<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 23 Aug 2026 15:07:18 +0000</lastBuildDate><item><title>தூத்துக்குடியில் 5.5 கிலோ கஞ்சா, 2 பைக் பறிமுதல்: 5 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/55-kg-of-ganja-2-bikes-seized-in-thoothukudi-5-people-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/55-kg-of-ganja-2-bikes-seized-in-thoothukudi-5-people-arrested#comments</comments><guid isPermaLink="false">ad99d455-8349-466f-ab26-05a1fa64e895</guid><pubDate>Sun, 23 Aug 2026 15:06:57 +0000</pubDate><atom:updated>2026-08-23T15:06:57.129Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,போலீஸ்,Thoothukudi,Ganja,தூத்துக்குடி,கஞ்சா,பறிமுதல்,patrol,bike,seized,ரோந்து பணி,பைக்,5 people arrested,5 பேர் கைது</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/qqu8t0a4/5.5-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-2-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 5.5 கிலோ கஞ்சா, 2 பைக் பறிமுதல்: 5 பேர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/qqu8t0a4/5.5-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-2-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியில் சட்ட விரோத விற்பனைக்காக 5.5 கிலோ <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE">கஞ்சா</a> வைத்திருந்த 5 பேர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>போலீசார் ரோந்து பணி</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா தலைமையிலான போலீசார் சிவந்தாகுளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே சந்தேகப்படும்படி 2 பைக்குகளில் வந்த நபர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது, அவர்கள் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.</p><h2>5.5 கிலோ கஞ்சா, 2 பைக் பறிமுதல்; 5 பேர் கைது</h2><p>தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா வழக்குப்பதிவு செய்து சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த வேல்முருகன் மகன் சங்கர் (வயது 20), சங்கரப்பேரி பகுதியைச் சேர்ந்த கனிஅரசன் மகன் வெங்கடேஷ்(23), பிரையன்ட்நகரைச் சேர்ந்தவர்களான செந்தில் மகன் காளிதாஸ்(22), சிவக்குமார் மகன் முத்துமாதவன்(19) மற்றும் வள்ளிநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் சுடலைசெல்வம்(20) ஆகிய 5 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 5 கிலோ 500 கிராம் கஞ்சா மற்றும் 2 பைக்குகளையும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">பறிமுதல்</a> செய்தார்.</p>]]></content:encoded></item><item><title>திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/severe-traffic-congestion-on-the-trichy-chennai-national-highway</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/severe-traffic-congestion-on-the-trichy-chennai-national-highway#comments</comments><guid isPermaLink="false">dc771c47-9c4a-4d26-8a40-44f786394ae2</guid><pubDate>Sun, 23 Aug 2026 14:52:17 +0000</pubDate><atom:updated>2026-08-23T14:52:17.857Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,திருச்சி,Trichy,தேசிய நெடுஞ்சாலை,போக்குவரத்து நெரிசல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/n4q87ww8/Traffic.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ போக்குவரத்து நெரிசல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/n4q87ww8/Traffic.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>விக்கிரவாண்டி,  </p><p> சனி விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அன்று முகூர்த்த நாளையொட்டி சென்னையிலிருந்து ஏராளமான வாகனங்கள் தென் மாவட்டங்களை நோக்கி படையெடுத்து சென்றன. இன்று முகூர்த்தம் முடிந்து நாளை அலுவலகத்திற்கும், பள்ளிக்கும் செல்ல வேண்டும் என்பதால் தென் மாவட்டங்களை நோக்கு சென்ற வாகனங்கள் அனைத்தும் சென்னை நோக்கி திரும்பின.</p><p>இதனால் திருச்சி-சென்னை சாலையில் வாகனங்கள் அணிவகுத்ததால் விக்கிரவாண்டி டோல் கேட்டில் வாகன நெரிசல் ஏற்பட்டது.சென்னை நோக்கி அதிகமான வாகனங்கள் சென்றதால் கூடுதலாக மூன்று வழிகள் திறந்து மொத்தம் ஒன்பது வழிகள்மூலம் வாகனங்கள் சென்னை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டன.</p><p>விக்கிரவாண்டி வடக்கு புறவழி சாலை முனையில் மேம்பால பணி நடைபெறுவதால் தெற்கு புறவழிச்சாலை முனையிலிருந்து டி.எஸ்.பி.,அலுவலகம் வரை சர்வீஸ் சாலையை கடக்க முடியாமல் வாகனங்கள் 2 கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து மெதுவாக ஊர்ந்து சென்றன.நேற்று மாலை 6 மணி வரை 40ஆயிரத்து 740 வாகனங்கள் டோல்கேட் டை கடந்து சென்றன மேலும் கூடுதலாக வாகனங்கள் செல்லும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>கோவில்பட்டி: வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kovilpatti-2-people-arrested-under-the-detention-act-in-connection-with-the-murder-of-a-youth</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kovilpatti-2-people-arrested-under-the-detention-act-in-connection-with-the-murder-of-a-youth#comments</comments><guid isPermaLink="false">f3dd289f-2b54-4903-923d-ca4bb304005c</guid><pubDate>Sun, 23 Aug 2026 14:46:55 +0000</pubDate><atom:updated>2026-08-23T14:46:55.882Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Thoothukudi,arrested,தூத்துக்குடி,Kovilpatti,கோவில்பட்டி,Youth Murder,வாலிபர் கொலை,2 பேர்,2 people,தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டம்,Tamil Nadu Detention Act</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/y01v38ok/2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 2 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/y01v38ok/2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">வாலிபர் கொலை</a> வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பேர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின்</a> கீழ் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்யப்பட்டனர்.</p><h2>வாலிபர் கொலை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF">கோவில்பட்டி</a> மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரதிநகர் பகுதியில், அதே பகுதியைச் சேர்ந்த முனியசாமி மகன் ஞானதிரவியம் (வயது 30) என்பவரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.</p><h2>தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் 2 பேர் கைது</h2><p>மேற்சொன்ன கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான பாரதி நகரைச் சேர்ந்தவர்களான செல்லபாண்டி மகன் மகாராஜன்(35) மற்றும் முத்து மகன் முத்துராஜ்(25) ஆகிய 2 பேரையும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, சம்பந்தப்பட்ட போலீசார் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து திருநெல்வேலி மத்திய சிறையில் அடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>விடுமுறை தினம், சுபமுகூர்த்த நாள்: திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-and-auspicious-day-surge-of-devotees-at-thiruchendur-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-and-auspicious-day-surge-of-devotees-at-thiruchendur-temple#comments</comments><guid isPermaLink="false">0e99a652-f08d-4d84-9377-2c9251247725</guid><pubDate>Sun, 23 Aug 2026 14:44:42 +0000</pubDate><atom:updated>2026-08-23T14:44:42.649Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்செந்தூர்,Holiday,Tiruchendur,விடுமுறை தினம்,பக்தர்கள் கூட்டம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/ewieih96/Tiruchendur.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/ewieih96/Tiruchendur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்செந்தூர்</p><p>அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாகவும், ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். திருவிழா காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்படுகிறது.</p><p>இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் மற்றும் சுபமுகூர்த்த தினம் என்பதால் கோவிலில் அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் சன்முகவிலாச மண்டபம், கோவில் வளாகம் உள்ளிட்ட இடங்களில் 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது. இன்று கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷே கமும், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் இடியுடன் கூடிய மிதமான மழை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/moderate-rain-accompanied-by-thunderstorms-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/moderate-rain-accompanied-by-thunderstorms-in-chennai#comments</comments><guid isPermaLink="false">65c0727a-74dd-496b-b4ad-2bcd4c29365c</guid><pubDate>Sun, 23 Aug 2026 14:40:48 +0000</pubDate><atom:updated>2026-08-23T14:40:48.024Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Rain,மழை</media:keywords><media:content height="270" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/ecece9la/State-09.jpg" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/ecece9la/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக கடலோர பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில், சென்னையில் தற்போது இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. தொடர்ந்து நாளை(திங்கட்கிழமை) தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் மற்றும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  </p>]]></content:encoded></item><item><title>சிவகாசி: சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sivakasi-commotion-as-a-luxury-car-parked-by-the-roadside-suddenly-caught-fire</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sivakasi-commotion-as-a-luxury-car-parked-by-the-roadside-suddenly-caught-fire#comments</comments><guid isPermaLink="false">efd2b35c-ce80-4269-85e1-e88feabbeb8b</guid><pubDate>Sun, 23 Aug 2026 14:38:33 +0000</pubDate><atom:updated>2026-08-23T14:38:33.740Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Sivakasi,சிவகாசி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/x8ersv9n/State-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/x8ersv9n/State-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகாசி,</p><p>சிவகாசியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகாசி மாவட்டம் ஞானகிரி சாலையைச் சேர்ந்த கண்ணன் என்பவர், தனது காரை சிவகாசி ரெயில் நிலையம் அருகே சாலையோரத்தில் நிறுத்தியிருந்தார். அந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. </p><p>இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் அதற்குள் கார் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. அந்த காரின் மதிப்பு சுமார் 16 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>தீப்பற்றி எரிந்தபோது காரில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-the-day-after-tomorrow-22</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-the-day-after-tomorrow-22#comments</comments><guid isPermaLink="false">dedb66da-7ab4-4b6b-a0b2-56c00e7cd472</guid><pubDate>Sun, 23 Aug 2026 14:19:27 +0000</pubDate><atom:updated>2026-08-23T14:19:27.378Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,monthly maintenance work,power outage,மாதாந்திர பராமரிப்பு பணி,மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/c7kn3yty/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/c7kn3yty/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மின்பகிர்மான வட்டம், கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் உள்ள கரிசல்பட்டி, சேரன்மகாதேவி துணை மின் நிலையங்களில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் காரணமாக நாளை மறுநாள் (25.8.2026, செவ்வாய்கிழமை) <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>கல்லிடைக்குறிச்சி கோட்டம் கரிசல்பட்டி மற்றும் சேரன்மகாதேவி துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் (25.8.2026, செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையங்களில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம், பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும்.</p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>கரிசல்பட்டி, பிள்ளைகுளம், மணிமுத்தான்குளம், புலவன் குடியிருப்பு, கோவிந்தபேரி, தெய்வநாயகபேரி, மீனவன்குளம், பட்டன்காடு, இடையான்குளம், கங்கணாங்குளம், சடையமான்குளம், வெங்கட்ரங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லுர், காடுவெட்டி, சேரன்மகாதேவி, பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், கரிசூழ்ந்தமங்கலம், கேசவசமுத்திரம், மலையடி, மேல்கரை ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>வீட்டு உபயோக சிலிண்டருக்கான இகேஒய்சி காலக்கெடு நீடிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/deadline-extended-for-e-kyc-for-domestic-lpg-cylinders</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/deadline-extended-for-e-kyc-for-domestic-lpg-cylinders#comments</comments><guid isPermaLink="false">c4a45fc5-7ee2-4dde-a798-f642005ffe1a</guid><pubDate>Sun, 23 Aug 2026 14:06:21 +0000</pubDate><atom:updated>2026-08-23T14:06:21.706Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>cylinder,சிலிண்டர்,காலக்கெடு,இகேஒய்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/8c589ms6/Gas.