<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 12 Jul 2026 09:36:34 +0000</lastBuildDate><item><title>ஸ்ரீபெரும்புதூரில் இஎஸ்ஐசி மருத்துவமனையை காணொலி வாயிலாக மத்திய மந்திரி தொடங்கி வைக்கிறார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/union-minister-to-inaugurate-100-bed-esic-hospital-in-sriperumbudur-via-video-conference</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/union-minister-to-inaugurate-100-bed-esic-hospital-in-sriperumbudur-via-video-conference#comments</comments><guid isPermaLink="false">ecda5305-63c6-44d8-b950-4fa00514d88c</guid><pubDate>Sun, 12 Jul 2026 09:25:34 +0000</pubDate><atom:updated>2026-07-12T09:25:34.027Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>hospital,மருத்துவமனை,Union Minister Mansukh Mandaviya,மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா,Sriperumbudur,ஸ்ரீபெரும்புதூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/uya16d8v/central-minister-Mansukh-Ma.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஸ்ரீபெரும்புதூரில் இஎஸ்ஐசி மருத்துவமனை,மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/uya16d8v/central-minister-Mansukh-Ma.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஸ்ரீபெரும்புதூர் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏழு இஎஸ்ஐ சுகாதாரத் திட்டங்கள் - வரும் 14-ம் தேதி தொடங்கி வைக்கிறார் மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா.</p> <h2>சுகாதார திட்டங்கள்</h2><p>நாளை மறுநாள் தெலங்கானா மாநிலம் சனத்நகரில் உள்ள தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகமான இஎஸ்ஐசி (ESIC) மருத்துவமனையிலிருந்து, நாடு முழுவதும் உள்ள ஏழு தொழிலாளர் அரசு காப்பீட்டு (இஎஸ்ஐ - ESI) சுகாதார திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, சனத்நகரில் உள்ள இஎஐஸ்ஐசி மருத்துவமனையின் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டடத்தை திறந்து வைப்பார். </p><p><strong>அதன் பின் ஆறு திட்டங்களையும் காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.</strong></p><p>* அசாம் மாநிலம் பெல்டோலாவில் உள்ள மேம்படுத்தப்பட்ட 200 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐசி மருத்துவமனை;</p><p>* ஸ்ரீபெரும்புதூரில் உள்ள 100 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐசி மருத்துவமனை;</p><p>* ஆந்திரப் பிரதேசம் மாநிலம் ராஜமகேந்திரவரத்தில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனை;</p><p>* குஜராத் மாநிலம் சுரேந்திரநகரில் உள்ள இஎஸ்ஐ மருந்தகம், கிளை அலுவலகம்;</p> <p>* ராஜஸ்தான் மாநிலம் கோட்டா உத்யோக் நகரில் உள்ள இஎஸ்ஐ மருந்தகம், கிளை அலுவலகம்;</p><p>* ராஜஸ்தான் மாநிலம் பவானி மண்டியில் உள்ள இஎஸ்ஐ மருந்தகம்.</p><p>சுமார் ரூ. 668 கோடி மதிப்பிலான இந்த மருத்துவ திட்டங்கள், நாடு முழுவதும் உள்ள ஏறத்தாழ 53 லட்சம் பயனாளிகளின் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்யும்.</p> <h2>கௌரவிப்பார்</h2><p>தொழிலாளர் நல துறைக்கான மத்திய இணைமந்திரி ஷோபா கரந்த்லாஜேவும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வார். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, தெலங்கானா மாநிலம் சனத்நகரில் உள்ள இஎஸ்ஐசி மருத்துவமனையின் புறநோயாளி பிரிவு கட்டடத்தின் வளர்ச்சிக்கு பங்களித்த கட்டுமான தொழிலாளர்களை டாக்டர் மாண்டவியா கௌரவிப்பார். மேலும், தொழிலாளர் நலனுக்கான அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையில், அவர் இஎஸ்ஐ பயனாளிகளுக்கு பண பலன்களையும் வழங்குவார்.</p><h2>மருத்துவ வசதி</h2><p>ஸ்ரீபெரும்புதூரில் 100 படுக்கைகள் கொண்ட <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88">இஎஸ்ஐசி மருத்துவமனை</a>, இந்தியாவின் முன்னணி உற்பத்தி, மின்னணு மையங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு அறை, அறுவை சிகிச்சை அரங்கம், தீவிர சிகிச்சைப் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, எக்ஸ்-ரே பிரிவு, ஆய்வக மருந்தகம் போன்ற வசதிகள் கிடைக்கப்பெறுவதால், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து 5.5 லட்சத்திற்கும் மேற்பட்ட காப்பீடு பெற்ற நபர்கள் மருத்துவ வசதிகளை பெறுவது எளிதாகும்.</p>]]></content:encoded></item><item><title>டிஜிட்டல் இந்தியா... வெறும் புளுகு மூட்டை! - மாணிக்கம் தாகூர் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/digital-india-just-a-bundle-of-rubbish-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/digital-india-just-a-bundle-of-rubbish-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">ac6555eb-d939-460b-ad34-65f37ca521a8</guid><pubDate>Sun, 12 Jul 2026 09:20:56 +0000</pubDate><atom:updated>2026-07-12T09:20:56.685Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore MP,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Tagore,தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி,tamilnadu congress</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/sycwlgab/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/sycwlgab/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>டிஜிட்டல் இந்தியா... வெறும் புளுகு மூட்டை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>மத்திய பா.ஜ.க அரசின் மவுனம் எதைக் காட்டுகிறது? 'டிஜிட்டல் இந்தியா' என மேடைக்கு மேடை முழங்கும் மத்திய அரசே, உங்கள் மவுனத்தின் நிழலில் இன்று கோடிக்கணக்கான டாலர் மதிப்புள்ள ஒரு மாபெரும் தேர்வு மோசடி மாபியா உருவாகியுள்ளது.</p><p>கல்வி முறையை டிஜிட்டல் ஆக்குவதற்குப் பதிலாக, இந்தத் தேர்வு மோசடித் தொழிற்சாலையைத் தான் நீங்கள் டிஜிட்டல் மயமாக்கி மாபெரும் சாம்ராக்ஷியமாக வளர்த்துள்ளீர்கள்!</p><h2>தரவுகள் பொய் சொல்லாது:</h2><p>- 2015-க்குப் பிந்தைய காலகட்டத்தில் தேர்வு மோசடிகளில் கேள்வித்தாள் கசிவு மட்டும் 70% ஆக விண்ணைத் தொட்டு நிற்கிறது.</p><p>- இதயமற்ற இந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">முறைகேடுகளாலும்</a>, தேர்வுகள் ரத்து மற்றும் மறுதேர்வு அறிவிப்புகளாலும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி, நாடு முழுவதும் பல அப்பாவி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளனர்! இது வெறும் பேப்பர் லீக் அல்ல, இளைஞர்களின் உயிரோடு விளையாடும் கொலைக் களம்!</p><p>- எல்லையப் பாதுகாக்க வேண்டிய ராணுவப் படைகளை இன்று கேள்வித்தாள்களைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்ல பயன்படுத்த வேண்டிய அவல நிலைக்கு இந்த ஆட்சியில் கல்வித் துறை தள்ளப்பட்டுள்ளது!</p><p>- 'குஜராத் மாடல்', 'டபுள் இன்ஜின்' என மார்தட்டும் குஜராத்தில் 2015-க்கு முன் பூஜ்யமாக இருந்த மோசடி வழக்குகள், இன்று 13 வழக்குகளாகப் பெருகியுள்ளன.</p><p>- தேசிய அளவில் வழக்குகள் 27 ஆக அதிகரித்துள்ளது.</p><p>- பி.ஜே.பி ஆளும் மாநிலங்களில் 60, கூட்டணிக் கட்சிகளின் மாநிலங்களில் 39 என மொத்தம் 100-க்கும் மேற்பட்ட மோசடிகள்!</p><h2>பதவி விலக வேண்டும்</h2><p>பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த கோச்சிங் சென்டர்களாலும், இந்த மோசடி நெக்ஸஸ்ஸாலும் கல்வித் துறை அதிகாரிகளும் முதலாளிகளும் மட்டுமே கோடிகளைக் குவிக்கிறார்கள்; மாணவர்களுக்கு மிஞ்சுவது மரணமும் ஏமாற்றமும் மட்டுமே!</p><p>நீங்கள் நடத்துவது அரசாங்கமா, இல்லை 'கேள்வித்தாள் ஆலோசனை மையமா'? </p><p>இதற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘எல்லோருக்கும் நம்மை பிடிக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது’ - நடிகை ரம்யா பாண்டியன் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-not-necessary-for-everyone-to-like-us-actress-ramya-pandian</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-not-necessary-for-everyone-to-like-us-actress-ramya-pandian#comments</comments><guid isPermaLink="false">2e315248-7912-47bf-9214-a7906168cda4</guid><pubDate>Sun, 12 Jul 2026 09:08:16 +0000</pubDate><atom:updated>2026-07-12T09:08:16.276Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ரம்யா பாண்டியன்,Ramya Pandian</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/hj4tfp4x/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/hj4tfp4x/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி.சரவணன் தயாரிப்பில், கணேஷ் விநாயகன் இயக்கத்தில் அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், காளிவெங்கட், வி.டி.வி.கணேஷ், கிருத்திகா உள்ளிட்டோர் நடித்துள்ள 'அருள்வான்' படம் வரும் 17-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், ‘அருள்வான்’ படக்குழுவினர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினர். </p> <p>அப்போது நடிகை ரம்யா பாண்டியனிடம், ‘உங்களைப் பற்றி வரும் டிரோல்களை எப்படி கையாள்கிறீர்கள்?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “டிரோல்கள் என்னை பெரிதாக பாதித்தது கிடையாது. கேலி செய்பவர்களின் ஆக்‌ஷன் எனது கட்டுப்பாட்டில் இல்லை. எனது ரியாக்‌ஷன்தான் என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது. எனவே, டிரோல் செய்பவர்களை நான் கண்டுகொள்ள மாட்டேன், தவிர்த்து விடுவேன். </p><p>எந்த ஒரு இயக்குநரும், ‘இந்த நடிகையை டிரோல் செய்துவிட்டார்கள், இவர் நமது கதைக்கு வேண்டாம்’ என்று நினைக்கவில்லை. எல்லோருக்கும் நம்மை பிடிக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. பிடித்தவர்கள் என்னை ஏற்றுக் கொள்கிறார்கள், பிடிக்காதவர்கள் அவர்களுக்கு தெரிந்த விதத்தில் டிரோல் செய்கிறார்கள். அது என்னை பாதிப்பதில்லை” என்று தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>தொடர்ந்து தொல்லை கொடுத்த தொழிலாளி.. வெளிநாட்டில் இருக்கும் கணவருக்கு மெசேஜ் அனுப்பி விட்டு பெண் எடுத்த விபரீத முடிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-takes-drastic-step-after-messaging-husband-abroad-about-a-worker-who-kept-harassing-her</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-takes-drastic-step-after-messaging-husband-abroad-about-a-worker-who-kept-harassing-her#comments</comments><guid isPermaLink="false">ae567f68-4bbd-4d0d-a688-87a21eaac8e3</guid><pubDate>Sun, 12 Jul 2026 08:54:52 +0000</pubDate><atom:updated>2026-07-12T08:54:52.217Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,police investigation,தற்கொலை,Suicide,Kulasekaram,குலசேகரம்,போலீசார் விசாரணை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/g4xfk35z/kanya.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/g4xfk35z/kanya.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>குலசேகரம், </p><p>குலசேகரம் அருகே வெளிநாட்டில் வசிக்கும் கணவருக்கு குறுந்தகவல் அனுப்பி விட்டு பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><h2>தகராறு செய்த தொழிலாளி</h2><p>குமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள திருநந்திக்கரை மூலைப்பாகம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (வயது 40). இவர் துபாயில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி அனிஷா (33). இந்த தம்பதிக்கு 1-ம் வகுப்பு படிக்கும் ஒரு பெண் குழந்தை உண்டு. பட்டதாரியான அனிஷா குலசேகரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.</p><p>இந்தநிலையில் மகேஷ் சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்து விட்டு குடும்பத்தினரிடம் உற்சாகமாக பொழுதை கழித்தார். பிறகு கடந்த 20 நாட்களுக்கு முன்பு அவர் மீண்டும் துபாய்க்கு சென்றார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் வீட்டில் இருந்த அனிஷாவிடம், ரப்பர் மரம் வெட்டும் தொழிலாளி ஒருவர் தகராறு செய்ததாக தெரிகிறது.</p><h2>நான் இனி வாழ விரும்பவில்லை</h2><p>இதனை தொடர்ந்து அனிஷா மனமுடைந்த நிலைக்கு சென்றார். நேற்று அதிகாலையில் செல்போன் மூலம் அனிஷா, வெளிநாட்டில் உள்ள கணவருக்கு மெசேஜ் ஒன்றை அனுப்பினார். அதில், நான் அவன் மேல் விருப்பப்பட்டு பழகியது கிடையாது. என்னால் இனி வாழ முடியாது. குழுவில் கட்ட வேண்டிய பணத்தை எனக்காக கட்டி விடுங்கள். </p><p>நான் இனி வாழ விரும்பவில்லை. என்னை அவன் வாழ விடமாட்டான். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். மகளை பார்த்துக் கொள்ளுங்கள் என உருக்கமாக அனுப்பியுள்ளார்.</p><p>இந்த குறுந்தகவலை சிறிது நேரம் கழித்து பார்த்த மகேஷ், அதிர்ச்சி அடைந்தார். உடனே தனது மனைவிக்கு செல்போனில் அழைத்துள்ளார். ஆனால் அவர் செல்போனை எடுக்கவில்லை. இதனை தொடர்ந்து தன்னுடைய தந்தையை தொடர்பு கொண்டு பதற்றத்துடன் நடந்த விவரத்தை கூறியுள்ளார்.</p><h2>விபரீத முடிவு</h2><p>இதையடுத்து மகேஷின் தந்தை, தன்னுடைய மற்றொரு மகனை அழைத்து கொண்டு அனிஷாவின் அறைக்கு சென்றுள்ளார். அங்கு கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை தட்டி பார்த்தபோது உள்ளே இருந்து எந்தவொரு சத்தமும் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் உடனடியாக குலசேகரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.</p><p>விரைந்து வந்த போலீசார் அறையின் கதவை உடைத்து பார்த்த போது, அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அனிஷா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். பின்னர் அனிஷா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.</p><p>மேலும் இதுகுறித்து மகேஷின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>பரபரப்பு தகவல்</h2><p>போலீசார் நடத்திய விசாரணையில், ரப்பர் மரம் வெட்டும் தொழிலாளி ஒருவர், தன்னுடன் தொடர்ந்து பழக வேண்டும் என கூறி அனிஷாவுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததால் அவர் மனவேதனையில் இருந்துள்ளார். இதனால் தன்னுடைய கணவருக்கு குறுந்தகவல் அனுப்பி விட்டு அனிஷா உயிரை மாய்த்துக் கொண்டது அம்பலமானது. அனிஷாவுக்கு தொந்தரவு கொடுத்த தொழிலாளிக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.</p><p>இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த தொழிலாளியை தேடி போலீசார் விரைந்தனர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். எனவே அவரை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>ஓடவில்லை.. ஒளியவில்லை.. பதுங்கவில்லை - விஜய்க்கு எ.வ.வேலு பதிலடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/didnt-run-didnt-hide-didnt-hide-ev-velus-reply-to-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/didnt-run-didnt-hide-didnt-hide-ev-velus-reply-to-vijay#comments</comments><guid isPermaLink="false">33436d62-693d-44c9-888b-4be8d024a812</guid><pubDate>Sun, 12 Jul 2026 08:31:30 +0000</pubDate><atom:updated>2026-07-12T08:31:30.483Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,திமுக,DMK,எ.வ.வேலு,Ev Velu,தமிழக அரசியல்,tn politics,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/tzyq73x3/CHENNAI-15.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/tzyq73x3/CHENNAI-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>லஞ்ச ஒழிப்புத்துறை</h2><p>தமிழகத்தில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் சாலைகளை மேம்படுத்த ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. எந்த இடத்திலும் பணிகளே நடைபெறாத நிலையில், முன்கூட்டியே தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு கோடிக்கணக்கில் தொகை விடுவிக்கப்பட்டு முறைகேடு நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையில் கடந்த 2022-ம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது.</p><h2>சிங்கப்பூர் பயணம்</h2><p>தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்து, தவெக அரசு அமைந்த பிறகு, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, துறை அதிகாரிகள், தனியார் ஒப்பந்ததாரர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். எ.வ.வேலு மற்றும் தொடர்பு உடையவர்களின் வீடுகளில் கடந்த ஜூன் 25-ம் தேதி சோதனை நடத்தினர். அடுத்த நாளான 26-ம் தேதி எ.வ.வேலு மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றார் அங்கு உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அனுமதிக்கப்பட்டது.</p><h2>விஜய் விமர்சனம்</h2><p>இதற்கிடையில், கரூரில் நேற்று முன்தினம் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் விஜய் பேசுகையில், ஒருவர் வெளிநாட்டில் போய் ஒழிந்துகொண்டார். வெளிநாடு என்றதும், ஸ்டாலின் சார் என்று நினைத்துவிட போகிறீர்கள். அவர் இல்லை. எனக்கு எப்போதுமே ஸ்டாலின் சார் மேல் தனி பாசம் உண்டு. அவர் கிடையாது. சிங்கப்பூருக்கு செக்கப்புக்கு போனாரே அவர் என்று எ.வ.வேலுவை தாக்கி விஜய் பேசினார்.</p><h2>எலிசபெத் மருத்துவமனை</h2><p>இந்த நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மருத்துவ சிகிச்சை முடித்துக்கொண்டு சிங்கப்பூரில் இருந்து இன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>சிங்கப்பூரில் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் 2016 முதல் இதயப் பிரச்சினைக்கு சிகிச்சை பெற்று வருகிறேன்; சிங்கப்பூர் செல்ல கடந்த மாதம் 15ம் தேதியே விசாவுக்கு விண்ணப்பித்தேன். 15ம் தேதி விண்ணப்பித்து விசா கிடைத்தவுடன் 17ம் தேதி டிக்கெட் எடுத்தேன். சிங்கப்பூர் புறப்பட்டுக் கொண்டிருந்த அன்றுதான் போலீசார் சோதனைக்கு வந்தார்கள். போலீசார் சோதனைக்கு வந்ததால் சிங்கப்பூர் பயண டிக்கெட்டை மாற்றி புக் செய்தேன். லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டதால் அன்று முழு ஒத்துழைப்பு கொடுத்தேன்.</p><p>ஒவ்வாமை, நரம்பு மற்றும் இதயம் சார்ந்த பிரச்சனைகள் எனக்கு உள்ளது; சிங்கப்பூரில் ஜூன் 29ம் தேதி நியூரோ பிரச்சனைக்காக சிகிச்சை பெற்றேன்; 30ம் தேதியன்று வயிறு தொடர்பான பிரச்சனைக்கு சிகிச்சை பெற்றேன்; ஜூலை 3-ம் தேதி இதய மருத்துவரிடம் சிகிச்சை பெற்றேன். நான் சிகிச்சை பெற்றதற்கான ஆவணங்கள் அனைத்தும் என்னிடம் உள்ளது; அவற்றை காண்பிக்க தயார்.</p><h2>ஓடுகிறேன். ஒளிகிறேன்</h2><p>ஜூலை 3ஆம் தேதி ஆஜராக சம்மன் கொடுக்கப்பட்டது. அதற்கு உரிய மரியாதை கொடுத்து பதில் கடிதம் கொடுத்தேன். ஜூலை 3இல் கொடுத்த சம்மனுக்கு 10 நாள்களுக்குப் பிறகு வருவதாக கடிதம் மூலம் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பதில் அளித்தேன். மீண்டும் 9ஆம் தேதி வரச்சொல்லி லஞ்ச ஒழிப்புத் துறை சம்மன் அளித்தது. விசாரணைக்கு ஒத்துழைப்பாக நான் கூறியும் ஓடுகிறேன். ஒளிகிறேன் எனக் கூறுகின்றனர்.</p><p>நான் ஓடவில்லை. ஒளியவில்லை. பதுங்கவில்லை; ஓடுவது, ஒளிவது, பதுங்குவது திமுகவினரின் பழக்கம் இல்லை. திமுக எங்களை அப்படி வளர்க்கவில்லை; நான் எந்த குற்றமும் செய்யவில்லை, வரும் 15-ம் தேதி விசாரணைக்கு ஆஜராவேன். சமூகவலைதளங்களில் எனது பயணம் பற்றி தங்களின் கற்பனைகளை அவிழ்த்துவிட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சிவகாசியில் தொழிலதிபர் வீட்டில் 75 சவரன் நகை கொள்ளை: 4 பேர் கைது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/75-sovereigns-worth-of-jewellery-stolen-from-businessmans-house-in-sivakasi-4-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/75-sovereigns-worth-of-jewellery-stolen-from-businessmans-house-in-sivakasi-4-arrested#comments</comments><guid isPermaLink="false">5baeec66-52e5-4e3d-acdb-f3ebb33f2c63</guid><pubDate>Sun, 12 Jul 2026 08:30:12 +0000</pubDate><atom:updated>2026-07-12T08:30:12.587Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Virudhunagar,விருதுநகர்,House,4 பேர் கைது,4 people arrested,வீடு,Sivakasi,சிவகாசி,நகை கொள்ளை,Jewelry robbery,தொழிலதிபர்,businessman</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/qa7000i1/Untitled-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நகை கொள்ளை, 4 பேர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/qa7000i1/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர், </p><p>விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதியில் தொழிலதிபர் வீட்டில் 75 சவரன் நகைகளை கொள்ளையடித்த வழக்கில், தூத்துக்குடியைச் சேர்ந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">4 பேர் கைது</a> செய்யப்பட்டுள்ளனர். </p><h2>தொழிலதிபர் வீட்டில் 75 சரவன் நகை கொள்ளை</h2><p>விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஐயப்பன்காலனி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரீஅரவிந்த்ராம் வீட்டில், முகமூடி அணிந்த நபர்கள் நுழைந்து 75 சவரன் நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து சிவகாசி டி.எஸ்.பி. அனில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. </p><h2>4 பேர் கைது</h2><p>டி.எஸ்.பி. அனில்குமார் தலைமையிலான தனிப்படையினர் மதுரை, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தங்களது விசாரணையை முடுக்கிவிட்டனர். இதில், முகமூடி கொள்ளையர்களுக்கு பின்னணியில் இருந்து உதவியாக செயல்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த பேச்சிமுத்து (வயது 21), சோமசுந்தரம்(24), ப்ரித்விராஜன்(28), மனோஜ்குமார்(24) ஆகிய 4 பேரை சிவகாசி போலீசார் அதிரடியாக கைது செய்து அழைத்து வந்தனர். </p><p>கைது செய்யப்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த 4 பேரிடமும் சிவகாசியில் உள்ள காவல் நிலையத்தில் வைத்து போலீசார் தனித்தனியாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 75 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட முக்கிய வழக்கில், தொடர்புடைய நபர்களை சிவகாசி டி.எஸ்.பி. அனில்குமார் தலைமையிலான தனிப்படையினர் 5 நாட்களுக்குள் விரைந்து கைது செய்ததற்கு உயர் போலீஸ் அதிகாரிகளும், சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்தனர். </p>]]></content:encoded></item><item><title>அதிமுகவின் வெற்றிக்கு பாமகவே முக்கிய காரணம் - அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pmk-is-the-main-reason-for-aiadmks-victory-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pmk-is-the-main-reason-for-aiadmks-victory-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">7c172b64-a661-48cf-aa51-1f8fdb1ed928</guid><pubDate>Sun, 12 Jul 2026 08:06:58 +0000</pubDate><atom:updated>2026-07-12T08:06:58.838Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK,அதிமுக</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/mizuhvxf/CHENNAI-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/mizuhvxf/CHENNAI-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டு அரசியலின் வழித்திசையை தீர்மானிக்கும் சக்தியாகவும், ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின்  உரிமைக்குரலாகவும் விளங்கும் பாட்டாளி மக்கள் கட்சி வரும் ஜூலை 16-ம் தேதி 37 ஆண்டுகளை நிறைவு செய்து  38-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த தருணத்தில் உலகெங்கும் வாழும் பாட்டாளி சொந்தங்களாகிய உங்கள் அனைவருக்கும் நமது நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் சார்பிலும், எனது சார்பிலும் உளமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>மருத்துவர் அய்யா ராமதாசின்  நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான அவர் வகுத்துக் கொடுத்தப் பாதையிலிருந்து கொஞ்சமும் விலகாமல் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். ஓர் அரசியல் இயக்கத்தின் வெற்றி ஆட்சியைப் பிடிப்பது மட்டும் தானா என்றால் இல்லை. அதிகாரத்திற்கு வராமலேயே அரசு இயந்திரத்தையும், அதிகார மையத்தையும் இயங்கச் செய்வது தான் ஓர் அரசியல் இயக்கத்தின் உண்மையான வெற்றி. அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சி தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.</p><p>அடித்தட்டு மக்களில் தொடங்கி அரசு ஊழியர்கள் வரை அனைவரும் தங்களின் சிக்கல்களை பாட்டாளி மக்கள் கட்சி பேசினால், அதற்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புவது இதற்கு சான்று ஆகும். இந்தியாவின் அரசியல் என்பது 16-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வணிகம் செய்ய வந்த காலத்தில் தொடங்குகிறது. அதற்கு வயது குறைந்தபட்சம் 500 ஆண்டுகள். சுதந்திர இந்தியாவின் ஜனநாயக அரசியல் 78 ஆண்டுகளைக் கடந்து தொடர்கிறது.</p><p>இந்த காலகட்டங்களில் நாடு முழுவதும் 100 கோடிக்கும் கூடுதலான மக்கள் பயனடையும் வகையில் மொத்தம் 6 இட ஒதுக்கீடுகளை வென்றெடுத்துக் கொடுத்த ஒரே இயக்கம் பாட்டாளி மக்கள் கட்சி தான். பாட்டாளிகளுக்கு இதைவிட வேறு பெருமை தேவையில்லை. பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரையிலான 37 ஆண்டுகளில் தமிழக மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளையும், உடமைகளையும் மீட்டெடுத்துக் கொடுத்த இயக்கம் பாட்டாளி மக்கள் கட்சி தான்.</p><p>கல்வி, வேலைவாய்ப்பு, சமூகநீதி, வேளாண்மை, நீர்ப்பாசனம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளில் பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்ட இயக்கங்களாலும், பணிகளாலும் தமிழ்நாட்டில் பயனடையாத குடும்பங்களே இருக்க முடியாது என்பதை நினைத்து நாம் அனைவரும் பெருமிதப்படலாம். தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் காலத்திற்கு ஏற்றவாறு நம்மை பாராட்டியிருக்கலாம்; விமர்சித்திருக்கலாம்; ஆனால், மக்களுக்காகவும், தமிழகத்திற்காகவும் பாட்டாளி மக்கள் கட்சி ஆற்றிய பணிகளை எந்தவொரு இயக்கத்தாலும் மறுக்க முடியாது.</p><p>தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகவும், உறுதியாகவும் பாட்டாளி மக்கள் கட்சி இன்றளவும் நிலைத்திருப்பதற்கு காரணம் நமது உழைப்பும், அர்ப்பணிப்பும் தான். 2026 சட்டசபை தேர்தலில் நாம் அங்கம் வகிக்கும் கூட்டணி தான் ஆட்சியைக் கைப்பற்றும் என்று உறுதியாக நம்பினோம். நான் பரப்புரைக்கு சென்ற இடங்களில் எல்லாம் கிடைத்த மக்களின் அமோக ஆதரவு நமது நம்பிக்கையை உறுதி செய்தது. ஆனால், எவருமே எதிர்பாராத அலை வீசியதால் தேர்தல் முடிவுகள் மாறின.</p><p>ஆனாலும் கூட நாம் மலை போல வலுவாக உள்ள பகுதிகளில் அந்த அலையால் எதுவும் செய்ய முடியவில்லை. 35-க்கும் மேற்பட்ட இடங்களில் நமது கூட்டணி கட்சி வெற்றி பெற நாம் தான் காரணமாக இருந்திருக்கிறோம். நாம் 4 இடங்களில் தான் வெற்றி பெற்றோம் என்றாலும் இன்றைய சூழலில் நாம் பெற்ற அந்த 4 இடங்கள் 40 இடங்களுக்கு சமமானது என்பதை பாட்டாளி சொந்தங்களாகிய நீங்கள் அறிவீர்கள்.</p><p>சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்த பிறகு நாம் ஓய்வெடுக்கவில்லை. நமது மக்கள் பணி முன்பை விட வேகமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சாதிவாரி சர்வே நடத்தப்பட வேண்டும் என்பது நமது 46 ஆண்டு கால கோரிக்கை ஆகும். கடந்த கால ஆட்சியாளர்கள் அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற முன்வராத நிலையில் இன்றைய ஆட்சியாளர்களிடம் அந்தக் கோரிக்கையை முன்வைத்து, தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே நடத்தப்படும் என்று கவர்னர் உரை மூலம் அறிவிக்கச் செய்திருக்கிறோம். இதை விட மகிழ்ச்சியும், மனநிறைவும் அளிக்கக் கூடிய நற்செய்தி நமக்கு இருக்க முடியுமா?.</p><p>நமது குரல் சட்டப்பேரவையில் ஓங்கி ஒலித்திருக்கிறது. அதன் எதிரொலி தமிழ்நாடு முழுவதும் கேட்கத் தொடங்கியுள்ளது. இதை விட வேறு என்ன பேறு வேண்டும்?. ஆட்சியில் இல்லாவிட்டாலும், மக்களுக்காக களத்தில் இறங்கி போராடுவதில் அன்றும், இன்றும் பாட்டாளி மக்கள் கட்சி தான் உண்மையான எதிர்க்கட்சியாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கும் நிலையை எட்ட வேண்டும் என்பதே மருத்துவர் ராமதாசின் கனவு; அது தான் நம் அனைவரின் நோக்கம். மருத்துவர் அய்யா ராமதாசின் கனவை நனவாக்கும் பயணத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் 38-ம் ஆண்டு புதிய தொடக்கமாக அமையும். இந்த ஆண்டின் அரசியலிலும், சமூகநீதியிலும் மேலும் பல சாதனைகளை படைக்கப் போகிறோம்.</p><p>பாட்டாளி மக்கள் கட்சியின் 38-ம் ஆண்டு தொடக்கவிழாவை தமிழ்நாடு மட்டுமின்றி, அண்டை மாநிலங்களிலும் உள்ள பாட்டாளி சொந்தங்கள் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். அனைத்துக் கிளைகளிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியேற்று விழாக்கள் நடத்தப்பட வேண்டும்; வாய்ப்புள்ள இடங்களில் பொதுக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அடுத்தடுத்து நடைபெறவிருக்கும் நமக்கு வெற்றியும், மகிழ்ச்சியும் அளிக்கும் நிகழ்வுகளில் உங்களை சந்திக்க காத்துக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் அம்பேத்கர் சிலை திறக்க எதிர்ப்பு... சேலத்தில் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/protest-against-opening-of-ambedkar-statue-sitting-cross-legged-uproar-in-salem</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/protest-against-opening-of-ambedkar-statue-sitting-cross-legged-uproar-in-salem#comments</comments><guid isPermaLink="false">b962b67b-2e48-4e09-8998-8616ad110dfa</guid><pubDate>Sun, 12 Jul 2026 07:50:15 +0000</pubDate><atom:updated>2026-07-12T07:50:15.157Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,சேலம்,Ambedkar statue,அம்பேத்கர் சிலை,அம்பேத்கர்,Ambedkar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/5a7zickl/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/5a7zickl/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><h2>அம்பேத்கர் சிலை</h2><p>சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே ஒதியத்தூர் ஊராட்சியில் உள்ள நான்கு ரோடு ரவுண்டானா பகுதியில் 2020-ம் ஆண்டு அம்பேத்கர் சிலை ஒரு தரப்பினரால் அமைக்கப்பட்டது. நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பதுபோல் அம்பேத்கர் சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்த சிலையை 2021-ம் ஆண்டுதிறக்க முற்பட்டபோது, மற்றொரு தரப்பினர் இந்த பகுதியில் சிலையை திறக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்ததால் பதற்றமான சூழல் நிலவியது.</p><p>அப்போது பணியில் இருந்த தாசில்தார் வெங்கடேசன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், அந்த சிலை மூடப்பட்டு எதுவாக இருந்தாலும் பேசி முடிவு செய்த பின்பு சிலையை திறக்க வேண்டும் என்றும் கூறினார்கள். இதையடுத்து கடந்த 5 ஆண்டுகளாக சிலை திறக்காமல் துணியால் கட்டப்பட்டிருந்தது.</p><h2>கோர்ட்டு அனுமதி</h2><p>இந்த நிலையில் நேற்று திடீரென்று சிலை திறக்கப்பட்டு இருந்தது. இதைபார்த்து அந்த பகுதியில் உள்ள ஒரு தரப்பினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் உடனடியாக சிலையை மூட வேண்டும் என்று ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இன்னொரு தரப்பினர் சிலை திறக்கப்பட்டு விட்டதால் இனிமேல் மூட மாட்டோம் என்று கூறியதால் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக கெங்கவல்லி போலீசார் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.