<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 16 Jul 2026 10:43:47 +0000</lastBuildDate><item><title>அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை எதிர்த்த வழக்கு - ஐகோர்ட்டில் 22-ந்தேதி விசாரணை  </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-challenging-the-resignation-of-aiadmk-mlas-high-court-hearing-on-the-22nd</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-challenging-the-resignation-of-aiadmk-mlas-high-court-hearing-on-the-22nd#comments</comments><guid isPermaLink="false">f9ddc1bd-9832-4bbc-984b-749235127024</guid><pubDate>Thu, 16 Jul 2026 10:27:56 +0000</pubDate><atom:updated>2026-07-16T10:27:56.192Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை ஐகோர்ட்டு,Chennai High Court</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/6b34wcrw/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/6b34wcrw/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சட்டமன்ற தேர்தலில் விராலிமலை, கரூர் தொகுதிகளில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தனர். அவர்களுடைய ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதை எதிர்த்து அ.தி.மு.க. கொரடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். </p><p>அந்த மனுவில், தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருக்கும் நிலையில், இருவருடைய ராஜினாமாவை சபாநாயகரை ஏற்றுக்கொண்டது தவறு என்றும், இந்த விவகாரத்தில் கோர்ட்டு தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. சபாநாயகரின் முடிவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் விராலிமலை, கரூர் தொகுதிகள் காலியானதாக அறிவித்த விவகாரத்தில் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.</p> <p>இந்த மனு இன்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, இந்த மனு குறித்து பதிலளிக்கும்படி சட்டமன்ற செயலாளர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் ஆகியோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், ஏற்கனவே 4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவை ஏற்றதை எதிர்த்த வழக்குகளோடு சேர்த்து இந்த வழக்குகளையும் ஜூலை 22-தேதி விசாரணைக்கு பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>அதிமுகவுடன் திமுக கூட்டணி அமைக்குமா? முன்னாள் அமைச்சர் ரகுபதி  விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-dmk-form-an-alliance-with-the-aiadmk-former-minister-raghupathy-clarifies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-dmk-form-an-alliance-with-the-aiadmk-former-minister-raghupathy-clarifies#comments</comments><guid isPermaLink="false">0479d437-0de6-458f-8087-424866ad39a1</guid><pubDate>Thu, 16 Jul 2026 10:23:41 +0000</pubDate><atom:updated>2026-07-16T10:23:41.579Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,திமுக,DMK,ரகுபதி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/cwx0zt1h/Ragupati.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரகுபதி ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/cwx0zt1h/Ragupati.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் வீழ்த்தி தவெக ஆட்சியைப் பிடித்தது. திமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்ற விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் இணைந்து தவெக ஆட்சி அமைத்துள்ளது. முன்னதாக பெரும்பான்மை கிடைக்காமல் தவெக ஆட்சியை அமைக்க தடுமாறிக்கொண்டு இருந்த நேரத்தில் திமுகவும் அதிமுகவும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதிமுக ஆட்சி அமைக்க திமுக வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கலாமா என்று ஆலோசிக்கப்பட்டதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது.</p><h2>சக்திவாய்ந்த இயக்கமாக</h2><p>எலியும் பூனையுமாக தேர்தல் களத்தில் இருந்த இரு கட்சிகளும் கூட்டணி அமைக்க ஆலோசனை நடத்தியதாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பின. இந்த நிலையில் முன்னாள் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அமைச்சர் ரகுபதி</a> இது தொடர்பாக பேசியதாவது: "தமிழ்நாட்டில் நிரந்தர கூட்டணியும் கிடையாது. நிரந்தர எதிரிகளும் கிடையாது. அதே நேரத்தில் அதிமுக பக்கம் போகமாட்டோம். தனித்து நின்று வெல்லக்கூடிய அளவிற்கு சக்திவாய்ந்த இயக்கமாக திமுகவை உருவாக்கிக் காட்டுவோம் </p> <h2>கொத்து பரோட்டா போட்டிருப்பார்கள் </h2><p>தமிழக மக்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லை. விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எங்கு சென்றாலும் தவெகவினர் கஞ்சா விற்பனை செய்கிறார்கள். திருமயம் தொகுதியில் தவெகவில் இருக்கக்கூடிய பலர் மணல் கடத்துகிறார்கள்.</p><p> எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என எங்களுக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருக்கிறது என அதிகாரிகள் சொல்கின்றனர். லஞ்சம் வாங்காத விஜய் சார், சிறுவர்களை ஏமாற்றி ஓட்டு வாங்கிய விஜய் சார், அந்த மேலிடம் யார்? . உங்கள் ஆட்சியில்தான் இவை அனைத்தும் நடந்து கொண்டிருக்கிறது. <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">முதல்வரே</a> கொஞ்சம் கண்களை விழித்துப்பாருங்கள்.  நான் கொளத்தூரில் 5 நிமிடம் பேசியதற்கே கொத்துப் பரோட்டா போட்டுவிட்டனர் என சொல்லியிருக்கிறார். நீங்கள் 10 நிமிடம் பேசியிருந்தால், உங்களை கொத்து பரோட்டா போட்டிருப்பார்கள். எழுதிக் கொடுத்த 5 நிமிட வசனத்தை தான் நீங்கள் பேசுனீர்கள்; 6-வது நிமிடம் பேசியிருந்தால், உங்களுக்கா ஓட்டு என மக்கள் ஓடியிருப்பார்கள்”என்றார். </p> ]]></content:encoded></item><item><title>மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிவு 2027 ஏப்ரல் மாதம் வெளியீடு: டிஜிட்டல் முறையில் தரவுகள் சேகரிப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/census-results-2027-to-be-released-in-april-data-collection-in-digital-format</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/census-results-2027-to-be-released-in-april-data-collection-in-digital-format#comments</comments><guid isPermaLink="false">641b3ad9-67bc-415c-8a35-b2eeb09fa609</guid><pubDate>Thu, 16 Jul 2026 10:17:56 +0000</pubDate><atom:updated>2026-07-16T10:17:56.682Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Census,டிஜிட்டல் முறை,Digital,மக்கள்தொகை கணக்கெடுப்பு,Data,தரவுகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/ub3qun9a/census.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/ub3qun9a/census.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு 1872-ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அடுத்து, 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட இருந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், நாட்டின் 16-வது மக்கள்தொகை கணக்கெடுப்பு, சுதந்திரத்திற்கு பிறகு நடத்தப்படும் 8-வது கணக்கெடுப்பு 2027-ம் ஆண்டு நடத்த முடிவு செய்யப்பட்டது. </p><p>இந்த நிலையில், மக்கள்தொகை கணக்கெடுப்பின் நோக்கம் குறித்த அறிவிப்பை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16-ந் தேதி மத்திய அரசு, அரசிதழில் வெளியிட்டது. தொடர்ந்து, ஜூலை மாதம் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் இந்த அறிவிப்பை தங்களது அரசிதழில் மறுவெளியீடு செய்ய அறிவுறுத்தப்பட்டது. </p><h2>மக்கள்தொகை கணக்கெடுப்பு</h2><p>அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி இந்தியா முழுவதும் நிர்வாக எல்லைகள் இறுதி செய்யப்பட்டன. முதற்கட்டமாக, வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுக்கும் பணி கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. இந்தப் பணிகள் செப்டம்பர் மாதம் நிறைவடைய உள்ள நிலையில், 2-ம் கட்டமாக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">மக்கள்தொகை கணக்கெடுப்பு</a> லடாக் யூனியன் பிரதேசம் மற்றும் ஒத்திசைவற்ற பனிப்பொழிவு உள்ள பகுதிகளான ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசம், இமாச்சலபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் செப்டம்பர் மாதம் தொடங்க இருக்கிறது. அடுத்த ஆண்டு (2027) பிப்ரவரி மாதம் 2-வது கட்டமாக மக்கள்தொகை கணக்கெடுப்பு களப்பணி தொடங்குகிறது. ஏப்ரல் மாதத்திற்குள் இந்தப் பணிகளை முடித்து, அம்மாதமே உத்தேச மக்கள்தொகை எண்ணிக்கை விவரங்கள் வெளியிடப்பட இருக்கின்றன.  </p><p>அடுத்த ஆண்டு நடைபெறும் மக்கள்தொகை கணக்கெடுப்பு முற்றிலும் டிஜிட்டல் முறையில் நடைபெற இருக்கிறது. அதாவது, டிஜிட்டல் தரவு சேகரிப்பு, சுய கணக்கெடுப்பு போர்டல், சாதிவாரி கணக்கெடுப்பு, புவிசார் குறியீட்டுடன் டிஜிட்டல் வரைபடங்கள், செயற்கை நுண்ணறிவு பயன்பாடு ஆகியவை புகுத்தப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>அன்புமணியை தலைவராக ஏற்றுக்கொள்ளப்போவதில்லை - பாமக அருள் பேட்டி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pmk-will-not-accept-anbumani-as-its-leader-arul-interview</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pmk-will-not-accept-anbumani-as-its-leader-arul-interview#comments</comments><guid isPermaLink="false">15c36e1f-b570-4c13-b765-d12b1d0f21a6</guid><pubDate>Thu, 16 Jul 2026 10:09:04 +0000</pubDate><atom:updated>2026-07-16T10:09:04.252Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாமக,PMK,அன்புமணி,சேலம்,AnbumaniRamadoss</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/b2jf8g7c/arul33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/b2jf8g7c/arul33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>அன்புமணியை தலைவராக ஏற்றுக்கொள்ளப்போவதில்லை  என முன்னாள் எம்.எல்.ஏ. அருள் கூறியுள்ளார். </p><p>சேலத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின் முன்னாள் எம்.எல்.ஏ. அருள் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- </p><p>அன்புமணியை கண்டு வன்னியர்கள் ஏமாறக்கூடாது. ராமதாஸை ஏற்ற பாஜகவினர் அன்புமணியை ஏற்க தயாராக இல்லை.  அன்புமணியை தலைவராக ஏற்றுக்கொள்ளபோவதில்லை. எப்போதும் எனக்கு ராமதாஸ்தான் கடவுள். </p><p>6 முறை வாய்ப்பு தந்து 7-ம் முறை எம்.எல்.ஏ ஆக்கியவர் ராமதாஸ்.  சோதனையான சூழலில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அன்புமணி</a>க்காக என் உயிரை பணயம் வைத்தேன். திமுக, அதிமுகவில் இருந்து எனக்கு அழைப்பு வந்துள்ளது. விரைவில் எனது முடிவை அறிவிப்பேன்.</p><p>பிரிந்திருந்த ராமதாஸும் அன்புமணியும் ஒன்று சேர்ந்த நிலையில் அருள் இவ்வாறு அறிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>காவிரி நீர் பங்கீட்டில் கர்நாடகாவின் முரண்பாடு ஏற்க முடியாதது - வானதி சீனிவாசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/karnatakas-inconsistency-in-cauvery-water-sharing-is-unacceptable-vanathi-srinivasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/karnatakas-inconsistency-in-cauvery-water-sharing-is-unacceptable-vanathi-srinivasan#comments</comments><guid isPermaLink="false">174c05fe-23c9-4681-ba83-9d74fca3b6dc</guid><pubDate>Thu, 16 Jul 2026 09:57:02 +0000</pubDate><atom:updated>2026-07-16T09:57:02.111Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காவிரி நீர்,Karnataka,கர்நாடகா,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,Cauvery water,பங்கீடு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/hxtcg0zx/vanathi-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/hxtcg0zx/vanathi-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் நேற்றைய காணொலிக் கூட்டத்தில், தமிழகத்திற்கு தற்போதைய சூழலில் தண்ணீர் தர முடியாது என்று கர்நாடக அதிகாரிகள் தெரிவித்ததாக செய்திகள் வருவது அதிர்ச்சி அளிக்கிறது. இது  தமிழகத்தின் உரிமையை சிறிது சிறிதாக பறிக்கும் அபாயத்தின் அறிகுறி. கர்நாடகத்தின் இந்த வாதம்,  காவிரி மேலாண்மை ஆணையத்திலும் பிரதிபலிக்கும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பருவநிலை மற்றும் நீர் இருப்பினைப் பொறுத்து பங்கிட வேண்டிய உரிய நீரின் அளவினை வழங்காமல் கர்நாடக அரசு வெற்று காரணங்களைக் கூறி மழுப்புவது கண்டனத்திற்குரியது.</p><p>ஏற்கனவே, மேகதாது அணை கட்டும் விவகாரத்தில், கர்நாடக அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் நிலையில் தற்போது <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D">காவிரி நதி நீர்</a> பங்கீட்டிலும் முரண்டு பிடிப்பது தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கி விடும்.</p><h2>வஞ்சிக்கும் செயல்</h2><p>தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் தவெக அரசு, அண்டை மாநிலமான கர்நாடகாவின் காங்கிரஸ் ஆட்சியின் இதுபோன்ற செயல்களை கண்டுகொள்ளாமல் இருப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும். கூட்டணி தர்மத்திற்காக தமிழகத்தின் உரிமைகளையும், நியாயங்களையும் கர்நாடகாவிடம் அடகு வைக்கும் தவெக அரசின் நடவடிக்கைகளை ஒருபோதும் தமிழக மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.</p><p>கூட்டணி அரசின் முதல்-அமைச்சர் அவர்களே..! தற்போது பருவமழையும் பொய்த்து வரும் சூழலில் உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு தமிழகத்திற்கான நதி நீர் பங்கீட்டை பெற்றுத் தர நடவடிக்கை எடுத்து டெல்டா மாவட்ட விவசாயிகள் வாழ்வாதாரத்தினைக் காக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள்: சென்னை மாநகராட்சி ஆணையர் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rainwater-drainage-dredging-works-chennai-corporation-commissioner-inspects</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rainwater-drainage-dredging-works-chennai-corporation-commissioner-inspects#comments</comments><guid isPermaLink="false">31e1d872-5118-44e1-9e21-68f1aba365bb</guid><pubDate>Thu, 16 Jul 2026 09:35:22 +0000</pubDate><atom:updated>2026-07-16T09:35:22.406Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rainwater drainage,dredging work,மழைநீர் வடிகால்,தூர்வாரும் பணிகள்,சென்னை மாநகராட்சி ஆணையர்,Chennai Corporation Commissioner</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/288n0l3n/68.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/288n0l3n/68.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன்,ஐ.ஏ.எஸ்., வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாதவரம் மற்றும் தண்டையார்பேட்டை மண்டலங்களில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் கால்வாய்களில் மேற்கொள்ளப்படும் தூர்வாரும் பணிகளை இன்று (16.07.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.</p><p>மாநகராட்சி ஆணையாளர், மாதவரம் மண்டலம், வார்டு-23க்குட்பட்ட வி.எஸ்.மணி நகர் பகுதியில் ரூ.22.88 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><h2>தூர்வாரும் பணிகள்</h2><p>இதனைத் தொடர்ந்து, வடபெரும்பாக்கம் திருப்பதி தேவஸ்தான நகர் அருகில் உள்ள புழல் உபரிநீர் கால்வாயினை பார்வையிட்டு ஆய்வு செய்து, நீர் சீராக வெளியேறும் வகையில் கால்வாயில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றி, தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு கண்காணித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>பின்னர், தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் அருகிலுள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் ஆம்பிபியன் எஸ்கவேட்டர் இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆகாயத்தாமரை அகற்றும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தினார்.