<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 24 Aug 2026 07:26:28 +0000</lastBuildDate><item><title>ஓணம் ஸ்பெஷல்: மங்களூரு - கொல்லம் இடையே நாளை சிறப்பு ரெயில் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-special-special-train-between-mangaluru-and-kollam-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-special-special-train-between-mangaluru-and-kollam-tomorrow#comments</comments><guid isPermaLink="false">de3a10e0-114f-4c34-b4e2-d8280b3dbe01</guid><pubDate>Mon, 24 Aug 2026 07:22:14 +0000</pubDate><atom:updated>2026-08-24T07:22:14.733Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Mangaluru,மங்களூரு,சிறப்பு ரெயில்,Kollam,Special train,கொல்லம்,Onam festival,ஓணம் பண்டிகை,Onam,ஓணம்,சிறப்பு ரெயில் சேவை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/ctj0tb5h/Untitled-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/ctj0tb5h/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>ஓணம் பண்டிகையையொட்டி, மங்களூரு - கொல்லம் இடையே நாளை (செவ்வாய்கிழமை) சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. </p><p>இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><h2>மங்களூரு - கொல்லம்</h2><p>மங்களூரு ஜங்ஷனில் இருந்து நாளை (செவ்வாய்கிழமை) காலை 8 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06052) மாலை 6.45 மணிக்கு கொல்லத்தை சென்றடைகிறது.</p><h2>கொல்லம் - மங்களூரு</h2><p>மறுமார்க்கத்தில், <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கொல்லத்தில </a>இருந்து நாளை இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06051) மறுநாள் காலை 9.30 மணிக்கு மங்களூரு ஜங்ஷனை சென்றடையும்.</p><p>20 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு இன்று (24-ந் தேதி) பகல் 12 மணிக்கு தொடங்கிவிட்டது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சில உறுப்பினர்கள் பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-do-not-wish-to-mention-the-names-of-certain-members-speaker-jcd-prabhakar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-do-not-wish-to-mention-the-names-of-certain-members-speaker-jcd-prabhakar#comments</comments><guid isPermaLink="false">cf931074-73a0-4dd9-b35a-98ccfdcbaa6b</guid><pubDate>Mon, 24 Aug 2026 07:18:37 +0000</pubDate><atom:updated>2026-08-24T07:18:37.846Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,TN Assembly,ஜே.சி.டி.பிரபாகர்,JCD Prabhakar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/5n3lrgto/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/5n3lrgto/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கூறியதாவது:-</p><p>பேரவைக்கு ஒரு அறிவிப்பை வெளியிட நான் விரும்புகிறேன். சட்டப்பேரவை விதி எண் 55, 56 போன்ற அறிவிப்புகள் பேரவையின் செயலாளர் அல்லது சபாநாயகர் அனுமதித்து பிறகு விவாதிக்கலாம். ஆனால், சில உறுப்பினர்கள் பெயரை இங்கு நான் குறிப்பிட விரும்பவில்லை. அறிவிப்புகளை எழுதி உடனடியாக யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களுக்குக் கொடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.</p><p>பேரவை உறுப்பினர்கள் தங்களது தனிப்பட்ட பெயரில் உள்ள சமூக வலைத்தளத்தில் அவற்றை வெளியிடுகிறார்கள். பேரவைத் தலைவரை அனுமதிக்கப்படும் வரை அவற்றை வெளியிடுவது விதிகளுக்கு முரணானது. அது குறித்து பேரவை விதி எண் 36 உள்பிரிவு 5 தெளிவாகக் குறிப்பிடுகிறது. அதன்படி, சபாநாயகர் அனுமதித்து உறுப்பினர்களுக்கு அனுப்பாத வரை அதனை உறுப்பினரோ, வேறு யாரும் வெளியிடக்கூடாது.</p><p>எனவே இன்று முதல் தொலைக்காட்சி, ஊடகங்கள் உள்பட அனைத்துக்கும் சேர்த்தே சொல்கிறேன், அவ்வாறு இதில் பேரவை உறுப்பினர்கள் யாராவது இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டால் பிரசுரிக்கவும் கூடாது, வெளியிடவும் கூடாது. எனவே அனைவரும் பேரவை விதிக்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பெண் அரசியல்வாதிகளை விமர்சிக்கலாம்... ஆனால் தனிப்பட்ட தாக்குதல் கூடாது: தமிழிசை சவுந்தரராஜன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/women-politicians-can-be-criticized-but-personal-attacks-should-not-be-made-tamilisai-soundararajan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/women-politicians-can-be-criticized-but-personal-attacks-should-not-be-made-tamilisai-soundararajan#comments</comments><guid isPermaLink="false">dff286b6-2f87-4e15-8c5b-975887278b9d</guid><pubDate>Mon, 24 Aug 2026 07:02:08 +0000</pubDate><atom:updated>2026-08-24T07:02:08.751Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழிசை சவுந்தரராஜன்,Tamilisai Soundararajan,பெண்,Woman,Politicians,அரசியல்வாதிகள்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/dla1finq/tamizhisai.gif" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழிசை சவுந்தரராஜன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/dla1finq/tamizhisai.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக முன்னாள் பாஜக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/tamilisai-soundararajan">தமிழிசை சவுந்தரராஜன் </a>தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>ஒரு இளம் பெண் அமைச்சரை இழிவுபடுத்தும் வகையிலும், தனிப்பட்ட முறையிலும் குறிவைத்து நடத்தப்படும் ட்ரோல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அரசியல் வேறுபாடுகளும், கொள்கை முரண்பாடுகளும் ஒரு பெண்ணின் தனிப்பட்ட கண்ணியத்தை காயப்படுத்துவதற்கான காரணமாக ஒருபோதும் மாறக்கூடாது.</p><h2>தனிப்பட்ட தாக்குதல்</h2><p>தன்னைப் பற்றிய தனிப்பட்ட தாக்குதல்களுக்கு பதில் சொல்லவும், தன்னை தற்காத்துக் கொள்ளவும் ஒரு பெண் அமைச்சர் தனது பொன்னான நேரத்தை செலவிட வேண்டிய நிலை மிகவும் வேதனையானது. இத்தகைய ட்ரோல்கள் ஒரு பெண்ணின் மன அமைதியையும், தன்னம்பிக்கையையும், கவனத்தையும் பாதிக்கலாம். அவர் தனது பொறுப்பில் கவனம் செலுத்தி மக்களுக்காக பணியாற்ற வேண்டிய நேரத்தையும் சக்தியையும் இவை பறித்துவிடுகின்றன. அதே நேரத்தில், நான் ஒன்றை மிகத் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன்.</p><h2>ட்ரோல்கள்</h2><p>நான் ஒரு அசைக்க முடியாத பாஜக பெண் தலைவர். என் கொள்கையிலும், என் கட்சியிலும் நான் உறுதியாக நிற்கிறேன். இந்த விஷயத்தில் ஒரு பெண்ணின் கண்ணியத்திற்காக நான் குரல் கொடுத்தால், உடனே என்னை “ஏ டீம்”, “பி டீம்” என்று கூறி ட்ரோல் செய்ய வேண்டாம். நானும் இத்தகைய ட்ரோல்களை எதிர்கொண்டிருக்கிறேன். அந்த வார்த்தைகள் ஒரு பெண்ணின் மனதை எவ்வளவு பாதிக்கக்கூடும் என்பதை நான் அனுபவித்திருக்கிறேன். ஆனால் அவற்றால் நான் அசைந்து போகவில்லை. இன்னும் உறுதியுடன், இன்னும் நம்பிக்கையுடன் நிற்கிறேன்.</p><h2>மனிதநேயத்தின் அடையாளம்</h2><p>ஒரு பெண்ணின் கண்ணியத்திற்காக குரல் கொடுப்பது எந்த “டீம்”-ஐச் சேர்ந்தது என்பதல்ல. அது மனிதநேயத்தின் அடையாளம். ஒரு பெண் அரசியல்வாதியை எதிர்க்க விரும்பினால் அரசியல் ரீதியாக எதிர்கொள்ளுங்கள். அவரது கொள்கைகளை கேள்வி கேளுங்கள். அவரது செயல்பாடுகளை விமர்சியுங்கள். அவரது கருத்துகளுக்கு உண்மையான தரவுகளாலும், வலுவான வாதங்களாலும் பதிலளியுங்கள். அரசியலை அரசியலால் எதிர்கொள்ளுங்கள். கருத்தை கருத்தால் எதிர்கொள்ளுங்கள். உண்மைக்கு உண்மையால் பதிலளியுங்கள். ஆனால் ஒரு பெண்ணின் கண்ணியத்தை மட்டும் காயப்படுத்தாதீர்கள். </p><p>ட்ரோல்கள் எத்தனை வந்தாலும், நாங்கள் பெண்கள் அசைந்து போக மாட்டோம். அஞ்ச மாட்டோம். அமைதியாக பின்வாங்க மாட்டோம். உறுதியுடன் நிற்போம். மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம், என்ற உறுதிப்பாட்டை பெண் தலைவர்கள் பெற வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உடனடித் தேவை ‘கார்&apos; அல்ல - டாக்டர் கிருஷ்ணசாமி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mlas-immediate-need-is-not-a-car-krishnasamy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mlas-immediate-need-is-not-a-car-krishnasamy#comments</comments><guid isPermaLink="false">6e90d548-dba2-4010-aaa6-214f01efdf1e</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:50:31 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:50:31.985Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Car,கார்,டாக்டர் கிருஷ்ணசாமி,புதிய தமிழகம்,Office,கிராம நிர்வாக அலுவலகம்,சட்டமன்ற உறுப்பினர்,Krishnasamy</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/lruvd62q/Krishnasamy.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கிருஷ்ணசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/lruvd62q/Krishnasamy.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உடனடித் தேவை 'கார்' அல்ல, காரியாலயம் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>கார் வழங்கும் திட்டம்</h2><p>சில சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் முன்வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் கார் வழங்கும் திட்டம் ’110 விதியின் கீழ்’ சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இத்திட்டத்திற்கு கடும் கண்டனங்கள் எழுகின்றன. எதையும் ஆராயாமல் திட்டங்களை அறிவிக்கும்போது இவ்வாறே நிகழும்.</p><p>தொகுதி முழுக்க பயணம் செய்து மக்கள் குறைகளைக் கேட்க இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் வாகனம் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அந்த வசதி கூட இல்லாதவர்கள் எத்தனை பேர் என்பதே முக்கியம்.</p><h2>நிர்வாக அலுவலகம்</h2><p>தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் உள்ள பொழுது, இத்திட்டம் ஆடம்பரமானது அல்லது ஊதாரித்தனமானது என்றே விமர்சிக்கப்படுகிறது. ஆனால், 200 முதல் 300 கிராமங்கள் உள்ள தங்கள் தொகுதி மக்களின் தேவைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்க “ஒரு நிர்வாக அலுவலகம்” தேவை என்பதை ஏன் எந்த சட்டமன்ற உறுப்பினரும் வலியுறுத்தவில்லை எனத் தெரியவில்லை.</p><p>சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சராகிவிட்டால் அவர்களின் அதிகாரம் தமிழக அளவில் பரவுகிறது. ஆனால், சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற ஒவ்வொரு அலுவலகப் படிக்கட்டுகளிலும் ஏறி இறங்கும் நிலையே உள்ளது.</p><p>எனவே, <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">சட்டமன்ற உறுப்பினர்கள்</a> மதிப்பும் மரியாதையோடும் சுதந்திரமாகவும் தங்களது சட்டமன்றத் தொகுதிக்குள் கடமையாற்ற தேவைப்படுவது குறைந்தபட்சம் ஒரு தட்டச்சர், உதவி பி.டி.ஓ, துணை வட்டாட்சியர், ஒரு பொறியாளர் உள்ளடங்கிய தனிக் காரியாலயம் - நிர்வாக அலுவலகமே! - கார் அல்ல.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மக்கள் தவறு செய்துவிட்டனர்; திருமண நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேச்சு

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/people-have-made-a-mistake-mk-stalin-speech-at-wedding-event</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/people-have-made-a-mistake-mk-stalin-speech-at-wedding-event#comments</comments><guid isPermaLink="false">81f6fde2-267d-4a67-aac5-830606b569f0</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:36:52 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:36:52.739Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,M.K.Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/hkd2ahkj/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/hkd2ahkj/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை, </p><p>தமிழக சட்டசபை தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றிய தவெக கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மாநில முதல்-அமைச்சராக <a href="https://www.dailythanthi.com/">விஜய் </a>செயல்பட்டு வருகிறார்.</p><p>அதேவேளை, தேர்தலில் தோல்வியடைந்த திமுக 59 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் தோல்வியடைந்தார்.  </p><h2>மக்கள் தவறு செய்துவிட்டனர்</h2><p>இந்நிலையில், சென்னை திருவான்மையூரில் கட்சி நிர்வாகியின் இல்ல திருமண நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.</p><p>திருமண நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,</p><p>ஒருகாலத்தில் ஒரு குடும்பத்தின் படித்தவர்கள், பட்டதாரிகள் அத்திப்பூ பூத்தார் போல் இருப்பார்கள். ஆனால் தற்போது ஊருக்கு ஊர் கிராமத்திற்கு கிராமம் பட்டதாரிகள், டாக்டர்கள் இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் திராவிட இயக்கங்கள் தான். இந்த நிலைக்கு வருவதற்கு யார் காரணம் என்பதை இன்றைக்கு இருக்கும் இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், இன்றைய இளைஞர்களுக்கு அது புரியவுமில்லை, தெரியவுமில்லை.</p><p>ஒரு மாற்றம் தமிழ்நாட்டில் ஏற்பட்டு அது ஏமாற்றமாக மாறியுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் தவறு செய்துவிட்டனர். அது கோடிக்கணக்கான மக்களை துன்புறுத்திக்கொண்டிருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். மணமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்ட வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு எதிராக தவெக அரசு செயல்படுகிறதா? - முத்தரசன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-government-acting-against-communist-parties-mutharasan-questions</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-government-acting-against-communist-parties-mutharasan-questions#comments</comments><guid isPermaLink="false">f13cb568-a456-49c9-afca-371d705b7c00</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:28:40 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:28:40.464Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,Communist Party of India,முத்தரசன்,Mutharasan,கம்யூனிஸ்டு கட்சி,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/835kknho/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/835kknho/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>கும்பகோணம்,</p><p>தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>இந்திய கம்யூனிஸ்டு கட்சி. தொடங்கப்பட்டபோதே தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு 2 முறை தடை விதிக்கப்பட்டது. தற்போது 4-வது முறையும் தடை விதிக்கப்படுமோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தலைநகர் டெல்லியில் நடைபெறும் செப்டம்பர் 1 பேரணியில் பங்கேற்பதற்காக பதிவு செய்யப்பட்ட சிறப்பு ரெயில்களை ரத்து செய்துள்ளனர். பேரணியை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.</p><h2>முதல்-அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்</h2><p>தமிழகத்தில் கம்யூனிஸ்டு கட்சியினரை கணக்கெடுக்க வேண்டும் என தாசில்தார் சுற்றறிக்கை அனுப்ப உள்ளார். அதற்கான நகல்கள் மாவட்ட கலெக்டர், வருவாய் அலுவலர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு இடதுசாரி கட்சிகள் கண்டனம் தெரிவித்தவுடன் தாசில்தார் இடமாற்றப்படுகிறார்.</p><p>இதுதொடர்பாக சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த பின்பு வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட் டையன் போகிற போக்கில் அந்த சுற்றறிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது என்கிறார். தமிழகத்தில் 2 கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க. ஆட்சி நடக்கிறது. கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு எதிராக குறி வைத்து மோடி செயல்படுகிறார். அதேபோல தமிழகத்தில் த.