<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 11 Jul 2026 13:47:57 +0000</lastBuildDate><item><title>தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு மேலும் 100 இடங்களை அளித்த பிரதமருக்கு நன்றி -  நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendran-thanks-the-prime-minister-for-allocating-an-additional-100-seats-to-government-medical-colleges-in-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendran-thanks-the-prime-minister-for-allocating-an-additional-100-seats-to-government-medical-colleges-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">0efdfe32-16ea-4ffb-8c5d-d46486a930c7</guid><pubDate>Sat, 11 Jul 2026 13:27:29 +0000</pubDate><atom:updated>2026-07-11T13:27:29.577Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,தமிழக அரசு,பிரதமர்,thanks,நன்றி,Medical Colleges,மருத்துவ கல்லூரிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/hj04tmpj/nainar-nagendheran.new.gif" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/hj04tmpj/nainar-nagendheran.new.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-</p><p>தமிழகத்தில் உள்ள <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">அரசு மருத்துவ கல்லூரிகளில்</a> கூடுதலாக 100 மருத்துவ இடங்களை வழங்குவதற்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. </p><h2>மாணவர்களின் மருத்துவராகும் கனவு</h2><p>நாமக்கல் மற்றும் திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரிகளில் தலா 50 மருத்துவ இடங்களை உயர்த்தி, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளிலுள்ள மொத்த மருத்துவ இடங்களை 5,150-ஆக மாற்றும் இந்த அறிவிப்பின் மூலம் தமிழக மாணவர்களின் மருத்துவராகும் கனவு எளிதில் நனவாகுவதோடு, தமிழக மக்களின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை! </p> <h2>நன்றி</h2><p>தமிழகத்தின் கல்வியிலும் சுகாதாரத்திலும் முக்கிய மைல்கல்லான இத்தகைய சீரிய நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ள நமது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசிற்கு தமிழக மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.</p> ]]></content:encoded></item><item><title>வியட்நாம் படகு விபத்தில் இந்தியர்கள் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது - அன்புமணி இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/shocking-loss-of-indians-in-vietnam-boat-accident-anbumani-condoles</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/shocking-loss-of-indians-in-vietnam-boat-accident-anbumani-condoles#comments</comments><guid isPermaLink="false">0b9396cf-9a6a-446f-b067-2526aae72b35</guid><pubDate>Sat, 11 Jul 2026 13:18:35 +0000</pubDate><atom:updated>2026-07-11T13:18:35.750Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK,அன்புமணி,Anbumani,வியட்நாம்,Vietnam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/5yq93gq0/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/5yq93gq0/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பா.ம.க.  தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>வியட்நாம் நாட்டின்  ஹான் மே ரூட் ங்வோய்  ( Hon May Rut Ngoai) தீவில்  இன்று மாலை நிகழ்ந்த மோசமான படகு விபத்தில்  தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேர் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டதாக வெளியாகியுள்ள செய்திகள்  பெரும் அதிர்ச்சியும்,  வேதனையும் அளிக்கின்றன.  அவர்களை இழந்து வாடும்  குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்,  அனுதாபங்களையும்  தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2>படகு கவிழ்ந்து விபத்து</h2><p>தமிழ்நாடு,  கர்நாடகம் உள்ளிட்ட தென் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மாநிலங்களைச் </a>சேர்ந்த  30-க்கும் மேற்பட்டோர் வியட்நாம் நாட்டுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்தனர்.  அவர்கள் Hon May Rut Ngoai தீவுக்கு அருகில்  பயணம் மேற்கொண்டிருந்த போது படகு கவிழ்ந்ததில் அதில் இருந்த அனைவரும் கடலில்  தூக்கி வீசப்பட்டனர். அவர்களில் 15 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.  உயிரிழந்த 15 பேரில்  8 பேர் சென்னை, தருமபுரி, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.</p><p>உயிரிழந்த தமிழர்கள் உள்ளிட்ட அனைவரின் உடல்களையும் உடனடியாக மீட்டு,  சொந்த ஊர்களுக்கு கொண்டு வர மத்திய அரசும், மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்,</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கிரில் கம்பிக்குள் சிக்கிய சிறுமியின் தலை - பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/girls-head-stuck-in-grill-wire-firefighters-safely-rescue-her</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/girls-head-stuck-in-grill-wire-firefighters-safely-rescue-her#comments</comments><guid isPermaLink="false">922dc765-429f-4edd-af4d-838587d5d139</guid><pubDate>Sat, 11 Jul 2026 13:14:44 +0000</pubDate><atom:updated>2026-07-11T13:14:44.724Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>புதுக்கோட்டை,Pudukottai,தீயணைப்புத் துறையினர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/y2fsd8nr/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/y2fsd8nr/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுக்கோட்டை,</p><p>புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் சந்தனபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவா. இவரது மகள் தியாழினி (4 வயது). சம்பவத்தன்று சிறுமி வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் முன்பு உள்ள கிரில் கம்பியில் அவரது தலை சிக்கிக்கொண்டது. இதில் வலி தாங்க முடியாமல் சிறுமி அலறி துடித்தார்.</p><p>இதையடுத்து, சிறுமியை மீட்க அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் முயற்சி செய்துள்ளனர். ஆனால் முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) நாகேந்திரன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று இரும்பு கம்பியை அறுத்து சிறுமியை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>பாஜகவினர் வழக்கம்போல தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர் - ஜோதிமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bjp-is-spreading-wrong-information-as-usual-jothimani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bjp-is-spreading-wrong-information-as-usual-jothimani#comments</comments><guid isPermaLink="false">9b461a90-1169-43dc-98ee-11e93a6b0345</guid><pubDate>Sat, 11 Jul 2026 13:10:46 +0000</pubDate><atom:updated>2026-07-11T13:10:46.922Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Information,wrong,ஜோதிமணி எம்பி,தவறான தகவல்,jothimani mp</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/il98kf07/jothimani.11.07.2026.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கரூர் எம்பி ஜோதிமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/il98kf07/jothimani.11.07.2026.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பாரதிய ஜனதா கட்சியினர் வழக்கம்போல தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இது தொடர்பாக கரூர் எம்பி ஜோதிமணி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-</p><h2>மனமார்ந்த நன்றி</h2><p>கரூர் மாவட்டம் புகழூர், வாங்கல், குப்பிச்சிபாளையம், வெஞ்சமாங்கூடலூர் மேல்பாகம், கீழ்பாகம், புங்கம்பாடி மற்றும் கரூர்  உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு சொந்தமான 3,084.95 ஏக்கர் நிலங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பத்திரப்பதிவு தடையை நீக்கி, மீண்டும் பத்திரப்பதிவு நடைபெற வழிவகை செய்த  முதல்-அமைச்சருக்கும், வருவாய்த் துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">கரூர் மாவட்ட மக்கள்</a> சார்பாக எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2>மக்களின் பிரச்சினை</h2><p>இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஒரு மாத காலமாக தமிழ்நாடு அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை எடுத்து சென்றோம். அறநிலைய துறை அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்  இடையே நேரடி சந்திப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டன. </p><p>தொடர்ந்து வருவாய் துறை அமைச்சரையும் நேரில் சந்தித்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தினேன். முதல்-அமைச்சரிடமும் பிரச்சினையின் தன்மை மற்றும் தீவிரம் குறித்து விரிவாக விளக்கிக்கூறினேன். அவரும் பொறுமையுடன் கேட்டு மக்களின் பிரச்சினைகளை புரிந்துகொண்டார்.</p><h2>பாஜக பொய் பிரச்சாரம்</h2><p>இதன் அடிப்படையில் இப்பொழுது பாதிக்கப்பட்ட  எமது மக்களின் ஒரு பகுதியினருக்கு  நியாயமான தீர்வு கிடைத்துள்ளது. இந்த நிலங்கள் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியினர் வழக்கம்போல தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். ரூ.25,000 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்களை அரசு கரூர்  மக்களுக்கு  பட்டா போட்டு வழங்கிவிட்டது என்ற பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.</p> <h2>அநீதி</h2><p>உண்மை என்னவென்றால், இந்நிலங்கள் நூற்றாண்டுகளாக மக்களின் பயன்பாட்டிலும் உரிமையிலும் இருந்து வரும் நிலங்கள். 1967ஆம் ஆண்டு இனாம் நில ஒழிப்பு சட்டத்தின் கீழ் இந்நிலங்களுக்கு ரயத்துவாரி பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் நில உரிமை தொடர்பான பதிவுகள் முறையாக மாற்றப்பட வேண்டியிருந்த நிலையில்,  அறநிலைய துறை ஆவணங்களில் மட்டும் மக்களின் பெயரில் பட்டா உள்ள நிலங்களையும் சேர்த்து கோவில் பெயரிலேயே வைத்து கொண்டது மட்டுமல்லாமல், சட்டத்திற்கு புறம்பாக,வருவாய்த்துறையினருக்கு தெரிவிக்காமல் பத்திரப்பதிவை நிறுத்தி வைக்க கடிதம் கொடுக்கப்பட்டு பத்திரப்பதிவு துறையும் எவ்வித ஆவணங்களையும் கோராமல், வருவாய்த்துறையிடம் கருத்து கேட்காமல் பத்திரப்பதிவை அநீதியாக நிறுத்தி வைத்தது.  </p><h2>பத்திரப்பதிவு தடை</h2><p> சம்பந்தப்பட்ட  துறைகளின் உரிய ஆய்வு மற்றும் வருவாய் துறையின் சரிபார்ப்பு இல்லாமல் பத்திரப்பதிவுக்கு தடைகள் விதிக்கப்பட்டதால், விவசாயிகள், நடுத்தர மக்கள், ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.</p><p>இந்த நிலங்களில் ஒரு சென்ட் நிலம் கூட கோவில் நிலம் அல்ல. இவை முழுமையாக மக்களின் உரிமையில் உள்ள, மக்களின் பெயரில் பட்டா பெற்றுள்ள நிலங்கள். விவசாய நிலங்களாக இருந்தால் மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர்; குடியிருப்பு பகுதிகளாக இருந்தால் மக்கள் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.</p><h2>நம்பிக்கை உள்ளது</h2><p>மக்களின் உரிமைகளை பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுபோன்ற பிரச்சினைகள் உள்ள பிற பகுதிகளிலும் உரிய ஆய்வு செய்து படிப்படியாக தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.</p><h2>பாராட்டுக்குரியது</h2><p>இந்த நேரத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையனின் நெடிய அனுபவம் மிகுந்த,விரைவான  செயல்பாடுகளையும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் அர்ப்பணிப்பு மிகுந்த, விரைவான, நடவடிக்கைகளையும் நன்றியோடு நினைவுகூற விரும்புகிறேன். கோவில் நிலங்களை பாதுகாப்பதில் உறுதியோடு உள்ள அதே நேரத்தில் மக்களுக்கு உரிமையுள்ள நிலங்களை தவறாக கையகப்படுத்திவிடக்கூடாது என்கிற அவரது கவனம் பாராட்டுக்குரியது. </p><p>இந்த முயற்சியில் எங்கள் தரப்பு நியாத்தை புரிந்துகொண்டு செயல்பட்ட  வருவாய்த்துறை மற்றும்  இந்து சமய அறநிலையத்துறை  அதிகாரிகள், கரூர் மாவட்ட ஆட்சியர்  முத்துக்குமரன் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன்  உள்ளிட்ட அனைவருக்கும் எனது  இதயப்பூர்வமான நன்றிகள்.</p>]]></content:encoded></item><item><title>யானை வழித்தடங்கள் குறித்து விரைந்து அறிவிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-court-orders-tamil-nadu-government-to-promptly-notify-elephant-corridors</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-court-orders-tamil-nadu-government-to-promptly-notify-elephant-corridors#comments</comments><guid isPermaLink="false">04ce72f7-9684-44d7-b9e2-51924679b83e</guid><pubDate>Sat, 11 Jul 2026 13:05:38 +0000</pubDate><atom:updated>2026-07-11T13:05:38.181Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஐகோர்ட்டு,Chennai High Court,யானை வழித்தடம்</media:keywords><media:content height="288" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/9pggqap9/State-06.jpg" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/9pggqap9/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>யானைகள் வழித்தடங்களை அறிவிப்பது தொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார், நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. </p><p>அப்போது வனத்துறை தரப்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் 41 யானைகள் வழித்தடங்கள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக அதில், “ஜவளகிரி, அஞ்சட்டி, பில்லிக்கல் உள்ளிட்ட 3 வழித்தடங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இது தவிர 12 வழித்தடங்களை இறுதி செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன. ஒரு சில வழித்தடங்கள் கைவிடப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இறுதி செய்யப்பட்ட 3 யானை வழித்தடங்கள் குறித்து விரைந்து அறிவிப்பு வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். </p><p>இதேபோல தடாகம் பள்ளத்தாக்கில் சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்துவது தொடர்பான வழக்கில், சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு ஆரம்ப கட்ட நிதி ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் மாவட்டங்களில் உள்ள பசுமை நிதியை பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என்றும் நீதிபதிகள் அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். </p> ]]></content:encoded></item><item><title>திண்டுக்கல் அருகே நடந்த பாச போராட்டம்: பெற்றோரை உதறிவிட்டு காதலுடன் சென்ற இளம்பெண்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-love-protest-near-dindigul-a-young-woman-who-left-her-parents-and-went-with-her-lover</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-love-protest-near-dindigul-a-young-woman-who-left-her-parents-and-went-with-her-lover#comments</comments><guid isPermaLink="false">f4918d7b-c724-479e-a3e1-e3e7129a5406</guid><pubDate>Sat, 11 Jul 2026 12:52:09 +0000</pubDate><atom:updated>2026-07-11T12:52:09.200Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Dindigul,திண்டுக்கல்,இளம்பெண்,lover,காதலர்,Parents</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/3m7uuzkb/love33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காதலுடன் சென்ற இளம்பெண்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/3m7uuzkb/love33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><p>திண்டுக்கல் அருகே சாணார்பட்டி ஒன்றியம் வி.