<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 11 Aug 2026 09:35:06 +0000</lastBuildDate><item><title>  கிராமசபை கூட்டத்தில் மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-urges-grama-sabha-to-pass-resolution-against-mekedatu-dam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-urges-grama-sabha-to-pass-resolution-against-mekedatu-dam#comments</comments><guid isPermaLink="false">a22bcac1-5173-4f85-9bb6-c63fa52fa562</guid><pubDate>Tue, 11 Aug 2026 09:33:28 +0000</pubDate><atom:updated>2026-08-11T09:33:28.203Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani Ramadoss,Gram Sabha Meeting,கிராமசபை கூட்டம்,தீர்மானம்,மேகதாது அணை,அன்புமணி ராமதஸ்,நிறைவேற்ற வேண்டும்,Mekedatu Dam Issue</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/1toqj0yw/anbumani.20.gif" width="750"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/1toqj0yw/anbumani.20.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஆகஸ்ட் 15 விடுதலை நாள் கிராமசபை கூட்டத்தில் மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இது தொடர்பாக, பா.ம.க. தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/anbumani-ramadoss">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>மேகதாது அணை திட்டம்</h2><p>காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக்கும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேகதாது அணை</a> திட்டத்திற்கு தமிழ்நாட்டில் கடும்  எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அதை சிறிதும் பொருட்படுத்தாமல் அணை கட்டுவதற்கான ஆயத்த பணிகளை  கர்நாடக அரசு மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி, இந்த விவகாரத்தில், மொழி&amp;இனவெறி அமைப்புகளால் தமிழ்நாட்டுக்கு எதிரான போராட்டங்களையும் கர்நாடக அரசு ஊக்குவித்து வருகிறது. இரு மாநிலங்களுக்கு  எதிரான நல்லுறவை சிதைக்கும் வகையிலான கர்நாடக அரசின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.</p><h2>குடிநீர் தேவை</h2><p>காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட வேண்டும் என்பதற்கு ஒரே ஒரு நியாயமான காரணத்தை கூட கர்நாடக அரசால் கூற முடியாது. கர்நாடக தலைநகர் பெங்களூரின் குடிநீர் தேவையை நிறைவேற்றவே  மேகதாது அணையை கட்ட முடிவு செய்திருப்பதாக கர்நாடக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. </p><h2>கிருஷ்ணராஜசாகர் அணை</h2><p>மேகதாது அணைக்காக கர்நாடக அரசின் முன்வைக்கப்படும் ஒரே வாதம் இது மட்டும் தான். ஆனால், இந்த வாதம் தவறு என்பதற்கு பல காரணங்களை பாட்டாளி மக்கள் கட்சி ஏற்கனவே முன்வைத்துள்ளது. பெங்களூருக்கு தேவையான அளவு குடிநீரை இப்போதுள்ள கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து எடுத்துக் கொள்ள முடியும்.</p><h2>கர்நாடக அதிகாரி</h2><p>மேகதாது அணை கட்டப்பட்டால், அதிலிருந்து 4 டி.எம்.சி நீரை பெங்களூருக்கு எடுத்து கொள்ளலாம் என்பது தான் கர்நாடக அரசின் திட்டமாகும். ஆனால், அதுவே தேவையில்லை என்ற குரல்கள் கர்நாடக  அதிகாரிகள் மத்தியிலேயே எழுந்துள்ளன. மேகதாது அணை கட்ட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">பெங்களூர் </a>நகரத்திலிருந்து 90 கி.மீ  தொலைவில் உள்ளது. </p><h2>கர்நாடக அரசின் திட்டம்</h2><p>பெங்களூரில் இருந்து 35 கி.மீ தொலைவில் உள்ள டி.ஜி.ஹள்ளி எனப்படும் திப்பகன்டன ஹள்ளி அணையில் இன்றைய நிலையில் 2.2 டி.எம்.சி நீர் உள்ளது. 74 அடி உயரம் கொண்ட இந்த அணையில் அதிகபட்சமாக 3.4 டி.எம்.சி நீரை தேக்கி வைக்க முடியும். இந்த நீரை பெங்களூருக்கு கொண்டு செல்ல ஏற்கனவே குழாய் பாதைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அணையின் நீரை பயன்படுத்திக் கொள்ள கூடுதலாக எந்த செலவும் செய்யத் தேவையில்லை.</p><h2>முறியடிக்கப்பட்டு விட்டது</h2><p>அதனால், மேகதாது அணை கட்டுவதை கைவிட்டு, டி.ஜி. அள்ளி அணையின் நீரை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அம்மாநில அதிகாரிகளே தெரிவித்திருக்கிறார்கள். இதன்மூலம் மேகதாது அணையை கட்டுவதற்காக  கர்நாடக அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட ஒற்றை வாதமும் முறியடிக்கப்பட்டு விட்டது. ஆனால், மேகதாது அணைக்கு எதிராக தமிழ்நாட்டின் சார்பில் முன்வைக்கப்பட்ட அனைத்து நியாயங்களும் அப்படியே உள்ளன.</p><h2>பாலைவனமாகி விடும்</h2><p>மேகதாது அணை கட்டப்பட்டால், கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே ஏற்கனவே கட்டப்பட்டுள்ள  அணைகளின் கொள்ளளவான 114.57 டி.எம்.சியுடன், புதிய அணையின் 70 டி.எம்.சி கொள்ளளவையும்  சேர்த்து மொத்தம் 184.57 டி.எம்.சி நீரை கர்நாடகத்தில் தேக்கி வைக்க முடியும். அவ்வளவு நீர் தேக்கி வைக்கப்பட்டால் தமிழ்நாட்டுக்கு ஒரு துளி நீர் கூட வராது. அப்போது காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். தமிழ்நாட்டில் 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரம் முற்றிலுமாக அழிந்து விடும்.</p><h2> 5 கோடி தமிழக மக்கள்</h2><p>அதுமட்டுமின்றி, மேகதாது அணை கட்டப்பட்டால், கர்நாடகத்தில் 12500 ஏக்கர் பரப்பளவிலான வனப் பகுதிகள் மூழ்கி விடும்; இதனால் அந்த பகுதிகளில் வாழும் வனவிலங்குகள், மீன்கள், பறவைகள் உள்ளிட்ட அரிய விலங்குகள் அனைத்து அழிந்து விடும். 5 கோடி தமிழக மக்களையும், பெருமளவிலான அரியவகை உயிரினங்களையும் பாதிக்க கூடிய மேகதாது அணையை கட்ட ஒருபோதும் அனுமதிக்க கூடாது.</p><h2>உச்சநீதிமன்றத்தில் வழக்கு</h2><p>மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக மத்திய அரசிடமும், கர்நாடக அரசிடமும்  தமிழக அரசு இன்னும் வலிமையாக வாதாட வேண்டும். மேகதாது அணை கட்டுவது குறித்து கர்நாடக அரசுடன் ஒருபோதும்  பேச்சு நடத்தக்கூடாது. மேகதாது அணைக்கு எதிராகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை நடத்தி புதிய அணை கட்டும் முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பில் அழுத்தம் கொடுக்க வேண்டும். அதற்கான வலிமையான அவை   அடித்தட்டு மக்களும் பங்கேற்க கூடிய கிராம அவைகள் தான் என்று பாட்டாளி மக்கள் கட்சி கருதுகிறது.</p> <h2>கிராமசபை கூட்டங்கள்</h2><p>இந்தியாவின் 80-ம் ஆண்டு விடுதலை நாள் விழா வரும் ஆகஸ்ட் 15-ம் நாள் கொண்டாடப்பட இருப்பதையொட்டி, தமிழ்நாடு முழுவதும் அந்த நாளில் கிராமசபை கூட்டங்கள் நடைபெறவுள்ளன.அந்தக்  கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினர் பெருமளவில் கலந்து கொண்டு,‘‘ காவிரி பாசன மாவட்டங்களில் விவசாயத்தையும், தமிழ்நாடு முழுவதும் 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரத்தையும் அழிக்கக் கூடிய மேகதாது அணையை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும். </p> <h2>தீர்மானம்</h2><p>மேகதாது அணை தொடர்பாக கர்நாடக அரசால் தாக்கல் செய்யப்படவுள்ள திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு ஏற்று கொள்ளக்கூடாது. மாறாக, மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசால் கர்நாடக அரசுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை உடனடியாக திரும்ப பெற வேண்டும்’’ என்ற தீர்மானத்தை மக்கள் ஆதரவுடன் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>அமைச்சர் விஸ்வநாதன் பேச்சால் எழுந்த சலசலப்பு.. உடனே சபாநாயகர் சொன்ன வார்த்தை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-stir-caused-by-minister-viswanathans-remarks-and-the-immediate-words-spoken-by-the-speaker</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-stir-caused-by-minister-viswanathans-remarks-and-the-immediate-words-spoken-by-the-speaker#comments</comments><guid isPermaLink="false">6fd2c93f-27da-425f-8cdd-ee2bf156052d</guid><pubDate>Tue, 11 Aug 2026 09:11:20 +0000</pubDate><atom:updated>2026-08-11T09:11:20.577Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Tamilnadu,திமுக,DMK,தமிழகம்,காங்கிரஸ்,Congress,தமிழக சட்டசபை,TN Assembly,சட்டசபை கூட்டத்தொடர்,TN Assembly session</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/6n88tjtg/skoer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/6n88tjtg/skoer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,.</p><p>தமிழக சட்டசபையில் பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 3-வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. அப்போது நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து ஆதரவு தெரிவித்தனர்.</p><h2>அமைச்சர் விஸ்வநாதன்</h2><p>நீட் தேர்வு விலக்கு தீர்மானம் தொடர்பாக அமைச்சர் விஸ்வநாதன் பேசிக் கொண்டிருந்தபோது தி.மு.க. எம்.எல்.ஏக்கள் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர்; அதன் எதிர்வினையாக த.வெ.க. மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் ஆவேசமாக முழக்கமிட்டனர். </p><p>அப்போது குறுக்கீட்ட சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் "ஒழுங்கீனமாக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் நின்றால் நடவடிக்கை எடுப்பேன்" என தி.மு.க. மற்றும் த.வெ.க. எம்.எல்.ஏக்களை எச்சரித்தார்.</p><h2>ராகுல் காந்தி</h2><p>தொடர்ந்து அமைச்சர் விஸ்வநாதன் பேசுகையில், நீட் எதிர்ப்பு போராட்டக்களத்தில் ராகுல் காந்தி நிற்கிறார் என புகழ்ந்து பேசினார். மீண்டும் அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் முழக்கமிட்டதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. </p><p>தி.மு.க. எம்.எல்.ஏக்கள் எழுந்து நின்று ஆவேசமாக பேசியதை அடுத்து (என்ன அவரோடு அமைச்சர்) சண்டைக்கு வர்றீங்களா என்று கேட்டு சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அமரச் சொன்னார். இதனையடுத்து அனைவரும் அவர்களது இருக்கையில் அமர்ந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>நெல், கரும்புக்கான ஊக்கத்தொகை உயர்வு -  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-incentive-for-paddy-and-sugarcane-marxist-communist-party-welcomes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-incentive-for-paddy-and-sugarcane-marxist-communist-party-welcomes#comments</comments><guid isPermaLink="false">d1d86dde-faac-4176-abe5-6638734ba46f</guid><pubDate>Tue, 11 Aug 2026 09:07:24 +0000</pubDate><atom:updated>2026-08-11T09:07:24.198Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஊக்கத்தொகை,Paddy,நெல்,வரவேற்பு,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,sugarcane,கரும்பு,CPI(M),welcomes</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/w36ehlay/communist.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/w36ehlay/communist.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நெல், கரும்புக்கான ஊக்கத்தொகை உயர்வு! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு ! இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p> <h2> வரவேற்பு</h2><p> தமிழ்நாடு அரசு 2026-27 ஆம் ஆண்டுக்கு நெல், கரும்புக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி அறிவித்துள்ளது. குறிப்பாக, கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ. 710 உயர்த்தி 4000 ரூபாயாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.</p> <h2>சன்ன ரக நெல்</h2><p>மத்திய அரசு இந்த ஆண்டு சன்ன ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2461, பொது ரக நெல்லுக்கு ரூ.2441 என்று விலை அறிவித்தது. இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர்  சட்டப்பேரவையில் சன்ன ரக நெல்லுக்கு ரூ.289 மற்றும் பொது ரக நெல்லுக்கு ரூ.159 உயர்த்தி முறையே ரூ.2750, ரூ.2600 என்று உயர்த்தப்பட்டுள்ளதை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி </a>வரவேற்கிறது.</p><h2>விலை வித்தியாசம் </h2><p>அதே நேரத்தில், சன்ன ரகத்துக்கும், பொது ரகத்துக்குமான ஊக்கத்தொகை வித்தியாசம் என்பது மிகவும் அதிகமாக உள்ளதை சுட்டிக்காட்டுகிறோம். தமிழ்நாட்டில் பொதுவான ரக நெல் தான் அதிகமாக உற்பத்தியாகிறது. கடந்த ஆண்டு இரண்டு ரகத்துக்குமான விலை வித்தியாசம் ரூ. 45 ஆக இருந்தது. மத்திய அரசு அறிவித்துள்ள விலை வித்தியாசம் ரூ. 20 ஆக இருக்கிறது என்பதையும், வருங்காலத்தில் இந்த விலை வித்தியாசம் தவறான முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளப்படும் வாய்ப்புள்ளது என்பதையும் கவனத்தில் கொண்டு, பொது ரகத்துக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.</p><h2>சேமிப்பு கிடங்குகள் </h2><p> கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைப்பதற்கு போதுமான சேமிப்பு கிடங்குகள் துரிதமாக உருவாக்கப்பட வேண்டும்; அதற்குரிய திட்டமிடுதலையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும், தவெக தேர்தல் வாக்குறுதிப்படி நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3000, கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ. 4500 என்பதையும் படிப்படியாக உயர்த்தி வழங்க முன்வர வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>2 லட்சம் தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி - சென்னை மாநகராட்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rabies-vaccination-for-2-lakh-stray-dogs-chennai-corporation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rabies-vaccination-for-2-lakh-stray-dogs-chennai-corporation#comments</comments><guid isPermaLink="false">07e113ba-2e6b-44be-9629-cc78485c5022</guid><pubDate>Tue, 11 Aug 2026 08:31:42 +0000</pubDate><atom:updated>2026-08-11T08:31:42.214Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,தெருநாய்கள்,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,வெறிநாய் கடி,event,தடுப்பூசி Vaccine</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/bp5zgdjg/125.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தடுப்பூசி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/bp5zgdjg/125.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>2 லட்சம் தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி மருந்து செலுத்தும் முகாம் இன்று தொடங்கியது.</p><p>இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சென்னை மாநகராட்சியின் சார்பில் 2 லட்சம் தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி (Anti Rabies Vaccination) மற்றும் அக, புற ஒட்டுண்ணி மருந்து செலுத்தும் மாபெரும் அளவிலான முகாம் முதற்கட்டமாக திருவொற்றியூர், மணலி மற்றும் தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்களில் இன்று தொடங்கியது. </p><h2>பங்கேற்பு</h2><p>இதன் ஒரு பகுதியாக, தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடிநோய் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF">தடுப்பூசி </a>மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தும் பணிக்கான வாகனத்தினை இணை ஆணையாளர் (சுகாதாரம்) ஸ்ரேயா பி. சிங், வடக்கு வட்டார துணை ஆணையாளர் ஸ்வேதா சுமன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் வி.