<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 19 Jul 2026 22:11:58 +0000</lastBuildDate><item><title>கீழடியின் பெருமையை உலக அளவில் பறைசாற்றுவோம் - அமைச்சர் ராஜ்மோகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-proclaim-the-glory-of-keeladi-to-the-world-minister-rajmohan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-proclaim-the-glory-of-keeladi-to-the-world-minister-rajmohan#comments</comments><guid isPermaLink="false">5bad7899-6396-4786-b627-e155329ba18c</guid><pubDate>Sun, 19 Jul 2026 19:59:52 +0000</pubDate><atom:updated>2026-07-19T19:59:52.341Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ராஜ்மோகன்,Minister Rajmohan,பள்ளிக் கல்வி அமைச்சர் ராஜ்மோகன்,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan inspects</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/ko7dzwes/rajmohan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/ko7dzwes/rajmohan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை, </p><p>சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியன் கீழடியில் அகழாய்வு நடை பெற்ற இடத்தில் அமைக்கப்பட்டு உள்ள திறந்தவெளி அருங்காட்சிய கத்தை அமைச்சர் ராஜ்மோகன் பார்வையிட்டு நேற்று ஆய்வு செய்தார். தற்போது நடந்து வரும் 11-ம் கட்ட அகழாய்வு தளத்தையும் பார்வை யிட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அமைச்சர் ராஜ்மோகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-</p><p>இதற்கு முந்தைய அரசுகள் செய்த நல்ல திட்டங்களை எந்த துறையாக இருந்தாலும் ஒருபோதும் நிறுத்தப்படாது.</p><h2>மாணவர் சேர்க்கை</h2><p>கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் மற்றும் அறிவியல் சான்றுகளை முறையாக தொகுத்து, மத்திய தொல்லியல் துறையுடன் இணைந்து உலக அளவில் கீழடியின் பெருமையை பறைசாற்ற அரசு தொடர்ந்து பாடுபடும். மாணவர் சேர்க்கை குறைவாக இருந்தாலும் எந்த ஒரு அரசு பள்ளியையும் மூடும் எண்ணம் அரசுக்கு கிடையாது. 10 மாணவர்கள் இருந்தாலும் வீடுவீடாக சென்றாவது மாணவர்களை சேர்த்து பள்ளிகள் தொடர்ந்து நடத்தப்படும்.</p><p>முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எம்.பி. த.வெ.க. அரசின் லஞ்ச ஊழலற்ற நிர்வாகத்தை பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசு பள்ளி களில் காலை உணவுத்திட்டம் விரிவுபடுத்தப்படும். அ.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சியினர் த.வெ.க.வை நோக்கி வருகின்றனர். கட்சியில் இணையும் அனைவரையும் அரவணைத்து செல்வோம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><h2>மலை குகைகளில் ஆய்வு</h2><p>இதேபோல் மதுரை மாவட்டம் மாங்குளம் மீனாட்சிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க இருவகை மலைக்குகைகள் மற்றும் தமிழ் பிராமி கல்வெட்டுகளை அமைச்சர் ராஜ்மோகன் நேரில் பார்வை யிட்டு விரிவான ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், அந்த படுகைகளில் படுத்தும், அமர்ந்தும் ஆய்வு செய்தார்.</p><p>தொடர்ந்து அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ராஜ்மோகன்</a> நிருபர்களிடம் கூறுகையில், "கீழடி அகழாய்வு என்பது தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், உலக நாகரிகத்திற்கே மிகப்பெரிய தாய்மடி போன்றதாகும். எனவே, அறிவியல் பூர்வமாக, இன்னும் கூடுதல் ஆதாரங்களுடன் முறையான வழிகளில் மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்து அது நிரூபிக்கப்பட உள்ளது. சரியான தருணத்தில், நாம் எல்லோரும் பெருமைப்படத்தக்க வகையில் இன்னும் ஒரு மாபெரும் விஷயம் துல்லியமான ஆதாரங்களோடு முறைப்படி விரைவில் அறிவிக்கப்படும்" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>நாமக்கல்லில் கோர விபத்து: மேல்நிலை குடிநீர் தொட்டி விழுந்து 2 பேர் பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/horrific-accident-in-namakkal-2-killed-as-overhead-water-tank-collapses</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/horrific-accident-in-namakkal-2-killed-as-overhead-water-tank-collapses#comments</comments><guid isPermaLink="false">ffb1e302-4be3-4629-aff9-fe9674140608</guid><pubDate>Sun, 19 Jul 2026 19:11:21 +0000</pubDate><atom:updated>2026-07-19T19:11:21.340Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Namakkal,நாமக்கல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/eo0ftv3e/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/eo0ftv3e/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல்,</p><p>நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் அருகே சரக்கு வாகனம் மேல்நிலை குடிநீர் தொட்டியின் தூணில் மோதியதில், தொட்டி வாகனத்தின் மீது சரிந்து விழுந்து டிரைவர் மற்றும் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>குடிநீர் தொட்டியில் மோதியது</h2><p>திருச்செங்கோடு தாலுகா வையப்பமலையில் இருந்து முட்டைகள் ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை நோக்கி நேற்று மாலை சரக்கு வாகனம் ஒன்று புறப்பட்டது. அந்த வாகனத்தை திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (23) ஓட்டிச் சென்றார். அவருடன் மல்லசமுத்திரத்தைச் சேர்ந்த சரக்கு ஏற்றி இறக்கும் தொழிலாளி குமார் (29) பயணம் செய்தார்.</p><p>மல்லசமுத்திரம் அருகே மேட்டுப்பாளையம் சத்யாநகர் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த மேல்நிலை குடிநீர் தொட்டியின் தூண்களில் பலத்த வேகத்தில் மோதியது.</p><h2>2 பேர் பலி</h2><p>இதன் தாக்கத்தில் குடிநீர் தொட்டியின் தூண்கள் முறிந்து, 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி முழுவதுமாக சரக்கு வாகனத்தின் மீது சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் டிரைவர் சுபாஷ் மற்றும் தொழிலாளி குமார் ஆகியோர் வாகனத்துக்குள் சிக்கி உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.</p><p>தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்புப் பணியினர், ராட்சத குடிநீர் தொட்டி வாகனத்தின் மீது விழுந்திருந்ததால் உடல்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு குடிநீர் தொட்டி இடித்து அகற்றப்பட்டதையடுத்து இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேதப் <a href="https://www.dailythanthi.com/news/india">பரிசோதனைக்காக </a>அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.</p><p>இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-today-7</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-today-7#comments</comments><guid isPermaLink="false">ab379855-a07e-4f2a-b0a2-17995a5173a9</guid><pubDate>Sun, 19 Jul 2026 18:46:08 +0000</pubDate><atom:updated>2026-07-19T18:46:08.850Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மின் தடை,power cut</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/kjxobebk/min.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/kjxobebk/min.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>சென்னையில் 20.07.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><h2>மின் தடை</h2><p><strong>ஆவடி</strong>: வைஷ்ணவி நகர் 1 முதல் 10வது தெருக்கள் வரை, சாந்திபுரம், ஸ்ரீதேவி வைஷ்ணவி நகர் எ மற்றும் பி தெருக்கள், இந்திரா காந்தி நகர், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, டி.ஆர்.ஆர். தெரு, நேதாஜி நகர்.</p><p><strong>தாம்பரம்</strong>: கிருஷ்ணா நகர், வெற்றி நகர், சுபாஷ் நகர், கிருஷ்ணா நகர் 1வது முதல் 8வது தெருக்கள் வரை, ரமணி நகர், மல்லிகா நகர், குமரன் நகர், சரஸ்வதி நகர், பார்வதி நகர், ஸ்ரீராம் நகர் வடக்கு மற்றும் தெற்கு, பாலகிருஷ்ணன் நகர், முடிச்சூர் சாலை, பழைய பெருங்களத்தூர்.</p><p><strong>பெரும்பாக்கம்</strong>: பெருமாள் கோவில் ஆர்ச், அப்பர் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, பஜனை கோவில் தெரு, பெருமாள் கோவில் தெரு, லட்சுமி அப்பாதுரை தெரு, சாய் ஆயுஷா அடுக்குமாடி குடியிருப்பு, ராக அமிர்தா அடுக்குமாடி குடியிருப்பு, முருகன் கோவில் ஆர்ச், மந்தவெளி தெரு, சூரியா நகர், ஜெயா நகர், சைதன்யா பள்ளி, தபால் அலுவலகம், சத்ய சாய் நகர்.</p><p><strong>பல்லாவரம்</strong>: சாரா நகர், யூனியன் கார்பைடு காலனி, பார்த்தசாரதி தெரு, சாஸ்தா நகர், திருவேங்கடமுடையான் தெரு, ரங்கசாமி தெரு.</p><p><strong>அனகாபுத்தூர்</strong>: பால்சன் கம்பெனி, அண்ணா சாலை, கண்ணாயிரம் தெரு, நீலகண்டன் தெரு, திருநீர்மலை பிரதான சாலை, அப்துல்கலாம் சாலை, தென்னவன் தெரு, சௌந்தரம்மன் தெரு, ஸ்ரீபுரம், சரஸ்வதிபுரம், ஈஸ்வரி நகர், கண்ணாயிரம் தெரு, துளசிங்கம் தெரு, அப்பு தெரு.</p><p><strong>மாத்தூர்</strong> :மாத்தூர் எம்எம்டிஏ,பெரிய மாத்தூர், சின்ன மாத்தூர், ஆவின் குவார்ட்டர்ஸ், சிபிசிஎல் நகர், எம்சிஜி அவென்யூ, சின்னசாமி நகர், காமராஜர் சாலை, காமராஜ் சாலை-மஞ்சம்பாக்கம் அனைத்து தெருக்கள், அசிஸ் நகர், அகர்சன் கல்லூரி சாலை, மேற்குத் தோட்டம், காத்தாக்குழி, திடீர் நகர், பாய் நகர், சங்கீதா நகர், சக்தி அம்மன் நகர், திருப்பதி நகர், ஜெயராஜ் நகர், குமாரராஜன் நகர், சுபாஷ் நகர், பானு நகர், கேவிடி டவுன்ஷிப், சந்தோஷ் காலனி, லட்சுமி நகர், அன்னை நகர், ஜெயா நகர், பாயசம்பாக்கம், கருமாரி நகர், மூகாம்பிகை நகர், கொசப்பூர் பகுதி, தீயப்பாக்கம் முழு பகுதி, சென்ட்ரபாக்கம், கண்ணம்பாளையம் பகுதி, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வடபெரும்பாக்கம் </a>தொழில் பூங்கா, பார்வதிபுரம், ஸ்ரீனிவாசா மாடர்ன் டவுன் , கன்னி அம்மன் நகர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காலி மது பாட்டிலுக்கு ரூ.10-க்கு பதிலாக ரூ.8 வழங்கியதால் தகராறு: தட்டி கேட்டவருக்கு மண்டை உடைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dispute-over-paying-8-instead-of-10-for-an-empty-liquor-bottle-man-who-questioned-it-suffers-a-head-injury</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dispute-over-paying-8-instead-of-10-for-an-empty-liquor-bottle-man-who-questioned-it-suffers-a-head-injury#comments</comments><guid isPermaLink="false">dd731b7c-f9e0-46c8-ba77-828b963f3535</guid><pubDate>Sun, 19 Jul 2026 17:45:31 +0000</pubDate><atom:updated>2026-07-19T17:45:31.797Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,டாஸ்மாக்,Tasmac,thiruvanamalai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/i0wdrmtx/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/i0wdrmtx/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை ,</p><p>திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் இருந்த இரண்டு டாஸ்மாக் கடைகளில் ஒன்று மூடப்பட்டதைத் தொடர்ந்து, புதுப்பட்டு சாலையில் உள்ள இந்த கடைக்கு மதுபிரியர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். இதனால் மது வாங்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p><h2>பாட்டிலுக்கு ரூ.10</h2><p>இந்த நிலையில், செ. நாச்சிபட்டு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ், தனது திருமண நாளையொட்டி உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக 20-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை வாங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் காலி பாட்டில்களை திருப்பி ஒப்படைக்க டாஸ்மாக் கடைக்கு சென்றார்.</p><p>அப்போது, ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரூ.10 வழங்க வேண்டிய நிலையில், ரூ.8 மட்டுமே வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோவிந்தராஜ் கேள்வி எழுப்பியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த டாஸ்மாக் ஊழியர்கள், பீர் பாட்டிலால் அவரை தாக்கியதாக தகவல் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வெளியாகியுள்ளது</a>.