<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 11 Jul 2026 11:49:26 +0000</lastBuildDate><item><title>உங்கள் குற்றவுணர்ச்சிக்கு எங்கள் இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கி விடாதீர்கள் - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dont-let-your-guilt-ruin-the-future-of-our-youth-nayinar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dont-let-your-guilt-ruin-the-future-of-our-youth-nayinar-nagendran#comments</comments><guid isPermaLink="false">6e0dfc99-2b9b-4fdb-9c5f-66397f631125</guid><pubDate>Sat, 11 Jul 2026 11:46:24 +0000</pubDate><atom:updated>2026-07-11T11:46:24.470Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Nayinar Nagendran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/am15ly5f/Untitled-22.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/am15ly5f/Untitled-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>உங்கள் குற்றவுணர்ச்சிக்கு எங்கள் இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கி விடாதீர்கள் ஜோசப் விஜய்யே!</p><p>கடந்த ஆண்டு கரூரில் தங்களின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உயிரிழந்தவர்களை, அப்பொழுது கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்த நீங்கள், முதல்-அமைச்சரான பிறகு அவர்களுக்கு “அரசுப்பணி” வழங்கி ஆறுதல் கூற முயன்றதை மனிதாபிமான அடிப்படையில் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், அரசுப் பணிகளை மட்டுமே இலக்காக வைத்து. இரவும் பகலும் கடுமையாக போராடிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு, நீங்கள் என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?</p><h2>காலிப்பணியிடங்கள் </h2><p>1. தமிழகத்தில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 125 கல்லூரிகளில் முதல்வர் காலிப்பணியிடங்கள் உள்ளன.</p><p>2. அதே கல்லூரிகளில் சுமார் 9000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாகக் கிடக்கின்றன.</p><p>3. சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பல்கலைக்கழகம்</a>, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியப் பல்கலைக் கழகங்களில் 50% -க்கும் மேற்பட்ட பேராசிரியப் பணியிடங்கள் காலியாக உள்ளன.</p><p>4. அரசுப் பள்ளிகளில் 30,000-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியப் பணியிடங்களும், 20,000-க்கும் பணியிடங்களும் காலியாகக் கிடக்கின்றன. மேற்பட்ட பட்டதாரி ஆசிரியப்</p><p>5. 7000-க்கும் மேற்பட்ட அரசு செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர்.</p><p>6. நீலகிரி மின்சார வாரியத்தில் மட்டும் கிட்டத்தட்ட 61% காலிப்பணியிடங்கள் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>7. தமிழ்நாடு மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை, தகுதியின் அடிப்படையில் தங்களுக்கு வழங்க வேண்டுமென கேங்க்மேன்கள் போராடி வருகின்றனர்.</p><p>8. அதுமட்டுமின்றி, தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் உட்பட பல பிரிவினர் நிரந்தர அரசு வேலை வேண்டி கோரிக்கை விடுத்து, தொடர்ந்து போராடி வருகின்றனர்.</p><h2>மெத்தனம் காட்டுவது ஏன்?</h2><p>ஆனால் நீங்களோ இந்த ஆண்டிற்கான TNPSC குரூப்-1 தேர்விற்கு வெறும் 26 காலிப்பணியிடங்களை மட்டுமே அறிவித்து, அரசு வேலையை மட்டுமே நம்பியிருந்த லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவுகளில் மண்ணை வாரி தூற்றியுள்ளீர்கள்.</p><p>உங்களின் குற்றவுணர்ச்சியை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">திருப்திப்படுத்திக் </a>கொள்வதற்காக அத்தனை அரசுப் பணிகளை யோசிக்காமல் உடனே தூக்கிக் கொடுத்த நீங்கள், அரசு கல்விக் கூடங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட மற்ற அரசு துறைகளில் உள்ள அரசு காலிப் பணியிடங்களை நிரப்புவதில் மட்டும் மெத்தனம் காட்டுவது ஏன்? TET, TRB உள்ளிட்ட அரசுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பல்லாயிரக் கணக்கானவர்கள் அரசு பணி நியமன ஆணைக்காக காத்துக் கொண்டிருக்கையில், துறை வாரியான ஆள்சேர்ப்பு மற்றும் பணி நியமனத்திற்கான கால அட்டவணையை உங்கள் அரசு ஏன் வெளியிடவில்லை?</p><p>எனவே, உங்கள் தனிப்பட்ட பாவச் செயல்களுக்கு, அதிகாரத்தைப் பயன்படுத்தி பரிகாரம் தேடுவதற்காக மட்டும் மக்கள் உங்களைத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை உணர்ந்து பொறுப்புடன் செயல்படுங்கள் ஜோசப் விஜய்யே! கரூர் மக்களுக்கு எப்படி ஜெட் வேகத்தில் அரசு பணி நியமன ஆணைகளை வழங்கினீர்களோ அதே போல, மற்ற அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நீங்கள் உடனே நிரப்ப வேண்டும்! அரசு வேலையை நம்பி காத்துக் கொண்டிருக்கும் லட்சோப லட்ச இளைஞர்களின் உழைப்பிற்கு மதிப்பு தர வேண்டும்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாமல்லபுரத்தில் சோகம்: மின்சாரம் தாக்கி 4 பேர் பலி

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-in-mamallapuram-4-killed-by-electrocution</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-in-mamallapuram-4-killed-by-electrocution#comments</comments><guid isPermaLink="false">17377658-1bfe-4c44-a6b9-b115f6afeedd</guid><pubDate>Sat, 11 Jul 2026 11:32:46 +0000</pubDate><atom:updated>2026-07-11T11:32:46.672Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Mamallapuram,மாமல்லபுரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/mfo1nh65/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/mfo1nh65/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>செங்கல்பட்டு,</p><p><a href="https://www.dailythanthi.com/">செங்கல்பட்டு </a>மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதி வளாகத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி இன்று நடைபெற்றது. இதில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். </p><h2>4 பேர் பலி</h2><p>ஆழ்துளை குழாயை பொருத்த இரும்பு பைப்பை உயர்த்தியபோது மேலே சென்ற மின்சார கேபிள் மீது உரசியுள்ளது. இதனால் இரும்பு பைப் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. அப்போது, இரும்பு பைப்பை பிடித்திருந்த 4 தொழிலாளர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் பிரபு (வயது 22), பாட்ஷா (வயது 45), ராஜேந்திரன் (55), பாலாஜி (வயது 32) ஆகிய 4 தொழிலாளர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், 4 தொழிலாளர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆழ்துளை கிணறு அமைக்கும்போது மின்சாரம் தாக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வார விடுமுறை: குற்றாலத்தில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் - அருவிகளில் ஆனந்த குளியல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/weekend-holiday-tourists-flock-to-courtallam-enjoying-a-bath-in-the-waterfalls</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/weekend-holiday-tourists-flock-to-courtallam-enjoying-a-bath-in-the-waterfalls#comments</comments><guid isPermaLink="false">8da628e4-6217-4a1b-9ca0-fe9bc5fd16cf</guid><pubDate>Sat, 11 Jul 2026 11:28:50 +0000</pubDate><atom:updated>2026-07-11T11:28:50.547Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>குற்றாலம்,Weekend,வார விடுமுறை,Couttralam waterfalls</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/dbcn7n3s/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/dbcn7n3s/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><p>தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்டியுள்ளது. குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுந்து வருகிறது.</p><p>நேற்று குற்றாலம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மலைப்பகுதிகளில் சாரல் மழை பெய்ததால் குற்றாலம் மெயின் அருவி, சிற்றருவி, ஐந்தருவிக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து காணப்பட்டது. இன்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.</p><p>காலை முதலே குற்றால அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். ஐந்தருவி, மெயின் அருவி கார் பார்க்கிங் பகுதிகள் முழுவதும் நிரம்பி வழிந்ததால் போலீசார் அதனை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். குற்றாலம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசி வருவதோடு இதமான சூழ்நிலை நீடிப்பதால் குற்றால சீசனை சுற்றுலா பயணிகள் உற்சாகமாக அனுபவித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கொடைக்கானல்: சிட்டி வியூ பாயிண்ட்டில் பாதுகாப்பு வேலி அமைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kodaikanal-tourists-request-the-installation-of-a-safety-fence-at-the-city-view-point</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kodaikanal-tourists-request-the-installation-of-a-safety-fence-at-the-city-view-point#comments</comments><guid isPermaLink="false">f1bb8aa2-d79f-48ff-bb12-186fbda2e8df</guid><pubDate>Sat, 11 Jul 2026 11:08:14 +0000</pubDate><atom:updated>2026-07-11T11:08:14.058Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கொடைக்கானல்,Kodaikanal,மலை,பாதுகாப்பு ஏற்பாடு,கோரிக்கை Request,சுற்றுலா பயணிகள் Tourists</media:keywords><media:content height="304" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/kuxj7hyw/kodaikanal.jpg" width="553"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கொடைக்கானல் சிட்டி வியூ பாயிண்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/kuxj7hyw/kodaikanal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கொடைக்கானல், </p><p>கொடைக்கானல்: சிட்டி வியூ பாயிண்ட்டில் பாதுகாப்பு வேலி அமைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை.</p><h2>சிட்டி வியூ பாயிண்ட்</h2><p>மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், கொடைக்கானல் நகரின் நுழைவு பகுதியில் அமைந்துள்ள செண்பகனூர் சிட்டி வியூ பாயிண்ட் (City View Point) பகுதிக்கு தற்போது சுற்றுலா பயணிகளின் வருகை அதிரடியாக அதிகரித்துள்ளது.</p><h2>சுற்றுலா பயணிகள் கூட்டம்</h2><p>மலைச்சாலையின் நுழைவாயிலில் அமைந்துள்ள இந்த வியூ பாயிண்டில் இருந்து பார்த்தால், வைகை அணை, பெரியகுளம், தேனி மற்றும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D">கொடைக்கானல்</a> மலைப்பாதையின் வளைவுகளும், இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான பள்ளத்தாக்குகளும் ஒரே பார்வையில் கண்களுக்கு விருந்தாக அமைகின்றன. </p> <p>தற்போது நிலவி வரும் இதமான குளு, குளு சீதோஷ்ண நிலையால், இப்பகுதியை அடிக்கடி மேக கூட்டங்களும், பனிமூட்டமும் சூழ்ந்து கொள்கின்றன. இந்த கண்கொள்ளா காட்சியை கண்டு ரசிப்பதற்காகவே செண்பகனூர் பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.</p><h2>பாதுகாப்பு வேலி</h2><p>இந்த சிட்டி வியூ பாயிண்ட் பகுதி மிக செங்குத்தான, ஆழமான மலைச்சரிவில் அமைந்துள்ளது. இவ்வளவு அபாயகரமான இடத்தில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக எந்தவொரு தடுப்பு சுவரோ அல்லது இரும்பு பாதுகாப்பு வேலியோ அமைக்கப்படவில்லை. இதனால், இங்கு வரும் பயணிகள் மற்றும் சிறுவர்கள் தவறி கீழே விழுந்து அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது. </p><p>ஆபத்தை உணராமல் பலர் சரிவின் விளிம்பில் நின்று ‘செல்பி’ எடுப்பதால், அசம்பாவிதங்கள் நடக்கும் முன் நகராட்சி நிர்வாகமும், வனத்துறையும் இணைந்து உடனடியாக இங்கு பலத்த பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் மற்றூம் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p><h2>அரசுக்கு கோரிக்கை</h2><p>மது அருந்தாமலும், சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் தடுக்க இந்த பகுதியில் நிரந்தரமாக பாதுகாப்பு பணியாளர்களை நியமிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளும், சமூக ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>விஜய் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி மறுத்ததால் ஆத்திரம்: டி.எஸ்.பி.யின் கையை கடித்து வைத்த த.வெ.க. தொண்டர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvkworker-bites-dsps-hand</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvkworker-bites-dsps-hand#comments</comments><guid isPermaLink="false">f1153091-b39f-4a24-9ef0-67ba2270c721</guid><pubDate>Sat, 11 Jul 2026 11:06:29 +0000</pubDate><atom:updated>2026-07-11T11:06:29.351Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,KarurStampede</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/uxep0g3d/dsp33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/uxep0g3d/dsp33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கரூர்,</p><p>கரூர் சின்னாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் மெல்வின். த. வெ.க. தொண்டரான இவர் நேற்று கரூர் வெண்ணைமலை அட்லஸ் அரங்கில் நடைபெற்ற முதல்-அமைச்சர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க மிகுந்த உற்சாகத்தோடு தனது சைக்கிளில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் புகைப்படம் மற்றும் த.வெ.க. கொடியை கட்டிக்கொண்டு வந்தார்.</p><p>மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்த இடத்திற்குள் அனுமதி அட்டை வைத்திருந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அவரிடம் அடையாள அனுமதி அட்டை இல்லாததால் போலீசார் அவரை உள்ளே விட மறுத்தனர். அவர், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் தான் இருக்கும் அடையாள அட்டையை போலீசாரிடம் காட்டி தன்னை உள்ளே விடுமாறு 'கேட்டுள்ளார். ஆனால் அது செல்லாது என்று போலீசார் கூறிவிட்டனர். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற மெல்வின், அருகில் இருந்த பேனரை கிழித்து எறிந்தார். இந்த காட்சிகளை வீடியோ எடுத்துக்கொண்டிருந்த செய்தியாளர்களை நோக்கி கல் மற்றும் பாட்டில்களை தூக்கி வீசி ரகளையில் ஈடுபட்டார்.</p>  <p>இதை கண்டு அதிர்ச்சியடைந்த தஞ்சாவூர் டி.எஸ். பி. கார்த்திகேயன், அங்கு சென்று அவரை சமாதா னப்படுத்தினார். அப்போதும் மெல்வின் தனது அடையாள அட்டையை காட்டி தன்னை உள்ளே அனுப்புமாறு டி.எஸ்.பி.யிடம் வாக்குவாதம் செய்தார். அதற்கு டி.எஸ்.பி. மறுப்பு தெரிவித்ததால், அடுத்த நொடியே, ஆவேசமடைந்த மெல்வின், டி.எஸ்.பி.கார்த்திகேயனின் கையை பிடித்து நறுக்கென்று கடித்து வைத்தார். வலி தாங்க முடியாமல் டி.எஸ்.பி. துடித்ததை பார்த்து மிரண்டு போன மற்ற போலீசார், உடனடியாக ஓடிவந்து ஓடிவந்து மெல்வினை பிடித்து இழுத்து டி.எஸ்.பி.யை மீட்டனர். இதனால் ஆத்திரமடைந்த டி.எஸ்.பி., மெல்வினின் கன்னத்தில் 2 அறை விட்டு அவரை மற்ற போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் அவரையும் சைக்கிளையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">முதல்-அமைச்சர் விஜய்</a> தனது பேச்சை முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டதும் போலீசார் மெல்வினை எச்சரித்து விடுவித்தனர். மெல்வின், மாலையில் கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு தனது சைக்கிளில் சென்றார். 