சிவா ஆகியோர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் முன்புற பகுதியில் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மனைவியுடன் பேசியதால் ஆத்திரம்: பால் பண்ணை உரிமையாளர் வெட்டிக்கொலை - விவசாயி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anger-over-talking-to-wife-dairy-farm-owner-hacked-to-death-farmer-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anger-over-talking-to-wife-dairy-farm-owner-hacked-to-death-farmer-arrested#comments</comments><guid isPermaLink="false">24ccb988-b61c-47c0-85b3-361370201f15</guid><pubDate>Tue, 11 Aug 2026 08:30:53 +0000</pubDate><atom:updated>2026-08-11T08:30:53.268Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Theni,தேனி,murder,கொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/4xeaqxly/Untitled-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/4xeaqxly/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி,</p><p>தேனி அருகே உப்புக்கோட்டை மேலத்தெருவை சேர்ந்தவர் நாகபாண்டி (45 வயது). இவர் சொந்தமாக அப்பகுதியில் பால்பண்ணை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (45 வயது). விவசாயி. இந்த நிலையில் ரமேசின் மனைவியிடம், நாகபாண்டி அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனை அறிந்த ரமேஷ் தனது மனைவி மற்றும் நாகபாண்டியை பலமுறை கண்டித்துள்ளார். இருப்பினும் அவர்கள் கேட்காமல் தங்களது பேச்சை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது.</p><p>இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி அதிகாலை 4 மணியளவில் நாகபாண்டி டீக்கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த ரமேஷ், தனது மனைவியுடன் பேசி வருவது தொடர்பாக தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து நாகபாண்டியை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.</p><p>இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து நாகபாண்டியை மீட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் பரிதாபமாக இறந்தார். இந்த கொலை தொடர்பாக வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் சரணடைந்த ரமேசை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>எப்.சி.ஆர்.ஏ மசோதா; பாஜக ஆதரவு இல்லை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fcra-bill-bjp-does-not-support-it</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fcra-bill-bjp-does-not-support-it#comments</comments><guid isPermaLink="false">fc7d15fd-6496-421e-b2a3-4a2f11a886f0</guid><pubDate>Tue, 11 Aug 2026 08:28:22 +0000</pubDate><atom:updated>2026-08-11T08:28:22.569Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,பாஜக,தமிழக சட்டசபை,TNAssembly,CMVijay,CMJosephVijay‌</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/gp4tks1h/bjp33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
எப்.சி.ஆர்.ஏ மசோதா; பாஜக ஆதரவு இல்லை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/gp4tks1h/bjp33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>`எப்.சி.ஆர்.ஏ  மசோதாவிற்கு பாஜக ஆதரவு இல்லை என <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95">பாஜக </a>எம்எல்ஏ போஜராஜன் கூறினார்.</p><p>தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், தமிழக சட்டசபையில், வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தை அமைச்சர் ராஜ்மோகன் முன்மொழிந்தார். </p><p>மத்திய அரசு கொண்டுவரும் எப்.சி.ஆர்.ஏ திருத்தங்கள் வெளிநாட்டு நிதியைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுத்து, அறக்கட்டளைகளை முறையாக நிர்வகிக்கவே உதவுகிறது. சமூக நலத் திட்டங்களுக்காகப் பெறப்படும் நிதி சரியாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யவே இந்தச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தத் திருத்தங்கள் மிகவும் அவசியமானது. எனவே மாநில அரசு கொண்டுவரும் இத்தீர்மானத்திற்கு ஆதரவு இல்லை.</p><p>தவறாக பயன்படுத்த கூடாது என்பதற்காக <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88">எப்.சி.ஆர்.ஏ  மசோதா</a>வில்  சில திருத்தங்களை தான் மத்திய அரசு செய்கிறது. அறக்கட்டளை சரியாக நிர்வகிக்க வேண்டும். சமூக திட்டங்களுக்கு பெறும் நிதி சரியாக பயன்படுத்த வேண்டும் என்று தான் மத்திய அரசு கொண்டு வருகிறது. இந்த திருத்தம் அவசியம் என்று தான் பா.ஜ.க நினைக்கிறது. மாநில அரசு கொண்டு வரும் தீர்மானத்திற்கு ஆதரவு இல்லை என  மசோதாவுக்கு எதிரான தமிழக அரசின் தனி தீர்மானத்தின் மீது பாஜக எம்.எல்.ஏ போஜராஜன் கூறினார்.</p><h2>வெளிநடப்பு செய்து திரும்பி வந்த பாஜக எம்.எல்.ஏ</h2><p>"பாஜக எம்எல்ஏ போஜராஜன் வெளிநடப்பு செய்கிறேன் என்று சொல்லிவிட்டு மீண்டும் பேரவைக்கு வந்துள்ளார்.. முடிவில் ஏதேனும் மாற்றம் உள்ளதா?" என சபாநாயகர் கேள்வி எழுப்பியதால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.</p>]]></content:encoded></item><item><title>சிகரெட் வாங்க ரூ.50 தர மறுத்ததால் ஆத்திரம்: 2 பேருக்கு கத்திக்குத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/enraged-over-refusal-to-give-50-for-cigarettes-two-stabbed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/enraged-over-refusal-to-give-50-for-cigarettes-two-stabbed#comments</comments><guid isPermaLink="false">550e0d86-d29f-4518-aa95-dd6f1ac21af9</guid><pubDate>Tue, 11 Aug 2026 08:18:27 +0000</pubDate><atom:updated>2026-08-11T08:18:27.971Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,கிரைம் செய்தி,மும்பை,Mumbai</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/ips217uk/14.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/ips217uk/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மும்பை,</p><p>மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் மும்ராவில் உள்ள அம்ருத் நகர் தர்கா சாலையில் கடந்த 5-ந்தேதி மாலை ஜிப்ரான் இம்ரான் கான் என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பர்தாம் இப்ராகிம் மன் சூரி(வயது24) என்ற வாலிபர், தனக்கு சிகரெட் வாங்கவேண்டும் என்றும், அதற்கு 50 ரூபாய் பணம் தருமாறும் ஜிப்ரானிடம் கேட்டு மிரட்டியுள்ளார். அதற்கு ஜிப்ரான் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த மன்சூரி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென ஜிப்ரானை சரமாரியாக குத்தினார். </p><p>அப்போது அதை தடுக்க வந்த எஸ்கலென் நிசார் காசி(19) என்ற மற்றொரு வாலிபரையும் அவர் கத்தியால் குத்தினார். இந்த பயங்கர தாக்குதலில் 2 பேரின் கைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து மும்ரா போலீசார், மன்சூரி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள வாலிபர் மன்சூரியை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-the-day-after-tomorrow-20</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-the-day-after-tomorrow-20#comments</comments><guid isPermaLink="false">ab6b925c-d94b-424f-97e7-63a26dfe101f</guid><pubDate>Tue, 11 Aug 2026 08:18:09 +0000</pubDate><atom:updated>2026-08-11T08:18:09.413Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,monthly maintenance work,power outage,மாதாந்திர பராமரிப்பு பணி,மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/u83vr9x3/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/u83vr9x3/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மின்பகிர்மான வட்டம், வள்ளியூர் கோட்டம், திசையன்விளை, களக்காடு, கோட்டைகருங்குளம் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் நாளை மறுநாள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் நடைபெற உள்ளதால் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இது தொடர்பாக வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன் அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>திசையன்விளை, களக்காடு மற்றும் கோட்டைகருங்குளம் துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (13.8.2026, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் கீழே குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது. </p><h2>காலை 9 மணி முதல் மதியம 2 மணி வரை</h2><p>திசையன்விளை, மகாதேவன்குளம், கரைச்சுத்துஉவரி, கூட்டப்பனை, கூடுதாலை, குட்டம், விமனங்குடி. </p><p>களக்காடு நகரம், பெருமாள்குளம், சாலைபுதூர், SN பள்ளிவாசல், மாவடி, டோனாவூர், புலியூர் குறிச்சி, கோதைசேரி, வடமலைசமுத்திரம், கருவேலன்குளம், கோவிலம்மாள்புரம், வடுகச்சிமதில். </p><p>கோட்டைகருங்குளம், குமாரபுரம், வாழை தோட்டம், சீலாத்திகுளம், முடவன்குளம், தெற்கு கள்ளிகுளம், சமூக ரெங்கபுரம், திருவெம்பலாபுரம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.3 உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chicken-eggs-increase-by-rs-3-per-kg-in-namakkal-region</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chicken-eggs-increase-by-rs-3-per-kg-in-namakkal-region#comments</comments><guid isPermaLink="false">b9a03834-6f1c-43e8-ae79-f036eb3a1bfe</guid><pubDate>Tue, 11 Aug 2026 08:09:46 +0000</pubDate><atom:updated>2026-08-11T08:09:46.924Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Namakkal,நாமக்கல்,Price,விலை,உயர்வு,Chicken,egg,முட்டைக்கோழி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/1x1g7i6s/124.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கோழி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/1x1g7i6s/124.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல்,</p><p>நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.3 உயர்ந்துள்ளது.</p> <h2>விலை உயர்வு</h2><p>நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.97-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.3 உயர்த்த முடிவு செய்தனர். </p><p>எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.100 ஆக அதிகரித்து உள்ளது. <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88">முட்டை</a> கொள்முதல் விலை 540 காசுகளாகவும் நீடித்து வருகிறது என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-light-to-moderate-rain-in-tamil-nadu-today</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-light-to-moderate-rain-in-tamil-nadu-today#comments</comments><guid isPermaLink="false">f798d418-5433-4c0a-9e2d-17fb500cfcf0</guid><pubDate>Tue, 11 Aug 2026 08:03:31 +0000</pubDate><atom:updated>2026-08-11T08:03:31.130Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,மழைக்கு வாய்ப்பு,வானிலை முன்னறிவிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/psgkernk/Untitled-11.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/psgkernk/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><p><strong>11-08-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>12-08-2026:</strong> மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><h3>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</h3><p><strong>11-08-2026 முதல் 14-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் வட உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><p><strong>15-08-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.</p><h3>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</h3><p><strong>11-08-2026 முதல் 14-08-2026 வரை:</strong> வட உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட சற்று அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p><strong>15-08-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p><strong>நாளை</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கண்ணியம், கவுரவத்தை காப்பாற்றுங்கள்... தவெக எம்.எல்.ஏ.வுக்கு சபாநாயகர் அறிவுரை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/uphold-dignity-and-honor-speaker-advises-tvk-mla</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/uphold-dignity-and-honor-speaker-advises-tvk-mla#comments</comments><guid isPermaLink="false">1c3efcb2-ee91-45ca-b1de-8cb5e10a62f0</guid><pubDate>Tue, 11 Aug 2026 08:02:36 +0000</pubDate><atom:updated>2026-08-11T08:02:36.747Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,சட்டசபை,TN Assembly,JCD Prabhakar,சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்,tvk mla,தவெக எம்.எல்.ஏ.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/k0vt59tj/CHENNAI-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/k0vt59tj/CHENNAI-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>தவெக எம்.எல்.ஏ. சுகுமார்</h2><p>தமிழக சட்டசபையில் பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 3-வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின்போது கன்னிப்பேச்சில் பேசிய சூலூர் தவெக எம்.எல்.ஏ. சுகுமார், முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் மனதில் இருந்திருந்தால் சட்டசபைக்குள் வந்திருப்பார் என்றார்.</p><p>அப்போது குறுக்கிட்டு பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், "தவெக எம்.எல்.ஏ., கடந்த ஆட்சியில் எங்களின் அமைச்சர் ஐ. பெரியசாமியுடன் சுற்றிக் கொண்டிருந்தார். 1.31 கோடி பெண்கள் மனதில் மு.க. ஸ்டாலின் குடியிருக்கிறார்" என்றார்.</p><h2>கண்ணியத்தை காப்பாற்றுங்கள்...</h2><p>இதையடுத்து திமுக கொறடா எ.வ.வேலு பேசியதாவது; “சட்டப்பேரவையில் நேரலை ஒளிபரப்புவதற்கு முன்பாக கண்ணியத்திற்கு எதிராக பேசப்படும். வார்த்தைகள் சபாநாயகர் அறைக்கு சென்ற பின்பாக ஆலோசனைக்கு உட்படுத்தப்பட்டு நீக்கப்படும். தற்போது எல்லாமே நேரலை செய்யப்படுவதால் சபாநாயகர் அவ்வப்போதே ஆலோசித்து கண்ணியத்திற்கு எதிராக பேசப்படும் வார்த்தைகளை நீக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.</p><p>தொடர்ந்து தவெக எம்.எல்.ஏ. சுகுமாரை நோக்கி சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பேசுகையில், "பேசும்போது சர்ச்சை கருத்துகளை தவிர்க்க வேண்டும். நீங்கள் மிகப்பெரிய திராவிட பின்புலம் கொண்ட பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறீர்கள். அந்த கண்ணியத்தையும் கவுரவத்தையும் காப்பாற்றும் வகையில் நீங்கள் தொடர்ந்து பேச வேண்டும்" என அறிவுறுத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>திரும்ப திரும்ப பேசிய தவெக எம்.எல்.ஏ.. டென்ஷன் ஆன சபாநாயகர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mla-tvk-who-spoke-repeatedly-became-tense-with-the-speaker</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mla-tvk-who-spoke-repeatedly-became-tense-with-the-speaker#comments</comments><guid isPermaLink="false">6377829a-a1f7-41a3-a149-e63037addd8f</guid><pubDate>Tue, 11 Aug 2026 07:59:08 +0000</pubDate><atom:updated>2026-08-11T07:59:08.664Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,தமிழக சட்டசபை,TNAssembly,சபாநாயகர்,CMVijay,TNBudget,ஜே.சி.டி பிரபாகர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/ad3ol42r/prbhaa33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