எஸ்.கோட்டை சில்வார்பட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன்.இவரது மனைவி செல்வி. இவர்க ளது மகள் ராஜபிரியா (வயது 23). இவர் எம்.டெக். பட்டதாரி. இவரும் வையாளிபட்டியைச் சேர்ந்தவர் முத்துராமன் மகன் பாலமுருகன் (25) என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் ராஜபிரியாவின் வீட்டிற்கு தெரிய வந்தது. அவர்கள் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.</p><h2>கோவிலில் திருமணம்</h2><p>அதனை பொருட்படுத்தாத ராஜபிரியா வீட்டை விட்டு வெளியேறி பாலமுருகனுடன் சென்று விட்டார். இவர்கள் 2 பேரும் மதுரையில் உள்ள ஒரு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கோவிலில் திருமணம்</a> செய்து கொண்டனர். அதன் பின்னர் சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.</p><p>இதையடுத்து போலீசார் சமரச பேச்சுவார்த்தைக்காக இருவரது பெற்றோர்களை யும் வர வைத்தனர். அப்போது போலீஸ் நிலையத்திற்கு வந்த ராஜ பிரியாவின் பெற்றோர் தங்களது மகள் காதல் கணவனுடன் இருப்பதை பார்த்ததும் கதறி அழுதனர். படிக்க வைத்து ஆளாக்கி அழகு பார்த்த எங்களுக்கு இப்படி ஒரு துரோகம் செய்து விட்டாயே எனக் கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அப்போது அவர்கள் தங்களது மகளை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து செல்வதற்கு முயற்சி செய்தனர். ஆனால் அதற்கு ராஜ பிரியா மறுத்துவிட்டார்.</p><h2>பெற்றோருடன் செல்ல மறுப்பு</h2><p>இதனால் அதிர்ச்சி அடைந்த தந்தை ராமச்சந்திரன், தாய் செல்வி மகள் என்றும் பாராமல் ராஜபிரியாவின் காலை பிடித்து எங்களுடன் வீட்டுக்கு வந்துவிடு என்று கெஞ்சியபடி கதறி அழுதக் காட்சி அங்கே இருந்தவர்களை கண்கலங்க வைத்தது. இதையடுத்து சாணார்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் ராஜ பிரியாவின் விருப்ப த்தின் பேரில் அவரது கணவன் பாலமுருகனுடன் அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து ராமச்சந்திரன், மனைவி செல்வி மற்றும் அவர்களது உறவினர்கள் அங்கிருந்து அழுதபடியே வீட்டிற்கு சென்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/places-in-chennai-that-will-experience-power-outages-the-day-after-tomorrow-13</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/places-in-chennai-that-will-experience-power-outages-the-day-after-tomorrow-13#comments</comments><guid isPermaLink="false">992e54fd-bd61-4582-b380-8b68fcb213c7</guid><pubDate>Sat, 11 Jul 2026 12:43:05 +0000</pubDate><atom:updated>2026-07-11T12:43:05.328Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மின் தடை,power cut</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/elbp7byj/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/elbp7byj/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>சென்னையில் 13.07.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><h2>மின் தடை ஏற்படும் இடங்கள்</h2><p><strong>ஆவடி</strong>: சிவசங்கரபுரம், ஜாக் நகர், குளக்கரை தெரு, சி.டி.எச். சாலை , சரஸ்வதி நகர், அண்ணா நகர் 1 முதல் 4வது தெருக்கள் வரை, எம்.ஜி.ஆர். நகர், நேரு நகர், வைஷ்ணவி நகர் 1 முதல் 10வது தெருக்கள் வரை, சாந்திபுரம், ஸ்ரீதேவி வைஷ்ணவி நகர் எ மற்றும் பி தெருக்கள், இந்திரா காந்தி நகர், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, டி.ஆர்.ஆர். தெரு, நேதாஜி நகர், முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரி, செக் போஸ்ட், என்.எம். சாலை, திருமலைராஜபுரம், நந்தவனம் மேட்டூர், கன்னிகாபுரம், நேரு பஜார் , கஸ்தூரிபாய் நகர்.</p><p><strong>அனகாபுத்தூர்</strong>: 7வது பிரதான சாலை, 2வது முதல் 8வது குறுக்குத் தெருக்கள் வரை, காந்தி சாலை, இந்திரா காந்தி தெரு, நேரு தெரு, ராஜாஜி தெரு, கலைஞர் ரோடு, கலைஞர் குறுக்குத் தெரு, பெரியார் தெரு, இளங்கோ தெரு, சிக்னல் ஆபீஸ் சாலை, கிருபா தெரு, லட்சுமி நாராயணன் தெரு, எஸ்.பி.ஐ. காலனி, கிறிஸ்டோபர் 1, 2, மற்றும் 3வது தெருக்கள், மாருதி தெரு, ராதாகிருஷ்ணன் தெரு.</p><p><strong>பம்மல்</strong>: இரட்டை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பிள்ளையார் </a>கோவில் தெரு, ஏழுமலை தெரு, நந்தனார் தெரு, நடராஜன் தெரு, பஜனை கோவில் தெரு, தேவதாஸ் தெரு, ராமானுஜம் தெரு, ரங்கசாமி தெரு, எச்.ஐ. காலனி 1வது பிரதான சாலை, தியாகராஜன் தெரு, பிரபாகரன் தெரு, வடிவேல் தெரு, கக்கன் தெரு, மருதுபாண்டி தெரு, வீரராகவன் தெரு, நல்லதம்பி சாலை .</p><p><strong>ஐடி. காரிடார்</strong>: ஹிரானந்தனி அபார்ட்மெண்ட்ஸ், ரேடியன்ஸ் அபார்ட்மெண்ட்ஸ், ஒலிம்பியா பனாசே மற்றும் ஒலிம்பியா ஓபலைன் அபார்ட்மெண்ட்ஸ், ஓ.எம்.ஆர். சாலை, நாவலூர், விஜயகணபதி நகர், எகாட்டூர் கிராமம், எமாமி தேஜோமயா அபார்ட்மெண்ட், முட்டுக்காடு, கானத்தூர் கிராமம், ஸ்ரீனிவாசா அபார்ட்மெண்ட், டிவிஎச் டாஸ் அபார்ட்மெண்ட், விர்டூசா எச்.டி. சேவை (எண்: 636), இந்தஸ் அனந்த்யா அபார்ட்மெண்ட், கிரியேஷன்ஸ் அபார்ட்மெண்ட்.</p><p><strong>பெசன்ட் நகர்</strong>: சாஸ்திரி நகர் காமராஜர் சாலை, வால்மீகி தெரு, கலாஷேத்ரா சாலை மற்றும் அவென்யூ, லட்சுமிபுரம், ஸ்ரீ ராம் நகர், குமரகுரு 1 முதல் 4வது தெருக்கள் வரை, பிள்ளையார் கோயில் தெரு , முத்துலட்சுமி தெரு.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தேனியில் அரசு பஸ்சின் பின்னால் நிஜ ‘ஸ்பைடர் மேன்’- வீடியோ வைரல் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/real-life-spider-man-spotted-behind-government-bus-in-theni-video-goes-viral</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/real-life-spider-man-spotted-behind-government-bus-in-theni-video-goes-viral#comments</comments><guid isPermaLink="false">6158a0b2-f2cc-4dc0-a356-546270700ece</guid><pubDate>Sat, 11 Jul 2026 12:40:53 +0000</pubDate><atom:updated>2026-07-11T12:40:53.828Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசு பஸ்,Government bus,ஸ்பைடர்மேன்,Theni,தேனி,Spider Man</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/vylor1lm/bus-spider.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ பஸ்சில் ஸ்பைடர் மேன் போல தொங்கிய வாலிபர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ தேனி நிஜ ஸ்பைடர் மேன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/vylor1lm/bus-spider.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தேனி</a> மாவட்டத்தில் அரசு பஸ்சின் பின்னால் உள்ள ஏணியில் ஸ்பைடர் மேன் போல தொங்கிய வாலிபரின் வீடியோ வைரல் ஆனது.</p><h2>ஆபத்தான பயணம்</h2><p>தேனியில் இருந்து பூதிப்புரம் நோக்கி அரசு நகர<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> பஸ்</a> ஒன்று கோடாக்கிப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ்சின் பின்புறம் உள்ள ஏணியில், வாலிபர் ஒருவர் எந்தவித பயமும் இன்றி, ' ஸ்பைடர் மேன்' திரைப்பட பாணியில் கைகளையும் கால்களையும் நீட்டியபடி ஆபத்தான முறையில் பஸ்சில் ஒட்டியபடி தொங்கிக்கொண்டே பயணித்தார்.  நிஜ ஸ்பைடர் மேன் போல  மக்களுக்கு காட்சி அளித்தது.</p><h2>பயணிகள் அதிர்ச்சி</h2><p>சுமார் 500 மீட்டருக்கும் மேல் நீடித்த இந்த ஆபத்தான பயணத்தை, பின்னால் வந்த வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மிக வேகமாக வைரலானது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.</p><p>முதற்கட்ட விசாரணையில், பேருந்தின் பின்னால் தொங்கிச் சென்ற நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலும், தனது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலும் செயல்பட்ட அந்த நபரை போலீசார் மீட்டு எச்சரித்து அனுப்பி வைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மாணிக்கம் தாகூர் இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/manickam-thakur-condoles-with-families-of-those-killed-in-vietnam-boat-accident</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/manickam-thakur-condoles-with-families-of-those-killed-in-vietnam-boat-accident#comments</comments><guid isPermaLink="false">d02b250f-8c75-4a81-886c-468a334f6117</guid><pubDate>Sat, 11 Jul 2026 12:36:18 +0000</pubDate><atom:updated>2026-07-11T12:36:18.292Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>இரங்கல்,மாணிக்கம் தாகூர்,condolences,வியட்நாம்,Vietnam,boat accident,படகு விபத்து,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/qc0lusit/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/qc0lusit/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வியட்நாமின் பு குவாக் தீவுக்கு இந்தியாவை சேர்ந்த 32 சுற்றுலா பயணிகள் உள்பட 35 பேர் இன்று காலை படகில் சுற்றுலா சென்றனர். மோசமான வானிலை காரணமாக படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் 18 பேரை உயிருடன் மீட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.</p><p>இந்த விபத்தில் இந்தியர்கள் 15 பேர் உயிரிழந்தனர். மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக வியட்நாம் அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. ​பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம் உடனடியாக தலையிட்டு, உயிரிழந்தவர்களின் உடல்களை தாயகம் கொண்டு வரவும், காயமடைந்தவர்களுக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை கிடைக்கவும் விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அரியலூர்: டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாணவர்கள்-பொதுமக்கள் போராட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ariyalur-students-and-public-protest-against-tasmac-shop</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ariyalur-students-and-public-protest-against-tasmac-shop#comments</comments><guid isPermaLink="false">eb273f11-4375-4743-ae37-1c33feb33066</guid><pubDate>Sat, 11 Jul 2026 12:34:08 +0000</pubDate><atom:updated>2026-07-11T12:34:08.454Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அரியலூர்,மாணவர்கள்,students,wine shop,டாஸ்மாக் கடை,பொதுமக்கள் போராட்டம்,Ariyalur District</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/pwm6f129/ariyalur-wine-shop.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ அரியலூர் மாணவர்கள்-பொதுமக்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ டாஸ்மாக்கை அகற்றக் கோரி போராட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/pwm6f129/ariyalur-wine-shop.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>அரியலூர்,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அரியலூர்</a> மாவட்டம் கோடாலியில் உள்ள டாஸ்மாக் கடையை நிரந்தரமாக அகற்ற  கோரி<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> மாணவர்கள் </a>மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். </p><h2>பள்ளி மாணவர்களின் ஆவேச போராட்டம்</h2><p>அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோடாலி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் குடியிருப்பு மற்றும் பள்ளி செல்லும் வழிக்கு அருகே டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வந்தனர்.</p><p>மதுப்பிரியர்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்ததால், ஆத்திரமடைந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பொதுமக்கள்</a> மற்றும் பள்ளி சீருடை அணிந்த மாணவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.</p><h2>தடுப்புகளை உடைத்தெறிந்த மக்கள்</h2><p>அரசின் கட்டுப்பாடுகளையும் மீறி தொடர்ந்து தொல்லை கொடுத்து வரும் இந்த மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தின் போது ஆவேசமடைந்த பொதுமக்கள், மதுக்கடைக்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை அதிரடியாக உடைத்தெறிந்து, கடையை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.</p><h2>போக்குவரத்து பாதிப்பு - அதிகாரிகள் பேச்சுவார்த்தை</h2><p>இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் ஜெயங்கொண்டம் - திருச்சி பிரதான சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.</p><p>"மக்களின் கோரிக்கையை ஏற்று, இந்த டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யவோ அல்லது மூடவோ உரிய உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதிகாரிகளின் இந்த உறுதிமொழியைத் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் தற்காலிகமாக போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வியட்நாம் படகு விபத்து: 8 தமிழர்கள் பலி
