<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 31 Aug 2026 08:24:09 +0000</lastBuildDate><item><title>கடல் கடந்து மலர்ந்த காதல்: வெளிநாட்டு பெண்ணை கரம் பிடித்த மயிலாப்பூர் வாலிபர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/love-blossoms-across-borders-mylapore-man-marries-woman-from-abroad</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/love-blossoms-across-borders-mylapore-man-marries-woman-from-abroad#comments</comments><guid isPermaLink="false">8811e513-42be-4570-9b5f-f8d167b93f47</guid><pubDate>Mon, 31 Aug 2026 08:23:54 +0000</pubDate><atom:updated>2026-08-31T08:23:54.126Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமணம்,Marriage,Youth,Love,திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்,காதல்,ரஷ்யா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/bfb7aipb/.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ உதயசங்கர்-மரியா]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம். ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/bfb7aipb/.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ரஷ்ய நாட்டுப் பெண்ணை தமிழ் பாரம்பரிய முறைப்படி திருச்செந்தூர் முருகன் கோவிலில்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D"> திருமணம்</a> செய்துகொண்டார்.</p><h2>காதல் டூ கல்யாணம்</h2><p>சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் உதயசங்கர். அவர் சீனாவில் உள்ள ஒரு கார் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவர் பணியாற்றி வரும் அதே நிறுவனத்தில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த மரியா என்ற பெண்ணும் பணியாற்றி வந்தார். இதையடுத்து அவர்கள் இவருக்கும் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் நட்பு காதலாக மலர்ந்தது. அவர்களது காதலுக்கு இருவீட்டு பெற்றோர்களும் பச்சைக்கொடி காட்டினர்.</p><h2>திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடந்த திருமணம்</h2><p>இதனைத் தொடர்ந்து, உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி மாவட்டம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி</a> கோவிலில் இவர்களது திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. தமிழ் கலாச்சார முறைப்படி, மணமகள் பட்டுப்புடவை உடுத்தியும், மணமகன் பட்டு வேட்டி-சட்டை அணிந்து பாரம்பரிய உடைகளில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கோவிலுக்கு வந்தனர்.</p><p>அங்கு இருவீட்டு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில், வேத மந்திரங்கள் முழங்க, கெட்டிமேள சத்தத்துடன் உதயசங்கர், ரஷ்யப் பெண்ணிற்கு தாலி கட்டினார். மேலும் மணப்பெண் மரியா தனது பெயரை கீர்த்தனா என்றும் மாற்றிக்கொண்டார். சர்வதேச எல்லைகளைக் கடந்து, தமிழ்நாட்டுப் பாரம்பரியத்தை மதித்து திருச்செந்தூர் முருகன் சாட்சியாக நடந்துள்ள இந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">காதல்</a> திருமணத்திற்கு இணையவாசிகள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நேபாள நிவாரண நிதிக்கு ஈஷா சார்பில் ரூ.1 கோடி: சத்குரு அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sadhguru-announces-1-crore-from-isha-for-nepal-relief-fund</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sadhguru-announces-1-crore-from-isha-for-nepal-relief-fund#comments</comments><guid isPermaLink="false">b77d7334-7a7f-4747-8177-3a5969f15690</guid><pubDate>Mon, 31 Aug 2026 08:20:13 +0000</pubDate><atom:updated>2026-08-31T08:20:13.040Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nepal,நேபாளம்,சத்குரு,Sadhguru,Isha,ஈஷா,நேபாளம் வெள்ளம்,Nepal Floods</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/34tsfzdh/sadhguru2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ சத்குரு]]></media:title><media:description type="html"><![CDATA[ 'நேபாளத்திற்குத் துணை நிற்போம்' என்ற நிகழ்ச்சியில் சத்குரு பங்கேற்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/34tsfzdh/sadhguru2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>"இமயமலைப் பகுதியில் பேரிடர்களை எதிர்கொள்ள 5 நாடுகள் அடங்கிய 'இமயமலை வாரியம் அமைக்க வேண்டும் என ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு கோரிக்கை விடுத்தார். மேலும், நேபாள பிரதமர் பேரிடர் நிவாரண நிதிக்கு 'ஈஷா நேபாளம்' சார்பில் ₹1 கோடி வழங்குவதாகவும் உறுதியளித்தார்.</p><p>நேபாள நாட்டின் காத்மாண்டு நகரில் நேற்று (30/08/2026) நடைபெற்ற 'நேபாளத்திற்குத் துணை நிற்போம்' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற <a href="https://www.dailythanthi.com/topic/sadhguru">சத்குரு</a> பேசுகையில், "இமயமலைத் தொடர்கள் பரவியுள்ள அனைத்து நாடுகளையும் உள்ளடக்கிய ஓர் அமைப்பு உடனடியாக உருவாக்கப்பட வேண்டும். அரசியல் நிர்வாகங்கள் தனித்தனியாக இருந்தாலும், இந்த மலைத் தொடர்கள் எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாகப் பார்க்கப்பட வேண்டும். இதை நாம் செய்யாமல், 'சரி, இது நேபாளத்தின் பிரச்சினை, அவர்களே பார்த்துக்கொள்ளட்டும்' என்று நினைத்துக் கொண்டிருந்தால், இதற்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது.</p><p>மலைகளுக்கு உங்களது அரசியல் தொடர்புகள் தெரியாது. நீங்கள் பேசும் மொழியோ அல்லது செய்யும் அபத்தமான காரியங்களோ தெரியாது. இதை ஒரே அமைப்பாக உங்களால் நிர்வகிக்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் கலந்தாலோசனை செய்வதாவது ஒரே அமைப்பாக நடக்க வேண்டும். நாம் செய்யும் செயல்களில் ஒரு ஒத்திசைவு இருக்க வேண்டும். ஏனெனில் இமயமலை, பூமியின் மிகவும் அற்புதமான மற்றும் கம்பீரமான அமைப்பாகும். அதே நேரத்தில், அது மிக உறுதியானதும் அல்ல.</p><figure><img alt="நேபாளம் பெருவெள்ளத்தில் சிக்கி பலியானவர்களுக்கு மவுன அஞ்சலி" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/2lpmgl9g/sadhguru1.jpg" /><figcaption>வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களுக்கு மவுன அஞ்சலி</figcaption></figure><p>ஒரு பெரிய பனிப்பாறையின் முக்கால்வாசி பகுதி, சிகரத்திலிருந்து 4,000 அடி கீழே திடீரென விழும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இதை யாரும் கணித்திருக்க முடியாது. ஆனால் இப்போது இது நடந்துவிட்டது என்பதால், <a href="https://www.dailythanthi.com/topic/nepal">நேபாளம்</a> போன்ற ஒரு சிறிய நாடு தனியாக இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாது என்பதை நாம் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்.</p><p>இந்தப் பேரழிவிற்கு தெய்வீக காரணங்களை கூறுவதோ அல்லது 'நம்ப முடியாத மாய சக்தி' என்று சித்தரிக்கவோ வேண்டாம். வாழ்க்கையின் ஆன்மீகப் பரிமாணங்களுக்கும், இயற்கை நிகழ்வுகளைக் கட்டுப்படுத்தும் பௌதிக விதிகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்வது அவசியம். எனவே தத்துவங்கள், கருத்தியல்கள் அல்லது ஆன்மீக விளக்கங்களை அளித்து மனித துயரத்தை நாம் கொச்சைப்படுத்தக் கூடாது.</p><p>மிகப்பெரும் பேரிடரைச் சந்தித்திருக்கும் நேபாளத்திற்கு உதவும் வகையில், நேபாள பிரதமர் பேரிடர் நிவாரண நிதிக்கு ₹1 கோடி வழங்கப்படும். மேலும் கோவை ஈஷா யோக மையத்தில், <a href="https://www.dailythanthi.com/topic/nepal-floods">நேபாள பெருவெள்ள பாதிப்பில்</a> உயிரிழந்தவர்களுக்காக 'கால பைரவ கர்மா செய்யப்படும்" எனக் கூறினார்.</p><p>இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை மனிஷா கொய்ராலா, இதுபோன்ற பேரழிவில் இருந்து மக்கள் என்ன படிப்பினையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டார். </p><p>அதற்குப் பதிலளித்த சத்குரு, "ஒரு மனிதனாக, <a href="https://www.dailythanthi.com/topic/nepal-floods">பேரிடர்கள்</a> வரும் வரை நாம் காத்திருக்கக் கூடாது. மனிதனாக வாழ்வதைப் பற்றிப் புரிந்துகொள்ள வேண்டிய முதன்மையான விஷயம் என்னவென்றால், நாம் அனைவரும் நிலையற்றவர்கள் என்பதை ஒவ்வொரு கணமும் அறிந்திருக்க வேண்டும். இதை நாம் தொடர்ந்து விழிப்புணர்வுடன் உணர்ந்திருந்தால், நமது வாழ்க்கையை மிகவும் புத்திசாலித்தனமான முறையில் திட்டமிட்டு வாழ்வோம். "எனக் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-moderate-rain-in-western-ghats-districts-today-3</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-moderate-rain-in-western-ghats-districts-today-3#comments</comments><guid isPermaLink="false">de71b475-25a7-4c55-9f3e-f4bdeac2beb4</guid><pubDate>Mon, 31 Aug 2026 08:18:35 +0000</pubDate><atom:updated>2026-08-31T08:18:35.916Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/26oshqb0/Untitled-12.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/26oshqb0/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><p><strong>31-08-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். </p><p><strong>01-09-2026 மற்றும் 02-09-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><h3>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</h3><p><strong>31-08-2026 முதல் 04-09-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும்.</p><h3>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</h3><p><strong>31-08-2026 முதல் 04-09-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகத்தில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p><strong>நாளை</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மராட்டியத்தில் ஹெல்மெட் அணியாத 58 போலீசாருக்கு அபராதம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/58-police-personnel-fined-in-maharashtra-for-not-wearing-helmets</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/58-police-personnel-fined-in-maharashtra-for-not-wearing-helmets#comments</comments><guid isPermaLink="false">0987825c-80ed-4dda-b4bf-d1d0b779e188</guid><pubDate>Mon, 31 Aug 2026 08:18:24 +0000</pubDate><atom:updated>2026-08-31T08:18:24.795Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,police,போலீஸ்,மராட்டிய மாநிலம்,ஹெல்மெட்,Helmet</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/z0itq0ws/National-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/z0itq0ws/National-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மும்பை,</p><p>மராட்டிய மாநிலம், லாத்தூர் மாவட்டத்தில் வருகிற 1-ந்தேதி முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. சாலை பாதுகாப்பு விதிகளை பொது மக்கள் மத்தியில் தீவிரமாக அமல்படுத்துவதற்கு முன்பாக, போலீசாரே அதற்கு முன்மாதிரியாக திகழவேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமோல் தாம்பே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.</p><p>இதன்படி, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த அதிகாரிகள் உள்பட 58 போலீசாருக்கு அதிரடியாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமீறல் தொடர்பான விவரங்கள் சம்பந்தப்பட்ட போலீசாரின் பணி பதிவேடு குறிப்பு பக்கத்தில் பதிவு செய்யப்படும் என்றும், இது அவர்களின் அதிகாரப்பூர்வ சேவை பதிவின் ஒரு பகுதியாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்ட உள்ளது.</p><p>இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு அமோல் தாம்பே கூறுகையில், "சட்டத்தை நிலைநாட்டும் பொறுப்பில் நாமே இருக்கிறோம். எனவே, சட்டத்தை பின்பற்றும் பொறுப்பு நம்மிடம் இருந்தே தொடங்க வேண்டும். ஹெல்மெட் விவகாரத்தில் போலீசாருக்கு எந்தவித விதிவிலக்கும் அளிக்கப்பட மாட்டாது" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>மனைவியுடன் தகராறு: மனவேதனையில் புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/husband-wife-quarrel-groom-takes-tragic-decision</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/husband-wife-quarrel-groom-takes-tragic-decision#comments</comments><guid isPermaLink="false">9c912115-d382-482f-976a-177ed1c2dab1</guid><pubDate>Mon, 31 Aug 2026 08:09:34 +0000</pubDate><atom:updated>2026-08-31T08:09:34.552Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nagapattinam,நாகப்பட்டினம்,தற்கொலை,புதுமாப்பிள்ளை,Nagore,நாகூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/6hkg0rc8/Untitled-11.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/6hkg0rc8/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தங்கைக்கு திருமணம் நடக்க இருந்த நிலையில், மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், மனவேதனை அடைந்த புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>தங்கைக்கு திருமணம்</h2><p>நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை அடுத்த தெற்கு பால்பண்ணைச்சேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நெடுஞ்செழியன். இவரது மகன் கஜேந்திரன் (26 வயது) டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த நான்கரை மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கஜேந்திரனின் தங்கைக்கு நேற்று திருமணம் நடக்க இருந்தது.</p><h2>மனைவியுடன் வாக்குவாதம்</h2><p>சம்பவத்தன்று இரவு கஜேந்திரனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதனால் மனவேதனை அடைந்த கஜேந்திரன் வீட்டில் இருந்த அறைக்குள் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>அதன்பின்னர் மறுநாள் காலையில் அவரது மனைவி சென்று பார்த்தபோது கஜேந்திரன் துப்பட்டாவால் தூக்கில் தொங்கியபடி இறந்தநிலையில் கிடந்ததாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கஜேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் பரந்தூருக்கு இடமாற்றமா?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-army-officers-training-centre-being-relocated-to-parandur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-army-officers-training-centre-being-relocated-to-parandur#comments</comments><guid isPermaLink="false">aa54c180-1dbf-4600-82c8-8c90d81cdb2a</guid><pubDate>Mon, 31 Aug 2026 07:57:57 +0000</pubDate><atom:updated>2026-08-31T07:57:57.595Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Army,Parandur,பரந்தூர்,ராணுவ அதிகாரிகள்,பயிற்சிமையம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/du6y8os8/parandur.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/du6y8os8/parandur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2>ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம்</h2><p>காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்க இருந்த சென்னையின் 2-வது விமான நிலையத் திட்டத்தை தமிழக அரசு கைவிட்டது. மாற்று இடத்தை உடனடியாக கண்டுபிடித்து திட்டத்தை செயல்படுத்த தொழில் துறையி னர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து விமான நிலை யத் திட்டத்தை மேம்படுத்துவது தொடர்பாக தொழில் துறை மற்றும் விமான நிலைய ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.