31 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கி விட்டு புறப்பட்ட விஜய்யை பார்த்து மகிழ்ச்சியடைந்த மெல்வின், கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் தனது சைக்கிளோடு மிகவும் சாந்தமாக சுற்றி திரிந்தார் </p> ]]></content:encoded></item><item><title>சென்னை வெளிவட்ட சாலையை தனியாருக்கு வழங்க தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-ramadoss-has-stated-that-the-tamil-nadu-government-should-scrap-the-agreementformulated-during-the-dmk-regimeto-award-the-contract-to-a-private-entity-for-a-low-sum</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-ramadoss-has-stated-that-the-tamil-nadu-government-should-scrap-the-agreementformulated-during-the-dmk-regimeto-award-the-contract-to-a-private-entity-for-a-low-sum#comments</comments><guid isPermaLink="false">d5eb2077-606d-4f71-bced-97234a6b710b</guid><pubDate>Sat, 11 Jul 2026 10:49:10 +0000</pubDate><atom:updated>2026-07-11T10:49:10.599Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/ksahp1yv/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/ksahp1yv/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை வெளிவட்ட சாலையை தனியாருக்கு வழங்க தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“சென்னை வண்டலூர் முதல் மீஞ்சூர் வரையிலான 60 கி.மீ நீள சென்னை வெளிவட்டச் சாலையை ரூ.2526 கோடிக்கு தனியாருக்கு 25 ஆண்டுகளுக்கு வழங்கப்படவுள்ளதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. 25 ஆண்டுகளில் ரூ.50 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டித்தரக் கூடிய வெளிவட்ட சாலையை அடிமாட்டு விலைக்கு தனியாருக்கு வழங்கும் தி.மு.க. அரசின் திட்டத்தை புதிய அரசும் அப்படியே செயல்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. </p><p>சென்னையை கடந்து மற்ற நகரங்களுக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் சென்னை மாநகருக்குள் வருவதைத் தவிர்க்கும் வகையில் சென்னை வண்டலூரில் தொடங்கி நெமிலிச்சேரி வழியாக மீஞ்சூர் வரை மொத்தம் 60.15 கிமீ தொலைவுக்கான வெளிவட்டச் சாலை 2011&amp;21 அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.2156.40 கோடி செலவில்  இரு கட்டங்களாக அமைக்கப்பட்டது. சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் பெரும்பங்கு வகிக்கும் இச்சாலையை இப்போது தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் பராமரித்து வருகிறது.</p><p>சென்னை வெளிவட்ட சாலையை பராமரித்து, சுங்கக்கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்தத்தை ரூ.2,000 கோடி என்ற அடிப்படை விலைக்கு தனியாருக்கு வழங்க முந்தைய தி.மு.க. அரசு முடிவு செய்தது. அந்த முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அதை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11-ந்தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன். </p><p>ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் ஒப்பந்தப்பணிகளை  தி.மு.க. அரசு தொடர்ந்தது. அதன்பின் 11 மாதங்களாகி விட்ட நிலையில், சென்னை வெளிவட்டச் சாலையை தனியாருக்கு தாரை வார்க்கும் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், ரூ.2,526 கோடிக்கு ஒரு தனியார் நிறுவனத்திற்கு அந்த ஒப்பந்தம் வழங்கப்படவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு அரசின் சொத்துகளை  தனியார் நிறுவனத்திற்கு தரைமட்ட விலைக்கு தாரை வார்க்கும் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது.</p> <p>இந்த சாலையை அமைப்பதற்கான அடிக்கல் 2010-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது. அ.தி.மு.க ஆட்சியில் இரு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு முறையே 2014, 2021 ஆண்டுகளில் திறக்கப்பட்டது. 16 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்திற்காக வாங்கப்பட்ட கடனுக்கான வட்டியாக மட்டுமே பல நூறு கோடி ரூபாய் செலுத்தப்பட்டிருக்கும் நிலையில், திட்ட மதிப்பை விட வெறும் ரூ.369.60 கோடி மட்டுமே கூடுதலாக நிர்ணயம் செய்து ஒப்பந்தம் வழங்குவது பொருளாதாரப் படுகொலையாகவே இருக்கும். </p><p>இதன் பின்னணியில் பேரங்களும், ஊழல்களும் நடந்திருக்கக் கூடும் என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன. தி.மு.க. ஆட்சி இப்படி ஒரு சீரழிவு ஒப்பந்தததை வழங்க முடிவு செய்ததை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அதில் எந்த மாற்றத்தையும் செய்யாமல், தி.மு.க. அரசின் முடிவை த.வெ.க. அரசின் பின்பற்றுவது அதிர்ச்சியளிக்கிறது.</p><p>சென்னை வெளிவட்ட சாலையை பராமரித்து, சுங்கக்கட்டணம் வசூலிப்பதற்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ள  நிறுவனம், அடுத்த 25 ஆண்டுகளுக்கு சுங்கக்கட்டணத்தை வசூலித்துக் கொள்ளும். வெளிவட்ட சாலையில் இன்றைய நிலையில் சராசரியாக தினமும் 31 ஆயிரம் வாகனங்கள் பயணிக்கின்றன. இந்த சாலைக்கான சுங்கக்கட்டணம் கடந்த ஜூன் 1-ந்தேதிதான் உயர்த்தப்பட்டன. அதன்படி, குறைந்தபட்சமாக கார்களுக்கு ரூ.140 முதல் அதிகபட்சமாக 7 அச்சு சரக்கு வாகனங்களுக்கு ரூ.915 வரை சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. </p><p>சராசரியாக ஓரு வாகனத்திற்கு  ரூ.350 என வைத்துக் கொண்டாலும் கூட ஆண்டுக்கு சுமார் ரூ.400 கோடி சுங்கக்கட்டணம் வசூலாகும். 25 ஆண்டுகளின் முடிவில் இந்த சாலையில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை 70 ஆயிரங்களை கடந்து விடும் என்பதால் சுங்கக்கட்டண வசூலும் ஆண்டுக்கு ரூ.4000 கோடி என்ற அளவைத் தாண்டி விடும். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இந்த சாலையிலிருந்து 25 ஆண்டுகளில் கிட்டத்தட்ட ரூ.50 ஆயிரம் கோடி வரை சுங்கக்கட்டணம் வசூலிக்க முடியும். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சாலையை வெறும் ரூ.2526 கோடிக்கு தனியாருக்கு தாரை வார்ப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.</p><p>சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை ரூ.2,100 பறக்கும் சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டதில் ரூ.700 கோடி ஊழல் நடந்திருக்கலாம் என்பதால் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. கரூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதல்-அமைச்சர் விஜய், இந்தத் திட்டத்தின் பெயரைக் குறிப்பிடாமல் இரு மடங்கு தொகைக்கு வழங்கப்பட்டிருந்த சென்னை மேம்பாலம் திட்டத்திற்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தார். அதே அளவுகோல்தான் இந்த ஒப்பந்தத்திற்கும் பயன்படுத்தபட வேண்டும்.</p><p>எனவே, சென்னை வண்டலூர் &amp; மீஞ்சூர் இடையிலான வெளிவட்டச் சாலையை மிகக் குறைந்த தொகைக்கு  தனியாருக்கு வழங்குவதற்காக தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். இந்த சாலை அரசின் பராமரிப்பிலேயே நீடிக்க வேண்டும்; அதில் சுங்கக்கட்டணம் ரத்து செய்யப்பட வேண்டும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>கரூர் 3,084 ஏக்கர் விவகாரம்: இனாம் நிலங்களையும் கோவில் சொத்துகளையும் குழப்ப வேண்டாம் - அண்ணாமலை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-3084-acre-issue-dont-confuse-inam-lands-and-temple-properties-annamalai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-3084-acre-issue-dont-confuse-inam-lands-and-temple-properties-annamalai#comments</comments><guid isPermaLink="false">26df518c-2f0d-4fad-8143-7077111c85ec</guid><pubDate>Sat, 11 Jul 2026 10:43:49 +0000</pubDate><atom:updated>2026-07-11T10:43:49.262Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர்,Annamalai,அண்ணாமலை,Karur</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/oceozfbp/annamalai.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/oceozfbp/annamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>‘வி த லீடர்ஸ்’ இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>கோவில் சொத்துகள்</h2><p>கரூர் மாவட்டத்தில் 3,084 ஏக்கர் நிலங்கள் தொடர்பாக எழுந்துள்ள விவகாரத்தில் உண்மை நிலையை, சட்டரீதியாகப் புரிந்துகொள்வது அவசியம்.</p><p>இங்கு பேசுபொருளாகியிருக்கும் அனைத்து நிலங்களும் "திருக்கோவில் சொத்துகள்" என்றல்ல; பெரும்பாலானவை இனாம் நிலங்கள் தொடர்பானவை. ஆலயங்களில் பணியாற்றிய அர்ச்சகர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு விஜயநகரப் பேரரசு மற்றும் பிற ஆட்சியாளர்களால் மானியமாக வழங்கப்பட்ட இனாம் நிலங்கள், பின்னர் தமிழ்நாடு இனாம் (ரத்து மற்றும் ரயத்வாரியாக மாற்றுதல்) சட்டம், 1963 (Act 30 of 1963)-ன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தகுதியுடையவர்களுக்கு </a>ரயத்வாரி பட்டாக்கள் வழங்கப்பட்டன.</p><p>இந்த பட்டாக்களை அடிப்படையாகக் கொண்டு, ஆயிரக்கணக்கான விவசாயிகள் பல தசாப்தங்களாக நிலங்களை சாகுபடி செய்து, பராமரித்து, சட்டப்பூர்வமாக அனுபவித்து வருகின்றனர். ஆனால், கடந்த திமுக ஆட்சியில், இந்த பட்டா பெற்ற இனாம் நிலங்களும் கோவில் நிலங்களுடன் சேர்த்து பூஜ்ஜிய மதிப்பில் வகைப்படுத்தப்பட்டதால், அவற்றைப் பத்திரப்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் கடன் பெறுதல், சொத்து பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.</p><h2>தவறான புரிதல்</h2><p>தற்போதைய தவெக அரசின் நடவடிக்கை, சட்டப்படி ஏற்கனவே ரயத்வாரி பட்டா பெற்ற இனாம் நிலங்களின் மீதான பதிவுத் தடையை நீக்கி, அந்த விவசாயிகளின் சட்டப்பூர்வ உரிமையை மீட்டெடுப்பதற்கானதாக இருந்தால், அதனை வரவேற்க வேண்டியதே தவிர, அதை கோவில் நிலங்களை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு வழங்கும் நடவடிக்கையாக சித்தரிப்பது தவறான புரிதலை ஏற்படுத்தும்.</p><p>அதே நேரத்தில், உண்மையான திருக்கோவில் சொத்துகள் எதுவும், சட்டவிரோதமாக தனியாருக்கு மாற்றப்படக் கூடாது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. கோவில் சொத்துகளை பாதுகாப்பதும், சட்டப்படி உரிமை பெற்ற விவசாயிகளின் உரிமையை பாதுகாப்பதும் இரண்டுமே அரசின் பொறுப்பாகும்.</p><h2>நாங்கள் ஆதரிக்கிறோம்</h2><p>எனவே, சட்டப்பூர்வமாக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ரயத்வாரி </a>பட்டா பெற்ற இனாம் நிலங்களின் உரிமையை உறுதி செய்யும் தமிழக அரசின் நடவடிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம். இது ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், பல ஆண்டுகளாக நிலவி வந்த பதிவுச் சிக்கல்களையும் தீர்க்கும் ஒரு முக்கியமான நடவடிக்கை.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க., தி.மு.க. ஏன் ஒரே அணியில் இருக்கக்கூடாது? - திருமாவளவன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-shouldnt-the-trp-and-dmk-be-in-the-same-team-thirumavalavan-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-shouldnt-the-trp-and-dmk-be-in-the-same-team-thirumavalavan-asks#comments</comments><guid isPermaLink="false">a180e1c6-3c62-4471-9524-09a413ba7a90</guid><pubDate>Sat, 11 Jul 2026 10:41:08 +0000</pubDate><atom:updated>2026-07-11T10:41:08.609Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,திமுக,DMK,திருமாவளவன்,Thirumavalavan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/gnu80oc0/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருமாவளவன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/gnu80oc0/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>காஞ்சிபுரம்,</p><p>விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக ஆகஸ்ட் மாதம் 17-ந்தேதி நடைபெறவுள்ள தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு தொடர்பான மண்டல செயற்குழு கூட்டம் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் அருள்நாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.</p><p>இந்த கூட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த முகாம், நகர, மாவட்ட, மாநிலப் பொறுப்பாளர்கள், அணிப் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய திருமாவளவன் கூறியதாவது:-</p><p>தி.மு.க. தோற்றுவிட்டதே என்பது ஒரு கவலை, அதைவிட அ.தி.மு.க.வை கண்முன்னரே சிதைத்து வருகிறார்களே என்பது ஒரு கவலை, திராவிட கட்சிகளை ஒதுக்கி விட வேண்டும் என பெரியார் காலத்தில் இருந்து ஒரு முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனக்கு தனிப்பட்ட முறையில் பா.ஜ.க. மீது எந்த வெறுப்பும் கிடையாது, ஆனால் கருத்தியல் என்பது வேறு.</p><p>பா.ஜ.க.வை கொள்கை எதிரி என த.வெ.க. கூறுகிறது. இவ்வளவு நாள்கள் எதிர்த்த தி.மு.க.வும் தொடர்ந்து எதிர்ப்பதாக கூறுகிறது. பா.ஜ.க.வை எதிர்ப்பதுதான் அரசியல் என இந்தியா கூட்டணியும் சொல்கிறது. அப்படியெனில், ஏன் இவர்கள் அனைவரும் ஒரே அணிக்குள் வரக்கூடாது என்றுதான் நான் கேட்கிறேன்.</p><p>த.வெ.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் ஒரே எதிரி பா.ஜ.க. தான். கேரளாவில் காங்கிரசும் இடதுசாரியும், மேற்கு வங்கத்தில் மம்தாவும் காங்கிரசும் கருத்து வேறுபாடு இருந்தால் கூட இந்தியா கூட்டணி என்று வரும்போது ஒன்றாக நிற்கிறார்கள். ஏன் தமிழ்நாட்டில் அப்படி ஒரு அரசியல் இருக்கக் கூடாது? இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>அண்ணாமலையின் முதல் மாநாடு: நாளை முக்கிய அறிவிப்புகளை வெளியிட திட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/annamalais-first-conference-plans-to-make-important-announcements-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/annamalais-first-conference-plans-to-make-important-announcements-tomorrow#comments</comments><guid isPermaLink="false">609352df-a82f-4425-8dad-b012ee55b18a</guid><pubDate>Sat, 11 Jul 2026 10:40:31 +0000</pubDate><atom:updated>2026-07-11T10:40:31.488Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவை,Annamalai,அண்ணாமலை,பொதுமக்கள்,Pollachi,Kovai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/moyvxd0l/malai33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அண்ணாமலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/moyvxd0l/malai33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>கோவை, </p><p>கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 'WE THE LEADERS' அமைப்பின் முதல் மாநாடு 'போதையில்லா தமிழகம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு மாநாடாக நடைபெறுகிறது.</p><p>தமிழக பாரதீய ஜனதா முன்னாள் தலைவராக பதவி வகித்த அண்ணாமலை, அந்த கட்சியில் இருந்து விலகி வீத லீடர்ஸ் என்ற புதிய அரசியல் அமைப்பை தொடங்கி உள்ளார்.</p><h2>முதல் மாநாடு பொள்ளாச்சி</h2><p>அண்ணாமலையின். இந்த கட்சியில் 19 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தாங்களாகவே முன்வந்து இணைந்துள்ளனர். இந்த கட்சியின் முதல் மாநாடு பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி யில் நாளை (12-ந் தேதி) நடக்கிறது. போதை இல்லா பொள்ளாச்சி என்னும் பெயரில் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.