<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 17 Jul 2026 07:26:36 +0000</lastBuildDate><item><title>பழனி கோவில் நில மோசடி: “மிகப்பெரிய சதி..குற்றவாளியை மறைக்க முயற்சி” - தி.மு.க. குற்றச்சாட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-temple-land-scam-a-massive-conspiracy-an-attempt-to-shield-the-culprit-dmks-allegation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-temple-land-scam-a-massive-conspiracy-an-attempt-to-shield-the-culprit-dmks-allegation#comments</comments><guid isPermaLink="false">30a459d5-011d-4b0f-9c34-eedd7201aaad</guid><pubDate>Fri, 17 Jul 2026 07:21:54 +0000</pubDate><atom:updated>2026-07-17T07:21:54.879Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,திமுக,DMK,பழனி,Palani,நில மோசடி,Land fraud case,கோவில் நிலம்,temple land</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/bctx4thy/vijay.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/bctx4thy/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பூங்கா ரோட்டில் தண்டபாணி சுவாமி மடம் அறக்கட்டளைக்கு சொந்தமான 1 ஏக்கர் 40 சென்ட் நிலம் உள்ளது. ஐகோர்ட்டு உத்தரவுப்படி நிலத்துக்கான தக்காராக பழனி முருகன் கோவில் இணை ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி கோவில் நிர்வாகம் இந்த நிலத்தை நிர்வகித்து வருகிறது.</p><p>ரூ.100 கோடி மதிப்பிலான இந்த நிலம் கடந்த ஆண்டு பழனி முருக பக்தர்களின் வாகன நிறுத்துமிடமாக மாற்றப்பட்டது. இந்நிலையில் தண்டபாணி சுவாமி மட நிலம் கடந்த 6-ந்தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் தனி யார் 2 பேருக்கு ரூ.2 கோடிக்கு கிரையமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. பழனி கோவில் கட்டுப்பாட்டிலுள்ள நிலத்தை முறைகேடாக பதிவு செய்த சம் பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p>இந்த முறைகேடு பதிவு குறித்து பழனி அடிவாரம் போலீசில் கோவில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் பழனி சார்பதிவாளராக இருந்த ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்ற விழுப்புரத்தை சேர்ந்த முருகதாஸ், அதனை வாங்கிய திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பாப்பன்குளத்தை சேர்ந்த வெள்ளத்துரை, பழனி அருகே உள்ள டி.கே.என்.புதூரை சேர்ந்த சேதுபதி என 4 பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.</p><h2>தி.மு.க. குற்றச்சாட்டு</h2><p>இதனிடையே ரூ.100 கோடி நிலம் முறைகேடாக பதிவு செய்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகிய 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.</p><p>இந்நிலையில் பழனி கோவில் நில மோசடி தொடர்பாக மிகப்பெரிய சதி நடந்துள்ளது என்றும் குற்றவாளியை மறைக்க முயற்சி நடப்பதாகவும் <a href="https://www.dailythanthi.com/topic/dmk">தி.மு.க.</a> சட்டப்பிரிவு இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றம் சாட்டி உள்ளார். </p><h2>திட்டமிட்ட சதி</h2><p>இதுதொடர்பாக இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது:-</p><p>பழனி நில மோசடி விவகாரத்தில் அறநிலையத்துறை அமைச்சர் விளக்கம் ஏற்புடையதல்ல. திட்டமிட்ட சதி நடந்துள்ளது. தனிநபர்களை காப்பாற்ற, குற்றவாளிகளை மறைக்கும் வகையில் அமைச்சர் பேசுவதன் நோக்கம் என்ன?</p><p>பழனிக்கு வந்துதான் எல்லோரும் மொட்டை போடுவார்கள். ஆனால், பழனிக்கே மொட்டை போட்டுள்ளது தவெக ஆட்சி. முறைகேடான அந்த நிலப்பதிவைக் கூட நீதிமன்றம்தான் ரத்து செய்தது, தவெக அரசு செய்யவில்லை.</p><p>சமூக வலைதளத்தில் பேசியவர்களை இரவோடு இரவாக கைது செய்த போலீசார், நிலத்தை விற்றவர்களை, வாங்கியவர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை? </p> <h2>முதல்-அமைச்சர் விஜய்</h2><p>பழனி கோயில் நில விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற அறநிலையத் துறை அமைச்சர் முயற்சிக்கிறார். இதில் பினாமி பரிவர்த்தனை நடந்துள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.பழனிக்கு அருகே உள்ள சார்பதிவாளரை அழைக்காமல் 67 கி.மீ. தொலைவில் உள்ள சார்பதிவாளரை வரவைத்து முறைகேடு செய்துள்ளனர்</p><p>இந்த விவகாரம் முதல்-அமைச்சர் விஜய்க்கே தெரிந்திருக்கிறது. ஏன் முதல்-அமைச்சர் வாய் திறக்கவில்லை?</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p> ]]></content:encoded></item><item><title>கோவையில் ரூ.70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-sub-inspector-arrested-for-rs-70k-bribe-in-coimbatore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-sub-inspector-arrested-for-rs-70k-bribe-in-coimbatore#comments</comments><guid isPermaLink="false">9e72d0e5-3b33-41b5-a948-69fcb5e067d5</guid><pubDate>Fri, 17 Jul 2026 07:16:22 +0000</pubDate><atom:updated>2026-07-17T07:16:22.994Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கைது,arrest,லஞ்சம்,Bribery,கோயம்புத்தூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/tnlculbl/Untitled-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/tnlculbl/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p>கோவை காட்டூர் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் பூபதி. இவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த ஒருவரிடம் ரூ.70 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். புகார் அளிக்க வந்தவர் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் கொடுத்தார்.</p><p>அந்த தகவலின் பேரில் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், ரசாயன பவுடர் தடவிய ரூ.70 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூபதியிடம் கொடுக்குமாறு கூறியுள்ளனர்.</p><p>அதன்பேரில், உக்கடம் பேருந்து நிலையம் அருகே வரவழைக்கப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூபதியிடம் புகார்தாரர் ரூ.70 ஆயிரம் வழங்கியபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>பழனிக்கே மொட்டை போட்ட ஆட்சி விஜய் ஆட்சி: திமுக விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-vijay-regime-that-shaved-palaniks-head-dmk-criticism</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-vijay-regime-that-shaved-palaniks-head-dmk-criticism#comments</comments><guid isPermaLink="false">0c3da8e7-b7b5-4194-84f4-d15dd3353972</guid><pubDate>Fri, 17 Jul 2026 07:15:45 +0000</pubDate><atom:updated>2026-07-17T07:15:45.601Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,திமுக,DMK,பழனி,நில மோசடி வழக்கு,Palani,Palani temple,land dispute case,பழனி கோவில்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/c7x268xl/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/c7x268xl/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பழனி நில மோசடி தொடர்பாக திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>பழனி கோவில் நில மோசடி விவகாரத்தில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் விளக்கம் ஏற்புடையதல்ல; திட்டமிட்ட சதி நடந்துள்ளது: தனிநபர்களை காப்பாற்ற, குற்றவாளிகளை மறைக்கும் வகையில் அமைச்சர் பேசுவதன் நோக்கம் என்ன?.</p><p>பழனி நில விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற அறநிலையத்துறை அமைச்சர் முயற்சிக்கிறார். இதில் பினாமி பரிவர்த்தனை நடந்துள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பழனிக்கு அருகே உள்ள சார் பதிவாளரை அழைக்காமல் 67 கி.மீ. தொலைவில் உள்ள சார் பதிவாளரை வரவைத்து முறைகேடு செய்துள்ளனர். கொடைக்கானல் சார் பதிவாளர் ஏன்?. ஒரே ஒரு நாள் டூட்டிக்கு வந்த பதிவாளர் அவசர அவசரமாக ரூ.100 கோடி நிலத்தை பதிவு செய்தது ஏன்?. </p><p>பழனி மடத்தின் நிலத்தை பத்திரப்பதிவு செய்ய முடியாது என சார்பதிவாளர் பாலகிருஷ்ணன் விடுப்பில் சென்றுவிடுகிறார். பழனிக்கு அருகே உள்ள சத்திரபட்டி, கீரனூர் சார் பதிவாளர்களை ஏன் பழனியில் டூட்டி போடவில்லை. பழனி நிலத்தை முறைகேடாக பதிவு செய்த பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் நிலப்பத்திரப்பதிவை கவனிப்பவர் அல்ல. பழனி நில முறைகேடு தொடர்பாக அமைச்சர்கள் ரமேஷ், லோகேஷ் கூறிய கருத்துகளுக்கு மாறாக நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் ஒரு கருத்து தெரிவித்துள்ளார்.</p><p>பழனி நில மோசடி விவகாரத்தில் கிரயம் செய்திருக்கக்கூடிய 2 பேர் யாரென்று போலீஸ் தரப்பில் வெளிக்காட்டவில்லை. எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, குற்றம்சாட்டப்பட்ட 2 பேரும் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சொத்து வாங்கக்கூடிய அளவிற்குக் கூட பொருளாதார ரீதியாக பலம் வாய்ந்தவர்கள் அல்ல என்பது தெரியவந்துள்ளது. அப்படி இருக்கும்போது எப்படி ரூ.2 கோடியில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும்?.</p><p>பழனி கோவில் நில மோசடி விவகாரத்தில் தொடர்புடைய நிலமும், கோவில்களும், கடந்த திராவிட மாடல் ஆட்சியில் பாதுகாக்கப்பட்டன. பழனிக்கு வந்துதான் எல்லோரும் மொட்டை போட்டு பார்த்திருப்போம்; ஆனால் விஜய் ஆட்சி பழனிக்கே மொட்டை போட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்கள் முகத்தில் விபூதி அடித்துள்ளது தவெக. முறைகேடான அந்த நிலப்பதிவைக் கூட நீதிமன்றம்தான் ரத்து செய்தது, தவெக அரசு செய்யவில்லை.</p><p>சமூக வலைதளங்களில் இந்த அரசையும், அரசு செய்யக்கூடிய குற்றங்களையும், முதல்-அமைச்சரையும் விமர்சித்தால், இரவோடு இரவாக கைது செய்கிறது போலீஸ். ஆனால் பழனி கோயில் நில மோசடி விவகாரத்தில் தொடர்புடைய துணை சார்பதிவாளரை இன்னும் ஏன் தவெக போலீஸ் கைது செய்யவில்லை?. நிலத்தை விற்றவர்களை, வாங்கியவர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை?. இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>நீட் ஒழிப்புக்கான டெல்லி போராட்டம் வெல்லட்டும் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழு ஆதரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/may-the-delhi-struggle-for-the-abolition-of-neet-win-tamil-nadu-vazhuvrimai-party-fully-supports</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/may-the-delhi-struggle-for-the-abolition-of-neet-win-tamil-nadu-vazhuvrimai-party-fully-supports#comments</comments><guid isPermaLink="false">24551351-faf4-4403-8c08-effab221ca4a</guid><pubDate>Fri, 17 Jul 2026 07:14:03 +0000</pubDate><atom:updated>2026-07-17T07:14:03.141Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Velmurugan,வேல்முருகன்,NEET,நீட்,தமிழக வாழ்வுரிமைக் கட்சி,டெல்லி போராட்டம்,Delhi struggle</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/w9pg18ga/velmurugan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/w9pg18ga/velmurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் வேல்முருகன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும், நீட் உள்ளிட்ட தேசிய நுழைவுத் தேர்வு முறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கும், அதற்கு ஆதரவாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தனது முழு ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது.</p><h2>அநீதியான தேர்வு முறை</h2><p>நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொடக்கக் காலம் முதலான உறுதியான கொள்கையாகும். நீட் என்பது சமூகநீதிக்கு எதிரானதும், ஏழை, எளிய, கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவைப் பறிக்கும் அநீதியான தேர்வு முறையுமாகும்.</p><p>தேர்வு முறைகேடுகளும், வினாத்தாள் கசிவுகளும்<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D"> நீட் தேர்வின் </a>நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்கியுள்ள நிலையில், ஒன்றிய அரசு நீட்டை முழுமையாக ரத்து செய்து, மாநிலங்களின் கல்வி உரிமையை மதிக்கும் வகையில் மாணவர் சேர்க்கை முறையை உறுதி செய்ய வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ரெஸ்டோ பார் திட்டம் தேவையில்லை: கைவிடாவிட்டால் பாமக போராட்டம் நடத்தும் - அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-need-for-resto-bar-plan-if-not-dropped-pmk-will-protest-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-need-for-resto-bar-plan-if-not-dropped-pmk-will-protest-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">840eb607-fa17-46a6-bc28-7d3f618f4dce</guid><pubDate>Fri, 17 Jul 2026 07:00:17 +0000</pubDate><atom:updated>2026-07-17T07:00:17.510Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,தமிழக அரசு,TN govt,ரெஸ்டோ பார்,resto bar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/98myxqhy/Untitled-10.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/98myxqhy/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைமுறையில் இருப்பதைப் போன்று தமிழ்நாட்டிலும் உணவங்களுடன் குடிப்பகங்களும் இணைக்கப்பட்ட ரெஸ்டோ பார்களை அமைக்க உரிமம் வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாகவும், இது குறித்த அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்படும் என்றும் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. பெரும் கேட்டை விளைவிக்கும் திட்டம் குறித்த இந்த செய்திகள் உண்மையா? என்பதை அரசு விளக்க வேண்டும்.</p><p>தமிழ்நாட்டில் தற்போது 3 நிலைகளில் மது குடிப்பகங்கள் அனுமதிக்கப்படுகின்றன. அரசு மதுக்கடைகளுடன் இணைந்த குடிப்பகங்கள் HL 1 என்ற உரிமத்துடனும், மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரிலான குடிப்பகங்கள் HL2 என்ற உரிமத்துடனும், நட்சத்திர விடுதிகளில் உள்ள குடிப்பகங்கள் HL3 என்ற உரிமத்துடனும் இயங்கி வருகின்றன. இவை அனைத்திலும் கடுமையான விதிமீறல்களும், சட்டவிரோத மது விற்பனையும் நடைபெற்று வருவதால் அவற்றை மூட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியும், நலவாழ்வு ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் கூடுதலாக ரெஸ்டோ பார்களை அனுமதிக்கவும்,  அவற்றுக்காக HL3A என்ற உரிமத்தை வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதும் பிற்போக்குத்தனமான செயல்களாகும்.</p><p>ரெஸ்டோ பார்களை திறப்பதற்காக அரசுத் தரப்பின் வாதங்களாக கூறப்படுபவை ஏற்றுக்கொள்ளவே முடியாதவை ஆகும். அரசு மதுக்கடைகளுடன் இணைந்த குடிப்பகங்கள் சுகாதாரமானவையாக இல்லை;  மனமகிழ் மன்றங்களில் உறுப்பினர்களுக்கு மட்டும்தான் மது வழங்கப்பட வேண்டும் என்ற விதியை மீறி அனைவருக்கும் மது மற்றும் உணவு வகைகள் வழங்கப்படுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது; இவற்றை ஒழுங்குபடுத்துவதற்காகத்தான் ரெஸ்டோ பார்கள் திறக்கப்படவுள்ளதாக அரசு அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த வாதங்கள் அபத்தமானவையாகும்.</p><p>மது மிகவும் கேடானது; மது சாத்தானுக்கு ஒப்பானது. அதன் வணிகம் தடை செய்யப்பட வேண்டுமே தவிர, அதை ஒழுங்குபடுத்தத் தேவையில்லை. அதையும் மீறி படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதுதான் அரசின் கொள்கை முடிவு என்றால் சட்டவிரோதமாக செயல்படும் குடிப்பகங்கள் எந்த வகையை சேர்ந்தவையாக இருந்தாலும் கருணை காட்டாமல் அவற்றை மூட ஆணையிடுவதுதான் சரியான, மக்கள் நலன் காக்கும் நடவடிக்கை ஆகும். அதற்கு மாறாக புதிய வகை குடிப்பகங்களை திறக்க முனைவது மோசமான முன்னுதாரணமாக அமைந்து விடும். இந்த வரலாற்றுத் தவறை த.வெ.க அரசு செய்யக் கூடாது.</p><p>அரசு மதுக்கடைகளுடன் கூடிய குடிப்பகங்கள், மனமகிழ்மன்ற குடிப்பகங்கள் ஆகியவற்றுக்கு எதிரான மனநிலை எப்போதும் மக்களிடம் உண்டு. அங்கு சென்று வந்தால், தங்களை சமூகத்தில் தவறாக நினைப்பார்கள் என்று அஞ்சுவார்கள். அந்த அச்சமே அவர்களை அவற்றின் பக்கம் செல்லாமல் தடுத்து விடும். ஆனால், ரெஸ்டோ பார்கள் உணவகங்களாகவும் கருதப்படும் என்பதால், அவற்றின் மீது அந்த தவறான முத்திரை இருக்காது. அதனால், மாணவர்கள், இளம்பெண்கள் போன்றவர்களும் ரெஸ்டோ பார்களுக்கு தயக்கமின்றி செல்லும் நிலை ஏற்பட்டு விடும். இது மிகவும் ஆபத்தானதும், சமூகக் கேடானதும் ஆகும்.</p><p>அதுமட்டுமின்றி, ரெஸ்டோ பார்களை திறப்பதற்காக கூறப்படும்  காரணங்கள் என்னவாக இருந்தாலும், அதன் முதன்மை நோக்கம் அரசுக்கு கூடுதல் வருவாயை ஈட்டுவதுதான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. வருவாய்க்காக மதுவணிகம் செய்வது மக்கள் நல அரசுக்கு அழகல்ல. கடந்த ஆட்சியில் மது வணிகத்தைப் பெருக்குவதற்காக வணிக வளாகங்களில் தானியங்கி மது வழங்கும் எந்திரங்களை அமைத்தல், 90 மி.லி காகிதக் குடுவையில் (டெட்ரா பேக்) மது வணிகம் செய்தல், விளையாட்டுப் போட்டிகள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள், திருமணம் போன்ற சமூக ஒன்று கூடல்கள் ஆகியவற்றில் மது வினியோகம் செய்தல் உள்ளிட்ட திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அவை அனைத்தையும் சட்டப் போராட்டம் நடத்தியும், அரசியல் அழுத்தங்களின் வாயிலாகவும் பாட்டாளி மக்கள் கட்சி முறியடித்தது. அதன்பின் தங்களின் வருவாயைப் பெருக்கிக் கொள்ளும் வகையில் மனமகிழ் மன்றங்களுக்கு அனுமதி அளித்தது. கடந்த ஆட்சியில் மட்டும் 1200-க்கும் மேற்பட்ட மனமகிழ் மன்றங்கள் திறக்கப்பட்டன.</p><p>ஆட்சியாளர்களின் நோக்கம் மதுவை ஒழிப்பதாகத் தான் இருக்க வேண்டும். மதுவிலக்குத் துறையில் செய்யப்படும் சீர்திருத்தங்களும் அவற்றை நோக்கியதாகவே இருக்க வேண்டும். மாறாக, அதிக வசதிகளுடன் ரெஸ்டொ பார்களை திறப்பது, வெளிமாநிலங்களில் இருந்து புதிய மது வகைகளை வாங்கி வினியோகம் செய்வது தமிழ்நாட்டில் மதுப்புழக்கத்தை அதிகரிக்கவே செய்யும் என்பதை தமிழக அரசு உணர வேண்டும்.