<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 11 Jul 2026 08:41:05 +0000</lastBuildDate><item><title>மாவீரன் அழகுமுத்துக்கோன் தியாகத்தையும், வீரத்தையும் போற்றி வணங்குகிறேன் - எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-honor-and-pay-tribute-to-the-sacrifice-and-valor-of-maaveeran-azhagumuthu-kon-edappadi-palaniswami</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-honor-and-pay-tribute-to-the-sacrifice-and-valor-of-maaveeran-azhagumuthu-kon-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">50e9f2ec-18a7-4070-bf43-2bb9e065b3ca</guid><pubDate>Sat, 11 Jul 2026 08:36:21 +0000</pubDate><atom:updated>2026-07-11T08:36:21.496Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,Edappadi Palaniasamy,Azhagumuthukon,அழகுமுத்துக்கோன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/uo6j95k0/11072026.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/uo6j95k0/11072026.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் அரசு அதிகாரிகள் சென்னையில் உள்ள அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.</p><p>மேலும், பல்வேறு அரசியல் தலைவர்கள் மாவீரன் அழகுமுத்துக்கோனை புகழந்து தங்களது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-</p><p>“அடிமைப்பட்டு உயிர்வாழ்வதை விட, சுதந்திர மனிதனாய் உயிரை விடுவோம் என வீரமுழக்கமிட்டு, ஆங்கிலேயரின் பீரங்கி குண்டுகளைத் தன் நெஞ்சில் தாங்கி, தமிழகத்தில் சுதந்திரப் போராட்ட வேட்கையை முதன்முதலில் விதைத்த மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் பிறந்தநாளில், அவர்தம் தியாகத்தையும் வீரத்தையும் போற்றி வணங்குகிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>கோவை:  வேளாண் பல்கலைக்கழக விடுதியில் மாணவி மர்ம மரணம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-mysterious-death-of-a-female-student-at-the-agricultural-university-hostel</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-mysterious-death-of-a-female-student-at-the-agricultural-university-hostel#comments</comments><guid isPermaLink="false">d8771b59-5513-4ddb-bc99-2b07c80fc9d8</guid><pubDate>Sat, 11 Jul 2026 08:35:49 +0000</pubDate><atom:updated>2026-07-11T08:35:49.236Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,மாணவி,student</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/wueixb0y/upaelt.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கோவை, மாணவி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/wueixb0y/upaelt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>கோவை</p><p>கோவை வேளாண் பல்கலைக்கழக விடுதியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவி மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளார்.</p><p>கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் விடுதியில் மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளார்.  இதனை சக மாணவிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.  அவர்கள் நிர்வாகத்தினரிடம் தகவல் தெரிவித்தனர்.</p><p>அந்த மாணவியின் உடல் பக்கெட்டுக்குள் (வாளிக்குள்) தலைகீழாக கவிழ்ந்த நிலையில் கிடந்துள்ளது.  அதனை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.</p> <h2>பெற்றோர் சந்தேகம்</h2><p>இதுபற்றி அந்த மாணவியின் பெற்றோர் கூறும்போது, அந்த மாணவி தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை என திட்டவட்டத்துடன் கூறினார்.  இந்த மரணத்தில் சந்தேகம் உள்ளது என குற்றம் சாட்டியுள்ளனர்.  இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>30 ஆண்டுகள், 300 ஸ்டார் ஓட்டல்களில் நூதன திருட்டு: முதியவர் ஒடிசாவில் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/30-years-300-star-hotels-involved-in-innovative-theft-elderly-man-arrested-in-odisha</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/30-years-300-star-hotels-involved-in-innovative-theft-elderly-man-arrested-in-odisha#comments</comments><guid isPermaLink="false">17648002-d663-4e64-b553-2360c73b069e</guid><pubDate>Sat, 11 Jul 2026 08:27:54 +0000</pubDate><atom:updated>2026-07-11T08:27:54.700Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Odisha,ஒடிசா,Thoothukudi,arrested,தூத்துக்குடி,முதியவர்,Star Hotel,Theft,Elderly,நூதன திருட்டு,ஸ்டார் ஓட்டல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/bffqb391/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஒடிசாவில் கைது செய்யப்பட்ட முதியவர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/bffqb391/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>நாட்டின் முன்னணி 5 நட்சத்திர ஆடம்பர ஓட்டல்களை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஏமாற்றி வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த முதியவரை, போலீசார் ஒடிசா மாநிலத்தில் கைது செய்தனர்.</p><h2>30 ஆண்டுகளாக முதியவரின் நூதன திருட்டு</h2><p>தூத்துக்குடியைச் சேர்ந்தவர் வின்சென்ட் ஜான் (வயது 69), 1980-களில் டெல்லியில் சுற்றுலா வழிகாட்டியாக பணியாற்றி வந்த ஓட்டல்களில் தங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ஓட்டலில் நேரிட்ட அவமானத்திற்கு பழிவாங்கும் நோக்குடன், 1996 முதல் 30 ஆண்டுகளாக ஸ்டார் ஓட்டல்களை ஏமாற்றுவதை தொழிலாக மாற்றியுள்ளார்.</p><h2>300-க்கும் மேற்பட்ட ஓட்டல்களில் கைவரிசை</h2><p>கண்ணியமான தோற்றம், சரளமான ஆங்கில அறிவு ஆகியவற்றைப் பயன்படுத்தி தன்னை ஒரு யோகா ஆசிரியர், ஆங்கில ஆசிரியர் அல்லது சுற்றுலா வழிகாட்டியாக ஓட்டல் ஊழியர்களிடம் அறிமுகம் செய்து நம்பிக்கையைப் பெறுவதில் வல்லவராக இருந்துள்ளார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம், கோவா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட், தெலுங்கானா, சத்தீஸ்கர் என்று பல மாநிலங்களில் உள்ள 300-க்கும் மேற்பட்ட சொகுசு ஓட்டல்களில் இவர் கைவரிசை காட்டியுள்ளார்.</p><p>ஓட்டல் அறைகளை முன்பதிவு செய்யும்போது இரண்டு பைகளுடன் வரும் இவர், ஒரு பையில் துணிகளையும், மற்றொரு பையில் பழைய செய்தித்தாள்கள் அல்லது தலையணைகளையும் நிரப்பி எடுத்து வருவார். வெளியில் செல்லும்போது ஊழியர்களுக்கு சந்தேகம் வராமல் இருக்க, செய்தித்தாள்கள் உள்ள பையை அறையிலேயே விட்டுவிட்டு, தனது துணிப்பையுடன் ஓட்டல் அறையில் இருக்கும் லேப்டாப், விலை உயர்ந்த வெளிநாட்டு மதுபானங்கள், சிகரெட்டுகள் போன்ற மதிப்புமிக்க பொருட்களைத் திருடிக் கொண்டு நைசாகத் தப்பி விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.</p><h2>ஒடிசாவில் கைது</h2><p>இந்த நிலையில் கடந்த ஜூன் 25-ம் தேதியன்று சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள ஆடம்பர ஓட்டலில் 2 நாட்கள் தங்கிய வின்சென்ட் ஜான், ஊழியரை ஏமாற்றி ரூ.1.48 லட்சம் மதிப்புள்ள லேப்டாப்பைப் பெற்றுக்கொண்டதுடன், ரூ.63,755 பில் தொகையைச் செலுத்தாமல் ஜூன் 27-ம் தேதியன்று தப்பியுள்ளார். ஓட்டல் நிர்வாகத்தின் புகாரைத் தொடர்ந்து சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் ஒடிசா மாநிலத்தின் தலைநகர், புவனேஸ்வரில் வைத்து இவரைப் போலீசார் கைது செய்தனர். டெல்லி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இவர் மீது ஏமாற்று வழக்குகள் இருப்பதும், பலமுறை போலீசாரின் பிடியில் சிக்கினாலும் தொடர்ந்து இந்த மோசடிகளில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தாமிரபரணி நதியை மாசுபட அனுமதிக்க முடியாது: ஐகோர்ட்டு மதுரை கிளை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cannot-allow-the-thamirabarani-river-to-be-polluted-madurai-bench-of-the-high-court</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cannot-allow-the-thamirabarani-river-to-be-polluted-madurai-bench-of-the-high-court#comments</comments><guid isPermaLink="false">9a38ee9d-61c7-4968-8b0b-9343f30b526e</guid><pubDate>Sat, 11 Jul 2026 08:22:40 +0000</pubDate><atom:updated>2026-07-11T08:22:40.737Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>தாமிரபரணி ஆறு,thamirabarani,மதுரை ஐகோர்ட்டு,Court,river</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/46zbq9lg/15.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/46zbq9lg/15.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>தாமிரபரணி ஆற்றின் மாசுபாடு தொடர்பான முக்கிய வழக்கு இன்று ஐகோர்ட்டு மதுரை கிளையில் விசாரனைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, தாமிரபரணி ஆற்றின் தற்போதைய நிலை குறித்து கவலை தெரிவித்தது.</p><p>ஈமச்சடங்குகள் பெயரில் ஆற்றில் கொட்டப்படும் பொருட்கள் பாபநாசம் முதல் தாமிரபரணி ஆற்றங்கரை வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள்நீராடுவதோடு, இறந்தவர்களுக்கான ஈமச்சடங்குகளையும் மேற்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், மதத்தின் பெயரில்கூட எந்த நீர்நிலையையும் மாசுபடுத்த யாருக்கும் உரிமை இல்லை. பாலியஸ்டர் போன்ற பொருட்கள் நீரில் மக்காமல் நீடிப்பதால், அவை ஆற்றின் சுற்றுச்சூழலுக்கும், உயிரினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, இந்திய கரு ஆமைகள் துணிகளில் சிக்கி உயிரிழக்கின்றன. </p><p>மக்களின் மத நம்பிக்கைகளை நீதிமன்றம் கேள்விக்குட்படுத்த விரும்பவில்லை. ஆனால் அந்த நடைமுறைகள் சுற்றுச்சூழலுக்கும் பிறரின் உரிமைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது. ஆற்றங்கரை அருகே கட்டப்பட்டு வரும் குளத்தை ஈமச்சடங்குகளுக்குப் பயன்படுத்தும் மாற்று வழியையும் பரிசீலிக்கலாம்.</p><p>தாமிரபரணி ஆற்றில் மேலும் மாசுபாடு ஏற்படாமல் தடுக்க எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிடவும், நிரந்தரத் தீர்வுக்கான பரிந்துரைகளை தாக்கல் செய்யவும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜூலை 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.</p> ]]></content:encoded></item><item><title>கருணை அடிப்படையில் அரசு வேலை: விவசாயத் தியாகிகள் குடும்பங்களுக்கும் வழங்க வேண்டும் - ஈ.ஆர்.ஈஸ்வரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-jobs-on-compassionate-grounds-families-of-agricultural-martyrs-should-also-be-provided-er-easwaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-jobs-on-compassionate-grounds-families-of-agricultural-martyrs-should-also-be-provided-er-easwaran#comments</comments><guid isPermaLink="false">5879ecb4-6119-4c23-99ba-95bf410dea89</guid><pubDate>Sat, 11 Jul 2026 08:09:10 +0000</pubDate><atom:updated>2026-07-11T08:09:10.564Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,அரசு வேலை,Government job,Agricultural,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி,கருணை அடிப்படை,ஈ.ஆர்.ஈஸ்வரன்,E.R. Easwaran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/qdoie3qb/222.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஈ.ஆர். ஈஸ்வரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/qdoie3qb/222.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%88.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%20%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">ஈ.ஆர். ஈஸ்வரன்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-           </p><p>1970 களில் விவசாயத்திற்கான மின் கட்டணம் ஏற்றப்பட்டதை குறைக்க வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். அப்போதைய அரசாங்கம் போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டு 63 பேர் தமிழ்நாடு முழுவதும் காவல்துறையால் சுடப்பட்டார்கள். அதற்குப் பிறகு நடந்த பல்வேறு அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு விவசாயிகளுக்கு கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்பட்டது. </p><h2>விவசாயம்</h2><p>தொடர்ந்து விவசாயிகள் கட்டணமில்லா மின்சாரத்தை பயன்படுத்தி விவசாயத்தை செய்து வருகிறார்கள். இந்த வசதியால் மட்டும் தான் தமிழகத்தில் விவசாயம் தொடர்ந்து நடக்கின்றது. போராட்டத்தில் உயிர் நீத்த விவசாயிகளுக்கு தமிழ்நாடு முழுவதும் நினைவு தூண்கள் அமைத்து அந்தந்த பகுதி விவசாயிகள் வருடம் தோறும் அவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்ட நாளில் நினைவஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.</p><h2>அரசு வேலை</h2><p>கடந்த காலங்களில் எங்களுடைய கோரிக்கைகளை ஏற்று உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. கடந்த பல வருடங்களாக தொடர்ந்து விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்க காரணமாக இருந்த, உயிர் நீத்த தியாகிகளுடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தி வருகின்றோம். தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளுடைய வாழ்வாதாரத்திற்கு அடித்தளம் அமைத்து கொடுத்தவர்கள் அவர்கள். பல்வேறு அரசுகளிடம் கருணை அடிப்படையில் அரசு வேலை கோரிக்கை வைத்தும் அது நிறைவேறவில்லை.</p><h2>முதல்-அமைச்சர்</h2><p>தற்போதைய அரசு கரூரில் அரசியல் நிகழ்ச்சியில் உயிரிழந்த குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கியிருப்பதை பார்க்கின்றோம். அரசியல் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கலாம் என்றால் தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து விவசாயிகளின் குடும்பங்கள் வாழ்வதற்காக உயிர்த்தியாகம் செய்த தியாகிகளின் குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கக் கூடாதா? ஒவ்வொரு முறை மேடையில் பேசும்போதும் விவசாயிகளோடு உடனிருப்பேன் என்று பேசுகின்ற இன்றைய முதல்-அமைச்சர் கனிவோடு பரிசீலித்து விவசாய மின் கட்டண உயர்வுக்காக போராடி உயிர் நீத்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு கருணையோடு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்க முன்வர வேண்டும். </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாமன்னர் அழகுமுத்துக்கோன் வீரப்பெரும்புகழ் போற்றுவோம் - சீமான்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-praise-the-heroic-deeds-of-his-majesty-king-azhagumuthugon-seeman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-praise-the-heroic-deeds-of-his-majesty-king-azhagumuthugon-seeman#comments</comments><guid isPermaLink="false">8f24325e-3dcf-4008-8778-d47e21850ee1</guid><pubDate>Sat, 11 Jul 2026 07:46:50 +0000</pubDate><atom:updated>2026-07-11T07:46:50.230Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,Seeman,மாவீரன் அழகுமுத்துக்கோன்,Azhagumuthukon</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/vz6ifvlz/seeman.