<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 18 Jul 2026 04:38:18 +0000</lastBuildDate><item><title>தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.22,970 பறிமுதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anti-corruption-department-raids-thoothukudi-taluka-office-rs22970-seized</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anti-corruption-department-raids-thoothukudi-taluka-office-rs22970-seized#comments</comments><guid isPermaLink="false">60cfd934-52b5-446f-b931-3e7bb4e93c5a</guid><pubDate>Sat, 18 Jul 2026 04:31:03 +0000</pubDate><atom:updated>2026-07-18T04:31:03.873Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Seizure,பறிமுதல்,பணம்,money,சோதனை,Search,Anti-Corruption Department,தாலுகா அலுவலகம்,Taluk office,லஞ்ச ஒழிப்புத் துறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/jj7nasx0/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பணம் பறிமுதல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/jj7nasx0/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் காட்டப்படாத <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ரூ.22,970 பணம் பறிமுதல்</a> செய்யப்பட்டுள்ளது.</p><h2>ரூ.22 ஆயிரத்து 970 பறிமுதல் </h2><p>தூத்துக்குடி தாலுகா அலுவலகத்திலுள்ள சிவில் சப்ளை (வட்ட வழங்கல்) பிரிவில் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் பீட்டர் பால்துரை தலைமையில் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது, உரிய ஆவணங்களோ அல்லது கணக்கோ இன்றி வைக்கப்பட்டிருந்த ரூ.22,970-ஐ லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைப்பற்றினர்.</p><p>கணக்கில் காட்டப்படாத இந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தாலுகா அலுவலகச் சிவில் சப்ளை பிரிவு ஊழியரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அரசு அலுவலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அமைச்சர் ஆனந்த் மீது வழக்கு தொடர்ந்த ஞானசவுந்தரி த.வெ.க.வில் இருந்து நீக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/gnanasoundari-who-filed-a-case-against-minister-anand-has-been-expelled-from-tvk</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/gnanasoundari-who-filed-a-case-against-minister-anand-has-been-expelled-from-tvk#comments</comments><guid isPermaLink="false">8a8e390c-cd81-40b0-9dd2-c0230f39e148</guid><pubDate>Sat, 18 Jul 2026 04:30:53 +0000</pubDate><atom:updated>2026-07-18T04:30:53.019Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Tamilnadu,தமிழகம்,விழுப்புரம்,Villupuram,கட்சியில் இருந்து நீக்கம்,அமைச்சர் ஆனந்த்,Minister Anand</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/3cp66vh6/tkie.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/3cp66vh6/tkie.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக வெற்றிக் கழக விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் அணி இணை செயலாளர் ஞானசவுந்தரி சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.</p><p>அதில், தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் அறிவுறுத்தலின் பேரில் மகளிர் நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பணிக்கும், மாவட்ட முதன்மை மற்றும் சார்பு நீதிமன்றங்களில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பணிக்கும் விண்ணப்பித்திருந்தேன்.</p><p>தமிழக அரசு கடந்த ஜூன் 5ஆம் வெளியிட்ட அறிவிப்பில், வழக்கறிஞர்கள் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 29 மாலை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அன்றைய தினம் மாலையில் நியமனப்பட்டியல் என ஒரு தகவல் வாட்ஸ் அப்பில் பரவியது.</p><p>இதுகுறித்து மாவட்ட செயலாளரிடம் நான் விசாரித்த போது, இதுதான் இறுதிப் பட்டியல் என்று அவர் கூறினார். ஒரு அரசு வழக்கறிஞர் நியமனத்துக்கு 5 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றுள்ளனர். பிற கட்சிகளை சேர்ந்த வழக்கறிஞர்களை, லஞ்சம் பெற்றுக்கொண்டு அரசு வழக்கறிஞர்களாக நியமித்துள்ளனர். அமைச்சர் ஆனந்த் பரிந்துரையிலேயே வழக்கறிஞர் நியமனம் செய்யப்படுகிறது. </p><p>எனவே, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு முதல்-அமைச்சர் விஜய்க்கு இருக்கிறது. அரசு வழக்கறிஞர்கள் நியமனத்துக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டிருந்தார்.</p><p>தொடர்ந்த நடந்த வழக்கு விசாரணையை அடுத்து அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பான வழக்கில் முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோரின் பெயரை நீக்குமாறு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. </p><p>இந்நிலையில் அமைச்சர் ஆனந்த் மீது வழக்கு தொடர்ந்த ஞானசவுந்தரி த.வெ.க.வில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>இதுதொடர்பாக விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராக இணையவழி (Online) முறையின் மூலமாக உறுப்பினராக இணைந்துள்ள சந்திரமோகன் மனைவி திருமதி M. ஞானசவுந்தரி, MS.No.4063/2015 அவர்கள் எதிரிகளுடன் சேர்ந்துகொண்டு பொய்யான குற்றச்சாட்டுகள் கூறியும், கட்சியின் கொள்கைகள், ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட அவரை தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து உடனடியாக நீக்கப்படுகிறார்.</p><p>மேலும் கட்சியின் எந்த நிர்வாகியும் அல்லது உறுப்பினரும் கட்சி சார்பில் இன்றிலிருந்து அவருடன் எந்தவித கட்சி தொடர்போ, ஒத்துழைப்போ வைத்துக்கொள்ள கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>&apos;தமிழ்நாடு&apos; என்ற பெயருக்கு அங்கீகாரம் கிடைத்த வரலாற்று நாள் இன்று - மு.க. ஸ்டாலின் பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/today-is-the-historic-day-when-the-name-tamil-nadu-was-recognized-mk-stalins-post</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/today-is-the-historic-day-when-the-name-tamil-nadu-was-recognized-mk-stalins-post#comments</comments><guid isPermaLink="false">b65f2c65-43b4-4e55-9e28-307937edaedb</guid><pubDate>Sat, 18 Jul 2026 04:12:31 +0000</pubDate><atom:updated>2026-07-18T04:12:31.876Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu Day,மு.க. ஸ்டாலின்,தமிழ்நாடு தினம்,M.K. Stalin</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/188mdw7f/stalin.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  மு.க. ஸ்டாலின் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/188mdw7f/stalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>1956-ஆம் ஆண்டே மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தாலும் இந்த நிலம் மதராஸ் மாநிலம் என்ற பெயரிலேயே தொடர்ந்தது.</p><p>எத்தனையோ முயற்சிகள், தீர்மானங்கள், போராட்டங்கள் நிகழ்ந்தும் எதுவும் மாறவில்லை.</p><h2>தமிழ்நாடு நாள்</h2><p>1967-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது கழகம். முதல்-அமைச்சரானார் நம் அண்ணா. வரலாற்றில் பொன்னாளாக நிலைபெற வந்தது அந்நாள்!</p><p>தமிழ்த்தாயின் ஏக்கம் தீரத் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள் 'தமிழ்நாடு' என்ற பெயரினை அவையினில் முழங்க, ஒட்டுமொத்த மாநிலத்தின் உணர்வினையும் எதிரொலிக்கும் வகையில் உறுப்பினர்கள் எல்லாம் 'வாழ்க' என வாழ்த்தி மகிழ்ந்த இந்த நாளே <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D">தமிழ்நாடு நாள்</a>!</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைத்தது: ‘என்னுடைய வாழ்க்கையில் நான் செய்த பெருந்தவறுகள்’ வைகோ பரபரப்பு கருத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-alliance-with-aiadmk-i-made-big-mistakes-in-my-life-vaiko</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-alliance-with-aiadmk-i-made-big-mistakes-in-my-life-vaiko#comments</comments><guid isPermaLink="false">4cee06cd-f5de-4ded-8046-c507e534125a</guid><pubDate>Sat, 18 Jul 2026 04:06:43 +0000</pubDate><atom:updated>2026-07-18T04:06:43.533Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,தவெக,அதிமுக,DMK,Vaiko,வைகோ,திமுக அரசு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/p1tphk0r/vaiko33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/p1tphk0r/vaiko33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. விலகியதால் வைகோ மீது தி.மு.க. சார்பில் கடும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வைகோ வெளியிட்டுள்ள கடித வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 4 இடங்கள்தான் உங்கள் கட்சிக்கு, அதற்கு மறுபேச்சுக்கு இடமில்லை. இதை ஏற்றுக்கொண்டு 'உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிடுங்கள் என்று தி.மு.க.வினர் வலியுறுத்தித் திணித்தார்கள். கூட்டணியில் இருக்கும்போது நான் அரசையோ, தி.மு.க.வையோ விமர்சித்து ஒரு சொல் சொன்னால்கூட அடுத்த கட்டமாக நம் இயக்கத்தை கூட்டணியில் இருந்து விலக்கி இருப்பார்கள்.</p> <h2>இரண்டு பெருந்தவறுகள்</h2><p>என் வாழ்க்கையில் இரண்டு பெருந்தவறுகளைச் செய்துவிட்டேன். ஒன்று 2006-ல் அ.தி.மு.க.வுடன் உடன்பாடு வைத்தது. அன்றைய ம.தி.மு.க தலைமை நிர்வாகிகள், முன்னணி யினர் என்னை நிர்ப்பந்தப்படுத்தி அ.தி.மு.க. பொதுச்செயலாளரை (ஜெயலலிதா) சந்திக்க வைத்தார்கள். நான் அந்த நிர்ப்பந்தத்திற்கு உடன்படாமல், இருந்திருந்தால் நமது இயக்கம் வலிவும். பொலிவும் பெற்றிருக்கும்.</p><h2>இனி நமக்கு தோல்வி இல்லை</h2><p>2017-ல் பா.ஜனதாவை எதிர்ப்பதற்காக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தி.மு.க.வுடன் உடன்பாடு</a> கொண்டது 2-வது பெரும் பிழையாகும். பொதிகைமலை உறுதியாக இருப்பதைப் போல நானும், நமது இயக்கமும் சரி யான முடிவுகளை இன்றைய அரசியலில் மேற்கொண்டிருக்கிறோம். இனி நமக்கு எந்தவித கேடும் யாரும் செய்ய முடியாது. </p><p>நடைமுறையில் சரிவிலிருந்து மீண்டு. ஓங்கி உயர்ந்து தலை நிமிர்ந்து தமிழக அரசியலில் நம் இயக்கம் பயணிக்கிறது. இனி நமக்கு தோல்வி இல்லை. வெற்றித் தேவதை நமக்கு ஆரம் சூட்ட காத்திருக்கிற நிலையை எண்ணி நாம் தடைகளைத் தகர்த்து, நம்மை வீழ்த்த நினைப்போரின் கணைகளை முறித்து செம்மாந்து நடப்போம். ஒளிம யமான எதிர்காலம் நம்மை வரவேற்க காத்திருக்கிறது.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உருவாக்கிட உறுதியேற்போம்: முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-pledge-to-make-tamil-nadu-the-leading-state-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-pledge-to-make-tamil-nadu-the-leading-state-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">56eadf2f-f769-4f14-ad10-abe3623c3d84</guid><pubDate>Sat, 18 Jul 2026 03:54:46 +0000</pubDate><atom:updated>2026-07-18T03:54:46.563Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu Day,தமிழ்நாடு நாள்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/3wmvzcmk/6.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/3wmvzcmk/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>தமிழ்நாடு நாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு பின்வருமாறு;</p><p>”தமிழரின் தொன்மை, வரலாறு, பண்பாடு, மொழியுணர்வைப் போற்றும் வகையில் நமது மாநிலத்திற்கு "தமிழ்நாடு" எனப் பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இந்நாளில், தமிழ் மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த “தமிழ்நாடு நாள்” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>மெட்ராஸ் மாநிலமாக உருவான நவம்பர் 1-ஆம் நாளையும், 'தமிழ்நாடு' எனும் பெயர் சூட்ட பேரறிஞர் அண்ணா அவர்களால் சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ஆம் நாளையும் இந்த அரசு கொண்டாடும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>சங்கம் கண்ட செம்மொழியின் தாயகமாக, சமத்துவமும், சமூகநீதியும் தழைத்தோங்கி, கல்வியிலும், தொழில்நுட்பத்திலும், திறன்மிகு மனிதவளத்திலும் சிறந்தோங்கும் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்!</p><p>தமிழின் இனிமையும், தமிழரின் உயரிய பண்பாடும், மனிதநேய மரபும் தலைமுறைகள் கடந்தும் தழைத்தோங்கட்டும். தமிழ்நாடு உருவாக உழைத்திட்ட தியாக சீலர்களை இந்நாளில் நினைவுகூர்ந்து வணங்கிடுவோம்!”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>திருப்பூர்: லாரி மீது கார் மோதி 3 பேர் பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruppur-3-killed-as-car-crashes-into-lorry</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruppur-3-killed-as-car-crashes-into-lorry#comments</comments><guid isPermaLink="false">96648b7e-d9b0-4fca-bd24-0a8343535694</guid><pubDate>Sat, 18 Jul 2026 03:48:58 +0000</pubDate><atom:updated>2026-07-18T03:48:58.793Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சாலை விபத்து,road accident,Tiruppur,திருப்பூர்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/f8qb318h/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/f8qb318h/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர், </p><p>திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து ஊட்டி நோக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் சுற்றுலா சென்றுகொண்டிருந்தனர். திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி அருகே சென்றுகொண்டிருந்தபோது, பழுதாகி நின்ற கேஸ் டேங்கர் லாரியின் பின்னால் கார் மோதி விபத்துக்குள்ளானது.</p><p>இந்த விபத்தில், 2 ஆண்கள், ஒரு பெண் என 3 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 5 பேருக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். </p> ]]></content:encoded></item><item><title>நாகர்கோவில் -கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-coach-connection-on-nagercoil-coimbatore-express</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-coach-connection-on-nagercoil-coimbatore-express#comments</comments><guid isPermaLink="false">09bcc4c7-7d01-44c5-8f8e-96cfd9a2efea</guid><pubDate>Sat, 18 Jul 2026 03:36:43 +0000</pubDate><atom:updated>2026-07-18T03:36:43.446Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,Nagercoil,நாகர்கோவில்,எக்ஸ்பிரஸ் ரெயில்,train service</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/sy4dvf3a/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/sy4dvf3a/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>நெல்லை, </p><p>நெல்லை வழியாக நாகர்கோவில் -கோயம்புத்தூர் இரவுநேர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 22667 / 22668) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் பயணிகள் கோரிக்கையை ஏற்று இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 31-ந்தேதி வரை கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படுகிறது.</p><p>இதையடுத்து இந்த ரெயிலில் 1 முதலாம் வகுப்புடன் இணைந்த இரண்ட டுக்கு ஏ.சி. பெட்டி, 1 ஏ.சி. இரண்டுக்கு பெட்டி, 2 ஏ.சி. மூன்றடுக்கு பெட்டி கள், 14 தூங்கும் வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 4 பொது பெட்டிகள், 1 மாற்றுத்திறனாளி பெட்டி, 1 சரக்கு பெட்டி என மொத்தம் 24 பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது.</p><p>இந்த தகவலை தெற்கு ரெயில்வே முதன்மை மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்து உள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>பெரம்பலூர்: ஆம்னி பஸ்  தீப்பற்றி எரிந்து விபத்து 