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இந்த தாக்குதலில் கோவிந்தராஜ் தலையில் பலத்த காயமடைந்து ரத்தக் காயத்துடன் கீழே சரிந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சர்வர் கோளாறு காரணமாக நுழைவுச்சீட்டு பெறுவதில் சிக்கல்; களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகள் அவதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/issues-in-obtaining-entry-tickets-due-to-a-server-glitch-tourists-face-hardship-at-kalakkad-thalaiyanai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/issues-in-obtaining-entry-tickets-due-to-a-server-glitch-tourists-face-hardship-at-kalakkad-thalaiyanai#comments</comments><guid isPermaLink="false">6b0918c4-d22e-43b5-a8c7-671a811e41bf</guid><pubDate>Sun, 19 Jul 2026 16:44:56 +0000</pubDate><atom:updated>2026-07-19T16:44:56.586Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சுற்றுலா பயணிகள்,களக்காடு,Kalakkadu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/juber5j3/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/juber5j3/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தலையணைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் இன்று ஞாயிறு வார விடுமுறை என்பதால் தலையணைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். </p><p>இந்நிலையில், சர்வர் கோளாறு காரணமாக நுழைவுச்சீட்டு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் சுற்றலா பயணிகளை வனத்துறை சோதனை சாவடியில் அனுமதிக்க மறுத்துள்ளனர். விடுமுறையையொட்டி அதிகமான சுற்றலா பயணிகள் வருகை தந்த நிலையில், குளிப்பதற்கு அனுமதி கிடைக்காததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். </p> ]]></content:encoded></item><item><title>கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி தற்காலிக மூடல் - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kolli-hills-agaya-gangai-waterfalls-temporarily-closed-tourists-disappointed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kolli-hills-agaya-gangai-waterfalls-temporarily-closed-tourists-disappointed#comments</comments><guid isPermaLink="false">1afc7796-b913-4380-8b2b-9e74d89f3828</guid><pubDate>Sun, 19 Jul 2026 16:24:59 +0000</pubDate><atom:updated>2026-07-19T16:24:59.066Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tourists,சுற்றுலா பயணிகள்,கொல்லிமலை,kollimalai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/8x833ov6/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/8x833ov6/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல்,</p><p>நாமக்கல்லின் முக்கியமான அடையாளம் கொல்லிமலை. 70 கொண்டை ஊசி வளைவுகளின் பயணத்தை அனுபவிக்க, தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பயணிகள் இங்கு குவிகின்றனர்.</p><h2>சுற்றுலா பயணிகள்</h2><p>சுற்றுலா பயணிகள் வரும்போது சோளக்காடு அருகே உள்ள நம் அருவி, எட்டுக்கை அம்மன், வரலாற்று புகழ்வாய்ந்த அரப்பளீஸ்வரர் கோவில், தாவரவியல் பூங்கா, படகு இல்லம் போன்ற பல்வேறு இடங்களை சுற்றி பார்க்கின்றனர். அத்துடன் மாசிலா அருவி மற்றும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்வார்கள்.</p><h2>தற்காலிக மூடல்</h2><p>இந்த நிலையில் ஆகாயங்கை நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து இல்லாத காரணத்தால் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. சிறுவர் பூங்காவும் தற்காலிகமாக மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஞாயிறுக்கிழமை விடுமுறை நாளான இன்று கொல்லிமலைக்கு வந்த சுற்றுழா பயணிகள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இஸ்கான் கோவில் ரத யாத்திரை கோலாகலம் - நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/grand-iskcon-temple-rath-yatra-in-chennai-hundreds-participate</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/grand-iskcon-temple-rath-yatra-in-chennai-hundreds-participate#comments</comments><guid isPermaLink="false">054ed4aa-287c-4a14-9414-b66c16012100</guid><pubDate>Sun, 19 Jul 2026 16:08:21 +0000</pubDate><atom:updated>2026-07-19T16:08:21.327Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,ISKCON,இஸ்கான்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/pk3i4s82/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/pk3i4s82/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இஸ்கான் கோவில் சார்பில் ரத யாத்திரை விமரிசையாக நடைபெற்றது. ஜெகன்னாதர், பாலபத்திரர் மற்றும் சுபத்ரா ஆகிய தெய்வங்கள் சிறப்பு அலங்காரங்களோடு தீப ஆராதனை காட்டப்பட்டு ரதத்தில் எழுந்தருளினர். பாலவாக்கத்தில் இருந்து ரத யாத்திரை முறைப்படி துவங்கியது. </p><p>அங்கிருந்து புறப்பட்ட ரதம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சுமார் 5 கிலோமீட்டர் தூரம் பயணித்து அக்கரையில் உள்ள இஸ்கான் கிருஷ்ணர் கோவிலை வந்தடைந்தது. வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் இந்த விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலதாளங்கள் முழங்க, ‘ஹரே கிருஷ்ணா ஹரே ராமா’ என கோஷம் எழுப்பியபடி பக்தர்கள் நடனமாடி தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கோத்தகிரியில் நிலையான விலை: கொடி பீன்ஸ் பயிரிட விவசாயிகள் தீவிரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/stable-prices-for-creeper-beans-in-kothagiri</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/stable-prices-for-creeper-beans-in-kothagiri#comments</comments><guid isPermaLink="false">93ea2d2e-2352-46ac-a371-36166f6ab237</guid><pubDate>Sun, 19 Jul 2026 16:07:12 +0000</pubDate><atom:updated>2026-07-19T16:07:12.469Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Price,விலை,தேயிலை,கோத்தகிரி,Kotagiri,பீன்ஸ்,விவசாயிகள் Farmers,Intensity தீவிரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/tiozggyt/beans.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பீன்ஸ் தோட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/tiozggyt/beans.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோத்தகிரி,</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF">கோத்தகிரி </a>மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேயிலை விவசாயத்திற்கு அடுத்தபடியாக, குறுகிய காலப் பயிரான பீன்ஸ் பயிரிடுவதில் விவசாயிகள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்பகுதியில் தேயிலை பிரதான தொழிலாக இருந்தாலும், ஏராளமான விவசாயிகள் காய்கறி விவசாயத்தையும் நம்பியுள்ளனர். </p><p>தற்போது நிலவி வரும் தொழிலாளர் பற்றாக்குறை, விதை, உரம் மற்றும் இடுபொருட்களின் கடுமையான விலை ஏற்றம் போன்ற காரணங்களால் விவசாயம் செய்ய பெரும் செலவு ஏற்படுகிறது. இதனால், பெரும்பாலான விவசாயிகள் கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்று இந்த காய்கறி விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர்.</p><h2>நிலையான விலை</h2><p>மலை காய்கறிகளுக்கு கடந்த சில மாதங்களாக காய்கறி மண்டிகளில் கொள்முதல் விலை நிலையாக உள்ளது. மேலும் இந்த விலை விவசாயிகளுக்கு போதுமானதாக உள்ளது. இந்நிலையில் கொடி பீன்ஸ் விலை கிலோவுக்கு 90 ரூபாய் வரை கிடைக்கிறது. மேலும் முத்திய அவரை (சோடகை) கிலோ 140 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டு வருவ தால் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் கொடி பீன்ஸ் பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.</p><p>தற்போது விவசாயிகள் பயிரிட்டுள்ள பீன்ஸ் தோட்டங்களில் பூக்கள் பூக்க தொடங்கி உள்ளன. இவை இன்னும் ஒரு மாதத்தில் அறுவடைக்கு தயாராகி விடும். </p> ]]></content:encoded></item><item><title>லண்டன் பயணம் நிறைவு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை வருகை- தொண்டர்கள் உற்சாக வரவேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/london-trip-concludes-dmk-leader-mk-stalin-arrives-in-chennai-enthusiastic-welcome-by-party-cadres</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/london-trip-concludes-dmk-leader-mk-stalin-arrives-in-chennai-enthusiastic-welcome-by-party-cadres#comments</comments><guid isPermaLink="false">debe134f-8cca-4fcb-90c5-2b50dfd24318</guid><pubDate>Sun, 19 Jul 2026 16:03:44 +0000</pubDate><atom:updated>2026-07-19T16:03:44.208Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,Stalin,ஸ்டாலின்,Chennai,</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/2eu5v9mo/Stalin-mk.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/2eu5v9mo/Stalin-mk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p> தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் பேரனும், உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி, லண்டன் மான்செஸ்டர் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மேம்பாட்டு தொடர்பான பட்டப்படிப்பை படித்து முடித்தார். இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் கடந்த 4-ந்தேதி சென்று சென்னையில் இருந்து விமானம் மூலம் லண்டன் புறப்பட்டு சென்றார். அப்போது அவர், 2 வாரங்கள் லண்டனில் தங்கி இருப்பேன் என்று தி.மு.க.வினருக்கு எழுதிய கடித வடிவிலான அறிக்கையில் தெரிவித்தார்.</p><h2>உற்சாக வரவேற்பு</h2><p>லண்டன் சென்ற மு.க.ஸ்டாலின் கடந்த 14-ந்தேதி அன்று பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். பட்டம் பெற்ற பேரன் இன்பநிதியை கட்டியணைத்து வாழ்த்தினார்.  இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் 2 வார கால லண்டன் பயணத்தை முடித்துகொண்டு  இன்று இரவு சென்னை திரும்பினார் அப்போது அவருக்கு பொன்னாடை, புத்தகங்கள் வழங்கி முன்னாள் அமைச்சர்கள் வரவேற்றனர். தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பு கோஷங்கள் எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>‘அதிகாரிகளை கவுன்சிலர்கள் வேலை செய்ய விடுவதில்லை; மாநகராட்சி தேர்தலில் பாடம் கற்பிக்க வேண்டும்’ - அமைச்சர் சரத்குமார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/councilors-do-not-let-officials-do-their-work-a-lesson-must-be-taught-in-the-municipal-corporation-elections-minister-sarathkumar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/councilors-do-not-let-officials-do-their-work-a-lesson-must-be-taught-in-the-municipal-corporation-elections-minister-sarathkumar#comments</comments><guid isPermaLink="false">ee17b35e-504d-4d7d-995b-b7da86d60c11</guid><pubDate>Sun, 19 Jul 2026 15:52:58 +0000</pubDate><atom:updated>2026-07-19T15:52:58.653Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Minister Sarathkumar,அமைச்சர் சரத்குமார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/3l4k81zn/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/3l4k81zn/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>செங்கல்பட்டு,</p><p>தமிழக அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரும், தாம்பரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான சரத்குமார், தனது தொகுதியில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும், எங்கள் தலைவர் எனக்கு அமைச்சர் பதவியை கொடுத்திருந்தாலும் தாம்பரம் மாநகராட்சியில் எனது தொகுதி மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை செய்யவே முடியவில்லை. அதிகாரிகளை கவுன்சிலர்கள் வேலை செய்யவிடாமல் தடுக்கின்றனர். த.வெ.க.வினர் சென்று நியாயம் கேட்டால் அதை வைத்து அரசியல் செய்கிறார்கள். </p><p>சட்டமன்ற உறுப்பினராக இருந்து எனது பணிகளை செய்ய வேண்டும் என்று நினைத்தால், கீழ இருப்பவர்கள் அந்த பணிகளை தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, மாநகராட்சி தேர்தல் வரும்போது அவர்களுக்கு நீங்கள் பாடம் கற்பிக்க வேண்டும். எல்லாமே உங்க கையில் மட்டும்தான் இருக்கிறது.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>காவலர் ஆட்சேர்ப்பைத் தாமதப்படுத்துவது ஏன் ? - வேல்முருகன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-delay-police-recruitment-velmurugan-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-delay-police-recruitment-velmurugan-asks#comments</comments><guid isPermaLink="false">5ebd9b0b-2fdf-4d6b-9230-0b6b8d1daf4d</guid><pubDate>Sun, 19 Jul 2026 15:23:31 +0000</pubDate><atom:updated>2026-07-19T15:23:31.403Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Velmurugan,வேல்முருகன்,கேள்வி,தாமதம்,delayed,ஏன்,Asked,Police Recruitment,காவலர் ஆட்சேர்ப்பு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/1cwiiawv/velmurugan.gif" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/1cwiiawv/velmurugan.