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சீமான்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/vz6ifvlz/seeman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>வீரம் விளைந்த கட்டாலங்குளம் மண்ணைக் கட்டி ஆண்ட மாமன்னர்..!ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மறப்போர் புரிந்த மாவீரன்..! வெள்ளையர் பீரங்கிகளுக்கு எதிர் நின்றபோதும் வெள்ளைக்கொடி ஏந்த மறுத்த மண்ணுரிமை போராளி..!</p><h2>வரலாற்று நாயகன்</h2><p>அடிமை வாழ்விலும், உரிமைச்சாவு மேலானது என்ற உயரிய இலட்சிய உறுதியுடன் தாயகம் காக்க தன்னுடைய 6 தளபதிகள் மற்றும் 248 போர் வீரர்களுடன் நடுக்காட்டூரில்  இன்னுயிர் ஈந்து வீரகாவியமாய் ஆன <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வரலாற்று நாயகன்</a>..! விடுதலைப்பேரொளி, வீரத்திருமகன், நம்முடைய பாட்டன் மாமன்னர் அழகுமுத்துக்கோன் வீரப்பெரும்புகழ் போற்றுவோம்!</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>விடுதலை கனலை நம் மண்ணில் மூட்டிய மாபெரும் வீரர் அழகுமுத்துக்கோன்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/azhagumamuthukon-is-a-great-warrior-who-ignited-the-fire-of-freedom-in-our-land-dmk-leader-mkstalins-post</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/azhagumamuthukon-is-a-great-warrior-who-ignited-the-fire-of-freedom-in-our-land-dmk-leader-mkstalins-post#comments</comments><guid isPermaLink="false">c5abe90e-6531-4d20-bd17-bcb6e53d93ef</guid><pubDate>Sat, 11 Jul 2026 07:44:04 +0000</pubDate><atom:updated>2026-07-11T07:44:04.847Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,birthday,X Page,எக்ஸ் பதிவு,பிறந்தநாள்,தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்,DMK President M.K.Stalin,மாவீரன் அழகுமுத்துக்கோன்,Azhagumuthukon</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/ol8wpfmn/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாவீரன் அழகுமுத்துக்கோன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/ol8wpfmn/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>விடுதலைப் போராட்டத்துக்கான வீர வித்தாய் மக்கள் மனங்களில் ஊன்றப்பட்ட அழகுமுத்துக்கோன் பிறந்தநாளில் அவருக்கு என் வீர வணக்கம் என்று <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்</a> தெரிவித்துள்ளார்.</p><p>சுதந்திரப் போராட்ட வீரர், மாவீரன் அழகுமுத்துக்கோன் 269-வது பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: </p><p>சிப்பாய்ப் புரட்சிக்கு நூறாண்டுகளுக்கு முன்பே விடுதலைக் கனலை நம் மண்ணில் மூட்டிய மாபெரும் வீரர் அழகு முத்துக்கோன்.</p><p>அடிமையாய் உயிர்வாழ்வதைக் காட்டிலும் அடக்குமுறைக்கு எதிராக வீரத்துடன் போராடி மடிவதே மேல் என விடுதலைப் போராட்டத்துக்கான வீர வித்தாய் மக்கள் மனங்களில் ஊன்றப்பட்ட அழகு முத்துக்கோன் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என் வீர வணக்கம்! </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>விழுப்புரத்தில் இருந்து புறப்படும் ரெயில் சேவைகளில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-train-services-departing-from-villupuram</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-train-services-departing-from-villupuram#comments</comments><guid isPermaLink="false">e08d5b38-e20d-41e0-84e2-f4f33d73f562</guid><pubDate>Sat, 11 Jul 2026 07:36:38 +0000</pubDate><atom:updated>2026-07-11T07:36:38.267Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>ரெயில் சேவை,விழுப்புரம்,Villupuram,Train Services</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/27v0adf7/14.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/27v0adf7/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விழுப்புரம்,</p><p>விழுப்புரம் யார்டில் பொறியியல் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக மெமு ரெயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன் விபரம் பின்வருமாறு;</p><p>வருகிற 12, 13, 14, 15, 17, 18, 25 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பின்வரும் மெமு ரெயில் சேவைகள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.</p><p>*திருப்பதியில் இருந்து அதிகாலை 4.10 மணிக்கு புறப்படும் வண்டி எண்: 16111, திருப்பதி புதுச்சேரி மெமு எக்ஸ்பிரஸ், முண்டியம்பாக்கம் மற்றும் புதுச்சேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.</p><p>*புதுச்சேரியில் இருந்து மாலை 3.35 மணிக்கு புறப்படும் வண்டி எண்: 66052, புதுச்சேரி-எழும்பூர் மெமு பயணிகள் ரெயில் புதுச்சேரி மற்றும் முண்டியம்பாக்கம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.</p><p>* நாளை முதல் (12-ந்தேதி), 13, 14, 15, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பின்வரும் மெமு ரெயில் சேவைகள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. </p><p>*விழுப்புரத்தில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்படும் வண்டி எண்: 66046, விழுப்புரம் சென்னை கடற்கரை மெமு பயணிகள் ரெயில், விழுப்புரம் மற்றும் முண்டியம்பாக்கம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.</p><p>*தாம்பரத்தில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்படும் வண்டி எண்: 66045, தாம்பரம் விழுப்புரம் மெமு பயணிகள் ரெயில், முண்டியம்பாக்கம் மற்றும் விழுப்புரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.</p><p>*புதுச்சேரியில் இருந்து மதியம் 2.40 மணிக்கு புறப்படும் வண்டி எண்: 16112, புதுச்சேரி திருப்பதி மெமு எக்ஸ்பிரஸ், புதுச்சேரியில் இருந்து மாலை 3.40 மணிக்கு புறப்படும்.</p> ]]></content:encoded></item><item><title>பன்னாட்டு நிறுவனத்திற்கு சேலம் மாநகராட்சியின் தண்ணீர் விநியோகத்தைத் தாரைவார்ப்பதா? - சீமான் கேள்வி
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-salem-corporation-handing-over-water-supply-operations-to-a-multinational-company-seeman-questions</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-salem-corporation-handing-over-water-supply-operations-to-a-multinational-company-seeman-questions#comments</comments><guid isPermaLink="false">8defe6af-76b1-41ba-a875-6f5184e69e77</guid><pubDate>Sat, 11 Jul 2026 07:16:37 +0000</pubDate><atom:updated>2026-07-11T07:16:37.616Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,Seeman,water supply,தண்ணீர் விநியோகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/by7jizs1/13.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/by7jizs1/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; </p><p>”சேலம் மாநகராட்சியின் குடிநீர் வியோகத்தை 25 ஆண்டுகளுக்கு சூயஸ் எனும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்குத் தாரைவார்த்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. அர்ஜென்டினா மற்றும் பொலிவியா நாடுகளுக்குள் குடிநீர் விநியோகம் செய்வதாய் உள்நுழைந்து, தண்ணீரை விற்பனைப் பண்டமாக்கி, அம்மண்ணின் நீர்வளத்தைச் சூறையாடி, அந்நாட்டு மக்களால் துரத்தியடிக்கப்பட்ட சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டு, சேலம் மாநகரத்தின் நீர் விநியோகத்தை வழங்கியிருக்கும் தவெக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. </p><p> நீர் என்பது மனிதர்களுக்கு மட்டுமானதல்ல; அது புல், பூண்டு, பூச்சி, ஆடு, மாடு, கரடி, மான், புலி, சிங்கம் என உலகில் வாழும் அத்தனை உயிர்களுக்குமான உயிருடைமை. அதனை மனிதர்களுக்கு மட்டுமானதாக்கி, விற்பனைப்பண்டமாக மாற்றி, சந்தைப்படுத்திப் பொருளீட்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. நீரை விற்பனை செய்யும் மானுடகுலத்தின் செயல் உலக உயிர்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும். புட்டிகளிலும், போத்தல்களிலும் அடைக்கப்பட்டுள்ள நீரை மனிதர்கள் விலைகொடுத்து வாங்கிப் பருகிவிட முடியும். காக்கையும், குருவியும், மைனாவும், சிட்டும் தனது தாகத்திற்கு என்ன செய்யும்? எனும் கேள்வியை உளச்சான்றோடு ஒவ்வொரு குடிமகனும் எழுப்ப வேண்டும். தண்ணீர் விநியோகத்தைத் தனியார்மயமாக்குவதும், குடிநீரை சந்தைப்பொருள் ஆக்குவதும் ஏற்கவே முடியாத சனநாயகத் துரோகம். வரிசெலுத்தி, வாக்குச் செலுத்தி ஓர் அரசை நிர்மாணிக்கும் குடிமக்களுக்கு தூய குடிநீரைத் தங்குதடையின்றித் தர வேண்டியது ஒரு அரசின் தலையாயப் பொறுப்பும், முதன்மைக் கடமையுமாகும்.</p><p>கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோகம் தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிடப்பட்டு, அதற்கெதிராகப் பரப்புரையும், போராட்டமும் செய்து வரும் நிலையில், தற்போது சேலம் மாநகரத்தின் குடிநீர் விநியோகத்தை அதே சூயஸ் நிறுவனத்திடம் தவெக அரசு கையளித்திருப்பது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையைத் தன்னுடைய நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் விஜய் அவர்கள் குடிநீர் வழங்குவதைத் தனியாருக்குத் தாரைவார்க்க உத்தரவிட்டது ஏன்? பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தால் குடிநீர் விநியோகத்தைச் சிறப்பாகச் செய்ய முடியும்; இவ்வளவு பெரிய நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்ட ஒரு அரசு இயந்திரத்தால் செய்ய முடியாதா? பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகள் இலாபத் தேவைக்குத்தான் வேலைசெய்வார்களே ஒழிய, மக்கள் சேவைக்கு ஒருநாளும் வேலை செய்ய மாட்டார்கள் எனும் அடிப்படைப் புரியாதா? நீர்வளத்தையும், நீராதாரங்களையும் பன்னாட்டு நிறுவனங்களிடம் கையளித்தால், நீர் இறையாண்மை முழுக்க முழுக்க அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும். அவர்கள் சொல்கிற விலைக்குக் குடிநீரை மக்கள் வாங்க வேண்டியப் பேராபத்துமிக்க சூழல் நாளை உருவாகும். இது வருங்காலத் தலைமுறையின் நலவாழ்வினைப் பன்னாட்டு நிறுவனத்திடம் அடமானம் வைக்கும் பேரபாயம். அர்ஜென்டினாவிலும், பொலிவியாவிலும் சூயஸ் நிறுவனம் செய்த மானுடகுலக் கொடுமைகள் வரலாறாக விரிகையில், கண்முன்னே சாட்சியாக இருக்கையில், அந்நிறுவனத்திடமே சேலம் மாநகரத்தின் நீர்விநியோகத்தை வழங்குவது மக்கள் விரோதப்போக்கின் உச்சமாகும். </p><p>ஆகவே, சேலம் மாநகராட்சியின் குடிநீர் விநியோகத்தை சூயஸ்  நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தத்தை உடனடியாகத் திரும்பப் பெற்று, மாநில அரசே தரமான குடிநீரை மக்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டுமென தவெக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.”</p><p>இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>அழகுமுத்துக்கோன் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் மரியாதை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tribute-paid-by-the-government-of-tamil-nadu-on-the-occasion-of-azhagumuthu-kones-birth-anniversary</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tribute-paid-by-the-government-of-tamil-nadu-on-the-occasion-of-azhagumuthu-kones-birth-anniversary#comments</comments><guid isPermaLink="false">29c68aa8-d553-4374-85d3-c6cc6c97f3b9</guid><pubDate>Sat, 11 Jul 2026 07:05:46 +0000</pubDate><atom:updated>2026-07-11T07:05:46.588Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,Government of Tamil Nadu,அழகுமுத்துக்கோன்,Azhagumuthu Kone</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/enyqbdfj/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/enyqbdfj/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுதந்திரப்போராட்ட வீரர் அழகுமுத்து கோன் பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் அவரை புகழந்து தங்களது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். </p><p>இந்த நிலையில், அழகுமுத்துக்கோன் பிறந்ததினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அரசு சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் அரசு அதிகாரிகள் சென்னையில் உள்ள அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். </p> ]]></content:encoded></item><item><title>நடத்தையில் சந்தேகம்.. சுத்தியலால் அடித்து பெண்ணை கொன்ற கொடூர கணவர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/suspicion-over-conduct-brutal-husband-kills-wife-by-striking-her-with-a-hammer</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/suspicion-over-conduct-brutal-husband-kills-wife-by-striking-her-with-a-hammer#comments</comments><guid isPermaLink="false">087167e5-25b8-4d35-999e-bb4954e7dc43</guid><pubDate>Sat, 11 Jul 2026 07:05:28 +0000</pubDate><atom:updated>2026-07-11T07:05:28.903Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ராமநாதபுரம்,Ramanathapuram,மனைவி கொலை,Husband arrested,Wife murdered,நடத்தை சந்தேகம்,கணவர்  கைது</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/z5oxmo5l/kurukk.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/z5oxmo5l/kurukk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமநாதபுரம்,</p><p>நடத்தையில் சந்தேகத்தால் சுத்தியலால் அடித்து பெண் கொடூரமாக <a href="https://www.dailythanthi.com/topic/கொலை">கொலை</a> செய்யப்பட்டார். இது தொடர்பாக 2-வது கணவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.</p><h2>நடத்தையில் சந்தேகம்</h2><p>ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் பழனி(வயது 50). கட்டிட தொழிலாளி. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் ராணி (47). இவர் பூக்கள் கட்டி விற்றும், கட்டிட வேலைக்கு சென்றும் வந்தார். இவருக்கும் திருமணமாகி மகள்கள், மகன்கள் உள்ளனர்.</p><p>இந்நிலையில் பழனிக்கும், ராணிக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக திருவள்ளுவர் நகரில் கணவன், மனைவியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.</p><p>இதற்கிடையே ராணியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக பழனி அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்தாராம். நேற்று முன்தினம் இரவு மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.