<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 11 Jul 2026 03:39:46 +0000</lastBuildDate><item><title>அழகுமுத்துக்கோன் குருபூஜை விழா: வீலிங், அதி வேகமாக வாகனங்களை இயக்கினால் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/azhagumuthukon-guru-puja-festival-police-warn-of-action-against-wheeling-and-speeding-vehicles</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/azhagumuthukon-guru-puja-festival-police-warn-of-action-against-wheeling-and-speeding-vehicles#comments</comments><guid isPermaLink="false">a332cdec-c8c8-4ed7-b3a1-e1cdfc0845d8</guid><pubDate>Sat, 11 Jul 2026 03:37:55 +0000</pubDate><atom:updated>2026-07-11T03:37:55.087Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Motorists,வாகன ஓட்டிகள்,காவல்துறை எச்சரிக்கை,police warning,அழகுமுத்துக்கோன் குருபூஜை விழா,Azhagamuthukon Guru Puja festival</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/9tcv09f6/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/9tcv09f6/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், கட்டாலங்குளத்தில் இன்று <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அழகுமுத்துக்கோன் 269-வது குருபூஜை விழா</a> நடைபெறுவதை முன்னிட்டு, அங்கே வருகை தரும் வாகன ஓட்டிகள் வீலிங், அதி வேகமாக வாகனங்களை இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>இன்று அழகுமுத்துக்கோன் 269-வது குருபூஜை விழா</h2><p>அழகுமுத்துக்கோன் 269-வது குருபூஜை விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: </p><p>தூத்துக்குடி மாவட்டம், கட்டாலங்குளத்தில் இன்று (11.7.2026, சனிக்கிழமை) நடைபெறவுள்ள மாவீரன் அழகுமுத்துக்கோன் 269-வது குருபூஜை விழாவில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருகை தர உள்ளனர்.</p><h2>வீலிங், அதி வேகமாக வாகனங்களை இயக்கினால் நடவடிக்கை </h2><p>பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை  குருபூஜையில் பங்கேற்க வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் வீலிங் (Wheeling), பந்தய வேகத்தில் வாகனம் ஓட்டுதல் (Rash Racing) மற்றும் பொதுமக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் ஆபத்து ஏற்படுத்தக்கூடிய பிற சாகசச் செயல்களில் ஈடுபடக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. மேலும், நீதிமன்றத்தின் உத்தரவின்படி, இத்தகைய ஆபத்தான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் பிற பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் காவல்துறையினர் உடனடியாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>எனவே குருபூஜையில் பங்கேற்க வரும் அனைவரும் தலைக்கவசம் அணிந்து பாதுகாப்பாக பயணிக்க வேண்டும். போக்குவரத்து விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். வீலிங், ரேசிங் மற்றும் ஆபத்தான சாகசச் செயல்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காவல்துறையினரின் அறிவுரைகள், நீதிமன்ற உத்தரவுகளை கடைப்பிடிக்க அனைவரையும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதனை மீறுவோர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்</p><p>"உங்கள் பாதுகாப்பே எங்கள் முன்னுரிமை... பாதுகாப்பாக வாருங்கள்... பாதுகாப்பாக வழிபட்டு... பாதுகாப்பாக வீடு திரும்புங்கள்." </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருச்சி: ஓடும் பஸ்சில் முதியவரிடம் 4 பவுன் நகை பறிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/trichy-4-sovereign-gold-chain-snatched-from-elderly-man-on-moving-bus</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/trichy-4-sovereign-gold-chain-snatched-from-elderly-man-on-moving-bus#comments</comments><guid isPermaLink="false">e2857fad-210b-4741-9d76-2b2a7284a042</guid><pubDate>Sat, 11 Jul 2026 03:29:11 +0000</pubDate><atom:updated>2026-07-11T03:29:11.771Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்சி,Trichy,நகை பறிப்பு,chain snatching</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/ap8z8ywr/6.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/ap8z8ywr/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>பெரம்பலூர் அரசறை அறிஞர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (65). இவர் சம்பவத்தன்று மதியம் தனியார் டவுன் பஸ்சில் சீனிவாசநகரில் இருந்து சத்திரம் பஸ் நிலையத்திற்கு வந்தார்.</p><p>பஸ் நிலையத்தில் இறங்கிய போது அவரது பையில் இருந்த 4 பவுன் எடை கொண்ட 2 தங்க சங்கிலியை காணவில்லை. மர்ம நபர்கள் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சங்கிலியை திருடி சென்றுவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p> ]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் முட்டை விலை வரலாறு காணாத உயர்வு... இன்று முதல் அமல்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/egg-prices-in-tamil-nadu-have-seen-an-unprecedented-rise-effective-from-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/egg-prices-in-tamil-nadu-have-seen-an-unprecedented-rise-effective-from-today#comments</comments><guid isPermaLink="false">2e19ac79-f886-4430-bb49-67f85ac33c15</guid><pubDate>Sat, 11 Jul 2026 03:09:09 +0000</pubDate><atom:updated>2026-07-11T03:09:09.469Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நாமக்கல்,முட்டை விலை,உயர்வு,Rise,Egg prices</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/94nn8ej1/46.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/94nn8ej1/46.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல்,</p><p>நாமக்கல் மாவட்டத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.</p><h2>கொள்முதல் விலை உயர்வு</h2><p>முட்டை கொள்முதல் விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுதான் நிர்ணயம் செய்கிறது. இதனிடையே, மேற்காசிய போர் ஏற்பட்டதால் கோழி தீவன மூலப்பொருள்களின் விலை உயர்வு, வெளிநாடு ஏற்றுமதி உள்ளிட்ட காரணங்களால் சமீபகாலமாக முட்டையின் விலை உயர்ந்து, கொள்முதல் விலையாக ரூ.6.50 என்று உயர்ந்தது. இந்த நிலையில், முட்டையின் பண்ணை கொள்முதல் விலையில் இதுவரையில் இல்லாத உச்சமாக மேலும் 5 காசுகள் உயர்ந்து ரூ.6.55 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><h2>மூலப்பொருட்களின் விலை உயர்வு</h2><p>தமிழ்நாட்டில் முட்டை ஒன்றின் கொள்முதல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.6.55 என்ற புதிய உச்சத்தை நேற்று அடைந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.  அதிகரித்த விற்பனை, கோழித்தீவன மூலப்பொருட்களின் கடுமையான <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88">விலை உயர்வு </a>உள்ளிட்ட காரணங்களால் விலையேற்றம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பெரும்பாலான கடைகளில் சில்லறை விற்பனையில் தற்போது ரூ.8 என்றிருக்கும் நிலையில், மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருச்சி - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-trichymayiladuthurai-express-train-service</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-trichymayiladuthurai-express-train-service#comments</comments><guid isPermaLink="false">b462c6c0-6414-43a2-a8b7-9fee6d2f10b9</guid><pubDate>Sat, 11 Jul 2026 02:56:42 +0000</pubDate><atom:updated>2026-07-11T02:56:42.438Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Mayiladuthurai,திருச்சி,Trichy,ரெயில் சேவை,train service,மயிலாடுதுறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/gzhj4695/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/gzhj4695/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>திருச்சி,  </p><p>திருச்சி ஜங்ஷனில் இருந்து மாலை 4.20 மணிக்கு புறப்படும் திருச்சி - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:16834) இன்று (சனிக்கிழமை ) மற்றும் 12,13-ந்தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயிலானது திருவெறும்பூரில் இருந்து மாலை 4.28 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை செல்லும். </p><p>இந்த ரெயில் திருச்சி - தஞ்சாவூர் இடையே பகுதியாக இயங்காது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்து உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது கேட்கப்படும் 33 கேள்விகள் என்னென்ன..? முழு விவரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-are-the-33-questions-asked-during-the-census-in-tamil-nadu-full-details</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-are-the-33-questions-asked-during-the-census-in-tamil-nadu-full-details#comments</comments><guid isPermaLink="false">dd791803-df6a-43ad-8162-dcc904796ab0</guid><pubDate>Sat, 11 Jul 2026 02:47:13 +0000</pubDate><atom:updated>2026-07-11T02:47:13.795Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,TN govt,மக்கள் தொகை கணக்கெடுப்பு,Census,Castewise Census,Caste Census,மக்கள் தொகை,மக்கள் தொகை பதிவேடு,கேள்விகள்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/vjtve95n/kkere.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு, மக்கள் தொகை கணக்கெடுப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/vjtve95n/kkere.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழகத்தில் ஆகஸ்டு 1-ந்தேதி தொடங்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது 33 கேள்விகள் கேட்கப்பட உள்ளன.</p><h2>மக்கள் தொகை கணக்கெடுப்பு</h2><p>இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். </p><p>2011-ம் ஆண்டுக்குப் பிறகு 2021-ம் ஆண்டு நடத்த வேண்டிய கணக்கெடுப்பு கொரோனா தொற்றுகாரணமாக ஒத்திவைக்கப்பட்டது.</p><p>இந்தநிலையில் தற்போது 2025-2026-ம் ஆண்டுகாலகட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியுள்ளன.</p><p>இந்திய வரலாற்றில், 2025-2026-ம் ஆண்டு கணக்கெடுப்பு முழுமையாக டிஜிட்ல் முறையில் நடக்கிறது.</p><p>மக்கள் தங்களை பற்றிய தகவல்களை "செல்போன் செயலி மூலம்" தாங்களாகவே பதிவு செய்யும் வசதியும் இருக்கிறது.</p><p>இது தரவுகளை விரைவாக சேகரிக்கவும், துல்லியமாக பகுப்பாய்வு செய்ய/வும் உதவும்.</p><h2>தமிழகத்தில் தொடக்கம்</h2><p>மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கும் நிதி, மக்கள் தொகையின் அடிப்படையிலேயே ஒதுக்கப்படுகிறது. எத்தனை பள்ளிகள், ஆஸ்பத்திரிகள் மற்றும் வேலைவாய்ப்புகள் தேவை என்பதை தீர்மானிக்க இது அவசியமாகும்.</p><p>பல்வேறு மாநிலங்களிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. புதுச்சேரியில் கடந்த 1-ந்தேதி முதல் இந்த பணிகள் ஆரம்பமாகி உள்ளது.</p><p>தமிழகத்தில் வருகிற ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்க உள்ளது.</p><p>( மக்கள் தவறான தகவலை அளித்தால் ரூ, 1,000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. )</p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/lh5f8v58/kier.jpg" /></figure><h2><strong>33 கேள்விகள்</strong></h2><p>மக்கள்தொகை கணகெடுப்புப் பணியின்போது  இந்த <strong>33 கேள்விகள்</strong> மத்திய அரசு  கேட்பதற்காக பட்டியலிடப்பட்டுள்ளன அதன் விபரம் பின்வருமாறு:-</p><p>மொத்த 33 கேள்விகள் கேட்கப்படும்</p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>1.✓ அடுக்கு மாடி கட்டிட எண் ?</strong></p><p>FOR APARTMENT BUILDING NUMBER</p><p>வசிக்கும் கட்டிடம் எண்</p><p>நீங்கள் வசிக்கும் கட்டிடத்தின் எண்</p><p>( நகராட்சி அல்லது உள்ளூர் அதிகாரசபை எண் )</p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>2.✓  வீட்டு கதவு எண் ?</strong></p><p>HOME DOOR NUMBER</p><p>வீட்டு எண்</p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>3.✓ வீட்டின் தரையின் முக்கிய பொருள் என்ன எதில் கட்டப்பட்டது ?</strong></p><p>TILES OR CEMENT</p><p>(Mosaic &amp; Red Oxide Floor)</p><p>வீட்டு தரை</p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>4✓  வீட்டின் சுவரின் முக்கிய பொருள் என்ன எதில் கட்டப்பட்டது ?</strong></p><p>BRICK OR MUD WALL</p><p>(Red Bricks / Cement Hollow Blocks) </p><p>சுவர்</p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>5.✓ வீட்டின் மேல் கூரையின் முக்கிய பொருள் எது ?</strong></p><p>CONCRETE SEELING OR WOODEN SEELING</p><p>•கான்கிரீட் (RCC) கூரை</p><p>•உலோகத் தாள்கள் (Metal Sheets)</p><p>•ஓடுகள் (Tiles)</p><p>•மரச்சட்டங்கள் (Wooden Trusses)</p><p>•மரப்பலகை / வைக்கோல்</p><p>கூரையின் பிரதான கட்டுமானப் பொருள்</p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>6.✓  வீடு தற்போது பயன்பாட்டில் உள்ளதா ( பயன்பாட்டை உறுதி செய்தல் ? )</strong></p><p>LIVING OR LOCKED</p><p>வீட்டின் பயன்பாடு</p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>7.✓ எந்த மாதிரி வீட்டின் அமைப்பு ?</strong></p><p>INDIVIDUAL PRIVATE HOUSE OR APARTMENT</p><p>மாடி வீடு (Duplex / Two-Story)</p><p>வீட்டின் நிலை</p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>8.✓ குடும்ப எண் ?</strong></p><p>"குடும்ப எண்" (Family ID) என்பது பொதுவாக உங்கள் ரேஷன் கார்டு (குடும்ப அட்டை) எண்ணைக் குறிக்கிறது.</p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>9.✓ வீட்டில் வசிக்கும் மொத்த நபர்களின் எண்ணிக்கை எவ்வளவு ?</strong></p><p>HOW MANY MEMBERS IN HOME</p><p>வசிக்கும் நபர்களின் எண்ணிக்கை என்பது உங்களின் சொந்த வீடு, கிராமம், மாவட்டம் அல்லது மாநிலத்தைப் பொறுத்து மாறுபடும். அரசாங்க மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஒரு வீட்டில் வசிக்கும் நபர்களின் மொத்த எண்ணிக்கை (Total number of persons living in a house) அடிப்படை தகவலாக சேகரிக்கப்படுகிறது.</p><p>வசிக்கும் நபர்களின் எண்ணிக்கை</p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>10.✓  வீட்டுத் தலைவரின் பெயர் என்ன ?</strong></p><p>அரசு ஆவணங்களில் உள்ள உங்கள் குடும்பத் தலைவர் பெயரை அறிய</p><p>FAMILY MEMBER NAME</p><p>குடும்ப தலைவர் பெயர்</p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/c0jp28li/samle.jpg" /></figure><p><strong>11.✓ வீட்டுத் தலைவரின் பாலினம் ( ஆணா  / பெண்ணா ) எது ?</strong></p><p>MALE OR FEMALE</p><p>தலைவரின் பாலினம்</p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>12.✓ குடும்பத் தலைவர் எந்த ( ஜாதி ) சாதி (Caste) ?