<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 19 Jul 2026 04:26:08 +0000</lastBuildDate><item><title>ஞாயிற்றுக்கிழமை: காசிமேட்டில் களைகட்டிய மீன்சந்தை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sunday-the-kasimedu-fish-market-was-bustling-with-activity</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sunday-the-kasimedu-fish-market-was-bustling-with-activity#comments</comments><guid isPermaLink="false">1e84e40d-7942-4c8d-9957-6aac4cf2fac9</guid><pubDate>Sun, 19 Jul 2026 03:54:23 +0000</pubDate><atom:updated>2026-07-19T03:54:23.175Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>காசிமேடு,Kasimedu,Fish Market,மீன்சந்தை</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/rudtxmba/7.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/rudtxmba/7.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>காசிமேடு மீன்பிடி சந்தையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் திருவிழா போன்று கூட்டம் அலை மோதுவது வழக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காசிமேடு மீன் பிடித்துறைமுகம் சந்தை மக்கள் கூட்டத்தால் களைகட்டியது. சந்தைக்கு மீன்களின் வரத்தும் அதிகரித்துள்ளது.</p> <p>வஞ்சிரம், சங்கரா, நண்டு, இறால் உள்ளிட்ட மீன் வகைகள் அதிகளவில் விற்பனையானதால், சந்தையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. மீன் பிரியர்கள், தங்களுக்கு தேவையான மீன்களை போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச்சென்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தனுஷ்கோடி அரிச்சல் முனையில் சாலையை மூடிய மணலால் சுற்றுலா பயணிகள் அவதி
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-face-difficulties-as-sand-covers-the-road-at-dhanushkodis-arichal-munai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-face-difficulties-as-sand-covers-the-road-at-dhanushkodis-arichal-munai#comments</comments><guid isPermaLink="false">5b489594-266c-4c7f-b0e7-ea38392fab5d</guid><pubDate>Sun, 19 Jul 2026 03:27:53 +0000</pubDate><atom:updated>2026-07-19T03:27:53.353Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>தனுஷ்கோடி,Dhanushkodi,அரிச்சல் முனை,Arichal Munai</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/5u1bt901/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/5u1bt901/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமேசுவரம்,  </p><p>ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி கடற்கரை உள்ளது. தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை சாலை அமைக்கப்பட்ட பின்னர் ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்தநிலையில் ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி பகுதியில் கடந்த 2 நாட்களாக வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது. </p><p>குறிப்பாக தனுஷ்கோடி தென்கடல் பகுதியில் கடல் பயங்கர சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தனுஷ்கோடி அரிச்சல்முனை அருகே தடுப்புச்சுவர் மீது கடல் அலை மோதி சாலை வரை தண்ணீர் சீறிப்பாய்கின்றன. ஆக்ரோஷமாக சீறிஎழும் கடல் அலைகளை தடுப்புச்சுவர் கற்கள் மீது ஏறி நின்று, சுற்றுலா பயணிகள் ஆபத்தான முறையில் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.</p><p>அதேபோல பலத்த சூறாவளி காற்று காரணமாக தனுஷ்கோடி அரிச்சல் முனை செல்லும் சாலையில் பல்வேறு இடங்களில் நேற்று கடற்கரை மணல் மூடியுள்ளது. மேலும் தனுஷ்கோடி பகுதியில் புழுதி காற்றும் வீசி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இதேபோல் சாலையை மணல் மூடியது குறிப்பிடத்தக்கது.</p><p>அரிச்சல்முனை சாலைகளில் மூடப்பட்ட மணலை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணியும் நடந்து வந்தது. இருப்பினும் தொடர்ந்து காற்று வீசி வருவதால் மணல் மீண்டும் சாலைகளை மூடிவருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>குதிரை பேர வழக்கில் மேலும் 2 பேர் அதிரடி கைது: ரூ.2.80 கோடி பறிமுதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/2-more-people-arrested-in-horse-trading-case</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/2-more-people-arrested-in-horse-trading-case#comments</comments><guid isPermaLink="false">8f145afd-1b75-4517-976d-115e48682a35</guid><pubDate>Sun, 19 Jul 2026 03:23:32 +0000</pubDate><atom:updated>2026-07-19T03:23:32.484Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,police,போலீசார்,குதிரை பேரம்,horse trading</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/7pwd49eo/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/7pwd49eo/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>குதிரை பேர வழக்கு</h2><p>தவெக ஆட்சியை கவிழ்ப்பதற்காக 15 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க 'மேகாலயா பிராஜக்ட்' என்ற பெயரில் அரங்கேறிய சதித்திட்டம் ஊத்தங்கரை த.வெ.க. எம்.எல்.ஏ. டாக்டர் இளையராஜா சென்னை போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகார் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. </p><p>அவரிடம் ரூ.35 கோடி பேரம் பேசி த.வெ.க. ஆட்சிக்கு எதிராக செயல்பட வேண்டும் என்று மிரட்டல் விடுத்த வழக்கை திருவல்லிக்கேணி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் இதுவரையில் 12 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.</p><h2>2 பேர் அதிரடி கைது</h2><p>இந்த நிலையில் இந்த வழக்கில் கைதானவர்களை அடுத்தடுத்து காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் அளித்த தகவல் அடிப்படையில் இந்த வழக்கில் கொரட்டூரை சேர்ந்த கருணாநிதி (வயது 52), சாலிகிராமம் பகுதியை சேர்ந்த சரவணன் (49), பள்ளிக்கர ணையை சேர்ந்த வினோத் வெங்கடேசன் (51) ஆகிய 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.</p><p>இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரின் வீடுகளுக்கு திருவல்லிக்கேணி போலீசார் சென்றனர். 3 பேரையும் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அவர்களுடைய வீடுகள், அலுவலகங்களும் சோதனை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது. விசாரணை முடிவில் கருணாநிதி, சரவணன் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். வினோத் வெங்கடேசனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.</p><h2>தீவிர விசாரணை</h2><p>த.வெ.க. ஆட்சியை கவிழ்க்கும் முயற்சிக்கு அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளிக்க முன்வந்தால் அவர்களுக்கு முன்பணமாக இந்த தொகையை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த வழக்கில் ஏற்கனவே ரூ.70 லட்சத்துக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது ரூ.2.80 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது எண்ணிக்கையும் 14 ஆக அதிகரித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் குன்னூர் சிம்ஸ் பூங்கா வெறிச்சோடியது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coonoor-sims-park-deserted-due-to-low-tourist-arrivals</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coonoor-sims-park-deserted-due-to-low-tourist-arrivals#comments</comments><guid isPermaLink="false">37ee989e-384a-43ab-8aae-54e342388e66</guid><pubDate>Sun, 19 Jul 2026 03:18:43 +0000</pubDate><atom:updated>2026-07-19T03:18:43.344Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சுற்றுலா பயணிகள்,park,பூங்கா,tourist,குன்னூர்,Coonoor</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/zp4qzhez/11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/zp4qzhez/11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>குன்னூர்,</p><p>சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் குன்னூர் சிம்ஸ் பூங்கா வெறிச்சோடியது. இதனால் நடைபாதை வியாபாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.</p><h2>சுற்றுலா பயணிகள் வருகை குறைவு</h2><p>நீலகிரி மாவட்டம் குன்னூர், ஊட்டி பகுதிகளில் கடந்த மாதம் நடைபெற்ற கோடை விழாவில் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர். இதில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடைபெற்ற பழக்கண்காட்சியில் தமிழகத்தில் உள்ள தோட்டக்கலைத்துறையினர் அரங்குகள் அமைத்து அப்பகுதியில் விளையும் பழங்களைக் கொண்டு விலங்குகளின் உருவங்கள் உருவாக்கப்பட்டு இருந்தது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துச் சென்றனர். மேலும் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணிக ளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. மேலும் தற்போது தொடர் சாரல் மழை பெய்து வருவதாலும் சுற்றுலா பயணிகளின் வரத்து வெகுவாக குறைந்து வருகிறது.</p><h2>பூங்கா வெறிச்சோடியது</h2><p>இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள சிம்ஸ் பூங்காவில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">சுற்றுலா பயணிகளின் </a>வருகை வெகுவாக குறைந்து காணப்பட்டது. இதனால் பூங்கா வெறிச்சோடி காட்சியளித்தது. மேலும் தற்போது பூங்காவில் விதைகள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது மேலும் படகு இல்லம், கண்ணாடி மாளிகை, சிறுவர் பூங்கா, புல்வெளி மைதானம் போன்ற பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் வேர்க்கடலை, சுண்டல், மக்காச்சோளம் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் சிறுவியாபாரிகள் வியாபாரம் நடக்காததால் வேதனை அடைந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>கன்னியாகுமரியில் சூரிய உதயம் காண குவிந்த சுற்றுலா பயணிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-flock-to-kanyakumari-to-witness-the-sunrise</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-flock-to-kanyakumari-to-witness-the-sunrise#comments</comments><guid isPermaLink="false">88c6b287-fea9-421c-844b-017b277c357a</guid><pubDate>Sun, 19 Jul 2026 03:03:19 +0000</pubDate><atom:updated>2026-07-19T03:03:19.818Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,Tourists,சுற்றுலா பயணிகள்,Kanyakumari</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/s3pd3fn5/6.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/s3pd3fn5/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி,</p><p>சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள்.</p><p>இந்தநிலையில் இன்று ஞாயிறு விடுமுறையையொட்டி காலையில் இருந்தே கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை, சன்ரைஸ் பாயின்ட் போன்ற பகுதிகளில் நள்ளிரவு முதல் காத்திருந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். </p><p>அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். படகுத்துறையில் இருந்து சுற்றுலா பயணிகள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்த்து ரசித்து வருகின்றனர். காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள தமிழன்னை பூங்கா, சன்செட் பாயிண்ட், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>வெள்ளலூர் அகழாய்வில் 2,000 ஆண்டுகள் பழமையான அரிய பொருட்கள் கண்டெடுப்பு!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/2000-year-old-rare-artifacts-discovered-in-vellalur-excavations</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/2000-year-old-rare-artifacts-discovered-in-vellalur-excavations#comments</comments><guid isPermaLink="false">963b20e7-c533-4851-ba63-e212c1c4996d</guid><pubDate>Sun, 19 Jul 2026 02:52:22 +0000</pubDate><atom:updated>2026-07-19T02:52:22.899Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவை,அகழாய்வு,Kovai,Excavations,பொருட்கள் கண்டெடுப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/a7e8e1vg/10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/a7e8e1vg/10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>வெள்ளலூர் அகழாய்வு பணியில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அவை பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்படுகின்றன.