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/perambalur-omni-bus-theeppatri-erinthu-vibathu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/perambalur-omni-bus-theeppatri-erinthu-vibathu#comments</comments><guid isPermaLink="false">525645c6-3877-4e3a-8bef-58c078d2682d</guid><pubDate>Sat, 18 Jul 2026 03:34:14 +0000</pubDate><atom:updated>2026-07-18T03:34:14.460Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Omni Bus,Fire accident,ஆம்னி பஸ்,தீ விபத்து,Perambalur,பெரம்பலூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/laxk27ov/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/laxk27ov/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>பெரம்பலூர்,</p><p>சென்னையில் இருந்து நேற்று இரவு மதுரைக்கு ஆம்னி <a href="https://www.dailythanthi.com/">பஸ் </a>புறப்பட்டது. அந்த பஸ்சில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.</p><p>பஸ் நள்ளிரவு சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் அயன்பேரையூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தது.</p><h2>தீ விபத்து</h2><p>அப்போது பஸ்சில் திடீரென தீப்பற்றியது. உடனடியாக டிரைவர் பஸ்சை சாலையோரம் நிறுத்தினார். பின்னர், பயணிகள் அனைவரும் வேகவேகமாக பஸ்சில் இருந்து கீழே இறங்கினர்.</p><p>தீ மளமளவென பஸ் முழுவதும் பரவியது. இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று பஸ்சில் பற்றிய தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பஸ் முழுவதும் எரிந்து நாசமாகியது. இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் உள்ளிட்ட பாதிப்பு எதுவும் எற்படவில்லை. இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். </p> ]]></content:encoded></item><item><title>இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-1;  350 கிலோ எடை வரை சுமக்கும் திறன் கொண்டது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/indias-first-private-rocket-vikram-1-launches-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/indias-first-private-rocket-vikram-1-launches-today#comments</comments><guid isPermaLink="false">7616ac93-c4d9-49b3-81a6-73e5eae879cd</guid><pubDate>Sat, 18 Jul 2026 03:34:03 +0000</pubDate><atom:updated>2026-07-18T03:34:03.473Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,இஸ்ரோ,ராக்கெட்,Rocket,ஸ்ரீஹரிகோட்டா,ISRO Center,Skyroot</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/hl1aliba/vikramone33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விக்ரம்-1]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/hl1aliba/vikramone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்திய விண்வெளி வரலாற்றில் முதல்முறையாக இன்று விண்ணில் பாய்கிறது விக்ரம்-1 தனியார் ராக்கெட்</p><p>தெலுங்கானா மாநிலம் தலைநகர் ஐதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் விக்ரம்-1 என்ற ராக்கெட்டை தயாரித்துள்ளது. இந்த ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட் டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்திலிருந்து இன்று (சனிக்கிழமை) காலை 11.30 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. ராக்​கெட்​டின் அனைத்து நிலைகளும் ஒருங்​கிணைக்​கப்​பட்​டு, ஏவுதளத்​தில் நிறுத்​தப்​பட்​டுள்​ளது. இதற்​கான 36 மணி நேர கவுண்​டன் நேற்று முன்​தினம் தொடங்​கியது.</p><p>கிரகா ஸ்பேஸ், காஸ்மோசர்வ், டிகியூப்ட் மற்றும் ஸ்கைரூட்டின் 'ஸ்கோப்' உள்ளிட்ட நிறுவனங்களின் தொழில்நுட்ப சோதனை சுமைகளை (Payloads) <a href="https://www.dailythanthi.com/news/india">விக்ரம்-1 </a>சுமந்து செல்கிறது. மேலும், காஸ்மோஸ் டயமண்ட்ஸ் நிறுவனத்தின் நினைவுப் பரிசு பொருட்களும் இதில் இடம் பெற்றுள்ளன.</p><h2>450 கி.மீ. இலக்கு</h2><p>சுமார் 350 கிலோ எடையுள்ள சிறிய செயற்கைக்கோள்களை குறைந்த புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் வகையில் விக்ரம்-1 வடிவமைக்கப்பட்டு உள்ளது. முழுமையாக கார்பன் கலவைப் பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த மூன்று கட்ட ராக்கெட்டில் 3-டி அச்சிடப்பட்ட என்ஜின்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.</p><p>முதல் சோதனைப் பயணத்தில் 450 கிலோமீட்டர் உயர சுற்றுப்பாதையை எட்டுவது இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.</p> <p>இந்த ராக்கெட் 350 கிலோ எடை வரை சுமக்கும் திறன் உடையது. அதிக உந்துவிசை கொண்ட திட எரிபொருள் ராக்கெட் பூஸ்டர்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. முதல் பயணத்தில் 450 கி.மீ., உயரத்தில் 60 டிகிரி சாய்வு கொண்ட சுற்றுப்பாதையில் செயற்கைக்கோளை நிலைநிறுத்த இலக்கு நிர்ணயித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.16 லட்சம் மோசடி: 4 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-sub-inspector-defrauded-of-rs-16-lakh-4-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-sub-inspector-defrauded-of-rs-16-lakh-4-arrested#comments</comments><guid isPermaLink="false">97175c6b-06fe-4c9b-bff4-9901b46a0b9c</guid><pubDate>Sat, 18 Jul 2026 03:16:26 +0000</pubDate><atom:updated>2026-07-18T03:16:26.237Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,கைது,arrested,பணம் மோசடி,money laundering,சப்-இன்ஸ்பெக்டர்,Police sub-inspector,போலீஸ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/hpetf2t2/3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பணம் மோசடி, 4 பேர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/hpetf2t2/3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை, </p><p>நெல்லை மாநகரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.16 லட்சம் மோசடி செய்த 4 பேரை போலீசார் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கைது</a> செய்து விசாரித்து வருகின்றனர்.</p><h2>ரூ.16 லட்சத்து 16 ஆயிரம் மோசடி</h2><p>நெல்லை பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரவடிவேல் (வயது64). இவரது வாட்ஸ்-அப் எண்ணைத் தொடர்புகொண்ட மர்மப்பெண் ஒருவர், ஆன்லைன் முதலீடு மூலம் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறி மொத்தம் ரூ.16 லட்சத்து 16 ஆயிரத்தை ஏமாற்றி உள்ளார்.</p><h2>கைது</h2><p>ஆனால் லாபத்தொகையோ அல்லது அசல் தொகையோ திரும்பக் கிடைக்காததால் ஏமாற்றமடைந்த அவர், நெல்லை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் 4 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>திண்டுக்கல்லில் பழனி சார்பதிவாளர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cb-cid-police-conduct-a-raid-at-the-residence-of-the-palani-sub-registrar-in-dindigul</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cb-cid-police-conduct-a-raid-at-the-residence-of-the-palani-sub-registrar-in-dindigul#comments</comments><guid isPermaLink="false">219ecd36-5cbb-4ea5-a624-39ed55f3f663</guid><pubDate>Sat, 18 Jul 2026 03:12:27 +0000</pubDate><atom:updated>2026-07-18T03:12:27.496Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Dindigul,திண்டுக்கல்,பழனி,தமிழகம்,Palani,CBCID,சார்பதிவாளர்,Sub-Registrar,சி.பி.சி.ஐ.டி.,நில மோசடி,போலீசார் வழக்குப்பதிவு,Land fraud case</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/dvcm9bgd/aya.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/dvcm9bgd/aya.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல், </p><p>ரூ.100 கோடி நில மோசடி தொடர்பாக <a href="https://www.dailythanthi.com/topic/பழனி">பழனி</a> முருகன் கோவில் அலுவலர்கள் உள்பட 5 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தினர்.</p><h2>ரூ.100 கோடி நிலம்</h2><p>பழனி அடிவாரம் பூங்கா சாலையில், தண்டபாணி சுவாமி மடத்தின் அறக்கட்டளைக்கு சொந்தமான 1 ஏக்கர் 40 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்துக்கான தக்காராக ஐகோர்ட்டு உத்தரவுப்படி பழனி முருகன் கோவில் இணை ஆணையர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். எனவே முருகன் கோவில் நிர்வாகம் அந்த நிலத்தை நிர்வகித்து வருகிறது.</p><h2>ரூ.2 கோடிக்கு கிரையம்</h2><p>ரூ.100 கோடி மதிப்பிலான அந்த நிலம் கடந்த ஆண்டு பழனி முருக பக்தர்களின் வாகன நிறுத்துமிடமாக மாற்றப்பட்டது. இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில், அந்த நிலம் 2 பேருக்கு ரூ.2 கோடிக்கு கிரையமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. பழனி முருகன் கோவில் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலத்தை பத்திரப்பதிவு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><h2>பழனி சார்பதிவாளர்</h2><p>இதுகுறித்து பழனி அடிவாரம் போலீசில் கோவில் நிலப்பிரிவு கண்காணிப்பாளர் முருகானந்தம் புகார் அளித்தார். அதன் பேரில் பழனி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், விழுப்புரத்தை சேர்ந்த முருகதாஸ், உடுமலையை அடுத்த பாப்பன்குளத்தை சேர்ந்த வெள்ளத்துரை, பழனி டி.கே.என்.புதூரை சேர்ந்த சேதுபதி ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.</p><p>அதையடுத்து சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் தண்டபாணி சுவாமி மடத்தின் நிலத்தை தனியாருக்கு பத்திரப்பதிவு செய்தது செல்லாது மதுரை ஐகோர்ட்டு கிளை அதிரடியாக உத்தரவிட்டது. இதற்கிடையே அந்த நிலமோசடி வழக்கு சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றப்பட்டது.</p><h2>சி.பி.சி.ஐ.டி. வழக்குப்பதிவு</h2><p>அதன்படி நில மோசடி தொடர்பாக திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதையடுத்து மதுரை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு அஜய் தங்கம் தலைமையில் திண்டுக்கல், தேனி, மதுரை, ராமநாதபு ரம், விருதுநகர் உள்பட 5 மாவட்டங்களை சேர்ந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர்.</p><p>அப்போது பழனி முருகன் கோவில் அலுவலகத்துக்கு சென்று சம்பந்தப்பட்ட நிலத்தின் ஆவணங்களை சேகரித்தனர். அதோடு தண்டபாணி சுவாமி மடத்தின் நிலத்தை பார்வையிட்டனர். பின்னர் கோவில் அலுவலர்கள், வருவாய்த் துறையினரிடம் விசாரணை நடத்தினர்.</p><h2>5 பேரிடம் விசாரணை</h2><p>இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு சஜிதா நேற்று திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு வந்தார். அதையடுத்து நில மோசடி தொடர்பாக புகார் அளித்த கண்காணிப்பாளர் முருகானந்தம் மற்றும் கண்காணிப்பாளர்கள் கணபதி, சிவநேசன், கோவில் நிலங்கள் தொடர்பான பணிகளை மேற்கொண்ட ஓய்வு பெற்ற தாசில்தார் மாரியப்பன், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சின்னச்சாமி ஆகியோர் திண்டுக்கல்லுக்கு வரவழைக்கப்பட்டனர்.</p><p>அதேபோல் சம்பந்தப்பட்ட நிலம் தொடர்பான ஆவணங்களும் கொண்டு வரப்பட்டன. இதையடுத்து 5 பேரிடமும் போலீஸ் சூப்பிரண்டு சஜிதா 4 மணி நேரம் விசாரணை நடத்தினார். தண்டபாணி சுவாமி மடத்துக்கு உரிய நிலத்தை விற்பனை செய்தவர்கள் மற்றும் வாங்கியவர்களுடன் தொடர்புடைய நபர்கள் குறித்து துருவி, துருவி விசாரணை நடத்தினார்.</p><h2>பழனி சார்பதிவாளர் அலுவலகம்</h2><p>அதேபோல் பழனி சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 பேர் சென்றனர். அவர்கள் சார்பதிவாளர் அலுவலகத்தில் கணினியில் உள்ள ஆவணங்களை சேகரித்து விசாரணை நடத்தினர். அதேபோல் கோவில் நிலம் மோசடியாக பத்திரப்பதிவு நடந்த நாளில் அங்கு வந்து சென்ற நபர்களை கண்டறியும் வகையில், கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டனர்.</p><p>விரைவில் நிலம் வாங்கி, விற்றவர்களிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. திட்டமிட்டுள்ளனர். ஆனால் நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள் தலைமறைவானதாக கூறப்படுகிறது.</p><h2>மேலும் சிலருக்கு தொடர்பு?</h2><p>அதேநேரம் கடந்த 2 நாட்களாக திண்டுக்கல், பழனியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீஸ் சூப்பிரண்டு சஜிதா திண்டுக்கல்லில் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கிறார். முதல்கட்ட விசாரணையில் போலீசாருக்கு பல்வேறு தகவல்கள் கிடைத்து உள்ளன.