அப்போது, விமான நிலையம் அருகில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தை (ஓ.டி.ஏ.) பரந்தூருக்கு இடமாற்றம் செய்துவிட்டு, அந்த இடத்தை ராணுவ அமைச்சகத்திடம் கேட்டுப் பெற்று அதில் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.</p> <h2>தாம்பரம்- மதுரவாயல்</h2><p>இதுகுறித்து தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது:-சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் 5-வது முனையம் மேற்குப் பகுதியில் அமைக்கப்பட உள்ளது. இதை தாம்பரம்- மதுரவாயல் சாலையுடன் இணைக்கும் வகையில் அணுகு சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்தப் பணிகள் ஆய்வுக்கான அனுமதிகளை நெடுஞ்சாலை, நீர்வளம் உள்ளிட்ட துறைகள் விரைவாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, ஜி.எஸ்.டி. சாலை மட்டுமின்றி தாம்பரம்-மதுரவாயல் சாலையில் இருந்தும், காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து வருவோரும் பயன்படுத்தி நேரடியாக விமான நிலையம் வர முடியும்.</p><h2>750 ஏக்கர் நிலம்</h2><p>சென்னை விமான நிலையம் அருகே பரங்கிமலையில் செயல்பட்டு வரும் ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமி, 650 முதல் 750 ஏக்கரில் அமைந் துள்ளது. இந்த இடத்தை தமிழக அரசு, ராணுவ அமைச்சகத்திடம் இருந்து கேட்டுப் பெற்று, சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து பயன்படுத்தலாம். பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்காக இது வரை 1,800 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு ஆயிரம் ஏக்க ரில் ராணுவ அதிகாரிகள், பயிற்சி அகாடமியை அதிநவீன உள்கட்ட மைப்பு வசதிகளுடன் தமிழக அரசு அமைத்து தரும் திட்டமும் பரிசீல னையில் உள்ளது. இதனால் சென்னை விமான நிலையத்தின் 2-வது ஓடு பாதையை முழுவதுமாக பயன்படுத்தும் சூழல் ஏற்படும். விமானங்களின் இயக்கமும் 3 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து ஆலோ சனை நடந்து வருகிறது.இவ்வாறு தொழில் துறை அதிகாரிகள் கூறினர்.</p> ]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய வார விடுமுறை:  சட்டசபையில் அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/paid-weekly-holiday-for-tasmac-employees-minister-vignesh-announces-in-the-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/paid-weekly-holiday-for-tasmac-employees-minister-vignesh-announces-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">6accd4c5-283a-459a-a357-a8cbfe563ca9</guid><pubDate>Mon, 31 Aug 2026 07:38:31 +0000</pubDate><atom:updated>2026-08-31T07:38:31.516Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,டாஸ்மாக்,Tasmac,Assembly,அமைச்சர் விக்னேஷ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/w4iprisi/vignesh.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விக்னேஷ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/w4iprisi/vignesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>தமிழக சட்டப்பேரவையில்  மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்ந்த ஆறு முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் விக்னேஷ் சட்டப்பேரவையில் வெளியிட்டார். அதில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பும் இடம் பெற்றது. அதன் விவரம் வருமாறு: டாஸ்மாக் சில்லறை விற்பனை நிலையங்களில் 23 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வரும் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றார். </p><h2>எவ்வளவு உயர்வு?</h2><p>அமைச்சர் விக்னேஷ் கூறியதாவது: டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் எம்ஆர்பி விதிமீறல்கள் உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுப்பதற்கும், ஊழியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, மேற்பார்வையாளர்களுக்கு 33 ஆயிரத்து 23 ரூபாய், விற்பனையாளர்களுக்கு 30 ஆயிரத்து 284 ரூபாய், உதவி விற்பனையாளர்களுக்கு 28 ஆயிரத்து 689 ரூபாய் என உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்கப்படும்.</p><h2>பண்டிகை முன்பணம் மற்றும் பணி நேர சலுகைகள்</h2><p>டாஸ்மாக் ஊழியர்களுக்கு பண்டிகை முன்பணமாக 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மேலும், ஆண்டுதோறும் மூன்று சீருடைகளுக்கான துணி மற்றும் தையல் செலவாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.அத்துடன், டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் எட்டு மணி நேர பணி ஒதுக்கீடு, மாதத்திற்கு ஒரு நாள் விடுமுறை மற்றும் மாதத்தில் இரண்டு நாட்கள் ஊதியத்துடன் கூடிய தற்செயல் விடுப்பு வழங்கப்படும். என்ற அறிவிப்பும் இடம் பெற்றது. டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு விற்றால் ஊழியர்கள் முதலில் இடைநீக்கமும், மீண்டும் தவறு  செய்தால் நிரந்தரமாக பணி நீக்கமும் செய்யப்படுவார்கள்  என்றும் அமைச்சர் விக்னேஷ் கூறினார். </p> ]]></content:encoded></item><item><title>புதிய துணை மின் நிலையங்கள், டிஜிட்டல் நிதி மையம்: 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்ட அறிவிப்புகள்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-substation-digital-finance-hub-tn-rule-110-announcements</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-substation-digital-finance-hub-tn-rule-110-announcements#comments</comments><guid isPermaLink="false">327f80ec-918a-4a84-9d46-be2cf523c344</guid><pubDate>Mon, 31 Aug 2026 07:37:17 +0000</pubDate><atom:updated>2026-08-31T07:37:17.653Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN Assembly,அறிவிப்புகள்,துணை மின் நிலையங்கள்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,டிஜிட்டல் நிதி மையம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/0ik5q04v/Untitled-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/0ik5q04v/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முதல்-அமைச்சர் விஜய், எரிசக்தித் துறை சார்பில் புதிய மின்கட்டமைப்புகள் அமைப்பது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் செமிகண்டெக்டர் மற்றும் மின்னணுவியல் உற்பத்திப் பூங்கா, கோயம்புத்தூரில் டிஜிட்டல் நிதி மையம் மற்றும் திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் பல்முனை சரக்குப் போக்குவரத்து மையம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>தமிழ்நாட்டின் வளர்ந்துவரும் பொருளாதாரம் மற்றும் அதிகரித்துவரும் மின் நுகர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மின் உற்பத்தி, மின் தொடரமைப்பு மற்றும் மின் விநியோகத் துறைகளில் விரிவான மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த மின்கட்டமைப்பு அவசியமாகிறது.</p><h2>தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கட்டமைப்பு (Transmission) மேம்பாட்டுத் திட்டம்:</h2><p>மின் நுகர்வு தொடர்ந்து அதிகரித்து வருவதால், மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சென்னை போன்ற முக்கிய மின் நுகர்வு மையங்களுக்குத் திறம்படக் கொண்டு செல்வதற்கான மின் தொடரமைப்பை மேம்படுத்துவது அவசியமாகிறது. இதற்காக, அரசு தொலைநோக்குடன் 33 ஆயிரத்து 66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் “தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்” (Tamil Nadu Transmission Improvement Scheme) செயல்படுத்தப்பட உள்ளது.</p><p>இத்திட்டத்தின் கீழ் 196 புதிய துணை மின் நிலையங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய 15 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுடைய புதிய மின் பாதைகள் அமைக்கப்படுவதுடன், ஏற்கனவே உள்ள மின் பாதைகள் வலுப்படுத்தப்படும்.</p><h2>தூத்துக்குடியில் New Supercritical Thermal Power Station அமைத்தல்:</h2><p>தூத்துக்குடி அனல் மின் நிலையம் தமிழ்நாட்டின் முக்கிய அனல் மின் நிலையங்களில் ஒன்றாகும். இந்த நிலையத்தில் தற்போது தலா 210 மெகாவாட் திறன்கொண்ட ஐந்து நிலக்கரி அடிப்படையிலான உற்பத்தி அலகுகள் உள்ளன. இவற்றின் மொத்த நிறுவு திறன் 1,050 மெகாவாட் ஆகும். இந்த அலகுகள் 1979-ம் ஆண்டு முதல் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன. நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் நிலையங்களுக்குப் பொருந்தக்கூடிய சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு இணங்க, தற்போதுள்ள அலகுகளைப் படிப்படியாக மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>தற்போதுள்ள ஐந்து, 210 மெகாவாட் அலகுகளைப் படிப்படியாக மாற்றியமைத்து, தூத்துக்குடி அனல் மின் நிலைய வளாகத்தில், பொது மற்றும் தனியார் கூட்டாண்மை (PPP) முறையில், தலா 800 மெகாவாட் திறன்கொண்ட இரண்டு அலகுகளுடன், மொத்தமாக 1,600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு New Supercritical Thermal Power Station 20 1,800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.</p><h2>மின் பகிர்மானக் கட்டமைப்பு (Distribution) மேம்பாட்டுப் பணிகள்:</h2><p>சென்னை மாநகரின் மின்தேவையைப் பூர்த்தி செய்ய வலுவான மின் பகிர்மானக் கட்டமைப்பு அவசியமாகும். சென்னையில் பருவ மழைக்காலங்களில் வெள்ளம் தொடர்பாக ஏற்படும் மின்தடைகளையும், கோடைக்காலங்களில் அதிக மின் தேவை காரணமாக ஏற்படும் சவால்களையும் சந்திக்க வேண்டியுள்ளது.</p><p>இதனைக் கருத்தில் கொண்டு, 36 புதிய 33 By 11 (33/11) கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் அமைத்தல், புதிய மின் பகிர்மான மின்மாற்றிகளை நிறுவுதல், சேதமடைந்த மற்றும் பயன்பாட்டுக் காலம் நிறைவடைந்த கேபிள்கள், மின்கடத்திகள், Pillar Box, Circuit Breakers உள்ளிட்ட உபகரணங்களை மாற்றுதல் போன்ற பணிகள் 1,762 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.</p><h2>செமிகண்டெக்டர் மற்றும் மின்னணுவியல் உற்பத்திப் பூங்கா:</h2><p>தமிழ்நாட்டில் செமிகண்டெக்டர் துறையில் (Semiconductor Sector) அதிக அளவு முதலீட்டினை ஈர்க்கவும், இத்துறையில் நமது மாநிலத்தின் பங்கினை கணிசமான அளவு உயர்த்திடவும், காஞ்சிபுரம் மாவட்டம், மதுரமங்கலத்தில் செமிகண்டெக்டர் மற்றும் மின்னணுவியல் உற்பத்திப் பூங்கா (Semiconductor &amp; Electronics Manufacturing Park) 175 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிப்காட் நிறுவனம் மூலம் அமைக்கப்படும்.</p><p>இப்பூங்காவில், Semiconductor துறையில் புதிய தொழிற்சாலைகள் அமைப்பதற்கு ஏதுவாக உலகத்தரம் வாய்ந்த, R&amp;D – Research and Development வசதிகள் ஏற்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் இத்துறையில் சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் வரை முதலீடுகள் ஈர்க்கப்படும். மேலும், சுமார் 5,000 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும்.</p><h2>டிஜிட்டல் நிதி மையம்</h2><p>நிதித் தொழில்நுட்ப (FinTech) புதுமைகளுடன் டிஜிட்டல் நிதிச் சேவைகளை உருவாக்கும் நோக்கில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) மூலம் கோயம்புத்தூரில் டிஜிட்டல் நிதி மையம் (Coimbatore FinTech Hub) பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.</p><p>உலகத் தரத்திலான வசதிகள், அலுவலக இடங்கள், புத்தொழில் நிறுவனங்கள், நவீன ஆய்வகங்கள், பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு போன்ற அதிநவீன வசதிகள் இம்மையத்தில் இடம்பெறும். இதன்மூலம், கோயம்புத்தூர் மாவட்டத்தில், நிதி மற்றும் நிதிநுட்பத் துறையில் உலகளாவிய முதலீடுகளை ஈர்க்கவும், நவீன தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கவும், உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்படும்.</p><h2>பல்முனை சரக்கு போக்குவரத்து மையம்</h2><p>2026-27ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டில் முக்கிய இடங்களில் பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்காக்கள் (Multi Model Logistics Parks), உலர் துறைமுகங்கள் (Dry Ports) அமைத்து முதலீட்டை ஈர்க்க அரசு முயற்சிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.</p><p>அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மற்றும் அதன் அருகில் அமைந்துள்ள மாவட்டப் பகுதிகளில் முக்கிய உற்பத்தித் தொழிற்சாலைகள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிகளவில் உள்ளதால், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) மூலம் ஆய்வு மேற்கொண்டு, திட்ட அறிக்கை தயார்செய்து அதன் அடிப்படையில் திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் “பல்முனை சரக்கு போக்குவரத்து மையம் (Multi Model Logistics Hub)” ஒன்று அமைக்கப்படும்.</p>]]></content:encoded></item><item><title>காவிரி நீர் பங்கீடு வழக்கு வரும் 15-ந்தேதிக்கு ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-water-sharing-case-adjourned-to-the-15th-supreme-court-order</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-water-sharing-case-adjourned-to-the-15th-supreme-court-order#comments</comments><guid isPermaLink="false">ae6be36e-a926-4266-abd3-d3eca04d08fa</guid><pubDate>Mon, 31 Aug 2026 07:31:46 +0000</pubDate><atom:updated>2026-08-31T07:31:46.964Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,சுப்ரீம் கோர்ட்டு,Cauvery,காவிரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/u6fmw654/National-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/u6fmw654/National-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><p>காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ஏற்று கர்நாடக அரசு காவிரி நீரை திறக்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நிலை அறிக்கை தாக்கல் செய்தது.</p><p>அந்த அறிக்கையில், விகிதாச்சார அடிப்படையில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய பற்றாக்குறை நீரான 17.604 டி.எம்.சி. நீரை கர்நாடகா அரசு உடனடியாக திறக்க வேண்டும் என்ற உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும், அடுத்த 15 நாட்களுக்கு 9,000 கன அடி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில், கர்நாடக அரசு தற்போது வரை வெறும் 20 டி.எம்.