</p><h2>அகழாய்வு பணிகள்</h2><p>கோவையில் உள்ள மிக பழமையான ஊர்களில் முக்கியமானதாக வெள்ளலூர் உள்ளது. இங்கு 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் வாழ்ந்து உள்ளனர். மேலும் ரோமானியர்களுடன் வணிக தொடர்பு வைத்திருந்தனர். இந்த பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">அகழாய்வு</a> பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தில் 7 குழிகள் தோண்டப்பட்டன. இந்த குழிகளில் இதுவரை சுடுமண் அணிகலன்கள், சங்கு வளையல்கள், மண்பானைகள், பானை ஓடுகள் என 500-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்து உள்ளன. ஒரு சில பழமையான நாணயங்களும் கிடைத்து உள்ளன. இந்த நாணயங்கள் ரோமானியர்களுடன் தொடர்புடையதா? என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.</p><h2>பழமையான பொருட்கள்</h2><p>இந்த நிலையில் வெள்ளலூரில் கிடைத்த 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பொருட்களை பொதுமக்கள் பார்வையிட வசதியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதே இடத்தில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. இதுகுறித்து தொல்லியல் அலுவலர்கள் கூறியதாவது:-பண்டைய தமிழகத்தின் பெருவழிப்பாதையாக வெள்ளலூர், பேரூர் விளங்கியது. இந்த வழியாக சேர நாடு மூலம் வணிகர்கள் ரோமானியர்களுடன் தொடர்பு ஏற்படுத்தினர். இதனால் கோவையில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடைபெற்ற அகழாய்வு பணியின்போது ரோமானிய காலத்துடன் தொடர்புடைய நாணயங்கள் கிடைத்தன. வெள்ளலூர் பகுதியில் 45 ஏக்கர் பரப்பளவில் பொதுமக்கள் வசித்திருக்கலாம் என தெரிகிறது. இங்கு 7 குழிகள் தோண்டி அகழாய்வு நடக்கிறது. இதுவரை 500-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இந்த பொருட்கள் அனைத்தும் இன்று பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. இதனை காலை 10 மணி முதல் மாலை வரை பொதுமக்கள் பார்வயிடலாம்.</p><p>இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rowdy-arrested-with-gun-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rowdy-arrested-with-gun-in-chennai#comments</comments><guid isPermaLink="false">d63c261f-1fa8-4dd7-b1de-6b93d94a291d</guid><pubDate>Sun, 19 Jul 2026 02:52:08 +0000</pubDate><atom:updated>2026-07-19T02:52:08.779Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>துப்பாக்கி சூடு,Chennai,சென்னை,Rowdy,ரவுடி,Chennai police,போலீசார்,Gun shooting</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/jjhvic4e/CHENNAI-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/jjhvic4e/CHENNAI-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பு என்ற தமிழ் அழகு. இவர் காவல்துறையின் ‘ஏ’ (A) கேட்டகிரி பட்டியலில் உள்ள ரவுடி ஆவார். இவர் மீது கொலை வழக்குகள் இரண்டு உட்பட மொத்தம் 19 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. பொதுமக்களை மிரட்டுவது, கட்டப்பஞ்சாயத்து செய்வது மற்றும் கொலை மிரட்டல் விடுத்தது போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் இவர் ஈடுபட்டு வந்துள்ளார்.</p><p>இந்நிலையில், குன்றத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரிக்கு பின்புறம் உள்ள காலி மைதானத்தில், ரவுடி கருப்பு கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக திருமுடிவாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை சுற்றி வளைத்தனர். அப்போது, ரவுடி கருப்பு மற்றும் ஓட்டேரி பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்கின்ற சூர்யா இருவரும் நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது.</p><p>போலீசாரைக் கண்டதும், தான் தயாரித்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை அவர்கள் மீது வீச ரவுடி கருப்பு முயற்சி செய்துள்ளார். மேலும் சுற்றி வளைக்க முயன்றபோது தலைமை காவலர் விஜயகுமாரை வலது முழங்கையில் வெட்டி விட்டு தப்ப முயன்றுள்ளார். உடனே சுதாரித்துக் கொண்ட காவல் ஆய்வாளர் ரவுடியின் வலது கணுக்காலில் சுட்டார். இதில் காயமடைந்த ரவுடி அங்கேயே கீழே விழுந்தார். தொடர்ந்து அவரை போலீசார் பிடித்து கைது செய்தனர்.</p><p>துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ரவுடி கருப்பு தாம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். காயமடந்த தலைமை காவலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னையில் ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 3 ரெயில் பாதை திட்டங்களுக்கு ரெயில்வே ஒப்புதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/railways-approves-three-rail-line-projects-in-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/railways-approves-three-rail-line-projects-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">ac9a10ba-2aec-46b1-ae9a-d1939bf53939</guid><pubDate>Sun, 19 Jul 2026 02:16:00 +0000</pubDate><atom:updated>2026-07-19T02:16:00.865Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,Tamil Nadu,Railway projects,ரெயில்வே திட்டங்கள்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/nrs29cjv/3.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/nrs29cjv/3.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை, </p><p>தாம்பரம் செங்கல்பட்டு இடையே, 4வது புதிய பாதை உட்பட மூன்று ரெயில் பாதை திட்டங்கள், 2,576 கோடி ரூபாயில் செயல்படுத்த, ரெயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியை, தெற்கு ரெயில்வே விரைவில் தொடங்க உள்ளது. </p><p>தெற்கு ரயில்வேயில் நெரிசல் மிக்க பிரதான வழித்தடங்களில், கூடுதல் ரயில் பாதைகள் அமைக்க, ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கி வருகிறது. சென்னை புறநகரில் அதிக நெரிசலை கொண்டுள்ள தாம்பரம் செங்கல்பட்டு தடத்தில், 713 கோடி ரூபாயில் நான்காவது புதிய பாதை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.</p><h2>அரக்கோணம் - செங்கல்பட்டு</h2><p>இதேபோல், அரக்கோணம் - செங்கல்பட்டு தடத்தில் 929 கோடி ரூபாயில், இரட்டை பாதை அமைக்க வும், ஈரோடு - கரூர் தடத்தில் 934 கோடி ரூபாயில் இரட்டை பாதை அமைக் கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.</p><p>இதையடுத்து, அடுத்த கட்ட பணிகளை, தெற்கு ரயில்வே தொடங்கி உள்ளது. இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது;</p><p>தெற்கு ரயில்வேயில் விரைவு, குறுகிய துார பயணியர் ரயில்கள், மின்சார ரயில்கள் என, 1,400 ரயில்கள் இயக்கப்படுகின்றன. கடந்த நிதி ஆண்டில் மட்டும், 152.75 கோடி பேர் பயணம் செய்தனர். இதன் வாயிலாக, 8,215 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.</p><h2>தாம்பரம் -செங்கல்பட்டு</h2><p>கூடுதல் பாதைகள் அமைப்பது, ரயில் நிலையங்கள் மேம்பாடு, சிறப்பு ரயில்கள் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வறு திட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறோம். ' தாம்பரம் -செங்கல்பட்டு இடையே, 4வது பாதை, அரக்கோணம் செங்கல்பட்டு மற்றும் கரூர் தடத் ஈரோடு தில், இரட்டை பாதைகள் என, 2,576 கோடி மதிப்பிலான பணிகளுக்கு ரயில்வே ஒப்புதல்அளித்துள்ளது. </p><p>நிலம் கையகப்படுத்துவது, கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ள, 'டெண்டர்' வெளியிட உள்ளோம். இதேபோல், திருச்சி, மதுரை, கேரளா மாநிலம் பாலக்காடு கோட்டங்களிலும், பல்வேறு ரயில் பாதை பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும் முடியும்போது, 2030ல், தற்போதுள்ளதை காட்டிலும், 50 சதவீதம் கூடுதலாக ரயில்கள் இயக்க முடியும். </p><p>இவ்வாறு அவர்கள் கூறினர். </p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் உத்தரவிட்டும் மீண்டும் சர்ச்சை..! அரசு பள்ளியில் ஆய்வு நடத்தி ‘ரீல்ஸ்’ வெளியிட்ட த.வெ.க. எம்.எல்.ஏ.</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-mla-conducts-inspection-at-government-school-and-releases-reels</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-mla-conducts-inspection-at-government-school-and-releases-reels#comments</comments><guid isPermaLink="false">a10f8f60-29c8-4170-8099-0fb09ee519dc</guid><pubDate>Sun, 19 Jul 2026 02:08:15 +0000</pubDate><atom:updated>2026-07-19T02:08:15.143Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,ரீல்ஸ்,தர்மபுரி,Dharmapuri,அரசு பள்ளி,Reels,Govt school,பென்னாகரம்,Pennagaram,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,tvk mla</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/nchlzpy1/vachi.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/nchlzpy1/vachi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தர்மபுரி, </p><p>தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன், அக்கட்சியினர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் ஆய்வு நடத்துவது போன்ற வீடியோக்கள் ரீல்சாக வலம் வந்தது. அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.</p><h2>ரீல்ஸ் வெளியிடக்கூடாது - முதல்-அமைச்சர் விஜய்</h2><p>இதையடுத்து, அரசு பள்ளிகளில் ஆய்வு நடத்தி ரீல்ஸ் வெளியிடக்கூடாது என்று <a href="https://www.dailythanthi.com/topic/vijay">தமிழக முதல்-அமைச்சர் விஜய்</a>, தனது கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.</p><h2>பள்ளியில் ஆய்வு</h2><p>இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. கஜேந்திரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி வகுப்பறை, சத்துணவுக்கூடம் ஆகியவற்றை ஆய்வு செய்த அவர் மாணவ-மாணவிகள் நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுரைகளை வழங்கி உள்ளார்.</p><h2>ரீல்ஸ் வீடியோ</h2><p>இதேபோல் பெரும்பாலை பகுதியில் உள்ள பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவ- மாணவிகள் சிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர்கள் அந்த பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதாரநிலையத்தில் சிகிச்சை பெற்றனர். </p><p>அங்கு சென்று மாணவ-மாணவிகளை பார்த்த பென்னாகரம் எம்.எல்.ஏ. கஜேந்திரன் அவர்களிடம் நலம் விசாரித்தார். இந்த நிகழ்ச்சிகள் தொடர்பான ரீல்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கிய 7 போலீசார் பணியிடை நீக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/7-police-officers-suspended-after-being-caught-in-anti-corruption-raid</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/7-police-officers-suspended-after-being-caught-in-anti-corruption-raid#comments</comments><guid isPermaLink="false">87f2db2d-9696-4fbb-8f49-19ff5f37ffd3</guid><pubDate>Sun, 19 Jul 2026 02:00:18 +0000</pubDate><atom:updated>2026-07-19T02:00:18.888Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,பணியிடை நீக்கம்,Anti-Corruption Police,போலீசார்,Anti-Corruption Department,லஞ்ச ஒழிப்பு சோதனை,லஞ்ச ஒழிப்பு துறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/v0yc326c/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/v0yc326c/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>தேனி,</p><p>தேனி மாவட்டம் போடிமெட்டு, குமுளி மலைப்பாதையில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடிகள், போடி முந்தலில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சோதனைச்சாவடி ஆகிய 3 இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 10-ந்தேதி அதிகாலையில் சோதனை செய்தனர். இந்த சோதனைகளின் போது 3 இடங்களில் இருந்து கணக்கில் வராத மொத்தம் ரூ.49,690-ஐ லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.</p><p>இந்த சோதனையின் போது முந்தல் மதுவிலக்கு சோதனைச் சாவடியில் மதுவிலக்கு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கணேசன், ஏட்டு உமாநாத் ஆகியோர் பணியில் இருந்தனர். போடிமெட்டு சோதனைச் சாவடியில் ஏட்டுகள் ராஜேஸ் கண்ணன், பாலமுருகன் ஆகியோரும், குமுளி சோதனைச் சாவடியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன், ஏட்டுகள் பாஸ்கர், அருளானந்தம் ஆகியோரும் பணியில் இருந்தனர்.</p><p>லஞ்ச ஒழிப்பு சோதனையை தொடர்ந்து 3 இடங்களில் பணியாற்றிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 7 பேரும் தேனி ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டனர். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை அளித்தனர். </p><p>இதையடுத்து துறை வாரியான நடவடிக்கையாக 2 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 7 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கே.எஸ்.பிரவீன் கவுதம் உத்தரவிட்டார். ஒரே நேரத்தில் 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஈரோடு: 16 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-case-registered-against-a-young-man-for-marrying-a-16-year-old-girl</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-case-registered-against-a-young-man-for-marrying-a-16-year-old-girl#comments</comments><guid isPermaLink="false">96daadea-399d-4fd6-9d05-d14eacd87e01</guid><pubDate>Sun, 19 Jul 2026 01:49:15 +0000</pubDate><atom:updated>2026-07-19T01:49:15.089Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமணம்,Marriage,Case,வழக்கு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/me3ojif5/police.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/me3ojif5/police.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>ஈரோடு,</p><p>நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி, கடந்த 16-ந்தேதி தனது நண்பருடன் ஈரோடு பஸ் நிலையம் வந்தார். அப்போது, சிறுமியின் நண்பருக்கு தெரிந்த 20 வயது மதிக்கத்தக்க செந்தில்குமார் என்ற வாலிபர் அங்கு வந்துள்ளார். அப்போது சிறுமி, செந்தில்குமாருடன் பேசி உள்ளார். இதையடுத்து சிறுமியின் நண்பர், அவசர வேலையாக செல்வதாக கூறி விட்டு அங்கிருந்து தலைமறைவானார். இதையடுத்து ஈரோடு வ.உ.சி. பூங் காவிற்கு சிறுமியை அழைத்து சென்று செந்தில்குமார் சிறுமிக்கு தாலி கட்டி உள்ளார். பின்னர் இருவரும் ஈரோடு பஸ் நிலையம் வந்து, அங்கிருந்து நாமக்கல் செல்வதற்காக அரசு பஸ்சில் ஏறி அமர்ந்தனர். பஸ் சிறிது தூரம் சென்றது.</p><p>பஸ் பயணிகள் சிறுமியின் கழுத்தில் கிடந்த தாலியை பார்த்து சந்தேகம் அடைந்து செந்தில்குமாரிடமும், சிறுமியிடமும் விசாரித்தனர். அப்போது செந்தில்குமார், பஸ்சில் இருந்து இறங்கி தப்பி தலைமறைவானார். இதைத் தொடர்ந்து பஸ் பயணிகள் இதுகுறித்து, ஈரோடு அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று சிறுமியை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். </p><p>பின்னர் சிறுமியின் தாயை வரவழைத்து புகார் பெறப்பட்டு, செந்தில்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள செந்தில்குமாரை போலீசார் தேடி வருகின்றனர். சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டி இருப்பதால் அரசின் குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு அ.தி.மு.க. ஒன்றிணைய சாத்தியமில்லை - செங்கோட்டையன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-unification-is-not-possible-after-mgr-and-jayalalithaa-sengottaiyan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-unification-is-not-possible-after-mgr-and-jayalalithaa-sengottaiyan#comments</comments><guid isPermaLink="false">29e049b9-e075-4a16-91ac-19b41075cc66</guid><pubDate>Sun, 19 Jul 2026 01:47:37 +0000</pubDate><atom:updated>2026-07-19T01:47:37.416Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,செங்கோட்டையன்,அ.தி.மு.க.,admk அ.தி.மு.க.,KA Sengottaiyan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/o0an91hv/sengottaiyan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  செங்கோட்டையன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/o0an91hv/sengottaiyan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோபிசெட்டிபாளையம்</p><p>ஈரோடு மாவட்டம் கோபியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது:- குதிரை பேரம் தொடர்பாக அ.தி.மு.க.வினர் தங்கள் நெஞ்சில் கை வைத்து சொல்ல வேண்டும். </p><h2>ஒன்றிணைய சாத்தியம் இல்லை</h2><p>41 எம்.எல்.ஏ.க்களை மட்டும் வைத்துக்கொண்டு முதல்-அமைச்சர் ஆகலாம் என்று கூறினார்களா? இல்லையா? இதுகுறித்து தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் தெளிவாக விளக்கியபிறகும் அதற்கு இதுவரை அ.தி.மு.க.விடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அதனால்தான் நாங்கள் வெளியே வருகிறோம் என்று அந்த கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூறினார்கள் வட துருவமும், தென் துருவமும் ஒருபோதும் இணைய போவதில்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85.%E0%AE%A4%E0%AE%BF.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95."> அ.தி.மு.க. </a>ஒன்றிணைய சாத்தியம் இல்லை என்பதை காட்டும் விதமாகவே அந்த கட்சியில் இருந்து பிறர் வெளியேறி வருகின்றனர்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: பைக் விபத்தில் முதியவர் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-elderly-man-dies-in-bike-accident</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-elderly-man-dies-in-bike-accident#comments</comments><guid isPermaLink="false">d56e6701-45f1-429c-b5e9-317f2f2721bd</guid><pubDate>Sun, 19 Jul 2026 01:39:22 +0000</pubDate><atom:updated>2026-07-19T01:39:22.804Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Elderly man,முதியவர்,Death,உயிரிழப்பு,bike accident,பைக் விபத்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/4dq0g5nm/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதியவர் உயிரிழப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/4dq0g5nm/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், காடல்குடி அருகே பைக்கில் இருந்து நிலைதடுமாறி விழுந்து காயமடைந்த முதியவர், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.</p><h2>பைக் விபத்து</h2><p>தூத்துக்குடி மாவட்டம், காடல்குடி போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்த செண்பகம் மகன் நாகப்பாண்டி (வயது 68). இவர் கடந்த 5-ம் தேதி தனது பைக்கில் காடல்குடியில் இருந்து விளாத்திகுளம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார்.</p><h2>முதியவர் உயிரிழப்பு</h2><p>இந்த விபத்தில் பலத்த காயமடைந்த நாகப்பாண்டியை அருகில் இருந்த பொது மக்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். இந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பைக் விபத்து</a> சம்பவம் குறித்து காடல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>‘நான் இறந்தால் த.வெ.க. நிர்வாகிகள்தான் காரணம்’ - நகர செயலாளர் ஆடியோவால் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-i-die-tvk-functionaries-will-be-responsible-city-secretarys-audio-clip-sparks-a-stir</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-i-die-tvk-functionaries-will-be-responsible-city-secretarys-audio-clip-sparks-a-stir#comments</comments><guid isPermaLink="false">5155c5f9-f0b6-4348-accb-6bf381c00b4c</guid><pubDate>Sun, 19 Jul 2026 01:31:19 +0000</pubDate><atom:updated>2026-07-19T01:31:19.114Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,Tamilnadu,தமிழகம்,தர்மபுரி,Dharmapuri,ஆடியோ,audio,பாப்பாரப்பட்டி,தவெக நிர்வாகி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/c7aaggnr/uyire.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/c7aaggnr/uyire.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தர்மபுரி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/dharmapuri">தர்மபுரி</a> மாவட்டம் பாப்பாரப்பட்டி பேரூராட்சி பகுதியில் த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. </p><h2>முறையான அழைப்பு இல்லை</h2><p>இதையொட்டி அந்த பகுதியில் உள்ள கோவிலில் நடந்த சிறப்பு பூஜைக்கு பென்னாகரம் எம்.எல்.ஏ.கஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் வந்தனர். அப்போது அங்கு வந்த பாப்பாரப்பட்டி நகர த.வெ.க. செயலாளர் ரமேசின் தாயார் முனியம்மாள் கட்சி நிகழ்ச்சிகளுக்கு எனது மகனுக்கு முறையான அழைப்பு வரவில்லை. </p><h2>28 ஆண்டுகளாக விஜய் ரசிகர்</h2><p>இதுவரை எந்த நிகழ்ச்சிக்கும் எனது மகனை அழைக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.</p><p>இந்த நிலையில் பாப்பாரப்பட்டி நகர செயலாளர் ரமேஷ் சமூக வலைத்தளத்தில் ஒரு ஆடியோ வெளியிட்டார். அதில் 28 ஆண்டுகளாக நான் விஜய் ரசிகராக போஸ்டர் ஒட்டி உள்ளேன்.</p><h2>நான் இறந்தால் என் சாவுக்கு..</h2><p>நகர செயலாளராக கட்சிக்கு ஒருநாள் கூட தவறாமல் உழைத்து உள்ளேன். ஆனால் கட்சி நிகழ்ச்சிகளுக்கு எனக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை. நான் இறந்தால் என் சாவுக்கு குறிப்பிட்ட சிலர்தான் காரணம் என்று நிர்வாகிகளின் பெயரை குறிப்பிடுகிறார். </p><p>இந்த ஆடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சிவகங்கை: மின் இணைப்பு மாற்ற ரூ.500 லஞ்சம்; இளநிலை பொறியாளர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sivaganga-junior-engineer-arrested-for-accepting-rs-500-bribe-to-change-electricity-connection</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sivaganga-junior-engineer-arrested-for-accepting-rs-500-bribe-to-change-electricity-connection#comments</comments><guid isPermaLink="false">eeb340e2-aec3-45e5-835b-2db0a3ac3882</guid><pubDate>Sun, 19 Jul 2026 01:20:12 +0000</pubDate><atom:updated>2026-07-19T01:20:12.259Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrested,லஞ்சம்,Bribery,சிவகங்கை,Sivagangai,Change,மாற்றம்,மின் இணைப்பு,Electricity connection,இளநிலை பொறியாளர்,junior engineer</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/zqfvugau/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இளநிலை பொறியாளர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/zqfvugau/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை, </p><p>சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியில் மின் இணைப்பு மாற்ற ரூ.500 லஞ்சம் வாங்கிய <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">இளநிலை பொறியாளர் </a>மற்றும் ஒரு மின் ஊழியர் என 2 பேர் கைது செய்யப்பட்டனர்.</p><h2>மின் இணைப்பு மாற்ற ரூ.500 லஞ்சம்</h2><p>சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே மணக்குடி மின் பகிர்மான அலுவலகத்தில், வீட்டிற்கான மின் இணைப்பு வகையை மாற்றுவதற்காக நுகர்வோர் ஒருவரிடம் இளநிலை பொறியாளர் சையது (வயது 48) என்பவர் ரூ.500 லஞ்சம் கேட்டுள்ளார். </p><h2>இளநிலை பொறியாளர், மின் ஊழியர் கைது</h2><p>லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தார். அதன்பேரில், நேற்று ரசாயனம் தடவிய நோட்டுகளை சையதுவிடம் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். மேலும், இதற்கு உடந்தையாக இருந்த மின் ஊழியர் பஞ்சநாதன்(36) என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மதுரை: பற்கள் விழுந்த விரக்தியில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-elderly-man-commits-suicide-by-hanging-himself-in-despair-after-losing-teeth</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-elderly-man-commits-suicide-by-hanging-himself-in-despair-after-losing-teeth#comments</comments><guid isPermaLink="false">4e239fe0-1afb-4221-b204-3ef776b53100</guid><pubDate>Sun, 19 Jul 2026 01:13:18 +0000</pubDate><atom:updated>2026-07-19T01:13:18.579Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,முதியவர்,Suicide by hanging,தூக்குப்போட்டு தற்கொலை,old man,problem,பிரச்சினை,விரக்தி,பற்கள்,Teeth,Despair</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/209zufsr/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/209zufsr/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p>மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் அனைத்து பற்களும் விழுந்து உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஏற்பட்ட விரக்தியில <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தூக்குப்போட்டு தற்கொலை</a> செய்து கொண்டார். </p><h2>அனைத்து பற்களும் விழுந்ததால் முதியவர் அவதி</h2><p>மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 60). இவருடைய அனைத்து பற்களும் விழுந்ததாகவும், அதனால் சரியாக உணவு சாப்பிட முடியாமல் அவதிப்பட்டதாகவும் கூறப்படுகிறது. </p><h2>தூக்குப்போட்டு தற்கொலை</h2><p>மேலும் அவருக்கு உடல்நலக்குறைவு இருந்ததாகவும் தெரிகிறது. இதனால், விரக்தி அடைந்த பாலசுப்பிரமணியன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>&apos;நீட்&apos; தேர்வில் தமிழகத்தின் சாதனை... முதல் 100 இடங்களில் 9 மாணவர்கள் இடம்பிடிப்பு!