</p><h2>சுத்தியலால் அடித்துக்கொலை</h2><p>அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த பழனி வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து மனைவி ராணியின் தலை மற்றும் முகத்தில் தாக்கி உள்ளார். இதில் முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே ராணி பரிதாபமாக இறந்தார். பின்னர் பழனி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.</p><p>நேற்று காலை ராணியின் மகள் அவரை பார்ப்பதற்காக வீட்டுக்கு வந்தார். அங்கு ராணி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் பரமக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.</p><p>அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். ராணியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனியை தேடி வருகின்றனர். இந்த பயங்கர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&quot;இந்துக்களுக்கு எதிரான அரசு&quot; - ராஜ்மோகனை கடுமையாக விமர்சித்த நயினார் நாகேந்திரன்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-against-hindus-nainar-nagendran-harshly-criticizes-rajmohan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-against-hindus-nainar-nagendran-harshly-criticizes-rajmohan#comments</comments><guid isPermaLink="false">42121d01-6467-4bd0-a044-76e9eee7947e</guid><pubDate>Sat, 11 Jul 2026 06:57:47 +0000</pubDate><atom:updated>2026-07-11T06:57:47.884Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,இந்து,hindu,அமைச்சர் ராஜ்மோகன்,Rajmohan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/fsdzyged/47.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/fsdzyged/47.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>நேற்று கரூரில் நடந்த விழாவில் “Praise the Lord, அஸ்ஸலாமு அலைக்கும்” என்று பிற மதத்தினரின் கடவுள்களை வணங்கிவிட்டு, இந்துக் கடவுள்களை வேண்டுமென்ற ஒதுக்கிய, உங்களைப் போன்ற இந்துமத வெறுப்பாளர்கள் உள்ளவரை, “மதநல்லிணக்கம்” என்பது சமூகத்தில் மருந்திற்கும் படராது. “அனைவருக்குமான ஆட்சி” என்று கூறிக்கொண்டு இந்து மதத்தின் மீது மட்டும் இப்படி வெளிப்படையாக ஒவ்வாமையை காட்டுவது கடும் கண்டனத்திற்குரியது.  </p><h2>வன்ம அரசியல்</h2><p>கடந்த ஆண்டு உங்கள் தலைவரை பார்க்க கரூரில் கூடிய கூட்டத்தில் சிக்கி, சின்னஞ்சிறு குழந்தைகள் உட்பட 41 பேர் அநியாயமாக உயிரிழந்தனர். அப்பொழுது நேரில் வந்து ஆறுதல் சொல்ல திராணியின்றி ஓடி, ஒளிந்த நீங்களும் உங்கள் தலைவரும் கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து, நேற்றைக்கு தான் வழி கண்டுபிடித்து கரூருக்கு வந்தீர்கள். அப்படியிருக்கையில் வந்த வேலையை விட்டு விட்டு, ஆறுதல் கூறும் நிகழ்விலும் கூட, இந்துக்களின் மீது இப்படியொரு வன்ம அரசியலைத் தொடுக்கும் உங்களைப் போன்ற அழுகிய சிந்தனை கொண்டவர்களை தமிழகம் என்றுமே மன்னிக்காது. </p><h2>இந்துக்களுக்கு எதிரான அரசு</h2><p>காரணம், தமிழகம் அடிப்படையில் ஓர் ஆன்மீக பூமி. நாம் காலங்காலமாக போற்றிப் பாதுகாத்து வரும் நமது தமிழ் இலக்கியங்களும், புராணங்களும் சிவன், திருமால், முருகன் உள்ளிட்ட இந்துக் கடவுள்களையே ஆராதிக்கின்றன. ஆனால், இவையனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, “வாக்கு வங்கி”யை மட்டுமே மனதில் வைத்து, உங்கள் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">தவெக அரசை</a> இந்துக்களுக்கு எதிரான அரசாக நிலைநிறுத்தியுள்ள நீங்களும், அதை மௌனமாக ஆதரிக்கும் உங்கள் தலைமையும் கூடிய விரைவில் இதற்கான விளைவுகளை எதிர்கொள்வீர்கள்!</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் 14-ம்தேதி மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-thoothukudi-on-the-14th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-thoothukudi-on-the-14th#comments</comments><guid isPermaLink="false">2b47a7c8-dd27-44be-8a43-8fce4c32a598</guid><pubDate>Sat, 11 Jul 2026 06:57:35 +0000</pubDate><atom:updated>2026-07-11T06:57:35.625Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,monthly maintenance work,power outage,மாதாந்திர பராமரிப்பு பணி,மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/tvbhu8lm/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/tvbhu8lm/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி சிப்காட் துணை மின்நிலையத்தில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் நடைபெற உள்ளதால் வருகிற 14-ம் தேதி செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை</h2><p>இது தொடர்பாக தூத்துக்குடி நகர் மின் விநியோகப் பிரிவு செயற்பொறியாளர் சின்னத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்தில் வரும் 14.7.2026, செவ்வாய்க்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.</p><p>அதன்படி மடத்தூர், மடத்தூர் மெயின் ரோடு, முருகேசநகர், கதிர்வேல்நகர், தேவகிநகர், சிப்காட் வளாகம், திரவியரத்தின நகர், அசோக் நகர், ஆசிரியர் காலனி, ராஜீவ் நகர், சின்னமணிநகர், 3வதுமைல், புதுக்குடி, டைமண்ட்காலனி, EB காலனி, ஏழுமலையான் நகர், மில்லர்புரம், ஹவுசிங் போர்டு பகுதிகள், அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு குடியிருப்புகள், ராஜகோபால் நகர், பத்தினாதபுரம், </p><p>சங்கர் காலனி, FCI குடோன் பகுதிகள், நிகிலேசன் நகர், சோரிஸ்புரம், மதுரை பைபாஸ் ரோடு, ஆசீர்வாத நகர், சில்வர்புரம், சுப்பிரமணியபுரம், கங்கா பரமேஸ்வரி காலனி, லாசர் நகர், ராஜரத்தின நகர், பாலையாபுரம், வி.எம்.எஸ். நகர், முத்தம்மாள் காலனி, நேதாஜி நகர், லூசியா காலனி, மகிழ்ச்சி புரம், ஜோதி நகர், பால்பாண்டி நகர், முத்துநகர், கந்தன் காலனி, காமராஜ் நகர், NGO காலனி, அன்னை தெரசா நகர், </p><p>பர்மா காலனி, TMB காலனி, அண்ணாநகர் 2வது நகர் மற்றும் 3வது நகர், கோக்கூர், சின்னக்கண்ணுபுரம், பாரதி நகர், புதூர்பாண்டியபுரம் மெயின் ரோடு, கிருபை நகர், அகில இந்திய வானொலி நிலையம், ஹரிராம்நகர், கணேஷ்நகர், புஷ்பாநகர், ஸ்டெர்லைட் குடியிருப்புகள், கலெக்டர் அலுவலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வெளி மாநிலங்களுக்கு எம்.சாண்ட் கொண்டு செல்ல தற்காலிக தடை போட அதிகாரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/authority-to-impose-a-temporary-ban-on-transporting-m-sand-to-other-states</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/authority-to-impose-a-temporary-ban-on-transporting-m-sand-to-other-states#comments</comments><guid isPermaLink="false">1fef62b2-aef3-4968-b7f3-c711535c0ea8</guid><pubDate>Sat, 11 Jul 2026 06:38:44 +0000</pubDate><atom:updated>2026-07-11T06:38:44.365Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Transport,ban,தற்காலிக தடை,வெளிமாநிலங்கள்,எம்.சாண்ட்,m-sand</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/gcxg6ra3/sand.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/gcxg6ra3/sand.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>எம் சாண்ட் உள்ளிட்ட கனிமங்கள் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்வதை தடை விதிக்க தற்காலிகமாக தடை விதிக்க சுரங்கம் மற்றும் புவியியல் துறை இயக்குனருக்கு அதிகாரம் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. </p><h2>எம்.சாண்ட்</h2><p>எம்.சாண்டை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்வதை ஒழுங்குபடுத்தவும் இயக்குநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் போதுமான அளவில் எம்.சாண்ட் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>தமிழ்நாடு அரசு</h2><p>முன்னதாக கட்டுக்கடங்காத விலை உயர்வை கட்டுப்படுத்தவும், கட்டுமான தொழில் முடக்கத்தை தடுத்து நிறுத்தவும் தமிழக அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வந்தன. இந்நிலையில், கேரளா, கர்நாடகாவுக்கு கனிமங்களை கொண்டு செல்வதை தடுத்து, தமிழ்நாட்டில் போதுமான அளவில் கனிமங்கள் கிடைப்பதை உறுதி செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>திடக்கழிவு மேலாண்மையில் புதிய நடைமுறை; 4 வகையாக குப்பையை பிரிக்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-practice-in-solid-waste-management-chennai-corporation-instructs-to-separate-garbage-into-4-categories</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-practice-in-solid-waste-management-chennai-corporation-instructs-to-separate-garbage-into-4-categories#comments</comments><guid isPermaLink="false">23b4c5bf-afb7-43ba-a67f-bd1416eec8ea</guid><pubDate>Sat, 11 Jul 2026 06:31:53 +0000</pubDate><atom:updated>2026-07-11T06:31:53.498Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Corporation,சென்னை மாநகராட்சி,புதிய நடைமுறை,திடக்கழிவு மேலாண்மை,Solid Waste Management</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/2k8m02ge/chennai-corporation.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/2k8m02ge/chennai-corporation.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர், தமிழ்நாட்டில் திடக்கழிவுகளை மேலாண்மை பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்கு ஏதுவாக, திடக்கழிவுகள் உருவாகும் இடத்திலேயே முறையாக மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதாரக் கழிவுகள் மற்றும் அபாயகரமான கழிவுகள் என தரம் பிரித்து பெற்று அகற்றிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்கள்.</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, ’<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பெருநகர சென்னை மாநகராட்சியில் </a>திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்கு ஏதுவாக, அனைத்து குடியிருப்புவாசிகள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் (Bulk Waste Generators) ஆகியோர் திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-இன்படி திடக்கழிவுகளை உருவாகும் இடத்திலேயே தரம் பிரித்து பெருநகர சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்</p><h2>நான்கு வகை</h2><p>திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-ன் படி, கழிவுகளை பின்வரும் நான்கு வகைகளாகப் பிரித்து வழங்க வேண்டும்:</p><p>மக்கும் கழிவுகள் (பச்சை நிறக் குப்பைத்தொட்டி): உணவுக் கழிவுகள், காய்கறி மற்றும் பழத்தோல்கள், பூக்கள் மற்றும் பிற மக்கும் கழிவுகள்.</p><p>மக்காத கழிவுகள் (நீல நிறக் குப்பைத்தொட்டி): காகிதம், பிளாஸ்டிக், உலோகம், அட்டைப்பெட்டிகள், துணி மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள்.</p><p>சுகாதாரக் கழிவுகள் (சிவப்பு நிறக் குப்பை தொட்டி): பயன்படுத்தப்பட்ட சானிட்டரி நாப்கின்கள், டயப்பர்கள், பயன்படுத்தப்பட்ட மருத்துவக் கட்டுப் பொருட்கள் போன்றவற்றை பாதுகாப்பாக சுற்றி தனியாக வழங்க வேண்டும்.</p><p>வீட்டு அபாயகரக் கழிவுகள் / சிறப்பு கவனம் தேவைப்படும் கழிவுகள் (கருப்பு நிறக் குப்பைத்தொட்டி): பேட்டரிகள், மின் விளக்குகள், டியூப் லைட்கள், மின்னணுக் கழிவுகள், காலாவதியான மருந்துகள், பெயிண்ட் டப்பாக்கள் உள்ளிட்ட அபாயகரக் கழிவுகளை தனியாக ஒப்படைக்க வேண்டும்.</p><h2>தனிநபரின் பொறுப்பு</h2><p>கழிவுகளை உருவாகும் இடத்திலேயே தரம் பிரிப்பது ஒவ்வொரு தனிநபரின் பொறுப்பாகும். இதன்மூலம் மக்கும் கழிவுகளை உரமாக மாற்றவும், மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை மீட்டெடுக்கவும், குப்பைக் கிடங்குகளுக்கு அனுப்பப்படும் கழிவுகளின் அளவை குறைக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்தவும் முடியும். பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் வீடுகள்தோறும் தரம் பிரிக்கப்பட்ட கழிவுகளை சேகரிக்க தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-இல் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு வகை கழிவு தரம் பிரிப்பு முறையை திறம்பட செயல்படுத்தும் வகையில், மாநகராட்சியின் அனைத்து பேட்டரி மூலம் இயக்கப்படும் கழிவு சேகரிப்பு வாகனங்களிலும் (Battery Operated Vehicles - BOVs), கழிவுகளின் நான்கு வகைகளையும் தனித்தனியாக சேகரிப்பதற்காக நான்கு வண்ண அடையாளங்களுடன் கூடிய தனித்தனி குப்பைத் தொட்டிகள் (Compartments) வைக்கப்பட்டுள்ளன.</p><h2>விழிப்புணர்வு பணிகள்</h2><p>எனவே, பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் அனைவரும் தரம் பிரிக்கப்பட்ட கழிவுகளை மட்டுமே பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கழிவுகள் உருவாகும் இடத்திலேயே பிரித்தல் மற்றும் அறிவியல் முறையிலான திடக்கழிவு மேலாண்மையை ஊக்குவிக்கும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தகவல்–கல்வி–தொடர்பு (IEC) நடவடிக்கைகள், பள்ளிகள் மற்றும் சமூக அமைப்புகள் மூலம் தொடர்ச்சியான விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.</p><h2>சட்டப்படியான அபராதம்</h2><p>தூய்மையான, ஆரோக்கியமான மற்றும் நிலைத்தன்மை வாய்ந்த சென்னையை உருவாக்குவதில் பொதுமக்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். எனவே, அனைத்து பொதுமக்களும் தங்களது வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் தினந்தோறும் உருவாகும் கழிவுகளை உருவாகும் இடத்திலேயே தரம் பிரித்து பெருநகர சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைத்து, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். திடக்கழிவுகளை உருவாகும் இடத்திலேயே தரம் பிரிக்கத் தவறுதல் அல்லது திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026 மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் விதிமுறைகளை மீறுதல் ஆகியவை சட்டப்படியான அபராதம் மற்றும் பிற நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் எனபும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. "திடக்கழிவுகளை உருவாகும் இடத்திலேயே தரம் பிரிப்போம் ! தூய்மையான, பசுமையான, ஆரோக்கியமான சென்னையை உருவாக்குவோம் !!"</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்த நாள்: தமிழக அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/maveeran-azhugamuthukons-birthday-tamil-nadu-ministers-pay-tribute-by-garlanding-him</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/maveeran-azhugamuthukons-birthday-tamil-nadu-ministers-pay-tribute-by-garlanding-him#comments</comments><guid isPermaLink="false">f0fc7fea-56ae-4ed3-a963-6ad7d7af2ad9</guid><pubDate>Sat, 11 Jul 2026 06:22:21 +0000</pubDate><atom:updated>2026-07-11T06:22:21.578Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,birthday,Tribute,minister,அமைச்சர்,மரியாதை,அழகு முத்துக்கோன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/hl1xt8a4/221.