<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 18 Jul 2026 16:30:40 +0000</lastBuildDate><item><title>சென்னையில் ஒரே நாளில் 16,922 குடும்பத்தினர் சுய கணக்கெடுப்பு விவரங்களை பதிவு செய்தனர் - மாநகராட்சி தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/16922-families-in-chennai-registered-their-self-enumeration-details-in-a-single-day-corporation-statement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/16922-families-in-chennai-registered-their-self-enumeration-details-in-a-single-day-corporation-statement#comments</comments><guid isPermaLink="false">c7926666-916e-4e41-bf9a-5d6a284b8c86</guid><pubDate>Sat, 18 Jul 2026 16:17:15 +0000</pubDate><atom:updated>2026-07-18T16:17:15.530Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மாநகராட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/q8tmjybv/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/q8tmjybv/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டப் பணிகள் நேற்று முன்தினம் தொடங்கியுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக, இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முழுமையாக டிஜிட்டல் முறையில் நடைபெறுகிறது. இந்த கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமான வீட்டிப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு ஆகஸ்டு 1 முதல் ஆகஸ்டு 30 வரை நடைபெறும். </p><p>அதற்கு முன்னதாக கடந்த 17-ந்தேதி முதல் வருகிற 31-ந்தேதி வரை முதன்முறையாக சுயக் கணக்கெடுப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே தங்களது குடும்பத்தின் விவரங்களை இணையம் வழியாக தாங்களே https://se.census.gov.inஎன்ற சுய கணக்கெடுப்பு இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். தங்களது சுய கணக்கெடுப்பை பதிவு செய்த பின் வழங்கப்படும் சுயகணக்கெடுப்பு பதிவு எண்ணை தங்கள் இல்லத்திற்கு வரும் கணக்கெடுப்பாளரிடம் வழங்கினால் போதுமானது.</p> <p>சென்னையில் நேற்று முன்தினம் ஒரு நாள் மட்டும் 16,922 குடும்பங்கள் சுய கணக்கெடுப்பு மூலம் தகவல்களை பதிவேற்றம் செய்துள்ளனர். எனவே, சென்னையில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் இந்த சுயக் கணக்கெடுப்பிலும், மக்கள் தொகைக் கணக்கெடுப்பிலும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருவண்ணாமலை: பிரபல பிரியாணி கடையில் உணவு சாப்பிட்ட 13 பேருக்கு உடல்நல பாதிப்பு - உணவகம் தற்காலிக மூடல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruvannamalai-13-people-fall-ill-after-eating-at-a-popular-biryani-shop-eatery-temporarily-closed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruvannamalai-13-people-fall-ill-after-eating-at-a-popular-biryani-shop-eatery-temporarily-closed#comments</comments><guid isPermaLink="false">42d0949c-2db8-4df3-b9ae-e9fd52107860</guid><pubDate>Sat, 18 Jul 2026 16:06:40 +0000</pubDate><atom:updated>2026-07-18T16:06:40.151Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,Thiruvannamalai,உணவகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/9gruw4z4/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/9gruw4z4/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை,</p><p>திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பிரபல பிரியாணி கடை இயங்கி வருகிறது. இங்கு உணவு சாப்பிட்ட 4 சிறுவர்கள் உட்பட 13 பேருக்கு வாந்தி உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p> <p>இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அங்குள்ள உணவுப்பொருட்களை சோதனை செய்த அதிகாரிகள், உணவகத்தை 14 நாட்கள் தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு எங்களை கட்டாயப்படுத்த வேண்டாம்-அரசுக்கு பகுதிநேர சிறப்பாசிரியர்கள் கோரிக்கை
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/do-not-compel-us-to-undertake-census-work-part-time-special-teachers-request-to-the-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/do-not-compel-us-to-undertake-census-work-part-time-special-teachers-request-to-the-government#comments</comments><guid isPermaLink="false">3ff0c4d3-2b05-4a3b-9519-89e435842357</guid><pubDate>Sat, 18 Jul 2026 15:35:46 +0000</pubDate><atom:updated>2026-07-18T15:35:46.498Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசு,மக்கள் தொகை,கணக்கெடுப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/90f1atcw/Census.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/90f1atcw/Census.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ்நாடு பகுதிநேர சிறப்பாசிரியர்கள் நலக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெ.ஆற்றலரசு, சென்னையில்  நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்ககளைவிட நாங்கள் குறைந்த ஊதியம் பெற்று வருகிறோம். 15 ஆண்டு காலமாக பணிநிரந்தரம் கேட்டு போராடி வருகிறோம். </p><p>தற்போது அதிகாரிகளின் உத்தரவு என்று கூறி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை செய்யுமாறு தலைமை ஆசிரியர்கள் கட்டாயப்படுத்துகின்றனர்.முதலில் எங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். அதன்பின்னர் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த உத்தரவிடலாம். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title> வைகோ விமர்சனம் செய்தாலும் நாங்கள் அவரை நேசிப்போம்-அமைச்சர் வன்னி அரசு  </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/even-if-vaiko-criticizes-us-we-will-continue-to-love-him-minister-vanni-arasu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/even-if-vaiko-criticizes-us-we-will-continue-to-love-him-minister-vanni-arasu#comments</comments><guid isPermaLink="false">6f54be8a-653f-4c3c-ad11-4a11f49b149d</guid><pubDate>Sat, 18 Jul 2026 15:10:55 +0000</pubDate><atom:updated>2026-07-18T15:10:55.351Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vaiko,வைகோ,வன்னி அரசு,Vanni Arasu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/hfvubey1/vanni-arasu.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  வன்னி அரசு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/hfvubey1/vanni-arasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p>தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு   சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையத்தைவிட்டு வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கோவை அருகே உள்ள கெம்பனூரில் பட்டியல் இன மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் நீண்ட நாட்களாக அரசு பஸ் செல்லாமல் இருந்தது. </p><p>தற்போது அங்கு பஸ் சென்று வருகிறது. அங்கு சென்று அந்தப்பகுதி மக்களை சந்திக்க உள்ளேன். தமிழகம் முழுவதும் <a href="https://www.dailythanthi.com/news/india">சமூக நீதித்துறை</a>க்கு உட்பட்ட விடுதிகளில் ஆய்வு செய்து வருகிறோம்.அந்த வகையில்தான் தமிழக முதல்-அமைச்சர் விஜய் ஆய்வு செய்தார். அப்போது மின்தடை ஏற்பட்டால் சிரமமாக இருக்கிறது எனவே இன்வெர்ட்டர் வேண்டும் என்று கேட்டனர். அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அவர், உடனடியாக நிறைவேற்ற உத்தரவிட்டு உள்ளார். அத்துடன் தரமான உணவு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.</p><p>பள்ளிக்கூடங்களில் வழங்கப்படும் டைரிகளில் சாதி பெயர் கேட்கப்படுவது குறித்த தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஏற்கனவே அறிவித்து உள்ளார். சாதி தொடர்பான அணுகுமுறை பாகுபாடு இருக்கக் கூடாது. அந்த அடிப்படையில் நாங்கள் செயல்படுகிறோம். <a href="https://www.dailythanthi.com/news/india">இரட்டை குவளை</a> முறையை ஒழிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த முறை எங்காவது இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் தீண்டாமையை கடைபிடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை நாங்கள் எப்போதும் நேசிக்கக்கூடியவர்கள். அவர் எந்த விமர்சனம், அவதூறு பரப்பினாலும் நாங்கள் அவரை நேசித்துக்கெண்டே இருப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதி: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sonam-wangchuck-forcibly-hospitalized-communist-party-of-india-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sonam-wangchuck-forcibly-hospitalized-communist-party-of-india-condemns#comments</comments><guid isPermaLink="false">45b6796a-9538-4dcf-884c-45a81aabbe31</guid><pubDate>Sat, 18 Jul 2026 15:06:08 +0000</pubDate><atom:updated>2026-07-18T15:06:08.466Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Communist Party of India,கண்டனம்,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி,அனுமதி,hospital,மருத்துவமனை,Sonam Wangchuk,சோனம் வாங்சுக்,Condemn,admitted</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/2d0oyz63/pandian.gif" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி  மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்

 ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/2d0oyz63/pandian.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டு வந்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D">சோனம் வாங்சுக்</a> வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதி மத்திய அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம். இது குறித்து,  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>காலவரையற்ற உண்ணாவிரதம்</h2><p>நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று, மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி, காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தில் டெல்லி ஜந்தர் மந்தரில்  சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், ஈடுபட்டு வந்தார். அவர் அங்கிருந்து பலவந்தமாக டெல்லி காவல் துறையால் அகற்றப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><h2>கரப்பான்பூச்சி ஜனதா</h2><p>தர்மேந்திரப் பிரதான் பதவி விலக்கோரி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில்,  அப்போராட்டத்திற்கு ஆதரவாக சோனம் வாங்சுக் 21 நாட்களாக உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டு வந்தார்.</p> <h2>ஜனநாயக உரிமை</h2><p>அவரது உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட போதிலும் மன உறுதியுடன் போராடி வந்தார். அவருடனும், போராட்டக்களத்தில் உள்ளோருடனும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக, போராடும் ஜனநாயக உரிமையை சிதைக்கும் வகையில் மத்திய உள்துறை செயல்படுகிறது.</p> <h2>கண்டனம்</h2><p>தனது கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் டெல்லி காவல் துறையை போராடுபவர்களுக்கு எதிராக ஏவிவிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி நாடு முழுவதும் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் போராடி வருகிறார்கள். </p><h2>பதவி நீக்கம் செய்ய வேண்டும்</h2><p>இந்த போராட்டத்தை  மதித்து, தர்மேந்திர பிரதானை உடனடியாக மத்திய அரசு பதவி நீக்கம் செய்ய வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற மாணவர்களின் சாதி விவரம் கட்டாயம் - கல்வித்துறை சுற்றறிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-caste-details-mandatory-to-avail-government-welfare-scheme-benefits-education-department-circular</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-caste-details-mandatory-to-avail-government-welfare-scheme-benefits-education-department-circular#comments</comments><guid isPermaLink="false">b0d68b78-54ea-4353-aa91-d64bf6bee834</guid><pubDate>Sat, 18 Jul 2026 14:43:17 +0000</pubDate><atom:updated>2026-07-18T14:43:17.950Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சுற்றறிக்கை,Education Department,கல்வித்துறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/wwiuhwc0/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/wwiuhwc0/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசு பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு பல துறைகள் சார்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் நேரடியாக அவர்களுடைய வங்கி கணக்கில் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். </p><p>அதில் மாணவர்களின் ஆதார் எண், அவர்களுடைய குடும்ப வருமானம் உள்ளிட்ட முழுமையான விவரங்கள், குறிப்பாக மாணவர்களின் சாதி உள்ளிட்ட விவரங்களும் கண்டிப்பாக கேட்டு பெற வேண்டும் எனவும், அந்த விவரங்கள் எல்லாம் சரியாக உள்ளதா என்பதை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>அதோடு, மாணவர்களின் விவரங்களை கல்வித்துறை இணையதளத்தில பதிவு செய்ய வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதில் ஏதேனும் தவறுகள், குளறுபடிகள் நடந்தால் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள்தான் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>மயிலாடுதுறை கோவில் யானைக்கு ஓய்வு அளிக்க கோரி மனு தாக்கல் - ஐகோர்ட்டில் தள்ளுபடி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/petition-seeking-rest-for-mayiladuthurai-temple-elephant-dismissed-by-high-court</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/petition-seeking-rest-for-mayiladuthurai-temple-elephant-dismissed-by-high-court#comments</comments><guid isPermaLink="false">2d897cfb-9c93-482f-9972-dfd0191da146</guid><pubDate>Sat, 18 Jul 2026 14:11:38 +0000</pubDate><atom:updated>2026-07-18T14:11:38.011Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை ஐகோர்ட்டு,Chennai High Court,elephant,யானை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/mly6r6ul/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/mly6r6ul/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மயிலாடுதுறை மாவட்டம் மயூரநாதர் கோவிலில் உள்ள அபயாம்பிகை என்ற 60 வயது யானைக்கு, தமிழ்நாடு வளர்ப்பு யானைகள் பராமரிப்பு மற்றும் மேலாண்மை விதிகளின்படி ஓய்வு அளிக்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி கோவாவை சேர்ந்த அலோக் அஸ்வினி குப்தா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். </p><p>இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது வனத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், மயூரநாதர் கோவிலில் உள்ள அபயாம்பிகை என்ற யானைக்கு 57 வயதுதான் ஆகிறது என்றும், அந்த யானை முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த விளக்கத்தை ஏற்ற ஐகோர்ட்டு, கோவில் யானைக்கு ஓய்வு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>இடைத் தேர்தலில் வெற்றியை குறி வைத்து பணியாற்றுங்கள்: எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/work-with-the-aim-of-winning-the-by-election-edappadi-palaniswamis-directive</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/work-with-the-aim-of-winning-the-by-election-edappadi-palaniswamis-directive#comments</comments><guid isPermaLink="false">5efac7af-6201-4282-8ec4-6e424e5362ab</guid><pubDate>Sat, 18 Jul 2026 13:52:05 +0000</pubDate><atom:updated>2026-07-18T13:52:05.888Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,எடப்பாடி பழனிசாமி,அதிமுக,Edappadi Palanisami,இடைத் தேர்தல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/hz8a7l38/Edappadi.