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadus-achievement-in-the-neet-exam-9-students-ranked-in-the-top-100</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadus-achievement-in-the-neet-exam-9-students-ranked-in-the-top-100#comments</comments><guid isPermaLink="false">c825e294-9e1f-4f44-be13-da68fc9b7187</guid><pubDate>Sun, 19 Jul 2026 01:10:53 +0000</pubDate><atom:updated>2026-07-19T01:10:53.393Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழகம்,நீட் தேர்வு,மாணவர்கள்,students,&apos;NEET&apos; exam,For Tamil Nadu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/5st7topb/neet.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/5st7topb/neet.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>நடப்பாண்டு 'நீட்' தேர்வு முடிவில் முதல் 100 இடங்களில் தமிழக மாணவர்கள் 9 பேர் இடம் பெற்று சாதனை படைத்திருக்கின்றனர்.</p><h2>'நீட்' தேர்வு முடிவு</h2><p>மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. 2026-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 3-ந்தேதி நடத்தப்பட்ட நிலையில், அதில் வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வு கடந்த மாதம் (ஜூன்) 21-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 19 லட்சத்து 99 ஆயிரத்து 895 பேர் எழுதியதில், 11 லட்சத்து 21 ஆயிரத்து 185 பேர் வெற்றி பெற்றிருக்கின்றனர்.</p><p>மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு நடந்த இந்த தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த 9 மாணவ-மாணவிகள் இடம் பெற்று இருக்கின்றனர். முதல் 100 இடங்களில்  வெங்கடபதி வேலாயுதம் (அகில இந்திய அளவில் 12-வது இடம்), ஸ்ரீனிகா (27-வது இடம்), சுடர் (45-வது இடம்), வனிஷா சதீஷ் (51-வது இடம்), சபரி (59-வது இடம்), ஜெய்கிருஷ்ணா (75-வது இடம்), சாம்விதா (82-வது இடம்), நவீதனா (88-வது இடம்), நிகில் சிவானந்தன் (92-வது இடம்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.</p><h2>2017-ல் ஒருவர் கூட இல்லை</h2><p>இது முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், டாப்-100-ல் இடம்பெறும் தமிழக மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. 2017-ம் ஆண்டில் இருந்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D">நீட் தேர்வை</a> தமிழக மாணவ-மாணவிகள் எழுதி வருகிறார்கள். அந்த ஆண்டில் முதல் 100 இடங்களில் ஒரு மாணவர் கூட இடம்பெறவில்லை. அதற்கு அடுத்த ஆண்டில் (2018) கீர்த்தனா என்ற மாணவி 12-வது இடத்தில் வந்தார். அந்த ஆண்டில் ஒருவர்தான் இடம் பெற்றார்.</p><p>2019-ல் சுருதி என்ற ஒரு மாணவி மட்டும் இடம் பெற்றிருந்தார். அதே போல், 2020-ல் ஸ்ரீஜன், மோகனபிரபா ரவிச்சந்திரன், சுவேதா ஆகிய 3 பேர் இடம் பெற்றனர். 2021-ல் கீதாஞ்சலி, பிரவீன், பிரசென்ஜித், அரவிந்த் ஆகிய 4 பேரும், 2022-ல் திரிதேவ் விநாயகா, ஹரிணி ஆகிய 2 பேரும், 2023-ல் பிரபஞ்சன், கவுஸ்தவ்பவுரி, சூரியா சித்தார்த், வருண், சாமுவேல் ஹரிஷித், ஜேக்கப் பவின் ஆகிய 6 பேரும், 2024-ல் சையத் ஆரிபின் யூசுப், சைலஜா, ஆதித்யா குமார் பாண்டா, ஸ்ரீராம், ரஜனீஷ், ஜெயதி பூர்வஜா, ரோஹித், சபரீசன் ஆகிய 8 பேரும் இடம் பெற்றிருந்தனர்.</p><p>கடந்த ஆண்டில் (2025) சூரிய நாராயணன், அபிநீத் நாகராஜ், புகழேந்தி, ஹிருத்திக் விஜய் ராஜா, ராகேஷ், பிரஜன் ஸ்ரீவாரி ஆகிய 6 பேரும் இடம் பெற்றிருந்த நிலையில், 2026-ல் இந்த எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சட்டென மாறும் வானிலை.. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அப்டேட் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chance-of-rain-in-tamil-nadu-over-the-next-5-days-meteorological-centre-update</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chance-of-rain-in-tamil-nadu-over-the-next-5-days-meteorological-centre-update#comments</comments><guid isPermaLink="false">d487d019-8202-4127-80d0-6ec7214d02c7</guid><pubDate>Sun, 19 Jul 2026 01:05:08 +0000</pubDate><atom:updated>2026-07-19T01:05:08.484Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Rain,Weather,வானிலை,தமிழகம்,Weather News,WeatherUpdate,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,weather forecast,வானிலை ஆய்வு மையம்,வானிலை அறிக்கை,weather condition,வானிலை தகவல்,Weather Report,வானிலை முன்னறிவிப்பு,Weather Status,வானிலை அறிவிப்பு,weather center,TN Rain</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/987kdfu5/sat.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மழை, Rain]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/987kdfu5/sat.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>வானிலை செய்திகள் (Weather)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>சுமார் 5.8 கிமீ உயரத்திலிருந்து 7.6 கிமீ உயரம் வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழகப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.</p><p>சுமார் 5.8 கிமீ உயரத்திலிருந்து 7.6 கிமீ உயரம் வரை வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.</p><h2>மழை</h2><p>இதன் காரணமாக <strong>இன்று (19-07-2026):</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><h2>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்</h2><p><strong>நாளை (20-07-2026):</strong> தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>நாளை மறுநாள் (21-07-2026):</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><h2>வடக்கு கடலோர தமிழகம்</h2><p><strong>22-07-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>23-07-2026 மற்றும் 24-07-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</strong></p><p><strong>19-07-2026 முதல் 22-07-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.</p><h2>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</h2><p><strong>19-07-2026 முதல் 22-07-2026 வரை:</strong> கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியும், ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று (19-07-2026):</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மதுபாட்டில்கள் கடத்தல்: போலீஸ் ஏட்டு உள்பட 3 பேர் கைது; கார் பறிமுதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/liquor-smuggling-3-people-arrested-including-police-officer-car-seized</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/liquor-smuggling-3-people-arrested-including-police-officer-car-seized#comments</comments><guid isPermaLink="false">9550b1c7-555f-4185-b4ce-ec8c7d0dcfab</guid><pubDate>Sun, 19 Jul 2026 01:01:29 +0000</pubDate><atom:updated>2026-07-19T01:01:29.258Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thiruvarur,திருவாரூர்,பறிமுதல்,Car,கார்,seized,3 arrested,3 பேர் கைது,Head Constable,மதுபாட்டில்கள்,போலீஸ் ஏட்டு,liquor bottles</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/px2d4716/3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 3 பேர் கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/px2d4716/3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவாரூர், </p><p>திருவாரூர் மாவட்டம், வாளவாய்க்கால் பகுதியில் மதுபாட்டில்கள் கடத்தல் தொடர்பாக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">போலீஸ் ஏட்டு உள்பட 3 பேரை கைது செய்த போலீசார் </a>ரூ.1 லட்சம் மதிப்புள்ள புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள், ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.</p><h2>புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்தல்</h2><p>திருவாரூர் மாவட்டம், வாளவாய்க்கால் பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையில், காரில் கடத்தி வரப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான 300-க்கும் மேற்பட்ட புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.</p><h2>போலீஸ் ஏட்டு உள்பட 3 பேர் கைது</h2><p>இதுதொடர்பாக காரைக்கால் வாஞ்சியூர் பகுதியிலிருந்து மது கடத்தி வந்த மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த குமார் (வயது 35), அருண்குமார்(39) மற்றும் பரவாக்கோட்டை போலீஸ் நிலைய ஏட்டு கார்த்திகேயன்(40) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து, ஒரு காரையும் பறிமுதல் செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த பாகுபலி யானை.. பொதுமக்கள் அச்சம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/baahubali-elephant-enters-residential-area-public-alarmed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/baahubali-elephant-enters-residential-area-public-alarmed#comments</comments><guid isPermaLink="false">fa3f6b13-f1af-4d2b-a7b4-284350017acd</guid><pubDate>Sun, 19 Jul 2026 00:42:52 +0000</pubDate><atom:updated>2026-07-19T00:42:52.556Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,காட்டு யானை,wild elephant</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/hhw0v53o/2.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/hhw0v53o/2.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவை மாவட்டம் சிறுமுகை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் பாகுபலி என்று அழைக்கப்படும் காட்டுயானை சுற்றித்திரிகிறது. அந்த யானை நேற்று முன் தினம் இரவு சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஓடந்துறை காப்பு காட்டு பகுதியில் இருந்து வெளியேறி பாலப்பட்டி அண்ணாநகர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. </p><p>இதனை கண்டதும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சத் தமிட்டும், டார்ச் லைட் அடித்தும் காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது.</p>]]></content:encoded></item><item><title>பெங்களூரு - திருச்சி சிறப்பு ரெயில் ரத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bengaluru-trichy-special-train-cancelled</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bengaluru-trichy-special-train-cancelled#comments</comments><guid isPermaLink="false">bcf012bb-1937-4109-8574-22a554785027</guid><pubDate>Sun, 19 Jul 2026 00:32:35 +0000</pubDate><atom:updated>2026-07-19T00:32:35.286Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்சி,Trichy,ரெயில் சேவை,train service</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/ds8pvw9u/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/ds8pvw9u/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி, </p><p>திருச்சி-பெங்களூரு இடையே இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட சிறப்பு ரெயில், டிக்கெட் முன்பதிவு குறைந்து போனதால் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கு வருகிற 21 மற்றும் 28-ந்தேதி களில் காலை 6.15 மணிக்கு இயக்கப்படுவதாக அறிவித்த சிறப்பு ரெயில் (வண்டி எண்:06007) ரத்து செய்யப்படுகிறது. </p><p>இதேபோல, பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு வருகிற 21 மற்றும் 28-ந் தேதிகளில் மாலை 3 மணிக்கு இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட சிறப்பு ரெயிலும் (எண்:06008) ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மண்புழு உரத்தை பயன்படுத்தி மண் வளத்தை பாதுகாக்கலாம் - வேளாண்மை அதிகாரி விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/soil-fertility-can-be-preserved-using-vermicompost-agriculture-officer-explains</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/soil-fertility-can-be-preserved-using-vermicompost-agriculture-officer-explains#comments</comments><guid isPermaLink="false">a986251b-bfe1-49bd-af2a-80197f260132</guid><pubDate>Sat, 18 Jul 2026 23:58:24 +0000</pubDate><atom:updated>2026-07-18T23:58:24.516Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>agriculture,Tanjore,தஞ்சை,வேளாண்மை,Agriculture Department,வேளாண்மை அதிகாரி தகவல்,மண்புழு உரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/l5dfif7s/Untitled-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/l5dfif7s/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சை,</p><p>மண்புழு உரத்தை பயன்படுத்தி மண் வளத்தை பாதுகாக்கலாம் என வேளாண்மை அதிகாரி விளக்கம் அளித்து உள்ளார்.