</strong></p><p>குடும்ப தலைவரின் அட்டவணை வகுப்பு</p><p>நீங்கள் "குடும்ப தலைவரின் அட்டவணை வகுப்பு" (Head of Household - Schedule Class) அல்லது "அரசு அட்டவணை வகுப்பினர் குடும்பத் தலைவருக்கான திட்டங்கள்" (SC Category Head of Household) பற்றிய தகவல்களைத் தேடுகிறீர்கள் என்றால், உங்கள் குடும்ப அட்டை (Ration Card), ஜாதிச் சான்றிதழ் (Community Certificate) மற்றும் அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.</p><p>( Scheduled Caste / எஸ்சி - SC )</p><p><strong>"பட்டியல் சாதியினரா" ?</strong></p><p>அல்லது "பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்" ( Scheduled Tribes - ST ) பழங்குடி சாதியினரா அல்லது பிற இனத்தைச் சேர்ந்தவரா என்பது ?</p><p>இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் சமூக நலத் திட்டங்களில் குடும்ப தலைவரின் அட்டவணை வகுப்பு ( "SC/ST/Other" ) என்பது, குடும்பத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர் எந்த சமூகப் பிரிவைச் (ஆதி திராவிடர், பழங்குடியினர் அல்லது இதர பிரிவினர்) சார்ந்தவர் என்பதைக் குறிக்கும். இது சாதிச் சான்றிதழ்களை அடிப்படையாகக் கொண்டது.</p><p>SC, ST மற்றும் பிறர்" என்பது பொதுவாக இந்தியாவில் இட ஒதுக்கீடு, கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காகப் பயன்படுத்தப்படும் சமூகக் குழுப் பிரிவுகளைக்குறிக்கிறது</p><p><strong>• பட்டியல் சாதியினர் (SC) :-</strong></p><p>வரலாற்று ரீதியாக ஓரங்கட்டப்பட்ட சமூகங்கள், முன்னர் தலித்துகள் என்று அழைக்கப்பட்டவர்கள், இவர்கள் கடுமையான சமூகப் புறக்கணிப்பையும் தீண்டாமையையும் எதிர்கொண்டனர்.</p><p><strong>• பட்டியல் பழங்குடியினர் (ST) :-</strong></p><p> பெரும்பாலும் தனிமைப்படுத்தப்பட்ட அல்லது வனப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடி சமூகங்கள்; இவர்கள் தனித்துவமான கலாச்சார நடைமுறைகள் மற்றும் புவியியல் ரீதியான தனிமைப்படுத்தலால் அறியப்படுகிறார்கள்.</p><p><strong>• மற்றவர்கள் :-</strong></p><p>பொதுவாக இது , சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கியுள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையோ (OBC), அல்லது அரசாங்க இட ஒதுக்கீட்டுப் பலன்களைப் பெறாத சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும்பொதுப் பிரிவினரையோ (UR) குறிக்கிறது .</p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>13.✓ வீட்டின் உரிமை நிலை என்ன?</strong></p><p>( சொந்த வீடா / வாடகை வீடா )</p><p>OWN HOUSE OR RENTAL HOUSE</p><p>வீட்டின் உரிமை நிலை</p><p>வீட்டின் உரிமை நிலை (Home ownership) என்பது ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது குடும்பத்திற்கு அந்த வீடு சொந்தமானதா அல்லது அவர்கள் வாடகைக்கு இருக்கிறார்களா என்பதைக் குறிக்கிறது. இது சமூக, பொருளாதார நிலையை அளவிடும் முக்கிய காரணியாகும்.</p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>14.✓ வீட்டில் உள்ள குடியிருப்பு அறைகளின் எண்ணிக்கை எத்தனை ?</strong></p><p>HOW MANY ROOMS IN YOUR HOUSE</p><p>அறைகளின் எண்ணிக்கை</p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>15.✓ வீட்டில் வசிக்கும் திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை ?</strong></p><p>HOW MANY COUPLES IN YOUR HOUSE</p><p>திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை</p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>16.✓ குடிநீரின் முக்கிய ஆதாரம் ?</strong></p><p>குடிநீர் ஆதாரம் அமைந்துள்ள இடம்</p><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான குடிநீர் ஆதாரங்கள் மேற்பரப்பு நீர் (ஏரிகள்), நிலத்தடி நீர், மற்றும் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் ஆகிய இடங்களில் இருந்து பெறப்படுகின்றன</p><p>(ஏரிகள், ஆறுகள்) மற்றும் நிலத்தடி நீர் (கிணறுகள், ஆழ்துளை கிணறுகள்)</p><p>IN WHICH PLACE YOU GETTING WATER</p><p>BY RIVER + LAKE + WELL + BORE</p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>17.✓ குடிநீர் வசதி எப்படி கிடைக்கிறது ?</strong></p><p>( குழாய் இணைப்புகள் மூலம் வழங்கப்படுகிறது )</p><p>*PRESENT YOU GETTING WATER BY PIPE LINE OR BORE</p><p>நிலத்தடி நீர் (Groundwater)</p><p>குடிநீர் இணைப்பு (Pipe Line)</p><p>குடிநீருக்கான பிரதான ஆதாரம்</p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>18.✓ கரன்ட் வசதி உள்ளதா ?</strong></p><p>விளக்கு ஒளிக்கான பிரதான ஆதாரம்</p><p>மின்சாரம் (Electricity) ஆகும்</p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>19.✓ கழிவறை உள்ளதா ?</strong></p><p>கழிப்பிட வசதி</p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>20.✓ கழிவறை எந்த வகை ?</strong></p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p> <p><strong>21.✓ கழிவு நீர் வெளியேறும் வசதி உள்ளதா ?</strong></p><p>கழிவு நீர் வெளியேற்றும் இணைப்பு*</p><p>(Sewerage Connection)</p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>22.✓ குளியல் வசதி இருக்கிறதா ?</strong></p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>23.✓ சமையலறை மற்றும் LPG/PNG இணைப்பு வசதி உள்ளதா ?</strong></p><p>சமையலறை வசதி மற்றும் கியாஸ் இணைப்பு</p><p>எல்.பி.ஜி (LPG)</p><p>குழாய் வழி கியாஸ் (PNG)</p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>24.✓ சமையலுக்குப் பயன்படுத்தப்படும் முக்கிய எரிபொருள் எது ?</strong></p><p>சமையலுக்கு பயன்படுத்தப்படும் பிரதான எரிபொருள்*</p><p>• எல்.பி.ஜி (LPG)</p><p>• இயற்கை எரிவாயு (PNG - Piped Natural Gas)</p><p>• மின்சாரம் (Electricity)</p><p>• விறகு, கரி மற்றும் சாணம் </p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>25.✓ ரேடியோ / டிரான்சிஸ்டர் இருக்கா ?</strong></p><p>வானொலி,டிரான்சிஸ்டர்,</p><p>RADIO TRANSISTOR </p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>26.✓ தொலைக்காட்சி ( TV ) இருக்கா ?</strong></p><p> TELIVISION </p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>27.✓ இணையதளம் வசதி இருக்கா ?*இணையதள வசதி</strong></p><p>INTERNET </p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>28.✓ மடிக்கணினி / கம்ப்யூட்டர் இருக்கா ?</strong></p><p>LAPTOP / COMPUTER </p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>29.✓ தொலைபேசி /மொபைல் போன் /ஸ்மார்ட்போன் இருக்கா ?</strong></p><p>TELEPHONE / MOBILE PHONE / SMARTPHONE </p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>30.✓ சைக்கிள் / ஸ்கூட்டர் / மோட்டார் சைக்கிள் / மொபெட் இருக்கா ?</strong></p><p>CYCLE / SCOOTER / MOTORBIKE </p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>31.✓ கார் / ஜீப் / வேன் இருக்கா ?</strong></p><p>CAR / JEEP / VAN</p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>32.✓ வீட்டில் சாப்பிடும் முக்கிய உணவு  எது ?</strong></p><p>• அரிசி (Rice)</p><p>• கோதுமை (Wheat)</p><p>• மக்காச்சோளம் (Maize / Corn)</p><p>• சிறுதானியங்கள் (Millets)</p><p>• பார்லி மற்றும் ஓட்ஸ் (Barley &amp; Oats)</p><p>பிரதான உணவு தானியங்கள்</p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p><strong>33.✓ உங்கள் மொபைல் எண் ( மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான தகவல் தொடர்புகளுக்கு மட்டும் )</strong></p><p>செல்போன் எண்</p><p>••••••••••••••••••••••••••••••••••••••••••</p><p>ஆகிய 33 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான விடைகள் பதிவு செய்யப்படுகிறது என்று முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரீஸ் தாக்கூர் பிறப்பித்துள்ள அரசு உத்தரவில் கூறியுள்ளார்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/9qfrpwk1/wuiot.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-inflow-to-bhavanisagar-dam-continues-to-increase-farmers-happy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-inflow-to-bhavanisagar-dam-continues-to-increase-farmers-happy#comments</comments><guid isPermaLink="false">2a6678b7-4712-46fb-8d3b-5028720c1e05</guid><pubDate>Sat, 11 Jul 2026 02:03:10 +0000</pubDate><atom:updated>2026-07-11T02:03:10.784Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>விவசாயிகள் மகிழ்ச்சி,Increase in water flow நீர்வரத்து அதிகரிப்பு,bhavanisagar dam பவானிசாகர் அணை,The farmers are happy</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/j5unmxwv/bhavani.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/j5unmxwv/bhavani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பவானிசாகர்,</p><p>நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்வதால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.</p><p>ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக இருப்பது <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D">பவானிசாகர் அணை</a>. இந்த அணைக்கு நீலகிரி மாவட்டத்தில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக வரும் பவானி ஆறும். கூடலூர் மலைப்பகுதி வழியாக வரும் மாயாறும் நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகின்றன. இந்த அணை தண்ணீரால் 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த சில மாதங்களாக பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழை இல்லாத காரணத்தால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. அதேசமயம் அணையில் இருந்து பவானி ஆறு மற்றும் கீழ்பவானி வாய்க்கால் ஆகியவற்றின் மூலம் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதால் அணையின் நீர்மட்டம் கிடு கிடுவென குறைந்தது.</p><h2>விவசாயிகள் மகிழ்ச்சி</h2><p>இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பவானி ஆற்றில் செந்நிறத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து வருகிறது. இதன்காரணமாக பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று மாலை 4 மணியளவில் அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 589 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 58.76 அடியாக இருந்தது. அணைக்கு தொடர்ந்து 5 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்துகொண்டு இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியன் வங்கியின் நிகர லாபம் ரூ.3,273 கோடியாக உயர்வு: நிர்வாக இயக்குனர் பினோத் குமார் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/indian-banks-net-profit-rises-to-rs-3273-crore-managing-director-binod-kumar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/indian-banks-net-profit-rises-to-rs-3273-crore-managing-director-binod-kumar#comments</comments><guid isPermaLink="false">47b64815-ee2f-49ba-b8c6-77a90844ff2c</guid><pubDate>Sat, 11 Jul 2026 01:54:01 +0000</pubDate><atom:updated>2026-07-11T01:54:01.465Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,தகவல்,உயர்வு,Profit,Managing Director,இந்தியன் வங்கி,Indian Bank,லாபம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/01yg0vv9/216.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்தியன் வங்கி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/01yg0vv9/216.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>இந்தியன் வங்கியின் நிகர லாபம் ரூ.3,273 கோடியாக உயர்ந்துள்ளது என்று அதன் நிர்வாக இயக்குனர் பினோத் குமார் தெரிவித்துள்ளார். </p><p>2026-27-ம் நிதி ஆண்டின் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF">இந்தியன் வங்கியின்</a> முதலாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை அதன் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான பினோத் குமார் நிருபர்கள் முன்னிலையில் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-</p><h2>நிகர லாபம்</h2><p>இந்தியன் வங்கியின் நிகர லாபம் கடந்த நிதி ஆண்டில் (ஜூன்) ரூ.2,973 கோடியாக இருந்தது. தற்போது நிகர லாபம் ரூ.3,273 கோடியாக உயர்ந்து இருக்கிறது. கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பீடுகையில் 10.09 சதவீதம் அதிகரித்து உள்ளது. வங்கியின் செயல்திறன். நிலையான வளர்ச்சியை பிரதிபலிக்கும் வகையில் நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.</p><p>வங்கியின் செயல்பாட்டு லாபம் ரூ.4,770 கோடியில் இருந்து ரூ.5.557 கோடியாகவும் நிகர வட்டி வருவாய் ரூ.6,359 கோடியில் இருந்து ரூ.7,435 கோடியாகவும் உயர்ந்துள்ளது. வங்கியின் பரவலான முன்னேற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் மொத்த வணிகம் 13.66 சதவீதம் அதிகரித்துள்ளது. </p><h2>விருது</h2><p>மொத்த வைப்புத்தொகை (டெபாசிட்) ரூ.7 லட்சத்து 44 ஆயிரத்து 289 கோடியில் இருந்து ரூ.8 லட்சத்து 44 ஆயிரத்து 578 கோடி என்ற அளவை எட்டி இருக்கிறது. மொத்தம் ரூ.2 லட்சத்து 36 ஆயிரத்து 720 கோடி வரை முன்னுரிமை கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக ஐ.ஐ.பி.எப். அமைப்பு விருது வழங்கி கவுரவித்துள்ளது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>