திரும்ப திரும்ப பேசிய தவெக எம்.எல்.ஏ.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/ad3ol42r/prbhaa33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.</p><p>இதில், அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் கலந்துகொண்டு பேசி வருகின்றனர்.</p><p>இந்த நிலையில், திருவெறும்பூர் தவெக எம்.எல்.ஏ. விஜி பேசுகையில், "எனது தொகுதியில் கொடுக்கப்பட்ட பட்டாவுக்கான இடங்கள் கிடையாது. தேர்தலுக்காக போலி பட்டா கொடுத்துள்ளார்கள். வேண்டுமென்றால் ஆய்வு செய்து பாருங்கள்" எனத் தெரிவித்தார்.</p><p>அவரின் பேச்சுக்கு திமுக தரப்பில் எதிர்ப்பு எழுந்த நிலையில், எதிர்க்கட்சிகளை நோக்கி அனைவரும் உட்காருங்கள், உண்மையைதான் பேசுகிறேன் என்றார்.</p><p>இதனால் டென்ஷன் ஆன பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், முதலில் நீங்கள் உட்காருங்கள் என்று கடிந்து கொண்டார்.</p><p>இதனிடையே வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், கடந்த ஆட்சியில் ஒரு இடத்தை தேர்வு செய்து பட்டா வழங்கியிருக்க கூடும். அந்த பட்டாவை லே-அவுட் செய்யப்பட்டு வழங்கப்படும். பல இடங்களில் குறைபாடுகள் இருப்பது கவனத்துக்கு வந்துள்ளது என்றார்.</p> <h2>எம்.எல்.ஏக்களை எச்சரித்த சபாநாயகர்</h2><p>நீட் தேர்வு விலக்கு தீர்மானம் தொடர்பாக அமைச்சர் விஸ்வநாதன் பேசிக் கொண்டிருந்த போது திமுக எம்.எல்.ஏக்கள் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் எதிர்வினையாக தவெக மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் ஆவேசமாக முழக்கமிட்டனர் "ஒழுங்கீனமாக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் நின்றால் நடவடிக்கை எடுப்பேன்" என திமுக மற்றும் தவெக எம்.எல்.ஏக்களை<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20">  சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்</a> எச்சரித்தார்.</p><p>முன்னதாக, திமுகவை விமர்சித்து சூலூர் எம்.எல்.ஏ. சுகுமார் பேசும்போது எதிர்ப்புகள் எழுந்த நிலையில், சர்ச்சைக்குரிய கருத்துகளை பேச வேண்டாம் என்று பேரவைத் தலைவர் அறிவுரை வழங்கியது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: பைக்கில் வந்து ஆடு திருட்டு; மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-goat-theft-on-bike-police-net-mysterious-persons</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-goat-theft-on-bike-police-net-mysterious-persons#comments</comments><guid isPermaLink="false">d5d8c01b-b378-46c1-83c6-da04ab004bd3</guid><pubDate>Tue, 11 Aug 2026 07:54:53 +0000</pubDate><atom:updated>2026-08-11T07:54:53.791Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,திருட்டு,mysterious persons,மர்ம நபர்கள்,போலீஸ் வலைவீச்சு,bike,பைக்,Theft,goat,ஆடு,police net sweep</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/ttzttadj/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆடு திருட்டு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/ttzttadj/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடியில் பகல் நேரத்தில் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பைக்கில் வந்து ஆட்டை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">திருடிச்</a> சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p><h2>ஆடு திருட்டு</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> முத்தம்மாள் காலனி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே, பகல் நேரத்தில் மேய்ச்சலுக்காக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81">ஆடு </a>ஒன்று நின்றுகொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள், கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்த ஆட்டை தூக்கிக் கொண்டு பைக்கில் தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தன.</p><h2>மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு</h2><p>இதுகுறித்து ஆட்டின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆட்டை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>ராஜீவ்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு 20-ந்தேதி தமிழ்நாடு காங்கிரஸ் சிறப்பு பொதுக்குழு கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-general-body-meeting-of-tamil-nadu-congress-on-august-20-ahead-of-rajiv-gandhi-birthday</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-general-body-meeting-of-tamil-nadu-congress-on-august-20-ahead-of-rajiv-gandhi-birthday#comments</comments><guid isPermaLink="false">1c057012-b1d0-470b-bc5b-18ab12ad5466</guid><pubDate>Tue, 11 Aug 2026 07:42:32 +0000</pubDate><atom:updated>2026-08-11T07:42:32.495Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,பொதுக்குழு கூட்டம்,மாணிக்கம் தாகூர்,Rajiv Gandhi,ராஜீவ்காந்தி,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/fu6kyd2i/Untitled-10.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ காங்கிரஸ் கட்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/fu6kyd2i/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ராஜீவ்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 20-ந்தேதி தமிழ்நாடு காங்கிரஸ் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தலைவர் பாரத ரத்னா ராஜீவ்காந்தியின் 82-ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை வருகிற ஆகஸ்ட் 20-ந்தேதி சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடத்துவதென முடிவு செய்யப்பட்டிருக்கிறது. </p><p>இந்தியாவில் தகவல் தொழில்நுட்பப் புரட்சியை உருவாக்கி, லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுகிற சூழலை ஏற்படுத்தி இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றவர் ராஜீவ்காந்தி. அவர் பிரதமராக இருந்த காலத்தில் இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் நோக்கத்தில், தேர்தலில் வாக்களிக்கும் வயதை 21-ல் இருந்து 18 ஆக குறைத்தார். கட்சித் தாவல் தடைச் சட்டத்தை நிறைவேற்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நிலையாக நடப்பதற்கான வாய்ப்பை உருவாக்கியவர். தேசிய கல்விக் கொள்கையை வகுத்தவர். நாடு முழுவதும் கிராமப்புறங்களில் நவோதயா பள்ளிகளை தொடங்கியவர். அசாம், பஞ்சாப் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு கண்டவர். </p><p>நாடாளுமன்ற, சட்டமன்றங்களுக்கு அடுத்த நிலையில், மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுகிற பஞ்சாயத்துராஜ், நகர்பாலிகா அமைப்புகளை அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் உருவாக்கி, மக்களுக்கே அதிகாரம் என்ற கோட்பாட்டை உருவாக்கியவர். இதன் மூலம் அதிகாரத்தை பரவலாக்கி மக்கள் பங்கேற்கிற ஜனநாயகத்தை உருவாக்கிய பெருமை திரு. ராஜீவ்காந்தி அவர்களுக்கு உண்டு. தமிழக மக்களை அதிகமாக நேசித்த அமரர் ராஜீவ்காந்தி அவர்களின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடுகிற நோக்கத்தில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நடத்த திட்டமிட்டுள்ள இக்கூட்டத்தில், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், வட்டார, நகர, பேரூர் காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோர் அவசியம் தவறாமல் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் குலாம் அகமது மிர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் நிவேதித் ஆல்வா, அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் டாக்டர் ஏ. செல்லக்குமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் கே.வீ. தங்கபாலு, சு. திருநாவுக்கரசர், கே.எஸ். அழகிரி, எம். கிருஷ்ணசாமி, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான எஸ். ராஜேஷ்குமார், உயர்கல்வித்துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன், முன்னாள் மத்திய அமைச்சர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், இந்நாள் - முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் பெருந்திரளாக பங்கேற்க உள்ளனர். </p><p>தமிழ்நாடு அரசியலில் ராஜீவ்காந்தி கண்ட கனவை நினைவாக்கும் வகையில் எதிர்கால செயல் திட்டங்களை வகுத்து காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்துகிற வகையில் பல்வேறு கருத்துகளை விவாதிப்பதற்காக இக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெறுகிற வகையில் அனைவரும் தவறாமல் பங்கேற்று ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தாய், மகனை தாக்கி கொலை மிரட்டல்: கேரள சிப்ஸ் நிறுவன உரிமையாளர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kerala-chips-company-owner-arrested-for-attacking-mother-and-son-and-threatening-to-kill-them</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kerala-chips-company-owner-arrested-for-attacking-mother-and-son-and-threatening-to-kill-them#comments</comments><guid isPermaLink="false">75bd0a99-6628-4f63-b975-501a391707b2</guid><pubDate>Tue, 11 Aug 2026 07:32:09 +0000</pubDate><atom:updated>2026-08-11T07:32:09.862Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தாக்குதல்,கேரளா,Kerala,கைது,Thoothukudi,தூத்துக்குடி,arrest,son,மகன்,attack,Death threat,கொலை மிரட்டல்,Mother,தாய்,உரிமையாளர்,owner,company,chips</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/s5i2lz33/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கேரள சிப்ஸ் நிறுவன உரிமையாளர் கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/s5i2lz33/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரியில் நிலுவை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">சம்பள </a>பணத்தை திருப்பித் தருமாறு கூறி தாய் மற்றும் மகனை தாக்கி, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D">கொலை மிரட்டல்</a> விடுத்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE">கேரள</a> சிப்ஸ் நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். </p><h2>கேரளாவில் உள்ள சிப்ஸ் நிறுவனத்தில் வேலை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், ஆறுமுகனேரி ராஜமணியபுரத்தைச் சேர்ந்த ஜெயநாதன்- மோகனா (வயது 43) தம்பதியின் மகன் பாலமுருகன், ஆறுமுகனேரி காணியாளர் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி என்பவருக்கு சொந்தமாகக் கேரளாவில் இயங்கி வரும் சிப்ஸ் நிறுவனத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேலைக்குச் சேர்ந்துள்ளார். </p><h2>சம்பள பிரச்சினை</h2><p>மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் பேசப்பட்ட நிலையில், அங்கு வேலை கடினமாக இருந்ததால் பாலமுருகன் 40 நாட்கள் மட்டும் பணியாற்றிவிட்டு ரூ.19 ஆயிரம் சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு ஊருக்கு திரும்பியுள்ளார். இந்த நிலையில் சிப்ஸ் நிறுவன உரிமையாளர் கருப்பசாமி, மோகனாவின் வீட்டிற்குச் சென்று, "பாலமுருகன் செய்த வேலைக்கு ரூ.12 ஆயிரம் மட்டுமே தர முடியும்; மீதி ரூ.7 ஆயிரத்தை திருப்பிக் கொடு" எனக் கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். அதற்கு அவர்கள் பணம் தர மறுத்துவிட்டனர். </p><h2>தாய், மகனை தாக்கி கொலை மிரட்டல்</h2><p>இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை, கருப்பசாமி தனது தாய் இசக்கியம்மாளுடன் மீண்டும் மோகனாவின் வீட்டிற்குச் சென்று பாலமுருகனின் கைபேசியை பறித்துக் கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றவே, அங்கிருந்த அலுமினிய வாளியால் மோகனா மற்றும் பாலமுருகனை தாக்கி, இரவுக்குள் பணம் தரவில்லையெனில் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளார். </p><h2>சிப்ஸ் நிறுவன உரிமையாளர் கைது</h2><p>இந்த தாக்குதலில் காயமடைந்த மோகனா மற்றும் பாலமுருகன் ஆகிய 2 பேரும் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து மோகனா அளித்த புகாரின் பேரில், ஆறுமுகனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>அரசு மருத்துவமனைகளில் ஏழை, எளியோருக்கு தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்க: டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ensure-quality-treatment-for-the-poor-and-needy-in-government-hospitals-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ensure-quality-treatment-for-the-poor-and-needy-in-government-hospitals-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">76aee9dd-2b6f-4873-92f4-335a9064caf9</guid><pubDate>Tue, 11 Aug 2026 07:26:22 +0000</pubDate><atom:updated>2026-08-11T07:26:22.323Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,அரசு மருத்துவமனை,Government Hospitals</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/tduqrli0/ttv.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/tduqrli0/ttv.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவே “தாய்மாமன் தங்க மோதிரம்” திட்டம் கொண்டு வரப்பட்டிருப்பதாக அமைச்சர் அருண்ராஜ் பேசியிருப்பது, தமிழகத் தாய்மார்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.