</p><h2>1 லட்சத்திற்கும் மேற்பட்டோர்</h2><p>மாநாட்டில் 1  லட்சத்துக்கும் மேற்பட்டோர் என பங்கேற்பார்கள் அண்ணாமலை தரப்பினர் கருதுகிறார்கள். அதற்கேற்ப மாநாடு பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மாநாடு முகப்புதோற்றம் வித்தியாசமாக இருபுறமும் தென்னை மரம், நடுவில் அணையின் தோற்றத்தை போல் அமைக்கப்ப ட்டுள்ளது. இந்த பகுதியின் முக்கிய நீராதாரமான பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தை மையப்படுத்தி யும், முக்கிய விவசாயமான தென்னை தொழிலை மையப்படுத்தியும் முகப்பு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>முக்கிய அறிவிப்புகள்</h2><p>நாளை மாலை 4 மணி அளவில் தொடங்கும் இந்த மாநாட்டில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அண்ணாமலை </a>பங்கேற்று உரையாற்ற உள்ளார். இதில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கட்சியின் எதிர்காலம், நடைபெற உள்ள இடைத்தேர்தல் மற்றும். உள் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டி யிடுவது தொடர்பாகவும் சில அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.</p><p>முந்தைய தி.மு.க. ஆட்சி காலத்தில் அந்த கட்சியின் செயல்பாடுகளை அண்ணா மலை கடுமையாக விமர்சி த்து வந்தார். இந்தநிலையில் தற்போது ஆட்சி மாறியு ள்ளது. தற்போதைய த. வெ.க. அரசு மற்றும் முதல்-அமைச்சர் விஜய்யின் செயல்பாடுகள் குறித்தும், கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு பணி வழங்கப்பட்டது குறித்தும் நாளை பொள்ளாச்சியில் விரிவாக பேச உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். </p><p>இதனால் அரசியல் தொடர்பாக அவர் என்ன பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோவை குண்டு வெடிப்பு சம்பவம்: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலை - வானதி சீனிவாசன் கோரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-bomb-blast-incident-vanathi-srinivasan-demands-government-jobs-for-affected-families</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-bomb-blast-incident-vanathi-srinivasan-demands-government-jobs-for-affected-families#comments</comments><guid isPermaLink="false">b9313f82-6f3e-4d39-a12b-179bf1544b5c</guid><pubDate>Sat, 11 Jul 2026 10:30:46 +0000</pubDate><atom:updated>2026-07-11T10:30:46.382Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோரிக்கை,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,அரசு வேலை,Government job,demands,குண்டு வெடிப்பு சம்பவம்,Bomb blast incident</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/ryg6w35o/vanathi18.gif" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/ryg6w35o/vanathi18.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கோவை குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டோர் குடும்பங்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இது தொடர்பாக தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p> <h2>அரசு பணி</h2><p>கடந்த 2025 செப்டம்பர் 27ம் தேதி கரூரில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4.%E0%AE%B5%E0%AF%86.%E0%AE%95.%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%20">த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய் </a>பங்கேற்ற பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களை சேர்ந்த 31 பேருக்கு நேற்று அரசு பணிக்கான நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் வழங்கியுள்ளார். கருணை அடிப்படையில் இப்பணி வவழங்கப்பட்டுள்ளது.</p>  <h2>பாஜக மூத்த தலைவர் அத்வானி</h2><p>1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி, மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்காக பாஜக மூத்த தலைவர் அத்வானி  கோவை வந்தார். அவரை கொலை செய்வதற்காக கோவை மாநகரில் தொடர் குண்டுவெடிப்புகளை மத அடிப்படைவாத பயங்கரவாதிகள் நிகழ்த்தினர். இதில் 58 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.</p> <h2>வாழ்வாதாரம்</h2><p>உயிரிழந்தவர்கள் யாரும் எந்த தவறும் செய்யாத சாதாரண பொதுமக்கள். வழக்கம் போல கடை தெருவுக்கு வந்தவர்கள். அவர்களில் பலர் குடும்பத்தின் ஒற்றை ஆதாரமாக விளங்கியவர்கள். பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை முன்கூட்டியே கண்டறியாத, குண்டுவெடிப்பை முன்கூட்டிய கண்டறிந்து தடுக்காத உளவு துறை மற்றும் காவல்துறையின் தோல்வியால் கொல்லப்பட்டவர்கள். அவர்களின் குடும்பத்தினர் இன்றளவும் வாழ்வாதாரத்திற்காக போராடும் நிலையிலேயே உள்ளனர்.</p><h2>கோவை குண்டு வெடிப்பு</h2><p>அரசு என்பது அனைவருக்கும் பொதுவானது. அரசின் கருணை பார்வை, ஒரு குறிப்பிட்ட தரப்பினர் மீது மட்டும் விழாமல், பாதிக்கப்பட்ட அனைவர் மீது விழ வேண்டும். எனவே, கரூர் த.வெ.க. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்பட்டது போல, கொடூர பயங்கரவாதிகளில் நிகழ்த்தப்பட்ட கோவை குண்டு வெடிப்பில் பலியானோர் குடும்பங்களின் வாரிசுகளுக்கு அரசு பணி வழங்க வேண்டும்.</p> ]]></content:encoded></item><item><title>ஆன்லைனில் பகுதிநேர வேலை தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.5.83 லட்சம் மோசடி - 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/2-arrested-for-defrauding-youth-of-rs-583-lakh-by-promising-part-time-work-online</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/2-arrested-for-defrauding-youth-of-rs-583-lakh-by-promising-part-time-work-online#comments</comments><guid isPermaLink="false">ea4956d5-73c5-45ea-98fc-5eb21c5512c4</guid><pubDate>Sat, 11 Jul 2026 10:23:01 +0000</pubDate><atom:updated>2026-07-11T10:23:01.505Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,தென்காசி,மோசடி,Duping</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/htgmhfys/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மோசடி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/htgmhfys/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><p>தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் கருவந்தா பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசேகரன் மகன் செல்வதாஸ் (31 வயது). இவர் காற்றாலையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் இவரது செல்போனுக்கு செயலி மூலம் குறுந்தகவல் வந்தது. அதில், ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை செய்து சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. பின்னர் அதில் வந்த இணையதள லிங்கில் பதிவு செய்து 'காயின் பிட்டிங் டாஸ்க்' ஆன்லைன் வேலையை செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.</p><p>முதல் நாள் முதலீடின்றி வேலை செய்த உடன் ரூ.1,050 பணம் கிடைத்தது. மீண்டும் ரூ.8 ஆயிரம் செலுத்தி வேலை செய்தவுடன் ரூ.14 ஆயிரம் வந்தது. இதை நம்பிய செல்வதாஸ், குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு பல தவணைகளாக ரூ.5 லட்சத்து 83 ஆயிரம் வரை செலுத்தி உள்ளார்.</p><p>பின்னர் ஆன்லைன் கணக்கில் பல லட்சம் ரூபாய் லாபம் வந்திருப்பதாகவும், அதை எடுப்பதற்கு ரூ.9 லட்சம் வரை செலுத்தினால் மட்டுமே எடுக்க முடியும் என்று கூறி உள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த செல்வதாஸ் தென்காசி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.</p><p>அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்த சதீஷ் பாண்டியன் (30 வயது) மற்றும் இளையராஜா (32 வயது) ஆகிய இருவரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் தலைமறைவான சிலரை வலைவீசி தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நகர்ப்புற வீடற்றோருக்கான இரவு நேர காப்பகங்கள் குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cultural-programs-to-raise-awareness-about-night-shelters-for-the-urban-homeless-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cultural-programs-to-raise-awareness-about-night-shelters-for-the-urban-homeless-in-chennai#comments</comments><guid isPermaLink="false">ffe4390d-5968-4c52-938f-db2d485372f5</guid><pubDate>Sat, 11 Jul 2026 10:20:42 +0000</pubDate><atom:updated>2026-07-11T10:20:42.746Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/tdxzx8u3/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/tdxzx8u3/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்பட்டு வரும் நகர்ப்புற வீடற்றோருக்கான இரவு நேர காப்பகங்கள் குறித்த விழிப்புணர்வினை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் சென்ட்ரல் ரெயில் நிலையப் பகுதியில் நேற்று விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சிறுமியருக்கான 2 காப்பகங்கள், சிறுவர்களுக்கான 3 காப்பகங்கள், அறிவுத்திறன் குறைவுள்ள ஆண்களுக்கான 1 காப்பகம், ஆண்களுக்கான 14 காப்பகங்கள், பெண்களுக்கான 11 காப்பகங்கள், முதியோர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 1 காப்பகம், முதியோர் பெண்களுக்கான 2 காப்பகங்கள், முதியோர் ஆண்களுக்கான 1 காப்பகம், மனநலம் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கான 3 காப்பகங்கள், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான 2 காப்பகங்கள், மாற்றுத்திறனாளி பெண்களுக்கான 1 காப்பகம், திருநங்கைகளுக்கான 1 காப்பகம், மெரினா கடற்கரையில் குடும்பங்களுக்கான 1 காப்பகம் என நகர்ப்புற வீடற்றோருக்கு 43 இரவு நேர காப்பகங்களும்,</p><p>எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் தாய் மற்றும் குழந்தைகளைப் பராமரிப்பவர்களுக்கான 1 காப்பகம், அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளுடன் வரும் உதவியாளர்கள் தங்கி பயன்பெறுவதற்கு ஏதுவாக பெண்களுக்கான 7 காப்பகங்கள் மற்றும் ஆண்களுக்கான 6 காப்பகங்கள் என 14 சிறப்பு காப்பகங்கள் என மொத்தம் 57 காப்பகங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 1,384 நபர்கள் தங்கி பயன்பெற்று வருகின்றனர். இந்த காப்பகங்களில் தங்கியுள்ளவர்களுக்கு மாநகராட்சியின் சார்பில் மூன்று வேளை உணவு வழங்கப்படுகிறது. மேலும், இங்கு படுக்கை வசதி, மின்வசதி, குடிநீர்வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் உள்ளன.</p><p>பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையரின் உத்தரவின்படி, இணை ஆணையரின் அறிவுறுத்தலின்படி, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் செயல்பட்டு வரும் நகர்ப்புற வீடற்றோருக்கான இரவு நேர காப்பகங்கள் தொடர்பான விழிப்புணர்வினை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் 10.07.2026 அன்று சென்னை சென்ட்ரல் இரயில் நிலையப் பகுதியில் தலைமை சமூக மேம்பாட்டு அலுவலர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் மூலமாக பொதுமக்களுக்கு நகர்ப்புற வீடற்றோருக்கான இரவு நேரக் காப்பகங்கள் குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.</p><p>இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான பொதுமக்கள் பயனடைந்தனர். மேலும், நகர்ப்புற வீடற்றோருக்கான காப்பக சமூகப் பணியாளர்கள் தெருநாடகம், பறையாட்டம், கதனி கூத்து மற்றும் ஒயிலாட்டம் போன்ற நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் மூலம் காப்பகங்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் சிறப்பாக எடுத்துரைத்தனர். மேலும், பொதுமக்களின் பங்களிப்பையும் ஆதரவையும் வலுப்படுத்தும் வகையில் அனைவராலும் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சியின் காப்பகங்களில் வழங்கப்படும் பாதுகாப்பான தங்குமிடம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.</p><p>இந்நிகழ்ச்சியில் தலைமை சமூக மேம்பாட்டு அலுவலர் ராஜ்குமார், பாலின ஆய்வகத் தலைவர் டாக்டர் லெஜிஸ், பெரியமேடு காவல் நிலைய ஆய்வாளர் திரு. நந்தகுமார், ரெயில்வே காவல்துறையினர், ரெயில்வே பாதுகாப்புப் படை அலுவலர்கள் மற்றும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>தமிழ் உயிரோடு இருக்கிறது...! ஆனால் தமிழ்ப் பெயர்கள் உயிரோடு இருக்கிறதா? - வேல்முருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-is-alive-but-are-tamil-names-alive-velmurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-is-alive-but-are-tamil-names-alive-velmurugan#comments</comments><guid isPermaLink="false">73767dbc-c9a8-4b4b-928e-6fc887bd5d80</guid><pubDate>Sat, 11 Jul 2026 09:57:59 +0000</pubDate><atom:updated>2026-07-11T09:57:59.288Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Velmurugan,வேல்முருகன்,தமிழக வாழ்வுரிமைக் கட்சி,தி.வேல்முருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/uvkufj3a/velmurugan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/uvkufj3a/velmurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ் உயிரோடு இருக்கிறது...! ஆனால் தமிழ்ப் பெயர்கள் உயிரோடு இருக்கிறதா? என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>ஜ... ஷ... ஸ... ஹ... க்ஷ...</p><p>இந்த எழுத்துகளின் ஒலிகளைக் கவனியுங்கள்.</p><h2>மொழிக் கலப்பா?</h2><p>தமிழின் தொன்மையான எழுத்து மரபில் இல்லாத இந்த ஒலிகள், இன்று தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளின் பெயர்களில் இயல்பாகிவிட்டன. இது வெறும் மொழிக் கலப்பா? அல்லது பல நூற்றாண்டுகளாகத் தமிழர் வாழ்வியலுக்குள் படிப்படியாகப் பதிந்த ஆரியப் பண்பாட்டின் தாக்குதலா?</p><p>உலகின் தொன்மையான மொழிகளில், முதன்மையான மொழியாகப் போற்றப்படும் தமிழ், இலக்கியத்திலும் இலக்கணத்திலும் தனது தனித்துவத்தை ஆயிரமாயிரமாண்டுகளாகக் காத்து நிற்கிறது. தமிழ் மொழியைத் தாங்கி நிற்கும் மக்களின் அடையாளங்களிலும் இருக்கிறது.</p><p>இன்று தமிழர் இல்லங்களில் ஒலிக்கும் பெயர்களைப் பார்த்தால், தமிழின் இயல்பான ஒலிகளைவிட பிறமொழி எழுத்துக்களின் ஒலிகளே அதிகமாகக் கேட்கின்றன. இது ஒரு நாளில் நிகழ்ந்த மாற்றமல்ல. பல தலைமுறைகளாகத் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட மாற்றங்களின் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விளைவாகவே </a>பார்க்கிறோம்.</p><h2>தமிழை அழிப்பதற்கான சூழ்ச்சியா? </h2><p>தமிழக வாழ்வுரிமைக் கட்சி எந்த மொழிக்கும் எதிரானது அல்ல. ஆனால், தமிழின் தனித்துவ அடையாளம் மெல்ல மெல்ல மங்கும் எந்தப் பண்பாட்டு மேலாதிக்கப் போக்காக இருந்தாலும், அதை ஆய்வு செய்து, தமிழர் சமூகத்துடன் திறந்த விவாதங்களை நடத்த வேண்டியது காலத்தின் தேவை என்று கருதுகிறோம்.</p><p>தமிழில் தொன்மையான எழுத்து மரபில் இல்லாத ஒலிகள், இன்று தமிழர் குழந்தைகளின் பெயர்களில் ஏன் தவிர்க்க முடியாததாக மாறின?</p><p>தமிழில் பெயரிடும் மரபில் இந்த மாற்றம் எப்போது, எப்படி, எந்தச் சமூகப் பண்பாட்டு சூழலில் ஏற்பட்டது?</p><p>தமிழரின் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் தமிழ்ப் பெயர்கள் ஏன் படிப்படியாகக் குறைந்தன?</p><p>இந்த மாற்றம் இயல்பாக நடந்த மாற்றமா? அல்லது ஆழமான திட்டமிடலோடு தமிழை அழிப்பதற்கான சூழ்ச்சியா? </p><h2>அரசின் பொறுப்பு </h2><p>இந்தக் கேள்விகளுக்கு, மொழியியல் மற்றும் சமூக ஆய்வுகளின் அடிப்படையில் பதில் தேட வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு உள்ளது.