வேலை தருவதாக கூறி கண்மாய் பகுதிக்கு அழைத்து சென்று... 6 பேர் கும்பலால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-taken-to-kanmai-area-on-the-pretext-of-employment-gang-of-6-brutally-assaults-her</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-taken-to-kanmai-area-on-the-pretext-of-employment-gang-of-6-brutally-assaults-her#comments</comments><guid isPermaLink="false">b4cc5b68-e690-405b-a1db-0496cb0f0547</guid><pubDate>Sat, 11 Jul 2026 01:48:43 +0000</pubDate><atom:updated>2026-07-11T01:48:43.696Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrests,கூட்டு பாலியல் பலாத்காரம்,Gang Rape Case</media:keywords><media:content height="768" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/j7lkr2re/ugwot.jpg" width="1366"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/j7lkr2re/ugwot.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>மதுரை</p><p>மேலூர் அருகே கண்மாய் பகுதியில் இளம்பெண்ணை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.</p><p>விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 33 வயதுடைய பெண்ணுக்கு திருமணமாகி ஒரு ஆண், பெண் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக அந்த பெண் கணவரை பிரிந்து வசித்து வந்தார். கட்டிட வேலைக்கும் சென்று வந்தார்.</p>  <h2>தோழியின் நட்பு</h2><p>இவரது வீட்டின் அருகில் வசிக்கும் அனிதா என்பவர் அவரிடம் நட்பாக பழகினாராம்.  இந்த நிலையில் மதுரை மாவட்டம் மேலூரில் ஒரு மூதாட்டியை பார்த்துக்கொள்ள ஆள் வேண்டும் எனக்கூறி ஒரு செல்போன் எண்ணை அனிதா கொடுத்துள்ளார். அதன்படி அந்த எண்ணுக்கு அப்பெண் தொடர்பு கொண்டு பேசினார்.</p><p>எதிர்முனையில் பேசியவர் மேலூருக்கு வருமாறும், பணம் தருவதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பி அந்த பெண் சம்பவத்தன்று இரவு மேலூருக்கு வந்தார். அங்கு 20 வயது வாலிபர் ஒருவர் அந்த பெண்ணை அழைத்து கொண்டு தாமரைப்பட்டி பகுதியில் டாஸ்மாக் கடை அருகே உள்ள கண்மாய் பகுதிக்கு சென்றார். அங்கு ஏற்கனவே 4 பேர் நின்று கொண்டிருந்தனர். அங்கு அந்த பெண்ணை இறக்கி விட்டு அந்த வாலிபர் தப்பி சென்றுள்ளார்.</p>  <h2>கூட்டு பலாத்காரம்</h2><p>அதன்பின் அந்த இளம்பெண்ணை அங்கிருந்த 4 பேரும் மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் பெண்ணிடம் இருந்து அரை பவுன் தங்கச்சங்கிலி, வெள்ளி கொலுசு, செல்போன் உள்ளிட்டவற்றை பறித்துக்கொண்டு 4 பேரும் ஓடிவிட்டதாக தெரிகிறது.</p><p>இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 4 பேரையும், அதற்கு உடந்தையாக இருந்த செல்போன் எண் கொடுத்த அனிதா, இளம்பெண்ணை அழைத்து சென்ற வாலிபர் உள்பட மற்றவர்களையும் தேடி வந்தனர்.</p>  <h2>போலீசார் விசாரணை</h2><p>அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக தாமரைப்பட்டியை சேர்ந்த வினித் (வயது 21), செல்வகுமார் (33), அரவிந்த் (26), வீரபாண்டி (30) மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய தாத்தா கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/grandfather-arrested-for-impregnating-10th-grade-student</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/grandfather-arrested-for-impregnating-10th-grade-student#comments</comments><guid isPermaLink="false">aa4abe9b-f210-4e49-a560-a0a911fd802a</guid><pubDate>Sat, 11 Jul 2026 01:43:21 +0000</pubDate><atom:updated>2026-07-11T01:43:21.714Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrest,10th grade student,சிறுமி கர்ப்பம்,தாத்தா,grandfather,10-ம் வகுப்பு மாணவி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/ip6cet93/arrest.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/ip6cet93/arrest.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பரமக்குடி,</p><p>10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய தாத்தாவை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.</p><p>ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 73 வயது முதியவர். இவருடைய மகளுக்கு திருமணமாகி கணவர் இறந்து விட்டார். அவருக்கு 15 வயதில் மகள் உள்ளார்.</p><h2>பாலியல் தொல்லை </h2><p>இந்த சிறுமி பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். முதியவரின் வீட்டின் அருகில் அவரது மகள் மற்றும் பேத்தி வசித்து வருகின்றனர். இதனால் முதியவர் அடிக்கடி தனது மகள் வீட்டுக்கு சென்று பேத்தியை பார்த்து வருவது வழக்கம். இந்நிலையில் சில மாதங்களாக தனது பேத்தி என்றும் பாராமல் அந்த சிறுமிக்கு முதியவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி, தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் தனது தந்தையை கண்டித்துள்ளார். இருப்பினும் முதியவர் தொடர்ந்து பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.</p><h2>3 மாத கர்ப்பம்</h2><p>மேலும் தனது பேத்தியை கட்டாயப்படுத்தி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சிறுமி 3 மாதம் கர்ப்பமானதாக தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், தனது தந்தை மீது பரமக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து முதியவரை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சேலம் மாநகரில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/traffic-diversion-in-salem-city-starting-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/traffic-diversion-in-salem-city-starting-tomorrow#comments</comments><guid isPermaLink="false">56a9d1cc-c016-42e2-b23f-a934d3d655fa</guid><pubDate>Sat, 11 Jul 2026 01:38:42 +0000</pubDate><atom:updated>2026-07-11T01:38:42.541Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,சேலம்,போக்குவரத்து மாற்றம்,traffic diversion</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/q045mcm2/3.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/q045mcm2/3.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம், </p><p>சேலம் மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. பிருந்தாவன் சாலை மற்றும் அதனை ஒட்டியுள்ள மருத்துவமனைகளுக்கு செல்லும் வாகனங்கள் ஓமலூர் பிரதான சாலையில் இருந்து வழக்கம்போல் உள்ளே செல்ல அனுமதிக்கப்படும். வெளியே வரும் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது.</p><p>மருத்துவமனை பகுதிக்குள் சென்ற வாகனங்கள் எஸ்.கே.எஸ். மருத்துவமனை சாலை 7-வது கிராஸ், எல்.ஐ.சி. காலனி சாலை வழியாக வெளியே வந்து ஓமலூர் பிரதான சாலையை அடைய வேண்டும். </p><p>எல்.ஐ.சி. காலனி, 7-வது கிராஸ் சாலை மற்றும் வசந்தம் ஓட்டல் சாலை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் எஸ்.கே.எஸ். சந்திப்பு வழியாக மட்டுமே செல்ல வேண்டும். இதற்காக எல்.ஐ.சி. காலனி சாலை ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. பிருந்தாவன் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் வலதுபுறம் திரும்பி 7-வது கிராஸ் சாலை வழியாக செல்ல வேண்டும். இந்த வழியாக செல்லும் வாகனங்கள் நேரடியாக ஓமலூர் பிரதான சாலைக்கு செல்ல அனுமதி இல்லை. இந்த தகவலை கலெக்டர் இளம்பகவத் தெரிவித்து உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கை, கால்களில் ஒயரை சுற்றி மின்சாரம் பாய்ச்சி மகள், மகன் கொலை; டிரைவர் தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/daughter-and-son-killed-by-electrocution-around-hands-and-feet-driver-commits-suicide</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/daughter-and-son-killed-by-electrocution-around-hands-and-feet-driver-commits-suicide#comments</comments><guid isPermaLink="false">ed98bcc1-3610-4e06-b8d8-a958430585d0</guid><pubDate>Sat, 11 Jul 2026 01:38:16 +0000</pubDate><atom:updated>2026-07-11T01:38:16.554Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,murder,son,மகன்,மகள்,daughter,electrocution,டிரைவர் தற்கொலை,Lorry driver commits suicide,மின்சாரம் பாய்ச்சி கொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/df4f11yo/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உயிரிழந்த தந்தை, மகள், மகன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/df4f11yo/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி அருகே மனைவி பிரிந்து சென்றதால் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தனது மகள், மகன் மீது மின்சாரத்தை பாய்ச்சி கொன்றுவிட்டு டிரைவர் தற்கொலை</a> செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.</p><h2>லாரி டிரைவர்</h2><p>தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை சிறுபாடு சவேரியார்புரத்தை சேர்ந்த அந்தோணிமுத்து மகன் மரிய மைக்கேல் (வயது 45), லாரி டிரைவர். இவரது மனைவி சபிதாரோனிகம். இந்த தம்பதிக்கு 9-ம் வகுப்பு படிக்கும் மரிய நிரோஷா(14) என்ற மகளும், 7-ம் வகுப்பு படிக்கும் மரிய கெனிஸ்டன்(12) என்ற மகனும் இருந்தனர். குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சபிதாரோனிகம் பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மரிய மைக்கேல் தனது தந்தை மற்றும் 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.</p><h2>மகள், மகன் கொலை</h2><p>மனைவி பிரிந்து சென்றதில் இருந்து மிகுந்த மனஉளைச்சலுடன் காணப்பட்ட மரிய மைக்கேல் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வீட்டுக்குள் 2 குழந்தைகளுடன் மரிய மைக்கேல் படுத்து தூங்கினார். வீட்டுக்கு வெளியே அந்தோணி முத்து படுத்திருந்தார். நள்ளிரவில் திடீரென எழுந்த மரிய மைக்கேல், தூங்கிக்கொண்டிருந்த மரிய நிரோஷா, மரிய கெனிஸ்டன் ஆகியோரின் கை, கால்களில் மின்சார ஒயரை சுற்றி வைத்து மின்சாரத்தை பாய்ச்சியதாக கூறப்படுகிறது. இதில் 2 குழந்தைகளும் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதன்பிறகு மரிய மைக்கேல் தனது காலிலும் மின்சார ஒயரை சுற்றிக்கொண்டு மின்சாரத்தை பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டார். </p><h2>போலீஸ் விசாரணை</h2><p>இதுகுறித்து புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், பூட்டிய கதவை உடைத்து வீட்டின் உள்ளே சென்றனர். அங்கு மின்சாரம் தாக்கி 3 பேரும் சடலமாக கிடந்ததை கண்டுபிடித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகள், மகனை மின்சாரம் பாய்ச்சி கொன்றுவிட்ட லாரி டிரைவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விபத்தில் பலியான கடை உரிமையாளர் குடும்பத்துக்கு ரூ.47 லட்சம் இழப்பீடு: சென்னை கோர்ட்டு தீர்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-47-lakh-compensation-to-the-family-of-the-shop-owner-who-died-in-the-accident-chennai-court-verdict</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-47-lakh-compensation-to-the-family-of-the-shop-owner-who-died-in-the-accident-chennai-court-verdict#comments</comments><guid isPermaLink="false">d6e02617-82af-4ab5-a300-14c0592d86ac</guid><pubDate>Sat, 11 Jul 2026 01:35:35 +0000</pubDate><atom:updated>2026-07-11T01:35:35.373Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Accident,இழப்பீடு,Compensation,சென்னை,தீர்ப்பு,court verdict,விபத்தில் பலி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/u23hgo1j/200.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை கோர்ட்டு தீர்ப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/u23hgo1j/200.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 38). இருசக்கர வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். கடந்த 8.1.2022 அன்று மிஞ்சூர் கும்மனூர்-புதூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். </p><h2>விசாரணை</h2><p>இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதேவேளையில், லோகநாதன் மனைவி யமுனா இழப்பீடு கோரி சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி தர்மபிரபு, 'எச்சரிக்கை விளக்குகளை ஒளிர செய்யாமல் சாலை ஓரத்தில் இருட்டான பகுதியில் லாரி நிறுத்தப்பட்டிருந்த காரணத்தினால் தான் இந்த விபத்து நடந்துள்ளது.</p><h2>தீர்ப்பு</h2><p>எனவே, லாரி உரிமையாளர் தான் இந்த விபத்துக்கு பொறுப்பேற்க வேண்டும். அந்தவகையில் லாரிக்கு இன்ஸ்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ள ராயல் சுந்தரம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.47 லட்சம் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணுடன் வாலிபர் உல்லாசம்.. அடுத்து நடந்த சம்பவம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-engages-in-intimacy-with-a-young-woman-after-promising-marriage-what-happened-next</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-engages-in-intimacy-with-a-young-woman-after-promising-marriage-what-happened-next#comments</comments><guid isPermaLink="false">ac490ac4-1f10-41ac-ba8b-a4737b7f562b</guid><pubDate>Sat, 11 Jul 2026 01:27:48 +0000</pubDate><atom:updated>2026-07-11T01:27:48.901Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,தமிழகம்,கைது,இளம்பெண்,arrest,உல்லாசம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/j4cshccr/ullas.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/j4cshccr/ullas.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோயம்பேடு, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/சென்னை">சென்னை</a> கோயம்பேடு சின்மயா நகரைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர், கோயம்பேடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். </p><h2>பலமுறை உல்லாசம்</h2><p>அதில் அவர் கூறியிருப்பதாவது:-</p><p>நான் தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். கடந்த 2023-ம் ஆண்டு வேளச்சேரியில் உள்ள வணிக வளாகத்தில், தாம்பரம் அடுத்த சிட்லபாக்கத்தைச் சேர்ந்த தமிழரசன் (வயது 25) என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. </p><p>என்னை திருமணம் செய்து கொள்வதாக தமிழரசன் ஆசை வார்த்தை கூறியதால், இருவரும் நெருங்கிப் பழகினோம். அப்போது தமிழரசன், பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று என்னுடன் பலமுறை உல்லாசமாக இருந்தார். பின்னர் திருமணம் குறித்து கேட்ட போது, தமிழரசன் மறுத்ததுடன், என்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறியிருந்தார்.</p><h2>கைது</h2><p>அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உல்லாசமாக இருந்துவிட்டு, திருமணம் செய்ய மறுத்தது தெரியவந்தது. இதையடுத்து, தமிழரசனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கட்சி நிகழ்ச்சிகளை அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு காண்பிக்க கூடாது  - 
அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/party-programs-should-not-be-shown-to-students-in-government-schools-minister-rajmohan-orders</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/party-programs-should-not-be-shown-to-students-in-government-schools-minister-rajmohan-orders#comments</comments><guid isPermaLink="false">c542a64f-5e74-4ae7-bfed-d0a0a072e552</guid><pubDate>Sat, 11 Jul 2026 01:11:44 +0000</pubDate><atom:updated>2026-07-11T01:11:44.103Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசு பள்ளி,students- மாணவர்கள்,In government schools,Minister Rajmohan,அமைச்சர் ராஜ்மோகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/998cyi1m/minister-rajmohan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/998cyi1m/minister-rajmohan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>த.வெ.க. நிகழ்ச்சியை பள்ளிக்கூடத்தில் நேரலை செய்து மாணவர்களுக்கு திரையிட்ட சம்பவம் தவறு என்றும், கட்சி நிகழ்ச்சிகளை அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு காண்பிக்க கூடாது என்றும் அமைச்சர் ராஜ்மோகன் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளார்.</p><p>கரூரில் முதல்-அமைச்சர் விஜய் நேற்று கலந்துகொண்ட கட்சி சார்ந்த நிகழ்ச்சி பள்ளி ஒன்றின் வகுப்பறையில் 'ஸ்மார்ட்' போர்டு வாயிலாக ஒளிபரப்பப்பட்டது சமூக வலைதளங்களில் பேசு பொருளானது. இந்த விவகாரத்தில் பள்ளி கல்வித்துறை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D">அமைச்சர் ராஜ்மோகன்</a> அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-</p><h2>ஒழுங்கு நடவடிக்கை</h2><p>பள்ளிக்கல்வித் துறை உத்தரவை மீறி, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளியில் த.வெ.க. நிகழ்ச்சியை நேரலை செய்து மாணவர்களுக்கு திரையிட்டது தவறு. சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர் மீது உடனடி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். எந்தவொரு கட்சியின் நிகழ்ச்சியையும் அரசு பள்ளி வளாகங்களில் மாணவர்களுக்கு காட்டக்கூடாது.</p><h2>சுற்றறிக்கை</h2><p>இதுதொடர்பாக பள்ளி கல்வி, தொடக்க கல்வி, தனியார் பள்ளிகள் ஆகிய 3 துறைகளின் இயக்குனர்கள் கூட்டாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு நேற்று அனுப்பிய சுற்றறிக்கையில், பள்ளிகளில் சாதி. மத. அரசியல் சார்ந்த நிகழ்வுகளைத் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>
