<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 17 Jul 2026 05:25:38 +0000</lastBuildDate><item><title>பழனி விவகாரம்: நிலத்தை விற்பனை செய்த மற்றும் வாங்கிய 3 பேர் தலைமறைவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-affair-3-people-who-sold-and-bought-land-are-absconding</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-affair-3-people-who-sold-and-bought-land-are-absconding#comments</comments><guid isPermaLink="false">1bfc680f-5690-486a-b31c-c36e7c5c590a</guid><pubDate>Fri, 17 Jul 2026 05:20:38 +0000</pubDate><atom:updated>2026-07-17T05:20:38.702Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பழனி,Palani Murugan Temple,Palani,CBCID Police,சிபிசிஐடி போலீசார்,Palani temple,land dispute case,பழனி கோவில்,நிலம் மோசடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/bzwiikwy/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/bzwiikwy/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>பழனி,</p><h2>தண்டபாணி சுவாமி மடம்</h2><p>திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பூங்கா ரோட்டில் தண்டபாணி சுவாமி மடம் அறக்கட்டளைக்கு சொந்தமான 1 ஏக்கர் 40 சென்ட் நிலம் உள்ளது. ஐகோர்ட்டு உத்தரவுப்படி நிலத்துக்கான தக்காராக பழனி முருகன் கோவில் இணை ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி கோவில் நிர்வாகம் இந்த நிலத்தை நிர்வகித்து வருகிறது.</p><p>ரூ.100 கோடி மதிப்பிலான இந்த நிலம் கடந்த ஆண்டு பழனி முருக பக்தர்களின் வாகன நிறுத்துமிடமாக மாற்றப்பட்டது. இந்நிலையில் தண்டபாணி சுவாமி மட நிலம் கடந்த 6-ந்தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் தனியார் 2 பேருக்கு ரூ.2 கோடிக்கு கிரையமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. பழனி கோவில் கட்டுப்பாட்டிலுள்ள நிலத்தை முறைகேடாக பதிவு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><h2>ரூ.100 கோடி முறைகேடு</h2><p>இந்த முறைகேடு பதிவு குறித்து பழனி அடிவாரம் போலீசில் கோவில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் பழனி சார்பதிவாளராக இருந்த ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்ற விழுப்புரத்தை சேர்ந்த முருகதாஸ், அதனை வாங்கிய திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பாப்பன்குளத்தை சேர்ந்த வெள்ளத்துரை, பழனி அருகே உள்ள டி.கே.என்.புதூரை சேர்ந்த சேதுபதி என 4 பேர் மீதும் 5 பிரி வுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.</p><p>இதனிடையே ரூ.100 கோடி நிலம் முறைகேடாக பதிவு செய்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகிய 2 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். தொடர்ந்து முறைகேடு பதிவை ரத்து செய்யக்கோரி பழனி கோவில் இணை ஆணையர் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த ஐகோர்ட்டு தண்டபாணி சுவாமி மடத்தின் சொத்து தனியாருக்கு பத்திரப்ப திவு செய்தது செல்லாது என உத்தரவிட்டது. இந்த முறைகேடு தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார்.</p><h2>தலைமறைவு</h2><p>அதன்படி, ரூ.100 கோடி கோவில் நிலம் மோசடி வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், நிலத்தை விற்பனை செய்த பழனி கோவில் அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ் பத்திரப்பதிவு நடந்த நாள் முதல் தலைமறைவாகியுள்ளார். அவரை தொடர்ந்து நிலத்தை வாங்கிய உடுமலை வெள்ளத்துரை, சேதுபதி ஆகியோரும் தலைமறைவாகியுள்ளனர். 3 பேரையும் கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.</p><p>இதற்கிடையில், பழனி கோவில் நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் பணியிடை நீக்க நடவடிக்கைக்கு உள்ளான சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு மதுரை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. அவருக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது என கோவில் நிர்வாகம் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தாயுமானவர் திட்டத்தில் 70 சதவீதத்திற்கும் குறைவாக ரேஷன் பொருள் விநியோகித்ததால் &apos;மெமோ&apos;: பணியாளர்கள் அதிர்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/memo-issued-for-distributing-less-than-70-of-ration-supplies-under-the-thayumanavar-scheme-staff-shocked</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/memo-issued-for-distributing-less-than-70-of-ration-supplies-under-the-thayumanavar-scheme-staff-shocked#comments</comments><guid isPermaLink="false">fdac9a65-c9b4-43dc-9b9c-a09484c0787f</guid><pubDate>Fri, 17 Jul 2026 05:11:46 +0000</pubDate><atom:updated>2026-07-17T05:11:46.871Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Ration items,ரேஷன் பொருட்கள்,தாயுமானவர் திட்டம்,Thayumanavar Scheme</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/khpqrh0s/puthi.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/khpqrh0s/puthi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தாயுமானவர் திட்டத்தில் 70 சதவீதத்திற்கும் குறைவாக <a href="https://www.dailythanthi.com/topic/ரேஷன்-பொருள்">ரேஷன் பொருள்</a> விநியோகித்த பணியாளர்களுக்கு விளக்கம் கேட்டு 'மெமோ' அனுப்பப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><h2>தாயுமானவர் திட்டம்</h2><p>தமிழகத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியில் தாயுமானவர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் 70 வயதை கடந்த முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடிச்சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. </p><p>ஒவ்வொரு மாதமும் 2-வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த திட்டத்தின் மூலம் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. இதன் மூலம் 21 லட்சத்து 70 ஆயிரம் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெற்று வருகிறார்கள். </p><h2>நடைமுறை சிக்கல்கள் என்ன?</h2><p>ஆனால், தாயுமானவர் திட்டத்தில் இருக்கும் நடைமுறை சிக்கல்களை சுட்டிக்காட்டி ரேஷன் கடை பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வீடுகளுக்கு தேடிச்சென்று பொருட்கள் வழங்க செல்லும்போது, சிலர் இருப்பதில்லை. போன் மூலம் தொடர்புகொண்டால், மகன் அல்லது மகள் வீட்டில் இருப்பதாகவும், அல்லது ஆஸ்பத்திரிக்கு சென்றிருப்பதாகவும் கூறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. </p><p>மேலும், குறுகிய சாலைப்பகுதியில் இருப்பவர்களை தேடிச்சென்று பொருட்கள் வழங்குவதில் சிக்கல் இருப்பதாகவும் ரேஷன் கடை பணியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்லாது, கைரேகை பதிவு செய்யும் பி.ஓ.எஸ். கருவியும் 'சார்ஜ்' இல்லாமல் 'ஆப்' ஆகிவிடுவதாகவும் கூறுகின்றனர். </p><h2>விளக்கம் கேட்டு நோட்டீஸ் </h2><p>இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டத்தில் உள்ள ஊத்தங்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளர் மற்றும் உதவி செயலாளர் ஆகியோர் விற்பனையாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் திடீர் நடவடிக்கையில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. </p><p>அதாவது, தாயுமானவர் திட்டத்தின் மூலம் 70 சதவீதத்திற்கும் குறைவாக பொருட்கள் விநியோகித்த ரேஷன் கடை பணியாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால், ரேஷன் கடை பணியாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். </p><h2>அமைச்சர் தலையிட வேண்டுகோள் </h2><p>ஏற்கனவே, தாயுமானவர் திட்டத்தை செயல்படுத்தும் போது இருக்கும் நடைமுறைச் சிக்கலால் கடும் அதிருப்தியில் உள்ள ரேஷன் கடை பணியாளர்களுக்கு இவ்வாறு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது மன உளைச்சலை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர். </p><p>எனவே, துறை சார்ந்த அமைச்சர் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்பதே ரேஷன் கடை பணியாளர்களின் கோரிக்கையாக உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள்; கொள்முதலை துரிதப்படுத்த அன்புமணி கோரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/piling-up-bundles-of-paddy-anbumani-requests-to-expedite-procurement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/piling-up-bundles-of-paddy-anbumani-requests-to-expedite-procurement#comments</comments><guid isPermaLink="false">6724b6db-4090-4859-bb10-905563943774</guid><pubDate>Fri, 17 Jul 2026 04:59:13 +0000</pubDate><atom:updated>2026-07-17T04:59:13.276Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி,Anbumani,நெல் மூட்டைகள்,கொள்முதல்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/h6x3k2fy/anbumani.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/h6x3k2fy/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-</p><p>காவிரி பாசன மாவட்டங்களில் கோடைப்பருவ நெல் அறுவடை தீவிரமடைந்திருக்கும் நிலையில், அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை விற்பனை செய்ய முடியாமல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனர். ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு அனுப்பப்படாமல் குவிந்து கிடப்பது தான் இதற்கு காரணம். இதில் அரசின் அலட்சியம் கவலையளிக்கிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர்  உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில்  ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கோடை பருவ நெல் சாகுபடி தொடங்கப்பட்டது. நிலத்தடி நீரைக் கொண்டு சாகுபடி செய்யப்பட்ட நெல் பயிர்களை அறுவடை செய்யும் பணி ஜூன் இறுதியில்  தொடங்கியது. பாதிக்கும் மேற்பட்ட பரப்பில் அறுவடை முடிவடைந்து விட்ட நிலையில், ஆகஸ்ட் மாதம் வரை இந்தப் பணி நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோடை பருவத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்ய காவிரி பாசன மாவட்டங்கள் முழுவதும் 800-க்கும் மேற்பட்ட கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், கடந்த 10 நாள்களுக்கும் மேலாக கொள்முதல் பணி முடங்கிக் கிடக்கிறது.</p><h2>சரியான திட்டமிடல்</h2><p>இதற்கு காரணம் அரசு நிர்வாகத்தின் சரியான திட்டமிடல் இல்லாமை தான் என்று உழவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். வழக்கமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும்  நெல் மூட்டைகளை அங்கிருந்து கிடங்குகளுக்கும்,  கிடங்குகளில் இருந்து அரவை ஆலைகளுக்கும் அனுப்பும் பணி சங்கிலித் தொடர் போல நடைபெற வேண்டும். ஆனால், இந்த சங்கிலித் தொடர் அறுபட்டு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அங்கேயே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. போதிய இடவசதி இல்லாததைக் காரணம் காட்டி கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் உழவர்கள் கொண்டு சென்ற நெல் மூட்டைகளும் குவித்து வைக்கப்பட்டுள்ளன.</p><h2>நெல் கொள்முதல் நிலையங்கள்</h2><p>காவிரி பாசன மாவட்டங்களில் திறக்கப்பட்டுள்ள <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">நெல் கொள்முதல்</a> நிலையங்களில் பெரும்பாலானவை  திறந்த வெளியில் அமைக்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் மூட்டைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. எதிர்பாராத வகையில் தென்மேற்கு பருவமழை காவிரி பாசன மாவட்டங்களில் தீவிரமடைந்தால் உழவர்கள் அரும்பாடுபட்டு விளைவித்த நெல் முழுமையும்  வீணாகி விடும். ஆனால், இது குறித்த கவலை அரசுக்கும், அதிகாரிகளுக்கும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.</p><p>கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கும், அரவை ஆலைகளுக்கும் அனுப்பி வைக்காதது ஏன்? என்பது குறித்து அரசு தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. ஆனால், கடந்த ஆண்டு அளவுக்கு அதிகமாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்குகளில் மலை போல குவிந்து கிடப்பதாகவும், அரவை ஆலைகளும் அளவுக்கு அதிகமான நெல் மூட்டைகளை கையாள முடியாத நிலையில் இருப்பதும் தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் உழவர் அமைப்புகள் கூறுகின்றன.</p><h2>தற்காலிக கிடங்கு</h2><p>ஒருவேளை இது தான் உண்மை என்றால், உழவர்கள் எதிர்கொள்ளும் அனைத்து சிக்கல்களுக்கும் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். கடந்த ஆண்டு குறுவை மற்றும் சம்பா பருவத்தில் அளவுக்கு அதிகமாக கொள்முதல் செய்யப்பட்டதால் கிடங்குகள் நிரம்பி விட்டன என்றால், கோடைப்பருவ கொள்முதல் மூலம் கிடைக்கும் நெல் மூட்டைகளை எவ்வாறு கையாள்வது? அவற்றை எங்கு அடுக்கி வைப்பது என்பதற்கான திட்டங்களை அரசு வகுத்திருக்க வேண்டும். ஆடி மாதம் பிறந்து விட்ட நிலையில், திருமண அரங்குகள் போன்றவற்றையாவது வாடகைக்கு எடுத்து தற்காலிக கிடங்குகளாக மாற்றியிருக்க வேண்டும். ஆனால், அதற்கான எந்த நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளாததால் தான் உழவர்களின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.</p><h2>நெல் மூட்டைகள் வீணானது</h2><p>கடந்த ஆண்டு குறுவைப் பருவத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சரியான தருணத்தில்  கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படாததால் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கிக் கிடந்ததையும்,   கொள்முதல் நடக்காததால் உழவர்களும் தங்களின் நெல்லை கொள்முதல் நிலையங்களுக்கு அருகில் திறந்த வெளிகளில் குவித்து வைக்கப்பட்டிருந்ததையும், அவை அனைத்தும் வடகிழக்கு பருவ மழையில் நனைந்து வீணானதையும் எவரும் மறந்திருக்க முடியாது. அதனால் ஏற்பட்ட இழப்புகளில் இருந்தே காவிரி பாசன மாவட்ட உழவர்கள் இன்னும் மீளாத நிலையில், மீண்டும் அதே போன்ற நிலை ஏற்பட்டு விடக்கூடாது.</p><p>எனவே, கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கும், கிடங்குகளில் உள்ள மூட்டைகளை அரவை ஆலைகளுக்கும் போர்க்கால அடிப்படையில் அரசு அனுப்பி வைக்க வேண்டும். அதன் மூலம் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் தடையின்றி நடப்பதை உறுதி செய்ய வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>1993-ல் ஏப்ரல் 14, 15-ம் தேதிகளில் நடந்தது என்ன..? - ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பரபரப்பு விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-happened-on-april-14-and-15-1993-mdmk-general-secretary-vaiko-gives-a-sensational-explanation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-happened-on-april-14-and-15-1993-mdmk-general-secretary-vaiko-gives-a-sensational-explanation#comments</comments><guid isPermaLink="false">5791484e-c520-4765-9195-685b8bc8c836</guid><pubDate>Fri, 17 Jul 2026 04:49:06 +0000</pubDate><atom:updated>2026-07-17T04:49:06.774Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,Tamilnadu,அதிமுக,திமுக,DMK,தமிழகம்,Vaiko,வைகோ,மதிமுக,அரசியல் களம்,tn politics,MDMK |</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/mhaayh8g/vaiko.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/mhaayh8g/vaiko.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பொதிகைமலை உறுதியாக இருப்பதை போல சரியான முடிவுகளை இன்றைய அரசியலில் செய்துள்ளோம் என்றும், இனி நமக்கு எவ்வித கேடும் யாரும் செய்ய முடியாது என்றும் மறுமலர்ச்சி தி.மு.க.பொதுச் செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B">வைகோ</a> தெரிவித்துள்ளார்.