<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 16 Jul 2026 05:27:25 +0000</lastBuildDate><item><title>கூடங்குளம் அணுமின் நிலைய தரவுகள் கசிவு?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kudankulam-nuclear-power-plant-data-leak</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kudankulam-nuclear-power-plant-data-leak#comments</comments><guid isPermaLink="false">503e49e5-00bc-4555-832a-41978b982acc</guid><pubDate>Thu, 16 Jul 2026 05:22:54 +0000</pubDate><atom:updated>2026-07-16T05:22:54.727Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தூத்துக்குடி,மத்திய அரசு,கூடங்குளம்,Kudankulam,Kudankulam Nuclear Power Plant,Kudankulam Nuclear Reactor</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/ow8rmhj4/kudankulam33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
கூடங்குளம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/ow8rmhj4/kudankulam33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>கூடங்குளம் அணுமின் நிலையத்தின் கட்டுப்பாட்டு அறை வரைபடங்கள், வெண்டிலேஷன் கட்டமைப்பு உள்ளிட்ட 19,000 முக்கிய கோப்புகள் Dark Web தளத்தில் கசிந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.</p><p>தூத்துக்குடி மாவட்டம் கூடங்குளத்தில் ரஷிய நாட்டின் உதவியுடன் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அணுமின் நிலையம்</a> அமைக்கப்பட்டுள்ளது. தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரு அலகுகள் இங்கு தற்போது செயல்பாட் டில் உள்ள நிலையில், மேலும் நான்கு அலகுகளுக்கான கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்தியாவின் அணுமின் தேவையைப் பூர்த்தி செய்வதில் இந்த மின் நிலையம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.</p><h2>தரவு கசிவு</h2><p>இந்த நிலையில், நேற்று 'வேர்ல்டு லீக்ஸ்' என்ற ஹேக்கர் குழு கூடங்குளம் அணுமின் நிலையத்தின் வரைபடங்கள் மற்றும் உதிரிபாகங்கள் வினியோகிப்பாளர் விவரங்கள் அடங்கிய ரகசிய ஆவணங்களை இணையதளம் மூலம் பொதுவெளியில் வெளியிட்டுள்ளதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் இந்த தகவலை தேசிய அணுசக்தி ஆணையம் மறுத்து உள்ளது.</p><p>இருப்பினும் இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான ரகசிய ஆவணங்கள் கசிந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இந்த விவகாரம் தொடர்பாக மூத்த அணுசக்தி விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட தரவு கசிவுக்கும் அணுசக்தி பாதுகாப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது அணுமின் நிலையத்தின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்று தெரிவித்தார்.</p> <h2>தகவல் உண்மையல்ல</h2><p>இதுதொடர்பாக NPCIL நிர்வாக இயக்குநர் ராஜேஷ் கூறுகையில், பாதுகாப்பு தகவல்கள் எதுவும் திருடப்படவில்லை. அணு பாதுகாப்பு தொடர்பான எந்த ரகசிய தகவலும் வெளியேறவில்லை. முக்கிய தகவல்கள் கசிந்தது என்பது உண்மையல்ல என்று விளக்கம் அளித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>காவலர்களுக்கான ஆள்தேர்வு அறிவிப்பை உடனே வெளியிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-recruitment-notification-should-be-published-immediately-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-recruitment-notification-should-be-published-immediately-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">7bbe8c80-3b81-49b9-a870-b62a6f580b28</guid><pubDate>Thu, 16 Jul 2026 05:17:46 +0000</pubDate><atom:updated>2026-07-16T05:17:46.920Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,police,அரசு வேலை,காவலர் பணி,ஆள்தேர்வு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/92lq94xc/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/92lq94xc/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு காவல்துறையில் காலியிடங்களின் எண்ணிக்கை மாதத்திற்கு மாதம் அதிகரித்து வரும் நிலையில், 2026-ம் ஆண்டில் காவலர்கள் நியமனம் நடைபெறாது என்றும், 2027-ம் ஆண்டு ஜூன் மாதத்தில்தான் ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்படும் என்றும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. காவல்துறை பணியில் சேர லட்சக்கணக்கான இளைஞர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் வேளையில் ஓராண்டு முழுவதும் காவலர் தேர்வு நடத்தப்படாது என்று அறிவிப்பது பெரும் அநீதியாகும்.</p><p>தமிழ்நாட்டில் காவலர்கள் நியமனத்தை தாமதப்படுத்துவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் காவலர்கள் தேவைப்படும் மாநிலங்களில் தமிழ்நாடுதான் முதன்மை  இடத்தில் உள்ளது. போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவது, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்தல் ஆகியவை அரசின் முதன்மைக் கடமையாக மாறியுள்ளன. இதற்காக காவல்துறையில் தனிப்பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றை வலுப்படுத்த போதிய எண்ணிக்கையில் காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். இதற்கு தேவையான காவலர்கள் தமிழக காவல்துறையில் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.</p><p>01.01.2025-ம் நாள் நிலவரப்படி தமிழக காவல்துறையில் அதிகாரிகள் அல்லாத காவலர்கள் பணியிடங்கள் ஒரு லட்சத்து 17,609 ஆகும். தமிழ்நாட்டின் மக்கள்தொகை 8 கோடி எனும் நிலையில், ஒரு லட்சம் மக்களுக்கு 147 காவலர் பணியிடங்கள் மட்டுமே உள்ளன. காவல்துறை தலைமை இயக்குனர் முதல் சார்பு ஆய்வாளர் வரையிலான அதிகாரிகள் பணியிடங்களையும் கணக்கில் கொண்டால் காவல்துறையின் மொத்த பணியிடங்கள் ஒரு லட்சத்து 33,961 ஆகும். இதன்படி பார்த்தால் ஒரு லட்சம் பேருக்கு 167.45 காவல்துறையினர் தான் உள்ளனர். இவற்றில் 10% பணியிடங்கள் காலியாக இருப்பதாகக் கொண்டால், ஒரு லட்சம் மக்களுக்கு  132 காவலர்கள் மட்டும் தான் இருப்பார்கள். இது சட்டம் &amp; ஒழுங்கைக் காக்க எந்த வகையிலும் போதுமானதல்ல.</p><p>ஐக்கிய நாடுகள் அமைப்பின் பரிந்துரைப்படி, ஒரு லட்சம் மக்களுக்கு 222 காவலர்கள் இருக்க வேண்டும். அதன்படி பார்த்தால் தமிழ்நாட்டில் காவலர் பணியிடங்கள் ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 600 ஆக இருக்க வேண்டும். அதற்கு தமிழ்நாட்டில் 60 ஆயிரம் காவலர் பணியிடங்கள் கூடுதலாக ஏற்படுத்தப்பட வேண்டும்.  அதுமட்டுமின்றி, ஏற்கனவே காலியாக உள்ள அனைத்து பணியிடங்களும் உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.</p><p>ஆனால், தமிழ்நாட்டில் ஏற்கனவே காலியாக உள்ள காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு கூட எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. தமிழக காவல்துறையில் ஒவ்வொரு ஆண்டும் 3,000 முதல் 4,000 காவலர்கள் ஓய்வு பெறும் நிலையில் அதனால் ஏற்படும் காலியிடங்களை நிரப்ப ஆண்டுக்கு ஒருமுறை காவலர் நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் அவ்வாறு செய்யப்படுவதில்லை.</p><p>தமிழ்நாட்டில் கடந்த 2023-ம் ஆண்டில் காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை ஆகியவற்றுக்கு மொத்தம் 3,359 இரண்டாம் நிலைக் காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதன்பின் 2024-ம் ஆண்டில் அடுத்த ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால்,  2023-ம் ஆண்டில் அறிவிக்கை செய்யப்பட்ட காலியிடங்களை நிரப்பும் பணியை 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை இழுத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் அந்த மாதத்தில்தான் பணி நியமன ஆணைகளை வழங்கியது. அதனால், அந்த ஆண்டில் காவலர் ஆள்தேர்வு அறிவிக்கப்படவில்லை.</p><p>அதன்பின் 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 3,644 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கை  வெளியிடப்பட்டது. அதற்கான போட்டித் தேர்வு நடத்தப்பட்டு கடந்த ஜனவரி மாதம் முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்பின் உடற்தகுதித் தேர்வு நடத்தப்பட்டும் கூட இன்று வரை முடிவுகள் வெளியிடப்படவில்லை. அதனால் நடப்பாண்டில் காவலர்கள் நியமனத்திற்கான அறிவிக்கை வெளியாவதற்கு வாய்ப்பில்லை என்பது உறுதியாகிறது.</p><p>தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நினைத்தால் காவலர் தேர்வு நடைமுறையை 6 மாதங்களில் முடிக்க முடியும். ஆனால், ஆண்டுக்கு ஒருமுறை காவலர் தேர்வு செய்யப்படுவதை தடுப்பதற்காகவே ஆள்தேர்வு நடைமுறை திட்டமிட்டு தாமதப்படுத்தப்படுகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் காவலர்கள் பணிக்காக தங்களை தயார் செய்து காத்திருக்கும் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள்தான்.</p><p>தமிழ்நாட்டில் காவலர் பணிக்கான கல்வித் தகுதி 10-ம் வகுப்பு ஆகும். அப்பணிக்கான வயது வரம்பு 18 முதல் 26 வரை ஆகும். ஆண்டுக்கு ஒருமுறை காவலர் நியமனம் செய்யப்பட்டால் 18 - 26 வயது பிரிவில் உள்ளவர்களுக்கு காவலர் தேர்வில் பங்கேற்க 8 முறை வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால்,  இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே காவலர் தேர்வு நடைபெறுவதால் அவர்களுக்கு 4 வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கின்றன. பலர் பட்டப்படிப்பை முடித்து விட்டு இந்த பணிக்கு விண்ணப்பிப்பதால் 2 அல்லது 3 வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கின்றன. ஒருவரிடமிருந்து 4 முதல் 6 முறை பணி வாய்ப்புகளை பறிப்பது மிகப்பெரிய அநீதியாகும்.</p><p>காவலர் பணிக்கான உடற்தகுதிக்கு உடனடியாக தயாராகிவிட முடியாது. அதற்காக குறைந்தது  6 மாதம் முதல் ஓராண்டு வரை பயிற்சி செய்ய வேண்டும். 2026-ம் ஆண்டில் காவலர் தேர்வுக்கான அறிவிக்கை வெளியாகும் என பயிற்சியில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும், ஆள்தேர்வு அறிவிக்கை வெளியாகாததால் பயிற்சியும், நம்பிக்கையும் வீணாகி விட்டது. இதில் அவர்களின் தவறு எதுவும் இல்லை; ஆனால், தேர்வு வாரியத்தின்  அலட்சியத்திற்கான தண்டனையை அவர்கள் அனுபவிக்க வேண்டியிருப்பதை நியாயப்படுத்தவே முடியாது.</p><p>2025-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட காவலர் தேர்வுக்கான முடிவுகளை, அது தொடர்பான வழக்குகளை முடித்து  உடனடியாக வெளியிட வேண்டும். 2026-ம் ஆண்டுக்கான காவலர் நியமன ஆள்தேர்வு அறிவிக்கையை செப்டம்பர் மாதத்தில் வெளியிட வேண்டும். அது சாத்தியமில்லை என்றால் காவலர் பணிக்கான வயது வரம்பை பொதுப் பிரிவினருக்கு 30, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 32,  பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு 35 ஆக தமிழக அரசு உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வகுப்பறையில் பிளஸ்-2 மாணவரை கத்தியால் குத்திய சக மாணவர்கள்: காரணம் என்ன..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/classmates-stab-plus-2-student-with-a-knife-in-the-classroom-what-is-the-reason</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/classmates-stab-plus-2-student-with-a-knife-in-the-classroom-what-is-the-reason#comments</comments><guid isPermaLink="false">42c93388-f9da-4df2-9671-0889f31a488c</guid><pubDate>Thu, 16 Jul 2026 04:59:39 +0000</pubDate><atom:updated>2026-07-16T04:59:39.901Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police investigation,போலீஸ் விசாரணை,சிவகங்கை,Sivagangai,அரசு பள்ளி,Govt school,கத்தி குத்து</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/sunw8too/plan.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/sunw8too/plan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை, </p><p>அரசு பள்ளி வகுப்பறையில் பிளஸ்-2 மாணவரை சக மாணவர்கள் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><h2>வகுப்பறையில் கத்திக்குத்து</h2><p>சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை அடுத்த நிரஞ்சான் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாங்கம் (வயது 45). கொத்தனார். இவருடைய மகன் சஞ்சய் பிரசாத் (17). இவர் சிவகங்கையை அடுத்த மல்லல் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர்நல அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.</p><p>நேற்று காலை சஞ்சய் பிரசாத் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றார். வகுப்பறையில் நுழைந்தபோது திடீரென 2 மாணவர்கள், தாங்கள் வைத்திருந்த கத்தியால் சஞ்சய் பிரசாத்தை மார்பு மற்றும் முதுகில் குத்தினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.</p> <h2>தீவிர சிகிச்சை</h2><p>அவரது அலறல் கேட்டு ஆசிரியர்கள், மற்ற மாணவர்கள் ஓடிவந்தனர். உடனே அந்த 2 மாணவர்களும் அங்கிருந்து ஓடிவிட்டனர்.</p><p>சிகிச்சைக்காக சஞ்சய் பிரசாத்தை சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><p>இது குறித்து அறிந்த மானாமதுரை சிப்காட் போலீசார், பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p><h2>காரணம் என்ன?</h2><p>இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து சஞ்சய் பிரசாத்தின் தந்தை ராஜாங்கம் கூறியதாவது:-</p><p>இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து சஞ்சய் பிரசாத்தின் தந்தை ராஜாங்கம் கூறியதாவது:-</p><p>கடந்த 10 நாட்களுக்கு முன்பு பள்ளியில் எனது மகனுக்கும், சில மாணவர்க ளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் எனது மகன் ஒரு மாணவரை தாக்கியதாக தலைமை ஆசிரியர் கூறினார். இதை தொடர்ந்து நான் ஒரு வாரம் கழித்து, கடந்த திங்கட்கிழமைதான் எனது மகனை பள்ளிக்கு அனுப்பினேன். அவனை நானே காலையில் பள்ளியில் கொண்டுசென்று விட்டுவிட்டு மாலையில் அழைத்துச்சென்றேன். அதன்படி சம்பவத்தன்று காலையிலும் பள்ளியில் விட்டுவிட்டு நான் வேலைக்கு சென்றுவிட்டேன். சிறிது நேரத்தில் பள்ளி காவலாளி என்னை செல்போனில் தொடர்பு கொண்டு உங்களது மகனை பள்ளியில் பயிலும் சக மாணவர்கள் கத்தியால் குத்திவிட்டதாக கூறினார். பள்ளியில் இருந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றதால் அலறி அடித்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்று எனது மகனை பார்த்தேன். இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 22-ம் ஆண்டு நினைவு தினம்: மெழுகுவர்த்தி ஏற்றி பொதுமக்கள் அஞ்சலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/22nd-anniversary-of-kumbakonam-school-fire-public-pays-tribute-by-lighting-candles</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/22nd-anniversary-of-kumbakonam-school-fire-public-pays-tribute-by-lighting-candles#comments</comments><guid isPermaLink="false">9e5dd8b7-b58f-4fbe-a2b4-14da7e2462f6</guid><pubDate>Thu, 16 Jul 2026 04:58:25 +0000</pubDate><atom:updated>2026-07-16T04:58:25.811Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Fire accident,கும்பகோணம்,பள்ளி தீ விபத்து,Kumbakonam,school fire</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/778cvt6f/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/778cvt6f/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>கும்பகோணம்,</p><h2>பள்ளி தீ விபத்து</h2><p>தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி காசிராமன் தெரு ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் பள்ளியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அத்துடன் 19 குழந்தைகள் காயமடைந்தனர். இந்த துயர சம்பவம் தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. </p><p>இந்த தீ விபத்து நடந்து இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 22-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இன்று காலை குழந்தைகளை தீயில் பறிகொடுத்த பெற்றோர் தங்கள் வீட்டில் உள்ள தங்களது குழந்தைகளின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து, புத்தாடைகள் மற்றும் அவர்களுக்கு பிடித்த தின்பண்டங்களை வைத்து அஞ்சலி செலுத்தினர்.