திருநெல்வேலி: இந்த ஆண்டு இதுவரை 72 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirunelveli-72-people-arrested-under-the-detention-act-so-far-this-year</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirunelveli-72-people-arrested-under-the-detention-act-so-far-this-year#comments</comments><guid isPermaLink="false">852355ec-e92d-4068-9b14-eca279323417</guid><pubDate>Sat, 11 Jul 2026 01:10:28 +0000</pubDate><atom:updated>2026-07-11T01:10:28.513Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Tirunelveli,திருநெல்வேலி,arrest,கஞ்சா விற்பனை,Ganja sale,police information,காவல்துறை தகவல்,தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டம்,Tamil Nadu Detention Act</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/calgu1ci/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கஞ்சா விற்பனை, தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/calgu1ci/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கணவன், மனைவி ஆகிய 2 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது</a> செய்யப்பட்டனர்.</p><h2>கணவன், மனைவி தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் கைது</h2><p>திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், தம்புபுரம் பகுதியைச் சேர்ந்த பழனி (வயது 63) மற்றும் அவரது மனைவி சுப்பம்மாள்(54) ஆகிய 2 பேரும் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேற்சொன்ன 2 பேரின் தொடர் சட்டவிரோத செயல்களை கருத்தில் கொண்டு, அவர்கள் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, நாங்குநேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம், மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன்பேரில், திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில், தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ்  சுப்பம்மாள் மதுரை பெண்கள் தனிச்சிறையிலும், பழனி பாளை மத்திய சிறையிலும் நேற்று (10.7.2026) அடைக்கப்பட்டனர்.</p><h2>இந்த ஆண்டு இதுவரை 72 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது</h2><p>திருநெல்வேலி மாவட்டத்தில், இந்த ஆண்டு இதுவரை 72 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. </p><p>திருநெல்வேலி மாவட்டம், களக்காடு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில், களக்காடு பனையன்குளம் ஜங்ஷன் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த களக்காடு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம்(எ) அருண்(19), ராமகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துபாலன்(26) ஆகிய 2 பேரை சோதனை செய்தனர். </p><h2>2 பேர் கைது, 2 கிலோ கஞ்சா பறிமுதல்</h2><p>அப்போது அவர்கள், அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய 2 கிலோ கஞ்சா விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து களக்காடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கண்ணா காந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மேற்சொன்ன 2 வாலிபர்களையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.</p>]]></content:encoded></item><item><title>இன்று பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.. எங்கு தெரியுமா..?</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-accompanied-by-strong-winds-today-do-you-know-where</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-accompanied-by-strong-winds-today-do-you-know-where#comments</comments><guid isPermaLink="false">27077fdc-d203-4364-bfcb-a78887afbcc1</guid><pubDate>Sat, 11 Jul 2026 01:08:16 +0000</pubDate><atom:updated>2026-07-11T01:08:16.696Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Rain,Weather,தமிழகம்,Weather News,WeatherUpdate,மழை,வானிலை செய்திகள்,வானிலை மையம்,வானிலை நிலவரம்,வானிலை ஆய்வு மையம்,வானிலை அறிக்கை,weather condition,Weather Report,வானிலை முன்னறிவிப்பு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/6tei9u06/makt.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மழை, rain]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/6tei9u06/makt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>சுமார் 0.9 கிமீ உயரத்தில், ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) வட தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவுகிறது.</p><p>சுமார் 1.5 கிமீ முதல் 3.1 கிமீ உயரத்தில், ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) தெலுங்கானாவிலிருந்து கர்நாடக கடலோரப்பகுதிக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் வரை நிலவுகிறது. </p><h2>மழை</h2><p>இதன் காரணமாக <strong>இன்று (11-07-2026):</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான<a href="https://www.dailythanthi.com/topic/rain"> மழை</a> பெய்யக்கூடும். </p><p>ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.</p><p><strong>12-07-2026 முதல் 14-07-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும் நிலவக்கூடும். ஏனைய தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.</p> <p><strong>15-07-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.</p><p><strong>16-07-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</strong></p><p><strong>11-07-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.</p><p><strong>12-07-2026 முதல் 14-07-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும்.</p><h2>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</h2><p><strong>11-07-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.</p><p><strong>12-07-2026 முதல் 14-07-2026 வரை:</strong> தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச</p><p>வெப்பநிலை இயல்பை விட 2-3° செல்சியஸ் உயர்ந்தும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p> <h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று (11-07-2026):</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்ய வாய்ப்புள்ளது. </p><p>அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>அரசு பஸ்சை தனிப்பட்ட நிகழ்ச்சிக்கு பயன்படுத்திய டிரைவர் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/driver-suspended-for-using-government-bus-for-private-function</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/driver-suspended-for-using-government-bus-for-private-function#comments</comments><guid isPermaLink="false">ecf2cee8-79a8-4647-9089-a85816d62b4a</guid><pubDate>Sat, 11 Jul 2026 01:07:52 +0000</pubDate><atom:updated>2026-07-11T01:07:52.156Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ராமேசுவரம்,அரசு பஸ்,Government bus,டிரைவர்,நிகழ்ச்சி,function</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/tqzqvulg/215.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அரசு பஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/tqzqvulg/215.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமேசுவரம், </p><p>தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் ராமேசுவரத்திற்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு வெளியூர்களில் இருந்து பஸ்களில் வரும் பயணிகள் மற்றும் பக்தர்களை பஸ் நிலையத்தில் இருந்து கோவிலுக்கு அழைத்து செல்வதற்கு வசதியாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.</p><h2>பணியிடை</h2><p>அதில் ஒரு டவுன் பஸ்சின் டிரைவராக வேலை பார்த்து வருபவர், ராமநாதபுரத்தை சேர்ந்த மாரிமுத்து (வயது 52). நேற்று முன்தினம் மாரிமுத்து தன்னுடன் பணிபுரியும் ஒருவரின் வீட்டு விழாவுக்கு செல்வதற்காக அந்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D">அரசு பஸ்சை</a> ஓட்டியபடி ராமேசுவரம் பேய்க்கரும்பு பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு சாலை ஓரத்தில் பஸ்சை நிறுத்திவிட்டு, அந்த விழாவில் பங்கேற்றுவிட்டு சிறிது நேரத்தில் மீண்டும் பஸ்சை இயக்கி ராமேசுவரம் வந்ததாக தெரிகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து டிரைவர் மாரிமுத்து மீது விசாரணை நடத்தப் பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.</p><h2>நடவடிக்கை</h2><p>இதுகுறித்து ராமேசுவரம் போக்குவரத்துக்கழக கிளை மேலாளர் கூறுகையில், "டிரைவர் மாரிமுத்து சம்பவத்தன்று தனது வேலையை முடித்த பின்னர் ஓய்வு நேரத்தில் தன்னுடன் பணிபுரியும் ஒருவரின் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு பஸ்சை ஓட்டி சென்றுள்ளார். பஸ்சில் எந்த பயணியும் இல்லை. 10 நிமிடத்தில் மீண்டும் பஸ்சை ஓட்டியபடி ராமேசுவரம் வந்து வழக்கமான பணியை தொடங்கி விட்டார். இருப்பினும் தனிப்பட்ட நிகழ்ச்சிக்கு அரசு பஸ்சை ஓட்டி சென்றதால் டிரைவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்”. என கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை-க்கு மருத்துவக்குழுவினர்  பரிசோதனை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/medical-team-examines-elephant-deity-at-tiruchendur-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/medical-team-examines-elephant-deity-at-tiruchendur-temple#comments</comments><guid isPermaLink="false">3299341a-5991-4ea1-b241-5f08f78009fb</guid><pubDate>Sat, 11 Jul 2026 00:55:17 +0000</pubDate><atom:updated>2026-07-11T00:55:17.669Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruchendur temple,திருச்செந்தூர் கோவில்,elephant,யானை,மருத்துவர்கள்,பரிசோதனை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/pdmruncz/44.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/pdmruncz/44.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்செந்தூர், </p><p>திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானைக்கு நேற்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. யானைக்கு பக்தர்கள் உணவு வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">திருச்செந்தூர் </a>சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெய்வானை என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானை கடந்த 2024-ம் ஆண்டு பாகன் உள்பட 2 பேரை தாக்கி கொன்றது.எனவே. பாதுகாப்பு கருதி அன்று முதல் யானையின் உடல் நலன் குறித்து தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. யானை சரியாக உணவு உட்கொள்கிறதா? அதன் குணநலன்களில் மாற்றம் உள்ளதா? என வன கால்நடை மருத்துவ குழுவினர் 3 மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர். மாவட்ட வன அலுவலர் இளையராஜா மற்றும் கால்நடைத்துறை மருத்துவக்குழுவினர் தெய்வானை யானைக்கு நேற்று வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்தனர்.</p><h2>பக்தர்கள் உணவு வழங்க வேண்டாம்</h2><p>இந்த பரிசோதனை குறித்து மாவட்ட வன அலுவலர் இளையராஜா கூறியதாவது:-</p><p>வனத்துறை சார்பில் மாவட்ட வளர்ப்பு யானைகள் நலக்குழு மூலம் 3 மாதத்திற்கு ஒருமுறை யானையின் உடல் ஆரோக்கியம் குறித்து ஆய்வு செய்கிறோம். அதேபோல் திருச்செந்தூர் கோவில் தெய்வானை யானையின் உடல் நலம் குறித்து ஆய்வு செய்தோம். யானை நலமுடன் உள்ளது என கூறினார்.</p><p>யானைக்கு கோவில் சார்பில் ஆரோக்கியமான உணவு. பழங்கள் வழங்கப்படுகிறது. அதனால் பக்தர்கள் யானைக்கு நேரடியாக பழங்கள் உள்ளிட்ட உணவுகளை வழங்க வேண்டாம். அவ்வாறு வழங்குவது யானையின் உடல் நலனுக்கு உகந்தது அல்ல. பக்தர்கள் யானைக்கு ஏதாவது செய்ய நினைத்தால், யானை பராமரிப்பு நிதியாக கோவில் நிர்வாகத்திடம் வழங்கிடலாம். சரவணப்பொய்கையில் யானை ஓய்வு எடுப்பதற்கு கூடுதலாக குடில் ஒன்று அமைக்கப்பட உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-price-status-in-chennai-33</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-price-status-in-chennai-33#comments</comments><guid isPermaLink="false">2adaca18-a20f-42d1-b820-71d125354ff1</guid><pubDate>Sat, 11 Jul 2026 00:49:27 +0000</pubDate><atom:updated>2026-07-11T00:49:27.002Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,petrol and diesel,Diesel Price,நிலவரம்,பெட்ரோல் மற்றும் டீசல் விலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/vhm3r48d/441.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/vhm3r48d/441.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D">பெட்ரோல் மற்றும் டீசல்</a> விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.</p><h2>பெட்ரோல், டீசல் விலை</h2><p>இந்நிலையில், சென்னையில் இன்று (11.07.2026 - சனிக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>செந்தில்பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-court-dismisses-election-case-against-senthil-balaji</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-court-dismisses-election-case-against-senthil-balaji#comments</comments><guid isPermaLink="false">3e7d6ccc-c375-47cd-9cec-d8b6f1d550ff</guid><pubDate>Sat, 11 Jul 2026 00:22:44 +0000</pubDate><atom:updated>2026-07-11T00:22:44.165Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai High Court,Senthil Balaji,செந்தில்பாலாஜி,ஐகோர்ட்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/cz7glp81/Chenni-High-Court.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/cz7glp81/Chenni-High-Court.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, தி.மு.க.. சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். இவர், த.வெ.க.. வேட்பாளர் வி.செந்தில்குமாரை விட 2 ஆயிரத்து 271 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளார். இவரது வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியைச் சேர்ந்த கே.