<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 17 Aug 2026 10:28:30 +0000</lastBuildDate><item><title>கடமானை வேட்டையாடிய வாலிபர் கைது: வாட்ஸ்-அப்பில் ‘ஸ்டேட்டஸ்&apos; வைத்ததால் சிக்கினார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-hunting-barking-deer-whatsapp-status-exposes-crime</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-hunting-barking-deer-whatsapp-status-exposes-crime#comments</comments><guid isPermaLink="false">81cddef2-f10e-4d69-a2fc-09905d526017</guid><pubDate>Mon, 17 Aug 2026 10:26:49 +0000</pubDate><atom:updated>2026-08-17T10:26:49.719Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Tenkasi,தென்காசி,arrest,கடையம்,hunting,வேட்டை,கடமான்,Kadayam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/09s9r2zm/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/09s9r2zm/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><p>தென்காசி மாவட்டத்தில் கடமானை வேட்டையாடிய வாலிபரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர் வாட்ஸ்-அப்பில் 'ஸ்டேட்டஸ்' வைத்ததால் சிக்கினார்.</p><h2>வனத்துறையினர் கண்காணிப்பு</h2><p>தென்காசி மாவட்டம் கடையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட சிவசைலம் பிரிவில் உள்ள முள்ளிமலை பொத்தை பகுதியில் மிளா, மான்கள், காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளன. வனவிலங்குகளை வேட்டையாடுவதை தடுக்கும் வகையில் வனத்துறையினர் அடிக்கடி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>வனவிலங்குகளை வேட்டையாடுபவர்களை தேடி கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் கடமான் (மிளா) ஒன்றை வேட்டையாடிய வாலிபர் ஒருவர் தானாகவே வனத்துறையினரிடம் சிக்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது.</p><h2>வாட்ஸ்-அப்பில் 'ஸ்டேட்டஸ்'</h2><p>வீரகேரளம்புதூர் தாலுகா வீராணம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் மகன் சுரேஷ் (26 வயது). இவர் சமீபத்தில் முள்ளிமலை பொத்தை பகுதிக்கு சென்று கடமான் ஒன்றை வேட்டையாடி உள்ளார். பின்னர் துண்டுகளாக வெட்டப்பட்ட கறியை வாட்ஸ்-அப்பில் 'ஸ்டேட்டஸ்' வைத்துள்ளார். இந்த தகவல் வைரலாக பரவிய நிலையில் வனத்துறையினரின் கவனத்துக்கு வந்தது.</p><h2>வாலிபர் கைது</h2><p>இதுதொடர்பாக வனத்துறை துணை இயக்குனர் அன்பு உத்தரவின்படி, கடையம் வனச்சரகர் ஜெயப்பிரகாஷ் மற்றும் வனப்பணியாளர்கள் நேற்று முன்தினம் அங்கு சென்று சுரேஷை அதிரடியாக கைது செய்தனர்.</p><p>பின்னர் அவரை தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். கடமான் வேட்டையில் மேலும் 3 பேருக்கு தொடர்புள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து தலைமறைவான அவர்களையும் வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சட்டப்பேரவைத் தலைவர் கருக்கலைப்பிற்கு எதிராக பேசியது தவறு -  மு.வீரபாண்டியன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-was-wrong-for-the-assembly-speaker-to-speak-against-abortion-m-veerapandian</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-was-wrong-for-the-assembly-speaker-to-speak-against-abortion-m-veerapandian#comments</comments><guid isPermaLink="false">1ac6ef19-ba16-46a9-b950-6ecd1c4ebe1f</guid><pubDate>Mon, 17 Aug 2026 09:59:41 +0000</pubDate><atom:updated>2026-08-17T09:59:41.834Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Communist Party of India,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி,மு.வீரபாண்டியன்,M. Veerapandian</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/v4uenajm/veerapandiyan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.வீரபாண்டியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/v4uenajm/veerapandiyan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் கருக்கலைப்பிற்கு எதிராக பேசியது தவறு. மத அடிப்படைவாதத்திற்கு இடமளிக்கக்கூடாது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>பிற்போக்கான கருத்து</h2><p>தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் சென்னையில் நடைபெற்ற 5-வது "மார்ச் பார் லைப்” என்ற கத்தோலிக்க மத அமைப்பின் கருக்கலைப்புக்கு எதிரான நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அண்மையில் கலந்து கொண்டுள்ளார்.</p><p>அதில், "கருக்கலைப்பு செய்வதற்கு நமக்கு உரிமை இல்லை” என்றும், ஒவ்வொரு குழந்தையும் "கடவுள் கொடுத்த பரிசு” என்றும் பேசியிருப்பது பெண்களின் கருக்கலைப்பு உரிமைகளுக்கு எதிரான, பிற்போக்கான கருத்தாகும்.</p><p>அவர் வகிக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் உயர்ந்த பதவிக்கு இத்தகைய மத அடிப்படையிலான, பிற்போக்கான போதனைகள் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>ஒரு பெண்ணின் இனப்பெருக்கத் தேர்வு மற்றும் உரிமை என்பது அவரது உடல் மீதான உரிமை என்பதோடு, உடல்நலம், உளநலம், கண்ணியம் மற்றும் சமத்துவ உரிமை ஆகியவற்றுடன் நேரடியாகத் தொடர்புடையதாகும்.</p><p>கர்ப்பம், கருக்கலைப்பு, மகப்பேறு என்பவை ஒரு மதக் கோட்பாட்டின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டியவை அல்ல</p><h2>கருக்கலைப்புச்சட்டம் 1971</h2><p>அது பெண்ணின் உடல், உள நலம், கருப்பையில் வளரும் சிசு, மற்றும் தாய் சேய் நலம், பெண்ணுரிமை, சமூக நலம் சார்ந்த விசயமாகும்.</p><p>அந்த அடிப்படையிலும், மருத்துவரீதியான காரணங்களுக்காகவும் கருக்கலைப்பை சட்ட ரீதியாக மேற்கொள்வதற்கும் ஏதுவாகவே, மருத்துவ ரீதியான கருக்கலைப்புச்சட்டம் 1971 (MTP Act -1971) மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. அது கருக்கலைப்புத் தொடர்பாக உலக நாடுகளில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டங்களில் ஓரளவு முற்போக்கான சட்டமாகும்.</p><p>கருக்கலைப்பு உரிமை இல்லாத அயர்லாந்தில் இந்தியப் பெண் பல்மருத்துவர் டாக்டர் சவீதா, கர்ப்பப்பையில் கருச்சிதைவுக்கு உள்ளான 17 வார சிசுவை கருக்கலைப்பு செய்ய முடியாமல் தொடர்ந்து சுமந்ததால் ஏற்பட்ட மருத்துவ ரீதியான பாதிப்பால் பரிதாபகரமாக 2012 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இது உலகம் முழுவதும் கண்டனத்திற்கு ஆளாகியது. இதன் மூலம் கருக்கலைப்புக்கு ஆதரவான சட்டத்திருத்தம் 2018 ல் கொண்டுவரப்பட்டது.</p><h2>50 நாடுகளில் கருக்கலைப்பிற்கு அனுமதி</h2><p>உலகளவில் எகிப்து, மால்ட்டா, ஹாண்டுராஸ், உள்ளிட்ட 24 நாடுகளில் கருக்கலைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளில் சட்டத்திற்கு விரோதமான முறையில் கருக்கலைப்பு செய்துகொண்டதால் பெண்கள் சிறை தண்டனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். துயரங்களுக்கு ஆளாகிவருகிறார்கள். அங்கெல்லாம் கருக்கலைப்பு உரிமை கோரி பெண்கள் போராடி வருகிறார்கள். ஏராளமான</p><p>லிபியா, இந்தோனேசியா, நைஜீரியா, ஈரான் போன்ற 50 நாடுகளில் கட்டுப்பாடுகளுடன் கருக்கலைப்பிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளில் கருக்கலைப்புக்கு சட்டப்படி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.</p><p>உலகின் வளர்ச்சியடைந்த நாடான அமெரிக்காவிலேயே, பல மாகாணங்களில் குறிப்பாக குடியரசுக் கட்சி ஆளும் மாகாணங்களில் கருக்கலைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிராக அமெரிக்கப் பெண்கள் தொடர்ச்சியாக குரல் எழுப்பி, போராட்டங்களிலும் பங்கெடுத்து வருகின்றனர். அது அமெரிக்காவின் ஒரு தேர்தல் பிரச்சனையாகவே தொடர்ந்து நீடித்து வருகிறது.</p><p>கருக்கலைப்பு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சட்டரீதியாக </a>இருக்கின்ற நாடுகளில் 90 விழுக்காடு கருக்கலைப்புகள் பாதுகாப்பானதாக இருக்கின்றன. சட்டரீதியாக இல்லாத நாடுகளில் 25 விழுக்காடு கருக்கலைப்புகள் மட்டுமே பாதுகாப்பானதாக உள்ளன.</p><p>உலகில் உள்ள கருக்கலைப்பு சட்டங்களை ஒப்பிடும் பொழுது, இந்தியாவின் கருக்கலைப்பு சட்டம் மற்றும் அதன் திருத்தங்கள் பெண்களுக்கு ஆதரவாக இருக்கிறது.</p><p>இந்தியாவில் கருக்கலைப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டு 50 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. 1971 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்தச் சட்டத்தில் 2002, 2003, 2021 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p><h2>பாதுகாப்பற்ற கருக்கலைப்பு</h2><p>பெண்ணின் மற்றும் குழந்தையின் கருவில் உள்ள உயிருக்கு ஆபத்தான நிலை, மனநல பிரச்சினைகள், மருத்துவக் காரணிகள், மனிதாபிமான அடிப்படைகள், கருத்தடை சாதனம் செயல்படாதது, பாலியல் வன்புணர்வு, சமூகக் காரணிகள் போன்ற காரணிகளுக்காக கருக்கலைப்பு செய்வதை சட்டபூர்வமாக இந்தியச் சட்டம் அனுமதிக்கிறது.</p><p>திருமணமாகாத பெண்களும், சில காரணங்களுக்காக கர்ப்பத்தை 20 வாரங்களிலும், சில காரணங்களுக்காக கர்ப்பத்தை 24 வாரங்கள் வரையிலான காலத்திலும் கலைக்கலாம் என்பது போன்ற முக்கியத்திருத்தங்கள் செய்யப்பட்டன. பெண்களுக்கு சாதகமாக மேலும் திருத்தங்கள் அவசியப்படுகின்றன.</p><p>இருப்பினும் இன்றையச் சட்டத்தின் காரணமாகவே, பாதுகாப்பற்ற கருக்கலைப்புகள், சட்டத்திற்கு புறம்பான கருக்கலைப்புகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன.</p><p>அபாயகரமான கருக்கலைப்பு காரணமாக ஏற்படும் பேறுகால மரணங்களும் தொடர்ந்து குறைந்து வருகின்றன.</p><p>இந்நிலையில் கருக்கலைப்பு செய்துகொள்ளும் பெண்களை களங்கப்படுத்தும் வகையிலான சில தவறான கருத்துக்களும், கண்ணோட்டங்களும் நம் சமூகத்தில் பரவலாக காணப்படுகின்றன. அவற்றின் விளைவாகவும், பல பெண்கள் பாதுகாப்பில்லாத கருக்கலைப்பு முறைகளை நாடுகின்றனர். அது, அவர்களின் உடலுக்கும் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கிறது. இந்தியாவில், பாதுகாப்பில்லாத கருக்கலைப்பினால் ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ 8 பெண்கள் இறக்கிறார்கள்.</p><p>இந்தியாவின் பேறுகால தாய் மரணங்களில் 8 முதல் 13 விழுக்காடு பாதுகாப்பற்ற கருக்கலைப்பினால் ஏற்படுகின்றன என்பது கவலை அளிப்பதாகும்.</p><h2>உரிமைகளுக்கு எதிராக பேசுவதை கைவிட வேண்டும்</h2><p>இத்தகைய நிலையில் தமிழக அரசின் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் போன்று முக்கிய அரசுப் பதவிகளில் இருப்பவர்கள், கருக்கலைப்புக்கு எதிரான கருத்துக்களை சொல்வது இறப்புகளை மேலும் அதிகரிக்கும்.</p><p>எனவே, பெண்களுக்கு எதிரான மத நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும், பெண்களின் உரிமைகளுக்கு எதிராக பேசுவதையும் கைவிட வேண்டும்.</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மதச்சார்பற்ற </a>கொள்கையையும், அறிவியல் ரீதியான கண்ணோட்டத்தையும் பற்றி நிற்க வேண்டுமென, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எஸ்.ஐ கன்னத்தில் அறைந்த இளைஞர்:  தஞ்சையில் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-slaps-si-on-cheek-uproar-in-thanjavur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-slaps-si-on-cheek-uproar-in-thanjavur#comments</comments><guid isPermaLink="false">cad2873c-812d-477b-aa90-8b11926c89ae</guid><pubDate>Mon, 17 Aug 2026 09:44:09 +0000</pubDate><atom:updated>2026-08-17T09:44:09.341Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thanjavur,இளைஞர்,தஞ்சை,எஸ்.ஐ,கைதுArrest,சாலை மறியல் Roadblock</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/hgr8swaj/127.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எஸ்.ஐ கன்னத்தில் அறைந்த இளைஞர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/hgr8swaj/127.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சை,</p><p>தஞ்சை மாநகராட்சி அலுவலகம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.</p><h2>வாக்குவாதம்</h2><p>விசிக பேனர் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மறியலை மீறி பைக்கில் செல்ல முயன்ற இளைஞருக்கும் விசிகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.</p><p>இதனைத் தடுக்க வந்த காவலருக்கும் அந்த இளைஞருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது இளைஞர் ஒருமையில் பேசியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த காவலர் அவரை கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது. </p><h2>கைது</h2><p>இதையடுத்து அந்த இளைஞரும் காவலரின் கன்னத்தில் அறைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக இளைஞரை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார் </a>கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தவெக அரசின் 100 நாள் ஆட்சி …வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளும், பொதுமக்களுமே சாட்சி - டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmers-and-public-suffering-under-100-days-of-tvk-rule-ttv-dhinakaran-claims</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmers-and-public-suffering-under-100-days-of-tvk-rule-ttv-dhinakaran-claims#comments</comments><guid isPermaLink="false">5feead0b-c953-4c42-b645-52fe6ad50fd3</guid><pubDate>Mon, 17 Aug 2026 09:27:13 +0000</pubDate><atom:updated>2026-08-17T09:27:13.678Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பொதுமக்கள்,டிடிவி தினகரன்,விவசாயிகள்,வாழ்வாதாரம்,தவெக அரசு</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/sq7mz7kn/dinakaran.jpg" width="768"><media:title type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/sq7mz7kn/dinakaran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">தவெக அரசின் 100 நாள் ஆட்சி</a> …வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளும், பொதுமக்களுமே சாட்சி என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சத்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>ஏமாற்றம்</h2><p>தமிழ்நாட்டில் அரசு ஆட்சியமைத்து இன்றோடு 100 நாட்கள் நிறைவடைந்துள்ளன. முதல் 100 நாட்களில் வாக்களித்த மக்கள் மனதில் நம்பிக்கையை விதைக்க வேண்டியதற்கு பதிலாக, ஏமாற்றத்தையும் அதிருப்தியையுமே இந்த அரசு விதைத்துள்ளது. </p><h2>ரீல்ஸ்</h2><p>அரசு நிர்வாகத்தை முதல் 100 நாளை கொண்டு முழுமையாக மதிப்பிட முடியாது என்றாலும், அந்த அரசு செல்லும் திசையை குறிப்பிட்ட நாட்களில் நிச்சயமாக கண்டறிய முடியும். இந்த 100 நாட்களில் மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய அரசு நிர்வாகம், தனக்கும் மக்கள் நலனுக்கும் எந்த வகையிலும் சம்பந்தமே இல்லாதது போல சமூக வலைத்தளங்களில்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D"> ரீல்ஸ் </a>போடுவதையே பிரதான வேலையாக செய்து வந்துள்ளது. </p><h2>வேடிக்கையான அறிவிப்பு</h2><p>அந்த வகையில் கடந்த 100 நாட்களில்... கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களால் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு; புதிதாக காவலர்களை நியமிக்காமல், இருக்கும் காவலர்களை வைத்தே புதிய அதிரடிப்படை என்ற வேடிக்கையான அறிவிப்பு மட்டுமே மிஞ்சியுள்ளது.</p> <h2>போதைப்பொருள் கலாச்சாரம்</h2><p>பெண்களுக்கு எதிரான குற்றங்களில் அமைச்சர் மற்றும் ஆளும்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது குற்றச்சாட்டு எழுந்த பின்னும் எந்தவித விசாரணையும் இல்லை. பள்ளி, கல்லூரிகளில் தொடங்கி பட்டிதொட்டி எங்கும் பரவியிருக்கும் போதைப்பொருள் கலாச்சாரம்; இது குறித்து தகவல் தரும் மாணவர்கள் படுகொலை. போதைப்பொருள் விற்பனை தொடங்கி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் வரை ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்குத் தொடர்பு.</p> <h2>அது போதைப்பொருளோ?</h2><p>தற்போதைய அமைச்சர் ஒருவர், தேர்தலுக்கு முன்பாக உடல்நலம் சரியில்லாத தனது குழந்தையை கிரிக்கெட் போட்டிக்கு அழைத்து சென்று, வெள்ளை நிற பவுடரை தனது ஏடிஎம் கார்டு மூலம் உடைத்ததை அவரே 'தக்' தருணம்' என ரீலாக வெளியிட, "அது போதைப்பொருளோ?" என பலர் சந்தேகம் எழுப்பியும் இதுவரை எந்த விசாரணையும், நடவடிக்கையும் இல்லை. </p><h2>மெத்தனப்போக்கு</h2><p>விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதாக தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதி கொடுத்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பின்பு அரைகுறையாக அறிவிக்கப்பட்ட தள்ளுபடி; இன்றுவரை விவசாயிகள் போராடியும் எந்தப் பயனும் இல்லை. காவிரி நதிநீர், மேகதாது அணை மற்றும் குறுவை சாகுபடி விவகாரங்களில் தொடரும் அரசு நிர்வாகத்தின் மெத்தனப்போக்கு. </p> <h2> ஏமாற்று அறிவிப்பு</h2><p>மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் என்ற வாக்குறுதிக்கு மாறாக, 2 மாதங்களுக்கு 200 யூனிட் இலவசம் என ஏமாற்று அறிவிப்பு. முதல்-அமைச்சர் தொகுதியில் தொடங்கி, அனைத்து பகுதிகளிலும் அறிவிக்கப்படாத இரவுநேர மின்வெட்டு. தமிழகம் எங்கும் திடீரென உயர்த்தப்பட்ட மின்கட்டணம்; மக்கள் போராட்டத்திற்கு பின் "மின்கணக்கீட்டில் குளறுபடி" என்று திசைதிருப்பினர். </p><h2>உயர்த்தப்பட்ட சொத்துவரி</h2><p>அதுவும் இன்றுவரை தீர்க்கப்படவில்லை. சென்னை மாநகராட்சியில், மக்கள் பிரதிநிதிகளிடம் ஆலோசிக்காமல் எதேச்சதிகாரத்தோடு உயர்த்தப்பட்ட சொத்துவரி, மக்களின் தொடர் கேள்விகளுக்குப் பின் கைவிடப்பட்டது.</p><h2>கலிங்குராய மன்னர்</h2><p>அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகள், அம்மா உணவகம் என அரசு நிர்வாகத்திற்குள் ஆளுங்கட்சியினரின் தலையீடு. உதவியாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் தமக்கு வேண்டப்பட்டவர்களுக்கு அரசு உயர் பதவிகளை வழங்கி, தன்னை நவீன கலிங்குராய மன்னர் என நிரூபித்துள்ளார் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்.</p><h2>ஸ்டிக்கர் ஒட்டுதல்</h2><p>அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் சொந்த கட்சியினரிடமே லஞ்சம் கேட்பதாக தவெக நிர்வாகிகள் புகார். கடந்த திராவிட ஆட்சிகளில் அறிமுகப்படுத்தி செயல்படுத்திய திட்டங்களுக்கு "வெற்றி" என வீணாக பெயர் சூட்டி ஸ்டிக்கர் ஒட்டுதல். சட்டமன்ற உறுப்பினர்கள் தொடங்கி அமைச்சர்கள் மற்றும் முதல்-அமைச்சரின் அறைகள் வரை அதிகரித்திருக்கும் ரீல்ஸ் மோகம்.