</p><p>ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் தந்தை  பெரியார், பெருந்தலைவர் காமராசர், தென்னாட்டு ஜான்சி ராணி கடலூர் அஞ்சலையம்மாள் ஆகியோர்    மதுவை கடுமையாக எதிர்த்தார்கள். தந்தை பெரியார் கள்ளுக்கடைகள் தேவையில்லை என்பதற்காக தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார்; காமராசர் அவரது ஆட்சியில் மதுவிலக்கை தீவிரமாக கடைபிடித்தார். அவர்களின் வழியில் வந்ததாக பெருமிதப்பட்டுக் கொள்ளும் தவெக அரசு ரெஸ்டோ பார் எனும் புதிய வகை மதுக்குடிப்பங்களை அறிமுகம் செய்தால் அது அரசுக்கு தீராத அவப்பெயரை ஏற்படுத்தி விடும்.</p><p>ரெஸ்டோ பார்கள் திறக்கப்பட்டு, அதன் காரணமாக மதுப்புழக்கம் அதிகரித்தால் சட்டம் &amp; ஒழுங்கு மிகவும் கடுமையாக பாதிக்கப்படும்; பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கும்.  முந்தைய திமுக அரசு மக்களால் தூக்கி எறியப்பட்டதற்கு காரணமே மது உள்ளிட்ட போதைப் பொருள்கள் நடமாட்டத்தையும், அதனால் பெருகிய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களையும் கட்டுப்படுத்தத் தவறியதுதான். திமுக அரசு செய்த அதே தவறை த.வெ.க. அரசும் செய்யக் கூடாது.</p><p>சமூகக் கேடுகளையும், புதிய குடிகாரர்களையும் உருவாக்கும் ரெஸ்டொ பார்களை அமைப்பதற்கு உரிமம்  வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். இல்லாவிட்டால், மக்களுக்கு கேடான இந்தத் திட்டத்திற்கு எதிராக சட்ட மற்றும் அரசியல் போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி முன்னெடுக்கும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சேலம் மாநகராட்சியில் ரூ.1.10 கோடியில் புதுப்பொலிவு பெறும் 11 அம்மா உணவகங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/11-amma-unavagam-in-salem-corporation-to-get-a-facelift-at-a-cost-of-rs-110-crore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/11-amma-unavagam-in-salem-corporation-to-get-a-facelift-at-a-cost-of-rs-110-crore#comments</comments><guid isPermaLink="false">c2b99c61-3e74-487d-a00b-18dd54290d31</guid><pubDate>Fri, 17 Jul 2026 06:59:20 +0000</pubDate><atom:updated>2026-07-17T06:59:20.956Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,சேலம்,அம்மா உணவகம்,Amma Restaurants,Amma Unavagam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/gz28aqlu/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/gz28aqlu/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><h2>அம்மா உணவகங்கள்</h2><p>சேலம் மாநகராட்சியில் அஸ்தம்பட்டி, வின்சென்ட், அரசு ஆஸ்பத்திரி, சூரமங்கலம், மணியனூர், சத்திரம், பழைய சூர மங்கலம், அம்மாப்பேட்டை, கருங்கல்பட்டி, ஆற்றோரம் காய்கறி மார்க்கெட், வெங்கடப்பன் சாலை ஆகிய 11 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. </p><p>இந்த ஒவ்வொரு உணவகங்களிலும் தினமும் காலையில் 1,200 இட்லிகள், மதியம் 300 சாம்பார் சாதம், 300 தயிர் சாதம் தயார் செய்யப்பட்டு மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, இட்லி ஒன்று ரூ.1-க்கும், சாம்பார் சாதம் ரூ.5-க்கும், தயிர் சாதம் ரூ.3-க்கும் கொடுக்கப்படுகிறது. 11 அம்மா உணவகங்களில் தினமும் சுமார் 10 ஆயிரம் பேர் வந்து சாப்பிட்டு செல்வதாக அங்கு வேலை செய்து வரும் பெண் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p><h2>ரூ.1.10 கோடியில் சீரமைப்பு</h2><p>இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை புதுப்பித்து மக்களுக்கு சுவையான, தரமான உணவு வகைகளை வழங்க வேண்டும் என முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள 11 அம்மா உணவகங்களின் உள்கட்டமைப்புகளை சீரமைக்க ரூ.1 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>இந்த நிதியை வைத்து அனைத்து அம்மா உணவகங்களிலும் வர்ணம் பூசுதல் (பெயிண்டு அடித்தல்), பழுதடைந்த மின்விசிறிகளை மாற்றி புதிய மின்விசிறிகள் மாட்டுதல், தேவையான அம்மா உணவகங்களில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் வைத்தல், புதிய சமையல் உபகரணங்களை வாங்குதல் உள்ளிட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ள அம்மா உணவகங்கள் தற்போது புதுப்பொலிவு பெறுகிறது.</p><p>குறிப்பாக மணியனூர் பகுதியில் உள்ள அம்மா உணவகத்திற்கு ரூ.20½ லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் அறைகள் கட்டுவதோடு தேவையான சமையல் பாத்திரங்கள் கொள்முதல் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், சூரமங்கலம் உழவர் சந்தை அருகில் அமைந்துள்ள அம்மா உணவகத்திலும் ரூ.20 லட்சத்தில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட உள்ளது.</p><h2>தேவையான பொருட்கள்</h2><p>அதேசமயம் அம்மா உணவகங்களுக்கு வழங்கப்படும் பருப்பு, அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை குறிப்பிட்ட அளவு மட்டும் வழங்குவதாகவும், இதனால் உணவு தரமான முறையில் தயாரித்து வழங்க முடியாத சிரமம் உள்ளதாகவும் அம்மா உணவகத்தில் வேலை செய்து வரும் பெண்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.</p><p>ஏழை, எளிய மக்களின் பசியை போக்கும் அம்மா உணவகங்களுக்கு தேவையான அளவு பொருட்கள் வழங்குவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று அம்மா உணவகங்களுக்கு சாப்பிட வந்துசெல்லும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சிறுமியை ஆணவக்கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை: தஞ்சை மகிளா கோர்ட்டு தீர்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/life-imprisonment-for-father-who-murdered-girl-thanjavur-mahila-court-verdict</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/life-imprisonment-for-father-who-murdered-girl-thanjavur-mahila-court-verdict#comments</comments><guid isPermaLink="false">19a575f5-a61f-48c3-aaa6-6c21c910a776</guid><pubDate>Fri, 17 Jul 2026 06:50:22 +0000</pubDate><atom:updated>2026-07-17T06:50:22.574Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thanjavur,தஞ்சாவூர்,life imprisonment,ஆயுள் தண்டனை,சிறுமி,girl,Father,தந்தை,ஆணவக்கொலை,Manslaughter,மகிளா நீதிமன்றம் தீர்ப்பு,women&apos;s court verdict</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/ixlws4vb/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறுமியின் தந்தைக்கு ஆயுள் தண்டனை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/ixlws4vb/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர், </p><p>மாற்று சமூகத்தை சேர்ந்த வாலிபரை காதலித்ததால் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சிறுமியை ஆணவக்கொலை செய்த தந்தைக்கு ஆயுள் சிறை தண்டனை</a> விதித்து தஞ்சை மகிளா கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. </p><h2>17 வயது சிறுமி காதல்</h2><p>தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா அம்மாப்பேட்டை அருகே உள்ள நெம்மேலி குடியானத்தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 60). இவருடைய மகள் சோபி(17). இவர் மாற்று சமூகத்தை சேர்ந்த சதீஷ் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதலுக்கு சோபியின் தந்தை தியாகராஜன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும் சோபி தனது முடிவை மாற்ற மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தியாகராஜன், கடந்த 26-1-2016 அன்று அம்மாப்பேட்டை அருகே உள்ள சர்க்கரைப்பாளையம் வெண்ணாற்று பகுதியில் சோபியின் கை, கால்களை கட்டி, கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார். </p><h2>ஆணவக்கொலை</h2><p>இதுகுறித்து அம்மாப்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் காசிநாதன் அளித்த புகாரின் பேரில் அம்மாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் ஆணவக்கொலை என வழக்குப்பதிவு செய்து தியாகராஜனை கைது செய்தனர். இந்த வழக்கு தஞ்சை மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. கடந்த 12-6-2017 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. </p><h2>ஆயுள் தண்டனை</h2><p>வழக்கை விசாரித்த நீதிபதி தீபா, குற்றம் சாட்டப்பட்ட தியாகராஜனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 1½ ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட அரசு வக்கீல் சுகன்யா, போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியவன் மற்றும் கோர்ட்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி ஆகியோரை மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம் பாராட்டினார். </p>]]></content:encoded></item><item><title>தென்காசி அருகே அகழாய்வில் தொல்பொருட்கள் கண்டெடுப்பு - அமைச்சர் ராஜ்மோகன் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/archaeological-artifacts-unearthed-during-excavation-near-tenkasi-minister-rajmohan-shares-details</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/archaeological-artifacts-unearthed-during-excavation-near-tenkasi-minister-rajmohan-shares-details#comments</comments><guid isPermaLink="false">86f488e8-73f4-40aa-913c-9535083a1c95</guid><pubDate>Fri, 17 Jul 2026 06:43:04 +0000</pubDate><atom:updated>2026-07-17T06:43:04.123Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,தென்காசி,அகழாய்வு பணிகள்,தொல்பொருட்கள் கண்டுபிடிப்பு,Archaeological Excavation,Minister Rajmohan,அமைச்சர் ராஜ்மோகன்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/ffflrvhw/mini.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/ffflrvhw/mini.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/topic/ராஜ்மோகன்">ராஜ்மோகன்</a> தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>தென்காசி மாவட்டம், கரிவலம்வந்தநல்லூர் அருகேயுள்ள மலையடிப்பட்டியில் அமைந்துள்ள தொல்லியல் தளத்தில் அகழாய்வு கடந்த மூன்று மாதங்களாக  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. </p><h2>தங்கத்திலான மணி</h2><p>இந்த அகழாய்வில் நூற்றுக்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் நுண்கற்கால கற்கருவிகள், சங்கு வளையல்கள், சுடுமண்ணாலான தக்களிகள், வட்டச்சில்லுகள், சுடுமண் மணிகள், சூதுபவள மணிகள், ஆடி மணிகள், தங்கத்திலான மணி, செவ்வக பகடைக்காய், இரும்பு பொருட்கள் மற்றும் செப்பு நாணயங்கள் ஆகியவை கிடைக்கப்பெற்றுள்ளன. </p><h2>இரும்புக் கருவிகள்</h2><p>இவை தவிர சங்க கால சதுர வடிவிலான செங்கல் கட்டுமானம், முழுமையான பானைகள், மூடியுடன் கூடிய கருப்பு வண்ணம் தீட்டப்பட்ட பானைகள், துளையிடப்பட்ட கிண்ணங்கள் போன்றவைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. </p><p>சங்க காலத்தில் இரும்புக் கருவிகள், ஆடி மணிகள், சங்கு வளையல்கள் மற்றும் நெசவு தொழிற்கூடங்கள் சிறப்புற செயல்பட்டதற்கான கட்டமைப்புகள் கிடைக்கப் பெற்றுள்ளன‌. </p><p>தொடர் தொல்லியல் பணிகளும், அறிவியல் பூர்வமான ஆய்வு முடிவுகளும் தமிழர்களின் தொன்மையை‌ மேலும் உலகிற்கு பறைசாற்றும் என நம்புகிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தென்காசி மாவட்டம், கரிவலம்வந்தநல்லூர் அருகேயுள்ள மலையடிப்பட்டியில் அமைந்துள்ள தொல்லியல் தளத்தில் அகழாய்வு கடந்த மூன்று மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. <br><br>இந்த அகழாய்வில் நூற்றுக்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் நுண்கற்கால கற்கருவிகள், சங்கு… <a href="https://t.co/I1c8WXAH9D">pic.twitter.com/I1c8WXAH9D</a></p>&mdash; Rajmohan (@imrajmohan) <a href="https://x.com/imrajmohan/status/2077984649926574142?ref_src=twsrc%5Etfw">July 17, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>மைசூரு - கண்ணூர் இடையே சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக சிறப்பு ரெயில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-mysore-kannur-via-salem-erode-tiruppur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-mysore-kannur-via-salem-erode-tiruppur#comments</comments><guid isPermaLink="false">68bdb0e9-9d20-4d8b-bbdb-a7ebdc59cce2</guid><pubDate>Fri, 17 Jul 2026 06:29:11 +0000</pubDate><atom:updated>2026-07-17T06:29:11.457Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Tiruppur,திருப்பூர்,சிறப்பு ரெயில்,mysore,மைசூரு,Special train,Salem,Erode,ஈரோடு,சேலம்,Kannur,கண்ணூர்,தெற்கு ரெயில்வே தகவல்,Southern Railway Information</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/c2que1ac/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.gif" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு ரெயில் இயக்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/c2que1ac/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மைசூரு - கேரள மாநிலம் கண்ணூர் இடையே சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சிறப்பு ரெயில் </a>இயக்கப்படுகிறது. </p><p>இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:</p><h2>மைசூரு - கண்ணூர் இடையே சிறப்பு ரெயில்</h2><p>மைசூருவில் இருந்து ஆகஸ்டு 25-ந்தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06227) மறுநாள் மதியம் 2 மணிக்கு கண்ணூரை சென்றடையும். மறுமார்க்கத்தில், கண்ணூரில் இருந்து ஆகஸ்டு 26-ந்தேதி மாலை 6.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06228) மறுநாள் காலை 8.35 மணிக்கு பெங்களூரு கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்தை சென்றடையும். </p><p>இதேபோல், மைசூருவில் இருந்து ஆகஸ்டு 29-ந்தேதி இரவு 11.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06229) மறுநாள் மாலை 5.50 மணிக்கு கண்ணூர் ரெயில் நிலையத்தை சென்றடையும். மறுமார்க்கத்தில், கண்ணூரில் இருந்து ஆகஸ்டு 30-ந்தேதி இரவு 7.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06230) மறுநாள் காலை 10 மணிக்கு பெங்களூரு கண்டோன்மெண்டை சென்றடையும்.</p><h2>20 பெட்டிகள்</h2><p>20 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில்கள் தமிழகத்தில் சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பாஜக ஆளும் மாநிலங்களில் ஊழலால் தாய்ப்பாலுக்கு மாற்றாக வழங்கும் பாலிலும் நஞ்சு கலப்பு - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/in-bjp-ruled-states-milk-substitutes-are-also-contaminated-due-to-corruption-manickam-thakur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/in-bjp-ruled-states-milk-substitutes-are-also-contaminated-due-to-corruption-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">e7a07e97-2faa-4150-bfc9-b87916939747</guid><pubDate>Fri, 17 Jul 2026 06:26:41 +0000</pubDate><atom:updated>2026-07-17T06:26:41.007Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,Corruption,பாஜக அரசு,மாணிக்கம் தாகூர் எம்.பி.,ஊழல் புகார்,Manickam Thakur MP</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/lv13elv2/manikam-takore.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/lv13elv2/manikam-takore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>பாஜக ஆளும் மகாராஷ்டிராவில், 'டிடர்ஜென்ட், பாமாயில், யூரியா" ஆகியவற்றை பயன்படுத்தி செயற்கையாக பால் தயாரித்துள்ளனர்.  100 லிட்டர் தூய பாலுடன், 10 லிட்டர்  செயற்கை நச்சுப் பால் கலந்து விற்பனை செய்து வந்துள்ளனர். கடந்த 6 மாதங்களில் மட்டும், சுமார் 2 லட்சத்து 30 ஆயிரத்து 470 கிலோ ஆபத்தான செயற்கை பால் பவுடர் விற்பனை செய்யப்பட்டுள்ளது  அதிர்ச்சி அளிக்கிறது.  </p><p>மகாராஷ்டிராவில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்  கட்சிகளை உடைத்து, குறுக்கு வழியில்  பாஜக அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. அதிகாரத்திற்காக எதையும் செய்யும்    பாஜகவின்  குறுக்கு வழியில், பணத்திற்காக எதையும் செய்யும் கொடூர மனம் படைத்தவர்கள், பச்சிளம் குழந்தைகளின் முக்கிய உணவான பாலில், ஆபத்தான ரசாயனங்களை கலந்திருப்பது, குற்றங்களிலேயே கொடிய குற்றம். இதற்கு மகாராஷ்டிராவை ஆளும் பாஜக அரசும், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் தான் பொறுப்பேற்க வேண்டும்.</p><h2>பாலில் கலப்படம்</h2><p>கடந்த ஆண்டு டிசம்பரில், பாஜக ஆளும் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் கலப்பட இருமல் மருந்து உட்கொண்ட குழந்தைகள் பலர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இப்போது, 'பாலில் கலப்படம்” என்ற அதிர்ச்சியான தகவல் வந்திருக்கிறது. பாஜக அரசுகளின் நிர்வாகத் திறமையின்மையும், லஞ்சம், ஊழல் மலிந்து கிடப்பதுமே காரணம். </p><h2>பூஜ்ய குரு</h2><p>ஒரு பக்கம், நாடு நாடாக சுற்றிக் கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, எது நடந்தாலும்,  'விஸ்வகுரு' என்று, தனக்குத்தானே விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார். மறுபக்கம், மோடியால் நியமிக்கப்பட்ட மத்திய மந்திரிகளும், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகளும் நிர்வாகத்தில் 'பூஜ்ய குரு”வாக இருக்கின்றனர். அதனால்தான் பச்சிளம் குழந்தைகளின் உணவான தாய்ப்பாலுக்கு மாற்றாக கொடுக்கப்படும் பாலில் கூட  நஞ்சை கலக்கும் கொடூரம் நடக்கிறது.  </p><h2>கடும் தண்டனை</h2><p>நஞ்சு கலந்த பாலால், இதயம், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் போன்ற உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. எனவே, மகாராஷ்டிராவில் நச்சுப்பால் விற்பனை செய்யப்பட்ட பகுதிகளில், சுதந்திரமான மருத்துவக் குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். இதற்குக் காரணமானவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்.</p><p>மகாராஷ்டிரா பாஜக அரசின் மற்றொரு ஊழலும் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,500 வழங்கும்  திட்டத்தில் நடந்த முறைகேடுகளை, கணக்கு தணிக்கை குழு சி.ஏ.ஜி.  அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. தகுதியான 92 லட்சம் குடும்பத் தலைவிகள் நீக்கப்பட்டுள்ளனர்.</p><h2>மிகப்பெரிய ஊழல்</h2><p>இத்திட்டத்திற்கு, 2024-25ம் நிதியாண்டில் ரூ.29,693.09 கோடி  ஒதுக்கப்பட்டது. ஆனால்,  ரூ.33,237.24 கோடி செலவிட்டுள்ளது. இதனால் ரூ.3,541.16 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. 2025 ஜனவரி முதல் மார்ச் வரை 15,586 கோடி ரூபாய், 'விர்ச்சுவல் தனிநபர்  வைப்பு கணக்கிற்கு” (Virtual Personal Deposit Account -VPDA)   மாற்றப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய  ஊழல். </p><p>நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவருக்கு மாதம் ரூ. 2100 வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்த பாஜக, 92 லட்சம் பயனாளிகளை நீக்கியுள்ளது. இப்படி குடும்பத் தலைவிகளுக்கு வழங்கும் நிதியிலும் ஊழல் செய்துவிட்டு 'உத்தமர்” வேடம் போடும் பாஜகவின் உண்மை முகம் இப்போது அம்பலமாகி இருக்கிறது. இந்த மெகா<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D"> ஊழல்</a> குறித்து சுதந்திரமான, வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் </p><h2>பாஜக அரசுகள்</h2><p>எதிர்க்கட்சி எம்.பி, எம்.எல்.ஏ.க்களின் வீடுகளில் சோதனை நடத்தி அவர்களை பாஜகவில் சேர்க்க உதவும், அமலாக்கத்துறை, சி.பி.ஐ, வருமான வரித்துறை போன்ற அமைப்புகள்,  பால் கலப்படம், பெண்கள் நிலையில் ஊழல் போன்றவற்றை கண்டு பிடிக்காமல் எங்கே சென்றன? மக்களின் உயிரோடு விளையாடுவதை பாஜக அரசுகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். திறமையான நிர்வாகத்தை கொடுக்க முடியாவிட்டால், பதவியை விட்டு விலகி விட வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நடப்பு ஆண்டுக்கான காவலர் ஆட்சேர்ப்புக்கான நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் - டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-recruitment-process-for-the-current-year-should-begin-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-recruitment-process-for-the-current-year-should-begin-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">a6e225b4-bd83-4d5f-aed3-dc4914f7dcb7</guid><pubDate>Fri, 17 Jul 2026 06:25:28 +0000</pubDate><atom:updated>2026-07-17T06:25:28.986Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,Police Exam,காவலர் தேர்வு,காவலர் ஆட்சேர்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/1a07b777/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/1a07b777/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>2026-ம் ஆண்டுக்கான காவலர் ஆட்சேர்ப்பை 2027-ம் ஆண்டுக்கு தள்ளி வைத்திருப்பதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பாணை, காவல்துறை பணியில் இணைய எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>காவல்துறையில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தோடும், லட்சியத்தோடும், பல ஆண்டுகளாக இரவு, பகலாக மனதளவிலும், உடலளவிலும் லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில், தவெக அரசின் இந்த ஆட்சேர்ப்பு தள்ளி வைப்பு நடவடிக்கை கடும் அதிருப்தியை ஏற்படுத்துவதோடு, வயது வரம்பு அடிப்படையில் இறுதி வாய்ப்புள்ள இளைஞர்களின் எதிர்காலத்தையும் வீணாக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. </p><p>காவல்துறையில் ஏற்கனவே ஒரு லட்சத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் நிலவும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான காவலர்கள் பணி ஓய்வுபெறுவதால் காலிப்பணியிடங்கள் மென்மேலும் அதிகரித்துக் கொண்டே இருக்கும் சூழலில், பணியில் உள்ள காவலர்களுக்கு கூடுதல் பணிச்சுமையை ஏற்படுத்துவதோடு, சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தொய்வு ஏற்படுத்தக் கூடும்.</p><p>கொலை, கொள்ளை, போதைப்பொருள் தாராளப்புழக்கம், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை தடுத்து நிறுத்தி, சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க வேண்டிய பொறுப்புமிக்க துறையாக திகழும் காவல்துறையில் நிலவும் காலிப்பணியிடங்களை நிரப்பவும், ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை தள்ளி வைப்பதும் பொதுமக்களின் உயிர்ப் பாதுகாப்போடு விளையாடும் செயலாகும்.</p><p>எனவே, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டிருக்கும் தேர்வு அட்டவணையை உடனடியாக திரும்பப் பெற்று, நடப்பு ஆண்டுக்கான காவலர் ஆட்சேர்ப்புக்கான நடவடிக்கைகளை தொடங்கிட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.100 கோடி கோவில் நிலம் மோசடி வழக்கு: அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-100-crore-temple-land-fraud-case-cb-cid-police-question-hindu-religiouscharitable-department-officials</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-100-crore-temple-land-fraud-case-cb-cid-police-question-hindu-religiouscharitable-department-officials#comments</comments><guid isPermaLink="false">0e7d25bf-3195-4704-9ea4-ad176070a49f</guid><pubDate>Fri, 17 Jul 2026 06:17:52 +0000</pubDate><atom:updated>2026-07-17T06:17:52.628Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Dindigul,பழனி,தமிழகம்,Palani,CBCID,சிபிசிஐடி போலீசார்,Land fraud case,temple land,நிலம் மோசடி,அறநிலையத்துறை அதிகாரிகள்,கோவில் நிலம் ஆக்கிரமிப்பு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/b2xjwjwb/palaal.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/b2xjwjwb/palaal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல், </p><p>ரூ.100 கோடி கோவில் நிலம் மோசடி வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார், விசாரணையை தொடங்கி உள்ளனர்.</p><h2>தண்டபாணி சுவாமி மடம்</h2><p>திண்டுக்கல் மாவட்டம் <a href="https://www.dailythanthi.com/topic/palani">பழனி</a> அடிவாரம் பூங்கா ரோட்டில் தண்டபாணி சுவாமி மடம் அறக்கட்டளைக்கு சொந்தமான 1 ஏக்கர் 40 சென்ட் நிலம் உள்ளது. ஐகோர்ட்டு உத்தரவுப்படி நிலத்துக்கான தக்காராக பழனி முருகன் கோவில் இணை ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி கோவில் நிர்வாகம் இந்த நிலத்தை நிர்வகித்து வருகிறது.</p><h2>முறைகேடாக பதிவு</h2><p>ரூ.100 கோடி மதிப்பிலான இந்த நிலம் கடந்த ஆண்டு <a href="https://www.dailythanthi.com/topic/palani">பழனி</a> முருக பக்தர்களின் வாகன நிறுத்துமிடமாக மாற்றப்பட்டது. இந்நிலையில் தண்டபாணி சுவாமி மட நிலம் கடந்த 6-ந்தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் தனியார் 2 பேருக்கு ரூ.2 கோடிக்கு கிரையமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. பழனி கோவில் கட்டுப்பாட்டிலுள்ள நிலத்தை முறைகேடாக பதிவு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><h2>பதிவாளர் சஸ்பெண்ட்</h2><p>இந்த முறைகேடு பதிவு குறித்து <a href="https://www.dailythanthi.com/topic/palani">பழனி</a> அடிவாரம் போலீசில் கோவில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் பழனி சார்பதிவாளராக இருந்த ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்ற விழுப்புரத்தை சேர்ந்த முருகதாஸ், அதனை வாங்கிய திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பாப்பன்குளத்தை சேர்ந்த வெள்ளத்துரை, பழனி அருகே உள்ள டி.கே.என்.புதூரை சேர்ந்த சேதுபதி என 4 பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.</p><h2>பத்திரப்பதிவு செல்லாது</h2><p>இதனிடையே ரூ.100 கோடி நிலம் முறைகேடாக பதிவு செய்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகிய 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தொடர்ந்து முறைகேடு பதிவை ரத்து செய்ய கோரி பழனி கோவில் இணை ஆணையர் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. </p><p>அதை விசாரித்த ஐகோர்ட்டு தண்டபாணி சுவாமி மடத்தின் சொத்து தனியாருக்கு பத்திரப்பதிவு செய்தது செல்லாது என உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த முறைகேடு தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார்.</p><h2>சி.பி.சி.ஐ.டி. விசாரணை</h2><p>அதையடுத்து சி.பி.சி.ஐ.டி. மதுரை போலீஸ் துணை சூப்பிரண்டு அஜய் தங்கம் தலைமையிலான 15 பேர் கொண்ட போலீஸ் குழுவினர் நேற்று பழனி வந்தனர். பின்பு முறைகேடு பதிவு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். </p><p>முதற்கட்டமாக <a href="https://www.dailythanthi.com/topic/palani">பழனி</a> கோவில் அலுவலகம் சென்று, நிலத்தின் ஆவணங்களை சேகரித்தனர். பின்னர் அடிவாரத்தில் உள்ள தண்டபாணி சுவாமி மடத்து நிலத்தை பார்வையிட்டனர். அப்போது, நிலத்தின் வரைபடத்தை ஆய்வு செய்து அதன் எல்லைகளையும் பார்வையிட்டனர்.</p><h2>ரூ.100 கோடி நிலம் முறைகேடு</h2><p>தொடர்ந்து பழனி கோவில் அலுவலகம் சென்று, நிலம் தொடர்பான ஆவணங்கள், பதிவு செய்த விவரங்கள், கோவில் அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். மேலும் பழனியில் உள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று, தண்டபாணி சுவாமி மடம் தொடர்பாக ஏற்கனவே பதிவான ஆவணங்களை சேகரித்தனர். பழனியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடாக பதிவு செய்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணையை தொடங்கியது பழனியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.</p><h2>அறநிலையத்துறை அதிகாரிகளிடம் விசாரணை</h2><p>இந்நிலையில் திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நிலம் முறைகேடு வழக்கு தொடர்ந்த முருகானந்தம் உள்பட அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சி.பி.சி.ஐ.டி. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஜிதா விசாரணை நடத்தி வருகிறார். மேலும் வருவாய்த்துறை மற்றும் பத்திரபதிவுத்துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>நகராட்சி நிர்வாகத்துறையில் 50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/more-than-50-tenders-cancelled-in-the-municipal-administration-department</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/more-than-50-tenders-cancelled-in-the-municipal-administration-department#comments</comments><guid isPermaLink="false">cf389de9-5ed2-4c74-b2e0-5cd5f5c9f5d2</guid><pubDate>Fri, 17 Jul 2026 06:07:47 +0000</pubDate><atom:updated>2026-07-17T06:07:47.340Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நகராட்சி நிர்வாகம்,municipal administration,டெண்டர்,Municipal Administration Department,Tenders,நகராட்சி நிர்வாகத்துறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/wxt36njj/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/wxt36njj/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முதல்-அமைச்சர் விஜய்யின் வசம் உள்ள நகராட்சி நிர்வாகத்துறையில் 50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கோத்தகிரி நகராட்சியில் 3 டெண்டர்கள், செங்கம் நகராட்சியில் 2 டெண்டர்கள், உடுமலைப்பேட்டை நகராட்சியில் 30 டெண்டர்கள், மணப்பாறை, பெரம்பலூர், திருவள்ளூர், திருவையாறு உள்ளிட்ட நகராட்சிகளிலும் 20-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.</p><p>கழிவுநீர் வடிகால் பராமரிப்பு, குடிநீர் இணைப்பு பணி, புதிய போர்வெல், வாரச்சந்தை கடைகள் உள்ளிட்ட பணிகளுக்கு டெண்டர்கள் வெளியிடப்பட்டன. டெண்டர் கோரி டெண்டர் சமர்ப்பிப்பதற்கு ஒன்று முதல் நான்கு நாட்கள் வரை மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த புகாரை தொடர்ந்து குறுகிய கால டெண்டர்களை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.</p><p>அரசின் இந்த நடவடிக்கை நகராட்சி நிர்வாக வட்டாரங்களிலும் ஒப்பந்ததாரர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-banned-from-entering-akaya-ganga-falls</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-banned-from-entering-akaya-ganga-falls#comments</comments><guid isPermaLink="false">c8bff414-798c-426d-986e-c0016525ae8c</guid><pubDate>Fri, 17 Jul 2026 06:01:44 +0000</pubDate><atom:updated>2026-07-17T06:01:44.871Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சுற்றுலா பயணிகள்,Namakkal,நாமக்கல்,Falls,நீர்வீழ்ச்சி,tourists ban</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/e2a9e50b/kollimalai.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/e2a9e50b/kollimalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல், </p><p>நாமக்கல்லின் முக்கியமான அடையாளம் கொல்லிமலை. 70 கொண்டை ஊசி வளைவுகளின் பயணத்தை அனுபவிக்க, தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா  பயணிகள் இங்கு குவிகின்றனர்.</p><h2>சுற்றுலா பயணிகள் </h2><p>சுற்றுலா பயணிகள் வரும்போது சோளக்காடு அருகே உள்ள நம் அருவி, எட்டுக்கை அம்மன், வரலாற்று புகழ்வாய்ந்த அரப்பளீஸ்வரர் கோவில், தாவரவியல் பூங்கா, படகு இல்லம் போன்ற பல்வேறு இடங்களை சுற்றி பார்க்கின்றனர். அத்துடன் மாசிலா அருவி மற்றும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்வார்கள்.</p><h2>சுற்றுலா பயணிகள் செல்ல தடை</h2><p>போதிய மழைப்பொழிவு இல்லாததால் நீர்வீழ்ச்சி முற்றிலும் வறண்டு காணப்படுகிறது. மிகவும் குறைந்தளவு தண்ணீர் மட்டுமே கொட்டி வருகிறது. இதனால் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%20%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">ஆகாய கங்கை நீர்விழ்ச்சிக்கு</a> சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவிக்கு ஆபாச சைகை.. சிங்கப்பெண் அதிரடிப்படையிடம் சிக்கிய வாலிபர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/obscene-gesture-made-to-college-student-on-a-moving-bus-youth-nabbed-by-the-singappen-lioness-squad</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/obscene-gesture-made-to-college-student-on-a-moving-bus-youth-nabbed-by-the-singappen-lioness-squad#comments</comments><guid isPermaLink="false">67e7b548-115b-4bdf-bf59-fe0864427991</guid><pubDate>Fri, 17 Jul 2026 05:37:28 +0000</pubDate><atom:updated>2026-07-17T05:37:28.844Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,College student,கல்லூரி மாணவி,வாலிபர் கைது,Youth Arrest,Singapen Athiradi Padai,சிங்கப்பெண் அதிரடிப்படை,Singapen Special Task Force</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/gnr1ewi9/dkierer.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/gnr1ewi9/dkierer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/nellai">நெல்லை</a> டவுன் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் நேற்று முன்தினம் மாலையில் சந்திப்பு பகுதியில் இருந்து டவுன் நோக்கி சென்ற பஸ்சில் பயணம் செய்தார். அதே பஸ்சில் பயணம் செய்த வாலிபர் ஒருவர், அந்த மாணவிக்கு ஆபாசமாக சைகை காட்டியதாக கூறப்படுகிறது. </p><h2>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை</h2><p>இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, உடனடியாக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் 5 நிமிடங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.</p><h2>ஆபாச சைகை</h2><p>அவர்கள் பஸ்சை மறித்து நிறுத்தி அதில் ஏறி விசாரணை நடத்தினர். அப்போது, கல்லூரி மாணவிக்கு ஆபாச சைகை காட்டிய வாலிபர் நெல்லை அருகே உள்ள வெள்ளாளன்குளத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் செல்வ மணிகண்டன் (வயது 24) என்பதும், அவர் சந்திப்பு பகுதியில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.</p><h2>கைது</h2><p>உடனே சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் செல்வ மணிகண்டனை பிடித்து நெல்லை சந்திப்பு போலீசில் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து, அவரை அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கள்ளக்குறிச்சி: பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/students-travel-dangerously-hanging-from-stairs</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/students-travel-dangerously-hanging-from-stairs#comments</comments><guid isPermaLink="false">189a219b-1b99-44a2-9124-9c439e220c87</guid><pubDate>Fri, 17 Jul 2026 05:29:43 +0000</pubDate><atom:updated>2026-07-17T05:29:43.871Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கள்ளக்குறிச்சி,பள்ளி மாணவர்கள்,GovtBus,SchoolStudents</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/am04ct5t/bus33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/am04ct5t/bus33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சி</p><p>தமிழகத்தில் ஒரு சில் இடங்களில்  பள்ளி, கல்லுாரி, அலுவலகம் திறப்பு, முடியும் நேரத்தில் போதிய பஸ்கள் இல்லாததால், உயிருக்கு ஆபத்தான முறையில் மாணவர்கள் பஸ் படிகட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வது வாடிக்கையாகியுள்ளது.