</p><h2>மாநகராட்சி ஆணையர் உத்தரவு</h2><p>தொடர்ந்து, கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகம் பகுதியில் மயானம் அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, இம்மயானத்திற்காக பக்கிங்ஹாம் கால்வாயின் குறுக்கே பாலம் கட்டுவதற்காக திட்டமிடப்பட்டிருந்த பணியும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த பாலம் கட்டும் பணிக்காக பக்கிங்ஹாம் கால்வாய் கரையில் கொட்டப்பட்டிருந்த மண் மற்றும் கட்டட இடிபாட்டுக் கழிவுகள் அனைத்தையும் இரண்டு நாட்களுக்குள் அப்புறப்படுத்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D"> மாநகராட்சி ஆணையாளர்</a> உத்தரவிட்டார். இந்த ஆய்வுகளின்போது, வடக்கு வட்டார துணை ஆணையாளர் ஸ்வேதா சுமன்,ஐ.ஏ.எஸ்., மண்டலக்குழுத் தலைவர் நேதாஜி யு. கணேசன், மண்டல அலுவலர் ராஜ்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>3,825 அடி உயர மலையை தொடர்ந்து 1,000 நாட்கள் ஏறிய இளைஞர்: நயினார் நாகேந்திரன் பாராட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-who-climbs-3825-ft-mountain-for-1000-consecutive-days-nayanar-nagendran-praised</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-who-climbs-3825-ft-mountain-for-1000-consecutive-days-nayanar-nagendran-praised#comments</comments><guid isPermaLink="false">0356df24-81f0-4662-8e2d-e09190e9bd77</guid><pubDate>Thu, 16 Jul 2026 09:35:07 +0000</pubDate><atom:updated>2026-07-16T09:35:07.992Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,மலையேற்றம்,Nayanar Nagendran</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/znkwmk3v/2.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/znkwmk3v/2.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் பகுதியில் அமைந்துள்ள 3,825 அடி உயரமுள்ள கொண்டரங்கி மலையைத் தொடர்ந்து 1,000 நாட்கள் ஏறி, நேற்று (ஜூலை 15) தனது அரிய சாதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள தம்பி திரு. தீபக் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இன்றைய இளைஞர்கள் சிலர் போதை போன்ற தவறான பாதைகளில் செல்லும் சூழலில், அதற்கு நேர்மாறாக ஒழுக்கம், விடாமுயற்சி மற்றும் உடற்தகுதியைத் தனது பாதையாகத் தேர்ந்தெடுத்துள்ளார் தம்பி தீபக் அவர்கள். அவரது இந்த அயராத அர்ப்பணிப்பு இளைய சமுதாயத்திற்கு ஒரு மிகச்சிறந்த வழிகாட்டியாகும்.</p><p>நமது நாட்டின் இளைய தலைமுறையினர், தம்பி தீபக் அவர்கள் போன்ற சாதனையாளர்களை முன்னுதாரணமாகக் கொண்டு தங்களது உடலையும் மனதையும் ஆரோக்கியமாகப் பேணி, தங்களின் ஆற்றலை ஆக்கப்பூர்வமான வழிகளில் செலுத்த வேண்டும். விடாமுயற்சியால் இமாலய இலக்கை எட்டியுள்ள தம்பி தீபக் அவர்களின் எதிர்கால முயற்சிகள் அனைத்தும் சிறக்க வாழ்த்துகிறேன்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பேருந்து கட்டணத்தை உயர்த்தக்கூடாது: அதிகாரிகளுக்கு முதல் அமைச்சர் விஜய் அறிவுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bus-fares-must-not-be-raised-chief-minister-vijay-orders-transport-department-officials</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bus-fares-must-not-be-raised-chief-minister-vijay-orders-transport-department-officials#comments</comments><guid isPermaLink="false">a878ff6a-4120-432a-8357-04357c51fdce</guid><pubDate>Thu, 16 Jul 2026 09:31:25 +0000</pubDate><atom:updated>2026-07-16T09:31:25.463Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,போக்குவரத்து துறை,பேருந்து கட்டணம்,TNCM</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/81v5zgan/Vijay.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/81v5zgan/Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p> தமிழக முதல் அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விஜய்</a>, பல்வேறு அரசு துறைகளின் செயல்பாடுகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். இதற்காக நடைபெறும் ஆய்வுக் கூட்டங்களில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, துறைகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், அண்மையில் நடைபெற்ற போக்குவரத்துத் துறை ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் சேவையில் ஈடுபடுத்துவதற்காக 2,000 புதிய குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளை உடனடியாக கொள்முதல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>மேலும், புதிய குளிர்சாதன பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அதனை காரணமாகக் கொண்டு பயணிகளின் பேருந்து கட்டணத்தை எந்த சூழலிலும் உயர்த்தக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், கட்டண உயர்வைத் தவிர்த்து மாற்று வழிகளில் போக்குவரத்துத் துறையின் வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>பொதுமக்களுக்கு தரமான, வசதியான மற்றும் நவீன போக்குவரத்து சேவையை வழங்குவதுடன், புதிய குளிர்சாதன பேருந்துகளை அறிமுகப்படுத்தி, பயணிகளுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படாத வகையில் மாற்று வருவாய் ஆதாரங்களை உருவாக்க வேண்டும் என்பதே <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">முதலமைச்சரின்</a> நோக்கம் என கூறப்படுகிறது. இதற்காக பேருந்துகளின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் விளம்பரங்கள் அமைத்தல், பயணச்சீட்டுகளின் (டிக்கெட்) பின்புறத்தில் விளம்பரங்களை அச்சிடுதல் உள்ளிட்ட பல்வேறு வழிகளின் மூலம் கூடுதல் வருவாய் ஈட்டுவதற்கான திட்டங்களை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content:encoded></item><item><title>மீன்பிடிக்க அனுமதி: ஆந்திராவிடம் தமிழக அரசு கோரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/permission-for-fishing-tamil-nadu-government-requests-andhra-pradesh</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/permission-for-fishing-tamil-nadu-government-requests-andhra-pradesh#comments</comments><guid isPermaLink="false">f8ea2226-e1c0-4792-884c-7c4c14cbc34c</guid><pubDate>Thu, 16 Jul 2026 09:08:37 +0000</pubDate><atom:updated>2026-07-16T09:08:37.058Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மீனவர்கள்,ஆந்திரா,Andhra Pradesh,Tamil Nadu Government,தமிழக அரசு,Fishermen -</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/s1pih2dt/67.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/s1pih2dt/67.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மீனவர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சென்னை மற்றும் ஆந்திர பிரதேச மீனவர்களிடையே கடலில் மீன்பிடிப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை தீர்த்து, மீனவர்கள் சுமூகமான மீன்பிடிப்பில் ஈடுபடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. </p><p>ஏறத்தாழ 50 ஆண்டுகளாக சென்னை மீன்பிடித்துறைமுகத்தினை தங்குதளமாகக் கொண்டு செயல்படும் மீன்பிடி படகுகள், சென்னைக்கு கிழக்கே வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் மீன்பிடிப் பகுதிகள் வரை மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, தங்குகடல் (Multi-day) மீன்பிடிப்பிற்கு செல்லும் சுமார் 200 மீன்பிடி விசைப்படகுகள், ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகளில் மீன்பிடிப்பினை மேற்கொண்டு வருகின்றன. தமிழ்நாடு மற்றும் குறிப்பாக புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆந்திரப் பிரதேச கடல் பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபடுவதனால், அப்பகுதியில் மீன்வளங்கள் குறையும் என்ற அச்சம் சமீப காலங்களில் ஆந்திர மாநில மீனவர்களிடையே உருவாகியுள்ளது.</p><h2>சட்டம் ஒழுங்கு பிரச்சினை</h2><p>இதன் காரணமாக ஆந்திர <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF">கடற்பகுதி</a>யில் அண்டை மாநில மீன்பிடிபடகுகள் மீன்பிடிப்பில் ஈடுபடுவதை தடை செய்யக் கோரி ஆந்திர பிரதேச மீனவர்கள் மேற்கொண்ட போராட்டங்களின் விளைவாக, அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட்டது. எனவே, ஆந்திர பிரதேச அரசு அதிகாரிகள், இந்திய கடல்சார் மண்டலச் சட்டம், 1976 ன் படி, மாநில அரசின் அதிகார எல்லையாக வரையறுக்கப்பட்டுள்ள, 12 கடல் மைல் தொலைவிற்குள் மீன்பிடிப்பில் ஈடுபடும் சென்னை மீன்பிடி படகுகளை சிறைபிடித்து வருகின்றனர். தற்பொழுது, சென்னையைச் சார்ந்த 7 விசைப்படகுகள் சிறைபிடிக்கப்பட்டு, ஆந்திர மாநிலம் ஜீவலடின் மீன்பிடிதுறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.</p><p>இது தொடர்பாக சென்னை மீன்பிடிப் படகு உரிமையாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் கோரிக்கைகளின் அடிப்படையில், இப்பிரச்சினைகளுக்கு சுமூகமான தீர்வு காணும் நோக்கில், தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட அரசாணைகளின் அடிப்படையில் அமைக்கப்பட்ட இரு மாநில அதிகாரிகள் கொண்ட மாவட்ட அளவிலான குழுக் கூட்டத்தை (District Level Committee) விரைவாக நடத்துவதற்கான நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப்பட்டது.</p><h2>தேவையான நடவடிக்கை</h2><p>இதனைத் தொடர்ந்து, இப்பிரச்சினை தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அளவிலும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் தலைமையிலும் மற்றும் நிதி, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பலன்கள், திட்டமிடல் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் தலைமையிலும், சென்னை மீன்பிடிப் படகு உரிமையாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பல்வேறு கட்டங்களில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. மேலும்,  மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகளை நேரடியாக ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கு அனுப்பியும், தமிழ்நாடு மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவிக்கவும், ஆந்திர கடற்பகுதியில் தமிழ்நாடு மீனவர்கள் வழக்கம்போல், சுமூகமாக மீன்பிடிப்பில் ஈடுபட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டது.</p><h2>சுமூகமான தீர்வு</h2><p>இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேச மீனவர்களுக்கிடையிலான பிரச்சினைகள் குறித்து விவாதித்து, சுமூகமான தீர்வை ஏற்படுத்தும் நோக்கில், 11.07.2026 அன்று ஆந்திரப் பிரதேச மாநிலம், நெல்லூரில் நடைபெற்ற இரு மாநிலங்களுக்கிடையேயான கூட்டத்தில், தமிழ்நாட்டின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும், ஆந்திர மாநிலத்தின் மீன்வளத்துறை ஆணையர், நெல்லூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்டுள்ள சென்னை மீன்பிடிபடகுகளை உடனடியாக விடுவித்திடவும், சென்னை மீனவர்களின் வாழ்வாதாரத்தினை கருத்திற்கொண்டு, அவர்களை வழக்கம்போல், ஆந்திர மாநில கடற்பகுதிகளில் மீன்பிடித்திட அனுமதிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறாக, சென்னையைச் சார்ந்த மீன்பிடி விசைப்படகுகள் வழக்கமாக மீன்பிடிப்பில் ஈடுபடும் ஆந்திர-தமிழக கடற்பகுதிகளில், தொடர்ந்து சுமூகமாக மீன்பிடிப்பில் ஈடுபட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஆந்திர அரசுடன் ஒருங்கிணைந்து தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>சேலம்: அம்பேத்கர் சிலையை திறப்பதில் எழுந்துள்ள சிக்கலை அரசு தீர்க்க வேண்டும் - சீமான்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-the-government-must-resolve-the-issues-surrounding-the-unveiling-of-the-ambedkar-statue-seeman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-the-government-must-resolve-the-issues-surrounding-the-unveiling-of-the-ambedkar-statue-seeman#comments</comments><guid isPermaLink="false">0e923ef5-6e04-4997-99f8-4a939aff16dc</guid><pubDate>Thu, 16 Jul 2026 09:06:56 +0000</pubDate><atom:updated>2026-07-16T09:06:56.907Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,Seeman,நாம் தமிழர் கட்சி,Naam tamilar katchi</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/xnjqptzm/seemaan.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/xnjqptzm/seemaan.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; </p><p>"சேலம் மாவட்டம், கெங்கவல்லிக்கு அருகேயிருக்கும் ஒதியத்தூர் பகுதியில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலையைத் திறப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே எழுந்திருக்கும் பதற்றச்சூழலும், மோதல்போக்கும் வேதனை அளிக்கிறது. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் கால் மேல் கால் போட்டு இருப்பதாய் வடிவமைக்கப்பட்டு இருப்பதாலேயே அச்சிலையைத் திறக்க எதிர்ப்புத் தெரிவிப்பது அறிவிலித்தனத்தின் உச்சமாகும். தமிழ்ப்பேரினம் எண்ணற்ற சிக்கல்களையும், உரிமை இழப்புகளையும், வளச்சுரண்டலையும், அடையாள அழிப்பையும், வரலாற்றுத் திரிபையும் நாள்தோறும் எதிர்கொண்டு வரும் தற்காலச்சூழலிலும், ஒன்றுபட்டு ஓரினமாய் நிற்காது, சாதியின் பெயரால் பிளவுப்பட்டு நிற்பதும், தன்னினப்பகை கொண்டு வீழ்வதும் சமகாலத்தில் நிகழும் பேரவலமாகும். </p><p>அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஒரு சாதிக்கானவர் இல்லை; ஒட்டுமொத்தச் சமூகத்துக்குமானவர்; அறிவாசான் அம்பேத்கர் அவர்கள் உலகம் பார்த்து வியந்த மாபெரும் கல்வியாளர்; சமூக விடுதலைக்காகப் பாடுபட்ட ஒப்பற்றப் புரட்சியாளர். அவரை ஒடுக்குமுறைக்கு எதிரானப் பொதுக்குறியீடாகவும், அறிவுலக மாமேதைகளில் உச்சம் தொட்டப் பேராசானாகவுமே பார்க்க  வேண்டும். அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பட்டியல் பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு மட்டுமாகப் போராடவில்லை. ஒட்டுமொத்த மக்களுக்குமாகத்தான் பாடுபட்டார். இடைநிலைச்சமூகங்களுக்கென வகுப்புவாரிப்பிரதிநிதித்துவப் பங்கீட்டில் இருக்கும், ‘இதர பிற்படுத்தப்பட்டப் பிரிவினர்’ எனும் வகைப்பாட்டை உருவாக்கித் தந்தது அம்பேத்கர்தான். சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தபோது, பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களுக்கென ஆணையம் அமைக்க வில்லை என்பதைப் பதவி விலகலுக்கானக் காரணங்களில் ஒன்றாகக் குறிப்பட்டவரும் அம்பேத்கர்தான். வெள்ளைய ஆட்சிக்காலத்தில் குறிப்பிட்ட சமூகங்களைக் குற்றப்பரம்பரையினர் என அடையாளப்படுத்தி, அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டபோது அதனைக் கடுமையாக எதிர்த்தவர்களில் அம்பேத்கரும் முதன்மையானவர். இதுமட்டுமல்லாது, தொழிலாளர்களுக்கு எட்டுமணி நேரம்தான் வேலை எனச் சட்டம் கொண்டு வந்தவரும், மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை எனச் சட்டமியற்றியவரும் அம்பேத்கர்தான். அவர் ஆதிக்குடிகளுக்காக மட்டும் போராடவில்லை; பிற்படுத்தப்பட்ட மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள், பழங்குடிகள், விளிம்புநிலை மக்கள், பெண்கள் என சமூகத்தின் அத்தனைத் தரப்பினரின் நலன்களுக்காகவும் தனது வாழ்நாள் முழுமைக்கும் பாடுபட்டப் பெருந்தகை அண்ணல் அம்பேத்கர் ஆவார். எந்த மக்களுக்காக அவர் பாடுபட்டாரோ, அந்த மக்களில் ஒரு பகுதியினரே அவரைத் தவறாகப் புரிந்துகொண்டு, அவருக்கு எதிராக வரிந்துகட்டிக் கொண்டு இன்றைக்கு நிற்பதெல்லாம் வரலாற்றுத்துயரமாகும்.</p><p>2021ஆம் ஆண்டு ஓதியத்தூர் பகுதியில் அமைக்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலை 5 ஆண்டுகளாகத் திறக்கப்படாது கிடப்பில் போடப்பட்டது வெட்கக்கேடானது. சமூக நீதியென்று வாய்கிழியப் பேசும் திமுகவின் ஆட்சியில் அம்பேத்கரின் சிலையைத் திறக்கக்கூட வழிசெய்யாது வாக்கரசியலுக்காக சமரசம் செய்துகொண்டது மோசடித்தனமாகும். அண்ணல் அம்பேத்கர் அவர்களைக் கொள்கைத் தலைவரெனக் கூறிக் கொள்ளும் முதல்வர் விஜய் அவர்கள் தலைமையிலான தவெகவின் ஆட்சியிலும், அச்சிலையை முறையாகத் திறக்கவும், சமூகப் பதற்றத்தைத் தணிக்கவும் நடவடிக்கைகளை எடுக்காது, சிக்கலை மேலும் பெரிதாக்குவது கடும் கண்டனத்திற்குரியது. சாதியவாதத்தாலும், புரிதலின்மையாலும் எழுந்திருக்கும் இச்சிக்கலைக்கூட தீர்க்க இயலாது திராணியற்றுப் போய்விட்டதா தவெக அரசு? இதுதான் கொள்கைத் தலைவர் மீது நீங்கள் கொண்டிருக்கும் பற்றா? கேலிக்கூத்து!