<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 13 Jul 2026 20:55:41 +0000</lastBuildDate><item><title>ரெயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த 411 பேர் சிக்கினர்; ரூ.3.68 லட்சம் அபராதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/411-people-caught-travelling-without-tickets-in-train-fined-rs-368-lakh</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/411-people-caught-travelling-without-tickets-in-train-fined-rs-368-lakh#comments</comments><guid isPermaLink="false">e6032528-4c4b-4c55-9f24-57679abd04da</guid><pubDate>Mon, 13 Jul 2026 20:51:09 +0000</pubDate><atom:updated>2026-07-13T20:51:09.475Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ரெயில் டிக்கெட்,train,பயணம்,Travel,fine அபராதம்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/lkmy88rt/train.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/lkmy88rt/train.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு, </p><p>கோவை-சில்சார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஓசி பயணம் செய்த 411 பேரிடம் இருந்து ரூ.3½ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.</p><p>கோவையில் இருந்து, அசாம் மாநிலம் சில்சார் வரை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 15627) இயக்கப்படுகிறது. திருப்பூர், ஈரோடு. சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக செல்லும் இந்த ரெயிலில், முன்பதிவு பெட்டிகளில் டிக்கெட் இல்லாமல் பலர் பயணம் செய்வதாக புகார் எழுந்தது.</p><h2>டிக்கெட் பரிசோதனை</h2><p>இதையடுத்து சேலம் ரெயில்வே கோட்ட வணிக பிரிவை சேர்ந்த 19 டிக்கெட் பரிசோதனை பணியாளர்கள் மற்றும் 5 ரெயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் கோவை -சில்சார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீவிர டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டனர். இதில் ரெயிலில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.</p><h2>411 பேர் ஓ.சி. பயணம்</h2><p>முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்த 80-க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத பயணிகள் கீழே இறக்கப்பட்டு, பொதுப்பெட்டிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். மேலும் டிக்கெட் இல்லாமலும், முறையான அனுமதியின்றியும் பயணம் மேற்கொண்ட 411 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர். இதையடுத்து ஓசி பயணம் செய்தவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்து 68 ஆயிரம் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">அபராதம் </a>வசூலிக்கப்பட்டது. இதுபோன்று தீவிர டிக்கெட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு டிக்கெட் இல்லாமல் பயணம் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலம் கோட்ட ரெயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பராமரிப்பு பணி: ஜோலார்பேட்டை-பெங்களூரு பயணிகள் ரெயில் பகுதி நேர ரத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/maintenance-work-jolarpettai-bengaluru-passenger-train-partially-cancelled</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/maintenance-work-jolarpettai-bengaluru-passenger-train-partially-cancelled#comments</comments><guid isPermaLink="false">5397770e-7b61-48dd-b8a3-af9c9803ab5d</guid><pubDate>Mon, 13 Jul 2026 20:39:28 +0000</pubDate><atom:updated>2026-07-13T20:39:28.011Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தெற்கு ரெயில்வே,Southern Railway,பெங்களூரு,Bengaluru,jolarpettai,ஜோலார்பேட்டை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/t6p1hwr6/railway.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/t6p1hwr6/railway.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>அரக்கோணம்-ஜோலார்பேட்டை வழித்தடத்தில் இன்று (14-ந்தேதி) மதியம் 2.10 மணி முதல் மாலை 4.10 மணி வரையில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.</p><h2>பெங்களூரு - ஜோலார்பேட்டை</h2><p>அதன்படி, பெங்களூருவில் இருந்து காலை 8.45 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை செல்லும் பயணிகள் ரெயில் (வண்டி எண்.66550), <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சோமநாயக்கன்பட்டி</a>-ஜோலார்பேட்டை இடையேயும், மறுமார்க்கமாக, ஜோலார்பேட்டையில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு செல்லும் பயணிகள் ரெயில் (66549), ஜோலார்பேட்டை-சோமநாயக்கன்பட்டி இடையேயும் பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அரசு பள்ளிகளில் 6-12-ம் வகுப்பு வரை  ஏ.ஐ., காலநிலை அறிவியல் பாடம்: முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ai-climate-science-subject-for-classes-6-12-in-government-schools-chief-minister-vijay-suggests</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ai-climate-science-subject-for-classes-6-12-in-government-schools-chief-minister-vijay-suggests#comments</comments><guid isPermaLink="false">859b0891-7331-46e1-8fa3-f3d4c6c6fae4</guid><pubDate>Mon, 13 Jul 2026 20:18:26 +0000</pubDate><atom:updated>2026-07-13T20:18:26.125Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>AI technology,அரசு பள்ளி,ஏ.ஐ,Government Schools,பாடம்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/uq8hvojb/cm-vijay.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/uq8hvojb/cm-vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை செயற்கை நுண்ணறிவு, காலநிலை அறிவியல் பாடங்களை கொண்டு வருவது குறித்து அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார்.</p><p>சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய் கடந்த ஒரு வார காலமாக தினமும் ஒவ்வொரு துறையாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன், நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன், நிதித்துறை செயலாளர் சித்திக், பள்ளிக்கல்வித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் டாக்டர் சந்திரமோகன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்கள் பங்கேற்றனர்.</p><h2>செயற்கை நுண்ணறிவு பாடம்</h2><p>தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு கட்டாயம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ள நிலையில் தமிழகத்தில் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று பணியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் தகுதித்தேர்வு எழுதாமல் பணியில் உள்ள ஆசிரியர்கள் தகவல்களையும் முதல்-அமைச்சர் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை செயற்கை நுண்ணறிவு மற்றும் காலநிலை அறிவியல் பாடங்களை கொண்டு வருவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.</p><h2>பள்ளிகளில் நவீன வகுப்பறைகள்</h2><p>2031-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் அனைத்து பள்ளி நவீன வகுப்பறைகளும் 'ஸ்மார்ட் கிளாஸ்' அறைகளாக மாற்றப்படுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அரசு பள்ளி ஆசிரியர்களின் தகுதியை மேம்படுத்தும் விதமாக தேர்வு செய்யப்படும் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக்கல்வியில் சிறந்து விளங்கும் சிங்கப்பூர் மற்றும் பின்லாந்து நாடுகளில் பயிற்சி பெறும் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.</p><h2>முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை</h2><p>அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்தும், அரசு பள்ளி ஆசிரியர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை திறன் பட கற்றுக்கொள்ள ஏதுவாக செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் கல்வி திறன் மேம்படுத்தும் திட்டம் பற்றி ஆலோசனை மேற்கொண்டதாக தெரிகிறது. பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக என்னென்ன புதிய அறிவிப்புகளை இடம்பெறச் செய்யலாம் என்பது பற்றியும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a> ஆலோசனை மேற்கொண்டார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-today-4</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-today-4#comments</comments><guid isPermaLink="false">fe552825-77e6-4b4f-919f-a7c561b6f4e0</guid><pubDate>Mon, 13 Jul 2026 20:17:00 +0000</pubDate><atom:updated>2026-07-13T20:17:00.705Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மின் தடை,power cut</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/uh409520/min.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/uh409520/min.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>சென்னையில் 14.07.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><h2>மின் தடை ஏற்படும் இடங்கள்</h2><p><strong>ஐய்யப்பந்தாங்கல்</strong>: காட்டுப்பாக்கம், செந்தூர்புரம், ஸ்ரீ நகர், விஜயலட்சுமி நகர், ஜானகியம்மாள் நகர், சொர்ணபுரி நகர், அடிசன் நகர், ஸ்ரீனிவாசபுரம், கிருஷ்ணா நகர், மாருதி நகர், நூம்பல், மவுண்ட் பூந்தமல்லி சாலை, ஆயில் மில் சாலை, அட்கோ நகர், சுப்பையா நகர், கிருஷ்ணவேணி அம்மாள் நகர், வசந்தம் நகர், சிவராமன் கிருஷ்ணா நகர், விஜயலட்சுமி அவென்யூ, ஸ்டெப் ஸ்டோன், போஹன்வில்லா, வசந்தபுரம், முத்து நகர், பொன்முத்து நகர், பரணிபுத்தூர்</p><p><strong>போரூர்</strong>: நசரத்பேட்டை பனிமலர் பொறியியல் கல்லூரி, வரதராஜபுரம்.</p><p><strong>தாம்பரம்</strong>: சிட்லபாக்கம், பாம்பன் சுவாமிகள் சாலை, சி.வி. ராமன் தெரு, லெனின் தெரு, சுதா அவென்யூ மற்றும் 2வது தெரு, வள்ளியம்மை தெரு, கலைவாணர் தெரு, உ.வே. சாமிநாதன் தெரு, வியாசர் தெரு, விஸ்வாமித்திரர் தெரு, சரஸ்வதி நகர், வீரவாஞ்சி தெரு, குரு ஹோம்ஸ், பாரத் அவென்யூ, கல்யாணசுந்தரம் தெரு, சத்திரபதி சிவாஜி தெரு.</p><p><strong>காரம்பாக்கம்</strong> : சமயபுரம் பிரதான சாலை மற்றும் சமயபுரம் 1 முதல் 9 வரை தெரு, ஸ்ரீராம் நகர், காந்தி நகர், தேவி நகர், அருணாசலம் நகர் கார்டன், கோலவிழி அப்பார்ட்மெண்ட்.</p><p><strong>அம்பத்தூர்</strong> <strong>தொழிற்பேட்டை</strong>: தெற்கு பகுதி, 1 மற்றும் 2 வது பிரதான சாலை, முகப்பேர் தொழிற்பேட்டை தெற்கு அவென்யூ, ரெட்டி தெரு, கவரை தெரு, முனுசாமி தெரு, எஸ்.எஸ்.ஓ.ஏ. வளாகம், கல்யாணி எஸ்டேட், நடேசன் நகர்.</p><p><strong>அடையாறு</strong>: கேனால் வங்கி சாலை.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தண்ணீர், தமிழ்நாட்டு மக்களின் உரிமையா?.. பன்னாட்டு நிறுவனங்களின் வணிகமா? - வேல்முருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-water-the-right-of-the-people-of-tamil-nadu-or-a-business-for-multinational-corporations-velmurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-water-the-right-of-the-people-of-tamil-nadu-or-a-business-for-multinational-corporations-velmurugan#comments</comments><guid isPermaLink="false">d34ef46d-2625-4751-a9e1-1ba37270564d</guid><pubDate>Mon, 13 Jul 2026 20:10:14 +0000</pubDate><atom:updated>2026-07-13T20:10:14.169Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Velmurugan,வேல்முருகன்,தி.வேல்முருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/ijie2j3f/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/ijie2j3f/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>ஏற்புடையதல்ல</h2><p>அனைத்து உயிர்களின் அடிப்படை இயக்கத்திற்கும், இயற்கையின் கொடையாக விளங்கும் நீர்வளத்தைத் தன்னிச்சையாக வர்த்தகப் பொருளாக மாற்றுவது சகித்துக்கொள்ள முடியாத அத்துமீறலாகும். </p><p>பன்னாட்டு ஏகபோகச் சுரண்டலில் ஈடுபட்டு, உலக அரங்கில் பல்வேறு இறையாண்மை மிக்க நாடுகளால் துரத்தியடிக்கப்பட்ட 'சூயஸ்' (Suez) நிறுவனத்திற்குத் தமிழக மண்ணில் சென்னை, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில், சிவப்புக் கம்பள வரவேற்பு அளிப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.</p><h2>நேரடித் தாக்குதல்</h2><p>குடிநீர் விநியோகக் கட்டமைப்பைப் பன்னாட்டு முதலாளித்துவத்தின் வசம் ஒப்படைப்பது, தமிழ் குடிகளின் வாழ்வுரிமை மீது தொடுக்கப்படும் நேரடித் தாக்குதலாகும்.</p><p>இந்நிறுவனத்தின் ஊடுருவல் என்பது ஏழை, எளிய மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை நசுக்குவதாகவே அமையும். இனிவரும் காலங்களில் நம் மக்கள் தங்களின் தாகத்தைத் தணித்துக் கொள்ளும் ஒவ்வொரு துளி நீருக்கும் பெருந்தொகையைக் விலையாகச் செலுத்த வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்படுவார்கள்.</p><h2>அநீதி</h2><p>நீர் என்பது சந்தையில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விற்கப்படும் </a>நுகர்வுப் பண்டமல்ல. அது நமது மக்களின் பிரிக்க முடியாத உயிராதாரம். அதைத் தாராளமயமாக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை.</p><p>எனவே, இந்த விவகாரத்தில் முதல்-அமைச்சர் விஜய் உடனடியாகத் தலையிட்டு, மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் இந்த அநீதியான சூயஸ் ஒப்பந்தத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸால் தகராறு: காதல் மனைவியை தாக்கிய ஐ.டி. ஊழியர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dispute-over-whatsapp-status-it-employee-arrested-for-attacking-his-loving-wife</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dispute-over-whatsapp-status-it-employee-arrested-for-attacking-his-loving-wife#comments</comments><guid isPermaLink="false">27b40138-bb1a-4def-ab1b-8d2d6393b43b</guid><pubDate>Mon, 13 Jul 2026 19:39:13 +0000</pubDate><atom:updated>2026-07-13T19:39:13.578Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrested,IT employee,wife,மனைவி,WhatsApp status,காதல்,ஐ.டி. ஊழியர்,வாட்ஸ்-அப்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/g1tcq1tr/arest.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/g1tcq1tr/arest.