<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 14 Jul 2026 13:47:29 +0000</lastBuildDate><item><title>மூடப்பட்ட குவாரிகளை மீண்டும் திறக்கும் முடிவை கைவிட வேண்டும் - டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-decision-to-reopen-closed-quarries-must-be-abandoned-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-decision-to-reopen-closed-quarries-must-be-abandoned-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">7175607d-f23d-44b5-8b75-fc52f262397e</guid><pubDate>Tue, 14 Jul 2026 13:26:11 +0000</pubDate><atom:updated>2026-07-14T13:26:11.529Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,AMMK,அமமுக</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/jnauq4j2/9.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/jnauq4j2/9.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>“தமிழ்நாட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையின் மூலம் மூடப்பட்ட மணல் குவாரிகளை மீண்டும் திறக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வெளியாகியிருக்கும் செய்திகள் விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  </p><p>அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், இயற்கை வளங்களை சட்டவிரோதமாக சுரண்டியதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் தற்போது வரை மூடப்பட்டுள்ள  மணல் குவாரிகளை தவெக அரசு மீண்டும் திறக்க முடிவு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது</p><p>மணல் குவாரிகளின் கட்டுப்பாடற்ற, விதிமுறைகளை மீறிய செயல்பாடுகளால் சுற்றுச்சூழலுக்கும், நிலத்தடி நீருக்கும் ஏற்படும் பாதிப்பை மறந்துவிட்டு, தமிழகத்தில் கட்டுமானப் பணிகளுக்கு ஏற்பட்டிருக்கும் மணல் தட்டுப்பாட்டை போக்கவே மீண்டும் மணல் குவாரிகளை திறக்க முடிவு செய்திருக்கும் தமிழக அரசின் நடவடிக்கையால் காவிரி டெல்டா பகுதிகளின் நிலை மேலும் மோசமடையும் என விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.  </p><p>அதோடு, மணல் குவாரிகளில் சட்டவிரோதமாக நடைபெற்ற மணல் கொள்ளையால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதை தாண்டி, உள்ளூர் மக்களுக்கு அச்சுறுத்தல், தடுக்க நினைப்போர் மீது தாக்குதல் என சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கும் அடிப்படைக் காரணமாகவும் அமைந்த அவலச் சம்பவங்கள் மீண்டும் தொடர வாய்ப்புள்ளதாக  சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  </p><p>எனவே, தமிழ்நாட்டின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பது அரசின் அடிப்படை பொறுப்பு என்பதை உணர்ந்து, சுற்றுச்சூழலுக்கும் நிலத்தடி நீருக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் மணல் குவாரிகளை மீண்டும் திறக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ரூ.100 கோடி மேல் பணம் வசூலித்து மோசடி: திமுக பிரமுகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-leader-booked-under-goonda-act-for-fraud-collecting-over-rs-100-crore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-leader-booked-under-goonda-act-for-fraud-collecting-over-rs-100-crore#comments</comments><guid isPermaLink="false">0a6d207f-d642-4db7-ba0c-e3d826a42a1d</guid><pubDate>Tue, 14 Jul 2026 13:19:49 +0000</pubDate><atom:updated>2026-07-14T13:19:49.460Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,குண்டர் சட்டம்,Cheating</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/92hml22k/arasakumar33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திமுக பிரமுகர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/92hml22k/arasakumar33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகம் முழுவதும் பல தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் இருந்து ரூ.100 கோடிக்குமேல் வசூலித்து மோசடி செய்துள்ளதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அரசகுமார் கைது செய்யப்பட்ட நிலையில், குண்டர் சட்டம் அவர் மீது போடப்பட்டுள்ளது.</p><h2>ரூ. 100 கோடிக்கு மேல் பணம் வசூலித்து மோசடி</h2><p>கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறையில் அமைச்சர் மற்றும் அதிகாரிகளை தனக்கு தெரியும் என்று கூறி தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ. 100 கோடிக்கு மேல் பணம் வசூலித்து மோசடி செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><p>இது தொடர்பாக தனியார் பள்ளிகளை சேர்ந்த நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தி.மு.க. பிரமுகரான பி.டி. அரசகுமாரை கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டி.டி.சி.பி. மற்றும் சி.எம்.டி.ஏ. அங்கீகாரம் உள்ளிட்ட பிற சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்றுத் தருவதாக கூறி, தமிழகம் முழுவதும் பல தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் இருந்து ரூ.100 கோடிக்குமேல் வசூலித்து மோசடி செய்துள்ளதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அரசகுமார் மீது இந்த நடடிக்கை மேற்கொள்ளப்பட்டது.</p><h2>குண்டர் சட்டம்</h2><p>இந்த நிலையில் பி.டி.அரசகுமார் மீது <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">குண்டர் சட்டம் </a>பாய்ந்துள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பெயரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.</p><p>இந்த வழக்கு தொடர்பாக போலீசார் கூறும்போது தி.மு.க.வில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேசுக்கு நெருக்கமாக இருப்பதாக கூறிய இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அரச குமார் பள்ளி நிர்வாகிகளிடம் பணம் வசூலித்துள்ளார்.</p><p>இந்த மோசடியில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது பற்றி தீவிரமாக விசாரண நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தனர்.</p><h2>அதிகாரிகள் - முக்கிய பிரமுகர்கள் சிக்குகிறார்கள்</h2><p>இது தொடர்பாக 47 பள்ளிகளின் நிர்வாகிகள் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் பி.டி. அரசகுமார் உடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆகியோருக்கும் இந்த மோசடியில் தொடர்பு உள்ளதா என்பது பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.</p><p>இதன் முடிவில் ரூ.100 கோடி மோசடி வழக்கில் மேலும் பல கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தீப்பற்றி எரிந்து நாசம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-car-parked-at-the-door-of-a-house-caught-fire-and-was-destroyed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-car-parked-at-the-door-of-a-house-caught-fire-and-was-destroyed#comments</comments><guid isPermaLink="false">5ee7deda-061c-4f2f-97ce-90c21443bbe2</guid><pubDate>Tue, 14 Jul 2026 13:16:24 +0000</pubDate><atom:updated>2026-07-14T13:16:24.792Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Engine,Smoke,கரும்புகை,தீ fire,கார்car</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/rkni2eu0/125.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விபத்து]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/rkni2eu0/125.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை பாடி, டி.எம்.பி. நகர், அவ்வை தெருவைச் சேர்ந்தவர் மோகன் (வயது 43). தனது காரை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு. காருக்குள் அமர்ந்து பாடல் கேட்டபடி தூங்கியதாக தெரிகிறது. திடீரென காரின் என்ஜின் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர், காரின் பக்கவாட்டு கண்ணாடியை தட்டி மோகனை வெளியே வருமாறு கூறினர். உடனே மோகன், காரில் இருந்து வெளியே வந்தார். </p><h2>விசாரணை</h2><p>அடுத்த சில நிமிடங்களில் கார் தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென கார் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. தகவல் அறிந்து வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள், காரில் எரிந்த தீயை அணைத்தனர். அதற்குள் கார் முழுவதும் எரிந்து தீக்கிரையானது. இதுகுறித்து கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>காலநிலை மாற்றத்தால் குன்னூரில் நீர் பனிப்பொழிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/frost-in-coonoor-due-to-climate-change</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/frost-in-coonoor-due-to-climate-change#comments</comments><guid isPermaLink="false">3f49630c-ca88-47d5-9c31-4abe3e5693ae</guid><pubDate>Tue, 14 Jul 2026 13:12:13 +0000</pubDate><atom:updated>2026-07-14T13:12:13.583Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>குன்னூர்,Coonoor,snowfall,பனிப்பொழிவு</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/5x62c14f/8.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/5x62c14f/8.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வெலிங்டன்,  </p><p>காலநிலை மாற்றத்தால் குன்னூரில் தற்போது நீர் பனிப்பொழிவு காணப் படுகிறது. இதனால் கடும் குளிர் நிலவுவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.</p><h2>நீர் பனிப்பொழிவு</h2><p>நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கி யது. ஆனால், எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. கடந்த மாத இறுதியில் இருந்து பருவமழை தீவிரம் அடைந்தது. குன்னூர், வெலிங்டன், கேத்தி, எடப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்தது.</p><p>இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது. குன்னூர் பகுதியில் அதிகாலை நேரங்களில் கடும் நீர் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் கடும்குளிர் நிலவுகிறது. இதன் காரணமாக அதிகாலையில் வேலைக்கு செல்லும் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்கள் கடும் குளிரால் அவதி அடைந்து வருகின்றனர்.</p><h2>இயல்பு வாழ்க்கை பாதிப்பு</h2><p>ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாத இறுதியில் நீர் பனிப்பொழிவு காணப்படுகிறது. பின்னர் உறைபனி தாக்கம் அதிகரிக்கும். காலநிலை மாற்றம் காரணமாக தற்போது நீர் பனிப்பொழிவு காணப்படுகிறது. பசு மையான புல்வெளிகளில் நீர் துளிகள் கோர்த்து உள்ளதை பார்க்க முடி கிறது. மேலும் குன்னூர் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானம், வெலிங்டன் ராணுவ மைதானம் மற்றும் பூங்காக்களின் புல்வெளிகளில் நீர் பனிப்பொழிவு படர்ந்து காணப்படுகிறது.</p><p>இதன் காரணமாக விளையாட்டு மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ளும் வீரர்கள் முறையாக பயிற்சி மேற்கொள்ள முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். கடுங்குளிரை சமாளிக்க மக்கள் அதிகாலையில் ஸ்வெட்டர் அணிந்தவாறு வெளியில் செல்கின்றனர். குன்னூருக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் கடும் குளிர் காரணமாக சுற்றுலா தலங்களுக்கு செல்லாமல், தங்கும் அறையிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். நீர் பனிப்பொழிவால் பொதுமக்கள், விவசாயிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பள்ளிக்கரணை பகுதியில் சாய்ந்திருந்த அதிஉயரழுத்த மின் கோபுரம்;  ஒரு வார காலத்திற்குள் சீரமைப்பு பணி - மின்சார வாரியம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-voltage-electricity-tower-leaning-in-the-pallikaranai-area-electricity-board-to-complete-repair-work-within-a-week</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-voltage-electricity-tower-leaning-in-the-pallikaranai-area-electricity-board-to-complete-repair-work-within-a-week#comments</comments><guid isPermaLink="false">75792cdb-94b8-4aeb-8a3d-058c18298b40</guid><pubDate>Tue, 14 Jul 2026 13:07:38 +0000</pubDate><atom:updated>2026-07-14T13:07:38.007Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Electricity Board,பள்ளிக்கரணை,Pallikaranai,சீரமைப்பு பணி,Repair work,மின்சார வாரியம்,உயர்மின் கோபுரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/pw9a61t6/tneb.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்சார வாரியம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/pw9a61t6/tneb.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு மின்சாரவாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p>  <p> பள்ளிக்கரணை பகுதியில் சாய்ந்திருந்த 110 கி.வோ. அதிஉயரழுத்த மின் கோபுரம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம்  ஒரு வார காலத்திற்குள் சீரமைப்பு பணிகள் முடிக்ககப்படும். சமூக வலைதளங்களிலும், நாளிதழ்களிலும் வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு மின்வாரியம் கீழ்க்கண்டவாறு தெரிவித்து கொள்கின்றது.</p>  <h2>மின்கோபுரம்</h2><p>பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில், குப்பைக் கிடங்கிற்கு அருகில் அமைந்துள்ள 110 கி.வோ. இடிஎல் தரமணி மற்றும் 110 கி.வோ. சிறுசேரி இடிஎல் இருவழி  மின்கோபுரம், அண்மையில் ஏற்பட்ட இயற்கை காரணங்களால் 10.07.2026 அன்று சாய்ந்த நிலையில் கண்டறியப்பட்டது.</p><h2>சீரமைப்பு பணி</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu/power-outage-in-two-areas-of-chennai-today-electricity-board-announces">தமிழ்நாடு மின்சார</a> வாரியத்தின் கோபுர மின் பாதை பராமரிப்பு பிரிவு, வழக்கமானஆய்வுப்பணியின் போது 10.07.2026 அன்று கோபுரம் சாய்ந்திருப்பதை உடனடியாக கண்டறிந்தது. இதையடுத்து, 11.07.2026 முதல் அவசர சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடங்கப்பட்டன.</p><h2>ஆய்வு</h2><p>மேலும், எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அறிவுறுத்தலின் படி, கடந்த12.07.2026 அன்று கூடுதல் தலைமை செயலாளர்/ தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன்,  நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, சீரமைப்பு பணிகளை விரைவாக மேற்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.</p> <h2>தவறான தகவல்கள்</h2><p>இந்நிலையில், 12.07.2026 அன்று சமூக வலைதளங்களில், இந்த கோபுரம் கீழே விழுந்தால் தென் சென்னை முழுவதும் மின்தடை ஏற்படும் என தவறான தகவல்கள் பரப்பப்பட்டன. அதனை தொடர்ந்து, 14.07.2026 அன்று வெளியான ஒரு நாளிதழில், கோபுரம் சாய்ந்த நிலையில் இருந்தும் எந்த சீரமைப்பு பணியும் மேற்கொள்ளப்படவில்லை என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.