<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 06 Aug 2026 06:20:04 +0000</lastBuildDate><item><title>அலங்காநல்லூர் அருகே டேங்கர் லாரி வெறியாட்டம்: மதுபோதை ஓட்டுநரால் தொடர் விபத்து; ஒருவர் பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tanker-lorry-rampage-near-alanganallur-drunk-driver-causes-chain-of-accidents-one-dead</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tanker-lorry-rampage-near-alanganallur-drunk-driver-causes-chain-of-accidents-one-dead#comments</comments><guid isPermaLink="false">6bee26ba-f289-4534-935d-999aba230e1f</guid><pubDate>Thu, 06 Aug 2026 06:18:52 +0000</pubDate><atom:updated>2026-08-06T06:18:52.437Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,Madurai,மதுரை,Death,உயிரிழப்பு,லாரி,police enquiry</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/g102z9fh/82.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ லாரி ஓட்டுநரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ மதுபோதையில் டேங்கர் லாரியை இயக்கி, தொடர் விபத்துகளை ஏற்படுத்திய ஓட்டுநரை பொதுமக்கள் வீதி வீதியாக விரட்டிப் பிடித்தனர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/g102z9fh/82.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மதுரை மாவட்டம் </a>அலங்காநல்லூர் அருகே கடுமையான மதுபோதையில் டேங்கர் லாரியை இயக்கி, தொடர் விபத்துகளை ஏற்படுத்திய ஓட்டுநரை பொதுமக்கள் வீதி வீதியாக விரட்டிப் பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>மதுபோதையில் நேர்ந்த விபரீதம்</h2><p>மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஜெயப்பிரகாஷ் (வயது 29). அவர் மிகக் கடுமையான மதுபோதையில் டேங்கர் லாரி ஒன்றை ஓட்டிச் சென்றார். அப்போது, போதையின் உச்சத்தில் இருந்ததால் லாரி அவரது கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் சென்று கொண்டிருந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது அடுத்தடுத்து பயங்கரமாக மோதியது.</p><h2>உயிரிழப்பு</h2><p>இந்த கோர விபத்தில், <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">லாரி </a>மோதியதில் முத்துப்பாண்டி என்பவர் படுகாயமடைந்தார். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், விபத்துக்குள்ளான மற்ற வாகனங்களில் பயணித்த 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து தற்பொழுது ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><h2>4 கி.மீ விரட்டியடித்த பொதுமக்கள்</h2><p>விபத்தை ஏற்படுத்திய பின்னரும் ஜெயப்பிரகாஷ் லாரியை நிறுத்தாமல் தப்பியோட முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பொதுமக்கள்</a> மற்றும் வாகன ஓட்டிகள், லாரியை சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு ஓட ஓட விரட்டிச் சென்றனர். இறுதியாக லாரியை மடக்கிப் பிடித்த பொதுமக்கள், போதையில் இருந்த ஓட்டுநரை கீழே இழுத்துப்போட்டு சரமாரியாக தர்ம அடி கொடுத்தனர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அலங்காநல்லூர் போலீசார், பொதுமக்களிடம் இருந்து ஓட்டுநரை மீட்டனர். காயமடைந்த அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மேலும் விபத்து மற்றும் பொதுமக்களின் தாக்குதல் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுபோதையால் ஏற்பட்ட இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தவெக அரசின் வேளாண் பட்ஜெட்: விவசாயிகளை மகிழ்விக்குமா? உடனுக்குடன் அப்டேட்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-governments-agriculture-budget-will-it-please-farmers-immediate-update</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-governments-agriculture-budget-will-it-please-farmers-immediate-update#comments</comments><guid isPermaLink="false">d957c9d5-df5c-429f-a09b-b1846bb7c135</guid><pubDate>Thu, 06 Aug 2026 03:57:22 +0000</pubDate><atom:updated>2026-08-06T06:13:19.917Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,தமிழக சட்டசபை,TNAssembly,சட்டசபை கூட்டத்தொடர்,வேளாண் பட்ஜெட்,TNAgricultureBudget,தமிழக வேளாண் பட்ஜெட்,தவெக அரசு,TVK Government,tvk cabinet,CMVijay‌</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/fx7b3hh9/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/fx7b3hh9/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h3>
காளான் உற்பத்திக் கூடங்கள் ரூ.50 லட்சம் நிதியில் அமைக்கப்படும் </h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/8v5zy111/kalan33.jpg" /></figure><p>காளான் வளர்ப்பினை ஊக்குவிக்க கிராமப்புற இளைஞர்கள், பெண்களுக்கு 50 சிறிய அளவிலான காளான் உற்பத்திக் கூடங்கள் ரூ.50 லட்சம் நிதியில் அமைக்கப்படும் -வேளாண் அமைச்சர் வினோத் -</p><h3>மிளகாய், கொத்தமல்லி சாகுபடிக்கு ரூ.49.4 லட்சம் ஒதுக்கீடு</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/4yh4e5cd/milagai33.jpg" /></figure> <p>கடலோர மாவட்டங்களில் முன்னோடித் திட்டமாக நன்னீர் கிணறுகள் அமைத்து மிளகாய் மற்றும் கொத்தமல்லி சாகுபடிக்கு ரூ.49.4 லட்சம் ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத்</p> <h3>
சிறு பால்பண்ணை அமைக்க ரூ.4.19 கோடி ஒதுக்கீடு </h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/kqmpwetp/milk33.jpg" /></figure><p>சிறு பால்பண்ணை அமைக்க ரூ.4.19 கோடி ஒதுக்கீடு -வேளாண் அமைச்சர் வினோத்</p><h3>
தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் தரம் உயர்த்தப்படும்</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/ssbhafgz/neelagiri33.jpg" /></figure><p>நீலகிரி விவசாயிகளுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்த தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் தரம் உயர்த்தப்படும். இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத் </p><h3>ஊட்டியில் புதிய வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் </h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/vwdi2en9/pasumai33.jpg" /></figure><p>நஞ்சில்லா வேளாண் முறைகளை ஊக்குவித்து விவசாயிகளின் விளைபொருட்களுக்கு சந்தை வாய்ப்புகளை உருவாக்க நீலகிரி மாவட்டம் ஊட்டியில் புதிய வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் செயல்படுத்தப்படும்; இதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு -வேளாண் அமைச்சர் வினோத்</p><h3>
கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு புதிய பேருந்துகள்</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/jignpwwo/coimbator33.jpg" /></figure><p>கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களின் களப் பயிற்சிக்காக 6 புதிய பேருந்துகள் வாங்கப்படும். இதற்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு- வேளாண் அமைச்சர் வினோத்</p><h3>
சாக்கோட்டையில் உயிர்ம வேளாண்மை பட்டயப் படிப்புக் கல்லூரி</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/i4gc13s7/education33.jpg" /></figure><p>தஞ்சை மாவட்டம், சாக்கோட்டையில் 'நம்மாழ்வார்' பெயரில் ஒரு புதிய உயிர்ம வேளாண்மை பட்டயப் படிப்புக் கல்லூரி அமைக்கப்படும். இதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத்</p><h3>
கியூ ஆர் கோடுடன் விதைச் சான்றிதழ் வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/7wfcdi2u/nut33.jpg" /></figure><p>கியூ ஆர் கோடுடன் விதைச் சான்றிதழ் வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு -வேளாண் அமைச்சர் வினோத்</p><h3>உழவர் சந்தை புனரமைப்பு
</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/v8va4df7/uvazavar33.jpg" /></figure><p>உழவர் சந்தைகள் புனரமைக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு விவசாயிகளுக்கு நேரடி விற்பனை மற்றும் நிறைவான வருமானத்தை உறுதி செய்ய ஏற்பாடு -  வேளாண் அமைச்சர் வினோத் </p><h3>
வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மற்றும் பயிற்சி மையங்கள்!
</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/fvj863ei/velan33.jpg" /></figure><p>திருக்கோவிலூர், முசிறி, காரைக்குடி, தாராபுரம் மற்றும் கும்பகோணம் ஆகிய இடங்களில் ரூ.4.6 கோடி மதிப்பில் புதிய வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மற்றும் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளது -  வேளாண் அமைச்சர் வினோத்</p><h3>1000 மெ.டன் சேமிப்பு கிடங்கு</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/ehx1xhu0/kudon33.jpg" /></figure> <p>2 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 1000 மெ.டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு வசதிகள் ரூ.4.80 கோடி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத் </p> <h3>கடலோர மாவட்டங்களில் நீலப் பசுமை தோட்டக்கலை</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/gv5mxtc5/sunclass33.jpg" /></figure><p>கடலோர மாவட்டங்களில் முன்னோடித் திட்டமாக நன்னீர் கிணறுகள் அமைத்து, மிளகாய் மற்றும் கொத்தமல்லி சாகுபடி செய்வதை ஊக்குவிக்க ரூ.49.4 லட்சம் நிதி ஒதுக்கீடு - -வேளாண் அமைச்சர் வினோத் </p><h3>
மானியத்தில் ஆழ்துளை கிணறுகள்</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/jdlbyrny/watertwo33.jpg" /></figure><p>ஆயிரம் ஏக்கர் பாசனம் பரம்பை உருவாக்கிட பொதுப்பிரிவைச் சார்ந்த 500 விவசாயிகளுக்கு ஆழ்துளை அல்லது குழாய்க் கிணறுகள் பின்னேற்பு மானியத்தில் அமைத்தல் அதிகபட்ச மானியம் 60% ரூ.6 கோடி ஒதுக்கீடு -  -வேளாண் அமைச்சர் வினோத் </p><h3>
வேளாண் இயந்திரங்கள், கருவிகள் கொள்முதல் </h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/twa87i0f/one33.jpg" /></figure><p>இ- வாடகை 2.0 செயலி மூலம் வேளாண்மைப் பொறியியல் துறையின் இயந்திரங்களை வாடகைக்கு வழங்கும் சேவையை வலுப்படுத்த, 463 வேளாண் இயந்திரங்கள், கருவிகள் கொள்முதல் செய்யப்படும் -வேளாண் அமைச்சர் வினோத் </p><h3>
 வேளாண் இயந்திரங்களைப் பழுது நீக்கி பராமரிக்கும் மையங்கள் அமைத்திட மானியம் </h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/391z5o33/truck33.jpg" /></figure><p>வேளாண் இயந்திரங்களைப் பழுது நீக்கி பராமரிக்கும் 15 மையங்கள் அமைத்திட 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். இதற்காக ரூ.1.12 கோடி நிதி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத்</p><h3>
100% மானியத்தில் 500 பண்ணைக் குட்டைகள் உருவாக்கப்படும்</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/vrw4gh7b/kuttai33.jpg" /></figure><p>100% மானியத்தில் 500 பண்ணைக் குட்டைகள் உருவாக்குதல் மற்றும் 75% மானியத்தில் 500 பண்ணைக் குட்டைகள் தூர்வாருதல் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.8.5 கோடி நிதி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத் </p><h3> மருத்துவப் பயிர்கள் சாகுபடி ஊக்குவிப்பு திட்டம்
</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/87etbm1d/payir33.jpg" /></figure><p>1,720 ஏக்கரில் 1.51 கோடியில் மருத்துவப் பயிர்கள் சாகுபடி ஊக்குவிப்பு திட்டம் - வேளாண் அமைச்சர் வினோத்</p> <h3>உயர் மதிப்பு கொண்ட பழ உற்பத்தியை அதிகரிக்க திட்டம்</h3><p>புளுபெரி அவகோடா, கிவி உள்ளிட்டட உயர் மதிப்பு கொண்ட பழ உற்பத்தியை அதிகரிக்க திட்டம் செயல்படுத்தப்படும்.இதற்காக ரூ.1.87 கோடி நிதி ஒதுக்கீடு -வேளாண் அமைச்சர் வினோத்</p><h3>
மாவட்ட அளவிலான "வெற்றி விவசாயி" விருது</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/n5eur664/farmem33.jpg" /></figure><p>நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துகள். பருத்தி உள்ளிட்ட ஒன்பது பயிர்களை இரண்டு ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டு, அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு, மாவட்ட அளவில் "வெற்றி விவசாயி விருது" வழங்கப்படும்</p><p>முதல் பரிசாக 50 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக 25 ஆயிரம் ரூபாய் என 90 பரிசுகள் வழங்கப்படும்; இதற்காக ரூ.67.50 லட்சம் மாநில நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்படும் - அமைச்சர் வினோத்</p><h3>
வெங்காய சேமிப்புக் கிடங்குகள் உருவாக்கப்படும்</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/baytqlwx/venkayam33.jpg" /></figure><p>வெங்காய சேமிப்புக் கிடங்குகள் அமைப்பதற்காக ரூ.22 கோடி மதிப்பீட்டில் 57 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன சேமிப்பு வசதிகள் உருவாக்கப்படும் -வேளாண் அமைச்சர் வினோத்</p><h3>
நீர் மேலாண்மைக்கான துளித் துளித் தண்ணீர் திட்டம்
</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/7ubnmrjy/sottu33.jpg" /></figure><p>நீர் மேலாண்மைக்கான துளித் துளித் தண்ணீர் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.785 கோடி நிதி ஒதுக்கீடு -வேளாண் அமைச்சர் வினோத்</p><h3>
அரசு தோட்டக்கலைப் பண்ணைகளை மேம்படுத்த ரூ.2.3 கோடி ஒதுக்கீடு </h3><p>அரசு தோட்டக்கலைப் பண்ணைகளை மேம்படுத்த ரூ.2.3 கோடி ஒதுக்கீடு -வேளாண் அமைச்சர் வினோத்</p><h3>

வேளாண் காடுகள் திட்டம்</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/t3wz8sz9/kadu33.jpg" /></figure><p>விவசாய நிலங்களில் நிரந்தரப் பசுமைக்காக வேளாண் காடுகள் திட்டம் செயல்படுத்தப்படும்; இதற்காக ரூ.17.70 கோடி நிதி ஒதுக்கீடு -வேளாண் அமைச்சர் வினோத்</p><h3>
தமிழ்நாடு தென்னை பதப்படுத்தும் கழகம் </h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/e8qahq6g/thennai33.jpg" /></figure><p>தென்னை சார்ந்த பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்கச் செய்ய ஏதுவாக தமிழ்நாடு தென்னை பதப்படுத்தும் கழகம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.5.30 கோடி நிதி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத் </p><h3>பருத்தி மறுமலர்ச்சி இயக்கம் 
</h3><p>தரமான பருத்தி உற்பத்தியை பெருக்கிட ஏதுவாக பருத்து மறுமலர்ச்சி இயக்கம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.27.21 கோடி நிதி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத்.</p><h3>
பனை பாதுகாப்பு திட்டம்
</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/21k62sx3/panai33.jpg" /></figure><p>பனை நடுவோம். பலன் பெறுவோம் என்பதன் அடிப்படையில் பனை பாதுகாப்பு இயக்கம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்.</p><h3>
அஞ்சலை அம்மாள் பெயரில் விருது</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/22u5sh46/anjsalai33.jpg" /></figure><p>மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டிக்காக அஞ்சலை அம்மாள் பெயரில் விருது வழங்கப்படும்.</p><p>அஞ்சலை அம்மாள் பெயரில் முதல் பரிசு ரூ.2.50 லட்சம். 2-வது பரிசு ரூ.1.50 லட்சம், 3-வது பரிசு. ரூ.1 லட்சம் வழங்கப்படும் - வேளாண் அமைச்சர் வினோத்</p><h3>
மாடித்தோட்டம் ரூ.10 கோடி ஒதுக்கீடு  </h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/p4bxdx6b/madi33.jpg" /></figure><p>மாடித்தோட்டம் அமைக்க இடுபொருள் தொகுப்புகள், காய்கறி விதைத் தொகுப்புகள், பழச்செடித் தொகுப்புகள், நீரியல் தோட்டம், செங்குத்துத் தோட்டம், நிழல்வலைக் குடில்கள் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு -வேளாண் அமைச்சர் வினோத் </p> <p>வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு</p><h3>தளிர்கீரைகள் திட்டம் </h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/x73c2rno/thali33.jpg" /></figure> <p>சிறிய தளிர்..பெரிய ஆரோக்கியம் என்ற அடிப்படையில் தமிழ்நாடு தளிர்கீரைகள் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.1.20 கோடி நிதி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத்</p><h3>நம்மாழ்வார் விருது 
</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/0hpfvt63/namazavar33.jpg" /></figure><p>5 விவசாயிகளுக்கு சிறந்த உயிர்ம விவசாயிக்கான நம்மாழ்வார் விருது வழங்கப்படும். இதற்காக ரூ.11 லட்சம் நிதி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத்</p><h3>3 புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள்
</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/w8ekfd6c/vithai33.jpg" /></figure><p>விதை சுத்திகரிப்பு திறனை அதிகரிக்க 3 புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ.7.1 கோடி நிதி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத்</p><h3>கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டம் </h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/lo6azp0g/karumbi33.jpg" /></figure><p>கருப்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க கரும்பு சாகுபடி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு  -அமைச்சர் வினோத் </p><h3>தமிழ்நாடு குறுதானிய இயக்கம் அமைக்கப்படும் </h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/unhltkfu/kuru33.jpg" /></figure><p>சாமை, தினை, வரகு, குதிரை வாலி, பனிவரகு போன்ற பயிர்களின் சாகுபடியை இருமடங்காக அதிகரிக்க தமிழ்நாடு குறுதானிய இயக்கம் அமைக்கப்படும். இத்திட்டதிற்காக ரூ.7.61 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்.</p><h3>43,500 தார்ப் பாய்கள் வாங்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு </h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/a5krmsx9/thaar33.jpg" /></figure><p>மழை வெயிலிருந்து விளை பொருட்களை பாதுகாக்க 43,500 தார்பாய்கள் திட்டத்திற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத் </p><h3>வேளாண் கண்காட்சி நடத்தப்படும்</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/pgcj2fry/veelna3.3jpg.jpg" /></figure><p>தொழில்நுட்பமும், பாரம்பரியமும் சங்கமிக்கும் திருவிழாவாக வேளாண் கண்காட்சி நடத்தப்படும். இதற்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத்</p><h3>
காட்டுப்பன்றிகளால் பயிர் இழப்பு
</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/viv44ihq/panni33.jpg" /></figure><p>காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் இழப்புகளைத் தடுக்க காட்டுப்பன்றி சேதத் தடுப்புத் திட்டத்திற்காக ரூ.7.35 கோடி நிதி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத்</p> <h3>
மக்காச்சோள உற்பத்தி - ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/pgfwx1sv/makaa33.jpg" /></figure> <p>மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டு திட்டத்திற்காக ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p> <h3>
இலவச மின்சாரத்திற்காக ரூ.7,432 கோடி நிதி ஒதுக்கீடு</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/u9pyv044/water33.jpg" /></figure> <p>விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்திற்காக ரூ.7,432 கோடி நிதி ஒதுக்கீடு. உழவர் ஐடி பெற்ற 3 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.6 கோடியில் மண்வள அட்டை  - அமைச்சர் வினோத்.</p> <h3>விவசாயிகளுக்கு ரூ.4,000 சிறப்பு ஊக்கத்தொகை
</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/fa4724iu/poochi33.jpg" /></figure> <p>உயிர்ம உரப்பயன்பாட்டை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு ரூ.4,000 சிறப்பு ஊக்கத்தொகை -அமைச்சர் வினோத்.</p> <h3>வேளாண் தொழில் நுட்பம் உங்கள் விரல் நுனியில்!</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/sk1z2p26/uzvar33.jpg" /></figure> <p>ஒவ்வொரு உழவருக்கும் தனிப்பயன் சேவைகள் ஏஐ அடிப்படையிலான உழவர் செயலி தொடங்கப்படும். அதற்கு ரூ. 2 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p> <h3>தரமான விதை! வளமான விவசாயம்!