</p><p>இது குறித்து சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><h2>மண்புழு உரம்</h2><p>வேளாண்மையில் ஒரு முக்கிய அங்கமாக மண்புழு உரம் திகழ்கிறது. கால்நடைகளின் சாணம், இலை, தழை, கோழி எச்சம், தென்னை நாற்கழிவு மற்றும் மக்கக்கூடிய அனைத்து சருகுகளையும் உண்டு மண்புழுக்கள் உரமாக வெளியேறுகின்றன. மண்புழு உரம் தயாரிக்க நிழல் பாங்கான இடத்தில் தொட்டிகளை அமைத்து கழிவுகளை நிரப்பி, மக்க வைத்த பின் மண்புழுக்களை 3 முதல் 4 கிலோ வரை விட வேண்டும். மண்புழு உரத் தொட்டியில் 60 சதவீதம் ஈரப்பதம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.</p><h2>மண் வளம்</h2><p>பயிருக்கு தேவையான <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஊட்டச்சத்துக்களை </a>வழங்க, ரசாயன உரங்களை மட்டும் சார்ந்து இருக்காமல், இயற்கை உரங்களையும் இட்டு மண்வளத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டும். இதற்கு மண்புழு உர தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு கைகொடுக்கும். மண்புழு உரத்தில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, தாவர வளர்ச்சி ஊக்கிகள் உள்ளன. இந்த மண்புழு உரத்தை நெல் மற்றும் காய்கறி பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தண்டவாள புதுப்பிக்கும் பணி: சேலம் வழியாக செல்லும் 2 ரெயில் சேவையில் மாற்றம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/track-renewal-work-changes-to-the-services-of-two-trains-passing-through-salem</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/track-renewal-work-changes-to-the-services-of-two-trains-passing-through-salem#comments</comments><guid isPermaLink="false">260538cc-7bef-418f-a29a-a53047645599</guid><pubDate>Sat, 18 Jul 2026 23:05:59 +0000</pubDate><atom:updated>2026-07-18T23:05:59.255Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,சேலம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/bj17uoq2/railway.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/bj17uoq2/railway.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம் ,</p><p>ஈரோடு - சேலம் ரெயில்வே வழித்தடத்தில் மகுடஞ்சாவடி-வீரபாண்டி ரோடு ரெயில்வே நிலையம் இடையே தண்டவாள பாதையை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, சேலம் வழியாக இயக்கப்படும் 2 ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. </p><h2>சேவையில் தாமதம்</h2><p>இதன்படி நாளை (திங்கட்கிழமை), 22 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் எர்ணாகுளம் டாட்டா நகர் எக்ஸ்பிரஸ் ரெயில் இந்த வழித்தடத்தில் ஏதேனும் ஒரு பகுதியில் 50 நிமிடங்கள் வரை நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் தாமதமாக புறப்பட்டு செல்லும். </p><p>இதேபோல் ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை, 22 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இந்த ரெயில் வழித்தடத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் 20 நிமிடங்கள் வரை நிறுத்தி வைக்கப்பட்டு, அதன் பின்னர் புறப்பட்டு செல்லும் என்று சேலம் ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">செய்திக்குறிப்பில் </a>கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மது விற்பனை மூலம் அரசின் வருமானத்தை பெருக்கும் எண்ணம் இல்லை - அமைச்சர் விக்னேஷ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-no-intention-to-boost-government-revenue-through-liquor-sales-minister-vignesh</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-no-intention-to-boost-government-revenue-through-liquor-sales-minister-vignesh#comments</comments><guid isPermaLink="false">048dbb27-01a3-4a1f-9a44-f396b7c8f243</guid><pubDate>Sat, 18 Jul 2026 20:12:15 +0000</pubDate><atom:updated>2026-07-18T20:12:15.203Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மது விற்பனை,liquor sales,Minister Vignesh,அமைச்சர் விக்னேஷ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/0vj354pa/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/0vj354pa/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-</p><h2>717 கடைகள் மூடல்</h2><p> "மது விற்பனை மூலம் அரசின் வருமானத்தை பெருக்குவது என்ற வார்த்தையை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். அவ்வாறு மது விற்பனை மூலம் வருமானத்தை பெருக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கோ. முதல்-அமைச்சருக்கோ கிடையாது. அப்படி ஒரு எண்ணம் இந்த அரசுக்கு இருந்திருந்தால், சமீபத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூடியிருக்க மாட்டோம். </p><p>அதை தாண்டியும் மேலும் சில <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கடைகளை</a> மூடும் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. மதுவுக்கு அடிமையானவர்களை மீட்டு எடுப்பதும், அடுத்த தலைமுறையினர் இந்த பிரச்சினையில் சிக்காமல் தடுப்பதுமே அரசின் உறுதியான நோக்கம்" </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>அரசு புதிய முயற்சி: பஸ் பயணச்சீட்டில் விளம்பரம் அச்சிட்டு வருவாய் உயர்த்தும் திட்டம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-new-initiative-advertising-on-bus-tickets-to-boost-revenue</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-new-initiative-advertising-on-bus-tickets-to-boost-revenue#comments</comments><guid isPermaLink="false">48b29753-9cb8-45d5-b55a-c8c39ec30238</guid><pubDate>Sat, 18 Jul 2026 18:20:11 +0000</pubDate><atom:updated>2026-07-18T18:20:11.039Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,Government,அரசு போக்குவரத்துக் கழகம்,State Transport Corporation,Bus ticket,பயணச்சீட்டு,புதிய முயற்சி,மின்னணு பயணச்சீட்டு,tamilnadu State Transport Corporation,தவெக அரசு,அரசு புதிய முயற்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/nrt0533e/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/nrt0533e/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் செலவினங்களை குறைப்பதற்கும் வருவாயை பெருக்குவதற்கும் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆ. விஜய் தமிழன் பார்த்திபனின் முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மின்னணு பயணச்சீட்டுகளின் பின்புறம் விளம்பரங்களை அச்சிடுவதன் மூலம், பயணச்சீட்டுகளை விலையில்லாமல் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு கொள்முதல் செய்து போக்குவரத்துக் கழங்களின் செலவை குறைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.</p><h2>அரசு புதிய முயற்சி</h2><p>அதனை தொடர்ந்து தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, முதற்கட்டமாக ஆறு மாதத்திற்குரிய சுமார் ஒன்பது கோடி ரூபாய் மதிப்புள்ள மின்னணு பயணச்சீட்டுகளை அச்சிடுவதற்கான காகிதச் சுருள் (Paper Roll) விலையில்லாமல் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு கொள்முதல் செய்வதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரும் விபரங்கள் https://tntenders.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.</p><h2>ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது</h2><p>இந்த ஒப்பந்தப்புள்ளிக்கு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">உற்பத்தியாளர்கள் </a>சிறு, குறு மற்றும் பெரிய வணிக நிறுவனங்கள்/ விளம்பரதாரர்கள் / அச்சக நிறுவனங்கள் மற்றும் அவர்களால் நியமிக்கப்படும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் / முகவர்கள் மற்றும் பிற நிறுவனங்களிடமிருந்து, பின்புறம் விளம்பரம் செய்யப்பட்ட மின்னணு பயணச்சீட்டுகள் அச்சிடுவதற்கான காகிதச் சுருள் (Paper Roll), அனைத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கும், ஆறு மாதங்களுக்கு கட்டணமில்லாமல் கொள்முதல் செய்திட மின்னணு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள தரப்பினர் ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்க இதன் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் 132 இடங்களிலிருந்து 33.74 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் அகற்றம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-removes-33-74-metric-tonnes-of-old-goods-from-132-locations</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-removes-33-74-metric-tonnes-of-old-goods-from-132-locations#comments</comments><guid isPermaLink="false">1f6f7a2a-2d9c-4146-aeee-4cc8008dd158</guid><pubDate>Sat, 18 Jul 2026 18:00:01 +0000</pubDate><atom:updated>2026-07-18T18:00:01.489Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/cg5rcdoh/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/cg5rcdoh/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் இன்று (18.07.2026) 132 இடங்களிலிருந்து 33.74 மெட்ரிக் டன் பழைய சோபாக்கள், மெத்தைகள் உள்ளிட்ட பழைய பொருட்கள் பெறப்பட்டு, கொடுங்கையூர் எரியூட்டும் நிலையத்திற்கு கொண்டு சென்று விஞ்ஞான முறையில் எரியூட்டி அகற்றப்பட்டது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>33.74 மெட்ரிக் டன்</h2><p>பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பொதுமக்கள் முன்கூட்டியே தரும் தகவலின் அடிப்படையில், அவர்களின் வீடுகளிலிருந்து பழைய சோபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகள் ஆகிய திடக்கழிவுகளை ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பெற்று அகற்றும் பணி 11.10.2025 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.</p><p>அதனடிப்படையில், இன்று (18.07.2026) மட்டும் 132 நபர்களிடமிருந்து வரப்பெற்ற தகவலின் அடிப்படையில், 33.74 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் பெறப்பட்டு, கொடுங்கையூரில் உள்ள எரியூட்டும் நிலையத்திற்கு எடுத்துச் சென்று விஞ்ஞான முறையில் எரியூட்டி அகற்றப்பட்டது. இதற்காக 42 எண்ணிக்கையிலான வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.</p><h2>“நம்ம சென்னை”</h2><p>ஒவ்வொரு வாரமும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சனிக்கிழமையன்று </a>நடைபெறும் இச்சேவையை பெறுவதற்கு, பொதுமக்கள் முன்கூட்டியே பெருநகர சென்னை மாநகராட்சியின் “நம்ம சென்னை” செயலியில் பதிவு செய்ய வேண்டும் (அல்லது) பெருநகர சென்னை மாநகராட்சியின் 1913 என்ற எண்ணிற்கு தகவல் அளிக்கப்பட வேண்டும் (அல்லது) பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலம் பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ள 94450 61913 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவலை அனுப்ப வேண்டும்.</p><p>இதனடிப்படையில் மாநகராட்சிப் பணியாளர்கள் பதிவு செய்த நபர்களின் வீடுகளுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் நேரடியாகச் சென்று, பழைய சோபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகள் உள்ளிட்ட பொருட்களை சேகரித்து பாதுகாப்பாகவும், அறிவியல் முறையிலும் அகற்றும் பணிகளை மேற்கொள்வார்கள். இச்சேவையினை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சாதிய வெறுப்பைத் தூண்டும் பியூஸ் மானுஷுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும்! - நயினார் நாகேந்திரன் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/piyush-manush-who-incites-caste-based-hatred-must-be-given-appropriate-punishment-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/piyush-manush-who-incites-caste-based-hatred-must-be-given-appropriate-punishment-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">9e292a24-a806-45c1-a3d1-846ebc7b6638</guid><pubDate>Sat, 18 Jul 2026 17:02:23 +0000</pubDate><atom:updated>2026-07-18T17:02:23.651Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/cf7e9gny/nainar.