</p><h2>பள்ளி மாணவர்கள்</h2><p>அந்தவகையில், <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கள்ளக்குறிச்சி</a> மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள்</p><p>பேருந்தில் ஏற்கனவே அதிகளவில் கூட்டம் இருந்ததால், மாணவர்கள் பலர் உள்ளே ஏற முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், களமருதூர் அரசு பள்ளிக்குச் செல்லும் சில மாணவர்கள், பேருந்தின் பின்புற டேஞ்சர் லைட்டைப் பிடித்தபடி தொங்கியவாறு உயிரை பணயம் வைத்து .பஸ் படிக்கட்டில் பயணம் செய்தனர். </p><p>கூடுதல் பேருந்துகள்</p><p>பள்ளி நேரங்களில் கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும், இதுபோன்ற ஆபத்தான பயணங்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சபரிமலையில் தமிழக பக்தர்களுக்கு தங்கும் வசதி: அரசுக்கு ஐயப்ப சேவா சங்கம் கோரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/accommodation-facilities-for-tamil-nadu-devotees-at-sabarimala-ayyappa-seva-sangam-requests-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/accommodation-facilities-for-tamil-nadu-devotees-at-sabarimala-ayyappa-seva-sangam-requests-government#comments</comments><guid isPermaLink="false">8a39289f-2268-48a7-889a-5c3e270a1c6e</guid><pubDate>Fri, 17 Jul 2026 05:29:16 +0000</pubDate><atom:updated>2026-07-17T05:29:16.967Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சபரிமலை கோவில்,Sabarimalai,Sabarimalai Ayyappan Temple,சபரிமலை ஐயப்பன் கோவில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/83isqxyt/Untitled-8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சபரிமலை கோவில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/83isqxyt/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சபரிமலை செல்லும் தமிழக பக்தர்களுக்கு தங்கும் வசதி ஏற்படுத்தி கொடுப்பது தொடர்பாக, தமிழக அரசுக்கு அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் கோரிக்கை விடுத்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-</p><p>சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழகத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் ஆண்டுதோறும் பெருமளவில் யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் இருந்து சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தமிழக அரசு சார்பாக தேவையான உதவிகள் கிடைப்பதில்லை என்ற குறை பக்தர்கள் மனதில் உள்ளது. எனவே, தமிழக அரசு பக்தர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் மூலம் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என அகில பாரத ஐயப்ப சேவா சங்க தமிழ் மாநில அமைப்பு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரின் பார்வைக்கு சில பரிந்துரைகளை வைக்கிறது.</p><p>அகில பாரத ஐயப்ப சங்கம் கடந்த 80 ஆண்டுகளாக சபரிமலை சன்னிதானம், பம்பா, கரிமலை, பெரியானைவட்டம் போன்ற இடங்களில் அன்னதானம் மூலிகை குடிநீர் வழங்குல் போன்ற சேவைகளை செய்து வருகிறது. மேலும், பம்பை முதல் சன்னிதானம் வரை சுகவீனமடைந்த பக்தர்களை உடனடி சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஸ்டெச்சர் சர்வீஸ் மூலம் எடுத்து செல்கின்றனர்.</p><p>மேலும், மண்டல மகர விளக்கு காலங்களில் தமிழ் மாநில அமைப்பின் மூலமாக ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அனைத்து மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் முகாம் அமைத்து அன்னதானம், தங்க இடம், முதல் உதவிகள் சேவை மனப்பான்மையுடன் செய்யப்படுகின்றன. இந்த முகாம்கள் தமிழக அரசின் ஆதரவுடன் செயல்படும்போது மேலும் பல பக்தர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.</p><p>கடந்த 2 ஆண்டுகளாக கேரள அரசின் சில தடைகளால் நிலக்கல், பம்பா, சன்னிதானம் பகுதிகளில் சேவை செய்ய இயலவில்லை. சபரிமலையில் தென் மாநில ஐயப்ப பக்தர்கள் தமிழக உணவு கிடைக்காமல் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, தமிழ்நாட்டில் இருந்து வரும் பக்தர்களுக்கு தனியே தங்கும் வசதியும், அன்னதான வசதியும் செய்து கொடுக்க தமிழக அரசு கேரளா அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி அனுமதி பெற்றுத்தர வேண்டும்.</p><p>அவ்வாறு அனுமதி பெற்றுத்தரும் பட்சத்தில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சபரிமலை சீசன் முழுவதும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கடந்த ஆண்டுகளைப் போலவே சங்கத்தின் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மூலம் சேவை செய்ய தயாராக உள்ளோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பழனி விவகாரம்: நிலத்தை விற்பனை செய்த மற்றும் வாங்கிய 3 பேர் தலைமறைவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-affair-3-people-who-sold-and-bought-land-are-absconding</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-affair-3-people-who-sold-and-bought-land-are-absconding#comments</comments><guid isPermaLink="false">1bfc680f-5690-486a-b31c-c36e7c5c590a</guid><pubDate>Fri, 17 Jul 2026 05:20:38 +0000</pubDate><atom:updated>2026-07-17T05:20:38.702Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பழனி,Palani Murugan Temple,Palani,CBCID Police,சிபிசிஐடி போலீசார்,Palani temple,land dispute case,பழனி கோவில்,நிலம் மோசடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/bzwiikwy/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/bzwiikwy/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>பழனி,</p><h2>தண்டபாணி சுவாமி மடம்</h2><p>திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பூங்கா ரோட்டில் தண்டபாணி சுவாமி மடம் அறக்கட்டளைக்கு சொந்தமான 1 ஏக்கர் 40 சென்ட் நிலம் உள்ளது. ஐகோர்ட்டு உத்தரவுப்படி நிலத்துக்கான தக்காராக பழனி முருகன் கோவில் இணை ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி கோவில் நிர்வாகம் இந்த நிலத்தை நிர்வகித்து வருகிறது.</p><p>ரூ.100 கோடி மதிப்பிலான இந்த நிலம் கடந்த ஆண்டு பழனி முருக பக்தர்களின் வாகன நிறுத்துமிடமாக மாற்றப்பட்டது. இந்நிலையில் தண்டபாணி சுவாமி மட நிலம் கடந்த 6-ந்தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் தனியார் 2 பேருக்கு ரூ.2 கோடிக்கு கிரையமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. பழனி கோவில் கட்டுப்பாட்டிலுள்ள நிலத்தை முறைகேடாக பதிவு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><h2>ரூ.100 கோடி முறைகேடு</h2><p>இந்த முறைகேடு பதிவு குறித்து பழனி அடிவாரம் போலீசில் கோவில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் பழனி சார்பதிவாளராக இருந்த ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்ற விழுப்புரத்தை சேர்ந்த முருகதாஸ், அதனை வாங்கிய திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பாப்பன்குளத்தை சேர்ந்த வெள்ளத்துரை, பழனி அருகே உள்ள டி.கே.என்.புதூரை சேர்ந்த சேதுபதி என 4 பேர் மீதும் 5 பிரி வுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.</p><p>இதனிடையே ரூ.100 கோடி நிலம் முறைகேடாக பதிவு செய்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகிய 2 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். தொடர்ந்து முறைகேடு பதிவை ரத்து செய்யக்கோரி பழனி கோவில் இணை ஆணையர் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த ஐகோர்ட்டு தண்டபாணி சுவாமி மடத்தின் சொத்து தனியாருக்கு பத்திரப்ப திவு செய்தது செல்லாது என உத்தரவிட்டது. இந்த முறைகேடு தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார்.</p><h2>தலைமறைவு</h2><p>அதன்படி, ரூ.100 கோடி கோவில் நிலம் மோசடி வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், நிலத்தை விற்பனை செய்த பழனி கோவில் அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ் பத்திரப்பதிவு நடந்த நாள் முதல் தலைமறைவாகியுள்ளார். அவரை தொடர்ந்து நிலத்தை வாங்கிய உடுமலை வெள்ளத்துரை, சேதுபதி ஆகியோரும் தலைமறைவாகியுள்ளனர். 3 பேரையும் கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.</p><p>இதற்கிடையில், பழனி கோவில் நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் பணியிடை நீக்க நடவடிக்கைக்கு உள்ளான சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு மதுரை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. அவருக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது என கோவில் நிர்வாகம் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தாயுமானவர் திட்டத்தில் 70 சதவீதத்திற்கும் குறைவாக ரேஷன் பொருள் விநியோகித்ததால் &apos;மெமோ&apos;: பணியாளர்கள் அதிர்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/memo-issued-for-distributing-less-than-70-of-ration-supplies-under-the-thayumanavar-scheme-staff-shocked</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/memo-issued-for-distributing-less-than-70-of-ration-supplies-under-the-thayumanavar-scheme-staff-shocked#comments</comments><guid isPermaLink="false">fdac9a65-c9b4-43dc-9b9c-a09484c0787f</guid><pubDate>Fri, 17 Jul 2026 05:11:46 +0000</pubDate><atom:updated>2026-07-17T05:11:46.871Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Ration items,ரேஷன் பொருட்கள்,தாயுமானவர் திட்டம்,Thayumanavar Scheme</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/khpqrh0s/puthi.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/khpqrh0s/puthi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தாயுமானவர் திட்டத்தில் 70 சதவீதத்திற்கும் குறைவாக <a href="https://www.dailythanthi.com/topic/ரேஷன்-பொருள்">ரேஷன் பொருள்</a> விநியோகித்த பணியாளர்களுக்கு விளக்கம் கேட்டு 'மெமோ' அனுப்பப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><h2>தாயுமானவர் திட்டம்</h2><p>தமிழகத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியில் தாயுமானவர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் 70 வயதை கடந்த முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடிச்சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. </p><p>ஒவ்வொரு மாதமும் 2-வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த திட்டத்தின் மூலம் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. இதன் மூலம் 21 லட்சத்து 70 ஆயிரம் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெற்று வருகிறார்கள். </p><h2>நடைமுறை சிக்கல்கள் என்ன?</h2><p>ஆனால், தாயுமானவர் திட்டத்தில் இருக்கும் நடைமுறை சிக்கல்களை சுட்டிக்காட்டி ரேஷன் கடை பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வீடுகளுக்கு தேடிச்சென்று பொருட்கள் வழங்க செல்லும்போது, சிலர் இருப்பதில்லை. போன் மூலம் தொடர்புகொண்டால், மகன் அல்லது மகள் வீட்டில் இருப்பதாகவும், அல்லது ஆஸ்பத்திரிக்கு சென்றிருப்பதாகவும் கூறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. </p><p>மேலும், குறுகிய சாலைப்பகுதியில் இருப்பவர்களை தேடிச்சென்று பொருட்கள் வழங்குவதில் சிக்கல் இருப்பதாகவும் ரேஷன் கடை பணியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்லாது, கைரேகை பதிவு செய்யும் பி.ஓ.எஸ். கருவியும் 'சார்ஜ்' இல்லாமல் 'ஆப்' ஆகிவிடுவதாகவும் கூறுகின்றனர். </p><h2>விளக்கம் கேட்டு நோட்டீஸ் </h2><p>இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டத்தில் உள்ள ஊத்தங்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளர் மற்றும் உதவி செயலாளர் ஆகியோர் விற்பனையாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் திடீர் நடவடிக்கையில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. </p><p>அதாவது, தாயுமானவர் திட்டத்தின் மூலம் 70 சதவீதத்திற்கும் குறைவாக பொருட்கள் விநியோகித்த ரேஷன் கடை பணியாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால், ரேஷன் கடை பணியாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். </p><h2>அமைச்சர் தலையிட வேண்டுகோள் </h2><p>ஏற்கனவே, தாயுமானவர் திட்டத்தை செயல்படுத்தும் போது இருக்கும் நடைமுறைச் சிக்கலால் கடும் அதிருப்தியில் உள்ள ரேஷன் கடை பணியாளர்களுக்கு இவ்வாறு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது மன உளைச்சலை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர். </p><p>எனவே, துறை சார்ந்த அமைச்சர் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்பதே ரேஷன் கடை பணியாளர்களின் கோரிக்கையாக உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள்; கொள்முதலை துரிதப்படுத்த அன்புமணி கோரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/piling-up-bundles-of-paddy-anbumani-requests-to-expedite-procurement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/piling-up-bundles-of-paddy-anbumani-requests-to-expedite-procurement#comments</comments><guid isPermaLink="false">6724b6db-4090-4859-bb10-905563943774</guid><pubDate>Fri, 17 Jul 2026 04:59:13 +0000</pubDate><atom:updated>2026-07-17T04:59:13.276Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி,Anbumani,நெல் மூட்டைகள்,கொள்முதல்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/h6x3k2fy/anbumani.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/h6x3k2fy/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-</p><p>காவிரி பாசன மாவட்டங்களில் கோடைப்பருவ நெல் அறுவடை தீவிரமடைந்திருக்கும் நிலையில், அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை விற்பனை செய்ய முடியாமல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனர். ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு அனுப்பப்படாமல் குவிந்து கிடப்பது தான் இதற்கு காரணம். இதில் அரசின் அலட்சியம் கவலையளிக்கிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர்  உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில்  ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கோடை பருவ நெல் சாகுபடி தொடங்கப்பட்டது. நிலத்தடி நீரைக் கொண்டு சாகுபடி செய்யப்பட்ட நெல் பயிர்களை அறுவடை செய்யும் பணி ஜூன் இறுதியில்  தொடங்கியது. பாதிக்கும் மேற்பட்ட பரப்பில் அறுவடை முடிவடைந்து விட்ட நிலையில், ஆகஸ்ட் மாதம் வரை இந்தப் பணி நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோடை பருவத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்ய காவிரி பாசன மாவட்டங்கள் முழுவதும் 800-க்கும் மேற்பட்ட கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், கடந்த 10 நாள்களுக்கும் மேலாக கொள்முதல் பணி முடங்கிக் கிடக்கிறது.</p><h2>சரியான திட்டமிடல்</h2><p>இதற்கு காரணம் அரசு நிர்வாகத்தின் சரியான திட்டமிடல் இல்லாமை தான் என்று உழவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். வழக்கமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும்  நெல் மூட்டைகளை அங்கிருந்து கிடங்குகளுக்கும்,  கிடங்குகளில் இருந்து அரவை ஆலைகளுக்கும் அனுப்பும் பணி சங்கிலித் தொடர் போல நடைபெற வேண்டும். ஆனால், இந்த சங்கிலித் தொடர் அறுபட்டு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அங்கேயே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. போதிய இடவசதி இல்லாததைக் காரணம் காட்டி கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் உழவர்கள் கொண்டு சென்ற நெல் மூட்டைகளும் குவித்து வைக்கப்பட்டுள்ளன.</p><h2>நெல் கொள்முதல் நிலையங்கள்</h2><p>காவிரி பாசன மாவட்டங்களில் திறக்கப்பட்டுள்ள <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">நெல் கொள்முதல்</a> நிலையங்களில் பெரும்பாலானவை  திறந்த வெளியில் அமைக்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் மூட்டைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. எதிர்பாராத வகையில் தென்மேற்கு பருவமழை காவிரி பாசன மாவட்டங்களில் தீவிரமடைந்தால் உழவர்கள் அரும்பாடுபட்டு விளைவித்த நெல் முழுமையும்  வீணாகி விடும். ஆனால், இது குறித்த கவலை அரசுக்கும், அதிகாரிகளுக்கும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.</p><p>கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கும், அரவை ஆலைகளுக்கும் அனுப்பி வைக்காதது ஏன்? என்பது குறித்து அரசு தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. ஆனால், கடந்த ஆண்டு அளவுக்கு அதிகமாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்குகளில் மலை போல குவிந்து கிடப்பதாகவும், அரவை ஆலைகளும் அளவுக்கு அதிகமான நெல் மூட்டைகளை கையாள முடியாத நிலையில் இருப்பதும் தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் உழவர் அமைப்புகள் கூறுகின்றன.</p><h2>தற்காலிக கிடங்கு</h2><p>ஒருவேளை இது தான் உண்மை என்றால், உழவர்கள் எதிர்கொள்ளும் அனைத்து சிக்கல்களுக்கும் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். கடந்த ஆண்டு குறுவை மற்றும் சம்பா பருவத்தில் அளவுக்கு அதிகமாக கொள்முதல் செய்யப்பட்டதால் கிடங்குகள் நிரம்பி விட்டன என்றால், கோடைப்பருவ கொள்முதல் மூலம் கிடைக்கும் நெல் மூட்டைகளை எவ்வாறு கையாள்வது? அவற்றை எங்கு அடுக்கி வைப்பது என்பதற்கான திட்டங்களை அரசு வகுத்திருக்க வேண்டும். ஆடி மாதம் பிறந்து விட்ட நிலையில், திருமண அரங்குகள் போன்றவற்றையாவது வாடகைக்கு எடுத்து தற்காலிக கிடங்குகளாக மாற்றியிருக்க வேண்டும். ஆனால், அதற்கான எந்த நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளாததால் தான் உழவர்களின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.