<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 13 Jul 2026 04:38:26 +0000</lastBuildDate><item><title>மு.க.ஸ்டாலினுக்கு எப்போது கோபம் வருகிறதோ? அப்போது தவெக ஆட்சி இருக்காது: ராஜேந்திர பாலாஜி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/when-will-mk-stalin-get-angry-then-there-will-be-no-tvk-government-rajendra-balaji</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/when-will-mk-stalin-get-angry-then-there-will-be-no-tvk-government-rajendra-balaji#comments</comments><guid isPermaLink="false">4527da4c-5780-4841-942c-7a3c46442c7e</guid><pubDate>Mon, 13 Jul 2026 04:25:19 +0000</pubDate><atom:updated>2026-07-13T04:25:19.249Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,மு.க.ஸ்டாலின்,M.K.Stalin,ராஜேந்திர பாலாஜி,Rajendra Balaji,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/g05u22gc/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/g05u22gc/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சிவகாசி,</p><p>சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-</p><p>தி.மு.க.வை எதிர்த்து அரசியல் செய்தவர்கள் அ.தி.மு.க.வினர். தற்போது ஆட்சியில் உள்ள கட்சி நேற்று முளைத்த காளான். இதை அ.தி.மு.க.வினர் ஊதி தள்ளிவிடுவார்கள். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. நிர்வாகிகளும், கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கடுமையாக தேர்தல் பணியாற்றினார்கள். ஆனால் இந்த தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர் த.வெ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.</p><p>த.வெ.க.வுக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறது என்றால் அந்த கட்சி தமிழகத்தில் 150 இடங்களில் வெற்றி பெற்று இருக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு முழு வெற்றி கிடைக்கவில்லை. இந்த வெற்றி நிலையான வெற்றி கிடையாது. த.வெ.க.வினர் ஆசைவார்த்தை கூறி மாற்று கட்சி தொண்டர்களையும், நிர்வாகிகளையும் அழைக்கிறார்கள். இதற்கு ஆசைப்பட்டு சிலர் இங்கிருந்து சென்றுவிட்டார்கள். அவர்கள் சென்றதால் அ.தி.மு.க. அழிந்து விடுமா?. அ.தி.மு.க.வில் இருந்து வெளியேறியவர்கள் விரைவில் தாய் கழகமான அ.தி.மு.க.வில் இணைவார்கள்.</p><p>முதல்-அமைச்சர் பதவியில் உள்ள விஜய், முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை கன்னியகுறைவாக பேசக்கூடாது. மு.க.ஸ்டாலினுக்கு எப்போது கோபம் வருகிறதோ? அப்போது தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி இருக்காது. அவருக்கு கோபம் வரணும். வரும்.. அதுவரை உங்கள் ஆட்சி நீடிக்கும். முதல்- அமைச்சர் விஜய் கரூரில் பேசியதை மக்கள் ரசிக்கவில்லை. தமிழகத்தை பல முதல்-அமைச்சர் ஆட்சி செய்துள்ளார்கள். அவர்கள் இப்படி நடந்து கொள்ளவில்லை. ஆனால் விஜய் கரூரில் நடந்து கொண்ட விதம் வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ராமேஸ்வரத்தில் திடீரென உள்வாங்கிய கடல்.!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sea-suddenly-recedes-at-rameswaram</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sea-suddenly-recedes-at-rameswaram#comments</comments><guid isPermaLink="false">596bd943-a71f-44e8-b14a-62f10431aeba</guid><pubDate>Mon, 13 Jul 2026 04:16:24 +0000</pubDate><atom:updated>2026-07-13T04:16:24.025Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Rameswaram,sea,கடல்,ராமேஸ்வரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/70w4gf1s/9.gif" width="753"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/70w4gf1s/9.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமேஸ்வரம்,  </p><p>ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நேற்று கடல் உள்வாங்கி காணப்பட் டது.</p><h2>ராமேஸ்வரம் கோவில்</h2><p>இந்தியாவில் உள்ள முக்கிய புண்ணிய தலங்களில் ஒன்றாக ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமல் லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனிடையே சனி, ஞாயிறு 2 நாட் கள் தொடர் விடுமுறையை தொடர்ந்து நேற்று ராமேஸ்வரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.</p><p>இவ்வாறு வந்த பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட குவிந்து இருந்தனர். கடலில் புனித நீராடிய பக்தர்கள் கடற்கரையில் அமர்ந்து இறந்து போன தங்களது முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் பூஜை செய்தனர். தொடர்ந்து கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் புனித நீராடினர்.</p><h2></h2><h2>தனுஷ்கோடி</h2><p>மேலும் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ரூ.100, ரூ.200 இலவச தரிசன பாதையிலும், பொது தரிசன பாதையிலும் நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து தரிசனம் செய்து சென்றனர். அதேபோல் ராமேசுவரம் கோவிலோடு சேர்ந்த ராமர் பாதம், தனுஷ் கோடி செல்லும் சாலையில் உள்ள கோதண்டராமர் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.</p><p>கோவிலுக்கு வந்த பக்தர்கள் பலரும் புயலால் அழிந்து போன தனுஷ் கோடி கம்பிப்பாடு கடற்கரை மற்றும் அரிச்சல்முனை கடற்கரை பகுதிக்கு சென்று கடலின் அழகை பார்த்து ரசித்து சென்றனர். இதனால் தனுஷ்கோடியிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.</p><h2>உள்வாங்கிய கடல்</h2><p>இதற்கிடையே ராமேசுவரம் அக்னி தீர்த்த கடல் பகுதியில் நேற்று காலை வழக்கத்திற்கு மாறாக பல அடி தூரத்திற்கு உள்வாங்கி காணப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கடலில் உள்ள பாசி, பாறைகள் தெளிவாக வெளியே தெரிந்தன. நேற்று அக்னி தீர்த்த கடலில் புனித நீராட வந்த பக்தர்கள் கடல் உள்வாங்கி இருந்ததால் புனித நீராட சிரமப்பட்டனர். மேலும் அங்கு வந்த பக்தர்கள் கடல் உள்வாங்கியதை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். செல்போனில் புகைப்படம், வீடியோ எடுத்தனர்.</p><p>காலை 9 மணி வரை உள்வாங்கி இருந்த கடலானது அதன் பிறகு நேரம் செல்ல செல்ல மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது. காற்று காலத்தில் அக்னி தீர்த்த கடல் மற்றும் துறைமுக பகுதியில் கடல் உள்வாங்குவதும், இயல்பு நிலைக்கு திரும்புவதும் வழக்கமான ஒன்று தான் என மீனவர்கள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>
எழுத்தாளர் பூமணியின் மறைவு தமிழ் இலக்கிய உலகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு - முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/writer-poomanis-demise-is-an-irreparable-loss-to-the-world-of-tamil-literature-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/writer-poomanis-demise-is-an-irreparable-loss-to-the-world-of-tamil-literature-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">f9d8144a-0431-45f8-9498-3ca821d410a6</guid><pubDate>Mon, 13 Jul 2026 03:46:47 +0000</pubDate><atom:updated>2026-07-13T03:46:47.512Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>இரங்கல்,condolences,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,எழுத்தாளர் பூமணி,Writer Poomani</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/3vx70yns/Untitled-4.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/3vx70yns/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 79. அவரது இறுதிச் சடங்குகள் கோவில்பட்டியில் இன்று மாலை நடைபெறுகிறது.</p><p>இந்த நிலையில் இலக்கியத் துறையில் அவரது பங்களிப்பைப் போற்றி அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சாகித்திய அகாடமி விருது பெற்ற  எழுத்தாளரும், தமிழ் இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க படைப்பாளருமான பூலித்துரை மாணிக்கவாசகம் எனும்  பூமணி காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.</p><p>பூமணி கரிசல் நிலத்தின் மண் வாசனையும், அடித்தட்டு மக்களின் வாழ்வின் நுட்பமான யதார்த்தங்களும், வரலாற்றின் ஆழமான சாட்சியங்களும் நிரம்பிய படைப்புகளின் மூலம் தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்திய முக்கியமான படைப்பாளி ஆவார். </p><p>அவரது 'அஞ்ஞாடி' நாவலுக்காக சாகித்திய அகாடமி விருது பெற்றது, அவரது இலக்கிய ஆளுமைக்கு கிடைத்த உயரிய அங்கீகாரமாகும். மேலும், அவரது 'வெக்கை' நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான 'அசுரன்' திரைப்படம், அவரது எழுத்தின் வீச்சை உலகறியச் செய்தது.</p><p>பூமணியின் மறைவு தமிழ் இலக்கிய உலகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவால்  வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தமிழ் இலக்கிய உலகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இலக்கியத் துறையில் பூமணியின் பங்களிப்பைப் போற்றி அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நடைபாதை வசதி கொண்ட நகரங்கள் பட்டியலில்  சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா...?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/do-you-know-how-many-places-chennai-has-in-the-list-of-cities-with-pedestrian-facilities</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/do-you-know-how-many-places-chennai-has-in-the-list-of-cities-with-pedestrian-facilities#comments</comments><guid isPermaLink="false">ee4f8612-54bf-477d-8847-041670a1ebb5</guid><pubDate>Mon, 13 Jul 2026 03:25:45 +0000</pubDate><atom:updated>2026-07-13T03:25:45.823Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,India,Chennai,சென்னை,நடைபாதை,Walkway</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/ckvrt5vh/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/ckvrt5vh/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள நடைபாதைகளின் தரம், அவற்றின் உள்கட்டமைப்பு மற்றும் அது மக்கள் நடப்பதற்கு ஏதுவாக இருக்கிறதா? என்பதை விளக்கும் வகையில் 'ஸ்டேட் ஆப் இந்தியன் ஸ்டிரீட்ஸ் 2026' என்ற அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த ஆய்வு அறிக்கையை ‘நியூ ரல் சிட்டி' என்ற நகர்ப்புற தரவு மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டு உள்ளது.</p><p>இந்தியாவின் பல்வேறு பெருநகரங்களின் உள்கட்டமைப்பை செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுகளின் அடிப்படையில் ஆய்வு செய்யும் அமைப்பு ஆகும். அந்த வகையில் சாலைகளின் தரைமட்ட படங்கள், செயற்கைக்கோள் தரவுகளை சேகரித்து இந்த அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.</p><p>அதிலும் நடைபாதை இருக்கிறதா? என்று மட்டும் பார்க்காமல், அந்த நடைபாதையில் 100 மீட்டர் தூரத்துக்கு தொடர்ச்சி யாக எந்தவொரு தங்கு தடையுமின்றி ஒரு மனிதரால் நடக்க முடிகிறதா? என்ற அளவுகோலை அடிப்படையாக வைத்து கணக்கிட்டும் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.</p><h2>சென்னைக்கு 4-வது இடம்</h2><p>அதன் அடிப்படையில், உத்தரபிர தேசமாநிலம் லக்னோவில் நடைபாதை வசதிகள் 28 சதவீதம் சரியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு பட்டியலில் முதல் இடம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது 100 கி.மீ. சாலையில் 28 கி.மீ. தூரத்துக்கு நடைபாதை வசதிகள் சரியாக இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பட்டியலில் அடுத்தபடியாக கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரத்தில் 25.9 சதவீதமும், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரத்தில் 15.1 சதவீதமும் மட்டுமே சரியான நடை பாதை வசதிகள் இருக்கின்றன.</p><p>சென்னை 4-வது இடத்தில் 13.9 சதவீதம் மட்டுமே முறையான நடைபாதை வசதிகளை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து விசாகப்பட்டினம் 13.4 சதவீதம், குருகிராம் 12.6 சதவீதம், இந்தூர் 8.5 சதவீதம், டெல்லி 7.8 சதவீ தம், ஆமதாபாத் 5.8 சதவீதம், மும்பை 5.5 சதவீதம் மட்டுமே சரியான நடைபாதை வசதிகள் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.</p><h2>சாலையோர கடை, விளம்பர பலகை</h2><p>இந்தியாவில் சுமார் 70 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை உள்ள நகரச்சாலைகளில் முறையான அல்லது பாதுகாப்பான நடைபாதைகளே இல்லை என்பதையும், இந்தியாவில் வாகனங்களுக்கு சாலைகளில் கொடுக்கப்படும் முக்கியத்துவம், நடந்து செல்லும் சாதாரண மனிதர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை என்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.</p><p>நடைபாதைகளில் சாலையோர கடைகள், விளம்பர பலகைகள் மற்றும் சட்டவிரோத வாகன நிறுத்தங்களால் ஆக்கிரமிக்கப்படுவது, மின்மாற்றிகள், மின்கம்பங்கள் மற்றும் குப்பைத் தொட்டிகள் போன்ற பொதுப்பயன்பாட்டு உள்கட்டமைப்புகள் நடைபாதைகளின் நடுவிலேயே அமைக்கப்படுவது, நகர்ப்புற திட்டமிடல் முழுவதும் 'வாகனங்கள் வேகமாகச் செல்வதற்கே' முக்கியத்துவம் தருவது, பாதசாரிகளுக்கான இடத்தை சாலை விரிவாக்கத்திற்காக குறைத்துவிடுவது போன்றவற்றால் எந்த நகரங்களும் முழுமையான நடைபாதை வசதிகளை மக்களுக்கு கொடுக்க முடியாமல் திணறுகிறது.</p>]]></content:encoded></item><item><title>திண்டுக்கல்லில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-dindigul-facing-a-power-outage-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-dindigul-facing-a-power-outage-tomorrow#comments</comments><guid isPermaLink="false">0f3131df-4e6e-43b4-9346-32fba1c0cd3f</guid><pubDate>Mon, 13 Jul 2026 03:22:05 +0000</pubDate><atom:updated>2026-07-13T03:22:05.362Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Dindigul,திண்டுக்கல்,மின் தடை,power cut</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/tg9bsldb/ep.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/tg9bsldb/ep.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><p>திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. </p><p>இதையொட்டி பண்ணப்பட்டி, குரும்பப்பட்டி, காரமடை, சர்க்கரை கவுண்டன்சாலை, கீழத்திப்பம்பட்டி, புதுப்பட்டி, சுரக்காய்பட்டி, தெத்துப்பட்டி, மலையாண்டிபுரம், தருமத்துப் பட்டி, பழைய கன்னிவாடி, ராமலிங்கம் பட்டி, தோனிமலை, மேலதிப்பம் பட்டி, வெள்ளமரத்துப்பட்டி, சிறுநாயக்கன்பட்டி, முத்துராம்பட்டி, டி.