<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 02 Sep 2026 04:14:08 +0000</lastBuildDate><item><title>சேவல் சண்டைக்கு தடை விதிக்க டி.ஜி.பி.க்கு என்ன அதிகாரம் உள்ளது? - ஐகோர்ட்டு கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-authority-does-dgp-have-to-ban-cockfights-high-court-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-authority-does-dgp-have-to-ban-cockfights-high-court-asks#comments</comments><guid isPermaLink="false">051f818e-4566-410e-997d-7e8d7fc0eb8b</guid><pubDate>Wed, 02 Sep 2026 04:13:57 +0000</pubDate><atom:updated>2026-09-02T04:13:57.908Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை ஐகோர்ட்டு,Chennai Highcourt,DGP,டிஜிபி,சேவல் சண்டை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/mqcrf1r0/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/mqcrf1r0/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சேவல் சண்டைக்கு தடை விதிக்க டி.ஜி.பி.க்கு என்ன அதிகாரம் உள்ளது என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.</p><h2>சேவல் சண்டை</h2><p>தமிழ்நாட்டில் சேவல் சண்டைக்கு தடை விதித்து டி.ஜி.பி. கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பரில் சுற்றறிக்கை பிறப்பித்தார். இந்த நிலையில், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் கோவில் திருவிழாக்களில் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கக் கோரி ஈரோட்டைச் சேர்ந்த ஆர்.அருண் குமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.</p><h2>அனுமதி வழங்க வேண்டும்</h2><p>அந்த மனுவில், "கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்களின்போது, ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை, ரேக்ளா பந்தயங்கள் உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். போலீசார் விதிக்கும் நிபந்தனைகளைப் பின்பற்றியே தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் சூதாட்டம் இல்லை. விலங்குகள் துன்புறுத்தப்படுவதும் இல்லை. எனவே, சேவல் சண்டைக்கு தடை விதித்து டி.ஜி.பி. பிறப்பித்துள்ள சுற்றறிக்கையை ரத்து செய்து, சேவல் சண்டை போட்டிகளை நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.</p><h2>என்ன அதிகாரம்?</h2><p>இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில், "மிருக வதை தடை சட்டம் மற்றும் சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை அமர்வு பிறப்பித்த பல்வேறு உத்தரவுகளின் அடிப்படையில்தான் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்சில் நிலுவையில் உள்ளது. இந்த மனுவுக்கு பதிலளிக்க 2 வாரம் அவகாசம் வேண்டும்" என்று கேட்கப்பட்டது.</p><p>இதை ஏற்க மறுத்த நீதிபதி, தமிழ்நாட்டில் சேவல் சண்டைக்கு தடை விதித்து சுற்றறிக்கை பிறப்பிக்க டி.ஜி.பி.க்கு என்ன அதிகாரம் உள்ளது? என கேள்வி எழுப்பி, மனுவுக்கு பதிலளிக்க போலீசாருக்கு உத்தரவிட்டு விசாரணையை வருகிற 7-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.</p>]]></content:encoded></item><item><title>சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த துளியும் மனமில்லாத மோடி அரசு - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/modi-government-has-absolutely-no-intention-of-conducting-a-caste-based-census-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/modi-government-has-absolutely-no-intention-of-conducting-a-caste-based-census-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">a8be6226-0035-4a00-9d08-32ef94daabe4</guid><pubDate>Wed, 02 Sep 2026 03:37:01 +0000</pubDate><atom:updated>2026-09-02T03:37:01.816Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,Census,சாதிவாரி கணக்கெடுப்பு,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore MP,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/b63d2ogo/manickam-tagore.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/b63d2ogo/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கண்துடைப்பு நாடகங்களை நிறுத்திவிட்டு, அறிவியல் பூர்வமான, வெளிப்படையான, முறையான சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்துங்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>சாதிவாரி கணக்கெடுப்பு</h2><p>சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த துளியும் மனமில்லாத ஆர்.எஸ்.எஸ்./மோடி அரசு, சமூகநீதியைத் திட்டமிட்டே சீர்குலைத்துத் தோற்கடிக்க ஒரு மோசடி நாடகத்தை அரங்கேற்றி வருகிறது. "யாருடைய மக்கள்தொகை எவ்வளவோ, அதற்கேற்பவே அவர்களின் உரிமையும் பங்கும் அமைய வேண்டும்" என்ற முழக்கத்தோடு, 50% இடஒதுக்கீட்டு உச்சவரம்பை உடைத்து, விளிம்புநிலை மக்களுக்கு அவர்களின் உண்மையான பிரதிநிதித்துவத்தையும் அதிகாரப் பகிர்வையும் பெற்றுத்தரவே ராகுல் காந்தி 2023யில் நியாய யாத்திரையை முன்னெடுத்தார். அந்த யாத்திரையின் மக்கள் எழுச்சிக்கும் எதிர்க்கட்சி தலைவரின் அழுத்தத்திற்கும் பணிந்து சாதிவாரி கணக்கெடுப்பை ஏற்றுக்கொள்வது போல் காட்டிக்கொண்டு, களத்தில் அதை முழுமையாகக் குளறுபடி செய்து கெடுப்பதுதான் ஆர்.எஸ்.எஸ். மற்றும் மோடி-ஷா கூட்டணியின் நயவஞ்சக சித்தாந்தத் திட்டம்.</p><p>இந்தியாவில் முதல்முறையாக டிஜிட்டல் முறையில் சாதியை எண்ணுகிறோம் என்று தம்பட்டம் அடித்துவிட்டு, உத்தரகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் மலைக்கிராமங்களில் அவசரக் கோலமாகத் தொடங்கியுள்ள கணக்கெடுப்பே இந்த நிர்வாக அலங்கோலத்திற்கு அப்பட்டமான சாட்சி. </p><p>களப் பணியாளர்களுக்கு முறையான வழிகாட்டலோ, நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளோ கிடையாது. 40 கேள்விகளைக் கேட்பதாகக் கூறிச் செல்லும் கணக்கெடுப்பாளர்கள் எந்தவொரு ஆவணச் சரிபார்ப்பும் இன்றி, ஆதார் அட்டை விவரங்களைக்கூட முறையாகப் பதிவு செய்யாமல் செயலியில் தானாக ஒரு 'டிக்' அடித்துவிட்டுச் செல்கிறார்கள்.</p><h2>இடஒதுக்கீட்டு உரிமைக்கு ஆபத்து</h2><p>இதைவிடப் பேராபத்து என்னவென்றால், 1931-ல் 4,147 ஆக இருந்த சாதிகள், 2011 SECC-யில் வரைமுறையற்ற திறந்தவெளிக் கேள்விகளால் 46.7 லட்சமாகச் சிதறிப் பயனற்றதாகிவிட்டது என உச்சநீதிமன்றத்தில் பாஜக அரசே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. SC (1,208) மற்றும் ST (730) பிரிவுகளுக்கு மத்திய அரசிடம் தெளிவான பட்டியல் இருப்பதைப் போல, OBC சாதிகளுக்கான பட்டியலை வைத்து ‘இரண்டடுக்கு வகைப்பாடு’ முறையை அமல்படுத்தாமல், மீண்டும் அதே திறந்தவெளிக் கேள்விகளைத் திணிக்கிறார்கள். இதனால் ஒரு சாதியே பல நூறு சாதிகளாகச் சிதறடிக்கப்பட்டு OBC மக்களின் உண்மையான எண்ணிக்கை திட்டமிட்டு அழிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.</p><p>இந்தக் குளறுபடியான முறையால் தமிழ்நாட்டின் 69% இடஒதுக்கீடு உட்பட நாட்டின் அனைத்து மாநிலங்களில் உள்ள OBC இடஒதுக்கீட்டு உரிமைகளும் ஒட்டுமொத்தமாக நிலைகுலைந்து பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளன. பீகாரிலும் தெலங்கானாவிலும் வெற்றிகரமாகச் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்னணியில், மத்திய அரசுக்கு உண்மையான நோக்கமிருந்தால் ஒன்றியப் பட்டியலிலுள்ள OBC சாதிகள் மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையப் பட்டியலிலுள்ள 252 சாதிகளைக் கொண்டு அறிவியல் பூர்வமாகத் தரவுகளைத் திரட்டியிருக்க வேண்டும். ஆனால், "சாதிவாரி புள்ளிவிவரங்கள் நம்பகத்தன்மையற்றவை" என்ற போலிக் காரணத்தைக் காட்டி இடஒதுக்கீட்டு உச்சவரம்பை உடைக்கும் வாய்ப்பையும், விளிம்புநிலை மக்களின் உரிமைகளையும் ஒழித்துக்கட்டுவதே மோடி அரசின் சதி.</p><p>இந்தக் கணக்கெடுப்பைத் தொடங்குவதற்கு முன்பே இதில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், காங்கிரஸ் தலைவர் கார்கேவும், பிரதமருக்குக் கடிதம் எழுதிய பிறகும், எவ்வித முன்னேற்பாடுகளுமின்றி இந்த நாடகத்தை மோடி அரசு துவக்கியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.</p><h2>சாதிவாரி கணக்கெடுப்பு அல்ல</h2><p>இப்படி அறிவியல் பூர்வமற்ற முறையில் எடுக்கப்படும் இந்தத் தரவுகள் மீண்டும் ஒரு பயனற்ற சாதிவாரி கணக்கெடுப்பாகவே அமையப் போகிறது. மக்களின் கோடிக்கணக்கான வரிப்பணத்தை பாழாக்கிவிட்டு, இறுதியில் "தரவுகள் நம்பகத்தன்மையற்றவை" என்று கூறி, இதை வெளியிடாமல் மூடி மறைப்பதே இவர்களின் திட்டம்!</p><p>மோடி அரசே, நீங்கள் நடத்துவது <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சாதிவாரி கணக்கெடுப்பு</a> அல்ல; மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் சமூகநீதிக்கு எதிரான அப்பட்டமான அரசியல் ஏமாற்று வித்தை! கண்துடைப்பு நாடகங்களை நிறுத்திவிட்டு, அறிவியல் பூர்வமான, வெளிப்படையான, முறையான சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்துங்கள்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெறுவதாக இசக்கி சுப்பையா கடிதம்: சட்டசபை செயலகம் இன்று பதில் கடிதம்?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/isakki-subbiahs-letter-withdrawing-his-resignation-will-the-assembly-secretariat-send-a-reply-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/isakki-subbiahs-letter-withdrawing-his-resignation-will-the-assembly-secretariat-send-a-reply-today#comments</comments><guid isPermaLink="false">aa4dce7f-f51d-450d-aecd-751087578548</guid><pubDate>Wed, 02 Sep 2026 03:05:10 +0000</pubDate><atom:updated>2026-09-02T03:05:10.965Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,TVK,தவெக,Tamilnadu,அதிமுக,தமிழகம்,தமிழக சட்டசபை,TN Assembly,ராஜினாமா,Resign,அரசியல் களம்,Ambasamudram,அம்பாசமுத்திரம்,இசக்கி சுப்பையா,tn politics,Isakki Subbaiah</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/h3tzmllg/isakki.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/h3tzmllg/isakki.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>அம்பாசமுத்திரம் தொகுதியில் இருந்து ராஜினாமா செய்த முன்னாள் எம்.எல்.ஏ. <a href="https://www.dailythanthi.com/topic/esakkisubbiah">இசக்கி சுப்பையா</a>, ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெறுவதாக சட்டசபை செயலகத்திற்கு கடிதம் கொடுத்துள்ளார்.</p><h2>அ.தி.மு.க.வில் பிளவு</h2><p>தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து அ.தி.மு.க.விலும் பிளவு ஏற்பட்டது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சில எம்.எல்.ஏ.க்கள் செயல்படத் தொடங்கினர். தேர்தலில் அ.தி.மு.க.வை எதிர்த்து களம் கண்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்த த.வெ.க.கட்சிக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலர் ஆதரவு தெரிவித்தனர்.</p><h2>25 எம்.எல்.ஏ.க்கள்</h2><p>அரசை அமைப்பதற்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்-அமைச்சர் விஜய் கொண்டு வந்தார். அப்போது அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரின் முடிவுக்கு மாறாக 25 எம்.எல்.ஏ.க்கள், த.வெ.க.வுக்கு ஆதரவளித்தனர். தாராபுரம் சத்தியபாமா, அம்பாசமுத்திரம் <a href="https://www.dailythanthi.com/topic/esakkisubbiah">இசக்கி சுப்பையா</a>, மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார் ஆகியோரும் அவர்களில் இடம் பெற்றிருந்தனர்.</p><h2>எடப்பாடி பழனிசாமி புகார்</h2><p>இந்த நிலையில் அவர்கள் 4 பேரும் திடீரென எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க. கட்சியில் இணைந்துவிட்டனர். அவர்கள் மீது கட்சித் தாவல் சட்டம் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகார் அளித்தார். </p><p>ஆனால் அவர்கள் 4 பேரின் ராஜினாமா கடிதம் உடனடியாக ஏற்கப்பட்டது. அதன் அடிப்படையில், அவர்களின் தொகுதிகள் காலியானதாக இந்திய தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்டு, அதற்கான அறிவிப்பாணையும் அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்டது.</p><p>மேலும், அவர்கள் 4 பேர் மீதும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.</p><h2>சபாநாயகர் மன்னிப்பு</h2><p>இந்த சூழ்நிலையில், திடீரென்று ஏற்பட்ட திருப்பமாக, அவர்கள் 4 பேர் தவிர மற்ற எம்.எல்.ஏ.க்கள் மன்னிப்பு கேட்டனர். அதன் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டதையடுத்து, அவர்களுக்கு சபாநாயகர் மன்னிப்பு அளித்து உத்தரவிட்டார். ஆனால் மன்னிப்பைப் பெற்றிருந்த டாக்டர் சி.விஜய பாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்) ஆகியோர் மற்றொரு நாளில் தங்களின் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்துகொண்டனர்.</p><h2>மீண்டும் தொடருகிறேன்</h2><p>இந்த நிலையில் மற்றொரு திருப்பமாக, <a href="https://www.dailythanthi.com/topic/esakkisubbiah">இசக்கி சுப்பையா</a> கடந்த ஆகஸ்டு 28-ந்தேதியன்று சட்டசபை செயலாளர் சாந்தியிடம் கடிதம் ஒன்றை கொடுத்தார். அதில், தான் ஏற்கனவே கொடுத்திருந்த ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெறுவதாகவும், அந்த கடிதத்தை ஏற்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார். மேலும்,எம்.எல்.ஏ.வாக தொடர விரும்புவதாகவும் அந்தக் கடிதத்தில் இசக்கி சுப்பையா தெரிவித்துள்ளார்.</p><h2>இன்று பதில் கடிதம்?</h2><p>காலியாக அறிவிக்கப்பட்ட தொகுதிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி இடைத்தேர்தல்தான் நடத்தப்பட வேண்டும் என்ற நிலையில், இசக்கி சுப்பையாவின் கடிதத்திற்கு சட்டசபை செயலகம் சார்பில் பதில் கடிதம் அனுப்பப்பட உள்ளது. இன்று அந்தக் கடிதம் அவருக்கு அனுப்பப்படலாம் என்று சட்டசபை செயலக வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சபாநாயகர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>தாம்பரத்தில் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/electricity-board-officer-arrested-for-rs-7000-bribe-in-tambaram</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/electricity-board-officer-arrested-for-rs-7000-bribe-in-tambaram#comments</comments><guid isPermaLink="false">d39882b4-3072-4bd5-b671-0d2bb0cd871e</guid><pubDate>Wed, 02 Sep 2026 03:01:26 +0000</pubDate><atom:updated>2026-09-02T03:01:26.652Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Tambaram,தாம்பரம்,கைது,arrest,லஞ்சம்,Bribery</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/u6wiahu6/Untitled-4.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/u6wiahu6/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தாம்பரத்தில் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டார்.</p><h2>மின் இணைப்பு</h2><p>சென்னை அடுத்த மேற்கு தாம்பரம் கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்தவர் சிவசெல்வன் (47 வயது). இவர் தனது தந்தை ஜெயராமன் பெயரில் உள்ள வீட்டுக்கு கூடுதல் ஒற்றை மின் இணைப்பு கேட்டு கடந்த ஜூலை மாதம் 9-ம்தேதி கடப்பேரி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இதற்கான கட்டணத்தையும் செலுத்தியுள்ளார்.</p><h2>லஞ்சம்</h2><p>ஆனால், கடந்த மாதம் 6-ந்தேதி அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, வீட்டின் மின்திறனை 1 கே.வி.யில் இருந்து 3 கே.வி.யாக உயர்த்தக் கோரி கடந்த மாதம் 10-ந்தேதி மீண்டும் விண்ணப்பித்தார். ஆனால் மின்வாரிய உதவி பொறியாளர் சந்திரன் என்பவர், பணியை முடித்து தருவதற்காக ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த தொகையை ரூ.7 ஆயிரமாக குறைத்ததாக தெரிகிறது.