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/hz8a7l38/Edappadi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தற்போது, அதில் 6 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்து உள்ளனர். மேலும், முன்னாள் அமைச்சர்கள் பலரும் த.வெ.க.வில் ஐக்கியமாகி உள்ளனர். இந்த நிலையில், கட்சியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகிறார். அதில் ஒரு பகுதியாக மாவட்டம் தோறும் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை வழங்கி வருகிறார்.</p><h2>கரூரில் வெற்றி</h2><p>அந்த வகையில் இன்று கரூர் மற்றும் நீலகிரி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து மாலையில் விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டங்களின் போது, பேசிய எடப்பாடி பழனிசாமி, இடைத்தேர்தலில் வெற்றியை குறி வைத்து அனைவரும் பணியாற்றுங்கள். <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அ.தி.மு.க.</a>வில் நல்ல முறையில் இருந்தவர்கள் எல்லாம் மாற்று கட்சிக்கு சென்று தங்கள் மதிப்பை இழந்து என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதை எல்லாரும் நினைத்துப் பாருங்கள். கரூர் தொகுதி ஏற்கனவே நாம் வெற்றி பெற்ற தொகுதி. எனவே, வரப்போகும் இடைத் தேர்தலிலும் கரூர் தொகுதியின் வெற்றிக் கனியை அ.தி.மு.க.வே பெற வேண்டும். </p><h2>கோஷ்டி சண்டை</h2><p>கட்சியில் இருந்து சென்றவர்களைப் பற்றி பேசிக் கொண்டு இருக்காமல், அனைவரும் நம்பிக்கையோடு வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும். அதே போன்று, கட்சியின் வளர்ச்சிக்காகவும் நீங்கள் முழுமூச்சாக உழைக்க வேண்டும். கட்சிப் பணியை சிறப்பாக செய்பவர்களுக்கு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">உள்ளாட்சித் தேர்தலில்</a> உரிய வாய்ப்பு வழங்கப்படும். உள்ளாட்சி தேர்தலில் கோஷ்டி சண்டை போடாமல் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் யாருக்கு அதிக வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பதை பார்த்து அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்போம் என்று எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை: கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அவசரகால ஒத்திகை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-emergency-drill-at-kalpakkam-nuclear-power-station</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-emergency-drill-at-kalpakkam-nuclear-power-station#comments</comments><guid isPermaLink="false">ea7603a5-4dc5-4a94-9c48-0fa3436e3057</guid><pubDate>Sat, 18 Jul 2026 13:49:05 +0000</pubDate><atom:updated>2026-07-18T13:49:05.424Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,emergency,கல்பாக்கம் அணுமின் நிலையம்,drill,ஒத்திகை,Kalpakkam nuclear power plant</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/xbbv9lwr/kalpakkam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அவசரகால ஒத்திகை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/xbbv9lwr/kalpakkam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தை சுற்றிய பகுதிகளில் நடைபெற்ற அவசரகால ஒத்திகை நேற்று  மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து பாதுகாப்புத்துறை தரப்பில் கூறப்படுவதாவது:- </p><h2>சென்னை அணுமின் நிலையம்</h2><p>அணுசக்தி துறையின் கல்பாக்கம் மையத்தில் பல பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இதில் இந்திய அணுமின் கழகத்தின் கீழ் உள்ள சென்னை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">அணுமின் நிலையம்</a>, இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், 'பாவினி' நிறுவனத்தால் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும் உலை, பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் வசதிகள் ஆகியவை இதில் அடங்கும்.</p><h2>கல்பாக்கம் அணுசக்தித்துறை மையம்</h2><p>அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் விதிமுறைகளின்படி, அவசரக்கால தயார்நிலை திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒருங்கிணைந்த கட்டளை, கட்டுப்பாடு, எதிர்வினை முறையில், கல்பாக்கம் அணுசக்தித்துறை மையத்தில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வளாகத்திற்கு வெளியிலான அவசரக்கால ஒத்திகை நடத்தப்படுகிறது. உலையை மின் உற்பத்தி செயல்பாட்டிற்கு கொண்டு செல்வதற்கு முந்தைய ஒழுங்குமுறை தேவைகளுக்கு இணங்க, கல்பாக்கம் வளாகத்தை சுற்றியுள்ள அவசரக்கால திட்டமிடல் மண்டலத்தில் இந்த ஒத்திகை நேற்று நடத்தப்பட்டது.</p><h2>மாவட்ட கலெக்டர்</h2><p>நிகழ்வுக்கான கட்டளை அதிகாரியாக செயல்பட்ட செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் டாக்டர் எம் வீரப்பனின் தலைமையிலான மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமையால் பொதுவெளியில் இந்த ஒத்திகை நடத்தப்பட்டது. அணுமின் நிலையத்தின் நிலைய இயக்குநரும் வளாக அவசரக்கால இயக்குநருமான எஸ்.பி. செல்வகுமரன் பிஎப்பிஆர் நிலைய இயக்குநர் அல்லு ஆனந்த் ஆகியோர் தலைமையிலான கல்பாக்கம் அவசரக்கால குழு இந்த ஒத்திகைக்கான தொழில்நுட்ப உள்ளீடுகளை வழங்கியது. </p><figure><img alt="அவசரநிலை ஒத்திகை" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/5heaeknq/kalpakkam.2.jpg" /></figure><p>அணுமின் நிலையத்தின் வடிவமைப்பு, சிறந்த பாதுகாப்பு ஆகியவை காரணமாக, இத்தகைய அவசரநிலை நிகழ்வுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக குறைவு. ஆனாலும், ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் அதை எதிர்கொள்வதில் தயார்நிலையை சோதிப்பதே இந்த ஒத்திகையின் நோக்கமாகும்.</p><h2>அவசரகால ஒத்திகை </h2><p>மாவட்டத்திலுள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எந்தவித இடையூறும் இன்றி இந்த அவசரகால ஒத்திகை நடத்தப்பட்டது. அணுசக்தி, பேரிடர் மீட்பு ஆகியவை தொடர்புடைய பல்வேறு அமைப்புகளை சேர்ந்த சுமார் 15 மூத்த அதிகாரிகள் இச்சோதனை முயற்சியை நேரில் பார்வையிட்டனர்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோவை மாமன்ற கூட்டத்தில் காங்கிரஸ் பெண் கவுன்சிலரை தாக்க முயற்சி: மாணிக்கம் தாகூர் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/attempt-to-assault-congress-woman-councilor-at-coimbatore-corporation-meeting-manickam-tagore-condemns-the-incident</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/attempt-to-assault-congress-woman-councilor-at-coimbatore-corporation-meeting-manickam-tagore-condemns-the-incident#comments</comments><guid isPermaLink="false">03af1cbe-8103-4f93-bd8a-16d68925971e</guid><pubDate>Sat, 18 Jul 2026 13:22:12 +0000</pubDate><atom:updated>2026-07-18T13:22:12.055Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கண்டனம்,Congress Party,காங்கிரஸ் கட்சி,Manickam Tagore MP,Condemn,மாணிக்கம் தாகூர் எம்.பி.,democratic,ஜனநாயக</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/7zok05a6/manickam-tagore.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர் எம்.பி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/7zok05a6/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கோவை மாமன்ற கூட்டத்தில் காங்கிரஸ் பெண் கவுன்சிலரை தாக்க முயற்சி  என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p> <h2>குற்றச்சாட்டு</h2><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">கோவை மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம்</a> ஜூலை 17 ஆம் தேதி காலை 10.45 மணிக்கு மேயர் ரங்கநாயகி தலைமையில் தொடங்கிய போது, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த காயத்ரி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நான்கு மாமன்ற உறுப்பினர்கள் செம்மொழி பூங்கா திட்ட பணிகளில் ரூபாய் 40 கோடி வரை முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு கூறினார்கள். </p> <h2>தள்ளுமுள்ளு</h2><p>இந்த குற்றச்சாட்டை கூறியதும் தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டு காயத்ரியை பேச விடாமல் தடுத்தனர். அதை மீறி அவர் பேச முயன்றபோது, பெண் என்றும் பாராமல் அவரது சேலையை பிடித்து இழுத்ததோடு, அவரை தாக்க முயற்சித்தார்கள். அதே நேரத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் மீது தி.மு.க. கவுன்சிலர்கள் தள்ளுமுள்ளுகளில் ஈடுபட்டதோடு, தாக்குதலும் செய்ய முற்பட்டார்கள். </p><h2>இடைநீக்கம்</h2><p>இந்நிலையில் மாமன்ற மேயர், காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி மற்றும் நான்கு கம்யூனிஸ்ட் மாமன்ற உறுப்பினர்களையும் இடைநீக்கம் செய்வதாக அறிவித்துவிட்டு சபையை ஒத்தி வைத்தார். பிறகு பிற்பகலில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர் காயத்ரியை மட்டும் இரண்டு மாதத்திற்கு இடைநீக்கம்  செய்து அறிவித்தார். கோவை மாமன்ற கூட்டத்தில் நடைபெற்ற ஜனநாயக விரோத செயலை காங்கிரஸ் கட்சியின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பொதுமக்களிடம் இருந்து 33.74 டன் பழைய பொருட்கள் பெறப்பட்டு எரியூட்டி அகற்றம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/3374-tonnes-of-old-items-collected-from-the-public-in-chennai-were-disposed-of-via-incineration</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/3374-tonnes-of-old-items-collected-from-the-public-in-chennai-were-disposed-of-via-incineration#comments</comments><guid isPermaLink="false">205cb16f-2a54-43a4-bf76-32bec02003da</guid><pubDate>Sat, 18 Jul 2026 13:20:55 +0000</pubDate><atom:updated>2026-07-18T13:20:55.564Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,பழைய பொருட்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/vqffzxzc/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/vqffzxzc/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் இன்று (18.07.2026) 132 இடங்களில் இருந்து 33.74 டன் பழைய சோபாக்கள், மெத்தைகள் உள்ளிட்ட பழைய பொருட்கள் பெறப்பட்டு, கொடுங்கையூர் எரியூட்டும் நிலையத்தில் விஞ்ஞான முறையில் எரியூட்டி அகற்றப்பட்டது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பொதுமக்கள் முன்கூட்டியே தரும் தகவலின் அடிப்படையில், அவர்களின் வீடுகளில் இருந்து பழைய சோபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகள் ஆகிய திடக்கழிவுகளை ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பெற்று அகற்றும் பணி 11.10.2025 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.</p><p>அதனடிப்படையில், இன்று (18.07.2026) மட்டும் 132 நபர்களிடமிருந்து வரப்பெற்ற தகவலின் அடிப்படையில், 33.74 டன் பழைய பொருட்கள் பெறப்பட்டு, கொடுங்கையூரில் உள்ள எரியூட்டும் நிலையத்திற்கு எடுத்துச் சென்று விஞ்ஞான முறையில் எரியூட்டி அகற்றப்பட்டது. இதற்காக 42 எண்ணிக்கையிலான வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.</p><p>ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று நடைபெறும் இச்சேவையை பெறுவதற்கு, பொதுமக்கள் முன்கூட்டியே பெருநகர சென்னை மாநகராட்சியின் “நம்ம சென்னை” செயலியில் பதிவு செய்ய வேண்டும் (அல்லது) பெருநகர சென்னை மாநகராட்சியின் 1913 என்ற எண்ணிற்கு தகவல் அளிக்கப்பட வேண்டும் (அல்லது) பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலம் பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ள 94450 61913 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவலை அனுப்ப வேண்டும்.</p><p>இதனடிப்படையில் மாநகராட்சிப் பணியாளர்கள் பதிவு செய்த நபர்களின் வீடுகளுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் நேரடியாகச் சென்று, பழைய சோபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகள் உள்ளிட்ட பொருட்களை சேகரித்து பாதுகாப்பாகவும், அறிவியல் முறையிலும் அகற்றும் பணிகளை மேற்கொள்வார்கள். இச்சேவையினை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>இணையவழி நிதி மோசடி: மின் - பூஜ்ஜிய எப்ஐஆர் முறையை அறிமுகப்படுத்தியது தமிழக அரசு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-introduces-e-zero-fir-system-for-online-financial-fraud</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-introduces-e-zero-fir-system-for-online-financial-fraud#comments</comments><guid isPermaLink="false">cb15af83-f8e1-4a09-a9e3-475ba287c95e</guid><pubDate>Sat, 18 Jul 2026 13:03:27 +0000</pubDate><atom:updated>2026-07-18T13:03:27.717Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Online,Tamil Nadu Government,தமிழக அரசு,நிதி மோசடி,இணையவழி,Financial fraud</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/vv9ulkif/police.18.07.2026.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காவல்துறை தலைமை இயக்குநர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/vv9ulkif/police.18.07.2026.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF">இணையவழி நிதி மோசடி</a>: மின் - பூஜ்ஜிய எப்ஐஆர் முறையை அறிமுகப்படுத்தியது தமிழக அரசு இது தொடர்பாக காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-</p> <p>இணையவழி நிதி மோசடி தொடர்பான புகார்களை விரைவாகப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளும் வகையில், இணைய குற்ற புகார் தேசிய உதவி எண் 1930-ல் பெறப்படும் புகார்களுக்காக மின் - பூஜ்ஜிய எப்ஐஆர் (e-Zero FIR) முறையை தமிழ்நாடு அரசு செயல்படுத்தியுள்ளது.</p><h2>நடவடிக்கை</h2><p>இணையவழி நிதி மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தவும். மோசடி செய்யப்பட்ட பணத்தை விரைவாக மீட்டெடுக்கும் முயற்சிகளை மேம்படுத்தவும். மத்திய உள்துறை அமைச்சகத்தின் நாடு தழுவிய முயற்சியின் ஒரு பகுதியாக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><h2>மின் - பூஜ்ஜிய எப்ஐஆர்</h2><p>இம்முறையின்படி, 1930 உதவி எண் மூலம் பெறப்படும் ரூ. 1 லட்சத்திற்கு மேற்பட்ட இணையவழி நிதி மோசடி புகார்கள், குற்றம் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு வலையமைப்பு உடன் தானாகவே ஒருங்கிணைக்கப்பட்டு மின் - பூஜ்ஜிய எப்ஐஆர் ( e-Zero FIR) ஆக பதிவு செய்யப்படும். பாதிக்கப்பட்ட நபருக்கு. தாம் அளித்த சைபர் குற்றப் புகாரின் அடிப்படையில் மின் - பூஜ்ஜிய எப்ஐஆர் (e-Zero FIR) பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்.</p><h2>விசாரணை</h2><p>மேலும் தேவையான நடவடிக்கைகளுக்காக குறிப்பிட்டுள்ள சைபர் குற்ற காவல் நிலையத்தில் மூன்று நாட்களுக்குள் நேரில் ஆஜராகுமாறும் எஸ்.எம்.எஸ் (SMS) மூலம் தகவல் தெரிவிக்கப்படும். அதன் பின்னர், அந்த மின் - பூஜ்ஜிய எப்ஐஆர் (e-Zero FIR) மின்னணு முறையில் சம்பந்தப்பட்ட அதிகார வரம்புடைய இணைய குற்ற காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அனுப்பப்படும். பின்னர் அதிகார வரம்பின் அடிப்படையில் வழக்கமான எப்ஐஆர்  ஆக மாற்றப்படும்.</p><p><strong>நேரில் சென்று புகாரை உறுதிப்படுத்த வேண்டும்.</strong></p><p>பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023-ன் விதிகளின்படி, மின்னணு முறையில் அளிக்கப்பட்ட புகாரை உறுதிப்படுத்தி, வழக்குப்பதிவை நிறைவு செய்ய, புகார்தாரர் மூன்று நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நேரில் சென்று தனது புகாரை உறுதிப்படுத்த வேண்டும்.</p><h2>உடனடி சட்ட நடவடிக்கை</h2><p>பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS), 2023-ன் பிரிவு 173-ன் கீழ் மின் - பூஜ்ஜிய எப்ஐஆர் (e-Zero FIR) முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இப்பிரிவு, கைது செய்யத்தக்க குற்றங்கள் தொடர்பான தகவல்களை மின்னணு முறையில் அளிக்க அனுமதிப்பதுடன், அதிகார வரம்பைப் பொருட்படுத்தாமல் மின் - பூஜ்ஜிய எப்ஐஆர் (e-Zero FIR) பதிவு செய்யவும் வழிவகுக்கிறது. இதன் மூலம். அதிகார வரம்பு பின்னர் தீர்மானிக்கப்படுவதால். சட்ட நடவடிக்கைகளை தாமதமின்றி உடனடியாக தொடங்க முடிகிறது.