</p><h2>22-ம் ஆண்டு நினைவு தினம்</h2><p>பின்னர் விபத்து நடந்த கிருஷ்ணா பள்ளி முன்பு திரண்ட பெற்றோர், பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த 94 குழந்தைகளின் உருவப்படங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனருக்கு மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து தின்பண்டங்களை வைத்தும் குழந்தைகளின் படங்களை பார்த்து கதறி அழுதனர்.</p><p>பல தன்னார்வ அமைப்பினரும், அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் இறந்த குழந்தைகளின் புகைப்படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த துயர சம்பவம் நடந்து 22 ஆண்டுகள் ஆகினும், பிஞ்சு குழந்தைகளை இழந்த தாக்கம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மத்தியிலிருந்து இன்னும் நீங்காத வடுவாக மாறியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரெயில் டிக்கெட் முன்பதிவை எளிமைப்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்ட ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் அறிமுகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-irctc-beta-website-launched-for-easier-ticket-booking</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-irctc-beta-website-launched-for-easier-ticket-booking#comments</comments><guid isPermaLink="false">8c214df6-7eea-488b-a53f-a9e5fc0cf3dc</guid><pubDate>Thu, 16 Jul 2026 04:56:35 +0000</pubDate><atom:updated>2026-07-16T04:56:35.966Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டிக்கெட் முன்பதிவு,Ticket Booking,ரெயில் டிக்கெட்,Train Ticket,Railway,ரெயில்வே,ஐ.ஆர்.சி.டி.சி,IRCTC,பீட்டா பதிப்பு,beta version</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/vzv7dmaf/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/vzv7dmaf/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>டிக்கெட் முன்பதிவு</h2><p>இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் மற்றும் அதன் செயலியில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். தற்போதுள்ள நிலவரப்படி, 82 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் முன்பதிவு செய்கின்றனர். ஆனால், தட்கல் முன்பதிவின்போது, அடிக்கடி 'சர்வர்' பிரச்சினை ஏற்படுகிறது.</p><p>'கேப்ட்சா' குறியீடுகளும் கடினமாக இருக்கிறது. தொழில்நுட்ப கோளாறுகளால் டிக்கெட் முன்பதிவு அடிக்கடி தோல்வியில் முடிகிறது. இதனால், பயணிகள் முன்பதிவு செய்ய முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து ரெயில்வே நிர்வாகத்திற்கு பல்வேறு புகார்களை பயணிகள் தெரிவித்துள்ளனர்.</p><h2>மேம்படுத்தப்பட்ட இணையதளம்</h2><p>இந்த நிலையில், 24 ஆண்டுகளுக்குப் பிறகு பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ள ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் சிரமம் இல்லாமல் எளிதில் முன்பதிவு செய்யும் வகையில் மேம்படுத்தப்பட்ட இணையதளத்தின் பீட்டா பதிப்பை ஐ.ஆர்.சி.டி.சி. தற்போது அறிமுகம் செய்துள்ளது.</p><h2>பீட்டா பதிப்பு</h2><p>இந்த புதிய பீட்டா பதிப்பு, டிக்கெட் முன்பதிவை எளிமையாகவும், தடையின்றியும் செய்வதை நோக்கமாக கொண்டு 4 முக்கிய மேம்பாட்டு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.</p><ul><li><p>முன்பதிவு செய்யும்போது தேவையற்ற கேப்ட்சாக்களை நீக்குதல், தேவையற்ற பாப்-அப்களை அகற்றுதல், ஒளிரும் கிராபிக்ஸ், கவனச்சிதறல்களை ஏற்படுத்தும் அம்சங்கள் நீக்கப்பட்டுள்ளன.</p></li><li><p>பயணிகள் அனைத்து வகுப்புகளிலும் இருக்கைகள் உள்ளதா என்பதைப் பார்க்கலாம்.</p></li><li><p>இந்த இணையதளம் வேகமான செக்-அவுட் செயல்முறையை வழங்குகிறது. இதன் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தேவைப்படும் படிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.</p></li><li><p>இந்த இணையதளம் பயணிகளின் விவரங்களைச் சேமிக்கும். இதன் மூலம் மீண்டும் மீண்டும் முன்பதிவு செய்வது எளிதாகிறது.</p></li></ul><h2>கருத்துகள் வரவேற்பு</h2><p>இந்த பீட்டா பதிப்பை <a href="https://www.irctc.co.in/eticket/">https://www.irctc.co.in/eticket/</a> என்ற முகவரியில் அணுகலாம். தற்போதுள்ள இணையதளத்தின் முகப்புப் பக்கத்திலும் பீட்டா பதிப்பிற்கான இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் எளிமைப்படுத்தப்பட்ட அம்சங்கள் குறித்துக் கருத்துக்களை வழங்குமாறு ரெயில்வே அமைச்சகம் பயனர்களை கேட்டுக் கொண்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தஞ்சாவூர்: வாலிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thanjavur-petrol-bomb-thrown-at-youths-house</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thanjavur-petrol-bomb-thrown-at-youths-house#comments</comments><guid isPermaLink="false">34a35457-c688-4d07-9584-dcd14b3841ab</guid><pubDate>Thu, 16 Jul 2026 04:55:29 +0000</pubDate><atom:updated>2026-07-16T04:55:29.781Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thanjavur,Youth,வாலிபர்,தஞ்சாவூர்,House,வீடு,முன்விரோதம்,பெட்ரோல் குண்டு வீச்சு,previous enmity,petrol bomb thrown</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/610wegaq/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%9F%E0%AF%81.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல் குண்டு வீச்சு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/610wegaq/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%9F%E0%AF%81.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர், </p><p>தஞ்சாவூர் மாவட்டம், துறவிக்காடு பகுதியில் உள்ள ஒரு வாலிபரின் வீட்டில் சண்டைக்கோழி வாங்கியது தொடர்பாக ஏற்பட்ட <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">முன்விரோதத்தின் காரணமாக பெட்ரோல் குண்டு வீசியது</a> குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். </p><h2>சண்டைக்கோழி வாங்கியதில் முன்விரோதம்</h2><p>தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் தில்லங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் அபின்தாஸ் (வயது 27). இவருக்கும், திருச்சிற்றம்பலம் அருகில் உள்ள துறவிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் மகன் பாபு(21) என்பவருக்கும் இடையே சண்டைக்கோழி வாங்கியது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. </p><h2>வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு</h2><p>நேற்று முன்தினம் இரவு அபின்தாசும் அவரது கூட்டாளிகள் சிலரும் துறவிக்காடு கிராமத்தில் உள்ள பாபு வீட்டுக்கு அவரை தேடி சென்றனர். பின்னர் பாட்டிலால் செய்யப்பட்ட 2 பெட்ரோல் குண்டுகளை அவரது வீட்டில் வீசி உள்ளனர். இதில் ஒரு குண்டு வெடித்தது. மற்றொன்று வெடிக்கவில்லை. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>லஞ்சம், முறைகேடு புகார்: சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 6 பேர் சஸ்பெண்ட்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/6-chennai-corporation-officials-suspended</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/6-chennai-corporation-officials-suspended#comments</comments><guid isPermaLink="false">07bbf139-013a-4513-a19a-e65796a8ce1c</guid><pubDate>Thu, 16 Jul 2026 04:41:32 +0000</pubDate><atom:updated>2026-07-16T04:41:32.385Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சஸ்பெண்ட்,சென்னை மாநகராட்சி,லஞ்சம்,லஞ்சம் புகார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/35uwwc9v/chennai33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை மாநகராட்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/35uwwc9v/chennai33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நிதி முறைகேடு, லஞ்சம் மற்றும் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய புகார்களை அடுத்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>சென்னை மாநகராட்சி</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை மாநகராட்சி</a>யில் லஞ்சம் பெறுதல், வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெறுதல், பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட புகார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.</p><p>இந்தநிலையில்,  சென்னை மாநகராட்சியில் டெண்டர்  முறைகேடு, நிதி முறைகேடு, லஞ்சம் உள்ளிட்ட புகார்கள் தொடர்பாக 4 மூத்த அதிகாரிகள் உள்பட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>குற்றவியல் வழக்கு</h2><p>மேலும், இவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கைகளும், 4 பேர் மீது குற்றவியல் வழக்குகளும் பதிவு செய்ய சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் உத்தரவிடுள்ளார்.</p><p>ரூ. 9 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்கு போலியான ரசீதுகளைச் சமர்ப்பித்த்ததாக மணலி மற்றும் மாதவரம் மண்டல சுகாதார அதிகாரியான டாக்டர் தேவிகலா, ஜூலை 9-ல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.</p>]]></content:encoded></item><item><title>கும்பகோணம் தீ விபத்து நினைவு நாள்: வானதி சீனிவாசன் அஞ்சலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fire-tragedy-anniversary-vanathi-srinivasan-pays-tribute</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fire-tragedy-anniversary-vanathi-srinivasan-pays-tribute#comments</comments><guid isPermaLink="false">39c42324-68c8-4724-9ac2-ee8a2a6d4760</guid><pubDate>Thu, 16 Jul 2026 04:37:11 +0000</pubDate><atom:updated>2026-07-16T04:37:11.311Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,வானதி சீனிவாசன்,நினைவு நாள்,கும்பகோணம்,பள்ளி தீ விபத்து,அஞ்சலி Tribute,வானதிசீனிவாசன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/ru7dhz7o/209.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வானதி சீனிவாசன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/ru7dhz7o/209.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக மகளிரணி தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF">வானதி சீனிவாசன்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 22-ஆம் ஆண்டு நினைவு நாளில், உயிரிழந்த 94 பிஞ்சுக் குழந்தைகளுக்கு ஆழ்ந்த இதய அஞ்சலிகள்.</p><p>தமிழக வரலாற்றில் என்றும் அழியாத பெருந்துயரமாகப் பதிந்த இந்தச் சம்பவம், பள்ளிகளில் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாதால் ஏற்படும் பேராபத்தின் கோர நினைவாக உள்ளது.</p><h2>வலியுறுத்தல்</h2><p>இத்தகைய துயரங்கள் இனி ஒருபோதும் நிகழாத வகையில், அனைத்து கல்வி நிலையங்களும் தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை முறையாகக் கடைப்பிடித்து, மாணவர்களின் உயிர் பாதுகாப்பை முதன்மையாகக் கருதி செயல்பட வேண்டும் என்பதை இந்த நாளில் வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 22-ஆம் ஆண்டு நினைவு நாளில், உயிரிழந்த 94 பிஞ்சுக் குழந்தைகளுக்கு ஆழ்ந்த இதய அஞ்சலிகள்.<br><br>தமிழக வரலாற்றில் என்றும் அழியாத பெருந்துயரமாகப் பதிந்த இந்தச் சம்பவம், பள்ளிகளில் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாதால் ஏற்படும் பேராபத்தின் கோர நினைவாக… <a href="https://t.co/FgpJ2Ska87">pic.twitter.com/FgpJ2Ska87</a></p>&mdash; Vanathi Srinivasan (@VanathiBJP) <a href="https://x.com/VanathiBJP/status/2077597772266795517?ref_src=twsrc%5Etfw">July 16, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>தங்கம் விலை குறைந்தது... இன்றைய நிலவரம் என்ன..?</title><link>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-drops-by-rs-240-per-sovereign-2</link><comments>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-drops-by-rs-240-per-sovereign-2#comments</comments><guid isPermaLink="false">4def3ffb-c110-4a88-b962-8213ec6fee63</guid><pubDate>Thu, 16 Jul 2026 04:23:48 +0000</pubDate><atom:updated>2026-07-16T04:23:48.586Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Gold Rate,தங்கம் விலை,வெள்ளி விலை,Silver rate,Gold Price,Silver Price,விலை நிலவரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/pne3sdnb/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/pne3sdnb/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தங்கம் (Gold Rate)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை, நேற்று உயர்ந்தது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.30-ம், சவரனுக்கு ரூ.240-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,180-க்கும், ஒரு சவரன் ரூ.1,05,440-க்கும் விற்பனை செய்யப்பட்டது. </p><p>இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,05,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.30 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.240-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>மதுரை அரசு மருத்துவ கல்லூரி விடுதியில் பெண் மருத்துவர் தற்கொலை - திருமணமான 5 மாதங்களில் விபரீத முடிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/female-doctor-commits-suicide-in-madurai-government-medical-college-hostel-tragic-end-5-months-after-marriage</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/female-doctor-commits-suicide-in-madurai-government-medical-college-hostel-tragic-end-5-months-after-marriage#comments</comments><guid isPermaLink="false">a5f59abb-1650-431a-a7a6-f1964b4d7641</guid><pubDate>Thu, 16 Jul 2026 03:45:46 +0000</pubDate><atom:updated>2026-07-16T03:45:46.846Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,தற்கொலை,doctor,மருத்துவ கல்லூரி,மருத்துவர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/y44mgnwa/Untitled-4.