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>மாமியார் வேலை பார்ப்பது போன்ற வீடியோவை வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் வைத்ததால் ஏற்பட்ட தகராறில், காதல் மனைவியை தாக்கிய சென்னை ஐ.டி. ஊழியரை போலீசார் கைது செய்தனர்.</p><p>சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (வயது 24). இவர், சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அபிராமி என்பவரை காதலித்து பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு புதுமண தம்பதி சென்னையில் வாடகை வீட்டில் குடியேறி குடும்பம் நடத்தி வந்தனர்.</p><h2>வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்</h2><p>இந்நிலையில், சமூக வலைதளங்களில் வந்த மாமியார், மருமகள் ரீல்ஸ் வீடியோவை அபிராமி தனது செல்போனில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B8%E0%AF%8D%20">வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்</a></p><p> வைத்துள்ளார். அந்த வீடியோவில், மருமகள், மாமியாரை வேலை செய்ய சொல்வது போன்று இருந்தது. இதனை ஸ்ரீகாந்தின் தங்கை பார்த்துவிட்டு, நமது தாயாரை பற்றி உனது மனைவி ரீல்ஸ் வைத்துள்ளார் என கூறியுள்ளார்.</p><h2>மனைவியுடன் தகராறு</h2><p>இதனால் ஆவேசம் அடைந்த ஸ்ரீகாந்த், மனைவியிடம் ஏன் எனது தாயாரை பற்றி ரீல்ஸ் வீடியோவை ஸ்டேட்டஸ் வைத்துள்ளாய்? என கேட்டு கண்டித்தார். அதற்கு அபிராமி, இதனை காமெடி வீடியோவாக எடுத்துக்கொள்ள வேண்டியது தானே? என கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அபிராமி கணவரிடம் கோபித்துக்கொண்டு சேலத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். அதன்பிறகு ஸ்ரீகாந்தும் சேலத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார்.</p><h2>கணவர் கைது</h2><p>இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலத்தில் மாமியாரின் வீட்டிற்கு ஸ்ரீகாந்த் சென்றபோது, அங்கிருந்த அபிராமியுடன் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, மனைவியை அவர் அடித்து தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அபிராமி, ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று ஸ்ரீகாந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு ஸ்டேட்டஸ் வைத்த விவகாரத்தால் காதல் திருமணம் செய்த மனைவியை தாக்கிய கணவர் இன்றைக்கு சிறைக்கு செல்லும் நிலைக்கு வந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>76 மின் திருட்டுகள் மற்றும் 24 வீதிமீறல்கள் கண்டுபிடிப்பு; ரூ.98 லட்சம் அபராதம் விதித்து நடவடிக்கை!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/76-cases-of-electricity-theft-and-24-violations-detected-action-taken-with-fines-totaling-98-lakh-imposed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/76-cases-of-electricity-theft-and-24-violations-detected-action-taken-with-fines-totaling-98-lakh-imposed#comments</comments><guid isPermaLink="false">28e3441d-1211-4a7c-b91d-a0ef0190becb</guid><pubDate>Mon, 13 Jul 2026 18:27:52 +0000</pubDate><atom:updated>2026-07-13T18:27:52.279Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு மின்சார வாரியம்,Electricity Board,மின்சார வாரியம்,மின் திருட்டு,Electricity Theft</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/3kt75mgh/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/3kt75mgh/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை வடக்கு, கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு, ஈரோடு, சேலம், நாமக்கல், தேனி, மதுரை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், மற்றும் திண்டுக்கல் ஆகிய அனைத்து மின் பகிர்மான வட்டங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது 76 மின் திருட்டுகள் மற்றும் 24 மின் வீதிமீறல்கள் கண்டறியப்பட்டது. </p><p>இதற்கான இழப்பீட்டு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தொகையாக </a>சென்னை கோட்ட அமலாக்க பிரிவின் மூலமாக ரூ.12 லட்சத்து 44 ஆயிரத்து 812 அத்துடன், ரூ.36 லட்சத்து 6 ஆயிரத்து 867 மற்றும் மதுரை, திருச்சியில் ரூ.29 லட்சத்து 28 ஆயிரத்து 826 உட்பட ரூ.98 லட்சத்து 39 ஆயிரத்து 594 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p>மின்நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து அதற்குரிய சமரசத் தொகையாக ரூ.4 லட்சத்து 77 ஆயிரத்து 500 செலுத்தியதால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் குற்றவியல் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்று மின்சார வாரிய அதிகாரிகள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>தனியார் பள்ளி கூட்டமைப்பு நிர்வாகிக்கு அன்பில் மகேஷ் நோட்டீஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anbil-mahesh-notice-to-private-school-federation-administrator</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anbil-mahesh-notice-to-private-school-federation-administrator#comments</comments><guid isPermaLink="false">10c953a5-e309-4bb6-9734-d750ed4bef55</guid><pubDate>Mon, 13 Jul 2026 18:23:22 +0000</pubDate><atom:updated>2026-07-13T18:23:22.659Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தனியார் பள்ளி,private school,நிர்வாகி,Anbil Mahesh Poiyamozhi,அன்பில் மகேஷ்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/hah1mxa6/anbil-mahes.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்பில் மகேஷ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/hah1mxa6/anbil-mahes.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் வாங்கப்பட்டதாக குற்றம் சாட்டிய தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் அலுவலகப் பொறுப்பாளர் நந்தகுமாருக்கு எதிராக முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். வழக்கறிஞர் வில்சன் வாயிலாக அனுப்பப்பட்டுள்ள அந்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D">நோட்டீஸில்</a>, 48 மணிநேரத்திற்குள் நந்தகுமார் பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும் எனவும், அவதூறுக்காக ரூ.50 கோடி இழப்பீடு வழங்கவேண்டும் எனவும், இல்லையென்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><h2>நோட்டீஸ்</h2><p>முந்தைய தி.மு.க ஆட்சியில் பள்ளி அங்கீகாரத்தைப் புதுப்பிக்கவும், தடையில்லா சான்றிதழ் பெறவும் பெருமளவில் லஞ்சம் பெறப்பட்டதாகத் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அண்மையில் குற்றம் சாட்டியிருந்தது. இது தொடர்பாகப் பதிவு செய்யப்படாத சங்கம் ஒன்றின் தலைவரான அரசகுமார் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளார். இந்த லஞ்சப் புகார்களில் தன்னுடைய பெயரும் தொடர்புபடுத்திப் பேசப்பட்டதை அடுத்து, தன் மீதான அவதூறுகளுக்கு எதிராக அன்பில் மகேஷ் இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தலைமைச் செயலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/commotion-caused-by-a-woman-attempting-self-immolation-in-front-of-the-secretariat</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/commotion-caused-by-a-woman-attempting-self-immolation-in-front-of-the-secretariat#comments</comments><guid isPermaLink="false">e33e7dd7-83f5-4c6c-a9ad-a2a4904cd062</guid><pubDate>Mon, 13 Jul 2026 17:27:51 +0000</pubDate><atom:updated>2026-07-13T17:27:51.708Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,General Secretariat,தலைமைச் செயலகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/svrb2dcu/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தலைமைச் செயலகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/svrb2dcu/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>திண்டிவனத்தைச் சேர்ந்தவர் சாமுண்டீஸ்வரி. இவர் சென்னை தலைமைச் செயலகத்திற்கு இன்று வந்தார். திடீரென்று தலைமைச் செயலகத்தின் எதிரில் நின்ற நிலையில் தனது உடலில் டீசலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி, கையில் இருந்த டீசல் கேனை பறிமுதல் செய்து, உடலில் தண்ணீரை ஊற்றினர்.</p><h2>திடீர் பரபரப்பு</h2><p>இதுகுறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில், ‘ஏற்கனவே முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் வழங்கிய புகார் மீது நடவடிக்கை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">எடுக்கவில்லை</a>, என்பதால் டீசலை ஊற்றிக் தற்கொலைக்கு முயன்றதாக' கூறினார். தொடர்ந்து கோட்டை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் சென்னை தலைமைச் செயலகம் முன்பு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>மணலி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-dies-after-motorcycle-hits-lorry-near-manali</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-dies-after-motorcycle-hits-lorry-near-manali#comments</comments><guid isPermaLink="false">a40967d2-4149-4f2e-bebb-90d0d8024a7f</guid><pubDate>Mon, 13 Jul 2026 16:25:17 +0000</pubDate><atom:updated>2026-07-13T16:25:17.211Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,lorry,உயிரிழப்பு,Manali,திருவொற்றியூர்,Motorcycle,மோட்டார் சைக்கிள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/z0jvu9zc/116.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உயிரிழப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/z0jvu9zc/116.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவொற்றியூர்,</p><p>திருவொற்றியூர், கலைஞர் நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் திவாகர் (வயது 25). சவுதி அரேபியாவில் வெல்டிங் வேலை செய்து வந்த இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்தார்.</p> <h2>விபத்து</h2><p>இந்த நிலையில் நேற்று இரவு அவரும் நண்பரான சக்தி நகரை சேர்ந்த ராஜ்குமார் என்பவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் மணலி விரைவுச்சாலையில் எண்ணூர் நோக்கி சென்றனர். வி.பி.நகர் அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை ஓரம் இருளில் நிறுத்தப்பட்டு இருந்த கண்டெய்னர் லாரி மீது மோதியது.</p><p>இதில் பலத்தகாயம் அடைந்த திவாகர் சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் வந்த ராஜ்குமார் பலத்த காயம் அடைந்தார். அவருக்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து செங்குன்றம் - போக்குவரத்து புலனாய்வு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a> வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தவெகவில் சேர சொல்லி யாரும் அழுத்தம் தரவில்லை - எம்.ஆர்.விஜய பாஸ்கர் விளக்கம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-one-pressured-me-to-join-thaveka-mr-vijayabaskar-explains</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-one-pressured-me-to-join-thaveka-mr-vijayabaskar-explains#comments</comments><guid isPermaLink="false">55c79c35-0caf-41e3-acb5-1482632049fc</guid><pubDate>Mon, 13 Jul 2026 16:17:07 +0000</pubDate><atom:updated>2026-07-13T16:17:07.487Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,MRVijayabhaskar,TVKVijay‌</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/0ps4k9du/basakar33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
தவெக]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/0ps4k9du/basakar33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டசபை தேர்தலில் தேர்தலில்  தவெகவிற்கு ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை கிடைக்காததால் குதிரை பேரத்தில் ஈடுபட்டு மாற்றுக் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் வசம் இழுக்கின்றனர் என்று எதிர்க்கட்சியினர் தொடர்ச்சியாக  குற்றம் சாட்டி வருகின்றனர்.  </p><p>கவர்னரிடம் அதிகாரப்பூர்வமாக இதுதொடர்பாக ஏற்கனவே திமுகவினர் புகார் கடிதம் அளித்துள்ளனர்.</p><p>இந்நிலையில், முன்னாள் அதிமுக அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்த பின்னர், நாங்கள் யாரும் பதவிக்கு ஆசைப்பட்டு செல்லவில்லை என்றும், தவெகவினர் அழைத்ததால் கட்சியில் இணைந்தோம் என்று கூறியிருந்தார்.</p> <p> இதுதொடர்பாக, திமுகவினர் தற்போது  கவர்னரிடம் புகார் கடிதம் அளித்துள்ளனர். இந்நிலையில், தான் சொந்த விருப்பத்தின் பேரிலேயே தவெகவில் இணைந்ததாகவும், இதற்காக யாரும் தனக்கு அழுத்தம் கொடுக்கவோ, தவெகவில் சேர அழைக்கவோ இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.</p>  <p>இதுகுறித்து எம்ஆர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: </p><p>மகாபலிபுரத்தில் தவெகவில் இணைந்த போது அளித்த பேட்டியின்போது நான் பேசியதை தவறாகப் புரிந்து கொண்டனர். தவெகவில் இருந்து என்னை யாரும் அழைக்கவில்லை. அதிமுக தலைமை மீதான அதிருப்தியின் காரணமாக சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏ, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் என கொத்து கொத்தாக அனைவரும் சென்று தவெகவில் இணைந்தனர். </p><p>கரூரிலும் அதிமுக நிர்வாகிகள் பலரும் தவெகவில் இணைய கூறி வற்புறுத்தினர். இதுதொடர்பாக எல்லா நிர்வாகிகளையும் அழைத்து கருத்து கேட்டோம். பெரும்பாலானோர் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தவெகவில் </a>இணையலாம் என்று கூறியதையடுத்து தவெகவில் இணைந்தோம். இதைத்தான் பேட்டியின்போதும் கூறினோம். அதனை தவறாகப் புரிந்து கொண்டனர். </p> <p>நாங்கள் கட்சியில் இணையும் வரை தவெகவினர் எங்களை அழைக்கவில்லை.  