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/8c589ms6/Gas.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p> சென்னை, </p><p>கியாஸ் நிறுவனங்கள் மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சகத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், மாதம் ஒன்றுக்கு 25 லட்சத்துக்கும் அதிகமான வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் இணைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் எழுந்தது.அதாவது, மானியத்துடன் கூடிய சிலிண்டரை பெற்று வணிகப் பயன்பாடுகளுக்கு பயன்படுத்துவதாகவும், ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் இருப்பதாகவும், இறந்து போன நபர்கள் பெயரில் உள்ள இணைப்புகளை வேறு சிலர் பயன்படுத்தி வருவதாகவும் தெரியவந்துள்ளது.5 பேர் உள்ள ஒரு குடும்பத்திற்கு 35 முதல் 40 நாட்கள் வரை ஒரு சிலிண்டர் போதுமானதாக இருக்கும் நிலையில், ஒரே ஒரு நபர் மட்டுமே உள்ள வீடுகளில் கூட வருடத்திற்கு 12 சிலிண்டர்கள் பெறப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.இதையடுத்து கள்ளச்சந்தையில் சமையல் கியாஸ் சிலிண்டர் விற்பனை செய்வதை தடுக்கவும், சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கத்திலும் சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கு ‘இ-கே.ஒய்.சி.’ அடிப்படையில் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.</p><h2>புதிய கட்டுப்பாடு</h2><p>மேலும் மத்திய கிழக்கு போர் காரணமாக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், சமையல் கியாஸ் சிலிண்டர் முன்பதிவில் மத்திய அரசு சமீபத்தில் புதிய கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்தது. அதன்படி கியாஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யும் கால அளவு உயர்த்தப்பட்டது.நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் 25 நாட்களுக்கு ஒரு முறையும், கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் 45 நாட்களுக்கு ஒரு முறையும் கியாஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யும் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டது. மேலும் ‘இ-கே.ஒய்.சி.’ ஆவணங்களை ஆகஸ்டு 16-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்து இருந்தது.</p> <h2>இன்று வரை கெடு</h2><p>இதனைத்தொடர்ந்து வாடிக்கையாளர்கள் பலரும் ஆன்லைன் மூலமும், சிலிண்டர் வினியோக அலுவலகங்களுக்கு நேரடியாக சென்றும் ஆவணங்களை சமர்ப்பித்து வருகின்றனர். இந்த நிலையில் வாடிக்கையாளர்களின் கோரிக்கையை ஏற்று ஆவணங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசத்தை மத்திய அரசு இன்று வரை நீட்டித்து இருந்தது. வீடுகளுக்கு தற்போது மானிய விலையில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 நிறுவனங்கள் மூலம் கியாஸ் வினியோகம் செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் சராசரியாக 85 சதவீத வாடிக்கையாளர்கள் தங்களது ஆவணங்களை பதிவேற்றம் செய்து விட்ட நிலையில், 15 சதவீத வாடிக்கையாளர்கள் பதிவு செய்யவில்லை என்று தெரிகிறது.</p><h2>முன்பதிவு செய்ய முடியாது</h2><p>ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவதால், தமிழகம் முழுவதும் சுமார் 50 லட்சம் வாடிக்கையாளர்கள் நாளை (24-ந்தேதி) முதல் மானியத்துடன் கூடிய வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.இதனால் ஆவணங்களை பதிவேற்றம் செய்யாத வாடிக்கையாளர்கள் தவித்தனர். அவர்கள் மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.</p><h2>அவகாசம் நீடிப்பு</h2><p>இதனை ஏற்று கியாஸ் சிலிண்டர்கள் பெற ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கியாஸ் வினியோகஸ்தர்கள் சார்பில் வீடுகளுக்கு கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் பணியாளர்கள், தங்களிடம் உள்ள ஆண்ட்ராய்டு போனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள செயலி மூலம் வீடுகளுக்கு சிலிண்டர் வினியோகம் செய்யும்போது ஆவணங்களை பதிவேற்றம் செய்தனர்.அதாவது, யார் பெயரில் சிலிண்டர் இணைப்பு உள்ளதோ அவரை மொபைல் கேமராவைப் பயன்படுத்தி புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்தனர். இது மிகவும் எளிமையான நடைமுறையாகும்.</p> <h2>செயலி அறிமுகம்</h2><p>ஒரு சிலர் கியாஸ் வினியோகஸ்தர்களின் அலுவலகத்திற்கு சென்று அவர்களிடம் உள்ள மொபைல் போனில் ஆவணங்களை பதிவேற்றம் செய்தனர். வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.அந்த செயலியில் நுழைந்து ஆவண விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். தமிழகத்தில் இணைப்பு பெற்றுள்ள குடும்பத் தலைவர்களின் குடும்பம் தமிழகத்தில் வசித்து வரும் நிலையில், குடும்பத் தலைவர்கள் மட்டும் உலகில் கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு இத்தகைய செயலி மொபைல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அதன் மூலம் அவர்கள் ஆவணங்களை சமர்ப்பித்தனர். தற்போது சிலிண்டர்களுக்கு ஆவணங்களை சமர்ப்பிக்க வருகிற 31-ந்தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சட்டமன்ற கூட்டத்தொடருக்கு உறுப்பினர்கள் ரெயிலிலேதான் வந்து சென்றோம் - முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-came-and-went-to-assembly-sessions-only-by-train-former-mla-balabharathi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-came-and-went-to-assembly-sessions-only-by-train-former-mla-balabharathi#comments</comments><guid isPermaLink="false">d0cd2a34-bb5b-452a-9f55-5fb3b424ed1b</guid><pubDate>Sun, 23 Aug 2026 13:46:35 +0000</pubDate><atom:updated>2026-08-23T13:46:35.431Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>train,ரெயில்,Assembly,members,உறுப்பினர்கள்,Travel,சட்டமன்ற கூட்டத்தொடர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/8fplhwvi/bala-bharathi.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பாலபாரதி]]></media:title><media:description type="html"><![CDATA[ முன்னாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/8fplhwvi/bala-bharathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் எம்.எல்.ஏ.க்களின் தொகுதிப் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள கார், ஓட்டுநர் உதவியாளர் மற்றும் மாதம் ரூ.75,000 பராமரிப்புத் தொகை வழங்கப்படும் என முதல்-அமைச்சர் விஜய் சமீபத்தில் சட்டபேரவையில் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. </p><h2>கோரிக்கை</h2><p>நிதிச்சுமையைக் கருத்தில் கொண்டு, பொருளாதாரத்தில் நலிவடைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டுமே இந்தச் சலுகையை வழங்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்தனர்.</p><h2>பாலபாரதி</h2><p>இந்த நிலையில், அப்போது (2001 முதல் 2016) சட்டமன்ற கூட்டத்தொடரை முன்னிட்டு உறுப்பினர்கள் ரெயிலிலேதான் வந்து சென்றோம் என்று முன்னாள்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D"> மார்க்சிஸ்ட்</a> கம்யூனிஸ்டு கட்சி சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி தெரிவித்தார். இது தொடர்பாக, அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>பாண்டியன் எக்ஸ்பிரஸ்</h2><p>அநேகமாக, பாண்டியன் எக்ஸ்பிரஸில்தான் தென்மாவட்ட எம்எல்ஏக்கள் நிறைந்திருப்பார்கள். இரண்டாம் வகுப்பு எஸ் 3, எஸ் 4 பெட்டிகளில் அவர்கள் பயணம் செய்வார்கள். அதிகாலையில் அரசுப் பேருந்துகள் எம்எல்ஏக்களுக்காக சென்ட்ரல் மற்றும் எக்மோர் ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டிருக்கும். இரண்டு அல்லது மூன்று பேருந்துகளில் எம்எல்ஏக்கள், அவர்களின் உதவியாளர்கள் அல்லது உறவினர்கள் ஏறிக்கொள்வார்கள். தலைமை செயலக கோட்டைக்குள்ளும் பேருந்தில்தான் செல்வோம்.</p><h2>காரணம் சிம்பிள்</h2><p>ஆளும்கட்சி எதிர்க்கட்சி பாகுபாடில்லாமல் அந்த பேருந்து கலகலப்பாகவே பயணிக்கும். அதன்பிறகு இன்றுவரை ரெயில் நிலையங்களில் எம்எல்ஏக்களை காணமுடியவில்லை... காரணம் சிம்பிள்.அதாவது எளிமை.</p><p>ரெயில் விமானமாக பரிணாம வளர்ச்சியை அடைந்திருந்தது.</p><p> இவ்வாறு அதில் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>‘அமைச்சர்களுக்கு அவை மரபும், சட்டமும் தெரியவில்லை’ - துரைமுருகன் விமர்சனம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ministers-are-unaware-of-house-conventions-and-the-law-duraimurugans-criticism</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ministers-are-unaware-of-house-conventions-and-the-law-duraimurugans-criticism#comments</comments><guid isPermaLink="false">984ac481-ad8c-4860-81ff-e696a6214dc5</guid><pubDate>Sun, 23 Aug 2026 13:26:12 +0000</pubDate><atom:updated>2026-08-23T13:26:12.467Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Duraimurugan,துரைமுருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/fk8cgfut/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/fk8cgfut/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>த.வெ.க. அமைச்சர்களுக்கு அவை மரபும் தெரியவில்லை, சட்டமும் தெரியவில்லை என தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-</p><p>“சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் நீண்ட நாள் சட்டசபையில் இருந்த அனுபவம் உள்ளவர். அவர் தற்போது சட்டசபையை நடத்துகின்ற விதத்தைப் பாக்கும்போது, ஓரளவு நல்ல முறையில்தான் அவையை நடத்துகிறார். அதை மறுக்க முடியாது. ஆனால் சட்டசபையில் நடக்கும் கூத்துகளை அவர்தான் தடுக்க வேண்டும். </p><p>த.வெ.க. அமைச்சர்களுக்கு அவை மரபும் தெரியவில்லை, சட்டமும் தெரியவில்லை. சட்டசபைக்குள் முதல் முறையாக செல்லும் எம்.எல்.ஏ.க்களுக்கு, அவையின் விதிமுறைகள் பற்றிய புத்தகத்தைக் கொடுப்பார்கள். அதை தற்போது உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு கொடுத்தார்களா என்பது தெரியவில்லை. அதை அவர்கள் வாங்கிப் படிக்க வேண்டும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>‘100 நாட்கள் ஆட்சியில் மக்களின் எண்ணங்களை த.வெ.க. அரசு பிரதிபலித்திருக்கிறது’ - ஜி.கே.வாசன்  </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tvk-government-has-reflected-the-sentiments-of-the-people-during-its-100-days-in-office-gk-vasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tvk-government-has-reflected-the-sentiments-of-the-people-during-its-100-days-in-office-gk-vasan#comments</comments><guid isPermaLink="false">97af0834-8589-4529-9e6d-c318f3a9a3cc</guid><pubDate>Sun, 23 Aug 2026 13:13:24 +0000</pubDate><atom:updated>2026-08-23T13:13:24.719Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>G.K.Vasan,ஜி.கே.வாசன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/swoodl3c/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/swoodl3c/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை ,</p><p>சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான கேள்விகளை எழுப்ப வேண்டும் என்றும், மக்கள் மற்றும் தொகுதி சார்ந்த பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-</p><p>“சட்டமன்றத்தில் ஏனோ தானோ என்று கேள்விகள் கேட்காமல் ஆக்கப்பூர்வமான முறையில் கேள்விகள் கேட்பதையே மக்கள் விரும்புகிறார்கள். சட்டமன்ற நிகழ்வுகள் நேரலை செய்யப்படுகிறது என்றால் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பொறுப்புணர்வு இன்னும் அதிகமாக இருக்க வேண்டும். மக்கள் தங்கள் தொகுதி எம்.எல்.ஏ.வின் செயல்பாடுகளை ஒவ்வொரு நிமிடமும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.</p><p>சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்கள் பேசும் பேச்சுகள் மக்கள் சார்ந்த பேச்சுகளாக, தங்கள் தொகுதி திட்டங்கள் சார்ந்த ஆக்கப்பூர்வமான பேச்சுகளாக இருக்க வேண்டுமே தவிர, ஏட்டிக்கு போட்டி பேச்சாகவோ, வெறுப்பு பேச்சாகவோ இருக்கக்கூடாது.</p><p>100 நாட்கள் ஆட்சியில் மக்களின் எண்ணங்களை பல விதங்களில் த.வெ.க. அரசு பிரதிபலித்திருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. அதே நேரம், விவசாயிகளின் எண்ணங்களை அரசு முழுமையாக பிரதிபலிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>வெள்ளத்தில் மூழ்கிய நெற்பயிர்கள்: த.வெ.க. அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/flooded-paddy-crops-tvk-government-should-provide-immediate-compensation-edappadi-palaniswami-insists</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/flooded-paddy-crops-tvk-government-should-provide-immediate-compensation-edappadi-palaniswami-insists#comments</comments><guid isPermaLink="false">b308f022-eeac-4fac-9439-3966da016f55</guid><pubDate>Sun, 23 Aug 2026 12:45:54 +0000</pubDate><atom:updated>2026-08-23T12:45:54.773Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இழப்பீடு,Compensation,எடப்பாடி பழனிசாமி,வலியுறுத்தல்,Edappadi Palaniswami ​,Paddy crops,flooded,நெற்பயிர்கள் சேதம்,insists,TVK Government,த.வெ.க. அரசு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/apf405py/7.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி ]]></media:title><media:description type="html"><![CDATA[ அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/apf405py/7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95">த.வெ.க.