</p><p>எனவே, தமிழ்நாடு அரசு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மொழியியலாளர்கள்</a>, வரலாற்றாசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆய்வாளர்கள் அடங்கிய உயர்மட்ட ஆய்வுக் குழுவை அமைத்து, தமிழில் பெயரிடும் மரபில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும், தமிழின் தனித்துவ அடையாளத்தைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்தும், விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி பள்ளியில் இருந்து மாணவியை அழைத்து சென்று பாலியல் தொல்லை - வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-taking-student-from-school-and-sexually-harassing-her</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-taking-student-from-school-and-sexually-harassing-her#comments</comments><guid isPermaLink="false">cd5218c5-4453-4b53-9f04-41b775bcfa4a</guid><pubDate>Sat, 11 Jul 2026 09:17:19 +0000</pubDate><atom:updated>2026-07-11T09:17:19.868Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கள்ளக்குறிச்சி,Kallakurichi,பாலியல் தொல்லை,POCSO case,போக்சோவில் கைது</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/mzwa2xex/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/mzwa2xex/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சி,</p><p>கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுகா சித்தேரி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் துரைராஜ் (26 வயது). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த நயினார்பாளையத்தில் உள்ள இ-சேவை மையத்தில் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று துரைராஜ், சின்னசேலம் பகுதியில் உள்ள பள்ளிக்கு சென்று, அங்கு 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியின் பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி அவரை அழைத்துள்ளார்.</p><p>அவருடைய பேச்சை நம்பி மாணவி, அவருடன் சென்றுள்ளார். ஆனால் துரைராஜ், மாணவியை தனது நிலத்தில் உள்ள கொட்டகைக்கு அழைத்து சென்று அங்கு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. பின்னர் மாணவியை மீண்டும் பள்ளியில் விட்டுவிட்டு துரைராஜ் சென்றுவிட்டார்.</p><p>இச்சம்பவம் குறித்து மாணவி தனது வகுப்பு ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் ஆசிரியர் இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தார். தொடர்ந்து இச்சம்பவம் குறித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து துரைராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கோவை: பல்கலைக்கழக விடுதியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழப்பு - வானதி சீனிவாசன் வேதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-student-mysteriously-dies-in-university-hostel-vanathi-srinivasan-in-anguish</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-student-mysteriously-dies-in-university-hostel-vanathi-srinivasan-in-anguish#comments</comments><guid isPermaLink="false">61f89e63-5198-4455-bf73-9d1f87df3331</guid><pubDate>Sat, 11 Jul 2026 09:13:44 +0000</pubDate><atom:updated>2026-07-11T09:13:44.387Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Coimbatore,கோவை,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/o77sr9o2/vanathi.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/o77sr9o2/vanathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>மாணவி உயிரிழப்பு </h2><p>கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தாரணிகா மர்மமான முறையில் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.</p><p>மாணவிக்கு ஏற்கனவே உடல்நலக் குறைபாடு இருந்ததாகப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவிக்கும் நிலையில், தங்களது மகள் நல்ல <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">உடல்நலத்துடன் </a>இருந்ததாக பெற்றோர் கூறுவது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.</p><p>எனவே, காவல்துறை வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொண்டு மாணவியின் மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிந்து, அவரது குடும்பத்தினருக்கு உரிய நீதியைப் பெற்றுத்தர வேண்டும்.</p><h2>ஆழ்ந்த இரங்கல்</h2><p>மேலும், விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு அவ்வப்போது மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் மனநல ஆலோசனைகள் வழங்கி, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.</p><p>உயிரிழந்த மாணவி தாரணிகாவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திமுக-அதிமுக கூட்டணி? டிடிவி தினகரன் சொன்ன பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-aiadmk-alliance-ttv-dinakarans-answer</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-aiadmk-alliance-ttv-dinakarans-answer#comments</comments><guid isPermaLink="false">6fd8f529-b9b1-487d-bb80-4071fc1dc5c8</guid><pubDate>Sat, 11 Jul 2026 09:08:29 +0000</pubDate><atom:updated>2026-07-11T09:08:29.878Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,அதிமுக,திமுக,DMK,தினகரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/rtb07vvz/dinakaran33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/rtb07vvz/dinakaran33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஆடு, மாடு திருடுவதைப் போல எம்.எல்.ஏ.க்களை திருடுகிறது தவெக..ஒரிஜினல் களவாணி விஜய்தான் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் காட்டமாக கூறியுள்ளார்.</p><p>விஜய் விமர்சனம்</p><p>நேற்றைய தினம் கரூர் சென்ற முதல்-அமைச்சர்ஜோசப் விஜய் எதிர்க்கட்சியான திமுகவையும் அதிமுகவையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசி இருந்தார். அவருடைய இந்த பேச்சுக்கு அக்கட்சியை சார்ந்தவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். குறிப்பாக அதிமுகவில் இருந்து ஆர்.பி. உதயகுமார், ஜெயக்குமார் உள்ளிட்டோர் விஜய்யின் பேச்சுக்கு கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளனர். </p><p>இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முதல்-அமைச்சரின் கரூர் பேச்சுக்கு பதிலடியை பதிவு செய்துள்ளார்.  அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>எம்.எல்.ஏ திருடர்கள் தவெக</p><p>ஒரு முதல்-அமைச்சர் களவாணி என்று பேசுகிறாரே, இதே போல் அவரை பார்த்து சொல்றதுக்கு எவ்வளவு நேரம் ஆகும். விஜய் தான் களவாணி. நம்ம ஊர்ல ஆடு திருடன், மாடு திருடன் என்று சொல்வாங்க. எங்க ஊர்ல சிலர் ஆடு மட்டும் தான் திருடுவான். சிலர் மாடு மட்டும் திருடுவான். அதே போல் எம்.எல்.ஏ. திருடர்கள் நீங்கள். எம்எல்ஏ களவாணி. முதன் முறையாக அமமுக எம்எல்ஏவை ஆசை வார்த்தை காட்டி திருடுனீங்க. இதை எதற்காக அடிக்கடி சொல்கிறேன் என்றால் உண்மையாக நடந்தது.</p><p>கவர்னரிடம் கொடுக்கப்பட்ட அந்த லெட்டர் போர்ஜரி. இப்படி ஆட்சி அமைப்பதற்கே தகிடு தத்தங்கள் செய்தவர்கள். எங்கள் அமமுக எம்எல்ஏவை <a href="https://www.dailythanthi.com/news/india">குதிரை பேரம் </a>செய்யவில்லை என்று ஒரு வீடியோவை வெளியிட்டார்கள். இதில் யார் எம்எல்ஏ களவாணிகள். இப்படி மற்ற கட்சிகளை வெற்றி பெற்ற அகம்பாவத்தில் பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title> 757 கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமனத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/applications-are-invited-for-the-appointment-of-trustees-for-757-temples</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/applications-are-invited-for-the-appointment-of-trustees-for-757-temples#comments</comments><guid isPermaLink="false">922b60e5-5998-42b6-a3b5-c259b93dde18</guid><pubDate>Sat, 11 Jul 2026 08:57:11 +0000</pubDate><atom:updated>2026-07-11T08:57:11.307Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>temples,கோவில்கள்,job opportunities,இந்து சமய அறநிலையத்துறை,வேலை வாய்ப்பு,Hindu Religious Endowments Department</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/bqe1umvd/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/bqe1umvd/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>விண்ணப்பங்கள் வரவேற்பு</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் சீர்மிகு நல்லாட்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் வழிக்காட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சட்டப்பிரிவு 46 (1) ன் கீழ் உள்ள 673 திருக்கோவில்களுக்கும் மற்றும் 46(2) ல் உள்ள 84 திருக்கோவில்களுக்கும் பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விண்ணப்பங்கள் </a>வரவேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.</p><p>அறங்காவலர் நியமன அறிவிப்பு. திருக்கோவில்கள் விவரம், தகுதிகள், விண்ணப்ப படிவம் ஆகியவை (www.hrce.tn.gov.in) இத்துறையின் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை இணைய வழியில் (online) பூர்த்தி செய்தோ அல்லது பதிவிறக்கம் செய்தோ உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் அல்லது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ, விரைவஞ்சல் (Speed Post) மூலமாகவோ சம்பந்தப்பட்ட இணை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பலாம். 12.08.2026 அன்று மாலை 5.45 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.</p><p>ஏற்கனவே, சட்டப்பிரிவு 46(3)ன் கீழ் உள்ள 220 திருக்கோவில்களுக்கும், நிர்வாகத்திட்டம் உள்ள 35 திருக்கோவில்களுக்கும் பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்கள் நியமனம் மற்றும் 14 மாவட்டங்களில் மாவட்டக்குழு உறுப்பினர்களின் நியமனத்திற்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கபட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாவீரன் அழகுமுத்துக்கோன் தியாகத்தையும், வீரத்தையும் போற்றி வணங்குகிறேன் - எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-honor-and-pay-tribute-to-the-sacrifice-and-valor-of-maaveeran-azhagumuthu-kon-edappadi-palaniswami</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-honor-and-pay-tribute-to-the-sacrifice-and-valor-of-maaveeran-azhagumuthu-kon-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">50e9f2ec-18a7-4070-bf43-2bb9e065b3ca</guid><pubDate>Sat, 11 Jul 2026 08:36:21 +0000</pubDate><atom:updated>2026-07-11T08:36:21.496Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,Edappadi Palaniasamy,Azhagumuthukon,அழகுமுத்துக்கோன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/uo6j95k0/11072026.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/uo6j95k0/11072026.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் அரசு அதிகாரிகள் சென்னையில் உள்ள அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.</p><p>மேலும், பல்வேறு அரசியல் தலைவர்கள் மாவீரன் அழகுமுத்துக்கோனை புகழந்து தங்களது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-</p><p>“அடிமைப்பட்டு உயிர்வாழ்வதை விட, சுதந்திர மனிதனாய் உயிரை விடுவோம் என வீரமுழக்கமிட்டு, ஆங்கிலேயரின் பீரங்கி குண்டுகளைத் தன் நெஞ்சில் தாங்கி, தமிழகத்தில் சுதந்திரப் போராட்ட வேட்கையை முதன்முதலில் விதைத்த மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் பிறந்தநாளில், அவர்தம் தியாகத்தையும் வீரத்தையும் போற்றி வணங்குகிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>கோவை:  வேளாண் பல்கலைக்கழக விடுதியில் மாணவி மர்ம மரணம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-mysterious-death-of-a-female-student-at-the-agricultural-university-hostel</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-mysterious-death-of-a-female-student-at-the-agricultural-university-hostel#comments</comments><guid isPermaLink="false">d8771b59-5513-4ddb-bc99-2b07c80fc9d8</guid><pubDate>Sat, 11 Jul 2026 08:35:49 +0000</pubDate><atom:updated>2026-07-11T08:35:49.236Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,மாணவி,student</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/wueixb0y/upaelt.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கோவை, மாணவி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/wueixb0y/upaelt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>கோவை</p><p>கோவை வேளாண் பல்கலைக்கழக விடுதியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவி மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளார்.</p><p>கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் விடுதியில் மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளார்.  இதனை சக மாணவிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.  அவர்கள் நிர்வாகத்தினரிடம் தகவல் தெரிவித்தனர்.</p><p>அந்த மாணவியின் உடல் பக்கெட்டுக்குள் (வாளிக்குள்) தலைகீழாக கவிழ்ந்த நிலையில் கிடந்துள்ளது.  அதனை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.</p> <h2>பெற்றோர் சந்தேகம்</h2><p>இதுபற்றி அந்த மாணவியின் பெற்றோர் கூறும்போது, அந்த மாணவி தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை என திட்டவட்டத்துடன் கூறினார்.  இந்த மரணத்தில் சந்தேகம் உள்ளது என குற்றம் சாட்டியுள்ளனர்.  இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>30 ஆண்டுகள், 300 ஸ்டார் ஓட்டல்களில் நூதன திருட்டு: முதியவர் ஒடிசாவில் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/30-years-300-star-hotels-involved-in-innovative-theft-elderly-man-arrested-in-odisha</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/30-years-300-star-hotels-involved-in-innovative-theft-elderly-man-arrested-in-odisha#comments</comments><guid isPermaLink="false">17648002-d663-4e64-b553-2360c73b069e</guid><pubDate>Sat, 11 Jul 2026 08:27:54 +0000</pubDate><atom:updated>2026-07-11T08:27:54.700Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Odisha,ஒடிசா,Thoothukudi,arrested,தூத்துக்குடி,முதியவர்,Star Hotel,Theft,Elderly,நூதன திருட்டு,ஸ்டார் ஓட்டல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/bffqb391/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஒடிசாவில் கைது செய்யப்பட்ட முதியவர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/bffqb391/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>நாட்டின் முன்னணி 5 நட்சத்திர ஆடம்பர ஓட்டல்களை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஏமாற்றி வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த முதியவரை, போலீசார் ஒடிசா மாநிலத்தில் கைது செய்தனர்.</p><h2>30 ஆண்டுகளாக முதியவரின் நூதன திருட்டு</h2><p>தூத்துக்குடியைச் சேர்ந்தவர் வின்சென்ட் ஜான் (வயது 69), 1980-களில் டெல்லியில் சுற்றுலா வழிகாட்டியாக பணியாற்றி வந்த ஓட்டல்களில் தங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ஓட்டலில் நேரிட்ட அவமானத்திற்கு பழிவாங்கும் நோக்குடன், 1996 முதல் 30 ஆண்டுகளாக ஸ்டார் ஓட்டல்களை ஏமாற்றுவதை தொழிலாக மாற்றியுள்ளார்.