</p><h2>புதிய மின் கோபுரம்</h2><p>இந்த தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்பதை தமிழ்நாடு மின்சார வாரியம் தெளிவுபடுத்துகிறது. உண்மையில், புதிய மின் கோபுரம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புதிய கோபுரம் நிறுவுதல் மற்றும் மின்கம்பிகள் பொருத்தும் பணிகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>பொது மக்கள் சமூக வலைதளங்களில் பரவும் ஆதாரமற்ற தகவல்களை நம்பாமல், தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிடும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்புமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>காரைக்கால், மயிலாடுதுறை ரெயில்கள் சேவையில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-karaikal-mayiladuthurai-train-services</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-karaikal-mayiladuthurai-train-services#comments</comments><guid isPermaLink="false">f6b91c10-39d4-4cc4-b4a3-6bc8a018d7d4</guid><pubDate>Tue, 14 Jul 2026 12:59:44 +0000</pubDate><atom:updated>2026-07-14T12:59:44.869Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>காரைக்கால்,Karaikal,Mayiladuthurai,மயிலாடுதுறை,Train Services,ரெயில்கள் சேவை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/8nqw5b4h/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/8nqw5b4h/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி, </p><p>திருச்சி கோட்டத்தில் பல்வேறு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக சில ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதோடு, சில ரெயில்கள் புறப்படும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்விவரம் வருமாறு:-</p><p>திருச்சியில் காலை 8.40 மணிக்கு புறப்படும் திருச்சி காரைக்கால் டெமு ரெயில் (எண்: 76820) நாளை (புதன்கிழமை) முதல் வருகிற 21-ந்தேதி வரை (19-ந்தேதி தவிர) திருவாரூர் வரை மட்டுமே இயங்கும். மேற்கண்ட நாட்களில் இந்த ரெயில் காரைக்கால் செல்லாது. மறுமார்க்கத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 21-ந்தேதி வரை (19-ந்தேதி தவிர) காரைக்காலில் இருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்படவேண்டிய காரைக்கால் - திருச்சி டெமு ரெயில் (எண்: 76819) திருவாரூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு திருச்சி வந்தடையும். அந்த நாட்களில் காரைக்காலில் இருந்து புறப்படாது. இதேபோல் திருச்சியில் இருந்து காலை 6.05 மணிக்கு புறப்படும் திருச்சி-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் (எண்:56700) நாளை முதல் வருகிற 20-ந்தேதி வரை ஆடுதுறை வரை மட்டுமே செல்லும். </p><p>மேற்கண்ட நாட்களில் மயிலாடுதுறைக்கு செல்லாது. மயிலாடுதுறையில் இருந்து பகல் 12.35 மணிக்கு புறப்படும் மயிலாடுதுறை-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் (எண்: 16847) நாளை முதல் வருகிற 20-ந்தேதி வரை மயிலாடுதுறையில் இருந்து புறப்படாது. அதற்கு பதிலாக ஆடுதுறையில் இருந்து பகல் 12.58 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டைக்கு செல்லும். மேலும் நாளை முதல் வருகிற 21-ந்தேதி வரை (19-ந்தேதி தவிர) காரைக்கால்-தஞ்சை பயணிகள் ரெயில் (எண்: 56817) தகுந்த இடங்களில் 20 நிமிடம் நின்று தாமதமாக செல்லும். இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>புதுடெல்லியில் நவீனமயமாக்கப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் &quot;புதுப்பாவு&quot; விற்பனை நிலையத்தை பார்வையிட்ட தமிழக அமைச்சர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-ministers-visit-modernized-co-optex-pudupavu-outlet-in-new-delhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-ministers-visit-modernized-co-optex-pudupavu-outlet-in-new-delhi#comments</comments><guid isPermaLink="false">ffe664ff-bba7-4cdd-9915-e6413f1b02ad</guid><pubDate>Tue, 14 Jul 2026 12:52:05 +0000</pubDate><atom:updated>2026-07-14T12:52:05.470Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பொதுமக்கள்,சென்னை,New Delhi,Public,கோ-ஆப்டெக்ஸ்,அமைச்சர்Minister</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/efs4qulr/124.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கதர்த்துறை அமைச்சர் விஜய் பாலாஜி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/efs4qulr/124.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>1935 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், இந்தியாவின் மிகப்பெரிய கைத்தறி நெசவாளர் கூட்டுறவு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. </p><p>தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்படும் கைத்தறிப் பொருட்களை "<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D">கோ-ஆப்டெக்ஸ்</a>" என்ற வணிக முத்திரையின் கீழ் நாடு முழுவதும் 146 விற்பனை நிலையங்கள் மூலம் சந்தைப்படுத்தி வரும் முன்னணி நிறுவனமாகும்.</p><h2>கோ-ஆப்டெக்ஸ்</h2><p>கோ-ஆப்டெக்ஸ் வணிகத்தை விரிவுபடுத்தவும், விற்பனையை அதிகரிக்கவும், இளம் தலைமுறையினரை அதிகளவில் ஈர்க்கவும், புதுதில்லி, கன்னாட் பிளேஸ், மாநில எம்போரியா வளாகம் (State Emporia Complex), சி-1, பாபா கரக் சிங் மார்க் பகுதியில் அமைந்துள்ள சுமார் 1,600 சதுர அடி பரப்பளவிலான கோ-ஆப்டெக்ஸ் "புதுப்பாவு (Pudupavu)" விற்பனை நிலையம் ரூ.49.00 லட்சம் மதிப்பீட்டில் முழுமையாக நவீனமயமாக்கப்பட்டுள்ளது.</p><h2>தமிழக அமைச்சர்கள்</h2><p>இந்நிலையில், நேற்று தமிழ்நாடு அரசின் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் விஜய் பாலாஜி, தமிழ்நாடு அரசின் தொழில்துறை, முதலீட்டு மேம்பாடு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் கீர்த்தனா இணைந்து, நவீனமயமாக்கப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் "புதுப்பாவு" விற்பனை நிலையத்தை பார்வையிட்டு, மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாட்டு வசதிகள் மற்றும் விற்பனை ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.</p><p>ரூ.49.00 லட்சம் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்டுள்ள இவ்விற்பனை நிலையத்தில் நவீன உள்துறை வடிவமைப்பு, உயர்தர ஒளியமைப்பு, மேம்படுத்தப்பட்ட பொருட்காட்சி வசதிகள், வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற நவீன கொள்முதல் சூழல் மற்றும் மேம்பட்ட விற்பனை வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.</p><h2>உயர்தர கைத்தறிப் பொருட்கள்</h2><p>இவ்விற்பனை நிலையத்தில் காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள், கோயம்புத்தூர் மென்பட்டுச் சேலைகள், ஆரணி பட்டுச் சேலைகள், சேலம் பட்டுச் சேலைகள், பருத்திச் சேலைகள், ஆயத்த ஆடைகள், படுக்கை விரிப்புகள், துண்டுகள், வேஷ்டிகள், ஆயத்த சட்டைகள், நவீன இண்டிகோ இணைவு ஆடைத் தொகுப்புகள், நவீன ஆண்கள் குர்தா (அச்சு) தொகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு உயர்தர கைத்தறிப் பொருட்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இப்பொருட்கள் தமிழ்நாட்டின் பாரம்பரிய நெசவுத் திறனையும் கைத்தறி கலை மரபையும் பிரதிபலிக்கின்றன.</p><h2>இணையதளம்</h2><p>கோ-ஆப்டெக்ஸ் தயாரிப்புகளை பொதுமக்கள் அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான www.cooptex.com வாயிலாகவும் எளிதாக வாங்கிக் கொள்ளலாம்.</p><p>2025–2026 ஆம் நிதியாண்டில் புதுதில்லி "புதுப்பாவு" விற்பனை நிலையம் ரூ.127.00 லட்சம் விற்பனையை பதிவு செய்துள்ளது. 2026–2027 ஆம் நிதியாண்டிற்கு ரூ.200.00 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், தீபாவளி 2026 விற்பனைக்காக ரூ.65.00 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><h2>கூடுதல் தள்ளுபடி</h2><p>இந்த நவீனமயமாக்கப்பட்ட "புதுப்பாவு" கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் வடஇந்தியாவில் கோ-ஆப்டெக்ஸின் வணிக வளர்ச்சியை மேலும் வலுப்படுத்துவதோடு, புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்து, தமிழ்நாட்டின் வளமான கைத்தறி பாரம்பரியம், கலைநயம் மற்றும் உயர்தர கைத்தறித் தயாரிப்புகளை நாடு முழுவதும் பரப்புவதில் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு ஒரு வார கால சிறப்பு தள்ளுபடியாக 20 + 20 சதவீகித கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.</p><h2>பங்கேற்பு</h2><p>இந்நிகழ்வின் போது, ஜெயா, கூடுதல் தலைமைச் செயலாளர் / தலைமை உள்ளுறை ஆணையர், தமிழ்நாடு இல்லம், புதுடெல்லி. டி. என். வெங்கடேஷ், முதன்மைச் செயலாளர், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை, தமிழ்நாடு அரசு. உமா மகேஸ்வரி, கைத்தறி இயக்குநர், தமிழ்நாடு அரசு. இன்னசென்ட் திவ்யா, மேலாண்மை இயக்குநர், கோ-ஆப்டெக்ஸ் ஆகியோர் உடனிருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தவெக மீது குதிரை பேர புகார்: அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த பதிலடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/horse-trading-complaint-against-thaweka-minister-nirmal-kumars-response</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/horse-trading-complaint-against-thaweka-minister-nirmal-kumars-response#comments</comments><guid isPermaLink="false">18aba127-d48c-48ce-bf09-d8c08a0306ba</guid><pubDate>Tue, 14 Jul 2026 12:50:19 +0000</pubDate><atom:updated>2026-07-14T12:50:19.183Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,அதிமுக,திமுக,DMK,சென்னை,Nirmalkumar,அமைச்சர் நிர்மல்குமார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/epves8qe/nirmalakumar33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல் குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/epves8qe/nirmalakumar33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திமுக, அதிமுக கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளர்களாக ராஜேந்திர பாலாஜியும், அனிதா ராதாகிருஷ்ணனும்தான் இருக்கப்போகிறார்கள் என நினைக்கிறேன் என அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.</p><p>சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-</p><h2>மின் தேவை அதிகரிப்பு </h2><p>எண்ணூர் அனல் மின் நிலையம் அருகில் உள்ள மீனவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளோம். எண்ணூர் -வட சென்னை அனல் மின் நிலையத்தால் அப்பகுதி மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>உப்பூர் அனல் மின் நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். மின் கேபிள்கள் ஒப்பந்ததார்களால் கட் செய்யப்படுவதால் ஒருசில இடங்களில் மின் விநியோகம் பாதிக்கப்படுகிறது. </p><p>கடைசி ஒருவாரமாக பகல் நேர வெப்பம் அதிகரித்துள்ளதால் மின் தேவை அதிகரித்துள்ளது. அதிமுகவினர் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் பேசிக்கொண்டிருக்கின்றனர். தங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் இருப்பதையே மறந்துவிட்டனர்.</p><h2>அதிமுக - திமுக கூட்டணி </h2><p>தங்கள் கட்சி தலைமை குறித்து பேசாமல் ஸ்டாலின், மோடி குறித்து அதிமுகவினர் பேசி கொண்டிருக்கின்றனர். <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அதிமுக - திமுக கூட்டணி</a> ஒருங்கிணைப்பாளர்களாக கே.டி.ராஜேந்திர பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளார்கள் போல தெரிகிறது.</p><p>அதிமுக - திமுகவினர் தவெகவில் தாமாக வந்து இணைவது குதிரை பேரம் கிடையாது. தலைமை மீது நம்பிக்கை இல்லாமல் அவர்கள் வருகின்றனர். குதிரை பேரத்தில் ஈடுபடுவது செந்தில் பாலாஜி தான்.</p><p>சிபிஐ எப்படி குதிரை பேர குற்றச்சட்டை நேரில் எடுத்து விசாரணை நடத்த முடியும். அது கூட தெரியாமல் டைம் பாசுக்காக சிபிஐக்கு கடிதம் எழுதி கொண்டிருக்கிறார் ஆர்.எஸ்.பாரதி. இப்போது வரை தவெக எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கவே அதிமுக திமுகவினர் இணைந்து முயற்சித்து வருகின்றனர்.</p><h2>குதிரை பேரம்</h2><p>அதிமுக - திமுக இணைந்து முயற்சித்து வருகின்றனர். அதிமுக - திமுக இணைந்து ஆட்சி இணைந்து ஆட்சி அமைக்க முயற்சித்ததை விரும்பாமல் அதிமுகவினர் தவெகவில் இணைகின்றனர்.</p><p>இதை குதிரை பேரம் என கூறக்கூடாது. சோலார் நிலையம் அமைப்பதற்கான அனுமதி விரைவில் வழங்கப்படும்.  சோலார் மின் நிலையம் அமைக்க ஒரு மெகாவாட்டுக்கு 25 லட்சம் கேட்டதாக திமுக ஆட்சி மீது என்னிடம் புகார் வந்தது. அதேபோன்று புகார்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.</p><h2>இரு மொழி கொள்கை</h2><p>தமிழகத்தில் இரு மொழி கொள்கை தொடரும். கவர்னர் குலக்கல்வி குறித்து கூற பேசலாம். அது அவரது விருப்பம். ஆனால் தமிழக அரசின் கல்விக்கொள்கை மாறாது.  ஐபிஎஸ் அதிகாரி அருண் துறை மாற்றம் குறித்த முடிவு முதல்-அமைச்சர் அலுவலகத்தால் எடுக்கப்பட்ட முடிவு.</p><p>தமிழகத்தில் ஒருபோதும் மின்வாரியம் தனியார் மயமாக்கப்படாது. அரசு வக்கீல் நியமனம் ஒரு சில பகுதிகளில் மட்டும் நிலுவையில் உள்ளது. 80 சதவீதம் நியமனங்கள் நிறைவடைந்துள்ளது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரெயில் சேவை பாதிப்பு; பயணிகள் அவதி

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-beach-tambaram-local-trains-service-delayed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-beach-tambaram-local-trains-service-delayed#comments</comments><guid isPermaLink="false">081fa154-c6e3-45b5-b90a-e0de46bcead4</guid><pubDate>Tue, 14 Jul 2026 12:48:15 +0000</pubDate><atom:updated>2026-07-14T12:48:15.928Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tambaram,தாம்பரம்,train,ரெயில்கள்,புறநகர் ரெயில்கள்,Chennai Beach,சென்னை கடற்கரை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/6qako70z/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/6qako70z/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[   <p>சென்னை,</p><p>புறநகர் மின்சார ரெயில் போக்குவரத்து சென்னை மக்களின் முக்கிய போக்குவரத்து முறையாக உள்ளது. குறிப்பாக, சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>அலுவலகம் செல்வோர், மாணவ - மாணவியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் இந்த ரெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.</p><h2>ரெயில் சேவை பாதிப்பு</h2><p>இந்நிலையில், சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரெயில் சேவை தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. மின்சார வயர் அறுந்து விழுந்ததால்   சென்னை கடற்கரையில் ஏராளமான புறநகர் ரெயில்கள் தண்டவாளத்தில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் பயணிகள் மிகுந்த அவதியடைந்துள்ளனர். </p><p>பயணிகள் அனைவரும்  சென்னை பூங்கா ரெயில் நிலையத்திற்கு தண்டவாளத்தில் நடந்து சென்று அங்கிருந்து ரெயில் ஏறி பயணம் செய்யும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அலுவலகம் முடிந்து வீடு திரும்புவோர் உள்பட அனைத்து தரப்பினரும் மின்சார ரெயில் சேவை பாதிப்பால் மிகுந்த அவதியடைந்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title> உங்கள் கட்சியை முதலில் காப்பாற்றி கொள்ளுங்கள் எடப்பாடியாரே! -  மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/save-your-party-first-edappadiyar-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/save-your-party-first-edappadiyar-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">4fab52a2-43a8-41b6-8271-455f3e109504</guid><pubDate>Tue, 14 Jul 2026 12:43:54 +0000</pubDate><atom:updated>2026-07-14T12:43:54.660Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Two Leaves symbol,மாணிக்கம் தாகூர்,டெபாசிட்,party,கட்சி,இரட்டை இலை,Palanisamy,எடப்பாடி பழனிசாம்,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/5e8uhgtk/manickam-tagore.