</a> கூட்டணி அரசை வலியுறுத்தல். இது தொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p> <h2>கன மழை</h2><p>கடந்த இரண்டு நாட்களாக திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">டெல்டா மாவட்டங்களில்</a> பெய்த திடீர் மழையினால் சுமார் 2000 ஏக்கர் நிலத்தில் விளைவித்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. விவசாயத்திற்கு ஆதாரம் தண்ணீர். தண்ணீருக்கு மழைதான் ஆதாரம்! கடந்த இரண்டு நாட்களாக டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் பெய்த கன மழை, சுமார் 2000 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகளின் வாழ்வை அடியோடு புரட்டிப்போட்டுள்ளது.</p><h2>விவசாயிகள் கண்ணீர்</h2><p>கன மழையால் அறுவடைக்குத் தயாரான நெற்கதிர்கள் எதிர்பாராத மழையால் சேதமடைந்ததை எண்ணி அப்பகுதி விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள். இவர்களின் கண்ணீரைத் துடைப்பது த.வெ.க. கூட்டணி அரசின் கடமையாகும். அடுத்த ஜென்மத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF">விவசாயியாக</a> பிறக்க கனவு காணும் பொய்க்கால் அரசின் முதல்-அமைச்சர்  ஜோசப் விஜய், இந்த ஜென்மத்தில் அல்லலுறும் விவசாயிகளை காக்கும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.</p><h2>வேதனையில் விவசாயிகள் </h2><p>இந்த அரசு ஜூன் 12-ல், குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடாத நிலையில், நிலத்தடி நீரை நம்பி கடன் வாங்கி வேளாண் பயிர் செய்திருந்த விவசாயிகள், தற்போது கதிர்கள் முற்றி அறுவடைக்கு தயாராக இருக்கும் நேரத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த திடீர் மழையினால், பாடுபட்டு விளைவித்திருந்த நெற்கதிர்கள் மழையில் மூழ்கிய நிலையை பார்த்து விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.</p><h2>தேர்தல் வாக்குறுதி </h2><p>ஏற்கெனவே, த.வெ.க. தேர்தல் நேரத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய வேளாண் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு, தவணை முறையில் சிறிது, சிறிதாக வேளாண் கடனை தள்ளுபடி செய்யும் அறிவிப்புகளை வெளியிடும் த.வெ.க. அரசின் முதல்-அமைச்சரின் செய்கைகளை கண்டு விவசாயிகள் கொதித்துப்போய் உள்ளனர்.</p> <h2>30,000 ரூபாய் நஷ்டஈடு</h2><p>தற்போது பெய்த கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு கை கொடுக்க இந்த அரசு முன்வர வேண்டும். தமிழக அரசின் வருவாய்த் துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகளை உடனடியாக மழையால் பாதிக்கப்பட்ட திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு அனுப்பி, பயிர் சேத விவரங்களை முழுமையாக கணக்கெடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் அனைவருக்கும் ஏக்கர் ஒன்றுக்கு 30,000 ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று பொய்க்கால் த.வெ.க. அரசை வலியுறுத்துகிறேன்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நள்ளிரவில் வீடு புகுந்து இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ரவுடி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rowdy-man-arrested-for-breaking-into-house-in-the-middle-of-the-night-and-trying-to-molest-young-woman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rowdy-man-arrested-for-breaking-into-house-in-the-middle-of-the-night-and-trying-to-molest-young-woman#comments</comments><guid isPermaLink="false">72a10c9c-3985-4a8e-819b-2a7faf94e3c1</guid><pubDate>Sun, 23 Aug 2026 12:35:57 +0000</pubDate><atom:updated>2026-08-23T12:35:57.182Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,young woman,rowdy arrested,ரவுடி கைது,வீடு புகுந்து,இளம்பெண்ணிடம்,house breaking,தவறாக நடக்க முயற்சி,misbehaving</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/867sce24/%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரவுடி கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/867sce24/%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை வேளச்சேரி பகுதியில் நள்ளிரவில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">வீடு புகுந்து</a>, தூங்கிக் கொண்டிருந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D">இளம்பெண்</a>ணிடம் தவறாக நடக்க முயன்ற <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">ரவுடி</a>யை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். </p><h2>இளம்பெண்ணிடம் தப்பாக நடக்க முயன்ற நபர்</h2><p>சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தனது தந்தையுடன் வசித்து வரும் இளம்பெண், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் அவரது வீட்டுக்குள் புகுந்து இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றார். </p><h2>மர்ம நபர் தப்பி ஓட்டம்</h2><p>அதிர்ச்சியடைந்த இளம்பெண் கூச்சலிட்டார். உடனே அந்த மர்ம நபர், சத்தம் போட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டினார். அதற்குள் மகளின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து அறையில் இருந்து தந்தை எழுந்து வந்ததால் அந்த மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார். </p><h2>ரவுடி கைது</h2><p>இதுகுறித்த புகாரின்பேரில் வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றது அதே பகுதியை சேர்ந்த பாலுசாமி (வயது 28) என்பதும், ரவுடியான அவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்தது. பின்னர் பாலுசாமியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். </p>]]></content:encoded></item><item><title>ஆவணி சுபமுகூர்த்தம்: திருத்தணி மலைக்கோவிலில் இன்று 65 ஜோடிகளுக்கு திருமணம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aavani-auspicious-day-weddings-for-65-couples-today-at-thiruttani-hill-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aavani-auspicious-day-weddings-for-65-couples-today-at-thiruttani-hill-temple#comments</comments><guid isPermaLink="false">33292e39-833e-4997-95aa-f04ffd947455</guid><pubDate>Sun, 23 Aug 2026 12:28:40 +0000</pubDate><atom:updated>2026-08-23T12:28:40.184Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruttani Murugan temple,திருத்தணி முருகன் கோவில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/avjio2xo/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/avjio2xo/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர்,</p><p>ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்த நாள் என்பதால் இன்று திருத்தணி முருகன் கோவிலில் சுமார் 65 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. </p><p>ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். மலை மீது அமைந்துள்ள இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.</p> <p>இந்த நிலையில், ஆடி முடிந்து ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்த நாளையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் இன்று ஏராளமான ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இதனையொட்டி அதிகாலை முதலே மணமக்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். இதனால் கோவில் வளாகம் விழாக்கோலம் பூண்டது.  </p><p>வேதமந்திரங்களும், கெட்டி மேளமும் முழங்க, பாரம்பரிய முறைப்படி சுமார் 65 ஜோடிகளுக்கு இன்று திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த உறவினர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், திருத்தணி-அரக்கோணம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. </p>]]></content:encoded></item><item><title>மானாமதுரை: காதல் விவகாரத்தால் சட்டக்கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை - பெண்ணின் தந்தை, தம்பி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/manamadurai-law-student-hacked-to-death-due-to-love-affair-womans-father-brother-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/manamadurai-law-student-hacked-to-death-due-to-love-affair-womans-father-brother-arrested#comments</comments><guid isPermaLink="false">92d75aca-2b6d-472d-b945-d5c58a9d4d03</guid><pubDate>Sun, 23 Aug 2026 12:20:05 +0000</pubDate><atom:updated>2026-08-23T12:20:05.602Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கொலை,love affair,Police action,போலீசார் விசாரணை,சட்டக்கல்லூரி மாணவர்,Law student</media:keywords><media:content height="410" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/eq8ar8ay/RAJA-2026.jpg" width="710"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கொலை செய்யப்பட்ட சிவபாலன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/eq8ar8ay/RAJA-2026.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை,</p><p>மானாமதுரை அருகே சட்டக்கல்லூரி மாணவனை காதல் விவகாரத்தால் பெண்ணின் தந்தை மற்றும் தம்பி கொடூரமாக வெட்டிக்கொலை செய்துள்ளனர்.</p><h2>வெட்டி கொலை </h2><p>சிவகங்கை மாவட்டம் மானாமதுரை  சின்ன புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த சிவபாலன்(வயது 35) மானாமதுரை சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த தனது உறவினர் முருகேசன் (வயது 50) என்பவரின் மகளை காதலித்து வந்தார். ஒரே ஊர் என்பதால் பெண்ணின் குடும்பத்தினருக்கு காதல் விவகாரம் தெரியவந்து, இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இருவரும் காதலை கைவிடவில்லை. மேலும் பெண்ணின் தம்பி அருண்ராஜா(19) இவர்கள் காதலுக்கு எதிராக இருந்து வந்தார். </p>  <p>இதனால் ஆத்திரமடைந்த சிவபாலன் பெண்ணின் தம்பியை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">கொலை </a>செய்வதற்காக சென்றுள்ளார் . இதனை அறிந்த பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள் சிவபாலனை வழிமறித்து கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த சிவபாலன் ரத்த வெள்ளத்தில் மிதந்து பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த கொலையில் ஈடுபட்ட பெண்ணின் தந்தை மற்றும் தம்பியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட சிவபாலன் மீது பல்வேறு குற்றவழக்குகள் இருப்பதாகவும்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D"> போலீசார் </a>தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘அறநிலையத்துறையின் செயல்பாடுகள் குறித்து சேகர்பாபு வேவு பார்க்க வேண்டிய அவசியம் என்ன?’ - அமைச்சர் ரமேஷ் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-is-the-need-for-sekar-babu-to-spy-on-the-operations-of-the-hrce-department-minister-ramesh-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-is-the-need-for-sekar-babu-to-spy-on-the-operations-of-the-hrce-department-minister-ramesh-asks#comments</comments><guid isPermaLink="false">195cc55b-cffa-4745-bcc3-2966e2e302c5</guid><pubDate>Sun, 23 Aug 2026 11:51:16 +0000</pubDate><atom:updated>2026-08-23T11:51:16.370Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Sekar Babu,சேகர்பாபு,Minister ramesh,அமைச்சர் ரமேஷ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/avuo7fla/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/avuo7fla/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“எங்கள் மீது எந்த தவறும் கிடையாது, நாங்கள் மிகவும் வெளிப்படையாக இருக்கிறோம் என்றெல்லாம் சொல்லும் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, இந்த ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?</p><p>நாங்கள் எந்த கோவில்களில் எல்லாம் ஆய்வு செய்கிறோம்? என்னென்ன செயல்பாடுகளை மேற்கொள்கிறோம்? என்பதையெல்லாம் அதிகாரிகளை வைத்து வேவு பார்த்து, அதை சட்டமன்றத்தில் பேசுவது தவறு கிடையாதா? தன் மீது எந்த தவறும் இல்லை என்றால், அரசாங்க விஷயங்களை அவர் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது ஏன்? </p><p>மடியில் கனம் இருந்தால்தான் இது போன்ற வேலைகளை எல்லாம் செய்ய வேண்டியிருக்கும். அரசு துறைக்குள் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள் என்றால் இவர்கள் எவ்வளவு தவறுகளை செய்திருப்பார்கள் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். நாம் செய்த தவறுகளை இந்த ஆட்சியில் கண்டுபிடித்துவிடுவார்களோ என்ற பயம் இவர்களுக்கு இருக்கிறது. அந்த பயம்தான் எங்கள் ஆட்சிக்கு கிடைத்த முதல் வெற்றி.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>வார விடுமுறையை கொண்டாட ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-flocked-to-ooty-to-celebrate-the-weekend</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-flocked-to-ooty-to-celebrate-the-weekend#comments</comments><guid isPermaLink="false">45d77da4-c004-4d80-b78d-2642fe085624</guid><pubDate>Sun, 23 Aug 2026 11:08:11 +0000</pubDate><atom:updated>2026-08-23T11:08:11.826Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tourists,சுற்றுலா பயணிகள்,ஊட்டி,Ooty</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/ztsviz5p/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/ztsviz5p/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கவும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் முதலாவது சீசனும், அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2-வது சீசனும் நடைபெறுகிறது.</p><p>இந்த நிலையில், வார விடுமுறை நாளான இன்று ஊட்டியில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளம் போன்ற மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்தனர்.</p> <p>அரசு தாவரவியல் பூங்கா, ஊட்டி படகு இல்லம், உள்ளிட்ட பல இடங்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படுகிறது. அங்கு செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.