</p><h2>கலைஞர் பொதுக்கூட்டம்</h2><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>1993 ஏப்ரல் 14ம் தேதி, சித்திரை திருநாளுக்கு முதல் நாள் அன்று நாகர்கோவிலில் கலைஞர் பொதுக்கூட்டம். என் பெயரையும் சேர்த்துப் போட்டிருக்கிறார்கள். முதல் நாளுக்கு முதல் நாள் ஆற்க்காடு வீராச்சாமி தொலைபேசியில் அழைத்து, “என்னங்க உங்க படம்தான் கன்னியாகுமரி, நாகர்கோவில் முழுவதும் ஒட்டியிருக்கிறார்களாம்! உங்களைப் புகழ்ந்து அதிகமாக போஸ்டர் ஒட்டியிருக்கிறார்களாமே! அதனால் கலைஞர் கூட்டத்தை ரத்து செய்யச் சொல்லி விட்டார்” என்றார். </p><h2>என் படம் போட்ட போஸ்டர்</h2><p>“எனக்கு தெரியாது அண்ணே. என்னை புகழ்ந்து போஸ்டர் ஒட்டச் சொல்லி நான் தூண்டிவிட்டது இல்லை. ஆட்களை உடனே அனுப்பி அதை நான் கிழித்துப் போடச் சொல்கிறேன்” என்று கூறிவிட்டு, இளைஞர் அணிச் செயலாளராக இருந்த ஷேக் தாவூத் மிகப் பெரிய தைரியசாலி. அவருடன் பத்துப் பேரை இரண்டு வண்டிகளில் அனுப்பி, நாகர்கோவில் சுற்றுவட்டாரத்தில் எங்கெல்லாம் என் போஸ்டர் இருக்கிறதோ, அதைக் கிழித்துப் போட்டு வாருங்கள் என்று கூறினேன்.</p><p>இவர்கள் போய் கிழித்தவுடன், “வைகோ படத்தை நாங்கள் ஒட்டுகிறோம். நீங்கள் ஏண்டா வந்து கிழிக்கிறீர்கள்?” என்று நாகர்கோவில்காரர்கள் சண்டை போட்டிருக்கிறார்கள். அதையும் மீறி கிழித்துப் போட்டுவிட்டார்கள். என் படம் போட்ட போஸ்டர் எதுவும் கிடையாது. கூட்டத்தில் நான் பத்து நிமிடம் பேசினேன். </p><h2>தலைவர் வருத்தம்</h2><p>கூட்டம் முடிந்து கலைஞர் கேரளா அரசுக்கு உரிய விருந்தினர் இல்லத்திற்குச் சென்று விட்டார். நான் தமிழ்நாடு அரசு விடுதிக்குச் சென்றேன். நான் அறைக்குச் சென்ற அரை மணி நேரத்திட்றகுள் அன்புச் சகோதரர் துரைமுருகன் அவர்களும், அண்ணன் ஆற்க்காடு வீராச்சாமி அவர்களும் என் அறைக்கு வந்து, “உனக்கு என்னப்பா பிரச்சினை? தலைவர் வருத்தப்படும்படி ஏன் நடந்துகொள்கிறாய்?” என்று கேட்டார்கள். “நான் தலைவருக்கு விசுவாசமாகத்தானே இருக்கிறேன். கட்சியில் நான் பெரிய பதவிக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேனா? ஒருக்காலும் கிடையாது. தலைவர்தான் என்னை ஒதுக்கி வைக்கப் பார்க்கிறார். நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அவர்  விரும்புகிறாரோ, அவ்விதமே நடந்துகொள்வேன்” என்றேன். “சரி, நீ ஒன்றும் கவலைப்படாதே எல்லாம் சரியாகிப் போய்விடும்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்.</p><h2>தலைவர் நடந்துகொண்ட விதம்</h2><p>மறுநாள் தூத்துக்குடிக்கு தலைவர் அவர்களோடு நாங்கள் பயணமானோம். தூத்துக்குடியில் முன்னிரவில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம். அக்கூட்டத்தில் பேசும்போது, என் மனம் திறந்து பேசினேன். கம்ப ராமாயணத்தில்,</p><p>அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி</p><p>அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி</p><p>அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்</p><p>அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்</p><p>என் நெஞ்சை பிளந்து பார்த்தால் அங்கு ராமபிரான்தான் இருக்கிறார் என்று அனுமன் கூறியதாக கம்பர் வர்ணித்தார்.</p><p>என்னுடைய மார்பை பிளந்து பார்த்தால் அங்கே டாக்டர் கலைஞர்தான் கொலு வீற்றிருக்கிறார் என்று சொன்ன கணத்தில் கூட்டம் ஆரவாரம் செய்தது. கரவொலி பலமாக எழுந்தது.</p><p>நான் என் விசுவாசத்தைச் சுட்டிக் காட்டி இவ்வளவு பேசியபோதிலும், அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்கள் உரையாற்றும்போது, “என் பெயரைச் சொல்லி, தம்பி இங்கே உணர்ச்சிவயப்பட்டுப் பேசினார். மூன்று மாதத்திற்கு முன்பே இதைச் சொல்லியிருக்கலாமே?” என்றார்.</p><p>ஆனால் மூன்று மாதத்திற்கு முன்பு அருப்புக்கோட்டை கூட்டத்தில் இதே விதத்தில்தான் பேசினேன். அதற்குப் பிறகும் என்னிடம் தலைவர் நடந்துகொண்ட விதம் மாறவே இல்லை.</p><h2>பேர் சொல்ல விரும்பாத பெருமைமிகு தம்பி</h2><p>இது நடந்தது 1993, ஏப்ரல் 14, 15 தேதிகளில். ஆனால் 16 வருடம் கழித்து 2009 மார்ச் 29 ஆம் நாள் பிரசுரமான முரசொலி உடன் பிறப்புக்கு எழுதிய கவிதையில், தன் கற்பனை வளத்தை எல்லாம் காட்டி கலைஞர் எழுதியிருந்தார். பராசக்திக்கும், மந்திரகுமாரிக்கும், மனோகராவுக்கும் வசனம் எழுதியவர்தானே! காட்சியை நாடக நிகழ்ச்சி போல காட்டுவதில் அவருக்கு நிகர் எவரும் இல்லை..</p><p>இந்தக் கவிதை கடிதத்தில் நடக்காத ஒன்றை படித்தால் உண்மைதான் என்று நம்புகிற அளவுக்கு ஆற்க்காட்டாரையும், துரைமுருகனையும் குறிப்பிட்டு, அவரது புதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களை பேராசிரியர் பாராட்டியது பற்றி குறிப்பிட்டு,</p><p>“கலைஞரே இப்போது உம்மைத்தானே “போர்வாள்” என்று புகழ்கிறார் - போற்றுகிறார் - மாநிலங்களவை உறுப்பினர் பதவியை உமக்கு வழங்கியது போல வேறு யாருக்கு இப்படித் தொடர்ந்து வழங்கியிருக்கிறார்; கவலைப்படாமல் இருந்திடுக! என்றார்கள்.</p><p>கலைஞர் அவர்கள் தனக்குப் பிறகு உங்களைத்தான் தலைவராக்குவார் இயக்கத்திற்கு” என்று நம்பிக்கை தெரிவித்து அந்த நள்ளிரவிலும் தமது பேர் சொல்ல விரும்பாத பெருமைமிகு தம்பியின் முகத்தில் ஒளி பிறக்கச் செய்திருக்கிறார்கள்.</p><p>புன்னகை தவழ்ந்த அந்தத் தம்பியின் முகத்தில் புதியதோர் சிந்தனை - அது ஒரு கேள்வியாகவும் மாறியது”</p><p>“ஏன் துரைமுருகன்; நான் கலைஞருக்குப் பிறகு தலைவனாவேன் என்கிறீர்களே? ஒரு வேளை நமது கலைஞர், பெரியார் போல - ராஜாஜி போல - தொண்ணூறு வயதுக்கு மேல் வாழ்ந்து விட்டால்; நான் தலைவனாவதற்கு எத்தனை வருடம் காத்திருப்பது?"</p><p>இதைக் கேள்வியாகக் கருதாமல்; மற்ற இரு தம்பியரும் தேன் பிலிற்றும் விஷமாக எண்ணிக் கலங்கி - இருவரும் இரகசியமாக சத்தியம் செய்து கொண்டார்களாம். இந்தச் செய்தியை இருவரும் தலைவரிடம் எப்போதும் சொல்வதில்லையென்று !</p><p>ஆனால் - துரைமுருகன் ரகசியத்தைக் காப்பாற்றுவதில் இரும்புப் பெட்டி! ஆற்காட்டாரோ - அசல்; கண்ணாடிப் பேழை - எனினும் - ஆண்டுகள் சில பல கடந்த பிறகே; அன்றைய குமரி முனையில் குமுறிய எரிமலையின் குட்டை மனப் பேராசையின் வெளிப்பாட்டைக் கூறினர் எனக்கு! குறளின் அமுத மொழியாம்; </p><p>"செப்பின் புணர்ச்சிபோற் கூடினும் கூடாதே உட்பகை உற்ற குடி"</p><p>(செப்பு எனப்படும் சிமிழில் அதன் மூடி பொருந்தியிருப்பது போல வெளித் தோற்றத்துக்கு மட்டுமே தெரியும். அவ்வாறே உட்பகை உள்ளவர்கள் உளமாரப் பொருந்தியிருக்க மாட்டார்கள்!</p><p>உடன்பிறப்பே,</p><p>“குறளோவியம்” நூல் தொகுப்பில் நான்</p><p>குறிப்பிடாமல் விட்டுப் போன இந்தக் குறட்பா;</p><p>இந்த நேரத்தில் நினைவுக்கு வந்ததே;</p><p>அந்த நினைவுக்கு ஒரு நன்றி!</p><p>அன்புள்ள,</p><p>மு.க. (29.3.2009)</p><h2>கோயபல்ஸ் பொய்</h2><p>என் மனதில் விசுவரூபம் எடுக்கின்ற கேள்வி யாதெனில்? அண்ணன் ஆற்க்காட்டாரும், சகோதரர் துரைமுருகனும் என் மீது அடாத பழியைப் போட்டு, கலைஞர் என்னை வெறுக்க வேண்டும் என்று இப்படி பொய் சொன்னார்களா? அல்லது தனக்கே உள்ள கற்பனை ஆற்றல், எழுத்தாற்றலால் இப்படி அப்பட்டமான ஒரு பொய்யை ஒரு காட்சியாக புனைந்து கலைஞர் எழுதினாரா?</p><p>இப்பொழுது சங்கரன்கோவில் செயல்வீரர்கள் கூட்டத்தில், நடந்ததை சுட்டிக் காட்டி நான் பேசியதால், இந்த 2026 ஜூலை 11 ஆம் நாள் பிரசுரமான முரசொலியில் 17 ஆண்டுகள் கழித்து முரசொலியில் “அந்த நினைவுக்கு நன்றி” என்று முன்பு அவிழ்த்துவிட்ட கோயபல்ஸ் பொய்யை தி.மு.கழக தோழர்களிடம், நடுநிலையாளர்களிடம், தொலைக்காட்சி செய்தி ஏடுகள் மூலம் 1993 எப்படி கொலைப்பழிக்கு என்னை ஆளாக்கி, தி.மு.கழகத்தை விட்டு நீக்கினாரோ, அதே பாணியில் திமுகவினர், மற்ற அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள், பொதுமக்கள், செய்தியாளர்கள், அதிகாரிகள் என்னைக் குறித்து வெறுப்பும், கசப்பும் ஏற்பட வேண்டும் என்பதற்காக 17 வருடம் கழித்து அதே முரசொலியில் வெளியிட்டார்களா? </p><p>அப்படியானால் 2005 இல் திண்டுக்கல் திமுக மாநாட்டில் என் உரைக்குப் பிறகு கலைஞர் உரையாற்றுகையில், “நீ உரையாற்றும் போது என் முகத்தை நீ கவனித்திருக்க முடியாது. நீ உரையாற்றும்போது என் கண்கள் நீர் பொழிந்துகொண்டிருந்தன. தம்பி, உன்னை நான் இழந்தேனா? என்னை நீ இழந்தாயா?” என்று பேசியது உண்மயா? அல்லது 1993 ஏப்ரலில் நடந்த நிகழ்வை 2009 முரசொலியில் எழுதியதை, இப்போது திரும்ப 2026 ஜூலை 11 இல் கொட்டை எழுத்துக்களில் முரசொலியில் தி.மு.கழகத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறவர்கள் பிரசுரிக்க என்ன காரணம்? தி.மு.கழக கூட்டணியிலிருந்து எமது இயக்கம் வெளியேறியதால் ஏற்பட்ட வெறுப்பில் என்னைக் களங்கப்படுத்துவதற்காக இதை வெளியிட்டார்களா?</p><p>எனவே இந்தப் பழி சுமத்தும் கவிதையை இன்றைய திமுக தலைமை திட்டமிட்டு இப்போது இப்படி வெளியிட்டிருக்கிறது என்று நான் உணர்ந்து கொண்டேன்.</p><p>பழிச் சொற்களையும், குற்றச்சாட்டுக்களையும் இப்போது பிரசுரிப்பதில் என்ன நோக்கம்?</p><p>கொலைப்பழியை என் மீது 1993 இல் திட்டமிட்டு ஏவியது, மீண்டும் அதே பழியை - குற்றச்சாட்டை தற்போதைய தலைமையினர் தொடுத்திருக்கிறார்கள்.</p><p>பொய்யும், அபாண்டமான குற்றச்சாட்டும் நிலை நிற்காது. மெய்தான் நிலைத்து நிற்கும்; என்னைக் காக்கும்.</p><h2>இரண்டு பெருந்தவறு</h2><p>ஆனால் இத்தகைய தாக்குதல்களை எல்லாம் என் இதயம் தாங்கி அனுபவப்பட்டுவிட்டேன். தெளிந்த நீரோடையைப் போல என் மனம் தூய்மையாக இருக்கிறது. பொய்மை தோற்கும்; மெய்மை இறுதியில் வெல்லும்.</p><p>எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்ற அண்ணாவின் மணிவவாசகத்தை எண்ணி நான் இதை எல்லாம் தாங்கி பழக்கப்பட்டுவிட்டேன்.</p><p>நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நான்கு இடங்கள்தான் உங்கள் கட்சிக்கு. அது மறுபேச்சுக்கு இடமில்லை. இதை ஏற்றுக் கொண்டு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுங்கள் என்று வலியுறுத்தித் திணித்தார்கள்.</p><p>கூட்டணியில் இருக்கும்போது நான் அரசையோ, திமுகவையோ விமர்சித்து ஒரு சொல் சொன்னால்கூட அடுத்த கட்டமாக நம் இயக்கத்தை கூட்டணியிலிருந்து அவர்களே விலக்கியிருப்பார்கள்.</p><p>என் வாழ்க்கையில் இரண்டு பெருந்தவறுகளைச் செய்துவிட்டேன். ஒன்று 2006 இல் அண்ணா திமுகவுடன் உடன்பாடு வைத்தது. அன்றைய மதிமுக தலைமை நிர்வாகிகள், முன்னணியினர் என்னை நிர்ப்பந்தப்படுத்தி அதிமுக பொதுச்செயலாளரை சந்திக்க வைத்தார்களே, நான் அந்த நிர்ப்பந்தத்திற்கு உடன்படாமல், அதிமுகவுடன் உடன்பாடு செய்யாமல் இருந்திருந்தால் நமது இயக்கம் வலிவும் பொலிவும் பெற்றிருக்கும்.</p><p>2017 இல் பா.ஜ.க.வை எதிர்ப்பதற்காக திமுகவுடன் உடன்பாடு கொண்டது இரண்டாவது பெரும் பிழையாகும்.</p><h2>பீனிக்ஸ் பறவை</h2><p>பொதிகைமலை உறுதியாக இருப்பதைப் போல நானும், நமது இயக்கமும் சரியான முடிவுகளை இன்றைய அரசியலில் நாம் மேற்கொண்டிருக்கிறோம். இனி நமக்கு எந்தவித கேடும் யாரும் செய்ய முடியாது.</p><p>வைரம் பாய்ந்த வஜ்ரம் போன்ற கண்மணிகளே நீங்கள் இலட்சோப இலட்சம் பேர் இருக்கிறீர்கள். கிரேக்க புராணத்தில் பீனிக்ஸ் பறவை என்று குறிபிடப்பட்டது கற்பனைதான். நடைமுறையில் சரிவிலிருந்து மீண்டு, ஓங்கி உயர்ந்து தலைநிமிர்ந்து தமிழக அரசியலில் நம் இயக்கம் பயணிக்கிறது. இனி நமக்குத் தோல்வி இல்லை. வெற்றித் தேவதை நமக்கு ஆரம் சூட்ட காத்திருக்கிற நிலையை எண்ணி நாம் தடைகளைத் தகர்த்து, நம்மை வீழ்த்த நினைப்போரின் கணைகளை முறித்து செம்மாந்து நடப்போம். ஒளிமயமான எதிர்காலம் நம்மை வரவேற்க காத்திருக்கிறது.</p><p>உங்களுக்கு தெளிவு ஏற்பட வேண்டும் என்பதற்காக இந்த விளக்கம் அல்ல, நடுநிலையாளர்களும், பொதுவாழ்வில் இருப்போரும், பொதுமக்களும், ஊடகத்தில் இருப்போரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே மடலாக சங்கொலியின் வாயிலாக உங்களுக்குத் தெரிவிக்கிறேன். </p><p>நிறைந்த நம்பிக்கையோடு பயணத்தைத் தொடர்வோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>தியாகிகளின் உயரிய பண்புகளை வாழ்வியல் நெறியாக ஏற்று, புதிய சமுதாயத்தை உருவாக்கிடுவோம் - முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-adopt-the-noble-qualities-of-martyrs-as-a-code-of-conduct-and-create-a-new-society-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-adopt-the-noble-qualities-of-martyrs-as-a-code-of-conduct-and-create-a-new-society-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">169800e6-b31e-4a60-a63b-a3d79180fe93</guid><pubDate>Fri, 17 Jul 2026 04:48:31 +0000</pubDate><atom:updated>2026-07-17T04:48:31.788Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>தியாகிகள் தினம்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,Martyrs&apos; Day</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/sgy7gljv/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/sgy7gljv/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தியாகிகள் தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>இந்திய விடுதலைக்கும், மக்களின் உரிமை வாழ்விற்கும் தங்களது இன்னுயிரை ஈந்த தியாகி ஆர்யா (எ) பாஷ்யம், தியாகி சங்கரலிங்கனார் மற்றும் தியாகி செண்பகராமன் ஆகியோருக்கு தியாகிகள் தினத்தை முன்னிட்டு எனது வீரவணக்கங்கள்.</p><p>ஆங்கிலேயரின் அதிகாரச் செருக்கை வேரறுக்கும் வகையில், சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக் கொத்தளத்தில் பறந்த பிரிட்டிஷ் யூனியன் ஜாக் கொடியை இறக்கிவிட்டு, இந்திய மூவர்ணக் கொடியை ஏற்றிய மாவீரர் தியாகி ஆர்யா (எ) பாஷ்யம், நமது மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ என்ற பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகத் தொடர் உண்ணாவிரதமிருந்து இன்னுயிரை ஈந்த தியாகி சங்கரலிங்கனார், ‘ஜெய்ஹிந்த்’ என்ற முழக்கத்தை சுதந்திரப் போராட்டத்திற்கு அளித்து, இந்திய விடுதலைக்காக சர்வதேச ஆதரவைத் திரட்டிய, வீரத்தியாகி செண்பகராமன் ஆகியோரின் அயராத உழைப்பும் தன்னலமற்ற தியாகமும் என்றென்றும் போற்றத்தக்கது.</p><p>இத்தகைய தியாகிகளின் உயரிய பண்புகளை வாழ்வியல் நெறியாக ஏற்று, மனிதநேயமும் நாட்டுப்பற்றும் கொண்ட புதிய சமுதாயத்தை உருவாக்கிடுவோம்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>&apos;தமிழ்நாடு&apos; என்ற பெயர் எப்படி வந்தது? பின்னால் இருந்த போராட்டமும் பெருமையும்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-did-the-name-ta</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-did-the-name-ta#comments</comments><guid isPermaLink="false">bdadd3a8-428f-43f7-9ab7-dd401ec482de</guid><pubDate>Fri, 17 Jul 2026 04:26:33 +0000</pubDate><atom:updated>2026-07-17T04:26:33.827Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,தமிழ்நாடு தினம்,In Tamil Nadu,Tamilnadu Day</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/oo4lf9dm/tamilnadu-day.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/oo4lf9dm/tamilnadu-day.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>சிறப்புக் கட்டுரைகள் (Sirappukatturaigal)</category><content:encoded><![CDATA[ <h2>மொழிவாரி மாநிலங்கள்</h2><p>1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி இந்தியா புதிய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டு, குடியரசாக உருவெடுத்தபோது, 28 மாநிலங்கள் இந்தியாவில் இருந்தன. ஒவ்வொரு மாநிலத்தின் பெயரும் அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.</p><p>இந்தியாவைப் பொறுத்தவரை மாநிலங்கள், இந்திய யூனியனிலிருந்து பிரிந்து செல்ல முடியாது. ஆனால், தங்களுக்குள் பிரிந்துகொள்ளலாம், சேர்ந்துகொள்ளலாம். மாநிலங்களின் எல்லைகள் மாற்றியமைக்கப்படலாம். மாநிலத்திற்கு புதிய பெயர் சூட்டப்படலாம்.</p><p>ஆனால், ஆந்திராவைத் தனியாகப் பிரிக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்ததால், 1953ல் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையத்தில் ஃபசல் அலி, கே.எம். பணிக்கர், எச்.எம். குன்ஸ்ரு ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்த ஆணையம், மாநிலங்களை மொழிவாரியாகப் பிரிக்க பரிந்துரைத்தது. அதன்படி பல புதிய மாநிலங்கள் உருவாயினர்.</p><h2>சென்னை மாநிலம்</h2><p>1956ல் மாநில எல்லைகளை மறு வரையறை செய்யும் சட்ட திருத்தத்தின் மூலம் சென்னை மாகாணத்தின் மேற்கு கடற்கரை பகுதிகள் கேரளாவிற்கும் கர்நாடகத்திற்கும் பிரிந்து சென்றன. வட பகுதி ஆந்திர மாநிலத்திற்குச் சென்றது. எஞ்சிய நிலப்பகுதி சென்னை மாநிலம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது.</p><p>சென்னை மாநிலம் என்ற பெயரை மாற்றி தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்ட வேண்டுமெனக் கோரி காங்கிரசை சேர்ந்த சங்கரலிங்கனார் 1957ல் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கத் துவங்கினார். உண்ணாவிரதம் துவங்கிய 76வது நாள் அவர் உயிரிழந்தார். இதற்குப் பிறகு தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கை மிகவும் தீவிரமடைந்தது. இதற்குப் பிறகு தமிழில் மட்டும் தமிழ்நாடு என்றும் ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் குறிப்பிடத் தீர்மானிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு 1961 பிப்ரவரி 24ஆம் தேதி சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டது. ஆனால், ஆங்கிலத்திலும் தமிழ்நாடு என்றே அழைக்கப்பட வேண்டுமென தி.மு.க. வலியுறுத்தியது.</p><h2>பெயர் மாற்ற தீர்மானம்</h2><p>இந்த நிலையில்தான் 1967ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு முழுமையாக தமிழ்நாடு என்று பெயர் சூட்டத் தீர்மானித்தது. அதன்படி இதற்கான தீர்மானத்தை 1967 ஜூலை 18ஆம் தேதி முதல்-அமைச்சர் சி.என். அண்ணாதுரை சட்டப்பேரவையில் தாக்கல்செய்தார். அனைத்துக் கட்சி ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது.</p><p>அந்தத் தீர்மானத்தில் பேசிய அண்ணா, "நாம் பெயர் மாற்றம் செய்வதாலேயே தனி நாடு ஆகிவிடவில்லை. இந்தியப் பேரரசின் ஒரு பகுதியாகவே தமிழ்நாடு இருக்கும். இதனால் சர்வதேச சிக்கல்கள் எழாது" என்றார்.</p><p>தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதும், அண்ணா எழுந்து "தமிழ்நாடு என்ற பெயர் மாற்ற தீர்மானம் நிறைவேறிய வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நன்னாளில் தமிழ்நாடு வாழ்க என்று நாம் வாழ்த்துவோம்" என்று கூறிவிட்டு, "தமிழ்நாடு" என மூன்று முறை குரல் எழுப்பினார். சட்டப்பேரவையின் எல்லா உறுப்பினர்களும் "வாழ்க" என்று 3 முறை கோஷம் எழுப்பினர்.</p><p>இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள், தங்கள் மாநிலம் வேறு மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்ட தினத்தை தங்கள் மாநில தினமாக கொண்டாடி வருகின்றன. ஆனால், தமிழ்நாடு எந்த மாநிலத்திலிருந்தும் பிரிக்கப்படாத மாநிலமாகவும் அதன் முந்தைய வடிவமான சென்னை மாகாணத்திலிருந்தே வேறு மாநிலங்கள் பிரிந்ததாலும் மாநில தினம் என்று எந்த நாளும் குறிப்பிடப்படாமல் இருந்தது.</p><h2>தமிழ்நாடு மாநில தினம்</h2><p>இந்த நிலையில், கடந்த 2019ஆம் தேதி தமிழ்நாடு அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1ஆம் தேதி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">தமிழ்நாடு மாநில தினமாக</a> கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் நவம்பர்1-ஆம் தேதியையே தங்கள் மாநில தினமாக கொண்டாடி வருகின்றன. தெலங்கானா மாநிலம் ஆந்திராவிலிருந்து பிரிந்து தனி மாநிலமான ஜூன் 2ஆம் தேதியை மாநில தினம் ஆக கொண்டாடி வருகிறது. ஆனால், 2021-ஆம் ஆண்டு திமுக அரசு பதவியேற்ற பிறகு இந்த நாளை மாற்ற முடிவு செய்தது. </p><p>இது தொடர்பாக கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதியன்று அப்போதைய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், "1956 ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன. 2019 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு மாநில நாளாக அப்போதைய அதிமுக அரசு அறிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ்க் கூட்டமைப்பினர், தமிழ் அறிஞர்கள் என பல தரப்பிலும் நவம்பர் 1ஆம் நாள் எல்லை போராட்டத்தினை நினைவுக்கூறும் நாளாகத்தான் அமையுமே தவிர தமிழ்நாடு நாளாக கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது என்றும் மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி அண்ணாவால் 1968 ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் நாள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, தமிழ்நாடு என்று பெயரிடப்பட்ட அந்த நாள்தான் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனை ஏற்று, ஜூலை 18 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக இனி கொண்டாடப்படும் என்று திமுக அரசு அறிவித்தது.</p>]]></content:encoded></item><item><title>சுய கணக்கெடுப்பை ‘ஆன்லைன்’ மூலம் பதிவு செய்வது எப்படி? - தெரிந்து கொள்ளுங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-to-register-for-self-assessment-online-find-out</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-to-register-for-self-assessment-online-find-out#comments</comments><guid isPermaLink="false">dbfb0d4f-4e6f-4468-abed-a93e095f02ef</guid><pubDate>Fri, 17 Jul 2026 04:08:05 +0000</pubDate><atom:updated>2026-07-17T04:08:05.464Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,மக்கள் தொகை கணக்கெடுப்பு,Census,Census data</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/ji3r3kxi/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/ji3r3kxi/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வீட்டு வசதிகள் குறித்த சுய கணக்கெடுப்பை 'ஆன்லைன்' மூலம் எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனரகம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வருமாறு:-</p><p>1. https://se.census.gov.in न '' (एक சென்று, மாநிலம் என்ற இடத்தில் தமிழ்நாட்டை தேர்வு செய்ய வேண்டும். பின்னர், 'கேப்ட்சா' குறியீட்டை பதிவு செய்ய வேண்டும்.</p><p>2. செல்போன் எண்ணை குறிப்பிட வேண்டும். தேவைப்பட்டால் இணையதள முகவரியையும் குறிப்பிடலாம்.</p><p>3. பதிவு செய்யும் வசதி 16 மொழிகளில் இடம் பெற்றிருக்கும். இதில் தங்களுக்கு தெரிந்த மொழிகளை தேர்வு செய்தால், பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு 'ஓ.டி.பி.' எண் வரும். அதன் மூலம் சுய கணக்கெடுப்பு பணியை தொடரலாம்.</p><p>4. எந்த மாவட்டம், கிராமம்/ நகரம்/ பின்கோடு எண்ணை தெரிவிக்க வேண்டும்.</p><p>5. இந்த விவரங்களை பதிவு செய்தவுடன் கூகுள் வரைப்படம் (மேப்) மூலம் தங்களுடைய வீடு அமைந்துள்ள இடம் உறுதி செய்யப்படும்.</p><p>6. வீட்டு வசதிகள் குறித்த 33 கேள்விகள் வரிசையாக வரும். இந்த கேள்விகளை நிரப்புவதில் சந்தேகம் ஏதேனும் இருந்தால் கேள்விகளை கேட்டு விளக்கங்கள் பெற முடியும். அதன் பின்னர் உரிய பதில்களை அளிக்கலாம்.</p><p>7. தாங்கள் அளித்த பதில்கள் சரியாக இருக்கிறதா? என்பதை பார்வையிட்டு உறுதி செய்யலாம்.</p><p>8. இறுதியாக விவரங்களை சமர்பித்தவுடன் அவை சர்வரில் பதிவாகிவிடும். இதனை உறுதி செய்யும் வகையில் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு 11 இலக்க எண் குறுந்தகவலாக அனுப்பி வைக்கப்படும்.</p><p>9. வீடுகளுக்கு நேரடியாக கணக்கெடுக்க வரும் பணியாளர்களிடம் இந்த எண்ணை காண்பிக்க வேண்டும். அவர்கள் இந்த எண் மூலம் தாங்கள் பதிவு செய்த விவரங்கள் சரியாக இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்த பின்னர், கணக்கெடுப்பை உறுதி செய்வார்கள்.</p>]]></content:encoded></item><item><title>மேகமலை அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/forest-department-bans-tourists-from-visiting-meghamalai-falls</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/forest-department-bans-tourists-from-visiting-meghamalai-falls#comments</comments><guid isPermaLink="false">5bf01211-b088-4e29-b5cf-0f42c6614779</guid><pubDate>Fri, 17 Jul 2026 03:50:30 +0000</pubDate><atom:updated>2026-07-17T03:50:30.471Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Theni,தேனி,Forest Department,வனத்துறை,தடை,சுற்றுலாப்பயணிகள்,மேகமலை அருவி,Megamalai</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/jew2l97k/mega.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/jew2l97k/mega.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி,</p><p>தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF">மேகமலை அருவி</a> உள்ளது. இந்த அருவியில் குளிப்பதற்காக தேனி மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்பட வெளிமாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.</p><h2>வனத்துறை தடை</h2><p>இந்த நிலையில், தேனி மாவட்டம் மேகமலை அருவிப் பகுதியில் சீரமைப்புப் பணிகளுக்காக இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. பணிகள் முடியும் வரை தடை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>வனத்துறையின் தடையால் அருவிக்கு குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>பவுர்ணமி கிரிவலம்: விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 29-ந்தேதி சிறப்பு ரெயில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pournami-girivalam-special-train-from-villupuram-to-tiruvannamalai-on-29th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pournami-girivalam-special-train-from-villupuram-to-tiruvannamalai-on-29th#comments</comments><guid isPermaLink="false">9925f37c-cacb-4d22-bbe9-2fe30a16e358</guid><pubDate>Fri, 17 Jul 2026 03:46:28 +0000</pubDate><atom:updated>2026-07-17T03:46:28.144Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,திருவண்ணாமலை,Thiruvannamalai,Special train,பவுர்ணமி கிரிவலம்,Pournami Girivalam,விழுப்புரம்,Villupuram</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/lnyioul5/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/lnyioul5/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விழுப்புரம்,</p><h2>பவுர்ணமி விழா</h2><p>திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வருகிற 29-ந்தேதி (புதன்கிழமை) நடைபெறும் பவுர்ணமி கிரிவலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும், பயணிகளின் வசதிக்காகவும் தெற்கு ரெயில்வே சார்பில் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.</p><h2>சிறப்பு ரெயில்</h2><p>அதாவது வருகிற 29-ந்தேதி விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 10.10 மணிக்கு புறப்படும் விழுப்புரம்-திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (வண்டி எண் 06130) 11.45 மணிக்கு திருவண்ணாமலை ரெயில் நிலையத்தை சென்றடையும். அதேபோல் மறுமார்க்கத்தில் திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்படும் திருவண்ணாமலை-விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (வண்டி எண் 06129) மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் ரெயில் நிலையத்தை வந்தடையும்.</p><p>இந்த ரெயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த தகவல் திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோவை செம்மொழி பூங்கா பணியில் ரூ.40 கோடி முறைகேடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-40-crore-embezzlement-in-coimbatore-semmozhi-park</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-40-crore-embezzlement-in-coimbatore-semmozhi-park#comments</comments><guid isPermaLink="false">3545c149-21ef-4ac5-accb-19788f3cfc64</guid><pubDate>Fri, 17 Jul 2026 03:22:56 +0000</pubDate><atom:updated>2026-07-17T03:22:56.990Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,Semmozhi Poonga,செம்மொழி பூங்கா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/4pqeht2z/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/4pqeht2z/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவை செம்மொழி பூங்கா திட்ட பணியில் ரூ.40 கோடி முறைகேடு நடைபெற்று இருப்பதாக ஒப்பந்ததாரர் சங்கம் புகார் செய்துள்ளது. தென்மண்டல ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் அமைச்சர் சம்பத்குமார் மற்றும் நகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறை நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-</p><h2>ரூ.40 கோடி முறைகேடு</h2><p>கோவை காந்திபுரத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியில் செம்மொழி பூங்கா திட்ட பணிகள் நடந்தது. சுமார் ரூ.45 கோடிக்கு திட்ட பணி மதிப்பீடு செய்து டெண்டர் விடப்பட்டது. ஆனால் அதன்பிறகு கூடுதல் மதிப்பீடு என்ற பெயரில் சுமார் ரூ.40 கோடிக்கு மேல் மாநகராட்சி நிதியில் கூடுதல் தொகை ஒதுக்கி பணிகள் நடந்தது. இது ஒரு நூதன கொள்ளை ஆகும்.</p><p>இந்த மதிப்பீடுகளில் ஒன்றுக்கு 2 மடங்காக விலைப் பட்டியலில் இல்லாத பல பொருட்களை பயன்படுத்தி போலியான விலைப்பட்டியல் தயார் செய்து சுமார் ரூ.80 கோடி செலவு செய்து மாநகராட்சி பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. இதனை பொதுப்பணித்துறை வல்லுனர்கள், தனியார் வல்லுனர்கள் மற்றும் தணிக்கை அதிகாரிகளை வைத்து ஆய்வு செய்தால், சுமார் ரூ.40 கோடிக்கு மேல் போலி பில் போட்டு முறைகேடு செய்தது வெளிச்சத்துக்கு வரும்.</p><h2>சாலை பணியிலும்...</h2><p>இதுபோன்று ஒரு சாலை அமைத்தால் 5 ஆண்டுகள் நீடித்து நிலைக்க வேண்டும். தேர்தல் செலவுக்கு பணம் தேவை என்பதால் 5 ஆண்டு காலத்திற்குள் போட்ட சாலைகளை பெரும்பாலும் தேர்வு செய்துள்ளனர். அதனை திரும்ப அமைப்பது போல பாசாங்கு செய்து குறைந்த கனத்தில் போட்டு 50 சதவீதம் மட்டுமே பணி செய்து 100 சதவீதத்துக்கு பில் போட்டுள்ளனர். எனவே கடந்த 6 மாதங்களில் நடைபெற்ற அனைத்து பணிகளையும் மறுஆய்வு செய்து அதன் தரம் மற்றும் அளவை சரி பார்த்து தவறு இருக்கும் பணிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>செம்மொழி பூங்காவிற்கு முதலில் தயாரிக்கப்பட்ட மதிப்பீடு எவ்வளவு, அதன்பின்னர் தற்போது வரையிலான செலவினம் எவ்வளவு என பார்த்து அதன் முழு உண்மை தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். இதில் மதிப்பீடு தயாரித்தவர். பணியை பார்த்து போலி பில் தயாரித்த அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மீதும் மற்றும் தேர்தல் நேரத்தில் 50 சதவீதம் மட்டும் பணி செய்து போலி பில் பெற்றவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நாடாளுமன்ற வளாகத்துக்குள் எம்.பி.க்கள் ஸ்மார்ட் வாட்ச் அணியத் தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/lok-sabha-issues-advisory-on-smartwatches-pen-cameras-for-mps-ahead-of-parliament-monsoon-session</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/lok-sabha-issues-advisory-on-smartwatches-pen-cameras-for-mps-ahead-of-parliament-monsoon-session#comments</comments><guid isPermaLink="false">707b0236-8704-4b84-9cc0-8b228672df46</guid><pubDate>Fri, 17 Jul 2026 03:16:02 +0000</pubDate><atom:updated>2026-07-17T03:16:02.288Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>புதுடெல்லி,நாடாளுமன்றம்,ஸ்மார்ட் வாட்ச்,In Parliament,smart watches</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/qo8f4fm2/parliment33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  ஸ்மார்ட் வாட்ச்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/qo8f4fm2/parliment33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 20-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. </p><p>இந்தநிலையில்,  நாடாளுமன்ற வளாகத்துக்குள் எம்பிக்கள் ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் கண்ணாடி, கேமரா பேனா ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து எம்.பி.க்களுக்கும் மக்களவை செயலகம் அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:</p><p>நாட்டில் <a href="https://www.dailythanthi.com/news/india">ஸ்மார்ட் வாட்ச்</a>, கேமரா பேனா உள்ளிட்ட நவீன சாதனங்கள் பரவலாக கிடைப்பது எம்.பி.க்களுக்கு தெரிந்திருக்கும். இவற்றில் சில சாதனங்கள், எம்.பி.க்களின் தனிநபர் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடும். நாடாளுமன்ற தனியுரிமைகளுக்கு எதிராக இருக்கக்கூடும். ஆதலால் பாதுகாப்பு, தனியுரிமைகளுக்கு எதிராக இருக்கும் இந்த சாதனங்களை எம்.பி.க்கள் பயன்படுத்த வேண்டாம். </p><p>நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது, நுழைவு வாயில் கேட்டுகள் முன்பு போராட்டம் நடத்த வேண்டாம் என எம்.பி.க்கள் கேட்டு கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு போராட்டம் நடத்துவது, நாடாளுமன்ற அலுவலில் பங்கேற்க வரும் மற்ற எம்.பி.க்களின் நடமாட்டத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோல், தர்ணா, போராட்டம், உண்ணாவிரதம் போன்றவற்றிலும் எம்.பி.க்கள் ஈடுபட வேண்டாம். </p><p>மேலும், பேனர்கள், கத்திகள், வாள், கம்பு, வெடிப்பொருள்கள் உள்ளிட்டவற்றையும் நாடாளுமன்ற வளாகத்துக்கு எம்.பி.க்கள் எடுத்து வரக்கூடாது என மக்களவை செயலகம் கேட்டுக் கொண்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காட்டு யானைகளை விரட்ட வந்த போது உடல்நலக்குறைவு:
கும்கி யானைக்கு சிகிச்சை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kumki-elephant-falls-ill-while-trying-to-chase-away-wild-elephants-treatment</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kumki-elephant-falls-ill-while-trying-to-chase-away-wild-elephants-treatment#comments</comments><guid isPermaLink="false">b98ae04d-e7ae-41df-ad8b-fd95a5d4bac1</guid><pubDate>Fri, 17 Jul 2026 03:11:48 +0000</pubDate><atom:updated>2026-07-17T03:11:48.663Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிகிச்சை,உடல்நலக்குறைவு,கும்கி யானை,Kumki elephant,For treatment</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/o56ch0li/53.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/o56ch0li/53.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பந்தலூர், </p><p>பந்தலூர் தாலுகா குந்தலாடி அருகே பாக்கனா, புத்தூர்வயல் பகுதிகளில் காட்டு யானைகள் தினமும் ஊருக்குள் புகுந்து வாழை, தென்னை, பாக்கு மரங்கள், பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. கடந்த மே மாதம் 26-ந் தேதி 8-ம் வகுப்பு படித்து வந்த மிஸ்ஹாப் (வயது 14) என்ற சிறுவன் புத்தூர்வயலில் இருந்து பாக்கனாவுக்கு முடி வெட்ட சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தான். அப்போது காட்டு யானை தாக்கியதில் சிறுவன் உயிரிழந்தான். இந்த சம்பவத்தை அடுத்து காட்டு யானைகளை விரட்ட கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். </p><h2>கும்கி யானை</h2><p>மேலும் கும்கி யானைகள் உதவியுடன் கண்காணித்து யானைகளை விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து முதுமலையில் இருந்து விஜய், கிருஷ்ணா ஆகிய 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு, பாக்கனாவில் தனியார் தேயிலை தோட்டம் பகுதியில் நிறுத்தப்பட்டு காட்டு யானைகளை விரட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் 55 வயது விஜய் என்ற <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88">கும்கி யானைக்கு</a> திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதோடு உணவு உட்கொள்ள முடியாமல் உள்ளது. இதை அறிந்த முதுமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஸ்குமார், கும்கி யானைக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை: கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-college-student-commits-suicide-by-hanging</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-college-student-commits-suicide-by-hanging#comments</comments><guid isPermaLink="false">e2571eb1-3c77-40dc-9421-1bbc6f107150</guid><pubDate>Fri, 17 Jul 2026 03:07:48 +0000</pubDate><atom:updated>2026-07-17T03:07:48.518Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,College student,கல்லூரி மாணவி,தூக்குப்போட்டு தற்கொலை,commits suicide by hanging</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/21uh1bfz/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கல்லூரி மாணவி தற்கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/21uh1bfz/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னையில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை</a> செய்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். </p><h2>கல்லூரி மாணவி</h2><p>சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் உஷா. இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகள் ரக்சனா (வயது 17), பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். ரக்சனாவுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்ததாக தெரிகிறது. </p><h2>தூக்குப்போட்டு தற்கொலை</h2><p>நேற்று முன்தினம், ரக்சனாவின் தாயார் மற்றும் அண்ணன் கடைக்கு சென்றுவிட்டனர். வீட்டில் தனியாக இருந்த ரக்சனா, மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். ரக்சனாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து மயிலாப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>‘பாராசிட்டமால் சிரப்&apos; விவகாரத்தில் தவறான தகவலை பரப்பவேண்டாம்: சுகாதாரத்துறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dont-spread-false-information-about-paracetamol-syrup-issue-health-department</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dont-spread-false-information-about-paracetamol-syrup-issue-health-department#comments</comments><guid isPermaLink="false">8e0752c2-9363-4519-a69b-4be12b7d2721</guid><pubDate>Fri, 17 Jul 2026 02:54:26 +0000</pubDate><atom:updated>2026-07-17T02:54:26.834Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சுகாதாரத்துறை,Public Health Department,பாராசிட்டமால்,பாராசிட்டமால் சிரப்,paracetamol,paracetamol syrup</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/dpn4xpgx/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/dpn4xpgx/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி பாதிப்பு ஏற்பட்டால் டாக்டர்கள் 'பாராசிட்டமால் சிரப்' வகைகளை பரிந்துரைப்பார்கள். இந்தநிலையில், குழந்தைகளுக்கு வழங்கப்படும் இந்த சிரப்பில் ஆல்கஹால் விதிகளை மீறி அதிகமான அளவு சேர்க்கப்படுவதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பரவி வந்தன. இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை விளக்கம் தெரிவித்துள்ளது.</p><h2>அதன் விவரம் வருமாறு:-</h2><p>'பாராசிட்டமால் சிரப்' மருந்தானது தமிழ்நாடு மருத்துவப் சேவை கழகத்தின் (டி.என்.எம்.எஸ்.சி.) அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தால் பரிசோதிக்கப்பட்டு தரமானது என உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அரசு ஆய்வகமும் இதனை தரமானது என்று சான்றளித்துள்ளது. குழந்தைகளுக்கான மருந்துகளில் ஆல்கஹால் சரியான விகிதத்திலேயே பயன்படுத்தப்படுகிறது. 'பாராசிட்டமால்' மருந்தை எளிதில் கரைக்க ஆல்கஹால் பயன்படுத்துவது வழக்கம்.</p><h2>95 சதவீதம்</h2><p>இந்த ஆல்கஹாலின் அளவு 10 சதவீதம் என்ற வரம்புக்குள்தான் இருக்கும். உதாரணத்திற்கு, 60 மி.லி. அளவு கொண்ட மருந்து பாட்டிலில் 10 சதவீதம் அதாவது 6 மி.லி. அளவிலேயே ஆல்கஹால் பயன்பாடு இருக்கும். '95 சதவீதம் ஆல்கஹால்' என்பது ஆல்கஹாலின் தூய தன்மையை குறிப்பிடும் சொல் மட்டுமே. தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் கிடங்குகளில் அனைத்து மருந்துகளும் 180 நாட்களுக்கு ஒருமுறை வழக்கமான மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.</p><p>இது தவிர அரசு மருத்துவ நிறுவனங்களில் உள்ள மருந்துகளும் தரத்தை உறுதி செய்ய அவ்வப்போது கள ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. தரமான மருந்து என்று உறுதி செய்யப்பட்ட பிறகே இந்த மருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வினியோகிக்கப்படுகின்றன. எனவே, மக்களிடையே தவறான தகவலை பரப்ப வேண்டாம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரெயில் முன்பு பாய்ந்து தம்பதி தற்கொலை - கடிதம் எழுதி வைத்துவிட்டு விபரீதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/couple-commits-suicide-by-jumping-in-front-of-train-leaving-a-note-behind</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/couple-commits-suicide-by-jumping-in-front-of-train-leaving-a-note-behind#comments</comments><guid isPermaLink="false">fbf2ea14-3a51-4906-a5f4-24c0f9d3545d</guid><pubDate>Fri, 17 Jul 2026 02:47:25 +0000</pubDate><atom:updated>2026-07-17T02:47:25.152Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,Thiruvannamalai,தற்கொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/mrmdr8sg/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/mrmdr8sg/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை,</p><p>திருவண்ணாமலையை அடுத்த நல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் சந்திரகுமார் (42 வயது). அரியானா மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சிந்து (38 வயது). இவர்களுக்கு 10-ம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளான். சந்திரகுமாருக்கு நுரையீரல் தொற்றுநோய் இருந்துள்ளது. இதனால் கடந்த வாரம் சொந்த ஊருக்கு திரும்பினார்.</p><p>பின்னர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவன்-மனைவி இருவரும் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு சிகிச்சைக்கு பின்னர் இருவரும் தனிமையில் அமர்ந்து பேசியபோது தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.</p><p>இதையடுத்து நேற்று அதிகாலை 4 மணியளவில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா களம்பூர் அருகே உள்ள வடமாதிமங்கலம் ரெயில் நிலையத்துக்கு சந்திரகுமாரும், சிந்துவும் வந்தனர். அப்போது இருவரும் திடீரென நஸ்ராபூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற ரெயில் முன்பு பாய்ந்தனர். இதில் இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த, ரெயில்வே போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டனர்.</p><p>அப்போது சந்திரகுமாரின் சட்டைப்பையில் ஒரு கடிதம் இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர். அதில் நீண்ட நாட்களாக சந்திரகுமாருக்கு நுரையீரல் தொற்றுநோய் பிரச்சினை இருந்துள்ளது. இதனால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதன் காரணமாக கடன் அதிகரிக்கும் என்பதால் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மது குடிக்கும்போது தகராறு; கல்லால் தாக்கி வாலிபர் கொலை: 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/argument-over-drinking-alcohol-youth-killed-by-stone-2-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/argument-over-drinking-alcohol-youth-killed-by-stone-2-arrested#comments</comments><guid isPermaLink="false">c0701b94-dcf8-4912-af76-6a9ca52cf53b</guid><pubDate>Fri, 17 Jul 2026 02:33:42 +0000</pubDate><atom:updated>2026-07-17T02:33:42.169Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>2 arrested,2 பேர் கைது,Kanchipuram,வாலிபர் கொலை,Dispute,தகராறு,காஞ்சீபுரம்,Stone attack,youth killed,Drinking alcohol,கல்லால் தாக்கி,மது அருந்துதல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/588ubt29/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வாலிபர் கொலை, 2 பேர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/588ubt29/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>காஞ்சீபுரம், </p><p>காஞ்சீபுரம் மாவட்டத்தில் மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கல்லால் தாக்கி வாலிபர் கொலை</a> செய்யப்பட்டது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>ரத்தக்காயங்களுடன் ஆண் பிணம்</h2><p>காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சோமங்கலம் கிராமத்தில் உள்ள தனியார் மனை பிரிவு அருகே நேற்று காலை வாலிபர் ஒருவர் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் சோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் சேத்துப்பட்டு கிராமம், வடவண்டை தெருவை சேர்ந்த ராஜேஷ் (வயது 30) என்பது தெரியவந்தது.</p><h2>போலீசில் சரண்</h2><p>இந்த நிலையில் நேற்று சேத்துப்பட்டு கிராமம் வடவண்டை தெருவை சேர்ந்த தங்கம்(46) மற்றும் ஆனந்தஜோதி(32) ஆகிய 2 பேர் சோமங்கலம் போலீசில் சரண் அடைந்தனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையின்போது அவர்கள் கூறியதாவது: </p><p>நேற்று முன்தினம் இரவு நாங்கள் ராஜேசுடன் சேர்ந்து மது குடித்தோம். அப்போது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. மதுபோதையில் நாங்கள் அவரை கல்லால் தாக்கினோம். இதில் அவர் இறந்து விட்டார். நாங்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டோம். </p><p>இவ்வாறு அவர்கள் கூறினர்.</p><h2>2 பேர் கைது</h2><p>போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். போலீசார் ராஜேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலைக்கு முன்விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்டிரல் ரெயில் நிலைய கழிவறையில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-videotaping-woman-bathing-in-central-railway-station-toilet</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-videotaping-woman-bathing-in-central-railway-station-toilet#comments</comments><guid isPermaLink="false">6a18b17d-4710-452a-be9e-b282ea2c504e</guid><pubDate>Fri, 17 Jul 2026 02:28:21 +0000</pubDate><atom:updated>2026-07-17T02:28:21.511Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,Central Railway Station,arrest,வாலிபர் கைது,சென்டிரல் ரெயில் நிலையம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/vv6zv2en/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/vv6zv2en/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 32 வயது பெண் ஒருவர், தனது குடும்பத்துடன் கேரளாவில் வசித்து வருகிறார். சமீபத்தில் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு, ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை சென்டிரல் வந்திருந்தார். அங்கிருந்து கேரளா செல்ல மற்றொரு ரெயிலுக்காக காத்திருந்தார்.</p><p>அப்போது, பெண்கள் காத்திருப்போர் அறை பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டிருந்ததால், ஆண்கள் காத்திருப்பு அறையில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட கழிவறையில் அந்த பெண் குளிக்க சென்றார். அவர் குளிப்பதை அருகில் இருந்த கழிவறையில் மறைந்திருந்த ஒருவர் செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு சக பயணிகள், அந்த நபரை பிடித்து சென்டிரல் ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.</p><p>விசாரணையில், பிடிபட்டவர் வேலூர் மாவட்டம் கீழந்தூரை சேர்ந்த அருண் (27 வயது) என்பதும், மின்வாரியத்தில் கேங்மேனாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>நீர்வரத்து குறைவால் ஒகேனக்கல்லில் வெளியே தெரியும் ஜெகன்மோகினி குகை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/jaganmohini-cave-in-hogenakkal-is-visible-due-to-low-water-flow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/jaganmohini-cave-in-hogenakkal-is-visible-due-to-low-water-flow#comments</comments><guid isPermaLink="false">39ec65ee-3fa8-494b-802e-237bad573b05</guid><pubDate>Fri, 17 Jul 2026 02:21:26 +0000</pubDate><atom:updated>2026-07-17T02:21:26.303Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Hogenakkal,ஒகேனக்கல்,தர்மபுரி,Dharmapuri,Hogenakkal Cauvery,ஒகேனக்கல் அருவி,குகை,cave,ஜெகன்மோகினி,Jaganmohini</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/1vslzxg1/CHENNAI-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/1vslzxg1/CHENNAI-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>தர்மபுரி,</p><h2>ஜெகன்மோகினி குகை</h2><p>தமிழகத்தின் பிரபலமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றான தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், கேரளம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிவர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குளித்தும் பரிசலில் சென்றும் மகிழ்வர்.