<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 10 Aug 2026 16:45:50 +0000</lastBuildDate><item><title>10 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் அருவி நாளை திறக்கப்படும் - வனத்துறை அறிவிப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kovai-kutralam-falls-closed-for-over-10-days-will-reopen-tomorrow-forest-department-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kovai-kutralam-falls-closed-for-over-10-days-will-reopen-tomorrow-forest-department-announcement#comments</comments><guid isPermaLink="false">4937ece8-8342-436c-a959-f26738484920</guid><pubDate>Mon, 10 Aug 2026 16:44:37 +0000</pubDate><atom:updated>2026-08-10T16:44:37.747Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை குற்றாலம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/mv9fniky/STate-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/mv9fniky/STate-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் கோவை குற்றாலம் அருவி உள்ளது. இங்கு கோவை மட்டுமின்றி பிற பகுதிகளை சேர்ந்த பொது மக்களும் அதிகளவு வருகின்றனர். கோவை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு கட்டணம் விதிக்கப்படுகிறது.</p><p>கோவை குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நீர்வீழ்ச்சி நுழைவு வாயில் அருகே நிறுத்தி வைக்கப்படுகிறது. அங்கிருந்து வனத்துறை வாகனத்தில் சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சிக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். அங்கு அவர்கள் குளித்து முடித்ததும், வனத்துறை வாகனத்தில் மீண்டும் நுழைவு வாயில் பகுதிக்கு அழைத்து வரப்படுகின்றனர்.</p><p>இதனிடையே கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, பாதுகாப்பு கருதி கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இதன்படி கடந்த 10 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் அருவி 11-ந்தேதி(நாளை) முதல் திறக்கப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது. தொடர்ந்து அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>புதுக்கோட்டையில் சாலை விபத்து:  தம்பதி பலி; 2 மகள்கள் காயம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/road-accident-in-pudukkottai-couple-killed-two-daughters-injured</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/road-accident-in-pudukkottai-couple-killed-two-daughters-injured#comments</comments><guid isPermaLink="false">6fe8fac3-207c-48e0-b5dd-c02ceeff8a01</guid><pubDate>Mon, 10 Aug 2026 16:41:30 +0000</pubDate><atom:updated>2026-08-10T16:41:30.667Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சாலை விபத்து,road accident,Pudukkottai,புதுக்கோட்டை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/p4gxmsvj/tnmats.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/p4gxmsvj/tnmats.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>புதுக்கோட்டை</p><p>புதுக்கோட்டையில் நடந்த சாலை விபத்தில் தம்பதி உயிரிழந்ததுடன், அவர்களுடைய 2 மகள்கள் காயம் அடைந்தனர்.</p><p><a href="https://www.dailythanthi.com/news/india">புதுக்கோட்டை</a> மாவட்டம் மேலமுத்துடையான்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் சதீஷ்குமார்.  இவருடைய மனைவி திலக சந்திரா.  இவர்கள் இருவரும் மகள்களான தர்ஷிகா, நிரஞ்சனா ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.</p>  <h2>தம்பதி பலி</h2><p>அவர்களுடைய வாகனம் திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது.  இந்த சம்பவத்தில், அதில் பயணம் செய்த தம்பதிகள் இருவரும் உயிரிழந்தனர்.</p><p>அவர்களின் இரு மகள்களான தர்ஷிகா, நிரஞ்சனா படுகாயம் அடைந்தனர்.  இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார், அவர்கள் இருவரையும் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>சதுரகிரி மலைக்கு நாளை பக்தர்கள் செல்ல தடை... ஆடி அமாவாசைக்கு அனுமதி கிடைக்குமா?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-devotees-visiting-sathuragiri-hill-tomorrow-will-permission-be-granted-for-aadi-amavasai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-devotees-visiting-sathuragiri-hill-tomorrow-will-permission-be-granted-for-aadi-amavasai#comments</comments><guid isPermaLink="false">c9375996-f58d-4c68-b7c3-176a12f9693b</guid><pubDate>Mon, 10 Aug 2026 16:33:11 +0000</pubDate><atom:updated>2026-08-10T16:33:11.949Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>sathuragiri hills,சதுரகிரி,aadi amavasai,ஆடி அமாவாசை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/gpwmo5i9/sa.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சதுரகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து காட்டுத் தீ பரவி வருவதால், பக்தர்கள் நாளை (ஆக. 11) மலைக்கு செல்வதற்கு தடை விதித்து வனத்துறை அறிவித்துள்ளது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/gpwmo5i9/sa.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர்,</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF">சதுரகிரி </a> மலைக்கு பக்தர்கள் நாளை (ஆக. 11) செல்வதற்கு தடை விதித்து வனத்துறை அறிவித்துள்ளது.</p><h2>ஆடி அமாவாசை</h2><p>சதுரகிரி கோவில் பகுதியில் தொடர்ந்து காட்டுத்தீ பரவி வருகிறது. இதனால் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாளை மலையேற வனத்துறை தடை விதித்துள்ளது.</p><p>காட்டுத் தீயின் தன்மையை பொறுத்து, ஆடி அமாவாசை தினத்தன்று பக்தர்களை மலையேற அனுமதிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எம் தமிழ் மொழியின் ஆளுமையுடன், ஒரு மதத்தை ஒப்பிட்டு பேசுவது சரிதானா நிதி அமைச்சரே? - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-it-right-finance-minister-to-compare-a-religion-with-the-stature-of-our-tamil-language-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-it-right-finance-minister-to-compare-a-religion-with-the-stature-of-our-tamil-language-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">d28ea334-261e-4ef1-aea9-39f85f9bc870</guid><pubDate>Mon, 10 Aug 2026 15:55:46 +0000</pubDate><atom:updated>2026-08-10T15:55:46.991Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Finance Minister,நிதி அமைச்சர்,மரிய வில்சன்,அமைச்சர் மரிய வில்சன்,Minister Marie Wilson,MarieWilson</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/rbcswa24/Untitled-22.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/rbcswa24/Untitled-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>எம் தமிழ் மொழியின் ஆளுமையுடன், ஒரு மதத்தை ஒப்பிட்டு பேசுவது சரிதானா அமைச்சர் மரியவில்சனே? என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>தமிழின் மீதான தாக்குதல்</h2><p>இன்றைய சட்டமன்றத்தில் உங்கள் மொழியாற்றல் மீதான விவாதத்தின் போது, “எனது மதம் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது” என்பதோடு நீங்கள் நிறுத்தியிருந்தால் அது உங்களின் தனிப்பட்ட அனுபவம். ஆனால், “எனது மதம் எனக்கு கற்று கொடுத்ததை, எத்தனை தமிழ் படித்தாலும் தெரிந்து கொள்ள முடியாது” என்று நீங்கள் கூறுவது, தமிழின் மீதான தாக்குதலாகத் தான் தெரிகிறது. </p><p>“அன்பு” என்ற வார்த்தைக்கு பல மதங்கள் கற்பித்த பல அர்த்தங்களை, "அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்” என்ற ஒற்றை வரியில் தூக்கி சாப்பிட்ட மொழி தான் நம் தாய் மொழி தமிழ். “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலாரின் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை விட, இரக்கத்தைப் பற்றி இவ்வுலகில் வேறு யாரால் நுட்பமாக எடுத்துரைக்க முடியும்? “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற புறநானூற்றுப் பாடலை நீங்கள் சரியாக படித்து புரிந்திருந்தாலே, “அமைதி” என்ற வார்த்தைக்கு தமிழ் மொழியில் உள்ள ஆழமான அர்த்தம் உங்களுக்கு தெரிந்திருக்கும். </p><h2>மன்னிப்பு கோர வேண்டும்!</h2><p>பிறப்பால் நீங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால், உணர்வால் நாம் அனைவரும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழர்கள் </a>என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய சட்ட மன்றத்தில் கூட உங்கள் கட்சி தலைமையும் அதைத் தானே சுட்டிக்காட்டினார்? அப்படியிருக்கையில் உங்கள் மதத்தை நீங்கள் உயர்த்திப் பிடிப்பதில் தவறில்லை. ஆனால், தமிழ் மொழியை நீங்கள் தாழ்த்துவதை ஒரு போதும் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, இன்று உணர்ச்சி மிகுதியில் தமிழ் மொழி மீது வைத்த தவறான விமர்சனத்திற்கு நீங்கள் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தொடர் மழை; சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடிக்கும் 11 விமானங்கள்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/continuous-rain-11-flights-circle-in-skies-over-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/continuous-rain-11-flights-circle-in-skies-over-chennai#comments</comments><guid isPermaLink="false">16f07779-8490-449a-8e57-12b548699504</guid><pubDate>Mon, 10 Aug 2026 15:55:02 +0000</pubDate><atom:updated>2026-08-10T15:55:02.067Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,விமானங்கள்,Flights</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/foh8fyqh/cafar.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/foh8fyqh/cafar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>சென்னையில் தொடர் மழையால் 11 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடிக்கின்றன.</p><p>தமிழகத்தின் வட கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.  இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.  இந்த நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று பரவலாக மழை பெய்தது.</p>  <h2>11 விமானங்கள்</h2><p>இதன்படி,  ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, கிண்டி, மீனம்பாக்கம், பூந்தமல்லி, ஐயப்பன் தாங்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.  இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு வந்த 11 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடிக்கின்றன.</p><p>விசாகப்பட்டினம், கொழும்பு, ஐதராபாத், மைசூரு, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த விமானங்கள் தொடர் மழையால், தெளிவற்ற வானிலையால் தரையிறங்க முடியாமல் வட்டமடித்தபடி இருக்கின்றன.  இதனால், நூற்றுக்கணக்கான பயணிகளும், அவர்களுடைய உறவினர்களும் பரிதவித்து வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் - அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டார் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rank-list-for-undergraduate-medical-courses-released-by-minister-arunraj</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rank-list-for-undergraduate-medical-courses-released-by-minister-arunraj#comments</comments><guid isPermaLink="false">254a69a0-70fc-452b-829f-8b79ed79973a</guid><pubDate>Mon, 10 Aug 2026 15:43:57 +0000</pubDate><atom:updated>2026-08-10T15:43:57.007Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>MBBS,தரவரிசை பட்டியல்,மருத்துவ படிப்பு,Minister Arunraj,அமைச்சர் அருண்ராஜ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/5nvyoxbn/STate-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/5nvyoxbn/STate-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கோ.க. அருண்ராஜ் இன்று (10.08.2026) சென்னை, கீழ்பாக்கத்தில் உள்ள மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்தில் 2026-2027ம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவம் (MBBS), பல் மருத்துவம் (BDS) மற்றும் மருத்துவம் சார்ந்த (Allied &amp; Health Care Courses) பட்டப் படிப்புகளுக்கான மாணவர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டார். இதன் பின்னர் அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-</p><p>“தேர்வுகுழு, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் சார்பில் 2026-2027ம் ஆண்டின் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம், அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக மருத்துவ இடங்களில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தின் மூலம் 29.06.2026 முதல் 23.07.2026 அன்று மாலை 5.00 மணி வரையிலும், பின்னர் 26.07.2026 காலை 10.00 மணி முதல் 27.07.2026 மாலை 3.00 மணி வரையும் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இறுதிநாளாக அறிவிக்கப்பட்டது.</p><p>இதுவரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 72,633 ஆகும். இதில் 7.5% அரசு பள்ளி மாணவர்களின் உள்ஒதுக்கீட்டுக்கு 4,860 விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருக்கிறது. விளையாட்டுப் பிரிவுக்கு 468 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருக்கிறது. முன்னாள் படைவீரர் பிரிவு ஒதுக்கீட்டிற்கு 524 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருக்கிறது. </p><p>மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டு பிரிவுக்கு 212 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருக்கிறது. பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலித்து மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலும் மற்றும் 7.5% அரசு பள்ளி மாணவர்களின் உள்ஒதுக்கீட்டிற்கான பட்டியலும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.</p><p>2026-2027ம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் சேர்க்கைக்காக அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் 41,726. அதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள் 35,926. இதில் மாணவர்கள் 12,551, மாணவிகள் 23,375.</p><p>2026-2027ம் ஆண்டிற்கான 7.5% அரசு பள்ளி மாணவர்களின் உள்ஒதுக்கீட்டிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் சேர்க்கைக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர்களிடம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் 4,860. இதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் 3,625. இதில் மாணவர்கள் 981, மாணவிகள் 2644.</p><p>சுயநிதி மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டிற்கான (Management Quota) இடங்களுக்கு மாணவர்களிடமிருந்து பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை 30,907. இதில் தகுதியுள்ள விண்ணப்பங்கள் 26,956. இதில் மாணவர்கள் 9,105, மாணவிகள் 17,851.</p><h2>அரசு ஒதுக்கீடு இடங்கள்</h2><p>இளநிலை மருத்துவத்திற்கான (MBBS) மொத்த இடங்கள் 7,157. இதில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மாநில ஒதுக்கீடு (State Quota) 4473 இடங்கள். சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 2684.</p><p>சுயநிதி பல் மருத்துவக் மேலும் பல் மருத்துவத்திற்கான (BDS) மொத்த இடங்கள் 1383. இதில் அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் 213. கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்கள் 1170.</p><h2>7.5% ஒதுக்கீடு இடங்கள்</h2><p>7.5% ஒதுக்கீட்டிற்கான மொத்த மருத்துவ இடங்கள் (MBBS) 537. இதில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் 335. சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 202.</p><p>7.5% ஒதுக்கீட்டிற்கான அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த BDS இடங்கள் 104. இதில் அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 16 இடங்களும், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் 88 இடங்களும் உள்ளன.