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-காவலர் ஆட்சேர்ப்பைத் தாமதப்படுத்துவது ஏன் ? இளைஞர்களின் எதிர்காலத்தை , அரசே சிதைப்பது சரியா?</p><h2>நிர்வாக திறனின்மை</h2><p>தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த வேண்டிய காவல்துறையிலேயே ஆயிரக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் கிடக்கின்றன. இதை சரிசெய்ய வேண்டிய அரசு, புதிய காவலர் ஆட்சேர்ப்பு அறிவிப்பைக் கூட காலத்திற்குள் வெளியிட முடியாமல் இருப்பது நிர்வாக திறனின்மையின் வெளிப்பாடாகும்.</p> <h2>அரசு மதிக்கவில்லை</h2><p>காவலர் பணியை நம்பி பல மாதங்களாக உடற்தகுதி பயிற்சியும், எழுத்து தேர்வுக்கான தயாரிப்பும் மேற்கொண்டு வரும் இளைஞர்களின் உழைப்பை, இந்த அரசு மதிக்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருப்பவர்களின் கனவுகளை, அரசின் மெத்தனமான செயல்பாடு சிதைத்து கொண்டிருக்கிறது.</p> <h2>தார்மீக உரிமையும் இல்லை</h2><p>குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக மக்கள் அச்சம் தெரிவிக்கும் சூழலில், காவல்துறையை வலுப்படுத்த வேண்டிய அரசு, காலிப்பணியிடங்களை நிரப்புவதில்கூட அக்கறை காட்டாதது ஏன்? காவல்துறைக்கு தேவையான மனிதவளத்தை உருவாக்காமல் பாதுகாப்பான தமிழ்நாட்டை பற்றி பேசுவதற்கு அரசுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை.</p><h2>அவமானகரமானது</h2><p>ஆட்சேர்ப்பு நடைமுறையை விரைந்து முடிக்க முடிந்தும், அதை இழுத்தடிப்பதால் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களே பாதிக்கப்படுகின்றனர். வயது வரம்பை காரணமாக கொண்டு, பலர் தங்களுக்குரிய வாய்ப்புகளை இழக்கும் நிலையை அரசே உருவாக்கியுள்ளது வேதனைக்குரியது.</p><p>இளைஞர்கள் அதிகம் கொண்ட ஆட்சி நிர்வாகத்தில், இளைஞர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது என்பது அவமானகரமானது.</p><h2>வயது வரம்பு</h2><p>எனவே, நிலுவையில் உள்ள காவலர் ஆட்சேர்ப்பின் அனைத்து நடைமுறைகளையும் உடனடியாக நிறைவு செய்து முடிவுகளை வெளியிட வேண்டும். அதேநேரத்தில், <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">புதிய காவலர் ஆட்சேர்ப்பு</a> அறிவிப்பை தாமதமின்றி வெளியிட வேண்டும். அதற்கு இயலாத சூழல் இருப்பின், அரசின் அலட்சியத்திற்காக இளைஞர்கள் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்காக, வயது வரம்பில் உரிய தளர்வை அறிவிக்க வேண்டும்.</p> <h2>மெத்தனப்போக்கு</h2><p>வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களின் நம்பிக்கையை சிதைக்கும் மெத்தனப்போக்கை தமிழக அரசு கைவிட்டு, இளைஞர்களின் எதிர்காலத்திற்குரிய உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">காவலர் ஆட்சேர்ப்பைத் தாமதப்படுத்துவது ஏன் ?இளைஞர்களின் எதிர்காலத்தை , <br>அரசே சிதைப்பது சரியா?<br><br>தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த வேண்டிய காவல்துறையிலேயே ஆயிரக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் கிடக்கின்றன. இதை சரிசெய்ய வேண்டிய அரசு, புதிய காவலர் ஆட்சேர்ப்பு அறிவிப்பைக் கூட… <a href="https://t.co/uyDeHg59XR">pic.twitter.com/uyDeHg59XR</a></p>&mdash; Velmurugan.T (@VelmuruganTVK) <a href="https://x.com/VelmuruganTVK/status/2078836819593138563?ref_src=twsrc%5Etfw">July 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>நெல் மூட்டைக்கு ரூ.50 லஞ்சம்; அமைச்சரிடம் புகார் அளித்த விவசாயி - பட்டியல் எழுத்தர் உடனடியாக சஸ்பெண்ட்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%8250-%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%8250-%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">9d078fd8-a9dc-46e7-b77f-6371dfa1fb7d</guid><pubDate>Sun, 19 Jul 2026 15:21:11 +0000</pubDate><atom:updated>2026-07-19T15:21:11.370Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சஸ்பெண்ட்,suspend,லஞ்சம்,அமைச்சர் வெங்கடரமணன்,Minister Venkataramanan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/mk24pt03/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/mk24pt03/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர்,</p><p>கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் ஆய்வு மேற்கொண்டார். அந்த வகையில் மருவாய் கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்ற அவர், விவசாயிகளிடம் தனது செல்போனில் இருந்து நேரடியாக பேசினார். </p><p>அப்போது நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு 50 ரூபாய் லஞ்சம் வாங்கப்படுவதாக அமைச்சர் வெங்கடரமணனிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, அமைச்சர் உத்தரவின்பேரில் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், உடனடியாக பட்டியல் எழுத்தர் வேல்முருகனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். </p>]]></content:encoded></item><item><title>2026-27ஆம் ஆண்டிற்கான பா.ம.க சார்பில் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை நாளை வெளியீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pmks-shadow-agriculture-budget-for-2026-27-to-be-released-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pmks-shadow-agriculture-budget-for-2026-27-to-be-released-tomorrow#comments</comments><guid isPermaLink="false">c0cd93f2-64c3-4c45-b237-41cb3d055c8d</guid><pubDate>Sun, 19 Jul 2026 15:01:15 +0000</pubDate><atom:updated>2026-07-19T15:01:15.776Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,PMK,பா.ம.க,agriculture budget,நிதிநிலை அறிக்கை,வேளாண்,நிழல்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/9rqv21o2/anbumani.gif" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/9rqv21o2/anbumani.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாட்டாளி மக்கள் கட்சியின் 2026-27ஆம் ஆண்டிற்கான 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை நாளை வெளியிடப்படுகிறது. இதுகுறித்து பாமக தலைமை நிலையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><h2>நாளை வெளியீடு </h2><p>பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆண்டுதோறும் வேளாண்மை மற்றும் பொது நிழல் நிதிநிலை அறிக்கைகள் தனியாக தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2026-27ஆம் ஆண்டிற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை நாளை காலை 11.00 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.</p> <h2>ஜி.ஆர்.டி விடுதியில் நிகழ்ச்சி</h2><p>சென்னை தியாகராயர் நகரில் (டி.நகர்) உள்ள ஜி.ஆர்.டி கிராண்ட் டேய்ஸ் விடுதியின் 'சதர்ன் கிரவுன்' அரங்கத்தில் இந்த வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்</a> வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிடவுள்ளார். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>  ]]></content:encoded></item><item><title>‘என் பெயரை சொல்லி குற்றச்சாட்டு சொல்கிறார்கள்; அதை நிரூபிக்க வேண்டும்’ - முன்னாள் அமைச்சர் மூர்த்தி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/they-are-making-allegations-by-citing-my-name-they-must-prove-them-former-minister-moorthy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/they-are-making-allegations-by-citing-my-name-they-must-prove-them-former-minister-moorthy#comments</comments><guid isPermaLink="false">777d767e-a1d5-4c41-82f1-6d80f5ca2639</guid><pubDate>Sun, 19 Jul 2026 14:57:05 +0000</pubDate><atom:updated>2026-07-19T14:57:05.121Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பத்திரப்பதிவு,மூர்த்தி,Minister Nirmalkumar,அமைச்சர் நிர்மல் குமார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/ukmktsly/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/ukmktsly/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பழனி கோவில் நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்திருந்த கருத்துகளுக்கு முன்னாள் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பதிலளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-</p><p>“கோவில்களுக்கு சொந்தமான இடத்தை பதிவு செய்யவே முடியாது. எந்தெந்த இடங்களில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் இருக்கிறதோ, அதற்கு சம்பந்தப்பட்டு வரக்கூடிய கோவில் நிலங்கள், அரசு நிலங்கள், நீர்நிலை, புறம்போக்கு நிலங்கள், வக்புவாரிய சொத்து உள்ளிட்ட எதுவாக இருந்தாலும் அவற்றை பதிவு செய்ய முடியாது என ஏற்கனவே குறித்திருப்பார்கள். </p><p>இன்றைக்கு ஒரு இடத்தை பதிய வேண்டும் என்றால், முதல் நாளே அதற்கான டோக்கன் போட்டிருப்பார்கள். அந்த டோக்கன் போடாமல் பதிய முடியாது. எனவே கோவில் நிலத்தை தெரியாமல் பதிவு செய்துவிட்டார்கள், இது யாருக்கும் தெரியாமல் எதார்த்தமாக நடந்துவிட்டது என்றெல்லாம் சொல்ல முடியாது.</p><p>589 பத்திர அலுவலகங்களுக்கும் நான் நேரடியாக ஆள் போட்டதாகவும், அவர்கள் வாங்கக்கூடிய பணத்தில் எனக்கு 20 சதவீதம் பங்கு கொடுத்ததாகவும் அமைச்சர் நிர்மல்குமார் எனது பெயரை குறிப்பிட்டு குற்றச்சாட்டு சொல்கிரார். ஒரு அலுவலகத்திற்காவது நான் நேரடியாக பேசினேனா? என்பதை அவர் நிரூபிக்க வேண்டும். எந்த அலுவலகத்தில் நான் ஆள் போட்டு அவங்கள் பெற்ற பணத்தில் பங்கு வாங்கினேன் என்பதை சொல்ல வேண்டும். </p><p>பொத்தாம் பொதுவாக எதுவும் சொல்லக் கூடாது. யார் எங்கே தவறு செய்தாலும், தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>விஜய் மாதிரி வேறு எந்த முதல் அமைச்சரும் இதுவரை கூறியது இல்லை:  காதர் மொய்தீன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-other-chief-minister-has-ever-spoken-the-way-vijay-has-khader-mohideen</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-other-chief-minister-has-ever-spoken-the-way-vijay-has-khader-mohideen#comments</comments><guid isPermaLink="false">3fcbdd05-13bb-4aa6-8e4f-aef7061e1fa0</guid><pubDate>Sun, 19 Jul 2026 14:39:08 +0000</pubDate><atom:updated>2026-07-19T14:39:08.714Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,தமிழக அரசு,காதர் மொய்தீன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/8c13ntqv/Moideen.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காதர் மொய்தீன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/8c13ntqv/Moideen.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><p> ராயப்பேட்டையில்  இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: -தமிழ்நாட்டில் ஒரு அரசியல் மாற்றம் ஏற்பட்டு, தமிழக வெற்றி கழக தலைவர் ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சி அமைந்து இரண்டு மாதங்கள் கூட நிறைவடையவில்லை.</p> <p>இரண்டு மாதத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை பொருத்தவரை மக்கள் பாராட்டக்கூடிய காரியங்கள் தொடர்ந்து நடக்கின்றன. ஊழல் இல்லாத ஆட்சி முழுவதும் வந்துவிட்டதா என்று உறுதிமொழி கொடுக்க முடியாது. ஆனால் ஊழல் இல்லாத ஆட்சி கொடுப்பேன் என்று ஒரு <a href="https://www.dailythanthi.com/news/india">முதலமைச்சர்</a> சொல்வது போல், இதுவரை யாரும் சொன்னதில்லை என்பதுதான் முக்கியம். ஊழல் இல்லாத ஆட்சி அமைப்போம் என்றும் மிகத் தெளிவாக வெளிப்படையாக சொன்ன முதலமைச்சரை இப்போதுதான் நாங்கள் பார்க்கிறோம்.” என்றார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை விடுதியில் பரபரப்பு: இளம்பெண்ணிடம் நகை திருடிய  வழக்கில் பெண் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/jewel-theft-in-chennai-lodge-woman-arrested-for-stealing-young-womans-chain</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/jewel-theft-in-chennai-lodge-woman-arrested-for-stealing-young-womans-chain#comments</comments><guid isPermaLink="false">4de7a8ed-4ce7-497c-9a88-a71896270e72</guid><pubDate>Sun, 19 Jul 2026 14:36:27 +0000</pubDate><atom:updated>2026-07-19T14:36:27.950Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,கைது,நகை திருட்டு,பெண்,woman arrested,lodge,விடுதி,stealing jewelry</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/xarfhi9x/woman-theif.