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>மண் எடுப்பதற்கு அரசு அனுமதி</h2><p>விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சுற்றுவட்டாரத்தில், விவசாயத்தின் ஆதாரமாகத் திகழும் பொன்பத்தி, சிங்கவரம், மேலச்சேரி, துறிஞ்சபூண்டி, மண்ணூர், ஆலம்பூண்டி, சாணிக்குளம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஏரிகளில் வண்டல் மண், கிராவல் மண் எடுப்பதற்கு அரசு அனுமதி வழங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>நீர்நிலைகளின் இயற்கை அமைப்பு சிதைவது ஏன்? நீர்நிலைகளைத் தூர்வாரி கொள்ளளவை மேம்படுத்த வேண்டிய நடைமுறை, தற்போது அவற்றின் இயற்கையான தரைப்பரப்பையே மாற்றும் அளவுக்குச் சென்றிருப்பதாக விவசாயிகள் தெரிவிப்பது மிகுந்த கவலைக்குரியது.</p><p>மழைக்காலத்தில் நீரைத் தேக்கி வைத்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி, விளைநிலங்களுக்கு உயிர் கொடுக்கும் நீர்நிலைகள் தங்களது தன்மையை இழந்துவிட்டால், அதனால் பாதிக்கப்படுவது தலைமுறை தலைமுறையாக அந்தப் பகுதியை நம்பி வாழும் விவசாயக் குடும்பங்கள்தான்.</p><h2>பல தலைமுறைகளைத் தாக்கும்</h2><p>நன்மைக்கான திட்டம் வணிகச் சுரண்டலாக மாறியது எப்படி? அனுமதி திசைமாறியது எப்படி?</p><p>விவசாயத் தேவைக்காகவும் ஏரியின் கொள்ளளவை உயர்த்தவும் வழங்கப்பட்ட அனுமதி, கட்டுப்பாடற்ற வணிக நோக்கிலான வளச்சுரண்டலாக மாறியுள்ளது. குறிப்பிட்ட தேவைக்கான அனுமதி தவறாகப் பயன்படுத்தப்பட்டால், அதன் பாதிப்பு பல தலைமுறைகளைத் தாக்கும்.</p><p>அரசுத் துறைகளின் தொடர் கண்காணிப்பு நடைமுறையில் இருந்தும், விதிமீறல்கள் தடையின்றி நடப்பது எப்படி? என்ற கேள்வி எழுகிறது. பொதுச் சொத்தான நீர்நிலைகளைப் பாதுகாப்பதில் நிர்வாகம் காட்டிய அலட்சியமே இதற்கு முதன்மைக் காரணம். பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர்ந்து தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியும், நிர்வாகம் அதனை உடனடியாகக் கவனத்தில் கொள்ளாதது கண்டிக்கத்தக்கது.</p><h2>அறிவியல் முறையில் சீரமைக்க வேண்டும்</h2><p>செஞ்சி வட்டாரத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ள அனைத்து நீர்நிலைகளிலும் நடைபெற்ற மண் அகழ்வுப் பணிகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். விதிமுறைகளை மீறி அதிகளவில் மண் அள்ளியவர்கள் மீதும், இதற்குத் துணைபோன மற்றும் கண்காணிப்புப் பொறுப்பில் இருந்த அதிகாரிகள் மீதும் பாரபட்சமின்றி சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இயற்கை அமைப்பு சிதைக்கப்பட்ட ஏரிப் பகுதிகளை உடனடியாக அறிவியல் முறையில் சீரமைக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற அனுமதிகளை வழங்கும்போது கடுமையான அளவுகோல்களையும், பொதுமக்கள் கண்காணிக்கும் வகையிலான வெளிப்படையான வழிமுறைகளையும் அரசு உருவாக்க வேண்டும்.</p><p>மக்களின் நீராதாரத்தைக் காக்க வேண்டிய அரசு, இயற்கை வளங்களைச் சுரண்டும் செயல்களுக்குத் துணை நிற்கக் கூடாது. செஞ்சி பகுதியில் நடைபெறும் விதிமீறல்களை உடனடியாகத் தடுத்து, நீர்நிலைகளையும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கடன் விவகாரம்: காவல் நிலையத்தில் புகார் அளித்த வாலிபர் வெட்டிக்கொலை- 4 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/loan-issue-youth-who-filed-a-complaint-at-the-police-station-hacked-to-death-4-people-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/loan-issue-youth-who-filed-a-complaint-at-the-police-station-hacked-to-death-4-people-arrested#comments</comments><guid isPermaLink="false">01a73c1b-83b2-4257-b659-bcaa07dddd0f</guid><pubDate>Thu, 10 Sep 2026 06:18:00 +0000</pubDate><atom:updated>2026-09-10T06:18:00.879Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Issue,Chennai,சென்னை,4 arrested,4 பேர் கைது,loan,youth hacked to death,திருவொற்றியூர்,கடன்,வாலிபர் வெட்டிக்கொலை,விவகாரம்,Thiruvottriyur</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/1ogvwyp2/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கொலை செய்யப்பட்ட வாலிபர் பிரதீப்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/1ogvwyp2/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>ரூ.18 லட்சம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D">கடன்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">விவகாரத்தில்</a> கொலை மிரட்டல் விடுப்பதாக திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">வாலிபர்  வெட்டிக்கொலை</a> செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேரை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். </p><h2>வாலிபர் வெட்டிக்கொலை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a> திருவொற்றியூர் மேற்கு மாட வீதியைச் சேர்ந்த பிரதீப் (வயது 28), தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். நேற்று இரவு 9 மணியளவில் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த பிரதீப்பை, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ஓடஓட விரட்டிச் சென்று தலையில் சரமாரியாக வெட்டினர். அப்போது அப்பகுதியில் பொதுமக்கள் வருவதை பார்த்த மர்ம நபர்கள், மோட்டார் சைக்கிள் மற்றும் கத்தியை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினர். இதில் பலத்த காயமடைந்த பிரதீப் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவல் அறிந்த திருவொற்றியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரதீப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். </p><h2>ரூ.18 லட்சம் கடன்</h2><p>போலீசார் நடத்திய விசாரணையில், பிரதீப்பின் தாய் சில ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு தெரிந்த ஒருவருக்காக மற்றொருவரிடம் கடன் வாங்கி கொடுத்ததாகவும், அந்த கடனுக்காக இதுவரை ரூ.18 லட்சம் வரை செலுத்தியதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், கடன் தொகையை திருப்பிச் செலுத்துமாறு கடன் கொடுத்தவர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக பிரதீப் ஏற்கனவே போலீசில் புகார் அளித்திருந்தார். மேலும், தன்னை ஒரு கும்பல் கொலை செய்ய முயற்சிப்பதாக காவல் நிலையம் முன்பு பிரதீப், தெரிவித்து இருந்தார். </p><h2>4 பேர் கைது</h2><p>இந்த நிலையில், அவர் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக நடந்ததா? அல்லது அதே பகுதியில் விநாயகர் சிலை வைப்பதில் ஏற்பட்ட மோதல் காரணமாக நடந்ததா? என்ற கோணங்களில் திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தற்போது இக்கொலை சம்பவம் தொடர்பாக மாதவரம் பகுதியில் பதுங்கி இருந்த நாராயணன், ஹரிகிருஷ்ணன், ஜபார், லோகேஷ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>சென்னை சென்டிரல்-போத்தனூர் இடையே சிறப்பு ரெயில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-chennai-central-and-podanur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-chennai-central-and-podanur#comments</comments><guid isPermaLink="false">95dae5d3-8ef2-4051-b5a1-119be5cbc20c</guid><pubDate>Thu, 10 Sep 2026 06:14:42 +0000</pubDate><atom:updated>2026-09-10T06:14:42.090Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,Special train,போத்தனூர்,Podanur</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/ajnugyfc/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/ajnugyfc/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர், </p><p>விநாயகர் சதுர்த்தி வருகிற 14-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு திருப்பூர் வழியாக சென்னை சென்டிரல்-போத்தனூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி. சென்னை சென்டிரல்-போத்தனூர் (வண்டி எண்.06023) சிறப்பு ரெயில் நாளை (வெள்ளிக்கிழமை) சென்னை சென்டிரலில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு போத்தனூர் சென்றடையும். </p><p>இந்த ரெயில் திருப்பூருக்கு காலை 6.58 மணிக்கு வந்து 7 மணிக்கு புறப்படும். போத்தனூர்-சென்னை சென்டிரல் (06024) சிறப்பு ரெயில் வருகிற 14-ந்தேதி போத்தனூரில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.25 மணிக்கு சென்னை சென்டிரலை சென்றடையும். இந்த ரெயில் திருப்பூருக்கு நள்ளிரவு 12.08 மணிக்கு வந்து 12.10 மணிக்கு புறப்படும். இந்த தகவலை ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>கள்ளச்சாராய சாவுகள் குறித்த விசாரணை ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை என்ன? - அன்புமணி கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-action-is-being-taken-on-the-inquiry-commission-report-regarding-illicit-liquor-deaths-anbumani-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-action-is-being-taken-on-the-inquiry-commission-report-regarding-illicit-liquor-deaths-anbumani-asks#comments</comments><guid isPermaLink="false">c9ad36dd-b662-405f-af8e-e1821912038d</guid><pubDate>Thu, 10 Sep 2026 05:57:40 +0000</pubDate><atom:updated>2026-09-10T05:57:40.763Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK,அன்புமணி,Anbumani</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/rzvl6emg/anbumani.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/rzvl6emg/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கள்ளச்சாராய சாவுகள் குறித்த விசாரணை ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை என்ன? என்று பாமக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/anbumani-ramadoss">அன்புமணி ராமதாஸ்</a> கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>கள்ளச்சாராய சாவுகள்</h2><p>கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு நிகழ்ந்த கள்ளச்சாராய சாவுகள் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதன்மூலம் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாம்ராஜ்யம் குறித்த உண்மைகள் அம்பலமாகியுள்ளன. திமுக ஆட்சியில் நிகழ்ந்த இந்தக் கொடூரம் குறித்த விசாரணை ஆணைய பரிந்துரைகள் மீது தவெக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? என்பது தான் இப்போது எழுந்துள்ள வினாவாகும்.</p><p>கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள கருணாபுரம் பகுதியில் 2024-ஆம் ஆண்டு ஜூன் 17-ஆம் தேதி விற்பனை செய்யப்பட்ட மெத்தனால் கலக்கப்பட்ட நச்சு சாராயத்தை குடித்தவர்களில் 70 பேர் அடுத்த சில நாள்களில் உயிரிழந்தனர்; மேலும் 161 பேர் கடுமையான உடல்நல பாதிப்புகளுடன் பிழைத்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்துவதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி பி.கோகுல்தாஸ் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட ஆணையத்தின் அறிக்கை, 18 மாதங்களுக்குப் பிறகு சட்டப்பேரவையில் நேற்று முன்நாள் வெளியிடப்பட்டது.</p><p>கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் அரசின் தோல்வி என்று குற்றஞ்சாட்டியுள்ள ஆணையம்,‘‘ கள்ளச் சாராய வணிகர்களுடன் அதிகாரிகள் கூட்டணி வைத்திருந்தனர். அவர்களின் துணையின்றி, சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு நச்சு சாராயம் வந்திருக்க முடியாது. இந்தக் கூட்டணி தகர்க்கப்பட வேண்டும். கடமை தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கல்வராயன்மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு மாவட்டம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. பல ஊர்களில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் உரிமை ரூ.5 லட்சம் வரையிலான தொகைக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது.</p><h2>வழக்கு தொடரப்போவதாக அச்சுறுத்தல்</h2><p>கள்ளச்சாராய சாவுகள் நடைபெற்ற ஒரு சில மணி நேரங்களிலேயே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழும் கள்ளச்சாராய வணிகத்திற்கு திமுகவைச் சேர்ந்த இரு சட்டமன்ற உறுப்பினர்கள் தான் முழு ஆதரவாக இருந்தனர் என்றும், திமுகவைச் சேர்ந்த கன்னுக்குட்டி என்பவரும், அவரது கூட்டாளிகளும் தான் நச்சு சாராயத்தை விற்பனை செய்துள்ளனர் என்றும் குற்றஞ்சாட்டியிருந்தேன். அப்போதைய ஆளும் கட்சியான திமுக, இதில் திமுகவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்ததுடன், என் மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாகவும் அச்சுறுத்தல் விடுத்தனர். ஆனால், அப்போது நானும், பாமகவும் முன்வைத்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என்பது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>கள்ளச்சாராய சாவுகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தல், கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மறுவாழ்வு வழங்குதல், இனிவரும் காலங்களில் கள்ளச்சாராய விற்பனை நடக்காமல் தடுத்தல் ஆகிய 3 வகைகளில் பல்வேறு பரிந்துரைகளையும் நீதிபதி கோகுல்தாஸ் ஆணையம் அளித்திருந்தது. கள்ளச்சாராயம் ஒழிக்கப்பட வேண்டும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற எண்ணம் திமுக அரசுக்கு இருந்திருந்தால், ஆணையத்தின் அறிக்கையை உடனடியாக வெளியிட்டு அதன் பரிந்துரைகளை செயல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக, ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் 15 மாதங்கள் ஆட்சியில் இருந்தும் கூட, அதை வெளியிடாமல் கிடப்பில் போட்டு வைத்ததிலிருந்தே திமுக அரசின் உண்மை முகம் அம்பலமாகி விட்டது.</p><p>கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளைத் தடுக்கத் தவறியது மட்டுமின்றி, அது தொடர்பான விசாரணை அறிக்கையை வெளியிடுவதற்கும், அதில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் திமுக அரசு தவறி விட்டது. 18 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் அறிக்கையை இப்போது வெளியிட்டிருக்கும் தவெக அரசு, அதன் பரிந்துரைகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? என்பது தான் இப்போது எழுந்துள்ள வினா. அதற்கு அரசு விடையளிக்க வேண்டும்.</p><h2>அரசு வேலை வழங்க வேண்டும்</h2><p>கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதைத் தடுக்க தனியாக ஒரு மதுவிலக்குப் படையை உருவாக்க வேண்டும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயச் சாவுகளில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் உணவு, உறைவிடம், கல்வி ஆகிய உதவிகளை வழங்க வேண்டும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டிருந்தாலும் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஆணையத்தின் பரிந்துரைகளை தவெக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்.</p><p>இவை அனைத்தையும் விட நீதிபதி கோகுல்தாஸ் ஆணையம் தெரிவித்துள்ள ஒரு கருத்தும், அதைச் சார்ந்து அளித்துள்ள பரிந்துரையும் மிகவும் முக்கியமானவை. தமிழ்நாட்டில் 1971-ஆம் ஆண்டில் மதுவிலக்கு தளர்த்தப்பட்டு, தாராளமாக மது கிடைக்க வசதி செய்யப்பட்டதால், பெரும்பாலான மக்கள் குடிகாரர்களாக மாறி விட்டனர் என்று கவலை தெரிவித்திருக்கும் ஆணையத்தின் அறிக்கை,‘‘மதுவிலக்கு சட்டத்தின் அனைத்து பிரிவுகளையும் அரசு கடுமையாக செயல்படுத்தினால் கள்ளச்சாராயத்தையும், பிற போதைப் பொருள்களையும் முற்றிலுமாக ஒழித்து விட முடியும். தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவணிகத்தைக் குறைத்து குறிப்பிட்ட காலத்திற்குள் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும்’’ என்றும் பரிந்துரைத்துள்ளது.</p><p>இது தான் தமிழ்நாட்டுக்கு இன்றைய நிலையில் மிகவும் தேவையான பரிந்துரை ஆகும். எனவே, தமிழ்நாட்டில் இப்போதுள்ள 4038 மதுக்கடைகளையும் படிப்படியாக மூடி, அடுத்த இரு ஆண்டுகளில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும். இதற்கான கால அட்டவணையை தமிழக அரசு வெளியிட வேண்டும். மதுவிலக்கு உள்ளிட்ட கோகுல்தாஸ் ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்துவது தொடர்பான தனது நிலைப்பாட்டை தவெக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சிறுமி கொலை வழக்கில் விடுதலையான தஷ்வந்த்; தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி தமிழக அரசு மனு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dashwanth-acquitted-in-girls-murder-case-tamil-nadu-government-files-petition-seeking-review-of-the-verdict</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dashwanth-acquitted-in-girls-murder-case-tamil-nadu-government-files-petition-seeking-review-of-the-verdict#comments</comments><guid isPermaLink="false">cd083507-86e5-4100-9d06-945ccc6f8604</guid><pubDate>Thu, 10 Sep 2026 05:36:46 +0000</pubDate><atom:updated>2026-09-10T05:36:46.156Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/r4jszv7c/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/r4jszv7c/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை போரூரை அடுத்துள்ள மதநந்தபுரத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி, கடந்த 2017-ம் ஆண்டு மாயமானாள். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்களின் பக்கத்து வீட் டில் வசித்த, தஷ்வந்த் என்ற வாலிபர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொலை செய்தது தெரியவந்தது. </p><p>இதனையடுத்து கைது செய்யப்பட்ட தஷ்வந்த் சிறையில் அடைக்கப்பட்டார். வழக்குத் தொடர்பாக விசாரணை நடந்து வந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டு தஷ்வந்துக்கு ஜாமீன் வழங்கி யது.இதைத் தொடர்ந்து சிறையில் இருந்து வெளியே வந்த தஷ்வந்த், தாயை அடித்து கொன்றுவிட்டு தலைமறைவானார். பல கட்ட தேடுதல் நடவடிக்கைக்கு பின் கைதான தஷ்வந்த்துக்கு செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டு கடந்த 2018-ல் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.</p> <p>தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தூக்கு தண்டனையை ரத்து செய்து தஷ்வந்தை விடுதலை செய்தது. முன்னதாக தாய் கொலை வழக்கிலும் தஷ்வந்த் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p><p>தஷ்வந்த் விடுதலை தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல் பா.கருணாகரன் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கலிங்கப்பட்டி, செவல்குளத்திற்கு புதிய வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள்: அமைச்சரிடம் துரை வைகோ கோரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-revenue-inspector-offices-for-kalingapatti-and-sevalkulam-durai-vaiko-makes-a-request-to-the-minister</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-revenue-inspector-offices-for-kalingapatti-and-sevalkulam-durai-vaiko-makes-a-request-to-the-minister#comments</comments><guid isPermaLink="false">0573df82-29ef-4513-a102-bf28a41e9100</guid><pubDate>Thu, 10 Sep 2026 05:34:23 +0000</pubDate><atom:updated>2026-09-10T05:34:23.650Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>செங்கோட்டையன்,Sengottaiyan,Durai Vaiko,துரை வைகோ,அமைச்சர் செங்கோட்டையன்,Minister Sengottaiyan,துரை வைகோ எம்பி,Durai Vaiko MP</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/0mb2xorb/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ துரை வைகோ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/0mb2xorb/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>துரை வைகோ எம்.பி. அமைச்சர் செங்கோட்டையனை நேரில் சந்தித்து, கரிசல்குளம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தைப் பிரித்து கலிங்கப்பட்டி, செவல்குளத்தில் புதிய அலுவலகங்கள் அமைக்கக் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக <a href="https://www.dailythanthi.com/topic/durai-vaiko">துரை வைகோ</a> வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>துரை வைகோ கோரிக்கை</h2><p>நேற்று (09.09.2026) மாலை 7 மணியளவில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையனை நேரில் சந்தித்து கீழகண்ட கோரிக்கைக் கடிதத்தை வழங்கினேன்.</p><p>அதில், தென்காசி மாவட்டம், திருவேங்கடம் வட்டத்திற்குட்பட்ட, A. கரிசல்குளம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை இரண்டாகப் பிரித்து, கலிங்கப்பட்டி மற்றும் செவல்குளம் ஆகியவற்றைத் தலைமையிடங்களாகக் கொண்டு புதிய வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள் அமைத்துத் தரக் கோரினேன்.</p><h2>அமைச்சர் உறுதி</h2><p>மேலும், பொதுமக்களின் நலன் மற்றும் நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, இக்கோரிக்கைகளின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சரிடம் வலியுறுத்தினேன்.</p><p>அமைச்சர் என் கோரிக்கையை பரிசீலித்துவிட்டு, தற்போது மக்கள் கணக்கெடுப்புப் பணி நடைபெறுவதால் உடனடியாக செய்ய இயலாது என்றும், அப்பணி முடிவுற்றபின் 2027 ஆம் ஆண்டு இக்கோரிக்கையை அவசியம் செயல்படுத்தித்தருவதாக உறுதியளித்தார். அமைச்சருக்கு நான் நன்றி தெரிவித்துக்கொண்டேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/announcement-of-tvk-candidates-contesting-the-by-election</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/announcement-of-tvk-candidates-contesting-the-by-election#comments</comments><guid isPermaLink="false">78bc5085-4251-4726-8ff8-b52cbb533006</guid><pubDate>Thu, 10 Sep 2026 05:33:10 +0000</pubDate><atom:updated>2026-09-10T05:33:10.885Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,இடைத்தேர்தல்,By election,By-election</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/c6xn6fe2/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/c6xn6fe2/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>இடைத்தேர்தல்</h2><p>தமிழகத்தில் காலியாகவுள்ள 7 சட்டசபை தொகுதிகளில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 தொகுதிகளிலும் வருகிற அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், அக்டோபர் 9-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் களம் காண அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதன்படி, ஆளும் கட்சியாக த.வெ.க. மற்றும் தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.</p><h2>திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு</h2><p>இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடுமா? அல்லது புறக்கணிக்குமா? என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக, மற்ற கட்சிகளை முந்திக்கொண்டு தி.மு.க. முதல் கட்சியாக 2 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நேற்று அறிவித்தது. அதன்படி மதுராந்தகத்தில் பரந்தாமனும், தாராபுரத்தில் சுகன்யாவும் போட்டியிடுகிறார்கள்.