<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 10 Jul 2026 19:43:31 +0000</lastBuildDate><item><title>திருவல்லிகேணி போலீஸ் நிலையத்தில் செந்தில்பாலாஜி எப்போது ஆஜராவார்?   
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/when-will-senthil-balaji-appear-at-the-triplicane-police-station</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/when-will-senthil-balaji-appear-at-the-triplicane-police-station#comments</comments><guid isPermaLink="false">a69dbe23-a6f1-476d-8566-d19dbfb97a58</guid><pubDate>Fri, 10 Jul 2026 19:24:42 +0000</pubDate><atom:updated>2026-07-10T19:24:42.885Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Senthil Balaji,செந்தில்பாலாஜி,குதிரை பேரம்,திருவல்லிகேணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/bsubhut6/Senthil-balaji.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ செந்தில்பாலாஜி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/bsubhut6/Senthil-balaji.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p> சென்னை,  </p><p>சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின்போது கட்சியின் கொறடா உத்தரவை மீறி தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் ரூ.35 கோடி தருவதாக ஊத்தங்கரை த.வெ.க., எம்.எல்.ஏ., இளையராஜாவிடம் சிலர் குதிரைபேரம் நடத்தியுள்ளனர். இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருநாவுகரசு உள்பட 9 பேரை கைது செய்துள்ளனர். இவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF">செந்தில்பாலாஜி</a>, அவரது தம்பி அசோக்குமார் ஆகியோரை வழக்கில் குற்றவாளியாக சேர்த்து அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.</p><p>இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு இருவரும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், இவர்கள் இருக்கும் நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அந்த உத்தரவில், இந்த உத்தரவு நகல் கிடைக்க பெற்று 15 நாட்களுக்குள் மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் ஆஜராகி, ரூ.25 ஆயிரம், அதே தொகைக்கு இருநபர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF">ஜாமீன் </a>உத்தரவாதத்தை செந்தில்பாலாஜியும், அசோக்குமாரும் வழங்கவேண்டும். </p><p>அதன்பின்னர் விசாரணை அதிகாரி முன்பு தினமும் ஆஜராக வேண்டும்’’ என்று கூறியுள்ளார். 15 நாட்கள் ஐகோர்ட்டு அவகாசம் வழங்கியுள்ளதால், அந்த அவகாசத்துக்குள் செந்தில்பாலாஜி போலீஸ் நிலையத்தில் ஆஜராவார் என்று தெரிகிறது.</p>]]></content:encoded></item><item><title>
அரசு மருத்துவமனைகளில்  குறைகளை களைய தொடர்பு அதிகாரிகள் நியமனம்- சுகாதாரத்துறை உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nodal-officers-appointed-to-address-grievances-in-government-hospitals-health-department-orde</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nodal-officers-appointed-to-address-grievances-in-government-hospitals-health-department-orde#comments</comments><guid isPermaLink="false">ce0e2d0e-4744-48be-9a79-894365d5baaa</guid><pubDate>Fri, 10 Jul 2026 18:21:17 +0000</pubDate><atom:updated>2026-07-10T18:21:17.298Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TN govt,health department,சுகாதாரத்துறை,அரசு மருத்துவமனை</media:keywords><media:content height="542" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/nvy95ifr/tn-secre.jpg" width="794"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/nvy95ifr/tn-secre.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லுாரி ஆஸ்பத்திரிகளில் சீர்கேடுகளை சரி செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டது. மருத்துவ உட்கட்டமைப்பு, சுகாதாரம், டாக்டர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை சரி செய்தல், அடிப்படை வசதி உறுதி செய்தல் அவசியம் என அறிவுறுத்தியிருந்தது. இதையடுத்து அனைத்து மருத்துவ கல்லுாரி ஆஸ்பத்திரிகளிலும், 50 தொடர்பு அதிகாரிகளை நியமிக்க மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. மாநில அளவில் ஒருங்கிணைக்கும் வகையில், பேராசிரியர் சுதர்ஷினி நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>இதுகுறித்து, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘அரசு ஆஸ்பத்திரிகளில் வரும் புகார்களுக்கு உடனடி தீர்வு ஏற்படுத்தும் வகையில், ‘தொடர்பு அதிகாரி’ நியமிக்கபட்டு உள்ளார். அதைதொடர்ந்து, அரசு ஆஸ்பத்திரிகளில் மருத்துவ நிலைய அதிகாரி அல்லது கண்காணிப்பாளர் ஆகியோரில் ஒருவர் தொடர்பு அதிகாரியாக செயல்படுவார். </p><p>அவர்களுக்கு கீழ், டாக்டர்கள், செவிலியர்கள் செயல்படுவார்கள். இவர்களை மாநில அளவில் ஒருங்கிணைக்க, ஒரு தொடர்பு அதிகாரி அரசால் நியமிக்கப்பட்டு உள்ளார். அவருக்காக, மருத்துவ கல்வி இயக்குனரக அலுவலகத்தில், ‘தொடர்பு அதிகாரி’ என்ற புதிய பிரிவு தொடங்கப்பட உள்ளது. குறைபாடுகளை ஆய்வு செய்து சீரமைக்கப்பட்ட பணிகளை அறிக்கையாக அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது’’என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கடந்த 6 ஆண்டுகளில் பழனி முருகன் கோவிலுக்கு ரூ.1,414 கோடி வருவாய்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/in-the-last-6-years-the-palani-murugan-temple-has-earned-an-income-of-rs-1414-crore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/in-the-last-6-years-the-palani-murugan-temple-has-earned-an-income-of-rs-1414-crore#comments</comments><guid isPermaLink="false">b3943d75-cea4-4abe-9e9b-4a773233011b</guid><pubDate>Fri, 10 Jul 2026 16:15:24 +0000</pubDate><atom:updated>2026-07-10T16:15:24.819Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Palani Murugan Temple,பழனி முருகன் கோவில்,வருவாய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/52rf4idz/Untitled-12.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ பழனி முருகன் கோவில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/52rf4idz/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பழனி,</p><p>பழனி முருகன் கோவிலுக்கு கடந்த 6 ஆண்டுகளில் ரூ.1,414 கோடி வருவாயாக கிடைத்துள்ளது. இதுகுறித்து பழனி முருகன் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து கூறியதாவது:-</p><p>பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் இலவச மற்றும் கட்டண சேவைகளை வழங்கி வருகிறது. அதில், சிறப்பு கட்டண தரிசனம், அபிஷேகம், அர்ச்சனை, தங்க தொட்டில் பிராத்தனை, பூஜை பொருட்கள் மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிராசதம் விற்பனை, நன்கொடைகள், சொத்துகள், முதலீட்டு வட்டி, தங்கும் விடுதி வாடகை என 33 இனங்கள் மூலம் கடந்த 6 ஆண்டுகளில் கோவிலுக்கு ரூ.1,414.83 கோடி வருவாயாக கிடைத்துள்ளது.</p><p>கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.353.89 கோடி வருமானம் கிடைத்துள்ளது. ஆண்டுதோறும் சராசரியாக ரூ.50 கோடி முதல் ரூ.70 கோடி வரை வருமானம் அதிகரித்துள்ளது. 2020-21-ல் ரூ.110.61 கோடியாக இருந்த ஆண்டு வருமானம், 5 ஆண்டுகளுக்கு பிறகு 2 மடங்கு (ரூ.243.28 கோடி) அதிகரித்துள்ளது.</p><p>மேலும், பக்தர்கள் நலன் கருதி நாள் முழுவதும் அன்னதானம் மற்றும் பிரசாதம், குழந்தைகளுக்கு காய்ச்சிய பால், தேவஸ்தான பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 2 வேளை உணவு, மாற்றுத்திறனாளிகளுக்கு ரோப் கார் மற்றும் வின்ச் ரெயிலில் இலவசமாக பயணிக்க வசதி உள்பட 28 கட்டணமில்லா சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக, கடந்த 5 ஆண்டுகளில் ரூ.145.26 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான பக்தர்கள் பயன் அடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தி.மு.க.வின் இந்து விரோத பாதையில் த.வெ.க. அரசு சென்று விடக் கூடாது - வானதி சீனிவாசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tmc-government-should-not-go-down-the-anti-hindu-path-of-the-dmk-vanathi-srinivasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tmc-government-should-not-go-down-the-anti-hindu-path-of-the-dmk-vanathi-srinivasan#comments</comments><guid isPermaLink="false">75d4c947-a9b9-4b2d-89ee-6ed2f3edc5bc</guid><pubDate>Fri, 10 Jul 2026 16:03:17 +0000</pubDate><atom:updated>2026-07-10T16:03:17.282Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,பாஜக,BJP,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/thv2cc5k/vanathi.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/thv2cc5k/vanathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>கோவில் சொத்துக்கள்</h2><p>கோவில் நிலங்கள் எந்த விதத்திலும் தனி நபர்களுக்கு சென்று விடாமல் இருப்பதை இந்து சமய அறநிலையத் துறை உறுதி செய்ய வேண்டும்.  தி.மு.க.,வின்  இந்து விரோத பாதையில் த.வெ.க. அரசு சென்று விடக் கூடாது.</p><p>கரூர் மாவட்டத்தின் 15 கிராமங்களில் உள்ள, 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, 3,084 ஏக்கர் 95 செண்ட்  திருக்கோவில் இனாம் நிலங்களை, 3,390 நபர்களின் பெயரில்  பதிவு மற்றும் விற்பனை செய்யும் வகையில், பதிவு தடையை நீக்குமாறு, சம்பந்தப்பட்ட கோவில் செயல் அலுவலர்களுக்கு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. </p><p>தமிழகத்தில் இந்து கோவில் சொத்துகளின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பக்தர்களால் கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்டு, கோவில் பெயரில் உள்ள சொத்துக்களை எந்தக் காரணத்திற்காகவும் வேறு யாருக்கும்  பட்டா மாறுதல் செய்யக் கூடாது.</p><h2>ஆக்கிரமிப்பு </h2><p>ஆக்கிரமிப்பு உள்ளிட்ட எந்த வகையிலும் கோவில் சொத்துக்கள் பறிபோகாமல் பாதுகாக்க வேண்டியது இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பூர்வ கடமையாகும். </p><p>எனவே, 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலங்களை, தனி நபர்கள் பெயரில் பதிவு செய்ய இருக்கும் தடையை நீக்க எந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அடிப்படையில்</a>,  இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டார் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். எந்தக் காரணத்தை கொண்டும் கோவில் நிலங்கள், தனி நபர்களுக்கு சென்று.விடக் கூடாது. இதை முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்ச ரமேஷ் அவர்களும் உறுதிப்படுத்த வேண்டும். தி.மு.க.,வின்  இந்து விரோத பாதையில் த.வெ.க. அரசு சென்று விடக் கூடாது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க குழு அமைப்பு - மாநகராட்சி ஆணையாளர் சமீரன் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/committee-formed-to-take-action-against-buildings-violating-regulations-in-chennai-corporation-commissioner-sameeran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/committee-formed-to-take-action-against-buildings-violating-regulations-in-chennai-corporation-commissioner-sameeran#comments</comments><guid isPermaLink="false">4e6a0841-42df-452e-925f-c3a58843c1af</guid><pubDate>Fri, 10 Jul 2026 16:01:34 +0000</pubDate><atom:updated>2026-07-10T16:01:34.912Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/53wcgus8/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/53wcgus8/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகராட்சி பகுதிகளில் குடியிருப்பு கட்டடத்திற்கான திட்ட அனுமதி பெற்று கட்டப்பட்ட கட்டிடங்களை வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்துதல் மற்றும் திட்ட அனுமதிக்கு மாறான விதிமீறல் கட்டிடங்கள் ஆகியவற்றின் மீது உடனுக்குடன் தொடர் நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் சமீரன் தலைமையில், விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் குறித்த சுப்ரீம் கோர்ட்டு வழக்கு சம்பந்தமாக மாநகராட்சி ஆலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் கட்டிட வளாகக் கூட்டரங்கில் இன்று (10.07.2026) நடைபெற்றது.</p><p>இக்கூட்டத்தில் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் குடியிருப்பு கட்டிடத்திற்கான திட்ட அனுமதி பெற்று கட்டப்பட்ட கட்டிடங்களை வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்துதல் மற்றும் திட்ட அனுமதிக்கு மாறான விதிமீறல் கட்டிடங்கள் ஆகியவற்றின் மீது உடனுக்குடன் தொடர் நடவடிக்கை எடுத்து, அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.</p><p>மேற்படி அமலாக்கப்பணிகளை கண்காணிக்க வட்டார அளவில், வட்டார துணை ஆணையர், கண்காணிப்பு பொறியாளர், முதுநிலை வருவாய் அலுவலர் மற்றும் மண்டல அலுவலர் ஆகியோரை கொண்ட ஒரு குழுவும், மண்டல அளவில் மண்டல அலுவலர், செயற்பொறியாளர், முதுநிலை வருவாய் அலுவலர் மற்றும் உதவி செயற்பொறியாளர் ஆகியோரை கொண்ட மற்றொரு குழுவும் அமைக்கப்பட்டு செயல்படுகிறது என தெரிவித்தார்.</p><p>இக்கூட்டத்தில் காணொலி காட்சியின் வாயிலாக இணை ஆணையர் (பணிகள்) செ.சரவணன், துணை ஆணையர் (வருவாய் (ம) நிதி) சித்ரா விஜயன், வட்டார துணை ஆணையர்கள் எச்.ஆர்.கவுஷிக், இ.ஆ.ப., (மத்தியம்), அதாப் ரசூல், (தெற்கு) மற்றும் முதுநிலை சட்ட அலுவலர் எஸ். ஜேக்கப் ராஜன்பாபு, அலுவலர்கள் கலந்து கொண்டனர்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>கரூரில் ரூ.850 கோடியில் தோல் அல்லாத காலணி ஆலை - முதல்-அமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டினார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/non-leather-footwear-plant-worth-rs-850-crore-in-karur-chief-minister-vijay-lays-the-foundation-stone</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/non-leather-footwear-plant-worth-rs-850-crore-in-karur-chief-minister-vijay-lays-the-foundation-stone#comments</comments><guid isPermaLink="false">ee46cb30-fc2a-4b76-b7b8-8766cd8b17ba</guid><pubDate>Fri, 10 Jul 2026 15:48:27 +0000</pubDate><atom:updated>2026-07-10T15:48:27.807Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர்,Karur,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/xtfxpq2z/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/xtfxpq2z/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கரூர்,</p><p>கரூர் மாவட்டத்திற்கு ஒரு நாள் சுற்றுப்பயணமாக முதல்-அமைச்சர் விஜய் சென்றுள்ளார். இன்று காலை அங்கு நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்-அமைச்சர் விஜய், கடந்த ஆண்டு த.