<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 15 Jul 2026 02:54:56 +0000</lastBuildDate><item><title>கள்ளக்குறிச்சி: தொழிலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; 4 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kallakurichi-petrol-bomb-thrown-at-workers-house-4-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kallakurichi-petrol-bomb-thrown-at-workers-house-4-arrested#comments</comments><guid isPermaLink="false">638b985c-1cd8-4f9e-ab5f-2d13ddd15cfd</guid><pubDate>Wed, 15 Jul 2026 02:54:13 +0000</pubDate><atom:updated>2026-07-15T02:54:13.908Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கள்ளக்குறிச்சி,Kallakurichi,Worker,தொழிலாளி,House,4 arrested,4 பேர் கைது,வீடு,petrol bomb attack,பெட்ரோல் குண்டுவீச்சு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/z6pf2sbt/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல் குண்டு வீசிய 4 பேர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/z6pf2sbt/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சி, </p><p>கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஒரு தொழிலாளி <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 4 பேரை</a> போலீசார் கைது செய்தனர்.</p><h2>வாய்த்தகராறு</h2><p>கள்ளக்குறிச்சி அருகே அகரக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி அந்தோணிசாமி (வயது 28). இவருக்கும் சிறுவங்கூரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்(33) என்பவருக்கும் கடந்த 7-ந்தேதி டீக்கடையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பாலகிருஷ்ணனும் அவரது நண்பர்களும் சேர்ந்து அந்தோணிசாமியைத் தாக்கியுள்ளனர்.</p><h2>பெட்ரோல் குண்டு வீசிய 4 பேர் கைது</h2><p>இதனால் ஆத்திரம் அடைந்த பாலகிருஷ்ணன், நேற்று அதிகாலை தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து அந்தோணிசாமியின் வீட்டிற்கு சென்று பெட்ரோல் குண்டுகளை வீசி உள்ளார். இதில் வீட்டின் முன்பக்க கதவு தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய பாலகிருஷ்ணன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>திருவள்ளூர் இட்லி மாவு வாங்குவது போல் நடித்து பெண் கொடூர கொலை:  குற்றவாளி அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvallur-woman-brutally-murdered-while-pretending-to-buy-idli-flour-accused-gives-shocking-confession</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvallur-woman-brutally-murdered-while-pretending-to-buy-idli-flour-accused-gives-shocking-confession#comments</comments><guid isPermaLink="false">77e171ad-cf36-449d-aff4-9837034156ea</guid><pubDate>Wed, 15 Jul 2026 02:18:23 +0000</pubDate><atom:updated>2026-07-15T02:18:23.747Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thiruvallur,திருவள்ளூர்,police investigation,போலீசார் விசாரணை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/t2c90qwb/tdpda.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/t2c90qwb/tdpda.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>பொன்னேரி</p><p>திருவள்ளூரில் பெண்ணை கொலை செய்தது ஏன்? என குற்றவாளி அளித்த வாக்குமூலம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.</p><p>திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் உள்ள பாபநாரிஷி கோவில் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 60). இவர் அதே பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி வனஜா (வயது 55). இவர் வீட்டிலேயே இட்லி மாவு தயாரித்து விற்பனை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை ராதாகிருஷ்ணன் வழக்கம்போல் மளிகைக்கடைக்கு சென்று விட்டார். வீட்டில் வனஜா மட்டும் தனியாக இருந்தார்.</p><p>சிறிது நேரத்தில் வீட்டிற்கு திரும்பி வந்த ராதாகிருஷ்ணன், வீடு பூட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, வனஜா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை கண்டு கதறி அழுதார்.</p>  <h2>போலீசார் விசாரணை</h2><p>இதுபற்றிய தகவல் அறிந்து, திருப்பாலைவனம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை மற்றும் கொள்ளை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அதில், முகமூடி அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர், வனஜா வீட்டிற்கு வந்து இட்லி மாவு கேட்டுள்ளார். அப்போது, திடீரென தன்னிடம் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வனஜாவின் கழுத்தில் குத்தினார்.</p>  <h2>நகைகள் பறிப்பு</h2><p>இதில் பலத்த காயமடைந்து கீழே சாய்ந்த அவருடைய கழுத்தில் இருந்த தாலி, தாலிச்சரடு, தங்க வளையல்கள் உள்ளிட்ட மொத்தம் 12.5 சவரன் தங்க நகைகளை பறித்து கொண்டார். பின்னர் வீட்டை வெளிப்புறமாக பூட்டிவிட்டு, மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக சம்பவம் நடந்த வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், கொலையாளி பயன்படுத்திய மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை போலீசார் கண்டுபிடித்தனர்.</p><p>அதைத்தொடர்ந்து பழவேற்காடு குளத்துமேடு பகுதியில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து திருப்பாலைவனம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.</p>  <h2>அதிர்ச்சி வாக்குமூலம்</h2><p>போலீஸ் விசாரணையில், அவர் ஊத்துக்கோட்டை அருகே பாலவாக்கம் பகுதியை சேர்ந்த யுகேந்தர் என்ற அப்துல் ரகுமான் என்பதும், வனஜாவை திட்டமிட்டு அவர் கொலை செய்ததும் உறுதியானது.  போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், சென்னையில் மாநகர போக்குவரத்து கழகத்தில் தற்காலிக பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறேன். காதலித்து திருமணம் செய்து கொண்ட நான், பழவேற்காட்டில் கடந்த 6 ஆண்டுகளாக 7 மாத கர்ப்பிணி மனைவியுடன் வசித்து வருகிறேன்.</p><p>அப்பகுதியில் புது வீடு கட்டி வரும் நிலையில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது.  இதனால், வனஜா வீட்டை நோட்டமிட்டு அவர் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து கொண்டு திட்டமிட்டு அவரை கொலை செய்து நகையை திருடிவிட்டு தப்பி சென்றேன் என போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.</p>  <h2>வழக்குப்பதிவு</h2><p>இதையடுத்து அப்துல் ரகுமான் மீது கொலை மற்றும் கொள்ளை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 12.5 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.  தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>அடகு கடையில் 139 சவரன் நகைகள் மோசடி: 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/139-sovereigns-of-jewelry-stolen-from-pawn-shop-police-nab-3-people</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/139-sovereigns-of-jewelry-stolen-from-pawn-shop-police-nab-3-people#comments</comments><guid isPermaLink="false">7f9ffeba-0abe-4730-991a-52872760d1f8</guid><pubDate>Wed, 15 Jul 2026 02:08:35 +0000</pubDate><atom:updated>2026-07-15T02:08:35.840Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Theni,தேனி,Jewelry Fraud,நகை மோசடி,3 people,3 பேர்,அடகு கடை,Aandipatti,ஆண்டிப்பட்டி,போலீசார் வலைவீச்சு,pawn shop,police net sweep</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/hg5j6oel/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நகை மோசடி, கோப்புப்படம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/hg5j6oel/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி, </p><p>ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனை அருகே இருந்த நகை அடகு கடையில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">139 சவரன் நகைகள் மோசடி</a>யில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p><h2>நகை அடகு கடை</h2><p>தேனி மாவட்டம் தும்மக்குண்டுவைச் சேர்ந்தவர் முருகன்(எ) துரைமுருகன் (வயது 38). இவர் ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனை அருகே நகை அடகுக்கடையை நடத்தி வந்தார். இந்த கடையில் ரோசனம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் 6 சவரன் நகையை அடகு வைத்து ரூ.1.68 லட்சம் கடன் பெற்றிருந்தார். </p><h2>139 சவரன் நகைகள் மோசடி</h2><p>சமீபத்தில் ரமேஷ் தனது நகையை மீட்பதற்காகச் சென்றபோது, அடகுக்கடை பூட்டப்பட்டு துரைமுருகன் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மொத்தம் 64 வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த 139 சவரன் நகைகளைத் திருப்பித் தராமல் துரைமுருகன் மோசடி செய்தது அம்பலமானது. இதுதொடர்பாக துரைமுருகன் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>பெண்களை வேட்டையாடும் பாலியல் குற்றவாளி: &quot;நாகர்கோவில் காசி சாகும் வரை சிறையிலேயே இருக்க வேண்டும்&quot; - ஐகோர்ட்டு அதிரடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nagercoil-kasi-must-remain-in-prison-until-his-death-high-courts-stern-order</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nagercoil-kasi-must-remain-in-prison-until-his-death-high-courts-stern-order#comments</comments><guid isPermaLink="false">ce0f83ce-0f09-4373-b010-355d08641cbc</guid><pubDate>Wed, 15 Jul 2026 01:45:35 +0000</pubDate><atom:updated>2026-07-15T01:45:35.936Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,நாகர்கோவில்,Madurai High Court,மதுரை ஐகோர்ட்டு,காசி,Kasi,பாலியல் குற்றவாளி,சாகும் வரை சிறை,sexual abuse,Nagarcoil</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/t2akbkjh/paliy.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/t2akbkjh/paliy.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p>பாலியல் வழக்கில் நாகர்கோவில் காசிக்கு கீழ் கோர்ட்டு விதித்த சாகும் வரை சிறை தண்டனையை உறுதி செய்து <a href="https://www.dailythanthi.com/topic/madurai-high-court">மதுரை ஐகோர்ட்டு</a> உத்தரவிட்டது.</p><h2>நாகர்கோவில் காசி</h2><p>நாகர்கோவிலை சேர்ந்தவர் சுஜி என்ற காசி (வயது 35). இவர் சமூக வலைதளங்கள் மூலமாக இளம்பெண்களிடம் பழகி, அவர்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக 2020-ம் ஆண்டில் புகார்கள் எழுந்தன. அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவாகின. இந்த வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டன.</p><h2>ஆபாச வீடியோக்கள், நிர்வாண புகைப்படங்கள்</h2><p>அதே ஆண்டில் அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்த மடிக்கணினி, செல்போன்களில் இளம்பெண்கள், மாணவிகள் தொடர்பான 400-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் 1,900 நிர்வாண புகைப்படங்கள் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p><p>இந்த வழக்கு நாகர்கோவில் விரைவு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை (இயற்கையாக மரணம் அடையும் வரை சிறை தண்டனை) விதித்து 2023-ம் ஆண்டில் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து காசி, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.</p><h2>பெண்களை வேட்டையாடும் பாலியல் குற்றவாளி</h2><p>இந்த தண்டனையை எதிர்த்து அவர் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், ராமகிருஷ்ணன் ஆகியோர் நேற்று பிறப்பித்த உத்தரவு வருமாறு:-</p><p>திட்டமிட்ட காதல் மோசடிக்கு இந்த வழக்கு ஒரு சிறந்த உதாரணம். இளம் பெண்களின் நம்பிக்கை, உணர்வுப்பூர்வமான பலவீனம், பொருளாதார தேவை ஆகியவற்றை மனுதாரர் தனக்கு சாதகமாக எல்லா வழிகளிலும் பயன்படுத்தி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு உள்ளார். இந்த இழிவான செயலை மனுதாரர் வஞ்சகமாக திட்டமிட்டு செயல்படுத்தி இருக்கிறார். அவரின் செயல்பாடு என்பது பெண்களை வேட்டையாடும் பாலியல் குற்றவாளி என்பதையே வெளிப்படுத்துகிறது. எனவே அவருக்கு கீழ்கோர்ட்டு விதித்த தண்டனையை இந்த கோர்ட்டு உறுதி செய்கிறது.</p><h2>சிறுமிகள், பெண்கள்</h2><p>இளம் தலைமுறையினர் இணையதளம், தொழில்நுட்பம் சார்ந்த நடவடிக்கைகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். டிஜிட்டல் உலகில் தங்களின் அந்தரங்கத்தையும், கண்ணியத்தையும் பாதுகாத்துக்கொள்ளும்படி ஒவ்வொரு சிறுமியையும், பெண்களையும் இந்த கோர்ட்டு மரியாதையுடன் கேட்டுக்கொள் கிறது. (இது சம்பந்தமான சில வரிகளை தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் இந்த உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது).</p><h2>வக்கிரமான வீடியோ</h2><p>டிஜிட்டல் யுகத்தில் இருக்கும் நாம், வழக்கு விசாரணைகளின்போது வன்முறை சம்பவங்களை நேரடியாக பார்க்கும் கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளோம். பாலியல் குற்றங்களை விசாரிக்கும் கோர்ட்டுகளில் மனிதர்களின் மோசமான நடத்தை சம்பவங்களை வீடியோக்கள், புகைப்படங்களாக சமர்ப்பிக்கின்றனர்.</p><p>இந்த வழக்கை விசாரித்த பெண் போலீஸ் அதிகாரி, வக்கிரமான வீடியோ, புகைப்படங்களை பலமுறை அலசி ஆராய வேண்டியிருந்தது. அவரை போல அரசு வக்கீல்கள், நீதிபதிகளும் இந்த ஆவணங்களை பார்க்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதன்மூலம் அதிகாரிகள் இயற்கைக்கு மாறான நடவடிக்கையில் ஈடுபட இந்த அமைப்பு கட்டாயப்படுத்துகிறது.</p><h2>உளவியல் பாதிப்பு</h2><p>பகுத்தறிவு மனம், "இது ஒரு வழக்கிற்கான ஆதாரம் மட்டுமே” என்று கூற முயல்கிறது, ஆனால் மூளையின் ஆழமான, பரிணாம வளர்ச்சியடைந்த பகுதிகள், ஒரு நேரடி, கொடூரமான தாக்குதலை மீண்டும், மீண்டும் காண்பது போல் உணர்கின்றன. அதிர்ச்சியூட்டும் டிஜிட்டல் ஆதாரங்களை மீண்டும், மீண்டும் பார்ப்பது, உளவியல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதற்கான பயிற்சியின் மூலம் இவர்களை பாதுகாக்க வேண்டும்.</p><p>இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர். </p>]]></content:encoded></item><item><title>வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் ‘தூத்துக்குடி கருவாடு’</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-karuvadu-to-be-exported-abroad</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-karuvadu-to-be-exported-abroad#comments</comments><guid isPermaLink="false">c2f3c380-c707-44a3-8b0d-fa5d92149e51</guid><pubDate>Wed, 15 Jul 2026 01:37:08 +0000</pubDate><atom:updated>2026-07-15T01:37:08.686Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆஸ்திரேலியா,Australia,Thoothukudi,தூத்துக்குடி,Sri Lanka,இலங்கை,foreign countries,ஏற்றுமதி,export,கருவாடு,வெளிநாடுகள்,Karuvadu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/ipf3nryy/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கருவாடு உலர வைக்கும் தொழிலாளர்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/ipf3nryy/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடியில் இருந்து வெளிநாடுகளுக்கு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கப்பல்கள் மூலம் கருவாடு ஏற்றுமதி</a> செய்யப்படுகிறது. </p><h2>வேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரம் </h2><p>முத்துநகரான தூத்துக்குடியில் துறைமுகம், விமான நிலையம், ரெயில் நிலையம், பஸ் நிலையம் என்று அனைத்து போக்குவரத்து வசதிகளும் உள்ளன. இதனால் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் தொழில் நகரமாக தூத்துக்குடி முத்திரை பதித்து வருகின்றது. குறிப்பாக மீன்பிடி தொழில் சிறப்புடன் விளங்குகிறது. மேலும் ஆண்டில் பெரும்பாலான மாதங்களில் வெயில் சுட்டெரிப்பதால் கருவாடு உற்பத்தியும் முழுவீச்சில் நடைபெறுகிறது.