</p><p>அதைபோல ஊட்டி தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்தனர். தொட்டபெட்டா மலை சிகரம் சென்ற சுற்றுலா பயணிகள் தொலைநோக்கி மூலம் மலைகள், பள்ளத்தாக்குகளை கண்டு ரசித்தனர். குறிப்பாக மலைச் சிகரத்தில் இருந்து தெரியும் ஊட்டி நகர வனப்பகுதிகள், கோவை, மேட்டுப்பாளையம் மற்றும் மலைகளில் தவழ்ந்து சென்ற மேகக் கூட்டங்களையும் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>கேரளாவில் 17 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; வருவாய் ஆய்வாளரை தாக்கிய கும்பலுக்கு வலைவீச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/17-tonnes-of-ration-rice-seized-in-kerala-gang-that-attacked-revenue-inspector-nabbed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/17-tonnes-of-ration-rice-seized-in-kerala-gang-that-attacked-revenue-inspector-nabbed#comments</comments><guid isPermaLink="false">ef8c8cfe-6e13-4cc4-a93f-a139f6f9bf56</guid><pubDate>Sun, 23 Aug 2026 10:45:00 +0000</pubDate><atom:updated>2026-08-23T10:45:00.216Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தாக்குதல்,கன்னியாகுமரி,கேரளா,Kerala,Seizure,பறிமுதல்,Kanyakumari,கும்பல்,attack,ration rice,ரேஷன் அரிசி,Revenue Inspector,வருவாய் ஆய்வாளர்,Gang,வலைவீச்சு,police netting</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/n2tu9rfw/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரேஷன் அரிசி பறிமுதல்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/n2tu9rfw/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி, </p><p>கேரள எல்லைக்குள் 17 டன் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">ரேஷன் அரிசியை பறிமுதல்</a> செய்ய முயன்றபோது, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D">வருவாய் ஆய்வாளரை</a> தாக்கிவிட்டு, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D">கொலை மிரட்டல்</a> விடுத்து தப்பி ஓடிய கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p><h2>வாகன சோதனை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF">கன்னியாகுமரி</a> மாவட்டம், களியக்காவிளையில் பறக்கும் படை தாசில்தார் பாரதி தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நிற்காமல் சென்ற மினி லாரியைத் துரத்திச் சென்றனர். அந்த லாரி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE">கேரள</a> எல்லைக்குள் இஞ்சிவிளையில் உள்ள அரிசி குடோனுக்குள் சென்றது.</p><h2>கேரளாவில் 17 டன் ரேஷன் அரிசி பறிமுதல்</h2><p>அதிகாரிகள் அந்த குடோனை சோதனையிட முயன்றபோது, அங்குள்ள கும்பல் வருவாய் ஆய்வாளர் தினேஷ் என்பவரை தாக்கிவிட்டு கொலை மிரட்டல் விடுத்துத் தப்பியோடியது. இரு மாநில போலீசார் நடத்திய சோதனையில், குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 17 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவான கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>காரை சேதப்படுத்திய காட்டு யானை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-damages-car</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-damages-car#comments</comments><guid isPermaLink="false">296bb02f-3c00-431f-8a47-416990345804</guid><pubDate>Sun, 23 Aug 2026 10:39:02 +0000</pubDate><atom:updated>2026-08-23T10:39:02.421Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>road,கார்,காட்டு யானை,சேதம்,Damages,A wild elephant,யானைக்கூட்டம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/mdsuz1qy/elephant.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ காட்டு யானைக்கூட்டம்]]></media:title><media:description type="html"><![CDATA[ காரை சேதப்படுத்திய காட்டு யானை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/mdsuz1qy/elephant.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஊட்டி,</p><p> நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து மைசூர் செல்லக்கூடிய தொரப்பள்ளி சாலையில், சுற்றுலாப் பயணிகளின் காரை <a href="https://www.dailythanthi.com/topic/wild-elephant">காட்டு யானை</a> ஒன்று ஆக்ரோஷமாக தாக்கிய வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>காட்டு யானைக்கூட்டம்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF">நீலகிரி</a> மாவட்ட வனப்பகுதிகளில் தற்போது காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், கூடலூர் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தொரப்பள்ளி பகுதியில், குட்டிகளுடன் கூடிய காட்டு யானைக்கூட்டம் ஒன்று சாலையை கடக்க முயன்றது. </p><h2>சாலையோரம்</h2><p>அப்போது, அந்த வழியாக வந்த சுற்றுலாப் பயணிகளின் கார் ஒன்று யானைகள் கடப்பதற்காக சாலையோரம் நிறுத்தப்பட்டது. குட்டிகளுடன் சாலையை கடந்த யானைகளில், ஒரு காட்டு யானை திடீரென ஆக்ரோஷமடைந்தது. </p> <h2>காரின் முன்பகுதி சேதம்</h2><p>கண்ணிமைக்கும் நேரத்தில் பாய்ந்து வந்த அந்த யானை, நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலாப் பயணிகளின் காரை நோக்கி ஓடிவந்து, தனது தும்பிக்கை மற்றும் தந்தங்களால் காரின் முன்பகுதியை ஆக்ரோஷமாக முட்டி தள்ளியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கி பலத்த சேதமடைந்தது. </p><h2>உயிர் தப்பினர்</h2><p>காரின் உள்ளே இருந்த பயணிகள் பயத்தில் அலறியடித்தபடி உள்ளேயே முடங்கினர். அதிர்ஷ்டவசமாக அவர்கள் காரை விட்டு கீழே இறங்காததால், எந்தவித காயமுமின்றி நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.</p><h2>வைரல் வீடியோ</h2><p>யானை காரை தாக்கும் இந்தத் திக் திக் காட்சிகள், பின்னால் வந்த வாகனத்தில் இருந்தவர்களால் வீடியோ எடுக்கப்பட்டு, தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பார்ப்போரை பதற வைத்து வருகிறது. வனப்பகுதி சாலைகளில் பயணிக்கும் போது, யானைகள் சாலையை கடந்தால் வாகனங்களை தூரத்திலேயே நிறுத்த வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் காரை விட்டு கீழே இறங்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது என வனத்துறையினர் பொதுமக்களுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>”கலைஞராக இருந்தாலும் தோற்கடித்திருப்பேன்” - தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/even-if-i-were-an-artist-i-would-have-defeated-him-thaveka-mla-vs-babus-criticism</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/even-if-i-were-an-artist-i-would-have-defeated-him-thaveka-mla-vs-babus-criticism#comments</comments><guid isPermaLink="false">f4525b32-e27e-4e8c-b28c-436838f83e1f</guid><pubDate>Sun, 23 Aug 2026 10:29:56 +0000</pubDate><atom:updated>2026-08-23T10:29:56.838Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தமிழக வெற்றி கழகம்,குளத்தூர்,கலைஞர் கருணாநிதி,M. K. Stalin,Kalaingnar,Kulathur</media:keywords><media:content height="400" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/9hu0wycu/RAJA-2026.jpg" width="900"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முன்னாள் முதல்-அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.பாபு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/9hu0wycu/RAJA-2026.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெரம்பூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் என்ன, அவருடைய அப்பாவாக இருந்தாலும் தோற்கடித்திருப்பேன் என்று தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு விமர்சித்துள்ளார்.</p><h2></h2><h2>தவெக பொதுக்கூட்டம்</h2><p>சென்னை மாவட்டம் பெரம்பூரில் நேற்று நடைபெற்ற தவெக பொதுக் கூட்டத்தில் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு கலந்துக்கொண்டார். அதில் அவர் கூறியதாவது:-  சொல்வது மட்டுமல்ல சொல்லாததும் செய்வது நமது முதல்- அமைச்சர் விஜய் தான். தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் செய்வதற்கு 5 நிமிடம் தான் குளத்தூர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">பொதுக்கூட்டத்திற்கு</a> வந்தார். இந்த கூட்டத்தில் 30,000க்கும் மேற்பட்ட மக்கள் கூடிவிட்டனர். அப்போதே  வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது  என முடிவு செய்து விட்டேன். யாரா இருந்தால் என்ன ஸ்டாலினா இருந்தா என்ன அவருடைய அப்பாவாகவே (கலைஞர் மு. கருணாநிதி) இருந்தாலும் நான் தோற்கடித்திருப்பேன் என கூறினார்.</p> <p>மேலும், 2006 முதல் 2011-ம் ஆண்டு வரை பல்வேறு கட்சிகளில் இருந்துள்ளேன் அன்பு சகோதரர் மரிய வில்சன் போல் ஒரு நிதி அமைச்சரை எங்கும் பார்த்ததில்லை. தமிழகத்தில் இனி எந்த கட்சிகளும் தேரவே தேராது. இனிமேல் திமுகவும் கிடையாது, அதிமுகவும் கிடையாது ஒரே கட்சி தான் அது தவெக தான். <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D">முதல் - அமைச்சர்</a> பேசாமல் இருந்தால் பேசுங்கள் என்கின்றனர் பேசினால் எழுந்து ஓடுகிறார்கள். தற்போதைய எதிர்க்கட்சிகளுக்கு ஒன்றுமே தெரியவில்லை. பேசாமல் கட்சியை ராஜினாமா செய்து விட்டு சென்று விடலாம். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தென்காசி அருகே ரெயில்வே கேட் கம்பியில் ஆம்புலன்ஸ் சிக்கியதால் பரபரப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/commotion-near-tenkasi-as-ambulance-gets-stuck-in-railway-crossing-barrier</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/commotion-near-tenkasi-as-ambulance-gets-stuck-in-railway-crossing-barrier#comments</comments><guid isPermaLink="false">f03f37df-f036-4373-a8eb-804882595bc1</guid><pubDate>Sun, 23 Aug 2026 10:26:49 +0000</pubDate><atom:updated>2026-08-23T10:26:49.076Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ambulance,ஆம்புலன்ஸ்,Tenkasi,தென்காசி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/cfclaqef/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/cfclaqef/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><p>தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் நோயாளியை அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று, ரெயில்வே கேட் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த உயர் தடுப்பு கம்பியில் சிக்கியது. மேலும் அது போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதி என்பதால், வாகனங்கள் செல்ல முடியாமல் சுமார் 30 நிமிடங்கள் அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. </p><p>உயர் தடுப்பு கம்பியில் ஆம்புலன்ஸ் வாகனத்தின் மேல் பகுதியில் இருந்த ஒலிபெருக்கி சிக்கிய நிலையில், ஊழியர்கள் அதைத் திருப்பி சரிசெய்து வாகனத்தை மீட்டனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் அங்கிருந்து கிளம்பிச் சென்றது. தொடர்ந்து போக்குவரத்து வழக்கம்போல் சீரானது. அந்த பகுதியில் மேம்பாலப் பணிகள் மந்தமான வேகத்தில் நடைபெறுவதே இது போன்ற சம்பவங்களுக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். </p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/vBIqsgO4HQY"></iframe></figure>]]></content:encoded></item><item><title>கோவை: ஏ.டி.எம்.மில் நிரப்ப கொடுத்த ரூ.10 லட்சம் மோசடி - பெண் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-woman-arrested-for-fraud-of-rs10-lakhs-for-atm-refill</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-woman-arrested-for-fraud-of-rs10-lakhs-for-atm-refill#comments</comments><guid isPermaLink="false">86ce50ae-329a-44fd-a134-315d5047fe57</guid><pubDate>Sun, 23 Aug 2026 10:06:05 +0000</pubDate><atom:updated>2026-08-23T10:06:05.045Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,பணம் மோசடி,woman arrested,பெண் கைது,Money fraud,ATM Machine,ஏடிஎம் எந்திரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/glyn68tl/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பணம் மோசடி, பெண் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/glyn68tl/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p>கோவை குனியமுத்தூர் பி.கே.புதூர் பகுதியில் ஏ.டி.எம்.மில் நிரப்ப கொடுத்த ரூ.10 லட்சம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF">பணத்தை மோசடி</a> செய்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">பெண் கைது</a> செய்யப்பட்டார்.</p><h2>ரூ.10 லட்சம் மோசடி</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88">கோவை</a> குனியமுத்தூர் பி.கே.புதூர் பகுதியில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">ஏ.டி.எம். எந்திரங்களில் </a>பணம் நிரப்பும் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்த திருச்சி அம்பிகாபுரத்தை சேர்ந்த கதிர்வேல் பச்சைமுத்து (வயது 40) மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா ஆகியோர், எந்திரங்களில் நிரப்ப வேண்டிய ரூ.10 லட்சம் பணத்தை தங்களது சொந்த தேவைக்காக எடுத்து மோசடி செய்தனர்.</p><h2>பெண் கைது</h2><p>பணத்தை திருப்பி தராமல் தம்பதியினர் தலைமறைவாகினர். இதுகுறித்து நிறுவன உரிமையாளர் ரவிகுமார் அளித்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்போது ஐஸ்வர்யாவை கைது செய்தனர். தலைமறைவான கதிர்வேலை தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ஆபரேஷன் சக்சஸ்... அ.தி.மு.க. பேஷண்ட் டெட்; அமைச்சர் அருண்ராஜ் பேச்சு