</p> <p>ஆகவே, சேலம் மாவட்டம், ஒதியத்தூர் பகுதியில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலையைத் திறக்க வேண்டுமெனவும், தேவையற்ற சமூகப்பதற்றமும், மோதலும் ஏற்படுவதை முற்றாகத் தடுத்து, ஓர்மையும், நல்லிணக்கமும் நிலவுவதை உறுதிசெய்ய வேண்டுமெனவும் தவெக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசக்கூடும் - வானிலை மையம் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/heatwave-likely-in-15-districts-of-tamil-nadu-today-meteorological-centre</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/heatwave-likely-in-15-districts-of-tamil-nadu-today-meteorological-centre#comments</comments><guid isPermaLink="false">c663d966-e87a-476f-b17f-0db44792cb28</guid><pubDate>Thu, 16 Jul 2026 08:57:40 +0000</pubDate><atom:updated>2026-07-16T08:57:40.753Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Weather,வானிலை,தமிழகம்,Weather News,WeatherUpdate,வானிலை செய்திகள்,வானிலை ஆய்வு மையம்,வானிலை அறிக்கை,weather condition,வானிலை முன்னறிவிப்பு,Heat wave,வெப்ப அலை,Weather Status</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/j39bkp69/unga.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/j39bkp69/unga.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>வானிலை செய்திகள் (Weather)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (16-07-2026) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக <a href="https://www.dailythanthi.com/topic/வறண்ட-வானிலை">வறண்ட வானிலை</a> நிலவக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><h2>15 மாவட்டங்களில்</h2><p>இந்நிலையில் தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசக்கூடும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், கரூர், ஈரோடு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று (16.07.2026) வெப்ப அலை வீசக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. </p><p>மேலும் இன்று ஒரு சில பகுதிகளில் இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>நாளை 4 மாவட்டங்களில் வெப்ப அலை</h2><p>தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை வெப்ப அலை வீசக்கூடும். இதன்படி கரூர், ஈரோடு, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் நாளை (17.07.2026) வெப்ப அலை வீசக்கூடும் என்று  சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.  </p> ]]></content:encoded></item><item><title>திமுக, அதிமுக, பாஜக சேர்ந்து ஆட்சியமைக்க முயற்சி - அமைச்சர் நிர்மல் குமார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-aiadmk-bjp-trying-to-form-government-together-minister-nirmal-kumar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-aiadmk-bjp-trying-to-form-government-together-minister-nirmal-kumar#comments</comments><guid isPermaLink="false">fc14a9e5-6890-4249-a41a-6a40b0ab0deb</guid><pubDate>Thu, 16 Jul 2026 08:42:56 +0000</pubDate><atom:updated>2026-07-16T08:42:56.209Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,அதிமுக,திமுக,அமைச்சர் நிர்மல் குமார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/d8z0wbxw/nirmalakumar33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  நிர்மல் குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/d8z0wbxw/nirmalakumar33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாஜகவுடன் பேச்சு நடத்துவதாக திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனே கூறிவிட்டார்; ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கடைசி முயற்சியாக பாஜகவுடன் சேர முடிவு செய்துள்ளனர்</p><p>யாருக்கு, எத்தனை பேருக்கு கேபினட் அமைச்சர் பதவி என்பதில்தான் போட்டி நடக்கிறது அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.</p><h2>திமுக, அதிமுக, பாஜக, சேர்ந்து ஆட்சியமைக்க முயற்சி </h2><p>தமிழக அமைச்சரவை கூட்டத்திற்கு பின் தலைமை செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>திமுக, அதிமுக, பாஜக, சேர்ந்து ஆட்சியமைக்க முயற்சி நடப்பதாக பல நாட்களாக சொல்லி வருகிறோம். திமுக, அதிமுக, பாஜக, சேர்ந்து ஆட்சியமைக்க முயற்சி நடப்பதாக பல நாட்களாக சொல்லி வருகிறோம். </p><p>திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் கைகோர்த்துக்கொண்டு, தமிழகத்தில் ஆட்சியைத் தங்களுக்குச் சாதகமாக மாற்ற சதி செய்கின்றன..பணத்தை வாரி இறைத்து தவெக சட்டமன்ற உறுப்பினர்களை இழுக்க முயற்சி நடக்கிறது.அடுத்த ஒரு வருடத்தில் அதிமுகவும் திமுகவும் கட்சி நடத்த முடியாமல் பாஜகவுடன் கட்சியை இணைத்து விடும்.யாருக்கு, எத்தனை பேருக்கு கேபினட் அமைச்சர் பதவி என்பதில்தான் போட்டி நடக்கிறது. </p><p>பாஜகவுடன் பேச்சு நடத்துவதாக திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனே கூறிவிட்டார்.  தவெக சட்டமன்ற உறுப்பினர்களை ரூ.50 கோடி வரை கொடுத்து வாங்குவதற்கு முயற்சிக்கின்றனர். </p><p>அதிமுக போன்ற பெரிய இயக்கத்தை லெட்டர் பேட் இயக்கம் போன்று பழனிசாமி மாற்றிவிட்டார்.ஸ்டாலின், பழனிசாமி குடும்பத்தினர் பாஜக அமைச்சரவையில் மத்திய அமைச்சர்கள் ஆக உள்ளனர். </p><h2> மின்ஸ்டர் கட்டிங்</h2><p>திமுக ஆட்சியில் ஊழலில் திளைத்துள்ளது பத்திரப்பதிவுத்துறை.  பத்திரப்பதிவுதுறையில் முன்பு அமைச்சராக இருந்த மூர்த்தி மினிஸ்டர் கட்டிங் என பணம் வாங்கினார்.  அமைச்சருக்கான கட்டிங் வாங்குவதற்கென்றே ஒவ்வொரு அலுவலகத்திலும் ஆட்கள் இருந்தனர்.  ஒவ்வொரு அலுவலகத்திலும் ஆள்போட்டு மின்ஸ்டர் கட்டிங் என தொகையை வசூலித்தார் மூர்த்தி. தவெக ஆட்சியில் பத்திரப்பதிவு துறையை முழுமையாக சீரமைப்போம்.</p><p>கடந்த ஐந்து ஆண்டுகளாக இரவு 9 மணி வரை நடைபெற்ற பத்திரப்பதிவு நடைமுறைகள் தற்போது முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளன. புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இனி பத்திரப்பதிவு முறையில் முறைகேடு அல்லது ஊழலில் ஈடுபடும் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கைது செய்யப்படுவார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.தவெக ஆட்சியில் பத்திரப்பதிவு துறையை முழுமையாக சீரமைப்போம். </p><h2>பழனி கோவில் விவகாரம்</h2><p>பழனி கோவில் நில விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்படுவார்கள். எந்த இடத்திலும் அரசு துணை போகவில்லை. தற்போதைய ஆட்சியில் பர்சன்டேஜ் கலாசாரத்திற்கு இடமில்லை.  பழனி கோவில் நிலம் தொடர்பான விவகாரத்தில் அரசு சார்ந்த யாருக்கும் தொடர்பில்லை. </p><p>முந்தைய ஆட்சியில் திருவான்மியூர் - உத்தண்டி மேம்பால ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளதால், அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது. முறைகேடாக வழங்கப்பட்ட ஒப்பந்தங்களை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும்.</p><h2>காவல் மரணங்கள்</h2><p>காவல் மரணங்களை முந்தைய ஆட்சிகள் மூடி மறைக்க முயன்றன.  காவல் மரணங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். யாரையும் காப்பாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை. சபரிவர்மன் குடும்பத்தினரை விரைவில் அமைச்சர்கள் சந்திப்பார்கள்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் வியாபாரியிடம் ரூ.19 லட்சம் மோசடி: பெங்களூரு வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bengaluru-youth-arrested-for-cheating-businessman-of-rs19-lakh-in-thoothukudi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bengaluru-youth-arrested-for-cheating-businessman-of-rs19-lakh-in-thoothukudi#comments</comments><guid isPermaLink="false">216f21bf-0479-4dc8-b56b-81638ad1a6e8</guid><pubDate>Thu, 16 Jul 2026 08:24:36 +0000</pubDate><atom:updated>2026-07-16T08:24:36.512Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பெங்களூரு,Bengaluru,Thoothukudi,தூத்துக்குடி,பணம் மோசடி,Youth arrested,வாலிபர் கைது,money laundering,businessman,வியாபாரி,ஆன்லைன் முதலீடு,online investment</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/00v1gwko/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெங்களூரு வாலிபர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/00v1gwko/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி வியாபாரியிடம் ஆன்லைன் முதலீடு மூலம் ரூ.19 லட்சம் சைபர் கிரைம் மோசடியில் ஈடுபட்ட கர்நாடக மாநிலம் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பெங்களூரைச் சேர்ந்த வாலிபர் கைது</a> செய்யப்பட்டுள்ளார்.</p><h2>குறைந்த முதலீட்டில் அதிக லாபம் சம்பாதிக்கலாம்</h2><p>தூத்துக்குடி புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவருக்கு வாட்ஸ்ஆப் மூலம் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என மெசேஜ் வந்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த தொலைபேசி எண்ணை அந்த வியாபாரி தொடர்பு கொண்டுள்ளார். தொடர்ந்து எதிர்தரப்பினர் கூறிய விபரங்களை நம்பி, குறிப்பிட்ட வங்கி எண்ணிற்கு அவர் பணம் அனுப்பியுள்ளார். ஆரம்பத்தில் சிறிய தொகைக்கு லாபம் கிடைத்துள்ளது. </p><h2>ரூ.19 லட்சம் மோசடி</h2><p>அதைத் தொடர்ந்து பல தவணைகளாக மொத்தம் ரூ.19 லட்சம் வரை அந்த வியாபாரி அனுப்பியுள்ளார். ஆனால், பல மாதங்களாகியும் பணம் திருப்பி வரவில்லை. அத்துடன் தொடர்பு கொண்ட தொலைபேசி எண்ணும் அணைக்கப்பட்டு இருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வியாபாரி இதுகுறித்து தூத்துக்குடி சைபர் கிரைம் காவல் பிரிவில் புகார் அளித்தார். </p><h2>பெங்களூரு வாலிபர் கைது</h2><p>அந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பெங்களூரு பகுதியைச் சேர்ந்த வைஷ்ணவ் மகன் முகேஷ் (வயது 36) இந்த மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து போலீசார் முகேஷை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பேரூரணி சிறையில் அடைத்தனர். </p>]]></content:encoded></item><item><title>கள்ளத் தொடர்பை கண்டித்த தந்தை... ராணுவ வீரர் எடுத்த விபரீத முடிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/father-condemns-fake-relationship-army-soldiers-bizarre-decision</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/father-condemns-fake-relationship-army-soldiers-bizarre-decision#comments</comments><guid isPermaLink="false">f115bc1f-6cdc-4868-ab9a-01d9c787294b</guid><pubDate>Thu, 16 Jul 2026 08:22:10 +0000</pubDate><atom:updated>2026-07-16T08:22:10.637Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirupattur,திருப்பத்தூர்,தற்கொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/929ckaqc/Untitled-10.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/929ckaqc/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பத்தூர்,</p><p>திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி ஊராட்சி, சின்னமண்டலவாடி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் என்பவரின் மகன் தினேஷ்குமார் (26 வயது). இவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக வேலை செய்து வந்தார். வெள்ளைய கவுண்டனூர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மகள் சுகுணா என்பவரை கடந்த 4 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டரை  மாதத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த மே மாதம் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார்.</p><p>பின்னர் தினேஷ் குமார் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாகவும் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருப்பதாகவும் அவரது மனைவி சுகுணாவிற்கு தெரிய வந்தது. இதுகுறித்து கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுதொடர்பாக சுகுணா நேற்று காலை தனது மாமனார் கோவிந்தராஜிடம் கூறியுள்ளார். இதையடுத்து மகன் தினேஷ் குமாரை கோவிந்தராஜ் கண்டித்துள்ளார். அதன்பின் தினேஷ்குமார் மனைவி சுகுணாவுடன் குழந்தைக்கு தடுப்பூசி போட திருப்பத்தூர் சென்று விட்டு மதியம் வீடு திரும்பினார்.</p><p>பின்னர் வீட்டின் அறைக்குள் சென்ற தினேஷ்குமார் கதவை பூட்டி உள்ளார். நீண்டநேரம் ஆகியும் கதவை திறக்காததால் குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது வழியிலேயே தினேஷ்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.</p><p>இதையடுத்து தந்தை கோவிந்தராஜ் அளித்த புகாரின்பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>
மடத்துக்குளம் அருகே வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/encroachments-on-canal-removed-near-madathukulam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/encroachments-on-canal-removed-near-madathukulam#comments</comments><guid isPermaLink="false">96b083c7-aa8f-4f06-b55e-c55ec5a20111</guid><pubDate>Thu, 16 Jul 2026 08:14:26 +0000</pubDate><atom:updated>2026-07-16T08:14:26.823Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தினத்தந்தி,வாய்க்கால்,Dailythanthi,encroachments,ஆக்கிரமிப்பு,மடத்துக்குளம்,Madathikulam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/c1pk98rg/z11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/c1pk98rg/z11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>மடத்துக்குளம், </p><p>மடத்துக்குளம் அருகே காரத்தொழுவு கிராமத்தில் அமராவதி பிரதான கால்வாயின் பாசன வாய்க்கால் பகுதியை சிலர் ஆக்கிரமித்து, கம்பி வேலி அமைத்து இருந்தனர். இது குறித்து, ‘தினத்தந்தி' யில் செய்தி பிரசுரம் செய்யப்பட்டிருந்தது. இந்த செய்தியின் எதிரொலியாக, மடத்துக்குளம் தாசில்தார் ரம்யா உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.</p> <p>இதையொட்டி துங்காவி நில வருவாய் ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில், காரத்தொழுவு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலிகளை அகற்றினர். இதன் மூலம் பாசன வாய்க்கால் மீட்கப்பட்டது. இதனால் செய்தி பிரசுரித்த  ‘தினத்தந்தி' க்கும், விரைந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் கலர் அப்பளம் விற்பனை செய்ய தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sale-of-colored-appalam-banned-in-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sale-of-colored-appalam-banned-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">a96e5524-4d3d-48f9-b0f5-f366c9450944</guid><pubDate>Thu, 16 Jul 2026 08:10:55 +0000</pubDate><atom:updated>2026-07-16T08:10:55.610Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>உணவு பாதுகாப்புத்துறை,food safety department,கலர் அப்பளம்,அப்பளம்,Colour Papad,Papad,color appalam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/vpjwzl7b/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/vpjwzl7b/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பொதுமக்கள் மற்றும் குறிப்பாகக் குழந்தைகளைக் கவரும் வகையில் கவர்ச்சிகரமான பல வண்ணங்களில் (சிவப்பு, மஞ்சள், பச்சை) விற்கப்படும் கலர் அப்பளங்களில் மற்றும் வத்தல்களில், அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிகமாகவும், சில இடங்களில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் தடைசெய்யப்பட்ட தொழிற்சாலை சாயங்கள் பயன்படுத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்தன.</p><p>இதனைத் தொடர்ந்து உணவுப் பாதுகாப்புத் துறை நடத்திய ஆய்வகச் சோதனைகளில், சேகரிக்கப்பட்ட பெரும்பாலான மாதிரிகள் பாதுகாப்பற்றவை எனத் தெரியவந்துள்ளது. அதிக நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட இந்த அப்பளம் மற்றும் வத்தல் வகைகளைத் தொடர்ந்து சாப்பிடுவதால் கடுமையான உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவர்களும் அதிகாரிகளும் எச்சரிக்கின்றனர்.