</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/ixhqxmlf/nel33.jpg" /></figure> <p>நெல் விதை உற்பத்தி மற்றும் விநியோக மானியத்திற்கான மாநில அரசின் சிறப்பு திட்டத்திற்கு ரூ.34.72 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><h3>வளமான மண்; வளமான வருங்காலம்</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/bd3nbwkp/man33.jpg" /></figure> <p>மண்ணின் வளத்தை பாதுகாக்க” தமிழ்நாடு மணவள பாதுகாப்பு இயக்கம் -ரூ.122.51 கோடி ஒதுக்கீடு</p> <h3>
விவசாயிகளின் கருத்துகளை பெற்று நிதி நிலை அறிக்கை</h3><p>"விவசாயிகள், ஏற்றுமதியாளர்களின் கருத்துக்களை பெற்று நிதிநிலை அறிக்கை. விவசாயிகளுக்கான முன்னோடி திட்டங்களுடன் நிதிநிலை அறிக்கை தயாரிப்பு.</p><p>சிஎம் வகுத்துக் கொடுத்த சீரிய தொலைநோக்கு திட்டங்களுடன் நிதிநிலை அறிக்கை. செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் தொடர்வதோடு, புதிய திட்டங்கள் அறிமுகம். வேளாண்மை பாதித்தால் எந்த துறையும் செயல்பட முடியாது என்று கூற்றுக்கு ஏற்ப பட்ஜெட் -  அமைச்சர் வினோத்  </p><h3>சபாநாயகர் அறிவுரை</h3><p>முதல்-அமைச்சரை புகழ்ந்து அமைச்சர் படித்த சில பகுதிகளுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து வேளாண் அறிக்கையில் உள்ளதை மட்டும் படிக்க அமைச்சர் வினோத்துக்கு சபாநாயகர் அறிவுறுத்தினார்.</p><h3>கோட் சூட் போட்ட விவசாயி முதல்-அமைச்சர் விஜய்: வினோத் புகழாரம் </h3><p>கோட் சூட் போட்ட விவசாயி நீங்கள். ஊழலை ஒழிக்க உங்களை விட்டால் வேறு யாரும் இல்லை. நீங்கள் கொண்டாடப்படும் வரம்.</p><h3>வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்; அமைச்சர் வினோத்
</h3><p>த.வெ.க. அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டை  வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார்.</p><h3>
ஈபிஎஸ் வருகை</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/z7ysr5rc/sami33.jpg" /></figure><p>இன்று தவெக அரசின் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. சட்டமன்ற வேளாண் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார்.</p><p><strong>வணக்கம் தெரிவித்துக் கொண்ட முதல்-அமைசர் விஜய் – ஈபிஎஸ்</strong></p><p>சட்டப்பேரவை இன்று காலை தொடங்குவதற்கு முன்பாக, சட்டப்பேரவை வளாகத்தில்  முதல்-அமைச்சர் விஜய் - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியும் நேரில் சந்தித்துக் கொண்டனர். அப்போது இருவரும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொண்டனர். </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/uzr9q7su/vvanakam33.jpg" /></figure><h3>
கருப்பு சட்டையில் வந்த திமுக எம்.எல்.ஏ-க்கள்</h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/ebaiopil/udayi33.jpg" /></figure><p>தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், திமுக எம்.எல்.ஏ-க்கள் கருப்பு சட்டை அணிந்து அவைக்கு வருகை தந்தனர்.</p> <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் 5-ந்தேதி தாக் கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தேர்தல் நேரத்தில் மக்களுக்கு பல் வேறு வாக்குறுதிகளை விஜய் அளித்து இருந்தார். எனவே பட்ஜெட் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.</p><p>தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர்  மரிய வில்சன் நேற்று (05.08.2026) தாக்கல் செய்தார். இதில், ஒவ்வொரு துறைக்கும் நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு அறிவிப்புகள் வெளியானது. </p><p>இந்தநிலையில்,  த.வெ.க. அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டை  வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் இன்று (06.05.2026) தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் விவசாய பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி, குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறுமா? விவசாயிகளை மகிழ்விக்கும் வகையில் வேளாண் பட்ஜெட் இருக்குமா? என்ற வகையில்  என விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சிறு, குறு விவசாயிகளுக்கு &apos;அஞ்சலையம்மாள்&apos; விருது: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anjalaiyammal-award-for-small-and-marginal-farmers-announcement-in-the-agriculture-budget</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anjalaiyammal-award-for-small-and-marginal-farmers-announcement-in-the-agriculture-budget#comments</comments><guid isPermaLink="false">7d9432b7-5356-4f45-ad61-d634ad56b527</guid><pubDate>Thu, 06 Aug 2026 05:53:21 +0000</pubDate><atom:updated>2026-08-06T05:53:21.999Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழக அரசு,வேளாண் பட்ஜெட்,agriculture budget,தமிழக வேளாண் பட்ஜெட்,TN Agriculture Budget,TamilNadu Goverment,அமைச்சர் வினோத்,Minister Vinoth,அஞ்சலையம்மாள் விருது,Anjalaiyammal Award</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/uqf8yupo/Untitled-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/uqf8yupo/Untitled-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்து வருகிறார்.</p><h2>30 விவசாயிகளுக்கு பரிசு</h2><p>மக்கள் சேவகர் அஞ்சலையம்மாள் சிறு, குறு விவசாயி விருது குறித்து அமைச்சர் வினோத் கூறியதாவது:-</p><p>2026-27 ஆம் ஆண்டில், சிறு, குறு விவசாயிகளை ஊக்குவிக்க, 'மக்கள் சேவகர் அஞ்சலையம்மாள்' பெயரில் மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டிகள் நடத்தப்பட்டு பயறு வகைகள், எண்ணெய்வித்துகள் சிறுதானியங்கள், உள்ளிட்ட 10 பயிர்களில் அதிக மகசூல் பெறும் முதல் 3 விவசாயிகளுக்கு முறையே 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், ஒரு லட்சம் ரூபாய் என மொத்தம் 30 விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்க 50 லட்சம் ரூபாய் மாநில நிதியிலிருந்து ஒதுக்கப்படும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>விபி-ஜி ராம் ஜி திட்டத்தால் கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்புகள் குறைக்கப்பட்டுள்ளது - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-vpg-ramg-scheme-has-reduced-employment-opportunities-for-rural-people-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-vpg-ramg-scheme-has-reduced-employment-opportunities-for-rural-people-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">06f21ff8-b6e6-4598-8bc3-1a1b0637f210</guid><pubDate>Thu, 06 Aug 2026 05:49:18 +0000</pubDate><atom:updated>2026-08-06T05:49:18.461Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,விபி-ஜி ராம் ஜி திட்டம்,VPG-RAMG Scheme</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/fd0sm9d1/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/fd0sm9d1/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;</p><p>”கிராமப்புற மக்களிடையே நிலவுகிற வேலையில்லா திண்டாட்டத்தை போக்குகின்ற வகையில் அன்னை சோனியா காந்தி அவர்களின் தீவிர முயற்சியின் காரணமாக 2006 ஆம் ஆண்டு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு கொண்டு வந்த திட்டம் தான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம். ஒரு நிதியாண்டில் 100 நாட்கள் வேலை வாய்ப்பு வழங்கி கிராமப்புற மக்களின் குறைந்தபட்ச வாழ்வாதாரத்தை உறுதி செய்தது. உலக நாடுகளிடையே  மிகப்பெரிய வரவேற்பை இத்திட்டம் பெற்றது. இத்திட்டத்தின்படி, ஆண்டுதோறும் சராசரியாக 5 கோடி குடும்பங்களுக்கு தொடக்கத்தில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. </p><p>இந்நிலையில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் என்பதால் அதைப் புறக்கணிக்கிற அணுகுமுறையை கையாண்டது. நிதி ஒதுக்கீடும் குறைக்கப்பட்டது. இருந்தாலும் இத்திட்டத்தை கைவிட முடியாமல் ஏனோதானோ என்று நடைமுறைப்படுத்தி வந்தது.  </p><p>மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை சீரழிக்கிற நோக்கத்தில் அவரது பெயரை நீக்கியதோடு, வாயில் நுழையாத விபி-ஜி ராம் ஜி என்ற பெயர் மாற்ற நாடகத்தை நடத்தி புதிய திட்டத்தை அமலுக்கு கொண்டு வந்தது. ஆண்டுதோறும் அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் இந்த முக்கிய காலகட்டத்திலேயே ஜுலை 31 வரை வெறும் 70.32 கோடி மனித வேலை நாட்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் உருவாக்கப்பட்ட வேலை நாட்களோடு ஒப்பிடுகையில் 34 சதவிகிதமாக இருப்பது அதிர்ச்சி தரக்கூடிய மிகப்பெரிய வீழ்ச்சியாகும். பா.ஜ.க. அரசின் புதிய திட்டத்தின்படி ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 80  சதவிகித நிதி ஒதுக்கீட்டிற்கு பதிலாக 60 சதவிகிதமாக குறைத்து மாநில அரசுகள் மீது மீதமுள்ள 40 சதவிகித நிதிச் சுமையை ஏற்றியிருக்கிறது. இதைவிட மாநில விரோதப் போக்கு வேறு எதுவும் இருக்க முடியாது. </p><p>புதிய விதிமுறைகளின் தெளிவற்ற தன்மையால் கிராமப்புற மக்களின் வேலை வாய்ப்புகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், பீகார் ஆகிய பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும் மாநிலங்களிலேயே இந்த அவலநிலை உள்ளது. பெயரை மாற்றினால் பெருமை சேராது, ஏழைகளின் வயிற்றில் அடித்தால் பா.ஜ.க.வை நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள். மழை பொழிவு குறைந்து ஏழை, எளிய மக்கள் வேலையில்லா திண்டாட்டத்தில் தவிக்கும் சூழலில் அவர்களது ஒரே வாழ்வாதாரமான வேலை வாய்ப்பையும் பறிப்பது தான் நரேந்திர மோடி அரசின் ‘விக்சித் பாரத்” சாதனையா ? இந்த பேரழிவுக்கு மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானும், பிரதமர் மோடியும் நாட்டு மக்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் ? கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தியை சீரழிக்கும் பா.ஜ.க.வின் நடவடிக்கையை எவராலும் மன்னிக்க முடியாது. அதற்குரிய விலையை நாட்டு மக்கள் நேரம் வழங்கும் போது அளிப்பார்கள்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>&apos;உழவர் ஏஐ&apos; திட்டம் அறிமுகம்... வேளாண் பட்ஜெட்டில் ரூ.2 கோடி ஒதுக்கீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/uzhavar-ai-scheme-launched-2-crore-allocated-in-the-agriculture-budget</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/uzhavar-ai-scheme-launched-2-crore-allocated-in-the-agriculture-budget#comments</comments><guid isPermaLink="false">3778a1ad-5390-43cc-8e42-ff9baaaa9c82</guid><pubDate>Thu, 06 Aug 2026 05:37:27 +0000</pubDate><atom:updated>2026-08-06T05:37:27.908Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழக அரசு,விவசாயம்,agriculture,Artificial Intelligence,செயற்கை நுண்ணறிவு,வேளாண் பட்ஜெட்,agriculture budget,வேளாண்துறை,தமிழக வேளாண் பட்ஜெட்,TN Agriculture Budget,அமைச்சர் வினோத்,உழவர் AI,Uzhavar AI,Smart Farming,Digital Agriculture,Machine Learning</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/osnnnslw/Untitled-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/osnnnslw/Untitled-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்து வருகிறார்.</p><h2>உழவர் ஏஐ</h2><p>உழவர் செயற்கை நுண்ணறிவுத் (AI) திட்டம் குறித்து அமைச்சர் வினோத் கூறியதாவது:-</p><p>"சரியான நேரத்தில் விவசாயிகளுக்குக் கிடைக்கும் தகவல், சரியான நேரத்தில் பெய்யும் மழைக்கு நிகர்" என்பதை உணர்ந்துதான் விவசாயிகளுக்குச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தி மண் வளம் மற்றும் பயிர் சாகுபடி குறித்த தகவல்களை உடனுக்குடன் வழங்க வேண்டும் என்ற தொலைநோக்குத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>அதன்படி, செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் இயந்திரவழி கற்றலுக்கு (Machine Learning) உரிய தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து, வானிலை முன்னறிவிப்பு, மண் நலம் மற்றும் மண் வளம், பூச்சி, நோய் மேலாண்மை, பருவ நிலைக்கு ஏற்ற பயிர் என, விதைப்பு முதல் அறுவடை வரையிலான அனைத்துத் தொழில்நுட்ப ஆலோசனைகளும் சேவைகளும் வழங்கப்படும். </p><h2>ரூ.2 கோடி ஒதுக்கீடு</h2><p>இவற்றோடு சந்தை நிலவரம், குரல் வழி வேளாண் சேவைகள் (Voice-First Agriculture Services), அரசு திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து அறிவுசார் வேளாண் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சேவைகளையும் </a>விவசாயிகள் தங்களது கைப்பேசி வாயிலாக எளிதாகப் பெறும் வகையில், 2026-27 ஆம் ஆண்டில் "உழவர் செயற்கை நுண்ணறிவுத் திட்டம்" செயல்படுத்திட மாநில நிதியிலிருந்து 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>எல் நினோவால்12 மாவட்டங்களில் பெரும் தாக்கம் ஏற்படும் என கணிப்பு: அமைச்சர் வினோத்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/el-ni%C3%B1o-predicted-to-have-a-major-impact-on-12-districts-minister-vinoth</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/el-ni%C3%B1o-predicted-to-have-a-major-impact-on-12-districts-minister-vinoth#comments</comments><guid isPermaLink="false">44eea55e-7e80-4718-b1e8-66124779f586</guid><pubDate>Thu, 06 Aug 2026 05:28:01 +0000</pubDate><atom:updated>2026-08-06T05:28:01.329Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>agriculture budget,தமிழக வேளாண் பட்ஜெட்,சூப்பர் எல் நினோ,Super El Niño</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/6bby80zy/11.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/6bby80zy/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பட்ஜெட்டில் எல் நினோ மற்றும் பயிர் சாகுபடி குறித்து அமைச்சர் பேசியவை பின்வருமாறு பின்வருமாறு,</p><p>இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள சூப்பர் எல் நினோ நிகழ்வினால் நாடு முழுவதும் பெரும் தாக்கம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் அதிக தாக்கம் ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் அனைத்து மாவட்டங்களுக்கும் தயாரிக்கப்பட்டுள்ள மாவட்ட வேளாண்மை இடை ஏற்பாட்டு திட்டம் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்டு அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகளை ஒருங்கிணைந்த முறையில் செயல்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.” என்றார். </p><p>முன்னதாக நேற்று 2026-2027 பொது பட்ஜெட்டில், வரவிருக்கும் 'சூப்பர் எல் நினோ' மற்றும் வறட்சிச் சூழலின் தாக்கத்தை எதிர்கொள்ளவும் சமாளிக்கவும் ரூ. 340 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>நெல் விதை உற்பத்தி மானியத்திற்கான சிறப்புத் திட்டம் - ரூ.34 கோடி ஒதுக்கீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-scheme-for-paddy-seed-production-subsidy-rs-34-crore-allocated</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-scheme-for-paddy-seed-production-subsidy-rs-34-crore-allocated#comments</comments><guid isPermaLink="false">eb28cc30-f441-4a95-8e81-164ca169d5b5</guid><pubDate>Thu, 06 Aug 2026 05:22:13 +0000</pubDate><atom:updated>2026-08-06T05:22:13.409Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Tamilnadu,தமிழ்நாடு,தமிழக அரசு,Agricultural,subsidy,வேளாண் பட்ஜெட்,Agricultural Budget,தமிழக வேளாண் பட்ஜெட்,subsidy for farmers</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/46qtrz2s/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/46qtrz2s/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்து வருகிறார்.