வெ.க. பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் நினைவாக கரூரில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். </p><p>இதனை தொடர்ந்து கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்ற அவர், அங்கு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கரூரில் ரூ.850 கோடியில் தோல் அல்லாத காலணி ஆலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் இன்று (10.7.2026), கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எவர்வான் கோத்தாரி புட்வேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், அடிடாஸ் நிறுவனத்திற்காக 850 கோடி ரூபாய் முதலீட்டில், 6,750 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் வகையில், கரூர் மாவட்டத்தில் தோல் அல்லாத காலணிகள் இரண்டாம் கட்ட உற்பத்தி ஆலை அமைப்பதற்குக் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். Everan Kothari நிறுவனம் அமைக்கவிருக்கும் இந்த ஆலை மூலம் 6,750 பேருக்கு வேலை கிடைக்கும்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கிய 117 கிலோ ‘புள்ளி களவாய் மீன்&apos;</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/117-kg-epinephelus-caught-in-pamban-fishermens-net</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/117-kg-epinephelus-caught-in-pamban-fishermens-net#comments</comments><guid isPermaLink="false">785af2f8-fa1c-484c-989b-8ce1d79e2cda</guid><pubDate>Fri, 10 Jul 2026 15:44:40 +0000</pubDate><atom:updated>2026-07-10T15:44:40.512Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மீனவர்கள்,fishermen,ராமநாதபுரம்,Ramanathapuram,மீன்,ராமேஸ்வரம்,Rameshwaram</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/yivf0h0k/Untitled-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/yivf0h0k/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமநாதபுரம்,</p><p>ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடல் பகுதியில் காற்றின் வேகம் குறைந்ததால் நேற்று முன்தினம் பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் இருந்து 100 விசைப்படகுகளில் 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு சென்று இருந்தனர். இந்த மீனவர்கள் அனைவரும் நேற்று பலவகையான மீன்களுடன் கரை திரும்பினார்கள்.</p><p>இதில் ஒரு விசைப்படகு மீனவர்கள் வலையில் 117 கிலோ எடையும், 6 அடி நீளமும் கொண்ட புள்ளி களவாய் மீன் சிக்கியது. இந்த மீனை 5 மீனவர்கள் சேர்ந்து படகில் இருந்து இறக்கி கடற்கரைக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து இந்த களவாய் மீனை வியாபாரி ஒருவர் ரூ.23 ஆயிரத்துக்கு வாங்கினார்.</p><p>இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, "இதுபோன்று அதிக எடையில் புள்ளி களவாய் மீன் கிடைப்பது அரிதாகும். கடந்த 4 ஆண்டுகளில் 100 கிலோவுக்கும் அதிக எடை கொண்ட புள்ளி களவாய் மீன் கிடைத்தது இதுவே முதல்முறை” என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>செங்கோட்டையில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற சர்வேயர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/surveyor-arrested-for-accepting-10000-bribe-in-sengottai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/surveyor-arrested-for-accepting-10000-bribe-in-sengottai#comments</comments><guid isPermaLink="false">05166b53-55cb-48d8-8532-68483d399804</guid><pubDate>Fri, 10 Jul 2026 15:37:36 +0000</pubDate><atom:updated>2026-07-10T15:37:36.482Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Sengottai,செங்கோட்டை,கைது,arrest,லஞ்சம்,Surveyor,Corrupt</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/8pz64r0w/surveyor.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சர்வேயர் ராமர் செல்வம் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/8pz64r0w/surveyor.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>செங்கோட்டை, </p><p>செங்கோட்டையில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற சர்வேயர் கைது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பிரானூர் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி (வயது 52). இவர் தனது மனைவி ஆறுமுகத்தம்மாள் பெயரில் 2.28 சென்ட் நிலம் மற்றும் வீடு ஒன்றை வாங்கியுள்ளார். </p><p>இந்த சொத்து கூட்டு பட்டாவில் இருந்ததால், அதை தனிப்பட்டாவாக மாற்றி தருமாறு செங்கோட்டை சர்வேயர் ராமர்செல்வத்தை (37) அணுகியுள்ளார்.</p><h2>ரூ. 10 ஆயிரம் லஞ்சம் </h2><p>நிலத்தை அளவீடு செய்து தனிப்பட்டா வழங்க சர்வேயர் ராமர்செல்வம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத மாடசாமி, இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின்படி, ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரம் நோட்டுகளை மாடசாமி சர்வேயர் ராமர்செல்வத்திடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சர்வேயரை கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.</p> <p>தனிப்பட்டா வழங்க லஞ்சம் வாங்கிய <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">அரசு அதிகாரி கைது</a> செய்யப்பட்ட சம்பவம் செங்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மகளுக்கு அரசு வேலை: விஜய்யை மகனாக பார்க்கிறேன் - பெண் கண்ணீருடன் உருக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/daughter-gets-government-job-i-see-vijay-as-my-son-woman-breaks-down-in-tears</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/daughter-gets-government-job-i-see-vijay-as-my-son-woman-breaks-down-in-tears#comments</comments><guid isPermaLink="false">d4517c2a-42de-41ad-8687-7dce3739c81d</guid><pubDate>Fri, 10 Jul 2026 15:35:31 +0000</pubDate><atom:updated>2026-07-10T15:35:31.095Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,கரூர்,விஜய்,Karur,CMVijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/1f8or52s/karuruthree33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/1f8or52s/karuruthree33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கரூர்,</p><p>முதல்-அமைச்சர் விஜய் செய்துள்ள இந்த உதவியின் மூலமாக அவரை எனது மகனாகவே பார்க்கிறேன் என்று ஞானாம்பாள்  உருக்கமாக தெரிவித்தார்.</p><h2>பணி நியமன ஆணை</h2><p>கரூரில் கடந்த ஆண்டு முதல்-அமைச்சர் விஜய் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்துக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் விஜய் இன்று பிற்பகல் நேரில் வழங்கினார்</p><p>இந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பணி நியமன ஆணை</a>யை பெறுவதற்காக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவுக்கு காலையிலேயே வந்திருந்தனர். அவர்கள் தங்களது குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் விஜய் அரசு வேலை வழங்கி இருப்பது மிகப்பெரிய ஆறுதலாக தெரிவித்தனர்.</p><p>கரூர் நெரிசலில் ஞானாம்பாள் என்பவரது மகனும் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அவரது மகளுக்கு பணி நியமன ஆணை இன்று வழங்கப்பட்டது. அதற்காக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்திருந்த ஞானாம்பாள் கண்ணீர் மல்க காட்சியளித்தார்.</p><h2>எனது மகன்</h2><p>முதல்-அமைச்சர் விஜய் செய்துள்ள இந்த உதவியின் மூலமாக அவரை எனது மகனாகவே பார்க்கிறேன். என்று அவர் உருக்கமாக தெரிவித்தார்.</p><p>இது தொடர்பாக ஞானாம்பாள் கூறும்போது, 'எனக்கு அரசு வேலை தருவதாக கூறினார்கள்.</p><p>நான் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். வயதும் 50 ஆகப் போகிறது. எனவே எனது மகளுக்கு அரசு வேலை கொடுக்கும்படி  கேட்டுக்கொண்டேன். அதனை ஏற்றுக்கொண்டு மகளுக்கு அரசுப்பணி வழங்கி உள்ளனர். எனது மகள் என்னை கடைசி வரை பார்த்துக் கொள்வாள். </p><p>எனது மகள்  டிகிரி முடித்துள்ளார். கரூர் சம்பவத்துக்கு பிறகு பாதுகாப்பு கருதி விஜய் வரவில்லை. இப்போது முதல்-அமைச்சராக அவர் வந்திருப்பது சந்தோஷமாக உள்ளது' என்றார்.</p><h2>பொது மக்கள் நெகிழ்ச்சி</h2><p>கரூர் நெரிசலில் முருகேசன் என்பவரது மனைவி ரேவதி உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரது மகனுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முருகேசன் கூறும்போது. 'எனது மகனுக்கு அரசு வேலை தருவது ஆறுதல் அளிக்கிறது. கடைசி வரை எங்களை நன்றாக பார்த்துக் கொள்வதாக முதல்-அமைச்சர் விஜய் கூறியுள்ளார். </p><p>அவரையும் நாங்கள் கடைசிவரை பார்த்துக் கொள்வோம்' என்றார்.</p><p>முதல்- அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக விஜய் கரூருக்கு வருகை தந்தது பற்றி பொது மக்கள் பலரும் நெகிழ்ச்சியுடன் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறும்போது, 'ஒரு கட்சியின்  தலைவராக கரூருக்கு வந்திருந்த விஜய், தற்போது தமிழகத்தின் அரியணையில் முதல்- அமைச்சராக அமர்ந்து அடியெடுத்து வைப்பது தங்களுக்கு கிடைத்த பெருமை என்றும், விஜய் பிரசாரத்துக்கு வரும் போது போதிய பாதுகாப்பு இல்லாத நிலையில் அவர் தற்போது முதல் - அமைச்சராக  பொறுப்பேற்ற பிறகு விழா நடக்கும் இடம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு இருப்பதை பார்க்கும்போது எங்களுக்கு பெருமையாக உள்ளது உள்ளது' என்று தெரிவித்தனர். </p><h2>பெண்கள் பாதுகாப்பு</h2><p>முதல்-அமைச்சர் விஜய்யின் 50 நாள் ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பிற்கு மிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அரசு கொண்டு வந்துள்ள  'சிங்கப்பெண் திட்டம்' மற்றும் 'தாய்மாமன் தங்க மோதிர திட்டம்' ஆகியவை தங்களை பெரிதும் கவர்ந்துள்ளது என்றும், தங்கள் பகுதியில் பெண்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருப்பது நிம்மதி  அளிப்பதாகவும் கூறினார்கள்.</p><p>தற்போது 10 மணிக்கு மேல் மதுக்கடைகளின் வாசலில் போலீசார் கட்டாயப் பணியில் ஈடுபட்டு, சட்ட விரோத மது விற்பனையை முற்றிலும் ஒழித்துள்ளதால், இரவு நேரங்களில் அச்சமின்றி நடமாட முடிகிறது எனவும் விஜய்யை பார்க்க வந்திருந்த பெண்கள் நன்றி தெரிவித்தனர்.</p><h2>தவெக அரசு மாற்றம்</h2><p>போதைப்பொருள் புழக்கம் மற்றும் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் குறித்துச் சமூக வலைத்தளங்களில் புகார்கள் தெரிவித்தால், அதிகாரிகள் வருவதற்கு முன்பாகவே த.வெ.க.வினர் களத்தில் இறங்கி பிரச்சினை களைத் தீர்த்து வைப்பதாகவும் அவர்கள் கூறினார்கள்.</p><p>இப்படி முதல்- அமைச்சர் விஜய்யை பார்க்க வந்திருந்த பெண்கள் பலர் தமிழகத்தில் த.வெ.க. அரசு மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் பாராட்டினர்.</p>]]></content:encoded></item><item><title>கரூர் அரசு பள்ளியில் த.வெ.க. நிகழ்ச்சி நேரலை - தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-event-at-karur-government-school-broadcast-live-headmistress-suspended</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-event-at-karur-government-school-broadcast-live-headmistress-suspended#comments</comments><guid isPermaLink="false">1700e49b-73fc-4759-966e-57085b48f1f6</guid><pubDate>Fri, 10 Jul 2026 15:29:39 +0000</pubDate><atom:updated>2026-07-10T15:29:39.057Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/dszkayym/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/dszkayym/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கரூர்,</p><p>கரூர் மாவட்டத்திற்கு ஒரு நாள் பயணமாக சென்ற தமிழக முதல்-அமைச்சர் விஜய், அங்கு நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு த.வெ.க. பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து பேசினார். தொடர்ந்து சாலை மார்க்கமாக வாகனத்தில் சென்று மக்களை முதல்-அமைச்சர் விஜய் சந்தித்தார். </p><p>இதற்கிடையில், கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் த.வெ.க. நிகழ்ச்சி தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வெளியான நிலையில், இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். </p><p>இந்த நிலையில், பள்ளியில் த.வெ.க. நிகழ்ச்சி நேரலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, பள்ளி வளாகங்களில் அரசியல் தொடர்பாக எந்த நிகழ்வுகளும் நடைபெறக்கூடாது என்றும், அவ்வாறு நடத்தப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஏற்கனவே எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. </p> ]]></content:encoded></item><item><title>திடக்கழிவுகளை தரம் பிரித்து ஒப்படையுங்கள்: பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி வேண்டுகோள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-corporation-appeals-to-the-public-to-segregate-and-dispose-of-solid-waste</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-corporation-appeals-to-the-public-to-segregate-and-dispose-of-solid-waste#comments</comments><guid isPermaLink="false">a860f6b4-41b2-4c0a-bce6-355fbb78a7e3</guid><pubDate>Fri, 10 Jul 2026 15:26:52 +0000</pubDate><atom:updated>2026-07-10T15:26:52.607Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/w57kfj0s/Untitled-17.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/w57kfj0s/Untitled-17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் திடக்கழிவுகளை உருவாகும் இடத்திலேயே முறையாக தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைத்திட பொதுமக்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியான செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>கழிவுகள் தரம் பிரிப்பு</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் தமிழ்நாட்டில் திடக்கழிவுகளை மேலாண்மை பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்கு ஏதுவாக, திடக்கழிவுகள் உருவாகும் இடத்திலேயே முறையாக மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதாரக் கழிவுகள் மற்றும் அபாயகரமான கழிவுகள் என தரம் பிரித்து பெற்று அகற்றிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்கள்.</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, ’பெருநகர சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்கு ஏதுவாக, அனைத்து குடியிருப்புவாசிகள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பெருமளவு கழிவு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">உற்பத்தியாளர்கள் </a>(Bulk Waste Generators) ஆகியோர் திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-இன்படி திடக்கழிவுகளை உருவாகும் இடத்திலேயே தரம் பிரித்து பெருநகர சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்</p><p><strong>திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-ன் படி, கழிவுகளை பின்வரும் நான்கு வகைகளாகப் பிரித்து வழங்க வேண்டும்:</strong></p><p>· மக்கும் கழிவுகள் (பச்சை நிறக் குப்பைத்தொட்டி): உணவுக் கழிவுகள், காய்கறி மற்றும் பழத்தோல்கள், பூக்கள் மற்றும் பிற மக்கும் கழிவுகள்.