</p><h2>அவல நிலை</h2><p>அரசு மருத்துவமனை அவசரச் சிகிச்சை பிரிவுகளுக்குள்ளாகவே எலிகள் சுற்றித்திரியும் அவல நிலை. அங்கன்வாடி மையங்களில் உணவருந்தும் குழந்தைகள் முதல், தூய்மை பணியாளர்கள் வரை வழங்கப்படும் உணவின் தரம் கேள்விக்குறி. பழனி முருகன் திருக்கோவிலுக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலம் தனிநபர் பெயரில் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது; அதனைத் தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்கும் சொந்தமான நிலம் மோசடியாக பத்திரப்பதிவு என தினந்தோறும் வரும் நில மோசடி புகார்கள்.</p> <h2>நிதிநிலை அறிக்கை</h2><p>மக்களுக்கும் மாநிலத்திற்கும் எந்த வகையிலும் துளியளவும் பயன்படாத நிதிநிலை அறிக்கை; விவசாயிகளின் வலியை உணராமல் தயாரிக்கப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை. கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில் தலைமை செயலகத்தில் பல கோடி ரூபாய் செலவில் தனது அறையை மாற்றும் முதலமைச்சர். </p><h2>அக்கறையின்மை</h2><p>உண்மையான முதலீடுகளை கொண்டுவருவதிலும் வேலைவாய்ப்பைப் பெருக்குவதிலும் அக்கறையின்மை. தொகுதி மறுவரையறை தொடர்பாக எந்தவொரு அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடாத நிலையில், இந்தத் தமிழக அரசின் மீது மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியை மடைமாற்ற அவசியமற்ற ஒரு தீர்மானம் நிறைவேற்றம்.</p><h2>ரீல்ஸ் மற்றும் விளம்பர மோகம்</h2><p>இப்படியாக தமிழக அரசின் இந்த 100 நாட்களில் நடைபெற்ற குழப்பங்களையும் குளறுபடிகளையும் அடுக்கும் நிலையில், ஏதேனும் மக்கள் நலனுக்கென ஆக்கப்பூர்வமான திட்டங்கள் ஏதேனும் கொண்டு வரப்பட்டதா என்றால் இதுவரை தெரியவில்லை. நிர்வாகக் குழப்பம், திட்டமிடலின்மை, ரீல்ஸ் மற்றும் விளம்பர மோகம் மட்டுமே இந்த 100 நாட்கள் தவெக ஆட்சியின் அடையாளங்களாக மாறியுள்ளன. </p><h2>ஒட்டுமொத்த தோல்வி</h2><p>முதல் 100 நாட்கள் ஆட்சியில் ஒட்டுமொத்த தோல்வியை சந்தித்திருந்தாலும், இனியாவது மக்கள் பயனடைவதற்கான பாதையை தேர்ந்தெடுத்து பயணிக்க முன்வர வேண்டும் என இந்நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/western-ghats-north-coastal-tamil-nadu-rain-forecast-today</link><comments>https://www.dailythanthi.com/news/weather/western-ghats-north-coastal-tamil-nadu-rain-forecast-today#comments</comments><guid isPermaLink="false">e77a27ff-812f-4457-88ec-52efa6fe35e0</guid><pubDate>Mon, 17 Aug 2026 09:25:03 +0000</pubDate><atom:updated>2026-08-17T09:25:03.710Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/u4882e0i/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/u4882e0i/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><p><strong>17-08-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>18-08-2026:</strong> செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>19-08-2026:</strong> நீலகிரி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><h3>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</h3><p><strong>17-08-2026 முதல் 21-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும், வட உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><h3>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</h3><p><strong>17-08-2026 முதல் 21-08-2026 வரை:</strong> வட உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று</strong> மற்றும் <strong>நாளை</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாற்றமும்…மக்கள் பணியும்…இன்னும் கம்பீரமாகத் தொடரும் -  தவெக எம்.எல்.ஏ கனிமொழி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/changeand-the-work-of-the-peoplewill-continue-with-greater-dignity-kanimozhi-santosh-mla</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/changeand-the-work-of-the-peoplewill-continue-with-greater-dignity-kanimozhi-santosh-mla#comments</comments><guid isPermaLink="false">fa7aeb94-e201-41b7-83b3-d98b24520ea7</guid><pubDate>Mon, 17 Aug 2026 09:14:16 +0000</pubDate><atom:updated>2026-08-17T09:14:16.150Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,Actor Vijay,கனிமொழி சந்தோஷ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/154a9x4w/kanimoz33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/154a9x4w/kanimoz33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கவுண்டம்பாளையத்தின் மாற்றமும்…மக்கள் பணியும்… இன்னும் கம்பீரமாகத் தொடரும் என கனிமொழி சந்தோஷ் கூறியுள்ளார்.</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்ற 2026-ஆம் ஆண்டு மே 10-ஆம் நாள் முதல் மாற்றம் தந்த மக்களுக்காக, அனைத்துத் தரப்பினரும் பயன்பெறத்தக்க வகையில் ஒரு சிறப்பான மக்களாட்சியைத் தந்து தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் பணியாற்றி வருகிறார். </p><p>இந்தநிலையில், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D">கனிமொழி சந்தோஷ்</a> எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,</p><p>முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் நல்லாசியுடனும், பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான  என்.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலுடனும்,கவுண்டம்பாளையத்தின் சட்டமன்ற உறுப்பினராக, மக்கள் எனக்கு அளித்த இந்தப் புனிதமான பணியில் இன்றுடன் 100 நாட்களை நிறைவு செய்கிறேன்!கடந்த 100 நாட்களில்…</p><p>953 மனுக்களுக்கு உடனடியாகத் தீர்வு</p><p>30,000+ அன்பு மக்களை நேரில் சந்தித்து, 1,317 கோரிக்கை மனுக்களைப்பெற்று, உங்கள் தேவைகளையும் குறைகளையும் நேரில் கேட்டறிந்துள்ளேன்.அவற்றில் 953 மனுக்களுக்கு உடனடியாகத் தீர்வு கண்டு, உங்கள் முகத்தில் மலர்ந்த மகிழ்ச்சியைப் பார்த்திருக்கிறேன்.</p><p>மேலும், 323 இடங்களில் நேரடியாகக் களத்தில் இறங்கி ஆய்வுகளை மேற்கொண்டு, மக்களின் தேவைகளை அறிந்து நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளேன். இந்த 100 நாள் சாதனைப் பயணம் என்பது வெறும் எண்களின் கணக்கு அல்ல…</p><h2>உழைப்பதே என் லட்சியம்</h2><p>தொகுதி மக்களின் ஒவ்வொரு தேவையையும் கேட்டறிந்து, உரிய நலத்திட்ட உதவிகளையும் தீர்வுகளையும் உங்களிடம் கொண்டு வந்து சேர்த்த என் மக்கள் பணியின் சான்று!எனக்கு வாக்களித்து, என்னை வெற்றி பெறச் செய்த ஒவ்வொரு குடும்பத்தின் நம்பிக்கையையும் காப்பாற்றுவது என் கடமை!</p><p>உங்கள் வீட்டுப் பிள்ளையாகவும், மக்கள் பிரதிநிதியாகவும், எந்நாளும் உங்கள் தோளோடு தோள் நின்று உழைப்பதே என் லட்சியம்!</p><p>கவுண்டம்பாளையத்தின் மாற்றமும்…மக்கள் பணியும்… இன்னும் கம்பீரமாகத் தொடரும்!  என அதில் பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தொழில்துறையை காக்க மின்சாரப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண்க! - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/find-an-immediate-solution-to-the-electricity-crisis-to-safeguard-the-industrial-sector-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/find-an-immediate-solution-to-the-electricity-crisis-to-safeguard-the-industrial-sector-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">2a6c60ee-8dd1-43a7-ab8d-d86ed73a15d4</guid><pubDate>Mon, 17 Aug 2026 09:05:39 +0000</pubDate><atom:updated>2026-08-17T09:05:39.282Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Electricity Board,மின்சாரத்துறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/o5heq8mv/Untitled-22.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/o5heq8mv/Untitled-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தொழில்துறையை காக்க மின்சாரப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண்க என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>தொழில்துறையைச் சீரழித்த பெருமை</h2><p>சென்னை முதல் கோவை வரை நிலவும் லோ-வோல்டேஜ் பிரச்சினையால் மக்களின் டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் பழுதாவதாக ஊடகங்களில் வரும் செய்தி கவலையளிக்கிறது. வெயில் காலம் முடிந்தும் மின் தேவையைச் சரியாகக் கையாளத் தெரியாத தவெக அரசு, மக்கள் மீது தேவையற்ற பொருளாதாரச் சுமையை ஏற்றியுள்ளது. இந்த நிர்வாகத் தோல்வியும் அரசின் மெத்தனப் போக்கும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.</p><p>வீடுகள் மட்டுமல்லாது, கோவை, விழுப்புரம் போன்ற தொழில் நகரங்களில் நிலவும் லோ-வோல்டேஜ் பிரச்சினையால், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் பழுதாகி உற்பத்தி மொத்தமாக முடங்கியுள்ளதாகத் தொழில்துறையினரே வேதனையுடன் தெரிவிக்கின்றனர். ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே தொழில்துறையைச் சீரழித்த பெருமை இந்த தவெக அரசையே சாரும்.</p><h2>போர்க்கால அடிப்படையில் தீர்வு காண்க</h2><p>மின் வாரியப் பராமரிப்புப் பணிகளில் தோல்வி ஏற்பட்டுள்ளதை அதிகாரிகளே ஒப்புக்கொள்ளும் நிலையில், <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மின்துறை அமைச்சர்</a> நிர்மல்குமார் வெற்று வாக்குறுதிகள் அளிப்பதை நிறுத்திவிட்டு, இப்பிரச்சினைக்குத் தொழில்நுட்ப ரீதியாகப் போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடக வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/karnataka-forest-department-personnel-should-be-booked-for-murder-and-dismissed-tamil-nadu-farmers-association</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/karnataka-forest-department-personnel-should-be-booked-for-murder-and-dismissed-tamil-nadu-farmers-association#comments</comments><guid isPermaLink="false">ef9b5182-30b5-4298-afc3-4ea99824f779</guid><pubDate>Mon, 17 Aug 2026 09:01:50 +0000</pubDate><atom:updated>2026-08-17T09:01:50.786Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,farmer,Forest Department,வனத்துறை,தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,கொலை வழக்குmurder case</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/njc8g63x/126.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பி.எஸ். மாசிலாமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/njc8g63x/126.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கால்நடை விவசாயிகள் மூன்று பேர் உயிர் பறித்த கர்நாடக வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து பணி நீக்கம் செய்ய வேண்டும், மூன்று குடும்பங்களுக்கும் கர்நாடக அரசே வாழ்வு கால இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">விவசாயிகள் </a>சங்கம் வலியுறுத்தியுள்ளது. </p><p>இது தொடர்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.எஸ். மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு</h2><p>கர்நாடக மாநிலம் தோமையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும்  மூன்று கால்நடை வளர்ப்பு விவசாயிகள் மீது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். இது தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியையும்... கர்நாடகத்தில் இரண்டாவது நாளாக அங்கு வெகு மக்கள் போராட்டமும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95">கர்நாடக</a> வனத்துறைக்கு எதிராக நடந்து வருகிறது.</p><p>தமிழகத்திலிருந்து 15 ஆண்டுகளுக்கு முன்னால் பிழைப்பு தேடி இடம் பெயர்ந்த தமிழர்கள், கர்நாடக மாநிலம் சாமுராய் நகர் மாவட்டம் ஹானூர் தாலுகாவில் வசித்து  வருகின்றனர். இவர்கள் தங்களுடைய ஆடு மாடுகளை காட்டுப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று தங்கி இருந்து திருப்பி ஓட்டிச்செல்வது வழக்கம். இந்நிலையில் இரவு நேரமாகியும் கிடைக்காத கால்நடைகளை விட்டு விட்டு வீட்டுக்கு வந்தவர்கள் மறுநாள் காலை தன் கால்நடைகளை தேடிச் சென்ற பொழுது... அதாவது ஆகஸ்ட் 15 அதிகாலை இவர்களை கர்நாடக வனத்துறையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த வக்கிர தாக்குதலில் அந்தோணிசாமி வயது 50.... லாசர் குமார் 33... ஜான்ரோஸ் பீட்டர்...48 ஆகிய மூவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மகிமை தாஸ் என்பவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். இவரது சாட்சி தான் அம்பலத்திற்கு வந்துள்ளது. வனத்துறையின் செயல் சந்தேகத்தை விளைவிக்கிறது.</p><h2>பிரேத பரிசோதனை</h2><p>குற்றவாளி என கருதினால் அவரை எச்சரிக்கும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாது அல்லது அரசின் வழி நெறி படி துப்பாக்கி பிரயோகம் செய்யாது உயிர் பறிக்கும் நிலையில் சுட வேண்டிய அவசியம் என்ன...? அதுவும் நான்கு பேரையும் ஒரே நேரத்தில் சுட வேண்டிய தேவை என்ன...? அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யாமல் ஆதாரங்களை மறைக்கும் நோக்கத்தில் 110 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மைசூர் மருத்துவ கல்லூரிக்கு ஏன் ரகசியமாக, உடனடியாக கொண்டு சென்றனர். இப்படி எல்லா வகையிலும் சந்தேகத்தை  விளைவிக்கக் கூடிய இந்த படுகொலையை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டிக்கிறது. </p><p>சுட்டுக் கொல்லப்பட்ட இவர்கள் தன் குடும்பத்துடன் அங்கே 15 ஆண்டுகள் வாழ்ந்து வருவதால் அவர்கள் கர்நாடக வாழ்விடத்தவர் ஆவர். இக் குடும்பங்களை பாதுகாக்க வேண்டிய முழு பொறுப்பு கர்நாடக அரசே. எனவே உரிய இழப்பீட்டை உடன் கொடுத்திட வேண்டும். வனத்துறையினர் மீது கொலை குற்ற வழக்கு பதிவு செய்து உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். உடன் இவர்களை பணியில் இருந்து விடுவித்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.</p>]]></content:encoded></item><item><title>பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் விழா தொடங்கியது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-onam-festival-began-at-padmanabhapuram-palace</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-onam-festival-began-at-padmanabhapuram-palace#comments</comments><guid isPermaLink="false">19f6d4fa-8d83-46e7-8efb-16f8dbeef92e</guid><pubDate>Mon, 17 Aug 2026 09:01:26 +0000</pubDate><atom:updated>2026-08-17T09:01:26.237Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Onam festival,ஓணம் பண்டிகை,பத்மநாபபுரம் அரண்மனை,Padmanabhapuram</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/upw02rgc/onam-festival.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ அத்தப்பூ கோலமிட்ட அரண்மனை ஊழியர்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் விழா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/upw02rgc/onam-festival.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி, </p><p>கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் விழா தொடங்கியது. அத்தப்பூ கோலம், ஓண விருந்து மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.</p><h2>பத்மநாபபுரம் அரண்மனை</h2><p>கேரள மக்களின் வசந்த விழாவான ஓணம் விழாவை கேரள மாநிலத்தில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் வாழும் மலையாள மொழி பேசும் மக்கள் சாதிமத பேதமின்றி கொண்டாடி வருகிறார்கள். இவ்விழா கேரள மாநிலத்தில் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அரசு அலுவலகங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. </p><p>கேரளம் மாநிலத்தில் நடப்பது போல் தமிழக பகுதியில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையிலும் 10 நாட்கள் <a href="https://www.dailythanthi.com/topic/onam-festival">ஓணம் விழா</a> கொண்டாடுவது வழக்கம். கேரள அரசின் தொல்லியல் ஆய்வு துறையால் இக்கோவில் பராமரிக்கப்படுகிறது.  இக்கோவிலில் இந்த ஆண்டின் ஓண விழா இன்று காலை தொடங்கியது. அரண்மனை முற்றத்தில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில், அரண்மனை அதிகாரி சது குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். </p><h2>அத்தப்பூ கோலம்</h2><p>இதனை தொடர்ந்து கேரள பாரம்பரிய உடை அணிந்து வந்த அரண்மனை பெண் ஊழியர்கள் வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டனர். பின்னர் அங்கு கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் அமந்து அவர்கள் ஆடி மகிழ்ந்தனர். ஊழியர்களுக்கிடையே விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன.</p><p><a href="https://www.dailythanthi.com/topic/onam-festival">ஓணம் விழாவில்</a> வருகிற 26-ம் தேதி வரை 10 நாட்கள் தினம் ஒரு வடிவத்தில் அத்தப்பூ கோலமிடப்படுகிறது. அதுபோல் ஓண விருந்து மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. இவ்விழாவை முன்னிட்டு அரண்மனை கட்டிடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிப்பட்டு வருகிறது. </p> ]]></content:encoded></item><item><title>24 மணிநேரத்தில் 5 படுகொலைகள்: போதையால் நிகழும் குற்றங்களைத் தடுக்க தீவிர நடவடிக்கை தேவை - அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/five-murders-in-24-hours-anbumani-calls-for-urgent-action-on-drug-crimes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/five-murders-in-24-hours-anbumani-calls-for-urgent-action-on-drug-crimes#comments</comments><guid isPermaLink="false">3dc3e9dc-c931-432f-acde-5d57f27f35bc</guid><pubDate>Mon, 17 Aug 2026 09:01:11 +0000</pubDate><atom:updated>2026-08-17T09:01:11.450Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK,கொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/x76z09ew/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/x76z09ew/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டில் போதைப்பொருள்கள் வணிகம், அதன் விளைவாக நிகழும் கொலைகள் உள்ளிட்ட குற்றச் செயல்களை தடுத்து சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் கோவில் திருவிழாவில் மது போதையால் ஏற்பட்ட மோதல் காரணமாக சந்துரு, விக்கி (எ) நீலகண்டன் என்ற இரு இளைஞர்கள் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.