</p><h2>போலீசில் புகார்</h2><p>லஞ்சம் கொடுக்க விரும்பாத சிவசெல்வன், இதுகுறித்து நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனப் பொடி தடவிய ரூ.7 ஆயிரத்தை சிவசெல்வனிடம் கொடுத்து அனுப்பினர்.</p><h2>கைது</h2><p>அப்போது மின்வாரிய அலுவலகத்தில் சந்திரன் இல்லாததால், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, தாம்பரம் சானடோரியம் பகுதிக்கு வருமாறு கூறியுள்ளார். அதன்படி சிவசெல்வன் அங்கு சென்று பணத்தை கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சந்திரனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து ரூ.12,540-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>திருச்சி சமயபுரத்தில் இன்று பாஜக ஆலோசனைக் கூட்டம்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bjp-consultative-meeting-in-samayapuram-trichy-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bjp-consultative-meeting-in-samayapuram-trichy-today#comments</comments><guid isPermaLink="false">04a39329-346f-419a-830a-c3a8d5e0d872</guid><pubDate>Wed, 02 Sep 2026 02:38:52 +0000</pubDate><atom:updated>2026-09-02T02:38:52.914Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,திருச்சி,Trichy,Samayapuram,சமயபுரம்,BJP meeting</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/i34dcag1/Untitled-5.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/i34dcag1/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம், திருச்சி சமயபுரத்தில் இன்று நடைபெறுகிறது. பாஜக மாநிலத் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/nainar-nagendran">நயினார் நாகேந்திரன்</a> தலைமையில் காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது.</p><h2>மேலிடப் பொறுப்பாளர்கள் பங்கேற்பு</h2><p>இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.</p><h2>உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை</h2><p>கூட்டத்தில் தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மேலும், தேர்தல் பணிகளை முன்னெடுப்பது குறித்தும் கட்சியின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்தும் நிர்வாகிகளுடன் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>அடுத்தகட்ட பணிகள் குறித்து ஆலோசனை</h2><p>மாவட்ட வாரியாக கட்சிப் பணிகளின் நிலை, அமைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளன.</p>]]></content:encoded></item><item><title>மது பாட்டிலுக்கு கூடுதல் பணம் வசூலா..? இந்த எண்ணில் புகார் தரலாம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/charging-extra-for-liquor-bottles-you-can-lodge-a-complaint-at-this-number</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/charging-extra-for-liquor-bottles-you-can-lodge-a-complaint-at-this-number#comments</comments><guid isPermaLink="false">48dcaa92-66e6-4c52-a37a-848853fa1812</guid><pubDate>Wed, 02 Sep 2026 02:30:34 +0000</pubDate><atom:updated>2026-09-02T02:30:34.334Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,டாஸ்மாக்,Tasmac,மது விற்பனை,மது பாட்டில்,Liquor Sale,Minister Vignesh,அமைச்சர் விக்னேஷ்,வாடிக்கையாளர் சேவை மையம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/wrtxvspy/kavin.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/wrtxvspy/kavin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மது கடைகள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் மது பிரியர்கள் தங்களின் புகார்களை தெரிவிக்க  வாடிக்கையாளர் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளதாக மது​விலக்கு, ஆயத்​தீர்வை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-</p><p><a href="https://www.dailythanthi.com/topic/tasmac">டாஸ்​மாக்</a> சில்​லறை விற்​பனை நிலை​யங்​கள் மற்​றும் சேவை​கள் தொடர்​பாக நுகர்​வோர், பொது​மக்​கள் தங்​களது புகார்​கள், குறை​கள் மற்​றும் இதர பிரச்​சினை​களை தெரிவிக்​கும் வகை​யில், டாஸ்​மாக் கட்​ட​ணமில்லா வாடிக்​கை​யாளர் சேவை மையம் ஆக.31-ம் தேதி முதல் செயல்​பாட்​டுக்கு கொண்டு வரப்​பட்​டுள்​ளது.</p><p>அதன்​படி, கட்​ட​ணமில்லா <strong>தொலைபேசி எண் 1800-889-2015</strong> மற்றும் அதி​காரப்​பூர்வ <strong>வாட்​ஸ்​அப் எண் 73977 20230</strong> ஆகிய​வற்​றைத் தொடர்​பு​கொண்டு 24 மணி நேர​மும் தெரிவிக்​கலாம். மேலும், டாஸ்​மாக் நிறு​வனத்​தின் அதி​காரப்​பூர்வ சமூக ஊடக கணக்​கு​கள் மூல​மும் புகார் தெரிவிக்​கலாம். புகார்​கள் மீதான நடவடிக்கை தொடர்ந்து கண்​காணிக்​கப்​படும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/qjx1t0eb/pavada.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>பள்ளி விடுதியில் 10-ம் வகுப்பு மாணவிக்கு பிறந்த ஆண் குழந்தை: திருச்சியில் பரபரப்பு..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/10th-grade-student-gives-birth-to-a-baby-boy-in-school-hostel-sensation-in-trichy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/10th-grade-student-gives-birth-to-a-baby-boy-in-school-hostel-sensation-in-trichy#comments</comments><guid isPermaLink="false">a11bcae2-9cda-4828-9d38-cf1d7226737b</guid><pubDate>Wed, 02 Sep 2026 02:28:17 +0000</pubDate><atom:updated>2026-09-02T02:28:17.037Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணவி,Cuddalore,கடலூர்,student,திருச்சி,Trichy,பள்ளி விடுதி,school hostel</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/esriqs75/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/esriqs75/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>திருச்சியில் அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் விடுதியில் தங்கி 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவிக்கு, திங்கள்கிழமை மாலை விடுதி வளாகத்திலேயே ஆண் குழந்தை பிறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி</h2><p>கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி விடுதியில் தங்கி அவர் கல்வி பயின்று வந்துள்ளார்.</p><h2>அரசு மருத்துவமனையில் அனுமதி</h2><p>இந்நிலையில், விடுதியில் தங்கியிருந்த மாணவிக்கு திங்கள்கிழமை மாலை திடீரென பிரசவம் ஏற்பட்டுள்ளது. விடுதி வளாகத்திலேயே அவருக்கு ஆண் <a href="https://www.dailythanthi.com/news/india/karnataka-class-9-student-gives-birth-in-school-toilet-28-year-old-booked-for-assault-1176787">குழந்தை </a>பிறந்துள்ளது. இதையடுத்து, தகவலறிந்த பள்ளி நிர்வாகத்தினர் மாணவியை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.</p><h2>குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை</h2><p>சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் காவல் துறைக்கும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகள் மற்றும் பொன்மலை அனைத்து மகளிர் போலீசார் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர்.</p><h2>பள்ளி நிர்வாகத்திடமும் விசாரணை</h2><p>மேலும், பள்ளிக் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கல்வித்துறை </a>சார்பிலும் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாணவியின் கர்ப்பம் மற்றும் பிரசவம் தொடர்பான முழு விவரங்களையும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.</p><h2>இளைஞர் மீது போலீசார் விசாரணை</h2><p>போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை மாணவி காதலித்து வந்ததாகவும், அதன் மூலம் அவர் கர்ப்பமடைந்ததாகவும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பஞ்சு விலை உயர்வால் அதிகரிக்கும் நூல் விலை: ஏற்றுமதி வர்த்தகம் பாதிப்பு - ஜவுளி தொழில்துறையினர் கவலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rising-yarn-prices-from-cotton-cost-surge-export-trade-hit</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rising-yarn-prices-from-cotton-cost-surge-export-trade-hit#comments</comments><guid isPermaLink="false">79050431-c841-4e51-a99b-ef1a8df52a41</guid><pubDate>Wed, 02 Sep 2026 02:13:22 +0000</pubDate><atom:updated>2026-09-02T02:13:22.220Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஏற்றுமதி,export,Cotton,நூல் விலை,Textile industry,ஜவுளி தொழில்,Yarn price,பஞ்சு விலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/duu6hzbu/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ நூல் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/duu6hzbu/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><p>தொடரும் பஞ்சு விலை உயர்வால், நூல் விலையும் அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜவுளி தொழில்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.</p><h2>நூல் விலை உயர்வு</h2><p>இந்திய பருத்தி கழகத்தின் தவறான அணுகுமுறையால், பருத்தி பஞ்சு விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக, ஜவுளி தொழில்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர். நடப்பு சீசன் தொடக்கத்தில், ரூ.54 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்த ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு விலை, 11 மாதங்களில், ரூ.21 ஆயிரத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதனால், ஒசைரி நூல் விலையும், கிலோவுக்கு ரூ.72 வரை உயர்த்தப்பட்டுள்ளது.</p><h2>செயற்கை விலை உயர்வு</h2><p>இதுகுறித்து நூற்பாலை உரிமையாளர்கள் கூறியதாவது:-</p><p>“நடப்பு பருத்தி ஆண்டில் (2025 அக்டோபர் முதல் 2026 செப்டம்பர் வரை) பஞ்சு உற்பத்தி குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்திக் கொண்ட இடைத்தரகர்கள் அதிகளவில் பஞ்சை கொள்முதல் செய்து இருப்பு வைத்து, செயற்கையாக விலையை உயர்த்தி வருகின்றனர். மேலும், மத்திய அரசு பஞ்சு இறக்குமதிக்கான வரிவிலக்கு சலுகையை காலதாமதமாக அறிவித்ததால், பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.</p><p>நேற்றைய நிலவரப்படி, இதர செலவுகள் நீங்கலாக ஒரு கேண்டி பஞ்சு விலை ரூ.71 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் ஏற்பட்ட பஞ்சு விலை உயர்வை கணக்கில் எடுத்தால், நூல் விலை கிலோவுக்கு ரூ.92 வரை அதிகரித்திருக்க வேண்டும். இருப்பினும், ஜவுளி உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, கிலோவுக்கு ரூ.72 மட்டுமே உயர்த்தியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளனர்.</p><h2>விலை நிர்ணயம்</h2><p>மேலும் இதுதொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் கூறும்போது, “நூல் விலை அடிக்கடி உயர்த்தப்படுவதால் ஏற்றுமதி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய பருத்திக் கழகம் தினசரி பஞ்சு விலையை நிர்ணயம் செய்வதை தவிர்த்து, மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே விலையை நிர்ணயிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.</p><p>மேலும், இடைத்தரகர்களின் தலையீட்டால் பஞ்சு விலை செயற்கையாக உயர்வதைத் தடுக்க, இந்திய பருத்திக் கழகம் நூற்பாலைகளுக்கு மட்டுமே பஞ்சை விற்பனை செய்யும் வகையில் அரசு கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும்” என்றார்.</p>]]></content:encoded></item><item><title>அரசு பள்ளி ஆசிரியரை முட்டிக்கால் போட வைத்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/officials-inquire-into-the-incident-where-a-government-school-teacher-was-made-to-kneel</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/officials-inquire-into-the-incident-where-a-government-school-teacher-was-made-to-kneel#comments</comments><guid isPermaLink="false">44a7bfe0-e636-422f-a155-a8fa60b037a9</guid><pubDate>Wed, 02 Sep 2026 02:03:40 +0000</pubDate><atom:updated>2026-09-02T02:03:40.155Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசு பள்ளி,Perambalur,பெரம்பலூர்,Government School,Government school teacher,அரசு பள்ளி ஆசிரியர்,பெரம்பலூர் செய்திகள்,Perambalur district</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/avgcgnt1/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/avgcgnt1/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பெரம்பலூர்,</p><p>பெரம்பலூர் மாவட்டம், தேனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் மாணவர் ஒருவர், அதே பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களான நல்லாசிரியர் விருது பெற்ற ராஜா மற்றும் சித்ரா ஆகியோர் குறித்து வகுப்பறை கரும்பலகையில் ஆபாசமாக விமர்சித்து, கேலிச்சித்திரம் வரைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த ஜூலை 30-ஆம் தேதி நடைபெற்றதாக தெரிகிறது.</p><h2>மாணவரை கண்டித்த ஆசிரியர்</h2><p>இதையறிந்த வணிகவியல் ஆசிரியர் கபில் தேவ், மாணவரை கண்டித்ததுடன், அவரை முட்டிக்கால் போட வைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மாணவரின் தந்தை ராஜசேகர், பள்ளிக்கு வந்து ஆசிரியர் கபில் தேவிடம் தகராறில் ஈடுபட்டார்.</p><h2>முட்டிக்கால் போட வைத்ததாக புகார்</h2><p>மாணவரின் தந்தையான ராஜசேகர், ஊராட்சி மன்ற செயலராகவும், அவரது மனைவி பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவராகவும் உள்ளனர். பள்ளிக்கு வந்த ராஜசேகர், ஆசிரியர் கபில் தேவிடம் மிரட்டல் விடுத்து, அவரை முட்டிக்கால் போட வைத்ததாக ஆசிரியர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>கலெக்டரிடம் ஆசிரியர்கள் மனு</h2><p>இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி ஆசிரியர்கள், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஷரண்யா அரியிடம் மனு அளித்துள்ளனர். சம்பவம் குறித்து போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விசாரணை </a>மேற்கொண்டு வருகின்றனர்.</p><h2>விசாரணைக்கு பிறகு நடவடிக்கை?</h2><p>பள்ளியில் மாணவர் ஒழுக்கம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை, ஆசிரியரை அவரது பெற்றோர் அவமதித்ததாக எழுந்துள்ள புகார் என இரு கோணங்களிலும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர் வன்கொடுமை சட்டத்தை பயன்படுத்த முடியாது: ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-court-order-person-who-converted-to-christianity-cannot-invoke-the-atrocities-act</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-court-order-person-who-converted-to-christianity-cannot-invoke-the-atrocities-act#comments</comments><guid isPermaLink="false">32be9517-0a59-4407-acda-aaaf70a644c3</guid><pubDate>Wed, 02 Sep 2026 02:00:50 +0000</pubDate><atom:updated>2026-09-02T02:00:50.278Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,Madurai High Court,மதுரை ஐகோர்ட்டு,மதம் மாற்றம்,converted,வன்கொடுமை சட்டம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/1r8rw4fk/mood.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/1r8rw4fk/mood.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p>மதம் மாறியவர்கள் எஸ்.சி., எஸ்.டி. சட்ட நடவடிக்கையை கோர முடியாது என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.