</p><p>தேர்தலுக்கு முன்பாக மருத்துவத்துறையில் உள்ள அவலங்களை சரி செய்து மாற்றத்தைத் தருவோம் என ஆட்சிக்கு வந்த தவெக, ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று மாதங்கள் கடந்தும் “மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு, தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் எலித்தொல்லை, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தூய்மைப் பணியாளர்கள், கைப்பேசி வெளிச்சத்தில் சிகிச்சை உள்ளிட்ட அவலங்களை சரி செய்யாமல், அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தவோ, நோயாளிகளுக்குத் தரமான சிகிச்சையை வழங்கவோ எந்தவித ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பையும் எடுக்காமல், தமிழகத் தாய்மார்களுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் கொடுத்தால் போதும் அவர்கள் அரசு மருத்துவமனைகளைத் தேடி வருவார்கள் என்ற தொனியில் அத்துறை அமைச்சர் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.</p><p>எனவே, “ஆட்சிக்கு வந்துவிட்டோம்; மக்களை என்ன வேண்டுமானாலும் பேசலாம், எவ்வளவு வேண்டுமானாலும் இழிவுபடுத்தலாம்” என்ற அதிகாரத் தொனியை ஓரம்கட்டிவைத்துவிட்டு, அரசு மருத்துவமனைகளை நாடி வரும் ஏழை, எளிய மக்களுக்கு தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>திமுக ஆட்சியில் கொடுத்தவை போலி பட்டா - தவெக எம்எல்ஏ பகீர் குற்றச்சாட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-dmk-government-issued-fake-certificates-thaveka-mla-bageer-alleges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-dmk-government-issued-fake-certificates-thaveka-mla-bageer-alleges#comments</comments><guid isPermaLink="false">47d1ea84-9171-4174-a3bf-c98f0b2d99d0</guid><pubDate>Tue, 11 Aug 2026 07:23:44 +0000</pubDate><atom:updated>2026-08-11T07:23:44.705Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,திமுக,DMK,பட்டா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/whn4zupn/tvk33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தவெக எம்எல்ஏ பகீர் குற்றச்சாட்டு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/whn4zupn/tvk33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.</p><p>இந்தநிலையில்,  திருவெறும்பூர் தொகுதியில் பட்டா கொடுத்த இடத்தை காணவில்லை. கொடுத்தவை அனைத்தும் போலி பட்டா; இது மாவட்ட கலெக்டருக்கும்  தெரியும்; தேர்தலை மனதில் வைத்து ஓட்டுக்காக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE">போலி பட்டா</a> கொடுக்கப்பட்டுள்ளது; இதனை ஆய்வு செய்ய வேண்டும் என நவல்பட்டு விஜி தவெக கூறினார்.</p><p>இதற்கு பதில் அளித்த  திமுக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்,</p><p>கடந்த திமுக ஆட்சியில் 73 லட்சம் பேருக்கு பட்டா கொடுக்கப்பட்டுள்ளது.வரலாற்றிலேயே இதுவே அதிகம்; தகுதியான நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது என்றார்.</p><p>இதுகுறித்த புகார்கள் என்னிடமும் வந்துள்ளது. பொது மக்கள் கொடுத்த புகார் மனுக்களை நிச்சயம் அவையில் சமர்பிப்பேன் என கால்நடைத்துறை அமைச்சர் கமலி கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும்: மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/resolution-passed-in-tamil-nadu-assembly-urging-the-central-government-to-withdraw-the-foreign-contribution-amendment-bill</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/resolution-passed-in-tamil-nadu-assembly-urging-the-central-government-to-withdraw-the-foreign-contribution-amendment-bill#comments</comments><guid isPermaLink="false">35832b41-a464-4cec-955d-9578a8913c3e</guid><pubDate>Tue, 11 Aug 2026 07:23:08 +0000</pubDate><atom:updated>2026-08-11T07:23:08.783Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,தமிழக சட்டசபை,TN Assembly,மத்திய அரசு,Central Govt,Minister Rajmohan,அமைச்சர் ராஜ்மோகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/ig4g0e0f/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/ig4g0e0f/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. </p><h2>தீர்மானம்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழக சட்டசபை</a>யில் இன்று பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தீர்மானம் ஒன்றை முன்மொழிந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026, தற்போதைய வடிவில், எப்.சி.ஆர்.ஏ. பதிவு காலாவதியாகுதல், புதுப்பிக்கப்படாமை, புதுப்பிப்பு மறுக்கப்படுதல், பதிவு ரத்து அல்லது ஒப்படைக்கப்படுதல் போன்ற காரணங்களால் தொண்டு நிறுவனங்களின் சொத்துகளை அரசிடம் ஒப்படைத்தல், நிர்வகித்தல், மாற்றுதல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பான விதிகள் குறித்து இம்மன்றம் ஆழ்ந்த கவலை தெரிவிக்கிறது. இவ்விதிகள் தொண்டு நிறுவனங்களின் தன்னாட்சியையும், குறிப்பாக சிறுபான்மையினர் நடத்தும் கல்வி மற்றும் சமூகநல நிறுவனங்களின் செயல்பாடுகளையும் பாதிக்கக்கூடும்.</p><h2>விரிவான ஆலோசனை</h2><p>எனவே, வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026-ஐ அதன் தற்போதைய வடிவில் திரும்பப்பெற்று, மாநில அரசுகள், தொண்டு, மத, கல்வி, மருத்துவ மற்றும் சமூக அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களுடனும் விரிவான ஆலோசனை நடத்துமாறு மத்திய அரசை இம்மன்றம் வலியுறுத்துகிறது.</p><p>எந்தவொரு திருத்த மசோதாவும் இயற்கை நீதி, விகிதாசாரம், சொத்துரிமைப் பாதுகாப்பு, நியாயமான எதிர்பார்ப்பு மற்றும் கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றை உறுதிசெய்ய வேண்டும். வெளிநாட்டு பங்களிப்புகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வுடன், சட்டப்பூர்வமாக செயல்படும் தொண்டு, கல்வி, மருத்துவ, மத, கலாசார மற்றும் சமூகநல அமைப்புகளின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும்.</p><h2>திரும்ப பெற வேண்டும்</h2><p>எனவே, வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026-ஐ அதன் தற்போதைய வடிவில் திரும்பப் பெறுமாறு மத்திய அரசை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/neet-exam-system-must-be-abolished-government-special-resolution-in-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/neet-exam-system-must-be-abolished-government-special-resolution-in-assembly#comments</comments><guid isPermaLink="false">fd647139-877c-47f2-9a3c-e57bd18ee750</guid><pubDate>Tue, 11 Aug 2026 06:38:49 +0000</pubDate><atom:updated>2026-08-11T07:18:46.051Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN Assembly,நீட் தேர்வு,NEET Exam,தனித்தீர்மானம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/xqx19buu/Untitled-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/xqx19buu/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் அரசினர் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. </p><h2>அரசினர் தனித் தீர்மானம்</h2><p>தமிழக சட்டசபையில் இன்று 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான 3-வது நாள் விவாதம் நடந்தது. அதனைத் தொடர்ந்து, மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கோ.க.அருண்ராஜ், அரசினர் தனித் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- </p><h2>பயிற்சி மையங்கள் பெருக வழிவகுக்கும்</h2><p>தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) முறை சமூக நீதி, சமத்துவம் மற்றும் மாநிலங்களின் உரிமைகளுக்கு எதிரானது என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்கள், கிராமப்புற மற்றும் சமூகப் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் ஆகியோரின் மருத்துவக் கல்வி வாய்ப்புகளை இத்தேர்வு முறை பெரிதும் பாதிக்கிறது.</p><p>நீட் தேர்வானது வரம்பின்றி அதிக அளவில் கட்டணம் வசூலிக்கும் பயிற்சி மையங்கள் பெருகுவதற்கு வழிவகுத்துள்ளது. மாணவர்களின் கவனத்தை பள்ளிப் பாடத்திட்டத்தைப் பயில்வதில் இருந்து திசைதிருப்பி, நீட் பயிற்சியில் மட்டுமே முழுக்கவனத்தையும் செலுத்த கட்டாயப்படுத்துகிறது.</p><h2>ஜனாதிபதி நிறுத்திவைப்பு </h2><p>12 ஆண்டுகால பள்ளிக் கல்வியை புறந்தள்ளி ஒரு நாள் நுழைவுத் தேர்வே மாணவர்களின் உயர் கல்வியைத் தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வில் இருந்து மாநிலத்திற்கு விலக்கு அளிக்கும் வகையில் 2021-ம் ஆண்டு தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டமுன்வடிவை (சட்ட முன்வடிவு எண் 43/2021) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒருமனதாக நிறைவேற்றியிருந்தும், ஜனாதிபதியால் அச்சட்ட முன்வடிவுக்கு ஏற்பிசைவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. </p><h2>நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும் </h2><p>தொடர் வினாத்தாள் கசிவுகள் மற்றும் முறைகேடுகளால் நீட் (இளநிலை) 2026 தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு நடத்தப்பட்ட நிலையில், லட்சக்கணக்கான மாணவர்களுக்குச் சொல்லொணாத் துயரமும், இளம் மாணவர்கள் உயிரிழப்பும் ஏற்பட்டு, நாடு முழுவதும் உள்ள மாணவர்களின் நம்பிக்கையை இத்தேர்வு முறை முற்றிலும் இழந்துள்ளது. எனவே, இத்தேர்வு முறை அகற்றப்பட வேண்டும்.</p><p>நீட் தேர்வுகளில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் முறைகேடுகளைக் கருத்தில் கொண்டு, நீட் நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்யும் வகையில், 2019-ம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் (மையச் சட்டம் 30/2019), 2020-ம் ஆண்டு இந்திய மருத்துவ முறைகளுக்கான தேசிய ஆணையச் சட்டம் (மையச் சட்டம் 14/2020) 2020-ம் ஆண்டு ஹோமியோபதிக்கான தேசிய ஆணையச் சட்டம், (மையச் சட்டம் 15/2020) மற்றும் தொடர்புடைய பிற மையச் சட்டங்களில் தேவையான திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது. இதன் மூலம் மாணவர்கள் 12-ம் வகுப்புத் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மாநிலத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள இயலும். இவ்வாறு அவர் கூறினார். </p><p>இந்த தனித்தீர்மானத்தை எதிர்த்து பாஜக எம்.எல்.ஏ வெளிநடப்பு செய்தார். மற்ற கட்சிகள் இந்த அரசினர் தனித்தீர்மானத்துக்கு வரவேற்பு தெரிவித்தனர். இதையடுத்து நீட் தேர்வு எதிராக கொண்டு வரப்பட்ட அரசினர் தனித்தீர்மானம் சட்டசபையின் முடிவுக்கு விடப்பட்டது. மறுப்போரே இல்லை என்பதால் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>நூல் விலை உயரும் என்ற அச்சத்தால் தீபாவளி பண்டிகைக்கான ஆடை தயாரிப்பு மும்முரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/garment-production-for-the-diwali-festival-intensifies-amid-fears-of-rising-yarn-prices</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/garment-production-for-the-diwali-festival-intensifies-amid-fears-of-rising-yarn-prices#comments</comments><guid isPermaLink="false">ce61e445-967f-4769-baaa-125b6e3b9f95</guid><pubDate>Tue, 11 Aug 2026 07:12:45 +0000</pubDate><atom:updated>2026-08-11T07:12:45.739Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்,Diwali festival,தீபாவளி பண்டிகை,நூல் விலை,garment production,Yarn price,ஆடை தயாரிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/6huiw7uh/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/6huiw7uh/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><h2>தீபாவளி பண்டிகை</h2><p>பனியன் தொழில் நகரான திருப்பூரில் வெளிநாட்டு ஆடை வர்த்தகத்துக்கு இணையாக உள்நாட்டு ஆடை உற்பத்தியும் நடந்து வருகிறது. பண்டிகை காலங்களில் உள்நாட்டு ஆடைகளுக்கான ஆர்டர்கள் வெளிமாநிலங்களில் இருந்து வருவது வழக்கம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழக்கமாக செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஆடை உற்பத்தி அதிகரிக்கும்.</p><p>புதுடெல்லி, மராட்டியம், ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஆடைகளை முன்கூட்டியே தயாரித்து அனுப்பிவைக்கப்படும். டி-சர்ட், உள்ளாடை, பெண்கள், சிறுவர்களுக்கான ஆடைகள் உள்ளிட்டவை நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. நூல் விலை உயர்வு காரணமாக ஆடைகளின் விலையையும் உயர்த்தும் கட்டாயத்தில் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.</p><h2>உற்பத்தி தொடக்கம்</h2><p>இதன்காரணமாக தீபாவளி பண்டிகை காலத்தில் ஆடைகளின் விலை உயரும் என்ற அச்சம் காரணமாக திருப்பூரில் உள்ள பல பனியன் உற்பத்தி நிறுவனங்கள் தீபாவளி விற்பனைக்கான ஆடை உற்பத்தியை முன்கூட்டியே தொடங்கியுள்ளன. குறிப்பாக கடந்த ஆண்டுகளில் அதிகம் விற்பனையான ஆடைகளின் அடிப்படையில் உள்ளாடை உற்பத்தி பணி வேகமெடுத்துள்ளன. திருப்பூரில் மாதந்தோறும் ரூ.2 ஆயிரத்து 500 முதல் ரூ.2 ஆயிரத்து 800 கோடி வரை உள்நாட்டு ஆடை உற்பத்தி நடக்கிறது.</p><p>இதுகுறித்து பனியன் உற்பத்தியாளர்கள் கூறும்போது, 'நவம்பர் மாதம் 8-ந் தேதி தீபாவளி பண்டிகை என்பதால் செப்டம்பர் மாதம் கடைசியில் இருந்து ஆடைகளை அனுப்ப வேண்டியுள்ளது. தொழிலாளர் பற்றாக்குறை, நூல் விலை உயர்வு காரணமாக இப்போதே நூலை கொள்முதல் செய்து பனியன் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டுள்ளோம்.</p><p>பெரிய நிறுவனங்கள் இந்த பணி ஏற்கனவே தொடங்கிவிட்டன' என்றனர். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கான உள்நாட்டு ஆர்டர், திருப்பூர் உற்பத்தியாளர்களுக்கு கைகொடுத்தது. அதுபோல் இந்த ஆண்டும் புதிய ஆர்டர்கள் வருகை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் உற்பத்தியாளர்கள் ஆடை தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>ஆந்திராவில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-should-take-steps-to-release-boats-of-tamil-nadu-fishermen-seized-in-andhra-pradesh-gk-vasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-should-take-steps-to-release-boats-of-tamil-nadu-fishermen-seized-in-andhra-pradesh-gk-vasan#comments</comments><guid isPermaLink="false">21ecca2e-da2f-4f82-8346-923fb969790b</guid><pubDate>Tue, 11 Aug 2026 07:04:30 +0000</pubDate><atom:updated>2026-08-11T07:04:30.257Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மீனவர்கள்,G.K. Vasan,சென்னை,fishermen,Andhra,ஆந்திரா,boat,பறிமுதல்,படகுகள்,ஜி.கே.வாசன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/s637uk1j/123.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜி.கே.வாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/s637uk1j/123.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஆந்திராவில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.</p><p>தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>ஆந்திர மாநில அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் மீன்பிடி விசைப்படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரம் காக்கும் வகையில் தமிழக அரசு, ஆந்திர அரசுடன் சுமூகமாக பேசி உரிய தீர்வு காண வேண்டும்.