<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 15 Aug 2026 08:24:45 +0000</lastBuildDate><item><title>மேட்டூர் அணையில் பாதுகாப்பு குழுவினர் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/safety-team-inspects-mettur-dam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/safety-team-inspects-mettur-dam#comments</comments><guid isPermaLink="false">0df442aa-b5cc-4e02-a3bb-4be619c84bb1</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:24:02 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:24:02.164Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur dam,ஆய்வு,inspection</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/y3ntjzg0/15.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/y3ntjzg0/15.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,  </p><p>அணைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அணைகள் பாதுகாப்பினை மேற்கொள்வதற்காக விரிவான திட்ட மதிப்பீடு மேற்கொள்வதற்கு ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய நீர்வள ஆணையத்தின் ஓய்வு பெற்ற தலைவர் சந்திரசேகர் அய்யர் தலைமையில் இந்த நிபுணர் குழு அமைக் கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தமிழக நீர்வளத்துறையின் ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் செல்வம், திருச்சி என்.ஐ.டி. கல்லூரியின் புவியியல் தொழில்நுட்ப வல்லுனர் முத்துக்குமரன், நீரியல் வல்லுனர் மஞ்சுளா ஆகி யோர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். </p><p>இந்த குழுவினர் நேற்று மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து நிபுணர் குழு வின் தலைவர் சந்திரசேகர் அய்யர் நிருபர்களிடம் கூறுகையில், அணைகள் பாதுகாப்பிற்காக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்காக மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்டோம். அணையின் கட்டுமானம், நீர் வெளி யேற்ற மதகுகள், அணையின் முக்கிய பகுதிகள் மற்றும் அணையின் பாது காப்புக்காக அமைக்கப்பட்டுள்ள கருவிகளை ஆய்வு செய்தோம்.மேலும் அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகு பாலத்தை ஆய்வு செய் தோம். அவசரகால நீர் போக்கியான அணையின் மண் கரையையும் ஆய்வு மேற்கொண்டோம். இதுகுறித்து விரிவான திட்ட அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்வோம் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>முதல் முறை எம்எல்ஏக்களுக்கு கார், உதவியாளர் வழங்க முதல் அமைச்சர் விஜய் முடிவு?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/reports-indicate-that-chief-minister-vijay-has-decided-to-provide-cars-and-assistants-to-first-time-mlas</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/reports-indicate-that-chief-minister-vijay-has-decided-to-provide-cars-and-assistants-to-first-time-mlas#comments</comments><guid isPermaLink="false">d7a6b4b9-803d-4f2d-aead-2bcd1194d099</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:22:01 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:22:01.700Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,முதல் அமைச்சர்,எம்எல்ஏ,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/mzjbg2lo/vijay-PTI.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/mzjbg2lo/vijay-PTI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p> சட்டசபையில் விசிகவின் காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ ஜோதிமணி  சபாநாயகருக்கு கோரிக்கை ஒன்றை விடுத்தார்.  ஜோதிமணி பேசுகையில்,  "அய்யா.. இது என் சொந்த கோரிக்கை. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தேவையான கோரிக்கை. இதைப்பற்றி உங்களிடம் ஏற்கனவே கடிதமாக கொடுத்துள்ளேன். நான் 280 கி.மீ தொலைவில் இருந்துதான் சட்டமன்றம் வருகிறேன். பஸ் அல்லது ரயிலில் வருவதற்கு அலவென்ஸ் கொடுக்கறீர்கள். சட்டமன்றத்தின் தனி வண்டியில் வருவதற்கு என்னிடம் சொந்தமாக வண்டி இல்லை. வாடகை வண்டியில் தான் சட்டமன்றம் வருகிறேன். என்னுடைய தொகுதி 40 கி.மீ சுற்றளவில் உள்ளது. மக்களின் பிரச்சனை தொடர்பாக தொகுதிக்குள் பயணித்து, குறைகளை கேட்பதற்கு வாகன வசதி இல்லை. உடன் ஒரு செயலாளர் வைத்து கொண்டு அவருக்கு ஊதியம் கொடுப்பதற்கும் என்னிடம் வசதி இல்லை. இப்படித்தான் இன்றைக்குள்ள முக்கால்வாசி சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அதில் எந்த மாற்றமும் இல்லை. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் உள்ளிட்ட மற்ற வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.</p><h2> சபாநாயகர் பதில்</h2><p>காலணி கூட அணிய முடியாத சட்டமன்ற உறுப்பினர் இங்கே உள்ளனர். காலணி வாங்குவதற்கு கூட வசதி வாய்ப்பு இல்லாத எம்எல்ஏ பணியாற்றுகிறார்கள். இந்த சூழலில் லஞ்சம், லாவாண்யம் இல்லாத அரசாங்கத்தை கொடுப்பதாக கூறியுள்ளோம். அதற்கு நம்முடைய உறுப்பினர்களை நலமுடன் பார்த்துக் கொள்ளுமாறு உண்மையுடன், அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.  உடனே சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அளித்த பதிலில், " சட்டமன்ற உறுப்பினராக நேர்மையுடன், உண்மையாக பணியாற்றும் போது ஏற்படும் சிரமங்களை சொல்லியிருப்பதாக கருதுகிறேன்.  </p> <h2>கார் வாங்கித்தர முடிவு?</h2><p>முதலமைச்சர் இந்த அவையில் உள்ளார். நேரடியாகவே அவரின் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன். அவரின் கரங்கள் அள்ளி கொடுக்கும் கரங்கள். அந்த வகையில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் கொடுத்துள்ள கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறேன்" என்றார்.   இந்த நிலையில்,  ஜோதிமணியின் கோரிக்கையை ஏற்று எம்எல்ஏக்களுக்கு கார் வாங்கி கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>இதுகுறித்து தலைமை செயலக வட்டாரங்கள் கூறுகையில், "முதல்முறை எம்எல்ஏ ஆனவர்களுக்கு கார் வழங்க முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளார். தொகுதி அலுவலகத்துக்கு ஒரு கார் என்கிற அடிப்படையில் கார் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதை எம்எல்ஏவாக இருப்போர் பயன்படுத்தலாம். இதேபோல முதல்முறை எம்எல்ஏக்களுக்கு உதவியாளர் நியமனம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்” என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தந்தைக்கு ‘தகைசால் தமிழர் விருது’ - சவுமியா அன்புமணி எம்.எல்.ஏ. பெருமிதம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thagaisal-tamizhar-award-for-father-mla-sowmya-anbumani-expresses-pride</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thagaisal-tamizhar-award-for-father-mla-sowmya-anbumani-expresses-pride#comments</comments><guid isPermaLink="false">9ccb4a07-5275-4caa-9cfc-4a757e527c85</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:18:18 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:18:18.560Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தகைசால் தமிழர் விருது,Sowmiya Anbumani,சவுமியா அன்புமணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/iizfi2zq/State-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/iizfi2zq/State-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் த.வெ.க. அரசு அமைந்த பிறகு, முதல் முறையாக சுதந்திர தினத்தில் முதல்-அமைச்சர் விஜய் கோட்டை கொத்தளத்தில் இன்று தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக தமிழ்நாடு காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்-அமைச்சர் விஜய் ஏற்றுக்கொண்டார். </p><p>தேசியக்கொடியை ஏற்றிய பிறகு முதல்-அமைச்சர் விஜய் தனது முதல் சுதந்திர தின உரையை நிகழ்த்தினார். இதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் சுதந்திர தின சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. இதன்படி தமிழக அரசின் ‘தகைகசால் தமிழர் விருது’ காங்கிரஸ் மூத்த தலைவர் மு.கிருஷ்ணசாமிக்கு வழங்கப்பட்டது. </p><p>இந்த விழாவில் மு.கிருஷ்ணசாமியின் மகளும், பா.ம.க. எம்.எல்.ஏ.வுமான சவுமியா அன்புமணி கலந்து கொண்டார். தனது தந்தைக்கு ‘தகைசால் விருது’ வழங்கப்பட்டபோது, கைத்தட்டி தனது உற்சாகத்தை சவுமியா அன்புமணி வெளிப்படுத்தினார். இது தொடர்பான காட்சிகளை அவர் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார். </p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழ்நாட்டிற்காக அரும்பணி ஆற்றிய தமிழர்களைச் சிறப்பிக்கும் வகையில், இன்று தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் &quot;தகைசால் தமிழர் விருது&quot; பெறும் எனது தந்தையும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் தலைவருமான திரு.M.கிருஷ்ணசாமி (EX MP) அவர்களுடனான மகிழ்ச்சிகரமான தருணத்தில்.! <a href="https://t.co/a0PHpOye1u">pic.twitter.com/a0PHpOye1u</a></p>&mdash; Sowmiya Anbumani (@Sowmiyanbumani) <a href="https://x.com/Sowmiyanbumani/status/2088508168209060009?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>‘ஆப்ரோ டிரஸ்ட் நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்த பொதுமக்கள் ஆவணங்களுடன் புகார் அளிக்கலாம்’ - தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/members-of-the-public-who-were-defrauded-after-paying-money-to-the-afro-trust-company-may-file-complaints-along-with-supporting-documents-tamil-nadu-police-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/members-of-the-public-who-were-defrauded-after-paying-money-to-the-afro-trust-company-may-file-complaints-along-with-supporting-documents-tamil-nadu-police-announcement#comments</comments><guid isPermaLink="false">6beef76d-01c2-42d1-8b9d-db84a4153ee3</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:04:33 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:04:33.321Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu Police,தமிழ்நாடு காவல்துறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/qjjo0kpq/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/qjjo0kpq/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“ஆப்ரோ டிரஸ்ட் (APHRO TRUST) என்ற நிறுவனம் 2010 முதல் மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த மகளிர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் தருவதாக மக்களிடம் பணத்தை பெற்று ஏமாற்றியுள்ளார்கள். இதனால் இவர்கள் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டு பொருளாதார குற்றப்பிரிவு, அசோக்நகர், சென்னையில் விசாரணையில் இருந்து வருகிறது. </p><p>மேற்படி ஆப்ரோ டிரஸ்ட் நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் அசல் ஆவணங்களுடன் 17.08.2026 முதல் 21.08.2026 வரை ஆஜராகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விபரங்களுக்கு फ्र नं. 7010190757, 9498109056, 9840895154, 9498127068 ல் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் டிரைவருக்கு வாயில் கத்திக்குத்து: நண்பர்கள் 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/driver-stabbed-in-the-mouth-in-thoothukudi-two-friends-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/driver-stabbed-in-the-mouth-in-thoothukudi-two-friends-arrested#comments</comments><guid isPermaLink="false">4f8e5ecf-2ee3-4c6a-af09-241d5315c4e8</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:03:18 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:03:18.019Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>stabbing,கத்திக்குத்து,Thoothukudi,தூத்துக்குடி,car driver,கார் டிரைவர்,மதுபோதை,Drunken,Friends arrested,2 நண்பர்கள் கைது,வாயில்,mouth</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/465unpql/2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 2 பேர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/465unpql/2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a>யில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">நண்பர்களிடையே</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88">மது போதை</a>யில் ஏற்பட்ட தகராறில் கார் டிரைவரை வாயில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">கத்தியால் குத்திய</a> 2 பேரை போலீசார் கொலை முயற்சி வழக்கில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர்.</p><h2>மது அருந்திய நண்பர்கள்</h2><p>தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த முத்துக்குமார் (வயது 40), கார் டிரைவராகப் பணியாற்றி வருகிறார். சக்தி நகரைச் சேர்ந்த சரவணன்(40), பிரையண்ட் நகரைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ்(33) ஆகிய இருவரும் கட்டிடத் தொழிலாளர்கள். நண்பர்களான இவர்கள் 3 பேரும் ஒன்றாகச் சேர்ந்து மது அருந்துவது வழக்கம். </p><p>இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரையண்ட்நகர் 7-வது தெருவில் உள்ள வெட்டவெளியில் அமர்ந்து 3 பேரும் மது அருந்தியுள்ளனர். அப்போது போதை தலைக்கேறிய நிலையில், முத்துக்குமார் தனது நண்பர்களான சரவணன் மற்றும் ஜெயப்பிரகாஷை அவதூறாகப் பேசியதாக கூறப்படுகிறது. </p><h2>டிரைவருக்கு கத்திக்குத்து</h2><p>இதனால் ஆத்திரமடைந்த சரவணனும், ஜெயப்பிரகாஷும் சேர்ந்து முத்துக்குமாரை சரமாரியாக தாக்கி, கத்தியால் அவரது நெஞ்சுப் பகுதி மற்றும் வாயில் குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த முத்துக்குமார் மயங்கிச் சரிந்ததும், அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.