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vietnam-boat-accident-man-from-dindigul-killed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vietnam-boat-accident-man-from-dindigul-killed#comments</comments><guid isPermaLink="false">bf0919ed-7ef6-4bb7-915a-ce52de344e6a</guid><pubDate>Sat, 11 Jul 2026 12:27:59 +0000</pubDate><atom:updated>2026-07-11T12:27:59.879Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வியட்நாம்,Vietnam,boat accident,படகு விபத்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/heh6bqdg/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/heh6bqdg/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>திண்டுக்கல்,</p><p>ஆசியாவில் தென்சீன கடல் பகுதியில் அமைந்துள்ள நாடு <a href="https://www.dailythanthi.com/">வியட்நாம்</a>. இந்நாட்டில் பல்வேறு தீவுகள், சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த சுற்றுலா தலங்களுக்கு இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.</p><h2>இந்தியர்கள்</h2><p>இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த 32 சுற்றுலா பயணிகள் உள்பட 36 பேர் இன்று காலை  பு குவாக் தீவுக்கு  படகில் சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.</p><h2>படகு விபத்து</h2><p>மோசமான வானிலை காரணமாக படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணம் செய்த அனைவரும் கடலில் விழுந்து தத்தளித்துள்ளனர். தகவலறிந்து  விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் 18 பேரை மீட்டனர். ஆனாலும், இந்த விபத்தில் இந்தியாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 15 பேர் உயிரிழந்தனர்.</p><h2>8 தமிழர்கள்</h2><p>இந்நிலையில், இந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களில் 8 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த முருகபிரபு (வயது44), திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர்கள் என தமிழ்நாட்டை சேர்ந்த 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. </p> <p>படகு விபத்தில் லாவா மொபைல் நிறுவன ஊழியர்கள் சிலரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>சிறந்த வணிக செயல்பாட்டிற்காக செல்போன் கடை உரிமையாளர்கள், நிறுவன ஊழியர்கள் உள்பட சிலரை லாவா மொபைல் நிறுவனம் வியட்நாமிற்கு சுற்றுலா அழைத்து சென்றுள்ளது. அவர்களும் இந்த படகு விபத்தில் சிக்கியுள்ளனர். </p> ]]></content:encoded></item><item><title>ஆந்திரா: கடலில் மூழ்கிய படகு..அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 8 தமிழக மீனவர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/boat-sinks-off-the-coast-of-andhra-8-tamil-nadu-fishermen-have-a-lucky-escape</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/boat-sinks-off-the-coast-of-andhra-8-tamil-nadu-fishermen-have-a-lucky-escape#comments</comments><guid isPermaLink="false">564c2cce-fb53-4efc-966a-b3301ba0aec2</guid><pubDate>Sat, 11 Jul 2026 12:26:18 +0000</pubDate><atom:updated>2026-07-11T12:26:18.701Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மீனவர்கள்,sea,ஆந்திரா,கடல்,boat capsized,படகு கவிழ்ந்தது,8 fisher,catching fish</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/poqset2h/ship-in-water.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ படகு மூழ்கியது]]></media:title><media:description type="html"><![CDATA[ படகு மூழ்கியதில் அதிஷ்டவசமாக 8 மீனவர்களும் உயிர் தப்பினர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/poqset2h/ship-in-water.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஆந்திர நடுக்கடலில்<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> மீன்</a> பிடித்து கொண்டிருந்த மீனவர்களின் படகு மூழ்கி நிலையில், 8 மீனவர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். </p><h2>படகில் இயந்திரக் கோளாறு</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை</a> திருவொற்றியூரைச் சேர்ந்த பிரசாத் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், காசிமேடு பகுதியை சேர்ந்த 8 மீனவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.</p><p>ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபட்டினம் அருகே நடுக்கடலில் அவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது படகின் இயந்திரத்தில் திடீரென்று பழுது ஏற்பட்டது.</p><h2>மூழ்கிய படகு</h2><p>இயந்திர கோளாறு காரணமாகப் படகு கட்டுப்பாட்டை இழந்து, கடலில் மெல்ல மூழ்கத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள், தங்களைக் காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர். சற்றும் எதிர்பாராத விதமாக படகு கடலுக்குள் முழுமையாக மூழ்கியது.</p><h2>துரிதமாகச் செயல்பட்ட சக மீனவர்கள்</h2><p>அதே கடற்பகுதியில் அவர்களுக்கு அருகே மற்றுமொரு விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். ஆபத்தில் சிக்கியவர்களின் அலறல் சத்தத்தைக் கேட்டு உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 8 மீனவர்களையும் அவர்கள் துரிதமாகச் செயல்பட்டு பத்திரமாக மீட்டனர்.</p><h2>அதிகாரிகள் விசாரணை</h2><p>மீட்கப்பட்ட<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> மீனவர்கள்</a> அனைவரும் சென்னை காசிமேடு கடற்கரைக்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர். இந்த விபத்து மற்றும் மீட்பு நடவடிக்கை குறித்து கடலோரப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>நடுக்கடலில் விசைப்படகு மூழ்கிய சம்பவமும், மீனவர்கள் நூலிழப்பில் உயிர் தப்பியதும் சென்னை கடலோரப் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&quot;போதையில்லா தமிழகம்&quot; - பொள்ளாச்சியில் நடைபெறும் விழிப்புணர்வு மாநாட்டு பந்தல் பணி தீவிரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/drug-free-tamil-nadu-awareness-conference-to-be-held-in-pollachi-in-full-swing</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/drug-free-tamil-nadu-awareness-conference-to-be-held-in-pollachi-in-full-swing#comments</comments><guid isPermaLink="false">d6dc4fd6-2ff3-4869-a7cc-8d051fcb1556</guid><pubDate>Sat, 11 Jul 2026 12:21:35 +0000</pubDate><atom:updated>2026-07-11T12:21:35.894Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,Annamalai,அண்ணாமலை,பொள்ளாச்சி,Pollachi,Conference,மாநாடு,கோயம்புத்தூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/yamg61z1/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/yamg61z1/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பொள்ளாச்சி,</p><p>கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் "WE THE LEADERS"  அமைப்பின் முதல் மாநாடு "போதையில்லா தமிழகம்" என்ற தலைப்பில் விழிப்புணர்வு மாநாடு நாளை (ஜூலை 12, ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது.</p><p>மாநாட்டுக்காக பொள்ளாச்சி கோவை நெடுஞ்சாலையில் ஆட்சி பட்டி அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு கடந்த 2-ம் தேதி அதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த மாநாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகளில் இருந்து 25,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>அதற்காக மாநாடு நடைபெறும் இடத்தில் தற்போது மாநாட்டு பந்தல், மேடை, இருக்கைகள் அமைக்கும் பணிகள் மற்றும் வாகன நிறுத்தம் இடம் ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மாநாடு நடைபெறும் இடத்தின் நுழைவுவாயிலில் அண்ணாமலையை வரவேற்கும் விதமாக பிளக்ஸ் பேனர்கள் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>125 நாள் வேலையில் முறைகேடு புகார்:  மாறி, மாறி மண்ணை வாரி தூற்றி தகராறில் ஈடுபட்ட பெண்கள்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/allegation-of-irregularities-in-the-125-day-employment-scheme-women-engaged-in-a-scuffle-hurling-soil-at-each-other</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/allegation-of-irregularities-in-the-125-day-employment-scheme-women-engaged-in-a-scuffle-hurling-soil-at-each-other#comments</comments><guid isPermaLink="false">8b6e9ea8-e62d-4bff-b994-d0885ea504c3</guid><pubDate>Sat, 11 Jul 2026 12:15:47 +0000</pubDate><atom:updated>2026-07-11T12:15:47.236Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பெண்கள்,womens,முறைகேடு புகார்,irregularities,125 நாள் வேலை திட்டம்,125-day work plan</media:keywords><media:content height="271" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/cnead6s0/street-fight.jpg" width="551"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மண்ணை வாரி தூற்றி தகராறில் ஈடுபட்ட பெண்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/cnead6s0/street-fight.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><p>திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஸ்ரீராமபுரம் ஊராட்சியில், <a href="https://www.dailythanthi.com/search?q=125%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">125 நாள் வேலை திட்டத்தில்</a> பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக வந்த புகாரை அடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் சென்று அதிரடி விசாரணை நடத்தியுள்ளார்.</p> <h2>புகார் மனு</h2><p>வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). இவர், ஸ்ரீராமபுரம் ஊராட்சியில் மத்திய,மாநில அரசுகளின் 125 நாள் வேலை திட்டம் (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்) செயல்படுத்தப்படுவதில் முறைகேடுகள் நடப்பதாக வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாக ஒரு புகார் மனு அளித்தார்.</p><p>அந்த மனுவில், ஸ்ரீராமபுரம் ஊராட்சியில் நூறு நாள் வேலை திட்டத்தின் பணித்தள பொறுப்பாளராக பணியாற்றி வரும் அம்பிகா என்பவர், தொழிலாளர்களின் பணிப்பதிவேடு மற்றும் திட்டப்பணிகளில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டிருந்தார்.</p><h2>அதிரடி நடவடிக்கை</h2><p>அதிகாரி நேரில் விசாரணைபொதுமக்களிடம் இருந்து வந்த இந்த பரபரப்பு புகாரை அடுத்து, வேடசந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கற்பகம் உடனடியாக அதிரடி நடவடிக்கையில் இறங்கினார். அவர் நேற்று பூத்தாம்பட்டியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு நேரடியாக சென்றார்.அங்கு சம்பந்தப்பட்ட ஆவணங்கள், வேலைக்கு வந்தவர்களின் விவரங்கள் மற்றும் பணிப்பதிவேடுகளை கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டார். </p><p>சுரேஷ் தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்தார். விசாரணை முடிந்ததை அடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் கற்பகம் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அவர் சென்ற அடுத்த சில நிமிடங்களிலேயே ஊராட்சி அலுவலக வளாகத்தில் திடீர் மோதல் வெடித்தது.</p> <h2>நீங்கள் எப்படி கூறலாம்?</h2><p>அங்கு வந்த வார்டு உறுப்பினர் மகேஸ்வரியின் மகள் புவனேஸ்வரி, பணித்தள பொறுப்பாளர் அம்பிகாவை நோக்கிச் சென்று பாய்ந்தார். என் தாயார் (வார்டு உறுப்பினர் மகேஸ்வரி) இந்த திட்டத்தில் கமிஷன் வாங்கியதாக நீங்கள் எப்படி கூறலாம்?" என்று கேட்டு அம்பிகாவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாய்த்தகராறு ஏற்பட்டது.</p> <h2>கமிஷன்</h2><p>புவனேஸ்வரியின் கேள்விக்கு பணித்தள பொறுப்பாளர் அம்பிகா ஆவேசமாக பதிலடி கொடுத்தார். அப்போது அவர், முறைகேடாக வந்த பணத்தை நான் மட்டும் தனியாக வைத்து கொள்ளவில்லை. இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் என அனைவருக்கும் சமமாக பிரித்து கொடுத்துவிட்டேன்" என்று அங்கிருந்தவர்கள் முன்னிலையில் பகிரங்கமாக கூறினார். அதிகாரி விசாரணை நடத்தி சென்ற உடனே, மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் கமிஷன் பிரித்து கொடுக்கப்பட்ட விவகாரத்தை அவரே ஒப்புக்கொண்டது வேடசந்தூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>மண்ணை வாரி மோதல்</h2><p> இதனால், வார்டு உறுப்பினர் மகேஸ்வரியின் மகள் புவனேஸ்வரிக்கும், அம்பிகாவுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு எல்லை மீறி முற்றியது. ஆத்திரமடைந்த இருவரும் ஊராட்சி அலுவலகத்தை விட்டு வெளியேறி, பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பார்க்கும் படி முக்கிய சாலைக்கு வந்தனர். அங்கு மாறி, மாறி மண்ணை வாரி தூற்றி மோதல்அங்கு நடுத்தெருவில் நின்றுகொண்டு, சினிமா பாணியில் ஒருவர் மீது ஒருவர் மண்ணை வாரி தூற்றி சாபமிட்டபடி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். </p><h2>போலீசார் விசாரணை</h2><p>சண்டை உச்சக்கட்டத்தை எட்டியதில், ஆத்திரமடைந்த இரு பெண்களும் ஒருவரையொருவர் தலைமுடியை பிடித்துக் கொண்டு சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர். இதில் காயம் அடைந்த புவனேஸ்வரி வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.</p> ]]></content:encoded></item><item><title>நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை புதிய உச்சம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/egg-purchase-price-hits-new-high-in-namakkal</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/egg-purchase-price-hits-new-high-in-namakkal#comments</comments><guid isPermaLink="false">dd7b1c9a-7f4d-4445-870e-ea9568c95677</guid><pubDate>Sat, 11 Jul 2026 12:13:47 +0000</pubDate><atom:updated>2026-07-11T12:13:47.472Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Namakkal,நாமக்கல்,முட்டை விலை,egg price,முட்டை,egg,Egg price hike,முட்டை கொள்முதல் விலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/zw19va3r/Untitled-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/zw19va3r/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல்,</p><p>நாமக்கல் மாவட்டத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.</p><h2>கொள்முதல் விலை உயர்வு</h2><p>முட்டை கொள்முதல் விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுதான் நிர்ணயம் செய்கிறது. இதனிடையே, மேற்காசிய போர் ஏற்பட்டதால் கோழி தீவன மூலப்பொருள்களின் விலை உயர்வு, வெளிநாடு ஏற்றுமதி உள்ளிட்ட காரணங்களால் சமீபகாலமாக முட்டையின் விலை உயர்ந்து, கொள்முதல் விலையாக ரூ.6.50 என்று உயர்ந்தது. இந்த நிலையில், முட்டையின் பண்ணை கொள்முதல் விலை மேலும் 5 காசுகள் உயர்ந்து ரூ.6.55 என்ற புதிய உச்சத்தை தொட்டிருந்தது.</p><p>இந்த நிலையில், இன்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த நிர்வாகிகள் முடிவு செய்தனர். எனவே நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலையில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">இதுவரையில் </a>இல்லாத புதிய உச்சமாக மேலும் 5 காசுகள் உயர்ந்து 660 காசுகளாக (ரூ.6.60) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><h2>மூலப்பொருட்களின் விலை உயர்வு</h2><p>தமிழ்நாட்டில் முட்டை ஒன்றின் கொள்முதல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.6.60 என்ற புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அதிகரித்த விற்பனை, கோழித்தீவன மூலப்பொருட்களின் கடுமையான விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் விலையேற்றம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பெரும்பாலான கடைகளில் சில்லறை விற்பனையில் தற்போது ரூ.8 என்றிருக்கும் நிலையில், மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நாமக்கல், திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் ஒதுக்கீடு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-student-admission-seats-allocated-to-namakkal-and-tiruppur-government-medical-colleges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-student-admission-seats-allocated-to-namakkal-and-tiruppur-government-medical-colleges#comments</comments><guid isPermaLink="false">631e8a6f-24be-4556-86d9-52a036bce089</guid><pubDate>Sat, 11 Jul 2026 11:59:21 +0000</pubDate><atom:updated>2026-07-11T11:59:21.536Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்,Namakkal,நாமக்கல்,மாணவர் சேர்க்கை,மருத்துவ கல்லூரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/gu7k9bux/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/gu7k9bux/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில மருத்துவ படிப்பு சேர்க்கைக்காக மாணவர்கள் இணைய வழியில விண்ணப்பம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாறியதன் காரணமாக ஒரு 700 மருத்துவ இடங்கள் அரசு ஒதுக்கீட்டில் இருந்து குறைகிறது என்ற ஒரு தகவலை மந்திரி ஏற்கனவே தெரிவித்திருந்தார். </p> <p>இந்த சூழலில், தமிழகத்தில் 2 அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடங்கள் அதிகரிக்கப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. திருப்பூர் மற்றும் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரிகளில் தலா 50 எம்.