</p><p>அதேபோல், சிவகங்கை மாவட்டம் கொந்தகை கிராமத்தில் 25 வயது இளைஞர் கழுத்தை அறுத்து படுகொலை, கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நரேஷ்குமார் என்ற இளைஞர் வெட்டிக்கொலை, சென்னை தியாகராயநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் ராதா என்ற பெண் நகைக்காக கொலை என கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பது தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.</p><p>மதுரை மாவட்டத்தில் மட்டும் கடந்த 10 நாள்களில் 8 கொலைகள், கோவை மாவட்டத்தில் 11 நாள்களில் 4 படுகொலைகள் நடந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவற்றில் பெரும்பான்மையான கொலைகளின் பின்னணி போதைப்பொருள் புழக்கம் மற்றும் பயன்பாடு என்பதாகத் தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் போதைப்பொருள்களின் புழக்கத்தை வேகமாக கட்டுப்படுத்த வேண்டும் என்ற அவசரத் தேவை ஏற்பட்டிருப்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன.</p><p>தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் போதைப்பொருள்களின் வணிகமும், பயன்பாடும் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தன. அதனால் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்ததால் தான் கடந்த ஆட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்பினார்கள். புதிய ஆட்சியிலும் இதே நிலை தொடருவது சரியல்ல.</p><p>எனவே, தமிழ்நாட்டில் போதைப்பொருள்கள் வணிகம், அதன் விளைவாக நிகழும் கொலைகள் உள்ளிட்ட குற்றச் செயல்களை தடுத்து சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மாணிக்கம் தாகூருக்கு பாஜகவை குறை கூற எந்த தகுதியுமில்லை - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/manickam-tagore-has-no-standing-to-criticize-the-bjp-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/manickam-tagore-has-no-standing-to-criticize-the-bjp-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">c233ec8c-97a9-4408-a5f3-70057aa2ccd6</guid><pubDate>Mon, 17 Aug 2026 08:47:48 +0000</pubDate><atom:updated>2026-08-17T08:47:48.330Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore MP,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/t2ej8s5a/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/t2ej8s5a/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காலங்காலமாக தமிழர்களுக்கு என்றும் விரோதமாக செயல்படும் உங்கள் கட்சிக்கு, பாஜகவை நோக்கி விரல் நீட்டி குறை கூற எந்த தகுதியுமில்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>குறுவை சாகுபடி வீழ்ச்சி</h2><p>தம்பி மாணிக்கம் தாகூரே!.. உங்கள் காங்கிரஸ் தான் கர்நாடகாவை ஆள்கிறது என்ற அடிப்படையை மறந்து விட்டு பேசுகிறீர்கள் போல. அதனால், முதலில் கர்நாடகாவிற்கு சென்று உங்கள் காங்கிரஸ் அரசிடம் பேசி, தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள். அதை விட்டு விட்டு, எங்களை குறை சொல்லி நாட்களை கடத்திக் கொண்டிருக்காதீர்கள்.</p><p>CWRC மற்றும் CWMA உள்ளிட்ட ஆணையங்கள் உத்தரவிட்ட பிறகும் கூட, குறித்த நேரத்திற்கு தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விடாமல் உங்கள் கர்நாடகா காங்கிரஸ் அரசு காட்டிய ஆணவத்தால் தான். தமிழகத்தின் குறுவை சாகுபடி மொத்தமாக வீழ்ச்சியடைந்துள்ளது. விவசாயிகள் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆனால் நீங்களோ மடைமாற்று அரசியலில் மூழ்கியிருக்கிறீர்கள். அதுமட்டுமன்றி, காவிரி நீர் விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி. சுமூக முடிவை எட்ட வேண்டும் என்று நினைத்த தமிழக முதல்-அமைச்சரையும், வரவிடாமல் தடுத்து அவமானப்படுத்தியது உங்கள் கர்நாடக காங்கிரஸ் தான்.</p><h2>எந்த தகுதியுமில்லை</h2><p>அரை நூற்றாண்டிற்கு பிறகு தமிழக அமைச்சரவையில் உங்களுக்கு இடம் கொடுத்த ஜோசப் விஜய்யை, கர்நாடக காங்கிரஸ் அரசு இப்படி அவமானப்படுத்தியதற்கு நியாயப்படி நீங்கள் கொந்தளித்திருக்க வேண்டும். ஆர்ப்பாட்டங்கள் நடத்தியிருக்க வேண்டும். ஆனால், நீங்களோ கட்சியின் விசுவாசியாக கமுக்கமாக இருக்கிறீர்கள்.</p><p>எனவே, காவிரி நதிநீர் பங்கீடு, காவிரி நடுவர் மன்றம் அமைப்பதில் தாமதம், காவிரியின் குறுக்கே அணை கட்டி தமிழகத்தின் நீராதாரத்தை தடுத்தது. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிப்பது. கச்சத்தீவை தாரை வார்த்தது. UPA ஆட்சியில் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட போது அமைதி காத்தது. ஈழத்தமிழர் படுகொலை. காட்சிப்படுத்தக் கூடாத விலங்கினங்கள் பட்டியலில் ஜல்லிக்கட்டு காளைகளை சேர்த்தது என காலங்காலமாக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழர்களுக்கு </a>என்றும் விரோதமாக செயல்படும் உங்கள் கட்சிக்கு, பாஜகவை நோக்கி விரல் நீட்டி குறை கூற எந்த தகுதியுமில்லை.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருப்பத்தூர்: கல் குவாரியில் இருந்து பெண் சடலம் மீட்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirupathur-womans-body-recovered-from-stone-quarry</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirupathur-womans-body-recovered-from-stone-quarry#comments</comments><guid isPermaLink="false">af4a636f-904e-4908-849b-df4f06925d57</guid><pubDate>Mon, 17 Aug 2026 08:40:13 +0000</pubDate><atom:updated>2026-08-17T08:40:13.416Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கொலை,திருப்பத்தூர்,Tirupathur,body recovered,சடலம் மீட்பு,Stone Quarry,கல் குவாரி</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/zckowj6g/2.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ கல் குவாரி- போலீசார் விசாரணை]]></media:title><media:description type="html"><![CDATA[ கல் குவாரியில் பெண் சடலம் மீட்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/zckowj6g/2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பத்தூர், </p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">திருப்பத்தூர் மாவட்டம் </a>வாணியம்பாடி அருகே செயல்படாத ஒரு கல் குவாரியில் இருந்து, தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணின் சடலம் கொடூரமான காயங்களுடன் மீட்கப்பட்டது.</p><h2>கல் குவாரியில் மிதந்த சடலம்</h2><p>திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பாரத் நகர் பகுதியில் நீண்ட நாட்களாகச் செயல்படாமல் இருக்கும் பாழடைந்த கல் குவாரி ஒன்று உள்ளது. இன்று (திங்கட்கிழமை) காலை அந்த வழியே சென்ற பொதுமக்கள், குவாரி தண்ணீரில் ஒரு சடலம் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.</p><p>சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்புத் துறையினரின் உதவியோடு சடலத்தை மீட்டனர். அப்போது, மீட்கப்பட்ட பெண்ணின் உடல் முழுவதும் பலத்த காயங்கள் இருந்ததும், அவரது உடல் தண்ணீரின் மேலே மிதந்து அடையாளம் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக கொலையாளிகள் அவரது உடலில் கல்லைக் கட்டி குவாரிக்குள் வீசிச் சென்றிருப்பதும் தெரியவந்தது.</p><h2>போலீஸ் விசாரணை</h2><p>முதற்கட்ட விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவர் தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்த சசிகலா (வயது 52) என்பது உறுதி செய்யப்பட்டது. மர்ம நபர்கள் அவரை வேறு ஏதேனும் ஒரு இடத்தில் வைத்து கொடூரமாகக் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">கொலை </a>செய்துவிட்டு, சடலத்தை மறைப்பதற்காக இந்த வாணியம்பாடி குவாரியில் கொண்டு வந்து வீசியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.</p><p>இந்தக் கொலைக்கான காரணம் முன்விரோதமா அல்லது வேறு ஏதேனும் மர்மப் பின்னணி உள்ளதா? என்ற கோணத்தில் வாணியம்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>மாமல்லபுரத்தில் நடைபெற்ற பட்டம் விடும் திருவிழா நிறைவு: 40,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kite-festival-in-mamallapuram-concludes-over-40000-people-participated</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kite-festival-in-mamallapuram-concludes-over-40000-people-participated#comments</comments><guid isPermaLink="false">9cfe5018-ed3b-4df3-a3ed-88f5d7eae7b5</guid><pubDate>Mon, 17 Aug 2026 08:19:47 +0000</pubDate><atom:updated>2026-08-17T08:19:47.634Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மாமல்லபுரம்,Mahabalipuram,International Kite Festival,சர்வதேச பட்டம் விடும் திருவிழா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/1jou47qs/State-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/1jou47qs/State-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>செங்கல்பட்டு,</p><p>செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுற்றுலா வளர்ச்சிக் கழக மைதானத்தில் 5-வது சர்வதேச பட்டம் விடும் திருவிழா கடந்த 14-ந்தேதி தொடங்கியது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வீரப்பன், சுற்றுலாத்துறை கமிஷனர் ஜெயசீலன், திருப்போரூர் எம்.எல்.ஏ. பா.விஜயராஜ், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் எஸ்.சக்திவேல் ஆகியோர் முன்னிலையில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் பட்டம் விடும் திருவிழாவை தொடங்கி வைத்தார். </p><p>தமிழ்நாடு சுற்றுலாத் துறை மற்றும் 'குளோபல் மீடியா பாக்ஸ்' (Global Media Box) ஆகியவை இணைந்து, ஆகஸ்ட் 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை TTDC ஓஷன் வியூ (Ocean View) வளாகத்தில் இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தன. இந்த விழாவில், இந்தியாவின் பஞ்சாப், தமிழ்நாடு, குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்களும், இந்தோனேசியா, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களும் கலந்துகொண்டு பட்டங்களை பறக்கவிட்டனர்.</p><p>சுதந்திர தின விடுமுறையில் நடைபெற்ற இந்த திருவிழாவில் இந்திய தேசிய கொடி, ஆமை, டால்பின், ஆக்டோபஸ், மிக்கி மவுஸ், ஜல்லிக்கட்டு காளை, சூப்பர்மேன், மீன்கள், டிராகன் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் எல்.இ.டி. விளக்குகளுடன் ஜொலித்த பட்டங்கள் வானில் பறந்த காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. வானில் பறந்த வண்ணமயமான பட்டங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்ததுடன், பல்வேறு இடங்களில் நின்று புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.</p><p>மாமல்லபுரத்தில் 3 நாட்கள் கோலாகலமாக நடைபெற்ற இந்த பட்டம் விடும் திருவிழா 16-ந்தேதி(நேற்று) நிறைவடைந்தது. இந்நிலையில், மாமல்லபுரம் பட்டம் விடும் திருவிழாவில் சுமார் 40,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக தமிழ்நாடு சுற்றுலாத்துறை தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>பதிவுத்துறையில் ஆன்லைன் பத்திரப்பதிவு திட்டம்: முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/online-document-registration-scheme-in-the-registration-department-chief-minister-vijay-launches-the-initiative</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/online-document-registration-scheme-in-the-registration-department-chief-minister-vijay-launches-the-initiative#comments</comments><guid isPermaLink="false">16a93580-53e3-4ce7-bf22-1e64e688765d</guid><pubDate>Mon, 17 Aug 2026 08:07:08 +0000</pubDate><atom:updated>2026-08-17T08:07:08.670Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பதிவுத்துறை,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,ஆன்லைன் பத்திரப்பதிவு,Online Document Registration</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/iaqftv8w/State-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/iaqftv8w/State-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ்நாட்டில் உள்ள மனைப்பிரிவில் முதல் மனை மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்பில் முதல் வீடு விற்பனை ஆவணங்களுக்கு பதிவுத்துறையில் இணையவழியில் வருகையில்லா ஆவணப்பதிவு கட்டாயாமாக்கல் நடைமுறையை முதல்-அமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் இன்று (17.8.2026) தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில், தமிழ்நாட்டில் உள்ள மனைப்பிரிவில் முதல் மனை விற்பனை மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்பில் முதல் வீடு விற்பனை ஆவணங்களைப் பதிவுத்துறையில் இணையவழியில் வருகையில்லா ஆவணப்பதிவு (Presenceless Registration) மூலம் மட்டுமே கட்டாயமாகப் பதிவுசெய்யும் நடைமுறையை தொடங்கி வைத்தார்.</p> <p>பதிவுத்துறையில் ஆவணப்பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்த பொதுமக்கள் தாங்களே நேரடியாக இணையவழியில் ஆவணங்களைப் பதிவுசெய்யும் முறையினை ஏற்கனவே பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆவணப்பதிவு முறையின் மூலம் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் (Anywhere Registration) பதிவுத்துறை இணையதளத்தின் மூலம் இணையவழியில் தங்களது ஆவணங்களைப் பதிவு செய்து கொள்ள முடியும்.</p><p>பதிவு நடைமுறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேலும் மேம்படுத்தவும், பொதுமக்களுக்கு எளிதான சேவையை வழங்கவும் நேரில் வருகையற்ற பதிவு (Presenceless Registration) முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இம்முறையில், பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகம் வராமலேயே மனைப்பிரிவில் முதல் மனை விற்பனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்பில் முதல் வீடு விற்பனை ஆகிய ஆவணங்களைத் தற்போது பதிவு செய்யலாம். இம்முறையில் ஆவணங்களை இணையவழியில் சமர்ப்பிக்க இயலும் என்பதால், சம்பந்தப்பட்டவர்கள் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் வருகைதர வேண்டிய அவசியம் தவிர்க்கப்படுகிறது.</p><h2>ஆவணப்பதிவு முறை:</h2><p>1. பதிவுத்துறை இணையதளத்தில் தங்களது உள்நுழைவினைத் தாங்களே உருவாக்கி மேற்படி ஆவணங்களை இணையவழியில் சமர்ப்பிக்கலாம்.</p><p>2. ஆவணத்தை எழுதிக் கொடுப்பவர்கள், எழுதிப் பெறுபவர்கள் மற்றும் சாட்சிகள் ஆகிய அனைவருக்கும் ஆதார் அட்டை பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.</p><p>3. ஆதார் ஆணையத்தின் மூலம் கைரேகை அல்லது கருவிழிப் படலம் வழி ஆதார் சரிபார்க்கப்பட வேண்டும்.</p><h2>தொழில்நுட்பத் தேவைகள்:</h2><p>இணைய இணைப்பு, UIDAI அங்கீகரிக்கப்பட்ட எல்1 விரல் ரேகை இயந்திரம் மற்றும் கருவிழிப்படலம் ஸ்கேன் செய்யும் கருவி, புகைப்படம் எடுக்க நீலநிறத் திரை (புகைப்படம் எடுப்பவரின் பின்புறத்தில் வைத்திருக்க வேண்டும்), புகைப்படக் கருவி (Webcam) ஆகிய தொழில்நுட்ப உபகரணங்கள் தேவைப்படும்.</p><h2>வருகையில்லா ஆவணப்பதிவின் முக்கிய அம்சங்கள்:</h2><p>வருகையில்லா ஆவணப்பதிவின் மூலம் இணையவழியில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை சார்பதிவாளர்கள் 24 மணி நேரத்திற்குள் பதிவு செய்தோ அல்லது திருத்தத்திற்காக திருப்பி அனுப்பியோ அல்லது நிராகரித்தோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>வருகையில்லா ஆவணப்பதிவின் மூலம் இணையவழியில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் சார்பதிவாளர்களால் தற்போதுள்ள நடைமுறையில் உள்ளபடி சரிபார்க்கப்பட்டு, சட்ட விதிகளுக்குட்பட்டு பதிவு செய்யப்படும்.</p><p>திருத்தத்திற்காகத் திருப்பி அனுப்பப்படும் ஆவணங்களை திருப்பி அனுப்பப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் தேவையான திருத்தங்களுடன் மீண்டும் சமர்ப்பிக்கலாம்.</p><p>பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் சார்பதிவாளர் டிஜிட்டல் கையொப்பமிட்டு, ஆவணப் பதிவிற்காக உருவாக்கப்பட்ட பயனர் உள்நுழைவில் அவை கிடைக்கச் செய்யப்படும். </p><p>பயனர் உள்நுழைவில் கிடைக்கும் பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை 60 நாட்களுக்குள் தேவையான எண்ணிக்கையில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் மென்பொருள் வசதி செய்யப்பட்டுள்ளது.</p><p>60 நாட்கள் முடிந்த பின்னர், பொதுமக்கள் நடைமுறையில் உள்ள முறையின்படி சான்றிட்ட நகலுக்கு (Certified Copy) விண்ணப்பித்து பதிவு செய்யப்பட்ட ஆவணத்தைப் பெறலாம்.</p><h2>வருகையில்லா ஆவணப்பதிவின் பாதுகாப்பு அம்சங்கள்:</h2><p>ஆவணத்தின் பதிவுச் சான்றுரை (Endorsement) ஒவ்வொரு முறையும் மாறுபடும் ஐந்து நிறங்களைக் கொண்ட தானியங்கி சீரற்ற நிற அமைப்பில் (Dynamic Random Five Colours) அச்சிடப்படும். சான்றிட்ட நகல் கோரப்படும் போது கருப்பு-வெள்ளை நகல் மட்டுமே வழங்கப்படும்; அசல் நிற டிஜிட்டல் நகல் பொதுமக்களின் உள்நுழைவில் 60 நாட்கள் வரை கிடைக்கும். இதனால் அசல் ஆவணத்தின் பதிவுச் சான்றுரையில் இடம்பெற்ற நிற அமைப்பை ஆவண உரிமையாளர் அறிந்துகொள்ள இயலும்; போலி ஆவணம் உருவாக்குவதைத் தடுக்கும் கூடுதல் பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.</p><p>ஆவணத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் QR குறியீடு இடம்பெறும். அதில் ஆவண எண், ஆவணத்தின் தன்மை மற்றும் பதிவு செய்யப்பட்ட தேதி ஆகிய விவரங்கள் இடம்பெறும். பதிவு அலுவலர் ஆவணத்தில் டிஜிட்டல் கையொப்பமிடுவார். காகித ஆவணத்தில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டிருந்தால் டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட</p><p>ஆவணத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கலாம். டிஜிட்டல் ஆவணம் மாற்றம் செய்யப்பட்டால், டிஜிட்டல் கையொப்பச் சரிபார்ப்பில் “X” குறியீடு தோன்றுவதன்மூலம் மாற்றம் செய்யப்பட்டிருப்பதை அறியலாம்.</p><p>பொதுமக்கள் நலனுக்காகவும், பதிவு நடைமுறையை எளிமைப்படுத்தி, வெளிப்படைத்தன்மையோடு செயல்படுத்திடும் வகையிலும் மனைப்பிரிவிற்கான முதல் மனை விற்பனை மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புக்கான முதல் வீடு விற்பனை ஆவணத்தை பதிவுத்துறையில் வருகையில்லா ஆவணப்பதிவு முறையின்கீழ் பதிவு செய்வது கட்டாயமாக்கப்படுகிறது.</p><p>இந்நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன், வணிகவரி, பதிவுத்துறை மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் ஜெ.குமரகுருபரன், பதிவுத்துறைத் தலைவர் ஜி.கே.