வெ.க. ஆட்சியும் அவ்வாறு செயல்படுகிறதா? என்கிற கேள்விக்கு முதல்-அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்.</p><h2>மோசடி இருக்க கூடாது</h2><p>குறுவை தொகுப்பு மற்றும் பயிர்க்காப்பீட்டு தொகையை உட னடியாக வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி வருகிற 28-ந் தேதி டெல்டா மாவட்டங்களில் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி முற்றுகை போராட்டம் நடத்தும். தாய்மாமன் திட்டத்தில் தங்க மோதிரம் வழங்குவதற்கான அரசின் டெண்டரில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். தாய்மாமன் விஷயத்தில் மோசடி இருக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஈரோடு ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் தீவிரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/development-works-at-erode-railway-station-are-in-full-swing</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/development-works-at-erode-railway-station-are-in-full-swing#comments</comments><guid isPermaLink="false">75ca8a7c-6423-4a2d-9829-607192f4c0e5</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:28:18 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:28:18.880Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Development Works,Erode Railway Station,மேம்பாட்டு பணிகள்,ஈரோடு ரெயில் நிலையம்</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/229tq6lw/11.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/229tq6lw/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,  </p><p>ஈரோடு ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p><h2>ஈரோடு ரெயில் நிலையம்</h2><p>ஈரோடு ரெயில் நிலையம் வழியாக தினமும் 100-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. இங்கு 4 நடைமேடைகள் உள்ளன. சுரங்கப் பாதை வழியாக பயணிகள் சென்று நகரும் படிக்கட்டில் ஏறி நடைமேடைக்கு சென்று வருகின்றனர். இதனால் ரெயில் நிலையத்தின் முகப்பு பகுதியில் இருந்து அனைத்து நடைமேடைகளுக்கும் செல்லும் வகையில் நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர்.</p><p>இதற்கிடையில் மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ஈரோடு ரெயில் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.38 கோடியே 9 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஈரோடு ரெயில் நிலையத்தில் நடைமேம்பாலம், நிலைய விரிவாக்க பணி, நடைமேடை சீரமைக்கும் பணி, வாகனங்கள் நிறுத்தும் வசதி உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகள் தொடங்கப்பட்டது.</p><h2>பயணிகள் அச்சம்</h2><p>இதில் வாகன நிறுத்துமிடம் புதுப்பொலிவுடன் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. புதிதாக நுழைவாயில் வளைவும் அமைக்கப்பட்டு உள்ளன. நடைமேம்பாலம் அமைக்கும் பணி தற்போது 80 சதவீதம் வரை நிறைவு பெற்றுள்ளது. மேலும் நடைமேம்பாலத்தில் ஏறி செல்வதற்கு வசதியாக படிக்கட்டு, 'லிப்ட்' மற்றும் நகரும் படிக்கட்டு போன்றவை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதற்கான எந்திரங்கள் ரெயில் நிலைய வளாக பகுதியில் வைக்கப்பட்டுள்ளன.</p><p>இதற்கிடையில் ரெயில் நிலையத்தின் முன்புள்ள பழைய கட்டிடம் இடிக்கும் பணியும் தற்போது வேகமாக நடந்து வருகிறது. பாதுகாப்பாக இந்த பணிகள் நடைபெற்றாலும், ரெயில் நிலையத்துக்குள் செல்லும் பயணிகள் ஒருவித அச்சத்துடன் உள்ளே சென்று வருகின்றனர். பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு புதிதாக காத்திருப்போர் அறை, டிக்கெட் கவுன்டர், அதிகாரிகள் அலுவலகங்கள் போன்றவை கட்டப்பட உள்ளதாகவும், அனைத்து பணிகளும் 8 மாதங்களில் முடிக்கப்படும் என்றும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>“6 சிலிண்டர் வாக்குறுதி... 3 ஆக குறைப்பா?” - தவெக அரசை விமர்சித்த டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-6-cylinder-promise-will-it-be-reduced-to-3-ttv-dhinakaran-criticizes-the-tvk-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-6-cylinder-promise-will-it-be-reduced-to-3-ttv-dhinakaran-criticizes-the-tvk-government#comments</comments><guid isPermaLink="false">2c5f3e5e-240a-42f3-90ae-c5f3757057cb</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:23:17 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:23:17.582Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,TTV Dhinakaran,டிடிவி தினகரன்,cylinder,சிலிண்டர்,வாக்குறுதி,promise</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/zpu71r9y/ttv-dhinakaran.gif" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/zpu71r9y/ttv-dhinakaran.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அன்னப்பூரணி சூப்பர் 6 திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஆண்டிற்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இது குறித்துஅமமுக பொதுச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/ttv-dhinakaran">டிடிவி தினகரன்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம்</h2><p>தவெகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட ஆறு சிலிண்டர்கள் மூன்றாக குறைப்பா? முதல்-அமைச்சர் மூன்று சிலிண்டர்கள் அறிவித்துள்ள நிலையில், மீதமுள்ள மூன்று கேள்விக்குறிதானா?</p><p>அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம் எனும் தலைப்பில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு ஆறு கேஸ் சிலிண்டர்கள் கட்டணமின்றி வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி கொடுத்த தவெக, ஆட்சிக்கு வந்தபின்பு முதற்கட்டம் எனக்கூறி லாவகமாக மக்களை ஏமாற்ற முனைந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.</p><h2>ஆண்டு வருமானம் 2.5 லட்சம் என்ற கட்டுப்பாடு</h2><p>ஏற்கனவே, பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதியளித்துவிட்டு, விவசாயிகளின் போராட்டங்களின் வீரியத்திற்கு ஏற்ப படிப்படியாகத் தள்ளுபடித் தொகையை அதிகரித்துக் கொண்டிருக்கும் தவெக அரசு, தற்போது ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் வழங்கப்படும் என்ற வாக்குறுதியைப் பாதியாகக் குறைத்ததோடு, ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு மிகாமல் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்ற கட்டுப்பாட்டை விதித்திருப்பதும், மீதி எப்போது கிடைக்கும் என்ற தகவலை அறிவிக்காததும் பொதுமக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>வாழைப்பழ காமெடி</h2><p>ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு, ஆட்சிக்கு வந்தபின்பு எந்தவொரு வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றாமல், அரைகுறையாக நிறைவேற்றுவதைப் பார்க்கும்போது, பிரபல வாழைப்பழ காமெடியைப் போல, மூன்று வந்துவிட்டது, மீதமுள்ள மூன்று எங்கே என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.</p><p>எனவே, தவெக கொடுத்த வாக்குறுதியின்படி ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்களை கட்டணமில்லாமல் வழங்கும் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்திட முன்வர வேண்டும் என முதல்-அமைச்சர் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் 10,000 ஏரிகளில் நீர் இல்லை: வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்! -  அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/10000-lakes-in-tamil-nadu-are-dry-state-must-be-declared-drought-hit-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/10000-lakes-in-tamil-nadu-are-dry-state-must-be-declared-drought-hit-anbumani#comments</comments><guid isPermaLink="false">fef13c7c-d319-4c3c-983c-bde9a403ff44</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:18:09 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:18:09.807Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK,அன்புமணி,Anbumani</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/rwdhgmmi/anbumani.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/rwdhgmmi/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>டெல்டாவில் 95% நீர்நிலைகள் வறண்டனதாகவும், தமிழ்நாட்டில் 10,000 ஏரிகளில் நீர் இல்லை எனவும் குறிப்பிட்டு தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>95 சதவீத நீர்நிலைகள் வறட்சி</h2><p>காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள கால்வாய்கள் மூலம் காவிரி நீரைப் பெறும் 737 நீர்நிலைகளில் 694 நீர்நிலைகள் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் வறண்டு கிடக்கின்றன. தமிழகம் முழுவதும் மொத்தமுள்ள 14,141 நீர்நிலைகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவற்றில் தண்ணீரே இல்லை. மிக மோசமான இச்சூழலில் இருந்து தமிழக விவசாயிகளை பாதுகாப்பதற்காக தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும்.</p><p>தமிழ்நாடு நீர்வளத்துறையின் புள்ளிவிவரங்கள்படி, தமிழகத்தில் நீர்வளத்துறையின் பராமரிப்பில் உள்ள மொத்தம் உள்ள 14,141 நீர்நிலைகளில், 4208 நீர்நிலைகள், அதாவது 29.25% நீர்நிலைகள் முற்றிலுமாக வறண்டு விட்டன. மேலும், 5,814 நீர்நிலைகளில் 1% முதல் 25% வரை மட்டுமே நீர் உள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் பயனளிக்கும் வகையில் தண்ணீர் இல்லை. இதில் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பவை காவிரி பாசன மாவட்டங்கள் தான். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் காவிரி, கல்லணைக் கால்வாய், வெண்ணாறு ஆகிய ஆறுகளில் இருந்து கால்வாய்கள் மூலம் தண்ணீர் பெறும் 737 நீர்நிலைகளில் 694 நீர்நிலைகள், அதாவது 95% தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன. இவை தவிர ஆறுகள் மூலம் தண்ணீர் பெறாத 27 தனித்த நீர்நிலைகளில் 26 நீர்நிலைகள் வறண்டு கிடக்கின்றன. ஒட்டுமொத்தமாக காவிரி பாசன மாவட்டங்களில் 764 நீர்நிலைகளில் 720 நீர்நிலைகளில் ஒரே ஒரு சொட்டு நீர் கூட இல்லை.</p><h2>பயிர்கள் நீரின்றி கருகி விட்டன</h2><p>காவிரி பாசன மாவட்டங்களில் நீர்வளத்துறையின் பராமரிப்பில் இருக்கும் நீர்நிலைகளின் மொத்தக் கொள்ளளவு 6.7 டி.எம்.சி ஆகும். அதில் வெறும் 0.17 டி.எம்.சி, அதாவது 2.62% அளவுக்கு மட்டுமே நீர் உள்ளது. தென்மேற்கு பருமழை பொய்தது, மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படாதது ஆகியவை தான் இந்த நிலைக்கு காரணமாகும். ஆனால், இதன் விளைவுகள் மிகக் கொடுமையானவை. காவிரி பாசன மாவட்டங்களின் பல பகுதிகளில் 100 அடி ஆழத்திற்குள்ளாக நிலத்தடி நீர் கிடைத்து வந்த நிலையில், இப்போது நிலத்தடி நீர்மட்டம் 200 அடிக்கும் கீழாக சென்று விட்டது. அதனால், நிலத்தடி நீரை நம்பி குறுவை சாகுபடி செய்ய முடியவில்லை; அதுமட்டுமின்றி, போர்வெல் எனப்படும் ஆழ்துளை கிணறுகளை மேலும் ஆழப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர். இதற்கான ஒவ்வொரு விவசாயிக்கும் குறைந்தது ஒரு லட்சம் முதல் பல லட்சம் ரூபாய் வரை செலவாவதாக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">உழவர்கள் </a>கவலை தெரிவிக்கின்றனர்.</p><p>காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த ஆண்டு 6.31 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. ஆனால், நடப்பாண்டில் அது சுமார் 2 லட்சம் ஏக்கர் என்ற நிலையில் குறுகி விட்டது. அவற்றிலும் பல்லாயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த குறுவைப் பயிர்கள் நீரின்றி கருகி விட்டன. சம்பா பருவத்திலும் இதே நிலை தான் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சம்பா சாகுபடிக்காக விதைக்கும் பணிகள் ஆகஸ்ட் மத்தியில் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், நெல் விதைப்புக்கான அறிகுறிகள் கூட இன்று வரை தென்படவில்லை.</p><h2>70 சதவீத விவசாயம் பாதிப்பு</h2><p>மேட்டூர் அணையிலிருந்து செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டால் தான் சம்பா சாகுபடியை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும். ஆனால், மேட்டூர் அணையில் சுமார் 85 அடி அளவுக்கு மட்டுமே தண்ணீர் இருக்கும் நிலையில், அதைக் கொண்டு அணையை திறப்பதோ, தொடர்ந்து தண்ணீர் விடுவதோ சாத்தியமல்ல. அணை திறக்கப்படுமா? என்பதைக் கணிக்கவே இன்னும் சில வாரங்கள் ஆகும் எனும் நிலையில் காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடியும் வினாக்குறியாகியுள்ளது.</p><p>கடந்த ஆண்டில் காவிரி பாசன மாவட்டங்களில் சுமார் 14 லட்சம் ஏக்கர் உள்பட தமிழ்நாடு முழுவதும் 26.25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. ஆனால், நடப்பாண்டில் காவிரி பாசன மாவட்டங்களில் இந்த அளவு 4 முதல் 5 லட்சம் ஏக்கர் என்ற அளவுக்கு குறைந்து விடும் என அஞ்சப்படுகிறது. இதனால், 16 முதல் 17 லட்சம் டன் நெல் உற்பத்தி குறையும். 60 முதல் 70% அளவுக்கு விவசாயம் பாதிக்கப்படுவதால் காவிரி பாசன மாவட்ட உழவர்கள் கடுமையான பொருளாதார இழப்புக்கு ஆளாவார்கள். அதுமட்டுமின்றி, வேளாண் கூலித் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி வருவாய் இழப்புக்கு ஆளாவார்கள்.</p><h2>வறட்சி பாதித்த மாநிலம்</h2><p>பருவமழை பொய்த்ததாலும், கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் இந்த அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், அதை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. இந்த பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான முதல் நடவடிக்கை தமிழ்நாட்டு வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிப்பது தான். அதன்படி <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழ்நாட்டை </a>வறட்சி பாதித்த மாநிலமாக தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.</p><p>அத்துடன் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்; குறுவை சாகுபடி செய்யாத விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 வீதமும், குறுவை சாகுபடி செய்து நீரின்றி பயிர்கள் வாடியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதமும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். சம்பா சாகுபடி செய்யமுடியாத நிலை உருவாகும் சூழலில் அதனால் பாதிக்கப்படும் உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.10000 உதவி வழங்க வேண்டும். நிலமில்லா தொழிலாளர்களுக்கு ஒருமுறை உதவியாக ரூ.25,000 வழங்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மதுக்கடையை ஆய்வு செய்த சி.வி.சண்முகம்; சாகும் வரை குடிப்போம் என முழங்கிய மதுப்பிரியர்களால் பரபரப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cv-shanmugam-inspected-the-liquor-store</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cv-shanmugam-inspected-the-liquor-store#comments</comments><guid isPermaLink="false">d8ae91c2-edc0-4fe7-a322-dca673a28a37</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:17:11 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:17:11.064Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சி.வி.சண்முகம்,மதுக்கடை,மதுபிரியர்கள்,CVShanmugam,Thindivanam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/lajqs5dq/sanmugam33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ சி.வி.சண்முகம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மதுக்கடையை ஆய்வு செய்த சி.வி.