</p><h2>300-க்கும் மேற்பட்ட ஓட்டல்களில் கைவரிசை</h2><p>கண்ணியமான தோற்றம், சரளமான ஆங்கில அறிவு ஆகியவற்றைப் பயன்படுத்தி தன்னை ஒரு யோகா ஆசிரியர், ஆங்கில ஆசிரியர் அல்லது சுற்றுலா வழிகாட்டியாக ஓட்டல் ஊழியர்களிடம் அறிமுகம் செய்து நம்பிக்கையைப் பெறுவதில் வல்லவராக இருந்துள்ளார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம், கோவா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட், தெலுங்கானா, சத்தீஸ்கர் என்று பல மாநிலங்களில் உள்ள 300-க்கும் மேற்பட்ட சொகுசு ஓட்டல்களில் இவர் கைவரிசை காட்டியுள்ளார்.</p><p>ஓட்டல் அறைகளை முன்பதிவு செய்யும்போது இரண்டு பைகளுடன் வரும் இவர், ஒரு பையில் துணிகளையும், மற்றொரு பையில் பழைய செய்தித்தாள்கள் அல்லது தலையணைகளையும் நிரப்பி எடுத்து வருவார். வெளியில் செல்லும்போது ஊழியர்களுக்கு சந்தேகம் வராமல் இருக்க, செய்தித்தாள்கள் உள்ள பையை அறையிலேயே விட்டுவிட்டு, தனது துணிப்பையுடன் ஓட்டல் அறையில் இருக்கும் லேப்டாப், விலை உயர்ந்த வெளிநாட்டு மதுபானங்கள், சிகரெட்டுகள் போன்ற மதிப்புமிக்க பொருட்களைத் திருடிக் கொண்டு நைசாகத் தப்பி விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.</p><h2>ஒடிசாவில் கைது</h2><p>இந்த நிலையில் கடந்த ஜூன் 25-ம் தேதியன்று சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள ஆடம்பர ஓட்டலில் 2 நாட்கள் தங்கிய வின்சென்ட் ஜான், ஊழியரை ஏமாற்றி ரூ.1.48 லட்சம் மதிப்புள்ள லேப்டாப்பைப் பெற்றுக்கொண்டதுடன், ரூ.63,755 பில் தொகையைச் செலுத்தாமல் ஜூன் 27-ம் தேதியன்று தப்பியுள்ளார். ஓட்டல் நிர்வாகத்தின் புகாரைத் தொடர்ந்து சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் ஒடிசா மாநிலத்தின் தலைநகர், புவனேஸ்வரில் வைத்து இவரைப் போலீசார் கைது செய்தனர். டெல்லி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இவர் மீது ஏமாற்று வழக்குகள் இருப்பதும், பலமுறை போலீசாரின் பிடியில் சிக்கினாலும் தொடர்ந்து இந்த மோசடிகளில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தாமிரபரணி நதியை மாசுபட அனுமதிக்க முடியாது: ஐகோர்ட்டு மதுரை கிளை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cannot-allow-the-thamirabarani-river-to-be-polluted-madurai-bench-of-the-high-court</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cannot-allow-the-thamirabarani-river-to-be-polluted-madurai-bench-of-the-high-court#comments</comments><guid isPermaLink="false">9a38ee9d-61c7-4968-8b0b-9343f30b526e</guid><pubDate>Sat, 11 Jul 2026 08:22:40 +0000</pubDate><atom:updated>2026-07-11T08:22:40.737Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>தாமிரபரணி ஆறு,thamirabarani,மதுரை ஐகோர்ட்டு,Court,river</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/46zbq9lg/15.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/46zbq9lg/15.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>தாமிரபரணி ஆற்றின் மாசுபாடு தொடர்பான முக்கிய வழக்கு இன்று ஐகோர்ட்டு மதுரை கிளையில் விசாரனைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, தாமிரபரணி ஆற்றின் தற்போதைய நிலை குறித்து கவலை தெரிவித்தது.</p><p>ஈமச்சடங்குகள் பெயரில் ஆற்றில் கொட்டப்படும் பொருட்கள் பாபநாசம் முதல் தாமிரபரணி ஆற்றங்கரை வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள்நீராடுவதோடு, இறந்தவர்களுக்கான ஈமச்சடங்குகளையும் மேற்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், மதத்தின் பெயரில்கூட எந்த நீர்நிலையையும் மாசுபடுத்த யாருக்கும் உரிமை இல்லை. பாலியஸ்டர் போன்ற பொருட்கள் நீரில் மக்காமல் நீடிப்பதால், அவை ஆற்றின் சுற்றுச்சூழலுக்கும், உயிரினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, இந்திய கரு ஆமைகள் துணிகளில் சிக்கி உயிரிழக்கின்றன. </p><p>மக்களின் மத நம்பிக்கைகளை நீதிமன்றம் கேள்விக்குட்படுத்த விரும்பவில்லை. ஆனால் அந்த நடைமுறைகள் சுற்றுச்சூழலுக்கும் பிறரின் உரிமைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது. ஆற்றங்கரை அருகே கட்டப்பட்டு வரும் குளத்தை ஈமச்சடங்குகளுக்குப் பயன்படுத்தும் மாற்று வழியையும் பரிசீலிக்கலாம்.</p><p>தாமிரபரணி ஆற்றில் மேலும் மாசுபாடு ஏற்படாமல் தடுக்க எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிடவும், நிரந்தரத் தீர்வுக்கான பரிந்துரைகளை தாக்கல் செய்யவும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜூலை 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.</p> ]]></content:encoded></item><item><title>கருணை அடிப்படையில் அரசு வேலை: விவசாயத் தியாகிகள் குடும்பங்களுக்கும் வழங்க வேண்டும் - ஈ.ஆர்.ஈஸ்வரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-jobs-on-compassionate-grounds-families-of-agricultural-martyrs-should-also-be-provided-er-easwaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-jobs-on-compassionate-grounds-families-of-agricultural-martyrs-should-also-be-provided-er-easwaran#comments</comments><guid isPermaLink="false">5879ecb4-6119-4c23-99ba-95bf410dea89</guid><pubDate>Sat, 11 Jul 2026 08:09:10 +0000</pubDate><atom:updated>2026-07-11T08:09:10.564Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,அரசு வேலை,Government job,Agricultural,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி,கருணை அடிப்படை,ஈ.ஆர்.ஈஸ்வரன்,E.R. Easwaran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/qdoie3qb/222.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஈ.ஆர். ஈஸ்வரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/qdoie3qb/222.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%88.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%20%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">ஈ.ஆர். ஈஸ்வரன்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-           </p><p>1970 களில் விவசாயத்திற்கான மின் கட்டணம் ஏற்றப்பட்டதை குறைக்க வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். அப்போதைய அரசாங்கம் போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டு 63 பேர் தமிழ்நாடு முழுவதும் காவல்துறையால் சுடப்பட்டார்கள். அதற்குப் பிறகு நடந்த பல்வேறு அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு விவசாயிகளுக்கு கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்பட்டது. </p><h2>விவசாயம்</h2><p>தொடர்ந்து விவசாயிகள் கட்டணமில்லா மின்சாரத்தை பயன்படுத்தி விவசாயத்தை செய்து வருகிறார்கள். இந்த வசதியால் மட்டும் தான் தமிழகத்தில் விவசாயம் தொடர்ந்து நடக்கின்றது. போராட்டத்தில் உயிர் நீத்த விவசாயிகளுக்கு தமிழ்நாடு முழுவதும் நினைவு தூண்கள் அமைத்து அந்தந்த பகுதி விவசாயிகள் வருடம் தோறும் அவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்ட நாளில் நினைவஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.</p><h2>அரசு வேலை</h2><p>கடந்த காலங்களில் எங்களுடைய கோரிக்கைகளை ஏற்று உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. கடந்த பல வருடங்களாக தொடர்ந்து விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்க காரணமாக இருந்த, உயிர் நீத்த தியாகிகளுடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தி வருகின்றோம். தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளுடைய வாழ்வாதாரத்திற்கு அடித்தளம் அமைத்து கொடுத்தவர்கள் அவர்கள். பல்வேறு அரசுகளிடம் கருணை அடிப்படையில் அரசு வேலை கோரிக்கை வைத்தும் அது நிறைவேறவில்லை.</p><h2>முதல்-அமைச்சர்</h2><p>தற்போதைய அரசு கரூரில் அரசியல் நிகழ்ச்சியில் உயிரிழந்த குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கியிருப்பதை பார்க்கின்றோம். அரசியல் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கலாம் என்றால் தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து விவசாயிகளின் குடும்பங்கள் வாழ்வதற்காக உயிர்த்தியாகம் செய்த தியாகிகளின் குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கக் கூடாதா? ஒவ்வொரு முறை மேடையில் பேசும்போதும் விவசாயிகளோடு உடனிருப்பேன் என்று பேசுகின்ற இன்றைய முதல்-அமைச்சர் கனிவோடு பரிசீலித்து விவசாய மின் கட்டண உயர்வுக்காக போராடி உயிர் நீத்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு கருணையோடு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்க முன்வர வேண்டும். </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாமன்னர் அழகுமுத்துக்கோன் வீரப்பெரும்புகழ் போற்றுவோம் - சீமான்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-praise-the-heroic-deeds-of-his-majesty-king-azhagumuthugon-seeman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-praise-the-heroic-deeds-of-his-majesty-king-azhagumuthugon-seeman#comments</comments><guid isPermaLink="false">8f24325e-3dcf-4008-8778-d47e21850ee1</guid><pubDate>Sat, 11 Jul 2026 07:46:50 +0000</pubDate><atom:updated>2026-07-11T07:46:50.230Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,Seeman,மாவீரன் அழகுமுத்துக்கோன்,Azhagumuthukon</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/vz6ifvlz/seeman.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சீமான்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/vz6ifvlz/seeman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>வீரம் விளைந்த கட்டாலங்குளம் மண்ணைக் கட்டி ஆண்ட மாமன்னர்..!ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மறப்போர் புரிந்த மாவீரன்..! வெள்ளையர் பீரங்கிகளுக்கு எதிர் நின்றபோதும் வெள்ளைக்கொடி ஏந்த மறுத்த மண்ணுரிமை போராளி..!</p><h2>வரலாற்று நாயகன்</h2><p>அடிமை வாழ்விலும், உரிமைச்சாவு மேலானது என்ற உயரிய இலட்சிய உறுதியுடன் தாயகம் காக்க தன்னுடைய 6 தளபதிகள் மற்றும் 248 போர் வீரர்களுடன் நடுக்காட்டூரில்  இன்னுயிர் ஈந்து வீரகாவியமாய் ஆன <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வரலாற்று நாயகன்</a>..! விடுதலைப்பேரொளி, வீரத்திருமகன், நம்முடைய பாட்டன் மாமன்னர் அழகுமுத்துக்கோன் வீரப்பெரும்புகழ் போற்றுவோம்!</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>விடுதலை கனலை நம் மண்ணில் மூட்டிய மாபெரும் வீரர் அழகுமுத்துக்கோன்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/azhagumamuthukon-is-a-great-warrior-who-ignited-the-fire-of-freedom-in-our-land-dmk-leader-mkstalins-post</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/azhagumamuthukon-is-a-great-warrior-who-ignited-the-fire-of-freedom-in-our-land-dmk-leader-mkstalins-post#comments</comments><guid isPermaLink="false">c5abe90e-6531-4d20-bd17-bcb6e53d93ef</guid><pubDate>Sat, 11 Jul 2026 07:44:04 +0000</pubDate><atom:updated>2026-07-11T07:44:04.847Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,birthday,X Page,எக்ஸ் பதிவு,பிறந்தநாள்,தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்,DMK President M.K.Stalin,மாவீரன் அழகுமுத்துக்கோன்,Azhagumuthukon</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/ol8wpfmn/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாவீரன் அழகுமுத்துக்கோன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/ol8wpfmn/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>விடுதலைப் போராட்டத்துக்கான வீர வித்தாய் மக்கள் மனங்களில் ஊன்றப்பட்ட அழகுமுத்துக்கோன் பிறந்தநாளில் அவருக்கு என் வீர வணக்கம் என்று <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்</a> தெரிவித்துள்ளார்.</p><p>சுதந்திரப் போராட்ட வீரர், மாவீரன் அழகுமுத்துக்கோன் 269-வது பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: </p><p>சிப்பாய்ப் புரட்சிக்கு நூறாண்டுகளுக்கு முன்பே விடுதலைக் கனலை நம் மண்ணில் மூட்டிய மாபெரும் வீரர் அழகு முத்துக்கோன்.</p><p>அடிமையாய் உயிர்வாழ்வதைக் காட்டிலும் அடக்குமுறைக்கு எதிராக வீரத்துடன் போராடி மடிவதே மேல் என விடுதலைப் போராட்டத்துக்கான வீர வித்தாய் மக்கள் மனங்களில் ஊன்றப்பட்ட அழகு முத்துக்கோன் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என் வீர வணக்கம்! </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>விழுப்புரத்தில் இருந்து புறப்படும் ரெயில் சேவைகளில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-train-services-departing-from-villupuram</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-train-services-departing-from-villupuram#comments</comments><guid isPermaLink="false">e08d5b38-e20d-41e0-84e2-f4f33d73f562</guid><pubDate>Sat, 11 Jul 2026 07:36:38 +0000</pubDate><atom:updated>2026-07-11T07:36:38.267Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>ரெயில் சேவை,விழுப்புரம்,Villupuram,Train Services</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/27v0adf7/14.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/27v0adf7/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விழுப்புரம்,</p><p>விழுப்புரம் யார்டில் பொறியியல் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக மெமு ரெயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன் விபரம் பின்வருமாறு;</p><p>வருகிற 12, 13, 14, 15, 17, 18, 25 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பின்வரும் மெமு ரெயில் சேவைகள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.</p><p>*திருப்பதியில் இருந்து அதிகாலை 4.10 மணிக்கு புறப்படும் வண்டி எண்: 16111, திருப்பதி புதுச்சேரி மெமு எக்ஸ்பிரஸ், முண்டியம்பாக்கம் மற்றும் புதுச்சேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.</p><p>*புதுச்சேரியில் இருந்து மாலை 3.35 மணிக்கு புறப்படும் வண்டி எண்: 66052, புதுச்சேரி-எழும்பூர் மெமு பயணிகள் ரெயில் புதுச்சேரி மற்றும் முண்டியம்பாக்கம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.</p><p>* நாளை முதல் (12-ந்தேதி), 13, 14, 15, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பின்வரும் மெமு ரெயில் சேவைகள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. </p><p>*விழுப்புரத்தில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்படும் வண்டி எண்: 66046, விழுப்புரம் சென்னை கடற்கரை மெமு பயணிகள் ரெயில், விழுப்புரம் மற்றும் முண்டியம்பாக்கம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.</p><p>*தாம்பரத்தில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்படும் வண்டி எண்: 66045, தாம்பரம் விழுப்புரம் மெமு பயணிகள் ரெயில், முண்டியம்பாக்கம் மற்றும் விழுப்புரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.</p><p>*புதுச்சேரியில் இருந்து மதியம் 2.40 மணிக்கு புறப்படும் வண்டி எண்: 16112, புதுச்சேரி திருப்பதி மெமு எக்ஸ்பிரஸ், புதுச்சேரியில் இருந்து மாலை 3.40 மணிக்கு புறப்படும்.</p> ]]></content:encoded></item><item><title>பன்னாட்டு நிறுவனத்திற்கு சேலம் மாநகராட்சியின் தண்ணீர் விநியோகத்தைத் தாரைவார்ப்பதா? - சீமான் கேள்வி