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/y44mgnwa/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் லாவண்யா (24 வயது). மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முடித்து பட்டம் பெற்ற நிலையில், தொடர்ந்து முதலாம் ஆண்டு முதுநிலை மருத்துவம் படித்து வந்தார். இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திவாகரன் என்பவருடன் திருமணம் நடந்தது.</p><p>நேற்று முன்தினம் மருத்துவ கல்லூரி விடுதியில் இருந்த அவர், நீண்டநேரம் தனது அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து கதவை உடைத்து பார்த்தபோது, அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது.</p><p>குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் இருப்பதாகவும், அது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை: அபாயகரமாக பைக் ஓட்டிய கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-2-college-students-arrested-for-dangerous-bike-riding</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-2-college-students-arrested-for-dangerous-bike-riding#comments</comments><guid isPermaLink="false">580e819b-25dc-45fb-8d11-c81d44447c64</guid><pubDate>Thu, 16 Jul 2026 03:31:05 +0000</pubDate><atom:updated>2026-07-16T03:31:05.464Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,2 arrested,2 பேர் கைது,கல்லூரி மாணவர்கள்,college students,அபாயம்,danger,பைக் ஓட்டுதல்,bike riding</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/66zvnuyg/3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/66zvnuyg/3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை ராயப்பேட்டை, கதீட்ரல் சாலையில் அபாயகரமாக பைக் ஓட்டிய <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கல்லூரி மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்</a>.</p><h2>பைக் சாகசத்தில் ஈடுபட்ட 2 கல்லூரி மாணவர்கள்</h2><p>சென்னை ராயப்பேட்டை, கதீட்ரல் சாலையில் மெரினா கடற்கரையை நோக்கி 2 பைக்குகளில் வாலிபர்கள் 2 பேர் சாகசம் என்ற பெயரில் அதிவேகமாகவும், அபாயகரமாகவும் சென்ற வீடியோ காட்சிகள் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வைரலானது. இதுதொடர்பாக மயிலாப்பூர் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தினர். </p><h2>கைது</h2><p>இந்த நிலையில் அதிவேகமாக பைக்குகளை ஓட்டிச் சென்றதாக சென்னை ஆயிரம்விளக்கை சேர்ந்த தணிகவேல் (வயது 19) என்பவரும், பூந்தமல்லியை சேர்ந்த சந்தோஷ்(19) என்பவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் கல்லூரி மாணவர்கள் ஆவார்கள். </p>]]></content:encoded></item><item><title>சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன் வினியோகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-token-distribution-at-sub-registrar-offices-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-token-distribution-at-sub-registrar-offices-today#comments</comments><guid isPermaLink="false">b4bad598-dae7-4349-ae72-605f5d72ef67</guid><pubDate>Thu, 16 Jul 2026 03:23:24 +0000</pubDate><atom:updated>2026-07-16T03:23:24.992Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பத்திரப்பதிவு,பத்திரப்பதிவு துறை,deed registration department,sub-registrar offices,சார்பதிவாளர் அலுவலகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/jrydqe1d/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/jrydqe1d/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பத்திரப்பதிவு அலுவலகங்களில் சுபமுகூர்த்த மற்றும் விசேஷ தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் பத்திரப் பதிவு, ஆவணப்பதிவுகள் நடைபெறும். இதையொட்டி அன்றையதினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.</p><p>இந்த நிலையில் நாளை (வெள்ளிக்கிழமை) ஆடி மாதம் பிறக்க உள்ளது. ஆடி மாதத்தில் பத்திரப்பதிவுகள் சற்று குறைவாகவே நடக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே ஆனி மாதத்தின் கடைசி நாளான இன்று (வியாழக்கிழமை ) அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>இதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலங்களிலும் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பத்திரப்பதிவு துறைக்கு சென்றுள்ளது.</p><p>அதன் அடிப்படையில் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும் கூடுதலாக வழங்கப்படும். மேலும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களில் 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களோடு, ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களோடு, கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட பத்திரப்பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>50 கிலோ எடை... மீனவர்கள் வலையில் சிக்கிய அரிய வகை ‘கொப்பரைக்குல்லா மீன்’</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/50-kg-weight-a-rare-species-of-kopparaikulla-fish-caught-in-fishermens-nets</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/50-kg-weight-a-rare-species-of-kopparaikulla-fish-caught-in-fishermens-nets#comments</comments><guid isPermaLink="false">0bc799c4-5e28-4ad5-8e0e-762f42bb5323</guid><pubDate>Thu, 16 Jul 2026 03:04:51 +0000</pubDate><atom:updated>2026-07-16T03:04:51.101Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மீனவர்கள்,Rameswaram,ராமேசுவரம்,Fish,மீன்,fisherman</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/h3jxihg9/CHENNAI-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/h3jxihg9/CHENNAI-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>ராமேசுவரம்,</p><p>ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் தெற்குவாடி துறைமுகத் தில் இருந்து நேற்று முன்தினம் 90 விசைப்படகுகளில் 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்த மீனவர்கள் அனைவரும் நேற்று காலை பல வகையான மீன்களுடன் கரை திரும்பினார்கள்.</p><p>இதில் ஒரு விசைப்படகில் அரிய வகையான 2 கொப்ப ரைக்குல்லா மீன்கள் சிக்கி இருந்தன. இதில் ஒரு மீன் சுமார் 50 கிலோ எடையுடனும், மற்றொரு மீன் 40 கிலோ எடையுடனும் இருந்தன. இதுகுறித்து மீனவர் ஒருவர் கூறும்போது, கொப்பரைக்குல்லா மீனானது மிக ஆழ்கடல் பகுதியில் இருக்கக்கூடியது. வலையில் சிக்குவது மிக அரிதாகும்.</p><p>ஆபத்தான மீனும் கூட, வலைகளில் சிக்கினால், தனது கூர்மையான அலகால் வலையை கிழித்துவிடும். கொப்பரைக்குல்லா மீன் குத்தி சில மீனவர்களின் கைகளில் படுகாயங்கள் ஏற்பட்டு உள்ளன. இந்த மீனை மயில் மீன் என்றும் அழைப்போம்" என கூறினார். இந்த கொப்பரைக்குல்லா மீன்களை, வியாபாரி ஒருவர் ரூ.16 ஆயிரத்துக்கு வாங்கிச்சென்றார்.</p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் இன்று மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-today-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-today-2#comments</comments><guid isPermaLink="false">9df5cea3-4dd6-4394-91d7-e9b9b1b6b22f</guid><pubDate>Thu, 16 Jul 2026 02:41:31 +0000</pubDate><atom:updated>2026-07-16T02:41:31.058Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,monthly maintenance work,power outage,தென்காசி,மாதாந்திர பராமரிப்பு பணி,மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/8kmr48f9/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/8kmr48f9/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p>திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், தென்காசி மாவட்டம், கடையநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட கடைநல்லூர் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணாக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மின்தடை</a> செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>கடையநல்லூர் கோட்டம்</h2><p>கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பக விநாயகர சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>கடையநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட கடையநல்லூர் துணை மின் நிலைய பகுதிகளில்  இன்று (16.7.2026, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பின்வரும் இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.</p><h2>காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை</h2><p>அதன்படி கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், பேட்டை, மாவடிக்கால், குமந்தாபுரம், முத்துச்சாமிபுரம், வலசை, கருப்பாநதி, தார்க்காடு, போகநல்லூர், கண்மணியாபுரம், பாலஅருணாச்சலபுரம், கம்பனேரி, மங்களபுரம், அச்சம்பட்டி, பொய்கை, ஊர் மேல் அழகியான், வேலாயுதபுரம், இடைகால், சிவராம்பேட்டை, கொடிக்குறிச்சி மற்றும் நயினாரகரம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை: மாணவனை சுத்தியால் தாக்கிய உடற்பயிற்சி ஆசிரியர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-gym-teacher-arrested-for-attacking-student-with-hammer</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-gym-teacher-arrested-for-attacking-student-with-hammer#comments</comments><guid isPermaLink="false">4acd0394-9f98-4e8a-88a7-b1232b82708a</guid><pubDate>Thu, 16 Jul 2026 02:22:27 +0000</pubDate><atom:updated>2026-07-16T02:22:27.127Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தாக்குதல்,Chennai,சென்னை,attack,gym,பள்ளி மாணவன்,school student,உடற்பயிற்சி,Teacher Arrested,ஆசிரியர் கைது,சுத்தியல்,Hammer</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/7u7cpmiz/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உடற்பயிற்சி ஆசிரியர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/7u7cpmiz/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை ஜெ.ஜெ.நகரில் உள்ள தனியார் பள்ளியில்  6-ம் வகுப்பு படிக்கும் மாணவனை சுத்தியால் தாக்கிய <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">உடற்பயிற்சி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்</a>.</p><h2>6-ம் வகுப்பு மாணவன் மீது சுத்தியால் தாக்குதல்</h2><p>சென்னை ஜெ.ஜெ.நகரில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் 11 வயது மாணவனை, உடற்பயிற்சி ஆசிரியர் உலோக சுத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மாணவனின் கை எலும்பு முறிவடைந்து, ரத்தக் கசிவும் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.</p><h2>உடற்பயிற்சி ஆசிரியர் கைது</h2><p>இது தொடர்பாக அந்த மாணவனின் தாயார் அளித்த புகாரின்பேரில், ஜெ.ஜெ.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடற்பயிற்சி ஆசிரியர் நவீன் ஜூட் கோனே (வயது 45) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் இன்று மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-thoothukudi-today-3</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-thoothukudi-today-3#comments</comments><guid isPermaLink="false">08e450c2-bcb2-441f-9670-1d6bfdcc652d</guid><pubDate>Thu, 16 Jul 2026 02:02:52 +0000</pubDate><atom:updated>2026-07-16T02:02:52.235Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,monthly maintenance work,power outage,மாதாந்திர பராமரிப்பு பணி,மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/evgu72dq/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/evgu72dq/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி பீச்ரோடு துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மின்தடை</a> ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை</h2><p>இதுகுறித்து தூத்துக்குடி நகர் கோட்ட மின்பகிர்மான வட்டச் செயற்பொறியாளர் சின்னத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  </p><p>தூத்துக்குடி நகர் கோட்டத்திற்குட்பட்ட பீச்ரோடு துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இன்று (16.7.2026, வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.</p><h2>மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்</h2><p>இனிகோநகர், ரோச்சு காலனி, சகாயபுரம், மினிசகாயபுரம், மாதா தோட்டம், கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிலையம், தெற்கு பீச்ரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள உப்பளப் பகுதிகள், லயன்ஸ்டவுன், தெற்கு காட்டன் ரோடு, சுனோஸ்காலனி, செயின்ட் பீட்டர் கோவில் தெரு, தெற்கு எம்பயர் தெரு, மணல் தெரு, பெரெயரா தெரு, விக்டோரியா தெரு, பெரிய கடைதெரு, ஜார்ஜ் ரோடு, கணேசபுரம், </p><p>பாத்திமாநகர், இந்திராநகர், புல் தோட்டம், டெலிபோன் காலனி, தாமஸ்நகர், பனிமயநகர், தாமோதரநகர், வண்ணார் தெரு, பெருமாள் தெரு, சிவந்தாகுளம் ரோடு, சண்முகபுரம், பிராப்பர், சந்தை ரோடு, காந்திநகர், மேலசண்முகபுரம் 2-வது தெரு, CGE காலனி, லெவிஞ்சிபுரம், பக்கீள்புரம், லோகியாநகர், ராஜபாண்டிநகர், பெரியசாமிநகர், எம்.ஜி.ஆர்.நகர், முடுக்குக்காடு ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும். எனவே இந்த பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த மின்தடை நேரத்தை கருத்தில் கொண்டு தங்களது மின் தேவைகளைத் திட்டமிட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>ரூ.1.30 லட்சம் லஞ்சம் வாங்கிய த.வெ.க. ஊராட்சி தலைவர் கைது.. கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-panchayat-president-arrested-for-accepting-a-bribe-of-rs-130-lakh-removed-from-party-posts</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-panchayat-president-arrested-for-accepting-a-bribe-of-rs-130-lakh-removed-from-party-posts#comments</comments><guid isPermaLink="false">534c8634-f1d1-4df7-a84d-78fb3b0a2621</guid><pubDate>Thu, 16 Jul 2026 01:58:53 +0000</pubDate><atom:updated>2026-07-16T01:58:53.566Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,கைது,arrest,Chengalpattu,செங்கல்பட்டு,லஞ்சம்,bribe,Panchayat president,திருப்போரூர்,Thiruporur,ஊராட்சி தலைவர்,மாம்பாக்கம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/5f9bd3kk/vara.