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/5e8uhgtk/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> உங்கள் கட்சியை முதலில் காப்பாற்றி கொள்ளுங்கள் எடப்பாடியாரே! என்று மாணிக்கம் தாகூர்.</p> <h2>பரிதாபகரமானது</h2><p>காங்கிரஸ் தங்களை கொள்கை கூட்டணி என்று மார்தட்டி கொள்கிறது. இப்போது வெறும் சீட்டுகளுக்காகவும் பதவிக்காகவும் அலைகிறது. கங்கிரஸ் காட்சியின் தற்போதைய நிலைமை மிகவும் பரிதாபகரமானது. </p> <h2>நரித்தனம்</h2><p>கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக மாறிவிட்டது" என இபிஎஸ் விமர்சனம். வாக்கு சேகரிக்கும் போது ஒரு பேச்சும், தேர்தல் முடிந்ததும் வேறு பேச்சும் பேசுவதுதான் காங்கிரஸின் நரித்தனம் என்று சாடியுள்ளார்.</p><p> தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தள பதிவில் கூறிஇருப்பதாவது:-</p><h2>டெபாசிட் இழந்து வரும் அதிமுக</h2><p>கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை' யாருக்கு பொருந்துமோ இல்லையோ, இரட்டை இலையை வைத்து கொண்டே டெபாசிட் இழந்து வரும் அதிமுகவிற்கு மிக கச்சிதமாக பொருந்தும்!</p> <h2>பாஜகவின் அடிமை</h2><p>​மத்தியில் பாஜகவிற்கு அடிமையாக இருந்துவிட்டு, இப்போது கொள்கை பேசும் இபிஎஸ்-ன் இரட்டை வேடத்தை மக்கள் அறிவார்கள். எங்களை விமர்சிப்பதை விட்டுவிட்டு, உங்கள் கட்சியை முதலில் காப்பாற்றி கொள்ளுங்கள் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87!%20">எடப்பாடியாரே! </a></p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை மறுநாள் மின் தடை செய்யப்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-scheduled-for-a-power-outage-the-day-after-tomorrow-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-scheduled-for-a-power-outage-the-day-after-tomorrow-2#comments</comments><guid isPermaLink="false">2934aebb-6c3a-44b4-b1b3-ea291703cf26</guid><pubDate>Tue, 14 Jul 2026 12:36:08 +0000</pubDate><atom:updated>2026-07-14T12:36:08.567Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மின் தடை,power cut</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/pe89mu49/ep.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/pe89mu49/ep.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னையில் நாளை மறுநாள் மின் தடை செய்யப்படும் இடங்கள் பின்வருமாறு;</p><p>சென்னையில்16.07.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p>”சோழிங்கநல்லூர்: பெரும்பாக்கம் பிரதான சாலை, கிருஷ்ணா நகர், கோகுல் நகர், சௌமியா நகர், மாம்பாக்கம் பிரதான சாலை, பாரதியார் நகர், நாவல்லார் தெரு, நெசவாளர் நகர், அரசு மருத்துவமனை. கோல்டன் அவென்யூ, சரஸ்வதி தெரு, சிவகாமி தெரு, சிபிஐ காலனி 1 முதல் 7வது குறுக்குத் தெருக்கள் வரை, பள்ளிக்கரணை வள்ளல் பாரி நகர் , சாய்கணேஷ் நகர், சாய் பாலாஜி நகர், வாஞ்சிநாதன் தெரு, விவேகானந்தா நகர் மற்றும் குறுக்கு தெரு, பாண்டியன் நகர், பசும்பொன் நகர், நாராயணன் தெரு. காமகோடி நகர், காமாட்சி காலனி, ஏஜிஎஸ் காலனி, விஜிபி சாந்தி நகர், லேபர் காலனி, சாய் பாபா நகர், பெரியார் நகர்.</p><p>பூவிருந்தவல்லி: குயின் விக்டோரியா சாலை, அம்பாள் நகர், சக்கரமங்களா நகர், சரவணா நகர், ஜேம்ஸ் தெரு, ஸ்ரீனிவாசா நகர், மல்லியம் நரசிம்மன் நகர், பலராமன் நகர், சுந்தர் நகர், சீரடி சாய் நகர், சுமித்ரா நகர், எஸ்.எஸ்.வி.கே., ஏ.எஸ்.ஆர். சிட்டி, பக்தவச்சலம் நகர்மற்றும் அவென்யூ.</p><p>ஆவடி: கிரீன் பீல்ட், சோமசுந்தரம் அவென்யூ,வெங்கடாசலம் நகர், கமலம் நகர், லலிதாம்பாள் நகர், அன்னை தெரசா நகர், மாசிலாமணிஸ்வரர் நகர், வெங்கடேஸ்வர நகர், ஓரகடம் சொசைட்டி.</p><p>திருமுல்லைவாயல்: பாண்டேஸ்வரம், அரக்கம்பாக்கம், கோடுவள்ளி, கவுடிபுரம்.</p><p>போரூர்: குமணண்சாவடி, ப்ரோடீஸ் சாலை, சி.ஆர்.எம். நகர், திருமால் நகர், கலைமகள் நகர், கோபால் நகர், ரோஸ் கார்டன், தர்மராஜா கோயில் தெரு கோவிந்தராஜ் நகர், குப்புசுவாமி நகர்,அருணாசலம் நகர், காடுவெட்டி, வீரராகவபுரம், ஆவடி பிரதான சாலை, தெள்ளியார் அகரம், மதுரம் நகர், பெரிய கொளுத்துவான்சேரி, ஆதித்தனார் நகர், தனலட்சுமி நகர்.</p><p>திருவேற்காடு: சுந்தரசோழபுரம், ராம் நகர், சுந்தர விநாயகா நகர், செல்லியம்மன் நகர், கிரீன் பார்க், சக்கரேஸ்வரி நகர்.</p><p>தாம்பரம்: கிஷ்கிந்தா பிரதான சாலை, கன்னடப்பாளையம், சர்வீஸ் சாலை, சாய் நகர், வசந்தம் நகர், சமத்துவப் பெரியார் நகர், ஆர்.கே. நகர், அன்னை இந்திரா நகர்.</p>]]></content:encoded></item><item><title>புதிய உச்சம்... தொடர்ந்து உயர்ந்து வரும் முட்டை விலை.!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-high-egg-prices-continue-to-rise</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-high-egg-prices-continue-to-rise#comments</comments><guid isPermaLink="false">0f88bcf9-1afe-4453-abb3-382110dfc9f3</guid><pubDate>Tue, 14 Jul 2026 12:28:16 +0000</pubDate><atom:updated>2026-07-14T12:28:16.302Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Namakkal,நாமக்கல்,முட்டை விலை,Egg prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/kr90zth8/6.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/kr90zth8/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல்,</p><p>நாமக்கல் மாவட்டத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.</p><h2>5 காசுகள் உயர்வு</h2><p>நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 670 காசுகளாக (ரூ.6.70) இருந்து வந்தது. இதற்கிடையே இன்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த நிர்வாகிகள் முடிவு செய்தனர். எனவே இன்று முட்டை கொள்முதல் விலை 675 காசுகளாக (ரூ.6.75) அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதன் மூலம் நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சில்லறை விற்பனையில் முட்டை விலை 8 ரூபாயை தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. </p><h2>மூலப்பொருட்களின் விலை உயர்வு</h2><p>விற்பனை அதிகரிப்பு, கோழித்தீவன மூலப்பொருட்களின் கடுமையான விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் விலையேற்றம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பெரும்பாலான கடைகளில் சில்லறை விற்பனையில் தற்போது ரூ.8 என்றிருக்கும் நிலையில், மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-to-experience-power-outages-tomorrow-3</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-to-experience-power-outages-tomorrow-3#comments</comments><guid isPermaLink="false">7d6bf2bf-daa6-432a-a2a9-68b4ed7290f7</guid><pubDate>Tue, 14 Jul 2026 12:27:09 +0000</pubDate><atom:updated>2026-07-14T12:27:09.047Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,தாம்பரம்,அடையாறு,maintenance work,பராமரிப்பு பணி,Power supply,பெசன்ட்நகர்,தரமணி,மின் பகிர்மானக் கழகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/351lkvif/123.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  மின் தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/351lkvif/123.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">மின் பகிர்மானக் கழகம்</a> வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>சென்னையில் 15.07.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். </p><h2>மின் தடை ஏற்படும் இடங்கள்</h2><p><strong>தரமணி:</strong> இந்திரா நகர், கஸ்தூரிபாய் நகர் 1வது முதல் 3வது பிரதான சாலை மற்றும் 1வது முதல் 3வது குறுக்குத் தெரு, கேனால் வங்கி சாலை, பத்தவச்சலம் 1வது மற்றும் 2வது தெரு, சர்தார் படேல் சாலை, அண்ணா அவென்யூ, கோவிந்தராஜபுரம் 1வது மற்றும் 2வது தெரு.</p><p><strong>அடையாறு:</strong> சிவகாமிபுரம் 1வது முதல் 4வது தெருக்கள், கங்கை அம்மன் கோவில் தெரு, எல்.ஐ.சி. காலனி, சுப்பிரமணியம் காலனி, மாளவியா அவென்யூ 1வது முதல் 3வது தெரு, எம்.ஜி. சாலை, ஆர்.கே. நகர் பிரதான சாலை மற்றும் 1வது முதல் 3வது குறுக்குத் தெரு, மருத்தீஸ்வர நகர், சுண்ணாம்பு கால்வாய், காமராஜர் நகர், ஆர்.பி.ஐ. காலனி, சாஸ்திரி நகர் 1வது பிரதான சாலை மற்றும் 1வது, 5வது மற்றும் 6வது குறுக்குத் தெரு.</p><p><strong>கொட்டிவாக்கம்:</strong> பல்கலை நகர், ஜெகநாதன் தெரு, வெங்கடேஸ்வரா நகர் 1வது முதல் 21வது தெருக்கள் வரை, கொட்டிவாக்கம் குப்பம், குப்பம் சாலை, ஏஜிஎஸ் காலனி 1வது முதல் 3வது குறுக்குத் தெரு வரை, நியூ காலனி 1வது முதல் 4வது தெரு வரை, திருவீதியம்மன் கோவில் தெரு, துலுக்கானத்தம்மன் கோவில் தெரு, லட்சுமிவதனா தெரு, ஈ.சி.ஆர், செந்தாமரைக்கண்ணன் சாலை.</p><p><strong>பெசன்ட்நகர்:</strong> 2 வது, 3வது மற்றும் 4வது பிரதான சாலை, 7வது, 16வது மற்றும் 28வது குறுக்குத் தெருக்கள், புதிய சி.பி.டபிள்யூ.டி. குடியிருப்புகள், 6 வது மற்றும் 7வது அவென்யூ, ஓடைக்குப்பம் , திடீர் நகர்.</p><p><strong>அலமாதி:</strong> ஏ,பி,சி காலனி, வெண்மனி நகர்.</p><p><strong>தாம்பரம்:</strong> மாடம்பாக்கம், வேங்கைவாசல், மேப்பேடு, அகரம்தேன், படுவாஞ்சேரி, காஸ்பாபுரம், செயலக காலனி, கேம்ப் சாலை, செம்பாக்கம், அகரம் பிரதான சாலை, சேலையூர், வி.ஜி.பி. ஸ்ரீனிவாச நகர், வி.ஜி.பி. சரவணா நகர், காயத்திரி நகர், கிருஷ்ணா நகர், திருவாஞ்சேரி, நூத்தஞ்சேரி, கணபதி நகர், ஞானதா நகர், பாரதிதாசன் நகர், சக்தி நகர், காயத்திரி கார்டன், ராஜகீழ்ப்பாக்கம், கௌவுரிவாக்கம், சந்தோஷ்புரம், ரிக்கி கார்டன், ராஜாஜி நகர், சுந்தரம் காலனி, பராசக்தி நகர், சத்யசாய் நகர், கோகுல் நகர், ஷா அவென்யூ, காமராஜ் நகர், ஜெயேந்திர நகர், தாரகேஸ்வரி நகர், கே.வி.ஐ.சி. நகர், வேளச்சேரி பிரதான சாலை, பழனியப்பா நகர், சாந்தம்மாள் நகர், விக்னராஜபுரம், விஜயநகரம், கே.கே. சாலை, சிவகாமி நகர், பத்மாவதி நகர், அலமேலுபுரம், கண்ணன் நகர், இந்திரா நகர், சோழன் நகர், சுதர்ஷன் நகர், டியானா ஸ்கை சிட்டி, திருமால் நகர், அன்னை சத்யா நகர், கணேஷ் நகர், மாருதி நகர் ஸ்ரீதேவி நகர்.</p><p><strong>பல்லாவரம்:</strong> சாவடி தெரு, ஐ.எச்.எப்.டி. காலனி, ஜி.எஸ்.டி. சாலை பல்லாவரம் பேருந்து நிலையம் முதல் பாண்ட்ஸ் பாலம் வரை, அருந்ததிபுரம், வள்ளுவர் பேட்டை, ரங்கநாதன் தெரு, ஐ.ஜி. சாலை சிக்னல்.</p><p><strong>இராமாபுரம்:</strong> மணப்பாக்கம் பிரதான சாலை, எல் &amp; டி பின் கேட், சேதுலக்ஷ்மி அவென்யூ, பார்த்தசாரதி நகர், பாட்டியா கார்டன், காசா XX, வேலவன் நகர், மலர் கார்டன், ராணி என்க்லேவ், அம்பேத்கர் நகர், ஐ.பி.எஸ். காலனி, ஜெயின் அக்ஷர்தாம்.</p><p><strong>சித்தாலப்பாக்கம்:</strong> மாம்பாக்கம் பிரதான சாலை, வேளச்சேரி பிரதான சாலை, வெங்கடேஸ்வரா நகர், தாவூத் நகர், குளக்கரை, பச்சையம்மன் கோவில் தெரு, புஷ்பா நகர் பூங்கா, சந்தானம் தெரு, பாரத் தெரு.</p><p><strong>பெரும்பாக்கம்:</strong> காசா கிராண்ட் பள்ளி, ஆஷீர்த்தா அவென்யூ, காசா கிராண்ட் செர்ரி பிக், கலர் ஹோம்ஸ், கலர் அவென்யூ, பிளாசா வெர்டன்ட், ஈஷைஸ்தபூமி, ரேடியன்ஸ் மெர்குரி, அர்பன் ட்ரீ, காந்தி நகர் சொசைட்டி, புஷ்கின் தெரு, கே.ஜி. ஃபிளாட்ஸ்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஈரோட்டில் மஞ்சள் விலை உயர்வு.!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sudden-rise-in-turmeric-prices-in-erode</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sudden-rise-in-turmeric-prices-in-erode#comments</comments><guid isPermaLink="false">8b1c6fc0-62b7-440b-b390-d9b7ccdf4871</guid><pubDate>Tue, 14 Jul 2026 12:07:28 +0000</pubDate><atom:updated>2026-07-14T12:07:28.595Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Erode,ஈரோடு,மஞ்சள் விலை,Turmeric Prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/y5g8hleq/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/y5g8hleq/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>தமிழகத்திலேயே ஈரோடு மாவட்டத்தில் தான் அதிகப்படியான மஞ்சள் விளைவிக்கப்படுகிறது. இதனால் ஈரோடு மஞ்சள் நகரம் என்று அழைக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் 4 இடங்களில் மஞ்சள் மார்க்கெட்டுகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் மஞ்சள் ஏலம் நடந்து வருகிறது.</p><p> ஈரோடு மார்க்கெட்டில் நேற்று ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.17,300க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று மேலும் ரூ.400 உயர்ந்து ரூ.17,777க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த மாதம் சராசரியாக குவிண்டால் ரூ.14,500க்கு விற்பனை ஆன நிலையில், ஒரே மாதத்தில் ரூ.3000 விலை அதிகரித்துள்ளது. மஞ்சள் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். </p> ]]></content:encoded></item><item><title>பழனி கோவில் நில விவகாரம்: அமைச்சர் ரமேஷ் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-temple-land-issue-minister-ramesh-clarifies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-temple-land-issue-minister-ramesh-clarifies#comments</comments><guid isPermaLink="false">6662f364-0307-42ee-a099-807ac3471b2a</guid><pubDate>Tue, 14 Jul 2026 11:29:55 +0000</pubDate><atom:updated>2026-07-14T11:29:55.757Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>temple lands,கோவில் நிலங்கள்,Minister ramesh,அமைச்சர் ரமேஷ்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/i1uxi7o1/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/i1uxi7o1/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பழனி கோவில் நில விவகாரம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது;</p><p>"கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கலர் கலராக ரீல் சுத்துகின்றனர். இனாம் நிலங்களை கோவில் நிலம் என கூறி வருகின்றனர். இனாம் நிலத்துக்கும், கோவில் நிலத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசுகின்றனர். இனாம் ஒழிப்பு சட்டத்தின் மூலமாக அந்த இடங்களுக்கு ஏற்கெனவே பட்டா வழங்கப்பட்டுள்ளது. பட்டா வாங்கி 60 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.  </p><p>எனது உறவினர் ஒருவர் ரூ.100 கோடிக்கு நிலம் வாங்கியதாக பொய்ச்செய்தி பரப்புகின்றனர். அரசு மீது ஊழல் கரையை சுமத்த எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றனர். நிலத்தை பதிவு செய்த சார் பதிவாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>கரூரில் கோவில் நிலங்களை யாருக்கும் பட்டா போட்டு கொடுக்கவில்லை. எங்களுக்கு யாரைப்பற்றியும் கவலையில்லை. கோவில் நிலங்களில் ஒரு இஞ்ச் நிலங்களை யாருக்கும் கொடுக்க எங்களுக்கு விருப்பம் கிடையாது. பொய், புரட்டு பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.”