அருண் சுந்தர் தயாளன் ஆகியோர் கலந்து கொண்டனர்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பெரம்பூரில் முதல்-அமைச்சர் விஜய் எம்.எல்.ஏ அலுவலகம் முற்றுகை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijays-mla-office-in-perambur-besieged</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijays-mla-office-in-perambur-besieged#comments</comments><guid isPermaLink="false">7096580f-d4e2-4557-b338-f8b1c0c5ef27</guid><pubDate>Mon, 17 Aug 2026 08:03:39 +0000</pubDate><atom:updated>2026-08-17T08:03:39.392Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,பெரம்பூர்,Perambur,CM Vijay,பெரம்பூர் எம்.எல்.ஏ அலுவலகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/942ytrfb/CHENNAI-15.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/942ytrfb/CHENNAI-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அடிப்படை வசதிகள் கோரி பெரம்பூரில் உள்ள முதல்-அமைச்சர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தினர்.</p><h2>பெரம்பூர் தொகுதி</h2><p>பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக முதல்-அமைச்சர் விஜய் உள்ளார். பெரம்பூர் தொகுதியில் எம்.எல்.ஏ. அலுவலகம் சென்னை வியாசர்பாடி சர்மா நகர் 1-வது தெருவில் உள்ளது. இந்த அலுவலகத்தில் தொகுதி மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக செயலி ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p>செல்போன் செயலியான அதில், பொதுமக்கள் தங்களது குறைகளை எந்த நேரத்திலும் தெரிவிக்கலாம். பெரம்பூர் தொகுதி மக்கள் தங்களது குறைகளையும் புகார்களையும் தொகுதி எம்.எல்.ஏ.வான முதல்-அமைச்சரிடம் நேரடியாகத் தெரிவிக்கும் வகையில் தொடங்கப்பட உள்ள இந்த செயலிக்கு 'மக்கள் சேவை தளம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் விஜய் இந்த பிரத்யேக செல்போன் செயலியை அறிமுகம் செய்து தொடங்கி வைத்தார்.</p><h2>எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை</h2><p>எம்.எல்.ஏ. அலுவலகத்தினுள் தனியாக கம்ப்யூட்டர்கள் அமைக்கப்பட்டு, 10 பணியாளர்கள் தினமும் பொதுமக்களின் குறைகளைக் கேட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், கொடுங்கையூர் வேதாந்தா முருகப்பா தெருவில் கழிவுநீர் செல்வதை சரி செய்ய வலியுறுத்தி 60-க்கும் மேற்பட்ட பெண்கள் பெரம்பூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.</p><p>பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட கொடுங்கையூர் வேதாந்தா முருகப்பா தெருவில் சாலையிலே கழிவுநீர் செல்வதாகவும் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை என்றும் நீதிமன்ற வழக்கின் காரணமாக அப்பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள முடியவில்லை என்று அதிகாரிகள் அலட்சியமாக பதிலளிப்பதாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்தனர்.</p><h2>பேச்சுவார்த்தை</h2><p>இதனிடையே, தவெக ஆட்சிக்கு வந்தால் அனைத்துப் பிரச்சினைகளையும் சரிசெய்து தருவதாக வாக்குறுதி அளித்ததாகவும், ஆட்சிக்கு வந்த பிறகு பெரம்பூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இதுதொடர்பாக மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.</p><p>போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்த தவெக நிர்வாகிகளுடனும் காவல்துறை அதிகாரிகளுடனும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். இதனையடுத்து மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று தவெக நிர்வாகிகள் உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>மத அடிப்படைவாதத்திற்கு இடமளிக்கக் கூடாது: சபாநாயகருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-room-for-religious-fundamentalism-communist-party-of-india-urges-speaker</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-room-for-religious-fundamentalism-communist-party-of-india-urges-speaker#comments</comments><guid isPermaLink="false">1069a109-93c8-4afb-af80-34d99a127b02</guid><pubDate>Mon, 17 Aug 2026 08:00:29 +0000</pubDate><atom:updated>2026-08-17T08:00:29.200Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,Communist Party of India,சபாநாயகர்,Assembly Speaker,M Veerapandian,மு. வீரபாண்டியன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/vi7263az/m-veerapandian.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு. வீரபாண்டியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/vi7263az/m-veerapandian.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D">மு. வீரபாண்டியன்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் சென்னையில் நடைபெற்ற 5-வது “மார்ச் ஃபார் லைஃப்” என்ற கத்தோலிக்க மத அமைப்பின் கருக்கலைப்புக்கு எதிரான நிகழ்ச்சியில்  சிறப்பு விருந்தினராக அண்மையில் கலந்து கொண்டுள்ளார். அதில், “கருக்கலைப்பு செய்வதற்கு நமக்கு உரிமை இல்லை” என்றும், ஒவ்வொரு குழந்தையும் “கடவுள் கொடுத்த பரிசு” என்றும் பேசியிருப்பது பெண்களின் கருக்கலைப்பு உரிமைகளுக்கு எதிரான, பிற்போக்கான கருத்தாகும். அவர் வகிக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் உயர்ந்த பதவிக்கு இத்தகைய  மத அடிப்படையிலான, பிற்போக்கான போதனைகள் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>சமூக நலம் சார்ந்த விசயம்</h2><p>ஒரு பெண்ணின் இனப்பெருக்கத் தேர்வு மற்றும் உரிமை  என்பது அவரது உடல் மீதான உரிமை என்பதோடு, உடல்நலம், உளநலம், கண்ணியம்  மற்றும் சமத்துவ உரிமை ஆகியவற்றுடன் நேரடியாகத் தொடர்புடையதாகும். கர்ப்பம், கருக்கலைப்பு, மகப்பேறு என்பவை ஒரு மதக் கோட்பாட்டின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டியவை அல்ல. அது பெண்ணின் உடல், உள நலம், கருப்பையில் வளரும் சிசு, மற்றும் தாய் சேய் நலம், பெண்ணுரிமை, சமூக நலம் சார்ந்த விசயமாகும். அந்த அடிப்படையிலும், மருத்துவரீதியான காரணங்களுக்காகவும் கருக்கலைப்பை சட்ட ரீதியாக மேற்கொள்வதற்கும் ஏதுவாகவே, மருத்துவ ரீதியான கருக்கலைப்புச்சட்டம் 1971 (விஜிறி கிநீt -1971) மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. அது கருக்கலைப்புத் தொடர்பாக உலக நாடுகளில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டங்களில் ஓரளவு  முற்போக்கான சட்டமாகும்.</p><h2>கருக்கலைப்பிற்கு அனுமதி</h2><p>கருக்கலைப்பு உரிமை இல்லாத அயர்லாந்தில் இந்தியப் பெண் பல்மருத்துவர் டாக்டர் சவீதா, கர்ப்பப்பையில் கருச்சிதைவுக்கு உள்ளான 17 வாரக் சிசுவை கருக்கலைப்பு செய்ய முடியாமல் தொடர்ந்து சுமந்ததால் ஏற்பட்ட மருத்துவ ரீதியான பாதிப்பால் பரிதாபகரமாக 2012 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இது உலகம் முழுவதும் கண்டனத்திற்கு ஆளாகியது. இதன் மூலம் கருக்கலைப்புக்கு ஆதரவான சட்டத்திருத்தம் 2018 ல் கொண்டுவரப்பட்டது. உலகளவில் எகிப்து, மால்ட்டா, ஹாண்டுராஸ், உள்ளிட்ட 24  நாடுகளில் கருக்கலைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளில் சட்டத்திற்கு விரோதமான முறையில் கருக்கலைப்பு செய்துகொண்டதால் பெண்கள் சிறை தண்டனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். ஏராளமான துயரங்களுக்கு ஆளாகிவருகிறார்கள். அங்கெல்லாம் கருக்கலைப்பு உரிமை கோரி பெண்கள் போராடி வருகிறார்கள். லிபியா, இந்தோனேசியா, நைஜீரியா, ஈரான்  போன்ற 50 நாடுகளில் கட்டுப்பாடுகளுடன் கருக்கலைப்பிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.</p><h2>பெண்களுக்கு ஆதரவாக கருக்கலைப்பு சட்டம்</h2><p>கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளில் கருக்கலைப்புக்கு சட்டப்படி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உலகின் வளர்ச்சியடைந்த நாடான அமெரிக்காவிலேயே,  பல மாகாணங்களில் குறிப்பாக குடியரசுக் கட்சி ஆளும் மாகாணங்களில் கருக்கலைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிராக அமெரிக்கப் பெண்கள் தொடர்ச்சியாக குரல் எழுப்பி, போராட்டங்களிலும் பங்கெடுத்து வருகின்றனர். அது  அமெரிக்காவின் ஒரு தேர்தல் பிரச்சினையாகவே தொடர்ந்து நீடித்து வருகிறது. கருக்கலைப்பு சட்டரீதியாக இருக்கின்ற நாடுகளில் 90 விழுக்காடு கருக்கலைப்புகள் பாதுகாப்பானதாக இருக்கின்றன. சட்டரீதியாக இல்லாத நாடுகளில் 25 விழுக்காடு கருக்கலைப்புகள் மட்டுமே பாதுகாப்பானதாக உள்ளன. உலகில் உள்ள கருக்கலைப்பு சட்டங்களை ஒப்பிடும் பொழுது, இந்தியாவின் கருக்கலைப்பு சட்டம் மற்றும் அதன் திருத்தங்கள் பெண்களுக்கு ஆதரவாக இருக்கிறது.</p><h2>மனிதாபிமான அடிப்படை</h2><p>இந்தியாவில் கருக்கலைப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டு 50  ஆண்டுகளுக்கும் மேலாகிறது. 1971 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்தச் சட்டத்தில் 2002, 2003, 2021 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெண்ணின் மற்றும் குழந்தையின் கருவில் உள்ள ‌உயிருக்கு ஆபத்தான நிலை, மனநல பிரச்சினைகள், மருத்துவக் காரணிகள், மனிதாபிமான அடிப்படைகள், கருத்தடை சாதனம் செயல்படாதது, பாலியல் வன்புணர்வு , சமூகக் காரணிகள் போன்ற காரணிகளுக்காக கருக்கலைப்பு செய்வதை சட்டபூர்வமாக இந்தியச் சட்டம் அனுமதிக்கிறது. திருமணமாகாத பெண்களும், சில காரணங்களுக்காக கர்ப்பத்தை 20 வாரங்களிலும், சில காரணங்களுக்காக கர்ப்பத்தை 24 வாரங்கள் வரையிலான காலத்திலும் கலைக்கலாம் என்பது போன்ற முக்கியத்திருத்தங்கள் செய்யப்பட்டன. பெண்களுக்கு சாதகமாக மேலும் திருத்தங்கள் அவசியப்படுகின்றன.</p><h2>பாதுகாப்பில்லாத கருக்கலைப்பு முறை</h2><p>இருப்பினும் இன்றையச் சட்டத்தின் காரணமாகவே, பாதுகாப்பற்ற கருக்கலைப்புகள், சட்டத்திற்கு புறம்பான கருக்கலைப்புகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன. அபாயகரமான கருக்கலைப்பு காரணமாக ஏற்படும் பேறுகால மரணங்களும் தொடர்ந்து குறைந்து வருகின்றன. இந்நிலையில் கருக்கலைப்பு செய்துகொள்ளும் பெண்களை களங்கப்படுத்தும் வகையிலான சில தவறான கருத்துக்களும், கண்ணோட்டங்களும் நம் சமூகத்தில் பரவலாக காணப்படுகின்றன. அவற்றின் விளைவாகவும், பல பெண்கள் பாதுகாப்பில்லாத கருக்கலைப்பு முறைகளை நாடுகின்றனர். அது, அவர்களின் உடலுக்கும் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கிறது. இந்தியாவில், பாதுகாப்பில்லாத கருக்கலைப்பினால் ஒவ்வொரு  நாளும் ஏறத்தாழ 8 பெண்கள் இறக்கிறார்கள்.</p><p>இந்தியாவின் பேறுகால தாய் மரணங்களில் 8 முதல் 13 விழுக்காடு பாதுகாப்பற்ற கருக்கலைப்பினால் ஏற்படுகின்றன என்பது கவலை அளிப்பதாகும். இத்தகைய நிலையில் தமிழக அரசின் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் போன்று முக்கிய அரசுப் பதவிகளில் இருப்பவர்கள், கருக்கலைப்புக்கு எதிரான கருத்துக்களை  சொல்வது  இறப்புகளை மேலும் அதிகரிக்கும். எனவே, பெண்களுக்கு எதிரான மத நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும், பெண்களின் உரிமைகளுக்கு எதிராக பேசுவதையும் கைவிட வேண்டும். மதச்சார்பற்ற கொள்கையையும், அறிவியல் ரீதியான கண்ணோட்டத்தையும் பற்றி நிற்க வேண்டுமென, தமிழ்நாடு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அவர்களை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. அரசின் 100 நாள் சாதனை மலர் - முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-governments-100-day-achievements-booklet-released-by-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-governments-100-day-achievements-booklet-released-by-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">57188288-1a3f-484f-a9ee-a53eb3a702bb</guid><pubDate>Mon, 17 Aug 2026 07:55:34 +0000</pubDate><atom:updated>2026-08-17T07:55:34.072Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,த.வெ.க.,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/gbqo72xd/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/gbqo72xd/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தயாரிக்கப்பட்ட “மக்கள் நலனை இலக்காகக் கொண்ட அரசின் 100 நாள் சாதனை மலர்“ மற்றும் “ஒரு புதிய தொடக்கம்” என்ற காலப்பேழை புத்தகம் ஆகியவற்றை தமிழக முதல்-அமைச்சர் விஜய் இன்று வெளியிட்டார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் இன்று (17.8.2026) தலைமைச் செயலகத்தில், த.வெ.க. அரசு பொறுப்பேற்று 100 நாட்களில் நிறைவேற்றப்பட்ட சாதனைகளை விளக்கிடும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தயாரிக்கப்பட்ட “மக்கள் நலனை இலக்காகக் கொண்ட அரசின் 100 நாள் சாதனை மலர்“ மற்றும் “ஒரு புதிய தொடக்கம்” என்ற காலப்பேழை புத்தகம் (Coffee Table Book) ஆகியவற்றை வெளியிட்டார்.</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்ற 2026-ஆம் ஆண்டு மே 10-ஆம் நாள் முதல் மாற்றம் தந்த மக்களுக்காக, அனைத்துத் தரப்பினரும் பயன்பெறத்தக்க வகையில் ஒரு சிறப்பான மக்களாட்சியைத் தந்து தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் பணியாற்றி வருகிறார்.</p><p>இவ்வரசு பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவுற்றதை முன்னிட்டு, கடந்த 100 நாட்களில் நிறைவேற்றப்பட்ட சாதனைகளைத் துறைவாரியாகத் தொகுத்து, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கீழ் இயங்கும் “தமிழரசு“ சார்பில் “மக்கள் நலனை இலக்காகக் கொண்ட அரசின் 100 நாள் சாதனை மலர்“ தயாரிக்கப்பட்டுள்ளது.</p><p>இச்சாதனை மலரானது, இவ்வரசு பொறுப்பேற்ற நூறு நாட்களில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள், துறைகளின் சாதனைகள், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மேற்கொண்ட கள ஆய்வுப் பணிகள், துறைவாரியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், முக்கிய நிகழ்வுகளின் உரைத் தொகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளின் புகைப்படங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும், “ஒரு புதிய தொடக்கம்” என்ற காலப்பேழை புத்தகத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் பங்கேற்ற பல்வேறு நிகழ்வுகளின் புகைப்படங்கள், அவை தொடர்பான விளக்கங்கள், தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள், வளர்ச்சி திட்டப் பணிகள் போன்றவற்றை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. </p><p>இந்நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன், தலைமைச் செயலாளர் முனைவர் மு.சாய்குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மரு.அ.அருண் தம்புராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>சட்டசபையில் 3 அமைச்சர்களின் கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிட்ட சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/speaker-jcd-prabhakar-ordered-the-removal-of-remarks-made-by-three-ministers-from-the-assembly-records</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/speaker-jcd-prabhakar-ordered-the-removal-of-remarks-made-by-three-ministers-from-the-assembly-records#comments</comments><guid isPermaLink="false">08b2648f-3ede-48e4-99df-4cfcedfb8b6d</guid><pubDate>Mon, 17 Aug 2026 07:41:38 +0000</pubDate><atom:updated>2026-08-17T07:41:38.618Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,TN Assembly,சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்,Speaker J.C.T. Prabhakar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/ohj9j2xa/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/ohj9j2xa/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>4 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் தமிழக சட்டசபை இன்று மீண்டும் தொடங்கியது. துறைவாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. </p><p>முன்னதாக சட்டசபையில், கோவையில் மாணவர் அமுதன் கொலை வழக்கு, கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து விவாதம் நடத்த தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். தொடர்ந்து இன்று நடைபெற்ற விவாதத்தில் சட்டசபை உறுப்பினர்கள் பேசினர். </p><p>இந்த விவாதத்தின்போது பேசிய பொதுப் பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, த.வெ.க.வின் 100 நாட்கள் ஆட்சியில் போதை கலாசாரம் பெருகிவிடவில்லை என்றும், தி.மு.க. ஆட்சியின்போதுதான் தமிழ்நாட்டில் போதை கலாசாரம் பெரிய அளவில் பரவியதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், சட்டசபையில் புகைப்பட ஆதாரம், காவல்துறை அறிக்கை உள்ளிட்டவற்றை காட்டி ஆதவ் அர்ஜுனா சில கருத்துகளை பேசினார். </p><p>இதற்கு தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், “பொதுப் பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சொன்ன கருத்தை நான் ஏற்க முடியாது. அதை மட்டும் அவைக் குறிப்பில் இருந்து நீக்குகிறேன்” என்றார்.</p><p>தொடர்ந்து, மேகமலையில் இருந்து பொதுமக்களை வெளியேற்றும் பிரச்சனை மீது விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் நிர்மல்குமார், எம்.ஜி.ஆர். பேசியதாக கூறி ஒரு கருத்தை சுட்டிக் காட்டினார். இதற்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் குறுக்கிட்டு, “அமைச்சர் நிர்மல்குமார் கூறிய வாசகம் மட்டும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது” என்றார்.</p><p>இதேபோல வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார், தி.மு.க. மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசியபோது, அவரது பேச்சுக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து அமைச்சர் ரஞ்சித்குமாரின் சர்ச்சையான கருத்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்க சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் உத்தரவிட்டார். </p><p>தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர் ராமச்சந்திரன் பேசும்போது அமைச்சர் ரஞ்சித்குமார் மீண்டும், மீண்டும் குறுக்கிட்டு பேசினார். அவரை அமைதியாக இருக்கும்படி அறிவுறுத்திய சபாநாயகர், வனத்துறை அமைச்சரின் மைக் இணைப்பை துண்டிக்கும்படி உத்தரவிட்டார். </p> ]]></content:encoded></item><item><title>சிவகங்கை: திருப்புவனம் அருகே இளைஞர் வெட்டிக்கொலை... கொந்தகை கண்மாயில் வைத்து கொடூரம் !