பிரகாசம் என்பவர் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், "செந்தில்பாலாஜி தன்னுடைய சொத்துக் கள், குற்ற வழக்குகள் ஆகியவை குறித்து முழுமையாக வேட்புமனுவில் குறிப்பிடவில்லை. </p> <p>பல தகவல்களை மறைத்துள்ளார். அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்கவேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, "மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 81-வது பிரிவின்படி, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சேர்ந்த மனுதாரர் பிரகா சம், கோவை தெற்கு தொகுதியின் வேட்பாளரும் அல்ல. அந்த தொகுதி வாக்காளரும் அல்ல. எனவே, அவர் தாக்கல் செய்துள்ள இந்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்கிறேன்" என்று உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>முதல் அமைச்சர் விஜய் கண்கலங்கிவிட்டார்; ஜோதிமணி எம்.பி  பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-was-moved-to-tears-mp-jothimani-posts</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-was-moved-to-tears-mp-jothimani-posts#comments</comments><guid isPermaLink="false">95b3854a-59a9-471b-97bb-7863a312fd15</guid><pubDate>Fri, 10 Jul 2026 22:20:52 +0000</pubDate><atom:updated>2026-07-10T22:20:52.075Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,ஜோதிமணி,Jothimani</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/4q0lf3zw/Karur-jothimani.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/4q0lf3zw/Karur-jothimani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>கரூர் எம்பி ஜோதிமணி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: இன்று காலையில் வீட்டிலிருந்து கிளம்பும்போதே ஒரு கனத்த மனதுடன்தான் சென்றேன். கரூர் கொடுந்துயர் நிகழ்வில் பாதிக்கப்பட்ட எமது மக்களை நான் பலமுறை சந்தித்திருக்கிறேன். அவர்களின் வலி, வேதனை, இழப்பு, போராட்டம் அனைத்தையும் உணர்ந்திருக்கிறேன். அரசின் இந்த எளிய ஆதரவு என்பது எமது மக்கள் வாழ்வோடு போராடிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் அவர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையாக இருக்கும் என்றாலும் அவர்களின் பேரிழப்பை ஈடு செய்ய முடியாது. அவர்கள் இழந்த உறவுகளை எந்த உதவியாலும் திரும்பக் கொண்டு வர முடியாது. அவர்கள் இதயத்தில் கனக்கும் துயரை இந்த தருணம் இன்னும் அதிகப்படுத்தவே செய்யும். அவர்களை எப்படி மீண்டும் எதிர்கொள்வது என்ற தயக்கத்துடன் தான் உள்ளே நுழைந்தேன்</p><p>நினைத்ததுபோலவே எமது மக்களில் பலர்  முதலமைச்சர் அவர்களிடமிருந்து பணி நியமன ஆணையைப் பெரும்போதே கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதனர். அந்த இடத்தில் நாமும் அழுதுவிடாமல் உணர்சிகளை கட்டுக்குள் வைப்பதற்கு போராட வேண்டியிருந்தது. ஒருகட்டத்தில் முதலமைச்சரே கலங்கி கண்ணீர்விடக்கூடிய சூழல் உருவாகிவிட்டது. அதிகாரத்தின் திரையை அகற்றி, ஒரு சக மனிதனின் துயரை உணர்ந்த சக மனிதராக அவர் அழுதுகொண்டிருந்தார். நிகழ்ச்சி சில மணித்துளிகள் நின்று மீண்டும் துவங்கியது.தனியாக பேச வேண்டும் என்று கேட்ட குடும்ப உறுப்பினர்களை அழைத்துவரச் சொல்லி அவர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசி ஆறுதல் கூறினார். </p><p>உணர்வுகளை எல்லாம் தாண்டி வாழ்வின் கொடிய எதார்த்தம் எமது மக்களை தினமும் சுட்டுக்கொண்டிருக்கின்ற சூழலில் முதலமைச்சர் அவர்களின் இந்த ஆதரவு எமது மக்களுக்கு நிச்சயம் பேருதவியாக இருக்கும்.எல்லாவற்றிற்கும் மேலாக "நான் உங்களுடன் இருக்கிறேன், எப்போதும் துணையாக இருப்பேன்" என்ற நம்பிக்கையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எமது மக்களுக்கு அளித்த தருணமாகவும் அது அமைந்தது.இதற்காக எமது மக்களின் சார்பாக ஜோசப் விஜய்க்கு எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் நாங்கள் எப்போதும் உறுதியாக நிற்போம். குறிப்பாக பெற்றோரை இழந்து எதிர்காலத்தை எதிர்நோக்கும் குழந்தைகளின் வாழ்க்கைப் பயணத்தில் அவர்களுக்கு துணையாக இருப்பது நமது பொறுப்பும் கடமையும் என்பதை உணர்ந்துள்ளோம். காலம் அவர்கள் காயங்களை ஆற்றற்றும்” என்று பதிவிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>காவிரி பிரச்சினையில் தமிழக மக்களுக்கு தி.மு.க. துரோகம் -அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-betrayed-the-people-of-tamil-nadu-on-the-cauvery-issue-minister-nirmal-kumars-allegation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-betrayed-the-people-of-tamil-nadu-on-the-cauvery-issue-minister-nirmal-kumars-allegation#comments</comments><guid isPermaLink="false">6067eb8a-6ef0-479a-ba5c-3f682368e537</guid><pubDate>Fri, 10 Jul 2026 21:44:32 +0000</pubDate><atom:updated>2026-07-10T21:44:32.399Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தி.மு.க,காவிரி பிரச்சினை,அமைச்சர் நிர்மல்குமார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/np98j8p9/Nirmal-kumar.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/np98j8p9/Nirmal-kumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-காவிரி பிரச்சினையில் தி.மு.க. தமிழ்நாட்டு மக் களுக்கு முழு துரோகம் செய்து விட்டது. இன்று காவிரி பிரச்சினை இந்த அளவுக்கு மோசமான நிலைக்கு சென்றதற்கு தி.மு.க.தான் காரணம்.1970-ம் ஆண்டு சட்டப்பேரவையில், ஹேமாவதி அணை கட்டுவதற்கு தமி ழகத்திற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறப்பட்டது. அதன் பின்னர்தான் ஹேமாவதி, கபினி, ஹாரங்கி உள்ளிட்ட அணைகளை கர்நாடகா கட்டியது.</p><h2>தி.மு.க. தவறுகளைச் செய்தது</h2><p>1971-ம் ஆண்டு அரசியல் சட்டத்தின் 131-வது பிரிவின் கீழ், காவிரி உரி மையை வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு, முன்னால் முதல்-அமைச்சர் கருணாநிதியால் யாரிடமும் ஆலோசிக்காமல் திரும்பப் பெறப்பட்டது. 1974-ம் ஆண்டு காலாவதியான 50 ஆண்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை. இவ்வாறு காவிரி விவகாரத்தில் தி.மு.க. பல தவ றுகளைச் செய்துள்ளது. 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியான பிறகும். அதை மத்திய அரசிதழில் வெளியிட முடியவில்லை. அப்போது மத்தியிலும், மாநிலத்திலும் கூட்டணி ஆட்சியில் இருந்த போதிலும் தி.மு.க. அதனை நிறைவேற்றவில்லை.</p> <h2>உரிமை பறிபோனது</h2><p>பின்னர் 2013-ம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடு மையாகப் போராடி, சுப்ரீம் கோர்ட்டை அணுகி, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுத்தார். தி.மு.க.வும், அந்த குடும்பமும் பெங்களூருவில் தாங்கள் வாங்கியுள்ள சொத்தை காப்பாற்றுவதற்காக காவிரி விஷயத்தில் சரணடைந்தனர்.அதனால் நமது உரிமை பறிபோனது. காவிரி விவகாரத்தில் தி.மு.க. செய்த அனைத்து தவறுகளுக்கும் துரைமுருகனே சாட்சி. அவருக்கு அனைத்தும் தெரியும். ஆனால் உண்மைகளை மறைத்து இப்போது பேசுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>திருவல்லிகேணி போலீஸ் நிலையத்தில் செந்தில்பாலாஜி எப்போது ஆஜராவார்?   
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/when-will-senthil-balaji-appear-at-the-triplicane-police-station</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/when-will-senthil-balaji-appear-at-the-triplicane-police-station#comments</comments><guid isPermaLink="false">a69dbe23-a6f1-476d-8566-d19dbfb97a58</guid><pubDate>Fri, 10 Jul 2026 19:24:42 +0000</pubDate><atom:updated>2026-07-10T19:24:42.885Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Senthil Balaji,செந்தில்பாலாஜி,குதிரை பேரம்,திருவல்லிகேணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/bsubhut6/Senthil-balaji.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ செந்தில்பாலாஜி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/bsubhut6/Senthil-balaji.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p> சென்னை,  </p><p>சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின்போது கட்சியின் கொறடா உத்தரவை மீறி தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் ரூ.35 கோடி தருவதாக ஊத்தங்கரை த.வெ.க., எம்.எல்.ஏ., இளையராஜாவிடம் சிலர் குதிரைபேரம் நடத்தியுள்ளனர். இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருநாவுகரசு உள்பட 9 பேரை கைது செய்துள்ளனர். இவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF">செந்தில்பாலாஜி</a>, அவரது தம்பி அசோக்குமார் ஆகியோரை வழக்கில் குற்றவாளியாக சேர்த்து அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.</p><p>இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு இருவரும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், இவர்கள் இருக்கும் நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அந்த உத்தரவில், இந்த உத்தரவு நகல் கிடைக்க பெற்று 15 நாட்களுக்குள் மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் ஆஜராகி, ரூ.25 ஆயிரம், அதே தொகைக்கு இருநபர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF">ஜாமீன் </a>உத்தரவாதத்தை செந்தில்பாலாஜியும், அசோக்குமாரும் வழங்கவேண்டும். </p><p>அதன்பின்னர் விசாரணை அதிகாரி முன்பு தினமும் ஆஜராக வேண்டும்’’ என்று கூறியுள்ளார். 15 நாட்கள் ஐகோர்ட்டு அவகாசம் வழங்கியுள்ளதால், அந்த அவகாசத்துக்குள் செந்தில்பாலாஜி போலீஸ் நிலையத்தில் ஆஜராவார் என்று தெரிகிறது.</p>]]></content:encoded></item><item><title>
அரசு மருத்துவமனைகளில்  குறைகளை களைய தொடர்பு அதிகாரிகள் நியமனம்- சுகாதாரத்துறை உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nodal-officers-appointed-to-address-grievances-in-government-hospitals-health-department-orde</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nodal-officers-appointed-to-address-grievances-in-government-hospitals-health-department-orde#comments</comments><guid isPermaLink="false">ce0e2d0e-4744-48be-9a79-894365d5baaa</guid><pubDate>Fri, 10 Jul 2026 18:21:17 +0000</pubDate><atom:updated>2026-07-10T18:21:17.298Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TN govt,health department,சுகாதாரத்துறை,அரசு மருத்துவமனை</media:keywords><media:content height="542" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/nvy95ifr/tn-secre.jpg" width="794"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/nvy95ifr/tn-secre.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லுாரி ஆஸ்பத்திரிகளில் சீர்கேடுகளை சரி செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டது. மருத்துவ உட்கட்டமைப்பு, சுகாதாரம், டாக்டர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை சரி செய்தல், அடிப்படை வசதி உறுதி செய்தல் அவசியம் என அறிவுறுத்தியிருந்தது. இதையடுத்து அனைத்து மருத்துவ கல்லுாரி ஆஸ்பத்திரிகளிலும், 50 தொடர்பு அதிகாரிகளை நியமிக்க மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. மாநில அளவில் ஒருங்கிணைக்கும் வகையில், பேராசிரியர் சுதர்ஷினி நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>இதுகுறித்து, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘அரசு ஆஸ்பத்திரிகளில் வரும் புகார்களுக்கு உடனடி தீர்வு ஏற்படுத்தும் வகையில், ‘தொடர்பு அதிகாரி’ நியமிக்கபட்டு உள்ளார். அதைதொடர்ந்து, அரசு ஆஸ்பத்திரிகளில் மருத்துவ நிலைய அதிகாரி அல்லது கண்காணிப்பாளர் ஆகியோரில் ஒருவர் தொடர்பு அதிகாரியாக செயல்படுவார். </p><p>அவர்களுக்கு கீழ், டாக்டர்கள், செவிலியர்கள் செயல்படுவார்கள். இவர்களை மாநில அளவில் ஒருங்கிணைக்க, ஒரு தொடர்பு அதிகாரி அரசால் நியமிக்கப்பட்டு உள்ளார். அவருக்காக, மருத்துவ கல்வி இயக்குனரக அலுவலகத்தில், ‘தொடர்பு அதிகாரி’ என்ற புதிய பிரிவு தொடங்கப்பட உள்ளது. குறைபாடுகளை ஆய்வு செய்து சீரமைக்கப்பட்ட பணிகளை அறிக்கையாக அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது’’என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கடந்த 6 ஆண்டுகளில் பழனி முருகன் கோவிலுக்கு ரூ.1,414 கோடி வருவாய்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/in-the-last-6-years-the-palani-murugan-temple-has-earned-an-income-of-rs-1414-crore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/in-the-last-6-years-the-palani-murugan-temple-has-earned-an-income-of-rs-1414-crore#comments</comments><guid isPermaLink="false">b3943d75-cea4-4abe-9e9b-4a773233011b</guid><pubDate>Fri, 10 Jul 2026 16:15:24 +0000</pubDate><atom:updated>2026-07-10T16:15:24.819Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Palani Murugan Temple,பழனி முருகன் கோவில்,வருவாய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/52rf4idz/Untitled-12.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ பழனி முருகன் கோவில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/52rf4idz/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பழனி,</p><p>பழனி முருகன் கோவிலுக்கு கடந்த 6 ஆண்டுகளில் ரூ.1,414 கோடி வருவாயாக கிடைத்துள்ளது. இதுகுறித்து பழனி முருகன் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து கூறியதாவது:-</p><p>பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் இலவச மற்றும் கட்டண சேவைகளை வழங்கி வருகிறது. அதில், சிறப்பு கட்டண தரிசனம், அபிஷேகம், அர்ச்சனை, தங்க தொட்டில் பிராத்தனை, பூஜை பொருட்கள் மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிராசதம் விற்பனை, நன்கொடைகள், சொத்துகள், முதலீட்டு வட்டி, தங்கும் விடுதி வாடகை என 33 இனங்கள் மூலம் கடந்த 6 ஆண்டுகளில் கோவிலுக்கு ரூ.1,414.83 கோடி வருவாயாக கிடைத்துள்ளது.</p><p>கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.353.89 கோடி வருமானம் கிடைத்துள்ளது. ஆண்டுதோறும் சராசரியாக ரூ.50 கோடி முதல் ரூ.70 கோடி வரை வருமானம் அதிகரித்துள்ளது. 2020-21-ல் ரூ.110.61 கோடியாக இருந்த ஆண்டு வருமானம், 5 ஆண்டுகளுக்கு பிறகு 2 மடங்கு (ரூ.243.28 கோடி) அதிகரித்துள்ளது.</p><p>மேலும், பக்தர்கள் நலன் கருதி நாள் முழுவதும் அன்னதானம் மற்றும் பிரசாதம், குழந்தைகளுக்கு காய்ச்சிய பால், தேவஸ்தான பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 2 வேளை உணவு, மாற்றுத்திறனாளிகளுக்கு ரோப் கார் மற்றும் வின்ச் ரெயிலில் இலவசமாக பயணிக்க வசதி உள்பட 28 கட்டணமில்லா சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக, கடந்த 5 ஆண்டுகளில் ரூ.145.26 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான பக்தர்கள் பயன் அடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தி.மு.க.வின் இந்து விரோத பாதையில் த.வெ.க. அரசு சென்று விடக் கூடாது - வானதி சீனிவாசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tmc-government-should-not-go-down-the-anti-hindu-path-of-the-dmk-vanathi-srinivasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tmc-government-should-not-go-down-the-anti-hindu-path-of-the-dmk-vanathi-srinivasan#comments</comments><guid isPermaLink="false">75d4c947-a9b9-4b2d-89ee-6ed2f3edc5bc</guid><pubDate>Fri, 10 Jul 2026 16:03:17 +0000</pubDate><atom:updated>2026-07-10T16:03:17.282Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,பாஜக,BJP,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/thv2cc5k/vanathi.