</p><p>அதன்மூலம் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அது தொடர்பாக சிலரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர். அதன் முடிவில் மேலும் சிலர் சிக்குவார்கள் என்று போலீசார் கூறினர்.</p><h2>சார்பதிவாளர் வீட்டில் சோதனை</h2><p>இந்நிலையில் திண்டுக்கல்லில் பழனி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் 8 சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். பழனி கோவில் நிலம் மோசடியாக பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>ஆசனூர் அருகே வாகனங்களை வழிமறித்த காட்டு யானை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-blocks-vehicles-near-asanur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-blocks-vehicles-near-asanur#comments</comments><guid isPermaLink="false">01bc2bda-554a-4f7c-b781-5cad3dfb6dfe</guid><pubDate>Sat, 18 Jul 2026 02:56:03 +0000</pubDate><atom:updated>2026-07-18T02:56:03.047Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காட்டு யானை,A wild elephant,ஆசனூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/bc1y3pz6/57.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/bc1y3pz6/57.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தாளவாடி, </p><p>சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஆசனூர், தலமலை, தாளவாடி, கேர்மாளம் வனச்சரகங்களில் ஏராளமான யானைகள் உள்ளன. இவைகள் அடிக்கடி உணவு, தண்ணீர் தேடி அருகே உள்ள வனப்பகுதி சாலையை கடந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலை ஆசனூர் </p><p>வனப்பகுதியில் இருந்து யானை வெளியேறியது. பின்னர் அந்த காட்டு யானை ஆசனூர்-தாளவாடி சாலைக்கு வந்தது. அதைத்தொடர்ந்து சாலையில் அங்கும் இங்கும் நடமாடியது. மேலும் வாகனங்களை வழிமறித்தபடி நடுரோட்டில் நின்றது. இதனால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை சற்று தூரத்திலேயே நிறுத்திக்கொண்டனர். தொடர்ந்து சிறிது நேரம் சாலையில் நடமாடிய யானை தானாக வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. அதன்பின்னர் வாகன ஓட்டிகள் அங்கிருந்து சென்றனர். இதனால் ஆசனூர்-தாளவாடி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.</p><h2>வாகன ஓட்டிகள் எச்சரிக்கை</h2><p>இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, 'யானை போன்ற வனவிலங்குகள் சத்தியமங்கலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி நடமாடி வருகிறது. எனவே வனப்பகுதி சாலையில் வாகன ஓட்டிகள் மெதுவாக எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்' என அறிவுறுத்தியுள்ளனர். இதற்கிடையே <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88">யானையை</a> வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இது வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>விசுவாசத்தின் உச்சம்: எஜமானியை காப்பாற்ற பாம்பிடம் போராடி உயிரை மாய்த்த நாய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-height-of-loyalty-dog-fights-snake-to-save-owner-dies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-height-of-loyalty-dog-fights-snake-to-save-owner-dies#comments</comments><guid isPermaLink="false">49001e1a-7eb1-4d86-84c6-0e92ad2c6c66</guid><pubDate>Sat, 18 Jul 2026 02:49:01 +0000</pubDate><atom:updated>2026-07-18T02:49:01.373Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,Kanyakumari,Snake,House,dead,dog,நாய்,Faith,வீட்டின்,நல்லபாம்பு,விசுவாசம்,பின்புறம்,இறந்தன,behind</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/qct2xme6/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நல்லபாம்பிடம் போராடி உயிரிழந்த நாய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/qct2xme6/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி, </p><p>கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் நாய் ஒன்று தனது எஜமானியை காப்பாற்ற பாம்பிடம் போராடி உயிரை மாய்த்துக் கொண்ட, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விசுவாசத்தின் உச்சம் தொட்ட சம்பவம்</a> நடந்துள்ளது.</p><h2>2 வயது நாய் சிஞ்சான்</h2><p>கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பிரம்மபுரம் பகுதியில் வசித்து வருபவர் விகேஷ் (வயது 35). இவர் திருவனந்தபுரம் கோட்டத்தில் ரெயில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார். இவருக்கு காயத்ரி என்ற மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களோடு காயத்ரியின் தாயார் பத்மகுமாரியும் வசித்து வருகிறார். இவர்கள் வீட்டில் சிஞ்சான் என்ற 2 வயது நாய் ஒன்றையும் வளர்த்து வந்தனர்.</p><h2>படம் எடுத்து நின்ற நல்லபாம்பு</h2><p>நேற்று முன்தினம் மாலை பத்மகுமாரி வீட்டின் பின்புறம் உள்ள திண்ணையில் இருந்து இரவு சமையல் செய்வதற்கான பொருட்களை எடுத்து தயார் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் இருந்த இடத்தின் அருகில் திடீரென சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு நல்லபாம்பு படம் எடுத்து நின்றது. இதை பார்த்ததும் பத்மகுமாரி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு விகேசும், அவரது மனைவியும் வீட்டின் பின்புறம் ஓடோடி வந்தனர். அதே நேரத்தில் வீட்டின் முன்புறம் படுத்திருந்த நாய் சிஞ்சானும் அங்கே ஓடி வந்து பத்மகுமாரியின் முன்னே படம் எடுத்து நின்ற பாம்பை கவ்வி பிடிக்க முயன்றது.</p><h2>நாயின் விசுவாசம்</h2><p>அப்போது பாம்பு சீறியபடி சிஞ்சானை கடித்தது. இதனால் ஆவேசமடைந்த அந்த நாய், பாம்பை கடித்து 2 துண்டாக்கி சின்னாபின்னமாக்கியாகியது. பின்னர் சிறிது நேரத்தில் சிஞ்சான் தரையில் மயங்கி விழுந்து இறந்தது. அதேபோல் உடல் துண்டான பாம்பும் இறந்தது. தனக்கு தினமும் சோறு போட்டு வளர்த்த எஜமானியை காப்பாற்றுவதற்காக பாம்பிடம் போராடி தனது உயிரை மாய்த்துக்கொண்ட செல்லப்பிராணியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rain-likely-in-5-districts-till-10-am-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rain-likely-in-5-districts-till-10-am-2#comments</comments><guid isPermaLink="false">88832a3e-03fe-494c-8c34-c97ca8a8f37e</guid><pubDate>Sat, 18 Jul 2026 02:33:16 +0000</pubDate><atom:updated>2026-07-18T02:33:16.965Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு,வானிலை முன்னறிவிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/90xa6gom/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/90xa6gom/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுமார் 7.6 கி.மீ. உயரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் முதல் வடக்கு லட்சத்தீவு பகுதிகள் வரை வட தமிழகம், தெற்கு உள் கர்நாடகா மற்றும் வடக்கு கேரளா வழியாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மொரப்பூர் அண்ணல் நகரில் வைப்பதற்காக அம்பேத்கர் சிலை கொண்டு வந்ததால் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ambedkar-statue-brought-to-anna-nagar-in-morapur-creating-a-stir</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ambedkar-statue-brought-to-anna-nagar-in-morapur-creating-a-stir#comments</comments><guid isPermaLink="false">97654ff2-c074-4447-a7d6-9fd77bd75fd6</guid><pubDate>Sat, 18 Jul 2026 02:17:47 +0000</pubDate><atom:updated>2026-07-18T02:17:47.240Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிலை,statue,Ambedkar,மொரப்பூர்,morapur,டாக்டர் அம்பேத்கர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/h6ko0uk4/56.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/h6ko0uk4/56.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மொரப்பூர்,</p><p>மொரப்பூர் அண்ணல் நகரில் வைப்பதற்காக அம்பேத்கர் வெண்கல சிலை கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அனுமதி பெற்று தான் சிலை வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.</p><p>தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அண்ணல் நகரில் அம்பேத்கர் அறக்கட்டளை மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் சிலை வைக்க முடிவு செய்தனர். அதன்படி ஊர் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் ரூ.9.5 லட்சம் மதிப்பில் 8 அடி உயர அம்பேத்கர் வெண்கல சிலை வாலாஜாபேட்டை பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு மொரப்பூர் அண்ணல் நகருக்கு கொண்டு வந்தனர். இந்த சிலைக்கு பொதுமக்கள் மேளதாளம் முழங்க, பட்டாசு வெடித்து வரவேற்பு கொடுத்தனர். இந்த சிலையை அரசு அனுமதி பெற்ற பின்னர் பொது இடத்தில் வைக்கவும் அதுவரை அண்ணல் நகர் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் வைக்கவும் விழாக்குழுவினர் முடிவு செய்தனர். இதையடுத்து அம்பேத்கர் சிலையை கிரேன் மூலம் வாகனத்தில் இருந்து இறக்கி கோவிலில் வைத்து பூட்டி வைத்தனர்.</p><h2>பேச்சுவார்த்தை</h2><p>இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரூர் தாசில்தார் வள்ளி, போலீஸ் துணை சூப்பிரண்டு சதீஷ்குமார், மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தமிழகத்தில் சிலைகளை வைக்க அரசு அனுமதி பெற்று தான் வைக்க வேண்டும். அரசு அனுமதி இன்றி சிலை வைக்கக்கூடாது. அரசு அனுமதி பெற்ற பிறகு சிலை வைக்க வேண்டும் என அதிகாரிகள் கூறினர். இதையடுத்து நிர்வாகிகள், பொதுமக்கள் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D">அம்பேத்கர் </a>சிலையை வேறு ஒரு இடத்திற்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். இதனால் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டனர். அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>மருத்துவ கல்லூரிகளில் 500 நர்சிங் இடங்களை தொடங்க தமிழக அரசு திட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-plans-to-introduce-500-nursing-seats-in-medical-colleges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-plans-to-introduce-500-nursing-seats-in-medical-colleges#comments</comments><guid isPermaLink="false">c061aea2-903b-4614-a280-039ec35bf354</guid><pubDate>Sat, 18 Jul 2026 02:05:21 +0000</pubDate><atom:updated>2026-07-18T02:05:21.765Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu Government,தமிழக அரசு,நர்சிங் படிப்பு,Nursing Course</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/n5m1mca0/3.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/n5m1mca0/3.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>அரசு மருத்துவ கல்லுாரிகளில், 1,500 பி.எஸ்சி., நர்சிங் இடங்களை தொடங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் ஆறு மருத் துவ கல்லுாரிகளில், 510 பி.எஸ்சி., நர்சிங் இடங்கள் உள்ளன. இங்கு ஆண்டிற்கு, 13,750 ரூபாய் கல்விக் கட் டணமாக வசூலிக்கப்படுகிறது. அதேநேரம் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், 1.20 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது.</p><p>பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் தொடர் கோரிக்கையை அடுத்து, தி.மு.க., ஆட்சியிலேயே, 10 மருந்தியல் மற்றும் நர்சிங் கல்லுாரிகளை தொடங்க, தமிழக அரசு பூர்வாங்க பணியை தொடங்கியது. ஆனால், அவற்றை செயல்படுத்தவில்லை.</p><p>இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க., அரசு, மருந்தியல் மற்றும் நர்சிங் கல்லுாரிகளை அதிகப்படுத்த, முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, வேலுார், திருவண்ணாமலை, தர்மபுரி, திருநெல்வேலி, திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட 14 மருத்துவ கல்லுாரிகளில், பி.எஸ்சி., நர் சிங் படிப்பு தொடங்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.</p><p>இது குறித்து, மருத்துவ கல்வி இயக்க அதிகாரிகள் கூறியதாவது:</p><p>தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு இணையாக, துணை மருத்துவ படிப்புகளையும் அதிகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 700க்கும் மேற்பட்ட மருந்தியல் படிப்புகள், 1,500 பி.எஸ்சி., நர்சிங் படிப்புகள் தொடங்கப்பட உள்ளன. இதற்கான உட்கட்டமைப்பு, பேராசிரியர்கள் நியமனம் உள்ளிட்ட பணிகள் நடக்க இருப்பதால், இவை அடுத்த ஆண்டு செயல்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது. </p><p>இவ்வாறு அவர்கள் கூறினர்.</p> ]]></content:encoded></item><item><title>&quot;நான் காதலிக்கும் பெண்ணை நீயும் காதலிப்பதா?&quot; - காதல் போட்டியில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-hacked-with-a-sickle-in-a-romantic-rivalry</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-hacked-with-a-sickle-in-a-romantic-rivalry#comments</comments><guid isPermaLink="false">18f08485-dc71-48a0-97d3-16efa0fdd371</guid><pubDate>Sat, 18 Jul 2026 02:04:38 +0000</pubDate><atom:updated>2026-07-18T02:04:38.239Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,தமிழகம்,கைது,காதல் விவகாரம்,love issue,வாலிபர் மீது தாக்குதல்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/y6z84ufd/rendu.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/y6z84ufd/rendu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>காதல் போட்டியில் வாலிபரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>7 ஆண்டுகளாக காதல் </h2><p>சென்னை கீழ்ப்பாக்கம் சாஸ்திரி நகரில் வசிப்பவர் நந்தகோபால் (வயது 23). இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கீழ்ப்பாக்கம் புல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை, கடந்த 7 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்ததாக தெரிகிறது.</p><p>அதே இளம்பெண்ணை சதீஷ் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சமீப காலமாக நந்தகோபால், தனது காதலியை செல்போனில் தொடர்புகொண்டபோது, அவர் பேசவில்லை என்று தெரிகிறது.