</p><h2>சாதி பாகுபாடு</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/தேனி">தேனி</a> மாவட்டம் பெரியகுளம் கள்ளிப்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக ரவிக்குமார் என்பவர் பணியாற்றினார். பின்னர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பள்ளிக்கு அவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.</p><p>இந்த நிலையில் அவர், மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், பட்டியல் சமுதாயத்தை சேர்ந்த இந்துவான என்னை பள்ளி முதல்வர் உள்ளிட்ட சிலர் சேர்ந்து, சாதிய பாகுபாடு காட்டி அவமானப்படுத்தினர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.</p><h2>நேர்மையாக நடக்க வேண்டும்</h2><p>இந்த மனு நீதிபதி விக்டோரியா கவுரி முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-</p><p>மனுதாரர் கிறிஸ்தவ மதத்தில் இணைந்து உள்ளார். அதற்கு ஆதாரம் உள்ளது. ஆனால் மனுவில், நான் ஒரு இந்து என்று கூறியுள்ளார். கோர்ட்டில் வழக்கு தொடரும் நபர் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தில் அளிக்கப்படும் புகாரில் கூறப்படும் சம்பவமானது வேண்டுமென்றே அவமதிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். சம்பவம் பொது இடத்தில் நடந்திருக்க வேண்டும்.</p><h2>தற்காலிக பணி நீக்கம்</h2><p>ஆனால் மனுதாரர் புகாரில் தேதி, இடம் போன்றவை தெரிவிக்கப்படவில்லை. யார் முன்பு அவமானப்படுத்தப்பட்டார் என்பதை கூறவில்லை. தற்காலிக பணி நீக்கம், இடமாறுதல் போன்ற குற்றச்சாட்டுகள்தான் புகாரில் உள்ளன. நிர்வாக நடவடிக்கையை துன்புறுத்தல் எனக்கூறி போலீஸ் நடவடிக்கைக்கு உத்தரவிட முடியாது.</p><h2>நடவடிக்கை கோர முடியாது</h2><p>சிறப்பு தண்டனை சட்டங்களை தவறாக பயன்படுத்துவது இரு தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். பட்டியல் சமுதாயத்தை சேர்ந்தவர் இந்து மதத்தில் இருந்து மதம் மாறிய பிறகு மீண்டும் பழைய மதத்திற்கு திரும்பியதற்கான ஆதாரம் இல்லை என்றால் எஸ்.சி., எஸ்.டி., சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோர முடியாது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.</p><p>இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் வேறு எண்ணெய் வழங்கப்படுமா..? - அமைச்சர் பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-a-different-oil-be-supplied-instead-of-palm-oil-at-ration-shops-ministers-reply</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-a-different-oil-be-supplied-instead-of-palm-oil-at-ration-shops-ministers-reply#comments</comments><guid isPermaLink="false">3912d60c-21bd-4bc4-ac89-7d7f9c2d98fb</guid><pubDate>Wed, 02 Sep 2026 01:39:02 +0000</pubDate><atom:updated>2026-09-02T01:39:02.507Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,தமிழக சட்டசபை,TN Assembly,Assembly Session,ration shops,பாமாயில்,Palm oil,ரேசன் கடைகள்,அமைச்சர் வெங்கடரமணன்,Minister Venkataramanan,சட்டசபை கூட்டத் தொடர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/wenqzzgu/venki.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/wenqzzgu/venki.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாதம் 2 கோடி லிட்டர் பாமாயில் கொள்முதல் செய்கிறோம் என்றும், ஆண்டுக்கு 24 கோடி லிட்டர் தேவைப்படுகிறது என்றும் அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்தார்.  </p><p><a href="https://www.dailythanthi.com/topic/tn-assembly">சட்டசபையில்</a> மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்தில் நித்தியானந்தன் (பொள்ளாச்சி, கொ.ம.தே.க.) பேசும்போது, 'கேரளாவில் கொப்பரை தேங்காயை சமையல் எண்ணெயாக தயாரித்து விற்பனை செய்வது போன்று கூட்டுறவு அங்காடி மூலம் விற்பனை செய்ய வேண்டும். </p><p>ரேஷன் கடைகளில் பொருட்களுக்கு பில் போடுவதில் சிரமம் இருக்கிறது. ஏழை எளிய மக்களை ஆராய்ந்து அவர்களுக்கான ரேஷன் கார்டுகளை வழங்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார்.</p><p>அதற்கு அமைச்சர் வெங்கடரமணன் பதில் அளித்து கூறியதாவது:-</p><p>ரேஷன் கடைகளில் பில் போடுவதில் தாமதம் ஏற்படுகிறது என்று உறுப்பினர் சொல்லி இருக்கிறார். சர்வரை மேம்படுத்தி வருகிறோம். எனவே இதுபோன்ற பிரச்சினைகள் வருங்காலங்களில் இருக்காது. </p><p>ரேஷன் கடைகள், அம்மா உணவகங்கள், அங்காடி மையங்கள், மருத்துவமனைகள், தங்கும் விடுதிகள் போன்ற திட்டங்களுக்காக மாதம் 2 கோடி லிட்டர் பாமாயில் கொள்முதல் செய்கிறோம். ஆண்டுக்கு 24 கோடி லிட்டர் தேவைப்படுகிறது. </p><p>தேங்காய் எண்ணெயை ஒரு மாதம் கொடுத்துவிடலாம். அடுத்த மாதம் கொடுக்க முடியாமல் போய்விடும். ஒரே சீராக கொடுக்க வேண்டும் என்பதற்காகதான் வேறு எண்ணெயை மாற்ற முடியவில்லை. வருங்காலங்களில் வேறு எண்ணெய்கள் கிடைத்தால் கண்டிப்பாக வழங்குவோம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் செயற்கை நுண்ணறிவுக்கான புதிய தொழில் பயிற்சி - அமைச்சர் பர்வேஸ் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-artificial-intelligence-vocational-training-in-government-institutes-minister-parvees</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-artificial-intelligence-vocational-training-in-government-institutes-minister-parvees#comments</comments><guid isPermaLink="false">78dabd77-82ed-4c3a-9aad-76a4fb74acd8</guid><pubDate>Wed, 02 Sep 2026 01:23:43 +0000</pubDate><atom:updated>2026-09-02T01:23:43.481Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Artificial Intelligence,செயற்கை நுண்ணறிவு,அமைச்சர் பர்வேஸ்,தொழில் பயிற்சி நிலையங்கள்,Minister Parvesh</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/d88qoqzu/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் பர்வேஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/d88qoqzu/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் செயற்கை நுண்ணறிவுக்கான புதிய தொழில் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அமைச்சர் பர்வேஸ் தெரிவித்துள்ளார்.</p><h2>குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலம்</h2><p>தமிழக சட்டசபையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை குறித்த மானியக் கோரிக்கை மீது நேற்று எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு பதிலளித்து அமைச்சர் பர்வேஸ் பேசியதாவது:-</p><p>தொழிலாளர்களுக்கு பணியின்போது விபத்துகளின் காரணமாக ஏற்படும் பாதிப்பு மற்றும் மரணத்திற்கு இழப்பீடு வழங்குதல் ஆகிய நிதி சார்ந்த உதவிகளை தொழிலாளர் நலத்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளர் மற்றும் கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக மாற்ற அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.</p><h2>தொழிலாளர்கள் பாதுகாப்பு</h2><p>தமிழ்நாட்டில் 5,415 பதிவு பெற்ற தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. கண்காணிப்பு நடவடிக்கைகளை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அலுவலகம் மூலம் அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பட்டாசு ஆலைகள், வேதிப் பொருட்களை கையாளும் தொழிற்சாலைகளில் தொழிலக பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு குழுக்கள் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தொழிலாளர்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.</p><h2>வேலை வாய்ப்பு முகாம்கள்</h2><p>படித்து முடித்த இளைஞர்கள் தங்களுக்கான வேலை வாய்ப்பை விரைவாகவும், எளிதாகவும் பெற அரசு பல்வேறு முன்னோடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தனியார் துறையிலும் தொழில் முனைவராக முன்னேறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவது இந்த அரசின் முக்கிய நோக்கமாகும். இதுவரை 139 சிறிய மற்றும் 16 பெரிய அளவிலான வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. 513 மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 26,330 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.</p><h2>செயற்கை நுண்ணறிவு</h2><p>வெற்றித்தமிழகம் தொலைநோக்கு பார்வையின்படி ஏஐ (செயற்கை நுண்ணறிவு) மற்றும் மெஷின் லேர்னிங் தொழில்நுட்பத்தின் மிகுந்த முக்கியத்துவம் கருதி, அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் அது தொடர்பான புதிய தொழில் பயிற்சி தொடங்க நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளது. அனைத்து தொழில் பிரிவுகளிலும் மாணவர்கள் நவீன தொழில்நுட்பங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் திட்டங்கள் (ஏ.ஆர் மற்றும் பி.ஆர்) அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>சட்டென்று மாறும் வானிலை.. 16 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்கப்போகும் மழை..!</title><link>https://www.dailythanthi.com/news/weather/rapidly-changing-weather-heavy-rain-set-to-lash-16-districts-today</link><comments>https://www.dailythanthi.com/news/weather/rapidly-changing-weather-heavy-rain-set-to-lash-16-districts-today#comments</comments><guid isPermaLink="false">19f32155-7cd9-45f8-86a9-2c38d1d6eefd</guid><pubDate>Wed, 02 Sep 2026 01:11:19 +0000</pubDate><atom:updated>2026-09-02T01:11:19.523Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,Rain,Weather,வானிலை,தமிழகம்,Weather News,WeatherUpdate,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,வானிலை ஆய்வு மையம்,வானிலை அறிக்கை,Weather Report,வானிலை முன்னறிவிப்பு,weather information,Weather Status,weather center,TN Rain,வானிலை அப்டேட்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/x4dwuek3/rain.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மழை, rain]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/x4dwuek3/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழகத்தில் 5 மாவட்டங்களில் நாளை  இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. </p><h2>மழை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><p>இதன் காரணமாக <strong>இன்று ( 02-09-2026):</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய <a href="https://www.dailythanthi.com/topic/rain">மிதமான மழை</a> பெய்யக்கூடும். </p><p>சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். </p><p>ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>நாளை (03-09-2026):</strong> திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>04-09-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a>யும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>05-09-2026 முதல் 07-09-2026 வரை:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a>யும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை </a>பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong><ins>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</ins></strong></p><p><strong>02-09-2026 முதல் 05-09-2026 வரை:</strong> உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 2-4° செல்சியஸ் வரை உயரக்கூடும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.</p><p><strong><ins>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</ins></strong></p><p><strong>02-09-2026 முதல் 05-09-2026 வரை:</strong> உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p> <h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று (02-09-2026):</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/ மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>மீனவர்களுக்கான எச்சரிக்கை:</h2><p><strong><ins>தமிழக கடலோரப்பகுதிகள்:</ins></strong></p><p><strong>02-09-2026 முதல் 03-09-2026 வரை:</strong> தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>04-09-2026 மற்றும் 05-09-2026:</strong> எச்சரிக்கை ஏதுமில்லை.</p><p><strong><ins>வங்கக்கடல் பகுதிகள்:</ins></strong></p><p><strong>02-09-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>03-09-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>04-09-2026 மற்றும் 05-09-2026:</strong> எச்சரிக்கை ஏதுமில்லை.</p><p>மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p><strong><ins>அரபிக்கடல் பகுதிகள் :</ins></strong></p><p><strong>02-09-2026 முதல் 05-09-2026 வரை:</strong> எச்சரிக்கை ஏதுமில்லை.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தங்கத்தை தொடர்ந்து, வெள்ளி நகைகளுக்கும் ‘ஹால்மார்க்’ முத்திரை கட்டாயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/following-gold-the-hallmark-stamp-is-now-mandatory-for-silver-jewelry-as-well</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/following-gold-the-hallmark-stamp-is-now-mandatory-for-silver-jewelry-as-well#comments</comments><guid isPermaLink="false">8f3f87aa-4e1d-4175-9159-a6370f7b27eb</guid><pubDate>Tue, 01 Sep 2026 23:30:00 +0000</pubDate><atom:updated>2026-09-01T23:30:00.924Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>silver,தங்கம்,gold,வெள்ளி,ஹால்மார்க் முத்திரை,ஹால்மார்க்,Silver Jewelry,வெள்ளி நகை,Hallmark</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/333vjq63/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/333vjq63/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தங்கத்தை தொடர்ந்து, வெள்ளி நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்பதை அடுத்த மாதம் (அக்டோபர்) கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>'ஹால்மார்க்' முத்திரை</h2><p>வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை அதிகரிக்கவும், ஒழுங்குமுறை கண்காணிப்பை பலப்படுத்தவும் அக்டோபர் மாதம் முதல் வெள்ளி நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் தங்க நகைகளுக்கு 'ஹால்மார்க்' முத்திரை கட்டாயமாக்கப்பட்டது. இது படிப்படியாக தற்போது வரை 400 மாவட்டங்களுக்கு விரிவாக்கப்பட்டதை போல, வெள்ளி நகைகளுக்கும் ஒவ்வொரு கட்டமாக அமல்படுத்தப்பட இருக்கிறது. இதற்காக 6 இலக்க 'ஹால்மார்க்' தனித்துவ அடையாள எண் (எச்.யு.ஐ.டி.) முறை மற்றும் உள்கட்டமைப்புகள் விரிவாக்கப்பட்டு வருகின்றன.</p><p>இந்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பான 'பி.ஐ.எஸ்.' 102 மாவட்டங்களில் 341 வெள்ளி பரிசோதனை மையங்களை நடத்தி வருகிறது. இதில் 25 ஆயிரம் நகை வியாபாரிகள் பதிவு செய்துள்ளனர். மேலும் பி.ஐ.எஸ். அமைப்பு 7 தூய்மை தரநிலைகளை அங்கீகரித்துள்ளது.</p><h2>தூய்மை தரம்</h2><p>2005-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் விருப்பத்தின் அடிப்படையில் இருந்த இந்த திட்டத்தில் அதே ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி எச்.யு.ஐ.டி. இணையதளம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 77 லட்சத்துக்கும் அதிகமான வெள்ளி நகைகளுக்கு 'ஹால்மார்க்' வழங்கப்பட்டுள்ளது. 'ஹால்மார்க்' செய்யப்பட்ட நகைகளில் பி.ஐ.எஸ். முத்திரை, 'சில்வர்' என்ற ஆங்கில வார்த்தை, தூய்மை தரம் மற்றும் எச்.யு.ஐ.டி. எண் இடம்பெறும். இதனை 'பி.ஐ.எஸ். கேர்' செயலி மூலம் வாடிக் கையாளர்கள் சரிபார்க்கலாம்.