</p><p>· மக்காத கழிவுகள் (நீல நிறக் குப்பைத்தொட்டி): காகிதம், பிளாஸ்டிக், உலோகம், அட்டைப்பெட்டிகள், துணி மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள்.</p><p>· சுகாதாரக் கழிவுகள் (சிவப்பு நிறக் குப்பை தொட்டி): பயன்படுத்தப்பட்ட சானிட்டரி நாப்கின்கள், டயப்பர்கள், பயன்படுத்தப்பட்ட மருத்துவக் கட்டுப் பொருட்கள் போன்றவற்றை பாதுகாப்பாக சுற்றி தனியாக வழங்க வேண்டும்.</p><p>· வீட்டு அபாயகரக் கழிவுகள் / சிறப்பு கவனம் தேவைப்படும் கழிவுகள் (கருப்பு நிறக் குப்பைத்தொட்டி): பேட்டரிகள், மின் விளக்குகள், டியூப் லைட்கள், மின்னணுக் கழிவுகள், காலாவதியான மருந்துகள், பெயிண்ட் டப்பாக்கள் உள்ளிட்ட அபாயகரக் கழிவுகளை தனியாக ஒப்படைக்க வேண்டும்.</p><h2>சுகாதாரம் மேம்படும்</h2><p>கழிவுகளை உருவாகும் இடத்திலேயே தரம் பிரிப்பது ஒவ்வொரு தனிநபரின் பொறுப்பாகும். இதன்மூலம் மக்கும் கழிவுகளை உரமாக மாற்றவும், மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை மீட்டெடுக்கவும், குப்பைக் கிடங்குகளுக்கு அனுப்பப்படும் கழிவுகளின் அளவை குறைக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்தவும் முடியும்.</p><p>பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் வீடுகள்தோறும் தரம் பிரிக்கப்பட்ட கழிவுகளை சேகரிக்க தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-இல் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு வகை கழிவு தரம் பிரிப்பு முறையை திறம்பட செயல்படுத்தும் வகையில், மாநகராட்சியின் அனைத்து பேட்டரி மூலம் இயக்கப்படும் கழிவு சேகரிப்பு வாகனங்களிலும் (Battery Operated Vehicles - BOVs), கழிவுகளின் நான்கு வகைகளையும் தனித்தனியாக சேகரிப்பதற்காக நான்கு வண்ண அடையாளங்களுடன் கூடிய தனித்தனி குப்பைத் தொட்டிகள் (Compartments) வைக்கப்பட்டுள்ளன.</p><p>எனவே, பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் அனைவரும் தரம் பிரிக்கப்பட்ட கழிவுகளை மட்டுமே பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><h2>ஆரோக்கியமான சென்னையை உருவாக்குவோம்</h2><p>கழிவுகள் உருவாகும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">இடத்திலேயே </a>பிரித்தல் மற்றும் அறிவியல் முறையிலான திடக்கழிவு மேலாண்மையை ஊக்குவிக்கும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தகவல்–கல்வி–தொடர்பு (IEC) நடவடிக்கைகள், பள்ளிகள் மற்றும் சமூக அமைப்புகள் மூலம் தொடர்ச்சியான விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.</p><p>தூய்மையான, ஆரோக்கியமான மற்றும் நிலைத்தன்மை வாய்ந்த சென்னையை உருவாக்குவதில் பொதுமக்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். எனவே, அனைத்து பொதுமக்களும் தங்களது வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் தினந்தோறும் உருவாகும் கழிவுகளை உருவாகும் இடத்திலேயே தரம் பிரித்து பெருநகர சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைத்து, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p>திடக்கழிவுகளை உருவாகும் இடத்திலேயே தரம் பிரிக்கத் தவறுதல் அல்லது திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026 மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் விதிமுறைகளை மீறுதல் ஆகியவை சட்டப்படியான அபராதம் மற்றும் பிற நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.</p><p>"திடக்கழிவுகளை உருவாககும் இடத்திலேயே தரம் பிரிப்போம் ! தூய்மையான, பசுமையான, ஆரோக்கியமான சென்னையை உருவாக்குவோம் !!"</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>அரசு பள்ளிகளில் கல்வி சாராத நிகழ்ச்சிகளுக்கு தடை - பள்ளிக்கல்வித்துறை அறிக்கை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-non-academic-events-in-government-schools-school-education-department-statement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-non-academic-events-in-government-schools-school-education-department-statement#comments</comments><guid isPermaLink="false">926a343e-e6ef-4489-84e7-d879954e1bd5</guid><pubDate>Fri, 10 Jul 2026 15:19:15 +0000</pubDate><atom:updated>2026-07-10T15:19:15.151Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>School Education Department,பள்ளிக்கல்வித்துறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/4elk1was/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/4elk1was/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பள்ளி வளாகங்களில் அரசியல் தொடர்பாக எந்த நிகழ்வுகளும் நடைபெறக்கூடாது என்றும், அவ்வாறு நடத்தப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஏற்கனவே எச்சரித்துள்ளார். இது தொடர்பான அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டிருந்தார். </p><p>இந்த நிலையில இன்று காலை கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக கட்சி நிகழ்ச்சி அரசு பள்ளி ஒன்றில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், தொடக்க கல்வித்துறை இயக்குனர் நரேஷ் ஆகியோர் இணைந்து ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளனர். </p><p>அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கையில், பள்ளி வளாகங்களில் கற்றல், கற்பித்தல் மற்றும் அது தொடர்பான செயல்பாடுகள் தவிர வேறு எந்த நிகழ்ச்சிகளும் நடைபெறக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை விதிமுறைகளின்படி பள்ளிகள் சாதி, மத பாகுபாடு இன்றி, அரசியல் சார்புகள் இன்றி பாடம் நடத்தக்கூடிய ஒரு இடமாகும். அஙகே மற்ற செயல்பாடுகளுக்கு அனுமதி கிடையாது.</p><p>குறிப்பாக அரசியல் நிகழ்வுகள், பிரிவினைவாத வகுப்புவாத நிகழ்வுகள் எதற்கும் அனுமதி கிடையாது. இதனை அதிகாரிகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் ரீதியான செயல்பாடுகளுக்கு பள்ளி வளாகங்களை பயன்படுத்துவது சில நேரங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தி, மாணவர்களிடையே மன அழுத்தத்தையும் ஏற்படுத்திவிடும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p><p> எனவே, பள்ளி வளாகங்களை கல்வி சாராத நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தக்கூடாது என்பதில் அதிகாரிகள முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் எனவும், பள்ளிக்கல்வித்துறை விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ஹூண்டாய் நிறுவனத்தின் முதலீடை உறுதி செய்யவேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/hyundais-investment-should-be-confirmed-edappadi-palaniswami-insists</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/hyundais-investment-should-be-confirmed-edappadi-palaniswami-insists#comments</comments><guid isPermaLink="false">961e81e5-ff80-48da-858f-43175e26283c</guid><pubDate>Fri, 10 Jul 2026 14:56:41 +0000</pubDate><atom:updated>2026-07-10T14:56:41.141Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,investment,முதலீடு,Edappadi Palaniswami ​</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/acik6nr0/Untitled-10.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/acik6nr0/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- </p><p>தென்கொரிய நாட்டைச் சேர்ந்த ஹூண்டாய் கப்பல் கட்டுமான நிறுவனம் ஆந்திர மாநில மந்திரியுடன் முதலீடு தொடர்பான பேச்சுவார்தை நடத்தியுள்ளதாக செய்திகள் வருகின்றன. ஏற்கனவே இந்நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ. 38,000 கோடி மதிப்பிலான முதலீடு செய்யவிருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இந்நிறுவன முதலீடு நம் மாநிலத்தின் கைவிட்டு போகக்கூடிய ஒரு அச்சமான சூழல் உள்ளது.</p><p>ஹூண்டாய் நிறுவனம் 1990-களில் இருந்து தமிழகத்தில் தொழில் முதலீடு செய்துள்ள நிறுவனம். அது இன்னொரு மாநிலத்தை தற்போது நாடுவது என்பதே, இன்றைய தவெக அரசு எப்படிப்பட்ட நம்பிக்கைக்கு பாத்திரமற்ற அரசாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.</p><p>இதற்கு மூலக் காரணம், ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக அரசு துவங்கிய Guidance Tamil Nadu நிறுவனத்தை முறையாக நிர்வகிக்காமல், அதன் செயல்பாடுகளை மழுங்கடிக்கும் நோக்கில் இன்றைய தவெக அரசு செயல்படுவது தான்! Guidance TamilNadu நிறுவனத்தில் இருந்து 10 அதிகாரிகள் பதவி விலகிவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன. இவையெல்லாம் முதலீடுகளை பாதிக்கும் என்பதை இந்த அரசு கொஞ்சமாவது உணர்கிறதா?</p><p>Amateur அமைச்சரவையின் Immature அமைச்சராக உள்ள இன்றைய தொழில்துறை அமைச்சர், இன்னொரு ரீல் வெளியிட்டால் இந்த நிறுவனம் வந்துவிடும் என நினைத்தால், அப்படிப்பட்ட எண்ணத்தின் முட்டாள்தனத்தை விவரிக்க வார்த்தையே இல்லை. உடனடியாக ஹூண்டாய் நிறுவனத்தோடு பேச்சுவார்தையை FastTrack செய்து அவர்களின் முதலீடை உறுதி செய்யவேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>விஜயின் முதுகுதான் கரூரின் நினைவுச்சின்னம்  - முன்னாள் அமைச்சர் சிவசங்கர் தாக்கு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vijays-back-is-the-monument-of-karur-former-minister-sivashankar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vijays-back-is-the-monument-of-karur-former-minister-sivashankar#comments</comments><guid isPermaLink="false">182f67c9-b4e0-46f4-9cb5-e7bd2b300394</guid><pubDate>Fri, 10 Jul 2026 14:52:55 +0000</pubDate><atom:updated>2026-07-10T14:52:55.618Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Chennai,Karur,சிவசங்கர்,tvk vijay,sivasankar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/xq80yj11/sivasankaar33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிவசங்கர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/xq80yj11/sivasankaar33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கரூரை விட்டு ஓடியது யார் என்பது மக்களுக்கு தெரியும். அந்த முதுகு கரூர் மக்களுக்கு நினைவுச்சின்னமாக இருக்கும் என சிவசங்கர் கூறியுள்ளார்.</p><h2>அரசு பணி</h2><p>கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு பணிக்கான பணி ஆணை வழங்க இன்று கரூர் சென்ற முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் திமுகவை பலமாக தாக்கி பேசிய நிலையில் இதுகுறித்து திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர்  அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்திப்பில் கூறியதாவது:-</p><h2>திமுக மீது பழி</h2><p>உங்கள் மீது உள்ள தப்பை எல்லாம் அழித்துவிட்டு கரூர் சம்பவத்தின் பழியை திமுக மேல் போட்டுள்ளீர்கள். எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவரும் தன்னுடைய அரசியல் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் உயிரிழப்பதை விரும்ப மாட்டார்கள் என்றும் மிகப் பெருந்தன்மையாக எங்கள் தலைவர் சொன்னார். காரணம் அவர் உயர்ந்த உள்ளம் கொண்ட மனிதர். அவருக்கும் உங்களுக்கும் எந்த விதத்தில் ஒப்பிட முடியும். </p><h2>கரூரை விட்டு ஓடியது யார்</h2><p>கரூரை விட்டு ஓடியது யார் என்பது மக்களுக்கு தெரியும். அந்த முதுகு கரூர் மக்களுக்கு நினைவுச்சின்னமாக இருக்கும். நீங்களாக உங்களை பெரிய மனிதராக நினைத்துக்கொண்டு பேசிக் கொண்டிருக்கிறீர்கள். எங்களுடைய தலைவருடன் உங்களை ஒப்பிட முடியாது.</p><p>குற்றம் சுமத்த வேண்டும் என முடிவு செய்திருந்தால் குற்றம் சுமத்தியதோடு இருக்க முடியாது வழக்கே போட சொல்லி இருக்கலாம். வழக்கே போட்டு இருந்தால் என்ன நிலைமை என்று  உங்களுக்கு  தெரியும். பெருந்தன்மையாக ஒரு அரசியல் கட்சித் தலைவர் தன்னுடைய தொண்டர்கள் உயிரிழப்பதை விரும்ப மாட்டார்கள் என்று சொல்லி பெருந்தன்மை காட்டியதால் இன்று நீங்கள் மனதில் பட்டதை எல்லாம், வாயில் வந்ததை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.</p><h2>திமுக ஆட்சி</h2><p>அடுத்தது ஒரு வசனம் சொல்லி இருக்கிறீர்கள் ''எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் மனதிற்கு ஏற்பட்ட காயங்களை மறக்க முடியாது. நிறைய வலிகள், நிறையக் காயங்களை தாண்டி தான் வந்துள்ளேன். என் வாழ்வில் அதிக வலி காயம் கொடுத்தது கரூர் சம்பவம் தான். மக்களை சந்திக்கவும் மக்களிடம் பேசவும் கருவூருக்கு வந்தேன்' என்று <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விஜய்</a> சொல்லியுள்ளார். ஆனால் வந்தது எத்தனை நாட்கள் கழித்து? சம்பவம் முடிந்து 250 நாட்களுக்கு மேலாகிவிட்டது. அப்பொழுதுதான் திமுக ஆட்சி உங்களை கரூருக்கு செல்லவிடாமல் தடுத்தது என்றால், உங்கள் ஆட்சி அமைந்தே இரண்டு மாதம் ஆகிவிட்டது.</p><h2>யோகிபாபு</h2><p>நாளைக்கு யோகிபாபு போகும்போது கூட்டம்கூடி ஏதாவது நடந்தால் அதற்கு அரசுத் தரப்பில் இவர் செய்துவிடுவாரா?  இடைத் தேர்தலுக்காகத்தான் கரூருக்கு சென்றிருக்கிறார் முதல்-அமைச்சர் விஜய். </p><p>துயரத்தில் இருந்ததாக கூறிய விஜய் திருமண விழாக்களில் மகிழ்ச்சியாக பங்கேற்றார்,</p><p>தன் தவறுகளை மறைத்துவிட்டு திமுக மீது குற்றம்சாட்டுகிறார் விஜய். இன்று நேரத்திற்கு சென்ற விஜய் பிரசாரத்திற்கு ஏன் தாமதமாக சென்றார்? தாம் முதல்-அமைச்சரையே மறந்துவிட்டு பேசுகிறார் விஜய்.</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>எஞ்சின் கோளாறு: சென்னை-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயில் 2 மணி நேரம் நிறுத்தம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/engine-failure-chennai-rameswaram-express-delayed-by-two-hours</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/engine-failure-chennai-rameswaram-express-delayed-by-two-hours#comments</comments><guid isPermaLink="false">b013aaf3-9dfe-4510-af50-9c3c4260c9bc</guid><pubDate>Fri, 10 Jul 2026 14:37:17 +0000</pubDate><atom:updated>2026-07-10T14:37:17.064Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Engine Failure,delay,ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்,Rameswaram Express,எஞ்சின் பழுது</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/qjoutahw/train.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/qjoutahw/train.