</p><h2>பொன்னான நேரம்</h2><p>1930 உதவி எண் மற்றும் CCTNS ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு மூலம், ஒரே தகவலை மீண்டும் பதிவு செய்ய வேண்டிய அவசியம் நீக்கப்படுகிறது. இதனால். வழக்குப் பதிவு. உரிய காவல் நிலையத்திற்கு மின்னணு பரிமாற்றம் மற்றும் விசாரணை விரைவாக நடைபெறுவதுடன், முக்கியமான பொன்னான நேரம் ( "Golden Hour") நேரத்தில் மோசடி செய்யப்பட்ட பணத்தை முடக்குதல். டிஜிட்டல் ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் பணத்தை மீட்கும் நடவடிக்கைகள் மேலும் துரிதப்படுத்தப்படுகின்றன.</p> <h2>இணையவழி நிதி மோசடி</h2><p>இணையவழி நிதி மோசடி தொடர்பான புகார்களுக்கு பொதுமக்கள் தாமதமின்றி தேசிய இணைய குற்ற உதவி எண் 1930-கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தொடர்புகொள்ள உடனடியாக புகார் அளிப்பதன் மூலம். காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்கவும். மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்டெடுக்கும் வாய்ப்பை அதிகரிக்கவும் இயலும்.</p><p>மின் - பூஜ்ஜிய எப்ஐஆர் (e-Zero FIR) முறை செயல்படுத்தப்பட்டிருப்பது. இணையவழி நிதி மோசடிகளுக்கு எதிராக தமிழ்நாடு காவல்துறையின் விரைவான மற்றும் பொதுமக்களை மையப்படுத்தி எடுக்கும் நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் முக்கியமான முன்னெடுப்பாகும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை மறுநாள் மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-with-power-shutdown-in-chennai-tomorrow-and-day-after</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-with-power-shutdown-in-chennai-tomorrow-and-day-after#comments</comments><guid isPermaLink="false">e2d0db21-371d-46c7-93e6-d4dc2bc807de</guid><pubDate>Sat, 18 Jul 2026 12:34:02 +0000</pubDate><atom:updated>2026-07-18T12:34:02.391Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,நாளை மறுநாள்,power cut,மின் நிறுத்தம்,day after tomorrow</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/6vjajelk/power-cut.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  மின் தடை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/6vjajelk/power-cut.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை</h2><p>சென்னையில் 20.07.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D">மின் விநியோகம் நிறுத்தப்படும்</a>. மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p> <h2>ஆவடி</h2><p> வைஷ்ணவி நகர் 1 முதல் 10வது தெருக்கள் வரை, சாந்திபுரம், ஸ்ரீதேவி வைஷ்ணவி நகர் எ மற்றும் பி தெருக்கள், இந்திரா காந்தி நகர், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, டி.ஆர்.ஆர். தெரு, நேதாஜி நகர்.</p> <h2>தாம்பரம்</h2><p> கிருஷ்ணா நகர், வெற்றி நகர், சுபாஷ் நகர், கிருஷ்ணா நகர் 1வது முதல் 8வது தெருக்கள் வரை, ரமணி நகர், மல்லிகா நகர், குமரன் நகர், சரஸ்வதி நகர், பார்வதி நகர், ஸ்ரீராம் நகர் வடக்கு மற்றும் தெற்கு, பாலகிருஷ்ணன் நகர், முடிச்சூர் சாலை, பழைய பெருங்களத்தூர்.</p><h2>பெரும்பாக்கம்</h2><p>பெருமாள் கோவில் ஆர்ச், அப்பர் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, பஜனை கோவில் தெரு, பெருமாள் கோவில் தெரு, லட்சுமி அப்பாதுரை தெரு, சாய் ஆயுஷா அடுக்குமாடி குடியிருப்பு, ராக அமிர்தா அடுக்குமாடி குடியிருப்பு, முருகன் கோவில் ஆர்ச், மந்தவெளி தெரு, சூரியா நகர், ஜெயா நகர், சைதன்யா பள்ளி, தபால் அலுவலகம், சத்ய சாய் நகர்.</p> <h2>பல்லாவரம்</h2><p>சாரா நகர், யூனியன் கார்பைடு காலனி, பார்த்தசாரதி தெரு, சாஸ்தா நகர், திருவேங்கடமுடையான் தெரு, ரங்கசாமி தெரு.</p><h2>அனகாபுத்தூர்</h2><p>பால்சன் கம்பெனி, அண்ணா சாலை, கண்ணாயிரம் தெரு, நீலகண்டன் தெரு, திருநீர்மலை பிரதான சாலை, அப்துல்கலாம் சாலை, தென்னவன் தெரு, சௌந்தரம்மன் தெரு, ஸ்ரீபுரம், சரஸ்வதிபுரம், ஈஸ்வரி நகர், கண்ணாயிரம் தெரு, துளசிங்கம் தெரு, அப்பு தெரு.</p> <h2>மாத்தூர் </h2><p>மாத்தூர் எம்எம்டிஏ,பெரிய மாத்தூர், சின்ன மாத்தூர், ஆவின் குவார்ட்டர்ஸ், சிபிசிஎல் நகர், எம்சிஜி அவென்யூ, சின்னசாமி நகர், காமராஜர் சாலை, காமராஜ் சாலை-மஞ்சம்பாக்கம் அனைத்து தெருக்கள், அசிஸ் நகர், அகர்சன் கல்லூரி சாலை, மேற்குத் தோட்டம், காத்தாக்குழி, திடீர் நகர், பாய் நகர், சங்கீதா நகர், சக்தி அம்மன் நகர், திருப்பதி நகர், ஜெயராஜ் நகர், குமாரராஜன் நகர், சுபாஷ் நகர், பானு நகர், கேவிடி டவுன்ஷிப், சந்தோஷ் காலனி, லட்சுமி நகர், அன்னை நகர், ஜெயா நகர், பாயசம்பாக்கம், கருமாரி நகர், மூகாம்பிகை நகர், கொசப்பூர் பகுதி, தீயப்பாக்கம் முழு பகுதி, சென்ட்ரபாக்கம், கண்ணம்பாளையம் பகுதி, வடபெரும்பாக்கம் தொழில் பூங்கா, பார்வதிபுரம், ஸ்ரீனிவாசா மாடர்ன் டவுன் , கன்னி அம்மன் நகர்.</p> ]]></content:encoded></item><item><title>திமுகவுக்கு ஆசை காட்டுகிறது பாஜக: கார்த்தி சிதம்பரம் பரபரப்பு பேச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bjp-is-trying-to-lure-the-dmk-karti-chidambarams-sensational-remarks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bjp-is-trying-to-lure-the-dmk-karti-chidambarams-sensational-remarks#comments</comments><guid isPermaLink="false">47b7b5d4-6cf0-4959-a314-5f0b81725e5b</guid><pubDate>Sat, 18 Jul 2026 12:23:31 +0000</pubDate><atom:updated>2026-07-18T12:23:31.573Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,திமுக,DMK,கார்த்தி சிதம்பரம்,Karti Chidambaram</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/8oa0je3q/Karti-chidambaram.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கார்த்தி சிதம்பரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/8oa0je3q/Karti-chidambaram.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் திருப்பத்தூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து  பேசினார். அப்போது அவர் கூறியதாவது: என்னுடைய புரிதல் என்னவென்றால் திமுகவுடன், பாஜக பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டது.தொகுதி மறுவரையறையை ஒத்துக்கொள்ளுங்கள். நாங்கள் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கொண்டு வருகிறோம். 2029-லேயே தேர்தல் வந்துவிடும். நீங்கள் 5 வருடம் காத்திருக்க வேண்டாம்' என்று சொல்லி <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பாஜக</a> திமுகவிற்கு ஆசைக்காட்டுகிறது.ஆனால் திமுக அந்தப் பாதையில் சென்றால் இந்தத் தேர்தலில் வந்த முடிவுகளை விட மிக மோசமான முடிவுகள்தான் வரும்.</p><p> தமிழகத்தில் தவெக கூட்டணி வலுவாக இருக்கிறது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒத்த கருத்தில் உள்ளன. திமுக தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் விபரீதங்கள் அவர்களுக்கு அதிகமாக வரும். <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தவெக</a> 5 வருடங்கள் நன்றாக ஆட்சி நடத்தலாம். அவர்களுக்கு எந்தவிதமான புது எம்எல்ஏக்களும் தேவையில்லை. யாரும் ராஜினாமா செய்துகொண்டு தவெகவில் சேர வேண்டும் என்ற அவசியமும் கிடையாது”என்று தெரிவித்தார். </p> ]]></content:encoded></item><item><title>தவெக தேர்தல் வாக்குறுதியான பணி நிரந்தரம், சமவேலை சமஊதியம் வழங்க பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/part-time-teachers-demand-permanent-jobs-equal-pay-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/part-time-teachers-demand-permanent-jobs-equal-pay-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">c06992db-956c-4afe-8f12-bb0b9a6b1b61</guid><pubDate>Sat, 18 Jul 2026 12:22:24 +0000</pubDate><atom:updated>2026-07-18T12:22:24.106Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,தேர்தல் வாக்குறுதி,பகுதிநேர ஆசிரியர்கள்,part-time teachers,election promise,கோரிக்கை Request</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/u498i8fq/part-time-teacher.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பகுதிநேர ஆசிரியர்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/u498i8fq/part-time-teacher.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தவெக தேர்தல் வாக்குறுதியான பணி நிரந்தரம், சமவேலை சமஊதியம் வழங்க <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%20%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பகுதிநேர ஆசிரியர்கள்</a> கோரிக்கை வைத்துள்ளனார். புதிய நியமனங்களுக்கு முன்பாக தற்காலிகமாக 16 ஆண்டுகளாக உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை பாடங்களில் பணிபுரிகின்ற 11,773 பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p> <p><strong>தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் வலியுறுத்தி அறிக்கை :</strong></p> <h2>5 ஆயிரம் ரூபாய் சம்பளம்</h2><p>அதிமுக ஆட்சியில் 2011-2012 ஆம் கல்விஆண்டில் அரசுப் பள்ளிகளில் 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் உடற்கல்வி, ஓவியம் மற்றும் தொழிற்கல்வி பாடங்களில் நியமித்து, ஆரம்ப சம்பளமாக ஐந்து ஆயிரம் ரூபாய் சம்பளம் தொகுப்பூதியமாக வழங்கப்பட்டது.</p> <h2>திமுக வாக்குறுதி</h2><p>இதனை அடுத்து அதிமுகவின் 10 ஆண்டு ஆட்சியில் ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் சம்பளத்தை மட்டுமே படிப்படியாக உயர்த்தி கடைசியாக பத்தாயிரம் ரூபாயாக சம்பளம் வழங்கப்பட்டது. இதை அடுத்து 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தது.</p><h2>பணி நிரந்தரம்</h2><p>ஆனால் திமுக ஆட்சியிலும் ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உதவி தொகையாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இதனால் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பளம் மற்றும் உதவித்தொகை ஐந்தாயிரம் ரூபாய் என இரண்டு தவணையில் பதினைந்தாயிரம் கிடைக்கிறது.</p><h2>முரண்பாடு நிலை</h2><p>2026 ஆம் ஆண்டின் மே மாதத்திற்கு சிறப்பு உதவித்தொகையாக பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இதனால் மே மாதத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் மற்ற மாதங்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் என சம்பளத்திலும் முரண்பாடு நிலை ஏற்பட்டுள்ளது.</p><h2>வாழ்வாதாரம்</h2><p>தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, மருத்துவ காப்பீடு, மருத்துவ விடுப்பு, போனஸ், பண்டிகை கால முன்பணம், இறந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் குடும்ப நல நிதி, ஓய்வு பெற்றோருக்கு ஓய்வூதியம், பணிக்கொடை போன்ற பண பலன்களும், அரசு சலுகைகளும் இல்லாமல் இந்த 16 ஆண்டுகளாக தற்காலிகமாக பணிபுரிவதால் வாழ்வாதாரம் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகிவிட்டது. வேலைக்கு சேர்ந்ததில் இருந்து இதுநாள்வரை மரணம், வயது மூப்பால் பணி ஓய்வு, ராஜினாமா என சுமார் 5 ஆயிரம் பேர் பணியிடங்கள் காலியிடமாகிவிட்டது.</p><h2>காலமுறை சம்பளம்</h2><p>இதன் காரணமாக தற்போது சுமார் 12 ஆயிரம் (11,773) ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். பல ஆண்டுகளாக தற்காலிகமாக பணிபுரிகின்ற ஆசிரியர்களை அவர்கள் கற்பிக்கின்ற பாடங்களில் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை கணினிஅறிவியல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்க்கைக்கல்வி ஆகியவற்றில் காலமுறை சம்பளத்தில் நிரந்தரமாக்க வேண்டும்.</p><h2>சம வேலை சம ஊதியம்</h2><p>மேற்கண்ட பாடங்களில் சிறப்பாசிரியர்களாக காலமுறை சம்பளத்தில் நியமித்தவர்களுக்கு தற்போது கிட்டத்தட்ட ஒரு லட்சம் வரை சம்பளம் கிடைக்கிறது. எனவே ஒரே கல்வித்தகுதி மற்றும் ஒரே பாடங்களில் பணிபுரிகின்ற பகுதிநேர ஆசிரியர்களுக்கு ரூ.15 ஆயிரம் சம்பளம் தொகுப்பூதியம், ஆனால் சிறப்பாசிரியர்களுக்கு மட்டும் ஒரு லட்சம் சம்பளம் என்ற ஏற்றத்தாழ்வை, பாகுபாட்டை மாற்றி, சம வேலை சம ஊதியம் வழங்க வேண்டும்.</p><h2>பணி நிரந்தரம் </h2><p>ஆசிரியர் தேர்வு வாரியத்தை (TRB) தற்போது உடற்கல்வி பாடத்திற்கு 1328 காலிப்பணி இடங்களுக்கு தேர்வு என அறிவித்துள்ளது. எனவே இதற்கு முன்பாக 16 ஆண்டுகளாக தற்காலிகமாகப் பணிபுரிகின்ற 3843 உடற்கல்வி பாட பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.</p><h2>கடந்த ஆட்சியாளர்கள் புறக்கணிப்பு </h2><p>இதே போல் ஓவியம் (3721), கணினிஅறிவியல்(2033), தையல்(1584), இசை(329), தோட்டக்கலை(22), கட்டிடக்கலை(49), வாழ்க்கைக்கல்வி(192) பாடங்களில் தற்காலிகமாக 16 ஆண்டுகளாக பணிபுரிகின்ற பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரமாக்கிய பிறகே காலிப்பணி இடங்களை நியமிக்க வேண்டும். இதனை கடந்த ஆட்சியாளர்கள் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, கணினிஅறிவியல் பாடங்களில் காலிப்பணி இடங்களில் பகுதிநேர ஆசிரியர்களை நிரப்பாமல் புறக்கணித்து விட்டார்கள்.</p><h2>திமுக ஆட்சி</h2><p>திமுக ஆட்சியில் காலிப்பணி இடங்களுக்கு தேர்வு நடந்தால் அதில் 5 ஆண்டுகளுக்கு பொருந்தும் வகையில் சிறப்பு மதிப்பெண் 15 வழங்கப்படும் என உடற்கல்வி, ஓவியம், தையல், இசை பாடங்களுக்கு மட்டுமே அறிவித்து, மற்ற பாடங்கள் கணினிஅறிவியல், தோட்டக்கலை கட்டிடக்கலை, வாழ்க்கைக்கல்வி போன்றவை புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதனால் பகுதிநேர ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு நிற்கின்றார்கள்.</p> <h2>தேர்தல் வாக்குறுதி</h2><p>தவெக ஆட்சியில் தற்காலிகமாக 5 ஆண்டுகளை நிறைவு செய்த ஆசிரியர்கள் நிரந்தரமாக்கப்படுவார்கள் என தேர்தலில் வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. எனவே புதிய காலிப்பணி இடங்களுக்கு தேர்வு நடத்துவதற்கு முன்பாக, 16 ஆண்டுகளாக தற்காலிகமாக உடற்கல்வி, ஓவியம், கணினிஅறிவியல், தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்க்கைக்கல்வி பாடங்களில் பணிபுரிகின்ற 11,773 பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.</p> <h2>அரசு கொள்கை முடிவு</h2><p>இதற்காக ஏழாவது ஊதிய குழு நிர்ணயம் செய்த நிலை 10-ன்படி ரூ. 20,600 என்ற அடிப்படை சம்பளத்துடன் காலமுறை சம்பளம் வழங்க ஒரு மாதத்திற்கு 20 கோடி என ஆண்டுக்கு 240 கோடி கூடுதலாக ஆகும். இதனை 50 லட்சம் மாணவர்கள் கல்வி வளர்ச்சிக்காகவும் மற்றும் 11,773 ஆசிரியர்கள் குடும்பங்கள் வாழ்வாதாரம் மேம்படவும், ஆசிரியர்களின் 16 ஆண்டு தற்காலிக வேலையை நிரந்தரமாக்கவும், ஆசிரியர்கள் பணி நிரந்தரம் என்ற தவெக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காகவும் முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அரசு கொள்கை முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும்.</p> <h2>கோரிக்கை</h2><p>தவெக தேர்தல் வாக்குறுதியாக இருப்பதால் கோப்பு உருவாக்கி முதல்வர் விஜய் கையொப்பமிட்டால் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும். முதல்-அமைச்சர் விஜய் கையிலும், கையொப்பத்திலும் பகுதிநேர ஆசிரியர்களின் எதிர்காலம் உள்ளது. பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டிய கோரிக்கை என்பது தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டிய முடிவு ஆகும். </p> <h2>அரசாணை</h2><p>தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் ஆசிரியர்கள் பணி செய்து வருகிறார்கள். அதனால் கோரிக்கையை முதல்-அமைச்சர், பள்ளிக்கல்வி, விளையாட்டு, நிதித்துறை, தலைமைச்செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வலியுறுத்தப்பட்டு வருகிறது. அரசாங்கம் ஒரு அரசாணை போட்டு செயல்படுத்த வேண்டிய விஷயம் இது.</p><h2>சரியான நடைமுறை இல்லை</h2><p>ஆனால் பல மாவட்டங்களை சேர்ந்த 11,773 பகுதிநேர ஆசிரியர்கள் சார்பாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு அனுப்புகின்ற கோரிக்கையை ஏதோ ஒரு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு அனுப்பி அதை தள்ளுபடி செய்து நிராகரிப்பது சரியான நடைமுறை இல்லை.