</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sivaganga-youth-hacked-to-death-near-thiruppuvanamatrocities-are-being-committed-with-the-backdrop-of-unrest</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sivaganga-youth-hacked-to-death-near-thiruppuvanamatrocities-are-being-committed-with-the-backdrop-of-unrest#comments</comments><guid isPermaLink="false">b74d17de-7e1f-427a-ae31-1498bef04872</guid><pubDate>Mon, 17 Aug 2026 07:30:38 +0000</pubDate><atom:updated>2026-08-17T07:30:38.730Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கொலை,சிவகங்கை,வெட்டிக் கொலை,Suspects,murder?,மர்மநபர்கள்,கொந்தகை,sivakangai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/rrnnu7ht/murder.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ இளைஞர் வெட்டிக்கொலை]]></media:title><media:description type="html"><![CDATA[ கருவெல பகுதியில் சடலம் மீட்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/rrnnu7ht/murder.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சிவகங்கை,</p><p>திருப்புவனம் அருகே உள்ள கீழடி கிராம கண்மாயில் 25 வயதுடைய இளைஞர் வெட்டி கொல்லபட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">கொலை </a>செய்யபட்ட இளைஞர் யார் என்றும், கொலை செய்தவர்கள் யார் என்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><h2>அடர்ந்த பகுதி</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">சிவகங்கை </a>மாவட்டம், திருப்புவனம் வட்டத்தில் வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள கீழடி கிராமத்தில் கொந்தகை கண்மாய் உள்ளது. சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த கண்மாயில் அதிகமாக கருவேல மரங்கள் உள்ளன. கடந்த சில நாட்கள் முன்பு அந்த மரங்களை அகற்றுவதற்காக வழித்தடங்களை உருவாக்கினார்கள். இன்று காலை கருவேல மரங்களை வெட்டி அகற்றுவதற்காக அங்கு சில நபர்கள் வந்துள்ளனர்.  அந்த வழிப்பதையில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்ததை பார்த்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.</p> <h2>அடையாளம் தெரியத இளைஞர்</h2><p>தகவலறிந்த போலீசார் உடனே விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிவகங்கை எஸ்.பி. அபிஷேக் குப்தா, டிஎஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் மோப்ப நாய்கள் மற்றும் தடவியல் நிபுணர்களை வைத்து தடயங்களை சேகரித்தனர். </p> <h2>விசாரணை</h2><p>கொலை செய்யப்பட்ட நபர் யார்? கொலையாளி யார்? என்று தெரியவில்லை. கண்மாயின் அடர்ந்த இந்த பகுதியில் வழிப்பாதை அமைத்ததை தெரிந்த நபர்களால் மட்டுமே அங்கு வந்து இந்த கொடூர சம்பவத்தை செய்திருக்க முடியும். அதனால் கொலை செய்யபட்டவர் யார் என்று அடையாளம் தெரிந்து விட்டால் விசாரணையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லலாம் என்று போலீஸ் தரப்பில் தெரிவித்தனர். அடையாளம்  தெரியாத இந்த இளைஞரின் கொலை அந்த கிராம மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் வரும்போது எதிர்க்கட்சித்தலைவர் உட்கார்ந்திருப்பதா? - அமைச்சர் ரமேஷ் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/should-the-leader-of-the-opposition-remain-seated-when-the-chief-minister-arrives-minister-ramesh-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/should-the-leader-of-the-opposition-remain-seated-when-the-chief-minister-arrives-minister-ramesh-asks#comments</comments><guid isPermaLink="false">9863dd7f-517a-436e-b7e3-4a5baa04d7d4</guid><pubDate>Mon, 17 Aug 2026 07:20:22 +0000</pubDate><atom:updated>2026-08-17T07:20:22.486Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/9tqu0jsi/14.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/9tqu0jsi/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் சட்டசபையில் பேசியதாவது;</p><p>"சட்டசபையில் கன்னியத்துடன் நடந்துகொள்வது குறித்து முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறி இருந்தார். சட்டசபைக்கு நாங்கள் எல்லோரும் புதியவர்கள். சட்டசபையில் கண்ணியத்துடன் நடந்துகொள்வது குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேசியதை ஏற்றுக்கொள்கிறோம். </p><p>அதே சட்டசபை கண்ணியம் குறித்து எதிர்க்கட்சித்தலைவருக்கும் ஓ.பன்னீர்செல்வம் சொல்லிக்கொடுக்க வேண்டும். ஏனென்றால், 8 கோடி மக்களின் பிரதிநிதியான முதல்-அமைச்சர் சட்டசபைக்கு வரும்போது நாம் அனைவரும் எழுந்து நின்று அவருக்கு மரியாதை கொடுக்கிறோம். ஆனால் எதிர்க்கட்சித்தலைவராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், முதல்-அமைச்சர் விஜய் சட்டசபைக்கு வரும்போது எழுந்து நிற்காமல் அமர்ந்து இருக்கிறார். எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.” என்றார்.</p><p>அமைச்சர் ரமேஷ் பேசியதற்கு திமுக தரப்பில் இருந்து எதிர்ப்புக்குரல் கிளம்பியது. இதனால் சட்டசபையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.</p><p>இதையடுத்து முன்னாள் அமைச்சர் நேரு இதுகுறித்து பேசுகையில், "முதல்-அமைச்சர் சட்டசபைக்குள் வரும்போது எழுந்து நிற்பது குற்றம், குறை அல்ல.. அது அவரவர் நடைமுறை. திமுக ஆட்சியில் இருக்கும்போது முதல்-அமைச்சர் வரும்போது எதிர்க்கட்சித்தலைவர் எழுந்து நிற்பது கிடையாது. எதிர்க்கட்சித்தலைவர் எழுந்து நிற்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. ” என விளக்கம் அளித்தார். </p> ]]></content:encoded></item><item><title>மு.க.ஸ்டாலின் சட்டசபைக்கு வரும்போது இங்கு பலர் இருக்க மாட்டார்கள்: சாத்தூர் ராமச்சந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/many-people-will-not-be-present-here-when-mk-stalin-arrives-at-the-assembly-sathur-ramachandran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/many-people-will-not-be-present-here-when-mk-stalin-arrives-at-the-assembly-sathur-ramachandran#comments</comments><guid isPermaLink="false">254cb356-d7fe-4904-9ae1-372f284b4ff0</guid><pubDate>Mon, 17 Aug 2026 07:19:27 +0000</pubDate><atom:updated>2026-08-17T07:19:27.199Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,M.K.Stalin,சட்டசபை,TN Assembly,சாத்தூர் ராமச்சந்திரன்,Sattur Ramachandran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/hn5apm0g/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/hn5apm0g/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வருவாய் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசியதாவது:-</p><p>முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் கொள்கை பிடிப்பும், மு.க.ஸ்டாலினின் செயல்திறனும் ஒருங்கே பெற்று எந்த ஆதிக்கத்துக்கும் அஞ்சாமல் எதையும் துணிவுடன் எதிர்கொள்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின். திமுகவின் வயது 75. ஒவ்வொரு வரும் போராட்டங்களில் பங்கேற்று, மக்களுக்காக சிறைக்கு சென்றவர்கள். கொள்கையில் அனைவரிடமும் சிறந்த கட்சி எங்களுடையது.</p><p>கடந்த 5 ஆண்டுகளில் 27 லட்சம் பேருக்கு அரசு மனை பட்டா வழங்கியுள்ளோம். சென்னை போன்ற மாநகராட்சிகளில் 30 ஆண்டுகளாக குடியிருப்போருக்கு 77 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கினோம்.</p><p>நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் கொரோனா காலத்திலேயே மக்களுக்கு ரூ.4,000 நிவாரணம் வழங்கினோம். ஆனால் தவெக அரசு கொடுத்த வாக்குறுதிகளில் எதையும் 3 மாதங்களில் நிறைவேற்றவில்லை. மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 கிடைக்கும், வீட்டில் வேலையில்லாமல் இருந்தால் ரூ. 4,000 கிடைக்கும், சிலிண்டர் கிடைக்கும். இதெல்லாம் நீங்கள் வந்தால் கிடைக்குமா என்று மக்கள் கேட்கின்றனர். ஆனால், இதுவரை எதுவும் கிடைக்கவில்லை" எனத் தெரிவித்தார்.</p><h2>அனல் பறந்த விவாதம்</h2><p>தொடர்ந்து அவர் பேசுகையில், மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மீண்டும் வரும்; விழுந்த வேகத்தில் எழுந்து நிற்கும் கட்சி திமுக.. நீங்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது?. அப்பாவை காணோம் என்று சொல்கிறீர்கள்.. அவர் வருகின்ற நேரத்தில் நீங்கள் பல பேர் இங்கே இருக்கமாட்டீர்கள்; நாங்கள் இருப்போம் என்று கூறினார்.</p><p>இதற்கு அவை முன்னவர் செங்கோட்டையன் பதில் அளிக்கையில், “விஜய் இருக்கும் வரை திமுக மீண்டும் ஆட்சிக்கு வரப் போவதில்லை. திமுகவுக்கு இனி எப்போதும் எதிர்க்கட்சி வரிசை தான்.. எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தவரை திமுக மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை. எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தவரை திமுக வெற்றிபெறவில்லை என்பது தான் வரலாறு என்று கூறினார்.</p><p>எம்.ஜி.ஆர். இருக்கும்போது தான், 1980ல் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. 1986ல் உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்றது என்று திமுக எம்.எல்.ஏ. கே.என்.நேரு கூறினார். இதற்கு பதிலளித்த செங்கோட்டையன், “நீங்கள் (திமுக) நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியை கலைத்தீர்கள். அதன் பிறகும் வெற்றி பெற்று நிரந்தர முதல்-அமைச்சராக வரலாறு படைத்தவர் எம்.ஜி.ஆர். என்றார்.</p>]]></content:encoded></item><item><title>வனத்துறை அமைச்சர் பேசிய விவகாரம்:  எதிர்க்கட்சிகளிடம் மன்னிப்பு கேட்ட முதல் அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/issue-regarding-the-forest-ministers-remarks-chief-minister-vijay-apologized-to-the-opposition-parties</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/issue-regarding-the-forest-ministers-remarks-chief-minister-vijay-apologized-to-the-opposition-parties#comments</comments><guid isPermaLink="false">91175301-ada8-4e6b-b8af-9357ee1ce52d</guid><pubDate>Mon, 17 Aug 2026 07:12:40 +0000</pubDate><atom:updated>2026-08-17T07:12:40.293Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN Assembly,CM Vijay,முதல் அமைச்சர் விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/lchtnsnx/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/lchtnsnx/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>4 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் தமிழக சட்டசபை இன்று மீண்டும் தொடங்கியது. துறைவாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. </p><p>முன்னதாக சட்டசபையில், கோவையில் மாணவர் அமுதன் கொலை வழக்கு, கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து விவாதம் நடத்த தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். தொடர்ந்து சட்டசபை உறுப்பினர்கள் பேசினர். </p><p>அப்போது வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார், தி.மு.க. மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசிய நிலையில், அவரது பேச்சுக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே தி.மு.க. உறுப்பினர் ராமச்சந்திரன் பேசும்போது அமைச்சர் ரஞ்சித்குமார் மீண்டும், மீண்டும் குறுக்கிட்டு பேசினார். அவரை அமைதியாக இருக்கும்படி அறிவுறுத்திய சபாநாயகர், வனத்துறை அமைச்சரின் மைக் இணைப்பை துண்டிக்கும்படி உத்தரவிட்டார். </p><p>இதன் பின்னர் முதல்-அமைச்சர் விஜய் பேசுகையில், “வனத்துறை அமைச்சர் அவ்வாறு பேசியிருக்க கூடாது. அவர் சார்பில் எதிர்க்கட்சிகளிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>கன்னியாகுமரி: ஆசிரியர்கள் கண்டித்ததால் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kanyakumari-college-student-takes-drastic-step-after-being-reprimanded-by-teachers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kanyakumari-college-student-takes-drastic-step-after-being-reprimanded-by-teachers#comments</comments><guid isPermaLink="false">0eada45a-840a-475d-aaa7-e3defd16d157</guid><pubDate>Mon, 17 Aug 2026 07:06:24 +0000</pubDate><atom:updated>2026-08-17T07:06:24.904Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,College student,Kanyakumari,போலீஸ் விசாரணை,தற்கொலை,Teachers</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/vrazg9bs/1.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ மாணவி அன்சிஜி ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆசிரியர்கள் கண்டித்ததால் மாணவி தற்கொலை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/vrazg9bs/1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கன்னியாகுமரி மாவட்டம் </a>கருங்கல் அருகே உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில், செல்போன் கொண்டு வந்ததாகக் கூறி கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் கண்டித்ததால் மனமுடைந்த கேரள மாணவி ஒருவர், கல்லூரி கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து குதித்து பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>செல்போன் பறிமுதல்-மன உளைச்சல்</h2><p>கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை கத்திப்பார பகுதியைச் சேர்ந்தவர் அன்சிஜி (வயது 21). இவர் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, கல்லூரிக்கு செல்போன் கொண்டு வந்ததாகக் கூறி, கல்லூரி முதல்வர் ஷீஜா மற்றும் ஆசிரியர்கள் அன்சிஜியை சக மாணவர்கள் முன்னிலையில் கடுமையாக கண்டித்தனர்.</p><p>மேலும், அவரது செல்போனை பறிமுதல் செய்தனர். இதனால் அன்சிஜி கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகினார். இது தொடர்பாக அவர் தனது தோழிகளுக்கு அனுப்பிய ஆடியோ பதிவில், கல்லூரி நிர்வாகம் தன்னைத் தொடர்ந்து மனரீதியாகத் துன்புறுத்தி வருவதாகக் கண்ணீருடன் தெரிவித்தார்.</p><h2>விபரீத முடிவு - உயிரிழப்பு</h2><p>மனவேதனையில் இருந்த மாணவி அன்சிஜி, கடந்த வெள்ளிக்கிழமை மதியம் கல்லூரியின் 3-வது மாடியில் இருந்து குதித்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">தற்கொலை</a> செய்ய முயன்றார். மாடியில் இருந்து கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த அவரை சக மாணவிகளும், கல்லூரி ஊழியர்களும் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.</p><p>பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (ஞாயிற்றுக்கிழாமை) அதிகாலை மாணவி அன்சிஜி பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>போலீஸ் நடவடிக்கை- வழக்குப்பதிவு</h2><p>மாணவியின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாணவியை தற்கொலைக்குத் தூண்டியதாக கல்லூரி முதல்வர் ஷீஜா மற்றும் கல்லூரி நிர்வாகத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ளவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அசம்பாவிதங்களைத் தடுக்க கல்லூரி வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>விவசாய கடன்கள் ரூ.75 ஆயிரம் வரை முழுமையாக தள்ளுபடி: முதல் அமைச்சர் விஜய் அறிவிப்பு
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/loans-up-to-rs-75000-fully-waived-chief-minister-vijay-announceschennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/loans-up-to-rs-75000-fully-waived-chief-minister-vijay-announceschennai#comments</comments><guid isPermaLink="false">87f659c5-e323-4f61-af32-81f29497986f</guid><pubDate>Mon, 17 Aug 2026 07:00:18 +0000</pubDate><atom:updated>2026-08-17T07:00:18.884Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விவசாய கடன்,கடன்கள் தள்ளுபடி,முதல் அமைச்சர் விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/eqnponhy/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/eqnponhy/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக சட்டசபையில் முதல் அமைச்சர் விஜய் விதி எண் 110-கீழ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:    ரூ.75 ஆயிரம் கடன் வாங்கியிருந்தால் 100 சதவீதம் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். ரூ.1 லட்சம் வரை கடன் வாங்கினாலும் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். தவெக அரசு பல்வேறு நிதி நெருக்கடிகளின் மத்தியில் பதவியேற்றாலும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. விவசாய அமைப்புகளின் கோரிக்கைகளின் படி ரூ.75,000 வரை முழு கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது” என்றார்.</p> <h2>முதல் அமைச்சர் விஜய் பேசியதன் முழு விவரம்</h2><p>உலகில் ஜாதி, மதம், இனம், மொழி என அனைத்து வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டு நடைபெறும் தொழில் என்றால், அது விவசாயத் தொழில் மட்டுமே. உலகின் ஒரு மூலையில் உற்பத்தி செய்யப்படும் விவசாயப் பொருட்கள், உலகின் மற்றொரு மூலையில் உள்ள மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்கிறது. எந்த நாடு உழவுத் தொழிலை மதித்து, விவசாயிகளுக்கு உரிய பாதுகாப்பையும் ஆதரவையும் வழங்குகிறதோ, அந்த நாட்டில்தான் மக்கள் வளமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும். தமிழக வெற்றிக் கழக அரசு, பல்வேறு "நிதி நெருக்கடிகளின் மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றாலும்," பதவியேற்ற 15 நாட்களுக்குள், விவசாயிகளின் கடன் சுமையைக் குறைக்க கடந்த 25.05.2026 அன்று, குறு, சிறு மற்றும் இதர விவசாயிகள் பெற்றிருந்த பயிர்க்கடனில் 50,000 ரூபாய் வரையிலான கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பல்வேறு விவசாய அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான கோரிக்கைகளைக் கனிவுடன் பரிசீலித்து,"நிதி நெருக்கடியான சூழ்நிலையிலும் விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை மட்டும்" கருத்தில் கொண்டு, குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 50,000 ரூபாய் வரை முழுத் தள்ளுபடி செய்ய அறிவிக்கப்பட்டதை உயர்த்தி, ரூ.75,000/- வரை கடன் பெற்றவர்களுக்கு முழுத் தொகையையும், ரூ.75,000/-க்கும் மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ.35,000/-மும் தள்ளுபடி செய்ய அறிவிக்கப்பட்டு, அதன்மூலம் 14.44 இலட்சம் விவசாயிகளுக்கு ரூபாய் 5,932.23 கோடி அளவிலான கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்து 19.06.2026 அன்று ஆணையிடப்பட்டது. இதில், 31.07.2026 வரை ரூபாய் 5,267 கோடி விடுவிக்கப்பட்டு 13.34 இலட்சம் விவசாயிகளின் கணக்கில் வரவும் வைக்கப்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில், மாநிலம் முழுவதுமுள்ள விவசாய சங்க அமைப்புகளின் பிரதிநிதிகள் பயிர்க்கடன் தள்ளுபடியை அதிகரிக்கவேண்டும் என்ற கோரிக்கையை  முன்வைத்துக் கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து 07.08.2026 அன்று, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், மாண்புமிகு மூத்த அமைச்சர்கள் மற்றும் துறைச் செயலாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அவர்களின் கோரிக்கைகள் விரிவாகப் பரிசீலிக்கப்பட்டது.