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/5f9bd3kk/vara.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்போரூர். </p><p>ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் லஞ்சம் வாங்கியது தொடர்பாக <a href="https://www.dailythanthi.com/topic/tvk">த.வெ.க.</a> ஊராட்சி தலைவர் கைது செய்யப்பட்டார். அவர் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்.</p><h2>சாலைப்பணிகள்</h2><p>செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் மாம்பாக்கம் ஊராட்சி தலைவராக த.வெ.க.வை சேர்ந்த வீராசாமி உள்ளார். மேலும் அந்த கட்சியின் கிழக்கு மாவட்ட இணைச்செயலாளராகவும் உள்ளார். மாம்பாக்கம் ஊராட்சியில் சாலைப்பணிகளை மேற்கொண்ட ஊராட்சி ஒன்றிய ஒப்பந்ததாரர் நவீன் பணிகளை முடித்தும் அதற்கான தொகை அவருக்கு வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. தொகையை விடுவிக்க நவீன் மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வீராசாமியை அணுகினார்.</p><h2>லஞ்சம்</h2><p>அவரிடம் வீராசாமி ஒரு குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக கேட்டுள்ளார். இதையடுத்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கொடுக்க ஒப்புக்கொண்ட நவீன் 2 முறை தனித்தனியாக ரூ.50 ஆயிரத்தை ஊராட்சிமன்ற தலைவருக்கு யு.பி.ஐ. செயலி மூலம் அனுப்பி உள்ளார்.</p><p>அதன்பிறகு மேலும் ரூ.30 ஆயிரத்தை ஊராட்சி மன்ற தலைவரின் தனி அலுவலகத்துக்கு சென்று நவீன் வழங்கியுள்ளார். அதை வாங்கிய ஊராட்சிமன்ற தலைவர் வீராசாமி அங்கு இருந்த பெண் ஒருவரிடம் கொடுக்கிறார். பிறகு உனது பில் பாஸ் ஆகிவிடும் என்று ஊராட்சி மன்ற தலைவர் வீராசாமி நவீனிடம் சொல்கிறார்.</p><h2>வீடியோ வெளியாகி பரபரப்பு</h2><p>இவை அனைத்தையும் காண்டிராக்டர் நவீன் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இந்த வீடியோ விவகாரம் குறித்து ஊராட்சி மன்ற தலைவர் வீராசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-</p><p>நவீனை எனக்கு நன்றாக தெரியும். கடனாக வாங்கிய பணத்தை தான் எனக்கு திருப்பி கொடுத்தார். லஞ்சம் வாங்குகிறவர்கள் யாராவது தன்னுடைய சொந்த கணக்கில் ஜி.பே. மூலம் வாங்க மாட்டார்கள். ஆபீசுக்கு வரவழைத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி வாங்கி இருந்தால் வெளியில் யார்கிட்டயாவது கொடுக்க சொல்லி வாங்கி இருக்கலாம். முதல்-அமைச்சர் விஜய் மற்றும் த.வெ.க.வுக்கு அவப்பெயரை ஏற்படுத்த அவதூறு பரப்பி வருகின்றனர். என் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் சிலர் பின்னால் இருந்து செயல்படுகிறார்கள். வழக்கில் வெற்றி பெற்று தலைவராக மீண்டும் பதவி ஏற்பதற்கு முன்பே டெண்டர் விடப்பட்டு இந்த பணிகள் நடைபெற்றுள்ளது. நான்தான் அவரை என்னுடைய அலுவலகத்துக்கு வர சொன்னேன்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><h2>மீண்டும் ஊராட்சி தலைவராக</h2><p>மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வீராசாமி மீது கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஊராட்சி வார்டு உறுப்பினர்களால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று அப்போதைய மாவட்ட கலெக்டர், வீராசாமியை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.</p><p>இதை எதிர்த்து வீராசாமி சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் மாவட்ட கலெக்டரின் உத்தரவுக்கு தடை வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த மே மாதம் 18-ந்தேதி திருப்போரூர் த.வெ.க. எம்.எல்.ஏ. விஜயராஜ் முன்னிலையில் வீராசாமி மீண்டும் ஊராட்சி தலைவராக பொறுப்பேற்று கொண்டது குறிப்பிடத்தக்கது.</p><h2>கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கம்</h2><p>இந்த நிலையில் த.வெ.க. செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் தினகரன் என்ற தீனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>த.வெ.க.வுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணைச்செயலாளராக பதவி வகித்து வந்த வீரா என்ற வீராசாமி கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் பொறுப்புகளிலில் இருந்து நீக்கப்படுகிறார்.</p><p>இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p> <h2>கைது</h2><p>ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் லஞ்சம் வாங்கியது தொடர்பாக ஒப்பந்ததாரர் நவீன் தாழம்பூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீராசாமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மணலியில் 500 மரக்கன்றுகள் நடும் விழா: மத்திய மந்திரி சுரேஷ் கோபி தொடங்கி வைத்தார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/plantation-of-500-saplings-in-manali-union-minister-suresh-gopi-inaugurated</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/plantation-of-500-saplings-in-manali-union-minister-suresh-gopi-inaugurated#comments</comments><guid isPermaLink="false">fe8e8916-acec-4e21-a1d2-862153a8f69e</guid><pubDate>Thu, 16 Jul 2026 01:37:33 +0000</pubDate><atom:updated>2026-07-16T01:37:33.122Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மணலி,Suresh Gopi,inaugurated,Union Minister,மரக்கன்றுகள் நடும் விழா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/ig7er8v9/240.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மந்திரி சுரேஷ் கோபி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/ig7er8v9/240.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவொற்றியூர், </p><p>சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (சி.பி.சி.எல்.) நிறுவனம் சார்பில், மணலி அருகே உள்ள ஆமுல்லைவாயல் கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. </p><p>நிகழ்ச்சிக்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை மத்திய இணை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF">மந்திரி சுரேஷ்கோபி</a> தலைமை தாங்கி, மரக்கன்று நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். </p><h2>பங்கேற்பு</h2><p>இதில் ஒரே நேரத்தில் சுமார் 500 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் தொழிற்சாலை ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனர். இதில் டாக்டர் கலாநிதி வீராசாமி எம்.பி., சி.பி.சி.எல். மேலாண்மை இயக்குனர் சங்கர், செந்தில்குமார் எம்.எல்.ஏ., சி.பி.சி.எல். இயக்குனர்கள் ரோஹித் குமார், கண்ணன், வெங்கடேஷ், இந்து பத்திரிகை குழும தலைமை செயல் அதிகாரி நவநீத், மணலி மண்டல குழு தலைவர் ஏ.வி. ஆறுமுகம், மாநகராட்சி கவுன்சிலர் முல்லை ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>நாகர்கோவில் சிறையில் வியாபாரி அடித்துக் கொலை: கைதிகள் 8 பேர் அதிரடி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/businessman-beaten-to-death-in-nagercoil-prison-8-inmates-arrested-in-action</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/businessman-beaten-to-death-in-nagercoil-prison-8-inmates-arrested-in-action#comments</comments><guid isPermaLink="false">94ae67e3-dac9-4242-bfeb-99bd94850d49</guid><pubDate>Thu, 16 Jul 2026 01:30:01 +0000</pubDate><atom:updated>2026-07-16T01:30:01.690Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,Nagercoil,நாகர்கோவில்,Kanyakumari,சிறை,கைதிகள்,prisoners,அடித்துக் கொலை,Prison,வியாபாரி,trader,beaten to death,8 பேர் கைது,8 people arrested</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/ameryckv/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வியாபாரி சபரிவர்மன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/ameryckv/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாகர்கோவில், </p><p>கன்னியாகுமரி மாவட்டம், <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நாகர்கோவில் சிறையில் வியாபாரி சபரிவர்மன் அடித்துக் கொலை</a> செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதிகள் 8 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. </p><h2>நாகர்கோவில் சிறையில் வியாபாரி உயிரிழப்பு</h2><p>கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே உள்ள வடக்கு தாமரைகுளம் ஈத்தங்காடு பகுதியை சேர்ந்தவர் சபரிவர்மன் (வயது 33). மாற்றுத்திறனாளியான அவர் தனது வீட்டின் அருகே பெட்டிக்கடை நடத்தி வந்தார். இந்த கடையில் கடந்த 9-ந்தேதி தென்தாமரைகுளம் போலீசார் நடத்திய சோதனையில், தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சோதனையில் 3-வது முறையாக சபரிவர்மன் சிக்கியதால், அவரை போலீசார் கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி காலை, சபரிவர்மன் சிறையில் உயிரிழந்து விட்டதாக அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. </p><h2>போலீசார் மீது குற்றச்சாட்டு</h2><p>சபரிவர்மன் இறந்த தகவல் அறிந்து அவரது மனைவி ஆனந்தவல்லி மற்றும் உறவினர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துமனையில் திரண்டனர். அவர்கள் சபரிவர்மன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை போலீசார் அடித்துக்கொன்று விட்டதாகவும் குற்றம்சாட்டினர். அவரது சாவுக்கு காரணமானவர்களின் மீது நடவடிக்கை எடுக்கும் வரை சபரிவர்மனின் உடலை வாங்கமாட்டோம் என்று கூறி போராட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. </p><h2>சிறையில் அடித்துக்கொலை</h2><p>இதற்கிடையில் சபரிவர்மன் இறந்தது குறித்து நாகர்கோவில் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு சத்தியமூர்த்தி விசாரித்தார். பின்னர் நாகர்கோவில் சிறைக்கு சென்று சிறைக்காவலர்கள் மற்றும் மற்ற கைதிகளிடமும் விசாரணை மேற்கொண்டார். அது மட்டுமின்றி கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலினும் நாகர்கோவில் சிறைக்குள் சென்று விசாரணை நடத்தினார். </p><h2>சபரிவர்மனின் உடலில் 19 இடங்களில் காயங்கள்</h2><p>இந்த நிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் நடந்த பிரேத பரிசோதனையில் சபரிவர்மனின் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் சிறைக்குள் வைத்து அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது. அதன்பேரில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, நாகர்கோவில் சிறையின் முதன்மை வார்டரான நெல்லை மாவட்டம், களக்காட்டை சேர்ந்த திருமலைநம்பி, வார்டர்களான தேங்காபட்டணத்தை சேர்ந்த ஜெகன், சாமியார்மடத்தை சேர்ந்த சிவகுமார் ஆகியோரை கைது செய்தனர். </p><h2>பரபரப்பு தகவல்கள்</h2><p>அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கடந்த 12-ந்தேதி இரவு சிறையில் சபரிவர்மனுக்கும், சக கைதிகள் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கைதிகள் அவரை தாக்கி உள்ளனர். மேலும் சபரிவர்மனின் கை, கால்களை கட்டிவைத்து சிறை வார்டர்களும், கைதிகளும் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதில் உடல் முழுவதும் பலத்த காயம் அடைந்து மயங்கி கிடந்த சபரிவர்மனை சிறைக்காவலர்கள் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.</p><h2>8 கைதிகள் அதிரடி கைது</h2><p>இதையடுத்து வார்டர்களுடன் சேர்ந்து சபரிவர்மனை தாக்கிய கைதிகள் யார்? என்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவரை தாக்கியது கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைகடை பகுதியை சேர்ந்த விஷ்ணு (வயது 21), ராஜாக்கமங்கலம்துறை சுனாமி காலனியை சேர்ந்த சாரதி(19), திற்பரப்பு நகராண்டிவிளை பகுதியை சேர்ந்த ஜெகன்(40), செங்கொடி முதலியார்குட்டிவிளையை சேர்ந்த சரத்(20), நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியை சேர்ந்த வெரியபெருமாள்(36), இரணியல் கீழத்தெருவை சேர்ந்த சேதுராம்(30), கொட்டாரம் பகுதியை சேர்ந்த அஜித்(29) மற்றும் அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த அரவிந்த்(27) ஆகிய 8 கைதிகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களின் மீதும் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்ததோடு 8 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் சபரிவர்மன் கொலை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்று கைது செய்யப்பட்டிருக்கும் வார்டர்கள் மற்றும் கைதிகளிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். </p><h2>உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு</h2><p>சபரிவர்மனின் மரணத்திற்கு நீதி கேட்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் உரிய நிவாரணம் வழங்கக் கோரிக்கை விடுத்தும் வருகிறார்கள். அதனை வலியுறுத்தி வியாபாரி சபரிவர்மனின் உடலை பெற்றுக்கொள்ள மறுத்து உறவினர்கள் நேற்று 3-வது நாளாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஏராளமானோர் திரண்டனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியினரும் திரண்டனர். இதற்கிடையே கைதான சிறை வார்டர்கள் 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். </p><figure><img alt="கபடி வீரர் லிங்கம்" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/r1dqd1em/Untitled-3.jpg" /></figure><h2>அன்று லிங்கம்... இன்று சபரிவர்மன்...</h2><p>கன்னியாகுமரியை சேர்ந்த கபடி வீரர் லிங்கம். தாதாவாக வலம் வந்த அவர், கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு 1995-ம் ஆண்டு, ஜூலை 30-ந்தேதி நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். கடந்த 1996-ம் ஆண்டு, ஏப்ரல் 9-ந்தேதி நள்ளிரவு, சிறையின் சுவர் மீது ஏணி போட்டு ஏறிய 30-க்கும் மேற்பட்ட கும்பல், சிறை வளாகத்திற்குள் குதித்தனர். ஆயுதங்களுடன் புகுந்த அந்த கும்பல் தங்களை தடுக்க முயன்ற சிறை காவலர்களை அரிவாளால் வெட்டியது. பின்னர் ஒரு சிறை அறைக்குள் நுழைந்து, அங்கிருந்த லிங்கத்தை சரமாரியாக வெட்டி கொன்றது. சிறைக்குள் அரங்கேறிய இந்த சம்பவம் அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. </p><h2>30 ஆண்டுகளுக்குப் பிறகு...</h2><p>அதன்பிறகு ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது, விசாரணை கைதியாக நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சபரிவர்மன் சிறைக்குள் வைத்து சக கைதிகளால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். 