</p> <h2>நடவடிக்கை </h2><p>எனவே தவெக தேர்தல் வாக்குறுதிபடி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் சார்பில் மாநில முதல்-அமைச்சருக்கு அனுப்புகின்ற கோரிக்கையை முதல்-அமைச்சரின் நேரடி பார்வைக்கு அனுப்பி அதை முதல்-அமைச்சர் பதில் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். </p><h2>பெண்கள் 50 சதவீதம்</h2><p>பகுதிநேர ஆசிரியர்கள் எப்போது பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்பதைக்கூட தெரிந்து கொள்ள முடியாமல் இன்றளவும் பரிதவித்து வருகிறார்கள். இதில் பெரும்பாலும் ஏழை எளிய விவசாய தினக்கூலி குடும்பத்தில் இருக்கின்றவர்கள், பெண்கள் 50 சதவீதம் இருக்கிறார்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் என கஷ்டப்படுகின்றார்கள். பலர் ஐம்பது வயதை கடந்து விட்டார்கள். ஓய்வு பெறும் நிலையில் உள்ளவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது.</p><h2>மனக்குமுறல்</h2><p>எவ்வித அரசு சலுகைகள் இல்லாமல், இந்த 15 ஆயிரம் ரூபாய் குறைவான சம்பளத்தை வைத்து இன்றைய விலைவாசி உயர்வில் எஞ்சிய காலத்தை குடும்பங்களை எப்படி நடத்துவது என மனக்குமுறல் மற்றும் மன உளைச்சலில் சிக்கி தவிக்கின்ற தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் உள்ள 11,773 பகுதிநேர ஆசிரியர்களை காப்பாற்ற முதல்-அமைச்சர் விஜய் ஒரே கையெழுத்தில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.</p><h2>கூடுதல் பணி</h2><p>6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பாடங்கள் நடத்த பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட போதிலும் அனைத்து வகுப்புகளுக்கும் சென்று கற்றல் கற்பித்தல் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். மற்ற வகுப்பு பாட ஆசிரியர்கள் வருகை புரியாத போதும் மேலும் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள போதும் அந்த வகுப்புகளை கூடுதல் பணியாக பகுதிநேர ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். அலுவலகப் பணி உள்பட பள்ளியின் அனைத்துவகை பணியிலும் இன்றளவும் பகுதிநேர ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். இதற்காக கூடுதலாக ஊதியம் எதுவும் வழங்க வில்லை.</p><h2>பயணப்படிகூட கிடைப்பது இல்லை</h2><p>பகுதிநேர ஆசிரியர்களுக்கு அரை நாள் மட்டுமே வேலை என்றாலும் விளையாட்டு போட்டிகள் மற்றும் கலைக்கழக போட்டிகள் நடைபெறும்போது மாணவர்களுக்கு பயிற்சி அளித்து அழைத்து கொண்டு போட்டிகளில் பங்கேற்க வைத்து பெற்றோர்களிடம் ஒப்படைப்பதுவரை அற்ப்பணிப்போடு பணியாற்றி வருகிறார்கள்.இதற்கு எல்லாம் போக்குவரத்து பயணப்படிகூட பகுதிநேர ஆசிரியர்களுக்கு கிடைப்பது இல்லை.</p> <h2>பணி நிரந்தரம் </h2><p>தேர்வுப் பணி, தேர்தல் பணி போன்றவற்றிற்க்கும் பகுதிநேர ஆசிரியர்கள் பகுதிநேரம் என்பதையும் கடந்து நாள் முழுவதும் பணியாற்றி வருகிறார்கள். என்றாவது ஒருநாள் அரசுப் பணிக்கு ஈர்க்கப்படுவோம் என்ற நம்பிக்கையில் கூடுதல் உழைப்பை செலுத்தி வருகின்ற பகுதிநேர ஆசிரியர்களை அங்கீகரித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மூலம் 7 நாட்களில் 390 புகார்கள் மீது உடனடி நடவடிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/immediate-action-taken-on-390-complaints-within-7-days-through-the-singappenn-special-task-force</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/immediate-action-taken-on-390-complaints-within-7-days-through-the-singappenn-special-task-force#comments</comments><guid isPermaLink="false">4021d7ba-181d-4289-b0d4-8d10a45f02d0</guid><pubDate>Sat, 18 Jul 2026 12:18:17 +0000</pubDate><atom:updated>2026-07-18T12:18:17.490Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை,Singapen Special Task Force</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/g8b5z92k/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/g8b5z92k/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் தொடர் தீவிர நடவடிக்கைகள் மூலம் 7 நாட்களில் 390 புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“தமிழ்நாடு காவல்துறையின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், மாநிலம் முழுவதும் துரிதமான கள் நடவடிக்கைகள், சமூக பங்களிப்புடன் கூடிய காவல் பணிகள் மற்றும் விழிப்புணர்வு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.</p><p>சம்பவ கடந்த 10.07.2026 முதல் 16.07.2026 வரை, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் மாவட்டக்களப்பிரிவுகள் 390 புகார்களுக்கு இடத்திலேயே உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, 29 குற்ற வழக்குகள் பதிவு செய்ய வழிவகுத்துள்ளன. மேலும், காணாமல் போன 9 பெண்கள் மற்றும் 9 குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.</p><p>இதே காலகட்டத்தில், பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மத்தியில் 3.711 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதுடன், குற்றங்கள் நிகழவாய்ப்புள்ள 9,572 இடங்களில் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், அறிவுசார் குறைபாடுடைய 8 நபர்கள் மீட்கப்பட்டு மறுவாழ்வுக்கு அளிக்கப்பட்டது. 8 குழந்தைத்திருமணங்கள் தடுக்கப்பட்டு, 44 பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். </p><p>இந்தக்காலகட்டத்தில், தூத்துக்குடி, தஞ்சாவூர் மற்றும் சென்னை மாநகரில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை களப்பிரிவினர் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு பாதுகாப்பு வழங்கி, துரிதமான நடவடிக்கைகள் மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யவும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவும், சட்டம் ஒழுங்கு காவல்துறையினருக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். </p><p>மேலும், அரியலூர், மயிலாடுதுறை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், திருப்பூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு, இணைய வழி அத்து மீறல், மிரட்டல் மற்றும் பெண்களுக்கு எதிரான பிற குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக்காவலுக்கு அனுப்பப்பட்டனர். </p><p>மேலும், மயிலாடுதுறை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பள்ளி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் போது மாணவிகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்து உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மாவட்டத்தில் சிறுமி ஒருவரின் புகாரின் பேரில் சிறுமியை தவறாக சித்தரித்த புகைப்படங்களை பொது வெளியில் வெளியிடுவதாக மிரட்டிய நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை துரிதமான கள நடவடிக்கைகள், சமூக பங்களிப்புடன் கூடிய காவல் பணிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் தனது சேவையை தொடர்ந்து அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு வருகிறது.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>முதல் அமைச்சர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்ற புஸ்ஸி ஆனந்த்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bussy-anand-met-chief-minister-vijay-and-received-his-best-wishes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bussy-anand-met-chief-minister-vijay-and-received-his-best-wishes#comments</comments><guid isPermaLink="false">ea85a319-618f-4c9b-b8d4-aff9b09a832e</guid><pubDate>Sat, 18 Jul 2026 12:11:41 +0000</pubDate><atom:updated>2026-07-18T12:11:41.837Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,Vijay,விஜய்,புஸ்ஸி ஆனந்த்,Bussy Anand</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/7tqutub6/bussy-anand.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ புஸ்ஸி ஆனந்த்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/7tqutub6/bussy-anand.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரும், தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த்   இன்று தனது 62-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த தவெக தொண்டர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதேபோல, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள புஸ்சி ஆனந்த் வீட்டிலும் காலை முதலே நுற்றுக்கணக்கான தவெகவினர்  திரண்டு வந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.  </p><p>இந்த நிலையில்,  முதல் அமைச்சரும் தவெக தலைவருமான விஜய்யை சந்தித்து  புஸ்சி ஆனந்த் வாழ்த்து பெற்றுள்ளார். இது தொடர்பான பதிவை தனது எக்ஸ் தளத்தில், விஜய்யை சந்தித்த புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். புஸ்சி ஆனந்த்  எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;   இன்று எனது பிறந்தநாளை முன்னிட்டு, இளைஞர்களின் எதிர்காலம், மக்களின் ஒற்றை நம்பிக்கை நாயகர், நம் ஜனநாயகர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர்,  தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து,  அன்பான வாழ்த்துகளையும் ஆசிகளையும் பெற்றேன்.! என்று பதிவிட்டுள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>சென்னை மாநகராட்சியில் நிலுவை சொத்து வரி வசூலிப்பதற்கான சிறப்பு முகாம் - ரூ.103.03 கோடி வசூல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-camp-for-collecting-property-tax-arrears-in-chennai-corporation-rs-10303-crore-collected</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-camp-for-collecting-property-tax-arrears-in-chennai-corporation-rs-10303-crore-collected#comments</comments><guid isPermaLink="false">050c9033-c5a1-4849-9b02-a493c9feee0a</guid><pubDate>Sat, 18 Jul 2026 11:48:21 +0000</pubDate><atom:updated>2026-07-18T11:48:21.920Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,வரி வசூல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/5qe1a1oq/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/5qe1a1oq/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்து உரிமையாளர்களிடமிருந்து நிலுவை சொத்து வரி வசூலிப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு முகாமில் 03.07.2026 முதல் 16.07.2026 வரை ரூ.103.03 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“பெருநகர சென்னை மாநகராட்சியின் பிரதான வரி வருவாயாக சொத்துவரி உள்ளது. இதன் மூலமே, சென்னை மாநகருக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்புகள், குப்பை திடக்கழிவுகள் அகற்றுதல், தெரு விளக்குகள், பூங்காக்கள் மற்றும் சாலைகள் பராமரித்தல், பொது சுகாதாரம் நோய்த்தடுப்புப் பணி போன்ற அத்தியாவசியப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p> <p>மொத்தம் உள்ள 14,23,653 சொத்து உரிமையாளர்களில், 7,10,285 எண்ணிக்கையிலான சொத்து உரிமையாளர்கள் நிலுவையின்றி சொத்துவரி செலுத்தியுள்ளனர். மீதமுள்ள 7,13,3637 சொத்து உரிமையாளர்களிடம் இருந்து ரூ.969.56 கோடி வசூலிக்கப்பட வேண்டும்.</p><p>பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்து வரி வசூலிப்பதற்கான சிறப்பு முகாம் 03.07.2026 முதல் தொடங்கி 31.07.2026 வரை நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து, 03.07.2026 முதல் நடைபெற்று வரும் சிறப்பு முகாம்களில் சொத்து உரிமையாளர்கள் தாமாக முன்வந்து, நிலுவை மற்றும் நடப்பு சொத்துவரி செலுத்தியதன் காரணமாக 03.07.2026 முதல் 16.07.2026 வரையிலான காலத்தில், ரூ.103.03 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் ஒப்பீடுகையில், வசூல் திறன் 145 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஜுலை மாதம் இறுதி வரை நடைபெறும் இந்த சிறப்பு முகாமில் சிறப்பு தீவிர வசூல் (Special Intensive Collection) பணி மேற்கொள்ளப்படும்.</p><p>பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரியை, சொத்துவரி உரிமையாளர்கள், இணையதளம், கைபேசி செயலி, கட்செவ்வி சேவை, சென்னை மாநகராட்சி கைபேசி செயலி ஆகியவற்றின் மூலமும் மற்றும் வரிவசூலிப்பாளர்கள் மூலமும் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியால் மண்டலங்கள்/வார்டுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு முகாம்களிலும், காலை 8.00 மணி முதல் மாலை 6.00 வரையிலும், தங்களது நிலுவை சொத்துவரித் தொகையினை செலுத்தி, தனிவட்டி விதிப்பினை தவிர்க்குமாறும், பெருநகர சென்னை மாநகராட்சி அத்தியாவசிய சேவைப்பணிகளுக்கு நல்ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>விலை மதிப்பற்ற உயிருக்கு விலை வைக்கும் த.வெ.க. அரசு;  எடப்பாடி பழனிசாமி கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-government-puts-a-price-on-priceless-lives-edappadi-palaniswami-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-government-puts-a-price-on-priceless-lives-edappadi-palaniswami-condemns#comments</comments><guid isPermaLink="false">5509c6ee-9649-4676-8ba3-da21f2fe7926</guid><pubDate>Sat, 18 Jul 2026 11:41:43 +0000</pubDate><atom:updated>2026-07-18T11:41:43.093Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,எடப்பாடி பழனிசாமி,அதிமுக,Edappadi palanicami</media:keywords><media:content height="542" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/bndl5lts/EPS.jpg" width="794"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/bndl5lts/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; திராவிட மாடல்’ என்று கூறி ஆட்சி நடத்திய திமுகவைப் போலவே, விலை மதிப்பற்ற உயிருக்கு விலை வைக்கும் துஷ்ட சக்தி தவெக அரசுக்கு கண்டனம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ என்று உயிரின் மேன்மையை பறைசாற்றச் சொல்வார்கள். தமிழகத்தையே தலைகீழாகப் புரட்டிவிடுவோம் என்று கூறி, கடந்த 5 ஆண்டுகள் ஆட்சி நடத்திய நிர்வாகத் திறனற்ற திமுக அரசுக்கு முடிவுரை எழுதப்பட்டுவிட்டது என்று பெருமூச்சு விட்ட மக்களுக்கு, அதிர்ச்சி அளிக்கும் வகையில், அதன் தொடர்ச்சியாக `நாங்கள் இருக்கிறோம்’ என்று தற்போதைய த.வெ.க. ஆட்சியாளர்கள் செயல்பட்டு வருவது வேதனை அளிக்கிறது. கடந்த திமுக ஆட்சியில் ‘கோவில் காவலாளி அஜித்குமார்’ முதல் சென்னை தலைமைச் செயலக காலனி போலீசாரால் ‘விக்னேஷ்’, தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்று பல சந்தர்ப்பங்களில் பல்வேறு காவல் நிலையங்களில் அடித்தும், என்கவுண்டர் என்ற பெயரிலும் கொல்லப்பட்டுள்ளனர்.</p> <h2> மழைவிட்டும் தூவானம் விடவில்லை</h2><p>முக்கியமான குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒருசில பெருந்தலைகளைக் காப்பாற்ற இதுபோன்ற நடவடிக்கைகள் அன்றைய அரசால் எடுக்கப்பட்டன என்று பொதுமக்களிடம் இருந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. ‘மாற்றம் கொண்டு வருவோம்’ என்று சொல்லி ஆட்சி அமைத்த இந்த தவெக அரசில், அடாவடித்தனங்கள் நிகழாது என்று மக்கள் நம்பினார்கள். ‘மழைவிட்டும் தூவானம் விடவில்லை’ என்பதுபோல், கொடுங்கோல் ஆட்சியாளர்களிடமிருந்து மக்கள் விடுபட்டிருந்தாலும், ‘துஷ்ட சக்தி’ ஆட்சியாளர்களின் கையில் சிக்கித் தவிக்கிறார்கள். ‘யானையின் பிடியிலிருந்து தப்பி, முதலையின் வாய்க்குள் விழுந்தது போல்’ அப்பாவி மக்கள் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள்.  ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்’ எங்களின் போக்கை யாரும் மாற்ற முடியாது என்ற இருமாப்போடு ஒருசில காவல் துறையினர் செயல்படுவதும், அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் ஆட்சியாளர்கள் திணறுவதும், தொடர்கதையாகி வருகின்றன. சமீபத்தில் நாகர்கோவில் சிறையில் மாற்றுத் திறனாளி கைதி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். அவரை சிறைக் காவலர்கள் கொடுமைப்படுத்தி சாகடித்தார்கள் என்று அவரது குடும்பத்தினர், உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தியுள்ளனர். </p><h2>நிவாரண நிதி</h2><p>இந்த அரசின் அமைச்சர்களான சிலர் போய் அந்தக் குடும்பத்தினரை விலைபேசி, சமாதானப்படுத்த முயன்று தோற்றிருக்கிறார்கள். அமைச்சர்கள் தருவதாகச் சொன்ன நிவாரண  நிதியையும், உதவியையும் பெற மறுத்ததாகச் செய்திகள் வருகின்றன. இதேபோல், <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை </a>புழல் சிறையிலும் விசாரணைக் கைதி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளதாகச் செய்திகள்வருகின்றன. அவரது உறவினர்களும் நீதிகேட்டுப் போராடி வருகின்றனர். அவர்களுக்கும் இந்த ஆட்சியாளர்கள் விலைபேசி வருகிறார்கள். விலை மதிப்பற்ற உயிர்களுக்கு - உயிரே உன் விலை என்ன? என்று கேட்டு, பணத்தை வாரி இறைத்து, அப்பாவிகளின் வாயை அடைத்துவிடலாம் என்ற மமதை எண்ணம், ஆட்சிக்கு வந்த 60 நாட்களுக்குள்ளேயே ஒரு முதலமைச்சருக்கு வந்துள்ளது என்பது மக்கள் மனதில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>முதலமைச்சர் உணர வேண்டும்</h2><p>தன்னைப் பார்க்க வந்து கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு அரசு வேலை கொடுத்துவிட்டாலே, அந்தக் குடும்பங்கள் ஜென்ம சாபல்யம் அடைந்துவிடும் என்ற எண்ணத்தில் ஆட்சியாளர்கள் மிதக்கிறார்கள். லாக்அப் மரணங்களும், சிறைச்சாலை மரணங்களும், தேவையற்ற என்கவுண்டர்களும், குற்றச் செயலில் ஈடுபட்ட அதிகாரம் மிக்கவர்களைக் காக்க முயற்சிக்காமல், இதுபோன்ற செயல்களைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இவைகளையெல்லாம் விரைவில் தடுத்துவிடுவோம் என்று அமைச்சர்களை விட்டு சொல்ல வைப்பது, ‘குதிரைகள் ஓடிய பின்னால், லாயத்தை பூட்டுவதற்கு’ சமமான ஒன்றாகும். ‘கோடிகளில் பணம் பெற்றோம், கொடுத்த கால்ஷீட்படி நடித்துக் கொடுத்தோர், படம் ஓடினாலும் - ஓடாவிட்டாலும் நமக்கு எந்த நஷ்டமும் இல்லை என்று உச்சத்தைத் தொட்ட நடிகர் ஒருவர், உச்சாணிக் கொம்பில் அமர்ந்துகொண்டு கொக்கரிப்பது போல் அல்ல ஆட்சி நடத்தும் முறை’ என்பதை, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தவெக</a> முதலமைச்சர் உணர வேண்டும். மாற்றத்தை வேண்டி தங்களது வீட்டில் உள்ள குழந்தைகளின் பேச்சைக் கேட்டு வாக்களித்த மக்களுக்கு,</p><p>மாற்றத்தைத் தராவிட்டாலும், ஏமாற்றத்தைத் தராத வகையில் ஆட்சி சக்கரத்தை சுழற்ற வேண்டும் என்று பொய்க்கால் குதிரை அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.” என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மது போதையில் ஆம்புலன்ஸ் ஓட்டி விபத்து - ஓட்டுநரை விரட்டி விரட்டி புரட்டி எடுத்த பொதுமக்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/drunk-ambulance-driver-accident-people-chased-driver-away-and-overthrow-him</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/drunk-ambulance-driver-accident-people-chased-driver-away-and-overthrow-him#comments</comments><guid isPermaLink="false">2775d080-d483-41e9-b8a7-6f9ea6f7c41c</guid><pubDate>Sat, 18 Jul 2026 11:29:14 +0000</pubDate><atom:updated>2026-07-18T11:29:14.849Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Accident,கன்னியாகுமரி,ambulance driver,மது போதை,drunk driving,ஆம்புலன்ஸ் ஓட்டுநர்</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/wncwroo0/ambulance-driver.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ ஆம்புலன்ஸ் ஓட்டுநர்]]></media:title><media:description type="html"><![CDATA[ குடிபோதையில் ஆம்புலன்ஸ் ஓட்டிய ஒட்டுநரை பொதுமக்கள் பிடித்து அடித்தனர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/wncwroo0/ambulance-driver.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி,</p><p>கன்னியாகுமர் மாவட்டம் நாகர்கோவில் அருகே மது போதையில் ஆம்புலன்ஸ் ஒட்டி விபத்து ஏற்படுத்திய ஓட்டிநரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்து புரட்டி எடுத்தனர்.</p><h2>விபத்து</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கன்னியாகுமரி மாவட்டம் </a>நாகர்கோவில் நகரின் பரபரப்பான வெட்டுரிணிமடம் சந்திப்பு பகுதியில் இன்று மதியம் ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று அதிவேகமாகவும், கட்டுப்பாடின்றியும் வந்தது. மேலும் எதிர்பாராதவிதமாக அந்த வாகனம் அங்கிருந்த மற்றுமொரு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.</p><h2>மக்களின் ஆக்ரோஷம்</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விபத்து</a> நடந்தவுடன் ஆம்புலன்சை நிறுத்திவிட்டு ஓட்டுநர் தப்பியோட முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், அவரை விடாமல் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர்.</p><p>அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கடுமையான மது போதையில் இருப்பது தெரியவந்தது. உயிரைக் காக்கும் அவசர வாகனத்தை மது போதையில் ஓட்டி உயிரோடு விளையாடிய ஓட்டுநரின் செயலால் ஆத்திரமடைந்த மக்கள், அவரை வீதியிலேயே வைத்து அடித்து புரட்டி எடுத்தனர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார், வழக்குப்பதிவு செய்து ஆம்புலன்ஸ் ஓட்டுநரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பொறுப்பற்ற செயலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>நீண்ட நாட்களாக சாலையோரங்களில் விடப்பட்ட 1863 வாகனங்கள் 15 நாட்களில் ஏலம் - சென்னை மாநகராட்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/1863-vehicles-abandoned-on-roadsides-for-a-long-period-to-be-auctioned-in-15-days-chennai-corporation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/1863-vehicles-abandoned-on-roadsides-for-a-long-period-to-be-auctioned-in-15-days-chennai-corporation#comments</comments><guid isPermaLink="false">f1a15967-066a-423e-b4c3-31ef32866966</guid><pubDate>Sat, 18 Jul 2026 11:11:02 +0000</pubDate><atom:updated>2026-07-18T11:11:02.672Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Corporation,சென்னை மாநகராட்சி,auction,Vehicles,வாகனங்கள்,ஏலம்,சாலையோர ஆக்கிரமிப்பு,Roadside occupations</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/4rl0m3hu/chennai-corporation.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை மாநகராட்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/4rl0m3hu/chennai-corporation.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p> <p>நீண்ட நாட்களாக சாலையோரங்களில் விடப்பட்ட 1863 வாகனங்கள் 15 நாட்களில் ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">சென்னை மாநகராட்சி</a> வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>1863 வாகனங்கள்</h2><p>சென்னை காவல் சென்னை மயிலாப்பூர், கொளத்தூர், புளியந்தோப்பு, வண்ணாரப்போட்டை மற்றும் கோயம்பேடு காவல் நிலையப் பகுதிகளில் சாலையோரங்களில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மொத்தம் 1863 எண்ணிக்கையிலான பல்வேறு வகையான வாகனங்களை அப்புறப்படுத்தி - அந்தந்த காவல் நிலைய வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.</p><h2>15 நாட்களுக்குள் அணுகவும்</h2><p>இவ்வாகனங்களின் விவரங்கள் பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளமான www.chennaicorporation.gov.in பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாகனங்களை உரிமை கோருவோர் சம்மந்தப்பட்ட காவல் நிலையமான சென்னை மயிலாப்பூர், கொளத்தூர், புளியந்தோப்பு, வண்ணாரப்போட்டை மற்றும் கோயம்பேடு காவல் நிலையங்களை செய்தி வெளியான 15 நாட்களுக்குள் அணுகவும் அவ்வாறு உரிமை கோரப்படாத வாகனங்களை மின்னனு ஏலம் மூலம் கழிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் சிறப்பாக நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-day-celebration-in-chennai-led-by-minister-rajmohan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-day-celebration-in-chennai-led-by-minister-rajmohan#comments</comments><guid isPermaLink="false">102c8078-6cad-41f7-b7b0-c66fafd02710</guid><pubDate>Sat, 18 Jul 2026 11:00:54 +0000</pubDate><atom:updated>2026-07-18T11:00:54.508Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,சென்னை அணி,Tamil Nadu Day Celebration,தமிழ்நாடு நாள் விழா,Minister Rajmohan,அமைச்சர் ராஜ்மோகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/wzsv9ke9/minister-rajmohan.18.07.202.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ராஜ்மோகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/wzsv9ke9/minister-rajmohan.18.07.202.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தாய் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜுலை 18ஆம் நாள் ‘’தமிழ்நாடு நாள் விழா’’வாக சென்னை, தரமணியில் உள்ள உலக தமிழாராய்ச்சி நிறுவன அரங்கத்தில் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றம் விளம்பரத்துறை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D">அமைச்சர் ராஜ்மோகன்</a> தலைமையில் இன்று கொண்டாடப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- </p><h2>பாராட்டு சான்றிதழ் வழங்கினார்</h2><p>தமிழ்நாடு நாள் விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அரசு செயலாளர் வே. ராஜாராமன், வரவேற்புரை ஆற்றினார். பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவில் நடத்தப்பெற்ற கட்டுரை போட்டியில் முதல் பரிசு பெற்ற காஞ்சிபுரம் மாவட்டம் ரா. நந்தனா என்ற மாணவிக்கு ரூ.50,000/-க்கான காசோலை, பாராட்டு சான்றிதழும் இரண்டாம் பரிசு பெற்ற தேனி மாவட்டம் ர.பா.தனுஸ்ரீ என்ற மாணவிக்கு ரூ.30,000/- க்கான காசோலை, பாராட்டு சான்றிதழும் மூன்றாம் பரிசு பெற்ற திருவண்ணாமலை மாவட்டம் பா. ஐஸ்வர்யா என்ற மாணவிக்கு ரூ.20,000/-க்கான காசோலை, பாராட்டு சான்றிதழும் வழங்கினார்.</p>  <h2>பேச்சு போட்டி</h2><p>பேச்சு போட்டியில் முதல் பரிசு பெற்ற திருவாரூர் மாவட்டம் பி. கிஷோர் என்ற மாணவனுக்கு ரூ.50,000/- க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழும் இரண்டாம் பரிசு பெற்ற கடலூர் மாவட்டம் பா. வர்ஷா என்ற மாணவிக்கு ரூ.30,000/- க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழும் மூன்றாம் பரிசு பெற்ற மயிலாடுதுறை மாவட்டம் க. மனிஷா என்ற மாணவிக்கு ரூ.20,000/- க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழும் வழங்கி விழா பேருரையாற்றினார்.</p> <p>தமிழ் வளர்ச்சி துறையின் இயக்குநர் ந. அருள் நன்றியுரை ஆற்றினார்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>த.வெ.க ஆட்சியை கவிழ்க்க சதி:  3 பேரிடம் இருந்து ரூ. 2 கோடி ரொக்கம் பறிமுதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/plot-to-topple-tvk-government-rs-2-crore-in-cash-seized-from-three-individuals</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/plot-to-topple-tvk-government-rs-2-crore-in-cash-seized-from-three-individuals#comments</comments><guid isPermaLink="false">eca18887-db61-4372-917f-9cc04f69e1d6</guid><pubDate>Sat, 18 Jul 2026 10:51:19 +0000</pubDate><atom:updated>2026-07-18T10:51:19.885Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,குதிரை பேரம்,horse trading</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/5aw7en0v/horse-trading.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/5aw7en0v/horse-trading.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை கலைக்க முயற்சிகள் நடப்பதாக  அமைச்சர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி  வருகிறார்கள். தவெக எம்எல்ஏக்களிடம் இதற்காக பேரம் பேசப்படுவதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.  இதற்கிடையே தான் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டசபை தொகுதியின் தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரை பேரத்தில் ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளது. </p><h2>10க்கும் மேற்பட்டவர்கள் கைது</h2><p>தமிழக சட்டசபையில் சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று இளையராஜாவிடம் பேரம் பேசப்பட்டுள்ளது. ரூ.35 கோடி வரை தருவதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர். ஆனால் அதற்கு தவெக எம்எல்ஏ இளையராஜா மயங்கவில்லை. மாறாக தன்னிடம் பேரம் பேசியவர்கள் பற்றி அவர் சென்னை திருவல்லிக்கேணி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ஐபிடிஎஸ் கருத்து கணிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் திருநாவுக்கரசு உள்பட 10க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் வழக்கில் கைதான நரேஷ், ரமேஷ், கார்த்திக் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுக்களை நீதிமன்றம் நேற்று நிராகரித்தது. </p> <h2>ரூ.2 கோடி பறிமுதல்</h2><p>எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசிய வழக்கில் இதுவரை  12 பேர் கைதான நிலையில், மேலும் 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  இந்த நிலையில்,  சென்னை கொரட்டூரை சேர்ந்த கருணாநிதி, சாலி கிராமத்தை சேர்ந்த சரவணன், பள்ளிக்கரணையை சேர்ந்த வினோத் ஆகிய மூவரிடம் இருந்து சுமார் 2 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக   தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில்,  மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>
ஈஷாவின் இலவச செஸ் பயிற்சி: குறுமைய அளவிலான போட்டியில் முதலிடம் பிடித்து அசத்திய பழங்குடியின மாணவி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/eshas-free-chess-coaching-tribal-student-wins-junior-tournament</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/eshas-free-chess-coaching-tribal-student-wins-junior-tournament#comments</comments><guid isPermaLink="false">81e81c60-cccb-4dbb-9700-ab0f30dde102</guid><pubDate>Sat, 18 Jul 2026 10:47:30 +0000</pubDate><atom:updated>2026-07-18T10:47:30.115Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>செஸ் போட்டி,ஈஷா மையம்,Isha Centre,பழங்குடியின மாணவி,Tribal students,Isha Foundation,chess game,செஸ் பயிற்சி,அரசுப்பள்ளி மாணவி,Chess Coaching</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/2xeufsvg/5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/2xeufsvg/5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>கோவை,</p><p>கோவை நரசீபுரத்தில் நடைபெற்ற குறுமைய அளவிலான செஸ் போட்டியில், ஈஷா வழங்கிய பயிற்சி மூலமாக, 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் அரசுப்பள்ளியில் படிக்கும் பழங்குடியின மாணவி நிவேதா முதலிடம் பிடித்துள்ளார்.</p><p>கோவை மாவட்டத்தில் குறுமைய அளவிலான செஸ் போட்டிகள், தொண்டாமுத்தூர் அருகே நரசீபுரத்தில் உள்ள கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில் 16.07.2026 (வியாழக்கிழமை) நடைபெற்றன. இதில், 70 அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.</p> <p>இப்போட்டியில், 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில், நரசீபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும், பட்டியார்கோயில்பதி என்ற பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த மாணவி நிவேதா முதல் பரிசு பெற்றார். இவர், அடுத்ததாக மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளார்.</p><p>இந்த குறுமையப் போட்டிகளில், 11 வயதுக்கு உட்பட்டோருக்கான செஸ் போட்டியில் ஈஷா வித்யா பள்ளி மாணவி பவ்யஸ்ரீ இரண்டாமிடம் பிடித்தார். 14 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் ஈஷா வித்யா பள்ளி மாணவி மூனு சௌஸ்திகா இரண்டாமிடமும், மத்வராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பூமிகா மூன்றாமிடமும் பிடித்தனர்.</p>  <p>19 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள் நந்திதா முதலிடத்தையும் நந்தனா இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். அதே போன்று ஆண்களுக்கான பிரிவில் மத்வராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மிதுனேஷ் முதலிடத்தையும், ஈஷா வித்யா பள்ளி மாணவர் சச்சின் மூன்றாமிடத்தையும் பிடித்தனர். இவர்கள் அனைவருக்கும் ஈஷா சார்பில் செஸ் விளையாட்டில் பயிற்சி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p><p>14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் முதலிடம் பிடித்த மாணவி நிவேதா இது குறித்து கூறுகையில், ”நான் உள்பட எங்கள் கிராமத்தில் உள்ள மாணவர்களுக்கு செஸ் குறித்த பெரிய அறிமுகம் கிடையாது. ஈஷா மூலமாக சுவாமி தத்யா, எங்கள் பழங்குடியின கிராமத்தில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக செஸ் விளையாட்டை கற்றுத் தந்தார். அவரது பயிற்சியால் ஆர்வமுள்ள பலர் செஸ் விளையாட்டைக் கற்றுக் கொண்டோம். தற்போது நான் மாவட்ட அளவிலானப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறேன். தற்போது, குறுமைய அளவில் முதலிடம் பிடித்துள்ளேன். மகிழ்ச்சியாக இருக்கிறது.” என்றார்.