</p><h2>தகராறு</h2><p>இந்த நிலையில், தனது காதலியிடம் பேச முடியாதது குறித்து நந்தகோபால், சதீஷிடம் விசாரித்தார். அப்போது அவர், "நான் காதலிக்கும் பெண்ணை நீயும் காதலிப்பதா?" என்று கேட்டு நந்தகோபாலுடன் தகராறில் ஈடுபட்டார்.</p><h2>அரிவாள் வெட்டு</h2><p>பின்னர் நந்தகோபாலை, 'காதலியை பார்க்க வாருங்கள்' என்று தனியாக அழைத்துச் சென்ற சதீஷ், தனது நண்பர்களுடன் சேர்ந்து சரமாரியாக தாக்கினார். இதில் நந்தகோபால் அரிவாளால் வெட்டப்பட்டார். மேலும், கற்களை வீசியும் அவர் மீது தாக்குதல் நடத்தினர்.</p><p>இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த நந்தகோபால், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து சதீஷ் உள்பட 8 பேரை கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>பெண்கள் உலகக் கோப்பை ஆக்கி போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/indian-squad-for-womens-hockey-world-cup-announced</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/indian-squad-for-womens-hockey-world-cup-announced#comments</comments><guid isPermaLink="false">db6546f0-1191-4c8a-a4c7-d86e54aa9998</guid><pubDate>Sat, 18 Jul 2026 01:53:29 +0000</pubDate><atom:updated>2026-07-18T01:53:29.844Z</atom:updated><atom:author><atom:name>விளையாட்டுச் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514347</atom:uri></atom:author><description></description><media:keywords>India,இந்திய அணி,ஆக்கி,hockey,பெண்கள் உலகக்கோப்பை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/prns9l9r/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/prns9l9r/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><p>16-வது பெண்கள் உலகக் கோப்பை ஆக்கி போட்டி அடுத்த மாதம் 15-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை பெல்ஜியம், நெதர்லாந்தில் நடக்கிறது. இதற்கான இந்திய பெண்கள் ஆக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. செப்டம்பர், அக்டோபரில் நடக்கும் ஆசிய விளையாட்டு போட்டிக்கான அணியில் இடம் பெற்றுள்ள வீராங்கனைகள் அப்படியே அணியில் நீடிக்கின்றனர்.</p><p>இந்திய பெண்கள் அணி வருமாறு:- சவிதா, பிச்சுதேவி கரிபாம் (கோல் கீப்பர்கள்), இஷிகா சவுத்ரி, சுஷிலா சானு, லால்தன்ட்லுவாங்கி, ஜோதி, ஷில்பி தபாஸ் (பின்களம்), நிக்கி பிரதான், சாக்ஷி ராணா, சுனேலிதா டாப்போ, சலிமா டெடி (கேப்டன்), நேஹா, தீபிகா சோரெங் (நடுகளம்), லால்ரெம்சியாமி, ருதுஜா தாதாசோ பிசல், நவ்னீத் கவுர், தீபிகா, இஷிகா, பல்ஜீத் கவுர், பியூட்டி டங்டங்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் பதுக்கிய வழக்கில் மலேசிய பெண் கைது: பரபரப்பு தகவல்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/malaysian-woman-arrested-in-chennai-for-hoarding-fake-rs500-notes-exciting-news</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/malaysian-woman-arrested-in-chennai-for-hoarding-fake-rs500-notes-exciting-news#comments</comments><guid isPermaLink="false">97101361-d053-4283-aafa-d7f7242ad608</guid><pubDate>Sat, 18 Jul 2026 01:11:20 +0000</pubDate><atom:updated>2026-07-18T01:11:20.140Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Malaysia,மலேசியா,Chennai,சென்னை,Seizure,woman arrested,பெண் கைது,திருவல்லிக்கேணி,Thiruvallikeni,counterfeit notes,கள்ளநோட்டுகள் பறிமுதல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/81dv0h3b/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மலேசிய பெண் புவனேஸ்வரி கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/81dv0h3b/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை திருவல்லிக்கேணியில் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மலேசிய பெண் கைது </a>செய்யப்பட்டார். </p><h2>500 ரூபாய் கள்ளநோட்டுகள்</h2><p>சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள 'லாட்ஜ்' ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 11 லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ளநோட்டுகள், கத்தை, கத்தையாக பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நோட்டை பதுக்கி வைத்திருந்ததாக, ஷபீக்ரகுமான் (வயது 37) என்ற 'டிராவல்ஸ்' அதிபர் கைது செய்யப்பட்டார். அவரது 'டிராவல்ஸ்' நிறுவனம் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ளது. </p><p>அவரிடம் இருந்து 11 லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுகளும், ரூ.11.21 லட்சம் உண்மையான 500 ரூபாய் நோட்டுகளும் மற்றும் 25 ஆயிரம் ‘யூரோ கரன்சி' நோட்டுகளும் கைப்பற்றப்பட்டது. இவர் கொடுத்த தகவலின்பேரில், தஞ்சாவூரை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரையும், போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.22.79 லட்சம் உண்மையான ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டது. இவர்கள் இருவரிடம் இருந்தும் ரூ.34 லட்சம் உண்மையான 500 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.  </p><h2>மலேசியாவில் அச்சடிப்பு</h2><p>இவர்களிடம் கைப்பற்றப்பட்ட கள்ளநோட்டுகள் அசல் நோட்டுகளை போலவே உள்ளன. இந்த கள்ள நோட்டுகளை மலேசியாவில் அச்சடித்ததாக தெரியவந்துள்ளது. கைதான ரவிச்சந்திரன், மலேசியாவில் சில காலம் தங்கியிருந்து வேலை பார்த்துள்ளார். அப்போது கள்ளநோட்டு கும்பலோடு இவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. </p><p>மலேசியாவை சேர்ந்த பரிமளா, புவனேஸ்வரி ஆகிய 2 பெண்கள் இந்த கள்ளநோட்டு கும்பலோடு தொடர்பில் இருந்துள்ளனர். அவர்கள் இருவரும் மாம்பலத்தில் உள்ள ஒரு லாட்ஜில்' தங்கியிருந்தனர். போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது, பரிமளா தப்பி ஓடிவிட்டார். புவனேஸ்வரி மட்டும் போலீசாரிடம் மாட்டினார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. </p><h2>விமானத்தில் கள்ளநோட்டுகள்</h2><p>கள்ளநோட்டுகள் மலேசியாவில் இருந்து, விமானத்தில் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது. விமானத்தில் எப்படி கொண்டு வந்தார்கள்? என்பது குறித்து தீவிர விசாரணை நடக்கிறது. தப்பி ஓடிய பரிமளாவுக்குதான் அதுபற்றிய விவரம் தெரியும் என்று புவனேஸ்வரி கூறியுள்ளார். பரிமளா மலேசியா தப்பி சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவரை கைது செய்யும் முயற்சியிலும் போலீசார் இறங்கியுள்ளனர். ரூ.1.10 கோடி அளவுக்கு, மலேசியாவில் இருந்து கள்ளநோட்டுகளை கொண்டு வந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். அவற்றில் ரூ.34 லட்சம் வரை கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர். மீதி கள்ளநோட்டுகள் என்ன ஆனது? எனவும் விசாரணை நடக்கிறது. </p><h2>புவனேஸ்வரி கைது</h2><p>இந்த நிலையில் போலீசாரிடம் சிக்கிய மலேசிய பெண் புவனேஸ்வரி(48) நேற்று முறையாக கைது செய்யப்பட்டார். தப்பி சென்ற பரிமளாவும், புவனேஸ்வரியும் சேர்ந்து கள்ளநோட்டுகளை மலேசியாவில் இருந்து தமிழகம் கொண்டுவந்துள்ளதாக தெரியவருகிறது. மலேசியா தப்பி சென்ற பரிமளாவை, சர்வதேச போலீஸ் உதவியுடன் கைதுசெய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர். </p><p>இந்த வழக்கில் மலேசியா போன்ற வெளிநாட்டு தொடர்பு விவரங்கள் வருவதால், திருவல்லிக்கேணி போலீசார் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற பரிந்துரை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>100, 200 ரூபாய் கள்ளநோட்டுகளும்...</h2><p>இந்த வழக்கில் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் மட்டுமல்லாது, 100, 200 ரூபாய் கள்ளநோட்டுகளும் சிக்கியுள்ளதாக போலீசார் நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர். கைதான 3 பேரிடம் இருந்தும், பல்வேறு பெயர்களில் 16 'பாஸ்போர்ட்டுகளும்' பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருச்சியில் இன்று மின் தடை செய்யப்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-trichy-facing-a-power-outage-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-trichy-facing-a-power-outage-today#comments</comments><guid isPermaLink="false">85fb6d5f-4b4d-4d76-881a-4d5e9242e2bf</guid><pubDate>Sat, 18 Jul 2026 01:02:04 +0000</pubDate><atom:updated>2026-07-18T01:02:04.506Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>power outage,மின் தடை,திருச்சி,Trichy</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/kut2qw4i/ep.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/kut2qw4i/ep.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி, </p><p>மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சியின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்பட உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;</p><p>மத்திய பஸ்நிலையம், வ.உ.சி.ரோடு, கலெக்டர் ஆபிஸ் ரோடு பகுதிகள், ராஜாகாலனி, குமுளித்தோப்பு, கல்லாங்காடு, பெரியமிள குபாறை, ஜங்ஷன் பகுதிகள், வில்லியம்ஸ்ரோடு, ராயல்ரோடு, கண்டித் தெரு, கான்வென்ட்ரோடு, பறவைகள் சாலை, பாரதியார்சாலை, மேலப்பு தூர், குட்செட்ரோடு, புதுக்கோட்டை ரோடு, ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலப்பகுதி, ஜென்னிபிளாசா பகுதி, தலைமை தபால்நிலைய பகுதி, முதலியார் சத்திரம், காஜாப்பேட்டை ஒரு பகுதி. உறையூர் பகுதிகளான மேட் டுத்தெரு, கல்நாயக்கன்தெரு, வாலாஜாபஜார், பாண்டமங்கலம்,வயலூர் ரோடு, கனராபேங்க்காலனி, குமரன்நகர், சிண்டிகேட் பேங்க்காலனி, பேங்கர்ஸ்காலனி, சீனிவாசநகர், ராமலிங்கநகர், தெற்கு வடக்கு கீதாநகர், அம்மையப்பபிள்ளைநகர், எம்.எம்.நகர், சண்முகாநகர், ரெங்காநகர், உய் யகொண்டான்திருமலை, கொடாப்பு, வாசன்நகர், சோழங்கநல்லூர், உறையூர் வெக்காளியம்மன் கோவில் பகுதி, பாத்திமாநகர், குழுமணி ரோடு, நாச்சியார்கோவில், பொன்னகர், கருமண்டபம் இருபுறமும், செல் வநகர், ஆர்.எம்.எஸ்.காலனி, தீரன்நகர், பிராட்டியூர், ராம்ஜிநகர் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.  </p><p>இதேபோல் கே.சாத்தனூர் துணை மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான கே.கே.நகர், இந்தியன்வங்கி காலனி, காஜாமலைகாலனி, எஸ்.எம்.இ.எஸ்.இ. காலனி, கிருஷ்ணமூர்த்தி நகர், சுந்தர்நகர், அய்யப்பாநகர், எல்.ஐ.சி.காலனி, பழனிநகர், முல்லைந கர், ஓலையூர், இச்சிகாமாலைபட்டி, மன்னார்புரம் ஒரு பகுதி, சிம்கோ காலனி, அகிலாண்டேஸ்வரிநகர், ஆர்.வி.எஸ்.நகர், வயர்லஸ் சாலை, செம்பட்டு ஒரு பகுதி, குடித்தெரு, பாரதிநகர், காமராஜ்நகர், ஜே.கே.நகர். சந்தோஷ்நகர், ஆனந்த்நகர், கே.சாத்தனூர், வடுகப்பட்டி, பாரிநகர், காஜாநகர், ஆர்.எஸ்.புரம், டி.எஸ்.என்.அவென்யூ. குளவாய்பட்டி, ராயல் வில்லா, இ.பி.காலனி, முத்துநகர், ராணிமெய்யம்மைநகர், மொராய்ஸ் சிட்டி, எஸ்.பி.ஓ.ஏ.பள்ளி, பசுமைநகர், அந்தோணியார்கோவில் தெரு, வி.எம்.டி.ரோடு, கலைஞர்நகர், இந்திரநகர், மொராய்ஸ்கார்டன், அம்மன்ந கர், எம்.ஜி.ஆர்.நகர் மற்றும் கொட்டப்பட்டு ஒரு பகுதி, சேஷசாயி நகர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.  </p><p>திருச்சி எடமலைப்பட்டிபுதூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட உயர ழுத்த மின்பாதையில் அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் இன்று காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை டி.எஸ்.பி.கேம்ப். அன்புநகர், காந்திநகர், சிம்கோகாலனி, கொல்லாங்குளம், அரசுகாலனி, ஆர்.எம்.எஸ்.காலனி, ராஜீவ்காந்திந கர், செட்டியப்பட்டி, கிராப்பட்டி காலனி, அருணாச்சலநகர், பாரதிமின்நகர், ஸ்டேட்பேங்க்காலனி, எடமலைப்பட்டிபுதூர், ராமச்சந்திராநகர், கே.ஆர்.எஸ்.நகர், கிருஷ்ணாபுரம், அன்பிலார்நகர், பஞ்சப்பூர் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது. </p>  ]]></content:encoded></item><item><title>பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு இன்று வாய்ப்பு: எந்தெந்த பகுதிகளில் தெரியுமா..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chance-of-rain-accompanied-by-strong-winds-today-do-you-know-which-areas</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chance-of-rain-accompanied-by-strong-winds-today-do-you-know-which-areas#comments</comments><guid isPermaLink="false">2fcacf94-f540-4fd4-99c8-d869df4a20f1</guid><pubDate>Sat, 18 Jul 2026 01:00:35 +0000</pubDate><atom:updated>2026-07-18T01:00:35.539Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,Rain,Weather,வானிலை,தமிழகம்,Weather News,WeatherUpdate,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,வானிலை ஆய்வு மையம்,வானிலை அறிக்கை,weather condition,Weather Report,வானிலை முன்னறிவிப்பு,Weather Status,வானிலை அறிவிப்பு,weather center</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/ujax954n/kumar.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/ujax954n/kumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>வானிலை செய்திகள் (Weather)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>காற்றழுத்த தாழ்வு பாதை</h2><p>இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>சுமார் 7.6 கிமீ உயரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் முதல் வடக்கு லட்சத்தீவு பகுதிகள் வரை வட தமிழகம், தெற்கு உள் கர்நாடகா மற்றும் வடக்கு கேரளா வழியாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><h2>மழை</h2><p>இதன் காரணமாக <strong>இன்று (18-07-2026):</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/மழை">மழை</a> பெய்யக்கூடும். </p><p>ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/மழை">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>நாளை (19-07-2026):</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/மழை">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>20-07-2026 மற்றும் 21-07-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/மழை">மழை </a>பெய்யக்கூடும்.</p><p><strong>22-07-2026 மற்றும் 23-07-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/மழை">மழை</a> பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</strong></p><p><strong>18-07-2026 முதல் 21-07-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.