30 ஆண்டுகளுக்கு பிறகு நாகர்கோவில் சிறையில் நடந்த இந்த சம்பவமும் தமிழகத்தை அதிர வைத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நிச்சயம் செய்துவிட்டு திருமணத்துக்கு மறுத்ததால் ஆத்திரம்: நர்சிங் மாணவிக்கு வெட்டு; தடுக்க வந்த தாய் கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/enraged-by-the-engagement-but-refused-to-marry-nursing-student-hacked-to-death-mother-killed-to-stop-her</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/enraged-by-the-engagement-but-refused-to-marry-nursing-student-hacked-to-death-mother-killed-to-stop-her#comments</comments><guid isPermaLink="false">1cad8a54-100f-4435-a832-08fc7447ea60</guid><pubDate>Thu, 16 Jul 2026 01:29:47 +0000</pubDate><atom:updated>2026-07-16T01:29:47.308Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Virudhunagar,விருதுநகர்,அரிவாள் வெட்டு,கொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/9j2xenve/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/9j2xenve/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர்,</p><h2>நிச்சயதார்த்தம்</h2><p>விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா கல்குறிச்சியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் மதுரையில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி விநாயக ஜோதி (45 வயது). இவர்களுடைய மகள்கள் வர்ஷா (21 வயது), வைஷ்ணவி (19 வயது). இவர்கள் இருவரும் மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் நர்சிங் படித்து வந்தனர்.</p><p>முத்துக்குமாரின் அக்கா பாசவலை என்பவருடைய மகன் யுவராஜா (35 வயது). மதுரையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் முத்துக்குமாரின் மகள் வர்ஷாவுக்கும், யுவராஜாவுக்கும் 2 மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில் திடீரென யுவராஜாவை திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று வர்ஷா கூறியதாக தெரிய வருகிறது.</p><h2>அரிவாள் வெட்டு</h2><p>நேற்று காலை காலை 8 மணியளவில் வர்ஷா மட்டும் வீட்டில் துணி துவைத்து கொண்டு இருந்தார். அப்போது, யுவராஜா வீட்டுக்குள் புகுந்தார். திருமணம் செய்ய மறுத்த ஆத்திரத்தில் வர்ஷாவிடம் பேசியதுடன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த வர்ஷா அலறினார். அந்த நேரத்தில், வீட்டுக்குள் இருந்த அவருடைய தாய் விநாயக ஜோதி மகள் வெட்டப்படுவதை பார்த்து தடுக்க முயன்றார்.</p><h2>தாய் உயிரிழப்பு</h2><p>உடனே யுவராஜா, இந்த பிரச்சினைக்கு எல்லாம் நீதான் காரணம்? எனக்கூறி விநாயக ஜோதியையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விநாயக ஜோதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு போராடிய வர்ஷாவை மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.</p><p>இதற்கிடையே யுவராஜா, அரிவாளுடன் மல்லாங்கிணறு போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பயணிகள் கவனத்திற்கு... சென்னையில் நாளை 8 மின்சார ரெயில்கள் ரத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/attention-passengers-8-electric-trains-cancelled-in-chennai-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/attention-passengers-8-electric-trains-cancelled-in-chennai-tomorrow#comments</comments><guid isPermaLink="false">c857c5cc-f74c-404c-a28a-25587b58021d</guid><pubDate>Thu, 16 Jul 2026 01:23:28 +0000</pubDate><atom:updated>2026-07-16T01:23:28.563Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,தெற்கு ரெயில்வே,Southern Railway,மின்சார ரெயில்,electric train,Chennai Electric Train</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/25v1e4v7/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/25v1e4v7/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் கூடுவாஞ்சேரி பணிமனையில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, நாளை இந்த வழித்தடத்தில் 8 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.</p><p>அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து நாளை காலை 11.28, மதியம் 12.02, 12.30, 1.45 ஆகிய நேரங்களில் செங்கல்பட்டுக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து மதியம் 1.35, 2.15, 3 மணி, 4.25 ஆகிய நேரங்களில் கடற்கரை செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படும்.</p><p>பயணிகளின் வசதிக்காக கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு காலை 11.28, மதியம் 12.02, 12.30, 1.45 ஆகிய நேரத்திலும், தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு மதியம் 2.30, 3.15, 4 மணி, 5.24 ஆகிய நேரத்திலும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்படுமா? - ஐகோர்ட்டு கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-reservation-be-provided-to-the-third-gender-in-government-employment-high-court-question</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-reservation-be-provided-to-the-third-gender-in-government-employment-high-court-question#comments</comments><guid isPermaLink="false">caa65d3a-8331-4ea0-b119-27d3539ea6a9</guid><pubDate>Thu, 16 Jul 2026 01:11:39 +0000</pubDate><atom:updated>2026-07-16T01:11:39.492Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,High Court,Reservation,அரசு வேலைவாய்ப்பு,இடஒதுக்கீடு,மூன்றாம் பாலினத்தவர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/8invphsq/chennai-highcourt.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஐகோர்ட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/8invphsq/chennai-highcourt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மூன்றாம் பாலினத்தவர்களை சமூக, கல்வி ரீதியாக பின்தங்கியவர்களாகவும், சிறப்புப் பிரிவினராகவும் கருதி. பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தோர் உள்ளிட்டோருக்கான இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்காமல், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சென்னை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81#google_vignette">ஐகோர்ட்டு</a> தனி நீதிபதி கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.</p><h2>விசாரணை</h2><p>இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், என். செந்தில்குமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அதனுடன் மூன்றாம் பாலினத்தவருக்கு தனி இடஒதுக்கீடு வழங்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. </p><h2>உத்தரவு</h2><p>அப்போது, கர்நாடகாவில் சீவில் சர்வீசஸ் மற்றும் அரசு வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஒரு சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதே நடைமுறையை தமிழ்நாட்டிலும் பின்பற்றலாம் என்றும், மூன்றாம் பாலினத்தவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாட்டில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சீவில் சர்வீஸ் மற்றும் அரசு வேலைவாய்ப்பில் ஒன்று அல்லது இரண்டு சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்கப்படுமா? என்பது குறித்து வருகிற ஆகஸ்டு 4-ந்தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-cabinet-to-meet-today-under-the-leadership-of-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-cabinet-to-meet-today-under-the-leadership-of-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">8528a637-d467-456c-9efa-26ab0ddd22f6</guid><pubDate>Thu, 16 Jul 2026 00:57:46 +0000</pubDate><atom:updated>2026-07-16T00:57:46.883Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,election manifesto,பட்ஜெட்,தேர்தல் வாக்குறுதி,TN Cabinet,Tamil Nadu cabinet meeting,தமிழக அமைச்சரவை கூட்டம்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/u1dbcntw/CHENNAI-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/u1dbcntw/CHENNAI-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது.</p><h2>தமிழக பட்ஜெட்</h2><p>தமிழகத்தில் த.வெ.க. அரசு ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், இம்மாத இறுதியில் 2026-2027-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறது. த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் என்பதால், பொதுமக்களை கவரும் வகையிலான திட்டங்கள், அறிவிப்புகள் இதில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>தற்போது, பட்ஜெட் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வருகிற 22-ந் தேதி வரை துறை வாரியாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். பட்ஜெட்டில் த.வெ.க. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் இடம்பெறும் என்று தெரிகிறது.</p><h2>அமைச்சரவை கூட்டம்</h2><p>இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள் குறித்தும், புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.</p><p>அத்துடன், புதிய திட்டங்கள் தொடங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இதில் பல்வேறு முக்கிய தொழில் திட்டங்களுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் ரூ.11 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல்: 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/counterfeit-notes-worth-rs-11-lakh-seized-in-chennai-2-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/counterfeit-notes-worth-rs-11-lakh-seized-in-chennai-2-arrested#comments</comments><guid isPermaLink="false">a8822c10-3166-4e8d-8540-ae19844c556b</guid><pubDate>Wed, 15 Jul 2026 21:44:01 +0000</pubDate><atom:updated>2026-07-15T21:44:01.992Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,திருவல்லிக்கேணி,Thiruvallikeni</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/rvzjcsjy/Untitled-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/rvzjcsjy/Untitled-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தங்கும் விடுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.11 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ளநோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>திடீர் சோதனை</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">திருவல்லிக்கேணியில் </a>உள்ள ஒரு விடுதியில் 500 ரூபாய் கள்ளநோட்டுகளை கத்தை கத்தையாக பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில், திருவல்லிக்கேணி இன்ஸ்பெக்டர் ரஜினிஸ் தலைமையிலான தனிப்படை போலீசார் விடுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.</p><p>அப்போது, அறை ஒன்றில் தங்கியிருந்த திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஷபீக் ரகுமான் (37) என்பவரின் கட்டில் மெத்தைக்கு அடியில் கத்தை கத்தையாக 500 ரூபாய் கள்ளநோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் எண்ணிப் பார்த்ததில், மொத்தம் ரூ.11 லட்சம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஷபீக் ரகுமான் கைது செய்யப்பட்டார்.</p><h2>கள்ளநோட்டுகள் பறிமுதல்</h2><p>அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த கள்ளநோட்டு கும்பலின் முக்கிய நபராக தஞ்சாவூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (40) செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து தஞ்சாவூரில் அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.22.79 லட்சம் மதிப்பிலான உண்மையான 500 ரூபாய் நோட்டுகள் மற்றும் 4 பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.</p><p>கைது செய்யப்பட்ட இருவரிடமும் சென்னை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளநோட்டுகள் எங்கிருந்து கிடைத்தன, இந்த கும்பலுக்கு பின்னால் வேறு யாரெல்லாம் உள்ளனர் என்பதையும், இவர்கள் பண இரட்டிப்பு மோசடி கும்பலுடன் தொடர்புடையவர்களா <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">என்பதையும் </a>போலீசார் விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>அமைச்சர் ரமேஷ் குறித்து அவதூறு பரப்பியவர் கைது! - மேலும் 2 பேருக்கு வலைவீச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/person-arrested-for-spreading-defamatory-remarks-about-minister-ramesh-manhunt-on-for-two-others</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/person-arrested-for-spreading-defamatory-remarks-about-minister-ramesh-manhunt-on-for-two-others#comments</comments><guid isPermaLink="false">344532c7-77ec-4439-be88-a31f3708f04c</guid><pubDate>Wed, 15 Jul 2026 19:58:18 +0000</pubDate><atom:updated>2026-07-15T19:58:18.947Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,அவதூறு,அவதூறு பதிவு,Minister ramesh,அமைச்சர் ரமேஷ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/ron9a4cg/Untitled-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/ron9a4cg/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பழனி முருகன் கோவில் நில முறைகேடு வழக்கில், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷை இணைத்து சமூக வலைதளங்களில் சிலர் அவதூறு கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.</p><h2>ஒருவர் கைது</h2><p>இதுதொடர்பாக அமைச்சர் ரமேஷின் உதவியாளர், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் 3 சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.</p><p>விசாரணையில் அவதூறு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தகவல்களை </a>பரப்பியது, 3 பேர் என்று தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p>இதனையடுத்து, போலீசார் நேற்று இரவு வினோத் சூர்யகுமார் (வயது 33) என்பவரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் பல்வேறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - அரசு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/transfer-of-various-ias-officers-in-tamil-nadu-government-order</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/transfer-of-various-ias-officers-in-tamil-nadu-government-order#comments</comments><guid isPermaLink="false">6f99a83f-f8d4-4162-b91d-86200fe6d13f</guid><pubDate>Wed, 15 Jul 2026 18:13:56 +0000</pubDate><atom:updated>2026-07-15T18:13:56.912Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழ்நாடு,Transfer,IAS Officers,IAS,தமிழக அரசு உத்தரவு,ஐ.ஏ.