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/hl1xt8a4/221.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இன்று தமிழ்நாடு அரசின் சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை, எழும்பூர் ரெயில் நிலையம் அருகில் அமைந்துள்ள அவரது சிலைக்கு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D">அமைச்சர் ராஜ்மோகன்</a>, சுற்றுச்சுழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் ராஜீவ், ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். </p><h2>பங்கேற்பு</h2><p>இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் விஜய் தாமு, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை/தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளர் தட்சிணாமூர்த்தி, செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் அருண் தம்புராஜ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p> ]]></content:encoded></item><item><title>துணியை காய வைக்க முயன்ற போது 3-வது மாடியில் இருந்து விழுந்த பெண்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-critically-injured-after-falling-from-the-third-floor-while-trying-to-hang-out-clothes-to-dry</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-critically-injured-after-falling-from-the-third-floor-while-trying-to-hang-out-clothes-to-dry#comments</comments><guid isPermaLink="false">285dbc63-f6af-4b33-acc8-4b93eece4312</guid><pubDate>Sat, 11 Jul 2026 06:19:30 +0000</pubDate><atom:updated>2026-07-11T06:19:30.341Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பெண்,women,தேனாம்பேட்டை,படுகாயம்,injured,மாடியில் இருந்து தவறி விழுந்தார்,balcony collapse</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/a0kd7ldz/lady-fall-in-3rd-floor.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ 3-வது மாடி]]></media:title><media:description type="html"><![CDATA[ 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/a0kd7ldz/lady-fall-in-3rd-floor.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் துணியையை காய வைக்க முயன்ற போது 3-வது மாடியில் இருந்து விழுந்து படுகாயமடைந்தார். </p><h2>விபத்து</h2><p>சென்னை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தேனாம்பேட்டை</a> பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் லட்சுமி (வயது 34) என்ற பெண் வசித்து வருகிறார். லட்சுமி இன்று காலை தனது வீட்டின் மூன்றாவது மாடி பால்கனியில் துணிகளை உலர்த்தச் சென்றுள்ளார். </p><p>அப்போது, பால்கனியின் தடுப்புச் சுவரில் சாய்ந்தபடி துணிகளை காய வைக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> தடுப்புச் சுவர்</a> திடீரென இடிந்து சரிந்தது. இதில் நிலைதடுமாறிய அந்த பெண், சுவருடன் சேர்த்து மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்தார். இந்த பயங்கர விபத்தில் அவரது தலை மற்றும் உடல் பாகங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.</p><h2>தீவிர சிகிச்சை</h2><p>அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.</p><h2>பொதுமக்கள் அதிருப்தி</h2><p>இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடியிருப்பின் சுவர்கள் தரமற்ற முறையில் கட்டப்பட்டதே இந்த விபத்துக்குக் காரணம் என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அழகுமுத்துகோனின் தியாகத்தையும், துணிச்சலையும் போற்றி வணங்கிடுவோம்: டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-honor-and-pay-tribute-to-the-sacrifice-and-courage-of-azhagu-muthukoon-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-honor-and-pay-tribute-to-the-sacrifice-and-courage-of-azhagu-muthukoon-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">f5ed4e92-76be-4f28-a0bd-76f812bddf80</guid><pubDate>Sat, 11 Jul 2026 06:09:23 +0000</pubDate><atom:updated>2026-07-11T06:09:23.711Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,அழகு முத்துக்கோன்,Azhagu Muthukoon</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/hww9un7m/11.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/hww9un7m/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாவீரர் அழகுமுத்துக்கோன் பிறந்த தினத்தை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிரான இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்டவர்களில் முதன்மையானவரும்,&nbsp; போர்க்களத்தில் எதிரிகளால் எளிதில் வீழ்த்த முடியாத போர் வீரருமான அழகுமுத்துகோன் அவர்களின் பிறந்தநாள் இன்று. ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு அடிபணிய மறுத்து தாய் மண்ணின் உரிமைக்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும் தொடர்ந்து போராடி உயிர்நீத்த அழகுமுத்துகோன் அவர்களின் தியாகத்தையும், அஞ்சாத துணிச்சலையும் இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.”</p><p>இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>இலங்கைக்கு கடத்த முயற்சி: தூத்துக்குடியில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/attempt-to-smuggle-beedi-leaves-to-sri-lanka-rs17-lakhs-seized-in-thoothukudi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/attempt-to-smuggle-beedi-leaves-to-sri-lanka-rs17-lakhs-seized-in-thoothukudi#comments</comments><guid isPermaLink="false">0a6fd42b-f10c-4ed8-be29-c7608f367e9a</guid><pubDate>Sat, 11 Jul 2026 06:05:03 +0000</pubDate><atom:updated>2026-07-11T06:05:03.795Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Seizure,பறிமுதல்,Sri Lanka,beedi leaves,பீடி இலைகள்,attempted smuggling,கடத்தல் முயற்சி,இலஙகை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/6z9w1awi/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பீடி இலைகள் பறிமுதல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/6z9w1awi/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ரூ.17 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள்</a> தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரைக்கு தென்புறம் உள்ள காட்டுப் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><h2>கியூ பிரிவு போலீசார் ரோந்து பணி</h2><p>தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி நகர உட்கோட்டம், தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இனிகோ நகர் பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தபடுவதாக கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், ஏட்டுகள் இருதயராஜகுமார், இசக்கிமுத்து, முதல் நிலை காவலர்கள் பழனி, பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோர் நேற்று நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.</p><h2>கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் தப்பி ஓட்டம்</h2><p>அப்போது இனிகோ நகர் கடற்கரைக்கு தென்புறம் உள்ள காட்டுப் பகுதியில், இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்ட 30 கிலோ எடை கொண்ட 18 பீடி இலை மூட்டைகளை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். போலீசாரைக் கண்டதும் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.</p><h2>ரூ.17 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்</h2><p>இதையடுத்து கடத்தலுக்கு பயன்படுத்த வைத்திருந்த சரக்கு வாகனம் மற்றும் சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட 18 பீடி இலை மூட்டைகள் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் சர்வதேச மதிப்பு ரூ.17 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>வன்னியர் இடஒதுக்கீட்டு போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் - அன்புமணி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-should-provide-jobs-to-the-heirs-of-vanniyar-reservation-struggle-martyrs-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-should-provide-jobs-to-the-heirs-of-vanniyar-reservation-struggle-martyrs-anbumani#comments</comments><guid isPermaLink="false">11b09213-85d4-43df-b9fe-c41aadfd558d</guid><pubDate>Sat, 11 Jul 2026 06:01:14 +0000</pubDate><atom:updated>2026-07-11T06:01:14.131Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadas,அரசு வேலை,Government Jobs,வாரிசு,Vanniyar Reservation,வன்னியர் இடஒதுக்கீடு,Martyrs,தியாகிகள்,heir</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/mhvnph54/anbumani.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  அன்புமணி ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/mhvnph54/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>கரூர் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு இளநிலை உதவியாளர் உள்ளிட்ட அரசு வேலைக்கான ஆணைகளையும், பணியாற்ற முடியாத நிலையில் உள்ள ஒருவருக்கு ரூ.10 லட்சத்தையும் முதல்-அமைச்சர் விஜய் வழங்கியுள்ளார். கருணை அடிப்படையிலான இந்த உதவி வரவேற்கத்தக்கது; அதே நேரத்தில் இத்தகைய உதவிகள் ஒரு சாராருக்கு மட்டுமின்றி, பல்வேறு காலகட்டங்களில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.</p><h2>31 பேருக்கு அரசு பணி</h2><p>கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி த.வெ.க. தலைவர் விஜய்  பங்கேற்ற பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதனால் வாழ்வாதாரம் இழந்த அவர்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில், அந்த குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு அவர்களின் சொந்த மாவட்டங்களில் இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட அரசு பணிகளுக்கான  ஆணையை கரூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் அவர்கள் வழங்கினார். மேலும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு ரூ.10 லட்சம் கருணைத் தொகையையும் முதலமைச்சர் வழங்கியிருக்கிறார்.</p><p>தமிழக அரசின் இந்த நடவடிக்கைகள் சரியானதா? என்பது தொடர்பாக அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்  விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அவை அனைத்தும் ஒருபுறம் இருந்தாலும், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றன என்பது உண்மை. அதைக் கருத்தில் கொண்டும், கருணையை மட்டும் அளவீடாகக் கொண்டும் பார்க்கும் போது இந்த நடவடிக்கைகள் மிகவும்  தேவையானவை என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும்.</p><h2>கொடூரமான துப்பாக்கிச் சூடு</h2><p>ஆனால், தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் நிகழ்ந்த இதே போன்ற, இதை விட இன்னும் மோசமான நிகழ்வுகளிலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இத்தகைய உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று பாமக வலியுறுத்துகிறது. இத்தகைய உதவிகள் வழங்கப்பட வேண்டிய பல்வேறு நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தாலும் கூட, அவர்களில் முதன்மையானவர்கள், வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு, அனைத்து சமூகங்களுக்கும் அவரவர் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு, பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவை 22% ஆக உயர்த்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி  1987-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி தொடங்கப்பட்ட ஒரு வார தொடர் சாலைமறியல் போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய கொடூரமான துப்பாக்கிச் சூட்டிலும், பிற அடக்குமுறைகளிலும் கொல்லப்பட்ட 21 பேர் உள்ளிட்ட 25 பேரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான்.</p><p>கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததற்கு அரசின் தவறு காரணமல்ல. ஆனாலும் அவர்களுக்கு அரசு வேலை உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதை விமர்சிக்க பாட்டாளி மக்கள் கட்சி விரும்பவில்லை. அதே நேரத்தில் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தின் போது சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வேலையும், பிற உதவிகளும் பெறுவதற்கான அனைத்து உரிமைகளும் உள்ளன;  அவற்றை வழங்க வேண்டியக் கடமையும், பொறுப்பும் அரசுக்கு உள்ளது. அவற்றை அரசு தட்டிக் கழிக்க முடியாது.</p><h2>சமூகநீதி போராட்டம்</h2><p>1987-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டும், பிற தாக்குதல்களிலும் கொல்லப்பட்ட  25 பேரும் சமூகநீதிக்காக போராடியவர்கள்; தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற உன்னத கோரிக்கையை வலியுறுத்தி போராடியவர்கள். அரசையோ, காவல்துறையையோ சீண்டும் வகையிலான எந்த செயல்களிலும் அவர்கள் ஈடுபடவில்லை. ஆனாலும், அறவழியில் போராடிய அப்பாவிகளை காவல்துறையினர் காக்கை, குருவிகளை சுடுவது போல சுட்டு வீழ்த்தினார்கள். இந்த பாவத்தை பல தருணங்களில் தமிழக அரசு அங்கீகரித்திருந்தாலும் அதற்கான பரிகாரத்தை  இன்று வரை செய்யவில்லை.</p><p>வன்னியர் இடஒதுக்கீட்டு போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்கள் இன்றளவும் வாழ்வாதாரமின்றி வாடும் நிலையில் தான் உள்ளன. பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டால், அதை பயன்படுத்திக் கொண்டு அந்த குடும்பங்கள் முன்னேறி விடும். அவர்கள் செய்த தியாகத்தால் 115 சமூகங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான குடும்பங்கள் பயனடைந்துள்ள நிலையில், அவர்களின் குடும்பங்கள்  இன்னும் அடிமட்டத்தில் தான் உள்ளன. பிறரை வாழ வைத்த அவர்களை தமிழக அரசு வாழ வைக்க வேண்டும்.