</p><p>இதையடுத்து ஆத்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் இரு தரப்பினரையும் அழைத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அம்பேத்கர் சிலை அருகே உள்ள காமராஜர் மற்றும் ராஜீவ் காந்தி சிலை என 3 சிலைகளையும் தற்போது தற்காலிகமாக வருவாய்த்துறை உதவியுடன் தகரம் அடித்து மூட முடிவு செய்து உள்ளோம். எதுவாக இருந்தாலும் கோர்ட்டு அனுமதி பெற்ற பின்பு அம்பேத்கர் சிலையை திறக்க வேண்டும் என்றும், மேலும் தற்போது 2 சிலைகள் தற்காலிகமாக மூடப்படுகிறது என்றும் உதவி கலெக்டர் தமிழ் மணி முத்தரப்பு பேச்சுவார்த்தையில் கூறினார்.</p><h2>போலீசார் குவிப்பு</h2><p>இதனிடையே நேற்று இரவு 9 மணி அளவில் ஆத்தூர் உதவி கலெக்டர் தமிழ்மணி மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று 3 சிலைகளையும் தகரம் அடித்து மூடும் பணியை தொடங்கினர். அப்போது போலீசாருக்கும், அம்பேத்கர் சிலையை திறக்க வலியுறுத்தும் தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறை வாகனத்தின் மூலம் பொது மக்கள் கலைந்து செல்வதற்காக தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.</p><p>அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் பெண் போலீஸ் உள்பட 3 போலீசாருக்கும், ஒரு தரப்பை சேர்ந்த 3 பெண்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் கெங்கவல்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையொட்டி ஒதியத்தூர் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>‘வாட்டர்மெலன் ஸ்டார்&apos; திவாகர் மதுரையில் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/watermelon-star-divakar-arrested-in-madurai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/watermelon-star-divakar-arrested-in-madurai#comments</comments><guid isPermaLink="false">5dbd1964-9a32-4d23-9138-c0310395efa0</guid><pubDate>Sun, 12 Jul 2026 07:37:40 +0000</pubDate><atom:updated>2026-07-12T07:37:40.181Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,கைது,arrest,Watermelon,பிக்பாஸ் திவாகர்,Bigg Boss Diwakar,வாட்டர்மெலன்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/mx5dbrld/watermelan.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திவாகர் மதுரையில் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/mx5dbrld/watermelan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p>யூடியூப் சேனல் ஊழியரை ஒரு லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில் வாட்டர் மெலன் ஸ்டார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D">திவாகர்</a> மதுரையில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>வாட்டர்மெலன் ஸ்டார்</h2><p>மதுரையை சேர்ந்தவர் திவாகர். இவர் பிசியோதெரபிஸ்ட் படித்து முடித்தவர். இவர் இன்ஸ்டாகிராமில் 'வாட்டர்மெலன் ஸ்டார்' என்ற பெயரில் புகழ்பெற்றவர். கஜினி திரைப்படத்தில் நடிகர் சூர்யா, சஞ்சய் ராமசாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த படத்தில் வரும் பாடல் ஒன்றில் அவர் தனது கையில் 'தர்பூசணி' பழத்தை வைத்து கொண்டு தனக்கு சல்யூட் அடிப்போரை அங்கிருந்து செல்லும்படி கூறுவார்.</p><p>அந்த சீனை வேடிக்கையாக நடித்து பிரபலமானவர் தான் இந்த திவாகர். தமிழ் 'பிக்பாஸ் -9' சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். அதன்பிறகு யூடியூப் சேனல்களுக்கு பேட்டி, இன்ஸ்டாகிராமில் வேடிக்கையாக வீடியோ போன்றவற்றை பதிவிட்டு வருகிறார். மேலும் சில படங்களிலும், டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.</p><p>இந்நிலையில் 'வாட்டர்மெலன் ஸ்டார்' திவாகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டார். அதில், பல தரப்பினர் மீது குற்றம் சாட்டி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.</p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/pb6732hi/kllerer.jpg" /></figure><h2>கொலை மிரட்டல்</h2><p>இந்த வீடியோவை தொடர்ந்து குறிப்பிட்ட யூடியூப் சேனலை சேர்ந்த நபர் வீடியோவை டெலிட் செய்யும்படி திவாகரிடம் கூறியுள்ளார். அதற்கு திவாகர் அவரிடம் ரூ.1 லட்சம் பணம் கேட்டு, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த நபர், திவாகர் மீது சென்னை கீழ்பாக்கம் போலீசில் புகார் செய்தார். </p><h2>கைது</h2><p>இதையடுத்து போலீசார் கொலை மிரட்டல், பணம் கேட்டு மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் திவாகர் மீடு வழக்குப்பதிவு செய்தனர். திவாகரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் இன்று மதுரை சென்று திவாகரை கைது செய்துள்ளனர். யூடியூபர் ஒருவரை மிரட்டி ரூ.1 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆதியோகி வளாகத்தில் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/breast-cancer-screening-camp-for-women-at-isha-yoga-center</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/breast-cancer-screening-camp-for-women-at-isha-yoga-center#comments</comments><guid isPermaLink="false">b8ee30a5-4177-44de-9812-fa4bb11a4126</guid><pubDate>Sun, 12 Jul 2026 07:34:29 +0000</pubDate><atom:updated>2026-07-12T07:34:29.559Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஈஷா யோகா மையம்,Isha,மார்பக புற்றுநோய்,Adiyogi,ஆதியோகி,மருத்துவ பரிசோதனை முகாம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/40vkgo5h/Breast-cancer-camp2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஈஷா, கங்கா மருத்துவமனை சார்பில் இலவச மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/40vkgo5h/Breast-cancer-camp2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p>ஈஷா அவுட்ரீச் இயக்கம் மற்றும் கங்கா மருத்துவமனை இணைந்து நடத்திய கிராமப்புற மற்றும் மலைவாழ் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் <a href="https://www.dailythanthi.com/topic/மருத்துவ-பரிசோதனை-முகாம்">பரிசோதனை முகாம்</a>, ஈஷா ஆதியோகி வளாகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (12.07.2026) நடைபெற்றது. இம்முகாமில் ஈஷாவைச் சுற்றியுள்ள பழங்குடியின கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். </p><p>அவர்களுக்கு கங்கா மருத்துவமனையின் சார்பில் நவீன கருவிகள் மூலமாக மார்பகப் புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.</p><figure><img alt="ஈஷா, கங்கா மருத்துவமனை சார்பில் இலவச மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம்" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/7o3tpjbn/Breast-cancer-camp1.jpg" /><figcaption>மார்பக புற்றுநோய் கண்டறிதல் முகாம்</figcaption></figure><h2>இலவச பரிசோதனை</h2><p>இந்த முகாம் குறித்து கங்கா மருத்துவமனையின் மார்பகப் புற்றுநோய் அறுவைச்சிகிச்சை மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் மருத்துவர் ராஜா சண்முக கிருஷ்ணன் கூறிதாவது, “கங்கா மருத்துவமனை சார்பில் 2020-ஆம் ஆண்டு முதல் ப்ராஜக்ட் சக்தி திட்டத்தில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் <a href="https://www.dailythanthi.com/topic/மருத்துவ-பரிசோதனை-முகாம்">பரிசோதனை முகாம்</a> மேற்கொண்டு வருகிறோம். இந்த முகாம் எங்களது 150-ஆவது முகாம். இதுவரை சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு  இந்தப் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளோம். அதில் புற்றுநோய் கண்டறியப்பட்ட 81 மார்பகப் புற்றுநோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளித்துள்ளோம். </p><p>அந்த வகையில் அதிகளவிலான சேவைப்பணிகளை மேற்கொண்டு வரும் ஈஷா அறக்கட்டளையுடன்  இணைந்து எங்களின் 150-ஆவது முகாமை ஆதியோகி வளாகத்தில் ஏற்பாடு செய்தோம். இங்கு அனைத்து பரிசோதனைகளும் முழுவதும் இலவசமாக மேற்கொள்ளப்படடன. இத்துடன், பெண்களுக்கு தேவையான ஆலோசனைகளும் வழங்கியுள்ளோம்” என்றார்.</p><h2>இலவச சிகிச்சை</h2><p>ஈஷா அவுட்ரீட் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ம.சந்திரகாசா கூறியதாவது, “மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு மேற்கொள்வதில் கங்கா மருத்துவமனை மிகப்பெரிய பங்கு வகித்துள்ளது. அவர்கள் இதுவரை நடத்தியுள்ள இலவச <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D">மார்பகப் புற்றுநோய்</a> பரிசோதனை முகாம்களில், ஈஷா அவுட்ரீச் இயக்கம் 18 முகாம்களில் இணைந்து பணியாற்றி உள்ளது. இந்த 18 முகாம்களில் 873 பெண்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 7 பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளித்து, பூரண குணமடையும் வரை தங்கள் பங்களிப்பை கங்கா மருத்துவமனை அளித்துள்ளது. </p><p>பழங்குடியின பெண்கள் பெரும்பாலும் இதுபோன்ற மருத்துவப் பரிசோதனை முகாம்களுக்கு செல்ல மாட்டார்கள். இதுதொடர்பாக, நாம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகு அவர்கள் முகாம்களுக்கு வரத் தொடங்கியுள்ளனர். பழங்குடியின பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து கங்கா மருத்துவமனை 150-ஆவது மருத்துவ பரிசோதனை முகாமை நடத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுடன் இணைந்து செயல்படுவதில் பெருமைப்படுகிறோம்” என்றார்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-worker-dies-after-falling-into-well</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-worker-dies-after-falling-into-well#comments</comments><guid isPermaLink="false">38046e3c-aa7e-4768-9c6f-0b8d443ad281</guid><pubDate>Sun, 12 Jul 2026 07:34:07 +0000</pubDate><atom:updated>2026-07-12T07:34:07.658Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,dies,Worker,தொழிலாளி,உயிரிழப்பு,well,கிணறு,தவறி விழுந்து,Falls</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/rem6kskf/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தொழிலாளி உயிரிழப்பு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/rem6kskf/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி அருகே கீழ தட்டப்பாறை பகுதியில் உள்ள தோட்டத்துக் கிணற்றில் தவறி விழுந்து <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கூலித் தொழிலாளி உயிரிழந்தார்</a>.</p><h2>கரிமூட்டம் போடும் பணி</h2><p>தூத்துக்குடி அருகே கீழ தட்டப்பாறையைச் சேர்ந்த சுப்பையா(எ) மணி (வயது 45), கூலித் தொழிலாளி. கீழ தட்டப்பாறை கைலாசபுரம் பகுதியில் பெங்களூரைச் சேர்ந்த ராஜன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் சுப்பையா, சக்தி, அய்யனடைப்பைச் சேர்ந்த முனியசாமி ஆகிய 3 பேரும் கரிமூட்டம் போடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.</p><h2>கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி</h2><p>கரி தயாரிக்க எரியும் நெருப்பில் தண்ணீர் ஊற்றுவதற்காக தோட்டத்தில் உள்ள கிணற்றிலிருந்து சுப்பையா தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கிணற்றிற்குள் தவறி விழுந்தார். அவர் கிணற்றில் விழுந்ததை அடுத்து, சக தொழிலாளர்கள் அவரை மீட்க முயன்றும் பலனளிக்கவில்லை. </p><h2>உயிரிழப்பு</h2><p>தண்ணீரில் மூழ்கிய சுப்பையா கிணற்றிலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: நெல்லை, தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-nellai-tenkasi-the-day-after-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-nellai-tenkasi-the-day-after-tomorrow#comments</comments><guid isPermaLink="false">4305ed27-24ad-4c18-8e22-40e87c59b7f5</guid><pubDate>Sun, 12 Jul 2026 07:18:36 +0000</pubDate><atom:updated>2026-07-12T07:18:36.720Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,Tenkasi,monthly maintenance work,power outage,தென்காசி,மாதாந்திர பராமரிப்பு பணி,மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/b7vt9o9e/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/b7vt9o9e/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி AMRL துணை மின் நிலையம் மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள மங்கம்மாள் சாலை துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுநாள் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மின்தடை </a>செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>வள்ளியூர் கோட்டம்</h2><p>வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்டள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>நாங்குநேரி AMRL துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (14.7.2026, செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையத்தில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குறிப்பிட்டுள்ள நேரங்களில்  மின்விநியோகம் இருக்காது. </p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>நாங்குநேரி, ராஜக்கள்மங்களம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி, பெருமளஞ்சி கீழ் ஊர், பெருமளஞ்சி மேல் ஊர், ஆச்சியூர், வாகைகுளம், கோவனேரி, AMRL தொழிற்கூடம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  </p><h2>தென்காசி கோட்டம்</h2><p>தென்காசி கோட்ட செயற்பொறியாளர் ஸ்ரீ வனஜா வெளியிட்டள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>மங்கம்மாள் சாலை துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (14.7.2026, செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.</p><h2>காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை</h2><p>தென்காசி புதிய பேருந்து நிலையம், மங்கம்மாள் சாலை பகுதிகள், சக்தி நகர், காளிதாசன் நகர், ஹவுசிங் போர்டு காலனி மற்றும் கீழப்புலியூர், தென்காசி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>பழம்பெரும் பின்னணி பாடகி எஸ். ஜானகி மறைவு:  ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்; கண்ணீர் அஞ்சலி செலுத்த திரண்ட பொதுமக்கள்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/passing-of-veteran-playback-singer-s-janaki-condolences-from-the-president-and-prime-minister-public-gathers-to-pay-tearful-tributes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/passing-of-veteran-playback-singer-s-janaki-condolences-from-the-president-and-prime-minister-public-gathers-to-pay-tearful-tributes#comments</comments><guid isPermaLink="false">05a3698f-a867-4681-ac4a-00dc8c4f0136</guid><pubDate>Sun, 12 Jul 2026 07:13:54 +0000</pubDate><atom:updated>2026-07-12T07:13:54.817Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பொதுமக்கள்,Tribute,Public,singer S. Janaki,பாடகி எஸ். ஜானகி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/9q90eyg8/fpsjt.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/9q90eyg8/fpsjt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>மைசூரு</p><p>பழம்பெரும் பின்னணி பாடகி எஸ். ஜானகி மறைவை அடுத்து அவருடைய உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்த பொதுமக்கள் திரளாக சென்று வருகின்றனர்.</p><p>இந்திய சினிமாவின் பழம்பெரும் பின்னணி பாடகி <a href="https://www.dailythanthi.com/">எஸ். ஜானகி </a>வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.  அவருக்கு வயது 88.  ஜானகியம்மா, கான கோகிலா, தென்னிந்தியாவின் நைட்டிங்கேல், இசை அரசி என்று பல்வேறு பட்டங்களில் புகழப்படும் எஸ்.