</p><h2>நிர்வாக ஒதுக்கீடு இடங்கள்</h2><p>சுயநிதி மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டிற்கான (Management Quota) இடங்களில் MBBS இடங்கள் 1966 மற்றும் பல் மருத்துவ (BDS) இடங்கள் 580 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ளன.</p> <h2>மருத்துவம் சார்ந்த படிப்புகள்(Allied and Health Care Courses):-</h2><p>மருத்துவம் சார்ந்த படிப்புகளில் B.Sc Nursing, B.Pharm, இணை மருத்துவ படிப்புகள், Pharm.D (6-வருடம் மற்றும் 3-வருடம்), DGNM மற்றும் DIPLOMA IN PHARMACY படிப்புகளுக்கு 21.06.2026 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேற்குறிப்பிட்ட அனைத்து பாடப்பிரிவுகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் 21.06.2026 முதல் 12.07.2026 வரை பெறப்பட்டன. பெறப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி நிறைவடைந்த நிலையில், இன்று தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/3cbs67ez/STate-07.png" /></figure><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/asody5z1/STate-07.png" /></figure><p>இந்த ஆண்டு கடந்த ஆண்டைவிட அரசு மருத்துவக் கல்லூரிகளில் MBBS-ல் கூடுதலாக 150 மாணவர்கள் சேர்க்கும் வாய்ப்பு 2021-ஆம் ஆண்டிற்கு பிறகு 2026-2027 இந்த ஆண்டு கிடைத்துள்ளது. திருப்பூர், திருவள்ளுர் மற்றும் நாமக்கல் ஆகிய 3 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 கூடுதல் இடங்கள் வீதம் கிடைத்திருக்கிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 700 இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக உள்ள MBBS இடங்கள் 9,999. BDS பல் மருத்துவத்திற்கான இடங்கள் 2,000 ஆகும்.</p><p>மேலும், விண்ணப்ப நிகழ்வில் கால நேரம் மற்றும் விண்ணப்பங்களை திருத்திக்கொள்ள கால அவகாசம் ஆகியவை வழங்கப்பட்டது. ஆனால் கலந்தாய்வை (Counselling) பொறுத்தவரையில் ஒன்றிய அரசுடன் ஒத்திசைந்து (Synchronized) நடத்த இருப்பதனால், எந்தவொரு அட்டவணை மாற்றமோ, கால நீட்டிப்போ அளிக்க இயலாது. எனவே, மாணவர்கள் தமிழ்நாட்டு மாநில தேர்வுக்குழு இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள அட்டவணைப்படி, கலந்தாய்வில் தவறாமல் கலந்துக் கொள்ள வேண்டும்.”</p><p>இவ்வாறு அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.</p>  ]]></content:encoded></item><item><title>பொறியாளர்களுக்கு உடல், மன நல பயிற்சி: மாநகராட்சி ஆணையாளர் சமீரன் தொடங்கி வைத்தார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-corporation-engineers-wellness-program-launched-by-commissioner-sameeran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-corporation-engineers-wellness-program-launched-by-commissioner-sameeran#comments</comments><guid isPermaLink="false">89f1a257-2f53-4e49-a299-18450f1533de</guid><pubDate>Mon, 10 Aug 2026 15:31:52 +0000</pubDate><atom:updated>2026-08-10T15:31:52.719Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பொறியாளர்கள்,Engineer,Training,பயிற்சி,mental health,உடல்,Corporation Commissioner,மாநகராட்சி ஆணையாளர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/m8t8229v/sameeran.10.08.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மாநகராட்சி ஆணையாளர் சமீரன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பொறியாளர்களுக்கு உடல், மன நல பயிற்சி: மாநகராட்சி ஆணையாளர் சமீரன் தொடங்கி வைத்தார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/m8t8229v/sameeran.10.08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p> சென்னை,</p><p> சென்னை மாநகராட்சியில் உள்ள உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்களுக்கு உடல், மன என முழுநலன் சார்ந்த பயிற்சியினை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D">மாநகராட்சி ஆணையாளர் </a>சமீரன், தொடங்கி வைத்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p> <p>அம்மா மாளிகை</p><p>இன்று சென்னை மாநகராட்சியில் உள்ள உதவிப் பொறியாளர்கள் மற்றும் இளநிலைப் பொறியாளர்களுக்கு உடல் நலன், மன நலன் என முழுநலன் சார்ந்த பயிற்சி பெருநகர சென்னை மாநகராட்சியுடன் கிரடாய் மற்றும் துருதி அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்தியது. இப்பயிற்சியினை மாநகராட்சி ஆணையாளர் சமீரன்,  ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் தொடங்கி வைத்து பேசினார்.</p> <p><strong>இப்பயிற்சியினை மாநகராட்சி ஆணையாளர் தொடங்கி வைத்து பேசியதாவது:-</strong></p><h2>பொறியாளர்கள் </h2><p> சென்னை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமார் ஒரு கோடி மக்களின் அடிப்படை தேவைகளுக்கான சேவைகளை சென்னை மாநகராட்சி வழங்கி வருகிறது. இத்திட்டப் பணிகளை மக்களிடம் கொண்டு சென்று சிறந்த சேவையினை வழங்கிடும் வகையில், மாநகராட்சியின் பொறியாளர்கள் சிறப்புடன் பணியாற்றி வருகின்றனர். அதிகாலை தொடங்கி இரவு வரை தங்களது பொறுப்பை உணர்ந்து பொறியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். </p><h2>முழுநலன் சார்ந்த பயிற்சி</h2><p>பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் பொறியாளர்கள் தங்களது உடல் நலனையும், மன நலனையும் ஒரு சேர பேணி பாதுகாத்து கொள்வது அத்தியாவசியமாகும். தங்களுக்கான பணிகள் காரணமாக ஏற்படும் மன இறுக்கத்தையும், சோர்வினையும் தவிர்த்து தங்களது உடல், மனம் சார்ந்த நலன்களில் தனிக்கவனம் செலுத்துவது தொடர்பாக சென்னை மாநகராட்சியின் சிறப்பு ஏற்பாட்டின் பேரில் கிரடாய் மற்றும் துருதி அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து முழுநலன் சார்ந்த பயிற்சி வழங்கப்படுகிறது. பொறியாளர்கள் தங்களது பணிகளுக்கிடையில் உடல், மனம் ஆகியவற்றில் மேம்பட்ட கவனம் செலுத்துவதற்கும், விழிப்புணர்வு பெறுவதற்கும் இப்பயிற்சி மிகவும் உதவிகரமாக அமைந்திடும் என்று பேசினார்.</p><p>இப்பயிற்சியில், இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன், சென்னை கிரடாய் நிர்வாகிகள்மெகுல் எச். தோஷி, பிரகாஷ் செல்லா, வர்கீஸ் ஜான், ஆஷா மரினா, துருதி அறக்கட்டளை நிர்வாகிகள் சுரேஷ் அருணாசலம்,  ராம்ஜி வெங்கடாச்சாரி, ஏழுமலை சிவகுமார், டாக்டர் சங்கீதா சண்முகம், ஜெயா வெங்கடேஷ், பயிற்சி வழங்குநர்கள் டாக்டர் சங்கீதா சந்தோஷ், டாக்டர் திவ்யா பிரபா, மற்றும் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை தொடங்குகிறது மாபெரும் ரேபிஸ் தடுப்பூசி முகாம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-massive-rabies-vaccination-camp-begins-in-chennai-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-massive-rabies-vaccination-camp-begins-in-chennai-tomorrow#comments</comments><guid isPermaLink="false">2706006d-6afa-4c0a-87eb-cf440a6fa1bf</guid><pubDate>Mon, 10 Aug 2026 15:11:20 +0000</pubDate><atom:updated>2026-08-10T15:11:20.684Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,Rabies Vaccination Camp,தடுப்பூசி முகாம்,மெகா தடுப்பூசி முகாம்,rabies vaccination,ரேபிஸ் தடுப்பூசி முகாம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/npa05phd/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/npa05phd/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வெறிநாய்க்கடிநோய்த் தடுப்பூசி (Anti Rabies Vaccination) மற்றும் அக, புற ஒட்டுண்ணி மருந்து செலுத்தும் மாபெரும் அளவிலான முகாம் நாளை (11.08.2026) தொடங்கப்பட்டு 2,00,000 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>ரேபிஸ் தடுப்பூசி முகாம்!</h2><p>பெருநகர சென்னை மாநகராட்சியின் 2026-2027 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை, அறிவிப்பின்படி வெறிநாய்க்கடி நோய் பாதிப்பிலிருந்து பொது மக்களை காத்திடவும், வெறிநாய்க்கடி நோய் இல்லா சென்னை மாநகரை உருவாக்கிடவும் அனைத்து தெரு நாய்களுக்கும் வெறிநாய்க்கடிநோய்த் தடுப்பூசி (Anti Rabies Vaccination) மற்றும் அக, புற ஒட்டுண்ணி மருந்து செலுத்தும் மாபெரும் அளவிலான முகாம் (Mass Anti Rabies Vaccination and Endectoparasiticidal camp) நாளை (11.08.2026) தொடங்கப்படவுள்ளது.</p><p>மண்டல வாரியாக, கோட்டம் வாரியாக தெரு நாய்களை அவை வசிக்கும் தெருக்களுக்கே சென்று நாய் பிடிக்கும் பணியாளர்கள் மூலம் வலைகளைக் கொண்டு நாய்களைப் பிடித்து கால்நடை மருத்துவரால் அவற்றிற்கு வெறிநாய்க்கடிநோய்த் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கம் மருந்து செலுத்தப்படும். பின்னர் அந்த நாய்களுக்கு வண்ண சாயம் (Vegetable dye) தெளித்து அடையாளப்படுத்தி அவை மீண்டும் அதே இடத்திலேயே விடுவிக்கப்படும்.</p><h2>30 குழுக்கள் நியமனம்</h2><p>இம்முகாமின் போது மண்டலங்களிலுள்ள அனைத்து தெருக்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் உள்ள தெருநாய்களுக்கும் வெறிநாய்க்கடிநோய்த் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தப்படும்.</p><p>ஒவ்வொரு குழுவும் நாள் ஒன்றிற்கு சுமார் 100 தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் 30 குழுக்கள் நியமிக்கப்பட்டு நாள் ஒன்றிற்கு தோராயமாக 3000 தெரு நாய்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. தலா 10 குழுக்களை பயன்படுத்தி ஒரே சமயத்தில் 3 மண்டலங்களில் இந்த சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.</p><h2>1,47,545 தெருநாய்களுக்கு தடுப்பூசி</h2><p>வளர்ப்பு நாய்கள் மற்றும் பூனைகளின் உரிமையாளர்களும் தங்களின் செல்லப்பிராணிகளுக்கு இம்முகாமினை பயன்படுத்தி இலவசமாக ரேபிஸ் நோய்த் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>கடந்த ஆண்டு, பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து தெருநாய்களுக்கும் இலவச ரேபிஸ் நோய்த் தடுப்பூசியும் மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கம் மருந்து செலுத்தும் மாபெரும் அளவிலான திட்டம் கடந்த 09.08.2025 அன்று தொடங்கப்பட்டு 1,47,545 தெருநாய்களுக்கு ரேபிஸ் நோய்த் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கம் மருந்து செலுத்தப்பட்டது.</p><h2>நாளை தொடங்கும் முகாம் </h2><p>இவ்வாண்டு தெருநாய்களுக்கு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ரேபிஸ் நோய்த் தடுப்பூசி</a> மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கம் மருந்து செலுத்தும் மாபெரும் அளவிலான முகாம் நாளை (11.08.2026) முதல் 1, 2 மற்றும் 4 ஆகிய மண்டலங்களில் தொடங்கப்படவுள்ளது.</p><p>இத்திட்டத்தை சிறப்புடன் செயல்படுத்துவது குறித்து 10.08.2026 இன்று ஆணையர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் இணை ஆணையர் (சுகாதாரம்), தலைமை கால்நடை மருத்துவ அலுவலர் மற்றும் கூடுதல் தலைமை கால்நடை மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மருத்துவர்கள்/ பயிற்சி மருத்துவர்களைப் பயன்படுத்தி Worldwide Veterinary Services (WVS) நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இம்முகாமினை தொய்வின்றி நடத்திட ஆணையர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.</p><h2>2,00,000 நாய்களுக்கு தடுப்பூசி</h2><p>இச்சிறப்பு முகாம் மண்டலம் 1ல் 14 நாட்களும் மண்டலம் 2ல் 9 நாட்களும் மற்றும் மண்டலம் 4ல் 14 நாட்களும் நடத்தப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து அனைத்து மண்டலங்களிலும் இம்முகாம் நடத்தப்பட்டு 75 வேலை நாட்களுக்குள் சுமார் 2,00,000 நாய்களுக்கு ரேபிஸ் நோய்த் தடுப்பூசியும் மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் ஊசியும் (Anti Rabies Vaccination and Endectoparasiticidal) அளிக்கப்படவுள்ளது.</p><p>இந்த சிறப்பு முகாம்கள் மூலம் “வெறிநாய்க்கடிநோய் இல்லாசென்னை” (Rabies Free Chennai) என்ற இலக்கை அடைவதற்கு பொது மக்களும், செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களும் மற்றும் விலங்கு நல ஆர்வலர்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காவிரி மேலாண்மை ஆணையத்தின் 55-வது கூட்டம் - நாளை நடைபெறுகிறது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/55th-meeting-of-the-cauvery-management-authority-to-be-held-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/55th-meeting-of-the-cauvery-management-authority-to-be-held-tomorrow#comments</comments><guid isPermaLink="false">4e94bdca-440f-4542-9a26-0df1a05c15dc</guid><pubDate>Mon, 10 Aug 2026 15:10:03 +0000</pubDate><atom:updated>2026-08-10T15:10:03.959Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காவிரி மேலாண்மை ஆணையம்,Cauvery Management Authority</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/05v1znnu/National-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/05v1znnu/National-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><p>சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையம் மாதம் ஒருமுறை கூடி வருகிறது. அதன் துணை அமைப்பான காவிரி ஒழுங்காற்றுக்குழுவுக்கு மாதம் இத்தனை முறை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்ற விதி இல்லை. எப்போது வேண்டுமானாலும் காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் நடத்தப்படும். </p><p>அந்த வகையில் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 139-வது கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது. காவிரியில் இருந்து ஆகஸ்ட் மாதத்தில் திறந்துவிடப்படும் தண்ணீர் குறித்து விவாதிப்பதற்காக இந்த கூட்டம் கூடுகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அதிகாரிகள் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.</p> <p>கர்நாடக அரசு ஆகஸ்ட் மாதம் 45.5 டி.எம்.சி. நீர் திறந்துவிட வேண்டிய நிலையில் ஒழுங்காற்று குழு கூட்டம் நடக்கிறது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் 88 டி.எம்.சி. திறக்க வேண்டிய நிலையில் 10 டி.எம்.சி. மட்டுமே திறக்கப்பட்டுள்ளது.</p><p>டெல்லியில் நாளை காலை காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டம் நடக்க இருக்கும் நிலையில், பிற்பகலில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 55-வது கூட்டம் நடைபெற உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட 10 டன் குட்கா பொருட்கள் அழிப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/10-tonnes-of-gutkha-products-seized-in-chennai-destroyed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/10-tonnes-of-gutkha-products-seized-in-chennai-destroyed#comments</comments><guid isPermaLink="false">2e84d307-a228-4484-b063-b6c07b803fa7</guid><pubDate>Mon, 10 Aug 2026 14:47:17 +0000</pubDate><atom:updated>2026-08-10T14:47:17.859Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,குட்கா,Gutka</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/m9gr4l2k/STate-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/m9gr4l2k/STate-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா போன்ற புகையிலை பொருட்கள் அரசால் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. கடைகளில் நடத்தப்படும் அதிரடி சோதனைகள் மூலம் பிடிபடும் இத்தகைய பொருட்கள், கோர்ட்டு உத்தரவு மற்றும் மாவட்ட அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி பாதுகாப்பாக அழிக்கப்படுகின்றன.</p><p>உணவு பாதுகாப்புத்துறை, காவல் துறை மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து கடைகளில் சோதனை நடத்தி குட்காவை கைப்பற்றுகின்றனர். அந்த வகையில், சென்னையில் தடையை மீறி விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 10 டன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அவற்றை கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் மாநகராட்சி அதிகாரிகள் குழி தோண்டி புதைத்து அழித்தனர். </p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை மசோதா: தி.மு.க.