சி. நீரை மட்டுமே திறந்து விட்டுள்ளதாகவும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடக அரசு காவிரியில் நீர் திறப்பதை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. </p><p>இந்நிலையில், இன்று இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, காவிரி நீர் பங்கீடு வழக்கை வரும் செப்டம்பர் 15-ந்தேதிக்கு ஒத்திவைத்தது. மேலும், தற்போதைய நிலவரத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய இரு மாநில அரசுகளுக்கும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான  நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/communist-party-of-india-urges-tamil-nadu-government-to-increase-financial-allocation-for-msmes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/communist-party-of-india-urges-tamil-nadu-government-to-increase-financial-allocation-for-msmes#comments</comments><guid isPermaLink="false">80f6ab58-2d7e-43d6-866b-18f87cd716db</guid><pubDate>Mon, 31 Aug 2026 07:13:52 +0000</pubDate><atom:updated>2026-08-31T07:13:52.872Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Communist Party of India,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/qh5j0sr3/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/qh5j0sr3/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“தமிழகத்தின் வருவாய் மற்றும் வேலை வாய்ப்பில் முக்கிய பங்காற்றுவது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்&nbsp;நிறுவனங்களாகும். தமிழகத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி, ரூபாய் 32 லட்சம் கோடியாகும்.&nbsp;அதில் 30 முதல் 35 விழுக்காடு அளவிற்கு&nbsp;பங்களிப்பு செலுத்துவது இந்நிறுவனங்களாகும்.</p><p>இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்நிறுவனங்களின் பங்களிப்பு 8 விழுக்காடாகும். இந்திய ஏற்றுமதியில் இவற்றின் பங்களிப்பு 40 விழுக்காடாகும். தமிழ்நாட்டில் 6.89 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள மொத்த சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் 15.07 விழுக்காடு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் உற்பத்திப் பொருள்களில் சுமார் 49 விழுக்காடு இந்நிறுவனங்கள் உற்பத்திச் செய்பவையாகும்.</p><p>எனவே, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, இந்நிறுவனங்களை தமிழ்நாடு அரசு பாதுகாத்திட வேண்டும். ஊக்கப்படுத்திட வேண்டும். இந்தியாவில் உற்பத்தித் துறையில் உள்நாட்டு, வெளிநாட்டு பெருநிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அவை செயற்கை நுண்ணறிவு, தானியங்கி எந்திரங்கள் போன்றவற்றை உற்பத்தித்துறையில் வேகமாக புகுத்துகின்றன. இதனால் அவை புதிய வேலை வாய்ப்புகளை அதிகம் உருவாக்குவதில்லை. லட்சக்கணக்கான தொழிலாளர்களை வேலை இழப்பிற்கும் உள்ளாக்குகின்றன. அவர்களை கடும் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்குவதோடு, அதீதமான லாபத்தை அடைகின்றன. </p><p>வெளிநாட்டு பெரு நிறுவனங்கள் நமது நாட்டின் செல்வாதாரங்களை கொள்ளையடிப்பதுடன், உற்பத்தித்துறையில் நாட்டின் தன்னிறைவை, தற்சார்பு பொருளாதாரத்தை ஒழித்துக்கட்ட முனைகின்றன. உள்நாட்டு - வெளிநாட்டு பெரு நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அச்சுறுத்தலாக மாறி அவற்றை ஒழித்துக் கட்ட முயல்கின்றன. </p><p>இந்நிலையில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களையும், அவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டியதும், அந்நிறுவனங்களை ஊக்கப்படுத்த வேண்டியதும் அரசின் கடமையாகும். எனவே, இந்நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு அதிகரிக்க வேண்டும்.</p><p>2026-27 பட்ஜெட்டில் இத்துறைக்கு ரூபாய் 2,142 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதை ரூபாய் 3,000 கோடியாக உயர்த்த வேண்டுமென தமிழக&nbsp;சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே, தமிழ்நாடு அரசு அதை பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும். இந்நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். </p><p>அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுத்திட வேண்டும். பேரிடர் காலத்தில் இந்நிறுவனங்கள் பாதிக்கப்படும் பொழுது, உரிய இழப்பீட்டை பெறும் வகையில் பேரிடர் காப்பீட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பால் கொள்முதல் விலை லிட்டருக்கு மேலும் ரூ.3 உயர்வு: முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/milk-procurement-price-hiked-by-rs3-per-litre-cm-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/milk-procurement-price-hiked-by-rs3-per-litre-cm-vijay#comments</comments><guid isPermaLink="false">42603c59-b6d0-44ee-a1a0-cc31fd06b977</guid><pubDate>Mon, 31 Aug 2026 05:33:40 +0000</pubDate><atom:updated>2026-08-31T07:12:39.278Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN Assembly,milk price,பால் கொள்முதல் விலை,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/tzybxg0c/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/tzybxg0c/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பால் கொள்முதல் விலையை மேலும் ரூ.3 உயர்த்தி, ரூ.44 ஆக வழங்கப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ், முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-</p><p>பால் உற்பத்தி, கிராமப் பொருளாதார மேம்பாட்டில் ஒரு முக்கியப் பங்கு வதிப்பதை கருத்தில் கொண்டு கிராம அளவில் உள்ள தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கும் 3 லட்சத்து 16 ஆயிரத்திற்கும் மேலான பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில் பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு கூட்டுறவு சங்கம் மூலமாக ரூ.1 உயர்த்தவும், மேலும், அரசு ஊக்கத்தொகை ரூ.3-லிருந்து 5 ரூபாயாக உயர்த்தவும் முடிவு செய்து ஆக மொத்தம் ஒரு லிட்டர் கொள்முதல் விலை ரூ.38-லிருந்து ரூ.41 உயர்த்தி 19.08.2026 அன்று சட்டமன்ற பேரவையில் அறிவித்தோம்.</p><p>இந்தச் சூழ்நிலையில், கறவை மாடுகளுக்கான பசுந்தீவனம், உலர் தீவனம், தவிடு, புண்ணாக்கு ஆகியவற்றின் விலை மற்றும் இதர இடுபொருட்களின் விலை ஆகியவை மிகவும் உயர்ந்துள்ளதைத் தெரிவித்து, பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தித்தர வேண்டும் என்று பல்வேறு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கங்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் அரசுக்குக் கோரிக்கையை வைத்துள்ளனர்.</p><p>எனவே, பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையினைக் கனிவுடன் பரிசீலனை செய்து அரசு, பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில் பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 38 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, மேலும் ரூ.3 உயர்த்தி 44 ரூபாயாக வழங்க தற்போது முடிவு செய்துள்ளது.</p><p>அரசு, பால் உற்பத்தியாளர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு இந்த முடிவினை எடுத்துள்ளது. மேலும், பால் கொள்முதல் விலை உயர்வினால் ஏற்படும் செலவினத்தை ஆவின் நிறுவனத்திற்கு அரசு ஈடு செய்து வழங்கும். இந்த கொள்முதல் விலை உயர்வால் கூடுதலாக மொத்தம் ஒரு மாதத்திற்கு ரூ.60 கோடியும், ஒரு ஆண்டிற்கு ரூ.720 கோடியும் செலவாகும். இவ்வாறு கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>விழுப்புரத்தில் ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-hurling-petrol-bomb-at-a-hotel-in-villupuram</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-hurling-petrol-bomb-at-a-hotel-in-villupuram#comments</comments><guid isPermaLink="false">0995ac18-6b02-4f22-aafa-723f238d631d</guid><pubDate>Mon, 31 Aug 2026 07:03:25 +0000</pubDate><atom:updated>2026-08-31T07:03:25.933Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விழுப்புரம்,police enquiry,Youth Arrest,இளைஞர் கைது,ஹோட்டல்,பெட்ரோல் குண்டுவீச்சு,petrol bomb thrown</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/tt09c3sr/-.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கைது செய்யப்பட்ட தனுஷ்]]></media:title><media:description type="html"><![CDATA[ இளைஞர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/tt09c3sr/-.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விழுப்புரம்,</p><p>விழுப்புரத்தில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>பணம் கேட்டதால் தகராறு</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விழுப்புரம்</a> நகர போலீஸ் நிலையத்திற்கு மிக அருகில் பிரபல ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் (சனிக்கிழமை), தனுஷ் (வயது 23) என்ற இளைஞர் அங்கு உணவு சாப்பிட்டுள்ளார். சாப்பிட்டு முடித்த பின், ஹோட்டல் ஊழியர்கள் அவரிடம் சாப்பிட்டதற்கான பணத்தைக் கேட்டனர். அதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், ஊழியர்களிடம் கடுமையான வாக்குவாதம் செய்துவிட்டு அங்கிருந்து சென்றார்.</p><h2>பூட்டிய உணவகம் மீது குண்டுவீச்சு</h2><p>இதற்கிடையே, நேற்றிரவு வியாபாரம் முடிந்த பிறகு உணவகம் பூட்டப்பட்டது. நள்ளிரவில் அங்கு வந்த அந்த வாலிபர், தான் கொண்டு வந்த பெட்ரோல் குண்டை பூட்டியிருந்த உணவகத்தின் மீது வீசிவிட்டு தப்பியோடினார். போலீஸ் நிலையம் அருகிலேயே மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><h2>வாலிபர் கைது</h2><p>இது குறித்து ஹோட்டல் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில்,<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81"> பெட்ரோல் குண்டு</a> வீசிய நபர் விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்பதை போலீசார் கண்டறிந்தனர்.</p><p>தலைமறைவாக இருந்த தனுஷை இன்று (திங்கட்கிழமை) காலை போலீசார் அதிரடியாக<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81"> கைது </a>செய்தனர். விசாரணையின் போது, உணவகத்தில் சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்திலேயே பூட்டியிருந்த கடையின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக அவர் தனது வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கொலைக்களமாக மாறுகிறதா தமிழ்நாடு? கைகட்டி வேடிக்கை பார்க்கிறதா தவெக அரசு? - டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-tamil-nadu-turning-into-killing-field</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-tamil-nadu-turning-into-killing-field#comments</comments><guid isPermaLink="false">d1618fad-37f7-4865-93ee-40a714b75e5c</guid><pubDate>Mon, 31 Aug 2026 06:36:47 +0000</pubDate><atom:updated>2026-08-31T06:36:47.794Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,கண்டனம்,AMMK,அமமுக,சட்டம் ஒழுங்கு,Law and order</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/g75dwtnh/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/g75dwtnh/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறியிருக்கும் படுகொலைச் சம்பவங்கள் சட்டம் ஒழுங்கை கேள்விகுறியாக்கியுள்ளதோடு, பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>பல்லாவரத்தில் விசிக நிர்வாகி வெட்டிக்கொலை, கூடங்குளம் அருகே ரவுடி தலை துண்டித்துக் கொலை, நெல்லை அருகே இளைஞர் படுகொலை, சேலம் அருகே பெண் துண்டு துண்டாக வெட்டிக்கொலை, கள்ளக்குறிச்சியில் தன் வயலுக்கு இரவு காவலுக்குச் சென்ற மூதாட்டி கொலை என, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து அரங்கேறியிருக்கும் படுகொலைச் சம்பவங்கள் சட்டம் ஒழுங்கை கேள்விகுறியாக்கியுள்ளதோடு, பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.</p><p>மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு வழங்குவதே அரசு  நிர்வாகத்தின் அடிப்படைக் கடமை என்பதை மறந்து, ஆட்சிக்கு வந்து நூறு நாட்களைக் கடந்த நிலையில் இன்னும் கும்பகர்ணத் தூக்கத்திலேயே இருக்கும் தவெக அரசால், பொதுமக்கள் பொதுவெளியில் சுதந்திரமாக நடமாடவே அச்சப்படும் அவலநிலை உருவாகியுள்ளது.</p><p>தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் குற்றச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தி, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு உரிய பதிலளிக்காமல் வேண்டுமென்றே சர்ச்சைகளை உருவாக்கி, அவையின் நேரத்தை வீணடிப்பதிலுமே கவனம் செலுத்தி வருவது வெட்கக்கேடானது.</p><p>எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அஞ்சி, தன் வசம் உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மானியக் கோரிக்கைகளைக்கூட மற்ற அமைச்சர்களைத் தாக்கல் செய்யச் சொன்ன முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், தற்போது சீரழிந்திருக்கும் சட்டம்-ஒழுங்கு குறித்து எந்தவிதக் கவலையும் இல்லாமல் இருப்பதைப் பார்க்கும்போது, காவல்துறையையும் மற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது.</p><p>எனவே, கொலைச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து, சட்டப்படி கடுமையான தண்டனை பெற்றுத்தருவதோடு, தமிழகத்தில் அதலபாதாளத்திற்குச் சென்றிருக்கும் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து கூடுதல் கவனம் செலுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கிருஷ்ணகிரி: 90 சதவீத நிலக்கடலை பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/krishnagiri-90-percent-of-groundnut-crops-damaged-farmers-in-distress</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/krishnagiri-90-percent-of-groundnut-crops-damaged-farmers-in-distress#comments</comments><guid isPermaLink="false">7403e5f0-c534-43a6-8e5e-9857610e5061</guid><pubDate>Mon, 31 Aug 2026 06:35:48 +0000</pubDate><atom:updated>2026-08-31T06:35:48.458Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விவசாயிகள்,கிருஷ்ணகிரி,formers,Krishnagiri district,நிலக்கடலை,Groundnut</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/g6cm0x6i/3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நிலக்கடலை பயிர்கள் சேதம் விவசாயி கவலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/g6cm0x6i/3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ணகிரி,</p><p>சுமார் 90 சதவீத நிலக்கடலை பயிர்கள் வறட்சியால் சேதமடைந்ததால் பயிரிட்ட விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளனர்.</p><p>கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி உள்ளிட்ட கிராம பகுதிகளில் பருவமழையை நம்பி விவசாயிகள் 30,000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நிலக்கடலை பயிரிட்டனர். அதற்கு மாறாக ஏற்படுகின்ற வானிலை மாற்றத்தால் பயிர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன. கோடை காலத்தில் மழையும், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88">பருவமழை</a> காலத்தில் வெயிலும் நிலவி வருகிறது. இதனால் பருவமழையை நம்பி பயிரிட்ட 90 சதவீத நிலக்கடலை பயிர்கள் வறட்சியால் சேதமடைந்துள்ளன.</p><h2>விவசாயிகள் கவலை</h2><p>கஷ்டப்பட்டு சாகுபடி செய்து அறுவடை செய்யும் நேரத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">வறட்சியால்</a> சேதமடைந்ததால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இதனால் வேளாண் துறை அதிகாரிகளும் மற்றும் மாவட்ட நிர்வாகிகளும் நேரில் சென்று ஆய்வு செய்து வறட்சியால் வாடிய பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>முதல்வர் விஜய்யின் கற்பனையில் கூட பிரதமர் ஆகும் எண்ணம் இருக்காது - வைகோ!