</p><h2>அரசு வேலை</h2><p>எனவே, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டதைப் போல,  இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தின் போது காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கும் உடனடியாக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88">அரசு வேலை </a>வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாவீரன் அழகுமுத்து கோனின் வீரத்தையும், தியாகத்தையும் வணங்கி போற்றுவோம்  - அன்புமணி புகழாரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-worship-and-honor-the-bravery-and-sacrifice-of-the-hero-azhugamuthukon-anbumani-pugazharam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-worship-and-honor-the-bravery-and-sacrifice-of-the-hero-azhugamuthukon-anbumani-pugazharam#comments</comments><guid isPermaLink="false">cf69f48c-3ad9-45fa-a0bc-4568fa62cd72</guid><pubDate>Sat, 11 Jul 2026 05:48:59 +0000</pubDate><atom:updated>2026-07-11T05:48:59.075Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி,சென்னை,Anbumani Ramadas,Textbook,புகழாரம்,அழகு முத்துக்கோன்,Honor</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/rg8duxnf/220.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/rg8duxnf/220.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF">அன்புமணி</a> இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் அவர்களை கடுமையாக எதிர்த்த  இந்திய விடுதலை போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில்,  அவரை நான் போற்றி வணங்குகிறேன். வீரத்தின் அடையாளமாக திகழ்ந்த  அவர், இந்திய விடுதலைக்காக  நடத்திய போர்களையும்,  செய்த தியாகங்களையும் நினைவு கூர்கிறேன்.  </p><h2>வீரத்தையும், தியாகத்தையும் நாம் போற்றுவோம்</h2><p>இந்திய விடுதலைப் போரில் வீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் பங்களிப்பும், தியாகமும் ஈடு இணையற்றது ஆகும். ஆங்கிலேயர்களுடன் நடந்த போரில் தோல்வியடைந்து விட்ட சூழலில், மன்னிப்புக் கேட்டு வரி செலுத்த ஒப்புக்கொண்டால், உயிரையும், நிலத்தையும் காப்பாற்றி கொள்ளலாம் என நிபந்தனை விதிக்கப்பட்ட நிலையில், அதை ஏற்க மறுத்து, பீரங்கியின் வாயில் வைத்து சுடப்படும் தண்டனையை மகிழ்வுடன் ஏற்ற மாவீரன் அவர். அவரின் வீரத்தையும், தியாகத்தையும் நாம் போற்றுவோம். அவரது வீரம் செறிந்த வாழ்க்கை வரலாற்றை மக்களிடம் கொண்டு செல்ல அதை பாடநூலில் தனிப் பாடமாக  சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். </p>]]></content:encoded></item><item><title>ஈரோடு வழியாக செல்லும் 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிறுத்திவைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-express-trains-passing-through-erode-suspended</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-express-trains-passing-through-erode-suspended#comments</comments><guid isPermaLink="false">a8ef7c73-1e46-49c7-9ca4-dc0c7a384904</guid><pubDate>Sat, 11 Jul 2026 05:26:33 +0000</pubDate><atom:updated>2026-07-11T05:26:33.972Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>ரெயில் சேவை,Erode,ஈரோடு,Train Services</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/jzcnus68/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/jzcnus68/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு, </p><p>சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி, வீரபாண்டி ஆகிய ரெயில் நிலையங்களுக்கு இடையில் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால் ஈரோடு வழியாக செல்லும் 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. அதன்படி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வருகிற 15, 18-ந்தேதிகளில் எர்ணாகுளம் டாட்டாநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் வண்டி எண் (18190) ஏதாவது ஒரு ரெயில் நிலையத்தில் 50 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும். </p><p>மேலும் ஆலப்புழா -தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் (13352) ஏதாவது ஒரு ரெயில் நிலையத்தில் 20 நிமிடம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலக செய்திக்கு றிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மேகதாது அணை விவகாரம்; தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் - டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mekedatu-dam-issue-tamil-nadu-government-should-take-serious-action-ttv-dinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mekedatu-dam-issue-tamil-nadu-government-should-take-serious-action-ttv-dinakaran#comments</comments><guid isPermaLink="false">7585a5b5-4de9-4728-add0-dfb9b90e11ec</guid><pubDate>Sat, 11 Jul 2026 05:22:36 +0000</pubDate><atom:updated>2026-07-11T05:22:36.590Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டிடிவி தினகரன்,Tamil Nadu Government,தமிழக அரசு,மேகதாது அணை விவகாரம்,Mekedatu Dam Issue</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/jyp92krz/ttv1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/jyp92krz/ttv1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க முடியாது என்றும், தமிழக அரசிடமிருந்து நீர் திறந்திட கோரி எந்தவொரு கோரிக்கையும் வரவில்லை என்றும் கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்தி, மாநிலங்களின் ஒருமைப்பாட்டிற்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் எதிராக உள்ளது.</p><h2>பொறுப்பற்ற பேச்சு</h2><p>கர்நாடகத்தில் பருவமழை போதுமான அளவில் பெய்யாததால் தமிழகத்திற்கான தண்ணீரை வழங்க இயலாது, காவிரி மேலாண்மை வாரியமும் இதுவரை நீர் திறக்க உத்தரவிடவில்லை, மேலும் தமிழக அரசிடமிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ கோரிக்கையும் வரவில்லை என கர்நாடக அமைச்சர் கூறியிருப்பது, காவிரி நீரையே குடிநீர் மற்றும் பாசனத்திற்கான பிரதான ஆதாரமாக நம்பியிருக்கும் தமிழகத்தின் 20-க்கும் மேற்பட்ட மாவட்ட மக்களிடமும், காவிரி படுகை விவசாயிகளிடமும் கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு கேட்கவில்லை; கர்நாடக அரசு வழங்க முடியாது என்ற பொறுப்பற்ற பேச்சு சட்டவிதிமுறைகளை அவமதிப்பதாகும்.</p><p>கடந்த ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை இதுவரை திறக்கப்படாத நிலையில், ஜூன் மாதத்திற்கான 9.91 டி.எம்.சி மற்றும் ஜூலை மாதத்திற்கான 32 டி.எம்.சி நீரை உரிய நேரத்தில் வழங்காமல் காலதாமதப்படுத்தி வரும் கர்நாடக அரசு, தற்போது தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க முடியாது என வெளிப்படையாக அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.</p><h2>ஆக்கப்பூர்வமான நடவடிக்கை</h2><p>ஆட்சியைத் தக்கவைக்கப் பெரும்பான்மை வேண்டி, திமுக கூட்டணியில் தவெகவிற்கு எதிராகப் பதிவான வாக்குகளின் மூலம் வெற்றி பெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை தமிழக அமைச்சரவையில் இணைத்ததுபோல், பெரும்பான்மை இல்லாத ஆட்சியை  காப்பாற்றிக் கொள்ள வேண்டி காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை கர்நாடக காங்கிரஸ் அரசிடம் அடகு வைக்க தவெக அரசு முனைந்துவிட்டதா என்ற சந்தேகம் எழுகிறது. “எங்கு பேச வேண்டுமோ அங்கு பேசுவோம்” என்ற முதல்-அமைச்சரின் வசனத்தின்  படி  டெல்லி காங்கிரஸ் மேலிடத்தில் சரியான முறையில் பேசி காவேரி தண்ணீர் மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தீர்வு காண ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும்.</p><h2>உண்மையான அக்கறை</h2><p>தமிழ்நாடு விவசாய சங்கங்களின் சார்பில் மேகதாது பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு கட்டுமானப் பணிகள் நடைபெறுவதாக ஊடகங்கள் மூலம் வெட்ட வெளிச்சமாக தெரிந்த பின்னும்  “மேகதாது அணை கட்ட ஒரு செங்கல்லைக்கூட நட்டுவைக்க அனுமதிக்க மாட்டோம்”  எனறு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் மாணிக்கம் தாகூர் அவர்கள் தமிழ்நாடு மக்களை ஏமாற்றும் விதமாக அறைகூவல் விடுவதை விட்டுவிட்டு தங்களது டெல்லி காங்கிரஸ் தலைமை மூலம் காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தில் தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் விதமாக உண்மையான அக்கறையுடன் செயல்பட வேண்டும்.</p><h2>தீவிர முயற்சி</h2><p>எனவே, தவெக அரசு வழக்கம் போல் அமைதியாகவும் தந்திரமாகவும் இருந்து தமிழக மக்களை ஏமாற்றும் விதமாக நடந்து கொள்ளாமல் சட்ட ரீதியான துரித நடவடிக்கைகள் மூலம் தமிழகத்திற்கான உரிய நீரை உரிய நேரத்தில் பெற்றுத் தருவதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொள்வதோடு தமிழகத்தின் நீர்வள உரிமைக்கு அச்சுறுத்தலாக உள்ள <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81">மேகதாது </a>அணைத் திட்டத்தை முற்றிலுமாக கைவிட செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என முதலல்-அமைச்சர்  ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளில் எனது மரியாதையையும், வீரவணக்கத்தையும் செலுத்துகிறேன்: முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-pay-my-respects-and-salute-to-the-hero-azhugamuthukon-on-his-birth-anniversary-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-pay-my-respects-and-salute-to-the-hero-azhugamuthukon-on-his-birth-anniversary-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">544a90b1-f15b-480f-a0b2-ae0a9b6bdba3</guid><pubDate>Sat, 11 Jul 2026 04:58:20 +0000</pubDate><atom:updated>2026-07-11T04:58:20.360Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,birthday,X Page,எக்ஸ் பதிவு,பிறந்த நாள்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,மாவீரன் அழகுமுத்துக்கோன்,Azhagumuthukon</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/z5pl8t1k/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாவீரன் அழகுமுத்துக்கோன், தமிழக முதல்-அமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/z5pl8t1k/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சுதந்திரப் போராட்ட வீரர், மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளில் எனது மரியாதையையும் வீர வணக்கத்தையும் செலுத்துகிறேன் என்று <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழக முதல்-அமைச்சர் விஜய்</a> தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். </p><p>சுதந்திரப் போராட்ட வீரர், மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: </p><p>ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக விடுதலைக் குரல் எழுப்பிய சுதந்திரப் போராட்ட வீரர், மாவீரன் அழகுமுத்துகோன் பிறந்தநாளில் எனது மரியாதையையும் வீர வணக்கத்தையும் செலுத்துகிறேன்.</p><h2>அடிமை வாழ்வைவிட சுதந்திரமே உயர்ந்தது</h2><p>தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகிலுள்ள கட்டாலங்குளத்தில் பிறந்த மாவீரன் அழகுமுத்துகோன், தமிழக மண்ணின் வீரத்திற்கும், தன்மான உணர்விற்கும், சுதந்திர வேட்கைக்கும் அடையாளமாக விளங்கியதோடு, அடிமை வாழ்வைவிட சுதந்திரமே உயர்ந்தது என்பதைத் தனது சொல்லாலும் செயலாலும் உணர்த்தி, தாய்நாட்டிற்காகத் தனது உயிரையே அர்ப்பணித்தவர்.</p><p>அவரது ஒப்பற்ற வீரமும், தன்னலமற்ற தியாகமும், அசைக்க முடியாத தேசப்பற்றும் தமிழினத்தின் பெருமையாக என்றும் நிலைத்திருக்கும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>பெண்களுக்கான இலவச ‘ரெசின் ஆர்ட்’ பயிற்சி.. ஆன்லைனில் இன்று நடக்கிறது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/online-training-on-resin-art-on-behalf-of-the-women-entrepreneurs-welfare-associationis-being-held-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/online-training-on-resin-art-on-behalf-of-the-women-entrepreneurs-welfare-associationis-being-held-today#comments</comments><guid isPermaLink="false">90353515-5435-404a-9b4e-7107a04fe123</guid><pubDate>Sat, 11 Jul 2026 04:28:30 +0000</pubDate><atom:updated>2026-07-11T04:28:30.300Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Online,ஆன்லைன்,today,பயிற்சிTraining,மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/zqt3fzka/219.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘ரெசின் ஆர்ட்’]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/zqt3fzka/219.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்க தலைவி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் சார்பில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மகளிர் பயன் பெறவேண்டும் என்ற நோக்கில் ஒவ்வொரு மாதமும் 2-ம் மற்றும் 4-ம் சனிக்கிழமைகளில் ஆன்லைன் கருத்தரங்கம் மற்றும் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு ரெசின் ஆர்ட் பயிற்சி வழங்கப்படுகிறது.</p><h2>பயிற்சி</h2><p>இந்த பயிற்சியில் ரெசின் கலவை தயாரித்தல், மோல்டிங் ஊற்றுதல், டிசைனிங் செய்வது, கியூரிங் மோல்டிங் பினிஷிங் போன்ற அனைத்து விவரங்களும் கற்றுத்தரப்பட உள்ளது. இதன் வாயிலாக அழகு சாதன பொருட்கள். கீ செயின்கள், கடிகாரங்கள், போட்டோ பிரேம்கள் ஆகியவற்றை உருவாக்கி அதனை தொழிலாக செய்யலாம்.</p><p>இந்த பயிற்சியில் பங்கேற்கும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D">மகளிர்</a> கட்டணமின்றி உறுப்பினராக இணைத்து கொள்ளப்படுவார்கள். மேலும் மத்திய-மாநில அரசு விவரங்கள், டிஜிட்டல் வழியாக பிசினஸ் செய்வது எப்படி? போன்றவை கற்றுத்தரப்படும். இதில் கலந்துகொள்ள எந்தவித கட்டணமும் கிடையாது. zoom.wewatn.com என்ற இணையதளம் வாயிலாக இணைந்து இந்த பயிற்சியில் பயன்பெறலாம்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திருவெண்ணெய்நல்லூர் அருகே வேன் மீது அரசு பஸ் மோதி விபத்து; 15 பேர் காயம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-bus-collides-with-a-van-near-thiruvennainallur-15-injured</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-bus-collides-with-a-van-near-thiruvennainallur-15-injured#comments</comments><guid isPermaLink="false">34d0ee75-770b-4797-b963-c664f0db1f2e</guid><pubDate>Sat, 11 Jul 2026 04:26:19 +0000</pubDate><atom:updated>2026-07-11T04:26:19.733Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,திருவெண்ணெய்நல்லூர்,Thiruvennainallur</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/0x2gfq6y/tnraf.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/0x2gfq6y/tnraf.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>விழுப்புரம்</p><p>திருவெண்ணெய்நல்லூர் அருகே வேன் மீது அரசு பஸ் மோதியதில் 15 பேர் காயம் அடைந்தனர்.</p>  <h2>15 பேர் காயம்</h2><p>விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சென்று கொண்டிருந்த வேன் மீது அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது.  இந்த சம்பவத்தில் சிக்கி 15 பேர் காயம் அடைந்தனர்.</p><p>சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.  விபத்து பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>மாவீரர் அழகு முத்துக்கோனின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்: நயினார் நாகேந்திரன் பதிவு