</p><p>நெல் விதை உற்பத்தி மற்றும் விதை விநியோக மானியத்திற்கான சிறப்புத் திட்டம் குறித்து அமைச்சர் வினோத் கூறியதாவது:-</p><p>விவசாயிகளுக்கு இடுபொருட்கள் போதிய அளவில் குறித்த பருவத்தில் கிடைக்கச் செய்ய, இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. நெல் உற்பத்தி, உற்பத்தித்திறனை அதிகரிப்பதில் முக்கியப் பங்களிப்பை வழங்கும் தரமான விதை உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கான மானியத்தினை 2026-2027ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு நிறுத்திவிட்டது.</p><p>ஆனால் விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, அவர்களின் நலன் கருதி, முதல்-அமைச்சர் தாயுள்ளத்தோடு அறிவுறுத்தியபடி, விதைப்பண்ணைகள் அமைத்து 7,730 மெட்ரிக் டன் சான்று நெல் விதை உற்பத்தி செய்து தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமைக்கு வழங்கும் விவசாயிகளுக்கு. "நெல் விதை உற்பத்தி" மானியமும் 14,570 மெட்ரிக் டன் சான்றளிக்கப்பட்ட விதைகளை மானியத்தில் விநியோகிக்க "நெல் விதை விநியோக மானியமும் வழங்குவதற்கு 2026-2027ஆம் ஆண்டில், ரூ.34 கோடியே 72 லட்சம் மாநில நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஓர் அரசு வல்லரசாகும் முன்பு விவசாயிகளின் அரசாக மாற வேண்டும் என்பதே முதல்-அமைச்சரின் கொள்கை:  அமைச்சர் வினோத்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/before-india-becomes-a-superpower-it-must-become-a-farmers-state-first-says-chief-ministers-policy-minister-vinod</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/before-india-becomes-a-superpower-it-must-become-a-farmers-state-first-says-chief-ministers-policy-minister-vinod#comments</comments><guid isPermaLink="false">47529bd1-8770-42df-b0a2-a23890652126</guid><pubDate>Thu, 06 Aug 2026 05:09:39 +0000</pubDate><atom:updated>2026-08-06T05:09:39.540Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Farmers,விவசாயிகள்,Free electricity,வேளாண் பட்ஜெட்,agriculture budget,இலவச மின்சாரம்,TN Agriculture Budget</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/8h8o45kg/tnafr.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேளாண் பட்ஜெட், அமைச்சர் வினோத்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/8h8o45kg/tnafr.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>ஓர் அரசு வல்லரசாகும் முன்பு விவசாயிகளின் அரசாக மாற வேண்டும் என்பதே முதல்-அமைச்சரின் கொள்கை என வேளாண் பட்ஜெட் தாக்கலின்போது அமைச்சர் வினோத் பேசியுள்ளார்.</p><p>தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று கடந்த மே மாதம் 10-ந்தேதி ஆட்சியமைத்த த.வெ.க. அரசு, இரண்டரை மாதங்களுக்கு பின்னர், 2026-27-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று தாக்கல் செய்தது.</p>  <h2>எம்.எல்.ஏ.க்கள் வருகை</h2><p>இந்த நிலையில், தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.  இதன்படி, காலை 9.30 மணிக்கு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.  இதனை முன்னிட்டு, தமிழக முதல்-அமைச்சர் விஜய், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, துறை சார்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரும் அவைக்கு வருகை தந்தனர்.</p><p>வேளாண் பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு, தமிழக முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத் ஆசி பெற்றார்.  இதன்பின்னர் சபாநாயகர் பிரபாகர் அவைக்கு வருகை தந்ததும், உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை தந்தனர்.  அவையில் திருக்குறள் வாசிக்கப்பட்டது.</p>  <h2>வேளாண் பட்ஜெட் தாக்கல்</h2><p>இதனை தொடர்ந்து, தமிழக வேளாண் துறை அமைச்சர் வினோத், 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசி வருகிறார்.</p><p>அவர் பேசும்போது, த.வெ.க. அரசின் முதல் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.  விவசாய குடும்பங்களின் மகனாக இருப்பதால் இலவச மும்முனை மின்சாரத்தை தொடர முதல்வர் அறிவுரை வழங்கி உள்ளார்.  வேளாண்மையை பெருக்க பல்வேறு திட்டங்களை மேற்கொள்ள உள்ளோம்.</p>  <h2>விவசாயிகளின் அரசு</h2><p>ஓர் அரசு வல்லரசாகும் முன்பு விவசாயிகளின் அரசாக மாற வேண்டும் என்பதே முதல்வரின் கொள்கை என்று அவர் பேசியுள்ளார்.  தொடர்ந்து பட்ஜெட்டில் திட்டங்களை அறிவித்து அவர் பேசி வருகிறார்.</p><p>அதில், தமிழக விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்திற்காக ரூ.7,432 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.</p><p>உயிர்ம உர பயன்பாட்டை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு ரூ.4,000 சிறப்பு ஊக்கத்தொகை.</p>  <h2>மண் வளம்</h2><p>மண் புழுக்கள் வாழும் அளவுக்கு மண்வளத்தை அதிகரிக்க வேண்டிய நிலை உள்ளது.  5 ஆண்டுகளுக்கு ரூ.600 கோடியில் மண்வள பாதுகாப்பு இயக்கம்.</p><p>மண் வளம் பாதுகாக்க ரசாயன உரம் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.</p><p>விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் ரூ.4 கோடி</p>  <p>விதை பண்ணைகள் அமைத்து விதை மேம்பாட்டு மையம் மூலம் விற்பனை செய்ய ரூ.34.72 கோடி ஒதுக்கீடு</p><p>பிரதம மந்திரி பயிர்க்காப்பீடு திட்டம் ரூ.648 கோடி</p><p>நஞ்சில்லா உணவு உற்பத்தி, இயற்கை வேளாண் தொகுப்பை உருவாக்க ரூ.9 கோடி என அறிவித்து தொடர்ந்து அவர் பேசி வருகிறார்.</p> ]]></content:encoded></item><item><title>மேட்டுப்பாளையம்-ஊட்டி சிறப்பு மலைரெயில் மீண்டும் நீட்டிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mettupalayam-ooty-special-mountain-train-extended-again</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mettupalayam-ooty-special-mountain-train-extended-again#comments</comments><guid isPermaLink="false">1dba5c34-009f-4aa4-9830-aac7746b9c4f</guid><pubDate>Thu, 06 Aug 2026 04:38:28 +0000</pubDate><atom:updated>2026-08-06T04:38:28.647Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>ஊட்டி,Ooty,மலைரெயில் சேவை,Mountain train</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/o5z198l2/10.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/o5z198l2/10.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மேட்டுப்பாளையம்,</p><h2>சிறப்பு மலைரெயில்</h2><p>கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு அழகிய மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர்.</p><p>மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினமும் காலை 7.10 மணிக்கு புறப்பட்டு செல்லும் மலைரெயில் மதியம் 12 மணிக்கு ஊட்டியை சென்றடையும். இந்த ரெயிலில் பயணம் செய்யும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்ததால் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு கோடைகால சிறப்பு மலை ரெயிலை கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி முதல் ஜூலை மாதம் 5-ந் தேதி வரை சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் இயக்கியது.</p><p>இந்த சிறப்பு மலை ரெயிலுக்கு சுற்றுலா பயணிகளிடையே நல்ல வரவேற்பு இருந்ததால் சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் சேவையை மேலும் ஒரு மாத காலம் நீட்டிப்பு செய்து ஜூலை மாதம் 10-ந் தேதி முதல் கடந்த 2-ந் தேதி வரை வாரத்தில் வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்களும், இதே போன்று ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு ஜூலை மாதம் 11-ந் தேதி முதல் கடந்த 3-ந் தேதி வரை சனிக்கிழமை, திங்கட்கிழமை ஆகிய 2 நாட்களும் இயக்கப்பட்டது.</p><h2>மீண்டும் நீட்டிப்பு</h2><p>தற்போது சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் மீண்டும் 2 மாதத்திற்கு மேட்டுப்பாளையம்-ஊட்டி, ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு மலைரெயில் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற அக்டோபர் மாதம் 4-ந் தேதி வரை வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்கள் சிறப்பு மலைரெயில் இயக்கப்படுகிறது. </p><p>காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு புறப்பட்டு செல்லும் மலை ரெயில் மதியம் 2.25 மணிக்கு ஊட்டியை சென்றடையும். இதே போன்று ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு நாளை மறு நாள்(சனிக்கிழமை) முதல் அக்டோபர் மாதம் 5-ந் தேதி வரை சனி, திங்கட்கிழமை ஆகிய 2 நாட்கள் சிறப்பு மலைரெயில் இயக்கப்படும். ஊட்டியில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்படும் சிறப்பு மலை ரெயில் மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையத்தை வந்தடையும். மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை முதல் வகுப்பு 40 இருக்கைகளும், 2-ம் வகுப்பு 140 இருக்கைகளும், குன்னூரில் இருந்து ஊட்டிக்கு முதல் வகுப்பு 80 இருக்கைகளும், 2-ம் வகுப்பு 140 இருக்கைகளும் ஒதுக்கப் பட்டு உள்ளது. இது சுற்றுலா பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் 13 வயது மகன் தூக்குப்போட்டு தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/popular-youtuber-savukku-shankars-13-year-old-son-commits-suicide-by-hanging</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/popular-youtuber-savukku-shankars-13-year-old-son-commits-suicide-by-hanging#comments</comments><guid isPermaLink="false">10efd0f0-28b7-4551-bc13-33f7294186b9</guid><pubDate>Thu, 06 Aug 2026 04:07:07 +0000</pubDate><atom:updated>2026-08-06T04:07:07.620Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தூக்குப்போட்டு தற்கொலை,சவுக்கு சங்கர்,தற்கொலை,மரக்காணம்,YouTuber Savukku Shankar,யூடியூபர் சவுக்கு சங்கர்,Savukku Sankar,sucide தற்கொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/i435i8e1/6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/i435i8e1/6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மரக்காணம், </p><p>மரக்காணம் அருகே தாத்தா வீட்டில் இருந்த பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் 13 வயது மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். </p> <h2>சவுக்கு சங்கர் மகன்</h2><p>சென்னையை சேர்ந்த பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர். இவரது மனைவி ஆர்த்தி, சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மகன் தியோ ஆழிசை (வயது 13). கருத்துவேறுபாடு காரணமாக சவுக்கு சங்கரும், ஆர்த்தியும் தனித்தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம் நடுக்குப்பத்தில் ஆர்த்தியின் பெற்றோர் உள்ளனர். அங்கு தாத்தா செந்தாமரைக் கண்ணன் மற்றும் பாட்டி கவனிப்பில் இருந்து சிறுவன் தியோ ஆழிசை, மரக்காணம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.</p> <h2>தூக்கில் தொங்கிய சிறுவன்</h2><p>தாய் மீதான ஏக்கத்தில் கடந்த சில நாட்களாக சிறுவன் சோகமாக இருந்துள்ளான். எனவே தாயார் ஆர்த்தியை பார்ப்பதற்காக சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். அங்கு சில நாட்கள் இருந்த நிலையில், நேற்று முன்தினம் சிறுவன் தியோ ஆழிசை நடுக்குப்பம் கிராமத்துக்கு அழைத்து வரப்பட்டான்.</p><p>நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு கிளம்புமாறு பேரனிடம் தாத்தா, பாட்டி கூறிவிட்டு மற்ற வேலைகளை கவனித்தனர். வீட்டின் பின்பக்கம் சென்ற சிறுவன் நீண்ட நேரமாகியும் வரவில்லை. சந்தேகமடைந்த தாத்தா, பாட்டி பின்பக்கம் சென்று பார்த்தபோது, அங்குள்ள வேப்ப மரத்தில் சிறுவன் தியோ ஆழிசை தூக்கில் தொங்கியவாறு இருந்தான்.</p><p>இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், சிறுவனை மீட்டு மரக்காணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே தியோ ஆழிசை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.</p>  <h2>போலீசார் விசாரணை</h2><p>இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாமல் சிறுவன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.</p>]]></content:encoded></item><item><title>8 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது; வெளியுறவுச் செயலர் இலங்கை அரசிடம் பேசமாட்டாரா? - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/8-rameswaram-fishermen-arrested-wont-the-foreign-secretary-speak-to-the-sri-lankan-government-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/8-rameswaram-fishermen-arrested-wont-the-foreign-secretary-speak-to-the-sri-lankan-government-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">e64557f9-8f54-48e2-8a75-c1d0a4720e4d</guid><pubDate>Thu, 06 Aug 2026 03:53:38 +0000</pubDate><atom:updated>2026-08-06T03:53:38.598Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,Sri Lanka,இலங்கை,மாணிக்கம் தாகூர்,Rameswaram fishermen,ராமேஸ்வரம் மீனவர்கள்,Manickam Tagore MP,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/fb6rii1y/manickam-tagore.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/fb6rii1y/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மோடி அரசுக்குத், தமிழ்நாட்டு மக்களின் நலன் மீதும் மீனவர்களின் வாழ்வாதாரம் மீதும் துளியளவும் அக்கறையில்லை என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- </p><h2>மீனவர்கள் கைது</h2><p>8 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது! படகுகளும் பறிமுதல்!.. இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி கொழும்புவில் இருக்கும்போதே இந்த அத்துமீறல் நடந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்பது குறித்து வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி இலங்கை அரசிடம் பேசமாட்டாரா?</p><p>2023 முதல் இதுவரை 1,306 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 179 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் மாநிலங்களவையிலேயே பிரவீன் சக்ரவர்த்தியின் கேள்விக்கு பதிலளித்த ஒப்புக்கொண்டுவிட்டுப் பொறுப்பிலிருந்து நழுவும் மோடி அரசுக்குத், தமிழ்நாட்டு மக்களின் நலன் மீதும் மீனவர்களின் வாழ்வாதாரம் மீதும் துளியளவும் அக்கறையில்லை என்பது மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது!</p><h2>கவன ஈர்ப்புத் தீர்மான</h2><p>இலங்கையின் இந்தத் தொடர் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அத்துமீறலுக்கு </a>முற்றுப்புள்ளி வைக்கவும், சிறைபிடிக்கப்பட்ட அனைவரையும் அவர்களின் படகுகளுடன் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் பாராளுமன்றத்தில் இன்று (06.08.2026)  கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்துள்ளேன்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கபட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பயணச்சீட்டில் எழுத்துகள் அழிவதால் தொடரும் அவலம்; டிக்கெட் இருந்தும் ரூ.510 அபராதம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-ongoing-ordeal-caused-by-fading-text-on-travel-tickets-a-510-fine-despite-holding-a-ticket</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-ongoing-ordeal-caused-by-fading-text-on-travel-tickets-a-510-fine-despite-holding-a-ticket#comments</comments><guid isPermaLink="false">afbeae8b-1f85-419d-8dbe-5766bd5bca35</guid><pubDate>Thu, 06 Aug 2026 03:32:11 +0000</pubDate><atom:updated>2026-08-06T03:32:11.068Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,ரெயில் டிக்கெட்,Southern Railway,ரெயில்,Railway,பட்டாபிராம்,Pattabiram,Rail ticket,பயணச்சீட்டு,ரெயில் டிக்கெட்டுகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/pwqikbuh/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/pwqikbuh/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பட்டாபிராம் ரெயில் நிலையத்தில் வாங்கிய மாதாந்திர பயணச்சீட்டில் அச்சிடப்பட்டிருந்த விவரங்கள் சில நாட்களில் அழிந்துவிட்டதால், கல்லூரி மாணவிக்கு டிக்கெட் பரிசோதகர் ரூ.510 அபராதம் விதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் ரெயில்வேயின் பயணச்சீட்டு அச்சிடும் முறையை கேள்விக்குறியாக்கியுள்ளது.