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/thv2cc5k/vanathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>கோவில் சொத்துக்கள்</h2><p>கோவில் நிலங்கள் எந்த விதத்திலும் தனி நபர்களுக்கு சென்று விடாமல் இருப்பதை இந்து சமய அறநிலையத் துறை உறுதி செய்ய வேண்டும்.  தி.மு.க.,வின்  இந்து விரோத பாதையில் த.வெ.க. அரசு சென்று விடக் கூடாது.</p><p>கரூர் மாவட்டத்தின் 15 கிராமங்களில் உள்ள, 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, 3,084 ஏக்கர் 95 செண்ட்  திருக்கோவில் இனாம் நிலங்களை, 3,390 நபர்களின் பெயரில்  பதிவு மற்றும் விற்பனை செய்யும் வகையில், பதிவு தடையை நீக்குமாறு, சம்பந்தப்பட்ட கோவில் செயல் அலுவலர்களுக்கு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. </p><p>தமிழகத்தில் இந்து கோவில் சொத்துகளின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பக்தர்களால் கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்டு, கோவில் பெயரில் உள்ள சொத்துக்களை எந்தக் காரணத்திற்காகவும் வேறு யாருக்கும்  பட்டா மாறுதல் செய்யக் கூடாது.</p><h2>ஆக்கிரமிப்பு </h2><p>ஆக்கிரமிப்பு உள்ளிட்ட எந்த வகையிலும் கோவில் சொத்துக்கள் பறிபோகாமல் பாதுகாக்க வேண்டியது இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பூர்வ கடமையாகும். </p><p>எனவே, 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலங்களை, தனி நபர்கள் பெயரில் பதிவு செய்ய இருக்கும் தடையை நீக்க எந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அடிப்படையில்</a>,  இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டார் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். எந்தக் காரணத்தை கொண்டும் கோவில் நிலங்கள், தனி நபர்களுக்கு சென்று.விடக் கூடாது. இதை முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்ச ரமேஷ் அவர்களும் உறுதிப்படுத்த வேண்டும். தி.மு.க.,வின்  இந்து விரோத பாதையில் த.வெ.க. அரசு சென்று விடக் கூடாது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க குழு அமைப்பு - மாநகராட்சி ஆணையாளர் சமீரன் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/committee-formed-to-take-action-against-buildings-violating-regulations-in-chennai-corporation-commissioner-sameeran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/committee-formed-to-take-action-against-buildings-violating-regulations-in-chennai-corporation-commissioner-sameeran#comments</comments><guid isPermaLink="false">4e6a0841-42df-452e-925f-c3a58843c1af</guid><pubDate>Fri, 10 Jul 2026 16:01:34 +0000</pubDate><atom:updated>2026-07-10T16:01:34.912Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/53wcgus8/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/53wcgus8/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகராட்சி பகுதிகளில் குடியிருப்பு கட்டடத்திற்கான திட்ட அனுமதி பெற்று கட்டப்பட்ட கட்டிடங்களை வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்துதல் மற்றும் திட்ட அனுமதிக்கு மாறான விதிமீறல் கட்டிடங்கள் ஆகியவற்றின் மீது உடனுக்குடன் தொடர் நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் சமீரன் தலைமையில், விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் குறித்த சுப்ரீம் கோர்ட்டு வழக்கு சம்பந்தமாக மாநகராட்சி ஆலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் கட்டிட வளாகக் கூட்டரங்கில் இன்று (10.07.2026) நடைபெற்றது.</p><p>இக்கூட்டத்தில் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் குடியிருப்பு கட்டிடத்திற்கான திட்ட அனுமதி பெற்று கட்டப்பட்ட கட்டிடங்களை வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்துதல் மற்றும் திட்ட அனுமதிக்கு மாறான விதிமீறல் கட்டிடங்கள் ஆகியவற்றின் மீது உடனுக்குடன் தொடர் நடவடிக்கை எடுத்து, அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.</p><p>மேற்படி அமலாக்கப்பணிகளை கண்காணிக்க வட்டார அளவில், வட்டார துணை ஆணையர், கண்காணிப்பு பொறியாளர், முதுநிலை வருவாய் அலுவலர் மற்றும் மண்டல அலுவலர் ஆகியோரை கொண்ட ஒரு குழுவும், மண்டல அளவில் மண்டல அலுவலர், செயற்பொறியாளர், முதுநிலை வருவாய் அலுவலர் மற்றும் உதவி செயற்பொறியாளர் ஆகியோரை கொண்ட மற்றொரு குழுவும் அமைக்கப்பட்டு செயல்படுகிறது என தெரிவித்தார்.</p><p>இக்கூட்டத்தில் காணொலி காட்சியின் வாயிலாக இணை ஆணையர் (பணிகள்) செ.சரவணன், துணை ஆணையர் (வருவாய் (ம) நிதி) சித்ரா விஜயன், வட்டார துணை ஆணையர்கள் எச்.ஆர்.கவுஷிக், இ.ஆ.ப., (மத்தியம்), அதாப் ரசூல், (தெற்கு) மற்றும் முதுநிலை சட்ட அலுவலர் எஸ். ஜேக்கப் ராஜன்பாபு, அலுவலர்கள் கலந்து கொண்டனர்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>கரூரில் ரூ.850 கோடியில் தோல் அல்லாத காலணி ஆலை - முதல்-அமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டினார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/non-leather-footwear-plant-worth-rs-850-crore-in-karur-chief-minister-vijay-lays-the-foundation-stone</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/non-leather-footwear-plant-worth-rs-850-crore-in-karur-chief-minister-vijay-lays-the-foundation-stone#comments</comments><guid isPermaLink="false">ee46cb30-fc2a-4b76-b7b8-8766cd8b17ba</guid><pubDate>Fri, 10 Jul 2026 15:48:27 +0000</pubDate><atom:updated>2026-07-10T15:48:27.807Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர்,Karur,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/xtfxpq2z/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/xtfxpq2z/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கரூர்,</p><p>கரூர் மாவட்டத்திற்கு ஒரு நாள் சுற்றுப்பயணமாக முதல்-அமைச்சர் விஜய் சென்றுள்ளார். இன்று காலை அங்கு நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்-அமைச்சர் விஜய், கடந்த ஆண்டு த.வெ.க. பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் நினைவாக கரூரில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். </p><p>இதனை தொடர்ந்து கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்ற அவர், அங்கு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கரூரில் ரூ.850 கோடியில் தோல் அல்லாத காலணி ஆலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் இன்று (10.7.2026), கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எவர்வான் கோத்தாரி புட்வேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், அடிடாஸ் நிறுவனத்திற்காக 850 கோடி ரூபாய் முதலீட்டில், 6,750 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் வகையில், கரூர் மாவட்டத்தில் தோல் அல்லாத காலணிகள் இரண்டாம் கட்ட உற்பத்தி ஆலை அமைப்பதற்குக் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். Everan Kothari நிறுவனம் அமைக்கவிருக்கும் இந்த ஆலை மூலம் 6,750 பேருக்கு வேலை கிடைக்கும்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கிய 117 கிலோ ‘புள்ளி களவாய் மீன்&apos;</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/117-kg-epinephelus-caught-in-pamban-fishermens-net</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/117-kg-epinephelus-caught-in-pamban-fishermens-net#comments</comments><guid isPermaLink="false">785af2f8-fa1c-484c-989b-8ce1d79e2cda</guid><pubDate>Fri, 10 Jul 2026 15:44:40 +0000</pubDate><atom:updated>2026-07-10T15:44:40.512Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மீனவர்கள்,fishermen,ராமநாதபுரம்,Ramanathapuram,மீன்,ராமேஸ்வரம்,Rameshwaram</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/yivf0h0k/Untitled-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/yivf0h0k/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமநாதபுரம்,</p><p>ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடல் பகுதியில் காற்றின் வேகம் குறைந்ததால் நேற்று முன்தினம் பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் இருந்து 100 விசைப்படகுகளில் 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு சென்று இருந்தனர். இந்த மீனவர்கள் அனைவரும் நேற்று பலவகையான மீன்களுடன் கரை திரும்பினார்கள்.</p><p>இதில் ஒரு விசைப்படகு மீனவர்கள் வலையில் 117 கிலோ எடையும், 6 அடி நீளமும் கொண்ட புள்ளி களவாய் மீன் சிக்கியது. இந்த மீனை 5 மீனவர்கள் சேர்ந்து படகில் இருந்து இறக்கி கடற்கரைக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து இந்த களவாய் மீனை வியாபாரி ஒருவர் ரூ.23 ஆயிரத்துக்கு வாங்கினார்.</p><p>இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, "இதுபோன்று அதிக எடையில் புள்ளி களவாய் மீன் கிடைப்பது அரிதாகும். கடந்த 4 ஆண்டுகளில் 100 கிலோவுக்கும் அதிக எடை கொண்ட புள்ளி களவாய் மீன் கிடைத்தது இதுவே முதல்முறை” என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>செங்கோட்டையில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற சர்வேயர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/surveyor-arrested-for-accepting-10000-bribe-in-sengottai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/surveyor-arrested-for-accepting-10000-bribe-in-sengottai#comments</comments><guid isPermaLink="false">05166b53-55cb-48d8-8532-68483d399804</guid><pubDate>Fri, 10 Jul 2026 15:37:36 +0000</pubDate><atom:updated>2026-07-10T15:37:36.482Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Sengottai,செங்கோட்டை,கைது,arrest,லஞ்சம்,Surveyor,Corrupt</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/8pz64r0w/surveyor.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சர்வேயர் ராமர் செல்வம் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/8pz64r0w/surveyor.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>செங்கோட்டை, </p><p>செங்கோட்டையில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற சர்வேயர் கைது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பிரானூர் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி (வயது 52). இவர் தனது மனைவி ஆறுமுகத்தம்மாள் பெயரில் 2.28 சென்ட் நிலம் மற்றும் வீடு ஒன்றை வாங்கியுள்ளார். </p><p>இந்த சொத்து கூட்டு பட்டாவில் இருந்ததால், அதை தனிப்பட்டாவாக மாற்றி தருமாறு செங்கோட்டை சர்வேயர் ராமர்செல்வத்தை (37) அணுகியுள்ளார்.</p><h2>ரூ. 10 ஆயிரம் லஞ்சம் </h2><p>நிலத்தை அளவீடு செய்து தனிப்பட்டா வழங்க சர்வேயர் ராமர்செல்வம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத மாடசாமி, இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின்படி, ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரம் நோட்டுகளை மாடசாமி சர்வேயர் ராமர்செல்வத்திடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சர்வேயரை கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.</p> <p>தனிப்பட்டா வழங்க லஞ்சம் வாங்கிய <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">அரசு அதிகாரி கைது</a> செய்யப்பட்ட சம்பவம் செங்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மகளுக்கு அரசு வேலை: விஜய்யை மகனாக பார்க்கிறேன் - பெண் கண்ணீருடன் உருக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/daughter-gets-government-job-i-see-vijay-as-my-son-woman-breaks-down-in-tears</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/daughter-gets-government-job-i-see-vijay-as-my-son-woman-breaks-down-in-tears#comments</comments><guid isPermaLink="false">d4517c2a-42de-41ad-8687-7dce3739c81d</guid><pubDate>Fri, 10 Jul 2026 15:35:31 +0000</pubDate><atom:updated>2026-07-10T15:35:31.095Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,கரூர்,விஜய்,Karur,CMVijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/1f8or52s/karuruthree33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/1f8or52s/karuruthree33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கரூர்,</p><p>முதல்-அமைச்சர் விஜய் செய்துள்ள இந்த உதவியின் மூலமாக அவரை எனது மகனாகவே பார்க்கிறேன் என்று ஞானாம்பாள்  உருக்கமாக தெரிவித்தார்.</p><h2>பணி நியமன ஆணை</h2><p>கரூரில் கடந்த ஆண்டு முதல்-அமைச்சர் விஜய் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்துக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் விஜய் இன்று பிற்பகல் நேரில் வழங்கினார்</p><p>இந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பணி நியமன ஆணை</a>யை பெறுவதற்காக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவுக்கு காலையிலேயே வந்திருந்தனர். அவர்கள் தங்களது குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் விஜய் அரசு வேலை வழங்கி இருப்பது மிகப்பெரிய ஆறுதலாக தெரிவித்தனர்.</p><p>கரூர் நெரிசலில் ஞானாம்பாள் என்பவரது மகனும் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அவரது மகளுக்கு பணி நியமன ஆணை இன்று வழங்கப்பட்டது. அதற்காக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்திருந்த ஞானாம்பாள் கண்ணீர் மல்க காட்சியளித்தார்.</p><h2>எனது மகன்</h2><p>முதல்-அமைச்சர் விஜய் செய்துள்ள இந்த உதவியின் மூலமாக அவரை எனது மகனாகவே பார்க்கிறேன். என்று அவர் உருக்கமாக தெரிவித்தார்.</p><p>இது தொடர்பாக ஞானாம்பாள் கூறும்போது, 'எனக்கு அரசு வேலை தருவதாக கூறினார்கள்.</p><p>நான் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். வயதும் 50 ஆகப் போகிறது. எனவே எனது மகளுக்கு அரசு வேலை கொடுக்கும்படி  கேட்டுக்கொண்டேன். அதனை ஏற்றுக்கொண்டு மகளுக்கு அரசுப்பணி வழங்கி உள்ளனர். எனது மகள் என்னை கடைசி வரை பார்த்துக் கொள்வாள். </p><p>எனது மகள்  டிகிரி முடித்துள்ளார். கரூர் சம்பவத்துக்கு பிறகு பாதுகாப்பு கருதி விஜய் வரவில்லை. இப்போது முதல்-அமைச்சராக அவர் வந்திருப்பது சந்தோஷமாக உள்ளது' என்றார்.</p><h2>பொது மக்கள் நெகிழ்ச்சி</h2><p>கரூர் நெரிசலில் முருகேசன் என்பவரது மனைவி ரேவதி உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரது மகனுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முருகேசன் கூறும்போது. 'எனது மகனுக்கு அரசு வேலை தருவது ஆறுதல் அளிக்கிறது. கடைசி வரை எங்களை நன்றாக பார்த்துக் கொள்வதாக முதல்-அமைச்சர் விஜய் கூறியுள்ளார். </p><p>அவரையும் நாங்கள் கடைசிவரை பார்த்துக் கொள்வோம்' என்றார்.