</p><h2>செலுத்தவேண்டிய தொகை</h2><p>கடந்த காலங்களில் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டாலும், அரசால் கூட்டுறவு வங்கிகளுக்குச் செலுத்தவேண்டிய தொகை 4-5 ஆண்டு கால இடைவெளியில் செலுத்தப்பட்டு வந்துள்ளது. 2021-ஆம் ஆண்டில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை, 2021 முதல் 2026 வரையான காலத்தில் அரசால் 12 தவணைகளாக கூட்டுறவு வங்கிகளுக்குச் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், அந்தக் கால அவகாசம் நமது அரசுக்குத் தற்போது இல்லை. இந்திய ரிசர்வ் வங்கியின் 28.11.2025 ஆம் தேதியிட்ட கடிதத்தில், அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான செயல்பாட்டு நடைமுறைகளின்படி பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழுத்தொகையையும், அரசானது 45 முதல் 60 நாட்களுக்குள் கூட்டுறவு வங்கிகளுக்கு முழுமையாக செலுத்த வேண்டும் என்ற வழிமுறை நடைமுறையில் வந்துள்ளது. இந்த வழிகாட்டுதலின்படியும், தமிழ்நாடு அரசின் நிதிநிலை மற்றும் நிதி ஆதாரங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட பயிர்க்கடன்களுக்குப் பின்வரும் கூடுதல் தள்ளுபடியை வழங்கிட அரசு முடிவு செய்துள்ளது.</p><h2>மொத்தமாக 6,220 கோடி</h2><p>75,000 ரூபாய் வரை பெற்றுள்ள பயிர்க்கடன்கள் 100% முழுமையாகவும்,</p><p>75,000 ரூபாய் முதல் 1,00,000 ரூபாய் வரை பெற்றுள்ள பயிர்க்கடன்களுக்கு அதிகபட்சமாக 75,000 ரூபாய் வரையும்,</p><p>1,00,000 ரூபாய்க்கு மேல் பெற்றுள்ள பயிர்க்கடன்களுக்கு அதிகபட்சமாக 35,000 ரூபாய் வரையும் தள்ளுபடி வழங்கப்படும்.</p><p>இதன்மூலம், 75,000 ரூபாய் முதல் 1,00,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்றுள்ள 2,38,264 விவசாயிகளுக்குத் தலா 75,000 ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படும். இதனால், ஏற்கனவே, பெற்ற தள்ளுபடித் தொகைக்கு மேலாக 40,000 ரூபாய் வரை கூடுதல் தள்ளுபடிபெறும் வாய்ப்பு ஏற்படும். இந்தக் கூடுதல் பயிர்க்கடன் தள்ளுபடியால் அரசுக்கு சுமார் ரூபாய் 953.06 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும், இருந்தாலும், தமிழக விவசாயிகளின் நலனில்தான் நமது நலன் உள்ளது என்று கருதி சுமார் 13.34 இலட்சம் விவசாயிகளுக்கு, மொத்தமாக 6,220 கோடி ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடியை இந்த அரசு வழங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஓணம் பண்டிகை: திருப்பூர் வழியாக கண்ணூருக்கு சிறப்பு ரெயில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-festival-special-train-to-kannur-via-tiruppur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-festival-special-train-to-kannur-via-tiruppur#comments</comments><guid isPermaLink="false">81624697-5544-4b8e-8fcf-24f7bb94301a</guid><pubDate>Mon, 17 Aug 2026 06:51:04 +0000</pubDate><atom:updated>2026-08-17T06:51:04.692Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,Special train,Onam festival,ஓணம் பண்டிகை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/ea392nbs/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/ea392nbs/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,  </p><p>ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம் கண்ணூருக்கு 20-ந் தேதி சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் பெங்களூரு கண்டோன் மென்ட்டில் இருந்து 20-ந் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் மதியம் 12.50 மணிக்கு கண்ணூர் சென்றடைகிறது. </p><p>இந்த ரெயில் 21-ந் தேதி அதிகாலை 2.10 மணிக்கு சேலத்துக்கும், 3.15 மணிக்கு ஈரோட்டுக்கும், 4.03 மணிக்கு திருப்பூருக்கும், 5.48 மணிக்கு போத்தனூருக்கும் சென்று சேரும். இதுபோல் கண்ணூரில் இருந்து 21-ந் தேதி மாலை 4.10 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு பெங்களூரு கண்டோன் மென்ட் பகுதிக்கு சென்று சேரும். இந்த ரெயில் 21-ந் தேதி இரவு 9.40 மணிக்கு போத்தனூருக்கும். 10.28 மணிக்கு திருப்பூருக்கும், 11.15 மணிக்கு ஈரோட்டுக்கும், நள்ளிரவு 12.05 மணிக்கு சேலத்துக்கும் சென்று சேரும்.</p><p>இந்த தகவலை ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>துணை ஜனாதிபதி பங்கேற்கும் விழா; தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் - மாணிக்கம் தாகூர் எம்.பி. </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/at-functions-attended-by-the-vice-president-the-tamil-thai-vazhthu-must-be-sung-first-mp-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/at-functions-attended-by-the-vice-president-the-tamil-thai-vazhthu-must-be-sung-first-mp-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">81f20d24-03e9-4b13-b284-19214cb1739f</guid><pubDate>Mon, 17 Aug 2026 06:27:45 +0000</pubDate><atom:updated>2026-08-17T06:27:45.230Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vice President,துணை ஜனாதிபதி,காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,தமிழ்த்தாய் வாழ்த்து,Manickam Tagore,C.P. Radhakrishnan,tamil thai valthu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/lf067h2l/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/lf067h2l/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-</p><p>“துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று தமிழகம் வருகை தந்து, இன்று திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழாவிலும், அதைத் தொடர்ந்து தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் மாணிக்க மற்றும் வெள்ளி விழா நிறைவு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்கிறார். துணை ஜனாதிபதியை பெருமையுடன் வரவேற்கிறோம்.</p><p>அரசு மரபின் அடிப்படையில் அவரை வரவேற்று, உபசரிப்புகளைக் கவனித்து, வழியனுப்பும் வரை உடன் செல்வதற்காக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் விசுவநாதனை தமிழக அரசு நியமித்துள்ளது.</p><p>​அதேசமயம் அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில், தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவின்படி முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு, அதன் பிறகே  மற்ற பாடல்கள் இசைக்கப்பட வேண்டும். இந்த நடைமுறை மாற்றப்படுமேயானால், அந்த நிகழ்ச்சிகளின் மேடைகளில் காங்கிரஸ் சார்ந்த தமிழக அமைச்சர் அமரமாட்டார்; நிகழ்விலும் பங்கேற்க மாட்டார் என்பதைத் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.</p><p>​அரசியல் சட்டம் உருவாக்கியுள்ள மிக உயர்ந்த பொறுப்புக்களில் ஒன்றான இந்திய குடியரசின் துணைத் தலைவர் அவர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படுவதிலும் தமிழக காங்கிரஸ் கவனமாக இருக்கும். அதே வேளையில் தமிழ்த்தாய் வாழ்த்தின் மாண்பை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்!”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>காஞ்சிபுரம் அருகே லாரி மீது தனியார் பஸ் மோதி  விபத்து: 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/accident-near-kanchipuram-private-bus-collides-with-lorry-over-25-workers-critically-injured</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/accident-near-kanchipuram-private-bus-collides-with-lorry-over-25-workers-critically-injured#comments</comments><guid isPermaLink="false">9365edd1-cb13-4ae1-8408-d0e8d586af72</guid><pubDate>Mon, 17 Aug 2026 06:26:37 +0000</pubDate><atom:updated>2026-08-17T06:26:37.113Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,Kanchipuram,காஞ்சிபுரம்,police enquiry,தனியார் பஸ்</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/hqype2i4/0.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ தனியார் பஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ லாரி மீது தனியார் பஸ் மோதி விபத்து.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/hqype2i4/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>காஞ்சிபுரம்,</p><p>காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தனியார் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி வந்த பஸ், முன்னால் சென்ற கனரக லாரி மீது பயங்கரமாக மோதி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">விபத்து</a> ஏற்பட்டது. இந்த விபத்தில் பெண்கள் உட்பட 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.</p><h2>தனியார் தொழிற்சாலை</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">காஞ்சிபுரம் மாவட்டம்</a>, ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் மொபைல் போன்களுக்கு சார்ஜர் தயாரிக்கும் பிரபல தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் பணிபுரியும் ஊழியர்களை ஏற்றிக்கொண்டு, ஆரணி பகுதியில் இருந்து இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவு சுமார் 1:00 மணியளவில் தொழிற்சாலை பஸ் ஒன்று புறப்பட்டது.</p><h2>விபத்து</h2><p>பஸ் சந்தவேலூர் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்று கொண்டிருந்த கனரக லாரியின் பின்புறத்தில் பலமாக மோதியது.</p><h2>மீட்பு - சிகிச்சை</h2><p>இதனால் பஸ்சின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்தது. இதனால் பஸ்சில் இருந்த தொழிலாளர்கள் அலறித்துடித்தனர். சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி பொதுமக்களும், தகவலறிந்து விரைந்து வந்த சுங்குவார்சத்திரம் போலீசாரும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பெண்கள் உட்பட 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்தனர்.</p><p>காயமடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். படுகாயமடைந்த ஆரணியைச் சேர்ந்த ரம்யா (வயது 21), முப்பதுவெட்டி பகுதியைச் சேர்ந்த சித்ரா (வயது 35), நெமிலியைச் சேர்ந்த கார்த்திகா (வயது 23) ஆகிய 3 தொழிலாளர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். லாரி ஓட்டுநர் மற்றும் லேசான காயமடைந்த 7 பேர் முதலுதவி சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>பேருந்து ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் தூக்கக் கலக்கமே இந்த விபத்திற்குக் முதன்மைக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. நள்ளிரவு நேரம் என்பதால் ஓட்டுநர் தூங்கியதால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து லாரியில் மோதியது. இச்சம்பவம் குறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>குத்தகை முறையில் நடத்துனர்கள் நியமனம்: திமுக ஒப்பந்தத்தை தவெக தொடருவது ஏன்? - அன்புமணி கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/appointment-of-conductors-on-a-contract-basis-why-is-tvk-continuing-the-dmks-contract-system-anbumani-questions</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/appointment-of-conductors-on-a-contract-basis-why-is-tvk-continuing-the-dmks-contract-system-anbumani-questions#comments</comments><guid isPermaLink="false">cbea6884-99a8-47b0-9786-5fefa77b1849</guid><pubDate>Mon, 17 Aug 2026 06:21:47 +0000</pubDate><atom:updated>2026-08-17T06:21:47.771Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,conductor,நடத்துநர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/ixn9vu6q/anbu.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/ixn9vu6q/anbu.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;</p><p>“சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணிப்போருக்கு பேருந்து நிறுத்தங்களில் பயணச்சீட்டு வழங்குவதற்காக 1,797 நடத்துனர்களை குத்தகை முறையில் நியமிப்பதற்கான ஒப்பந்தம் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.எஸ். எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் கோரப்பட்ட ஒப்பந்தப் புள்ளியின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட ஒப்பந்தத்தை தவெக அரசு வழங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.</p><p>சென்னை மற்றும் அதையொட்டியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டப் பகுதிகளைச்  சேர்ந்த மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் மாநகரப் போக்குவரத்துக் கழகம் 3858 பேருந்துகளை இயக்கி வருகிறது. இவற்றை  இயக்குவதற்குத் தேவையான 18,898 பணியிடங்களில் 6,000க்கும்  மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அவற்றை நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு நிரப்ப வேண்டிய அரசும், மாநகரப் போக்குவரத்துக் கழகமும் குத்தகை முறைப் பணியாளர்களைக் கொண்டு நிரப்பி வருகின்றன.</p><p>அந்த வரிசையில் இப்போது 1797 நடத்துனர்களை குத்தகை முறையில் நியமிப்பதற்கான ஒப்பந்தம் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.எஸ். எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து புதிய நடத்துனர்களை தேர்வு செய்வதற்கான விளம்பரத்தை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. அடுத்த சில வாரங்களில் இவர்கள் தேர்வு செய்யப்படுவர். குத்தகை முறையில் நியமிக்கப்படும் நடத்துனர்களின் ஒப்பந்தக் காலம் 11 மாதங்கள் ஆகும். அவர்களுக்கு மாத ஊதியமாக அனைத்துப் படிகள், வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு உள்பட ரூ.26,743 வழங்கப்படும். சென்னையில் அடையார், குரோம்பேட்டை, வடபழனி, தண்டையார்பேட்டை, அயனாவரம், அண்ணாநகர் பணிமனைகளுக்கு உள்ளிட்ட பேருந்து நிறுத்தங்களில் பயணிக்கக் காத்திருக்கும் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கும் பணியில் அவர்கள் அமர்த்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த குத்தகை முறை நடத்துனர்களை நியமிப்பதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கடந்த ஜனவரி 17&amp;ஆம் தேதி கோரப்பட்டன. மொத்தம் 3297 ஓட்டுனர்கள், 1895 ஓட்டுனர்கள் என மொத்தம் 5192 பேரை நியமிப்பதற்காக கோரப்பட்ட ஒப்பந்தப்ப்புள்ளிகளின் முதல்கட்டமாகத் தான் இப்போது 1797 நடத்துனர்களை தேர்ந்தெடுத்து குத்தகை முறையில் வழங்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1500 நடத்துனர்கள் மற்றும் 1895 ஓட்டுனர்களை தேர்ந்தெடுத்து வழங்கும் ஒப்பந்தங்களும் சில நிறுவனங்களுக்கு விரைவில் வழங்கப்படவுள்ளன.</p><p>இதில் கொடுமை என்னவென்றால், திமுக ஆட்சியில் கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளின் அடிப்படையில் இந்த ஒப்பந்தங்களை தவெக அரசு வழங்கியிருப்பது தான். திமுக ஆட்சியில் இறுதி செய்யப்பட்ட பல ஒப்பந்தங்களை, அவற்றில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி தவெக அரசு ரத்து செய்திருக்கிறது. ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அவற்றை பாட்டாளி மக்கள் கட்சியும் வரவேற்றிருக்கிறது. ஆனால், குத்தகை முறை பணி நியமனங்கள் தொழிலாளர்களின் உழைப்பையும், உரிமைகளையும் சுரண்டக் கூடியவை என்பதை அறிந்தும் அவற்றை தவெக அரசு தொடர்வது ஏன்? என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சி எழுப்பும் வினா.</p><p>திமுக ஆட்சியில் தான் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் குத்தகை முறையில் ஓட்டுனர்கள் &amp; நடத்துனர்களை நியமிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. குத்தகை முறையில் நியமிக்கப்படும் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் எந்த அளவுக்கு சுரண்டப்படுவார்கள் என்பதை பாட்டாளி மக்கள் கட்சி நன்றாக அறியும். அதுமட்டுமின்றி, குத்தகை முறையில் நடைபெறும் நியமனங்களில் இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்படுவதில்லை. அதனால் தான் குத்தகை முறை பணி நியமனங்களை தொடக்கம் முதலே பாட்டாளி மக்கள் கட்சி எதிர்த்து வருகிறது.</p><p>2026&amp;ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கு கண்ணியமான வாழ்க்கையும், சமூகப் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி சமூகநீதி தான் தங்களின் முதன்மைக் கொள்கை என்றும் தவெக கூறி வருகிறது. அப்படிப்பட்ட  தவெக, இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாத, உழைப்பைச் சுரண்டக்கூடிய  குத்தகைமுறை பணி நியமனங்களை நடைமுறைப்படுத்துவது ஏன்? என்பது பற்றி மக்களுக்கு விளக்க வேண்டும்.</p><p>மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் ஒட்டுமொத்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களின் எண்ணிக்கை 18,898 ஆகும். இவற்றில் திமுக ஆட்சிக்காலத்திலேயே 3692 ஓட்டுனர்களும், நடத்துனர்களும் குத்தகை முறையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்போது நியமிக்கப்படும் 1797 பேரையும் சேர்த்தால் குத்தகை பணியாளர் எண்ணிக்கை 4989 ஆக அதிகரிக்கும். மேலும் 1500 நடத்துனர்கள், 1895 ஓட்டுனர்கள் நியமிக்கப்படும் போது இந்த எண்ணிக்கை 8384 ஆக உயரும். இது மொத்த ஓட்டுனர், நடத்துனர் எண்ணிக்கையில் 45% ஆகும். ஒரு நிறுவனத்தில் 45% பணியாளர்கள் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டால், அங்கு சமூகநீதியும், சமநீதியும் எங்கிருந்து தழைக்கும்? மனித உரிமை எவ்வாறு மலரும்? என்ற வினாவுக்கு அரசு விடையளிக்க வேண்டும்.