கோம்பை, மல்லையாபுரம் ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற் கண்ட தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>நீலகிரி: தேயிலை தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-wild-elephants-run-amok-after-entering-a-tea-estate</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-wild-elephants-run-amok-after-entering-a-tea-estate#comments</comments><guid isPermaLink="false">7cb350e3-b727-4c1a-a847-02fde459d27c</guid><pubDate>Mon, 13 Jul 2026 03:10:33 +0000</pubDate><atom:updated>2026-07-13T03:10:33.229Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nilgiris,நீலகிரி,காட்டு யானைகள்,Wild elephants</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/cvkn54wo/5.gif" width="753"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/cvkn54wo/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட சேரம்பாடி, சோலாடி, கண்ணம்பள்ளி, கோரஞ்சால், சப்பந்தோடு, புஞ்சகொல்லி உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வாழை, தென்னை, பாக்கு மரங்கள், பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும் பொதுமக்கள், மாணவர்களை விரட்டி வருகிறது. காட்டு யானைகள் நடமாட்டத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் சேரம்பாடியில் இருந்து பந்தலூர் செல்லும் சாலையில் 5 காட்டு யானைகள் முகாமிட்டது. </p><p>அந்த வழியாக சென்ற வாகனங்களை வழிமறித்தது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து காட்டு யானைகள் காப்பி காடு பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தன. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்தனர். தகவல் அறிந்த சேரம்பாடி வனச்சரகர் சஞ்சீவி, வனவர் முத்தமிழ் மற்றும் வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டினர். இதேபோல் அய்யன்கொல்லி அருகே தட்டாம்பாறை, கருத்தாடு, கோட்டப் பாடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 8 காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்தது. இதை அறிந்த வனத்துறையினர் யானைகளை விரட்டினர்.</p>]]></content:encoded></item><item><title>மேட்டூர் அணை நீர்மட்டம் 75.65 அடியாக குறைந்தது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mettur-dam-water-level-drops-to-7565-feet</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mettur-dam-water-level-drops-to-7565-feet#comments</comments><guid isPermaLink="false">5f96fbf8-85cb-4be6-ba30-56445114e7f4</guid><pubDate>Mon, 13 Jul 2026 02:28:45 +0000</pubDate><atom:updated>2026-07-13T02:28:45.183Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur dam,Water inflow,தண்ணீர் வரத்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/bewgayui/4.gif" width="753"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/bewgayui/4.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம், </p><p>தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு கை கொடுக்காத நிலையில் மேட் டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லாததால் கடந்த மாதம் 12-ந் தேதி டெல்டா பாசனத்திற்கு திறக்க வேண்டிய மேட்டூர் அணை இன்று வரை திறக்கப்பட வில்லை. இதனால் இந்த ஆண்டு டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக் கப்படுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. </p><p>ஜூன் மாதம் முதல் ஜனவரி வரை டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை அளிக்கும் மேட்டூர் அணையில் இருந்து தற்போது குடிநீர் தேவைக்காக மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 75.65 அடியாக குறைந்துள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 91 கனஅடியாகவும், அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>கள்ளக்காதல் விவகாரம்; குடும்பத்தினரை தவிக்க விட்டு 17 வயது சிறுவனுடன், பெண் தற்கொலை
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fake-love-affair-leaving-family-in-distress-woman-commits-suicide-with-17-year-old-boy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fake-love-affair-leaving-family-in-distress-woman-commits-suicide-with-17-year-old-boy#comments</comments><guid isPermaLink="false">75b87b95-7174-48e8-a105-51d0a7a0de7d</guid><pubDate>Mon, 13 Jul 2026 02:15:51 +0000</pubDate><atom:updated>2026-07-13T02:15:51.926Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கள்ளக்காதல்,திருச்சி,Trichy,fake love</media:keywords><media:content height="768" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/8h0cpvev/upael.jpg" width="1366"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/8h0cpvev/upael.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>லால்குடி</p><p>திருச்சி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் 17 வயது சிறுவனுடன் பெண் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><p>திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மணக்கால் பகுதியில் ரெயில்வே கேட் உள்ளது.  திருச்சியின் லால்குடி மற்றும் காட்டூர் பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது.</p><p>அப்போது அந்த வழியே சென்ற 2 பேர் அந்த ரெயில் முன்பு திடீரென்று பாய்ந்தனர்.  இதில், பலத்த காயமடைந்து அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ரெயில்வே இன்ஸ்பெக்டர் பிருந்தா சம்பவ இடத்திற்கு வந்து, இறந்து கிடந்தவர்களின் உடல்களை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.</p>  <h2>முதல்கட்ட விசாரணை</h2><p>போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், இறந்தவர்கள் திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டையை அடுத்துள்ள போதாவூர் கிராமத்தை சேர்ந்த புவனேஸ்வரி (வயது 26) மற்றும் திருச்சியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. மேலும் புவனேஸ்வரிக்கு திருமணமாகி 9 வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.</p><p>புவனேஸ்வரிக்கும், அவரது உறவினரான திருச்சியை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியுள்ளது. அந்த சிறுவன் ஒரு கல்லூரியில் பட்டய படிப்பு படித்து வந்தார். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் இருவரது குடும்பத்தினருக்கும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.</p>  <h2>ஊர் சுற்றினர்</h2><p>இந்நிலையில், நேற்று முன்தினம் அந்த சிறுவன் கடைக்கு பொருட்கள் வாங்க செல்வதாக தனது பெற்றோரிடம் கூறி விட்டு சென்றுள்ளார். அதேபோல், புவனேஸ்வரி திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா ஆலயத்துக்கு சென்று வருவதாக தனது கணவரிடம் கூறிவிட்டு சென்றார். இதையடுத்து அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் ஊர் சுற்றியுள்ளனர்.</p><p>இதையடுத்து நேற்று முன்தினம் இரவு மணக்கால் ரெயில்வே கேட் பகுதிக்கு அவர்கள் வந்தனர். அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, அந்த வழியாக வந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. ஆனால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை.</p>  <h2>வழக்குப்பதிவு</h2><p>இதையடுத்து 2 பேரின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து இன்ஸ்பெக்டர் பிருந்தா வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.</p> ]]></content:encoded></item><item><title>மதுரை அருகே அரசு பஸ் மீது ஆம்னி பஸ் மோதி பயங்கர விபத்து: 5 பேர் பலி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/omni-bus-collides-with-government-bus-in-horrific-accident-near-madurai-5-killed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/omni-bus-collides-with-government-bus-in-horrific-accident-near-madurai-5-killed#comments</comments><guid isPermaLink="false">956aebfa-311a-40a0-b658-3b885ac851d4</guid><pubDate>Mon, 13 Jul 2026 02:15:46 +0000</pubDate><atom:updated>2026-07-13T02:15:46.806Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,சாலை விபத்து,road accident,Omni Bus,ஆம்னி பஸ்,அரசு பஸ்,Madurai,மதுரை,கிரைம் செய்திகள்,govt bus</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/5ym1f7bp/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/5ym1f7bp/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>சென்னையில் இருந்து மார்த்தாண்டத்துக்கு தனியார் ஆம்னி பஸ் ஒன்று நேற்று புறப்பட்டது. இந்த பஸ்சில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். இந்த நிலையில், இன்று அதிகாலை மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே வண்டிநகரம் பகுதி நான்குவழிச்சாலையில் ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் மதுரையில் இருந்து திருச்சி சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.</p><p>அரசு பஸ் மீது மோதிவிட்டு இடது பக்கம் திரும்பி சாலையோரம் உள்ள பயணிகள் நிழற்குடையில் ஆம்னி பஸ் மோதி சுக்குநூறானது. இதில் ஆம்னி பஸ்சின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. அரசுப் பஸ் தலைக்குப்புற கவிழ்ந்தது. விபத்து குறித்து தகவலறிந்த கொட்டாம்பட்டி போலீசார் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு பஸ்களிலும் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.</p><p>இந்த விபத்தில் இரு பஸ்களிலும் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 4 ஆண்கள், 1 பெண் என 5 பேர் உயிரிழந்துள்ளனர். குழந்தைகள் உட்பட 42 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த கோர விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-36</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-36#comments</comments><guid isPermaLink="false">ed510a37-6ab3-40dd-ba41-409e714c2582</guid><pubDate>Mon, 13 Jul 2026 01:00:07 +0000</pubDate><atom:updated>2026-07-13T01:00:07.321Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல் விலை,Diesel Price,டீசல் விலை,Petrol price</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/ozg6t2r8/2.gif" width="753"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/ozg6t2r8/2.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.</p><p>பெட்ரோல், டீசல் விலை</p><p>இந்நிலையில், சென்னையில் இன்று (13.07.2026 - சனிக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. </p> ]]></content:encoded></item><item><title>அ.தி.மு.க.விற்கு திரும்பி வந்தால் ஜீரோவில் இருந்து மீண்டும் அரசியல் வாழ்க்கை: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/returning-to-the-aiadmk-means-starting-a-political-career-from-scratch-edappadi-palaniswami</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/returning-to-the-aiadmk-means-starting-a-political-career-from-scratch-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">dc01649a-50b1-4064-885c-aa761fd5506e</guid><pubDate>Sun, 12 Jul 2026 23:18:17 +0000</pubDate><atom:updated>2026-07-12T23:18:17.874Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,எடப்பாடி பழனிசாமி,அ.தி.மு.க,Edappadi Palaniasamy</media:keywords><media:content height="542" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/e85og6zo/EPS.jpg" width="794"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/e85og6zo/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, அ.தி.மு.க.வில் இருந்து த.வெ.க.வுக்கு பிரிந்து சென்றவர்கள் அங்கு எப்படி இருக்கிறார்கள்? என்பது அனைவருக்கும் தெரியும். என்னை எப்போது வேண்டுமானாலும் வந்து சந்திக்கலாம். ஆனால் தி.மு.க. தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் த.வெ.க. தலைவரை அவர்களால் சுலபமாக பார்க்க முடியாது. ஆட்சி, காட்சிகள் மாறும்போது, நம்மிடம் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வருவார்கள். அவ்வாறு வந்தால் அவர்கள் ஜீரோவில் இருந்து தான் அவர்களது அரசியல் பயணம் தொடங்கப்படும். </p> <h2>விஜய்க்கு நம்பிக்கையில்லை</h2><p>தேர்தலில் தி.மு.க. தலைவர் உள்ளிட்ட சில அரசியல் கட்சி தலைவர்கள் வெற்றி பெறமுடியவில்லை. த.வெ.க.தலைவர் விஜய் அவர் மீது நம்பிக்கை இல்லாமல் 2 தொகுதிகளில் போட்டியிட்டார். ஆனால் எடப்பாடி தொகுதியில் நான் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன், என்றார்.</p><h2>போதைப்பொருள் நடமாட்டம்</h2><p>மேலும் பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: பேரறிஞர் அண்ணா, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோரின் உருவ படங்களை வைத்து த.வெ.க. தலைவர் விஜய் ஊர், ஊராக சென்று மக்களை சந்தித்தார். நமது தலைவர்களை வைத்து வெற்றி பெற்றுள்ளதால் அது உண்மையான வெற்றியாக கருதமுடியாது. ஜனநாயகன் படத்தயாரிப்பாளருக்கு டெல்லி சிறப்பு பிரதிநிதியாவும், அவருக்கு ஆலோசகருக்கு தமிழ்நாடு அரசின் ஆலோசகராகவும் பதவி வழங்கப்பட்டுள்ளது. சொல்லபோனால் முதல்-அமைச்சருக்கு மேக்கப் போடும் நபருக்கும் வரும் நாட்களில் பதவி கொடுப்பார்கள்?. த.வெ.க. ஆட்சிக்கு வந்து 60 நாட்களில் தி.மு.க. ஆட்சியில் இருந்ததுபோல் கொலை, கொள்ளை, போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகமாக நடந்து வருகிறது.</p> <h2>அதிமுக வெற்றி பெறும்</h2><p>தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என நினைத்து ஏராளமான வாக்குறுதிகளை விஜய் அள்ளி வீசினார். தற்போது நிதியில்லாமல் விழி பதுங்கி நிற்கிறார். த.வெ.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரவில்லை. தி.மு.