சண்முகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/lajqs5dq/sanmugam33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>விழுப்புரம்,</p><p> திண்டிவனம் அருகே மதுக்கடையை ஆய்வு செய்தார் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்.</p><p>விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே  நடுவனந்தல் புதூரில் ஆக.18-ஆம் தேதி புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு, அங்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மதுக்கடை திறப்புக்கு கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் ஆதரவும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து கடந்த சில நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அதே பகுதியைச் சேர்ந்த சிலர் டாஸ்மாக் கடையை மூடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>இந்நிலையில், மயிலம் தொகுதி எம்எல்ஏ சி.வி சண்முகம் நேற்று  நடுவனந்தல் கிராமத்துக்குச் சென்று, மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.</p><p>இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: -</p><p>கிராமங்கள் நிறைந்த நடுவனந்தல் பகுதியில் புதியதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப் பேரவையில் பேசியுள்ளேன். டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம சபைக் கூட்டத்திலும் தீர்மானம் நிறவேற்றப்பட்டுள்ளது.</p><p>எனவே, விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதியதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நடவடிக்கைக்காக 5 நாள்கள் காத்திருப்போம். தவறும் பட்சத்தில் போராட்டம் நடத்தப்படும் என்று <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">சி.வி.சண்முகம்</a>. கூறினார்.</p><p>இந்நிலையில், மதுக்கடை முன் திரண்ட அதே பகுதியைச் சேர்ந்த சிலர் டாஸ்மாக் கடையை மூடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து "சாகும் வரை குடிப்போம்" என சிலர் முழக்கமிட்டதால் பரப்பான சூழல் நிலவியது.  இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார் இரு தரப்பைச் சேர்ந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைத்தனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>நெல்லை: சொகுசு காரில் கஞ்சா விற்பனை - 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-ganja-sold-from-luxury-car-2-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-ganja-sold-from-luxury-car-2-arrested#comments</comments><guid isPermaLink="false">3b367fd8-43bc-41dc-9a6c-7219dd7c09e7</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:13:55 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:13:55.273Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Tirunelveli,Cannabis smuggling,சொகுசு கார்,luxury car,கஞ்சா கடத்திய 2 பேர் கைது</media:keywords><media:content height="410" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/fol4m29o/raja-2026.jpg" width="710"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ போலீஸ் அதிகாரி மற்றும் அவரது நண்பர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/fol4m29o/raja-2026.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை, </p><p>நெல்லை மாவட்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா கடத்தி விற்பனை செய்த வழக்கில் இரண்டாம் நிலை சிறைப் போலீஸ் அதிகாரி மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டனர்.</p><h2>கஞ்சா கடத்தல்</h2><p>நெல்லை மாவட்ட பகுதிகளில் சொகுசு காரைப் பயன்படுத்தி பெருமளவில்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"> போதைப்பொருட்கள்</a> விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நெல்லை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த சொகுசு காரை மறித்து சோதனை செய்தனர். சோதனையில் காரில் கஞ்சா கடத்தியது கண்டுப்பிடிக்கப்பட்டது . அதிலிருந்த 2 கிலோ கஞ்சா, 7 லட்சம் ரொக்க பணம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். உடனடியாக இருவரையும் கைது செய்து, விசாரணை மேற்கொண்டதில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் தூத்துக்குடியை சேர்ந்த இரண்டாம் நிலை சிறைப் போலீஸ் அதிகாரி தமிழரசன் மற்றொருவர் அவரது நண்பர் என்பது தெரிய வந்தது.</p><h2>வழக்குப்பதிவு</h2><p>சட்டவிரோதமாகக் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்த குற்றத்திற்காக சிறைப் போலீஸ் அதிகாரி தமிழரசன் மற்றும் அவரது நண்பர் மீது 1985 போதைப்பொருட்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் நெல்லை மாநகர <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a> வழக்குப் பதிவு செய்துள்ளனர். போலீசார் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டது பொது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>5 கோவில்களில் உண்டியல்களை உடைத்து திருட்டு: 3 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/3-arrested-for-stealing-money-by-breaking-bank-notes-in-5-temples</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/3-arrested-for-stealing-money-by-breaking-bank-notes-in-5-temples#comments</comments><guid isPermaLink="false">d10c8250-0968-4869-8d41-40bdf4453369</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:12:44 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:12:44.210Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrest,திருட்டு,கோவில்,Temple,உண்டியல்,ஆலங்குடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/ppxm0sph/160.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/ppxm0sph/160.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஆலங்குடி, </p><p>ஆலங்குடி அருகே 5 கோவில்களில் உண்டியலை உடைத்து  திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.</p><h2>மர்ம நபர்கள்</h2><p>ஆலங்குடி அருகே கல்லாலங்குடி முத்துமாரியம்மன் கோவில், கலிபுல்லா நகர் சித்தி விநாயகர் கோவில், ஆண்டிகுளம் மங்கள விநாயகர் கோவில் மற்றும் மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோவில், மழை மாரியம்மன் கோவில்களில் கடந்த ஒரு வாரத்திற்குள் உண்டியல்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.</p><h2>தீவிர விசாரணை</h2><p>இதுகுறித்து கோவில் நிர்வாகிகள், கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பூசாரிகள் ஆலங்குடி மற்றும் கீரமங்கலம் போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தனர். இதையடுத்து ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">விசாரணை</a> நடத்தி வந்தனர்.</p><p>விசாரணையில், கோவில்களில் உண்டியல்களை உடைத்து பணத்தை திருடியது மணமேல்குடி தாலுகா வேதியன்குடியை சேர்ந்த ஆனந்தன் மகன் காளிதாஸ் (வயது 24), தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் கலச்சங்காட்டை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் நாகராஜ் (28), அறந்தாங்கி தாலுகா திருநாளூர் வடக்கை சேர்ந்த கண்ணையா மகன் விஜய் (32) ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது. </p><h2>கைது</h2><p>இதையடுத்து தனிப்படை போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரையும் ஆலங்குடி, கீரமங்கலம் போலீசார் அறந்தாங்கி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>விசிக பிரமுகரை கொன்று உடல் கிணற்றில் வீச்சு: கள்ளக்காதலனுடன் மனைவி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vck-functionary-murdered-and-body-dumped-in-well-wife-and-her-lover-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vck-functionary-murdered-and-body-dumped-in-well-wife-and-her-lover-arrested#comments</comments><guid isPermaLink="false">56691f0d-3045-435c-88f4-08015389dafe</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:01:08 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:01:08.361Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,Cuddalore,கடலூர்,கள்ளக்காதல்,கிரைம் செய்திகள்,fake love,wife,மனைவி,விசிக</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/822r501b/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/822r501b/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>கடலூர்,</p><h2>காதல் திருமணம்</h2><p>கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள ஒரங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி மகன் இளையராஜா (வயது 39). விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒரங்கூர் முகாம் செயலாளராக இருந்து வந்தார். இவரும், பட்டாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த அஸ்வினிதா(30) என்ப வரும் காதலித்து கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு விஷ்ணு(10), மிதுன்(8) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.</p><p>இந்நிலையில் கடந்த 12-ந்தேதி ஒரங்கூர் கிராமத்தில் உள்ள பெரியசாமி என்பவரது விவசாய கிணற்றில் இளையராஜா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்த புகாரின் பேரில் சிறுபாக்கம் போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.</p><h2>மனைவி மீது சந்தேகம்</h2><p>ஆனால் அஸ்வினிதாவின் நடவடிக்கையும், பேச்சும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அஸ்வினிதாவின் செல்போன் எண்ணை பெற்றுக்கொண்டு போலீசார் ரகசியமாக ஆராய்ந்தனர். அதேபோல் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் பார்வையிட்டனர்.</p><p>அஸ்வினிதாவும், இளையராஜாவின் சித்தி மகனான பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள இனாம் அகரம் கிராமத்தை சேர்ந்த கனகராஜ் மகன் வெங்கடேசன்(32) என்பவரும் தினமும் செல்போனில் மணிக்கணக்கில் பேசியது தெரிந்தது. இதையடுத்து அஸ்வினிதா, வெங்கடேசன் ஆகிய 2 பேரையும் போலீசார் தங்களது விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். முதலில் இருவரும் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர்.</p><h2>கள்ளக்காதல்</h2><p>போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-</p><p>அண்ணன் என்ற முறையில் இளையராஜாவின் வீட்டுக்கு வெங்கடேசன் அடிக்கடி வந்துள்ளார். அப்போது அவருக்கும், அஸ்வினிதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் தங்களது செல்போன் எண்ணை பரிமாறி மணிக்க ணக்கில் பேசி வந்தனர். இதுவே நாளடைவில் கள்ளக்காத லாக மாறியது. இந்த விவகாரம் தெரிந்ததும் இளையராஜா அதிர்ச்சி அடைந்தார். மேலும் மனைவியையும், தம்பியையும் கண்டித்துள்ளார். ஆனாலும் இருவரும் கள்ளத்தொடர்பை கைவிடவில்லை.</p><h2>அடித்துக் கொலை</h2><p>இந்தநிலையில் கடந்த 11-ந்தேதி இளையராஜா, வெங்கடேசனை செல்போனில் தொடர்பு கொண்டு மது குடிக்க அழைத்துள்ளார். இதையடுத்து அவர், தனது நண்பரான அதே ஊரை சேர்ந்த செல்லையா மகன் செல்வம் (23) என்பவருடன் காரில் கீழ்கல்பூண்டிக்கு வந்துள்ளார். அங்குள்ள டாஸ்மாக் கடையில் 3 பேரும் மதுபாட்டில்கள் வாங்கிக்கொண்டு ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றனர்.</p><p>அங்குள்ள ஒரு மரத்தடியில் அமர்ந்து 3 பேரும் மதுகுடித்தனர். போதை தலைக்கு ஏறியதும் இளையராஜா, இனிமேல் தனது மனைவியுடன் பழகக்கூடாது என்று கூறி வெங்கடேசனை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன் சரமாரியாக அடித்து இளையரா ஜாவை கொலை செய்தார்.</p><h2>நாடகமாட திட்டம்</h2><p>பின்னர் கொலையை மறைக்க வெங்கடேசன் திட்டமிட்டார். அதன்படி இருவரும் சேர்ந்து உடலை காரில் தூக்கிப் போட்டு இனாம் அகரம் கிராமத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் இளையராஜா விபத்தில் இறந்ததுபோல் நாடகமாட திட்டமிட்டனர். எனவே மீண்டும் அவரது உடலை கீழ்கல்பூண்டியில் மது குடித்த இடத்துக்கு கொண்டு வந்தனர். அங்கு கிடந்த இளையராஜா ஓட்டி வந்த ஸ்கூட்டரை எடுத்தனர்.</p><p>அதை செல்வம் ஓட்டி வர, அவருக்கு முன்னால் வெங்கடேசன் காரில் இளையராஜாவின் உடலுடன் ஒரங்கூருக்கு சென்றார். அங்கு ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள பெரியசாமியின் கிணற்றில் இளையராஜாவின் உடலை வீசினர். பின்னர் ஸ்கூட்டரை கிணற்றின் மீது மோதி விழுந்து கிடப்பதுபோன்று செய்து விட்டு சென்று விட்டனர். மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரிந்தது.</p><h2>3 பேர் கைது</h2><p>இதையடுத்து சந்தேக மரண வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி வெங்கடேசன், செல்வம் ஆகியோரையும், கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அஸ்வினிதாவையும் கைது செய்தனர். விசிக பிரமுகரை அடித்துக் கொலை செய்து விட்டு உடலை கிணற்றில் வீசிய வழக்கில் மனைவி, கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆணாதிக்க அரசியலை கடந்து பெண்கள் வெற்றி பெற வேண்டும்! - கனிமொழி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/women-must-overcome-patriarchal-politics-and-win-kanimozhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/women-must-overcome-patriarchal-politics-and-win-kanimozhi#comments</comments><guid isPermaLink="false">2fa0877a-f6bc-41d5-a710-68db1317e783</guid><pubDate>Mon, 24 Aug 2026 05:53:48 +0000</pubDate><atom:updated>2026-08-24T05:53:48.764Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசியல்,politics,கனிமொழி,பெண்கள்,Kanimozhi Karunanidhi,A woman,Patriarchy,ஆணாதிக்கம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/ypw78vfs/kanimozhi.gif" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/ypw78vfs/kanimozhi.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திமுக துணைப்பொதுச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/kanimozhi">கனிமொழி</a> கருணாநிதி தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>காலம் காலமாக, கட்சி வேறுபாடின்றி பொதுவாழ்வில் இருக்கும் பெண்கள் மீது அநாகரிகமான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.</p><h2>ஆணாதிக்க அரசியல்</h2><p>ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் களத்தில் துணிச்சலுடன் செயலாற்றும் பெண்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல், அவர்களின் உடை, தோற்றம், தனிப்பட்ட வாழ்க்கை போன்றவற்றை வைத்து விமர்சிப்பது மலினமான அரசியலின் வெளிப்பாடாகும். இத்தகைய தாக்குதல்களில் ஈடுபடுபவர்களின் பிற்போக்குத்தனமான மனநிலையே இதன் மூலம் வெளிப்படுகிறது. பெண்கள் இதையெல்லாம் கடந்தே வெற்றி பெற வேண்டும்.</p><p>இவ்வாறு அதில்  தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பிரதமர் வேட்பாளர் ராகுலா?, விஜய்யா?: காங்கிரஸ் - த.வெ.க. கூட்டணியில் வெடித்தது மோதல்! 