வை சமாதானப்படுத்த மத்திய அரசு புதிய வியூகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/constituency-delimitation-bill-central-governments-new-strategy-to-pacify-the-dmk</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/constituency-delimitation-bill-central-governments-new-strategy-to-pacify-the-dmk#comments</comments><guid isPermaLink="false">664b2c1f-d8d4-460a-b3e9-b8a4b3f010bc</guid><pubDate>Mon, 10 Aug 2026 14:14:35 +0000</pubDate><atom:updated>2026-08-10T14:14:35.367Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,திமுக,DMK,தொகுதி மறுவரையறை,Delimitation,Fair Delimitation,தொகுதி மறுவரையறை மசோதா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/qzjnyo0v/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/qzjnyo0v/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>சிறப்புக் கட்டுரைகள் (Sirappukatturaigal)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தொகுதி மறுவரையறை சட்டத்தை நிறைவேற்றுவதற்குத் தேவையான ஆதரவைப் பெறும் நோக்கில், தி.மு.க. மற்றும் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சமாதானப்படுத்தும் வகையில், வெளிநாட்டு நிதியுதவி ஒழுங்குமுறை மசோதாவை தற்காலிகமாக ஒத்திவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு</h2><p>நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை தற்போதுள்ள 543-ல் இருந்து 810 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p>இதற்கான அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவு தேவைப்படுகிறது.</p><h2>தொகுதி மறுவரையறைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு</h2><p>தொகுதி மறுவரையறையையும், பெண்களுக்கான இடஒதுக்கீட்டையும் ஒன்றாக இணைக்கக் கூடாது என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. தற்போதுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் கோரி வருகின்றனர்.</p><p>மேலும், மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென்மாநிலங்கள் தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் என்ற அச்சமும் எதிர்க்கட்சிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.</p><h2>அனைத்து மாநிலங்களிலும் தொகுதிகள் அதிகரிக்கும்</h2><p>தொகுதி மறுவரையறை மூலம் அனைத்து மாநிலங்களிலும் தொகுதிகளின் எண்ணிக்கை சுமார் 50 சதவீதம் அதிகரிக்கும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த நிலைப்பாட்டை எழுத்துப்பூர்வமாக உறுதி செய்தால் தொகுதி மறுவரையறை தொடர்பான நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கத் தயாராக இருப்பதாக தி.மு.க. உள்ளிட்ட சில கட்சிகள் தெரிவித்துள்ளது.</p><h2>தி.மு.க. விதித்துள்ள நிபந்தனைகள்</h2><p>தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தி.மு.க. தரப்பில் 3 முக்கிய நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. அவற்றை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் மசோதாவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து அக்கட்சி முடிவு செய்யும் எனத் தெரிகிறது.</p><p>கடந்த ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலுக்குப் பிறகு அகில இந்திய அரசியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. இதனால் நாடாளுமன்றத்தில் பா.ஜ.க.வுக்கான ஆதரவு அதிகரித்துள்ளது.  இதனிடையே, தி.மு.க. மற்றும் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை தங்களது நிபந்தனைகளின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2>வெளிநாட்டு நிதியுதவி மசோதா தற்காலிக ஒத்திவைப்பு</h2><p>இந்தநிலையில் இந்த கட்சிகளை சமாதானப்படுத்தும் வகையில் பா.ஜ.க. புதிய ஏற்பாட்டையும் செய்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் கூட்டத் தொடரிலேயே வெளிநாட்டு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நிதியுதவி </a>ஒழுங்குமுறை மசோதாவையும் நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்தது.</p><p>இந்த மசோதாவுக்கு கிறிஸ்தவ, இஸ்லாமிய சிறு பான்மை மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இவர்களுக்கு தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ஆதரவாக உள்ளன. ஆகவே இந்த மசோதாவை தற்காலிகமாக மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>  உண்மை என்னவென்று தெரிந்தே  தயாநிதி மாறன் திரித்து பேசுவது அரசியல் தர்மம் அல்ல -மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dayanidhi-maran-distorting-truth-is-not-political-ethics-says-manickam-thakur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dayanidhi-maran-distorting-truth-is-not-political-ethics-says-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">9d18bfc4-af4a-441f-811e-40537031cf32</guid><pubDate>Mon, 10 Aug 2026 13:29:25 +0000</pubDate><atom:updated>2026-08-10T13:29:25.778Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசியல்,மாணிக்கம் தாகூர்,political,தயாநிதி மாறன்,Dayanidhi Maran,உண்மை,Manickam Thakur MP</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/nda24k2n/manickam-tagore.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:title><media:description type="html"><![CDATA[ காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/nda24k2n/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- அண்ணன் தயாநிதி மாறன் உண்மை என்னவென்று தெரியாமல் அல்லது தெரிந்தே திரித்துப் பேசுவது அரசியல் தர்மம் அல்ல. </p><h2>மறுவரையறை அல்ல</h2><p> தெலங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி முன்வைத்தது பாஜகவின் மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை அல்ல! "வளர்ச்சி அடைந்த, குடும்பக் கட்டுப்பாட்டைச் சிறப்பாக நடைமுறைப்படுத்திய தென்னிந்திய மாநிலங்கள் தங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இழக்கக் கூடாது" என்பதற்காக மாநிலத்தின் பொருளாதாரப் பங்களிப்பு மற்றும் வளர்ச்சியையும் 50:50 கணக்கில் கொள்ள வேண்டும் என்ற கலப்பினம் மாடலைத்’ தான் வலியுறுத்தினார். இது தென்னிந்திய மாநிலங்களின் உரிமையைப் பாதுகாக்கும் குரல்!</p><p>https://x.com/the_hindu/status/2043882148588106152?s=42</p><h2>துரோகம்</h2><p>ஒட்டுமொத்த தென்னிந்தியாவையும் வஞ்சித்து, வடமாநிலங்களுக்கு சாதகமாக பாஜக கொண்டுவர துடிக்கும் மக்கள்தொகை அடிப்படையிலான ஒருதலைப்பட்ச தொகுதி மறுவரையறையை தான் நாங்கள் "தென்னிந்தியாவிற்கு இழைக்கப்படும் துரோகம்" என்று எதிர்க்கிறோம்.</p> <h2>தண்டிக்கப்படக்கூடாது</h2><p>தெலங்கானாவாக இருந்தாலும் சரி, தமிழ்நாடாக இருந்தாலும் சரி — குடும்ப கட்டுப்பாட்டை வெற்றிகரமாக செயல்படுத்திய தென்னக மாநிலங்கள் ஒருபோதும் தண்டிக்கப்படக்கூடாது என்பதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது.</p><h2>அரசியல் லாபம்</h2><p>அரசியல் லாபத்திற்காக அரைகுறை தகவல்களை பரப்பி அற்ப அரசியல் செய்வதை விட்டுவிட்டு, தென்னக மாநிலங்களின் உரிமைகளுக்காகவும், தமிழ்நாட்டின் குரலாகவும் ஒட்டுமொத்தமாக இணைந்து பாஜகவின் சதியை வீழ்த்த வரமாட்டேன் என்று முடிவெடுத்து விட்டீர்களா? </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.&nbsp;</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">அண்ணன் <a href="https://x.com/Dayanidhi_Maran?ref_src=twsrc%5Etfw">@Dayanidhi_Maran</a> அவர்களே! <br>உண்மை என்னவென்று தெரியாமல் அல்லது தெரிந்தே திரித்துப் பேசுவது அரசியல் தர்மம் அல்ல.<br><br>மாண்புமிகு தெலங்கானா முதலமைச்சர் <a href="https://x.com/revanth_anumula?ref_src=twsrc%5Etfw">@revanth_anumula</a> முன்வைத்தது பாஜகவின் மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை அல்ல! &quot;வளர்ச்சி அடைந்த, குடும்பக் கட்டுப்பாட்டைச்… <a href="https://t.co/F9TrdJkPKg">https://t.co/F9TrdJkPKg</a></p>&mdash; Manickam Tagore .Bமாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) <a href="https://x.com/manickamtagore/status/2086783968108855734?ref_src=twsrc%5Etfw">August 10, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>பெரம்பூர் தொகுதியில் மேற்கொள்ளப்படும் பணிகள் - மாநகராட்சி இணை ஆணையாளர் சரவணன் ஆய்வு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/works-being-carried-out-in-perambur-constituency-corporation-joint-commissioner-saravanan-inspects</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/works-being-carried-out-in-perambur-constituency-corporation-joint-commissioner-saravanan-inspects#comments</comments><guid isPermaLink="false">c90b7136-4627-4663-ac07-429e5efded5f</guid><pubDate>Mon, 10 Aug 2026 13:16:36 +0000</pubDate><atom:updated>2026-08-10T13:16:36.385Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பெரம்பூர்,Perambur</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/n99zj3d9/STate-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/n99zj3d9/STate-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை பெரம்பூர் தொகுதியில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து மாநகராட்சி இணை ஆணையாளர்(பணிகள்) சரவணன் இன்று ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“பெருநகர சென்னை மாநகராட்சி, பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து மாநகராட்சி இணை ஆணையாளர்(பணிகள்) சரவணன் இன்று (10.08.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.</p><p>இணை ஆணையாளர், பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தினைப் பார்வையிட்டு, அங்கு செயல்பட்டு வரும் இ-சேவை மையத்தில் மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அங்கு மனு அளிக்க வருகைத் தரும் மக்களிடம் கலந்துரையாடி, மக்களுக்கான தேவைகளை விரைந்து வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>தொடர்ந்து, வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் கலை கல்லூரியில் நிர்வாகக் கட்டிடம், கலையரங்கம், நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையம், கிரிக்கெட் பயிற்சி வலை, கைப்பந்து உள்ளிட்ட ஒருங்கிணைந்த விளையாட்டு வசதிகள் அமைப்பது குறித்துப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.</p><p>பின்னர், பிவி காலனியில் உள்ள காலி இடத்தினைப் பார்வையிட்டு, அங்கு பொதுமக்களுக்கு பயன்படும் வகையிலான கட்டிடங்கள் கட்டுவது தொடர்பாகவும், வார்டு-46க்குட்பட்ட குட் செட் குளத்தில் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்வது தொடர்பாகவும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.</p><p>தொடர்ச்சியாக, வார்டு-37க்குட்பட்ட சத்தியமூர்த்தி நகர் பிரதான சாலையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் முல்லை மற்றும் வசந்தம் காம்ப்ளெக்ஸ் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடம் சிதிலமடைந்துள்ளதைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடாக விபத்துகள் ஏற்படாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>திருச்சி, நாகப்பட்டினத்தில் நடைபெறவிருந்த அதிமுக ஆர்ப்பாட்டத்தின் தேதி மாற்றம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-protest-in-trichy-nagapattinam-rescheduled-to-august-22-2026</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-protest-in-trichy-nagapattinam-rescheduled-to-august-22-2026#comments</comments><guid isPermaLink="false">cf7f31ea-75b5-456d-8e8e-6423316d997e</guid><pubDate>Mon, 10 Aug 2026 12:50:47 +0000</pubDate><atom:updated>2026-08-10T12:50:47.639Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அதிமுக,AIADMK,ஆர்ப்பாட்டம்,Nagapattinam,திருச்சி,Trichy,நாகப்பட்டினம்,Demonstration,date,changed,தேதி மாற்றம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/rllhydke/eps.gif" width="750"><media:title type="html"><![CDATA[ அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி]]></media:title><media:description type="html"><![CDATA[ அதிமுக ஆர்ப்பாட்டத்தின் தேதி மாற்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/rllhydke/eps.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அ.தி.மு.க. பொதுச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">எடப்பாடி பழனிசாமி </a>வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- த.வெ.க. அரசை கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் : 14.8.2026 கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு கூடுதல் தலைமையேற்போர் விபரம்; திருச்சி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் 14.8.2026 அன்று நடைபெறுவதாக இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் மாற்றியமைக்கப்பட்டு 22.8.2026 அன்று நடைபெறும்!</p> <h2>மெத்தனம் காட்டி வரும் த.வெ.க. அரசு</h2><p>விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் அவர்களை வஞ்சித்து வருவதோடு; மேகதாது பிரச்சனையில் மெத்தனம் காட்டி வரும் த.வெ.க. அரசைக் கண்டித்தும்; காவிரியில் நமக்குரிய பங்கு நீரை உரிய முறையில் பெறுவதற்கு முயற்சி எடுக்காத த.வெ.க. அரசை கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், வருகின்ற 14.8.2026 - வெள்ளிக் கிழமை காலை 9.30 மணியளவில், தமிழகம் முழுவதும் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">ஆர்ப்பாட்டம்</a> நடைபெறும்.</p><p> இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமையேற்போர் பட்டியலும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 14.8.2026 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள பின்வரும் வருவாய் மாவட்டங்களில், கீழ்க்கண்ட நிர்வாகிகள் கூடுதலாக தலைமை ஏற்பார்கள்.</p> <p><strong>தலைமை ஏற்போர் (கூடுதல்) மாவட்டம்</strong></p><h2>மயிலாடுதுறை</h2><p> கே. கோபால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், கழக அமைப்புச் செயலாளர்</p><h2>கடலூர்</h2><p> சிவா. ராஜமாணிக்கம் கழக அமைப்புச் செயலாளர்</p> <h2>தேதி மாற்றம்</h2><p>திருச்சி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் 14.8.2026 அன்று நடைபெறுவதாக இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் மாற்றியமைக்கப்பட்டு, வருகின்ற 22.8.2026 சனிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறும். </p><p>ஆகவே, வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட, கழக அமைப்பு ரீதியான மாவட்டக் கழக செயலாளர்கள் ஒன்றிணைந்து, இந்த கண்டன ஆர்ப்பாட்டங்களை மிக சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து நடத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்காக ரூ. 264 கோடி ஒதுக்கீடு; தமிழக அரசு 