க. கூட்டணி கட்சிகளின் உதவியுடன் ஆட்சி நடந்து வருகிறது. அவர்கள் எப்போது வேண்டுனாலும் காலை வாறிவிடுவார்கள். அப்போது இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும். எனவே, விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் மற்றும் அதன்பிறகு வரும் தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். எனவே, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து கட்சி பணியாற்ற வேண்டும்” என்றார். </p>]]></content:encoded></item><item><title>தமிழக சட்டசபை தேர்தலில் ஓட்டுப்போட்ட இலங்கை தம்பதி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sri-lankan-couple-arrested-for-voting-in-tamil-nadu-assembly-election</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sri-lankan-couple-arrested-for-voting-in-tamil-nadu-assembly-election#comments</comments><guid isPermaLink="false">c9920182-8813-4c59-ba6d-edf6bafec6ee</guid><pubDate>Sun, 12 Jul 2026 22:01:49 +0000</pubDate><atom:updated>2026-07-12T22:01:49.373Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை தேர்தல்,Sri Lanka,இலங்கை,vote</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/fezuxjro/Arrest.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/fezuxjro/Arrest.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் குணேஸ்வரன் (வயது 69). இவர் சென்னை தியாகராயநகரில், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தனது மனைவி நாகுலாம்பிகையுடன் (60) வசித்து வந்தார். அங்கு சிறிய அளவில் நகைக்கடை ஒன்றையும் வைத்துள்ளார். இவரது மகள் மற்றும் குடும்பத்தினர், இலங்கை யாழ்ப்பாணத்தில் வாழ்கிறார்கள். இலங்கை பாஸ்போர்ட்டில் தமிழகத்தில் தங்கியிருந்த இவர், வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை வாங்கி வைத்திருந்ததாக தெரிகிறது.</p> <p>அதை பயன்படுத்தி சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் ஓட்டுபோட்டுள்ளார். இது கண்டுபிடிக்கப்பட்டு, மாம்பலம் போலீஸ் நிலையத்தில் இவர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், இவர்கள் இருவர் மீதும் 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் இலங்கை செல்வதற்காக, சென்னை விமான நிலையம் சென் றுள்ளனர். அப்போது இவர்கள் தமிழக வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்ததை விமான நிலைய அதிகாரிகள் கண்டுபிடித்து போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>பெரம்பூர்  எம்.எல்.ஏ. அலுவலகம் இன்று  திறப்பு: தொகுதி மக்களையும் சந்திக்கிறார் முதல் அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/perambur-mla-office-to-open-today-chief-minister-vijay-to-meet-constituents</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/perambur-mla-office-to-open-today-chief-minister-vijay-to-meet-constituents#comments</comments><guid isPermaLink="false">d131b249-4800-4e1f-a2ea-08df6fa43cae</guid><pubDate>Sun, 12 Jul 2026 20:45:45 +0000</pubDate><atom:updated>2026-07-12T20:45:45.519Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,Vijay,பெரம்பூர்,எம்.எல்.ஏ. அலுவலகம்,CM Vijay,முதல் அமைச்சர் விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/f5ne6sl4/Vijay.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/f5ne6sl4/Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>முதல்-அமைச்சர் விஜய் சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதில் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பெரம்பூர் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.தொகுதி மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, பெரம்பூர் தொகுதி அலுவலகம் சென்னை வியாசர்பாடி சர்மா நகர் 1-வது தெருவில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தின் முன்பகுதியில், "பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ச. ஜோசப் விஜய்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றிலும் காம்பவுண்டு சுவர் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. முதல்-அமைச்சர் விஜய்க்காக தனி அறையும் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தினுள் தனியாக கம்ப்யூட்டர்கள் அமைக்கப்பட்டு, 10 பணியாளர்கள் தினமும் பொதுமக்களின் குறைகளைக் கேட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.</p><h2> இன்று திறந்து வைக்கிறார்</h2><p>இந்த அலுவலகத்தை முதல்-அமைச்சர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு திறந்து வைக்கிறார். சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு,  இன்று முதல் முறையாக அவர் தனது தொகுதிக்குச் செல்வதால், அவருக்கு த.வெ.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.ஏற்கனவே செயல்பட்டு வந்த கட்டிடம் ஒன்றை புதுப்பித்து, அதனை நவீனமயமான எம்.எல்.ஏ. அலுவலகமாக மாற்றியுள்ளனர். எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்து வைத்த பிறகு, முதல்-அமைச்சர் விஜய் அருகில் உள்ள ரேஷன் கடைக்குச் சென்று ஆய்வு செய்கிறார். புதிய ரேஷன் கார்டுகள் மற்றும் பட்டாக்களையும் பொதுமக்களுக்கு அவர் வழங்குகிறார்.</p><h2>புதிய செயலி</h2><p>எம்.எல்.ஏ. அலுவலகத்தில் தொகுதி மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக செயலி ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. செல்போன் செயலியான அதில், பொதுமக்கள் தங்களது குறைகளை எந்த நேரத்திலும் தெரிவிக்கலாம். பெரம்பூர் தொகுதி மக்கள் தங்களது குறைகளையும் புகார்களையும் தொகுதி எம்.எல்.ஏ.வான முதல்-அமைச்சரிடம் நேரடியாகத் தெரிவிக்கும் வகையில் தொடங்கப்பட உள்ள இந்த செயலிக்கு ‘மக்கள் சேவை தளம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் விஜய் இந்த பிரத்யேக செல்போன் செயலியையும் நாளை அறிமுகம் செய்து தொடங்கி வைக்கிறார்.</p><h2>அடிப்படை தேவைகள்</h2><p>இந்தச் செயலி மூலம் பெரம்பூர் தொகுதி மக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளான மின்சாரம், சாலை வசதி, குடிநீர், துப்புரவுப் பணி, கல்வி மற்றும் மருத்துவ உதவிகள், அரசு நலத்திட்டங்கள், வீட்டு வசதி உதவிகள், வேலைவாய்ப்பு, வணிகம் மற்றும் சட்டரீதியான ஆவண உதவிகள், அவசர உதவிகள் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகள் குறித்தும் நேரடியாக முதல்-அமைச்சர் விஜய்யின் கவனத்துக்குக் கொண்டு செல்ல முடியும்.</p><h2>சில நொடிகளில்</h2><p>இந்தச் செயலி மூலம் பொதுமக்கள் தங்களது புகாரைப் பதிவு செய்ததும், அடுத்த சில நொடிகளிலேயே அது பெரம்பூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தைச் சென்றடையும். புகார் சமர்ப்பிக்கப்பட்டவுடன், அதை ஏற்றுக்கொண்டதற்கான உறுதிப்படுத்தல் குறுஞ்செய்தி, புகார் அளித்தவரின் செல்போன் எண்ணுக்கு செல்லும் வகையிலேயே செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.புகார் அளித்தவர்கள் தங்களது புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை எந்த நிலையில் உள்ளது என்பதையும் செல்போன் மூலமாகவே தெரிந்துகொள்ளலாம்.புகார் அளிக்கப்பட்டது முதல், பிரச்சினைகள் தீர்க்கப்படுவது வரை தங்களது மனுக்கள் எந்த நிலையில் உள்ளன என்பதையும் தொகுதி மக்கள் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><h2>3 நாட்கள்</h2><p>முதல்-அமைச்சர் விஜய் அறிமுகப்படுத்தும் இந்தச் செயலி மூலம் பெறப்படும் புகார்கள் மீது குறைந்தபட்சம் 3 நாட்களுக்குள் முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.குடிநீர், மின்சாரம், சாலை வசதி, துப்புரவுப் பணிகள் போன்ற அத்தியாவசியப் பிரச்சினைகளுக்கு அதிகபட்சமாக 10 நாட்களுக்குள் முழுமையான தீர்வு காணப்பட்டு, அது குறித்த விரிவான பதிலை மக்களுக்கு செயலி வழியாகவே தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இச்செயலியைப் பிரத்யேகமாகக் கண்காணிப்பதற்கான நவீன கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.இந்த 'டிஜிட்டல்' மக்கள் சேவை செயலி பொதுமக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>தொகுதி மக்கள்</h2><p>இன்று திறக்கப்பட உள்ள பெரம்பூர் தொகுதி சட்டமன்ற அலுவலகத்தை பொதுமக்கள்  நேற்றே நேரில் சென்று பார்த்து புகைப்படங்களையும் எடுத்தனர். இந்த அலுவலகத்துக்கு எதிரில் உள்ள பெரிய காம்பவுண்டு சுவரில் த.வெ.க. அரசின் சாதனைகளை விளக்கும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம், சிங்கப்பெண் திட்டம் ஆகியவை பற்றிய புகைப்படங்கள் முதல்-அமைச்சர் விஜய் படத்துடன் இடம்பெற்றுள்ளன. விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் விஜய் செல்லும் வழியில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்புப் பணிகளை போலீசார்  நேற்றே தொடங்கியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title> வி.சி.க.வை பலவீனப்படுத்த நினைத்தவர்கள் ஏமாந்து போனார்கள்- திருமாவளவன்  தாக்கு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/those-who-sought-to-weaken-the-vck-have-been-left-disappointed-thirumavalavan-lashes-out</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/those-who-sought-to-weaken-the-vck-have-been-left-disappointed-thirumavalavan-lashes-out#comments</comments><guid isPermaLink="false">e861f6fe-4608-4944-ba79-65ca47b9bab0</guid><pubDate>Sun, 12 Jul 2026 20:34:14 +0000</pubDate><atom:updated>2026-07-12T20:34:14.682Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமாவளவன்,விசிக,VCK,Thirumavalvan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/3f4ctus8/Thiruma.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/3f4ctus8/Thiruma.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தர்மபுரியில் நடந்த திருமண விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-நான் ஒருபோதும் கட்சியிலிருந்து யாரையும் வெளியேற்ற வேண்டும் என்று எண்ணியதில்லை. சிலர் வி.சி.க.வை எப்படியாவது சிதறடிக்க வேண்டும். பலவீனப்படுத்தி விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருந் தார்கள். அவர்கள் இப்போது ஏமாற்றம் அடைந்து இருக்கிறார்கள்.</p><p>ஒருவர் நம் கட்சிக்கு வருகிறார் என்று சொன்னால், அவரிடம் என்ன சொல் லியிருக்க வேண்டும். எங்களுடன் திருமாவளவன் நீண்ட காலமாக இணைந்து பணியாற்றியுள்ளார். நாளை வி.சி.க. எங்களுக்கு தேவை. நீங்கள் எங்கள் கட்சிக்கு வர வேண்டாம். வேறு கட்சிக்கு செல்லுங்கள் என்று சொல்லி இருக்க வேண்டும். அதுதான் அரசியல் அறம். எங்களாலும் வி.சி.க.வை பலவீனப்படுத்த முடியும் என்ற நோக்கில் கட்சி யில் இணைத்துக் கொண்டார்கள். </p> <p>நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட இயக்கம் எடுத்த முடிவு என் இதயத்தில் முள் குத்தியதை போல் வலியை ஏற்படுத்தியது. லட்சக்கணக்கான தொண்டர்கள் கொண்ட இந்த இயக்கத்தில் நூற்றுக்கணக்கான கருத்தியல் சார்ந்த படை தளபதிகள் வலிமையுடனும் பற்றுதலுடனும் இருக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>அண்ணாமலையின் ஆரோக்கியமான கருத்துகளை ஏற்கிறோம்’-அமைச்சர் விக்னேஷ் பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-accept-annamalais-constructive-views-minister-vigneshs-statement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-accept-annamalais-constructive-views-minister-vigneshs-statement#comments</comments><guid isPermaLink="false">df83a926-af78-48e8-952c-1eea881d899d</guid><pubDate>Sun, 12 Jul 2026 19:31:27 +0000</pubDate><atom:updated>2026-07-12T19:31:27.326Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,Annamalai,அண்ணாமலை,விக்னேஷ்,Vignesh</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/yvr0ccze/minister-vignesh.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் விக்னேஷ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/yvr0ccze/minister-vignesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2>சட்ட நடவடிக்கை</h2><p>பழனி அருகே உள்ள கோரிக்கடவு கிராமத்தில் த.வெ.க. சார்பில் கூட்டம் நடந்தது. இதில் மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் கலந்து கொண்டார். பின்பு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-வியட்நாம் விபத்தில் பலியான பழனியை சேர்ந்த முருகபிரபுவின் உடலை கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பழனி முருகன் கோவில் கட்டுப்பாட்டிலுள்ள நிலத்தை மோசடியாக பதிவு செய்ததாக செய்திகள் வந்தன. எனவே இன்று கூட (அதாவது நேற்று) அறநிலையத்துறை அமைச்சரிடம் செல்போனில் பேசினேன். </p> <p>அப்போது, கோவில் நில மோசடி செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுத்து, அந்த நிலங்கள் மீட்கப்படும் என அவர் கூறியுள்ளார். தவறு யார் செய்திருந்தாலும் தண்டனை வழங்கப்படும்.தமிழகத்தில் முதற்கட்டமாக 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் அரசுக்கு நிதிச்சுமை இருந்தது. தற்போது அதை நிவர்த்தி செய்து வருகிறோம். எனவே அடுத்தகட்டமாக மக்களுக்கு பாதிப்புள்ள டாஸ்மாக் கடைகளை மூட முக்கியத்துவம் கொடுக்கப்படும். அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுத்து செயல்பட்டு வந்த பார்கள் தான் மூடப்பட்டுள்ளன.</p><h2>ஆரோக்கியமான கருத்து</h2><p>திண்டுக்கல் மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். இதற்காக கலெக் டர் உள்ளிட்ட உயர் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.பின்பு, <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">அண்ணாமலை</a> நடத்தும் 'வீ தி லீடர்ஸ்' அமைப்புக்கு அதிகமாக இளைஞர்கள் செல்கிறார்கள், எனவே அவரின் மாநாடு குறித்து தங்களின் கருத்து என்ன? என அமைச்சரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு, அவர் இது ஜனநாயக நாடு. கரூரில் கோவில் நிலம் வழங்கப்பட உள்ள விவகாரத்தில் கூட அண்ணாமலை தமிழக அரசை பாராட்டியுள் ளார். எனவே அண்ணாமலையின் ஆரோக்கியமான கருத்துகளை ஏற்கிறோம். யாரையும் எதிரியாக பார்க்கவில்லை, தீயசக்தியை தவிர, என்றார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை கடற்கரை-திருவண்ணாமலை இடையே 8 பெட்டிகள் கொண்ட பயணிகள் ரெயில் இயக்கம்-தெற்கு ரெயில்வே அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/southern-railway-announces-operation-of-an-8-coach-passenger-train-between-chennai-beach-and-tiruvannamalai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/southern-railway-announces-operation-of-an-8-coach-passenger-train-between-chennai-beach-and-tiruvannamalai#comments</comments><guid isPermaLink="false">9dfa14d0-d232-492a-a832-5bc173694a8e</guid><pubDate>Sun, 12 Jul 2026 18:40:03 +0000</pubDate><atom:updated>2026-07-12T18:40:03.186Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,train,பயணிகள் ரெயில் சேவை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/zs7042fl/Train-new.