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பண்ருட்டி,</p><p>சென்னை எழும்பூரில் இருந்து நேற்று மாலை 6 மணிக்கு ராமேஸ்வரம்  செல்லும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">எக்ஸ்பிரஸ் ரெயில்</a> புறப்பட்டது. ரெயில் ஒன்று நேற்று இரவு 8 மணிக்கு விழுப்புரம் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அங்கு வழக்கமான நடைமுறைப்படி ரெயிலின் என்ஜின் மாற்றப்பட்டது. என்ஜின் மாற்றும் பணிகள் அனைத்தும் முடிந்த பின்னர், இரவு 8.40 மணிக்கு அந்த எக்ஸ்பிரஸ் ரெயில் விழுப்புரத்தில் இருந்து தனது பயணத்தை தொடங்கியது.</p> <h2>நடுவழியில் பழுது</h2><p>ரெயில் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, விழுப்புரத்தை அடுத்த சேந்தனூர் ரெயில் நிலையத்தை நெருங்கியபோது, ரெயிலின் என்ஜினில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் சேந்தனூர் ரெயில் நிலையத்திலேயே எக்ஸ்பிரஸ் ரெயில் நிறுத்தப்பட்டது.</p> <h2>பயணிகள் அவதி</h2><p> எஞ்சின் கோளாறால் ரெயில் பாதி வழியில் நின்றதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். தகவலறிந்த ரெயில்வே அதிகாரிகள் உடனடியாக விழுப்புரத்தில் இருந்து மாற்று எஞ்சினை அனுப்பி வைத்தனர்.</p><p>சுமார் 2 மணி நேர கால தாமதத்திற்கு பிறகு மாற்று எஞ்சின் வந்ததை தொடர்ந்து, இரவு II மணிக்கு சேந்தனூரில் இருந்து ரெயில் மீண்டும் புறப்பட்டு ராமேஸ்வரம் நோக்கி சென்றது.</p> <p>எஞ்சின் கோளாறு  காரணமாக ரெயில் தாமதமானதால் ராமேஸ்வரம் செல்லும் வழியில் உள்ள மற்ற ரெயில்களின் நேரமும் பாதிக்கப்பட்டது.</p> ]]></content:encoded></item><item><title>வேறு பெண்ணை திருமணம் செய்த கணவருக்கு அரசு வேலையா? கரூரில் பலியான சிறுவனின் தாய் கண்ணீர் பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-a-government-job-available-to-a-husband-who-married-another-woman-mother-of-a-boy-who-died-in-karur-cries</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-a-government-job-available-to-a-husband-who-married-another-woman-mother-of-a-boy-who-died-in-karur-cries#comments</comments><guid isPermaLink="false">660e4f52-9557-4aca-a75b-cdbd8abe293c</guid><pubDate>Fri, 10 Jul 2026 14:31:24 +0000</pubDate><atom:updated>2026-07-10T14:31:24.038Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர் கூட்ட நெரிசல்,TVK,தவெக,கரூர்,விஜய்,திருமணம்,Karur,கரூர் சம்பவம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/ssxn38en/karuru3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறுவனின் தாய் கண்ணீர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/ssxn38en/karuru3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>குடும்பத்தை தவிக்கவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்த கணவருக்கு அரசு வேலை வழங்குவதாக என கரூரில் பலியான சிறுவனின் தாய் கண்ணீர் மல்க கூறினார்.</p><p>கரூர்,</p><p>கரூர் கலெக்டர் அலுவலகத்தில்  இன்று தமிழக முதல்-அமைச்சர் விஜய்  கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தை சேர்ந்த 32 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலைக்கான பணி நியமன ஆணை வழங்கினார்.  இதற்காக தேர்வு செய்யப் பட்ட பயனாளிகள் கலெக்டர் அலுவலக அரங்கத்திற்குள் அனுமதிக்கப் பட்டனர். </p><h2>கணவர் மீது குற்றச்சாட்டு</h2><p>அப்போது ஒரு இளம்பெண் தனக்கு அனுமதி அளிக்காமல் தன்னையும், குழந்தையையும் கைவிட்டு சென்ற கணவரை அதிகாரிகள் அனுமதித்து உள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும் அவர் கண்ணீர் மல்க கூறும்போது, </p><p>எனது பெயர் திருவளர் செல்வி என் கணவர் ரகுநாதன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே, என்னையும், குழந்தையையும் தவிக்கவிட்டுவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு சென்று விட்டார். எனது மகன் சனுஜ் வர்ஷனை சிறு வயது முதல் என் தாயின் உதவியுடன் வளர்த்து வந்தேன். </p><h2>கூட்ட நெரிசல்</h2><p>இந்த நிலையில் கரூர் சம்பவத்தில் எனது சகோதரியுடன் சென்ற எனது மகன் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதா பமாக உயிரிழந்தான். இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக அரசு மற்றும்  முதல்-அமைச்சர் விஜய் தரப்பில்  இருந்து எனக்கு முறையான நிவாரண உதவிகள் அனைத்தும் சட்டப் பூர்வமாக வழங்கப்பட்டது.</p><p>ஆனால், எனது மகனின் இறுதி சடங்கு மற்றும் இதர நிகழ்வுகளின் போது அதிகாரிகளின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. உயிரிழந்த குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதை அறிந்து இங்கு வந்தேன். ஆனால், அதிகாரிகள் உள்ளே என்னை அனுமதிக்கவில்லை. ஆனால், எனது கணவர் கூட்ட அரங்கில் அமரவைக்கப்பட்டு இருந்தார். </p><h2>கண்டுகொள்ளாத தந்தை</h2><p>கடந்த 10 ஆண்டுகளாக பிள்ளையை கண்டு கொள்ளாத, ஒரு நாள்கூடப் பள்ளிக்கு அழைத்து செல்லாத அவருக்கு எந்த அடிப்படையில் அதிகாரிகள்<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> அரசு வேலை</a> வழங்கு கிறார்கள்?. எனக்கு என்று ஆம்பளை துணை யாரும் இல்லை. நியாயம் கேட்க போனால் யாரும் முறையான பதில் சொல்ல மறுக்கிறார்கள். எனக்கு நீதி வழங்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறினார். </p>]]></content:encoded></item><item><title>அரசு மருத்துவமனைகளின் குறைகளை களைய முதல்-அமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cm-vijay-orders-action-to-resolve-shortcomings-in-government-hospitals</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cm-vijay-orders-action-to-resolve-shortcomings-in-government-hospitals#comments</comments><guid isPermaLink="false">3d1da1ee-25e5-473d-90f1-73d525522039</guid><pubDate>Fri, 10 Jul 2026 14:27:46 +0000</pubDate><atom:updated>2026-07-10T14:27:46.771Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசு மருத்துவமனைகள்,Govt Hospitals,தமிழக சுகாதாரத்துறை,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/uo82qetl/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/uo82qetl/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசு மருத்துவமனைகளின் குறைகளை களைய முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் முதல்-அமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில் அரசு மருத்துவமனைகளில் பல்வேறு குறைபாடுகள் இருப்பது கள ஆய்வில் தெரிய வந்துள்ளது.</p><p>சென்னை முதல் தூத்துக்குடி வரை 31 மாவட்ட மருத்துவமனைகளில் நிலவும் குறைபாடுகள் குறித்து முதல்-அமைச்சர் அலுவலகம் விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் அரசு மருத்துவமனைகளில் தூய்மைப்பணி, குடிநீர், கழிப்பறை, நோயாளிகள் பராமரிப்பு, ஊழல், முறைகேடு, திருட்டு, நாய்கள் தொல்லை உள்ளிட்ட 304 குறைபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த அறிக்கை தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், அரசு மருத்துவமனைகளின் குறைகளை களையவும் 50 நோடல் அதிகாரிகளை தமிழக சுகாதாரத்துறை நியமித்துள்ளது. </p><p>சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் வார்டு பாய்கள், காவலர்கள் சிலர் கஞ்சா பயன்படுத்துவதாகவும், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டு முதல் பிணவறை வரை ரூ.2 ஆயிரம் வரை லஞ்சம் வாங்குவதாகவும் தெரிய வந்துள்ளது. அனைத்து மாவட்ட கலெக்டர்களும் அரசு மருத்துவமனைகளின் குறைபாடுகளை ஆய்வு செய்து சீரமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருப்பூர்: டேங்கர் லாரி - கார் நேருக்கு நேர் மோதி விபத்து - 6 பேர் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruppur-tanker-lorry-car-head-on-collision-accident-6-dead</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruppur-tanker-lorry-car-head-on-collision-accident-6-dead#comments</comments><guid isPermaLink="false">5a6190c8-611a-4807-a90a-845f5edb3467</guid><pubDate>Fri, 10 Jul 2026 13:57:38 +0000</pubDate><atom:updated>2026-07-10T13:57:38.399Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,Tiruppur,திருப்பூர்,accident death</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/c9u6936m/Untitled-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/c9u6936m/Untitled-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><p>திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே டேங்கர் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.</p><h2>நேருக்கு நேர் மோதி விபத்து</h2><p>ஊத்துக்குளி - விஜயமங்கலம் சாலையில் காக்காப்பள்ளம் அருகே இன்று ஏற்பட்ட இந்த விபத்தில், காரில் பயணம் செய்த 2 பெண்கள், 2 சிறுவர்கள் உள்பட மொத்தம் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த ஒருவர் மீட்கப்பட்டு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மருத்துவமனையில் </a>சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>விபத்து குறித்து தகவல் அறிந்த ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டதுடன், உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><h2>விசாரணை</h2><p>இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்குப் பிறகு தப்பிச் சென்ற டேங்கர் லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர். விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>‘இவ்வளவு கர்வம் தேவையில்லை...’ - முதல்-அமைச்சர் விஜய் பேச்சுக்கு குறித்து துரைமுருகன் விமர்சனம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-no-need-for-such-arrogance-duraimurugan-criticizes-chief-minister-vijays-remarks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-no-need-for-such-arrogance-duraimurugan-criticizes-chief-minister-vijays-remarks#comments</comments><guid isPermaLink="false">42cb85da-27da-41d6-bb70-b41ce0ad5d9f</guid><pubDate>Fri, 10 Jul 2026 13:26:23 +0000</pubDate><atom:updated>2026-07-10T13:26:23.168Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Duraimurugan,துரைமுருகன்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/h6lp48wq/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/h6lp48wq/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கரூர் மாவட்டத்திற்கு ஒரு நாள் பயணமாக சென்ற தமிழக முதல்-அமைச்சர் விஜய், அங்கு நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு த.வெ.க. பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து பேசினார். அப்போது அவர், “கரூர் போலீசார் நினைத்திருந்தால் எங்களை எச்சரித்து, அன்று கூட்டத்தை ரத்து செய்திருக்கலாம். கூட்டத்துக்கு ஏற்றபடி போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதா? </p><p>அன்று முதல்-அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேடினார். என் குடும்ப உறவுகளை இழந்து வலியில் இருந்த என் மீதே பழியை போட்டார்கள். நான் ஓடி ஒளிந்துவிட்டேன் என்றார்கள். வாய் என்று ஒன்று இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா?” என்று ஆவேசமாக பேசினார். </p><p>இந்நிலையில், முதல்-அமைச்சர் விஜய்யின் பேச்சு குறித்து தி.மு.க. முன்னாள் அமைச்சர் துரைமுருகன் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “பேச்சிலே ஒரு கண்ணியம் இருக்க வேண்டும். இதுவரை தமிழக முதல்-அமைச்சர்கள் எதிர்க்கட்சிகளையும் அரவணைத்து, அனுசரணையாக பேசுவதைத்தான் நான் கேட்டிருக்கிறேன். ஆனால் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று பேசுவது முதல்-அமைச்சருக்கு முறையல்ல. </p><p>‘வெற்றி பெற்றவர்கள் எல்லாம் வீரர்கள் அல்ல’ என்று கண்ணதாசன் கூறுவார். இந்த வெற்றி நிலையானதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இப்படித்தான் ஒரு காலத்தில் எங்களை விட்டால் ஆளில்லை என்று காங்கிரஸ் சொன்னது. காங்கிரஸ் தோற்காமலா போய்விட்டது? அரசியலில் வெற்றி, தோல்வி சகஜம். அது இரண்டையும் ஒன்றாக பாவித்து அடுத்த முறை மக்களின் மனதை கவர்கிறவன்தான் அரசியல்வாதி. ஏதோ வந்துவிட்டோம் என்பதற்காக பேசக்கூடாது. அதுவும் சொந்த பலம் அல்ல, ஊரான் பலத்தில் வந்திருப்பவருக்கு இவ்வளவு கர்வம் தேவையில்லை.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title> சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையால் எடுக்கப்பட்ட தொடர் தீவிர நடவடிக்கைகள் என்ன? - டி.ஜி.பி அலுவலகம் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-are-the-sustained-intensive-measures-taken-by-the-singappen-special-task-force-dgps-office-explains</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-are-the-sustained-intensive-measures-taken-by-the-singappen-special-task-force-dgps-office-explains#comments</comments><guid isPermaLink="false">787ff624-04e0-4d8a-aaa2-d4e914329625</guid><pubDate>Fri, 10 Jul 2026 13:15:01 +0000</pubDate><atom:updated>2026-07-10T13:15:01.670Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>DGP Office,டி.ஜி.பி. அலுவலகம்,action நடவடிக்கை,பள்ளிschool,Singapen Athiradi Padai,சிங்கப்பெண் அதிரடிப்படை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/xpujvxia/dig-office.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை, டி.ஜி.பி அலுவலகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/xpujvxia/dig-office.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய மாநிலம் முழுவதும் சிங்கப்பெண்<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu/man-arrested-for-sexually-harassing-schoolgirl-lioness-special-task-force-operation"> சிறப்பு அதிரடி படையால்</a> எடுக்கப்பட்ட தொடர் தீவிர நடவடிக்கைகள் பற்றி டி.ஜி.பி அலுவலகம் விளக்கம். இது தொடர்பாக தமிழ்நாடு டி.ஜி.பி அலுவலகம் வெளியிட்ட செய்தியில், தெரிவித்திருப்பதாவது:-</p><h2>நடவடிக்கை</h2><p>தமிழ்நாடு காவல்துறையின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மாநிலம் முழுவதும் துரிதமான கள நடவடிக்கைகள், சமூக பங்களிப்புடன் கூடிய காவல் பணிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.</p>  <p>கடந்த 03.07.2026 முதல் 09.07 2026 வரை, மாவட்ட களப்பிரிவுகள் 371 புகார்களுக்கு சம்பவ இடத்திலேயே நடவடிக்கை எடுத்து, 25 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><h2>குழந்தை திருமணம் தடுக்கப்பட்டது</h2><p>மேலும், காணாமல் போன 7 பெண்கள் மற்றும் 6 குழந்தைகள் மீட்கப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த காலகட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடையே 3,882 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதுடன், குற்றங்கள் நடக்க சாத்தியகூறுகள் உள்ள 9,507 இடங்களில் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது. </p> <p> அறிவுசார் குறைபாடுடைய 12 நபர்கள் மீட்கப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. ஒரு குழந்தை திருமணம் தடுக்கப்பட்டதுடன், 57 பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்.