</p><h2>வெளிநாடுகளுக்கு கருவாடு ஏற்றுமதி</h2><p>தூத்துக்குடியில் மீன்பிடி தடைகாலத்துக்கு பிறகு விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதால், அதிகளவில் மீன்கள் பிடிக்கப்படுகின்றன. அதன் பின்னர் அந்த மீன்களை பதப்படுத்தியும், கருவாடாக மாற்றியும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். </p><h2>வேலைவாய்ப்பு</h2><p>தூத்துக்குடியில் கருவாடு உற்பத்தி மற்றும் விற்பனை குறித்து மீனவர்கள் கூறுகையில், "பொதுவாக நெத்திலி, சாளை, சீலா, பாறை போன்ற மீன்கள் மூலம் கருவாடு உற்பத்தி செய்கிறோம். நல்ல மீன்களை தேர்வு செய்து, அவற்றில் உள்ள குடல் மற்றும் தேவையற்ற பகுதிகளை நீக்குவோம். அதன் பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து சில மணி நேரம் முதல் ஒரு நாள் வரையிலும் ஊற வைப்போம். உப்பானது மீன்களை பாதுகாப்பதுடன் சுவையூட்டுகின்றன. உப்பு ஊறிய மீன்கள் சுத்தமான உலர்த்தும் தளங்களில் பரப்பி, பல நாட்கள் நன்கு வெயிலில் உலர்த்துவோம். போதுமான அளவு ஈரப்பதம் நீங்கிய பிறகு கருவாட்டின் தரத்தை பரிசோதித்து விற்பனைக்கு அனுப்புகிறோம். இதன் மூலம் ஆயிரக்கணக்கான மீனவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது” என்றனர். </p><h2>வெளிநாட்டினரின் விருப்பம்</h2><p>தற்போது மீன்களை ரகம் வாரியாக தரம் பிரித்து, சுத்தம் செய்து, உப்பு கலந்து வெயிலில் காய வைக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். வெயில் கொளுத்துவதால் மணமணக்கும் நம்ம ஊரு கருவாடு உற்பத்தி சூடுபிடித்துள்ளது. இங்கு தயாரிக்கப்படும் கருவாடு அதிகளவில் இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதுதவிர ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, துபாய், கத்தார், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கும் அதிகளவில் ஏற்றுமதியாகிறது. </p><p>மருத்துவ குணம் கொண்ட கருவாடுகளுக்கு அதிக கிராக்கி உள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் ஆர்வமுடன் கருவாடுகளை கொள்முதல் செய்கின்றனர். வெளிநாட்டினரும் நம்ம ஊரு கருவாடுகளை அதிகம் விரும்புகின்றனர். வியாபாரிகளும் போட்டி போட்டு வாங்கி செல்வதால் மீனவர்களுக்கு நல்ல விலை கிடைக்கிறது.</p><h2>தேவை அதிகம்</h2><p>இதுகுறித்து தூத்துக்குடியை சேர்ந்த கருவாடு ஏற்றுமதியாளர் ஜோசப் காஸ்கரினோ கூறியதாவது: </p><p>தூத்துக்குடியில் கருவாடு உற்பத்தி முக்கிய இடம் பிடித்துள்ளது. பெரும்பாலும் மாசிக்கருவாடு, நெத்திலி கருவாடு ஏற்றுமதி அதிகளவில் உள்ளது. இந்த கருவாட்டை வெளிநாட்டில் மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். அங்கு தேவை அதிகமாக இருக்கும்போது, நாம் உற்பத்தியை பெருக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. </p><p>தற்போது மீன்பிடி தடைகாலம் முடிந்து விசைப்படகுகள் மீண்டும் கடலுக்கு சென்று வருகின்றன. ஆனால் தூத்துக்குடியில் மீன்களுக்கு அதிக தேவை உள்ளது. இதனால் மக்கள் அதிக விலை கொடுத்து மீன்களை வாங்கி சாப்பிடுகின்றனர். இதேபோன்று கேரள வியாபாரிகள் பெரிய மீன்களை மொத்தமாக வாங்கி ஏற்றுமதி செய்து விடுகின்றனர். இதனால் கருவாடு உற்பத்திக்கு தேவையான மீன்கள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. அதிக விலை கொடுத்து மீன்களை வாங்கி கருவாடு தயாரிக்கும்போது, கருவாட்டின் விலையும் அதிகரித்து விடும். இது வாடிக்கையாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். ரூ.150 முதல் ரூ.230 வரை விற்பனையான ஒரு கிலோ நெத்திலி கருவாடு, தற்போது ரூ.410-க்கு விற்பனையாகிறது. இதேபோன்று மாசிக்கருவாடு கிலோ ரூ.450 முதல் ரூ.550 வரை விற்பனையாகி வருகிறது. மாதத்துக்கு 4 முதல் 5 கன்டெய்னர் கருவாடு ஏற்றுமதியாகும். </p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>பிளாஸ்டிக் பாக்கெட்டில் பால் வினியோகம் நிறுத்தப்படும் - ஐகோர்ட்டில் ஆவின் நிறுவனம் அறிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/milk-supply-in-plastic-packets-to-be-stopped-aavin-company-tells-high-court</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/milk-supply-in-plastic-packets-to-be-stopped-aavin-company-tells-high-court#comments</comments><guid isPermaLink="false">25506904-8cba-4d69-a36e-c20923130c76</guid><pubDate>Wed, 15 Jul 2026 01:32:59 +0000</pubDate><atom:updated>2026-07-15T01:32:59.793Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை ஐகோர்ட்டு,Chennai Highcourt,ஆவின் நிறுவனம்,Aavin Milk,ஆவின் பால் பாக்கெட்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/z8a3562m/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/z8a3562m/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வனம், வன விலங்கு தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் ஐகோர்ட்டு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச், "ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை ஊர்களில் பிளாஸ்டிக் தடை உத்தரவை தீவிரமாக அமல்படுத்தவேண்டும். இந்த ஊர்களில் பாலை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் வினியோகம் செய்வதற்கு பதிலாக மாற்று வழியை தேர்வு செய்யவேண்டும்" என்று உத்தரவிட்டிருந்தது.</p><p>இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆவின் நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில், "ஆவின் பால் வினியோகத்துக்கு மீண்டும் தானியங்கி விற்பனை எந்திரத்தை அறிமுகப்படுத்த உள்ளோம். சோதனை அடிப்படையில் கொடைக்கானல், ஊட்டி நகரங்களில் மக்கள் தொகை நெருக்கம் நிறைந்த பகுதிகளில் இந்த எந்திரங்களை அமைக்கவுள்ளோம்.</p><p>இதற்காக, உத்தரபிரதேசத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் இருந்து ஒரு எந்திரம் 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் என்ற விலையில் இரண்டு எந்திரங்களை வாங்கி உள்ளோம். இந்த எந்திரங்களை வைத்த பிறகு, அருகில் உள்ள வீடுகள், ஓட்டல்கள் ஆகியவற்றுக்கு பாக்கெட்டுகளில் பால் வினியோகிக்கக்கூடாது என மொத்த விற்பனையாளர்கள், ஏஜெண்டுகள். வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்படும். எந்திரங்களை அமைத்த பிறகு ஊட்டி, கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் பால் விற்பனை நிறுத்தப்படும்"என்று கூறப்பட்டிருந்தது.</p>]]></content:encoded></item><item><title>குழந்தைகளை பிரசாரத்துக்கு பயன்படுத்துவது குறித்து ஆய்வு - ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில் மனு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/study-on-the-use-of-children-for-campaigning-election-commissions-reply-in-the-high-court</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/study-on-the-use-of-children-for-campaigning-election-commissions-reply-in-the-high-court#comments</comments><guid isPermaLink="false">6f892b1d-bd2f-439a-9386-9d35e4e7f0ac</guid><pubDate>Wed, 15 Jul 2026 01:16:17 +0000</pubDate><atom:updated>2026-07-15T01:16:17.378Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,தேர்தல் ஆணையம்,Election Commission,சென்னை ஐகோர்ட்டு,Chennai Highcourt,பதில் மனு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/opojcb1o/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/opojcb1o/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>விஜய் பிரசாரம்</h2><p>தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலின்போது, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு எதிராகவும், பெற்றோரையும், குடும்பத்தில் உள்ள மூத்தவர்களையும் தனக்கு ஓட்டு போட சொல்லும்படி குழந்தைகளிடம் முதல்-அமைச்சர் விஜய் பிரசாரம் செய்ததாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வாசுகி என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.</p><p>இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.</p><p>அதில் கூறியிருப்பதாவது:-</p><p>தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தால், அதை தடுக்க பி.என்.எஸ்.எஸ். சட்டப்பிரிவுகள் உள்ளன. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, வெற்றிபெற்ற வேட்பாளருக்கு எதிராக தேர்தல் வழக்கும் தொடரலாம்.</p><h2>குழந்தைகளை பயன்படுத்தக்கூடாது</h2><p>பணப்பட்டுவாடா போன்ற சட்டவிரோத செயல்களை தடுக்க, தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்கின்றன. தேர்தலின்போது, வேட்பாளர்கள் மேற்கொள்ளும் தேர்தல் செலவுகள் கண்காணிப்படுகிறது. பறக்கும்படை அதிகாரிகள் மூலம் அதிரடி சோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.</p><p>தமிழ்நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் ஏப்ரல் 22-ந்தேதி வரை சட்டவிரோதமாக எடுத்துச்செல்லப்பட்ட 599 கோடியே 24 லட்சம் ரூபாயை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.</p><p>குழந்தைகளை பொறுத்தவரை, தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட தேர்தல் நடவடிக்கைகளில் அவர்களை பயன்படுத்தக்கூடாது. இதுதொடர்பாக கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி 5-ந்தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்ட பத்திரிகை செய்திக்குறிப்பில், 'தேர்தல் பிரசாரம் அல்லது வேறு எந்த ஒரு தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளிலும், குழந்தைகளை அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் பயன்படுத்தக்கூடாது" என்று கூறியுள்ளது.</p><p>பொதுவாக வாக்காளர்கள் அனைவரும் வயது வந்த நபர்கள்தான். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சுயமாக சிந்திக்கும் திறன் கொண்டுள்ளார்கள். அதுமட்டுமல்ல ரகசியமாகத்தான் அவர்கள் வாக்களிக்கின்றனர். அதனால், மறைமுகமாக ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்ததாக கூறுவதற்கு எந்த ஒரு அனுமானமும் இல்லை.</p><h2>வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும்</h2><p>அதேநேரம், சமூக ஊடக பயன்பாடு அதிகரித்து வரும் இந்த காலத்தில், வாக்காளர்கள் அல்லாத குழந்தைகள் தங்கள் பெற்றோர்களையும் வீட்டில் உள்ள பெரியவர்களையும் தான் விரும்பும் அரசியல் கட்சிகளுக்கு வாக்களிக்க சம்மதிக்க வைக்கும் நோக்கில் நடத்தப்படும் குழந்தைகளின் பிரசாரங்களை அனுமதிப்பது குறித்த உகந்த தன்மை ஆராயப்படும். தேவைப்பட்டால், சூழ்நிலைக்கேற்ப பொருத்தமான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கை வருகிற 22-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்..  இன்றைய வானிலை நிலவரம் என்ன..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/scorching-heat-in-tamil-nadu-what-is-todays-weather-forecast</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/scorching-heat-in-tamil-nadu-what-is-todays-weather-forecast#comments</comments><guid isPermaLink="false">703f4bf6-5284-450b-a9e9-18740e26a8a1</guid><pubDate>Wed, 15 Jul 2026 01:09:15 +0000</pubDate><atom:updated>2026-07-15T01:09:15.207Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Rain,Weather,வானிலை,தமிழகம்,Weather News,WeatherUpdate,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,வானிலை ஆய்வு மையம்,வானிலை அறிக்கை,weather condition,Weather Report,Heat wave,வெப்ப அலை,Weather Status,வானிலை அறிவிப்பு,weather center,வானிலை முன்ன்றிவிப்பு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/ky90s47p/klere.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/ky90s47p/klere.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>வானிலை செய்திகள் (Weather)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, <strong>இன்று (15-07-2026):</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.</p><h2>மழை</h2><p><strong>16-07-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். அவ்வப்போது ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>17-07-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>18-07-2026 மற்றும் 19-07-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>20-07-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை </a>பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</strong></p><p><strong>15-07-2026 மற்றும் 16-07-2026 :</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-4° செல்சியஸ் வரை உயரக்கூடும்.</p><p><strong>17-07-2026 மற்றும் 18-07-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.</p> <h2>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</h2><p><strong>15-07-2026 மற்றும் 16-07-2026:</strong> உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும்.</p><p><strong>17-07-2026 மற்றும் 18-07-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.</p><p><strong>15-07-2026 மற்றும் 16-07-2026 :</strong> அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் (Hot and Humid) இருக்கும் நிலையில் கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம்.</p><p><strong>15-07-2026:</strong> உள் தமிழக பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதால், ஒரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று (15-07-2026)</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படக்கூடும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோவை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-in-coimbatore-nagercoil-express-train-service</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-in-coimbatore-nagercoil-express-train-service#comments</comments><guid isPermaLink="false">748d4c4d-f6fa-447a-a147-4d49c2bb4ea1</guid><pubDate>Wed, 15 Jul 2026 00:57:08 +0000</pubDate><atom:updated>2026-07-15T00:57:08.607Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,Express train,Nagercoil,நாகர்கோவில்,எக்ஸ்பிரஸ் ரெயில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/42g15it9/CHENNAI-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/42g15it9/CHENNAI-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கரூர் ரெயில் நிலையத்தில் தண்டவாளம் புதுப்பித்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக சில ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) புறப்படும் பாலக்காடு டவுன் -திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16844) கரூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படும். பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு, இந்த வண்டி கரூரில் இருந்து திருச்சி சந்திப்பு வரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயிலாக இயக்கப்படும்.