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/may-the-fame-of-the-great-warrior-azhagu-muthukoon-endure-forever-nainar-nagendrans-post</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/may-the-fame-of-the-great-warrior-azhagu-muthukoon-endure-forever-nainar-nagendrans-post#comments</comments><guid isPermaLink="false">83622c1a-bcfd-422d-853b-578cabba6319</guid><pubDate>Sat, 11 Jul 2026 04:21:58 +0000</pubDate><atom:updated>2026-07-11T04:21:58.758Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,அழகு முத்துக்கோன்,Azhagu Muthukoon</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/i3sg4htg/8.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/i3sg4htg/8.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாவீரர் அழகுமுத்துக்கோன் பிறந்த தினத்தை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”மாவீரர் அழகு முத்துக்கோனின் பிறந்தநாளில், தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக உயிரை அர்ப்பணித்த அவரது வீரத்தையும், அசைக்க முடியாத மனஉறுதியையும் மரியாதையுடன் நினைவுகூர்கிறோம். காலம் கடந்தாலும் அவரது தியாகமும், விடுதலை உணர்வும் தலைமுறைகளுக்கு என்றென்றும் ஊக்கமாக நிற்கும்.</p><p>தமிழர் வீர வரலாற்றில் அழியாத முத்திரை பதித்த மாவீரர் அழகு முத்துக்கோனின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும். அவரது உயரிய இலட்சியங்களும் தன்னலமற்ற தியாகமும் நம் சமூகத்திற்கு வழிகாட்டும் ஒளியாக விளங்கட்டும்.”</p><p>இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>பிளஸ்-2 மாணவி கர்ப்பம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/class-12-student-pregnant-pocso-case-registered-against-young-man</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/class-12-student-pregnant-pocso-case-registered-against-young-man#comments</comments><guid isPermaLink="false">07f734d3-4ac6-4106-8bf3-58f6156da3a4</guid><pubDate>Sat, 11 Jul 2026 03:40:32 +0000</pubDate><atom:updated>2026-07-11T03:40:32.495Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பிளஸ்-2 மாணவி,POCSO case,கர்ப்பம்,போக்சோ வழக்கு,pregnant</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/cv06jdcu/7.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/cv06jdcu/7.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p>கோவை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி பிளஸ்-2 படித்து வருகிறார். இவருக்கும். 19 வயது வாலிபர் ஒருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. அந்த வாலிபர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. </p><p>இதனால் அவர் கர்ப்பமானார். இது குறித்து கருமத்தம்பட்டி மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் அந்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>அழகுமுத்துக்கோன் குருபூஜை விழா: வீலிங், அதி வேகமாக வாகனங்களை இயக்கினால் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/azhagumuthukon-guru-puja-festival-police-warn-of-action-against-wheeling-and-speeding-vehicles</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/azhagumuthukon-guru-puja-festival-police-warn-of-action-against-wheeling-and-speeding-vehicles#comments</comments><guid isPermaLink="false">a332cdec-c8c8-4ed7-b3a1-e1cdfc0845d8</guid><pubDate>Sat, 11 Jul 2026 03:37:55 +0000</pubDate><atom:updated>2026-07-11T03:37:55.087Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Motorists,வாகன ஓட்டிகள்,காவல்துறை எச்சரிக்கை,police warning,அழகுமுத்துக்கோன் குருபூஜை விழா,Azhagamuthukon Guru Puja festival</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/9tcv09f6/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/9tcv09f6/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், கட்டாலங்குளத்தில் இன்று <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அழகுமுத்துக்கோன் 269-வது குருபூஜை விழா</a> நடைபெறுவதை முன்னிட்டு, அங்கே வருகை தரும் வாகன ஓட்டிகள் வீலிங், அதி வேகமாக வாகனங்களை இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>இன்று அழகுமுத்துக்கோன் 269-வது குருபூஜை விழா</h2><p>அழகுமுத்துக்கோன் 269-வது குருபூஜை விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: </p><p>தூத்துக்குடி மாவட்டம், கட்டாலங்குளத்தில் இன்று (11.7.2026, சனிக்கிழமை) நடைபெறவுள்ள மாவீரன் அழகுமுத்துக்கோன் 269-வது குருபூஜை விழாவில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருகை தர உள்ளனர்.</p><h2>வீலிங், அதி வேகமாக வாகனங்களை இயக்கினால் நடவடிக்கை </h2><p>பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை  குருபூஜையில் பங்கேற்க வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் வீலிங் (Wheeling), பந்தய வேகத்தில் வாகனம் ஓட்டுதல் (Rash Racing) மற்றும் பொதுமக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் ஆபத்து ஏற்படுத்தக்கூடிய பிற சாகசச் செயல்களில் ஈடுபடக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. மேலும், நீதிமன்றத்தின் உத்தரவின்படி, இத்தகைய ஆபத்தான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் பிற பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் காவல்துறையினர் உடனடியாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>எனவே குருபூஜையில் பங்கேற்க வரும் அனைவரும் தலைக்கவசம் அணிந்து பாதுகாப்பாக பயணிக்க வேண்டும். போக்குவரத்து விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். வீலிங், ரேசிங் மற்றும் ஆபத்தான சாகசச் செயல்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காவல்துறையினரின் அறிவுரைகள், நீதிமன்ற உத்தரவுகளை கடைப்பிடிக்க அனைவரையும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதனை மீறுவோர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்</p><p>"உங்கள் பாதுகாப்பே எங்கள் முன்னுரிமை... பாதுகாப்பாக வாருங்கள்... பாதுகாப்பாக வழிபட்டு... பாதுகாப்பாக வீடு திரும்புங்கள்." </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருச்சி: ஓடும் பஸ்சில் முதியவரிடம் 4 பவுன் நகை பறிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/trichy-4-sovereign-gold-chain-snatched-from-elderly-man-on-moving-bus</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/trichy-4-sovereign-gold-chain-snatched-from-elderly-man-on-moving-bus#comments</comments><guid isPermaLink="false">e2857fad-210b-4741-9d76-2b2a7284a042</guid><pubDate>Sat, 11 Jul 2026 03:29:11 +0000</pubDate><atom:updated>2026-07-11T03:29:11.771Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்சி,Trichy,நகை பறிப்பு,chain snatching</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/ap8z8ywr/6.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/ap8z8ywr/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>பெரம்பலூர் அரசறை அறிஞர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (65). இவர் சம்பவத்தன்று மதியம் தனியார் டவுன் பஸ்சில் சீனிவாசநகரில் இருந்து சத்திரம் பஸ் நிலையத்திற்கு வந்தார்.</p><p>பஸ் நிலையத்தில் இறங்கிய போது அவரது பையில் இருந்த 4 பவுன் எடை கொண்ட 2 தங்க சங்கிலியை காணவில்லை. மர்ம நபர்கள் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சங்கிலியை திருடி சென்றுவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p> ]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் முட்டை விலை வரலாறு காணாத உயர்வு... இன்று முதல் அமல்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/egg-prices-in-tamil-nadu-have-seen-an-unprecedented-rise-effective-from-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/egg-prices-in-tamil-nadu-have-seen-an-unprecedented-rise-effective-from-today#comments</comments><guid isPermaLink="false">2e19ac79-f886-4430-bb49-67f85ac33c15</guid><pubDate>Sat, 11 Jul 2026 03:09:09 +0000</pubDate><atom:updated>2026-07-11T03:09:09.469Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நாமக்கல்,முட்டை விலை,உயர்வு,Rise,Egg prices</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/94nn8ej1/46.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/94nn8ej1/46.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல்,</p><p>நாமக்கல் மாவட்டத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.</p><h2>கொள்முதல் விலை உயர்வு</h2><p>முட்டை கொள்முதல் விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுதான் நிர்ணயம் செய்கிறது. இதனிடையே, மேற்காசிய போர் ஏற்பட்டதால் கோழி தீவன மூலப்பொருள்களின் விலை உயர்வு, வெளிநாடு ஏற்றுமதி உள்ளிட்ட காரணங்களால் சமீபகாலமாக முட்டையின் விலை உயர்ந்து, கொள்முதல் விலையாக ரூ.6.50 என்று உயர்ந்தது. இந்த நிலையில், முட்டையின் பண்ணை கொள்முதல் விலையில் இதுவரையில் இல்லாத உச்சமாக மேலும் 5 காசுகள் உயர்ந்து ரூ.6.55 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><h2>மூலப்பொருட்களின் விலை உயர்வு</h2><p>தமிழ்நாட்டில் முட்டை ஒன்றின் கொள்முதல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.6.55 என்ற புதிய உச்சத்தை நேற்று அடைந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.  அதிகரித்த விற்பனை, கோழித்தீவன மூலப்பொருட்களின் கடுமையான <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88">விலை உயர்வு </a>உள்ளிட்ட காரணங்களால் விலையேற்றம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பெரும்பாலான கடைகளில் சில்லறை விற்பனையில் தற்போது ரூ.8 என்றிருக்கும் நிலையில், மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருச்சி - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-trichymayiladuthurai-express-train-service</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-trichymayiladuthurai-express-train-service#comments</comments><guid isPermaLink="false">b462c6c0-6414-43a2-a8b7-9fee6d2f10b9</guid><pubDate>Sat, 11 Jul 2026 02:56:42 +0000</pubDate><atom:updated>2026-07-11T02:56:42.438Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Mayiladuthurai,திருச்சி,Trichy,ரெயில் சேவை,train service,மயிலாடுதுறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/gzhj4695/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/gzhj4695/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>திருச்சி,  </p><p>திருச்சி ஜங்ஷனில் இருந்து மாலை 4.20 மணிக்கு புறப்படும் திருச்சி - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:16834) இன்று (சனிக்கிழமை ) மற்றும் 12,13-ந்தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயிலானது திருவெறும்பூரில் இருந்து மாலை 4.28 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை செல்லும். </p><p>இந்த ரெயில் திருச்சி - தஞ்சாவூர் இடையே பகுதியாக இயங்காது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்து உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது கேட்கப்படும் 33 கேள்விகள் என்னென்ன..? முழு விவரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-are-the-33-questions-asked-during-the-census-in-tamil-nadu-full-details</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-are-the-33-questions-asked-during-the-census-in-tamil-nadu-full-details#comments</comments><guid isPermaLink="false">dd791803-df6a-43ad-8162-dcc904796ab0</guid><pubDate>Sat, 11 Jul 2026 02:47:13 +0000</pubDate><atom:updated>2026-07-11T02:47:13.795Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,TN govt,மக்கள் தொகை கணக்கெடுப்பு,Census,Castewise Census,Caste Census,மக்கள் தொகை,மக்கள் தொகை பதிவேடு,கேள்விகள்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/vjtve95n/kkere.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு, மக்கள் தொகை கணக்கெடுப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/vjtve95n/kkere.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழகத்தில் ஆகஸ்டு 1-ந்தேதி தொடங்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது 33 கேள்விகள் கேட்கப்பட உள்ளன.</p><h2>மக்கள் தொகை கணக்கெடுப்பு</h2><p>இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். </p><p>2011-ம் ஆண்டுக்குப் பிறகு 2021-ம் ஆண்டு நடத்த வேண்டிய கணக்கெடுப்பு கொரோனா தொற்றுகாரணமாக ஒத்திவைக்கப்பட்டது.</p><p>இந்தநிலையில் தற்போது 2025-2026-ம் ஆண்டுகாலகட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியுள்ளன.</p><p>இந்திய வரலாற்றில், 2025-2026-ம் ஆண்டு கணக்கெடுப்பு முழுமையாக டிஜிட்ல் முறையில் நடக்கிறது.</p><p>மக்கள் தங்களை பற்றிய தகவல்களை "செல்போன் செயலி மூலம்" தாங்களாகவே பதிவு செய்யும் வசதியும் இருக்கிறது.</p><p>இது தரவுகளை விரைவாக சேகரிக்கவும், துல்லியமாக பகுப்பாய்வு செய்ய/வும் உதவும்.</p><h2>தமிழகத்தில் தொடக்கம்</h2><p>மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கும் நிதி, மக்கள் தொகையின் அடிப்படையிலேயே ஒதுக்கப்படுகிறது. எத்தனை பள்ளிகள், ஆஸ்பத்திரிகள் மற்றும் வேலைவாய்ப்புகள் தேவை என்பதை தீர்மானிக்க இது அவசியமாகும்.</p><p>பல்வேறு மாநிலங்களிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. புதுச்சேரியில் கடந்த 1-ந்தேதி முதல் இந்த பணிகள் ஆரம்பமாகி உள்ளது.</p><p>தமிழகத்தில் வருகிற ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்க உள்ளது.</p><p>( மக்கள் தவறான தகவலை அளித்தால் ரூ, 1,000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. )</p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/lh5f8v58/kier.jpg" /></figure><h2><strong>33 கேள்விகள்</strong></h2><p>மக்கள்தொகை கணகெடுப்புப் பணியின்போது  இந்த <strong>33 கேள்விகள்</strong> மத்திய அரசு  கேட்பதற்காக பட்டியலிடப்பட்டுள்ளன அதன் விபரம் பின்வருமாறு:-</p><p>மொத்த 33 கேள்விகள் கேட்கப்படும்</p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>1.