எஸ்.,ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்,ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்,Tamil Nadu Government Order</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/vse9t190/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/vse9t190/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் தலைமைச் செயலாளராக இருக்கும் பிரதீப் யாதவ், இடமாற்றம் செய்யப்பட்டு அதுல் ஆனந்திற்கு பதிலாக நுண், சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.</p><p>அதுல் ஆனந்த் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தீரஜ்குமார் இடமாற்றம் செய்யப்பட்டு, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">உயர்கல்வித் </a>துறையின் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.</p><p>பொது மற்றும் மறுவாழ்வுத் துறையின் அரசின் செயலாளராக இருக்கும் காகர்லா உஷா, இடமாற்றம் செய்யப்பட்டு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.</p><p>பொது மற்றும் மறுவாழ்வுத் துறையின் சிறப்புச் செயலாளராக இருக்கும் சுந்தரவல்லி, இடமாற்றம் செய்யப்பட்டு, காகர்லா உஷாக்குப் பதிலாக, பொது மற்றும் மறுவாழ்வுத் துறையின் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.</p><p>தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநராக இருக்கும் நிர்மல் ராஜ், இடமாற்றம் செய்யப்பட்டு, வள்ளாலாருக்குப் பதிலாக, போக்குவரத்துத் துறையின் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.</p><p>தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக இருந்த உமாநாத், தொழில்துறை ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநராக நியமிக்கப்படுகிறார்.</p><p>தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன ஆணையராக சுப்ரியா சாஹூ நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவராக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ராதாகிருஷ்ணனுக்குப் </a>பதிலாக அருண் ராய் நியமனம்.</p><p>ராதாகிருஷ்ணன் அண்ணா நிர்வாக கல்லூரி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்து அறநிலையத்துறையின் ஆணையராக ரத்னா நியமிக்கப்பட்டுள்ளார்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/d28uh72y/Untitled-9.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>ரூ.1.30 லட்சம் லஞ்ச புகார்: தவெக முன்னாள் நிர்வாகி வீராசாமி கைது!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-130-lakh-bribery-complaint-former-tvk-functionary-veerasamy-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-130-lakh-bribery-complaint-former-tvk-functionary-veerasamy-arrested#comments</comments><guid isPermaLink="false">84e8c519-4b77-4ebe-a247-a8c1c04aba0c</guid><pubDate>Wed, 15 Jul 2026 17:40:16 +0000</pubDate><atom:updated>2026-07-15T17:40:16.733Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Chennai,சென்னை,arrested,Chengalpattu,செங்கல்பட்டு,bribery case,லஞ்ச புகார்,தவெக நிர்வாகி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/j14na8rp/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/j14na8rp/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>செங்கல்பட்டு,</p><p>சாலை ஒப்பந்ததாரரிடம் ரூ.1.30 லட்சம் லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், தவெக முன்னாள் நிர்வாகி வீராசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>வீடியோ ஆதாரம்</h2><p>சாலை அமைக்கும் பணிக்கான நிலுவைத் தொகை பில்லை விடுவிக்க ரூ.1.30 லட்சம் லஞ்சம் பெற்றதாக வீராசாமி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வீடியோ ஆதாரங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.</p><p>இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, வீராசாமி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டார்.</p><h2>முன்னாள் நிர்வாகி கைது</h2><p>இதனிடையே, சாலை ஒப்பந்ததாரர் நவீன், தாழம்பூர் காவல் நிலையத்தில், வீராசாமி தன்னை மிரட்டி ரூ.1.30 லட்சம் பணம் பெற்றதாக புகார் தெரிவித்தார். </p><p>இந்தப் புகாரின் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அடிப்படையில் </a>வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், வீராசாமியை கைது செய்தனர். பின்னர், அவரை செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், வீராசாமியை ஜூலை 29ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டது.</p>]]></content:encoded></item><item><title>பழனி முருகன் கோவில் நில முறைகேடு: சிபிஐ விசாரணை வேண்டும் - எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-murugan-temple-land-irregularities-cbi-probe-needed-edappadi-palaniswami</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-murugan-temple-land-irregularities-cbi-probe-needed-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">c7854fa6-ba89-4253-9d13-22c11c3c877d</guid><pubDate>Wed, 15 Jul 2026 17:08:16 +0000</pubDate><atom:updated>2026-07-15T17:08:16.589Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,எடப்பாடி பழனிசாமி,அதிமுக,Edappadi Palaniswami</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/ksqnu05b/8.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/ksqnu05b/8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான கோவில் நிலம், வெறும் ரூ. 2 கோடி மதிப்பிற்கு தனியார் பெயருக்கு மாற்றப் பட்டிருப்பது என்பது ஏதோ Clerical Error போல இந்த பொய்க்கால் குதிரை அரசு கடக்க முயல்வது ஏற்புடையதல்ல.</p><h2>மிகப்பெரிய ஊழல்</h2><p>தவறு நடந்திருப்பதை அமைச்சரே ஒப்புக்கொண்டு இருப்பதால், இது மிகப்பெரிய ஊழல்! இந்த பத்திரப் பதிவு குறித்த விவரங்கள் ஏன் பொதுவெளியில் வரவில்லை? யார் பெயரில் இந்த நிலம் மாற்றப்பட்டது? அந்த நபர் இந்த வழக்கில் குற்றவாளி இல்லையா?</p><p>இவ்வளவு பெரிய ஊழல், அதுவும் பழனி முருகப் பெருமானின் சொத்தையே வளைத்து போடும் நோக்கத்தில் நடந்திருக்கிறது. இவ்வளவு பெரிய பத்திரப் பதிவு நடக்கிறது என்றால், அதை ஏதோ ஒரு Powercenter தான் முன்னின்று இதற்கான உத்தரவுகளை கொடுத்திருக்க வேண்டும். தனது ஆட்சியில் தான் மட்டுமே Powercenter என்று சொன்ன முதல்-அமைச்சரே, இந்த ஊழலில் பின்னால் யார் அந்த Powercenter?</p><h2>சிபிஐ விசாரணை</h2><p>அதுவும், முதலில் ஒரு சார்பதிவாளர் இதனை பதிவு செய்ய இயலாது என மறுத்த நிலையில், அவர் மாற்றப்பட்டு, வேறு ஒரு அதிகாரி நியமிக்கப்பட்ட பிறகு இந்த பத்திரப் பதிவு நடைபெற்றது என்றால், இந்த பத்திரப் பதிவிற்காக தான் புதிய அதிகாரியே வந்தாரா? அந்த அளவிற்கு அதிகாரியையே மாற்றி காரியத்தை முடிக்கும் அளவிற்கு யார் அந்த Powercenter?</p><p>இதனை மாநில அரசின் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கட்டுப்பாட்டில் </a>உள்ள சிபிசிஐடி (CBCID) விசாரிப்பது என்பது, இந்த கேள்விகளுக்கு உண்மையான பதிலைத் தராது. நேர்மையான விசாரணை நடைபெற, பழனி முருகன் கோவில் சொத்து முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க உடனடியாக இந்த அரசு மாற்றிட வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கிருஷ்ணகிரியில் ரிக்டர் 3.0 அளவில் லேசான நில அதிர்வு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mild-earthquake-measuring-30-on-the-richter-scale-in-krishnagiri-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mild-earthquake-measuring-30-on-the-richter-scale-in-krishnagiri-2#comments</comments><guid isPermaLink="false">ab8c577e-8906-41f4-97cb-034684c316cf</guid><pubDate>Wed, 15 Jul 2026 16:30:31 +0000</pubDate><atom:updated>2026-07-15T16:30:31.334Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>earthquake,கிருஷ்ணகிரி,Krishnagiri,நில அதிர்வு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/dudm2g31/State-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/dudm2g31/State-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ணகிரி,</p><p>கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு 7.52 மணியளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இந்த அதிர்வானது ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக பதிவாகி இருந்ததாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><p>இந்த நில அதிர்வின் மையமானது பூமிக்கு அடியில் சுமார் 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நில அதிர்வால் கட்டிடங்கள் லேசாக குலுங்கிய நிலையில், அங்கு பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>அணை பாதுகாப்பு மதிப்பீடு - நிபுணர் குழு அமைக்க தமிழக அரசு ஒப்புதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dam-safety-assessment-tamil-nadu-government-approves-formation-of-expert-committee</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dam-safety-assessment-tamil-nadu-government-approves-formation-of-expert-committee#comments</comments><guid isPermaLink="false">adf821ab-af1a-4b5c-9bf5-238f4c668327</guid><pubDate>Wed, 15 Jul 2026 16:16:08 +0000</pubDate><atom:updated>2026-07-15T16:16:08.176Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt,நிபுணர் குழு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/ai4d239d/State-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/ai4d239d/State-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய அணைகளுக்கு விரிவான அணை பாதுகாப்பு மதிப்பீடு மேற்கொள்வதற்காக நிபுணர் குழு அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. </p><p>இந்த மதிப்பீட்டு பணிக்கான மொத்த செலவு ரூ.1.20 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதன்படி குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து பாதுகாப்பு மதிப்பீடு நடைபெற இருக்கிறது. மொத்தம் 86 அணைகளுக்கு விரைவான அணை பாதுகாப்பு மதிப்பீட்டுக்காக நிபுணர் குழு அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>சென்னையில் 608 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கிய அமைச்சர் வெங்கடரமணன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-venkataramanan-issued-new-electronic-ration-cards-to-608-beneficiaries-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-venkataramanan-issued-new-electronic-ration-cards-to-608-beneficiaries-in-chennai#comments</comments><guid isPermaLink="false">29ae15ee-2974-42d6-a24e-98116fcb4412</guid><pubDate>Wed, 15 Jul 2026 16:10:00 +0000</pubDate><atom:updated>2026-07-15T16:10:00.352Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Electronic,Ration card,குடும்ப அட்டை,அமைச்சர் வெங்கடரமணன்,Minister Venkataramanan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/fof30rn9/239.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் வெங்கடரமணன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/fof30rn9/239.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னையில் 608 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D">அமைச்சர் வெங்கடரமணன்</a> வழங்கினார். </p><h2>மின்னணு குடும்ப அட்டைகள்</h2><p>இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>கண்ணதாசன் நகர், கொடுங்கையூரில் உள்ள எஸ்.கே. மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் பெரம்பூர் பகுதிக்குட்பட்ட 300 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, தண்டையார்பேட்டை, பெருநகர சென்னை மாநகராட்சி நெய்தல் திருமண மாளிகைளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.கே.நகர், இராயபுரம் மற்றும் திருவெற்றியூர் பகுதிகளுக்குட்பட்ட 308 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கி, அரசின் மக்கள் நலத் திட்டங்கள் அனைவரையும் விரைவாகச் சென்றடைய வேண்டும் என்ற அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.</p><p>இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில், பொதுமக்கள் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தங்களுக்குத் தேவையான பொருட்களை முறையாகப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். </p><h2>மானிய விலையில்</h2><p>மேலும், விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன அரிசி ஆலை மற்றும் தனியார் அரிசி அரவை ஆலையிலிருந்து அரிசியாக பெறப்படுகிறது. மேலும், சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வியாபாரிகளிடமிருந்து வெளிச்சந்தை விலையில் பெறப்பட்டு, தரப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, விலையில்லா மற்றும் மானிய விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன என்பதையும் விளக்கமாக எடுத்துரைத்தார்.</p><h2>ரசீது</h2><p>மேலும், நியாய விலைக்கடைகளில் பொருட்களை வாங்கும் ஒவ்வொரு முறையும் கட்டாயமாக ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், இதன் மூலம் விநியோகத்தில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுவதுடன், பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்கள் வெளிச்சந்தைக்கு முறைகேடாக விற்கப்படுவதை பொதுமக்களின் பங்களிப்புடன் திறம்பட தடுக்க முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சிகளில் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய்யுடன் நடிகர் சிவகார்த்திகேயன் சந்திப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/actor-sivakarthikeyan-meets-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/actor-sivakarthikeyan-meets-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">9ffc222b-364c-43ce-b9cc-85da434c869a</guid><pubDate>Wed, 15 Jul 2026 16:07:07 +0000</pubDate><atom:updated>2026-07-15T16:07:07.043Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Sivakarthikeyan,சிவகார்த்திகேயன்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/wc8d4fqf/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/wc8d4fqf/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக முதல்-அமைச்சர் விஜய்யை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று நேரில் சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்ற பிறகு முதல் முறையாக அவரை சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-</p><p>“மக்களின் மனங்களை மகிழ்விப்பதில் தொடங்கி மாநிலத்தையே வழிநடத்துவது வரை, சில பயணங்கள் உண்மையிலேயே அசாதாரணமானவை. தமிழகத்தின் மாண்புமிகு முதல்-அமைச்சர் விஜய் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தது ஒரு பெருமைக்குரிய தருணம்.