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-would-never-even-dream-of-becoming-prime-minister-vaiko</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-would-never-even-dream-of-becoming-prime-minister-vaiko#comments</comments><guid isPermaLink="false">d23ed993-4786-4e5e-b108-cd58d7336786</guid><pubDate>Mon, 31 Aug 2026 06:34:21 +0000</pubDate><atom:updated>2026-08-31T06:34:21.903Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,காங்கிரஸ்,Congress,Rahul Gandhi,ராகுல்காந்தி,முதல் -அமைச்சர்,வைகோ பேச்சு,Vaiko Talk,முதல் அமைச்சர் விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/g5erz5yk/vaiko-rahul-vijay.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வைகோ - விஜய் - ராகுல் காந்தி ]]></media:title><media:description type="html"><![CDATA[ வைகோ பேட்டி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/g5erz5yk/vaiko-rahul-vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி </p><p>தமிழக<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D"> முதல்வர்</a> விஜய்யின் கற்பனையில் கூட பிரதமர் ஆகும் இந்த எண்ணம் இருக்காது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.</p><h2>விலகுவோம்</h2><p>சமீபத்தில் குமரியில் <a href="https://www.dailythanthi.com/topic/congress">காங்கிரஸ்</a> கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்பதை ஏற்காவிட்டால் தவெக அமைச்சரவையில் இருந்து விலகுவோம் என கூறியிருந்தார். அவரது இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. கூட்டணியிலும் சலசலப்பை உருவாக்கியிருக்கிறது.</p><h2>வைகோ-வின் பதில்</h2><p>இந்நிலையில் இன்று திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த வைகோவிடம் செய்தியாளர் ஒருவர் இதுக்குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு வைகோ கூறியதாவது:-</p><p>இதுபோன்ற எண்ணங்கள் கற்பனையில் கூட முதல்வர் விஜய்க்கோ அமைச்சர்களுக்கோ இருக்காது. ஒரு கூட்டணியில் இருந்து கொண்டு இவ்வாறு பேசுவது தவறு. அமைச்சர்கள் பேசும்போது இதுகுறித்து நகைச்சுவையாக பேசக்கூடாது. வரப்போகும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் <a href="http://dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">ராகுல் காந்தி</a>தான். வேறு யாரும் இருக்கவும் முடியாது. இதுகுறித்து இனிமேல் பேசக்கூடாது என்று முதல் அமைச்சர் வலியுறுத்த வேண்டும். </p><p>இவ்வாறு கூறியுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>திருப்பத்தூர்: விவசாய கிணற்றில் 2 சிறுவர்களின் சடலங்கள் மீட்பு - போலீஸ் தீவிர விசாரணை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirupathur-bodies-of-two-boys-recovered-from-an-agricultural-well-police-conducting-intensive-investigation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirupathur-bodies-of-two-boys-recovered-from-an-agricultural-well-police-conducting-intensive-investigation#comments</comments><guid isPermaLink="false">b6345ed6-e6ed-42c0-be69-dc271a467d19</guid><pubDate>Mon, 31 Aug 2026 06:27:22 +0000</pubDate><atom:updated>2026-08-31T06:27:22.924Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirupattur,திருப்பத்தூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/ghu0y44j/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/ghu0y44j/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பத்தூர்,</p><p>திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆலங்காயம் பெத்தூர் பகுதியை சேர்ந்த முன்னாள் கிராம நிர்வாக அலுவளர் பிரகாசத்திற்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் பிரகாசம் இருக்கும் கிணற்றில் இரண்டு சடலங்கள் மிதந்ததை கண்டு பிரகாசம் அதிர்ச்சி அடைந்துள்ளார். </p><p>இது குறித்து அவர் ஆலங்காயம் காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கிணற்றுக்குள் கிடந்த 2 சிறுவர்களின் சடலங்களையும் மீட்டனர். மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு சுமார் 9 மற்றும் 15 வயது இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். </p> <p>தொடர்ந்து 2 சிறுவர்களின் சடலங்களையும் வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். சிறுவர்களின் அடையாளம் தெரியாத நிலையில், அப்பகுதியில் உள்ள விடுதிகளில் மாணவர்கள் யாரேனும் காணாமல் போயுள்ளனரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவர்கள் கிணற்றில் தவறி விழுந்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் எதிர்க்கட்சியினர் வரிசையில்  காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட்டிற்கு  இடம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/congress-mla-tharakai-kathbert-allotted-a-seat-in-the-opposition-benches-of-the-legislative-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/congress-mla-tharakai-kathbert-allotted-a-seat-in-the-opposition-benches-of-the-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">831792fb-8a26-480d-98e1-e8afd340c385</guid><pubDate>Mon, 31 Aug 2026 06:04:31 +0000</pubDate><atom:updated>2026-08-31T06:04:31.146Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,சட்டசபை,எதிர்க்கட்சி,தாரகை கத்பர்ட்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/hcssoamf/Tharagai.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தாரகை கத்பர்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/hcssoamf/Tharagai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>தமிழக சட்டசபையில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட் திடீரென எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் எனவும் இல்லையென்றால் அமைச்சர் பதவியில் இருந்தும் விலக தயார் என்று காங்கிரஸ் அமச்சர் ராஜேஷ்குமார் நேற்று பேசியிருந்த நிலையில் தாரகை கத்பர்ட் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது சிறிது நேரம் பரபரப்பை கிளப்பியது.</p><h2>சட்டமன்றக்குழு தலைவர்</h2><p>எனினும், சட்டமன்றக்குழு தலைவராக தாரகை கத்பர்ட் அங்கீகரிக்கப்பட்ட நிலையில்,  அவருக்கான இடம் மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாமக சட்டமன்றக்குழு தலைவராக உள்ள சவுமியா அன்புமணி அருகில் தாரகை கத்பர்ட் அமைர்ந்துள்ளார். <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தாரகை கத்பர்ட்</a>டிற்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய திமுக கொறடா எ.வ.வேலு, தங்கள் பக்கம் இருக்கும் மூத்த உறுப்பினர்களுக்கும் முன்வரிசையில் இடம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். </p>  <h2>சபாநாயகர் விளக்கம்</h2><p>தமிமுன் அன்சாரி, ஜவஹிருல்லா ஆகியோருக்கும் முன்வரிசையில் இடம் ஒதுக்க வேண்டும் என்று எ.வ. வேலு கோரிய நிலையில், அது குறித்து ஆய்வு செய்து உரிய முடிவு எடுக்கப்படும் என்று சபாநாயகர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">ஜேசிடி பிரபாகர் </a>கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சேலம் அரிசிபாளையத்தில் தண்ணீர் தொட்டியில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண் சடலம் மீட்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mutilated-body-of-a-woman-recovered-from-a-water-tank-in-salems-arisipalayam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mutilated-body-of-a-woman-recovered-from-a-water-tank-in-salems-arisipalayam#comments</comments><guid isPermaLink="false">b462686e-5c88-4be7-b110-71b2446ef1e2</guid><pubDate>Mon, 31 Aug 2026 05:59:53 +0000</pubDate><atom:updated>2026-08-31T05:59:53.566Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>murder,சேலம்,மீட்பு,police enquiry,body recovered,பெண் சடலம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/vhva82jt/000.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ தண்ணீர் தொட்டியில் போலீசார் ஆய்வு]]></media:title><media:description type="html"><![CDATA[ துண்டு துண்டாக பெண்சடலம் மீட்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/vhva82jt/000.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம் மாநகரப் பகுதியான அரிசிபாளையத்தில், பெண் ஒருவர் துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு, தண்ணீர் தொட்டிக்குள் வீசப்பட்டார்.</p><h2>துர்நாற்றத்தால் அம்பலமான கொடூரம்</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சேலம் மாவட்டம்</a> அரிசிபாளையம், மெயின் ரோடு பகுதியில் பூசாரி ஒருவரின் வீடு அமைந்துள்ளது. அந்த வீட்டின் மொட்டை மாடியில் இருக்கும் தண்ணீர் தொட்டியிலிருந்து கடந்த சில நாட்களாக கடுமையான துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள், இன்று (திங்கட்கிழமை) தண்ணீர் தொட்டியைத் திறந்து பார்த்துள்ளனர். அப்போது அதற்குள் ஒரு மூட்டை கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக செவ்வாய்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.</p><h2>மூட்டையில் இருந்த உடல் பாகங்கள்</h2><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேலம் மாநகர போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள், தண்ணீர் தொட்டிக்குள் இருந்த மூட்டையை வெளியே எடுத்தனர். அந்த மூட்டையைப் பிரித்து சோதித்தபோது, அதற்குள் ஒரு பெண்ணின் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் அழுகிய நிலையில் இருந்தன. </p><h2>போலீசார் தீவிர விசாரணை</h2><p>கொலை செய்யப்பட்டு பல நாட்கள் ஆகியிருக்கலாம் என்பதால் சடலம் முற்றிலும் சிதைந்த நிலையில் இருந்தது. போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">சடலத்தை மீட்டு</a>, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இக்கொடூர கொலை தொடர்பாக சேலம் மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண் யார்? என்பது குறித்தும், கடந்த சில நாட்களில் சேலம் மாவட்டத்தில் மாயமான பெண்களின் பட்டியல் குறித்தும் முதற்கட்ட விசாரணை நடந்து வருகிறது.</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF">கொலையாளி</a> யார்? என்பதை அறிய அந்த வீட்டின் மாடிக்கு வந்து சென்றவர்கள் யார், அங்கு தங்கியிருந்தவர்கள் யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் பணிகளும் தீவிரமாக தொடங்கப்பட்டன. </p><p>அரிசிபாளையத்தின் குடியிருப்புப் பகுதியில், பெண்ணை மிகக் கொடூரமான முறையில் துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் தொட்டியில் வீசிச் சென்ற சம்பவம் சேலம் மக்களிடையே அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கள்ளக்குறிச்சி: கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவர் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kallakurichi-school-student-dies-after-accidentally-falling-into-a-well</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kallakurichi-school-student-dies-after-accidentally-falling-into-a-well#comments</comments><guid isPermaLink="false">e91ce310-9ad9-4a35-87e0-c5a8429c1979</guid><pubDate>Mon, 31 Aug 2026 05:56:04 +0000</pubDate><atom:updated>2026-08-31T05:56:04.317Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Accident,கள்ளக்குறிச்சி,well,கிணறு,police enquiry,மாணவன் பலி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/5krf1sll/000000.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஆழமான கிணறு]]></media:title><media:description type="html"><![CDATA[ கிணற்றில் தவறி விழுந்து மாணவன் பலி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/5krf1sll/000000.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சி,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கள்ளக்குறிச்சி மாவட்டம்</a> உளுந்தூர்ப்பேட்டை அருகே கிணற்றை எட்டிப் பார்த்தபோது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி உள்ளே விழுந்த 15 வயது மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>பெற்றோரை பார்க்க சென்றபோது சோகம்</h2><p>கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டை அடுத்த புகைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D"> மாணவர் சஞ்சய் </a>(வயது 15). அந்த மாணவனின் பெற்றோர், அங்குள்ள ஒரு பகுதியில் கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். </p><p>இந்த நிலையில் சஞ்சய் தனது பெற்றோர் இருக்கும் இடத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஆழமான கிணறு ஒன்றை அவர் ஆர்வம் காரணமாக எட்டிப் பார்த்துள்ளார்.</p><h2>தண்ணீரில் மூழ்கி மரணம்</h2><p>எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறிய சஞ்சய், ஆழமான அந்த கிணற்றுக்குள் தவறி விழுந்தார். தண்ணீரில் மூழ்கிய அவரை மீட்டெடுக்க அங்கிருந்தவர்கள் உடனடியாக முயற்சித்தனர். எனினும், கடுமையான போராட்டத்திற்குப் பிறகு அவர் சடலமாகவே மீட்கப்பட்டார். இந்த விபத்து அவரது பெற்றோர் மற்றும் புகைப்பட்டி கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாணவனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து, போலீசார் தீவிர <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">விசாரணை</a> மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சாதியப் பாகுபாட்டுக்கு எதிரான போராட்டத்தை பாஜகவால் ஒருபோதும் ஒடுக்க முடியாது - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bjp-can-never-crush-struggle-against-caste-discrimination-manickam-thakur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bjp-can-never-crush-struggle-against-caste-discrimination-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">e7b72168-a231-455e-9684-c5f1342be208</guid><pubDate>Mon, 31 Aug 2026 05:50:37 +0000</pubDate><atom:updated>2026-08-31T05:50:37.419Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,சாதியப் பாகுபாடு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/ol2x0aag/Untitled-8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/ol2x0aag/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சாதியப் பாகுபாட்டுக்கு எதிரான போராட்டத்தை பாஜகவால் ஒருபோதும் ஒடுக்க முடியாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சிறுபான்மை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தீண்டாமை மற்றும் சாதியப் பாகுபாட்டுக்கு எதிராக குரல் எழுப்பியதற்காகவே, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொடர்பான சம்பவத்தில், ராகுல் காந்தி மீது FIR பதிவு செய்திருப்பது ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.வின் ஆழமாக வேரூன்றியுள்ள மனுவாத சிந்தனையை வெளிப்படுத்துகிறது.</p><p>பா.ஜ.க.வின் செய்தி தெளிவாக உள்ளது: சாதியப் பாகுபாட்டைக் கேள்வி கேட்பவர்கள் குறிவைக்கப்படுவார்கள்; அதைத் தொடர்ந்து பாதுகாப்பவர்கள் பாதுகாக்கப்படுவார்கள்.