</p><p>இந்த நிலையில், தமிழ்நாட்டில் அதிக செயற்கை நிறமூட்டிகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் கலர் அப்பளத்தை விற்பனை செய்ய உணவு பாதுகாப்புத்துறை தடை விதித்துள்ளது. கலர் அப்பளத்தை அடிக்கடி சாப்பிட்டால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. </p><p><strong>இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,</strong></p><p>அடிக்கடி கலர் அப்பளம் சாப்பிட்டால் செரிமான பிரச்சனை, சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. முக்கியமாக குழந்தைகள் இந்த கலர் அப்பளத்தை சாப்பிட்டால் அலர்ஜி மற்றும் கவன சிதறல் உண்டாகலாம். பாரம்பரியமாக உளுந்து, அரிசி உள்ளிட்டவையில் தயாரிக்க கூடிய அப்பளத்தை வாங்கி சாப்பிடுவது நல்லது. சந்தைகள், சுற்றுலா தளங்கள் மற்றும் பொருட்காட்சிகள் உள்ளிட்ட இடங்களில் கலர் அப்பளம் விற்பனை செய்ய வேண்டாம்.</p><p>நீண்ட நாட்களாக இந்தச் செயற்கை நிறமிகளை உட்கொள்வதால் புற்றுநோய் மற்றும் கட்டிகள் ஏற்படும் அபாயம் கணிசமாக அதிகரிக்கிறது. இவை செரிமான மண்டலத்தைப் பாதித்து வயிற்றுப் புண் மற்றும் குடல் பாதிப்புகளை உண்டாக்குகின்றன. இந்தத் தரம் குறைந்த சாயங்கள் உடலில் இருந்து எளிதில் வெளியேறாமல் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் தங்கி, அவற்றின் செயல்பாட்டைப் பாதிக்கின்றன.</p><p>பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான வாராந்திர சந்தைகள், புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் மற்றும் பொருட்காட்சிகள் நடைபெறும் வளாகங்களில் இந்த கலர் அப்பளங்களை விற்பனை செய்ய கூடாது. தயாரிப்பாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.</p><p>விதிகளுக்கு புறம்பாக நிறமூட்டிகளை பயன்படுத்தி அப்பளம் விற்றால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சந்தேகத்திற்குரிய அல்லது அதிக அடர் நிறமுள்ள அப்பளங்களைத் தவிர்த்து, இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதே உடலுக்குப் பாதுகாப்பானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-the-day-after-tomorrow-15</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-the-day-after-tomorrow-15#comments</comments><guid isPermaLink="false">24f445e7-b4dd-49a3-8580-8e0e26ecc35c</guid><pubDate>Thu, 16 Jul 2026 07:55:35 +0000</pubDate><atom:updated>2026-07-16T07:55:35.126Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,monthly maintenance work,power outage,மாதாந்திர பராமரிப்பு பணி,மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/lwxenniq/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/lwxenniq/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருநெல்வேலி நகர்ப்புறம், திருநெல்வேலி கிராமப்புறம், வள்ளியூர், கல்லிடைக்குறிச்சி ஆகிய கோட்டங்களுக்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (18.7.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பின்வரும் நேரங்களில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மின்தடை</a> செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம்</h2><p>திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் ரவிராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>பாளையங்கோட்டை, சமாதானபுரம் மற்றும் கொக்கிரகுளம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (18.7.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும். </p><h2>காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை</h2><p>அதன்படி வி.எம்.சத்திரம், கிருஷ்ணாபுரம், கட்டபொம்மன்நகர், செய்துங்கநல்லூர், அரியகுளம், மேலக்குளம், நடுவக்குறிச்சி, ரஹமத்நகர், நீதிமன்றபகுதி, சாந்திநகர், சமாதானபுரம், அசோக் திரையரங்கம் பகுதி, பாளை மார்க்கெட் பகுதி, திருச்செந்தூர் சாலை, கான்சாபுரம், திம்மராஜபுரம், பொட்டல் படப்பக்குறிச்சி, திருமலைகொழுந்துபுரம், மணப்படைவீடு, கீழநத்தம், பாளை பேருந்து நிலையம், முருகன்குறிச்சி, திருநெல்வேலி சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், வடக்கு மற்றும் தெற்கு புறவழிச் சாலை, வண்ணாரப்பேட்டை முழுவதும், இளங்கோநகர், பரணிநகர், திருநெல்வேலி சந்திப்பு முதல் மேரி சார்ஜன்ட் பள்ளி வரையிலான திருவனந்தபுரம் சாலை, பாளை புதுப்பேட்டை தெரு, சுப்பிரமணியபுரம் மற்றும் மாருதிநகர் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரவித்துள்ளார். </p><h2>திருநெல்வேலி கிராமப்புற கோட்டம்</h2><p>திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>கரந்தானேரி, ரஸ்தா, மூன்றடைப்பு, பரப்பாடி, வன்னிக்கோனேந்தல், மானுர் மற்றும் மூலைக்கரைப்பட்டி துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (18.7.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதால்  காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும். இதன் காரணமாக பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. </p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>மானூர், மாவடி, தெற்குபட்டி, களக்குடி, எட்டாங்குளம், கானார்பட்டி, பிள்ளையார்குளம், சிங்கநேரி, அம்பலம், திடியூர், மூன்றடைப்பு, பானாங்குளம்.  மதவக்குறிச்சி, துலுக்கர்பட்டி, ரஸ்தா, பட்டவர்த்தி, வெங்கலப்பொட்டல், நரியூத்து.   அம்பூரணி, தோட்டாக்குடி, பத்தினிப்பாறை, மருதகுளம். </p><p>பரப்பாடி, இலங்குளம், சடையனேரி, சவனைக்காரன்குளம், வில்லயனேரி, ஏமன்குளம், பெருமாள்நகர், கேர்க்கனேரி, காரன்காடு, தட்டான்குளம், கண்ணநல்லூர், துலுக்கர்ப்பட்டி, பட்டர்புரம், மாவடி, முத்தலாபுரம், சித்தூர், சீயோன்மலை, கண்ணாத்திகுளம், தங்கயம். </p><p>வன்னிக்கோனேந்தல், மூவிருந்தாளி, தேவர்குளம், முத்தம்மாள்புரம், கண்ணாடிகுளம், மருக்காலங்குளம், தெற்குபனவடலி, நரிக்குடி, மூலைகரைப்பட்டி, பருத்திப்பாடு, புதுக்குறிச்சி, மருதகுளம், கோவைகுளம்,முனைஞ்சிப்பட்டி, தாமரைசெல்வி, காடான்குளம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p><h2>காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை</h2><p>இதேபோல் கங்கைகொண்டான் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (18.7.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும். இதன் காரணமாக பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. </p><p>சீவலப்பேரி, கங்கைகொண்டான், பாலாமடை, பதினாலாம்பேரி, குப்பக்குறிச்சி, பருத்திகுளம், துறையூர், ராஜாபதி, வெங்கடாசலபுரம், ஆலடிப்பட்டி, அலவந்தான்குளம், செழியநல்லூர் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  </p><h2>வள்ளியூர் கோட்டம்</h2><p>வள்ளியூர் மின் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>நவலடி, சங்கனான்குளம் மற்றும் களக்காடு ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (18.7.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது. </p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>நவலடி, ஆற்றங்கரை பள்ளிவாசல், தோட்டவிளை, தெற்கு புளிமான்குளம், கோடாவிளை, மரக்காட்டுவிளை, செம்பொன்விளை, காளிகுமாரபுரம், குண்டல், பரதர் உவரி, பெட்டைகுளம், உறுமன்குளம். </p><p>மன்னார்புரம், வடக்கு விஜயநாராயண், தெற்கு விஜயநாராயண், இட்டமொழி, நம்பிகுறிச்சி, தெற்கு ஏராந்தை, சிவந்தியாபுரம், பரப்பாடி. </p><p>களக்காடு நகரம், பெருமாள்குளம், சாலைபுதூர், SN பள்ளிவாசல், மாவடி, டோனாவூர், புலியூர் குறிச்சி, கோதைசேரி, வடமலை சமுத்திரம், கருவேலன்குளம், கோவிலம்மாள்புரம், வடுகச்சிமதில் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>கல்லிடைக்குறிச்சி கோட்டம்</h2><p>கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும்பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>கல்லிடைக்குறிச்சி மின் கோட்டத்திற்குட்பட்ட மேலக்கல்லுர் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (18.7.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையத்தில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில்</p><p>மின்விநியோகம், பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும்.</p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>மேலக்கல்லுர், சுத்தமல்லி, சங்கன்திரடு கொண்டாநகரம், நடுக்கல்லுர், பழவூர், கருங்காடு, திருப்பணிகரிசல்குளம், துலுக்கர்குளம், பொழிக்கரை, வெள்ளாளங்குளம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பொள்ளாச்சி அருகே மசாஜ் சென்டரில் விபசாரம்: மூன்று இளம் பெண்கள் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/prostitution-at-a-massage-center-near-pollachi-three-young-women-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/prostitution-at-a-massage-center-near-pollachi-three-young-women-arrested#comments</comments><guid isPermaLink="false">c532cc67-c263-4337-9e31-5f2d2bc7ff47</guid><pubDate>Thu, 16 Jul 2026 07:54:56 +0000</pubDate><atom:updated>2026-07-16T07:54:56.760Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>arrest,பொள்ளாச்சி,Pollachi,விபசாரம்,Massage Center,மசாஜ் சென்டர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/jmg4r901/211.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/jmg4r901/211.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பொள்ளாச்சி,</p><p>கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனீஸ் அவருடன் இளம்பெண் ஒருவர் பொள்ளாச்சி பல்லடம் சாலையில் ஆயுர்வேதிக் பிசியோதெரபி அக்குபஞ்சர் கிளினிக் என்ற பெயரில் மசாஜ் சென்டர் நடத்தி வருகின்றனர். </p><h2>கைது</h2><p>இந்த நிலையில் மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாக பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசாருக்கு வந்த ரகசிய தகவல் கிடைத்தது, இதனையடுத்து இன்று வாடிக்கையாளர்களைப் போல அதிரடி ஆய்வு மேற்கொண்டனர் அப்போது அங்கு மூன்று இளம் பெண்கள் வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்ததது. இதனை தொடர்ந்து, சென்னை, சேலம், கோவை மாவட்டத்தைச் சென்ற மூன்று இளம் பெண்களை போலீசார் கைது செய்தனர்.</p><p>பிசியோதெரபி அக்குபஞ்சர் சிகிச்சை அளிக்கப்படும் என ஆன்லைன் வாயிலாக வாடிக்கையாளர்களை முன்பதிவு செய்து இளம் பெண்களை வைத்து பாலியல் தொழிலும் செய்து வந்தது தெரிய வந்தது, இதனையடுத்து மூவரும் மீதும் வழக்கு பதிவு செய்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a> ஒருவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். மற்ற இரு இளம் பெண்களை காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் அக்குபஞ்சர் கிளினிக் நடத்தி வந்த உரிமையாளர் அனீஸ் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தை உலுக்கிய சிறை மரணம்: தென்தாமரைக்குளம் எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/custodial-death-that-shook-tamil-nadu-thendhamaraikulam-si-transferred-to-armed-reserve</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/custodial-death-that-shook-tamil-nadu-thendhamaraikulam-si-transferred-to-armed-reserve#comments</comments><guid isPermaLink="false">e9aa6e90-c61b-46e2-8682-080c2d6897f3</guid><pubDate>Thu, 16 Jul 2026 07:54:28 +0000</pubDate><atom:updated>2026-07-16T07:54:28.072Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தாக்குதல்,தமிழகம்,Nagercoil,நாகர்கோவில்,சிறை கைதிகள்,Prison Clash,சபரிவர்மன்,தென் தாமரைக்குளம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/85jj9t2o/makkr.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/85jj9t2o/makkr.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாகர்கோவில், </p><p>குமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே உள்ள வடக்கு தாமரைகுளம் ஈத்தங்காடு பகுதியை சேர்ந்தவர் சபரிவர்மன் (வயது 33).</p><h2>வியாபாரி உயிரிழப்பு</h2><p>மாற்றுத்திறனாளியான அவர் தனது வீட்டின் அருகே பெட்டிக்கடை நடத்தி வந்தார். இந்த கடையில் கடந்த 9-ந் தேதி தென்தாமரைகுளம் போலீசார் நடத்திய சோதனையில், தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.</p><p>சோதனையில் 3-வது முறையாக சபரிவர்மன் சிக்கியதால், அவரை போலீசார் கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் கடந்த 13-ந்தேதி காலை, சபரிவர்மன் சிறையில் உயிரிழந்து விட்டதாக அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.</p><h2>சாவில் சந்தேகம்</h2><p>சபரிவர்மன் இறந்த தகவல் அறிந்து அவரது மனைவி ஆனந்தவல்லி மற்றும் உறவினர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் திரண்டனர். அவர்கள் சபரிவர்மன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை போலீசார் அடித்துக் கொன்று விட்டதாகவும் குற்றம்சாட்டினர்.</p><p>அவரது சாவுக்கு காரணமானவர்களின் மீது நடவடிக்கை எடுக்கும் வரை சபரி வர்மனின் உடலை வாங்கமாட்டோம் என்று கூறி போராட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.</p><h2>கொலை வழக்குப்பதிவு</h2><p>இதற்கிடையில் சபரிவர்மன் இறந்தது குறித்து நாகர்கோவில் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு சத்தியமூர்த்தி விசாரித்தார். பின்னர் நாகர்கோவில் சிறைக்கு சென்று சிறைக்காவலர்கள் மற்றும் மற்ற கைதிகளிடமும் விசாரணை மேற்கொண்டார். அது மட்டுமின்றி குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலினும் நாகர்கோவில் சிறைக்குள் சென்று விசாரணை நடத்தினார்.</p><p>இந்தநிலையில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடந்த பிரேத பரிசோதனையில் சபரி வர்மனின் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் சிறைக்குள் வைத்து அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது. </p><p>அதன்பேரில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, நாகர்கோவில் சிறையின் முதன்மை வார்டரான நெல்லை மாவட்டம் களக்காட்டை சேர்ந்த திருமலை நம்பி, வார்டர்களான தேங்காபட்டணத்தை சேர்ந்த ஜெகன், சாமியார்மடத்தை சேர்ந்த சிவகுமார் ஆகியோரை கைது செய்தனர்.</p><h2>திடுக்கிடும் தகவல்கள்</h2><p>அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கடந்த 12-ந்தேதி இரவு சிறையில் சபரிவர்மனுக்கும், சக கைதிகள் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கைதிகள் அவரை தாக்கி உள்ளனர்.</p><p>மேலும் சபரிவர்மனின் கை கால்களை கட்டிவைத்து சிறை வார்டர்களும், கைதிகளும் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதில் உடல் முழுவதும் பலத்த காயம் அடைந்து மயங்கி கிடந்த சபரிவர்மனை சிறைக்காவலர்கள் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.</p><h2>8 கைதிகள் கைது</h2><p>இதையடுத்து வார்டர்களுடன் சேர்ந்து சபரிவர்மனை தாக்கிய கைதிகள் யார்? என்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவரை தாக்கியது குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்த விஷ்ணு (21), சாரதி (19), குலசேகரத்தை சேர்ந்த ஜெகன் (40), சரத், நெல்லையை சேர்ந்த பெருமாள், கன்னியாகுமரியை சேர்ந்த சேதுராம் (30), அரவிந்த் (27), கொட்டாரத்தை சேர்ந்த அஜித் (29) ஆகிய 8 கைதிகள் என்பது தெரியவந்தது.</p><p>இதையடுத்து அவர்களின் மீதும் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்ததோடு 8 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் சபரிவர்மன் கொலை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்று கைது செய்யப்பட்டிருக்கும் வார்டர்கள் மற்றும் கைதிகளிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு</h2><p>சபரி வர்மனின் மரணத்திற்கு நீதி கேட்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் உரிய நிவாரணம் வழங்கக் கோரிக்கை விடுத்தும் வருகிறார்கள். அதனை வலியுறுத்தி வியாபாரி உடலை பெற்றுக்கொள்ள மறுத்து உறவினர்கள் நேற்று 3-வது நாளாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஏராளமானோர் திரண்டனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியினரும் திரண்டனர்.</p><p>இதற்கிடையே கைதான சிறை வார்டர்கள் 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர்.