</p><h2>கைது</h2><p>தஞ்சாவூரில் பள்ளி மாணவிகள் அளித்த பாலியல் தொந்தரவு புகாரின் அடிப்படையில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இரு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல்லில், மாணவி அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றவாளி கைது செய்யப்பட்டார். செங்கல்பட்டில், அரசு பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு செய்த நபர் கைது செய்யப்பட்டார்.</p><h2>இடைநிற்றல் குழந்தைகள்</h2><p>காஞ்சிபுரத்தில், பிச்சையெடுக்க வற்புறுத்தப்பட்ட அறிவுசார் குறைபாடுடைய பெண் ஒருவர் மீட்கப்பட்டு அவரது பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு உறுதி செய்யப்பட்டது. திருப்பூரில், பள்ளிக்கல்வி துறை மற்றும் குழந்தைகள் உதவி எண் அமைப்புடன் இணைந்து 33 பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.</p> <h2>கள நடவடிக்கை</h2><p>பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கில், சிங்கப்பெண் சிறப்பு படை துரிதமான கள நடவடிக்கைகள், சமூக பங்களிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை காவல் பணிகள் மூலம் தனது சேவையை தொடர்ந்து அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு வருகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நெல்லை வண்ணாரப்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட 400-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/over-400-anganwadi-workers-arrested-for-staging-a-road-blockade-in-nellai-vannarpettai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/over-400-anganwadi-workers-arrested-for-staging-a-road-blockade-in-nellai-vannarpettai#comments</comments><guid isPermaLink="false">8b7e1330-707c-4b98-aa2e-5b6b50e412d1</guid><pubDate>Fri, 10 Jul 2026 13:13:32 +0000</pubDate><atom:updated>2026-07-10T13:13:32.650Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrest,போராட்டம்,சாலை மறியல்,அங்கன்வாடி ஊழியர்கள்,Road block,Anganwadi protest</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/w9du141q/thirunelveeli-road-block.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ திருநெல்வேலி ]]></media:title><media:description type="html"><![CDATA[ திருநெல்வேலியில் அக்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/w9du141q/thirunelveeli-road-block.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நெல்லை</a> வண்ணாரப்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட 400-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.</p><p>கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில், அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும் எனத் தெரிவித்திருந்தது. ஆனால் இதுவரை எந்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை. </p><h2>கோரிக்கைகள்</h2><p>அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களைப் பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்கும் முழுநேர அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். பணி ஓய்வு பெறும்போது ஊழியர்களுக்கு ரூ. 10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ. 5 லட்சமும் பணிக்கொடையாக வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற பின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 9,000 வழங்கப்பட வேண்டும்.</p><p>அரசுப் பள்ளி ஆசிரியர்களைப் போல, அங்கன்வாடி பணியாளர்களுக்கும் மே மாதம் முழுவதும் 30 நாட்கள் கோடை விடுமுறை அளிக்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் மற்றும் தகுதியான உதவியாளர்களுக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும்.</p><h2>சாலை மறியல் போராட்டம்</h2><p>இந்த வாக்குறுதிகளை உடனடியாக புதியதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு நிறைவேற்றக் கோரி நெல்லை வண்ணாரப்பேட்டை மேம்பாலம் அருகே சுமார் 400 -க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஞானம்மாள் தலைமை தாங்கினார்.</p><p>மேலும் சி.ஐ.டி.யு நெல்லை மாவட்டத் தலைவர் முருகன் போராட்டத்தைத் துவக்கி வைத்தார். போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான பெண் ஊழியர்கள், தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் அமர்ந்து தொடர் முழக்கங்களை எழுப்பினர்.</p><h2>கைது</h2><p>இதனால் அப்பகுதியில் கடும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">போக்குவரத்து நெரிசல்</a> ஏற்பட்டது. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஊழியர்களைக் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். எனினும், ஊழியர்கள் கலைந்து செல்ல மறுத்துப் போராட்டத்தில் உறுதியாக இருந்ததால், மறியலில் ஈடுபட்ட 400-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களைப் போலீசார் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கைது </a>செய்தனர்.</p><p>பின்னர் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இச்சம்பவத்தால் நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியில் இன்று பெரும் பரபரப்பு நிலவியது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் ஒரே நாளில் 10 நீர்வழிக்கால்வாய்களில் 218 மெட்ரிக் டன் ஆகாயத்தாமரை, வண்டல்கள் அகற்றம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/218-metric-tons-of-water-lilies-and-silt-removed-from-10-waterways-in-chennai-in-a-single-day</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/218-metric-tons-of-water-lilies-and-silt-removed-from-10-waterways-in-chennai-in-a-single-day#comments</comments><guid isPermaLink="false">b232276a-1ab1-4aa3-8c73-cc8deb9ccb40</guid><pubDate>Fri, 10 Jul 2026 13:04:20 +0000</pubDate><atom:updated>2026-07-10T13:04:20.629Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/ysvy9ujs/Untitled-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/ysvy9ujs/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள நீர்வழிக்கால்வாய்களில் ஆகாயத்தாமரைகள் மற்றும் வண்டல்கள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று (09.07.2026) ஒருநாள் மட்டும் வியாசர்பாடி கால்வாயில் 19 மெட்ரிக் டன் கழிவுகள் உள்பட 10 நீர்வழிக்கால்வாய்களில் 218 மெட்ரிக்டன் ஆகாயத்தாமரைகள் மற்றும் வண்டல்களும் அகற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>தூர்வாரும் பணி தீவிரம்</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், கால்வாய்கள், மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் தூர்வாருதல் மற்றும் கழிவுகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p>இதன் ஒரு பகுதியாக, பருவமழைக்காலங்களில் பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள நீர்வழிக்கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில் ஆம்பிபியன் வாட்டர் மாஸ்டர் (Amphibian Water Master), ஆம்பிபியஸ் எஸ்கவேட்டர் (Amphibious Excavator), மினி ஆம்பிபியன் (Mini Amphibian) ரொபோடிக் மல்டிபர்பஸ் எஸ்கவேட்டர் (Robotic Multipurpose Excavator) இயந்திரங்கள் மூலம் சுழற்சி முறையில் தூர்வாரும் பணி மற்றும் மிதக்கும் கழிவுகளை அகற்றும் பணி நாள்தோறும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மேற்கொள்ளப்பட்டு </a>வருகிறது.</p><h2>218 மெட்ரிக் டன்</h2><p>இதில் நேற்று (09.07.2026) ஒருநாள் மட்டும் வியாசர்பாடி கால்வாயில் 19 மெட்ரிக் டன், பக்கிங்ஹாம் கால்வாயில் 23 மெட்ரிக் டன், நொளம்பூர் கால்வாயில் 20 மெட்ரிக் டன், போரூர் ஏரியில் 31 மெட்ரிக் டன், கொரட்டூர் ஏரி கால்வாயில் 46 மெட்ரிக் டன், வேளச்சேரி ஏரியில் 20 மெட்ரிக் டன், கூவம் கால்வாயில் 20 மெட்ரிக் டன், வீராங்கல் ஓடை கால்வாயில் 19 மெட்ரிக் டன், தாதாங்குப்பம் கால்வாயில் 20 மெட்ரிக் டன் என மொத்தம் 218 மெட்ரிக் டன் ஆகாயத்தாமரைகள் மற்றும் வண்டல்கள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>தொடர்ச்சியாக, கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில் ஆகாயத்தாமரைகள் அகற்றி, தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற பயத்தில் மீண்டும் குழந்தைகளை குறிவைக்க முயற்சிக்கிறீர்களா? - நயினார் நாகேந்திரன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/are-you-trying-to-target-children-again-for-fear-of-the-regime-falling-nainar-nagendran-questions</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/are-you-trying-to-target-children-again-for-fear-of-the-regime-falling-nainar-nagendran-questions#comments</comments><guid isPermaLink="false">270a2a23-1819-49bf-a851-d57beb104a3f</guid><pubDate>Fri, 10 Jul 2026 12:57:29 +0000</pubDate><atom:updated>2026-07-10T12:57:29.398Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர்,நயினார் நாகேந்திரன்,Karur,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,தவெக அரசு,TVK Government,Nainar Nagenthran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/3vs0stty/Untitled-8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/3vs0stty/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>“கல்விக்கூடங்கள் காட்சிக்கூடங்கள் அல்ல, அரசியலின் மேடை அல்ல” என்று நீங்கள் நீட்டி முழக்கி, இன்னும் ஒரு நாள் கூட முழுதாக முடிவடையவில்லை, அதற்குள் இன்று கரூரில் முதல்வர் விஜய் பங்கேற்ற விழா, பள்ளிக்கூடங்களில் “நேரலை”யில் ஒளி பரப்பப்படுவதாக காணொளி வெளியாகியுள்ளது. </p><p>சட்டமன்ற விவாதங்களை தடையின்றி நேரலையில் ஒளிபரப்ப முடியாத உங்கள் தவெக அரசு, தவெகவின் கட்சி நிகழ்வுகளை மெனக்கெட்டு அரசுப் பள்ளிகளில் நேரலை செய்வது அருவருப்பான அரசியல் வியூகம். பள்ளிக் கூடங்களையும், படிக்கும் மாணவர்களையும், கட்சி தூதுவர்கள் போல பாவிக்கும் தவெகவினரின் ஆணவம் கடும் கண்டனத்திற்குரியது. </p><p>இல்லை தெரியாமல்தான் கேட்கிறோம், வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு, பிள்ளைகளை பார்க்கச் செய்யுமளவிற்கு இன்றைய கரூர் நிகழ்வு என்ன அறிவார்ந்த அரசு நிகழ்ச்சியா? அல்லது அனுபவம் வாய்ந்த அறிஞர்கள் பங்கேற்ற அறிவியல் விவாத மேடையா? தனது தேர்தல் பிரசாரத்தில் ஏற்பட்ட பாதிப்பிற்கு, ஜோசப் விஜய் பாவ மன்னிப்பு கேட்கும் “Personal Event” தானே? </p><p>மற்ற கட்சிகளை குறை கூறி, தங்களை புனிதராக நிறுவ முற்படும் தவெகவின் கட்சி நிகழ்வை, அரசுப் பள்ளிகளில் நேரலையில் ஒளிபரப்புவதற்கு உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்? அந்தளவிற்கு விளம்பர மோகம் உங்களை வாட்டி வதைக்கிறதா? அல்லது எப்படியும் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற பயத்தில் மீண்டும் குழந்தைகளை குறிவைக்க முயற்சிக்கிறீர்களா? இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>புதிய உச்சத்தை தொட்ட முட்டை விலை!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/egg-prices-hit-a-new-high</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/egg-prices-hit-a-new-high#comments</comments><guid isPermaLink="false">ccacf7c4-19c3-4dc7-bcae-2fb11429695d</guid><pubDate>Fri, 10 Jul 2026 12:52:06 +0000</pubDate><atom:updated>2026-07-10T12:52:06.408Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>முட்டை விலை,egg price,முட்டை,egg,முட்டை விலை உயர்வு,Egg price hike</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/nxcls5ta/Untitled-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/nxcls5ta/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல்,</p><p>நாமக்கல் மாவட்டத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.</p><h2>5 காசுகள் உயர்வு</h2><p>இந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் முட்டை கொள்முதல் விலை புதிய உச்சத்தை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தொட்டுள்ளது</a>. அதன்படி, நேற்று முட்டை விலை 650 காசுகளாக (ரூ.6.50) இருந்து வந்தது. இதற்கிடையே இன்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த நிர்வாகிகள் முடிவு செய்தனர். எனவே இன்று முட்டை கொள்முதல் விலை 655 காசுகளாக (ரூ.6.55) அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. </p><p>மேலும் சில்லறை விற்பனையில் முட்டை விலை 8 ரூபாயை தொட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘த.வெ.க.வினர் கூறிய மாற்றம் என்பது பெயர் மாற்றம் தானா?’ - கீதா ஜீவன் விமர்சனம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-change-mentioned-by-tvk-members-merely-a-change-of-name-geetha-jeevans-criticism</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-change-mentioned-by-tvk-members-merely-a-change-of-name-geetha-jeevans-criticism#comments</comments><guid isPermaLink="false">cb20b529-5c78-4f7b-8a50-6cc6f34fd1bd</guid><pubDate>Fri, 10 Jul 2026 12:49:17 +0000</pubDate><atom:updated>2026-07-10T12:49:17.770Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,த.வெ.க.,கீதா ஜீவன்,geetha jeevan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/eii7xykd/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/eii7xykd/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தி.மு.க. முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-</p><p>“தி.மு.க. அரசு கொண்டு வந்த 'மகளிர் விடியல் பயணம்' திட்டத்தை 'மகளிர் பயணம்' எனப் பெயர் மாற்றியிருக்கிறது த.வெ.க. அரசு. அ.தி.மு.க.வின் 10 ஆண்டுகால ஆட்சியால் இருண்டு கிடந்த தமிழ்நாட்டுக்கு விடியலை கொடுத்தது நமது தி.மு.க. அரசு. </p><p>தற்போதைய த.வெ.க. அரசு,  மீண்டும் தமிழ்நாட்டை இருண்ட காலமாக மாற்றப் போவதால் 'விடியல்' என்ற சொல்லை அவர்களாகவே நீக்கியிருக்கிறார்கள் போல..! மகளிர் விடியல் பயணத்தில் விடியலை தூக்கியவர்கள், வரும் நாட்களில் 'மகளிர் பயணம்' என்ற சொற்களையும் தூக்கிவிட்டு இத்திட்டத்தையே நிறுத்திவிடுவார்களோ என்ற அச்சம் பெண்களிடையே மேலோங்குகிறது! மாற்றம் என்று தவெகவினர் கூறியது பெயர் மாற்றம் தான் போல!”