✓ அடுக்கு மாடி கட்டிட எண் ?</strong></p><p>FOR APARTMENT BUILDING NUMBER</p><p>வசிக்கும் கட்டிடம் எண்</p><p>நீங்கள் வசிக்கும் கட்டிடத்தின் எண்</p><p>( நகராட்சி அல்லது உள்ளூர் அதிகாரசபை எண் )</p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>2.✓  வீட்டு கதவு எண் ?</strong></p><p>HOME DOOR NUMBER</p><p>வீட்டு எண்</p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>3.✓ வீட்டின் தரையின் முக்கிய பொருள் என்ன எதில் கட்டப்பட்டது ?</strong></p><p>TILES OR CEMENT</p><p>(Mosaic &amp; Red Oxide Floor)</p><p>வீட்டு தரை</p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>4✓  வீட்டின் சுவரின் முக்கிய பொருள் என்ன எதில் கட்டப்பட்டது ?</strong></p><p>BRICK OR MUD WALL</p><p>(Red Bricks / Cement Hollow Blocks) </p><p>சுவர்</p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>5.✓ வீட்டின் மேல் கூரையின் முக்கிய பொருள் எது ?</strong></p><p>CONCRETE SEELING OR WOODEN SEELING</p><p>•கான்கிரீட் (RCC) கூரை</p><p>•உலோகத் தாள்கள் (Metal Sheets)</p><p>•ஓடுகள் (Tiles)</p><p>•மரச்சட்டங்கள் (Wooden Trusses)</p><p>•மரப்பலகை / வைக்கோல்</p><p>கூரையின் பிரதான கட்டுமானப் பொருள்</p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>6.✓  வீடு தற்போது பயன்பாட்டில் உள்ளதா ( பயன்பாட்டை உறுதி செய்தல் ? )</strong></p><p>LIVING OR LOCKED</p><p>வீட்டின் பயன்பாடு</p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>7.✓ எந்த மாதிரி வீட்டின் அமைப்பு ?</strong></p><p>INDIVIDUAL PRIVATE HOUSE OR APARTMENT</p><p>மாடி வீடு (Duplex / Two-Story)</p><p>வீட்டின் நிலை</p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>8.✓ குடும்ப எண் ?</strong></p><p>"குடும்ப எண்" (Family ID) என்பது பொதுவாக உங்கள் ரேஷன் கார்டு (குடும்ப அட்டை) எண்ணைக் குறிக்கிறது.</p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>9.✓ வீட்டில் வசிக்கும் மொத்த நபர்களின் எண்ணிக்கை எவ்வளவு ?</strong></p><p>HOW MANY MEMBERS IN HOME</p><p>வசிக்கும் நபர்களின் எண்ணிக்கை என்பது உங்களின் சொந்த வீடு, கிராமம், மாவட்டம் அல்லது மாநிலத்தைப் பொறுத்து மாறுபடும். அரசாங்க மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஒரு வீட்டில் வசிக்கும் நபர்களின் மொத்த எண்ணிக்கை (Total number of persons living in a house) அடிப்படை தகவலாக சேகரிக்கப்படுகிறது.</p><p>வசிக்கும் நபர்களின் எண்ணிக்கை</p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>10.✓  வீட்டுத் தலைவரின் பெயர் என்ன ?</strong></p><p>அரசு ஆவணங்களில் உள்ள உங்கள் குடும்பத் தலைவர் பெயரை அறிய</p><p>FAMILY MEMBER NAME</p><p>குடும்ப தலைவர் பெயர்</p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/c0jp28li/samle.jpg" /></figure><p><strong>11.✓ வீட்டுத் தலைவரின் பாலினம் ( ஆணா  / பெண்ணா ) எது ?</strong></p><p>MALE OR FEMALE</p><p>தலைவரின் பாலினம்</p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>12.✓ குடும்பத் தலைவர் எந்த ( ஜாதி ) சாதி (Caste) ?</strong></p><p>குடும்ப தலைவரின் அட்டவணை வகுப்பு</p><p>நீங்கள் "குடும்ப தலைவரின் அட்டவணை வகுப்பு" (Head of Household - Schedule Class) அல்லது "அரசு அட்டவணை வகுப்பினர் குடும்பத் தலைவருக்கான திட்டங்கள்" (SC Category Head of Household) பற்றிய தகவல்களைத் தேடுகிறீர்கள் என்றால், உங்கள் குடும்ப அட்டை (Ration Card), ஜாதிச் சான்றிதழ் (Community Certificate) மற்றும் அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.</p><p>( Scheduled Caste / எஸ்சி - SC )</p><p><strong>"பட்டியல் சாதியினரா" ?</strong></p><p>அல்லது "பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்" ( Scheduled Tribes - ST ) பழங்குடி சாதியினரா அல்லது பிற இனத்தைச் சேர்ந்தவரா என்பது ?</p><p>இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் சமூக நலத் திட்டங்களில் குடும்ப தலைவரின் அட்டவணை வகுப்பு ( "SC/ST/Other" ) என்பது, குடும்பத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர் எந்த சமூகப் பிரிவைச் (ஆதி திராவிடர், பழங்குடியினர் அல்லது இதர பிரிவினர்) சார்ந்தவர் என்பதைக் குறிக்கும். இது சாதிச் சான்றிதழ்களை அடிப்படையாகக் கொண்டது.</p><p>SC, ST மற்றும் பிறர்" என்பது பொதுவாக இந்தியாவில் இட ஒதுக்கீடு, கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காகப் பயன்படுத்தப்படும் சமூகக் குழுப் பிரிவுகளைக்குறிக்கிறது</p><p><strong>• பட்டியல் சாதியினர் (SC) :-</strong></p><p>வரலாற்று ரீதியாக ஓரங்கட்டப்பட்ட சமூகங்கள், முன்னர் தலித்துகள் என்று அழைக்கப்பட்டவர்கள், இவர்கள் கடுமையான சமூகப் புறக்கணிப்பையும் தீண்டாமையையும் எதிர்கொண்டனர்.</p><p><strong>• பட்டியல் பழங்குடியினர் (ST) :-</strong></p><p> பெரும்பாலும் தனிமைப்படுத்தப்பட்ட அல்லது வனப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடி சமூகங்கள்; இவர்கள் தனித்துவமான கலாச்சார நடைமுறைகள் மற்றும் புவியியல் ரீதியான தனிமைப்படுத்தலால் அறியப்படுகிறார்கள்.</p><p><strong>• மற்றவர்கள் :-</strong></p><p>பொதுவாக இது , சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கியுள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையோ (OBC), அல்லது அரசாங்க இட ஒதுக்கீட்டுப் பலன்களைப் பெறாத சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும்பொதுப் பிரிவினரையோ (UR) குறிக்கிறது .</p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>13.✓ வீட்டின் உரிமை நிலை என்ன?</strong></p><p>( சொந்த வீடா / வாடகை வீடா )</p><p>OWN HOUSE OR RENTAL HOUSE</p><p>வீட்டின் உரிமை நிலை</p><p>வீட்டின் உரிமை நிலை (Home ownership) என்பது ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது குடும்பத்திற்கு அந்த வீடு சொந்தமானதா அல்லது அவர்கள் வாடகைக்கு இருக்கிறார்களா என்பதைக் குறிக்கிறது. இது சமூக, பொருளாதார நிலையை அளவிடும் முக்கிய காரணியாகும்.</p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>14.✓ வீட்டில் உள்ள குடியிருப்பு அறைகளின் எண்ணிக்கை எத்தனை ?</strong></p><p>HOW MANY ROOMS IN YOUR HOUSE</p><p>அறைகளின் எண்ணிக்கை</p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>15.✓ வீட்டில் வசிக்கும் திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை ?</strong></p><p>HOW MANY COUPLES IN YOUR HOUSE</p><p>திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை</p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>16.✓ குடிநீரின் முக்கிய ஆதாரம் ?</strong></p><p>குடிநீர் ஆதாரம் அமைந்துள்ள இடம்</p><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான குடிநீர் ஆதாரங்கள் மேற்பரப்பு நீர் (ஏரிகள்), நிலத்தடி நீர், மற்றும் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் ஆகிய இடங்களில் இருந்து பெறப்படுகின்றன</p><p>(ஏரிகள், ஆறுகள்) மற்றும் நிலத்தடி நீர் (கிணறுகள், ஆழ்துளை கிணறுகள்)</p><p>IN WHICH PLACE YOU GETTING WATER</p><p>BY RIVER + LAKE + WELL + BORE</p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>17.✓ குடிநீர் வசதி எப்படி கிடைக்கிறது ?</strong></p><p>( குழாய் இணைப்புகள் மூலம் வழங்கப்படுகிறது )</p><p>*PRESENT YOU GETTING WATER BY PIPE LINE OR BORE</p><p>நிலத்தடி நீர் (Groundwater)</p><p>குடிநீர் இணைப்பு (Pipe Line)</p><p>குடிநீருக்கான பிரதான ஆதாரம்</p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>18.✓ கரன்ட் வசதி உள்ளதா ?</strong></p><p>விளக்கு ஒளிக்கான பிரதான ஆதாரம்</p><p>மின்சாரம் (Electricity) ஆகும்</p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>19.✓ கழிவறை உள்ளதா ?</strong></p><p>கழிப்பிட வசதி</p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>20.✓ கழிவறை எந்த வகை ?</strong></p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p> <p><strong>21.✓ கழிவு நீர் வெளியேறும் வசதி உள்ளதா ?</strong></p><p>கழிவு நீர் வெளியேற்றும் இணைப்பு*</p><p>(Sewerage Connection)</p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>22.✓ குளியல் வசதி இருக்கிறதா ?</strong></p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>23.✓ சமையலறை மற்றும் LPG/PNG இணைப்பு வசதி உள்ளதா ?</strong></p><p>சமையலறை வசதி மற்றும் கியாஸ் இணைப்பு</p><p>எல்.பி.ஜி (LPG)</p><p>குழாய் வழி கியாஸ் (PNG)</p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>24.✓ சமையலுக்குப் பயன்படுத்தப்படும் முக்கிய எரிபொருள் எது ?</strong></p><p>சமையலுக்கு பயன்படுத்தப்படும் பிரதான எரிபொருள்*</p><p>• எல்.பி.ஜி (LPG)</p><p>• இயற்கை எரிவாயு (PNG - Piped Natural Gas)</p><p>• மின்சாரம் (Electricity)</p><p>• விறகு, கரி மற்றும் சாணம் </p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>25.✓ ரேடியோ / டிரான்சிஸ்டர் இருக்கா ?</strong></p><p>வானொலி,டிரான்சிஸ்டர்,</p><p>RADIO TRANSISTOR </p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>26.✓ தொலைக்காட்சி ( TV ) இருக்கா ?</strong></p><p> TELIVISION </p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>27.✓ இணையதளம் வசதி இருக்கா ?*இணையதள வசதி</strong></p><p>INTERNET </p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>28.✓ மடிக்கணினி / கம்ப்யூட்டர் இருக்கா ?</strong></p><p>LAPTOP / COMPUTER </p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>29.✓ தொலைபேசி /மொபைல் போன் /ஸ்மார்ட்போன் இருக்கா ?</strong></p><p>TELEPHONE / MOBILE PHONE / SMARTPHONE </p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>30.✓ சைக்கிள் / ஸ்கூட்டர் / மோட்டார் சைக்கிள் / மொபெட் இருக்கா ?</strong></p><p>CYCLE / SCOOTER / MOTORBIKE </p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>31.✓ கார் / ஜீப் / வேன் இருக்கா ?</strong></p><p>CAR / JEEP / VAN</p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>32.✓ வீட்டில் சாப்பிடும் முக்கிய உணவு  எது ?</strong></p><p>• அரிசி (Rice)</p><p>• கோதுமை (Wheat)</p><p>• மக்காச்சோளம் (Maize / Corn)</p><p>• சிறுதானியங்கள் (Millets)</p><p>• பார்லி மற்றும் ஓட்ஸ் (Barley &amp; Oats)</p><p>பிரதான உணவு தானியங்கள்</p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>33.✓ உங்கள் மொபைல் எண் ( மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான தகவல் தொடர்புகளுக்கு மட்டும் )</strong></p><p>செல்போன் எண்</p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p>ஆகிய 33 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான விடைகள் பதிவு செய்யப்படுகிறது என்று முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரீஸ் தாக்கூர் பிறப்பித்துள்ள அரசு உத்தரவில் கூறியுள்ளார்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/9qfrpwk1/wuiot.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-inflow-to-bhavanisagar-dam-continues-to-increase-farmers-happy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-inflow-to-bhavanisagar-dam-continues-to-increase-farmers-happy#comments</comments><guid isPermaLink="false">2a6678b7-4712-46fb-8d3b-5028720c1e05</guid><pubDate>Sat, 11 Jul 2026 02:03:10 +0000</pubDate><atom:updated>2026-07-11T02:03:10.784Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>விவசாயிகள் மகிழ்ச்சி,Increase in water flow நீர்வரத்து அதிகரிப்பு,bhavanisagar dam பவானிசாகர் அணை,The farmers are happy</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/j5unmxwv/bhavani.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/j5unmxwv/bhavani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பவானிசாகர்,</p><p>நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்வதால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.</p><p>ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக இருப்பது <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D">பவானிசாகர் அணை</a>. இந்த அணைக்கு நீலகிரி மாவட்டத்தில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக வரும் பவானி ஆறும். கூடலூர் மலைப்பகுதி வழியாக வரும் மாயாறும் நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகின்றன. இந்த அணை தண்ணீரால் 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த சில மாதங்களாக பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழை இல்லாத காரணத்தால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. அதேசமயம் அணையில் இருந்து பவானி ஆறு மற்றும் கீழ்பவானி வாய்க்கால் ஆகியவற்றின் மூலம் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதால் அணையின் நீர்மட்டம் கிடு கிடுவென குறைந்தது.</p><h2>விவசாயிகள் மகிழ்ச்சி</h2><p>இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பவானி ஆற்றில் செந்நிறத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து வருகிறது. இதன்காரணமாக பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று மாலை 4 மணியளவில் அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 589 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 58.76 அடியாக இருந்தது. அணைக்கு தொடர்ந்து 5 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்துகொண்டு இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியன் வங்கியின் நிகர லாபம் ரூ.3,273 கோடியாக உயர்வு: நிர்வாக இயக்குனர் பினோத் குமார் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/indian-banks-net-profit-rises-to-rs-3273-crore-managing-director-binod-kumar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/indian-banks-net-profit-rises-to-rs-3273-crore-managing-director-binod-kumar#comments</comments><guid isPermaLink="false">47b64815-ee2f-49ba-b8c6-77a90844ff2c</guid><pubDate>Sat, 11 Jul 2026 01:54:01 +0000</pubDate><atom:updated>2026-07-11T01:54:01.465Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,தகவல்,உயர்வு,Profit,Managing Director,இந்தியன் வங்கி,Indian Bank,லாபம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/01yg0vv9/216.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்தியன் வங்கி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/01yg0vv9/216.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>இந்தியன் வங்கியின் நிகர லாபம் ரூ.3,273 கோடியாக உயர்ந்துள்ளது என்று அதன் நிர்வாக இயக்குனர் பினோத் குமார் தெரிவித்துள்ளார். </p><p>2026-27-ம் நிதி ஆண்டின் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF">இந்தியன் வங்கியின்</a> முதலாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை அதன் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான பினோத் குமார் நிருபர்கள் முன்னிலையில் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-</p><h2>நிகர லாபம்</h2><p>இந்தியன் வங்கியின் நிகர லாபம் கடந்த நிதி ஆண்டில் (ஜூன்) ரூ.2,973 கோடியாக இருந்தது. தற்போது நிகர லாபம் ரூ.3,273 கோடியாக உயர்ந்து இருக்கிறது. கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பீடுகையில் 10.09 சதவீதம் அதிகரித்து உள்ளது. வங்கியின் செயல்திறன். நிலையான வளர்ச்சியை பிரதிபலிக்கும் வகையில் நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.</p><p>வங்கியின் செயல்பாட்டு லாபம் ரூ.4,770 கோடியில் இருந்து ரூ.5.557 கோடியாகவும் நிகர வட்டி வருவாய் ரூ.6,359 கோடியில் இருந்து ரூ.7,435 கோடியாகவும் உயர்ந்துள்ளது. வங்கியின் பரவலான முன்னேற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் மொத்த வணிகம் 13.66 சதவீதம் அதிகரித்துள்ளது. </p><h2>விருது</h2><p>மொத்த வைப்புத்தொகை (டெபாசிட்) ரூ.7 லட்சத்து 44 ஆயிரத்து 289 கோடியில் இருந்து ரூ.8 லட்சத்து 44 ஆயிரத்து 578 கோடி என்ற அளவை எட்டி இருக்கிறது. மொத்தம் ரூ.2 லட்சத்து 36 ஆயிரத்து 720 கோடி வரை முன்னுரிமை கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக ஐ.ஐ.பி.எப். அமைப்பு விருது வழங்கி கவுரவித்துள்ளது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>