</p><p>'ஹால்மார்க்' முத்திரையை கட்டாயமாக்குவது, நுகர்வோர் தாங்கள் செலுத்தும் பணத்திற்கு ஏற்ற தூய்மையான வெள்ளியைப் பெறுவதை உறுதி செய்யும். மேலும் தூய்மை உத்தரவாதத்தை வழங்கி சந்தைக்கு அதிக வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவரும் என்றும் கூறப்படுகிறது.</p><h2>தண்டனை-அபராதம்</h2><p>பி.ஐ.எஸ். சட்டம் 2016-ன் படி, விதிகளை மீறும் வியாபாரிகளுக்கு ஓராண்டு வரை சிறை அல்லது குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் அபராதம் (பொருட்களின் மதிப்பில் 5 மடங்கு வரை) விதிக்கப்படலாம். முத்திரையை தவறாக பயன்படுத்தினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். இந்தியாவில் பெரும்பாலான நகைக் கடைகள் 92.5 சதவீத ‘ஸ்டெர்லிங்' வெள்ளி தரத்தை பின்பற்றுவதாக அனைத்து இந்திய ரத்தினங்கள் மற்றும் நகைகள் உள்நாட்டு கவுன்சில் அமைப்பு தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காலி மதுபாட்டில்களை திரும்பப் பெற தானியங்கி எந்திரங்கள்: டெண்டர் வெளியீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/automated-machines-for-the-return-of-empty-liquor-bottles-tender-issued</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/automated-machines-for-the-return-of-empty-liquor-bottles-tender-issued#comments</comments><guid isPermaLink="false">ecc56b99-2bc2-4759-8652-f900506050a1</guid><pubDate>Tue, 01 Sep 2026 23:12:48 +0000</pubDate><atom:updated>2026-09-01T23:12:48.382Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt,டாஸ்மாக்,Tasmac,Tasmac Shops,மதுபாட்டில்,liquor bottles</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/67p65xh1/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/67p65xh1/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மதுபானம் குடித்த பிறகு காலிபாட்டில்களை சாலையோரங்களிலும், பொது இடங்களிலும் வீசுவதை தடுக்கும் வகையில், அவற்றை திரும்பப் பெறும் முறையை டாஸ்மாக் நடைமுறைப்படுத்தி உள்ளது. தற்போது இந்தப் பணியை தானியங்கி எந்திரங்கள் மூலம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மதுபான பாட்டில்களை தானாகப் பெற்றுக்கொள்ளும் எந்திரங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட உள்ளன. </p><p>இந்த எந்திரத்தில் காலி பாட்டிலை செலுத்தினால், பாட்டில் சரிபார்க்கப்பட்டு, அதற்கான ரூ.10 ஊக்கத்தொகை நுகர்வோருக்கு வழங்கப்படும். சேகரிக்கப்படும் காலி பாட்டில்கள் வகைப்படுத்தப்பட்டு, மறுபயன்பாடு அல்லது மறுசுழற்சிக்கு அனுப்பப்படும். மறுபயன்பாட் டுக்கு ஏற்ற கண்ணாடி பாட்டில்கள் சம்பந்தப்பட்ட மதுபான உற்பத்தியாளர்களிடம் திருப்பி வழங்கப்படும். மற்ற கண்ணாடி மற்றும் உலோகப் பொருட்கள் பதிவு செய்யப்பட்ட மறுசுழற்சி நிறுவனங்களுக்கு அனுப்பப்படும்.</p><p>இந்தப் பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தை தேர்வு செய்ய ரூ.50 கோடி மதிப்பில் தமிழக அரசு டெண்டர் வெளியிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்த காலம் 7 ஆண்டுகள் ஆகும். இந்த டெண்டர் விண்ணப்பங்களை அக்டோபர் 5-ந்தேதி காலை 11 மணி வரை சமர்ப்பிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பேச்சுவார்த்தையில் உடன்பாடு... தவெக- காங்கிரஸ் சலசலப்புக்கு முற்றுப்புள்ளி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/agreement-in-talks-tvk-congress-tussle-ends</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/agreement-in-talks-tvk-congress-tussle-ends#comments</comments><guid isPermaLink="false">5053a91b-e896-41db-9c73-281accb361ba</guid><pubDate>Tue, 01 Sep 2026 22:04:37 +0000</pubDate><atom:updated>2026-09-01T22:04:37.728Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,காங்கிரஸ்,Congress,Rahul Gandhi,ராகுல்காந்தி,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/jlikdp45/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/jlikdp45/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முதல்-அமைச்சர் விஜய்யுடன் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி நடத்திய பேச்சுவார்த்தையில் த.வெ.க.-காங்கிரஸ் சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.</p><h2>காங்கிரஸ் கட்சி தான் பெரிது</h2><p>2029 நாடாளுமன்ற தேர்தலில் யார் பிரதமர் வேட்பாளர் என்பதில் த.வெ.க.- காங்கிரசாரிடையே மோதல் போக்கு உருவாகியது. இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் நடை பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார், "எங்கள் தலைவர் ராகுல்காந்தி 2029 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமராக வருவார். ஒருவேளை த.வெ.க. அதற்கு உடன்படாவிட்டால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 பேரும், அமைச்சரவையில் நீடிக்க மாட்டோம், எங்களுக்கு காங்கிரஸ் கட்சி தான் பெரிது" என்று பேசி இருந்தார்.</p><p>அமைச்சர் ராஜேஷ்குமாரின் இந்த பேச்சு த.வெ.க.-காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர், தனது சமூக வலைத்தள பக்கத்தில், சிங்கம் யானை நரி என ஒரு குட்டிக்கதையை பகிர்ந்து சிங்கமும், யானையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட போது புரிந்து கொண்டனர் என்று இந்த சலசலப்பை முடித்துக் கொள்ளும் வகையில் கருத்து வெளியிட்டு இருந்தார்.</p><h2>முதல்-அமைச்சருடன் சந்திப்பு</h2><p>இந்த நிலையில், நாடாளுமன்ற வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான நிலைக்குழுவில் இடம்பெற்றுள்ள மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள், தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்யை சென்னை தலைமைச் செயலகத் தில் நேற்று முன்தினம் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது, எம்.பி.க்களாக இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் முதல்-அமைச்சர் விஜய்யை தனியாக சந்தித்து பேசி உள்ளனர்.</p><p>அப்போது, கூட்டணியின் ஒற்றுமைக்கு பாதிப்பு இருக்கக்கூடாது என்றும், தொண்டர்கள் மத்தியில் வீண் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை யாரும் பேச வேண்டாம் என்றும் காங்கிரஸ் டெல்லி மேலிடம் கூறியதை முதலமைச்சர் விஜய்யிடம் தெரிவித்தனர். அதை ஏற்றுக்கொண்ட முதல்-அமைச்சர் விஜய், 'கூட்டணி தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம்' எனக் கூறியதாக காங்கிரஸ் வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>ரூ.25 லட்சம் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம் எப்போது அமலுக்கு வரும்? - அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/when-will-the-rs-25-lakh-free-medical-insurance-scheme-come-into-effect-minister-arunraj-clarifies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/when-will-the-rs-25-lakh-free-medical-insurance-scheme-come-into-effect-minister-arunraj-clarifies#comments</comments><guid isPermaLink="false">06df994b-be32-40f6-abdc-cfde000d1b8c</guid><pubDate>Tue, 01 Sep 2026 21:24:29 +0000</pubDate><atom:updated>2026-09-01T21:24:29.698Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Medical Insurance,மருத்துவ காப்பீடு,Minister Arunraj,அமைச்சர் அருண்ராஜ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/dlu34k4j/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/dlu34k4j/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>இலவச மருத்துவ காப்பீடு</h2><p>சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணி பேசும்போது, இலவச மருத்துவ காப்பீடு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சலுகையை பெறுவதற்கு உச்ச வருமானம் எவ்வளவு என கேள்வி எழுப்பினார். அதேபோன்று அ.தி.மு.க. கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அவர்களுக்கு செலுத்தப்படுகின்ற பிரிமீயம் தொகை எவ்வளவு அது, இத்திட்டத்தில் சேர்ந்துள்ளவர்களுக்கு எப்போது செலுத்தப்படும் என கேள்வி எழுப்பினார்.</p><h2>பிரிமீயம் உயராது</h2><p><strong>இந்த கேள்விகளுக்கு பதில் அளித்து அமைச்சர் அருண்ராஜ் கூறியதாவது:-</strong></p><p>ரூ.25 லட்சம் மருத்துவ காப்பீட்டுக்கும் தற்போது இருக்கும் அதே வருமான உச்சவரம்பு தான். தற்போது ஒரு நபருக்கு ரூ.800 முதல் 900 வரை பிரிமீயம் செலுத்தப்படுகிறது. ரூ.25 லட்சமாக மருத்துவ காப்பீடு உயர்த்தப்பட்டுள்ளதால் பிரிமீயம் தொகை 5 மடங்காக ஆகிவிடுமா? அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வியெல்லாம் எழுகிறது.</p><p>இன்சூரன்ஸ் திட்டத்தை பொறுத்தமட்டில், அதுபோன்று இன்சூரன்ஸ் தொகை உயரும் போது பிரீமியம் தொகை அதே மடங்கு உயராது. இன்சூரன்ஸ் கிளைம் ரூ.25 லட்சமாக இருந்தால் கூட அந்த தொகைக்கு கிளைம் செய்கிறவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் என்பதால் பிரிமீயம் தொகை 5 மடங்கெல்லாம் உயராது.</p><h2>புதிய டெண்டர்</h2><p>இத்திட்டத்துக்கு, எவ்வளவு நிதி தேவைப்படும் என்பதை கணக்கில் கொண்டு தான் நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். ஏற்கனவே இருந்து வரும் மருத்துவ காப்பீட்டு திட்டம் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. ஜனவரி மாதத்தில் புதிய டெண்டர் கோரும் போது பிரிமீயம் தொகை எவ்வளவு வரும் என்பது தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.</p><p>அமைச்சரின் இந்த பதில் மூலம் ரூ.25 லட்சம் மருத்துவ காப்பீட்டு திட்டம் ஜனவரி மாதத்துக்கு பின்பு அமலுக்கு வரும் என்பது தெரிகிறது.</p>]]></content:encoded></item><item><title>நான் 10 ஆண்டுகளாக கதர் ஆடையை அணிகிறேன்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-have-been-wearing-khadar-for-10-years-speaker-jcd-prabhakar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-have-been-wearing-khadar-for-10-years-speaker-jcd-prabhakar#comments</comments><guid isPermaLink="false">bd869eec-fafd-4518-b2ae-50d01e74b63d</guid><pubDate>Tue, 01 Sep 2026 21:05:56 +0000</pubDate><atom:updated>2026-09-01T21:05:56.933Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,TN Assembly,ஜே.சி.டி.பிரபாகர்,JCD Prabhakar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/kevxqe6q/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/kevxqe6q/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டசபையில் நேற்று கைத்தறி துறை மீதான மானியக்கோரிக்கை நடைபெற்றது. கதர் ஆடைகள் குறித்து உறுப்பினர்கள் பேசினார்கள். தே.மு.தி.க. உறுப்பினர் பிரேமலதா, 'கேப்டன் விஜயகாந்த் தனது வாழ்நாள் முழுவதும் கதர் ஆடையை மட்டுமே உடுத்தி இந்தியர்களுக்கும். அனைத்து தமிழர்களுக்கும் ஒரு உதாரணமாக வாழ்ந்தார்' என்றார்.</p><p>த.வெ.க. உறுப்பினர் சபரி ஐயங்கரன் (பெரியகுளம்) பேசுகையில், 'நான் காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் படித்தேன். அப்போது ஒரு நாள் மட்டும் கதர் ஆடையை அணிவோம். அப்படி இங்கே எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒரு நாள் கதர் ஆடையை மட்டும் அணிந்து வர வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்தார்.</p><p>அதற்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், 'நான் கடந்த 10 ஆண்டுகளாக கதர் ஆடையைத்தான் அணிந்து வருகிறேன்' என்றார்.</p>]]></content:encoded></item><item><title>பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்? - முதல்-அமைச்சர் விஜய் அறிவிக்க வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-secretariat-at-pattinapakkam-chief-minister-vijay-likely-to-make-an-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-secretariat-at-pattinapakkam-chief-minister-vijay-likely-to-make-an-announcement#comments</comments><guid isPermaLink="false">f00ad366-7657-481d-9c3c-2a78918011d6</guid><pubDate>Tue, 01 Sep 2026 20:07:00 +0000</pubDate><atom:updated>2026-09-01T20:07:00.875Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,பட்டினப்பாக்கம்,Secretariat,Pattinapakkam,தலைமைச் செயலகம்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/m9b042g7/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/m9b042g7/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தற்போதுள்ள தலைமைச் செயலகத்தில் அலுவலர்கள் நடமாட்டம், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டவற்றிற்கு இடவசதி குறைபாடு உள்ளது. புதிய கட்டிட வசதிகளை அமைப்பதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. எனவே தலைமைச் செயலகத்தை வேறு இடத்துக்கு மாற்ற த.வெ.க. அரசு தீவிரம் காட்டி வருகிறது.</p><p>கடந்த ஆட்சியாளர்களால் செய்ய முடியாததை முதல்-அமைச்சர் விஜய் செய்துள்ளார் என்ற நிலையான வரலாற்றுப் புகழ்ச்சியை பெற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கோயம்பேடு, கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலைய வளாகம், பட்டினம்பாக்கம், நந்தம்பாக்கம் போன்ற பகுதிகளில் உள்ள இடங்கள் பரிசீலிக்கப்பட்டன.</p><p>பட்டினப்பாக்கத்தில் 24 ஏக்கரில் புதிய தலைமைச் செயலகத்தை கட்டலாம் என்று ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், தற்போது நடந்து வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் அவை விதி 110-ம் மூலம் முதல்-அமைச்சர் விஜய் அதற்கான அறிவிப்பை வெளியிடலாம் என்றும் கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>இலவச தட்கல் மின்இணைப்புக்கு வசூலித்த ரூ.2,431 கோடி எங்கே? - மதுரை ஐகோர்ட்டு கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/where-is-the-2431-crore-collected-for-free-tatkal-electricity-connections-madurai-high-court-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/where-is-the-2431-crore-collected-for-free-tatkal-electricity-connections-madurai-high-court-asks#comments</comments><guid isPermaLink="false">3a9d1b40-ebcc-4bbf-bb85-69c4a30f2437</guid><pubDate>Tue, 01 Sep 2026 19:28:44 +0000</pubDate><atom:updated>2026-09-01T19:28:44.609Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>electricity,Madurai High Court,மதுரை ஐகோர்ட்டு,Electricity connection,TNEB,மின்இணைப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/8thk1w4i/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/8thk1w4i/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>தமிழக அரசு விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில், 2025-26-ம் நிதியாண்டில் இந்த மானியத்தொகை ரூ.7,280 கோடி ஒதுக்கப்பட்டதாகவும், 2026-27-ம் ஆண்டு ரூ.7,431 கோடியாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, சாதாரண முறையில் காத்திருக்கும் ஏழை விவசாயிக ளுக்கு இணைப்பு வழங்கப்படாமல், 'தட்கல்' முறையில் பணத்தை செலுத்துவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகக் கூறி மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த வக்கீல் செல்வகுமார் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.</p><p>மேலும், அந்த மனுவில், 2021-22-ம் ஆண்டு முதல் தட்கல் திட்டத்தின் கீழ் 89,289 விண்ணப்பங்கள் பெறப்பட்டு ரூ.2,431 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 44,296 பேர் இன்னும் இணைப்புக்காக காத்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வசூலிக்கப்பட்ட இந்தத் தொகை எங்கு பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து சிறப்பு தணிக்கை நடத்த வேண்டும் என கோரப்பட்டிருந்தது.