</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>30 குண்டுகள் முழங்க எழுத்தாளர் பூமணியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/writer-poomanis-body-laid-to-rest-with-state-honors</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/writer-poomanis-body-laid-to-rest-with-state-honors#comments</comments><guid isPermaLink="false">ce6a6da4-80a2-4fd8-9669-d7fea81fa63a</guid><pubDate>Tue, 14 Jul 2026 11:24:24 +0000</pubDate><atom:updated>2026-07-14T11:24:24.915Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சாகித்ய அகாடமி விருது,எழுத்தாளர் பூமணி,WriterPoomani</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/7od257f0/poo33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எழுத்தாளர் பூமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/7od257f0/poo33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த தமிழ் எழுத்தாளர் பூமணி, வயோதிகம் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79. </p><p>பூமணியின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும் கரிசல் வட்டார வாசகர்களுக்கும் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகக் கருதப்படுகிறது. அவரது மறைவுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு எழுத்தாளர்களும், திரையுலகினரும், வாசகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்தனர்.</p><p>முதல்-அமைச்சர் விஜய் இரங்கல்</p><p>இந்தநிலையில் மறைந்த எழுத்தாளர் பூமணியின் இறுதி பயணத்துக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">முதல்-அமைச்சர் விஜய்</a> அறிவித்தார். மேலும், பூமணியின் மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும். உறவினர், நண்பர்களுக்கும், தமிழ் இலக்கியவாதிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்', என்றும் தெரிவித்தார்.</p><p>இந்தநிலையில்,  பூமணியின் உடல் இன்று நண்பகல் 12 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், சொந்த ஊரான  தூத்துக்குடி மாவட்டம், இளையரசனேந்தல் அருகேயுள்ள ஆண்டிபட்டி கிராமத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது.அங்கு அவரது தோட்டத்தில் பிற்பகல் 2 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடந்தது.  </p><p>பூமணி உடலுக்கு அவரது குடும்பத்தினர் இறுதிச் சடங்குகள் செய்த நிலையில், காவல்துறை அணிவகுப்புடன் 30 குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன்  அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>&quot;அரசு கல்லூரி ஆசிரியரல்லாப் பணியாளர்கள் மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்&quot; அமைச்சர் விஸ்வநாதன் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-college-non-teaching-employees-can-apply-for-transfer-counseling-minister-viswanathan-announces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-college-non-teaching-employees-can-apply-for-transfer-counseling-minister-viswanathan-announces#comments</comments><guid isPermaLink="false">4a2cc614-9011-4a32-818e-bf849fd4e278</guid><pubDate>Tue, 14 Jul 2026 11:20:01 +0000</pubDate><atom:updated>2026-07-14T11:20:01.712Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,அறிவிப்பு,Counseling,கலந்தாய்வு,announced,Government College- அரசு கல்லூரி,உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/hc05jfvb/121.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் விஸ்வநாதன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/hc05jfvb/121.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள கல்லூரிக் கல்வி இயக்ககம், அனைத்து மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்ககங்கள், அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியரல்லாப் பணியாளர்களின் (‘டி’ பிரிவு தவிர்த்து) நலன்கருதி 2026-27ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது கலந்தாய்விற்கு (General Counselling) இணைய வழியில் வரும் 15.07.2026 முதல் 24.07.2026 வரை விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D">விஸ்வநாதன்</a> தெரிவித்துள்ளார்.</p><p>இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாவது:-</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி, உயர்கல்வித் துறையின் கீழுள்ள கல்லூரிக் கல்வி இயக்ககம், அனைத்து மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்ககங்கள், அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியரல்லாப் பணியாளர்களின் நலன்கருதி 2026-27ஆம் ஆண்டு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடத்திட ஆணையிடப்பட்டுள்ளது.</p><h2>பொது கலந்தாய்வு</h2><p>அதன்படி, உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கும் கல்லூரிக் கல்வி இயக்ககம், அனைத்து மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்ககங்கள், அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள் 2026-27ஆம் ஆண்டு பணியிட மாறுதலுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்விற்கு  15.07.2026 முதல் 24.07.2026 வரை இணையவழி வாயிலாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.</p><p>இந்த பொது கலந்தாய்வில் கலந்து கொள்ள கல்லூரிக் கல்வி இயக்ககம், அனைத்து மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்ககங்கள், அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள்  www.nonteaching.dcetransfer.in என்ற இணையதள முகவரியில், விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு உயர்கல்வித்துறை அமைச்சர்  தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் இதற்கு உரிய பதில் சொல்ல வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-chief-minister-who-has-the-police-under-his-control-must-give-a-befitting-reply-udhayanidhi-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-chief-minister-who-has-the-police-under-his-control-must-give-a-befitting-reply-udhayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">cf0f56be-1725-44b6-85f1-c47e8fba62a9</guid><pubDate>Tue, 14 Jul 2026 11:06:11 +0000</pubDate><atom:updated>2026-07-14T11:06:11.605Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,police,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,காவல்துறை,முதல்-அமைச்சர்,Chief Minister,பதில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/iss5mc1r/122.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/iss5mc1r/122.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக எதிர்க்கட்சித்தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">உதயநிதி ஸ்டாலின்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரான சபரிவர்மன் காவல்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றக்காவலில் மரணம் அடைந்து இருப்பது அறிந்து அதிர்ச்சியுற்றேன். கைதானபோது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த சபரிவர்மன், விசாரணை முடிந்து சிறையில் அடைக்கப்பட்ட போது, உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார் என்று காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது.</p><h2>பதில் சொல்ல வேண்டும்</h2><p>ஆனால், மரணமடைந்த சபரிவர்மனின் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும், அவரை மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் காவல்துறையினர் அடித்தே கொலை செய்துள்ளதாகவும் சபரிவர்மனின் குடும்பத்தார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் இதற்கு உரிய பதில் சொல்ல வேண்டும்.</p><p>சபரிவர்மனின் கடையில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டதாக, அவரை கைது செய்த காவல்துறையினர், ஈரோட்டில் குட்கா விற்றதாக கைது செய்யப்பட்ட த.வெ.க. நிர்வாகி அருணை அன்றே சொந்த ஜாமினில் விடுவித்துள்ளனர். சபரிவர்மன் எனும் சாமானியருக்கு ஒரு சட்டம், த.வெ.க நிர்வாகி என்றால் வேறொரு சட்டம் என்னும் காவல்துறையின் போக்குக் கண்டிக்கத்தக்கது. </p><h2>நடவடிக்கை</h2><p>இந்தச்சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு, சபரிவர்மனின் மரணத்திற்குக் காரணமானவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும். சபரிவர்மனின் மரணத்துக்கு நீதி கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>8 கிராம மீனவர்களின் கோரிக்கைகள்: நியாயமான, சட்டபூர்வமான தீர்வு காணும் வகையில்  நடவடிக்கை
அமைச்சர் நிர்மல் குமார் உறுதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/demands-of-fishermen-from-eight-villages-minister-nirmal-kumar-assures-action-to-find-a-fair-and-legal-solution</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/demands-of-fishermen-from-eight-villages-minister-nirmal-kumar-assures-action-to-find-a-fair-and-legal-solution#comments</comments><guid isPermaLink="false">0f13b240-ef1c-4df2-b251-5045f6608a35</guid><pubDate>Tue, 14 Jul 2026 11:00:54 +0000</pubDate><atom:updated>2026-07-14T11:00:54.330Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மீனவர்கள்,fishermen,தீர்வு,நடவடிக்கை action,கோரிக்கை Request,அமைச்சர் நிர்மல் குமார்,Minister Nirmal Kumar</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/84e9ja7z/nirmal-kumar.gif" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர்  சி. டி. ஆர். நிர்மல் குமார் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/84e9ja7z/nirmal-kumar.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>எண்ணூரை சுற்றியுள்ள நெட்டுக்குப்பம், தாழங்குப்பம் உள்ளிட்ட 8 கிராம மீனவர்களின் கோரிக்கைகள் குறித்து மீனவ சங்க பிரதிநிதிகளுடன் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர்  சி. டி. ஆர். நிர்மல் குமார் கலந்துரையாடல்.</p> <h2>கலந்தாய்வு</h2><p>இன்று சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமார்  எண்ணூரை சுற்றியுள்ள நெட்டுக்குப்பம், தாழங்குப்பம் உள்ளிட்ட 8 கிராம மீனவர்களின் நீண்டகால கோரிக்கைகள் குறித்து மீனவ சங்க பிரதிநிதிகளுடன் விரிவான கலந்தாய்வு மேற்கொண்டார்.</p> <p><strong>கலந்தாய்வுக்குப்பின், அமைச்சர் அவர்கள் மீனவ சங்கப் பிரதிநிதிகளுடன் பேசுகையில்,</strong></p><p>முதலில், இன்று தங்களுடைய கருத்துகளையும் கோரிக்கைகளையும் நேரடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு அரசு மற்றும்  முதல்-அமைச்சர், வளர்ச்சி திட்டங்களும் மக்களின் வாழ்வாதாரமும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல; இரண்டையும் சமநிலையுடன் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்ற உறுதியான கொள்கையை கொண்டுள்ள மக்களுக்கான அரசு.</p><h2>சமநீதி</h2><p>இன்று நடைபெற்ற இந்த கலந்தாய்வில், குறிப்பாக வேலைவாய்ப்பு, மீனவர்களின் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மாசுகட்டுப்பாடு மற்றும் பொதுநல கோரிக்கைகள் குறித்து தாங்கள் முன்வைத்த கருத்துகள் அனைத்தையும் மிகவும் கவனமாக கேட்டறிந்துள்ளோம். வேலைவாய்ப்பு தொடர்பாக, அரசால் நடைமுறையில் செயல்படுத்தக்கூடிய, சட்டரீதியாக நிலைத்திருக்கும், அனைவருக்கும் சமநீதியை வழங்க கூடிய ஒரு நிரந்தர நடைமுறை உருவாக்கப்படும்.</p> <h2>நடவடிக்கை எடுக்கப்படும்</h2><p>இதற்காக, எட்டு மீனவ கிராமங்களின் பதிவு செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் மீனவ குடும்பங்களின் விவரங்கள், உண்மையாக மீன்பிடி தொழிலை நம்பி வாழும் குடும்பங்கள், பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, அதிகாரிகளுடன் விரிவாக ஆய்வு செய்து ஒரு செயல்பாட்டு வழிமுறையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.</p><h2>சட்டபூர்வமான தீர்வு</h2><p>இந்த நடைமுறை, தற்போதைய ஆட்சேர்ப்புகளுக்கு மட்டுமல்லாமல், எதிர்கால ஆட்சேர்ப்புகளிலும் தொடர்ச்சியாக பின்பற்ற கூடிய வகையில் இருக்கும் என்பதே அரசின் நோக்கமாகும். அதே நேரத்தில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஏற்கனவே நீண்டகாலமாக பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் உரிமைகளையும் கருத்தில் கொள்ள வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. எனவே, அனைவருக்கும் நியாயமான மற்றும் சட்டபூர்வமான தீர்வு காணும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.</p><h2>கோரிக்கை</h2><p>தாங்கள் முன்வைத்த சுற்றுச்சூழல், சாம்பல்அகற்றுதல், நீர்வழிப்பாதைகள், ஆற்று பராமரிப்பு, ஒப்பந்தப் பணிகள் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும் தனித்தனியாக பட்டியலிடப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் மூலம் ஆய்வு செய்து, உடனடியாக மேற்கொள்ளக் கூடிய பணிகள் விரைவு படுத்தப்படும்.</p> <h2>இன்றுடன் முடிவடைவதல்ல</h2><p>மேலும், நான் விரைவில் சம்பந்தப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு, நிலைமையை ஆய்வு செய்யவும் திட்டமிட்டுள்ளேன். இந்த பேச்சு வார்த்தை இன்றுடன் முடிவடைவதல்ல. இன்று, தாங்கள் அளித்த அனைத்து கோரிக்கைகளையும் அதிகாரிகள் தொகுத்து ஆய்வு செய்வார்கள். மீண்டும் ஒரு கலந்தாய்வு கூட்டம் நடத்தி, நடைமுறையில் செயல்படுத்த கூடிய தீர்வுகளை முன்வைத்து விவாதிப்போம்.</p><h2>நிரந்தர தீர்வு</h2><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">அரசின் நோக்கம்</a> வெறும் வாக்குறுதி வழங்குவது அல்ல; நடைமுறையில் செயல்படுத்த கூடிய, அனைவராலும் ஏற்று கொள்ள கூடிய நிரந்தர தீர்வை உருவாக்குவதே ஆகும். அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட்டால் மட்டுமே இந்த முயற்சி வெற்றியடையும். தேவையற்ற சட்டப் பிரச்சினைகள் அல்லது கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல், அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் ஒரு நல்ல முடிவை எட்டுவோம் என்று நான் நம்புகிறேன்.</p><h2> உறுதி</h2><p>முதல்-அமைச்சர் வழிகாட்டுதலின் படி, எண்ணூர் பகுதி மீனவர்களின் நலன், வாழ்வாதாரம் மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் என்பதை இந்த தருணத்தில் உறுதியுடன் தெரிவித்து கொள்கிறேன் என்று பேசினார்.</p> <h2>கலந்து கொண்டனர்</h2><p>உடன், கூடுதல் தலைமை செயலாளர்/ மின்வாரிய தலைவர் ஜெ. ராதாகிருஷ்ணன், எரிசக்தி துறை முதன்மை செயலாளர் அனில்மேஷ்ராம், மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குநர் ம. கோவிந்தராவ், பசுமை எரிசக்தி கழக மேலாண்மை இயக்குநர் பி. என். ஸ்ரீதர், மின் பகிர்மானம் மற்றும் மின் தொடரமைப்பு கழக இணை மேலாண்மை இயக்குநர் ஐ.சா. மெர்சிரம்யா, மீன்வளம், காவல்துறை, தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாய் பழுது: 810 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/boiler-tube-fault-at-mettur-thermal-power-station-810-mw-power-generation-affected</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/boiler-tube-fault-at-mettur-thermal-power-station-810-mw-power-generation-affected#comments</comments><guid isPermaLink="false">2fe225d4-a041-40ed-9f13-485f3f2d3dd0</guid><pubDate>Tue, 14 Jul 2026 10:58:54 +0000</pubDate><atom:updated>2026-07-14T10:58:54.172Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Power generation,மேட்டூர் அனல் மின் நிலையம்,மின்சார உற்பத்தி,Mettur Thermal Power Station</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/t0g5nrvp/2.