</p><h2>நெல் மூட்டைகள் வீணானது</h2><p>கடந்த ஆண்டு குறுவைப் பருவத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சரியான தருணத்தில்  கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படாததால் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கிக் கிடந்ததையும்,   கொள்முதல் நடக்காததால் உழவர்களும் தங்களின் நெல்லை கொள்முதல் நிலையங்களுக்கு அருகில் திறந்த வெளிகளில் குவித்து வைக்கப்பட்டிருந்ததையும், அவை அனைத்தும் வடகிழக்கு பருவ மழையில் நனைந்து வீணானதையும் எவரும் மறந்திருக்க முடியாது. அதனால் ஏற்பட்ட இழப்புகளில் இருந்தே காவிரி பாசன மாவட்ட உழவர்கள் இன்னும் மீளாத நிலையில், மீண்டும் அதே போன்ற நிலை ஏற்பட்டு விடக்கூடாது.</p><p>எனவே, கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கும், கிடங்குகளில் உள்ள மூட்டைகளை அரவை ஆலைகளுக்கும் போர்க்கால அடிப்படையில் அரசு அனுப்பி வைக்க வேண்டும். அதன் மூலம் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் தடையின்றி நடப்பதை உறுதி செய்ய வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>1993-ல் ஏப்ரல் 14, 15-ம் தேதிகளில் நடந்தது என்ன..? - ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பரபரப்பு விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-happened-on-april-14-and-15-1993-mdmk-general-secretary-vaiko-gives-a-sensational-explanation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-happened-on-april-14-and-15-1993-mdmk-general-secretary-vaiko-gives-a-sensational-explanation#comments</comments><guid isPermaLink="false">5791484e-c520-4765-9195-685b8bc8c836</guid><pubDate>Fri, 17 Jul 2026 04:49:06 +0000</pubDate><atom:updated>2026-07-17T04:49:06.774Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,Tamilnadu,அதிமுக,திமுக,DMK,தமிழகம்,Vaiko,வைகோ,மதிமுக,அரசியல் களம்,tn politics,MDMK |</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/mhaayh8g/vaiko.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/mhaayh8g/vaiko.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பொதிகைமலை உறுதியாக இருப்பதை போல சரியான முடிவுகளை இன்றைய அரசியலில் செய்துள்ளோம் என்றும், இனி நமக்கு எவ்வித கேடும் யாரும் செய்ய முடியாது என்றும் மறுமலர்ச்சி தி.மு.க.பொதுச் செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B">வைகோ</a> தெரிவித்துள்ளார்.</p><h2>கலைஞர் பொதுக்கூட்டம்</h2><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>1993 ஏப்ரல் 14ம் தேதி, சித்திரை திருநாளுக்கு முதல் நாள் அன்று நாகர்கோவிலில் கலைஞர் பொதுக்கூட்டம். என் பெயரையும் சேர்த்துப் போட்டிருக்கிறார்கள். முதல் நாளுக்கு முதல் நாள் ஆற்க்காடு வீராச்சாமி தொலைபேசியில் அழைத்து, “என்னங்க உங்க படம்தான் கன்னியாகுமரி, நாகர்கோவில் முழுவதும் ஒட்டியிருக்கிறார்களாம்! உங்களைப் புகழ்ந்து அதிகமாக போஸ்டர் ஒட்டியிருக்கிறார்களாமே! அதனால் கலைஞர் கூட்டத்தை ரத்து செய்யச் சொல்லி விட்டார்” என்றார். </p><h2>என் படம் போட்ட போஸ்டர்</h2><p>“எனக்கு தெரியாது அண்ணே. என்னை புகழ்ந்து போஸ்டர் ஒட்டச் சொல்லி நான் தூண்டிவிட்டது இல்லை. ஆட்களை உடனே அனுப்பி அதை நான் கிழித்துப் போடச் சொல்கிறேன்” என்று கூறிவிட்டு, இளைஞர் அணிச் செயலாளராக இருந்த ஷேக் தாவூத் மிகப் பெரிய தைரியசாலி. அவருடன் பத்துப் பேரை இரண்டு வண்டிகளில் அனுப்பி, நாகர்கோவில் சுற்றுவட்டாரத்தில் எங்கெல்லாம் என் போஸ்டர் இருக்கிறதோ, அதைக் கிழித்துப் போட்டு வாருங்கள் என்று கூறினேன்.</p><p>இவர்கள் போய் கிழித்தவுடன், “வைகோ படத்தை நாங்கள் ஒட்டுகிறோம். நீங்கள் ஏண்டா வந்து கிழிக்கிறீர்கள்?” என்று நாகர்கோவில்காரர்கள் சண்டை போட்டிருக்கிறார்கள். அதையும் மீறி கிழித்துப் போட்டுவிட்டார்கள். என் படம் போட்ட போஸ்டர் எதுவும் கிடையாது. கூட்டத்தில் நான் பத்து நிமிடம் பேசினேன். </p><h2>தலைவர் வருத்தம்</h2><p>கூட்டம் முடிந்து கலைஞர் கேரளா அரசுக்கு உரிய விருந்தினர் இல்லத்திற்குச் சென்று விட்டார். நான் தமிழ்நாடு அரசு விடுதிக்குச் சென்றேன். நான் அறைக்குச் சென்ற அரை மணி நேரத்திட்றகுள் அன்புச் சகோதரர் துரைமுருகன் அவர்களும், அண்ணன் ஆற்க்காடு வீராச்சாமி அவர்களும் என் அறைக்கு வந்து, “உனக்கு என்னப்பா பிரச்சினை? தலைவர் வருத்தப்படும்படி ஏன் நடந்துகொள்கிறாய்?” என்று கேட்டார்கள். “நான் தலைவருக்கு விசுவாசமாகத்தானே இருக்கிறேன். கட்சியில் நான் பெரிய பதவிக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேனா? ஒருக்காலும் கிடையாது. தலைவர்தான் என்னை ஒதுக்கி வைக்கப் பார்க்கிறார். நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அவர்  விரும்புகிறாரோ, அவ்விதமே நடந்துகொள்வேன்” என்றேன். “சரி, நீ ஒன்றும் கவலைப்படாதே எல்லாம் சரியாகிப் போய்விடும்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்.</p><h2>தலைவர் நடந்துகொண்ட விதம்</h2><p>மறுநாள் தூத்துக்குடிக்கு தலைவர் அவர்களோடு நாங்கள் பயணமானோம். தூத்துக்குடியில் முன்னிரவில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம். அக்கூட்டத்தில் பேசும்போது, என் மனம் திறந்து பேசினேன். கம்ப ராமாயணத்தில்,</p><p>அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி</p><p>அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி</p><p>அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்</p><p>அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்</p><p>என் நெஞ்சை பிளந்து பார்த்தால் அங்கு ராமபிரான்தான் இருக்கிறார் என்று அனுமன் கூறியதாக கம்பர் வர்ணித்தார்.</p><p>என்னுடைய மார்பை பிளந்து பார்த்தால் அங்கே டாக்டர் கலைஞர்தான் கொலு வீற்றிருக்கிறார் என்று சொன்ன கணத்தில் கூட்டம் ஆரவாரம் செய்தது. கரவொலி பலமாக எழுந்தது.</p><p>நான் என் விசுவாசத்தைச் சுட்டிக் காட்டி இவ்வளவு பேசியபோதிலும், அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்கள் உரையாற்றும்போது, “என் பெயரைச் சொல்லி, தம்பி இங்கே உணர்ச்சிவயப்பட்டுப் பேசினார். மூன்று மாதத்திற்கு முன்பே இதைச் சொல்லியிருக்கலாமே?” என்றார்.</p><p>ஆனால் மூன்று மாதத்திற்கு முன்பு அருப்புக்கோட்டை கூட்டத்தில் இதே விதத்தில்தான் பேசினேன். அதற்குப் பிறகும் என்னிடம் தலைவர் நடந்துகொண்ட விதம் மாறவே இல்லை.</p><h2>பேர் சொல்ல விரும்பாத பெருமைமிகு தம்பி</h2><p>இது நடந்தது 1993, ஏப்ரல் 14, 15 தேதிகளில். ஆனால் 16 வருடம் கழித்து 2009 மார்ச் 29 ஆம் நாள் பிரசுரமான முரசொலி உடன் பிறப்புக்கு எழுதிய கவிதையில், தன் கற்பனை வளத்தை எல்லாம் காட்டி கலைஞர் எழுதியிருந்தார். பராசக்திக்கும், மந்திரகுமாரிக்கும், மனோகராவுக்கும் வசனம் எழுதியவர்தானே! காட்சியை நாடக நிகழ்ச்சி போல காட்டுவதில் அவருக்கு நிகர் எவரும் இல்லை..</p><p>இந்தக் கவிதை கடிதத்தில் நடக்காத ஒன்றை படித்தால் உண்மைதான் என்று நம்புகிற அளவுக்கு ஆற்க்காட்டாரையும், துரைமுருகனையும் குறிப்பிட்டு, அவரது புதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களை பேராசிரியர் பாராட்டியது பற்றி குறிப்பிட்டு,</p><p>“கலைஞரே இப்போது உம்மைத்தானே “போர்வாள்” என்று புகழ்கிறார் - போற்றுகிறார் - மாநிலங்களவை உறுப்பினர் பதவியை உமக்கு வழங்கியது போல வேறு யாருக்கு இப்படித் தொடர்ந்து வழங்கியிருக்கிறார்; கவலைப்படாமல் இருந்திடுக! என்றார்கள்.</p><p>கலைஞர் அவர்கள் தனக்குப் பிறகு உங்களைத்தான் தலைவராக்குவார் இயக்கத்திற்கு” என்று நம்பிக்கை தெரிவித்து அந்த நள்ளிரவிலும் தமது பேர் சொல்ல விரும்பாத பெருமைமிகு தம்பியின் முகத்தில் ஒளி பிறக்கச் செய்திருக்கிறார்கள்.</p><p>புன்னகை தவழ்ந்த அந்தத் தம்பியின் முகத்தில் புதியதோர் சிந்தனை - அது ஒரு கேள்வியாகவும் மாறியது”</p><p>“ஏன் துரைமுருகன்; நான் கலைஞருக்குப் பிறகு தலைவனாவேன் என்கிறீர்களே? ஒரு வேளை நமது கலைஞர், பெரியார் போல - ராஜாஜி போல - தொண்ணூறு வயதுக்கு மேல் வாழ்ந்து விட்டால்; நான் தலைவனாவதற்கு எத்தனை வருடம் காத்திருப்பது?"</p><p>இதைக் கேள்வியாகக் கருதாமல்; மற்ற இரு தம்பியரும் தேன் பிலிற்றும் விஷமாக எண்ணிக் கலங்கி - இருவரும் இரகசியமாக சத்தியம் செய்து கொண்டார்களாம். இந்தச் செய்தியை இருவரும் தலைவரிடம் எப்போதும் சொல்வதில்லையென்று !</p><p>ஆனால் - துரைமுருகன் ரகசியத்தைக் காப்பாற்றுவதில் இரும்புப் பெட்டி! ஆற்காட்டாரோ - அசல்; கண்ணாடிப் பேழை - எனினும் - ஆண்டுகள் சில பல கடந்த பிறகே; அன்றைய குமரி முனையில் குமுறிய எரிமலையின் குட்டை மனப் பேராசையின் வெளிப்பாட்டைக் கூறினர் எனக்கு! குறளின் அமுத மொழியாம்; </p><p>"செப்பின் புணர்ச்சிபோற் கூடினும் கூடாதே உட்பகை உற்ற குடி"</p><p>(செப்பு எனப்படும் சிமிழில் அதன் மூடி பொருந்தியிருப்பது போல வெளித் தோற்றத்துக்கு மட்டுமே தெரியும். அவ்வாறே உட்பகை உள்ளவர்கள் உளமாரப் பொருந்தியிருக்க மாட்டார்கள்!</p><p>உடன்பிறப்பே,</p><p>“குறளோவியம்” நூல் தொகுப்பில் நான்</p><p>குறிப்பிடாமல் விட்டுப் போன இந்தக் குறட்பா;</p><p>இந்த நேரத்தில் நினைவுக்கு வந்ததே;</p><p>அந்த நினைவுக்கு ஒரு நன்றி!</p><p>அன்புள்ள,</p><p>மு.க. (29.3.2009)</p><h2>கோயபல்ஸ் பொய்</h2><p>என் மனதில் விசுவரூபம் எடுக்கின்ற கேள்வி யாதெனில்? அண்ணன் ஆற்க்காட்டாரும், சகோதரர் துரைமுருகனும் என் மீது அடாத பழியைப் போட்டு, கலைஞர் என்னை வெறுக்க வேண்டும் என்று இப்படி பொய் சொன்னார்களா? அல்லது தனக்கே உள்ள கற்பனை ஆற்றல், எழுத்தாற்றலால் இப்படி அப்பட்டமான ஒரு பொய்யை ஒரு காட்சியாக புனைந்து கலைஞர் எழுதினாரா?</p><p>இப்பொழுது சங்கரன்கோவில் செயல்வீரர்கள் கூட்டத்தில், நடந்ததை சுட்டிக் காட்டி நான் பேசியதால், இந்த 2026 ஜூலை 11 ஆம் நாள் பிரசுரமான முரசொலியில் 17 ஆண்டுகள் கழித்து முரசொலியில் “அந்த நினைவுக்கு நன்றி” என்று முன்பு அவிழ்த்துவிட்ட கோயபல்ஸ் பொய்யை தி.மு.கழக தோழர்களிடம், நடுநிலையாளர்களிடம், தொலைக்காட்சி செய்தி ஏடுகள் மூலம் 1993 எப்படி கொலைப்பழிக்கு என்னை ஆளாக்கி, தி.மு.கழகத்தை விட்டு நீக்கினாரோ, அதே பாணியில் திமுகவினர், மற்ற அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள், பொதுமக்கள், செய்தியாளர்கள், அதிகாரிகள் என்னைக் குறித்து வெறுப்பும், கசப்பும் ஏற்பட வேண்டும் என்பதற்காக 17 வருடம் கழித்து அதே முரசொலியில் வெளியிட்டார்களா? </p><p>அப்படியானால் 2005 இல் திண்டுக்கல் திமுக மாநாட்டில் என் உரைக்குப் பிறகு கலைஞர் உரையாற்றுகையில், “நீ உரையாற்றும் போது என் முகத்தை நீ கவனித்திருக்க முடியாது. நீ உரையாற்றும்போது என் கண்கள் நீர் பொழிந்துகொண்டிருந்தன. தம்பி, உன்னை நான் இழந்தேனா? என்னை நீ இழந்தாயா?” என்று பேசியது உண்மயா? அல்லது 1993 ஏப்ரலில் நடந்த நிகழ்வை 2009 முரசொலியில் எழுதியதை, இப்போது திரும்ப 2026 ஜூலை 11 இல் கொட்டை எழுத்துக்களில் முரசொலியில் தி.மு.கழகத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறவர்கள் பிரசுரிக்க என்ன காரணம்? தி.மு.கழக கூட்டணியிலிருந்து எமது இயக்கம் வெளியேறியதால் ஏற்பட்ட வெறுப்பில் என்னைக் களங்கப்படுத்துவதற்காக இதை வெளியிட்டார்களா?</p><p>எனவே இந்தப் பழி சுமத்தும் கவிதையை இன்றைய திமுக தலைமை திட்டமிட்டு இப்போது இப்படி வெளியிட்டிருக்கிறது என்று நான் உணர்ந்து கொண்டேன்.</p><p>பழிச் சொற்களையும், குற்றச்சாட்டுக்களையும் இப்போது பிரசுரிப்பதில் என்ன நோக்கம்?</p><p>கொலைப்பழியை என் மீது 1993 இல் திட்டமிட்டு ஏவியது, மீண்டும் அதே பழியை - குற்றச்சாட்டை தற்போதைய தலைமையினர் தொடுத்திருக்கிறார்கள்.</p><p>பொய்யும், அபாண்டமான குற்றச்சாட்டும் நிலை நிற்காது. மெய்தான் நிலைத்து நிற்கும்; என்னைக் காக்கும்.</p><h2>இரண்டு பெருந்தவறு</h2><p>ஆனால் இத்தகைய தாக்குதல்களை எல்லாம் என் இதயம் தாங்கி அனுபவப்பட்டுவிட்டேன். தெளிந்த நீரோடையைப் போல என் மனம் தூய்மையாக இருக்கிறது. பொய்மை தோற்கும்; மெய்மை இறுதியில் வெல்லும்.</p><p>எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்ற அண்ணாவின் மணிவவாசகத்தை எண்ணி நான் இதை எல்லாம் தாங்கி பழக்கப்பட்டுவிட்டேன்.</p><p>நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நான்கு இடங்கள்தான் உங்கள் கட்சிக்கு. அது மறுபேச்சுக்கு இடமில்லை. இதை ஏற்றுக் கொண்டு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுங்கள் என்று வலியுறுத்தித் திணித்தார்கள்.</p><p>கூட்டணியில் இருக்கும்போது நான் அரசையோ, திமுகவையோ விமர்சித்து ஒரு சொல் சொன்னால்கூட அடுத்த கட்டமாக நம் இயக்கத்தை கூட்டணியிலிருந்து அவர்களே விலக்கியிருப்பார்கள்.</p><p>என் வாழ்க்கையில் இரண்டு பெருந்தவறுகளைச் செய்துவிட்டேன். ஒன்று 2006 இல் அண்ணா திமுகவுடன் உடன்பாடு வைத்தது. அன்றைய மதிமுக தலைமை நிர்வாகிகள், முன்னணியினர் என்னை நிர்ப்பந்தப்படுத்தி அதிமுக பொதுச்செயலாளரை சந்திக்க வைத்தார்களே, நான் அந்த நிர்ப்பந்தத்திற்கு உடன்படாமல், அதிமுகவுடன் உடன்பாடு செய்யாமல் இருந்திருந்தால் நமது இயக்கம் வலிவும் பொலிவும் பெற்றிருக்கும்.</p><p>2017 இல் பா.ஜ.க.வை எதிர்ப்பதற்காக திமுகவுடன் உடன்பாடு கொண்டது இரண்டாவது பெரும் பிழையாகும்.</p><h2>பீனிக்ஸ் பறவை</h2><p>பொதிகைமலை உறுதியாக இருப்பதைப் போல நானும், நமது இயக்கமும் சரியான முடிவுகளை இன்றைய அரசியலில் நாம் மேற்கொண்டிருக்கிறோம். இனி நமக்கு எந்தவித கேடும் யாரும் செய்ய முடியாது.</p><p>வைரம் பாய்ந்த வஜ்ரம் போன்ற கண்மணிகளே நீங்கள் இலட்சோப இலட்சம் பேர் இருக்கிறீர்கள். கிரேக்க புராணத்தில் பீனிக்ஸ் பறவை என்று குறிபிடப்பட்டது கற்பனைதான். நடைமுறையில் சரிவிலிருந்து மீண்டு, ஓங்கி உயர்ந்து தலைநிமிர்ந்து தமிழக அரசியலில் நம் இயக்கம் பயணிக்கிறது. இனி நமக்குத் தோல்வி இல்லை. வெற்றித் தேவதை நமக்கு ஆரம் சூட்ட காத்திருக்கிற நிலையை எண்ணி நாம் தடைகளைத் தகர்த்து, நம்மை வீழ்த்த நினைப்போரின் கணைகளை முறித்து செம்மாந்து நடப்போம். ஒளிமயமான எதிர்காலம் நம்மை வரவேற்க காத்திருக்கிறது.</p><p>உங்களுக்கு தெளிவு ஏற்பட வேண்டும் என்பதற்காக இந்த விளக்கம் அல்ல, நடுநிலையாளர்களும், பொதுவாழ்வில் இருப்போரும், பொதுமக்களும், ஊடகத்தில் இருப்போரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே மடலாக சங்கொலியின் வாயிலாக உங்களுக்குத் தெரிவிக்கிறேன். </p><p>நிறைந்த நம்பிக்கையோடு பயணத்தைத் தொடர்வோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>தியாகிகளின் உயரிய பண்புகளை வாழ்வியல் நெறியாக ஏற்று, புதிய சமுதாயத்தை உருவாக்கிடுவோம் - முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-adopt-the-noble-qualities-of-martyrs-as-a-code-of-conduct-and-create-a-new-society-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-adopt-the-noble-qualities-of-martyrs-as-a-code-of-conduct-and-create-a-new-society-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">169800e6-b31e-4a60-a63b-a3d79180fe93</guid><pubDate>Fri, 17 Jul 2026 04:48:31 +0000</pubDate><atom:updated>2026-07-17T04:48:31.788Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>தியாகிகள் தினம்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,Martyrs&apos; Day</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/sgy7gljv/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/sgy7gljv/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தியாகிகள் தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>இந்திய விடுதலைக்கும், மக்களின் உரிமை வாழ்விற்கும் தங்களது இன்னுயிரை ஈந்த தியாகி ஆர்யா (எ) பாஷ்யம், தியாகி சங்கரலிங்கனார் மற்றும் தியாகி செண்பகராமன் ஆகியோருக்கு தியாகிகள் தினத்தை முன்னிட்டு எனது வீரவணக்கங்கள்.</p><p>ஆங்கிலேயரின் அதிகாரச் செருக்கை வேரறுக்கும் வகையில், சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக் கொத்தளத்தில் பறந்த பிரிட்டிஷ் யூனியன் ஜாக் கொடியை இறக்கிவிட்டு, இந்திய மூவர்ணக் கொடியை ஏற்றிய மாவீரர் தியாகி ஆர்யா (எ) பாஷ்யம், நமது மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ என்ற பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகத் தொடர் உண்ணாவிரதமிருந்து இன்னுயிரை ஈந்த தியாகி சங்கரலிங்கனார், ‘ஜெய்ஹிந்த்’ என்ற முழக்கத்தை சுதந்திரப் போராட்டத்திற்கு அளித்து, இந்திய விடுதலைக்காக சர்வதேச ஆதரவைத் திரட்டிய, வீரத்தியாகி செண்பகராமன் ஆகியோரின் அயராத உழைப்பும் தன்னலமற்ற தியாகமும் என்றென்றும் போற்றத்தக்கது.</p><p>இத்தகைய தியாகிகளின் உயரிய பண்புகளை வாழ்வியல் நெறியாக ஏற்று, மனிதநேயமும் நாட்டுப்பற்றும் கொண்ட புதிய சமுதாயத்தை உருவாக்கிடுவோம்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>&apos;தமிழ்நாடு&apos; என்ற பெயர் எப்படி வந்தது? பின்னால் இருந்த போராட்டமும் பெருமையும்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-did-the-name-ta</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-did-the-name-ta#comments</comments><guid isPermaLink="false">bdadd3a8-428f-43f7-9ab7-dd401ec482de</guid><pubDate>Fri, 17 Jul 2026 04:26:33 +0000</pubDate><atom:updated>2026-07-17T04:26:33.827Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,தமிழ்நாடு தினம்,In Tamil Nadu,Tamilnadu Day</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/oo4lf9dm/tamilnadu-day.