</p><h2>தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு</h2><p>இந்த நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி மதுராந்தகத்தில் மரகதம் குமாரவேலும், தாராபுரத்தில் சத்தியபாமாவும் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.</p><h2>அதிமுக வேட்பாளர்கள் யார்...?</h2><p>அ.தி.மு.க. வேட்பாளர்களாக மதுராந்தகம் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. கணிகா சம்பத்தும், தாராபுரம் தொகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமி வின்சென்டின் மகள் வக்கீல் உமா சங்கரியும் களம் இறக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>திருநெல்வேலி: இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் புகைப்படம் வெளியிட்ட வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirunelveli-youth-arrested-for-posting-photo-with-sickle-on-instagram</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirunelveli-youth-arrested-for-posting-photo-with-sickle-on-instagram#comments</comments><guid isPermaLink="false">30c2f39f-817d-410b-84d8-684505d13bed</guid><pubDate>Thu, 10 Sep 2026 05:30:45 +0000</pubDate><atom:updated>2026-09-10T05:30:45.714Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,Youth arrested,வாலிபர் கைது,இன்ஸ்டாகிராம்,Instagram,Sickle,அரிவாள்,post,பதிவு,புகைப்படம்,photo</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/lzyxwwi2/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் புகைப்படம் வெளியிட்ட வாலிபர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/lzyxwwi2/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a>யில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D">இன்ஸ்டாகிராம்</a> பக்கத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D">அரிவாளுடன்</a> இருக்கும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">புகைப்படத்தைப்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81">பதிவிட்ட</a> வாலிபரை சைபர் கிரைம் போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர்.</p><h2>சமூக வலைதளப் பதிவுகள் கண்காணிப்பு</h2><p>திருநெல்வேலி மாவட்டத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாகவோ, சாதிப் பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலோ அல்லது ஆயுதங்களுடன் அச்சுறுத்தும் வகையிலோ இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்களை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். </p><h2>இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் இருக்கும் புகைப்படம்</h2><p>இந்த நிலையில், நெல்லை பழையபேட்டை பகுதியைச் சேர்ந்த இசக்கிராஜா (வயது 20) என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரிவாளுடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். இதனை சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து கண்டறிந்தனர். </p><h2>வாலிபர் கைது</h2><p>அதைத் தொடர்ந்து இசக்கிராஜாவை காவல் நிலையத்திற்கு அழைத்து எச்சரிக்கை விடுத்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். </p><h2>காவல்துறை எச்சரிக்கை</h2><p>இதுபோன்ற ஆட்சேபனைக்குரிய மற்றும் சட்டவிரோதமான பதிவுகளை உருவாக்குபவர்கள் மட்டுமின்றி, அவற்றைப் பகிர்வு செய்பவர்கள் மற்றும் அதற்கு ஆதரவாக தீங்கிழைக்கும் கருத்துகளைப் பதிவிடுபவர்கள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். </p><p>மேலும், நெல்லை மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் பிரச்சினையைத் தூண்டும் வகையில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டாலோ, பயங்கர ஆயுதங்களுடன் இருக்கும் நபர்களின் புகைப்படங்களைப் பகிர்ந்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>4 நாட்களில் 20 காசுகள் உயர்ந்த முட்டை விலை.!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/egg-prices-have-risen-by-20-paise-in-four-days</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/egg-prices-have-risen-by-20-paise-in-four-days#comments</comments><guid isPermaLink="false">0c3b6b26-b391-4a8f-b2e2-e508887e844f</guid><pubDate>Thu, 10 Sep 2026 05:25:31 +0000</pubDate><atom:updated>2026-09-10T05:25:31.946Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Namakkal,நாமக்கல்,முட்டை விலை,Egg prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/72gt4o84/10.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/72gt4o84/10.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>நாமக்கல்,</p><p>நாமக்கல் மாவட்டத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.</p><h2>20 காசுகள் அதிகரிப்பு</h2><p>நாமக்கல் மாவட்டத்தில் கோழி முட்டை கொள்முதல் விலை நேற்றை நிலவரப்படி 535 காசுகளாக (ரூ.5.35) இருந்து வந்தது. இதற்கிடையே நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் அதிகரிக்க நிர்வாகிகள் முடிவு செய்தனர். </p><p>எனவே முட்டை கொள்முதல் விலை தற்போது 540 காசுகளாக (ரூ.5.40) அதிகரித்துள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் அதிகரித்து உள்ளது. தேவை அதிகரித்து உள்ளதன் காரணமாக விலை அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. </p>  ]]></content:encoded></item><item><title>‘போலி பிம்பம்’ உடைந்ததில் பதற்றம் பற்றிக்கொண்டதோ? - மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/did-panic-set-in-because-the-fake-image-was-shattered-tvk-questions-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/did-panic-set-in-because-the-fake-image-was-shattered-tvk-questions-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">f526e310-319a-42dd-9066-9be7cebb995b</guid><pubDate>Thu, 10 Sep 2026 05:16:43 +0000</pubDate><atom:updated>2026-09-10T05:16:43.327Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,விஜய்,திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,mk stalin,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/ra0h3s83/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/ra0h3s83/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையில் போலீஸ், தீயணைப்புத்துறைகள் மீதான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு முதல்-அமைச்சர் விஜய் பதிலளித்து பேசினார். அப்போது அவர் ஆவேசமாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக உரையாற்றினார். அவர் பேசுகையில், 'எது பேசினாலும் நாங்கள் (தி.மு.க.) 'மிசா'வை பார்த்தவர்கள் என்று சொல்கிறார்கள். எல்லோருக்கும் 'மிசா' வரலாறு நன்றாக தெரியும்' என்று செய்கை ஒன்றை காண்பித்தார்.</p><p>அவருடைய இந்த செய்கை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை கேலி செய்வது போன்று அமைந்ததால் தி.மு.க.வின் முன்னணி நிர்வாகிகள் சமூக வலைத்தளங்களின் கண்டன பதிவு வெளியிட்டனர். மு.க.ஸ்டாலினின் 'மிசா' தியாகத்தை முதல்-அமைச்சர் விஜய் தனது செய்கை மற்றும் உடல் மொழி மூலம் கொச்சைப்படுத்திவிட்டார் என்று ஆவேசமாக கூறினர்.</p><h2>விஜய் விளக்கம்</h2><p>இதற்கு முதல்-அமைச்சர் விஜய் விளக்கம் அளித்தார். சட்டமன்றத்தில் கடந்த 7-ந்தேதி அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எந்த வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.</p><h2>மு.க.ஸ்டாலின் பதிலடி</h2><p>இதற்கிடையே, மிசா காலத்தில் நடந்ததை குறிப்பிட்டு திமுக தலைவர் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu/you-were-right-to-point-to-your-chin-mk-stalins-retort-to-vijay">மு.க.ஸ்டாலின் வீடியோ</a> ஒன்றை இன்று காலை வெளியிட்டார். இந்த நிலையில், அவரது வீடியோவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தவெக ஐடி விங் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;-</p><h2>தவெக பதிலடி</h2><p>பல ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்ட “சிறை சென்ற தியாகி” என்ற போலி பிம்பம் உடைந்ததில் பதற்றம் பற்றிக்கொண்டதோ?</p><p>எதை உலகறியக் கூடாது என்று மஞ்சள் துண்டு தந்தை முதல் ஆபாசநதி மகன் வரை கட்டி அடைகாத்தார்களோ, அது அம்பலமானதில் அச்சம் அதிகமாகியிருக்கிறது. அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மட்டும் மூச்சுவிடவில்லை.</p><p>உண்மைக்கு விளம்பரங்களோ, விளக்கங்களோ தேவையில்லை. ஆனால் இங்கே shooting video வெளியாகிறது என்றால், போலி பிம்பம் உடைந்தது உண்மையாகிறது.</p><p>பல cut-கள், உணர்வற்ற பேச்சு, மீண்டும் உண்மைக்கு மாறான ஒன்றை நம்ப வைக்க முயலும் படுதோல்வி முயற்சியாகவே தெரிகின்றன.</p><p>கட்டுமரக் கதைகளாலும் கட்டுக்கதைகளாலும் கட்டமைக்கப்பட்ட பொய்ப் பிம்பம், மெய்யைத் தாக்குப்பிடிக்காது என்பதை நிரூபித்திருக்கிறது இன்று வெளியான பொய் போராளியின் காணொளி.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சரின் வீடு அருகே புதிய தலைமைச்செயலகமா? - டிடிவி தினகரன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-new-secretariat-near-the-chief-ministers-residence-ttv-dhinakaran-questions</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-new-secretariat-near-the-chief-ministers-residence-ttv-dhinakaran-questions#comments</comments><guid isPermaLink="false">db285f7e-eead-46fb-a988-e7399149e1c4</guid><pubDate>Thu, 10 Sep 2026 05:16:07 +0000</pubDate><atom:updated>2026-09-10T05:16:07.424Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,தலைமை செயலகம்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/bv7v6s16/ttv.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/bv7v6s16/ttv.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;</p><p>”பட்டினப்பாக்கம் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதி. மக்கள் கூட்டம் நிறைந்த  பகுதி, பள்ளிக்கூடங்கள், தேவாலயங்கள் நிறைந்த பகுதி. வருங்காலங்களில் புதிய தலைமை செயலகத்தை விரிவாக்கம் செய்ய முடியாது. வீடு பக்கத்தில் உள்ளது என்பதற்காக முதல்-அமைச்சர் அங்கு தலைமை செயலகம் கட்டுகிறாரா என்ற கேள்வி எழுகிறது. </p><p>முதல்-அமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் கூட மறைக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சரின் வெளிநாட்டுப் பயணத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை. பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பது போல சித்தரிக்கிறார்கள். மக்கள் மாற்றம் வேண்டுமென தவறாக அவர்களை தேர்வுசெய்துவிட்டார்கள். தவெக ஆட்சி மக்கள் விரோத ஆட்சி என்பதை மக்கள் உணர்ந்துவிட்டனர். தவெக ஆட்சி தமிழ்நாட்டின் இருண்டகாலம். </p><p>தேர்தலில் வென்றவர்கள் துரோகம் செய்துவிட்டு தவெகவுக்கு சென்றுவிட்டனர். கட்சிக்கும், மக்களுக்கும்  துரோகம் செய்ததால்தான் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு அமமுக ஆதரவு அளிக்கும். இடைத்தேர்தலில் அதிமுக வெல்ல போராடுவோம்.”