</p><p><strong>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:-</strong></p><p><strong>18-07-2026 முதல் 21-07-2026 வரை:</strong> உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p> <h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று (18-07-2026):</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88">மழை</a> பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சென்னை தொலைபேசி பிரிவின் பி.எஸ்.என்.எல். புதிய தலைமை பொதுமேலாளர் பொறுப்பேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-chief-general-manager-of-bsnl-chennai-telephone-division-takes-charge</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-chief-general-manager-of-bsnl-chennai-telephone-division-takes-charge#comments</comments><guid isPermaLink="false">ecb0628c-9833-41dc-a4ac-11bb2215619a</guid><pubDate>Sat, 18 Jul 2026 00:58:14 +0000</pubDate><atom:updated>2026-07-18T00:58:14.509Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,BSNL,பி.எஸ்.என்.எல்.,General Manager,பொதுமேலாளர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/i23p1uhh/54.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/i23p1uhh/54.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பி.எஸ்.என்.எல். சென்னை தொலைபேசி பிரிவின் புதிய தலைமை பொது மேலாளராக பி.சுதாகர ராவ் நேற்று </p><p>பொறுப்பேற்றார். இவர் 1992-ம் ஆண்டு இந்திய தொலைத்தொடர்பு சேவை அதிகாரி ஆவார். பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு வட்டத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் முதன்மை பொதுமேலாளராக பணிபுரிந்தார். தொலைதொடர்பு துறையின் பல்வேறு பிரிவுகளில் அனுபவம் கொண்டவர்.</p><h2>'மொபைல் கோர் நெட்வொர்க்'</h2><p>குறிப்பாக புதிய தொழில்நுட்ப சுவிட்சுகள், தொலைதொடர்பு நெட்வொர்க் நிர்வாகம் மற்றும் திட்டமிடல், 'மொபைல் கோர் நெட்வொர்க்' இயக்கம் மற்றும் பராமரிப்பு, செல்போன் இணைப்பு திட்டமிடல் மற்றும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D.">பி.எஸ்.என்.எல். </a>விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவுகளில் அனுபவம் பெற்றவர். இவர் ஒருங்கிணைந்த ஆந்திரபிரதேச வட்டம், வடகிழக்கில் உள்ள ஷில்லாங், தெலுங்கானா வட்டம் மற்றும் தமிழ்நாடு வட்டம் என நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் &apos;ரெஸ்டோ பார்&apos; தொடங்க திட்டமா? - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-there-a-plan-to-start-resto-bar-in-tamil-nadu-minister-vignesh-explains</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-there-a-plan-to-start-resto-bar-in-tamil-nadu-minister-vignesh-explains#comments</comments><guid isPermaLink="false">63e7ae6a-a46f-410a-b100-2e77db6e0d48</guid><pubDate>Sat, 18 Jul 2026 00:54:15 +0000</pubDate><atom:updated>2026-07-18T00:54:15.577Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Minister Vignesh,அமைச்சர் விக்னேஷ்,ரெஸ்டோ பார்,resto bar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/pnppc1py/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் விக்னேஷ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/pnppc1py/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தென்மாநிலங்களில் போதைப்பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்-அமைச்சர் விஜய்யை கேரள அரசின் உள்துறை மந்திரி ரமேஷ் சென்னிதலா கடந்த 15-ந்தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் விக்னேஷ் உடனிருந்தார்.</p><p>இந்த ஆலோசனையில், கேரளாவில் 'ரெஸ்டோ பார்'கள் மூலம் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது என்று அம்மாநில மந்திரி ரமேஷ் சென்னிதலா கருத்து தெரிவித்ததாகவும், அதன் அடிப்படையில் தமிழ்நாட்டிலும் 'ரெஸ்டோ பார்' களை கொண்டு வருவதற்கு 'டாஸ்மாக்' நிர்வாகம் உடனடி பரிசீலனையில் இறங்கியதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியானது.</p><p>ஏற்கனவே, அ.தி.மு.க. ஆட்சியில் 'ரெஸ்டோ பார்'களை கொண்டு வருவதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் கைவிடப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில், இதுதொடர்பாக தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்துள்ளார். </p><p>அவர் கூறும்போது, 'உணவகத்துடன் கூடிய மதுபானக்கூடம் (ரெஸ்டோ பார்) திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக 'டாஸ்மாக்' நிர்வாகம் அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. துறையை சீரமைக்க சில ஆலோசனைகள், விவாதங்கள் மேற்கொள்ளப்படலாம். இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் 'டாஸ்மாக்' நிர்வாகம் வெளியிடவில்லை' என்று தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்று மின்தடை: எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/power-cut-in-chennai-today-know-which-areas</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/power-cut-in-chennai-today-know-which-areas#comments</comments><guid isPermaLink="false">d7d5023a-9a38-4f74-93cd-caa5769bab33</guid><pubDate>Fri, 17 Jul 2026 19:53:47 +0000</pubDate><atom:updated>2026-07-17T19:53:47.532Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,power cut,மின்தடை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/6vgwl8w7/min.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/6vgwl8w7/min.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>சென்னையில் 18.07.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><h2>மின்தடை ஏற்படும் இடங்கள்: </h2><p><strong>தில்லைகங்காநகர்</strong>: நங்கநல்லூர், பழவந்தாங்கல், ஜீவன்நகர், சஞ்ஜய்காந்திநகர், வேளச்சேரி, ஆதம்பாக்கம், ஆன்டாள்நகர், வானுவம்பேட்டை, பிருந்தாவன்நகர், மகாலக்ஷ்மிநகர், சாந்தி நகர், புழுதிவாக்கம், உள்ளகரம், ஏஜிஎஸ் காலனி வேளச்சேரி, இபி காலனி, மோகனபுரி, ஆதம்பாக்கம் நியுகாலனி.</p><p><strong>பஞ்செட்டி</strong>: அழிஞ்சிவாக்கம், அத்திப்பேடு, இருளிப்பட்டு, ஜனபஞ்சத்திரம் கூட் ரோடு, பெரியபாளையம் சாலை, ஜெகநாதபுரம் சாலை, சாய்கிருபா நகர், விருந்தாவன் நகர், எம்.கே. கார்டன், ஸ்ரீ நகர், எஸ்.வி. பண்ணை, மாலிவாக்கம், அமூர் ஜெகநாதபுரம் சத்திரம், குதிரைப்பள்ளம்.</p><p><strong>சோழிங்கநல்லூர்</strong>: எல்காட் அவென்யூ சாலை, மாடல் பள்ளி சாலை கிளாசிக் படிவங்கள், நெடுஞ்செழியன் தெரு, நாராயணசாமி தெரு, படவேட்டம்மன் கோயில் தெரு, பரமேஸ்வரன் நகர், பொன்னியம்மன் கோயில் தெரு, குமரன் நகர், டிஎன்எச்பி, அலமேலுமங்காபுரம், காந்தி நகர், ஒஎம்ஆர், நூக்காம்பாளையம் சாலை, திருவள்ளுவர் சாலை, பாண்டிச்சேரி பட்டி, செம்மஞ்சேரி, ஜவகர் நகர், சத்யபாமா நகர், ஜேபிஆர், செயின்ட் ஜோஷப் கல்லூரி, கிராம உயர் சாலை, வேலுநாயக்கர் தெரு, நேரு தெரு, கணேஷ் நகர், மேடவாக்கம் சாலை, விப்ரோ சாலை, அண்ணா தெரு, தேவராஜ் நகர், நியூ குமரன் நகர், எழில் நகர், காந்தி தெரு, எம்ஜிஆர் தெரு.</p><p><strong>நங்கநல்லூர்</strong>: ஷீலா நகர், ஐஸ்வர்யா தெரு, எரிகரை தெரு, ராமகிருஷ்ண ராஜு நகர், நீலமேகம் தெரு, அகத்தியர் தெரு, மணிகண்டன் தெரு, அன்னை தெரசா நகர், ஏழுமலை தெரு, ஏஜிஎஸ் காலனி, பாலாஜி நகர் தெரு, சிவபிரகாசம் நகர், சங்கரா நகர், சங்கரதாஸ் தெரு, நந்தனார் தெரு, முல்லை தெரு, சிவசுப்ரமணியன் தெரு, அம்பிகாபதி தெரு, ராமலிங்க நகர், குப்புசாமி தெரு, கங்கை தெரு, யமுனை தெரு, வைகை தெரு, சொக்கநாதன் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, சிவராமன் தெரு, சதாசிவம் நகர், ராம் குமார் தெரு.</p><p><strong>பொன்னேரி</strong>: பஞ்செட்டி, தச்சூர் கூட் ரோடு, அழிஞ்சிவாக்கம், போராக்ஸ், கீழ்மேனி, பெரவள்ளூர், அத்திப்பேடு, நத்தம், ஆண்டார்குப்பம், சத்திரம், மாதவரம், ஆமூர், கோடூர், கே.பி.கே. நகர், சின்னாவரம், வெள்ளோடை, எலியம்பேடு, சின்னகாவனம், பெரியகாவனம், காவல்பட்டி, உப்பளம், டி.வி.பாடி, வெம்பாக்கம், தேவதானம், அன்னுப்பம்பட்டு, ஏ.ஆர். பாளையம், ஆலாடு, பெரும்பேடு, டி.வி.புரம்., உத்தண்டி, கண்டிகை, அரசூர்.</p><p><strong>திருமுல்லைவாயல்</strong>: பழைய அலமாதி, அலமாதி ஏ காலனி, வெண்மணி நகர், பால் பண்னை, கோவிந்தபுரம், கிருஷ்ணா நகர்.</p><p><strong>கோவிலம்பாக்கம்</strong>: மேடவாக்கம் பிரதான சாலை, எம்.ஜி.ஆர். நகர், ரோஸ் கார்டன், சின்ன கோவிலம்பாக்கம், எஸ். கொளத்தூர் சாலை, ஈச்சாங்காடு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தொழிற்பேட்டை</a>, பல்லாவரம் ரேடியல் சாலை.</p><p><strong>ஒட்டியம்பாக்கம்</strong>: வேடந்தாங்கல் நகர், ஒட்டியம்பாக்கம் முழுவதும், நேதாஜி நகர், காரணை பிரதான சாலை, ஒட்டியம்பாக்கம் பிரதான சாலை, ஜோன்ஸ், கிரஷர் சாலை.</p><p><strong>போரூர்</strong>: பணிமலர் மருத்துவ கல்லூரி, வரதராஜபுரம், யமுனா நகர், கோலப்பன்சேரி, சொக்கநல்லூர்.</p><p><strong>அடையாறு</strong>: காந்தி நகர் 4வது பிரதான சாலை, 2வது மற்றும் 3வது கிரசென்ட் பார்க் சாலை, 3வது பிரதான சாலை, ராமச்சந்திர ஆதித்தனார் சாலை.</p><p><strong>பூவிருந்தவல்லி</strong>: டிரன்க் சாலை,ஆஞ்சநேயர் கோயில் தெரு, வைதீஸ்வரன் கோயில் தெரு, ராமானுஜகூடம் தெரு, சுந்தர் நகர், புது தெரு, கங்கா சாரதி நகர், பிள்ளையார் கோயில் தெரு.</p><p><strong>ஆவடி</strong>: சோழம்பேடு சாலை, ஸ்ரீ நகர் காலனி, கணபதி நகர், அர்ஜுன நகர், செந்தில் நகர்,சீனிவாச நகர், பிருந்தாவனம் அவென்யூ.</p><p><strong>தாம்பரம்</strong>: முல்லை நகர், அம்பேத்கர் தெரு, வைகை நகர், காந்தி நகர், பழைய ஸ்டேட் பேங்க் காலனி, ஆர்.டி.ஓ. அலுவலகச் சாலை, காமராஜ் தெரு, காந்தி சாலை.</p><p><strong>ஈஞ்சம்பாக்கம்</strong>: பாரதி அவென்யூ, கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் முதல் அக்கரை வரை, வி.ஜி.பி. லேஅவுட், ஷாலிமார் கார்டன், விமலா கார்டன், பெரியார் தெரு, பொதிகை தெரு, முனீஸ்வரன் கோவில் தெரு, கங்கையம்மன் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, கௌவுரியம்மன் கோவில் தெரு, ஜெகஜீவன்ராம் அவென்யூ, சோழமண்டல் தேவி நகர், சேஷாத்ரி அவென்யூ, பெத்தல் நகர் 1வது தெரு, பொன்னுரங்கன் தெரு.</p><p><strong>நீலாங்கரை</strong>: கோஹினூர் காம்ப்ளக்ஸ், பாண்டியன் நகர், வெட்டுவாங்கேணி, பே வாட்ச் பார்ம், டீச்சர்ஸ் காலனி, வொர்க்கர்ஸ் எஸ்டேட், ராஜா தெரு, சங்கர் தெரு, பூம்புகார் தெரு, ஜோனி தெரு, கங்கையம்மன் கோவில் தெரு.</p><p><strong>பல்லாவரம்</strong>: ஆர்.கே.வி. அவென்யூ, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கட்டபொம்மன் </a>நகர், பி.வி. வைத்தியலிங்கம் தெரு.</p><p><strong>குமணன்சாவடி</strong>: பெரியார் நகர், அபிராமி நகர், வி.ஜி.என். அவென்யூ, சாந்தி நகர், எஸ்.வி. நகர், ஜீவன் பிரகாஷ் நகர், பூந்தமல்லி பைபாஸ், ரேடியன் மற்றும் ஷோபா அபார்ட்மெண்ட்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தவெக எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம்: 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/horse-trading-involving-tvk-mla-bail-pleas-of-three-individuals-dismissed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/horse-trading-involving-tvk-mla-bail-pleas-of-three-individuals-dismissed#comments</comments><guid isPermaLink="false">fc2ab191-4fe0-4a67-9886-b5b94fdc90e6</guid><pubDate>Fri, 17 Jul 2026 19:11:00 +0000</pubDate><atom:updated>2026-07-17T19:11:00.202Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Chennai,சென்னை,ஜாமீன் மனு தள்ளுபடி,Chennai Court,Bail petition dismissed,குதிரை பேரம்,TVK Government</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/pk3mpix8/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/pk3mpix8/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கடந்த 1-ந் தேதி கைதான நரேஷ், ரமேஷ், கார்த்திக் ஆகிய 3 பேரும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அரசியல் காரணங்களுக்காக தங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், போலீசார் கூறும் குற்றச்சாட்டுக்கும், தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றும், வழக்கு விசாரணைக்கு முழுஒத்துழைப்பு அளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.</p><h2>ஜாமீன் மனு தள்ளுபடி</h2><p>இந்த மனு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தபோது, திருவல்லிக்கேணி சரக போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல், வழக்கு விசாரணை ஆரம்ப கட்டத்தில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">உள்ளதாகவும்</a>, தற்போதைக்கு ஜாமீன் வழங்கினால் விசாரணை முழுவதும் பாதிக்கப்படுவதோடு, சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாகவும் வாதிட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, போலீசாரின் வாதங்களை ஏற்று 3 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை: ரூ.82 லட்சம் பறிமுதல்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anti-corruption-raid-at-tahsildar-offices-rs-82-lakh-seized</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anti-corruption-raid-at-tahsildar-offices-rs-82-lakh-seized#comments</comments><guid isPermaLink="false">a3082526-c635-4ae8-8c28-49c1a4ae0205</guid><pubDate>Fri, 17 Jul 2026 17:53:33 +0000</pubDate><atom:updated>2026-07-17T17:53:33.686Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,raid,Anti-corruption,லஞ்ச ஒழிப்புத்துறை,வட்டாட்சியர் அலுவலகம்,Anti-Corruption Department,லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை,அதிரடி சோதனை,Tahsildar Office,Anti-corruption police raid</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/xfsqgt7b/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/xfsqgt7b/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.82 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>அதிகாரிகள் திடீர் சோதனை</h2><p>பட்டா மாறுதல், வருமானம், இருப்பிடம், சமூகச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு சேவைகளை வழங்குவதற்காக சில வட்டாட்சியர் அலுவலகங்களில் அதிகளவில் லஞ்சம் பெறப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் பல்வேறு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.