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-264-crore-allocation-for-anti-drug-operations-tamil-nadu-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-264-crore-allocation-for-anti-drug-operations-tamil-nadu-government#comments</comments><guid isPermaLink="false">66027010-6e20-4e27-b598-a9f99d8f8d5d</guid><pubDate>Mon, 10 Aug 2026 12:50:41 +0000</pubDate><atom:updated>2026-08-10T12:50:41.072Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN government,Narcotics,போதைப்பொருள் தடுப்பு பிரிவு,போதைப்பொருள் தடுப்பு,Task Force</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/wc5zar38/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/wc5zar38/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தி வருகிறது. <a href="https://www.dailythanthi.com/">போதைப்பொருள் </a>ஒழிப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அரசு சார்பில் நடைபெற்று வருகின்றன. மேலும், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.</p><h2>சிறப்பு அதிரடிப்படைகள்</h2><p>இந்நிலையில், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்காக ரூ. 264 கோடியை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக 65 சிறப்பு அதிரடிப்படைகள் உருவாக்கப்பட்டுள்ளன. </p><p>தமிழகத்தில் மொத்தமுள்ள 37 மாவட்டங்களில் தலா ஒரு சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டுள்ளது. இது தவிர கூடுதலாக 12 சிறப்பு அதிரடிப்படைகளும், ஆவடி, தாம்பரம், சேலம், கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை, நெல்லைக்கு தலா 2 கூடுதல் சிறப்பு அதிரடிப்படைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.</p><p>இந்த சிறப்பு அதிரடிப்படைப்பிரிவுகளில் 65 இன்ஸ்பெக்டர்கள் ( தலா ஒரு சப் இன்ஸ்பெக்டர்), 260 சப் இன்ஸ்பெக்டர்கள் (ஒரு சிறப்பு அதிரடிப்படைப்பிரிவுக்கு தலா 4 சப் இன்ஸ்பெக்டர்கள்), 1,300 போலீசார் (ஒரு சிறப்பு அதிரடிப்படைப்பிரிவுக்கு தலா 20 போலீசார்) பணியாற்ற உள்ளனர். </p><p>இந்த சிறப்பு அதிரடிப்படைப்பிரிவு போலீசாருக்கு போதைப்பொருள் தடுப்பு மற்றும் அது சார்ந்த பணிகள் தவிர வேறு பணிகள் ஒதுக்கப்படாது என அர்சு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வாரத்தில் 2 நாட்கள் கட்டாய விடுப்பு வழங்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/public-interest-litigation-filed-in-the-madras-high-court-seeking-mandatory-leave-of-2-days-a-week</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/public-interest-litigation-filed-in-the-madras-high-court-seeking-mandatory-leave-of-2-days-a-week#comments</comments><guid isPermaLink="false">f03b8375-0d52-46ba-abe0-2f78ded161bb</guid><pubDate>Mon, 10 Aug 2026 12:30:45 +0000</pubDate><atom:updated>2026-08-10T12:30:45.137Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Public Interest Litigation,நீதிமன்றம்,பொதுநல வழக்கு,Petition filed,In Tamil Nadu</media:keywords><media:content height="542" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/import/Articles/2019/Jan/201901021124247981_Demanding-to-keep-the-Thiruvarur-bypoll-appealed-to-HC_SECVPF.gif" width="794"><media:title type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/import/Articles/2019/Jan/201901021124247981_Demanding-to-keep-the-Thiruvarur-bypoll-appealed-to-HC_SECVPF.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் வாரத்தில் 2 நாட்கள் விடுப்பு வழங்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தாக்கல் </a>செய்யப்பட்டது.</p><h2>மன அழுத்தம்- பணிச்சுமை</h2><p>தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் வாரத்தில் 2 நாட்கள் கட்டாய வாராந்திர விடுப்பு வழங்க உத்தரவிடக் கோரி இன்று (திங்கட்கிழமை) சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பொதுநல வழக்கு</a> ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.</p><p>பொதுமக்கள் நலன் கருதி தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், தற்போதைய நவீன வாழ்வியலில் தொழிலாளர்கள் கடுமையான வேலைப்பளு மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருவதாகக் குறிப்பிடப்பட்டது. ஊழியர்களின் உடல்நலம், மனநலம் மற்றும் குடும்ப உறவுகளை மேம்படுத்த வாரத்தில் 2 நாட்கள் ஓய்வு என்பது அத்தியாவசியமானது என மனுதாரர் சுட்டிக்காட்டினார்.</p><h2>சுழற்சி முறை பரிந்துரை</h2><p>தொடர் சேவை தேவைப்படும்<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> அரசு மற்றும் தனியார் </a>துறைகளில், பொதுமக்களுக்கான பணிகள் பாதிக்கப்படாத வண்ணம் ஊழியர்களைச் சுழற்சி முறையில் பணியமர்த்தி இந்த 2 நாட்கள் விடுமுறையைச் செயல்படுத்தலாம் என்றும் மனுவில் வழிவகை கூறப்பட்டது. தற்போதைய தொழிலாளர் சட்டங்களின்படி வாரத்தில் ஒரு நாள் மட்டுமே கட்டாய விடுமுறையாக உள்ள நிலையில், இந்த வழக்கு ஊழியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மனு விரைவில் நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வரவுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கடலூர் அருகே பயங்கரம்:  நாட்டு வெடிகுண்டு வீசி கார் டிரைவர் கொடூரக் கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/horror-near-cuddalore-car-driver-brutally-murdered-by-country-made-bomb-attack</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/horror-near-cuddalore-car-driver-brutally-murdered-by-country-made-bomb-attack#comments</comments><guid isPermaLink="false">86340dc4-3777-441b-806c-dd156cdfebc5</guid><pubDate>Mon, 10 Aug 2026 12:27:31 +0000</pubDate><atom:updated>2026-08-10T12:27:31.685Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Cuddalore,கடலூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/hoo7rq53/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/hoo7rq53/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர்,</p><p>கடலூர் அருகே பெரிய காட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 31). இவர் கார் டிரைவராக பணி புரிந்து வருகிறார். </p><h2>வெட்டிக் கொலை</h2><p>இவர் இன்று கடலூர் ரங்காரெட்டிப்பாளையம் அருகே கார் ஓட்டி வந்தார். புதுச்சேரி எல்லை அருகே உள்ள இரட்டைசாவடி அருகே தனது காரை நிறுத்தி சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சசிக்குமார் மீது நாட்டு வெடிகுண்டை வீசினர். இதனை தொடர்ந்து அந்த மர்ம நபர்கள் அவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு, தப்பி ஓடினர். </p><p>இதில் பலத்த காயமடைந்த சசிக்குமார் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சசிகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமவனைக்கு அனுப்பி வைத்தனர். </p><h2>போலீசார் வலைவீச்சு</h2><p>இந்த சம்பவம் குறித்து <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வழக்குப்பதிவு </a>செய்த போலீசார் சசிகுமாரை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதனிடையே அவர் கொலை செய்யப்பட்ட காரணம் குறித்தும் புதுச்சேரி மற்றும் கடலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விசாரணைக்கு அழைக்கப்படுபவர்களை துன்புறுத்தக்கூடாது: போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு! </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/court-orders-the-police-not-to-harass-those-called-for-investigation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/court-orders-the-police-not-to-harass-those-called-for-investigation#comments</comments><guid isPermaLink="false">02bd35d7-4575-49c7-bc1b-ed85a0a6e03a</guid><pubDate>Mon, 10 Aug 2026 12:21:43 +0000</pubDate><atom:updated>2026-08-10T12:21:43.536Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,விசாரணை,High Court,investigation,ஐகோர்ட் உத்தரவு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-05-06/sssf5k58/high-court.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்]]></media:title><media:description type="html"><![CDATA[ விசாரணைக்கு அழைக்கும் நபர்களை போலீசார் துன்புறுத்தக் கூடாது என ஐகோர்ட் உத்தரவு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-05-06/sssf5k58/high-court.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விசாரணைக்கு அழைக்கும் நபர்களை போலீசார் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">துன்புறுத்தக் கூடாது </a>என ஐகோர்ட் கடுமையான விதிகள் உத்தரவிட்டது.</p><h2>ஐகோர்ட் உத்தரவு</h2><p>விசாரணை என்ற பெயரில் போலீஸ் நிலையங்களுக்கு வரவழைக்கப்படும் நபர்களைக் போலீசார் எக்காரணம் கொண்டும் உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ துன்புறுத்தக் கூடாது என <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை ஐகோர்ட்</a> அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><p>சென்னையைச் சேர்ந்த ராஜா என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், தமிழக போலீசார் விசாரணைக்காகப் பொதுமக்களை அழைக்கும்போது பின்பற்ற வேண்டிய முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து இந்த உத்தரவை வழங்கியுள்ளார். ஐகோர்ட்டின் முக்கிய வழிகாட்டுதல்கள் பின்வருமாறு:-</p><p>விசாரணைக்கு அழைக்கப்படும் சந்தேகத்திற்குரிய நபர்களையோ அல்லது சாட்சிகளையோ போலீசார் எவ்வித சித்திரவதைக்கும் ஆளாக்கக் கூடாது. ஒருவரை விசாரணைக்கு அழைக்க வேண்டுமானால், பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (செக்சன் 179) விதிகளின் கீழ் எழுத்துப்பூர்வமான சம்மன் அனுப்பப்பட வேண்டும். அந்தச் சம்மனில் சம்பந்தப்பட்ட நபர் எந்தத் தேதியில், எந்தத் துல்லியமான நேரத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற விவரங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.</p><p>விசாரணைக்கு வரும் நபரிடம் நடத்தப்படும் விசாரணையின் நிமிடங்களை போலீஸ் நிலையத்தின் பொது நாட்குறிப்பில் முறையாகப் பதிவு செய்ய வேண்டும்.<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> விசாரணை</a> என்ற பெயரில் பொதுமக்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்கவே இந்த விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட் தெளிவுபடுத்தி உள்ளது. இந்த விதிகளை மீறிச் செயல்படும் போலீஸ் அதிகாரிகள் மீது துறை ரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஐகோர்ட் எச்சரித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சபாநாயகர்: சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? - நயினார் நாகேந்திரன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/speaker-guardian-of-law-or-representative-of-religion-nainar-nagendran-question</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/speaker-guardian-of-law-or-representative-of-religion-nainar-nagendran-question#comments</comments><guid isPermaLink="false">ac116586-df86-422a-b2e2-80b8864cc3a4</guid><pubDate>Mon, 10 Aug 2026 12:21:22 +0000</pubDate><atom:updated>2026-08-10T12:21:22.441Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Question,Speaker,சபாநாயகர்,கேள்வி,religion</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/ygpoi23o/nainar-nagendheran.new.gif" width="752"><media:title type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ சபாநாயகர்: சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? - நயினார் நாகேந்திரன் கேள்வி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/ygpoi23o/nainar-nagendheran.new.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன்</a> எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- சபாநாயகர்: சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? </p><h2>கருக்கலைப்பு ஒரு கொலை</h2><p>உச்ச நீதிமன்றமே கருக்கலைப்பு என்பது பெண்களின் அடிப்படை உரிமை என்பதையும், தனது உடல் குறித்து முடிவெடுக்கும் உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் மிக முக்கியமானது என்பதையும் பல வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளில் உறுதிப்படுத்தியுள்ளது. இத்தகைய சூழலில், 'கருக்கலைப்பு ஒரு கொலை' என முழக்கமிடும் மத ரீதியான ஊர்வலத்தில்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D"> சபாநாயகர்</a> ஜே. சி. டி. பிரபாகர் பங்கேற்பது, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களுக்கும் நாட்டின் சட்டங்களுக்கும் சவால் விடுவதற்குச் சமமாகும்.</p><h2>அரசியல் சாசனம்</h2><p>சட்டமன்றத்தின் சபாநாயகர் என்பவர் அரசியல் சாசனத்தை பாதுகாப்பவராகவும், சட்டத்தின் ஆட்சி நடப்பதை உறுதி செய்பவராகவும் இருக்க வேண்டும். ஆனால், ஏற்கனவே சட்டமன்றத்தில் பைபிள் வசனங்களை போதித்து, மதச்சார்பின்மைக்கு எதிராக செயல்பட்டதாக கடும் விமர்சனத்திற்குள்ளான ஜே.சி.டி பிரபாகர், தற்போது மீண்டும் ஒரு மதவாத நிலைப்பாட்டை வெளிப்படையாக ஆதரிப்பது அவர் வகிக்கும் பதவியின் மாண்பை குலைப்பதாக உள்ளது.</p> <h2>மத அடையாளம்</h2><p>மத அடையாளத்திற்காக பெண்களின் உரிமைகளுடன் விளையாடும் இத்தகைய பிற்போக்குத்தனமான போராட்டங்கள் நவீன சமூகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாகும். நாட்டின் சட்டத்தை விட தனிப்பட்ட மதக் கோட்பாடுகளுக்கே முக்கியத்துவம் அளிக்கும் சபாநாயகரின் செயல், தமிழகத்தின் முற்போக்கு சிந்தனை மற்றும் சமூக நீதி பாரம்பரியத்திற்கு விடப்பட்ட சவாலாகும். சமூக முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் இத்தகைய செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியவை.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திருப்பூர்: அரசு டிக்கெட் பரிசோதகர் - தனியார் பஸ் டிரைவர் மோதல்

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruppur-government-ticket-checker-private-bus-driver-clash</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruppur-government-ticket-checker-private-bus-driver-clash#comments</comments><guid isPermaLink="false">344b3fa8-2dd3-4f0f-a57e-44b80b03db55</guid><pubDate>Mon, 10 Aug 2026 12:20:48 +0000</pubDate><atom:updated>2026-08-10T12:20:48.002Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்,bus,பஸ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/etwsv001/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/etwsv001/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><p><a href="https://www.dailythanthi.com/">திருப்பூர் </a>மத்திய பஸ் நிலையத்தில் அரசு டிக்கெட் பரிசோதகரும், தனியார் பஸ் டிரைவரும் மோதிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ஈரோடு செல்லவேண்டிய தனியார் பஸ் இன்று மதியம் ஒதுக்கப்பட்ட நேரத்தை கடந்தும் புறப்படாமல் பஸ் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.</p><p>இதைக்கண்ட அரசு பஸ் டிக்கெட் பரிசோதகர் முத்தையன், சம்மந்தப்பட்ட தனியார் பஸ் டிரைவர் குமார், கண்டெக்டர் குணசேகரனிடம் சென்று பஸ்சை எடுக்குமாறு கூறியுள்ளார். </p><h2>மோதல்</h2><p>அப்போது, அரசு பஸ் டிக்கெட் பரிசோதகருக்கும், தனியார் பஸ் டிரைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த தனியார் பஸ் டிவரைவர் குமார், கண்டெக்டர் குணசேகரன் இணைந்து டிக்கெட் பரிசோதகர் முத்தையனை சரமாரியாக தாக்கினர். இதற்கு முத்தையனும் இருவர் மீதும் சரமாரியாக தாக்கினர். இதனால், 3 பேரும் திருப்பூர் மத்திய பஸ் நிலையத்திற்குள் மோதிக்கொண்டனர்.</p><h2>கைது </h2><p>இந்த மோதல் குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து சென்று மோதலை தடுத்து நிறுத்தினர். பின்னர் மோதலில் காயமடைந்த அரசு பஸ் கண்டெக்டர் முத்தையனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த மோதல் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மோதலில் ஈடுபட்ட தனியார் பஸ் டிரைவர் குமார், கண்டெக்டர் குணசேகரைன் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  </p> ]]></content:encoded></item><item><title>கன்னியாகுமரி - திப்ருகார் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kanyakumari-dibrugarh-vivek-express-train-cancelled</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kanyakumari-dibrugarh-vivek-express-train-cancelled#comments</comments><guid isPermaLink="false">e142abfa-de96-46ea-a8c8-be8b4bd9b0ab</guid><pubDate>Mon, 10 Aug 2026 12:18:35 +0000</pubDate><atom:updated>2026-08-10T12:18:35.639Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,Kanyakumari,விவேக் எக்ஸ்பிரஸ்,Dibrugarh,vivek express train,திப்ருகார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/bmwz42ct/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/bmwz42ct/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி, </p><p>கன்னியாகுமரியில் இருந்து அசாமின் திப்ருகார் செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை (ஆகஸ்ட் 11) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.</p><h2>கன்னியாகுமரி - திப்ருகார்</h2><p>கன்னியாகுமரியில் இருந்து நாளை மாலை 5.25 மணிக்கு புறப்பட வேண்டிய (ரெயில் எண் 22503) கன்னியாகுமரி - திப்ருகார் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.</p><h2>இணைப்பு ரெயில் ரத்து</h2><p>கடந்த ஆகஸ்ட் 7-ந்தேதி இயக்கப்பட்டிருக்க வேண்டிய இணைப்பு ரெயிலான (ரெயில் எண் 22504) ரத்து செய்யப்பட்டுள்ளதால், அதனைத் தொடர்ந்து நாளை இயக்கப்பட வேண்டிய கன்னியாகுமரி - திப்ருகார் விவேக் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">எக்ஸ்பிரஸ் </a>ரெயிலும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனால், நாளைய பயணத்துக்கு முன்பதிவு செய்துள்ள பயணிகள் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>