</p><p>இதேபோல் கோவை சந்திப்பிலிருந்து நாளை மறுநாள் காலை 8 மணிக்கு புறப்படும் கோவை -நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16322) கோவை -திண்டுக்கல் இடையே மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இந்த ரெயில் போத்தனூர், பொள்ளாச்சி மற்றும் பழனி வழியாக செல்லும்.</p><p>இதன் காரணமாக கோவை வடக்கு, பீளமேடு, சிங்காநல்லூர், இருகூர், சூலூர் சாலை, சோமனூர், திருப்பூர், ஊத்துக்குளி, ஈங்கூர், ஈரோடு, பாசூர், கொடுமுடி, புகலூர், கரூர், பாளையம் மற்றும் எரியோடு ஆகிய ரெயில் நிலையங்களுக்கு வராது. எனினும் போத்தனூர் மற்றும் பொள்ளாச்சி ரெயில் நிலையங்களில் மாற்று நிறுத்தங்கள் வழங்கப்படும் என்று சேலம் ரெயில்வே கோட்டம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாடுகளை சாலையில் திரியவிட்ட உரிமையாளர்களிடமிருந்து ரூ.1.24 கோடி அபராதம் - சென்னை மாநகராட்சி நடவடிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-124-crore-fine-collected-from-owners-who-let-cattle-roam-the-streets-chennai-corporation-action</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-124-crore-fine-collected-from-owners-who-let-cattle-roam-the-streets-chennai-corporation-action#comments</comments><guid isPermaLink="false">1114e925-a8f5-4c4a-825d-357e8ece3c2f</guid><pubDate>Tue, 14 Jul 2026 23:46:29 +0000</pubDate><atom:updated>2026-07-14T23:46:29.011Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/9sqf8bzp/corparation.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/9sqf8bzp/corparation.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><h2>மாநகராட்சி நடவடிக்கை</h2><p>சென்னை மாநகராட்சி பகுதிகளில் பெரும்பாலான மாடுகள் உரிய இட வசதி இன்றி, சாலைகள் மற்றும் பொது இடங்களில் சுற்றித்திரிந்து வருகின்றன. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு மற்றும் சில நேரங்களில் பொதுமக்கள் மாடுகளால் தாக்கப்படும் சம்பவங்களும் ஏற்பட்டு வருகின்றன. இவ்வாறு போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கட்டுப்படுத்தும்</a> பொருட்டு ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா 5 மாடு பிடிக்கும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். </p><p>அந்த வகையில், கடந்த 2 ஆண்டுகளில் சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 2,718 மாடுகள் பிடிக்கப்பட்டு அவற்றின் உரிமையாளர்களிடமிருந்து ரூ.1 கோடியே 24 லட்சத்து 3 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. எனவே, மாடுகளின் உரிமையாளர்கள் சாலைகளில் மாடுகளை சுற்றித்திரிய விடாமல் மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தை தலைநிமிரச் செய்த கர்மவீரர் காமராஜரின் வாழ்க்கைப் பயணம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-life-journey-of-karmaveer-kamaraj-the-hero-who-made-tamil-nadu-proud</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-life-journey-of-karmaveer-kamaraj-the-hero-who-made-tamil-nadu-proud#comments</comments><guid isPermaLink="false">d58adee2-38b9-45ba-bc0b-a09c9755a4fb</guid><pubDate>Tue, 14 Jul 2026 23:43:25 +0000</pubDate><atom:updated>2026-07-14T23:43:25.956Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழகம்,Kamarajar,காமராஜர்,Journey,In Tamil Nadu,வாழ்க்கை பயணம்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/b0kf78lp/kamarajar.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/b0kf78lp/kamarajar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>சிறப்புக் கட்டுரைகள் (Sirappukatturaigal)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தை தலைநிமிரச் செய்த தியாகச் செம்மல், 'கல்விக்கண் திறந்த' கர்மவீரர் காமராஜர். எளிமையின் இலக்கணமாகவும், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய மாபெரும் தலைவராகவும் விளங்கிய காமராஜரின் வரலாற்றை அறிவது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும். </p><p>காமராஜர் 1903-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் நாள் விருதுநகரில் குமாரசாமி - சிவகாமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் காமாட்சி என்பதாகும். வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை 6-ம் வகுப்போடு முடித்த இவர், இளம் வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, பலமுறை சிறைவாசம் அனுபவித்தார்.</p><h2>சுதந்திரப் போராட்டம்</h2><p>தனது மாமாவின் துணிக்கடையில் வேலை பார்த்தபோதே, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிகுந்த ஆர்வம் காட்டினார். 15 வயதிலேயே ஜாலியன் வாலாபாக் படுகொலையின் தாக்கம், காமராஜரிடம் சுதந்திர வேட்கையைத் தூண்டியது. 1930-ல் காந்தியடிகள் நடத்திய உப்பு சத்தியாகிரகம் உள்ளிட்ட பல போராட்டங்களில் கலந்துகொண்டு ஒன்பது ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்.</p><h2>அரசியல் தொண்டு</h2><p>1930-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வேதாரண்யத்தில் நடந்த காந்தி அடிகளின் உப்பு சத்தியாக்கிரகதில் கலந்து கொண்டார். அதனால் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது அந்த முதல் சிறை தண்டனைக்குப் பிறகு அவர் மேலும் 5 முறை சிறைவாசம் அனுபவித்திக்கிறார். கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் அவர் சிறையிலேயே கழித்திருக்கிறார். 1940 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த பொறுப்பை அடுத்த 14 ஆண்டுகளுக்கு வகித்தார். 1952-ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த 2 ஆண்டுகளில் சென்னை மாநிலத்தின் முதலமைச்சரானார். </p><h2>'கிங் மேக்கர்'</h2><p>விடுதலைக்குப் பின்னர் 1954-ஆம் ஆண்டு தமிழகத்தின் முதலமைச்சரானார். மிகவும் தயக்கத்தோடுதான் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. இந்தியாவில் ஆங்கிலம் தெரியாத ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரானது அதுவே முதன்முறை. ஆனால் ஆங்கிலம் தெரியாமலும் 6 ஆண்டுகளே கற்ற கல்வியுடனும் முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற அவர்தான் அடுத்த 9 ஆண்டுகளுக்கு தலை சிறந்த தலைமைத்துவத்தை தமிழகத்திற்கு வழங்கினார். அவரது கால கட்டத்தில் இந்தியாவிலேயே மிகச்சிறந்த முறையில்  நிர்வகிக்கப்பட்ட மாநிலம் என்ற பெருமையை பெற்றது தமிழ்நாடு. ஒன்பது ஆண்டுகள் சிறப்பான ஆட்சி புரிந்து, இந்திய அரசியலிலும் பெரும் செல்வாக்கு செலுத்தினார். பல பிரதமர்களை உருவாக்கியதால் இவரை 'கிங் மேக்கர்' (Kingmaker) என்றும் அழைத்தனர்.</p><h2>நீர்ப்பாசனத் திட்டங்கள்</h2><p>தமிழகத்தின் நீர்ப்பாசனத் தேவைகளுக்காகவும், விவசாயத்தைக் காக்கவும் பல முக்கிய அணைகள் கட்டப்பட்டன. வைகை, மணிமுத்தாறு, அமராவதி, சாத்தனூர், கீழ்பவானி, ஆழியாறு, கிருஷ்ணகிரி, ஆரணியாறு மற்றும் வீடுர் ஆகியவை அவர் கட்டிய முக்கிய அணைகளில் அடங்கும்.</p><h2>தொழில் வளர்ச்சி</h2><p>இவரது ஆட்சிக் காலத்தில்தான் தமிழகம் தொழில் துறையில் பெரும் வளர்ச்சி கண்டது. நெய்வேலி நிலக்கரி நிறுவனம், பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலை, ஆவடி கனரக வாகனத் தொழிற்சாலை, மற்றும் மேட்டூர் காகிதத் தொழிற்சாலை போன்ற பல முக்கிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/2221xpgt/kamarajar1.jpg" /></figure><h2>கல்விப் பணிகள்</h2><p>ஏழை மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக மதிய உணவுத் திட்டம் மற்றும் இலவச சீருடைத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D">காமராஜரின்</a> பொற்கால ஆட்சி வறுமையில் வாடிய தமிழ்நாட்டில் கல்விப் புரட்சிக்கு வித்திட்டவர் காமராஜர். மூடப்பட்டிருந்த 6,000 பள்ளிகளை மீண்டும் திறந்ததுடன், 14,000 புதிய பள்ளிகளையும், ஏழை எளிய குழந்தைகள் பசி இல்லாமல் படிக்க வேண்டும் என்பதற்காக மதிய உணவுத் திட்டத்தையும் கொண்டு வந்தார். </p><p>அரசியலில் நேர்மை, எளிமை, மற்றும் தொண்டு ஆகியவற்றைத் தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்தவர் காமராஜர். 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் நாள் இவ்வுலகை விட்டு மறைந்தாலும், அவரது சாதனைகள் என்றும் தமிழக மக்களால் நினைவுகூரப்படும். </p><h2>எளிமையான வாழ்வு</h2><p>அதற்கு அடுத்த ஆண்டு(1976) அவருக்கு உயரிய “பாரத ரத்னா” விருது வழங்கி கெளரவித்தது இந்திய அரசு. சமூகத் தொண்டையே பெரிதாக நினைத்ததால் தனக்கென்று ஒரு குடும்பத்தை அமைத்துக் கொள்ளவில்லை காமராஜர்.  அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை மேலும் சிறு வயதிலேயே கல்வியை கைவிட்டதை நினைத்து வருந்திய அவர் தான் சிறைவாசம் சென்ற போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கில நூல்களை வாசிக்க கற்றுக்கொண்டார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த போதும் அவருடைய தாய் விருதுநகரில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு வீட்டில்தான் வாழ்ந்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது.</p><h2>கர்ம வீரர்</h2><p>தன் குடும்பம் என்பதற்காக தன் தாய்க்குக்கூட எந்த சலுகையும் வழங்கியதில்லை. அவர் தனக்கென வைத்திருந்த சொத்துக்கள் என்ன தெரியுமா? சில கதர் வேட்டி சட்டைகளும், சில புத்தகங்களும்தான். பதவிக்குரிய பந்தா எப்போதும் அவரிடம் இருந்ததே இல்லை எந்த நேரத்திலும் எவரும் அவரை தடையின்றி சந்திக்க முடியும். அதனால்தான் அவரை கர்ம வீரர் என்றும், கருப்பு காந்தி என்றும் இன்றும் போற்றுகிறது தமிழக வரலாறு. அப்படிப்பட்ட ஒரு கன்னியமான நேர்மையான இன்னொரு தலைவனை தமிழக வரலாறு மட்டுமல்ல உலக வரலாறும் இனி சந்திக்குமா என்பது சந்தேகமே?</p><p>முறையான கல்விகூட இல்லாத ஒருவர் நாட்டின் நலனை மட்டுமே குறிக்கோளாக கொண்ட ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகி இவ்வுளவும் செய்திருக்கிறார் என்றால் “துணிந்தவனால் எதையும் செய்ய முடியும் என்றுதானே பொருள்” நல்லாட்சி என்ற வானம் வசப்பட்டதற்கு அவருடைய சமதர்ம சிந்தனையும், நாடும் மக்களும் நலம்பெற வேண்டும் என்ற வேட்கையும், சுயநலமின்றி சமூக நலத்தொண்டு செய்ய வேண்டுமென்ற நல் எண்ணமும்தான் காரணம். அதே காரணங்கள் நமக்கும் வானத்தை வசப்படுத்த உதவும். வாழ்க்கையில் நம்பிக்கையோடும் விடாமுற்சியோடும் போராடினால் நமக்கும் நாம் விரும்பும் வானம் வசப்படாமலா போகும்!</p><h2>கல்வி வளர்ச்சி நாள்</h2><p>பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15-ந் தேதி தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சி நாளாக அன்றைய தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி அறிவித்தார். அன்றுமுதல் ஒவ்வொரு வருடமும் காமராஜரின் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஆசனூர் அருகே சாலையில் உலா வந்த சிறுத்தைப்புலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/leopard-found-roaming-on-the-road-near-asanur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/leopard-found-roaming-on-the-road-near-asanur#comments</comments><guid isPermaLink="false">aa21b2b9-59c3-429f-ad69-4c80b1f70504</guid><pubDate>Tue, 14 Jul 2026 21:50:35 +0000</pubDate><atom:updated>2026-07-14T21:50:35.048Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சாலை,Erode,leopard,Forest area,Leopard சிறுத்தைப்புலி,ஆசனூர்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/0r9n1lx9/19.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/0r9n1lx9/19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தாளவாடி, </p><p>தாளவாடி அருகே ஆசனூரில் இருந்து கேர்மாளம் செல்லும் சாலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தைப்புலி நேற்று அதிகாலை சாலையோரத்தில் படுத்திருந்தது. அப்போது அந்த வழியாக காரில் சென்ற ஒருவர் சிறுத்தைப்புலியை பாத்ததும் காரை நிறுத்தினார். பின்னர் தனது செல்போனில் வீடியோ எடுத்தார். தொடர்ந்து சிறிது நேரம் அங்கு உலா வந்த சிறுத்தைப்புலி சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.</p><h2>வனத்துறையினர் எச்சரிக்கை</h2><p>இந்த மலைப்பாதையில் அடிக்கடி சிறுத்தைப்புலி நடமாடுவதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். வனப்பகுதியில் இருந்து வெளியேறிய <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF">சிறுத்தைப்புலி</a> கடந்த சில நாட்களாக திம்பம், ஆசனூர், கேர்மாளம் சாலையில் உலா வருகிறது. எனவே வனப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்தவோ, கீழே இறங்கவோ கூடாது. மேலும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-today-5</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-today-5#comments</comments><guid isPermaLink="false">b16a1342-af5c-4230-973c-088b539fea09</guid><pubDate>Tue, 14 Jul 2026 21:43:32 +0000</pubDate><atom:updated>2026-07-14T21:43:32.237Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மின் தடை,power cut</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/6g92ajg5/min.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/6g92ajg5/min.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>சென்னையில் 15.07.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><h2>மின் தடை ஏற்படும் இடங்கள்</h2><p><strong>தரமணி</strong>: இந்திரா நகர், கஸ்தூரிபாய் நகர் 1வது முதல் 3வது பிரதான சாலை மற்றும் 1வது முதல் 3வது குறுக்குத் தெரு, கேனால் வங்கி சாலை, பத்தவச்சலம் 1வது மற்றும் 2வது தெரு, சர்தார் படேல் சாலை, அண்ணா அவென்யூ, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கோவிந்தராஜபுரம் </a>1வது மற்றும் 2வது தெரு.</p><p><strong>அடையாறு</strong>: சிவகாமிபுரம் 1வது முதல் 4வது தெருக்கள், கங்கை அம்மன் கோவில் தெரு, எல்.ஐ.சி. காலனி, சுப்பிரமணியம் காலனி, மாளவியா அவென்யூ 1வது முதல் 3வது தெரு, எம்.ஜி. சாலை, ஆர்.கே. நகர் பிரதான சாலை மற்றும் 1வது முதல் 3வது குறுக்குத் தெரு, மருத்தீஸ்வர நகர், சுண்ணாம்பு கால்வாய், காமராஜர் நகர், ஆர்.பி.ஐ. காலனி, சாஸ்திரி நகர் 1வது பிரதான சாலை மற்றும் 1வது, 5வது மற்றும் 6வது குறுக்குத் தெரு.</p><p><strong>கொட்டிவாக்கம்</strong>: பல்கலை நகர், ஜெகநாதன் தெரு, வெங்கடேஸ்வரா நகர் 1வது முதல் 21வது தெருக்கள் வரை, கொட்டிவாக்கம் குப்பம், குப்பம் சாலை, ஏஜிஎஸ் காலனி 1வது முதல் 3வது குறுக்குத் தெரு வரை, நியூ காலனி 1வது முதல் 4வது தெரு வரை, திருவீதியம்மன் கோவில் தெரு, துலுக்கானத்தம்மன் கோவில் தெரு, லட்சுமிவதனா தெரு, ஈ.சி.ஆர், செந்தாமரைக்கண்ணன் சாலை.