</p><h2>2 பேர் கைது</h2><p>இதுகுறித்து தகவலறிந்த தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையிலான போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, படுகாயமடைந்த முத்துக்குமாரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய சரவணன் மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகிய 2 பேரையும் கொலை முயற்சி வழக்கின் கீழ் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>வேலூர் பி.டி.ஓ அலுவலகத்தில் தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றியதாக புகார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/velur-bdo-office-complaint-over-hoisting-national-flag-upside-down</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/velur-bdo-office-complaint-over-hoisting-national-flag-upside-down#comments</comments><guid isPermaLink="false">d38fdd95-8157-4c92-9825-8a6e304e879f</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:02:20 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:02:20.624Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vellore,வேலூர்,சுதந்திர தினம்,Independece Day,தேசியக் கொடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/p88llnlu/Untitled-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/p88llnlu/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வேலூர்,</p><p>வேலூர் பி.டி.ஓ அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றியதாக புகார் எழுந்துள்ளது.</p><h2>தலைகீழாக தேசியக்கொடி</h2><p>நாடு முழுவதும் 80-வது சுதந்திர தின விழா இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் வேலூர் அண்ணா சாலையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.</p><p>வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமால், சத்தியமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.</p><h2>அதிகாரிகள் அலட்சியம்</h2><p>தேசியக்கொடியை ஏற்றுவதற்கு முன்பு முறையாக சரிபார்க்காமல், அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் மாவட்ட நிர்வாகம் உரிய கண்காணிப்பையும் நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>80-வது சுதந்திர தினம்: ரிப்பன் கட்டட வளாகத்தில் மேயர் பிரியா தேசியக் கொடி ஏற்றிவைத்து மரியாதை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/80th-independence-day-mayor-priya-hoists-national-flag-ripon-building</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/80th-independence-day-mayor-priya-hoists-national-flag-ripon-building#comments</comments><guid isPermaLink="false">18dd4463-c8bf-4d9a-8f5d-38644acaccfc</guid><pubDate>Sat, 15 Aug 2026 07:54:53 +0000</pubDate><atom:updated>2026-08-15T07:54:53.640Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Mayor Priya,மேயர் பிரியா,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,Flag hoisting,சுதந்திர தினம்,Independece Day,ரிப்பன் மாளிகை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/7gwn71at/Untitled-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/7gwn71at/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>80-வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் மேயர் பிரியா தேசியக் கொடியினை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>சென்னை மாநகராட்சியில் இன்று (15.08.2026) 80-வது இந்திய சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் மேயர் பிரியா தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, மூவர்ண பலூன்களை விண்ணில் பறக்க விட்டார்.</p><p>தொடர்ந்து, மேயர் தேசிய மாணவர் படையினர், சாரண, சாரணியர் மற்றும் பேண்டு, வாத்தியக்குழுவின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, சென்னை மாநகராட்சியின் சஞ்சீவராயன் தெரு, புழல், கிருஷ்ணாம்பேட்டை, பூத்தப்பேடு, கோயம்பேடு மற்றும் ஜல்லடியான்பேட்டை சென்னை நடுநிலைப்பள்ளிகளின் மாணவ, மாணவிகள், குரு வித்யாஷ்ரம் சிறப்புப் பள்ளியைச் சார்ந்த மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவிகளின் கண்கவரும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.</p><p>பின்னர், சென்னை மாநகராட்சிக்கு மிக அதிகமாக சொத்துவரி செலுத்திய 3 நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கும், வட்டாரங்கள் அளவில் உரிய காலங்களில் முறையாக தாமதமில்லாமல் சொத்துவரி செலுத்திய 3 சொத்து உரிமையாளர்களுக்கும் பாராட்டுக் கடிதங்களை (Letter of Appreciation) மேயர் பிரியா வழங்கிப் பாராட்டினார். தொடர்ந்து, மாவட்ட அளவிலான சிறந்த பகுதி கூட்டமைப்பு மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு “மணிமேகலை விருதுகள்” வழங்கிப் பாராட்டினார்.</p><p>தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சியில் சிறப்பாகப் பணியாற்றிய வடக்கு, தெற்கு மற்றும் மத்திய வட்டார துணை ஆணையாளர்கள் உள்ளிட்ட 180 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கிப் பாராட்டினார். மேலும், தேசிய மாணவர் படை, சாரண சாரணியர்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சுதந்திர தின விழா: தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/independence-day-mechanised-boat-fishermen-in-thoothukudi-did-not-venture-out-to-sea</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/independence-day-mechanised-boat-fishermen-in-thoothukudi-did-not-venture-out-to-sea#comments</comments><guid isPermaLink="false">aec5fc4f-07d9-450d-92d5-57827b03846b</guid><pubDate>Sat, 15 Aug 2026 07:50:04 +0000</pubDate><atom:updated>2026-08-15T07:50:04.858Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>boat,Thoothukudi,தூத்துக்குடி,விசைப்படகு,சுதந்திர தின விழா,Independence Day Celebration,மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை,Fishermen did not go to sea</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/fswc4xlj/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/fswc4xlj/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>நாட்டின் 80-வது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE">சுதந்திர தின விழா</a>வை முன்னிட்டு, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தைச் சேர்ந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">விசைப்படகு மீனவர்கள்</a> இன்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88">கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை</a>. </p><h2>சுதந்திர தினம், விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை</h2><p>நாட்டின் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாகவும், தேசிய மரியாதையைச் செலுத்தும் விதமாகவும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இயங்கும் 270-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இன்று கடலுக்குச் செல்லவில்லை. இதனால் விசைப்படகுகள் அனைத்தும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகப் பகுதியில் வரிசையாக நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.</p><p>துறைமுக வளாகத்திலும் படகுகளிலும் மீனவர்கள் மற்றும் விசைப்படகு உரிமையாளர்கள் தேசியக் கொடியை ஏற்றி, சுதந்திர தின வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர். இன்று ஒருநாள் விடுமுறைக்குப்பின், நாளை (ஆகஸ்ட் 16) வழக்கம்போல் விசைப்படகுகள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லும் என மீன்பிடி துறைமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p>]]></content:encoded></item><item><title>பாரதத் தாயின் புகழை உலகெங்கும் பரப்புவோம்: நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/lets-spread-the-fame-of-mother-india-all-over-the-world-nayanar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/lets-spread-the-fame-of-mother-india-all-over-the-world-nayanar-nagendran#comments</comments><guid isPermaLink="false">7f723d1e-a575-49e8-8db5-4e7c46a04b71</guid><pubDate>Sat, 15 Aug 2026 07:32:55 +0000</pubDate><atom:updated>2026-08-15T07:32:55.524Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,சுதந்திர தினம்,Independence Day</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/nbbqs3lx/13.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/nbbqs3lx/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”அன்னை பாரதத்தின் அடிமை சாங்கிலியை அறுத்து, விடுதலைக் காற்று வீசத் தொடங்கிய 80-ஆம் ஆண்டு விடியலில் நாம் பெருமையுடன் அடியெடுத்து வைக்கிறோம், அகிலமே வியக்கும் வண்ணம், தொன்மைச் சிறப்பும் நவீன வளர்ச்சியும் ஒருங்கே மிளிரும் நமது தேசத்தின் 80-வது சுதந்திர தினத் திருநாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பாரதத்தின் விடுதலை வேள்வியில், தியாகத் தீயாகத் தங்களை அர்ப்பணித்த தீரர்களை இவ்வேளையில் போற்றி வணங்குகிறோம். </p><p>அந்நியரின் அடக்குமுறைக்கு அஞ்சாது. செங்குருதி சிந்தி இம்மண்ணைப் புனிதமாக்கிய தியாகச் செம்மல்களின் வீரத்தையும், அறச்சீற்றத்தையும் நாம் ஒருபோதும் மறவோம், அந்த மகத்தான தியாகிகளின் கனவுகள் இன்று நனவாகிக் கொண்டிருப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.</p><p>மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தீர்க்கதரிசனமான தலைமையின் கீழ், வளர்ச்சியடைந்த பாரதம் (Viksit Bharat) எனும் இலக்கை நோக்கி நமது தேசம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. உலகிற்கே வழிகாட்டும் 'விஸ்வகுரு'வாக இந்தியா மிளிர்வது நமது பிரதமரின் அசாத்திய உழைப்பிற்குச் சான்றாகும். சாமானியர் நலனும், தேசப் பாதுகாப்பும் ஒருங்கே மிளிரும் அவரது புதிய இந்தியா ஒவ்வொரு இந்தியனுக்கும் மட்டற்ற பெருமிதத்தை அளிக்கிறது.</p><p>ஜாதி, மத, மொழி கடந்து 'தேசியம்' எனும் மந்திரத்தால் ஒன்றிணைவோம். வலிமையான பாரதத்தை வருங்காலத்திற்கு அளிப்பதே நாம் தியாகிகளுக்குச் செய்யும் நன்றிக்கடன். தியாகிகளின் கனவையும் நமது பிரதமரின் லட்சியத்தையும் நனவாக்க தேசியக் கொடியின் கீழ் அணிவகுத்து. அன்னை பாரதத்தின் புகழை உலகெங்கும் பரப்புவோம்! அனைவருக்கும் இனிய 80-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்! பாரத் மாதா கி ஜே!”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>‘கோமாளி சர்க்காரை கண்டு சமூக விரோதிகளுக்கு துளியும் பயமில்லை’ - உதயநிதி ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anti-social-elements-have-not-the-slightest-fear-of-the-clown-government-udhayanidhi-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anti-social-elements-have-not-the-slightest-fear-of-the-clown-government-udhayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">b2eed740-98cb-49f6-9dbb-043b6de10d22</guid><pubDate>Sat, 15 Aug 2026 07:25:49 +0000</pubDate><atom:updated>2026-08-15T07:25:49.364Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/d4vop61g/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/d4vop61g/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-</p><p>“சென்னை திருவொற்றியூரில் போதைப்பொருள் புழக்கத்தைத் தட்டிக்கேட்டதால், அரசுப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவர் தனுஷ், 30 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.</p><p>கோவையில் போதை கும்பலை தட்டிக் கேட்டதற்காக கல்லூரி மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட, அடுத்த சில தினங்களில் சென்னையிலும் இத்தகைய கொடூரம் நடந்திருக்கிறது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் இந்த அரசு எந்த அளவுக்கு தோற்றுக் கொண்டிருக்கிறது என்பதற்கு தமிழ்நாட்டிலே தொடரும் கொலைகளே சாட்சி.</p><p>போதைப் பொருள் பயன்படுத்துவதையோ – விற்பதையோ அம்பலப்படுத்தினால், அவர்கள் கொலை செய்யப்படுவார்கள் என்பது, ஒட்டுமொத்த சமூகத்திற்கும் விடப்படும் எச்சரிக்கை. நிர்வாகத்திறனற்ற இந்த கோமாளி சர்க்காரை கண்டு சமூக விரோதிகளுக்குத் துளியும் பயமில்லை என்பதே இதற்கு காரணம்.