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-salem-corporation-handing-over-water-supply-operations-to-a-multinational-company-seeman-questions</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-salem-corporation-handing-over-water-supply-operations-to-a-multinational-company-seeman-questions#comments</comments><guid isPermaLink="false">8defe6af-76b1-41ba-a875-6f5184e69e77</guid><pubDate>Sat, 11 Jul 2026 07:16:37 +0000</pubDate><atom:updated>2026-07-11T07:16:37.616Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,Seeman,water supply,தண்ணீர் விநியோகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/by7jizs1/13.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/by7jizs1/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; </p><p>”சேலம் மாநகராட்சியின் குடிநீர் வியோகத்தை 25 ஆண்டுகளுக்கு சூயஸ் எனும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்குத் தாரைவார்த்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. அர்ஜென்டினா மற்றும் பொலிவியா நாடுகளுக்குள் குடிநீர் விநியோகம் செய்வதாய் உள்நுழைந்து, தண்ணீரை விற்பனைப் பண்டமாக்கி, அம்மண்ணின் நீர்வளத்தைச் சூறையாடி, அந்நாட்டு மக்களால் துரத்தியடிக்கப்பட்ட சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டு, சேலம் மாநகரத்தின் நீர் விநியோகத்தை வழங்கியிருக்கும் தவெக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. </p><p> நீர் என்பது மனிதர்களுக்கு மட்டுமானதல்ல; அது புல், பூண்டு, பூச்சி, ஆடு, மாடு, கரடி, மான், புலி, சிங்கம் என உலகில் வாழும் அத்தனை உயிர்களுக்குமான உயிருடைமை. அதனை மனிதர்களுக்கு மட்டுமானதாக்கி, விற்பனைப்பண்டமாக மாற்றி, சந்தைப்படுத்திப் பொருளீட்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. நீரை விற்பனை செய்யும் மானுடகுலத்தின் செயல் உலக உயிர்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும். புட்டிகளிலும், போத்தல்களிலும் அடைக்கப்பட்டுள்ள நீரை மனிதர்கள் விலைகொடுத்து வாங்கிப் பருகிவிட முடியும். காக்கையும், குருவியும், மைனாவும், சிட்டும் தனது தாகத்திற்கு என்ன செய்யும்? எனும் கேள்வியை உளச்சான்றோடு ஒவ்வொரு குடிமகனும் எழுப்ப வேண்டும். தண்ணீர் விநியோகத்தைத் தனியார்மயமாக்குவதும், குடிநீரை சந்தைப்பொருள் ஆக்குவதும் ஏற்கவே முடியாத சனநாயகத் துரோகம். வரிசெலுத்தி, வாக்குச் செலுத்தி ஓர் அரசை நிர்மாணிக்கும் குடிமக்களுக்கு தூய குடிநீரைத் தங்குதடையின்றித் தர வேண்டியது ஒரு அரசின் தலையாயப் பொறுப்பும், முதன்மைக் கடமையுமாகும்.</p><p>கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோகம் தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிடப்பட்டு, அதற்கெதிராகப் பரப்புரையும், போராட்டமும் செய்து வரும் நிலையில், தற்போது சேலம் மாநகரத்தின் குடிநீர் விநியோகத்தை அதே சூயஸ் நிறுவனத்திடம் தவெக அரசு கையளித்திருப்பது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையைத் தன்னுடைய நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் விஜய் அவர்கள் குடிநீர் வழங்குவதைத் தனியாருக்குத் தாரைவார்க்க உத்தரவிட்டது ஏன்? பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தால் குடிநீர் விநியோகத்தைச் சிறப்பாகச் செய்ய முடியும்; இவ்வளவு பெரிய நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்ட ஒரு அரசு இயந்திரத்தால் செய்ய முடியாதா? பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகள் இலாபத் தேவைக்குத்தான் வேலைசெய்வார்களே ஒழிய, மக்கள் சேவைக்கு ஒருநாளும் வேலை செய்ய மாட்டார்கள் எனும் அடிப்படைப் புரியாதா? நீர்வளத்தையும், நீராதாரங்களையும் பன்னாட்டு நிறுவனங்களிடம் கையளித்தால், நீர் இறையாண்மை முழுக்க முழுக்க அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும். அவர்கள் சொல்கிற விலைக்குக் குடிநீரை மக்கள் வாங்க வேண்டியப் பேராபத்துமிக்க சூழல் நாளை உருவாகும். இது வருங்காலத் தலைமுறையின் நலவாழ்வினைப் பன்னாட்டு நிறுவனத்திடம் அடமானம் வைக்கும் பேரபாயம். அர்ஜென்டினாவிலும், பொலிவியாவிலும் சூயஸ் நிறுவனம் செய்த மானுடகுலக் கொடுமைகள் வரலாறாக விரிகையில், கண்முன்னே சாட்சியாக இருக்கையில், அந்நிறுவனத்திடமே சேலம் மாநகரத்தின் நீர்விநியோகத்தை வழங்குவது மக்கள் விரோதப்போக்கின் உச்சமாகும். </p><p>ஆகவே, சேலம் மாநகராட்சியின் குடிநீர் விநியோகத்தை சூயஸ்  நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தத்தை உடனடியாகத் திரும்பப் பெற்று, மாநில அரசே தரமான குடிநீரை மக்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டுமென தவெக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.”</p><p>இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>அழகுமுத்துக்கோன் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் மரியாதை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tribute-paid-by-the-government-of-tamil-nadu-on-the-occasion-of-azhagumuthu-kones-birth-anniversary</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tribute-paid-by-the-government-of-tamil-nadu-on-the-occasion-of-azhagumuthu-kones-birth-anniversary#comments</comments><guid isPermaLink="false">29c68aa8-d553-4374-85d3-c6cc6c97f3b9</guid><pubDate>Sat, 11 Jul 2026 07:05:46 +0000</pubDate><atom:updated>2026-07-11T07:05:46.588Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,Government of Tamil Nadu,அழகுமுத்துக்கோன்,Azhagumuthu Kone</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/enyqbdfj/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/enyqbdfj/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுதந்திரப்போராட்ட வீரர் அழகுமுத்து கோன் பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் அவரை புகழந்து தங்களது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். </p><p>இந்த நிலையில், அழகுமுத்துக்கோன் பிறந்ததினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அரசு சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் அரசு அதிகாரிகள் சென்னையில் உள்ள அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். </p> ]]></content:encoded></item><item><title>நடத்தையில் சந்தேகம்.. சுத்தியலால் அடித்து பெண்ணை கொன்ற கொடூர கணவர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/suspicion-over-conduct-brutal-husband-kills-wife-by-striking-her-with-a-hammer</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/suspicion-over-conduct-brutal-husband-kills-wife-by-striking-her-with-a-hammer#comments</comments><guid isPermaLink="false">087167e5-25b8-4d35-999e-bb4954e7dc43</guid><pubDate>Sat, 11 Jul 2026 07:05:28 +0000</pubDate><atom:updated>2026-07-11T07:05:28.903Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ராமநாதபுரம்,Ramanathapuram,மனைவி கொலை,Husband arrested,Wife murdered,நடத்தை சந்தேகம்,கணவர்  கைது</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/z5oxmo5l/kurukk.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/z5oxmo5l/kurukk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமநாதபுரம்,</p><p>நடத்தையில் சந்தேகத்தால் சுத்தியலால் அடித்து பெண் கொடூரமாக <a href="https://www.dailythanthi.com/topic/கொலை">கொலை</a> செய்யப்பட்டார். இது தொடர்பாக 2-வது கணவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.</p><h2>நடத்தையில் சந்தேகம்</h2><p>ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் பழனி(வயது 50). கட்டிட தொழிலாளி. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் ராணி (47). இவர் பூக்கள் கட்டி விற்றும், கட்டிட வேலைக்கு சென்றும் வந்தார். இவருக்கும் திருமணமாகி மகள்கள், மகன்கள் உள்ளனர்.</p><p>இந்நிலையில் பழனிக்கும், ராணிக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக திருவள்ளுவர் நகரில் கணவன், மனைவியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.</p><p>இதற்கிடையே ராணியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக பழனி அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்தாராம். நேற்று முன்தினம் இரவு மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.</p><h2>சுத்தியலால் அடித்துக்கொலை</h2><p>அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த பழனி வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து மனைவி ராணியின் தலை மற்றும் முகத்தில் தாக்கி உள்ளார். இதில் முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே ராணி பரிதாபமாக இறந்தார். பின்னர் பழனி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.</p><p>நேற்று காலை ராணியின் மகள் அவரை பார்ப்பதற்காக வீட்டுக்கு வந்தார். அங்கு ராணி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் பரமக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.</p><p>அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். ராணியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனியை தேடி வருகின்றனர். இந்த பயங்கர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&quot;இந்துக்களுக்கு எதிரான அரசு&quot; - ராஜ்மோகனை கடுமையாக விமர்சித்த நயினார் நாகேந்திரன்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-against-hindus-nainar-nagendran-harshly-criticizes-rajmohan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-against-hindus-nainar-nagendran-harshly-criticizes-rajmohan#comments</comments><guid isPermaLink="false">42121d01-6467-4bd0-a044-76e9eee7947e</guid><pubDate>Sat, 11 Jul 2026 06:57:47 +0000</pubDate><atom:updated>2026-07-11T06:57:47.884Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,இந்து,hindu,அமைச்சர் ராஜ்மோகன்,Rajmohan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/fsdzyged/47.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/fsdzyged/47.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>நேற்று கரூரில் நடந்த விழாவில் “Praise the Lord, அஸ்ஸலாமு அலைக்கும்” என்று பிற மதத்தினரின் கடவுள்களை வணங்கிவிட்டு, இந்துக் கடவுள்களை வேண்டுமென்ற ஒதுக்கிய, உங்களைப் போன்ற இந்துமத வெறுப்பாளர்கள் உள்ளவரை, “மதநல்லிணக்கம்” என்பது சமூகத்தில் மருந்திற்கும் படராது. “அனைவருக்குமான ஆட்சி” என்று கூறிக்கொண்டு இந்து மதத்தின் மீது மட்டும் இப்படி வெளிப்படையாக ஒவ்வாமையை காட்டுவது கடும் கண்டனத்திற்குரியது.  </p><h2>வன்ம அரசியல்</h2><p>கடந்த ஆண்டு உங்கள் தலைவரை பார்க்க கரூரில் கூடிய கூட்டத்தில் சிக்கி, சின்னஞ்சிறு குழந்தைகள் உட்பட 41 பேர் அநியாயமாக உயிரிழந்தனர். அப்பொழுது நேரில் வந்து ஆறுதல் சொல்ல திராணியின்றி ஓடி, ஒளிந்த நீங்களும் உங்கள் தலைவரும் கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து, நேற்றைக்கு தான் வழி கண்டுபிடித்து கரூருக்கு வந்தீர்கள். அப்படியிருக்கையில் வந்த வேலையை விட்டு விட்டு, ஆறுதல் கூறும் நிகழ்விலும் கூட, இந்துக்களின் மீது இப்படியொரு வன்ம அரசியலைத் தொடுக்கும் உங்களைப் போன்ற அழுகிய சிந்தனை கொண்டவர்களை தமிழகம் என்றுமே மன்னிக்காது. </p><h2>இந்துக்களுக்கு எதிரான அரசு</h2><p>காரணம், தமிழகம் அடிப்படையில் ஓர் ஆன்மீக பூமி. நாம் காலங்காலமாக போற்றிப் பாதுகாத்து வரும் நமது தமிழ் இலக்கியங்களும், புராணங்களும் சிவன், திருமால், முருகன் உள்ளிட்ட இந்துக் கடவுள்களையே ஆராதிக்கின்றன. ஆனால், இவையனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, “வாக்கு வங்கி”யை மட்டுமே மனதில் வைத்து, உங்கள் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">தவெக அரசை</a> இந்துக்களுக்கு எதிரான அரசாக நிலைநிறுத்தியுள்ள நீங்களும், அதை மௌனமாக ஆதரிக்கும் உங்கள் தலைமையும் கூடிய விரைவில் இதற்கான விளைவுகளை எதிர்கொள்வீர்கள்!</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் 14-ம்தேதி மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-thoothukudi-on-the-14th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-thoothukudi-on-the-14th#comments</comments><guid isPermaLink="false">2b47a7c8-dd27-44be-8a43-8fce4c32a598</guid><pubDate>Sat, 11 Jul 2026 06:57:35 +0000</pubDate><atom:updated>2026-07-11T06:57:35.625Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,monthly maintenance work,power outage,மாதாந்திர பராமரிப்பு பணி,மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/tvbhu8lm/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/tvbhu8lm/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி சிப்காட் துணை மின்நிலையத்தில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் நடைபெற உள்ளதால் வருகிற 14-ம் தேதி செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை</h2><p>இது தொடர்பாக தூத்துக்குடி நகர் மின் விநியோகப் பிரிவு செயற்பொறியாளர் சின்னத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்தில் வரும் 14.7.2026, செவ்வாய்க்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.</p><p>அதன்படி மடத்தூர், மடத்தூர் மெயின் ரோடு, முருகேசநகர், கதிர்வேல்நகர், தேவகிநகர், சிப்காட் வளாகம், திரவியரத்தின நகர், அசோக் நகர், ஆசிரியர் காலனி, ராஜீவ் நகர், சின்னமணிநகர், 3வதுமைல், புதுக்குடி, டைமண்ட்காலனி, EB காலனி, ஏழுமலையான் நகர், மில்லர்புரம், ஹவுசிங் போர்டு பகுதிகள், அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு குடியிருப்புகள், ராஜகோபால் நகர், பத்தினாதபுரம், </p><p>சங்கர் காலனி, FCI குடோன் பகுதிகள், நிகிலேசன் நகர், சோரிஸ்புரம், மதுரை பைபாஸ் ரோடு, ஆசீர்வாத நகர், சில்வர்புரம், சுப்பிரமணியபுரம், கங்கா பரமேஸ்வரி காலனி, லாசர் நகர், ராஜரத்தின நகர், பாலையாபுரம், வி.எம்.எஸ். நகர், முத்தம்மாள் காலனி, நேதாஜி நகர், லூசியா காலனி, மகிழ்ச்சி புரம், ஜோதி நகர், பால்பாண்டி நகர், முத்துநகர், கந்தன் காலனி, காமராஜ் நகர், NGO காலனி, அன்னை தெரசா நகர், </p><p>பர்மா காலனி, TMB காலனி, அண்ணாநகர் 2வது நகர் மற்றும் 3வது நகர், கோக்கூர், சின்னக்கண்ணுபுரம், பாரதி நகர், புதூர்பாண்டியபுரம் மெயின் ரோடு, கிருபை நகர், அகில இந்திய வானொலி நிலையம், ஹரிராம்நகர், கணேஷ்நகர், புஷ்பாநகர், ஸ்டெர்லைட் குடியிருப்புகள், கலெக்டர் அலுவலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வெளி மாநிலங்களுக்கு எம்.சாண்ட் கொண்டு செல்ல தற்காலிக தடை போட அதிகாரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/authority-to-impose-a-temporary-ban-on-transporting-m-sand-to-other-states</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/authority-to-impose-a-temporary-ban-on-transporting-m-sand-to-other-states#comments</comments><guid isPermaLink="false">1fef62b2-aef3-4968-b7f3-c711535c0ea8</guid><pubDate>Sat, 11 Jul 2026 06:38:44 +0000</pubDate><atom:updated>2026-07-11T06:38:44.365Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Transport,ban,தற்காலிக தடை,வெளிமாநிலங்கள்,எம்.சாண்ட்,m-sand</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/gcxg6ra3/sand.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/gcxg6ra3/sand.