</p><h2>படகுகள் பறிமுதல்</h2><p>இலங்கை கடற்படை அடிக்கடி தமிழக மீனவர்களை கைது செய்தும் படகுகளை பறிமுதல் செய்தும் தொடர்ந்து பல்வேறு இன்னல்களை இழைத்து வருகிறார்கள். தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கடும் துயரத்திற்கு உள்ளாகின்றார்கள். அதோடு துரதிஷ்டவசமாக தற்பொழுது நமது அண்டை மாநிலமான ஆந்திர அரசும், எல்லைக்கு அருகே கடலில் மீன் பிடிக்க வரும் மீனவர்களை கைது செய்தும், மீன்பிடி விசைப்படகுகளை கைப்பற்றியும் காணொன்னா துயரத்தை ஏற்படுத்துவது மிகுந்த வருத்ததை அளிக்கிறது.</p><h2>கைது</h2><p>கடந்த 16.06.2026 ஆம் தேதியன்று மீன்பிடித்து கொண்டு இருந்து சென்னையை சேர்ந்த மீனவர்களை எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்களை கைது செய்தும் 7 மீன்பிடி விசைப்படகுகளை பறிமுதல் செய்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இதுவரை விடுவிக்காமல் இருப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">மீனவர்கள்</a> மிகுந்த மனவேதனையில் உள்ளார்கள்.</p><p>தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் காக்கும் வகையில் தமிழக அரசு, ஆந்திர அரசுடன் சுமூகமாக பேசி நிரந்தர தீர்வை காண வேண்டும். வருங்காலங்களில் இதுபோன்று ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட 7 மீன்பிடி விசைப் படகுளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>நீட் ரத்து தீர்மானத்துக்கு எதிர்ப்பு: பாஜக எம்.எல்.ஏ., வெளிநடப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/opposition-to-resolution-seeking-neets-abolition-bjp-mla-stages-walkout</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/opposition-to-resolution-seeking-neets-abolition-bjp-mla-stages-walkout#comments</comments><guid isPermaLink="false">0fea5598-f261-498c-a703-125ffd7edf0c</guid><pubDate>Tue, 11 Aug 2026 06:58:45 +0000</pubDate><atom:updated>2026-08-11T06:58:45.938Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,நீட் தேர்வு,NEET Exam</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/bc4hwbpv/13.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/bc4hwbpv/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிரான தனித் தீர்மானத்தை அமைச்சர் அருண்ராஜ் மொழிந்தார். இந்த தீர்மானத்துக்கு அதிமுக, பாமக, திமுக உள்ளிட்ட கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்து பேசினார்கள். இதற்கிடையே, நீட் ரத்து தீர்மானத்துக்கு பாஜக எம்எல்ஏ போஜராஜன் எதிர்ப்பு தெரிவித்தார். </p><p>இது தொடர்பாக சட்டசபையில் போகராஜன் பேசியபோது, ”நீட் தேர்வுக்கு தயாராகும் படி மாணவர்களுக்கு தரமான பயிற்சி மையங்களை அரசு உருவாக்க வேண்டும். மாணவர்களை உற்சாகப்படுத்தும் திட்டத்தை கொண்டு வாருங்கள். இந்த தீர்மானத்திற்கு உடன்படாமல், வெளிநடப்பு செய்கிறேன்.” என்றார். </p> ]]></content:encoded></item><item><title>பல்லடத்தில் வீடு புகுந்து தாய், மகள் வெட்டிக்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mother-and-daughter-murdered-after-breaking-into-house-in-palladam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mother-and-daughter-murdered-after-breaking-into-house-in-palladam#comments</comments><guid isPermaLink="false">d5c809d8-fe42-488a-9cf0-439636696dc7</guid><pubDate>Tue, 11 Aug 2026 06:41:14 +0000</pubDate><atom:updated>2026-08-11T06:41:14.213Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருப்பூர்,Youth arrested,இன்ஸ்டாகிராம் காதல்,police enquiry,இளைஞர் கைது,இரட்டைக்கொலை,2 people murdered</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/ch2ydg4g/6.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ அக்ஷய்]]></media:title><media:description type="html"><![CDATA[ பல்லடத்தில் வீடு புகுந்து காதலி மற்றும் அவரது தாய் வெட்டிக் கொலை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/ch2ydg4g/6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><p>திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வீடு புகுந்து காதலி மற்றும் அவரது தாயை வெட்டிக் கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>ரகசிய திருமணம்- எதிர்ப்பு</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">திருப்பூர் மாவட்டம் பல்லடம்</a> அடுத்த பச்சாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பூவரசி. அவரும் அக்ஷய் என்ற இளைஞரும் கடந்த 5 ஆண்டுகளாக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">இன்ஸ்டாகிராம்</a> மூலம் பழகி காதலித்து வந்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் பெற்றோர்களுக்குத் தெரியாமல் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டனர். இந்த விவகாரம் பூவரசியின் குடும்பத்திற்குத் தெரியவந்தபோது, அவரது தாய் தனலட்சுமி இந்த திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.</p><h2>அரிவாள் வெட்டு- உயிரிழப்பு</h2><p>தாயின் எதிர்ப்பு காரணமாக, பூவரசி தனது காதலனுடன் செல்ல மறுத்து காதலைத் துண்டித்தார். இதனால் கடும் ஆத்திரமடைந்த அக்ஷய், இன்று (செவ்வாய்க்கிழமை) பூவரசியின் வீட்டிற்குள் அதிரடியாகப் புகுந்தார். அங்கு அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே, அக்ஷய் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பூவரசி மற்றும் அவரது தாய் தனலட்சுமி ஆகிய இருவரையும் கொடூரமாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><h2>இளைஞர் கைது</h2><p>அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக முயன்ற கொலையாளி அக்ஷயைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">இரட்டைக் கொலை</a> சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>போதைப்பொருள் ஒழிப்பில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பதக்கம்: முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/medals-given-to-police-officers-who-worked-well-in-drug-eradication-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/medals-given-to-police-officers-who-worked-well-in-drug-eradication-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">9a7183ad-f12b-4757-9029-0279e9b89f9f</guid><pubDate>Tue, 11 Aug 2026 06:40:16 +0000</pubDate><atom:updated>2026-08-11T06:40:16.426Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பதக்கம்,உறுதிமொழி,drug eradication,போதைப்பொருள் ஒழிப்பு,Chief Minister Vijay</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/d8ee192j/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/d8ee192j/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநில கல்லூரியில் இன்று போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு விருது வழங்கும் விழா ஆகியவை நடைபெற்றது.</p><p>இந்த விழாவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். விழாவில் முதல்-அமைச்சர் விஜய் கலந்துகொண்டு மாணவ, மாணவிகள் முன்னிலையில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழியை வாசித்தார்.  </p><p>இதன் பின்னர் தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளில் திறம்பட செயல்பட்ட 15 காவல் துறை அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார். அதனை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் போலீசார் பறிமுதல் செய்த போதைப் பொருட்களை அழிக்கும் நடவடிக்கை முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் துவங்கி வைக்கப்பட்டது. செங்கல்பட்டு, திருநெல்வேலி, கோவை, தஞ்சை ஆகிய பகுதிகளில் போதைப் பொருட்களை அழிக்கும் பணிகளை முதல்வர் விஜய் வீடியோ வாயிலாக பார்வையிட்டார்.</p> ]]></content:encoded></item><item><title>சிபிஐ, வருமான வரி வழக்கு... உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் என்.ஆனந்த் பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cbi-and-income-tax-cases-minister-n-anand-responds-to-udhayanidhi-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cbi-and-income-tax-cases-minister-n-anand-responds-to-udhayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">5a8bf18e-bd2a-4f29-8cbe-f2cf9177c8b8</guid><pubDate>Tue, 11 Aug 2026 06:27:39 +0000</pubDate><atom:updated>2026-08-11T06:27:39.466Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,CBI,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,சட்டசபை,TN Assembly,N Anand,அமைச்சர் ஆனந்த்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/cmmxpjb0/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/cmmxpjb0/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>ரிலாக்சா இருக்கிறீர்கள்</h2><p>நேற்றைய சட்டசபையில் விவாதத்தின்போது, தி.மு.க. உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேசும்போது, 'நாங்களெல்லாம் அமைச்சர்களாக இருக்கும்போது ஒரு பதற்றம் இருக்கும். முதல்-அமைச்சராக இருந்த கலைஞரோ, மு.க.ஸ்டாலினோ உடனே எங்களை தொடர்பு கொண்டு அதில் இடம்பெற்றுள்ள மக்கள் பிரச்சினைகள் பற்றி பேசுவார்கள். அப்படி 5 ஆண்டுகாலமும் டென்ஷனிலேயே இருப்போம். நீங்கள் (புதிதாக பொறுப்பேற்று இருக்கும் அமைச்சர்கள்) எல்லாம் ரிலாக்சா இருக்கிறீர்கள்' என்றார்.</p><p>அப்போது எழுந்து பேசிய அமைச்சர் ஆனந்த், 'சின்ன வாய்க்கால் பிரச்சினைக்குகூட எங்களை தொடர்பு கொண்டு சரிசெய்து விட்டீர்களா? என்று கேட்கும் முதல்-அமைச்சராகத்தான் எங்கள் முதல்-அமைச்சர் இருக்கிறார். நாங்கள் தினந்தோறும் டென்ஷனோடு தான் இருக்கிறோம். சின்ன விஷயமாக இருந்தாலும் பயத்தோடு அதை அணுகுகிறோம்' என்றார்.</p><h2>சிபிஐ வழக்கு</h2><p>இந்த நிலையில், இன்று நிதிநிலை அறிக்கையின் மீதான விவாதத்தின்போது எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் பேச்சை விமர்சித்து பேசிய தவெக எம்.எல்.ஏ. சுகுமார், “எங்கள் மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. நாங்கள் கூலாகதான் இருக்கிறோம். 5 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தலுக்காக மக்களை சந்திக்கும் போதும் கூலாகதான் இருப்போம்" என்றார்.</p><p>அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "நேற்று எங்கள் உறுப்பினர் பேசும்போது கடந்த 5 ஆண்டுகளாக டென்ஷனாக இருந்தோம் என்று. அதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், நாங்களும் தினமும் நிம்மதியாக உறங்க முடியவில்லை; ஒவ்வொரு நிமிடமும் டென்ஷனாகதான் இருக்கிறோம் என்றார். மீண்டும் அதை திருப்பி சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். எனென்றால் உங்களுக்கும் சிபிஐ வழக்கு இருக்கிறது; வருமான வரி வழக்கும் இருக்கிறது என்று கூறினார்.</p><h2>வேறு எந்த அர்த்தமும் இல்லை</h2><p>இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் என். ஆனந்த், "சிபிஐ வழக்கு இருக்கிறது என்பதெல்லாம் சரிதான். எங்களுடைய டென்ஷன், எங்களுடைய முதல்-அமைச்சர் தொகுதியில் மக்கள் பிரச்சினை உடனுக்குடன் சரிசெய்யப்படுகிறதா? என கேட்பார் என்பதைதான் நேற்று குறிப்பிட்டேனே தவிர; வேறு எந்த அர்த்தத்திலும் இல்லை. எங்களை பயமுறுத்தியோ, டென்ஷனாகவோ குறிப்பிடவில்லை. </p><p>எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் எப்போது நமது முதல்-அமைச்சர் பேசுவார் என்று எதிர்ப்பார்ப்பார்கள். ஆனால் இப்போது போன் வந்தாலே பயம் இருக்கிறது; தொகுதியில் எதாவது ஒரு சிறிய பிரச்சினை இருந்தால் கூட ஏன் சரிசெய்யவில்லை என கேட்கும் முதல்-அமைச்சர் தான் எங்கள் முதல்-அமைச்சர் என்று பதிலளித்தார்.</p><p>அதே எண்ணத்தில்தான் எங்களின் சட்டமன்ற உறுப்பினரும் பேசினார் என்று உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார். இவ்வாறு இருவரிடையே விவாதம் நடந்தது.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/Z7pKL3UX-Yo"></iframe></figure>]]></content:encoded></item><item><title>சென்னையில் 44 இடங்களில் இலவச வைபை வசதி..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/free-wifi-at-44-locations-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/free-wifi-at-44-locations-in-chennai#comments</comments><guid isPermaLink="false">afbfd153-39d5-4edc-a240-dff1c715bd04</guid><pubDate>Tue, 11 Aug 2026 06:22:48 +0000</pubDate><atom:updated>2026-08-11T06:22:48.961Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,Free Wi-Fi,இலவச வைபை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/4zo5bwe4/Untitled-8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ இலவச வைபை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/4zo5bwe4/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முதலமைச்சரின் உத்தரவின்படி, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை மற்றும் தலைமைச் செயலகப் பூங்கா பகுதிகளில் 44 இடங்களில் பயன்பாட்டில் இல்லாத இலவச வைபை (WiFi) வசதி 10.08.2026 முதல் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் மக்களுக்கு எளிதாக சேவைகளை வழங்கும் வகையிலும் திட்டமிட்டு செயலாற்றி வருகிறார்.</p><p>இதன் ஒரு பகுதியாக, முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, சென்னையில் மக்கள் அதிகம் வந்து செல்லும் கடற்கரைப் பகுதிகளான மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரை மற்றும் தலைமைச் செயலகப் பூங்கா பகுதிகளில் முதற்கட்டமாக மக்கள் தங்குதடையின்றி இணைய பயன்பாட்டினை மேற்கொள்ளும் வகையில் உயர்தரத்தில் இலவச வைபை (WiFi) வசதிக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை மற்றும் தலைமைச் செயலகப் பூங்கா பகுதிகளில் 44 இடங்களில் பயன்பாட்டில் இல்லாத இலவச வைபை வசதி 10.08.2026 முதல் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.</p><p>சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மெரினா கடற்கரைப் பகுதியில் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை 27 இடங்களிலும், பெசன்ட் நகர் கடற்கரைப் பகுதியில் 5 இடங்களிலும், தலைமைச் செயலகப் பூங்காவில் 12 இடங்களிலும் என மொத்தம் 44 இடங்களிலும் 10.08.2026 முதல் இலவச வைபை (WiFi) வசதி மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வைபை வசதியினைப் பயன்படுத்துவதற்கு மக்கள் தங்கள் செல்பேசியில் வைபையினை ஆன் செய்து அதனை கிளிக் செய்தவுடன் வரும் QR Codeனை மீண்டும் கிளிக் செய்தவுடன், செல்பேசி எண்ணிற்கு வரும் OTP எண்ணை இதில் பதிவு செய்தவுடன் வைபை இணைப்பு ஏற்படும். மக்கள் இதனை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.