</p><p>இவ்வாறு அவர் பேசினார். </p> ]]></content:encoded></item><item><title>கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு மருத்துவமனையில் அனுமதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kolathur-mla-vs-babu-admitted-to-hospital</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kolathur-mla-vs-babu-admitted-to-hospital#comments</comments><guid isPermaLink="false">c6cf4975-5f85-4c9a-922c-e6b2a2339e9e</guid><pubDate>Thu, 10 Sep 2026 04:56:06 +0000</pubDate><atom:updated>2026-09-10T04:56:06.840Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,கொளத்தூர்,எம்எல்ஏ,Kolathur Constituency,VS Babu,வி.எஸ். பாபு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/gikfmgbg/VS-BABU.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  வி.எஸ். பாபு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/gikfmgbg/VS-BABU.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கொளத்தூர் தொகுதி தவெக  எம்.எல்.ஏ வி.எஸ். பாபு  உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்த வி.எஸ். பாபுக்கு இன்று அதிகாலை  உடல்நலக்குறைவு  ஏற்பட்டது. இதையடுத்து, விஎஸ்பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மூச்சுதிணறல் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் வி.எஸ். பாபு அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>அமைந்தகரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஎஸ் பாபு உடல் நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். விஎஸ் பாபு விரைவில் உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று அவரது ஆதரவாளர்களும் தவெகவினரும் விருப்பம் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் மீண்டும் ஒரு கொடூர கொலை அரங்கேறி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது - உதயநிதி ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-shocking-that-yet-another-brutal-murder-has-taken-place-in-chennai-udhayanidhi-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-shocking-that-yet-another-brutal-murder-has-taken-place-in-chennai-udhayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">12b0c019-8704-4296-a9e8-804642b80433</guid><pubDate>Thu, 10 Sep 2026 04:31:29 +0000</pubDate><atom:updated>2026-09-10T04:31:29.345Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,திமுக,DMK,Chennai,சென்னை,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/41rfvx2k/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/41rfvx2k/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொடூர கொலை அரங்கேறி இருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>காவல் ஆய்வாளர் மிரட்டல்</h2><p>‘கடன் தொல்லை கொடுக்கிறார்கள்’ என பாதுகாப்பு கேட்ட பிரதீப்ராஜ் எனும் இளைஞரை, ‘உயிரோடு இருக்க மாட்ட.. பொய் Case போட்டு உள்ள தள்ளுவேன்’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மிரட்டியதாக சம்பந்தப்பட்ட இளைஞரே நேற்று முன் தினம் வீடியோ வெளியிட்ட நிலையில், நேற்று அவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.</p><p>‘சி.எம்.-ட்ட வேணும்னா போய் சொல்லு. என்னைய ஒன்னும் பண்ண முடியாது’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் சொன்னதாகவும் கொலையாவதற்கு ஒரு நாள் முன்பு பிரதீப்ராஜ் கூறியுள்ளார்.</p><p>காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சரை காவல்துறையினரே டம்மி சி.எம். ஆக நினைக்கிறார்களா?</p><p>காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டால் கொலை செய்யப்படுவார்கள் என்ற புதிய வரலாற்றை இந்த சர்கஸ் ஆட்சியாளர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.</p><h2>டைவர்ட் செய்யும் முதல்-அமைச்சர்</h2><p>சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி கேட்டால், ‘1974-இல் என்ன நடந்து தெரியுமா,, இ.டி. என்ன பண்ணுச்சு தெரியுமா’ என்று டைவர்ட் செய்யும் முதல்-அமைச்சர், இந்த கொலைக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்.</p><p>இந்த வழக்கில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">திருவொற்றியூர் </a>காவல் ஆய்வாளர் உட்பட சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்வதோடு, சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்.</p><p>தலைநகரில் மீண்டும் ஒரு கொலை நடக்காமல் இருப்பதற்கு தேவையான கடுமையான நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அரசு கார்கள் வேண்டாம்: சட்டசபை செயலகத்திற்கு திமுக கடிதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-government-cars-dmk-writes-to-assembly-secretariat</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-government-cars-dmk-writes-to-assembly-secretariat#comments</comments><guid isPermaLink="false">6bd3679c-079a-43fc-8dfd-b0ccd9404a15</guid><pubDate>Thu, 10 Sep 2026 04:26:48 +0000</pubDate><atom:updated>2026-09-10T04:26:48.728Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,சட்டசபை,TN Assembly,cars,கார்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/n7fgll3x/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/n7fgll3x/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் பல எம்.எல்.ஏ.க்களுக்கு கார், உதவியாளர் உள்ளிட்ட வசதிகள் இல்லை என்று சட்டசபையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. ஜோதிமணி பேசினார். அதைத்தொடர்ந்து, அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு சார்பில் கார்கள் வழங்கப்படும் என்று அவையில் முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தார்.</p><p>ஆனால் அரசு ஏற்கனவே நிதிநிலை நெருக்கடியில் இருப்பதாக முதல்-அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 59 பேருக்கும் அரசு கார் தேவையில்லை என்று அவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறி னார். அதைத்தொடர்ந்து அதற்கான கடிதத்தை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் தி.மு.க. எம்.எல்.ஏ. கோவி செழியன் வழங் கியுள்ளார்.</p><p>அரசு கார்கள் வேண்டாம் என்ற அந்தக் கடிதத்தில் தி.மு.க. கூட்டணியில் இருந்து அந்த கட்சி சின்னத்தில் வெற்றி பெற்ற மற்ற கட்சி எம்.எல்.ஏ.க்களான ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி, நித்தியானந்தன் ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.77 லட்சம், 1.31 கிலோ தங்கம் காணிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/offerings-collected-via-the-temple-hundi-offering-box-at-the-samayapuram-mariamman-temple-amounted-to-77-lakh-in-cash-and-131-kg-of-gold</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/offerings-collected-via-the-temple-hundi-offering-box-at-the-samayapuram-mariamman-temple-amounted-to-77-lakh-in-cash-and-131-kg-of-gold#comments</comments><guid isPermaLink="false">af28958c-01f1-4018-9a96-434ce39787c5</guid><pubDate>Thu, 10 Sep 2026 04:14:46 +0000</pubDate><atom:updated>2026-09-10T04:14:46.008Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Samayapuram Mariamman Temple,சமயபுரம் மாரியம்மன் கோவில்,உண்டியல் காணிக்கை</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/3rvq9zdv/7.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/3rvq9zdv/7.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>திருச்சி,</p><p>திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் கோவில் நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு மாதமும் 2 முறை எண்ணப்படும். அதன்படி, இந்த மாதம் முதல் முறையாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரும். கோவில் தக்காருமான ஞானசேகரன், சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் சூரியநாராயணன், மண்ணச்சநல்லூர் சரக அறநிலையத்துறை ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நேற்று உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.  </p><p>இதில், சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல்களில் ரூ. 77 லட்சத்து 16 ஆயிரத்து 600-ம், 1 கிலோ 315 கிராம் தங்கமும், 1 கிலோ 540 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு நோட்டுகள் 172-ம், வெளிநாட்டு நாணயங்கள் 1081-ம் கிடைத்தது. மேலும் பித்தளை பொருட்கள், பட்டுப் புடவைகள் உள்ளிட்டவைகளும் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பணிகளுக்கும் விரைவில் டி.என்.பி.எஸ்.சி. மூலம் ஆட்கள் தேர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/recruitment-for-urban-local-body-jobs-will-also-be-done-soon-through-tnpsc</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/recruitment-for-urban-local-body-jobs-will-also-be-done-soon-through-tnpsc#comments</comments><guid isPermaLink="false">843a177a-3029-4f50-8572-9fff37beea28</guid><pubDate>Thu, 10 Sep 2026 04:00:41 +0000</pubDate><atom:updated>2026-09-10T04:00:41.634Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TNPSC,ஆட்கள் தேர்வு,டி.என்.பி.எஸ்.சி.,நகர்ப்புற உள்ளாட்சி,Urban Local Body Elections,நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/mwg5mhtx/5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/mwg5mhtx/5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையில் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் சரத்குமார், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (கூடுதல் செயல்பணிகள்) சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-மிகவும் திறமையான தொழில்முறை சார்ந்த மற்றும் வெளிப்படையான ஆட்சேர்ப்பு செயல்முறையை உறுதி செய்வதற்காக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் உள்ள பதவிகளுக்கு தகுதியானவர்களை நியமிப்பதற்கான ஆள்சேர்ப்பு முறையை சீராக அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. </p> <p>இதன் மூலம் மாநிலத்தின் தொலைதூரப் பகுதியில் உள்ள இளைஞர்களும் இதுபோன்ற பணியிடங்களில் வேலைவாய்ப்பை பெற வாய்ப்பு ஏற்படும். எனவே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (கூடுதல் செயல்பணிகள்) சட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்தும் வகையில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் உள்ள பதவிகளுக்கு தகுதியான ஆட்களை தேர்வு செய்யும் பணியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திடம் (டி.என்.பி.எஸ்.சி.) கூடுதல் பணியாக ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக இந்த சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி சாகுபடி 3.12 லட்சம் ஏக்கர் இலக்கை எட்டுமா? - விவசாயிகள் தீவிரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-samba-and-thaladi-cultivation-in-thanjavur-district-reach-the-312-lakh-acre-target</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-samba-and-thaladi-cultivation-in-thanjavur-district-reach-the-312-lakh-acre-target#comments</comments><guid isPermaLink="false">4cf52c60-6baf-4d55-a5e2-a9fe228154c7</guid><pubDate>Thu, 10 Sep 2026 03:58:07 +0000</pubDate><atom:updated>2026-09-10T03:58:07.068Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Farmers,தஞ்சாவூர்,விவசாயிகள்,Tanjore,சம்பா சாகுபடி,Thaladi,தாளடி,Samba Crops</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/3zb0d2tb/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/3zb0d2tb/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர்,</p><h2>நெற்களஞ்சியம்</h2><p>தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி எதிர்பார்த்த அளவு நடைபெறவில்லை. காரணம் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந்தேதி திறக்கப்படும் தண்ணீர் இந்த ஆண்டு திறக்கப்பட வில்லை. இதனால் ஆழ்துளை கிணறு மூலம் பாசனம் நடை பெறும் இடங்களில் மட்டும் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது குறுவை சாகுபடி செய்த வயல்களில் அறுவடை பணிகள் இறுதிக்கட்டதை எட்டி உள்ளது.