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/zs7042fl/Train-new.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>தாம்பரம் பணிமனையில் இன்று (13-ந்தேதி), நாளை (14-ந்தேதி) ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரை-விழுப்புரம் வழித்தடத்தில் இயக்கப்படும் 12 பெட்டிகள் கொண்ட 5 பயணிகள் ரெயில்கள் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் 12 பெட்டிகளுக்கு பதிலாக 8 பெட்டிகள் கொண்ட பயணிகள் ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-</p> <p>விழுப்புரத்தில் இருந்துகாலை 5.10 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் பயணிகள் ரெயிலும் (வண்டி எண்.66056), தாம்பரத்தில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்லும் பயணிகள் ரெயிலும் (66045), விழுப்புரத்தில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் பயணிகள் ரெயிலும் (66046), சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலை செல்லும் பயணிகள் ரெயிலும் (66033), இன்று (திங்கட்கிழமை) 8 பெட்டிகள் கொண்ட ரெயிலாக இயக்கப்படும். மேலும், திருவண்ணாமலையில் இருந்து நாளை (14-ந்தேதி) காலை 4.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் பயணிகள் ரெயில் (66034) 8 பெட்டிகள் கொண்ட ரெயிலாக இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ராஜினாமா செய்யும் எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கேட்க வேண்டும்: கவர்னருக்கு கிருஷ்ணசாமி கடிதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/explanation-must-be-sought-from-mlas-who-are-resigning-krishnasamys-letter-to-the-governor</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/explanation-must-be-sought-from-mlas-who-are-resigning-krishnasamys-letter-to-the-governor#comments</comments><guid isPermaLink="false">ce002f91-ef01-457e-aba2-d4d041c9d24e</guid><pubDate>Sun, 12 Jul 2026 17:11:31 +0000</pubDate><atom:updated>2026-07-12T17:11:31.039Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Governor,கவர்னர்,கிருஷ்ணசாமி,All over Tamil Nadu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/cdl9gcep/krishasamy.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/cdl9gcep/krishasamy.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, கவர்னர் அர்லேகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக தங்களது பதவிகளை திடீரென ராஜினாமா செய்வதும், பின்னர் ஆளும் கட்சியில் இணைவதும் ஒரு தொடர் கதையாகி வருகிறது. இதுவரை 6 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.</p><p>இதனை குதிரை பேரமாக கருத வேண்டும். ராஜினாமா செய்த ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களிடமும் கவர்னராகிய நீங்கள் தலையிட்டு, அவர்களை நேரில் அழைத்து விளக்கம் கேட்க வேண்டும். அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைக்க வேண்டும்.மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்க உங்களுக்கான சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும்.</p><p>சாதிவாரி மககள் தொகை கணக்கெடுப்பிற்கு முன்னதாகவே, தேவேந்திர குல வேளாளர்களை பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்றுவதற்கான பரிந்துரைகளை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பா.ஜ.க. அரசின் &apos;மதவாத அரசியல்&apos; செயல் திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு இணங்கிவிட கூடாது - திருமாவளவன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tamil-nadu-government-should-not-yield-to-the-bjp-governments-agenda-of-communal-politics-thirumavalavan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tamil-nadu-government-should-not-yield-to-the-bjp-governments-agenda-of-communal-politics-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">2723bfa3-d7a0-40a6-a7e3-3aa5ebe6fd67</guid><pubDate>Sun, 12 Jul 2026 16:33:20 +0000</pubDate><atom:updated>2026-07-12T16:33:20.846Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமாவளவன்,Thirumavalavan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/d7859wpb/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/d7859wpb/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“வந்தே மாதரம் பாடலை அரசு நிகழ்ச்சிகளில் கட்டாயம் பாட வேண்டுமென்று இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் மாநில தலைமைச் செயலாளர்களுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. ( No. 14/2/2025-Publie; Government of India Dt 09.07.2026). எந்தெந்த நிகழ்ச்சிகளில் அதனைப் பாடவேண்டும் என்ற பட்டியலையும் கொடுத்துள்ளது. </p><p>உள்துறை அமைச்சகத்தின் இந்தச் சுற்றறிக்கை  இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு ஆபத்தானது மட்டுமல்ல; மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதுமாகும். எனவே, இந்த சுற்றறிக்கையை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். அத்துடன், 'வந்தே மாதரம்' பாடலைக் கட்டாயம் பாட வேண்டும் என்பதைத் தமிழ்நாடு அரசு ஏற்காது என்று முதல்-அமைச்சர் மத்திய அரசிடம் உரிய முறையில் தெரிவிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம். </p><p>இந்தியாவின் தேசிய கீதமாக 'ஜன கண மன' பாடல் இருப்பதா? 'வந்தே மாதரம்' பாடல் இருப்பதா? என்ற விவாதம் இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்திலேயே எழுப்பப்பட்டது. விரிவான வாதங்களுக்குப் பிறகே,  'ஜன கண மன' என்னும் பாடல் இந்தியாவின் தேசிய கீதமாக தேர்வு செய்யப்பட்டது. கடந்த 75 ஆண்டுகளாக அதுவே பாடப்பட்டு வருகிறது. இப்போது பாஜக அரசு, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தூண்டுதலால் 'வந்தே மாதரம்' பாடலை இந்தியாவின் தேசிய கீதமாக மாற்றுவதற்கு முயற்சி செய்கிறது. </p><p>மத்திய அரசின் நிகழ்ச்சிகளில் மட்டும் அதனைப் பாடினால் போதும் என்று தொடக்கத்தில் சொன்னார்கள். இப்போதோ 'தேசிய கீதம்' பாடுவதற்கு முன்பு 'தேசிய பாடலென்று' "வந்தே மாதர"த்தைப் பாட வேண்டும் என ஒன்றிய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. </p><p>1870-களில் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயரால் எழுதப்பட்டு, 1882-ல் வெளியான அவரது 'ஆனந்தமடம்' (Anandamath) நாவலின் மூலம் பிரபலமடைந்த இப்பாடலை தேசிய கீதம் ஆக்கவேண்டும் என்ற கருத்துக்கு சுதந்திரத்துக்கு முன்பேயே அனைத்துத் தரப்பினரின் ஆதரவு கிடைக்கவில்லை. இந்தப் பாடலின் முதல் இரண்டு பத்திகளுக்குப் பிறகு இந்துக் கடவுள்களைப்பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. இதனை முஸ்லிம்கள் உள்ளிட்ட பிற மதங்களைச் சார்ந்தோர் பாடினால் அது அவர்களது வழிபாட்டுக் கொள்கைக்கு எதிராகப் போய்விடும். எனவே, முஸ்லிம் லீக் போன்ற சில அமைப்புகள் அதனை எதிர்த்ததன.</p><p>இந்தப் பிரச்சினையால் நாட்டின் விடுதலை போராட்டம் பின்னடைவைச் சந்திக்கிறது என்பதை உணர்ந்த ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ் முதலான காங்கிரஸ் தலைவர்கள் 1937-ல் ஒரு சமரசத்தை ஏற்படுத்தினர். இந்தியர்களிடையே ஒற்றுமையைப் பேணுவதற்காக, இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள வெளிப்படையான இந்துமதம் சார்ந்த குறிப்புகளைத் தவிர்த்து, காங்கிரஸ் பொதுக் கூட்டங்களில் முதல் இரண்டு பத்திகளை மட்டும் பாடுமாறு அவர்கள் பரிந்துரைத்தனர்.</p><p>1950 இல் அரசியல் நிர்ணய சபையிலும்கூட இந்தப் பிரச்சினை கிளப்பப்பட்டது. 'ஜன கண மன' பாடலைப் பாடுவதற்குப் பதிலாக, 'வந்தே மாதரம்' பாடவேண்டும் எனக் கூறப்பட்டது. ஆனால், ரவீந்திரந்தா தாகூர் எழுதிய 'ஜன கண மன' என்னும் பாடலே தேசியகீதம் என முடிவு செய்யப்பட்டது. </p><p>வந்தே மாதரம் பாடலின்  150 ஆவது ஆண்டு கொண்டாடப்பட்டதிலிருந்து அதனை தேசிய கீதமாக அறிவித்துவிட வேண்டும் என பா.ஜ.க. அரசு துடிக்கிறது. அதற்காகவே பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்த சுற்றறிக்கையை மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ளது. </p><p>மதச்சார்பின்மைக்கு மாறான - ஒரு குறிப்பிட்ட மதசார்புள்ள பாடலான வந்தே மாதரம் பாடலை அரசு நிகழ்ச்சிகளில் பாடுவதைக் கட்டாயமாக்கும் சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வேண்டுமென்றும்; மத்திய பாஜக அரசின் இந்த மதவாத அரசியல் செயல்திட்டத்தைத் தமிழ்நாடு அரசும் ஏற்கக்கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>அண்ணாமலை மாநாடு: &apos;கொண்டையை மறைக்காம விட்டுட்டீங்கப்பா&apos;&apos; - மாணிக்கம் தாகூர் கிண்டல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/annamalai-conference-you-left-the-party-without-hiding-it-manickam-tagores-sarcasm</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/annamalai-conference-you-left-the-party-without-hiding-it-manickam-tagores-sarcasm#comments</comments><guid isPermaLink="false">f6df2853-eeee-446d-9bd7-077ac0ed7351</guid><pubDate>Sun, 12 Jul 2026 16:11:24 +0000</pubDate><atom:updated>2026-07-12T16:11:24.479Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Annamalai,அண்ணாமலை,காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,ManickamThakur</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/gpqvx3ae/taqure33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/gpqvx3ae/taqure33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><p>பாஜகவுக்கும் தனக்கும் சம்பந்தமில்லாதது போல் அண்ணாமலை சொல்வது, வடிவேலு காமடியை போல் “அந்த கொண்டய மறைக்காம விட்டியேப்பா..” மாதிரி இருக்கு என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.</p><h2>அண்ணாமலை புதிய இயக்கம் </h2><p>தமிழக அரசியல் களத்தில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனியாக புதிய இயக்கம் மற்றும் மாநாடு இன்று நடத்தினார்.</p><p>அண்ணாமலையின் இந்த புதிய அரசியல் நகர்வை நடிகர் வடிவேலுவின் காமெடியுடன் கொண்டையை மறைக்காம விட்டுட்டீங்கப்பா' என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம் தாகூர் கிண்டல் செய்துள்ளார்.</p> <p>தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், </p><p>தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் புதிய இயக்கங்கள் அல்லது அமைப்புகளைத் தொடங்கலாம்.அதில் எவ்விதத் தவறும் இல்லை. அதற்காக அண்ணாமலைக்கு எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால், அவர் பேசும்போது தனக்கும் பாஜகவிற்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லாதது போலக் காட்டிக்கொள்ள முயல்வதுதான் பெரும் ஆச்சரியமாக உள்ளது.</p><h2>அண்ணாமலை திட்டம் பலிக்காது</h2><p> அண்ணாமலை பேசுவதைப் பார்த்தால் அப்படியே சினிமாப் படத்தில் வரும் நடிகர் வடிவேலுவின் காமெடி போல் தான் இருக்கிறது. ஒருவன் தன் தலையில் இருக்கும் கொண்டையை மறைக்க மறந்துவிட்டு மாட்டிக்கொள்வதைப் போல, கொண்டையை மறைக்காம விட்டுட்டீங்கப்பா' என்ற கதையாகத்தான் அண்ணாமலையின் புதிய இயக்கம் இருக்கிறது. <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பாஜகவின்</a> முகமாக இருந்துகொண்டே, மக்கள் மத்தியில் தனியாக ஒரு பிம்பத்தை உருவாக்க அண்ணாமலை போடும் திட்டம் பலிக்காது.</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>நெல்லையில் வாலிபர் கொலை:  தப்பியோடிய 3 பேருக்கு வலைவீச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-murdered-in-nellai-manhunt-launched-for-three-absconding-suspects</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-murdered-in-nellai-manhunt-launched-for-three-absconding-suspects#comments</comments><guid isPermaLink="false">53bd7d7d-0116-474d-8885-5fde0f1d460b</guid><pubDate>Sun, 12 Jul 2026 16:02:26 +0000</pubDate><atom:updated>2026-07-12T16:02:26.709Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,கொலை,வாலிபர்,murdered,teenager,A youth</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/1g574940/sea.gif" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வாலிபர் கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/1g574940/sea.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p> நெல்லை நகர் பாறையடி பகுதியை சேர்ந்த வாலிபர் ஆவுடையப்பன் (32) மர்ம நபர்களால் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">வெட்டி படுகொலை</a> செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p> <h2>மர்ம கும்பல் வெறிச்செயல்</h2><p>பாறையடி பகுதியை சேர்ந்த ஆவுடையப்பன் இன்று தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென ஆவுடையப்பனை வழிமறித்து, தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.</p><h2>ரத்த வெள்ளத்தில் பலி </h2><p>இதில் உடல் முழுவதும் பலத்த வெட்டுக் காயமடைந்த ஆவுடையப்பன், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். </p><h2>முன்விரோதம்</h2><p>முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் அரங்கேறியிருப்பது தெரியவந்துள்ளது. இதற்கிடையே, கொலையுண்ட ஆவுடையப்பனின் உடலை பிரேத பரிசோதனைக்காக எடுக்க போலீசார் முயன்றனர். ஆனால், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் உடலை எடுக்க விடாமல் போலீசாரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/places-in-chennai-that-will-experience-power-outages-tomorrow-5</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/places-in-chennai-that-will-experience-power-outages-tomorrow-5#comments</comments><guid isPermaLink="false">d4f366cd-080e-416a-8547-746943506390</guid><pubDate>Sun, 12 Jul 2026 15:58:44 +0000</pubDate><atom:updated>2026-07-12T15:58:44.407Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மின் தடை,power cut</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/c6a8j5w9/Untitled-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/c6a8j5w9/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>சென்னையில் 13.07.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><h2>மின் தடை ஏற்படும் இடங்கள்</h2><p><strong>ஆவடி</strong>: சிவசங்கரபுரம், ஜாக் நகர், குளக்கரை தெரு, சி.