</p><p>அவுட்சோர்சிங் எனப்படும் குத்தகை முறை நியமனங்களை ஜனநாயகத்திலும், சமூகநீதியிலும் அக்கறை கொண்டு எந்த அரசாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தக் கொள்கைகளில் தவெக அரசுக்கு நம்பிக்கை இருந்தால் மாநகரப் போக்குவரத்துக் கழகம் மட்டுமின்றி, அனைத்து அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள்,  மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் குத்தகை முறை நியமனங்களை ரத்து செய்வதாக அறிவிக்க வேண்டும்; காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் காலமுறை ஊதிய அடிப்படையில் உடனே நிரப்ப வேண்டும்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தவெக ஆட்சியின் 100 நாள் சாதனை அல்ல; 100 நாள் வேதனை: வானதி சீனிவாசன் விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-100-days-of-tvk-rule-are-not-an-achievement-they-are-100-days-of-agony-vanathi-srinivasans-criticism</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-100-days-of-tvk-rule-are-not-an-achievement-they-are-100-days-of-agony-vanathi-srinivasans-criticism#comments</comments><guid isPermaLink="false">6871842c-252f-41b0-8f6c-1a63046bfe63</guid><pubDate>Mon, 17 Aug 2026 06:19:59 +0000</pubDate><atom:updated>2026-08-17T06:19:59.986Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,Tvk  government,தவெக ஆட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/vye1f9bo/vanathi-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/vye1f9bo/vanathi-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தேசிய பாஜக மகளிரணி தலைவர்<a href="https://www.dailythanthi.com/topic/vanathi-srinivasan"> வானதி சீனிவாசன்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>100 நாள் சாதனை அல்ல.. 100 நாள் வேதனை. </p><p>தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கியுள்ள அரிவாள் கலாசாரம், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியிருப்பது கவலை அளிக்கிறது. கடந்த சில நாட்களில் மட்டும் காஞ்சிபுரத்தில் இரு இளைஞர்கள் வெட்டிக் கொலை, சிவகங்கை திருப்புவனத்தில் இளைஞர் வெட்டிக் கொலை, ஆட்டோவில் பெண் கொலை, கோவையில் மாணவர் கொலை என அடுத்தடுத்து அரங்கேறும் கொலைச் சம்பவங்கள் தமிழக மக்களை அதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளன.</p><h2>சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு</h2><p>தவெக அரசு பதவியேற்ற 100 நாட்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குற்ற சம்பவங்கள் நடந்திருப்பது இந்த ஆட்சியின் சட்டம்-ஒழுங்கு மீதான அக்கறையை கேள்விக்குறியாக்குகின்றன. இது 100 நாள் சாதனை அல்ல.. 100 நாள் வேதனை.  அமைதி பூங்காவாக திகழ்ந்த தமிழகத்தில், இன்று ஆயுதங்கள் சர்வசாதாரணமாக புழங்குவதும், கொலைகள் தொடர்ச்சியாக நடைபெறுவதும் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவின் வெளிப்பாடாகும்.</p><h2>அரிவாள் கலாசாரம்</h2><p>எனவே தமிழக முதல் அமைச்சர் விஜய் ஆட்சியின் திட்டங்கள், அறிவிப்புகள், விளம்பரங்களை விட முதலில் மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கும் அரிவாள் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கோவை: மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-villagers-organized-a-wedding-for-donkeys-hoping-it-would-bring-rain</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-villagers-organized-a-wedding-for-donkeys-hoping-it-would-bring-rain#comments</comments><guid isPermaLink="false">43348fd4-64db-48b2-9da0-5f380fa60da6</guid><pubDate>Mon, 17 Aug 2026 06:16:51 +0000</pubDate><atom:updated>2026-08-17T06:16:51.628Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவை,Rain,மழை,Marriage,Kovai,donkeys,கழுதைகளுக்கு திருமணம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/8pwre2w0/1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கழுதை திருமணம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/8pwre2w0/1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவை மாவட்டம் லக்கிபாளையம் கிராமத்தில் கடந்த ஆறு மாதங்களாக மழை பெய்யவில்லை. இதனால் கிராமத்தில் வறட்சி நிலவியது. மழை பெய்வதற்காக கழுதைகளுக்கு திருமணம் செய்து வைக்க கிராம மக்கள் முடிவு செய்தனர்.</p><h2>கழுதை திருமணம் </h2><p>அதன்படி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு, பெண் கழுதைக்கு புடவை, வளையல் மற்றும் மாலை அணிவித்தனர். ஆண் கழுதைக்கு வேட்டி, துண்டு அணிவித்து மணமகன் அலங்காரம் செய்தனர். இதனை தொடர்ந்து லக்கிபாளையத்தில் உள்ள  சுப்பிரமணிய கோவிலில் பூஜைகள் செய்யப்பட்டு மேலத்தாளங்களுடன் பெண் கழுதைக்கு தாலி அணிவித்து திருமணம் செய்து வைத்தனர். பின்னர் திருமண விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கம்பங்கூழ் வழங்கப்பட்டது. இந்த திருமணத்தை தொடர்ந்து மழைப்பெய்யும் என்ற நம்பிக்கையில் கிராம மக்கள் காத்திருக்கின்றனர்.</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3">கழுதைகளுக்கு திருமணம்</a> செய்து வைத்தால் மழை பெய்யும் என்பது ஐதீகம் என்றும் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற திருமணம் நடத்தியதால் மழை பெய்ததாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>‘முதல்-அமைச்சர் விஜய்யின் முதல் 100 நாள் பதவிக்காலம் தமிழக வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்’ - சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijays-first-100-days-in-office-mark-a-significant-milestone-in-tamil-nadus-history-speaker-jcd-prabhakar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijays-first-100-days-in-office-mark-a-significant-milestone-in-tamil-nadus-history-speaker-jcd-prabhakar#comments</comments><guid isPermaLink="false">1ca87df7-4662-4196-9e01-e2cbbaf32643</guid><pubDate>Mon, 17 Aug 2026 06:09:02 +0000</pubDate><atom:updated>2026-08-17T06:09:02.351Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,ஜே.சி.டி.பிரபாகர்,Speaker J.C.T. Prabhakar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/n7lum4al/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/n7lum4al/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>தமிழகத்தில் அரை நூறாண்டுக்கும் மேலாக மாறி, மாறி ஆட்சி செய்து வந்த தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு பெரும் திராவிட கட்சிகளை எதிர்த்து, புதிதாக துவங்கப்பட்ட விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சி, கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. தமிழகத்தின் முதல்-அமைச்சராக கடந்த மே 10-ந்தேதி விஜய் பதவியேற்றார். </p><p>தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்று இன்றுடன்(திங்கட்கிழமை) 100 நாட்கள் ஆகியுள்ளது. இந்நிலையில், ‘முதல்-அமைச்சர் விஜய்யின் 100 நாள் பதவிக்காலம் தமிழக வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்’ என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து இன்று சட்டசபையில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறியதாவது;-</p> <p>“முதல்-அமைச்சர் விஜய்யின் முதல் 100 நாட்கள் பதவிக்காலம், தமிழ்நாட்டின் வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லை குறிக்கிறது. பெண்கள் பாதுகாப்பு, சமூக நலத் திட்டங்கள், 200 யூனிட் இலவச மின்சாரம், கூட்டுறவு விவசாயக் கடன் தள்ளுபடி, ஏழைகளுக்கு தரமான வீடுகள் கட்டும் அறிவிப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் என பல பாராட்டத்தக்க முன்னெடுப்புகளை முதல்-அமைச்சர் விஜய் மேற்கொண்டு, இது மக்களுக்கான அரசு என்பதை நிரூபித்துள்ளார்.</p><p>வெளிப்படையான மற்றும் ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்யவும், நமது மாநிலத்தை வளம் மிக்க மற்றும் வலிமையான தமிழ்நாடாக மாற்றுவதற்கும் தேவையான எதிர்காலக் கனவுகளுக்கு இந்த மைல்கல் ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துத் தருகிறது.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>
மதுரையில் பரபரப்பு: விசாரணைக்கு சென்று வந்த பூசாரி திடீர் மரணம்; போலீசார் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/commotion-in-madurai-priest-dies-after-police-questioning-relatives-allege-assault</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/commotion-in-madurai-priest-dies-after-police-questioning-relatives-allege-assault#comments</comments><guid isPermaLink="false">1934676b-9c5a-4c3d-8730-d35bcb5722a6</guid><pubDate>Mon, 17 Aug 2026 05:56:32 +0000</pubDate><atom:updated>2026-08-17T05:56:32.825Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,temple priest,கோவில் பூசாரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/ucv39zy4/tpawp.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/ucv39zy4/tpawp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>மதுரை</p><p>மதுரையில் விசாரணைக்கு சென்று வந்த பூசாரி, போலீசார் தாக்கியதில் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><p>மதுரை மேலஅனுப்பானடி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 52). கோவில் பூசாரி. இவருடைய மனைவி அய்யம்மாள். இவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் வாகனங்களை நிறுத்துவது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த மாதம் இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது.</p><p>இதில் அய்யம்மாளுக்கு தலையில் காயம் ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனை தொடர்ந்து இரு தரப்பினரும், சிந்தாமணி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.</p>  <h2>திடீர் மரணம்</h2><p>இந்தநிலையில் கடந்த மாதம் 19-ந்தேதி, போலீசார் விசாரணை செய்ய வேண்டும் என கூறி பரமசிவத்தை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது போலீசார் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து விசாரணை முடிந்து வீட்டிற்கு வந்த பரமசிவத்திற்கு தொடர்ச்சியாக வாந்தி, மயக்கம், தலைவலி ஏற்பட்டு அவதிப்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்தநிலையில் நேற்று காலை பரமசிவம் திடீரென உயிரிழந்தார்.</p>  <h2>உறவினர்கள் புகார் மனு</h2><p>இந்தநிலையில் உயிரிழப்பதற்கு முன்பு பரமசிவம் சில வீடியோக்களை எடுத்துள்ளார். அதில், போலீசார் தன்னை கடுமையாக தாக்கியதாகவும், அதனால் என் உயிருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், என்னை தாக்கிய போலீசார்தான் காரணம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த வீடியோவில் கூறி இருந்தார்.</p><p>இதற்கிடையே, அய்யம்மாள் தரப்பில், முதல்-அமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டர், மாநகர போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோருக்கும் புகார் மனு அனுப்பி உள்ளனர். அதில், பரமசிவம் மரணத்திற்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.</p><p>இதுகுறித்து அவரது உறவினர்கள் கூறுகையில், போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்றபோது, பரமசிவத்தை அவர்கள் கடுமையாக தாக்கி உள்ளனர். மேலும் ஷூ காலால் அவரது தலையில் கடுமையாக தாக்கினர். அதனால் அவர் அங்கேயே வாந்தி எடுத்து மயங்கினார். போலீசார் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். மேலும், போலீசார் தாக்கியது குறித்து வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது எனவும் எச்சரித்து அனுப்பி வைத்தனர். அவரது இறப்புக்கு காரணமான போலீசார் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கூறினர்.</p>  <h2>ஆர்.டி.ஓ. விசாரணை</h2><p>இதுகுறித்து போலீசார் கூறுகையில், போலீசார் தாக்கியதில் பரமசிவம் உயிரிழக்கவில்லை. அவருக்கு ஏற்கனவே, உடல்நல பாதிப்பு உள்ளது. இறப்பதற்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோக்களை, அவரது குடும்பத்தினர் அவர் இறந்த பின்னர் வெளியிட்டுள்ளனர்.</p><p>அவர் இறப்புக்கான உண்மையான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவரும். மேலும், போலீஸ் அதிகாரிகள் மீது அவர்கள் புகார் அளித்துள்ளதால், ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது. விசாரணையின் முடிவில்தான் அவரது இறப்பு குறித்து முழுவிவரம் தெரியவரும் என்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>துறை சார்ந்த கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்கவில்லை: உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ministers-failed-to-answer-department-specific-questions-udhayanidhi-stalins-allegation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ministers-failed-to-answer-department-specific-questions-udhayanidhi-stalins-allegation#comments</comments><guid isPermaLink="false">54ab1679-4ba2-4657-ae54-9ff78a7a2294</guid><pubDate>Mon, 17 Aug 2026 05:36:18 +0000</pubDate><atom:updated>2026-08-17T05:36:18.788Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,சட்டசபை,Legislative Assembly</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/rnzgz90y/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/rnzgz90y/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>எதிர்க்கட்சி எழுப்பிய கேள்விகளுக்கு உரிய விளக்கம் தரவில்லை எனக்கூறி சட்டசபையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது. இதன் பின்னர் சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;</p><p>”மாணவர் கொலை, பாலியல் வன்கொடுமை தொடர்பான கேள்விகளுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை. மாணவர்கள் கொலை மீதான கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பதிலளிக்காமல் எங்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர். எல்லாவற்றுக்கும் திமுக மீது குறை சொல்கின்றனர். </p><p>எந்த துறைக்கு யார் அமைச்சர்கள் என்று தெரியவில்லை. அந்தந்த துறை அமைச்சர் அந்தந்த துறை கேள்விகளுக்கான பதிலை அளிக்கவில்லை. எந்த அமைச்சர்களும் துறை சார்ந்த கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை. சட்டம், ஒழுங்கிற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர் இன்று சட்டசபைக்கு வரவில்லை.”</p><p>இவ்வாறு அவர் பேசினார். </p> ]]></content:encoded></item><item><title>போதைப்பொருள் பழக்கம் எந்த ஆட்சியில் அதிகரித்தது..? - சட்டசபையில் காரசார விவாதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/under-which-administration-did-drug-abuse-increase-heated-debate-in-the-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/under-which-administration-did-drug-abuse-increase-heated-debate-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">20d4bcd6-2d62-4d75-b109-2e073e78f145</guid><pubDate>Mon, 17 Aug 2026 05:24:43 +0000</pubDate><atom:updated>2026-08-17T05:24:43.406Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,தவெக,அதிமுக,திமுக,DMK,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,ஆதவ் அர்ஜுனா,சட்டசபை,drugs,போதைப்பொருள்,TN Assembly,CTR Nirmal kumar,நிர்மல் குமார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/vn4gvq97/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/vn4gvq97/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>4 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் தமிழக சட்டசபை இன்று மீண்டும் தொடங்கியது. இன்று முதல் துறைவாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.</p><p>முன்னதாக சட்டசபையில், கோவையில் மாணவர் அமுதன் கொலை வழக்கு, கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து விவாதம் நடத்த திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.</p><h2><strong>உதயநிதி ஸ்டாலின்</strong></h2><p><strong>இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,</strong> கடந்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் ஏராளமான கொலைகள் நடந்துள்ளன. கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். 20 பேர் சேர்ந்து ஒரு மாணவரை அடித்துக் கொன்றுள்ளனர். அமுதன் கொலை கோஷ்டி மோதல் அல்ல. போதைப்பொருள் கும்பல் குறித்து தகவல் தெரிவித்த‌தால் கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p>கோவை மாணவன் அமுதன் கொலையை தனிப்பட்ட சம்பவமாகவோ, கோஷ்டி பூசலாகவோ கடந்து போய்விட முடியாது. அரசின் அலட்சியத்தால், காவல்துறையின் பொறுப்பற்ற போக்கு தான் கொலைக்கு காரணம் என்பது தான் குற்றச்சாட்டு. இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பேசினார்.</p><p>கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து விவாதம் தேவை என்றும் எண்ணூர் ஆற்றில் மீன்கள் கொத்து கொத்தாக இறந்ததால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது இது குறித்தும் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார்.</p><p><strong>அதிமுக எம்.எல்.ஏ. காமராஜ் பேசுகையில்,</strong> “20 பேர் கொண்ட கும்பலால் அமுதன் அடித்து கொலை. கோவை மாணவர் கொலையில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. உரிய நடவடிக்கை தேவை. ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். ஒருவரை 25 பேர் அடித்துக் கொல்வது எப்படி கோஷ்டி மோதலாகும்?. பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் புழக்கத்தை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறினார்.</p><p><strong>பாமக எம்.எல்.ஏ. கணேஷ்குமார் பேசுகையில்,</strong> “கோவை மாணவர்கள் கொலை வழக்கில் காவல்துறை விளக்கம் ஏற்புடையதல்ல. கடந்த 24 மணி நேரத்தில் 5 கொலைகள் நடந்துள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்வது வேதனை. பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருள் எளிதாக கிடைக்கிறது. கடந்த ஆட்சி என்னென்ன காரணங்களுக்காக விமர்சிக்கப்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதோ, இந்த ஆட்சியிலும் போதை பொருள் புழக்கமும், பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களும் இன்றும் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது</p><p>இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருக்க அரசு வெளிப்படைத்தன்மையுடன் விசாரணை நடத்த வேண்டும்; அமுதன் மற்றும் தனுஷ் கொலை குறித்து ஓய்வு பெற்ற நீதியரசர் கொண்டு விசாரணை நடத்த வேண்டும்” என்று கூறினார்.</p><p><strong>சிபிஎம் எம்.எல்.