</p><p>குறிப்பாக, பள்ளிகளில் – கல்லூரிகளில் இத்தகைய சம்பவங்கள் நடப்பதை அரசு கண்டும் காணாமல் வாயை மூடிக் கொண்டு இருப்பது வெட்கக்கேடு. மாணவர் தனுஷ் கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும். </p> <p>இத்தகைய தொடர் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி கல்லூரிகளில் போதைப் பொருள் பயன்பாடு இருக்கிறதா? அதற்கு என்ன காரணம்? இதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை எல்லாம் உரிய முறையில் விசாரித்து இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>மேலும், வன்முறை எதற்கும் தீர்வல்ல என்பதை உணர்த்தும் வகையில் மாணவர்கள் மத்தியில் கவுன்சிலிங் வழங்கி போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>விடுமுறை தினம்: குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-tourists-flock-to-courtallam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-tourists-flock-to-courtallam#comments</comments><guid isPermaLink="false">7d9b4527-d46b-4d2d-b844-996fb040a392</guid><pubDate>Sat, 15 Aug 2026 07:23:15 +0000</pubDate><atom:updated>2026-08-15T07:23:15.852Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tourists,சுற்றுலா பயணிகள்,குற்றாலம் அருவி,Courtallam</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/xqulwuav/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/xqulwuav/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p>தென்காசி மாவட்டத்தையொட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தற்போது அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்வீழ்ச்சிகள், அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. </p><p>முக்கிய சுற்றுலாத்தலமான குற்றால அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சீராக தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. </p><p>இன்று விடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்தனர். ஐந்தருவி, மெயின் அருவி பழைய குற்றால அருவிகளில் நீண்ட வரிசையில் நின்று குளித்து மகிழ்ந்தனர்.</p><p>அருவிகளில் குளித்த சுற்றுலா பயணிகள் அருவிக்கரை பகுதியில் உள்ள கடைகளில் தேநீர், தின்பண்டங்களை வாங்கி ருசித்தனர். இதனால் கடைகளிலும் வியாபாரம் சூடுபிடித்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் ஏ.டி.எம். இயந்திரத்திற்கு பணம் நிரப்பும் வாகனத்தில் ரூ.24 லட்சம் மாயம் - போலீஸ் தீவிர விசாரணை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-24-lakh-goes-missing-from-an-atm-cash-loading-vehicle-in-chennai-police-conducting-an-intensive-investigation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-24-lakh-goes-missing-from-an-atm-cash-loading-vehicle-in-chennai-police-conducting-an-intensive-investigation#comments</comments><guid isPermaLink="false">478cbe9d-e76f-409d-a6ae-f877c959708a</guid><pubDate>Sat, 15 Aug 2026 07:15:03 +0000</pubDate><atom:updated>2026-08-15T07:15:03.472Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,ATM,ஏ.டி.எம்.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/ohscgveg/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/ohscgveg/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் வங்கிக்காக ஒப்பந்த அடிப்படையில் செயல்படக்கூடிய ‘கேஷ் செக்யூர் சிஸ்டம்’ நிறுவன ஊழியர்கள் பல்வேறு ஏ.டி.எம். மையங்களில் உள்ள இயந்திரங்களில் பணம் நிரப்பக்கூடிய பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று இரவு வேளச்சேரியில் உள்ள இந்த நிறுவன அலுவலகத்தில் இருந்து ரூ.4.69 கோடி பணத்துடன் 105 பணப்பெட்டிகளை எடுத்துக்கொண்டு, பணம் நிரப்பும் வாகனத்தில ஊழியர்கள் புறப்பட்டனர்.</p><p>அவர்கள் நகரில் உள்ள 14 ஏ.டி.எம். மையங்களில் பணத்தை நிரப்பிய நிலையில் 15-வது ஏ.டி.எம். மையமான பெரம்பூர் பேப்பர் மில் சாலையில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணத்தை நிரப்புவதற்காக வந்தபோது, அந்த வாகனத்தில மூன்று பணப்பெட்டிகள் குறைவாக இருப்பது தெரியவந்திருக்கிறது.</p> <p>இதனையடுத்து அவர்கள் வந்த வழியிலேயே திரும்பிச் சென்று தேடி பார்த்தபோது, முரசொலிமாறன் மேம்பாலத்தின் மீது 2 காலி பணப்பெட்டிகள் மட்டும் கிடந்திருக்கிறது. ஆனால் ஒரே ஒரு பணப்பெட்டி மாயமாகி உள்ளது. அந்த பணப்பெட்டியில் சுமார் 24 லட்சம் ரூபாய் வரை இருந்ததாக கூறப்படுகிறது.</p><p>இது குறித்து உடனடியாக ஊழியர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து கொளத்தூர் துணை ஆணையர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து முரசொலிமாறன் மேம்பாலத்திற்கு அருகே உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இது தொடர்பாக ஐ.சி.எப். போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கி உள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>கஞ்சா அடித்ததை தட்டிக் கேட்டதால் மாணவன் படுகொலை - தந்தை பரபரப்பு பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-killed-after-confronting-cannabis-use-fathers-interview</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-killed-after-confronting-cannabis-use-fathers-interview#comments</comments><guid isPermaLink="false">8615e8e9-e156-430e-bf9d-0c330276f322</guid><pubDate>Sat, 15 Aug 2026 07:12:45 +0000</pubDate><atom:updated>2026-08-15T07:12:45.376Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,திருவொற்றியூர்,Tiruvottiyur,மாணவன் கொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/xika0p76/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/xika0p76/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கஞ்சா அடித்ததை தட்டிக் கேட்டதால் தனது மகனை கொலை செய்துவிட்டதாக, பிளஸ்-2 மாணவனின் தந்தை தெரிவித்துள்ளார்.</p><h2>மாணவர் கொலை</h2><p>சென்னை மாவட்டம் திருவொற்றியூரை சேர்ந்த தனுஷ் (16 வயது) என்ற மாணவர் ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று 30-க்கும் மேற்பட்ட மாணவர்களால் தனுஷ் அடித்து கொல்லப்பட்டார். இதுதொடர்பாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><h2>தட்டிக்கேட்ட மாணவன்</h2><p>மாணவர் கொலை குறித்து அவரது தந்தை கூறியதாவது:-</p><p>பள்ளி வளாகத்தில் தனுஷ் மற்றும் அவரது நண்பர் ஜெயகேஷ் சென்று கொண்டிருந்தபோது, பிளஸ்-1 மாணவர்கள் சிலர் கஞ்சா அடித்து, தனுஷின் முகத்தில் ஊதியுள்ளனர். அதனை ஜெயகேஷ் தட்டிகேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் பழிவாங்கும் நோக்கில், அவரை கொலை செய்வதற்காக திட்டம் தீட்டியுள்ளனர்.</p><p>இந்த நிலையில் ஜெயகேஷ் நேற்று பள்ளிக்கு வராததால், பள்ளி முடிந்து பேருந்து நிலையம் சென்ற தனுஷை 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வழிமறித்து, வலுகட்டாயமாக ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு மைதானத்திற்கு இழுத்து சென்று தாக்கியுள்ளனர். இதில் உள்காயங்கள் அடைந்த தனுஷ் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இந்த சம்பவம் குறித்து அறிந்த திருவொற்றியூர் போலீசார், மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவரின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். </p><h2>3 பேர் கைது</h2><p>இது தொடர்பாக 3 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மாணவர்களை கைது செய்வதற்காக வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். 30 மாணவர்களையும் கைது செய்யும் வரை மறியலில் ஈடுபடுவோம் என பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆவேசமாக கூறியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் 5 கட்டிடங்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு: மாநகராட்சி அதிரடி நடவடிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/drinking-water-connections-to-five-buildings-in-thoothukudi-disconnected-corporation-takes-swift-action</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/drinking-water-connections-to-five-buildings-in-thoothukudi-disconnected-corporation-takes-swift-action#comments</comments><guid isPermaLink="false">dfded2c2-83fb-43d5-b8b1-d9e5eca8132d</guid><pubDate>Sat, 15 Aug 2026 07:10:01 +0000</pubDate><atom:updated>2026-08-15T07:10:01.300Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Action,நடவடிக்கை,Corporation,மாநகராட்சி,Buildings,கட்டிடங்கள்,disconnection,குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு,Drinking water connection</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/98qv38kx/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-5-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூத்துக்குடியில் 5 கட்டிடங்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/98qv38kx/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-5-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">மாநகராட்சி</a>யில் நீண்ட நாட்களாகச் சொத்து வரி நிலுவை வைத்திருந்த 5 கட்டிடங்களின் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">குடிநீர் இணைப்பு</a>களை மாநகராட்சி அலுவலர்கள் அதிரடியாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">துண்டித்து</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">நடவடிக்கை</a> எடுத்தனர். </p><h2>மாநகராட்சி கமிஷனர் உத்தரவு</h2><p>தூத்துக்குடி மாநகராட்சியில் 2025-26-ம் நிதியாண்டு வரை (31.3.2026 வரை) சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தாத வரிவிதிப்பதாரர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சி கமிஷனர் பிரியங்கா உத்தரவின்படியும், கிழக்கு மண்டல உதவி கமிஷனரின் அறிவுறுத்தலின்படியும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>5 கட்டிடங்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு</h2><p>அதன் ஒரு பகுதியாக மாநகராட்சி கமிஷனர் உத்தரவின்படி, கிழக்கு மண்டல உதவி கமிஷனரின் அறிவுரையின்படி, கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு 24 மற்றும் 47  வார்டுகளுக்குட்பட்ட தெற்கு காட்டன் ரோடு மற்றும் வடக்கு ராஜா பகுதிகளில் குறைந்தபட்சம் 2023-24-ம் ஆண்டு முதலும் அதிகபட்சம் 2018-19-ம் ஆண்டிலிருந்தும் சொத்துவரி (நிலுவை தொகை ரூ.18,000 இலிருந்து ரூ.69,000 வரை) செலுத்தாமல் நிலுவை வைத்திருந்த 5 கட்டிடங்களுக்கு முறையாக கால அவகாசம் கொடுத்து அறிவிப்பு வழங்கியும் நிலுவை வரி செலுத்தாதனை முன்னிட்டு இன்று  மாநகராட்சி அலுவலர்களால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்யப்பட்டது. </p><h2>மாநகராட்சி எச்சரிக்கை</h2><p>குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்ட கட்டிடங்களின் உரிமையாளர்கள், தங்களது சொத்து வரி நிலுவையை 3 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். தவறினால், நடைமுறையில் உள்ள மாநகராட்சி விதிகளின்படி ஜப்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><h2>சொத்து வரி, குடிநீர் கட்டணம்</h2><p>"பொதுமக்கள் அனைவரும் தங்களது கட்டிடங்களுக்கான சொத்து வரி, குடிநீர் கட்டணம், திடக்கழிவு மேலாண்மை வரி மற்றும் பாதாள சாக்கடை கட்டணம் போன்றவற்றை நடப்புக் காலம் வரை செலுத்தியுள்ளீர்களா என்பதைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். நிலுவை இருப்பின் உடனடியாகச் செலுத்தி, குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் இதர சட்டபூர்வ நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சமரசம் செய்ய சென்றவருக்கு சபலம்: நண்பரின் மனைவியை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த பூசாரி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/compromise-goer-gets-karma-priest-arrested-for-threatening-friends-wife-with-obscene-video</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/compromise-goer-gets-karma-priest-arrested-for-threatening-friends-wife-with-obscene-video#comments</comments><guid isPermaLink="false">86935cc3-65ce-4513-b181-866cc69c5cae</guid><pubDate>Sat, 15 Aug 2026 06:51:54 +0000</pubDate><atom:updated>2026-08-15T06:51:54.601Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrest,Blackmail,ஆபாச வீடியோ,மிரட்டல்,தர்மபுரி,Dharmapuri</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/avir1kf1/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/avir1kf1/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தர்மபுரி,</p><p>நண்பரின் மனைவியை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த பூசாரியை போலீசார் கைது செய்தனர். குடும்ப தகராறில் சமரசம் செய்ய சென்றவருக்கு வந்த சபலத்தால் தற்போது கைதாகி உள்ளார்.</p><h2>குடும்ப தகராறு</h2><p>தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அந்த இளம்பெண் அப்பகுதியில் உள்ள தனியார் பார்மசி கல்லூரியில் படித்து வந்தார். தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பயிற்சிக்கும் சென்று வந்தார். அவருடைய கணவர் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட்டு வந்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.</p><p>கணவன், மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் கணவரின் நண்பரான கோவில் பூசாரி ரகுராம் (28 வயது) இவர்களை சமாதானம் செய்துள்ளார். அதன்பின்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த அந்த இளம்பெண்ணை ரகுராம் காரில் வருமாறு அழைத்துள்ளார்.</p><h2>வீடியோ எடுத்து மிரட்டல்</h2><p>காரில் சென்றபோது இருவரும் நெருக்கமாக இருப்பது போல் படத்தை செல்போனில் எடுத்து வைத்துக்கொண்ட ரகுராம், நமக்கு தகாத உறவு இருப்பதாக வெளியே சொல்லி விடுவேன் என்று கூறி இளம்பெண்ணை பாலியல் இச்சைக்கு வருமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது.</p><p>இதனால் பயந்துபோன இளம்பெண் அதற்கு உடன்பட்டுள்ளார். இவர்கள் தனிமையில் இருந்தபோது செல்போனில் மறைமுகமாக படம் பிடித்த ரகுராம் அந்த வீடியோ காட்சிகளை சென்னையில் உள்ள தனது நண்பருக்கு அனுப்பினார். அந்த நண்பரும் இளம்பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு வீடியோ காலில் நிர்வாணமாக நின்றபடி பேச வேண்டும் என மிரட்டல் விடுத்தார்.</p><h2>கைது</h2><p>இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் அவர் கூறியதை போலவே வீடியோ காலில் பேசினார். அதை பதிவு செய்து வைத்துக்கொண்ட அந்த வாலிபர் இளம்பெண்ணை பாலியல் இச்சைக்கு அழைத்தார். ஆனால் இளம்பெண் மறுப்பு தெரிவித்ததால் அந்த வீடியோ பதிவுகளை இளம்பெண்ணின் கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு அனுப்பி விடுவதாக கூறி மிரட்டினார்.</p><p>இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் இது தொடர்பாக அரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூசாரி ரகுராமை நேற்று கைது செய்தனர். தலைமறைவான சென்னையைச் சேர்ந்த வாலிபரை தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>திருச்செந்தூர் கடலில் ராட்சத அலையில் சிக்கிய சிறுவனை மீட்ட பாதுகாப்பு பணியாளர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/security-personnel-rescues-a-boy-caught-in-a-giant-wave-in-the-sea-at-tiruchendur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/security-personnel-rescues-a-boy-caught-in-a-giant-wave-in-the-sea-at-tiruchendur#comments</comments><guid isPermaLink="false">864cc3a7-e473-45e6-938a-8b4de7842f36</guid><pubDate>Sat, 15 Aug 2026 06:50:11 +0000</pubDate><atom:updated>2026-08-15T06:50:11.386Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,பாதுகாப்பு,Thiruchendur Temple,திருச்செந்தூர் கோவில்,Rescue,sea wave,boy,security personnel,சிறுவன் மீட்பு,பணியாளர்,ராட்சத கடல் அலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/py83379a/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருச்செந்தூர் கடலில் ராட்சத அலையில் சிக்கிய சிறுவனை மீட்ட பாதுகாப்பு பணியாளர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/py83379a/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்செந்தூர், </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">திருச்செந்தூர் கோவில்</a> கடலில் குளித்தபோது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88">ராட்சத அலை</a>யில் சிக்கி ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்ட 14 வயது சிறுவனை, கோவில் கடற்கரை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">பாதுகாப்பு</a>ப் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D">பணியாளர் </a>பத்திரமாக மீட்டார். </p><h2>கடல் அலைகளின் கடும் சீற்றம்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பகுதியில் அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு முந்தைய, பிந்தைய நாட்களில் கடல் உள்வாங்குவதும், பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்புவதும் வழக்கமாக நடக்கும் ஒன்று. கடந்த 12-ம் தேதி ஆடி அமாவாசையன்று காலையில் சுமார் 100 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியது. இந்த நிலையில் நேற்று காலையில் கடல் அலைகள் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது.</p><h2>ராட்சத அலையில் சிக்கிய சிறுவன்</h2><p>இருப்பினும் பக்தர்கள் வழக்கம்போல் கடலில் புனித நீராடி வந்தனர். விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த சரண் (வயது 14) என்ற சிறுவன், தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தான். பின்னர் தனது நண்பர்களுடன் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டு தண்ணீரில் தத்தளித்துள்ளான். </p><h2>உடலில் சிராய்ப்பு காயங்கள்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D">சிறுவன்</a> தத்தளிப்பதைக் கண்ட கோவில் கடற்கரை பாதுகாப்புப் பணியாளர் சிவராஜா, உடனடியாகக் கடலில் குதித்து சிறுவன் சரணை பத்திரமாக மீட்டு கரைக்குக் கொண்டு வந்தார். அப்பகுதி பாறைகள் நிறைந்த பகுதி என்பதால், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">மீட்பு</a> நடவடிக்கையின் போது இருவருக்கும் உடலில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன.</p><h2>பாதுகாப்பு பணியாளருக்கு பாராட்டு</h2><p>இதையடுத்து 2 பேருக்கும் கோவில் வளாகத்தில் உள்ள முதலுதவி மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தனது உயிரைப் பொருட்படுத்தாமல் கடலில் தத்தளித்த சிறுவனை சாதுரியமாக மீட்ட பாதுகாப்புப் பணியாளர் சிவராஜாவை கோவில் அதிகாரிகளும், பொதுமக்களும் பாராட்டினர்.</p>]]></content:encoded></item><item><title>‘சுதந்திர தினத்தன்று மாநில முதல்-அமைச்சர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையை பெற்றுத் தந்தவர் கலைஞர்’ - கனிமொழி எம்.பி. </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-was-kalaignar-who-secured-the-right-for-state-chief-ministers-to-hoist-the-national-flag-on-independence-day-kanimozhi-mp</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-was-kalaignar-who-secured-the-right-for-state-chief-ministers-to-hoist-the-national-flag-on-independence-day-kanimozhi-mp#comments</comments><guid isPermaLink="false">3a0d1b34-0492-4df8-9ce8-aa921bc22ca1</guid><pubDate>Sat, 15 Aug 2026 06:29:43 +0000</pubDate><atom:updated>2026-08-15T06:29:43.335Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கனிமொழி எம்.பி.,Kanimozhi,சுதந்திர தினம்,Independence Day</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/2bi6cucb/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/2bi6cucb/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். தமிழகத்தில் த.வெ.க. அரசு அமைந்த பிறகு, சுதந்திர தினத்தில் முதல் முறையாக முதல்-அமைச்சர் விஜய் கோட்டை கொத்தளத்தில் இன்று தேசியக்கொடியை ஏற்றினார். </p><p>இந்நிலையில், தி.மு.க. எம்.பி. கனிமொழி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-</p><p>“எண்ணற்ற தியாகங்களாலும், போராட்டங்களாலும் ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்து இந்நாளில் விடுதலை பெற்றது, இந்திய நாடு. அவ்வாறு போராடிப் பெற்ற சுதந்திரம் அனைத்து மக்களுக்குமானது என்பதை உணர்த்தும் வகையிலும், இந்நாடு ஏற்றுள்ள கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தும் வகையிலும், சுதந்திர தினத்தன்று மாநில முதல்-அமைச்சர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையை போராடிப் பெற்றுத் தந்தவர் தலைவர் கலைஞர்.</p><p>தாய்நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வீரர்களின் தியாகங்களைப் போற்றுவோம். அந்த விடுதலையை முழுமையாக்கும் கூட்டாட்சித் தத்துவத்தின் விழுமியங்களை உயர்த்திப் பிடிப்போம்!”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசை பெற்ற கோவை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-wins-the-first-prize-for-the-best-municipal-corporation-in-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-wins-the-first-prize-for-the-best-municipal-corporation-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">dc75d104-3b67-499d-a3d8-9658060f5080</guid><pubDate>Sat, 15 Aug 2026 05:54:44 +0000</pubDate><atom:updated>2026-08-15T05:54:44.367Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,Tamil Nadu,மாநகராட்சி,Municipal Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/k5uhalst/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/k5uhalst/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் த.வெ.க. அரசு அமைந்த பிறகு, முதல் முறையாக சுதந்திர தினத்தில் முதல்-அமைச்சர் விஜய் கோட்டை கொத்தளத்தில் இன்று தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக தமிழ்நாடு காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்-அமைச்சர் விஜய் ஏற்றுக்கொண்டார். </p><p>தேசியக்கொடியை ஏற்றிய பிறகு முதல்-அமைச்சர் விஜய் தனது முதல் சுதந்திர தின உரையை நிகழ்த்தினார். இதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் சுதந்திர தின சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. இதில், தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் விருதுகள் வழங்கி கவுரவித்தார். </p><p>இதன்படி தமிழகத்தில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசு கோவை பெற்றது. அதே போல், சிறந்த மாநகராட்சிக்கான இரண்டாம் பரிசு தஞ்சாவூருக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து சிறந்த நகராட்சிக்கான முதல் பரிசு தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சிக்கும், இரண்டாம் பரிசு திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சிக்கும், மூன்றாம் பரிசு விழுப்புரம் நகராட்சிக்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. </p> ]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி:  உடன்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-udankudi-thermal-power-plant-shutdown</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-udankudi-thermal-power-plant-shutdown#comments</comments><guid isPermaLink="false">6757f03a-309c-48ec-a761-0e7fde67e7f4</guid><pubDate>Sat, 15 Aug 2026 05:33:52 +0000</pubDate><atom:updated>2026-08-15T05:33:52.013Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தூத்துக்குடி,மின் உற்பத்தி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/58q7yj6o/tdutp.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/58q7yj6o/tdutp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி</p><p>தூத்துக்குடி உடன்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.</p><p>தூத்துக்குடியில் <a href="https://www.dailythanthi.com/">உடன்குடி</a> பகுதியில் அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.  இதில், கடந்த மார்ச் 13-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மின் உற்பத்தியை தொடங்கி வைத்தார்.  இந்நிலையில், அனல் மின் நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.</p> <h2>மின் உற்பத்தி நிறுத்தம்</h2><p>இந்த பராமரிப்பு பணி காரணமாக முதல் அலகில் 660 மெகாவாட் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. . தற்போது பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், 2-வது அலகில் மின் உற்பத்திக்கான சோதனை ஓட்டங்கள் மற்றும் கூலிங் டவர் சோதனைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.</p> ]]></content:encoded></item><item><title>சுதந்திர தின விழா: முதல் அமைச்சர் விஜய்யின் பெற்றோர், நடிகை திரிஷா பங்கேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/independence-day-celebration-chief-minister-vijays-parents-and-actress-trisha-participate</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/independence-day-celebration-chief-minister-vijays-parents-and-actress-trisha-participate#comments</comments><guid isPermaLink="false">e80280a8-d876-4518-86d5-934fa7d8c1c9</guid><pubDate>Sat, 15 Aug 2026 05:29:23 +0000</pubDate><atom:updated>2026-08-15T05:29:23.442Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,Trisha,Independece Day,சுதந்திர தின விழா,திரிஷா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/x9dizjos/Trisha-ama.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/x9dizjos/Trisha-ama.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை:</p><p>நாட்டின் 80-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல்முறையாக ஆட்சி அமைத்துள்ள தவெக அரசின் சார்பில் முதல் சுதந்திர தின விழா இன்று நடைபெற்றது. தமிழக அரசு சார்பில் சென்னை கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்பதற்காக முதல் அமைச்சர் விஜய், இன்று காலை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்டார். மெரீனா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே வந்த  விஜய்க்கு காவல்துறையினரின் மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. </p>  <p>இதனைத் தொடர்ந்து அவர் கோட்டைக்கு வந்தார். கோட்டையில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட விஜய், பின்னர் திறந்த ஜீப்பில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.இதையடுத்து சரியாக காலை 8.45 மணிக்கு கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து முதல் அமைச்சர் மரியாதை செலுத்தினார்.</p><h2> திரிஷா பங்கேற்பு</h2><p>இந்த சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ. சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர் ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும், நடிகை திரிஷாவும் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விஜய்யின் பெற்றோர் அமர்ந்திருந்த இடத்துக்கு அருகிலேயே த்ரிஷாவுக்கும் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.  