டி.எச். சாலை , சரஸ்வதி நகர், அண்ணா நகர் 1 முதல் 4வது தெருக்கள் வரை, எம்.ஜி.ஆர். நகர், நேரு நகர், வைஷ்ணவி நகர் 1 முதல் 10வது தெருக்கள் வரை, சாந்திபுரம், ஸ்ரீதேவி வைஷ்ணவி நகர் எ மற்றும் பி தெருக்கள், இந்திரா காந்தி நகர், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, டி.ஆர்.ஆர். தெரு, நேதாஜி நகர், முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரி, செக் போஸ்ட், என்.எம். சாலை, திருமலைராஜபுரம், நந்தவனம் மேட்டூர், கன்னிகாபுரம், நேரு பஜார் , கஸ்தூரிபாய் நகர்.</p><p><strong>அனகாபுத்தூர்</strong>: 7வது பிரதான சாலை, 2வது முதல் 8வது குறுக்குத் தெருக்கள் வரை, காந்தி சாலை, இந்திரா காந்தி தெரு, நேரு தெரு, ராஜாஜி தெரு, கலைஞர் ரோடு, கலைஞர் குறுக்குத் தெரு, பெரியார் தெரு, இளங்கோ தெரு, சிக்னல் ஆபீஸ் சாலை, கிருபா தெரு, லட்சுமி நாராயணன் தெரு, எஸ்.பி.ஐ. காலனி, கிறிஸ்டோபர் 1, 2, மற்றும் 3வது தெருக்கள், மாருதி தெரு, ராதாகிருஷ்ணன் தெரு.</p><p><strong>பம்மல்</strong>: இரட்டை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பிள்ளையார் </a>கோவில் தெரு, ஏழுமலை தெரு, நந்தனார் தெரு, நடராஜன் தெரு, பஜனை கோவில் தெரு, தேவதாஸ் தெரு, ராமானுஜம் தெரு, ரங்கசாமி தெரு, எச்.ஐ. காலனி 1வது பிரதான சாலை, தியாகராஜன் தெரு, பிரபாகரன் தெரு, வடிவேல் தெரு, கக்கன் தெரு, மருதுபாண்டி தெரு, வீரராகவன் தெரு, நல்லதம்பி சாலை .</p><p><strong>ஐடி</strong>. காரிடார்: ஹிரானந்தனி அபார்ட்மெண்ட்ஸ், ரேடியன்ஸ் அபார்ட்மெண்ட்ஸ், ஒலிம்பியா பனாசே மற்றும் ஒலிம்பியா ஓபலைன் அபார்ட்மெண்ட்ஸ், ஓ.எம்.ஆர். சாலை, நாவலூர், விஜயகணபதி நகர், எகாட்டூர் கிராமம், எமாமி தேஜோமயா அபார்ட்மெண்ட், முட்டுக்காடு, கானத்தூர் கிராமம், ஸ்ரீனிவாசா அபார்ட்மெண்ட், டிவிஎச் டாஸ் அபார்ட்மெண்ட், விர்டூசா எச்.டி. சேவை (எண்: 636), இந்தஸ் அனந்த்யா அபார்ட்மெண்ட், கிரியேஷன்ஸ் அபார்ட்மெண்ட்.</p><p><strong>பெசன்ட் நகர்</strong>: சாஸ்திரி நகர் காமராஜர் சாலை, வால்மீகி தெரு, கலாஷேத்ரா சாலை மற்றும் அவென்யூ, லட்சுமிபுரம், ஸ்ரீ ராம் நகர், குமரகுரு 1 முதல் 4வது தெருக்கள் வரை, பிள்ளையார் கோயில் தெரு , முத்துலட்சுமி தெரு.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோவை: ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்ட 3 மாடி வணிக வளாகம் - கோர்ட்டு உத்தரவின்படி இடித்து அகற்றம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-three-storey-commercial-complex-built-on-encroached-land-demolished-following-court-order</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-three-storey-commercial-complex-built-on-encroached-land-demolished-following-court-order#comments</comments><guid isPermaLink="false">7baf95e6-2a81-434b-83c9-a43f0d1db152</guid><pubDate>Sun, 12 Jul 2026 15:52:01 +0000</pubDate><atom:updated>2026-07-12T15:52:01.578Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/mgt8tcvj/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/mgt8tcvj/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவை ஆவாரம்பாளையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான ரிசர்வ் சைட் இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 11 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட 3 மாடி வணிக வளாகத்தை நீதிமன்ற உத்தரவுப்படி மாநகராட்சி அதிகாரிகள் இடித்தனர்.</p><p>தாமோதரன் என்பவர் இந்த அரசு நிலத்தை ஆக்கிரமித்து கடைகள் கட்டி, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகைக்கு விட்டு வந்துள்ளார். இதுகுறித்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வரை சென்ற மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த இடத்தை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதன்படி இன்று வணிக வளாக கட்டிடம் இடித்து அகற்றபப்ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>வேலூர் கிரீன் சர்கிள் பகுதியில் புதிய சுரங்கப்பாதை பணிகள்: போக்குவரத்து மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-subway-construction-work-in-the-vellore-green-circle-area-traffic-diversion</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-subway-construction-work-in-the-vellore-green-circle-area-traffic-diversion#comments</comments><guid isPermaLink="false">b9014a78-4b2e-4cf8-8809-3a376df7b3a8</guid><pubDate>Sun, 12 Jul 2026 15:35:18 +0000</pubDate><atom:updated>2026-07-12T15:35:18.132Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vellore,வேலூர்,work,போக்குவரத்து மாற்றம்,Subway,traffic diversion,சுரங்கப்பாதை பணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/l157mr07/traffic-changes.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ போக்குவரத்து மாற்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/l157mr07/traffic-changes.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வேலூர்,</p><p>வேலூர் கிரீன் சர்கிள் பகுதியில் புதிய சுரங்கப்பாதை பணிகள் நடைபெறுவதை ஒட்டி, இன்று முதல் முக்கிய <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">போக்குவரத்து மாற்றங்கள்</a> செய்யப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.</p> <p>பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் வசதிக்காக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்ற விவரங்கள் பின்வருமாறு:</p><p><strong>1. பெங்களூரு நோக்கிச் செல்லும் வாகனங்கள்.</strong></p><p> காட்பாடி மற்றும் சத்துவாச்சாரி சாலைகளில் இருந்து பெங்களூரு நோக்கிச் செல்லும் வாகனங்கள், கிரீன் சர்கிள் பகுதியிலிருந்து நேரடியாக பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலைக்குள் செல்ல அனுமதி இல்லை. இந்த வாகனங்கள் நேஷனல் தியேட்டர் சந்திப்பில் வலதுபுறமாக திரும்பி அதன் பின்னர் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலை வழியாக தங்களது பயணத்தைத் தொடரலாம்.</p><p><strong>2. சித்தூர் மற்றும் காட்பாடி நோக்கிச் செல்லும் வாகனங்கள்.</strong></p><p> சென்னை மற்றும் சத்துவாச்சாரி பகுதிகளில் இருந்து சித்தூர் மற்றும் காட்பாடி நோக்கிச் செல்லும் வாகனங்கள், கிரீன் சர்கிளிலிருந்து நேரடியாக சித்தூர் சாலைக்கு செல்ல கூடாது. அதற்கு பதிலாக, நேஷனல் தியேட்டர் சந்திப்பு வரை நேராக சென்று, அங்கிருந்து யூ-டர்ன் (U-Turn) எடுத்து மீண்டும் கிரீன் சர்கிளை அடைய வேண்டும். பின்னர் இடதுபுறமாகத் திரும்பி வழக்கமான சாலை வழியாகச் செல்லலாம்.</p> <p><strong>3. சென்னை நோக்கிச் செல்லும் வாகனங்கள்.</strong></p><p> பழைய பேருந்து நிலையம் (சி.எம்.சி அவுட்கேட் வழியாக) மற்றும் பழைய பைபாஸ் சாலை ஆகிய இருவேறு வழிகளில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள், நேஷனல் தியேட்டர் சந்திப்பை கடந்து வலதுபுறமாக திரும்ப வேண்டும். பின்னர் கிரீன் சர்கிளை அடைந்து, நேரடியாக சென்னை தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலைக்கு செல்லாமல், இடதுபுறமாக திரும்பி, அடுத்து வரும் வலதுபுற யூ-டர்னில் (U-Turn) திரும்பி தங்களது பயணத்தை தொடர வேண்டும்.</p><h2>முழு ஒத்துழைப்பு</h2><p>இன்று முதல் இந்த புதிய போக்குவரத்து மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. எனவே, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவரும் இந்த தற்காலிக மாற்றத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>வியாசர்பாடி விளையாட்டுத் திடலை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/corporation-commissioner-inspects-vyasarpadi-playground</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/corporation-commissioner-inspects-vyasarpadi-playground#comments</comments><guid isPermaLink="false">7eab837f-6b83-43b7-8a3f-5c21e8107650</guid><pubDate>Sun, 12 Jul 2026 15:15:42 +0000</pubDate><atom:updated>2026-07-12T15:15:42.617Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,வியாசர்பாடி,Vyasarpadi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/qrufmean/Untitled-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/qrufmean/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, வியாசர்பாடி, சர்மா நகரில் உள்ள விளையாட்டுத் திடல் மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தினை மாநகராட்சி ஆணையாளர் ஜி. எஸ்.சமீரன் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.</p><h2>மாநகராட்சி ஆணையர் ஆய்வு</h2><p>இன்று (12.07.2026) பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி தண்டையார்பேட்டை மண்டலம், வியாசர்பாடி, சர்மா நகரில் உள்ள விளையாட்டுத் திடல் மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விளையாட்டுத் திடலில் இருந்த இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களிடம் கலந்துரையாடி, தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.</p><p>இதனைத் தொடர்ந்து, விளையாட்டுத் திடல் மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தினை மேம்படுத்துதல், குத்துச்சண்டை பயிற்சிக் கூடம் அமைத்தல், பெண்களுக்கான உடற்பயிற்சிக் கூடம் அமைத்தல், கிரிக்கெட் வளைப் பயிற்சி அமைத்தல், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>இந்த ஆய்வின்போது இணை ஆணையர் (பணிகள்) செ.சரவணன், மண்டல அலுவலர் ராஜ்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஒதியத்தூர் அம்பேத்கர் சிலையை  மீண்டும் திறந்திட வேண்டும் - மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ambedkar-statue-in-othiyathur-must-be-reopened-marxist-party-urges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ambedkar-statue-in-othiyathur-must-be-reopened-marxist-party-urges#comments</comments><guid isPermaLink="false">1d972dbc-456b-4b9c-9fc6-fe29fc77ed6e</guid><pubDate>Sun, 12 Jul 2026 15:05:35 +0000</pubDate><atom:updated>2026-07-12T15:05:35.749Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வலியுறுத்தல்,சிலை,statue,அம்பேத்கர்,Ambedkar,to insist,Communist Party of India (Marxist),மார்க்சிஸ்ட் கம்ப்யூனிஸ்ட் கட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/vw1ztxz8/communist.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/vw1ztxz8/communist.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஒதியத்தூர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88">அம்பேத்கர் சிலையை</a> மீண்டும் திறந்திட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><h2>வலியுறுத்துகிறது</h2><p>சேலம் மாவட்டம், கெங்கவள்ளி வட்டம், ஒதியத்தூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணல் அம்பேத்கர் சிலை உடனடியாக மீண்டும் திறந்து வைக்கப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசையும் சேலம் மாவட்ட நிர்வாகத்தையும் வலியுறுத்துகிறது.</p><h2>கோரிக்கை</h2><p>சேலம் மாவட்டம், கெங்கவள்ளி வட்டம், ஒதியத்தூர் கிராமத்தில் அம்பேத்கர் சிலை கால் மேல் கால் போட்டு அமர்ந்த நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இச்சிலையை திறப்பதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில், சிலையை திறக்க வேண்டும் என்று வலியுறுத்திய தலித் மக்களின் கோரிக்கையை ஏற்று, மாவட்ட நிர்வாகம் இச்சிலையை திறந்து வைத்துள்ளது.</p> <h2>அடிபணிந்து </h2><p>இதனால் ஆத்திரமுற்ற ஒரு தரப்பினர், சிலையை உடனடியாக மூட வேண்டும் என்று மீண்டும் பலமான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். அவ்வாறு சாதிய மனப்பான்மையுடன் எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொண்டு, சிலை திறந்து வைக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்த வேண்டிய மாவட்ட நிர்வாகம், சாதிய மனநிலையுடன் கூடியவர்களின் அழுத்தத்திற்கு அடிபணிந்து அண்ணல் அம்பேத்கர் சிலையை மீண்டும் துணியால் மூடி அடைத்துவிட்டது.</p><h2>கண்டனம்</h2><p>இத்தகைய சூழ்நிலையில், அம்பேத்கர் சிலைக்கு இழைக்கப்பட்ட சாதிய ரீதியான இந்த அநீதிக்கு எதிராக உடனடியாக சிலையை திறக்க வேண்டும் என்று போராட்டம் நடத்திய தலித் மக்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதும், தலித் பகுதியை சேர்ந்த சிலரைக் கைது செய்திருப்பதும் கண்டிக்கத்தக்கது.</p><h2>வன்கொடுகைகள் தடுப்பு சட்டம்</h2><p>எனவே, மாவட்ட நிர்வாகம் ஒதியத்தூர் அம்பேத்கர் சிலையை உடனடியாக திறந்து வைத்திட வேண்டும். சட்டவிரோதமாக சிலையை மூடிய அரசு அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும், சாதிய மனநிலையோடு சிலையைத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், நீதிக்காகப் போராடியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கள்ளக்குறிச்சியில் போக்சோ வழக்கு குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது - கலெக்டர் நடவடிக்கை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pocso-case-convict-in-kallakurichi-arrested-under-the-goondas-act-collector-takes-action</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pocso-case-convict-in-kallakurichi-arrested-under-the-goondas-act-collector-takes-action#comments</comments><guid isPermaLink="false">922b703d-8006-4041-b76b-7452f4cb7533</guid><pubDate>Sun, 12 Jul 2026 14:49:09 +0000</pubDate><atom:updated>2026-07-12T14:49:09.475Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கள்ளக்குறிச்சி,Kallakurichi,போக்சோ</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/40ynuxb8/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/40ynuxb8/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சி,</p><p>கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட புகாரில் சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பன் மகன் ராமு (47) என்பவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்யப்பட்டார். </p><p>இந்நிலையில், கைது செய்யப்பட்ட ராமுவின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் வகையில், அவரை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் பத்மஜா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>உடற்பயிற்சி அளிக்க ஆசிரியர்களுக்கு முதல்முறையாக பாடப்புத்தகங்கள் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/physical-education-textbooks-for-teachers-for-the-first-time-school-education-department-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/physical-education-textbooks-for-teachers-for-the-first-time-school-education-department-announcement#comments</comments><guid isPermaLink="false">d420f899-0efe-4f56-a144-3aa292b52cf8</guid><pubDate>Sun, 12 Jul 2026 14:08:18 +0000</pubDate><atom:updated>2026-07-12T14:08:18.620Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>education,உடற்பயிற்சி,ஆசிரியர்கள்,பாடப்புத்தகங்கள்,Education Department,பள்ளிக்கல்வித் துறை,Physical</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/u26bibu9/education-department.