பி.பி.எஸ். இடங்கள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கான உத்தரவை மத்திய அரசு வழங்கி இருப்பதாக மருத்துவக் கல்வி இயக்குனராக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். இது 100 இடங்கள் அதிகரிப்பு என்பது தமிழக மாணவர்களுக்கு, குறிப்பாக அரசு பள்ளிகளில் படிக்கும் 7.5 விழுக்காட்டின் கீழ் வரக்கூடிய மாணவர்களுக்கு மிகுந்த ஒரு பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>உங்கள் குற்றவுணர்ச்சிக்கு எங்கள் இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கி விடாதீர்கள் - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dont-let-your-guilt-ruin-the-future-of-our-youth-nayinar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dont-let-your-guilt-ruin-the-future-of-our-youth-nayinar-nagendran#comments</comments><guid isPermaLink="false">6e0dfc99-2b9b-4fdb-9c5f-66397f631125</guid><pubDate>Sat, 11 Jul 2026 11:46:24 +0000</pubDate><atom:updated>2026-07-11T11:46:24.470Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Nayinar Nagendran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/am15ly5f/Untitled-22.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/am15ly5f/Untitled-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>உங்கள் குற்றவுணர்ச்சிக்கு எங்கள் இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கி விடாதீர்கள் ஜோசப் விஜய்யே!</p><p>கடந்த ஆண்டு கரூரில் தங்களின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உயிரிழந்தவர்களை, அப்பொழுது கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்த நீங்கள், முதல்-அமைச்சரான பிறகு அவர்களுக்கு “அரசுப்பணி” வழங்கி ஆறுதல் கூற முயன்றதை மனிதாபிமான அடிப்படையில் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், அரசுப் பணிகளை மட்டுமே இலக்காக வைத்து. இரவும் பகலும் கடுமையாக போராடிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு, நீங்கள் என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?</p><h2>காலிப்பணியிடங்கள் </h2><p>1. தமிழகத்தில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 125 கல்லூரிகளில் முதல்வர் காலிப்பணியிடங்கள் உள்ளன.</p><p>2. அதே கல்லூரிகளில் சுமார் 9000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாகக் கிடக்கின்றன.</p><p>3. சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பல்கலைக்கழகம்</a>, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியப் பல்கலைக் கழகங்களில் 50% -க்கும் மேற்பட்ட பேராசிரியப் பணியிடங்கள் காலியாக உள்ளன.</p><p>4. அரசுப் பள்ளிகளில் 30,000-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியப் பணியிடங்களும், 20,000-க்கும் பணியிடங்களும் காலியாகக் கிடக்கின்றன. மேற்பட்ட பட்டதாரி ஆசிரியப்</p><p>5. 7000-க்கும் மேற்பட்ட அரசு செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர்.</p><p>6. நீலகிரி மின்சார வாரியத்தில் மட்டும் கிட்டத்தட்ட 61% காலிப்பணியிடங்கள் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>7. தமிழ்நாடு மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை, தகுதியின் அடிப்படையில் தங்களுக்கு வழங்க வேண்டுமென கேங்க்மேன்கள் போராடி வருகின்றனர்.</p><p>8. அதுமட்டுமின்றி, தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் உட்பட பல பிரிவினர் நிரந்தர அரசு வேலை வேண்டி கோரிக்கை விடுத்து, தொடர்ந்து போராடி வருகின்றனர்.</p><h2>மெத்தனம் காட்டுவது ஏன்?</h2><p>ஆனால் நீங்களோ இந்த ஆண்டிற்கான TNPSC குரூப்-1 தேர்விற்கு வெறும் 26 காலிப்பணியிடங்களை மட்டுமே அறிவித்து, அரசு வேலையை மட்டுமே நம்பியிருந்த லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவுகளில் மண்ணை வாரி தூற்றியுள்ளீர்கள்.</p><p>உங்களின் குற்றவுணர்ச்சியை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">திருப்திப்படுத்திக் </a>கொள்வதற்காக அத்தனை அரசுப் பணிகளை யோசிக்காமல் உடனே தூக்கிக் கொடுத்த நீங்கள், அரசு கல்விக் கூடங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட மற்ற அரசு துறைகளில் உள்ள அரசு காலிப் பணியிடங்களை நிரப்புவதில் மட்டும் மெத்தனம் காட்டுவது ஏன்? TET, TRB உள்ளிட்ட அரசுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பல்லாயிரக் கணக்கானவர்கள் அரசு பணி நியமன ஆணைக்காக காத்துக் கொண்டிருக்கையில், துறை வாரியான ஆள்சேர்ப்பு மற்றும் பணி நியமனத்திற்கான கால அட்டவணையை உங்கள் அரசு ஏன் வெளியிடவில்லை?</p><p>எனவே, உங்கள் தனிப்பட்ட பாவச் செயல்களுக்கு, அதிகாரத்தைப் பயன்படுத்தி பரிகாரம் தேடுவதற்காக மட்டும் மக்கள் உங்களைத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை உணர்ந்து பொறுப்புடன் செயல்படுங்கள் ஜோசப் விஜய்யே! கரூர் மக்களுக்கு எப்படி ஜெட் வேகத்தில் அரசு பணி நியமன ஆணைகளை வழங்கினீர்களோ அதே போல, மற்ற அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நீங்கள் உடனே நிரப்ப வேண்டும்! அரசு வேலையை நம்பி காத்துக் கொண்டிருக்கும் லட்சோப லட்ச இளைஞர்களின் உழைப்பிற்கு மதிப்பு தர வேண்டும்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாமல்லபுரத்தில் சோகம்: மின்சாரம் தாக்கி 4 பேர் பலி

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-in-mamallapuram-4-killed-by-electrocution</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-in-mamallapuram-4-killed-by-electrocution#comments</comments><guid isPermaLink="false">17377658-1bfe-4c44-a6b9-b115f6afeedd</guid><pubDate>Sat, 11 Jul 2026 11:32:46 +0000</pubDate><atom:updated>2026-07-11T11:32:46.672Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Mamallapuram,மாமல்லபுரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/mfo1nh65/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/mfo1nh65/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>செங்கல்பட்டு,</p><p><a href="https://www.dailythanthi.com/">செங்கல்பட்டு </a>மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதி வளாகத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி இன்று நடைபெற்றது. இதில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். </p><h2>4 பேர் பலி</h2><p>ஆழ்துளை குழாயை பொருத்த இரும்பு பைப்பை உயர்த்தியபோது மேலே சென்ற மின்சார கேபிள் மீது உரசியுள்ளது. இதனால் இரும்பு பைப் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. அப்போது, இரும்பு பைப்பை பிடித்திருந்த 4 தொழிலாளர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் பிரபு (வயது 22), பாட்ஷா (வயது 45), ராஜேந்திரன் (55), பாலாஜி (வயது 32) ஆகிய 4 தொழிலாளர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், 4 தொழிலாளர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆழ்துளை கிணறு அமைக்கும்போது மின்சாரம் தாக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வார விடுமுறை: குற்றாலத்தில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் - அருவிகளில் ஆனந்த குளியல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/weekend-holiday-tourists-flock-to-courtallam-enjoying-a-bath-in-the-waterfalls</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/weekend-holiday-tourists-flock-to-courtallam-enjoying-a-bath-in-the-waterfalls#comments</comments><guid isPermaLink="false">8da628e4-6217-4a1b-9ca0-fe9bc5fd16cf</guid><pubDate>Sat, 11 Jul 2026 11:28:50 +0000</pubDate><atom:updated>2026-07-11T11:28:50.547Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>குற்றாலம்,Weekend,வார விடுமுறை,Couttralam waterfalls</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/dbcn7n3s/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/dbcn7n3s/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><p>தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்டியுள்ளது. குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுந்து வருகிறது.</p><p>நேற்று குற்றாலம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மலைப்பகுதிகளில் சாரல் மழை பெய்ததால் குற்றாலம் மெயின் அருவி, சிற்றருவி, ஐந்தருவிக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து காணப்பட்டது. இன்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.</p><p>காலை முதலே குற்றால அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். ஐந்தருவி, மெயின் அருவி கார் பார்க்கிங் பகுதிகள் முழுவதும் நிரம்பி வழிந்ததால் போலீசார் அதனை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். குற்றாலம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசி வருவதோடு இதமான சூழ்நிலை நீடிப்பதால் குற்றால சீசனை சுற்றுலா பயணிகள் உற்சாகமாக அனுபவித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கொடைக்கானல்: சிட்டி வியூ பாயிண்ட்டில் பாதுகாப்பு வேலி அமைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kodaikanal-tourists-request-the-installation-of-a-safety-fence-at-the-city-view-point</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kodaikanal-tourists-request-the-installation-of-a-safety-fence-at-the-city-view-point#comments</comments><guid isPermaLink="false">f1bb8aa2-d79f-48ff-bb12-186fbda2e8df</guid><pubDate>Sat, 11 Jul 2026 11:08:14 +0000</pubDate><atom:updated>2026-07-11T11:08:14.058Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கொடைக்கானல்,Kodaikanal,மலை,பாதுகாப்பு ஏற்பாடு,கோரிக்கை Request,சுற்றுலா பயணிகள் Tourists</media:keywords><media:content height="304" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/kuxj7hyw/kodaikanal.jpg" width="553"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கொடைக்கானல் சிட்டி வியூ பாயிண்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/kuxj7hyw/kodaikanal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கொடைக்கானல், </p><p>கொடைக்கானல்: சிட்டி வியூ பாயிண்ட்டில் பாதுகாப்பு வேலி அமைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை.</p><h2>சிட்டி வியூ பாயிண்ட்</h2><p>மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், கொடைக்கானல் நகரின் நுழைவு பகுதியில் அமைந்துள்ள செண்பகனூர் சிட்டி வியூ பாயிண்ட் (City View Point) பகுதிக்கு தற்போது சுற்றுலா பயணிகளின் வருகை அதிரடியாக அதிகரித்துள்ளது.</p><h2>சுற்றுலா பயணிகள் கூட்டம்</h2><p>மலைச்சாலையின் நுழைவாயிலில் அமைந்துள்ள இந்த வியூ பாயிண்டில் இருந்து பார்த்தால், வைகை அணை, பெரியகுளம், தேனி மற்றும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D">கொடைக்கானல்</a> மலைப்பாதையின் வளைவுகளும், இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான பள்ளத்தாக்குகளும் ஒரே பார்வையில் கண்களுக்கு விருந்தாக அமைகின்றன. </p> <p>தற்போது நிலவி வரும் இதமான குளு, குளு சீதோஷ்ண நிலையால், இப்பகுதியை அடிக்கடி மேக கூட்டங்களும், பனிமூட்டமும் சூழ்ந்து கொள்கின்றன. இந்த கண்கொள்ளா காட்சியை கண்டு ரசிப்பதற்காகவே செண்பகனூர் பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.</p><h2>பாதுகாப்பு வேலி</h2><p>இந்த சிட்டி வியூ பாயிண்ட் பகுதி மிக செங்குத்தான, ஆழமான மலைச்சரிவில் அமைந்துள்ளது. இவ்வளவு அபாயகரமான இடத்தில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக எந்தவொரு தடுப்பு சுவரோ அல்லது இரும்பு பாதுகாப்பு வேலியோ அமைக்கப்படவில்லை. இதனால், இங்கு வரும் பயணிகள் மற்றும் சிறுவர்கள் தவறி கீழே விழுந்து அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது. </p><p>ஆபத்தை உணராமல் பலர் சரிவின் விளிம்பில் நின்று ‘செல்பி’ எடுப்பதால், அசம்பாவிதங்கள் நடக்கும் முன் நகராட்சி நிர்வாகமும், வனத்துறையும் இணைந்து உடனடியாக இங்கு பலத்த பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் மற்றூம் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p><h2>அரசுக்கு கோரிக்கை</h2><p>மது அருந்தாமலும், சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் தடுக்க இந்த பகுதியில் நிரந்தரமாக பாதுகாப்பு பணியாளர்களை நியமிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளும், சமூக ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>விஜய் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி மறுத்ததால் ஆத்திரம்: டி.எஸ்.பி.யின் கையை கடித்து வைத்த த.வெ.க. தொண்டர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvkworker-bites-dsps-hand</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvkworker-bites-dsps-hand#comments</comments><guid isPermaLink="false">f1153091-b39f-4a24-9ef0-67ba2270c721</guid><pubDate>Sat, 11 Jul 2026 11:06:29 +0000</pubDate><atom:updated>2026-07-11T11:06:29.351Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,KarurStampede</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/uxep0g3d/dsp33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/uxep0g3d/dsp33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கரூர்,</p><p>கரூர் சின்னாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் மெல்வின். த. வெ.க. தொண்டரான இவர் நேற்று கரூர் வெண்ணைமலை அட்லஸ் அரங்கில் நடைபெற்ற முதல்-அமைச்சர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க மிகுந்த உற்சாகத்தோடு தனது சைக்கிளில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் புகைப்படம் மற்றும் த.வெ.க. கொடியை கட்டிக்கொண்டு வந்தார்.</p><p>மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்த இடத்திற்குள் அனுமதி அட்டை வைத்திருந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அவரிடம் அடையாள அனுமதி அட்டை இல்லாததால் போலீசார் அவரை உள்ளே விட மறுத்தனர். அவர், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் தான் இருக்கும் அடையாள அட்டையை போலீசாரிடம் காட்டி தன்னை உள்ளே விடுமாறு 'கேட்டுள்ளார். ஆனால் அது செல்லாது என்று போலீசார் கூறிவிட்டனர். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற மெல்வின், அருகில் இருந்த பேனரை கிழித்து எறிந்தார். இந்த காட்சிகளை வீடியோ எடுத்துக்கொண்டிருந்த செய்தியாளர்களை நோக்கி கல் மற்றும் பாட்டில்களை தூக்கி வீசி ரகளையில் ஈடுபட்டார்.</p>  <p>இதை கண்டு அதிர்ச்சியடைந்த தஞ்சாவூர் டி.எஸ். பி. கார்த்திகேயன், அங்கு சென்று அவரை சமாதா னப்படுத்தினார். அப்போதும் மெல்வின் தனது அடையாள அட்டையை காட்டி தன்னை உள்ளே அனுப்புமாறு டி.எஸ்.பி.யிடம் வாக்குவாதம் செய்தார். அதற்கு டி.எஸ்.பி. மறுப்பு தெரிவித்ததால், அடுத்த நொடியே, ஆவேசமடைந்த மெல்வின், டி.எஸ்.பி.கார்த்திகேயனின் கையை பிடித்து நறுக்கென்று கடித்து வைத்தார். வலி தாங்க முடியாமல் டி.எஸ்.பி. துடித்ததை பார்த்து மிரண்டு போன மற்ற போலீசார், உடனடியாக ஓடிவந்து ஓடிவந்து மெல்வினை பிடித்து இழுத்து டி.எஸ்.பி.யை மீட்டனர். இதனால் ஆத்திரமடைந்த டி.எஸ்.பி., மெல்வினின் கன்னத்தில் 2 அறை விட்டு அவரை மற்ற போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் அவரையும் சைக்கிளையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">முதல்-அமைச்சர் விஜய்</a> தனது பேச்சை முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டதும் போலீசார் மெல்வினை எச்சரித்து விடுவித்தனர். மெல்வின், மாலையில் கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு தனது சைக்கிளில் சென்றார். 31 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கி விட்டு புறப்பட்ட விஜய்யை பார்த்து மகிழ்ச்சியடைந்த மெல்வின், கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் தனது சைக்கிளோடு மிகவும் சாந்தமாக சுற்றி திரிந்தார் </p> ]]></content:encoded></item><item><title>சென்னை வெளிவட்ட சாலையை தனியாருக்கு வழங்க தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-ramadoss-has-stated-that-the-tamil-nadu-government-should-scrap-the-agreementformulated-during-the-dmk-regimeto-award-the-contract-to-a-private-entity-for-a-low-sum</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-ramadoss-has-stated-that-the-tamil-nadu-government-should-scrap-the-agreementformulated-during-the-dmk-regimeto-award-the-contract-to-a-private-entity-for-a-low-sum#comments</comments><guid isPermaLink="false">d5eb2077-606d-4f71-bced-97234a6b710b</guid><pubDate>Sat, 11 Jul 2026 10:49:10 +0000</pubDate><atom:updated>2026-07-11T10:49:10.599Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/ksahp1yv/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/ksahp1yv/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை வெளிவட்ட சாலையை தனியாருக்கு வழங்க தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“சென்னை வண்டலூர் முதல் மீஞ்சூர் வரையிலான 60 கி.மீ நீள சென்னை வெளிவட்டச் சாலையை ரூ.2526 கோடிக்கு தனியாருக்கு 25 ஆண்டுகளுக்கு வழங்கப்படவுள்ளதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. 25 ஆண்டுகளில் ரூ.50 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டித்தரக் கூடிய வெளிவட்ட சாலையை அடிமாட்டு விலைக்கு தனியாருக்கு வழங்கும் தி.மு.க. அரசின் திட்டத்தை புதிய அரசும் அப்படியே செயல்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. </p><p>சென்னையை கடந்து மற்ற நகரங்களுக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் சென்னை மாநகருக்குள் வருவதைத் தவிர்க்கும் வகையில் சென்னை வண்டலூரில் தொடங்கி நெமிலிச்சேரி வழியாக மீஞ்சூர் வரை மொத்தம் 60.15 கிமீ தொலைவுக்கான வெளிவட்டச் சாலை 2011&amp;21 அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.2156.40 கோடி செலவில்  இரு கட்டங்களாக அமைக்கப்பட்டது. சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் பெரும்பங்கு வகிக்கும் இச்சாலையை இப்போது தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் பராமரித்து வருகிறது.</p><p>சென்னை வெளிவட்ட சாலையை பராமரித்து, சுங்கக்கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்தத்தை ரூ.2,000 கோடி என்ற அடிப்படை விலைக்கு தனியாருக்கு வழங்க முந்தைய தி.மு.க. அரசு முடிவு செய்தது. அந்த முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அதை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11-ந்தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன். </p><p>ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் ஒப்பந்தப்பணிகளை  தி.மு.க. அரசு தொடர்ந்தது. அதன்பின் 11 மாதங்களாகி விட்ட நிலையில், சென்னை வெளிவட்டச் சாலையை தனியாருக்கு தாரை வார்க்கும் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், ரூ.2,526 கோடிக்கு ஒரு தனியார் நிறுவனத்திற்கு அந்த ஒப்பந்தம் வழங்கப்படவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு அரசின் சொத்துகளை  தனியார் நிறுவனத்திற்கு தரைமட்ட விலைக்கு தாரை வார்க்கும் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது.</p> <p>இந்த சாலையை அமைப்பதற்கான அடிக்கல் 2010-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது. அ.தி.மு.க ஆட்சியில் இரு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு முறையே 2014, 2021 ஆண்டுகளில் திறக்கப்பட்டது. 16 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்திற்காக வாங்கப்பட்ட கடனுக்கான வட்டியாக மட்டுமே பல நூறு கோடி ரூபாய் செலுத்தப்பட்டிருக்கும் நிலையில், திட்ட மதிப்பை விட வெறும் ரூ.369.60 கோடி மட்டுமே கூடுதலாக நிர்ணயம் செய்து ஒப்பந்தம் வழங்குவது பொருளாதாரப் படுகொலையாகவே இருக்கும். </p><p>இதன் பின்னணியில் பேரங்களும், ஊழல்களும் நடந்திருக்கக் கூடும் என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன. தி.மு.க. ஆட்சி இப்படி ஒரு சீரழிவு ஒப்பந்தததை வழங்க முடிவு செய்ததை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அதில் எந்த மாற்றத்தையும் செய்யாமல், தி.மு.க. அரசின் முடிவை த.வெ.க. அரசின் பின்பற்றுவது அதிர்ச்சியளிக்கிறது.</p><p>சென்னை வெளிவட்ட சாலையை பராமரித்து, சுங்கக்கட்டணம் வசூலிப்பதற்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ள  நிறுவனம், அடுத்த 25 ஆண்டுகளுக்கு சுங்கக்கட்டணத்தை வசூலித்துக் கொள்ளும். வெளிவட்ட சாலையில் இன்றைய நிலையில் சராசரியாக தினமும் 31 ஆயிரம் வாகனங்கள் பயணிக்கின்றன. இந்த சாலைக்கான சுங்கக்கட்டணம் கடந்த ஜூன் 1-ந்தேதிதான் உயர்த்தப்பட்டன. அதன்படி, குறைந்தபட்சமாக கார்களுக்கு ரூ.140 முதல் அதிகபட்சமாக 7 அச்சு சரக்கு வாகனங்களுக்கு ரூ.915 வரை சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. </p><p>சராசரியாக ஓரு வாகனத்திற்கு  ரூ.350 என வைத்துக் கொண்டாலும் கூட ஆண்டுக்கு சுமார் ரூ.400 கோடி சுங்கக்கட்டணம் வசூலாகும். 25 ஆண்டுகளின் முடிவில் இந்த சாலையில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை 70 ஆயிரங்களை கடந்து விடும் என்பதால் சுங்கக்கட்டண வசூலும் ஆண்டுக்கு ரூ.4000 கோடி என்ற அளவைத் தாண்டி விடும். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இந்த சாலையிலிருந்து 25 ஆண்டுகளில் கிட்டத்தட்ட ரூ.50 ஆயிரம் கோடி வரை சுங்கக்கட்டணம் வசூலிக்க முடியும். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சாலையை வெறும் ரூ.2526 கோடிக்கு தனியாருக்கு தாரை வார்ப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.</p><p>சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை ரூ.2,100 பறக்கும் சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டதில் ரூ.700 கோடி ஊழல் நடந்திருக்கலாம் என்பதால் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. கரூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதல்-அமைச்சர் விஜய், இந்தத் திட்டத்தின் பெயரைக் குறிப்பிடாமல் இரு மடங்கு தொகைக்கு வழங்கப்பட்டிருந்த சென்னை மேம்பாலம் திட்டத்திற்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தார். அதே அளவுகோல்தான் இந்த ஒப்பந்தத்திற்கும் பயன்படுத்தபட வேண்டும்.</p><p>எனவே, சென்னை வண்டலூர் &amp; மீஞ்சூர் இடையிலான வெளிவட்டச் சாலையை மிகக் குறைந்த தொகைக்கு  தனியாருக்கு வழங்குவதற்காக தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். இந்த சாலை அரசின் பராமரிப்பிலேயே நீடிக்க வேண்டும்; அதில் சுங்கக்கட்டணம் ரத்து செய்யப்பட வேண்டும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>கரூர் 3,084 ஏக்கர் விவகாரம்: இனாம் நிலங்களையும் கோவில் சொத்துகளையும் குழப்ப வேண்டாம் - அண்ணாமலை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-3084-acre-issue-dont-confuse-inam-lands-and-temple-properties-annamalai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-3084-acre-issue-dont-confuse-inam-lands-and-temple-properties-annamalai#comments</comments><guid isPermaLink="false">26df518c-2f0d-4fad-8143-7077111c85ec</guid><pubDate>Sat, 11 Jul 2026 10:43:49 +0000</pubDate><atom:updated>2026-07-11T10:43:49.262Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர்,Annamalai,அண்ணாமலை,Karur</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/oceozfbp/annamalai.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/oceozfbp/annamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>‘வி த லீடர்ஸ்’ இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>கோவில் சொத்துகள்</h2><p>கரூர் மாவட்டத்தில் 3,084 ஏக்கர் நிலங்கள் தொடர்பாக எழுந்துள்ள விவகாரத்தில் உண்மை நிலையை, சட்டரீதியாகப் புரிந்துகொள்வது அவசியம்.</p><p>இங்கு பேசுபொருளாகியிருக்கும் அனைத்து நிலங்களும் "திருக்கோவில் சொத்துகள்" என்றல்ல; பெரும்பாலானவை இனாம் நிலங்கள் தொடர்பானவை. ஆலயங்களில் பணியாற்றிய அர்ச்சகர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு விஜயநகரப் பேரரசு மற்றும் பிற ஆட்சியாளர்களால் மானியமாக வழங்கப்பட்ட இனாம் நிலங்கள், பின்னர் தமிழ்நாடு இனாம் (ரத்து மற்றும் ரயத்வாரியாக மாற்றுதல்) சட்டம், 1963 (Act 30 of 1963)-ன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தகுதியுடையவர்களுக்கு </a>ரயத்வாரி பட்டாக்கள் வழங்கப்பட்டன.</p><p>இந்த பட்டாக்களை அடிப்படையாகக் கொண்டு, ஆயிரக்கணக்கான விவசாயிகள் பல தசாப்தங்களாக நிலங்களை சாகுபடி செய்து, பராமரித்து, சட்டப்பூர்வமாக அனுபவித்து வருகின்றனர். ஆனால், கடந்த திமுக ஆட்சியில், இந்த பட்டா பெற்ற இனாம் நிலங்களும் கோவில் நிலங்களுடன் சேர்த்து பூஜ்ஜிய மதிப்பில் வகைப்படுத்தப்பட்டதால், அவற்றைப் பத்திரப்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் கடன் பெறுதல், சொத்து பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.</p><h2>தவறான புரிதல்</h2><p>தற்போதைய தவெக அரசின் நடவடிக்கை, சட்டப்படி ஏற்கனவே ரயத்வாரி பட்டா பெற்ற இனாம் நிலங்களின் மீதான பதிவுத் தடையை நீக்கி, அந்த விவசாயிகளின் சட்டப்பூர்வ உரிமையை மீட்டெடுப்பதற்கானதாக இருந்தால், அதனை வரவேற்க வேண்டியதே தவிர, அதை கோவில் நிலங்களை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு வழங்கும் நடவடிக்கையாக சித்தரிப்பது தவறான புரிதலை ஏற்படுத்தும்.</p><p>அதே நேரத்தில், உண்மையான திருக்கோவில் சொத்துகள் எதுவும், சட்டவிரோதமாக தனியாருக்கு மாற்றப்படக் கூடாது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. கோவில் சொத்துகளை பாதுகாப்பதும், சட்டப்படி உரிமை பெற்ற விவசாயிகளின் உரிமையை பாதுகாப்பதும் இரண்டுமே அரசின் பொறுப்பாகும்.</p><h2>நாங்கள் ஆதரிக்கிறோம்</h2><p>எனவே, சட்டப்பூர்வமாக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ரயத்வாரி </a>பட்டா பெற்ற இனாம் நிலங்களின் உரிமையை உறுதி செய்யும் தமிழக அரசின் நடவடிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம். இது ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், பல ஆண்டுகளாக நிலவி வந்த பதிவுச் சிக்கல்களையும் தீர்க்கும் ஒரு முக்கியமான நடவடிக்கை.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க., தி.மு.க. ஏன் ஒரே அணியில் இருக்கக்கூடாது? - திருமாவளவன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-shouldnt-the-trp-and-dmk-be-in-the-same-team-thirumavalavan-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-shouldnt-the-trp-and-dmk-be-in-the-same-team-thirumavalavan-asks#comments</comments><guid isPermaLink="false">a180e1c6-3c62-4471-9524-09a413ba7a90</guid><pubDate>Sat, 11 Jul 2026 10:41:08 +0000</pubDate><atom:updated>2026-07-11T10:41:08.609Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,திமுக,DMK,திருமாவளவன்,Thirumavalavan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/gnu80oc0/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருமாவளவன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/gnu80oc0/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>காஞ்சிபுரம்,</p><p>விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக ஆகஸ்ட் மாதம் 17-ந்தேதி நடைபெறவுள்ள தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு தொடர்பான மண்டல செயற்குழு கூட்டம் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் அருள்நாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.</p><p>இந்த கூட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த முகாம், நகர, மாவட்ட, மாநிலப் பொறுப்பாளர்கள், அணிப் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய திருமாவளவன் கூறியதாவது:-</p><p>தி.மு.க. தோற்றுவிட்டதே என்பது ஒரு கவலை, அதைவிட அ.தி.மு.க.வை கண்முன்னரே சிதைத்து வருகிறார்களே என்பது ஒரு கவலை, திராவிட கட்சிகளை ஒதுக்கி விட வேண்டும் என பெரியார் காலத்தில் இருந்து ஒரு முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனக்கு தனிப்பட்ட முறையில் பா.ஜ.க. மீது எந்த வெறுப்பும் கிடையாது, ஆனால் கருத்தியல் என்பது வேறு.</p><p>பா.ஜ.க.வை கொள்கை எதிரி என த.வெ.க. கூறுகிறது. இவ்வளவு நாள்கள் எதிர்த்த தி.மு.க.வும் தொடர்ந்து எதிர்ப்பதாக கூறுகிறது. பா.ஜ.க.வை எதிர்ப்பதுதான் அரசியல் என இந்தியா கூட்டணியும் சொல்கிறது. அப்படியெனில், ஏன் இவர்கள் அனைவரும் ஒரே அணிக்குள் வரக்கூடாது என்றுதான் நான் கேட்கிறேன்.</p><p>த.வெ.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் ஒரே எதிரி பா.ஜ.