</p>  <p>பழங்குடியின கிராம மாணவர்களுக்கு செஸ் விளையாட்டில் பயிற்சி அளிக்கும் ஈஷாவின் முழுநேர தன்னார்வலரான சுவாமி தத்யா கூறுகையில், “ஈஷாவைச் சுற்றியுள்ள பழங்குடியின மற்றும் கிராம மாணவர்களுக்கு செஸ் விளையாட்டில் ஆர்வத்தை ஏற்படுத்த, அவர்களுக்கு பயிற்சி அளிக்க துவங்கினோம். அவர்களும் ஆர்வத்துடன் செஸ் விளையாட்டு நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.</p><p>இன்று பெரும்பாலும் நகரப் பகுதிகளில் பொருளாதார வசதியுள்ள மாணவர்களால் மட்டுமே செஸ் விளையாட்டை தொடர்ந்து கற்றுக்கொண்டு போட்டிகளில் கலந்து கொள்ள முடிகிறது. பெரும்பாலும் கிராமப்புற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இந்த விளையாட்டில் பயிற்சியும் வாய்ப்பும் கிடைப்பதில்லை. ஆனால் முறையான பயிற்சியும் ஊக்கமும் அளித்தால் செஸ் போட்டியில் கிராமங்களில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் வெற்றி பெற முடியும் என்பதற்கு இவர்கள் சான்றாக விளங்குகிறார்கள்,” எனக் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>விருதுநகரில் நிர்மலா சீதாராமன்..பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nirmala-sitharaman-in-virudhunagar-participates-in-various-events</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nirmala-sitharaman-in-virudhunagar-participates-in-various-events#comments</comments><guid isPermaLink="false">74b9bcc3-76de-43f1-812f-eaf07f7c0d16</guid><pubDate>Sat, 18 Jul 2026 10:26:23 +0000</pubDate><atom:updated>2026-07-18T10:26:23.987Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Virudhunagar,விருதுநகர்,நிர்மலா சீதாராமன்,Finance Minister Nirmala Sitharaman,Events,நிகழ்ச்சிகள்</media:keywords><media:content height="608" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/ba7z7iec/nirmala-sitharaman.jpg" width="1080"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/ba7z7iec/nirmala-sitharaman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர்,</p><p>விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள உள்ளரங்க விளையாட்டு வளாகத்தை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D">நிர்மலா சீதாராமன்</a> திறந்து வைத்தார்.</p><h2>உடற்பயிற்சிக்கூடம்</h2><p>எஸ்பிஐ அறக்கட்டளையின் முன்னெடுப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நவீன விளையாட்டு வளாகத்தில் பன்னோக்கு உள்விளையாட்டு அரங்கு, உடற்பயிற்சிக்கூடம், மேசைப்பந்தாட்ட அறை மற்றும் சதுரங்கம், கேரம் உள்ளிட்ட உள்விளையாட்டுகளுக்கான தனிப்பிரிவுகள் இடம்பெற்றுள்ளன.</p><h2>எஸ்பிஐ அறக்கட்டளை</h2><p> ஊரக மேம்பாட்டுத் திட்ட அறக்கட்டளை (SSRDPT) மூலம் செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்திற்கு எஸ்பிஐ அறக்கட்டளை ரூ. 3.96 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. இந்த வளாகம், அப்பகுதியின் விளையாட்டு உட்கட்டமைப்பை மேம்படுத்துவதோடு, அடுத்த 30 ஆண்டுகளில் சுமார் 15,000 கல்லூரி மாணவர்களுக்கும் 30,000 கிராமப்புற இளைஞர்களுக்கும் பயனளிக்கும்.</p><p><strong>திருச்சுழி மிளகாய் பதப்படுத்தும் மையம் திறப்பு</strong></p><p>மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகில் உள்ள காரேந்தலில், இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கி ஆதரவுடன் அமைக்கப்பட்டுள்ள குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் (GCAPL) ஒருங்கிணைந்த மிளகாய் பதப்படுத்தும் மையத்தை திறந்து வைத்தார்.</p> <figure><img alt="மிளகாய் பதப்படுத்தும் மையத்தை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்.

" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/vwdkggh6/nirmala.jpg" /></figure><h2>எஸ்பிஐ</h2><p>வேளாண்மையுடன் இணைக்கப்பட்ட இந்த நிறுவனம், இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கி (SIDBI) அமைப்பின் திட்ட மேம்பாட்டு முன்முயற்சியின் கீழ், அரசு நிதியின் கீழ் இயங்கும் கலப்பு நிதி மாதிரி மூலம் ஆதரிக்கப்படுகிறது.</p><h2>சந்தை வாய்ப்பு</h2><p>இப்பகுதியின் புவிசார் குறியீடு பெற்ற சம்பா மிளகாய்க்கான மதிப்புக்கூட்டல், முறைப்படுத்துதல் மற்றும் சந்தை வாய்ப்புகளை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும், கிராமப்புற தொழில்முனைவோரை வலுப்படுத்தவும், சாகுபடியை பதப்படுத்துதல், பிராண்டிங் மற்றும் சந்தை வாய்ப்புகளுடன் இணைக்கிறது.</p><p>இந்த மையம் மிளகாய் பதப்படுத்துதல், சுத்தம் செய்தல், உலர்த்துதல், சேமிப்பு, பேக்கேஜிங் மற்றும் தர உத்தரவாதம் ஆகியவற்றை ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்து, மதிப்புக்கூட்டப்பட்ட மிளகாய் தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறது.</p> ]]></content:encoded></item><item><title>ஜனநாயகன் படத்தை சிறப்பாக கொண்டாட வேண்டும்: புஸ்சி ஆனந்த் அறிவுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/jananayagan-film-must-be-celebrated-in-a-grand-manner-pucy-anands-directive</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/jananayagan-film-must-be-celebrated-in-a-grand-manner-pucy-anands-directive#comments</comments><guid isPermaLink="false">2fb87cf1-9356-45a1-b74d-49387d2ab0c3</guid><pubDate>Sat, 18 Jul 2026 10:01:45 +0000</pubDate><atom:updated>2026-07-18T10:01:45.447Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,Bussy Anand,ஜனநாயகன்,Jananayagan,புஸ்சி ஆனந்த்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/1lp753xf/Bussy.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ புஸ்சி ஆனந்த்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/1lp753xf/Bussy.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஹெச்.வினோத் இயக்கத்தில், விஜய் - பூஜா ஹெக்டே நடிப்பில் உருவான<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D"> ‘ஜனநாயகன்’</a> திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருந்தது. ஆனால், சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக தணிக்கை வாரியம் சென்சார் சான்றிதழ் அளிக்காததால், திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை. </p> <p>இதையடுத்து, தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடியிருந்தது. பின்னர் வழக்கை வாபஸ் பெற்ற நிலையில்,  கடந்த வாரம் இப்படத்திற்கு தணிக்கை வாரியம் ஏ சான்றிதழ் அளித்துள்ளது. தணிக்கை சான்று பெற்றதையடுத்து ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டது. </p><p>வரும் 23 ஆம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், தவெக பொதுச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D">புஸ்ஸி ஆனந்த் </a>கட்சியினருக்கு அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளார். திரையரங்குகளை சிறப்பாக அலங்கரித்து கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டும். ஜனநாயகன் பட வெளியீட்டை திருவிழா போல் பிரம்மாண்டமாக கொண்டாட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை காக்க கையெழுத்து இயக்கம்: அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைக்கிறார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/signature-campaign-to-save-pallikaranai-marshland-anbumani-ramadoss-to-launch-the-initiative</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/signature-campaign-to-save-pallikaranai-marshland-anbumani-ramadoss-to-launch-the-initiative#comments</comments><guid isPermaLink="false">0fa5482f-82e1-4e42-9f0c-df8752d6bd31</guid><pubDate>Sat, 18 Jul 2026 09:44:59 +0000</pubDate><atom:updated>2026-07-18T09:44:59.796Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,பள்ளிக்கரணை சதுப்பு நிலம்,Pallikaranai wetland,கையெழுத்து இயக்கம்,Signature campaign</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/sn6jjvc7/anbumani.20.gif" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/sn6jjvc7/anbumani.20.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையின் இயற்கை அரணாகவும், உயிர்நாடியாகவும் விளங்கும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்கும் நோக்கில், ‘<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">பசுமை தாயகம்</a>’ அமைப்பின் சார்பில் புதிய மக்கள் பரப்புரை மற்றும் மாபெரும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்படுகிறது. </p><p>சென்னை தியாகராயர் நகர், பாண்டி பஜார் ரத்னா ஸ்டோர்ஸ் அருகில் நாளை காலை 10.00 மணிக்கு இந்த பரப்புரையின் தொடக்க நிகழ்வு நடைபெறுகிறது.</p> <h2>அன்புமணி ராமதாஸ் பங்கேற்பு</h2><p>சென்னையின் உயிர்நாடி பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை காப்பதற்கான மக்கள் இயக்கம்" என்ற பெயரில் நடைபெறும் இந்த மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தை பா.ம.க. தலைவரும், பசுமை தாயகம் அமைப்பின் ஆலோசகருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் நேரில் கலந்துகொண்டு முறைப்படி தொடங்கி வைக்கிறார். </p><h2>சௌமியா அன்புமணி</h2><p>இந்த நிகழ்ச்சியில் பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி, பிரபல நீரியல் வல்லுநர் எஸ். ஜனகராஜன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோ. சுந்தர்ராஜன் உள்ளிட்ட முக்கிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஆளுமைகளும், சமூக ஆர்வலர்களும் பெருந்திரளாக பங்கேற்கிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>
இந்தியாவின் ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள்: சமூக ஆர்வலருக்காக குரல் கொடுத்த வைரமுத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/save-indias-democracy-vairamuthu-speaks-up-for-the-social-activist</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/save-indias-democracy-vairamuthu-speaks-up-for-the-social-activist#comments</comments><guid isPermaLink="false">a6129f34-5935-49f6-9040-c6cf6800e0c4</guid><pubDate>Sat, 18 Jul 2026 09:29:50 +0000</pubDate><atom:updated>2026-07-18T09:29:50.117Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Delhi,Social Activist,சமூக ஆர்வலர்,வைரமுத்து,Vairamuthu,Sonam Wangchuk,சோனம் வாங்சுக்,உண்ணா விரதம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/v9hy8gdl/1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/v9hy8gdl/1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்தி வரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணா விரதம் இருந்து வருகிறார். 21-வது நாளாக உண்ணா விரதம் இருந்து வரும் நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது.</p><p>இந்த நிலையில் டெல்லி ஜந்தர் மந்தரில் உள்ள உண்ணாவிரதப் பந்தலில் இருந்து சோனம் வாங்சுக்கை இன்று காலையில் போலீசார் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சோனம் வாங்சுக் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.</p> <p>இந்த நிலையில், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கு ஆதரவாக கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், </p><p>டெல்லியில் </p><p>உண்ணா நோன்பிருக்கும்</p><p>வாங்சுக் உயிரைக்</p><p>காப்பாற்றுங்கள்</p><p>உயிரின் கடைசிச் சொட்டு</p><p>வற்றினாலும் வற்றிவிடும்;</p><p>பிறகு எதுவும் செய்ய இயலாது</p><p>அவரது உயிர் </p><p>உடல் சார்ந்தது மட்டுமல்ல;</p><p>இந்திய உரிமை சார்ந்தது;</p><p>நாட்டு நலன் சார்ந்தது</p><p>சம்பந்தப்பட்டவர்கள்</p><p>தன்னகங்காரத்தைத்</p><p>தள்ளிவைத்து</p><p>ஓர் இந்தியனை மீட்டெடுங்கள்;</p><p>இந்தியாவின்</p><p>ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள்</p><p>அதில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மோப்பநாய் மோக்கா வீர மரணம்: 24 குண்டுகள் முழங்க அரசு இறுதி மரியாதை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/moka-the-dogs-heroic-death-24-gunshots-fired-as-government-pays-last-respects</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/moka-the-dogs-heroic-death-24-gunshots-fired-as-government-pays-last-respects#comments</comments><guid isPermaLink="false">13c762d1-d88b-46e1-b94f-4c6d4047bf1e</guid><pubDate>Sat, 18 Jul 2026 08:55:16 +0000</pubDate><atom:updated>2026-07-18T08:55:16.027Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nilagiris,மோப்பநாய்,அரசு மரியாதையுடன் அடக்கம்,heroic death,24 குண்டுகள்,24 gunshots fired,Moka dog</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/gcxcaef7/dog-governmen-t.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ மோக்கா மோப்பநாய்]]></media:title><media:description type="html"><![CDATA[ மோக்கா மோப்பநாய்க்கு அரசு இறுதி மரியாதை செய்யப்பட்டது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/gcxcaef7/dog-governmen-t.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி, </p><p>நீலகிரி மாவட்டத்தில் வீரமரணம் அடைந்த மோக்கா என்ற மோப்பநாயின் உடலுக்கு 24 குண்டுகள் முழங்க அரசு இறுதி மரியாதை செய்யப்பட்டது.</p><h2>சாதனையும் வீரமரணமும்</h2><p>நீலகிரி மாவட்டம் ஊட்டியில் காவல் துறையில் குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் “மோக்கா” என்ற மோப்பநாய் சிறப்பாகச் செயல்பட்டு வந்தது. மேலும் மோக்கா நாய் கொலை, கொள்ளை உள்ளிட்ட 26 முக்கிய குற்ற வழக்குகளைக் கண்டுபிடிக்க உதவி சாதனை படைத்தது. </p><p>இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மோக்கா ஊட்டியில் உள்ள காவல் துறை மோப்பநாய் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தது. ஆனால் சிகிக்கை பலனின்றி உயிரிழந்தது.</p><h2>அரசு மரியாதையுடன் இறுதிசடங்கு</h2><p>வீரமரணம் அடைந்த மோக்காவின் உடலுக்கு உயர் காவல் அதிகாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும் காவல் துறை சார்பில் தொடர்ந்து 24 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் ஊட்டி ஆயுதப்படை மைதானத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.</p><p>காவல் துறையில் பெரும் பங்காற்றிய இந்த மோப்பநாயின் மறைவு நீலகிரி மாவட்ட காவல் துறையினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">மோப்பநாய் மோக்கா<br>வீர மரணம்!<br><br>நீலகிரியில் கொலை, கொள்ளை உள்ளிட்ட 26 குற்ற வழக்குகளில் காவல்துறைக்கு உதவிய மோக்கா என்ற மோப்பநாய் உடல்நலக்குறைவால் உயிரிழந்தது; 24 குண்டுகள் முழங்க போலீசார் இறுதி மரியாதை செலுத்தினர்.<a href="https://x.com/hashtag/Mokka?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Mokka</a> <a href="https://x.com/hashtag/SnifferDog?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SnifferDog</a> <a href="https://x.com/hashtag/PoliceDog?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#PoliceDog</a> <a href="https://x.com/hashtag/PoliceTribute?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#PoliceTribute</a> <a href="https://x.com/hashtag/Nilgiris?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Nilgiris</a> <a href="https://x.com/hashtag/Ooty?