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/t0g5nrvp/2.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம் மாவட்டம், மேட்டூரில் அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தலா, 210 மெகா வாட் திறனில் நான்கு அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒட்டுமொத்த மின் உற்பத்தித் திறன் 1,440 மெகாவாட் ஆகும். </p><p>இந்த நிலையில் அனல் மின் நிலையத்தின் கொதிகலன் குழாய் மற்றும் டர்பைன் திடீரென பழுதடைந்தது. இதனால் மொத்தம் 810 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கொதிகலன் குழாய் மற்றும் டர்பைனில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. </p>]]></content:encoded></item><item><title>திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-sea-suddenly-receded-at-tiruchendur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-sea-suddenly-receded-at-tiruchendur#comments</comments><guid isPermaLink="false">d9ca2a30-e46d-40ce-959b-268d3bc9dae3</guid><pubDate>Tue, 14 Jul 2026 10:47:25 +0000</pubDate><atom:updated>2026-07-14T10:47:25.544Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>கடல்,திருச்செந்தூர்,Tiruchendur</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/7wefowul/1.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/7wefowul/1.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்செந்தூர்,</p><p>திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதார பதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் வழக்கமாக அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள், அதற்கு முன்தினம், மறுநாள் கடல்நீர் உள்வாங்குவது வழக்கமான நிகழ்வாக நடைபெற்று வருகிறது.</p><p>இந்த நிலையில், அமாவாசையை முன்னிட்டு, திருச்செந்தூரில் கடல் நீர் இன்று காலை திடீரென உள்வாங்கி காணப்பட்டது. சுமார் 70 அடி தூரம் கடல் உள்வாங்கியதால் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. எனினும், ஆபத்தை உணராமல் பாறைகள் மேல் நின்று பக்தர்கள் செல்பி எடுத்தனர். கடல் உள்வாங்கிய பகுதிகளில் காவல்துறையினர் மற்றும் கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியினர் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>ஆட்சி, காட்சிகள் மாறினாலும்...தமிழகத்தில் கஞ்சா போதை  எள்ளளவு கூட குறையவில்லை - வானதி சீனிவாசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/even-as-governments-and-scenes-change-the-menace-of-cannabis-abuse-in-tamil-nadu-has-not-diminished-in-the-slightest-vanathi-srinivasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/even-as-governments-and-scenes-change-the-menace-of-cannabis-abuse-in-tamil-nadu-has-not-diminished-in-the-slightest-vanathi-srinivasan#comments</comments><guid isPermaLink="false">73485bba-db49-4b18-9fd3-702d17e295b7</guid><pubDate>Tue, 14 Jul 2026 10:30:20 +0000</pubDate><atom:updated>2026-07-14T10:30:20.475Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,Government of Tamil Nadu,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,ஆட்சி,drug eradication,கஞ்சா போதை,action நடவடிக்கை,ஒழிக்க</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/ctpk7xcw/vanathi18.gif" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/ctpk7xcw/vanathi18.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஆட்சி, காட்சிகள் மாறினாலும்...தமிழகத்தில் கஞ்சா போதை  எள்ளளவு கூட குறையவில்லை இது தொடர்பாக தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p> <h2>கொலை வெறி தாக்குதல்</h2><p>சென்னை எண்ணூரில் நள்ளிரவில் கஞ்சா போதையில் வீடு புகுந்து தம்பதியரை கொடூரமாக தாக்கியதாக கூறப்படும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே அந்த கும்பல் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்து, பயன்படுத்தி வந்ததை தட்டிக்கேட்டதால் தான் அவர்கள், தம்பதிகள் மேல் கொலை வெறி தாக்குதலை அரங்கேற்றி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.</p> <h2>ஆமை வேகம்</h2><p>ஆட்சி, காட்சிகள் மாறினாலும் கஞ்சா போதை பொருட்களின் பயன்பாடு மட்டும் தமிழகத்தில் எள்ளளவு கூட குறையவில்லை என்பதற்கு இது போன்ற சம்பவங்களே சாட்சி. மேலும் தமிழகத்தில் போதை பொருட்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளும் விழிப்புணர்வு பிரச்சாரங்களும் ஆமை வேகத்தில் நகர்வது தவெக அரசின் நிர்வாக தோல்விக்கான ஆரம்ப புள்ளி.</p><h2>தீவிர நடவடிக்கை</h2><p>எனவே குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%20">போதைப்பொருள்</a> விற்பனை நெட்வொர்க்கை முழுமையாக ஒழிக்க தமிழக அரசு உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">சென்னை எண்ணூரில் நள்ளிரவில் கஞ்சா போதையில் வீடு புகுந்து தம்பதியரை கொடூரமாக தாக்கியதாகக் கூறப்படும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே அந்த கும்பல் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்து, பயன்படுத்தி வந்ததை தட்டிக்கேட்டதால் தான் அவர்கள், தம்பதிகள் மேல் கொலை வெறி தாக்குதலை…</p>&mdash; Vanathi Srinivasan (@VanathiBJP) <a href="https://x.com/VanathiBJP/status/2076919169157898301?ref_src=twsrc%5Etfw">July 14, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>11 நவீன மாடுகள் காப்பகங்களில் 980 மாடுகள் பராமரிப்பு: சென்னை மாநகராட்சி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/980-cows-being-maintained-in-11-modern-cow-shelters-chennai-corporation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/980-cows-being-maintained-in-11-modern-cow-shelters-chennai-corporation#comments</comments><guid isPermaLink="false">1922f954-2837-402a-b0be-43f1035c49e3</guid><pubDate>Tue, 14 Jul 2026 10:23:47 +0000</pubDate><atom:updated>2026-07-14T10:23:47.858Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai Corporation,cow,மாடுகள்,காப்பகம்,சென்னை மாநகராட்சி அறிவிப்பு,maintain</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/x75tzosv/120.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாடுகள் காப்பகங்களில் 980 மாடுகள் பராமரிப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/x75tzosv/120.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கால்நடை காப்பகங்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து கால்நடை காப்பகங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.</p><h2>பொது சுகாதார சீர்கேடு</h2><p>பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் கடந்த 2024ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி, சுமார் 22,875 மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பான்மையான மாடுகள் உரிய இடவசதி இன்றி, தொழுவங்களுக்குள் வைத்து பராமரிக்கப்படாமல் சாலைகள் மற்றும் பொது இடங்களில் சுற்றித்திரிந்து வருகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு, பொது சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் சில நேரங்களில் பொதுமக்கள் மாடுகளால் தாக்கப்படும் சம்பவங்களும் ஏற்பட்டு வருகின்றன.</p><p>இவ்வாறு தெருக்களில் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு மாடு பிடிக்கும் வாகனம் ஒதுக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா 5 மாடு பிடிக்கும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பிடிக்கப்படும் மாடுகள் புதுப்பேட்டையில் உள்ள மாநகராட்சி மாட்டுத் தொழுவத்தில் அடைக்கப்பட்டு, மாட்டின் உரிமையாளர்களிடமிருந்து அபராதத் தொகை வசூலிக்கப்பட்டு மீண்டும் சாலைகளில் விடக்கூடாது என்ற நிபந்தனையுடன் அந்த மாடுகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.</p><h2>அபராதம்</h2><p>கடந்த 2 ஆண்டுகளில் சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 2,718 எண்ணிக்கையிலான மாடுகள் பிடிக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களிடமிருந்து ரூ.1,24,03,000/- அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.</p><h2>மாடுகள் காப்பகங்கள்</h2><p>இந்நிலையில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை முறையாகப் பராமரித்திடவும், பாதசாரிகள் மற்றும் வாகனத்தில் செல்வோருக்கு அச்சுறுத்தல் மற்றும் இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்கவும், பொது இடங்களில் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதைத் தவிர்த்து ஒழுங்குபடுத்தவும், கால்நடை வளர்ப்போர்களது வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகாமல் இருப்பதை ஊர்ஜிதம் செய்யும் வகையிலும் சேவை மனப்பான்மையுடன் 1 முதல் 15 வரை உள்ள மண்டலங்களில் 18 இடங்களில் மாடுகள் காப்பகங்கள் அமைக்கப்படும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் தற்போது 11 நவீன மாடுகள் காப்பகங்கள் அமைக்கப்பட்டு, அதில் 980 மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.</p><h2>பல்வேறு வசதிகள்</h2><p>இந்த கால்நடை காப்பகங்களில் கால்நடை மருத்துவர் அறை, பராமரிப்பாளர் அறை, கட்டுப்பாட்டு அறை, மருந்துகள் வைப்பு அறை, கண்காணிப்புக் கேமராக்கள், மின் வசதி, மின் விசிறி வசதி, தண்ணீர் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு கால்நடைக்கு நாளொன்றுக்கு ரூ.10/- பராமரிப்புக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p><strong>செயல்பாட்டில் உள்ள நவீன மாடுகள் காப்பகங்களின் விவரங்கள் பின்வருமாறு:-</strong></p><p>1. திருவொற்றியூர், 7 டி.பி.பி சாலை.</p><p>2. மணலி, 17 அரியலூர், தீயம்பாக்கம்.</p><p>3. மணலி, 20 காமராஜர் சாலை.</p><p>4. மாதவரம். 25 சி. எம். டி. ஏ. டெர்மினல்,</p><p>5. இராயபுரம், 53 பேசின் பிரிட்ஜ் சாலை.</p><p>6. அண்ணாநகர், 95 சிவசக்தி நகர், பாடி பிர்ட்ஜ் அருகில்.</p><p>7. தேனாம்பேட்டை, 115 பீட்டர்ஸ் சாலை,இராயப்பேட்டை.</p><p>8. ஆலந்தூர், 158 எம். ஜி. ஆர் சாலை, நந்தம்பாக்கம்.</p><p>9. ஆலந்தூர், 158 எம். ஜி. ஆர் சாலை, நந்தம்பாக்கம்.</p><p>10. பெருங்குடி, 184 வீரபாண்டிய கட்டபொம்மன் குறுக்குத் தெரு.</p><p>11. சோழிங்கநல்லூர், 194 பயோ சி.என்.ஜி. பிளான்ட் அருகில்.</p> <p><strong>கட்டப்பட்டு வரும் மாடுகள் காப்பகங்களின் விவரங்கள் பின்வருமாறு:-</strong></p><p>1. திருவொற்றியூர், 7 டி.பி.பி. சாலை.</p><p>2. இராயபுரம், 58 மூர் மார்க்கெட்.</p><p>3. அம்பத்தூர், என். ஆர். எஸ். சாலை.</p><p>4. தேனாம்பேட்டை, கிருஷ்ணாம்பேட்டை.</p><p>5. பெருங்குடி, 184 வீரபாண்டிய கட்டபொம்மன் குறுக்குத் தெரு.</p><p>6. பெருங்குடி,188 தாம்பரம்-வேளச்சேரி பிரதான சாலை.</p><p>7. சோழிங்கநல்லூர், 194 இஸ்கான் கோயில் அருகில்.</p><h2>பெருநகர சென்னை மாநகராட்சி</h2><p>எனவே, மாடுகளின் உரிமையாளர்கள் பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தங்கள் மாடுகளை சாலைகளில் சுற்றித்திரிய விடாமல், மாநகராட்சியின் சார்பில் பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கால்நடை காப்பகங்களில் தங்கள் மாடுகளை வைத்துப் பராமரித்திடவும், <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">மாநகராட்சியின்</a> சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் 18 அரசு பள்ளிகளுக்கு பெஞ்ச் டெஸ்க் வழங்கிய ஹுண்டாய் நிறுவனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/hyundai-provided-benches-and-desks-to-18-government-schools-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/hyundai-provided-benches-and-desks-to-18-government-schools-in-chennai#comments</comments><guid isPermaLink="false">c638387e-adf0-4925-9024-e719b6ea500b</guid><pubDate>Tue, 14 Jul 2026 10:18:38 +0000</pubDate><atom:updated>2026-07-14T10:18:38.349Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Aadhav Arjuna,ஆதவ் அர்ஜுனா,Government School,அரசு பள்ளிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/z8s0kyek/minister-rajmohan-adhav-ar.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ராஜ்மோகன்,அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,ஹூ மின் ஹோ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/z8s0kyek/minister-rajmohan-adhav-ar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாவட்ட கலக்டரின் சீரிய முன்னெடுப்பில் பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்பு திட்டத்தின்கீழ் ஹூண்டாய்மொபிஸ் நிறுவனத்தின் வாயிலாக சென்னை மாவட்டத்தில் உள்ள 18 அரசு பள்ளிகளுக்கு ரூ.70 லட்சம் செலவில் 900 பெஞ்ச் டெஸ்க் வழங்கும் விழா சென்னை எழும்பூர் மாகாண மகளிர் மேல்நிலை பள்ளி வளாகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.</p> <h2>அமைச்சர் ராஜ்மோகன்</h2><p>சென்னை மாவட்ட கலெக்டர் மாலதி ஹெலன் தலைமையில் நடைபெற்ற&nbsp; இந்நிகழ்வில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D">பள்ளிக் கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன்</a> மாணவர்களுக்கு பெஞ்ச் டெஸ்க் வழங்கி விழா பேருரை ஆற்றினார்கள். மேலும் பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். </p> <h2>கலந்து கொண்டனர்</h2><p>பள்ளி கல்வித்துறை கூடுதல் தலைமை செயலர் சந்திரமோகன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். ஹூண்டாய்மொபிஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் ஹூ மின் ஹோ, நரசிம்மன் தலைவர் பெரு நிறுவன சமூக பொறுப்புத்துறை நிகழ்வில் கலந்து கொண்டனர் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ச.கண்ணப்பன் விழாவில் நன்றியுரை ஆற்றினார். உடன் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p> ]]></content:encoded></item><item><title>கோவை: ஒற்றைக் காட்டு யானை தாக்கி விவசாயி பலி  </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-farmer-killed-in-attack-by-lone-wild-elephant</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-farmer-killed-in-attack-by-lone-wild-elephant#comments</comments><guid isPermaLink="false">8f8660e6-f161-4f3f-acae-31f3f33d33f8</guid><pubDate>Tue, 14 Jul 2026 10:06:04 +0000</pubDate><atom:updated>2026-07-14T10:06:04.017Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,தாக்குதல்,காட்டு யானை,விவசாயி பலி,Wild elephan,Farmer death</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-06-09/mdp3wkj5/elephant-attack.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஒற்றைக் காட்டு யானை தாக்கி விவசாயி பலி]]></media:title><media:description type="html"><![CDATA[ ஒற்றைக் காட்டு யானை தாக்கி விவசாயி பலி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-06-09/mdp3wkj5/elephant-attack.