அதாவது முதல் வரிசையில் திரிஷா அமரவைக்கப்பட்டு இருந்தார். </p><p>காவல்துறையினரின் அணிவகுப்பை விஜய் பார்வையிட்டபோது, அவர் சல்யூட் அடித்தார். அப்போது திரிஷாவும் முதல்வர் விஜய்யை பார்த்து சல்யூட் அடித்தார். விழா நிறைவடைந்து முதல்வர் விஜய் புறப்பட்டுச் சென்றபோது, அவரது பெற்றோர் மற்றும் நடிகை திரிஷா ஆகியோர் கையசைத்து அவரை வழியனுப்பி வைத்தனர். சுதந்திர தின விழாவில் நடிகை திரிஷா கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில், தமிழ்நாட்டிற்கு தனித்துவமான இடமுண்டு: முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-has-a-unique-place-in-indias-freedom-struggle-says-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-has-a-unique-place-in-indias-freedom-struggle-says-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">bc817f1e-e67e-47e0-beb3-59defb437f60</guid><pubDate>Sat, 15 Aug 2026 05:28:05 +0000</pubDate><atom:updated>2026-08-15T05:28:05.045Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Greetings,வாழ்த்து,சுதந்திர தினம்,Independence Day,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/3tlxvxtn/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/3tlxvxtn/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாடு முழுவதும் 80-வது சுதந்திர தின விழா இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தாய்நாட்டின் விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே ஈந்த எண்ணற்ற தியாகிகளையும், ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராக அஞ்சாது களமிறங்கிப் போராடிய தேசத் தலைவர்களையும் இந்நன்னாளில் நன்றியுடன் நினைவுகூர்ந்து, மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில், தமிழ்நாட்டிற்கு என்றும் ஒரு தனித்துவமான, மகத்தான இடமுண்டு. அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக அச்சமின்றி எழுந்த முதல் குரலும், விடுதலை வேட்கையை மக்கள் மனங்களில் விதைத்த வீர உணர்வும் இந்த தமிழ் மண்ணிலிருந்தே வலிமை பெற்றன. இத்தகைய வீரத்தையும், தேசப்பற்றையும் விதைத்திட்ட தியாக சீலர்கள் கண்ட கனவுகளை நிறைவேற்றுவோம்.</p><p>நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பேணிக்காத்து, அனைத்து குடிமக்களின் நலனையும் முன்னிறுத்தி, சமத்துவமும் சமூகநீதியும் ஜனநாயகமும் தழைத்தோங்கும் இந்தியாவை உருவாக்கிட இந்நன்னாளில் உறுதியேற்போம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்தது கர்நாடக அரசு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-leader-mk-stalin-has-stated-that-our-india-is-one-that-upholds-pluralism-and-unity</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-leader-mk-stalin-has-stated-that-our-india-is-one-that-upholds-pluralism-and-unity#comments</comments><guid isPermaLink="false">ffe1b473-f3a8-4220-b89f-f157e6557770</guid><pubDate>Sat, 15 Aug 2026 05:25:19 +0000</pubDate><atom:updated>2026-08-15T05:25:19.718Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தண்ணீர் திறப்பு,Water Opening,Cauvery,காவிரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/o0r0x1ue/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/o0r0x1ue/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><p>கர்நாடக அரசு தற்போது கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வர உள்ளது. </p><h2>காவிரி நீர் மேலாண்மை ஆணையம்</h2><p>கிருஷ்ணராஜ சாகர்(கே.ஆர்.எஸ்.) அணையில் இருந்து கடந்த ஜூலை 29-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 12-ந் தேதி வரை தண்ணீர் திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை கர்நாடக அரசு அமல்படுத்தவில்லை. பிலிகுண்டுலு அளவீட்டின்படி, ஜூன் மாதத்தில் கிடைக்க வேண்டிய 9.140 டி.எம்.சி.க்கு பதிலாக 2.915 டி.எம்.சி.யும், ஜூலையில் 31.240 டி.எம்.சி.க்கு பதிலாக 0.714 டி.எம்.சி.யும், ஆகஸ்டு 9-ந் தேதி வரை 13.341 டி.எம்.சி.க்கு பதிலாக 6.757 டி.எம்.சி. மட்டுமே கிடைத்துள்ளது. ஒட்டு மொத்தமாகப் பெற வேண்டிய 53.721 டி.எம்.சி.க்கு பதிலாக 10.386 டி.எம்.சி. நீர் மட்டுமே தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்துள்ளது.</p><h2>12 ஆயிரம் கனஅடி நீர்</h2><p>இதைத் தொடர்ந்து தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று காவிரிநீர் ஒழுங்காற்று குழு சென்ற 11-ந் தேதி கூட்டப்பட்டது. அதில் ஆகஸ்ட் மாதத்திற்குரிய நிலுவை நீர் மற்றும் வழக்கமான நீர் சேர்த்து மொத்தம் 37 டி.எம்.சி. நீரை உடனடியாக திறக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரியது. ஆனால், ஆணையம் இதனை ஏற்காமல், 15 நாட்களுக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீரை மட்டும், அதாவது 15.552 டி.எம்.சி.நீரை மட்டும் திறக்கப் பரிந்துரைத்தது. </p> <h2>சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு </h2><p>இந்த அளவு விவசாயத் தேவைகளுக்குப் போதுமானதாக இல்லை என தமிழ்நாடு அரசு சுட்டிக்காட்டியது. எனவே, நிலுவை நீரான 21.357 டி.எம்.சி. நீரையும், விகிதாசார அடிப்படையில் ஆகஸ்டு 12 முதல் இறுதி வரையிலான மொத்த நீரின் அளவான 37 டிஎம்சி நீரை திறக்க நாள்தோறும் 10 நாள்களுக்கு வினாடிக்கு 21.413 கனஅடி நீரை அதாவது 1.85 டிஎம்சி நீரை திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வக்கீல்கள் சி.எஸ். வைத்தியநாதன் ஜி.உமாபதி, வக்கீல் பி.கருணாகரன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். </p><h2>காவிரியில் தண்ணீர் திறப்பு</h2><p>இந்த நிலையில், கர்நாடக அரசு தற்போது கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டுள்ளது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு சுமார் 12 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படும் நிலையில், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வர உள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வர உள்ள நிலையில், இன்று காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.    </p>]]></content:encoded></item><item><title>தென்காசி: லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tenkasi-electricity-board-official-arrested-for-accepting-a-bribe</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tenkasi-electricity-board-official-arrested-for-accepting-a-bribe#comments</comments><guid isPermaLink="false">fda0b9fe-7c6f-4fce-989f-166a43ac1f3b</guid><pubDate>Sat, 15 Aug 2026 05:05:47 +0000</pubDate><atom:updated>2026-08-15T05:05:47.294Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,farmer,விவசாயி,Tenkasi,தென்காசி,arrest,லஞ்சம்,Electricity Board,bribe,Electricity connection,New,புதிய மின் இணைப்பு,மின்வாரிய அதிகாரி,Official</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/flhfmuuf/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ லஞ்சம், கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/flhfmuuf/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF">தென்காசி</a> மாவட்டத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">புதிய மின் இணைப்பு</a> வழங்க ரூ.2 ஆயிரம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">லஞ்சம்</a> வாங்கிய மின்வாரிய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்தனர். </p><h2>ரூ.2 ஆயிரம் லஞ்சம்</h2><p>தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகே உள்ள கொக்குகுளத்தைச் சேர்ந்த விவசாயி காளிராஜ் (வயது 32), புதிய மின் இணைப்பு பெற விண்ணப்பித்தார். அப்போது பழங்கோட்டை மின்வாரிய வணிக ஆய்வாளர் கருப்பசாமி ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.</p><h2>மின்வாரிய அதிகாரி கைது</h2><p>லஞ்சம் கொடுக்க விரும்பாத காளிராஜ் இதுகுறித்து தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். அந்த புகாரின்பேரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய பணத்தைப் பெற்றுக் கொண்ட கருப்பசாமியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>விஜய் தலைமையில் தகவல் ஆணையர்கள் தேர்வுக்கான கூட்டம்;  உதயநிதி பங்கேற்கவில்லை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/meeting-to-select-information-commissioners-held-under-vijays-leadership-udhayanidhi-did-not-participate</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/meeting-to-select-information-commissioners-held-under-vijays-leadership-udhayanidhi-did-not-participate#comments</comments><guid isPermaLink="false">a8efcd36-500e-4dcf-8500-81730dbed996</guid><pubDate>Sat, 15 Aug 2026 05:03:08 +0000</pubDate><atom:updated>2026-08-15T05:03:08.188Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,Tamil Nadu,உதயநிதி,Udhayanidhi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/afit7f5q/Vija.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/afit7f5q/Vija.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் தலைமை தகவல் ஆணையர் மற்றும் 8 தகவல் ஆணையர்கள் உள்ளனர். தலைமை தகவல் ஆணையர் முகமது ஷகீல் அக்தர் மற்றும் தகவல் ஆணையர்கள் தாமரைக்கண்ணன், பிரியகு மார், திருமலைமுத்து ஆகியோர் ஓய்வு பெற்றுவிட்டனர். அதைத் தொடர்ந்து அங்கு 5 ஆணையர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான வழிகாட்டுதல்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.</p><p>அதன்படி முதல்-அமைச்சர் தலைமையில் சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் கூடி, பட்டியலில் உள்ளவர்களில் யாரை ஆணையராக தேர்வு செய்ய வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும். இந்த காலி பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் தலைமையில் தேடல் குழுவை தமிழக அரசு அமைத்திருந்தது. </p> <p>அந்த குழு தகுதியானவர்களிடம் இருந்து விண் ணப்பங்களை பெற்று இறுதிப்பட்டியலை அரசுக்கு சமர்ப்பித்துள்ளது. அந்த வகையில் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் இந்த கூட்டம் கூடியது. சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் மட்டும் அதில் பங்கேற்றார். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க வில்லை.</p>]]></content:encoded></item><item><title>தங்கம் விலை மேலும் உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..?</title><link>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-rises-further-whats-todays-rate</link><comments>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-rises-further-whats-todays-rate#comments</comments><guid isPermaLink="false">c22d5964-8e63-4722-83a9-4f61f7207802</guid><pubDate>Sat, 15 Aug 2026 04:50:54 +0000</pubDate><atom:updated>2026-08-15T04:50:54.096Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Gold Rate,தங்கம் விலை,வெள்ளி விலை,Silver rate,Gold Price,Silver Price,விலை நிலவரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/mf9johfk/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/mf9johfk/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தங்கம் (Gold Rate)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,13,760-க்கு விற்பனையானது. இந்த நிலையில் நேற்று காலையில் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.1,440 குறைந்து, ரூ.1,12,320-க்கு விற்பனை செய்யப்பட்டது.</p><p>காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது. நேற்று மாலையில் சவரனுக்கு ரூ.1,280-ம், கிராமுக்கு ரூ.160-ம் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,600-க்கும், ஒரு கிராம் ரூ.14,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.</p><p>இந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>பிளஸ்-2 மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-arrested-for-raping-plus-2-student-after-threatening-her</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-arrested-for-raping-plus-2-student-after-threatening-her#comments</comments><guid isPermaLink="false">20328fec-bd1e-48d2-aefa-6cb72c1879dc</guid><pubDate>Sat, 15 Aug 2026 04:36:44 +0000</pubDate><atom:updated>2026-08-15T04:36:44.200Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பலாத்காரம்,கன்னியாகுமரி,plus-2 student,பிளஸ்-2 மாணவி,Youth arrested,வாலிபர் கைது,Kanyakumari,rape</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/w8yv02l0/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-2-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிளஸ்-2 மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த வாலிபர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/w8yv02l0/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-2-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF">கன்னியாகுமரி</a> மாவட்டத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-2-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF">பிளஸ்-2 மாணவி</a>யை மிரட்டி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">பலாத்காரம்</a> செய்த வாலிபரை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். </p><h2>பிளஸ்-2 மாணவியை மிரட்டி பலாத்காரம்</h2><p>கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே ராமன்துறையை சேர்ந்த மீன்பிடி தொழிலாளி ஆரோக்கிய டிக்சன் (வயது 27), பிளஸ்-2 மாணவியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி, ஆபாச காட்சிகளை பதிவு செய்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. </p><h2>வாலிபர் போக்சோவில் கைது</h2><p>மேலும், மாணவியின் ஆபாச புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ஆரோக்கிய டிக்சனை கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>‘ஒளிமிகு எதிர்காலத்தை நோக்கிய நம் நாட்டின் பயணம் வெல்ல வேண்டும்’ - மு.