</p><h2>மாணவிக்கு அபராதம்</h2><p>பட்டாபிராம் உழைப்பாளர் நகரைச் சேர்ந்த வினோத் கிறிஸ்டோபரின் மகள், சென்னையில் உள்ள கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். அவர் வழக்கம்போல் மின்சார ரெயிலில் கல்லூரிக்கு சென்று, சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இறங்கியபோது டிக்கெட் பரிசோதகர்கள் மாதாந்திர பயணச்சீட்டை சோதனை செய்தனர்.</p><p>அப்போது, பயணச்சீட்டில் எண்ணைத் தவிர மற்ற விவரங்கள் அனைத்தும் அழிந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மாணவி விளக்கம் அளித்தும், அதனை ஏற்காத டிக்கெட் பரிசோதகர்கள் ரூ.510 அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது.</p><h2>மன உளைச்சலுக்கு ஆளான மாணவி</h2><p>திடீர் நடவடிக்கையால் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பதற்றமடைந்த </a>மாணவி, தனது தந்தை வினோத் கிறிஸ்டோபருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, அவர் ஜி-பே மூலம் அபராதத் தொகையை செலுத்தினார். இந்தச் சம்பவத்தால் மாணவி மன உளைச்சலுக்கு ஆளானதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.</p><h2>புகார் அளிக்க சென்ற தந்தை</h2><p>அபராதம் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வினோத் கிறிஸ்டோபர் பட்டாபிராம் ரெயில் நிலைய டிக்கெட் கவுன்டரில் புகார் அளிக்கச் சென்றார். ஆனால், அங்கிருந்த ஊழியர்கள் உரிய பதில் அளிக்கவில்லை என்றும், புகார் புத்தகத்தை கேட்டபோது ஒருவரிடமிருந்து மற்றொருவரிடம் அனுப்பி அலைக்கழித்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.</p><h2>மற்ற பயணிகளுக்கும் அதே பாதிப்பு</h2><p>அதே நேரத்தில், மேலும் சில பயணிகளும் தங்களது மாதாந்திர பயணச்சீட்டுகளில் அச்சிடப்பட்ட தகவல்கள் அழிந்துவிட்டதாக புகார் தெரிவித்தனர். செல்லுபடியாகும் பயணச்சீட்டு இருந்தும் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.</p><h2>அச்சு தரம் குறித்து கேள்வி</h2><p>ரெயில்வே நிலையங்களில் தற்போது பயன்படுத்தப்படும் தெர்மல் காகிதங்களில் அச்சிடப்படும் பயணச்சீட்டுகளின் எழுத்துகள் சில நாட்களிலேயே அழிந்துவிடுவதாகவும், அச்சு இயந்திரங்களின் பராமரிப்பு குறைபாடுகள் அல்லது கார்பன் ரிப்பன் தொடர்பான சிக்கல்களும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.</p><h2>நடவடிக்கை எடுக்க கோரிக்கை</h2><p>பயணிகளின் தவறு இல்லாத நிலையில் அபராதம் விதிக்கப்படுவது <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தவிர்க்கப்பட </a>வேண்டும் என்றும், பயணச்சீட்டு அச்சிடும் முறையில் உள்ள குறைபாடுகளை ரெயில்வே நிர்வாகம் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குவதுடன், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சிறையில் அடைத்தாலும் பரவாயில்லை; டிசம்பரில் வங்காளதேசம் செல்வேன் - ஷேக் ஹசீனா உறுதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-dont-mind-being-imprisoned-i-will-go-to-bangladesh-in-december-sheikh-hasina-asserts</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-dont-mind-being-imprisoned-i-will-go-to-bangladesh-in-december-sheikh-hasina-asserts#comments</comments><guid isPermaLink="false">5139cb93-1e92-4e72-b815-43bf94f62456</guid><pubDate>Thu, 06 Aug 2026 03:30:41 +0000</pubDate><atom:updated>2026-08-06T03:30:41.953Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Bangladesh,வங்காளதேசம்,ஷேக் ஹசீனா,Sheikh Hasina</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/dc3j5h56/National-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/dc3j5h56/National-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><p>வங்காள தேசத்தில் 2024-ம் ஆண்டு வெடித்த மாணவர் புரட்சி காரணமாக, அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, அவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அதன்பிறகு அமைந்த முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு மற்றும் தற்போதைய தாரிக் ரஹ்மான் தலைமையிலான அரசும், ஷேக் ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்குமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன.</p><p>இந்நிலையில், தனது நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பதவியில் இருந்து நீக்கப்பட்ட வங்காள தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, டிசம்பர் மாதம் தனது மூத்த கட்சியினருடன் நாடு திரும்பி அந்நாட்டில் உள்ள கோர்ட்டில் சரணடையத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக மாணவர்கள் தலைமையிலான போராட்டங்கள் மீது கொடூரமான அடக்கு முறையை நடத்த உத்தரவிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்காக, வங்காளதேச கோர்ட்டில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.</p> <p>இந்த நிலையில், வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, டிசம்பர் மாதம் தாயகம் திரும்ப இருப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தன்னை சிறையில் அடைத்தாலும் பரவாவில்லை என்றும் சிறை தண்டனை அல்லது மரண தண்டனையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும், ஜனநாயகம் மற்றும் நீதியை நிலைநாட்டவே திரும்புவதாகவும் அவர் கூறினார்.</p><p>வங்காளதேசத்தில் தற்போது சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அவரது மகன் சாஜிப் வாசித் ஜாய் குற்றம் சாட்டியுள்ளார். இந்த போராட்டங்கள் அமைதியான மாணவர் இயக்கம் அல்ல என்றும், திட்டமிட்ட வன்முறை என்றும் ஹசீனா தெரிவித்தார். வங்காளதேச நிலைமை கவலையளிப்பதாகவும், சர்வதேச சமூகம் உதவ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>9-ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/abduction-and-sexual-assault-of-a-9th-grade-student-youth-sentenced-to-20-years-in-prison</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/abduction-and-sexual-assault-of-a-9th-grade-student-youth-sentenced-to-20-years-in-prison#comments</comments><guid isPermaLink="false">4e0ae9a4-4161-4c31-b717-228638c75228</guid><pubDate>Thu, 06 Aug 2026 03:19:45 +0000</pubDate><atom:updated>2026-08-06T03:19:45.676Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறை தண்டனை,Prison sentence,போக்சோ சட்டம்,POCSO act</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/y1rew9n7/9.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/y1rew9n7/9.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி, </p><p>திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பகுதியை சேர்ந்த 14 வயதுடைய 9-ம்வகுப்பு மாணவி கடந்த 7-4-2022 அன்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் இதுபற்றி அவருடைய பெற்றோர் துவரங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் சிறுமி மாயம் என்ற பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சிறுமியை தேடிவந்தனர். விசாரணையில் அந்த சிறுமியை மருங்காபுரி தாலுகா கஞ்சநாயக்கன் பட்டி, செட்டியபட்டி, கோவில்பாறைக்களம் பகுதியை சேர்ந்த துரை என்பவரின் மகன் சின்னையா (வயது 21), கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.</p><h2>20 ஆண்டுகள் சிறை</h2><p>அத்துடன் சின்னையா ஏற்கனவே மற்றொரு போக்சோ வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ளதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சிறுமி மாயம் என்ற வழக்கை மாற்றி, சின்னையா மீது போக்சோ சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு திருச்சி மகிளா கோர்ட்டில் நீதிபதி சண்முகபிரியா முன்னிலையில் நடந்து வந்தது. போலீசார் தரப்பில் அரசு வக்கீல் சுமதி ஆஜரானார். இந்த வழக்கில் சாட்சி விசாரணைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட சின்னையாவுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>குமரி: ஒரே கல்லில் உருவான 11 அடி உயர கிருஷ்ணர் சிலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/an-11-foot-tall-statue-of-lord-krishna-carved-from-a-single-stone</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/an-11-foot-tall-statue-of-lord-krishna-carved-from-a-single-stone#comments</comments><guid isPermaLink="false">b403b984-9ac4-4a9e-a209-23a5d0ed9656</guid><pubDate>Thu, 06 Aug 2026 03:07:18 +0000</pubDate><atom:updated>2026-08-06T03:07:18.486Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,Kanyakumari,கிருஷ்ணர் சிலை,Krishna statue</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/qn5ldgsp/8.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/qn5ldgsp/8.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி,</p><p>15 டன் எடையில் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட 11 அடி உயர கிருஷ்ணர் சிலை குமரியில் இருந்து லாரி மூலம் நெல்லைக்கு அனுப்பி வைக் கப்பட்டது.</p><h2>கிருஷ்ணர் சிலை</h2><p>குமரி மாவட்டம் மயிலாடியில் ஏராளமான சிற்பக்கூடங்கள் உள்ளன. இங் குள்ள சிற்பக்கூடத்தில் இருந்து ஏராளமான சாமிசிலைகள் செய்யப்பட்டு உள்நாடு மற்றும் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மயிலாடி சிற்பம் புவிசார் குறியீடு பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் மயி லாடி சேந்தன்புதூர் பகுதியை சேர்ந்த சிற்பி சுப்பிரமணியன் ஆசாரியின் சிற்பக்கூடத்தில் 15 டன் எடையுள்ள ஒரே கல்லில் கிருஷ்ணர் சிலை வடி வமைக்கப்பட்டுள்ளது. இது 11 அடி உயரமும், 32 அடி அகலத்தில் கிருஷ்ணர் சிலையை த்ரூபமாக கடந்த 8 மாதங்களாக தொழிலாளர்கள் வடிவமைத்தனர். </p><h2>புதிய கோவிலுக்கு... </h2><p>திருநெல்வேலி டவுனில் புதியதாக கட்டப்பட உள்ள கிருஷ்ணசாமி கோவிலுக்கு அனுப்புவதற்காக இந்த சிலை வடிவமைக்கப்பட்டது. அந்த கோவிலில் இந்த சிலை நிறுவப்பட உள்ளது. அதன்படி கிருஷ்ணர் சிலையை நெல்லைக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.</p><p>அதன்படி மயிலாடியில் சிற்ப கலைஞர்கள் சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் 10 சக்கரம் கொண்ட கனரக லாரியில் சிலையை கிரேன் மூலம் ஏற்றி நெல்லைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சாமி சிலையை காண அங்கு ஏராளமான பக்தர்கள் திரண்டு பார்வையிட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>கச்சத்தீவு அருகே 8 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sri-lankan-navy-arrests-8-tamil-nadu-fishermen-near-katchatheevu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sri-lankan-navy-arrests-8-tamil-nadu-fishermen-near-katchatheevu#comments</comments><guid isPermaLink="false">14f18112-aba0-41e8-8697-0e8bd056fb45</guid><pubDate>Thu, 06 Aug 2026 03:00:56 +0000</pubDate><atom:updated>2026-08-06T03:00:56.053Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,தமிழக மீனவர்கள்,இலங்கை கடற்படை,fishermen,கைது,arrest,Sri Lanka</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/wlv9mlhf/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/wlv9mlhf/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமநாதபுரம்,</p><p>எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், அவர்களின் படகுகள் மற்றும் உடைமைகளை சேதப்படுத்துவதுமான சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இதை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். </p><p>இந்த நிலையில், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டை பெற்று சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அந்த பகுதியில் ரோந்து சென்ற இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்து, அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். </p><p>அந்த மீனவர்கள் எல்லை தாண்டி சென்றதாக கூறப்படும் நிலையில், அவர்களிடம் இலங்கை கடற்படையினர் நடத்திய விசாரணையில், தங்களின் படகு சேதமடைந்ததால் எல்லை தாண்டி வந்தோம் என்று அவர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், கைது செய்யப்பட்ட 8 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் இலங்கைக்கு அழைத்துச் சென்று அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>திண்டுக்கல்: கிராமத்துக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்திய காட்டெருமை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dindigul-indian-bison-enters-village-and-terrorizes-residents</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dindigul-indian-bison-enters-village-and-terrorizes-residents#comments</comments><guid isPermaLink="false">8f5f709a-63ea-456a-9713-f04b22a8d7e0</guid><pubDate>Thu, 06 Aug 2026 02:52:45 +0000</pubDate><atom:updated>2026-08-06T02:52:45.935Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Dindigul,திண்டுக்கல்,காட்டெருமை</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/8lb2wf0c/7.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/8lb2wf0c/7.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல், </p><p>கொடைக்கானல் கீழ்மலையில் உள்ள மங்களம்கொம்பு, தாண்டிக்குடி. பெரும்பாறை, கானல்காடு, கே.சி.பட்டி, குப்பம்மாள்பட்டி உள்ளிட்ட மலைக் கிராமங்களில் காட்டு யானை, காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குக ளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. தற்போது வெயில் வாட்டி வதைப்பதால் இரை மற்றும் தண்ணீர் தேடி மலைக்கிராமங்களுக்குள் வனவிலங்கு கள் புகுந்து மக்களை பீதியடைய செய்து வருகின்றன.</p><p>இந்தநிலையில் பெரும்பாறை அருகே உள்ள மஞ்சள்பரப்பு கிராமத்துக்குள் நேற்று கம்பீர தோற்றத்துடன் காட்டெருமை ஒன்று உலா வந்தது. அந்த காட்டெருமை மஞ்சள்பரப்பில் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார், மோட்டார் சைக்கிள்களை உரசிக்கொண்டு சென்றது. இதனை பார்த்ததும் கிராம மக்கள் அச்சம் அடைந்ததுடன், பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தஞ்சம் அடைந்தனர். </p><p>காட்டெருமையை கண்ட இளைஞர்கள் சிலர் ஆபத்தை உணராமல் அதன் அருகே சென்று தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். சுமார் 1 மணி நேரமாக கிராமத் தில் உலா வந்த காட்டெருமை, அதன்பிறகு வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.</p>]]></content:encoded></item><item><title>சுதந்திர தின விழா ஒத்திகை: சென்னையில் மூன்று நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/independence-day-rehearsal-traffic-diversions-in-chennai-for-three-days</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/independence-day-rehearsal-traffic-diversions-in-chennai-for-three-days#comments</comments><guid isPermaLink="false">9917ae26-b5e0-4ab1-bb33-bb78617b707b</guid><pubDate>Thu, 06 Aug 2026 02:17:33 +0000</pubDate><atom:updated>2026-08-06T02:17:33.812Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,போக்குவரத்து,மெரினா,போக்குவரத்து மாற்றம்,Chennai Beach,போக்குவரத்து துறை,சுதந்திர தின விழா,traffic diversion,Traffic diversions,சென்னை கோட்டை,Chennai Fort</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/6u5iuv2r/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/6u5iuv2r/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை கோட்டையில் சுதந்திர தினவிழா, வரும் 15ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, நாளை, 11, 13 ஆகிய மூன்று நாட்கள், ஒத்திகை நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதற்காக இந்நாட்களில் காலை 6 மணி முதல் ஒத்திகை முடியும் வரை, மெரினாவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.