</p><p>இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "தட்கல் முறையினால் ஏழை விவசாயிகள் பாதிக்கப்படமாட்டார்களா?" என எழுப்பிய கேள்வியுடன், இந்தத் தொகை எதன் அடிப்படையில் வசூலிக்கப்பட்டது மற்றும் அதற்கான தணிக்கை விவரங்கள் என்ன என்பது குறித்து மின்சார மற்றும் நிதித்துறை அதிகாரிகள் விரிவான பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>கேரளத்துக்கு கனிம வளம் கடத்தி செல்ல லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sub-inspector-and-head-constable-transferred-to-the-armed-reserve-for-accepting-bribes-to-facilitate-the-smuggling-of-mineral-resources-to-kerala</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sub-inspector-and-head-constable-transferred-to-the-armed-reserve-for-accepting-bribes-to-facilitate-the-smuggling-of-mineral-resources-to-kerala#comments</comments><guid isPermaLink="false">56e65453-89b1-4078-b8c6-17d254e81742</guid><pubDate>Tue, 01 Sep 2026 18:10:51 +0000</pubDate><atom:updated>2026-09-01T18:10:51.465Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,Kanyakumari,லஞ்சம்,சப்-இன்ஸ்பெக்டர்,Sub Inspector,Mines,கேரளம்,keralam,கனிம வளம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/uif2fktr/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/uif2fktr/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>குமரி,</p><p>குமரி மாவட்டம் வழியாக கேரளத்துக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி சோதனைச்சாவடிகளில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் ஆங்காங்கே சோதனை சாவடிகளில் பணியில் இருக்கும் போலீசார் லஞ்சம் பெற்றுக்கொண்டு கனிமவளம் ஏற்றி வரும் லாரிகளை கேரளத்துக்கு செல்ல அனுமதிப்பதாக பல்வேறு புகார்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வந்தது.</p><p>இதையடுத்து சோதனைச் சாவடிகளை கண்காணிக்க ரகசிய போலீசார் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. சில இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தும் கண் காணிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் பளுகல் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட மத்தம்பாலை சோதனை சாவடியில் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தை சேர்ந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பணி யில் இருந்த போது கனிமவளம் கொண்டு வந்த லாரி டிரைவரிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு கேரளத்துக்கு அனுமதித்ததாக புகார் எழுந்தது.</p><p>இதுபோல் ஆறுகாணி போலீஸ் நிலையத்தை சேர்ந்த ஏட்டு ஒருவர் செறியகொல்லா சோதனை சாவடியில் பணியில் இருந்த போது லஞ்சம் பெற்றுக்கொண்டு கனிமவள லாரியை கேரளத்துக்கு அனுப்பி வைத்ததாக புகார் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டரையும், ஏட்டுவையும் ஆயுதப்படைக்கு மாற்றி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள்: வரவு ரூ.54.91 கோடி... செலவு ரூ.319.50 கோடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tnpsc-exam-revenue-5491-crore-expenditure-31950-crore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tnpsc-exam-revenue-5491-crore-expenditure-31950-crore#comments</comments><guid isPermaLink="false">9cce5545-6238-455c-98e1-b385326b4079</guid><pubDate>Tue, 01 Sep 2026 17:26:11 +0000</pubDate><atom:updated>2026-09-01T17:26:11.033Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TNPSC,TNPSC exam,டி.என்.பி.எஸ்.சி.,டி.என்.பி.எஸ்.சி. தேர்வு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/su00fhg6/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/su00fhg6/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>2021 ஜன.01 முதல் 2025 அக்.31ம் தேதி வரை டி.என்.பி.எஸ்.சி. நடத்திய தேர்வுகள் மூலம் ரூ.54 கோடியே 91 லட்சத்து 56 ஆயிரத்து 915 தேர்வுக் கட்டணமாக பெறப்பட்டுள்ளது.  2020-21 முதல் 2025-26 வரையிலான 6 நிதியாண்டுகளில், தேர்வாணையத்தின் தேர்வுகள் தொடர்பான செலவினங்களை மேற்கொள்ள ரூ.319 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>இக்காலகட்டத்தில் பணி நியமனம் பெற்ற தேர்வர்கள், ஆண், பெண், திருநங்கைகள் எண்ணிக்கை மற்றும் போலி சான்றிதழ் சமர்ப்பித்துச் சிக்கியவர்கள் பற்றிய விவரங்கள் தனியாகத் தொகுத்து பராமரிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>2021 முதல் 2025-ம் ஆண்டு வரை தேர்வுக் கட்டணமாக எவ்வளவு தொகை வசூலிக்கப்பட்டது, தேர்வுகளை நடத்துவதற்காக எவ்வளவு நிதி பெறப்பட்டு செலவிடப்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பதில் அளித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எங்கள் கூட்டணிக்குள் எந்தக் குழப்பமோ பிரச்சினையோ இல்லை: அமைச்சர் நிர்மல் குமார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-no-confusion-or-problem-within-our-alliance-minister-nirmal-kumar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-no-confusion-or-problem-within-our-alliance-minister-nirmal-kumar#comments</comments><guid isPermaLink="false">69c131ab-37a6-44c9-8b8c-7d673393551f</guid><pubDate>Tue, 01 Sep 2026 17:05:10 +0000</pubDate><atom:updated>2026-09-01T17:05:10.810Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,CTR Nirmal kumar,சிடிஆர் நிர்மல் குமார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/qttqr927/CHENNAI-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/qttqr927/CHENNAI-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><p>தென்காசியில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:</p><p>தமிழகத்திலிருந்து ஒருவர் வர வேண்டும் என்பது அனைவரும் ஆசைப்படக் கூடிய ஒன்றுதான். இதில் எந்த சர்ச்சையும் இல்லை. காலக்கட்டத்துக்கு ஏற்றார்போல இயற்கையே ஒரு விஷயத்தை உருவாக்கும். இதனால் எங்கள் கூட்டணியில் எந்த முரணும் இல்லை. உங்களுக்கெல்லாம் சுவாரஸ்யம் வேண்டும் என்பதற்காக தினமும் இதை கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.</p><p>கடந்த ஆண்டு இதே நேரத்தில், தவெக ஆட்சிக்கு வரும் என்று நாங்கள் சொன்னதற்கு அனைத்து பத்திரிகைகளும், கருத்துக் கணிப்புகளும் என்ன சொன்னது? ஆனால், எங்கள் தலைவர் முதல்வராவார் என நாங்கள் ஆணித்தனமாக சொன்னோம்.</p><p>இயற்கை தானாகவே ஒன்றை உருவாக்கும். அதுவரைக்கும் இதுபற்றி நாம் பேசிக்கொண்டே இருக்க வேண்டாம். இன்னும் மூன்று, நான்கு ஆண்டுகள் உள்ளன. இவ்வாறு நீங்கள் கேள்வி கேட்பதால்தான் இது பெரிய விஷயமாக உருவாக்கப்படுகிறது. யாருக்கோ தீனி போடவெல்லாம் இதைக் கேட்க வேண்டாம். இதனால், கூட்டணிக்குள் எந்தக் குழப்பமோ பிரச்னையோ இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை: ராஜீவ்காந்தி சாலையில் போக்குவரத்து மாற்றம் - போலீசார் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-traffic-changes-on-rajiv-gandhi-salai-police-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-traffic-changes-on-rajiv-gandhi-salai-police-announcement#comments</comments><guid isPermaLink="false">ba3ddf35-6779-42d3-8878-5fdf275d666b</guid><pubDate>Tue, 01 Sep 2026 16:18:52 +0000</pubDate><atom:updated>2026-09-01T16:18:52.559Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,சாலை,Announcement,போக்குவரத்து மாற்றம்,Traffic change,ராஜீவ்காந்தி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/r7a4fx56/177.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ போக்குவரத்து மாற்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/r7a4fx56/177.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, சென்னை ராஜீவ்காந்தி சாலையில் மெட்ரோ மற்றும் கழிவுநீர் குழாய் பணிகள் நடைபெறுவதால், வரும் 5-ந்தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.</p><h2>போக்குவரத்து மாற்றம்</h2><p>சென்னை ராஜீவ்காந்தி சாலையில் மெட்ரோ ரெயில் பணிகள் ஏற்கனவே நடந்து வருகிறது. இந்த நிலையில் அதே பகுதியில் கழிவுநீர் குழாய்கள் சீரமைப்பு பணிகளும் நடைபெற உள்ளன.</p><p>இதையொட்டி அந்தப் பகுதியில் வரும் 5-ந்தேதி வரை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D">போக்குவரத்து மாற்றம்</a> செய்யப்படும் என்று போக்குவரத்து போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு வாகன ஓட்டிகளை போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><h2>போலீசார்</h2><p>இந்தப் போக்குவரத்து மாற்றத்தில் கிண்டியில் இருந்து வரும் மாநகர பஸ்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மத்திய கைலாஸ் சந்திப்பில் ராஜீவ்காந்தி சாலை நோக்கி வலது புறம் செல்ல அனுமதி இல்லை என்று அறிவித்துள்ளனர்.</p><p>ஆனால் அதே கிண்டியில் இருந்து வரும் இலகுரக வாகனங்கள் மத்திய கைலாஸ் சந்திப்பில் ராஜீவ்காந்தி சாலையில் வலது புறம் திரும்ப அனுமதிக்கப்படும் என்றும் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>மதுபோதையில் விபரீதம்: வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-strikes-while-under-the-influence-of-alcohol-youth-commits-suicide-by-hanging</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-strikes-while-under-the-influence-of-alcohol-youth-commits-suicide-by-hanging#comments</comments><guid isPermaLink="false">7206eacb-f8a4-4b37-b3c3-820175617aa2</guid><pubDate>Tue, 01 Sep 2026 16:18:28 +0000</pubDate><atom:updated>2026-09-01T16:18:28.308Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Youth,வாலிபர்,Suicide by hanging,தூக்குப்போட்டு தற்கொலை,மதுபோதை,Tragedy,alcoholism,விபரீதம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/1od5gnoe/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/1od5gnoe/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88">மதுபோதை</a>யில் தாயிடம் தகராறு செய்துவிட்டு வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>தாயாரிடம் தகராறு செய்த வாலிபர்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், நாசரேத் அருகேயுள்ள கன்னிவிளை கிராமத்தைச் சேர்ந்த வீரதுரை மகன் தங்கதுரை (வயது 23). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில், அந்த வாலிபர் தினமும் அவரது தாயாரிடம் தகராறு செய்து வந்துள்ளார். ஏற்கனவே 2 முறை தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியுள்ளார். </p><h2>மதுபோதை</h2><p>இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில், மதுபோதையில் வீட்டிற்கு வந்த அந்த வாலிபர் வழக்கம் போல அவரது அம்மாவிடம் தகராறு செய்து விட்டு, கதவை உள்புறமாக பூட்டிக் கொண்டார். நீண்ட நேரம் கதவு திறக்கப்படாமல் இருந்ததால் குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். </p><h2>தூக்குப்போட்டு தற்கொலை</h2><p>அப்போது தங்கதுரை அம்மாவின் சேலையை பயன்படுத்தி சீலிங் பேனில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">தூக்குப்போட்டு தற்கொலை</a> செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து நாசரேத் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>திருநெல்வேலி, தென்காசியில் மின்வாரிய குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள்: மேற்பார்வை பொறியாளர் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/electricity-board-grievance-redressal-day-meetings-in-tirunelveli-tenkasi-supervising-engineer-information</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/electricity-board-grievance-redressal-day-meetings-in-tirunelveli-tenkasi-supervising-engineer-information#comments</comments><guid isPermaLink="false">f2eb89eb-35c7-4895-be9d-c88e4159fa8e</guid><pubDate>Tue, 01 Sep 2026 16:06:08 +0000</pubDate><atom:updated>2026-09-01T16:06:08.742Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,Tenkasi,தென்காசி,Information,தகவல்,Engineer,Grievance Redressal Day Meeting,பொறியாளர்,குறைதீர்க்கும் நாள் கூட்டம்,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/831i0ci2/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/831i0ci2/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மற்றும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF">தென்காசி</a> மாவட்டங்களில் உள்ள மின்பகிர்மான கோட்டங்களுக்கு உள்பட்ட செயற்பொறியாளர் அலுவலகங்களில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">மின்வாரிய</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">குறைதீர்க்கும் நாள் கூட்டங்க</a>ள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>திருநெல்வேலி, தென்காசி மாவட்டம்</h2><p>திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள மின்பகிர்மான கோட்டங்களுக்கு உள்பட்ட செயற்பொறியாளர் அலுவலகங்களில் காலை 11 மணியளவில் பின்வருமாறு மின்சார வாரியம் சார்ந்த குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் நடைபெறும் என திருநெல்வேலி மின்பகிர்மான மேற்பார்வை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D">பொறியாளர்</a> தென்னரசு தெரிவித்துள்ளார். </p><h2>மின்சார வாரிய குறைதீர்க்கும் நாள் கூட்டம்</h2><p>இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: </p><p>2026-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 8.9.2026 இரண்டாவது செவ்வாய்கிழமை வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 11.9.2026 இரண்டாவது வெள்ளிக்கிழமை திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 15.9.2026 மூன்றாவது செவ்வாய்கிழமை சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 18.9.2026 மூன்றாவது வெள்ளிக்கிழமை தென்காசி கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 22.9.2026 நான்காவது செவ்வாய்கிழமை கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 25.9.2026 நான்காவது வெள்ளிக்கிழமை கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் அலுவலத்திலும், 29.9.2026 ஐந்தாவது செவ்வாய்கிழமை திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலும் காலை 11 மணியளவில் மின்சார வாரியம் சார்ந்த குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படும். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>எம்.எல்.ஏ.வாக மீண்டும் செயல்பட இசக்கி சுப்பையா கோரிக்கை: ஐகோர்ட்டு மறுப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-court-rejects-isakki-subbiahs-request-to-resume-duties-as-mla</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-court-rejects-isakki-subbiahs-request-to-resume-duties-as-mla#comments</comments><guid isPermaLink="false">109e01db-1c56-49dc-90e7-9e97ef2456c3</guid><pubDate>Tue, 01 Sep 2026 16:00:09 +0000</pubDate><atom:updated>2026-09-01T16:00:09.080Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,ஐகோர்ட்டு,Chennai High Court,மறுப்பு,எம்.எல்.ஏ,மனு,இசக்கி சுப்பையா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/j684y9le/176.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஐகோர்ட்டு மறுப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/j684y9le/176.