க. தான். கேரளாவில் காங்கிரசும் இடதுசாரியும், மேற்கு வங்கத்தில் மம்தாவும் காங்கிரசும் கருத்து வேறுபாடு இருந்தால் கூட இந்தியா கூட்டணி என்று வரும்போது ஒன்றாக நிற்கிறார்கள். ஏன் தமிழ்நாட்டில் அப்படி ஒரு அரசியல் இருக்கக் கூடாது? இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>அண்ணாமலையின் முதல் மாநாடு: நாளை முக்கிய அறிவிப்புகளை வெளியிட திட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/annamalais-first-conference-plans-to-make-important-announcements-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/annamalais-first-conference-plans-to-make-important-announcements-tomorrow#comments</comments><guid isPermaLink="false">609352df-a82f-4425-8dad-b012ee55b18a</guid><pubDate>Sat, 11 Jul 2026 10:40:31 +0000</pubDate><atom:updated>2026-07-11T10:40:31.488Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவை,Annamalai,அண்ணாமலை,பொதுமக்கள்,Pollachi,Kovai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/moyvxd0l/malai33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அண்ணாமலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/moyvxd0l/malai33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>கோவை, </p><p>கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 'WE THE LEADERS' அமைப்பின் முதல் மாநாடு 'போதையில்லா தமிழகம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு மாநாடாக நடைபெறுகிறது.</p><p>தமிழக பாரதீய ஜனதா முன்னாள் தலைவராக பதவி வகித்த அண்ணாமலை, அந்த கட்சியில் இருந்து விலகி வீத லீடர்ஸ் என்ற புதிய அரசியல் அமைப்பை தொடங்கி உள்ளார்.</p><h2>முதல் மாநாடு பொள்ளாச்சி</h2><p>அண்ணாமலையின். இந்த கட்சியில் 19 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தாங்களாகவே முன்வந்து இணைந்துள்ளனர். இந்த கட்சியின் முதல் மாநாடு பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி யில் நாளை (12-ந் தேதி) நடக்கிறது. போதை இல்லா பொள்ளாச்சி என்னும் பெயரில் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.</p><h2>1 லட்சத்திற்கும் மேற்பட்டோர்</h2><p>மாநாட்டில் 1  லட்சத்துக்கும் மேற்பட்டோர் என பங்கேற்பார்கள் அண்ணாமலை தரப்பினர் கருதுகிறார்கள். அதற்கேற்ப மாநாடு பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மாநாடு முகப்புதோற்றம் வித்தியாசமாக இருபுறமும் தென்னை மரம், நடுவில் அணையின் தோற்றத்தை போல் அமைக்கப்ப ட்டுள்ளது. இந்த பகுதியின் முக்கிய நீராதாரமான பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தை மையப்படுத்தி யும், முக்கிய விவசாயமான தென்னை தொழிலை மையப்படுத்தியும் முகப்பு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>முக்கிய அறிவிப்புகள்</h2><p>நாளை மாலை 4 மணி அளவில் தொடங்கும் இந்த மாநாட்டில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அண்ணாமலை </a>பங்கேற்று உரையாற்ற உள்ளார். இதில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கட்சியின் எதிர்காலம், நடைபெற உள்ள இடைத்தேர்தல் மற்றும். உள் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டி யிடுவது தொடர்பாகவும் சில அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.</p><p>முந்தைய தி.மு.க. ஆட்சி காலத்தில் அந்த கட்சியின் செயல்பாடுகளை அண்ணா மலை கடுமையாக விமர்சி த்து வந்தார். இந்தநிலையில் தற்போது ஆட்சி மாறியு ள்ளது. தற்போதைய த. வெ.க. அரசு மற்றும் முதல்-அமைச்சர் விஜய்யின் செயல்பாடுகள் குறித்தும், கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு பணி வழங்கப்பட்டது குறித்தும் நாளை பொள்ளாச்சியில் விரிவாக பேச உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். </p><p>இதனால் அரசியல் தொடர்பாக அவர் என்ன பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோவை குண்டு வெடிப்பு சம்பவம்: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலை - வானதி சீனிவாசன் கோரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-bomb-blast-incident-vanathi-srinivasan-demands-government-jobs-for-affected-families</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-bomb-blast-incident-vanathi-srinivasan-demands-government-jobs-for-affected-families#comments</comments><guid isPermaLink="false">b9313f82-6f3e-4d39-a12b-179bf1544b5c</guid><pubDate>Sat, 11 Jul 2026 10:30:46 +0000</pubDate><atom:updated>2026-07-11T10:30:46.382Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோரிக்கை,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,அரசு வேலை,Government job,demands,குண்டு வெடிப்பு சம்பவம்,Bomb blast incident</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/ryg6w35o/vanathi18.gif" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/ryg6w35o/vanathi18.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கோவை குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டோர் குடும்பங்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இது தொடர்பாக தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p> <h2>அரசு பணி</h2><p>கடந்த 2025 செப்டம்பர் 27ம் தேதி கரூரில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4.%E0%AE%B5%E0%AF%86.%E0%AE%95.%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%20">த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய் </a>பங்கேற்ற பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களை சேர்ந்த 31 பேருக்கு நேற்று அரசு பணிக்கான நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் வழங்கியுள்ளார். கருணை அடிப்படையில் இப்பணி வவழங்கப்பட்டுள்ளது.</p>  <h2>பாஜக மூத்த தலைவர் அத்வானி</h2><p>1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி, மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்காக பாஜக மூத்த தலைவர் அத்வானி  கோவை வந்தார். அவரை கொலை செய்வதற்காக கோவை மாநகரில் தொடர் குண்டுவெடிப்புகளை மத அடிப்படைவாத பயங்கரவாதிகள் நிகழ்த்தினர். இதில் 58 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.</p> <h2>வாழ்வாதாரம்</h2><p>உயிரிழந்தவர்கள் யாரும் எந்த தவறும் செய்யாத சாதாரண பொதுமக்கள். வழக்கம் போல கடை தெருவுக்கு வந்தவர்கள். அவர்களில் பலர் குடும்பத்தின் ஒற்றை ஆதாரமாக விளங்கியவர்கள். பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை முன்கூட்டியே கண்டறியாத, குண்டுவெடிப்பை முன்கூட்டிய கண்டறிந்து தடுக்காத உளவு துறை மற்றும் காவல்துறையின் தோல்வியால் கொல்லப்பட்டவர்கள். அவர்களின் குடும்பத்தினர் இன்றளவும் வாழ்வாதாரத்திற்காக போராடும் நிலையிலேயே உள்ளனர்.</p><h2>கோவை குண்டு வெடிப்பு</h2><p>அரசு என்பது அனைவருக்கும் பொதுவானது. அரசின் கருணை பார்வை, ஒரு குறிப்பிட்ட தரப்பினர் மீது மட்டும் விழாமல், பாதிக்கப்பட்ட அனைவர் மீது விழ வேண்டும். எனவே, கரூர் த.வெ.க. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்பட்டது போல, கொடூர பயங்கரவாதிகளில் நிகழ்த்தப்பட்ட கோவை குண்டு வெடிப்பில் பலியானோர் குடும்பங்களின் வாரிசுகளுக்கு அரசு பணி வழங்க வேண்டும்.</p> ]]></content:encoded></item><item><title>ஆன்லைனில் பகுதிநேர வேலை தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.5.83 லட்சம் மோசடி - 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/2-arrested-for-defrauding-youth-of-rs-583-lakh-by-promising-part-time-work-online</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/2-arrested-for-defrauding-youth-of-rs-583-lakh-by-promising-part-time-work-online#comments</comments><guid isPermaLink="false">ea4956d5-73c5-45ea-98fc-5eb21c5512c4</guid><pubDate>Sat, 11 Jul 2026 10:23:01 +0000</pubDate><atom:updated>2026-07-11T10:23:01.505Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,தென்காசி,மோசடி,Duping</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/htgmhfys/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மோசடி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/htgmhfys/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><p>தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் கருவந்தா பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசேகரன் மகன் செல்வதாஸ் (31 வயது). இவர் காற்றாலையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் இவரது செல்போனுக்கு செயலி மூலம் குறுந்தகவல் வந்தது. அதில், ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை செய்து சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. பின்னர் அதில் வந்த இணையதள லிங்கில் பதிவு செய்து 'காயின் பிட்டிங் டாஸ்க்' ஆன்லைன் வேலையை செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.</p><p>முதல் நாள் முதலீடின்றி வேலை செய்த உடன் ரூ.1,050 பணம் கிடைத்தது. மீண்டும் ரூ.8 ஆயிரம் செலுத்தி வேலை செய்தவுடன் ரூ.14 ஆயிரம் வந்தது. இதை நம்பிய செல்வதாஸ், குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு பல தவணைகளாக ரூ.5 லட்சத்து 83 ஆயிரம் வரை செலுத்தி உள்ளார்.</p><p>பின்னர் ஆன்லைன் கணக்கில் பல லட்சம் ரூபாய் லாபம் வந்திருப்பதாகவும், அதை எடுப்பதற்கு ரூ.9 லட்சம் வரை செலுத்தினால் மட்டுமே எடுக்க முடியும் என்று கூறி உள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த செல்வதாஸ் தென்காசி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.</p><p>அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்த சதீஷ் பாண்டியன் (30 வயது) மற்றும் இளையராஜா (32 வயது) ஆகிய இருவரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் தலைமறைவான சிலரை வலைவீசி தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நகர்ப்புற வீடற்றோருக்கான இரவு நேர காப்பகங்கள் குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cultural-programs-to-raise-awareness-about-night-shelters-for-the-urban-homeless-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cultural-programs-to-raise-awareness-about-night-shelters-for-the-urban-homeless-in-chennai#comments</comments><guid isPermaLink="false">ffe4390d-5968-4c52-938f-db2d485372f5</guid><pubDate>Sat, 11 Jul 2026 10:20:42 +0000</pubDate><atom:updated>2026-07-11T10:20:42.746Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/tdxzx8u3/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/tdxzx8u3/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்பட்டு வரும் நகர்ப்புற வீடற்றோருக்கான இரவு நேர காப்பகங்கள் குறித்த விழிப்புணர்வினை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் சென்ட்ரல் ரெயில் நிலையப் பகுதியில் நேற்று விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சிறுமியருக்கான 2 காப்பகங்கள், சிறுவர்களுக்கான 3 காப்பகங்கள், அறிவுத்திறன் குறைவுள்ள ஆண்களுக்கான 1 காப்பகம், ஆண்களுக்கான 14 காப்பகங்கள், பெண்களுக்கான 11 காப்பகங்கள், முதியோர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 1 காப்பகம், முதியோர் பெண்களுக்கான 2 காப்பகங்கள், முதியோர் ஆண்களுக்கான 1 காப்பகம், மனநலம் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கான 3 காப்பகங்கள், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான 2 காப்பகங்கள், மாற்றுத்திறனாளி பெண்களுக்கான 1 காப்பகம், திருநங்கைகளுக்கான 1 காப்பகம், மெரினா கடற்கரையில் குடும்பங்களுக்கான 1 காப்பகம் என நகர்ப்புற வீடற்றோருக்கு 43 இரவு நேர காப்பகங்களும்,</p><p>எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் தாய் மற்றும் குழந்தைகளைப் பராமரிப்பவர்களுக்கான 1 காப்பகம், அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளுடன் வரும் உதவியாளர்கள் தங்கி பயன்பெறுவதற்கு ஏதுவாக பெண்களுக்கான 7 காப்பகங்கள் மற்றும் ஆண்களுக்கான 6 காப்பகங்கள் என 14 சிறப்பு காப்பகங்கள் என மொத்தம் 57 காப்பகங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 1,384 நபர்கள் தங்கி பயன்பெற்று வருகின்றனர். இந்த காப்பகங்களில் தங்கியுள்ளவர்களுக்கு மாநகராட்சியின் சார்பில் மூன்று வேளை உணவு வழங்கப்படுகிறது. மேலும், இங்கு படுக்கை வசதி, மின்வசதி, குடிநீர்வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் உள்ளன.</p><p>பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையரின் உத்தரவின்படி, இணை ஆணையரின் அறிவுறுத்தலின்படி, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் செயல்பட்டு வரும் நகர்ப்புற வீடற்றோருக்கான இரவு நேர காப்பகங்கள் தொடர்பான விழிப்புணர்வினை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் 10.07.2026 அன்று சென்னை சென்ட்ரல் இரயில் நிலையப் பகுதியில் தலைமை சமூக மேம்பாட்டு அலுவலர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் மூலமாக பொதுமக்களுக்கு நகர்ப்புற வீடற்றோருக்கான இரவு நேரக் காப்பகங்கள் குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.</p><p>இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான பொதுமக்கள் பயனடைந்தனர். மேலும், நகர்ப்புற வீடற்றோருக்கான காப்பக சமூகப் பணியாளர்கள் தெருநாடகம், பறையாட்டம், கதனி கூத்து மற்றும் ஒயிலாட்டம் போன்ற நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் மூலம் காப்பகங்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் சிறப்பாக எடுத்துரைத்தனர். மேலும், பொதுமக்களின் பங்களிப்பையும் ஆதரவையும் வலுப்படுத்தும் வகையில் அனைவராலும் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சியின் காப்பகங்களில் வழங்கப்படும் பாதுகாப்பான தங்குமிடம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.</p><p>இந்நிகழ்ச்சியில் தலைமை சமூக மேம்பாட்டு அலுவலர் ராஜ்குமார், பாலின ஆய்வகத் தலைவர் டாக்டர் லெஜிஸ், பெரியமேடு காவல் நிலைய ஆய்வாளர் திரு. நந்தகுமார், ரெயில்வே காவல்துறையினர், ரெயில்வே பாதுகாப்புப் படை அலுவலர்கள் மற்றும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>தமிழ் உயிரோடு இருக்கிறது...! ஆனால் தமிழ்ப் பெயர்கள் உயிரோடு இருக்கிறதா? - வேல்முருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-is-alive-but-are-tamil-names-alive-velmurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-is-alive-but-are-tamil-names-alive-velmurugan#comments</comments><guid isPermaLink="false">73767dbc-c9a8-4b4b-928e-6fc887bd5d80</guid><pubDate>Sat, 11 Jul 2026 09:57:59 +0000</pubDate><atom:updated>2026-07-11T09:57:59.288Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Velmurugan,வேல்முருகன்,தமிழக வாழ்வுரிமைக் கட்சி,தி.வேல்முருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/uvkufj3a/velmurugan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/uvkufj3a/velmurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ் உயிரோடு இருக்கிறது...! ஆனால் தமிழ்ப் பெயர்கள் உயிரோடு இருக்கிறதா? என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>ஜ... ஷ... ஸ... ஹ... க்ஷ...</p><p>இந்த எழுத்துகளின் ஒலிகளைக் கவனியுங்கள்.</p><h2>மொழிக் கலப்பா?