எங்களுடைய நிர்வாகிகளின் எண்ணமும் தவெகவில் இணைய வேண்டும் என்பதாக இருந்தது. அதனால் தான் நகரச் செயலாளர்கள், பகுதி செயலாளர்கள் என்னோடு சேர்ந்து தவெகவில் இணைந்துள்ளனர்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>தவெக அரசு; ஏழை முருக பக்தர்களின் தலையில் பேரிடியை இறக்கியுள்ளது- நயினார் நாகேந்திரன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-rainfall-on-poor-muruga-devotees-nainar-nagendran-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-rainfall-on-poor-muruga-devotees-nainar-nagendran-condemns#comments</comments><guid isPermaLink="false">cd6890f1-e0a2-449b-bbec-30db7185ba32</guid><pubDate>Mon, 13 Jul 2026 16:15:19 +0000</pubDate><atom:updated>2026-07-13T16:15:19.503Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,பழனி,நயினார் நாகேந்திரன்,கண்டனம்,condemns,Nayanar Nagendran,chiefMinister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/593afxgi/nainar-nagendheran.new.gif" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/593afxgi/nainar-nagendheran.new.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஏழை முருக பக்தர்களின் தலையில் பேரிடியை இறக்கியுள்ளது. இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:- பழனி கோவிலில் கட்டண கொள்ளை- ஜோசப் விஜய் அரசின் ஆன்மிக விரோத போக்கிற்கு கண்டனம். </p><h2>அநியாய கட்டண கொள்ளை</h2><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில்</a> விடுதிகளின் கட்டணங்களை இன்று முதல் ஜோசப் விஜய் அரசு வரலாறு காணாத வகையில் ரூ. 300 முதல் ரூ. 1,500 வரை உயர்த்தி, அறைகள் இன்றி அவதியுறும் ஏழை முருகப் பக்தர்களின் தலையில் பேரிடியை இறக்கியுள்ளது. முதல்-அமைச்சர் விஜய் அரசின் இந்த அநியாய கட்டண கொள்ளையை பாஜக வன்மையாக கண்டிக்கிறது.</p> <h2>வருவாய் ஈட்டும் வணிக கூடங்கள்</h2><p>ஆட்சி பொறுப்பேற்றதும் கோவில்களை தங்களின் நேரடி கண்காணிப்பில் வைத்திருப்போம் என வீராப்பு பேசிய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்  ஏழை எளிய முருக பக்தர்களுக்கு வழங்கும் பரிசு இதுதானா? பராமரிப்பு செலவு என்ற வெற்று மழுப்பல் காரணத்தை  கூறி, ஆன்மிக தலங்களை வெறும் வருவாய் ஈட்டும் வணிக கூடங்களாக மட்டுமே பார்க்கும்  ஜோசப் விஜய் அரசின் போக்கு வெளிப்பட்டுள்ளது.</p> <h2>நடவடிக்கை</h2><p>எனவே, உயர்த்தப்பட்ட தங்குமிட கட்டணத்தை தவெக அரசு உடனடியாக திரும்ப பெறவதோடு, போதிய தங்குமிட வசதி இல்லாத சூழலை பயன்படுத்தி தனியார் விடுதிகள் நடத்தும் கட்டண கொள்ளையில் இருந்து ஏழை பக்தர்களை பாதுகாக்க தவெக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வலியுறுத்திகேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பழனிக் கோயிலில் கட்டணக் கொள்ளை- திரு. ஜோசப் விஜய் அரசின் ஆன்மிக விரோதப் போக்கிற்கு கண்டனம்!<br><br>பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் விடுதிகளின் கட்டணங்களை இன்று (ஜூலை 13) முதல் திரு. ஜோசப் விஜய் அரசு வரலாறு காணாத வகையில் ரூ. 300 முதல் ரூ. 1,500 வரை உயர்த்தி, அறைகள் இன்றி… <a href="https://t.co/xL6rol3beZ">pic.twitter.com/xL6rol3beZ</a></p>&mdash; Nainar Nagenthran (@NainarBJP) <a href="https://x.com/NainarBJP/status/2076684747884134910?ref_src=twsrc%5Etfw">July 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் இன்று 15 இடங்களில் சதமடித்த வெயில் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/temperatures-hit-the-100f-378c-mark-at-15-locations-in-tamil-nadu-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/temperatures-hit-the-100f-378c-mark-at-15-locations-in-tamil-nadu-today#comments</comments><guid isPermaLink="false">6b214c85-b48a-45dd-adf2-9ffaa59a3e4f</guid><pubDate>Mon, 13 Jul 2026 15:36:46 +0000</pubDate><atom:updated>2026-07-13T15:36:46.733Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,Tamil Nadu,வெயில்,heat</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/kyrizdcf/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/kyrizdcf/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பசிபிக் பெருங்கடலில் நிலவும் வலுவான எல் நினோ நிகழ்வுகள் காரணமாக, இந்தியப் பகுதிகளில் பருவமழைக் காற்று பலவீனமடைந்து. வறண்ட நிலப்பரப்பும் வெப்பமும் அதிகரிக்கின்றன. இதன் காரணமாக தமிழகத்தில் இம்மாதம் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>தென்மேற்கு பருவமழைக்காலம் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தாலும், சில பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 15 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><p>இதன்படி சென்னை நுங்கம்பாக்கம், சென்னை, கடலூர், ஈரோடு, கரூர் பரமத்தி, காரைக்கால், மதுரை நகரம், மதுரை விமான நிலையம், நாகப்பட்டினம், பாளையங்கோட்டை, திருச்சி, திருத்தணி, வேலூர், நாமக்கல் மற்றும் பரங்கிப்பேட்டை ஆகிய 15 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. </p> ]]></content:encoded></item><item><title>தஞ்சாவூர் அருகே பூட்டிய காருக்குள் மூச்சுத்திணறி 6 வயது சிறுவன் பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/6-year-old-boy-dies-after-suffocating-in-locked-car-near-thanjavur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/6-year-old-boy-dies-after-suffocating-in-locked-car-near-thanjavur#comments</comments><guid isPermaLink="false">5a99925d-564d-4a43-83c7-2a4b6a8d069f</guid><pubDate>Mon, 13 Jul 2026 15:32:06 +0000</pubDate><atom:updated>2026-07-13T15:32:06.549Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thanjavur,தஞ்சாவூர்,சிறுவன் உயிரிழப்பு,Die,கார்car</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/unrcpevr/116.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறுவன் பலி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/unrcpevr/116.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர்,</p><p>தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே கக்கரைக்கோட்டை வடக்குநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் தனபால். இவரது மகன் தமன் (வயது 6). இவர் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.</p><h2>பூட்டிய காருக்குள்</h2><p>இந்த நிலையில் நேற்று விடுமுறை நாள் என்பதால் தனது பெரியப்பா மகன் பிரவீன்குமார் என்பவரின் காரில் சிறுவன் தமன் வெளியில் சென்றுள்ளார். பின்னர், வீட்டிற்கு வந்ததும் அதே பகுதியில் பிரவீன்குமார் காரை பூட்டிய நிலையில் நிறுத்தி விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் காருக்குள் இருந்த சிறுவன் செய்வதறியாமல் திணறி வந்துள்ளார். மேலும், மூச்சு விட முடியாததால் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்.. கூச்சலிட்டவாறு இருந்துள்ளார். ஆனால், ஜன்னல்கள் அடைக்கப்பட்டு இருந்ததால் சிறுவனின் அபயக்குரல் வளியில் கேட்கவில்லை.</p><p>இதனிடையே மற்றொரு புறம் தமன் எங்கே சென்றான்? என்பது தெரியாமல் அவரது பெற்றோர்கள், உறவினர்கள் அவரை தீவிரமாக தேடிக்கொண்டிருந்தனர். வீட்டின் அனைத்து வீட்டிற்கு அறைகளிலும், வெளியேயும் என நாலாபுறமும் தமனை தேடி பார்த்துள்ளனர். ஆனால், அவர் கிடைக்கவில்லை. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு இரவு காருக்குள் உறவினர்கள் பார்த்த போது தமன் மூச்சுப்பேச்சு இன்றி கிடந்துள்ளார். பின்னர், காரை திறந்து பார்க்கையில் தமன் மூச்சுத்திணறி இறந்தது தெரியவந்தது. இதனை கண்ட அவரது பெற்றோர்கள் மகனின் உடலை மாரோடு அணைத்துக்கொண்டு சுதறி துடித்தனர். தனது மகன் இறந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் பெற்றோர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை எற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மயிலாப்பூர்: நொச்சிக்குப்பம் மாநகராட்சி தொடக்க பள்ளியில் அமைச்சர்  ப.வெங்கடரமணன் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mylapore-minister-p-venkataramanan-inspected-nochikuppam-municipal-corporation-primary-school</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mylapore-minister-p-venkataramanan-inspected-nochikuppam-municipal-corporation-primary-school#comments</comments><guid isPermaLink="false">131483f4-f738-43de-984a-19752b17b6de</guid><pubDate>Mon, 13 Jul 2026 15:29:26 +0000</pubDate><atom:updated>2026-07-13T15:29:26.705Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆய்வு,Mylapore,மயிலாப்பூர்,government schools-அரசு பள்ளி,inspect,Minister P. Venkataramanan,அமைச்சர் வெங்கடரமணன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/tkl6puvb/minister-school-visit.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்  ப.வெங்கடரமணன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/tkl6puvb/minister-school-visit.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இன்று மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி நொச்சிக்குப்பம் மாநகராட்சி தொடக்க பள்ளியில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்  ப.வெங்கடரமணன் ஆய்வு மேற்கொண்டார்.</p><h2>கருத்துக்களை கேட்டறிந்தார்</h2><p>இவ்வாய்வின் போது,  முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் விதத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவின் தரம், சுவை, சுகாதாரம், ஊட்டச்சத்து, மற்றும் உணவு தயாரிப்பு குறித்து ஆய்வு செய்து, மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் கருத்துக்களை கேட்டறிந்தார். தொடர்ந்து, மாணவர்களுடன் கலந்துரையாடி, காலை உணவு திட்டத்தின் பயன்கள் மற்றும் பள்ளி வருகை, கற்றல் திறன் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து கேட்டறிந்தார்.</p> <h2>காலை உணவு திட்டம்</h2><p>மேலும், <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">காலை உணவு திட்டம்</a> தினந்தோறும் தரமாகவும், சுகாதாரமான முறையிலும், குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து மாணவர்களுக்கும் வழங்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.</p><h2>அடிப்படை வசதி</h2><p>அதனை தொடர்ந்து, பள்ளியின் வகுப்பறைகள், குடிநீர் வசதி, கழிப்பறை பராமரிப்பு, தூய்மை மற்றும் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளையும் ஆய்வு செய்து, மாணவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான கல்வி சூழலை தொடர்ந்து உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tamil-nadu-government-has-issued-an-order-transferring-three-ias-officers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tamil-nadu-government-has-issued-an-order-transferring-three-ias-officers#comments</comments><guid isPermaLink="false">add70407-cc74-4dc7-bae7-bfb7257f296b</guid><pubDate>Mon, 13 Jul 2026 15:12:47 +0000</pubDate><atom:updated>2026-07-13T15:12:47.507Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,Tamil Nadu,இடமாற்றம்,ஐ.ஏ.எஸ்.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/w8lovsr4/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/w8lovsr4/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டில் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் சாய் குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். </p><p>இதன்படி, கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ சேவைகள் துறை இயக்குநராக கிருஷ்ணனுன்னி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநராக ஷில்பா பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதே போல், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக மேலாண்மை இயக்குநராக அம்ரித் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>சேலம்: வரி பாக்கியை நூதன முறையில் வசூல் செய்த ஊராட்சி செயலாளர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-the-panchayat-secretary-collected-the-tax-arrears-in-a-new-way</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-the-panchayat-secretary-collected-the-tax-arrears-in-a-new-way#comments</comments><guid isPermaLink="false">717f7236-12ed-4c1e-b38c-72a696b25235</guid><pubDate>Mon, 13 Jul 2026 15:12:26 +0000</pubDate><atom:updated>2026-07-13T15:12:26.259Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வசூல்,சேலம்,ஊராட்சி செயலாளர்,Tax Collection,Village Panchayat,வரி பாக்கி,In Salem</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/yj07vmgu/officer.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  வரி பாக்கி காலில் விழுந்து வசூல் செய்த ஊராட்சி செயலாளர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/yj07vmgu/officer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>அரசு அதிகாரி ஒருவர் கிராம மக்களின் கால்களில் விழுந்து வரி வசூல் செய்யும் நெகிழ்ச்சியான சம்பவம் சேலம் அருகே அரங்கேறியுள்ளது.</p> <h2>நீண்ட நாள் வரி பாக்கி</h2><p>சேலம் மாவட்டம், நங்கவள்ளி அருகே உள்ள சாணாரப்பட்டி ஊராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்துள்ளன. இந்த ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் பலர் நீண்ட நாட்களாக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%2C%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF">வீட்டு வரி, குடிநீர் வரி</a> உள்ளிட்ட உள்ளாட்சி வரிகளை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.</p> <h2> அதிரடி முடிவு</h2><p>அதிகாரிகள் எத்தனையோ முறை நோட்டீஸ் அனுப்பியும், நேரில் கேட்டுப்பார்த்தும் பொதுமக்கள் வரி செலுத்த முன்வரவில்லை. இதனால், கிராமத்தின் வளர்ச்சி பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து, சாணாரப்பட்டி ஊராட்சி செயலாளர் மாதவன் ஒரு அதிரடி மற்றும் உருக்கமான முடிவை எடுத்தார். அதன்படி அப்பகுதிக்கு நேரில் சென்றார்.  வீதி வீதியாக சென்ற அவர், திடீரென  வரி பாக்கி வைத்துள்ள பொதுமக்களின்  கால்களில் விழுந்து வணங்கினார்.