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நகை திருடிய  வழக்கில் ராதிகா கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/xarfhi9x/woman-theif.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை ராமாபுரத்தில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர் சிவரஞ்சினி (வயது 22). இவருடைய சொந்த ஊர் கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆகும். சம்பவத்தன்று சிவரஞ்சினி வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டு விடுதிக்கு திரும்பினார். </p> <h2>6 கிராம் தங்க சங்கிலி</h2><p>இந்த நிலையில், இவர் தங்கும் விடுதியில் தூங்கிக்கொண்டிருந்த போது, முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் இளம் பெண் சிவரஞ்சினி கழுத்தில் இருந்த 6 கிராம் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து அவர் உடனடியாக போலீசில் புகார் செய்தார்.</p><h2> ஆய்வு</h2><p>விடுதியில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். பின்னர், <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF">நகை திருடிய</a> சின்ன போரூர் பகுதியை சேர்ந்த தனசேகர் (வயது 30) என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது, அதே தங்கும் விடுதியில் தங்கியிருந்த தனது காதலி சென்னை தி.நகரைச் சேர்ந்த ராதிகா (வயது 28) என்பவரின் ஆலோசனைப்படி நகையை திருடியதை அவர் ஒத்துக்கொண்டார்.</p><h2>காதலி கைது</h2><p>சிவரஞ்சினியின் நகையை திருடுவதற்கு உடந்தையாக இருந்த தனசேகரின் காதலியை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த ராதிகாவை நேற்று கைது செய்த போலீசார், அவரைப் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.</p><p>விடுதியில் இளம்பெண்ணிடம் நகை திருடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>‘ஊழல் செய்தால் எங்களை பதவியில் இருந்து முதல்-அமைச்சர் விஜய் நீக்கிவிடுவார்’ - அமைச்சர் என்.ஆனந்த்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-will-remove-us-from-office-if-we-engage-in-corruption-minister-n-anand</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-will-remove-us-from-office-if-we-engage-in-corruption-minister-n-anand#comments</comments><guid isPermaLink="false">747fe24c-a991-443e-a6be-5461d229e780</guid><pubDate>Sun, 19 Jul 2026 14:33:43 +0000</pubDate><atom:updated>2026-07-19T14:33:43.107Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அமைச்சர் ஆனந்த்,Minister Anand</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/o9p8fnuu/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/o9p8fnuu/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என்.ஆனந்த் சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“த.வெ.க. ஆட்சியில் எக்காரணத்தைக் கொண்டும் மக்கள் பணத்தில் ஊழல் செய்வது என்பது நடக்கவே நடக்காது. அப்படி நாங்கள் யாராவது தவறு செய்தால் உடனடியாக முதல்-அமைச்சர் விஜய் எங்களை அந்த பதவியில் இருந்து நீக்கி விடுவார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.</p> <p>மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யக்கூடிய ஒரு ஆட்சியாகத்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி இருக்கும். கூடிய விரைவில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பயிற்சி மற்றும் கடன் வசதி எல்லாம் வழங்கப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளை முதல்-அமைச்சர் விஜய் செய்து கொண்டிருக்கிறார். </p> <p>நீங்கள் எல்லோரும் நிம்மதியாக இருக்கலாம். எதைப் பற்றியுமே நீங்கள் கவலையே பட வேண்டாம். எந்த ஒரு சின்ன விஷயம் உங்களுக்கு தேவை என்று சொன்னாலும் நாங்கள் அதை செய்து கொடுப்பதற்கு கடமைப்பட்டிருக்கிறோம், கண்டிப்பாக நாங்கள் செய்வோம்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>பழனி நில மோசடி வழக்கு: விழுப்புரத்தை சேர்ந்த முருகதாஸ் என்பவரின் வீட்டிற்கு சீல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-land-fraud-case-house-of-murugadass-from-villupuram-sealed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-land-fraud-case-house-of-murugadass-from-villupuram-sealed#comments</comments><guid isPermaLink="false">5bf2032c-2f4d-4566-a95a-d61b03250028</guid><pubDate>Sun, 19 Jul 2026 14:29:55 +0000</pubDate><atom:updated>2026-07-19T14:29:55.402Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பழனி,விழுப்புரம்,நில மோசடி வழக்கு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/g98jlbfb/SEAL.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/g98jlbfb/SEAL.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பழனி,</p><p>பழனி கோவில் தண்டபாணி மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை தனிநபர்கள் பெயருக்கு முறைகேடாக பதிவுசெய்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. இதுதொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் முழுமையாக ஆய்வு செய்து உண்மை நிலையை அறிய, பதிவுத்துறை சார்பில் 3 பேர் கொண்ட உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தக்குழுவில் கூடுதல் பதிவுத்துறைத் தலைவர், உதவி பதிவுத்துறைத் தலைவர் மற்றும் ஒரு மாவட்டப் பதிவாளர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவினர் பத்திரப்பதிவு நடைபெற்ற நாளில் பணியில் இருந்த சார்பதிவாளர், விடுப்பில் சென்ற சார்பதிவாளர், மாவட்ட பதிவாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்டோரிடம் விரிவான விசாரணை  மேற்கொண்டு வருகிறார்கள். </p><h2> விசாரணை</h2><p>முன்னதாக பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமானதாக கூறப்படும் நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாக எழுந்த புகாரில், ஏற்கனவே சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில், அதே விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் மாவட்ட பதிவாளர் சசிகலாவையும் தமிழக பதிவுத்துறை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. சிபிசிஐடி போலீசார் ஜஸ்டின் மணிகண்டன் உள்பட பல்வேறு நபர்களிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள். </p><h2>அறக்கட்டளை உறுப்பினர்</h2><p>இந்த நிலையில்,  விழுப்புரத்தை சேர்ந்த முருகதாஸ் என்பவர் வீட்டுக்கு சீல் வைத்து சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். முருகதாஸ் வீட்டில் இருந்து 50 க்கும் மேற்பட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், வீட்டைபூட்டி சிபிசிஐடி போலீசார் சீல் வைத்தனர்.  முருகதாஸ் வீட்டில் யாரும் இல்லாத நிலையில், ஆவணங்களை பறிமுதல் செய்து சிபிசிஐடி போலீஸ் சீல் வைத்துள்ளது.  பழனி கோயில் அறக்கட்டளை உறுப்பினராகவும் அரசுப்பள்ளி ஆசிரியராகவும் முருகதாஸ் இருந்து வருகிறார்</p>]]></content:encoded></item><item><title>வார விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/people-returning-to-chennai-after-the-weekend-traffic-congestion-on-gst-road</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/people-returning-to-chennai-after-the-weekend-traffic-congestion-on-gst-road#comments</comments><guid isPermaLink="false">d2819054-8ea1-4e2e-ae1c-a425a5ba70d5</guid><pubDate>Sun, 19 Jul 2026 14:18:57 +0000</pubDate><atom:updated>2026-07-19T14:18:57.230Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,போக்குவரத்து,GST Road,ஜிஎஸ்டி சாலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/7afm759x/Chennai.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/7afm759x/Chennai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வார விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்றிருந்த  மக்கள்,  விடுமுறை முடிவடைந்ததைத் தொடர்ந்து  இன்று  மாலை முதல் சென்னை நோக்கி திரும்பினர். இதன் காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது</p><p> திருச்சி, பெரம்பலூர், உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், திண்டிவனம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கார்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், சரக்கு வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் மெதுவாகச் சென்றன. குறிப்பாக சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் அதிக அளவில் குவிந்தன.  </p><p>பரனூர் டோல்கேட் அருகே நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஜிஎஸ்டி சலையிலும் இன்று பிற்பகலில் இருந்தே சென்னை நோக்கி வரும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இரவு நேரத்திலும் சென்னை நோக்கி வாகனங்களின் வரத்து தொடர்ந்து அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் மின் தேவை புதிய உச்சம்: ஒரே நாளில் மின் நுகர்வு 475.45 மில்லியன் யூனிட்டாகப் பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/electricity-demand-in-tamil-nadu-hits-a-new-peak-consumption-recorded-at-47545-million-units-in-a-single-day</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/electricity-demand-in-tamil-nadu-hits-a-new-peak-consumption-recorded-at-47545-million-units-in-a-single-day#comments</comments><guid isPermaLink="false">463e335f-dbb9-43a9-958d-2d3f26d4c92e</guid><pubDate>Sun, 19 Jul 2026 13:52:32 +0000</pubDate><atom:updated>2026-07-19T13:52:32.006Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழகம்,electricity,demand,மின் தேவை,உச்சம்,New Peak,Across Tamil Nadu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/l12ai7ec/electricity-usage.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின் நுகர்வு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/l12ai7ec/electricity-usage.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மற்றும் வளிமண்டல மாறுபாடு காரணமாக மின்சாரப் பயன்பாடு முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகக் கடுமையான புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது.</p><h2>புதிய சாதனை</h2><p>கடந்த புதன்கிழமை 472.263 மில்லியன் யூனிட்களாகவும், வியாழக்கிழமை 473.572 மில்லியன் யூனிட்களாகவும், வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மட்டும் மாநிலம் முழுவதும் 475.45 மில்லியன் யூனிட்டுகள் மின்சாரம் நுகரப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.</p><h2>அதீத பயன்பாடு</h2><p>கோடைகால உச்ச நுகர்வான 471.46 மில்லியன் யூனிட் அளவை இந்த ஜூலை மாத பயன்பாடு முறியடித்துள்ளது. தென்மேற்கு பருவமழை குறைந்ததால் ஏற்பட்ட கடுமையான புழுக்கம் மற்றும் ஏசி, கூலர்களின் அதீத பயன்பாடு.</p><h2>உதவிய காற்றாலை மின்சாரம் </h2><p> இந்த இமாலய தேவையை எதிர்கொள்ள காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சாரம் சுமார் 150 மில்லியன் யூனிட் பெருமளவில் கைகொடுத்துள்ளது.  <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">காற்றாலை மின்சாரம்</a> மட் டும் இதுவரை 15 நாட்களுக்கு மேல் 100 மில்லியன் யூனிட்களுக்கும் கூடுதலாக கிடைத்துள்ளது.</p> <h2>மின் தேவை</h2><p>தொடர்ந்து அதிகரித்து வரும் மின் தேவையால் மின்சார கட்டமைப்பு சவால்களை எதிர்கொண்டாலும், தடையில்லா மின்சாரம் வழங்க வாரியம் கூடுதல் ஊழியர்களை நியமித்து தீவிரமாக கண்காணித்து வருகிறது. மாநிலம் முழுவதும் பரவலான மழை பெய்ய வாய்ப்புள்ளதால், வரும் நாட்களில் மின் நுகர்வு கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>கன்னியாகுமரி-திப்ருகார் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து-தெற்கு ரெயில்வே அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cancellation-of-kanyakumari-dibrugarh-vivek-express-southern-railway-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cancellation-of-kanyakumari-dibrugarh-vivek-express-southern-railway-announcement#comments</comments><guid isPermaLink="false">c7ce0075-0553-4af0-bcdc-077715099ad1</guid><pubDate>Sun, 19 Jul 2026 12:56:53 +0000</pubDate><atom:updated>2026-07-19T12:56:53.391Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,ரெயில்,விவேக் எக்ஸ்பிரஸ்,திப்ருகார்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/8yjxaz0g/Train-new.