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Ooty</a>… <a href="https://t.co/8VbnbV9o8F">pic.twitter.com/8VbnbV9o8F</a></p>&mdash; Thanthi TV (@ThanthiTV) <a href="https://x.com/ThanthiTV/status/2078386802931486745?ref_src=twsrc%5Etfw">July 18, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ மாஸ்டர்பிளான் போட்ட பெண்.. கணவருக்கு நேர்ந்த கொடூரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-hatches-master-plan-to-live-with-her-lover-the-horror-that-befell-her-husband</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-hatches-master-plan-to-live-with-her-lover-the-horror-that-befell-her-husband#comments</comments><guid isPermaLink="false">96384c6b-2161-4b32-9978-e765b3cd26b3</guid><pubDate>Sat, 18 Jul 2026 08:50:07 +0000</pubDate><atom:updated>2026-07-18T08:50:07.747Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,கள்ளக்காதல்,கிரைம் செய்திகள்,உல்லாசம்,கிருஷ்ணகிரி,Krishnagiri,கணவர் கொலை,husband murder</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/jo6ijbws/aver.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/jo6ijbws/aver.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>குப்பம், </p><p>குப்பம் அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை வெட்டிக்கொன்ற மனைவி உள்பட 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p><h2>திருமணம்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/krishnagiri">கிருஷ்ணகிரி</a> மாவட்டம் சூளகிரியை அடுத்த தேவதாசனபள்ளியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35). இவருக்கும், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சாந்திபுரம் மண்டலம் போயனபள்ளியைச் சேர்ந்த ஹாசினி (30) என்ற பெண்ணுக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. </p><p>அவர்களுக்கு ஒன்றரை வயதில் மவுனிகா என்ற மகள் உள்ளாள். ரமேஷ் தனது மனைவி, குழந்தையுடன் ஓசூரில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஊழியரயாக வேலை பார்த்து வந்தார்.</p><h2>கோவிலுக்கு சென்ற தம்பதி</h2><p>கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹாசினி தனது கணவர் ரமேஷ், குழந்தை மவுனிகாவோடு தாய் வீட்டுக்கு வந்தார். மறுநாள் தன்னை மல்லப்பாமலையில் உள்ள கோவிலுக்கு அழைத்துச் செல்லும்படி ஹாசினி, ரமேசிடம் கூறினார். அதன்பேரில் ஹாசினி, குழந்தையை தூக்கி கொண்டு ரமேசின் மோட்டார்சைக்கிளில் கோவிலுக்கு சென்றார்.</p><h2>கணவர் வெட்டிக்கொலை</h2><p>ஆனால், அவர்கள் வெகுநேரம் ஆகியும் வீட்டுக்கு விரவில்லை. ஹாசினியின் தாய் ருக்கம்மா உடனே குப்பத்தை அடுத்த ரால்லபூடுகூரு போலீசில் புகார் செய்தார். நேற்று முன்தினம் போலீசார் மல்லப்பாமலைக்கு சென்று தேடினர். அங்கிருந்த புதரில் ரமேஷ் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தது தெரிய வந்தது. அவரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைகாக குப்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.</p><h2>கேமராவில் பதிவான காட்சி</h2><p>மேலும் ஹாசினி, குழந்தையை காணவில்லை. அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஹாசினி தனது குழந்தையுடன் வேறு ஒருவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.</p><h2>தனிமையில் உல்லாசம்</h2><p>இந்தநிலையில் போயனபள்ளியைச் சேர்ந்தவரும், தன்னை விட வயது குறைந்த யுகேந்தர் என்ற வாலிபருடன் ஹாசினி பழகி வந்தார். அது, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களின் கள்ளக்காதல் விவகாரத்தை அறிந்த ரமேஷ், ஹாசினியிடம் கேட்டு தகராறு செய்து வந்தார்.</p><h2>கொலை செய்ய திட்டம்</h2><p>கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்ய யுகேந்தருடன் ஹாசினி திட்டமிட்டார். அதன்படி கணவரிடம் மல்லப்பாமலைக்கு போகலாம் எனக்கூறி குழந்தையை தூக்கி கொண்டு கணவருடன் அங்கு சென்றுள்ளார். மல்லப்பாமலைப் பாதையில் ஏறும்போது 3-வது வளைவில் ஹாசினி தனது கைப்பையை கீழே போடுவதுபோல் நடித்துள்ளார்.</p><h2>வெட்டிக்கொலை</h2><p>உடனே ரமேஷ் மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு கைப்பையை எடுக்கச் சென்றார். அப்போது அங்கு ஏற்கனவே மறைந்திருந்த யுகேந்தர் உள்பட 3 பேர் கொண்ட கும்பல் ரமேசை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து, உடலை முட்புதரில் வீசினர். </p><p>இதையடுத்து ரமேசின் மோட்டார்சைக்கிளை எடுத்துக் கொண்டு யுகேந்தர் தனது கள்ளக்காதலியான ஹாசினி, குழந்தை மவுனிகாவை அழைத்துக்கொண்டு குப்பம் ரெயில் நிலையத்துக்கு சென்றார். அங்கு, மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு யுகேந்தர் உள்பட 3 பேர் ரெயிலில் ஏறி தப்பி சென்றதாக விசாரணையில் தெரிய வந்தது.</p><p>இதையடுத்து யுகேந்தர், ஹாசினி, குழந்தை மவுனிகா மற்றும் கொலைக்கு உதவிய 2 பேர் என 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பைக் விபத்தில் அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியர் பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thermal-power-plant-contract-worker-dies-in-bike-accident</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thermal-power-plant-contract-worker-dies-in-bike-accident#comments</comments><guid isPermaLink="false">c1ac147a-3018-4ce5-b1fe-7daa6ae18654</guid><pubDate>Sat, 18 Jul 2026 08:33:47 +0000</pubDate><atom:updated>2026-07-18T08:33:47.691Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,Thoothukudi,தூத்துக்குடி,பலி,bike,பைக்,Death,thermal power plant,அனல்மின் நிலையம்,ஒப்பந்த ஊழியர்,contract employee</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/zk0y8xje/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பைக் விபத்தில் ஒப்பந்த ஊழியர் பலி ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/zk0y8xje/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடியில் பைக் மீது வாகனம் மோதிய விபத்தில் அனல் மின் நிலைய ஒப்பந்தத் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்</a>. மேலும் ஒருவர் பலத்த காயமடைந்தார்.</p><h2>அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள்</h2><p>தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை யாதவர் தெருவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் முத்தமிழரசன் (வயது 18). அதே பகுதியைச் சேர்ந்த பூவலிங்கம் மகன் மாரிக்கண்ணன்(18). இவர்கள் 2 பேரும் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தனர். </p><h2>பைக் மீது வாகனம் மோதி விபத்து</h2><p>இன்று காலையில் பணிக்கு செல்வதற்காக முத்தமிழரசன் பைக்கை ஓட்ட, மாரிக்கண்ணன் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார். தூத்துக்குடி புதிய துறைமுகம் - மதுரை பைபாஸ் சாலையில் உள்ள திருச்செந்தூர் ரோடு ரவுண்டானா அருகே சென்றபோது, இவர்களின் பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதிவிட்டு நிறுத்தாமல் சென்றது.</p><h2>ஒப்பந்த ஊழியர் பலி</h2><p>இந்த விபத்தில் முத்தமிழரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாரிக்கண்ணன் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற முத்தையாபுரம் காவல் நிலையப் போலீசார், பாதிக்கப்பட்ட 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த முத்தமிழரசனின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. </p><p>இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை கண்டறிய அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>3 தமிழக அமைச்சர்களுடன் கைலாசா நாட்டின் பிரதிநிதிகள் சந்திப்பு: நித்யானந்தா வெளியிட்ட பதிவால் பரபரப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kailasha-representatives-meet-with-3-tamil-nadu-ministers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kailasha-representatives-meet-with-3-tamil-nadu-ministers#comments</comments><guid isPermaLink="false">57dcb007-8c3a-4b47-86cd-0db76a5ca05b</guid><pubDate>Sat, 18 Jul 2026 08:25:21 +0000</pubDate><atom:updated>2026-07-18T08:25:21.778Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,Vijay,விஜய்,தமிழக அரசு,Nithyananda,கைலாசா,கைலாசா நாடு,தவெக அரசு,Kailasha</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/d8omnlvy/nithiyandaa33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நித்யானந்தா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/d8omnlvy/nithiyandaa33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>3 தமிழக அமைச்சர்களை கைலாசா நாட்டின் பிரதிநிதிகள் சந்தித்து பேசியதாக நித்யானந்தா வெளியிட்ட பதிவால் பரபரப்பு நிலவுகிறது. </p><h2>நித்யானந்தா வெளியிட்ட பதிவு</h2><p>போலீசாரால் தேடப்பட்டு வரும் நித்யானந்தா, கைலாசா எனும் நாட்டில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 16-ந் தேதி நித்யானந்தா தனது எக்ஸ் தளப்பதிவில் வெளியிட்டுள்ள தகவல் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>அதாவது, கைலாசா நாட்டு பிரதிநிதிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் த.வெ.க. அமைச்சர்கள் லோகேஷ், ஸ்ரீநாத், வன்னி அரசு ஆகியோரை சந்தித்து ராஜாங்க ரீதியிலான உறவுகள் குறித்து பேசியதாக குறிப்பிட்டுள்ளார். </p><h2>புகைப்படங்கள் வெளியீடு</h2><p>மேலும், இந்த சந்திப்பின்போது, "சுவாமி நித்யானந்தா எழுதிய 'யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் கைலாசா', 'கைலாசாவின் வரலாறு' ஆகிய புத்தகங்களை அமைச்சர்களுக்கு பரிசாக அளித்தோம். </p><p>இந்த புத்தகம் சனாதன தர்மத்தின் மீட்சிக்கும், அதை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.   அமைச்சர்களுடன் கைலாசா நாட்டு நிர்வாகிகள் சந்தித்த புகைப்படங்களையும் நித்யானந்தா பதிவிட்டுள்ளார். </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/avoedylh/nithione33.jpg" /></figure><h2>தவறான தகவல்</h2><p>தமிழக அரசியலில் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து தலைமைச் செயலக வட்டாரத்தில் விசாரித்தபோது, "நித்யானந்தா சொல்வதைப்போல எந்த அரசாங்க ரீதியான சந்திப்பும் நடைபெறவில்லை. மனு கொடுப்பதற்காக தினமும் அமைச்சர்களை நிறைய பேர் சந்திக்கிறார்கள். அதுபோல வந்தவர்கள்தான் புத்தகத்தை கொடுத்து புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். மற்றபடி பேச்சு வார்த்தை எதுவும் நடைபெறவில்லை. நித்யானந்தா பதிவில் கூறியிருப்பது தவறான தகவல்" என்று தெரிவிக்கப்பட்டது. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/68hd9qe7/nithitwo33.jpg" /></figure><p>கடந்த மே மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக பெற்ற  வெற்றியைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவரான நடிகர் விஜய்-க்கு நித்தியானந்தா வாழ்த்துத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த புதிய சர்ச்சை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு நாள், எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள்: இரண்டையுமே செய்தது தி.மு.க. அரசுதான் - தங்கம் தென்னரசு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-day-border-martyrs-day-dmk-government-thangam-thenarasu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-day-border-martyrs-day-dmk-government-thangam-thenarasu#comments</comments><guid isPermaLink="false">78e5c1bc-8880-41f5-9321-5e6e39e8c347</guid><pubDate>Sat, 18 Jul 2026 08:22:35 +0000</pubDate><atom:updated>2026-07-18T08:22:35.658Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,தமிழ்நாடு நாள்,தங்கம் தென்னரசு,Thangam thennarasu,Tamilnadu Day</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/aqyx4djz/Untitled-11.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம் தென்னரசு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/aqyx4djz/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மெட்ராஸ் மாநிலமாக உருவான நவம்பர் 1-ம் நாளையும், 'தமிழ்நாடு' எனும் பெயர் சூட்ட பேரறிஞர் அண்ணாவால் சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ம் நாளையும் அரசு கொண்டாடும் என்று தெரிவித்து முதல்-அமைச்சர் விஜய் பதிவிட்டிருந்தார்.</p><p>இந்த நிலையில் அவரது பதிவை குறிப்பிட்டு இந்த இரண்டையுமே செய்தது தி.மு.க. அரசுதான் என்று திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>இந்த இரண்டையுமே செய்தது தி.மு.க. அரசுதான்.</p><p>தமிழ்நாடு நாள் இன்று (ஜூலை 18) கொண்டாடப்படுவதற்குக் காரணம் என்ன?</p><p>நவம்பர் 1-ம் தேதியைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவது பொருத்தமற்றது என்று பல்வேறு அறிஞர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாளான நவம்பர் 1-ம் தேதியைத் தமிழ்நாடு நாளாக எவ்வாறு கொண்டாட முடியும்? அந்த நாளில், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழ்நாடு பெற்றதைவிட இழந்ததே அதிகம். எனவே, அந்த நாளைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவது சரியல்ல என்று அவர்கள் வலியுறுத்தினர்.</p><p>மேலும், அன்னைத் தமிழ்நாட்டிற்கு "தமிழ்நாடு" என்ற பெயரைச் சூட்டுவதற்காகத் தியாகி சங்கரலிங்கனார் உயிர்நீத்ததும், எண்ணற்றோர் போராடியதும் வரலாறு. "பெயரில் என்ன இருக்கிறது?" என்று தமிழினத்திற்கான தனித்துவமான அடையாளத்தை வழங்க மறுத்த ஆதிக்க மனப்போக்கிற்கு எதிராகப் போராடி, ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பேரறிஞர் அண்ணா தலைமையிலான அரசுதான் இந்த மாநிலத்திற்கு "தமிழ்நாடு" என்ற பெயரைச் சூட்டியது.</p><p>அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவது தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் என்று கருதிய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜூலை 18-ம் தேதியைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாட ஆணையிட்டார்.</p><p>அதே நேரத்தில், தமிழ்நாட்டின் எல்லைகளைக் காக்க இன்னுயிர் நீத்துப் போராடிய தியாகிகளைப் போற்றும் வகையில் நவம்பர் 1-ம் தேதியை "எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள்" என அறிவித்ததுடன், அவர்களுக்கான ஓய்வூதியத்தையும் உயர்த்தினார். இனம், மொழி, பண்பாடு காத்தவர் நம் தலைவர்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">இந்த இரண்டையுமே செய்தது தி.மு.க. அரசுதான்.<br><br>தமிழ்நாடு நாள் இன்று (ஜூலை 18) கொண்டாடப்படுவதற்குக் காரணம் என்ன?<br><br>நவம்பர் 1-ஆம் தேதியைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவது பொருத்தமற்றது என்று பல்வேறு அறிஞர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாளான நவம்பர்… <a href="https://t.co/hmZFlWpzSV">https://t.co/hmZFlWpzSV</a></p>&mdash; Thangam Thenarasu-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@TThenarasu) <a href="https://x.com/TThenarasu/status/2078382199590867130?ref_src=twsrc%5Etfw">July 18, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>மதுபோதையில் பொதுமக்களை அரிவாளுடன் மிரட்டிய வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-young-man-who-threatened-the-public-with-a-sickle-while-drunk-was-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-young-man-who-threatened-the-public-with-a-sickle-while-drunk-was-arrested#comments</comments><guid isPermaLink="false">d57e8aab-badb-4de0-86a6-876552b99e02</guid><pubDate>Sat, 18 Jul 2026 08:14:23 +0000</pubDate><atom:updated>2026-07-18T08:14:23.135Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பொதுமக்கள்,கைது,Thoothukudi,தூத்துக்குடி,arrest,Youth,வாலிபர்,Threat,மிரட்டல்,Sickle,அரிவாள்,Public,மதுபோதை,alcoholism</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/fl9jdil8/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வாலிபர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/fl9jdil8/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பஜார் பகுதியில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மதுபோதையில் அரிவாளுடன் ரகளை</a>யில் ஈடுபட்டு, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். </p><h2>அரிவாளை காட்டி மிரட்டல்</h2><p>தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளி பகுதியில் வசித்து வரும் இசக்கி மகன் ஜெயமணிகண்டன் (வயது 25). இவர் கயத்தாறு மதுரை பிரதான சாலை, பஜாரில் ஐயர் பாலத்தின் அருகே உள்ள ஒரு தனியார் விடுதி முன்பு மதுபோதையில் கையில் அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்களையும், பொதுமக்களையும் அரிவாளைக் காட்டி மிரட்டியுள்ளார்.