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/congress-tvk-pm-candidate-row-rahul-or-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/congress-tvk-pm-candidate-row-rahul-or-vijay#comments</comments><guid isPermaLink="false">adb8fc24-1fc3-4232-aa43-619d0ab6b5fd</guid><pubDate>Mon, 24 Aug 2026 05:40:12 +0000</pubDate><atom:updated>2026-08-24T05:40:12.264Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,Vijay,விஜய்,காங்கிரஸ்,Congress,ராகுல் காந்தி,Rahul Gandhi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/73czh01m/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/73czh01m/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தியா?, விஜய்யா? என்ற விஷயத்தில் காங்கிரஸ் - த.வெ.க. கூட்டணியில் <a href="https://www.dailythanthi.com/">மோதல் </a>வெடித்துள்ளது. </p>   <h2>கூட்டணி ஆட்சி அமைத்துள்ள த.வெ.க.</h2> <p>தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க.வுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தேவை 118 ஆக இருக்க, அக்கட்சிக்கு 107 இடங்களே கிடைத்தன. இதனால், காங்கிரஸ் (5), விடுதலை சிறுத்தைகள் கட்சி (2), இந்திய கம்யூனிஸ்டு கட்சி (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க. கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.</p><p>தமிழகத்தில் 'மைனாரிட்டி' அரசாக த.வெ.க. இருந்து வரும் நிலையில், ஆட்சிக்கு எப்போதும் ஆபத்து வரலாம் என்ற நிலையே தொடர்கிறது. குறிப்பாக, அமைச்சரவையில் பங்குபெறாத இரு கம்யூனிஸ்டு கட்சிகளால், எப்போது வேண்டுமானாலும் த.வெ.க. அரசு ஆட்டம் காணலாம் என்ற நிலையே இருக்கிறது.</p> <h2>ரசிகர் மன்ற மனநிலை</h2><p>சூழ்நிலை இவ்வாறு இருக்க, த.வெ.க. <a href="https://www.dailythanthi.com/">அமைச்சர்கள் </a>ஆதவ் அர்ஜூனா, ஜெகதீஸ்வரி, ஸ்ரீநாத் உள்ளிட்டோர், நாட்டின் அடுத்த பிரதமர் விஜய் என்ற அளவில் பேசிவருகின்றனர். இது கூட்டணியில் உள்ள தேசிய கட்சியான காங்கிரஸ் நிர்வாகிகளை கொதிப்படைய செய்துள்ளது.</p><p>இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி., "பிரதமர் வேட்பாளர் தொடர்பாக த.வெ.க.வினர் வெளியிடும் கருத்துகள் ரசிகர் மன்ற மனநிலையிலேயே உள்ளது. 'இந்தியா' கூட்டணியில் தற்போது 23 கட்சிகள் உள்ளன. த.வெ.க.வுக்கு எம்.பி.க்கள் இல்லை. எனவே, அவர்களுக்கு எம்.பி.க்கள் கிடைத்ததும் 'இந்தியா' கூட்டணியில் இணைக்கப்படுவர். த.வெ.க.வுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கவில்லை என்றால், மத்திய மந்திரி அமித்ஷா கதையை முடித்திருப்பார். எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராகி இருப்பார்" என்று கூறியிருக்கிறார்.</p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/wntehtvi/1.jpg" /></figure><h2>கூட்டணியில் மோதல்</h2><p>இதன் மூலம் காங்கிரஸ் - த.வெ.க. கூட்டணியில் மோதல் போக்கு ஆரம்பித்துவிட்டது என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 ஆண்டுகள் இருக்கின்றன. தற்போதைய நிலையில் த.வெ.க.வுக்கு ஒரு எம்.பி. கூட கிடையாது. நிலைமை இவ்வாறு இருக்க, இப்போதே ஏன் பிரதமர் வேட்பாளர் குறித்த பேச்சு தேவையா? என்ற கேள்வி எழுகிறது.</p><p>அரசியலில் தற்போதைய நிலையில் த.வெ.க. ஒரு குழந்தை. 2½ வயதுதான் ஆகிறது. தமிழகத்தில் ஆட்சிக்கு வந்து 100 நாட்களை இப்போதுதான் கடந்திருக்கிறது. இன்னும் பயணிக்க வேண்டியது வெகுதூரம் உள்ளது. தமிழகத்திலேயே இன்னும் சரியாக கால் ஊன்றவில்லை. அப்படி இருக்கும்போது, தேசிய அரசியலை இப்போதே த.வெ.க. முன்னெடுப்பது தேவையில்லாதது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.</p> <h2>3-வது முறை பிரதமராக நரேந்திரமோடி</h2><p>2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது, பா.ஜ.க.வுக்கு பிரதமர் வேட்பாளர் தேவையாக இருந்தது. அந்த நேரத்தில், குஜராத் மாநிலத்தை முன்னேற்றப் பாதைக்கு அழைத்து வந்த முதல்-மந்திரி நரேந்திரமோடியை நாடே அறிந்து இருந்ததால், அவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.</p><p>தேர்தலில் பா.ஜ.க.வும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தொடர்ந்து, 3-வது முறை பிரதமராக <a href="https://www.dailythanthi.com/">நரேந்திரமோடி </a>இருந்து வருகிறார். பா.ஜ.க.வுக்கு மாற்றாக இருந்து வரும் காங்கிரஸ் கட்சியில் ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளராக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளார்.</p>  <h2>தற்போதைக்கு தேவையில்லாதது</h2><p>காங்கிரஸ் தலைமையிலான 'இந்தியா' கூட்டணியில் 23 கட்சிகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இருந்து த.வெ.க.வும் அந்தக் கூட்டணியில் இணைந்தால், நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான தொகுதிகளில் போட்டியிட முடியும்.</p><p>நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் த.வெ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான 'இந்தியா' கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும். அவ்வாறு நடந்தால்தான், அந்தக் கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் குறித்த பேச்சுக்கே தேவை ஏற்படும். அதுவும், ராகுல்காந்தி ஏற்கனவே முன்னிறுத்தப்பட்டுள்ள நிலையில், விஜய்யை த.வெ.க. அமைச்சர்கள் முன்மொழிந்து வருவது தற்போதைக்கு தேவையில்லாதது.</p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/hmd7k8n1/0.jpg" /></figure><h2>கடந்து செல்ல வேண்டிய தூரம் அதிகம்</h2><p>தேசிய அரசியலை <a href="https://www.dailythanthi.com/">த.வெ.க.</a> இப்போதே முன்னெடுத்தால், இன்னும் கடந்து செல்ல வேண்டிய தூரம் அதிகம் உள்ளது. முதலில், தமிழகத்தில் வலுவாக கால் ஊன்ற வேண்டும். நல்லாட்சியை இங்கு கொடுத்தால் தான், த.வெ.க. புகழ் நாடு முழுவதும் பரவும்.</p><p>அடுத்தக்கட்டமாக, த.வெ.க.வை அண்டை மாநிலங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும். கேரளம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களில் விஜய்க்கு ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன. இந்த மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி, அதில் வெற்றி பெற்றால்தான், த.வெ.க.வால் அங்கு கால் ஊன்ற முடியும். இவை எல்லாம் ஒரே நாளில் நடந்துவிடாது.</p> <h2>பின்னடைவை ஏற்படுத்தும்</h2><p>எனவே, முதலில் தமிழ்நாட்டில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் த.வெ.க. கவனம் செலுத்தி, மொத்தம் உள்ள 7 இடங்களில் வெற்றி பெற்றாகவேண்டும். அவ்வாறு வெற்றி பெற்றாலும், பெரும்பான்மைக்கு 4 தொகுதிகள் குறைவாகத்தான் இருக்கும்.</p><p>எனவே, தேவையில்லாமல் இப்போது தேசிய அரசியலை பேசி கூட்டணிக்குள் குதர்க்கத்தை ஏற்படுத்துவது த.வெ.க.வுக்குத்தான் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ஊழல் பெருச்சாளிகள் நிரம்பிய கூடாரமாக மாறி வருகிறதா தவெக? - விசிக கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-tvk-turning-into-a-den-of-corrupt-giant-rats-vck-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-tvk-turning-into-a-den-of-corrupt-giant-rats-vck-asks#comments</comments><guid isPermaLink="false">3f1023be-d309-4dc7-991c-a239ccc59f2b</guid><pubDate>Mon, 24 Aug 2026 05:34:55 +0000</pubDate><atom:updated>2026-08-24T05:34:55.567Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,ஊழல்,விசிக</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/padt1yli/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/padt1yli/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் சா.ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><p>ஜென்சி எனப்படும் புதிய தலைமுறை நிரம்பிய ஒரு பேரியக்கம் என்று நம்பப்பட்ட முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஊழலை ஒழித்து தூயமையான ஆட்சி நிர்வாகத்தை கொடுப்பதுதான் தமது முதன்மையான நோக்கம் என்று கூறி வருகிறது. அதனை தமிழக மக்களும் பெரிதாக நம்பி வருகிறார்கள். ஆனால் தமிழக வெற்றிக் கழகத்தின் இன்றைய செயல்பாடுகள் அந்த நம்பிக்கையை தகர்க்கும் விதமாக அமைந்துள்ளது .</p><p>ஏற்கனவே ஊழலில் திளைத்து வழக்குகளை சந்தித்து வரும் முன்னாள் அமைச்சர்களையும், ஊழல் சக்தி என்று முதல்-அமைச்சர் விஜயால் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்ட கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ-க்களையும் தங்கள் கட்சியில் பெருமளவில் சேர்த்து வருவதும், அதனை அமைச்சர் செங்கோட்டையன் போன்றவர்கள் பெருமையாக பேசிவருவதும் தமிழக வெற்றிக் கழகம் ஊழல் பேர்வழிகள் நிரம்பிய கூடாரமாக மாறி வருகிறதோ என்ற அய்யத்தை மக்களுக்கு ஏற்படுத்தத் தொடங்கியிருக்கிறது.</p><p>அமைச்சர் செங்கோடையன் அதிமுகவைச் சேர்ந்த இன்னும் 10 பேர் விரைவில் தவெகவில் இணைய உள்ளனர், அந்த எண்ணிக்கை 25-ஐ தாண்டும் என்று சொல்லியிருப்பது இதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது. எத்தகைய மக்கள் சிந்தனையும் இல்லாமல் பதவியும், பணமும் மட்டுமே தங்களது குறிக்கோள் என்று செயல்பட்டுவரும் ஊழல் பெருச்சாளிகள் தவெகவில் இணைந்ததும் வாஷிங் மெஷினில் துவைக்கப்பட்டு தூய்மையானவர்களாக மாறிவிடுகிறார்களா? என்ற எதிக்கட்சிகளின் கேள்விக்கு வலு சேர்ப்பதாக உள்ளது.</p><p>அதே போன்று தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டும் உண்மையே என்ற எண்ணத்தையும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. ஆகவே, தமிழக வெற்றிக் கழகம் இத்தகைய நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். இவை தொடருமேயானால் தமிழக வெற்றிக் கழகம் மக்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும் என்பதில் ஐயமில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விருத்தாசலம்: வந்தே பாரத் ரெயில் மீது கல்வீச்சு - 2 சிறுவர்களிடம் விசாரணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vriddhachalam-stone-pelting-on-vande-bharat-train-2-boys-questioned</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vriddhachalam-stone-pelting-on-vande-bharat-train-2-boys-questioned#comments</comments><guid isPermaLink="false">0a8a962e-05be-4264-85aa-38950df8e02a</guid><pubDate>Mon, 24 Aug 2026 05:29:12 +0000</pubDate><atom:updated>2026-08-24T05:29:12.854Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>வந்தே பாரத் ரெயில்,Vande Bharat Express,கல்வீச்சு,Stone-pelting</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/3vg11tbc/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/3vg11tbc/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர், </p> <p>சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்தே பாரத் ரெயில் நேற்று புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் காலை 8.30 மணி அளவில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பூவனூர் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது மர்மநபர்கள் திடீரென வந்தே பாரத் ரெயில் மீது கல்வீசி தாக்கினர். இதில் ரெயிலின் 2 ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. இது குறித்து ரெயில்வே ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் மற்றும் விருத்தாசலம் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தினர். </p><p>தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் ரெயிலில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் ரெயிலில் கல்வீசி கண்ணாடியை உடைத்தது 2 சிறுவர்கள் என் பது தெரிந்தது. இதையடுத்து அவர்களை பிடித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>ஆவின் பால் கொள்முதல்: சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aavin-milk-procurement-calling-attention-motion-in-the-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aavin-milk-procurement-calling-attention-motion-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">0ffa8373-28a6-4ece-9997-6e431e9e2158</guid><pubDate>Mon, 24 Aug 2026 05:15:34 +0000</pubDate><atom:updated>2026-08-24T05:15:34.353Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,TN Assembly,Aavin Milk,Milk procurement,பால் கொள்முதல்,ஆவின் பால்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/vjh7ua8h/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/vjh7ua8h/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஆவின் பால் கொள்முதல் விலை தொடர்பாக சட்டசபையில் முக்கிய கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. </p><h2>இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-</h2><p>ஆவினுக்கு பால் வழங்குவது ஒரு கேள்விக்குறியாக மாறியுள்ளது. தீவனங்கள் விலை உயர்வால் பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை கட்டுப்படியாகவில்லை. கேரளத்தில் ஒரு லிட்டர் ரூ.45க்கு பாலை கொள்முதல் செய்கின்றனர். அதைபோல தமிழகத்திலும் பால் கொள்முதல் விலையை ரூ.45 ஆக உயர்த்த வேண்டும் என்று அவர் கூறினார்.</p><p><strong>தொடர்ந்து முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில்,</strong> கால்நடைகளின் தீவனங்கள் விலையும் பராமரிப்பு செலவும் அதிகரித்துள்ளது; அரசு அறிவித்த விலை போதாது என தமிழ்நாடு முழுவதும் பால் முகவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். அரசு அறிவித்துள்ள பால் கொள்முதல் விலை கூடுதலாக உயர்த்தப்பட வேண்டும் என தமிழ்நாடு முழுவதும் பால் முகவர்கள், பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்துகின்றனர். 1 லிட்டர் பசும்பால் ரூ.50, எருமை பால் ரூ.60 என கொள்முதல் விலை கொடுக்க வேண்டும் என்றார்.</p><p><strong>இதற்கு பதில் அளித்த பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி,</strong> “பால் கொள்முதல் விலை உயர்த்தி வழங்குவது மிக முக்கியமானது என்பதில் மாற்றுக்கருத்துகள் இல்லை. திமுக அரசால் 2021-ம் ஆண்டு ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டதால் ஆவின் நிறுவனத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ. 270 கோடி கூடுதல் நஷ்டம் ஏற்பட்டது. விலை குறைப்பினால் ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்யவும், பால் கொள்முதல் மற்றும் விற்பனையை அதிகரிக்க எந்த முயற்சியும் எடுக்காமல் திமுக அரசு மெத்தன போக்கில் செயல்பட்டது; இதனால் ஆவின் நிறுவனம் கூடுதல் நிதிசுமையை எதிர்க்கொண்டு வருகிறது.</p><p>தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகளுக்கு பிறகே பால் கொள்முதல் விலையை உயர்த்தினார்கள்.. ஆனால் முதல்வர் விஜய் ஆட்சி பொறுப்பேற்று மூன்றே மாதத்தில் கொள்முதல் விலையை உயர்த்தியுள்ளார். அதைபோல பால் கொள்முதல் விலையை ரூ.44 ஆக உயர்த்த முதல்-அமைச்சருடன் ஆலோசித்து பரிசீலிக்கப்படும்” என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டால் தொழில் வளர்ச்சி பாதிக்கும்: தங்கம் தென்னரசு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/industrial-growth-would-be-affected-if-the-parandur-airport-project-were-abandoned-thangam-thennarasu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/industrial-growth-would-be-affected-if-the-parandur-airport-project-were-abandoned-thangam-thennarasu#comments</comments><guid isPermaLink="false">a2fb5304-bada-47d6-aa17-9fbe903e2c8d</guid><pubDate>Mon, 24 Aug 2026 05:14:12 +0000</pubDate><atom:updated>2026-08-24T05:14:12.790Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>தங்கம் தென்னரசு,Thangam thennarasu,பரந்தூர் விமான நிலையம்,Parandur Airport</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/enqg6881/10.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/enqg6881/10.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்படுவதாக முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தார். அப்போது திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கோஷங்களை எழுப்பினர். அத்துடன் இதுகுறித்து விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுத்ததாக கூறி திமுகவினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதன் பின்னர் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;</p><p>”பரந்தூர் விமான நிலையம் குறித்து 55 விதியிண் கீழ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்திருந்தோம். கவன ஈர்ப்பு தீர்மானம் இன்று ஏற்கபப்டும் என கூறி இருந்தனர். முதல்-அமைச்சர்110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்தால் பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து விவாதிக்க மறுத்துவிட்டனர். கவன ஈர்ப்பு தீர்மானத்தை சபாநாயகர் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவில்லை. </p><p>தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு சென்னையில் 2-வது விமான நிலையம் தேவை. பரந்தூர் விமான நிலையம் மிகவும் அவசியமானது. விமான நிலையம் தொழில் வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியமானது. சென்னையை சுற்றி மற்ற இடங்களில் விமான நிலையம் அமைவதில் சிக்கல்கள் உள்ளன. பல இடங்களில் ஆய்வு செய்த பின்னர்தான் பரந்தூரை விமான நிலையத்துக்காக தேர்வு செய்தோம். </p><p>ஸ்ரீபெரும்புதூரில் அதிகளவில் தொழிற்சாலைகள் அமைந்துள்ளதால் பரந்தூர் விமான நிலையம் கட்டாய தேவையாக உள்ளது. பரந்தூர் விமான நிலையத்தை நம்பியே எலக்ட்ரானிக் நிறுவனங்கள் ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் வந்தன. பரந்தூர் விமான நிலையம் கைவிடப்பட்டால் எத்தகைய பொருளாதாரா விளைவு ஏற்படும் என்பது குறித்து விவாதிக்க மறுத்துவிட்டனர். அரசியல் நோக்கம் தாண்டி செயல்படுவது அவசியம்.”