</p><h2>வேண்டுகோள்</h2><p> கிராமத்தின் முன்னேற்றத்திற்காக வரிப் பாக்கியை உடனே செலுத்துங்கள்" என்று கைகூப்பி, காலில் விழுந்து வேண்டுகோள் விடுத்தார். கடந்த 2 நாட்களாக ஊராட்சி செயலாளர் மாதவன் இப்படி வீடு வீடாக சென்று மக்களின் கால்களில் விழுந்து வரி வசூல் செய்து வரும் நடவடிக்கை, அந்த பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும், கவனத்தையும் ஈர்த்துள்ளது. </p> <h2>வரி செலுத்தி வருகின்றனர்</h2><p>ஒரு அரசு அதிகாரி, தன்மானத்தை பார்க்காமல் கிராமத்தின் வளர்ச்சிக்காக மக்களின் கால்களில் விழுந்ததை பார்த்த பலரும், தங்களது வரி பாக்கியை உடனே செலுத்தி வருகின்றனர். அரசு அதிகாரியின் இந்த நூதன மற்றும் பாச போராட்டம்,  தற்போது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>சட்டமன்றத்த சந்தைக்கடையா ஆக்கிட்டாங்க -  செல்லூர் ராஜு தாக்கு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/they-have-turned-the-legislative-assembly-into-a-market-stall-sellur-raju-attacks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/they-have-turned-the-legislative-assembly-into-a-market-stall-sellur-raju-attacks#comments</comments><guid isPermaLink="false">cdfbcf24-8c9a-4638-9c4e-5de60d48a136</guid><pubDate>Mon, 13 Jul 2026 15:00:23 +0000</pubDate><atom:updated>2026-07-13T15:00:23.091Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,TVK,மதுரை,செல்லூர் ராஜு,sellurraju,EPS,முதல்-அமைச்சர் விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/w86ytu54/raju33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ செல்லூர் ராஜு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/w86ytu54/raju33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரையில் நடந்த அதிமுக கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, </p><p>வாயில் வந்ததையெல்லாம் பேசுபவன் தலைவன் அல்ல. முதல்-அமைச்சர் விஜய் ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும். ஒரு தலைமுறையையே விஜய் பாழ்படுத்தி கொண்டிருக்கிறார். ஒரு சட்டமன்ற வரலாற்றில் முதல்-அமைச்சருக்கு ஒரு தகுதியுள்ளது. ஒரு நடிகராக பேசுவது வேறு. முதல்-அமைச்சராக பேசுவது வேறு. சட்டமன்றத்தில் உரையாற்றும் போது மிகவும் நாகரீகமாக பேச வேண்டும். ராஜாஜி, காமராஜர், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடியார், ஸ்டாலின் ஆகியோர் அந்த நாற்காலியில் அமர்ந்துள்ளனர்.</p><h2>சட்டமன்றமா, சந்தக்கடையா</h2><p>சட்டமன்றத்தில் இவரை போல யாராவது பேசியுள்ளார்களா. சட்டமன்றத்தில் செய்கை காண்பிப்பது எல்லாம் காரியம். அது சட்டமன்றமா, சந்தக்கடையா. பதவி வரும்போது பணிவு வர வேண்டும், துணிவு வரவேண்டும் தோழா என்று எங்கள் தலைவர் சொன்னது. என் தலைவரை உச்சரிக்க உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது. </p> <p>மாண்புமிகு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">முதல்-அமைச்சர் விஜய் </a>அவர்களே நீ யோக்கியமானவர் என்று சொல்ல முடியுமா. ஒரு படத்திற்கு எவ்வளவு வாங்கினாய். அதில் எவ்வளவு வெளியே சொன்னாய். நீ நடித்த புலி படத்திற்கு ரூ.15 கோடி வாங்கி குறைந்த கணக்கு காண்பித்து, ரூ.1.5 கோடி அபராதம் கட்டியது மறந்துவிட்டதா. நீயே ஒரு களவாணி. உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது. நீ ஒரு விரலில் சுட்டி காட்டலாம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பெரம்பூர் மக்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்த பிரத்யேக செயலி பயன்பாட்டிற்கு வந்தது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-special-app-launched-by-chief-minister-vijay-for-the-people-of-perambur-has-been-launched</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-special-app-launched-by-chief-minister-vijay-for-the-people-of-perambur-has-been-launched#comments</comments><guid isPermaLink="false">d80f24e8-391b-4176-a576-0b5ae6ce0518</guid><pubDate>Mon, 13 Jul 2026 13:51:11 +0000</pubDate><atom:updated>2026-07-13T13:51:11.564Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,பெரம்பூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/fpfs3cub/perambure33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/fpfs3cub/perambure33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முதல்-அமைச்சர் விஜய் சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதில் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பெரம்பூர் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.தொகுதி மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, பெரம்பூர் தொகுதி அலுவலகம் சென்னை வியாசர்பாடி சர்மா நகர் 1-வது தெருவில் தொடங்கப்பட்டுள்ளது. </p> <p>இந்தநிலையில், இந்த அலுவலகத்தை முதல்-அமைச்சர் விஜய் இன்று மாலை திறந்து வைத்தார்.  தொடர்ந்து எம்.எல்.ஏ அலுவலக வளாகத்தில் இ -சேவை மையத்தை திறந்து வைத்தார்.</p><p>இந்தநிலையில்,  எம்.எல்.ஏ. அலுவலகத்தில் தொகுதி மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக செயலி ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. செல்போன் செயலியான அதில், பொதுமக்கள் தங்களது குறைகளை எந்த நேரத்திலும் தெரிவிக்கலாம். <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பெரம்பூர் தொகுதி</a> மக்கள் தங்களது குறைகளையும் புகார்களையும் தொகுதி எம்.எல்.ஏ.வான முதல்-அமைச்சரிடம் நேரடியாகத் தெரிவிக்கும் வகையில் தொடங்கப்பட உள்ள இந்த செயலிக்கு ‘மக்கள் சேவை தளம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. </p><p>இந்தநிலையில், பெரம்பூர் மக்களுக்கு  முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்த பிரத்யேக செயலி பயன்பாட்டிற்கு வந்தது. http://Tvkcm.com மூலம் சேவை தளத்தை மக்கள் தொடர்பு கொள்ளலாம். 9498500444 என்ற வாட்ஸ்ஆப் எண் மூலம் பெரம்பூர் மக்கள் புகார் தெரிவிக்கலாம்.</p>]]></content:encoded></item><item><title>மூத்த படைப்பாளி பூமணி மறைவு - சிபிஐ(எம்) இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/passing-of-veteran-writer-poomani-cpim-condoles</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/passing-of-veteran-writer-poomani-cpim-condoles#comments</comments><guid isPermaLink="false">8d7b732b-115f-4f5b-8b5f-0f77c1c50882</guid><pubDate>Mon, 13 Jul 2026 13:46:06 +0000</pubDate><atom:updated>2026-07-13T13:46:06.736Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இரங்கல்,condoles,CPI(M),சிபிஐ(எம்),Writer Poomani,பூமணி மறைவு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/y0y1glyf/communist.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பெ. சண்முகம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/y0y1glyf/communist.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மூத்த படைப்பாளி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81">பூமணி மறைவு</a> - சிபிஐ(எம்) இரங்கல். இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><h2>சாகித்திய அகாடமி விருது</h2><p>சாகித்திய அகாடமி விருது பெற்ற தமிழின் மூத்த படைப்பாளி பூமணியின் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. கரிசல் வட்டார மக்களின் வாழ்வியலை, குறிப்பாக பட்டியலின மக்களின் வாழ்க்கையை, அழுத்தமான குரலில் பதிவு செய்த பூமணியின் படைப்புகள் தமிழ் இலக்கிய உலகில் நீங்கா இடம் பெற்றவை. </p><h2>சாதி எதிர்ப்புணர்வு</h2><p>அஞ்ஞாடி நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற அவர், மார்க்சியத்தையே தன் வாழ்க்கை கண்ணோட்டமாக கொண்ட இடதுசாரி சிந்தனையாளராக வாழ்ந்தார். அவரது எழுத்துக்களில் வெளிப்பட்ட சாதி எதிர்ப்புணர்வும், உழைக்கும் மக்கள் மீதான அவரது நேசமும் ஒரு முற்போக்கு படைப்பாளிக்குரிய பண்பாகும். தமிழின் இந்த மகத்தான படைப்பாளியை இழந்திருப்பது தமிழ் இலக்கிய உலகிற்கும், முற்போக்கு சிந்தனைப் பரப்பிற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.</p> <p>தோழர் பூமணி மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும். இலக்கிய நேசர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறது.</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் பாசன பகுதிக்கு  தண்ணீர் திறப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-release-from-bhavanisagar-dam-to-the-kalingarayan-irrigation-area</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-release-from-bhavanisagar-dam-to-the-kalingarayan-irrigation-area#comments</comments><guid isPermaLink="false">217efd46-6af8-4cdd-98f4-d2c1c5785857</guid><pubDate>Mon, 13 Jul 2026 13:17:42 +0000</pubDate><atom:updated>2026-07-13T13:17:42.730Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Release,Bhavanisagar Dam,பவானிசாகர் அணை,தண்ணீர்,திறப்பு,additional water</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/22q527w5/bavani-dam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பவானிசாகர் அணை
]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/22q527w5/bavani-dam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>ஈரோடு மாவட்ட விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, பவானிசாகர் அணையிலிருந்து நாளை முதல் சிறப்பு தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 15,743 ஏக்கர் விவசாய நிலங்கள் கருகாமல் காப்பாற்றப்படும். </p><h2>குடிநீர் தட்டுப்பாடு</h2><p>ஈரோடு மாவட்டம் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">பவானிசாகர் அணையின்</a> மூலம் லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. தற்போதைய கோடைக்கால சூழலில், காலிங்கராயன் வாய்க்கால் பாசனப் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் தண்ணீரின்றி கருகும் நிலைக்கு தள்ளப்பட்டன. மேலும், கிராமப்புறங்களில் கால்நடைகளுக்கான குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வந்தது.</p><p>முதல்-அமைச்சர் அதிரடி உத்தரவுவிவசாயிகளின் இந்த நியாயமான கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் தண்ணீரை திறக்க அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–</p> <h2>15 நாட்கள் தண்ணீர்</h2><p>ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து 2026–2027 ஆம் ஆண்டு காலிங்கராயன் வாய்க்காலிலுள்ள பாசன நிலங்களில் நிலுவையிலுள்ள பயிர்களை காப்பற்றும் பொருட்டும், கால்நடைகளின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டும் சிறப்பு நனைப்பிற்கு தண்ணீர் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.15 நாட்கள் தண்ணீர் நாளை முதல் ஜூலை 28ஆம் தேதி வரை மொத்தம் 15 நாட்களுக்கு இந்த தண்ணீர் தங்கு தடையின்றி திறந்து விடப்படும்.</p><h2>15,743 ஏக்கர் பாசன வசதி</h2><p> மொத்தம் 648 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீரைத் திறந்துவிட தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 15,743 ஏக்கர் நிலங்கள் பலன்அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கீழ்க்கண்ட வட்டங்கள் பெருமளவில் பயனடைய உள்ளன: ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி இந்த மூன்று வட்டங்களில் உள்ள சுமார் 15,743 ஏக்கர் பாசன நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறும். </p> <h2>விவசாயிகள் மகிழ்ச்சி</h2><p> முதல்-அமைச்சரின் இந்த திடீர் உத்தரவால் கருகும் நிலையில் இருந்த தங்களது பயிர்கள் உயிர் பெறும் என ஈரோடு மாவட்ட விவசாயிகள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சரியான நேரத்தில் தண்ணீரை திறக்க உத்தரவிட்ட முதல்-அமைச்சர்  ச. ஜோசப் விஜய்க்கு இப்பகுதி மக்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் அருண் பணியிட மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/director-of-the-directorate-of-vigilance-and-anti-corruption-arun-transferred</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/director-of-the-directorate-of-vigilance-and-anti-corruption-arun-transferred#comments</comments><guid isPermaLink="false">649e4694-8eb7-4f6b-ae7b-18382f899a0a</guid><pubDate>Mon, 13 Jul 2026 13:05:15 +0000</pubDate><atom:updated>2026-07-13T13:05:15.762Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பணியிட மாற்றம்,Anti-Corruption Department,லஞ்ச ஒழிப்புத் துறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/kk2b4y0k/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/kk2b4y0k/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக அருண் நியமிக்கப்பட்டார். அதன்பிறகு, தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் லஞ்சப் பணத்துடன் பலர் சிக்கினர். </p> <p>இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் அருண் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத் துறையின் புதிய இயக்குநராக மகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அரசு பள்ளியில் மது பாட்டில்கள் சிதறி கிடந்ததால் அதிர்ச்சி: போலீசில் பொதுமக்கள் புகார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/shock-over-liquor-bottles-found-scattered-at-a-government-school-in-kallakurichi-public-makes-a-demand</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/shock-over-liquor-bottles-found-scattered-at-a-government-school-in-kallakurichi-public-makes-a-demand#comments</comments><guid isPermaLink="false">36492bf4-2697-42bb-a21f-f3213e6c2596</guid><pubDate>Mon, 13 Jul 2026 12:55:57 +0000</pubDate><atom:updated>2026-07-13T12:55:57.168Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கள்ளக்குறிச்சி,Kallakurichi,Government School,அரசு தொடக்கப்பள்ளி,மது பாட்டில்கள்,liquor bottles</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/71o7896z/wine-bottle.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ மது பாட்டிலகள்]]></media:title><media:description type="html"><![CDATA[ கள்ளக்குறிச்சி அருகே அரசு தொடக்கப்பள்ளியில் சிதறி கிடந்த மது பாட்டில்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/71o7896z/wine-bottle.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சி,</p><p>கள்ளக்குறிச்சி மாவட்டம் எம்.குண்ணத்தூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் மது பாட்டில்கள் உடைந்து சிதறிக் கிடந்ததால் பொதுமக்கள் போலீசில் கோரிக்கை வைத்தனர். </p><h2>அரசு தொடக்கப்பள்ளி</h2><p>கள்ளக்குறிச்சி மாவட்டம் எம்.குண்ணத்தூர் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் வழக்கம்போல் இன்று காலையில் பள்ளிக்கூடத்திற்கு ஆசிரியர்களும் மாணவர்களும் வந்தனர். அப்போது பள்ளி வளாகத்திலும் வகுப்பறைக்கு அருகிலும் மது பாட்டில்கள் உடைக்கப்பட்டு சிதறிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். </p><h2>பொதுமக்கள் கோரிக்கை</h2><p>சமூக விரோதிகளின் இந்த செயலால் பள்ளியின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து கிராம மக்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்</p><p>மேலும், பள்ளி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து மது அருந்திய மர்ம நபர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளிக்கு இரவு நேர போலீஸ் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>எழுத்தாளர் பூமணி மறைவு-வைகோ இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/passing-of-writer-poomani-vaiko-offers-condolences</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/passing-of-writer-poomani-vaiko-offers-condolences#comments</comments><guid isPermaLink="false">21840481-e4fa-4085-91f6-09b23425caf4</guid><pubDate>Mon, 13 Jul 2026 12:54:02 +0000</pubDate><atom:updated>2026-07-13T12:54:02.642Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Durai Vaiko,condolences,எழுத்தாளர்,பூமணி மறைவு,வைகோ இரங்கல்,Boomani</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/g18hbgct/boomani.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ எழுத்தாளர் பூமணி மறைவு