</p><p>இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/consultative-meeting-of-aiadmk-district-functionaries-led-by-edappadi-palaniswami</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/consultative-meeting-of-aiadmk-district-functionaries-led-by-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">e4ab3dc7-c051-4be7-9651-d1d8f5df7fbf</guid><pubDate>Fri, 10 Jul 2026 12:43:26 +0000</pubDate><atom:updated>2026-07-10T12:43:26.182Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,அதிமுக,AIADMK,Consultative meeting,Edappadi Palaniswami ​,ஆலோசனை கூட்டம்,மாவட்ட நிர்வாகிகள்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/jyy0lhob/eps.gif" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி கே. பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/jyy0lhob/eps.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம். இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில், தெரிவித்திருப்பதாவது:-</p> <h2>கலந்தாலோசனை கூட்டம்</h2><p>அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு முன்னாள் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-district-functionaries-consultative-meeting-on-july-3-and-4-edappadi-k-palaniswami">முதல்-அமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி</a> தலைமையில், சென்னை, இராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமை கழக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், கீழே குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையில் உள்ளவாறு, மாவட்டங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.</p> <p><strong>கூட்டம் நடைபெறும் தேதி,கிழமை,நேரம் மற்றும் பங்குபெறும் மாவட்டங்களின் விவரங்கள்:-</strong></p><p><strong>15.7.2026 - புதன்</strong> </p><p>காலை 10 மணி ஈரோடு புறநகர் கிழக்கு, ஈரோடு புறநகர் மேற்கு</p><p>காலை 11.30 மணி திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு</p><p>மாலை 4.30 மணி தேனி கிழக்கு, தேனி மேற்கு</p> <p><strong>16.7.2026 - வியாழன்</strong></p><p>காலை 10 மணி புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு புதுக்கோட்டை கிழக்கு</p><p>காலை 11.30 மணி கடலூர் கிழக்கு, கடலூர் வடக்கு</p><p>மாலை 4.30 மணி கடலூர் தெற்கு</p> <h2>18.7.2026 - வெள்ளி</h2><p>காலை 10 மணி கரூர்</p><p>காலை 11.30 மணி நீலகிரி</p><p>மாலை 4.30 மணி விருதுநகர் கிழக்கு, விருதுநகர் மேற்கு</p><h2> வளர்ச்சி பணிகள்</h2><p>இந்த ஆலோசனை கூட்டங்களில், நடந்து முடிந்த சட்டமன்ற பொது தேர்தல் முடிவுகள் குறித்தும்; கழகத்தின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. ஆகவே, சம்பந்தப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், நடந்து முடிந்த சட்டமன்ற பொது தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி கழகச் செயலாளர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்புகளின் மாநில துணை நிர்வாகிகள், சார்பு அமைப்புகளின் மாவட்டச் செயலாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி மன்ற தலைவர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கரூரில் 31 பேருக்கு வழங்கப்பட்ட பணிகள் விவரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/details-of-jobs-given-to-31-people-in-karur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/details-of-jobs-given-to-31-people-in-karur#comments</comments><guid isPermaLink="false">6d2e83c5-aa39-4e7c-a1b4-063241d28d7f</guid><pubDate>Fri, 10 Jul 2026 12:25:14 +0000</pubDate><atom:updated>2026-07-10T12:25:14.555Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Karur Stampede,கரூர் கூட்டநெரிசல்,பணி நியமன ஆணை,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/u5g3enu3/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/u5g3enu3/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கரூர், </p><p>தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி கரூரில் நடைபெற்ற த.வெ.க. பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்துபோனார்கள். இவர்களது குடும்பத்தினர்களில் 31 பேருக்கு அரசுப் பணியும், ஒருவருக்கு ரூ.10 லட்சம் ரொக்கமும் வழங்கும் நிகழ்வு கரூரில் இன்று நடைபெற்றது.</p><p>இதில், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கலந்துகொண்டு ரூ.10 லட்சத்திற்கான காசோலை மற்றும் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.  அதன்படி, க.சாந்திக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. 31 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. அவர்களது பெயர் மற்றும் நியமனம் செய்யப்படும் துறை விவரம் வருமாறு:-</p><p>ஆனந்த ஜோதி - இளநிலை உதவியாளர் (பள்ளி கல்வித்துறை), மா.நிவேதா - இளநிலை உதவியாளர் (பள்ளி கல்வித்துறை), சு.கலைச் செல்வி - அலுவலக உதவியாளர் (மாவட்ட வருவாய் அலகு), செ.சதீஸ் குமார் - அலுவலக உதவியாளர் (மாவட்ட வருவாய் அலகு), வெ.விமல் - அலுவலக உதவியாளர் (மாவட்ட வருவாய் அலகு).</p><p>வை.சங்கவி - இளநிலை உதவியாளர் (பள்ளி கல்வித்துறை), பா.ரகுநாதன் - இரவு காவலர் (மாவட்ட வருவாய் அலகு), பெ.செல்வராணி - மசால்ஜி (மாவட்ட வருவாய் அலகு), ச.திவ்யா - இளநிலை உதவியாளர் (பள்ளி கல்வித்துறை), ந.கிருஷ்ணமூர்த்தி - இளநிலை உதவியாளர் (பள்ளி கல்வித்துறை), மோனிஷா - இளநிலை உதவியாளர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை).</p><p>ப.சந்திரகலா - இளநிலை உதவியாளர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை), ச.மகாலட்சுமி - இளநிலை உதவியாளர் (காவல் துறை), பா.தனலட்சுமி - இளநிலை உதவியாளர் (காவல் துறை), சு.முருகன் - அலுவலக உதவியாளர் (கரூர் மாவட்ட அலகு), செ.பிரபாகரன் - இளநிலை உதவியாளர் (பதிவுத்துறை), ம.ஷர்மிளா - இளநிலை உதவியாளர் (பதிவுத்துறை), ச.சந்தியா - இளநிலை உதவியாளர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை).</p><p>அஷ்வின் குமரன் - இளநிலை உதவியாளர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை), ச.சுதன் - அலுவலக உதவியாளர் (கரூர் மாவட்ட அலகு),  அகிலா - அலுவலக உதவியாளர் (மாவட்ட வருவாய் அலகு), குணசேகர் - இளநிலை உதவியாளர் (பேரூராட்சிகள் துறை), ஜெயபிரகாஷ் - இளநிலை உதவியாளர் (ஊரக வளர்ச்சித் துறை), நிவேதிதா - இளநிலை உதவியாளர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை), தீபலட்சுமி - இளநிலை உதவியாளர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை).</p><p>மல்லிகா - இளநிலை உதவியாளர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை), பிரபாகரன் - இளநிலை உதவியாளர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை), ஜோதி - இரவு காவலர் (பழங்குடியினர் அடிமலைப்புதூர் உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளி), ம.பிரியதர்ஷினி - இளநிலை உதவியாளர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஊராட்சித் துறை), க.சக்திவேல் - இளநிலை உதவியாளர் (பள்ளி கல்வித்துறை), ந.யோகேஷ்குமார் - இரவு காவலர் (மாவட்ட வருவாய் அலகு).</p>]]></content:encoded></item><item><title>ரூ.2,000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலம் - தமிழக அரசு அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/auction-of-bonds-worth-rs-2000-crore-tamil-nadu-government-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/auction-of-bonds-worth-rs-2000-crore-tamil-nadu-government-announcement#comments</comments><guid isPermaLink="false">942f83fd-e61f-4c17-b846-aa4925abe091</guid><pubDate>Fri, 10 Jul 2026 12:06:10 +0000</pubDate><atom:updated>2026-07-10T12:06:10.288Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,Bonds,TamilNadu Goverment,பிணையப் பத்திரங்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/muaa2lo2/tamilnadu.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/muaa2lo2/tamilnadu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ரூ.2,000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>பிணையப் பத்திரம் ஏலம்</h2><p>தமிழ்நாடு அரசு மொத்தம் ரூபாய் 2000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான ரூ. 1000 கோடி மதிப்புள்ள 8 ஆண்டுகால பிணையப் பத்திரம் மற்றும் ரூ. 1000 கோடி மதிப்புள்ள 15 ஆண்டுகால பிணையப் பத்திரம் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் ஜூலை 14, 2026 அன்று நடத்தப்படும். </p><p>போட்டி ஏலக்கேட்புகள் முற்பகல் 10.30 <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மணியிலிருந்து </a>11.30 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.00 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் [Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System] மின்னணு படிவத்தில் (Electronic format) ஜூலை 14, 2026 அன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரைவார்ப்பதா? -  விஜய் அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/handing-over-temple-properties-to-encroachers-nainar-nagendran-condemns-the-vijay-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/handing-over-temple-properties-to-encroachers-nainar-nagendran-condemns-the-vijay-government#comments</comments><guid isPermaLink="false">90b0ab2c-a5ba-41dd-a43b-a1739a52e37e</guid><pubDate>Fri, 10 Jul 2026 12:06:04 +0000</pubDate><atom:updated>2026-07-10T12:06:04.351Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,கண்டனம்,கோவில் சொத்துகள்,விஜய் அரசு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/n87bohf3/nainar-nagendheran.new.gif" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/n87bohf3/nainar-nagendheran.new.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ரூ.25,000 கோடி மதிப்பிலான திருக்கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரைவார்ப்பதா? - ஜோசப் விஜய் அரசுக்கு கண்டனம்! இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p> <h2>அதிர்ச்சியளிக்கிறது</h2><p>தமிழ்நாட்டில் புதிதாக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய்யின் தவெக அரசு, ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே ஆலய சொத்துகளை சூறையாட தொடங்கி தங்களின் உண்மை முகத்தை காட்டியுள்ளது. கரூரில் உள்ள 4 முக்கிய கோவில்களுக்கு சொந்தமான ரூ.25,000 கோடி மதிப்பிலான 3,085 ஏக்கர் நிலங்களை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரைவார்க்கும் நோக்கில் அவற்றின் மீதான பத்திரப்பதிவு தடையை இந்து சமய அறநிலையத்துறை நீக்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.</p><h2>அசாதாரண வேகம்</h2><p>குறிப்பாக, நேற்று காலையில் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது பரிந்துரை கடிதத்தை அனுப்புகிறார்; அதே நாளில் திருப்பூர் இணை ஆணையரின் பரிந்துரை குறிப்பும் வருகிறது; அதே ஜூலை 9-ஆம் தேதியன்றே சென்னையிலுள்ள ஆணையரும் மின்னல் வேகத்தில் தனது இறுதி உத்தரவை பிறப்பிக்கிறார். </p><p>ஒரே நாளில் வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள மூன்று முக்கிய அரசு துறைகள் இவ்வளவு அசுர வேகத்தில் கோப்புகளை நகர்த்தி இறுதி உத்தரவை வெளியிட்டதன் பின்னணி என்ன? கோவில் நிலங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதில் காட்டும் இந்த அசாதாரண வேகத்தை, மக்கள் நல பணிகளிலும் ஏழை எளிய மக்களின் தேவைகளிலும் இந்த தவெக அரசு காட்ட மறுப்பது ஏன்?</p><h2>இமாலய துரோகம்</h2><p>ஆக, கோவில்களின் சொத்துகளை காப்பதாக கூறிக்கொண்டே ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணைபோகிறார் அமைச்சர் ரமோஷ். முந்தைய திமுக ஆட்சியில் கூட அரங்கேறாத இந்த இமாலய துரோகத்தை, ஆன்மீக போர்வையில் வந்துள்ள ஜோசப் விஜய் அரசு மிக துணிச்சலாக செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.</p> <p>எனவே, புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோவில் உட்பட 4 கோவில்களின் 3,085 ஏக்கர் நிலங்களின் மீதான பத்திரப்பதிவு தடையை நீக்க ஆணையர் பிறப்பித்துள்ள உத்தரவை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய் </a>தலையிட்டு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>உதவியது யார்? ஓடியது யார்? என்பது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும் - செந்தில் பாலாஜி பதிலடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/who-helped-karur-people-know-very-well-who-ran-away-senthil-balaji-retorts</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/who-helped-karur-people-know-very-well-who-ran-away-senthil-balaji-retorts#comments</comments><guid isPermaLink="false">4fbd3b71-2e35-409a-bbe6-1a3760a24e98</guid><pubDate>Fri, 10 Jul 2026 11:35:47 +0000</pubDate><atom:updated>2026-07-10T11:35:47.636Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Karur Stampede,கரூர் கூட்டநெரிசல்,Senthil Balaji,செந்தில் பாலாஜி,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/wf3bi4sk/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/wf3bi4sk/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கரூரில் இன்று பேசிய முதல்-அமைச்சர் விஜய், "கரூர் கம்பெனி ஓனர் ஒருத்தரு எங்க இருக்காருனே தெரியல... ஓடு ஓடுனு ஓடிக்கிட்டே இருக்காரு.." என்று வேட்டைக்காரன் பட பாடலை பாடி செந்தில் பாலாஜியை விமர்சித்திருந்தார். இந்த நிலையில் முதல்-அமைச்சருக்கு பதிலடி தெரிவித்து செந்தில் பாலாஜி பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:-</p><p>கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்? </p><p>மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதல்-அமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலினும், அன்றைய தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும்.</p><p>அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும்,  தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்?</p><p>திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல்,  தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஓடு. ஓடு.. ஓடு... இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-riding-bike-with-husband-robbed-of-7-pounds-of-jewelry</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-riding-bike-with-husband-robbed-of-7-pounds-of-jewelry#comments</comments><guid isPermaLink="false">ddf1f7dc-c3ab-4c60-bde3-fff5b2519fc5</guid><pubDate>Fri, 10 Jul 2026 11:26:05 +0000</pubDate><atom:updated>2026-07-10T11:26:05.129Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,Kanniyakumari,நகை பறிப்பு,chain snatching</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/xeo6zhl9/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/xeo6zhl9/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி,</p><p>கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.