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பள்ளிக்கல்வித் துறை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/u26bibu9/education-department.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில், <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">தமிழக பள்ளிக்கல்வித்துறை</a> மிக முக்கிய அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 6 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தரமான உடற்கல்வி பயிற்சி அளிப்பதற்காக, ஆசிரியர்களுக்கு முதல்முறையாக பாடத்திட்டங்கள் அடங்கிய பிரத்யேக பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.</p><h2>ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு</h2><p>இந்த வரலாற்று சிறப்புமிக்க திட்டத்திற்காக தமிழக அரசு சுமார் 2 கோடி ரூபாய் (ரூ.1.93 கோடி) நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் நிதியிலிருந்து இந்த செலவினங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><h2> ரூ.58,000-க்கும் அதிகமான பள்ளிகள் பலன்</h2><p>இத்திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 58,985 பள்ளிகளுக்கு உடற்கல்வி நூல்கள் அச்சிடப்பட்டு வழங்கப்பட உள்ளன. மொத்தமாக 2 லட்சத்து 68 ஆயிரம் புத்தகங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு வழிகளிலும் அச்சிடப்பட்டு வருகின்றன. இந்த புத்தகங்கள் அனைத்தும் முழுமையாக தயாராகி, அடுத்த வாரம் முதல் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p> <p>இதன் மூலம் பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகள் பிற பாட வேளைகளாக மாற்றப்படுவது தடுக்கப்பட்டு, மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் விளையாட்டு திறமை மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நிச்சயம்: அண்ணாமலை பேச்சு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/like-2026-regime-change-is-certain-in-2031-annamalai-speech</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/like-2026-regime-change-is-certain-in-2031-annamalai-speech#comments</comments><guid isPermaLink="false">19d9917a-c735-406a-baf8-fc470fde7a55</guid><pubDate>Sun, 12 Jul 2026 13:55:18 +0000</pubDate><atom:updated>2026-07-12T13:55:18.903Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவை,Annamalai,அண்ணாமலை,WeTheLeaders</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/l2uxhy0f/annamalai333.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/l2uxhy0f/annamalai333.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆக்சிப்பட்டியில் வி த லீடர்ஸ் மாநாட்டில் அண்ணாமலை பேசியதாவது:-</p><h2>ஒரு அரசியல் இயக்கம்</h2><p>38 நாட்களில் 19 லட்சம் பேர் இந்த அமைப்பில் இணைந்துள்ளனர். இது என் குடும்ப கட்சி இல்லை. ஜூன் 5-ல் ஆரம்பிக்கப்பட்ட வி த லீடர்ஸ் அமைப்பு ஒரு அரசியல் இயக்கம். இன்றுடன் 38-வது நாள். </p><p>பெண்கள், கல்லூரி மாணவிகளை பார்க்கும்போது நம் இலக்கில் 50 சதவீதம் தாண்டிவிட்டோம் என தெரிகிறது. அமைப்பில் சேர்ந்துள்ள 19 லட்சம் பேரில் 17 சதவீதம் மகளிர் இருக்கிறார்கள். இது நம் வெற்றி. இந்த அமைப்பை பொறுத்தவரை நானும் ஒரு தன்னார்வலர்தான். த<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மிழ்நாட்டில் நல்லவர்கள் இருக்கிறார்கள்.</a> </p><p>இங்கு எல்லாருமே தன்னார்வலர்கள்தான். இங்கு அனைவரும் தலைவர்களாக அமர்ந்திருக்கிறோம்.</p><p>பொள்ளாச்சி மண்ணில் பெரிய எதிர்பார்ப்போடு அனைவரும் நின்றுகொண்டிருக்கிறோம். நல்லவர்கள் பணி செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள் அவர்களுக்கான வாய்ப்பு இங்கு வழங்கப்படும். </p><h2>ஆட்சி மாற்றம்</h2><p>6 மாதங்களும் 6 முக்கிய பிரச்சினைகளை எடுத்து வி த லீடர்ஸ் அமைப்பு நிகழ்ச்சி நடத்த உள்ளது. 2026 போல </p><p>2031-ல் ஆட்சி மாற்றம் நிச்சயம். மற்றுமொரு ஆட்சி மாற்றம் ஏற்படபோகிறது. தலைவர்கள் தானாக வரப்போகிறார்கள். </p><p>ஆகஸ்டில் நதிநீர் சுத்தம், செப்டம்பரில் பெண்கள் நலனுக்கான மாநாடுகளை நாம் நடத்துகிறோம். மது எல்லா இடங்களிலும் கலந்துவிட்டது. தைரியமாக மது குடிக்கும் காலம் வந்திருத்துகிறது.இன்னொரு கட்சியை திட்டுவதற்கு, தலைவர்களை குறை கூறுவதற்கான மாநாடு இது அல்ல.  எத்தனை ஆண்டுகளுக்கு இந்த அமைப்பு இருக்கிறதோ அதுவரை ஜூலையில் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு நடக்கும்.  </p><p>5200 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தமிழ்நாடு முழுவதும் மது நிறைந்துள்ளது. அனைத்து பாலியல் குற்றங்கள் பின்னணியிலும் மது உள்ளது. </p><p>5200 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தமிழ்நாடு முழுவதும் மது நிறைந்துள்ளது. அனைத்து பாலியல் குற்றங்கள் பின்னணியிலும் மது உள்ளது.  கஞ்சாவை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களை நாங்கள் தடுக்க இருக்கிறோம்.</p><h2>தமிழ்நாட்டின் கடன் 15 லட்சம் கோடி</h2><p>தமிழ்நாட்டில் ஒரு ரேஷன் கார்டுக்கு 4.15 லட்சம் கடன் இருக்கிறது. பிரம்மாவே வந்தாலும் தமிழ்நாட்டை இதில் இருந்து காப்பாற்ற முடியாது.  இந்த ஆண்டு தவெக அரசு 85 ஆயிரம் கோடிக்கு குறையாமல் கடன் வாங்கும். இந்த தவெக அரசு ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்யும் போது தமிழ்நாட்டின் கடன் தொகை ரூ. 14 முதல் 15 லட்சம் கோடியாக இருக்கும். அதனை நாம் சரி செய்ய வேண்டும். அதற்கு அந்த இடத்திற்கு நல்ல தலைவர்களை கொண்டு வரவேண்டும்</p><h2>வீ தி லீடர்ஸ் அரசியல் கட்சியாக மாறும் </h2><p> “யார் நம்மைப் பிரித்தாலும், சேவை, தமிழ்நாட்டின் மாற்றம், பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றில் நாம் இணைந்திருக்கிறோம். நல்ல தலைவர்களை, தன்னார்வலர்களை நாம் கீழே அடிமட்டத்தில் இருந்து எடுக்கப்போகிறோம். அவர்களை மக்களின் வேட்பாளராக நிற்கவைத்து, எம்.எல்.ஏ.வாக, அமைச்சராக, எம்.பி.யாக மாற்றப்போகிறோம். வீ தி லீடர்ஸ் அரசியல் கட்சியாக மாறப்போகிறது. </p><h2>நான் முதலில் இந்தியன்</h2><p>நாட்டிலேயே தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றுவோம். மதுவை ஒழிப்பது மட்டும் நோக்கம் அல்ல, மது குடிப்பவர்களை திருத்துவோம்.  நான் தேசியவாதி, நான் முதலில் இந்தியன், இரண்டாவது தமிழன்.</p><p>பண்பாட்டு மீட்சி, ஆட்சியிலே புரட்சி என்பதும் எங்களின் தாரக மந்திரம். </p><h2>தவெகவில் அனைவரும் புதியவர்கள்</h2><p>கோவில் நிலத்தை வைத்து ஆக்கிரமிப்பு என்ற பெயரில் திமுகவினர் அரசியல் செய்தனர். கரூரில் கோவில் நிலத்தில் குடியிருந்தவர்களுக்கு தவெக அரசு அதை கொடுப்பதாக உறுதி அளித்துள்ளது. மதத்தின் அடிப்படையில் நான் இந்து. உங்களுக்கு உங்கள் மதம் பெரிது. எனக்கு என் மதம் பெரிது. ஆனால் அது வீட்டில் மட்டுமே. சாதி, மதம், சாதியை வீட்டில் வைத்து பூட்டி விட்டு அனைவருக்கும் பொதுவானவராக வருகிறேன். </p><p>வி த லீடர்ஸ் -ல் தலைவர் கிடையாது. பேனர், புகைப்பட கலாசாரம் இல்லை. தவெகவில் அமைச்சர்கள் அனைவரும் புதியவர்கள், தடுமாறுவார்கள். அவர்களை நாம் தூக்கிவிடத்தான் வேண்டும். மூர்க்கத்தனமாக, அதிகாரத்தை பிடிக்க நாம் வரவில்லை. நல்ல நோக்கத்துடன் நம் அரசியல் இருக்கும். </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><p>முன்னதாக போதைப்பொருள் ஒழிப்பில் தேசிய முன்னோடி மாநிலமாக தமிழகத்தை மாற்றுவது உட்பட 6 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர் பாடல் அண்ணாமலை மாநாட்டில் ஒளிபரப்பட்டது.  அண்ணாமலை தொடங்கிய வி த லீடர்ஸ் அமைப்பின் செயலி மாநாட்டில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.  அண்ணாமலை வி த லீடர்ஸ் மாநாட்டில் பங்கேற்றவர்கள் அனைவரும் எழுந்து நின்று உறுதிமொழி ஏற்றனர்.  போதைப்பொருள் பயன்படுத்த மாட்டோம், போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. </p>]]></content:encoded></item><item><title>வால்பாறை அருகே தேயிலைத் தோட்டத்தில் புகுந்த காட்டுயானை; எச்சரிக்கை விடுத்த வனத்துறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-enters-tea-estate-near-valparai-forest-department-issues-warning</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-enters-tea-estate-near-valparai-forest-department-issues-warning#comments</comments><guid isPermaLink="false">22a7d67e-58c4-4b98-add3-cb892adf13dc</guid><pubDate>Sun, 12 Jul 2026 13:35:44 +0000</pubDate><atom:updated>2026-07-12T13:35:44.621Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வால்பாறை,வனத்துறை,எச்சரிக்கை,காட்டுயானை,தேயிலைத் தோட்டம்,A wild elephant,Forest Department warns,valparai tea estate</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/2d92t790/wild-elephant.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காட்டுயானை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/2d92t790/wild-elephant.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வால்பாறை, </p><p>கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் ஏராளமான தேயிலை எஸ்டேட்டுகள் உள்ளன. இந்த எஸ்டேட் பகுதிகளில் ஆங்காங்கே பலா மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. தற்போது பலாப்பழ சீசன் என்பதால், பழங்களின் வாசனைக்கு ஈர்க்கப்பட்டு வனப்பகுதியில் இருந்து காட்டுயானைகள் எஸ்டேட்டுக்குள் நுழைவது தொடர்கதையாகி வருகிறது.</p><p>இந்த எஸ்டேட் பகுதிகளில் காட்டுயானைகள் கூட்டம், கூட்டமாகவும், சில நேரங்களில் ஒற்றையானையாகவும் தொடர்ந்து சுற்றித்திரிந்து வருகின்றன. இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் பீதியடைந்துள்ளனர். </p> <h2>பலாப்பழம் அருகே ஒற்றையானை</h2><p>இந்த நிலையில், நேற்று மதியம் வால்பாறை அருகே உள்ள குரங்குமுடி எஸ்டேட் தேயிலை தோட்டத்திற்குள் திடீரென ஒற்றை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88">காட்டுயானை</a> ஒன்று புகுந்தது. பட்டப்பகலில் வந்த அந்த யானை, அங்கிருந்தஅங்கிருந்த பலா மரத்தின் அருகே நின்றுகொண்டிருந்தது.</p> <h2>யானை பதுங்கியது</h2><p>அப்போது அந்த வழியாக பேருந்து ஒன்று வந்தது. பேருந்தின் சத்தம் கேட்டதும், பலாப்பழம் அருகே நின்று கொண்டிருந்த அந்த காட்டுயானை, சட்டென்று பலா மரத்தின் அடியில் சென்று மறைந்து பதுங்கி கொண்டது. பேருந்திற்கு வழிவிடுவது போலவும், தன்னை மறைத்து கொள்வது போலவும் அந்த யானை செய்த செயல் அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.</p><h2>பயணிகள் ரசிப்பு</h2><p> பேருந்துக்குள் இருந்த பயணிகள், பட்டப்பகலில் மிக அருகில் யானை பதுங்கி நின்ற இந்த அபூர்வ காட்சியை தங்கள் மொபைல் போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.</p><h2>வனத்துறை எச்சரிக்கை</h2><p>தற்போது வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் பலாப்பழ சீசன் தீவிரமடைந்துள்ளதால், காட்டுயானைகளின் நடமாட்டம் பலமடங்கு அதிகரித்துள்ளது. எனவே, தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை வெளிவட்ட சாலை, பொதுச் சொத்தா?.. தனியார் லாபக் கருவியா? - வேல்முருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-chennai-outer-ring-road-a-public-asset-or-a-private-profit-tool-velmurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-chennai-outer-ring-road-a-public-asset-or-a-private-profit-tool-velmurugan#comments</comments><guid isPermaLink="false">0337e166-b2f6-481c-8e84-2296585db879</guid><pubDate>Sun, 12 Jul 2026 13:11:11 +0000</pubDate><atom:updated>2026-07-12T13:11:11.770Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Velmurugan,வேல்முருகன்,தி.வேல்முருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/mkzuvhwe/velmurugan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/mkzuvhwe/velmurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>மக்கள் நல ஆட்சிக்கு ஏற்றதல்ல</h2><p>சென்னை வண்டலூர் முதல் மீஞ்சூர் வரை நீளும் வெளிவட்டச் சாலை என்பது தமிழ்நாட்டின் பொருளாதார ஓட்டத்தைத் தாங்கி நிற்கும் முக்கியபா பொதுச் சொத்து. சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, சரக்குப் போக்குவரத்தையும் தொழில் வளர்ச்சியையும் வேகப்படுத்தும் இந்தக் கட்டமைப்பை, நீண்டகால வருமான உரிமையுடன் தனியாரிடம் ஒப்படைக்க முயற்சிக்கப்படுவது மிகுந்தக் கவலைக்குரியது.</p><p>தமிழ்நாடு அரசு மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கிய உள்கட்டமைப்பின் பயனை, பல ஆண்டுகள் தனியார் நிறுவனம் அனுபவிக்கும் வகையில் ஒப்பந்தம் செய்வது, எந்த வகையிலும் மக்கள் நல ஆட்சிக்கு ஏற்றதல்ல. இன்று கிடைக்கும் தொகையைக் காரணம் காட்டி, நாளைய தலைமுறைகளுக்குச் சொந்தமான தொடர்ச்சியான வருவாயைக் கைவிடுவது, பொருளாதார தொலைநோக்கின்மையின் வெளிப்பாடாகும்.</p><p>இந்தச் சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. தொழில் வளர்ச்சி, நகர விரிவாக்கம், வாகனப் பெருக்கம் ஆகியவற்றால் எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை பல மடங்கு உயரும் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. </p><h2>பதிலளிக்க வேண்டும்</h2><p>இத்தகைய மக்களுக்கு பயன் தரும் பொதுச் சொத்தை, மிகக் குறைந்த மதிப்பில் நீண்டகாலத்திற்கு தனியாரிடம் ஒப்படைப்பது, அரசின் நிதி நலனுக்கும் மக்களின் உரிமைக்கும் எதிரான நடவடிக்கையாகவே பார்க்கிறோம். பொதுச் சொத்துகளை தனியார் கைகளில் ஒப்படைப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல்.