</p><h2>போக்குவரத்து மாற்றம்</h2><p>இது தொடர்பாக காவல்துறை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வெளியிட்டுள்ள </a>அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>உழைப்பாளர் சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரையிலான காமராஜர் சாலை, போர் நினைவுச் சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரையிலான ராஜாஜி சாலைகளில் அனுமதி அட்டை பெற்றிருப்போர் தவிர, மற்ற வாகனங்களுக்கு அனுமதி இல்லை</p><p>காமராஜர் சாலை - ராஜாஜி சாலை வழியாக பாரிமுனை நோக்கி செல்லும் வாகனங்கள், உழைப்பாளர் சிலையிலிருந்து வாலாஜா சாலை - அண்ணா சாலை - முத்துசாமி பாலம் - முத்துசாமி சாலை வழியாக பாரிமுனை செல்லலாம்</p><p>பாரிமுனையிலிருந்து, தலைமைச் செயலகம் வழியாக காமராஜர் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும், வடக்கு கோட்டை பக்க சாலை - ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு - முத்துசாமி சாலை - முத்துசாமி பாலம் - அண்ணா சாலை - வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலை செல்லலாம்.</p><h2>அனுமதி அட்டை</h2><p>சிவப்பு மற்றும் ஊதா வண்ண வாகன அனுமதி அட்டை வைத்திருப்போர், காலை, 8:30 மணி வரை ராஜாஜி சாலை வழியாக சென்று தலைமைச் செயலக உள்வாயிலின் அருகே இறங்கி, வாகனத்தை கோட்டை வளாகத்தில் நிறுத்த வேண்டும்</p><p>சிவப்பு மற்றும் ஊதா வண்ண வாகன அனுமதி அட்டை வைத்திருப்போர், காலை 8:30 மணிக்கு பின் வந்தால், போர் நினைவுச்சின்னம் - கொடிமரச்சாலை - முத்துசாமி பாலம் - வடக்கு கோட்டை பக்க சாலை - ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக தலைமைச் செயலக வெளிவாயிலின் அருகே இறங்கி, பொதுப்பணித் துறை வாகன நிறுத்தத்தில், வாகனங்களை நிறுத்த வேண்டும்</p><p>நீல மற்றும் இளஞ்சிவப்பு வண்ண அனுமதி அட்டை வைத்திருப்போர், காலை 8:30 மணி வரை ராஜாஜி சாலை - போர்நினைவுச்சின்னம் கொடிமரச்சாலை - முத்துசாமி சாலை - வடக்கு கோட்டை பக்க சாலை - ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக தலைமைச் செயலக வெளி வாயிலின் அருகே இறங்கிக் கொள்ள வேண்டும். பின், பொதுப்பணித்துறை அலுவலக வாகன நிறுத்தத்தில் வாகனத்தை நிறுத்த வேண்டும்.</p><p>நீல மற்றும் இளஞ்சிவப்பு வண்ண அனுமதி அட்டை வைத்திருப்போர், காலை 8:30 மணிக்கு பின் வந்தால், காமராஜர் சாலை - வாலாஜா சாலை - அண்ணாசாலை - முத்து சாமி பாலம் - வடக்கு கோட்டை பக்க சாலை - ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக தலைமைச் செயலக வெளிவாயிலின் அருகே இறங்கிக் கொள்ள வேண்டும். பின் வாகனத்தை பொதுப்பணித்துறை வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும்</p><p>அனுமதி அட்டை இல்லாத வாகனங்களில் வருவோர், போர் நினைவுச் சின்னம் அருகில் இறங்கி, வாகனங்களை தீவுத்திடல் உள்ளே நிறுத்த வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகம் வருகிறார் அமித்ஷா:  திருவண்ணாமலை கோவிலில் தரிசனம் செய்கிறார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/amit-shah-visits-tamil-nadu-to-offer-prayers-at-the-tiruvannamalai-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/amit-shah-visits-tamil-nadu-to-offer-prayers-at-the-tiruvannamalai-temple#comments</comments><guid isPermaLink="false">7d7b56e6-8926-4661-9b33-f89f0d5105bd</guid><pubDate>Thu, 06 Aug 2026 02:08:41 +0000</pubDate><atom:updated>2026-08-06T02:08:41.344Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>அமித்ஷா,Amit Shah,திருவண்ணாமலை,Tiruvannamalai</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/dq0acyp4/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/dq0acyp4/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>புதுச்சேரி, </p><p>மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரி வருகிறார்.</p><p>புதுச்சேரி போலீஸ் துறைக்கு, ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த விருதினை வழங்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாளை மறுநாள் புதுச்சேரி வருகிறார். இதற்காக, டெல்லியில் இருந்து சென்னை விமான நிலையம் வரும் அவர், ஹெலிகாப்டர் வாயிலாக அன்று மாலை, 4:55 மணிக்கு புதுச்சேரி செல்கிறார்.</p><p>புதுச்சேரி கடற்கரையையொட்டி உள்ள நீதிபதிகள் விருந்தினர் மாளிகையில் அன்று இரவு தங்குகிறார். அதன்பின், 9ம் தேதி காலை, 8:10 மணிக்கு புதுச்சேரி கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நடக்கும் விழாவில், போலீசாருக்கு ஜனாதிபதி விருதை அமித் ஷா வழங்குகிறார்.</p><p>அந்த விழாவிற்கு பின், காலை  10:50 மணிக்கு ஹெலிகாப்டர் வாயிலாக திருவண்ணாமலை சென்று, கோவிலில் தரிசனம் செய்கிறார். ரமணர் ஆசிரமத்துக்கும் செல்கிறார். பின், அங்கிருந்து ஹெலிகாப்டரில் சென்னை வந்து, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.</p>]]></content:encoded></item><item><title>மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை குறைக்கப்பட்டுள்ளதா? - அரசு விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/has-the-relief-amount-for-the-fishing-ban-period-been-reduced-government-clarification</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/has-the-relief-amount-for-the-fishing-ban-period-been-reduced-government-clarification#comments</comments><guid isPermaLink="false">914916d8-43c3-43ad-8164-c17d23398480</guid><pubDate>Thu, 06 Aug 2026 02:04:04 +0000</pubDate><atom:updated>2026-08-06T02:04:04.391Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,மீன்வளத்துறை,Fact Check Unit,Fact check,தமிழக அரசு விளக்கம்,அரசு விளக்கம்,தகவல் சரிபார்ப்பகம்,TN Fact Check,தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம்,தகவல் நம்பகத்தன்மை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/vcz5sceu/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/vcz5sceu/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை குறைக்கப்பட்டுள்ளதாக பரப்பப்படும் தவறான தகவல் பரவி வருவதாக தகவல் நம்பகத்தன்மை பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அப்பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p><strong>பரவும் செய்தி!</strong></p><p>ஏற்கனவே ரூ.8,000-ஆக உள்ள மீன்பிடி <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தடைக்கால </a>நிவாரணம், ரூ.7,000-ஆக தமிழ்நாடு அரசு குறைத்திருப்பதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவி வருகிறது.</p><p><strong>உண்மை என்ன?</strong></p><p><strong>இது முற்றிலும் தவறான தகவல்.</strong></p><p>மீனவர்களுக்கான மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை (Ban Period Assistance) ரூ.8,000 தொடர்ந்து தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. </p><p>2026 - 2027 பட்ஜெட்டில் வடகிழக்கு பருவமழை காலங்களில்  மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் சிறப்பு உதவித் தொகை (Lean Period Fishing Assistance) ரூ.6,000-லிருந்து ரூ.7,000-ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><strong>தவறான தகவலைப் பரப்பாதீர்!</strong></p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>குற்றாலத்தில் சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்க மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-high-court-branch-order-to-set-up-a-special-monitoring-team-at-the-court</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-high-court-branch-order-to-set-up-a-special-monitoring-team-at-the-court#comments</comments><guid isPermaLink="false">12a7fbdd-b5aa-401c-b662-0477ea758d0c</guid><pubDate>Thu, 06 Aug 2026 02:01:13 +0000</pubDate><atom:updated>2026-08-06T02:01:13.380Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai High Court Branch,மதுரை ஐகோர்ட்டு கிளை,குற்றாலம்,Courtallam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/nrgd0e95/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/nrgd0e95/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவிகளில் குளிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது மழையின் தாக்கம் குறைந்து, நீர்வரத்து சீரான நிலைக்கு வந்துள்ளது.</p><p>குற்றாலத்தின் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளம் குறைந்ததை அடுத்து, சுற்றுலா பயணிகள் குளிக்க முழு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் புலி அருவி மற்றும் சிற்றருவியில் பாதுகாப்பான அளவில் தண்ணீர் கொட்டுவதால் பொதுமக்கள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்கின்றனர்.</p> <p>இந்த நிலையில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய உத்தரவிடக்கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு கண்காணிப்பு அமைக்க உத்தரவிட்டுள்ளது.</p><p>அதோட், ‘நந்தவன திட்டம்’ குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், குற்றாலத்தில் உள்ள கடைகளில் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றால அருவி பகுதிகளில் 72 கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>திருத்தணி முருகன் கோவில் ஆடி கிருத்திகை விழா; திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/local-holiday-declared-in-thiruvallur-district-for-aadi-kiruththigai-at-thiruththani-murugan-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/local-holiday-declared-in-thiruvallur-district-for-aadi-kiruththigai-at-thiruththani-murugan-temple#comments</comments><guid isPermaLink="false">284dfab9-f32e-4ba6-8e7b-c0a0ec703a06</guid><pubDate>Thu, 06 Aug 2026 01:49:57 +0000</pubDate><atom:updated>2026-08-06T01:49:57.499Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Local Holiday,திருத்தணி முருகன் கோவில்,உள்ளூர் விடுமுறை,Tiruthani Murugan Temple</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/2958gddz/lcatft.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/2958gddz/lcatft.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>திருவள்ளூர்</p><p>திருத்தணி முருகன் கோவில் ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.</p>  <h2>ஆடி கிருத்திகை திருவிழா</h2><p>திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான முருகன் கோவில் உள்ளது.  இந்த கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா இன்று வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.  இதனை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என கலெக்டர் கவிதா அறிவித்து உள்ளார்.</p>  <h2>உள்ளூர் விடுமுறை</h2><p>இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் வராது என்பதால் இந்த மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சார் நிலை கருவூலங்களும், பாதுகாப்பான அரசு அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு இன்று (6-ந்தேதியன்று) செயல்பட வேண்டும். இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் பொருட்டு நாளை மறுநாள் (8-ந்தேதி) சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.</p><p>எனவே இந்த உள்ளூர் விடுமுறையானது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்து கொண்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/gradual-rise-in-mettur-dams-water-level</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/gradual-rise-in-mettur-dams-water-level#comments</comments><guid isPermaLink="false">fd5b6a8d-c483-4a41-b833-6c83fcc8e4d6</guid><pubDate>Thu, 06 Aug 2026 01:47:29 +0000</pubDate><atom:updated>2026-08-06T01:47:29.254Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur dam,கபினி அணை,Kabini Dam</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/0fvzg4zk/4.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/0fvzg4zk/4.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம், </p><p>கர்நாடகா மற்றும் கேரளம் மாநிலங்களில் மழை தீவிரமடைந்ததன் காரண மாக கபினி அணையில் இருந்து கடந்த 1-ந் தேதி வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இவ்வாறு திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் இரவு மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதன் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்துள்ளது. அதாவது நேற்று முன்தினம் காலை 73.02 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 74.01 அடி யாக உயர்ந்தது.</p><p>74.55 அடியாக உயர்வு</p><p>அணைக்கு காலையில் வினாடிக்கு 11 ஆயிரத்து 988 கனஅடி வீதம் தண் ணீர் வந்து கொண்டிருந்தது. பின்னர் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து மாலை 4 மணிக்கு வினாடிக்கு 18 ஆயிரத்து 905 கனஅடியாக இருந்தது. இதன் எதிரொலியாக மாலை 4 மணி நிலவரப்படி 74.55 அடியாக நீர்மட்டம் உயர்ந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் அணை நீர்மட்டம் மீண்டும் படிப்படியாக உயரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரெயில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-tambaram-and-nellai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-tambaram-and-nellai#comments</comments><guid isPermaLink="false">a58e3e9c-b5d5-4826-8f5d-97a8dd2c2e16</guid><pubDate>Thu, 06 Aug 2026 01:28:08 +0000</pubDate><atom:updated>2026-08-06T01:28:08.944Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,சிறப்பு ரெயில்,Special train</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/guxviw0o/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/guxviw0o/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;</p><p>இதேபோல் பயணிகளின் வசதிக்காக திருச்சி வழியாக தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி, நெல்லையில் இருந்து வருகிற 13, 20, 27 ஆகிய தேதிகளில் இரவு 11.35 மணி அளவில் தாம்பரத்திற்கு வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-06070) இயக்கப்படுகிறது. </p><p>அதே போல, தாம்பரத்தில் இருந்து வருகிற 14, 21, 28 ஆகிய தேதிகளில் மதியம் 1.55 மணிக்கு நெல்லைக்கு வாராந்திர சிறப்பு ரெயில் (06069) இயக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழக சட்டசபையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/agriculture-budget-to-be-presented-in-the-tamil-nadu-legislative-assembly-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/agriculture-budget-to-be-presented-in-the-tamil-nadu-legislative-assembly-today#comments</comments><guid isPermaLink="false">648a861c-1e59-4639-b323-a25d2057cb1a</guid><pubDate>Thu, 06 Aug 2026 01:19:20 +0000</pubDate><atom:updated>2026-08-06T01:19:20.760Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,Tamil Nadu Legislative Assembly,வேளாண் பட்ஜெட்,agriculture budget</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/12kowm2e/1.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/12kowm2e/1.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக சட்டசபையில் இன்று (வியாழக்கிழமை) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. </p><h2>வேளாண் பட்ஜெட்</h2><p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. </p><p>இந்த நிலையில், இன்று தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. காலை 9.30 மணிக்கு தொடங்கும் கூட்டத்தில், வேளாண் துறை அமைச்சர் ஆர்.