</p><p>இதற்கிடையே சம்பா மற்றும் தாளடி சாகுபடிக்கு தண்ணீர் வழங்கும் வகையில் கடந்த 1-ந் தேதி மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் கடந்த 5-ந் தேதி கல்லணையை வந்தடைந்தது. இதையடுத்து மறுநாள் 6-ந் தேதி கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.</p><h2>வயலை பண்படுத்தும் பணி</h2><p>கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், சம்பா சாகுபடியை தொடங்குவதற்கான நம்பிக்கை விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு சம்பா, தாளடி சாகுபடி 3.12 லட்சம் ஏக்கரில் நடைபெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p>சூரக்கோட்டை, மடிகை, துறையூர், வாளமரக்கோட்டை, வரவுக்கோட்டை, காட்டூர், கல்விராயன்பேட்டை, ஆலக்குடி, சித்திரக்குடி, டவுன்கரம்பை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் வயல்களை உழுது நிலத்தை சாகுபடிக்கு ஏற்ற வகையில் தயார்படுத்தி வருகின்றனர். சில விவசாயிகள் நேரடி நெல் விதைப்புக்காகவும் நிலத்தை தயார் செய்து வருகிறார்கள்.</p><p>ஒரு சில விவசாயிகள், ஆற்றில் இருந்து வாய்க்கால்களுக்கு போதிய அளவு தண்ணீர் வருவதை எதிர்பார்த்து, வயல்களில் இயற்கை எருவை குவித்து வைத்துள்ளனர். வயலுக்கு தண்ணீர் கிடைத்தவுடன் எருவை பரப்பி உழவு பணிகளை மேற் கொள்ள திட்டமிட்டுள்ளனர். சில விவசாயிகள் விலைக்கு இயற்கை உரமான எருவை வாங்கி நிலத்தில் குவித்து வைத்துள்ளனர்.</p><h2>சம்பா சாகுபடி</h2><p>இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சமீப நாட்களில் ஓரளவு மழை பெய்திருப்பதால் வயல்களில் ஈரப்பதம் ஏற்பட்டுள்ளது. தற்போது கல்லணையில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் வாய்க்கால்கள் வழியாக வயல்களுக்கு வந்து சேரும் பட்சத்தில் சம்பா சாகுபடி பணிகளை வேகப்படுத்துவோம்.</p><p>இருப்பினும் சம்பா சாகுபடிக்கு தொடர்ந்து தண்ணீர் கிடைக்க வேண்டுமென்றால் மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிக்க வேண்டும். பருவமழையும் கைகொடுக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்தி வயலை தயார்படுத்தும் பணி களை மட்டும் மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>வடகிழக்குப் பருவமழை: மாநகராட்சி உடன் இணைந்து பணியாற்ற தன்னார்வலர்கள் பதிவு தொடக்கம்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-registration-begins-for-volunteers-to-work-alongside-the-corporation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-registration-begins-for-volunteers-to-work-alongside-the-corporation#comments</comments><guid isPermaLink="false">10a97393-4776-4659-979d-75215e9389c6</guid><pubDate>Thu, 10 Sep 2026 03:44:19 +0000</pubDate><atom:updated>2026-09-10T03:44:19.640Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,Northeast Monsoon,வடகிழக்குப் பருவமழை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/4d4wycdn/chennai-corporation.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை மாநகராட்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/4d4wycdn/chennai-corporation.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியில் மேம்படுத்தப்பட்ட'நம்ம சென்னை' செயலியில் தன்னார்வலர்கள் பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>நம்ம சென்னை</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் 08.09.2026 அன்று தலைமைச் செயலகத்தில், நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கைப் பணிகள் குறித்து பல்வேறு அறிவுரைகள் வழங்கினார்கள். வடகிழக்குப் பருவமழை உள்ளிட்ட அவசர காலங்கள் மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகளில் பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள் (NGOs), சங்கங்கள், பிற அமைப்புகள் தன்னார்வலர்களாக அரசு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து தங்களது பங்களிப்பினை வழங்கிடும் வகையில் செயலியில் பதிவு செய்திடும் நடவடிக்கைகளை தொடங்கிட உத்தரவிட்டார்கள்.</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, மேம்படுத்தப்பட்ட 'நம்ம சென்னை' கைபேசி செயலி (Namma Chennai Mobile App - https://play.google.com/store/apps/details?id=com.ceedeev.grivenancev2) மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளம் (https://www.chennaicorporation.gov.in/gcc/) வாயிலாக தன்னார்வலர்களாகப் பதிவு செய்திடும் நடவடிக்கை தற்போது தொடங்கப்பட்டுள்ளது.</p><p>பேரிடர் காலங்களில் தன்னார்வலர்களின் சேவையைச் சீராக ஒருங்கிணைக்கவும், அவர்களின் விருப்பத்திற்கேற்ப பங்கேற்பினைப் பயன்படுத்திக் கொள்ளவும் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.</p><h2>பதிவு செய்யும் வழிமுறைகள்:</h2><h4>1. பயனர் பதிவு (User Registration):</h4><p>· கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் (Apple App Store) மூலம் 'நம்ம சென்னை' செயலியைப் பதிவிறக்கம் செய்யவும்.</p><p>· செயலியைத் திறந்து, பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் மற்றும் ஒருமுறை கடவுச்சொல் (OTP) மூலம் உள்நுழையவும் (Login/Register).</p><p>· புதிய பயனர்கள் தங்கள் பெயர், கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, முகவரி மற்றும் அஞ்சல் குறியீட்டு எண் (Pincode) ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து கணக்கை உருவாக்க வேண்டும்.</p><h4>2. தன்னார்வலர் பதிவு படிவம் நிரப்புதல்:</h4><p>· செயலி அல்லது இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் 'Volunteer Registration' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.</p><p>· வகை தேர்வு: தனிநபர் (Individual), கார்ப்பரேட் (Corporate) அல்லது தொண்டு நிறுவனம் (NGO/Associations) ஆகிய வகைகளில் பொருத்தமானதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.</p><p>· விவரங்கள்: முந்தைய பேரிடர் அனுபவம், அடையாளச் சான்று (ID Proof) மற்றும் அவசரகால தொடர்பு விவரங்களைப் பதிவேற்ற வேண்டும்.</p><p>· திறமை மற்றும் மண்டலம் தேர்வு: தங்களின் சிறப்புத் திறமை (Area of Expertise) மற்றும் பணியாற்ற விரும்பும் பகுதி அல்லது மண்டலத்தைத் (Preferred Zone) தேர்ந்தெடுக்க வேண்டும். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட எந்தப் பகுதியிலும் பணியாற்ற விரும்பினால் 'Any Area in Chennai' என்ற விருப்பத்தையும் தேர்வு செய்யலாம்.</p><p>· அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு, OTP சரிபார்ப்பை முடித்து படிவத்தைச் சமர்ப்பிக்கலாம் (Submit).</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வடகிழக்குப் பருவமழை</a> உள்ளிட்ட அவசர காலங்கள் மற்றும் பேரிடர் காலங்களில் அரசு மற்றும் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து மக்களுக்குச் சேவை செய்ய விருப்பமுள்ள பொதுமக்கள் மற்றும் அமைப்புகள் உடனே பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><h4>செயலி பதிவிறக்கம் செய்ய:</h4><p>· Android: https://play.google.com/store/apps/details?id=com.ceedeev.grivenancev2 · iOS: https://apps.apple.com/in/app/namma-chennai/id6479407891</p><p>மேற்கண்ட தகவலை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மண்டி உரிமகாலம் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: தமிழக அரசுக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நன்றி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/extension-of-market-yard-license-period-to-5-years-federation-of-traders-associations-thanks-tamil-nadu-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/extension-of-market-yard-license-period-to-5-years-federation-of-traders-associations-thanks-tamil-nadu-government#comments</comments><guid isPermaLink="false">9b85ad13-3ecf-4df3-8cfa-de8c5a0549e2</guid><pubDate>Thu, 10 Sep 2026 03:39:17 +0000</pubDate><atom:updated>2026-09-10T03:39:17.815Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விக்கிரமராஜா,Vikramaraja</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/murund59/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/murund59/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>“தமிழக அரசு, வணிகர்களுக்கு வழங்கப்படும் மண்டி உரிம காலத்தை 5 ஆண் டுகளுக்கு நீட்டித்து மசோதா நிறைவேற்றியுள்ளதை தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரமைப்பு வரவேற்கின்றது. அதேபோல், அனைத்து தொழில், வணிக உரிமங்களும் ஒற்றைச் சாளர முறையில் வணிகர்களுக்கு அளித்து, வணிகம் செய்வதை எளிமைப்படுத்திடவும், வணிக உரிமங்களை ஆயுள் உரிமமாக மாற்றி அரசாணை வெளியிட்டு வணிகர்கள் எளிமையான முறையில் சிரமமின்றி வணிகம்செய்திட வழிவகை செய்ய வேண்டும்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் இன்று மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-thoothukudi-today-5</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-thoothukudi-today-5#comments</comments><guid isPermaLink="false">480efbad-b248-4e47-b65f-64d6e6f5dece</guid><pubDate>Thu, 10 Sep 2026 03:29:53 +0000</pubDate><atom:updated>2026-09-10T03:29:53.087Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,monthly maintenance work,power outage,மாதாந்திர பராமரிப்பு பணி,மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/cot3wvx9/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/cot3wvx9/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> துணைமின் நிலையத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் காரணமாக இன்று  மாநகர் பகுதிகளில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> செய்யப்படும் என தூத்துக்குடி நகர்ப்புற செயற்பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:  </p><p>தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், தூத்துக்குடி நகர்ப்புற துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று (10.9.2026, வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.</p><h2>காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை</h2><p>இதன் காரணமாக போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1-ம் கேட், 2-ம் கேட், மட்டக்கடை, எட்டயாபுரம் ரோடு, தெப்பக்குளம் தெரு, முனியசாமிபுரம், ரத்தினாபுரம், சத்திரம் தெரு, சிவன்கோவில் தெரு, வ.உ.சி. ரோடு, மீனாட்சிபுரம், வி.இ.ரோடு, பங்களா தெரு, பால விநாயகர் கோவில் தெரு, டூவிபுரம்,ஜெயராஜ் ரோடு, தாமோதர நகர்,</p><p>ஸ்டேட் பேங்க் காலனி, கந்தசாமிபுரம் இன்னாசியார்புரம், எழில் நகர், அழகேசபுரம், திரவியபுரம் முத்துகிருஷ்ணாபுரம், சுந்தரவேல்புரம் அம்பேத்கார் நகர் குறிஞ்சிநகர், அண்ணாநகர், வி.