</p><p>இந்த ஒப்பந்தம் தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்கள் அனைத்தும் வெளிப்படையான முறையில் விளக்கப்பட வேண்டும். சொத்தின் உண்மையான பொருளாதார மதிப்பு என்ன? வருங்கால வருவாய் கணக்கீடு என்ன? ஏன் அரசே பராமரிக்கக்கூடாது? என்ற கேள்விகளுக்கு தமிழக அரசு மக்களிடம் தெளிவாகப் பதிலளிக்க வேண்டும்.</p><p>தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில், சென்னை வெளிவட்டச் சாலைத் தொடர்பான தனியார் ஒப்பந்த முயற்சியை, தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இந்த ஒப்பந்தத்தின் அனைத்து நிதி, தொழில்நுட்ப மற்றும் சட்ட விவரங்களையும் பொதுமக்கள் பார்வைக்கு வெளிப்படையாக வெளியிட வேண்டும். மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட பொதுச் சொத்துகள், தலைமுறைத் தலைமுறையாக மக்களுக்கே பயன்பட வேண்டுமே தவிர, சில தனியார் நிறுவனங்களின் நீண்டகால இலாபத்திற்கான கருவிகளாக மாற்றப்படக் கூடாது. பொதுச் சொத்துகளைப் பாதுகாப்பதும், மக்களின் பொருளாதார உரிமைகளை நிலைநிறுத்துவதும், அரசின் அடிப்படைப் பொறுப்பு என்பதை தமிழக அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>நாகர்கோவில்: மலிவு விலை சேலைக்கு ஆசைப்பட்டு ஜவுளிக்கடை கண்ணாடியை உடைத்த பெண்களால் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nagercoil-commotion-caused-by-women-who-smashed-a-textile-shops-glass-window-in-their-eagerness-to-get-low-priced-sarees</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nagercoil-commotion-caused-by-women-who-smashed-a-textile-shops-glass-window-in-their-eagerness-to-get-low-priced-sarees#comments</comments><guid isPermaLink="false">a121e246-c602-4569-a502-5db00b3f829c</guid><pubDate>Sun, 12 Jul 2026 12:54:13 +0000</pubDate><atom:updated>2026-07-12T12:54:13.101Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nagercoil,நாகர்கோவில்,துணிக்கடை,Saree,சேலை,clothes shop,Low price,குறைந்த விலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/gso49qzr/dress-shop.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாகர்கோவில் துணிக்கடை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/gso49qzr/dress-shop.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாகர்கோவில்,</p><p> நாகர்கோவில் மாவட்டத்தின் மையப்பகுதியான மீனாட்சிபுரத்தில் பிரபல <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9C%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88">ஜவுளிக்கடை</a> ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் விளம்பரம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.அதில், குறிப்பிட்ட நாளான இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை, ஒரு புடவை வெறும் 99 ரூபாய்க்கு சிறப்பு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.</p><h2>நீண்ட வரிசையில் பெண்கள் </h2><p>இந்த அதிரடி சலுகை அறிவிப்பை தொடர்ந்து, நாகர்கோவில் நகர் மட்டுமின்றி, சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பெண்கள் அதிகாலையிலேயே கடை முன்பு குவிய தொடங்கினர். விடிவதற்கு முன்பாகவே, அதாவது அதிகாலை முதலே பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.நேரம் செல்ல செல்ல கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதியது. இதனால் அந்தப் பகுதியே மக்கள் கடலாக காட்சியளித்தது.</p><h2>கண்ணாடி உடைந்தது</h2><p> கடையின் ஷட்டர் திறக்கப்பட்டவுடன், ஆபர் சேலைகளை முன் கூட்டியே வாங்குவதற்காக பெண்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக்கொண்டு கடையின் உள்ளே பாய்ந்தனர். இதனால் அங்கு பயங்கர தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நெரிசலை தாங்க முடியாமல் கடையின் முன்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான நுழைவாயில் கண்ணாடி பயங்கர சத்தத்துடன் உடைந்து நொறுங்கியது. </p><p>கண்ணாடி சிதறியதை கண்டு அதிர்ச்சியடைந்த பெண்கள் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில் சில பெண்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.</p><h2> கடை மூடல்</h2><p>இதுகுறித்து தகவல் அறிந்த நாகர்கோவில் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். எனினும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். இறுதியில், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, ஜவுளிக்கடையை உடனடியாக மூடுமாறு போலீசார் அதிரடியாக உத்தரவிட்டனர்.</p><p>அங்கு திரண்டிருந்த ஏமாற்றமடைந்த பெண்கள் கூட்டத்தை கலைந்து போக செய்தனர். மலிவு விலை சேலைக்கு ஆசைப்பட்டு ஜவுளிக்கடை கண்ணாடியே உடைந்த சம்பவம், நாகர்கோவிலில் இன்று பெரும் பரபரப்பான பேச்சாக மாறியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அண்ணாமலையின்  ‘வீ த லீடர்ஸ்’ முதல் மாநில மாநாடு தொடங்கியது ; திரளானவர்கள் பங்கேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/annamalais-we-the-leaders-first-state-conference-begins</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/annamalais-we-the-leaders-first-state-conference-begins#comments</comments><guid isPermaLink="false">105c2f38-bbc1-4748-bc0e-16c1ce6690c0</guid><pubDate>Sun, 12 Jul 2026 12:45:02 +0000</pubDate><atom:updated>2026-07-12T12:45:02.974Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவை,Annamalai,அண்ணாமலை,tnpolitics</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/jrmihi65/malai33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/jrmihi65/malai33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>பாஜக முன்னாள் மாநில தலைவராக இருந்தவர் அண்ணாமலை. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அவர், அந்த கட்சியில் இருந்து விலகி ‘வீ த லீடர்ஸ்’ என்ற இயக்கத்தை நிறுவினார். அந்த இயக்கத்தில் லட்ச கணக்கானோர் இணைந்துள்ளனர். இயக்கத்தில் உள்ளவர்களை அரசியல் மயப்படுத்தும் பணிகளை அவர் தொடங்கி உள்ளார்.</p><p>தமிழகம் முழுவதும் பல்வேறு முக்கிய விவகாரங்களை சுட்டிக்காட்டி, அது தொடர்பான கருத்துக்களை ‘வீ த லீடர்ஸ்’ இயக்கம் வெளிப்படுத்தி வருகிறது.</p><p>இந்நிலையில், போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் முழக்கத்துடன் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை ‘வீ த லீடர்ஸ்’ இயக்கம் ஒருங்கிணைத்து வருகிறது. நடைபயணம், மாரத்தான், சைக்கிள் பயணம் உள்ளிட்டவை இதில் அடங்கும்.</p><p>இந்நிலையில், <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அண்ணாமலை </a>தொடங்கி உள்ள வி த லீடர்ஸ் அமைப்பின் முதல் மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. கோவை பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் நடைபெறும் மாநாட்டில் அண்ணாமலை பேசுகிறார். போதையில்லா தமிழகம் என்ற பெயரில் நடக்கும் விழிப்புணர்வு மாநாட்டில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.  மாநாட்டு அரங்கில் 20 ஆயிரம் பேர் அமரும் வகையில் ஏற்பாடு செய்யபப்ட்டுள்ளது. திடலுக்கு வெளியே எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளது. </p><p>பாஜகவில் இருந்து வெளியேறிய பிறகு அண்ணாமலை நடத்தும் முதல் மாநாடு என்பதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல் வியூகங்கள் தொடர்பாக அண்ணாமலை பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி மாஞ்சோலை எஸ்டேட் வனத்துறையிடம் ஒப்படைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/manjolai-estate-handed-over-to-the-forest-department-in-accordance-with-the-supreme-courts-order</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/manjolai-estate-handed-over-to-the-forest-department-in-accordance-with-the-supreme-courts-order#comments</comments><guid isPermaLink="false">932baf89-56b9-41ad-8fd4-53676a326702</guid><pubDate>Sun, 12 Jul 2026 12:30:55 +0000</pubDate><atom:updated>2026-07-12T12:30:55.580Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,சுப்ரீம் கோர்ட்டு,மாஞ்சோலை,Manjolai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/lwga9lra/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/lwga9lra/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,  </p><p>நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அமைந்திருக்கக்கூடிய மாஞ்சோலை எஸ்டேட் பகுதி, மிகப் பிரபலமான தேயிலை தோட்டமாக விளங்கி வருகிறது. இந்த பகுதி பல்வேறு வனவிலங்குகளின் வாழ்விடமாகவும் உள்ளது. யானைகள், சிறுத்தைகள், கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளும் இங்கு உள்ளன.</p><p>இதற்கிடையில், சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வலியுறுத்தி, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் நேரடி கண்காணிப்பில இந்த அடர்வனப் பகுதிகளை முழுவதும் கொண்டு வர வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவின்படி தற்போது அந்த மாஞ்சோலை வனப்பகுதி முழுவதுமே வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. </p><p>ஏற்கனவே மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த சூழலில், தற்போது இந்த மாஞ்சோலை எஸ்டேட் தேயிலை தோட்டம் முழுவதுமே வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையானது இன்று முதல் அமலுக்கு வந்ததாகவும் வனத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. </p><p>முன்னதாக மாஞ்சோலையில் பி.பி.டி.சி. தேயிலை நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவுற்ற நிலையில், தற்போது மாஞ்சோலை எஸ்டேட் முழுவதும் வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான அந்த நகலும் அந்த பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. </p> ]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டின் வலுவான மருத்துவக்கட்டமைப்பு சரியான கைகளுக்கு சென்றுள்ளது - ஜோதிமணி பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadus-robust-medical-infrastructure-has-been-entrusted-to-capable-hands-jothimanis-post</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadus-robust-medical-infrastructure-has-been-entrusted-to-capable-hands-jothimanis-post#comments</comments><guid isPermaLink="false">a8e87d9f-d013-4565-8f0a-ba0a8c855155</guid><pubDate>Sun, 12 Jul 2026 12:26:14 +0000</pubDate><atom:updated>2026-07-12T12:26:14.775Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர்,hospital,மருத்துவமனை,ஜோதிமணி,Infrastructure,In Tamil Nadu,Jothimani,தமிழ்நாட்டை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/1vw0mm0b/jothimani-with-minister-aru.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜோதிமணி,சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/1vw0mm0b/jothimani-with-minister-aru.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கரூர்,</p><p>கரூர் எம்பி ஜோதிமணி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:- கரூர் மாவட்ட மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் உடன் இணைந்து, கரூர் புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பழைய அரசு மருத்துவமனை கட்டிடத்தை நேரில் ஆய்வு செய்தோம்.</p><h2>கோரிக்கை</h2><p> அமைச்சர் மிகுந்த பொறுமையுடன் அனைத்து கோரிக்கைகளையும் கவனமாக கேட்டார். தானே ஒரு மருத்துவர் என்பதால், மருத்துவ துறையின் நிலவரத்தையும்,<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"> கரூர் மக்கள்</a> எதிர்கொள்ளும் சிரமங்களையும் மிக நன்றாக புரிந்துகொண்டார். தமிழ்நாட்டின் வலுவான மருத்துவக்கட்டமைப்பு சரியான கைகளுக்கு சென்றுள்ளது என்பதை உறுதியாக உணர்ந்தேன்.</p><h2>கடிதம்</h2><p>புதிய மருத்துவமனையின் செயல்பாடுகளை பார்வையிட்ட பின்னர், தற்போது பயன்பாட்டில் இல்லாத பழைய அரசு மருத்துவமனை கட்டிடத்தை துணை மருத்துவம் &amp; செவிலியர் கல்லூரியாக மாற்றியமைக்க வேண்டும் என முதல்-அமைச்சருக்கும், சுகாதாரத்துறை அமைச்சருக்கும் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளோம்.</p> <p><strong>இக்கல்லூரி நிறுவப்பட்டால்:</strong></p><p>1. கரூர் மாவட்டத்தின் இளைஞர்களுக்கு மருத்துவத் துறையில் உயர்கல்வி பயிற்சி பெறுவதற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும். </p><p>2. மாவட்டத்தில் நிலவும் சுகாதாரப் பணியாளர் பற்றாக்குறை படிப்படியாக நிவர்த்தியாகும். </p><p>3. கரூர் மாவட்டம் சுகாதாரக் கல்வியின் முக்கிய மையமாக உருவெடுக்கும்.</p> <p>மேலும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை வலுப்படுத்த பின்வரும் முக்கிய கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளோம்:</p><p>- மூளை மற்றும் நரம்பியல் சிறப்பு மருத்துவர் &amp; அறுவை சிகிச்சை நிபுணர்கள் (4 பணியிடங்கள் - ரூ, 1 கோடி)</p><p>- 300 படுக்கைகள் கொண்ட மகப்பேறு அவசர சிகிச்சை பிரிவு </p><p>- 200 படுக்கைகள் கொண்ட உயர் சிறப்பு சிகிச்சை பிரிவு </p> <p>- புற்றுநோயாளிகளுக்கான ரேடியோ தெரபி சிகிச்சை மையம் (ரூ. 35 கோடி)</p><p>- ரூ. 3.40 கோடி மதிப்பிலான நவீன மருத்துவ உபகரணங்கள்</p><p>இந்த கோரிக்கைகள் விரைவில் நிறைவேற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ராமேஸ்வரம்: கேரள வாகன ஓட்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டிராபிக் போலீசார் - வைரல் வீடியோ