</p><p><strong>பெசன்ட்நகர்</strong>: 2 வது, 3வது மற்றும் 4வது பிரதான சாலை, 7வது, 16வது மற்றும் 28வது குறுக்குத் தெருக்கள், புதிய சி.பி.டபிள்யூ.டி. குடியிருப்புகள், 6 வது மற்றும் 7வது அவென்யூ, ஓடைக்குப்பம் , திடீர் நகர்.</p><p><strong>அலமாதி</strong>: ஏ,பி,சி காலனி, வெண்மனி நகர்.</p><p><strong>தாம்பரம்</strong>: மாடம்பாக்கம், <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வேங்கைவாசல்</a>, மேப்பேடு, அகரம்தேன், படுவாஞ்சேரி, காஸ்பாபுரம், செயலக காலனி, கேம்ப் சாலை, செம்பாக்கம், அகரம் பிரதான சாலை, சேலையூர், வி.ஜி.பி. ஸ்ரீனிவாச நகர், வி.ஜி.பி. சரவணா நகர், காயத்திரி நகர், கிருஷ்ணா நகர், திருவாஞ்சேரி, நூத்தஞ்சேரி, கணபதி நகர், ஞானதா நகர், பாரதிதாசன் நகர், சக்தி நகர், காயத்திரி கார்டன், ராஜகீழ்ப்பாக்கம், கௌவுரிவாக்கம், சந்தோஷ்புரம், ரிக்கி கார்டன், ராஜாஜி நகர், சுந்தரம் காலனி, பராசக்தி நகர், சத்யசாய் நகர், கோகுல் நகர், ஷா அவென்யூ, காமராஜ் நகர், ஜெயேந்திர நகர், தாரகேஸ்வரி நகர், கே.வி.ஐ.சி. நகர், வேளச்சேரி பிரதான சாலை, பழனியப்பா நகர், சாந்தம்மாள் நகர், விக்னராஜபுரம், விஜயநகரம், கே.கே. சாலை, சிவகாமி நகர், பத்மாவதி நகர், அலமேலுபுரம், கண்ணன் நகர், இந்திரா நகர், சோழன் நகர், சுதர்ஷன் நகர், டியானா ஸ்கை சிட்டி, திருமால் நகர், அன்னை சத்யா நகர், கணேஷ் நகர், மாருதி நகர் ஸ்ரீதேவி நகர்.</p><p><strong>பல்லாவரம்</strong>: சாவடி தெரு, ஐ.எச்.எப்.டி. காலனி, ஜி.எஸ்.டி. சாலை பல்லாவரம் பேருந்து நிலையம் முதல் பாண்ட்ஸ் பாலம் வரை, அருந்ததிபுரம், வள்ளுவர் பேட்டை, ரங்கநாதன் தெரு, ஐ.ஜி. சாலை சிக்னல்.</p><p><strong>ராமாபுரம்</strong>: மணப்பாக்கம் பிரதான சாலை, எல் &amp; டி பின் கேட், சேதுலக்ஷ்மி அவென்யூ, பார்த்தசாரதி நகர், பாட்டியா கார்டன், காசா XX, வேலவன் நகர், மலர் கார்டன், ராணி என்க்லேவ், அம்பேத்கர் நகர், ஐ.பி.எஸ். காலனி, ஜெயின் அக்ஷர்தாம்.</p><p><strong>சித்தாலப்பாக்கம்</strong>: மாம்பாக்கம் பிரதான சாலை, வேளச்சேரி பிரதான சாலை, வெங்கடேஸ்வரா நகர், தாவூத் நகர், குளக்கரை, பச்சையம்மன் கோவில் தெரு, புஷ்பா நகர் பூங்கா, சந்தானம் தெரு, பாரத் தெரு.</p><p><strong>பெரும்பாக்கம்</strong>: காசா கிராண்ட் பள்ளி, ஆஷீர்த்தா அவென்யூ, காசா கிராண்ட் செர்ரி பிக், கலர் ஹோம்ஸ், கலர் அவென்யூ, பிளாசா வெர்டன்ட், ஈஷைஸ்தபூமி, ரேடியன்ஸ் மெர்குரி, அர்பன் ட்ரீ, காந்தி நகர் சொசைட்டி, புஷ்கின் தெரு, கே.ஜி. ஃபிளாட்ஸ்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சிறுவாபுரி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் - முதியவர் மயங்கி விழுந்து  உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/devotees-gathered-at-siruvapuri-murugan-temple-elderly-man-faints-and-dies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/devotees-gathered-at-siruvapuri-murugan-temple-elderly-man-faints-and-dies#comments</comments><guid isPermaLink="false">3e1a7806-0fed-4070-b2fa-5b5220250648</guid><pubDate>Tue, 14 Jul 2026 21:14:12 +0000</pubDate><atom:updated>2026-07-14T21:14:12.112Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Siruvapuri Murugan Temple,சிறுவாபுரி முருகன் கோவில்,Elderly man dies,முதியவர் உயிரிழப்பு,குவிந்த பக்தர்கள்,Devotees gathered</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/e0lgu60i/death.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/e0lgu60i/death.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பெரியபாளையம்,</p><p>சிறுவாபுரி முருகன் கோவிலில் நேற்று பக்தர்கள் குவிந்தனர். கோவிலுக்கு வந்த முதியவர் மயங்கி விழுந்து இறந்தார்.</p><p>திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்தில் உள்ள <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF">சிறுவாபுரி</a> கிராமத்தில் புகழ்பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. ஆனி மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமை என்பதால் நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக குவிந்தனர். பொது தரிசனத்திற்காக பக்தர்கள் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து, கல் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த முருகப்பெருமானை தரிசித்தனர்.</p><p>முன்னதாக மூலவருக்கு பால், தயிர், விபூதி, சந்தனம், ஜவ்வாது, இளநீர், தேன் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, பூக்களால் கல் அங்கி அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.</p><h2>முதியவர் உயிரிழப்பு</h2><p>சென்னை கொளத்தூரைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது 67), சாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, செங்குன்றம் அருகே நல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p>ராஜேந்திரனுக்கு ஏற்கனவே இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும், தற்போது மூன்றாவது முறையாக மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஆரணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>திருப்பூர்: அமராவதி அணையிலிருந்து இன்று தண்ணீர் திறப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruppur-water-release-from-amaravathi-dam-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruppur-water-release-from-amaravathi-dam-today#comments</comments><guid isPermaLink="false">451feeff-9fc0-42ac-a6ad-b1a2b13841d5</guid><pubDate>Tue, 14 Jul 2026 20:21:29 +0000</pubDate><atom:updated>2026-07-14T20:21:29.761Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்,அமராவதி அணை,amaravathi dam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/cwrxpvsr/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/cwrxpvsr/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>தண்ணீர் திறப்பு</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் உத்தரவிற்கிணங்க, திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து, ஆற்று மதகு வழியாக, திருப்பூர் மாவட்ட பொதுமக்களின் குடிநீர்த் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் 15.07.2026 முதல் 21.07.2026 முடிய 6 <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நாட்களுக்கு </a>414.72 மில்லியன் கன அடிக்கு மிகாமல், அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்துவிட அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாற்றுத்திறனாளி இளைஞர் மரணத்தில் முழுமையான விசாரணை நடத்த வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-thorough-investigation-should-be-conducted-into-the-death-of-a-disabled-youth-ttv-dhinakaran-insists</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-thorough-investigation-should-be-conducted-into-the-death-of-a-disabled-youth-ttv-dhinakaran-insists#comments</comments><guid isPermaLink="false">83645940-baaa-4784-ab12-0eb61a346ad1</guid><pubDate>Tue, 14 Jul 2026 18:27:11 +0000</pubDate><atom:updated>2026-07-14T18:27:11.532Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,Youth,Death,மரணம்,இளைஞர்,மாற்றுத்திறனாளி,Disabled people</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/6202z4nm/ttvdhinakaran.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/6202z4nm/ttvdhinakaran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- </p><h2>மாற்றுத்திறனாளி இளைஞர் கொலை</h2><p>ஒருபுறம் அடக்குமுறை, மறுபுறம் கரிசனம் என  முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் போடும் இரட்டை வேடம் மாற்றுத்திறனாளிகள் மத்தியில் ஒருபோதும் எடுபடாது நாகர்கோவில் அருகே குட்கா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D">மாற்றுத்திறனாளி இளைஞர்</a> ஒருவரை காவல்துறையினரே அடித்துக் கொலை செய்துவிட்டதாகக் கூறி அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர் .</p><p>மறுபுறம், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை  சமூக வலைத்தளத்தில் விமர்சித்ததாக கூறி, கரூர் மாவட்டத்தைச் சார்ந்த மற்றொரு மாற்றுத்திறனாளி இளைஞர் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளார். </p><h2>பணி நியமன ஆணை</h2><p>தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் நிலைமை இப்படி மோசமாக இருக்க, இன்று காலை சுகாதார ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்வில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு, அவரின் இருக்கைக்கே சென்று பணி நியமன ஆணை வழங்கிவிட்டு ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகளுக்கும் பாதுகாவலராக தன்னைத் தானே முன்னிறுத்திக் கொள்ள முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அரங்கேற்றியிருக்கும் நாடகம் மக்கள் மத்தியில் குறிப்பாக மாற்றுத்திறனாளிகளின் மத்தியில் இனி  எடுபடாது. </p><h2>அடிப்படை உரிமை</h2><p>எனவே, மாற்றுத்திறனாளி இளைஞர் மரணத்தில் முழுமையான விசாரணையை மேற்கொள்வதோடு,   மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலர் எனும் போர்வையில் அவர்களை அடக்கி ஒடுக்க முயற்சிக்கும் சர்வாதிகாரப்போக்கை உடனடியாக கைவிட்டு, ஆட்சியாளர்களை விமர்சனம் செய்வது ஜனநாயகம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமை என்பதை உணர்ந்து விமர்சனங்களை துணிச்சலுடன் எதிர்கொண்டு, ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுத்திட வேண்டும் என முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் காவலர்களுக்கே பாதுகாப்பில்லையா? - நயினார் நாகேந்திரன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-there-no-protection-even-for-police-personnel-in-tamil-nadu-nainar-nagendran-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-there-no-protection-even-for-police-personnel-in-tamil-nadu-nainar-nagendran-asks#comments</comments><guid isPermaLink="false">290225ef-3c87-4ca5-8e22-a5216ac7eb24</guid><pubDate>Tue, 14 Jul 2026 17:57:56 +0000</pubDate><atom:updated>2026-07-14T17:57:56.178Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/xe2cc88t/nainar1.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/xe2cc88t/nainar1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- </p><h2>சட்டம்-ஒழுங்கு</h2><p>மதுரை பெருங்குடியில் உளவுத்துறை தலைமைக் காவலர் ராஜா மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முழுமையாகச் சீர்குலைந்துவிட்டதை அப்பட்டமாகக் காட்டுகிறது. சந்தேகத்திற்கிடமான நபர்களை விசாரித்த ஒரே காரணத்திற்காக, 16 தையல்கள் போடும் அளவிற்கு காவலர் ஒருவரையே கற்களாலும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஆயுதங்களாலும் </a>தாக்க வன்முறையாளர்கள் துணிந்துள்ளனர். முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில், காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத அவல நிலை நிலவுகிறது.</p><p>தமிழகத்தில் நடைபெறும் சம்பவங்களைப் பார்க்கும்போது, வெறும் திரைக்கவர்ச்சியையும் விளம்பர அரசியலையும் மட்டுமே நம்பி தமிழகத்தில் ஆட்சி நடத்திவிடலாம் என்று ஜோசப் விஜய் அரசு பகற்கனவு காண்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.</p><h2>பாதுகாப்பை உறுதி செய்யக</h2><p>காவலர் ராஜா மீது தாக்குதல் நடத்திய போதை வன்முறைக் கும்பலை உடனடியாகக் கைது செய்து மிகக் கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் சிறையில் அடைப்பதோடு, இனியாவது விழித்துக்கொண்டு தமிழக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவெக அரசு முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>15 சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க தடையில்லா சான்று: அமைச்சர் ராஜ்மோகன்  வழங்கினார் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-rajmohan-grants-no-objection-certificate-to-start-15-cbse-schools</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-rajmohan-grants-no-objection-certificate-to-start-15-cbse-schools#comments</comments><guid isPermaLink="false">e81b34bc-d014-4e96-b4a0-ce45e24b9699</guid><pubDate>Tue, 14 Jul 2026 17:52:59 +0000</pubDate><atom:updated>2026-07-14T17:52:59.177Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>CBSE,சிபிஎஸ்இ,தடையில்லா சான்று,Minister Rajmohan,அமைச்சர் ராஜ்மோகன்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/uio0hgya/minister-rajmohan.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  ராஜ்மோகன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/uio0hgya/minister-rajmohan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>தடையின்மைச் சான்று</h2><p>பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று தலைமைச் செயலகத்தில், 15 <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%87">சிபிஎஸ்இ</a> மற்றும் பிற வாரிய பள்ளிகள் துவங்க தடையின்மைச் சான்றுகளையும், 10 தனியார் பள்ளிகளுக்கு துவக்க அனுமதி ஆணைகளையும் வழங்கினார்.</p><p>தனியார் பள்ளிகள் எவ்வித இடைத்தரகர்களுமின்றி, தகுதி மற்றும் பாதுகாப்புச் சான்றுகளின் அடிப்படையில் ஆன்லைன் வழியாகவே எளிய முறையில் இந்த சான்றிதழ்களைப் பெறும் புதிய வழிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.