வினோத், 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். </p><h2>வேளாண் துறைக்கு ரூ.14,984 கோடி ஒதுக்கீடு</h2><p>நேற்றைய பொது பட்ஜெட்டில் வேளாண் மற்றும் உழவர் நலத் துறைக் ரூ.14,984 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>நாளை (7-ந் தேதி) முதல் 3 நாட்கள் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுகிறது. வரும் 12-ந் தேதி பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண் துறை அமைச்சர் வினோத் ஆகியோர் பேச இருக்கின்றனர். </p><h2>பரபரப்புக்கு பஞ்சமிருக்காது</h2><p>அதனைத் தொடர்ந்து, வரும் 17-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதம் செப்டம்பர் 8-ந் தேதி நிறைவடைகிறது. </p><p>இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளனர். எனவே, இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது என்றே தெரிகிறது. </p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்று மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/electricity-consumer-grievance-redressal-meeting-in-chennai-today-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/electricity-consumer-grievance-redressal-meeting-in-chennai-today-2#comments</comments><guid isPermaLink="false">376b5561-85bd-4ff8-9af2-a81c12982df8</guid><pubDate>Thu, 06 Aug 2026 01:03:20 +0000</pubDate><atom:updated>2026-08-06T01:03:20.286Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/tleehtmy/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/tleehtmy/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;</p><p>அடையாறு கோட்டத்தில் வரும் ஆகஸ்ட் 06 (இன்று) ஆம் தேதி மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்</p><p>அடையாறு கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 06.08.2026 (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு செயற் பொறியாளர்/இ-ப/அடையாறு, தரைதளம், 110/33-11 கி.வோ, வேளச்சேரி துணை மின் நிலைய வளாகம், வேளச்சேரி மெயின் ரோடு, வேளச்சேரி, சென்னை-42 அமைந்துள்ள விலாசத்தில் நடைபெற உள்ளது.</p><p>பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் மின்சாரத் துறை சார்ந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">குறைகளை </a>தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என மேற்பார்வை பொறியாளர்/ சென்னை மின்பகிர்மான வட்டம்/ அடையாறு (தெற்கு-II) கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மின்சார வாகனங்கள் பதிவில் தமிழகத்துக்கு 4-வது இடம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-ranks-4th-in-electric-vehicle-registrations</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-ranks-4th-in-electric-vehicle-registrations#comments</comments><guid isPermaLink="false">5924ff2a-7ee9-419c-bc0e-c7827d8184cb</guid><pubDate>Wed, 05 Aug 2026 22:44:16 +0000</pubDate><atom:updated>2026-08-05T22:44:16.592Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழ்நாடு,Electric Vehicles,மின்சார வாகனங்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/8tlvz33e/10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/8tlvz33e/10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாடு தழுவிய அளவில் கடந்த ஜூலை மாதம் அதிக மின்சார வாகனங்கள் பதிவாகியதில் தமிழகம் 4-வது இடத்தை பிடித்துள்ளது.</p><h2>மின்சார வாகனங்கள்</h2><p>சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய-மாநில அரசுகள் பல்வேறு சலுகைகள், ஊக் கத் தொகைகளை அளித்து வருகின்றன. இதனால் பதிவு செய்யப்படும் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. பிரதான சாலைகளில் பச்சை நிற ‘நம்பர் பிளேட்’ உடன் சத்தமே இல்லா மல் சீறிப்பாய்ந்து செல்லும் மின்சார வாகனங்களை இப்போது பரவலாக பார்க்க முடிகிறது.</p><p>கடந்த ஜூலை மாதம் நாடு முழுவதும் 3 லட்சத்து 7 ஆயிரத்து 752 மின் சார வாகனங்கள் பதிவாகியுள்ளன. இதில், அதிகபட்சமாக உத்தரபிரதே சத்தில் 47 ஆயிரத்து 62 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக மராட்டியத்தில் 36 ஆயிரத்து 642, கர்நாடகாவில் 29 ஆயி ரத்து 183, தமிழகத்தில் 29 ஆயிரத்து 34, மத்தியபிரதேசத்தில் 19 ஆயி ரத்து 133, ராஜஸ்தானில் 17 ஆயிரத்து 79, பீகாரில் 16 ஆயிரத்து 80, மேற்கு வங்காளத்தில் 15 ஆயிரத்து 569, கேரளாவில் 13 ஆயிரத்து 671, குஜராத்தில் 13 ஆயிரத்து 443 வாகனங்கள் பதிவாகியிருக்கின்றன.</p><h2>4-வது இடம்</h2><p>மின்சார வாகனங்களின் பயன்பாட்டினை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு-தனியார் கூட்டாண்மையில் அடுத்த 5 ஆண்டுகளில் மின்சார வாகனங்களுக்கான 20 ஆயிரம் பொது சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும், இதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ.50 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதேபோல அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்கங்களின் மூலம் குடியிருப்புகளில் அமைக்கப்படும் மின் வாகன சார்ஜிங் நிலையங்களுக்கு அரசு மானியம் வழங்கும் என்றும் அறிவித்துள்ளதோடு, இதற்காக ரூ.5 கோடியும் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.</p><p>கடந்த மாதம் அதிக மின்சார வாகனங்கள் பதிவாகிய முதல் 10 மாநிலங் களில் 3-வது இடத்தில் உள்ள கர்நாடகத்துக்கும், 4-வது இடத்தில் உள்ள தமிழகத்துக்கும் இடையேயான வித்தியாசம் 149 மட்டும்தான். முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளால் மின்சார வாகனங்கள் பதிவாகியதில் தமிழகம் அடுத்தடுத்து முன்னேறி செல்லும் என்று மின்சார வாகன தொழில் நிபுணர்கள் நம் பிக்கை தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>கொளத்தூர் தொகுதி  வாக்குப்பதிவு இயந்திரங்களில் நடைபெற்ற ஆய்வு நிறைவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/inspection-of-kolathur-constituency-voting-machines-completed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/inspection-of-kolathur-constituency-voting-machines-completed#comments</comments><guid isPermaLink="false">50fc812c-a5be-4b06-9bee-31552d30db73</guid><pubDate>Wed, 05 Aug 2026 17:17:54 +0000</pubDate><atom:updated>2026-08-05T17:17:54.782Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,ஆய்வு,கொளத்தூர்,Kolathur,வாக்குப்பதிவு இயந்திரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/znju822k/194.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வாக்குப்பதிவு இயந்திரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/znju822k/194.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கொளத்தூர் தொகுதி  வாக்குப்பதிவு இயந்திரங்களில் நடைபெற்ற ஆய்வு இன்று நிறைவடைந்தது.</p><h2>மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்</h2><p>2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 14 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) Burnt Memory/Microcontroller-ஐ ஆய்வு செய்து சரிபார்க்கக் கோரி, அத்தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் மு.க. ஸ்டாலின் விண்ணப்பித்திருந்தார்.</p><p>இதையடுத்து, இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த EVM மற்றும் VVPAT இயந்திரங்கள் கடந்த மாதம் 29-ஆம் தேதி திறக்கப்பட்டு, விண்ணப்பதாரர் மற்றும் பிற வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டது.</p><p>பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவன பொறியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், மாதிரி வாக்குப்பதிவு மற்றும் VVPAT சீட்டுகள் சரிபார்க்கப்பட்டதில் எந்தவித முரண்பாடும் இல்லை என்றும், அனைத்து EVM-களும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">தேர்தல் ஆணையத்தின்</a> விதிமுறைகளின்படி முறையாக செயல்பட்டன என்றும் சான்றளிக்கப்பட்டது. இந்த ஆய்வு மற்றும் சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந்ததாக சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் 1.2 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/12-kg-of-ganja-seized-in-thoothukudi-2-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/12-kg-of-ganja-seized-in-thoothukudi-2-arrested#comments</comments><guid isPermaLink="false">fc683e64-2705-4c11-8318-8e8e2b319a85</guid><pubDate>Wed, 05 Aug 2026 16:53:00 +0000</pubDate><atom:updated>2026-08-05T16:53:00.589Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,போலீஸ்,Thoothukudi,Ganja,தூத்துக்குடி,கஞ்சா,Seizure,பறிமுதல்,patrol,ரோந்து பணி,2 arrested,2 பேர் கைது</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/4suqqok2/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கஞ்சா பறிமுதல், 2 பேர் கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/4suqqok2/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a>யில் 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 2 வாலிபர்களை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர்.</p><h2>போலீசார் ரோந்து பணி</h2><p>தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெப்பக்குளம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி வந்த 2 பேரை பிடித்து விசாரித்தபோது அவர்கள் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.</p><h2>1.2 கிலோ கஞ்சா பறிமுதல், 2 பேர் கைது</h2><p>இதையடுத்து மத்தியபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சட்ட விரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த தூத்துக்குடி, நேதாஜி நகரைச் சேர்ந்தவர்களான சொர்ணபாண்டி மகன் சோலைக்குமார் (வயது 32) மற்றும் ராஜசிங் மகன் ஜெர்ரிஸ்(33) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 200 கிராம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">கஞ்சாவை பறிமுதல்</a> செய்தார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் மழைநீர் வடிகால்வாய் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-mayor-orders-speedy-completion-of-stormwater-drains</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-mayor-orders-speedy-completion-of-stormwater-drains#comments</comments><guid isPermaLink="false">58597ad0-90b6-4ee4-a064-1e5e85e6f11b</guid><pubDate>Wed, 05 Aug 2026 16:30:39 +0000</pubDate><atom:updated>2026-08-05T16:30:39.501Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மாநகராட்சி ஆணையர்,மழைநீர் வடிகால்வாய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/y0brz4az/Untitled-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/y0brz4az/Untitled-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில், இன்று (05.08.2026) ரிப்பன் கட்டட வளாக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கூறியதாவது:-</p><p>சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். தற்போது மழைநீர் வடிகால்வாய்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை கண்காணித்து தொடர்ந்து, இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து வண்டல் சேகரிப்பு தொட்டிகளிலும் வண்டல்கள் தூர்வாரி சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதுவரை 1,10,082 வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் 92,657 வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் வண்டல்கள் தூர்வாரி சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதர வண்டல் சேகரிப்புத் தொட்டிகளிலும் இப்பணியினை மேற்கொள்ள வேண்டும். மேலும், இப்பணியினை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.</p><p>மழைநீர் வடிகால்வாய் கட்டும் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும். மழைநீர் வடிகால்வாய் இணைப்பு இல்லாத இடங்களில் இணைப்பினை ஏற்படுத்திட வேண்டும். மேம்பாட்டுப் பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் 32 குளங்கள் மற்றும் ஏரிகளின் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும்.</p><p>வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பாதிப்பு ஏற்படுத்தும் நிலையில் உள்ள 28,584 மரங்களின் கிளைகள் கத்தரித்து அகற்றப்பட்டுள்ளது. மேலும், இப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.</p><p>மேலும், மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள ஓட்டேரி நல்லா கால்வாய், விருகம்பாக்கம், கேப்டன் காட்டன் கால்வாய், டிரஸ்ட்புரம் கால்வாய், ரெட்டிக் குப்பம் கால்வாய், பள்ளிக்கரணை கால்வாய், செக்ரடரியேட் காலனி கால்வாய் உள்ளிட்ட கால்வாய்களில் வண்டல்கள் தூர்வாருதல், தாங்குச் சுவர், வேலி அமைத்தல் மற்றும் தடுப்புச் சுவரினை உயர்த்திக் கட்டுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்திடவும், பணிகள் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஆணையாளர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>மழைநீர் தேங்கும் தாழ்வான பகுதிகளில் மழைநீரை வெளியேற்றும் வகையில் பல்வேறு குதிரைத் திறன்கள் கொண்ட மோட்டார் பம்புகள், டிராக்டரில் பொருத்தப்பட்ட மோட்டார் பம்புகள், மின்சார மோட்டார் பம்புகளை செயல்படும் வகையில் தயார்நிலையில் வைத்திடவும், கூடுதலாக தேவைப்படும் மோட்டார் பம்புகளை தயார்நிலையில் வைத்திடவும், சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்காமல் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடித்திடவும், முகத்துவாரங்களில் முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளவும் வேண்டும்.</p><p>மாநகராட்சியின் சார்பில் 215 நிவாரண மையங்களில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுடன் தயார்நிலையில் வைத்திருக்கவும், தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை மீட்பதற்காக மாநகராட்சியின் 36 படகுகள் மற்றும் கூடுதலாக தேவைப்படும் படகுகளை தயார்நிலையில் வைத்திடவும், மழைநீர் சேமிப்புத் தொட்டி மற்றும் மோட்டார் அறைகளை தயார்நிலையில் வைத்திடவும் அனைத்து இயந்திரங்கள் மற்றும் மோட்டார்களின் பயன்பாட்டினை சோதனை மேற்கொண்டு தயார்ப்படுத்திடவும் வேண்டும். அனைத்து அலுவலர்களும் சேவைத் துறைகளுடன் ஒருங்கிணைந்து வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.</p><p>இக்கூட்டத்தில், இணை ஆணையாளர்கள் ஸ்ரேயா பி. சிங் (சுகாதாரம்), க. கற்பகம் (கல்வி), செ.சரவணன் (பணிகள்), துணை ஆணையாளர் (வருவாய் (ம) நிதி) சித்ரா விஜயன், வட்டார துணை ஆணையாளர்கள் எச். ஆர். கௌஷிக் (மத்தியம்), ஸ்வேதா சுமன் (வடக்கு) மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் இருந்து அரியானாவுக்கு ரெயிலில் செல்லும் மின்சார கார்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/electric-cars-travelling-by-train-from-thoothukudi-to-haryana</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/electric-cars-travelling-by-train-from-thoothukudi-to-haryana#comments</comments><guid isPermaLink="false">e9ab4faa-d853-44be-95f1-5653f9a9ae46</guid><pubDate>Wed, 05 Aug 2026 16:27:02 +0000</pubDate><atom:updated>2026-08-05T16:27:02.272Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அரியானா,தூத்துக்குடி,Haryana,Tuticorin,வின்பாஸ்ட் நிறுவனம்,Electric Car,Winfast Company,சரக்கு ரெயில்,Freight train,மின்சார கார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/u9yy12l6/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரெயிலில் அனுப்பப்படும் மின்சார கார்கள் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/u9yy12l6/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> துறைமுக சரக்கு நிலையத்தில் இருந்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE">அரியானா</a> மாநிலம் பல்லப்கார் நகருக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">ரெயில்</a> மூலம் 100 மின்சார கார்கள் அனுப்பி வைக்கப்பட்டன.</p><h2>சரக்கு ரெயிலில் அனுப்பப்படும் மின்சார கார்கள்</h2><p>தூத்துக்குடி சிப்காட் அருகில் வியட்நாமை சேர்ந்த வின்பாஸ்ட் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">மின்சார கார்</a> உற்பத்தி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு மாதத்துக்கு 1,000 முதல் 2,000 கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் கார்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன. அதன்படி கார்களை ஒரே நேரத்தில் அதிக அளவில் பாதுகாப்பாக அனுப்ப ரெயில் போக்குவரத்து உகந்ததாக உள்ளது. எனவே ஒவ்வொரு மாதமும் 10 சரக்கு ரெயில்களில் மின்சார கார்களை பல்வேறு நகரங்களுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><h2>சரக்கு கட்டண வருமானம் ரூ.22.07 லட்சம்</h2><p>தூத்துக்குடி துறைமுக சரக்கு நிலையத்தில் இருந்து நேற்று முதல் அரியானா மாநிலம் பல்லப்கார் நகருக்கு ரெயில் மூலம் 100 மின்சார கார்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதற்காக கார்களை ஏற்றும் வகையில் மாற்றி அமைக்கப்பட்ட 25 சரக்கு பெட்டிகளில் இந்த கார்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதன் மூலம் மதுரை கோட்டத்துக்கு சரக்கு கட்டண வருமானமாக ரூ.22.07 லட்சம் கிடைத்துள்ளது. இந்த சரக்கு போக்குவரத்துக்கு நடவடிக்கை எடுத்த முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் கணேஷ் தலைமையிலான வர்த்தக வளர்ச்சிக் குழுவுக்கு கோட்ட ரெயில்வே மேலாளர் ஓம்பிரகாஷ் மீனா பாராட்டு தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>