</p><p>தீண்டாமைக்கும் சமூகப் பாகுபாட்டிற்கும் எதிராக காங்கிரஸ் எப்போதும் போராடி வந்துள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் 17-வது பிரிவின் மூலம் தீண்டாமையை ஒழித்ததும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க SC-ST (வன்கொடுமைத் தடுப்பு) சட்டத்தை கொண்டுவந்ததும் சமூக நீதிக்கான போராட்டத்தில் காங்கிரசின் வரலாற்றுச் சாதனைகள்.</p><p>ஆனால், தீண்டாமையை ஒழிக்க ஆர்.எஸ்.எஸ். நடத்திய இயக்கம் எங்கே? சாதிய ஏற்றத்தாழ்வையும் மனுவாத சமூக அமைப்பையும் தகர்க்க பா.ஜ.க. செய்த வரலாற்றுச் சாதனை என்ன? சமூகப் பாகுபாட்டை எதிர்கொள்வதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாக்கி, அநீதிக்கு எதிராக எழுப்பப்படும் குரலையே குற்றமாக்க பா.ஜ.க. அரசு முயற்சிக்கிறது.</p><p>இது வெறும் அரசியல் ஆணவம் அல்ல. சமத்துவம், கண்ணியம் மற்றும் சமூக நீதியை வலியுறுத்திய அம்பேத்கரின் அரசியலமைப்புச் சிந்தனையின் மீதான நேரடியான தாக்குதல். FIR-கள் மூலம் ராகுல் காந்தியின் குரலை ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. ஒடுக்க முயற்சி செய்யலாம். ஆனால், சாதியப் பாகுபாட்டுக்கு எதிரான போராட்டத்தை அவர்களால் ஒருபோதும் ஒடுக்க முடியாது.</p><p>மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி மற்றும் ஒட்டுமொத்த காங்கிரஸ் பேரியக்கம் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக உறுதியாக நிற்கும். தீண்டாமையை எதிர்த்துப் போராடும். மனுவாத சிந்தனையைப் பாதுகாக்கும் ஒவ்வொரு முயற்சியையும் எதிர்த்து தொடர்ந்து போராடும்.</p><p>அரசியலமைப்பைக் காப்போம். சமூக நீதியைக் காப்போம். சாதியப் பாகுபாட்டை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>‘ரேஷனில் கை வைக்கலாம் என்று நினைத்தால் உங்கள் கதை முடிந்துவிடும்’ - பெ.சண்முகம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-you-think-you-can-tamper-with-the-ration-system-your-story-is-over-p-shanmugam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-you-think-you-can-tamper-with-the-ration-system-your-story-is-over-p-shanmugam#comments</comments><guid isPermaLink="false">d23bb55d-7075-4c0e-ad79-310b318c284f</guid><pubDate>Mon, 31 Aug 2026 05:47:34 +0000</pubDate><atom:updated>2026-08-31T05:47:34.617Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பெ.சண்முகம்,ரேஷன்,ration rice,P.Shanmugam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/35wfawyt/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/35wfawyt/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர்,</p><p>திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“சட்டமன்றத்தில் ஒரு அமைச்சர், ரேஷன் அரிசியில் மக்கள் சோறாக்கி சாப்பிடுவது இல்லை என்றும், ஆடு, மாடு, கோழிக்குதான் போடுகிறார்கள் என்றும் கூறுகிறார். மற்றொரு அமைச்சர், ரேஷன் அரிசியை மக்கள் இட்லி, தோசைக்கு மாவு அரைத்துதான் சாப்பிடுகிறார்கள் என்று சொல்கிறார். இட்லி, தோசை எல்லாம் உணவு கணக்கில் வராதா?</p><p>சாப்பிடும் வகையில் இருந்தால் மக்கள் சாப்பிட மாட்டார்களா? இதில் என்ன பெருமை இருக்கிறது உங்களுக்கு? மக்கள் சாப்பிடும் வகையிலான அரிசியாக இருந்தால் கட்டாயம் சாப்பிடுவார்கள். இந்த மாதிரி காரணங்களை சொல்லி, ரேஷன் கடைகளில் இனிமேல் அரிசி போட வேண்டாம் என்ற முடிவை நோக்கி போய்விடுவார்களோ என்று எனக்கு பதற்றமாக இருக்கிறது. </p><p>ரேஷன் கடைகளில் ஒரு கார்டுக்கு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பல லட்சக்கணக்கான குடும்பங்கள் அதை நம்பித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தனித்து வாழக்கூடிய ஏராளமான பெண்கள், தனித்து வாழக்கூடிய முதியவர்கள் பலர் அதை நம்பி வாழ்கிறார்கள். அந்த அரிசிதான் அவர்களின் உயிரை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. </p><p>இதெல்லாம் அமைச்சர்களுக்கு தெரியுமா, தெரியாதா என்று தெரியவில்லை. அமைச்சர்கள் ஓட்டு கேட்டு சென்றதுபோல், ரேஷன் கடைகளில் யார் அரிசி வாங்குகிறார்கள்? அதை வைத்து என்ன செய்கிறார்கள்? என்பதை வீடு வீடாக சென்று கொஞ்சம் கேட்டால் மக்கள் சொல்வார்கள். சட்டசபையில் உட்கார்ந்து சொல்வதை விட, தெருக்களில் வந்து மக்களிடம் கேட்டுவிட்டு பிறகு சட்டசபையில் போய் பேசினால் சிறப்பாக இருக்கும். எனவே, தப்பி தவறி கூட ரேஷனில் கை வைக்கலாம் என்று நினைக்க வேண்டாம். ரேஷனில் கை வைத்தால் உங்கள் கதை முடிந்துவிடும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>கன்னியாகுமரி: 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; மீன்பிடி தொழிலாளி போக்சோவில் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kanyakumari-5-year-old-girl-sexually-assaulted-fisherman-arrested-under-pocso</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kanyakumari-5-year-old-girl-sexually-assaulted-fisherman-arrested-under-pocso#comments</comments><guid isPermaLink="false">2e0eda83-6334-4b6c-94e6-274f7c676ccf</guid><pubDate>Mon, 31 Aug 2026 05:42:35 +0000</pubDate><atom:updated>2026-08-31T05:42:35.382Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,police,Kanyakumari,போக்சோ,POCSO,5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/dvgt1pop/2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ போக்சோவில் கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/dvgt1pop/2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி,</p><p>5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் மீன்பிடி தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.</p><h2>பாலியல் தொல்லை</h2><p>கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் உள்ள கொல்லங்கோடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெல்சன் (வயது 29). இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் தனது வீட்டிற்கு விளையாட வந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.</p><h2>போக்சோவில் கைது</h2><p>இது குறித்து சிறுமியின் பெற்றோர் குளச்சல் அனைத்து மகளிர் <a href="https://www.dailythanthi.com/topic/போலீஸ்">போலீஸ்</a> நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார், ஜெல்சனை விசாரணை செய்த போது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு சட்டமான<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B"> போக்சோ </a>சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தி.மு.க.வில் இருந்து விலகல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/former-minister-thoppu-venkatachalam-quits-dmk</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/former-minister-thoppu-venkatachalam-quits-dmk#comments</comments><guid isPermaLink="false">82d70c2c-1ac2-4d2d-9175-3ae926df2fd7</guid><pubDate>Mon, 31 Aug 2026 05:29:11 +0000</pubDate><atom:updated>2026-08-31T05:29:11.097Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,தி.மு.க.,Ex-Minister,தோப்பு வெங்கடாசலம்,Venkatachalam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/8ty8vfkt/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/8ty8vfkt/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தி.மு.க.வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது;-</p><p>“தி.மு.க. தலைவர், முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வணக்கங்கள். கழகத்தில் என் மீது நம்பிக்கை வைத்து மாவட்ட கழக பொறுப்பாளராகவும், பெருந்துறை சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராகவும் வாய்ப்பு வழங்கினீர்கள். அதற்கு என்னுடைய நெஞ்சார்ந்த கோடான கோடி நன்றிகளை அன்புடனும் பணிவுடனும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>ஆனால் நான் மாவட்ட கழக செயலாளராக செயல்படுவதற்கும் சட்டமன்ற தேர்தலில் எனக்கும் என்னுடன் பணியாற்றியவர்களுக்கும் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிற காரணத்தால் இனிமேலும் என்னால் கழகத்தில் பயணிக்க என் மனம் இடம் கொடுக்காத காரணத்தால் எனது அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்பதை அன்புடனும் பணிவுடனும் தெரிவித்துக் கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>ஜல்லிக்கட்டு:  தவெக எம்.எல்.ஏவின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/jallikattu-tvk-mlas-remarks-expunged-from-the-house-records</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/jallikattu-tvk-mlas-remarks-expunged-from-the-house-records#comments</comments><guid isPermaLink="false">7e19550a-056a-40bd-95ec-bf31f71d1c97</guid><pubDate>Mon, 31 Aug 2026 05:17:22 +0000</pubDate><atom:updated>2026-08-31T05:17:22.696Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,ஜல்லிக்கட்டு,Jallikkatu,தவெக எம்.எல்.ஏ.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/ml6jxtgk/javahirulla.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/ml6jxtgk/javahirulla.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்​டப்​பேர​வை​யில் கடந்த வியாழக்கிழமை சோழ​வந்​தான் தவெக எம்​எல்ஏ கருப்​பை​யா,  ஜல்லிக்கட்டு தொடர்பாக பேசிய கருத்து சர்ச்​சைக்​குள்​ளாகி​யுள்​ளது. இதற்கு அதி​முக, அமமுக உள்பட பல்​வேறு கட்சி தலைவர்கள் கண்​டனம் தெரி​வித்​து இருந்தனர். எம்.எல்.ஏவின் பேச்சை கண்டித்து அதிமுக வரும் 3 ஆம் தேதி ஆர்ப்பாட்டமும் அறிவித்துள்ளது. </p><p>இந்த நிலையில், தவெக எம்.எல்.ஏ கருப்பையாவின் ஜல்லிக்கட்டு தொடர்பான கருத்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார். முன்னதாக, தனது பேச்சு சர்ச்சையை கிளப்பிய நிலையில், வருத்தம் தெரிவித்த தவெக எம்.எல்.ஏ கருப்பையா ‘ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளின் கலாசாரப்படி அரங்கம் அமைத்து நடத்துவது தமிழ் கலாசாரத்திற்கு முரணானது.</p><p>பொங்கல் விழாவின்போது அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு நடந்த பிறகு கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் தொடர்ந்து ஏறு தழுவுதல் அரங்கில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதனால் பள்ளி-கல்லூரிக்கு மாணவர்கள் ஒழுங்காக செல்லாமல் ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டி வந்தனர். அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதற்காகதான் சட்டமன்றத்தில் பேசினேன். ஆனால் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பற்றி இழிவாகக்கூறவில்லை. மாணவ பருவத்தினரை மனதில் வைத்து கொண்டு, அவர்கள் படித்து பட்டம் பெற்று நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பதற்காக அப் படி கூறினேன். இதில் இளைய சமுதாயத்தினரின் மனது புண்படும்படி யாக பேசி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவிக்கிறேன்’ என்று கூறியிருந்தார். </p> ]]></content:encoded></item><item><title>தங்கம் விலை மேலும் குறைவு... இன்றைய நிலவரம் என்ன..?</title><link>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-drops-further-whats-todays-rate</link><comments>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-drops-further-whats-todays-rate#comments</comments><guid isPermaLink="false">474d1caf-d969-4c61-bc06-382b976f4d4d</guid><pubDate>Mon, 31 Aug 2026 04:56:02 +0000</pubDate><atom:updated>2026-08-31T04:56:02.143Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Gold Rate,தங்கம் விலை,வெள்ளி விலை,Silver rate,Gold Price,Silver Price,விலை நிலவரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/hdyt8eww/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/hdyt8eww/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தங்கம் (Gold Rate)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தங்கம் விலை கடந்த 6-ந்தேதியில் இருந்து அதிகரிக்கத் தொடங்கியது. 6-ந்தேதி ஒரு சவரன் ரூ.1,10,000-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து விலை அதிகரித்து, கடந்த 24-ந்தேதி ரூ.1,20,240-க்கு விற்பனையானது. இப்படியாக விலை உயர்ந்து வந்த சூழலில், அதன் பின்னர் சற்று குறையத் தொடங்கியது.</p><p>நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.295-ம், சவரனுக்கு ரூ.2,360-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14,505-க்கும், ஒரு சவரன் ரூ.1,16,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.</p><p>அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,080 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,14,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.135 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,370-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.260-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>மேட்டூர் அணை நாளை திறக்கப்பட உள்ள நிலையில்  நீர்வரத்து 11 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/with-the-mettur-dam-set-to-open-tomorrow-water-inflow-has-increased-to-10485-cubic-feet-per-second</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/with-the-mettur-dam-set-to-open-tomorrow-water-inflow-has-increased-to-10485-cubic-feet-per-second#comments</comments><guid isPermaLink="false">e4f00f52-79d2-4158-94be-94caddee8256</guid><pubDate>Mon, 31 Aug 2026 04:51:34 +0000</pubDate><atom:updated>2026-08-31T04:51:34.342Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur dam,Salem,சேலம்,கனஅடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/71biav2j/mettur-dam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மேட்டூர் அணை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/71biav2j/mettur-dam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறைந்தது. இதனால் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லாததால் குறிப் பிட்ட நாளான ஜூன் 12ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனிடையே, கர்நா டக மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழை காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு பரவலாக தண்ணீர் வருவதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.</p><h2>நாளை அணை திறப்பு</h2><p>நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 90.47 அடியை எட்டி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 35 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினா டிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனிடையே, மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத் திற்கு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதற்காக முதல்-அமைச்சர் விஜய் நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் செல்கிறார். ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு செல்லும் அவர், அங்கிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக மேட்டூர் செல்கிறார். பின்னர் அவர் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைக்கிறார்.</p><h2>பாதுகாப்பு ஏற்பாடுகள்</h2><p>முதல்-அமைச்சர் விஜய் சேலம் வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மேட்டூர் அணையில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து முதல்-அமைச்சர் விஜய் வரும் வழிநெடுகிலும் சாலை யின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதாவது முதல்-அமைச்சர் விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் பொதுமக்கள் அதிகளவு வருவார்கள் என்பதால் அவர் செல்லும் வழியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அணை யின் வலதுகரையில் விழாவுக்காக பந்தல் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது.</p><h2>ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு</h2><p>கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கனஅடியில் இருந்து 11 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வ ரத்து தொடர்ந்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருப்பதால் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை  இன்று 16-வது நாளாக நீடித்தது.</p>]]></content:encoded></item><item><title>