</p><p>இந்த நிலையில் காவிரி ஆற்றில் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் ஒகேனக்கல் பெரிய பாணி காவிரி ஆற்றில் தண்ணீரில் மூழ்கி இருந்த ஜெகன்மோகினி குகை வெளியே தெரிய தொடங்கி உள்ளது. ஜெகன்மோகினி குகை, 1978-ம் ஆண்டு வெளியான ஜெகன்மோகினி திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக பாறையில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது</p><h2>சுற்றுலா பயணிகள் ஆர்வம்</h2><p>காவிரியில் நீர்வரத்து அதிகரிக்கும் காலங்களில் இந்த குகை முழுவதும் நீரில் மூழ்கிவிடும். ஆனால் நீர்வரத்து குறையும் காலங்களில் மட்டுமே இது மீண்டும் காட்சியளிக்கும். குகையை பார்வையிடும் சுற்றுலா பயணிகள் 10 மீட்டர் தூரம் வரை உள்ளே சென்று வர முடியும். மேலும் அதன் அமைப்பையும், இயற்கை அழகையும் கண்டு வியப்படைந்தனர்.</p><p>தற்போது நீர்வரத்து வினாடிக்கு 300 கனஅடியாக உள்ளதால் பரிசல் ஓட்டிகளும் சுற்றுலா பயணிகளை ஜெகன்மோகினி குகை வரை அழைத்து சென்று காட்டுகின்றனர். இதனால் ஒகேனக்கல் சுற்றுலாத்தலத்தில் பயணிகளின் ஆர்வம் அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>பழனி கோவில் நில மோசடி விவகாரத்தில் மேலும் ஒரு அதிரடி நடவடிக்கை..! மாவட்ட பதிவாளர் சஸ்பெண்ட்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/another-bold-move-in-the-palani-temple-land-fraud-case-district-registrar-suspended</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/another-bold-move-in-the-palani-temple-land-fraud-case-district-registrar-suspended#comments</comments><guid isPermaLink="false">ef9adda5-5b69-4b95-8e04-c1ac2dece234</guid><pubDate>Fri, 17 Jul 2026 02:19:57 +0000</pubDate><atom:updated>2026-07-17T02:19:57.883Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,பழனி,தமிழகம்,சஸ்பெண்ட்,suspend,மோசடி,நில மோசடி வழக்கு,Palani,Palani temple,நில மோசடி,பழனி கோவில்,Land fraud case,பத்திர பதிவு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/0fwod3sh/palani.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பழனி கோவில், நில மோசடி, சஸ்பெண்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/0fwod3sh/palani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பழனி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/palani-temple">பழனி கோவில்</a> தண்டபாணி மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை தனிநபர்கள் பெயருக்கு முறைகேடாக பதிவுசெய்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. இதுதொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் முழுமையாக ஆய்வு செய்து உண்மை நிலையை அறிய, பதிவுத்துறை சார்பில் 3 பேர் கொண்ட உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.</p><h2>விரிவான விசாரணை</h2><p>இந்தக்குழுவில் கூடுதல் பதிவுத்துறைத் தலைவர், உதவி பதிவுத்துறைத் தலைவர் மற்றும் ஒரு மாவட்டப் பதிவாளர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவினர் பத்திரப்பதிவு நடைபெற்ற நாளில் பணியில் இருந்த சார்பதிவாளர், விடுப்பில் சென்ற சார்பதிவாளர், மாவட்ட பதிவாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்டோரிடம் விரிவான விசாரணை மேற்கொள்வார்கள்.</p><h2>சஸ்பெண்ட்</h2><p>முன்னதாக பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமானதாக கூறப்படும் நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாக எழுந்த புகாரில், ஏற்கனவே சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்.</p><p>இந்த நிலையில், அதே விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் மாவட்ட பதிவாளர் சசிகலாவையும் தமிழக பதிவுத்துறை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அவர்களின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>அடுத்தடுத்து நடவடிக்கைகள்</h2><p>பழனி கோவில் நில பதிவு முறைகேடு தொடர்பான புகாரில் நடைபெற்று வரும் விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அடுத்தடுத்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.</p><p>இந்த விவகாரத்தில் மேலும் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் ஆவணங்கள் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>காதலுக்கு எதிர்ப்பு: ரெயில் தண்டவாளத்தில் படுத்து உயிரை மாய்த்த காதல் ஜோடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-couple-committed-suicide-by-lying-on-the-railway-tracks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-couple-committed-suicide-by-lying-on-the-railway-tracks#comments</comments><guid isPermaLink="false">fe430fb3-e5e0-4007-aa2d-879eb5f08597</guid><pubDate>Fri, 17 Jul 2026 02:03:12 +0000</pubDate><atom:updated>2026-07-17T02:03:12.678Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,கிரைம் செய்திகள்,Love,காதல் ஜோடி,தர்மபுரி,Dharmapuri,Love couple,காதல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/sctjdi7b/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/sctjdi7b/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>தர்மபுரி,</p><p>தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள ஆவலம்பட்டி பிரிவு சாலை எதிரில் சேலம்-சென்னை செல்லும் ரெயில் தண்டவாளத்தில் ஆண், பெண் உடல்கள் துண்டாகி சிதறி கிடப்பதாக மொரப்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தண்டவாளத்தில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த உடல்களை மீட்டு விசாரணை நடத்தினார்கள். </p><p>மேலும் உடல்கள் கிடந்த தண்டவாளத்தின் அருகே மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த வண்டி எண்ணை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் காதல் ஜோடி ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.</p><h2>பிளஸ்-1 மாணவி</h2><p>தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த எட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த தட்சிணா மூர்த்தி மகன் கன்சிராம் ராணா (வயது 19) என்பவர் காரிமங்கலம் பகுதியில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். அதே ஊரை சேர்ந்த அரசு என்பவரின் மகள் அமுதபிரியா என்ற அறிவுஜோதி (16), அரூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். மாணவரும், மாணவியும் உறவினர்கள் என கூறப்படுகிறது.</p><p>இவர்கள் 2 பேரும் காதலித்து வந்ததாகவும், பள்ளியில் படிக்கிற வயதில் என்ன காதல் என்று அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மேலும் அந்த மாணவிக்கு அக்காள்கள் இருப்பதாகவும் அவர்களின் எதிர்காலம் கருதி சிறுமியான பிளஸ்-1 மாணவி படிக்க மட்டும் செய், காதல் எல்லாம் வேண்டாம் என்று பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது.</p><h2>உறவினர்கள் கதறல்</h2><p>இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் இருவரும் காணாமல் போனதும் தெரியவந்தது. பின்னர் நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் ரெயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. தண்டவாளத்தில் துண்டு, துண்டாக சிதறிக்கிடந்த 2 பேரின் உடல்களையும் கண்டு உறவினர்கள் கதறி அழுத காட்சி நெஞ்சை பதைபதைக்க வைத்தது.</p><p>காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் வீட்டு கதவை உடைத்து 17 சவரன் நகை கொள்ளை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/17-sovereigns-of-jewellery-stolen-after-breaking-down-house-door-in-thoothukudi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/17-sovereigns-of-jewellery-stolen-after-breaking-down-house-door-in-thoothukudi#comments</comments><guid isPermaLink="false">80d56a7d-4829-426b-9d3b-e39043e102d2</guid><pubDate>Fri, 17 Jul 2026 02:01:37 +0000</pubDate><atom:updated>2026-07-17T02:01:37.669Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,jewelry stolen,mysterious persons,மர்ம நபர்கள்,House,வீட்டின் கதவை உடைத்து,நகை கொள்ளை,போலீசார் வலைவீச்சு,door broken,police netting</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/euxzbvc3/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நகை கொள்ளை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/euxzbvc3/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி அடுத்த புதுக்கோட்டை பகுதியில் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 17 சவரன் தங்க நகைளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p><h2>மருத்துவ பரிசோதனை</h2><p>தூத்துக்குடி அடுத்த புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம்புளி கோல்டன் நகரை சேர்ந்தவர் ஆஷிக்தனசிங் (வயது 26). இவர் மடத்தூர் பகுதியில் உள்ள தனியார் ஆயில் நிறுவனத்தில் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கர்ப்பிணியாக உள்ளதால், கடந்த 12-ந்தேதி மருத்துவ பரிசோதனைக்காக தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். </p><h2>17 சவரன் நகை கொள்ளை</h2><p>சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆஷிக்தனசிங் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">17 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை</a>யடித்து சென்றிருப்பது தெரியவந்தது.</p><h2>மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு</h2><p>இது தொடர்பான புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் ரூ.14 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>யு.பி.ஐ. மூலம் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டணம் - மத்திய அரசு ஆலோசனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-charges-for-digital-money-transactions-made-through-upi-central-government-advises</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-charges-for-digital-money-transactions-made-through-upi-central-government-advises#comments</comments><guid isPermaLink="false">369a918b-1a30-4ea2-a645-e7bd424d8e9c</guid><pubDate>Fri, 17 Jul 2026 01:58:09 +0000</pubDate><atom:updated>2026-07-17T01:58:09.892Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,யுபிஐ,UPI,கட்டணம்,Digital transaction,டிஜிட்டல் பண பரிவர்த்தனை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/cn55g66e/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/cn55g66e/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><h2>யு.பி.ஐ. சேவை</h2><p>இந்தியாவில் இன்று பெட்டிக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால்கள் வரை அனைத்து வணிக நிறுவனங்களிலும் யு.பி.ஐ. பரிவர்த்தனைகள் நடந்து வருகிறது. தேசிய கொடுப்பணவு அமைப்பால் கடந்த 2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த யு.பி.ஐ. தொழில்நுட்பம், இன்று இந்திய மக்களின் அன்றாட வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக மாறிவிட்டது. எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி, 24 மணி நேரமும், ஒரே நொடியில் ஒரு வங்கி கணக்கிலிருந்து மற்றொரு வங்கி கணக்கிற்குப் பணத்தை நேரடியாக அனுப்ப முடியும். உள்நாட்டை கடந்து சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ் போன்ற பல நாடுகள் இந்தியாவின் இந்த யு.பி.ஐ. கட்டண முறையைத் தங்களின் நாடுகளிலும் அதிகாரபூர்வமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.</p><h2>புதிய கட்டணம்</h2><p>தற்போது இந்தியாவில் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யு.பி.ஐ. செயலிகள் மூலம் நடக்கும் பணப் பரிவர்த்தனைகளுக்கு, 5 முதல் 7 அடிப்படை புள்ளிகள் வரை புதிய கட்டணம் வசூலிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரிசர்வ் வங்கி மற்றும் தேசிய கொடுப்பனவு கழகம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளபடி, இந்த புதிய வணிகர் கட்டணம் 0.05 சதவீதம் முதல் 0.07 சதவீதம் வரை விதிக்கப்படவுள்ளது. உதாரணமாக, ஒரு கடையில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான வர்த்தகம் நடந்தால், அதற்கு அதிகபட்சமாக ரூ.5 முதல் ரூ.7 வரை கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்புள்ளது.</p><h2>வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பா?</h2><p>இந்த புதிய கட்டண முறை சாதாரண பொதுமக்களுக்கோ அல்லது ஒரு தனிநபர் மற்றொரு தனிநபருக்கு அனுப்பும் பணப் பரிவர்த்தனைகளுக்கோ முற்றிலும் பொருந்தாது. இது கடைகளில் உள்ள கியூ.ஆர். கோடு மூலம் நடக்கும் பெரியஅளவிலான வணிகப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே விதிக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>தற்போது இந்தியாவில் யு.பி.ஐ. பரிவர்த்தனைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கான உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பச் செலவுகளை வங்கிகளும், கூகுள் பே, போன்பே போன்ற நிறுவனங்களுமே ஏற்றுக்கொள்கின்றன. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தவும், வங்கிகளின் பராமரிப்புச் செலவுகளைச் சரி செய்யவும், இந்த மிகக் குறைந்த கட்டண முறையைக் கொண்டு வர நிதி அமைச்சகம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஆடி பிறப்பையொட்டி ஈரோட்டில் தேங்காய் சுடும் பண்டிகைக்காக அழிஞ்சி குச்சிகள் விற்பனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/azhinjic-sticks-sold-for-coconut-roasting-festival-in-erode-on-the-occasion-of-aadis-birth</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/azhinjic-sticks-sold-for-coconut-roasting-festival-in-erode-on-the-occasion-of-aadis-birth#comments</comments><guid isPermaLink="false">428f8ff0-4d75-40f4-bf6a-cc455ef2e81e</guid><pubDate>Fri, 17 Jul 2026 01:51:43 +0000</pubDate><atom:updated>2026-07-17T01:51:43.716Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Aadi festival,ஆடி,Coconut,தேங்காய்,பிறப்பு,festival; பண்டிகை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/5gy926tx/51.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/5gy926tx/51.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>ஆடி மாதம் இன்று பிறக்கிறது. இதையொட்டி தேங்காய் சுடும் பண்டிகைக்காக ஈரோட்டில் அழிஞ்சி குச்சிகள் விற்பனை நேற்று மும்முரமாக நடந்தது.</p><h2>ஆடி மாத பிறப்பு</h2><p>ஈரோடு மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதம் பிறப்பை வெகுசிறப்பாக கொண்டாடி வரவேற்பது வழக்கம். அன்று ஈரோட்டில் தேங்காய் சுடும் பண்டிகை பிரசித்தி பெற்றதாகும். அப்போது வீட்டு வாசலில் பெண்கள் தேங்காய்களை சுட்டு, அருகில் உள்ள கோவில்களுக்கு எடுத்துச்சென்று அதை விநாயகருக்கு படைத்து வழிபாடு நடத்துவது தனிச்சிறப்பு. இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%20">ஆடி மாதம்</a> பிறக்கிறது. இதையொட்டி பெண்கள் வீட்டை சுத்தம் செய்து வருகின்றனர். இன்று மாலையில் தேங்காய் சுடும் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது.</p><h2>அழிஞ்சி குச்சி</h2><p>வீட்டு வாசலில் அல்லது கோவில்களின் முன்பு நெருப்பு மூட்டி தேங்காய் சுடுவார்கள். பின்னர் தேங்காயை எடுத்து விநாயகர் முன்பு வைத்து பூஜை செய்வார்கள். பூஜை முடிந்தவுடன் தேங்காயை உடைத்து, உள்ளே ஏற்கனவே வைக்கப்பட்ட பச்சரிசி, பருப்பு, வெல்லம் கலந்த உணவு பிரசாதமாக வழங்கப்படும். இதற்காக ஈரோடு சந்தை மற்றும் காய்கறி, மளிகை கடைகளில் அழிஞ்சி குச்சிகள் நேற்று காலையிலேயே குவிக்கப்பட்டன. அவற்றை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கிச்சென்றதால் அழிஞ்சி குச்சிகள் விற்பனை மும்முரமாக இருந்தது.</p><h2>மருத்துவ குணங்கள்</h2><p>இதுகுறித்து மொத்த வியாபாரி ஒருவர் கூறும்போது, 'சித்த மருத்துவத்திலும். ஆன்மிகத்திலும் மிக முக்கியத்துவம் வாய்ந்த அழிஞ்சில் என்ற மரத்தில் இருந்து இந்த குச்சிகள் வெட்டப்படுகின்றன. அழிஞ்சில் மரத்தின் மருத்துவ குணங்கள் இந்த குச்சியின் மூலம் சுடப்படும் தேங்காயிலும் இறங்குவதால், ஆடி மாத சீதோஷ்ண மாற்றங்களால் ஏற்படும் நோய்களை தடுக்கும் ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. ஈரோடு மாவட்டத்துக்கு தேவையான அழிஞ்சி குச்சிகள் சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியில் இருந்து கொண்டு வரப்படுகிறது. தற்போது 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழிஞ்சி குச்சிகள் சங்ககிரியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. வியாபாரிகளுக்கு ஒரு குச்சி ரூ.15 முதல் ரூ.17 வரையும், பொதுமக்களுக்கு ரூ.20-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது' என்றார்.</p> ]]></content:encoded></item><item><title>4 மாவட்டங்களுக்கு வெப்பஅலை எச்சரிக்கை: சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பா..? </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/heatwave-warning-for-4-districts-chance-of-rain-in-chennai-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/heatwave-warning-for-4-districts-chance-of-rain-in-chennai-today#comments</comments><guid isPermaLink="false">ed363a1b-44ca-4515-91dc-119dcc8b0798</guid><pubDate>Fri, 17 Jul 2026 01:43:33 +0000</pubDate><atom:updated>2026-07-17T01:43:33.717Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,சென்னை,Rain,Weather,வானிலை,தமிழகம்,Weather News,WeatherUpdate,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,வானிலை ஆய்வு மையம்,weather condition,Heat wave,வெப்ப அலை,Weather Status,வானிலை அறிவிப்பு,வானிலை முன்ன்றிவிப்பு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/yop893qj/ligam.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மழை, rain]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/yop893qj/ligam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>வானிலை செய்திகள் (Weather)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, <strong>இன்று (17-07-2026):</strong> மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். </p><p>ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>18-07-2026 மற்றும் 19-07-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>20-07-2026:</strong> தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>21-07-2026 மற்றும் 22-07-2026:</strong> தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</strong></p><p><strong>17-07-2026 முதல் 20-07-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.</p><h2>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</h2><p><strong>17-07-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.</p><p><strong>18-07-2026 முதல் 20-07-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.</p> <p><strong>17-07-2026:</strong> அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் (Hot and Humid) இருக்கும் நிலையில் கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்பம் சார்ந்த அசெளகரியம் ஏற்படலாம்.</p><h2>4 மாவட்டங்களில் வெப்ப அலை</h2><p><strong>17-07-2026:</strong> கரூர், ஈரோடு, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று  (17-07-2026):</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்ய வாய்ப்புள்ளது. </p><p>அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மதியம்/மாலை நேரங்களில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படக்கூடும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் இன்று மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-thoothukudi-today-4</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-thoothukudi-today-4#comments</comments><guid isPermaLink="false">4f938313-f538-4226-8fb6-c70006baa736</guid><pubDate>Fri, 17 Jul 2026 01:29:28 +0000</pubDate><atom:updated>2026-07-17T01:29:28.655Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,monthly maintenance work,power outage,மாதாந்திர பராமரிப்பு பணி,மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/nrqdqj7f/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/nrqdqj7f/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி அய்யனார் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மின்தடை</a> செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட அய்யனார் துணை மின் நிலையத்தில் இன்று (17.7.2026, வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.</p><h2>காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை</h2><p>இதன் காரணமாக மாப்பிள்ளையூரணி, ஜோதிநகர், திரேஷ்நகர், ஹவுசிங்போர்டு, குமரன்நகர், காமராஜ்நகர், டேவிஸ்புரம், சாகிர்உசேன்நகர், சுனாமிநகர், நேரு காலனி கிழக்கு, ஜீவாநகர், லூர்தம்மாள்புரம், தாளமுத்துநகர், கோயில்பிள்ளைவிளை, ஆரோக்கியபுரம், T.சவேரியார்புரம், மாதாநகர், ராஜபாளையம், சிலுவைபட்டி, கிருஷ்ணராஜாபுரம், முத்துகிருஷ்ணாபுரம்.</p><p>மேலஅரசடி, கீழஅரசடி, வெள்ளப்பட்டி, தருவைகுளம், பனையூர், தளவாய்புரம், கோமஸ்புரம், பட்டிணமருதூர், உப்பளபகுதிகள், ஆனந்தமாடன்பச்சேரி, வாலசமுத்திரம், மேலமருதூர், அ.குமாரபுரம், திரேஸ்புரம், மேலஅலங்காரதட்டு, மாணிக்கப்புரம், பூபாலராயர்புரம், குருஸ்புரம், சங்குகுளி காலனி, மேட்டுப்பட்டி, முத்தையார் காலனி, வெற்றிவேல்புரம் மற்றும் ராமர்விளை ஆகிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கெலவரப்பள்ளி அணையில் 2 மாதங்களாக நுரை பொங்கி செல்லும் தண்ணீர்; விவசாயிகள் அதிர்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-in-kelavarapalli-dam-has-been-foaming-for-2-months-farmers-are-shocked</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-in-kelavarapalli-dam-has-been-foaming-for-2-months-farmers-are-shocked#comments</comments><guid isPermaLink="false">e88154ca-3d89-4ff4-ab9b-da7d609633dd</guid><pubDate>Fri, 17 Jul 2026 01:26:36 +0000</pubDate><atom:updated>2026-07-17T01:26:36.864Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Hosur,Dam,ரசாயன நுரை,கெலவரப்பள்ளி அணை,விவசாயிகள் அதிர்ச்சி,water; தண்ணீர்,foaming</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/m2023mdl/kelavarapalli-dam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/m2023mdl/kelavarapalli-dam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஒசூர், </p><p>கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு கடந்த 15 நாட்களாக தொடர்ந்து மாற்றம் இன்றி வினாடிக்கு 1,057 கனஅடி நீர்வரத்து காணப்படுகிறது. அணையின் பாதுகாப்பு கருதி அதே அளவு தண்ணீர் ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">கெலவரப்பள்ளி அணையின்</a> உச்ச நீர்மட்டமான 44.28 அடியில், தற்போதைய நீர்மட்டம் 42.15 அடியாக உள்ளது. </p><h2>விவசாயிகள் அதிர்ச்சி</h2><p>இந்த நிலையில், மழை இல்லாத இக்காலங்களிலும் அதிகளவிலான ரசாயன கலவைகளுடன் குவியல், குவியலாக நுரை பொங்க நீர் செல்வதால் அணை முன்பகுதியில் நுரைமண்டலமாக மட்டுமே காட்சியளிக்கிறது. நுரைகள் காற்றில் பறந்துசென்று அப்பகுதியில் ஆங்காங்கே விழுகின்றன. மழைக்காலங்களில் ஆற்றில் நுரைபொங்கி செல்வது வழக்கம் என்றாலும், மழை இல்லாதபோ தும் ஆற்றில் தொடர்ந்து 2 மாதங்களாக நுரை பொங்கி செல்வது விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வெளிநாடு பயணம்: அமைச்சர்கள் கீர்த்தனா, ராஜ்மோகனுக்கு மத்திய அரசு நோட்டீஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/foreign-travel-central-government-issues-notice-to-ministers-keerthana-and-rajmohan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/foreign-travel-central-government-issues-notice-to-ministers-keerthana-and-rajmohan#comments</comments><guid isPermaLink="false">8206d084-efc8-4aad-940c-4bc6930c2d90</guid><pubDate>Fri, 17 Jul 2026 01:22:22 +0000</pubDate><atom:updated>2026-07-17T01:22:22.858Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Central Government,வெளிநாடு பயணம்,Foreign Travel,அமைச்சர் கீர்த்தனா,Minister Keerthana,Minister Rajmohan,அமைச்சர் ராஜ்மோகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/7cnleebv/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/7cnleebv/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வெளிநாடு பயணம் தொடர்பாக அமைச்சர்கள் கீர்த்தனா, ராஜ்மோகனுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.</p><h2>வெளிநாடு பயணம்</h2><p>தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா மற்றும் பள்ளி கல்வித்துறை, தமிழ் வளர்ச்சி, செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகிய இருவரும் சமீபத்தில் அரசு முறை பயணமாக வெளிநாடுகளுக்கு சென்று திரும்பியுள்ளனர். இவர்களுடன் துறை சார்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் தனி உதவியாளர்களும் சென்று வந்தனர்.</p><h2>விதிமுறை மீறல்</h2><p>அரசு முறை பயணம், முதலீடுகளை ஈர்ப்பதற்கான பயணம் எனப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், இந்த ஒட்டு மொத்தப் பயணமும் இப்போது ஒரு மிகப்பெரிய சட்ட சிக்கலில் வந்து முடிந்துள்ளது. பொதுவாக, ஒரு மாநிலத்தின் அமைச்சர்களோ அல்லது உயர் அதிகாரிகளோ அரசு முறை பயணமாக வெளிநாடுகளுக்கு செல்லும்போது, மத்திய வெளியுறவுத் துறை மற்றும் உள்துறை அமைச்சகத்தின் முறையான அனுமதியை பெற வேண்டும் என்பது கட்டாய விதியாகும்.</p><p>இத்தகைய பயணங்களின் போது அவர்கள் 'டிப்ளமேடிக் பாஸ்போர்ட்' மூலமாகவே பயணிக்க வேண்டும். ஆனால், இந்த விவகாரத்தில் 2 அமைச்சர்களுமே மத்திய அரசின் எவ்வித முன் அனுமதியும் பெறவில்லை என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, 'டிப்ளமேடிக் பாஸ்போர்ட்டை பயன்படுத்தாமல், தங்களுடைய சொந்த பாஸ்போர்ட் மூலமாக வெளிநாடு சென்று வந்துள்ளனர். இது அப்பட்டமான விதிமுறை மீறல் என்றும், நாட்டின் விதிமுறைகளுக்கு எதிரானதாகும்.</p><h2>நோட்டீஸ்</h2><p>மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் விளக்க நோட் டீஸ் ('ஷோ காஸ்') இந்த விதிமீறலை கடுமையான குற்றச் சாட்டாக கையில் எடுத்துள்ளன. இதுதொடர்பாக தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு ('ஷோ காஸ்') நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீசில், மத்திய அரசின் அனுமதி இல்லாமல் அமைச்சர்கள் எப்படி வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளலாம்? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.</p><p>இந்த விவகாரத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலக அதிகாரிகள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களது கடமையை சரியாகச் செய்யவில்லை என்றும், அரசை முறையாக அவர்கள் வழிநடத்த தவறிவிட்டனர் என்றும் மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு முழுவதும் மக்கள் தொகை ‘சுய கணக்கெடுப்பு&apos; தொடங்கியது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/first-phase-of-the-census-housing-enumeration-work-begins-in-tamil-nadu-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/first-phase-of-the-census-housing-enumeration-work-begins-in-tamil-nadu-today#comments</comments><guid isPermaLink="false">c2600041-5b05-4009-a104-2adfd6875f72</guid><pubDate>Fri, 17 Jul 2026 01:14:17 +0000</pubDate><atom:updated>2026-07-17T01:14:17.071Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழ்நாடு,இந்தியா,India,தமிழகம்,Online,ஆன்லைன்,மக்கள் தொகை கணக்கெடுப்பு,Census,Census data,மத்திய அரசு,Central Govt,Tamilnadu ​,டிஜிட்டல் முறை,Digital</media:keywords><media:content height="506" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/vdlqt7ch/cesnu.jpg" width="900"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மக்கள் தொகை கணக்கெடுப்பு, Census]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/vdlqt7ch/cesnu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ்நாட்டில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">மக்கள்தொகை கணக்கெடுப்</a>பில் முதல் கட்டமாக வீடுகள் குறித்த கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கியுள்ளது.</p><h2>மக்கள்தொகை கணக்கெடுப்பு</h2><p>இந்தியாவில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">மக்கள்தொகை கணக்கெடுப்பு</a> 1872-ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அடுத்து, 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட இருந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.</p><p>இந்த நிலையில், நாட்டின் 16-வது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">மக்கள்தொகை கணக்கெடுப்பு</a>, சுதந்திரத்திற்கு பிறகு நடத்தப்படும் 8-வது கணக்கெடுப்பு 2027-ம் ஆண்டு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மக்கள்தொகை கணக்கெடுப்பின் நோக்கம் குறித்த அறிவிப்பை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16-ந் தேதி மத்திய அரசு, அரசிதழில் வெளியிட்டது.</p><h2>தமிழ்நாட்டில் இன்று தொடக்கம் </h2><p>தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் இந்த அறிவிப்பை தங்களது அரசிதழில் மறுவெளியீடு செய்ய அறிவுறுத்தப்பட்டது. </p><p>அதன்பின்னர், இந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி இந்தியா முழுவதும் நிர்வாக எல்லைகள் இறுதி செய்யப்பட்டன. முதற்கட்டமாக, வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுக்கும் பணி கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. </p><p>இந்தப் பணிகள் செப்டம்பர் மாதம் நிறைவடைய உள்ள நிலையில், தமிழ்நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் முதல் கட்டமாக வீடுகள் குறித்த கணக்கெடுப்பு பணி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியுள்ளது. இன்று முதல் வரும் 31-ம் தேதி வரை 15 நாட்களுக்கு மக்கள் தொகை 'சுய கணக்கெடுப்பு நடைபெறுகிறது. se.census.gov.in இணையதளம் மூலம் பொதுமக்களே சுய விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>33 கேள்விகள் கேட்கப்படும்  </h2><p>தொடர்ந்து, ஆகஸ்டு 1-ந் தேதி முதல் வீடு வீடாகச் வீடு கட்டமைப்பு குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட இருக்கிறது. இந்த கணக்கெடுப்பு பணியின்போது, 33 கேள்விகள் கேட்கப்படும். இந்த தரவுகள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் சேகரிக்கப்படும். ஆகஸ்டு 30-ந் தேதி இந்தப் பணிகள் நிறைவடையும். </p><p>தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்க இருக்கிறது. அது முடிவடைந்த பிறகு, ஏப்ரல் மாதம் இறுதியில் அதன் முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><h2>33 கேள்விகள் என்னென்ன..?</h2><p>முழுவிவரம் காண்க;</p> <aside><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu/what-are-the-33-questions-asked-during-the-census-in-tamil-nadu-full-details">தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது கேட்கப்படும் 33 கேள்விகள் என்னென்ன..? முழு விவரம்</a></aside><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/dl6za6bu/kanm.