ஜானகி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.</p>  <h2>முதல் பயணம்</h2><p>1938-ம் ஆண்டு ஏப்ரல் 23-ந்தேதி ஆந்திர பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டம் பள்ளபட்லா கிராமத்தில் பிறந்த எஸ். ஜானகி, சிறுவயதில் இருந்தே இசையில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், நாதஸ்வர மேதை பைடிசாமி என்பவரிடம் ஓராண்டு காலம் முறையாக இசைப்பயிற்சி பெற்றவர். தனது மாமாவின் ஆலோசனையின்பேரில் சென்னைக்கு குடிபெயர்ந்த அவர், ஏ.வி.எம். ஸ்டூடியோவில் பின்னணி பாடகியாக தனது திரை பயணத்தை தொடங்கினார்.</p><p>1957-ம் ஆண்டு வெளியான 'விதியின் விளையாட்டு' என்ற திரைப்படத்தில் 'பெண் என் ஆசை பாழானது ஏனோ...' என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மறுநாளே தெலுங்கு படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.  அந்த வகையில் 'எம்.எல்.ஏ.' என்ற படத்தில் 'நீயாசா அடியார்...' என்ற பாடலை கண்டசாலாவுடன் இணைந்து பாடி தெலுங்கு சினிமாவிலும் அடியெடுத்து வைத்தார்.</p>  <h2>காலத்தால் அழியாத பாடல்கள்</h2><p>1957 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில், ஜானகி தனது தனித்துவமான குரலால் பல தலைமுறை இசையமைப்பாளர்கள் மற்றும் நடிகர்களின் பாடல்களுக்கு உயிரூட்டினார். எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் இவர் பாடிய பாடல்கள் இன்றும் காலத்தால் அழியாதவை. தனது தாய்மொழியான தெலுங்கு மட்டுமின்றி, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, ஒடிசா, பெங்காலி, மராத்தி, துளு, உருது, குஜராத்தி, பஞ்சாபி, கொங்கனி, அசாமி, சிந்து, ஆங்கிலம், ஜப்பான், அரபு, ஜெர்மன், சிங்களம் உள்ளிட்ட மொழிகளில் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.  பல பக்தி பாடல்களை தானே எழுதி, இசையமைத்து பாடியுள்ளார்.</p>  <h2>தேசிய விருதுகள்</h2><p>ஜானகியின் அசாத்திய குரல் திறமைக்காக எண்ணற்ற விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 4 முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார்.  இதன்படி 1976-ல் பதினாறு வயதினிலே படத்தின் செந்தூரப்பூவே, 1980-ல் மலையாள படத்தின் எட்டுமனூரம்பழத்தில், 1984-ல் தெலுங்கு படத்தின் வெண்ணெல்லோ கோதாரி அந்தம், 1992-ல் தேவர் மகன் படத்தில் இஞ்சி இடுப்பழகா ஆகிய பாடல்களுக்காக நான்கு தேசிய விருதுகளை வென்றார்.</p><p>தமிழகம், கேரளம், கர்நாடகா போன்ற பல்வேறு மாநில அரசுகளின் திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார்.  1992-ல் இலங்கையில் அவருக்கு "ஞான கான சரஸ்வதி" என்ற சிறப்பு பட்டம் வழங்கப்பட்டது.</p>  <h2>இசையமைப்பாளர்கள்</h2><p>எம்.எஸ். விஸ்வநாதன், கே.வி. மகாதேவன், இளையராஜா, கங்கை அமரன், தேவா, ஏ.ஆர். ரஹ்மான், வித்யாசாகர், எஸ்.ஏ. ராஜ்குமார், யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் எண்ணற்ற மறக்க முடியாத பாடல்களை பாடினார்.</p>  <h2>மகன் மறைவு</h2><p>2016-ம் ஆண்டுக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய எஸ்.ஜானகி மைசூருவில் தனது மகன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவரது ஒரே மகன் முரளி கிருஷ்ணா கடந்த ஜனவரி மாதம் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். மருமகள் உமா மற்றும் பேரப்பிள்ளைகளுடன் மைசூருவிலேயே ஜானகி வசித்து வந்தார்.</p><p>தனது ஒரே மகன் இறந்த துயரத்தில் இருந்த ஜானகியை உடல் நலக்குறைவும் பற்றிக்கொண்டது. கடந்த சில மாதங்களாகவே அவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். நேற்று அவரது உடல்நிலை மோசம் அடையவே உடனடியாக மைசூருவில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஜானகிக்கு சிகிச்சையின்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.  அவருடைய மறைவு இந்திய திரையிசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாக பார்க்கப்படுகிறது.</p><p>அவருடைய மறைவுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், திரைத்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p>  <h2>ஜனாதிபதி இரங்கல்</h2><p>ஜனாதிபதி திரவுபதி முர்மு, பாடகி எஸ்.ஜானகி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், </p><p>புகழ்பெற்ற பின்னணி பாடகி எஸ். ஜானகி அம்மா அவர்களின் மறைவால், இந்தியா ஒரு இசைச் சிகரத்தை இழந்துள்ளது. அவரது அபாரமான குரல்வளம் பல தலைமுறையினரை மெய்சிலிர்க்க வைத்தது. ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த அவரது சிறப்பான இசைப் பயணத்தில், இந்தி, ஒடியா, துளு, உருது, பஞ்சாபி மற்றும் பெங்காலி உள்ளிட்ட சுமார் 20 இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை அவர் பாடியுள்ளார்.</p><p>காலத்தால் அழியாத அவரது இசை என்றும் மதிப்புமிக்கதாக திகழும். அவரது குடும்பத்தினருக்கும், எண்ணற்ற ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>  <h2>துணை ஜனாதிபதி இரங்கல்</h2><p>துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், புகழ்பெற்ற பின்னணி பாடகி எஸ்.ஜானகியின் மறைவால் ஆழ்ந்த வருத்தம் அடைகிறேன். அவரது அசாதாரணக்குரல் இந்திய இசையை வளப்படுத்தி, தலைமுறைகள் கடந்து எண்ணற்ற இதயங்களை தொட்டது.</p><p>தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களால் 6 தசாப்தங்களுக்கும் மேலாக பார்வையாளர்களை கவர்ந்தார். அவர் பாரம்பரிய, பக்தி மற்றும் நாட்டுப்புற பாடல்களில் சமமான தேர்ச்சியை வெளிப்படுத்தினார்.</p><p>ஜானகியின் மறைவு இசை உலகத்துக்கும், தேசத்தின் கலைப்பாரம்பரியத்துக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது குடும்பத்தினர், அபிமானிகள் மற்றும் ஒட்டுமொத்த இசைத்துறைக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும். ஓம் சாந்தி.  இவ்வாறு தெரிவித்து உள்ளார்.</p> <h2>பிரதமர் இரங்கல்</h2><p>பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,</p><p>புகழ்பெற்ற பின்னணி பாடகி எஸ். ஜானகி அம்மாவின் மறைவு, இசை மற்றும் கலாசார உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். பல்வேறு மொழிகளில் அமைந்த அவரது பாடல்கள், தலைமுறை தலைமுறையாக பிரபலமாக இருந்தன. அவை, ஈடு இணையற்ற நளினத்துடனும் பன்முகத்தன்மையுடனும் ஒவ்வொரு உணர்விற்கும் குரல் கொடுத்தன. </p><p>அவரது மெல்லிசை, வரும் ஆண்டுகளிலும் கேட்போரைத்தொடர்ந்து வசீகரிக்கும்.  இந்த துயர நேரத்தில், அவரது குடும்பத்தினருக்கும், எண்ணற்ற ரசிகர்களுக்கும், ஒட்டுமொத்த இசைத்துறைக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி.  இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>  <h2>முதல்-அமைச்சர் விஜய் இரங்கல்</h2><p>முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,</p><p>இந்திய திரையிசை உலகில் தனது தனித்துவமான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்ற பழம்பெரும் பின்னணி பாடகி எஸ்.ஜானகி மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.</p><p>தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி, இசை உலகில் அழியாத முத்திரையை பதித்தவர். பலமுறை தேசிய திரைப்பட விருதுகள் உள்பட எண்ணற்ற உயரிய விருதுகளை பெற்ற அவர், தனது இனிமையான குரல், உணர்வுகளை வெளிப்படுத்தும் அபார திறன் மற்றும் இசைக்கான அர்ப்பணிப்பால் ரசிகர்களின் மனங்களில் என்றும் நிலைத்திருப்பார்.</p><p>அவரது மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகினர், இசைக்கலைஞர்கள் மற்றும் உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.  அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என தெரிவித்து உள்ளார்.</p>  <h2>முதல்-மந்திரிகள் இரங்கல்</h2><p>பாடகி எஸ்.ஜானகி மறைவுக்கு தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த்ரெட்டி வெளியிட்ட இரங்கல் பதிவில், 'ஜானகியின் மறைவு இந்திய திரையுலகுக்கு மட்டுமல்ல, கோடிக்கணக்கான இசை ரசிகர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று கூறியுள்ளார்.  ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, கேரள முதல்-மந்திரி வி.டி.சதீசன், கர்நாடக முதல்-மந்திரி சிவக்குமார் முன்னாள் முதல்-அமைச்சர் மற்றும் தி.மு.க. தலைவரான மு.க. ஸ்டாலின், முன்னாள் முதல்-அமைச்சர் மற்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.</p>  <h2>அரசியல் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள்</h2><p>இதேபோல, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.</p><p>முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், நடிகை சிம்ரன், இசையமைப்பாளர்கள் இளையராஜா, தேவா, அனிருத், இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தமிழ் குமரன் உள்ளிட்ட திரையுலகினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.</p>  <h2>இறுதிச்சடங்கு</h2><p>அவருடைய உடல் மகாராஜா கல்லூரி மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள், ரசிகர்கள் இன்று அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டு உள்ளது.  இதனை தொடர்ந்து, பொதுமக்கள்  ஆயிரக்கணக்கில் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.</p><p>அதன்பின்னர் பிற்பகல் 3 மணிக்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, கனியனகுந்தி என்ற இடத்தில் இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டு ஜானகியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>விடுமுறை தினத்தையொட்டி திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள்  குளித்து மகிழ்ந்தனர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-enjoyed-bathing-at-thirparappu-falls-on-the-occasion-of-the-holiday</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-enjoyed-bathing-at-thirparappu-falls-on-the-occasion-of-the-holiday#comments</comments><guid isPermaLink="false">440a4a8e-8dd3-4378-9b7a-77b159583ef6</guid><pubDate>Sun, 12 Jul 2026 07:11:03 +0000</pubDate><atom:updated>2026-07-12T07:11:03.490Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Holiday,Thirparappu Falls,திற்பரப்பு அருவி,விடுமுறை தினம்,Tourists flocked சுற்றுலா பயணிகள் குவிந்தனர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/bkvrv3jp/thirparappu.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/bkvrv3jp/thirparappu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி,</p><p>கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலா தளங்களில் மிக முக்கியமான ஒன்று <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF">திற்பரப்பு அருவி</a>யாகும். வார விடுமுறை தினத்தையொட்டி இன்று தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். குமரி மாவட்ட மலையோரப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.</p><h2>சுற்றுலா பயணிகள்</h2><p>இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அருவியில் கொட்டும் தண்ணீரில் நீண்ட நேரம் நீராடி மகிழ்வதுடன் அருகில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் அடித்தும் மகிழ்கின்றனர். மேலும் அருவியின் மேற்பகுதியில் உள்ள சுற்றுலா படகு துறையில் படகு சவாரி செய்தும் மகிழ்கின்றனர்.</p><h2>மாத்தூர் தொட்டிப்பாலம்</h2><p>திருவட்டார் அருகே உள்ள மாத்தூர் தொட்டிப்பாலத்திலும்  ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் பாலத்தில் நடந்து சென்று இயற்கை அழகை ரசித்தனர். பாலத்தில் இருந்து கீழே இறங்கி தொட்டிப்பாலத்தின் பிரமாண்டமான தூண்களை பார்த்து ரசித்தனர். மேலும் கீழ் பகுதியில் ஓடும் பரளியாற்றில் குளித்து மகிழ்ந்தனர். அத்துடன் குறைந்த விலையில் கிடைக்கும் அன்னாசிப்பழங்களை வாங்கி சாப்பிட்டனர். அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வந்ததால் மாத்தூர் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மொத்தத்தில் வார விடுமுறையான இன்று திற்பரப்பு, மாத்தூர் தொட்டிப்பாலம் பகுதிகள் 'களை' கட்டியது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் மீன் வரத்து குறைவால் விலை அதிகரிப்பு: மீனவர்கள் மகிழ்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fish-prices-increase-due-to-reduced-fish-supply-in-thoothukudi-fishermen-happy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fish-prices-increase-due-to-reduced-fish-supply-in-thoothukudi-fishermen-happy#comments</comments><guid isPermaLink="false">aa6d1354-a6a4-470a-88c1-639deb5271dc</guid><pubDate>Sun, 12 Jul 2026 07:10:20 +0000</pubDate><atom:updated>2026-07-12T07:10:20.332Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மீனவர்கள்,fishermen,Fish,Thoothukudi,தூத்துக்குடி,மீன்,சந்தை,market,happiness,மகிழ்ச்சி,Low,price increase,வரத்து குறைவு,Supply,விலை அதிகரிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/skbk38wl/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மீன் வரத்து குறைவால், விலை அதிகரிப்பு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/skbk38wl/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி, திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களின் வரத்து குறைவாக இருந்தபோதிலும், சந்தையில் மீன்களுக்கு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி</a> அடைந்துள்ளனர்.</p><h2>மீன்வரத்து குறைவு</h2><p>தூத்துக்குடி, திரேஸ்புரத்திலிருந்து கடலுக்குச் சென்ற நாட்டுப்படகுகள் கரை திரும்பின. கடல் பகுதியில் பலத்த காற்று வீசியதன் காரணமாக, வலைகளில் சிக்கிய மீன்களின் வரத்து வழக்கத்தைவிட குறைவாகவே காணப்பட்டது.</p><h2>விலை அதிகரிப்பு</h2><p>மீன் வரத்து குறைந்த சூழலில், திரேஸ்புரம் மீன் ஏலக்கூடத்தில் மீன்களை வாங்குவதற்காகப் பொதுமக்கள், வியாபாரிகள் அதிக அளவில் திரண்டனர். இதனால் ஏற்பட்ட கடுமையான போட்டி காரணமாக மீன்கள் அனைத்தும் கூடுதல் விலைக்கு விற்பனையாகின. </p><h2>சீலா மீன் ஒரு கிலோ ரூ.1,300க்கு விற்பனை</h2><p>இந்த நிலையில் தூத்துக்குடியில் மீன் சந்தையில் மீன்களின் விலை நிலவரம் பின்வருமாறு இருந்தது. சீலா மீன் ஒரு கிலோ ரூ.1,300, விளை மீன் கிலோ ரூ.650, நண்டு கிலோ ரூ.600, பாறை மீன் கிலோ ரூ.500, ஊழி மீன் ஒரு கிலோ ரூ.450 என்றும், சாளை மீன் ஒரு கூடை ரூ.3,000க்கும் விற்பனை செய்யப்பட்டன. </p><h2>மீனவர்கள் மகிழ்ச்சி</h2><p>வழக்கத்தைவிட கூடுதல் லாபம் கிடைத்ததால், தொழில் பாதிப்பிலிருந்து சற்று நிம்மதி ஏற்பட்டுள்ளது என மீனவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். </p>]]></content:encoded></item><item><title>திருவாரூரில் சட்டவிரோத மண் எடுப்பு: உடனடி நடவடிக்கை எடுக்க கோரி டிடிவி தினகரன் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/illegal-soil-extraction-in-thiruvarur-ttv-dhinakaran-urges-immediate-action</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/illegal-soil-extraction-in-thiruvarur-ttv-dhinakaran-urges-immediate-action#comments</comments><guid isPermaLink="false">bbf53265-6861-4486-8dd0-3ec0ddec610f</guid><pubDate>Sun, 12 Jul 2026 06:51:04 +0000</pubDate><atom:updated>2026-07-12T06:51:04.409Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thiruvarur,திருவாரூர்,TTV Dhinakaran,டிடிவி தினகரன்,soil,மண் கடத்தல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/qu82hmbp/ttv1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/qu82hmbp/ttv1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவாரூர்,</p><p>அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்திற்கு உட்பட்ட துளசேந்திரபுரம் கண்ணாரப்பேட்டை  வடக்கு ஏரியில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D">வண்டல் மண்</a> எடுப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதியை பயன்படுத்தி அளவுக்கு அதிகமான மண்ணை  எடுத்து சட்டவிரோதமாக தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p><h2>கடும் கண்டனம்</h2><p>விவசாய நிலங்களின் வளத்தை மேம்படுத்தும் வகையிலும், நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிக்கும் நோக்கத்திலும் வழங்கப்பட்ட வண்டல் மண் எடுப்புக்கான அனுமதியை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி வருவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை, அதனை தட்டிக் கேட்ட இளைஞர்களின் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.