</h2><p>தமிழின் தொன்மையான எழுத்து மரபில் இல்லாத இந்த ஒலிகள், இன்று தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளின் பெயர்களில் இயல்பாகிவிட்டன. இது வெறும் மொழிக் கலப்பா? அல்லது பல நூற்றாண்டுகளாகத் தமிழர் வாழ்வியலுக்குள் படிப்படியாகப் பதிந்த ஆரியப் பண்பாட்டின் தாக்குதலா?</p><p>உலகின் தொன்மையான மொழிகளில், முதன்மையான மொழியாகப் போற்றப்படும் தமிழ், இலக்கியத்திலும் இலக்கணத்திலும் தனது தனித்துவத்தை ஆயிரமாயிரமாண்டுகளாகக் காத்து நிற்கிறது. தமிழ் மொழியைத் தாங்கி நிற்கும் மக்களின் அடையாளங்களிலும் இருக்கிறது.</p><p>இன்று தமிழர் இல்லங்களில் ஒலிக்கும் பெயர்களைப் பார்த்தால், தமிழின் இயல்பான ஒலிகளைவிட பிறமொழி எழுத்துக்களின் ஒலிகளே அதிகமாகக் கேட்கின்றன. இது ஒரு நாளில் நிகழ்ந்த மாற்றமல்ல. பல தலைமுறைகளாகத் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட மாற்றங்களின் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விளைவாகவே </a>பார்க்கிறோம்.</p><h2>தமிழை அழிப்பதற்கான சூழ்ச்சியா? </h2><p>தமிழக வாழ்வுரிமைக் கட்சி எந்த மொழிக்கும் எதிரானது அல்ல. ஆனால், தமிழின் தனித்துவ அடையாளம் மெல்ல மெல்ல மங்கும் எந்தப் பண்பாட்டு மேலாதிக்கப் போக்காக இருந்தாலும், அதை ஆய்வு செய்து, தமிழர் சமூகத்துடன் திறந்த விவாதங்களை நடத்த வேண்டியது காலத்தின் தேவை என்று கருதுகிறோம்.</p><p>தமிழில் தொன்மையான எழுத்து மரபில் இல்லாத ஒலிகள், இன்று தமிழர் குழந்தைகளின் பெயர்களில் ஏன் தவிர்க்க முடியாததாக மாறின?</p><p>தமிழில் பெயரிடும் மரபில் இந்த மாற்றம் எப்போது, எப்படி, எந்தச் சமூகப் பண்பாட்டு சூழலில் ஏற்பட்டது?</p><p>தமிழரின் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் தமிழ்ப் பெயர்கள் ஏன் படிப்படியாகக் குறைந்தன?</p><p>இந்த மாற்றம் இயல்பாக நடந்த மாற்றமா? அல்லது ஆழமான திட்டமிடலோடு தமிழை அழிப்பதற்கான சூழ்ச்சியா? </p><h2>அரசின் பொறுப்பு </h2><p>இந்தக் கேள்விகளுக்கு, மொழியியல் மற்றும் சமூக ஆய்வுகளின் அடிப்படையில் பதில் தேட வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு உள்ளது.</p><p>எனவே, தமிழ்நாடு அரசு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மொழியியலாளர்கள்</a>, வரலாற்றாசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆய்வாளர்கள் அடங்கிய உயர்மட்ட ஆய்வுக் குழுவை அமைத்து, தமிழில் பெயரிடும் மரபில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும், தமிழின் தனித்துவ அடையாளத்தைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்தும், விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி பள்ளியில் இருந்து மாணவியை அழைத்து சென்று பாலியல் தொல்லை - வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-taking-student-from-school-and-sexually-harassing-her</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-taking-student-from-school-and-sexually-harassing-her#comments</comments><guid isPermaLink="false">cd5218c5-4453-4b53-9f04-41b775bcfa4a</guid><pubDate>Sat, 11 Jul 2026 09:17:19 +0000</pubDate><atom:updated>2026-07-11T09:17:19.868Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கள்ளக்குறிச்சி,Kallakurichi,பாலியல் தொல்லை,POCSO case,போக்சோவில் கைது</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/mzwa2xex/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/mzwa2xex/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சி,</p><p>கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுகா சித்தேரி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் துரைராஜ் (26 வயது). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த நயினார்பாளையத்தில் உள்ள இ-சேவை மையத்தில் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று துரைராஜ், சின்னசேலம் பகுதியில் உள்ள பள்ளிக்கு சென்று, அங்கு 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியின் பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி அவரை அழைத்துள்ளார்.</p><p>அவருடைய பேச்சை நம்பி மாணவி, அவருடன் சென்றுள்ளார். ஆனால் துரைராஜ், மாணவியை தனது நிலத்தில் உள்ள கொட்டகைக்கு அழைத்து சென்று அங்கு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. பின்னர் மாணவியை மீண்டும் பள்ளியில் விட்டுவிட்டு துரைராஜ் சென்றுவிட்டார்.</p><p>இச்சம்பவம் குறித்து மாணவி தனது வகுப்பு ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் ஆசிரியர் இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தார். தொடர்ந்து இச்சம்பவம் குறித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து துரைராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கோவை: பல்கலைக்கழக விடுதியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழப்பு - வானதி சீனிவாசன் வேதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-student-mysteriously-dies-in-university-hostel-vanathi-srinivasan-in-anguish</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-student-mysteriously-dies-in-university-hostel-vanathi-srinivasan-in-anguish#comments</comments><guid isPermaLink="false">61f89e63-5198-4455-bf73-9d1f87df3331</guid><pubDate>Sat, 11 Jul 2026 09:13:44 +0000</pubDate><atom:updated>2026-07-11T09:13:44.387Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Coimbatore,கோவை,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/o77sr9o2/vanathi.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/o77sr9o2/vanathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>மாணவி உயிரிழப்பு </h2><p>கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தாரணிகா மர்மமான முறையில் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.</p><p>மாணவிக்கு ஏற்கனவே உடல்நலக் குறைபாடு இருந்ததாகப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவிக்கும் நிலையில், தங்களது மகள் நல்ல <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">உடல்நலத்துடன் </a>இருந்ததாக பெற்றோர் கூறுவது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.</p><p>எனவே, காவல்துறை வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொண்டு மாணவியின் மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிந்து, அவரது குடும்பத்தினருக்கு உரிய நீதியைப் பெற்றுத்தர வேண்டும்.</p><h2>ஆழ்ந்த இரங்கல்</h2><p>மேலும், விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு அவ்வப்போது மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் மனநல ஆலோசனைகள் வழங்கி, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.</p><p>உயிரிழந்த மாணவி தாரணிகாவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திமுக-அதிமுக கூட்டணி? டிடிவி தினகரன் சொன்ன பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-aiadmk-alliance-ttv-dinakarans-answer</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-aiadmk-alliance-ttv-dinakarans-answer#comments</comments><guid isPermaLink="false">6fd8f529-b9b1-487d-bb80-4071fc1dc5c8</guid><pubDate>Sat, 11 Jul 2026 09:08:29 +0000</pubDate><atom:updated>2026-07-11T09:08:29.878Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,அதிமுக,திமுக,DMK,தினகரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/rtb07vvz/dinakaran33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/rtb07vvz/dinakaran33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஆடு, மாடு திருடுவதைப் போல எம்.எல்.ஏ.க்களை திருடுகிறது தவெக..ஒரிஜினல் களவாணி விஜய்தான் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் காட்டமாக கூறியுள்ளார்.</p><p>விஜய் விமர்சனம்</p><p>நேற்றைய தினம் கரூர் சென்ற முதல்-அமைச்சர்ஜோசப் விஜய் எதிர்க்கட்சியான திமுகவையும் அதிமுகவையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசி இருந்தார். அவருடைய இந்த பேச்சுக்கு அக்கட்சியை சார்ந்தவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். குறிப்பாக அதிமுகவில் இருந்து ஆர்.பி. உதயகுமார், ஜெயக்குமார் உள்ளிட்டோர் விஜய்யின் பேச்சுக்கு கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளனர். </p><p>இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முதல்-அமைச்சரின் கரூர் பேச்சுக்கு பதிலடியை பதிவு செய்துள்ளார்.  அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>எம்.எல்.ஏ திருடர்கள் தவெக</p><p>ஒரு முதல்-அமைச்சர் களவாணி என்று பேசுகிறாரே, இதே போல் அவரை பார்த்து சொல்றதுக்கு எவ்வளவு நேரம் ஆகும். விஜய் தான் களவாணி. நம்ம ஊர்ல ஆடு திருடன், மாடு திருடன் என்று சொல்வாங்க. எங்க ஊர்ல சிலர் ஆடு மட்டும் தான் திருடுவான். சிலர் மாடு மட்டும் திருடுவான். அதே போல் எம்.எல்.ஏ. திருடர்கள் நீங்கள். எம்எல்ஏ களவாணி. முதன் முறையாக அமமுக எம்எல்ஏவை ஆசை வார்த்தை காட்டி திருடுனீங்க. இதை எதற்காக அடிக்கடி சொல்கிறேன் என்றால் உண்மையாக நடந்தது.</p><p>கவர்னரிடம் கொடுக்கப்பட்ட அந்த லெட்டர் போர்ஜரி. இப்படி ஆட்சி அமைப்பதற்கே தகிடு தத்தங்கள் செய்தவர்கள். எங்கள் அமமுக எம்எல்ஏவை <a href="https://www.dailythanthi.com/news/india">குதிரை பேரம் </a>செய்யவில்லை என்று ஒரு வீடியோவை வெளியிட்டார்கள். இதில் யார் எம்எல்ஏ களவாணிகள். இப்படி மற்ற கட்சிகளை வெற்றி பெற்ற அகம்பாவத்தில் பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title> 757 கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமனத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/applications-are-invited-for-the-appointment-of-trustees-for-757-temples</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/applications-are-invited-for-the-appointment-of-trustees-for-757-temples#comments</comments><guid isPermaLink="false">922b60e5-5998-42b6-a3b5-c259b93dde18</guid><pubDate>Sat, 11 Jul 2026 08:57:11 +0000</pubDate><atom:updated>2026-07-11T08:57:11.307Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>temples,கோவில்கள்,job opportunities,இந்து சமய அறநிலையத்துறை,வேலை வாய்ப்பு,Hindu Religious Endowments Department</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/bqe1umvd/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/bqe1umvd/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>விண்ணப்பங்கள் வரவேற்பு</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் சீர்மிகு நல்லாட்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் வழிக்காட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சட்டப்பிரிவு 46 (1) ன் கீழ் உள்ள 673 திருக்கோவில்களுக்கும் மற்றும் 46(2) ல் உள்ள 84 திருக்கோவில்களுக்கும் பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விண்ணப்பங்கள் </a>வரவேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.</p><p>அறங்காவலர் நியமன அறிவிப்பு. திருக்கோவில்கள் விவரம், தகுதிகள், விண்ணப்ப படிவம் ஆகியவை (www.hrce.tn.gov.in) இத்துறையின் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை இணைய வழியில் (online) பூர்த்தி செய்தோ அல்லது பதிவிறக்கம் செய்தோ உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் அல்லது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ, விரைவஞ்சல் (Speed Post) மூலமாகவோ சம்பந்தப்பட்ட இணை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பலாம். 12.08.2026 அன்று மாலை 5.45 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.</p><p>ஏற்கனவே, சட்டப்பிரிவு 46(3)ன் கீழ் உள்ள 220 திருக்கோவில்களுக்கும், நிர்வாகத்திட்டம் உள்ள 35 திருக்கோவில்களுக்கும் பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்கள் நியமனம் மற்றும் 14 மாவட்டங்களில் மாவட்டக்குழு உறுப்பினர்களின் நியமனத்திற்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கபட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாவீரன் அழகுமுத்துக்கோன் தியாகத்தையும், வீரத்தையும் போற்றி வணங்குகிறேன் - எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-honor-and-pay-tribute-to-the-sacrifice-and-valor-of-maaveeran-azhagumuthu-kon-edappadi-palaniswami</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-honor-and-pay-tribute-to-the-sacrifice-and-valor-of-maaveeran-azhagumuthu-kon-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">50e9f2ec-18a7-4070-bf43-2bb9e065b3ca</guid><pubDate>Sat, 11 Jul 2026 08:36:21 +0000</pubDate><atom:updated>2026-07-11T08:36:21.496Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,Edappadi Palaniasamy,Azhagumuthukon,அழகுமுத்துக்கோன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/uo6j95k0/11072026.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/uo6j95k0/11072026.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் அரசு அதிகாரிகள் சென்னையில் உள்ள அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.</p><p>மேலும், பல்வேறு அரசியல் தலைவர்கள் மாவீரன் அழகுமுத்துக்கோனை புகழந்து தங்களது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-</p><p>“அடிமைப்பட்டு உயிர்வாழ்வதை விட, சுதந்திர மனிதனாய் உயிரை விடுவோம் என வீரமுழக்கமிட்டு, ஆங்கிலேயரின் பீரங்கி குண்டுகளைத் தன் நெஞ்சில் தாங்கி, தமிழகத்தில் சுதந்திரப் போராட்ட வேட்கையை முதன்முதலில் விதைத்த மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் பிறந்தநாளில், அவர்தம் தியாகத்தையும் வீரத்தையும் போற்றி வணங்குகிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>கோவை:  வேளாண் பல்கலைக்கழக விடுதியில் மாணவி மர்ம மரணம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-mysterious-death-of-a-female-student-at-the-agricultural-university-hostel</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-mysterious-death-of-a-female-student-at-the-agricultural-university-hostel#comments</comments><guid isPermaLink="false">d8771b59-5513-4ddb-bc99-2b07c80fc9d8</guid><pubDate>Sat, 11 Jul 2026 08:35:49 +0000</pubDate><atom:updated>2026-07-11T08:35:49.236Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,மாணவி,student</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/wueixb0y/upaelt.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கோவை, மாணவி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/wueixb0y/upaelt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>கோவை</p><p>கோவை வேளாண் பல்கலைக்கழக விடுதியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவி மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளார்.</p><p>கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் விடுதியில் மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளார்.  