வி.டி. மெயின் ரோடு, போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை ரோடு, சிதம்பரநகர், பிரையண்ட்நகர் முத்தம்மாள் காலனி, கே.டி.சி.நகர், ஹவுசிங் போர்டு காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>காயத்துடன் சுற்றித்திரியும் பாகுபலி யானை: சிகிச்சை அளிக்க வனத்துறையினர் நடவடிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/baahubali-the-elephant-is-roaming-with-an-injury-forest-department-officials-are-taking-steps-to-provide-treatment</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/baahubali-the-elephant-is-roaming-with-an-injury-forest-department-officials-are-taking-steps-to-provide-treatment#comments</comments><guid isPermaLink="false">702405fe-82dc-4373-b0b7-e1867ea3f047</guid><pubDate>Thu, 10 Sep 2026 03:29:49 +0000</pubDate><atom:updated>2026-09-10T03:29:49.136Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>elephant,காயம்,பாகுபலி யானை</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/siqa6kyw/56.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/siqa6kyw/56.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>மேட்டுப்பாளையம்,</p><p>மேட்டுப்பாளையத்தில் காயத்துடன் சுற்றித்திரி யும் பாகுபலி யானைக்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின் றனர்.</p><h2>பாகுபலி யானை</h2><p>மேட்டுப்பாளையம், சிறுமுகை மற்றும் அதனை சுற்றி உள்ள வனப்பகுதிகளில் கம்பீர தோற்றம் கொண்ட பாகுபலி என்று அழைக்கப்படும் காட்டுயானை சுற்றித்திரிந்து வருகிறது. இரவு நேரத் கோத்தகிரி சாலையில் உலா தில் உணவு மற்றும் நீர்நிலைகளை தேடி நெல் வந்த பாகுபலி யானை, சமயபுரம் சாலையை கடந்து குடியிருப்புகள் வழியாக கல்லார் வனப்பகுதி அருகே உள்ள தோட்டங்களில் புகுந்து மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலை மற்றும் கோத்தகிரி சாலை ஆகிய சாலைகளை கடந்து சிறுமுகை வனப்பகுதிக்குள் இடம்பெயர்ந்து செல்வதை வழக்க மாக கொண்டுள்ளது.</p><h2>வால் பகுதியில் காயம்</h2><p>இதுவரை அந்த யானை யாரையும் விரட்டியதோ, தாக்கியதோ, பொதுமக்களின் உடைமைகளை சேதப்படுத்தியதோ இல்லை. காட்டுயானைகளின் இயற்கையான குணத்தை விட மிகவும் அமைதியான குணத்தை கொண்டது. கடந்த சில நாட்களாக மேட்டுப்பாளையம் சமயபுரம் சாலை, ஊட்டி சாலை, கோத்தகிரி சாலை ஆகிய சாலைகளில் பாகுபலி யானையின் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.</p><p>இந்த நிலையில் வனப்பகுதியில் சில நாட்களுக்கு முன்பு பிற யானைகளுடன் ஏற்பட்ட மோதலில் பாகுபலி யானையின் வால் பகுதியில் காயம் ஏற்பட்டு உள்ளது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக அவதிப்பட்டு வரும் அந்த யானை நேற்று காலை கோத்தகிரி சாலையில் உலா வந்தது. ஆனால் வேகமாக நடக்க முடியாமல் மெல்ல, மெல்ல நடந்ததை காண முடிந்தது. அந்த யானயை வனத்துறையினர் தீவிரமாக கண்கா ணித்து வருகின்றனர். மேலும் காயத்துக்கு சிகிச்சை அளிக்க வனத்துறை யினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>விரும்பியது நடக்கும் என கூறி மந்திரித்த வாழைப்பழம் ரூ.2,500-க்கு ஏலம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-banana-blessed-with-the-promise-that-ones-wishes-would-come-true-was-auctioned-for-2500</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-banana-blessed-with-the-promise-that-ones-wishes-would-come-true-was-auctioned-for-2500#comments</comments><guid isPermaLink="false">23256ca1-2701-4970-91cf-4217f58cbe86</guid><pubDate>Thu, 10 Sep 2026 03:20:28 +0000</pubDate><atom:updated>2026-09-10T03:20:28.691Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Banana,வாழைப்பழம்,கேரளம்,keralam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/z65o24fh/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/z65o24fh/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>மலப்புரம்,</p><p>கேரளம் மாநிலம் மலப்புரம் மாவட்டம் கொடைக்கல் பகுதியில் ஒருவர் தன்னை அபு அலவி மஜ்லி சில் என அறிமுகப்படுத்தி கொண்டு, மந்திரித்த வாழைப்பழத்தை ஏலம் விடுவதாக தெரிவித்தார். இந்த வாழைப்பழத்தை வாங்கி சாப்பிட்டால், விரும்பியது நடக்கும் என்று கூறியுள்ளார். இதையடுத்து வாழைப் பழம் ஏலம் விடப்பட்டது. ரூ.1,000-த்தில் தொடங்கிய ஏலம், முடிவில் ரூ.2,500-க்கு விலை போனது. ஏலம் எடுத்த வாலிபருக்கு வாழைப்பழம் வழங்கப்பட்டது. </p><p>அப்போது மேடையில் போர்வை போர்த்திக்கொண்டு இருந்த அபு அலவி மஜ்லி சில், வாழைப்பழத்தின் தோலை மெதுவாக உரிக்குமாறு கூறினார். அதன்படி, வாலிபர் தோலை உரித்தபோது உள்ளே வாழைப்பழம் ஏற்கனவே துண்டுகளாக வெட்டப்பட்டு இருந்தது. அவர் கூறியதை நம்பி, வாலிபரும் வாழைப்பழத்தை சாப்பிட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.</p><p>தற்போது ஒரு கிலோ நேந்திரன் வாழைப்பழம் ரூ.100-க்கு விற்கும் நிலையில், மந்திரித்த ஒரு வாழைப்பழத்தை ரூ.2,500-க்கு ஏலம் விடப்பட்ட சம்பவம் பேசுபொருளானது. இதையடுத்து அபு அலவி மஜ்லிசில் ஏமாற்றும் செயலில் ஈடுபடுவதாக கூறி, அவர் தங்கியிருந்த வீட்டிற்குள் இளைஞர்கள் புகுந்து பொருட்களை தாக்கினர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - உதவி கலெக்டர் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/public-awareness-regarding-fortified-rice-needs-to-be-created-assistant-collector</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/public-awareness-regarding-fortified-rice-needs-to-be-created-assistant-collector#comments</comments><guid isPermaLink="false">49b35ab6-52b9-4eee-96d8-c9e414b02c14</guid><pubDate>Thu, 10 Sep 2026 03:00:26 +0000</pubDate><atom:updated>2026-09-10T03:00:26.935Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tanjore,தஞ்சை,உதவி கலெக்டர்,rice,செறிவூட்டப்பட்ட அரிசி,Assistant Collector</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/85gwwod2/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/85gwwod2/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர், </p><p>செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என உதவி கலெக்டர் சுபாஷ் கார்த்திக் பேசினார்.</p><h2>கண்காட்சி</h2><p>தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் மத்திய அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நேற்று தொடங்கியது. இதை உதவி கலெக்டர் சுபாஷ் கார்த்திக் தொடங்கி வைத்தார். கண்காட்சியில் மத்திய அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்கள் தொடர்பான புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.</p><p>மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில், பொதுமக்கள் மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து அறிந்து பயன்பெறும் வகையில், இந்தக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் 3 நாட்கள் நடக்கின்றன.</p><h2>அறிவியல் ஆய்வுகள்</h2><p>இதில் தஞ்சை முதுநிலை தபால் கண்காணிப்பாளர் தங்கமணி, அஞ்சலகங்கள் மூலம் மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தார். இதேபோல், முத்ரா கடன் உள்பட பல்வேறு வங்கிச் சேவைகள் மற்றும் மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பிரதீப் கண்ணன் எடுத்து கூறினார். சென்னை மண்டல கள விளம்பர அலுவலர் சக்திவேல், மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்கள் முழுமையாகத் தெரிந்து கொண்டு பயன் அடைய வேண்டும் என்றார்.</p><p>உதவி கலெக்டர் சுபாஷ் கார்த்திக் பேசும்போது, அரசு ஒரு திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பாக அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு திட்டங்கள் குறித்த முழுமையான விழிப்புணர்வை பொதுமக்கள் பெற்றுக்கொண்டு, அதன் பயன்களைப் பெற வேண்டும். <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">இணையதளத்தில் </a>கிடைக்கும் தகவல்களில் உண்மையான தகவல்களை சரிபார்த்து பயன்படுத்த வேண்டும். செறிவூட்டப்பட்ட அரிசி திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்றார். கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டு, மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து அறிந்து பயன் அடைந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>நீங்கள் கை வைத்து தாடையை காண்பித்தது சரிதான்: விஜய்க்கு மு.க.ஸ்டாலின் பதிலடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/you-were-right-to-point-to-your-chin-mk-stalins-retort-to-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/you-were-right-to-point-to-your-chin-mk-stalins-retort-to-vijay#comments</comments><guid isPermaLink="false">ed40409e-7375-44f3-8d15-94337a2bc200</guid><pubDate>Thu, 10 Sep 2026 02:48:36 +0000</pubDate><atom:updated>2026-09-10T02:48:36.377Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,மு.க.ஸ்டாலின்,M.K.Stalin,CM Vijay</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/ymfh4dgy/vijay-CM.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/ymfh4dgy/vijay-CM.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <h2>சட்டசபையில் சைகை</h2><p>தமிழக சட்டசபையில் போலீஸ், தீயணைப்புத்துறைகள் மீதான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு முதல்-அமைச்சர் விஜய் பதிலளித்து பேசினார். அப்போது அவர் ஆவேசமாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக உரையாற்றினார். அவர் பேசுகையில், 'எது பேசினாலும் நாங்கள் (தி.மு.க.) 'மிசா'வை பார்த்தவர்கள் என்று சொல்கிறார்கள். எல்லோருக்கும் 'மிசா' வரலாறு நன்றாக தெரியும்' என்று செய்கை ஒன்றை காண்பித்தார்.</p><p>அவருடைய இந்த செய்கை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டா லினை கேலி செய்வது போன்று அமைந்ததால் தி.மு.க.வின் முன்னணி நிர்வாகிகள் சமூக வலைத்தளங்களின் கண்டன பதிவு வெளியிட்டனர். மு.க.ஸ்டாலினின் 'மிசா' தியாகத்தை முதல்-அமைச்சர் விஜய் தனது செய்கை மற்றும் உடல் மொழி மூலம் கொச்சைப்படுத்திவிட்டார் என்று ஆவேசமாக கூறினர்.</p><h2>விஜய் விளக்கம்</h2><p>இதற்கு முதல்-அமைச்சர் விஜய் விளக்கம் அளித்தார். சட்டமன்றத்தில் கடந்த 7-ந்தேதி அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எந்த வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்ப தைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.</p><h2>மு.க.ஸ்டாலின் பதிலடி</h2><p><strong>இந்த நிலையில், மிசா காலத்தில் நடந்ததை குறிப்பிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-</strong></p><p>என் அன்பான தமிழ் மக்களுக்கு வணக்கம்.. அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் நடந்த சில சர்ச்சைகள், தமிழ் மக்களுக்கும் நம் உடன்பிறந்தவர்களுக்கும் கோபத்தையும் அதிருப்தியையும் உண்டாக்கியிருப்பதை நான் உணர்கிறேன். அதுவும் இந்த சர்ச்சையில் என்னுடைய சிறை வரலாறும் இருக்கிறதால், அதை பற்றி கொஞ்சம் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.