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எக்ஸ்பிரஸ் ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/8yjxaz0g/Train-new.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><p>தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-ஒடிசா மாநிலம் பாலசோர் ரெயில் நிலையத்தில் மேற்கொள்ள இருக்கும் பராமரிப்பு பணி காரணமாக சில ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-</p><p>* விழுப்புரத்தில் இருந்து வருகிற ஆகஸ்டு 4-ந்தேதி காலை 11.05 மணிக்கு புறப்பட்டு மேற்கு வங்க மாநிலம் காரக்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும்(வண்டி எண்.22604), மறுமார்க்கமாக காரக்பூரில் இருந்து வருகிற ஆகஸ்டு 6-ந்தேதி மதியம் 2 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலும்(22603) ரத்து செய்யப்படுகிறது.</p><p>* அசாம் மாநிலம் திப்ருகாரில் இருந்து ஆகஸ்ட் 4-ந்தேதி இரவு 7 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி வரும் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயிலும்(22504), மறுமார்க்கமாக கன்னியாகுமரில் இருந்து ஆகஸ்டு 7-ந்தேதி மாலை 5.25 மணிக்கு புறப்பட்டு திப்ருகார் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும்(22503) ரத்து செய்யப்படுகிறது.</p><p>* மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் இருந்து ஆகஸ்டு 3-ந்தேதி காலை 10 மணிக்கு புறப்பட்டு நெல்லை வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்(22605), அதற்கு மாற்றாக, புருலியாவில் இருந்து ஒரு மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு புறப்பட்டு நெல்லை வரும். மறுமார்க்கமாக, நெல்லையில் இருந்து ஆகஸ்டு 5-ந்தேதி அதிகாலை 3.15 மணிக்கு புறப்பட்டு புருலியா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்(22606), அதற்கு மாற்றாக நெல்லையில் இருந்து ஒரு மணி நேரம் 30 நிமிடம் தாமதமாக அதிகாலை 4.45 மணிக்கு புறப்பட்டு புருலியா செல்லும்.</p><p>* மேற்கு வங்க மாநிலம் சாலிமாரில் இருந்து ஆகஸ்டு 4-ந்தேதி மதியம் 12.10 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்(22825), ஒரு மணி நேரம் தாமதமாக சென்டிரல் வந்தடையும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விவசாயிகளிடம் லஞ்சம்  - ஊழியரை பணியிடை நீக்கம் செய்ய அமைச்சர் உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bribe-from-farmers-minister-orders-suspension-of-employee</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bribe-from-farmers-minister-orders-suspension-of-employee#comments</comments><guid isPermaLink="false">0cee3606-2326-4480-ae51-aac16370fd35</guid><pubDate>Sun, 19 Jul 2026 12:24:15 +0000</pubDate><atom:updated>2026-07-19T12:24:15.925Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Farmers,லஞ்சம்,விவசாயிகள்,அமைச்சர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/yv239ikw/venkat-ramanan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/yv239ikw/venkat-ramanan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர் மாவட்டம், சிதம்பரம் கொத்தங்குடித்தோப்பு பகுதியில் உள்ள அரசு நவீன அரிசி ஆலை, நகராட்சி அமுதம் பல்பொருள் அங்காடி மற்றும் சேத்தியாத்தோப்பில் எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சேமிப்பு கிடங்கு, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தமிழ்நாடு உணவு மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் பி.வெங்கடரமணன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.  அந்த வகையில், வடலூர் அருகே மருவாய் கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அமைச்சர் பி.வெங்கட்ரமணன் ஆய்வு மேற்கொண்டார்.</p><p>அப்போது, விவசாயிகளிடம் ஏதேனும் லஞ்சம் வாங்கப்படுகிறதா என விசாரித்தார். இதற்கு நெல் மூட்டைக்கு ரூ.50 முதல் ரூ.60 வரை லஞ்சம் வாங்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.   உடனே,  அங்கிருந்து விவசாயிகளின் நெல் வருகை பதிவேடுகளை எடுத்து பார்வையிட்ட அமைச்சர், அதில் இருந்து ஒரு விவசாயின் செல்போன் எண்ணை எடுத்து  அந்த விவசாயிடம் பேசினார். அப்போது அந்த விவசாயி நெல் மூட்டைக்கு ரூ.50 முதல் ரூ.60 வரை லஞ்சம் வாங்கப்படுவதாக அமைச்சரிடம் தெரிவித்தார். </p><p>லஞ்சம் கேட்டது உறுதியானதையடுத்து நெல் கொள்முதல் நிலைய அரசு ஊழியர் வேல்முருகனை உடனடியாக பணியிடை நீக்கம் செய்யுமாறு கலெக்டரிடம் பரிந்துரை செய்தார். தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் யாரேனும் லஞ்சம் பெற்றிருந்தால் அனைவரையும் பணியிடை நீக்கம் செய்யுமாறு கலெக்டரிடம் அறிவுறுத்தினார்.</p> ]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை மசோதா; திமுகவின் நிலைப்பாடு என்ன? திருச்சி சிவா பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/constituency-delimitation-bill-what-is-the-dmks-stance-trichy-siva-responds</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/constituency-delimitation-bill-what-is-the-dmks-stance-trichy-siva-responds#comments</comments><guid isPermaLink="false">844fbe9e-3425-41a9-823d-2070fddd3016</guid><pubDate>Sun, 19 Jul 2026 11:42:34 +0000</pubDate><atom:updated>2026-07-19T11:42:34.940Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்சி சிவா,தொகுதி மறுவரையறை மசோதா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/3bp9apc0/Trichy-siva.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ திருச்சி சிவா]]></media:title><media:description type="html"><![CDATA[ திருச்சி சிவா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/3bp9apc0/Trichy-siva.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்  நாளை தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடரில் மேகேதாட்டு அணை குறித்து ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, எம்.பி மற்றும் மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா, எம்.பி ஆகியோர் நோட்டீஸ் அளித்துள்ளனர்.  </p> <p>இதற்கிடையே, இன்று  நாடாளுமன்ற ம்ழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக அனைத்துக்கட்சிக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்  பங்கேற்ற பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திருச்சி சிவா எம்.பி கூறியதாவது:  தொகுதி மறுவரையறை குறித்து அரசு தெளிவான வழிமுறையை வெளியிட வேண்டும். தென் மாநிலங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். </p><h2>தெளிவு வேண்டும்</h2><p>தற்போது உள்ள தொகுதி எண்ணிக்கையின் படி பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதை திமுக ஆதரிக்கிறது. தொகுதி மறுவரையறை குறித்து மேலும் தெளிவு வேண்டும். வரைவு மசோதாவை பார்த்த பின்னரே இறுதி நிலைப்பாடு” என்றார்.</p><h2>தொகுதி மறுவரையறை மசோதா</h2><p>தொகுதி மறுவரையறை மசோதாவை கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது  மத்திய அரசு நிறைவேற்ற முயற்சித்தது.  ஆனால் அப்போது மசோதாவை நிறைவேற்ற தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாததால், மசோதா தோற்கடிக்கப்பட்டது தற்போது பல்வேறு மாநிலங்களிலும் அரசியல் சூழல் மாறியுள்ளதால் தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் பலம் கூடியுள்ளது. இதுபோக சில கட்சிகள் ஆதரவு அளிக்கும் சூழலும் உருவாகியுள்ளதால் மசோதாவை மீண்டும்  கொண்டு வர மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.  </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் ரெஸ்ட்ரோ பார்? - அமைச்சர் விக்னேஷ் விளக்கம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/restro-bars-in-tamil-nadu-minister-vignesh-clarifies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/restro-bars-in-tamil-nadu-minister-vignesh-clarifies#comments</comments><guid isPermaLink="false">615e12e5-e16a-4647-a7a4-b92fc571b387</guid><pubDate>Sun, 19 Jul 2026 11:19:45 +0000</pubDate><atom:updated>2026-07-19T11:19:45.996Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Minister Vignesh,அமைச்சர் விக்னேஷ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/8w4q5iru/National-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/8w4q5iru/National-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் உணவகத்துடன் கூடிய மதுபானக் கூடம்(ரெஸ்ட்ரோ பார்) கொண்டு வர அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் பரவியது. இருப்பினும் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“கடந்த கால ஆட்சிகளில் டாஸ்மாக் நிர்வாகத்தை மிக மோசமான நிலையில் வைத்திருக்கிறார்கள். இன்றுகூட டாஸ்மாக் கடைகள் முன்பு சிலர் போதையில் படுத்துக்கிடப்பதும், பாட்டில்கள், கிளாஸ்களை வீசிவிட்டு செல்வதுமான செயல்களை நம்மால் பார்க்க முடிகிறது. இதை எல்லாம் மாற்றி, சீரமைக்க வேண்டும். </p><p>அதற்கு என்னனென்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம். அதில் சிலர் ரெஸ்ட்ரோ பார் குறித்து பேசினார்கள். சிலர் டாஸ்மாக் நிர்வாகத்தை தனியாருக்கு விடலாம் என்றார்கள். சிலர் அரசாங்கமே டாஸ்மாக் நிர்வாகத்தை மேம்படுத்தி தரம் உயர்த்தலாம் என்று ஆலோசனை கூறினார்கள். இதில் ரெஸ்ட்ரோ பார் என்று சொன்னது மட்டும் எப்படியே வெளியே கசிந்துவிட்டது. இதை வைத்து தவறான தகவலை பரப்பிவிட்டுள்ளனர். </p> <p>ஆனால் அரசு இதுவரை எந்த திட்டத்தையும் உறுதி செய்யவில்லை. மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறதோ, அதைத்தான் த.வெ.க. அரசு பிரதிபலிக்கும். அதேபோல், டாஸ்மாக் துறையை வைத்து அரசின் வருமானத்தை உயர்த்த நாங்கள் திட்டமிடுகிறோம் என்று யாரும் நினைக்க வேண்டாம். எதிர்க்கட்சிகள் அவ்வாறு நினைத்தால் ஏமாந்து போய்விடுவார்கள். எங்களுக்கு அந்த எண்ணம் கிடையாது.” </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>72 வது தேசிய திரைப்பட விருது: தேர்வானவர்களுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/72nd-national-film-awards-gk-vasan-congratulates-winners</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/72nd-national-film-awards-gk-vasan-congratulates-winners#comments</comments><guid isPermaLink="false">a4a8174d-954b-438e-a8b5-bad3cbfe759d</guid><pubDate>Sun, 19 Jul 2026 10:48:52 +0000</pubDate><atom:updated>2026-07-19T10:48:52.309Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வாழ்த்து,congratulates,GK Vasan,ஜி.கே.வாசன்,72nd National Film Awards,72வது தேசிய திரைப்பட விருதுகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/d8bt5azd/g.k.vasan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/d8bt5azd/g.k.vasan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>72 வது தேசிய திரைப்பட விருது பெற்ற தேர்வானவர்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- </p><h2>தேசிய விருதுகள்</h2><p>தமிழ் சினிமாவின் மூலம் தேசிய விருதுக்கு தேர்வானவர்கள் தேசிய அளவில் தமிழ் சினிமாவிற்கும், தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் பேரும் புகழும் சேர்த்திருப்பது சிறப்புக்குரியது. இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட திரைப்படத்தில் உள்ள பல துறைகளுக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.</p><h2>மகிழ்ச்சி</h2><p>கலைஞர்களின் கடின உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் தேசிய விருதுகள் அறிவிக்கப்படுவது மகிழ்ச்சிக்குரியது. 2024-ம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கான <a href="https://www.dailythanthi.com/search?q=72-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">72-வது தேசிய திரைப்பட விருதுகள்</a> (72nd National Film Awards) அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>ஜி.வி. பிரகாஷ்குமார்</h2><p>புஷ்பா 2 திரைப்படம் இரண்டு முக்கிய பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றுள்ளது. சிறந்த தமிழ் படமாக தனுஷ் இயக்கி நடித்த 'ராயன்' திரைப்படமும், 'அமரன்' படத்திற்காக ஜி.