</p><p>முதல்- அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக விஜய் கரூருக்கு வருகை தந்தது பற்றி பொது மக்கள் பலரும் நெகிழ்ச்சியுடன் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறும்போது, 'ஒரு கட்சியின்  தலைவராக கரூருக்கு வந்திருந்த விஜய், தற்போது தமிழகத்தின் அரியணையில் முதல்- அமைச்சராக அமர்ந்து அடியெடுத்து வைப்பது தங்களுக்கு கிடைத்த பெருமை என்றும், விஜய் பிரசாரத்துக்கு வரும் போது போதிய பாதுகாப்பு இல்லாத நிலையில் அவர் தற்போது முதல் - அமைச்சராக  பொறுப்பேற்ற பிறகு விழா நடக்கும் இடம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு இருப்பதை பார்க்கும்போது எங்களுக்கு பெருமையாக உள்ளது உள்ளது' என்று தெரிவித்தனர். </p><h2>பெண்கள் பாதுகாப்பு</h2><p>முதல்-அமைச்சர் விஜய்யின் 50 நாள் ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பிற்கு மிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அரசு கொண்டு வந்துள்ள  'சிங்கப்பெண் திட்டம்' மற்றும் 'தாய்மாமன் தங்க மோதிர திட்டம்' ஆகியவை தங்களை பெரிதும் கவர்ந்துள்ளது என்றும், தங்கள் பகுதியில் பெண்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருப்பது நிம்மதி  அளிப்பதாகவும் கூறினார்கள்.</p><p>தற்போது 10 மணிக்கு மேல் மதுக்கடைகளின் வாசலில் போலீசார் கட்டாயப் பணியில் ஈடுபட்டு, சட்ட விரோத மது விற்பனையை முற்றிலும் ஒழித்துள்ளதால், இரவு நேரங்களில் அச்சமின்றி நடமாட முடிகிறது எனவும் விஜய்யை பார்க்க வந்திருந்த பெண்கள் நன்றி தெரிவித்தனர்.</p><h2>தவெக அரசு மாற்றம்</h2><p>போதைப்பொருள் புழக்கம் மற்றும் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் குறித்துச் சமூக வலைத்தளங்களில் புகார்கள் தெரிவித்தால், அதிகாரிகள் வருவதற்கு முன்பாகவே த.வெ.க.வினர் களத்தில் இறங்கி பிரச்சினை களைத் தீர்த்து வைப்பதாகவும் அவர்கள் கூறினார்கள்.</p><p>இப்படி முதல்- அமைச்சர் விஜய்யை பார்க்க வந்திருந்த பெண்கள் பலர் தமிழகத்தில் த.வெ.க. அரசு மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் பாராட்டினர்.</p>]]></content:encoded></item><item><title>கரூர் அரசு பள்ளியில் த.வெ.க. நிகழ்ச்சி நேரலை - தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-event-at-karur-government-school-broadcast-live-headmistress-suspended</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-event-at-karur-government-school-broadcast-live-headmistress-suspended#comments</comments><guid isPermaLink="false">1700e49b-73fc-4759-966e-57085b48f1f6</guid><pubDate>Fri, 10 Jul 2026 15:29:39 +0000</pubDate><atom:updated>2026-07-10T15:29:39.057Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/dszkayym/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/dszkayym/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கரூர்,</p><p>கரூர் மாவட்டத்திற்கு ஒரு நாள் பயணமாக சென்ற தமிழக முதல்-அமைச்சர் விஜய், அங்கு நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு த.வெ.க. பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து பேசினார். தொடர்ந்து சாலை மார்க்கமாக வாகனத்தில் சென்று மக்களை முதல்-அமைச்சர் விஜய் சந்தித்தார். </p><p>இதற்கிடையில், கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் த.வெ.க. நிகழ்ச்சி தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வெளியான நிலையில், இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். </p><p>இந்த நிலையில், பள்ளியில் த.வெ.க. நிகழ்ச்சி நேரலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, பள்ளி வளாகங்களில் அரசியல் தொடர்பாக எந்த நிகழ்வுகளும் நடைபெறக்கூடாது என்றும், அவ்வாறு நடத்தப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஏற்கனவே எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. </p> ]]></content:encoded></item><item><title>திடக்கழிவுகளை தரம் பிரித்து ஒப்படையுங்கள்: பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி வேண்டுகோள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-corporation-appeals-to-the-public-to-segregate-and-dispose-of-solid-waste</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-corporation-appeals-to-the-public-to-segregate-and-dispose-of-solid-waste#comments</comments><guid isPermaLink="false">a860f6b4-41b2-4c0a-bce6-355fbb78a7e3</guid><pubDate>Fri, 10 Jul 2026 15:26:52 +0000</pubDate><atom:updated>2026-07-10T15:26:52.607Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/w57kfj0s/Untitled-17.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/w57kfj0s/Untitled-17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் திடக்கழிவுகளை உருவாகும் இடத்திலேயே முறையாக தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைத்திட பொதுமக்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியான செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>கழிவுகள் தரம் பிரிப்பு</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் தமிழ்நாட்டில் திடக்கழிவுகளை மேலாண்மை பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்கு ஏதுவாக, திடக்கழிவுகள் உருவாகும் இடத்திலேயே முறையாக மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதாரக் கழிவுகள் மற்றும் அபாயகரமான கழிவுகள் என தரம் பிரித்து பெற்று அகற்றிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்கள்.</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, ’பெருநகர சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்கு ஏதுவாக, அனைத்து குடியிருப்புவாசிகள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பெருமளவு கழிவு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">உற்பத்தியாளர்கள் </a>(Bulk Waste Generators) ஆகியோர் திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-இன்படி திடக்கழிவுகளை உருவாகும் இடத்திலேயே தரம் பிரித்து பெருநகர சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்</p><p><strong>திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-ன் படி, கழிவுகளை பின்வரும் நான்கு வகைகளாகப் பிரித்து வழங்க வேண்டும்:</strong></p><p>· மக்கும் கழிவுகள் (பச்சை நிறக் குப்பைத்தொட்டி): உணவுக் கழிவுகள், காய்கறி மற்றும் பழத்தோல்கள், பூக்கள் மற்றும் பிற மக்கும் கழிவுகள்.</p><p>· மக்காத கழிவுகள் (நீல நிறக் குப்பைத்தொட்டி): காகிதம், பிளாஸ்டிக், உலோகம், அட்டைப்பெட்டிகள், துணி மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள்.</p><p>· சுகாதாரக் கழிவுகள் (சிவப்பு நிறக் குப்பை தொட்டி): பயன்படுத்தப்பட்ட சானிட்டரி நாப்கின்கள், டயப்பர்கள், பயன்படுத்தப்பட்ட மருத்துவக் கட்டுப் பொருட்கள் போன்றவற்றை பாதுகாப்பாக சுற்றி தனியாக வழங்க வேண்டும்.</p><p>· வீட்டு அபாயகரக் கழிவுகள் / சிறப்பு கவனம் தேவைப்படும் கழிவுகள் (கருப்பு நிறக் குப்பைத்தொட்டி): பேட்டரிகள், மின் விளக்குகள், டியூப் லைட்கள், மின்னணுக் கழிவுகள், காலாவதியான மருந்துகள், பெயிண்ட் டப்பாக்கள் உள்ளிட்ட அபாயகரக் கழிவுகளை தனியாக ஒப்படைக்க வேண்டும்.</p><h2>சுகாதாரம் மேம்படும்</h2><p>கழிவுகளை உருவாகும் இடத்திலேயே தரம் பிரிப்பது ஒவ்வொரு தனிநபரின் பொறுப்பாகும். இதன்மூலம் மக்கும் கழிவுகளை உரமாக மாற்றவும், மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை மீட்டெடுக்கவும், குப்பைக் கிடங்குகளுக்கு அனுப்பப்படும் கழிவுகளின் அளவை குறைக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்தவும் முடியும்.</p><p>பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் வீடுகள்தோறும் தரம் பிரிக்கப்பட்ட கழிவுகளை சேகரிக்க தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-இல் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு வகை கழிவு தரம் பிரிப்பு முறையை திறம்பட செயல்படுத்தும் வகையில், மாநகராட்சியின் அனைத்து பேட்டரி மூலம் இயக்கப்படும் கழிவு சேகரிப்பு வாகனங்களிலும் (Battery Operated Vehicles - BOVs), கழிவுகளின் நான்கு வகைகளையும் தனித்தனியாக சேகரிப்பதற்காக நான்கு வண்ண அடையாளங்களுடன் கூடிய தனித்தனி குப்பைத் தொட்டிகள் (Compartments) வைக்கப்பட்டுள்ளன.</p><p>எனவே, பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் அனைவரும் தரம் பிரிக்கப்பட்ட கழிவுகளை மட்டுமே பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><h2>ஆரோக்கியமான சென்னையை உருவாக்குவோம்</h2><p>கழிவுகள் உருவாகும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">இடத்திலேயே </a>பிரித்தல் மற்றும் அறிவியல் முறையிலான திடக்கழிவு மேலாண்மையை ஊக்குவிக்கும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தகவல்–கல்வி–தொடர்பு (IEC) நடவடிக்கைகள், பள்ளிகள் மற்றும் சமூக அமைப்புகள் மூலம் தொடர்ச்சியான விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.</p><p>தூய்மையான, ஆரோக்கியமான மற்றும் நிலைத்தன்மை வாய்ந்த சென்னையை உருவாக்குவதில் பொதுமக்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். எனவே, அனைத்து பொதுமக்களும் தங்களது வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் தினந்தோறும் உருவாகும் கழிவுகளை உருவாகும் இடத்திலேயே தரம் பிரித்து பெருநகர சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைத்து, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p>திடக்கழிவுகளை உருவாகும் இடத்திலேயே தரம் பிரிக்கத் தவறுதல் அல்லது திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026 மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் விதிமுறைகளை மீறுதல் ஆகியவை சட்டப்படியான அபராதம் மற்றும் பிற நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.</p><p>"திடக்கழிவுகளை உருவாககும் இடத்திலேயே தரம் பிரிப்போம் ! தூய்மையான, பசுமையான, ஆரோக்கியமான சென்னையை உருவாக்குவோம் !!"</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>அரசு பள்ளிகளில் கல்வி சாராத நிகழ்ச்சிகளுக்கு தடை - பள்ளிக்கல்வித்துறை அறிக்கை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-non-academic-events-in-government-schools-school-education-department-statement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-non-academic-events-in-government-schools-school-education-department-statement#comments</comments><guid isPermaLink="false">926a343e-e6ef-4489-84e7-d879954e1bd5</guid><pubDate>Fri, 10 Jul 2026 15:19:15 +0000</pubDate><atom:updated>2026-07-10T15:19:15.151Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>School Education Department,பள்ளிக்கல்வித்துறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/4elk1was/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/4elk1was/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பள்ளி வளாகங்களில் அரசியல் தொடர்பாக எந்த நிகழ்வுகளும் நடைபெறக்கூடாது என்றும், அவ்வாறு நடத்தப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஏற்கனவே எச்சரித்துள்ளார். இது தொடர்பான அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டிருந்தார். </p><p>இந்த நிலையில இன்று காலை கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக கட்சி நிகழ்ச்சி அரசு பள்ளி ஒன்றில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், தொடக்க கல்வித்துறை இயக்குனர் நரேஷ் ஆகியோர் இணைந்து ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளனர். </p><p>அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கையில், பள்ளி வளாகங்களில் கற்றல், கற்பித்தல் மற்றும் அது தொடர்பான செயல்பாடுகள் தவிர வேறு எந்த நிகழ்ச்சிகளும் நடைபெறக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை விதிமுறைகளின்படி பள்ளிகள் சாதி, மத பாகுபாடு இன்றி, அரசியல் சார்புகள் இன்றி பாடம் நடத்தக்கூடிய ஒரு இடமாகும். அஙகே மற்ற செயல்பாடுகளுக்கு அனுமதி கிடையாது.</p><p>குறிப்பாக அரசியல் நிகழ்வுகள், பிரிவினைவாத வகுப்புவாத நிகழ்வுகள் எதற்கும் அனுமதி கிடையாது. இதனை அதிகாரிகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் ரீதியான செயல்பாடுகளுக்கு பள்ளி வளாகங்களை பயன்படுத்துவது சில நேரங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தி, மாணவர்களிடையே மன அழுத்தத்தையும் ஏற்படுத்திவிடும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p><p> எனவே, பள்ளி வளாகங்களை கல்வி சாராத நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தக்கூடாது என்பதில் அதிகாரிகள முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் எனவும், பள்ளிக்கல்வித்துறை விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ஹூண்டாய் நிறுவனத்தின் முதலீடை உறுதி செய்யவேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/hyundais-investment-should-be-confirmed-edappadi-palaniswami-insists</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/hyundais-investment-should-be-confirmed-edappadi-palaniswami-insists#comments</comments><guid isPermaLink="false">961e81e5-ff80-48da-858f-43175e26283c</guid><pubDate>Fri, 10 Jul 2026 14:56:41 +0000</pubDate><atom:updated>2026-07-10T14:56:41.141Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,investment,முதலீடு,Edappadi Palaniswami ​</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/acik6nr0/Untitled-10.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/acik6nr0/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- </p><p>தென்கொரிய நாட்டைச் சேர்ந்த ஹூண்டாய் கப்பல் கட்டுமான நிறுவனம் ஆந்திர மாநில மந்திரியுடன் முதலீடு தொடர்பான பேச்சுவார்தை நடத்தியுள்ளதாக செய்திகள் வருகின்றன. ஏற்கனவே இந்நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ. 38,000 கோடி மதிப்பிலான முதலீடு செய்யவிருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இந்நிறுவன முதலீடு நம் மாநிலத்தின் கைவிட்டு போகக்கூடிய ஒரு அச்சமான சூழல் உள்ளது.</p><p>ஹூண்டாய் நிறுவனம் 1990-களில் இருந்து தமிழகத்தில் தொழில் முதலீடு செய்துள்ள நிறுவனம். அது இன்னொரு மாநிலத்தை தற்போது நாடுவது என்பதே, இன்றைய தவெக அரசு எப்படிப்பட்ட நம்பிக்கைக்கு பாத்திரமற்ற அரசாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.</p><p>இதற்கு மூலக் காரணம், ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக அரசு துவங்கிய Guidance Tamil Nadu நிறுவனத்தை முறையாக நிர்வகிக்காமல், அதன் செயல்பாடுகளை மழுங்கடிக்கும் நோக்கில் இன்றைய தவெக அரசு செயல்படுவது தான்! Guidance TamilNadu நிறுவனத்தில் இருந்து 10 அதிகாரிகள் பதவி விலகிவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன. இவையெல்லாம் முதலீடுகளை பாதிக்கும் என்பதை இந்த அரசு கொஞ்சமாவது உணர்கிறதா?