</p><p>கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (40 வயது), தொழிலாளி. இவருடைய மனைவி அனிஷா (35 வயது). இவர்களுக்கு ஆஸ்னா என்ற மகள் உள்ளார். ஆஸ்னாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சம்பவத்தன்று மகளின் சிகிச்சைக்காக குமார் தனது பைக்கில் மனைவி மற்றும் மகளை அழைத்துக் கொண்டு திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.</p><p>அவர்கள் தமிழக-கேரள எல்லை பகுதியான பாறசாலை அருகே நான்கு வழிச்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து மற்றொரு பைக்கில் மர்ம ஆசாமி ஒருவர் வந்து கொண்டிருந்தார். அந்த ஆசாமி, குமாரின் பைக்கின் அருகில் வந்து திடீரென அனிஷா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிச் சங்கிலியை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருடன்... திருடன் என கூச்சலிட்டார்.</p><p>மேலும், மர்ம ஆசாமி நகையை பறித்ததில் அனிஷா நிலைத் டுமாறியதால் பைக்குடன் அவர்கள் 3 பேரும் கீழே விழுந்தனர். இதில் அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட் டது. இதற்கிடையே அந்த மர்ம ஆசாமி பைக்கில் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றார்.</p><p>பின்னர், இதுகுறித்து குமார் பாறைசாலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு சென்று அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>5 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க சென்னை ஐகோர்ட்டு தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-high-court-stays-announcement-of-by-elections-in-5-constituencies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-high-court-stays-announcement-of-by-elections-in-5-constituencies#comments</comments><guid isPermaLink="false">1b01b340-3bc0-4926-9396-4665926401d8</guid><pubDate>Fri, 10 Jul 2026 11:19:41 +0000</pubDate><atom:updated>2026-07-10T11:19:41.328Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,தேர்தல் ஆணையம்,சென்னை ஐகோர்ட்டு,ராஜினாமா,Resign,madras highcourt</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/1mfp5b0q/madrashc33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/1mfp5b0q/madrashc33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற திருச்சி (கிழக்கு), மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததால் அந்த தொகுதிகள் காலியானதாக சட்டப் பேரவையின் செயலாளர் அறிவித்திருந்தார்.</p><p>இந்த நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த வெங்கடாசலபதி, சென்னை  ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், "காலியான தொகுதிகளுக்கு எப்போது வேண்டுமானாலும் இடைத்தேர்தல் அறிவிப்புகள் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும் என்ற நிலையில் 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 151- ஏ-வின் கீழ் காலியானது இல்லை என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்.</p><h2>தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும்</h2><p>வேட்பாளர்களின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வரை குறிப்பிட்ட தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.</p><p>இந்த வழக்கு சென்னை  ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருந்தால் இடைத்தேர்தல் அறிவிப்புகளை வெளியிடக் கூடாது என  சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. அதனால், இடைத்தேர்தல் அறிவிப்புகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.</p><h2>சபாநாயகர் அரசாணை</h2><p>தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், "ராஜினாமா செய்யப்பட்ட தொகுதிக்கு எதிரான தேர்தல் வழக்குகளை பொறுத்தவரை அதன் நிலைபாடுகள் கோர்ட்டில் மாறுபடலாம் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. வெற்றி பெற்ற வேட்பாளர் ராஜினாமா செய்வதற்கு முன் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தால் அதை கருத்தில் கொள்ள வேண்டியது இல்லை எனவும்  கோர்ட்டு உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.</p><p>இந்த வழக்கை பொறுத்தவரை, வேட்பாளர்களின் ராஜினாமாவை உரிய ஆய்வுக்கு பின் சபாநாயகர் ஏற்று அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் உத்தரவிட்டால் அது தேர்தல் நடவடிக்கைகளை பாதிக்கும். 10 ஆண்டுகளுக்கு முன் தொடர்ந்த பழமையான தேர்தல் வழக்கை தற்போது தான் கோர்ட்டு ரத்து செய்துள்ளது" என்று வாதிட்டார்.</p><h2>எந்த தொடர்பும் இல்லாமல் வழக்கு</h2><p>முதல்-அமைச்சர் விஜய் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மாசிலாமாணி, "காலியானதாக அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தேர்தல் ஆணையம்</a> தான் முடிவு எடுக்க முடியும். தனி நபர்கள் தேர்தலை நடத்தக் கூடாது என வழக்கு தொடர முடியாது. இந்த வழக்கு விசாரணைக்கே உகந்தது இல்லை. இடைத்தேர்தல் நடத்துவதை எதிர்த்து குறிப்பிட்ட தொகுதி வாக்காளர்கள் மட்டுமே வழக்கு தொடர உரிமை உள்ளது. மனுதாரர் எந்த தொடர்பும் இல்லாமல் வழக்கை தொடர்ந்துள்ளார் என்று வாதிட்டார்.</p><p>அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருந்தால் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என 2018- ஆம் ஆண்டு  சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தேர்தல் வழக்கு நிலுவையில் இருக்கும் போதும் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடக் கூடாது எனவும், நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள தேர்தல் வழக்குகளில்  கோர்ட்டு தீர்ப்பு வழங்கினால், அது வேறுவொரு பாதிப்பை ஏற்படுத்தும்.</p><h2>இடைத்தேர்தல் அறிவிக்க தடை</h2><p>குறிப்பிட்ட வேட்பாளருக்கு எதிராக வழக்கு நிலுவையில் இருந்தால், எப்படி தேர்தல் அறிவிப்பை வெளியிட முடியும்? நிலுவையில் வழக்குகள் இல்லாதபோது ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பது கட்டாயம் தான். அதே நேரத்தில் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்ந்தால் அங்கே எப்படி தேர்தல் அறிவிப்பு வெளியிட முடியும்? இடைத்தேர்தலில் புதிய வேறு வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்தால் என்ன செய்வது? அதனால் சற்று பொறுத்திருந்துப் பார்க்கலாம்" என்று குறிப்பிட்ட நீதிபதிகள் ஜூலை 31-ம் தேதிக்குள் பதில் தர தேர்தல் ஆணையம், மத்திய அரசு, சட்டமன்ற செயலாளர், முதல்-அமைச்சர் விஜய்க்கு  கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து திருச்சி கிழக்கு, கரூர், விராலி மலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் தடை விதித்து தீர்ப்பை ஒத்திவைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>கிளிமஞ்சாரோ மலையில் பறந்த உலகின் மிகப்பெரிய இந்திய தேசிய கொடி - வானதி சீனிவாசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/worlds-largest-indian-national-flag-flown-on-mount-kilimanjaro-vanathi-srinivasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/worlds-largest-indian-national-flag-flown-on-mount-kilimanjaro-vanathi-srinivasan#comments</comments><guid isPermaLink="false">d22888ee-c7cb-4403-9857-296b394cf3d8</guid><pubDate>Fri, 10 Jul 2026 11:11:19 +0000</pubDate><atom:updated>2026-07-10T11:11:19.579Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,இந்திய தேசிய கொடி,Indian national flag,கிளிமஞ்சாரோ,Patriotism</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/glpv26df/vanathi-seenivasan.10.07.20.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/glpv26df/vanathi-seenivasan.10.07.20.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>ஆப்பிரிக்க கண்டத்தின் மிக உயர்ந்த சிகரமான கிளிமஞ்சாரோ மலையில், தமிழக பெண் முத்தமிழ்ச்செல்வி தலைமையிலான குழுவினர் உலகின் மிகப்பெரிய இந்திய தேசிய கொடியை ஏற்றி புதிய சாதனை படைத்துள்ளனர்.</p> <h2>80 அடி நீள தேசிய கொடி</h2><p>தான்சானியா நாட்டில் அமைந்துள்ள கிளிமஞ்சாரோ மலையின் மிக உயர்ந்த பகுதியான 'உஹுரு சிகரத்தில்' (Uhuru Peak) கடந்த 8-ம் தேதி இந்த வரலாற்று சிறப்புமிக்க உலக சாதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. முத்தமிழ்ச்செல்வி தலைமையில் சென்ற 16 இந்திய மலையேற்ற வீரர்கள் அடங்கிய குழுவினர், கடல் மட்டத்திலிருந்து 5,895 மீட்டர் உயரத்தில் 80 அடி நீளமும், 120 அடி அகலமும் (மொத்தம் 9,600 சதுர அடி) கொண்ட  மிகப்பெரிய <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88">இந்திய தேசிய கொடியை</a> விரித்து பறக்கவிட்டனர்.</p> <h2>போதைப்பொருள் இல்லாத இந்தியா</h2><p>ஒரே கொடி. ஒரே நோக்கம். போதைப்பொருள் இல்லாத இந்தியா” என்ற உன்னத இலக்கை உலகறிய செய்யும் நோக்கில் இந்த மலையேற்ற பயணம் அதிகாரப்பூர்வமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மைனஸ் டிகிரி குளிரையும் பொருட்படுத்தாமல், இந்திய மலையேற்ற குழுவினர் காட்டிய துணிச்சல், விடாமுயற்சி மற்றும் தேசபக்தி ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளது. </p> <p>இந்த வரலாற்று சாதனை பயணத்தை வெற்றிகரமாக முடித்த இந்திய குழுவினருக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இது தொடர்பாக தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p> <p>இந்தியாவுக்கு ஒரு பெருமைமிகு தருணம்!</p><p>"ஒரே கொடி. ஒரே லட்சியம். போதைப்பொருள் இல்லாத இந்தியா" என்ற ஊக்கமளிக்கும் முன்னெடுப்பின் கீழ், கிளிமஞ்சாரோ மலையின் உஹுரு சிகரத்தில் உலகின் மிகப்பெரிய இந்திய தேசியக் கொடி (80 அடி × 120 அடி) ஏற்றப்பட்டது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>பரந்தூர் விமான நிலைய திட்டம்: காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து ஆலோசித்து அறிக்கை தயார் செய்ய குழு அமைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/parandur-airport-project-committee-formed-to-deliberate-on-the-congress-partys-stance-and-prepare-a-report</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/parandur-airport-project-committee-formed-to-deliberate-on-the-congress-partys-stance-and-prepare-a-report#comments</comments><guid isPermaLink="false">c1066d62-eb6e-4349-8c28-02c2ebf0c87d</guid><pubDate>Fri, 10 Jul 2026 10:46:11 +0000</pubDate><atom:updated>2026-07-10T10:46:11.905Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,பரந்தூர் விமான நிலையம்,Parandur Airport</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/fgkdrmi9/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/fgkdrmi9/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பரந்தூர் விமான நிலைய திட்டம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து ஆலோசித்து அறிக்கை தயார் செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப.மாணிக்கம் தாகூர், எம்.பி. அறிவுறுத்தலின் பேரில், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் விமானம் நிலைய திட்டத்தின் தற்போதைய சூழலில் காங்கிரசின் நிலை குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்களிடம் கலந்து பேசி அறிக்கை தயார் செய்து சமர்ப்பிக்க மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் சசிகாந்த் செந்திலை ஒருங்கிணைப்பாளராக கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.</p><p>இக்குழுவில் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சா.பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் திரு. மோகன் குமாரமங்கலம் ஆகியோர் உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.” </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பாரம்பரிய அரிசி மூலம் மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பது எப்படி? - சென்னையில் 2 நாட்கள் பயிற்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-to-make-value-added-food-products-from-traditional-rice-2-days-training-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-to-make-value-added-food-products-from-traditional-rice-2-days-training-in-chennai#comments</comments><guid isPermaLink="false">0ce6bcdc-f64d-4200-937e-206ae10d48ce</guid><pubDate>Fri, 10 Jul 2026 10:41:57 +0000</pubDate><atom:updated>2026-07-10T10:41:57.760Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,பயிற்சி,Training Class,பயிற்சி வகுப்பு,Training course</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/ufjb5f0k/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/ufjb5f0k/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>2 நாட்கள் - தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் " சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி வகைகளைக் கொண்டு மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சி"</p><h2>பாரம்பரிய அரிசி வகைகள்</h2><p>தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 2 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி வகைகளைக் கொண்டு மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சி வரும் 15.07.2026 முதல் 16.07.2026 தேதி வரை காலை 10.00 மணி முதல் மதியம் 5.00 மணி வரை நடைபெற உள்ளது.</p><p>இப்பயிற்சியில் சிறுதானிய பொருட்களின் இரத்தசாலி அரிசி மாவு லட்டு, திணை நாட்டு சர்க்கரை பூந்தி லட்டு கருப்பு கவுனி அல்வா, கேழ்வரகு மைசூர் பாக், பூங்கார் அரிசி முறுக்கு, திணை ஓமப்பொடி, குதிரைவாலி சீவல், வரகு மிச்சர் , சோளம் காராசேவ், சாமை பட்டர், முறுக்கு ,வரகு காராபூந்தி, கம்பு முறுக்கு வகைகள் தயாரிப்பது பற்றி இப்பயிற்சியில் விளக்குவார்கள். மேலும் தயாரிப்பு சந்தைப்படுத்துதலின் அம்சங்கள் பேக்கிங் லேபிளிங் மற்றும் அதற்காண விலை வழிமுறைகள் ஆகியன கற்றுத்தரப்படும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விளக்கப்படும்.</p><h2>விண்ணப்பிக்கலாம்</h2><p>இப்பயிற்சியில் ஆர்வமுள்ள <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தொழில்முனைவோர் </a>(ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.</p><p>இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி, கைபேசி எண்கள்.