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/operation-success-admk-patient-dead-minister-arunraj-speech</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/operation-success-admk-patient-dead-minister-arunraj-speech#comments</comments><guid isPermaLink="false">bd4fa3b5-54f4-4338-b56d-69b1c9e69c55</guid><pubDate>Sun, 23 Aug 2026 10:04:07 +0000</pubDate><atom:updated>2026-08-23T10:04:07.323Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>த.வெ.க.,T.V.K.,Minister Arunraj,அமைச்சர் அருண்ராஜ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/8eng5c9h/tphda.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/8eng5c9h/tphda.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>திருப்பூர்</p><p>திருப்பூரில் நடந்த த.வெ.க. 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் ஆபரேஷன் சக்சஸ், அ.தி.மு.க. பேஷண்ட் டெட் என அமைச்சர் அருண்ராஜ் பேசினார்.</p><p>தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் முதல் முறையாக தேர்தலில் களம் கண்ட விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 தொகுதிகளை வென்று முதல் இடம் பிடித்தது. கடந்த முறை ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க. கூட்டணி 73 தொகுதிகளில் வெற்றி பெற்று 2-வது இடத்திற்கு சென்றதோடு, அ.தி.மு.க. கூட்டணி 53 தொகுதிகளில் வெற்றி பெற்று 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.</p> <h2>ஆட்சியமைத்த த.வெ.க.</h2><p>இதனால், ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை இல்லாத போதிலும் அதிக தொகுதிகளை வென்ற த.வெ.க.வுடன் காங்கிரஸ் கைகோர்த்தது. தொடர்ந்து, வி.சி.க., 2 கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க. ஆட்சியமைத்தது. மே 10-ந்தேதி முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்று கொண்டார். சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும் த.வெ.க. வெற்றி பெற்றது. பின்னர் அக்கட்சியின் முதல் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் ஆகியவையும் தாக்கல் செய்யப்பட்டது.</p><p>இந்த நிலையில், த.வெ.க. ஆட்சி பொறுப்புக்கு வந்து 100 நாட்கள் ஆன சூழலில், இதுதொடர்பான சாதனை விளக்க பொதுக்கூட்டங்களை அக்கட்சி நடத்தி வருகிறது. இதன்படி, திருப்பூரில் நடந்த த.வெ.க.வின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அமைச்சர் அருண்ராஜ் கலந்து கொண்டு பேசினார்.</p> <h2>நகைச்சுவையாக ராகிங்</h2><p>அவர் பேசும்போது, சட்டசபையில் நம் மூத்த அண்ணன் செங்கோட்டையனின் பக்கத்தில்தான் நான் எப்போதும் அமர்ந்திருப்பேன். அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் அந்த பக்கம் வரும்போது, அண்ணனை பார்த்து நகைச்சுவையாக ராகிங் செய்வது வழக்கம். நான் அண்ணனை பற்றி அடிக்கடி சொல்வதுண்டு. மருத்துவத்தில் நான் எப்படி ஒரு டாக்டரோ, அதேபோல அரசியலில் நமது அண்ணன் ஒரு அரசியல் டாக்டர்.</p><p>அரசியலில் என்ன பிரச்சினை, அ.தி.மு.க.வில் என்ன பிரச்சினை என துல்லியமாக கண்டறிந்து, அதற்கேற்ற சிகிச்சையை அளித்து, இறுதியில் 'ஆபரேஷன் சக்சஸ்... அ.தி.மு.க. பேஷண்ட் டெட்' என்ற நிலைக்கு கொண்டு சென்று விட்டார் என பேசியுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>கூடலூரில் இரவு நேரத்தில் உலா வரும் காட்டு யானை - பொதுமக்கள் அச்சம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-wanders-in-gudalur-at-night-public-alarmed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-wanders-in-gudalur-at-night-public-alarmed#comments</comments><guid isPermaLink="false">58d817ad-d130-4e3d-b7d0-612947c5f873</guid><pubDate>Sun, 23 Aug 2026 09:58:15 +0000</pubDate><atom:updated>2026-08-23T09:58:15.828Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>elephant,யானை,கூடலூர்,Kudalur</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/rwj41qri/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/rwj41qri/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>நீலகிரி மாவட்டம் கூடலூரில் குடியிருப்பு பகுதிக்குள் இரவு நேரத்தில் உலா வரும் காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனை அங்கிருந்த குடியிருப்புவாசி ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். </p><p>இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் பிரம்மாண்ட உருவத்துடன் வலம் வந்த காட்டு யானை, பொதுமக்களின் சத்தத்தை கேட்டதும் மெதுவாக அங்கிருந்து நகர்ந்து சென்றது. தொடர்ந்து யானைகள் ஊருக்குள் வருவதால் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>ஏற்கனவே கூடலூர் பகுதியில் கடந்த ஒரு மாதத்தில், வனப்பகுதிக்குள் இருந்து ஊருக்குள் நுழைந்த புலி தாக்கி 2 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மனிதர்களை வேட்டையாடும் புலியை கூண்டு வைத்து சீக்கிரமாக பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், தற்போது காட்டு யானை ஊருக்குள் உலா வருவது மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். </p><p>இருப்பினும் வனத்துறையினர் தொடர்ந்து டிரோன் கேமராக்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதால், பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>எம்.எல்.ஏக்களுக்கு கார் வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன் பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/plan-to-provide-cars-to-mlas-must-be-dropped-cpis-veerapandian</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/plan-to-provide-cars-to-mlas-must-be-dropped-cpis-veerapandian#comments</comments><guid isPermaLink="false">d889fb4d-c328-485f-a7ad-ba9bbef61941</guid><pubDate>Sun, 23 Aug 2026 09:57:45 +0000</pubDate><atom:updated>2026-08-23T09:57:45.067Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Communist,இந்திய கம்யூனிஸ்ட்,M Veerapandian,வீரபாண்டியன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/9dizxr6a/veerapandian.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வீரபாண்டியன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/9dizxr6a/veerapandian.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><p>சென்னை தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைமைய 1 கத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் நேற்று, நிருபர் களிடம் கூறியதாவது:-விடுதலைப் போராட்ட வீரர் என்கின்ற முறையில் நல்லகண்ணுவிற்கு அரசு ஒதுக்கிய வீட்டை, அவரது விருப்பப்படி அரசிடமே திரும்ப ஒப்படைக்கிறோம்.  டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வலியுறுத்தி, டெல்டா மாவட்டங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வருகிற 28-ந்தேதி கலெக்டர் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடத்த இருக்கிறோம்.</p> <p>பணிநிரந்தரம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அன் றைய தினம் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இடதுசாரி மாணவர் அமைப்புகளைக் கண்காணித்தல் தொடர்பான சுற்றறிக்கைக்கு முதல்-அமைச்சர் விஜய் மற்றும் தலைமைச் செயலாளர் விளக்கம் அளிக்க வேண்டும். மேகதாது அணை கட்டக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எம்.எல்.ஏக்களுக்கு கார் வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும். டெல்லி பேரணிக்காக தமிழகத்தில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு ரெயிலுக்கு மத்திய அரசு அனுமதி தர மறுத்துவிட்டது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தேனியில் வாழை இலை விலை உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/banana-leaf-prices-surge-in-theni</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/banana-leaf-prices-surge-in-theni#comments</comments><guid isPermaLink="false">d6d85e47-e81c-4506-afe2-ca8ccac7fb27</guid><pubDate>Sun, 23 Aug 2026 09:20:22 +0000</pubDate><atom:updated>2026-08-23T09:20:22.520Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Price,விலை,Theni,தேனி,உயர்வு,hike,வாழை இலை,banana leaves</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/9c13qhnv/bananan-leaf.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வாழை இலை]]></media:title><media:description type="html"><![CDATA[ தேனியில் வாழை இலை விலை உயர்வு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/9c13qhnv/bananan-leaf.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி, </p><p>தேனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88">வாழை இலை </a>விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம் வரை ரூ.1,500-க்கு விற்கப்பட்ட ஒரு கட்டு வாழை இலை, தற்போது ரூ.4,000 வரை விற்பனையாவதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.</p><h2>வரத்து குறைவு</h2><p>தேனி மாவட்ட சந்தைகளுக்கு வழக்கமாக வரும் வாழை இலைகளின் வரத்து கடந்த சில நாட்களாக கணிசமாக குறைந்துள்ளது. வரத்து குறைவு ஒருபுறம் இருக்க, மறுபுறம் ஆவணி மாத தொடர் முகூர்த்த நாட்கள் மற்றும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%93%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D">ஓணம்</a> பண்டிகை அடுத்தடுத்து வருவதால் வாழை இலையின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது.</p><h2>விலை உயர்வு</h2><p>தேவையை பயன்படுத்தி, தேனி சந்தையில் 180 இலைகள் கொண்ட ஒரு கட்டு வாழை இலையின் விலை ரூ.4,000 ஆக உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனையில் ஒரு இலை ரூ.25 முதல் ரூ.30 வரை விற்கப்படுகிறது. ஓணம் பண்டிகை நெருங்குவதால் வரும் நாட்களில் இதன் விலை மேலும் உயரக்கூடும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>மதுரை: இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய டாக்டர் மீது வழக்குப்பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-case-registered-against-doctor-who-made-young-woman-pregnant</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-case-registered-against-doctor-who-made-young-woman-pregnant#comments</comments><guid isPermaLink="false">1672ec09-4cce-4749-8080-f3a860305f3d</guid><pubDate>Sun, 23 Aug 2026 09:11:30 +0000</pubDate><atom:updated>2026-08-23T09:11:30.199Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,young woman,இளம்பெண்,கர்ப்பம்,doctor,வழக்குப்பதிவு,டாக்டர்,pregnancy,case registered</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/nk410qzo/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டாக்டர் மீது வழக்குப்பதிவு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/nk410qzo/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p>மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D">இளம்பெண்</a>ணை ஆசை வார்த்தை கூறி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF">கர்ப்பமாக்கிய</a> காரைக்குடியைச் சேர்ந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D">டாக்டர் </a>மீது<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81"> வழக்குப்பதிவு</a> செய்யப்பட்டுள்ளது. </p><h2>ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய டாக்டர்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88">மதுரை</a> திருமங்கலத்தைச் சேர்ந்த 30 வயது அழகு நிலைய பெண் உரிமையாளருக்கும், காரைக்குடி பகுதியைச் சேர்ந்த டாக்டர் மணிரத்தினத்திற்கும் சமூக வலைத்தளம் வழியாகப் பழக்கம் ஏற்பட்டது. திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி, டாக்டர் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததில் அவர் கர்ப்பமானார். </p><h2>வழக்குப்பதிவு</h2><p>இதையறிந்த டாக்டர் பெண்ணின் கர்ப்பத்தைக் கலைக்கக் கூறி மாத்திரைகள் வழங்கி கட்டாயப்படுத்தியுள்ளார். மேலும் திருமணத்திற்கு மறுத்த நிலையில் மணிரத்தினம் மீது, பாதிக்கப்பட்ட பெண் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>அனுபவ நிலங்களுக்கு பட்டா கொடுக்காமல் இருந்த ஆட்சியாளர்கள் மீது என்ன நடவடிக்கை  - பெ. சண்முகம் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-action-against-rulers-who-denied-patta-for-customary-lands-pe-shanmugam-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-action-against-rulers-who-denied-patta-for-customary-lands-pe-shanmugam-asks#comments</comments><guid isPermaLink="false">4c292a58-0c96-4d36-bd91-6cda91426807</guid><pubDate>Sun, 23 Aug 2026 09:06:25 +0000</pubDate><atom:updated>2026-08-23T09:06:25.469Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>land,P. Shanmugam,Administrators,கேள்வி,பட்டா,நிலங்கள்,Occupation,ஆட்சியாளர்கள்,என்ன நடவடிக்கை,asks,பெ. சண்முகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/kmytj21q/communist.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பெ. சண்முகம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாலர் பெ. சண்முகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/kmytj21q/communist.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அனுபவ நிலங்களுக்குப் பட்டா தராமல் இருந்த ஆட்சியாளர்கள் மீது என்ன நடவடிக்கை?" என்று தவெக அரசுக்கு பெ. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D">மார்க்சிஸ்ட் </a>கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாலர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2> நடவடிக்கை</h2><p>தேனி மாவட்டம் மேகமழையில் 118 அரசு ஊழியர்களை அவர்களின் நிலங்களில் இருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து தேனி மாவட்ட ஆட்சியர் நாளை வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது.</p> <h2>ஆக்கிரமிப்பாளர்கள்</h2><p>இப்போது அரசு ஊழியர்களாக உள்ளவர்களின் முப்பாட்டன், தாத்தா, அப்பா பயிர் செய்து வந்த நிலங்களை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">ஆக்கிரமிப்பு </a>என்றும், எனவே அவர்களின் வாரிசுகளான இப்போது அரசு ஊழியர்களாக உள்ளவர்கள் எல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் என்றும் வகைப்படுத்தி வெளியேற்ற உத்தரவு வழங்கி உள்ளது சுப்ரீம் கோர்ட்டு. இல்லை என்றால் ஊழியர்கள் மீது சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.</p><h2>இது நீதியா? நியாயமா?</h2><p>இது நீதியா? நியாயமா? இதே அணுகுமுறையை நாடு முழுவதும் கடைப்பிடித்தால் பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் தங்கள் பணியை இழக்க வேண்டும் அல்லது நிலத்தை இழக்க வேண்டும்.</p> <h2>வன உரிமைச்சட்டம்</h2><p>பட்டா இல்லாதவர்கள் எல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் என்றால் நூறாண்டுகளாக பயிர் செய்தும், குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டா கொடுக்காததற்கு யார் பொறுப்பு ஏற்பது? அனுபவ நிலங்களுக்கு பட்டா கொடுக்காமல் இருந்த ஆட்சியாளர்கள் மீது என்ன நடவடிக்கை! வன உரிமைச்சட்டம் 2006, 20 ஆண்டுகளாக அமலில் இருந்தும் சட்டத்தை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை?</p><h2>மனிதாபிமான கண்ணாடி</h2><p>சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் "ஆக்கிரமிப்பு கண்ணாடியை" அணிந்து கொண்டு பார்த்தால் ஆக்கிரமிப்பாகத் தான் தெரியும். மக்களின் வாழ்வாதாரம் என்ற "மனிதாபிமான கண்ணாடியை" அணிந்து கொண்டு பார்த்தால்தான் நீதி தெரியும்.</p><p>அநீதிக்கு எதிராக அணிதிரள்வீர் இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கடலூர்: காதலனை கரம்பிடித்த திருநங்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cuddalore-transgender-woman-embraces-lover</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cuddalore-transgender-woman-embraces-lover#comments</comments><guid isPermaLink="false">46f9dd12-521e-49ac-92fe-74ac8eaece0d</guid><pubDate>Sun, 23 Aug 2026 08:39:32 +0000</pubDate><atom:updated>2026-08-23T08:39:32.843Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கடலூர்,Marriage,transgender,திருநங்கை,TemplePriest</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/ov3ehuiu/lover33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