</p><p>Amateur அமைச்சரவையின் Immature அமைச்சராக உள்ள இன்றைய தொழில்துறை அமைச்சர், இன்னொரு ரீல் வெளியிட்டால் இந்த நிறுவனம் வந்துவிடும் என நினைத்தால், அப்படிப்பட்ட எண்ணத்தின் முட்டாள்தனத்தை விவரிக்க வார்த்தையே இல்லை. உடனடியாக ஹூண்டாய் நிறுவனத்தோடு பேச்சுவார்தையை FastTrack செய்து அவர்களின் முதலீடை உறுதி செய்யவேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>விஜயின் முதுகுதான் கரூரின் நினைவுச்சின்னம்  - முன்னாள் அமைச்சர் சிவசங்கர் தாக்கு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vijays-back-is-the-monument-of-karur-former-minister-sivashankar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vijays-back-is-the-monument-of-karur-former-minister-sivashankar#comments</comments><guid isPermaLink="false">182f67c9-b4e0-46f4-9cb5-e7bd2b300394</guid><pubDate>Fri, 10 Jul 2026 14:52:55 +0000</pubDate><atom:updated>2026-07-10T14:52:55.618Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Chennai,Karur,சிவசங்கர்,tvk vijay,sivasankar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/xq80yj11/sivasankaar33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிவசங்கர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/xq80yj11/sivasankaar33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கரூரை விட்டு ஓடியது யார் என்பது மக்களுக்கு தெரியும். அந்த முதுகு கரூர் மக்களுக்கு நினைவுச்சின்னமாக இருக்கும் என சிவசங்கர் கூறியுள்ளார்.</p><h2>அரசு பணி</h2><p>கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு பணிக்கான பணி ஆணை வழங்க இன்று கரூர் சென்ற முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் திமுகவை பலமாக தாக்கி பேசிய நிலையில் இதுகுறித்து திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர்  அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்திப்பில் கூறியதாவது:-</p><h2>திமுக மீது பழி</h2><p>உங்கள் மீது உள்ள தப்பை எல்லாம் அழித்துவிட்டு கரூர் சம்பவத்தின் பழியை திமுக மேல் போட்டுள்ளீர்கள். எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவரும் தன்னுடைய அரசியல் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் உயிரிழப்பதை விரும்ப மாட்டார்கள் என்றும் மிகப் பெருந்தன்மையாக எங்கள் தலைவர் சொன்னார். காரணம் அவர் உயர்ந்த உள்ளம் கொண்ட மனிதர். அவருக்கும் உங்களுக்கும் எந்த விதத்தில் ஒப்பிட முடியும். </p><h2>கரூரை விட்டு ஓடியது யார்</h2><p>கரூரை விட்டு ஓடியது யார் என்பது மக்களுக்கு தெரியும். அந்த முதுகு கரூர் மக்களுக்கு நினைவுச்சின்னமாக இருக்கும். நீங்களாக உங்களை பெரிய மனிதராக நினைத்துக்கொண்டு பேசிக் கொண்டிருக்கிறீர்கள். எங்களுடைய தலைவருடன் உங்களை ஒப்பிட முடியாது.</p><p>குற்றம் சுமத்த வேண்டும் என முடிவு செய்திருந்தால் குற்றம் சுமத்தியதோடு இருக்க முடியாது வழக்கே போட சொல்லி இருக்கலாம். வழக்கே போட்டு இருந்தால் என்ன நிலைமை என்று  உங்களுக்கு  தெரியும். பெருந்தன்மையாக ஒரு அரசியல் கட்சித் தலைவர் தன்னுடைய தொண்டர்கள் உயிரிழப்பதை விரும்ப மாட்டார்கள் என்று சொல்லி பெருந்தன்மை காட்டியதால் இன்று நீங்கள் மனதில் பட்டதை எல்லாம், வாயில் வந்ததை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.</p><h2>திமுக ஆட்சி</h2><p>அடுத்தது ஒரு வசனம் சொல்லி இருக்கிறீர்கள் ''எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் மனதிற்கு ஏற்பட்ட காயங்களை மறக்க முடியாது. நிறைய வலிகள், நிறையக் காயங்களை தாண்டி தான் வந்துள்ளேன். என் வாழ்வில் அதிக வலி காயம் கொடுத்தது கரூர் சம்பவம் தான். மக்களை சந்திக்கவும் மக்களிடம் பேசவும் கருவூருக்கு வந்தேன்' என்று <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விஜய்</a> சொல்லியுள்ளார். ஆனால் வந்தது எத்தனை நாட்கள் கழித்து? சம்பவம் முடிந்து 250 நாட்களுக்கு மேலாகிவிட்டது. அப்பொழுதுதான் திமுக ஆட்சி உங்களை கரூருக்கு செல்லவிடாமல் தடுத்தது என்றால், உங்கள் ஆட்சி அமைந்தே இரண்டு மாதம் ஆகிவிட்டது.</p><h2>யோகிபாபு</h2><p>நாளைக்கு யோகிபாபு போகும்போது கூட்டம்கூடி ஏதாவது நடந்தால் அதற்கு அரசுத் தரப்பில் இவர் செய்துவிடுவாரா?  இடைத் தேர்தலுக்காகத்தான் கரூருக்கு சென்றிருக்கிறார் முதல்-அமைச்சர் விஜய். </p><p>துயரத்தில் இருந்ததாக கூறிய விஜய் திருமண விழாக்களில் மகிழ்ச்சியாக பங்கேற்றார்,</p><p>தன் தவறுகளை மறைத்துவிட்டு திமுக மீது குற்றம்சாட்டுகிறார் விஜய். இன்று நேரத்திற்கு சென்ற விஜய் பிரசாரத்திற்கு ஏன் தாமதமாக சென்றார்? தாம் முதல்-அமைச்சரையே மறந்துவிட்டு பேசுகிறார் விஜய்.</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>எஞ்சின் கோளாறு: சென்னை-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயில் 2 மணி நேரம் நிறுத்தம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/engine-failure-chennai-rameswaram-express-delayed-by-two-hours</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/engine-failure-chennai-rameswaram-express-delayed-by-two-hours#comments</comments><guid isPermaLink="false">b013aaf3-9dfe-4510-af50-9c3c4260c9bc</guid><pubDate>Fri, 10 Jul 2026 14:37:17 +0000</pubDate><atom:updated>2026-07-10T14:37:17.064Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Engine Failure,delay,ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்,Rameswaram Express,எஞ்சின் பழுது</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/qjoutahw/train.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/qjoutahw/train.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பண்ருட்டி,</p><p>சென்னை எழும்பூரில் இருந்து நேற்று மாலை 6 மணிக்கு ராமேஸ்வரம்  செல்லும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">எக்ஸ்பிரஸ் ரெயில்</a> புறப்பட்டது. ரெயில் ஒன்று நேற்று இரவு 8 மணிக்கு விழுப்புரம் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அங்கு வழக்கமான நடைமுறைப்படி ரெயிலின் என்ஜின் மாற்றப்பட்டது. என்ஜின் மாற்றும் பணிகள் அனைத்தும் முடிந்த பின்னர், இரவு 8.40 மணிக்கு அந்த எக்ஸ்பிரஸ் ரெயில் விழுப்புரத்தில் இருந்து தனது பயணத்தை தொடங்கியது.</p> <h2>நடுவழியில் பழுது</h2><p>ரெயில் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, விழுப்புரத்தை அடுத்த சேந்தனூர் ரெயில் நிலையத்தை நெருங்கியபோது, ரெயிலின் என்ஜினில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் சேந்தனூர் ரெயில் நிலையத்திலேயே எக்ஸ்பிரஸ் ரெயில் நிறுத்தப்பட்டது.</p> <h2>பயணிகள் அவதி</h2><p> எஞ்சின் கோளாறால் ரெயில் பாதி வழியில் நின்றதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். தகவலறிந்த ரெயில்வே அதிகாரிகள் உடனடியாக விழுப்புரத்தில் இருந்து மாற்று எஞ்சினை அனுப்பி வைத்தனர்.</p><p>சுமார் 2 மணி நேர கால தாமதத்திற்கு பிறகு மாற்று எஞ்சின் வந்ததை தொடர்ந்து, இரவு II மணிக்கு சேந்தனூரில் இருந்து ரெயில் மீண்டும் புறப்பட்டு ராமேஸ்வரம் நோக்கி சென்றது.</p> <p>எஞ்சின் கோளாறு  காரணமாக ரெயில் தாமதமானதால் ராமேஸ்வரம் செல்லும் வழியில் உள்ள மற்ற ரெயில்களின் நேரமும் பாதிக்கப்பட்டது.</p> ]]></content:encoded></item><item><title>வேறு பெண்ணை திருமணம் செய்த கணவருக்கு அரசு வேலையா? கரூரில் பலியான சிறுவனின் தாய் கண்ணீர் பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-a-government-job-available-to-a-husband-who-married-another-woman-mother-of-a-boy-who-died-in-karur-cries</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-a-government-job-available-to-a-husband-who-married-another-woman-mother-of-a-boy-who-died-in-karur-cries#comments</comments><guid isPermaLink="false">660e4f52-9557-4aca-a75b-cdbd8abe293c</guid><pubDate>Fri, 10 Jul 2026 14:31:24 +0000</pubDate><atom:updated>2026-07-10T14:31:24.038Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர் கூட்ட நெரிசல்,TVK,தவெக,கரூர்,விஜய்,திருமணம்,Karur,கரூர் சம்பவம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/ssxn38en/karuru3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறுவனின் தாய் கண்ணீர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/ssxn38en/karuru3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>குடும்பத்தை தவிக்கவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்த கணவருக்கு அரசு வேலை வழங்குவதாக என கரூரில் பலியான சிறுவனின் தாய் கண்ணீர் மல்க கூறினார்.</p><p>கரூர்,</p><p>கரூர் கலெக்டர் அலுவலகத்தில்  இன்று தமிழக முதல்-அமைச்சர் விஜய்  கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தை சேர்ந்த 32 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலைக்கான பணி நியமன ஆணை வழங்கினார்.  இதற்காக தேர்வு செய்யப் பட்ட பயனாளிகள் கலெக்டர் அலுவலக அரங்கத்திற்குள் அனுமதிக்கப் பட்டனர். </p><h2>கணவர் மீது குற்றச்சாட்டு</h2><p>அப்போது ஒரு இளம்பெண் தனக்கு அனுமதி அளிக்காமல் தன்னையும், குழந்தையையும் கைவிட்டு சென்ற கணவரை அதிகாரிகள் அனுமதித்து உள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும் அவர் கண்ணீர் மல்க கூறும்போது, </p><p>எனது பெயர் திருவளர் செல்வி என் கணவர் ரகுநாதன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே, என்னையும், குழந்தையையும் தவிக்கவிட்டுவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு சென்று விட்டார். எனது மகன் சனுஜ் வர்ஷனை சிறு வயது முதல் என் தாயின் உதவியுடன் வளர்த்து வந்தேன். </p><h2>கூட்ட நெரிசல்</h2><p>இந்த நிலையில் கரூர் சம்பவத்தில் எனது சகோதரியுடன் சென்ற எனது மகன் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதா பமாக உயிரிழந்தான். இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக அரசு மற்றும்  முதல்-அமைச்சர் விஜய் தரப்பில்  இருந்து எனக்கு முறையான நிவாரண உதவிகள் அனைத்தும் சட்டப் பூர்வமாக வழங்கப்பட்டது.</p><p>ஆனால், எனது மகனின் இறுதி சடங்கு மற்றும் இதர நிகழ்வுகளின் போது அதிகாரிகளின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. உயிரிழந்த குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதை அறிந்து இங்கு வந்தேன். ஆனால், அதிகாரிகள் உள்ளே என்னை அனுமதிக்கவில்லை. ஆனால், எனது கணவர் கூட்ட அரங்கில் அமரவைக்கப்பட்டு இருந்தார். </p><h2>கண்டுகொள்ளாத தந்தை</h2><p>கடந்த 10 ஆண்டுகளாக பிள்ளையை கண்டு கொள்ளாத, ஒரு நாள்கூடப் பள்ளிக்கு அழைத்து செல்லாத அவருக்கு எந்த அடிப்படையில் அதிகாரிகள்<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> அரசு வேலை</a> வழங்கு கிறார்கள்?. எனக்கு என்று ஆம்பளை துணை யாரும் இல்லை. நியாயம் கேட்க போனால் யாரும் முறையான பதில் சொல்ல மறுக்கிறார்கள். எனக்கு நீதி வழங்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறினார். </p>]]></content:encoded></item><item><title>அரசு மருத்துவமனைகளின் குறைகளை களைய முதல்-அமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cm-vijay-orders-action-to-resolve-shortcomings-in-government-hospitals</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cm-vijay-orders-action-to-resolve-shortcomings-in-government-hospitals#comments</comments><guid isPermaLink="false">3d1da1ee-25e5-473d-90f1-73d525522039</guid><pubDate>Fri, 10 Jul 2026 14:27:46 +0000</pubDate><atom:updated>2026-07-10T14:27:46.771Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசு மருத்துவமனைகள்,Govt Hospitals,தமிழக சுகாதாரத்துறை,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/uo82qetl/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/uo82qetl/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசு மருத்துவமனைகளின் குறைகளை களைய முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் முதல்-அமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில் அரசு மருத்துவமனைகளில் பல்வேறு குறைபாடுகள் இருப்பது கள ஆய்வில் தெரிய வந்துள்ளது.</p><p>சென்னை முதல் தூத்துக்குடி வரை 31 மாவட்ட மருத்துவமனைகளில் நிலவும் குறைபாடுகள் குறித்து முதல்-அமைச்சர் அலுவலகம் விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் அரசு மருத்துவமனைகளில் தூய்மைப்பணி, குடிநீர், கழிப்பறை, நோயாளிகள் பராமரிப்பு, ஊழல், முறைகேடு, திருட்டு, நாய்கள் தொல்லை உள்ளிட்ட 304 குறைபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த அறிக்கை தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், அரசு மருத்துவமனைகளின் குறைகளை களையவும் 50 நோடல் அதிகாரிகளை தமிழக சுகாதாரத்துறை நியமித்துள்ளது. </p><p>சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் வார்டு பாய்கள், காவலர்கள் சிலர் கஞ்சா பயன்படுத்துவதாகவும், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டு முதல் பிணவறை வரை ரூ.2 ஆயிரம் வரை லஞ்சம் வாங்குவதாகவும் தெரிய வந்துள்ளது. அனைத்து மாவட்ட கலெக்டர்களும் அரசு மருத்துவமனைகளின் குறைபாடுகளை ஆய்வு செய்து சீரமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருப்பூர்: டேங்கர் லாரி - கார் நேருக்கு நேர் மோதி விபத்து - 6 பேர் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruppur-tanker-lorry-car-head-on-collision-accident-6-dead</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruppur-tanker-lorry-car-head-on-collision-accident-6-dead#comments</comments><guid isPermaLink="false">5a6190c8-611a-4807-a90a-845f5edb3467</guid><pubDate>Fri, 10 Jul 2026 13:57:38 +0000</pubDate><atom:updated>2026-07-10T13:57:38.399Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,Tiruppur,திருப்பூர்,accident death</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/c9u6936m/Untitled-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/c9u6936m/Untitled-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><p>திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே டேங்கர் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.</p><h2>நேருக்கு நேர் மோதி விபத்து</h2><p>ஊத்துக்குளி - விஜயமங்கலம் சாலையில் காக்காப்பள்ளம் அருகே இன்று ஏற்பட்ட இந்த விபத்தில், காரில் பயணம் செய்த 2 பெண்கள், 2 சிறுவர்கள் உள்பட மொத்தம் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த ஒருவர் மீட்கப்பட்டு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மருத்துவமனையில் </a>சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>விபத்து குறித்து தகவல் அறிந்த ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டதுடன், உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><h2>விசாரணை</h2><p>இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்குப் பிறகு தப்பிச் சென்ற டேங்கர் லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர். விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item></channel></rss>