</p><p>புதிய மாணவர் சேர்க்கை இல்லாததை காரணம் காட்டி, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் பல அரசுப் பள்ளிகள் நடப்பு கல்வியாண்டில் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>காவல் நிலையங்கள் சித்ரவதைக் கூடங்கள் அல்ல..! - வானதி சீனிவாசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-stations-are-not-torture-chambers-vanathi-srinivasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-stations-are-not-torture-chambers-vanathi-srinivasan#comments</comments><guid isPermaLink="false">ce571274-f821-483b-ac85-5cef7a0448bb</guid><pubDate>Tue, 14 Jul 2026 17:38:20 +0000</pubDate><atom:updated>2026-07-14T17:38:20.771Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/y09ljz78/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/y09ljz78/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>காவல் நிலைய மரணம்</h2><p>நாகர்கோவிலில் சபரிவர்மன் என்ற மாற்றுத் திறனாளி இளைஞர் குட்கா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டு விசாரணைக் கைதியாக நாகர்கோவில் மாவட்டச் சிறையில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக காவல் துறையினர் தெரிவித்ததாகக் கூறப்படும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. நல்ல உடல்நலத்துடன் இருந்த இளைஞர் சபரிவர்மன் சிறையில் மர்மமான உயிரிழந்திருப்பது மீண்டும் ஓர் அஜித்குமார் சம்பவத்தை ஏற்படுத்தியிருக்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் நீதிபதியின் முன் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் உடலில் காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  </p><p>காவல் நிலையங்களும், சிறைகளும் கைதிகளை நன்னெறிப்படுத்தவும், சட்டம் ஒழுங்கினை சரி செய்யவும் தானே தவிர இதுபோன்ற <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அப்பாவிகளை </a>அடித்துத் துன்புறுத்தி உயிரிழக்கச் செய்யும் சித்ரவதைக் கூடங்கள் அல்ல. சாத்தான்குளம், திருப்புவனம் சம்பவங்களைத் தொடர்ந்து தற்போது நாகர்கோவிலிலும் காவல் நிலைய மரணங்கள் அரங்கேறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? </p><h2>கடுமையான நடவடிக்கை</h2><p>இந்த விவகாரத்தில் உண்மையை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வெளிக்கொணரும் </a>வகையில் வெளிப்படையான விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உயிரிழந்த சபரிவர்மன் குடும்பத்திற்கு உரிய நீதி மற்றும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஜுலை 16-ந் தேதி பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வழங்க அரசு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-orders-to-issue-additional-tokens-for-bond-registration-on-july-16</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-orders-to-issue-additional-tokens-for-bond-registration-on-july-16#comments</comments><guid isPermaLink="false">87ea3161-04f2-453d-8127-8d429f7baee2</guid><pubDate>Tue, 14 Jul 2026 17:30:48 +0000</pubDate><atom:updated>2026-07-14T17:30:48.399Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பத்திரப்பதிவு,Government Order,கூடுதல் டோக்கன்கள்,அரசு உத்தரவு,Additional Tokens,bond registration</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/mgo2v4c5/17.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/mgo2v4c5/17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுபமுகூர்த்த மற்றும் விசேஷ தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.</p><p>தற்போது ஆடி மாதம் தொடங்க இருப்பதை முன்னிட்டு மாதத்தின் கடைசி நாளான 16.07.2026(வியாழக்கிழமை) அன்று அதிகளவில்<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81"> பத்திரப்பதிவுகள்</a> நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள்  ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.</p><h2>முன்பதிவு டோக்கன்கள்</h2><p>எனவே 16.07.2026 (வியாழக்கிழமை) அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும். இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு  டோக்கன்களும், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 300-க்கு பதிலாக 100 சாதாரண முன்பதிவு டோக்கன்களோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்கள்  கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோவில்கள் பெயரில் மாற்றம் செய்யப்பட்ட நிலங்கள்: தடை நீக்க உத்தரவை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கிறது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/lands-reclassified-from-temple-ownership-marxist-party-welcomes-order-lifting-the-ban</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/lands-reclassified-from-temple-ownership-marxist-party-welcomes-order-lifting-the-ban#comments</comments><guid isPermaLink="false">870cb5dc-13a2-4d62-ac20-681dc5e55cb3</guid><pubDate>Tue, 14 Jul 2026 17:08:00 +0000</pubDate><atom:updated>2026-07-14T17:08:00.488Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பெ.சண்முகம்,Marxist Communist Party,மார்க்சிஸ்ட் கம்ப்யூனிஸ்ட் கட்சி,p shanmugam,சிபிஐ(எம்),Marxist Party</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/xhncr6ga/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/xhncr6ga/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செய்லாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>தடை நீக்க உத்தரவு</h2><p>கரூர் மாவட்டத்தில் இனாம் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்கள் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டா பெற்று பயன்படுத்தி வந்த இடத்தை விற்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடையை 9.7.2026 அன்று தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை 3084 ஏக்கருக்கு விலக்கிக் கொண்டுள்ளது. இந்த தடை நீக்க ஆணையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வரவேற்கிறது. மக்களின் நில உரிமை, குடியிருப்பு உரிமை இந்த உத்தரவு மூலம் பாதுகாக்கப்பட்டிருக்கிறது.</p><p>தமிழ்நாட்டில் பாஜக, இந்து முன்னணி, இந்து மகா சபா போன்ற சங்பரிவார் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அமைப்புக்களின் </a>நிர்வாகிகள் ஆக்கிரமித்து வைத்திருந்த கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் கடந்த ஆட்சிக் காலத்தில் மீட்கப்பட்டது என்பதை நினைவுப்படுத்துகிறோம். அரசு கோவிலிலிருந்து வெளியேற வேண்டுமென்று சொல்வதே கோவில் சொத்துக்களை சூறையாடுவதற்காக சங்பரிவார் தீட்டும் சதி திட்டம் தான் என்பதை வரலாறு நிரூபித்துக் கொண்டே வந்திருக்கிறது. தற்போது, அயோத்தியில் ராமர் கோவிலிலேயே உண்டியலை திருடிய கூட்டம் அதைப்பற்றி பேச மறுக்கிற கூட்டம் இப்போது இந்து பக்தர்களுக்கு அவர்களது உரிமைகள் நிலைநாட்டப்பட்டதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தமிழ்நாடு அரசை தரம் தாழ்ந்து விமர்சித்து வருகிறார்கள். இந்த சக்திகள் மீண்டும் நீதிமன்றத்தின் மூலம் மக்களின் உரிமைகளை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சங்பரிவார் அமைப்புக்கள் இதை எதிர்த்து நியாயமற்ற விமர்சனங்களை முன்வைப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.</p><h2>தீர்வு காண வேண்டும்</h2><p>இதேபோல், மாநிலம் முழுவதும் இனாம் நில விவசாயிகளும், பொதுமக்களும் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அரசாணையை முன்மாதிரியாகக் கொண்டு இனாம் நில பிரச்சனைக்கு முழுமையாக தீர்வு காண வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>செங்கல்பட்டு பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பிய மேலும் 6 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/6-more-escapees-from-chengalpattu-safe-house-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/6-more-escapees-from-chengalpattu-safe-house-arrested#comments</comments><guid isPermaLink="false">76828756-90c5-4d57-8668-b74fd654c099</guid><pubDate>Tue, 14 Jul 2026 16:25:29 +0000</pubDate><atom:updated>2026-07-14T16:25:29.946Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,செங்கல்பட்டு,Escape,தப்பி ஓட்டம்,கைதுArrest,அரசினர் பாதுகாப்பு இல்லம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/9w4e0su4/128.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/9w4e0su4/128.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>செங்கல்பட்டு, </p><p>செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் அரசு பழதோட்டம் அருகே அரசினர் பாதுகாப்பு இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு மாவட்டங்களில் குற்ற வழக்குகளில் கைதான 18 வயதில் இருந்து 21-வயது வரை உள்ள முதல் குற்ற செயல்களில் ஈடுபட்ட 80-க்கும் மேற்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.</p><h2>தப்பி ஓட்டம்</h2><p>கடந்த சில தினங்களுக்கு முன்பு குற்றவாளிகள் இருதரப்பினராக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த நிலையில் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்த 12 பேர் திடீரென அங்கிருந்த 2 ஆசிரியர்கள், ஒரு வார்டன் மற்றும் கேட்டில் இருந்த காவலாளி ஆகியோரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர். </p><h2>கைது</h2><p>இதுகுறித்து செங்கம்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பி ஓடிய 12 பேரை தேடிவந்தனர். அவர்கள் அனைவரும் கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர்,  சென்னை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள். அவர்களை தேடி போலீசார் விரைந்து உள்ளனர். இதற்கிடையே சென்னை, கே.கே. நகரில் உள்ள வீட்டில் பதுங்கி இருந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 11 பேரை தேடி வந்தனர். இந்த நிலையில் கோவைக்கு தப்பி வந்த 6 பேரை தனிப்படை போலீசார் இன்று <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். அவர்களை போலீசார் கோவையில் இருந்து சென்னைக்கு அழைத்து சென்றனர். </p>]]></content:encoded></item><item><title>2031க்குள் 20,000 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்: தமிழக அரசு முடிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-decides-to-set-up-20000-electric-vehicle-charging-stations-by-2031</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-decides-to-set-up-20000-electric-vehicle-charging-stations-by-2031#comments</comments><guid isPermaLink="false">ee2ac7c9-d7bc-4a6e-9b97-d6899fccb5b5</guid><pubDate>Tue, 14 Jul 2026 16:21:38 +0000</pubDate><atom:updated>2026-07-14T16:21:38.104Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu Government,தமிழக அரசு,மின்சார வாகனம்,Electric Vehicles,நிலையம்,முடிவு,decide</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/d08bvbtv/ev-charging-station.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/d08bvbtv/ev-charging-station.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> தமிழகத்தில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மின்சார வாகனங்களின்</a>  பயன்பாட்டைப் பெருமளவில் ஊக்குவிக்கும் வகையில், அடுத்த 5 ஆண்டுகளில் சார்ஜிங் உள்கட்டமைப்பை அதிரடியாக விரிவுபடுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, மின்சார வாகன சார்ஜிங் வசதிகளுக்கு தனியாக துணை மின்மீட்டர் அமைக்க அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><h2>தமிழக அரசு</h2><p>மாநிலம் முழுவதும் வரும் 2031-ஆம் ஆண்டிற்குள் 20,000 பொது மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்கான தீவிர நடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்கியுள்ளது. கூடுதல் செலவின்றி புதிய வசதி தற்போதுள்ள நடைமுறைகளின்படி, புதிய சார்ஜிங் நிலையங்களை அமைக்க கூடுதல் மின் உள்கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியுள்ளது. </p><h2>சார்ஜிங் வசதி</h2><p>அரசின் இந்த புதிய முடிவின் மூலம், கூடுதல் மின் உள்கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டிய தேவையின்றி, மிக குறைந்த முதலீட்டிலேயே இ.பி சார்ஜிங் வசதிகளை எளிதாக அமைத்துவிட முடியும்.</p><h2></h2><h2>உயர் மட்ட குழு</h2><p> மின்சார வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பிற்காக மட்டுமே தனியாக புதிய மின் சேவை இணைப்பைப்  பெறவும் நுகர்வோருக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.  சார்ஜிங் நிலையங்களை வைப்போருக்கு பெரும் நிம்மதி தரும் வகையில், தற்போது நடைமுறையிலுள்ள நிலைக்கட்டணம் மற்றும் குறைந்தபட்ச மாதாந்திர கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்களிக்க அல்லது அந்த கட்டணங்களைக் கணிசமாக குறைக்க வேண்டும் என அரசுக்கு உயர் மட்ட குழு பரிந்துரை செய்ய முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.</p>  <p>அரசின் இந்த சலுகைகள் மற்றும் கொள்கை திருத்தங்கள் மூலம், தமிழ்நாட்டில் மின்வாகன சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>வள்ளல் ஓரி விழா: நாமக்கல் மாவட்டத்திற்கு ஆக.3-ந்தேதி உள்ளூர் விடுமுறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vallal-oori-festival-local-holiday-for-namakkal-district-on-august-3rd</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vallal-oori-festival-local-holiday-for-namakkal-district-on-august-3rd#comments</comments><guid isPermaLink="false">fc1d2114-0459-4b1b-b500-008aebde0238</guid><pubDate>Tue, 14 Jul 2026 15:49:05 +0000</pubDate><atom:updated>2026-07-14T15:49:05.365Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Namakkal,நாமக்கல்,Local Holiday,உள்ளூர் விடுமுறை,வள்ளல் ஓரி விழா,Vallal Oori Festival</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/xcaailaa/15.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/xcaailaa/15.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல்,</p><p>கொல்லிமலையில் கடை ஏழு வள்ளல்களில் ஒருவராக திகழ்ந்த வல்வில் ஓரி மன்னரின் வீரத்தையும், கொடை தன்மையையும் போற்றும் வகையில் ஆண்டுதோறும்  அரசு சார்பில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 3-ந் தேதி வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட உள்ளது.</p><p>எனவே வருகிற 3-ந் தேதி நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. அதை ஈடு செய்யும் வகையில் 8-ந் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>நாகர்கோவில்: சபரிவர்மன் உடலில் 19 இடங்களில் காயம் - வெளியான அதிர்ச்சி தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sabarivarman-injured-in-19-places-on-his-body-shocking-information-released</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sabarivarman-injured-in-19-places-on-his-body-shocking-information-released#comments</comments><guid isPermaLink="false">10ad6f01-9888-43bb-8186-d8b7cf8978af</guid><pubDate>Tue, 14 Jul 2026 15:43:33 +0000</pubDate><atom:updated>2026-07-14T15:43:33.025Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,மரணம்,சிறை,விசாரணை கைதி,Nagarcoil,நாகர் கோவில்,CustodyDeath</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/e3e46g33/nagakocil33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