</p><p>41 இடங்களில் சோதனை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 35 தாலுகா அலுவலகங்களில் கணக்கில் காட்டப்படாத ரொக்க பணம் சிக்கியது.  இதில், கணக்கில் காட்டப்படாத ரொக்கமாக ரூ.13 லட்சமும், ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரூ.68 லட்சமும் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தமாக ரூ.82 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.</p><h2>தீவிர விசாரணை</h2><p>சோதனையின்போது முக்கிய <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஆவணங்கள் </a>மற்றும் பரிவர்த்தனை தொடர்பான பதிவுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் விவகாரம்: தமிழக அரசின் இரட்டை நிலைப்பாடு ஏன்? - வேல்முருகன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmak-issue-why-tamil-nadu-governments-double-stand-velmurugan-question</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmak-issue-why-tamil-nadu-governments-double-stand-velmurugan-question#comments</comments><guid isPermaLink="false">730b6136-0614-46c5-8dbf-b249bb014c54</guid><pubDate>Fri, 17 Jul 2026 17:35:30 +0000</pubDate><atom:updated>2026-07-17T17:35:30.759Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டாஸ்மாக்,Velmurugan,வேல்முருகன்,டாஸ்மாக் கடை,தி.வேல்முருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/b3zwr72m/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/b3zwr72m/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>54 வகையான மதுபானங்கள்</h2><p>தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் புதியதாக 54 வகையான மதுபானங்களை அறிமுகப்படுத்தும் முயற்சி, அரசின் கொள்கைக்கும் செயலுக்கும் இடையே உள்ள முரண்பாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.</p><p>இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அது மக்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும், படிப்படியாக டாஸ்மாக் கடைகள் குறைக்கப்படும் என்றும் தமிழக மக்களுக்கு உறுதியளிக்கப்பட்டது.</p><h2>எதற்காக?</h2><p>அப்படியிருக்க, தற்போது புதிய 54 வகையான மதுபானங்களை அறிமுகப்படுத்துவது எதற்காக?</p><p>டாஸ்மாக் கடைகளைக் குறைப்பதே அரசின் நோக்கமென்றால், புதிய மதுபானங்களை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் என்ன? மதுப்பழக்கத்தை ஒழிப்பதே இலக்கென்றால், புதிய பிராண்டுகள் மூலம் விற்பனையை விரிவுபடுத்துவது யாருடைய நலனுக்காக?</p><p>ஏற்கனவே மதுப்பழக்கத்தால் ஆயிரக்கணக்கானக் குடும்பங்கள் சீரழிந்துள்ளன. குடும்ப வன்முறைகள், சாலை விபத்துகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், கொலை, கொள்ளை உள்ளிட்ட பல குற்றச் செயல்களில், மதுபோதையும் ஒரு முக்கியக் காரணியாக, காவல்துறை விசாரணைகளில் அடிக்கடிப் பதிவாகி வருகிறது. </p><h2>இரட்டை நிலைப்பாடு</h2><p>மதுவால் குடும்பங்கள் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பொருளாதார </a>ரீதியாக மட்டுமல்ல, மனநல மற்றும் சமூக ரீதியிலும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. இந்த நிலையில், மதுப்பழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக புதிய மதுபான வகைகளை அறிமுகப்படுத்துவது, சமூகப் பொறுப்புள்ள அரசின் செயலாக கருத முடியாது.</p><p>ஒரு புறம் டாஸ்மாக் கடைகளை மூடுகிறோம் என்று கூறிவிட்டு, மறுபுறம் 54 புதிய மதுபானங்களை அறிமுகப்படுத்துகிறோம் என்று அறிவிப்பது மக்களை ஏமாற்றும் இரட்டை நிலைப்பாடு அல்லவா?</p><h2>திட்டத்தை திரும்பப் பெற வேண்டும்</h2><p>தமிழக மக்களின் நலனில் அரசுக்கு அக்கறை இருக்கிறது என்றால், மது விற்பனையைக் குறைத்து, மதுபான கடைகளைக் குறைத்து, மக்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை கொடுப்பதையே உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும். </p><p>எனவே, புதிய 54 வகையான மதுபானங்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மது விற்பனையை விரிவுபடுத்தும் திட்டங்களைக் கைவிட்டு, இளைஞர்களின் எதிர்காலத்தையும், பெண்களின் பாதுகாப்பையும், குடும்பங்களின் அமைதியையும், சமூகத்தின் ஒழுக்கத்தையும் பாதுகாக்கும் கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வாழ்வுரிமைக் </a>கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் தனது தோழமைக் கட்சியிடம் பேசி தமிழகத்தின் உரிமைகளைப் பெற வேண்டும்! - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-chief-minister-must-speak-with-his-alliance-partner-and-secure-tamil-nadus-rights-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-chief-minister-must-speak-with-his-alliance-partner-and-secure-tamil-nadus-rights-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">6b707ff9-a14c-4853-95d1-d7c7c3f1f0ba</guid><pubDate>Fri, 17 Jul 2026 17:05:44 +0000</pubDate><atom:updated>2026-07-17T17:05:44.608Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/u605h5t8/nainar.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/u605h5t8/nainar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>அணை நீர் பிரச்சினை</h2><p>தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், தமிழகத்தின் உரிமைகளையும் ஒருசேர கேள்விக்குறியாக்கும், காவிரி, மேகதாது, முல்லை பெரியாறு உள்ளிட்ட அணை நீர் பிரச்சினைகளை வைத்து இதற்கு முந்தைய அரசு அரசியல் மட்டும் தான் செய்ததே தவிர, தீர்வு காணவில்லை. பல ஆண்டுகளாக நீடிக்கும் இப்பிரச்சினைகளுக்காக கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுடன் பலமுறை பேச்சு வார்த்தைகள் நடத்தியும் எவ்வித பலனுமில்லை. </p><p>இதற்கிடையில், மேகதாது அணையை கட்டுவதற்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மறைமுக அனுமதி <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வழங்கியிருப்பதைப் </a>போல, ஜோசப் விஜய்யின் கூட்டணிக் கட்சி தலைவரான வைகோ போன்றவர்கள் பொய் பரப்புரைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற உண்மைக்கு புறம்பான செய்திகளை பொதுவெளியில் பரப்புவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அறநெறியிலான அரசியலுக்கு நேர் எதிரானது. </p><h2>தீர்வு காண வேண்டும்</h2><p>எனவே, தமிழகத்தில் தற்போது ஆட்சியில் இருக்கும் தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், இந்த நீண்டகால பிரச்சினைகளுக்கும், தேவையற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்! கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்த கதை போல் இல்லாமல், தனது கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தலைவர் ராகுல் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">காந்தியிடம் </a>பேசி, காங்கிரஸ் ஆளும் கர்நாடகா, கேரளா மாநில முதல்-மந்திரியின் ஒத்துழைப்போடு, இந்த அணைப் பிரச்சனைகளுக்கு நிரந்தரமான தீர்வு காண வேண்டும்! விவசாயப் பெருமக்களின் துயர் துடைக்க வேண்டும்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் தினமும் அம்மா உணவகங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 1.04 லட்சமாக உயர்வு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/number-of-daily-users-of-amma-unavagams-in-chennai-rises-to-104-lakh</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/number-of-daily-users-of-amma-unavagams-in-chennai-rises-to-104-lakh#comments</comments><guid isPermaLink="false">7dc78461-8f7a-4664-abf8-329184469a37</guid><pubDate>Fri, 17 Jul 2026 16:24:16 +0000</pubDate><atom:updated>2026-07-17T16:24:16.143Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,அம்மா உணவகங்கள்,amma hotel</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/deqb9d81/State-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/deqb9d81/State-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் உள்ள 383 அம்மா உணவகங்களை தினசரி சராசரியாக பயன்படுத்துவோர் எண்ணிக்கை 67,164ல் இருந்து 1,04,102 ஆக உயர்ந்துள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“சென்னை மாநகரில் வாழும் ஏழை எளிய மக்கள், கூலி வேலை செய்பவர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், கட்டிட தொழிலாளர்கள், பாரம் தூக்குபவர்கள் என குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்கள் மற்றும் சென்னைக்கு பணி நிமித்தமாக வந்து செல்பவர்கள் பயன் பெறும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் மற்றும் நோயாளிகள், அவர்களின் துணைவருபவர்கள் பயன்பெறும் வகையில் ராயபுரம், அண்ணாநகர் மற்றும் தேனாம்பேட்டை ஆகிய 3 மண்டலங்களில் உள்ள 7 அரசு மருத்துவமனைகளிலும் என மொத்தம் தற்போது 383 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.</p> <p>இத்திட்டத்தின் கீழ் காலை நேரத்தில் ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும், பொங்கல் ஐந்து ரூபாய்க்கும், மதிய நேரத்தில் சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம் மற்றும் கருவேப்பிலை சாதம் தலா ஐந்து ரூபாய்க்கும், தயிர் சாதம் மூன்று ரூபாய்க்கும் மற்றும் மாலை நேரத்தில் இரண்டு சப்பாத்திகள் மூன்று ரூபாய்க்கும் வழங்கப்பட்டு வருகிறது.</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவின்படி, அம்மா உணவகங்களை மேம்படுத்தி தரமான உணவுகளை மக்களுக்கு வழங்கிட மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் தினசரி சராசரியாக 67,164 பயனாளிகள் அம்மா உணவகங்களில் சாப்பிட்டு பயனடைந்து வந்த நிலையில் தற்போது தினசரி சராசரியாக 1,04,102 பயனாளிகள் அம்மா உணவகங்களில் சாப்பிட்டு பயனடைந்து வருகின்றனர். அம்மா உணவகங்களின் வாயிலாக கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.87,60,489/- வருவாய் வரப்பெற்ற நிலையில் தற்போது ரூ.1,35,78,548/- ஆக உயர்ந்துள்ளது.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>  குதிரை பேரம் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற கோரிய பொதுநல மனு தள்ளுபடி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/horse-trading-case-cbi-probe-public-interest-plea-dismissed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/horse-trading-case-cbi-probe-public-interest-plea-dismissed#comments</comments><guid isPermaLink="false">53d3a133-76a5-4c9b-823a-ca29b8531f14</guid><pubDate>Fri, 17 Jul 2026 16:21:20 +0000</pubDate><atom:updated>2026-07-17T16:21:20.182Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>CBI,சிபிஐ விசாரணை,குதிரை பேரம்,horse trading</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/6prrdr1c/High-Curt.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/6prrdr1c/High-Curt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ-வான இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தியதாக திருவல்லிக்கேணி போலீசார் பதிவு செய்துள்ள வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் திருப்பூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் விசாரித்து, பிறப்பித்த தீர்ப்பில், ‘‘உள்ளூர் போலீசார் சரி வர வழக்கை விசாரிக்க வில்லை என்றாலோ, உண்மையை கண்டறிய முடியவில்லை என்றாலோ அல்லது சமரசமாக சென்றாலோ வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றலாம். </p><p>இதுபோன்ற ஒரு சூழ்நிலையைக்கூட மனுதாரர் எடுத்துக்கூறி நிரூபிக்கவில்லை. செய்திதாள் வந்த செய்திகள், சமூக ஊடகங்களில் வந்த தகவல்கள் ஆகியவற்றிந் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணைக்கு கேட்டு வழக்கு தொடர்ந்துள்லார், இவர் கூறும் காரணத்துக்காக சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற முடியாது. பொதுநல வழக்கு என்பது வலிமைமிக்க ஒரு ஆயுதம். </p><p>அது குரலற்றவர்களின் குரலாக ஒலிக்கூடியது. இந்த குதிரை பேரம் வழக்கில் ஏற்கனவே பலரை போலீசார் கைது செய்துள்ளனர். எனவே, சரி பார்க்கப்படாத ஊடக செய்திகளின் அடிப்படையில் புலன்விசாரணையை மாற்ற முடியாது. இந்த பொதுநல வழக்கை தள்ளுபடி செய்கிறோம்’’ என்று கூறியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை அண்ணாநகர் டி.வி.எஸ். கால்வாயில் மேம்பாட்டுப் பணிகள் - விரைந்து முடிக்க துணை ஆணையாளர் கவுஷிக் உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/improvement-works-on-the-tvs-canal-in-anna-nagar-chennai-deputy-commissioner-kaushik-orders-speedy-completion</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/improvement-works-on-the-tvs-canal-in-anna-nagar-chennai-deputy-commissioner-kaushik-orders-speedy-completion#comments</comments><guid isPermaLink="false">6b0d67c0-253d-4d24-8462-6334b65efda6</guid><pubDate>Fri, 17 Jul 2026 16:17:57 +0000</pubDate><atom:updated>2026-07-17T16:17:57.501Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/tp7nt1hw/State-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/tp7nt1hw/State-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“அண்ணாநகர் மண்டலத்திற்குப்பட்ட, இயந்திர வாகனங்கள் பனிமனை, டி.வி.எஸ். கால்வாய், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், அரசு ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளி ஆகியவற்றினை மத்திய வட்டார துணை ஆணையாளர் கவுஷிக் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.</p><p>இன்று (17.07.2026) மத்திய வட்டார துணை ஆணையாளர் கவுஷிக், பெருநகர சென்னை மாநகராட்சி அண்ணாநகர் மண்டலம், வார்டு-94க்குட்பட்ட டி.