வி. பிரகாஷ்குமார் சிறந்த பின்னணி இசைக்கான விருதுக்கும் தேர்வாகியிருக்கிறது. </p> <h2>10 தேசிய விருதுகள்</h2><p>‘மகாராஜா’ படத்திற்காக சிறந்த துணை நடிகை பிரிவில் சச்சனா நமிதாஸுக்கும், சிறந்த சண்டைப் பயிற்சியாளருக்கான பிரிவில் அனல் அரசுக்கும் என 2 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் திரையுலகிற்கு மொத்தம் 10 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது போற்றுதலுக்குரியது.</p> <h2>பெருமைமிக்கவர்கள்</h2><p>3 தேசிய விருதுகளுக்கு தேர்வான இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கும், கேப்டன் மில்லர் பட நடிகர் தனுஷுக்கும், சிறந்த ஒலிக்கலவை பொறியாளரான சுரேன் ஜிக்கும், அமரன் பட படத்தொகுப்பாளர் கலைவாணனுக்கும், சிறந்த ஒலிக்கலவைக்கான விருது ப்ளூ படத்திற்காக ஹரிஹர சுதனுக்கும் உட்பட தமிழ் சினிமாவில் தேசிய விருதுக்குத் தேர்வான அனைவரும் பெருமைமிக்கவர்கள். </p><h2>கடின உழைப்பு</h2><p>காரணம், கலைத்துறையில் மிகுந்த ஈடுபாட்டோடு செயல்பட்டு, தொடர் முயற்சி செய்து, கடின உழைப்பை மேற்கொண்டு, அர்ப்பணிப்போடு பணியாற்றியதுதான்.</p><h2>பாராட்டு</h2><p>தேசிய அளவில் தமிழ் மொழி உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பணியாற்றி தேசிய விருதுக்கு தேர்வானவர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள், வாழ்த்துக்குரியவர்கள். </p><h2>வாழ்த்து</h2><p>குறிப்பாக தமிழ் சினிமாவின் மூலம் தேசிய விருது பெறும் அனைவரையும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பாராட்டி, தொடர்ந்து கலைத்துறையில் சிறந்து விளங்கி பல்வேறு உயரிய விருதுகள் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>குலசேகரன்பட்டினம் ஏவுதளப்பணிகள்  எப்போது முடியும்? இஸ்ரோ தலைவர் பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/when-will-the-work-on-the-kulasekarapattinam-launch-site-be-completed-isro-chairman-responds</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/when-will-the-work-on-the-kulasekarapattinam-launch-site-be-completed-isro-chairman-responds#comments</comments><guid isPermaLink="false">5c32e952-046a-4087-abce-5bdf3ed77372</guid><pubDate>Sun, 19 Jul 2026 10:46:54 +0000</pubDate><atom:updated>2026-07-19T10:46:54.978Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இஸ்ரோ,ISRO,குலசேகரன்பட்டினம்,ஏவுதளப்பணிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/m4q2tlx1/isro.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  இஸ்ரோ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/m4q2tlx1/isro.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்ரீஹரிகோட்டா,</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B">இஸ்ரோ</a> தலைவர் நாராயணன் பேசியதாவது:- விண்வெளி சீர்திருத்தம் அறிவிக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட முதல் ராக்கெட், அதன் முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக செயற்கைக் கோளை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது. </p> <p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B">ராக்கெட் ஏவுதல்</a> என்பது மிகவும் சவாலான விஷயம். அதை முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்றிருப்பதற்கு ஸ்கைரூட் நிறுவனத்துக்கு வாழ்த்துகள். இது ஒரு தொடக்கம் மட்டுமே, இந்த ஆண்டு ஆறு முதல் 7 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளோம். </p><p>2 ராக்கெட்டுகளின் தயாரிப்பு பணிகள் முடிந்து சோதனை அடிப்படையில் இருக்கின்றன. 5 ராக்கெட்டுகள் முடியும் தருவாயில் இருக்கிறது. குலசேகரன்பட்டினம் ஏவுதளம் அமைக்கும் பணிகள் இந்த ஆண்டு முடிவடைவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அடுத்த ஆண்டு (2027) மார்ச் மாதம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B">இஸ்ரோ </a>அமைப்பில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பணி முடிவதற்கு முன்பாகவே ஓய்வு பெற்று வெளியேறுவதால் இஸ்ரோவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது' என்றார்.</p>]]></content:encoded></item><item><title>வாகன விபத்தில் பலியான பெண் டாக்டர் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/1-crore-compensation-for-the-family-of-the-female-doctor-who-died-in-a-vehicle-accident</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/1-crore-compensation-for-the-family-of-the-female-doctor-who-died-in-a-vehicle-accident#comments</comments><guid isPermaLink="false">b18ff8bc-54ff-4891-81b2-5f50b6962d5d</guid><pubDate>Sun, 19 Jul 2026 09:12:53 +0000</pubDate><atom:updated>2026-07-19T09:12:53.776Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இழப்பீடு,road accident,Chennai,சென்னை,பெண் டாக்டர்,வாகன விபத்து,Woman Doctor</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/04ky9xh3/koer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/04ky9xh3/koer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/Chennai">சென்னை</a>யில் பல் டாக்டராக பணியாற்றிவவர் இமயவள்ளி. இவர், கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி கும்பகோணம், நெல்லத்தநல்லூர் அசுர்குளம் பகுதியில் பயணிகள் வாகனத்தில் சென்றார். இந்த வாகனத்தை அவர் கணவர் ராதாகிருஷ்ணன் ஓட்டினார். அப்போது, எதிர் திசையில் வேகமாக வந்த சரக்கு வாகனம், ஒன்று இந்த வாகனம் மீது மோதியது.</p><h2>வாகன விபத்து</h2><p>இந்த விபத்தில் டாக்டர் இமயவள்ளி மரணம் அடைந்தார். இதையடுத்து சென்னையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் கோர்ட்டில், இழப்பீடு கேட்டு இமயவள்ளியின் கணவர் ராதாகிருஷ்ணன், மகன் ஹெம்தேவ் தர்சன், தந்தை செல்வம், தாய் ஜோதி ஆகியோர் கூட்டாக வழக்கு தொடர்ந்தனர்.</p><h2>காப்பீட்டு நிறுவனம்</h2><p>இந்த வழக்கை நீதிபதி ஏ.பி.நஷீர்அலி விசாரித்தார். மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் ஏ.எஸ்.பிலால், "டாடா ஏஸ் வாகனத்தில் டாக்டர் இமயவள்ளி பின்புறம் உட்கார்ந்திருந்தார். எதிர்தரப்பில் வேகமாகவும், கவனக்குறைவாகவும் வந்த சரக்கு வாகனத்தினால் இந்த விபத்து நடந்துள்ளது. இதில் இமயவள்ளி மரணமடைந்துள்ளார்” என்று வாதிட்டார். விபத்துக்குள்ளான சரக்கு வாகனம் காப்பீடு செய்திருந்த காப்பீட்டு நிறுவனம் தரப்பில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது. </p><h2>வயது 35</h2><p>காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "விபத்தில் பலியான டாக்டர் தனியார் ஆஸ்பத்திரியில் மாதம் ரூ.55 ஆயிரத்து 200 ஊதியமாக பெற்றுள்ளார். இதுதவிர தனியாக கிளினிக்கும் நடத்தி வந்துள்ளார். இறக்கும்போது அவரது வயது 35 தான்.</p><h2>7.5 சதவீத வட்டி</h2><p>எனவே, அவரது மரணத்துக்கு ஒரு கோடியே 4 லட்சத்து 64 ஆயிரத்து 462 ரூபாய் இழப்பீடாக நிர்ணயம் செய்கிறேன். இந்த தொகையை வழக்கு தொடர்ந்த நாளில் இருந்து 7.5 சதவீத வட்டியுடன், அவரது கணவர் உள்ளிட்டோருக்கு காப்பீட்டு நிறுவனம் வழங்கவேண்டும்” என்று தீர்ப்பு அளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>மதுரை: சமணர் படுகையில் படுத்துக் கொண்டு ஆய்வு செய்த அமைச்சர் ராஜ்மோகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-rajmohan-inspects-ancient-jain-beds-madurai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-rajmohan-inspects-ancient-jain-beds-madurai#comments</comments><guid isPermaLink="false">f2d6a1e3-7a82-41d0-b56e-30542c93a53f</guid><pubDate>Sun, 19 Jul 2026 08:47:20 +0000</pubDate><atom:updated>2026-07-19T08:47:20.422Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,ஆய்வுInspection,தமிழ்Tamil,Minister Rajmohan,அமைச்சர் ராஜ்மோகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/146585ci/minister-rajmohan.17.07.202.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ராஜ்மோகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/146585ci/minister-rajmohan.17.07.202.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரை அருகே மீனாட்சிபுரம் (மாங்குளம்) கிராமத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சமணர் படுகைகளுக்கு தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D">அமைச்சர் ராஜ்மோகன்</a> நேரில் சென்று ஆய்வு நடத்தினார். </p> <h2>ஆய்வு</h2><p>அங்குள்ள சங்க கால தமிழ் பிராமி  கல்வெட்டுகள் மற்றும் சமண முனிவர்களின் படுக்கை அமைப்பை துல்லியமாக ஆராய்வதற்காக, அமைச்சர் ராஜ்மோகன் அவரே அந்த கற்படுகையில் படுத்துக்கொண்டு வரலாற்று எழுத்துக்களை உற்று நோக்கி ஆய்வு செய்தார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. </p><h2>அதிகாரிகளுக்கு உத்தரவு</h2><p>தொல்லியல் துறை அதிகாரிகளுடன் இணைந்து இந்த வரலாற்று பொக்கிஷத்தை பாதுகாக்கவும், உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா தலமாக மாற்றவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனே எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-the-day-after-tomorrow-16</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-the-day-after-tomorrow-16#comments</comments><guid isPermaLink="false">bbd64c7d-f2fe-4458-9c23-edf6aac6a27b</guid><pubDate>Sun, 19 Jul 2026 08:25:06 +0000</pubDate><atom:updated>2026-07-19T08:25:06.981Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,monthly maintenance work,power outage,மாதாந்திர பராமரிப்பு பணி,மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/j769a4ls/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/j769a4ls/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர், கல்லிடைக்குறிச்சி மின் கோட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட இடங்களில் நாளை மறுநாள் (21.7.2026, செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மின்தடை</a> செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>வள்ளியூர் கோட்டம்</h2><p>வள்ளியூர் மின்கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>வள்ளியூர் மற்றும் விஜயாபதி துணை மின் நிலையங்களில்  நாளை மறுநாள் (21.7.2026,  செவ்வாய்கிழமை) அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணை மின் நிலையங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும். இதன் காரணமாக பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் பின்வரும் நேரங்களில் மின்விநியோகம் இருக்காது.</p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>வள்ளியூர், செம்பாடு, கிழவனேரி, சமாதானபுரம், வடலிவிளை, தெற்கு வள்ளியூர், ஏர்வாடி, திருக்குறுங்குடி. </p><p>கூத்தன்குழி, முருகானந்தபுரம், உதயத்தூர், சிதம்பரபுரம், பரமேஸ்வரபுரம், இளையநயினார்குளம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p><h2>கல்லிடைக்குறிச்சி கோட்டம்</h2><p>கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும்பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>கல்லிடைக்குறிச்சி கோட்டம் கரிசல்பட்டி மற்றும் சேரன்மகாதேவி துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (21.7.2026, செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம், பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும். </p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>அதன்படி கரிசல்பட்டி, பிள்ளைகுளம், மணிமுத்தான்குளம், புலவன்குடியிருப்பு, கோவிந்தபேரி, தெய்வநாயகபேரி, மீனவன்குளம், பட்டன்காடு, இடையான்குளம், கங்கணாங்குளம், சடையமான்குளம், வெங்கட்ரங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லுர், காடுவெட்டி, சேரன்மகாதேவி, பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், கரிசூழ்ந்தமங்கலம், கேசவசமுத்திரம், மலையடி, மேல்கரை ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>பெற்றோர் கண்டித்ததால் விபரீதம்.. கல்லூரி மாணவி தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragic-outcome-after-scolding-by-parents-college-student-commits-suicide</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragic-outcome-after-scolding-by-parents-college-student-commits-suicide#comments</comments><guid isPermaLink="false">8c28de7f-9c42-4363-b7d6-836a655c5415</guid><pubDate>Sun, 19 Jul 2026 08:23:38 +0000</pubDate><atom:updated>2026-07-19T08:23:38.385Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>College student,கல்லூரி மாணவி,Erode,ஈரோடு,தற்கொலை,Suicide,சத்தியமங்கலம்,Sathyamangalam</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/8820kcp6/colleg.