நெல்லை மாமன்றத்தில் விசில் அடித்தபடி வந்த த.வெ.க. கவுன்சிலர் 2 மாதம் சஸ்பெண்டு
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/councillor-suspended-for-whistling-in-nellai-corporation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/councillor-suspended-for-whistling-in-nellai-corporation#comments</comments><guid isPermaLink="false">fb71bc57-cb75-440c-be46-ad7a7172b42d</guid><pubDate>Mon, 10 Aug 2026 11:53:18 +0000</pubDate><atom:updated>2026-08-10T11:53:18.817Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,த.வெ.க.,Councilor,கவுன்சிலர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/91k940h3/ntpcst.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/91k940h3/ntpcst.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>நெல்லை</p><p>நெல்லை மாமன்றத்தில் விசில் அடித்தபடி வந்த த.வெ.க. கவுன்சிலரை மேயர் ராமகிருஷ்ணன் 2 மாதம் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.</p><p>நெல்லை மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றபோது, <a href="https://www.dailythanthi.com/">த.வெ.க. </a>கவுன்சிலர் அல்லா பிச்சை என்பவர், தோளில் கட்சி துண்டுடன் விசில் அடித்தபடி உள்ளே வந்துள்ளார்.</p>  <h2>எதிர்ப்பு கோஷம்</h2><p>இதற்கு மன்றத்தில் இருந்த உறுப்பினர்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  மாமன்றத்தில் விசில் அடிக்க கூடாது.  மாமன்றத்தில் அதற்கு அனுமதியும் கிடையாது.  மாமன்றத்திற்கு என ஒரு மரியாதை உள்ளது என கூறி உறுப்பினர்கள் எதிர்ப்பு கோஷம் எழுப்பினர்.</p><p>அப்போது உறுப்பினர் ஒருவர் மேயரை நோக்கி, இது என்ன கேலிக்கூத்து.  ஒரு முறை விசில் அடித்ததும் அதனை நிறுத்தும்படி நீங்கள் கூறினீர்கள்.  அவர் கேட்கவில்லை.  மறுபடியும் மறுபடியும் விசில் அடிக்கிறார்.  நீங்கள் நடவடிக்கை எடுப்பீர்களா? இல்லையா என கேள்வி எழுப்பினர்.  அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.</p>  <h2>மேயர் உத்தரவு</h2><p>இதனை தொடர்ந்து பேசிய மேயர் ராமகிருஷ்ணன், அவர் இயக்கம் ஒன்றில் இணைந்திருக்கிறார்.  அதனால், அந்த இயக்கத்தின் சின்னம் பயன்படுத்துவது என்பது அவருடைய உரிமை.  ஆனால், இந்த மாமன்றத்திற்கு என மரியாதை உள்ளது.  இதன் வரலாற்றிலேயே இதுபோன்று யாரும் செயல்பட்டது கிடையாது.</p><p>அவர் வேண்டுமென்றே செய்திருக்கிறார்.  2 முறை எச்சரித்தும், அதனை கேட்காமல் 3-வது முறையாக அவர் விசில் ஊதியுள்ளார்.  அவர் 9, 10 ஆகிய மாதங்களில் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என கூறி, 2 மாதங்களுக்கு அவரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.</p> ]]></content:encoded></item><item><title>த.வெ.க ஆட்சி விவசாயிகளின் பொற்கால ஆட்சி - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvks-governance-will-be-a-golden-era-for-farmers-minister-aadav-arjuna</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvks-governance-will-be-a-golden-era-for-farmers-minister-aadav-arjuna#comments</comments><guid isPermaLink="false">4ba5496f-1f94-4d51-b221-59a4e7e1f0ed</guid><pubDate>Mon, 10 Aug 2026 11:41:42 +0000</pubDate><atom:updated>2026-08-10T11:41:42.287Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Aadhav Arjuna,ஆதவ் அர்ஜுனா,த.வெ.க,Aadav arjuna,அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/802hbree/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/802hbree/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>கரும்பு உற்பத்தி கடந்த 5 வருடங்களில் 100 சதவீதத்தில் இருந்து 70 சதவீதம் வீழ்ச்சி அடைந்து, தொழில் ஆலைகள் மூடப்பட்டுள்ளதாக சட்டசபையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;-</p><h2>அரிசியின் தரம் குறைவு</h2><p>”ரேஷன் கடைகளில் இலவசமாக  கொடுக்கப்படும் அரிசி சாப்பிட முடியாத அளவுக்கு தரம் குறைந்துள்ளது. இதை தடுக்கவே உடனடியாக சன்னகர நெல்லின் உற்பத்தி விலையை ரூ.2,850 ஆக உயர்த்த வேண்டும் என <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">முதல்-அமைச்சர்</a> உத்தரவிட்டார். இந்த நெல் அதிமாக உற்பத்தி ஆகும்போது, இதை மக்களுக்கு கொடுங்கள். இதன் மூலமாக உணவு துறையில் தற்போது உள்ள அரிசியை விட நல்ல தரமான சன்னகர அரிசியை வழங்கும் நோக்கில் இந்த திட்டத்தை அமல்படுத்தியுள்ளதாக முதல்-அமைச்சர் கூறினார்.</p><h2>கரும்பின் வீழ்ச்சி</h2><p>கரும்பு உற்பத்தி கடந்த 5 வருடங்களில் 100 சதவீதத்தில் இருந்து 70 சதவீதம் வீழ்ச்சி அடைந்து, தொழில் ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையை தொடர்ந்து விவசாயிகள் கரும்பை பயிரிடவில்லை எனில் தமிழ்நாட்டுக்கு தேவையான சர்க்கரை அளவு குறைந்து மராட்டியத்தில் இருந்து இறக்குமதி செய்யும் நிலை வந்துவிடும். கரும்பு விளைச்சலில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஒரு மெட்ரிக் டன் கரும்புக்கு ரூ.4,000 வழங்குவதாக நம் முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த (தவெகவின்) 5 வருட கால ஆட்சி விவசாயிகளின் பொற்கால ஆட்சியாக முதல்-அமைச்சர் உருவாக்குவார். சொன்னதை செய்வார்”. இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஆடி அமாவாசை திருவிழா: சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு 150 சிறப்பு பஸ்கள் இயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aadi-amavasai-festival-150-special-buses-operated-to-sorimuthu-ayyanar-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aadi-amavasai-festival-150-special-buses-operated-to-sorimuthu-ayyanar-temple#comments</comments><guid isPermaLink="false">e71e3b32-7b5d-44c9-9a29-625c65a551a6</guid><pubDate>Mon, 10 Aug 2026 11:33:40 +0000</pubDate><atom:updated>2026-08-10T11:33:40.765Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>aadi amavasai,ஆடி அமாவாசை,ஆடி அமாவாசை விழா,Sorimuthu Ayyanar Temple,சொரிமுத்து அய்யனார் கோவில்,Aadi Amavasai festival,ஆடி அமாவாசை திருவிழா,சிறப்பு பஸ்கள் இயக்கம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/wp2zraum/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/wp2zraum/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நாளை மறுநாள் (புதன்கிழமை) நடைபெற உள்ளது.</p><p>திருவிழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தர உள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குடில்களில் தங்கி சாமி தரிசனம் செய்ய உள்ளனர்.</p><h2>ஒரு நாள் மட்டும் அனுமதி</h2><p><a href="https://www.dailythanthi.com/devotional/aadi-amavasai-devotees-flock-to-sorimuthu-ayyanar-temple">சொரிமுத்து அய்யனார் கோவில்</a> பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளதால், பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வனப்பகுதியை பாதுகாக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.</p><p>குடில்களில் தங்கும் பக்தர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்வதற்கு வசதியாக நேற்று ஒரு நாள் மட்டும் தனியார் வாகனங்களில் கோவில் பகுதிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து நூற்றுக்கணக்கான தனியார் வாகனங்களில் ஏராளமான பக்தர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களுடன் கோவிலை நோக்கி சென்றனர்.</p><h2>அரசு பஸ்களில் மட்டுமே பயணம்</h2><p>இன்று முதல் வருகிற 12-ந்தேதி வரை அகஸ்தியர்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ்களில் மட்டுமே பக்தர்கள் கோவில் பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.</p><p>ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் நெல்லை மண்டல நிர்வாக இயக்குனர் செல்வம் உத்தரவின்பேரில், இன்று முதல் வருகிற 14-ந்தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.</p><p>நெல்லை, ஆலங்குளம், சுரண்டை, அம்பை, தென்காசி மற்றும் அகஸ்தியர்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து பக்தர்களின் வசதிக்காக மொத்தம் 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.</p><h2>வனச்சோதனை சாவடியில் தீவிர சோதனை</h2><p>பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் பிளாஸ்டிக் பொருட்கள், கேரி பேக்குகள், போதைப்பொருட்கள், மதுபானங்கள் மற்றும் வனவிலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>இதையடுத்து பாபநாசம் வனச்சோதனை சாவடியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவிலுக்கு செல்லும் அரசு பஸ்களை நிறுத்தி, அதில் பயணம் செய்யும் பக்தர்களின் உடைமைகள் மற்றும் பொருட்களை சோதனை செய்த பின்னரே வனப்பகுதிக்குள் செல்ல அனுமதித்து வருகின்றனர்.</p><p>ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால், வனத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்துத்துறை சார்பில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>கல்லூரிக்குச் சென்ற முதல் நாளிலேயே சோகம்: ரெயில் மோதி மாணவி பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-on-the-first-day-of-college-student-dies-after-being-hit-by-train</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-on-the-first-day-of-college-student-dies-after-being-hit-by-train#comments</comments><guid isPermaLink="false">d0064eb9-4441-4708-ba4f-b03e2f8d7856</guid><pubDate>Mon, 10 Aug 2026 11:06:59 +0000</pubDate><atom:updated>2026-08-10T11:06:59.902Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>train accident,Chennai,சென்னை,கல்லூரி,police enquiry,மாணவி பலி</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/mnejz07f/4.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ மாணவி ராஜஸ்ரீ]]></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மாணவி, விரைவு ரெயில் மோதி பலி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/mnejz07f/4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை</a> குரோம்பேட்டையில் கல்லூரிக்குச் சென்ற முதல் நாளிலேயே ரெயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மாணவி, விரைவு ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.</p><h2>முதல் நாள் கல்லூரிக்கு சென்ற மாணவி</h2><p>சென்னையைச் சேர்ந்த மாணவி ராஜஸ்ரீ (வயது 18). அந்த மாணவி குரோம்பேட்டையில் உள்ள வைஷ்ணவா கல்லூரியில் புதிதாகச் சேர்ந்தார். இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) அவரது கல்லூரியின் முதல் நாள் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்போடு வீட்டை விட்டுப் புறப்பட்டார். மாணவி குரோம்பேட்டை வைஷ்ணவா கல்லூரிக்கு அருகில் உள்ள<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> ரெயில்வே கேட் </a>பகுதியை வந்தடைந்தார். அப்போது, அங்குள்ள ரெயில் தண்டவாளத்தை அவர் கடக்க முயன்றார்.</p><h2>மாணவி உயிரிழப்பு</h2><p>அவர் தண்டவாளத்தைக் கடக்க முயன்றார். அப்போது, சென்னை நோக்கி அதிவேகமாக வந்த ஒரு விரைவு ரெயில் ஒன்று எதிர்பாராதவிதமாக<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> மாணவி ராஜஸ்ரீ </a>மீது பலமாக மோதியது. இந்த கோர விபத்தில் அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் அந்த மாணவிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே போலீசார், மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான முழுமையான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>கல்லூரிக்குச் சென்ற முதல் நாளிலேயே மாணவி விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் சக மாணவர்களிடையே பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்களின் போராட்டம் பற்றி விவாதிக்கத் தயார்; எதிர்க்கட்சிகள் அமித்ஷாவின் பதிலை அமைதியாக கேட்க வேண்டும் - கிரண் ரிஜிஜு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ready-to-discuss-the-students-protest-opposition-parties-should-listen-to-amit-shahs-reply-calmly-kiren-rijiju</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ready-to-discuss-the-students-protest-opposition-parties-should-listen-to-amit-shahs-reply-calmly-kiren-rijiju#comments</comments><guid isPermaLink="false">ad6edb3e-60cc-4fec-9899-a7543e18492b</guid><pubDate>Mon, 10 Aug 2026 11:01:49 +0000</pubDate><atom:updated>2026-08-10T11:01:49.617Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அமித்ஷா,Amit Shah,கிரண் ரிஜிஜு,Kiren Rijiju</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/ftk2csnb/National-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/ftk2csnb/National-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><p>மாணவர்களின் போராட்டம் பற்றி விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாகவும், எதிர்க்கட்சிகள் அமித்ஷாவின் பதிலை அமைதியாக கேட்க வேண்டும் எனவும் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். </p><p>மழைக்காலக் கூட்டத்தொடர் நிறைவடைய இன்னும் மூன்று நாள்களே உள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் நிலவும் முட்டுக்கட்டையால் பெண்கள் இட ஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை மற்றும் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம் தொடர்பான முக்கிய மசோதாக்களின் நிலை நிச்சயமற்றதாக உள்ளது.</p><p>இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் 16-வது நாளான இன்று காலை 11 மணிக்கு அவை நடவடிக்கைகள் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டங்களால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சில நிமிடங்களில் மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் மதியம் 12 மணிக்கு இரு அவைகளும் மீண்டும் கூடின.</p><p>அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள், டெல்லியில் கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட காவல்துறை நடவடிக்கை குறித்து உள்துறை மந்திரி அறிக்கை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். நாடாளுமன்ற வளாகத்திற்கு அமித்ஷா வருகை தந்தாலும், அவைக்குள் அவர் காணப்படவில்லை.</p><p>இந்நிலையில், நாடாளுமன்ற விவகாரத் துறை மந்திரி கிரண் ரிஜிஜு பேசுகையில், மாணவர் போராட்டங்கள் மற்றும் காவல்துறை நடவடிக்கை குறித்து மக்களவையில் விவாதம் நடத்த அரசு தயாராக இருப்பதாகவும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அதற்கு பதிலளிப்பார் என்றும்  தெரிவித்தார். எனினும், எதிர்க்கட்சிகள் விவாதத்தில் இருந்து வெளியேறாமல் அமைதியாக கேட்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.</p><p>மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் மாணவர் போராட்டங்கள் குறித்த விவாதத்திற்கும் அரசு தயாராக இருப்பதால், அவையில் நடைபெறும் விவாதத்தின்போதும் அதற்குப் பதிலளிக்கும்போதும் எதிர்க்கட்சிகள் எந்தவிதமான அமளியிலோ அல்லது முழக்கமிடும் செயலிலோ ஈடுபடக்கூடாது என்றும் கிரண் ரிஜிஜு கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக அரசியலில் உருவாகும்  புதிய போட்டி: எதிர்காலத்தில் விஜய்க்கும், தனுசுக்கும் இடையேதான்  - பிரபல ஜோதிடர் கணிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81#comments</comments><guid isPermaLink="false">847e0dfb-618a-4314-a322-d5c26e10d0ae</guid><pubDate>Mon, 10 Aug 2026 10:49:30 +0000</pubDate><atom:updated>2026-08-10T10:49:30.461Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,தனுஷ்,Dhanush,தமிழக அரசியல்,ஜோதிடர் கணிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/tu9kuw1g/vijayone33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/tu9kuw1g/vijayone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பிரபல ஜோதிடர் ரத்தன் பண்டிட், அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் தொழில்துறை பிரபலங்க ளுக்கு பல ஆண்டுகளாக ஜோதிட ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.