வி.எஸ். கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், ராஜமங்கலம், 1-வது தெருவில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், 2-வது தெருவில் உள்ள அரசு ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளி, இயந்திர வாகனங்கள் பனிமனை உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, வட்டார துணை ஆணையாளர் அலுவகலத்தில், வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.</p><p>இந்த ஆய்வுகளின்போது, மத்திய வட்டார துணை ஆணையாளர் கவுஷிக், கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடித்திடவும், சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள், பணியாளர்கள் வருகை மற்றும் மக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் அலுவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தொழில்நுட்பத்தை சமூக நன்மைக்காக பயன்படுத்துங்கள் - சென்னை ஐ.ஐ.டி.யில் சான்சிபார் அதிபர் ஹுசைன் அலி பேச்சு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/use-technology-for-social-good-zanzibar-president-hussein-ali-speaks-at-iit-madras</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/use-technology-for-social-good-zanzibar-president-hussein-ali-speaks-at-iit-madras#comments</comments><guid isPermaLink="false">4d58da21-7ba6-4bc2-97b9-ccc177b1ba88</guid><pubDate>Fri, 17 Jul 2026 16:10:32 +0000</pubDate><atom:updated>2026-07-17T16:10:32.503Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>IIT Chennai,சென்னை ஐ.ஐ.டி.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/voytrnn5/State-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/voytrnn5/State-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவின் கட்டுப்பாட்டில் சான்சிபார் என்ற தீவுக்கூட்டம்(Archipelago) அமைந்துள்ளது. இதன் அதிபரான ஹுசைன் அலி மின்யி சென்னை ஐ.ஐ.டி. கல்லூரியில் நடைபெற்ற 63-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பேசியதாவது;-</p> <p>“ஒரு புதிய கண்டுபிடிப்பு நம்மை வியக்க வைக்கும்போது மட்டுமல்ல, மனித வாழ்வின் கண்ணியத்தை மேம்படுத்தும்போதுதான் அதன் மிகச்சிறந்த நிலையை அடைகிறது. உங்கள் பணிகள் சமூகத்தில் ஏற்படுத்தும் மாற்றமே உங்கள் வெற்றிக்கான அளவுகோலாகும். தொழில்நுட்பத்தை சமூக நன்மைக்காக பயன்படுத்துங்கள்.</p><p>கல்வி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளால் ஏற்படும் மாற்றத்தை உருவாக்கும் ஆற்றல் இந்தியாவிற்கு உள்ளது. ஒரு நாடு அறிவியலில் முதலீடு செய்யும்போது, ​​அது தனது எதிர்காலத்தில் முதலீடு செய்கிறது. சிறந்த கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்குக் கல்வி அளிப்பதோடு மட்டுமல்லாமல், சமூகங்களை வடிவமைக்கவும், பொருளாதாரங்களை வலுப்படுத்தவும், தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கவும் செய்கின்றன.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-filed-against-a-man-for-marrying-a-second-time-without-his-first-wifes-knowledge</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-filed-against-a-man-for-marrying-a-second-time-without-his-first-wifes-knowledge#comments</comments><guid isPermaLink="false">74bd3a68-4599-4324-9880-544e25fa86f8</guid><pubDate>Fri, 17 Jul 2026 16:04:17 +0000</pubDate><atom:updated>2026-07-17T16:04:17.260Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமணம்,Marriage,வழக்குப்பதிவு,Case filed</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/ofpbjy46/police.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/ofpbjy46/police.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வீரவனூர் பகுதியை சேர்ந்தவர் ராமர் (வயது 34). இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். ராமருக்கு ஏற்கனவே திருமணமாகி கவுசல்யா என்ற மனைவி உள்ளார். அவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். </p><p>இந்த நிலையில் ராமர் இளம்பெண்ணை 2-வதாக திருமணம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முதல் மனைவி கவுசல்யா ராமரிடம் இதுகுறித்து கேட் டுள்ளார். அப்போது கோபமடைந்த ராமர், கவுசல்யாவை சரமாரியாக தாக்கி உள்ளார். </p><p>இதுகுறித்த புகாரின்பேரில் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசார் ராமர், அவரது சகோதரி நித்யா, அண்ணன் பரிமணன் ஆகிய 3 பேர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p> ]]></content:encoded></item><item><title>சைபர் அடிமைத்தனம், வேலைவாய்ப்பு மோசடி தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளி கைது - காவல்துறை தகவல் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/key-suspect-arrested-in-cyber-slavery-and-job-fraud-case-police-statement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/key-suspect-arrested-in-cyber-slavery-and-job-fraud-case-police-statement#comments</comments><guid isPermaLink="false">6b019f28-4857-46a6-b0c7-92f0613c64c3</guid><pubDate>Fri, 17 Jul 2026 15:48:05 +0000</pubDate><atom:updated>2026-07-17T15:48:05.033Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,police,கைது,காவல்துறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/1y3elk3q/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/1y3elk3q/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சைபர் அடிமைதனம் மற்றும் வேலைவாய்ப்பு மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற பெயரில் இந்திய இளைஞர்களை ஏமாற்றி, கம்போடியா, வியட்நாம் மற்றும் லாவோஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பி, அங்கு இணையவழி மோசடி (Cyber Scam) நிறுவனங்களில் சைபர் அடிமைகளாக கட்டாயப்படுத்தி பணியமர்தப்பட்டது தொடர்பாக இந்திய அரசு மற்றும் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (I4C) மேற்கொண்ட நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்கள் அவ்வாறு மீட்க்கப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் சி.பி.சி.ஐ.டியில் 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. </p><p>கம்போடியாவில் இருந்து மீட்கப்பட்ட நபர்களில் வெற்றிவேல் (த/பெ. செல்வகுமார்), வயது 48, அழகரசன் நகர், 2-வது தெரு, நாகை ரோடு, தஞ்சாவூர் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், தஞ்சாவூர் சி.பி.சி.ஐ.டி. குற்ற எண் 05/2024, ச/பி 120(B), 420, 368, 371 இதச மற்றும் பிரிவு 10 இந்திய குடியேற்றச் சட்டம், 1983 ன் படி கடந்த 10.08.2024 ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.</p><p>இவ்வழக்கில் சுந்தர் (எ) சுந்தராஜூலு என்பவர் 03.10.2024 அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இவர் தஞ்சாவூரை சேர்ந்த ஆறு நபர்களிடம் கம்போடியாவில் கால் சென்டர் வேலை என்றும் அதிக சம்பளம் கிடைக்கும் என்றும் நம்ப வைத்து வேலைக்கு சேர்ப்பதற்கென்று லட்சகணக்கில் புகார்தாரர் உட்பட ஐந்து நபர்களிடம் பணம் பெற்றும் மலேசியாவில் வசித்து வரும் தேனி மாவட்டம் பந்துவார்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெய் (எ) பாபு (த/பெ. காளியப்பன்) என்பவர் மூலம் விமான டிக்கெட் மற்றும் மற்ற ஏற்பாடுகளை செய்து தாய்லாந்து மூலம் கம்போடியாவிற்கு மேற்படி 6 நபர்களையும் அனுப்பியுள்ளார் என தெரிய வந்தது. </p><p>இந்த வழக்கில் ஜெய் (எ) பாபு கம்போடியாவிற்கு இணையதள மோசடி வேலைகள் செய்வதற்கு சைபர் அடிமைகளாக அனுப்பும் குற்ற செயல்களில் முக்கிய ஆட்சேர்ப்பு முகவராக செயல்பட்டுள்ளார் என்பதும் இவர் கம்போடியாவில் உள்ள ஏஜென்டுகளுடன் நேரடி தொடர்பில் இருந்து சுந்தர் அனுப்பிய மேற்படி ஆறு நபர்களையும் கம்போடியாவில் உள்ள "பாவெட்" (Pavet) என்ற நகரத்தில் உள்ள இணையதள மோசடி மையங்களில் (cybercrime compound) சைபர் அடிமைகளாக விற்று அதற்காக கம்போடியா முகவர்களிடம் பணம் பெற்றுள்ளனர். </p> <p>இவ்வாறு விற்கப்பட்டவர்களை கம்போடியா cybercrime compound-ல் உள்ள ஏஜென்டுகள் போலியாக உருவாக்கிய பிட்காயின் முதலீட்டு செயலிகளில் பொதுமக்களிடம் இணையவழி மோசடி செய்ய கட்டாயப்படுத்தும் வேலையை செய்யவைத்து வற்புறுத்தியுள்ளனர். அவர்களது கடவுச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு வெளியேற முடியாமல் தடுத்து வைக்கப்பட்டதும் அவர்கள் வேலை செய்ய மறுத்தபோது உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தப்பட்டதும் தெரியவந்தது.</p><p>மேற்படி இருவர் மீது வழக்கு விசாரணை முடித்து ஜெய் தலைமறைவானதாக நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றம் இவர் மீது பிடிவாரண்ட் பிறப்பிந்திருந்த நிலையில் ஜெய் மலேசியா நாட்டில் இருந்ததால் இவர் மீது Lookout Circular பிறப்பிக்க சி.பி.சி.ஐ.டியில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. மேற்படி ஜெய் (எ) பாபு என்பவர் 16.07.2026 ஆம் தேதி மலேசியாவில் இருந்து பாங்காங் வழியாக இந்தியாவின் பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்தபோது அவர் தஞ்சாவூர் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது உரிய சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஊழல் குற்றச்சாட்டுகளில் வேகமான நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/swift-action-on-corruption-allegations-minister-sengottaiyan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/swift-action-on-corruption-allegations-minister-sengottaiyan#comments</comments><guid isPermaLink="false">949af90e-940e-4107-a196-a36c448e47e9</guid><pubDate>Fri, 17 Jul 2026 15:42:53 +0000</pubDate><atom:updated>2026-07-17T15:42:53.361Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஊழல் குற்றச்சாட்டு,corruption charges,action நடவடிக்கை,அமைச்சர் செங்கோட்டையன்,Minister Sengottaiyan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/p68lxgzq/minister-shenkottaiyan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் செங்கோட்டையன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/p68lxgzq/minister-shenkottaiyan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை </p><p>ஊழல் குற்றச்சாட்டுகளில் வேகமான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காரணம் இன்றி டெண்டர்கள் ரத்து செய்யப்படாது என  கோவையில் வருவாய்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.</p> <p>கோவை விமான நிலையத்தில் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.</p> <h2>ரேஸ் கோர்ஸ்</h2><p>கோவை செம்மொழி பூங்கா அமைப்பில் ரூ.40 கோடி ஊழல் நடைபெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து கேட்கப்பட்டபோது, புதிய அரசு தற்போது தான் பொறுப்பேற்றுள்ளதாகவும், இதுபோன்ற விவகாரங்கள் முந்தைய ஆட்சிக் காலத்தில் நடைபெற்றவை என்றும் தெரிவித்தார். தவறுகள் குறித்து அரசு ஏற்கனவே நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதாகவும், ரேஸ் கோர்ஸ் தொடர்பான சில டெண்டர்களும் கூடுதல் மதிப்பீடுகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.</p><h2>அரசு உறுதி</h2><p>மேலும், "<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a> தலைமையிலான ஆட்சியில் எந்த தவறும் நடக்க கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி டெண்டர்களின் காலக்கெடு அடுத்த ஆண்டு வரை இருப்பதால் அதுவரை காத்திருக்க வேண்டும். காரணமின்றி எந்த டெண்டரையும் ரத்து செய்ய முடியாது. தேவையான ஆய்வுகளின் அடிப்படையில் முதல்-அமைச்சர் தெளிவான முடிவுகளை எடுப்பார்" என்றார்.</p><h2>வரவேற்கத்தக்க நடவடிக்கை</h2><p>ஆம்னி பேருந்துகள் அரசு பேருந்துகளுக்கான கட்டணத்திலேயே சேவையை இயக்குவதாக அறிவித்திருப்பது குறித்து பேசிய அவர், "இது வரவேற்கத்தக்க நடவடிக்கை. கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் அரசு நிர்ணயித்த கட்டணத்திலேயே சேவையை வழங்குவது பொதுமக்களுக்கு பயனுள்ளதாகவும், நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவதாகவும் அமையும்" என்றார்.</p><h2>ரெஸ்ட்ரோ பார்</h2><p>ரெஸ்ட்ரோ பார் விவகாரம் குறித்து கேட்கப்பட்டபோது, போதைப்பொருள் ஒழிப்பில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும், தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகள் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து முதல்-அமைச்சர் படிப்படியாக தேவையான முடிவுகளை எடுப்பார் என்றும் கூறினார்.</p> <h2>காலப்போக்கில் தெரியும்</h2><p>"பழனிக்கே மொட்டை போட்டுவிட்டார்கள்" என்ற எதிர்க்கட்சியினரின் விமர்சனம் குறித்து கேட்கப்பட்டபோது, "பழனிக்கு மொட்டை போட்டவர் யார் என்பது காலப்போக்கில் தெரியும்" என்று அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>தணிக்கைத் துறை தொடர்பான மக்களின் குறைகளுக்கு தீர்வு காண புதிய தளம் - தமிழக அரசு அறிவிப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-platform-to-address-public-grievances-regarding-the-audit-department-tamil-nadu-government-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-platform-to-address-public-grievances-regarding-the-audit-department-tamil-nadu-government-announcement#comments</comments><guid isPermaLink="false">9a8c2c7a-60e4-4cdf-9e14-310ad4d93b7a</guid><pubDate>Fri, 17 Jul 2026 15:32:54 +0000</pubDate><atom:updated>2026-07-17T15:32:54.107Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/zi5hkqg5/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/zi5hkqg5/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தணிக்கைத் துறை தொடர்பான மக்களின் குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண புதிதாக ‘பொதுமக்கள் குறைதீர்த்திடும் தளம்’ (Public Grievance Portal) உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“தலைமை தணிக்கை இயக்குநர் கட்டுப்பாட்டில் ஐந்து தணிக்கை துறைகளான உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை, மாநில அரசு தணிக்கைத் துறை, கூட்டுறவு தணிக்கைத் துறை, இந்து சமய அறநிறுவனங்களின் தணிக்கைத் துறை மற்றும் பால் கூட்டுறவுகளின் தணிக்கைத் துறை இயங்கி வருகின்றது. தணிக்கைத் துறையில் வெளிப்படைத்தன்மையும், தணிக்கை நிறுவனங்கள் மற்றும் தணிக்கையாளர்களின் வசதிகளையும் மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>இதன் ஒரு பகுதியாக, பொதுமக்கள் மற்றும் தணிக்கை நிறுவனங்கள் தங்களது குறைகளை எளிதாக தீர்க்கவும், தேவையான விவரங்களை உடனுக்குடன் பெறவும் புதியதாக பொதுமக்கள் குறைகள் தீர்த்திடும் தளம் (Public Grievance Portal) CAMS வலைதளத்தின் ஒரு பகுதியாக புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.