நாகர்கோவில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/e3e46g33/nagakocil33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாகர்கோவில்,</p><p>கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் (குட்கா) விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி வாலிபர் சபரிவர்மன், சிறையில் அடைக்கப்பட்ட சில நாட்களிலேயே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.</p><h2>மாற்றுத்திறனாளி சபரிவர்மன்</h2><p>கன்னியாகுமரி மாவட்டம் தென் தாமரைக்குளம் அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ததாகக் கூறி, கடந்த ஜூலை 9 -ம் தேதி 35 வயதான மாற்றுத்திறனாளி சபரிவர்மன் என்பவரை தென் தாமரைக்குளம் போலீசார் கைது செய்தனர்.</p><p>அவரிடம் இருந்து சுமார் 200 கிராம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, சபரிவர்மனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்தின் உத்தரவின்படி, நாகர்கோவில் மாவட்ட கிளைச் சிறையில், சபரிவர்மனை போலீசார் விசாரணை கைதியாக அடைத்தனர்.</p><h2>விசாரணை கைதி உயிரிழப்பு</h2><p>இந்நிலையில், இன்று  காலை திடீரென விசாரணை கைதியான சபரிவர்மனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரை உடனடியாக போலீசார் மருத்துவ சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.</p><p>மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். முதற்கட்ட தகவலின்படி மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும், உயிரிழப்புக்கான துல்லியமான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே உறுதி செய்யப்படும் என டாக்டர்கள் தெரிவித்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.</p><h2>உறவினர்கள் போராட்டம்</h2><p>இந்த சம்பவம் தொடர்பாக, நேசமணி நகர் போலீசார் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  சிறையில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விசாரணை கைதி</a>யாக இருந்தவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரின் மரணத்தின் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிணவறை (Mortuary) முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>தொடர்ந்து, மருத்துவமனையின் முன்பு குவிந்த உறவினர்கள், இளம் வயதில் மாரடைப்பினால் உயிரிழந்ததாக கூறப்படும் தகவலை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><h2>19 இடங்களில் காயம்</h2><p>இந்தநிலையில்,  சிறையில் உயிரிழந்ததாக கூறப்படும் சபரிவர்மன் உடலில் 19 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. </p><p>கை, கால்கள், நெஞ்சு பகுதிகளில் காயம், வலது கையில் முறிவு என உடற்கூறாய்வு அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.  மாவட்ட நீதிபதி முன்னிலையில் நடந்த பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.</p><h2>விசாரணை கைதி மரணம்; 3 பேர் கைது </h2><p>இந்தநிலையில்,சபர்வர்மன் மரணம் தொடர்பாக சிறை வார்டன் உட்பட சிறை காவலர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சிறை தலைமை வார்டன் ஜெகன், வார்டன்கள் சிவக்குமார், திருவிடைநம்பியை நேசமணி நகர் போலீசார் கைது செய்துள்ளனர்.  </p><p>இதனையடுத்து, வார்டன் உட்பட சிறை காவலர்களை நெல்லை மத்திய சிறைச்சாலை எஸ்.பி. சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மணல் குவாரிகளை திறக்க தமிழக அரசு திட்டம்: டெல்டா மாவட்டங்களுக்கு முன்னுரிமை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-plans-to-open-sand-quarries</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-plans-to-open-sand-quarries#comments</comments><guid isPermaLink="false">4eff7cbe-e276-4a87-b84f-e256b43799f4</guid><pubDate>Tue, 14 Jul 2026 15:21:29 +0000</pubDate><atom:updated>2026-07-14T15:21:29.974Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Tamil Nadu,தமிழக அரசு,மணல் குவாரி,டெல்டா மாவட்டங்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/xzm9ulxd/lorry33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
மணல் குவாரிகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/xzm9ulxd/lorry33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><p>அமலாக்க துறை சோதனையை தொடர்ந்து சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் மூடப்பட்ட 12 ஆற்று மணல் குவாரிகளை மீண்டும் திறக்க தவெக அரசு முடிவு செய்துள்ளது.</p><h2>30 இடங்களில் மணல் குவாரிகள் திறக்க அனுமதி</h2><p>தமிழகத்தில், 13 இடங்களில், நீர்வளத் துறை வாயிலாக மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தன. இந்த குவாரிகளில், சட்ட விரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக, ஒப்பந்ததாரர்கள் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக, அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டது. இதில், அமலாக்கத் துறை சோதனையை அடுத்து, மணல்குவாரிகள் மூடப்பட்டன. இதன்பின்னர், விழுப்புரம்,கடலூர்,திருச்சி,நாமக் கல், கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில், 30 இடங்களில் மணல் குவாரிகள் திறக்க, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சுற்றுச்சூழல் துறை</a> அனுமதி கடந்த ஆண்டு பெறப்பட்டது. </p><p>இதில், லாரிகளில் மணல் ஏற்றும் ஒப்பந்ததாரராக யாரை நியமிப்பது என்பதில்,கடந்த திமுக ஆட்சியில் முடிவு ஏற்படவில்லை.  இதனால், தேர்தல் முடிந்த பின், மணல் குவாரிகள் திறப்பு விவகாரத்தை கையில் எடுக்க, அதிகாரிகள் முடிவு செய்தனர்.  இதன்காரணமாக, மணல் குவாரிகள் திறக்கப்படாமல் முடங்கின. </p><h2>லாரி உரிமையாளர்கள் கோரிக்கை</h2><p>இந்நிலையில், தேர்தல் முடிந்து புதிய அரசுபொறுப்புக்கு வந்துள்ள நிலையில், மணல் குவாரிகளை திறக்க வேண்டும் என,லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.</p><p>இந்தநிலையில் 2.5ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 10 முதல் 12 மணல் குவாரிகளைத் திறக்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில் டெல்டா மாவட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. </p><h2>டெல்டா மாவட்டங்களுக்கு முன்னுரிமை</h2><p>இந்த மணல் குவாரிகளில் பெரும்பாலானவை டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமையவுள்ளன.</p><p>கடந்த 2017ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஆன்லைன் மணல் விற்பனை முறை பின்னர் தனியார் ஒப் பந்ததாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டதால், பெரிய அளவிலான முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத மணல் அள்ளும் செயல்கள் நடந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, இந்த முறை மணல் குவாரிகளை ஆன்லைன் மூலம் அரசே நேரடியாக இயக்கப் பரிசீலித்து வருகிறது. </p><p>தமிழகத்தில் மணல் எடுப்பதற்கு உகந்த சுமார் 600 கி.மீ முதல் 650 கி.மீநீள முள்ள ஆற்றுப்படுக்கைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>திருவள்ளூர்: தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் விஜய் நிவாரணம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvallur-chief-minister-vijay-announces-relief-for-the-family-of-a-person-who-died-in-an-industrial-accident</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvallur-chief-minister-vijay-announces-relief-for-the-family-of-a-person-who-died-in-an-industrial-accident#comments</comments><guid isPermaLink="false">14ef81ed-a6ac-4884-9044-d4ef1a115cf8</guid><pubDate>Tue, 14 Jul 2026 15:19:24 +0000</pubDate><atom:updated>2026-07-14T15:19:24.132Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>தொழிற்சாலை விபத்து,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,factory Accident</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/4kt9qxu1/13.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/4kt9qxu1/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர் மற்றும் காயமடைந்தோர் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் விஜய் நிதியுதவி வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது;</p><p>”திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் இன்று (14.07.2026) காலை பழைய பேட்டரியில் காரீயம் (Lead) பிரித்து எடுக்கும் தனியார் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் அங்கு பணியிலிருந்த நபர்களுக்குத் தீக்காயம் ஏற்பட்டதில் எதிர்பாராதவிதமாக ஒருவர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.</p><p>மருத்துவமனை, மேலும், இவ்விபத்தில் காயமடைந்து சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் ஒன்பது நபர்களுக்கு உயரிய சிறப்புச் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.</p><p>இச்சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்ற வருவாய்த் துறை, காவல் துறை, தொழிலாளர் நலத்துறை, தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத் துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p>இவ்விபத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து இரண்டு இலட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும், அவரது உடலினை அரசு செலவில் சொந்த மாநிலத்திற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மூன்று நபர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும் இலேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஆறு நபர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>குடிநீர் தேவைக்காக அமராவதி அணையிலிருந்து  தண்ணீர் திறப்பு - தமிழக அரசு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/release-of-water-from-amaravati-dam-for-drinking-water-needs-tamil-nadu-government-orders</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/release-of-water-from-amaravati-dam-for-drinking-water-needs-tamil-nadu-government-orders#comments</comments><guid isPermaLink="false">8dffd052-b712-4645-bb93-f772b3e403b7</guid><pubDate>Tue, 14 Jul 2026 15:00:19 +0000</pubDate><atom:updated>2026-07-14T15:00:19.634Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருப்பூர்,உத்தரவு,Government Order,அமராவதி அணை,Amaravati dam,தண்ணீர் திறப்பு water release</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/w3hqk9tt/127.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமராவதி அணை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/w3hqk9tt/127.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர் </p><p>உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகளின் நீராதாரங்களை கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. </p><h2>தண்ணீர் திறப்பு</h2><p>திருப்பூர் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">அமராவதி </a>அணையிலிருந்து ஜூலை 15 - 21ம் தேதி வரை 6 நாட்களுக்கு 414.72 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோவை: ரோட்டில் கிடந்த ஆண் குழந்தை உயிருடன் மீட்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-baby-boy-found-abandoned-on-the-road-rescued-alive</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-baby-boy-found-abandoned-on-the-road-rescued-alive#comments</comments><guid isPermaLink="false">be0a1044-b736-4a56-ab1e-30003565b7e3</guid><pubDate>Tue, 14 Jul 2026 14:44:51 +0000</pubDate><atom:updated>2026-07-14T14:44:51.889Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,ஆண் குழந்தை,Baby Boy</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/a8d9yvw2/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/a8d9yvw2/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>கோவை, </p><p>கோவையை அடுத்த அரிசிபாளையம் மூலக்கடை வீதியை சேர்ந்த ஜோதிமணி என்பவர் தனது வளர்ப்பு நாயுடன் வி.கே.சி.கம்பெனி அருகே நடைபயிற்சி சென்றார். அப்போது அங்கு குழந்தையின் அழுகுரல் கேட்டது. உடனே அவர் அருகில் சென்று பார்த்தார்.</p><p>அங்கு ஒரு ஆண் குழந்தை கிடந்தது. இதனால் பதற்றம் அடைந்த அவர், கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குழந்தையை மீட்டனர். இதில் அது பிறந்த ஒருமணி நேரமே ஆன குழந்தை என்பது தெரிய வந்தது. இதையடுத்து அரிசிபாளையம் மருத்துவமனை மருத்துவ அதிகாரி டாக்டர் பிரதீபா நேரில் சென்று குழந்தைக்கு தேவையான முதலுதவி சிகிச்சை அளித்தார். </p><p>பின்னர் அந்த குழந்தை ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து குழந்தையை ரோட்டில் வீசி சென்றது யார்? என்று தீவிரமாக தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தேனீக்கள் கொட்டியதில் அரசு பள்ளி மாணவர்கள் 51 பேர் காயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/51-government-school-students-injured-in-bee-sting</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/51-government-school-students-injured-in-bee-sting#comments</comments><guid isPermaLink="false">e810ecd3-a9cf-416b-b5a7-ede64b7dc7fe</guid><pubDate>Tue, 14 Jul 2026 14:28:57 +0000</pubDate><atom:updated>2026-07-14T14:28:57.834Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கடலூர்,அரசு பள்ளி,students,Government School,தேனீக்கள்,injuries,Bee</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/rqt5uo69/126.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  அரசு பள்ளி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/rqt5uo69/126.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திட்டக்குடி,</p><p>கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்து மங்களூரில் உள்ள <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF">அரசு மேல்நிலைப்பள்ளி</a> உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.</p><h2>தேனீக்கள்</h2><p>இன்று காலை வழக்கம் போல மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது பள்ளி கட்டிடங்களுக்கு இடையில் இருந்த வேப்பமரத்தில் கூடு கட்டியிருந்த மலைத்தேனீக்களை, யாரோ ஒருவர் கற்களால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் தேனீக்கள் கூட்டமாக பறந்து வந்து பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை தாக்கின. தேனீக்கள் கொட்டியதில் 51-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காயம் அடைந்தனர். </p><h2>சிகிச்சை</h2><p>இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் உடனடியாக ஓடி வந்து காயம் அடைந்த மாணவ, மாணவிகளை மீட்டு மங்களூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காயம் அடைந்தவர்களில் 30 மாணவர்கள் மேல் சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனை மற்றும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p>இதுகுறித்து தகவல் அறிந்ததும், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து பள்ளி வளாகத்தில் இருந்த தேனீக்கூட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்தில் மாணவர்களுக்கு உயிருக்கு ஆபத்தான பாதிப்பு எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. </p>]]></content:encoded></item><item><title>நாகர்கோவிலில் சிறை கைதியை கொன்ற காவல்துறையினரைப் பாதுகாப்பதா? - சீமான் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/protecting-the-police-officers-who-killed-a-prison-inmate-in-nagercoil-seeman-condemns-the-move</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/protecting-the-police-officers-who-killed-a-prison-inmate-in-nagercoil-seeman-condemns-the-move#comments</comments><guid isPermaLink="false">58df677b-faf8-48e5-952b-9c768aa03516</guid><pubDate>Tue, 14 Jul 2026 14:19:21 +0000</pubDate><atom:updated>2026-07-14T14:19:21.062Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,Seeman,police,காவல்துறை</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/zd14sfj2/10.