</p><p>இவ்வாறு அவர் பேசினார். </p> ]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டின் கனிமவளத்தை அழிக்கத்தான் ஆட்சிக்கு வந்தீர்களா? - வேல்முருகன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/did-you-come-to-power-to-destroy-the-mineral-resources-of-tamil-nadu-velmurugan-question</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/did-you-come-to-power-to-destroy-the-mineral-resources-of-tamil-nadu-velmurugan-question#comments</comments><guid isPermaLink="false">f78ce880-9e38-43ef-b15d-78fb3a22da97</guid><pubDate>Mon, 24 Aug 2026 04:55:20 +0000</pubDate><atom:updated>2026-08-24T04:55:20.839Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,கேரளா,Velmurugan,வேல்முருகன்,Mineral resources,For Tamil Nadu,கனிமவளங்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/2ca5fnfn/159.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/2ca5fnfn/159.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கேரளாவில் மலைகள் இல்லையா? தமிழ்நாட்டின் கனிமவளத்தை அழிக்கத்தான் ஆட்சிக்கு வந்தீர்களா? என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.  </p><p>இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>கனிமப் பொருட்கள்</h2><p>கேரளாவின் கட்டுமானத் தேவைக்காக தமிழ்நாட்டிலிருந்து கல், ஜல்லி, எம்சாண்ட் உள்ளிட்ட கனிமப் பொருட்களை எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.</p><p>குறிப்பாக, மாமல்லபுரத்தில் நடைபெற்ற தென் மண்டல முதல்வர்கள் மாநாட்டின் போது, கேரள முதல்-மந்திரி சதீசன், தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கான கட்டுப்பாடுகளில் கேரளாவுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் இடம் கோரிக்கை வைத்துள்ளார். </p><p>அதற்கு, கேரளாவை இந்தக் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்குவது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலிக்கும் என்று முதல்-அமைச்சர் விஜய் உறுதியளித்துள்ளதாக கேரள முதல்-மந்திரி அலுவலகமே தெரிவித்துள்ளது. இது உண்மையா ?</p><h2>தமிழ்நாட்டின் இயற்கை</h2><p>இத்தகைய சூழலில், தமிழ்நாட்டிற்குள்ளேயே சாலை, பாலம், வீடமைப்பு, தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிப் பணிகளுக்கு கட்டுமான மூலப்பொருட்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நமது தேவையை முழுமையாக உறுதி செய்யாமல் பிற மாநிலங்களின் கட்டுமானத் தேவைக்காக தமிழ்நாட்டின் இயற்கைச் செல்வத்தை அனுப்புவது எந்த வகையிலும் தொலைநோக்கான நிர்வாகமாக இருக்க முடியாது. </p><p>அண்டை மாநிலங்களுடன் நல்லுறவு வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் நல்லுறவு என்ற பெயரில் தமிழ்நாட்டின் மலைகளை இழக்க முடியாது.</p><p>கேரளமாக இருந்தாலும், கர்நாடகமாக இருந்தாலும், ஆந்திரமாக இருந்தாலும், எந்த மாநிலத்தின் கட்டுமானத் தேவையை நிறைவேற்றுவதற்காகவும், தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறைகளின் வாழ்வுரிமையை அழிப்பதை ஏற்க முடியாது.</p><p>எனவே, கேரளாவுக்கு தனிப்பட்ட விலக்கு அளிப்பது குறித்த பரிசீலனையை, தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். தமிழ்நாட்டின் உள்நாட்டுத் தேவையை முதலில் முழுமையாகக் கணக்கில் கொண்டு, இயற்கை வளத்தின் இருப்பு, சுற்றுச்சூழல் தாக்கம், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வருங்காலத் தலைமுறைகளின் தேவைகளை உறுதி செய்த பின்னரே கனிமவளப் பயன்பாடு தொடர்பான எந்த முடிவும் எடுக்கப்பட வேண்டும்.</p><h2>வலியுறுத்தல்</h2><p>வெளிமாநிலங்களுக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">கனிமவளங்களை</a> எடுத்துச் செல்வதில் விதிவிலக்குகளுக்கு இடமளிக்காமல், சட்டவிரோதக் குவாரிகள், அதிகப்படியான அகழ்வுகள் மற்றும் கனிமவளக் கடத்தலை முற்றாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">கேரளாவில் மலைகள் இல்லையா? தமிழ்நாட்டின் கனிமவளத்தை அழிக்கத்தான் ஆட்சிக்கு வந்தீர்களா?<br><br>கேரளாவின் கட்டுமானத் தேவைக்காக தமிழ்நாட்டிலிருந்து கல், ஜல்லி, எம்சாண்ட் உள்ளிட்ட கனிமப் பொருட்களை எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து… <a href="https://t.co/8SnGpyynS9">pic.twitter.com/8SnGpyynS9</a></p>&mdash; Velmurugan.T (@VelmuruganTVK) <a href="https://x.com/VelmuruganTVK/status/2091735870361788619?ref_src=twsrc%5Etfw">August 24, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-members-walk-out-of-the-legislative-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-members-walk-out-of-the-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">980c3ed1-91ce-4189-8843-07d04b4591bf</guid><pubDate>Mon, 24 Aug 2026 04:47:21 +0000</pubDate><atom:updated>2026-08-24T04:47:21.018Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,சட்டசபை,Legislative Assembly</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/0irb9r5k/9.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/0irb9r5k/9.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்படுவதாக முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தார். அப்போது திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கோஷங்களை எழுப்பினர். அத்துடன், பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து திமுக பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி கொடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். </p><p>ஆனால் சபாநாயகர் திமுகவினருக்கு உடனடியாக பேச வாய்ப்பு மறுத்துவிட்டார். முதல்-அமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டதால், அதுகுறித்து பேச திமுகவினருக்கு அனுமதி அளிக்க முடியாது என தெரிவித்தார். அப்போது திமுகவினர் அனைவரும் எழுந்து நின்று கோஷமிட்டதால், அனைவரும் வெளியே சென்று கோஷமிடுங்கள் என சபாநாயகர் கூறினார். </p><p>இதையடுத்து திமுகவினர் உடனடியாக சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செந்தனர். மேலும், வெளியே செல்லும்போது 'அனுமதி கொடு, அனுமதி கொடு' என கோஷங்களை எழுப்பினர். </p>]]></content:encoded></item><item><title>கரூர்: சமூக நீதி விடுதியில் தரமற்ற உணவு வழங்குவதாக மாணவர்கள் புகார் - டிடிவி தினகரன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-students-complain-about-substandard-food-at-the-social-justice-hostel-ttv-dhinakaran-condemns-the-situation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-students-complain-about-substandard-food-at-the-social-justice-hostel-ttv-dhinakaran-condemns-the-situation#comments</comments><guid isPermaLink="false">1c77e55b-896d-43d7-b4a6-3bd905043cf6</guid><pubDate>Mon, 24 Aug 2026 04:34:27 +0000</pubDate><atom:updated>2026-08-24T04:34:27.990Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர்,TTV Dhinakaran,டிடிவி தினகரன்,Karur,AMMK,அமமுக</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/8qvgw5at/ttv.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/8qvgw5at/ttv.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கரூர்,</p><p>ஆட்சியை சமூகவலைதளத்தில் நடத்தாமல், கொஞ்சம் களத்தில் மக்களுக்கு பயன்படும் படி நடத்தவேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>தரமற்ற உணவு</h2><p>கரூர் மாவட்டம், காந்தி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு சமூகநீதி விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமற்ற நிலையிலும், மிகவும் மோசமான நிலையிலும் இருப்பதாக வெளியாகியிருக்கும் காணொளி தவெக அரசின் சமூக நீதி கொள்கையையும், அக்கறையையும் தோலுரித்து காட்டியுள்ளது.</p><p>பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய ஏழை, எளிய விளிம்பு நிலை குடும்பங்களைச் சார்ந்த மாணவர்கள் தங்கி கல்வி பயிலும் சமூகநீதி விடுதியில் தரமான மற்றும் சுகாதாரமான உணவைக் கூட வழங்க முடியாத தவெக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.</p><h2>வெற்று விளம்பரத்திற்காகவா?</h2><p>சென்னை சைதாப்பேட்டை எம்.சி.ராஜா சமூகநீதி விடுதியில் நேரடியாக திடீரென ஆய்வு செய்து மாணவர்களுக்கு தரமான உணவை வழங்க உத்தரவு பிறப்பித்த முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழகம் </a>முழுவதும் உள்ள சமூகநீதி விடுதிகளின் அவலநிலைகளை நேரடியாக ஆய்வு செய்வாரா? என்ற கேள்வி மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும், இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்வது முதல்-அமைச்சர் மற்றும் அதிகாரிகள் நடத்தும் ஆய்வுகளும், அவர்கள் அமைக்கும் கண்காணிப்புக் குழுக்களும் வெற்று விளம்பரத்திற்காகவா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.</p><p>எனவே, ஆட்சியை சமூகவலைதளத்தில் நடத்தாமல், கொஞ்சம் களத்தில் மக்களுக்கு பயன்படும் படி நடத்தவேண்டும் என தவெக அரசை வலியுறுத்துவதோடு, சமூகநீதி விடுதிகளில் மாணவர்களுக்கு தரமற்ற உணவு வழங்கும் விடுதி நிர்வாகத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, மாணவர்களுக்கு தரமான உணவு, பாதுகாப்பான தங்குமிடம், சுகாதாரமான சூழல் ஆகியவற்றை உறுதிபடுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என சமூகநீதித்துறையையும், தவெக அரசையும் வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆண்டிற்கு 3 சிலிண்டர், அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம்; முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/3-cylinders-free-per-year-chief-minister-vijay-announces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/3-cylinders-free-per-year-chief-minister-vijay-announces#comments</comments><guid isPermaLink="false">f087b6e2-99b9-4b1d-9f43-851ca10c60cb</guid><pubDate>Mon, 24 Aug 2026 04:28:06 +0000</pubDate><atom:updated>2026-08-24T04:28:06.869Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,சட்டசபை,TNAssembly,முதல்-அமைச்சர் விஜய்,TamilnaduAssembly2026,சிலிண்டர் இலவசம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/f2q30ykx/vijayone33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/f2q30ykx/vijayone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அன்னப்பூரணி சூப்பர் 6 திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஆண்டிற்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.</p><p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. 2 நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று நடைபெறும் சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரம் ஆகிய துறைகளின் மீதான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது. இந்தநிலையில், </p><p>சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ் முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், </p><h2>விலையில்லா சிலிண்டர்</h2><p>போர் சூழல் காரணமாக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88">சிலிண்டர் விலை</a> உயர்வு ஏற்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை முதல் அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் செயல்படுத்தப்படும். சிலிண்டர் வழங்கும் திட்டம் பொங்கல் பண்டிகை முதல் செயல்பாட்டுக்கு வரும். அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும்.   </p><p>வரும் பொங்கல் பண்டிகை முதல் இந்த திட்டம் அமலுக்கு வரும். இதற்காக ஆண்டுக்கு 4,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.  எரிவாயு சிலிண்டருக்கான விலை நேரடியாக பயனாளியின் கணக்கில் வரவு வைக்கப்படும்.  ஆண்டுக்கு 2.50 லட்சம் வரை வருமானம் பெறுவோரின் குடும்பத்தினருக்கு சிலிண்டருக்கு நிதி வழங்கப்படும்.</p><h2>பரந்தூர் விமான நிலையம்</h2><p>பரந்தூர் விமான நிலையம் அமைக்க கூடாது என போராடிய மக்களுடன் உறுதியாக நிற்கிறேன். நீண்ட நாட்களுக்கு மேலாக இந்த திட்டத்திற்கு எதிராக போராடிவரும் விவசாயிகளுக்கு எனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு, இந்த விவசாய நிலங்களை பாதுகாக்க இந்த மக்கள் போராடி வருகிறார்கள். விக்கிரவாண்டியில் அக்டோபர் 2024 நடந்த பொதுக் கூட்டத்திலேயே பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறேன். தொழில் வளர்ச்சி மற்றும் அதற்கான விமான நிலையங்களின் பங்கு பற்றி நான் நன்கு அறிவேன். அதற்கான என்னுடைய முழு ஆதரவும் உண்டு. ஆனால் பரந்தூரில் இந்த திட்டம் அமையக்கூடாது. </p><p>இந்த திட்டம் குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும், குறைவான விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் வகையிலும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையிலும் மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என தெரிவித்தேன். மக்கள் மத்தியிலே நான் அன்று அறிவித்ததை நிறைவேற்றும் பொருட்டு புதிய விமான நிலையம் அமைப்பது குறித்து உயர் அதிகாரிகளிடமும், துறை வல்லுனர்களிடமும் விரிவாக ஆலோசனை நடத்தினேன். ஏற்கனவே நான் உறுதி அளித்தவாறு பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்த அரசால் கைவிடப்படும். புதிய விமான நிலையம் அமைப்பதற்கு புதிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். </p><h2>வெற்றிப் பயணம்</h2><p>மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டம் 'வெற்றிப் பயணம்' என்ற பெயரில் காந்தியடிகள் பிறந்த நாளான அக்.2ம் தேதி முதல் விரிவாக்கம் செய்யப்படும். முதற்கட்டமாக மாநகரம், நகரப் பகுதிகளில் இயங்கும் Express, LSS, டீலக்ஸ் (Deluxe) அரசுப் பேருந்துகளிலும், மகளிர் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம். மாவட்டங்களுக்கிடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் (Mofussil) மற்றும் மலைப் பகுதிகளில், சாதாரணக் கட்டண பேருந்துகளிலும், மகளிர் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம். வருமான உச்சவரம்போ மற்றும் மேற்கொள்ளவிரும்பும் பயண எண்ணிக்கையிலோ கட்டுப்பாடுகள் இல்லை. திருநரும் (Transgender) கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>10 ஆண்டுகளுக்கு பிறகு வறண்ட ரேலியா அணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rallia-dam-runs-dry-after-10-years</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rallia-dam-runs-dry-after-10-years#comments</comments><guid isPermaLink="false">67b89d62-3843-435f-832c-8fedc2ea9850</guid><pubDate>Mon, 24 Aug 2026 04:09:23 +0000</pubDate><atom:updated>2026-08-24T04:09:23.213Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nilgiris,நீலகிரி,ரேலியா அணை,Rallia Dam</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/p3nbhjw8/8.