]]></media:title><media:description type="html"><![CDATA[ எழுத்தாளர் பூமணி மறைவிற்கு வைகோ இரங்கல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/g18hbgct/boomani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>எழுத்தாளர் பூமணி மறைவிற்கு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வைகோ இரங்கல் </a>தெரிவித்துள்ளார்.</p><p>பூலித்துரை மாணிக்கவாசகம் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர்<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> பூமணி </a>அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து துயரம் அடைந்தேன். </p><p>கூட்டுறவுத் துறை பணியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற அவர், எண்ணற்ற சிறுகதைகளையும், புதினங்களையும் தமிழ் இலக்கியத்திற்கு கொடை அளித்த பெருமைக்குரியவர். தாமரை இதழில் அறுப்பு என்ற சிறுகதைதான் இவரது முதல் படைப்பு ஆகும்.அஞ்ஞாடி என்ற இவரின் புதினம் சாகித்ய அகாடமி விருதைப் பெற்றது.</p><p>தாய் அன்பு சாதி கலவரங்களுக்கு முற்றுபுள்ளி வைத்தல் முதலானவைகளை விளக்கும் கரிசல் காட்டு இலக்கியமாக இது திகழ்ந்தது. வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள், நல்ல நாள், வெக்கை, நைவேத்தியம், வரப்புகள், வாய்க்கால், பிறகு முதலான இவரின் படைப்புக்கள் ஒவ்வொன்றும் முற்போக்கு இலக்கியங்கள் ஆகும்.</p><p>இவருடைய வெக்கை எனும் கதையைத் தழுவி இயக்குநர் வெற்றிமாறன், அசுரன் என்ற திரைப்படத்தை உருவாக்கினார்.எழுத்தாளர் கி.ரா எனும் கி.ராஜநாராயணன் அவர்கள் இவரது இலக்கியப் புலமைக்கு தூண்டு கோலாகத் திகழ்ந்தார்.</p><p>பெருமைக்குரிய எழுத்தாளரான பூமணி அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அவரது குடும்பத்தினருக்கும், வாசகர்களுக்கும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு தனது எக்ஸ் வலைதளத்தில் இரங்கல் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>வாக்காளர் சேர்க்கைக்கான புதிய நிபந்தனைக்கு எஸ்டிபிஐ கட்சி கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/stpi-condemns-new-condition-for-voter-registration</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/stpi-condemns-new-condition-for-voter-registration#comments</comments><guid isPermaLink="false">bf734243-800d-4a9d-9b2f-0224d357510a</guid><pubDate>Mon, 13 Jul 2026 12:47:39 +0000</pubDate><atom:updated>2026-07-13T12:47:39.277Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,தேர்தல் ஆணையம்,voter,Migrant Workers,நிபந்தனை,Condemn,SDPI Party,எஸ்டிபிஐ கட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/jkpqtues/115.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எஸ்டிபிஐ கட்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/jkpqtues/115.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">எஸ்டிபிஐ </a>கட்சியின் தேசிய தலைவர் எம்.கே. பைஸி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>புதிய வாக்காளர் சேர்க்கைக்கான இணையவழி 'படிவம் 6'-இல் (Form 6), பெற்றோரின் எல்.ஐ.ஆர் (சிறப்பு தீவிர திருத்தப் பட்டியல்) விவரங்களைக் குறிப்பிடுவதைக் கட்டாயமாக்கியுள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் முடிவை எஸ்டிபிஐ கட்சி வன்மையாக கண்டிக்கிறது.</p><p>இந்த நிபந்தனைக்கு இந்திய அரசியலமைப்பிலோ அல்லது 1950 ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திலோ எந்தவித அடிப்படையுமில்லை. தேவையான சட்டத் திருத்தங்கள் ஏதுமின்றி இம்முடிவு தன்னிச்சையாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. </p><h2>முதன்முறை வாக்காளர்கள்</h2><p>வாக்களிக்கும் உரிமை என்பது ஒருவரின் குடியுரிமை, வயது மற்றும் வசிப்பிடம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட ஓர் அரசியலமைப்பு உரிமையாகும். அது ஒருவருடைய பெற்றோரின் தேர்தல் வரலாற்றுடன் தொடர்புடையது அல்ல.</p><p>தற்போது நடைமுறையில் உள்ள 'சிறப்பு தீவிர திருத்தப் பட்டியல்' (SIR) நடவடிக்கையின் காரணமாக, ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இருந்து ஏராளமான பெயர்கள் நீக்கப்பட்டு, தகுதியான வாக்காளர்கள் புறக்கணிக்கப்படுவது குறித்து நாடு முழுவதும் கடுமையான கவலைகள் எழுந்துள்ளன. இத்தகைய சூழலில், இந்த புதிய நிபந்தனையானது முதன்முறை வாக்காளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் விளிம்புநிலை சமூகத்தினருக்கு மேலும் ஒரு பெரும் சுமையாக மாறும்.</p><h2>நடவடிக்கை</h2><p>சிறப்பு தீவிர திருத்தம் (SIR), குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் கொண்டுவரப்பட உள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஆகியவற்றைச் சுற்றி நிலவும் சர்ச்சைகளின் பின்னணியில், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை, அனைவருக்கும் பொதுவான வாக்குரிமைக்கு புதிய முட்டுக்கட்டைகளை உருவாக்குமோ என்ற கடுமையான அச்சத்தை ஏற்படுத்துகிறது.</p><p>எனவே, சட்டவிரோதமான மற்றும் பாகுபாடான இந்த நிபந்தனையை தேர்தல் ஆணையம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அத்துடன், சுதந்திரமான, நியாயமான மற்றும் உள்ளடக்கிய தேர்தல்களை உறுதி செய்ய வேண்டிய தனது அரசியலமைப்பு சட்ட கடமையை நிலைநிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மின் பகிர்மான வட்டங்களில் அதிகாரிகள் சோதனை: மின் விதிமீறல்கள் கண்டுபிடிப்பு - 98.40 லட்சம் வசூல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/officials-inspect-electricity-distribution-circles-electricity-violations-found-rs-9840-lakhs-collected</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/officials-inspect-electricity-distribution-circles-electricity-violations-found-rs-9840-lakhs-collected#comments</comments><guid isPermaLink="false">21e9fd37-b212-4989-872b-6b4ba87ada5e</guid><pubDate>Mon, 13 Jul 2026 12:18:51 +0000</pubDate><atom:updated>2026-07-13T12:18:51.801Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,electricity,Complaint,Consumer,சோதனை,Settlement,தொகை,மின் பகிர்மானக் கழகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/4yn0qrd8/114.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின் பகிர்மான கழகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/4yn0qrd8/114.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மின் பகிர்மான வட்டங்களில் நடத்தப்பட்ட கோட்ட அளவிலான அதிரடி சோதனையின் போது 76 மின் திருட்டுகள் மற்றும் 24 மின் வீதிமீறல்கள் கண்டறியப்பட்டது. இழப்பீட்டு தொகையாக 98.40 லட்சம் வசூல் செய்யப்பட்டது.</p><h2>அதிரடி சோதனை</h2><p>15.06.2026 முதல் 30.06.2026 வரை தமிழ்நாடு<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D"> மின் பகிர்மான கழகத்தின்</a> சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய அமலாக்க கோட்ட பிரிவுக்குட்பட்ட சென்னை வடக்கு, சென்னை மேற்கு, சென்னை மையம், சென்னை தெற்கு, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோயம்புத்தூர், கோயம்புத்தூர் வடக்கு, திருப்பூர், சேலம், ஈரோடு, தர்மபுரி, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், திருச்சி, தஞ்சாவூர், வேலூர் மற்றும் விழுப்புரம் அமலாக்க உப கோட்டப் பிரிவுகளால் பல்வேறு நாட்களில் சென்னை வடக்கு, கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு, ஈரோடு, சேலம், நாமக்கல், தேனி, மதுரை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், மற்றும் திண்டுக்கல் ஆகிய அனைத்து மின் பகிர்மான வட்டங்களில் நடத்தப்பட்ட கோட்ட அளவிலான அதிரடி சோதனையின் போது 76 மின் திருட்டுகள் மற்றும் 24 மின் வீதிமீறல்கள் கண்டறியப்பட்டு இழப்பீட்டு தொகையாக சென்னை கோட்ட அமலாக்க பிரிவின் மூலமாக ரூ.12,44,812/- (ரூபாய் பன்னிரண்டு லட்சத்து நாற்பத்தி நான்கு ஆயிரத்து எண்ணூற்று பன்னிரண்டு மட்டும்), ரூ.36,06,867/- (ரூபாய் முப்பத்தாறு லட்சத்து ஆறாயிரத்து எண்ணூற்று அறுபத்து ஏழு மட்டும்) மற்றும் மதுரை, திருச்சி அமலாக்க பிரிவின் மூலமாக ரூ.29,28,826/- (ரூபாய் இருபத்தொன்பது லட்சத்து இருபத்தெட்டாயிரத்து எண்ணூற்று இருபத்தாறு மட்டும்) என ஆக மொத்தம் ரூ.98,39,594/- (ரூபாய் தொண்ணூற்று எட்டு லட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து ஐந்நூற்று தொண்ணூற்று நான்கு மட்டும்) அபராதம் விதிக்கப்பட்டது.</p><p>மேலும் சம்பந்தப்பட்ட மின்நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து அதற்குரிய சமரசத் தொகையாக ரூ.4,77,500/- (ரூபாய் நான்கு லட்சத்து எழுபத்து ஏழு ஆயிரத்து ஐந்நூறு மட்டும்) செலுத்தியதால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் குற்றவியல் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை.</p><h2>தகவல் தெரிவிக்க</h2><p>மின் திருட்டு தொடர்பான தகவல்களை செயற்பொறியாளர்/ அமலாக்கம்/ சென்னை கைபேசி 9445857591, கோவை அமலாக்கக் கோட்டப் பிரிவு 9443049456, மதுரை அமலாக்கக் கோட்டப் பிரிவு 9443037508, திருச்சி அமலாக்கக் கோட்டப் பிரிவு 9443329851 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.</p>]]></content:encoded></item><item><title>போதைப்பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை - தலைமை இயக்குநர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/action-against-narcotics-and-banned-tobacco-products-director-general</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/action-against-narcotics-and-banned-tobacco-products-director-general#comments</comments><guid isPermaLink="false">64221180-1b73-4ef7-bbe3-4456a32774bf</guid><pubDate>Mon, 13 Jul 2026 12:11:48 +0000</pubDate><atom:updated>2026-07-13T12:11:48.458Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tobacco products,போதைப்பொருட்கள்,சட்டவிரோதம்,தடை Prohibition,illegal activities</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/z2jr71mk/police.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தலைமை இயக்குநர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/z2jr71mk/police.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>போதைப்பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை. இது தொடர்பாக காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>சமரசம் இல்லா கொள்கை</h2><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%20%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%20">தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் </a>/ படைத்தலைவர் மகேஷ் குமார் அகர்வாலின் உத்தரவின் படி, தமிழ்நாடு காவல்துறை மாநிலம் முழுவதும் போதைப்பொருட்களுக்கு எதிராக தீவிர சிறப்பு சோதனை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. போதைப்பொருள் குற்றங்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் சட்டவிரோத விற்பனைக்கு எதிராக தமிழ்நாடு அரசு கடைப்பிடித்து வரும் "சமரசம் இல்லா" (Zero Tolerance) கொள்கையை செயல்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.</p><h2>சோதனை நடவடிக்கை</h2><p>இதன் ஒரு பகுதியாக, அனைத்து மாநகர காவல் ஆணையர்களும் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், குற்றம் நடைபெற வாய்ப்புள்ள பகுதிகளில் தீவிர வாகன சோதனைகள். சோதனை நடவடிக்கைகள். கண்காணிப்பு மற்றும் நுண்ணறிவு தகவல்களின் அடிப்படையிலான துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு. போதைப்பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களின் சட்டவிரோத தயாரிப்பு. விற்பனை. பதுக்கல் மற்றும் கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.</p><h2>பறிமுதல்</h2><p>கடந்த ஜூலை 1 முதல் ஜூலை 12 வரை நடைபெற்ற இந்த தீவிர சிறப்பு சோதனை நடவடிக்கைகளின் போது. தமிழ்நாடு காவல் துறை 978 போதைப்பொருள் தடுப்புச் சட்ட வழக்குகளை பதிவு செய்து, 1.216 நபர்களை கைது செய்துள்ளது. மேலும், 971 கிலோ கஞ்சா. 4.5 கிலோ பிற போதைப்பொருட்கள் மற்றும் 2,907 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><h2>1,343 வழக்குகள் பதிவு</h2><p>இத்துடன், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களின் சட்டவிரோத விற்பனைக்கு எதிராக 1,343 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு. 14.955 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விதிமீறல்களில் அபராதம் வசூலிக்கப்பட்டதுடன். சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 162 கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. ஈடுபட்டவர்களிடமிருந்து ரூ. 