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/zd14sfj2/10.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>“கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் குட்கா வழக்கில் கைதுசெய்து சிறையிலடைக்கப்பட்ட சபரிவர்மன் எனும் மாற்றுத்திறனாளி நீதிமன்றக் காவலில் சிறையிலிருக்கும்போதே மரணித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கைதுசெய்யப்பட்டபோது எவ்வித உடல்நலக்குறைபாடுமில்லாது, முழு நலத்தோடு இருந்த சபரிவர்மன் விசாரணைக்குப் பிறகு, இறந்துபோகிறாரென்றால், இது காவல்துறை செய்திருக்கும் பச்சைப்படுகொலையாகும். எந்தக் குற்றமிழைத்தவராக இருந்தாலும், அவரைச் சட்டத்தின்படிதான் தண்டிக்க வேண்டுமே ஒழிய, அவரை அடித்துத் துன்புறுத்திக் கொலை செய்வது என்பதை எதன்பொருட்டும் ஏற்க முடியாது.   </p><p>முந்தைய திமுகவின் ஆட்சிக்காலத்தில் நடந்த காவல் மரணங்களுக்கு எதிராகப் பேசிய இன்றைய முதல்வர் விஜய் அவர்கள், தற்போதைய தவெகவின் ஆட்சியில் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை செய்திருக்கும் இந்தப் படுகொலைக்கு என்ன செய்யப் போகிறார்? தார்மீகப் பொறுப்பேற்று, காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவுசெய்து, சிறைப்படுத்தப் போகிறாரா? இல்லை! முந்தைய திமுக, அதிமுகவின் ஆட்சிக்காலங்களைப் போலவே, சிறைவாசிக் உடல்நலக் குறைபாட்டால் இறந்ததாகக் கட்டுக்கதைகளைக் கட்டவிழ்த்துவிட்டு காவல்துறையினரைக் காப்பாற்றிச் சிக்கலைக் கடத்திவிடப் போகிறாரா? திமுக, அதிமுக செய்த நிர்வாக அணுகுமுறைகளைத்தான் முதல்வர் விஜய்யும் கடைப்பிடிப்பாரென்றால்  இதிலென்ன மாற்று இருக்கிறது? இதிலென்ன எளிய மக்களுக்கான அரசியல் இருக்கிறது? சிறைவாசி சபரிவர்மனை அடித்துக் கொன்ற காவலர்களைப் பாதுகாத்து, முதல்வர் விஜய் இதுவரை வாய்திறக்க மறுத்து வருவது அதிகாரத்திமிர் இல்லையா? திமுகவின் ஆட்சியில் நடந்த காவல் மரணங்களுக்கும் நீதியைப் பெற்றுத் தருவோம் எனத் தேர்தல் களத்தில் வாக்குறுதி அளித்துவிட்டு, தம்பி ஆகாஷ் டெலிசன் மரணத்துக்கான நீதியைப் பெற்றுத் தராது தவெக அரசு வஞ்சித்த நிலையில், தற்போதைய சபரிவர்மன் மரணத்துக்கும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள்  மீது நடவடிக்கை எடுக்க மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது. </p><p>ஆகவே, விசாரணை சிறைவாசி சபரிவர்மனை அடித்துக் கொன்ற காவலர்கள் மீது கொலைவழக்குப் பதிவு செய்து, சிறைப்படுத்த வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 25 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன்.”</p><p>இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>தென்காசி மாவட்டத்திற்கு ஜூலை 28 உள்ளூர் விடுமுறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/local-holiday-for-tenkasi-district-on-july-28</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/local-holiday-for-tenkasi-district-on-july-28#comments</comments><guid isPermaLink="false">cda8136b-923d-477e-947a-ec3078f6651e</guid><pubDate>Tue, 14 Jul 2026 14:14:24 +0000</pubDate><atom:updated>2026-07-14T14:14:24.986Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,தென்காசி,உள்ளூர் விடுமுறை,localholiday</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/jp3t5g6i/thenkasi33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  உள்ளூர் விடுமுறை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/jp3t5g6i/thenkasi33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><p>சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி ஆடித்தபசு விழாவை ஒட்டி ஜூலை 28 உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>அரியும் சிவனும் ஒன்றே</h2><p>அரியும் சிவனும் வேறல்ல, ஒன்றுதான் என உலகத்திற்கு உணர்த்தும் வகையில், தவமிருந்த அம்பாளுக்கு சங்கர நாராயணராக சுவாமி காட்சி அளிக்கும் 'ஆடித்தபசு' திருவிழா, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.</p><h2>ஆடித்தபசு</h2><p>இந்த ஆண்டும் வருகிற ஜூலை 18 -ம் தேதி கொடியேற்றத்துடன் 12 நாள் விழா தொடங்குகிறது. இதில் 11 -ம் நடக்கும் முதன்மையான விழாவே ஆடித்தபசு ஆகும். ஜூலை 28 -ம் தேதி மாலை அம்பாளுக்கு சங்கர நாராயணராக சுவாமி காட்சி அளிக்கும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஆடித்தபசு காட்சி</a> நடைபெற உள்ளது. அதன்பின்னர் சங்கர லிங்கராக அம்பாளை திருமணம் செய்துகொள்ளும் நிகழ்வு அன்று இரவில் நடைபெறும்.</p><p>இந்த திருவிழாவையொட்டி தென்காசி மாவட்டத்துக்கு ஜூலை 28 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவித்து மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் உத்தரவிட்டுள்ளார்.</p><p>விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஆக.1 ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக செயல்படும் என்றும் கூறியுள்ளார். பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தேர்வுகள் இருப்பின் உள்ளூர் விடுமுறை பொருந்தாது என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோவில்கள் பெயரில் தவறுதலாக மாற்றம் செய்யப்பட்ட நிலங்கள்: தடை நீக்க உத்தரவை சிபிஐ(எம்)
வரவேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cpim-welcomes-the-order-lifting-the-ban-on-lands-erroneously-reclassified-under-temple-ownership</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cpim-welcomes-the-order-lifting-the-ban-on-lands-erroneously-reclassified-under-temple-ownership#comments</comments><guid isPermaLink="false">a01a06ad-6d90-4d95-9831-967726d20db2</guid><pubDate>Tue, 14 Jul 2026 14:12:41 +0000</pubDate><atom:updated>2026-07-14T14:12:41.115Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவில்கள்,Temple,வரவேற்பு,நிலங்கள்,CPI(M),lands,தடை நீக்கம்,சிபிஐ(எம்),welcomes</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/pf16v9sy/shunmugam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பெ. சண்முகம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/pf16v9sy/shunmugam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- திருக்கோவில்கள் பெயரில் தவறுதலாக மாற்றம் செய்யப்பட்ட நிலங்கள்: தடை நீக்க உத்தரவை சிபிஐ(எம்) வரவேற்கிறது.</p><h2>வரவேற்பு</h2><p>கரூர் மாவட்டத்தில் இனாம் ஒழிப்பு சட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்கள் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டா பெற்று பயன்படுத்தி வந்த இடத்தை விற்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடையை 9.7.2026 அன்று தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை 3084 ஏக்கருக்கு விலக்கி கொண்டுள்ளது. இந்த தடை நீக்க ஆணையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வரவேற்கிறது. மக்களின் நில உரிமை, குடியிருப்பு உரிமை இந்த உத்தரவு மூலம் பாதுகாக்கப்பட்டிருக்கிறது.</p><h2>தீட்டும் சதி திட்டம்</h2><p>தமிழ்நாட்டில் பாஜக, இந்து முன்னணி, இந்து மகா சபா போன்ற சங்பரிவார் அமைப்புக்களின் நிர்வாகிகள் ஆக்கிரமித்து வைத்திருந்த கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் கடந்த ஆட்சி காலத்தில் மீட்கப்பட்டது என்பதை நினைவுப்படுத்துகிறோம். அரசு கோவிலிலிருந்து வெளியேற வேண்டுமென்று சொல்வதே கோவில் சொத்துக்களை சூறையாடுவதற்காக சங்பரிவார் தீட்டும் சதி திட்டம் தான் என்பதை வரலாறு நிரூபித்து கொண்டே வந்திருக்கிறது. </p><h2>உண்டியலை திருடிய கூட்டம்</h2><p>தற்போது, அயோத்தியில் ராமர் கோவிலிலேயே உண்டியலை திருடிய கூட்டம் அதைப்பற்றி பேச மறுக்கிற கூட்டம் இப்போது இந்து பக்தர்களுக்கு அவர்களது உரிமைகள் நிலைநாட்டப்பட்டதை பொறுத்து கொள்ள முடியாமல் தமிழ்நாடு அரசை தரம் தாழ்ந்து விமர்சித்து வருகிறார்கள். இந்த சக்திகள் மீண்டும் நீதிமன்றத்தின் மூலம் மக்களின் உரிமைகளை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். </p><h2>கண்டனம்</h2><p>சங்பரிவார் அமைப்புக்கள் இதை எதிர்த்து நியாயமற்ற விமர்சனங்களை முன்வைப்பதை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி</a> வன்மையாக கண்டிக்கிறது. இதேபோல், மாநிலம் முழுவதும் இனாம் நில விவசாயிகளும், பொதுமக்களும் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அரசாணையை முன்மாதிரியாக கொண்டு இனாம் நில பிரச்சனைக்கு முழுமையாக தீர்வு காண வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">திருக்கோயில்கள் பெயரில் தவறுதலாக மாற்றம் செய்யப்பட்ட நிலங்கள்: தடை நீக்க உத்தரவை சிபிஐ(எம்) வரவேற்கிறது <a href="https://t.co/dPwUHErOHh">pic.twitter.com/dPwUHErOHh</a></p>&mdash; Shanmugam P (@Shanmugamcpim) <a href="https://x.com/Shanmugamcpim/status/2077028897707925980?ref_src=twsrc%5Etfw">July 14, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>சென்னை பெரியார் நகரில் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை: எல். முருகன் நாளை மறுநாள் திறந்து வைக்கிறார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/post-office-passport-service-in-chennais-periyar-nagar-l-murugan-to-inaugurate-it-the-day-after-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/post-office-passport-service-in-chennais-periyar-nagar-l-murugan-to-inaugurate-it-the-day-after-tomorrow#comments</comments><guid isPermaLink="false">230b9bb3-98c8-44fb-8f3a-14e462f71c0b</guid><pubDate>Tue, 14 Jul 2026 13:53:49 +0000</pubDate><atom:updated>2026-07-14T13:53:49.021Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Post office,அஞ்சலக சேவைகள்,passport,பாஸ்போர்ட்,எல். முருகன்,Minister L. Murugan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/apohjf26/lmurugan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எல். முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/apohjf26/lmurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெரியார் நகர் துணை அஞ்சல் அலுவலகத்தில் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம் நாளை மறுநாள் திறக்கப்படுகிறது. இதனை மத்திய தகவல், ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி  எல் முருகன் திறந்து வைப்பார். இந்நிகழ்ச்சியில் வட சென்னை மக்களவை தொகுதி உறுப்பினர் கலாநிதி வீராசாமி, வட சென்னையை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், வெளியுறவு அமைச்சகம் மற்றும் அஞ்சல் துறையின் மூத்த அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள்.</p><h2>இலக்கு நிறைவேறுகிறது</h2><p> இது சென்னை மண்டலத்தில்14-வது தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையமாகும். இதன் மூலம், சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக வரம்பிற்குட்பட்ட ஒவ்வொரு மக்களவை தொகுதியிலும் குறைந்தபட்சம் ஒரு பாஸ்போர்ட் சேவை மையம் அல்லது தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையம் செயல்படும் என்ற இலக்கு நிறைவேறுகிறது.</p><p>இந்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%20%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையம் </a>அமைக்கப்படுவதால் வட சென்னை மக்களவை தொகுதியிலும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளிலும் வசிபோர்க்கு பாஸ்போர்ட் மற்றும் தொடர்புடைய சேவைகள் எளிதில் கிடைக்கும். விண்ணப்பதாரர்களின் பயண நேரம் கணிசமாக குறையும்.</p> <h2>90 விண்ணப்பங்கள்</h2><p>தொடக்கத்தில், நாளொன்றுக்கு சுமார் 40 விண்ணப்பங்களை ஏற்கும் இந்த பாஸ்போர்ட் சேவை மையத்தின் செயல்திறன் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு நாளொன்றுக்கு 90 விண்ணப்பங்கள் வரை ஏற்கும் நிலை உருவாக்கப்படும்.  விண்ணப்பதாரர்கள் www.passportindia.gov.in என்ற இணைய தளம், பாஸ்போர்ட் சேவா தெலைபேசி செயலி ஆகியவற்றின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.</p> ]]></content:encoded></item><item><title>மூடப்பட்ட குவாரிகளை மீண்டும் திறக்கும் முடிவை கைவிட வேண்டும் - டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-decision-to-reopen-closed-quarries-must-be-abandoned-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-decision-to-reopen-closed-quarries-must-be-abandoned-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">7175607d-f23d-44b5-8b75-fc52f262397e</guid><pubDate>Tue, 14 Jul 2026 13:26:11 +0000</pubDate><atom:updated>2026-07-14T13:26:11.529Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,AMMK,அமமுக</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/jnauq4j2/9.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/jnauq4j2/9.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>“தமிழ்நாட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையின் மூலம் மூடப்பட்ட மணல் குவாரிகளை மீண்டும் திறக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வெளியாகியிருக்கும் செய்திகள் விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  </p><p>அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், இயற்கை வளங்களை சட்டவிரோதமாக சுரண்டியதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் தற்போது வரை மூடப்பட்டுள்ள  மணல் குவாரிகளை தவெக அரசு மீண்டும் திறக்க முடிவு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது</p><p>மணல் குவாரிகளின் கட்டுப்பாடற்ற, விதிமுறைகளை மீறிய செயல்பாடுகளால் சுற்றுச்சூழலுக்கும், நிலத்தடி நீருக்கும் ஏற்படும் பாதிப்பை மறந்துவிட்டு, தமிழகத்தில் கட்டுமானப் பணிகளுக்கு ஏற்பட்டிருக்கும் மணல் தட்டுப்பாட்டை போக்கவே மீண்டும் மணல் குவாரிகளை திறக்க முடிவு செய்திருக்கும் தமிழக அரசின் நடவடிக்கையால் காவிரி டெல்டா பகுதிகளின் நிலை மேலும் மோசமடையும் என விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.  </p><p>அதோடு, மணல் குவாரிகளில் சட்டவிரோதமாக நடைபெற்ற மணல் கொள்ளையால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதை தாண்டி, உள்ளூர் மக்களுக்கு அச்சுறுத்தல், தடுக்க நினைப்போர் மீது தாக்குதல் என சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கும் அடிப்படைக் காரணமாகவும் அமைந்த அவலச் சம்பவங்கள் மீண்டும் தொடர வாய்ப்புள்ளதாக  சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  </p><p>எனவே, தமிழ்நாட்டின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பது அரசின் அடிப்படை பொறுப்பு என்பதை உணர்ந்து, சுற்றுச்சூழலுக்கும் நிலத்தடி நீருக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் மணல் குவாரிகளை மீண்டும் திறக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ரூ.100 கோடி மேல் பணம் வசூலித்து மோசடி: திமுக பிரமுகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-leader-booked-under-goonda-act-for-fraud-collecting-over-rs-100-crore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-leader-booked-under-goonda-act-for-fraud-collecting-over-rs-100-crore#comments</comments><guid isPermaLink="false">0a6d207f-d642-4db7-ba0c-e3d826a42a1d</guid><pubDate>Tue, 14 Jul 2026 13:19:49 +0000</pubDate><atom:updated>2026-07-14T13:19:49.460Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,குண்டர் சட்டம்,Cheating</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/92hml22k/arasakumar33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திமுக பிரமுகர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/92hml22k/arasakumar33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகம் முழுவதும் பல தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் இருந்து ரூ.100 கோடிக்குமேல் வசூலித்து மோசடி செய்துள்ளதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அரசகுமார் கைது செய்யப்பட்ட நிலையில், குண்டர் சட்டம் அவர் மீது போடப்பட்டுள்ளது.</p><h2>ரூ. 100 கோடிக்கு மேல் பணம் வசூலித்து மோசடி</h2><p>கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறையில் அமைச்சர் மற்றும் அதிகாரிகளை தனக்கு தெரியும் என்று கூறி தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ. 100 கோடிக்கு மேல் பணம் வசூலித்து மோசடி செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><p>இது தொடர்பாக தனியார் பள்ளிகளை சேர்ந்த நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தி.மு.க. பிரமுகரான பி.டி. அரசகுமாரை கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டி.டி.சி.பி. மற்றும் சி.எம்.டி.ஏ. அங்கீகாரம் உள்ளிட்ட பிற சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்றுத் தருவதாக கூறி, தமிழகம் முழுவதும் பல தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் இருந்து ரூ.100 கோடிக்குமேல் வசூலித்து மோசடி செய்துள்ளதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அரசகுமார் மீது இந்த நடடிக்கை மேற்கொள்ளப்பட்டது.</p><h2>குண்டர் சட்டம்</h2><p>இந்த நிலையில் பி.டி.அரசகுமார் மீது <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">குண்டர் சட்டம் </a>பாய்ந்துள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பெயரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.</p><p>இந்த வழக்கு தொடர்பாக போலீசார் கூறும்போது தி.மு.க.வில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேசுக்கு நெருக்கமாக இருப்பதாக கூறிய இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அரச குமார் பள்ளி நிர்வாகிகளிடம் பணம் வசூலித்துள்ளார்.</p><p>இந்த மோசடியில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது பற்றி தீவிரமாக விசாரண நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தனர்.</p><h2>அதிகாரிகள் - முக்கிய பிரமுகர்கள் சிக்குகிறார்கள்</h2><p>இது தொடர்பாக 47 பள்ளிகளின் நிர்வாகிகள் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் பி.டி. அரசகுமார் உடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆகியோருக்கும் இந்த மோசடியில் தொடர்பு உள்ளதா என்பது பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.</p><p>இதன் முடிவில் ரூ.100 கோடி மோசடி வழக்கில் மேலும் பல கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தீப்பற்றி எரிந்து நாசம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-car-parked-at-the-door-of-a-house-caught-fire-and-was-destroyed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-car-parked-at-the-door-of-a-house-caught-fire-and-was-destroyed#comments</comments><guid isPermaLink="false">5ee7deda-061c-4f2f-97ce-90c21443bbe2</guid><pubDate>Tue, 14 Jul 2026 13:16:24 +0000</pubDate><atom:updated>2026-07-14T13:16:24.792Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Engine,Smoke,கரும்புகை,தீ fire,கார்car</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/rkni2eu0/125.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விபத்து]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/rkni2eu0/125.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை பாடி, டி.எம்.பி. நகர், அவ்வை தெருவைச் சேர்ந்தவர் மோகன் (வயது 43). தனது காரை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு. காருக்குள் அமர்ந்து பாடல் கேட்டபடி தூங்கியதாக தெரிகிறது. திடீரென காரின் என்ஜின் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர், காரின் பக்கவாட்டு கண்ணாடியை தட்டி மோகனை வெளியே வருமாறு கூறினர். உடனே மோகன், காரில் இருந்து வெளியே வந்தார். </p><h2>விசாரணை</h2><p>அடுத்த சில நிமிடங்களில் கார் தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென கார் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. தகவல் அறிந்து வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள், காரில் எரிந்த தீயை அணைத்தனர். அதற்குள் கார் முழுவதும் எரிந்து தீக்கிரையானது. இதுகுறித்து கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>காலநிலை மாற்றத்தால் குன்னூரில் நீர் பனிப்பொழிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/frost-in-coonoor-due-to-climate-change</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/frost-in-coonoor-due-to-climate-change#comments</comments><guid isPermaLink="false">3f49630c-ca88-47d5-9c31-4abe3e5693ae</guid><pubDate>Tue, 14 Jul 2026 13:12:13 +0000</pubDate><atom:updated>2026-07-14T13:12:13.583Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>குன்னூர்,Coonoor,snowfall,பனிப்பொழிவு</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/5x62c14f/8.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/5x62c14f/8.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வெலிங்டன்,  </p><p>காலநிலை மாற்றத்தால் குன்னூரில் தற்போது நீர் பனிப்பொழிவு காணப் படுகிறது. இதனால் கடும் குளிர் நிலவுவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.</p><h2>நீர் பனிப்பொழிவு</h2><p>நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கி யது. ஆனால், எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. கடந்த மாத இறுதியில் இருந்து பருவமழை தீவிரம் அடைந்தது. குன்னூர், வெலிங்டன், கேத்தி, எடப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்தது.</p><p>இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது. குன்னூர் பகுதியில் அதிகாலை நேரங்களில் கடும் நீர் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் கடும்குளிர் நிலவுகிறது. இதன் காரணமாக அதிகாலையில் வேலைக்கு செல்லும் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்கள் கடும் குளிரால் அவதி அடைந்து வருகின்றனர்.</p><h2>இயல்பு வாழ்க்கை பாதிப்பு</h2><p>ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாத இறுதியில் நீர் பனிப்பொழிவு காணப்படுகிறது. பின்னர் உறைபனி தாக்கம் அதிகரிக்கும். காலநிலை மாற்றம் காரணமாக தற்போது நீர் பனிப்பொழிவு காணப்படுகிறது. பசு மையான புல்வெளிகளில் நீர் துளிகள் கோர்த்து உள்ளதை பார்க்க முடி கிறது. மேலும் குன்னூர் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானம், வெலிங்டன் ராணுவ மைதானம் மற்றும் பூங்காக்களின் புல்வெளிகளில் நீர் பனிப்பொழிவு படர்ந்து காணப்படுகிறது.</p><p>இதன் காரணமாக விளையாட்டு மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ளும் வீரர்கள் முறையாக பயிற்சி மேற்கொள்ள முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். கடுங்குளிரை சமாளிக்க மக்கள் அதிகாலையில் ஸ்வெட்டர் அணிந்தவாறு வெளியில் செல்கின்றனர். குன்னூருக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் கடும் குளிர் காரணமாக சுற்றுலா தலங்களுக்கு செல்லாமல், தங்கும் அறையிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். நீர் பனிப்பொழிவால் பொதுமக்கள், விவசாயிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பள்ளிக்கரணை பகுதியில் சாய்ந்திருந்த அதிஉயரழுத்த மின் கோபுரம்;  ஒரு வார காலத்திற்குள் சீரமைப்பு பணி - மின்சார வாரியம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-voltage-electricity-tower-leaning-in-the-pallikaranai-area-electricity-board-to-complete-repair-work-within-a-week</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-voltage-electricity-tower-leaning-in-the-pallikaranai-area-electricity-board-to-complete-repair-work-within-a-week#comments</comments><guid isPermaLink="false">75792cdb-94b8-4aeb-8a3d-058c18298b40</guid><pubDate>Tue, 14 Jul 2026 13:07:38 +0000</pubDate><atom:updated>2026-07-14T13:07:38.007Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Electricity Board,பள்ளிக்கரணை,Pallikaranai,சீரமைப்பு பணி,Repair work,மின்சார வாரியம்,உயர்மின் கோபுரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/pw9a61t6/tneb.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்சார வாரியம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/pw9a61t6/tneb.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு மின்சாரவாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p>  <p> பள்ளிக்கரணை பகுதியில் சாய்ந்திருந்த 110 கி.வோ. அதிஉயரழுத்த மின் கோபுரம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம்  ஒரு வார காலத்திற்குள் சீரமைப்பு பணிகள் முடிக்ககப்படும். சமூக வலைதளங்களிலும், நாளிதழ்களிலும் வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு மின்வாரியம் கீழ்க்கண்டவாறு தெரிவித்து கொள்கின்றது.</p>  <h2>மின்கோபுரம்</h2><p>பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில், குப்பைக் கிடங்கிற்கு அருகில் அமைந்துள்ள 110 கி.வோ. இடிஎல் தரமணி மற்றும் 110 கி.வோ. சிறுசேரி இடிஎல் இருவழி  மின்கோபுரம், அண்மையில் ஏற்பட்ட இயற்கை காரணங்களால் 10.07.2026 அன்று சாய்ந்த நிலையில் கண்டறியப்பட்டது.</p><h2>சீரமைப்பு பணி</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu/power-outage-in-two-areas-of-chennai-today-electricity-board-announces">தமிழ்நாடு மின்சார</a> வாரியத்தின் கோபுர மின் பாதை பராமரிப்பு பிரிவு, வழக்கமானஆய்வுப்பணியின் போது 10.07.2026 அன்று கோபுரம் சாய்ந்திருப்பதை உடனடியாக கண்டறிந்தது. இதையடுத்து, 11.07.2026 முதல் அவசர சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடங்கப்பட்டன.</p><h2>ஆய்வு</h2><p>மேலும், எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அறிவுறுத்தலின் படி, கடந்த12.07.2026 அன்று கூடுதல் தலைமை செயலாளர்/ தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன்,  நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, சீரமைப்பு பணிகளை விரைவாக மேற்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.</p> <h2>தவறான தகவல்கள்</h2><p>இந்நிலையில், 12.07.2026 அன்று சமூக வலைதளங்களில், இந்த கோபுரம் கீழே விழுந்தால் தென் சென்னை முழுவதும் மின்தடை ஏற்படும் என தவறான தகவல்கள் பரப்பப்பட்டன. அதனை தொடர்ந்து, 14.07.2026 அன்று வெளியான ஒரு நாளிதழில், கோபுரம் சாய்ந்த நிலையில் இருந்தும் எந்த சீரமைப்பு பணியும் மேற்கொள்ளப்படவில்லை என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.</p><h2>புதிய மின் கோபுரம்</h2><p>இந்த தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்பதை தமிழ்நாடு மின்சார வாரியம் தெளிவுபடுத்துகிறது. உண்மையில், புதிய மின் கோபுரம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புதிய கோபுரம் நிறுவுதல் மற்றும் மின்கம்பிகள் பொருத்தும் பணிகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>பொது மக்கள் சமூக வலைதளங்களில் பரவும் ஆதாரமற்ற தகவல்களை நம்பாமல், தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிடும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்புமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>காரைக்கால், மயிலாடுதுறை ரெயில்கள் சேவையில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-karaikal-mayiladuthurai-train-services</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-karaikal-mayiladuthurai-train-services#comments</comments><guid isPermaLink="false">f6b91c10-39d4-4cc4-b4a3-6bc8a018d7d4</guid><pubDate>Tue, 14 Jul 2026 12:59:44 +0000</pubDate><atom:updated>2026-07-14T12:59:44.869Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>காரைக்கால்,Karaikal,Mayiladuthurai,மயிலாடுதுறை,Train Services,ரெயில்கள் சேவை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/8nqw5b4h/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/8nqw5b4h/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி, </p><p>திருச்சி கோட்டத்தில் பல்வேறு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக சில ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதோடு, சில ரெயில்கள் புறப்படும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்விவரம் வருமாறு:-</p><p>திருச்சியில் காலை 8.40 மணிக்கு புறப்படும் திருச்சி காரைக்கால் டெமு ரெயில் (எண்: 76820) நாளை (புதன்கிழமை) முதல் வருகிற 21-ந்தேதி வரை (19-ந்தேதி தவிர) திருவாரூர் வரை மட்டுமே இயங்கும். மேற்கண்ட நாட்களில் இந்த ரெயில் காரைக்கால் செல்லாது. மறுமார்க்கத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 21-ந்தேதி வரை (19-ந்தேதி தவிர) காரைக்காலில் இருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்படவேண்டிய காரைக்கால் - திருச்சி டெமு ரெயில் (எண்: 76819) திருவாரூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு திருச்சி வந்தடையும். அந்த நாட்களில் காரைக்காலில் இருந்து புறப்படாது. இதேபோல் திருச்சியில் இருந்து காலை 6.05 மணிக்கு புறப்படும் திருச்சி-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் (எண்:56700) நாளை முதல் வருகிற 20-ந்தேதி வரை ஆடுதுறை வரை மட்டுமே செல்லும். </p><p>மேற்கண்ட நாட்களில் மயிலாடுதுறைக்கு செல்லாது. மயிலாடுதுறையில் இருந்து பகல் 12.35 மணிக்கு புறப்படும் மயிலாடுதுறை-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் (எண்: 16847) நாளை முதல் வருகிற 20-ந்தேதி வரை மயிலாடுதுறையில் இருந்து புறப்படாது. அதற்கு பதிலாக ஆடுதுறையில் இருந்து பகல் 12.58 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டைக்கு செல்லும். மேலும் நாளை முதல் வருகிற 21-ந்தேதி வரை (19-ந்தேதி தவிர) காரைக்கால்-தஞ்சை பயணிகள் ரெயில் (எண்: 56817) தகுந்த இடங்களில் 20 நிமிடம் நின்று தாமதமாக செல்லும். இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p>]]></content:encoded></item></channel></rss>