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/p3nbhjw8/8.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>நீலகிரி மாவட்டம் குன்னூர் நகருக்கு குடிநீர் வழங்கும் ரேலியா அணை 10 ஆண்டுகளுக்கு பிறகு வறண்டு உள்ளது. அணை பகுதியில் தண்ணீரை உறிஞ்சும் யூக லிப்டஸ் மரங்கள் வெட்டி அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.</p><h2>ரேலியா அணை</h2><p>நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளது. இங்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். குன்னூர் நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக ரேலியா அணை உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் இந்த அணை அமைக்கப்பட்டது. தற்போது தென்மேற்கு பருவ மழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் ரேலியா அணையில் நீர் வரத்து குறைந்ததோடு,நீர்மட்டம் வேகமாக சரிய தொடங்கியது.</p><p>மழை பெய்யாததால், தற்போது அணை வறண்டு சேறும், சகதியுமாக காணப்படுகிறது. அணை பகுதியில் பாளம், பாளமாக வெடித்து இருக்கிறது. அணையின் முழு கொள்ளளவான 46.7 அடியில், 10 அடிக்கும் குறைவாக நீர்மட்டம் உள்ளது. இதனால் குன்னூர் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் எமரால்டு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குன்னூர் பகுதிக்கு குடிநீர் வழங்கப்படுவதால், 5 நாட்களுக்கு ஒரு முறை 30 வார்டுகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு ரேலியா அணை வறண்டு சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>வக்கீல்கள் தகுதித்தேர்வு: நீண்ட பயணத்தை தவிர்க்க கூடுதல் மையங்கள் அமைக்க வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/lawyers-qualifying-examination-urge-to-set-up-additional-centers-to-avoid-long-journeys</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/lawyers-qualifying-examination-urge-to-set-up-additional-centers-to-avoid-long-journeys#comments</comments><guid isPermaLink="false">6a925431-5d7b-468e-9ad3-a8d3d50b3a2a</guid><pubDate>Mon, 24 Aug 2026 03:54:11 +0000</pubDate><atom:updated>2026-08-24T03:54:11.875Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>lawyers,Additional,வக்கீல்கள்,தேர்வு மையம்,qualifying examination,கூடுதல்,தகுதித்தேர்வு,Examination Centers</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/q0br5imy/lawyer.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/q0br5imy/lawyer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டப்படிப்பை முடித்து பார் கவுன்சிலில் பதிவு செய்தவர்கள் வக்கீலாக பணியாற்றுவதற்காக இந்திய பார் கவுன்சில் அகில இந்திய வக்கீல்கள் தேர்வை அவ்வப்போது நடத்தி வருகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்தியாவில் உள்ள எந்தவொரு நீதிமன்றத்திலும் வக்கீலாக பணியாற்றும் தகுதியைப் பெறுகிறார்கள். </p><h2>தகுதித்தேர்வு</h2><p>வக்கீல்களுக்கான இந்த தகுதித்தேர்வு நவம்பர் 29-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு தொடங்கிய நிலையில் அக்டோபர் 27-ந் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி ஆகிய 3 நகரங்கள் மட்டுமே தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.</p><h2>நீண்ட தூர பயணம்</h2><p>இத்தேர்வில், அனைத்து மாவட்டங்களை சேர்ந்த இளம் <a href="https://www.dailythanthi.com/topic/lawyers-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">வக்கீல்கள்</a> பங்கேற்கும் நிலையில் தமிழகத்தில் 3 நகரங்களில் மட்டும் தேர்வு மையங்களை அமைத்திருப்பதன் மூலம் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் நீண்ட தூரம் பயணம் செய்து தேர்வு மையங்களுக்கு செல்ல வேண்டியது உள்ளது.</p><h2>கூடுதல் தேர்வு மையங்கள்</h2><p>எனவே, இந்தத் தேர்வை எழுதவிருக்கும் இளம் வக்கீல்களின் நலனைக் கருத்தில் கொண்டு மதுரை, சேலம், நெல்லை, தஞ்சாவூர் மற்றும் வேலூர் போன்ற முக்கிய நகரங்களிலும் கூடுதல் தேர்வு மையங்களை அமைக்க தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர்கள், இந்திய பார் கவுன்சிலிடம் முறையிட்டு, தேர்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பணம் இரட்டிப்பாக தருவதாக ரூ.80 லட்சம் மோசடி... தொழில் அதிபரை கடத்திய 4 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/4-arrested-for-kidnapping-businessman-in-rs-80-lakh-fraud-case-claiming-to-double-the-money</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/4-arrested-for-kidnapping-businessman-in-rs-80-lakh-fraud-case-claiming-to-double-the-money#comments</comments><guid isPermaLink="false">da4d584e-41f2-4453-9ab5-1d947e15d8b8</guid><pubDate>Mon, 24 Aug 2026 03:43:06 +0000</pubDate><atom:updated>2026-08-24T03:43:06.759Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவை,கைது,arrest,மோசடி,money,kidnap,தொழில் அதிபர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/my3mwlvo/111.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/my3mwlvo/111.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவையில் நடந்த கடத்தல் வழக்கில் திடீர் திருப்பமாக ரூ.80 லட்சம் மோசடி செய்ததாக தொழில் அதிபர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.</p><p>மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியை சேர்ந்தவர் தேப்ஜித் ரானா (வயது 25). தொழில் அதிபரான இவர் திருப்பூரில் ஜவுளிக்கடை நடத்தி வருவதாகவும், தனது ஜவுளிக்கடையில் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பாக திரும்ப கொடுப்பதாகவும் அறிவித்து இருந்தார். அதை நம்பி கோவையை சேர்ந்த ஆனந்தகுமார். அவருடைய நண்பர் செந்தில்குமார் உள்பட 10 பேர் தேப்ஜித் ரானாவிடம் ரூ.80 லட்சம் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. </p><p>பணத்தை பெற்றுக்கொண்ட அவர், கூடுதல் லாபமோ அல்லது அவர்கள் முதலீடு செய்த பணத்தையோ திரும்ப கொடுக்கவில்லை என்று தெரிகிறது.</p><h2>வழக்குப்பதிவு</h2><p>இந்த நிலையில் தேப்ஜித் ரானா தனது நண்பர் சித்தார்த், ஆதர்ஷ் குமார் ஆகியோருடன் கோவை வந்தார். பின்னர் கோவையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தார். அதை அறிந்த ஆனந்தகுமார். செந்தில்குமார் உள்பட 10 பேரும் அங்கு சென்றனர். </p><p>பின்னர் தேப்ஜித் ரானா உள்பட 3 பேரையும் காரில் கடத்திச்சென்று ரூ.26 லட்சம் மற்றும் 1 பவுன் நகை ஆகியவற்றை பறித்தனர். இது குறித்து தேப்ஜித் ரானா பீளமேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.</p><h2>மோசடி</h2><p>அதில் தேப்ஜித் ரானா, இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி ரூ.80 லட்சத்தை பெற்றுக்கொண்டு, லாபத்தை கொடுக்க மறுத்ததுடன் முதலீடு செய்த பணத்தையும் கொடுக்காமல் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF">மோசடி </a>செய்ததும், இதனால்தான் ஆனந்தகுமார் உள்பட 10 பேரும் அவரை கடத்தி பணம், நகையை பறித்ததும் தெரியவந்தது. </p><p>எனினும் தேப்ஜித் ரானாவை கடத்தி சென்று பணத்தை பறித்த வழக்கில் திண்டுக்கல்லை சேர்ந்த வினோத் (37). வினோத்குமார் (39), திருச்சியை சேர்ந்த சண்முகராஜ் (44), மயிலாடுதுறையை சேர்ந்த செந்தில்குமார் (45) ஆகிய 4 பேரை பீளமேடு போலீசார் கைது செய்தனர். மீதமுள்ள 6 பேரை தேடி வருகின்றனர். இதற்கிடையே செந்தில்குமார் தான் உள்பட 10 பேரிடம் தேப்ஜித் ரானா, சித்தார்த் சர்மா ஆகியோர் ரூ.80 லட்சத்தை மோசடி செய்துவிட்டதாக ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தனர்.</p><h2>கைது</h2><p>அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேப்ஜித் ரானா, சித்தார்த் சர்மா ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் முகாம்: தொழிலாளர்கள் அச்சம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephants-camp-in-tea-estate-workers-fearful</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephants-camp-in-tea-estate-workers-fearful#comments</comments><guid isPermaLink="false">f3ca55d2-ff68-4317-92e2-edb8d093ac37</guid><pubDate>Mon, 24 Aug 2026 03:40:39 +0000</pubDate><atom:updated>2026-08-24T03:40:39.841Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>காட்டு யானைகள்,Wild elephants,தேயிலை தோட்டம்,Tea Estate</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/l6a1e5bm/7.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/l6a1e5bm/7.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கொலக்கம்பை பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அப்பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களுக்குள் புகுந்து, அங்குள்ள பலா மரங்களில் இருக்கும் பலாப்பழங்களை பறித்து தின்று வருகின்றன. இந்தநிலையில் கொலக்கம்பை, கிளிஞ்சடா பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களுக்குள் 6 காட்டு யானைகள் முகாமிட்டன. இதனால் அப்பகுதி மக்கள், தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். </p><p>இந்த வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையோரம் அல்லது தேயிலை தோட்டங்களில் யானைகளை காணும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி செல்பி மற்றும் புகைப் படம் எடுப்பதற்காக யானைகள் அருகே சென்று சத்தம் எழுப்புவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தகவல் அறிந்த வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>மேலும் அவர்கள், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கவனமுடன் செல்ல வேண்டும் என்றும், யானைகளை பார்த்த உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தலைமைச்செயலாளர் மாற்றமா? அமைச்சர் ஷாஜகான் பதில் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-chief-secretary-be-changed-minister-shahjahan-responds</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-chief-secretary-be-changed-minister-shahjahan-responds#comments</comments><guid isPermaLink="false">03da8133-b8f8-4e75-9aa5-2b33cd759bc0</guid><pubDate>Mon, 24 Aug 2026 03:39:47 +0000</pubDate><atom:updated>2026-08-24T03:39:47.419Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,விஜய்,தலைமைச்செயலாளர்,அமைச்சர் ஷாஜகான்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/4wbhtci2/shaa33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
தலைமைச்செயலாளர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ஷாஜகான் பதில் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/4wbhtci2/shaa33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர், </p><p>தலைமைச் செயலாளர் மாற்றம் பற்றி முதல்-அமைச்சர் ஆய்வு செய்து, முடிவு எடுப்பார் என அமைச்சர் ஷாஜகான் கூறியுள்ளார்.</p><h2>வக்பு நிறுவனங்களுக்கு சவால்</h2><p>தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் கடலூரில்  நிருபர்களிடம் கூறியதாவது:-</p><p>தமிழகத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களும், தர்க்காக்களும் உள்ளன. அவற்றிற்கு சொந்தமான சில சொத்துகளை வாடகை மற்றும் குத்தகைக்கு விடப்படும் போது, அதை மீட்டெடுப்பதில், சம்பந்தப்பட்ட வக்பு நிறுவனங்களுக்கு சவால்கள் ஏற்படுகிறது. சொத்துகளை மீட்டு, வக்பு நிறுவனத்திடம் ஒப்படைத்து வருகிறோம்.</p><p>சட்டசபையில் வருகிற 27-ந்தேதி (வியாழக்கிழமை) சிறு பான்மையினர் நலத்துறை மானிய கோரிக்கை நடக்கிறது. இதில் பல்வேறு புதிய திட்டங்களை அறிவிக்க இருக்கிறோம். மிக முக்கியமாக கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்பு, சமுதாய மேம்பாட்டுக்கான திட்டங்கள் இருக்கும்.</p><h2>தலைமைச்செயலாளர் மாற்றமா?</h2><p>த.வெ.க. அரசின் 100 நாட்கள் ஆட்சி எப்படி இருக்கிறது என்று கேட்கிறீர்கள். லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி செயல்பட்டு வருகிறது. <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D">தலைமைச் செயலாளர் </a>தேர்தல் காலத்தில் நியமிக்கப்பட்டு. தற்போது 6 மாதங்கள் பதவி நீட்டிப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. </p><p>நாங்கள் பார்த்த வரையில், அரசு பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. இருந்தாலும் அவர் பா.ஜனதா சார்பில் நியமிக்கப்பட்டார் என்ற கருத்தின் அடிப்படையில், ஒரு சில அரசியல் கட்சிகளால் தகவல் சொல்லப்படுகிறது. தலைமைச் செயலாளர் மாற்றம் பற்றி முதல்-அமைச்சர் ஆய்வு செய்து, முடிவு எடுப்பார்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தென்காசி: மலையடிபட்டி அகழாய்வில் 5-ம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு கண்டுபிடிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tenkasi-5th-century-hero-stone-inscription-discovered-during-the-excavation-at-malaiyadipatti</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tenkasi-5th-century-hero-stone-inscription-discovered-during-the-excavation-at-malaiyadipatti#comments</comments><guid isPermaLink="false">e47b02ad-a413-44bd-a93a-5530caeb7687</guid><pubDate>Mon, 24 Aug 2026 03:26:07 +0000</pubDate><atom:updated>2026-08-24T03:26:07.505Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,தென்காசி,Excavation,அகழாய்வு</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/x0ktf6y9/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/x0ktf6y9/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><h2>நடுகல் கல்வெட்டு</h2><p>தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே மலையடிப்பட்டி கிரா மத்தில் தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு பழங்காலத்தை சேர்ந்த பானைகள், தாழிகள், இரும்பு கருவிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்தன.</p><p>சமீபத்தில் இங்கு படிக்கட்டுடன் கூடிய சங்க கால செங்கல் கிணறு சமீ பத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கிணற்றுக்குள் கி.பி. 5-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கல்வெட்டு தற்போது கிடைத்துள்ளது. இதில் பழங்கால தமிழி எழுத்தில் இருந்து வட்டெழுத்தாக உருமாறுகின்ற நிலையுடையதாக எழுத்துகள் உள்ளன. </p><h2>வாசகங்கள்</h2><p>நடுகல்லின் நீளம் 1 மீட்டர், அகலம் 0.30 மீட்டர் ஆகும். இதில் கருக் கண், சுளகன், நன்னங், கொடியன் ஆகிய வாசகங்கள் எழுதப்பட்டுள் ளன.இதுகுறித்து அங்கு அகழாய்வு இயக்குனர் எத்திஸ் குமார், அக ழாய்வு துணை பொறுப்பாளர் காளீஸ்வரன் ஆகியோர் கூறுகையில், "தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள நடுகல்லில் எழுதப்பட்டுள்ள வாசகத்தை கூர்ந்து கவனித்தால் இந்த கல்வெட்டானது கருக்கண்சுளகன் மகன் நன்னங்கொடியனுக்காக எழுதப்பட்டதாக பொருள் கொள்ளலாம். இதுகுறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது" என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>3 கோப்புகளை ஒரு வாரத்துக்குள் முதல்-அமைச்சர் வெளியிட வேண்டும் - துரைமுருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-chief-minister-must-release-three-files-within-a-week-duraimurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-chief-minister-must-release-three-files-within-a-week-duraimurugan#comments</comments><guid isPermaLink="false">9c61e175-6433-46d6-8f10-80b2659ac89a</guid><pubDate>Mon, 24 Aug 2026 03:20:40 +0000</pubDate><atom:updated>2026-08-24T03:20:40.770Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,திமுக,DMK,சட்டசபை,TN Assembly,Durai Murugan,துரைமுருகன்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/23bpwps0/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/23bpwps0/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>வேலூர்,</p><p>வேலூர் காட்பாடி காந்திநகரில் தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>'யார் ஆட்சிக்கு வந்தாலும், எங்களுக்கு பின்னாடி யாரும் வர மாட்டார்கள் என்று தான் சொல்வார்கள். அவ்வாறு தான் த.