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவையில் ஒற்றைக் காட்டு யானை தாக்கியதில் விவசாயி பலியானார்.</p><h2>யானை தாக்குதல்</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கோவை மாவட்டம்</a> அருகே உள்ள சின்னாம்பதி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜ் (வயது 72) விவசாயி.  இவர் தனது விவசாய நிலத்தில் இருந்தபோது, எதிர்பாராத விதமாக காட்டை விட்டு வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை ஒன்று திடீரென்று அவரைத் தாக்கியது. </p><h2>விவசாயி பலி</h2><p>இதில் படுகாயமடைந்த விவசாயி அலறிக் கூச்சலிட்டார். எனவே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகிலுள்ள கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் விவசாயி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p>இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. மேலும் காட்டு யானைகளின் நடமாட்டம் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><h2>வனத்துறை எச்சரிக்கை-பொதுமக்கள் கோரிக்கை</h2><p>பொதுமக்கள் இரவு நேரங்களில் தனியாக வெளியே வராமல் இருக்குமாறு வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும்<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> காட்டு யானை</a>களை கண்டால் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.</p><p>காட்டு யானைகளின் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் இப்பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>மதுக்கடைகளை மூடுவதே போதைப்பொருளை ஒழிப்பதற்கான முதற்படியாகும் - சீமான்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/closing-liquor-shops-is-the-first-step-towards-eradicating-substance-abuse-seeman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/closing-liquor-shops-is-the-first-step-towards-eradicating-substance-abuse-seeman#comments</comments><guid isPermaLink="false">194f79dc-3875-449e-85bf-122cd093c2c2</guid><pubDate>Tue, 14 Jul 2026 09:53:57 +0000</pubDate><atom:updated>2026-07-14T09:53:57.306Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,Seeman,மதுக்கடைகள்,drug eradication,போதைப்பொருள் ஒழிப்பு,liquor shops</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/mkoop90f/seeman.21.06.2026.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/mkoop90f/seeman.21.06.2026.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மதுக்கடைகளை மூடுவதே போதைப்பொருளை ஒழிப்பதற்கான முதற்படியாகும். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>மதுக்கடைகளை மூடக்கோரி போராடிய மாணவிகள் மீது காவல்துறையை ஏவி கண்மூடித்தனமாக தவெக அரசு தாக்குதல் நடத்துவது கொடுங்கோன்மை என்று சீமான் தெரிவித்தார்.</p><h2>தாக்குதல்</h2><p>அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கோடாலி கிராமத்தில் பள்ளி செல்லும் வழியில் மாணவச்செல்வங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இயங்கி வந்த தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரிப் போராடிய மாணவிகளின் கையை கிழித்து தவெக அரசின் காவல்துறை கண்மூடித்தனமாக தாக்குதல் தொடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.</p> <h2>மதுக்கடைகளை மூடப்போவது எப்போது?</h2><p>ஆட்சிக்கு வந்தவுடன் கல்விக்கூடங்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் மதுக்கடைகள் அனைத்தையும் மூடிவிட்டதாக கூறும் தவெக அரசின் பட்டியலில் அரியலூர் மாவட்டம் கோடாலி கிராமத்தில் இயங்கிய மதுக்கடை இடம்பெறாமல் போனது எப்படி? தமிழ்நாடு முழுவதும் இதுபோல் இயங்கிவரும் மற்ற மதுக்கடைகளை தவெக அரசு மூடப்போவது எப்போது? பள்ளி செல்வதற்கே அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இயங்கிவரும் மதுக்கடைகளை மூடுவதில் தவெக அரசுக்கு என்ன தயக்கம்? </p><h2>பேரவலம் இல்லையா?</h2><p>கல்வி கற்பதை விட்டுவிட்டு, மதுக்கடைகளை மூட வேண்டும் என்று மாணவக் கண்மணிகளை வீதியில் இறங்கி போராடும் நிலைக்கு ஆளாக்கியது மனித பேரவலம் இல்லையா? மாணவிகள் போராடும் வரை மதுக்கடைகளை மூடாமல் என்ன செய்து கொண்டிருக்கிறது தவெக அரசு? மாணவிகள் போராடிய பிறகும், மதுக்கடைகளை மூடாமல் காவல்துறையை ஏவி தாக்குதல் நடத்தியிருப்பது கொடுங்கோன்மை இல்லையா?</p><h2>விரும்பிய மாற்றமா?</h2><p>பிஞ்சு குழந்தைகளின் சின்னஞ்சிறு கைகளைக் காயப்படுத்த தவெக காவல் துறைக்கு எப்படி மனசு வந்தது? இதுதான் மக்கள் விரும்பிய மாற்றமா? இக்கொடுமைகளை நிகழ்த்தத்தான் மக்கள் உங்களை ஆட்சியில் அமர்த்தினார்களா? பெண்கள் பாதுகாப்பிற்கு சிங்கப்பெண்கள் காவல் படையை உருவாக்கிய தவெக அரசு, காவல்துறையிடமிருந்து மாணவிகளை பாதுகாக்க என்ன படையை உருவாக்கப்போகிறது?</p><h2>புனித தீர்த்தமா?</h2><p>தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் முற்று முழுவதுமாக மூடி முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே நாம் தமிழர் கட்சியின் நீண்டகால முதன்மையான கோரிக்கையாகும். கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிப்போம் என்று கூறும் தவெக அரசு, டாஸ்மாக் கடைகளில் விற்பது போதைப்பொருள் அல்லாமல் புனித தீர்த்தமா? அதனை மூடுவதில் தவெக அரசுக்கு என்ன தயக்கம்? முந்தைய திமுக, அதிமுக அரசுகள் செய்த டாஸ்மாக் மது விற்பனையை தவெக அரசும் தொடர்வது வெட்கக்கேடானது. </p> <h2>முதற்படியாகும்</h2><p>போதைப்பொருள் ஒழிப்பு நாளில் உறுதிமொழி எடுத்தால் மட்டுமே ஒழிந்துவிடாது முதல்வர் அவர்களே! டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக மூடுவதற்கான உறுதியான நடவடிக்கையை எப்போது எடுப்பீர்கள்? சட்டம் ஒழுங்கை சீரழித்து, சமூகத்தின் அனைத்து குற்றச்செயலுக்கும் காரணமான மதுக்கடைகளை மூடுவதே போதைப்பொருளை ஒழிப்பதற்கான முதற்படியாகும்.</p><h2>சட்ட நடவடிக்கை</h2><p>ஆகவே, அரியலூர் மாவட்டம் கோடாலி கிராமத்தில் மதுக்கடைகளுக்கு எதிராக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D">போராடிய மாணவிகளை தாக்கிய காவல்துறையினர்</a> மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மாணவிகளின் அறப்போராட்டத்தை அடுத்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ள மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டுமெனவும், முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.</p><h2>பாராட்டு</h2><p>தவெக அரசின் காவல்துறை தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அன்பு பிள்ளைகள் விரைந்து நலம்பெற விழைகிறேன். கண் முன்னே நடக்கும் அநீதிக்கு எதிராக சிறிய வயதிலும் சமூக பொறுப்புணர்வோடு தீரத்துடன் போராடிய அரியலூர் மண்ணின் வீரமகள்களுக்கு என்னுடைய அன்பையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">மதுக்கடைகளை மூடக்கோரிப் போராடிய மாணவிகள் மீது காவல்துறையை ஏவி கண்மூடித்தனமாக தவெக அரசு தாக்குதல் நடத்துவது கொடுங்கோன்மை!<a href="https://x.com/CMOTamilnadu?ref_src=twsrc%5Etfw">@CMOTamilnadu</a> <a href="https://x.com/TVKVijayHQ?ref_src=twsrc%5Etfw">@TVKVijayHQ</a><br><br>அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கோடாலி கிராமத்தில் பள்ளி செல்லும் வழியில் மாணவச்செல்வங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும்… <a href="https://t.co/Epwp53AFdT">pic.twitter.com/Epwp53AFdT</a></p>&mdash; செந்தமிழன் சீமான் (@Seeman4TN) <a href="https://x.com/Seeman4TN/status/2076941774006997261?ref_src=twsrc%5Etfw">July 14, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>மேகதாது விழிப்புணர்வு பரப்புரைக்கு நன்றி: அன்புமணியை நேரில் சந்தித்து வாழ்த்திய உழவர் அமைப்புகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thank-you-for-mekedatus-awareness-campaign-farmers-organizations-met-and-congratulated-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thank-you-for-mekedatus-awareness-campaign-farmers-organizations-met-and-congratulated-anbumani#comments</comments><guid isPermaLink="false">d5ee638b-ad4c-4940-8e61-0bace0249647</guid><pubDate>Tue, 14 Jul 2026 09:47:44 +0000</pubDate><atom:updated>2026-07-14T09:47:44.847Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி,Anbumani,சென்னை,farmer,வாழ்த்து,மேகதாது,Mekedatu Dam Issue</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/1l62vvim/119.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/1l62vvim/119.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணியை சென்னையிலுள்ள அவரது அலுவலகத்தில்  தமிழ்நாடு அனைத்து விவசாயச் சங்கங்களின் கூட்டியக்க தலைவர் பி.கே. தெய்வசிகாமணி உள்ளிட்ட உழவர் அமைப்புகளின் தலைவர்கள் சந்தித்து பேசினார்கள். </p><h2>நன்றி</h2><p>அப்போது காவிரியின்  குறுக்கே மேகதாது அணை கட்டும்  கர்நாடக அரசின் சதித் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பரப்புரை பயணம் மேற்கொண்டது உள்ளிட்ட உழவர்களுக்கு ஆதரவான செயல்பாடுகளுக்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர்.</p><h2>ஆதரவு</h2><p>கூட்டுறவு சங்கங்கள் மூலம் உழவர்கள் வாங்கிய பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உழவர் அமைப்புகள் சார்பில் நடத்தப்படவிருக்கும் நடைபயணத்திற்கும் ஆதரவளிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர். அதை ஏற்றுக்கொண்ட அன்புமணி இராமதாசை, உழவர்கள் நலனுக்காக உழவர் அமைப்புகள்  மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">பாட்டாளி மக்கள் கட்சி</a> முழு ஆதரவு அளிக்கும் என்று உறுதியளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை திருடும் முதல்-அமைச்சர் விஜய் தான் களவாணி - எடப்பாடி பழனிசாமி காட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-who-poaches-aiadmk-mlas-is-a-thief-remarked-edappadi-palaniswami-sharply</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-who-poaches-aiadmk-mlas-is-a-thief-remarked-edappadi-palaniswami-sharply#comments</comments><guid isPermaLink="false">3f14501b-62be-48cf-8b4f-8a19a2370d3a</guid><pubDate>Tue, 14 Jul 2026 09:44:15 +0000</pubDate><atom:updated>2026-07-14T09:44:15.198Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,எம்.எல்.ஏ.க்கள்,thief,Edappadi Palaniswami ​,அ.தி.மு.க.,காட்டம்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,AIADMK MLAs</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/yx853w6f/sami33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/yx853w6f/sami33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம், </p><p>அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை திருடும் முதல்-அமைச்சர் விஜய் தான் களவாணி. இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- </p> <h2>விஜய் தான் களவாணி</h2><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a> கரூர் நிகழ்ச்சியில் சமீபத்தில் பேசும்போது தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டு களவாணிகள் என்று கூறினார். அவர் வகிக்கும் பதவியில் இருந்து இவ்வாறு பேசுவது அழகல்ல. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை திருடும் முதல்-அமைச்சர் விஜய் தான் களவாணி. </p><h2>இறவல் கால்</h2><p>தமிழகத்தில் 60 நாள் த.வெ.க. ஆட்சியில் செய்தது என்ன. ஒன்றும் செய்யவில்லை. 4 கால்கள் இருந்தால் தான் நாற்காலி நிற்கும். விஜய் நாற்காலியின் ஒரு கால் இறவல் கால். வேறு கூட்டணியில் வென்றவர்கள் தான் த.வெ.க.வுக்கு உறுதுணையாக உள்ளனர்.</p><h2>கட்டுக்கதை</h2><p>தி.மு.க. - அ.தி.மு.க. கூட்டணி என்பது கட்டுக்கதை. தீயசக்தி தி.மு.க. என்பதுதான் எனது நிலைப்பாடும். தி.மு.க. எதிர்ப்பில் உறுதியாக இருக்கிறோம். முதல்-அமைச்சர் விஜய் இதுவரை ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யவில்லை. </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய்யிடம் ஆட்டோகிராப் வாங்கிய பெண் டாக்டர்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/female-doctor-gets-autograph-from-cm-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/female-doctor-gets-autograph-from-cm-vijay#comments</comments><guid isPermaLink="false">e6d149f2-f21e-4cca-ba63-4862c30ea9a3</guid><pubDate>Tue, 14 Jul 2026 09:29:16 +0000</pubDate><atom:updated>2026-07-14T09:29:16.835Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,முதல்-அமைச்சர்,doctor,Appointment Order,பணி நியமன ஆணைகள்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/dsnhjvej/118.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/dsnhjvej/118.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 751 உதவி மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D">முதல்-அமைச்சர்</a> ஜோசப் விஜய் வழங்கினார். </p><h2>ஆட்டோகிராப்</h2><p>அப்போது, பெண் டாக்டர் ஒருவர் முதல்-அமைச்சரிடம் ஆர்வம் மிகுதியால் ஆட்டோகிராப் கேட்டார். அப்போது, முதல்-அமைச்சரிடம் பேனா இல்லை. உடனே அந்த பெண் டாக்டரிடமே பேனா கேட்டார். அவரும் தனது பையில் இருந்து எடுத்து கொடுக்க, பணி ஆணையின் பின்புறத்தில் ஆட்டோகிராப் போட்டு கொடுத்தார். அந்த பெண் டாக்டரும் மகிழ்ச்சியுடன் மேடையைவிட்டு கீழே இறங்கினார். </p>]]></content:encoded></item><item><title>&quot;தமிழகத்தின் உயர்கல்வித் துறையை உயர்த்தும் பிரதமர் மோடி அரசு&quot; -  நயினார் நாகேந்திரன் பாராட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/prime-minister-modis-government-is-elevating-tamil-nadus-higher-education-sector-nainar-nagendran-praises</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/prime-minister-modis-government-is-elevating-tamil-nadus-higher-education-sector-nainar-nagendran-praises#comments</comments><guid isPermaLink="false">39bfdfa2-e320-4c3c-befe-21d3759c9a5c</guid><pubDate>Tue, 14 Jul 2026 09:26:18 +0000</pubDate><atom:updated>2026-07-14T09:26:18.270Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரதமர் மோடி,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Narendra Modi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/yky9mcgg/112.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/yky9mcgg/112.