வேலை தருவதாக கூறி கண்மாய் பகுதிக்கு அழைத்து சென்று... 6 பேர் கும்பலால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-taken-to-kanmai-area-on-the-pretext-of-employment-gang-of-6-brutally-assaults-her</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-taken-to-kanmai-area-on-the-pretext-of-employment-gang-of-6-brutally-assaults-her#comments</comments><guid isPermaLink="false">b4cc5b68-e690-405b-a1db-0496cb0f0547</guid><pubDate>Sat, 11 Jul 2026 01:48:43 +0000</pubDate><atom:updated>2026-07-11T01:48:43.696Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrests,கூட்டு பாலியல் பலாத்காரம்,Gang Rape Case</media:keywords><media:content height="768" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/j7lkr2re/ugwot.jpg" width="1366"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/j7lkr2re/ugwot.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>மதுரை</p><p>மேலூர் அருகே கண்மாய் பகுதியில் இளம்பெண்ணை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.</p><p>விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 33 வயதுடைய பெண்ணுக்கு திருமணமாகி ஒரு ஆண், பெண் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக அந்த பெண் கணவரை பிரிந்து வசித்து வந்தார். கட்டிட வேலைக்கும் சென்று வந்தார்.</p>  <h2>தோழியின் நட்பு</h2><p>இவரது வீட்டின் அருகில் வசிக்கும் அனிதா என்பவர் அவரிடம் நட்பாக பழகினாராம்.  இந்த நிலையில் மதுரை மாவட்டம் மேலூரில் ஒரு மூதாட்டியை பார்த்துக்கொள்ள ஆள் வேண்டும் எனக்கூறி ஒரு செல்போன் எண்ணை அனிதா கொடுத்துள்ளார். அதன்படி அந்த எண்ணுக்கு அப்பெண் தொடர்பு கொண்டு பேசினார்.</p><p>எதிர்முனையில் பேசியவர் மேலூருக்கு வருமாறும், பணம் தருவதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பி அந்த பெண் சம்பவத்தன்று இரவு மேலூருக்கு வந்தார். அங்கு 20 வயது வாலிபர் ஒருவர் அந்த பெண்ணை அழைத்து கொண்டு தாமரைப்பட்டி பகுதியில் டாஸ்மாக் கடை அருகே உள்ள கண்மாய் பகுதிக்கு சென்றார். அங்கு ஏற்கனவே 4 பேர் நின்று கொண்டிருந்தனர். அங்கு அந்த பெண்ணை இறக்கி விட்டு அந்த வாலிபர் தப்பி சென்றுள்ளார்.</p>  <h2>கூட்டு பலாத்காரம்</h2><p>அதன்பின் அந்த இளம்பெண்ணை அங்கிருந்த 4 பேரும் மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் பெண்ணிடம் இருந்து அரை பவுன் தங்கச்சங்கிலி, வெள்ளி கொலுசு, செல்போன் உள்ளிட்டவற்றை பறித்துக்கொண்டு 4 பேரும் ஓடிவிட்டதாக தெரிகிறது.</p><p>இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 4 பேரையும், அதற்கு உடந்தையாக இருந்த செல்போன் எண் கொடுத்த அனிதா, இளம்பெண்ணை அழைத்து சென்ற வாலிபர் உள்பட மற்றவர்களையும் தேடி வந்தனர்.</p>  <h2>போலீசார் விசாரணை</h2><p>அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக தாமரைப்பட்டியை சேர்ந்த வினித் (வயது 21), செல்வகுமார் (33), அரவிந்த் (26), வீரபாண்டி (30) மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய தாத்தா கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/grandfather-arrested-for-impregnating-10th-grade-student</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/grandfather-arrested-for-impregnating-10th-grade-student#comments</comments><guid isPermaLink="false">aa4abe9b-f210-4e49-a560-a0a911fd802a</guid><pubDate>Sat, 11 Jul 2026 01:43:21 +0000</pubDate><atom:updated>2026-07-11T01:43:21.714Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrest,10th grade student,சிறுமி கர்ப்பம்,தாத்தா,grandfather,10-ம் வகுப்பு மாணவி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/ip6cet93/arrest.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/ip6cet93/arrest.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பரமக்குடி,</p><p>10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய தாத்தாவை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.</p><p>ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 73 வயது முதியவர். இவருடைய மகளுக்கு திருமணமாகி கணவர் இறந்து விட்டார். அவருக்கு 15 வயதில் மகள் உள்ளார்.</p><h2>பாலியல் தொல்லை </h2><p>இந்த சிறுமி பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். முதியவரின் வீட்டின் அருகில் அவரது மகள் மற்றும் பேத்தி வசித்து வருகின்றனர். இதனால் முதியவர் அடிக்கடி தனது மகள் வீட்டுக்கு சென்று பேத்தியை பார்த்து வருவது வழக்கம். இந்நிலையில் சில மாதங்களாக தனது பேத்தி என்றும் பாராமல் அந்த சிறுமிக்கு முதியவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி, தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் தனது தந்தையை கண்டித்துள்ளார். இருப்பினும் முதியவர் தொடர்ந்து பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.</p><h2>3 மாத கர்ப்பம்</h2><p>மேலும் தனது பேத்தியை கட்டாயப்படுத்தி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சிறுமி 3 மாதம் கர்ப்பமானதாக தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், தனது தந்தை மீது பரமக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து முதியவரை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சேலம் மாநகரில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/traffic-diversion-in-salem-city-starting-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/traffic-diversion-in-salem-city-starting-tomorrow#comments</comments><guid isPermaLink="false">56a9d1cc-c016-42e2-b23f-a934d3d655fa</guid><pubDate>Sat, 11 Jul 2026 01:38:42 +0000</pubDate><atom:updated>2026-07-11T01:38:42.541Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,சேலம்,போக்குவரத்து மாற்றம்,traffic diversion</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/q045mcm2/3.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/q045mcm2/3.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம், </p><p>சேலம் மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. பிருந்தாவன் சாலை மற்றும் அதனை ஒட்டியுள்ள மருத்துவமனைகளுக்கு செல்லும் வாகனங்கள் ஓமலூர் பிரதான சாலையில் இருந்து வழக்கம்போல் உள்ளே செல்ல அனுமதிக்கப்படும். வெளியே வரும் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது.</p><p>மருத்துவமனை பகுதிக்குள் சென்ற வாகனங்கள் எஸ்.கே.எஸ். மருத்துவமனை சாலை 7-வது கிராஸ், எல்.ஐ.சி. காலனி சாலை வழியாக வெளியே வந்து ஓமலூர் பிரதான சாலையை அடைய வேண்டும். </p><p>எல்.ஐ.சி. காலனி, 7-வது கிராஸ் சாலை மற்றும் வசந்தம் ஓட்டல் சாலை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் எஸ்.கே.எஸ். சந்திப்பு வழியாக மட்டுமே செல்ல வேண்டும். இதற்காக எல்.ஐ.சி. காலனி சாலை ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. பிருந்தாவன் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் வலதுபுறம் திரும்பி 7-வது கிராஸ் சாலை வழியாக செல்ல வேண்டும். இந்த வழியாக செல்லும் வாகனங்கள் நேரடியாக ஓமலூர் பிரதான சாலைக்கு செல்ல அனுமதி இல்லை. இந்த தகவலை கலெக்டர் இளம்பகவத் தெரிவித்து உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கை, கால்களில் ஒயரை சுற்றி மின்சாரம் பாய்ச்சி மகள், மகன் கொலை; டிரைவர் தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/daughter-and-son-killed-by-electrocution-around-hands-and-feet-driver-commits-suicide</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/daughter-and-son-killed-by-electrocution-around-hands-and-feet-driver-commits-suicide#comments</comments><guid isPermaLink="false">ed98bcc1-3610-4e06-b8d8-a958430585d0</guid><pubDate>Sat, 11 Jul 2026 01:38:16 +0000</pubDate><atom:updated>2026-07-11T01:38:16.554Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,murder,son,மகன்,மகள்,daughter,electrocution,டிரைவர் தற்கொலை,Lorry driver commits suicide,மின்சாரம் பாய்ச்சி கொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/df4f11yo/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உயிரிழந்த தந்தை, மகள், மகன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/df4f11yo/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி அருகே மனைவி பிரிந்து சென்றதால் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தனது மகள், மகன் மீது மின்சாரத்தை பாய்ச்சி கொன்றுவிட்டு டிரைவர் தற்கொலை</a> செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.</p><h2>லாரி டிரைவர்</h2><p>தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை சிறுபாடு சவேரியார்புரத்தை சேர்ந்த அந்தோணிமுத்து மகன் மரிய மைக்கேல் (வயது 45), லாரி டிரைவர். இவரது மனைவி சபிதாரோனிகம். இந்த தம்பதிக்கு 9-ம் வகுப்பு படிக்கும் மரிய நிரோஷா(14) என்ற மகளும், 7-ம் வகுப்பு படிக்கும் மரிய கெனிஸ்டன்(12) என்ற மகனும் இருந்தனர். குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சபிதாரோனிகம் பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மரிய மைக்கேல் தனது தந்தை மற்றும் 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.</p><h2>மகள், மகன் கொலை</h2><p>மனைவி பிரிந்து சென்றதில் இருந்து மிகுந்த மனஉளைச்சலுடன் காணப்பட்ட மரிய மைக்கேல் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வீட்டுக்குள் 2 குழந்தைகளுடன் மரிய மைக்கேல் படுத்து தூங்கினார். வீட்டுக்கு வெளியே அந்தோணி முத்து படுத்திருந்தார். நள்ளிரவில் திடீரென எழுந்த மரிய மைக்கேல், தூங்கிக்கொண்டிருந்த மரிய நிரோஷா, மரிய கெனிஸ்டன் ஆகியோரின் கை, கால்களில் மின்சார ஒயரை சுற்றி வைத்து மின்சாரத்தை பாய்ச்சியதாக கூறப்படுகிறது. இதில் 2 குழந்தைகளும் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதன்பிறகு மரிய மைக்கேல் தனது காலிலும் மின்சார ஒயரை சுற்றிக்கொண்டு மின்சாரத்தை பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டார். </p><h2>போலீஸ் விசாரணை</h2><p>இதுகுறித்து புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், பூட்டிய கதவை உடைத்து வீட்டின் உள்ளே சென்றனர். அங்கு மின்சாரம் தாக்கி 3 பேரும் சடலமாக கிடந்ததை கண்டுபிடித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகள், மகனை மின்சாரம் பாய்ச்சி கொன்றுவிட்ட லாரி டிரைவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விபத்தில் பலியான கடை உரிமையாளர் குடும்பத்துக்கு ரூ.47 லட்சம் இழப்பீடு: சென்னை கோர்ட்டு தீர்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-47-lakh-compensation-to-the-family-of-the-shop-owner-who-died-in-the-accident-chennai-court-verdict</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-47-lakh-compensation-to-the-family-of-the-shop-owner-who-died-in-the-accident-chennai-court-verdict#comments</comments><guid isPermaLink="false">d6e02617-82af-4ab5-a300-14c0592d86ac</guid><pubDate>Sat, 11 Jul 2026 01:35:35 +0000</pubDate><atom:updated>2026-07-11T01:35:35.373Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Accident,இழப்பீடு,Compensation,சென்னை,தீர்ப்பு,court verdict,விபத்தில் பலி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/u23hgo1j/200.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை கோர்ட்டு தீர்ப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/u23hgo1j/200.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 38). இருசக்கர வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். கடந்த 8.1.2022 அன்று மிஞ்சூர் கும்மனூர்-புதூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். </p><h2>விசாரணை</h2><p>இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதேவேளையில், லோகநாதன் மனைவி யமுனா இழப்பீடு கோரி சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி தர்மபிரபு, 'எச்சரிக்கை விளக்குகளை ஒளிர செய்யாமல் சாலை ஓரத்தில் இருட்டான பகுதியில் லாரி நிறுத்தப்பட்டிருந்த காரணத்தினால் தான் இந்த விபத்து நடந்துள்ளது.</p><h2>தீர்ப்பு</h2><p>எனவே, லாரி உரிமையாளர் தான் இந்த விபத்துக்கு பொறுப்பேற்க வேண்டும். அந்தவகையில் லாரிக்கு இன்ஸ்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ள ராயல் சுந்தரம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.47 லட்சம் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item></channel></rss>