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tn-traffic-police-argue-with-kerala-driver-in-rameswaram-viral-video</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tn-traffic-police-argue-with-kerala-driver-in-rameswaram-viral-video#comments</comments><guid isPermaLink="false">36fe9776-639a-48c5-a2d0-3ed66aa9013d</guid><pubDate>Sun, 12 Jul 2026 11:58:43 +0000</pubDate><atom:updated>2026-07-12T11:58:43.557Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rameswaram,Viral Video,வைரல் வீடியோ,ராமேஸ்வரம்,Traffic Police</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/71y0gwfh/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/71y0gwfh/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமேஸ்வரம்,</p><p>ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.</p><p>இந்நிலையில், ராமேஸ்வரத்திற்கு வந்த கேரள வாகன ஓட்டியிடம் டிராபிக் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. </p><h2>வைரல் வீடியோ</h2><p>கேரளாவை சேர்ந்த நபர் காரில் ராமேஸ்வரத்திற்கு வந்துள்ளார். ராமேஸ்வரம் - தனுஷ்கோடி சாலையில் அரசு பஸ்சுக்கு பின்னே அந்த கேரள நபர் தனது காரை ஓட்டி சென்றுள்ளார். அப்போது, அவரது காரை இடைமறித்த டிராபிக் போலீசார், இது வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதி ( திஸ் இஸ் நோ எண்ட்ரி) என்று கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த கேரள வாகன ஓட்டி முன்னால் சென்ற அரசு பஸ்சை காட்டி, இவ்வளவு பெரிய பஸ் முன்னே செல்கிறது இது நோ எண்ட்ரி பகுதியா? என்று கேள்வி எழுப்பினார். </p><p>அதற்கு பதில் அளித்த போக்குவரத்து போலீஸ், அது அரசு பஸ்.. என்று கூறினார். அப்போது, அரசு பஸ்சுக்கு ஒரு சட்டம், மற்றவர்களுக்கு ஒரு சட்டமா? என கேள்வி எழுப்பினார். அப்போது, பைக்கில் ஹெல்மெட் அணியாமல் வந்த மற்றொரு டிராபிக் போலீஸ் அதிகாரி, அந்த கேரள நபரின் கார் எண்ணை தனது செல்போனில் புகைப்படம் எடுத்தார். பின்னர், அந்த வாகன ஓட்டியிடம் டிராபிக் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவங்கள் அனைத்தையும் கேரள வாகன ஓட்டி தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. </p>  <figure><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DaqmRY0SEG2/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:658px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DaqmRY0SEG2/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a></div></blockquote>
<script async src="//platform.instagram.com/en_US/embeds.js"></script></figure>]]></content:encoded></item><item><title>தாம்பரம் போலீசார் அதிரடி : 1,100 போதை மாத்திரைகள், 5 கிலோ கஞ்சா பறிமுதல் - 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tambaram-police-take-action-1100-narcotic-pills-5-kg-of-ganja-seized-2-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tambaram-police-take-action-1100-narcotic-pills-5-kg-of-ganja-seized-2-arrested#comments</comments><guid isPermaLink="false">7030ac20-1a22-4950-bdc7-986d734883c4</guid><pubDate>Sun, 12 Jul 2026 11:25:59 +0000</pubDate><atom:updated>2026-07-12T11:25:59.902Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tambaram,தாம்பரம்,கஞ்சா,கஞ்சா கடத்தல்,போதை மாத்திரைகள்,Ganja seized,Narcotic Pills,Chennai Tambaram,தாம்பரம் போலீசார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/ay1pk08c/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/ay1pk08c/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தாம்பரம் போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>தீவிர கண்காணிப்பு</h2><p>தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத போதைப்பொருள் பழக்கத்தை முற்றிலுமாக ஒடுக்கும் பொருட்டு, தாம்பரம் மாநகர காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>இதன் ஒரு பகுதியாக, 11.07.26 அன்று மேற்கு தாம்பரம், முடிச்சூர் சாலையில் உள்ள கூரியர் நிலையத்திற்கு மருத்துவமனையின் பெயரில் சந்தேகத்திற்கிடமான ஒரு பார்சல் வந்திருப்பதாக தாம்பரம் காவல் நிலைய <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">போலீசாருக்கு </a>தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அந்த பார்சலை வாங்குவதற்காக வந்த குரோம்பேட்டை, லட்சுமிபுரத்தைச் சேர்ந்த லீஸ்ரீ என்பவரை மடக்கிப் பிடித்து சோதனையிட்டனர். விசாரணையில், பார்சலில் அரசால் தடை செய்யப்பட்ட 1,100 'Tapentadol' போதை மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன.</p><h2>5 கிலோ கஞ்சா</h2><p>அதேபோல், சிங்கப்பெருமாள் கோவில் காவல் நிலைய போலீசார், காசிமேடு காவல் நிலையத்தின் 'பி' பிரிவு சரித்திரப் பதிவேடு குற்றவாளியான செந்தில் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சா, ரூ. 60,000 ரொக்கப் பணம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட இருவர் மீதும் போதைப்பொருள் மற்றும் மனநிலை மாற்றும் பொருட்கள் தடுப்புச் சட்டம் (NDPS Act)-ன் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.</p><p>தாம்பரம் மாநகர <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">காவல்துறை</a>, நகரில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் இத்தகைய தீவிர நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களை போதைப்பொருள் பழக்கத்திலிருந்து பாதுகாக்கவும், நகரின் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநிறுத்தவும் காவல்துறையின் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விருதுநகர்: சாலை தடுப்புச்சுவர் மீது ஜீப் மோதி விபத்து - 3 பேர் பலி

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/jeep-accident-in-virudhunagar-kills-3</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/jeep-accident-in-virudhunagar-kills-3#comments</comments><guid isPermaLink="false">bcd0b934-c813-4c18-baf7-63de037a1afd</guid><pubDate>Sun, 12 Jul 2026 11:15:17 +0000</pubDate><atom:updated>2026-07-12T11:15:17.422Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,Virudhunagar,விருதுநகர்,ஜீப்,Jeep</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/23nahl69/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/23nahl69/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>விருதுநகர்,</p><p><a href="https://www.dailythanthi.com/">விருதுநகர் </a>மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று மாலை ஜீப் சென்றுகொண்டிருந்தது. அந்த ஜீப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பயணம் செய்தனர்.</p><h2>3 பேர் பலி</h2><p>ஸ்ரீவில்லிபுத்தூர் நத்தம்பட்டி அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.</p><p>இந்த விபத்தில் ஜீப்பில் பயணம் செய்த பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். எஞ்சிய 6 பேர் படுகாயமடைந்தனர். </p><p>தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் குடும்பத்தினர் கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது ஜீப் விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் பள்ளி மாணவர்களுக்காக நாளை முதல் 41 சிறப்பு பேருந்துகள் இயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/41-special-buses-to-operate-for-school-students-in-chennai-from-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/41-special-buses-to-operate-for-school-students-in-chennai-from-tomorrow#comments</comments><guid isPermaLink="false">afb8d141-6077-442e-8d87-d6f7b1282a87</guid><pubDate>Sun, 12 Jul 2026 11:06:03 +0000</pubDate><atom:updated>2026-07-12T11:06:03.177Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,special buses,சிறப்பு பேருந்துகள்,School students,பள்ளி மாணவர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/zsk2mqip/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/zsk2mqip/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>பேருந்து வசதி வேண்டி கோரிக்கை</h2><p>சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ம.அருள் பிரகாசம் சைதாப்பேட்டை தொகுதியில் உள்ள 2 அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பேருந்து வசதி வேண்டி கடந்த 30.06.2026 அன்று போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், கடந்த 10 நாட்களாக சைதாப்பேட்டை மற்றும் பல்வேறு பகுதிகளில், பள்ளிகள் அமைந்துள்ள இடங்களில் மாநகர் போக்குவரத்துக் கழக அலுவலர்களை கொண்டு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதுடன், அப்பகுதிகளைச் சார்ந்த மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கருத்துக்களின் அடிப்படையில் அறிக்கை தயார் செய்யப்பட்டு, தமிழ்நாடு முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.</p><h2>முதல்-அமைச்சர் உத்தரவு</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் உத்தரவின்படி, பள்ளி மாணவர்கள் கூட்ட நெரிசலின்றி, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பாதுகாப்பான </a>பயணம் மேற்கொள்ள வசதியாக, மாணவர்களை அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்களிலிருந்து பள்ளிக்கும், பள்ளியிலிருந்து அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்களுக்கும் காலை மற்றும் மாலை நேரங்களில் அழைத்து சென்றுவர ஏதுவாக, ஏற்கனவே சென்னையில் உள்ள 25 பள்ளிகளுக்கு 25 பேருந்துகள் மூலம் 50 பயண நடைகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் நாளொன்றுக்கு 41 சிறப்பு பேருந்துகள் வாயிலாக 84 பயண நடைகள் 13.07.2026 திங்கட்கிழமை அன்று முதல் இயக்கப்படவுள்ளது. அப்பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் இன்று (11.07.2026) பார்வையிட்டார், உடன் மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் த. மோகன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் இருந்தனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>பயணிகளின் கவனத்திற்கு.. வைகை, சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவையில் மாற்றம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/attention-passengers-change-in-vaigai-and-cholan-express-train-services</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/attention-passengers-change-in-vaigai-and-cholan-express-train-services#comments</comments><guid isPermaLink="false">bcb5a8b9-605c-49c0-bd0e-273363697bf9</guid><pubDate>Sun, 12 Jul 2026 10:17:30 +0000</pubDate><atom:updated>2026-07-12T10:17:30.451Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>train service,வைகை எக்ஸ்பிரஸ்,Vaigai Express,vaigai,வைகை,Cholan Express,சோழன் எக்ஸ்பிரஸ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/088qe234/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/088qe234/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திருச்சிராப்பள்ளி ரெயில்வே கோட்டத்தில் உள்ள பொன்மலை யார்டில் புதிய 8-வது பாதையை (Road No. 8) இயக்கத்துக்கு கொண்டு வரும் பணிகள் நடைபெறுவதால், சில ரெயில்களின் இயக்கத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.</p><h2>எழும்பூர் - மதுரை</h2><p>அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு செல்லும் 12635 வைகை சூப்பர்பாஸ்ட் விரைவு ரெயில், ஜூலை 13, 2026 (திங்கட்கிழமை) பிற்பகல் 1.15 மணிக்கு புறப்படவுள்ளது. இந்த ரெயில் வழித்தடத்தில் சுமார் 40 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.</p><h2>எழும்பூர்- திருச்சி</h2><p>அதேபோல், சென்னை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">எழும்பூரில் </a>இருந்து திருச்சிராப்பள்ளிக்கு செல்லும் 22675 சோழன் சூப்பர்பாஸ்ட் விரைவு ரெயில், ஜூலை 15, 2026 (புதன்கிழமை) காலை 8.00 மணிக்கு புறப்படவுள்ளது. இந்த ரெயிலும் வழித்தடத்தில் 40 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.</p><p>பயணிகள் இதனை கருத்தில் கொண்டு தங்களது பயணத் திட்டங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறு ரெயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மெரினாவில் காங்கிரஸ் சார்பில் காமராஜர் மணற்சிற்பம்: நாளை மாலை திறப்பு!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kamaraj-sand-sculpture-by-congress-in-marina-opening-tomorrow-evening</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kamaraj-sand-sculpture-by-congress-in-marina-opening-tomorrow-evening#comments</comments><guid isPermaLink="false">aee0e844-3a25-44f3-af62-084c7b13d01f</guid><pubDate>Sun, 12 Jul 2026 10:04:41 +0000</pubDate><atom:updated>2026-07-12T10:04:41.370Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,மெரினா கடற்கரை,Marina beach,காமராஜர்,Kamaraj,Sand Sculpture,மணற்சிற்பம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/xe5z71c2/manickam-tagore.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/xe5z71c2/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெருந்தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D124-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88">காமராஜர்124-வது பிறந்த தினத்தை</a> முன்னிட்டு, நாளை  மாலை 5.00 மணியளவில், சென்னை மெரினா கடற்கரையில் (விவேகானந்தர் இல்லம் அருகில்), உலகப்புகழ் பெற்ற மணற்சிற்பக் கலைஞரும் சுற்றுச்சூழல் பாதுகாவலருமான கஜேந்திரன் ஏழுமலையான், காமராஜரின் உருவத்துடன் கூடிய பிரம்மாண்ட மணற்சிற்பத்தை அமைக்கிறார்.</p><h2>காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்பு </h2><p>இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  ப. மாணிக்கம் தாகூர், எம்.பி., சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான எஸ். ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ., காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் டாக்டர் ஏ. செல்லகுமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் கே.வீ.தங்கபாலு,  கே.எஸ்.அழகிரி, அகில இந்திய தொழில் வல்லுநர்கள் காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான  பிரவீன் சக்ரவர்த்தி, எம்.பி., நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் பொருளாளர்  விஜய் வசந்த், எம்.பி, அகில இந்திய காங்கிரஸ் வார் ரூம் தலைவர் சசிகாந்த் செந்தில், எம்.பி., எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி, செல்வி. சுதா ராமகிருஷ்ணன் எம்.பி, மூத்த காங்கிரஸ் தலைவர் சா. பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.</p><h2>மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும்</h2><p>அமைச்சர் பெருமக்கள், முன்னணி காங்கிரஸ் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் பார்வையிடுகின்ற வகையில் 13.07.2026 முதல் 19.07.2026 வரை தொடர்ந்து 6 நாட்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item></channel></rss>