ஏ செல்லசுவாமி பேசுகையில்,</strong> “கோவையில் கடந்த 10 நாட்களில் 3 கொலை சம்பவங்கள் நடந்துள்ளது. தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சரி செய்ய வேண்டும் என்றால் காவல்துறையில் களை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.</p><h2>திசை திருப்ப வேண்டாம்</h2><p><strong>இதையடுத்து கவன ஈர்ப்பு தீர்மானத்தில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்து கூறியதாவது:-</strong></p><p>மாணவர் கொலை வழக்கு போதைப் பொருள் புகார் தொடர்பானது இல்லை; உண்மை நிலவரத்திற்கு மாறாக வழக்கை திசை திருப்ப வேண்டாம். எதிர்க்கட்சிகள் கூறியது போல எந்த ஒரு சம்பவமும் நடைபெறவில்லை. மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாகவே இந்த கொலை நடந்துள்ளது. கோவை மாணவர் கொலையில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>உண்மையை மறைக்க வேண்டிய தேவை காவல்துறைக்கோ, அரசுக்கோ இல்லை. போதைப்பொருள் குறித்து புகார் அளித்ததால் கொலை என்பது தவறு. சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் 3 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.</p><h2>எந்த சம்பவமும் நடைபெறாமல்</h2><p><strong>தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது:-</strong></p><p>பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் எங்கள் குழந்தைகள். நேர்மையான முறையில் விசாரணை நடத்த முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் துன்பத்தில் அரசு பங்கெடுக்கிறது. மாணவர்கள் கொலை தொடர்பாக உரிய விசாரணை நடக்கிறது. கோவை மாணவர் கொலை வழக்கில் நீதி நிலைநாட்டப்படும். கல்வி நிறுவனங்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது.</p><p>மாணவர் தனுஷ் குடும்பத்திற்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை. மாணவர் தனுஷின் சகோதரருக்கு அரசு வேலை வழங்கப்படும். தவெக அரசை பொறுத்தவரை நீதி நிலைநாட்டப்பட வேண்டும்; இனி இது போல எந்த சம்பவமும் நடைபெறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறோம் என்று கூறினார்.</p><h2>காரசார விவாதம்</h2><p>தொடர்ந்து போதை பொருள் மன்னன் ஜாபர் சாதிக்குடன் திமுக அமைச்சர்களுக்கும் தொடர்பு இருந்ததாக அமைச்சர் நிர்மல்குமார் குற்றம் சாட்டினார். </p><p>இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, “ஜாபர் சாதிக் மீதான குற்றச்சாட்டு வந்த போது, அவர் மீது கட்சி நடவடிக்கை எடுத்தது. ஆனால் உங்கள் அமைச்சர் ஒருவர் மைதானத்தில் பவுடர் வைத்திருந்தார். அதை உலகமே பார்த்திருக்கிறது. அது பற்றி அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதா? நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்று கேள்வி எழுப்பினார்.</p><p>இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சரத்குமார் கூறுகையில், ஸ்டேடியத்தில் நடந்ததற்கான விளக்கத்தை நான் அளித்துவிட்டேன். அதில் முரண்பாடு இருந்தால், அந்த நிகழ்வு நடந்தது திமுக ஆட்சியில் தான். அப்போது ஸ்டேடியத்தில் போதை பொருளை அவர்கள் அனுமதித்தார்களா? விளக்கம் அளித்த பின் தேவையில்லாத கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம்.</p><p>என் மீது கூறப்படும் புகார் நடைபெற்றது திமுக ஆட்சி காலத்தில் அப்படியானால் திமுக ஆட்சி காலத்தில் போதை பொருள் விற்றதை ஒப்புக் கொள்கிறீர்களா? என்று கூறினார். இவ்வாறு தமிழக சட்டசபையில் தொடக்கத்திலேயே காரசார விவாதம் நடந்தது.</p>]]></content:encoded></item><item><title>திமுக ஆட்சியில் போதைப்பொருள், பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rise-in-drug-abuse-and-sexual-violence-under-dmk-rule-aadav-arjunas-allegation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rise-in-drug-abuse-and-sexual-violence-under-dmk-rule-aadav-arjunas-allegation#comments</comments><guid isPermaLink="false">9ba65843-e1fc-4719-b2a9-00a19fb69dc8</guid><pubDate>Mon, 17 Aug 2026 05:15:08 +0000</pubDate><atom:updated>2026-08-17T05:15:08.311Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>drug eradication,போதைப்பொருள் ஒழிப்பு,அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,Minister Aadav Arjuna</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/vzyzbag1/11.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/vzyzbag1/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டசபையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது;</p><p>கடந்த 2020ம் ஆண்டுக்கு முன்பு தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் இல்லை. போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்ததால்தான் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரிக்கிறது. திமுக ஆட்சியில் போதைப்பொருள், பாலியல் வன்கொடுமை அதிகரித்தது. திமுக ஆட்சியில் போக்சோ வழக்குகள் 40 சதவீதம் அதிகரித்துள்ளன. திமுக ஆட்சியில் காவல்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில் பேசுகிறேன். தவெகவின் அறிக்கை அல்ல. </p> <p>போதைப்பொருள் அதிகரிப்பு &nbsp;காரணமாகத்தான் திமுகவை மக்கள் தூக்கி எறிந்துள்ளனர். தவெக ஆட்சியில் போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர் கொலை வழக்கில் காவல்துறையின் அறிக்கையா? அல்லது இறந்தவர்களின் தாயா? என்றால், எங்கள் முதல்வர் அந்த தாயின் பக்கம் தான் இருப்பார். எந்த அழுத்தத்திற்கும் இடம் தரமாட்டோம்.”</p><p>இவ்வாறு அவர் பேசினார். </p> ]]></content:encoded></item><item><title>கடந்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் ஏராளமான கொலைகள் - சட்டப்பேரவையில் உதயநிதி பேச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/numerous-murders-in-tamil-nadu-over-the-past-week-udhayanidhi-speaks-in-the-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/numerous-murders-in-tamil-nadu-over-the-past-week-udhayanidhi-speaks-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">d704568e-49a5-454f-a113-cc02ed9c1bb0</guid><pubDate>Mon, 17 Aug 2026 04:53:20 +0000</pubDate><atom:updated>2026-08-17T04:53:20.344Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,போதைப்பொருள்,drug case</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/fe337s76/10.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/fe337s76/10.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>கோவை மாணவர் கொலை தொடர்பான சிறப்பு கவன தீர்மானத்தின்போது எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது;</p><p>”கடந்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் ஏராளமான கொலைகள் நடந்துள்ளன. கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். 20 பேர் சேர்ந்து ஒரு மாணவரை அடித்துக் கொன்றுள்ளனர். அமுதன் கொலை கோஷ்டி மோதல் அல்ல. போதைப்பொருள் கும்பல் குறித்து தகவல் தெரிவித்த‌தால் கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p>சென்னை திருவொற்றியூரில் பள்ளி மாணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 30 பேர் கும்பலால் மாணவர் தனுஷ் அடித்து கொலை. காஞ்சிபுரத்தில் 2 இளைஞர்கள் வெட்டிக்கொலை. போதை கும்பலை தட்டிக் கேட்ட‌தால் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். </p><p>கோவை மாணவன் அமுதன் கொலையை தனிப்பட்ட சம்பவமாகவோ, கோஷ்டி பூசலாகவோ கடந்து போய்விட முடியாது. அரசின் அலட்சியத்தால், காவல்துறையின் பொறுப்பற்ற போக்கு தான் கொலைக்கு காரணம் என்பது தான் குற்றச்சாட்டு. இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” </p><p>இவ்வாறு அவர் பேசினார். </p>   ]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் வழக்கு: ஐ.பி.எஸ் அதிகாரியின் சகோதரருக்கு லுக் அவுட் நோட்டீஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-case-lookout-notice-issued-for-ips-officers-brother</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-case-lookout-notice-issued-for-ips-officers-brother#comments</comments><guid isPermaLink="false">dc9063d6-92ea-48dc-b75e-3e162542042a</guid><pubDate>Mon, 17 Aug 2026 04:49:39 +0000</pubDate><atom:updated>2026-08-17T04:49:39.274Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>IPS Officer,லுக் அவுட் நோட்டீஸ்,Look Out Notice,ஐ.பி.எஸ் அதிகாரிகள்,டாஸ்மாக் வழக்கு,TASMAC Case</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/j08h17jl/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/j08h17jl/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>டாஸ்மாக் முறைகேடு</h2><p>டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை கடைகளுக்கு கொண்டு செல்ல போக்குவரத்து டெண்டர் வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.</p><p>செந்தில்பாலாஜி, முன்னாள் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் எஸ்.விசாகன், முன்னாள் அதிகாரிகள் டி.ராமதுரை முருகன், ஆர்.பன்னீர்செல்வம், செந்தில்பாலாஜியின் உதவியாளர் பாஸ்கர், ஐபிஎஸ் அதிகாரியின் சகோதரரான ரத்தேஷ் ராஜ், சண்முகவேல், எஸ்.கார்த்திக் (எ) முலனூர் கார்த்திக் ஆகிய 7 பேர் மீது ஊழல் ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. </p><h2>லுக் அவுட் நோட்டீஸ்</h2><p>ரத்தேஷ் ராஜ், டாஸ்மாக் நிர்வாகத்தில் அங்கீகரிக்கப்படாத இடைத்தரகராக செயல்பட்டு, மதுபான பிராண்ட் அனுமதி, பார் உரிமங்களுக்கான ஒப்பந்தப்புள்ளிகள், அதிகாரிகள் இடமாற்றம் உள்ளிட்டவற்றில் செல்வாக்கு செலுத்தியதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த நிலையில், டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரியின் சகோதரர் ரத்தேஷ் ராஜூவுக்கு லஞ்ச ஒழிப்புத் துறையினர் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். தலைமறைவாக ரத்தேஷ் ராஜூவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அவர் வேறு நாட்டிற்கு தப்பி செல்லாமல் இருக்கவும், இந்தியா வந்தால் கைது செய்யவும், 'லுக் அவுட் நோட்டீஸ்' வழங்கி உள்ளனர். இந்த வழக்கில் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ஒரு தேர்வைக்கூட முறையாக நடத்த முடியாத மோடி அரசு: மாணிக்கம் தாகூர் விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/modi-government-cannot-even-conduct-a-single-election-properly-manickam-thakur-criticizes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/modi-government-cannot-even-conduct-a-single-election-properly-manickam-thakur-criticizes#comments</comments><guid isPermaLink="false">bbd916ce-610f-473e-8574-919429172207</guid><pubDate>Mon, 17 Aug 2026 04:49:13 +0000</pubDate><atom:updated>2026-08-17T04:49:13.405Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Modi government,மோடி அரசு,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Thakur MP</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/7kj86tfd/9.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/7kj86tfd/9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை.</p><p>தமிழக காங்கிரஸ் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">மாணிக்கம் தாகூர் </a>தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>NTA குளறுபடி செய்யும், NDA வேடிக்கை பார்க்கும் - இடையில் சிதைவது மாணவர்களின் எதிர்காலம் மட்டுமே!</p><h2>நிர்வாகச் சீர்கேடு</h2><p>87 பாடப்பிரிவுகளில் அல்லும் பகலும் படித்து, தங்கள் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் முழுமையாக வெளிப்படுத்தி மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள்; ஆனால், ஒன்றிய மோடி அரசின் நிர்வாகச் சீர்கேடும் தோல்வியடைந்த அமைப்பும் நாட்டின் லட்சக்கணக்கான இளம் மாணவர்களின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையுமே பாழாக்கியுள்ளது.</p><p>‘Exam Warriors’ என்று கவர்ச்சிகரமான வார்த்தைகளில் வாழ்த்துச் சொல்லும் நரேந்திர மோடி அவர்களே, மாணவர்கள் நிஜ வாழ்க்கையில் உங்கள் NTA-வின் குளறுபடிகளோடும்தான் போராட வேண்டுமா? </p><p>தவறுகள் முழுமையாக NTA பக்கம் இருக்கும்போது, அமைப்பின் தோல்விகளுக்குத் துளியும் பொறுப்பேற்காமல் மத்திய அரசு தட்டிக்கழிப்பதும், அதற்கான அலைச்சலையும் மன உளைச்சலையும் அப்பாவி மாணவர்கள் மட்டுமே சுமப்பதும் என்ன நியாயம்?</p><h2>தொடர் நிர்வாகத் தோல்வி</h2><p>அடிப்படை முறைகேடுகளும் குளறுபடிகளும் தர்மேந்திர பிரதான் கல்வி மந்திரியாக இருந்த காலத்திலேயே அரங்கேறின; மாணவர்களின் தொடர் போராட்டங்களாலும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் அழுத்தத்தாலும் அவர் பதவி விலகிய பின்னரும்கூட, நாடாளுமன்றத்தில் கொண்டாடிப் பாராட்டியது இதே பாஜக அரசுதான். இப்போது கல்வித்துறையைப் பொறுப்பேற்றுள்ள பிரகலாத் ஜோஷி அவர்களே, அவருக்கும் மேலாக நீங்களும் இதற்குப் பதில் சொல்லியே தீர வேண்டும்; இந்தத் தொடர் நிர்வாகத் தோல்விக்கு நீங்களும் முழுப் பொறுப்பாளி.</p><p>தொழில்நுட்பம் கோலோச்சும் இந்த டிஜிட்டல் யுகத்திலும், ஒரு தேர்வைக்கூடச் சரியாக நடத்த முடியாத மோடி அரசின் அலட்சியத்தால் மாணவர்களின் வாழ்க்கை நடுத்தெருவில் நிற்கிறது! நான் ஏற்கனவே சுட்டிக்காட்டியது போல, மாணவர்களுக்கு இந்த NTA என்பது ‘National Testing Agency’ அல்ல, முழுமையாக நம்பகத்தன்மையை இழந்த "No Trust Agency" - 0! உங்கள் நிர்வாகத் தோல்விகளுக்கு அப்பாவி மாணவர்களை இன்னும் எத்தனை காலம் பலிகடா ஆக்கப் போகிறீர்கள்? </p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திருமாவளவனுக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/actor-rajinikanth-birthday-wishes-to-thirumavalavan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/actor-rajinikanth-birthday-wishes-to-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">6b9224c4-ce20-4405-8fde-b256ef12ee42</guid><pubDate>Mon, 17 Aug 2026 04:31:45 +0000</pubDate><atom:updated>2026-08-17T04:31:45.902Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajinikanth,திருமாவளவன்,Thirumavalavan,நடிகர் ரஜினிகாந்த்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/x5281cr1/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/x5281cr1/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு முதல்-அமைச்சர் விஜய், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.</p><p>அந்த வகையில், திருமாவளவனுக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். <strong>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,</strong></p><p>தனது 28-ம் வயதில் கட்சி ஆரம்பித்து, 36 ஆண்டுகள் கட்சியை கட்டி காப்பாத்தி, தன்னுடைய கொள்கைகளையும், சித்தாந்தத்தையும், விட்டு கொடுக்காமல், ஒரு தொண்டனையும் இழக்காமல், ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு வேண்டுமென்று ஓயாமல் போராடி, அதையும் சாதித்தவர் என்னுடைய அருமை நண்பர் தொல்.திருமாவளவன்.</p><p>65-ஆவது வயதில் நுழையும் இந்த தருணத்தில் அவர் பெரும் பேறும் புகழும் பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து, மக்கள் சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் ரூ.500 கோடியில் நீர்நிலைகள் புனரமைப்பு; அமைச்சர் ஆனந்த் தொடங்கி வைத்தார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-anand-inaugurated-the-reconstruction-of-water-bodies-in-tamil-nadu-at-a-cost-of-rs-500-crore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-anand-inaugurated-the-reconstruction-of-water-bodies-in-tamil-nadu-at-a-cost-of-rs-500-crore#comments</comments><guid isPermaLink="false">6a563163-0a9c-4067-b2fc-c4d4aa680301</guid><pubDate>Mon, 17 Aug 2026 04:18:07 +0000</pubDate><atom:updated>2026-08-17T04:18:07.025Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழகம்,Water bodies,நீர்நிலைகள்,reconstruction,புனரமைப்பு பணி,In Tamil Nadu,அமைச்சர் ஆனந்த்,Minister Anand</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/67kue14g/118.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/67kue14g/118.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>செங்கல்பட்டு,</p><p>அமைச்சர் ஆனந்த் ரூ.3.19 கோடி மதிப்பீட்டிலான புனரமைப்புப் பணிகளை செங்கல்பட்டில்தொடங்கி வைத்தார்.</p><p>தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, இன்று (17.08.2026) திங்கட்கிழமை, வளர்ச்சியடைந்த பாரதம் – கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் (VB-GRAMG) கீழ், தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 10,185 வரத்துக் கால்வாய்கள் மற்றும் 809 ஏரிகள், குளங்கள் மற்றும் ஊரணிகள், ரூ.500 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.</p><p>மழைநீரை முறையாக சேமித்து, நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிப்பதுடன், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு நீர்வளத்தை பாதுகாக்கவும் இப்புனரமைப்புப் பணிகள் முக்கிய பங்காற்றும்.</p><h2>அமைச்சர் ஆனந்த் தொடங்கி வைத்தார்</h2><p>இதன் ஒரு பகுதியாக, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை <a href="https://www.dailythanthi.com/topic/minister-anand">அமைச்சர் ஆனந்த்</a>, செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியம், நெடுங்குன்றம் ஊராட்சியில் உள்ள புத்தூர் கிராம ஏரி வரத்துக் கால்வாயில் ரூ.3.19 கோடி மதிப்பீட்டிலான புனரமைப்புப் பணிகளை தொடங்கி வைத்தார்.</p><p>தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் நீர்நிலைகளை பாதுகாத்து, நீர்வளத்தை மேம்படுத்தி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.</p><p>இந்நிகழ்வில் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் டி.சரத்குமார், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம். வீரப்பன், ஐ.ஏ.எஸ்.,  செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தியாகராஜன், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் விஜயராஜ் , ஊராட்சித் துறை ஆணையர் வி.அமுதவல்லி, ஐ.ஏ.எஸ்.,அவர்கள் மற்றும் துறை சார்ந்த பிற அதிகாரிகள் உடன் இருந்தனர்.</p>]]></content:encoded></item></channel></rss>