</p><p>'ரசிகன் எக்ஸ்பிரஸ்' முதல் 'விஜய் அவார்ட்ஸ்' மேடை வரை, 'GOAT' திரைப்படத்தில் இணைந்து நடித்தது முதல், இப்போது உங்களுடன் இந்தத் தருணம் வரை; இது எப்போதும் மிகவும் சிறப்பானதாகவே இருக்கும். அந்த சகோதரத்துவமும், அந்த பிணைப்பும், எப்போதும் தொடர்கிறது.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>பெருங்குடி, சோழிங்கநல்லூரில் ரூ. 58.46 கோடியில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monsoon-preparedness-works-worth-5846-crore-in-perungudi-and-sholinganallur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monsoon-preparedness-works-worth-5846-crore-in-perungudi-and-sholinganallur#comments</comments><guid isPermaLink="false">a0689cae-d2b3-4f6b-9750-3dbb053097b9</guid><pubDate>Wed, 15 Jul 2026 16:05:56 +0000</pubDate><atom:updated>2026-07-15T16:05:56.283Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பருவமழை,பெருங்குடி,Perungudi,சோழிங்கநல்லூர்,Sholinganallur,பணிகள்works,Monsoon Rain</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/555btj5n/inspection.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன்,  ஆய்வு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/555btj5n/inspection.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் ரூ. 58.46 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கால்வாய் மற்றும் ஏரி மேம்பாட்டுப் பணிகளை இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன், இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் ரூ.58.46 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கால்வாய் மற்றும் ஏரி மேம்பாட்டு பணிகளை இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன், இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.</p><h2>மேம்பாட்டு பணிகள் ஆய்வு </h2><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D">மாநகராட்சி இணை ஆணையாளர்</a> (பணிகள்) பெருங்குடி மண்டலம், வார்டு-188க்குட்பட்ட மயிலை பாலாஜி நகர் 4ஆவது பிளாக் பகுதி கால்வாயில் ரூ.8.68 கோடி மதிப்பீட்டில் 207 மீ. நீளம் மற்றும் 14.40 மீ. அகலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகள், 1ஆவது பிளாக் கால்வாயில் ரூ.6.48 கோடி மதிப்பீட்டில் 235 மீ. நீளம் மற்றும் 13 மீ. அகலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகள், ரூ.10.95 கோடி மதிப்பீட்டில் அணை ஏரியில் தூர்வாருதல், கரைகளை பலப்படுத்துதல், உள்வரத்து மற்றும் உபரிநீர் வெளியேற்ற கால்வாய் சீரமைப்பு பணிகள், ஆக்கிரமிப்பு மற்றும் ஆகாயத்தாமரை உள்ளிட்ட செடிகளை அகற்றுதல், மழைநீர் வடிகால்வாய் இணைப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட சீரமைப்பு மற்றும் புனரமைப்புப் பணிகள், நாராயணபுரம் ஏரியில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கைப் பணிகள் ஆகியவற்றினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.</p> <h2>வால்வெட்டி தாங்கல் குளம்</h2><p>இதனைத் தொடர்ந்து, சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-195க்குட்பட்ட தலைமை செயலக அலுவலர் குடியிருப்பு பகுதியில் ரூ.12.42 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் சிறு பாலம் மற்றும் கால்வாய் மேம்பாட்டு பணிகள், செம்மஞ்சேரி-தாழம்பூர் பகுதியில் அமைந்துள்ள வால்வெட்டி தாங்கல் குளத்தினை ரூ.19.93 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தும் பணி ஆகியவற்றினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.</p> <p>இந்த ஆய்வின்போது, மாநகராட்சி இணை ஆணையாளர் (பணிகள்) நடைபெற்று வரும் பணிகளை வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, தெற்கு வட்டார துணை ஆணையாளர் அஃதாப் ரசூல், மற்றும் அலுவலர் உடனிருந்தனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>கடும் வெயில் எதிரொலி: நாகை மாவட்டத்தில் தீவிரமடையும் உப்பு உற்பத்தி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/impact-of-intense-heat-salt-production-intensifies-in-nagapattinam-district</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/impact-of-intense-heat-salt-production-intensifies-in-nagapattinam-district#comments</comments><guid isPermaLink="false">8e57a81e-2b1b-4c26-8c39-c91b5d4a6efe</guid><pubDate>Wed, 15 Jul 2026 15:52:58 +0000</pubDate><atom:updated>2026-07-15T15:52:58.441Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nagapattinam,உப்பு உற்பத்தி,நாகை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/f6vek9rr/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/f6vek9rr/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாகை,</p><p>நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நிலவி வரும் கடும் வெயில் காரணமாக, உப்பு உற்பத்தி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி, நிர்ணயிக்கப்பட்ட 6 லட்சம் டன் இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, தொழிலாளர்கள் அதிகாலை மூன்று மணி முதலே உப்பு சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் ஆயிரக்கணக்கான உப்பளத் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ள நிலையில், உப்பு உற்பத்தி தீவிரமடைந்துள்ளதால் இந்த பகுதிகள் முழுவதும் வெள்ளைக் கம்பளம் விரித்தது போல் காட்சியளித்து வருகின்றன. </p>]]></content:encoded></item><item><title>நாகர்கோவில் கைதி மரணம்; கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் நிர்மல்குமார் உறுதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nagercoil-prisoners-death-minister-nirmal-kumar-assures-strict-action-will-be-taken</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nagercoil-prisoners-death-minister-nirmal-kumar-assures-strict-action-will-be-taken#comments</comments><guid isPermaLink="false">15af5c0c-1b14-4914-8c33-fe13091bcb32</guid><pubDate>Wed, 15 Jul 2026 15:40:45 +0000</pubDate><atom:updated>2026-07-15T15:40:45.665Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nagercoil,Minister Nirmalkumar,அமைச்சர் நிர்மல்குமார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/o042wdtv/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/o042wdtv/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர்,</p><p>நாகர்கோவில்ல நீதிமன்ற காவலில் கைதி மரணம் அடைந்த சம்பவத்தில தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் உறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-</p><p>“நாகர்கோவிலில் கைதி உயிரிழந்த சம்பவத்தில், குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது, முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>அதிகார அத்துமீறலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம். இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. </p><p>சிறைத்துறையில் காவலர்கள் கடும் மன அழுத்தத்தில் உள்ளனர். அவர்களுக்கு பல ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லை. காவல்துறைக்கு ஈடாக ஊதியமும் வழங்கப்படவில்லை. அனைத்தையும் சரிசெய்வதற்கான வேலைகளை செய்ய வேண்டியுள்ளது.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>முட்டை விலை மீண்டும் உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/egg-prices-rise-again</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/egg-prices-rise-again#comments</comments><guid isPermaLink="false">f300830e-a21f-4fe0-b47e-5b2a9854d92f</guid><pubDate>Wed, 15 Jul 2026 15:21:59 +0000</pubDate><atom:updated>2026-07-15T15:21:59.061Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Namakkal,நாமக்கல்,முட்டை விலை,egg price</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/2s98chnt/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/2s98chnt/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல்,</p><p>நாமக்கல் மாவட்டத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.</p><h2>5 காசுகள் உயர்வு</h2><p>நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 675 காசுகளாக (ரூ.6.75) இருந்து வந்தது. இதற்கிடையே இன்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை மேலும் 5 காசுகள் உயர்த்த நிர்வாகிகள் முடிவு செய்தனர். எனவே இன்று முட்டை கொள்முதல் விலை 680 காசுகளாக (ரூ.6.80) அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதன் மூலம் நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் முட்டை விலை ரூ.7.45 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><h2>மூலப்பொருட்களின் விலை உயர்வு</h2><p>விற்பனை அதிகரிப்பு, கோழித்தீவன மூலப்பொருட்களின் கடுமையான விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் விலையேற்றம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பெரும்பாலான கடைகளில் சில்லறை விற்பனையில் தற்போது ரூ.8 என்றிருக்கும் நிலையில், மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மொடக்குறிச்சி அருகே தெருநாய்கள் கடித்து குதறியதில் 600 கோழிக் குஞ்சுகள் இறந்தன</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/600-chickens-died-after-being-bitten-by-stray-dogs-near-modakurichi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/600-chickens-died-after-being-bitten-by-stray-dogs-near-modakurichi#comments</comments><guid isPermaLink="false">f036952d-a06a-4703-a030-f82a41866507</guid><pubDate>Wed, 15 Jul 2026 15:21:10 +0000</pubDate><atom:updated>2026-07-15T15:21:10.803Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>stray dogs,தெருநாய்கள்,கடித்து,chickens,கோழிக்குஞ்சு,Bitter</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/jqg3gqvc/chicken.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கோழிக் குஞ்சுகள் இறந்தன]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/jqg3gqvc/chicken.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p> மொடக்குறிச்சி அருகே நள்ளிரவில் கோழிப்பண்ணைக்குள் புகுந்த தெருநாய்கள் கடித்ததில் ஏராளமான கோழிக்குஞ்சுகள் இறந்தன.</p><h2>நாட்டுக்கோழிப்பண்ணை</h2><p>ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த ஈஞ்சம்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட கொமரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 64). விவசாயியான இவர், தனது வீட்டின் முன்பாக 3 பெரிய ஷெட்டுகள் அமைத்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88">நாட்டுக்கோழிப்பண்ணை</a> நடத்தி வருகிறார். இந்த பண்ணையில் வளர்ப்பிற்காகப் பொறிக்கப்பட்டு 2 மாதங்களே ஆன 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிக்குஞ்சுகள் அடைக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வந்தன.</p><h2>நள்ளிரவில் நடந்த பயங்கரம்</h2><p>வழக்கம் போல் பண்ணை பணிகளை முடித்துவிட்டு கணேசன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் கோழிப்பண்ணையில் இருந்து கோழிக்குஞ்சுகள் பயங்கரமாக அலறும் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு எழுந்த கணேசன், பதறியடித்துக் கொண்டு ஓடிவந்து பண்ணைக்குள் சென்று பார்த்தார்.</p><p>அப்போது, அப்பகுதியில் சுற்றித் திரியும் 4 தெருநாய்கள் பண்ணையின் பாதுகாப்பு வேலியைத் தாண்டி உள்ளே புகுந்து, கோழிக்குஞ்சுகளைக் கடித்துக் குதறி அட்டகாசத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.</p><h2>தெருநாய்களை அடித்து விரட்டினர் </h2><p>நாய்களைக் கண்ட கணேசன், உடனடியாக பண்ணைக்குள் சென்று அந்த தெருநாய்களைத் துரத்த முயன்றார். ஆனால், வெறிகொண்ட நிலையில் இருந்த நாய்களை அவரால் தனியாகத் துரத்த முடியவில்லை. இதையடுத்து, அவர் உடனடியாக அக்கம்பக்கத்தினருக்குத் தகவல் கொடுத்து உதவிக்கு அழைத்தார்.சத்தம் கேட்டு அங்கு விரைந்து வந்த மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, தடி மற்றும் கம்புகளுடன் பண்ணைக்குள் புகுந்து, அட்டகாசம் செய்த தெருநாய்களை அடித்து விரட்டினர். </p> <h2>மக்கள் கோரிக்கை</h2><p>இருப்பினும், நாய்கள் கடித்ததில் ஏராளமான கோழிக்குஞ்சுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.இச்சம்பவம் விவசாயி கணேசனுக்குப் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கொமரம்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், உள்ளாட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டுத் தெருநாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காமராஜர் பிறந்தநாளையொட்டி &apos;கல்வியைக் கொண்டாடுவோம்&apos; என்ற தலைப்பில் போட்டிகள் - தமிழக அரசு அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/competitions-on-the-theme-lets-celebrate-education-on-the-occasion-of-kamarajs-birthday-tamil-nadu-government-notification</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/competitions-on-the-theme-lets-celebrate-education-on-the-occasion-of-kamarajs-birthday-tamil-nadu-government-notification#comments</comments><guid isPermaLink="false">4c00990f-cd8f-4264-88f8-fc37f72ab30b</guid><pubDate>Wed, 15 Jul 2026 15:10:53 +0000</pubDate><atom:updated>2026-07-15T15:10:53.452Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>birthday,Tamil Nadu Government,பிறந்தநாள்,தமிழக அரசு அறிவிப்பு,காமராஜர்,Competitions,போட்டிகள்,Kamaraj</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/qd37lsrw/govt.gif" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக அரசு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/qd37lsrw/govt.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காமராஜரின் பிறந்தநாளையொட்டி செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் "கல்வியைக் கொண்டாடுவோம்" என்ற தலைப்பில் மாணாக்கர்/ பொதுமக்களுக்கான பல்வேறு சிறப்பு போட்டிகள் நடத்தப்படவுள்ளது.</p><h2>கல்வியின் கதவுகளை திறந்தார்</h2><p>"ஒவ்வொரு குழந்தையும் கல்வி கற்க வேண்டும்" என்ற உயரிய கனவை நனவாக்க, தனது வாழ்நாளையே கல்விக்காக அர்ப்பணித்து ஆயிரக்கணக்கான புதிய பள்ளிகளை உருவாக்கி, மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தி, ஏழை எளிய மாணவ, மாணவியர்களுக்கு கல்வியின் கதவுகளை திறந்தார். அதன் விளைவாக பள்ளிகளில் மாணவர்சேர்க்கை உயர்ந்து, இடைநிற்றல் விகிதம் குறைந்தது. </p><h2>கல்வியைக் கொண்டாடுவோம்</h2><p>அத்தகைய கல்வி புரட்சியை நினைவுகூரும் வகையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் உத்தரவின்படி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு</a>, கல்வியின் முக்கியத்துவத்தைப் பரப்பவும், மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கவும், செய்தி மக்கள் தொடர்புத் துறை "கல்வியைக் கொண்டாடுவோம்" என்ற தலைப்பில் பல்வேறு சிறப்பு போட்டிகளை நடத்தவுள்ளது.