</p><h2>ஆயுதப்படைக்கு இடமாற்றம்</h2><p>இந்நிலையில் நாகர்கோவில் சிறையில் சபரிவர்மன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சபரிவர்மனை கைது செய்த தென் தாமரைக்குளம் காவல் நிலைய எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  </p>]]></content:encoded></item><item><title>மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பெண்ணை குத்தூசியால் குத்திக் கொன்ற கொடூர கணவன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/brutal-husband-kills-wife-undergoing-hospital-treatment-by-stabbing-her-with-a-puncture-repair-awl</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/brutal-husband-kills-wife-undergoing-hospital-treatment-by-stabbing-her-with-a-puncture-repair-awl#comments</comments><guid isPermaLink="false">c1cdc852-beac-4358-8438-593d979a4ec7</guid><pubDate>Thu, 16 Jul 2026 07:23:43 +0000</pubDate><atom:updated>2026-07-16T07:23:43.577Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,திருச்சி,Trichy,கிரைம் செய்திகள்,Treatment,சிகிச்சை,hospital,மருத்துவமனை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/bw89qbr4/thiru.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/bw89qbr4/thiru.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி, </p><p>கம்பியால் குத்தியதில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பெண்ணை கணவன் குத்திக்கொலை செய்தார்.</p><h2>பீடா கடை</h2><p>திருச்சி தீரன்நகர் பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார் என்ற மூர்த்தி (வயது 40). இவரது மனைவி கவிதா (36). இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சம்பத்குமார் மிளகுபாறை பகுதியில் உள்ள ஒரு பீடா கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தினமும் கவிதா மதிய நேரத்தில் சாப்பாடு கொண்டு சென்று கொடுப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்து கவிதா சாப்பாடு கொண்டு செல்லவில்லை. இதுகுறித்து சம்பத்குமாருக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.</p><h2>இரும்பு கம்பியால் தாக்குதல்</h2><p>இதனால் ஆத்திரமடைந்த சம்பத்குமார் நேற்று முன்தினம் மாலை கடையில் இருந்து வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. நீண்டநேரமாக கதவை தட்டியும் திறக்காததால் மேலும் கோபம் அடைந்த அவர் கதவை உதைத்து திறந்து உள்ளே சென்றார். அங்கு வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் கவிதாவின் உடலில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.</p><h2>மருத்துவமனையில் சிகிச்சை</h2><p>பின்னர் சிறிது நேரம் கழித்து அவர், தனது மாமியாரை செல்போனில் தொடர்பு கொண்டு, கவிதாவை குத்தி விட்டேன் என்று கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த கவிதாவின் தாய், கவிதா வீட்டுக்கு விரைந்து சென்றார்.</p><p>அங்கு காயத்துடன் கிடந்த கவிதாவை மீட்டு சிகிச்சைக்காக உறையூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். கவிதா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்த சம்பத்குமார் நேற்று முன்தினம் இரவு அந்த தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.</p><h2>குத்திக் கொலை</h2><p>அப்போது அங்கு சிகிச்சையில் இருந்த கவிதாவிடம், 'நீ இன்னும் சாகவில்லையா, உயிரோடு தான் இருக்கிறாயா?' என்று ஆவேசமாக பேசிய சம்பத்குமார், பஞ்சர் ஒட்டுவதற்கு பயன்படுத்தும் குத்தூசியால் மீண்டும் கவிதாவின் வயிறு உள்பட பல இடங்களில் மாறி மாறி குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவத்தில் கவிதா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>போலீஸ் விசாரணை</h2><p>இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை நிர்வாகத்தினர் உடனடியாக உறையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.</p>]]></content:encoded></item><item><title>உதவித்தொகை வழங்க ரூ.1,000 லஞ்சம் கேட்ட பெண் அலுவலர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/female-official-arrested-for-demanding-a-1000-bribe-to-issue-a-financial-grant</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/female-official-arrested-for-demanding-a-1000-bribe-to-issue-a-financial-grant#comments</comments><guid isPermaLink="false">73dcc661-847e-4f49-8923-05d5d92c1be1</guid><pubDate>Thu, 16 Jul 2026 06:58:34 +0000</pubDate><atom:updated>2026-07-16T06:58:34.793Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrest,லஞ்சம்,bribe,உதவித் தொகை,பெண் அலுவலர்,Female official</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/oyk35371/luoe.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/oyk35371/luoe.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை, </p><p>தமிழக அரசு சமூக நலத்துறை சார்பாக 2 பெண் குழந்தைகளை பெற்ற பெண்களுக்கு உதவித்தொகைக்கான சேமிப்பு பத்திரம் வழங்கப்படுகிறது.</p><h2>உதவித்தொகை கோரி விண்ணப்பம்</h2><p>இந்த திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புபவர்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள விரிவாக்க அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதனை ஆய்வு செய்து மாவட்ட அலுவலகத்திற்கு அனுப்புவார்கள். இந்நிலையில் இத்திட்டத்தில் பயன்பெறுவதற்காக காளையார்கோவில் பகுதியை சேர்ந்த சிவா ஆனந்த் என்பவர் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் ஜெயராணி என்பவரை சந்தித்து உதவித்தொகை கோரி விண்ணப்ப மனுவை கொடுத்துள்ளார். </p><h2>ரூ.1,000 லஞ்சம்</h2><p>இந்த மனுவை ஆய்வு செய்து சிவகங்கையில் உள்ள மாவட்ட அலுவலகத்துக்கு அனுப்புவதற்கு ரூ.1,000 லஞ்சம் தர வேண்டும் என்று விரிவாக்க அலுவலர் ஜெயராணி கேட்டதாக கூறப்படுகிறது.</p><h2>கைது</h2><p>லஞ்சம் தர விரும்பாத சிவா ஆனந்த் இதுகுறித்து சிவகங்கையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். அவர்களது அறிவுறுத்தலின்பேரில் ரசாயன பவுடர் தடவிய ஆயிரம் ரூபாயை காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வைத்து விரிவாக்க அலுவலர் ஜெயராணியிடம், சிவா ஆனந்த் கொடுத்தார்.</p><p>அப்போது அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ஜெயராணியை கையும், களவுமாக கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.49.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு மையக் கட்டடம் - மேயர் பிரியா திறந்து வைத்தார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/multipurpose-center-building-built-at-a-cost-of-rs-4970-lakhs-mayor-priya-inaugurates</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/multipurpose-center-building-built-at-a-cost-of-rs-4970-lakhs-mayor-priya-inaugurates#comments</comments><guid isPermaLink="false">8321a5b0-2875-4f72-be06-806021bec026</guid><pubDate>Thu, 16 Jul 2026 06:51:38 +0000</pubDate><atom:updated>2026-07-16T06:51:38.609Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Mayor Priya,மேயர் பிரியா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/ft80krgs/Untitled-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/ft80krgs/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திரு.வி.க.நகர் மண்டலம், நரசிங்க பெருமாள் கோவில் தெருவில் ரூ.49.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு மையக் கட்டடத்தினை மேயர் பிரியா இன்று பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு 78-க்குட்பட்ட நரசிங்க பெருமாள் கோவில் தெருவில் மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.49.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு மையக் கட்டடத்தினை மேயர் பிரியா இன்று (16.07.2026) பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.</p><p>இந்த கட்டடம் நரசிங்க பெருமாள் கோவில் தெருவில் மாமன்ற உறுப்பினர் 2024-25ம் ஆண்டு வார்டு மேம்பாட்டு நிதியில் ரூ.49.70 லட்சம் மதிப்பீட்டில் 750 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம், முதல் தளத்துடன் கட்டப்பட்டுள்ளது.</p><p>இந்நிகழ்ச்சியில், துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் பி.கே.சேகர்பாபு, மண்டலக்குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார், நியமனக் குழு உறுப்பினர் சொ.வேலு, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-the-day-after-tomorrow-9</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-the-day-after-tomorrow-9#comments</comments><guid isPermaLink="false">3dff3919-a07c-4302-8fe7-8646f5528216</guid><pubDate>Thu, 16 Jul 2026 06:41:48 +0000</pubDate><atom:updated>2026-07-16T06:41:48.447Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,monthly maintenance work,power outage,தென்காசி,மாதாந்திர பராமரிப்பு பணி,மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/ddi464pz/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/ddi464pz/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p>திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், கடையநல்லூர் ஆகிய கோட்டங்களுக்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (18.7.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பின்வரும் நேரங்களில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மின்தடை</a> செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>மலையாங்குளம், கலிங்கப்பட்டி, திருவேங்கடம், நக்கலமுத்தன்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (18.7.2026, சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மலையாங்குளம், சிதம்பராபுரம், செவல்குளம், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி ஆகிய ஊர்களுக்கும்,  கலிங்கப்பட்டி, சத்திரப்பட்டி, ஆலடிப்பட்டி, மலையடிப்பட்டி, சுப்புலாபுரம், சென்னிகுளம், பாறைப்பட்டி, பருவக்குடி, கரிசல்குளம் மற்றும் ரெங்கசமுத்திரம் ஆகிய ஊர்களுக்கும், </p><p>திருவேங்கடம், உமையத்தலைவன்பட்டி, ஆலமநாயக்கர்பட்டி, மகாதேவர்பட்டி, ஆலடிப்பட்டி, கரிசல்குளம், குறிஞ்சாகுளம், வெள்ளாகுளம், சங்குப்பட்டி, புதுப்பட்டி, ஆவுடையாள்புரம் மற்றும் குண்டம்பட்டி ஆகிய ஊர்களுக்கும், நக்கலமுத்தன்பட்டி, இளையரசனேந்தல், கொம்பன்குளம், வெங்கடாசலபுரம், புளியங்குளம் அய்யனேரி, அப்பனேரி, ஆண்டிப்பட்டி, மைப்பாறை ஆகிய ஊர்களுக்கும் மின்விநியோகம் தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p><p>கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பகவிநாயகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>விஸ்வநாதபேரி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (18.7.2026, சனிக்கிழமை) மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பின்வரும் இடங்களில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ள நேரத்தில் மின்விநியோகம் இருக்காது. </p><h2>காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை</h2><p>சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்குசத்திரம், வழிவழிக்குளம், மேலகரிசல்குளம், ராயகிரி, கொத்தாடைப்பட்டி, சொக்கநாதன்புத்தூர், மேலூர் துரைச்சாமிபுரம் மற்றும் வடுகப்பட்டி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர் பதவி பறிக்கப்படும்: முதல்-அமைச்சர் விஜய் எச்சரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-warns-that-if-caught-in-corruption-case-ministerial-post-will-be-revoked</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-warns-that-if-caught-in-corruption-case-ministerial-post-will-be-revoked#comments</comments><guid isPermaLink="false">a0dc767b-d591-4d3e-9279-392435c4a024</guid><pubDate>Thu, 16 Jul 2026 06:24:26 +0000</pubDate><atom:updated>2026-07-16T06:24:26.601Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Ministers,அமைச்சர்கள்,TN Cabinet,Tamil Nadu cabinet meeting,தமிழக அமைச்சரவை கூட்டம்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/v8fx14qe/CHENNAI-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/v8fx14qe/CHENNAI-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள் குறித்தும், புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அத்துடன், புதிய திட்டங்கள் தொடங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.</p><p>கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய் அமைச்சர்களுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். </p><h2>அதன்விவரம்:-</h2><p>ஊழல் புகாரில் சிக்கும் அமைச்சர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தால் அமைச்சர் பதவி பறிக்கப்படும். தவறு செய்பவர்களில் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்றெல்லாம் பார்க்கமாட்டேன். தவறு நடந்தது தெரிந்தால் பதவி உடனே பறிக்கப்படும். தனது தலைமையிலான தவெக அரசு வெளிப்படைத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். தவெக அரசு லஞ்சமற்ற அரசாக இருக்க வேண்டும் என்பதில் அமைச்சர்கள் உறுதியாக இருக்க வேண்டும்.</p><p>பள்ளிகளுக்கு சென்று அமைச்சர்கள் ரீல்ஸ் போடுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது. அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு ஆய்வு என்ற பெயரில் செல்வதை அமைச்சர்கள் தவிர்க்க வேண்டும். ஆய்வு என்ற பெயரில் பள்ளிகளுக்கு சென்று செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது. அமைச்சர்கள் ரீல்ஸ் போடுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது. இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.</p><p>அமைச்சரவை கூட்டத்தின் போது குறிப்பிட்ட சில அமைச்சர்களை குறிப்பிட்டு முதல்-அமைச்சர் விஜய் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காவலர் தேர்வில் தவெக அரசின் அறிவிப்பு பெரும் அநீதியாகும்: அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-gotvt-announcement-on-the-police-recruitment-is-a-great-injustice-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-gotvt-announcement-on-the-police-recruitment-is-a-great-injustice-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">a288d91a-ad33-427c-9e3b-30309f423b81</guid><pubDate>Thu, 16 Jul 2026 06:05:04 +0000</pubDate><atom:updated>2026-07-16T06:05:04.165Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,Police Exam,போலீஸ் தேர்வு,காவலர் தேர்வு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/gbyjobom/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/gbyjobom/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு காவல்துறையில் காலியிடங்களின் எண்ணிக்கை மாதத்திற்கு மாதம் அதிகரித்து வரும் நிலையில், 2026-ம் ஆண்டில் காவலர்கள் நியமனம் நடைபெறாது என்றும், 2027-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் தான் ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்படும் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. காவல்துறை பணியில் சேர லட்சக்கணக்கான இளைஞர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் வேளையில் ஓராண்டு முழுவதும் காவலர் தேர்வு நடத்தப்படாது என்று அறிவிப்பது பெரும் அநீதியாகும்.</p><p>தமிழ்நாட்டில் காவலர்கள் நியமனத்தை தாமதப்படுத்துவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் காவலர்கள் தேவைப்படும் மாநிலங்களில் தமிழ்நாடு தான் முதன்மை  இடத்தில் உள்ளது. போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவது, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்தல் ஆகியவை அரசின் முதன்மைக் கடமையாக மாறியுள்ளன. இதற்காக காவல்துறையில் தனிப்பிரிவுகள்  ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றை வலுப்படுத்த போதிய எண்ணிக்கையில் காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். இதற்கு தேவையான காவலர்கள் தமிழக காவல்துறையில் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.