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/oo4lf9dm/tamilnadu-day.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>சிறப்புக் கட்டுரைகள் (Sirappukatturaigal)</category><content:encoded><![CDATA[ <h2>மொழிவாரி மாநிலங்கள்</h2><p>1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி இந்தியா புதிய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டு, குடியரசாக உருவெடுத்தபோது, 28 மாநிலங்கள் இந்தியாவில் இருந்தன. ஒவ்வொரு மாநிலத்தின் பெயரும் அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.</p><p>இந்தியாவைப் பொறுத்தவரை மாநிலங்கள், இந்திய யூனியனிலிருந்து பிரிந்து செல்ல முடியாது. ஆனால், தங்களுக்குள் பிரிந்துகொள்ளலாம், சேர்ந்துகொள்ளலாம். மாநிலங்களின் எல்லைகள் மாற்றியமைக்கப்படலாம். மாநிலத்திற்கு புதிய பெயர் சூட்டப்படலாம்.</p><p>ஆனால், ஆந்திராவைத் தனியாகப் பிரிக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்ததால், 1953ல் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையத்தில் ஃபசல் அலி, கே.எம். பணிக்கர், எச்.எம். குன்ஸ்ரு ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்த ஆணையம், மாநிலங்களை மொழிவாரியாகப் பிரிக்க பரிந்துரைத்தது. அதன்படி பல புதிய மாநிலங்கள் உருவாயினர்.</p><h2>சென்னை மாநிலம்</h2><p>1956ல் மாநில எல்லைகளை மறு வரையறை செய்யும் சட்ட திருத்தத்தின் மூலம் சென்னை மாகாணத்தின் மேற்கு கடற்கரை பகுதிகள் கேரளாவிற்கும் கர்நாடகத்திற்கும் பிரிந்து சென்றன. வட பகுதி ஆந்திர மாநிலத்திற்குச் சென்றது. எஞ்சிய நிலப்பகுதி சென்னை மாநிலம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது.</p><p>சென்னை மாநிலம் என்ற பெயரை மாற்றி தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்ட வேண்டுமெனக் கோரி காங்கிரசை சேர்ந்த சங்கரலிங்கனார் 1957ல் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கத் துவங்கினார். உண்ணாவிரதம் துவங்கிய 76வது நாள் அவர் உயிரிழந்தார். இதற்குப் பிறகு தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கை மிகவும் தீவிரமடைந்தது. இதற்குப் பிறகு தமிழில் மட்டும் தமிழ்நாடு என்றும் ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் குறிப்பிடத் தீர்மானிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு 1961 பிப்ரவரி 24ஆம் தேதி சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டது. ஆனால், ஆங்கிலத்திலும் தமிழ்நாடு என்றே அழைக்கப்பட வேண்டுமென தி.மு.க. வலியுறுத்தியது.</p><h2>பெயர் மாற்ற தீர்மானம்</h2><p>இந்த நிலையில்தான் 1967ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு முழுமையாக தமிழ்நாடு என்று பெயர் சூட்டத் தீர்மானித்தது. அதன்படி இதற்கான தீர்மானத்தை 1967 ஜூலை 18ஆம் தேதி முதல்-அமைச்சர் சி.என். அண்ணாதுரை சட்டப்பேரவையில் தாக்கல்செய்தார். அனைத்துக் கட்சி ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது.</p><p>அந்தத் தீர்மானத்தில் பேசிய அண்ணா, "நாம் பெயர் மாற்றம் செய்வதாலேயே தனி நாடு ஆகிவிடவில்லை. இந்தியப் பேரரசின் ஒரு பகுதியாகவே தமிழ்நாடு இருக்கும். இதனால் சர்வதேச சிக்கல்கள் எழாது" என்றார்.</p><p>தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதும், அண்ணா எழுந்து "தமிழ்நாடு என்ற பெயர் மாற்ற தீர்மானம் நிறைவேறிய வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நன்னாளில் தமிழ்நாடு வாழ்க என்று நாம் வாழ்த்துவோம்" என்று கூறிவிட்டு, "தமிழ்நாடு" என மூன்று முறை குரல் எழுப்பினார். சட்டப்பேரவையின் எல்லா உறுப்பினர்களும் "வாழ்க" என்று 3 முறை கோஷம் எழுப்பினர்.</p><p>இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள், தங்கள் மாநிலம் வேறு மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்ட தினத்தை தங்கள் மாநில தினமாக கொண்டாடி வருகின்றன. ஆனால், தமிழ்நாடு எந்த மாநிலத்திலிருந்தும் பிரிக்கப்படாத மாநிலமாகவும் அதன் முந்தைய வடிவமான சென்னை மாகாணத்திலிருந்தே வேறு மாநிலங்கள் பிரிந்ததாலும் மாநில தினம் என்று எந்த நாளும் குறிப்பிடப்படாமல் இருந்தது.</p><h2>தமிழ்நாடு மாநில தினம்</h2><p>இந்த நிலையில், கடந்த 2019ஆம் தேதி தமிழ்நாடு அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1ஆம் தேதி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">தமிழ்நாடு மாநில தினமாக</a> கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் நவம்பர்1-ஆம் தேதியையே தங்கள் மாநில தினமாக கொண்டாடி வருகின்றன. தெலங்கானா மாநிலம் ஆந்திராவிலிருந்து பிரிந்து தனி மாநிலமான ஜூன் 2ஆம் தேதியை மாநில தினம் ஆக கொண்டாடி வருகிறது. ஆனால், 2021-ஆம் ஆண்டு திமுக அரசு பதவியேற்ற பிறகு இந்த நாளை மாற்ற முடிவு செய்தது. </p><p>இது தொடர்பாக கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதியன்று அப்போதைய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், "1956 ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன. 2019 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு மாநில நாளாக அப்போதைய அதிமுக அரசு அறிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ்க் கூட்டமைப்பினர், தமிழ் அறிஞர்கள் என பல தரப்பிலும் நவம்பர் 1ஆம் நாள் எல்லை போராட்டத்தினை நினைவுக்கூறும் நாளாகத்தான் அமையுமே தவிர தமிழ்நாடு நாளாக கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது என்றும் மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி அண்ணாவால் 1968 ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் நாள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, தமிழ்நாடு என்று பெயரிடப்பட்ட அந்த நாள்தான் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனை ஏற்று, ஜூலை 18 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக இனி கொண்டாடப்படும் என்று திமுக அரசு அறிவித்தது.</p>]]></content:encoded></item><item><title>சுய கணக்கெடுப்பை ‘ஆன்லைன்’ மூலம் பதிவு செய்வது எப்படி? - தெரிந்து கொள்ளுங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-to-register-for-self-assessment-online-find-out</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-to-register-for-self-assessment-online-find-out#comments</comments><guid isPermaLink="false">dbfb0d4f-4e6f-4468-abed-a93e095f02ef</guid><pubDate>Fri, 17 Jul 2026 04:08:05 +0000</pubDate><atom:updated>2026-07-17T04:08:05.464Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,மக்கள் தொகை கணக்கெடுப்பு,Census,Census data</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/ji3r3kxi/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/ji3r3kxi/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வீட்டு வசதிகள் குறித்த சுய கணக்கெடுப்பை 'ஆன்லைன்' மூலம் எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனரகம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வருமாறு:-</p><p>1. https://se.census.gov.in न '' (एक சென்று, மாநிலம் என்ற இடத்தில் தமிழ்நாட்டை தேர்வு செய்ய வேண்டும். பின்னர், 'கேப்ட்சா' குறியீட்டை பதிவு செய்ய வேண்டும்.</p><p>2. செல்போன் எண்ணை குறிப்பிட வேண்டும். தேவைப்பட்டால் இணையதள முகவரியையும் குறிப்பிடலாம்.</p><p>3. பதிவு செய்யும் வசதி 16 மொழிகளில் இடம் பெற்றிருக்கும். இதில் தங்களுக்கு தெரிந்த மொழிகளை தேர்வு செய்தால், பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு 'ஓ.டி.பி.' எண் வரும். அதன் மூலம் சுய கணக்கெடுப்பு பணியை தொடரலாம்.</p><p>4. எந்த மாவட்டம், கிராமம்/ நகரம்/ பின்கோடு எண்ணை தெரிவிக்க வேண்டும்.</p><p>5. இந்த விவரங்களை பதிவு செய்தவுடன் கூகுள் வரைப்படம் (மேப்) மூலம் தங்களுடைய வீடு அமைந்துள்ள இடம் உறுதி செய்யப்படும்.</p><p>6. வீட்டு வசதிகள் குறித்த 33 கேள்விகள் வரிசையாக வரும். இந்த கேள்விகளை நிரப்புவதில் சந்தேகம் ஏதேனும் இருந்தால் கேள்விகளை கேட்டு விளக்கங்கள் பெற முடியும். அதன் பின்னர் உரிய பதில்களை அளிக்கலாம்.</p><p>7. தாங்கள் அளித்த பதில்கள் சரியாக இருக்கிறதா? என்பதை பார்வையிட்டு உறுதி செய்யலாம்.</p><p>8. இறுதியாக விவரங்களை சமர்பித்தவுடன் அவை சர்வரில் பதிவாகிவிடும். இதனை உறுதி செய்யும் வகையில் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு 11 இலக்க எண் குறுந்தகவலாக அனுப்பி வைக்கப்படும்.</p><p>9. வீடுகளுக்கு நேரடியாக கணக்கெடுக்க வரும் பணியாளர்களிடம் இந்த எண்ணை காண்பிக்க வேண்டும். அவர்கள் இந்த எண் மூலம் தாங்கள் பதிவு செய்த விவரங்கள் சரியாக இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்த பின்னர், கணக்கெடுப்பை உறுதி செய்வார்கள்.</p>]]></content:encoded></item><item><title>மேகமலை அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/forest-department-bans-tourists-from-visiting-meghamalai-falls</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/forest-department-bans-tourists-from-visiting-meghamalai-falls#comments</comments><guid isPermaLink="false">5bf01211-b088-4e29-b5cf-0f42c6614779</guid><pubDate>Fri, 17 Jul 2026 03:50:30 +0000</pubDate><atom:updated>2026-07-17T03:50:30.471Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Theni,தேனி,Forest Department,வனத்துறை,தடை,சுற்றுலாப்பயணிகள்,மேகமலை அருவி,Megamalai</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/jew2l97k/mega.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/jew2l97k/mega.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி,</p><p>தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF">மேகமலை அருவி</a> உள்ளது. இந்த அருவியில் குளிப்பதற்காக தேனி மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்பட வெளிமாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.</p><h2>வனத்துறை தடை</h2><p>இந்த நிலையில், தேனி மாவட்டம் மேகமலை அருவிப் பகுதியில் சீரமைப்புப் பணிகளுக்காக இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. பணிகள் முடியும் வரை தடை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>வனத்துறையின் தடையால் அருவிக்கு குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>பவுர்ணமி கிரிவலம்: விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 29-ந்தேதி சிறப்பு ரெயில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pournami-girivalam-special-train-from-villupuram-to-tiruvannamalai-on-29th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pournami-girivalam-special-train-from-villupuram-to-tiruvannamalai-on-29th#comments</comments><guid isPermaLink="false">9925f37c-cacb-4d22-bbe9-2fe30a16e358</guid><pubDate>Fri, 17 Jul 2026 03:46:28 +0000</pubDate><atom:updated>2026-07-17T03:46:28.144Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,திருவண்ணாமலை,Thiruvannamalai,Special train,பவுர்ணமி கிரிவலம்,Pournami Girivalam,விழுப்புரம்,Villupuram</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/lnyioul5/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/lnyioul5/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விழுப்புரம்,</p><h2>பவுர்ணமி விழா</h2><p>திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வருகிற 29-ந்தேதி (புதன்கிழமை) நடைபெறும் பவுர்ணமி கிரிவலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும், பயணிகளின் வசதிக்காகவும் தெற்கு ரெயில்வே சார்பில் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.</p><h2>சிறப்பு ரெயில்</h2><p>அதாவது வருகிற 29-ந்தேதி விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 10.10 மணிக்கு புறப்படும் விழுப்புரம்-திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (வண்டி எண் 06130) 11.45 மணிக்கு திருவண்ணாமலை ரெயில் நிலையத்தை சென்றடையும். அதேபோல் மறுமார்க்கத்தில் திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்படும் திருவண்ணாமலை-விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (வண்டி எண் 06129) மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் ரெயில் நிலையத்தை வந்தடையும்.</p><p>இந்த ரெயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த தகவல் திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோவை செம்மொழி பூங்கா பணியில் ரூ.40 கோடி முறைகேடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-40-crore-embezzlement-in-coimbatore-semmozhi-park</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-40-crore-embezzlement-in-coimbatore-semmozhi-park#comments</comments><guid isPermaLink="false">3545c149-21ef-4ac5-accb-19788f3cfc64</guid><pubDate>Fri, 17 Jul 2026 03:22:56 +0000</pubDate><atom:updated>2026-07-17T03:22:56.990Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,Semmozhi Poonga,செம்மொழி பூங்கா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/4pqeht2z/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/4pqeht2z/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவை செம்மொழி பூங்கா திட்ட பணியில் ரூ.40 கோடி முறைகேடு நடைபெற்று இருப்பதாக ஒப்பந்ததாரர் சங்கம் புகார் செய்துள்ளது. தென்மண்டல ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் அமைச்சர் சம்பத்குமார் மற்றும் நகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறை நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-</p><h2>ரூ.40 கோடி முறைகேடு</h2><p>கோவை காந்திபுரத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியில் செம்மொழி பூங்கா திட்ட பணிகள் நடந்தது. சுமார் ரூ.45 கோடிக்கு திட்ட பணி மதிப்பீடு செய்து டெண்டர் விடப்பட்டது. ஆனால் அதன்பிறகு கூடுதல் மதிப்பீடு என்ற பெயரில் சுமார் ரூ.40 கோடிக்கு மேல் மாநகராட்சி நிதியில் கூடுதல் தொகை ஒதுக்கி பணிகள் நடந்தது. இது ஒரு நூதன கொள்ளை ஆகும்.</p><p>இந்த மதிப்பீடுகளில் ஒன்றுக்கு 2 மடங்காக விலைப் பட்டியலில் இல்லாத பல பொருட்களை பயன்படுத்தி போலியான விலைப்பட்டியல் தயார் செய்து சுமார் ரூ.80 கோடி செலவு செய்து மாநகராட்சி பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. இதனை பொதுப்பணித்துறை வல்லுனர்கள், தனியார் வல்லுனர்கள் மற்றும் தணிக்கை அதிகாரிகளை வைத்து ஆய்வு செய்தால், சுமார் ரூ.40 கோடிக்கு மேல் போலி பில் போட்டு முறைகேடு செய்தது வெளிச்சத்துக்கு வரும்.</p><h2>சாலை பணியிலும்...</h2><p>இதுபோன்று ஒரு சாலை அமைத்தால் 5 ஆண்டுகள் நீடித்து நிலைக்க வேண்டும். தேர்தல் செலவுக்கு பணம் தேவை என்பதால் 5 ஆண்டு காலத்திற்குள் போட்ட சாலைகளை பெரும்பாலும் தேர்வு செய்துள்ளனர். அதனை திரும்ப அமைப்பது போல பாசாங்கு செய்து குறைந்த கனத்தில் போட்டு 50 சதவீதம் மட்டுமே பணி செய்து 100 சதவீதத்துக்கு பில் போட்டுள்ளனர். எனவே கடந்த 6 மாதங்களில் நடைபெற்ற அனைத்து பணிகளையும் மறுஆய்வு செய்து அதன் தரம் மற்றும் அளவை சரி பார்த்து தவறு இருக்கும் பணிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>செம்மொழி பூங்காவிற்கு முதலில் தயாரிக்கப்பட்ட மதிப்பீடு எவ்வளவு, அதன்பின்னர் தற்போது வரையிலான செலவினம் எவ்வளவு என பார்த்து அதன் முழு உண்மை தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். இதில் மதிப்பீடு தயாரித்தவர். பணியை பார்த்து போலி பில் தயாரித்த அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மீதும் மற்றும் தேர்தல் நேரத்தில் 50 சதவீதம் மட்டும் பணி செய்து போலி பில் பெற்றவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நாடாளுமன்ற வளாகத்துக்குள் எம்.பி.க்கள் ஸ்மார்ட் வாட்ச் அணியத் தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/lok-sabha-issues-advisory-on-smartwatches-pen-cameras-for-mps-ahead-of-parliament-monsoon-session</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/lok-sabha-issues-advisory-on-smartwatches-pen-cameras-for-mps-ahead-of-parliament-monsoon-session#comments</comments><guid isPermaLink="false">707b0236-8704-4b84-9cc0-8b228672df46</guid><pubDate>Fri, 17 Jul 2026 03:16:02 +0000</pubDate><atom:updated>2026-07-17T03:16:02.288Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>புதுடெல்லி,நாடாளுமன்றம்,ஸ்மார்ட் வாட்ச்,In Parliament,smart watches</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/qo8f4fm2/parliment33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  ஸ்மார்ட் வாட்ச்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/qo8f4fm2/parliment33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 20-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. </p><p>இந்தநிலையில்,  நாடாளுமன்ற வளாகத்துக்குள் எம்பிக்கள் ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் கண்ணாடி, கேமரா பேனா ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து எம்.பி.க்களுக்கும் மக்களவை செயலகம் அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:</p><p>நாட்டில் <a href="https://www.dailythanthi.com/news/india">ஸ்மார்ட் வாட்ச்</a>, கேமரா பேனா உள்ளிட்ட நவீன சாதனங்கள் பரவலாக கிடைப்பது எம்.பி.க்களுக்கு தெரிந்திருக்கும். இவற்றில் சில சாதனங்கள், எம்.பி.க்களின் தனிநபர் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடும். நாடாளுமன்ற தனியுரிமைகளுக்கு எதிராக இருக்கக்கூடும். ஆதலால் பாதுகாப்பு, தனியுரிமைகளுக்கு எதிராக இருக்கும் இந்த சாதனங்களை எம்.பி.க்கள் பயன்படுத்த வேண்டாம். </p><p>நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது, நுழைவு வாயில் கேட்டுகள் முன்பு போராட்டம் நடத்த வேண்டாம் என எம்.பி.க்கள் கேட்டு கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு போராட்டம் நடத்துவது, நாடாளுமன்ற அலுவலில் பங்கேற்க வரும் மற்ற எம்.பி.க்களின் நடமாட்டத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோல், தர்ணா, போராட்டம், உண்ணாவிரதம் போன்றவற்றிலும் எம்.பி.க்கள் ஈடுபட வேண்டாம். </p><p>மேலும், பேனர்கள், கத்திகள், வாள், கம்பு, வெடிப்பொருள்கள் உள்ளிட்டவற்றையும் நாடாளுமன்ற வளாகத்துக்கு எம்.பி.க்கள் எடுத்து வரக்கூடாது என மக்களவை செயலகம் கேட்டுக் கொண்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காட்டு யானைகளை விரட்ட வந்த போது உடல்நலக்குறைவு:
கும்கி யானைக்கு சிகிச்சை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kumki-elephant-falls-ill-while-trying-to-chase-away-wild-elephants-treatment</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kumki-elephant-falls-ill-while-trying-to-chase-away-wild-elephants-treatment#comments</comments><guid isPermaLink="false">b98ae04d-e7ae-41df-ad8b-fd95a5d4bac1</guid><pubDate>Fri, 17 Jul 2026 03:11:48 +0000</pubDate><atom:updated>2026-07-17T03:11:48.663Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிகிச்சை,உடல்நலக்குறைவு,கும்கி யானை,Kumki elephant,For treatment</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/o56ch0li/53.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/o56ch0li/53.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பந்தலூர், </p><p>பந்தலூர் தாலுகா குந்தலாடி அருகே பாக்கனா, புத்தூர்வயல் பகுதிகளில் காட்டு யானைகள் தினமும் ஊருக்குள் புகுந்து வாழை, தென்னை, பாக்கு மரங்கள், பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. கடந்த மே மாதம் 26-ந் தேதி 8-ம் வகுப்பு படித்து வந்த மிஸ்ஹாப் (வயது 14) என்ற சிறுவன் புத்தூர்வயலில் இருந்து பாக்கனாவுக்கு முடி வெட்ட சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தான். அப்போது காட்டு யானை தாக்கியதில் சிறுவன் உயிரிழந்தான். இந்த சம்பவத்தை அடுத்து காட்டு யானைகளை விரட்ட கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். </p><h2>கும்கி யானை</h2><p>மேலும் கும்கி யானைகள் உதவியுடன் கண்காணித்து யானைகளை விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து முதுமலையில் இருந்து விஜய், கிருஷ்ணா ஆகிய 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு, பாக்கனாவில் தனியார் தேயிலை தோட்டம் பகுதியில் நிறுத்தப்பட்டு காட்டு யானைகளை விரட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் 55 வயது விஜய் என்ற <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88">கும்கி யானைக்கு</a> திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதோடு உணவு உட்கொள்ள முடியாமல் உள்ளது. இதை அறிந்த முதுமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஸ்குமார், கும்கி யானைக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை: கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-college-student-commits-suicide-by-hanging</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-college-student-commits-suicide-by-hanging#comments</comments><guid isPermaLink="false">e2571eb1-3c77-40dc-9421-1bbc6f107150</guid><pubDate>Fri, 17 Jul 2026 03:07:48 +0000</pubDate><atom:updated>2026-07-17T03:07:48.518Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,College student,கல்லூரி மாணவி,தூக்குப்போட்டு தற்கொலை,commits suicide by hanging</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/21uh1bfz/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கல்லூரி மாணவி தற்கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/21uh1bfz/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னையில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை</a> செய்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். </p><h2>கல்லூரி மாணவி</h2><p>சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் உஷா. இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகள் ரக்சனா (வயது 17), பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். ரக்சனாவுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்ததாக தெரிகிறது. </p><h2>தூக்குப்போட்டு தற்கொலை</h2><p>நேற்று முன்தினம், ரக்சனாவின் தாயார் மற்றும் அண்ணன் கடைக்கு சென்றுவிட்டனர். வீட்டில் தனியாக இருந்த ரக்சனா, மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். ரக்சனாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து மயிலாப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>‘பாராசிட்டமால் சிரப்&apos; விவகாரத்தில் தவறான தகவலை பரப்பவேண்டாம்: சுகாதாரத்துறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dont-spread-false-information-about-paracetamol-syrup-issue-health-department</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dont-spread-false-information-about-paracetamol-syrup-issue-health-department#comments</comments><guid isPermaLink="false">8e0752c2-9363-4519-a69b-4be12b7d2721</guid><pubDate>Fri, 17 Jul 2026 02:54:26 +0000</pubDate><atom:updated>2026-07-17T02:54:26.834Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சுகாதாரத்துறை,Public Health Department,பாராசிட்டமால்,பாராசிட்டமால் சிரப்,paracetamol,paracetamol syrup</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/dpn4xpgx/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/dpn4xpgx/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி பாதிப்பு ஏற்பட்டால் டாக்டர்கள் 'பாராசிட்டமால் சிரப்' வகைகளை பரிந்துரைப்பார்கள். இந்தநிலையில், குழந்தைகளுக்கு வழங்கப்படும் இந்த சிரப்பில் ஆல்கஹால் விதிகளை மீறி அதிகமான அளவு சேர்க்கப்படுவதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பரவி வந்தன. இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை விளக்கம் தெரிவித்துள்ளது.</p><h2>அதன் விவரம் வருமாறு:-</h2><p>'பாராசிட்டமால் சிரப்' மருந்தானது தமிழ்நாடு மருத்துவப் சேவை கழகத்தின் (டி.என்.எம்.எஸ்.சி.) அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தால் பரிசோதிக்கப்பட்டு தரமானது என உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அரசு ஆய்வகமும் இதனை தரமானது என்று சான்றளித்துள்ளது. குழந்தைகளுக்கான மருந்துகளில் ஆல்கஹால் சரியான விகிதத்திலேயே பயன்படுத்தப்படுகிறது. 'பாராசிட்டமால்' மருந்தை எளிதில் கரைக்க ஆல்கஹால் பயன்படுத்துவது வழக்கம்.</p><h2>95 சதவீதம்</h2><p>இந்த ஆல்கஹாலின் அளவு 10 சதவீதம் என்ற வரம்புக்குள்தான் இருக்கும். உதாரணத்திற்கு, 60 மி.லி. அளவு கொண்ட மருந்து பாட்டிலில் 10 சதவீதம் அதாவது 6 மி.லி. அளவிலேயே ஆல்கஹால் பயன்பாடு இருக்கும். '95 சதவீதம் ஆல்கஹால்' என்பது ஆல்கஹாலின் தூய தன்மையை குறிப்பிடும் சொல் மட்டுமே. தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் கிடங்குகளில் அனைத்து மருந்துகளும் 180 நாட்களுக்கு ஒருமுறை வழக்கமான மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.</p><p>இது தவிர அரசு மருத்துவ நிறுவனங்களில் உள்ள மருந்துகளும் தரத்தை உறுதி செய்ய அவ்வப்போது கள ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. தரமான மருந்து என்று உறுதி செய்யப்பட்ட பிறகே இந்த மருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வினியோகிக்கப்படுகின்றன. எனவே, மக்களிடையே தவறான தகவலை பரப்ப வேண்டாம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரெயில் முன்பு பாய்ந்து தம்பதி தற்கொலை - கடிதம் எழுதி வைத்துவிட்டு விபரீதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/couple-commits-suicide-by-jumping-in-front-of-train-leaving-a-note-behind</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/couple-commits-suicide-by-jumping-in-front-of-train-leaving-a-note-behind#comments</comments><guid isPermaLink="false">fbf2ea14-3a51-4906-a5f4-24c0f9d3545d</guid><pubDate>Fri, 17 Jul 2026 02:47:25 +0000</pubDate><atom:updated>2026-07-17T02:47:25.152Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,Thiruvannamalai,தற்கொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/mrmdr8sg/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/mrmdr8sg/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை,</p><p>திருவண்ணாமலையை அடுத்த நல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் சந்திரகுமார் (42 வயது). அரியானா மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சிந்து (38 வயது). இவர்களுக்கு 10-ம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளான். சந்திரகுமாருக்கு நுரையீரல் தொற்றுநோய் இருந்துள்ளது. இதனால் கடந்த வாரம் சொந்த ஊருக்கு திரும்பினார்.</p><p>பின்னர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவன்-மனைவி இருவரும் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு சிகிச்சைக்கு பின்னர் இருவரும் தனிமையில் அமர்ந்து பேசியபோது தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.</p><p>இதையடுத்து நேற்று அதிகாலை 4 மணியளவில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா களம்பூர் அருகே உள்ள வடமாதிமங்கலம் ரெயில் நிலையத்துக்கு சந்திரகுமாரும், சிந்துவும் வந்தனர். அப்போது இருவரும் திடீரென நஸ்ராபூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற ரெயில் முன்பு பாய்ந்தனர். இதில் இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த, ரெயில்வே போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டனர்.</p><p>அப்போது சந்திரகுமாரின் சட்டைப்பையில் ஒரு கடிதம் இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர். அதில் நீண்ட நாட்களாக சந்திரகுமாருக்கு நுரையீரல் தொற்றுநோய் பிரச்சினை இருந்துள்ளது. இதனால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதன் காரணமாக கடன் அதிகரிக்கும் என்பதால் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மது குடிக்கும்போது தகராறு; கல்லால் தாக்கி வாலிபர் கொலை: 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/argument-over-drinking-alcohol-youth-killed-by-stone-2-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/argument-over-drinking-alcohol-youth-killed-by-stone-2-arrested#comments</comments><guid isPermaLink="false">c0701b94-dcf8-4912-af76-6a9ca52cf53b</guid><pubDate>Fri, 17 Jul 2026 02:33:42 +0000</pubDate><atom:updated>2026-07-17T02:33:42.169Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>2 arrested,2 பேர் கைது,Kanchipuram,வாலிபர் கொலை,Dispute,தகராறு,காஞ்சீபுரம்,Stone attack,youth killed,Drinking alcohol,கல்லால் தாக்கி,மது அருந்துதல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/588ubt29/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வாலிபர் கொலை, 2 பேர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/588ubt29/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>காஞ்சீபுரம், </p><p>காஞ்சீபுரம் மாவட்டத்தில் மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கல்லால் தாக்கி வாலிபர் கொலை</a> செய்யப்பட்டது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>ரத்தக்காயங்களுடன் ஆண் பிணம்</h2><p>காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சோமங்கலம் கிராமத்தில் உள்ள தனியார் மனை பிரிவு அருகே நேற்று காலை வாலிபர் ஒருவர் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் சோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் சேத்துப்பட்டு கிராமம், வடவண்டை தெருவை சேர்ந்த ராஜேஷ் (வயது 30) என்பது தெரியவந்தது.</p><h2>போலீசில் சரண்</h2><p>இந்த நிலையில் நேற்று சேத்துப்பட்டு கிராமம் வடவண்டை தெருவை சேர்ந்த தங்கம்(46) மற்றும் ஆனந்தஜோதி(32) ஆகிய 2 பேர் சோமங்கலம் போலீசில் சரண் அடைந்தனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையின்போது அவர்கள் கூறியதாவது: </p><p>நேற்று முன்தினம் இரவு நாங்கள் ராஜேசுடன் சேர்ந்து மது குடித்தோம். அப்போது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. மதுபோதையில் நாங்கள் அவரை கல்லால் தாக்கினோம். இதில் அவர் இறந்து விட்டார். நாங்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டோம். </p><p>இவ்வாறு அவர்கள் கூறினர்.</p><h2>2 பேர் கைது</h2><p>போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். போலீசார் ராஜேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலைக்கு முன்விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்டிரல் ரெயில் நிலைய கழிவறையில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-videotaping-woman-bathing-in-central-railway-station-toilet</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-videotaping-woman-bathing-in-central-railway-station-toilet#comments</comments><guid isPermaLink="false">6a18b17d-4710-452a-be9e-b282ea2c504e</guid><pubDate>Fri, 17 Jul 2026 02:28:21 +0000</pubDate><atom:updated>2026-07-17T02:28:21.511Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,Central Railway Station,arrest,வாலிபர் கைது,சென்டிரல் ரெயில் நிலையம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/vv6zv2en/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/vv6zv2en/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 32 வயது பெண் ஒருவர், தனது குடும்பத்துடன் கேரளாவில் வசித்து வருகிறார். சமீபத்தில் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு, ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை சென்டிரல் வந்திருந்தார். அங்கிருந்து கேரளா செல்ல மற்றொரு ரெயிலுக்காக காத்திருந்தார்.</p><p>அப்போது, பெண்கள் காத்திருப்போர் அறை பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டிருந்ததால், ஆண்கள் காத்திருப்பு அறையில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட கழிவறையில் அந்த பெண் குளிக்க சென்றார். அவர் குளிப்பதை அருகில் இருந்த கழிவறையில் மறைந்திருந்த ஒருவர் செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு சக பயணிகள், அந்த நபரை பிடித்து சென்டிரல் ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.</p><p>விசாரணையில், பிடிபட்டவர் வேலூர் மாவட்டம் கீழந்தூரை சேர்ந்த அருண் (27 வயது) என்பதும், மின்வாரியத்தில் கேங்மேனாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>நீர்வரத்து குறைவால் ஒகேனக்கல்லில் வெளியே தெரியும் ஜெகன்மோகினி குகை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/jaganmohini-cave-in-hogenakkal-is-visible-due-to-low-water-flow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/jaganmohini-cave-in-hogenakkal-is-visible-due-to-low-water-flow#comments</comments><guid isPermaLink="false">39ec65ee-3fa8-494b-802e-237bad573b05</guid><pubDate>Fri, 17 Jul 2026 02:21:26 +0000</pubDate><atom:updated>2026-07-17T02:21:26.303Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Hogenakkal,ஒகேனக்கல்,தர்மபுரி,Dharmapuri,Hogenakkal Cauvery,ஒகேனக்கல் அருவி,குகை,cave,ஜெகன்மோகினி,Jaganmohini</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/1vslzxg1/CHENNAI-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/1vslzxg1/CHENNAI-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>தர்மபுரி,</p><h2>ஜெகன்மோகினி குகை</h2><p>தமிழகத்தின் பிரபலமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றான தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், கேரளம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிவர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குளித்தும் பரிசலில் சென்றும் மகிழ்வர்.</p><p>இந்த நிலையில் காவிரி ஆற்றில் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் ஒகேனக்கல் பெரிய பாணி காவிரி ஆற்றில் தண்ணீரில் மூழ்கி இருந்த ஜெகன்மோகினி குகை வெளியே தெரிய தொடங்கி உள்ளது. ஜெகன்மோகினி குகை, 1978-ம் ஆண்டு வெளியான ஜெகன்மோகினி திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக பாறையில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது</p><h2>சுற்றுலா பயணிகள் ஆர்வம்</h2><p>காவிரியில் நீர்வரத்து அதிகரிக்கும் காலங்களில் இந்த குகை முழுவதும் நீரில் மூழ்கிவிடும். ஆனால் நீர்வரத்து குறையும் காலங்களில் மட்டுமே இது மீண்டும் காட்சியளிக்கும். குகையை பார்வையிடும் சுற்றுலா பயணிகள் 10 மீட்டர் தூரம் வரை உள்ளே சென்று வர முடியும். மேலும் அதன் அமைப்பையும், இயற்கை அழகையும் கண்டு வியப்படைந்தனர்.