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>எம் சாண்ட் உள்ளிட்ட கனிமங்கள் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்வதை தடை விதிக்க தற்காலிகமாக தடை விதிக்க சுரங்கம் மற்றும் புவியியல் துறை இயக்குனருக்கு அதிகாரம் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. </p><h2>எம்.சாண்ட்</h2><p>எம்.சாண்டை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்வதை ஒழுங்குபடுத்தவும் இயக்குநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் போதுமான அளவில் எம்.சாண்ட் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>தமிழ்நாடு அரசு</h2><p>முன்னதாக கட்டுக்கடங்காத விலை உயர்வை கட்டுப்படுத்தவும், கட்டுமான தொழில் முடக்கத்தை தடுத்து நிறுத்தவும் தமிழக அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வந்தன. இந்நிலையில், கேரளா, கர்நாடகாவுக்கு கனிமங்களை கொண்டு செல்வதை தடுத்து, தமிழ்நாட்டில் போதுமான அளவில் கனிமங்கள் கிடைப்பதை உறுதி செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>திடக்கழிவு மேலாண்மையில் புதிய நடைமுறை; 4 வகையாக குப்பையை பிரிக்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-practice-in-solid-waste-management-chennai-corporation-instructs-to-separate-garbage-into-4-categories</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-practice-in-solid-waste-management-chennai-corporation-instructs-to-separate-garbage-into-4-categories#comments</comments><guid isPermaLink="false">23b4c5bf-afb7-43ba-a67f-bd1416eec8ea</guid><pubDate>Sat, 11 Jul 2026 06:31:53 +0000</pubDate><atom:updated>2026-07-11T06:31:53.498Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Corporation,சென்னை மாநகராட்சி,புதிய நடைமுறை,திடக்கழிவு மேலாண்மை,Solid Waste Management</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/2k8m02ge/chennai-corporation.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/2k8m02ge/chennai-corporation.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர், தமிழ்நாட்டில் திடக்கழிவுகளை மேலாண்மை பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்கு ஏதுவாக, திடக்கழிவுகள் உருவாகும் இடத்திலேயே முறையாக மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதாரக் கழிவுகள் மற்றும் அபாயகரமான கழிவுகள் என தரம் பிரித்து பெற்று அகற்றிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்கள்.</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, ’<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பெருநகர சென்னை மாநகராட்சியில் </a>திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்கு ஏதுவாக, அனைத்து குடியிருப்புவாசிகள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் (Bulk Waste Generators) ஆகியோர் திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-இன்படி திடக்கழிவுகளை உருவாகும் இடத்திலேயே தரம் பிரித்து பெருநகர சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்</p><h2>நான்கு வகை</h2><p>திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-ன் படி, கழிவுகளை பின்வரும் நான்கு வகைகளாகப் பிரித்து வழங்க வேண்டும்:</p><p>மக்கும் கழிவுகள் (பச்சை நிறக் குப்பைத்தொட்டி): உணவுக் கழிவுகள், காய்கறி மற்றும் பழத்தோல்கள், பூக்கள் மற்றும் பிற மக்கும் கழிவுகள்.</p><p>மக்காத கழிவுகள் (நீல நிறக் குப்பைத்தொட்டி): காகிதம், பிளாஸ்டிக், உலோகம், அட்டைப்பெட்டிகள், துணி மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள்.</p><p>சுகாதாரக் கழிவுகள் (சிவப்பு நிறக் குப்பை தொட்டி): பயன்படுத்தப்பட்ட சானிட்டரி நாப்கின்கள், டயப்பர்கள், பயன்படுத்தப்பட்ட மருத்துவக் கட்டுப் பொருட்கள் போன்றவற்றை பாதுகாப்பாக சுற்றி தனியாக வழங்க வேண்டும்.</p><p>வீட்டு அபாயகரக் கழிவுகள் / சிறப்பு கவனம் தேவைப்படும் கழிவுகள் (கருப்பு நிறக் குப்பைத்தொட்டி): பேட்டரிகள், மின் விளக்குகள், டியூப் லைட்கள், மின்னணுக் கழிவுகள், காலாவதியான மருந்துகள், பெயிண்ட் டப்பாக்கள் உள்ளிட்ட அபாயகரக் கழிவுகளை தனியாக ஒப்படைக்க வேண்டும்.</p><h2>தனிநபரின் பொறுப்பு</h2><p>கழிவுகளை உருவாகும் இடத்திலேயே தரம் பிரிப்பது ஒவ்வொரு தனிநபரின் பொறுப்பாகும். இதன்மூலம் மக்கும் கழிவுகளை உரமாக மாற்றவும், மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை மீட்டெடுக்கவும், குப்பைக் கிடங்குகளுக்கு அனுப்பப்படும் கழிவுகளின் அளவை குறைக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்தவும் முடியும். பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் வீடுகள்தோறும் தரம் பிரிக்கப்பட்ட கழிவுகளை சேகரிக்க தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-இல் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு வகை கழிவு தரம் பிரிப்பு முறையை திறம்பட செயல்படுத்தும் வகையில், மாநகராட்சியின் அனைத்து பேட்டரி மூலம் இயக்கப்படும் கழிவு சேகரிப்பு வாகனங்களிலும் (Battery Operated Vehicles - BOVs), கழிவுகளின் நான்கு வகைகளையும் தனித்தனியாக சேகரிப்பதற்காக நான்கு வண்ண அடையாளங்களுடன் கூடிய தனித்தனி குப்பைத் தொட்டிகள் (Compartments) வைக்கப்பட்டுள்ளன.</p><h2>விழிப்புணர்வு பணிகள்</h2><p>எனவே, பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் அனைவரும் தரம் பிரிக்கப்பட்ட கழிவுகளை மட்டுமே பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கழிவுகள் உருவாகும் இடத்திலேயே பிரித்தல் மற்றும் அறிவியல் முறையிலான திடக்கழிவு மேலாண்மையை ஊக்குவிக்கும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தகவல்–கல்வி–தொடர்பு (IEC) நடவடிக்கைகள், பள்ளிகள் மற்றும் சமூக அமைப்புகள் மூலம் தொடர்ச்சியான விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.</p><h2>சட்டப்படியான அபராதம்</h2><p>தூய்மையான, ஆரோக்கியமான மற்றும் நிலைத்தன்மை வாய்ந்த சென்னையை உருவாக்குவதில் பொதுமக்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். எனவே, அனைத்து பொதுமக்களும் தங்களது வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் தினந்தோறும் உருவாகும் கழிவுகளை உருவாகும் இடத்திலேயே தரம் பிரித்து பெருநகர சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைத்து, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். திடக்கழிவுகளை உருவாகும் இடத்திலேயே தரம் பிரிக்கத் தவறுதல் அல்லது திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026 மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் விதிமுறைகளை மீறுதல் ஆகியவை சட்டப்படியான அபராதம் மற்றும் பிற நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் எனபும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. "திடக்கழிவுகளை உருவாகும் இடத்திலேயே தரம் பிரிப்போம் ! தூய்மையான, பசுமையான, ஆரோக்கியமான சென்னையை உருவாக்குவோம் !!"</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்த நாள்: தமிழக அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/maveeran-azhugamuthukons-birthday-tamil-nadu-ministers-pay-tribute-by-garlanding-him</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/maveeran-azhugamuthukons-birthday-tamil-nadu-ministers-pay-tribute-by-garlanding-him#comments</comments><guid isPermaLink="false">f0fc7fea-56ae-4ed3-a963-6ad7d7af2ad9</guid><pubDate>Sat, 11 Jul 2026 06:22:21 +0000</pubDate><atom:updated>2026-07-11T06:22:21.578Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,birthday,Tribute,minister,அமைச்சர்,மரியாதை,அழகு முத்துக்கோன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/hl1xt8a4/221.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/hl1xt8a4/221.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இன்று தமிழ்நாடு அரசின் சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை, எழும்பூர் ரெயில் நிலையம் அருகில் அமைந்துள்ள அவரது சிலைக்கு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D">அமைச்சர் ராஜ்மோகன்</a>, சுற்றுச்சுழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் ராஜீவ், ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். </p><h2>பங்கேற்பு</h2><p>இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் விஜய் தாமு, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை/தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளர் தட்சிணாமூர்த்தி, செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் அருண் தம்புராஜ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p> ]]></content:encoded></item><item><title>துணியை காய வைக்க முயன்ற போது 3-வது மாடியில் இருந்து விழுந்த பெண்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-critically-injured-after-falling-from-the-third-floor-while-trying-to-hang-out-clothes-to-dry</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-critically-injured-after-falling-from-the-third-floor-while-trying-to-hang-out-clothes-to-dry#comments</comments><guid isPermaLink="false">285dbc63-f6af-4b33-acc8-4b93eece4312</guid><pubDate>Sat, 11 Jul 2026 06:19:30 +0000</pubDate><atom:updated>2026-07-11T06:19:30.341Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பெண்,women,தேனாம்பேட்டை,படுகாயம்,injured,மாடியில் இருந்து தவறி விழுந்தார்,balcony collapse</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/a0kd7ldz/lady-fall-in-3rd-floor.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ 3-வது மாடி]]></media:title><media:description type="html"><![CDATA[ 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/a0kd7ldz/lady-fall-in-3rd-floor.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் துணியையை காய வைக்க முயன்ற போது 3-வது மாடியில் இருந்து விழுந்து படுகாயமடைந்தார். </p><h2>விபத்து</h2><p>சென்னை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தேனாம்பேட்டை</a> பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் லட்சுமி (வயது 34) என்ற பெண் வசித்து வருகிறார். லட்சுமி இன்று காலை தனது வீட்டின் மூன்றாவது மாடி பால்கனியில் துணிகளை உலர்த்தச் சென்றுள்ளார். </p><p>அப்போது, பால்கனியின் தடுப்புச் சுவரில் சாய்ந்தபடி துணிகளை காய வைக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> தடுப்புச் சுவர்</a> திடீரென இடிந்து சரிந்தது. இதில் நிலைதடுமாறிய அந்த பெண், சுவருடன் சேர்த்து மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்தார். இந்த பயங்கர விபத்தில் அவரது தலை மற்றும் உடல் பாகங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.</p><h2>தீவிர சிகிச்சை</h2><p>அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.</p><h2>பொதுமக்கள் அதிருப்தி</h2><p>இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடியிருப்பின் சுவர்கள் தரமற்ற முறையில் கட்டப்பட்டதே இந்த விபத்துக்குக் காரணம் என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அழகுமுத்துகோனின் தியாகத்தையும், துணிச்சலையும் போற்றி வணங்கிடுவோம்: டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-honor-and-pay-tribute-to-the-sacrifice-and-courage-of-azhagu-muthukoon-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-honor-and-pay-tribute-to-the-sacrifice-and-courage-of-azhagu-muthukoon-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">f5ed4e92-76be-4f28-a0bd-76f812bddf80</guid><pubDate>Sat, 11 Jul 2026 06:09:23 +0000</pubDate><atom:updated>2026-07-11T06:09:23.711Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,அழகு முத்துக்கோன்,Azhagu Muthukoon</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/hww9un7m/11.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/hww9un7m/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாவீரர் அழகுமுத்துக்கோன் பிறந்த தினத்தை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிரான இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்டவர்களில் முதன்மையானவரும்,&nbsp; போர்க்களத்தில் எதிரிகளால் எளிதில் வீழ்த்த முடியாத போர் வீரருமான அழகுமுத்துகோன் அவர்களின் பிறந்தநாள் இன்று. ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு அடிபணிய மறுத்து தாய் மண்ணின் உரிமைக்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும் தொடர்ந்து போராடி உயிர்நீத்த அழகுமுத்துகோன் அவர்களின் தியாகத்தையும், அஞ்சாத துணிச்சலையும் இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.”</p><p>இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>இலங்கைக்கு கடத்த முயற்சி: தூத்துக்குடியில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/attempt-to-smuggle-beedi-leaves-to-sri-lanka-rs17-lakhs-seized-in-thoothukudi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/attempt-to-smuggle-beedi-leaves-to-sri-lanka-rs17-lakhs-seized-in-thoothukudi#comments</comments><guid isPermaLink="false">0a6fd42b-f10c-4ed8-be29-c7608f367e9a</guid><pubDate>Sat, 11 Jul 2026 06:05:03 +0000</pubDate><atom:updated>2026-07-11T06:05:03.795Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Seizure,பறிமுதல்,Sri Lanka,beedi leaves,பீடி இலைகள்,attempted smuggling,கடத்தல் முயற்சி,இலஙகை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/6z9w1awi/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பீடி இலைகள் பறிமுதல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/6z9w1awi/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ரூ.17 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள்</a> தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரைக்கு தென்புறம் உள்ள காட்டுப் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><h2>கியூ பிரிவு போலீசார் ரோந்து பணி</h2><p>தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி நகர உட்கோட்டம், தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இனிகோ நகர் பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தபடுவதாக கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், ஏட்டுகள் இருதயராஜகுமார், இசக்கிமுத்து, முதல் நிலை காவலர்கள் பழனி, பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோர் நேற்று நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.</p><h2>கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் தப்பி ஓட்டம்</h2><p>அப்போது இனிகோ நகர் கடற்கரைக்கு தென்புறம் உள்ள காட்டுப் பகுதியில், இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்ட 30 கிலோ எடை கொண்ட 18 பீடி இலை மூட்டைகளை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். போலீசாரைக் கண்டதும் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.