</p><p>01.01.2025-ம் நாள் நிலவரப்படி தமிழக காவல்துறையில் அதிகாரிகள் அல்லாத காவலர்கள் பணியிடங்கள் ஒரு லட்சத்து 17,609 ஆகும். தமிழ்நாட்டின் மக்கள்தொகை 8 கோடி எனும் நிலையில், ஒரு லட்சம் மக்களுக்கு 147 காவலர் பணியிடங்கள் மட்டுமே உள்ளன. காவல்துறை தலைமை இயக்குனர் முதல் சார்பு ஆய்வாளர் வரையிலான அதிகாரிகள் பணியிடங்களையும் கணக்கில் கொண்டால் காவல்துறையின் மொத்த பணியிடங்கள் ஒரு லட்சத்து 33,961 ஆகும். இதன்படி பார்த்தால் ஒரு லட்சம் பேருக்கு 167.45 காவல்துறையினர் தான் உள்ளனர். இவற்றில் 10% பணியிடங்கள் காலியாக இருப்பதாகக் கொண்டால், ஒரு லட்சம் மக்களுக்கு  132 காவலர்கள் மட்டும் தான் இருப்பார்கள். இது சட்டம்-ஒழுங்கைக் காக்க எந்த வகையிலும் போதுமானதல்ல.</p><p>ஐக்கிய நாடுகள் அமைப்பின் பரிந்துரைப்படி, ஒரு லட்சம் மக்களுக்கு 222 காவலர்கள் இருக்க வேண்டும். அதன்படி பார்த்தால் தமிழ்நாட்டில் காவலர் பணியிடங்கள் ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 600 ஆக இருக்க வேண்டும். அதற்கு தமிழ்நாட்டில் 60 ஆயிரம் காவலர் பணியிடங்கள் கூடுதலாக ஏற்படுத்தப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, ஏற்கனவே காலியாக உள்ள அனைத்து பணியிடங்களும் உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.</p><p>ஆனால், தமிழ்நாட்டில் ஏற்கனவே காலியாக உள்ள காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு கூட எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. தமிழக காவல்துறையில் ஒவ்வொரு ஆண்டும் 3000 முதல் 4000 காவலர்கள் ஓய்வு பெறும் நிலையில் அதனால் ஏற்படும் காலியிடங்களை நிரப்ப ஆண்டுக்கு ஒருமுறை காவலர் நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் அவ்வாறு செய்யப்படுவதில்லை.</p><p>தமிழ்நாட்டில் கடந்த 2023-ம் ஆண்டில் காவல்துறை, சிறைத்துறை, தீயவிப்புத்துறை ஆகியவற்றுக்கு மொத்தம் 3359 இரண்டாம் நிலைக் காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதன்பின் 2024-ம் ஆண்டில் அடுத்த ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 2023-ம் ஆண்டில் அறிவிக்கை செய்யப்பட்ட காலியிடங்களை நிரப்பும் பணியை 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை இழுத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் அந்த மாதத்தில் தான் பணி நியமன ஆணைகளை வழங்கியது. அதனால், அந்த ஆண்டில் காவலர் ஆள்தேர்வு அறிவிக்கப்படவில்லை.</p><p>அதன்பின் 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 3,644 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதற்கான போட்டித் தேர்வு நடத்தப்பட்டு கடந்த ஜனவரி மாதம் முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்பின் உடற்தகுதித் தேர்வு நடத்தப்பட்டும் கூட இன்று வரை முடிவுகள் வெளியிடப்படவில்லை. அதனால் நடப்பாண்டில் காவலர்கள் நியமனத்திற்கான அறிவிக்கை வெளியாவதற்கு வாய்ப்பில்லை என்பது உறுதியாகிறது.</p><p>தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நினைத்தால் காவலர் தேர்வு நடைமுறையை 6 மாதங்களில் முடிக்க முடியும். ஆனால், ஆண்டுக்கு ஒருமுறை காவலர் தேர்வு செய்யப்படுவதை தடுப்பதற்காகவே ஆள்தேர்வு நடைமுறை திட்டமிட்டு தாமதப்படுத்தப்படுகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் காவலர்கள் பணிக்காக தங்களை தயார் செய்து காத்திருக்கும் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தான்.</p><p>தமிழ்நாட்டில் காவலர் பணிக்கான கல்வித் தகுதி 10-ம் வகுப்பு ஆகும். அப்பணிக்கான வயது வரம்பு 18 முதல் 26 வரை ஆகும். ஆண்டுக்கு ஒருமுறை காவலர் நியமனம் செய்யப்பட்டால் 18-26 வயது பிரிவில் உள்ளவர்களுக்கு காவலர் தேர்வில் பங்கேற்க 8 முறை வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே காவலர் தேர்வு நடைபெறுவதால் அவர்களுக்கு 4 வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கின்றன. பலர் பட்டப்படிப்பை முடித்து விட்டு இந்த பணிக்கு விண்ணப்பிப்பதால் 2 அல்லது 3 வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கின்றன. ஒருவரிடமிருந்து 4 முதல் 6 முறை பணி வாய்ப்புகளை பறிப்பது மிகப்பெரிய அநீதியாகும்.</p><p>காவலர் பணிக்கான உடற்தகுதிக்கு உடனடியாக தயாராகிவிட முடியாது. அதற்காக குறைந்தது 6 மாதம் முதல் ஓராண்டு வரை பயிற்சி செய்ய வேண்டும். 2026-ம் ஆண்டில் காவலர் தேர்வுக்கான அறிவிக்கை வெளியாகும் என பயிற்சியில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும், ஆள்தேர்வு அறிவிக்கை வெளியாகதால் பயிற்சியும், நம்பிக்கையும் வீணாகி விட்டது. இதில் அவர்களின் தவறு எதுவும் இல்லை; ஆனால், தேர்வு வாரியத்தின் அலட்சியத்திற்கான தண்டனையை அவர்கள் அனுபவிக்க வேண்டியிருப்பதை நியாயப்படுத்தவே முடியாது.</p><p>2025-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட காவலர் தேர்வுக்கான முடிவுகளை, அது தொடர்பான வழக்குகளை முடித்து உடனடியாக வெளியிட வேண்டும். 2026-ம் ஆண்டுக்கான காவலர் நியமன ஆள்தேர்வு அறிவிக்கையை செப்டம்பர் மாதத்தில் வெளியிட வேண்டும். அது சாத்தியமில்லை என்றால் காவலர் பணிக்கான வயது வரம்பை பொதுப் பிரிவினருக்கு 30, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 32, பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு 35 ஆக தமிழக அரசு உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடன் பேட்மிண்டன் விளையாடி, பாராட்டு தெரிவித்த அன்புமணி ராமதாஸ்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-ramadoss-played-badminton-with-minister-aadhav-arjuna-and-expressed-his-appreciation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-ramadoss-played-badminton-with-minister-aadhav-arjuna-and-expressed-his-appreciation#comments</comments><guid isPermaLink="false">cfeb5937-88e2-4aa3-9470-c8f4efc440d0</guid><pubDate>Thu, 16 Jul 2026 06:00:25 +0000</pubDate><atom:updated>2026-07-16T06:00:25.871Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,Aadhav Arjuna,ஆதவ் அர்ஜுனா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/5cjkx71c/tnapa.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/5cjkx71c/tnapa.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>சென்னையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடன் இணைந்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்மிண்டன் விளையாடினார்.</p><p>சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் அகில இந்திய சீனியர் ரேங்கிங் பேட்மிண்டன் போட்டியின் தொடக்க விழா நடந்தது.  இந்த போட்டியை தமிழக விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பா.ம.க. தலைவர் மற்றும் தமிழ்நாடு பேட்மிண்டன் கூட்டமைப்பு தலைவரான அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.</p> <h2>அன்புமணி ராமதாஸ் பாராட்டு</h2><p>பேட்மிண்டன் போட்டியை தொடங்கி வைத்து மேடையில் பேசிய அன்புமணி ராமதாஸ், முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோரை பாராட்டி பேசினார்.</p><p>அப்போது அவர், போதைப்பொருளுக்கு எதிராக முதல்-அமைச்சர் விஜய் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு ஓடியது வரவேற்கத்தக்கது. முந்தைய விளையாட்டு அமைச்சர்களை விட ஆதவ் அர்ஜுனா முற்றிலும் மாறுபட்டவர். வித்தியாசமான அணுகுமுறை கொண்டவர் என கூறினார்.</p><p>இந்த நிகழ்ச்சியில், இளம் வீரர்களுடன் இணைந்து, எதிர் எதிரணிகளில் இருந்தபடி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் அன்புமணி ராமதாஸ் இருவரும் பேட்மிண்டன் விளையாடினர்.  அப்போது கூடியிருந்தவர்கள் கரவொலி எழுப்பி உற்சாகம் ஏற்படுத்தினர்.</p> ]]></content:encoded></item><item><title>காதல் திருமணம் செய்த சிறுமி தற்கொலை - கணவர் போக்சோவில் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/love-marriage-girl-commits-suicide-husband-arrested-under-pocso</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/love-marriage-girl-commits-suicide-husband-arrested-under-pocso#comments</comments><guid isPermaLink="false">50974635-4b8f-4b54-bca7-607820d48fc7</guid><pubDate>Thu, 16 Jul 2026 05:59:07 +0000</pubDate><atom:updated>2026-07-16T05:59:07.762Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Mayiladuthurai,காதல் திருமணம்,தற்கொலை,போக்சோ,மயிலாடுதுறை,POCSO</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/1btm8g7x/Untitled-8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/1btm8g7x/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மயிலாடுதுறை,</p><h2>காதல் திருமணம் செய்த சிறுமி</h2><p>தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபர் ஒருவர் மயிலாடுதுறை அருகே ஒரு கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது 17 வயது சிறுமி ஒருவருடன் அந்த வாலிபருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருச்செந்தூரில் திருமணம் செய்து கொண்டு கும்பகோணத்தில் குடும்பம் நடத்தி வந்தனர்.</p><h2>மது பழக்கம்</h2><p>இந்த நிலையில் அந்த வாலிபருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் அந்த சிறுமி தனது காதல் கணவருடன் மொபட்டில் தாய் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வாலிபர் மதுபோதையில் இருந்தார். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சென்றபோது மொபட் நிலைதடுமாறியதில் இருவரும் மொபட்டில் இருந்து கீழே விழுந்தனர்.</p><h2>தூக்குப்போட்டு தற்கொலை</h2><p>இதையடுத்து சிறுமி தனது தாயாரை செல்போன் மூலமாக வரவழைத்து அவருடன் ஆட்டோவில் தனது கணவரை அனுப்பி வைத்துள்ளார். பின்னர் மொபட்டில் தாய் வீட்டுக்கு சென்ற சிறுமி, அங்கு சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்ட அவருடைய தாய் கூச்சல் போட்டு கதறி அழுதார்.</p><h2>'போக்சோ' வழக்கில் கணவர் கைது</h2><p>இதுகுறித்து தகவல் அறிந்த மணல்மேடு போலீசார், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து 'போக்சோ' வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை திருமணம் செய்த வாலிபரை கைது செய்தனர். காதல் திருமணம் செய்த சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கார் மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து.. கோவில்பட்டியை சேர்ந்த தம்பதிக்கு நேர்ந்த சோகம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/accident-container-truck-collides-with-car-couple-from-kovilpatti-killed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/accident-container-truck-collides-with-car-couple-from-kovilpatti-killed#comments</comments><guid isPermaLink="false">95b46ddf-6c6d-4c8b-92ad-d1e74a8eecee</guid><pubDate>Thu, 16 Jul 2026 05:48:15 +0000</pubDate><atom:updated>2026-07-16T05:48:15.545Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சாலை விபத்து,road accident,Bengaluru,Kovilpatti,கோவில்பட்டி,Temple festival,கோவில் திருவிழா,பெங்களுரு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/4vw4yotn/koer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/4vw4yotn/koer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தர்மபுரி, </p><p>தொப்பூர் கணவாயில் கார் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் சிக்கி <a href="https://www.dailythanthi.com/topic/கோவில்பட்டி">கோவில்பட்டி</a>யை சேர்ந்த தம்பதி பலியாகினர்.</p><h2>கோவில் திருவிழா</h2><p>தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சிவந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்க மாரியப்பன் (வயது59). இவரது மனைவி லதா (54). இவர்கள் பெங்களூருவில் குடியேறி முறுக்கு உள்ளிட்ட பலகாரங்கள் தயாரித்து விற்பனை செய்து வந்தனர். </p><p>சொந்த ஊரில் நடைபெறும் கோவில் திருவிழாவில் பங்கேற்க தங்க மாரியப்பன், தனது மனைவி லதாவுடன் நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் இருந்து கோவில்பட்டிக்கு காரில் புறப்பட்டார். இந்த காரை லதாவின் தம்பி செந்தில்குமார் (47) ஓட்டி வந்தார்.</p> <h2>கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி</h2><p>இந்தநிலையில் நேற்று அதிகாலை கார் தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் கட்டமேடு பகுதியில் வந்து கொண்டு இருந்தது. அப்போது பின்னால் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து திருப்பூருக்கு நைலான் கயிறு பாரம் ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார்  மற்றும் 2 லாரிகள் மீது அடுத்தடுத்து மோதியது. இதில் கார், 2 லாரிகளுக்கு இடையே சிக்கி நொறுங்கியது.</p> <h2>தம்பதி பலி</h2><p>இந்த விபத்தில் லதா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். தங்க மாரியப்பன், செந்தில்குமார் ஆகிய 2 பேரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் 2 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தங்க மாரியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். செந்தில்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><h2>டிரைவர் கைது</h2><p>இந்த விபத்து காரணமாக தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து சென்று விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். </p><p>தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கன்டெய்னர் டிரைவரான தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மாம்பட்டியை சேர்ந்த சசிகுமார் (52) என்பவரை கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேரின் கட்சிப் பொறுப்புகள் பறிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cv-shanmugams-11-supporters-stripped-of-party-responsibilities</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cv-shanmugams-11-supporters-stripped-of-party-responsibilities#comments</comments><guid isPermaLink="false">4d7b2191-3fda-4b5a-a659-4dde45116b11</guid><pubDate>Thu, 16 Jul 2026 05:38:40 +0000</pubDate><atom:updated>2026-07-16T05:38:40.776Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,எடப்பாடி பழனிசாமி,அதிமுக,Edappadi Palaniswami,விழுப்புரம்,Villupuram,CV Shanmugam,சி.வி. சண்முகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/5zygjls4/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/5zygjls4/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்து 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் வெடித்து சி.வி. சண்முகம் தலைமையில் ஒரு அணியும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் மற்றொரு அணியும் என்று அ.தி.மு.க. 2-ஆக பிரிந்தது. </p><p>பின்னர், மீண்டும் அ.தி.மு.க. ஒன்றிணைந்த நிலையில், சி.வி.சண்முகம் மட்டும் தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்காமல் உள்ளார். இதற்கிடையே விழுப்புரம் மாவட்ட புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட பசுபதி தரப்பினருக்கும், சி.வி.சண்முகம் தரப்பினருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.</p><p>இந்த சூழலில் கடந்த 9-ம் தேதி நடந்த விழுப்புரம் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பசுபதி ஆதரவாளர்களுக்கும், சி.வி.சண்முகம் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. கார் மீது கல்வீச்சு, மறியல் போராட்டம் நடந்தது. இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இதுதொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.</p><p>அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேரை கட்சி பொறுப்பிலுருந்து நீக்கி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/062tuu56/Untitled-1.