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/8820kcp6/colleg.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சத்தியமங்கலம்,</p><p>பெற்றோர் திட்டியதால் சத்தியமங்கலத்தில் கல்லூரி மாணவி <a href="https://www.dailythanthi.com/topic/suicide">தற்கொலை</a> செய்துகொண்டார்.</p><h2>கல்லூரி மாணவி</h2><p>ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் குள்ளங்கரடு பகுதியை சேர்ந்தவர் ராஜா. கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி நீலாவதி. மகள்கள் சஞ்சனா (வயது 21). சோனியா (19). ஈரோட்டில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் சஞ்சனா இறுதி ஆண்டு படித்து வருகிறார். சோனியா தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.</p><p>நேற்று மதியம் வீட்டில் இருந்த சோனியா வேலைகள் எதுவும் செய்யாமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் ராஜாவும், நீலாவதியும் வீட்டில் ஒரு வேலை செய்யாமல் இருக்கிறாயே என்று கண்டித்துள்ளனர்.</p><p>இந்தநிலையில் பெற்றோர் திட்டியதால், ஆத்திரமடைந்த சோனியா வீட்டில் இருந்த அறைக்குள் சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார்.</p><h2>தூக்கில் தொங்கினார்</h2><p>பெற்றோர் நீண்ட நேரம் கதவை தட்டிப்பார்த்தும் சோனியா கதவை திறக்க வில்லை. இதனால் அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.</p><p>அப்போது வீட்டின் விட்டத்தில் சேலையால் சோனியா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிந்தது. அதைப்பார்த்து பெற்றோர் கதறி துடித்தனர். இதுகுறித்து உடனே சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. </p><p>அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>கோவை: இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-police-constable-arrested-for-sexually-harassing-a-young-woman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-police-constable-arrested-for-sexually-harassing-a-young-woman#comments</comments><guid isPermaLink="false">41573c74-a34b-41bd-b2be-fab63503feed</guid><pubDate>Sun, 19 Jul 2026 08:09:30 +0000</pubDate><atom:updated>2026-07-19T08:09:30.467Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,police,போலீஸ்காரர்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/e17s3pcn/15.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/e17s3pcn/15.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவையில் ஆண் நண்பருடன் நின்ற போது விசாரிப்பதாக அழைத்துச் சென்று இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.</p><p>கோவை துடியலூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் போலீஸ்காரர் வினோத்குமார் (வயது 35) மற்றும் போலீசார் கடந்த 15-ந் தேதி வெள்ளக் கிணறு பகுதியில் வீட்டுவசதி வாரிய 2-ம் கட்ட வளைவு அருகே ரோந்து சென்றனர். அங்கு 23 வயது இளம்பெண், தனது ஆண் நண்பருடன் நின்று கொண்டு இருந்தனர். </p><p>உடனே போலீசார் அந்த 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது போலீஸ்காரர் வினோத்குமார், அந்த இளம்பெண்ணை தனியாக அழைத் துச்சென்று விசாரணை நடத்தினார். அதன்பிறகு அவர் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அந்த இளம்பெண்ணை அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.</p><p>இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண், தனது ஆண் நண்பரிடம் ஓடிச்சென்று தனக்கு நடந்ததை கூறி அழுதார். இது தொடர்பாக அந்த இளம்பெண்ணின் ஆண் நண்பர் போலீஸ் உயர் அதிகாரிகளை சந்தித்து புகார் தெரிவித்தார். </p><p>அதன்பேரில் போலீஸ்காரர் வினோத்குமார் மீது துடியலூர் போலீஸ் நிலை யத்தில் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நேற்று போலீஸ்காரர் வினோத்குமாரை போலீசார் கைது செய்தனர்.</p><p>இதுகுறித்து போலீசார் கூறும்போது. சம்பவம் நடந்த அன்று போலீஸ்காரர் வினோத்குமாருடன் ரோந்து சென்ற போலீசார் மீதும் துறைரீதியான நடவ டிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-under-pocso-for-sexually-harassing-girl</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-under-pocso-for-sexually-harassing-girl#comments</comments><guid isPermaLink="false">06dadf94-254f-47e9-b647-4f2ffbe704c7</guid><pubDate>Sun, 19 Jul 2026 07:56:04 +0000</pubDate><atom:updated>2026-07-19T07:56:04.573Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Thoothukudi,தூத்துக்குடி,arrest,Sexual harassment,பாலியல் தொல்லை,Youth,வாலிபர்,சிறுமி,போக்சோ,Kovilpatti,கோவில்பட்டி,POCSO,minor</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/pqbe2w1e/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறுமிக்கு பாலியல் தொல்லை, வாலிபர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/pqbe2w1e/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சிறுமிக்கு பாலியல் தொல்லை</a> கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.</p><h2>சிறுமிக்கு பாலியல் தொல்லை</h2><p>தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வள்ளுவர்நகரைச் சேர்ந்த ராஜபாண்டி மகன் கருப்பசாமி (வயது 20). இவர் அப்பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.</p><h2>போக்சோவில் வாலிபர் கைது</h2><p>இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, தலைமறைவாக இருந்த கருப்பசாமியை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். </p>]]></content:encoded></item><item><title>தேசிய விருது வென்ற அனைவருக்கும் வாழ்த்துகள் - பிரேமலதா விஜயகாந்த்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/congratulations-to-all-the-national-award-winners-premalatha-vijayakanth</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/congratulations-to-all-the-national-award-winners-premalatha-vijayakanth#comments</comments><guid isPermaLink="false">95b06ebc-95eb-4c81-bb07-355a4054b8f7</guid><pubDate>Sun, 19 Jul 2026 07:50:11 +0000</pubDate><atom:updated>2026-07-19T07:50:11.784Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தேசிய விருதுகள்,வாழ்த்து,Congratulations,Premalatha Vijayakanth,பிரேமலதா விஜயகாந்த்,National Award</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/tazglpzv/premalatha.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரேமலதா விஜயகாந்த்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/tazglpzv/premalatha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்திய திரையுலகின் உயரிய அங்கீகாரமாக கருதப்படும் தேசிய திரைப்பட விருதுகள், கடந்த 1954-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர். இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.</p><p>அந்த வகையில், 72-வது <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81">தேசிய திரைப்பட விருதுகள்</a> டெல்லியில் நேற்று மாலை அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தனது  எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>வாழ்த்துகள்</h2><p>72-வது தேசிய திரைப்பட விருதுகளில் விருது பெற்ற அனைத்து கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுக்கும் எனது இதயப்பூர்வமான பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய சினிமாவின் பன்முகத் திறமையை உலக அரங்கில் உயர்த்தும் ஒவ்வொரு படைப்பும் நமது கலாசாரத்தின் பெருமையைப் பறைசாற்றுகிறது. உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு தொடர்ந்து பல புதிய உச்சங்களைத் தொடட்டும் என வாழ்த்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கடப்பாரையால் மனைவி அடித்துக்கொலை: வியாபாரி வெறிச்செயல்..என்ன காரணம்..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wife-beaten-to-death-with-a-crowbar-merchants-brutal-actwhat-was-the-reason</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wife-beaten-to-death-with-a-crowbar-merchants-brutal-actwhat-was-the-reason#comments</comments><guid isPermaLink="false">7dbd3f04-249e-4b3a-bec1-bbff129f749e</guid><pubDate>Sun, 19 Jul 2026 07:49:52 +0000</pubDate><atom:updated>2026-07-19T07:49:52.409Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,Erode,ஈரோடு,கிரைம் செய்திகள்,police investigation,போலீசார் விசாரணை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/55vin3zh/koli.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/55vin3zh/koli.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சோலார், </p><p>ஈரோடு அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு கடப்பாரையால் மனைவியை அடித்துக்கொன்ற பழ வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.</p><h2>நடத்தையில் சந்தேகம்</h2><p>ஈரோடு அருகே உள்ள லக்காபுரம் ஊராட்சிக்குட்பட்ட சோலார் செல்லகிருஷ்ணா நகரை சேர்ந்தவர் சேட்டு தனபால். இவருடைய மனைவி புஷ்பா (வயது 48). இருவரும் தள்ளுவண்டியில் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தனர். இவர்களுக்கு 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர்.</p><p>இந்தநிலையில் சேட்டு தனபால் தன்னுடைய தந்தை ஆறுமுகத்துக்கும், புஷ்பாவுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். கடந்த 14-ந் தேதி இரவு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. </p><h2>கடப்பாரையால் தாக்குதல்</h2><p>அதன்பின்னர் அன்று நள்ளிரவு 1 மணி அளவில் புஷ்பா கழிப்பறைக்கு சென்று வந்துள்ளார். அப்போது தூக்கம் கலைந்து எழுந்த சேட்டு தனபால் சந்தேகப்பட்டு நீ உயிரோடு இருந்தால்தானே இப்படி செய்கிறாய் என்று கூறி வீட்டில் இருந்த கடப்பாரையை எடுத்து புஷ்பாவை தாக்கியதாக கூறப்படுகிறது.</p><h2>டாக்டர்கள் சிகிச்சை</h2><p>கணவன் தாக்கியதில் படுகாயம் அடைந்த புஷ்பா ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.</p><h2>கைது</h2><p>இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மனைவியை தாக்கியதாக சேட்டு தனபாலை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கோபி சிறையில் அடைக்கப்பட்டார்.