</p><h2>ரூ.17 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்</h2><p>இதையடுத்து கடத்தலுக்கு பயன்படுத்த வைத்திருந்த சரக்கு வாகனம் மற்றும் சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட 18 பீடி இலை மூட்டைகள் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் சர்வதேச மதிப்பு ரூ.17 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>வன்னியர் இடஒதுக்கீட்டு போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் - அன்புமணி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-should-provide-jobs-to-the-heirs-of-vanniyar-reservation-struggle-martyrs-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-should-provide-jobs-to-the-heirs-of-vanniyar-reservation-struggle-martyrs-anbumani#comments</comments><guid isPermaLink="false">11b09213-85d4-43df-b9fe-c41aadfd558d</guid><pubDate>Sat, 11 Jul 2026 06:01:14 +0000</pubDate><atom:updated>2026-07-11T06:01:14.131Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadas,அரசு வேலை,Government Jobs,வாரிசு,Vanniyar Reservation,வன்னியர் இடஒதுக்கீடு,Martyrs,தியாகிகள்,heir</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/mhvnph54/anbumani.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  அன்புமணி ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/mhvnph54/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>கரூர் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு இளநிலை உதவியாளர் உள்ளிட்ட அரசு வேலைக்கான ஆணைகளையும், பணியாற்ற முடியாத நிலையில் உள்ள ஒருவருக்கு ரூ.10 லட்சத்தையும் முதல்-அமைச்சர் விஜய் வழங்கியுள்ளார். கருணை அடிப்படையிலான இந்த உதவி வரவேற்கத்தக்கது; அதே நேரத்தில் இத்தகைய உதவிகள் ஒரு சாராருக்கு மட்டுமின்றி, பல்வேறு காலகட்டங்களில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.</p><h2>31 பேருக்கு அரசு பணி</h2><p>கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி த.வெ.க. தலைவர் விஜய்  பங்கேற்ற பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதனால் வாழ்வாதாரம் இழந்த அவர்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில், அந்த குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு அவர்களின் சொந்த மாவட்டங்களில் இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட அரசு பணிகளுக்கான  ஆணையை கரூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் அவர்கள் வழங்கினார். மேலும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு ரூ.10 லட்சம் கருணைத் தொகையையும் முதலமைச்சர் வழங்கியிருக்கிறார்.</p><p>தமிழக அரசின் இந்த நடவடிக்கைகள் சரியானதா? என்பது தொடர்பாக அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்  விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அவை அனைத்தும் ஒருபுறம் இருந்தாலும், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றன என்பது உண்மை. அதைக் கருத்தில் கொண்டும், கருணையை மட்டும் அளவீடாகக் கொண்டும் பார்க்கும் போது இந்த நடவடிக்கைகள் மிகவும்  தேவையானவை என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும்.</p><h2>கொடூரமான துப்பாக்கிச் சூடு</h2><p>ஆனால், தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் நிகழ்ந்த இதே போன்ற, இதை விட இன்னும் மோசமான நிகழ்வுகளிலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இத்தகைய உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று பாமக வலியுறுத்துகிறது. இத்தகைய உதவிகள் வழங்கப்பட வேண்டிய பல்வேறு நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தாலும் கூட, அவர்களில் முதன்மையானவர்கள், வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு, அனைத்து சமூகங்களுக்கும் அவரவர் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு, பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவை 22% ஆக உயர்த்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி  1987-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி தொடங்கப்பட்ட ஒரு வார தொடர் சாலைமறியல் போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய கொடூரமான துப்பாக்கிச் சூட்டிலும், பிற அடக்குமுறைகளிலும் கொல்லப்பட்ட 21 பேர் உள்ளிட்ட 25 பேரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான்.</p><p>கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததற்கு அரசின் தவறு காரணமல்ல. ஆனாலும் அவர்களுக்கு அரசு வேலை உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதை விமர்சிக்க பாட்டாளி மக்கள் கட்சி விரும்பவில்லை. அதே நேரத்தில் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தின் போது சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வேலையும், பிற உதவிகளும் பெறுவதற்கான அனைத்து உரிமைகளும் உள்ளன;  அவற்றை வழங்க வேண்டியக் கடமையும், பொறுப்பும் அரசுக்கு உள்ளது. அவற்றை அரசு தட்டிக் கழிக்க முடியாது.</p><h2>சமூகநீதி போராட்டம்</h2><p>1987-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டும், பிற தாக்குதல்களிலும் கொல்லப்பட்ட  25 பேரும் சமூகநீதிக்காக போராடியவர்கள்; தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற உன்னத கோரிக்கையை வலியுறுத்தி போராடியவர்கள். அரசையோ, காவல்துறையையோ சீண்டும் வகையிலான எந்த செயல்களிலும் அவர்கள் ஈடுபடவில்லை. ஆனாலும், அறவழியில் போராடிய அப்பாவிகளை காவல்துறையினர் காக்கை, குருவிகளை சுடுவது போல சுட்டு வீழ்த்தினார்கள். இந்த பாவத்தை பல தருணங்களில் தமிழக அரசு அங்கீகரித்திருந்தாலும் அதற்கான பரிகாரத்தை  இன்று வரை செய்யவில்லை.</p><p>வன்னியர் இடஒதுக்கீட்டு போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்கள் இன்றளவும் வாழ்வாதாரமின்றி வாடும் நிலையில் தான் உள்ளன. பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டால், அதை பயன்படுத்திக் கொண்டு அந்த குடும்பங்கள் முன்னேறி விடும். அவர்கள் செய்த தியாகத்தால் 115 சமூகங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான குடும்பங்கள் பயனடைந்துள்ள நிலையில், அவர்களின் குடும்பங்கள்  இன்னும் அடிமட்டத்தில் தான் உள்ளன. பிறரை வாழ வைத்த அவர்களை தமிழக அரசு வாழ வைக்க வேண்டும்.</p><h2>அரசு வேலை</h2><p>எனவே, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டதைப் போல,  இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தின் போது காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கும் உடனடியாக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88">அரசு வேலை </a>வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாவீரன் அழகுமுத்து கோனின் வீரத்தையும், தியாகத்தையும் வணங்கி போற்றுவோம்  - அன்புமணி புகழாரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-worship-and-honor-the-bravery-and-sacrifice-of-the-hero-azhugamuthukon-anbumani-pugazharam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-worship-and-honor-the-bravery-and-sacrifice-of-the-hero-azhugamuthukon-anbumani-pugazharam#comments</comments><guid isPermaLink="false">cf69f48c-3ad9-45fa-a0bc-4568fa62cd72</guid><pubDate>Sat, 11 Jul 2026 05:48:59 +0000</pubDate><atom:updated>2026-07-11T05:48:59.075Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி,சென்னை,Anbumani Ramadas,Textbook,புகழாரம்,அழகு முத்துக்கோன்,Honor</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/rg8duxnf/220.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/rg8duxnf/220.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF">அன்புமணி</a> இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் அவர்களை கடுமையாக எதிர்த்த  இந்திய விடுதலை போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில்,  அவரை நான் போற்றி வணங்குகிறேன். வீரத்தின் அடையாளமாக திகழ்ந்த  அவர், இந்திய விடுதலைக்காக  நடத்திய போர்களையும்,  செய்த தியாகங்களையும் நினைவு கூர்கிறேன்.  </p><h2>வீரத்தையும், தியாகத்தையும் நாம் போற்றுவோம்</h2><p>இந்திய விடுதலைப் போரில் வீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் பங்களிப்பும், தியாகமும் ஈடு இணையற்றது ஆகும். ஆங்கிலேயர்களுடன் நடந்த போரில் தோல்வியடைந்து விட்ட சூழலில், மன்னிப்புக் கேட்டு வரி செலுத்த ஒப்புக்கொண்டால், உயிரையும், நிலத்தையும் காப்பாற்றி கொள்ளலாம் என நிபந்தனை விதிக்கப்பட்ட நிலையில், அதை ஏற்க மறுத்து, பீரங்கியின் வாயில் வைத்து சுடப்படும் தண்டனையை மகிழ்வுடன் ஏற்ற மாவீரன் அவர். அவரின் வீரத்தையும், தியாகத்தையும் நாம் போற்றுவோம். அவரது வீரம் செறிந்த வாழ்க்கை வரலாற்றை மக்களிடம் கொண்டு செல்ல அதை பாடநூலில் தனிப் பாடமாக  சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். </p>]]></content:encoded></item><item><title>ஈரோடு வழியாக செல்லும் 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிறுத்திவைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-express-trains-passing-through-erode-suspended</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-express-trains-passing-through-erode-suspended#comments</comments><guid isPermaLink="false">a8ef7c73-1e46-49c7-9ca4-dc0c7a384904</guid><pubDate>Sat, 11 Jul 2026 05:26:33 +0000</pubDate><atom:updated>2026-07-11T05:26:33.972Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>ரெயில் சேவை,Erode,ஈரோடு,Train Services</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/jzcnus68/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/jzcnus68/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு, </p><p>சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி, வீரபாண்டி ஆகிய ரெயில் நிலையங்களுக்கு இடையில் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால் ஈரோடு வழியாக செல்லும் 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. அதன்படி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வருகிற 15, 18-ந்தேதிகளில் எர்ணாகுளம் டாட்டாநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் வண்டி எண் (18190) ஏதாவது ஒரு ரெயில் நிலையத்தில் 50 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும். </p><p>மேலும் ஆலப்புழா -தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் (13352) ஏதாவது ஒரு ரெயில் நிலையத்தில் 20 நிமிடம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலக செய்திக்கு றிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மேகதாது அணை விவகாரம்; தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் - டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mekedatu-dam-issue-tamil-nadu-government-should-take-serious-action-ttv-dinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mekedatu-dam-issue-tamil-nadu-government-should-take-serious-action-ttv-dinakaran#comments</comments><guid isPermaLink="false">7585a5b5-4de9-4728-add0-dfb9b90e11ec</guid><pubDate>Sat, 11 Jul 2026 05:22:36 +0000</pubDate><atom:updated>2026-07-11T05:22:36.590Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டிடிவி தினகரன்,Tamil Nadu Government,தமிழக அரசு,மேகதாது அணை விவகாரம்,Mekedatu Dam Issue</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/jyp92krz/ttv1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/jyp92krz/ttv1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க முடியாது என்றும், தமிழக அரசிடமிருந்து நீர் திறந்திட கோரி எந்தவொரு கோரிக்கையும் வரவில்லை என்றும் கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்தி, மாநிலங்களின் ஒருமைப்பாட்டிற்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் எதிராக உள்ளது.</p><h2>பொறுப்பற்ற பேச்சு</h2><p>கர்நாடகத்தில் பருவமழை போதுமான அளவில் பெய்யாததால் தமிழகத்திற்கான தண்ணீரை வழங்க இயலாது, காவிரி மேலாண்மை வாரியமும் இதுவரை நீர் திறக்க உத்தரவிடவில்லை, மேலும் தமிழக அரசிடமிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ கோரிக்கையும் வரவில்லை என கர்நாடக அமைச்சர் கூறியிருப்பது, காவிரி நீரையே குடிநீர் மற்றும் பாசனத்திற்கான பிரதான ஆதாரமாக நம்பியிருக்கும் தமிழகத்தின் 20-க்கும் மேற்பட்ட மாவட்ட மக்களிடமும், காவிரி படுகை விவசாயிகளிடமும் கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு கேட்கவில்லை; கர்நாடக அரசு வழங்க முடியாது என்ற பொறுப்பற்ற பேச்சு சட்டவிதிமுறைகளை அவமதிப்பதாகும்.</p><p>கடந்த ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை இதுவரை திறக்கப்படாத நிலையில், ஜூன் மாதத்திற்கான 9.91 டி.எம்.சி மற்றும் ஜூலை மாதத்திற்கான 32 டி.எம்.சி நீரை உரிய நேரத்தில் வழங்காமல் காலதாமதப்படுத்தி வரும் கர்நாடக அரசு, தற்போது தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க முடியாது என வெளிப்படையாக அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.</p><h2>ஆக்கப்பூர்வமான நடவடிக்கை</h2><p>ஆட்சியைத் தக்கவைக்கப் பெரும்பான்மை வேண்டி, திமுக கூட்டணியில் தவெகவிற்கு எதிராகப் பதிவான வாக்குகளின் மூலம் வெற்றி பெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை தமிழக அமைச்சரவையில் இணைத்ததுபோல், பெரும்பான்மை இல்லாத ஆட்சியை  காப்பாற்றிக் கொள்ள வேண்டி காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை கர்நாடக காங்கிரஸ் அரசிடம் அடகு வைக்க தவெக அரசு முனைந்துவிட்டதா என்ற சந்தேகம் எழுகிறது. “எங்கு பேச வேண்டுமோ அங்கு பேசுவோம்” என்ற முதல்-அமைச்சரின் வசனத்தின்  படி  டெல்லி காங்கிரஸ் மேலிடத்தில் சரியான முறையில் பேசி காவேரி தண்ணீர் மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தீர்வு காண ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும்.</p><h2>உண்மையான அக்கறை</h2><p>தமிழ்நாடு விவசாய சங்கங்களின் சார்பில் மேகதாது பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு கட்டுமானப் பணிகள் நடைபெறுவதாக ஊடகங்கள் மூலம் வெட்ட வெளிச்சமாக தெரிந்த பின்னும்  “மேகதாது அணை கட்ட ஒரு செங்கல்லைக்கூட நட்டுவைக்க அனுமதிக்க மாட்டோம்”  எனறு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் மாணிக்கம் தாகூர் அவர்கள் தமிழ்நாடு மக்களை ஏமாற்றும் விதமாக அறைகூவல் விடுவதை விட்டுவிட்டு தங்களது டெல்லி காங்கிரஸ் தலைமை மூலம் காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தில் தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் விதமாக உண்மையான அக்கறையுடன் செயல்பட வேண்டும்.</p><h2>தீவிர முயற்சி</h2><p>எனவே, தவெக அரசு வழக்கம் போல் அமைதியாகவும் தந்திரமாகவும் இருந்து தமிழக மக்களை ஏமாற்றும் விதமாக நடந்து கொள்ளாமல் சட்ட ரீதியான துரித நடவடிக்கைகள் மூலம் தமிழகத்திற்கான உரிய நீரை உரிய நேரத்தில் பெற்றுத் தருவதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொள்வதோடு தமிழகத்தின் நீர்வள உரிமைக்கு அச்சுறுத்தலாக உள்ள <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81">மேகதாது </a>அணைத் திட்டத்தை முற்றிலுமாக கைவிட செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என முதலல்-அமைச்சர்  ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>