</p><p>தற்போது நீர்வரத்து வினாடிக்கு 300 கனஅடியாக உள்ளதால் பரிசல் ஓட்டிகளும் சுற்றுலா பயணிகளை ஜெகன்மோகினி குகை வரை அழைத்து சென்று காட்டுகின்றனர். இதனால் ஒகேனக்கல் சுற்றுலாத்தலத்தில் பயணிகளின் ஆர்வம் அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>பழனி கோவில் நில மோசடி விவகாரத்தில் மேலும் ஒரு அதிரடி நடவடிக்கை..! மாவட்ட பதிவாளர் சஸ்பெண்ட்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/another-bold-move-in-the-palani-temple-land-fraud-case-district-registrar-suspended</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/another-bold-move-in-the-palani-temple-land-fraud-case-district-registrar-suspended#comments</comments><guid isPermaLink="false">ef9adda5-5b69-4b95-8e04-c1ac2dece234</guid><pubDate>Fri, 17 Jul 2026 02:19:57 +0000</pubDate><atom:updated>2026-07-17T02:19:57.883Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,பழனி,தமிழகம்,சஸ்பெண்ட்,suspend,மோசடி,நில மோசடி வழக்கு,Palani,Palani temple,நில மோசடி,பழனி கோவில்,Land fraud case,பத்திர பதிவு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/0fwod3sh/palani.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பழனி கோவில், நில மோசடி, சஸ்பெண்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/0fwod3sh/palani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பழனி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/palani-temple">பழனி கோவில்</a> தண்டபாணி மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை தனிநபர்கள் பெயருக்கு முறைகேடாக பதிவுசெய்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. இதுதொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் முழுமையாக ஆய்வு செய்து உண்மை நிலையை அறிய, பதிவுத்துறை சார்பில் 3 பேர் கொண்ட உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.</p><h2>விரிவான விசாரணை</h2><p>இந்தக்குழுவில் கூடுதல் பதிவுத்துறைத் தலைவர், உதவி பதிவுத்துறைத் தலைவர் மற்றும் ஒரு மாவட்டப் பதிவாளர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவினர் பத்திரப்பதிவு நடைபெற்ற நாளில் பணியில் இருந்த சார்பதிவாளர், விடுப்பில் சென்ற சார்பதிவாளர், மாவட்ட பதிவாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்டோரிடம் விரிவான விசாரணை மேற்கொள்வார்கள்.</p><h2>சஸ்பெண்ட்</h2><p>முன்னதாக பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமானதாக கூறப்படும் நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாக எழுந்த புகாரில், ஏற்கனவே சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்.</p><p>இந்த நிலையில், அதே விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் மாவட்ட பதிவாளர் சசிகலாவையும் தமிழக பதிவுத்துறை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அவர்களின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>அடுத்தடுத்து நடவடிக்கைகள்</h2><p>பழனி கோவில் நில பதிவு முறைகேடு தொடர்பான புகாரில் நடைபெற்று வரும் விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அடுத்தடுத்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.</p><p>இந்த விவகாரத்தில் மேலும் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் ஆவணங்கள் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>காதலுக்கு எதிர்ப்பு: ரெயில் தண்டவாளத்தில் படுத்து உயிரை மாய்த்த காதல் ஜோடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-couple-committed-suicide-by-lying-on-the-railway-tracks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-couple-committed-suicide-by-lying-on-the-railway-tracks#comments</comments><guid isPermaLink="false">fe430fb3-e5e0-4007-aa2d-879eb5f08597</guid><pubDate>Fri, 17 Jul 2026 02:03:12 +0000</pubDate><atom:updated>2026-07-17T02:03:12.678Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,கிரைம் செய்திகள்,Love,காதல் ஜோடி,தர்மபுரி,Dharmapuri,Love couple,காதல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/sctjdi7b/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/sctjdi7b/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>தர்மபுரி,</p><p>தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள ஆவலம்பட்டி பிரிவு சாலை எதிரில் சேலம்-சென்னை செல்லும் ரெயில் தண்டவாளத்தில் ஆண், பெண் உடல்கள் துண்டாகி சிதறி கிடப்பதாக மொரப்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தண்டவாளத்தில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த உடல்களை மீட்டு விசாரணை நடத்தினார்கள். </p><p>மேலும் உடல்கள் கிடந்த தண்டவாளத்தின் அருகே மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த வண்டி எண்ணை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் காதல் ஜோடி ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.</p><h2>பிளஸ்-1 மாணவி</h2><p>தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த எட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த தட்சிணா மூர்த்தி மகன் கன்சிராம் ராணா (வயது 19) என்பவர் காரிமங்கலம் பகுதியில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். அதே ஊரை சேர்ந்த அரசு என்பவரின் மகள் அமுதபிரியா என்ற அறிவுஜோதி (16), அரூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். மாணவரும், மாணவியும் உறவினர்கள் என கூறப்படுகிறது.</p><p>இவர்கள் 2 பேரும் காதலித்து வந்ததாகவும், பள்ளியில் படிக்கிற வயதில் என்ன காதல் என்று அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மேலும் அந்த மாணவிக்கு அக்காள்கள் இருப்பதாகவும் அவர்களின் எதிர்காலம் கருதி சிறுமியான பிளஸ்-1 மாணவி படிக்க மட்டும் செய், காதல் எல்லாம் வேண்டாம் என்று பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது.</p><h2>உறவினர்கள் கதறல்</h2><p>இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் இருவரும் காணாமல் போனதும் தெரியவந்தது. பின்னர் நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் ரெயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. தண்டவாளத்தில் துண்டு, துண்டாக சிதறிக்கிடந்த 2 பேரின் உடல்களையும் கண்டு உறவினர்கள் கதறி அழுத காட்சி நெஞ்சை பதைபதைக்க வைத்தது.</p><p>காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் வீட்டு கதவை உடைத்து 17 சவரன் நகை கொள்ளை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/17-sovereigns-of-jewellery-stolen-after-breaking-down-house-door-in-thoothukudi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/17-sovereigns-of-jewellery-stolen-after-breaking-down-house-door-in-thoothukudi#comments</comments><guid isPermaLink="false">80d56a7d-4829-426b-9d3b-e39043e102d2</guid><pubDate>Fri, 17 Jul 2026 02:01:37 +0000</pubDate><atom:updated>2026-07-17T02:01:37.669Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,jewelry stolen,mysterious persons,மர்ம நபர்கள்,House,வீட்டின் கதவை உடைத்து,நகை கொள்ளை,போலீசார் வலைவீச்சு,door broken,police netting</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/euxzbvc3/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நகை கொள்ளை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/euxzbvc3/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி அடுத்த புதுக்கோட்டை பகுதியில் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 17 சவரன் தங்க நகைளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p><h2>மருத்துவ பரிசோதனை</h2><p>தூத்துக்குடி அடுத்த புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம்புளி கோல்டன் நகரை சேர்ந்தவர் ஆஷிக்தனசிங் (வயது 26). இவர் மடத்தூர் பகுதியில் உள்ள தனியார் ஆயில் நிறுவனத்தில் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கர்ப்பிணியாக உள்ளதால், கடந்த 12-ந்தேதி மருத்துவ பரிசோதனைக்காக தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். </p><h2>17 சவரன் நகை கொள்ளை</h2><p>சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆஷிக்தனசிங் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">17 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை</a>யடித்து சென்றிருப்பது தெரியவந்தது.</p><h2>மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு</h2><p>இது தொடர்பான புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் ரூ.14 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>யு.பி.ஐ. மூலம் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டணம் - மத்திய அரசு ஆலோசனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-charges-for-digital-money-transactions-made-through-upi-central-government-advises</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-charges-for-digital-money-transactions-made-through-upi-central-government-advises#comments</comments><guid isPermaLink="false">369a918b-1a30-4ea2-a645-e7bd424d8e9c</guid><pubDate>Fri, 17 Jul 2026 01:58:09 +0000</pubDate><atom:updated>2026-07-17T01:58:09.892Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,யுபிஐ,UPI,கட்டணம்,Digital transaction,டிஜிட்டல் பண பரிவர்த்தனை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/cn55g66e/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/cn55g66e/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><h2>யு.பி.ஐ. சேவை</h2><p>இந்தியாவில் இன்று பெட்டிக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால்கள் வரை அனைத்து வணிக நிறுவனங்களிலும் யு.பி.ஐ. பரிவர்த்தனைகள் நடந்து வருகிறது. தேசிய கொடுப்பணவு அமைப்பால் கடந்த 2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த யு.பி.ஐ. தொழில்நுட்பம், இன்று இந்திய மக்களின் அன்றாட வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக மாறிவிட்டது. எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி, 24 மணி நேரமும், ஒரே நொடியில் ஒரு வங்கி கணக்கிலிருந்து மற்றொரு வங்கி கணக்கிற்குப் பணத்தை நேரடியாக அனுப்ப முடியும். உள்நாட்டை கடந்து சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ் போன்ற பல நாடுகள் இந்தியாவின் இந்த யு.பி.ஐ. கட்டண முறையைத் தங்களின் நாடுகளிலும் அதிகாரபூர்வமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.</p><h2>புதிய கட்டணம்</h2><p>தற்போது இந்தியாவில் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யு.பி.ஐ. செயலிகள் மூலம் நடக்கும் பணப் பரிவர்த்தனைகளுக்கு, 5 முதல் 7 அடிப்படை புள்ளிகள் வரை புதிய கட்டணம் வசூலிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரிசர்வ் வங்கி மற்றும் தேசிய கொடுப்பனவு கழகம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளபடி, இந்த புதிய வணிகர் கட்டணம் 0.05 சதவீதம் முதல் 0.07 சதவீதம் வரை விதிக்கப்படவுள்ளது. உதாரணமாக, ஒரு கடையில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான வர்த்தகம் நடந்தால், அதற்கு அதிகபட்சமாக ரூ.5 முதல் ரூ.7 வரை கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்புள்ளது.</p><h2>வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பா?</h2><p>இந்த புதிய கட்டண முறை சாதாரண பொதுமக்களுக்கோ அல்லது ஒரு தனிநபர் மற்றொரு தனிநபருக்கு அனுப்பும் பணப் பரிவர்த்தனைகளுக்கோ முற்றிலும் பொருந்தாது. இது கடைகளில் உள்ள கியூ.ஆர். கோடு மூலம் நடக்கும் பெரியஅளவிலான வணிகப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே விதிக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>தற்போது இந்தியாவில் யு.பி.ஐ. பரிவர்த்தனைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கான உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பச் செலவுகளை வங்கிகளும், கூகுள் பே, போன்பே போன்ற நிறுவனங்களுமே ஏற்றுக்கொள்கின்றன. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தவும், வங்கிகளின் பராமரிப்புச் செலவுகளைச் சரி செய்யவும், இந்த மிகக் குறைந்த கட்டண முறையைக் கொண்டு வர நிதி அமைச்சகம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஆடி பிறப்பையொட்டி ஈரோட்டில் தேங்காய் சுடும் பண்டிகைக்காக அழிஞ்சி குச்சிகள் விற்பனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/azhinjic-sticks-sold-for-coconut-roasting-festival-in-erode-on-the-occasion-of-aadis-birth</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/azhinjic-sticks-sold-for-coconut-roasting-festival-in-erode-on-the-occasion-of-aadis-birth#comments</comments><guid isPermaLink="false">428f8ff0-4d75-40f4-bf6a-cc455ef2e81e</guid><pubDate>Fri, 17 Jul 2026 01:51:43 +0000</pubDate><atom:updated>2026-07-17T01:51:43.716Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Aadi festival,ஆடி,Coconut,தேங்காய்,பிறப்பு,festival; பண்டிகை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/5gy926tx/51.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/5gy926tx/51.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>ஆடி மாதம் இன்று பிறக்கிறது. இதையொட்டி தேங்காய் சுடும் பண்டிகைக்காக ஈரோட்டில் அழிஞ்சி குச்சிகள் விற்பனை நேற்று மும்முரமாக நடந்தது.</p><h2>ஆடி மாத பிறப்பு</h2><p>மகாபாரதத்தில் பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசத்தை முடித்த பிறகு, ஓராண்டு தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டனர். அப்போது தங்களை யாரும் அடையாளம் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக தங்களது ஆயுதங்களை விராட தேச எல்லையில் உள்ள ஒரு மயானத்தில் வன்னி மரத்தின் அடியில் ஒளித்து வைத்துவிட்டுச் சென்றனர்.</p><p>ஓராண்டுக்கு பிறகு தங்களது ஆயுதங்களை எடுத்து, சுத்தப்படுத்தி, நெருப்பில் வாட்டி, புதுப்பித்து பூஜை செய்த நாள் ஆடி முதல் தேதி என்று கருதப்படுகிறது. இதனை நினைவு கூறும் விதத்தில் சேலம் மாவட்டத்தில் தொன்று தொட்டு தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் 18 நாள் நடைபெற்ற மகாபாரதப் போரின் தொடக்க நாளாக ஆடி ஒன்றும் முடியும் நாளாக ஆடி 18ம் கொண்டாடப்படுகிறது. </p><p>வீட்டில் இருக்கும் முன்னோரின் ஆயுதங்கள் மற்றும் சிறிய செப்புத் திருமேனிகளை காவிரி ஆற்றில் சுத்தம் செய்து வழிபாடு நடத்தப்படும். ஆடி 18 அன்று கவுரவர்களை வெற்றிகொண்ட பாண்டவர்கள் தங்கள் ஆயுதங்களை ஆற்றில் கழுவி தங்கள் பாவங்களை போக்கினர். அதுபோல சேலம் மாவட்ட மக்கள் கூடுதுறை, கல்வடங்கம், பூலாம்பட்டி, மேட்டூர் என காவிரிக்கு சென்று நீராடி தங்கள் பாவங்களை போக்கிக் கொள்கின்றனர்.  திருமணமான புது ஜோடிக்கு பெண் வீட்டில் தலையாடி என்ற பெயரில் தடபுடல் விருந்து நடைபெறும். எனக்கு தெரிந்து மழவர்நாட்டின் சேலம் மாவட்டம் முழுதும், நாமக்கல், ஈரோடு, தருமபுரி மாவட்டங்களின் வெகு சில பகுதிகளில் மட்டுமே தேங்காய் சுடும் வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. மழவர்நாட்டின் பாரம்பரிய விழாக்களில் முக்கியமானது இந்த ஆடி 1.</p><h2>தேங்காய் சுடும் பண்டிகை</h2><p>ஈரோடு மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதம் பிறப்பை வெகுசிறப்பாக கொண்டாடி வரவேற்பது வழக்கம். அன்று ஈரோட்டில் தேங்காய் சுடும் பண்டிகை பிரசித்தி பெற்றதாகும். அப்போது வீட்டு வாசலில் பெண்கள் தேங்காய்களை சுட்டு, அருகில் உள்ள கோவில்களுக்கு எடுத்துச்சென்று அதை விநாயகருக்கு படைத்து வழிபாடு நடத்துவது தனிச்சிறப்பு. இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%20">ஆடி மாதம்</a> பிறக்கிறது. இதையொட்டி பெண்கள் வீட்டை சுத்தம் செய்து வருகின்றனர். இன்று மாலையில் தேங்காய் சுடும் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது.</p><h2>அழிஞ்சி குச்சி</h2><p>வீட்டு வாசலில் அல்லது கோவில்களின் முன்பு நெருப்பு மூட்டி தேங்காய் சுடுவார்கள். பின்னர் தேங்காயை எடுத்து விநாயகர் முன்பு வைத்து பூஜை செய்வார்கள். பூஜை முடிந்தவுடன் தேங்காயை உடைத்து, உள்ளே ஏற்கனவே வைக்கப்பட்ட பச்சரிசி, பருப்பு, வெல்லம் கலந்த உணவு பிரசாதமாக வழங்கப்படும். இதற்காக ஈரோடு சந்தை மற்றும் காய்கறி, மளிகை கடைகளில் அழிஞ்சி குச்சிகள் நேற்று காலையிலேயே குவிக்கப்பட்டன. அவற்றை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கிச்சென்றதால் அழிஞ்சி குச்சிகள் விற்பனை மும்முரமாக இருந்தது.</p><h2>மருத்துவ குணங்கள்</h2><p>இதுகுறித்து மொத்த வியாபாரி ஒருவர் கூறும்போது, 'சித்த மருத்துவத்திலும். ஆன்மிகத்திலும் மிக முக்கியத்துவம் வாய்ந்த அழிஞ்சில் என்ற மரத்தில் இருந்து இந்த குச்சிகள் வெட்டப்படுகின்றன. அழிஞ்சில் மரத்தின் மருத்துவ குணங்கள் இந்த குச்சியின் மூலம் சுடப்படும் தேங்காயிலும் இறங்குவதால், ஆடி மாத சீதோஷ்ண மாற்றங்களால் ஏற்படும் நோய்களை தடுக்கும் ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. ஈரோடு மாவட்டத்துக்கு தேவையான அழிஞ்சி குச்சிகள் சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியில் இருந்து கொண்டு வரப்படுகிறது. தற்போது 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழிஞ்சி குச்சிகள் சங்ககிரியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. வியாபாரிகளுக்கு ஒரு குச்சி ரூ.15 முதல் ரூ.17 வரையும், பொதுமக்களுக்கு ரூ.20-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது' என்றார்.</p> ]]></content:encoded></item></channel></rss>