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக மீண்டும் செயல்பட அனுமதிக்கக் கோரி முன்னாள் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா தாக்கல் செய்த மனுவை ஏற்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால், அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா, தகுதி நீக்கம் தொடர்பான விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>ராஜினாமா</h2><p>அதிமுக சார்பில் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா, பின்னர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து அவர் ஆளும் தவேகவில் இணைந்தார். இந்நிலையில், அம்பாசமுத்திரம் தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ. இல்லாததால் பொதுமக்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருவதாகக் கூறிய இசக்கி சுப்பையா, மீண்டும் தொகுதி எம்.எல்.ஏ.வாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் கடந்த 28-ம் தேதி மனு அளித்தார்.</p><p>மேலும், இடைத்தேர்தல் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வெளியாகும் வரை எம்.எல்.ஏ.வாக தொடர அனுமதிக்க வேண்டும் என்றும், ஏற்கனவே தான் அளித்த ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கிடையே, அதிமுகவில் இருந்து வெற்றி பெற்ற 6 எம்.எல்.ஏ.க்கள் ஆளும் தவேகவில் இணைந்தனர். இதையடுத்து, அவர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். அவர்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார். ஆனால், கட்சி மாறிய 6 எம்.எல்.ஏ.க்கள் மீதும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக வலியுறுத்தியது. இதுதொடர்பாக சபாநாயகரிடமும் அதிமுக சார்பில் மனுக்கள் அளிக்கப்பட்டன.</p><h2>சென்னை ஐகோர்ட்</h2><p>தகுதி நீக்கக் கோரிக்கைகள் நிலுவையில் இருந்த நிலையில், 6 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதற்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனை எதிர்த்து அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல். ரவி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஐகோர்ட்டு ஒத்திவைத்துள்ளது.</p><p>இந்த சூழலில், தேர்தல் வழக்கில் தீர்ப்பு வெளியாகும் வரை தன்னை மீண்டும் எம்.எல்.ஏ.வாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu/ambasamudram-constituency-declared-vacant">இசக்கி சுப்பையா</a> கூடுதல் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவரது கோரிக்கையை ஏற்க முடியாது என ஐகோர்ட்டு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.  இதனால், அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ. பதவி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா, தகுதி நீக்கம் தொடர்பான விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>வேலை கிடைக்காததால் விரக்தி; மனு மூட்டையுடன் வந்த நபரால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/frustrated-over-joblessness-man-with-bag-of-petitions-causes-stir-at-collector-office</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/frustrated-over-joblessness-man-with-bag-of-petitions-causes-stir-at-collector-office#comments</comments><guid isPermaLink="false">a22d42d1-dbc5-480b-b034-f30be76b0f06</guid><pubDate>Tue, 01 Sep 2026 15:54:12 +0000</pubDate><atom:updated>2026-09-01T15:54:12.196Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பரபரப்பு,கலெக்டர் அலுவலகம்,Petition,நபர்,மனுPetition,frustration,A collector- கலெக்டர்,மூட்டை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/smiz6v7o/petition.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ திருநாவுக்கரசு]]></media:title><media:description type="html"><![CDATA[ மனு மூட்டையுடன் வந்த நபரால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/smiz6v7o/petition.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி,</p><p>தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று தனது கோரிக்கை மனுக்களை மூட்டை கட்டி தலையில் தூக்கி வந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 220 முறை மனு கொடுத்தும் எவ்வித தீர்வும் கிடைக்காத விரக்தியில் அவர் இந்த வினோத போராட்டத்தை கையில் எடுத்துள்ளார்.</p><h2>யார் இந்த நபர்?</h2><p>தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே உள்ள ஜெயமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 50). ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்காக இவரது தாத்தா, அரசுக்கு 4 ஏக்கர் நிலத்தை கொடுத்துள்ளார். அதற்கு பதிலாக வாரிசுதாரருக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88">அரசு வேலை</a> வழங்குவதாக அப்போது அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.</p><h2>23 ஆண்டு கால போராட்டம்</h2><p> நிலம் கொடுத்ததற்கு பதிலாக அரசு வேலை கேட்டு திருநாவுக்கரசு கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து மனு கொடுத்து வருகிறார். இதுவரை ஒப்புகைச் சீட்டுடன் மொத்தம் 220 முறை மனு கொடுத்துள்ளார். இத்தனை முறை மனு அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், கடும் விரக்தி அடைந்த அவர், இதுவரை தான் கொடுத்த அனைத்து மனுக்களையும் ஒன்றாக சேர்த்து ஒரு பெரிய மூட்டையாக கட்டி கலெக்டர் அலுவலகத்திற்கு எடுத்து வந்துள்ளார்.</p> <h2>போலீசார் தடுப்பு</h2><p>நுழைவு வாயிலில் தலையில் மூட்டையுடன் வந்தவரை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். மூட்டையுடன் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று கூறியதையடுத்து, மூட்டை மற்றும் பையை வெளியிலேயே வைத்துவிட்டு, மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அவர் மீண்டும் ஒரு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81">மனுவை</a> அளித்தார். </p> <p>தாத்தா கொடுத்த நிலத்திற்கு வாரிசு வேலை கேட்டு 220 மனுக்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நபர் வந்த சம்பவம் அங்கு கூடியிருந்த பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.</p> ]]></content:encoded></item><item><title>பெண் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் உத்தரவு திரும்ப பெறப்பட்டுவிட்டது - ஐகோர்ட்டில் அரசு தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-order-to-dismiss-a-female-inspector-has-been-withdrawn-government-informs-the-high-court</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-order-to-dismiss-a-female-inspector-has-been-withdrawn-government-informs-the-high-court#comments</comments><guid isPermaLink="false">14b237e6-f402-4815-8f0a-23fd0d09d692</guid><pubDate>Tue, 01 Sep 2026 15:50:24 +0000</pubDate><atom:updated>2026-09-01T15:50:24.886Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை ஐகோர்ட்டு,பணியிடை நீக்கம்,High Court Bench</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/khoc9dy7/court33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
பெண் இன்ஸ்பெக்டர்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஐகோர்ட்டில் அரசு தகவல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/khoc9dy7/court33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் விமலாவின் சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டது.</p><p>சென்னை விபச்சாரத் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ராஜலட்சுமி என்பவருக்கு எதிராக ஊழல் புகாரை லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டர் விமலா விசாரித்தார். பின்னர் உயர் அதிகாரிகளின் ஒப்புதலுடன், ராஜலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்தார்.</p><p>பணியிடை நீக்கம்</p><p>இந்தநிலையில், இன்ஸ்பெக்டர் விமலா கடந்த ஜூன் 17-ந்தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%90%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D">சென்னை ஐகோர்ட்</a>டில் வழக்கு தொடர்ந்து, பணியிடை நீக்கம் செய்த உத்தரவுக்கு இன்ஸ்பெக்டர் விமலா இடைக்கால தடை உத்தரவை பெற்றார்.</p><h2>வழக்கு முடித்து வைப்பு </h2><p>இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி எம்.சுதிர்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் எஸ்.அய்யாதுரை ஆஜராகி வாதிட்டார். அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் கவுதமன் ஆஜராகி, ‘‘மனுதாரர் இன்ஸ்பெக்டர் விமலா பணியிடை நீக்க உத்தரவு திரும்ப பெறப்பட்டு விட்டது. அதனால், இந்த வழக்கை முடித்து வைக்கவேண்டும்'' என்று கூறி, பணியிடை நீக்கத்தை திரும்ப பெற்ற உத்தரவை தாக்கல் செய்தார். இதை பதிவுச் செய்துக் கொண்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>எழும்பூர் ரெயில் நிலையத்தில் புதிய நடை மேம்பாலத்திற்கான தூண்கள் அமைக்கும் பணி நிறைவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pillar-erection-work-for-new-pedestrian-overpass-at-egmore-railway-station-completed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pillar-erection-work-for-new-pedestrian-overpass-at-egmore-railway-station-completed#comments</comments><guid isPermaLink="false">8dd6d21a-ace7-43df-a655-537d9b6ab704</guid><pubDate>Tue, 01 Sep 2026 15:40:48 +0000</pubDate><atom:updated>2026-09-01T15:40:48.630Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Egmore,மின்சார ரெயில்,எழும்பூர் ரெயில் நிலையம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/9591th6f/rail33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
மின்சார ரெயில் நடைமேடை]]></media:title><media:description type="html"><![CDATA[ 
புதிய நடை மேம்பாலத்திற்கான தூண்கள் அமைக்கும் பணி நிறைவு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/9591th6f/rail33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.842 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமான மறுசீரமைப்பு பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாக, ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பார்சல் பிரிவுக்கான புதிய நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்முதல் கட்டமாக, நடைமேடை 1 முதல் 5 வரையிலான பகுதிகளில் 18 மீட்டர் அகலமும், 120 மீட்டர் நீளமும் கொண்ட புதிய இரும்பு நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டன.</p><p>இந்த கட்டுமான பணிகளின் காரணமாக, எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தற்காலிகமாக தாம்பரம் ரெயில் நிலையத்திற்கு மாற்றப்பட்டு இயக்கப்பட்டன. தற்போது அந்த நடைமேடைகளில் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டதால், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீண்டும் எழும்பூர் நிலையத்திலிருந்தே வழக்கம்போல இயக்கப்பட்டு வருகின்றன.</p><p>இதனைத் தொடர்ந்து, <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20">மின்சார ரெயில்</a> நடைமேடைகளிலும் புதிய நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த மாதம் இறுதியில் தொடங்கப்பட்டன. தற்போது இந்த நடைமேம்பாலத்திற்கான பிரம்மாண்டமான தூண்கள் மற்றும் தாங்கு சட்டங்களை அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. குறிப்பாக, நடைமேடை 1 முதல் 11 வரையில் புதிய இரும்பு நடைமேம்பாலம் அமைப்பதற்கான தூண்கள் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.எஞ்சிய கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.</p><p>ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, இந்த கட்டுமானப் பணிகள் காரணமாக இரவு நேர மின்சார ரெயில்கள் வருகிற 6-ந்தேதி வரையில் ரத்து செய்யப்பட்டுள்ளன. நிர்ணயிக்கப்பட்ட அந்த தேதிக்குள் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டு, பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>தவெக ஆட்சி 5 ஆண்டுகள் கூட நீடிக்காது - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-rule-will-not-last-even-5-years-edappadi-palaniswami-review</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-rule-will-not-last-even-5-years-edappadi-palaniswami-review#comments</comments><guid isPermaLink="false">b68d537a-021f-4819-b956-b29c0254cd1a</guid><pubDate>Tue, 01 Sep 2026 15:36:38 +0000</pubDate><atom:updated>2026-09-01T15:36:38.060Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,Edappadi Palaniswami,விமர்சனம்,Tvk  government,தவெக ஆட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/kpnrgppl/21.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/kpnrgppl/21.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p>“தமிழக வெற்றிக் கழக ஆட்சி 5 ஆண்டுகள் நிலைக்காது” என்றும் அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே தொடர்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் . </p><p>கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கடுமையாக விமர்சித்தார்.சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், கொலை, கொள்ளை, போதைப்பொருள் மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.</p><p>சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என வலியுறுத்திய அவர், அமைச்சர்கள் தங்களது துறைகள் தொடர்பான கேள்விகளுக்கு முறையாக பதிலளிப்பதில்லை என்றும் குறிப்பிட்ட சில அமைச்சர்களே அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிப்பதாக விமர்சித்தார். தமிழக அரசின் கடன் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறிய எடப்பாடி பழனிசாமி, மின்சாரத் துறையில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.</p><h2>ஊழல் அதிகரிப்பு</h2><p>போக்குவரத்துத் துறையில் பழைய பேருந்துகளையே தொடர்ந்து இயக்குவதாகவும், புதிய பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், தமிழகத்தில் ஊழல் அதிகரித்துள்ளதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி பணம் பறிமுதல் செய்யப்படுகிறது என்றால் ஊழல் நடைபெறுகிறது என்பதுதானே அர்த்தம்  ஊழலுக்கு  இதற்கு சாட்சி என்றும் குற்றம்சாட்டினார்.</p><h2>காஸ்ட்லி முதல்வர்</h2><p>முதலமைச்சரின் மேட்டூர் அணை பயணம் குறித்து தனக்கு முழுமையான தகவல் தெரியாது எனக் கூறிய அவர், முன்னாள் முதலமைச்சர்கள் எளிமையாக அணையை திறந்து வைத்த நிலையில், தற்போது ஆடம்பர செலவுகள் அதிகரித்துள்ளதாகவும். மேலும் இந்த முதல்வர் ஒரு காஸ்ட்லி முதல்வர் என விமர்சித்தார். “அடுத்த பிரதமர் விஜய்” என்ற பரப்புரை குறித்த கேள்விக்கு, விஜய் விரும்பினால் அமெரிக்க ஜனாதிபதியாகக்கூட ஆகலாம் என எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.</p><h2>5 ஆண்டுகள் நீடிக்காது</h2><p>அதிமுகவில் இருந்து மேலும் எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு செல்வார்கள் என்ற தகவலை நிராகரித்த அவர், ஏற்கனவே சென்ற எம்எல்ஏவே மீண்டும் பதவியில் தொடர வேண்டும் என நீதிமன்றத்தில் வாதாடி வருவதாக தெரிவித்தார்.மேலும், விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை, அதிகரிக்கும் கடன் மற்றும் வருவாய் பெருக்குவதற்கான ஆக்கப்பூர்வமான திட்டங்கள் இல்லாதது ஆகியவற்றை சுட்டிக்காட்டி, இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது என்பது அதன் செயல்பாடுகளைப் பார்த்தாலே தெரிகிறது என <a href="https://www.dailythanthi.com/topic/edappadi-palanisamy">எடப்பாடி பழனிசாமி </a>தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>கோயில்களில் மொபைல் போன்களை பாதுகாக்கவே ரூ.5 கட்டணம் வசூல் - அமைச்சர் ரமேஷ் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-5-fee-charged-to-protect-phones-minister-ramesh-explains</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-5-fee-charged-to-protect-phones-minister-ramesh-explains#comments</comments><guid isPermaLink="false">8c9ca84a-4d7a-480f-9a04-53d3081462db</guid><pubDate>Tue, 01 Sep 2026 15:28:58 +0000</pubDate><atom:updated>2026-09-01T15:28:58.234Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவில்கள்,செல்போன்,இந்து சமய அறநிலையத்துறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/ngivjtbc/ramesh33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ரமேஷ் விளக்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ பாதுகாக்கவே ரூ.5 கட்டணம் வசூல் - அமைச்சர் ரமேஷ் விளக்கம்