</p><p>இத்தளத்தின் மூலம் பொதுமக்கள் மற்றும் தணிக்கை மேற்கொள்ளப்படும் நிறுவனங்கள் தங்களது குறைகளை / சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. அதன் விவரம் பின்வருமாறு;-</p><p>URL ID: https://cams.tn.gov.in</p><p>Menu Name: Public Grievance Portal”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>திருப்பூரில் நாளை மின் தடை செய்யப்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-tiruppur-where-power-supply-will-be-suspended-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-tiruppur-where-power-supply-will-be-suspended-tomorrow#comments</comments><guid isPermaLink="false">d95abbe4-3107-46ab-a4ce-c3e5a39ba293</guid><pubDate>Fri, 17 Jul 2026 15:29:24 +0000</pubDate><atom:updated>2026-07-17T15:29:24.724Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்,மின் தடை,power cut</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/4xkzue46/ep.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/4xkzue46/ep.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><p>திருப்பூர் சந்தைப்பேட்டை துணைமின்நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதை யொட்டி, அரண்மனைப்புதூர், தட்டான்தோட்டம், எம்.ஜி.புதூர், கரட்டாங் காடு, அரசு மருத்துவமனை, செரீப்காலனி, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், கல்லாங்காடு, வெள்ளியங்காடு, கே.எம்.நகர். கே.எம்.ஜி.நகர், பட்டுக்கோட்டையார்நகர், திரு.வி.க.நகர், கருப்பகவுண்டம்பா ளையம், கோபால்நகர், பெரிச்சிப்பாளையம், கருவம்பாளையம், வாலிபா ளையம், ஊத்துக்குளி ரோடு, யூனியன் மில் ரோடு, மிஷன் வீதி, காமராஜர் ரோடு, புதுமார்க்கெட் வீதி, ராயபுரம், ஸ்டேட் பாங்க் காலனி, காதர் பேட்டை, சந்திராபுரம், புதூர் மெயின் ரோடு, கரட்டாங்காடு, செரங்காடு, டி.ஏ.பி.நகர், என்.பி.நகர், பூம்புகார் நகர், இந்திராநகர், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு வித்யாலயம், பாரதிநகர், குளத்துப்பாளையம், செல்வலட்சுமிநகர், வீரபாண்டி, பொதுசுத்திகரிப்பு நிலைய பகுதிகள், கருப் பகவுண்டன்பாளையம், கே.ஆர்.ஆர்.தோட்டம் ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது. </p><p>இதேபோல், பல்லடம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பல்லடம் நகரம், மங்கலம் ரோடு, கொசவம்பாளையம், ரோடு, செட்டிபாளையம் ரோடு, மாணிக்காபுரம் ரோடு, திருச்சி ரோடு ஒரு பகுதி, வடுகபாளையம், சித்தம்பலம், புள்ளியப்பன்பாளையம், வெங்கிட்டாபுரம், பனப்பாளையம், மாதப்பூர், ராசாகவுண்டன்பாளையம், ராயர்பாளையம், அனுப்பட்டி, அம்மாபாளையம், மகாலட்சுமி நகர் மற்றும் கானூர்புதூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்டகானூர், அல்லப்பாளையம், கஞ்சப் பள்ளி, ராமநாதபுரம். செட்டிபுதூர், ஆலத்தூர், தொட்டிபாளையம், குமாரபாளையம், மொன்டிபாளையம், தாசராபாளையம், ஆம்போதி, பசூர் ஒரு பகுதி, பெத்தநாயக்கன்பாளையம் ஒரு பகுதி, ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். </p> ]]></content:encoded></item><item><title>பழனி முருகன் கோவில் நில மோசடியில் மிகப்பெரிய சதி - திமுக குற்றச்சாட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-murugan-temple-land-scam-major-conspiracy-dmk-allegation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-murugan-temple-land-scam-major-conspiracy-dmk-allegation#comments</comments><guid isPermaLink="false">0ebe8442-7936-4cc0-9d3e-f96723672636</guid><pubDate>Fri, 17 Jul 2026 15:15:34 +0000</pubDate><atom:updated>2026-07-17T15:15:34.063Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,பழனி,முருகன் கோவில்,Palani temple</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/1t8cr21y/DMK-Paranthaman.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/1t8cr21y/DMK-Paranthaman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 1.41 ஏக்கர் நிலத்தை தனியார் இருவர் பதிவு செய்துள்ளனர். இதுபற்றி இரண்டு அமைச்சர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசி வருகின்றனர். இந்த நிலம் கோவிலுக்கு சொந்தமானது, இதை பதிவு செய்ய கூடாது என சார்பதிவாளர் அலுவலகத்திற்கு<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> கோவில்</a> தரப்பில் இருந்து ஏற்கனவே கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த தி.மு.க. ஆட்சியில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த நிலத்தை கைப்பற்றி கோவில் கார் பார்க்கிங்கிற்காக பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்த நிலம் இப்போது திடீரென தனியார் பெயரில் பதிவு செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. இதன் பின்னால் சதி நடந்துள்ளது. பினாமி பெயரில் பத்திரப்பதிவு நடந்துள்ளது.</p><h2>பழனிக்கே மொட்டை</h2><p>இந்துக்களுக்கு எதிரி என்று எங்களின் மீது போலியாக அவதூறு பரப்பினார்கள். ஆனால் எங்களின் தி.மு.க. ஆட்சியில் இந்த இடம் பாதுகாக்கப்பட்டது. ஆனால் இந்த ஆட்சியில் நிலம் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. பழனிக்கு மொட்டை போடுவாங்க என்று தான் நாமெல்லாம் பார்த்தோம். ஆனால் பழனிக்கே விஜய் ஆட்சி மொட்டை போட்டுள்ளது. </p> <h2>நீதிமன்றம் செல்வோம்</h2><p>தூய்மையான ஆட்சி என்று சொல்லக்கூடிய <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விஜய்</a> அரசாங்கம் இன்றைக்கு கோவிலோட நிலத்தை இன்னொருத்தருக்கு ‘ரிஜிஸ்டர்’ பண்ணி கொடுத்துருக்கும்போது, நீங்க எப்படி எங்களை பார்த்து குற்றம் சுமத்த முடியும்? மக்கள் முன்னாடி வந்து உண்மையாக பேசணுமே தவிர, தேவையில்லாத அரசியல் சர்ச்சைகளை உருவாக்கி பிரச்சினைகளை திசை திருப்புவதற்காக மட்டுமே அமைச்சர் பிரஸ் மீட் நடைபெற்றிருக்கிறது.வழக்கு விசாரணை சரியாக நடைபெறவில்லை என்று சொன்னால், தி.மு.க. இது குறித்து நீதிமன்றத்திற்கு செல்வதற்கு தயங்காது. இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>‘வி.சி.க. தேர்தலுக்காக உருவான இயக்கம் அல்ல, மக்களின் தேவைக்காக உருவானது’ - திருமாவளவன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vck-is-not-a-movement-formed-for-elections-it-was-formed-for-the-needs-of-the-people-thirumavalavan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vck-is-not-a-movement-formed-for-elections-it-was-formed-for-the-needs-of-the-people-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">6932be1e-f55e-4d95-a9fc-0ef0aa4dd3be</guid><pubDate>Fri, 17 Jul 2026 14:54:51 +0000</pubDate><atom:updated>2026-07-17T14:54:51.579Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமாவளவன்,Thirumavalavan,VCK,வி.சி.க.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/545cbpp1/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/545cbpp1/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 'தமிழ் தேசிய எழுச்சி மாநாடு' தொடர்பான செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் பேசியதாவது;-</p><p>“ஒரு இயக்கம் உயிர்ப்போடு இருக்க வேண்டுமானால் 2 விஷயங்கள் தேவை. ஒன்று கொள்கை, கோட்பாடு என்கிற உயிர்ப்பு ஆற்றல். இன்னொன்று அதற்கான களமும், பணிகளும், போராட்டங்களும். கொள்கை, கோட்பாட்டை மட்டும் வைத்துக் கொண்டு எதுவும் செய்ய முடியாது. வெறும் கோட்பாட்டை பேசிக்கொண்டு எதுவும் செய்ய முடியாது. அதற்கான களம் அமைப்பது, அந்த களத்தில் நின்று போராடுவது என்பதுதான் ஒரு இயக்கத்தை உயிர்ப்தோடு வைத்திருப்பதற்கான அடிப்படை தேவைகளில் ஒன்று.</p><p>இது வெறும் தேர்தலுக்காக உருவான இயக்கம் இல்லை. மக்களின் தேவைக்காக உருவான இயக்கம். பெரும் பதவி அதிகாரம் என்கிற வேட்கையில் உருவான இயக்கம் இல்லை. இது மக்களின் பாதுகாப்புக்காக உருவான இயக்கம். இது பதவிக்கானது அல்ல, பாதுகாப்புக்கானது.</p><p>எப்படியெல்லாம் வேலை செய்தால் ஓட்டு வாங்க முடியும் என்று சிந்திக்காமல் எப்படியெல்லாம் வேலை செய்தால் மக்களை பாதுகாக்க முடியும் என்று சிந்திக்கிற இயக்கம் இந்த இயக்கம். எப்படியெல்லாம் வேலை செய்தால் தொகுதி பங்கீடு செய்து கொள்ள முடியும் என்று சிந்திக்கிற இயக்கம் இல்லை இந்த இயக்கம். எப்படியெல்லாம் வேலை செய்தால் மக்கள் சந்திக்கிற சவால்களை எதிர்கொள்ள முடியும் என்று சிந்திக்கிற இயக்கம். ஆகவேதான் எத்தனை சுனாமிகள் அடித்தாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சேதப்படாமல் இருக்கிறது. </p><p>இப்படித்தான் நாம் தொடக்க காலத்தில் இருந்தே இந்த இயக்கத்தை உயிர்ப்போடு வைத்திருக்கிறோம். இந்த இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்ட ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த பங்களிப்பை செலுத்தியதன் அடிப்படையில்தான் இந்த இயக்கம் நாளுக்கு நாள் வலிமை பெற்று இன்றைக்கு தமிழகத்தில் ஒரு மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றிருக்கிறது.</p> <p>பொருளாதார வலிமை பெற்ற யாரும் நம்மோடு இல்லை. தொழிலதிபர்களோ, பெரு வணிகர்களோ, ஒப்பந்ததாரர்களோ இந்த இயக்கத்தில் யாருமில்லை. இந்த இயக்கத்திற்கு பெரிதாக கொடை அளிப்பதற்கும், துணை இருப்பதற்கும் தொழிலதிபர்களோ, பெரு வணிகர்களோ, ஒப்பந்ததாரர்களோ தயாராகவும் இல்லை.</p><p>சமகாலத்தில் நம்மோடு களத்திற்கு வந்த எத்தனையோ பல இயக்கங்கள் காணாமலும் போயிருக்கின்றன, வலுவிழந்து நீர்த்தும் போயிருக்கின்றன. ஆனால் எந்த பின்புலமும் இல்லாமல், யாருடைய தயவும் இல்லாமல், நம் சொந்த கைகளை ஊன்றி கரணம் போட்டு ‘அந்தரத்திலே பந்தல் கட்டுவது’ என்பார்களே, அப்படி அந்தரத்தில் பந்தல் கட்டி இன்றைக்கு ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக இந்த இயக்கம் பரிணாமம் அடைந்திருக்கிறது. அதை பெருமையோடு சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன்.</p><p>அதிலும் இந்த இயக்கத்தின் கிளைகள் எங்கு வேண்டுமானாலும் பரவி தழைத்திருக்கலாம். ஆனால் இந்த இயக்கத்தின் ஆணிவேர் மதுரை மண்தான் என்பதை என்றென்றைக்கும் பெருமையோடு பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன். இந்த இயக்கம் இன்றைக்கு எளிய மக்களுக்குக்கான ஒரு பாதுகாப்பு அரணாக விளங்குகிறது.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>பணி நியமனம் வழங்கக்கோரி எழும்பூரில் ஆசிரியர்கள் கண்கட்டி உண்ணாவிரத போராட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/teachers-blindfold-hunger-strike-chennai-job-appointments</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/teachers-blindfold-hunger-strike-chennai-job-appointments#comments</comments><guid isPermaLink="false">60917c38-f169-4022-ab04-0909888a428b</guid><pubDate>Fri, 17 Jul 2026 14:53:06 +0000</pubDate><atom:updated>2026-07-17T14:53:06.419Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எழும்பூர்,ஆசிரியர்கள்,Chennai Egmore,hunger strike,உண்ணாவிரத போராட்டம்,Graduate Teachers</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/6vt8sreh/tea.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆசிரியர்கள் கண்கட்டி உண்ணாவிரத போராட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/6vt8sreh/tea.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் தகுதி தேர்வு மற்றும் நியமன தேர்வுகளில் தேர்ச்சி பெற்றும் இன்னும் பணி நியமனம் வழங்கப்படாததை கண்டித்து, ஆசிரியர்கள் சென்னையில் இன்று நூதன முறையில் கண்களில் சிவப்பு துணி கட்டி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">உண்ணாவிரத போராட்டத்தில்</a> ஈடுபட்டனர்.</p> <h2>ஆசிரியர்கள் உண்ணாவிரதம் </h2><p>தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் மற்றும் 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இன்று காலை சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே திரண்டனர். அவர்கள் தங்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கக்கோரி திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><h2>கண்கட்டி நூதன போராட்டம்</h2><p>போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அனைவரும் தங்களது கண்களில் சிவப்பு நிற ரிப்பன்களை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தனர். தங்களின் வாழ்வாதார போராட்டத்தை அரசு இன்னும் கவனித்து பார்க்கவில்லை என்பதை உணர்த்தும் விதமாக இந்த நூதன முறையை கையாண்டதாக அவர்கள் தெரிவித்தனர். </p><h2>உடனடியாக பணி நியமனம்</h2><p>2024 நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களில் குறைந்த அளவில் ஆசிரியர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய அனைத்து ஆசிரியர்களுக்கும் உடனடியாக பணி நியமனம் வழங்க வேண்டும். எந்தவொரு மறுதேர்வும் இன்றி, தகுதி பட்டியலில் உள்ளவர்களுக்கு நேரடியாக வேலை வழங்கப்பட வேண்டும். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். 1 ஆசிரியர் மட்டுமே உள்ள அரசு பள்ளிகளை மாற்றி, குறைந்தபட்சம் 5 ஆசிரியர்களை கொண்ட பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும். </p><h2>10 அம்ச கோரிக்கை</h2><p>இது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. ஆசிரியர்களின் இந்த கண்கட்டி போராட்டம் அந்த வழியே சென்ற பொதுமக்களின் கவனத்தை ஈர்த்ததுடன், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழலை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item></channel></rss>