</p><p>இதன் தொடர்ச்சியாக, பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களான இதர கடற்கரைப் பகுதிகள், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் பயன்பாட்டில் இல்லாத வைபை வசதியினை மீண்டும் பயன்பாட்டிக்குக் கொண்டு வருதல் மற்றும் புதிதாக வைபை (WiFi) வசதியினை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: பரிசல் இயக்க தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-flow-increases-in-cauvery-river-at-hogenakkal-ferry-operation-banned</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-flow-increases-in-cauvery-river-at-hogenakkal-ferry-operation-banned#comments</comments><guid isPermaLink="false">1b47205a-e435-4da4-85a1-215a90f73ea9</guid><pubDate>Tue, 11 Aug 2026 06:16:14 +0000</pubDate><atom:updated>2026-08-11T06:16:14.376Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Hogenakkal,ஒகேனக்கல்,Increase,தர்மபுரி,நீர்வரத்து அதிகரிப்பு,Cauvery water,காவிரி ஆறுCauvery river</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/8wqhzjcn/122.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பரிசல் இயக்க தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/8wqhzjcn/122.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பென்னாகரம், </p><p>தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. </p><h2>ஒகேனக்கல்</h2><p>இந்த நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து நேற்று காலை 7 மணி நிலவரப்படி வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கன அடியாகவும், 11 மணி நிலவரப்படி வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரித்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.</p><h2>தடை</h2><p>மேலும் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் ஆகிய அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.</p><h2>நீர்மட்டம்</h2><p>இதே <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேட்டூர் அணைக்கு</a> நேற்று முன்தினம் வினாடிக்கு 5 ஆயிரத்து 543 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 5 ஆயிரத்து 311 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 78.69 அடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>முன்விரோதத்தில் வடமாநில தொழிலாளர்கள் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/petrol-bomb-thrown-at-northern-workers-house-in-enmity-2-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/petrol-bomb-thrown-at-northern-workers-house-in-enmity-2-arrested#comments</comments><guid isPermaLink="false">ba400a86-8b9e-44ed-8c65-ae3a7ec9e38a</guid><pubDate>Tue, 11 Aug 2026 06:10:07 +0000</pubDate><atom:updated>2026-08-11T06:10:07.453Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Thoothukudi,தூத்துக்குடி,arrest,House,வீடு,வடமாநில தொழிலாளர்கள்,Northern State workers,petrol bomb attack,பெட்ரோல் குண்டு வீச்சு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/wjqzzqyj/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல் குண்டு வீச்சு; 2 பேர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/wjqzzqyj/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தித் தொழிற்சாலையில் பணியாற்றும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">வடமாநிலத் தொழிலாளர்கள்</a> தங்கியிருந்த வீட்டின் மீது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81">பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல்</a> நடத்திய சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். </p><h2>வடமாநில தொழிலாளர்கள் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> திரு.வி.க. நகரில் உள்ள ஒரு வீட்டில் வடமாநிலங்களைச் சேர்ந்த 15 தொழிலாளர்கள் தங்கி வசித்து வருகின்றனர். இவர்கள் தூத்துக்குடியில் அமைந்துள்ள மின்சார கார் உற்பத்தித் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் தொழிலாளர்கள் வீட்டின் உள் தூங்கிக் கொண்டிருந்தபோது, 4 பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளையும், கற்களையும் வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியது. </p><p>இந்த தாக்குதலில் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. வீட்டின் வெளிப்புறத்தில் உலர்த்தப்பட்டிருந்த துணிகள் தீப்பற்றி எரிந்தன. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். </p><h2>2 பேர் கைது</h2><p>முதற்கட்ட விசாரணையில், அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. மேலும் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக அதே பகுதியைச் சேர்ந்த சரத் (வயது 20) மற்றும் ஹரிகார்த்திக்(19) ஆகிய 2 பேரை போலீசார் உடனடியாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>நெல் குவிண்டால் ரூ.3,500, கரும்பு டன்னுக்கு ரூ.4,500 விலை அறிவிக்க வேண்டும்: விவசாயிகள் கருத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/price-of-rs-3500-per-quintal-for-paddy-and-rs-4500-per-tonne-for-sugarcane-must-be-announced-farmers-view</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/price-of-rs-3500-per-quintal-for-paddy-and-rs-4500-per-tonne-for-sugarcane-must-be-announced-farmers-view#comments</comments><guid isPermaLink="false">a5702ae6-dd2a-4663-b066-6d5f3dd76629</guid><pubDate>Tue, 11 Aug 2026 05:59:40 +0000</pubDate><atom:updated>2026-08-11T05:59:40.893Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Farmers,விவசாயிகள்,crops,நெல்,sugarcane,கரும்பு,agricultural crops</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/0azedpz9/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/0azedpz9/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை</h2><p>தமிழக சட்டசபையில் விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்ட அறிவிப்பில், சன்னரக நெல்லுக்கு மாநில அரசின் ஊக்கத்தொகை குவிண்டாலுக்கு ரூ.289 ஆகவும், பொது ரக நெல்லுக்கு ரூ.159 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சன்னரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,750-க்கும். பொது ரக நெல் ரூ.2,600-க்கும் கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதேபோல், 2025-26 கரும்பு அரவை பருவத்தில் மத்திய அரசு நிர்ணயித்துள்ள டன்னுக்கு ரூ.3,290.50 விலையுடன் தமிழக அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.709.50 வழங்கப்படுவதன் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.4,000 கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>விவசாயிகள் சங்கம் வரவேற்பு</h2><p><strong>இது குறித்து விவசாயிகள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு-</strong></p><p><strong>தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சாமி.நடராஜன்:-</strong> தமிழக அரசு நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்கியதை வரவேற்கிறோம். கடந்த ஆண்டு சன்னரக நெல்லுக்கு வழங்கப்பட்ட ரூ.156 ஊக்கத்தொகை தற்போது ரூ.289 ஆக உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.</p><p>உரம் மற்றும் வேளாண் இடுபொருட்களின் விலை உயர்வு, டீசல் விலை உயர்வு காரணமாக உற்பத்திச் செலவு அதிகரித்துள்ள நிலையில் இந்த உயர்வு விவசாயிகளுக்கு ஓரளவு உதவியாக இருக்கும். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கூட்டுறவு பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்துள்ள தமிழக அரசு, தேர்தல் வாக்குறுதியின்படி மேலும் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.</p><h2>திருப்தி இல்லை</h2><p><strong>தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர் முகமது இப்ராஹிம்:-</strong> தமிழக அரசின் தற்போதைய அறிவிப்பு விவசாயிகளுக்கு முழுமையான திருப்தியை அளிக்கவில்லை. இது விவசாயிகள் மத்தியில் மிகுந்த மன வேதனையை தருகிறது. ஏமாற்றத்தை தருகிறது. தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500-ம், கரும்புக்கு டன்னுக்கு ரூ.4,500-ம் வழங்க வேண்டும்.</p><p>எனவே, தற்போதைய விலை அறிவிப்பை மறுபரிசீலனை செய்து உயர்த்தி வழங்க வேண்டும். விவசாயிகள் கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் சாகுபடி மேற்கொண்டு வருவதால், உற்பத்திச் செலவு மற்றும் கடன் சுமையை கருத்தில் கொண்டு அரசு கூடுதல் விலை வழங்க வேண்டும்.</p><h2>வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்</h2><p><strong>தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை விமல்நாதன்:-</strong> கரும்பு டன்னுக்கு ரூ.4,000 வழங் கப்படும் என்ற அறிவிப்பு சற்று ஆறுதல் அளிப்பதாக இருந்தாலும், தேர்தல் வாக்குறுதியான ரூ.4,500-ஐ வழங்க வேண்டும். நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3,500 வழங்கப்படும் என எதிர்பார்த்த விவசாயிகளுக்கு தற்போதைய ரூ.2,750 மற்றும் ரூ.2,600 விலை அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது.</p><p>சன்னரகம், பொது ரகம் என விலை வேறுபாடு இல்லாமல் ஒரே கொள்முதல் விலையாக குவிண்டாலுக்கு ரூ.3,500 வழங்க வேண்டும். அரசு நிதிச்சுமையை கருத்தில் கொண் டால், குறைந்தபட்சம் இந்த ஆண்டுக்கு குவிண்டாலுக்கு ரூ.3,100 வழங்கி, மீதமுள்ள தொகையை அடுத்த ஆண்டு வழங்குவதாக சட்டசபையில் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.</p><h2>கூடுதல் கோரிக்கை</h2><p><strong>தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன்:-</strong>நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஓராண்டில் நெல்லுக்கான மாநில அரசின் ஊக்கத்தொகை ரூ.156 வரை உயர்த்தப்பட்டிருப்பது முக்கியமான நடவடிக்கை. கரும்பு டன்னுக்கு ரூ.709.50 சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படுவதன் மூலம் ரூ.4,000 கிடைப்பதும் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.</p><p>இருப்பினும், த.வெ.க. தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3,500-ம், கரும்புக்கு டன்னுக்கு ரூ.4,500-ம் வழங்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தேர்தல் காலத்தில் அறிவிக்கப்பட்ட விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடியை விரைந்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>பயிர்க்கடனை தள்ளுபடி செய்யாதது ஏமாற்றம்; சவுமியா அன்புமணி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/disappointment-over-not-waiving-crop-loans-soumya-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/disappointment-over-not-waiving-crop-loans-soumya-anbumani#comments</comments><guid isPermaLink="false">5d5857e6-d8e2-46d5-ab14-d762eec27191</guid><pubDate>Tue, 11 Aug 2026 05:56:41 +0000</pubDate><atom:updated>2026-08-11T05:56:41.357Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,தமிழக சட்டசபை,TNAssembly,சவுமியா அன்புமணி,பயிர்க்கடன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/vfys7qfb/mani33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 

பயிர்க்கடனை தள்ளுபடி செய்யாதது ஏமாற்றம்; சவுமியா அன்புமணி ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/vfys7qfb/mani33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சாப்பாடு போடக்கூடிய விவசாயத் துறைக்கு மிக குறைவான நிதியே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.எதிர்பார்த்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இல்லை என சவுமியா அன்புமணி கூறினார்.</p><p>பட்ஜெட் மீதான விவாதத்தில் சவுமியா அன்புமணி உரையாற்றினார்.</p><p>பாமகவின் 13 வருட கோரிக்கையான சேவை உரிமை சட்டத்தி அமல்படுத்திய தவெக அரசுக்கு வாழ்த்துகள்.</p><p>பிறப்பு, இறப்பு உள்ளிட்ட சான்றுகளை விரைவாக வழங்கும் சேவை உரிமைச்சட்டத்தை நிறைவேற்ற ஒப்புதலுக்கு நன்றி.</p><p>பட்ஜெட்டில் ப<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81">யிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி</a> செய்யாதது ஏமாற்றம் அளிக்கிறது.  5 கோடி விவசாய மக்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ததும் மிகக்குறைவான தொகை.மகளிர்,விவசாயிகளுக்கான திட்டங்கள், இயற்கை விஞ்ஞானி விருது அறிவிப்பை வரவேற்கிறேன்.</p><p>தமிழ்நாட்டில் உள்ள 27,000 குளங்களை தூர்வாரினால் போதும் 150 டிஎம்சி வரை நீர் சேமிக்க முடியும். 42,000 ஏரிகள் இருந்த தமிழ்நாட்டில் தற்போது 27,000 ஏரிகள் மட்டுமே உள்ளன. அவற்றை 1 மீட்டர் அளவு தூர்வார வேண்டும்.</p><p>குறைந்தது 100 டிஎம்சி நீரை சேமிப்பதன் மூலம், அண்டை மாநிலங்களில் கையேந்த வேண்டாம். காவிரியில் தடுப்பணைகள் கட்டுவதன்மூலம் கடலில் கலக்கும் தண்ணீரை சேகரிக்க முடியும்.  ஆறுகள் இணைப்பு உள்ளிட்ட நீர்ப்பாசன திட்டத்திற்கு இன்னும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். 10 கிமீ ஒரு தடுப்பணைகளை கட்டினால் கேரளா, கர்நாடகாவிடம் நீர் எதிர்பார்க்க வேண்டிய அவசியமே இல்லை.</p><p>ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரும் திட்டங்கள் தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. நிலத்தடி நீர்மட்டத்தை நம்பியே விவசாயிகள் உள்ள நிலையில் அதை உயர்த்துவதற்கான எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை</p><h2>தவெக அரசு கூடுதலாகவே நிதி ஒதுக்கீடு</h2><p>இதற்கு பதில் அளித்த அமைச்சர் புஸ்சி ஆனந்த்,</p><p>நீர்வளத்துறைக்கு கடந்த ஆண்டுகளில் ஒதுக்கப்பட்டதை விட தவெக அரசு கூடுதலாகவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் எங்களுக்கும் தான் மாவட்டம். விவசாயிகளின் கோரிக்கை கண்டிப்பாக நிறைவேற்றுவோம். முதல்-அமைச்சருடன் கலந்தாலோசித்து சவுமியா கேட்ட அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.