]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/ngivjtbc/ramesh33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மொபைல் போன்களை பாதுகாக்கவே ரூ.5 கட்டணம் வசூல். பக்தர்கள் காத்திருப்பதை தவிர்க்க கூடுதல் மொபைல் பாதுகாப்பு கவுன்ட்டர்கள். கூடுதல் கவுன்ட்டர்களை அமைப்பது குறித்து கோவில் நிர்வாகங்கள் முடிவெடுக்கும் என அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார்.</p><h2>இந்து சமய அறநிலையத்துறை</h2><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%20">இந்து சமய அறநிலையத்துறை</a> அமைச்சர் ரமேஷ்  இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,</p><p>தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள 52 முதுநிலைத் திருக்கோயில்களில், ஏற்கனவே உள்ள நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையிலும், திருக்கோயில்களில் பக்தர்கள் அமைதியான சூழலில் இறைவனைத் தரிசனம் செய்வதற்காகவும், இன்று (செப்.1) முதல் மொபைல் போன்களை எடுத்துச் செல்வதற்கான தடை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.</p><p>ஏற்கனவே பழனி, திருச்செந்தூர், மதுரை மற்றும் ராமேஸ்வரம் உள்ளிட்ட முக்கிய திருக்கோயில்களில் செல்போன்களுக்கு தடை நடைமுறையிலிருந்து வருகிறது. திருக்கோயில்களின் புனிதத்தன்மை மற்றும் அமைதியான வழிபாட்டுச் சூழலைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானதாகும்.</p><p>சிலர் திருக்கோயில்களில் இறைவனின் திருவுருவச் சிலைகளை புகைப்படம் எடுப்பது. வீடியோ பதிவு செய்வது, செல்ஃபி மற்றும் ரீல்ஸ் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதால், பக்தர்களின் வழிபாட்டு அனுபவமும் பாதிக்கப்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையிலும், திருக்கோயில்களின் பாரம்பரியத்தையும், புனிதத்தன்மையையும் பாதுகாக்கும் நோக்கத்திலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><h2>ரூ.5 கட்டணம் வசூல்</h2><p>செல்போன்களை எடுத்து செல்ல முடியாத பக்தர்களின் வசதிக்காக, சம்பந்தப்பட்ட திருக்கோயில்களில் செல்போன் பாதுகாப்பு கவுண்டர்கள் மற்றும் பாதுகாப்பு லாக்கர் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பாக ஒப்படைத்துவிட்டு தரிசனம் முடிந்த பின்னர் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.</p><p>இப்பாதுகாப்பு கவுண்டர்களை செயல்படுத்துவதற்காக தனி ஊழியர்கள், பாதுகாப்பு லாக்கர்கள், மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான நிர்வாக மற்றும் செயல்பாட்டு செலவுகளை ஈடுகட்டும் வகையில், செல்போன் ஒன்றுக்கு ரூ.5 என்ற குறைந்தபட்சக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த கட்டணமும் திருக்கோயில்களுக்கு வருவாய் ஈட்டுவதற்காக நிர்ணயிக்கப்பட்டதல்ல, செல்போன்களை பாதுகாப்பாகப் பெற்றுக்கொண்டு, முறையாக பராமரித்து, பக்தர்களுக்கு மீண்டும் வழங்குவதற்கான ஊழியர்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுக்கான செலவுகளை ஈடுகட்டுவதற்காக மட்டுமே இந்த குறைந்தபட்சக் கட்டணம் பெறப்படுகிறது.</p><h2>போதுமான அளவில் செல்போன் கவுண்டர்கள்</h2><p>செல்போன் தடை நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், சில திருக்கோயில்களில் செல்போன் பாதுகாப்பு கவுண்டர்களில் பக்தர்கள் அதிகளவில் வரிசையில் நிற்பதால், கூடுதல் நேரம் எடுத்துக்கொள்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தற்போது அந்தந்த திருக்கோயில்களின் தேவைக்கேற்ப போதுமான அளவில் செல்போன் கவுண்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.</p><p>பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள இடங்களில், தேவைக்கேற்ப கூடுதல் கவுண்டர்களை அமைப்பது குறித்து அந்தந்த திருக்கோயில் நிர்வாகம் முடிவெடுத்து செயல்படுத்துவதற்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.</p><p>அதேநேரத்தில் பொதுமக்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் இந்தக் காத்திருப்பு நேரத்தை பெருமளவில் தவிர்க்க முடியும். கோயிலுக்கு அருகில் வசிப்பவர்கள் தங்களது வீடுகளிலேயே செல்போன்களை வைத்துவிட்டும். வெளியூரிலிருந்து வருபவர்கள் தாங்கள் தங்கியிருக்கும் அறைகளில் செல்போன்களை வைத்துவிட்டு, நான்கு சக்கர வாகனங்களில் வருபவர்கள் தங்களது வாகனங்களில் செல்போன்களை பாதுகாப்பாக வைத்துவிட்டு திருக்கோயிலுக்குள் செல்லலாம்.</p><h2>சாதாரண கைபேசிகளுக்கு தடை இல்லை</h2><p>புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் வசதி இல்லாத சாதாரண கைப்பேசிகள் திருக்கோயிலுக்குள் எடுத்துவர எந்தவித தடையும் இல்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட திருக்கோயில் நிர்வாகத்திற்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அவசரக்கால தேவைகளின்போது பக்தர்களுக்கு உதவுவதற்காக திருக்கோயில் அலுவலர்கள் மற்றும் பாதுகாவலர்கள் மூலம் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><h2>ஒன்றிணைந்து செயல்படுவோம்</h2><p>திருக்கோயில்களில் மேற்கொள்ளப்படும் இந்த மாற்றங்கள் அனைத்தும் பக்தர்களின் ஆன்மிக அனுபவத்தை மேம்படுத்தவும், அமைதியான வழிபாட்டுச் சூழலை உருவாக்கவும், நமது திருக்கோயில்களின் பாரம்பரியம், புனிதத்தன்மை மற்றும் ஆன்மிகச் சிறப்பை பாதுகாக்கவும் மேற்கொள்ளப்படுகின்றன. அரசும், பொதுமக்களும் இணைந்துதான் இதுபோன்ற நல்ல மாற்றங்களை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும்.</p><p>எனவே, திருக்கோயில்களில் பக்தர்களின் அமைதியான வழிபாட்டிற்கும், கோயில்களின் பாரம்பரியத்தையும், புனிதத்தன்மையையும் பாதுகாப்பதற்கும், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நமது திருக்கோயில்கள் அமைதியின் மையமாகவும், ஆன்மிகத்தின் அடையாளமாகவும், நமது பாரம்பரியத்தின் பாதுகாப்பிடமாகவும் திகழ அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: பெருங்குடி மண்டலத்தில் துணை ஆணையாளர் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-preparedness-deputy-commissioner-inspects-perungudi-zone</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-preparedness-deputy-commissioner-inspects-perungudi-zone#comments</comments><guid isPermaLink="false">33b71179-429d-43e3-8bcd-b727e49ae3d8</guid><pubDate>Tue, 01 Sep 2026 15:12:50 +0000</pubDate><atom:updated>2026-09-01T15:12:50.358Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/rrrp0a4r/175.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ துணை ஆணையாளர் ஆய்வு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/rrrp0a4r/175.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துணை ஆணையாளர் அதாப் ரசூல், இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.</p><p>இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>ஆய்வு</h2><p>வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை தெற்கு வட்டார துணை ஆணையாளர் அதாப் ரசூல், இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.</p><p>பெருங்குடி மண்டலம், வார்டு-188க்குட்பட்ட மயிலை பாலாஜி நகர் 1-வது மற்றும் 4-வது பிளாக் பகுதிகளில் உள்ள கால்வாயில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>இதனைத் தொடர்ந்து, வார்டு-186க்குட்பட்ட உள்வட்டச் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி, வார்டு-188க்குட்பட்ட பெரியார் நகர் நகர் 1-வது தெருவில் சாலைகள், அப்பகுதியில் உள்ள அம்மா உணவகம், மயிலை பாலாஜி நகரில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பேனர்கள் அகற்றும் பணி, அப்பகுதியில் உள்ள இலவச ஒப்பனை அறை, லட்சுமி நகர் மற்றும் பெரியார் நகரில் பள்ளி மாணவர்களின் காலை உணவுத் திட்டத்திற்கான மைய சமையல் கூடம், வார்டு-189க்குட்பட்ட ராம் நகரில் கட்டப்பட்டு வரும் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையம் கட்டுமானப் பணி ஆகியவற்றினைப் பார்வையிட்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">ஆய்வு </a>செய்து, பணிகளை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வுகளின் போது, மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: வாய்க்காலில் வாலிபர் சடலம் மீட்பு- போலீசார் விசாரணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-body-of-a-youth-recovered-from-a-canal-police-investigating</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-body-of-a-youth-recovered-from-a-canal-police-investigating#comments</comments><guid isPermaLink="false">760810e5-1ab6-4e8d-a163-04672cef84ba</guid><pubDate>Tue, 01 Sep 2026 15:05:59 +0000</pubDate><atom:updated>2026-09-01T15:05:59.350Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Youth,வாலிபர்,வாய்க்கால்,police investigation,body recovered,சடலம் மீட்பு,போலீசார் விசாரணை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/hyrdi4ar/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வாலிபர் சடலம் மீட்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/hyrdi4ar/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், செய்துங்கநல்லூரில் டாஸ்மாக் அருகில் உள்ள வாய்காலில் கிடந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D">வாலிபர்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">சடலத்தை மீட்டு</a> போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். </p><h2>வாய்க்காலில் வாலிபர் சடலம் மீட்பு</h2><p>தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த உச்சிமாகாளி மகன் கோமு (வயது 38). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில், நேற்று அவர் டாஸ்மாக் அருகில் உள்ள வாய்காலில் நீரில் மிதந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இதுகுறித்த தவலின் பேரில் ஸ்ரீவைகுண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது நெற்றியில் ரத்த காயம், இரண்டு கால் முட்டுகளில் சிராய்ப்பு காயங்கள் இருந்தன. அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/inspection-of-stormwater-drain-and-census-related-works-in-corporation-areas</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/inspection-of-stormwater-drain-and-census-related-works-in-corporation-areas#comments</comments><guid isPermaLink="false">7339faa2-58e9-45da-815b-8e7039f4a735</guid><pubDate>Tue, 01 Sep 2026 14:54:53 +0000</pubDate><atom:updated>2026-09-01T14:54:53.739Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Corporation,மாநகராட்சி,மக்கள் தொகை கணக்கெடுப்பு,Census,ஆய்வு,inspection,பணிகள்,மழைநீர் வடிகால்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/mpjab3bo/20.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/mpjab3bo/20.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் குறித்து ஆணையாளர் கெளஷிக் ஆய்வு செய்தார்.</p><p>இது குறித்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">சென்னை மாநகராட்சி</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>வடகிழக்குப் பருவமழையினை  முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மற்றும் அண்ணாநகர் மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் ஆணையாளர் எச்.ஆர்.கெளஷிக், இ.ஆ.ப., அவர்கள் இன்று (01.09.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.</p><h2>மழைநீர் வடிகால் குறித்து ஆய்வு</h2><p>கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-127க்குட்பட்ட வி.வி.கோவில் தெருவில் புதிதாக மழைநீர் வடிகால் அமைப்பது தொடர்பாகவும், ஐயப்பன் கோவில் தெருவில் முடிவுற்ற மழைநீர் வடிகால் பணி, அண்ணாநகர் மண்டலம் வார்டு-100க்குட்பட்ட  கீழ்பாக்கம் ஆர்ம்ஸ் சாலை, வார்டு-102க்குட்பட்ட அண்ணாநகர் 'L' பிளாக் மற்றும் வார்டு-106க்குட்பட்ட நேரு தெரு ஆகிய இடங்களில் மழைநீர் வடிகால் அமைப்பது குறித்துப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.</p><h2>மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி</h2><p>இதனைத் தொடர்ந்து, வார்டு-127க்குட்பட்ட வி.வி.கோவில் தெரு, சேமத்தம்மன் கோவில் தெரு மற்றும் காளியம்மன்  கோவில் உள்ளிட்ட  பகுதிகளில் மாநகராட்சி அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி உள்ளிட்டவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். </p><p>இந்த ஆய்வுகளின்போது, மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வேலைக்கு செல்லாததை கண்டித்த மனைவி: கத்தியால் சரமாரியாக குத்திக்கொன்ற கணவர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wife-reprimanded-him-for-not-going-to-work-husband-stabbed-her-to-death-in-a-frenzied-attack</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wife-reprimanded-him-for-not-going-to-work-husband-stabbed-her-to-death-in-a-frenzied-attack#comments</comments><guid isPermaLink="false">738cc23e-af65-4289-93b7-1965e0411d47</guid><pubDate>Tue, 01 Sep 2026 14:47:04 +0000</pubDate><atom:updated>2026-09-01T14:47:04.965Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,husband,work,Death,மனைவி,கத்தி,குத்திக்கொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/0mod44ok/158.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/0mod44ok/158.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>கொளத்தூர், சத்யா நகரை சேர்ந்தவர் சரண்ராஜ் இவரது மனைவி முத்துமாரியம்மாள் (வயது38) இருவரும் கடந்த வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.இவர்க ளுக்கு குழந்தை இல்லை.கணவன்-மனைவி இருவரும் கொளத்தூரில் உள்ள ஒரே கம்பெனியில் வேலை செய்து வந்தனர்.</p><h2>மோதல்</h2><p>இந்த நிலையில் சரண்ராஜ் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வழக்கம் போல் நேற்று இரவு கணவர் வேலைக்கு செல்லாததை முத்துமாரியம்மாள் கண்டித்தார். இதில் கணவன்-மனைவிக்கு இடையே மோதல் ஏற்பட்டது. </p><p>இதில் ஆத்திரம் அடைந்த சரண்ராஜ் வீட்டில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியால் முத்து மாரியம்மாளின் மார்பில் சரமாரியாக குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் முத்து மாரியம்மாள் உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் கொளத்தூர் போலீசார் விரைந்து வந்து சரண்ராஜை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்தனர். முத்து மாரியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.