க.ஸ்டாலின் சுதந்திர தின வாழ்த்து </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/our-countrys-journey-towards-a-bright-future-must-succeed-mk-stalins-independence-day-greetings</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/our-countrys-journey-towards-a-bright-future-must-succeed-mk-stalins-independence-day-greetings#comments</comments><guid isPermaLink="false">78508ce9-bd34-47ee-87f4-950511ef9c41</guid><pubDate>Sat, 15 Aug 2026 04:11:15 +0000</pubDate><atom:updated>2026-08-15T04:11:15.425Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,M.K.Stalin,சுதந்திர தினம்,Independence Day</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/7mi30ccm/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/7mi30ccm/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். தமிழகத்தில் த.வெ.க. அரசு அமைந்த பிறகு, சுதந்திர தினத்தில் முதல் முறையாக முதல்-அமைச்சர் விஜய் கோட்டை கொத்தளத்தில் இன்று தேசியக்கொடியை ஏற்றினார். </p><p>இந்நிலையில், தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-</p><p>“பிற்போக்கையும், பழமையையும் வேரறுத்து, பன்மைத்துவத்தையும், ஒற்றுமையையும் உயர்த்திப் பிடிப்பதே நமது இந்தியா! கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் நனவாகும் ஒளிமிகு எதிர்காலத்தை நோக்கிய நம் நாட்டின் பயணம் வெல்ல வேண்டும்!</p><p>நாளை என்பதை அறிவாலும், ஆற்றலாலும் வடிவமைத்து, சமத்துவம் – சகோதரத்துவம் – முற்போக்கு – மனிதநேயம் உள்ளிட்ட விழுமியங்களோடு ஒன்றுபட்டு முன்னேறுவோம்!  அனைவருக்கும் விடுதலை நாள் நல்வாழ்த்துகள்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு சாகும்வரை சிறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/worker-who-raped-a-minor-girl-sentenced-to-life-imprisonment</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/worker-who-raped-a-minor-girl-sentenced-to-life-imprisonment#comments</comments><guid isPermaLink="false">a12ebb99-ea0f-4df5-90b2-69ce0187f492</guid><pubDate>Sat, 15 Aug 2026 03:49:38 +0000</pubDate><atom:updated>2026-08-15T03:49:38.155Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,Tiruvannamalai,life imprisonment,சிறை தண்டனை,சிறுமி,பாலியல் பலாத்காரம்,Sexual assault,Minor girl</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/a726s6na/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு சாகும்வரை சிறை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/a726s6na/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">திருவண்ணாமலை</a> மாவட்டத்தில் 13 வயது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF">சிறுமி</a>யை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">பலாத்காரம்</a> செய்த தொழிலாளிக்கு சாகும்வரை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">சிறை தண்டனை</a> விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. </p><h2>13 வயது சிறுமிக்கு பாலியல் பலாத்காரம்</h2><p>திருவண்ணாமலை மாவட்டம், தேவரெட்டியார் குப்பத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வீரமணி (வயது 45). இவர் கடந்த 2021-ம் ஆண்டு 13 வயதுடைய வாய் பேச முடியாத, மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். </p><h2>தொழிலாளிக்கு சாகும்வரை சிறை தண்டனை</h2><p>இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த திருவண்ணாமலை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி காஞ்சனா நேற்று தீர்ப்பளித்தார். அதில் குற்றவாளி வீரமணிக்கு சாகும்வரை சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>லஞ்சம், ஊழலில் இருந்து தமிழகத்தை காக்க வந்துள்ளோம்: முதல்-அமைச்சர் விஜய் பேச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-have-come-to-protect-tamil-nadu-from-bribery-and-corruption-chief-minister-vijays-speech</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-have-come-to-protect-tamil-nadu-from-bribery-and-corruption-chief-minister-vijays-speech#comments</comments><guid isPermaLink="false">86421662-5847-4c90-9678-f4e464331e49</guid><pubDate>Sat, 15 Aug 2026 03:49:22 +0000</pubDate><atom:updated>2026-08-15T03:49:22.249Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சுதந்திர தினம்,Independence Day,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/ai97hb53/8.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/ai97hb53/8.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் விஜய் சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றினார். இதன் பின்னர் அவர் பேசியதாவது;</p><p>"என் நெஞ்சில் குடியிருக்கும் மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகள். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வீர வணக்கம். அனைவரும் இணையும் இடத்தில் சாதி, மதம், இனம் நொறுங்கும். தமிழகத்தை லஞ்சத்தில் இருந்து காப்பாற்றுவதும் விடுதலை தான். லஞ்சம், ஊழலில் இருந்து தமிழகத்தை காக்க வந்துள்ளோம். சுதந்திரத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டு வளர்கிறோம். </p><p>வெளிப்படையான நிர்வாகம் நடைபெறுகிறது. கொள்கைக்கு எதிரான விஷயங்களை அரசு நிச்சயம் எதிர்க்கும். மத்திய அரசுடன் நிர்வாக ரீதியாக ஒத்துழைப்பு. தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை எதிர்ப்போம். கடந்த அரசு கொண்டு வந்த நல்ல திட்டங்கள் கைவிடப்படவில்லை. ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா உணவகம் தொடர்ந்து நடத்தப்படுகிறது. 100 நாள் திட்டம் 125 நாள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.</p><p>இந்த 3 மாதத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கோவில் நிலங்கள் கணக்கெடுக்கப்பட்டு, ஆன்லைனில் ஏற்றப்படுகிறது. லஞ்சம் வாங்குவதை புகார் செய்ய வாட்ஸ் அப் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. லஞ்சம், ஊழலை ஒழிக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொது வாழ்வில் சமரசம் இருக்கக் கூடாது. மக்கள் நலனே முக்கியம். </p><p>மக்களே இனிதான் நீங்கள் நம்முடன்  இருக்க வேண்டும். அப்போது தான் உங்களுக்கு நல்ல திட்டங்கள் கொண்டுவர முடியும். நான் உட்பட அனைவரும் உங்களின் சேவகர்கள். நமது அரசுக்கு எதிரான அதிகளையும், சக்திகளையும் முறியடிப்போம். </p><p>இந்த விழாவில் விருதுகளை வாங்கப்போகும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.”</p><p>இவ்வாறு அவர் பேசினார். </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் அடுத்த ஓராண்டுக்குள் பி.எஸ்.என்.எல். 5ஜி சேவை - சென்னை தலைமை பொது மேலாளர் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bsnl-5g-service-in-tamil-nadu-within-next-year-says-chennai-chief-general-manager</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bsnl-5g-service-in-tamil-nadu-within-next-year-says-chennai-chief-general-manager#comments</comments><guid isPermaLink="false">8b4fb704-b08e-40b4-a1f2-4c62520a0782</guid><pubDate>Sat, 15 Aug 2026 03:41:59 +0000</pubDate><atom:updated>2026-08-15T03:41:59.824Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,BSNL,பி.எஸ்.என்.எல்.,5ஜி சேவை,5G</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/xx2t8qas/Untitled-4.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ பி.எஸ்.என்.எல்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/xx2t8qas/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் அடுத்த ஓராண்டுக்குள் பி.எஸ்.என்.எல். 5ஜி சேவை கொண்டு வரப்படும் என சென்னை பி.எஸ்.என்.எல். தலைமை பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.</p><h2>ரூ.1-க்கு பிரீபேய்டு சேவை</h2><p>சென்னை பி.எஸ்.என்.எல். தலைமை பொது மேலாளர் சுதாகரராவ் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய வாடிக்கையாளர்களுக்கு, பிரீபேய்டு சேவை வெறும் 1 ரூபாய்க்கு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சிம் கார்டு இலவசமாக வழங்கப்படும்.</p><h2>புதிய செயலி</h2><p>24 நாட்கள் செல்லுபடியாகும் வகையிலான இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்புகள், 1 ஜி.பி. டேட்டா. தினமும் 100 குறுந்தகவல்கள் (எஸ்.எம்.எஸ்.) பெற முடியும். இந்த சலுகை செப்டம்பர் 12-ந்தேதி வரை கிடைக்கும். இதேபோன்று ஓராண்டு திட்டத்துக்கும், அதிவேக இணைய சேவைக்கும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. பிரீபெய்டு ரீசார்ஜ். போஸ்ட்பெய்டு பில் கட்டணம், டேட்டா பயன்பாடு கண்காணிப்பு, புதிய அதிவேக இணைய சேவை பதிவு, புகார் பதிவு, திட்ட விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய வேகமான, மேம்படுத்தப்பட்ட, ஒருங்கிணைந்த 'பி.எஸ்.என்.எல். செல்ப்கேர்' எனும் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><h2>பி.எஸ்.என்.எல். 5ஜி சேவை</h2><p>சென்னை பி.எஸ்.என்.எல். எல்லைக்குள் மொத்தம் 1,902 செல்போன் கோபுரங்கள் உள்ளன. இதில், 1,214 கோபுரங்கள் 4ஜி சேவை வழங்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளன. இன்னும் 6 மாதங்களில் மீதமுள்ள கோபுரங்களும் மேம்படுத்தப்படும். இந்த பணி முடிவடைந்ததும், தற்போது செல்போன் சேவையில் இருந்து வரும் இடையூறுகள் முற்றிலும் சீராகும். அடுத்த ஓராண்டுக்குள் தமிழகத்தில் பி.எஸ்.என்.எல். 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>80-வது சுதந்திர தினம்: கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றினார் முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/80th-independence-day-chief-minister-vijay-hoists-national-flag-first-time</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/80th-independence-day-chief-minister-vijay-hoists-national-flag-first-time#comments</comments><guid isPermaLink="false">2f11b451-bcb4-497f-bd57-9251e2f4936b</guid><pubDate>Sat, 15 Aug 2026 03:18:50 +0000</pubDate><atom:updated>2026-08-15T03:22:52.148Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சுதந்திர தினம்,Independece Day,தேசியக்கொடி ஏற்றினார்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/0nheth4f/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/0nheth4f/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் தனது முதல் சுதந்திர தின விழாவில், சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் இன்று தேசியக் கொடியேற்றினார்.</p><h2>சுதந்திர தின விழா</h2><p>நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு சார்பில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடக்கும் இந்த விழாவில் முதல்-அமைச்சர் தேசியக் கொடி ஏற்றுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு முதல்-அமைச்சர் விஜய் கலந்து கொண்டு தேசியக் கொடி ஏற்றினார்.</p><p>இதற்காக அவர், இன்று காலை சுமார் 8 மணியளவில் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டார். மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே வந்ததும், சென்னை காவல்துறையின் மோட்டார் சைக்கிள்கள் முன்னும் பின்னும் அணிவகுத்து அவரை கோட்டைக்கு அழைத்து வந்தனர்.</p><p>காலை சுமார் 8.35 மணியளவில் கோட்டை முன்பாக அமைக்கப்பட்டுள்ள அணிவகுப்பு மரியாதை ஏற்ற விஜய் மேடையை வந்தடைந்தார். அவரை தலைமைச் செயலாளர் சாய்குமார் வரவேற்றார். அதன்பிறகு மேடைக்கு வந்த விஜய், அங்கு காவல்துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து திறந்த ஜீப்பில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/xdzmujnw/Untitled-3-2.jpg" /></figure><h2>தேசியக் கொடி ஏற்றினார்</h2><p>பின்னர் கோட்டை கொத்தளத்துக்கு வருகை தந்தார். இந்த நிலையில் காலை 8.45 மணிக்கு கொடிக் கம்பத்தில் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்து, முதல்-அமைச்சர் விஜய் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து முதல்-அமைச்சர் விஜய் சுதந்திர தின உரையாற்றி வருகிறார்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/8ph51p8l/Untitled-3-3.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-lifted-on-11-types-of-liquor-at-tasmac-shops</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-lifted-on-11-types-of-liquor-at-tasmac-shops#comments</comments><guid isPermaLink="false">a5789d7f-aed2-4f04-b07c-4b8545c383a0</guid><pubDate>Sat, 15 Aug 2026 03:15:09 +0000</pubDate><atom:updated>2026-08-15T03:15:09.329Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டாஸ்மாக்,Tasmac,மதுபானம்,Liquor</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/r165qgli/Tssmac-shop.