</p><p>தம்பி விஜய் நீங்க சொல்றது உண்மை தான். பொய் எல்லாம் அல்ல.. எமெர்ஜென்சில் காலத்தில் அதை எதிர்த்து கலைஞர் மெரினா கடற்கரையில் மிகப்பெரிய கூட்டத்தை கூட்டி மிசா சட்டத்தை கடுமையாக விமர்சித்ததை தொடர்ந்து அப்போது இருந்த ஒன்றிய அரசு 30.01.1976 ஆம் ஆண்டு திமுக ஆட்சியை கலைத்தார்கள். ஆட்சியை கலைத்த அடுத்த நொடி மிசா சட்டத்தில் என்னை கைது செய்வதற்காக கோபாலபுரம் வீட்டிற்கு போலீசார் வந்தார்கள்.</p><p>அன்னைக்கு நான் வீட்டில் இல்லை. பையன் பிரசாரத்திற்கு போய் இருக்கான். நாளை வந்துவிடுவான். வந்ததும் நானே போன் பண்ட்ரேன்.. வந்து அரெஸ்ட் பண்ணிக்கோங்க என சொன்னார். அடுத்த நாள் போலீசிடம் என்ன கைது செய்ய சொல்லிட்டார். சிறையில் எனக்கு பல கொடுமைகள் நடந்துச்சு.. என்னை கொண்டு போய் அடைத்ததே தொழு நோயாளிகள் இருக்கும் இடத்தில் தான். 10 பேரை ஒரு சின்ன அறைக்குள் அடைத்து வைத்தார். அந்த அறைக்குள் ஒரு பானை தான் இருக்கும். அதில் தான் அனைவரும் சிறுநீர் கழிக்க வேண்டும்.</p><p>ரொம்ப துர்நாற்றமாக இருக்கும். இந்த அறையில் தான் நாங்கள் தூங்க வேண்டும். நைட்டில் தூங்க விடாமல் போலீஸ் லத்தியால் அடிப்பாங்க.. பூட்ஸ் காலால் மிதிப்பாங்க.. இன்னொரு பக்கம் ஆயுள் தண்டனை கைதியை வைத்து கொடூரமாக அடிப்பாங்க. அவங்க அடித்ததில் என் அண்ணன் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்டி பாபு ஜெயிலிலேயே இறந்து போனார். அவங்க அடிச்சதில் என்னுடைய தாடை எலும்பு உடைந்தது. நீங்க கூட இப்படி கை வைத்து தாடையை காண்பீத்தீர்கள் அல்லவா? அது சரிதான். நான் அடி வாங்கிய தழும்புகள் இன்றைக்கும் எனக்கு இருக்கிறது. நான் இல்லை என்று சொல்லவில்லை.</p><p>யார் என்னை கொச்சைப்படுத்தினாலும், வரலாற்றை மாற்ற முடியாது; அது காலத்துக்கும் அப்படியேதான் இருக்கும். பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு, முக்கியமாக தமிழர்களுக்காக போராடும் நிறைய பேருக்கு இந்த மாதிரி அடக்குமுறை நடந்துள்ளது. போராளிகள் எல்லாம் இதை தாண்டிதான் வந்துள்ளோம்.</p><h2>மறந்துட்டீங்களா தம்பி விஜய்?</h2><p>என்னை வீட்டில் வந்து சந்தித்தபோது சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்?... தேர்தல் பரப்புரையில் உங்களை மிகவும் விமர்சித்து பேசிட்டேன்; அதற்கு I am sorry சார்ன்னு சொன்னீங்க.. அதை நான் மனதில் வைக்கவில்லை; யாரை பற்றி பேசும்போதும் கண்ணியத்துடன் பேசுங்கள் எனக் கூறினேன்.. அதை மறந்துவிட்டீர்கள்போல: முதல்-அமைச்சருக்கான கண்ணியத்துடன் உங்கள் வார்த்தை. உடல்மொழி இருக்க வேண்டும். நாம்தான் மக்களுக்கு முன்னுதாரணம்: அதை மறந்து விடாதீர்கள்: பொறுப்பை உணர்ந்து செயல்படுங்கள். உண்மை ஊரை தாண்டுவதற்குள் பொய் உலகையே சுற்றிவிடும் என்ற பழமொழிதான் நடக்கிறது.</p><p>அரசியலுக்காக கலைஞர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் கூறிய பொய் குற்றச்சாட்டையும் தம்பி விஜய்யும் கூறியுள்ளார். முதல்-அமைச்சருக்கு சந்தேகம் இருந்தால் சட்டமன்றத்தில் உள்ள நூலகத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம். அமலாக்கத்துறை எழுதிய கடிதத்தை எடுத்துக்கொண்டு எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு இருப்பதாக சொல்கிறீர்கள். அமலாக்கத்துறை குற்றம்சாட்டிய 95% வழக்குகளில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமல் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.</p><p>பெரும்பாலும் அரசியல் பழிவாங்கலுக்காக அமலாக்கத்துறை பயன்படுத்தப்படுவது இங்கிருக்கும் எல்லோருக்கும் தெரியும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால். உங்கள் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மீதுகூட அமலாக்கத்துறை பல வழக்குகளை போட்டிருக்கிறது. இதெல்லாம் ஒன்றிய அரசை கொள்கை எதிரியாக சித்தரிக்கும் உங்களுக்கு எப்படி தெரியாமல் போச்சு?.</p><p>தவெக ஆட்சியில் கொலை, பாலியல் குற்றங்கள் என சட்டம் ஒழுங்கு படுகுழியில் உள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு என்று ஒரு மாண்பு உள்ளது. சட்டப்பேரவையை ரீல்ஸ் மன்றமாக மாற்றிவிட்டார் முதல்-அமைச்சர் விஜய். தமிழ்நாட்டை முன்னேற்ற விவாதம் செய்யுங்கள் விஜய். சட்டமன்றத்தில் தேவையற்ற சர்ச்சைகளை பேச வேண்டாம் என்பதே என் கோரிக்கை.</p><p>பரந்தூர் திட்டம் ரத்தால் தமிழக வளர்ச்சியை 15 ஆண்டு பின்னோக்கி கொண்டு போய்விட்டார் விஜய். மாற்றம் வேண்டும் என வாக்களித்தவர்கள் இது சரியான மாற்றமா என சிந்தியுங்கள். விவசாயிகளுக்கு பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை. ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர் என்று வாக்குறுதி அளித்திருந்தார். தற்போது தகுதி உள்ளவர்களுக்கு 3 சிலிண்டர் என அந்தர்பல்டி அடித்துள்ளார். உரிமைத் தொகை ரூ.2,500 என்று விஜய் கூறினார், ஆனால் இன்னும் நாங்கள் கொடுத்த அதே ரூ.1000தான் தருகிறார். இன்னும் பல வாக்குறுதிகள் பற்றி விஜய் வாயையே திறக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="ta" dir="ltr">வீட்ல என்னை meet பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்? <a href="https://t.co/kzpwXi14L8">pic.twitter.com/kzpwXi14L8</a></p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2097857590516445226?ref_src=twsrc%5Etfw">September 10, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/teacher-commits-suicide-by-hanging-after-losing-money-in-online-game</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/teacher-commits-suicide-by-hanging-after-losing-money-in-online-game#comments</comments><guid isPermaLink="false">fd100afd-03f8-4881-93c4-6e80b767d9fe</guid><pubDate>Thu, 10 Sep 2026 02:32:21 +0000</pubDate><atom:updated>2026-09-10T02:32:21.824Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chhattisgarh,Suicide by hanging,தூக்குப்போட்டு தற்கொலை,money,Nilgiris,நீலகிரி,Loss,பணம் இழப்பு,ஆன்லைன் விளையாட்டு,Online game,சத்தீஸ்கர்,school teacher,பள்ளி ஆசிரியர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/tv2dorfx/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/tv2dorfx/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF">நீலகிரி</a> மாவட்டம், ஊட்டியில் வேலை பார்த்த சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D">பள்ளி ஆசிரியர் </a>ஒருவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">ஆன்லைன் விளையாட்டில்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">பணத்தை இழந்ததால்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">தூக்குப்போட்டு தற்கொலை</a> செய்து கொண்டார். </p><h2>பள்ளி ஆசிரியர்</h2><p>சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் தீபக்குமார் போர்டே (வயது 30). இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. அவர், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். </p><h2>தூக்குப்போட்டு தற்கொலை</h2><p>இதற்கிடையே தீபக்குமார் போர்டே, கடன் பிரச்சினையை தீர்க்க ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டார். ஆன்லைன் விளையாட்டில் எதிர்பார்த்ததை விட பணம் அதிகமாக இழப்பு ஏற்பட்டு, அவருக்கு லட்சக் கணக்கில் கடன் ஆகிவிட்டது. இதனால் விரக்தி அடைந்த தீபக்குமார் போர்டே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். </p>]]></content:encoded></item><item><title>திருப்பூர்: சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruppur-woman-sexually-harassed-while-walking-on-the-road</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruppur-woman-sexually-harassed-while-walking-on-the-road#comments</comments><guid isPermaLink="false">94b0a529-314c-4b3f-a8fa-3e51bce689c5</guid><pubDate>Thu, 10 Sep 2026 02:09:23 +0000</pubDate><atom:updated>2026-09-10T02:09:23.450Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்,வடமாநில தொழிலாளி</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/icg83j4h/4.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/icg83j4h/4.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><p>திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள ஓலப்பாளையம் பகுதியை சேர்ந்த 33 வயதான பெண், காங்கயம் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்ததும் ஓலப்பாளையம் பஸ்சில் வந்தார். பின்னர் பஸ்சில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அந்த பெண்ணை வழிமறித்தார். தொடர்ந்து அவரிடம் அத்துமீறியதோடு அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். </p><p>இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்தனர். மேலும் இதுகுறித்து அறிந்ததும், வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் குமார் மற் றும் போலீசார் அங்கு சென்று, வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பீகார் மாநிலம், மலாய் மாவட்டம், மத்தி பாய் பகுதியைச் சேர்ந்த ஜிதேஷ் குமார் என்பதும், பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>வேலூரில் போலீஸ் சூப்பிரண்டு, மாநகராட்சி கமிஷனராக ஐ.பி.எஸ்.-ஐ.ஏ.எஸ். தம்பதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ips-ias-couple-serve-as-superintendent-of-police-and-corporation-commissioner-in-vellore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ips-ias-couple-serve-as-superintendent-of-police-and-corporation-commissioner-in-vellore#comments</comments><guid isPermaLink="false">69554368-7569-4820-be90-473d8cf87fd2</guid><pubDate>Thu, 10 Sep 2026 01:55:32 +0000</pubDate><atom:updated>2026-09-10T01:55:32.390Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vellore,வேலூர்,Superintendent of Police,IPS Officer,IAS,போலீஸ் சூப்பிரண்டு,Corporation Commissioner,ஐ.பி.எஸ்.,ஐ.ஏ.எஸ்.,மாநகராட்சி கமிஷனர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/c77pn6n7/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/c77pn6n7/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>வேலூர்,</p><p>வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக சிவராமன் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி கேத்ரின் சரண்யா. ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் சிப்காட் நிறுவன செயல் இயக்குனராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சாய்குமார் உத்தரவிட்டார். </p><p>அதன்படி வேலூர் மாநகராட்சி கமிஷனராக இருந்த சுல்தானா இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் கேத்ரின் சரண்யா வேலூர் மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் உயர்ந்த பதவிகளான போலீஸ் சூப்பிரண்டாக கணவரும், மாநகராட்சி கமிஷனராக மனைவியும் இருப்பது மாவட்ட மக்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது.</p><p>வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக சிவராமன் கடந்த பிப்ரவரி மாதமும், கமிஷனர் சுல்தானா கடந்த ஜூலை மாதமும் பொறுப்பேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>சேலத்தில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவாக செப்டம்பரில் கொளுத்தும் வெயில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/salems-hottest-september-in-10-years</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/salems-hottest-september-in-10-years#comments</comments><guid isPermaLink="false">422f4609-9081-4ec5-b6d4-c3c1762ae744</guid><pubDate>Thu, 10 Sep 2026 01:52:19 +0000</pubDate><atom:updated>2026-09-10T01:52:19.350Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,சேலம்,Temperature,வெப்பநிலை</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/lb3uqt1u/3.