</p><h2>விசாரணை</h2><p>கொலையுண்ட முத்துமாரியம்மாளின் முதல் கணவர் கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து அவர் சரண்ராஜை காதலித்து 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் முத்து மாரியம்மாள் கொலை செய்யப்பட்டு உள்ளார். கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து சரண்ராஜிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p> ]]></content:encoded></item><item><title>அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா ஏற்புக்கு எதிரான வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-against-the-acceptance-of-aiadmk-mlas-resignations-verdict-reserved-without-a-date</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-against-the-acceptance-of-aiadmk-mlas-resignations-verdict-reserved-without-a-date#comments</comments><guid isPermaLink="false">6ff367ca-b065-40eb-b429-b8a8d09cbf85</guid><pubDate>Tue, 01 Sep 2026 14:29:10 +0000</pubDate><atom:updated>2026-09-01T14:29:10.426Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை ஐகோர்ட்டு,Chennai Highcourt,Case,வழக்கு,Resignation,ராஜினாமா கடிதம்,அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்,AIADMK MLAs</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/yged4op9/highcourt.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/yged4op9/highcourt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் உள்ளதால் அதிமுக-வைச் சேர்ந்த ஆறு எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்குகளின் தீர்ப்பை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D">சென்னை ஐகோர்ட்டு</a>, தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.</p><h2>விசாரணை</h2><p>த.வெ.க. தலைவர் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்போது கொறடா உத்தரவை மீறி, த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆறு பேருக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்தபோது, அவர்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, அ.தி.மு.க. கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள், தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது, அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கிரி மற்றும் எஸ்.ஆர். ராஜகோபால் ஆகியோர், இந்த வழக்கில் சபாநாயகர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ராஜினாமா செய்தவர்களிடம் சுயமாக பதவி விலகினார்களா என விசாரணை நடத்தி, திருப்தியடைந்த பின், ஏற்றுக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>குதிரை பேரம்</h2><p>ஆனால், இந்த விசாரணை என்பது வெறும் சம்பிரதாயம் அல்ல. அரசியல் சாசன கடமை. அர்த்தமுள்ள எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை எனக் குறிப்பிட்டனர். ராஜினாமா கடிதங்களை அளித்த சில நிமிடங்களில், தலைமைச் செயலகத்தில் அமைச்சரை சந்தித்து தவெக-வில் இணைந்திருக்கின்றனர். ஆனால் இது சம்பந்தமாக சபாநாயகர் முழுமையான விசாரணை நடத்தாமல், ராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ளார். ராஜினாமாவை ஏற்கும் முன், தகுதி நீக்க புகார் அளித்த மனுதாரரான அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு எந்த நோட்டீசும் அனுப்பப்படவில்லை. குதிரை பேரம் நடந்துள்ளது குறித்து ஆளுநருக்கும் புகார் அளிக்கப்பட்டது எனச் சுட்டிக்காட்டினர்.</p><p>சபாநாயகர் தரப்பில் ஆஜரான சி.எஸ். வைத்தியநாதன் ராஜினாமா ஏற்றுக் கொண்டதால் தகுதி நீக்க நடவடிக்கை இல்லாமல் ஆகிவிடாது. ராஜினாமாவை ஏற்றது சட்டப்படி செல்லுபடியானதுதான். ஒரு எம்.எல்.ஏ. ராஜினாமா செய்ய விரும்பினால், பதவியில் நீடிக்கும்படி நிர்பந்திக்க முடியாது. உறுப்பினர்களின் ராஜினாமாவை ஏற்காவிட்டால் அது அரசியல் சாசன கடமையை செய்யத் தவறியதாகி விடும் எனக் குறிப்பிட்டார்.</p><h2>தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு</h2><p>சுய விருப்பப்படி ராஜினாமா செய்தாரா என்பதை மட்டும்தான் விசாரிக்க முடியும். அமைச்சர் பதவி, பணத்துக்காக ராஜினாமா செய்தார்களா, குதிரைபேரம் நடந்ததா என்பதை தகுதி நீக்க நடவடிக்கையில்தான் விசாரிக்க முடியும். ராஜினாமாவின் நோக்கம் என்ன என்பதை, ராஜினாமாவை ஏற்கும்போது விசாரிக்க முடியாது. சபாநாயகர் எந்த விதிமீறலும் செய்யவில்லை. இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார். இருதரப்பு வாக்குவாதம் மற்றும் ராஜினாமா செய்த எம்.எல்.ஏ. தரப்பிலான வாக்குவாதம் ஆகியவற்றிக்குப் பிறகு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.</p>]]></content:encoded></item><item><title>ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை உடனடியாக கைவிட கோரி நெல்லையில் ஆர்ப்பாட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/protest-in-nellai-demanding-immediate-cancellation-of-smart-meter-project</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/protest-in-nellai-demanding-immediate-cancellation-of-smart-meter-project#comments</comments><guid isPermaLink="false">820b01f1-62c3-4793-b516-208d758f642f</guid><pubDate>Tue, 01 Sep 2026 14:06:25 +0000</pubDate><atom:updated>2026-09-01T14:06:25.250Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,protest,ஆர்ப்பாட்டம்,demand,Project,CITU,சிஐடியு தொழிற்சங்கத்தினர்,திட்டம்,ஸ்மார்ட் மீட்டர்,Smart Meter,கைவிட வேண்டும்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/v52dgh0b/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை உடனடியாக கைவிட கோரி நெல்லையில் ஆர்ப்பாட்டம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/v52dgh0b/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>​திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D">ஸ்மார்ட் மீட்டர்</a> திட்டத்தை உடனடியாக கைவிட கோரி நெல்லையில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.) சார்பில் கவன ஈர்ப்பு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">ஆர்ப்பாட்டம் </a>நடைபெற்றது.</p><h2>தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம்</h2><p>தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.) சார்பில், நெல்லை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ​திட்டத் தலைவர் நாகையன் தலைமை வகித்தார். <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81">சி.ஐ.டி.யு.</a> மாவட்ட தலைவர் முருகன் ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து பேசினார். </p><h2>ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட கோரிக்கை</h2><p>​இந்த ஆர்ப்பாட்டத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். 5 ஆண்டு ஒப்பந்தம் மூலம் ஒப்பந்தப் பணியாளர் நியமனம் செய்யப்படும் என்ற அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. </p><h2>பகுதி நேர ஊழியர்கள் நிரந்தரம்</h2><p>​மேலும் கேங்மேன் பணியாளர்களுக்கு கள உதவியாளர் பதவி வழங்குவது, ஊதியம் இல்லாமல் பணிபுரிந்து வரும் பகுதி நேர ஊழியர்களை நிரந்தரம் செய்வது, கணக்கீட்டுப் பிரிவில் பணிபுரியும் R.S. மற்றும் IA பணியாளர்களை கீழ்நிலை பணிகளைச் செய்ய நிர்பந்திக்கக் கூடாது, நெல்லை மின் திட்டத்தில் பணிபுரியும் களப் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பதவி உயர்வுகளை உடனடியாக வழங்குவது போன்ற கோரிக்கைகளும் எழுப்பப்பட்டன. </p><p>இந்த ஆர்ப்பாட்டத்தில் திட்ட துணை தலைவர் பூலுடையார், திட்ட துணைச் செயலாளர் தளபதி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் சுவாமிதாசன் மற்றும் கோமதி, கோட்டச் செயலாளர்கள் முருகேசன், வேல்முருகன், அய்யாத்துரை, ஜார்ஜ், திட்டப் பொருளாளர் பாலசுப்பிரமணியன், காற்றாலை பிரிவு துணைச் செயலாளர் அந்தோனி கிளமென்ட் உள்ளிட்டோர் பேசினர். ​திட்டச் செயலாளர் கந்தசாமி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார். மத்திய அலுவலகத் தலைவர் அழகர் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் திரளான மின் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். </p>]]></content:encoded></item><item><title>ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு : அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை; தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sterlite-shooting-action-needed-against-officials</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sterlite-shooting-action-needed-against-officials#comments</comments><guid isPermaLink="false">8003250b-59ed-4622-9dab-cbcc350a56d8</guid><pubDate>Tue, 01 Sep 2026 14:05:36 +0000</pubDate><atom:updated>2026-09-01T14:05:36.160Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>துப்பாக்கி சூடு,நடவடிக்கை,வலியுறுத்தல்,அதிகாரிகள்,ஸ்டெர்லைட்,CPI(M),Sterlite firing,Urges,மார்க்சிஸ்ட் கட்சி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/yu8z5zb9/34.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ பெ. சண்முகம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/yu8z5zb9/34.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது உறுதியான நடவடிக்கை தேவை !தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல். இது தொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் </a>மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><h2>துப்பாக்கிச்சூடு</h2><p>2018 ஆம் ஆண்டு<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D"> ஸ்டெர்லைட்டை</a> எதிர்த்த போராட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் பொறுப்பற்ற தன்மை, அத்துமீறல் காரணமாக கொல்லப்பட வேண்டுமென்ற நோக்கத்தோடு நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இதற்கென அமைக்கப்பட்ட நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை நடத்தி தனது பரிந்துரையை அரசுக்கு அளித்தது. </p><h2>அறிக்கை</h2><p>3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உட்பட 17 காவல்துறையினர், மாவட்ட கலெக்டர் மற்றும் 3 வட்டாட்சியர்கள் இதற்கு காரணமானவர்கள் என்று அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். அவர்கள் மீது துறைவாரியான நடவடிக்கையும், குற்ற வழக்கு பதிவு செய்து விசாரிக்கவும் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது.</p> <h2> நீதிமன்ற நிகழ்வு</h2><p>நேற்று  சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ள கருத்துக்கள் கொலைக்கு காரணமான அதிகாரிகளை பாதுகாக்கும் நோக்கத்தை கொண்டதாக உள்ளது. இவர்களில் யாரும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்பதுதான் நேற்றைய நீதிமன்ற நிகழ்வின் வெளிப்பாடாகும்.</p><h2>அடக்குமுறை கருவி</h2><p>இது ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறை கருவியாக அரசு அமைப்புகள் செயல்படும் என்பதற்கான மிக வெளிப்படையான நிகழ்வாகும். அந்த வகையில் திமுகவும் தவெகவும் அதிகாரிகளுக்கு ஆதரவான நிலைபாட்டையே எடுத்துள்ளன.</p> <h2>பன்னாட்டு முதலாளி</h2><p> சுற்றுச்சூழல் சீர்கேடுகள் குறித்து மக்கள் சுட்டிக்காட்டியபோதே, ஸ்டெர்லைட் நிர்வாகமோ அல்லது அரசு அமைப்புகளோ நடவடிக்கை எடுத்திருந்தால் இத்தகைய கொடூரம் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. பன்னாட்டு முதலாளி ஒருவரின் நலனை பாதுகாப்பதற்காகவே ஆளும் வர்க்கத்தின் அடியாளாக செயல்பட்ட இந்த அதிகாரிகள் பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை. </p> <h2>எந்த நியாயமும் கிடைக்காது</h2><p>இத்தகைய நிலைமை நீடிப்பது நிர்வாகத்தாலும், நீதித்துறையாலும், அரசாங்கத்தாலும் தங்களுக்கு எந்த நியாயமும் கிடைக்காது என்று குடிமக்களை நிராதாவாக நிற்க வைக்கும். ஜனநாயக நாட்டில் இத்தகைய நிலையை அரசாங்கம் எடுத்திருப்பது முற்றிலும் ஏற்க தக்கதல்ல.</p> <h2>குற்ற வழக்கு பதிவு</h2><p>எனவே, தமிழ்நாடு அரசு முந்தைய திமுக அரசு மேற்கொண்ட நிலையை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி, 13 பேர் கொலைக்கு காரணமான அனைத்து அதிகாரிகள் மீதும் உரிய துறைவாரியான நடவடிக்கை மற்றும் குற்ற வழக்கு பதிவு செய்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், உயிரிழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் ஆணையம் பரிந்துரைத்த இழப்பீட்டுத் தொகையை முழுவதுமாக வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நெல்லையில் பெண்ணை மிரட்டி ஆபாச படம் எடுத்து நகை, செல்போன் பறிப்பு - 3 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-threatened-stripped-filmed-robbed-in-nellai-three-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-threatened-stripped-filmed-robbed-in-nellai-three-arrested#comments</comments><guid isPermaLink="false">2fcab83e-768c-456c-9556-de5b9edb617a</guid><pubDate>Tue, 01 Sep 2026 13:41:47 +0000</pubDate><atom:updated>2026-09-01T13:41:47.001Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,கைது,arrested,பெண்,Woman,மிரட்டி நகை பறிப்பு,In Nellai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/uubg00co/manikandan.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மணிகண்டன்,சிவா]]></media:title><media:description type="html"><![CDATA[ நெல்லையில் பெண்ணை மிரட்டி ஆபாச படம் எடுத்து நகை, செல்போன் பறிப்பு - 3 பேர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/uubg00co/manikandan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி,</p><p>நெல்லையில் பெண் ஒருவரை மர்ம கும்பல் காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று, அவரை பலவந்தமாக நிர்வாணமாக்கி செல்போனில் படம் பிடித்து, நகை மற்றும் செல்போனை கொள்ளையடித்த சம்பவம் மாவட்டத்தையே உலுக்கியுள்ளது.</p><h2>காட்டுப்பகுதிக்கு கடத்தல்</h2><p>திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்து பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் சிவா ஆகியோர், 40 வயதுடைய பெண் ஒருவரை ஆள் நடமாட்டமில்லாத தனிமையான காட்டுப்பகுதிக்கு அழைத்து் சென்றனர். அங்கு வைத்து அந்தப் பெண்ணைச் சூழ்ந்து கொண்ட கும்பல், அவரை மிரட்டி ஆடை இன்றி நிர்வாணமாக்கியுள்ளது.</p><h2>படம் பிடித்து மிரட்டல்</h2><p>தொடர்ந்து, தங்களது செல்போன்கள் மூலம் அந்த பெண்ணை ஆபாசமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளனர். "நாங்கள் சொல்வதை கேட்காவிட்டால் இந்த ஆபாச படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அசிங்கப்படுத்திவிடுவோம்" என அந்த பெண்ணை மிரட்டி, அவர் அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.</p><h2>3 பேர் கைது</h2><p>இந்த அதிர்ச்சி சம்பவத்தால் நிலைகுலைந்த அந்த பெண், இதுகுறித்து உடனடியாக போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் நெல்லை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில், பெண்ணை மிரட்டி ஆபாச படம் எடுத்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88">கொள்ளையடித்த</a> கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81"> கைது </a>செய்தனர். கைதானவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகை மற்றும் குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>