இதனை சக மாணவிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.  அவர்கள் நிர்வாகத்தினரிடம் தகவல் தெரிவித்தனர்.</p><p>அந்த மாணவியின் உடல் பக்கெட்டுக்குள் (வாளிக்குள்) தலைகீழாக கவிழ்ந்த நிலையில் கிடந்துள்ளது.  அதனை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.</p> <h2>பெற்றோர் சந்தேகம்</h2><p>இதுபற்றி அந்த மாணவியின் பெற்றோர் கூறும்போது, அந்த மாணவி தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை என திட்டவட்டத்துடன் கூறினார்.  இந்த மரணத்தில் சந்தேகம் உள்ளது என குற்றம் சாட்டியுள்ளனர்.  இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>30 ஆண்டுகள், 300 ஸ்டார் ஓட்டல்களில் நூதன திருட்டு: முதியவர் ஒடிசாவில் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/30-years-300-star-hotels-involved-in-innovative-theft-elderly-man-arrested-in-odisha</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/30-years-300-star-hotels-involved-in-innovative-theft-elderly-man-arrested-in-odisha#comments</comments><guid isPermaLink="false">17648002-d663-4e64-b553-2360c73b069e</guid><pubDate>Sat, 11 Jul 2026 08:27:54 +0000</pubDate><atom:updated>2026-07-11T08:27:54.700Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Odisha,ஒடிசா,Thoothukudi,arrested,தூத்துக்குடி,முதியவர்,Star Hotel,Theft,Elderly,நூதன திருட்டு,ஸ்டார் ஓட்டல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/bffqb391/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஒடிசாவில் கைது செய்யப்பட்ட முதியவர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/bffqb391/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>நாட்டின் முன்னணி 5 நட்சத்திர ஆடம்பர ஓட்டல்களை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஏமாற்றி வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த முதியவரை, போலீசார் ஒடிசா மாநிலத்தில் கைது செய்தனர்.</p><h2>30 ஆண்டுகளாக முதியவரின் நூதன திருட்டு</h2><p>தூத்துக்குடியைச் சேர்ந்தவர் வின்சென்ட் ஜான் (வயது 69), 1980-களில் டெல்லியில் சுற்றுலா வழிகாட்டியாக பணியாற்றி வந்த ஓட்டல்களில் தங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ஓட்டலில் நேரிட்ட அவமானத்திற்கு பழிவாங்கும் நோக்குடன், 1996 முதல் 30 ஆண்டுகளாக ஸ்டார் ஓட்டல்களை ஏமாற்றுவதை தொழிலாக மாற்றியுள்ளார்.</p><h2>300-க்கும் மேற்பட்ட ஓட்டல்களில் கைவரிசை</h2><p>கண்ணியமான தோற்றம், சரளமான ஆங்கில அறிவு ஆகியவற்றைப் பயன்படுத்தி தன்னை ஒரு யோகா ஆசிரியர், ஆங்கில ஆசிரியர் அல்லது சுற்றுலா வழிகாட்டியாக ஓட்டல் ஊழியர்களிடம் அறிமுகம் செய்து நம்பிக்கையைப் பெறுவதில் வல்லவராக இருந்துள்ளார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம், கோவா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட், தெலுங்கானா, சத்தீஸ்கர் என்று பல மாநிலங்களில் உள்ள 300-க்கும் மேற்பட்ட சொகுசு ஓட்டல்களில் இவர் கைவரிசை காட்டியுள்ளார்.</p><p>ஓட்டல் அறைகளை முன்பதிவு செய்யும்போது இரண்டு பைகளுடன் வரும் இவர், ஒரு பையில் துணிகளையும், மற்றொரு பையில் பழைய செய்தித்தாள்கள் அல்லது தலையணைகளையும் நிரப்பி எடுத்து வருவார். வெளியில் செல்லும்போது ஊழியர்களுக்கு சந்தேகம் வராமல் இருக்க, செய்தித்தாள்கள் உள்ள பையை அறையிலேயே விட்டுவிட்டு, தனது துணிப்பையுடன் ஓட்டல் அறையில் இருக்கும் லேப்டாப், விலை உயர்ந்த வெளிநாட்டு மதுபானங்கள், சிகரெட்டுகள் போன்ற மதிப்புமிக்க பொருட்களைத் திருடிக் கொண்டு நைசாகத் தப்பி விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.</p><h2>ஒடிசாவில் கைது</h2><p>இந்த நிலையில் கடந்த ஜூன் 25-ம் தேதியன்று சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள ஆடம்பர ஓட்டலில் 2 நாட்கள் தங்கிய வின்சென்ட் ஜான், ஊழியரை ஏமாற்றி ரூ.1.48 லட்சம் மதிப்புள்ள லேப்டாப்பைப் பெற்றுக்கொண்டதுடன், ரூ.63,755 பில் தொகையைச் செலுத்தாமல் ஜூன் 27-ம் தேதியன்று தப்பியுள்ளார். ஓட்டல் நிர்வாகத்தின் புகாரைத் தொடர்ந்து சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் ஒடிசா மாநிலத்தின் தலைநகர், புவனேஸ்வரில் வைத்து இவரைப் போலீசார் கைது செய்தனர். டெல்லி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இவர் மீது ஏமாற்று வழக்குகள் இருப்பதும், பலமுறை போலீசாரின் பிடியில் சிக்கினாலும் தொடர்ந்து இந்த மோசடிகளில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தாமிரபரணி நதியை மாசுபட அனுமதிக்க முடியாது: ஐகோர்ட்டு மதுரை கிளை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cannot-allow-the-thamirabarani-river-to-be-polluted-madurai-bench-of-the-high-court</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cannot-allow-the-thamirabarani-river-to-be-polluted-madurai-bench-of-the-high-court#comments</comments><guid isPermaLink="false">9a38ee9d-61c7-4968-8b0b-9343f30b526e</guid><pubDate>Sat, 11 Jul 2026 08:22:40 +0000</pubDate><atom:updated>2026-07-11T08:22:40.737Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>தாமிரபரணி ஆறு,thamirabarani,மதுரை ஐகோர்ட்டு,Court,river</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/46zbq9lg/15.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/46zbq9lg/15.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>தாமிரபரணி ஆற்றின் மாசுபாடு தொடர்பான முக்கிய வழக்கு இன்று ஐகோர்ட்டு மதுரை கிளையில் விசாரனைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, தாமிரபரணி ஆற்றின் தற்போதைய நிலை குறித்து கவலை தெரிவித்தது.</p><p>ஈமச்சடங்குகள் பெயரில் ஆற்றில் கொட்டப்படும் பொருட்கள் பாபநாசம் முதல் தாமிரபரணி ஆற்றங்கரை வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள்நீராடுவதோடு, இறந்தவர்களுக்கான ஈமச்சடங்குகளையும் மேற்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், மதத்தின் பெயரில்கூட எந்த நீர்நிலையையும் மாசுபடுத்த யாருக்கும் உரிமை இல்லை. பாலியஸ்டர் போன்ற பொருட்கள் நீரில் மக்காமல் நீடிப்பதால், அவை ஆற்றின் சுற்றுச்சூழலுக்கும், உயிரினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, இந்திய கரு ஆமைகள் துணிகளில் சிக்கி உயிரிழக்கின்றன. </p><p>மக்களின் மத நம்பிக்கைகளை நீதிமன்றம் கேள்விக்குட்படுத்த விரும்பவில்லை. ஆனால் அந்த நடைமுறைகள் சுற்றுச்சூழலுக்கும் பிறரின் உரிமைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது. ஆற்றங்கரை அருகே கட்டப்பட்டு வரும் குளத்தை ஈமச்சடங்குகளுக்குப் பயன்படுத்தும் மாற்று வழியையும் பரிசீலிக்கலாம்.</p><p>தாமிரபரணி ஆற்றில் மேலும் மாசுபாடு ஏற்படாமல் தடுக்க எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிடவும், நிரந்தரத் தீர்வுக்கான பரிந்துரைகளை தாக்கல் செய்யவும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜூலை 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.</p> ]]></content:encoded></item><item><title>கருணை அடிப்படையில் அரசு வேலை: விவசாயத் தியாகிகள் குடும்பங்களுக்கும் வழங்க வேண்டும் - ஈ.ஆர்.ஈஸ்வரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-jobs-on-compassionate-grounds-families-of-agricultural-martyrs-should-also-be-provided-er-easwaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-jobs-on-compassionate-grounds-families-of-agricultural-martyrs-should-also-be-provided-er-easwaran#comments</comments><guid isPermaLink="false">5879ecb4-6119-4c23-99ba-95bf410dea89</guid><pubDate>Sat, 11 Jul 2026 08:09:10 +0000</pubDate><atom:updated>2026-07-11T08:09:10.564Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,அரசு வேலை,Government job,Agricultural,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி,கருணை அடிப்படை,ஈ.ஆர்.ஈஸ்வரன்,E.R. Easwaran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/qdoie3qb/222.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஈ.ஆர். ஈஸ்வரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/qdoie3qb/222.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%88.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%20%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">ஈ.ஆர். ஈஸ்வரன்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-           </p><p>1970 களில் விவசாயத்திற்கான மின் கட்டணம் ஏற்றப்பட்டதை குறைக்க வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். அப்போதைய அரசாங்கம் போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டு 63 பேர் தமிழ்நாடு முழுவதும் காவல்துறையால் சுடப்பட்டார்கள். அதற்குப் பிறகு நடந்த பல்வேறு அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு விவசாயிகளுக்கு கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்பட்டது. </p><h2>விவசாயம்</h2><p>தொடர்ந்து விவசாயிகள் கட்டணமில்லா மின்சாரத்தை பயன்படுத்தி விவசாயத்தை செய்து வருகிறார்கள். இந்த வசதியால் மட்டும் தான் தமிழகத்தில் விவசாயம் தொடர்ந்து நடக்கின்றது. போராட்டத்தில் உயிர் நீத்த விவசாயிகளுக்கு தமிழ்நாடு முழுவதும் நினைவு தூண்கள் அமைத்து அந்தந்த பகுதி விவசாயிகள் வருடம் தோறும் அவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்ட நாளில் நினைவஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.</p><h2>அரசு வேலை</h2><p>கடந்த காலங்களில் எங்களுடைய கோரிக்கைகளை ஏற்று உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. கடந்த பல வருடங்களாக தொடர்ந்து விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்க காரணமாக இருந்த, உயிர் நீத்த தியாகிகளுடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தி வருகின்றோம். தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளுடைய வாழ்வாதாரத்திற்கு அடித்தளம் அமைத்து கொடுத்தவர்கள் அவர்கள். பல்வேறு அரசுகளிடம் கருணை அடிப்படையில் அரசு வேலை கோரிக்கை வைத்தும் அது நிறைவேறவில்லை.</p><h2>முதல்-அமைச்சர்</h2><p>தற்போதைய அரசு கரூரில் அரசியல் நிகழ்ச்சியில் உயிரிழந்த குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கியிருப்பதை பார்க்கின்றோம். அரசியல் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கலாம் என்றால் தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து விவசாயிகளின் குடும்பங்கள் வாழ்வதற்காக உயிர்த்தியாகம் செய்த தியாகிகளின் குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கக் கூடாதா? ஒவ்வொரு முறை மேடையில் பேசும்போதும் விவசாயிகளோடு உடனிருப்பேன் என்று பேசுகின்ற இன்றைய முதல்-அமைச்சர் கனிவோடு பரிசீலித்து விவசாய மின் கட்டண உயர்வுக்காக போராடி உயிர் நீத்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு கருணையோடு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்க முன்வர வேண்டும். </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாமன்னர் அழகுமுத்துக்கோன் வீரப்பெரும்புகழ் போற்றுவோம் - சீமான்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-praise-the-heroic-deeds-of-his-majesty-king-azhagumuthugon-seeman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-praise-the-heroic-deeds-of-his-majesty-king-azhagumuthugon-seeman#comments</comments><guid isPermaLink="false">8f24325e-3dcf-4008-8778-d47e21850ee1</guid><pubDate>Sat, 11 Jul 2026 07:46:50 +0000</pubDate><atom:updated>2026-07-11T07:46:50.230Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,Seeman,மாவீரன் அழகுமுத்துக்கோன்,Azhagumuthukon</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/vz6ifvlz/seeman.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சீமான்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/vz6ifvlz/seeman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>வீரம் விளைந்த கட்டாலங்குளம் மண்ணைக் கட்டி ஆண்ட மாமன்னர்..!ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மறப்போர் புரிந்த மாவீரன்..! வெள்ளையர் பீரங்கிகளுக்கு எதிர் நின்றபோதும் வெள்ளைக்கொடி ஏந்த மறுத்த மண்ணுரிமை போராளி..!</p><h2>வரலாற்று நாயகன்</h2><p>அடிமை வாழ்விலும், உரிமைச்சாவு மேலானது என்ற உயரிய இலட்சிய உறுதியுடன் தாயகம் காக்க தன்னுடைய 6 தளபதிகள் மற்றும் 248 போர் வீரர்களுடன் நடுக்காட்டூரில்  இன்னுயிர் ஈந்து வீரகாவியமாய் ஆன <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வரலாற்று நாயகன்</a>..! விடுதலைப்பேரொளி, வீரத்திருமகன், நம்முடைய பாட்டன் மாமன்னர் அழகுமுத்துக்கோன் வீரப்பெரும்புகழ் போற்றுவோம்!</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>விடுதலை கனலை நம் மண்ணில் மூட்டிய மாபெரும் வீரர் அழகுமுத்துக்கோன்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/azhagumamuthukon-is-a-great-warrior-who-ignited-the-fire-of-freedom-in-our-land-dmk-leader-mkstalins-post</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/azhagumamuthukon-is-a-great-warrior-who-ignited-the-fire-of-freedom-in-our-land-dmk-leader-mkstalins-post#comments</comments><guid isPermaLink="false">c5abe90e-6531-4d20-bd17-bcb6e53d93ef</guid><pubDate>Sat, 11 Jul 2026 07:44:04 +0000</pubDate><atom:updated>2026-07-11T07:44:04.847Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,birthday,X Page,எக்ஸ் பதிவு,பிறந்தநாள்,தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்,DMK President M.K.Stalin,மாவீரன் அழகுமுத்துக்கோன்,Azhagumuthukon</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/ol8wpfmn/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாவீரன் அழகுமுத்துக்கோன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/ol8wpfmn/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>விடுதலைப் போராட்டத்துக்கான வீர வித்தாய் மக்கள் மனங்களில் ஊன்றப்பட்ட அழகுமுத்துக்கோன் பிறந்தநாளில் அவருக்கு என் வீர வணக்கம் என்று <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்</a> தெரிவித்துள்ளார்.</p><p>சுதந்திரப் போராட்ட வீரர், மாவீரன் அழகுமுத்துக்கோன் 269-வது பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: </p><p>சிப்பாய்ப் புரட்சிக்கு நூறாண்டுகளுக்கு முன்பே விடுதலைக் கனலை நம் மண்ணில் மூட்டிய மாபெரும் வீரர் அழகு முத்துக்கோன்.</p><p>அடிமையாய் உயிர்வாழ்வதைக் காட்டிலும் அடக்குமுறைக்கு எதிராக வீரத்துடன் போராடி மடிவதே மேல் என விடுதலைப் போராட்டத்துக்கான வீர வித்தாய் மக்கள் மனங்களில் ஊன்றப்பட்ட அழகு முத்துக்கோன் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என் வீர வணக்கம்! </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>