ஓசூரில் இருந்து கர்நாடகா மாநிலத்துக்கு மெட்ரோ ரெயில் திட்டம்- தமிழக அரசு தீவிரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-keen-on-metro-rail-project-from-hosur-to-karnataka</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-keen-on-metro-rail-project-from-hosur-to-karnataka#comments</comments><guid isPermaLink="false">a6c78e3b-a093-42bd-a248-3f5d205065b0</guid><pubDate>Wed, 05 Aug 2026 16:18:40 +0000</pubDate><atom:updated>2026-08-05T16:18:40.121Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt,மெட்ரோ ரெயில்,Metro Rail</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/wcl8dx3f/Metro-rail.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக அரசு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/wcl8dx3f/Metro-rail.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 118.9 கி.மீ. நீளத்திலான 3 வழித்தடங்களை கொண்ட கட்டம் 2-ன் பணிகள் ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பீட்டில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு வரையிலான தடத்தை, ஏற்கெனவே உள்ள வடபழனி மெட்ரோ நிலையத்துடன் இணைக்கப்படும் வகையில் 14.64 கிமீ. நீளத்திலான, 11 மெட்ரோ ரெயில் நிலையங்களைக் கொண்ட கட்டம் 2-ன் முதல் பகுதி, விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்படவுள்ளது.</p> <p>சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம், ஆவடி வழியாக கோயம்பேடு முதல் பட்டாபிராம், ஸ்ரீபெரும்புதூர் வழியாக திருப்பெரும்புதூர் வழியாக பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரையில் மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்ட மெட்ரோ ரெயில் திட்டங்கள் மத்திய அரசின் தீவிர பரிசீலனையின் கீழ் உள்ளன.</p> <p>இந்த கூடுதல் மெட்ரோ ரெயில் வழித்தடத் திட்டங்களுக்கு மத்திய அரசு விரைவான ஒப்புதல் வழங்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலிருந்து கர்நாடகா மாநிலம் பொம்மசந்திரா வரையிலான மெட்ரோ ரெயில்திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசு ஆகிய 2 அரசுகளுடனும் இணைந்து தமிழக அரசு முன்னெடுத்து வருவதாக தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title> திருச்சி-ஜோத்பூர் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு-தெற்கு ரெயில்வே அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/southern-railway-announces-the-attachment-of-an-additional-coach-to-the-trichy-jodhpur-humsafar-express</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/southern-railway-announces-the-attachment-of-an-additional-coach-to-the-trichy-jodhpur-humsafar-express#comments</comments><guid isPermaLink="false">8985af93-e64d-4a53-8eac-5b498993952d</guid><pubDate>Wed, 05 Aug 2026 15:55:38 +0000</pubDate><atom:updated>2026-08-05T15:55:38.756Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தெற்கு ரயில்வே,ரயில்வே</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/8ckmpf9m/Train-new.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/8ckmpf9m/Train-new.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,   </p><p>தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகரில் இருந்து திருச்சி வரும் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயிலில்(வண்டி எண்.22497) வருகிற 31-ந்தேதி வரையிலும், மறுமார்க்கமாக, திருச்சியில் இருந்து ஸ்ரீ கங்காநகர் செல்லும் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயிலில்(22498) வருகிற செப்டம்பர் 4-ந்தேதி வரையிலும் தற்காலிகமாக ஒரு 3-வது வகுப்பு ஏ.சி பெட்டி இணைத்து இயக்கப்படுகிறது.</p> <p>இதேபோல, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து திருச்சி வரும் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயிலில்(20481) நாளை (6-ந்தேதி) முதல் 26-ந்தேதி வரையிலும், மறுமார்க்கமாக, திருச்சியில் இருந்து ஜோத்பூர் செல்லும் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயிலில்(20482) வருகிற 8-ந்தேதி முதல் 29-ந்தேதி வரையிலும் தற்காலிகமாக ஒரு படுக்கை வசதி பெட்டி இணைத்து இயக்கப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழக பட்ஜெட்: அரசின் முக்கிய துறைகளுக்கான நிதிகளை குறைத்தது ஏன்? - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-budget-why-cut-funds-to-key-sectors-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-budget-why-cut-funds-to-key-sectors-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">a11976ab-22cf-4753-b121-4d562bd8313b</guid><pubDate>Wed, 05 Aug 2026 15:48:22 +0000</pubDate><atom:updated>2026-08-05T15:48:22.389Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,funds,நிதி,தமிழக பட்ஜெட்,Tamil Nadu Budget,Joseph,ஜோசப் விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/xl4tdnqz/nainar-nagendran.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/xl4tdnqz/nainar-nagendran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/tamilnadu-budget">தமிழக பட்ஜெட்டில்</a> அரசின் முக்கிய துறைகளுக்கான நிதியை குறைத்தது ஏன் என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார் இது தொடர்பாக, பாஜக மாநிலத் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன்</a> தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:- பட்ஜெட்டை குறைப்பது, தரத்தில் சமரசம் செய்வதற்கு சமம்!</p> <h2>குறைவாக நிதி ஒதுக்கீடு</h2><p> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">ஜோசப் விஜய்</a> தலைமையிலான அரசு தாக்கல் செய்துள்ள 2026- 2027 ஆண்டிற்கான பட்ஜெட்டில், தமிழகத்தின் மிக முக்கிய துறைகளுக்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, அரசு இயந்திரத்தினை மழுங்கடிக்க செய்யும் முடிவாகும். </p> <p><strong>கடந்த ஆண்டின் இடைக்கால பட்ஜெட்டில்,</strong> </p><p>- ரூ. 48,534 கோடியாக இருந்த பள்ளிக்கல்வி துறைக்கான நிதி, இந்த ஆண்டு ரூ. 44,527 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. </p><p>- உயர்கல்வித் துறைக்கான நிதி ரூ. 8,505 கோடியில் இருந்து ரூ. 8,393 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. </p><p>- நீர்வளத்துறைக்கான நிதி ரூ. 10,076 கோடியில் இருந்து ரூ. 9,264 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.</p><p>- எரிசக்தி துறைக்கான நிதி ரூ. 18,091 கோடியில் இருந்து ரூ. 15,828 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. </p><p>- கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறைக்கான நிதி ரூ. 1,943 கோடியில் இருந்து ரூ. 1,678 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.</p><h2>சந்தேகங்கள்</h2><p>இப்படி முக்கியமான துறைகளுக்கெல்லாம் நிதி ஒதுக்கீட்டை குறைத்த தவெக அரசு, தமிழகத்தின் கடன் மட்டும் ரூ.1.22 லட்சம் கோடியிலிருந்து ரூ.1.73 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக கணக்கு காட்டுவது பல்வேறு சந்தேகங்களை கிளப்புகிறது. </p><h2> நிதிகளை குறைத்தது ஏன்? </h2><p>எனவே, அரசின் முக்கிய துறைகளுக்கான நிதிகளை குறைத்தது ஏன்? இதனால் உண்டாகும் பாதிப்புகளை எதிர்கொள்ள அரசு என்ன மாதிரியான செயல்திட்டங்களை வைத்துள்ளது? செலவினங்கள் குறைவாக இருக்கும் பட்சத்தில், கடன் தேவை மட்டும் அதிகரிக்க காரணம் என்ன? "பணக் கசிவு "- ஐ சரி செய்கிறோம் என்ற பேர்வழியில், "மக்கள் நலன்"-இல் அரசு சமரசம் செய்கிறதா? உள்ளிட்ட மக்களின் சந்தேகங்களுக்கு முதல்அமைச்சர் ஜோசப் விஜய் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களும் உடனடியாக மக்கள் மன்றத்தில் பதிலளிக்க வேண்டும்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>கோவை: பைக் ஓட்டிக்கொண்டே லேப்டாப்பில் வேலை பார்த்த வாலிபர் - வைரலாகும் வீடியோ</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-bike-ottikkonda-laptopil-velai-partha-valibar-vairalagum-video</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-bike-ottikkonda-laptopil-velai-partha-valibar-vairalagum-video#comments</comments><guid isPermaLink="false">caa35b80-bd19-4c59-8cff-ef3803e7fb6c</guid><pubDate>Wed, 05 Aug 2026 15:36:29 +0000</pubDate><atom:updated>2026-08-05T15:36:29.735Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,Viral Video,வைரல் வீடியோ,கோயம்புத்தூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/nwy6eo66/Untitled-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/nwy6eo66/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோயம்புத்தூர்,</p><p>கோயம்புத்தூரில் சாலையில் வாலிபர் ஒருவர் பைக் ஓட்டி சென்றார். அவர் வலது கையால் பைக்கை ஓட்டிக்கொண்டு, இடது கையால் பைக் மீது லேப்டாப்பை வைத்து வேலை பார்த்து கொண்டே சென்றார். இதை கண்ட சக வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.</p><p>இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, "எந்த நிறுவனமாக இருந்தாலும் சரி நாளுக்குநாள் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கவே செய்யும். அதற்காக இப்படி ஆபத்தான முறையில் ஒரு கையால் பைக்கை ஓட்டிக் கொண்டு, மற்றொரு கையால் லேப்டாப்பில் வேலை பார்த்து கொண்டு செல்வது அவருக்கு மட்டுமின்றி, பிற வாகன ஓட்டிக ளுக்கும் ஆபத்தில் முடியும். இதுபோன்ற நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால்தான் விபத்துகளை தடுக்க முடியும்” என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள், கார் பறிமுதல்: வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tobacco-products-worth-rs1-lakh-car-seized-2-youths-from-northern-state-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tobacco-products-worth-rs1-lakh-car-seized-2-youths-from-northern-state-arrested#comments</comments><guid isPermaLink="false">26764e2d-9e30-402f-840a-0febd6ac5202</guid><pubDate>Wed, 05 Aug 2026 15:20:22 +0000</pubDate><atom:updated>2026-08-05T15:20:22.792Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,போலீஸ்,Thoothukudi,தூத்துக்குடி,Seizure,பறிமுதல்,Car,கார்,2 arrested,2 பேர் கைது,vehicle check,வாகன சோதனை,வடமாநில வாலிபர்கள்,Tobacco products,புகையிலை பொருட்கள்,northern state youth</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/n3ty6cqx/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ புகையிலை பொருட்கள் பறிமுதல், 2 பேர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/n3ty6cqx/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a>யில் கடத்தி வரப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள், காரை பறிமுதல் செய்த போலீசார், காரில் இருந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">ராஜஸ்தான்</a> மாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்களை கைது செய்தனர். </p><h2>போலீசார் வாகன சோதனை</h2><p>தூத்துக்குடி தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகப்படும்படி வந்த ஒரு காரை மடக்கி சோதனை செய்தனர். அந்த சோதனையில் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கூல்பேட் உள்ளிட்டவை பண்டல்களாக இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.</p><h2>ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள், கார் பறிமுதல், 2 பேர் கைது</h2><p>இதில் மொத்தம் 150 கிலோ 250 கிராம் எடையுள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">புகையிலை பொருட்கள்</a> இருந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 500 ஆகும். இந்த பொருட்களை காருடன் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">பறிமுதல்</a> செய்து அதில் இருந்த இரண்டு பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர் விசாரணையில் ராஜஸ்தான் மாநிலம் காளி பல்காரா பகுதியை சேர்ந்த அட்மன் ராம் மகன் வீரேந்திர பிஸ்னெய் (24) பாரத்சிங் மகன் பிரேம் சிங் (21) ஆகிய இரண்டு பேரையும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>தொழிலதிபரிடம் ரூ.40 லட்சம் பறித்ததாக புகார்: போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/inspector-bukhari-suspended-after-complaint-of-extorting-rs-40-lakh-from-businessman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/inspector-bukhari-suspended-after-complaint-of-extorting-rs-40-lakh-from-businessman#comments</comments><guid isPermaLink="false">74b2096f-b197-4d85-a16e-831faecd9375</guid><pubDate>Wed, 05 Aug 2026 15:08:16 +0000</pubDate><atom:updated>2026-08-05T15:08:16.155Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,சஸ்பெண்ட்,இன்ஸ்பெக்டர்,Complaint,suspended,தொழிலதிபர்,businessman</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/67r71of2/193.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சஸ்பெண்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/67r71of2/193.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தொழிலதிபரிடம் ரூ.40 லட்சம் பறித்ததாக இன்ஸ்பெக்டர் புகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.</p><h2>தொழில் அதிபர் மிரட்டி</h2><p>சென்னை பரங்கிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது புகாரி ரூ.40 லட்சம் லஞ்சப் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி திருவேங்கடத்தை போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற புகாரி அதன் பிறகு சவுகார்பேட்டையை சேர்ந்த தொழில் அதிபர் அகில் என்பவரை மிரட்டி ரூ. 