</p><h2>வாலிபர் கைது</h2><p>இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், கயத்தாறு இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் காந்திராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஜெயமணிகண்டனை சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர். அவர் கையில் வைத்திருந்த அரிவாளை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தந்தை கண்டித்ததால் விஷம் குடித்த வாலிபர் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/teenager-dies-after-consuming-poison-after-being-scolded-by-his-father</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/teenager-dies-after-consuming-poison-after-being-scolded-by-his-father#comments</comments><guid isPermaLink="false">acb3ff8c-b514-499d-be35-2781af94f2fe</guid><pubDate>Sat, 18 Jul 2026 07:56:57 +0000</pubDate><atom:updated>2026-07-18T07:56:57.412Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,son,மகன்,Suicide,விஷம் குடித்து தற்கொலை,கண்டித்த,Father,தந்தை,consuming poison,reprimands</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/fr21bn33/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விஷம் குடித்த வாலிபர் உயிரிழப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/fr21bn33/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், நாரைக்கிணறு பகுதியில் தந்தை கண்டித்ததால் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">களைக்கொல்லி மருந்து குடித்த வாலிபர்</a> மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். </p><h2>மகனை கண்டித்த தந்தை</h2><p>தூத்துக்குடி மாவட்டம், நாரைக்கிணறு கோவிந்தாபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த சின்னச்சாமி மகன் குமார் (வயது 51). இவரது மகன் ஜெகநாதன்(19). இவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் தந்தை குமார், மகனை வேலைக்குச் செல்லுமாறு அறிவுறுத்திப் பேசியுள்ளார்.</p><h2>விஷம் குடித்த மகன் உயிரிழப்பு</h2><p>இதில் மனவேதனை அடைந்த ஜெகநாதன், கடந்த ஜூன் 25-ம் தேதி இரவு வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த ஜெகநாதன், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து நாரைக்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>சோனம் வாங்சுக் போராட்டம் கலைக்கப்பட்டதற்கு   சிபிஐ(எம்) கடும் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cpim-strongly-condemns-the-dissolution-of-sonam-wangchuks-protest</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cpim-strongly-condemns-the-dissolution-of-sonam-wangchuks-protest#comments</comments><guid isPermaLink="false">a65b464b-cf91-43ff-880f-14548e2181a3</guid><pubDate>Sat, 18 Jul 2026 07:54:32 +0000</pubDate><atom:updated>2026-07-18T07:54:32.682Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>போராட்டம்,Sonam Wangchuk,சோனம் வாங்சுக்,CPI(M),p shanmugam,சிபிஐ(எம்),பெ. சண்முகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/0iv9mne8/pshanmugam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/0iv9mne8/pshanmugam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாலர் பெ. சண்முகம் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>நீட் வினாத்தாள் கசிவு ஊழலுக்குக் காரணமான கல்வி மாஃபியாக்கள் மீது நடவடிக்கை எடுக்க முதுகெலும்பு இல்லாத மோடி அரசு, அதற்கு எதிராக ஜனநாயக முறையில் போராடிய சமூக ஆர்வலர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D">சோனம் வாங்சுக்</a> மற்றும் அபிஜித் திப்கே ஆகியோரைக் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.</p><h2>அடக்குமுறை</h2><p>நியாயமான எதிர்ப்புக் குரல்களை லத்திகள் மூலமும், அராஜக கைதுகள் மூலமும் நசுக்கப் பார்க்கும் இந்த ஜனநாயக விரோத, சர்வாதிகாரப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன். கல்வி மந்திரியின் தோல்வியை மறைக்க போராடுபவர்கள் மீது ஏவப்படும் இந்த கோழைத்தனமான அடக்குமுறைக்கு எதிராக, நாட்டின் ஒட்டுமொத்த ஜனநாயக சக்திகளும் வீதிக்கு வந்து போராட வேண்டும். ஜந்தர் மந்தரிலிருந்து எழப்போகும் இந்த உழைக்கும் வர்க்க இளைஞர்களின் புரட்சிப் பேரலை, உங்கள் அதிகாரச் சிம்மாசனத்தின் அஸ்திவாரத்தையே உலுக்கி தகர்க்கும்! அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம்! தர்மேந்திர பிரதான் உடனே பதவி விலகு!</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-aaditabhasu-festival-at-the-sankara-narayana-swamy-temple-began-with-flag-hoisting</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-aaditabhasu-festival-at-the-sankara-narayana-swamy-temple-began-with-flag-hoisting#comments</comments><guid isPermaLink="false">bf35921f-d8a9-41e9-834b-e844585d9dd1</guid><pubDate>Sat, 18 Jul 2026 07:35:48 +0000</pubDate><atom:updated>2026-07-18T07:35:48.372Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சங்கரன்கோவில்,ஆடித்தபசு,Sankaranarayana Swamy Temple,சங்கரநாராயண சுவாமி கோவில்,Aadi Thabasu,கொடியேற்றத்துடன் தொடங்கியது,In Sankarankovil</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/gi4jrtpp/60.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/gi4jrtpp/60.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>ஆன்மிகம் (Devotional)</category><content:encoded><![CDATA[ <p>சங்கரன்கோவில்,</p><p>தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணசுவாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று. சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதனை பக்தர்களுக்கு உணர்த்தும் பொருட்டு சிவபெருமான் கோமதி அம்பாளுக்கு ஸ்ரீ சங்கரநாராயணராக காட்சி கொடுத்தார். இத்தகைய நிகழ்வானது. ஆடித்தபசு திருவிழாவாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் தொடர்ந்து 12 நாட்கள் இவ்விழா நடைபெறும்.</p><h2>கொடியேற்றம்</h2><p>இந்த ஆண்டிற்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு 3.30 மணிக்கு திருவனந்தல் பூஜை நடந்தது. அதனைத் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது. கொடியேற்றத்தை முன்னிட்டு கோமதி அம்பாள் சிவிகையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து கொடிபட்டம் வீதி உலா நடந்தது.</p><h2>வீதி உலா நிகழ்ச்சி</h2><p>காலை 7.05 மணிக்கு அம்மன் சன்னதியில் உள்ள தங்க கொடி மரத்தில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D">கொடியேற்றத்துடன்</a> தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை கோமதி அம்மன் பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து தினமும் இரவு மண்டகப்படியில் இருந்து வெவ்வேறு வாகனங்களில் கோமதி அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. விழாவில் 9-ம் திருநாளான வருகிற 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. ஆடித்தபசு 11-ம் திருநாளான 28-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தவமிருக்கும் கோமதி அம்மனுக்கு சங்கரநாராயணனராக காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெறுகிறது. அன்று காலை 9.30 மணிக்கு கோமதி அம்பாளுக்கு அபிஷேக அலங்கார பரிவட்டம் சாத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.</p><h2>தபசு காட்சி</h2><p>தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் தங்கச்சப்பரத்தில் தவக்கோலத்தில் கோமதி அம்மன் தெற்கு ரத வீதியில் உள்ள தபசு மண்டகப்படியில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை 6.05 மணிக்கு மேல் சிவபெருமான் அரியும் சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் வகையில் சங்கர நாராயணசுவாமியாக ரிஷப வாகனத்தில் கோமதி அம்மனுக்கு தபசு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும், அன்று இரவு 11.45 மணிக்கு மேல் சங்கரலிங்க சுவாமியாக யானை வாகனத்தில் கோமதி அம்மனுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து 29-ந் தேதி (புதன்கிழமை) சுவாமி அம்பாள் இரண்டு சப்பரங்களில் ஒரே நேரத்தில் சப்தா வர்ணத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.</p><p>கொடியேற்ற விழாவில் தென்காசி எம்.பி. ராணி ஸ்ரீகுமார், அ.தி.மு.க. மாநில மகளிர் அணி துணை செயலாளர் முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. திலீபன் ஜெய்சங்கர், சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் கவுசல்யா வெங்கடேஷ், நகராட்சி கமிஷனர் லட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ஜவுளிக் கடையில் ரூ.2 லட்சம் திருட்டு: பெண் உள்பட 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs2-lakh-stolen-from-textile-shop-police-nab-2-people-including-woman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs2-lakh-stolen-from-textile-shop-police-nab-2-people-including-woman#comments</comments><guid isPermaLink="false">13ac2c46-cdd3-44f3-a6c8-7aa7d4148eb3</guid><pubDate>Sat, 18 Jul 2026 07:35:02 +0000</pubDate><atom:updated>2026-07-18T07:35:02.885Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,ஜவுளிக்கடை,பணம் திருட்டு,money theft,2 பேர்,2 people,போலீசார் வலைவீச்சு,textile shop,police netting</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/m9plwxmv/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பணம் திருட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/m9plwxmv/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் உள்ள ஜவுளிக் கடையில் திருமணத்திற்குத் துணி எடுப்பது போல நடித்து, பணப்பெட்டியிலிருந்த ரூ.2 லட்சம் ரொக்கப் பணத்தைத் திருடிச் சென்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p><h2>வீட்டு திருமணத்திற்காக துணி</h2><p>தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அகிலாண்டபுரம் இந்திரா காலனியைச் சேர்ந்த மகாராஜன் (வயது 32), கயத்தாறு பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு வந்த அடையாளம் தெரியாத ஒரு ஆணும், பெண்ணும் தங்களது வீட்டு திருமணத்திற்காக துணி எடுப்பதாகக் கூறி ரூ.27 ஆயிரத்திற்கு ஜவுளி ரகங்களை தேர்வு செய்துள்ளனர். பின்னர் பணத்தைக் கொடுத்துவிட்டு துணிகளை எடுத்துக் கொள்வதாக கூறிவிட்டு அவர்கள் கடையை விட்டு வெளியேறியுள்ளனர்.</p><h2>ரூ.2 லட்சம் பணம் திருட்டு</h2><p>இதைத் தொடர்ந்து, கடையில் இருந்த பணப்பெட்டியை உரிமையாளர் மகாராஜன் சரிபார்த்தபோது, அதிலிருந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ரூ.2 லட்சம் ரொக்கப் பணம்</a> திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மகாராஜன் அளித்த புகாரின் அடிப்படையில், கயத்தாறு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜவுளிக்கடையில் வாடிக்கையாளர்கள் போல நடித்து பணத்தை திருடிச் சென்ற 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சிவகங்கை: தாசில்தார் வீட்டில் 50 பவுன் நகைகள் கொள்ளை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sivaganga-50-sovereigns-of-jewelry-stolen-from-a-tahsildars-house</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sivaganga-50-sovereigns-of-jewelry-stolen-from-a-tahsildars-house#comments</comments><guid isPermaLink="false">4ea7f0ec-359d-4a5d-be3e-6fd8875f5752</guid><pubDate>Sat, 18 Jul 2026 07:25:57 +0000</pubDate><atom:updated>2026-07-18T07:25:57.567Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>jewelry stolen,சிவகங்கை,Sivagangai,நகைகள் கொள்ளை</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/h4jo9j6z/14.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/h4jo9j6z/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>காரைக்குடி</p><p>சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனி பகுதியை சேர்ந்தவர் சாந்தி(வயது 56). இவர் சிவகங்கையில் தனி தாசில்தாராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் காரைக்குடியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.</p><p>இந்நிலையில் நேற்று காலை வீட்டில் உள்ள அனைவரும் வெளியே சென்று இருந்தனர். மதியம் தாசில்தார் சாந்தியின் மருமகள் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோக்களும் உடைக்கப்பட்டு பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடி யாக சாந்திக்கு தகவல் தெரிவித்தார். </p><h2>50 பவுன் கொள்ளை</h2><p>அதன்பேரில் அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த சுமார் 50 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.. வீட் டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை கொள்ளையடித்து உள்ளனர். இது தொடர் பாக சாந்தி, காரைக்குடி வடக்கு போலீசில் புகார் அளித்தார்.</p><p>சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவப்பிரசாத், காரைக்குடி உதவி சூப்பிரண்டு ஆசிஷ் புனியா ஆகியோரும் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த கொள்ளை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து மர் மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற் படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>‘நீட்&apos; தேர்வில்  சாதனை படைத்த மாடு மேய்க்கும் தொழிலாளியின் மகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/daughter-of-a-cowherd-worker-achieves-success-in-neet-exam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/daughter-of-a-cowherd-worker-achieves-success-in-neet-exam#comments</comments><guid isPermaLink="false">dd2bef0c-9309-4cee-ae5f-36fc0602c90e</guid><pubDate>Sat, 18 Jul 2026 07:13:21 +0000</pubDate><atom:updated>2026-07-18T07:13:21.971Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணவி,student,NEET Exam,சாதனை,‘நீட்&apos; தேர்வு,Achiever</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/mqg0lq75/59.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/mqg0lq75/59.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஆலங்குடி, </p><p>ஆலங்குடி தாலுகா கீரமங்கலம் வடக்கு குமரன் சாலையில் வசித்து வருபவர் தமிழரசன். இவர் பசுமாடுகளை வளர்த்து வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி. இவர்களது மகள் பிரியதர்ஷினி (வயது 20). இவர் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்தார். பின்னர் 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்று டாக்டராக வேண்டும் என்கிற கனவோடு<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%27%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81"> 'நீட்' தேர்வுக்கு</a> தயாராகி வந்தார். </p><h2>7.5 சதவீத இட ஒதுக்கீடு</h2><p>இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் 21-ந்தேதி 'நீட்' மறு தேர்வை பிரியதர்ஷினி எழுதினார். இதில் 502 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும் பிரியதர்ஷினி 7.5 சதவீத இட ஒதுக்கீடு கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பாணை இன்னும் வரவில்லை என்றும், வந்ததும் அதில் கலந்து கொள்வதாக தெரிவித்தார்.</p>]]></content:encoded></item></channel></rss>