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/cf7e9gny/nainar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>சமூகத் தொண்டர் எனும் போர்வையில் சமுதாயத்தில் நச்சு விதைகளைத் தூவி வரும் பியூஸ் மானுஷ், பிராமண குலத்தினரைத் தாழ்வுபடுத்தியும், அவர்தம் விழுமிய கலாசார அடையாளங்களை அவமதித்தும் பேசியுள்ள காணொளி கடும் கண்டனத்திற்குரியது. திருக்கோயில்களின் மாண்பையும், வழிபாட்டு நெறிமுறைகளையும் அவதூறுகளால் சிதைக்க முயல்வதோடு, சாதிப் பூசல்களைத் தூண்டும் நோக்கில் நச்சு மொழிகளை உதிர்த்திருப்பது அநாகரிகத்தின் உச்சமாகும்.</p><h2>தகுந்த தண்டனை</h2><p>ஆகவே, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழித்துரைத்து, மக்கள் நெஞ்சங்களில் பிரிவினைத் தீயை மூட்ட முயன்ற பியூஸ் மானுஷ் மீது தமிழக அரசும் காவல்துறையும் காலந்தாழ்த்தாது வன்மையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வருங்காலத்தில் எவரும் எந்தவொரு சமுதாயத்தின் மீதும், அவர்தம் நம்பிக்கைகளின் மீதும் அவதூறுச் சேற்றை வாரி வீச நினைக்கக்கூட அஞ்சும் அளவிற்கு முன்னுதாரணமான தகுந்த தண்டனையை வழங்க <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வேண்டுமெனத் </a>தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘மறைமலையடிகளாரின் வாழ்வையும், பணியையும் இன்றைய தலைமுறையினர் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும்’ - மு.க.ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-present-generation-must-certainly-learn-about-the-life-and-work-of-maraimalai-adigal-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-present-generation-must-certainly-learn-about-the-life-and-work-of-maraimalai-adigal-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">414e0946-a999-4d0c-8020-49d40bd02cf7</guid><pubDate>Sat, 18 Jul 2026 16:41:55 +0000</pubDate><atom:updated>2026-07-18T16:41:55.466Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,M.K.Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/m3qa7mv4/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/m3qa7mv4/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-</p><p>“வாழ்த்தாத நாளில்லை வையகம் </p><p>மறைமலையடிகள் மறையாத் திருப்பெயர்</p><p>வாழ்த்தாத நாளில்லை வையகம்!</p><p>பொழுதெல்லாம் தமிழுக் குழைத்த தலைவனை</p><p>வாழ்த்தா நாளில்லை வையகம்” – பாவேந்தர் பாரதிதாசன்!</p><p>“தமிழ் நன்மங்கையின் அழகிய நன்மேனியில் அம்மைத் தழும்புபோல் வடசொற்களைப் புகுத்தாதீர்கள். தனித்தமிழுக்குப் பாடுபடுங்கள்” என வலியுறுத்தி, தமக்கென வாழாமல் தமிழுக்கென வாழ்ந்த மறைமலையடிகளின் 150-ஆவது பிறந்தநாள் நிறைவுப் பெருவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடியிருக்கிறது கழக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை! மறைமலையடிகளாரின் வாழ்வையும் பணியையும் இன்றைய தலைமுறையினர் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும்.</p><p>வேதாசலம் என்ற தன் பெயரையே மாற்றிக்கொண்டு தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் அடிகளார். “இந்தி பொதுமொழியா?” நூல் உள்ளிட்ட தம் பங்களிப்புகளால் இந்தித் திணிப்பை எதிர்த்தார். </p><p>“தமிழர் அனைவரும் பண்டுபோல் தமக்குந் தம் இல்லங்களுக்கும் தம்மூர்களுக்கும் பிறவற்றிற்கு மெல்லாந் தூய தமிழ்ப் பெயர்களையே அமைத்தல் வேண்டும்” என்ற மறைமலையடிகளின் வேண்டுகோளினை ஏற்று நம் பிள்ளைகளுக்குத் தமிழ்ப்பெயர்களைச் சூட்டுவோம்! வாழ்க மறைமலையடிகள் புகழ்!”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>சென்னையில் ஒரே நாளில் 16,922 குடும்பத்தினர் சுய கணக்கெடுப்பு விவரங்களை பதிவு செய்தனர் - மாநகராட்சி தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/16922-families-in-chennai-registered-their-self-enumeration-details-in-a-single-day-corporation-statement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/16922-families-in-chennai-registered-their-self-enumeration-details-in-a-single-day-corporation-statement#comments</comments><guid isPermaLink="false">c7926666-916e-4e41-bf9a-5d6a284b8c86</guid><pubDate>Sat, 18 Jul 2026 16:17:15 +0000</pubDate><atom:updated>2026-07-18T16:17:15.530Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மாநகராட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/q8tmjybv/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/q8tmjybv/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டப் பணிகள் நேற்று முன்தினம் தொடங்கியுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக, இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முழுமையாக டிஜிட்டல் முறையில் நடைபெறுகிறது. இந்த கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமான வீட்டிப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு ஆகஸ்டு 1 முதல் ஆகஸ்டு 30 வரை நடைபெறும். </p><p>அதற்கு முன்னதாக கடந்த 17-ந்தேதி முதல் வருகிற 31-ந்தேதி வரை முதன்முறையாக சுயக் கணக்கெடுப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே தங்களது குடும்பத்தின் விவரங்களை இணையம் வழியாக தாங்களே https://se.census.gov.inஎன்ற சுய கணக்கெடுப்பு இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். தங்களது சுய கணக்கெடுப்பை பதிவு செய்த பின் வழங்கப்படும் சுயகணக்கெடுப்பு பதிவு எண்ணை தங்கள் இல்லத்திற்கு வரும் கணக்கெடுப்பாளரிடம் வழங்கினால் போதுமானது.</p> <p>சென்னையில் நேற்று முன்தினம் ஒரு நாள் மட்டும் 16,922 குடும்பங்கள் சுய கணக்கெடுப்பு மூலம் தகவல்களை பதிவேற்றம் செய்துள்ளனர். எனவே, சென்னையில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் இந்த சுயக் கணக்கெடுப்பிலும், மக்கள் தொகைக் கணக்கெடுப்பிலும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருவண்ணாமலை: பிரபல பிரியாணி கடையில் உணவு சாப்பிட்ட 13 பேருக்கு உடல்நல பாதிப்பு - உணவகம் தற்காலிக மூடல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruvannamalai-13-people-fall-ill-after-eating-at-a-popular-biryani-shop-eatery-temporarily-closed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruvannamalai-13-people-fall-ill-after-eating-at-a-popular-biryani-shop-eatery-temporarily-closed#comments</comments><guid isPermaLink="false">42d0949c-2db8-4df3-b9ae-e9fd52107860</guid><pubDate>Sat, 18 Jul 2026 16:06:40 +0000</pubDate><atom:updated>2026-07-18T16:06:40.151Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,Thiruvannamalai,உணவகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/9gruw4z4/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/9gruw4z4/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை,</p><p>திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பிரபல பிரியாணி கடை இயங்கி வருகிறது. இங்கு உணவு சாப்பிட்ட 4 சிறுவர்கள் உட்பட 13 பேருக்கு வாந்தி உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p> <p>இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அங்குள்ள உணவுப்பொருட்களை சோதனை செய்த அதிகாரிகள், உணவகத்தை 14 நாட்கள் தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு எங்களை கட்டாயப்படுத்த வேண்டாம்-அரசுக்கு பகுதிநேர சிறப்பாசிரியர்கள் கோரிக்கை
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/do-not-compel-us-to-undertake-census-work-part-time-special-teachers-request-to-the-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/do-not-compel-us-to-undertake-census-work-part-time-special-teachers-request-to-the-government#comments</comments><guid isPermaLink="false">3ff0c4d3-2b05-4a3b-9519-89e435842357</guid><pubDate>Sat, 18 Jul 2026 15:35:46 +0000</pubDate><atom:updated>2026-07-18T15:35:46.498Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசு,மக்கள் தொகை,கணக்கெடுப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/90f1atcw/Census.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/90f1atcw/Census.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ்நாடு பகுதிநேர சிறப்பாசிரியர்கள் நலக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெ.ஆற்றலரசு, சென்னையில்  நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்ககளைவிட நாங்கள் குறைந்த ஊதியம் பெற்று வருகிறோம். 15 ஆண்டு காலமாக பணிநிரந்தரம் கேட்டு போராடி வருகிறோம். </p><p>தற்போது அதிகாரிகளின் உத்தரவு என்று கூறி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை செய்யுமாறு தலைமை ஆசிரியர்கள் கட்டாயப்படுத்துகின்றனர்.முதலில் எங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். அதன்பின்னர் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த உத்தரவிடலாம். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title> வைகோ விமர்சனம் செய்தாலும் நாங்கள் அவரை நேசிப்போம்-அமைச்சர் வன்னி அரசு  </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/even-if-vaiko-criticizes-us-we-will-continue-to-love-him-minister-vanni-arasu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/even-if-vaiko-criticizes-us-we-will-continue-to-love-him-minister-vanni-arasu#comments</comments><guid isPermaLink="false">6f54be8a-653f-4c3c-ad11-4a11f49b149d</guid><pubDate>Sat, 18 Jul 2026 15:10:55 +0000</pubDate><atom:updated>2026-07-18T15:10:55.351Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vaiko,வைகோ,வன்னி அரசு,Vanni Arasu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/hfvubey1/vanni-arasu.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  வன்னி அரசு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/hfvubey1/vanni-arasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p>தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு   சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையத்தைவிட்டு வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கோவை அருகே உள்ள கெம்பனூரில் பட்டியல் இன மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் நீண்ட நாட்களாக அரசு பஸ் செல்லாமல் இருந்தது. </p><p>தற்போது அங்கு பஸ் சென்று வருகிறது. அங்கு சென்று அந்தப்பகுதி மக்களை சந்திக்க உள்ளேன். தமிழகம் முழுவதும் <a href="https://www.dailythanthi.com/news/india">சமூக நீதித்துறை</a>க்கு உட்பட்ட விடுதிகளில் ஆய்வு செய்து வருகிறோம்.அந்த வகையில்தான் தமிழக முதல்-அமைச்சர் விஜய் ஆய்வு செய்தார். அப்போது மின்தடை ஏற்பட்டால் சிரமமாக இருக்கிறது எனவே இன்வெர்ட்டர் வேண்டும் என்று கேட்டனர். அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அவர், உடனடியாக நிறைவேற்ற உத்தரவிட்டு உள்ளார். அத்துடன் தரமான உணவு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.</p><p>பள்ளிக்கூடங்களில் வழங்கப்படும் டைரிகளில் சாதி பெயர் கேட்கப்படுவது குறித்த தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஏற்கனவே அறிவித்து உள்ளார். சாதி தொடர்பான அணுகுமுறை பாகுபாடு இருக்கக் கூடாது. அந்த அடிப்படையில் நாங்கள் செயல்படுகிறோம். <a href="https://www.dailythanthi.com/news/india">இரட்டை குவளை</a> முறையை ஒழிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த முறை எங்காவது இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் தீண்டாமையை கடைபிடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை நாங்கள் எப்போதும் நேசிக்கக்கூடியவர்கள். அவர் எந்த விமர்சனம், அவதூறு பரப்பினாலும் நாங்கள் அவரை நேசித்துக்கெண்டே இருப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதி: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sonam-wangchuck-forcibly-hospitalized-communist-party-of-india-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sonam-wangchuck-forcibly-hospitalized-communist-party-of-india-condemns#comments</comments><guid isPermaLink="false">45b6796a-9538-4dcf-884c-45a81aabbe31</guid><pubDate>Sat, 18 Jul 2026 15:06:08 +0000</pubDate><atom:updated>2026-07-18T15:06:08.466Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Communist Party of India,கண்டனம்,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி,அனுமதி,hospital,மருத்துவமனை,Sonam Wangchuk,சோனம் வாங்சுக்,Condemn,admitted</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/2d0oyz63/pandian.gif" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி  மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்

 ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/2d0oyz63/pandian.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டு வந்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D">சோனம் வாங்சுக்</a> வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதி மத்திய அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம். இது குறித்து,  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>காலவரையற்ற உண்ணாவிரதம்</h2><p>நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று, மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி, காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தில் டெல்லி ஜந்தர் மந்தரில்  சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், ஈடுபட்டு வந்தார். அவர் அங்கிருந்து பலவந்தமாக டெல்லி காவல் துறையால் அகற்றப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><h2>கரப்பான்பூச்சி ஜனதா</h2><p>தர்மேந்திரப் பிரதான் பதவி விலக்கோரி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில்,  அப்போராட்டத்திற்கு ஆதரவாக சோனம் வாங்சுக் 21 நாட்களாக உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டு வந்தார்.</p> <h2>ஜனநாயக உரிமை</h2><p>அவரது உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட போதிலும் மன உறுதியுடன் போராடி வந்தார். அவருடனும், போராட்டக்களத்தில் உள்ளோருடனும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக, போராடும் ஜனநாயக உரிமையை சிதைக்கும் வகையில் மத்திய உள்துறை செயல்படுகிறது.</p> <h2>கண்டனம்</h2><p>தனது கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் டெல்லி காவல் துறையை போராடுபவர்களுக்கு எதிராக ஏவிவிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி நாடு முழுவதும் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் போராடி வருகிறார்கள். </p><h2>பதவி நீக்கம் செய்ய வேண்டும்</h2><p>இந்த போராட்டத்தை  மதித்து, தர்மேந்திர பிரதானை உடனடியாக மத்திய அரசு பதவி நீக்கம் செய்ய வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற மாணவர்களின் சாதி விவரம் கட்டாயம் - கல்வித்துறை சுற்றறிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-caste-details-mandatory-to-avail-government-welfare-scheme-benefits-education-department-circular</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-caste-details-mandatory-to-avail-government-welfare-scheme-benefits-education-department-circular#comments</comments><guid isPermaLink="false">b0d68b78-54ea-4353-aa91-d64bf6bee834</guid><pubDate>Sat, 18 Jul 2026 14:43:17 +0000</pubDate><atom:updated>2026-07-18T14:43:17.950Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சுற்றறிக்கை,Education Department,கல்வித்துறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/wwiuhwc0/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/wwiuhwc0/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசு பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு பல துறைகள் சார்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் நேரடியாக அவர்களுடைய வங்கி கணக்கில் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். </p><p>அதில் மாணவர்களின் ஆதார் எண், அவர்களுடைய குடும்ப வருமானம் உள்ளிட்ட முழுமையான விவரங்கள், குறிப்பாக மாணவர்களின் சாதி உள்ளிட்ட விவரங்களும் கண்டிப்பாக கேட்டு பெற வேண்டும் எனவும், அந்த விவரங்கள் எல்லாம் சரியாக உள்ளதா என்பதை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>அதோடு, மாணவர்களின் விவரங்களை கல்வித்துறை இணையதளத்தில பதிவு செய்ய வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதில் ஏதேனும் தவறுகள், குளறுபடிகள் நடந்தால் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள்தான் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>மயிலாடுதுறை கோவில் யானைக்கு ஓய்வு அளிக்க கோரி மனு தாக்கல் - ஐகோர்ட்டில் தள்ளுபடி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/petition-seeking-rest-for-mayiladuthurai-temple-elephant-dismissed-by-high-court</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/petition-seeking-rest-for-mayiladuthurai-temple-elephant-dismissed-by-high-court#comments</comments><guid isPermaLink="false">2d897cfb-9c93-482f-9972-dfd0191da146</guid><pubDate>Sat, 18 Jul 2026 14:11:38 +0000</pubDate><atom:updated>2026-07-18T14:11:38.011Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை ஐகோர்ட்டு,Chennai High Court,elephant,யானை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/mly6r6ul/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/mly6r6ul/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மயிலாடுதுறை மாவட்டம் மயூரநாதர் கோவிலில் உள்ள அபயாம்பிகை என்ற 60 வயது யானைக்கு, தமிழ்நாடு வளர்ப்பு யானைகள் பராமரிப்பு மற்றும் மேலாண்மை விதிகளின்படி ஓய்வு அளிக்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி கோவாவை சேர்ந்த அலோக் அஸ்வினி குப்தா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். </p><p>இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது வனத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், மயூரநாதர் கோவிலில் உள்ள அபயாம்பிகை என்ற யானைக்கு 57 வயதுதான் ஆகிறது என்றும், அந்த யானை முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த விளக்கத்தை ஏற்ற ஐகோர்ட்டு, கோவில் யானைக்கு ஓய்வு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>இடைத் தேர்தலில் வெற்றியை குறி வைத்து பணியாற்றுங்கள்: எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/work-with-the-aim-of-winning-the-by-election-edappadi-palaniswamis-directive</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/work-with-the-aim-of-winning-the-by-election-edappadi-palaniswamis-directive#comments</comments><guid isPermaLink="false">5efac7af-6201-4282-8ec4-6e424e5362ab</guid><pubDate>Sat, 18 Jul 2026 13:52:05 +0000</pubDate><atom:updated>2026-07-18T13:52:05.888Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,எடப்பாடி பழனிசாமி,அதிமுக,Edappadi Palanisami,இடைத் தேர்தல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/hz8a7l38/Edappadi.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/hz8a7l38/Edappadi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தற்போது, அதில் 6 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்து உள்ளனர். மேலும், முன்னாள் அமைச்சர்கள் பலரும் த.வெ.க.வில் ஐக்கியமாகி உள்ளனர். இந்த நிலையில், கட்சியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகிறார். அதில் ஒரு பகுதியாக மாவட்டம் தோறும் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை வழங்கி வருகிறார்.</p><h2>கரூரில் வெற்றி</h2><p>அந்த வகையில் இன்று கரூர் மற்றும் நீலகிரி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து மாலையில் விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டங்களின் போது, பேசிய எடப்பாடி பழனிசாமி, இடைத்தேர்தலில் வெற்றியை குறி வைத்து அனைவரும் பணியாற்றுங்கள். <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அ.தி.மு.க.</a>வில் நல்ல முறையில் இருந்தவர்கள் எல்லாம் மாற்று கட்சிக்கு சென்று தங்கள் மதிப்பை இழந்து என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதை எல்லாரும் நினைத்துப் பாருங்கள். கரூர் தொகுதி ஏற்கனவே நாம் வெற்றி பெற்ற தொகுதி. எனவே, வரப்போகும் இடைத் தேர்தலிலும் கரூர் தொகுதியின் வெற்றிக் கனியை அ.தி.மு.க.வே பெற வேண்டும். </p><h2>கோஷ்டி சண்டை</h2><p>கட்சியில் இருந்து சென்றவர்களைப் பற்றி பேசிக் கொண்டு இருக்காமல், அனைவரும் நம்பிக்கையோடு வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும். அதே போன்று, கட்சியின் வளர்ச்சிக்காகவும் நீங்கள் முழுமூச்சாக உழைக்க வேண்டும். கட்சிப் பணியை சிறப்பாக செய்பவர்களுக்கு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">உள்ளாட்சித் தேர்தலில்</a> உரிய வாய்ப்பு வழங்கப்படும். உள்ளாட்சி தேர்தலில் கோஷ்டி சண்டை போடாமல் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் யாருக்கு அதிக வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பதை பார்த்து அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்போம் என்று எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை: கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அவசரகால ஒத்திகை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-emergency-drill-at-kalpakkam-nuclear-power-station</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-emergency-drill-at-kalpakkam-nuclear-power-station#comments</comments><guid isPermaLink="false">ea7603a5-4dc5-4a94-9c48-0fa3436e3057</guid><pubDate>Sat, 18 Jul 2026 13:49:05 +0000</pubDate><atom:updated>2026-07-18T13:49:05.424Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,emergency,கல்பாக்கம் அணுமின் நிலையம்,drill,ஒத்திகை,Kalpakkam nuclear power plant</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/xbbv9lwr/kalpakkam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அவசரகால ஒத்திகை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/xbbv9lwr/kalpakkam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தை சுற்றிய பகுதிகளில் நடைபெற்ற அவசரகால ஒத்திகை நேற்று  மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து பாதுகாப்புத்துறை தரப்பில் கூறப்படுவதாவது:- </p><h2>சென்னை அணுமின் நிலையம்</h2><p>அணுசக்தி துறையின் கல்பாக்கம் மையத்தில் பல பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இதில் இந்திய அணுமின் கழகத்தின் கீழ் உள்ள சென்னை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">அணுமின் நிலையம்</a>, இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், 'பாவினி' நிறுவனத்தால் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும் உலை, பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் வசதிகள் ஆகியவை இதில் அடங்கும்.</p><h2>கல்பாக்கம் அணுசக்தித்துறை மையம்</h2><p>அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் விதிமுறைகளின்படி, அவசரக்கால தயார்நிலை திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒருங்கிணைந்த கட்டளை, கட்டுப்பாடு, எதிர்வினை முறையில், கல்பாக்கம் அணுசக்தித்துறை மையத்தில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வளாகத்திற்கு வெளியிலான அவசரக்கால ஒத்திகை நடத்தப்படுகிறது. உலையை மின் உற்பத்தி செயல்பாட்டிற்கு கொண்டு செல்வதற்கு முந்தைய ஒழுங்குமுறை தேவைகளுக்கு இணங்க, கல்பாக்கம் வளாகத்தை சுற்றியுள்ள அவசரக்கால திட்டமிடல் மண்டலத்தில் இந்த ஒத்திகை நேற்று நடத்தப்பட்டது.</p><h2>மாவட்ட கலெக்டர்</h2><p>நிகழ்வுக்கான கட்டளை அதிகாரியாக செயல்பட்ட செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் டாக்டர் எம் வீரப்பனின் தலைமையிலான மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமையால் பொதுவெளியில் இந்த ஒத்திகை நடத்தப்பட்டது. அணுமின் நிலையத்தின் நிலைய இயக்குநரும் வளாக அவசரக்கால இயக்குநருமான எஸ்.