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>"மாணவர்களுக்கு தரமான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை உறுதி செய்யும் நமது மத்திய அரசின் PM SETU திட்டத்தின் கீழ், சுமார் ரூ.1,440 கோடி நிதிச் செலவில் அம்பத்தூர், கோயம்புத்தூர், தூத்துக்குடி, மதுரை, திருச்சி மற்றும் ஓசூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள 30 ஐடிஐ கல்லூரிகள் நவீனமயமாக்கப்பட உள்ளதாக வெளியாகியுள்ள அறிவிப்பை முழு மனதுடன் வரவேற்று மகிழ்கிறேன். </p><p>தமிழகத் தொழிற்பயிற்சி நிலையங்களில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், லாஜிஸ்டிக்ஸ் மற்றும் பிற நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த முன்னெடுப்பின் மூலம், நமது இளைய சமுதாயத்தினரின் வளமான எதிர்காலம் வலிமையாக வடிவமைக்கப்படும். தொழில்துறையில் ஓர் புது புரட்சி உண்டாகும்! மாணவர்களின் நலனையும், தொழில்துறையின் வளர்ச்சியையும் ஒருசேர முன்னேற்றும் இத்திட்டத்தினை நமக்கு வழங்கிய மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடிக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்"</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தொழிற்சாலையில் பாய்லர் வெடிப்பு: தொழிலாளர்கள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் அவசியம் - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/factory-boiler-explosion-extra-attention-needed-for-worker-safety-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/factory-boiler-explosion-extra-attention-needed-for-worker-safety-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">64911b9b-104b-42af-861f-5ff502194a96</guid><pubDate>Tue, 14 Jul 2026 09:13:52 +0000</pubDate><atom:updated>2026-07-14T09:13:52.131Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,பாதுகாப்பு,factory,safety,தொழிற்சாலை,பாய்லர் வெடிப்பு,Boiler explosion,கவனம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/qon1dwsr/nainar-nagendheran.new.gif" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/qon1dwsr/nainar-nagendheran.new.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தொழிற்சாலையில் பாய்லர் வெடிப்பு: தொழிலாளர்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இதுதொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>ராட்சத பாய்லர் </h2><p>திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள சிப்காட் தொழிற்பேட்டையில், தனியார் உலோக உருக்கு தொழிற்சாலையில் ராட்சத பாய்லர் வெடித்ததில், புலம்பெயர் தொழிலாளி ஒருவர் பலியானதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த மன வேதனையளிக்கின்றன. </p> <h2> இரங்கல்</h2><p>உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவதோடு, பாதிக்கப்பட்டவர்கள் முழு உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் விரைவில் குணமடைய தேவையான ஆதரவு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு தவெக அரசை கேட்டு கொள்கிறேன். </p><h2> கூடுதல் கவனம்</h2><p>மேலும், வேதிப்பொருட்களை அடிப்படையாக கொண்டு இயங்கும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">தொழிற்சாலைகள்</a> தங்களது தொழிலாளர்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமெனவும், இதுபோன்ற எதிர்பாரா விபத்துகளைத் தவிர்க்கும் வகையில் தொழிற்சாலைகளில் தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து தர வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள சிப்காட் தொழிற்பேட்டையில், தனியார் உலோக உருக்கு தொழிற்சாலையில் ராட்சத பாய்லர் வெடித்ததில், புலம்பெயர் தொழிலாளி ஒருவர் பலியானதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த மன வேதனையளிக்கின்றன. <br><br>உயிரிழந்தவரின்…</p>&mdash; Nainar Nagenthran (@NainarBJP) <a href="https://x.com/NainarBJP/status/2076937944863269242?ref_src=twsrc%5Etfw">July 14, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>வழிபாட்டு மற்றும் உணவு உரிமைகளை பாதுகாக்க சட்டத்திருத்தம் தேவை: தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/amendment-needed-to-protect-religious-and-food-rights-sdpi-party-demands-tamil-nadu-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/amendment-needed-to-protect-religious-and-food-rights-sdpi-party-demands-tamil-nadu-government#comments</comments><guid isPermaLink="false">df910709-858d-4996-b381-0866d71efa87</guid><pubDate>Tue, 14 Jul 2026 09:10:41 +0000</pubDate><atom:updated>2026-07-14T09:10:41.777Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,demand,உணவு,Amendment,முகம்மது முபாரக்,எஸ்டிபிஐ வலியுறுத்தல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/m7dmmwa6/117.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முகம்மது முபாரக்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/m7dmmwa6/117.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;</p><p>தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை மட்டுமன்றி, மற்ற நாட்களிலும் அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர பொது இடங்களில் எருது, காளை உள்ளிட்ட மாடுகள் மற்றும் ஆடு உள்ளிட்ட விலங்கினங்களைப் பலியிடக்கூடாது என்ற சென்னை ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சென்னை ஐகோர்ட் உத்தரவிற்கு இடைக்காலத்தடை விதித்துள்ளது. தமிழக அரசின் சட்ட ரீதியான நகர்வு மூலம் பெறப்பட்ட சுப்ரீம் கோர்ட்டில் இந்த உத்தரவை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">எஸ்டிபிஐ கட்சி</a> மனதார வரவேற்கிறது.</p><p>இந்த விவகாரத்தில் தற்போது கிடைத்துள்ளது இடைக்கால உத்தரவு மட்டுமே என்பதால், வழக்கில் முழுமையான வெற்றி பெறவும், எதிர்காலத்தில் இதுபோன்ற தடைகள் மீண்டும் ஏற்படுவதைத் தடுத்து நிறுத்தவும் தமிழக அரசு சில முக்கியமான சட்டத்திருத்த நடவடிக்கைகளில் உடனடியாகத் தீவிர கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. அப்போதுதான் இவ்விவகாரத்தில் அரசு எதிர்கொள்ளும் சட்டச் சிக்கல்களையும், மக்களின் பாரம்பரிய மத மற்றும் உணவு உரிமைகளில் ஏற்படும் நடைமுறைப் பிரச்சினைகளையும் நிரந்தரமாக களைய முடியும்.</p><h2>உடனடி திருத்தங்கள்</h2><p>இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மத வழிபாட்டு உரிமை மற்றும் மக்களின் பாரம்பரிய உணவு உரிமைகளைப் பாதுகாப்பது ஒரு மக்கள் அரசின் முதன்மைக் கடமையாகும். சென்னை ஐகோர்டின் தடை உத்தரவு போன்ற நடவடிக்கைகள், மக்களின் நீண்டகால வழிபாட்டு நடைமுறைகளில் தேவையற்ற தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, தமிழ்நாடு அரசு பின்வரும் சட்டங்களில் உடனடியாகத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்:</p><p>* தமிழ்நாடு விலங்குகள் பாதுகாப்புச் சட்டம், 1958 (Tamil Nadu Animals Preservation Act, 1958)</p><p>* தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998 மற்றும் விதிகள், 2023 (Tamil Nadu Urban Local Bodies Act, 1998 and Rules, 2023)</p><p>* தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம், 1939 (Tamil Nadu Public Health Act, 1939)</p><p>இச்சட்டங்களில் மத சடங்குகள், பண்டிகைகள் மற்றும் பாரம்பரிய வழிபாட்டு நடைமுறைகளுக்கான விலங்குப் பலிக்கு முறையான சட்டப்பூர்வ விலக்கை (Exemption) உறுதி செய்யும் வகையில் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.</p><h2>சமத்துவ நடவடிக்கை</h2><p>மேலும், ஒன்றிய அரசின் 'விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின்' (Prevention of Cruelty to Animals Act) விதிகளை மீறாத வகையிலும், சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் மத வழிபாட்டு உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும் தெளிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட வேண்டும். இது இஸ்லாமியர்களின் புனித குர்பானி திருநாள் மற்றும் இந்து உள்ளிட்ட மற்ற சமூக மக்களின் பாரம்பரிய கிராமப்புறக் கோவில் கொடை விழாக்கள் என அனைத்துத் தரப்பு மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் ஒரு சமத்துவ நடவடிக்கையாக அமையும்.</p><h2>வலியுறுத்தல்</h2><p>எனவே, மக்களின் உணர்வுகளோடும், வழிபாட்டு முறைகளோடும் கலந்த இந்த உணர்வுப்பூர்வமான விவகாரத்தில், தமிழ்நாடு அரசு எதிர்கால நலன் கருதி, தேவையான சட்டத்திருத்தங்களையும், புதிய வழிகாட்டுதல்களையும் போர்க்கால அடிப்படையில் உடனடியாக மேற்கொண்டு, அனைத்துத் தரப்பு மக்களின் மத மற்றும் உணவு உரிமைகளையும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய்யுடன் கஜகஸ்தான் தூதர் சந்திப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kazakhstan-ambassador-meets-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kazakhstan-ambassador-meets-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">ae7c4cbf-95e6-4862-9a53-be9408f02bc4</guid><pubDate>Tue, 14 Jul 2026 08:58:40 +0000</pubDate><atom:updated>2026-07-14T08:58:40.853Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சந்திப்பு,Kazakhstan,கஜகஸ்தான்,Ambassador,தூதர்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/08rkvw44/vijaywith-Kazakhstan-Ambass.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய்,கஜகஸ்தான் தூதர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/08rkvw44/vijaywith-Kazakhstan-Ambass.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> சென்னை தலைமை செயலகத்திற்கு இன்று முக்கிய சர்வதேச பிரமுகர் ஒருவர் வருகை தந்தார். இந்தியாவிற்கான கஜகஸ்தான்  தூதர் அஸமத் யெஸ்கரயேவ், இன்று சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் சி. ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்து ஆலோசித்தார். </p> <h2>வரவேற்பு</h2><p>பொன்னாடை போர்த்தி வரவேற்பு தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்-அமைச்சர் அலுவலகத்திற்கு வந்த கஜகஸ்தான் தூதரை, முதல்-அமைச்சர் விஜய் இன்முகத்தோடு வரவேற்றார். இந்த சந்திப்பின் போது கஜகஸ்தான் தூதருக்கு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF.%20%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%88">முதல்-அமைச்சர் விஜய்</a> பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து இரு நாட்டு அதிகாரிகள் முன்னிலையில் சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.</p><h2>வர்த்தக முதலீடுகள்</h2><p>மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.  தமிழகத்தில் கஜகஸ்தான் நாட்டின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் புதிய தொழில் வாய்ப்புகள் குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது.  கல்வி, தொழில்நுட்பம் மற்றும் கலாச்சாரப் பரிமாற்றங்களை இருதரப்பிலும் மேம்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. </p> <p>இருதரப்பு உறவுகள்</p><p>இந்தியா மற்றும் கஜகஸ்தான் இடையேயான நட்புறவை, தமிழக அரசு வழியே மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. தூதர்கள் வருகையால் சுறுசுறுப்படையும் தலைமை செயலகம் நடிகராக இருந்து அரசியல் கட்சி தொடங்கி, அண்மையில் தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற சி. ஜோசப் விஜய்யை, உலக நாடுகளின் தூதர்கள் அடுத்தடுத்து சந்தித்து வருவது அரசியல் அரங்கில் உற்றுநோக்கப்படுகிறது.</p><p>இந்த சந்திப்பின்போது, கஜகஸ்தான் குடியரசு தூதரகத்தின் இரண்டாம் செயலாளர் யர்மெக் ஜட்மகம்பெடோவ், இந்தியாவிற்கான கசாத் இன்வெஸ்ட் பிரதிநிதிகள் டொமினிக் சின்னப்பன் மற்றும் நந்தகுமார் மனோகரன், பேங்க் சென்டர் கிரெடிட் ஜெ.எஸ்.சி.யின் நிர்வாக இயக்குநர் அஸ்காத் சுய்னிஷேவ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்படாது - சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட முக்கிய தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sewage-pumping-stations-will-not-operate-important-information-released-by-the-chennai-water-board</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sewage-pumping-stations-will-not-operate-important-information-released-by-the-chennai-water-board#comments</comments><guid isPermaLink="false">25a2caf3-af0c-4873-b4b4-674e48deebf8</guid><pubDate>Tue, 14 Jul 2026 08:33:55 +0000</pubDate><atom:updated>2026-07-14T08:33:55.845Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,தமிழகம்,கழிவுநீர்,சென்னை குடிநீர் வாரியம்,Chennai Water Board</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/gbkc3lll/mathi.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை குடிநீர் வாரியம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/gbkc3lll/mathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/சென்னை-குடிநீர்-வாரியம்">சென்னை குடிநீர் வாரியம்</a> வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் (CMRL) சார்பில், அடையாறு மண்டலம், தரமணி சரிவு (Ramp Metro Station) மெட்ரோ ரெயில் நிலையத்தில் பிரதான கழிவுநீர் உந்துக்குழாய் மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், 16.07.2026 அன்று இரவு 10 மணி முதல் 17.07.2026 இரவு 10 மணி வரை மண்டலம் -9 மற்றும் 13- க்குட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்படாது.</p><p><strong>சென்னை குடிநீர் வாரியம் தகவல்</strong></p><p>சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் (CMRL) சார்பில், அடையாறு மண்டலம், தரமணி சரிவு (Ramp Metro Station) மெட்ரோ ரெயில் நிலையத்தில் பிரதான கழிவுநீர் உந்துக்குழாய் மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், 16.07.2026 அன்று இரவு 10 மணி முதல் 17.07.2026 இரவு 10 மணி வரை மண்டலம் -9 (தேனாம்பேட்டை) –க்குட்பட்ட வடக்கு மயிலாப்பூர் கழிவுநீர் உந்து நிலையம், தெற்கு மயிலாப்பூர் கழிவுநீர் உந்து நிலையம், ஐஸ் ஹவுஸ் கழிவுநீர் உந்து நிலையம் மற்றும் மண்டலம் - 13 (அடையாறு) - க்குட்பட்ட பட்டினப்பாக்கம் கழிவுநீர் உந்து நிலையம், ராஜா அண்ணாமலை புரம் கழிவுநீர் உந்து நிலையம், பக்தவச்சலம் நகர் கழிவுநீர் உந்து நிலையம். அடையாறு கழிவுநீர் உந்து நிலையம் தற்காலிகமாக செயல்படாது.</p><p>எனவே, தேனாம்பேட்டை மற்றும் அடையாறு மண்டலங்களுக்குட்பட்ட கீழ்கண்ட இடங்களில் கழிவுநீர் தொடர்பான புகார்களுக்கு கீழ்க்காணும் பகுதி அலுவலர்களை தொடர்பு கொள்ளவும்.</p><p><strong><ins>1. மண்டலம் - 9 (தேனாம்பேட்டை)</ins></strong></p><p><strong>கைபேசி எண்</strong></p><p>8144930909 </p><p><strong>பகுதிகள்</strong></p><p>ஐஸ்ஹவுஸ், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சாந்தோம் நெடுஞ்சாலை, ஆழ்வார்பேட்டை, சாமியர்ஸ் சாலை, ஆஸ்டின் நகர், மந்தைவெளி, சீத்தம்மாள் காலனி மற்றும் இராயப்பேட்டை</p> <p><strong><ins>2. மண்டலம் - 13 (அடையாறு)</ins></strong> </p><p><strong>கைபேசி எண்</strong></p><p>8144930913 </p><p><strong>பகுதிகள்</strong></p><p>பட்டினம்பாக்கம், சீனிவாசபுரம், ராஜா அண்ணாமலை புரம் அடையாறு, கஸ்தூரிபாய் நகர் காந்தி நகர், இந்திரா நகர், சாஸ்திரி நகர், பரமேஸ்வரி நகர், பத்மநாபன் நகர், அருணாச்சலபுரம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், ஜீவரத்தினம் நகர், லட்சுமிபுரம், பெசன்ட் நகர், ஓடை குப்பம், உரூர் குப்பம், காமராஜர் நகர், பாலகிருஷ்ணன் நகர், திருவள்ளுவர் நகர், பத்திரிகையாளர் குடியிருப்பு, பி.டி.