</p><h2>ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர்</h2><p>இவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடராக இருந்து முக்கிய ஆலோசனைகளை வழங்கியவர் என்ற பெருமையையும் பெற்றவர். அதேபோல் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்யுடனும்</a> நீண்டகாலமாக நெருக்கமாக இருந்து வருகிறார். </p><p>சமீபத்திய தமிழக சட்டசபை தேர்தலின் போது அவரது ஜோதிட கணிப்பு உலகம் முழுவதும் பேசுபொருளானது. தேர்தல் ஆணையம் காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று அறிவித்து இருந்த நிலையில், அதற்கு முன்பாகவே காலை 9 மணியளவில் பூங்கொத்துடன் விஜய்யை நேரில் சந்தித்து,"வெற்றிக்கு வாழ்த்துகள்" என்று கூறி வாழ்த்து தெரிவித்தார்.</p><h2>உலகளவில் கவனம் பெற்ற கணிப்பு</h2><p>பின்னர் தேர்தல் முடிவுகள் வெளியானதில் விஜய் வெற்றி பெற்று தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதை தொடர்ந்து, ரத்தன் பண்டிட்டின் ஜோதிடத் திறன் உலகளவில் கவனம் பெற்றதுடன் அவரது கணிப்பு பரவலாக பேசப்பட்டது.</p><p>இந்த நிலையில் சென்னையில் நடந்த தனியார் நிகழ்ச்சியில், ஜோதிடர் ரத்தன் பண்டிட்டுக்கு, சிறப்பு விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற அவர் பேசும்போது, தமிழக முதல்-அமைச்சர் விஜய் குறித்து மீண்டும் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். மேலும் அரசியலில் யார் யாரெல்லாம் சாதிப்பார்கள். யாரெல்லாம் ஜொலிக்க மாட்டார்கள் என்றும் அவர் தனது கணிப்பை தெரிவித்தார்.</p><h2>எதிர்காலத்தில் விஜய் - தனுஷ் போட்டி</h2><p>முதல்-அமைச்சர் விஜய் கையில் சுட்டி இருக்கும் சிகப்பு கயிறு முருகப்பெருமாளின் அருளின் அடையாளம். அந்த சிகப்பு கயிறு வெற்றியையும் உயர்வையும் குறிக்கிறது. முருகனின் அருளால் அவருக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். அவர் எடுத்துள்ள பாதை வெற்றிப் பாதையாக அமையும்.</p><h2>மு.க.ஸ்டாலின்:-</h2><p> முன்னாள் முதல்-அமைச் சர் மு.க.ஸ்டாலினுக்கு இனி வெற்றி யோகம் இல்லை. அவருடைய அரசியல் பயணம் ஓய்வை நோக்கி செல்லும்.</p><h2>உதயநிதி ஸ்டாலின்:</h2><p>விஜய் அரசியலுக்கு வரவில்லை என்றால் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் - அமைச்சராகும் வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் தற்போதைய சூழலில் அவருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியே அமையும்.</p><h2>அண்ணாமலை:-</h2><p>அண்ணாமலைக்கு தமிழக அரசியலில் முதல்-அமைச்சர் யோகம் இல்லை. இனி தமிழக அரசியலில் முக்கிய சக்தியாக இருப்பவர் முதல்- அமைச்சர் விஜய் தான்.</p><h2>நடிகர் தனுஷ்:- </h2><p>எதிர்காலத்தில் நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவதற்கான யோகம் இருக்கிறது. அவர் அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கும் காலம் வந்தால் தமிழக அரசியலில் புதிய போட்டி உருவாகும். அதுவரை தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கு குறிப்பிடத்தக்க அரசியல் போட்டி இருக்காது. தனுசின் அரசியல் வருகைக்கு பிறகே தமிழக அரசியல் புதிய கட்டத்தை நோக்கி செல்லும்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p><p>நடிகர் தனுஷ் நற்பணி மன்றத்தை சட்டமன்ற தொகுதிகள் சார்ந்து விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருவதை அறிவிப்பு ஒன்று உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் அரசியல் ஆழம் பார்க்கிறாரா தனுஷ்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அண்மையில் நடந்த தனது பிறந்த நாள் விழா நிகழ்வில், “சும்மா வந்தோம், என்னுடன் புகைப்படம் எடுத்தோம், என இருக்க கூடாது. உங்களை சுற்றியுள்ளவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுங்கள். நலத்திட்ட உதவிகள் வழங்குங்கள்” என்று பேசியிருந்தார் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>ஜோதிடர் ரத்தன் பண்டிட் பகிர்ந்த கருத்துகள் சமூக வலை தளங்களில் பரபரப்பான விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>பக்தர்கள் கவனத்திற்கு... சதுரகிரி கோவிலுக்கு மலையேற புதிய கட்டுப்பாடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-rules-for-sathuragiri-temple-hill-climb</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-rules-for-sathuragiri-temple-hill-climb#comments</comments><guid isPermaLink="false">8e049146-40fa-4548-baa7-4b51c13491a9</guid><pubDate>Mon, 10 Aug 2026 10:41:34 +0000</pubDate><atom:updated>2026-08-10T10:41:34.314Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பக்தர்கள்,Devotees,சதுரகிரி கோவில்,மலை,Trekking,Chathuragiri Hill Temple,புதிய கட்டுப்பாடு,New Restrictions</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/zf2n3jrb/sathuragiri-temple.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ சதுரகிரி கோவில்]]></media:title><media:description type="html"><![CDATA[ சதுரகிரி கோவிலுக்கு மலையேற புதிய கட்டுப்பாடு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/zf2n3jrb/sathuragiri-temple.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி,</p><p>தேனி மாவட்டம் உப்புத்துறை பழைய கருப்பசாமி கோவில் வனப்பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தேனி மாவட்ட காவல் துறை மற்றும் வனத்துறை அறிவித்துள்ளது.</p><h2>குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே அனுமதி</h2><p>வழக்கம்போல் நாள் முழுவதும் மலையேற பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. தேனி வனப்பகுதி வழியாக வரும் பக்தர்கள், காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே மலைப்பாதைக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். அதற்கு பின் வரும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும்.</p><p><strong>வனப்பகுதியின் பாதுகாப்பை கருதி பின்வரும் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது:-</strong></p><h2> தடை செய்யப்பட்ட பொருட்கள்</h2><p>தீப்பெட்டி, லைட்டர் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் போன்ற சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பொருட்களின் பயன்பாட்டிற்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>யாருக்கெல்லாம் அனுமதி இல்லை?</h2><p> மலை பயணத்தின் ஆபத்து மற்றும் பக்தர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் இந்த வனப்பாதை வழியாக மலையேறுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p> <h2>போலீஸ் பாதுகாப்பு</h2><p>பக்தர்களின் பாதுகாப்பிற்காக தேனி மாவட்ட காவல் துறை மற்றும் வனத்துறையினர் இணைந்து தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மோட்டா ரக நெல்லுக்கான ஊக்கத்தொகையை உயர்த்திட வேண்டும்: விவசாயிகள் சங்கம் கோரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-incentive-for-motta-rice-variety-farmers-association-demand</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-incentive-for-motta-rice-variety-farmers-association-demand#comments</comments><guid isPermaLink="false">031cb40f-547b-4e38-91a2-613c47750950</guid><pubDate>Mon, 10 Aug 2026 09:56:40 +0000</pubDate><atom:updated>2026-08-10T09:56:40.352Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஊக்கத்தொகை,Paddy,farmers association,கோரிக்கை,நெல்,demands,Incentive,தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/m3xf7ihn/masilamani-tamil-nadu.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பி.எஸ்.மாசிலாமணி]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/m3xf7ihn/masilamani-tamil-nadu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மோட்டா இரக நெல்லுக்கான ஊக்கத்தொகையை உயர்த்திட வேண்டும் என்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்</a> கோரிக்கை. இது தொடர்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>கரும்பு.. மற்றும் நெல் விலை உயர்வு,தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம். மோட்டா ரக நெல்லுக்கான ஊக்கத்தொகையை உயர்த்திட வேண்டும்... தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரல்..  </p><h2>நெல் விலை உயர்வு</h2><p> இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக முதல்-அமைச்சரின் அறிவிப்பாக பொதுப்பணி துறை அமைச்சர்  நெல் மற்றும் கரும்புக்கு... நெல் குவிண்டால் ரூபாய் 3500 விலையாக தமிழ்நாடு அரசு அறிவிக்கும் என எதிர்பார்த்து இருந்த நிலையில்.... தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள விலை உயர்வை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வரவேற்கிறோம். </p><h2>கரும்பு சாகுபடி</h2><p>கடந்த 7.ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் 8 அமைச்சர்களுடன் நடந்த கலந்துரையாடலில் நெல் மற்றும் கரும்புக்கான விலை உயர்வை நடப்பு பருவத்திற்கு உடன் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். தமிழ்நாட்டில் தற்போது 30 சதவிதம் அளவிற்கே கரும்பு சாகுபடி உள்ளதை.. முந்தைய நிலையில் உயர்த்திட வேண்டும் என கடலூரில் நடந்த கரும்பு உற்பத்தியாளர் சங்க மாநாடு தீர்மானம் மற்றும் கூட்டத்தில் கரும்பு விவசாய சங்க தலைவர் பேசியதை ஏற்று சட்டமன்றத்தில் அறிவிப்பு செய்து இருப்பதை பாராட்டுகிறோம்.</p><h2>பாராட்டுகிறோம்</h2><p>இந்த நிலையில் நடப்பு பருவத்திற்கான கரும்பு விலையாக மத்திய அரசின் விலையோடு டன் ஒன்றுக்கு 709.50 ரூபாய் சேர்த்து ரூபாய் 4000 என்று அறிவித்திருப்பதையும், கரும்பு  சாகுபடி பரப்பை உயர்த்திட நடவடிக்கை எடுக்க உள்ளதையும் பாராட்டுகிறோம்.   </p><h2>மோட்டா ரக</h2><p>   மேலும் நெல் குவிண்டால் ஒன்றுக்கு கடந்தாண்டு மத்திய அரசு அறிவித்த விலையுடன் நடப்பாண்டிற்கு ஊக்கத்தொகையாக சன்ன ரகத்துக்கு ரூபாய் 289 சேர்த்து ரூ.2750 எனவும்... மோட்டா ரகத்திற்கு ரூபாய் 159 சேர்த்து 2600 ரூபாய் என்றும்  அறிவித்துள்ளளதை பாராட்டுகிறோம்.</p><h2>விவசாய கடன்கள் தள்ளுபடி</h2><p>மற்றும் த.வெ.க. அரசின் தேர்தல் கால வாக்குறுதிபடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்திட வேண்டும் என தொடர்ந்து போராட்டம் நடந்து வரும் நிலையில்.. கடந்த ஏழாம் தேதி அன்று அமைச்சர்கள் முன் நடந்த பேச்சுவார்த்தையில் நாங்கள் வலியுறுத்தியபடி, தள்ளுபடி அறிவிப்பை செய்திட வேண்டும். ஏனெனில்... வங்கியாளர்கள் விவசாயிகளிடம் கடனை திருப்பி செலுத்த வற்புறுத்தி வருகிறார்கள். இரண்டாம் கட்ட நிலையில் விவசாயிகள் இருப்பதால் வரும் சாகுபடி பணிகளில் கவனம் செலுத்த முடியாது விவசாயிகள் தவிக்கின்றனர். எனவே பயிர் கடன் தள்ளுபடியையும் விவசாயிகள் எதிர்பார்த்த முறையில் உடன் அறிவிப்பை செய்திட வேண்டுகிறோம்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content:encoded></item><item><title>முதலிடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து: தீர்மானத்தை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-thai-vazhthu-given-top-priority-thanks-to-everyone-who-supported-the-resolution-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-thai-vazhthu-given-top-priority-thanks-to-everyone-who-supported-the-resolution-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">5748071c-b71f-4dac-b905-7e0fa8d34f7f</guid><pubDate>Mon, 10 Aug 2026 09:55:28 +0000</pubDate><atom:updated>2026-08-10T09:55:28.666Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,தமிழக அரசு,தமிழ்த்தாய் வாழ்த்து,முதல்-அமைச்சர் விஜய்,தவெக அரசு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/2p355dle/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/2p355dle/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசுத் துறை, கல்வி நிறுவன நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை கட்டாயமாக்கும் வகையில், சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu/tamilthai-vazhthu-mandatory-at-government-events-chief-minister-vijay-resolution">தனித்தீர்மானம் </a>கொண்டு வந்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><h2>தமிழ் என்றால் கெத்து</h2><p>இந்தியாவின் நெற்றியில் வைக்கக்கூடிய வெற்றிப் பொட்டுதான் நம் தமிழ்நாடு. தமிழ் என்றால் கெத்து; தமிழ் என்றால் அது தனி பவர். ஒரு பெயரே, ஒரு சொல்லே மிகப்பெரிய வரலாறுன்னா அது தமிழ்தான். தமிழ் மொழி என்றால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒன்றாக வந்து நிற்கும். தமிழ் வெறும் மொழி மட்டும் அல்ல; நம் உயிர்; பேசினால் ஓசை மட்டும் இல்லை, உணர்வும் வரும்; நம் தாய்மொழி குறித்த உணர்வை புரியவைக்க தாய் மொழி, தமிழ் மொழி என்று சொல்வதே போதும்.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிப்பதுதான் மாநில உரிமை. தமிழ்த்தாய் வாழ்த்தின் மரியாதையை பாதுகாப்பதில் தவெக அரசு சமரசம் செய்யாது. உணர்வோடு கலந்திருக்கக்கூடிய தமிழை பின்னுக்குத் தள்ளினால் எப்படி பொறுத்துக்கொள்வது?; தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலிடத்தில் இருக்க வேண்டும்; அது நம் உரிமை. தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்று கூறுவது அரசியல் சார்ந்த விவாதமாக மாற வேண்டிய அவசியம் இல்லை. கட்சி வேறுபாடுகளை கடந்து ஒன்றிணைந்து அனைத்து உறுப்பினர்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூறினார்.</p><h2>திமுக ஆதரவு</h2><p>இதனையடுத்து முதல்-அமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்துக்கு திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. திமுக சார்பில் எம்.எல்.ஏ. கோவி.செழியன் பேசுகையில், “அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற தீர்மானத்துக்கு திமுக ஆதரவு தெரிவிக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடவேண்டும் என முதலில் அரசாணை வெளியிட்டவர் முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர். தமிழ்த்தாய் வாழ்த்தை கட்டாயம் பாட வேண்டும் என 2021 டிச. 17இல் அரசாணை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின். தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இயற்றியவரின் பெயரில் உள்ள பல்கலைகழகத்திலேயே 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டது அடிக்கடி மாறுபடும் இந்த சூழலை மாற்றிட இதனை சட்டமாக மாற்ற வேண்டும் என்று கூறினார்.</p><h2>அதிமுக ஆதரவு</h2><p>தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “தமிழ்த்தாய் வாழ்த்து வெறும் பாடல் அல்ல..! அது நம் பண்பாட்டின் அடையாளம். தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது யாருக்கும் எதிரானது அல்ல; தேசப்பற்றும் மொழிப்பற்றும் வேறு வேறானது அல்ல.. அரசியலில் நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.. ஆனால் தமிழ் என்று வரும்போது நாம் அனைவரும் ஒரே குரலில் ஒலிக்க வேண்டும்” என்று கூறினார்.</p><h2>ஒருமனதாக நிறைவேற்றம்</h2><p>தொடர்ந்து முதல்-அமைச்சர் விஜய் முன்மொழிந்த தனித்தீர்மானத்திற்கு காங்கிரஸ், பாமக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், பாஜக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து தனித்தீர்மானம் அனைத்து கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.</p><p>இந்த நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழ்நாட்டின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் கட்டாயம் முதலில் பாடப்படவேண்டும் என்ற அரசினர் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu/tamilthai-vazhthu-mandatory-at-government-events-chief-minister-vijay-resolution">தனித்தீர்மானத்தை </a>தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக நிறைவேற்றி தந்தமைக்காக நன்றி தெரிவித்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>மனமார்ந்த நன்றிகள்</h2><p>தமிழ் ஒரு மொழி மட்டுமன்று, அது ஒரு சிந்தனை-பண்பாடு-நாகரீகம்-அதோடு தமிழ் நம் உயிர்; தமிழ் நம் உணர்வு என்பதை முழுமையாக உணர்ந்ததே நமது தமிழ்நாடு அரசு.  