</p><h2>சட்டவிரோத செயல்</h2><p>அரசு வகுத்துள்ள விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு, அனுமதிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு அதிகமாக இயந்திரங்கள் மூலம்  இரவு, பகலாக  மண் தோண்டி எடுக்கப்பட்டு, தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுவது குறித்து பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததின் மூலம் இந்த சட்டவிரோத செயல்களுக்கு காவல்துறையும் சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகளும் உடந்தையாக இருக்கின்றரா? என்ற சந்தேகம் அப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.</p><h2>நடவடிக்கை</h2><p>எனவே, திருவாரூர் மாவட்டம் துளசேந்திரபுர கண்ணாரப்பேட்டை வடக்கு ஏரியில் நடைபெறும் மண் திருட்டை உடனடியாக தடுத்து நிறுத்திடும் நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, சட்டவிரோத மண் எடுப்பைத் தட்டிக் கேட்ட இளைஞர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தஞ்சையின் பின்வரும் பகுதிகளில் நாளை மறுநாள் மின் தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/power-outage-in-the-following-areas-of-thanjavur-the-day-after-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/power-outage-in-the-following-areas-of-thanjavur-the-day-after-tomorrow#comments</comments><guid isPermaLink="false">a08a3252-8186-418e-ac97-6400a30852eb</guid><pubDate>Sun, 12 Jul 2026 06:31:27 +0000</pubDate><atom:updated>2026-07-12T06:31:27.796Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>மின் தடை,Thanjavur,தஞ்சை,power cut</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/onjpihya/ep.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/onjpihya/ep.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர்,</p><p>தஞ்சை நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>தஞ்சை பழைய நீதிமன்ற சாலையில் அமைந்துள்ள நகர துணை மின் நிலையத்தில் துணை மின் நிலைய பராமரிப்பு மற்றும் மின்பாதை பராம ரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதையொட்டி, வருகிற 14-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதி களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.</p> <h2>மின்சாரம் நிறுத்தம்</h2><p>அதன்படி ஸ்டேடியம் மின்வழித்தடத்தில் மேம்பாலம், சிவாஜி நகர், சீதாந கர், சீனிவாசபுரம், ராஜன் ரோடு, தென்றல் நகர், கிரி ரோடு, காமராஜ் ரோடு, ஆபிரகாம் பண்டிதர் நகர் பகுதிகளிலும், திலகர் திடல் மின்வழித் தடத்தில் மேலவீதி, தெற்கு வீதி, பெரியகோவில், செக்கடி ரோடு. மேல அலங்கம், ரெயிலடி, சாந்தப்பிள்ளைகேட், மகர்நோன்பு சாவடி, வண்டிக் கார தெரு, தொல்காப்பியர் சதுக்கம், வி.பி. கோவில், சேவியர் நகர், சோழன் நகர் பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>இசையரசி  எஸ். ஜானகி அம்மாள் மறைவுக்கு அன்புமணி ராமதாஸ்  இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-ramadoss-condoles-the-passing-of-musician-s-janaki-ammal</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-ramadoss-condoles-the-passing-of-musician-s-janaki-ammal#comments</comments><guid isPermaLink="false">a4855615-5bab-4c67-b2a2-27ff09d40eda</guid><pubDate>Sun, 12 Jul 2026 06:16:25 +0000</pubDate><atom:updated>2026-07-12T06:16:25.744Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani Ramadoss,மறைவு,டாக்டர் அன்புமணி ராமதாஸ்,S. Janaki,பாடகி எஸ். ஜானகி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/2wo9b6wj/50.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/2wo9b6wj/50.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என்று போற்றப்பட்ட பாடகி  எஸ். ஜானகி அம்மையார் அவர்கள் முதுமை மற்றும்   உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து  அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.</p><p>தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும் ஐந்து தலைமுறை இசைக் கலைஞர்களுடன் இணைந்து பாடல்களை பாடிய அவர், இசை  ரசிகர்களின் செவிகள் வழியாக இதயங்களில் நுழைந்தவர். கே.வி. மகாதேவன்,  எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா ஆகியோரின் இசை அமைப்புகளிலும்  கே.ஜே.ஜேசுதாஸ்,  எஸ்.பி. பாலசுப்பிரமணியன் ஆகியோருடன் இணைந்தும், தனித்தும் அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் எரிமலைகளையும் இளக வைக்கக் கூடியவை. காந்தக் குரலுக்கு எடுத்துக்காட்டு என்றால் எஸ். ஜானகி அமமையார் தான்.</p><h2>அனைவருக்கும் பேரிழப்பு</h2><p>4 தேசிய விருதுகள், 6 தமிழக அரசு விருதுகள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றவர் அவர். இவை அனைத்துக்கும் மேலாக இசை ரசிகர்களின் அன்பையும், ஆரவாரத்தையும் தான்  பெரிய விருதாக மதித்தவர்.  அவரது மறைவு இசை ரசிகர்கள் அனைவருக்கும் பேரிழப்பு.</p><p>இசையரசி<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF"> எஸ்.ஜானகி</a> அம்மையார் அவர்களை இழந்து வாடும்  அவரது குடும்பத்தினர், நண்பர்கள், இசையுலகினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்,  அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இரும்பு தகடுகள் விழுந்து சிறுவன் உயிரிழப்பு: மேலாளர் உட்பட 3 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/boy-dies-after-falling-iron-plates-3-people-including-manager-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/boy-dies-after-falling-iron-plates-3-people-including-manager-arrested#comments</comments><guid isPermaLink="false">edd2c990-32d4-4633-a88f-ad8663474b4b</guid><pubDate>Sun, 12 Jul 2026 06:06:46 +0000</pubDate><atom:updated>2026-07-12T06:06:46.251Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,Chennai,சென்னை,கிரைம் செய்திகள்,சிறுவன்,இரும்பு தகடு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/zlf9k4lm/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/zlf9k4lm/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையை அடுத்த புழல் அருகே காவாங்கரை பகுதியில், பாதாளச் சாக்கடை பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், இன்று காலை அந்த பகுதியில் 3 வயது சிறுவன் ஷாருக் ஈஸ்வரன் தனது தந்தையுடன் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது ஜேசிபி மூலம் இரும்பு தகடு தூக்கப்பட ரோப் திடீரென அறுந்து நடந்து சென்று கொண்டிருந்த சிறுவன் மீது தகடு பலமாக விழுந்தது. </p><p>இதில் சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மகன் மீது இரும்பு தகடு விழுந்ததை பார்த்து தந்தை அதிர்ச்சி அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். </p><p>இந்த நிலையில், உயிரிழந்த 3 வயது சிறுவனின் தந்தை அளித்த புகாரில் திட்ட மேலாளர் முத்துகுமார், மேற்பார்வையாளர் வெங்கடேசன், ஜே.சி.பி.ஆபரேட்டர் ரமேஷ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரும்பு தகடுகள் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தேனியில் 2 வங்கி கிளைகளில் ரூ.14 கோடி நகைக்கடன் மோசடி: மேலாளர், ஊழியர்கள் பணிநீக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs14-crore-jewelry-loan-fraud-at-2-bank-branches-in-theni-manager-employees-fired</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs14-crore-jewelry-loan-fraud-at-2-bank-branches-in-theni-manager-employees-fired#comments</comments><guid isPermaLink="false">38eaff3f-3b29-41aa-9863-e5d087cd3aba</guid><pubDate>Sun, 12 Jul 2026 06:01:10 +0000</pubDate><atom:updated>2026-07-12T06:01:10.374Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Theni,தேனி,மோசடி,fraud,பணிநீக்கம்,employees,bank,வங்கி,நகைக்கடன்,Dismissal,ஊழியர்கள்,manager,மேலாளர்,jewelry loan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/nf9yl9ww/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நகைக்கடன் மோசடி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/nf9yl9ww/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி, </p><p>தேனி மாவட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் 2 கிளைகளில் நடந்துள்ள <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ரூ.14 கோடி நகைக்கடன் மோசடி</a> தொடர்பாக வங்கி கிளைகளின் மேலாளர், ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். </p><h2>2 வங்கி கிளைகளில் ரூ.14 கோடி நகைக்கடன் மோசடி</h2><p>தேனி மாவட்டம் ஓடைப்பட்டி மற்றும் கூழையனூர் ஆகிய பகுதிகளில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் 2 கிளைகளில் அதிகாரிகள் நடத்திய தணிக்கையில், ரூ.14 கோடி மதிப்பிலான நகைக்கடன் மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. </p><h2>வங்கி மேலாளர், ஊழியர்கள் பணிநீக்கம் </h2><p>வங்கி லாக்கரில் இருந்த பல உறைகளில் நகைகள் ஏதுமின்றி காலியாக இருந்ததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த 2 கிளைகளிலும் பணியாற்றிய வங்கி மேலாளர் மற்றும் சில ஊழியர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். </p><h2>பொதுமக்கள் யாரும் நேரடியாக பாதிக்கப்படவில்லை</h2><p>இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் பொதுமக்கள் யாரும் நேரடியாகப் பாதிக்கப்படவில்லை என்றும், வங்கியின் பணமே மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>விடுமுறை தினம்: குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-tourists-enjoy-an-enthusiastic-dip-at-courtallam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-tourists-enjoy-an-enthusiastic-dip-at-courtallam#comments</comments><guid isPermaLink="false">f6b76e79-3422-41e2-b1a6-9fa6354233a4</guid><pubDate>Sun, 12 Jul 2026 05:56:52 +0000</pubDate><atom:updated>2026-07-12T05:56:52.125Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tourists,சுற்றுலா பயணிகள்,குற்றாலம்,Courtallam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/6hcccs22/12.gif" width="753"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/6hcccs22/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,  </p><p>குற்றாலம் அருவிகளில் தற்போது தண்ணீர் சீராக விழுந்து வருகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளத்தில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வேன், பஸ், கார்களில் தங்களது குடும்பத்துடன் குற்றாலத்தில் குவிந்தனர்.</p><p>அவர்கள் அனைத்து அருவிகளிலும் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். குறிப்பாக ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் குளித்தனர்.</p><p>சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் பாதுகாப்பு பணியிலும் அதிக அளவில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். குற்றாலம் பகுதியில் கடைகள் நடத்தி வரும் வியாபாரிகளுக்கும் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றதால் அவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>வியட்நாமில் 10 தமிழர்கள் உயிரிழப்பு: லாவா மொபைல் நிறுவனத்தின் அலட்சியம் காரணமா? - வேல்முருகன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/10-tamils-killed-in-vietnam-lava-mobile-negligence-velmurugan-question</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/10-tamils-killed-in-vietnam-lava-mobile-negligence-velmurugan-question#comments</comments><guid isPermaLink="false">c069d88e-136c-4f66-a210-5ab1d7a4d0d3</guid><pubDate>Sun, 12 Jul 2026 05:52:53 +0000</pubDate><atom:updated>2026-07-12T05:52:53.221Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Velmurugan,justice,வியட்நாம்,Vietnam,கேள்வி,நிறுவனம்,தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/5ec64ehn/229.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/5ec64ehn/229.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D">வேல்முருகன்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>வியட்நாமில் சுற்றுலா பயணத்தின்போது நிகழ்ந்த படகு விபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த முருகபிரபு (44)  உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.</p><h2>பயணிகளின் பாதுகாப்பு</h2><p>வியட்நாட்டிற்கு சுற்றுலா அழைத்துச் சென்றதாகக் கூறப்படும், லாவா மொபைல் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து இந்திய வெளியுறவுத்துறை, தமிழ்நாடு அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இணைந்து முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும். பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதா?, வானிலை எச்சரிக்கைகள் வழங்கப்பட்டனவா?, உயிர்காக்கும் உபகரணங்கள் மற்றும் அவசரகால பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனவா?, பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டனரா? மேலும் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்? என்பது குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணையில் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதோ அல்லது அலட்சியம் நடந்ததோ உறுதியானால், லாவா மொபைல் நிறுவனம் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். </p><h2>வலியுறுத்தல்</h2><p>மேலும், உயிரிழந்த முருகபிரபு உள்ளிட்ட 10 பேர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும், அனைத்து அரசு உதவிகளும் விரைவாக வழங்கப்பட வேண்டும். பத்து தமிழரின் உயிரிழப்பு வெறும் விபத்து என்ற பெயரில் மறைக்கப்படக்கூடாது. உண்மையை வெளிக்கொண்டு வந்து, பொறுப்புக்கூற வேண்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு முழுமையான நீதி கிடைப்பதைத் தமிழக அரசும், மத்திய அரசும் உறுதி செய்ய வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>’கூட்டணி ஆட்சிக்கு தயார் என்று திமுக அறிவித்திருந்தால்...’ திருமாவளவன் பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-the-dmk-had-announced-its-readiness-for-a-coalition-government-thirumavalavans-interview</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-the-dmk-had-announced-its-readiness-for-a-coalition-government-thirumavalavans-interview#comments</comments><guid isPermaLink="false">d3f9d069-29ff-4cbc-a245-142c6bc152b1</guid><pubDate>Sun, 12 Jul 2026 05:31:18 +0000</pubDate><atom:updated>2026-07-12T05:31:18.955Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமாவளவன்,Thirumavalavan,விசிக,VCK</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/vupn624b/11.gif" width="753"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/vupn624b/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது;</p><p>”கூட்டணி ஆட்சிக்கு திமுக தயார் என்று அறிவித்திருந்தால், கூட்டணி கட்சிகளின் உணர்வுகளை மதித்து அவர்கள் விரும்பிய எண்ணிக்கையை ஓரளவிற்காவது திருப்திகரமான முறையிலேயே தந்திருந்தால், விரும்பிய தொகுதிகளை தந்திருந்தால் இவ்வளவு பெரிய பின்னடைவை சந்திருக்க வாய்ப்பு இல்லை.