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/r165qgli/Tssmac-shop.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு என்ரிகா எண்டர்பிரைசஸ் நிறுவனம் மதுபானங்களை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் கடந்த 11-ந் தேதி உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, அந்த நிறுவனத்தின் குறிப்பிட்ட மதுபான தயாரிப்புகளில் செயற்கை சுவையூட்டும் பொருட்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. எனவே அதன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அந்த நிறுவனத்தின் 11 வகை மதுபானங்களின் விற்பனையை நிறுத்துமாறு தமிழக அரசின் டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டது.</p><h2>தடை நீக்கம்</h2><p>அதன்படி வி.எஸ்.ஓ.பி. எக்ஸ்ஷா கோல்டு பிராந்தி, லூயிஸ் வெர்னான்ட் எக்ஸ்ஓ பிளெண்டட் பிரீமியம் பிராந்தி, மெக்டொவெல்ஸ் வி.எஸ்.ஓ.பி. பிராந்தி, நம்பர் ஒன் மெக்டொவெல்ஸ் பைன் பிராந்தி, மென்'ஸ் கிளப் டீலக்ஸ் பிராந்தி, ஹனி பீ பைன் பிராந்தி, என்ரிகா வி.எஸ்.ஓ.பி. செலக்ட் பிராந்தி, என்ரிகா பிளாட்டினம் ரிசர்வ் எக்ஸ்ஓ பிராந்தி, என்ரிகா பிரீமியம் பிரெஞ்ச் பிராந்தி, வீரன் ஸ்பெஷல் பிராந்தி, என்ரிகா ஒல்டு இண்டி கிளா சிக் டார்க் ரம் ஆகியவை தடை செய்யப்பட்டன. இந்த நிலையில் மறுநாளே தடை நீக்கப்பட்டுள்ளது. உணவு தரக்கட்டுப்பாட்டு அமைப்பு தடையை நீக்கலாம் என பரிந்துரையை செய்ததையடுத்து தடை நீக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பயங்கரம்: ஒரே நாளில் பிளஸ்-2 மாணவர் உள்பட 3 பேர் படுகொலை- 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/horror-in-chennai-three-people-including-a-class-12-student-murdered-in-a-single-day-two-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/horror-in-chennai-three-people-including-a-class-12-student-murdered-in-a-single-day-two-arrested#comments</comments><guid isPermaLink="false">28b62ebc-3f0c-4c30-84e0-a82aeeb932e7</guid><pubDate>Sat, 15 Aug 2026 03:00:48 +0000</pubDate><atom:updated>2026-08-15T03:00:48.699Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Nepal,நேபாளம்,plus-2 student,வாலிபர்,2 arrested,2 பேர் கைது,young man,பிளஸ்-2 மாணவர்,படுகொலை,murdered,3 people,3 பேர்,பயங்கரம்,Horrifying</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/n4k83wlw/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கொலையான தனுஷ், ரஞ்சன், ஸ்ரீராம் சகா.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/n4k83wlw/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a>யில் நேற்று ஒரே நாளில் நடந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-2-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D">பிளஸ்-2 மாணவர் </a>உள்பட <a href="https://www.dailythanthi.com/topic/3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">3 பேர் படுகொலை</a> செய்யப்பட்ட சம்பவங்களில் <a href="https://www.dailythanthi.com/topic/2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">2 பேர் கைது</a> செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>பிளஸ்-2 மாணவர்</h2><p>சென்னை திருவொற்றியூர் தாங்கல் வசந்த் நகர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷின் மகன் தனுஷ் (வயது 16). இவர் விம்கோ நகரில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று மாலை சுமார் 4.30 மணியளவில் பள்ளி அருகே உள்ள அஜாக்ஸ் பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள காலி மைதானத்தில் தனுஷ் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தனுஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். </p><h2>தகராறு</h2><p>தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் பாஸ்கரன், திருவொற்றியூர் உதவி கமிஷனர் பால்ராஜ், இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் உள்ளிட்ட போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், 2 நாட்களுக்கு முன்பு அதே பள்ளியில் பிளஸ்-2 மாணவர் ஒருவருக்கும், பிளஸ்-1 மாணவர் ஒருவருக்கும் யார் சீனியர் என்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. </p><h2>மயங்கி விழுந்து சாவு</h2><p>இந்த நிலையில் அந்த பள்ளியின் பிளஸ்-1 மாணவர், அதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோருடன் சேர்ந்து தனுஷை அஜாக்ஸ் பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள காலி மைதானத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த தனுஷ், சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள பிளஸ்-1 மாணவர் உள்பட 10-க்கும் மேற்பட்டோரை தேடி வருகின்றனர். </p><h2>நேபாள வாலிபர் அடித்து கொலை</h2><p>சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நீச்சல் குளம் பின்பகுதியில் இளைஞர் ஒருவர் தலை உள்பட உடல் முழுவதும் பலத்த காயங்களோடு நேற்று காலை கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அண்ணாசதுக்கம் போலீசார் இறந்து கிடந்த இளைஞரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார். விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">நேபாளத்தை</a> சேர்ந்த ஸ்ரீராம்சாகா(27) என்பது தெரிந்தது.</p><p>இதுதொடர்பாக பீகாரை சேர்ந்த சன்னிசதா(26) என்பவரை போலீசார் கைது செய்தனர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில் ஏறி அவசரமாக அவர் சொந்த ஊருக்கு தப்பி ஓட முயன்றபோது அவரை பிடித்தனர். விசாரணையில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் ஸ்ரீராம்சாகாவை சன்னிசதா அடித்து படுகொலை செய்தது உறுதியானது. </p><figure><img alt="கைதான காமேஷ், சன்னி சதா." src="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/y3m00o30/கைதான-காமேஷ்-சன்னி-சதா.jpg" /></figure><h2>சமாதியில் ரத்த வெள்ளத்தில் பிணம்</h2><p>அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள பாதிரிவேடு போலீஸ் எல்லைக்கு உட்பட்டது சாணாபுத்தூர் கிராமம். இங்கு வசித்து வரும் கூலித்தொழிலாளி ராஜா என்பவரின் மூத்த மகன் ரஞ்சன்(18). சாணாபுத்தூர் கிராமத்தில் வீட்டின் அருகே தனியார் வயல்வெளியில் உள்ள சமாதி மீது நேற்று காலை ரஞ்சன் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலையில் புகுந்து காவலாளிகளை தாக்கி கட்டிப்போட்டு ரூ.4 லட்சம் பொருள் கொள்ளை வழக்கில் கைதானவர்களில் ரஞ்சனும் ஒருவர் என தெரியவந்தது. </p><h2>வாலிபர் வெட்டிக்கொலை</h2><p>இந்த வழக்கில் அதே கிராமத்தை சேர்ந்த காமேஷ்(22) என்பவரையும் பாதிரிவேடு போலீசார் கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட ரஞ்சனும், காமேசும் நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள். இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் இரவு ரஞ்சன், காமேஷை மது குடிக்க அழைத்தார். இருவரும் வயல்வெளியில் சமாதி உள்ள இடத்துக்கு சென்றனர். அங்கு மது போதை தலைக்கு ஏறிய நிலையில், முன் விரோதத்தில் ஏற்பட்ட தகராறில் ரஞ்சனை, காமேஷ் சரமாரியாக வெட்டி கொன்றது தெரியவந்தது.</p>]]></content:encoded></item><item><title>துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 17-ந் தேதி திருச்சி வருகை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vice-president-cp-radhakrishnan-to-visit-trichy-on-the-17th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vice-president-cp-radhakrishnan-to-visit-trichy-on-the-17th#comments</comments><guid isPermaLink="false">8326789d-8c62-4c1e-8bc1-58dc34655e3d</guid><pubDate>Sat, 15 Aug 2026 02:53:44 +0000</pubDate><atom:updated>2026-08-15T02:53:44.299Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சி.பி.ராதாகிருஷ்ணன்,திருச்சி,Trichy,C.P. Radhakrishnan</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/62dxoap4/7.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/62dxoap4/7.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,  </p><p>இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் மற்றும் தஞ்சை சாஸ்திரா பல்கலைக்கழகங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகிற 17-ந் தேதி (திங்கட்கி ழமை) காலை 7 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகிறார். பின்னர் அவர் திருச்சியில் இருந்து கார் மூலம் திருவாரூர் சென்று நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். </p><p>அதன்பிறகு அங்கிருந்து தஞ்சை செல்லும் அவர், அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு அன்றைய தினம் மாலையே கார் மூலம் திருச்சி வந்து மீண்டும் விமானம் மூலம் புறப்பட்டு செல்கிறார். துணை ஜனாதிபதி வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.</p> ]]></content:encoded></item><item><title>போலீசார் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ஒரு நாள் ஆப்சென்ட்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-personnel-who-ride-vehicles-without-wearing-a-helmet-will-be-marked-absent-for-the-day</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-personnel-who-ride-vehicles-without-wearing-a-helmet-will-be-marked-absent-for-the-day#comments</comments><guid isPermaLink="false">466c4b35-04d5-43a2-989d-a26c88ae8318</guid><pubDate>Sat, 15 Aug 2026 02:21:55 +0000</pubDate><atom:updated>2026-08-15T02:21:55.339Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>police,absent,ஹெல்மெட்,Helmet,போலீசார்,ஆப்சென்ட்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/tv1y6l70/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/tv1y6l70/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>'விபத்து தடுப்பு நடவடிக்கையாக, 'ஹெல்மெட்' அணியாமல், இரு சக்கர வாகனம் ஓட்டும் போலீசாரின் வாகனங்களை, பறிமுதல் செய்ய வேண்டும்; அவர்களுக்கு ஒரு நாள் 'ஆப்சென்ட்' போட வேண்டும்' என, மண்டல ஐ.ஜி.,க்கள் உத்தரவிட்டுள்ளனர்.</p><p>'பொதுமக்கள் அனை வரும் ஹெல்மெட் அணிந்து தான், இரு சக்கர வாகனம் ஓட்ட வேண்டும்' என, உத்தரவிடப் பட்டுள்ளது. சில நேரங்களில், சட்டத்தை அமல்படுத்த வேண்டிய போலீசாரே, அதனை மீறி வருகின்றனர். 'ஹெல்மெட்' அணியாமல் இரு சக்கர வாகனங்களில் போலீசார் சென்றால், பொதுமக்கள் அதை, 'வீடியோ' எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிடுகின்றனர். இது, காவல் துறைக்கு அவப்பெயர் ஏற்படுத்துகிறது.</p><p>இதனை தவிர்க்கவும், விபத்து தடுப்பு நடவ டிக்கையாகவும், 'ஹெல் மெட்' அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டும் போலீசாருக்கு, ஒரு நாள், 'ஆப்சென்ட்' போட வேண்டும்' என, மாவட்ட எஸ்.பி.,க்கள் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு ஐ.ஜி.,க்கள் மண்டல உத்தரவிட்டுள்ளனர். இது தொடர்பாக அவர் பிறப்பித்துள்ள உத்தரவு பின்வருமாறு;</p><p>போலீசார், 'ஹெல் மெட்' அணியாமல் இரு சக்கர வாகனம் ஒட்டுவது தெரியவந்தால், அவர்களின் வாகனத்தை பறிமுதல் செய்ய வேண் டும். சம்பந்தப்பட்ட நபர், ஐ.எஸ்.ஐ., முத்திரையுடன் கூடிய, புதிய ஹெல்மெட் வாங்கி வந்த பின், அவரிடம் வாகனத்தை ஒப்படைக்க வேண்டும்.</p><p>போலீசார் காலை, 7:00 மணிக்கு பணிக்கு வரும் போது, 'ஹெல்மெட்' அணிந்து வந்ததை, உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். அவர்கள் ஹெல்மெட் அணியாமல் வந்தது தெரியவந்தால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு நாள், ஆப்சென்ட்' போட வேண்டும்.</p><p>சாலையில், போலீசார் ஹெல்மெட் அணியாமல், இரு சக்கர வாகனம் ஓட்டிச் சென்றால், அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.</p><p>இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சென்னை-கடலூர் சரக்கு கப்பல் சேவை ஜனவரி மாதம் தொடங்கும் - துறைமுக அதிகாரிகள் தகவல் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-cuddalore-cargo-ship-service-to-begin-in-january-port-officials</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-cuddalore-cargo-ship-service-to-begin-in-january-port-officials#comments</comments><guid isPermaLink="false">2bf2f0f9-182c-4e70-abaf-0abfc00c7050</guid><pubDate>Sat, 15 Aug 2026 01:57:01 +0000</pubDate><atom:updated>2026-08-15T01:57:01.896Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,துறைமுகம்,Cuddalore,கடலூர்,Harbour</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/vqoy9gpb/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/vqoy9gpb/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>கடலுார் துறைமுகத்தில், 40 ஆண்டுகளுக்கு முன் உரங்கள், நிலக்கரி ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டன. சுமார் 111 ஏக்கர் பரப்பளவு கொண்ட கடலுார் துறைமுகத்தில், சரக்கு கப்பல்கள் கரைக்கு அருகே வராமல் கடலுக்கு உள்ளேயே நிறுத்தப்பட்டு, சிறிய படகுகளில் சரக்குகள் இறக்கப்படும். பின்னர் அவை துறைமுகத்திற்கு எடுத்து வரப்படும். இது போன்ற பல்வேறு காரணங்களால், கடலூர் துறைமுக பணிகள் காலப்போக்கில் முடங்கின.