40 லட்சம் பறித்துள்ளார்.</p><h2>சஸ்பெண்ட்</h2><p>இது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் இன்ஸ்பெக்டர் புகாரி அதிரடியாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போலீஸ் இணை ஆணையர் ஒருவரது பெயரைச் சொல்லி கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரூ.5 லட்சம் பணத்தை பறித்த நிலையில் தொழிலதிபர் அளித்த புகாரை தொடர்ந்து மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் புகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதற்கான உத்தரவை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D">போலீஸ் கமிஷனர்</a> அமல்ராஜ் பிறப்பித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>7 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-until-10-pm-in-7-districts</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-until-10-pm-in-7-districts#comments</comments><guid isPermaLink="false">e4c3a6db-0736-44e8-bdde-553197dcd6a2</guid><pubDate>Wed, 05 Aug 2026 14:38:02 +0000</pubDate><atom:updated>2026-08-05T14:38:02.993Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு,வானிலை முன்னறிவிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/vw8saa0t/Untitled-11.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/vw8saa0t/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுமார் 5.8 கி.மீ. உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 5.8 கி.மீ. முதல் 7.6 கி.மீ. உயரம் வரை தென் தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. வட தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இதன் காரணமாக தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மக்கள் பெரிதும் எதிர்பார்த்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-election-promises-that-people-have-been-waiting-for-so-long-must-be-fulfilled-communist-party-of-india-marxist</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-election-promises-that-people-have-been-waiting-for-so-long-must-be-fulfilled-communist-party-of-india-marxist#comments</comments><guid isPermaLink="false">1f305460-d97d-432b-a6b6-727aeaec6c25</guid><pubDate>Wed, 05 Aug 2026 14:32:08 +0000</pubDate><atom:updated>2026-08-05T14:32:08.385Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Communist Party of India,பெ.சண்முகம்,பட்ஜெட்,தேர்தல் வாக்குறுதிகள்,election promises,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/xhgb8qr0/pe.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/xhgb8qr0/pe.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மக்கள் பெரிதும் எதிர்பார்த்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. </p><p>இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">பெ.சண்முகம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்</h2><p>2026-27 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள மக்கள் நலனுக்கான அறிவிப்புகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. அதே நேரத்தில் அரசு தனியார் கூட்டு வினை என்ற அடிப்படையில் நவீன தாராளமய பாதையை ஒட்டியே திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருப்பது ஏற்கத்தக்கதல்ல என்பதையும், மக்கள் பெரிதும் எதிர்பார்த்த தேர்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இடம் பெற்றிருக்க வேண்டுமென்பதையும் அழுத்தமாக சுட்டிக் காட்டுகிறது.</p><p>புதிய கட்டண உயர்வுகள் ஏதும் முன்மொழியப்படவில்லை. அதே நேரத்தில் வருவாய் கசிவை தடுப்போமென்று உறுதிபடக் கூறியிருப்பது பாராட்டத்தக்கது. ஆனால் அரசியல் உறுதியோடு இது நிறைவேற்றப்பட வேண்டும்.</p><p>பள்ளிகளின், மாணவர் விடுதிகளின் கட்டமைப்பு மேம்பாடு, 500 புதிய அங்கன்வாடி கட்டிடங்கள், போதை ஒழிப்பு, சுகாதாரத்துறையில் கருவுற்ற மகளிர் பராமரிப்பு மையங்கள், 5 மண்டலங்களில் புற்று நோய் சிகிச்சை மையங்கள், மூத்த குடிமக்களுக்கான நடமாடும் மருத்துவகங்கள் - பாதுகாப்பு இல்லங்கள், அறிதல் திறன் குறைபாடு உடையோருக்கு நம்பிக்கை இல்லங்கள், புதிய கால்நடை காப்பீடு, ஜென் இசட் மாணவர்களுக்கு நவீன மிதி வண்டிகள், திருநர்களுக்கு சமூகப் பொருளாதார அதிகாரமளிப்பு, பொது நூலகங்கள் டிஜிட்டல் மயம், கிராமிய விளையாட்டு ஊக்குவிப்பு, ஒலிம்பிக் சிறப்பு மையங்கள், நாட்டுப் புறக் கலைஞர்கள் நிகழ்ச்சிகளுக்கு வாய்ப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.</p><p>மக்கள் நல அறிவிப்புகளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் உரிமைத்தொகை உயர்த்தப்படவில்லை. முதியோர் உதவித் தொகையும் உயர்த்தப்படவில்லை. பள்ளிக்கல்வி, உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் வெட்டு விழுந்திருப்பது என்பதும் ஏமாற்றம் அளிப்பதாகும்.</p> <h2>முற்போக்கான பாடத் திட்டம்</h2><p>10,000 அரசுப் பள்ளிகளில் "சூப்பர் கிளீன் சூப்பர் கேம்பஸ்" என்ற திட்டம் அறிவிக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்க துவக்கம் ஆகும். இது நடைமுறைப்படுத்தும் போது நிரந்தர துப்புரவு பணியாளர்கள், காவலர்கள் பள்ளிகளில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒரு பள்ளிக்கு ஒரு நாளைக்கு ரூ.380/- மட்டுமே கிடைக்கிறதென்பது ஒதுக்கீட்டின் போதாமையை வெளிப்படுத்துகிறது. பகுத்தறிவு, பாலின சமத்துவம், சுற்றுச் சூழல் போன்றவற்றை உள்ளடக்கிய முற்போக்கான பாடத் திட்டத்தை உருவாக்குவது என்ற அறிவிப்பும் வரவேற்புக்குரியது. ஆனால் கல்விக்கான நிதி ஒதுக்கீடு பட்ஜெட் ஆவணம் காண்கிற கனவுக்கு ஈடு கொடுப்பதாக இல்லை என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.</p><p>இளைஞர்களிடம் வேலை வாய்ப்பு குறித்த பெரும் எதிர்பார்ப்புகள் உள்ள நேரத்தில் வேலை உருவாக்கம் குறித்த திட்டவட்டமான அறிவிப்புகள் ஏதுமில்லை. வேலையில்லா கால நிவாரணம் அறிவிக்கப்படுமென்ற எதிர்பார்ப்பும் இடம்பெறவில்லை. 20000 இளைஞர்களுக்கு பணியிடப்பயிற்சி, உதவித் தொகை என்கிற திட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு மிகக் குறைவாக உள்ளது. இது தனியார்கள் மலிவான உழைப்பை பெற்றுக் கொள்வதற்கே பயன்படும்.</p><p>அரசு - தனியார் கூட்டு வினை என்பது மாணவர் விடுதி மேம்பாடு, நகர்ப்புற மேம்பாடு, மின் பகிர்மான பாதை, போக்குவரத்தில் மொத்த செலவின ஒப்பந்தம் ஆகியவற்றில் முன்மொழியப்பட்டுள்ளது. இது நவீன தாராளமய பாதையை அடியொற்றிய நடவடிக்கையே ஆகும். தனியார்கள் லாபம் பெறவே இந்த கூட்டு வினைகள் உதவுமே தவிர சமூகப் பொறுப்புடனான செயலாக்கத்திற்கு பயன்படாது.</p><h2>கூடுதல் நிதி ஒதுக்கீடு</h2><p>விவசாயிகளின் பயிர்க்கடன் ரத்து வரம்பு அதிகரிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை இதில் இடம் பெறவில்லை. அனைத்து விவசாயிகளும் பயன்பெறத்தக்க வகையில் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட வேண்டும். விபி ஜிராம் ஜி திட்டத்தில் மத்திய அரசு அறிவித்துள்ள, 125 நாட்களை நிறைவு செய்பவர்களுக்கு கூடுதல் 25 நாட்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு சராசரி வேலை நாட்கள் 44 முதல் 59 ஆகவே இருக்கிற சூழலில் சட்டப்படியான வேலை நாட்களை உறுதி செய்வதும், அதற்கு மேலாக 25 நாட்கள் வேலை தருவதுமே பெரும் பகுதி மக்களுக்கு பயனளிக்கும். இதற்கான நிதிப் பகிர்வுக்கு மத்திய அரசின் வஞ்சனையை எதிர்த்து குரல் கொடுத்து மாநில நிதி உரிமையை உறுதி செய்ய வேண்டும். காவிரி, கொள்ளிடம் குறுக்கே தடுப்பணை கட்டுவது பற்றி நீரியல் நிபுணர்கள் ஆலோசனை பெற்று கதவணைகளை உறுதி செய்ய வேண்டும். வைகை குண்டாறு இணைப்புத்திட்டம் தாமதம் பற்றி பட்ஜெட் குறிப்பிட்டு இருப்பது சரியானது. எனவே, கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து காலவரையறை தீர்மானித்து திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.</p><p>'திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர்' அறிவிப்பு வரவேற்கத்தக்கது. டெண்டர் முறையில் வெளிப்படைத்தன்மை பற்றி பட்ஜெட் பேசி இருப்பது நடைமுறையில் அமலாக வேண்டும். கிரானைட், மணல் மற்றும் கனிம வளங்கள் அனைத்தும் அரசின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு தனியார், ஒப்பந்த முறை தடுக்கப்பட வேண்டும். அரசின் வருவாய் உயர்வதற்கான வழியாகும் இது. சுற்றுலா ஊக்குவிப்பிற்கான அறிவிப்புகள் குறிப்பிடத்தக்கவை. மாமல்லபுரத்தை போல சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த கன்னியாகுமரியும் சுற்றுலா மேம்பாட்டில் இணைக்கப்பட வேண்டும். நதி நீர் சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா, சூழல் சுற்றுலா ஆகியன அரசின் வருவாய் பெருக்கத்திற்கு உதவும். மாநிலம் முழுமைக்கான ஒருங்கிணைந்த சுற்றுலா கொள்கை உருவாக்குவதும் முக்கியம். தென்மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி பற்றி பட்ஜெட் பேசியிருப்பது முக்கியமானது.</p><p>தொழிலாளர் உரிமைகள் பற்றி பட்ஜெட் எந்தக் குறிப்பையும் கொண்டதாக இல்லை. தொழிவாளர் தொகுப்புச் சட்டங்களை ஒன்றிய அரசு உருவாக்கிய வடிவில் தமிழ்நாட்டில் அமலாக்க மாட்டோமென்றும், மாநில அரசின் அதிகார வரம்பைப் பயன்படுத்தி தொழிலாளர் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்வோமென்றும் அறிவித்திட வேண்டும்.</p><p>பழைய பென்சன் திட்டம் பரிசீலிக்கப்படுமென்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும். அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைகள் களையப்பட வேண்டும்.</p><p>ஆதிதிராவிடர், பழங்குடி சிறப்பு உட்கூறு திட்டங்களின் கோட்பாடுகள் உறுதியாக கடைப்பிடிக்கப்பட்டு மடைமாற்றம் இல்லாத, இலக்கிடப்பட்டதாக, ஒதுக்கீடுகள் முழுமையாகப் பயன்படுத்ததக்கதாக அமலாக்கப்பட வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடி மாணவர் அவல்கல்வி ஊக்குவிப்பு வரவேற்கத்தக்கது. ஜூன் இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்ற காலவரம்பு நீக்கப்பட வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடி தொழில் முனைவோர் ஊக்குவிப்பு, வட்டி மானியம் ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு போதுமான அளவில் இல்லை.</p><p>மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையில் உயர்வு இல்லை என்பதும் ஏமாற்றம் தருகிறது. பணியில்லா கால மீன்பிடித் தொகை தற்போது ரூ.8000 வழங்கப்பட்டு வருகிறது. அதைவிட குறைவாக அறிவித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல.</p><p>சிறுபான்மையினர் நலனுக்கான அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. புனித ஹஜ் மானியம், கிறித்தவ இஸ்லாமிய மகளிர் சங்கங்கள், கபர்ஸ்தான், கல்லறைத் தோட்டங்களின் உட்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு பாராட்டத்தக்கது.</p><h2>புதிய வீடு கட்டும் திட்டம்</h2><p>புதிய வீடு கட்டும் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 5 லட்சமாக அதிகரிக்கப்பட்டு இருந்தாலும் இன்றைய கட்டுமான செலவுகளின் நிலைமையை ஒப்பிடும் போது அது போதுமானதல்ல. ரூ. 10 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும்.</p><p>மொத்தத்தில் பட்ஜெட் மக்கள் நல அம்சங்கள் குறித்த அறிவிப்புகள் சார்ந்தும், அது வெளிப்படுத்தி இருக்கிற எண்ணங்கள் சார்ந்தும் வரவேற்கத்தக்கது. இருப்பினும் அவற்றின் அமலாக்கம், நிதி ஒதுக்கீடு ஆகியவற்றில் உள்ள போதாமை களையப்பட வேண்டும். நவீன தாராளமய பொருளாதாரப் பாதையில் இருந்து விலகாமல் சாதாரண எளிய மக்களை உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்ய முடியாது. நிதி கூட்டாட்சி குறித்த வலுவான குரலை மத்திய அரசை நோக்கி எழுப்ப வேண்டும். தேர்தல் வாக்குறுதிகள் சார்ந்து மக்கள் மத்தியில் உள்ள எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.</p>]]></content:encoded></item><item><title>

50 ஆண்டுகளுக்கு கடனை குறைக்க முடியாது: நிதித்துறை செயலர் சித்திக் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/debt-cannot-be-reduced-for-50-years-finance-secretary-siddique-explains</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/debt-cannot-be-reduced-for-50-years-finance-secretary-siddique-explains#comments</comments><guid isPermaLink="false">2922a279-6d80-4a12-ba33-c1fcc7c4e766</guid><pubDate>Wed, 05 Aug 2026 14:30:40 +0000</pubDate><atom:updated>2026-08-05T14:30:40.015Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,தமிழக அரசு,பட்ஜெட்,Budget,தவெக அரசு,நிதித்துறை,vijay Govt</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/ix72j3f9/Finance.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நிதித்துறை செயலர் சித்திக்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/ix72j3f9/Finance.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><p>தமிழக பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு நிதித்துறை செயலாளர் சித்திக் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>தமிழ்நாட்டின் நிதி நிலைமை இக்கட்டான சூழலில் உள்ளது. வரவுகளை அதிகரிக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள. பெட்ரோல், டீசல் விலை ஏற்கனவே உயர்ந்துள்ளதால், மேலும் விலையேற்றும் திட்டம் இல்லை. கடந்த முறை ரூ.10 லட்சம் கோடியாக அரசின் கடன் சுமை இருந்தது. மாநில அரசின் கடன் சுமை கடந்த முறை 3.4% இருந்தது. இந்த ஆண்டு கடனை அதிகமாக உயர்த்தாததால் 3.17%ஆக குறையும். வருவாயை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டின் கடன் அடுத்த 50 ஆண்டுகளுக்கு குறைக்க முடியாது. தமிழக அரசின் கடன் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே செல்லும். மத்திய அரசின் அனுமதியோடு தான் கடன் வாங்குகிறோம்” என்றார். </p><h2>கடன் அளவு எவ்வளவு?</h2><p>பட்ஜெட்டில் நிதி அமைச்சர் மரியவில்சன் கடன் அளவு பற்றிய தகவலை வெளியிட்டார். அதில் கூறிய்தாவது; மாநிலத்தின் ஒட்டுமொத்த நிலுவைக் கடன் பொறுப்புகள், 2026-27-ம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மதிப்பிடப்பட்டிருந்த ரூ.10 லட்சத்து 99 ஆயிரத்து 458 கோடியுடன் ஒப்பிடுகையில், 2026-27-ம் ஆண்டு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ.10 லட்சத்து 98 ஆயிரத்து 768 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலுவைப் பொறுப்புகளில் மாநிலத்தின் பொதுக் கடன் மற்றும் பொதுக் கணக்குப் பொறுப்புகள் ஆகியவை அடங்கியுள்ளன.</p><h2>நிலைப் பெறுப்புகள்</h2><p>மேலும், சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்திற்காக பெறப்பட்ட ரூ.9,523 கோடியும் இந்நிலுவைப் பொறுப்புகளில் அடங்கியுள்ளது. இத்திட்டம், மத்திய அரசுத் துறைத் திட்டமாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசின் கணக்குகளில் உரிய கணக்கு சரிகட்டல்கள் மேற்கொள்ளப்படும்போது, நிலைப் பெறுப்புகள் 9,523 கோடி ரூபாய் குறையும்.</p><h2>வரவு-செலவுத் திட்டம்</h2><p>மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் (ஜி.எஸ்.டி.பி.) நிலுவைப் பொறுப்புகளின் விகிதம், 2026-27-ம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில் மதிப்பிடப்பட்டிருந்த 27.03 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், 2026-27-,ம் ஆண்டு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 27.01 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பொதுக்கடனை பொறுத்த அளவில் 2026-27-ம் ஆண்டில் ரூ.1 லட்சத்து 73 ஆயிரத்து 445கோடி கடன் பெறவும், ரூ.51,971 கோடியை திருப்பி செலுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டு இருந்த நிகர பொதுக்கடன், ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 653 கோடியாகவும், திருத்தப்பட்ட பட்ஜெட்டில் அது ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்து 964 கோடியாகவும் உள்ளது” என்றார்.</p>]]></content:encoded></item></channel></rss>