மேலும், தமிழ் மொழியின் தொன்மை, தனித்தன்மை, பெருமை, சிறப்பு மற்றும் தமிழர்களின் உணர்வைப் போற்றிப் பாதுகாக்கும் வகையிலான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம், தமிழ்த்தாய்க்குச் செலுத்தப்படும் உயரிய மரியாதையாகும். இத்தீர்மானம் நிறைவேற்றிய இந்நன்னாள் தமிழ்நாட்டின் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். </p><p>இந்தத் தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஆதரித்து நிறைவேற்றித் தந்தமைக்காக என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  உலகெங்கும் தமிழ்த்தாயின் புகழ் ஓங்கட்டும்! தமிழ்நாட்டின் வெற்றிப் பயணம் தொடரட்டும்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘செவிலியர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்’ - மாணிக்கம் தாகூர் எம்.பி. </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-central-government-must-stop-playing-with-the-future-of-nurses-manickam-tagore-mp</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-central-government-must-stop-playing-with-the-future-of-nurses-manickam-tagore-mp#comments</comments><guid isPermaLink="false">4b566af3-dea4-4f5c-a00e-a060a696ba4c</guid><pubDate>Mon, 10 Aug 2026 09:49:52 +0000</pubDate><atom:updated>2026-08-10T09:49:52.684Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Manickam Tagore MP,மாணிக்கம் தாகூர் எம்.பி.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/y1d4xv2b/STate-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/y1d4xv2b/STate-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மத்திய பா.ஜ.க. அரசின் அலட்சியத்தால் செவிலியர்களின் எதிர்காலம் முடங்கியுள்ளதாக காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“மத்திய அரசு கொண்டு வந்த ‘தேசிய செவிலியர் பதிவு மற்றும் கண்காணிப்பு முறைமை" (NRTS) திட்டம் தொடங்கி 7 ஆண்டுகள் கடந்தும், நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு செவிலியர்கள் இன்னும் இதில் பதிவு செய்யப்படவில்லை என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.</p><p>நாட்டிலேயே அதிக செவிலியர்களைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில், மொத்தம் உள்ள 4,76,264 பதிவுசெய்த செவிலியர்களில் வெறும் 57,084 பேருக்கு மட்டுமே (12% மட்டுமே !) இந்த அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 4.19 லட்சத்திற்கும் அதிகமான தமிழ்நாட்டுச் செவிலியர்களின் விவரங்கள் இன்னும் ஒன்றிய அரசின் பட்டியலில் ஏற்றப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளன!</p><p>இந்திய தொழிலும்சார் செவிலியர் சங்கத்தின் (IPNA) இணைச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளது போல், இந்திய செவிலியர் கவுன்சிலின் (INC) போதிய மேலாண்மையின்மையும், பொறுப்பின்மையுமே இத்தகைய பின்னடைவுக்கு முக்கியக் காரணம்.</p><p>மாநிலங்களுக்கு இடையே இடம் பெயரவோ அல்லது புதிய பணிக்கு மாறவோ தேவையான 'தடையில்லாச் சான்றிதழ்” (NOC) பெற மாதக்கணக்கில் செவிலியர்கள் காத்துக்கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.</p><p>வெளிநாடுகளில் பணிபுரியச் செல்ல விரும்புவோரின் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் முடங்கியுள்ளன. செவிலியர்களின் வாழ்வாதாரமும், வேலைவாய்ப்பும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி. நட்டா உடனடியாக இதில் தலையிட வேண்டும். விடுபட்ட அனைத்துச் செவிலியர்களின் பதிவையும் விரைவுபடுத்தி, அடுத்த 6 மாதங்களுக்குள் அனைவருக்கும் ‘தேசிய தனித்துவ அடையாள அட்டைகளை" (NUID) வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>'டிஜிட்டல் இந்தியா” என மார்தட்டிக்கொள்ளும் பாஜக அரசு, நாட்டின் சுகாதாரத் தூண்களாகத் திகழும் செவிலியர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற தீர்மானம் வரவேற்புக்குரியது - மு.வீரபாண்டியன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-resolution-that-the-tamil-thai-vazhthu-must-be-sung-first-is-welcome-m-veerapandian</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-resolution-that-the-tamil-thai-vazhthu-must-be-sung-first-is-welcome-m-veerapandian#comments</comments><guid isPermaLink="false">7aa1273a-e134-4020-8123-5b1d0d909661</guid><pubDate>Mon, 10 Aug 2026 09:14:08 +0000</pubDate><atom:updated>2026-08-10T09:14:08.143Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,Communist Party of India,மு.வீரபாண்டியன்,M. Veerapandian</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/2rfyp9tc/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/2rfyp9tc/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற சட்டமன்றத் தீர்மானம் வரவேற்பிற்குரியது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>முதன்மை இடம் கிடைக்கவில்லை</h2><p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசு நிகழ்ச்சிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து எப்போதும் முதலில் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு முதல்-அமைச்சர் சட்டப்பேரவையில்  தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார். ஒருமனதாக இத்தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது வரவேற்பிற்குரியது.</p><p>தமிழ்நாட்டின் கவர்னர் மத்திய அரசின் சுற்றறிக்கையின் அடிப்படையில் அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரத்தை பாடும் நடைமுறையை கொண்டு வந்தார். அண்மையில் மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் வழிகாட்டலை பின்பற்றாமல், கவர்னர் ஆர்.வி.அர்லேக்கர் ஆலோசனை அடிப்படையில் வந்தேமாதரம் முதலில் பாடப்பட்டது. தமிழுக்கு முதன்மை இடம் கிடைக்கவில்லை.</p><h2>தீர்மானத்தை வரவேற்கிறோம்</h2><p>“வந்தேமாதரம்” பாடலில் சில வரிகள் ஒரு குறிப்பிட்ட பெரும்பான்மை மதச்சார்பு கொண்டதாகவும், சில வரிகள் சிறுபான்மை  முஸ்லீம் சமூகத்திற்கு எதிரானதாகவும் இருப்பதால், குறிப்பிட்ட அந்தப் பாடல் வரிகளை தேசிய கீதமாக ஏற்கக் கூடாது  என விடுதலை இயக்கக் காலத்திலேயே தீர்மானிக்கப்பட்டது.</p><p>இந்த நிலையில், கவர்னர் மாளிகை நிர்வாகத்தின் உத்தரவுப்படி, பல்கலைக் கழக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பட்டமளிப்பு விழா</a> நிகழ்ச்சி நிரலில் “வந்தேமாதரம்“ பாடலுக்கு முதலிடம் வழங்கி, தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் நிலையில் வைத்தது, வழக்கத்தில் இருந்து வரும் மரபை மீறிய செயலாகும். இவ்வாறு கவர்னரின் தமிழ், தமிழர் விரோத நடவடிக்கைகள் தொடரும் நிலையில், தமிழ்நாட்டின் மரபுரிமையை,  பண்பாட்டை பாதுகாக்க அரசு பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது. அரசு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை முதன்மைப்படுத்த, வழக்கத்தில் இருந்து வரும் மரபுரிமையை நிலை நாட்ட எடுத்துவரும் நடவடிக்கைகளை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது.</p><h2>வலுவான அழுத்தம் தர வேண்டும்</h2><p>தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மூன்றாம் இடத்துக்கு தள்ளிவிடும் மத்திய அரசின் சுற்றறிக்கையை திரும்பப் பெறவும்  தமிழ்நாடு அரசு வலுவான அழுத்தம் தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திரைப்பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு தமிழக அரசு பதவி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-appoints-film-producer-archana-kalpathi-to-a-post</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-appoints-film-producer-archana-kalpathi-to-a-post#comments</comments><guid isPermaLink="false">cd4207e1-d18c-47f2-9788-03de9bb4a196</guid><pubDate>Mon, 10 Aug 2026 09:07:38 +0000</pubDate><atom:updated>2026-08-10T09:07:38.001Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt,அர்ச்சனா கல்பாத்தி,Archana Kalpathi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/uf2sjyh9/STate-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/uf2sjyh9/STate-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்டின் (AGS Entertainment) தலைமை செயல் அதிகாரி(CEO) அர்ச்சனா கல்பாத்தி. இவரது நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகரும், தற்போதைய தமிழக முதல்-அமைச்சருமான விஜய் நடித்த ‘பிகில்’, ‘கோட்’ உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகின. </p><p>இந்த நிலையில், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு தற்போது தமிழக அரசு பதவி வழங்கப்பட்டுள்ளது. கோவில்களுக்கு மரபுசாரா அறங்காவலர்களை நியமிப்பதற்கான தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்யும் குழுவில் திரைப்பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இடம் பெற்றுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p> <p>“இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகைக்குட்பட்ட, ஆண்டு வருமானம் 10 லட்சத்திற்கு மேலுள்ள திருக்கோவில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களை தேர்வு செய்து உரிய பெயர்ப்பட்டியல் தயாரித்து அளித்திட, கீழ்க்கண்ட உறுப்பினர்களை கொண்ட மாநிலக்குழுவினை அமைத்து அரசு ஆணையிடுகிறது. </p><p>1. தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள் பொம்மபுரம் ஆதினம், மயிலம்   - தலைவர் </p><p>2. டாக்டர் கே.ராமநாதன், மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி(ஓய்வு) - துணைத் தலைவர் </p><p>3. அர்ச்சனா கல்பாத்தி அகோரம் - உறுப்பினர் </p><p>4. ப.ரா.சம்பத், இ.ஆ.ப.(ஓய்வு)  - உறுப்பினர்</p><p>5. மா.சுமதி (எ) சுமதிஸ்ரீ  - உறுப்பினர்</p><p>6. த.வேல்முருகன்  - உறுப்பினர்</p><p>7. இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் - பதவி வழி உறுப்பினர்/செயலர்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>அமித்ஷாவுக்கு கேள்விகளை எதிர்கொள்ள ஏன் இவ்வளவு தயக்கம்? - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-is-amit-shah-so-hesitant-to-face-questions-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-is-amit-shah-so-hesitant-to-face-questions-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">f37659bf-acd6-4def-97b9-3204e91b0741</guid><pubDate>Mon, 10 Aug 2026 08:49:06 +0000</pubDate><atom:updated>2026-08-10T08:49:06.584Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore MP,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/fujbpm8n/manickam-tagore.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/fujbpm8n/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஜூலை 21 முதல் நாடாளுமன்றப் பக்கமே வராமல் உள்துறை மந்திரி அமித்ஷா தலைமறைவாக இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>தலைமறைவாக இருக்கும் அமித்ஷா</h2><p>'குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும்' என்பதற்கேற்ப! இன்று நாடாளுமன்றத்தில், அரசால் அவசர மற்றும் முக்கியத்துவம் கருதி கொண்டுவரப்பட்ட Supplementary List of Business பட்டியலில், உள்துறை மந்திரி அமித்ஷாவின் பெயரில் இரண்டு முக்கிய மசோதாக்கள் The Kerala (Alteration of Name) Bill, 2026 மற்றும் The National Co-operative Development Corporation (Amendment) Bill, 2026, அறிமுகத்திற்காகப் பட்டியலிடப்பட்டிருந்தன.</p><p>ஜூலை 21 முதல் நாடாளுமன்றப் பக்கமே வராமல் தலைமறைவாக இருக்கும் அவர், தன் பெயரிலேயே மசோதாக்கள் பட்டியலிடப்பட்டிருந்தும் அவைக்கே வராமல் இணை மந்திரிகளைக் கொண்டு அவற்றை நகர்த்த வைக்கிறார். இது மக்களுக்குத் தெரியாமல் இல்லை!</p><h2>ஏன் இந்த பயம்?</h2><p>திருவண்ணாமலை கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வந்த பிறகும் அமித் ஷாவுக்கு ஏன் இந்த பயம்? லோக்சபாவிற்கு வந்து கேள்விகளை எதிர்கொள்ள ஏன் இவ்வளவு தயக்கம்?</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் விசில் அடித்த தவெக கவுன்சிலர் சஸ்பெண்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-councillor-suspended-for-blowing-a-whistle-at-the-nellai-corporation-meeting</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-councillor-suspended-for-blowing-a-whistle-at-the-nellai-corporation-meeting#comments</comments><guid isPermaLink="false">ac2acd1d-38f8-4fe0-8e7d-3fe6248297a4</guid><pubDate>Mon, 10 Aug 2026 08:32:06 +0000</pubDate><atom:updated>2026-08-10T08:32:06.818Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,நெல்லை,Nellai,கவுன்சிலர்,சஸ்பெண்டு,Councillor,நெல்லை மாநகராட்சி,Nellai Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/y216xrvg/CHENNAI-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/y216xrvg/CHENNAI-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><h2>மாமன்ற கூட்டம்</h2><p>திருநெல்வேலி மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் திமுகவில் இருந்து விலகி அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 19-வது வார்டு மாமன்ற உறுப்பினர் அல்லா பிச்சையும் பங்கேற்றார்.</p><p>கூட்டத்திற்கு அல்லா பிச்சை தோளில் தவெக துண்டை அணிந்தபடியும், விசில் அடித்தபடியும் வந்தார். இதற்கு திமுக மாமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாமன்ற கூட்டத்தை கட்சிக் கூட்டம் போன்று நடத்தக்கூடாது என்றும், மன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதனால் திமுக - தவெக மாமன்ற உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. </p><h2>சஸ்பெண்ட்</h2><p>ஒரு கட்டத்தில் தவெக. உறுப்பினர் வைத்திருந்த விசிலை திமுக உறுப்பினர்கள் பிடுங்க முயன்றதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் மீண்டும் மீண்டும் விசில் அடித்ததால் மாமன்ற கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. மாமன்ற கூட்டத்தின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி அவரை கூட்டத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும், அவை நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.</p><p>இதையடுத்து, மாமன்ற கூட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் தெரிவித்தார். அதன்படி, மாமன்ற விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி 19-வது வார்டு மாமன்ற உறுப்பினர் அல்லா பிச்சையை செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறும் மாமன்ற கூட்டங்களில் கலந்து கொள்ள தடை விதித்து (சஸ்பெண்ட்) மேயர் உத்தரவிட்டார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>ரேஷன்கடை செயல்படும் நேரத்தை மாற்றலாமா? ஆய்வு செய்து  அறிக்கை அளிக்க அரசு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/can-the-working-hours-of-ration-shops-be-changed-government-orders-to-investigate-and-submit-a-report</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/can-the-working-hours-of-ration-shops-be-changed-government-orders-to-investigate-and-submit-a-report#comments</comments><guid isPermaLink="false">6a3da3d2-34d8-4009-babc-3b345f1bbe34</guid><pubDate>Mon, 10 Aug 2026 08:28:43 +0000</pubDate><atom:updated>2026-08-10T08:28:43.537Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Ration shop,report,Kanchipuram,காஞ்சிபுரம்,ரேஷன்கடை,நேரம்,investigate</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/dwe457xl/42.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரேஷன்கடை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/dwe457xl/42.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களின் வேலை நேரத்தை மாற்றுவது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க அரசு உத்தரவு.