வெ.க. உறுப்பினர்கள் தி.மு.க. இனி வெல்ல முடியாது என்று கூறுகின்றனர். இப்படித்தான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் கூறினர். அவர்களையும் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். இதெல்லாம் அரசியல் ஞானத்தோடு சொல்லும் சொல் அல்ல.</p><p>என் மேஜையில் 3 பைல்கள் உள்ளது. அதனை திறக்க வைத்து விடாதீர்கள் என்று முதல்-அமைச்சர் விஜய் கூறியதற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். தைரியம் இருந்தால் அந்த பைல்களை திறந்து, யார் மீது குற்றம் இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள் என்று கூறி உள்ளார். அந்த பைலை திறக்க கூறி எதிர்க்கட்சிகள் வலியுறுத்த வேண்டும்.</p><p>ஒரு வாரத்திற்குள் திறக்கவில்லை என்றால் சட்டசபைக்கு முதல்-அமைச்சர் தவறான தகவலை கொடுத்தார் என உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரவேண்டும். எதிர்க்கட்சிக்காரன் வாளோடு சபைக்கு செல்ல வேண்டும். ஆளும் கட்சிக்காரன் கேடயத் தோடு வரவேண்டும். இவன் சுழற்றுவான். அவன் தடுக்க வேண்டும். தடுக்க முடிந்தால் தடுக்கணும் இல்லையென்றால் சலாம் போட்டு விட்டு செல்ல வேண்டும். இதுதான் சட்டசபை. இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>கோயம்பேடு சந்தையில் வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/onion-prices-rise-sharply-in-koyambedu-market</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/onion-prices-rise-sharply-in-koyambedu-market#comments</comments><guid isPermaLink="false">1ff1d10a-190f-4db1-bb00-9ab4e7b6a412</guid><pubDate>Mon, 24 Aug 2026 03:18:21 +0000</pubDate><atom:updated>2026-08-24T03:18:21.666Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Koyambedu market,கோயம்பேடு சந்தை,வெங்காயம்,Onions</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/jib4n0jo/4.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/jib4n0jo/4.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>கோயம்பேடு மார்க்கெட்</h2><p>ஆசியாவில் மிகப்பெரிய காய்கறி சந்தைகளில் ஒன்றான சென்னை கோயம்பேடு மார்க்கெட் என்பது சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு காய்கறி சப்ளை செய்யும் பிரதான மார்க் கெட்டாக விளங்கி வருகிறது. சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் காய்கறி தேவைகள் அனைத்தும் பெரும்பாலும் கோயம்பேடு மார்க்கெட்டால் பூர்த்தி செய்யப்படுகிறது.</p><p>சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிறு வியாபாரிகள் அனைவரும் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து இரவோடு இரவாக மொத்த விலைக்கு காய்கறிகளை வாங்கிச் சென்று, அதிகாலைக்குள் தங் கள் கடைகளுக்கு கொண்டு சென்று அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு அன்றாட தேவைக்கான காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர்.</p><h2>வெங்காயம் விலை</h2><p>இத்தகைய சிறப்பு மிக்க கோயம்பேடு மார்க்கெட்டுக்கு உத்தரபிரதேசம், மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து வெங் காயம் விற்பனைக்கு வருகிறது. மராட்டிய மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாகவும், வெங்காய ஏற்றுமதி அதிகரித்துள்ள காரணத்தாலும் வட மாநிலங்களில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் வெங்காய வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காய விலை அதிகரித்துள்ளதாக அங்குள்ள மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.</p><p>பொதுவாக தினசரி 70 முதல் 80 லாரிகளில் கோயம்பேடு மார்க்கெட் டுக்கு வரும் வெங்காய வரத்து 50 லாரிகளாக குறைந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால், கடந்த 7-ந் தேதி ரூ.30 முதல் ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ வெங்காயம் படிப்படியாக உயர்ந்து நேற்று ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><h2>தக்காளி, உருளை விலை</h2><p>இதே போன்று வரத்துக் குறைவு காரணமாக தக்காளி மற்றும் உருளைக் கிழங்கு விலையும் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை உயர்ந்து உள் ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்றைய காய்கறி மொத்த விலை விவரம் (கிலோவுக்கு) வருமாறு:-</p><p>நாட்டு தக்காளி ரூ.18 முதல் ரூ.25 வரை, நவீன் தக்காளி ரூ.40, உருளை கிழங்கு ரூ.15 - ரூ.35, கேரட் ரூ.50 ரூ.70, பீன்ஸ் ரூ.60 - ரூ.80, பீட்ரூட் ரூ.50 - ரூ.60, முட்டைகோஸ் ரூ.20 - ரூ.25, வெண்டைக்காய் மற்றும் வரி கத்திரிக்காய் ரூ.25 -ரூ.30, நாட்டு கத்திரிக்காய் ரூ.30 - ரூ.40, பாகற்காய் ரூ.40 - ரூ.50, புடலங்காய் ரூ.20ரூ.30, சுரக்காய் ரூ.15 - ரூ.25, முருங் கைக்காய் ரூ.25 ரூ.30, சேனைக்கிழங்கு ரூ.30 - ரூ.40, பச்சமிளகாய் ரூ.50 - ரூ.60, இஞ்சி ரூ.90 ரூ.180, பூண்டு ரூ.130 ரூ.240, தேங்காய் 5.55 .60.</p>]]></content:encoded></item><item><title>தானியங்கி முறையில் கட்டட அனுமதி: தயாராகும் புதிய திட்டம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/automated-building-permit-issuance-new-scheme-in-the-works</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/automated-building-permit-issuance-new-scheme-in-the-works#comments</comments><guid isPermaLink="false">956d82d2-9101-4e88-a215-1a1bf082f68e</guid><pubDate>Mon, 24 Aug 2026 02:29:42 +0000</pubDate><atom:updated>2026-08-24T02:29:42.784Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>அனுமதி,building,புதிய திட்டம்,new scheme,கட்டடம்</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/l35em2u8/1.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/l35em2u8/1.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>தமிழகத்தில், 3,500 சதுரடி வரையிலான குடி யிருப்புகள் கட்ட, சான்று முறையில் கட்டட அனுமதி வழங்கும் திட்டம், 2024ல் அமலுக்கு வந்தது. இதன்படி, அதிகாரிகளின் அலைக்கழிப்பு இல்லாமல், பொதுமக்கள் கட்டட அனுமதி பெறுவது எளிதாகி உள்ளது. இதையடுத்து, 5,000 சதுரடி மனையில், 7,500 சதுரடி வரையிலான தொழிலக கட்டடங்களுக்கு, சுயசான்று கட்டட அனுமதி முறை அமலுக்கு வந்துள்ளது. இதற்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.</p><p>இதையடுத்து, அடுக்கு மாடி திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவதை எளிதாக்க, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அதிகாரிகள், நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக, தானியங்கி முறையில் கட்டட அனு மதி பெற வழி ஏற்பட்டு உள்ளது. இது குறித்து, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகரரி ஒருவர் கூறியதாவது:</p><p>தானியங்கி முறையில் கட்டட அனுமதி வழங்க, புதிய திட்டம் தயாரிக்கப் பட்டு வருகிறது. நில வகைப்பாடு மாற்றம் தேவைப்படாத, அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு இருக்கும் திட்டங்களுக்கு, இதை செயல்படுத்துவதில் எந்த பிரச்னையும் இல்லை. கடந்த 2008க்கு முன், சி.எம்.டி.ஏ.,வில், '' - சேனல் என்ற பெயரில், இது போன்ற நடைமுறை இருந்தது. அதன் அடிப்படையில், தற்போதைய சூழலுக்கு ஏற்ப புதிய நடைமுறையை உருவாக்கி வருகிறோம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களை பாதிக்கும் அரசாணை: உடனடியாக திரும்பப் பெறுக! - எஸ்டிபிஐ</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-order-affecting-small-blood-testing-centers-withdraw-immediately-stbi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-order-affecting-small-blood-testing-centers-withdraw-immediately-stbi#comments</comments><guid isPermaLink="false">90730302-aa20-41ff-8a7e-39fe7c9ea5b1</guid><pubDate>Mon, 24 Aug 2026 02:27:18 +0000</pubDate><atom:updated>2026-08-24T02:27:18.638Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எஸ்டிபிஐ,STBI,Blood,Testing,Centers,ரத்த பரிசோதனை,நிலையங்கள்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/8y6ryq1h/sdpi.gif" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/8y6ryq1h/sdpi.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:</p><h2>ரத்தப் பரிசோதனை நிலையங்கள்</h2><p>தமிழக அரசின் அரசாணை எண் 41/2026 (13.02.2026), மாநிலத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களின் இயங்குதளத்தையும், அதில் பணியாற்றும் லேப் டெக்னீசியன்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாகப் பாதிப்பதாக உள்ளது. கிராமப்புறங்களிலும் சிறு நகரங்களிலும் பல ஆண்டுகளாகச் சேவை வழங்கி வரும் மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்ப இளங்கலை (BMLT), மற்றும் பட்டயப் படிப்பு (DMLT) பயின்ற தொழில் நுட்பனர்கள் பரிசோதனை அறிக்கைகளில் கையொப்பமிடத் தடை விதித்து,  எம்.பி.பி.எஸ். அல்லது முதுகலை மருத்துவர்கள் மட்டுமே கையொப்பமிட வேண்டும் எனக் கூறுவது முற்றிலும் நடைமுறைக்குச் சாத்தியமற்ற ஒன்றாகும். இது சிறு ஆய்வகங்களின் சுயசார்பை அழித்து, மருத்துவத் துறையில் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு மட்டுமே வழிவகுக்கும்.</p><h2>ரத்தப் பரிசோதனை கட்டணம் உயரும்</h2><p>மேலும், பரிசோதனை அறிக்கைகளுக்காக மருத்துவர்களைச் சார்ந்திருக்க வேண்டிய சூழல் உருவாக்கப்படும் போது, சாதாரண ரத்தப் பரிசோதனைகளின் கட்டணமும் பல மடங்கு உயரும் அபாயம் உள்ளது. இதனால் கிராமப்புற மற்றும் ஏழை எளிய மக்கள் மிகக் குறைந்த கட்டணத்தில் பெற்று வந்த முதன்மை சுகாதாரப் பரிசோதனைச் சேவைகள் பறிபோகும். சிறிய பரப்பளவில் இயங்கும் லேப்களுக்கும் தீயணைப்புத் துறைச் சான்றிதழ் கட்டாயம் என்பது போன்ற கட்டுப்பாடுகளும், அதிகப்படியான மருத்துவக் கழிவு அகற்றும் கட்டணங்களும் எளிய தொழில் முனைவோரை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும்.</p><h2>வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல்</h2><p>இந்த அரசாணையானது, லேப் டெக்னீசியன் படிப்பை முடித்துவிட்டு, சொந்தமாக சிறிய அளவில் ரத்தப் பரிசோதனை மையங்களை வைத்துள்ள பல்லாயிரக்கணக்கான டெக்னீசியன்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. மட்டுமின்றி, சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களின் உரிமையாளர்களை, கார்ப்பரேட் ரத்தப் பரிசோதனை நிலையங்கள் மற்றும் இதர பரிசோதனை நிலையங்களுக்கான கூலித் தொழிலாளிகளாக மாற்றும் நிலையையும் உருவாக்கியுள்ளது .</p><p>பெருநிறுவனங்களின் வளர்ச்சிக்காக, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களை ஒழித்துக்கட்டி, பல்லாயிரக்கணக்கான வேலை இழப்பை ஏற்படுத்தும் இத்தகைய நடவடிக்கை கண்டனத்திற்குரியது.</p><p>எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக அரசாணை எண் 41/2026-ல் உள்ள சிறு ஆய்வகங்களைப் பாதிக்கும் விதிகளை ரத்து செய்ய வேண்டும். அனுபவமிக்க ஆய்வகத் தொழில்நுட்பனர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்கி, பரிசோதனை அறிக்கைகளில் அவர்களே தொடர்ந்து கையொப்பமிடும் உரிமையை உறுதி செய்ய வேண்டும். அத்துடன் துணை மருத்துவ மற்றும் சுகாதாரக் குழுமத்தில் (Allied Health Council) ஆய்வகச் சங்கங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட ஆய்வக உரிமையாளர்கள் மற்றும் தொழில்நுட்பனர்களின் போராட்டங்களுக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90">எஸ்டிபிஐ </a>கட்சி முழு ஆதரவை தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>90 அடியை நெருங்கும் நீர்மட்டம்... மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுமா?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-level-nearing-90-feet-will-water-be-released-from-mettur-dam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-level-nearing-90-feet-will-water-be-released-from-mettur-dam#comments</comments><guid isPermaLink="false">fed451ba-e363-4c22-87de-128e3f568c35</guid><pubDate>Mon, 24 Aug 2026 02:11:10 +0000</pubDate><atom:updated>2026-08-24T02:11:10.708Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur dam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/twhv9f50/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/twhv9f50/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் டெல்டா பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் காய்ந்து வருகிறது. கர்​நாடக அணை​களில் இருந்து காவிரி ஆற்​றில் தண்​ணீர் திறந்து விடப்​பட்​டுள்ள நிலை​யில், மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து அதிகரித்துள்ளது.</p><p>விநாடிக்கு 13,538 கனஅடி​ தண்ணீர் வருகிறது. அணை​யில் இருந்து குடிநீர் தேவைக்​காக விநாடிக்கு 2,000 கனஅடி தண்​ணீர் திறக்கப்​பட்டு வரு​கிறது. வரும் நீரின் அளவைவிட வெளியேற்​றப்​படும் நீரின் அளவு குறை​வாக இருப்​ப​தால், நீர்​மட்​டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.</p><p>மேலும் மேட்டூர் அணை நீர்மட்டம் 87அடியை நெருங்கி உள்ளது. அணை நீர்மட்டம் நேற்று மாலை 86.83 அடியாக உள்ளது. தற்போதைய அளவில் நீர்வரத்து காணப்பட்டால், அணை நீர்மட்டம் அடுத்த சில நாட்களில் 90 அடியை எட்டி விடும். அதன்பிறகும் இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் சூழல் உருவாகலாம் என்று பொதுப்பணித்துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தின் உயர்கல்வித்துறையை மீட்டெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/reviving-tamil-nadus-higher-education-sector-is-the-need-of-the-hour-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/reviving-tamil-nadus-higher-education-sector-is-the-need-of-the-hour-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">6e863fe5-6bef-4cec-9c95-f74c02e43a06</guid><pubDate>Mon, 24 Aug 2026 02:10:46 +0000</pubDate><atom:updated>2026-08-24T02:10:46.731Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,Higher Education Department,மாணிக்கம் தாகூர்,Higher Education,உயர்கல்வித்துறை,Manickam Tagore MP,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/48p2hdej/manickam-tagore.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/48p2hdej/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இத்துறை சார்ந்த ஆக்கப்பூர்வப் பணிகளுக்கு முழு ஆதரவளித்து வழிநடத்தும் தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கு நெஞ்சார்ந்த நன்றிகள் என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF">மாணிக்கம் தாகூர்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை</h2><p>பெருந்தலைவர் காமராஜர் கண்ட உயர்ந்த கல்விக்கனவை நனவாக்கி, தமிழகத்தின் உயர்கல்வித்துறையை மீட்டெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.</p><p>பெரும்பாலான நிதி நிர்வாக மற்றும் தொடர் செலவினங்களுக்கே சென்றுவிடும் சூழல், தொலைதூரக் கல்வி வருவாய் இழப்பு, மத்திய UGC நிதி முடக்கம் மற்றும் பல்கலைக்கழக நிதி பற்றாக்குறை போன்ற கட்டமைப்பு சவால்களைச் சீரமைப்பது மிக முக்கியம். ஒரு பக்கம் ஊழலை ஒழித்து, மறுபுறம் வலதுசாரி/RSS சக்திகளின் ஊடுருவலை முறியடித்து, பல்கலைக்கழகங்களை மீட்டெடுத்து மாணவர்களுக்கு உலகத்தரக் கல்வியையும் பேராசிரியர்களுக்குப் பலத்தையும் தர வேண்டும்.