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>விருதுநகர்: கத்திமுனையில் பெண்ணிடம் 25 சரவன் நகை பறிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/virudhunagar-25-saravan-jewelry-snatched-from-woman-at-knifepoint</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/virudhunagar-25-saravan-jewelry-snatched-from-woman-at-knifepoint#comments</comments><guid isPermaLink="false">f0d79e33-2c15-4d1d-abb5-8b3d2ad4999b</guid><pubDate>Thu, 16 Jul 2026 05:33:46 +0000</pubDate><atom:updated>2026-07-16T05:33:46.733Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Virudhunagar,விருதுநகர்,பெண்ணிடம்,தங்க நகைகள்,பறிப்பு,knife point,Jewelry stolen from woman,கத்தி முனையில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/e4309x3f/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெண்ணிடம் 25 சரவன் நகைகள் பறிப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/e4309x3f/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர், </p><p>விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே பணிக்கனேந்தல் கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டி <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">25 சவரன் நகைகளை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்</a>. </p><h2>வீட்டில் தனியாக இருந்த பெண்</h2><p>விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே பணிக்கனேந்தல் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி, கட்டிட காண்டிராக்டர். இவருடைய மனைவி அன்னலட்சுமி (வயது 50). நேற்று மதியம் அன்னலட்சுமி வீட்டில் தனியாக இருந்தார். </p><h2>கத்தி முனையில் 25 சவரன் நகைகள் பறிப்பு</h2><p>அப்போது 2 பேர் அவரது வீட்டிற்கு வந்து, குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். உடனே அன்னலட்சுமி தண்ணீர் எடுக்க சென்றுள்ளார். அப்போது அவர்கள் 2 பேரும் நைசாக அன்னலட்சுமியை பின்தொடர்ந்து சென்றனர். பின்னர் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காண்பித்து மிரட்டினர். அன்னலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி உள்பட 25 சவரன் தங்க நகைகளை பறித்துக்கொண்டு தப்பி ஓடினர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>சென்னையில் போக்சோ வழக்கில் கைதானவர் தப்பியோட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/man-arrested-in-pocso-case-escapes-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/man-arrested-in-pocso-case-escapes-in-chennai#comments</comments><guid isPermaLink="false">b8c2ae58-d54b-4155-a61b-45978b480cf0</guid><pubDate>Thu, 16 Jul 2026 05:30:37 +0000</pubDate><atom:updated>2026-07-16T05:30:37.112Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,தமிழகம்,கைது,போக்சோ,தப்பி ஓட்டம்,புழல் சிறை,Puzhal Central Jail</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/lqkzzern/sta.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/lqkzzern/sta.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜா தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. </p><p>சென்னை அம்பத்தூரில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைதானவர் ராஜா. அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் வயிற்று வலி என கூறியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். </p><p>இந்நிலையில் போலீசாரை ஏமாற்றி விட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து கைதி ராஜா தப்பிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தப்பியோடிய கைதியை பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>கூடங்குளம் அணுமின் நிலைய தரவுகள் கசிவு?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kudankulam-nuclear-power-plant-data-leak</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kudankulam-nuclear-power-plant-data-leak#comments</comments><guid isPermaLink="false">503e49e5-00bc-4555-832a-41978b982acc</guid><pubDate>Thu, 16 Jul 2026 05:22:54 +0000</pubDate><atom:updated>2026-07-16T05:22:54.727Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தூத்துக்குடி,மத்திய அரசு,கூடங்குளம்,Kudankulam,Kudankulam Nuclear Power Plant,Kudankulam Nuclear Reactor</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/ow8rmhj4/kudankulam33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
கூடங்குளம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/ow8rmhj4/kudankulam33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>கூடங்குளம் அணுமின் நிலையத்தின் கட்டுப்பாட்டு அறை வரைபடங்கள், வெண்டிலேஷன் கட்டமைப்பு உள்ளிட்ட 19,000 முக்கிய கோப்புகள் Dark Web தளத்தில் கசிந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.</p><p>தூத்துக்குடி மாவட்டம் கூடங்குளத்தில் ரஷிய நாட்டின் உதவியுடன் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அணுமின் நிலையம்</a> அமைக்கப்பட்டுள்ளது. தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரு அலகுகள் இங்கு தற்போது செயல்பாட் டில் உள்ள நிலையில், மேலும் நான்கு அலகுகளுக்கான கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்தியாவின் அணுமின் தேவையைப் பூர்த்தி செய்வதில் இந்த மின் நிலையம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.</p><h2>தரவு கசிவு</h2><p>இந்த நிலையில், நேற்று 'வேர்ல்டு லீக்ஸ்' என்ற ஹேக்கர் குழு கூடங்குளம் அணுமின் நிலையத்தின் வரைபடங்கள் மற்றும் உதிரிபாகங்கள் வினியோகிப்பாளர் விவரங்கள் அடங்கிய ரகசிய ஆவணங்களை இணையதளம் மூலம் பொதுவெளியில் வெளியிட்டுள்ளதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் இந்த தகவலை தேசிய அணுசக்தி ஆணையம் மறுத்து உள்ளது.</p><p>இருப்பினும் இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான ரகசிய ஆவணங்கள் கசிந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இந்த விவகாரம் தொடர்பாக மூத்த அணுசக்தி விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட தரவு கசிவுக்கும் அணுசக்தி பாதுகாப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது அணுமின் நிலையத்தின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்று தெரிவித்தார்.</p> <h2>தகவல் உண்மையல்ல</h2><p>இதுதொடர்பாக NPCIL நிர்வாக இயக்குநர் ராஜேஷ் கூறுகையில், பாதுகாப்பு தகவல்கள் எதுவும் திருடப்படவில்லை. அணு பாதுகாப்பு தொடர்பான எந்த ரகசிய தகவலும் வெளியேறவில்லை. முக்கிய தகவல்கள் கசிந்தது என்பது உண்மையல்ல என்று விளக்கம் அளித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>காவலர்களுக்கான ஆள்தேர்வு அறிவிப்பை உடனே வெளியிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-recruitment-notification-should-be-published-immediately-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-recruitment-notification-should-be-published-immediately-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">7bbe8c80-3b81-49b9-a870-b62a6f580b28</guid><pubDate>Thu, 16 Jul 2026 05:17:46 +0000</pubDate><atom:updated>2026-07-16T05:17:46.920Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,police,அரசு வேலை,காவலர் பணி,ஆள்தேர்வு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/92lq94xc/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/92lq94xc/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு காவல்துறையில் காலியிடங்களின் எண்ணிக்கை மாதத்திற்கு மாதம் அதிகரித்து வரும் நிலையில், 2026-ம் ஆண்டில் காவலர்கள் நியமனம் நடைபெறாது என்றும், 2027-ம் ஆண்டு ஜூன் மாதத்தில்தான் ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்படும் என்றும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. காவல்துறை பணியில் சேர லட்சக்கணக்கான இளைஞர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் வேளையில் ஓராண்டு முழுவதும் காவலர் தேர்வு நடத்தப்படாது என்று அறிவிப்பது பெரும் அநீதியாகும்.</p><p>தமிழ்நாட்டில் காவலர்கள் நியமனத்தை தாமதப்படுத்துவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் காவலர்கள் தேவைப்படும் மாநிலங்களில் தமிழ்நாடுதான் முதன்மை  இடத்தில் உள்ளது. போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவது, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்தல் ஆகியவை அரசின் முதன்மைக் கடமையாக மாறியுள்ளன. இதற்காக காவல்துறையில் தனிப்பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றை வலுப்படுத்த போதிய எண்ணிக்கையில் காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். இதற்கு தேவையான காவலர்கள் தமிழக காவல்துறையில் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.</p><p>01.01.2025-ம் நாள் நிலவரப்படி தமிழக காவல்துறையில் அதிகாரிகள் அல்லாத காவலர்கள் பணியிடங்கள் ஒரு லட்சத்து 17,609 ஆகும். தமிழ்நாட்டின் மக்கள்தொகை 8 கோடி எனும் நிலையில், ஒரு லட்சம் மக்களுக்கு 147 காவலர் பணியிடங்கள் மட்டுமே உள்ளன. காவல்துறை தலைமை இயக்குனர் முதல் சார்பு ஆய்வாளர் வரையிலான அதிகாரிகள் பணியிடங்களையும் கணக்கில் கொண்டால் காவல்துறையின் மொத்த பணியிடங்கள் ஒரு லட்சத்து 33,961 ஆகும். இதன்படி பார்த்தால் ஒரு லட்சம் பேருக்கு 167.45 காவல்துறையினர் தான் உள்ளனர். இவற்றில் 10% பணியிடங்கள் காலியாக இருப்பதாகக் கொண்டால், ஒரு லட்சம் மக்களுக்கு  132 காவலர்கள் மட்டும் தான் இருப்பார்கள். இது சட்டம் &amp; ஒழுங்கைக் காக்க எந்த வகையிலும் போதுமானதல்ல.</p><p>ஐக்கிய நாடுகள் அமைப்பின் பரிந்துரைப்படி, ஒரு லட்சம் மக்களுக்கு 222 காவலர்கள் இருக்க வேண்டும். அதன்படி பார்த்தால் தமிழ்நாட்டில் காவலர் பணியிடங்கள் ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 600 ஆக இருக்க வேண்டும். அதற்கு தமிழ்நாட்டில் 60 ஆயிரம் காவலர் பணியிடங்கள் கூடுதலாக ஏற்படுத்தப்பட வேண்டும்.  அதுமட்டுமின்றி, ஏற்கனவே காலியாக உள்ள அனைத்து பணியிடங்களும் உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.</p><p>ஆனால், தமிழ்நாட்டில் ஏற்கனவே காலியாக உள்ள காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு கூட எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. தமிழக காவல்துறையில் ஒவ்வொரு ஆண்டும் 3,000 முதல் 4,000 காவலர்கள் ஓய்வு பெறும் நிலையில் அதனால் ஏற்படும் காலியிடங்களை நிரப்ப ஆண்டுக்கு ஒருமுறை காவலர் நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் அவ்வாறு செய்யப்படுவதில்லை.</p><p>தமிழ்நாட்டில் கடந்த 2023-ம் ஆண்டில் காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை ஆகியவற்றுக்கு மொத்தம் 3,359 இரண்டாம் நிலைக் காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதன்பின் 2024-ம் ஆண்டில் அடுத்த ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால்,  2023-ம் ஆண்டில் அறிவிக்கை செய்யப்பட்ட காலியிடங்களை நிரப்பும் பணியை 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை இழுத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் அந்த மாதத்தில்தான் பணி நியமன ஆணைகளை வழங்கியது. அதனால், அந்த ஆண்டில் காவலர் ஆள்தேர்வு அறிவிக்கப்படவில்லை.</p><p>அதன்பின் 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 3,644 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கை  வெளியிடப்பட்டது. அதற்கான போட்டித் தேர்வு நடத்தப்பட்டு கடந்த ஜனவரி மாதம் முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்பின் உடற்தகுதித் தேர்வு நடத்தப்பட்டும் கூட இன்று வரை முடிவுகள் வெளியிடப்படவில்லை. அதனால் நடப்பாண்டில் காவலர்கள் நியமனத்திற்கான அறிவிக்கை வெளியாவதற்கு வாய்ப்பில்லை என்பது உறுதியாகிறது.</p><p>தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நினைத்தால் காவலர் தேர்வு நடைமுறையை 6 மாதங்களில் முடிக்க முடியும். ஆனால், ஆண்டுக்கு ஒருமுறை காவலர் தேர்வு செய்யப்படுவதை தடுப்பதற்காகவே ஆள்தேர்வு நடைமுறை திட்டமிட்டு தாமதப்படுத்தப்படுகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் காவலர்கள் பணிக்காக தங்களை தயார் செய்து காத்திருக்கும் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள்தான்.</p><p>தமிழ்நாட்டில் காவலர் பணிக்கான கல்வித் தகுதி 10-ம் வகுப்பு ஆகும். அப்பணிக்கான வயது வரம்பு 18 முதல் 26 வரை ஆகும். ஆண்டுக்கு ஒருமுறை காவலர் நியமனம் செய்யப்பட்டால் 18 - 26 வயது பிரிவில் உள்ளவர்களுக்கு காவலர் தேர்வில் பங்கேற்க 8 முறை வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால்,  இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே காவலர் தேர்வு நடைபெறுவதால் அவர்களுக்கு 4 வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கின்றன. பலர் பட்டப்படிப்பை முடித்து விட்டு இந்த பணிக்கு விண்ணப்பிப்பதால் 2 அல்லது 3 வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கின்றன. ஒருவரிடமிருந்து 4 முதல் 6 முறை பணி வாய்ப்புகளை பறிப்பது மிகப்பெரிய அநீதியாகும்.</p><p>காவலர் பணிக்கான உடற்தகுதிக்கு உடனடியாக தயாராகிவிட முடியாது. அதற்காக குறைந்தது  6 மாதம் முதல் ஓராண்டு வரை பயிற்சி செய்ய வேண்டும். 2026-ம் ஆண்டில் காவலர் தேர்வுக்கான அறிவிக்கை வெளியாகும் என பயிற்சியில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும், ஆள்தேர்வு அறிவிக்கை வெளியாகாததால் பயிற்சியும், நம்பிக்கையும் வீணாகி விட்டது. இதில் அவர்களின் தவறு எதுவும் இல்லை; ஆனால், தேர்வு வாரியத்தின்  அலட்சியத்திற்கான தண்டனையை அவர்கள் அனுபவிக்க வேண்டியிருப்பதை நியாயப்படுத்தவே முடியாது.</p><p>2025-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட காவலர் தேர்வுக்கான முடிவுகளை, அது தொடர்பான வழக்குகளை முடித்து  உடனடியாக வெளியிட வேண்டும். 2026-ம் ஆண்டுக்கான காவலர் நியமன ஆள்தேர்வு அறிவிக்கையை செப்டம்பர் மாதத்தில் வெளியிட வேண்டும். அது சாத்தியமில்லை என்றால் காவலர் பணிக்கான வயது வரம்பை பொதுப் பிரிவினருக்கு 30, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 32,  பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு 35 ஆக தமிழக அரசு உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வகுப்பறையில் பிளஸ்-2 மாணவரை கத்தியால் குத்திய சக மாணவர்கள்: காரணம் என்ன..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/classmates-stab-plus-2-student-with-a-knife-in-the-classroom-what-is-the-reason</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/classmates-stab-plus-2-student-with-a-knife-in-the-classroom-what-is-the-reason#comments</comments><guid isPermaLink="false">42c93388-f9da-4df2-9671-0889f31a488c</guid><pubDate>Thu, 16 Jul 2026 04:59:39 +0000</pubDate><atom:updated>2026-07-16T04:59:39.901Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police investigation,போலீஸ் விசாரணை,சிவகங்கை,Sivagangai,அரசு பள்ளி,Govt school,கத்தி குத்து</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/sunw8too/plan.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/sunw8too/plan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை, </p><p>அரசு பள்ளி வகுப்பறையில் பிளஸ்-2 மாணவரை சக மாணவர்கள் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><h2>வகுப்பறையில் கத்திக்குத்து</h2><p>சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை அடுத்த நிரஞ்சான் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாங்கம் (வயது 45). கொத்தனார். இவருடைய மகன் சஞ்சய் பிரசாத் (17). இவர் சிவகங்கையை அடுத்த மல்லல் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர்நல அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.</p><p>நேற்று காலை சஞ்சய் பிரசாத் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றார். வகுப்பறையில் நுழைந்தபோது திடீரென 2 மாணவர்கள், தாங்கள் வைத்திருந்த கத்தியால் சஞ்சய் பிரசாத்தை மார்பு மற்றும் முதுகில் குத்தினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.</p> <h2>தீவிர சிகிச்சை</h2><p>அவரது அலறல் கேட்டு ஆசிரியர்கள், மற்ற மாணவர்கள் ஓடிவந்தனர். உடனே அந்த 2 மாணவர்களும் அங்கிருந்து ஓடிவிட்டனர்.</p><p>சிகிச்சைக்காக சஞ்சய் பிரசாத்தை சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><p>இது குறித்து அறிந்த மானாமதுரை சிப்காட் போலீசார், பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p><h2>காரணம் என்ன?