</p><h2>ரேஷன் கடை</h2><p>இது தொடர்பாக, வெளியிட்டுள்ள கூட்டுறவுத்துறை அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் கோரிக்கையில், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வேலை நேரம் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை பிற்பகல் 3.00 மணி முதல் 7.00 மணி வரை என்பதில் மதியம் இடைப்பட்ட நேரமாக இரண்டரை மணி நேரம் உட்பட சுமார் 2 மணி நேரமாகுவதால், பணியாளர்கள் மனச்சோர்வுக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள்.</p><h2>வேலை நேரம்</h2><p>மேலும், நுகர்பொருள் வாணிபக்கழக குடோனுக்கு வெள்ளிக்கிழமை வேலை நாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை, ஆனால் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88">ரேஷன் கடை</a> பணியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை ஞாயிற்றுக்கிழமை வேலை நாள் எனவும் விடுமுறை நாட்களை விடுமுறை நாளாக குடோன் பணியாளர்களோ ரேஷன் கடை பணியாளர்களோ பயன்படாத நாளாக உள்ளது.</p><p>காஞ்சிபுரம் சென்னை ஆகிய மாவட்டங்களில் வேலை நேரத்தை காலை 8.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பிற்பகல் 2.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரை மாற்றித்தருமாறும் முதல் 2 வெள்ளிக்கிழமைகளை வேலை நேரமாகவும் முதல் 2 ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாகவும் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்பாக பதிவாளர் அலுவலகத்திற்கு குறிப்புகள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு: கொள்முதல் விலையை உயர்த்தாமல் கோடை வெயிலை குறை கூறுவதா? - அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/milk-shortage-without-raising-aavin-procurement-price-blaming-summer-heat-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/milk-shortage-without-raising-aavin-procurement-price-blaming-summer-heat-anbumani#comments</comments><guid isPermaLink="false">a16fa9ec-bc82-447d-a3ca-5f097cdd9f3d</guid><pubDate>Mon, 10 Aug 2026 08:19:50 +0000</pubDate><atom:updated>2026-08-10T08:19:50.639Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,Aavin,Aavin Milk,ஆவின் பால்,ஆவின் நிர்வாகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/qizo90zm/Untitled-12.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/qizo90zm/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு குறைந்தது ரூ.10 உயர்த்தி, கொள்முதலை அதிகரிக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஆவின் பாலுக்கு கடந்த சில நாள்களாக கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஏழைகள் மற்றும் குழந்தைகளுக்கு வரப்பிரசாதமாக விளங்கும் ஆவின் பால் அனைத்து மக்களுக்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அரசு தவறியிருப்பது கவலையளிக்கிறது.</p><p>ஆவின் நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் தினமும் 31 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வந்தது. சென்னையில் மட்டும் தினமும் 16 லட்சம் லிட்டருக்கும் கூடுதலாக ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாகவே ஆவின் பால் விற்பனை படிப்படியாக குறைந்து விட்டது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் ஆவின் பால் விற்பனை மூன்றில் ஒரு பங்கு குறைக்கப்பட்டு விட்டதாகவும், சென்னையில் 20% அளவுக்கு குறைக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>ஆவின் பால் தட்டுப்பாட்டால் தமிழக மக்கள் இரு வகைகளில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். முதலில் ஆவின் நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் பால் தான் ஒப்பீட்டளவில் தூய்மையானதாகவும், கலப்படம் இல்லாததாகவும் உள்ளது. இதனால் மூத்த குடிமக்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆவின் பாலை வழங்கும்படி மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஆனால், ஆவின் பாலுக்கு கடுமையான தட்டுப்பாடு  ஏற்பட்டிருப்பதால் குழந்தைகளுக்கும், பெரியோர்களுக்கும் தரமான பாலை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.</p><p>இரண்டாவதாக, ஆவின் பால் விலை தட்டுப்பாட்டால் தனியார் நிறுவன பால்களை அதிக விலை கொடுத்து மக்கள் வாங்க வேண்டியுள்ளது. ஆவின் பாலுடன் ஒப்பிடும்போது தனியார் நிறுவனங்களின் பால் விலை லிட்டருக்கு ரூ.16 முதல் 24 வரை அதிகம் ஆகும். ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் ஏழைகள் மாதத்திற்கு குறைந்தது ரூ.750 வரை கூடுதலாக செலவு செய்ய வேண்டும். இது அவர்களுக்கு பெரும் சுமை.</p><p>ஆவின் பாலுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாட்டால் ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே பெரும் கவலையும், கோபமும் ஏற்பட்டுள்ள நிலையில், அது குறித்து ஆவின் நிறுவனம் எந்தக் கவலையும் பட்டதாக தெரியவில்லை. கோடைக்காலம் என்பதால் பால் உற்பத்தி குறைந்திருப்பதுதான் இந்த தட்டுப்பாட்டுக்கு காரணம் என்று கூறி இந்த விவகாரத்தை மிகவும் எளிதாக கடந்து செல்ல ஆவின் நிறுவனம் முயல்கிறது. இது உண்மையல்ல.</p><p>கடந்த ஐந்தாண்டுகளாகவே ஆவின் பால் கொள்முதல் படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகிறது. 2021-ம் ஆண்டில் ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் தினமும் 41 லட்சம் லிட்டராக இருந்தது. 2022-ம் ஆண்டில் 38 லட்சம் லிட்டர், 2023-ம் ஆண்டில் 30 லட்சம் லிட்டர் என குறைந்த ஆவின் பால் கொள்முதல், இப்போது 28 லட்சம் லிட்டராக குறைந்து விட்டது. அதாவது மூன்றில் இரு பங்காகி விட்டது.</p><p>ஆவின் பால்கொள்முதல் 13 லட்சம் லிட்டர் குறைந்திருப்பதற்கு காரணம் அதன் கொள்முதல் விலைகள் உயர்த்தப்படாததுதான். பசும்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.35, எருமைப்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.44  என்ற அளவில் ஆவின் நிறுவனத்தால் வழங்கப்பட்டு வந்த கொள்முதல் விலையுடன் சேர்த்து லிட்டருக்கு ரூ.3 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தனியார் நிறுவனங்கள் அதை விட லிட்டருக்கு 12 வரை கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்கின்றன. அதற்கு இணையாக ஆவின்  நிறுவனமும் பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல் அதன் கொள்முதலை அதிகரிக்க முடியாது.</p><p>ஆனால், ஆவின் நிறுவனமும், அரசும் இதை உணரவில்லை. ஆவின் பால் கொள்முதல் குறையவில்லை  என்றும், கோடை வெப்பத்தால் குறைந்த அளவு மட்டும்தான் உயர்த்தப்பட்டிருப்பதாகவும் காரணம் கூறி வருகிறது. இந்த மாயையில் இருந்து தமிழக அரசு மீள வேண்டும். ஆவின் பால் கொள்முதல் வீழ்ச்சி அடைந்திருப்பதற்கான உண்மையான காரணத்தை அறிந்து கொண்டு உடனடியாக சரி செய்ய வேண்டும்.</p><p>ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு குறைந்தது ரூ.10 உயர்த்தி, கொள்முதலை அதிகரிக்க வேண்டும். அதன் மூலம் ஆவின் பால் மாநிலம் முழுவதும் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திமுக முன்னாள் அமைச்சர் பேச்சால் குலுங்கி குலுங்கி சிரித்த முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-laughed-heartily-at-the-remarks-made-by-the-former-dmk-minister</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-laughed-heartily-at-the-remarks-made-by-the-former-dmk-minister#comments</comments><guid isPermaLink="false">2e187484-c090-4e9b-83a0-ceba790e21cb</guid><pubDate>Mon, 10 Aug 2026 08:10:02 +0000</pubDate><atom:updated>2026-08-10T08:10:02.835Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,திமுக,DMK,சட்டசபை,TN Assembly,MRK Panneerselvam,எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/6dl3y0lk/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/6dl3y0lk/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டசபையில் பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்தில் திமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேசுகையில், பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை எனவும், மாற்றம் வரும் என நினைத்த விவசாயிகளுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியதாக கூறினார்.</p><p>இதற்கு பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்,"கடந்த ஆட்சியில் ரூ.309 கோடிக்கு நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும் என அறிவித்தது என்ன ஆனது.</p><p>எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திரைக்கதை, வசனம் பேசுகிறார். விவசாயிகளுக்கு கடந்த ஆட்சியில் நெல்லைச் சேமித்து வைக்க இடமில்லாத நிலை இருந்தது. நெல் கொள்முதலில் முறைகேடுகள் நடைபெற்றதாக விவசாயிகள் தெரிவித்தனர். கரும்புத் தோட்டத்தில் கான்கிரீட் போட்டு நடந்து சென்ற விவசாயி குறித்தும் அவர் எதுவும் கூறவில்லை என்று தெரிவித்தார்.</p><p>தொடர்ந்து பேசிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், "தமிழக வெற்றிக் கழகம் எப்படி ஆட்சிக்கு வந்தது என சாமி அமைச்சரை பார்த்தாலே தெரிகிறது" என்றார். இந்து சமய அறநிலைதுறை அமைச்சரை சாமி அமைச்சர் என எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறிய நிலையில் இதனை கண்ட முதல்-அமைச்சர் விஜய் அவையில் குலுங்கி குலுங்கி சிரித்தார்.</p><p>மேலும், இப்போதுதான் எப்படி பிரசாரம் செய்கிறீர்கள் என்று தெரிகின்றது. அவர் பேசுவது உண்மையா? பொய்யா? என்று தெரியாதவாறு டெக்னிக்காக பேசுகிறார் என்று எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்தார். தொடர்ந்து, தவெகவினரை நோக்கி நீங்களெல்லாம் படத்தைப் பார்த்து வந்தவர்கள். நாங்களும் அதிமுகவினரும் கொள்கையைப் படித்து, களத்தில் போராடி வந்தவர்கள்.</p><p>திமுக ஆட்சியில் ஆக்டிங் கிடையாது. ஆக்ஷன் மட்டுமே இருந்தது. தவெக எப்படி ஆட்சிக்கு வந்தது என்பது அமைச்சர் பேசும்போது டெக்னிக் தெரிகிறது என்று கூறினார். அதற்கு அமைச்சர் ரமேஷ் அந்த டெக்னிக்கை 10 நிமிடங்கள் முன்பு தான் அண்ணன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் கற்றுக்கொண்டேன் என கூறினார். இதனால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>புதுக்கோட்டை: முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pudukkottai-former-panchayat-president-beheaded-and-murdered</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pudukkottai-former-panchayat-president-beheaded-and-murdered#comments</comments><guid isPermaLink="false">e6be7736-45a2-4197-b011-ba3e7db4fba3</guid><pubDate>Mon, 10 Aug 2026 08:01:59 +0000</pubDate><atom:updated>2026-08-10T08:01:59.643Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,கொலை,Pudukkottai,புதுக்கோட்டை,நிலத்தகராறு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/r0b7luqo/pputhukottai33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/r0b7luqo/pputhukottai33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுக்கோட்டை </p><p>புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே கோங்குடிபட்டி முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் நாகராஜ் (59) வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p>புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே தன்னாங்குடியை சேரந்த முன்னாள் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D">ஊராட்சி மன்ற தலைவர் </a>நாகராஜ், இவர் இன்று காலை அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வரும் தனது மனைவியை பள்ளியில் இறக்கி விட்டு மீண்டும் பாக்குடி வழியாக வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது பாக்குடி பெரிய குடும்பம்பட்டி சாலையில் இவரை வழிமறித்த மர்ம நபர்கள், தலையை துண்டித்து படுகொலை செய்து விட்டு கண் இமைக்கும் நேரத்தில் மின்ன வேகத்தில் தப்பி ஓடி விட்டனர்.</p><p>பாக்குடி கவரச்சி குளக்கரை தார் சாலை நடுவே வெட்டுக்காயத்துடன் சடலமாகக் கிடந்தவரை போலீசார் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.</p><p>இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இவருக்கும் பக்கத்து வீட்டில் வசித்து வரும் முத்துலட்சுமி என்பவருக்கும் ஏற்கனவே இட பிரச்சினை தொடர்பாக வழக்கு இருப்பதாகவும், இந்த வழக்கில் நாகராஜ் மீது இலுப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும்  முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. </p><p>மேலும் இந்த கொலைக்கான காரணம் இடப்பிரச்சினையா அல்லது வேறு ஏதும் பிரச்சினையா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட நாகராஜ் ஏற்கனவே கோங்குடிபட்டி ஊராட்சி மன்ற தலைவராகவும் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>புதுக்கோட்டையில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. </p>]]></content:encoded></item><item><title>“மாநிலப் பாடலை 3-வது பாட வேண்டும் என மத்திய அரசின் சுற்றறிக்கையில் குறிப்பிடவில்லை” - தமிழிசை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-central-government-circular-does-not-mention-that-the-state-anthem-should-be-sung-third-tamilisai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-central-government-circular-does-not-mention-that-the-state-anthem-should-be-sung-third-tamilisai#comments</comments><guid isPermaLink="false">0e2b134d-08cc-4b92-9af5-a870c6544a1d</guid><pubDate>Mon, 10 Aug 2026 07:58:35 +0000</pubDate><atom:updated>2026-08-10T07:58:35.535Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,தமிழிசை சவுந்தரராஜன்,Central Government,Circular,சுற்றறிக்கை,மத்திய அரசின்,Tamilisai Saundarajan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/c2vmhhk6/41.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழிசை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/c2vmhhk6/41.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மத்திய உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கையில் மாநிலப் பாடலை மூன்றாவதாகப் பாட வேண்டும் என எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக, தமிழக முன்னாள் பாஜக தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%20%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D">தமிழிசை சவுந்தரராஜன்</a> தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>சுற்றறிக்கை</h2><p>சட்டமன்றத்தில் பேசிய இடது கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ஒரு புரிதல் இல்லாமல் மத்திய அரசு இதில் தலையிட முடியாது என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட வேண்டும் என்று தமிழ் தாயை பெருமை சேர்க்கும் இடத்தில் கூட மத்திய அரசின் மீது உள்ள வன்மத்தை உமிழ்ந்தார் என்பது தான் எனது கருத்து ஏனென்றால் மத்திய உள்துறை அமைச்சரிடம் இருந்து வந்த சுற்றறிக்கை அந்தந்த மாநில பாடல் மூன்றாவது பாடப்பட வேண்டும் என்று எங்கேயுமே குறிப்பிடப்படவில்லை. </p><p>அந்த சுற்றறிக்கை என்ன சொல்கிறது என்றால் புதிதாக இப்பொழுது வந்தே மாதரம் பாடல் சேர்க்கப்படுவதால் வந்தே மாதரம் பாடல் தேசிய கீதத்திற்கு முன்னால் பாடப்பட வேண்டும் அது முழுவதுமாக பாடப்பட வேண்டும் என்று தான் சொல்லப்பட்டு இருக்கிறது. அதனால் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முதல் இடம் அளிக்கப்படுவது நம் எல்லோருக்கும் பெருமைதான் ஆனால் இங்கே சிலர் ஏதோ உள்துறை அமைச்சகம் மாநில பாடலை மூன்றாவதாக பாட வேண்டும் என்று வலியுறுத்துவதாக பேசுவது சரியல்ல.</p><h2>திருக்குறள்</h2><p>இன்று திருக்குறள் நமக்கு பெருமை சேர்க்கிறது என்று தீர்மானத்தை முன்மொழிந்த முதல்-அமைச்சர் இன்று தான் சொல்கிறார் ஆனால் திருக்குறளை உலக அரங்கில் எடுத்துச் சென்றவர் நம் பிரதமர் என்பதை நான் பெருமையோடு இங்கே நினைவு கூறுகிறேன்.</p><p>அதுமட்டுமல்ல புதிய கல்விக் கொள்கையில் கூட மாநில மொழிக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது ஆனால் அதுவுமே இங்கே தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்பதை தான் நான் தெரிவித்துக் கொள்கிறேன். </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>