37 லட்சம் மேற்கண்ட அனைத்து வழக்குகளும் போதைப்பொருள் மற்றும் மனமயக்க பொருட்கள் தடுப்புச் சட்டம், 1985 , சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் சட்டம், 2003 மற்றும் பிற தொடர்புடைய சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p> <h2>கோயம்புத்தூரில் கைது</h2><p>தீவிர சிறப்பு சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்ட முக்கிய குற்றங்கள் ஆம்புலன்ஸ் மூலம் மாநிலங்களுக்கு இடையே போதைப்பொருள் கடத்திய கும்பல் கோயம்புத்தூரில் கைது. கோயம்புத்தூர் மாநகர காவல் துறையின்  மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW)  பிரிவு, ஆந்திர பிரதேசத்தின் இச்சாபுரம் பகுதியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் தமிழ்நாட்டிற்கு போதைப்பொருள் கடத்திய மாநிலங்களுக்கு இடையே செயல்படும் கும்பலின் செயல்பாட்டை முறியடித்தது.</p><h2>21 கிலோ கஞ்சா </h2><p> முதற்கட்டமாக 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கும்பலின் முக்கிய நபர். ஷெல்டன் (த/பெ ஜான்சன்) கைது செய்யப்பட்டு. அவரிடமிருந்து 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவரது ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், கூட்டாளிகளான மணிகண்டன் (28) மற்றும் வீரச்சின்னமருது (28) ஆகியோர் கைது செய்யப்பட்டு, மேலும் 21 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதன் மூலம் மொத்தம் 44.1 கிலோ உலர் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.</p><h2>மெத்தாம்பெட்டமின்</h2><p>சிவகங்கையில் இருந்து வெளிநாட்டிற்கு கடத்த இருந்த மெத்தாம்பெட்டமின் தடுத்து நிறுத்தப்பட்டது: துல்லியமான நுண்ணறிவு தகவலின் அடிப்படையில் சிவகங்கை மாவட்ட காவல் துறையினர். மலேசியாவிற்கு சட்டவிரோதமாக கடத்தப்பட இருந்த உயர்மதிப்புள்ள 3.100 கிலோ மெத்தாம்பெட்டமின் (Methamphetamine) போதைப்பொருளை பறிமுதல் செய்து. கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட நான்கு பேரை கைது செய்துள்ளனர்.</p><p>தமிழ்நாடு காவல் துறை. போதைப்பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களின் அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், நுண்ணறிவு தகவல்களின் அடிப்படையில் தொடர்ச்சியான நடவடிக்கைகளையும் ஒருங்கிணைந்த சட்ட அமலாக்கத்தையும் உறுதியுடன் மேற்கொண்டு வருகிறது.</p> <h2>மொபைல் செயலி</h2><p>போதைப்பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களின் சட்டவிரோத தயாரிப்பு. விற்பனை, பதுக்கல் மற்றும் கடத்தல் தொடர்பான தகவல்கள் ஏதேனும் பொதுமக்களுக்கு தெரிந்தால், போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு(Drug Free TN) மொபைல் செயலி அல்லது கட்டணமில்லா உதவி எண்: 10581 அல்லது வாட்ஸ்அப் எண்: 94984 10581 ஆகியவற்றின் மூலம் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம்: 16-ந் தேதி நடக்கிறது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cabinet-meeting-chaired-by-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cabinet-meeting-chaired-by-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">51ce2adc-571a-4ca4-a61f-f234bc355809</guid><pubDate>Mon, 13 Jul 2026 12:04:34 +0000</pubDate><atom:updated>2026-07-13T12:04:34.650Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,tngovt,அமைச்சரவை கூட்டம்,தமிழக அமைச்சரவை கூட்டம்,CMVijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/u2umxem8/meeting33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
முதல்-அமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/u2umxem8/meeting33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் வரும் 16-ந் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது. </p><h2>த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்</h2><p>தமிழகத்தில் த.வெ.க. அரசு ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், இம்மாத இறுதியில் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறது. த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் என்பதால், பொதுமக்களை கவரும் வகையிலான திட்டங்கள், அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>தற்போது, பட்ஜெட் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் 22-ந் தேதி வரை துறை வாரியாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். </p><h2>அமைச்சரவை கூட்டம் </h2><p>பட்ஜெட்டில் த.வெ.க. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் இடம்பெறும் என்று தெரிகிறது. இந்த நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் வரும் 16-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெறுகிறது. </p><p>இந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அமைச்சரவை கூட்டம்</a> பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும், புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.</p> ]]></content:encoded></item><item><title>புதிய ஸ்மார்ட் ரேஷன் அட்டைகளை வழங்கினார் முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-distributes-new-smart-ration-cards</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-distributes-new-smart-ration-cards#comments</comments><guid isPermaLink="false">e214d77e-1d84-46f4-ac14-b7c9f8a2e4d2</guid><pubDate>Mon, 13 Jul 2026 11:59:11 +0000</pubDate><atom:updated>2026-07-13T11:59:11.755Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,Chennai,பெரம்பூர்,Perambur,ரேஷன் கார்டு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/kbahic2d/two33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/kbahic2d/two33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெரம்பூரில் உள்ள ரேஷன் கடையில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். புதிய ஸ்மார்ட் அட்டை வழங்கும் திட்டத்தை முதற்கட்டமாக 50 பேருக்கு வழங்கி  புதிய ரேஷன் கடையில் 10 குடும்பங்களுக்கு அடையாளமாக ரேஷன் பொருட்களை வழங்கினார்.  ரேஷன் கடையில் பயனாளிகளுக்கு சர்க்கரை, அரிசி, பருப்பு, உள்ளிட்டவற்றை முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார். முன்னதாக </p><p>பெரம்பூர் தொகுதியில் உள்ள நியாய விலைக்கடையில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">முதல்-அமைச்சர் விஜய் </a>ஆய்வு செய்தார். </p> <p>இம்மாத இறுதிக்குள் தமிழகத்தில் 73,000 பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.</p><p>முதல்-அமைச்சரான பிறகு தனது சொந்த தொகுதியான பெரம்பூருக்குச் சென்ற முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், எம்.எல்.ஏ. அலுவலகத்தை  இன்று திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தையும்  திறந்து வைத்தார். பிறகு, சர்மா நகர் 10ஆவது தெருவில் உள்ள நியாய விலைக் கடையினைப் பார்வையிட்டு, பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டையினை வழங்கினார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கவில்லை; பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் - சுகாதாரத்துறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-spread-of-covid-19-has-not-increased-in-tamil-nadu-the-public-need-not-panic-health-department</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-spread-of-covid-19-has-not-increased-in-tamil-nadu-the-public-need-not-panic-health-department#comments</comments><guid isPermaLink="false">5a2534de-5dda-4af6-9dc9-965ff0f6bbee</guid><pubDate>Mon, 13 Jul 2026 11:45:32 +0000</pubDate><atom:updated>2026-07-13T11:45:32.702Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,Tamil Nadu,கொரோனா,Corona</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/vdb8xurz/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/vdb8xurz/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>ஆந்திராவில் கடப்பா மற்றும் அன்னமய்யா ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இருவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சூழலில் ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் வேலூர் சிஎம்சியில் அனுமதிக்கப்பட்டு கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தார் என்று தகவல் பரவியது. </p><p>இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கவில்லை என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“சமீபத்தில் கொரோனா நோய் தொற்று காரணமாக ஆந்திர மாநிலத்தில் இரு நபர்கள் உயிரிழந்ததாக, பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது. ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய நபர், திருப்பதி தனியார் மருத்துவமனையில் இருந்து 26.06.2026 அன்று மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். </p><p>அவருக்கு Klebsiella pneumoniae பாக்டீரியா மற்றும் கொரோனா தொற்றும் ஏற்பட்டிருந்தது. மேலும், நீரிழிவு மற்றும் நீண்டகால சிறுநீரக நோய் போன்ற இணைநோய்களும் இருந்தன. கடுமையான Klebsiella pneumoniae தொற்று ஏற்பட்டு தீவிர சுவாசக் கோளாறு (ARDS) ஆகிய சிக்கல்களால் 28.06.2026 அன்று அவர் உயிரிழந்தார்.</p><p>வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 68 வயதுடைய நபர் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பெருங்குடல் புற்றுநோயைத் தொடர்ந்து ஏற்பட்ட சுவாச செயலிழப்பு காரணமாக இறப்பு நேரிட்டது. இந்த நிகழ்வில் கொரோனா ஒரு தற்செயலான (Incidental finding) கண்டறிதலாக இருந்தது.</p><p>ஆந்திர பிரதேசம், கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் கடப்பா மருத்துவமனையில் கொரோனா பாதிப்பினால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இவ்வழக்கின் மருத்துவ விவரங்கள் ஆந்திர பிரதேச சுகாதாரத் துறையால் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.</p><p>தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் (Integrated Disease Surveillance Programme - IDSP) கீழ், கொரோனா நோய்க்கான கண்காணிப்பு வழக்கமான (Routine Surveillance) முறையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், வழக்கமாக அறுவை சிகிச்சைகளுக்கு முன்னதாகவும் ( Pre operative Test ) மற்றும் தீவிர சுவாச நோய்கள் சிகிச்சைக்கு பலனளிக்காத நோயாளிகளுக்கும், ஏனைய நோயாளிகளுக்கு வழக்கமாக கோவிட் தொற்று பரிசோதனை செய்வது நடைமுறையில் உள்ளது. </p><p>அதன் அடிப்படையில், 2024 ஆம் ஆண்டில் 990 பேருக்கும், 2025ஆம் ஆண்டில் 1,250 பேருக்கும், 2026 ஆம் ஆண்டில் 335 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மொத்தம் 2,575 வழக்குகள் பதிவாகியுள்ளன. இவை அனைத்தும் வழக்கமான நோய் கண்காணிப்பின் போது கண்டறியப்பட்டவை மட்டுமே; நோய்த் தொற்று பரவல் (Outbreak) காரணமாக ஏற்பட்டவை அல்ல. பதிவான பெரும்பாலான நோயாளிகளுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே காணப்பட்டுள்ளன; நோயின் தீவிரம் அதிகரித்ததற்கான அல்லது வழக்கத்திற்கு மாறான மருத்துவ வெளிப்பாடுகளுக்கான எந்த ஆதாரமும் இல்லை.</p><p>இந்நிலையில் தேசிய வைராலஜி நிறுவனம் (NIV), புனே-யில் மேற்கொள்ளப்பட்ட Whole Genome Sequencing (WGS) பரிசோதனைகளின் முடிவுகளின்படி, தற்போது பரவி வரும் வைரஸ் வகை லேசான நோய் வெளிப்பாட்டைக் கொண்டதாகவும், சமூகத்தில் குறைந்த அளவிலான (Low Community Transmission) பரவல் மட்டுமே இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.</p><p>இதனால் பொதுமக்கள் தேவையற்ற அச்சமோ, பதற்றமோ அடைய வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், முதியவர்கள், கர்ப்பிணிகள், நீண்டகால உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p> <p>காய்ச்சல், இருமல், தொண்டை வலி அல்லது சுவாசக் கோளாறு போன்ற அறிகுறிகள் இருப்பின் அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுகி மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் மற்றும் இருமல்/தும்மல் ஒழுங்குமுறைகளை பின்பற்றுதல் போன்ற பொது சுகாதார வழிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.</p><p>தற்போது தமிழ்நாட்டில் அதிக வீரியம் கொண்ட கொரோனா வைரஸ் வகை பரவி வருவதாக எந்த ஆதாரமும் இல்லை. கடந்த ஆண்டுகளை விட தற்போது கோவிட் தொற்று குறைவாகவே உள்ளது. பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை நிலைமையை தொடர்ந்து கண்காணித்து, தேவையான அனைத்து தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல், அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title> கொத்து பரோட்டா என்றெல்லாம் கொச்சையாக பேசுவதா?- தி.மு.க. கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-it-appropriate-to-use-crude-language-like-kothu-parotta-dmk-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-it-appropriate-to-use-crude-language-like-kothu-parotta-dmk-asks#comments</comments><guid isPermaLink="false">cdbe8885-1e4b-4425-944f-adf62ed1de5b</guid><pubDate>Mon, 13 Jul 2026 11:39:32 +0000</pubDate><atom:updated>2026-07-13T11:39:32.062Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Governor,கவர்னர்,Parotta,கேள்வி,பரோட்டா,தி.மு.க.,asks,The DMK,Cmjosephvijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/6zp3x5bj/r.s.-bharathi.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆர்.எஸ்.பாரதி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/6zp3x5bj/r.s.-bharathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கொத்து பரோட்டா என்றெல்லாம் கொச்சையாகப் பேசுவதா?" - தி.மு.க. கேள்வி! இது தொடர்பாக தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p> <p>விஜயின் குதிரை பேர அரசியல் - கவர்னர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவோம்.! அதிமுக வின் எச்சில் இலைகளை சேர்த்துக்கொண்டுள்ள விஜய், கொத்து பரோட்டா என்றெல்லாம் கொச்சையாக பேசுவதா.?