</h2><p>இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து சஞ்சய் பிரசாத்தின் தந்தை ராஜாங்கம் கூறியதாவது:-</p><p>இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து சஞ்சய் பிரசாத்தின் தந்தை ராஜாங்கம் கூறியதாவது:-</p><p>கடந்த 10 நாட்களுக்கு முன்பு பள்ளியில் எனது மகனுக்கும், சில மாணவர்க ளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் எனது மகன் ஒரு மாணவரை தாக்கியதாக தலைமை ஆசிரியர் கூறினார். இதை தொடர்ந்து நான் ஒரு வாரம் கழித்து, கடந்த திங்கட்கிழமைதான் எனது மகனை பள்ளிக்கு அனுப்பினேன். அவனை நானே காலையில் பள்ளியில் கொண்டுசென்று விட்டுவிட்டு மாலையில் அழைத்துச்சென்றேன். அதன்படி சம்பவத்தன்று காலையிலும் பள்ளியில் விட்டுவிட்டு நான் வேலைக்கு சென்றுவிட்டேன். சிறிது நேரத்தில் பள்ளி காவலாளி என்னை செல்போனில் தொடர்பு கொண்டு உங்களது மகனை பள்ளியில் பயிலும் சக மாணவர்கள் கத்தியால் குத்திவிட்டதாக கூறினார். பள்ளியில் இருந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றதால் அலறி அடித்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்று எனது மகனை பார்த்தேன். இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 22-ம் ஆண்டு நினைவு தினம்: மெழுகுவர்த்தி ஏற்றி பொதுமக்கள் அஞ்சலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/22nd-anniversary-of-kumbakonam-school-fire-public-pays-tribute-by-lighting-candles</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/22nd-anniversary-of-kumbakonam-school-fire-public-pays-tribute-by-lighting-candles#comments</comments><guid isPermaLink="false">9e5dd8b7-b58f-4fbe-a2b4-14da7e2462f6</guid><pubDate>Thu, 16 Jul 2026 04:58:25 +0000</pubDate><atom:updated>2026-07-16T04:58:25.811Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Fire accident,கும்பகோணம்,பள்ளி தீ விபத்து,Kumbakonam,school fire</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/778cvt6f/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/778cvt6f/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>கும்பகோணம்,</p><h2>பள்ளி தீ விபத்து</h2><p>தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி காசிராமன் தெரு ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் பள்ளியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அத்துடன் 19 குழந்தைகள் காயமடைந்தனர். இந்த துயர சம்பவம் தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. </p><p>இந்த தீ விபத்து நடந்து இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 22-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இன்று காலை குழந்தைகளை தீயில் பறிகொடுத்த பெற்றோர் தங்கள் வீட்டில் உள்ள தங்களது குழந்தைகளின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து, புத்தாடைகள் மற்றும் அவர்களுக்கு பிடித்த தின்பண்டங்களை வைத்து அஞ்சலி செலுத்தினர்.</p><h2>22-ம் ஆண்டு நினைவு தினம்</h2><p>பின்னர் விபத்து நடந்த கிருஷ்ணா பள்ளி முன்பு திரண்ட பெற்றோர், பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த 94 குழந்தைகளின் உருவப்படங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனருக்கு மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து தின்பண்டங்களை வைத்தும் குழந்தைகளின் படங்களை பார்த்து கதறி அழுதனர்.</p><p>பல தன்னார்வ அமைப்பினரும், அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் இறந்த குழந்தைகளின் புகைப்படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த துயர சம்பவம் நடந்து 22 ஆண்டுகள் ஆகினும், பிஞ்சு குழந்தைகளை இழந்த தாக்கம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மத்தியிலிருந்து இன்னும் நீங்காத வடுவாக மாறியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரெயில் டிக்கெட் முன்பதிவை எளிமைப்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்ட ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் அறிமுகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-irctc-beta-website-launched-for-easier-ticket-booking</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-irctc-beta-website-launched-for-easier-ticket-booking#comments</comments><guid isPermaLink="false">8c214df6-7eea-488b-a53f-a9e5fc0cf3dc</guid><pubDate>Thu, 16 Jul 2026 04:56:35 +0000</pubDate><atom:updated>2026-07-16T04:56:35.966Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டிக்கெட் முன்பதிவு,Ticket Booking,ரெயில் டிக்கெட்,Train Ticket,Railway,ரெயில்வே,ஐ.ஆர்.சி.டி.சி,IRCTC,பீட்டா பதிப்பு,beta version</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/vzv7dmaf/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/vzv7dmaf/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>டிக்கெட் முன்பதிவு</h2><p>இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் மற்றும் அதன் செயலியில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். தற்போதுள்ள நிலவரப்படி, 82 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் முன்பதிவு செய்கின்றனர். ஆனால், தட்கல் முன்பதிவின்போது, அடிக்கடி 'சர்வர்' பிரச்சினை ஏற்படுகிறது.</p><p>'கேப்ட்சா' குறியீடுகளும் கடினமாக இருக்கிறது. தொழில்நுட்ப கோளாறுகளால் டிக்கெட் முன்பதிவு அடிக்கடி தோல்வியில் முடிகிறது. இதனால், பயணிகள் முன்பதிவு செய்ய முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து ரெயில்வே நிர்வாகத்திற்கு பல்வேறு புகார்களை பயணிகள் தெரிவித்துள்ளனர்.</p><h2>மேம்படுத்தப்பட்ட இணையதளம்</h2><p>இந்த நிலையில், 24 ஆண்டுகளுக்குப் பிறகு பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ள ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் சிரமம் இல்லாமல் எளிதில் முன்பதிவு செய்யும் வகையில் மேம்படுத்தப்பட்ட இணையதளத்தின் பீட்டா பதிப்பை ஐ.ஆர்.சி.டி.சி. தற்போது அறிமுகம் செய்துள்ளது.</p><h2>பீட்டா பதிப்பு</h2><p>இந்த புதிய பீட்டா பதிப்பு, டிக்கெட் முன்பதிவை எளிமையாகவும், தடையின்றியும் செய்வதை நோக்கமாக கொண்டு 4 முக்கிய மேம்பாட்டு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.</p><ul><li><p>முன்பதிவு செய்யும்போது தேவையற்ற கேப்ட்சாக்களை நீக்குதல், தேவையற்ற பாப்-அப்களை அகற்றுதல், ஒளிரும் கிராபிக்ஸ், கவனச்சிதறல்களை ஏற்படுத்தும் அம்சங்கள் நீக்கப்பட்டுள்ளன.</p></li><li><p>பயணிகள் அனைத்து வகுப்புகளிலும் இருக்கைகள் உள்ளதா என்பதைப் பார்க்கலாம்.</p></li><li><p>இந்த இணையதளம் வேகமான செக்-அவுட் செயல்முறையை வழங்குகிறது. இதன் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தேவைப்படும் படிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.</p></li><li><p>இந்த இணையதளம் பயணிகளின் விவரங்களைச் சேமிக்கும். இதன் மூலம் மீண்டும் மீண்டும் முன்பதிவு செய்வது எளிதாகிறது.</p></li></ul><h2>கருத்துகள் வரவேற்பு</h2><p>இந்த பீட்டா பதிப்பை <a href="https://www.irctc.co.in/eticket/">https://www.irctc.co.in/eticket/</a> என்ற முகவரியில் அணுகலாம். தற்போதுள்ள இணையதளத்தின் முகப்புப் பக்கத்திலும் பீட்டா பதிப்பிற்கான இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் எளிமைப்படுத்தப்பட்ட அம்சங்கள் குறித்துக் கருத்துக்களை வழங்குமாறு ரெயில்வே அமைச்சகம் பயனர்களை கேட்டுக் கொண்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தஞ்சாவூர்: வாலிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thanjavur-petrol-bomb-thrown-at-youths-house</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thanjavur-petrol-bomb-thrown-at-youths-house#comments</comments><guid isPermaLink="false">34a35457-c688-4d07-9584-dcd14b3841ab</guid><pubDate>Thu, 16 Jul 2026 04:55:29 +0000</pubDate><atom:updated>2026-07-16T04:55:29.781Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thanjavur,Youth,வாலிபர்,தஞ்சாவூர்,House,வீடு,முன்விரோதம்,பெட்ரோல் குண்டு வீச்சு,previous enmity,petrol bomb thrown</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/610wegaq/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%9F%E0%AF%81.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல் குண்டு வீச்சு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/610wegaq/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%9F%E0%AF%81.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர், </p><p>தஞ்சாவூர் மாவட்டம், துறவிக்காடு பகுதியில் உள்ள ஒரு வாலிபரின் வீட்டில் சண்டைக்கோழி வாங்கியது தொடர்பாக ஏற்பட்ட <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">முன்விரோதத்தின் காரணமாக பெட்ரோல் குண்டு வீசியது</a> குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். </p><h2>சண்டைக்கோழி வாங்கியதில் முன்விரோதம்</h2><p>தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் தில்லங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் அபின்தாஸ் (வயது 27). இவருக்கும், திருச்சிற்றம்பலம் அருகில் உள்ள துறவிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் மகன் பாபு(21) என்பவருக்கும் இடையே சண்டைக்கோழி வாங்கியது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. </p><h2>வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு</h2><p>நேற்று முன்தினம் இரவு அபின்தாசும் அவரது கூட்டாளிகள் சிலரும் துறவிக்காடு கிராமத்தில் உள்ள பாபு வீட்டுக்கு அவரை தேடி சென்றனர். பின்னர் பாட்டிலால் செய்யப்பட்ட 2 பெட்ரோல் குண்டுகளை அவரது வீட்டில் வீசி உள்ளனர். இதில் ஒரு குண்டு வெடித்தது. மற்றொன்று வெடிக்கவில்லை. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>லஞ்சம், முறைகேடு புகார்: சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 6 பேர் சஸ்பெண்ட்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/6-chennai-corporation-officials-suspended</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/6-chennai-corporation-officials-suspended#comments</comments><guid isPermaLink="false">07bbf139-013a-4513-a19a-e65796a8ce1c</guid><pubDate>Thu, 16 Jul 2026 04:41:32 +0000</pubDate><atom:updated>2026-07-16T04:41:32.385Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சஸ்பெண்ட்,சென்னை மாநகராட்சி,லஞ்சம்,லஞ்சம் புகார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/35uwwc9v/chennai33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை மாநகராட்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/35uwwc9v/chennai33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நிதி முறைகேடு, லஞ்சம் மற்றும் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய புகார்களை அடுத்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>சென்னை மாநகராட்சி</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை மாநகராட்சி</a>யில் லஞ்சம் பெறுதல், வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெறுதல், பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட புகார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.</p><p>இந்தநிலையில்,  சென்னை மாநகராட்சியில் டெண்டர்  முறைகேடு, நிதி முறைகேடு, லஞ்சம் உள்ளிட்ட புகார்கள் தொடர்பாக 4 மூத்த அதிகாரிகள் உள்பட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>குற்றவியல் வழக்கு</h2><p>மேலும், இவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கைகளும், 4 பேர் மீது குற்றவியல் வழக்குகளும் பதிவு செய்ய சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் உத்தரவிடுள்ளார்.</p><p>ரூ. 9 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்கு போலியான ரசீதுகளைச் சமர்ப்பித்த்ததாக மணலி மற்றும் மாதவரம் மண்டல சுகாதார அதிகாரியான டாக்டர் தேவிகலா, ஜூலை 9-ல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.</p>]]></content:encoded></item><item><title>கும்பகோணம் தீ விபத்து நினைவு நாள்: வானதி சீனிவாசன் அஞ்சலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fire-tragedy-anniversary-vanathi-srinivasan-pays-tribute</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fire-tragedy-anniversary-vanathi-srinivasan-pays-tribute#comments</comments><guid isPermaLink="false">39c42324-68c8-4724-9ac2-ee8a2a6d4760</guid><pubDate>Thu, 16 Jul 2026 04:37:11 +0000</pubDate><atom:updated>2026-07-16T04:37:11.311Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,வானதி சீனிவாசன்,நினைவு நாள்,கும்பகோணம்,பள்ளி தீ விபத்து,அஞ்சலி Tribute,வானதிசீனிவாசன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/ru7dhz7o/209.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வானதி சீனிவாசன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/ru7dhz7o/209.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக மகளிரணி தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF">வானதி சீனிவாசன்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 22-ஆம் ஆண்டு நினைவு நாளில், உயிரிழந்த 94 பிஞ்சுக் குழந்தைகளுக்கு ஆழ்ந்த இதய அஞ்சலிகள்.</p><p>தமிழக வரலாற்றில் என்றும் அழியாத பெருந்துயரமாகப் பதிந்த இந்தச் சம்பவம், பள்ளிகளில் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாதால் ஏற்படும் பேராபத்தின் கோர நினைவாக உள்ளது.</p><h2>வலியுறுத்தல்</h2><p>இத்தகைய துயரங்கள் இனி ஒருபோதும் நிகழாத வகையில், அனைத்து கல்வி நிலையங்களும் தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை முறையாகக் கடைப்பிடித்து, மாணவர்களின் உயிர் பாதுகாப்பை முதன்மையாகக் கருதி செயல்பட வேண்டும் என்பதை இந்த நாளில் வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 22-ஆம் ஆண்டு நினைவு நாளில், உயிரிழந்த 94 பிஞ்சுக் குழந்தைகளுக்கு ஆழ்ந்த இதய அஞ்சலிகள்.<br><br>தமிழக வரலாற்றில் என்றும் அழியாத பெருந்துயரமாகப் பதிந்த இந்தச் சம்பவம், பள்ளிகளில் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாதால் ஏற்படும் பேராபத்தின் கோர நினைவாக… <a href="https://t.co/FgpJ2Ska87">pic.twitter.com/FgpJ2Ska87</a></p>&mdash; Vanathi Srinivasan (@VanathiBJP) <a href="https://x.com/VanathiBJP/status/2077597772266795517?ref_src=twsrc%5Etfw">July 16, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>தங்கம் விலை குறைந்தது... இன்றைய நிலவரம் என்ன..?</title><link>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-drops-by-rs-240-per-sovereign-2</link><comments>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-drops-by-rs-240-per-sovereign-2#comments</comments><guid isPermaLink="false">4def3ffb-c110-4a88-b962-8213ec6fee63</guid><pubDate>Thu, 16 Jul 2026 04:23:48 +0000</pubDate><atom:updated>2026-07-16T04:23:48.586Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Gold Rate,தங்கம் விலை,வெள்ளி விலை,Silver rate,Gold Price,Silver Price,விலை நிலவரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/pne3sdnb/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/pne3sdnb/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தங்கம் (Gold Rate)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை, நேற்று உயர்ந்தது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.30-ம், சவரனுக்கு ரூ.240-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,180-க்கும், ஒரு சவரன் ரூ.1,05,440-க்கும் விற்பனை செய்யப்பட்டது. </p><p>இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,05,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.30 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.240-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item></channel></rss>