</p><p>அதைவிட இந்த கட்சிகள் அவ்வளவு வேகமாக வெளியேற வாய்ப்பு இல்லை. இந்த கோணத்தில் யாரும் சிந்திக்கல. துரோகம் பண்ணிட்டாங்க எனச் சொல்றாங்க., துரோகம் பண்ண என்ன இருக்கு. நாளைக்கு கூட நாம் அமைச்சர் பதவியில் இருந்து வெளியேற முடியும். பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால், அதை தக்கவைப்பதற்கான அணுகுமுறையைத்தானே எடுப்பார்கள். த.வெ.க.-வுக்கு ஆதரவு, அமைச்சர் பதவி. அப்படி என்றால் த.வெ.க. அரசை புகழ்ந்து பாடிக் கொண்டே இருப்போம். இப்படித்தானே சராசரி மனிதன் முடிவு எடுக்கனும். </p><p>அதைத் தாண்டி பாஜக-வுக்கு எதிராக எல்லா கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்ற பார்வையை திருமாவளவன் முன் வைக்கிறான் என்றால், இந்த பார்வையை நீங்கள் பாராட்ட வேண்டாமா? வரவேற்க வேண்டாமா? ஒரு அட்டாச்சுடு இல்லாமல் இவன் ஏன் இப்படி பேசுகிறான் என்றால், திமுக-வில் மீண்டும் ஒட்டிக்கொள்ள நினைக்கிறான் என்கிறார்கள். திமுகவுடன் ஒட்டிக்கொள்ள தேவை என்ன வந்தது?. அர்த்தம் இல்லாத விமர்சனம் அது.”</p><p>இவ்வாறு அவர் பேசினார். </p>]]></content:encoded></item><item><title>அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையில் மரங்களை அகற்றும் பணி தீவிரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tree-removal-work-in-progress-at-factory-where-ammonia-gas-leak-occurred</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tree-removal-work-in-progress-at-factory-where-ammonia-gas-leak-occurred#comments</comments><guid isPermaLink="false">5bf27ba1-2081-4dcd-add8-ac517acc4f96</guid><pubDate>Sun, 12 Jul 2026 05:02:10 +0000</pubDate><atom:updated>2026-07-12T05:02:10.948Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவள்ளூர்,Tiruvallur,தொழிற்சாலை,Ammonia gas leak,ammonia gas,அமோனியா வாயு கசிவு,அமோனியா வாயு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/c5csh109/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/c5csh109/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர்,</p><p>திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேரில் செயல்பட்டு வந்த கடல் உணவுப்பொருட்கள் ஏற்றுமதி தொழிற்சாலையில் கடந்த மாதம் 21-ந்தேதி அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதில் 18 வடமாநில பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலர் பாதிக்கப்பட்டனர்.</p><p>விபத்துக்கு பிறகு, தொழிற்சாலையில் இருந்த அமோனியா வாயு அகற்றும் பணி 4 நாட்கள் நடைபெற்றது. பின்னர், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் அலுவலகம், குடோன், தளவாட அறை, குடியிருப்பு உள்ளிட்ட 5 பகுதிகளுக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.</p><p> தொழிற்சாலையில் கழிவுநீர் அகற்றும் பணியுடன், வளாகத்தில் உள்ள சுமார் 20 மரங்களை வெட்டி அகற்றும் பணியும்  நடைபெற்றது. இதற்காக அங்கு மின்சார இணைப்பு துண்டிக்கப் பட்டது. இந்த பணிகள் இன்று மாலை அல்லது நாளைக்குள் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தொழிற்சாலையின் பிரதான நுழைவாயிலுக்கும் அதிகாரப்பூர்வமாக 'சீல்' வைக்கப்பட உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மெரினா கடலில் ஆட்டிசம் குறைபாடுடைய 39 குழந்தைகள் 2 கி.மீ. நீந்தி சாதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/39-children-with-autism-set-a-record-by-swimming-2-km-in-the-marina-sea</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/39-children-with-autism-set-a-record-by-swimming-2-km-in-the-marina-sea#comments</comments><guid isPermaLink="false">447bbbdb-c415-4690-8874-1e2def4e9c2e</guid><pubDate>Sun, 12 Jul 2026 04:54:16 +0000</pubDate><atom:updated>2026-07-12T04:54:16.668Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,children,குழந்தைகள்,Achievement,Swimming,நீச்சல்,மெரினா கடல்,Marina Sea,சாதனை,ஆட்டிசம் குறைபாடு,Autism Spectrum Disorder</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/t2yzsofp/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மெரினா கடலில் ஆட்டிசம் குறைபாடுடைய 39 குழந்தைகள் 2 கி.மீ. நீந்தி சாதனை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/t2yzsofp/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை மெரினா கடற்கரையில், ஆட்டிசம் குறைபாடுடைய 39 குழந்தைகள் ஒன்றிணைந்து 2 கிலோ மீட்டர் தூரத்தை வெற்றிகரமாக நீந்தி சாதனை படைத்தனர்.</p><h2>ஆட்டிசம் குறைபாடுடைய குழந்தைகளின் கடல் நீச்சல் நிகழ்வு</h2><p>சென்னை மெரினா கடற்கரையில், ஆட்டிசம் குறைபாடுடைய குழந்தைகளின் திறனையும், தன்னம்பிக்கையும், மன உறுதியையும் உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் தனியார் அறக்கட்டளை சார்பில் நேற்று கடல் நீச்சல் நிகழ்வு நடைபெற்றது. </p><h2>39 குழந்தைகள் 2 கி.மீ. நீந்தி சாதனை</h2><p>இந்த கடல் நீச்சல் நிகழ்வில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஆட்டிசம் குறைபாடுடைய 39 குழந்தைகள் ஒன்றிணைந்து 2 கிலோ மீட்டர் தூரத்தை வெற்றிகரமாக நீந்தி சாதனை </a>படைத்தனர். </p><h2>கடல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு</h2><p>மெரினா கலங்கரை விளக்கத்தில் இருந்து கண்ணகி சிலை வரை குழந்தைகள் நீந்தி சென்றனர். அப்போது, ஆட்டிசம் குறித்தும், கடல்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. </p>]]></content:encoded></item><item><title>வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு அண்ணாமலை ஆழ்ந்த இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vietnam-boat-accident-annamalai-expresses-deep-condolences-to-the-families-of-the-deceased</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vietnam-boat-accident-annamalai-expresses-deep-condolences-to-the-families-of-the-deceased#comments</comments><guid isPermaLink="false">93118757-ee12-438a-865f-cddf70e94e01</guid><pubDate>Sun, 12 Jul 2026 04:45:35 +0000</pubDate><atom:updated>2026-07-12T04:45:35.933Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Annamalai,அண்ணாமலை,இரங்கல்,வியட்நாம்,Vietnam,boat accident,படகு விபத்து</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/or3s6mz1/annamalai.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அண்ணாமலை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/or3s6mz1/annamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> “வி த லீடர்ஸ்” இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>வியட்நாம் நாட்டின் பூகுவோக் தீவுக்கு அருகே <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">படகு கவிழ்ந்து </a>ஏற்பட்ட விபத்தில், 10 தமிழர்கள் உட்பட 15 இந்திய சுற்றுலா பயணிகள் உயிரிழந்த செய்தி பேரதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.</p><h2>துரித நடவடிக்கை</h2><p>இந்த துயரமான விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும், தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்கவும், உயிரிழந்தோரின் உடல்களை விரைந்து தாயகம் கொண்டு வரவும், துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மத்திய அரசையும், தமிழக அரசையும் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை: கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி பிளஸ்-1 மாணவர் பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-plus-1-student-dies-after-being-caught-in-a-giant-wave-while-bathing-in-the-sea</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-plus-1-student-dies-after-being-caught-in-a-giant-wave-while-bathing-in-the-sea#comments</comments><guid isPermaLink="false">d676c635-c581-4dfa-ab59-0ebadbbe5534</guid><pubDate>Sun, 12 Jul 2026 04:32:36 +0000</pubDate><atom:updated>2026-07-12T04:32:36.258Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,கடல்,dies,Ennore,எண்ணூர்,Plus-1 student,giant wave,பிளஸ்-1 மாணவர் பலி,ராட்சத அலையில் சிக்கி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/dzpom0d4/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிளஸ்-1 மாணவர் பலி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/dzpom0d4/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை எண்ணூரில் கடலில் குளித்தபோது <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ராட்சத அலையில் சிக்கி பிளஸ்-1 மாணவர் பலி</a>யானார். அவரது நண்பருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. </p><h2>2 மாணவர்கள்</h2><p>சென்னை எண்ணூரை அடுத்த எர்ணாவூர் பெரிய காசி கோவில் குப்பம் முதல் தெருவைச் சேர்ந்த தங்கராஜின் மகன் கவுதம் (வயது 15). இவர், அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் ஜோதிஷ்(15). இவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். </p><h2>ராட்சத அலையில் சிக்கிய மாணவர்கள்</h2><p>நேற்று மாலை நண்பர்கள் இருவரும் எண்ணூர் பெரியக்குப்பம் கடற்கரை பகுதியில் கடலில் குளித்து விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி 2 பேரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். </p><h2>பிளஸ்-1 மாணவர் பலி</h2><p>இதைப் பார்த்த அங்கிருந்த மீனவர்கள், உடனடியாக கடலுக்குள் சென்று, அலையில் சிக்கித் தத்தளித்த 2 பேரையும் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது, கவுதம் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மற்றொரு மாணவர் ஜோதிசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு சோதனை: ரூ.22.33 லட்சம் பறிமுதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anti-corruption-raids-in-government-offices-rs-2233-lakh-seized</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anti-corruption-raids-in-government-offices-rs-2233-lakh-seized#comments</comments><guid isPermaLink="false">e4a30333-a1a8-407b-b2b2-4bdcfc4011e7</guid><pubDate>Sun, 12 Jul 2026 04:28:38 +0000</pubDate><atom:updated>2026-07-12T04:28:38.653Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>லஞ்ச ஒழிப்புத்துறை,Anti-Corruption Police,அரசு அலுவலகம்,Govt Offices,Anti-Corruption Department,ஊழல் தடுப்பு படை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/o697uwtp/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/o697uwtp/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அருண் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><p>தமிழகத்தில் ஜூலை 4ம் தேதி முதல், 1-0ம் தேதி வரை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. அதன்படி, கிருஷ்ணகிரி, திருவள்ளுர், தேனி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தஞ்சாவூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில், 11 அரசு அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதில் கணக்கில் வராத, 12.46 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், மாநில எல்லைகளில் நடத்திய சோதனையில், 9.87 லட்சம் ரூபாய் என, மொத்தம், 22.33 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.</p><p>மேலும், 7-ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில், கட்டட வரைபட அனுமதிக்கு, 15,000 ரூபாய் லஞ்சம் பெற்ற, இளநிலை உதவியாளர் பாலமுருகன் கைது செய்யப்பட்டார். அதே நாளில், திருப்பூர் மாவட்டத்தில் பட்டா மாற்றம் செய்ய, 5,000 ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் அப்துல் ரகுமான் கைது செய்யப்பட்டார். சென்னை வேளச்சேரி காவலர் அழகுராஜா இரு சக்கர வாகனத்தின் உரிமத்தை திருப்பி தர, 1,000 ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில், 9-ம் தேதி கைது செய்யப்பட்டார்.</p><p>அதே நாளில், சிவகங்கை மாவட்டத்தில், திருமணம் செய்து வைக்க, திருப்புவனம் போலீஸ் எஸ்.ஐ., 3,000 ரூபாய் லஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டார். மேலும், அதே மாவட்டத்தில், பட்டா பெயர் மாற்ற 3,000 ரூபாய் லஞ்சம் பெற்ற, கிராம உதவியாளர் கணேசன் கைது செய்யப்பட்டார்.</p><p>கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பட்டா பெயர் மாற்றம் செய்ய, 2,500 ரூபாய் லஞ்சம் பெற்ற தாலுகா அலுவலக உதவியாளர் ஆரோன், 10-ம் தேதி கைது செய்யப்பட்டார். அதே நாளில் தென்காசி மாவட்டத்தில், பட்டா பெயர் மாற்றம் செய்ய நில அளவையர் சங்கர், 10,000 ரூபாய் லஞ்சம் பெற்றபோது சிக்கினார்.</p><p>மேலும், லஞ்சம் பெற்ற தாசில்தார் ஆதிபகவான், ஓட்டுனர் கந்தசாமி ஆகியோருக்கு, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 1,000 ரூபாய் அபராதம் விதித்து, விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தனுஷ்கோடி தெற்கு கடற்கரையில் கல் சுவர் அமைக்கும் பணி தீவிரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/work-on-constructing-a-stone-wall-along-the-southern-coast-of-dhanushkodi-is-proceeding-rapidly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/work-on-constructing-a-stone-wall-along-the-southern-coast-of-dhanushkodi-is-proceeding-rapidly#comments</comments><guid isPermaLink="false">51d72520-e415-415a-9ed4-5895354e83ff</guid><pubDate>Sun, 12 Jul 2026 04:25:49 +0000</pubDate><atom:updated>2026-07-12T04:25:49.667Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>கடற்கரை,beach,தனுஷ்கோடி,Dhanushkodi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/nd8p20rz/8.gif" width="753"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/nd8p20rz/8.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமேசுவரம்,  </p><p>கடல் சீற்றத்தால் சாலை சேதம் அடைவதை தடுக்கும் வகையில் தனுஷ்கோடி தெற்கு கடற்கரையில் கல்சுவர் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.</p><h2>தனுஷ்கோடி</h2><p>ராமேசுவரம் அருகே புயலால் அழிந்து போன தனுஷ்கோடி கடல் பகுதி உள்ளது. தனுஷ்கோடி வரையிலும் மத்திய அரசின் சார்பில் தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் புதிதாக சாலை அமைக்கப்பட்ட பின்னர் கடந்த 9 ஆண்டுகளில் ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. முகுந்தராயசத்திரம் கடற்கரையில் இருந்து 10 கிலோமீட்டர் தூரம் அரிச்சல் முனை வரையிலும் அமைக்கப்பட்டுள்ள சாலையின் பாதுகாப்பு கருதியும், கடல் சீற்றம் நீரோட்ட வேகத்தால் சாலை சேதமாவதை தடுக்கும் வகையிலும் சாலையின் இருபுறங்களிலும் கடற்கரை பகுதியில் பாறாங்கற்களை கொண்டு தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது.</p><p>தனுஷ்கோடி கடல் பகுதியில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கடல் சீற்றம் மற் றும் நீரோட்ட வேகத்தால் தெற்கு கடற்கரை பகுதியில் பல இடங்களில் தடுப்பு சுவர் பெயர்ந்து கடலில் இழுத்து செல்லப்பட்டது. இதனிடையே தனுஷ்கோடி கம்பிப்பாடுக்கும், அரிச்சல் முனைக்கும் இடைப்பட்ட தெற்கு கடற்கரை பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலையின் பாதுகாப்பு கருதி கூடுதலாக தடுப்பு சுவர்களை கட்டி, கடற்கரையை பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.</p><p>இதற்காக அருப்புக்கோட்டை பகுதியில் இருந்து கனரக லாரிகள் மூலம் பாறாங்கற்கள் தனுஷ்கோடி பகுதிக்கு கொண்டுவரப்பட்டு அரிச்சல் முனை அருகே தெற்கு கடற்கரை பகுதியில் கொட்டப்பட்டுள்ளன.</p><h2>கல் சுவர்</h2><p>இவை பொக்லைன் எந்திரம் மூலம் வரிசையாக அடுக்கி, கற்கள் சரி வதை தடுக்கும் வகையில் இரும்பு கம்பியால் கட்டி பாக்ஸ் போன்று தடுப்பு சுவர் கட்டப்பட்டு வருகிறது. இன்னும் சில மாதங்களில் இந்த தடுப்பு சுவர் கட்டும் பணி முழுமையாக முடிவடையும் என எதிர்பார்க்கப் படுகிறது.</p><p>அரிச்சல் முனை சாலை சுற்றி பாக்ஸ் வடிவில் தடுப்பு சுவர் கட்டி முடிக்கப்பட்டுள்ளதால் அங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் இந்த தடுப்பு சுவரில் நின்று கடல் மற்றும் கடற்கரை அழகை பார்த்து ரசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>மதுபானங்களுக்கு ரூ.10 கூடுதலாக செஸ் வரி வசூலிக்க பரிசீலனை: ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/consideration-to-collect-additional-cess-of-rs-10-on-alcoholic-beverages-tasmac-administration-informs-the-high-court</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/consideration-to-collect-additional-cess-of-rs-10-on-alcoholic-beverages-tasmac-administration-informs-the-high-court#comments</comments><guid isPermaLink="false">ac27baac-e5ba-494c-9dc2-c070dae759a4</guid><pubDate>Sun, 12 Jul 2026 04:21:00 +0000</pubDate><atom:updated>2026-07-12T04:21:00.829Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஐகோர்ட்டு,டாஸ்மாக்,Tasmac,Chennai High Court,மதுபானம்,Liquor,மதுபான கடை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/baxr45pc/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/baxr45pc/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுற்றுச்சூழல் மற்றும் வன விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கும் விதமாக காலி மதுபான பாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டு வருகிறது. விற்பனை செய்யும் போது பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலித்து, காலி பாட்டிலை திருப்பித்தரும்போது அந்த பணத்தை திருப்பிக் கொடுக்கும் திட்டத்தை ஐகோர்ட்டு உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் நிர்வாகம் அமல்படுத்தி வருகிறது.</p><p>இந்நிலையில், இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் காலிமது பாட்டில்களை திரும்ப வாங்கும் திட்டத்தை மாற்றியமைக்க உள்ளதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.</p><p>அதில் கூறியிருப்பதாவது, பாட்டிலுக்கு ரூ. 10 கூடுதலாக வசூலிப்பதற்கு பதிலாக அந்த தொகையை மதுபான விற்பனை விலையுடன் சேர்த்து விற்க திட்டமிடப்பட் டுள்ளது. அதன்படி, காலி மது பாட்டில்களை சேகரித்து திரும்பப் பெறுவது. கொண்டு செல்வது. மறு சுழற்சி செய் வது என அனைத்து பொறுப்புகளையும் சம்பந்தப்பட்ட மதுபான உற்பத்தி நிறுவனங்கள் வசமே ஒப்படைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, உரிய சட்ட திருத்தங்கள் மேற்கொள்ள மதுவிலக்குத் துறை ஆணையருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.</p><p>மதுபானங்களின் அதிக பட்ச விற்பனை விலையுடன் கூடுதலாக ரூ.10-ஐ செஸ் வரியாக விதிக்க அரசுக்கு வணிக வரித்துறை ஆணையர் கருத்துரு அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக மதிப்பு கூட்டுவரியின் சட்ட விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ள அரசு பரிசீலித்து வருகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதையடுத்து நீதிபதிகள், வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்கு தள்ளிவைத்து. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>ஞாயிறு விடுமுறை: காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த அசைவ பிரியர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sunday-holiday-non-vegetarian-enthusiasts-flocked-to-kasimedu-to-buy-fish</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sunday-holiday-non-vegetarian-enthusiasts-flocked-to-kasimedu-to-buy-fish#comments</comments><guid isPermaLink="false">9ab0bf1b-1e86-4201-9577-ba60e6d2feb8</guid><pubDate>Sun, 12 Jul 2026 04:05:42 +0000</pubDate><atom:updated>2026-07-12T04:05:42.017Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>காசிமேடு,Kasimedu Fish Market,மீன் சந்தை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/bg5syo57/7.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/bg5syo57/7.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காசிமேடு மீன்பிடி சந்தையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் திருவிழா போன்று கூட்டம் அலை மோதுவது வழக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காசிமேடு மீன் பிடித்துறைமுகம் சந்தை மக்கள் கூட்டத்தால் களைகட்டியது. சந்தைக்கு மீன்களின் வரத்தும் அதிகரித்துள்ளது.</p><p>வஞ்சிரம், சங்கரா, நண்டு, இறால் உள்ளிட்ட மீன் வகைகள் அதிகளவில் விற்பனையானதால், சந்தையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. மீன் பிரியர்கள், தங்களுக்கு தேவையான மீன்களை போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச்சென்றனர். </p>]]></content:encoded></item><item><title>இறந்தவர்கள் ஆன்மாவை திருப்தி செய்கிறோம் என பொருட்களை ஆற்றில் வீசுவதா? - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் அதிருப்தி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/should-we-throw-things-into-the-river-to-appease-the-spirits-of-the-dead-madurai-high-court-judges-unhappy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/should-we-throw-things-into-the-river-to-appease-the-spirits-of-the-dead-madurai-high-court-judges-unhappy#comments</comments><guid isPermaLink="false">d6a195a6-771c-4e47-9e74-a22e43e403c9</guid><pubDate>Sun, 12 Jul 2026 03:43:05 +0000</pubDate><atom:updated>2026-07-12T03:43:05.184Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தாமிரபரணி ஆறு,மதுரை,ஐகோர்ட்டு,Madurai High Court,river,ஐகோர்ட்டு நீதிபதிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/gb377qj2/227.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மதுரை ஐகோர்ட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/gb377qj2/227.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p>இறந்தவர்கள் ஆன்மாவை திருப்தி செய்கிறோம் என பொருட்களை ஆற்றில் வீசுவதா? எனக்கூறி அதிருப்தி தெரிவித்த மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள். பல்வேறு உத்தரவுகளை பிறப்பிக்க இருப்பதாகவும் அதிரடியாக அறிவித்தனர்.</p><p>நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சிவானுபாண்டியன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா விக்கிரமசிங்கபுரம் பகுதியில் உள்ள ஆனந்த விலாஸ் மண்டபத்தில் இருந்து எங்களை வெளியேறுமாறு நீர்வளத்துறை அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.</p><p>இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-</p><p>இந்த வழக்கு விசாரணையின்போது. பாபநாசம் முதல் தாமிரபரணி ஆற்றின் படித்துறைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கான சடங்குகளை செய்வதற்காக கூடுகிறார்கள் என்று தாமிரபரணி வடிநில கோட்ட உதவி செயற்பொறியாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.</p><h2>மக்களுக்கு விழிப்புணர்வு</h2><p>இந்த சடங்குகளின்போது. ஆடைகள், துண்டுகள், செருப்புகள், இறந்தவர்களின் பொருட்களை ஆற்றில் வீசும் வழக்கம் உள்ளது. தாமிரபரணியில் டன் கணக்கில் வீசப்பட்ட ஆடைகள் அகற்றப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆறு 2 வகையான ஆமைகளின் வாழ்விடமாக உள்ளது. இவற்றின் சராசரி ஆயுட்காலம் நூறு ஆண்டுகளுக்கு குறையாது. ஆனால், ஆமைகள் ஆற்றில் வீசப்பட்ட ஆடைகளில் சிக்கி இறக்கின்றன. புகைப்படங்களின் சட்டங்களைக்கூட ஆற்றில் வீசுவதால் கண்ணாடி உடைந்து நீர்வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.</p><h2>தாமிரபரணி</h2><p>இதுசம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாசுபடுவதற்கு அனுமதிக்கக்கூடாது. மதத்தின் பெயரால்கூட நீர்நிலையை மாசுபடுத்த யாருக்கும் உரிமை இல்லை என்பதை சட்டம் உறுதிப்படுத்துகிறது. நீர்நிலையை அழித்து வருவதால், நாங்கள் இதில் தலையிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இறந்தவர்களின் ஆன்மாக்களை திருப்திப்படுத்துகிறோம் என பொருட்களை ஆற்றில் வீசுவதா? இந்த பழக்கத்தில் இருந்து மக்களை விடுவிக்க வேண்டும்.</p><p>சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமலும், மற்றவர்களின் உரிமைகளை மீறாமலும் ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் தங்களுக்கு பயனளிக்கும் செயல்களை செய்யலாம். ஆனால் இறந்தவர்களுக்கு சடங்குகளை செய்வதற்காக கோடிக்கணக்கான மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வற்றாத ஜீவநதியாக திகழும் தாமிரபரணி ஆறு மாசுபடுவதற்கு அனுமதிக்கக்கூடாது. </p><p>இந்த வழக்கை வருகிற 16-ந்தேதிக்கு ஒத்திவைக்கிறோம். அன்றையதினம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பிப்போம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>சுற்றுலாத்துறை சார்பில், இன்று ஏற்காட்டில் சிக்கன் பிரியாணி திருவிழா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chicken-biryani-festival-in-yercaud-today-on-behalf-of-the-tourism-department</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chicken-biryani-festival-in-yercaud-today-on-behalf-of-the-tourism-department#comments</comments><guid isPermaLink="false">5128a4ca-e49d-48a0-81aa-e24486b8833e</guid><pubDate>Sun, 12 Jul 2026 03:37:22 +0000</pubDate><atom:updated>2026-07-12T03:37:22.349Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவிழா,ஏற்காடு,Yercaud,சுற்றுலாத்துறை,Tourism Department,Chicken Biryani,சிக்கன் பிரியாணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/yxhdbd7g/briyani.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/yxhdbd7g/briyani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம், </p><p>சுற்றுலாத்துறை சார்பில் ஏற்காட்டில் இன்று சிக்கன் பிரியாணி திருவிழா நடக்கிறது. ரூ.99-க்கு பிரியாணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஒகேனக்கல், கொல்லிமலை, கன்னியாகுமரி, வண்டலூர் உள்பட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு வாரவிடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஏற்கனவே சுற்றுலாத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஓட்டல்களிலும், அமுதம் உணவகங்களிலும் சுற்றுலா பயணிகளுக்கு சைவம் மற்றும் அசைவ உணவுகள் தயாரித்து வழங்கப்படுகின்றன.</p><h2>பிரியாணி திருவிழா</h2><p>இந்நிலையில், <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">சுற்றுலா வளர்ச்சி கழகம்</a> சார்பில் புதிய முயற்சியாக கடந்த 5-ந் தேதி சுற்றுலா தலங்களில் செயல்படும் தமிழ்நாடு ஓட்டல்கள், அமுதம் உணவகங்கள், படகு இல்லங்கள் என 21 இடங்களில் குறைந்த விலைக்கு அதாவது ரூ.99-க்கு சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப் பட்டது. இந்த திட்டத்திற்கு பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து சுற்றுலா தலங்களிலும் ரூ.99-க்கு சிக்கன் பிரியாணி (பார்சல்) வழங்கும் திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><h2>மலிவு விலை சிக்கன் பிரியாணி</h2><p>அந்த வகையில் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் உள்ள படகு இல்லம் முன்பு ரூ.99-க்கு சிக்கன் பிரியாணி திருவிழா (பார்சல் மட்டும்) நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, மதியம் 12.30 முதல் ரூ.99-க்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப்படும். முதலில் வரும் 100 பேருக்கு மட்டும் பிரியாணி வழங்கப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுற்றுலா பயணிகளுக்கு மலிவு விலையில் தரமான சிக்கன் பிரியாணி கிடைக்கும் வகையில் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் ஏற்காட்டிற்கு இன்று வரும் சுற்றுலா பயணிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மருத்துவ கல்லூரியில் ‘சீட்’ வாங்கி தருவதாக ரூ.5.8 லட்சம் மோசடி: வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-cheating-rs-58-lakhs-by-promising-to-buy-a-seat-in-a-medical-college</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-cheating-rs-58-lakhs-by-promising-to-buy-a-seat-in-a-medical-college#comments</comments><guid isPermaLink="false">ad93c3bf-eda7-400b-b0fa-6b567b883962</guid><pubDate>Sun, 12 Jul 2026 03:27:30 +0000</pubDate><atom:updated>2026-07-12T03:27:30.712Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Youth arrested,வாலிபர் கைது,money laundering,பணமோசடி,medical college,மருத்துவ கல்லூரி,சீட்,seat</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/4c05u4g9/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பண மோசடி, வாலிபர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/4c05u4g9/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னையில் ஒரு பெண்ணின் மகனுக்கு மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ரூ.5.8 லட்சம் மோசடி</a> செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>மருத்துவ கல்லூரி சீட்டுக்கு ரூ.5.8 லட்சம்</h2><p>சென்னை பெரவள்ளூர் பேப்பர் மில்ஸ் சாலையைச் சேர்ந்தவர் சுகன்யா லட்சுமி (வயது 37). இவர், நண்பர் மூலம் அறிமுகமான சென்னையை அடுத்த கரையான்சாவடியைச் சேர்ந்த சக்தி(27) என்பவரிடம், தனது மகனுக்கு தனியார் கல்லூரியில் மருத்துவ படிப்புக்கான 'சீட்' வாங்கித் தருவதற்காக ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் கொடுத்துள்ளார். </p><p>ஆனால், பணத்தை வாங்கிய சக்தி, சொன்னபடி மருத்துவ கல்லூரியில் 'சீட்' வாங்கி தரவில்லை. மேலும் சுகன்யா லட்சுமியிடம் வாங்கிய பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. </p><h2>பண மோசடி, வாலிபர் கைது</h2><p>இந்த பண மோசடி குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி சுகன்யா லட்சுமி, திரு.வி.க. நகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மருத்துவ கல்லூரியில் 'சீட்' வாங்கி தருவதாக சக்தி மோசடி செய்தது உறுதியானது. இதையடுத்து சக்தியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>நயினார் நாகேந்திரனுக்கு ரூ.25 ஆயிரம் கோடி பரிசு: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் பேச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nayinar-nagendran-to-receive-rs-25000-crore-reward-tamil-nadu-farmers-association-presidents-speech</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nayinar-nagendran-to-receive-rs-25000-crore-reward-tamil-nadu-farmers-association-presidents-speech#comments</comments><guid isPermaLink="false">051884f1-3613-4a05-8050-305700b85b28</guid><pubDate>Sun, 12 Jul 2026 03:21:54 +0000</pubDate><atom:updated>2026-07-12T03:21:54.029Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Farmers,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,விவசாயிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/14zyb53a/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/14zyb53a/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- </p><p>கரூர் மாவட்டத்தில் இனாம் ஒழிப்பு சட்டத்தின் கீழ், 3,085 ஏக்கர் நிலங்களுக்கு பத்திரப்பதிவு தடை விதித்திருப்பதை நீக்கி அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதற்கு எதிராக ரமேஷ் என்பவர் உண்மைகளை மறைத்து, இனாம் நிலங்களை கோவில் நிலம் என்று தெரிவித்ததோடு, ரூ.25 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துகள் என கற்பனையான மதிப்பை குறிப்பிட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு இந்த நிலங்களை தமிழ்நாடு அரசு தாரை வார்த்து இருப்பதாக தவறாக ஒரு பதிவு செய்துள்ளார்.</p><p>அதன் உண்மைத்தன்மை குறித்து ஆராயாமல், பா. ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதை வழிமொழிந்து அறிக்கை வெளியிட்டிருப்பது தமிழ்நாட்டில் இனாம் நில பிரச்சினையில் பாதிக்கப்பட்ட 30 லட்சம் மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே அவரின் தவறான அறிக்கையை உடனடி யாக திரும்பப் பெற வேண்டும்.</p><p>இனாம் நில விவசாயிகள் பொதுமக்களின் நில உரிமைக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். அப்படி இனாம் நிலங்களை கோவில் நிலம் என்று நிரூபித்தால் நயினார் நாகேந்திரனுக்கு ரூ.25 ஆயிரம் கோடி பரிசு வழங்க தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது அவருடன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் சண்முகசுந்தரம், திருப்பூர் மாவட்ட தலைவர் ரமேஷ், பல்லடம் ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், நடராஜ், பல்லடம் நகர செயலாளர் கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மறுநாள் மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-thoothukudi-the-day-after-tomorrow-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-thoothukudi-the-day-after-tomorrow-2#comments</comments><guid isPermaLink="false">22fbf019-0515-4a4c-944f-f5393e86e8fd</guid><pubDate>Sun, 12 Jul 2026 02:52:39 +0000</pubDate><atom:updated>2026-07-12T02:52:39.992Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,monthly maintenance work,power outage,மாதாந்திர பராமரிப்பு பணி,மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/40kht5f9/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/40kht5f9/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி சிப்காட் துணை மின்நிலையத்தில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் நடைபெற உள்ளதால் நாளை மறுநாள் (14.7.2026, செவ்வாய்க்கிழமை) மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை</h2><p>இது தொடர்பாக தூத்துக்குடி நகர் மின் விநியோகப் பிரிவு செயற்பொறியாளர் சின்னத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (14.7.2026, செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். </p><p>அதன்படி மடத்தூர், மடத்தூர் மெயின் ரோடு, முருகேசநகர், கதிர்வேல்நகர், தேவகிநகர், சிப்காட் வளாகம், திரவியரத்தின நகர், அசோக் நகர், ஆசிரியர் காலனி, ராஜீவ் நகர், சின்னமணிநகர், 3வதுமைல், புதுக்குடி, டைமண்ட்காலனி, EB காலனி, ஏழுமலையான் நகர், மில்லர்புரம், ஹவுசிங் போர்டு பகுதிகள், அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு குடியிருப்புகள், ராஜகோபால் நகர், பத்தினாதபுரம், </p><p>சங்கர் காலனி, FCI குடோன் பகுதிகள், நிகிலேசன் நகர், சோரிஸ்புரம், மதுரை பைபாஸ் ரோடு, ஆசீர்வாத நகர், சில்வர்புரம், சுப்பிரமணியபுரம், கங்கா பரமேஸ்வரி காலனி, லாசர் நகர், ராஜரத்தின நகர், பாலையாபுரம், வி.எம்.எஸ். நகர், முத்தம்மாள் காலனி, நேதாஜி நகர், லூசியா காலனி, மகிழ்ச்சி புரம், ஜோதி நகர், பால்பாண்டி நகர், முத்துநகர், கந்தன் காலனி, காமராஜ் நகர், NGO காலனி, அன்னை தெரசா நகர், </p><p>பர்மா காலனி, TMB காலனி, அண்ணாநகர் 2வது நகர் மற்றும் 3வது நகர், கோக்கூர், சின்னக்கண்ணுபுரம், பாரதி நகர், புதூர்பாண்டியபுரம் மெயின் ரோடு, கிருபை நகர், அகில இந்திய வானொலி நிலையம், ஹரிராம்நகர், கணேஷ்நகர், புஷ்பாநகர், ஸ்டெர்லைட் குடியிருப்புகள், கலெக்டர் அலுவலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>விடுமுறை தினம்: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-tourists-flock-to-kanyakumari-11</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-tourists-flock-to-kanyakumari-11#comments</comments><guid isPermaLink="false">d2033642-c24d-435a-ac7b-8ff9f3748c87</guid><pubDate>Sun, 12 Jul 2026 02:48:37 +0000</pubDate><atom:updated>2026-07-12T02:48:37.677Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,Tourists,சுற்றுலா பயணிகள்,Kanyakumari</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/r6gcr0ce/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/r6gcr0ce/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி, </p><p>சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள்.</p><p>இந்தநிலையில் இன்று ஞாயிறு விடுமுறையையொட்டி காலையில் இருந்தே கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை, சன்ரைஸ் பாயின்ட் போன்ற பகுதிகளில் நள்ளிரவு முதல் காத்திருந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர்.</p><p>அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். படகுத்துறையில் இருந்து சுற்றுலா பயணிகள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்த்து ரசித்து வருகின்றனர். காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள தமிழன்னை பூங்கா, சன்செட் பாயிண்ட், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.</p><p>கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>வைகை அணை நீர்மட்டம் 34 அடியாக உயர்வு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம் நீங்கியது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vaigai-dam-water-level-rises-to-34-feet-danger-of-water-shortage-eliminated</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vaigai-dam-water-level-rises-to-34-feet-danger-of-water-shortage-eliminated#comments</comments><guid isPermaLink="false">4bc0efa3-c2c0-40d2-8ff6-5e124a9768a2</guid><pubDate>Sun, 12 Jul 2026 02:42:43 +0000</pubDate><atom:updated>2026-07-12T02:42:43.273Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vaigai Dam,வைகை அணை,குடிநீர் தட்டுப்பாடு,water shortage</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/mwbex6j9/CHENNAI-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/mwbex6j9/CHENNAI-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>வைகை அணை</h2><p>தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக விளங்குகிறது. இந்த நிலையில் ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. </p><p>போதிய மழை இல்லாததால் கடந்த மாதம் வைகை அணையின் நீர்மட்டம் 20 அடியாக சரிந்தது. இதனால் வைகை அணையை நம்பியுள்ள பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதற்கிடையே முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஓரளவு மழை பெய்தது. இதனால் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி வீதம் வைகை அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. </p><h2>நீர்மட்டம் உயர்வு</h2><p>இதன்மூலம் வைகை அணையின் நீர்மட்டம் மெல்ல, மெல்ல உயரத்தொடங்கியது. முழுமையாக மழை பெய்யாத நிலையிலும் முல்லைப்பெரியாறு அணையின் தயவால் வைகை அணை, தனது அபாய கட்டத்தில் இருந்து மீண்டுள்ளது. இன்றைய நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 34 அடியாக உயர்ந்து காணப்படுகிறது. அணையில் தற்போது இருப்பில் உள்ள தண்ணீரின் மூலம் 2 மாதங்களுக்கு அனைத்து பகுதிகளுக்கும் தடையின்றி குடிநீர் வழங்க முடியும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.</p><p>மேலும் அவர்கள் கூறும்போது, "வைகை அணையின் நீர்மட்டம் 34 அடியை எட்டியுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் நீங்கியது. இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு தண்ணீர் திறப்பதற்கு வாய்ப்பே இல்லை. வரும் நாட்களில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து அணைக்கான நீர்வரத்து கணிசமாக அதிகரிக்கும் பட்சத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது” என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சோற்றுக்குள் பாத்தி கட்டி பார்த்திருக்கிறோம்:  ஆற்றுக்குள் குளத்தை  வெட்டி பார்த்திருக்கிறீர்களா?- இந்த கொடுமை நடந்தது தமிழ்நாட்டில் தான்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/have-you-ever-seen-a-pond-dug-right-inside-a-river-this-atrocity-took-place-in-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/have-you-ever-seen-a-pond-dug-right-inside-a-river-this-atrocity-took-place-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">bf654a53-5c1b-42e2-acf1-5e51e8dc4376</guid><pubDate>Sun, 12 Jul 2026 02:29:47 +0000</pubDate><atom:updated>2026-07-12T02:29:47.210Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,river,Kancheepuram,காஞ்சீபுரம்,குளம்,125 நாள் வேலை திட்டம்,125 days work,வேகவதி ஆறு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/zgqtqafh/puthi.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆற்றுக்குள் குளம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/zgqtqafh/puthi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>"வேலைக்காரன்" படத்தில் நடிகர் ரஜினிகாந்த்,  "தோட்டத்தில பாத்தி கட்டி பாத்திருக்கேன்.. பாத்திருக்கேன்.. சோற்றுக்குள்ள பாத்திய கட்டுற பட்டணம் பட்டணமே.." என்று ஒரு பாடல் பாடியிருப்பார். </p><p>அதுபோல, ஆற்றுக்குள் குளத்தை வெட்டிய கதை ஒன்று தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது. அதுவும் தலைநகர் சென்னை அருகே உள்ள <a href="https://www.dailythanthi.com/topic/காஞ்சீபுரம்">காஞ்சீபுரம்</a> மாவட்டத்தில்தான் அரங்கேறியிருக்கிறது.</p><p>காஞ்சீபுரம் அருகே வேகவதி ஆற்றுக்குள் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஏற்கனவே குளம் வெட்டப்பட்டு சேதமடைந்துள்ள நிலையில், தற்போது அதே இடத்தில் மீண்டும் குளம் வெட்டும் பணி நடந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.</p><h2>ஆற்றுக்குள் குளம் வெட்டுவதால் சர்ச்சை</h2><p>அதாவது, காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட முத்தியால்பேட்டை ஊராட்சியில், வேகவதி ஆற்றில் தற்போது குளம் வெட்டும் பணி நடந்து வருகிறது. ஆற்றுக்குள்ளேயே குளத்தை வெட்டுவது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. </p><p>கடந்த 2022-ம் ஆண்டு இதே  ஆற்றுப்பகுதியில் ரூ.9 லட்சத்து 65 ஆயிரம் செலவில் குளம் ஒன்று வெட்டப்பட்டது. ஆனால்,  ஆற்றில் இயல்பான நீரோட்டத்தின்போது அந்த குளம் பெருமளவில் சேதமடைந்தது.</p><h2>அரசு நிதி வீண்</h2><p>இந்த நிலையில், அந்த இடத்தின் அருகிலேயே மீண்டும் 125 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை பயன்படுத்தி, புதிய குளம் வெட்டும் பணி தொடங்கியிருக்கிறது. இது அப்பகுதி மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆற்றில் மழைக்காலத்தில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடி வரும் என்பது தெரிந்தும், அதே இடத்தில் மீண்டும் அரசு நிதியை செலவழித்து குளம் அமைப்பது ஏன் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். </p><p>இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- </p><p>விதி மீறல் இருந்தால் நடவடிக்கை </p><p>வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் பகுதியில் மீண்டும் மீண்டும் குளம் வெட்டுவது மக்களின் வரிப் பணத்தை வீணடிக்கும் செயலாகும். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பல இடங்களில் 125 நாள் திட்ட பணிகள் நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. </p><p>குளம் வெட்டும் திட்டம் உண்மையான பயனாளிகளுக்காக இல்லாமல், நிதியை செலவிட்டதாக கணக்கு காட்டும் திட்டமா என்ற சந்தேகம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, அனுமதி வழங்கிய அதிகாரிகள்,  தொழில்நுட்பத்தை ஆய்வு செய்த பொறுப்பாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். </p><p>இவ்வாறு அவர் கூறினார். </p><p>வட்டார வளர்ச்சி அலுவலர் கூறும்போது, "குளம் வெட்டப்பட்டுள்ள இடத்தை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட பொறியாளர்களுடன் ஆலோசித்து, விதிமீறல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>உயர்கல்வி சேர்க்கையில் கோவை அசத்தல்; தொடர்ந்து 2-வது ஆண்டாக மாநிலத்தில் முதலிடம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-excels-in-higher-education-admissions-tops-the-state-for-the-second-consecutive-year</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-excels-in-higher-education-admissions-tops-the-state-for-the-second-consecutive-year#comments</comments><guid isPermaLink="false">5f6b1135-c3d1-450b-97b9-31371b7813d9</guid><pubDate>Sun, 12 Jul 2026 02:05:33 +0000</pubDate><atom:updated>2026-07-12T02:05:33.030Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,Higher Education,Admissions,உயர்கல்வி சேர்க்கை,தொடர்ந்து முதலிடம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/np7rfoep/clg-students.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/np7rfoep/clg-students.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் தொடர்ந்து 2-வது ஆண்டாக கோவை முதலிடம் பிடித்து உள்ளது.</p><p>தமிழக அளவில் அரசு பள்ளிகளில் பிளஸ்-2 முடித்து உயர் கல்வியில் சேரும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கையில் கோவை முன்னிலையில் உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த பிளஸ்-2 பொதுத்தேர்வை 11 ஆயிரத்து 251 பேர் எழுதினர். இதில் 10 ஆயிரத்து 307 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 210 பேர் தவிர்த்து மீதம் உள்ள மாணவ-மாணவிகள்<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88"> உயர்கல்வியில் </a>சேர விண்ணப்பித்து உள்ளனர். தேர்ச்சி பெறாத மாணவ-மாணவிகள் 944 பேரில் அடுத்த கட்ட படிப்பிற்காக 288 பேர் விண்ணப்பித்து உள்ளனர். 656 பேர் விண்ணப்பிக்காமல் உள்ளனர்.</p><p>மாநில அளவில் முதலிடம்</p><p>அதன்படி கோவையில் அரசு பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகளில் 87 சதவீதம் பேர் உயர்கல்வியில் சேர்ந்து உள்ளனர். அத்துடன் மாநில அளவில் தொடர்ந்து 2-வது ஆண்டாக கோவை முதலிடம் பிடித்து உள்ளது. கடந்த ஆண்டு 95.45 சதவீத மாணவ-மாணவிகள் உயர் கல்வியில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன் உயர்கல்வியில் சேராத மாணவ-மாணவிகளை கண்டறிந்து அவர்களை உயர்கல்வியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item></channel></rss>