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>சிவகங்கையில் சோகம்: விஷ ஊசி செலுத்தி பெண் டாக்டர் தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-in-sivaganga-female-doctor-commits-suicide-by-injecting-poison</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-in-sivaganga-female-doctor-commits-suicide-by-injecting-poison#comments</comments><guid isPermaLink="false">18565200-7b7c-4931-a37c-dee17ea36bde</guid><pubDate>Fri, 17 Jul 2026 01:06:38 +0000</pubDate><atom:updated>2026-07-17T01:06:38.764Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>female doctor,சிவகங்கை,Sivagangai,Suicide,பெண் டாக்டர் தற்கொலை,விஷ ஊசி போட்டு,Poison injection</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/6w6k1w5n/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தற்கொலை செய்துகொண்ட பெண் டாக்டர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/6w6k1w5n/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை, </p><p>சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா பகுதியில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விஷ ஊசி செலுத்தி பெண் டாக்டர் தற்கொலை</a> செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. </p><h2>7.5 சதவீத இடஒதுக்கீட்டில் படித்தவர்</h2><p>சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் அருகே உள்ள கணபதிபட்டி கிராமத்தை சேர்ந்த சின்னையா, விவசாயி. இவருடைய மகள் சின்னநம்பி (வயது 25). இவர் 2020-ம் ஆண்டு அரசு பள்ளியில் பிளஸ்-2 முடித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரியில் படித்து வந்தார். கடந்த மாதம் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றார். </p><h2>குடும்ப பிரச்சினை</h2><p>படித்து கொண்டு இருந்தபோது இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள நல்லூர் கிராமத்தை சேர்ந்த தாய்மாமன் மகனான இளையராஜாவுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இளையராஜாவும் சென்னையில் வேலைபார்த்து வந்தார். சென்னையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.</p><h2>பரிதாப சாவு</h2><p>இந்த நிலையில் பெண் டாக்டர் சின்னநம்பி, கணபதிபட்டியில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு நேற்று முன்தினம் வந்துள்ளார். நேற்று மதியம் ஒரு அறையில் தூங்குவதாக கூறி சென்றுள்ளார். மாலை வரை அவர் எழுந்து வராததால் சின்னையா அவரை எழுப்பி உள்ளார். ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை. மேலும் அவரது அருகில் ஊசி மற்றும் சில மாத்திரைகள் கிடந்தன. இதையடுத்து சின்னையா தனது மகளை சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்ததில் சின்னநம்பி ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.</p><h2>விஷ ஊசி செலுத்தி தற்கொலை</h2><p>தகவல் அறிந்து வந்த புழுதிபட்டி போலீசார், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் புழுதிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், குடும்ப பிரச்சினை காரணமாக விஷ ஊசி செலுத்தியும், மாத்திரைகளை தின்றும் சின்னநம்பி தற்கொலை செய்திருக்கலாம் என கருதுகிறோம். முழுமையான விசாரணைக்கு பின்னரே அதுபற்றி விரிவாக கூற முடியும்" என்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>இஸ்ரோ விஞ்ஞானிகள் ராஜினாமா செய்வதற்கு கட்டுப்பாடு - விண்வெளித்துறை அவசர நடவடிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/isro-scientists-to-resign-space-ministry-takes-urgent-action</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/isro-scientists-to-resign-space-ministry-takes-urgent-action#comments</comments><guid isPermaLink="false">986386b1-92f9-48cc-acb7-b9366dff0117</guid><pubDate>Fri, 17 Jul 2026 01:03:48 +0000</pubDate><atom:updated>2026-07-17T01:03:48.907Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விண்வெளித்துறை,இஸ்ரோ,ISRO,ராஜினாமா,Resign,விஞ்ஞானிகள்,scientist</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/c4zsiqug/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/c4zsiqug/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>விஞ்ஞானிகள் ராஜினாமா</h2><p>கடந்த சில மாதங்களில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சுமார் 100 முதல் 120 பேர் வரை ராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக இந்தியாவின் தற்போதைய சந்திரயான்-3, ககன்யான் போன்ற முக்கிய திட்டங்களில் பணியாற்றிய சில மூத்த விஞ்ஞானிகளும் ராஜினாமா செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ராஜினாமா செய்வதில் சில கட்டுப்பாடுகளை விதித்து அதனை அவசர நடவடிக்கையாக விண்வெளித்துறை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.</p><h2>விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளக் கூடாது</h2><p>அதில் ககன்யான் மற்றும் நாட்டின் பிற முக்கிய விண்வெளி திட்டங்களில் பணியாற்றும் 'குரூப் ஏ' அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களின் ராஜினாமா அல்லது விருப்ப ஓய்வு விண்ணப்பங்களை இனி வழக்கமான ஒன்றாக கருதி உடனடியாக ஏற்றுக்கொள்ள கூடாது. அதனை கடுமையான பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.</p><p>முக்கியத்திட்டங்களில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள், தங்களது பொறுப்பில் உள்ள திட்டங்கள் அல்லது பணிகள் முழுமையாக முடிவடையும் வரை பணியில் நீடிக்கவேண்டும். அதுவரை அவர்களது ராஜினாமா விண்ணப்பங்களை மைய இயக்குனர்கள் அங்கீகரிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதற்கு முன்பு 2020 நவம்பர் 25-ந்தேதியன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, 'குரூப் ஏ' அதிகாரிகளின் ராஜினாமாவை அந்தந்த இஸ்ரோ மையங்களின் இயக்குனர்களே நேரடியாக ஏற்று ஒப்புதல் அளிக்க அதிகாரம் இருந்தது. புதிய சுற்றறிக்கை அதனை ரத்து செய்து, விண்ணப்பங்களை இயக்குனர்களின் பரிந்துரைகளுடன் டெல்லியில் உள்ள விண்வெளித்துறையின் (டி.ஓ.எஸ்.) இறுதி முடிவுக்காக மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.</p><h2>இறுதி முடிவெடுக்கும் அதிகாரம்</h2><p>இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானிகள் தனியார் விண்வெளி நிறுவனங்களின் ஈர்ப்பால் பணியில் இருந்து விலகுவதாக கூறப்படும் நிலையில், இந்த சுற்றறிக்கை மூலம் இஸ்ரோ விஞ்ஞானிகள் தங்களுக்குப் பிடித்த நேரத்தில் உடனே பணியைவிட்டு வெளியேற முடியாதபடி, இறுதி முடிவு எடுக்கும் அதிகாரத்தை இஸ்ரோவிடமிருந்து விண்வெளித்துறை (அரசாங்கம்) நேரடியாக தன் கைக்கு மாற்றியிருக்கிறது.</p><p>இஸ்ரோ உலக நாடுகளுக்குப் போட்டியாக விண்வெளிப் பொருளாதாரத்தில் அசுர வளர்ச்சி அடைந்துவரும் சூழலில், அதன் தொழில்நுட்பமும், விஞ்ஞானிகளும் உலக அளவில் மதிக்கப்படுகிறார்கள். அந்த அரிய மனிதவளத்தைக் காப்பதற்காகவே அரசாங்கம் தற்போது இந்த புதிய கட்டுப்பாட்டு விதியை கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>பழனி கோவில் நில விவகாரம்: பதிவுத்துறை சார்பில் 3 பேர் கொண்ட உயர்மட்ட விசாரணைக்குழு அமைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-temple-land-issue-registration-department-forms-3-member-high-level-inquiry-committee</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-temple-land-issue-registration-department-forms-3-member-high-level-inquiry-committee#comments</comments><guid isPermaLink="false">efe69531-90c6-4078-b09e-a6c4daad4d34</guid><pubDate>Fri, 17 Jul 2026 00:56:51 +0000</pubDate><atom:updated>2026-07-17T00:56:51.457Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Registration department,பதிவுத்துறை,Palani temple,பழனி கோவில்,Inquiry Committee,விசாரணைக்குழு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/nt3ta0hw/CHENNAI-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/nt3ta0hw/CHENNAI-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பழனி கோவில் தண்டபாணி மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை தனிநபர்கள் பெயருக்கு முறைகேடாக பதிவுசெய்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. இதுதொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் முழுமையாக ஆய்வு செய்து உண்மை நிலையை அறிய, பதிவுத்துறை சார்பில் 3 பேர் கொண்ட உயர்மட்ட விசார ணைக் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.</p><p>இந்தக்குழுவில் கூடுதல் பதிவுத்துறைத் தலைவர், உதவி பதிவுத்துறைத் தலைவர் மற்றும் ஒரு மாவட்டப் பதிவாளர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவினர் பத்திரப்பதிவு நடைபெற்ற நாளில் பணியில் இருந்த சார்பதிவாளர், விடுப்பில் சென்ற சார்பதிவாளர், மாவட்ட பதிவாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்டோரிடம் விரிவான விசாரணை மேற்கொள்வார்கள். </p><p>மேலும், பத்திரப்பதிவு நடந்த நாளில் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் தீவிரமாக ஆய்வு செய்ய இருக்கின்றனர். இந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் சொல்லப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-today-6</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-today-6#comments</comments><guid isPermaLink="false">c4e3e85a-358d-4c58-8c7d-e90951865f13</guid><pubDate>Thu, 16 Jul 2026 21:37:23 +0000</pubDate><atom:updated>2026-07-16T21:37:23.724Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மின் தடை,power cut</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/o4iokbae/min.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/o4iokbae/min.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>சென்னையில் 17.07.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><h2>மின் தடை ஏற்படும் இடங்கள்</h2><p><strong>பெசன்ட் நகர்:</strong> சாஸ்திரி நகர் காமராஜர் சாலை, வால்மீகி தெரு, கலாஷேத்ரா சாலை மற்றும் அவென்யூ, லட்சுமிபுரம், ஸ்ரீ ராம் நகர், குமரகுரு 1 முதல் 4வது தெருக்கள் வரை, பிள்ளையார் கோயில் தெரு , முத்துலட்சுமி தெரு.</p><p><strong>ஆவடி:</strong> முருகப்பா <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பாலிடெக்னிக் </a>கல்லூரி, செக் போஸ்ட், என்.எம். சாலை, திருமலைராஜபுரம், நந்தவனம் மேட்டூர், கன்னிகாபுரம், நேரு பஜார் , கஸ்தூரிபாய் நகர்.</p><p><strong>புழல்:</strong> சூரப்பட்டு, புழல், ரெட்ஹில்ஸ் மார்க்கெட் சாலை, காவாங்கரை, சண்முகபுரம், கதிர்வேடு, புத்தகரம், மெட்ரோவாட்டர், புழல் சிறை I, II மற்றும் III.</p><p><strong>தரமணி:</strong> இந்திரா நகர், கஸ்தூரிபாய் நகர் 3வது மற்றும் 4வது பிரதான சாலை, 3வது குறுக்குத் தெரு, கேனால் வங்கி சாலை, நேரு நகர் 2 வது முதல் 4 வது பிரதான சாலை வரை, தனலட்சுமி அவென்யூ 1வது முதல் 4 வது தெரு வரை.</p><p><strong>பெசன்ட் நகர்:</strong> 1 வது பிரதான சாலை மற்றும் 1 வது அவென்யூ, பீச் ஹோம் அவென்யூ, தாமோதரபுரம் நியூ தெரு.</p><p><strong>பல்லாவரம்:</strong> டிடிகே கம்பெனி, சாவடி தெரு, ஐ.எச்.எப்.டி. பிளாட்ஸ், ஜி.எஸ்.டி. சாலை பல்லாவரம் பேருந்து நிலையம் முதல் பாண்ட்ஸ் பாலம் வரை, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அருந்ததிபுரம்</a>, வள்ளுவர் பேட்டை, ரங்கநாதன் தெரு, ஐ.ஜி. சாலை சிக்னல், ரங்கநாதன் சுரங்கப்பாதை அம்பேத்கர் சிலை, கனரா வங்கி.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சிறை கொலை வழக்கு: அரசு வேலை, நிவாரணத்தை ஏற்க மறுத்த சபரிவர்மனின் குடும்பத்தினர்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/prison-murder-case-sabarivarmans-family-refuses-government-job-and-compensation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/prison-murder-case-sabarivarmans-family-refuses-government-job-and-compensation#comments</comments><guid isPermaLink="false">4cd1f76a-f5a1-4470-81fe-8bfb9075d6e0</guid><pubDate>Thu, 16 Jul 2026 20:54:20 +0000</pubDate><atom:updated>2026-07-16T20:54:20.007Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,Nagercoil,நாகர்கோவில்,Kanyakumari,சிறை,கைதிகள்,prisoners,அடித்துக் கொலை,Prison,வியாபாரி,beaten to death,8 பேர் கைது,8 people arrested</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/aq59v1w1/Untitled-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/aq59v1w1/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாகர்கோவில் ,</p><p>சிறையில் கொல்லப்பட்ட சபரிவர்மனின் மனைவி அரசு வேலை, நிவாரணத்தை ஏற்க மறுத்ததால், ஆறுதல் கூறி விட்டு அமைச்சர்கள் திரும்பினர்.</p><h2>சிறையில் கொலை</h2><p>நாகர்கோவில் சிறையில் வியாபாரியான சபரிவர்மன் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 3 சிறை வார்டன்கள், 8 கைதிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சபரிவர்மனின் மனைவிக்கு அரசு வேலை, குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக பணம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல கோரிக்கைகளை உறவினர்கள் வலியுறுத்தினர். அதனை நிறைவேற்றும் வரை சபரிவர்மனின் உடலை வாங்க மாட்டோம் என்பதில் விடாப்பிடியாக இருந்தனர்.</p><h2>அரசு வேலையை ஏற்க மறுப்பு</h2><p>இந்தநிலையில் நேற்று இரவில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் கலெக்டர் பிரதாப், போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உள்ளிட்ட அதிகாரிகள் சபரிவர்மன் வீட்டுக்கு நேரில் சென்று அவருடைய மனைவி ஆனந்தவல்லி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.</p><p>அப்போது அரசு வேலை, ரூ.10 <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">லட்சத்துக்கான </a>நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர்கள் தெரிவித்தனர். மேலும் சபரிவர்மனின் உடலை வாங்க வேண்டும் என்றனர். ஆனால் அதற்கு சபரிவர்மனின் மனைவி மற்றும் குடும்பத்தினர் மறுத்தனர். அதாவது பிரேத பரிசோதனைக்கான வீடியோ காட்சிகளை எங்களுக்கு தெரிந்த ஒரு டாக்டரிடம் காண்பித்து பிரேத பரிசோதனை பற்றிய சந்தேகத்தை தீர்த்து கொள்வோம். அதுவரை அரசு வேலை, நிவாரணத்தை ஏற்க மாட்டோம் என்றனர். இதனை தொடர்ந்து அமைச்சர்கள் அங்கிருந்து சென்றனர்.</p>]]></content:encoded></item><item><title>காவல் நிலையங்களும், சிறைகளும் உயிர்ப் பறிக்கும் இடங்களாக மாறுகிறதா? - வேல்முருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/are-police-stations-and-prisons-turning-into-places-that-claim-lives-velmurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/are-police-stations-and-prisons-turning-into-places-that-claim-lives-velmurugan#comments</comments><guid isPermaLink="false">a241cde0-e049-4e9c-96ce-7f4820caa082</guid><pubDate>Thu, 16 Jul 2026 19:32:14 +0000</pubDate><atom:updated>2026-07-16T19:32:14.646Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Velmurugan,வேல்முருகன்,தமிழக வாழ்வுரிமைக் கட்சி,தி.வேல்முருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/0f5xk388/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/0f5xk388/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>உறவினர்கள் போராட்டம்</h2><p>சென்னையை அடுத்த சேலையூர் பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவர், தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை வைத்திருந்ததாகக் கூறி அண்மையில் மாநகர காவல்துறையால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பின்னர் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  </p><p>தற்போது, சிறையில் இருந்த பாலாஜி உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலாஜியின் உறவினர்கள், சிறைக் காவலர்கள் தாக்கியதால்தான் அவர் உயிரிழந்தார் என்று மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மறுபுறம், சிறை நிர்வாகம் அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளது.  </p><h2>கேள்விகள்  முன்வைப்பு</h2><p>இந்நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சி சில <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கேள்விகளை </a>முன் வைக்க விரும்புகிறது.</p><p>கைது செய்யப்பட்ட சில நாட்களிலேயே, நீதிமன்றக் காவலில் இருந்த ஒருவர் எவ்வாறு உயிரிழந்தார்?  </p><p>பாலாஜியின் உடலில் காயங்கள் இருந்தனவா? இருந்தால் அவை எவ்வாறு ஏற்பட்டன?</p><p>அவர் இருந்த சிறைப்பிரிவின் சிசிடிவி காட்சிகள் பாதுகாக்கப்பட்டுள்ளனவா? அவை நீதிமன்றத்தின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்படுமா?  </p><p>கைது செய்த காவல்துறை, சிறை நிர்வாகம் மற்றும் மருத்துவப் பதிவுகள் அனைத்தும் வெளிப்படையாக ஆய்வு செய்யப்படுமா?</p><p>இந்த மரணம் குறித்து நீதித்துறை கண்காணிப்பில் சுயாதீன விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிடுமா?</p><p>ஒருவர் குற்றம் சாட்டப்பட்டிருக்கலாம். நீதிமன்றம் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கும் வரை, அவர் ஒரு விசாரணைக் கைதிதான். அந்த நபரின் உயிருக்கு முழுப் பொறுப்பு, அரசுக்கும் சிறை நிர்வாகத்திற்குமே உள்ளது.  </p><h2>உரிய நடவடிக்கை வேண்டும்</h2><p>எனவே, உயர்நீதிமன்ற நீதிபதி அல்லது சுயாதீன அமைப்பின் கண்காணிப்பில் முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.</p><p>பிரேதப் பரிசோதனை அறிக்கை, சிசிடிவி பதிவுகள் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களும் வெளிப்படையாக வெளியிடப்பட வேண்டும்.</p><p>விசாரணை முடியும் வரை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சம்பந்தப்பட்ட </a>அதிகாரிகள் மீது உரிய நிர்வாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு யார் செய்திருந்தாலும், அவர்கள் மீது சட்டத்தின் முன் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு, தமிழ்நாடு அரசு, இது போன்ற சிறைக்காவல் மரணங்கள் அல்லது அரசின் அலட்சியத்தால் ஏற்படும் மரணங்களுக்கு, 50 லட்சம் அல்லது ஒரு கோடி ரூபாய் வரையிலான தொகையை நிர்ணயித்து வழங்க வேண்டும் என்றும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சரின் சொந்தத் தொகுதியிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையா? - வானதி சீனிவாசன் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-there-no-safety-for-women-even-in-the-chief-ministers-own-constituency-vanathi-srinivasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-there-no-safety-for-women-even-in-the-chief-ministers-own-constituency-vanathi-srinivasan#comments</comments><guid isPermaLink="false">f5d54f67-deba-4962-8813-14ffb40ce23e</guid><pubDate>Thu, 16 Jul 2026 18:08:27 +0000</pubDate><atom:updated>2026-07-16T18:08:27.766Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/nhn6235n/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/nhn6235n/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>பாதுகாப்பு இல்லை</h2><p>சென்னை பெரம்பூரில் இளம்பெண் ஒருவர் தனது முன்னாள் ஆண் நண்பர் மற்றும் 4 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த மாதமும் இதேபோல் பெரம்பூரில் இளம்பெண் ஒருவரை முன்னாள் ஆண் நண்பர் வீடு புகுந்து தாக்கியதாகச் செய்திகள் வந்தது.</p><p>மேடைகள் தோறும் பெண்களை அக்கா, தங்கை, தோழி என உணர்வுப்பூர்வமாகப் பேசும் முதல்-அமைச்சரின் சொந்தத் தொகுதியிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழலில் தமிழகப் பெண்களுக்கு முதல்-அமைச்சர் எப்படி பாதுகாப்புத் தரப் போகிறார் என்ற கேள்வி ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் எழுந்துள்ளது.</p><h2>எதற்கு தனி சிறப்புப்படை?</h2><p>சீரும் சிங்கங்களாய் ஏதோ பெரிய மாற்றம் கொண்டு வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புடன் துவங்கப்பட்ட சிங்கப் பெண் அதிரடிப் படை தற்போது சோர்ந்து வழக்கம்போல் மகளிர் காவல் நிலையங்களாக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">செயல்படுவதற்கு </a>எதற்கு தனி சிறப்புப்படை?</p><p>எனவே பெண்களை காதல் என்ற பெயரில் அத்துமீறும் ஆண்களிடமிருந்து காக்கும் வகையில் சிங்கப் பெண் படையை முடுக்கி விட்டு இரும்புக்கரம் கொண்டு செயல்பட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதன்மைத் தேர்வு தேதி மாற்றம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tnpsc-group-1-main-exam-date-changed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tnpsc-group-1-main-exam-date-changed#comments</comments><guid isPermaLink="false">b132ef10-f139-4092-8c5e-09ffce3b55a5</guid><pubDate>Thu, 16 Jul 2026 17:32:32 +0000</pubDate><atom:updated>2026-07-16T17:32:32.785Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TNPSC,TNPSC exam,டி.என்.பி.எஸ்.சி.,டி.என்.பி.எஸ்.சி. தேர்வு,குரூப்-1 முதல்நிலைத் தேர்வு,டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு,TNPSC Group-1 Exam,டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு,குரூப்-1 தேர்வு,டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு,TNPSC Announcement,TNPSC Group 1</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/vvbfvn5y/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/vvbfvn5y/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>26 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 1 முதல் நிலைத் தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 6-ந்தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்திருந்தது. இந்த தேர்வுக்கு கடந்த 30-ந்தேதி முதல் ஜூலை 29-ந்தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.</p><h2>தேர்வு தேதி மாற்றம்</h2><p>இந்த நிலையில், தமிழ்நாட்டில் அரசு உயர் பதவிகளுக்கான குரூப்-1 (Group 1 Main Exam) முதன்மைத் தேர்வு நடத்தப்படும் தேதிகளில் அதிரடியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><p>முன்னதாக, செப்டம்பர் மாதம் 6-ஆம் தேதி தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,  அத்தேர்வானது 27.09.2026 அன்று நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- </p><p>தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 23.06.2026 அன்று வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - I (தொகுதி I பணிகள்) அறிவிக்கையில் முதல்நிலைத் தேர்வானது 06.09.2026 மு.ப. நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அத்தேர்வானது 27.09.2026 மு.ப. அன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியானது!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/neet-re-exam-results-released</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/neet-re-exam-results-released#comments</comments><guid isPermaLink="false">c37ab8ac-4e28-41be-b3f7-c6fbda14cd76</guid><pubDate>Thu, 16 Jul 2026 17:09:27 +0000</pubDate><atom:updated>2026-07-16T17:09:27.641Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நீட் தேர்வு,NEET Exam,NEET,நீட்,நீட் மறு தேர்வு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/qot920ve/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/qot920ve/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நாடு முழுவதும் கடந்த 3-ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில், ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் தேர்வுக்கு முன்பாக இணையத்தில் பரவிய வினாத்தாள், நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வித் தாளுடன் ஒத்துப் போவதாக சர்ச்சை வெடித்தது. இதையடுத்து தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.</p><p>இதையடுத்து, நீட்மறுதேர்வு  கடந்த ஜூன் 21ம் தேதி நாடு முழுவதும் 550 நகரங்களில் உள்ள 5400-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றது. 22.79 லட்சம் மாணாக்காரர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், தோராயமாக 20 லட்சம் பேர் தேர்வில் கலந்து கொண்டனர்.</p><p>நீட் மறு தேர்வு முடிவுகள் வரும் 20ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது நீட் மறு தேர்வுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளது.  இதில் பஞ்சாப்பைச் சேர்ந்த ஆர்யன் குப்தா 715 மதிப்பெண்களும், அரியானாவைச் சேர்ந்த பான்ஷுல் பன்சால் 715 மதிப்பெண்களும் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். </p><p>மேலும், 138 மாணவர்கள் 690க்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதனை தவிர, நீட் மறுதேர்வில் 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், மாணவிகளில் 56.8 சதவீதத்தினரும், மாணவர்களில் 55.1 சதவீதத்தினரும் தேர்ச்சி பெற்றதாகவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>பழைய மாமல்லபுரம் சாலையில் அஸ்திவார தூண்கள் அமைக்கும் பணி நிறைவு - சென்னை மெட்ரோ நிறுவனம் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/work-on-installing-foundation-pillars-on-old-mahabalipuram-road-completed-chennai-metro-rail-limited-announces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/work-on-installing-foundation-pillars-on-old-mahabalipuram-road-completed-chennai-metro-rail-limited-announces#comments</comments><guid isPermaLink="false">0a393e2d-74df-432d-a174-03f0b391fb3c</guid><pubDate>Thu, 16 Jul 2026 16:30:55 +0000</pubDate><atom:updated>2026-07-16T16:30:55.519Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை மெட்ரோ,chennai metro</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/hsuxkk61/State-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/hsuxkk61/State-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்டத் திட்டத்தின் 3-வது வழித்தடத்தில் கட்டுமான பணியில் 2 முக்கிய மைல்கல்கள் எட்டப்பட்டுள்ளன. இப்பணியில், பழைய மாமல்லபுரம் சாலையில் நேரு நகர் முதல் சோழிங்கநல்லூர் வரை மொத்தம் 3,066 அஸ்திவார தூண்கள் அமைக்கும் பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மேலும், மொத்தம் 582 முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட யூ-வடிவ கான்கிரீட் தூண் விட்டங்கள் தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளது.</p><p>தற்போது அனைத்து அஸ்திவார தூண்கள் பணிகளும், யு-கார்டர் தயாரிப்பு பணிகளும் முழுவதுமாக நிறைவடைந்துள்ளது. இது சென்னை மெட்ரோ 2-ம் கட்டிடத்தின் 3-வது வழித்தட பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்க உதவும் ஒரு முக்கிய மைல்கல் ஆகும். இதன் மூலம் பழைய மாமல்லபுரம் சாலையில் பாதுகாப்பான போக்குவரத்து சேவை விரைவில் பொதுமக்களுக்கு கிடைக்கும்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>
விராலிமலை இடைத்தேர்தலில் துரோகிகளை வெற்றிபெற விடக்கூடாது- எடப்பாடி பழனிசாமி  </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/traitors-must-not-be-allowed-to-win-the-viralimalai-by-election-edappadi-palaniswami</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/traitors-must-not-be-allowed-to-win-the-viralimalai-by-election-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">bc3f9f54-9f25-4d47-b08b-478eb93bdd88</guid><pubDate>Thu, 16 Jul 2026 16:19:18 +0000</pubDate><atom:updated>2026-07-16T16:19:18.291Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Edappadi Palaniswami,இடைத்தேர்தல்,விராலிமலை,Viralimalai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/l0epfu11/Edappadi-palanisami.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி  ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/l0epfu11/Edappadi-palanisami.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சட்டமன்ற தேர்தலில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக, கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து  ஆலோசனை நடத்தி வருகிறர். அந்த வகையில் இன்று புதுக்கோடையை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது; </p><h2> துரோகிகள்</h2><p>தங்களின் சொத்துக்களை பாதுகாப்பதற்காக கட்சியில் இருந்து விலகி ஆளும் கட்சியான த.வெ.க. பக்கம் சென்றுள்ள துரோகிகள் பற்றி கவலைப்பட வேண்டாம். உள்ளாட்சி தேர்தலுக்காக தீவிரமாக களப்பணியாற்றுங்கள். கட்சிக்கு விசுவாசம் மிக்க இளைஞர்கள், பெண்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். </p><h2>விராலிமலை தொகுதி</h2><p>அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு அ.தி.மு.க.வின் வெற்றிக்காக உழைக்க வேண்டும். விராலிமலை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற டாக்டர் சி.விஜயபாஸ்கர் கட்சிக்கு துரோகம் இளைத்து எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்துள்ளார். விராலிமலை தொகுதி இடைத்தேர்தலிலும் நாம் தான் வெற்றி பெற வேண்டும். துரோகிகளை வெற்றிபெற விடக்கூடாது. எனவே, ஒரு நல்ல வேட்பாளரை நீங்களே தேர்வு செய்துவிட்டு வாருங்கள் என்று தெரிவித்து உள்ளார்</p>]]></content:encoded></item><item><title>ரெயில்வே கேட் பகுதியில் நடு வழியில் நின்ற பாமணி ரெயில்: வாகன ஓட்டிகள் அவதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bamani-train-stalls-midway-at-railway-crossing-motorists-face-inconvenience</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bamani-train-stalls-midway-at-railway-crossing-motorists-face-inconvenience#comments</comments><guid isPermaLink="false">dd0df660-a67e-439d-9240-fad51e9d9566</guid><pubDate>Thu, 16 Jul 2026 15:55:37 +0000</pubDate><atom:updated>2026-07-16T15:55:37.118Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,train,ரெயில்,Tiruvannamalai,ரெயில்வே கேட்,Railway Crossing</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/nuo8rx20/15.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/nuo8rx20/15.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை, </p> <p>மன்னார்குடியில் இருந்து திருவண்ணாமலை வழியாக திருப்பதி சென்ற பாமணி ரெயில், ரெயில்வே கேட் பகுதியில் நடுவழியில் நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.</p><h2>நடுவழியில் நின்ற ரெயில்</h2><p>மன்னார்குடியில் இருந்து திருவண்ணாமலை வழியாக திருப்பதி நோக்கி சென்ற பாமணி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை 11 மணியளவில் திருவண்ணாமலையில், அவலூர்பேட்டை சாலையில் உள்ள ரெயில்வே கேட் வழியாக சென்றது. இதையொட்டி ரெயில்வே கேட் இருபுறமும் சாலை இரும்பு தடுப்பால் மூடப்பட்டது.</p><p>அவலூர்பேட்டை சாலை ரெயில்வே கேட் வழியாக சென்ற ரெயில் திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவழியில் நின்றது. இதைய டுத்து ரெயில்வே துறையினர் துரித நடவடிக்கை மேற்கொண்டு தொழில் நுட்பக் கோளாறை உடனடியாக சரி செய்தனர்.</p><h2>வாகன ஓட்டிகள் அவதி</h2><p>பின்னர் சுமார் 15 நிமிடம் காலதாமதமாக அந்த இடத்தில் இருந்து பாமணி ரெயில் புறப்பட்டு சென்றது. ரெயில்வே கேட் பகுதியில் ரெயில் நின்றதால் ரெயில்வே கேட் அருகே வாகன ஓட்டிகள் அணிவகுத்து நின்ற னர். அவர்கள் அங்கிருந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். ரெயில் அங்கிருந்து சென்ற பின்னர் கேட் திறக்கப்பட்டதை தொடர்ந்து வாகன ஓட்டிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.</p>]]></content:encoded></item></channel></rss>