</p><p>இன்று உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கையைத் தாக்கல் செய்யும் அமைச்சர் விஸ்வநாதனுக்கு வாழ்த்துகள்!</p><h2>பெருமிதம் கொள்கிறோம்</h2><p>வெற்றி தமிழகம் என்ற பாதையில் இத்துறை சார்ந்த ஆக்கப்பூர்வப் பணிகளுக்கு முழு ஆதரவளித்து வழிநடத்தும் தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!</p><p>2,150+ உயர்கல்வி நிறுவனங்கள், 60+ பல்கலைக்கழகங்களின் மறுமலர்ச்சிக்கான வரலாற்று நிதிநிலை அறிக்கையாகவும், உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை 50% GER என்ற மைல்கல்லைத் தாண்டி முன்னெடுத்துச் செல்லும் திட்டமாகவும் இது அமையும் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பணம் கேட்டு மிரட்டியதாக நாட்டு வைத்தியர் வீடியோ: இன்ஸ்பெக்டர், ஏட்டு இடைநீக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/country-doctor-video-inspector-suspended-for-blackmailing-for-money</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/country-doctor-video-inspector-suspended-for-blackmailing-for-money#comments</comments><guid isPermaLink="false">52d02b88-0d11-4feb-ab0a-e7276cf2f951</guid><pubDate>Mon, 24 Aug 2026 02:10:01 +0000</pubDate><atom:updated>2026-08-24T02:10:01.336Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிவகங்கை,money,Inspector,suspended,இடைநீக்கம்,போலீஸ் இன்ஸ்பெக்டர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/ibb39ahy/156.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இன்ஸ்பெக்டர், ஏட்டு இடைநீக்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/ibb39ahy/156.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை, </p><p>தன்னிடம் பணம் கேட்டு மிரட்டியதாக நாட்டு வைத்தியர் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆகிய 2 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.</p><p>சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை அருகே ஆத்திகாடு பகுதியை சேர்ந்தவர் நெடுஞ்செழியன் (வயது 45). இவர் சிங்கம் புணரியில் புத்தூர்கட்டு பாண்டி என்ற பெயரில் எலும்பு முறிவு, முடக்குவாதம், நரம்பு தளர்ச்சிக்கு நாட்டு வைத்திய சிகிச்சை அளித்து வந்தார். யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமடைந்தவர்.</p><h2>சிங்கம்புணரி போலீசார்</h2><p>இதற்கிடையே கடந்த ஜனவரி மாதம் இவரிடம் முறையாக கல்விச்சான்று இல்லை என்று மருத்துவத்துறை இணை இயக்குனர் கொடுத்த புகாரின் பேரில் சிங்கம்புணரி போலீசார் விசாரணை நடத்தி நெடுஞ்செழியனை கைது செய்தனர். மேலும் அவரின் மருத்துவமனைக்கும் 'சீல்' வைத்தனர். பின்னர், ஜாமீனில் வெளியே வந்த அவர், தனது தோப்பில் செம்புவேல் முருகன் என்ற பெயரில் கோவில் கட்டி, அங்கு சிகிச்சை அளித்து வந்தார்.</p><p>இந்தநிலையில், நெடுஞ்செழியன் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தற்போது சிங்கம் புணரி போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் சீனிபாபு என்பவர் தனக்கு மாதந்தோறும் பணம் தரவேண்டும் என்று தொல்லை கொடுக்கிறார். இல்லையென்றால் பொய் வழக்குப்பதிந்து விடுவேன் என்று மிரட்டுகிறார்.</p><h2>பணியிடை நீக்கம்</h2><p>மேலும், சிங்கம்புணரி போலீஸ் நிலையத்தில் முன்பு பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் ஒருவரின் பெயரைகூறி போலீஸ் ஏட்டு ஒருவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தன்னிடம் பணம் பெற்றது தொடர்பான காட்சியையும் வெளியிட்டார். <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">விசாரணையின்</a> அடிப்படையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிபாபு மற்றும் ஏட்டு ஜெயராஜ் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து டி.ஐ.ஜி. மணிவண்ணன் உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>வகுப்பறை முதல் ஆய்வகம் வரை... அரசு பள்ளிகளின் தேவைகள் பட்டியல் வெளியானது!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/from-classrooms-to-laboratories-government-schools-needs-list-released</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/from-classrooms-to-laboratories-government-schools-needs-list-released#comments</comments><guid isPermaLink="false">bb858108-f5dd-4bde-a395-358fb2a2fd61</guid><pubDate>Mon, 24 Aug 2026 02:01:42 +0000</pubDate><atom:updated>2026-08-24T02:01:42.509Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசு பள்ளி,பட்டியல்,வகுப்பறை,Government Schools,Classrooms,List,laboratory,ஆய்வகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/kdk7iawk/schooleducationdept.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/kdk7iawk/schooleducationdept.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பள்ளிக்கல்விக்கு பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு தேவைகள் பூர்த்தி செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அரசு பள்ளிகளில் 5,641 வகுப்பறைகள், 5,880 கழிவறைகள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.</p><h2>அரசு பள்ளிகள்</h2><p>அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு நிகராக கொண்டுவரும் நோக்கில், கடந்த கால அரசுகள் காட்டிய அதே முனைப்பை தற்போது புதிதாக பொறுப்பேற்று இருக்கும் அரசும் காட்டி வருகிறது. அதற்கேற்ப அரசு பள்ளிகளில் என்னென்ன உள்கட்டமைப்பு தேவைகள் இருக்கிறது? என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அரசு பள்ளிகளிடம் கேட்டு இருந்த நிலையில், அதற்கான விவரங்கள் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, உள்கட்டமைப்பு வசதிகளின் விவரங்கள் பள்ளிகளில் இருந்து பெறப்பட்டு, அதற்கு ஒரு உத்தேச செலவு பட்டியலையும் பள்ளிக்கல்வித் துறை தயாரித்திருக்கிறது.</p><h2>வகுப்பறைகள்</h2><p>அந்தவகையில் 2026-27-ம் ஆண்டில் வகுப்பறைகள் மட்டும் 5,641 என்ற எண்ணிக்கையில் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு வகுப்பறையின் மதிப்பு சுமார் ரூ.25.97 லட்சம் என கணக்கிடப்பட்டு, மொத்தம் சுமார் ரூ.1,465 கோடி செலவாகும் என சொல்லியுள்ளனர். அதேபோல், 3,142 எண்ணிக்கையில் மாணவர்கள் கழிவறைகளும், 2,738 எண்ணிக்கையில் மாணவிகள் கழிவறைகளும் என மொத்தம் 5 ஆயிரத்து 880 எண்ணிக்கையில் கழிவறை வசதிக்காக சுமார் ரூ.620 கோடி தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுமட்டுமல்லாமல், சுமார் ரூ.59 கோடியில் குடிநீர் வசதி 1,340 என்ற எண்ணிக்கையில் தேவைப்படுவதாகவும் கூறப்பட்டு இருக்கிறது.</p><h2>ரூ.4,200 கோடி வரை தேவை</h2><p>மேலும் 2,361 ஆய்வகங்கள் <a href="https://www.dailythanthi.com/topic/government-schools-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF">அரசு பள்ளி</a>களில் தேவைப்படுவதாகவும், இதற்கு ரூ.1,598 கோடியே 24 லட்சம் வரை செலவாகும் என்றும், அரசு பள்ளி சுற்றுச்சுவர்களுக்கு என ரூ.458 கோடி செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆக மொத்தம் அரசு பள்ளிகளின் இந்த உள்கட்டமைப்பு தேவைகளை பூர்த்தி செய்ய சுமார் ரூ.4,200 கோடி வரை தேவைப்படும் என பள்ளிக் கல்வித்துறை அரசிடம் தெரிவித்திருக்கிறது. சமீபத்தில் வெளியான பட்ஜெட் அறிவிப்பில், பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.44,527 கோடி ஒதுக்கப்பட்டுள்ள சூழலில், அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளின் தேவையை பள்ளிக்கல்வித்துறை எப்படி? எப்போது? பூர்த்தி செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு மாணவ-மாணவிகள், பெற்றோர், கல்வியாளர்கள் இடையே எழுந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பொறியியல் 3-ம் சுற்று கலந்தாய்வு: 12,346 மாணவர்கள் வெளியேறினர்!</title><link>https://www.dailythanthi.com/education-and-employment/engineering-3rd-round-counseling-12346-students-dropped-out</link><comments>https://www.dailythanthi.com/education-and-employment/engineering-3rd-round-counseling-12346-students-dropped-out#comments</comments><guid isPermaLink="false">d4d22c3d-a43a-4a60-b617-d3d543ac6c19</guid><pubDate>Mon, 24 Aug 2026 01:58:11 +0000</pubDate><atom:updated>2026-08-24T01:58:11.050Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>என்ஜினீயரிங் படிப்பு,Engineering courses,Engineering course,என்ஜினீயரிங் படிப்புகள்,பொறியியல் கலந்தாய்வு,engineering counseling</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/dxjri4lq/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பொறியியல் 3-ம் சுற்று கலந்தாய்வு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/dxjri4lq/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கல்வி&amp;வேலைவாய்ப்பு (Eduction and Jobs)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 418 பொறியியல் கல்லூரிகளில், நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த 13-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்றாம் சுற்று கலந்தாய்வில் பங்கேற்க 1,02,719 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது.</p><h2>68,640 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடு</h2><p>இதையடுத்து, கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை கடந்த 21-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் பொதுப்பிரிவில் 66,159 பேருக்கும், 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் 2,481 பேருக்கும் என மொத்தம் 68,640 மாணவர்களுக்கு பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டது.</p><h2>56,294 பேருக்கு இறுதி ஒதுக்கீடு</h2><p>தற்காலிக ஒதுக்கீட்டை உறுதி செய்த மாணவர்களுக்கான இறுதி <a href="https://www.dailythanthi.com/education-and-employment">ஒதுக்கீட்டு ஆணை</a> நேற்று வெளியிடப்பட்டது. பொதுப்பிரிவில் 54,684 பேருக்கும், 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் 1,610 பேருக்கும் என மொத்தம் 56,294 மாணவர்களுக்கு இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது.</p><h2>6,621 பேர் மேல்நோக்கு நகர்வுக்கு காத்திருப்பு</h2><p>இறுதி ஒதுக்கீடு பெற்றவர்களில் 6,621 மாணவர்கள் தங்களுக்கு கிடைத்த கல்லூரி ஒதுக்கீட்டை உறுதி செய்துவிட்டு, மேல்நோக்கு நகர்வுக்காக காத்திருக்கின்றனர்.</p><h2>12,346 பேர் கலந்தாய்வில் இருந்து வெளியேற்றம்</h2><p>மூன்றாம் சுற்றில் தற்காலிக ஒதுக்கீடு பெற்ற 68,640 மாணவர்களில் 56,294 பேர் மட்டுமே அந்த ஒதுக்கீட்டை உறுதி செய்துள்ளனர். இதனால், தற்காலிக ஒதுக்கீட்டை இறுதி செய்யாத 12,346 மாணவர்கள் கலந்தாய்வில் இருந்து வெளியேறியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>1.69 லட்சம் அரிய ஓலைச்சுவடிகளை மின்பதிவாக்கம் செய்வது துவக்கம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/digitization-of-169-lakh-rare-palm-leaf-manuscripts-begins</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/digitization-of-169-lakh-rare-palm-leaf-manuscripts-begins#comments</comments><guid isPermaLink="false">37b9aedb-8e20-4b8d-9115-64f9893e05ae</guid><pubDate>Mon, 24 Aug 2026 01:52:17 +0000</pubDate><atom:updated>2026-08-24T01:52:17.402Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Meenakshi Amman Temple,மீனாட்சி அம்மன் கோவில்,ஓலைச்சுவடி</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/vwak1hsg/3.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/vwak1hsg/3.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>'தமிழக கோவில்களில் பாதுகாக்கப்பட்ட மன்னர் கால கொடைகள் மற்றும் வரலாற்று ஆவணங்கள் அடங்கிய, 1.69 லட்சம் அரிய ஓலைச்சுவடிகளை, 'டிஜிட்டலைசேசன்' எனப் படும். மின்பதிவாக்கம் செய்யும் பணி தொடங்கியுள்ளது' என, ஹிந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, துறையின் கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:</p><p>தமிழக இந்து சமய அற நிலையத்துறை சார்பில், கோவில்களில் உள்ளஅரிய ஓலைச்சுவடிகளை, வருங்கால  தலைமுறையினர் எளிதில் அறிந்து கொள்ள, அவற்றை மின்பதிவாக்கம் செய்து, தற்கால தமிழுக்கு ஏற்ப, மாற்றம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. </p><p>சுந்தரேஸ்வரர் கோவிலில் உள்ள சுவடிகள், வெற்றிகரமாக மின்பதிவாக்கம் செய்யப்பட்டுள்ளன</p><p>செய்யப்பட்டதில், 73 கோவில்களில், 1.69 லட்சம் ஓலைச்சுவடிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.</p><p>மேலும், செப்பேடு கள் மற்றும் செப்பு பட்டயங்கள் 82; தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி மற்றும் ஐம்பொன் ஏடுகள் 9 ; தாள் சுவடிகள், 13 என்ற எண்ணிக்கையில் கிடைக்கப் பெற்றுள்ளன. சேகரிக்கப்பட்ட ஓலைச் சுவடிகளில் இதுவரை, 80,000 சுவடகள் கள் சுத்திக முறையில் பராமரிக்கப்பட்டு ரிக்கப்பட்டு, அறிவியல்</p><p>பட்டுள்ளன. மீதமுள்ள சுவடிகளை பாதுகாக்கும் பணிகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. </p><p>இவ்வாறு கூறப்பட்டுள்ளது.  </p>]]></content:encoded></item><item><title>ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-flow-at-hogenakkal-increased-to-13000-cubic-feet-per-second</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-flow-at-hogenakkal-increased-to-13000-cubic-feet-per-second#comments</comments><guid isPermaLink="false">1a7113d3-ed56-465a-a981-d66920c2b710</guid><pubDate>Mon, 24 Aug 2026 01:42:28 +0000</pubDate><atom:updated>2026-08-24T01:42:28.376Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Hogenakkal,Increase,அதிகரிப்பு,நீர்வரத்து,water flow,பென்னாகரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/2tzxjtr4/146.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஒகேனக்கல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/2tzxjtr4/146.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பென்னாகரம்,</p><p>கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் சூழல் உருவாகியுள்ளது.</p><h2>நீர்வரத்து அதிகரிப்பு</h2><p>கர்நாடக மாநிலம் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை பொறுத்து தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.</p><p>இந்த நிலையில் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. அதன்படி நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.</p><h2>அணை நீர்மட்டம்</h2><p>நீர்வரத்து அதிகரிப்பதும். குறைவதுமாக உள்ளதால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை நேற்று 8-வது நாளாக நீடித்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.</p><p>மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் டெல்டா பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் காய்ந்து வரும் நிலையில், மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 87 அடியை நெருங்கி உள்ளது. அணை நீர்மட்டம் நேற்று மாலை 86.83 அடியாக உள்ளது. அணைக்கு காலையில் வினாடிக்கு 12 ஆயிரத்து 883 கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலையில் வினாடிக்கு 13 ஆயிரத்து 538 கனஅடியாக அதிகரித்து உள்ளது.</p><p>அதே நேரத்தில் அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போதைய அளவில் நீர்வரத்து காணப்பட்டால், அணை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">நீர்மட்டம் </a>அடுத்த சில நாட்களில் 90 அடியை எட்டி விடும். அதன் பிறகும் இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் சூழல் உருவாகலாம் என்று பொதுப்பணித்துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item></channel></rss>