</p><h2>குதிரைபேர ஊழல்</h2><p>கரூரில் முதல்-அமைச்சர் விஜய் பேசியது தொடர்பாக உச்ச நீதிமன்ற வழிகாட்டல்படி ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக் குழுவிடமும், சி.பி.ஐ.யிடமும் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல்-அமைச்சர் விஜய் குதிரைபேர ஊழலில் ஈடுபட்டுள்ளார் என்பதை வைகோ அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏற்கனவே கடந்த  4-ம் தேதி கவர்னரை சந்தித்து ஆதாரத்தோடு புகார் அளித்தோம்.</p><h2>புகார்</h2><p> அதேபோல விஜயபாஸ்கர் அவர்களும் வெளிப்படையாகவே செய்தியாளர்கள் கூட்டத்திலே என்னை த.வெ.க.வில் வில் வந்து சேரும்படி கேட்டுக்கொண்டார்கள் ஆகவேதான் நான் ராஜினாமா செய்கிறேன் என்று சொல்லி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவரும் சேர்ந்துவிட்டார். ஆக இதெல்லாம் குதிரைபேர ஊழலுக்கு தகுந்த ஆதாரங்கள் என்பதை சுட்டிக்காட்டி கவர்னரிடத்தில் இன்று மீண்டும் ஒருமுறை திமுகவின் சார்பில் புகார் கொடுத்திருக்கிறோம்.</p><h2>கொச்சையாக பேசுகிறார்</h2><p>விஜய் பேசும்போது கொத்து பரோட்டா என்றெல்லாம் கொச்சையாக பேசுகிறார். கரூர் விஜய பாஸ்கர், விராலிமலை  விஜயபாஸ்கர் ஆகிய இருவருமே நாங்கள் சாப்பிட்டு போட்ட இரண்டு இலைதான் அதை த.வெ.க.வில் இணைத்து கொண்டுள்ளனர் என அ.தி.மு.க.வினரே  விமர்சித்து உள்ளனர். ஆகவே எச்சில் இலையை வைத்து ஒரு விழா நடத்துகிறார். அதில் ஏற்கனவே வெளியிட்ட கரூர் அறநிலையத்துறை நிலம் தொடர்பான அரசாணையை ஏதோ இவரிடம் கோரிக்கை வைத்து அதன் பிறகு வெளிடுவதுபோல ஒரு நாடகத்தை நடத்தி காட்டியுள்ளார். </p><h2>பெரிய நாடகம்</h2><p>இந்த நாடகம் நடந்தது 10-ஆம் தேதி; ஆனால், 9-ஆம் தேதியே அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுவிட்டது. இது எவ்வளவு பெரிய பித்தலாட்டம், எவ்வளவு பெரிய நாடகம் ஆக, இப்படிப்பட்ட நாடகங்களை இவர்கள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் முடிவுகட்டுகிற வகையில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.">தி.மு.க.</a> சார்பில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். முதல்-அமைச்சர் விஜய்யின் இந்த குதிரைபேர புகாரின் பேரில் கவர்னர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், தி.மு.க. சார்பில் கண்டிப்பாக நீதிமன்றத்தை நாடுவோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>பெரம்பூர் எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cm-vijay-inaugurates-perambur-mla-office</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cm-vijay-inaugurates-perambur-mla-office#comments</comments><guid isPermaLink="false">20f0a748-bca0-4150-829a-23b30fd636b1</guid><pubDate>Mon, 13 Jul 2026 11:31:16 +0000</pubDate><atom:updated>2026-07-13T11:31:16.670Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,Chennai,பெரம்பூர்,Perambur,CMVijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/hb4wy28h/vijaythree33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/hb4wy28h/vijaythree33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெரம்பூரில் தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார் முதல்-அமைச்சர் விஜய்.  அலுவலகத்தில் இயங்கும் இ-சேவை மையத்தையும் திறந்து வைத்தார். தேர்தல் வெற்றிக்குப் பின் 2 மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக பெரம்பூர் தொகுதிக்கு வருகை தந்துள்ளார். </p><h2>பெரம்பூர் தொகுதி அலுவலகம்</h2><p>முதல்-அமைச்சர் விஜய் சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதில் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பெரம்பூர் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.தொகுதி மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, பெரம்பூர் தொகுதி அலுவலகம் சென்னை வியாசர்பாடி சர்மா நகர் 1-வது தெருவில் தொடங்கப்பட்டுள்ளது. </p><p>இந்தநிலையில், இந்த அலுவலகத்தை முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.  தொடர்ந்து எம்.எல்.ஏ அலுவலக வளாகத்தில் இ -சேவை மையத்தை திறந்து வைத்தார்.  தொடர்ந்து, சர்மா நகர் 10ஆவது தெருவில் உள்ள நியாய விலைக் கடையினைப் பார்வையிட்டு, பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டையினை வழங்கினார்.</p><p>பொது இ - சேவை மையத்தை பார்வையிட்டு செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் முதல்-அமைச்சர் விஜய் கேட்டறிந்தார்.  பெரம்பூர் தொகுதிக்கான ரூ.100 கோடி மதிப்பிலான திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சருக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் கொண்டுவரப்பட உள்ள புதிய திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். கே.ஏ.செங்கோட்டையன், வெங்கடரமணன் உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் நிகழ்சியில் பங்கேற்றனர்.</p><p>சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு,  இன்று முதல் முறையாக அவர் தனது தொகுதிக்குச் சென்றதால் அவருக்கு த.வெ.க. நிர்வாகிகள் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.</p><h2>புதிய செயலி</h2><p>எம்.எல்.ஏ. அலுவலகத்தில் தொகுதி மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக செயலி ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. செல்போன் செயலியான அதில், பொதுமக்கள் தங்களது குறைகளை எந்த நேரத்திலும் தெரிவிக்கலாம். பெரம்பூர் தொகுதி மக்கள் தங்களது குறைகளையும் புகார்களையும் தொகுதி எம்.எல்.ஏ.வான முதல்-அமைச்சரிடம் நேரடியாகத் தெரிவிக்கும் வகையில் தொடங்கப்பட உள்ள இந்த செயலிக்கு ‘மக்கள் சேவை தளம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் விஜய் இந்த பிரத்யேக செல்போன் செயலியையும் நாளை அறிமுகம் செய்து தொடங்கி வைத்தார். </p><h2>விஜய்க்காக தனி அறை</h2><p>அலுவலகத்தின் முன்பகுதியில், "பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ச. ஜோசப் விஜய்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றிலும் காம்பவுண்டு சுவர் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">முதல்-அமைச்சர் விஜய்</a>க்காக தனி அறையும் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தினுள் தனியாக கம்ப்யூட்டர்கள் அமைக்கப்பட்டு, 10 பணியாளர்கள் தினமும் பொதுமக்களின் குறைகளைக் கேட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.</p><h2>ஸ்மார்ட் ரேஷன் அட்டையை வழங்கினார் முதல்-அமைச்சர் விஜய்</h2><p>பெரம்பூரில் உள்ள ரேஷன் கடையில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். புதிய ஸ்மார்ட் அட்டை வழங்கும் திட்டத்தை முதற்கட்டமாக 50 பேருக்கு வழங்கி முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.  புதிய ரேஷன் கடையில் 10 குடும்பங்களுக்கு அடையாளமாக ரேஷன் பொருட்களை முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார். </p>]]></content:encoded></item><item><title>விஜய் இதை செய்துவிட்டால் நான் அரசியலில் இருந்தே விலகுகிறேன்-ஆர்.பி.உதயகுமார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-vijay-does-this-i-will-quit-politics-rp-udayakumar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-vijay-does-this-i-will-quit-politics-rp-udayakumar#comments</comments><guid isPermaLink="false">b81a5b1c-fbc3-46bb-a1c8-ed89a0d02062</guid><pubDate>Mon, 13 Jul 2026 11:10:50 +0000</pubDate><atom:updated>2026-07-13T11:10:50.156Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,TVK,விஜய்,அதிமுக,ஆர்.பி.உதயகுமார் பேச்சு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/ao0ee424/udaiya33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆர்.பி.உதயகுமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/ao0ee424/udaiya33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>107 சட்டமன்ற உறுப்பினர்களின் முகத்தை பார்த்து முதல்வர் விஜய் பெயரை சரியாக சொல்லிவிட்டால் நான் பொதுவாழ்க்கையில் இருந்து சென்றுவிடுகிறேன் என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.</p><h2>அதிமுக - திமுக கூட்டு களவாணிகள்</h2><p>முதல்-அமைச்சர் விஜய் எப்போதெல்லாம் அதிமுகவை பற்றி விமர்சிக்கிறாரோ அப்போதெல்லாம் ஆர்.பி. உதயகுமார் தவெகவுக்கு எதிராகவும், முதலமைச்சர் விஜய்க்கு எதிராகவும் கருத்துகளை கூறி வருகிறார். சமீபத்தில் கரூரில் பேசிய முதல்0-அமைச்சர் விஜய் அதிமுகவும், திமுகவும் கூட்டு களவாணிகள்தான் என கூறினார்.</p><h2>குறுக்கு வழியை தேடும் விஜய்</h2><p>இதற்கு பதிலடி கொடுத்த ஆர்.பி உதயகுமார் ‘சமூக வலைதளங்களில் பல ஆயிரம் கோடிகளை இறைத்து கவர்ச்சியான வசனங்கள் மூலம் ஜென்சி தலைமுறையை மூளைச்சலவை செய்து விஜய் இந்த வெற்றியை பெற்றுள்ளார். கொள்கை இல்லாத இந்த விபரீத அரசியல் போக்கால் தமிழகத்தின் எதிர்காலமே பாழாகிவிடும்.. பெரும்பான்மையை நிரூபிக்க குறுக்கு வழியை தேடும் விஜயிடம் கேள்வியெழுப்பினால்  மவுனமே பதிலாக கிடைக்கிறது.</p><h2>அரசியலில் இருந்து விலகல்</h2><p>மேலும் ‘தவெகவின் 17 சட்டமன்ற உறுப்பினர்களின் முகத்தை பார்த்து அவர்களின் பெயரை முதல்-அமைச்சர் விஜய் சொல்லிவிட்டால் நான் பொது வாழ்க்கையிலிருந்தே அதாவது அரசியலில் இருந்தே விலகி விடுகிறேன்’ என அவர் சவால் விட்டிருக்கிறார்.</p><h2>தவெக கட்சி</h2><p>சமீபத்தில் கூட <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">முதல்-அமைச்சர் விஜய் </a>கரூர் சம்பவத்தால பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை கொடுத்து தொடர்பாக கருத்து தெரிவித்த ஆர்.பி உதயகுமார் ‘ஊரான் வீட்டு நெய்யில் ஸ்வீட் செய்யாதீங்க விஜய். மக்கள் பணத்தில் தவெக கட்சியை வளர்க்க நினைத்தால் தமிழகத்தில் இளைய சமுதாய புரட்சி வெடிக்கும்’ எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>வைரமுத்துவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சீமான்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/seeman-extends-birthday-wishes-to-vairamuthu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/seeman-extends-birthday-wishes-to-vairamuthu#comments</comments><guid isPermaLink="false">9acd1749-03f3-4ec3-8282-f2d4c134b6fe</guid><pubDate>Mon, 13 Jul 2026 11:04:36 +0000</pubDate><atom:updated>2026-07-13T11:04:36.033Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,வாழ்த்து,வைரமுத்து,பிறந்தநாள்,Wishes,Poet Vairamuthu,நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/ka0ybzuo/vairamuthuseeman.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வைரமுத்து,சீமான்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/ka0ybzuo/vairamuthuseeman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">வைரமுத்துவிற்கு பிறந்தநாள் வாழ்த்து</a> தெரிவித்த சீமான். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>ஆண் அன்னை</h2><p>இயற்றமிழ் மூலம் இசை தமிழ் தந்த தமிழ் பெருங்கவி சங்கத்தமிழ் சாறெடுத்து தங்கத்திரை தட்டில் வைத்து கவித்தமிழ் அமுதூட்டிய ஆண் அன்னை! செந்தமிழ் சொல்லெடுத்து தேன்மொழி வார்த்த தென்மொழிப் பாவலன்!</p><h2>தமிழ் அடையாளம்</h2><p>காலம் கடந்து தழைக்கும் தன் தமிழால், ஞாலம் உள்ள வரை நிலைக்கும் தன் மொழியால்,  இறவா இலக்கியம் படைத்து சிகரங்களை தொட்டு கள்ளிக்காட்டு இதிகாசம் கண்டு, கருவாச்சி காவியம் வடித்து, மூன்றாம் உலகப்போர் தொடுத்து, தண்ணீர் தேசம் நிறைத்து, தமிழாற்றுப்படை கண்ட எங்கள் கவியாற்றுப்படை! கவி உலகின் தமிழ் அடையாளம்!</p><h2>வடுகப்பட்டியின் தமிழ் தென்றல்</h2><p>மகாகவிதையாய் வீசி மனங்களை வருடிய வடுகப்பட்டியின் தமிழ் தென்றல்! வையம் உள்ளவரை ஐயா வைரமுத்துவின் வைரத் தமிழ் உலகில் உலவும்! ஞாலத்து விருதுகளையெல்லாம் தம் ஞானத்துச் செறிவால் தமிழ் அன்னையின் காலடியில் சேர்ப்பித்த ஈடு இணையற்ற என் மண்ணின் கவிஞன்!</p> <p>முத்தமிழ்ப்பேரறிஞர் கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தென்மேற்கு பருவமழையால் அணைகள் நிரம்பாது - கோவை வெதர்மேன் அதிர்ச்சி தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dams-not-filling-due-to-southwest-monsoon-coimbatore-weathermans-shocking-information</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dams-not-filling-due-to-southwest-monsoon-coimbatore-weathermans-shocking-information#comments</comments><guid isPermaLink="false">f2b222c2-b924-400f-b777-f49bb63efa14</guid><pubDate>Mon, 13 Jul 2026 10:59:20 +0000</pubDate><atom:updated>2026-07-13T10:59:20.094Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,Weather,தென்மேற்கு பருவமழை,அதிர்ச்சி தகவல்,Shocking information,அணை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/6fjbe7of/113.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எல் நினோ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/6fjbe7of/113.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p>தென்மேற்கு பருவமழை மற்றும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B">எல் நினோ</a> தொடர்பாக, கோவை வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p>பல வருடங்கள் கழித்து கோவை மற்றும் கொங்கு மண்டலத்தில் எல் நினோ காரணமாக ஜூலை மாதத்தில் வெயில் மற்றும் வறண்ட காற்று பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த மாத இறுதிவரை இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படப்போவதில்லை. நாம் முன்பு கூறியிருந்தது போலவே தென்மேற்கு பருவமழை இந்த வருடம் அணைகளை நிரப்புவது சாத்தியமற்றது.</p><p>இந்த வருடம் விவசாயம் செய்பவர்கள் அக்டோபர் நவம்பர் மாதம் வடகிழக்கு பருவமழை எப்படி மழை பெய்கிறது என்று பொறுத்திருந்து பார்த்து அடுத்த பயிர் நடும் பணியை செய்யலாம். அதுவரை இருக்கும் பயிரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். பாலக்காடு கணுவாய் தென்னை விவசாயிகள் மிகுந்த கவனத்துடன் தங்களது தென்னை பயிரை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். இந்த வருடம் மற்றும் அடுத்த வருட வெயில் காலம் நமக்கு சோதனை காலம் தான். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நடிகையை நிர்வாணமாக போஸ் கொடுக்க வற்புறுத்தல்; தயாரிப்பாளர் உள்பட 3 பேர் கைது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/forcing-actress-to-pose-photo-shoot</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/forcing-actress-to-pose-photo-shoot#comments</comments><guid isPermaLink="false">aef6af54-06a0-4593-bfcd-0c240733aedb</guid><pubDate>Mon, 13 Jul 2026 10:53:24 +0000</pubDate><atom:updated>2026-07-13T10:53:24.050Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,கைது,arrest,சினிமா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/cuwi4a7w/arrest33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/cuwi4a7w/arrest33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>போரூர்,</p><p>சென்னை சாலிகிராமத்தில் வசிக்கும் 31 வயதான இளம்பெண் சின்னத்திரை மற்றும் சினிமா படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.</p><h2>"போட்டோ ஷூட்"</h2><p>இவரை பெருங்குடி பகுதியை சேர்ந்த நந்தி ராம நாதன் (65) என்பவர் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது "நான் சினிமா தயாரிப்பாளர் புதிதாக தயாரிக்கும் படத்தில் நீங்கள் கதாநாயகியாக நடிக்க வேண்டும்.</p><p>மேலும் அதே பகுதி காவேரி தெருவில் உள்ள தங்கும் விடுதியில் நடந்து வரும் "போட்டோ ஷூட்" டில் கலந்து கொள்ள வேண்டு, என்று கூறி அழைத்தார்.</p><p>இதையடுத்து நடிகை அந்த விடுதிக்கு நேரில் சென்றார். அப்போது தயாரிப்பாளர் நந்தி ராமநாதனுடன் சென்னை தரமணி மற்றும் விருதுநகரை சேர்ந்த 2 இளம்பெண்கள் 7 வயது சிறுமி உள்ளிட்ட 4 பேர் ஒரே அறையில் இருந்தனர். அங்கிருந்த பெண் தனது செல்போன மூலம் பல்வேறு கோணங்களில் நடிகையை கவர்ச்சியான தோற்றத்தில் புகைப்படம் எடுத்தார்.</p><h2>நிர்வாண கோலத்தில்</h2><p>பின்னர் படத்தில் சாமி வேஷம் போட வேண்டி உள்ளது. உடம்பில் காயத் தழும்பு ஏதும் தெரியக் கூடாது. எனவே முகத்தை  மறைத்துக் கொண்டு நிர்வாண கோலத்தில்  புகைப்படம் ஒன்று எடுக்க வேண்டும் என கூறினார்.</p><p>இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நடிகை, அங்கிருந்த தயாரிப்பாளர் மற்றும் உடன் இருந்த பெண்களிடம் தகராறில்  ஈடுபட்டு விடுதி அறையில் இருந்து வெளி யேறினார்.</p><h2>3 பேர் கைது</h2><p>மேலும் இதுபற்றி உட னடியாக செல்போன் மூலம் காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சிங்கப்பெண் அதிரடிப்படை சப்- இன்ஸ் பெக்டர் ஜானகி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து நடிகையிடம் அத்து மீறலில் ஈடுபட்ட தயாரிப்பாளர் நந்தி ராமநாதன் மற்றும் அங்கிருந்த 2 பெண்கள் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.</p><h2>சிறுமி மீட்பு</h2><p>அவர்கள் மீது பாலியல் தொந்தரவு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் உடன் இருந்த சிறுமியை போலீசார் மீட்டு அடையாறில் உள்ள குழந்தைகள் காப்ப கத்தில் சேர்த்தனர்.</p><p>கதாநாயகி வாய்ப்பு தருவதாக கூறி போட்டோ ஷூட் என்கிற பெயரில் நடிகையிடம் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நிர்வாண படம் </a>எடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் கடை எதிர்ப்பு போராட்டம்: பள்ளி மாணவிகள் மீது காவல்துறை தடியடி நடத்தியதற்கு டி.டி.வி தினகரன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/protest-against-tasmac-shop-ttv-dhinakaran-strongly-condemns-police-lathi-charge-on-schoolgirls</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/protest-against-tasmac-shop-ttv-dhinakaran-strongly-condemns-police-lathi-charge-on-schoolgirls#comments</comments><guid isPermaLink="false">bc0b863c-211e-4561-96a7-5428fa90dd2c</guid><pubDate>Mon, 13 Jul 2026 10:45:11 +0000</pubDate><atom:updated>2026-07-13T10:45:11.278Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,TTV Dhinakaran,கண்டனம்,டாஸ்மாக் கடை,பள்ளி மாணவிகள்,Tasmac shop,condemns,schoolgirls,டி.டி.வி தினகரன்,போலீஸ் தடியடி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/ggv6mf4v/ttv-dinakaran.gif" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/ggv6mf4v/ttv-dinakaran.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>டாஸ்மாக் கடை எதிர்ப்பு போராட்டம்: பள்ளி மாணவிகள் மீது காவல்துறை தடியடி நடத்தியதற்கு டி.டி.வி தினகரன் கடும் கண்டனம். இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-</p><h2>பள்ளி மாணவிகள் மீது தாக்குதல்</h2><p>அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோடாலியில் இயங்கி வரும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%20%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%20">டாஸ்மாக் மதுபானக் கடையை மூடக்கோரி</a> பொதுமக்களுடன் இணைந்து போராடிய பள்ளி மாணவிகள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. </p><h2>ஜனநாயகத்திற்கு எதிரான அணுகுமுறை</h2><p>மக்களின் உயிரையும், உடமைகளையும் பாதுகாத்து சட்டம், ஒழுங்கை பேணிக்காக்க வேண்டிய பொறுப்பும், கடமையுமிக்க காவல்துறையினரே, சமூக பொறுப்புடனும், துணிச்சலுடன் குரல் எழுப்பிய பள்ளி மாணவிகளிடம் தனது அதிகாரத்தை வெளிப்படுத்தியிருப்பதும், அவர்களை குற்றவாளிகளை போல சித்தரித்திருப்பதும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு  எதிரான அணுகுமுறையாகும்.</p><h2>அதிகாரப்போக்கு</h2><p>குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருபுறம் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கிவிட்டு, மறுபுறம் பெண்களுக்கு நாள்தோறும் பல்வேறு சிக்கல்களை உருவாக்கி கொண்டிருக்கும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி அறவழியில் போராடிய பள்ளி மாணவிகள் மீது காவல்துறையின் மூலம் அடக்குமுறையை ஏவியிருப்பது தவெக அரசின் அளவுக்கு மீறிய அதிகாரப்போக்கையே வெளிப்படுத்துகிறது. </p> <h2>வலியுறுத்தல்</h2><p>எனவே, டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடி காவல்துறையினர் தாக்கியதில் காயமடைந்த மாணவிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதோடு, பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்துள்ள சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&quot;த.வெ.க. ஆட்சியிலும் தொடர்கிறதா லாக்-அப் மரணங்கள்?&quot; - நயினார் நாகேந்திரன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/do-lock-up-deaths-continue-under-the-tvk-regime-nainar-nagendran-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/do-lock-up-deaths-continue-under-the-tvk-regime-nainar-nagendran-asks#comments</comments><guid isPermaLink="false">c55fde31-eafc-48bc-a182-428d5f1d2af0</guid><pubDate>Mon, 13 Jul 2026 10:40:52 +0000</pubDate><atom:updated>2026-07-13T10:40:52.894Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,Chennai,சென்னை,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,த.வெ.க.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/sfl0nj3r/112.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/sfl0nj3r/112.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>கடந்த ஜூலை 9-ம் தேதி குட்கா வழக்கில் கைதாகி, நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சபரிவர்மன் என்ற விசாரணைக் கைதி, சிறையிலேயே மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். ஆனால் மாற்றுத் திறனாளியான சபரிவர்மன் சிறையில் அடித்துக் கொல்லப்பட்டதாக, குற்றம் சாட்டி அவரது உறவினர்கள் போராடுகின்றனர். கடும் அதிர்ச்சியையும், பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பும் இச்சம்பவத்தின் மீது ஜோசப் விஜய் அரசு முறையான விசாரணை நடத்த வேண்டும். </p><h2>லாக்-அப் மரணம்</h2><p>காரணம், தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்படுபவர்களுக்கு அவ்வப்போது கை, கால்களில் எலும்பு முறிவுகள் ஏற்படுவதும், “பாத்ரூமில் வழுக்கி” விழுந்துவிட்டதாக காவல்துறை அதை மழுப்புவதும், “கைதிகள் செல்லும் கழிவறைகள் மட்டும் தான் எப்பொழுதும் வழுக்குமா” என நீதிமன்றங்கள் கண்டிப்பதும் தொடர்கதையாகி வரும் நிலையில், காவல் நிலையங்களில் ஏற்படும் மரணங்களை நம்மால் எளிதாகக் கடந்துவிட முடியவில்லை. காரணம், திருப்புவனம் அஜித்குமாரின் லாக்-அப் மரணம் நம்முள் ஏற்படுத்திய தாக்கம் அத்தகையது. அவரைப் போன்று இன்னொரு அப்பாவியை இழக்க தமிழகம் தயாராக இல்லை.</p><h2>வலியுறுத்தல்</h2><p>எனவே, விசாரணைக் கைதி சபரிவர்மன் மரணத்தின் உண்மைக்காரணம் என்னவென்பதை எவ்வித சமரசமுமின்றி கண்டறிய வேண்டுமெனவும், சிறையில் உள்ள கைதிகளின் உடல்நலத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டுமெனவும் முதல்-அமைச்சரை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பிரசார வாகனத்தில் பெரம்பூர் புறப்பட்டார் முதல்-அமைச்சர் விஜய் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-set-out-for-perambur-in-a-campaign-vehicle</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-set-out-for-perambur-in-a-campaign-vehicle#comments</comments><guid isPermaLink="false">470f4bc3-32c0-478f-890a-da8ee944eec3</guid><pubDate>Mon, 13 Jul 2026 10:28:11 +0000</pubDate><atom:updated>2026-07-13T10:28:11.662Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பெரம்பூர்,Perambur,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/zthg99zp/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/zthg99zp/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முதல்-அமைச்சர் விஜய் சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதில் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பெரம்பூர் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.தொகுதி மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். </p> <h2>எம்.எல்.ஏ. அலுவலகம்</h2><p>அதன்படி, பெரம்பூர் தொகுதி அலுவலகம் சென்னை வியாசர்பாடி சர்மா நகர் 1-வது தெருவில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தின் முன்பகுதியில், "பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ச.ஜோசப் விஜய்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றிலும் காம்பவுண்டு சுவர் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. </p><p>முதல்-அமைச்சர் விஜய்க்காக தனி அறையும் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தினுள் தனியாக கம்ப்யூட்டர்கள் அமைக்கப்பட்டு, 10 பணியாளர்கள் தினமும் பொதுமக்களின் குறைகளைக் கேட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.</p><h2>உற்சாக வரவேற்பு</h2><p>இந்த அலுவலகத்தை முதல்-அமைச்சர் விஜய் இன்று திறந்து வைக்கிறார். இதற்காக முதல்-அமைச்சர் விஜய் தற்போது தனது பிரசார வாகனத்தில் பெரம்பூர் புறப்பட்டு சென்றுள்ளார். சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, இன்று முதல் முறையாக அவர் தனது தொகுதிக்குச் செல்வதால், அவருக்கு த.வெ.க. நிர்வாகிகள் வழிநெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.</p><p>ஏற்கனவே செயல்பட்டு வந்த கட்டிடம் ஒன்றை புதுப்பித்து, அதனை நவீனமயமான எம்.எல்.ஏ. அலுவலகமாக மாற்றியுள்ளனர். எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்து வைத்த பிறகு, முதல்-அமைச்சர் விஜய் அருகில் உள்ள ரேஷன் கடைக்குச் சென்று ஆய்வு செய்கிறார். புதிய ரேஷன் கார்டுகள் மற்றும் பட்டாக்களையும் பொதுமக்களுக்கு அவர் வழங்க உள்ளார். </p>]]></content:encoded></item><item><title>சேலத்தில் அம்பேத்கர் சிலையை மீண்டும் நிறுவிட வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-communist-party-of-india-has-urged-that-the-ambedkar-statue-be-re-installed-in-salem</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-communist-party-of-india-has-urged-that-the-ambedkar-statue-be-re-installed-in-salem#comments</comments><guid isPermaLink="false">236ed719-e62d-44a2-aaaa-14ab77411754</guid><pubDate>Mon, 13 Jul 2026 10:22:04 +0000</pubDate><atom:updated>2026-07-13T10:22:04.734Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,Communist Party of India,Salem,சேலம்,வேண்டுகோள்,Ambedkar statue,அம்பேத்கர் சிலை,urge</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/vcimb827/verapandiyan.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/vcimb827/verapandiyan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சேலம் மாவட்டம் ஒதியத்தூரில், அம்பேத்கர் சிலையை மீண்டும் நிறுவ வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p> <h2>பேரறிஞர் அம்பேத்கர்</h2><p>சேலம் மாவட்டம் கெங்கவள்ளி வட்டம் ஒதியத்தூர் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த  <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88">அம்பேத்கர் சிலை</a> அகற்றப்பட்டுள்ளது. நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை வரைவு செய்து, அறிஞர்களும், தேச விடுதலை போராட்ட வீரர்களும் நிரம்பிய அவையில் முன் மொழிந்து, விரிவாக விவாதித்து, ஒரு மனதாக நிறைவேற்றிட பெரும் பங்களிப்பு செய்தவர் அம்பேத்கர்.  கம்பீரமாக காட்சியளிக்கும் வடிவில் அவரது சிலை ஒதியத்தூரில் அமைக்கப்பட்டது.</p><h2>அம்பேத்கர் சிலை அகற்றம்</h2><p>சாதிய ஆதிக்க மனோபாவம் கொண்ட சிலர் அம்பேத்கர் சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பதற்றத்தை உருவாக்கி உள்ளனர். சட்டம் - ஒழுங்கை பராமரித்து, சாதி ஆதிக்க சக்திகளை ஒடுக்க வேண்டிய அரசு நிர்வாகம், அந்த சமூக விரோத கும்பலுக்கு பணிந்து அம்பேத்கர் சிலையை அகற்றி விட்டது.</p> <h2>அவமானம்</h2><p>இந்தியாவின் மிக சிறந்த சமூக அறிஞரும், சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் சலிப்பறியாத போராட்டம் நடத்திய வருமான அம்பேத்கரை குறிப்பிட்ட சாதி எல்லைக்குள் அடைத்து அடையாளப்படுத்தும் செயல் நாட்டுக்கே அவமானமாகும். இந்த மாபெரும் குற்றச் செயலில் ஈடுபட்ட சிலரை தவிர்த்து, ஒட்டு மொத்த சமூகமும் ஏற்றுக் கொண்ட தலைவர் அண்ணல் அம்பேத்கர் திருவுருவ சிலையை அகற்றப்பட்ட, அதே இடத்தில் அரசு அமைத்துத் தர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டு கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>