கடலூர்]]></media:title><media:description type="html"><![CDATA[  காதலனை கரம்பிடித்த திருநங்கை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/ov3ehuiu/lover33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர்,</p><p>கடலூர் பகுதியைச் சேர்ந்த திருநங்கை சஞ்சனா தனது காதலன் நாகராஜ் என்பவரை குடும்பத்தார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.</p><p>கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் ஆவணி மாத முகூர்த்தத்தை முன்னிட்டு ஒரே நாளில் 84 திருமணங்கள் நடைபெற்றன. இதில் நெகிழ்ச்சியான நிகழ்வாக, கடலூர் பகுதியைச் சேர்ந்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">திருநங்கை</a> சஞ்சனா தனது காதலன் நாகராஜ் என்பவரை குடும்பத்தார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். </p><p>திருமணம் செய்துகொண்ட திருநங்கை சஞ்சனா நடனக் கலைஞராகவும், அவரது காதலன் நாகராஜ் பூசாரியாகவும் உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தேனியில் நில வெளியேற்ற நடவடிக்கைக்கு எதிராக அணிதிரள மார்க்சிஸ்ட் கட்சி அழைப்பு..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/marxist-party-calls-for-mobilization-against-land-eviction-drive-in-theni</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/marxist-party-calls-for-mobilization-against-land-eviction-drive-in-theni#comments</comments><guid isPermaLink="false">a0ca1a9e-7c80-4996-a2b5-cf1479153557</guid><pubDate>Sun, 23 Aug 2026 08:24:35 +0000</pubDate><atom:updated>2026-08-23T08:24:35.866Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பெ.சண்முகம்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி,Communist Party of India (Marxist),p shanmugam,Marxist Party,மார்க்சிஸ்ட் கட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/sviyc05g/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/sviyc05g/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>இது நீதியா? நியாயமா?</h2><p>தேனி மாவட்டம் மேகமழையில் 118 அரசு ஊழியர்களை அவர்களின் நிலங்களில் இருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட ஆட்சியர் நாளை வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது.</p><p>இப்போது அரசு ஊழியர்களாக உள்ளவர்களின் முப்பாட்டன், தாத்தா, அப்பா பயிர் செய்து வந்த நிலங்களை ஆக்கிரமிப்பு என்றும், எனவே அவர்களின் வாரிசுகளான இப்போது அரசு ஊழியர்களாக உள்ளவர்கள் எல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் என்றும் வகைப்படுத்தி வெளியேற்ற உத்தரவு வழங்கி உள்ளது உச்சநீதிமன்றம். இல்லை என்றால் ஊழியர்கள் மீது சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.</p><p>இது நீதியா? நியாயமா? இதே அணுகுமுறையை நாடு முழுவதும் கடைப்பிடித்தால் பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் தங்கள் பணியை இழக்க வேண்டும் அல்லது நிலத்தை இழக்க வேண்டும்.</p><h2>அநீதிக்கு எதிராக அணிதிரள்வீர்</h2><p>பட்டா இல்லாதவர்கள் எல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் என்றால் நூறாண்டுகளாக பயிர் செய்தும், குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டா கொடுக்காததற்கு யார் பொறுப்பு ஏற்பது? அனுபவ நிலங்களுக்கு பட்டா கொடுக்காமல் இருந்த ஆட்சியாளர்கள் மீது என்ன நடவடிக்கை! வன உரிமைச்சட்டம் 2006, 20 ஆண்டுகளாக அமலில் இருந்தும் சட்டத்தை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை?</p><p>உச்சநீதிமன்ற நீதிபதிகள் "ஆக்கிரமிப்பு கண்ணாடியை" அணிந்து கொண்டு பார்த்தால் ஆக்கிரமிப்பாகத் தான் தெரியும். மக்களின் வாழ்வாதாரம் என்ற "<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மனிதாபிமான </a>கண்ணாடியை" அணிந்து கொண்டு பார்த்தால்தான் நீதி தெரியும்.</p><p>அநீதிக்கு எதிராக அணிதிரள்வீர்</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்: மருத்துவ ஊழியர் பணியிடைநீக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/medical-worker-suspended-after-complaint-of-sexual-harassment-against-student</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/medical-worker-suspended-after-complaint-of-sexual-harassment-against-student#comments</comments><guid isPermaLink="false">fa1da1f9-1e7d-4c9d-8b27-74e981c511a7</guid><pubDate>Sun, 23 Aug 2026 08:21:22 +0000</pubDate><atom:updated>2026-08-23T08:21:22.888Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Sexual harassment,பாலியல் தொல்லை,மாணவன்,student,suspended,பணியிடைநீக்கம்,மருத்துவ ஊழியர்,medical workers</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/lhon6vuc/suspension.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/lhon6vuc/suspension.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாகர்கோவில்,</p><p>நாகர்கோவிலில் கல்லூரி மாணவனுக்கு, மருத்துவ ஊழியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீஸ் சூப்பிரண்டிடம் பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.</p><h2>மாணவனுக்கு பாலியல் தொல்லை</h2><p>நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்த 23 வயதான வாலிபர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலினிடம் பரபரப்பு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-</p><p>நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.எஸ்.சி. படித்து வருகிறேன். குடும்ப வறுமையின் காரணமாக, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில், செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தின் மூலம் பகுதி நேர பணியாளராக கடந்த ஓராண்டிற்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். இந்த நிலையில் அங்கு பணியாற்றும் எனக்கு சீனியரான மருத்துவ ஊழியர் ஒருவர் என்னிடம் சகஜமாக பேசினார். பின்னர் திடீரென பாலியல் தொல்லை கொடுக்க தொடங்கினார்.</p><h2>ஓரின சேர்க்கை தொல்லை</h2><p>ஓரின சேர்க்கைக்கு, என்னை வற்புறுத்தி தொல்லை கொடுத்தார். நான் எவ்வளவோ மறுத்தும் என்னை தொடர்ந்து ஓரின சேர்க்கைக்கு அழைத்து வருகிறார். இதற்கிடையே பணி நிமித்தமாக சென்னைக்கு செல்ல வேண்டும் என்று அழைத்துச் சென்று பஸ்சில் வைத்து, எனக்கு பாலியல் தொல்லை அளித்து ஓரின சேர்க்கைக்கு வற்புறுத்தினார். </p><p>மேலும் எனது வாட்ஸ்-அப் எண்ணுக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பி வைத்து மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தினார். இந்த செயலால் என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. இது குறித்து வெளியே கூறினால், வெளி மாநில பணியாளர்களை வைத்து கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டுகிறார். எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறியுள்ளார்.</p><p>இந்த சம்பவம் வெளியானதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனம், குற்றச்சாட்டுக்கு உள்ளான ஊழியரை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">பணியிடை நீக்கம்</a> செய்துள்ளதாக கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>சட்டமன்றம் ரீல்ஸ்-க்காகவே நடைபெறுகிறது - திமுக எம்.பி. கனிமொழி விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-assembly-is-being-held-for-reels-dmk-mp-kanimozhi-criticises</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-assembly-is-being-held-for-reels-dmk-mp-kanimozhi-criticises#comments</comments><guid isPermaLink="false">7a1cf4f0-6fbf-4f65-8395-1040f414899f</guid><pubDate>Sun, 23 Aug 2026 08:11:37 +0000</pubDate><atom:updated>2026-08-23T08:11:37.411Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,DMK,தமிழக சட்டசபை,Kanimozhi MP,கனிமொழி எம்பி,சட்டமன்றம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/07b6et1w/kanimozi33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[  திமுக எம்.பி. கனிமொழி ]]></media:title><media:description type="html"><![CDATA[ 
சட்டமன்றம் ரீல்ஸ்-க்காகவே நடைபெறுகிறது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/07b6et1w/kanimozi33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டமன்றமே ரீல்ஸ்காக தான் நடத்தப்படுகிறது என்ற உணர்வை தருகிறார்கள் என  தூத்துக்குடியில் திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.</p><p>தூத்துக்குடியில் திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%20">தவெக ஆ</a>ட்சிக்கு வந்தபிறகு தொடர்ந்து குற்றங்கள் பெருகி கொண்டே வருகின்றன. குற்றங்களில் பல குற்றங்களை செய்திருப்பவர்கள் தவெகவினராக இருக்கிறார்கள்.  காவல் நிலைய மரணங்கள், பாலியல் குற்றங்கள் அதிகரித்து உள்ளது. </p><p>சட்டம் ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாக இந்த ஆட்சியில் மாறியிருக்கிறது. சட்டமன்றமே ரீல்ஸ்-க்காக நடத்தப்படுகிறது என்ற உணர்வை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>வேலூர்: முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vellore-woman-snatches-3-sovereign-gold-chain-while-pretending-to-ask-for-address</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vellore-woman-snatches-3-sovereign-gold-chain-while-pretending-to-ask-for-address#comments</comments><guid isPermaLink="false">c5df5d6d-aaac-4e52-b5db-8d69d3212af5</guid><pubDate>Sun, 23 Aug 2026 08:08:24 +0000</pubDate><atom:updated>2026-08-23T08:08:24.412Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Vellore,வேலூர்,நகை பறிப்பு,chain snatched</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/gvf8aa7p/chainsnatching.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/gvf8aa7p/chainsnatching.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வேலூர்,</p><p>வேலூர் மாவட்டம் காங்கேயநல்லூரை சேர்ந்தவர் சேகர் (வயது 63) நெசவுத் தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி (60) நேற்று முன்தினம் வேலூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் மனைவியை அழைத்துக் கொண்டு சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் உள்ள மகன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். காஞ்சீபுரம் மாவட்டம் சோமங்கலம் அருகே உள்ள அமரம்பேடு பகுதியை கடந்து செல்லும் போது மழை பெய்ததால் சாலையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு ஒதுங்கி நின்றனர்.</p><p>மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் மழைக்கு ஒதுங்கி நின்ற கணவன்-மனைவி அருகே வந்து முகவரி கேட்பது போல் கேட்டு தனலட்சுமி அணிந்து இருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டார். இது குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் முன்னாள் அமைச்சர்கள் தகாத வார்த்தையில பேசிக்கிட்டு இருக்காங்க - அமைச்சர் ரமேஷ் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/former-ministers-are-using-inappropriate-language-in-the-assembly-minister-ramesh</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/former-ministers-are-using-inappropriate-language-in-the-assembly-minister-ramesh#comments</comments><guid isPermaLink="false">ccd92890-0559-4768-bc85-b1ee2e74933b</guid><pubDate>Sun, 23 Aug 2026 07:53:32 +0000</pubDate><atom:updated>2026-08-23T07:53:32.269Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,சட்டசபை,Trichy,அமைச்சர் ரமேஷ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/gvx8j9kp/ramehs33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ரமேஷ் ]]></media:title><media:description type="html"><![CDATA[ மாண்புடன் பேச மாட்றங்க என அமைச்சர் ரமேஷ் கூறினார்.