</p><p>இதற்கிடையே, கடலுார் துறைமுகத்தை மேம்படுத்தி, மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர, 'மஹதி கடலுார் போர்ட் அண்டு மேரிடைம்' என்ற நிறுவனத்துடன் தமிழக அரசு, கடந்த ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி, இந்த துறைமுகத்தில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை ஆகஸ்ட் மாதத்தில் முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பணிகள் இன்னும் முடியவில்லை. </p><p>மேலும், பணிகளை முடிக்க, அந்த நிறுவனம் அவகாசம் கேட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை துறைமுக அதிகாரிகள் கூறுகையில், “கடலுார் துறைமுகத்தில், கப்பல்களை நிறுத்துவதற்கான இரண்டு இடங்கள் தயாராக உள்ளன. கடலுார் துறைமுகம், 9 மீட்டர் ஆழம் கொண்டது என்பதால், பெரிய கண்டெய்னர் கப்பலை இயக்க முடியும். அடுத்தகட்டமாக பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. </p><p>அந்த பணிகள் இந்த மாதத்தில் முடியும் என எதிர்பார்த்த நிலையில், இன்னும் பணிகள் நிறைவடையாததால், பணிகளை முடிக்க வரும் ஜனவரி வரை அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. எனவே, சென்னை -கடலுார் சரக்கு கப்பல் சேவை அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்தனர். </p> ]]></content:encoded></item><item><title>மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா: வண்ணமயமான பட்டங்களை பார்த்து ரசித்த பொதுமக்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/international-kite-festival-in-mamallapuram-colorful-kites-delight-public</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/international-kite-festival-in-mamallapuram-colorful-kites-delight-public#comments</comments><guid isPermaLink="false">1d7d3434-0027-4487-806e-0470e30be8f2</guid><pubDate>Sat, 15 Aug 2026 01:53:47 +0000</pubDate><atom:updated>2026-08-15T01:53:47.870Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Mamallapuram,மாமல்லபுரம்,பட்டம் விடும் திருவிழா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/0wf1usjk/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/0wf1usjk/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>செங்கல்பட்டு,</p><p>மாமல்லபுரத்தில் 5-வது சர்வதேச பட்டம் விடும் திருவிழா நேற்று தொடங்கியது. வண்ணமயமான பட்டங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.</p><h2>பட்டம் விடும் திருவிழா</h2><p>செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுற்றுலா வளர்ச்சிக் கழக மைதானத்தில் 5-வது சர்வதேச பட்டம் விடும் திருவிழா நேற்று தொடங்கியது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வீரப்பன், சுற்றுலாத்துறை கமிஷனர் ஜெயசீலன், திருப்போரூர் எம்.எல்.ஏ. பா.விஜயராஜ், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் எஸ்.சக்திவேல் ஆகியோர் முன்னிலையில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் பட்டம் விடும் திருவிழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த பட்டம் பறக்கவிடும் வீரர்களுக்கு அமைச்சர் பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.</p><p>இந்த விழா ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று, இந்தியாவின் பஞ்சாப், தமிழ்நாடு, குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், இந்தோனேசியா, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களும் கலந்துகொண்டு பட்டங்களை பறக்கவிட்டனர்.</p><h2>பார்வையாளர்களை கவர்ந்தது</h2><p>காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், கடற்கரை பகுதியில் வண்ணமயமான 70 பட்டங்கள் வானில் பறக்கவிடப்பட்டன. இந்திய தேசிய கொடி, ஆமை, டால்பின், ஆக்டோபஸ், மிக்கி மவுஸ், ஜல்லிக்கட்டு காளை, சூப்பர்மேன், மீன்கள், டிராகன் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் எல்.இ.டி. விளக்குகளுடன் ஜொலித்த பட்டங்கள் வானில் பறந்த காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. வானில் பறந்த வண்ணமயமான பட்டங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்ததுடன், பல்வேறு இடங்களில் நின்று புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.</p><p>விழாவில் மாமல்லபுரம் சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாளர் கமலக்கண்ணன், மாமல்லபுரம் நகராட்சி கமிஷனர் அபர்ணா, நகராட்சி பொறியாளர் சுபாஷினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்களின் பாதுகாப்புக்காக செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அய்மன் ஜமால் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். மேலும், பட்டம் விடும் திருவிழா நடைபெறும் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்கள் மெதுவாக செல்லும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.</p>]]></content:encoded></item><item><title>போலீசாரை துப்பாக்கி காட்டி மிரட்டிய ரவுடி அதிரடி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rowdy-who-threatened-police-with-a-gun-arrested-in-a-swift-operation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rowdy-who-threatened-police-with-a-gun-arrested-in-a-swift-operation#comments</comments><guid isPermaLink="false">1bf96dfd-d86a-4926-899f-fc94306f8c9f</guid><pubDate>Sat, 15 Aug 2026 01:39:55 +0000</pubDate><atom:updated>2026-08-15T01:39:55.434Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,போலீஸ்,கைது,Tirunelveli,திருநெல்வேலி,arrest,Threat,மிரட்டல்,Rowdy,ரவுடி,துப்பாக்கி,gun</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/3z2u7xby/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-5-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாட்டு துப்பாக்கி, 5 தோட்டாக்களுடன் ரவுடி கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/3z2u7xby/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-5-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>நெல்லை அருகே தாழையூத்து பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் பொதுமக்களை அச்சுறுத்தியதோடு, போலீசாரையும் துப்பாக்கி காட்டி மிரட்டிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">ரவுடி</a>யை போலீசார் கைது செய்தனர்.</p><h2>நாட்டு துப்பாக்கியுடன் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டம், தாழையூத்து பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு அரிசி ஆலை அருகே ஒரு நபர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF">நாட்டு துப்பாக்கி</a>யுடன் சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்துவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.</p><h2>நாட்டு துப்பாக்கி, 5 தோட்டாக்கள் பறிமுதல்</h2><p>அப்போது அங்கிருந்த ராஜவல்லிபுரம், மேலத்தெருவைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் இசக்கிமுத்து(எ) ராஜாவை போலீசார் மடக்கி பிடித்தனர். போலீசாரைக் கண்டதும், தன்னை கைது செய்ய வந்தால் போலீசாரை சுட்டுக் கொன்று விடுவதாக அவர் மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் A வகை சரித்திர பதிவேடு குற்றவாளியான ராஜாவிடமிருந்து ஒரு நாட்டு துப்பாக்கி மற்றும் 5 <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">தோட்டாக்களை</a> போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">பறிமுதல்</a> செய்தனர். </p><h2>ரவுடி கைது</h2><p>இதுதொடர்பாக தாழையூத்து காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து இசக்கிமுத்து(எ) ராஜா கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். </p>]]></content:encoded></item><item><title>காங். மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருது: இன்று வழங்குகிறார் முதல்-அமைச்சர் விஜய் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thagaisal-tamizhar-award-for-senior-congress-leader-krishnasamy-chief-minister-vijay-to-present-it-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thagaisal-tamizhar-award-for-senior-congress-leader-krishnasamy-chief-minister-vijay-to-present-it-today#comments</comments><guid isPermaLink="false">828f66b0-6f1f-4cf2-8e16-938147b381fd</guid><pubDate>Sat, 15 Aug 2026 01:39:51 +0000</pubDate><atom:updated>2026-08-15T01:39:51.039Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>விருது,Award,கிருஷ்ணசாமி,Krishnasamy,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/kmbe1rtm/4.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/kmbe1rtm/4.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>தகைசால் தமிழர் விருது என்பது தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் தொண்டாற்றிச் சிறப்பிடம் பெற்ற தகைசான்ற நபர்களைப் பெருமைப்படுத்த தமிழ்நாடு அரசால் கடந்த 2021-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டு வரும் ஒரு உயரிய விருதாகும். ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் தகைசால் தமிழர் விருதை கோட்டை கொத்தளத்தில் நடக்கும் விழாவில் முதல்-அமைச்சர் வழங்கி வருகிறார்.</p><h2>தகைசால் தமிழர் விருது</h2><p>இந்த விருதை பெறும் நபருக்கு ரூ.10 லட்சம் பரிசாக வழங்கப்படுகிறது. அந்தவகையில், கடந்த 2021-ம் ஆண்டு பொதுவுடைமை இயக்க மூத்த தலைவர் என்.சங்கரய்யாவுக்கும், 2022-ம் ஆண்டு கம்யூனிஸ்டு கட்சி மூத்ததலைவர் நல்லகண்ணு, 2023-ம் ஆண்டுதிராவிடர் கழக தலைவர் கி.வீரமணி 2024-ம் ஆண்டு காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், 2025-ம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே. எம்.காதர் மொய்தீன் ஆகியோருக்கு 'தகைசால் தமிழர்' விருது வழங்கப்பட்டது. </p><p>இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான 'தகைசால் தமிழர்' விருதைதமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கும், கல்பனா சாவ்லா விருதை கோவையை சேர்ந்த நவ்ஷீன் பானு சந்த் என் பவருக்கும் முதல்-அமைச்சர் விஜய் வழங்குகிறார்.</p><p>அதன்படி, இன்று கோட்டை கொத்தளத்தில் நடக்கும் சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் விஜய் அந்த விருதை கிருஷ்ணசாமிக்கு வழங்குவார். கிருஷ்ணசாமி, பா.ம.க. எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணியின் தந்தை ஆவார். இவரது மகன் விஷ்ணு பிரசாத் கடலூர் எம்.பி.யாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>கல்பனா சாவ்லா விருது</h2><p>மேலும், வீரசாகசம் புரிந்தவர்களுக்கு கல்பனா சாவ்லா பெயரிலான விருதுகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில், கோவையை சேர்ந்த நவ்ஷீன் பானு சந்த் என்ற பெண்ணுக்கு இந்த ஆண்டு வழங்கப்படுகிறது. இவர் உலகிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரத்தை 2 முறை தொட்டவர். அதாவது, டென்சிங் ஹிலாரி எவரெஸ்ட் மாரத்தான் என்ற உலகிலேயே கடின மான மலையேற்றத்தை அவர் ஏறியுள்ளார்.</p><p>மேலும், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரில் விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது டயபடாலஜி மருத்துவ பிரிவில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர் வி.மோகன் என்பவருக்கு வழங்கப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>வேளாங்கண்ணி திருவிழா: சேலம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/velankanni-festival-special-train-operation-via-salem</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/velankanni-festival-special-train-operation-via-salem#comments</comments><guid isPermaLink="false">47909cda-1228-4b08-bfe2-5281299e2d5e</guid><pubDate>Sat, 15 Aug 2026 01:28:27 +0000</pubDate><atom:updated>2026-08-15T01:28:27.586Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,Special Train ​,Velankanni,வேளாங்கண்ணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/cuzoj80v/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/cuzoj80v/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,  </p><p>வேளாங்கண்ணியில் நடைபெறும் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா ஆலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக கோவா மாநிலம் வாஸ்கோடகாமாவில் இருந்து சேலம் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு கட்டண ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.</p><p>இது குறித்து சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>இந்த சிறப்பு ரெயில் (07365) வருகிற செப்டம்பர் மாதம் 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வாஸ்கோடகாமாவில் இருந்து இரவு 9.55 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரெயில் எஸ்.எம்.வி.டி. பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக மறுநாள் 7-ந்தேதி மாலை 4.00 மணிக்கு சேலம் வந்த டையும். பின்னர், இங்கிருந்து மாலை 4.10 மணிக்கு புறப்பட்டு நாமக்கல், கரூர், திருச்சி வழியாக 8-ந்தேதி அதிகாலை 3.45 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.</p><p>மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரெயில் (07366) வருகிற செப்டம்பர் மாதம் 9-ந் தேதி வேளாங்கண்ணியில் இருந்து இரவு 1.00 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் 10-ந்தேதி காலை 7.20 மணிக்கு சேலம் வந்தடை யும். இங்கிருந்து காலை 7.30 மணிக்கு புறப்பட்டு செப்டம்பர் 10-ந் தேதி அதிகாலை 3.00 மணிக்கு வாஸ்கோடகாமா சென்றடையும்.</p><p>இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item></channel></rss>