</p><h2>போட்டிகளின் விவரம்</h2><p><strong>1. வினாடி வினாப் போட்டி (Quiz Competition)</strong></p><p>பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டிற்காக அளித்த பங்களிப்புகளைப் நடத்தப்படுகிறது. பள்ளி மாணவர்கள் அறியும் நோக்குடன் இப்போட்டி</p><p>பிரிவுகள்:</p><p>5-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை</p><p>9-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு வரை</p><p>11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு வரை</p> <p><strong>2. இன்ஸ்டாகிராம் ஸ்டோரி போட்டி (Instagram Story)</strong></p><p>தற்போதைய சூழலில் சமூக வலைதளத்தின் ஆதிக்கம் மற்றும் பலம் அதிகரித்துள்ளதால் "மக்களை உருவாக்கிய மாமனிதர்" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு, படைப்பாற்றல் மிக்க ஒரு இன்ஸ்டாகிராம் ஸ்டோரி போட்டியை (Instagram Story) உருவாக்கி பகிரவும். (பகிரப்பட்ட ஸ்டோரியின் ஸ்கிரீன்ஷாட்டைச் சமர்ப்பிக்க வேண்டும்).</p><p>பிரிவு: அனைவருக்கும் பொதுவானது</p><p><strong>3. காட்சிப் பலகை / ஓவியம் / புகைப்படப் போட்டி</strong></p><p>எல்லையற்ற கல்வி என்ற கருப்பொருளில், தொழில்நுட்பத்தின் துணையுடன் குழந்தைகள் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளும் எதிர்காலக் கல்வியை கற்பனை செய்து, அதை ஓவியமாகவோ, புகைப்படமாகவோ அல்லது Al (Artificial Intelligence) தொழில்நுட்பம் மூலம் வடிவமைக்கப்பட்ட காட்சிப் பலகையாகவோ அனுப்ப வேண்டும்.</p><p>பிரிவு: அனைவருக்கும் பொதுவானது.</p><p><strong>4. ஏஐ தொழில்நுட்ப படைப்பு 2 Al Prompt 2 (Al Prompt Creation)</strong></p><p>பள்ளி மாணவர்களுக்கு: பெருந்தலைவர் காமராஜரை நேரில் சந்தித்தது போன்ற ஒரு தத்ரூபமான படத்தை ஏஐ (AI) மூலம் உருவாக்கி, அந்தப் படைப்புக்கான படைப்புடன் ('Prompt') சமர்ப்பிக்க வேண்டும். இப்படம் அவரது எளிமை மற்றும் கல்விப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.</p><p>பொதுமக்களுக்கு: பெருந்தலைவர் காமராஜரின் தொலைநோக்குப் பார்வை அல்லது</p><p>தலைமைத்துவத்தைப் போற்றும் வகையில் ஒரு கவிதை அல்லது பொன்மொழியுடன் கூடிய ஒரு படைப்பை ஏஐ (Al) மூலம் வடிவமைத்து, அதற்கான படைப்புடன் ('Prompt') அனுப்ப வேண்டும்.</p><p>குறிப்பு : சிறந்த படைப்பு மற்றும் சிறந்தபடைப்புக்கு ('Prompt') பரிசுகள் வழங்கப்படும்.</p><p><strong>5. தனித்திறமைப் போட்டி (Special Talent Short Video)</strong></p><p>பெருந்தலைவர் காமராஜர் குறித்த தங்களது தனித்திறமைகளை 1.30 நிமிட காணொளியாக எடுத்து அனுப்ப வேண்டும்.</p><p>தலைப்புகள்:</p><p>காமராஜருக்கு ஒரு கடிதம்,</p><p>நான் ஒரு நாள் கல்வி அமைச்சர்,</p><p>கல்வியே சிறந்த செல்வம்,</p><p>ஒரு புத்தகம் என் வாழ்க்கையை மாற்றியது,</p><p>காமராஜரும் கல்விப் புரட்சியும்.</p><p>பிரிவு: பள்ளி மாணவர்கள் (PRE-KG முதல் 5-ஆம் வகுப்பு வரை).</p><p><strong>6. குறும்படப் போட்டி (Short Film)</strong> </p><p>கீழ்க்காணும் தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் குறும்படம் உருவாக்க வேண்டும்:</p><p>தலைப்புகள்:</p><p>1. படிப்போம்... படைப்போம்: கற்றல், சமத்துவம், நட்பு மற்றும் கனவுகளைப் போற்றும் வகையில் அமைய வேண்டும்.</p><p>2. முதல் பட்டதாரி: முதல் தலைமுறையாகக் கல்வி கற்கும் குழந்தையின் தாக்கம், குடும்பம் மற்றும் சமூகத்தில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை விவரிக்க வேண்டும்.</p><p>3. கல்வி புத்தகத்தில் அல்ல, பண்பில் தெரியும்: கல்வியின் உண்மையான அர்த்தம் நம் நடத்தையிலும், பிறரை மதிப்பதிலும் உள்ளது என்பதை உணர்த்த வேண்டும்.</p><p>(குறிப்பு : குறும்படம் 3 முதல் 7 நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும்)</p><p>பிரிவு: அனைவருக்கும் பொதுவானது.</p> <p>பின்குறிப்பு</p><p>போட்டிகள் தொடர்பான சந்தேகங்களுக்கு kalviyaikondaduvom@gmail.com என்ற மின்னஞ்சலை அணுகலாம்.</p><p>போட்டியில் கலந்து கொள்பவர்கள் கீழ்க்கண்ட விரைவு துலங்கள் குறியீடு (QR code) வாயிலாக தங்களது படைப்புகளை ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.</p><figure><img alt="குறியீடு (QR code) " src="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/zf8pohej/qr-code.jpg" /></figure><p><strong>விதிமுறைகள்</strong></p><p>1. வினாடி வினாப் போட்டி</p><p>1. 5-8, 9-10 மற்றும் 11-12 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களுக்கான பிரிவில் மட்டுமே பங்கேற்க வேண்டும்.</p><p>2. ஒவ்வொரு மாணவரும் ஒருமுறை மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.</p><p>3. ஒரே மாணவர் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகள் செய்தால், முதல் பதிவு மட்டுமே பரிசீலிக்கப்படும்.</p><p>2. இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி பதிவிடுவது</p><p>1. "மக்களை உருவாக்கிய மாமனிதர்" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இன்ஸ்டாகிராம் ஸ்டோரி  உருவாக்கப்பட வேண்டும்.</p><p>2. ஸ்டோரியை தங்களது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி கணக்கில் பதிவிட்டு, அதன் ஸ்கிரீன்ஷாட்டை போட்டிக்காக சமர்ப்பிக்க வேண்டும்.</p><p>3. ஸ்டோரி 24 மணி நேரம் பொதுப் பார்வைக்கு (Public) இருக்க வேண்டும்.</p><p>4. பிறரின் படைப்புகளை நகலெடுத்து (அ) பதிப்புரிமையை மீறும் (Copyright) உள்ளடக்கங்களைப் பயன்படுத்தக் கூடாது.</p><p>5.  ஸ்டோரி (Story-யில்) போட்டி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ ஹேஷ்டேக் (Hashtag) )#kalviyaikondaduvom, #TNOfficial Updates)  Instagram Handle-  குறிப்பிட வேண்டும்.</p><p>3. காட்சிப் பலகை / ஓவியம் / புகைப்படப் போட்டி</p><p>1. "எல்லையற்ற கல்வி" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு காட்சிப் பலகை / ஓவியம் / புகைப்படம் உருவாக்கப்பட வேண்டும்.</p><p>2. போட்டிக்கான படைப்பு JPG, JPEG அல்லது PNG வடிவில் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.</p><p>3. பதிவேற்றும் கோப்பின் அளவு அதிகபட்சம் 2 எம்பிக்குள் (MB-க்குள்) இருக்க வேண்டும்.</p><p>4. படைப்பு முழுமையாக பங்கேற்பாளரின் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்.</p><p>5. படைப்பில் நீர்முத்திரை, சின்னம், கையொப்பம் (Watermark, Logo, Signature) அல்லது பெயர் இடம்பெறக் கூடாது.</p><p>6. கருப்பொருளுக்கு தொடர்பில்லாத படைப்புகள் மதிப்பீட்டிற்கு எடுத்து கொள்ளப்படமாட்டாது.</p><p><strong>4. ஏஐ தொழில்நுட்ப படைப்பு (Al Prompt Creation)</strong></p><p>பள்ளி மாணவர்களுக்கு</p><p>1. "பள்ளி மாணவர்களுக்கான பிரிவில், பள்ளி மாணவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும்."</p><p>2. படைப்புடன், அதனை உருவாக்க பயன்படுத்திய ஏஐ தொழில்நுட்பம் (Al Prompt) கட்டாயம் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.</p><p>3. படைப்பும்  ஏஐ தொழில்நுட்பம்  (Al Prompt) பங்கேற்பாளரின் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்.</p><p>4. சமர்ப்பிக்கப்படும் படைப்பு கோப்பு (PDF) வடிவில் இருக்க வேண்டும். அதில் முதலில்  ஏஐ (Al) மூலம் உருவாக்கப்பட்ட படம் இடம்பெற வேண்டும். அதனைத் தொடர்ந்து, அந்தப் படத்தை உருவாக்க பயன்படுத்தப்பட்ட முழுமையான Prompt கட்டாயமாக இணைக்கப்பட வேண்டும்.</p><p>5. ஒவ்வொரு மாணவரும் ஒரு படைப்பை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.</p><p><strong>பொதுமக்களுக்கு:</strong></p><p>1. இப்போட்டியில் அனைத்து பொதுமக்களும் பங்கேற்கலாம்.</p><p>2. படைப்புடன், அதனை உருவாக்க பயன்படுத்திய செயற்கை நுண்ணறிவு  தொழில்நுட்பம் (Al Prompt) கட்டாயம் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.</p><p>3. படைப்பும் ஏஐ தொழில்நுட்பம் (Al Prompt) பங்கேற்பாளரின் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்.</p><p>4. ஒவ்வொரு பங்கேற்பாளரும் ஒரு படைப்பை மட்டுமே சமர்ப்பிக்க அனுமதிக்கப்படுவார்.</p><p>5. படைப்பில் வன்முறை, ஆபாசம், வெறுப்புணர்வைத் தூண்டும், மத அல்லது சமூக நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் உள்ளடக்கங்கள் இடம்பெறக் கூடாது.</p><p>6. சமர்ப்பிக்கப்படும் படைப்பு பிடி கோப்பு (PDF) வடிவில் இருக்க வேண்டும். அதில் முதலில் ஏஐ (Al) மூலம் உருவாக்கப்பட்ட படம் இடம்பெற வேண்டும். அதனைத் தொடர்ந்து, அந்தப் படத்தை உருவாக்க பயன்படுத்தப்பட்ட முழுமையான தொழில்நுட்பம்  (Prompt) கட்டாயமாக இணைக்கப்பட வேண்டும்.</p><p><strong>5. Special Talent (Short video)</strong></p><p>1. போட்டியில் ப்ரீ-கேஜி (Pre-KG) முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும்.</p><p>2. குறும்படத்தின் அதிகபட்ச கால அளவு 1 நிமிடம் 30 விநாடிகள் மட்டுமே இருக்க வேண்டும்.</p><p>3. "வீடியோவின் அளவு அதிகபட்சம் 100 எம்.பி (MB) ஆக இருத்தல் வேண்டும்."</p><p>4. "பேச்சு, நடிப்பு, கவிதை, கதை சொல்லல் உள்ளிட்ட எந்தவொரு படைப்பாற்றல் வடிவிலும் வீடியோவை உருவாக்கலாம்."</p><p>5. வீடியோ தமிழ் மொழியில் மட்டுமே இருக்க வேண்டும்.</p><p>6. மாணவரின் முகம் தெளிவாக தெரிவதுடன், அவரின் குரலிலேயே பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.</p> <p><strong>குறும்படப் போட்டி (Short Film)</strong></p><p>1. இப்போட்டியில் அனைத்து பொதுமக்களும் பங்கேற்கலாம்.</p><p>2. குறும்படத்தின் கால அளவு குறைந்தபட்சம் 3 நிமிடத்திலிருந்து 7 நிமிடம் இருக்க வேண்டும்.</p><p>3. குறும்படத்தின் அளவு அதிகபட்சம் 100 எம்.பி (MB) ஆக இருத்தல் வேண்டும்.</p><p>4. குறும்படம் பின்வரும் தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட வேண்டும்.</p><p>* படிப்போம்... படைப்போம்</p><p>* முதல் பட்டதாரி (The First Graduate)</p><p>* கல்வி புத்தகத்தில் அல்ல, பண்பில் தெரியும்</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வேலை வாங்கித் தருவதாக கூறி பெண்ணிடம் அத்துமீறல்: ஜிம் பயிற்சியாளர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/gym-trainer-arrested-for-raping-woman-on-the-pretext-of-getting-her-a-job</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/gym-trainer-arrested-for-raping-woman-on-the-pretext-of-getting-her-a-job#comments</comments><guid isPermaLink="false">f86f4675-95d0-4316-bea7-f9c15d68b4a7</guid><pubDate>Wed, 15 Jul 2026 14:57:33 +0000</pubDate><atom:updated>2026-07-15T14:57:33.624Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,arrest,Complaint,புகார்,போலீஸ்Police,Sexual harassment- பாலியல் தொல்லை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/9mhtaswu/226.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/9mhtaswu/226.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும் திருமணமான 22 வயது அண்ணாநகர், பெண் 5 வது அவென்யூவில் உள்ள ஓட்டல் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் அந்த பெண்னை வழிமறித்து வேலைக்கு ஆள் தேவைப்படுகிறது, விருப்பம் உள்ளதா? என கேட்பார். அதற்கு அந்த பெண் சம்மதித்தார். </p><p>உடனே அவரை அண்ணா நகர், 2-வது அவென்யூவில் உள்ள ஒரு கடைக்கு மேல் அழைத்துச்சென்று மாடி மற்றும் மாடிப்படிகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் மாடியை காட்டுகிறேன் என சென்று, அப்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அப்பெண் சத்தம்போடவே, அந்த நபர் தப்பிச் சென்றார்.</p><h2>கைது</h2><p>பாதிக்கப்பட்ட பெண் தனது கணவருடன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார், அண்ணாநகர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">போலீசார்</a> பி. என்.எஸ். மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து பாலியல் தொல்லை கொடுத்த திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயல் கன்னடபாளையத்தை சேர்ந்த ஆனந்தன் (வயது 37) என்பவரை கைது செய்தனர். கைதான ஆனந்தன் ஜிம் பயிற்சியாளர் மற்றும் பகுதி நேர கார் டிரைவராக வேலை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title> கிருஷ்ணகிரி: பாரூர் பெரிய ஏரியிலிருந்து  130 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/krishnagiri-tamil-nadu-government-orders-the-release-of-water-from-barur-big-lake-for-130-days</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/krishnagiri-tamil-nadu-government-orders-the-release-of-water-from-barur-big-lake-for-130-days#comments</comments><guid isPermaLink="false">6e49742b-d80f-43cb-ae53-83dc0a5c5d6e</guid><pubDate>Wed, 15 Jul 2026 14:20:25 +0000</pubDate><atom:updated>2026-07-15T14:20:25.231Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கிருஷ்ணகிரி,Krishnagiri,தமிழக அரசு உத்தரவு,in the lake,பெரிய ஏரி,தண்ணீர்water,Tamil Nadu Government Order</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/ejb1et16/Barur-Big-Lake.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பாரூர் பெரிய ஏரி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/ejb1et16/Barur-Big-Lake.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p> கிருஷ்ணகிரி,</p><p> கிருஷ்ணகிரி பாரூர் பெரிய ஏரியிலிருந்து  130 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-</p> <h2>தண்ணீர் திறந்து விட உத்தரவு</h2><p> தமிழ்நாடு முதல்-அமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் உத்தரவிற்கிணங்க, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியிலிருந்து பாசனத்திற்காக ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் முதல் ஐந்து நாட்களுக்கு நாற்றுவிட தண்ணீர் விட்டும் பிறகு முறைப்பாசனம் மூலம் 3 நாட்கள் மதகை திறந்துவிட்டும்.</p> <h2>130 நாட்கள்</h2><p> 4 நாட்கள் மதகை மூடி வைத்தும் சுழற்சி முறையில் நாள் ஒன்றுக்கு 6.00 மி.க.அடி வீதம் 16.07.2026 முதல் 22.11.2026 வரை 130 நாட்களுக்கு மொத்தம் 361.00 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் வரத்து மற்றும் இருப்பைப் பொறுத்து முதல் போக சாகுபடிக்கு 2397 ஏக்கருக்கு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81">தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது</a>.</p> <p> இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள 2397 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>