</p><h2>சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு</h2><p>இந்தநிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த புஷ்பா சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மாலை இறந்துவிட்டார். இதையடுத்து மொடக்குறிச்சி போலீசார் சேட்டு தனபால் மீது தாக்குதல் வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p> ]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-the-day-after-tomorrow-10</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-the-day-after-tomorrow-10#comments</comments><guid isPermaLink="false">0524cf0f-080e-4d7c-8f6c-361616e8c903</guid><pubDate>Sun, 19 Jul 2026 07:40:42 +0000</pubDate><atom:updated>2026-07-19T07:40:42.110Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,monthly maintenance work,power outage,தென்காசி,மாதாந்திர பராமரிப்பு பணி,மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/cbuct9ux/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/cbuct9ux/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p>திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், தென்காசி கோட்டம், கீழப்பாவூர், அச்சன்புதூர் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட இடங்களில் நாளை மறுநாள் (21.7.2026, செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மின்தடை</a> செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>தென்காசி கோட்ட செயற்பொறியாளர் ஸ்ரீ வனஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>கீழப்பாவூர் மற்றும் அச்சன்புதூர் துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (21.7.2026, செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் பின்வரும் ஊர்கள் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. </p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>அதன்படி பாவூர்சத்திரம், கீழப்பாவூர், மேலப்பாவூர், குலசேகரப்பட்டி, குறும்பலாப்பேரி, நாட்டார்பட்டி, ஆவுடையானூர், வெய்காலிப்பட்டி, சின்னநாடானூர், திப்பணம்பட்டி, செட்டியூர், பெத்தநாடார்பட்டி, கரிசலூர், செல்லத்தாயார்புரம், மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கலப்பட்டினம் வடக்கு, சாலைப்புதூர். </p><p>வடகரை, அச்சன்புதூர், நெடுவயல், வாவா நகரம், காசி தர்மம், பண்பொழி, மேக்கரை, கரிசல் குடியிருப்பு ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>ஆய்வு மேற்கொண்ட விடுதியில் மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிய முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-fulfilled-the-demands-of-the-students-in-the-hostel-he-inspected</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-fulfilled-the-demands-of-the-students-in-the-hostel-he-inspected#comments</comments><guid isPermaLink="false">42f14b12-db98-4c58-ab0a-ac98f42d28de</guid><pubDate>Sun, 19 Jul 2026 07:28:25 +0000</pubDate><atom:updated>2026-07-19T07:28:25.797Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,மாணவர் விடுதி,முதல்-அமைச்சர் விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/axo2lyma/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/axo2lyma/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்​னை, சைதாப்​பேட்​டை​யில் உள்ள எம்​.சி. ராஜா சமூகநீதி மாணவர் விடுதியில் நேற்​று ​முன்​தினம் முதல்​-அமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்​கொண்​டார். மேலும், மாணவர்​களிடம் குறை​கள் மற்​றும் தேவை​களை கேட்டறிந்​தார். அப்​போது, விடு​தி​யில் இருக்​கும் குறை​கள் மற்​றும் தேவை​களை முதல்-அமைச்சரிடம் வேதனை​யுடன் மாணவர்​கள் எடுத்துரைத்​தனர். </p><p>குறிப்​பாக, உடற்​கல்வி ஆசிரியரை நியமிக்க வேண்​டும். நவீன உடற்​ப​யிற்சி கூடம் அமைக்க வேண்​டும். உணவின் தரத்தை மேம்​படுத்த வேண்​டும் உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்​கைகள் அடங்​கிய மனுக்​களை​யும் முதல்-அமைச்சரிடம் மாணவர்கள் வழங்​கினர். மாணவர்​களின் கோரிக்​கைகளை உடனடி​யாக நிறைவேற்ற வேண்​டும் என அமைச்​சர் மற்​றும் அதி​காரி​களுக்கு முதல்-அமைச்சர் உத்தர​விட்​டார்.</p><p>இதையடுத்​து, பல மாற்​றங்​கள் விடு​தி​யில் செய்யப்​பட்​டுள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்ளன. இதுகுறித்​து, சமூகநீ​தித் துறை​யின் மூத்த அதி​காரி ஒரு​வர் கூறுகையில், மாணவர்​களுக்கு தரமான உணவு வழங்​கும் வகை​யில் விடு​தி​யின் உணவுப் பட்​டியல் திருத்தி அமைக்கப்பட்டுள்​ளது. இட்​லி, சப்​பாத்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்​ளது.</p><p>மாணவர்​களுக்கு தரமான உணவு வழங்​கப்​படு​வதை உறுதி செய்ய கண்​காணிப்பு குழு​வும் அமைக்​கப்​பட்​டுள்​ளது. அத்​துடன், மூடப்​பட்​டிருந்த வாலி​பால் மைதானம் மாணவர்​கள் பயன்​படுத்த திறக்​கப்​பட்​டுள்​ளது. மாணவர்​கள் இரவு 12 மணி வரை விடுதிக்குள் நுழைய அனு​மதி வழங்​கப்​பட்​டுள்​ளது. இவ்வாறு அவர் கூறி​னார். முதல்​-அமைச்சர் விஜய்​யின் ஆய்​வுக்கு அடுத்த நாளே மாணவர்​கள் முன்​வைத்த கோரிக்​கை​களில் சில​வற்​றுக்கு உடனடி தீர்வு காணப்​பட்​டிருப்​பது, மாணவர்​களிடையே வரவேற்​பை பெற்றுள்​ளது.</p>]]></content:encoded></item><item><title>யு.பி.ஐ. மூலம் மாதந்தோறும் 2 ஆயிரம் கோடி யு.பி.ஐ. பரிவர்த்தனைகள்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/2000-crore-upi-transactions-per-month-via-upi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/2000-crore-upi-transactions-per-month-via-upi#comments</comments><guid isPermaLink="false">51d6bd7e-5651-4318-866a-524e5cfca3b0</guid><pubDate>Sun, 19 Jul 2026 07:09:10 +0000</pubDate><atom:updated>2026-07-19T07:09:10.874Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,யு.பி.ஐ. பரிவர்த்தனை,UPI transactions,நிர்மலா சீதாராமன்,UPI,மத்திய மந்திரி,UPI Service,யு.பி.ஐ.,யு.பி.ஐ. பண பரிவர்த்தனை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/xv7d3h13/woe.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/xv7d3h13/woe.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p>மதுரையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசினார். </p><p>அப்போது அவர் பேசியதாவது:-</p><p>உலகளாவிய போர்ப்பதற்றங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு சிக்கல்கள், உரங்களின் விலை உயர்வு போன்ற பல்வேறு உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும், இந்தியா உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடாக திகழ்கிறது.</p><p>நமது டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு சர்வதேச அளவில் ஒரு முன்மாதிரியாக மாறியுள்ளது. இந்தியாவில் யு.பி.ஐ. தளம் மூலம் ஒவ்வொரு மாதமும் 2 ஆயிரம் கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை கையாள்கிறது. </p> <p>இந்தியாவில் தற்போது 2,100 உலகளாவிய திறன் மையங்கள் உள்ளன. இவை பெரு நகரங்களை தாண்டி 2-ம் மற்றும் 3-ம் கட்ட நகரங்களுக்கும் விரிவடைந்து வருகின்றன. </p><p>நாட்டில் பின்தங்கிய 114 மாவட்டங்களை கண்டறிந்து, அவற்றை ‘லட்சிய மாவட்டங்கள்' என்று அழைத்து, அனைத்து அரசுத்திட்டங்களையும் ஒருங்கிணைத்து மேம்படுத்தி வருகிறோம். அதன்படி, தமிழகத்தில் விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 2 மாவட்டங்கள் இதில் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு முன்னிலையில் உள்ளன.</p><h2>தவிர்க்க முடியாத சக்தி</h2><p>உள்ளூர் தயாரிப்புகளின் உலகளாவிய சந்தை சிட்பி (எஸ்.ஐ.டி.பி.ஐ.) வங்கி விருதுநகரில் ஒரு பிரிவை தொடங்கி, அங்குள்ள புகழ்பெற்ற 'விருதுநகர் வத்தல்' (மிளகாய்) வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இப்பகுதி விவசாயிகள் மாப்பிள்ளை சம்பா, கருப்புக்கவுனி போன்ற பாரம்பரிய, ஊட்டச்சத்துமிக்க நெல் ரகங்களை மீட்டெடுத்து சர்வதேச அளவிற்கு ஏற்றுமதி செய்ய தொடங்கி உள்ளனர். </p><p>பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மதுரை, எப்போதும் அழியாத மீளெழுச்சியின் அடையாளமாக உள்ளது. பல்வேறு சாதனைகள் மூலம் உலக அரங்கில் இந்தியாவின் சாதனைகள் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக நிமிர்ந்து நிற்கிறது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பத்திரப்பதிவு துறையில் லஞ்சம் தவிர்க்கப்பட்டுள்ளது; ப.சிதம்பரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bribery-has-been-avoided-in-the-securities-registration-sector-p-chidambaram</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bribery-has-been-avoided-in-the-securities-registration-sector-p-chidambaram#comments</comments><guid isPermaLink="false">6a23e61b-83d2-49b5-ae42-cf1db78f0c2c</guid><pubDate>Sun, 19 Jul 2026 07:04:50 +0000</pubDate><atom:updated>2026-07-19T07:04:50.693Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/kj2cpobq/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/kj2cpobq/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- </p><p>காமராஜரின் 9 ஆண்டு கால ஆட்சியில் லஞ்சம் என்பதே இருந்ததில்லை. அதேபோல், தற்போது தமிழகத்தில் அமைந்துள்ள தவெகவின் 2 மாத கால ஆட்சியில் பத்திரப்பதிவு துறையில் லஞ்சம் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த நேர்மையான நிர்வாக மாற்றத்திற்கு தனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>ஈரோடு: லாரியை மறித்து கரும்பை சுவைத்த காட்டு யானை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-wild-elephant-intercepts-lorry-and-feasts-on-sugarcane</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-wild-elephant-intercepts-lorry-and-feasts-on-sugarcane#comments</comments><guid isPermaLink="false">6aa549df-93b4-46d2-b3e4-702a2f02e1cb</guid><pubDate>Sun, 19 Jul 2026 07:02:53 +0000</pubDate><atom:updated>2026-07-19T07:02:53.138Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>lorry,லாரி,காட்டு யானை,wild elephant,sugarcane,கரும்பு</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/j0pmjnje/14.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/j0pmjnje/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு, </p><p>ஈரோடு மாவட்டம் தாளவாடியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலம் நோக்கி ஒரு லாரி மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மதியம் வந்துகொண்டு இருந்தது. ஆசனூர் வந்தபோது, சாலை யோரம் நின்றுகொண்டு இருந்த ஒரு காட்டு யானை கரும்பு பாரம் ஏற்றிய லாரியை மறித்தது.</p><p>இதனால் டிரைவர் லாரியை நிறுத்திக்கொண்டார்.  </p><p>இதையடுத்து யானை லாரியின் மீது போடப்பட்டு இருந்த தார்பாயை விலக்கிவிட்டு கரும்புகளை எடுத்து சுவைத்தது. இதைப்பார்த்த மற்ற வாகன ஓட்டிகளும் வாகனங்களை நிறுத்திக்கொண்டனர். சுமார் 15 நிமிடம் யானை கரும்பை சுவைத்துவிட்டு, அதன்பின்னர் காட்டுக்குள் சென்றுவிட்டது. </p><p>வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் அடிக்கடி தேசிய நெடுஞ்சாலையோரம் வந்து நின்றுவிடுகின்றன. அவ்வாறு நிற்கும் யானைகள் தாள வாடியில் இருந்து ஆசனூர் வழியாக கரும்பு, காய்கறி ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலம் மற்றும் கோவைக்கு செல்லும் வாகனங்களை மறித்து அவற்றை தின்று நாசப்படுத்துகின்றன. எனவே தேசிய நெடுஞ்சாலையோரம் நிற்கும் யானைகளை வனத்துறையினர் தொடர்ந்து ரோந்து சென்று விரட்டவேண்டும் என்று வாகன ஓட்டிகள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>அலோபதி சிகிச்சை அளித்த வடமாநில டாக்டர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/northern-state-doctor-arrested-for-providing-allopathic-treatment</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/northern-state-doctor-arrested-for-providing-allopathic-treatment#comments</comments><guid isPermaLink="false">64c9fd15-0f28-438c-aefb-5ae08dbeea37</guid><pubDate>Sun, 19 Jul 2026 06:54:45 +0000</pubDate><atom:updated>2026-07-19T06:54:45.419Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>arrest,Dindugal,போலி டாக்டர் கைது,Dindugal - திண்டுக்கல்,அலோபதி சிகிச்சை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/5k9ee6s3/arrest33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டாக்டர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/5k9ee6s3/arrest33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்</p><p>திண்டுக்கல்லில் ராமர்கோவில் சந்து பகுதியில் சித்த மருத்துவத்தில் டிப்ளமோ படித்துவிட்டு, அலோபதி மருத்துவ சிகிச்சை அளித்து வந்த அமித் குமார் டிக்காதர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>திண்டுக்கல் மாவட்டம், பழனி ராமர்கோவில் தெரு பகுதியில் முறையான மருத்துவம் படிக்காமல் கிளினிக் நடத்தி சிகிச்சை அளிப்பதாக மாவட்ட சுகாதாரத்துறைக்கு புகார் வந்தது.</p><p>அதன்பேரில் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் பாரதி உத்தரவின்பேரில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சுகாதாரத்துறை</a> அதிகாரிகள் பழனியில் உள்ள சம்பந்தப்பட்ட கிளினிக்கிற்கு சென்று ஆய்வு செய்தனர்.</p> <h2>டாக்டர் கைது</h2><p>பின்பு அங்கிருந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பழனி சேரன்ஜீவாநகரில் குடியிருந்து வரும், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அமித்குமார் டிக்காதர் (வயது 51) என்பதும், டிப்ளமோ சித்தா படித்துவிட்டு அலோபதி முறையில் ஊசி போடுவது, சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது.</p><p>அதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அமித்குமார் டிக்காதரை பிடித்து பழனி டவுன் போலீசில் ஒப்படைத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து அமித்குமார் டிக்காதரை கைது செய்தனர்.</p>]]></content:encoded></item></channel></rss>