</p><p>மக்களுக்கும் விவசாயிகளுக்கும் தேவையான அனைத்தும் செய்து தரப்படும்-கால்நடைத்துறை அமைச்சர் கமலி உறுதி அளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ரெயிலில் தவறவிட்ட 6.5 சவரன் தங்க நகைகள் மீட்பு: உரிமையாளரிடம் ஒப்படைத்த போலீசார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/65-sovereigns-of-gold-jewelry-lost-on-train-recovered-police-hand-over-to-owner</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/65-sovereigns-of-gold-jewelry-lost-on-train-recovered-police-hand-over-to-owner#comments</comments><guid isPermaLink="false">8e69f921-513d-4432-8a84-1b8977b86bb7</guid><pubDate>Tue, 11 Aug 2026 05:47:19 +0000</pubDate><atom:updated>2026-08-11T05:47:19.353Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>train,ரெயில்,Thoothukudi,தூத்துக்குடி,பயணி,passenger,Kovilpatti,கோவில்பட்டி,ஒப்படைப்பு,Handover,உரிமையாளர்,owner,பை,bag</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/0hf0g4q5/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 6.5 சவரன் தங்க நகைகள் உரிமையாளரிடம் ஒப்படைப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/0hf0g4q5/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>ரெயிலில் பெண் பயணி ஒருவர் தவறவிட்ட 6.5 சவரன் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">தங்க நகைகளை</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> இருப்புப்பாதை போலீசார் கண்டுபிடித்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D">உரிமையாளரிடம் </a><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">ஒப்படைத்தனர்</a>. </p><h2>கோவில்பட்டி ரெயில் நிலையம்</h2><p>விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பைச் சேர்ந்த குருசாமி மனைவி மாரிஸ்வரி. இவர் தற்போது சென்னை முடிச்சூர், மேற்கு லட்சுமி நகரில் வசித்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை அதிகாலையில் கோவில்பட்டி ரெயில் நிலையம் வந்தபோது தாம்பரம் - கொல்லம் அனந்தபுரி விரைவு ரெயிலில் விளாத்திகுளத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார் பயணித்துள்ளார். அப்போது அவர் அவசரத்தில் மற்றொரு பயணி வைத்திருந்த அதே போன்ற கருப்பு நிற டிராவல் பையைத் தவறாக மாற்றி எடுத்துக்கொண்டு கோவில்பட்டியில் இறங்கியுள்ளார். வீட்டிற்குச் சென்று பார்த்தபோதுதான் அது தனது பை இல்லை என்பது தெரியவந்தது. உடனடியாக ஆனந்தகுமார் அந்தப் பையைக் கோவில்பட்டி ரயில் நிலைய நடைமேடை அலுவலகத்தில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் விக்னேஸ்வரனிடம் ஒப்படைத்தார். </p><h2>பையில் இருந்த நகைகள்</h2><p>அந்தப் பை தூத்துக்குடி இருப்புப்பாதை காவல் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அந்த பையின் உள்ளே 2 நெக்லஸ், 1 ஜோடி ஜிமிக்கி கம்மல், 1 ஜோடி காது மாட்டால் ஆகியவை இருந்தன. மேலும் அதில் ஒரு பிரபல நகைக் கடையின் ரசீதும் இருந்தது. </p><h2>6.5 சவரன் நகைகள் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைப்பு</h2><p>அதைத் தொடர்ந்து, இருப்புப்பாதை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மகாகிருஷ்ணன் தீவிர விசாரணை மேற்கொண்டு, நகையின் உரிமையாளர், சென்னை முடிச்சூரைச் சேர்ந்த மாரிஸ்வரி என்பதைக் கண்டறிந்து அவருக்கு தகவல் தெரிவித்தார். போலீசாரின் தகவலின் பேரில் தூத்துக்குடி இருப்புப்பாதை காவல் நிலையம் வந்த மாரிஸ்வரி, உரிய அத்தாட்சிகளைக் காண்பித்தார். பின்னர் 6.5 சவரன் எடை கொண்ட தங்க நகைகள் உரியவரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டன. உரிய நேரத்தில் நகைகளைக் கண்டறிந்து ஒப்படைத்த தூத்துக்குடி இருப்புப்பாதை போலீசாருக்கு பயணியின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். </p>]]></content:encoded></item><item><title>தமிழ்த்தாய் வாழ்த்தை முதலாவதாகப் பாடக்கோரும் தமிழகச் சட்டமன்றத் தீர்மானம் வரவேற்புக்குரியது - சீமான்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-thai-vaalthai-muthalavathaga-paada-korum-tamilaga-sattamandra-theermaanam-varaverpukkuriyathu-seeman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-thai-vaalthai-muthalavathaga-paada-korum-tamilaga-sattamandra-theermaanam-varaverpukkuriyathu-seeman#comments</comments><guid isPermaLink="false">0551db31-ebe1-406a-825c-3e4f7d162687</guid><pubDate>Tue, 11 Aug 2026 05:37:11 +0000</pubDate><atom:updated>2026-08-11T05:37:11.647Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,Seeman,தனித்தீர்மானம்,தமிழ்த்தாய் வாழ்த்து,TamilThai Vazhthu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/2sqsdb9h/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சீமான்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/2sqsdb9h/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்த்தாய் வாழ்த்தை முதலாவதாகப் பாட வலியுறுத்தும் தீர்மானத்தை தமிழகச் சட்டமன்றத்தில் இயற்றிய ஆளும் தவெக அரசுக்கு என்னுடைய வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் அனைத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழகச் சட்டமன்றத்தில் இயற்றப்பட்டுள்ள தீர்மானத்தை முழுமையாக வரவேற்கிறேன்.</p><p>மொழியை ஏற்றிருக்கிற நிலம்தான் தேசமாகவும், மொழியை அடிப்படையாகக் கொண்டுள்ள மக்கள் கூட்டம்தான் தேசிய இனமாகவும் வரையறுக்கப்படுகிறது. ஒரு இனத்தின் கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு, வழிபாடு, வாழ்வியல், அரசியல் எல்லாம் மொழியிலிருந்துதான் பிறக்கிறது. அதனால்தான், மொழியைத் தாயென்று போற்றுகிறோம். மொழியே ஒரு இனத்தின் முகம், முகவரி, அடையாளம் என எல்லாவுமாகத் திகழ்கிறது. தமிழர்களின் வரலாற்றுத் தாயகமான தமிழ்நாட்டில் தமிழை முதன்மைப்படுத்தப்பட வேண்டியது தமிழர் நிலத்தை ஆளுகை செய்யும் ஆட்சியாளர்களின் தார்மீகக் கடமையாகும். அந்த வகையில், தமிழர் தாய்நிலத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலாவதாகப் பாடப்படுவதை உறுதிசெய்ய முன்வர வேண்டும். அதுவே தமிழ்த்தேசிய இனத்தின் இறையாண்மையையும், தமிழர்களின் தன்மான உணர்வையும் மதித்துப் போற்றுவதாக அமையும். அதுபோல, ஒவ்வொரு தேசிய இனத்தின் தாயகத்திலும் அந்தந்த இனத்தின் தாய்மொழியைப் போற்றும் பாடலே முதன்மையாக இடம்பெற வேண்டும்.</p><p>வேறுபட்ட மொழி, பண்பாடு, வாழ்வியல் கொண்ட வெவ்வேறு தேசிய இனங்கள் ஒன்றுபட்டு, ஒரே நாட்டுக்குள் வாழ்வதால்தான் வேற்றுமையில் ஒற்றுமை என நாட்டின் பன்மைத்துவம் போற்றப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளைவிட அதிக மாறுபாடுகளைக் கொண்டிருந்தாலும், இந்நாட்டில் பல்வேறு மொழிவழித் தேசிய இனங்கள் ஒரே நாட்டுக்குள் ஒன்றிணைந்து வாழ்வதைக் கண்டு, உலக நாடுகள் வியக்கின்றன. அத்தகைய தேசிய இனங்களின் தன்னுரிமையையும், தனித்துவ அடையாளத்தையும் பாதுகாப்பதே இந்திய ஒன்றியத்தின் ஒருமைப்பாட்டுக்கு ஏற்றதாகும். மாறாக, தேசிய இனங்களின் உரிமைகளை மறுத்து ஒற்றை மொழியையும், ஆதிக்கத்தையும் திணிக்க முற்பட்டால், அது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு உணர வேண்டும். </p><p>ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே சட்டம், ஒரே தேர்தல், ஒரே தேர்வு, ஒரே வரி, ஒரே ராணுவத்தளபதி, ஒரே உணவுச்சந்தை என எல்லாவற்றையும் ஒற்றைமயப்படுத்தும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு, நாட்டுப்பண்ணை மட்டும் இரண்டாகத் திணிப்பது கேலிக்கூத்தாகும். மதச்சார்பு கொண்ட ‘வந்தே மாதரம்’ எனும் பாடலை வலியத் திணிப்பதும், தேசிய இனங்களின் மொழியைப் போற்றும் பாடலை பின்னுக்குத் தள்ளுவதுமானப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்தே தமிழ்நாட்டில் முதன்மைப்பாடலாகப் பாடப்பட வேண்டும் எனும் தமிழர்களின் ஒருமித்தக் கருத்தோட்டத்தின் விளைவாக, தமிழ்த்தாய் வாழ்த்தை முதலாவதாகப் பாட வலியுறுத்தும் தீர்மானத்தை தமிழகச் சட்டமன்றத்தில் இயற்றிய ஆளும் தவெக அரசுக்கும், தமிழ்நாட்டு முதல்வர் விஜய்க்கும், தீர்மானத்தை ஆதரித்துத் துணைநின்ற அனைத்துக்கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்களுடன் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றார் முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-took-an-anti-drug-pledge-with-students</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-took-an-anti-drug-pledge-with-students#comments</comments><guid isPermaLink="false">c0dcd78c-191a-4475-bb22-599ecfee41df</guid><pubDate>Tue, 11 Aug 2026 05:31:02 +0000</pubDate><atom:updated>2026-08-11T05:31:02.737Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,போதைப்பொருள் ஒழிப்பு,CM Vijay,drug pledge</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/ohwfcjfo/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/ohwfcjfo/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>போதைப் பொருள் இல்லாத தமிழகம்</h2><p>போதைப் பொருள் இல்லாத பாதுகாப்பான தமிழ்நாட்டை உருவாக்க அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய் வலியுறுத்தி வருகிறார். அந்த வகையில், போதைப் பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கான உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. </p><p>இந்த நிலையில், போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி சென்னை மாநிலக் கல்லூரியில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த முதல்-அமைச்சர் விஜய்க்கு காவல்துறை சார்பில் வழங்கப்பட்ட மரியாதையை சல்யூட் அடித்து ஏற்றுக்கொண்டார்.</p><h2>மாணவர்களுடன் உறுதிமொழி</h2><p>பின்னர் விழா மேடைக்கு வந்த முதல்-அமைச்சர் விஜய் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதை மற்றும் புகையிலை இல்லா வளாகம் விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை அழிக்கும் நடவடிக்கை முதல்வர் விஜய் முன்னிலையில் காணொளி வாயிலாக நடைபெற்றது. செங்கல்பட்டு, நெல்லை, கோவை, தஞ்சை ஆகிய பகுதிகளில் போதைப்பொருட்களை அழிக்கும் பணிகளை காணொளி வாயிலாக முதல்-அமைச்சர் பார்த்தார்.</p><p>பின்னர் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' என்ற பெயரில் இயக்கத்தை முதல்-அமைச்சர் விஜய் துவக்கி வைத்து மாணவர்களுடன் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். 'நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன்'... போதைப்பொருள் ஒழிப்பிற்கு எனது பங்களிப்பை முழுமையாக தருவேன்..' என மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்</p><p>தொடர்ந்து மதுவிலக்கு பிரிவில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு முதல்-அமைச்சர் விஜய் விருதுகளை வழங்கி சிறப்பித்தார். மேலும் போதைப்பொருள் தடுப்பு மன்றங்களில் சிறந்து விளங்கிய பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகளை முதல்-அமைச்சர் வழங்கினார்.</p><h2>மாரத்தான் ஓட்டம்</h2><p>சென்னையில் கடந்த ஜூன் 26-ந்தேதி நடந்த சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட் டத்தை, மெரினா கடற்கரையில் தொடங்கி வைத்த முதல்-அமைச்சர் விஜய் அதில் பொதுமக்களுடன் இணைந்து ஓடினார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் மாற்றுப்பாதையில் இயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nagercoil-coimbatore-express-diverted-to-an-alternate-route</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nagercoil-coimbatore-express-diverted-to-an-alternate-route#comments</comments><guid isPermaLink="false">af905fe6-940a-4a64-867d-8709aa978fba</guid><pubDate>Tue, 11 Aug 2026 05:26:03 +0000</pubDate><atom:updated>2026-08-11T05:26:03.805Z</atom:updated><atom:author><atom:name>Muthu Pandian K</atom:name><atom:uri>/api/author/2401539</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்சி,Trichy,ரெயில் சேவை,Train Services</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/py3ambm8/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/py3ambm8/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>திருச்சி,  </p><p>மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணி காரணமாக திருச்சி வரும் சில ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.</p><h2>மாற்றுப்பாதையில் இயக்கம்</h2><p>மதுரை கோட்டத்தில் தண்டவாளத்தில் பொறியியல் பணி மேற்கொள்ளப் பட இருப்பதால் சில ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளன. அதன்படி நாகர்கோவிலில் இருந்து வருகிற 17-ந்தேதி காலை 8 மணிக்கு புறப்படும் நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் (எண்: 16321) விருதுநகரில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக கரூர் சென்று கோவைக்கு புறப்படும். அன்று இந்த ரெயில் திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல்ரோடு, அம்பா துரை, திண்டுக்கல், எரியோடு, பாளையம் வழியாக செல்லாது. </p><p>இதேபோல் நாகர்கோவிலில் இருந்து வருகிற 13-ந்தேதி காலை 6.15 மணிக்கு புறப்படும் நாகர்கோவில்-மும்பை சி.எஸ்.டி.எம். எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்: 16352) மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்து மும்பை செல்லும். அந்த நாட்களில் திண்டுக்கல் வழியாக வராது. இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>50 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை 5 ஆண்டுகளில் செய்தோம் - சேகர்பாபு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-did-in-5-years-what-should-have-been-done-in-50-years-shekar-babu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-did-in-5-years-what-should-have-been-done-in-50-years-shekar-babu#comments</comments><guid isPermaLink="false">f6a5b148-320e-4b37-8c90-b6e5c7a4af89</guid><pubDate>Tue, 11 Aug 2026 05:16:07 +0000</pubDate><atom:updated>2026-08-11T05:16:07.581Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,சேகர்பாபு,அறநிலையத்துறை,Recovered,தி.மு.க,5 years,Shekar Babu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/whya9nka/sakarbabu.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சேகர்பாபு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/whya9nka/sakarbabu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>50 ஆண்டுகளில் செய்ய வேண்டிய மக்கள் பணிகளை 5 ஆண்டுகளில் நிறைவேற்றியது தி.மு.க. ஆட்சி என்று சேகர்பாபு தெரிவித்துள்ளார்.</p><p>முன்னாள் அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><h2>அறநிலையத்துறை சொத்துகள்</h2><p>மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சொத்துகளை தி.மு.க. ஆட்சி பாதுகாத்தது. எங்களை பார்த்து தூங்கிக் கொண்டிருந்தீர்களா? என்று அமைச்சர் ரமேஷ் கேட்கிறார். நாங்கள் தூக்கத்தைக் கலைத்து முழுமையாக களத்தில் நின்றதால் தான். 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">இந்து சமய அறநிலையத்துறை</a> சொத்துகளை மீட்டிருக்கின்றோம்.</p><p>பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை மீட்டுள்ளோம். எனவே, கும்பகர்ணத் தூக்கம் கொண்டிருக்கின்ற ஆட்சி, இந்த ஆட்சி என்பதை நான் பதிவு செய்கிறேன். இன்றைக்குத் தமிழ்நாட்டில் இருக்கின்ற கோபுரங்கள், சமயபுரம் முதற்கொண்டு எடுத்துக்கொண்டால், மு.க.ஸ்டாலின் பெயரை உச்சரிக்கும்.</p><h2>தி.மு.க. ஆட்சி</h2><p>இந்த ஆட்சியினர் அதிகாரிகளை மிரட்டுவது. “எடுத்தேன், கவிழ்த்தேன்" என்று பேசுவது மட்டுமே கையில் வைத்திருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டிருக்கின்றோம். அதை ஒரு கணம் அவர்கள் திருப்பிப் பார்த்தாலே. 