நடிகரின் கார் கண்ணாடியை உடைத்து பணம்-நகை திருட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cash-and-jewelry-stolen-after-breaking-actors-car-window</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cash-and-jewelry-stolen-after-breaking-actors-car-window#comments</comments><guid isPermaLink="false">8cbe1fa7-2a31-4a1b-9853-88ad28ce0d25</guid><pubDate>Mon, 31 Aug 2026 04:29:55 +0000</pubDate><atom:updated>2026-08-31T04:29:55.227Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,திருட்டு,நகை திருட்டு,actor,நடிகர்,Theft,கார் கண்ணாடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/acwhou2h/4.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ Image Credits: AI]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/acwhou2h/4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நடிகரின் கார் கண்ணாடியை உடைத்து பணம் மற்றும் நகை திருடிய வழக்கில், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஜலாலுதீன் (49) என்பது தெரியவந்தது.</p><h2>கார் கண்ணாடியை உடைத்து திருட்டு</h2><p>சென்னை மயிலாப்பூர் சி.ஐ.டி. காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயேந்திரன் வருண் (வயது 33) நடிகர். 'வனமகன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தொழிலதிபரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஐசரி கணேசனின் தங்கை மகன் ஆவார். </p><p>இவர் தனது காரை வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்தார். அந்த கார் கண்ணாடியை உடைத்து. அதற்குள் இருந்த ரூ.85 ஆயிரம், தங்க சங்கிலி, தங்க காப்பு மற்றும் ஐபோன், விலை உயர்ந்த கைக்கடிகாரம் உள்ளிட்ட பொருட்களை யாரோ மர்ம நபர் திருடிச் சென்றுவிட்டார். </p><h2>கேமரா பதிவை வைத்து கைது</h2><p>இதுகுறித்து ஜெயேந்திரன் வருண் அளித்த புகாரின்பேரில் மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில் இந்த திருட்டில் ஈடுபட்டது, சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஜலாலுதீன் (49) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.பிரபல கொள்ளையனாக வலம் வந்த இவர் மீது ஏற்கனவே நிறைய வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரிடம் இருந்து திருட்டுப்பொருட்கள் மீட்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>விளையாடிக் கொண்டிருந்தபோது சோகம்... தண்ணீர் வாளியில் மூழ்கி ஒரு வயது குழந்தை உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/toddler-dies-after-falling-into-water-bucket-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/toddler-dies-after-falling-into-water-bucket-chennai#comments</comments><guid isPermaLink="false">863678d5-4f6c-4994-ba3e-c7cba73b2bf4</guid><pubDate>Mon, 31 Aug 2026 04:03:38 +0000</pubDate><atom:updated>2026-08-31T04:03:38.511Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,குழந்தை உயிரிழப்பு,புழல்,Puzhal</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/j53cys3x/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/j53cys3x/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையை அடுத்த புழல் கண்ணப்பசாமி நகர் 24-வது தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி சுமித்ரா. இவர்களுக்கு யோகமாயா (1 வயது) என்ற பெண் குழந்தை இருந்தது.</p><p>நேற்று மாலை வீட்டில் உள்ள வாளியில் இருந்த தண்ணீரில் குழந்தை யோகமாயா விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது சுமித்ரா, சமையல் அறையில் சமையல் செய்து கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து குழந்தையைப் பார்க்க வந்தபோது, வாளியில் உள்ள தண்ணீரில் குழந்தை மூழ்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.</p><p>உடனடியாக குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை... வரதட்சணை கொடுமையா? - ஆர்.டி.ஓ. விசாரணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-dies-by-suicide-near-chennai-dowry-harassment-suspected-rdo-probe</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-dies-by-suicide-near-chennai-dowry-harassment-suspected-rdo-probe#comments</comments><guid isPermaLink="false">12376d58-5aa8-4e2e-9231-b3b42dc2d91c</guid><pubDate>Mon, 31 Aug 2026 03:20:15 +0000</pubDate><atom:updated>2026-08-31T03:20:15.557Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,தற்கொலை,வரதட்சணை கொடுமை,dowry case,கோவிலம்பாக்கம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/f6kpd5us/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/f6kpd5us/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கோவிலம்பாக்கத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டாரா? என ஆர்.டி.ஓ. விசாரித்து வருகிறார்.</p><h2>பட்டதாரி ஆசிரியை</h2><p>சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் எஸ்.கொளத்தூர் பிள்ளையார் கோவில் குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது 2-வது மகள் புவனேஸ்வரி (27 வயது). இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எம்.எஸ்.சி., பி.எட். முடித்து, தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.</p><p>கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், செங்கல்பட்டு மாவட்டம் ஈச்சங்கரணையைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவருக்கு புவனேஸ்வரியை திருமணம் செய்து வைத்தனர். திருமணத்தின்போது பெண்ணுக்கு 50 பவுன் நகைகளும், மாப்பிள்ளைக்கு 20 பவுன் நகைகளும், ரூ.15 லட்சம் மதிப்புள்ள காரும், வீட்டு உபயோகப் பொருட்களும் வரதட்சணையாக கொடுத்ததாக கூறப்படுகிறது.</p><h2>கூடுதல் வரதட்சணை</h2><p>ஆனாலும் திருமணத்துக்குப் பிறகு ஜானகிராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு புவனேஸ்வரியை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது இவர்களுக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. சமீபத்தில் குழந்தையின் முதலாவது பிறந்தநாளையொட்டி புவனேஸ்வரியின் பெற்றோர், 1.25 பவுன் சங்கிலி மட்டும் அணிவித்துள்ளனர். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.</p><h2>தூக்குப்போட்டு தற்கொலை</h2><p>இந்த நிலையில், கடந்த 20-ந்தேதி தனது தந்தை வீட்டின் அருகே உள்ள கோவிலில் திருவிழா நடைபெறுவதால், புவனேஸ்வரி தந்தை வீட்டுக்கு வந்து தங்கி இருந்தார். அப்போது அவரிடம் தொலைபேசியில் பேசிய ஜானகிராமன், "வீட்டுக்கு வர வேண்டாம். உன் தாய் வீட்டிலேயே இரு" என்று கூறியதாக தெரிகிறது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான புவனேஸ்வரி, இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.</p><h2>ஆர்.டி.ஓ. விசாரணை</h2><p>இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று புவனேஸ்வரியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி புவனேஸ்வரியின் தந்தை போலீசில் புகார் அளித்தார். அதில், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால்தான் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.</p><p>இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 2 ஆண்டுகளுக்குள் புவனேஸ்வரி தற்கொலை செய்து கொண்டதால், வரதட்சணை கொடுமை நடந்துள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக இந்த வழக்கு கிண்டி ஆர்.டி.ஓ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கூட்டணி கட்சிகள் கடும் நெருக்கடி: ஆட்சியில் தொடர இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் த.வெ.க. </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/severe-pressure-on-alliance-parties-tvk-faces-the-compulsion-to-win-the-by-election-to-remain-in-power</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/severe-pressure-on-alliance-parties-tvk-faces-the-compulsion-to-win-the-by-election-to-remain-in-power#comments</comments><guid isPermaLink="false">5777d09f-d824-432d-9f85-2d8cbfbc49dd</guid><pubDate>Mon, 31 Aug 2026 02:47:10 +0000</pubDate><atom:updated>2026-08-31T02:47:10.663Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,Vijay,Congress,த.வெ.க,இடைத்தேர்தல்,கூட்டணி கட்சிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/i0qk5i3p/P-Shanmugam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/i0qk5i3p/P-Shanmugam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2>கூட்டணி ஆட்சி நடத்தும் த.வெ.க.</h2><p>தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 12-வது முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். ஆனால், த.வெ.க.வுக்கு ஆட்சி அமைக்க தேவையான 118 தொகுதிகளில் வெற்றி கிடைக்கவில்லை. த.வெ.க.வுக்கு 107 இடங்களிலேயே வெற்றி கிடைத்த நிலையில், காங்கிரஸ் (5), இந்திய <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கம்யூனிஸ்டு</a> கட்சி (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி (2), விடுதலை சிறுத்தைகள் கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. த.வெ.க. அமைச்சரவையில் காங்கிரஸ் (2), விடுதலை சிறுத்தைகள் கட்சி (1), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (1) ஆகியவை இடம்பெற்றுள்ளன. </p><h2>கூட்டணி கட்சிகளால் குடைச்சல் </h2><p>தமிழகத்தில் த.வெ.க. அரசு அமைந்து 3 மாதங்களே கடந்துள்ள நிலையில், கூட்டணியில் உள்ள கட்சிகள் பல்வேறு வகையில் குடைச்சல் கொடுக்க தொடங்கியிருக்கின்றன. அதாவது, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, தலைமைச் செயலாளருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியது. விடுதலை சிறுத்தைகள் கட்சியோ, அரசின் கொள்கை முடிவுகளில், தங்களுடைய கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க நெருக்கடி கொடுத்து வருகிறது. </p><p>தற்போது, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">காங்கிரஸ்</a> கட்சியும், ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால் அமைச்சரவையில் இருந்து வெளியேறுவோம் என்றும் மிரட்டி வருகிறது. கூட்டணி கட்சிகள் இவ்வாறு நெருக்கடி கொடுத்து வருவது த.வெ.க. அரசுக்கு புதிய தலைவலியை  ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, எதிர்க்கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள், த.வெ.க. அரசு எப்போது கவிழும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு த.வெ.க. அரசை கவலையடைய செய்துள்ளது. </p> <h2>இடைத்தேர்தலை சந்திக்க தயாராகும் த.வெ.க. </h2><p>ஆட்சியில்  தொடர வேண்டும் என்றால், தமிழகத்தில் காலியாக உள்ள 7 தொகுதிகள் இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் த.வெ.க. அரசுக்கு ஏற்பட்டுள்ளது. கடைசியாக கரூர் தொகுதி காலியானதாக கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி அறிவிக்கப்பட்டது. அதிலிருந்து 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்ற விதிமுறை இருந்தாலும், திருச்சி கிழக்கு, பெருந்துறை, விராலிமலை, கரூர், அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் மீது தேர்தல் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால், குறிப்பிட்ட காலத்திற்குள் இடைத்தேர்தல் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. </p><p>மேற்கண்ட 5 தொகுதிகளில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">இடைத்தேர்தல்</a> நடத்துவதற்கான தடை செப்டம்பர் 8-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவதில் சிக்கல் நீடிக்கிறது. என்றாலும், இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ள த.வெ.க.,விரைவாக தேர்தலை சந்திக்கவும் தயாராகி வருகிறது. </p> <h2>முதல்-அமைச்சர் விஜய் பதில் மனு தாக்கல் </h2><p>அந்த வகையில், காலியாக உள்ள 7 தொகுதிகளில், 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த நீதிமன்றம் விதித்த தடையை நீக்கக்கோரி முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை ஐகோர்ட்</a>டில் அவசரமாக பதில் மனு தாக்கல் செய்துள்ளார். இடைத்தேர்தல் நடைபெற வேண்டிய 7 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தலிலும் அனைத்து தொகுதிகளிலும் த.வெ.க. வெற்றி பெற்றால் மட்டுமே சட்டசபையில் அக்கட்சியின் பலம் 114 ஆக உயரும். இதுவும் பெரும்பான்மைக்கு (118) போதாது என்றாலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2), அ.ம.மு.க.வில் இருந்து த.வெ.க.வுக்கு வந்த ஒரு எம்.எல்.ஏ.வின் ஆதரவுடன் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள முடியும்.  எனவே, கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பை சமாளிக்க, கட்டாயம் வெற்றி என்ற இலக்குடன் இடைத்தேர்தலை சந்திக்க த.வெ.க. தயாராகிவருகிறது. செப்டம்பர் 8-ந் தேதி அதற்கான விடையும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>பைக்கில் காதலி அமர்ந்திருந்தால் வாலிபருக்கு உற்சாகம் ஏற்படுவது இயல்புதான் - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/its-natural-for-a-youth-to-feel-excited-when-his-girlfriend-sits-on-bike-madurai-high-court-judges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/its-natural-for-a-youth-to-feel-excited-when-his-girlfriend-sits-on-bike-madurai-high-court-judges#comments</comments><guid isPermaLink="false">b96fb925-2ec9-4d35-9f99-a3c16fc0529c</guid><pubDate>Mon, 31 Aug 2026 01:28:26 +0000</pubDate><atom:updated>2026-08-31T01:28:26.649Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Accident,இழப்பீடு,Compensation,மதுரை ஐகோர்ட்டு,பைக் விபத்து,Madurai Highcourt</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/it8m3ox9/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மதுரை ஐகோர்ட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/it8m3ox9/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>பைக்கின் பின் இருக்கையில் காதலி அமர்ந்திருந்தால் வாலிபருக்கு உற்சாகம் ஏற்படுவது இயல்புதான் என்று விபத்து வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.