</p><p><strong>முகவரி :</strong> தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை- 600 032.  </p><p><strong>கைபேசி எண்கள்:</strong> 8668102600/7806918309</p><p><strong>முன்பதிவு அவசியம்:</strong> அரசு சான்றிதழ் வழங்கப்படும்</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>கரூரில் விஜய் தாமதமாக சென்றதுதான் உயிரிழப்புக்கு காரணம் - டி.கே.எஸ்.இளங்கோவன் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vijays-late-arrival-in-karur-was-the-reason-for-the-death-tks-ilangovan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vijays-late-arrival-in-karur-was-the-reason-for-the-death-tks-ilangovan#comments</comments><guid isPermaLink="false">1be362b8-409f-44c8-a034-1b0b669a74a1</guid><pubDate>Fri, 10 Jul 2026 10:39:50 +0000</pubDate><atom:updated>2026-07-10T10:39:50.885Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,கரூர்,விஜய்,திமுக,DMK,KarurStampede,CMVijay,TKSElangovan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/8numj2pc/vijay33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திமுகவின் டி.கே.எஸ் இளங்கோவ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/8numj2pc/vijay33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கரூர் சென்ற முதல்-அமைச்சர் விஜய், கரூர் போலீசார் நினைத்திருந்தால் எங்களை எச்சரித்து, </p><p>அன்று கூட்டத்தை ரத்து செய்திருக்கலாம்.கூட்டத்துக்கு ஏற்றபடி போலீஸ் பாதுகாப்பு தந்தீர்களா?அன்று ஸ்டாலின் சார் அரசியல் ஆதாயம் தேடினார்.என் குடும்ப உறவுகளை இழந்து வலியில் இருந்த என் மேலேயே பழியை போட்டீர்கள். அந்த வலியோடு வீட்டில் இருந்தேன். அப்போது என்னை ஓடி ஒளிந்துவிட்டேன் என்று சொன்னீர்களே. வாய்னு ஒண்ணு இருந்தா என்ன வேணும்னாலும் பேசுவீங்களா? என அவர் கேள்வி எழுப்பினர்.</p><h2>திமுக பதிலடி</h2><p>இந்த நிலையில் இதைவிட மோசமான ஒரு பொய்யை முதல்-அமைச்சர் சொல்ல முடியாது அடிப்படை அறிவுள்ள மனிதர்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும் என்று கரூரில் முதல்-அமைச்சர் விஜய் பேசியதற்கு திமுகவின் டி.கே.எஸ் இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">  டி.கே.எஸ்.இளங்கோவன்</a> அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>கரூரில் நிலவிய உண்மையான சூழல் என்ன? கலவரம் வெடித்ததா அல்லது பேரிடர் ஏதேனும் ஏற்பட்டதா?அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. மதியம் 12 மணிக்கு விஜய் உரையாற்றுவார் என நினைத்து 9 மணிக்கே மக்கள் வந்தனர்.</p><h2>தாமதமாக வந்தார் விஜய்</h2><p>விஜய்யை ஒருமுறையாவது நேரில் பார்த்துவிட வேண்டும் என்பதற்காகவே அவர்கள் முன்னரே வந்து காத்துக்கிடந்தனர். உட்காரக்கூட இல்லை, கிட்டத்தட்ட 12 மணிநேரம் வெயிலிலேயே நின்றனர். 7.30 மணிக்குத்தான் விஜய் வந்தார்.</p><p>சுட்டெரிக்கும் வெயிலில் தண்ணீர், உணவு இல்லாமல் ஒருவர் நின்றால் மயங்கி விழுவார்கள் என்பது குறைந்தபட்சம் பொது அறிவும், மனிதநேயமும் உள்ளவர்களுக்கு தெரியும்.</p><p>10 மணிநேரம் தண்ணீர், உணவு இல்லாமல் விஜய் நின்றாக்கூட மயங்கிதான் விழுவார். இது முழுவதும் தாமதத்தின் விளைவு. ஆனால் அவர் திமுகவை குற்றம் சாட்டுவதில்தான் இருக்கிறார்.</p><p>100 பேர் மயங்கியதில் 41 பேர் உயிரிழந்தனர். மீதமுள்ள 60 பேரை திமுக காப்பாற்றியது. விஜய் காப்பாற்றவில்லை. அதைமுதலில் அவர் புரிந்துகொள்ள வேண்டும். திமுக சம்பவ இடத்திற்கு விரைந்தது.</p><h2>சென்னைக்கு ஓட்டம்</h2><p>இதற்கிடையே சென்னைக்கு ஓடினாரே தவிர, பாதிக்கப்பட்டவர்களை சென்று ஒருமுறைக்கூட பார்க்கவில்லை. தாமதத்தின் விளைவுதான் இந்த விபத்து என்பதை அவர் முதலில் உணரவேண்டும். கரூரில் விஜய் தாமதமாக சென்றதுதான் உயிரிழப்புக்கு காரணம். பலரை மருத்துவமனையில் சேர்த்து உயிரை காப்பாற்றியது திமுக அரசு.</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>குஜராத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-from-gujarat-to-velankanni</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-from-gujarat-to-velankanni#comments</comments><guid isPermaLink="false">a67b91d3-8759-40d8-a10a-022b6d7ef760</guid><pubDate>Fri, 10 Jul 2026 10:29:55 +0000</pubDate><atom:updated>2026-07-10T10:29:55.178Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>குஜராத்,Gujarat,சிறப்பு ரெயில்,Special train,Velankanni,வேளாங்கண்ணி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/cynyxzn7/special-train.gif" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ குஜராத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/cynyxzn7/special-train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>குஜராத் மாநிலம் வல்சாத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><h2>சிறப்பு ரெயில்</h2><p>யணிகள் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, குஜராத் மாநிலம் வல்சாத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu/trichy-charlapalli-weekly-special-train-permanently-operational">சிறப்பு ரெயில்</a> (வண்டி எண் 09030) இயக்கப்படுகிறது. வல்சாத்தில் இருந்து ஜூலை 14-ந் தேதி (செவ்வாய்கிழமை) மாலை 6.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், 3-வது நாள் காலை 10 மணிக்கு வேளாங்கண்ணியை வந்தடைகிறது. </p> <p>மறுமார்க்கத்தில், வேளாங்கண்ணி - மராட்டிய மாநிலம் தஹானு ரோடு இடையே சிறப்பு ரெயில் (09029) இயக்கப்படுகிறது. வேளாங்கண்ணியிலர் இருந்து ஜூலை 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 12.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் மதியம் 2.50 மணிக்கு தஹானு ரோடு ரெயில் நிலையத்தை சென்றடைகிறது.</p><p>22 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில்கள், தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், நாகூர், காரைக்கால், திருநள்ளார், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்), விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் கன்டோன்மென்ட், காட்பாடி ஆகிய ரெயில் நிலையங்கள் வழியாக செல்லும்.</p><p>இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை (11-ந் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>திருமணமான 3 மாதங்களில் இளம்பெண் தற்கொலை: வரதட்சணை கொடுமையா? - உதவி கலெக்டர் விசாரணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/teen-commits-suicide-within-3-months-of-marriage-is-dowry-cruel-assistant-collector-inquiry</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/teen-commits-suicide-within-3-months-of-marriage-is-dowry-cruel-assistant-collector-inquiry#comments</comments><guid isPermaLink="false">30e709ef-5818-4e3c-bf68-4443648bbff5</guid><pubDate>Fri, 10 Jul 2026 10:29:38 +0000</pubDate><atom:updated>2026-07-10T10:29:38.877Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thanjavur,தஞ்சாவூர்,தற்கொலை,Suicide</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/gsxxsz65/Untitled-4.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/gsxxsz65/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர்,</p><p>தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள சக்கராப்பள்ளி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரியாஸ் அகமது. இவருடைய மனைவி அனீப்நிஷா (22 வயது). இவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரு மாதத்துக்கு முன்பு அனீப்நிஷா கணபதி அக்ரஹாரம் பகுதியில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.</p><p>நேற்று முன்தினம் ரியாஸ் அகமது தனது வீட்டில் நடந்த விசேஷ நிகழ்ச்சிக்காக உறவினர்கள் வந்திருப்பதாக கூறி அனீப்நிஷாவை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். விசேஷ நிகழ்ச்சிகள் முடிந்து இரவு 10 மணிக்கு மேல் அனீப் நிஷாவை அவருடைய தாயார் வீட்டில் ரியாஸ் அகமது அழைத்துச்சென்று விட்டுள்ளார்.</p><p>இந்த நிலையில் வீட்டின் அறையில் உள்ள மின் விசிறியில் அனீப்நிஷா சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். இதைப் பார்த்து பதறிப்போன அவருடைய தாயார் பரிதா உடனடியாக அனீப்நிஷாவை அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைகு அழைத்துச் சென்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.</p><p>இதுகுறித்து பரிதா கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அனீப்நிஷாவுக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆவதால் அவருடைய சாவுக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது குறித்து கும்பகோணம் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.</p><p>திருமணமான 3 மாதங்களில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியை சேர்ந்தவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோயம்புத்தூரில் மனித, வனவிலங்கு மோதல் குறித்த திறன்சார் மையத்தை தொடங்கி வைத்தார்- பூபேந்தர் யாதவ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bhupender-yadav-inaugurated-a-centre-of-excellence-on-human-wildlife-conflict-in-coimbatore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bhupender-yadav-inaugurated-a-centre-of-excellence-on-human-wildlife-conflict-in-coimbatore#comments</comments><guid isPermaLink="false">5aa4628d-160e-4fee-9999-39195c5ecb54</guid><pubDate>Fri, 10 Jul 2026 10:12:11 +0000</pubDate><atom:updated>2026-07-10T10:12:11.458Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோயம்புத்தூர்,நிகழ்ச்சி,Union Minister Bhupender Yadav,மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ்,function</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/zbsjkzmi/buvendra-singh.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மந்திரி  பூபேந்தர் யாதவ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/zbsjkzmi/buvendra-singh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோயம்புத்தூர்,</p><p>கோயம்புத்தூரில் உள்ள இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை மையத்தில் இன்று  நடைபெற்ற நிகழ்ச்சியில் மனித  வனவிலங்கு மோதல் குறித்த திறன்சார் மையத்தை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை மந்திரி  <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D">பூபேந்தர் யாதவ்</a> தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, மனித வனவிலங்கு மோதல் குறித்த தேசிய பயிலரங்கையும் அவர் தொடங்கி வைத்தார்.</p><p><strong>இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மந்திரி தெரிவித்ததாவது:-</strong></p><p> சிறு, சிறு குடியிருப்புகள், நில பயன்பாட்டு முறையில் மாற்றம், மனித செயல்பாடுகளின் விரிவாக்கம் போன்றவற்றால் மனிதர்களுக்கும், வனவிலங்குகளுக்கும் இடையேயான மோதல்கள் அதிகரிப்பது, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி சவால்களாக மாறியுள்ளது. நமது அணுகுமுறை என்பது நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தீர்வு சார்ந்ததாக இருக்க வேண்டுமே தவிர, பிரச்சனையை ஏற்படுத்துவதாக இருக்கக்கூடாது.</p> <h2>விழிப்புணர்வு</h2><p>புலிகள், சிறுத்தைகள், யானைகள் சரணாலயங்களுக்கு வெளியே மனிதர்களுடன் அவற்றுக்கு ஏற்படும் மோதல்களை தடுக்க கொள்கை ஒன்றை உருவாக்குவதில் இந்த நிறுவனம் கவனம் செலுத்த வேண்டும். மனிதர்களுக்கும், வனவிலங்குகளுக்கும் இடையே ஏற்படும் மோதலை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து நகர்ப்பகுதிகளிலும், ஊரகப்பகுதிகளிலும் இயக்க ரீதியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். </p><p>இவ்வாறு அதில் கூறினார்.</p><p> இதில் நாடு முழுவதிலுமிருந்து கொள்கை வகுப்பாளர்கள், வன நிர்வாகிகள், அறிவியலாளர்கள், ஆய்வாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை இணைமந்திரி  கீர்த்திவர்தன் சிங் பங்கேற்றார்.</p> ]]></content:encoded></item><item><title>கரூர் துயரத்தின்போது உதவி செய்தவர்கள் யார், ஓடிப்போனவர்கள் யார் என்று மக்களுக்கு தெரியும் - கனிமொழி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/people-know-who-helped-and-who-fled-during-the-karur-tragedy-kanimozhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/people-know-who-helped-and-who-fled-during-the-karur-tragedy-kanimozhi#comments</comments><guid isPermaLink="false">c348ae90-2fea-442c-a641-ce8467c2c3df</guid><pubDate>Fri, 10 Jul 2026 09:50:49 +0000</pubDate><atom:updated>2026-07-10T09:50:49.386Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Karur Stampede,கரூர் கூட்டநெரிசல்,கனிமொழி,Kanimozhi,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/40j0ygz6/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கனிமொழி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/40j0ygz6/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>தூத்துக்குடியில் இன்று திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>இந்த ஆட்சியில் இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், எந்த இடத்திற்கு போகக்கூடாதோ அந்த இடத்திற்கே தொடர்ந்து சென்று, அங்கிருக்கக்கூடிய மக்களுக்கு சிக்கல்களை உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக பள்ளிக்கூடங்களுக்கு சென்று அங்கே இருக்கக்கூடிய குழந்தைகளின் மனநிலையை பாதிக்கக்கூடிய அளவிற்கும், அவர்களுக்கு மன உளைச்சலை தரக்கூடிய அளவிற்கும் நடந்து கொண்டிருக்கிறார்கள்.</p><p>இதையெல்லாம் தாண்டி முதல்-அமைச்சரும் அதை செய்யும் பொழுது, இந்த ஆட்சி எதை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுகிறது. முதல்-அமைச்சர் தொடங்கி அமைச்சர்கள் வரை அனைவரும் அவர்களுக்கென பொறுப்புகள் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். நான் கரூர் துயரம் பற்றி அதிகமாக பேச விரும்பவில்லை. ஏனென்றால், இது போன்ற துயர சம்பவம் குறித்து பேசுவதை பொறுப்புணர்வுடன் தவிர்ப்பதே நல்லது. </p><p>ஏனெனில் விசாரணையில் இருக்கக்கூடிய விஷயம் குறித்து பேச வேண்டாம் என்ற பொறுப்புணர்வு எனக்கு இருப்பதனால் கரூர் துயர சம்பவம் பற்றி நான் பேசாமல் இருப்பதுதான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால், கரூர் துயரத்தின்போது மக்களோடு நின்றவர்கள் யார், அவர்களுக்கு உதவி செய்தவர்கள் யார், மக்களை தவிக்க விட்டுவிட்டு அங்கிருந்து ஓடிப்போனவர்கள் யார் என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item></channel></rss>