]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/gvx8j9kp/ramehs33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்  ரமேஷ் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>ரேஷன் அரிசிதான் சாப்பிடுகிறேன் என சட்டசபை உறுப்பினர் கே.என் நேரு கூறுவது மகிழ்ச்சியாக இருந்தாலும், பல இடங்களில் பொது மக்கள் ரேஷன் அரிசியை பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது.</p><p>அதனையெல்லாம் சரிசெய்து தரமான பொருட்களை வழங்க முதல்-அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். திமுககாரர்கள் பக்கம் கேமராவை திருப்பினால் எப்படி ரிலீஸ் போடமுடியும் என்பது மக்களுக்கு தெரியும், முதன்முறையாக சட்டப்பேரவை வந்த உறுப்பினர்கள் நாங்கள் மாண்புடன் கருத்துக்களை முன்வைக்கிறோம். மக்கள் பிரச்சினை பற்றி முன்வைக்கிறோம். எதிர்த்தரப்பின் கருத்துக்கும் பதில் சொல்லுகிறோம்.</p><p>ஆனால் இவர்கள் எழுந்து நின்று கூச்சல் போடுவதும், வரிக்கு வரி கூச்சல் போடுவதும், கத்துவது, ஓடுவது மற்றும் அமைச்சர்கள் பேசும்போது முன்னாள் அமைச்சர்கள் பின் வரிசையில் அமர்ந்து கொண்டு தகாத வார்த்தைகளில் பேசுவது என்று சட்டப்பேரவையைச் சண்டை நடத்தும் இடமாக மாற்ற செயல்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு முதலில் மாண்பு இருக்கிறதா என்பது தெரிய வேண்டும். சட்டமன்றத்துல எப்படியாவது சண்டை நடக்கணும்னு எதிர்க்கட்சியினர் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்காங்க.</p><p>நாங்கள் ஏதேனும் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை. ஜனநாயக முறைப்படி நடைபெறும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88">சட்டப்பேரவை</a>யில் அனைவருக்குமான கேள்விக்கு பதிலளிக்கப்பட்டு, சில வார்த்தைகள் இருந்தால் அதை நீக்குவது மரபு, கடந்த ஆட்சியில் ஜனநாயகத்திற்கு இடமில்லை என்பது தெரியும், அதனால் இந்த வார்த்தைகளை கேட்டிருக்க மாட்டீர்கள். பேரவைத் தலைவர் அவரது பணியை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>கோவளம் மாநாட்டில் முதல்-அமைச்சர் விஜய் பேசியது குறித்து சட்டமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்காதது ஏன்? - கிருஷ்ணசாமி கேள்வி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-was-no-statement-submitted-in-the-legislative-assembly-regarding-chief-minister-vijays-speech-at-the-kovalam-conference-krishnasamy-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-was-no-statement-submitted-in-the-legislative-assembly-regarding-chief-minister-vijays-speech-at-the-kovalam-conference-krishnasamy-asks#comments</comments><guid isPermaLink="false">5166c3f1-b438-4283-8d52-ca99c96bcd81</guid><pubDate>Sun, 23 Aug 2026 07:32:21 +0000</pubDate><atom:updated>2026-08-23T07:32:21.707Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,தமிழக சட்டசபை,TN govt,TN Assembly,டாக்டர் கிருஷ்ணசாமி,Dr. Krishnasamy,Assembly Session,சட்டசபை கூட்டத்தொடர்,புதிய தமிழகம்,TN Assembly session,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,சட்டசபை கூட்டத் தொடர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/p4mq2l3l/joes.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/p4mq2l3l/joes.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>கோவளம் மாநாட்டில் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய் </a>பேசியது குறித்து சட்டமன்றத்தில் விளக்க அறிக்கை சமர்ப்பிக்காதது ஏன்? என புதிய தமிழகம் கட்சி நிறுவனரும், தலைவருமான டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பி உள்ளார். </p><h2>ஆக்கபூர்வமான பதில்</h2><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>துறை ரீதியான நிதிநிலை அறிக்கைகள் மற்றும் அன்றாடம் எழும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் வினாக்களுக்கு, ஆக்கபூர்வமாகப் பதிலளிக்க வேண்டிய அமைச்சர்களின் அர்த்தமற்ற, திசைதிருப்பும் பதில்கள் -  'பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கு விலை என்ன?' என்று கேட்பது போல உள்ளன.</p> <h2>இருதலைக்கொள்ளி எறும்பு</h2><p>நேரலை ஒளிபரப்பில் அவர்களின் இத்தகைய வீராவேசப் பதில்கள் சமூக ஊடக Content-களுக்கு பயன்படுமே தவிர, மக்களுக்குக் கிஞ்சித்தும் பயன் தராது. ஏதாவது ஒரு கட்டத்தில் சட்டமன்ற நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த வேண்டிய நிலையில் உள்ள பேரவைத் தலைவர், இருதலைக்கொள்ளி எறும்பைப் போல் நியாயத்திற்கும் அநியாயத்திற்கும் இடையே சிக்கித் தவிக்கிறார்.</p><p>அமைச்சர்களின் அடாவடியான, அருவருக்கத்தக்க பேச்சுக்கள் லட்சக்கணக்கான மக்களிடையே நேரலையில் சென்றடைந்த பிறகு, அதைக் குறிப்பிலிருந்து நீக்குவது ”குதிரை ஓடிய பிறகு லாயத்தைப் பூட்டுவதற்குச் சமம்”. இதனால் யாருக்கு என்ன பலன்? </p><h2>முதல்-மந்திரிகள் மாநாடு</h2><p>காவிரி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சனை தீவிரமடைந்துள்ள சூழலில், தமிழக்த்திலிருந்து எதிர்ப்புகள் எழும் என்று எண்ணி, எவ்வித முன்அறிவிப்புமின்றி, தமிழகத்திலுள்ள கோவளம் பகுதியில், உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் தென்னிந்திய முதல்-மந்திரிகள் மாநாடு  நடைபெற்றது.</p><p>இதில் மேகதாது பிரச்சனை, காவிரி நதிநீர்ப் பங்கீடு, பெரியாறு அணைக்கட்டு உயரத்தை 152 அடியாக உயர்த்துவது, ஆந்திராவுடனான பாலாறு குறித்த பிரச்சனைகள் குறித்து <a href="https://www.dailythanthi.com/topic/vijay">தமிழக முதல்-அமைச்சர்</a> பேசியது என்ன? என்பது குறித்து தமிழகச் சட்டமன்றத்திற்கு அறிக்கையாகச் சமர்ப்பித்திருக்க வேண்டுமே, ஏன் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> அவர்கள் அதைச் செய்யவில்லை? இது குறித்து எதிர்கட்சியினர் எவரும் வினா எழுப்பவில்லையே ஏன்?</p><h2>Reels content</h2><p>’பட்டுக்கோட்டைக்கு’ வழி கேட்டால் ’கொட்டைப்பாக்கின்’ விலை என்ன? என்பதற்கேற்ப அமையும் தமிழக அமைச்சர்களின் பதில்கள்!</p><p>“Reels content”- மீடியா வெளிச்சத்தை  குறிவைத்து பேசும் தமிழக அமைச்சர்கள்!</p><p>கோவளம் மாநாட்டில் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> அவர்கள் பேசியது குறித்து சட்டமன்றத்தில் விளக்க அறிக்கை சமர்ப்பிக்காதது ஏன்?</p><p>தமிழக சட்டமன்ற நிகழ்வுகள் திசைமாறிப் போகிறதா?</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஊழல், கட்சி நிதி என்று கூறினாலே எதிர்க்கட்சியினருக்கு கோபம் வருகிறது -அமைச்சர் நிர்மல் குமார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/opposition-parties-get-angry-when-they-mention-corruption-and-party-funding-minister-nirmal-kumar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/opposition-parties-get-angry-when-they-mention-corruption-and-party-funding-minister-nirmal-kumar#comments</comments><guid isPermaLink="false">f237d5ab-1eb1-4e37-896a-274e5635a42c</guid><pubDate>Sun, 23 Aug 2026 07:23:53 +0000</pubDate><atom:updated>2026-08-23T07:23:53.734Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Madurai,மதுரை,அமைச்சர் நிர்மல்குமார்,CTRNirmalkumar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/o4q760nc/nirmalakumar33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார்]]></media:title><media:description type="html"><![CDATA[ 
ஊழல், கட்சி நிதி என்று கூறினாலே எதிர்க்கட்சியினருக்கு கோபம் வருகிறது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/o4q760nc/nirmalakumar33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>ஊழல், கட்சி நிதி என்று கூறினாலே எதிர்க்கட்சியினருக்கு கோபம் வருகிறது என அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.</p><p>மதுரையில் தவெக பொதுக் கூட்டத்தில் <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">அமைச்சர் நிர்மல் குமார்</a> பேசியதாவது:-</p><p>நடந்து முடிந்த தேர்தலில் திமுகவை மக்களே பழிவாங்கி விட்டனர். அவர்களை நாங்கள் ஏன் தனியாக பழிவாங்க வேண்டும்?</p><p>இத்தனை ஆண்டுகளில் நீங்கள் என்னென்ன கொள்ளை அடித்தீர்கள்? என்னென்ன செய்தீர்கள்? என்பதைப் பார்த்த மக்களே, உங்களைத் தூக்கி வெளியில் போட்டு விட்டார்கள்.</p><p>முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் தீய சக்தி திமுகவை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று கூறினர். அதற்காகத்தான் அந்தக் கட்சியையே (அதிமுக) தொடங்கினர். ஆனால், தற்போது திமுகவை விஜய் ஒழித்துக் கட்டி விட்டார்.</p><p>இனிமேல், அறிவாலயத்தை வெள்ளையடித்து, வாடகைக்குத்தான் விட வேண்டும். முரசொலி அறக்கட்டளைக்குத்தான் அவர்களுக்கு இவ்வளவு போட்டி. அதில்தான் சொத்துகள் அனைத்தும் உள்ளன. அந்த அறக்கட்டளையை யார் எந்த குடும்பம் கைப்பற்றுகிறது? என்பதுதான் போட்டி.</p><p>இன்னும் 2 ஆண்டுகளில் அறக்கட்டளையைக் கைப்பற்றிவிட்டு, அறிவாலயத்தை வாடகைக்கு விட்டுவிட்டு, வேறு வேலையைப் பார்க்கச் சென்று விடுவர். இது (தவெக) மக்களுக்கான அரசு. ஒவ்வோர் ஆண்டும் உங்களுக்குத் தேவையான அனைத்தும் கிடைக்கும். வரும் 5 ஆண்டுகளில் நிச்சயமாக ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வருவோம். எதிர்க்கட்சியினருக்கு ஊழல், கட்சி நிதி என்று கூறினாலே கோபம் வருகிறது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஈஷா கிராமோத்சவம் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள்: எம்.எல்.ஏ. கனிமொழி தொடங்கி வைத்தார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/isha-gramotsavam-zonal-level-sports-competitions-mla-kanimozhi-inaugurated</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/isha-gramotsavam-zonal-level-sports-competitions-mla-kanimozhi-inaugurated#comments</comments><guid isPermaLink="false">6df610d0-5bfe-40d3-ad62-85709b98f727</guid><pubDate>Sun, 23 Aug 2026 07:23:44 +0000</pubDate><atom:updated>2026-08-23T07:23:44.249Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவை,ஈஷா மையம்,Isha,Sports competitions,கனிமொழி சந்தோஷ்,kanimozhi santhosh</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/0s3uy34j/154.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கனிமொழி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/0s3uy34j/154.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>தமிழ்நாட்டில் கோவை, சேலம், வேலூர், கடலூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய 6 இடங்களில் இன்று மண்டல அளவிலான போட்டிகள் நடைபெற்றன. </p><p>இதில் கோவையில் நடைபெற்ற போட்டிகளை கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் மற்றும் கொங்குநாடு கல்லூரியின் செயலாளர் வாசுகி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர். </p><h2>ஈஷா கிராமோத்சவம்</h2><p>இதில் முதற்கட்ட கிளஸ்டர் போட்டிகளில் வெற்றி பெற்ற ஆயிரக்கணக்கான கிராமப்புற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். கனிமொழி சந்தோஷ் பேசுகையில், “சமூகத்தில் பலரும் பல்வேறு சங்கங்களையும் இயக்கங்களையும் தொடங்குகிறார்கள். ஆனால், அவற்றைத் தொய்வின்றித் தொடர்ந்து நடத்துவது இல்லை. ஒரு நிகழ்வைத் தொடர்ந்து நடத்துவது என்பது மிகப்பெரிய மற்றும் கடினமான செயலாகும். </p><p>ஆனால், ஈஷாவிடம் நான் கண்ட ஒரு முக்கியச் சிறப்பு அவர்களின் ஒருங்கிணைப்புத் திறன் மற்றும் அர்ப்பணிப்பு ஆகும். 18 ஆண்டுகளாக இளைஞர்களுக்காகவும் மக்களுக்காகவும் ஒரு சமூக நோக்கத்தோடு ஈஷா கிராமோத்சவத்தை தொடர்ந்து நடத்துவது என்பது மிகப்பெரிய செயலாகும்.</p><p>நமது முதல்-அமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சர் விளையாட்டிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று, அங்குள்ள இளைஞர்களின் திறமைகளைக் கண்டறிந்து, அவர்களை வெளிக்கொண்டு வருவதில் நமது முதல்-அமைச்சர் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். தற்போதைய காலகட்டத்தில், தொழில்நுட்பம் எந்த அளவிற்கு வளர்கிறதோ, அந்த அளவிற்கு நமது உடல்நலனும் குறைந்துகொண்டே வருகிறது. </p><p>இன்றைய சூழலில், குழந்தைகள் காலை முதல் இரவு வரை அலைபேசியிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர். மது மற்றும் புகைப்பழக்கத்தை விட, அலைபேசியின் அதீதப் பயன்பாடு குழந்தைகளின் சிந்தனைத் திறனைக் கடுமையாகப் பாதிக்கக்கூடியது. எனவே, குழந்தைகளுக்கு அலைபேசியை அளவோடு பயன்படுத்தக் கற்றுக் கொடுக்க வேண்டும்.</p><p>பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்லும் தற்போதைய சூழலில், குழந்தைகளின் கவனத்தைத் சரியான திசையில் செலுத்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%88%E0%AE%B7%E0%AE%BE">ஈஷா </a>நடத்தும் இதுபோன்ற விளையாட்டு நிகழ்வுகள் பெரிதும் உதவுகின்றன. விளையாட்டை ஊக்குவிப்பது என்பது உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு மட்டுமல்லாமல், மனத்தெளிவையும், எதிர்கால இலக்குகளை நோக்கிய கவனத்தையும் குழந்தைகளுக்கு வழங்குகிறது. </p><p>விளையாட்டுத்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் கூறியது போல் உங்களின் வேலைப்பளு எவ்வளவு இருந்தாலும், தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது விளையாட்டிற்காக நேரம் ஒதுக்க வேண்டும். எனக் கூறினார். இதில் வெற்றி பெற்ற வாலிபால் மற்றும் த்ரோபால் அணிகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. குறிப்பாக த்ரோபால் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ஒரு வீராங்கனைக்கு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. போட்டிகள் நடைபெற்ற 6 மண்டலங்களிலும் ஒரு சிறந்த த்ரோபால் வீராங்கனைக்கு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கிராமப்புற மக்களின் அன்றாட வாழ்வில் விளையாட்டை ஒரு அங்கமாக மாற்றி, அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் சத்குருவின் வழிகாட்டுதலில் 'ஈஷா கிராமோத்சவம்' விளையாட்டுத் திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.