</p><h2>பைக் விபத்து</h2><p>தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் கோபால் (19 வயது). இவர் கடந்த 10.5.2018 அன்று பைக்கில் வீரபாண்டி-வலையபட்டி சாலையில் சென்று கொண்டு இருந்தார். பைக்கின் பின் இருக்கையில் இளம்பெண் ஒருவரும் அமர்ந்திருந்தார். திடீரென எதிரே வந்த வேனும், பைக்கும் மோதின. இதில் படுகாயம் அடைந்த கோபால் சம்பவ இடத்திலேயே இறந்தார். அந்த இளம்பெண்ணுக்கு படுகாயம் ஏற்பட்டது.</p><p>இதையடுத்து கோபாலின் இறப்புக்கு இழப்பீடு கேட்டு அவரது பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த தேனி கோர்ட்டு, அவர்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கும்படி இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக இன்சூரன்ஸ் நிறுவனம் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.</p><h2>இயல்பான உற்சாகம்</h2><p>அந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், சுமதி ஆகியோர் விசாரித்தனர். அப்போது இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல், இந்த விபத்துக்கு பைக்கை ஓட்டி வந்த கோபாலும் ஒரு காரணம். எனவே இழப்பீட்டுத்தொகையில் பாதியை குறைத்து இருக்க வேண்டும் என வாதாடினார்.</p><p>பின்னர் மனுதாரர்களின் வக்கீல் ஆஜராகி, நியாயமான இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு உள்ளது. அதில் தலையிடத் தேவையில்லை என்று வாதாடினார். விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-</p><p>இந்த சம்பவம் அதிகாலை நேரத்தில் நடந்துள்ளது. பைக்கை ஓட்டிய 19 வயது இளைஞரின் பின் இருக்கையில் அவரது காதலி அமர்ந்திருந்தார். காதலி பின் இருக்கையில் அமர்ந்திருக்கும்போது, எந்தவொரு டிரைவருக்கும் இயல்பாகவே உற்சாகம் ஏற்படும். வரைபடத்தை பார்த்தாலே, இது நேருக்குநேர் மோதிய விபத்து என்பது தெளிவாகிறது. வேன் சரியான பக்கத்தில்தான் வந்து கொண்டிருந்தது.</p><h2>விபத்துக்கு காரணம்</h2><p>பைக்தான் தவறான பக்கத்தில் (சாலையின் வலது புறத்தில்) சென்றுள்ளது. இது போக்குவரத்து விதிமீறலாகும். இறந்தவரின் கவனக்குறைவும் இந்த விபத்துக்கு காரணம் என நாங்கள் கருதுகிறோம். அவரது பங்கு 25 சதவீதம் என நிர்ணயிக்கிறோம். அதற்கேற்ப இன்சூரன்ஸ் தொகையை குறைக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>2 நாள் விடுமுறைக்கு பிறகு சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது: 4 துறைகள் மீது மானியக் கோரிக்கை விவாதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/assembly-reconvenes-today-after-a-two-day-break-debate-on-demands-for-grants-for-four-departments</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/assembly-reconvenes-today-after-a-two-day-break-debate-on-demands-for-grants-for-four-departments#comments</comments><guid isPermaLink="false">c613ac96-779b-4e8a-b088-a5723efac540</guid><pubDate>Mon, 31 Aug 2026 00:36:29 +0000</pubDate><atom:updated>2026-08-31T00:36:29.525Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,விஜய்,சட்டசபை,மானியக் கோரிக்கை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/m21quz3o/Vijay.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சட்டசபை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/m21quz3o/Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2>32 துறைகளின் மானியக் கோரிக்கை முடிந்தது</h2><p>தமிழக சட்டசபையில் கடந்த 5-ந் தேதி 2026-2027-ம் ஆண்டுக்கான பொது  பட்ஜெட்டும், 6-ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 7, 10,11 ஆகிய தேதிகளில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">பட்ஜெட்</a> மீதான விவாதமும், 12-ந் தேதி நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோரின் பதில் உரையும் இடம் பெற்றது.  இந்த நிலையில், 17-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதுவரை, 32 துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து முடிந்துள்ளது.</p><h2>4 துறைகள் மீது விவாதம் </h2><p>இந்த நிலையில், கடந்த 2 நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில், 2 நாள் விடுமுறைக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு தமிழக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">சட்டசபை </a>மீண்டும் கூடுகிறது. முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. கேள்வி நேரம் முடிந்ததும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது. </p><h2>முதல்-அமைச்சரின் துறை</h2><p>இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் அமைச்சரான முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் க.விக்னேஷ், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத் ஆகியோர் பதில் அளித்து பேசுகிறார்கள். விவாதம் தொடங்குவதற்கு முன்னதாக, தங்களது துறை சார்ந்த அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிட இருக்கின்றனர். </p>]]></content:encoded></item><item><title>அதிக ஆர்வம் கொண்ட அருணா.. ஒரு கட்டத்தில் முடியல...ஆந்திர பெண் கொலையில் வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youths-sensational-confession-in-andhra-pradesh-womans-murder</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youths-sensational-confession-in-andhra-pradesh-womans-murder#comments</comments><guid isPermaLink="false">498c37d1-0f10-4ec0-aa86-e37c5428b07b</guid><pubDate>Sun, 30 Aug 2026 16:19:05 +0000</pubDate><atom:updated>2026-08-30T16:19:05.914Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,கைது,ஆந்திரா,வாலிபர் கைது,உல்லாசம்,arreste,ஆந்திரா பெண்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/de9o1o7v/arrest33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஆந்திர பெண் கொலை]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/de9o1o7v/arrest33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>ஆந்திரமாநிலம், நகரி அருகே உள்ள நின்றை சவரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அருணா (வயது 48). இவரது கணவர் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகன், மகள் பெங்களூரில் உள்ள ஐ.டி.நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள்.</p><h2>கொடூர கொலை</h2><p>அருணா கடந்த 2 நாட்களுக்கு முன்பு தாமரைப் பாக்கம் அடுத்த வதட்டூர் கிராமத்தில் நடைபெற்ற உறவினர் திருமணத்தில் பங்கேற்க வந்து இருந்தார்.</p><p>இந்த நிலையில் நேற்று முன்தினம் பெரியபாளயைம் அருகே உள்ள தொட்டா ரெட்டி குப்பம் வெள்ளக்குளம், வயல் வெளியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது முகம் ஆசிட் ஊற்றியும், தீயால் எரித்தும் சிதைக்கப்பட்டு இருந்தது.</p><p>இதுகுறித்து ஊத்துக் கோட்டைபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கள்ளக் காதல் விவகாரத்தில் அருணா கொலை செய்யப் பட்டு இருப்பது தெரிந்தது.</p><p>இது தொடர்பாக தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலை அருகே உள்ள வதட்டூர் கிராமத்தைச்சேர்ந்த கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளியான பாரதி ராஜா (44) என்பவரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>செக்ஸ் தொல்லை</h2><p>அவரிடம் நடத்திய விசாரணையில் அருணா அடிக்கடி செக்ஸ் தொல்லை கொடுத்து அழைத்ததால் தீர்த்து கட்டியதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். அவர் கூறியதாவது:-</p><p>அருணா வதட்டூரில் உள்ள தனது தாய்வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற போது எனக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது. <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%20">இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தோம்.</a></p><h2>அதிக ஆர்வம்</h2><p>அருணா இயற்கைக்கு மாறாக உல்லாசமாக இருக்க கூறுவார். இது எனக்கு பிடிக்கவில்லை. செக்சில் அதிக ஆர்வம் கொண்ட அருணா அடிக்கடி என்னை தனிமையில் இருக்க அழைப்பார்.</p><p>நான் சில நேரங்களில் மறுப்பு தெரிவித்தால் எனக்கு குழந்தைகள் இல்லையே..வரவேண்டியது தானே என்று கூறுவார்.</p><p>உல்லாசமாக இருக்கும் போது ரகசியமாக அருணா அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்தும் ரசிப்பார்.</p><p>இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த போது என்னை தனிமையில் சந்திக்க உடனடியாக புறப்பட்டு வருமாறு செல்போனில் அழைத்தார். நான் மறுப்பு தெரிவித்தபோது அவர் கடுமையாக பேசினார். </p><h2>தீர்த்துக்கட்ட முடிவு</h2><p>அருணாவின் செக்ஸ் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்ததால் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தேன்.</p><p>ஆசிட் ஊற்றினேன். இதையடுத்து அருணா விடம் உல்லாசமாக இருக்க லாம் என்று ஆசை வார்த்தை கூறி அவரை மோட்டார் சைக்கிளில் தொட்டாரெட்டி குப்பம் அழைத்து வந்தேன். பின்னர் அவரை கையால் அடித்தும், கழுத்தை நெரித்தும் கொன்றேன்.</p><p>அருணா இறந்ததும் என்ன செய்வது என்று தெரியாமல் சிக்காமல் இருப்பதற்காக அவர முகத் தில் ஆசிட் ஊற்றினேன். மேலும் கொண்டு வந்து இருந்த மோட்டார் சைக்கிள் ஆயிலை முகத்தில் ஊற்றி தீவைத்தேன்.</p><p>ஆனால் தீப்பற்றி எரியாததால் பயந்து போய் அங்கிருந்து தப்பி சென்று விட்டோன். ஆனால் போலீ சார் கைது செய்துவிட்டனர். இவ்வாறு பாரதிராஜா கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.</p><h2>கொலையாளி சிக்கியது எப்படி?</h2><p>அருணா கொலை செய் யப்பட்ட இடத்தில் அவரது செல்போன் கிடந்தது.அதில் கடைசியாக பேசி நபர்களின் விபரங்களை வைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது பாரதிராஜா விடம் விசாரித்தபோதுதான் அவர்களது கள்ளக்காதல் வெளிச்சத்துக்கு வந்தது. போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையின்போது அவர் அருணாவை கொலை செய்ததை கொண்டார். ஒப்புக்கைதான பாரதிராஜாவை போலீசார் ஊத்துக் கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>நேபாள பெருவெள்ளம்: நடந்தது என்ன?  டிராவல்ஸ் உரிமையாளர் கூறும் அதிர்ச்சி தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nepal-floods-what-happened-shocking-information-from-travel-owner</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nepal-floods-what-happened-shocking-information-from-travel-owner#comments</comments><guid isPermaLink="false">7f6edab1-ba0d-4fa6-a193-c39c691c43cd</guid><pubDate>Sun, 30 Aug 2026 15:35:06 +0000</pubDate><atom:updated>2026-08-30T15:35:06.870Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,Flood,flood affected,nepal flood,நேபாள வெள்ளம்,டிரவால்ஸ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/cq6mwqlo/travless33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டிராவல்ஸ் உரிமையாளர் கூறும் அதிர்ச்சி தகவல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/cq6mwqlo/travless33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>குடியுரிமை மையத்தின் வெள்ள பாதிப்பு சிசிடிவி காட்சியில் நீல நிற உடையில் தப்பி ஓடும் நபர்கள் எங்கள் குழுவினர் தான் என டிராவல்ஸ் உரிமையாளர் கூறியுள்ளார்.</p><p>சென்னை குரோம்பேட்டை ராதா நகர் ரங்கநாதன் தெருவில் இயங்கி வரும் மகாதேவ் கைலாஷ் யாத்ரா என்ற தனியார் ஆன்மிக சுற்றுலா நிறுவனம் சார்பில் கடந்த 14ஆம் தேதி சென்னை விமான நிலையத்திலிருந்து 49 பேர் நேபாளம் வழியாக சீன எல்லையில் உள்ள கைலாஷ் யாத்திரைக்குப்புறப்பட்டுச் சென்றனர்.</p><p>சுற்றுலா நிறுவன உரிமையாளரின் மகன் சத்ய நாராயணன் தலைமையில் சென்ற இந்த குழுவில் சிங்கப்பெருமாள் கோவில் செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ராஜாராம் (28) என்ற வாலிபரும் சென்றுள்ளார். மேலும் குரோம்பேட்டை, பெரம்பூர், ஆழ்வார் பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, மதுரை,</p><p>கோவை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் இந்த பயணத்தில் இடம்பெற்றுள்ளனர். </p><p>சுமார் 14 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்றுமுன்தினம் சென்னை திரும்ப வேண்டிய நிலையில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">நேபாள சீன எல்லை</a>ப் பகுதியில் உள்ள குடியேற்ற அலுவலகத்தில் நடைமுறைகளை மேற்கொண்டிருந்த போது எதிர் பாராதவிதமாக சக்திவாய்ந்த காட்டாற்று வெள்ளத்தால் அந்த குடியேற்ற அலுவலக கட்டிடமே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. </p><p>இந்தநிலையில்,  நேபாளத்திற்கு சென்று வந்த சென்னை குரோம்பேட்டை டிராவல்ஸ் உரிமையாளர் மறவேள் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>குடியுரிமை மையத்தின் வெள்ள பாதிப்பு சிசிடிவி காட்சியில் நீல நிற உடையில் தப்பி ஓடும் நபர்கள் எங்கள் குழுவினர் தான். மலை மேல் ஓடியவர்கள் ஒரு சிலர் தப்பியிருக்கலாம். சீன பகுதிக்குள் ஓடியுள்ளனர். அந்த பகுதி முழுவதும் 6 அடி உயர சேற்றால் மூடப்பட்டுள்ளது. எங்கள் 3 குழுவும் இதில் சிக்கி உள்ளனர்.</p><p>வெள்ள பாதிப்பு குறித்து நேபாள அரசின் தகவல் மட்டுமே கிடைக்கிறது. சீன அரசு மூலம் எந்த தகவலும் கிடைக்கவில்லை. எங்கள் குழுவினர் சீன பகுதிக்குள் சிக்கியுள்ளனர் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>திண்டுக்கல் கோர விபத்தில் 4 சிறுவர்கள் உயிரிழப்பு: ஜோதிமணி எம்.பி. வேதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/4-children-die-in-horrific-dindigul-accident-mp-jothimani-expresses-anguish</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/4-children-die-in-horrific-dindigul-accident-mp-jothimani-expresses-anguish#comments</comments><guid isPermaLink="false">728dbe7e-c38a-4fbb-8956-3d9604462030</guid><pubDate>Sun, 30 Aug 2026 15:34:50 +0000</pubDate><atom:updated>2026-08-30T15:34:50.701Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Dindigul,திண்டுக்கல்,காங்கிரஸ்,Congress,ஜோதிமணி,ஜோதிமணி எம்.பி.,Jothimani,jothimani mp</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/r0nntl6t/jothimani.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/r0nntl6t/jothimani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>​விளையாடித் திரியும் வயதில், எந்தத் தவறும் செய்யாத அந்தப் பிஞ்சுப் பிள்ளைகளின் உயிர் இப்படி அநியாயமாகப் பறிக்கப்பட்டிருப்பதை எவராலும் அவ்வளவு எளிதில் கடந்துபோக முடியாது என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>4 சிறுவர்கள் பலி</h2><p>திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்த புத்தூர் கிராமத்தில், சாலையோரம் அமர்ந்திருந்த 4 சின்னஞ்சிறு பிள்ளைகள் மீது வாகனம் மோதி அவர்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர் என்ற கோரச் செய்தி கேட்டு என் நெஞ்சம் பதைபதைக்கிறது.</p><p>என்ன சொல்லி அந்தப் பெற்றோருக்கு ஆறுதல் கூறுவது என்று தெரியாமல் வார்த்தைகளின்றித் தவிக்கிறேன்.