50 ஆண்டுகளில் செய்ய வேண்டிய மக்கள் பணிகளை 5 ஆண்டுகளில் நிறைவேற்றிய ஆட்சி, தி.மு.க. ஆட்சி என்பது தெரியும்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா... உருண்டை சோறுடன் கிடாக்கறி விருந்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-unique-festival-where-only-men-participated-a-feast-of-meat-served-with-balls-of-rice</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-unique-festival-where-only-men-participated-a-feast-of-meat-served-with-balls-of-rice#comments</comments><guid isPermaLink="false">a8e24091-e079-4e61-9be0-45cff3286a9f</guid><pubDate>Tue, 11 Aug 2026 04:58:45 +0000</pubDate><atom:updated>2026-08-11T04:58:45.877Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Dindigul,திண்டுக்கல்,திருவிழா,Temple festival,ஆண்கள்,கறி விருந்து,mens</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/cx0tjnzi/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/cx0tjnzi/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><h2>பொன்னர் சங்கர் சுவாமி கோவில்</h2><p>திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பாதசிறுகுடியில் பொன்னர் சங்கர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் உருண்டைச் சோறுடன் கூடிய கறி விருந்து திருவிழா நடைபெறுவது வழக்கம். இக்கோவிலில் பல நூறு ஆண்டுகளாக இத்திருவிழா பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது.</p><p>இந்த ஆண்டுக்காண இந்த திருவிழா இன்று நள்ளிரவு தொடங்கியது. இதில் ஆண் பக்தர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 101 ஆடுகளை சாமிக்கு பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது பின்னர் இளைஞர்கள் ஒன்றிணைந்து ஆடுகளை உரித்து சுத்தம் செய்து பெரிய பெரிய அண்டாக்களில் போட்டு சமைத்தனர்.</p><h2>உருண்டை சாதம், கிடாக்கறி குழம்பு</h2><p>பின்னர் பூஜைகள் செய்யப்பட்டு பொன்னர் சங்கர் சாமிக்கு உருண்டை சாதம் படைக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலின் கருவறையில் மின் விளக்கை அணைத்த பின்னர் அந்த உருண்டை சாதத்தை வானை நோக்கி எரிந்தனர். இது இந்த கோவிலின் மரபாகும். பின்னர் திருவிழாவில் பங்கேறே்ற ஆண்களுக்கு இலை போட்டு உருண்டை சாதமும், கிடாக்கறி குழம்பும் பரிமாறப்பட்டது.</p><p>நள்ளிரவில் நடைபெற்ற இந்த வினோத திருவிழாவில் நத்தம்,குட்டுபட்டி, பாதசிறுகுடி, குமரபட்டி, புதூர்,குட்டூர்,மாம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பாக்கெட்டில் யார் படம்?  ஓபிஎஸ் - செங்கோட்டையன் இடையே காராசார விவாதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/whose-picture-is-in-the-pocket-a-heated-debate-between-ops-and-sengottaiyan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/whose-picture-is-in-the-pocket-a-heated-debate-between-ops-and-sengottaiyan#comments</comments><guid isPermaLink="false">0228d21f-d19d-492c-aa77-71d4c7a553fc</guid><pubDate>Tue, 11 Aug 2026 04:54:24 +0000</pubDate><atom:updated>2026-08-11T04:54:24.265Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,செங்கோட்டையன்,OPS,TNAssembly,ஒ.பன்னீர் செல்வம்,Tamilnadu ​,CMVijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/usw96mu3/ops3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  ஓபிஎஸ் - செங்கோட்டையன் இடையே காராசார விவாதம்|]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/usw96mu3/ops3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>தவெக அரசின் பட்ஜெட்டில் திருப்புகிற பக்கங்கள் எல்லாம் திராவிட மாடல் அரசின் சாதனைகளே ஜொலிக்கின்றது என பேரவையில் திமுக எம்.எல்.ஏ. ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.</p><p>தமிழக சட்டசபையில் பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 3-வது நாளாக இன்று தொடங்கியது. சட்டசபை கூட்டம் தொடங்கியதும் முன்னாள் முதல்-அமைச்சரும் தி.மு.க.</p><p>எம்.எல்.ஏ.வுமான ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>தமிழக வெற்றிக்கழகம் தலைமையிலான அரசின் நிதிநிலை அறிக்கையானது ஏமாற்றின் வடிவமாக ஜொலிக்கும் பட்ஜெட். செய்வதை மட்டும் தான் சொல்வோம் எனக்கூறி அள்ளித்தெளித்த வாக்குறுதிகளை த.வெ.க. அரசு மறந்துவிட்டது. துறை ரீதியான கூட்டம் நடத்தி அமைச்சரவை கூட்டம் நடத்திய பின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தமிழக வெற்றிக்கழக அரசு தாக்கல் செய்துள்ள நிதி நிலை அறிக்கை பெயர் மாற்றப்பட்டியல் போல் உள்ளது.</p><p>உரிமைத் தொகை உயரவில்லை, 6 சிலிண்டர் என எந்த அறிவிப்பும் வராததால் மகளிர் ஏமாற்றம். மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க நிதி ஒதுக்கீடு திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லை. மாநிலம் முழுவதும் அனைத்து அரசு பேருந்திலும் இலவச பயணம் என்ற விடியல் பயண திட்டம் அறிவிக்கப்படவில்லை.</p><p>திருப்புகின்ற பக்கமெல்லாம் தி.மு.க. ஆட்சியின் திட்டங்களே பட்ஜெட்டில் உள்ளன. புதிய அரசின் திட்டங்களை தேடுகிறேன், தேடுகிறேன், தேடிக்கொண்டே இருக்கிறேன் என்று கூறினார்.</p><p>ஓ.பன்னீர்செல்வம் பேச்சுக்கு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%93%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%20-%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D">அமைச்சர் செங்கோட்டையன்</a> பதில் கூறுகையில், 5 ஆண்டுகளுக்குள் சொன்னவற்றை நிறைவேற்றுவோம், ஓ.பன்னீர்செல்வம் சொல்வதை போல் 3 மாதத்தில் செய்து சரித்திரம் படைக்க முடியாது. நீங்கள் இடம் மாறி இருக்குறீர்கள் பரவாயில்லை.. அதற்காக இவ்வளவு துதி பாட வேண்டிய அவசியமில்லை. அம்மாவால் 3 முறை முதல்-அமைச்சராக்கப்பட்ட ஓ.பி.எஸ் பேச்சை பார்த்து நாடே சிரித்து கொண்டிருக்கிறது.</p><p>இதற்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் கூறுகையில், முதலில் இடம் மாறியது செங்கோட்டையன் தான் என்றார்.</p><p>மேலும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறுகையில், </p><p>இடத்தை மாற்றியபோது அவரின் இதயத்தின் அருகே வைத்துள்ள நிழல் படத்தை மாற்றவேண்டாம் என கூறினார் முதல்-அமைச்சர் விஜய். ஜெயலலிதா இருந்த காலத்திலேயே முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம் யார் படத்தை தற்போது வைத்துள்ளார் என்றார்.</p><h2>இடமும் மாறியது, படமும் மாறியது - ராஜ்மோகன்</h2><p>ஓ.பன்னீர்செல்வம் இடத்தை மட்டும் அல்ல இதயத்தையும் மாற்றிவிட்டார் என அமைச்சர் ராஜ்மோகன் பேசினார்.</p><p>இதற்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் கூறுகையில், அண்ணா, ஜெயலலிதா, கலைஞர் என அனைவரும் இதயத்தில் உள்ளனர். படம் வைத்து ஏமாற்ற வேண்டிய அவசியம் இல்லை. தற்போது சட்டமன்ற உறுப்பினராக பேரவையில் நான் இருப்பதற்கு காரணம் ஸ்டாலின், எனவே அவர் படத்தை வைத்துள்ளேன்.</p><p>திராவிட இயக்கத்தை சுற்றித்தான் என் நிலை இருக்கும், நான் எப்படிப்பட்டவன் என அனைவருக்கும் 200% தெரியும்.பயிர்க்கடன் முழு தள்ளுபடி, பழைய ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு வரவில்லை.வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையிலேயே தூங்கி கொண்டிருக்கின்றன.</p><p>கடன் வாங்காமல் 50 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ய முடியாது என்கிறார் நிதித்துறை செயலாளர். தேர்தல் பிரசாரத்தில் பேசியது தவறு என முதல்-அமைச்சருக்கு  இப்போது தெரிந்திருக்கும் என்றார். </p><p>சட்டசபையில் படம் வைப்பது தொடர்பான நகைச்சுவை பேச்சு சலசலப்பாக மாறியது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்த்தாய் வாழ்த்து மசோதா சட்டமாக இயற்றப்பட வேண்டும்: கவிஞர் வைரமுத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tamil-thai-vazhthu-bill-must-be-enacted-into-law-poet-vairamuthu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tamil-thai-vazhthu-bill-must-be-enacted-into-law-poet-vairamuthu#comments</comments><guid isPermaLink="false">4190aa39-f9e5-425e-afb5-143144eedc79</guid><pubDate>Tue, 11 Aug 2026 04:21:34 +0000</pubDate><atom:updated>2026-08-11T04:21:34.770Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,கவிஞர் வைரமுத்து,Poet Vairamuthu,தமிழ்த்தாய் வாழ்த்து,TamilThai Vazhthu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/rpdr7trv/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/rpdr7trv/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் பொது அமைப்பு நிகழ்ச்சிகளில் கட்டாயமாக தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட வேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய், சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். அது அனைவரின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.</p><p><strong>இந்த நிலையில் இதுகுறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-</strong></p><p>சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்குத் தனித் தீர்மானம் இயற்றிய தமிழ்நாட்டரசையும் ஒருதுளி மறுப்புமின்றி ஒருமனதாக நிறைவேற்றிக்கொடுத்த அனைத்துக் கட்சித் தலைவர்களையும் பரந்துபட்ட தமிழ் உலகம் பாராட்டுகிறது; எழுந்து நின்று நன்றி சொல்கிறது.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து என்பது வெறும் சொற்கூட்டமல்ல; அது புவியியல், வரலாறு, பீடு, பெருமிதம் அனைத்தும் கொண்ட இனத்தின் குறியீடாகும். தேசிய கீதத்தின் அளவுக்குத் தமிழ்த்தாய் வாழ்த்தைத் தமிழர்கள் அனைவரும் மனப்பாடம் செய்யவில்லை.</p><p>பள்ளியிலிருந்தே அது மனப்பாடப் பொருளாக மாற்றப்பட வேண்டும். மாண்புமிகு உறுப்பினர்கள் சிலர் முன்மொழிந்ததைப் போலவே அது சட்டமாகவும் இயற்றப்பட வேண்டும்.. தமிழ்த்தாயே...! உன்னைச் செயல் மறந்து மட்டுமல்ல செயல் புரிந்தும் வாழ்த்துவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வாகன சோதனையில் நிற்காத வாலிபரை லத்தியால் தாக்கிய போலீசார்: 2 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-beat-up-a-young-man-with-a-lathi-for-not-stopping-at-a-vehicle-check-2-transferred-to-the-armed-forces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-beat-up-a-young-man-with-a-lathi-for-not-stopping-at-a-vehicle-check-2-transferred-to-the-armed-forces#comments</comments><guid isPermaLink="false">6e6fa0af-3b95-496d-91b1-225ad1123065</guid><pubDate>Tue, 11 Aug 2026 04:14:30 +0000</pubDate><atom:updated>2026-08-11T04:14:30.362Z</atom:updated><atom:author><atom:name>S.Mariappan</atom:name><atom:uri>/api/author/2422435</atom:uri></atom:author><description></description><media:keywords>தூத்துக்குடி,மோட்டார் சைக்கிள்,Armed Forces,ஆயுதப்படை,போலீசார்,இடமாற்றம்Transfer,Police vehicle check</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/1l6a70ky/120.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆயுதப்படைக்கு மாற்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/1l6a70ky/120.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஆறுமுகநேரி,</p><p>ஆறுமுகநேரியில் வாகன சோதனையின்போது மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்ற வாலிபரை லத்தியால் போலீசார் தாக்கினர். இதுதொடர்பாக 2 போலீசார் அதிரடியாக ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.</p> <h2>வாகன சோதனை</h2><p>தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி - அடைக்கலாபுரம் மெயின் ரோட்டில் ஆறுமுகநேரி போலீசார் நேற்று முன்தினம் மாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் ஆறுமுகநேரி மேல தெருவை சேர்ந்த அரசகுமார் மகன் விக்னேஷ் (வயது 25), அவருடைய நண்பர் சூரியா ஆகிய 2 பேரும் திருச்செந்தூர் நோக்கி சென்றனர். அவர்களிடம் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு போலீசார் சைகை காண்பித்தனர். இதனை கவனிக்காமல் அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது.</p><h2>லத்தியால் தாக்குதல்</h2><p>உடனே போலீசார் லத்தியால் விக்னேஷை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் விக்னேஷின் முகத்தில் கண் இமையில் ரத்தக்காயம் ஏற்பட்டது. அவரை ஆட்டோவில் ஏற்றி நண்பருடன் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவரது கண் இமையில் 9 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவரது பார்வைத்திறனும் சற்று பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.</p><h2>இடமாற்றம்</h2><p>வாகன சோதனையில் நிற்காமல் சென்ற வாலிபரை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார் </a>லத்தியால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் விசாரணை நடத்தினார். இந்த நிலையில் ஆறுமுகநேரி போலீஸ் ஏட்டு கஜேந்திரன் (43). போலீஸ்காரர் காளி (31) ஆகிய 2 பேரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து சூப்பிரண்டு சிவபிரசாத் நேற்று அதிரடியாக உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-water-inflow-to-mettur-dam-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-water-inflow-to-mettur-dam-2#comments</comments><guid isPermaLink="false">0ef7ccc6-6a8f-442c-a567-cdda6446c487</guid><pubDate>Tue, 11 Aug 2026 04:12:04 +0000</pubDate><atom:updated>2026-08-11T04:12:04.431Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur dam,நீர்வரத்து,Water inflow</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/2xk6sml2/7.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/2xk6sml2/7.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சேலம், </p><p>கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பியது. இதையடுத்து கடந்த 1-ந்தேதியில் இருந்து கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் திறந்து விடப்பட்டு வருகிறது. </p><p>அதிகபட்சமாக கபினி அணையில் இருந்து வினாடிக்கு 27 ஆயிரம் கனஅடி வரை திறக்கப்பட்டது. அதே நேரம் கிருஷ்ண ராஜ சாகர் அணையில் இருந்தும் வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வீதம் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது. </p><p>இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சற்று மழை குறைந்தது. இதனால் அங்குள்ள அணைகளுக்கும் நீர்வரத்து குறைந்தது. இதனால் தமிழகத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டது.</p><p>தற்போது கர்நாடகாவில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 5,760 கனஅடியில் இருந்து 7,151 கன அடியாக அதிகரித்துள்ளது. குடிநீர் தேவைக்காக 1,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. </p> ]]></content:encoded></item></channel></rss>