பி. செல்வகுமரன் பிஎப்பிஆர் நிலைய இயக்குநர் அல்லு ஆனந்த் ஆகியோர் தலைமையிலான கல்பாக்கம் அவசரக்கால குழு இந்த ஒத்திகைக்கான தொழில்நுட்ப உள்ளீடுகளை வழங்கியது. </p><figure><img alt="அவசரநிலை ஒத்திகை" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/5heaeknq/kalpakkam.2.jpg" /></figure><p>அணுமின் நிலையத்தின் வடிவமைப்பு, சிறந்த பாதுகாப்பு ஆகியவை காரணமாக, இத்தகைய அவசரநிலை நிகழ்வுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக குறைவு. ஆனாலும், ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் அதை எதிர்கொள்வதில் தயார்நிலையை சோதிப்பதே இந்த ஒத்திகையின் நோக்கமாகும்.</p><h2>அவசரகால ஒத்திகை </h2><p>மாவட்டத்திலுள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எந்தவித இடையூறும் இன்றி இந்த அவசரகால ஒத்திகை நடத்தப்பட்டது. அணுசக்தி, பேரிடர் மீட்பு ஆகியவை தொடர்புடைய பல்வேறு அமைப்புகளை சேர்ந்த சுமார் 15 மூத்த அதிகாரிகள் இச்சோதனை முயற்சியை நேரில் பார்வையிட்டனர்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோவை மாமன்ற கூட்டத்தில் காங்கிரஸ் பெண் கவுன்சிலரை தாக்க முயற்சி: மாணிக்கம் தாகூர் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/attempt-to-assault-congress-woman-councilor-at-coimbatore-corporation-meeting-manickam-tagore-condemns-the-incident</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/attempt-to-assault-congress-woman-councilor-at-coimbatore-corporation-meeting-manickam-tagore-condemns-the-incident#comments</comments><guid isPermaLink="false">03af1cbe-8103-4f93-bd8a-16d68925971e</guid><pubDate>Sat, 18 Jul 2026 13:22:12 +0000</pubDate><atom:updated>2026-07-18T13:22:12.055Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கண்டனம்,Congress Party,காங்கிரஸ் கட்சி,Manickam Tagore MP,Condemn,மாணிக்கம் தாகூர் எம்.பி.,democratic,ஜனநாயக</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/7zok05a6/manickam-tagore.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர் எம்.பி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/7zok05a6/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கோவை மாமன்ற கூட்டத்தில் காங்கிரஸ் பெண் கவுன்சிலரை தாக்க முயற்சி  என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p> <h2>குற்றச்சாட்டு</h2><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">கோவை மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம்</a> ஜூலை 17 ஆம் தேதி காலை 10.45 மணிக்கு மேயர் ரங்கநாயகி தலைமையில் தொடங்கிய போது, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த காயத்ரி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நான்கு மாமன்ற உறுப்பினர்கள் செம்மொழி பூங்கா திட்ட பணிகளில் ரூபாய் 40 கோடி வரை முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு கூறினார்கள். </p> <h2>தள்ளுமுள்ளு</h2><p>இந்த குற்றச்சாட்டை கூறியதும் தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டு காயத்ரியை பேச விடாமல் தடுத்தனர். அதை மீறி அவர் பேச முயன்றபோது, பெண் என்றும் பாராமல் அவரது சேலையை பிடித்து இழுத்ததோடு, அவரை தாக்க முயற்சித்தார்கள். அதே நேரத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் மீது தி.மு.க. கவுன்சிலர்கள் தள்ளுமுள்ளுகளில் ஈடுபட்டதோடு, தாக்குதலும் செய்ய முற்பட்டார்கள். </p><h2>இடைநீக்கம்</h2><p>இந்நிலையில் மாமன்ற மேயர், காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி மற்றும் நான்கு கம்யூனிஸ்ட் மாமன்ற உறுப்பினர்களையும் இடைநீக்கம் செய்வதாக அறிவித்துவிட்டு சபையை ஒத்தி வைத்தார். பிறகு பிற்பகலில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர் காயத்ரியை மட்டும் இரண்டு மாதத்திற்கு இடைநீக்கம்  செய்து அறிவித்தார். கோவை மாமன்ற கூட்டத்தில் நடைபெற்ற ஜனநாயக விரோத செயலை காங்கிரஸ் கட்சியின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பொதுமக்களிடம் இருந்து 33.74 டன் பழைய பொருட்கள் பெறப்பட்டு எரியூட்டி அகற்றம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/3374-tonnes-of-old-items-collected-from-the-public-in-chennai-were-disposed-of-via-incineration</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/3374-tonnes-of-old-items-collected-from-the-public-in-chennai-were-disposed-of-via-incineration#comments</comments><guid isPermaLink="false">205cb16f-2a54-43a4-bf76-32bec02003da</guid><pubDate>Sat, 18 Jul 2026 13:20:55 +0000</pubDate><atom:updated>2026-07-18T13:20:55.564Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,பழைய பொருட்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/vqffzxzc/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/vqffzxzc/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் இன்று (18.07.2026) 132 இடங்களில் இருந்து 33.74 டன் பழைய சோபாக்கள், மெத்தைகள் உள்ளிட்ட பழைய பொருட்கள் பெறப்பட்டு, கொடுங்கையூர் எரியூட்டும் நிலையத்தில் விஞ்ஞான முறையில் எரியூட்டி அகற்றப்பட்டது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பொதுமக்கள் முன்கூட்டியே தரும் தகவலின் அடிப்படையில், அவர்களின் வீடுகளில் இருந்து பழைய சோபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகள் ஆகிய திடக்கழிவுகளை ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பெற்று அகற்றும் பணி 11.10.2025 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.</p><p>அதனடிப்படையில், இன்று (18.07.2026) மட்டும் 132 நபர்களிடமிருந்து வரப்பெற்ற தகவலின் அடிப்படையில், 33.74 டன் பழைய பொருட்கள் பெறப்பட்டு, கொடுங்கையூரில் உள்ள எரியூட்டும் நிலையத்திற்கு எடுத்துச் சென்று விஞ்ஞான முறையில் எரியூட்டி அகற்றப்பட்டது. இதற்காக 42 எண்ணிக்கையிலான வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.</p><p>ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று நடைபெறும் இச்சேவையை பெறுவதற்கு, பொதுமக்கள் முன்கூட்டியே பெருநகர சென்னை மாநகராட்சியின் “நம்ம சென்னை” செயலியில் பதிவு செய்ய வேண்டும் (அல்லது) பெருநகர சென்னை மாநகராட்சியின் 1913 என்ற எண்ணிற்கு தகவல் அளிக்கப்பட வேண்டும் (அல்லது) பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலம் பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ள 94450 61913 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவலை அனுப்ப வேண்டும்.</p><p>இதனடிப்படையில் மாநகராட்சிப் பணியாளர்கள் பதிவு செய்த நபர்களின் வீடுகளுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் நேரடியாகச் சென்று, பழைய சோபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகள் உள்ளிட்ட பொருட்களை சேகரித்து பாதுகாப்பாகவும், அறிவியல் முறையிலும் அகற்றும் பணிகளை மேற்கொள்வார்கள். இச்சேவையினை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>இணையவழி நிதி மோசடி: மின் - பூஜ்ஜிய எப்ஐஆர் முறையை அறிமுகப்படுத்தியது தமிழக அரசு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-introduces-e-zero-fir-system-for-online-financial-fraud</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-introduces-e-zero-fir-system-for-online-financial-fraud#comments</comments><guid isPermaLink="false">cb15af83-f8e1-4a09-a9e3-475ba287c95e</guid><pubDate>Sat, 18 Jul 2026 13:03:27 +0000</pubDate><atom:updated>2026-07-18T13:03:27.717Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Online,Tamil Nadu Government,தமிழக அரசு,நிதி மோசடி,இணையவழி,Financial fraud</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/vv9ulkif/police.18.07.2026.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காவல்துறை தலைமை இயக்குநர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/vv9ulkif/police.18.07.2026.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF">இணையவழி நிதி மோசடி</a>: மின் - பூஜ்ஜிய எப்ஐஆர் முறையை அறிமுகப்படுத்தியது தமிழக அரசு இது தொடர்பாக காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-</p> <p>இணையவழி நிதி மோசடி தொடர்பான புகார்களை விரைவாகப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளும் வகையில், இணைய குற்ற புகார் தேசிய உதவி எண் 1930-ல் பெறப்படும் புகார்களுக்காக மின் - பூஜ்ஜிய எப்ஐஆர் (e-Zero FIR) முறையை தமிழ்நாடு அரசு செயல்படுத்தியுள்ளது.</p><h2>நடவடிக்கை</h2><p>இணையவழி நிதி மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தவும். மோசடி செய்யப்பட்ட பணத்தை விரைவாக மீட்டெடுக்கும் முயற்சிகளை மேம்படுத்தவும். மத்திய உள்துறை அமைச்சகத்தின் நாடு தழுவிய முயற்சியின் ஒரு பகுதியாக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><h2>மின் - பூஜ்ஜிய எப்ஐஆர்</h2><p>இம்முறையின்படி, 1930 உதவி எண் மூலம் பெறப்படும் ரூ. 1 லட்சத்திற்கு மேற்பட்ட இணையவழி நிதி மோசடி புகார்கள், குற்றம் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு வலையமைப்பு உடன் தானாகவே ஒருங்கிணைக்கப்பட்டு மின் - பூஜ்ஜிய எப்ஐஆர் ( e-Zero FIR) ஆக பதிவு செய்யப்படும். பாதிக்கப்பட்ட நபருக்கு. தாம் அளித்த சைபர் குற்றப் புகாரின் அடிப்படையில் மின் - பூஜ்ஜிய எப்ஐஆர் (e-Zero FIR) பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்.</p><h2>விசாரணை</h2><p>மேலும் தேவையான நடவடிக்கைகளுக்காக குறிப்பிட்டுள்ள சைபர் குற்ற காவல் நிலையத்தில் மூன்று நாட்களுக்குள் நேரில் ஆஜராகுமாறும் எஸ்.எம்.எஸ் (SMS) மூலம் தகவல் தெரிவிக்கப்படும். அதன் பின்னர், அந்த மின் - பூஜ்ஜிய எப்ஐஆர் (e-Zero FIR) மின்னணு முறையில் சம்பந்தப்பட்ட அதிகார வரம்புடைய இணைய குற்ற காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அனுப்பப்படும். பின்னர் அதிகார வரம்பின் அடிப்படையில் வழக்கமான எப்ஐஆர்  ஆக மாற்றப்படும்.</p><p><strong>நேரில் சென்று புகாரை உறுதிப்படுத்த வேண்டும்.</strong></p><p>பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023-ன் விதிகளின்படி, மின்னணு முறையில் அளிக்கப்பட்ட புகாரை உறுதிப்படுத்தி, வழக்குப்பதிவை நிறைவு செய்ய, புகார்தாரர் மூன்று நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நேரில் சென்று தனது புகாரை உறுதிப்படுத்த வேண்டும்.</p><h2>உடனடி சட்ட நடவடிக்கை</h2><p>பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS), 2023-ன் பிரிவு 173-ன் கீழ் மின் - பூஜ்ஜிய எப்ஐஆர் (e-Zero FIR) முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இப்பிரிவு, கைது செய்யத்தக்க குற்றங்கள் தொடர்பான தகவல்களை மின்னணு முறையில் அளிக்க அனுமதிப்பதுடன், அதிகார வரம்பைப் பொருட்படுத்தாமல் மின் - பூஜ்ஜிய எப்ஐஆர் (e-Zero FIR) பதிவு செய்யவும் வழிவகுக்கிறது. இதன் மூலம். அதிகார வரம்பு பின்னர் தீர்மானிக்கப்படுவதால். சட்ட நடவடிக்கைகளை தாமதமின்றி உடனடியாக தொடங்க முடிகிறது.</p><h2>பொன்னான நேரம்</h2><p>1930 உதவி எண் மற்றும் CCTNS ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு மூலம், ஒரே தகவலை மீண்டும் பதிவு செய்ய வேண்டிய அவசியம் நீக்கப்படுகிறது. இதனால். வழக்குப் பதிவு. உரிய காவல் நிலையத்திற்கு மின்னணு பரிமாற்றம் மற்றும் விசாரணை விரைவாக நடைபெறுவதுடன், முக்கியமான பொன்னான நேரம் ( "Golden Hour") நேரத்தில் மோசடி செய்யப்பட்ட பணத்தை முடக்குதல். டிஜிட்டல் ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் பணத்தை மீட்கும் நடவடிக்கைகள் மேலும் துரிதப்படுத்தப்படுகின்றன.</p> <h2>இணையவழி நிதி மோசடி</h2><p>இணையவழி நிதி மோசடி தொடர்பான புகார்களுக்கு பொதுமக்கள் தாமதமின்றி தேசிய இணைய குற்ற உதவி எண் 1930-கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தொடர்புகொள்ள உடனடியாக புகார் அளிப்பதன் மூலம். காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்கவும். மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்டெடுக்கும் வாய்ப்பை அதிகரிக்கவும் இயலும்.</p><p>மின் - பூஜ்ஜிய எப்ஐஆர் (e-Zero FIR) முறை செயல்படுத்தப்பட்டிருப்பது. இணையவழி நிதி மோசடிகளுக்கு எதிராக தமிழ்நாடு காவல்துறையின் விரைவான மற்றும் பொதுமக்களை மையப்படுத்தி எடுக்கும் நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் முக்கியமான முன்னெடுப்பாகும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>