</p><h2>இறுதிப்போட்டி</h2><p>கிராமோத்சவ விளையாட்டுத் திருவிழா கிளஸ்டர், டிவிஷனல் மற்றும் இறுதிப் போட்டிகள் ஆகிய நிலைகளில் நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுவையில் கிளஸ்டர் அளவிலான முதற்கட்ட போட்டிகள் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் இம்மாத முதல் 2 வாரங்களில் நடைபெற்றது. தற்போது மண்டல அளவிலான போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து பிரம்மாண்ட இறுதிப்போட்டி செப்டம்பர் 6 அன்று கோவை ஆதியோகி வளாகத்தில் சத்குருவின் முன்னிலையில் நடைபெறும்.</p><h2>பரிசுத்தொகை</h2><p>ஈஷா கிராமோத்சவம் 2026-இன் இறுதிப் போட்டியில் வெல்லும் கைப்பந்து மற்றும் எறிபந்து அணிகளுக்கு தலா ரூ.5 லட்சமும், இரண்டாம் இடத்திற்கு ரூ.3 லட்சமும் பரிசாக வழங்கப்படும். மூன்று மற்றும் நான்காம் இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.1 லட்சமும், ரூ.50,000-மும் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறும் அணிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். இந்த விளையாட்டுத் திருவிழாவில், கிராமப்புற இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மொத்தம் ரூ.1 கோடிக்கும் மேல் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.</p><h2>வட மாநிலங்களுக்கும் விரிவாக்கம்</h2><p>ஈஷா கிராமோத்சவம் இந்தாண்டு புதிதாக உத்தரப் பிரதேசம், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஒடிசா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய வட மாநிலங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரி இணைந்து மொத்தம் 10 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் போட்டிகள் நடைபெறுகின்றன. </p><p>இந்த மாபெரும் விளையாட்டுத் திருவிழாவில், சுமார் 7,005 அணிகள் மூலம் 40,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து கிட்டத்தட்ட 20,000 பெண்கள் உட்பட 80,352 கிராமப்புற மக்கள் பங்கேற்றுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>போதையில் லாரி மோதி விபத்து..! தர்ம அடிக்கு பயந்து குளத்தில் குதித்து தப்பியோடிய டிரைவர் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/drunk-driver-crashes-lorry-jumps-into-pond-to-escape-a-thrashing</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/drunk-driver-crashes-lorry-jumps-into-pond-to-escape-a-thrashing#comments</comments><guid isPermaLink="false">6a620004-3565-417e-9190-56646e8cdfbf</guid><pubDate>Sun, 23 Aug 2026 07:03:09 +0000</pubDate><atom:updated>2026-08-23T07:03:09.431Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சாலை விபத்து,road accident,Nagercoil,நாகர்கோவில்,களியக்காவிளை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/xmoxjwl9/escap.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/xmoxjwl9/escap.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திங்கள்சந்தை,</p><p>கார் மீது டாரஸ் லாரியை மோதி விபத்து ஏற்படுத்திய டிரைவர், பொதுமக்களின் தர்ம அடிக்கு பயந்து குளத்தில் குதித்து தப்பி ஓடிய சம்பவம் நிகந்துள்ளது. </p><h2>போக்குவரத்து நெரிசல்</h2><p>குமரி மாவட்டத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/nagercoil">நாகர்கோவில்</a>- களியக்காவிளை 4 வழிச்சாலை பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சுங்கான்கடை அருகே தோட்டியோட்டில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடக்கிறது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குளச்சல் போக்குவரத்து போலீசார் தினமும் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி வருகின்றனர்.</p><h2>கார்- டாரஸ் லாரி மோதல்</h2><p>இந்தநிலையில் நேற்று முன்தினம் ஒரு டாரஸ் லாரி தக்கலையில் இருந்து <a href="https://www.dailythanthi.com/topic/nagercoil">நாகர்கோவில்</a> நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி தோட்டியோட்டில் மேம்பால பணிகள் நடைபெறும் இடத்தில் வந்த போது எதிரே ஒரு சொகுசு கார் வந்தது. எதிர்பாராத விதமாக டாரஸ் லாரியும், சொகுசு காரும் நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் காரின் ஒரு பகுதி முழுவதும் பலத்த சேதம் அடைந்தது.</p><h2>பொதுமக்கள் சத்தம்</h2><p>விபத்து நடந்ததும் அந்த வழியாக வந்தவர்கள் அங்கு திரண்டு காரில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். ஆனாலும் ஆவேசம் அடைந்த பொதுமக்கள் டாரஸ் லாரி டிரைவரிடம் கீழே இறங்குமாறு சத்தமிட்டனர்.</p><h2>குளத்தில் குதித்து தப்பியோட்டம்</h2><p>பொதுமக்களின் ஆவேச குரலை கேட்டு லாரி டிரைவர் மிகவும் அச்சமடைந்தார். பொதுமக்களின் கையில் சிக்கினால் தர்ம அடி கிடைக்கும் என பயந்து போன டிரைவர் லாரியின் ஜன்னல் வழியாக வெளியே வந்தார். தொடர்ந்து லாரியின் பின்பக்கம் வழியாக வேகமாக சென்று சாலையோரம் இருந்த குளத்தில் குதித்தார். இதைபார்த்த பொதுமக்கள், 'அவரை பிடியுங்கள்... பிடியுங்கள்...' என கூச்சலிட்டனர்.</p><p>இதை கேட்டு மேலும் அச்சமடைந்த டிரைவர் தண்ணீரில் வேகமாக நீந்தி குளத்தின் மறுகரைக்கு சென்று புதர்கள் இடையே கரையேறினார். தொடர்ந்து அருகில் இருந்த தென்னந்தோப்பு வழியாக ஓட்டமும் நடையுமாக தப்பி செல்ல முயன்றார்.</p><h2>சமூக வலைத்தளங்களில் வைரல்</h2><p>இதற்கிடையே அங்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி கொண்டிருந்த குளச்சல் போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று லாரி டிரைவரை மடக்கி பிடித்தனர். அப்போதுஅவர் மது போதையில் லாரியை ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.</p><p>இந்தநிலையில் விபத்தில் சிக்கிய வாகனங்கள் சாலையில் நின்றதால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து போலீசார், லாரி மற்றும் சொகுசு காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.</p><p>இதற்கிடையே லாரி டிரைவர் ஜன்னல் வழியாக வெளியேறி குளத்தில் குதித்து தப்பி செல்வதை அங்கு நின்ற சிலர் செல்போனில் படம் பிடித்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>திண்டுக்கல்-கரூர் வழித்தடத்தில் 9 மணி நேரம் ரெயில் சேவை நிறுத்தம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/train-services-suspended-for-9-hours-on-the-dindigul-karur-route</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/train-services-suspended-for-9-hours-on-the-dindigul-karur-route#comments</comments><guid isPermaLink="false">8445ef44-660a-4a08-9ebf-53a818f83e56</guid><pubDate>Sun, 23 Aug 2026 07:01:29 +0000</pubDate><atom:updated>2026-08-23T07:01:29.778Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Dindigul,திண்டுக்கல்,ரெயில் சேவை,train service</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/a9ofs65i/14.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/a9ofs65i/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,  </p><p>தண்டவாள புதுப்பிப்பு பணி காரணமாக திண்டுக்கல்-கரூர் வழித்தடத்தில் 9 மணி நேரம் ரெயில் சேவை நிறுத்தப்பட்டது.</p><h2>தண்டவாளம் புதுப்பிப்பு</h2><p>திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து கரூர், சேலம் வழித்தடத்தில் செல்லும் ரெயில்கள் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள ரெயில் பாதை வழியாக சென்று வருகின்றன. இந்த நிலையில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து கரூர் செல்லும் வழித்தடத்தில் இரண்டரை கிலோ மீட்டர் தூரம் வரை அமைக்கப்பட்ட தண்டவாளத்தை புதுப்பிக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.</p><p>அதன்படி அந்த வழித்தடத்தில் ஏற்கனவே பதிக்கப்பட்ட 54 கே.ஜி. எடை கொண்ட தண்டவாளத்தை அகற்றிவிட்டு 60 கே.ஜி. தண்டவாளத்தை பதிக்கும் பணி நேற்று காலை 9 மணிக்கு தொடங்கியது. இதற்காக பொக்லைன் எந்திரங்கள், தண்டவாளத்துடன் இணைக்கப்பட்ட சிமெண்டு சிலிப்பர் கட்டைகளுடன் அவற்றை பெயர்த்து எடுக்கும் பிரத்யேக எந்திரம் ஆகியவை கொண்டுவரப்பட்டன. பின்னர் அந்த கருவிகள் மூலம் பழைய தண்டவாளம் அகற்றப்பட்டது.</p><h2>ரெயில்வே சேவை மாற்றம்</h2><p>இதையொட்டி திண்டுக்கல்-கரூர் வழித்தடத்தில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை 9 மணி நேரம் ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. மேலும் அந்த வழித்தடத்தில் செங்கோட்டை-ஈரோடு எக்ஸ்பிரஸ் ரெயில் மட்டுமே பகலில் செல்கிறது. அந்த நேரத்தில் மட்டும் பராமரிப்பு பணி கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டது. நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் விருதுநகரில் இருந்து வழித்த டம் மாற்றப்பட்டு அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக் குடி, திருச்சி வழியாக கரூருக்கு சென்று, அங்கிருந்து கோவை சென்றது.</p><p>இதற்கிடையே சிமெண்டு சிலிப்பர் கட்டைகளுடன் கூடிய 60 கே.ஜி. எடை கொண்ட புதிய தண்டவாளம் பிரத்யேக எந்திரம் மூலம் பதிக்கப்பட்டு பணிகள் நிறைவு செய்யப்பட்டது. இதன் மூலம் தண்டவாளத்தின் உறுதி தன்மை அதிகரிக்கும், அதிக எடையிலான பொருட்களை சரக்கு ரெயில் மூலம் அந்த வழித்தடத்தில் கொண்டு செல்ல முடியும். பயணிகள் ரெயிலின் வேகத்தையும் அதிகரிக்க முடியும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் 44 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/44-lakh-metric-tons-of-garbage-disposal-at-kodungaiyur-garbage-dump-through-bio-excavation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/44-lakh-metric-tons-of-garbage-disposal-at-kodungaiyur-garbage-dump-through-bio-excavation#comments</comments><guid isPermaLink="false">fe6437ac-0bd6-4fe2-99fb-332700055fbe</guid><pubDate>Sun, 23 Aug 2026 06:54:50 +0000</pubDate><atom:updated>2026-08-23T06:54:50.588Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Kodungaiyur,Perungudi,அகற்றம்,Garbage Disposal,குப்பைக்கிடங்கு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/tl8f9fu5/thalamai-seiyalagam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை மாநகராட்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/tl8f9fu5/thalamai-seiyalagam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் தொடர்பாக அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் சமீரன், தலைமையில் ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. </p><p>இக்கூட்டத்தில் துணை ஆணையாளர் சித்ரா விஜயன், மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் பணிகளை ஆய்வு செய்து பேசும்போது தெரிவித்ததாவது:-</p><h2>திடக்கழிவு மேலாண்மைப் பணி</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். பெருமளவு திடக்கழிவுகளை உருவாக்குபவர்கள் திடக்கழிவுகள் உருவாகும் இடத்திலேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதாரக் கழிவுகள், அபாயகரமான கழிவுகளை தனித்தனியே பிரித்து வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். </p><p>இப்பணிகளை கண்காணித்திட பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குப்பைகளுக்கான குப்பைத் தொட்டிகளையும் குப்பைகளை உருவாக்குபவர்களுடைய வளாகத்திற்குள் வைத்து, குப்பைகளை வழங்கிட வேண்டும். வருகின்ற செப்டம்பர் 1-ம் தேதி முதல் பெருமளவு திடக்கழிவுகளை உருவாக்குபவர்கள் கட்டாயம் திடக்கழிவினைத் தரம் பிரித்து வழங்கிட வேண்டும் மீறுவோர்களுக்கு உரிய அபராதம் விதித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.</p><h2>விழிப்புணர்வு</h2><p>அதைப்போல, குடியிருப்புகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலிருந்தும் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்குவதற்கு உரிய விழிப்புணர்வுப் பணியினைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும், இன்று தெற்கு வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் மக்களிடையே குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது தொடர்பாக வீடுவீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. </p><p>இதனைத் தொடர்ந்து, வடக்கு மற்றும் மத்திய வட்டாரப் பகுதிகளிலும் வீடுவீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும்.</p><p>பெருங்குடி குப்பை கிடங்குகளில் குப்பைகளை முதற்கட்டமாக நடைபெற்ற உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் அகற்றிடும் பணி முடிக்கப்பட்டு 94 ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. தற்போது இரண்டாம் கட்டமாக 5.50 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகளை உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் அகற்றிடும் பணி மேற்கொள்ளப்பட்டு இதில் 28 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து இப்பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.</p><p>இதைப் போல கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் 66 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் அகற்றிடும் பணி மேற்கொள்ளப்பட்டு இதுவரை 44 இலட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் 16 ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இப்பணிகளை கண்காணித்து விரைந்து முடித்திட வேண்டும்.</p><p>அத்திப்பட்டு குப்பை கிடங்குகளில் குப்பைகளை முதற்கட்டமாக நடைபெற்ற உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் 1 லட்சம் கன மீட்டர் குப்பைகள் அகற்றப்பட்டது. தற்போது இரண்டாம் கட்டமாக 72 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகளை உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் அகற்றிடும் பணி மேற்கொள்ளப்பட்டு இதில் 36 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து இப்பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88">திடக்கழிவு மேலாண்மைப்</a> பணிகளை அலுவலர்கள் கண்காணித்து மேலும் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்று பேசினார்.</p>]]></content:encoded></item></channel></rss>