சி காலனி மற்றும் திருவான்மியூர்</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: திருச்சியில் நாளை மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-trichy-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-trichy-tomorrow#comments</comments><guid isPermaLink="false">5a04543b-207d-4cf9-b9c2-e6a0616a3f21</guid><pubDate>Tue, 14 Jul 2026 08:31:51 +0000</pubDate><atom:updated>2026-07-14T08:31:51.303Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>monthly maintenance work,மாதாந்திர பராமரிப்பு பணி,திருச்சி,Trichy,Power outage tomorrow,நாளை மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/jskbn9bp/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாளை மின்தடை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/jskbn9bp/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி, </p><p>திருச்சி நகர்ப்புற கோட்டம் E.B. ரோடு துணை மின் நிலையத்தில் நாளை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் காரணமாக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>திருச்சி நகர்ப்புறம்</h2><p>தமிழ்நாடு மின்பகிர்மான கழகம், திருச்சி நகர்ப்புற செயற்பொறியாளர் முத்துராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>திருச்சி நகர்ப்புற கோட்டத்திற்குட்பட்ட E.B. ரோடு துணை மின் நிலையத்தில் நாளை (15.7.2026, புதன் கிழமை) காலை 9.45 மணி முதல் மணி மாலை 4 வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் பின்வரும் இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><h2>காலை 9.45 மணி முதல் மணி மாலை 4 வரை</h2><p>அதன்படி மேற்சொன்ன துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் E.B.ரோடு, மணிமண்டப சாலை, காந்தி மார்கெட், கல்மர்ந்தை, வெள்ளை வெற்றிலைக்காரத் தெரு, ராணித்தெரு, பூலோகநாதர் கோவில் தெரு, பெரிய சொராஷ்டிரா தெரு, ஜின்னா தெரு, கிருஷ்ணபுரம் ரோடு, சின்னகடைவீதி, பெரிய கடைவீதி, மதுரம் மைதானம், பாரதியார் தெரு, பட்டவர்த் ரோடு, கீழ ஆண்டார் வீதி, மலைக்கோட்டை, மேலபுலிவார் ரோடு, பாபுரோடு, குறிஞ்சி கல்லூரி, டவுன் ஸ்டேசன், வில்வாஸ் நகர், வேதாத்திரி நகர், A.P.நகர், லட்சுமிபுரம் மற்றும் உக்கடை ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>பட்டமளிப்பு விழா: பேரன் இன்பநிதியை கட்டியணைத்து வாழ்த்திய மு.க.ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/graduation-ceremony-mkstalin-hugs-grandson-inbanidhi-and-congratulates-him</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/graduation-ceremony-mkstalin-hugs-grandson-inbanidhi-and-congratulates-him#comments</comments><guid isPermaLink="false">5010cafd-cd52-4d6f-9f70-baac86ecd631</guid><pubDate>Tue, 14 Jul 2026 08:26:55 +0000</pubDate><atom:updated>2026-07-14T08:26:55.076Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,M.K.Stalin,பட்டமளிப்பு விழா,Graduation Ceremony,இன்பநிதி,Inbanidhi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/1vrjr3x2/CHENNAI-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/1vrjr3x2/CHENNAI-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் பேரனும், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி, லண்டன் மான்செஸ்டர் நகரில் உள்ள கல்லூரியில் விளையாட்டு மேம்பாடு தொடர்பான உயர் படிப்பை முடித்துள்ளார்.</p><p>இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்னையில் இருந்து விமானம் மூலம் கடந்த 4-ம் தேதி லண்டன் புறப்பட்டு சென்றார். லண்டனில் 15 நாட்கள் தங்கி ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ள அவர், அங்கு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவும் திட்டமிட்டுள்ளார். பேரனின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட பிறகு, 18-ந்தேதி அவர் சென்னை திரும்புவார் என தெரிவிக்கப்பட்டது.</p><p>இந்த நிலையில், இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடந்த இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது இன்பநிதியை மு.க.ஸ்டாலின் கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைபோல தந்தை உதயநிதி ஸ்டாலினும் மகன் இன்பநிதியை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/9a5l7uo4/Untitled-1.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் முற்றுகை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/villagers-blockade-demanding-arrest-of-culprits-in-attempted-murder-case</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/villagers-blockade-demanding-arrest-of-culprits-in-attempted-murder-case#comments</comments><guid isPermaLink="false">1ae727b4-36e2-45b1-84ea-cd2cb83af9c8</guid><pubDate>Tue, 14 Jul 2026 08:12:45 +0000</pubDate><atom:updated>2026-07-14T08:12:45.842Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பொதுமக்கள்,Thoothukudi,தூத்துக்குடி,Attempt to murder case,கொலை முயற்சி வழக்கு,Public,முற்றுகை,Collector&apos;s Office,கலெக்டர் அலுவலகம்,Petition,Siege</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/v8eyg1ry/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முற்றுகை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/v8eyg1ry/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய அனைத்து நபர்களையும் கைது செய்யக் கோரி ஆழ்வார்கற்குளம் கிராம மக்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">முற்றுகையிட்டு கலெக்டரிடம் மனு</a> அளித்தனர்.</p><h2>கிராம மக்கள் குற்றச்சாட்டு</h2><p>தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்கற்குளம் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பா என்பவரை 9.7.2026 அன்று கொலை செய்ய முயன்ற சம்பவம் நடைபெற்றது. இந்த கொலை முயற்சி வழக்கில், ஸ்ரீவைகுண்டம் காவல்துறையினர் 2 பேரை கைது செய்துள்ளனர். எனினும், இந்த வழக்கில் தொடர்புடைய பிற நபர்களை குற்றப் பட்டியலில் சேர்க்காமல் காவல்துறையினர் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.</p><h2>கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு</h2><p>இந்த கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களையும் உடனடியாக கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆழ்வார்கற்குளம் பகுதியில் மீண்டும் ஜாதி மோதல்கள் ஏதும் நிகழாத வண்ணம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கிராம மக்கள் சார்பில் மாவட்ட கலெக்டடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>கரூர் கோவில் நிலத்தை பத்திரப்பதிவு செய்யலாம் என்ற உத்தரவுக்கு தடைவிதிக்க மதுரை ஐகோர்ட்டு மறுப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-high-court-refuses-to-stay-the-order-allowing-the-registration-of-karur-temple-land</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-high-court-refuses-to-stay-the-order-allowing-the-registration-of-karur-temple-land#comments</comments><guid isPermaLink="false">7a71c5e2-28d9-49ca-9e85-a150a8b85d00</guid><pubDate>Tue, 14 Jul 2026 08:12:06 +0000</pubDate><atom:updated>2026-07-14T08:12:06.404Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர்,temples,கோவில்கள்,Karur,Madurai High Court,மதுரை ஐகோர்ட்டு,பத்திரப்பதிவு,Registration,கோவில் நிலம்,temple land</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/ndldfq9l/vino.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மதுரை ஐகோர்ட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/ndldfq9l/vino.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p>கோவில்களின் 3,084 ஏக்கர் நிலத்தை பத்திர பதிவு செய்ய அனுமதி அளித்த கலெக்டரின் உத்தரவை ரத்து செய்யும்படி மதுரை ஐகோர்ட்டில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று விசாரணை நடைபெற்றது.</p><h2>3,084 ஏக்கர் நிலங்கள்</h2><p>திருத்தொண்டர் சபை அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-</p><p>கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், குப்புச்சிபாளையம் ரவீஸ்வரர் கோவில், வெஞ்சமாங்கூடலூர் விக்ருதீஸ்வரர் கோவில்களுக்கு கரூர் மாவட்டத்தில் 15 கிராமங்களில் 3,084 ஏக்கர் நிலங்கள் உள்பட ஏராளமான நிலங்கள் உள்ளன. இவை பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு உடையவை.</p><h2>அரசாணை</h2><p>இந்த நிலங்களை ஆக்கிரமித்த தனிநபர்கள் 3,390 பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டு இருந்தன. இதுதொடர்பாக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து இருந்தது.</p><p>அதன்விளைவாக மேற்கண்ட 3,084 ஏக்கர் நிலங்களையும் பத்திரப்பதிவு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு சுமார் 10 ஆண்டுக்கு முன்பே அரசாணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளது.</p><h2>தடை நீக்கம்</h2><p>இந்தநிலையில் மேற்கண்ட கோவில்களுக்கு சொந்தமான 3,084 ஏக்கர் நிலங்களை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்கி கரூர் மாவட்ட கலெக்டர் கடந்த 9-ந்தேதி உத்தரவிட்டு இருக்கிறார். இந்த உத்தரவின் மூலம் அறநிலையத்துறையும் தடை உத்தரவுகளை நீக்குவதற்கான நட வடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளது.</p><p>உயர் அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் கோவில் நிலங்கள் பெருமளவில் ஆக்கிரமிக்கப்படும் அபாயம் உள்ளது. இது தவறான முன் உதாரணமாக அமைந்துவிடும். எனவே மேற்கண்ட நிலங்களை பத்திரப்பதிவு செய்ய ஏற்கனவே விதித்த தடையை நீக்கிய கலெக்டர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.</p><p>இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.</p><h2>அவசர வழக்கு</h2><p>இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் முன்பு நேற்று ஆஜரான ராதாகிருஷ்ணன் முறையிட்டார்.அதை ஏற்ற நீதிபதிகள், இந்த வழக்கு நாளை (அதாவது இன்று) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தனர்.</p><h2>உத்தரவுக்கு தடை</h2><p>இந்நிலையில் இன்று நடந்த வழக்கு விசாரணையின்போது, கரூர் கோவில் நிலத்தை பத்திரப்பதிவு செய்யலாம் என்ற உத்தரவுக்கு தடைவிதிக்க ஐகோர்ட்டு மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் எந்த விதியின் அடிப்படையில் தடை நீக்கப்பட்டது என இந்துசமய அறநிலையத்துறை பதில் அளிக்க வேண்டும் என்றும் ஆணையிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் குதிரை பேரம் நடக்கிறது: மு.வீரபாண்டியன் பரபரப்பு குற்றச்சாட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/horse-trading-is-taking-place-in-tamil-nadu-m-veerapandian-alleges-sensationalism</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/horse-trading-is-taking-place-in-tamil-nadu-m-veerapandian-alleges-sensationalism#comments</comments><guid isPermaLink="false">7cd60211-db28-45e4-b2c8-bd1126969725</guid><pubDate>Tue, 14 Jul 2026 07:55:56 +0000</pubDate><atom:updated>2026-07-14T07:55:56.311Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,Communist Party of India,குதிரை பேரம்,மு.வீரபாண்டியன்,M.Veerapandian,horse trading</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/tthjrcl1/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/tthjrcl1/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>உள்ளாட்சித் தேர்தல்</h2><p>சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுமா என்பதை, தேர்தலின் போதே முடிவு செய்வோம். இப்போது இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சிபிஎம்எல் ஆகிய கட்சிகள் இணைந்து ஒரு இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கியுள்ளோம். அது தேர்தலுக்கான குழு அல்ல. தமிழக நலனுக்காக போராடுவதற்காக உருவாக்கப்பட்ட குழு. தேர்தல் வருகிற நேரங்களில் இடதுசாரி கட்சிகள் அவரவர் கட்சியில் கூடி முடிவெடுப்போம். தேவை ஏற்படுகிறபோது ஒருங்கிணைந்து முடிவெடுப்போம். </p><p>நாட்டை இடதுசாரிகள் பக்கம் திருப்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த ஒருங்கிணைப்புக் குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தல்களின் போது, அப்போதைய சூழலுக்கு ஏற்ப முடிவு எடுப்போம். ஒரு வேளை தனித்துப் போட்டியிடக் கூடிய சூழல் உருவாகும் எனில், தனித்துக்கூட கம்யூனிஸ்டுகளால் நிற்க முடியும்.</p><h2>குதிரை பேரம்</h2><p>கம்யூனிஸ்டுகளுக்கு நாடு முழுவதும் அமைப்பு இருக்கிறது, எங்களின் பணியை மக்கள் அறிந்துள்ளனர். எனவே அத்தகைய சூழல் ஏற்பட்டால் நாங்கள் உள்ளாட்சித் தேர்தலில் தனித்தே நிற்போம். அதனை கட்சியே முடிவு செய்யும். தமிழ்நாட்டில் இடதுசாரி கட்சிகளின் பலத்தை அறிய வேண்டியது அவசியம்.</p><p>தமிழ்நாட்டில் எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேரம் நடக்கிறது. இதனைத் தடுப்பது தமிழ்நாட்டின் நலனுக்கு நல்லது. இந்த கலாசாரம் வட மாநிலங்களிலிருந்து இங்குப் பரவியுள்ளது. கட்சித் தாவல் மற்றும் குதிரை பேரம் ஏற்புடையதல்ல. அது நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் பல கட்சிகள் இயங்குமுறையை நெருக்கடிக்கு உள்ளாக்கும். அரசியல் மீதே ஒரு வெறுப்புணர்வை உருவாக்கும். அவரவர் கொள்கைவழி நின்று அரசியல் செய்வதே கடமை என கருதுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-the-day-after-tomorrow-8</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-the-day-after-tomorrow-8#comments</comments><guid isPermaLink="false">977c2932-b759-43fe-9919-628cab1cdff3</guid><pubDate>Tue, 14 Jul 2026 07:46:06 +0000</pubDate><atom:updated>2026-07-14T07:46:06.098Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,monthly maintenance work,power outage,தென்காசி,மாதாந்திர பராமரிப்பு பணி,மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/4vm42zkw/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாளை மறுநாள் மின்தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/4vm42zkw/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p>திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், தென்காசி மாவட்டம், கடையநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட கடைநல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் காரணாக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>கடையநல்லூர் கோட்டம்</h2><p>கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பக விநாயகர சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>கடையநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட கடையநல்லூர் துணை மின் நிலைய பகுதிகளில்  நாளை மறுநாள் (16.7.2026, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பின்வரும் இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.</p><h2>காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை</h2><p>அதன்படி கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், பேட்டை, மாவடிக்கால், குமந்தாபுரம், முத்துச்சாமிபுரம், வலசை, கருப்பாநதி, தார்க்காடு, போகநல்லூர், கண்மணியாபுரம், பாலஅருணாச்சலபுரம், கம்பனேரி, மங்களபுரம், அச்சம்பட்டி, பொய்கை, ஊர் மேல் அழகியான், வேலாயுதபுரம், இடைகால், சிவராம்பேட்டை, கொடிக்குறிச்சி மற்றும் நயினாரகரம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item></channel></rss>