</p><p>​விளையாடித் திரியும் வயதில், எந்தத் தவறும் செய்யாத அந்தப் பிஞ்சுப் பிள்ளைகளின் உயிர் இப்படி அநியாயமாகப் பறிக்கப்பட்டிருப்பதை எவராலும் அவ்வளவு எளிதில் கடந்துபோக முடியாது. தங்கள் உலகமாக நினைத்து வளர்த்த பிள்ளைகளை இழந்து, கதறித் துடிக்கும் அந்தக் குடும்பத்தினரின் கண்ணீருக்கு இந்த உலகத்தில் எந்த ஆறுதலும் ஈடாகாது.</p><p>இந்த ஈடுசெய்ய முடியாத பெருந்துயரத்தில் ஒரு சகோதரியாக அவர்களோடு நான் நிற்கிறேன்.</p><h2>மாபெரும் குற்றம்</h2><p>​இந்தக் கொடூர விபத்தை ஏற்படுத்திவிட்டு, வீதியில் உயிருக்குத் துடித்த குழந்தைகளைக் காப்பாற்ற முனையாமல், ஈவிரக்கமின்றித் தப்பியோடிய அந்த மனிதநேயமற்ற செயல் மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமாகும். வடமதுரை காவல்துறை உடனடியாக விசாரணையை மேற்கொண்டு, அந்த வாகனத்தையும் குற்றவாளியையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.</p><p>​மேலும், படுகாயமடைந்து <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மருத்துவமனையில் </a>உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வரும் நபருக்குத் தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் தாமதமின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.</p><p>அவர் விரைவில் முழுமையாக நலம்பெற்றுத் திரும்ப மனதாரப் பிரார்த்திக்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஊட்டி அருகே குடியிருப்புக்குள் புகுந்த கரடி - மக்கள் அச்சம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/midnight-bear-sighting-in-ooty-village-alarms-residents</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/midnight-bear-sighting-in-ooty-village-alarms-residents#comments</comments><guid isPermaLink="false">1bf8dcb8-695e-41a1-8af7-0f57f18f5fc8</guid><pubDate>Sun, 30 Aug 2026 15:32:35 +0000</pubDate><atom:updated>2026-08-30T15:32:35.101Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஊட்டி,Ooty,bear,குடியிருப்புகள்,மக்கள் அச்சம்,fear,Residential Area,கருப்பு கரடி</media:keywords><media:content height="768" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/tnx6imn4/bearss.jpg" width="1366"><media:title type="html"><![CDATA[  கரடி]]></media:title><media:description type="html"><![CDATA[ ஊட்டி அருகே குடியிருப்புக்குள் புகுந்த கரடி - மக்கள் அச்சம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/tnx6imn4/bearss.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஊட்டி,</p><p>ஊட்டி அருகே குடியிருப்பு பகுதிக்குள் நள்ளிரவில் கரடி ஒன்று ஜாலியாக உலா வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மளமளவென பரவி வைரலாகி வருகிறது.</p><h2>வனவிலங்குகள்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF">நீலகிரி</a> மாவட்டம் ஊட்டி நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சமீபகாலமாக கரடி, காட்டுமாடு, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த விலங்குகள் அடர்ந்த காட்டுப்பகுதியை விட்டு வெளியேறி, உணவு மற்றும் தண்ணீருக்காக குடியிருப்பு பகுதிகளில் தஞ்சம் புகுவது வாடிக்கையாகி விட்டது.</p><h2>பொதுமக்கள் அதிர்ச்சி</h2><p>இந்நிலையில், ஊட்டி அருகே உள்ள கோழிப்பண்ணை கிராமத்திற்குள் நள்ளிரவு நேரத்தில் பிரம்மாண்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF">கரடி</a> ஒன்று ஊடுருவியது. தெருக்களில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில், அந்த கரடி அங்குமிங்கும் உலா வந்துள்ளது. நாய் குரைக்கும் சத்தம் கேட்டு ஜன்னல் வழியே பார்த்த பொதுமக்கள், ஊருக்குள் கரடி நிற்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.</p> <p>குப்பை தொட்டியில் வேட்டை</p><p>வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் வரும் கரடிகள், மீண்டும் காட்டுக்குள் செல்லாமல் ஊரை சுற்றியுள்ள புதர்களிலேயே பதுங்கி கொள்கின்றன. குறிப்பாக, குடியிருப்பு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளை கிளறி, அதில் கொட்டப்படும் உணவு கழிவுகளை சாப்பிட்டு இவை பழகிவிட்டன.</p> <h2>மக்கள் கோரிக்கை</h2><p>தற்போது கோழிப்பண்ணை கிராமத்தில் கரடி உலா வந்த சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன்பு, ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தி வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>வளசரவாக்கத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monsoon-precautionary-works-intensifies-in-valasaravakkam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monsoon-precautionary-works-intensifies-in-valasaravakkam#comments</comments><guid isPermaLink="false">da89e785-073e-422c-817e-612a37b12529</guid><pubDate>Sun, 30 Aug 2026 15:29:20 +0000</pubDate><atom:updated>2026-08-30T15:29:20.554Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>work,வளசரவாக்கம்,Valasaravakkam,பணிகள் தீவிரம்,Monsoon Precautions,பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/fu2glmrd/48.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/fu2glmrd/48.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வளசரவாக்கம் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மண்டல கண்காணிப்பு அலுவலர் முனைவர் ஜெ.விஜயா ராணி,  இன்று (30.08.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.</p><h2>பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>வடகிழக்குப்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88"> பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை</a>யாக, வளசரவாக்கம் மண்டலத்தில், வார்டு 148ல் உள்ள விருகம்பாக்கம் கால்வாயில் தடுப்புச் சுவர் கட்டும் பணி, ஆற்காடு சாலையில் மழைநீர் வடிகால் பணி,போரூர் சந்திப்பில் மழைநீர் வடிகால் பணி, மவுண்ட் பூந்தமல்லி சாலையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பில் பணிகள் நடைபெறும் இடத்தில் மீண்டும் மழைநீர் வடிகால் கட்டுதல், நந்தம்பாக்கம் கால்வாயில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளை மண்டல கண்காணிப்பு அலுவலர் தோட்டக் கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை இயக்குநர் முனைவர் ஜெ.விஜயா ராணி,  பார்வையிட்டு, வடகிழக்குப் பருவ மழைக்கு முன்னதாக இப்பணிகளை முடித்திடவும், மோட்டார் பம்புகள், இயந்திரங்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வுகளின் போது, மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திண்டுக்கல் கோர விபத்தில் 4 குழந்தைகள் பலி; தலா ரூ.3 லட்சம் நிவாரணம் - முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dindukkal-fatal-accident-4-children-dead-cm-vijay-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dindukkal-fatal-accident-4-children-dead-cm-vijay-announcement#comments</comments><guid isPermaLink="false">4354e2c3-0692-4365-838b-e447088a5ea4</guid><pubDate>Sun, 30 Aug 2026 15:20:21 +0000</pubDate><atom:updated>2026-08-30T15:20:21.308Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Dindigul,திண்டுக்கல்,Relief,குழந்தைகள் பலி,நிவாரணம் அறிவிப்பு,கோர விபத்து,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,fatal accident</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/ldp9kbyp/cmvijayone33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/ldp9kbyp/cmvijayone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், கொல்லப்பட்டி-புத்தூர் சாலையில் நிகழ்ந்த வாகன விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்</a> அறிவிப்பு. இது தொடர்பாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;- </p><h2>வருத்தமும், வேதனையுமடைந்தேன்</h2><p>திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், கொல்லப்பட்டி கிராமத்தில் இன்று சாலையின் ஓரத்தில் அமர்ந்திருந்த புத்தூர் கிராமத்தை சேர்ந்த அஞ்சலையம்மாள் (வயது 60) க/பெ. பழனிச்சாமி, அய்யலூர் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் யோகவர்ஷினி (வயது 11) த/பெ. நாகராஜ், அனன்யா (வயது 6) த/பெ. நாகராஜ், தனுஸ்ரீ (வயது 7) த/பெ. ஜெகதீஷ் மற்றும் போஸ்கிரண் (வயது 6) த/பெ. சின்னத்தம்பி ஆகியோர் மகேந்திரா தோஸ்த் வாகனம் எதிர்பாராத விதமாக மோதிய விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். </p><p>இவர்களில் நான்கு குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையுமடைந்தேன்.</p><h2>சிறப்பு சிகிச்சை</h2><p>இவ்விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அஞ்சலையம்மாள் அவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.</p><h2> நிவாரண நிதி</h2><p>இவ்விபத்தில் உயிரிழந்த நான்கு குழந்தைகளின் பெற்றோர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு 1 லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">பொது நிவாரண நிதியிலிருந்து</a> வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>வடமதுரை அருகே 4 குழந்தைகள் பலி: விபத்தை ஏற்படுத்திய பால் வேன் ஓட்டுநர் போலீசில் சரண்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/4-children-killed-near-vadamadurai-milk-van-driver-who-caused-the-accident-surrenders-to-police</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/4-children-killed-near-vadamadurai-milk-van-driver-who-caused-the-accident-surrenders-to-police#comments</comments><guid isPermaLink="false">86a2dced-d9f9-45c8-b08b-e4dcb77ced4a</guid><pubDate>Sun, 30 Aug 2026 15:14:31 +0000</pubDate><atom:updated>2026-08-30T15:14:31.905Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>driver,ஓட்டுநர்,குழந்தைகள் பலி,வடமதுரை,Surrender,சரண்,vadamadurai,children die</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/thnbkqgn/47.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/thnbkqgn/47.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><p>விபத்தை ஏற்படுத்திய பால் வேன் ஓட்டுநர் போலீசில் சரணடைந்துள்ளார்.</p><p>திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகேயுள்ள கொல்லம்பட்டி பிரிவில் சாலையோரத்தில் தனுஸ்ரீ(5), யோக வர்ஷி(11). அனன்யா(6) மற்றும் மோசிகீரன்(6) ஆகியோர் ஆடுமேய்த்துக் கொண்டிருந்தனர். </p><h2>சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு</h2><p>அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வேன் ஒன்று, சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த  சிறுவர்கள் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிறுத்தாமல் சென்றுள்ளது. இதில் 4 குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.</p><h2>போலீசில் சரண்</h2><p>இச்சம்பவம் குறித்து வடமதுரை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய வாகனத்தையும் அதன் ஓட்டுநரையும் தீவிரமாகத் தேடிவந்தனர். இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய பால் வேன் ஓட்டுநர் போலீசில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D">சரணடைந்தார்</a>.</p>]]></content:encoded></item><item><title>ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் ஏற்காவிட்டால், தவெக அமைச்சரவையில் இருந்து விலகுவோம் - காங்கிரஸ் பகிரங்க அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-rahul-does-not-accept-the-pm-candidate-we-will-resign-from-the-tdp-cabinet-congress-makes-a-public-statement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-rahul-does-not-accept-the-pm-candidate-we-will-resign-from-the-tdp-cabinet-congress-makes-a-public-statement#comments</comments><guid isPermaLink="false">ad4045ca-0c76-4928-9825-554b14c0709b</guid><pubDate>Sun, 30 Aug 2026 15:08:53 +0000</pubDate><atom:updated>2026-08-30T15:08:53.529Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,காங்கிரஸ்,RahulGandhi,Congress Alliance,CMVijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/al65rel0/vijayone33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ தவெக அமைச்சரவை]]></media:title><media:description type="html"><![CDATA[ காங்கிரஸ் பகிரங்க அறிவிப்பு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/al65rel0/vijayone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என ஏற்காவிட்டால் தவெக அமைச்சராஇயில் இருந்து விலகுவோம் என   தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.</p><h2>2029 மக்களவை தேர்தல்</h2><p>'வரும் 2029ம் ஆண்டு மக்களவை தேர்தலில், தமிழகம், கேரளம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில், 40 தொகுதிகளில், த.வெ.க., தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும்.</p><p>'தெலுங்கானாவில் கவிதா, ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, உபி.,யில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான அணிகளுக்கு, 50 தொகுதிகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இப்படி மொத்தம், 130 எம்.பி.,க்கள் அணியை உருவாக்கி, அதற்கு விஜய் தலைமை வகிப்பார். காங்கிரஸ் ஆதரவுடன் விஜய் பிரதமராவார் என முதல்-அமைச்சர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் ரத்தன் பண்டிட் கணித்துள்ளார்.</p><h2>விஜய் பிரதமர் </h2><p>அவரது கணிப்பு தகவல்களை, த.வெ.க.,வுக்கு ஆதரவாக செயல்படுகிற, 'வெற்றி டிவி' நிர்வாக இயக்குநர் சிங்காரவேலன் வெளியிட்டுள்ளார். தமிழக அரசியலில் இருந்து, தேசிய அரசியலுக்கு விஜயின் பயணம் விரிவடையுமா என்ற விவாதத்தை, ஜோதிடரின் கணிப்பு உருவாக்கி, காங்கிரசாரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இதனிடையே இன்றைய முதல்-அமைச்சர் விஜய், நாளைய பிரதமர்' என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்கள், துாத்துக்குடி மாவட்ட த.வெ.க.,வினரால் ஒட்டப்பட்டு உள்ளன. அதற்கு பதிலடியாக, 'ராகுல் தான் பிரதமர் வேட்பாளர் என, சமூக வலைதளங்களில் காங்கிரசார் தங்களது எதிர்ப்பு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.</p><h2>அமைச்சரவையில் இருந்தே வெளியேறுவோம்</h2><p>இந்தநிலையில், குமரியில் காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார்,</p><p>"2029  நாடாளுமன்ற தேர்தலில் பாரத பிரதமர் வேட்பாளர் எங்களுடைய தலைவர்<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF"> ராகுல்காந்தி</a> தான். ஒருவேளை தமிழக வெற்றிக்கழகம் அதற்கு உடன்படவில்லை என்றால், தமிழக வெற்றி கழக அமைச்சரவையில் இருக்கும் இரண்டு அமைச்சர்களும் எங்கள் பொறுப்புகளை துறப்போம் என்றார்.</p><p> ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என ஏற்காவிட்டால் தவெக அமைச்சரவையில் இருந்து விலகுவோம் என தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் பேசி உள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>