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/lb3uqt1u/3.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>வானிலை செய்திகள் (Weather)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,  </p><p>10 ஆண்டுகளுக்கு பிறகு செப்டம்பர் மாதத்தில் 100 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.</p><h2>கொளுத்தும் வெயில்</h2><p>சேலம் மாவட்டத்தில் இந்தாண்டு பிப்ரவரி இறுதியிலேயே வெயிலின் தாக்கம் ஆரம்பித்துவிட்டது. மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் 20 நாட்களும், அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கிய மே மாதத்தில் 7 நாட்களும் வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. அதிகபட்சமாக 103 டிகிரி வரை பதிவானது.</p><p>இந்த நிலையில் கத்திரி வெயில் முடிந்து ஜூன் 1-ந் தேதி தென்மேற்கு பருவ மழை தொடங்கும். இந்த ஆண்டு பருவமழை போதிய அளவு இல்லை. பருவமழை காலம் தொடங்கிய பிறகு வெயிலின் தாக்கம் குறைய தொடங்கும். இந்த ஆண்டு முற்றிலும் அக்னி நட்சத்திர காலத் தில் இருப்பது போன்று வெயில் தற்போது வாட்டி வதைக்கிறது. 6-ந் தேதி வெயிலின் அளவு 100 டிகிரியாக பதிவாகி இருந்தது.</p><h2>10 ஆண்டுகளில்...</h2><p>சேலம் மாவட்டத்தில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந் தேதி 100 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. அதன்பிறகு தற்போது தான் இந்த மாதத்தில் (செப்டம்பர்) வெயிலின் அளவு 100 டிகிரியாக பதிவாகி உள்ளது. வெப்பத்தின் தாக்கம் குறையாமல் கடந்த 2 நாட்களாக 99 டிகிரியை தாண்டி பதிவாகி உள்ளதால் பொதுக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.</p><p>இதனால் மதிய வேளையில் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்து வருகிறது. கடும் வெப்பத்தால் வீடுகள், வணிக வளாகங்களில் குளிர்சாதனங்கள், மின் விசிறிகளின் பயன்பாடு கோடைக்காலம் போன்று அதிகரித்து வருகின்றன. வெயிலின் தாக்கம் காரணமாக இளநீர், பழ ஜூஸ் விற்பனை மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தாம்பரம்-விழுப்புரம் பயணிகள் ரெயில் பகுதி நேர ரத்து </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/partial-cancellation-of-tambaram-villupuram-passenger-train</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/partial-cancellation-of-tambaram-villupuram-passenger-train#comments</comments><guid isPermaLink="false">317f4cc3-870d-459e-b814-03655528eb82</guid><pubDate>Thu, 10 Sep 2026 01:19:09 +0000</pubDate><atom:updated>2026-09-10T01:19:09.385Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tambaram,தாம்பரம்,விழுப்புரம்,passenger train,பயணிகள் ரெயில்,Egmore,Viluppuram,Southern Railway Announcement,பகுதி நேர ரத்து,Partial cancellation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/n5a8ihv4/2a.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/n5a8ihv4/2a.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>சென்னை எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் பேரனி பணிமனையில் பராமரிப்புப் பணி மேற்கொள்ள இருப்பதால் தாம்பரத்தில் இருந்து இன்று (10-ந்தேதி) காலை 9.45 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்லும் பயணிகள் ரெயில் (வண்டி எண்.66045), திண்டிவனம்-விழுப்புரம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. </p><p>விழுப்புரத்தில் இருந்து இன்று மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் பயணிகள் ரெயில் (66046), விழுப்புரம்-திண்டிவனம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, திண்டிவனத்தில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>விசிக மாநாட்டில் நெரிசல் ஏற்பட்டது சதித்திட்டமா? - தலைமைச் செயலாளர் விசாரிக்க ஆணையம் உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/conspiracy-to-jam-at-vck-conference-chief-secretary-orders-commission-to-investigate</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/conspiracy-to-jam-at-vck-conference-chief-secretary-orders-commission-to-investigate#comments</comments><guid isPermaLink="false">93a1d67d-4f2e-491e-8f8d-aff3343f4d20</guid><pubDate>Thu, 10 Sep 2026 01:18:35 +0000</pubDate><atom:updated>2026-09-10T01:18:35.722Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமாவளவன்,Thirumavalavan,விசிக,VCK,உளுந்தூர்பேட்டை,Ulundurpet,விசிக மாநாடு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/y3wnvhhk/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/y3wnvhhk/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கடந்த மாதம் 17-ந் தேதி நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் கடும் நெரிசல் ஏற்பட்டது. அப்போது தங்கள் கட்சித் தலைவர் திருமாவளவனை கொல்ல சதி நடந்ததாக வி.சி.க. சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.</p><p>இந்தநிலையில் சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த வக்கீல்கள் ராஜேந்திரன், நெப்போலியன் ஆகியோர் உளுந்தூர்பேட்டை சம்பவத்தைச் சுட்டிக்காட்டி திருமாவளவனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு மற்றும் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கவும், உளுந்தூர்பேட்டை மாநாட்டில் பாதுகாப்புக் குறைபாடு குறித்து உரிய விசாரணை நடத்தவும் உத்தரவிட வேண்டும் என சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தனர்.</p><p>இந்த மனுவை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினர்கள் ஆனந்தராஜா, இளஞ்செழியன் ஆகியோர், இந்த புகார் தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு உரிய விசாரணை மேற்கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-village-administrative-officer-arrested-for-accepting-a-bribe-from-a-farmer</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-village-administrative-officer-arrested-for-accepting-a-bribe-from-a-farmer#comments</comments><guid isPermaLink="false">c7b0cb69-6d0a-469a-a030-98a0806281ef</guid><pubDate>Thu, 10 Sep 2026 01:18:11 +0000</pubDate><atom:updated>2026-09-10T01:18:11.875Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Thoothukudi,தூத்துக்குடி,arrest,லஞ்சம்,bribe</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/fvxmg19w/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/fvxmg19w/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>திருச்செந்தூர் அருகே உள்ள தேரிக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மதிபால் (வயது 56). விவசாயியான இவர் காயாமொழியில் உள்ள 86 செண்ட் நிலத்தில் தென்னை மற்றும் எலுமிச்சை சாகுபடி செய்து வருகிறார். இதில் அரசு மானியம் மூலம் சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கு சிறு, குறு விவசாய சான்றிதழை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெற்றார். </p><p>ஆனால் நில அடங்கல் சான்றில் கையெழுத்திட்டு வழங்குவதற்கு மதிபாலிடம், கிராம நிர்வாக அலுவலர் தனசேகர் ரூ.2,500 லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத மதிபால் இதுகுறித்து தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூ.2,500-ஐ மதிபாலிடம் வழங்கி, அதை தனசேகரிடம் கொடுக்கும்படி கூறினர். </p><p>அதன்படி நேற்று பகலில் கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்த தனசேகரிடம் பணத்தை மதிபால் கொடுத்தார். அதை அவர் வாங்கியபோது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கிராம நிர்வாக அலுவலர் தனசேகரை கையும், களவுமாக பிடித்து அதிரடியாக கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>மும்மொழி கொள்கையில் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலக்கு-சி.பி.எஸ்.இ.க்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/exemption-from-three-language-policy-for-class-6-students-supreme-court-directs-cbse</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/exemption-from-three-language-policy-for-class-6-students-supreme-court-directs-cbse#comments</comments><guid isPermaLink="false">e777bf45-99bb-499e-bfc9-61d9c2d79bd5</guid><pubDate>Thu, 10 Sep 2026 01:16:28 +0000</pubDate><atom:updated>2026-09-10T01:16:28.251Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சி.பி.எஸ்.இ,CBSE,Supreme Court,சுப்ரீம் கோர்ட்டு,மும்மொழி கொள்கை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/25fclwoy/Supreme-court.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/25fclwoy/Supreme-court.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p> 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 1-ந்தேதி முதல் 3 மொழிகள் கட்டாயம் எனவும் அதில் 2 மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் சி.பி.எஸ்.இ. அறிவித்தது. இதை எதிர்த்து பல்வேறு தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜோய் மால்யா பாக்சி, மோகனா அமர்வு விசாரித்து வருகிறது. 3 மொழி கொள்கையை அமல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இதனால் மாணவர்கள் எத்தகைய அழுத்தத்துக்கும் ஆளாகக்கூடாது என்றும் வலியுறுத்தினர். பின்னர் இந்த கொள்கை 6-ம் வகுப்பிலேயே அறிமுகப்படுத்தினால், இந்த ஆண்டு விட்டுவிட்டு அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யுமாறும் அறிவுறுத்தி இருந்தனர். </p><p>இந்த நிலையில் தலைமை நீதிபதி அமர்வில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மீண்டும் இந்த கருத்தை நீதிபதிகள் வலியுறுத்தினர். அதன்படி நீதிபதிகள் கூறுகையில், 'இந்த ஆண்டு 6-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விலக்கு அளிக்க முடியுமா?' என்று பரிசீலிக்குமாறு சி.பி.எஸ்.இ. தரப்பை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். அதற்கு சி.பி.எஸ்.இ. சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஆலோசித்து கூறுவதாக தெரிவித்தார். எனினும் இந்த விவகாரத்தில் எந்த உறுதிமொழியையும் அவர் அளிக்கவில்லை.நாங்கள் அனைவரும் அமர்ந்து ஆலோசித்து கூறுகிறோம்' என்று மட்டும் கூறினார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை வருகிற 17-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.</p><p>அதேநேரம் வழக்கு தொடர்ந்து ஒத்திவைக்கப்படுவதற்கு மனுதாரர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மாணவர்கள் தேர்வு எழுத வேண்டியிருப்பதாலும், அது அவர்களது பெற்றோரிடையே கவலையை ஏற்படுத்துவதாலும், மேலும் ஒத்திவைப்புகளால் இந்த விஷயத்தை தாமதப்படுத்தக்கூடாது என்று மனுதாரர்களின் வக்கீல் ஒருவர் கேட்டுக்கொண்டார். எனினும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டி வராததால், விசாரணையை ஒத்திவைக்க சொலிசிட்டர் ஜெனரல் கேட்டுக்கொண்டார். எனவே குறைந்த நாட்களுக்கு மட்டுமே தள்ளி வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item></channel></rss>