<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 12 Jul 2026 13:36:41 +0000</lastBuildDate><item><title>வால்பாறை அருகே தேயிலைத் தோட்டத்தில் புகுந்த காட்டுயானை; எச்சரிக்கை விடுத்த வனத்துறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-enters-tea-estate-near-valparai-forest-department-issues-warning</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-enters-tea-estate-near-valparai-forest-department-issues-warning#comments</comments><guid isPermaLink="false">22a7d67e-58c4-4b98-add3-cb892adf13dc</guid><pubDate>Sun, 12 Jul 2026 13:35:44 +0000</pubDate><atom:updated>2026-07-12T13:35:44.621Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வால்பாறை,வனத்துறை,எச்சரிக்கை,காட்டுயானை,தேயிலைத் தோட்டம்,A wild elephant,Forest Department warns,valparai tea estate</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/2d92t790/wild-elephant.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காட்டுயானை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/2d92t790/wild-elephant.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வால்பாறை, </p><p>கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் ஏராளமான தேயிலை எஸ்டேட்டுகள் உள்ளன. இந்த எஸ்டேட் பகுதிகளில் ஆங்காங்கே பலா மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. தற்போது பலாப்பழ சீசன் என்பதால், பழங்களின் வாசனைக்கு ஈர்க்கப்பட்டு வனப்பகுதியில் இருந்து காட்டுயானைகள் எஸ்டேட்டுக்குள் நுழைவது தொடர்கதையாகி வருகிறது.</p><p>இந்த எஸ்டேட் பகுதிகளில் காட்டுயானைகள் கூட்டம், கூட்டமாகவும், சில நேரங்களில் ஒற்றையானையாகவும் தொடர்ந்து சுற்றித்திரிந்து வருகின்றன. இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் பீதியடைந்துள்ளனர். </p> <h2>பலாப்பழம் அருகே ஒற்றையானை</h2><p>இந்த நிலையில், நேற்று மதியம் வால்பாறை அருகே உள்ள குரங்குமுடி எஸ்டேட் தேயிலை தோட்டத்திற்குள் திடீரென ஒற்றை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88">காட்டுயானை</a> ஒன்று புகுந்தது. பட்டப்பகலில் வந்த அந்த யானை, அங்கிருந்தஅங்கிருந்த பலா மரத்தின் அருகே நின்றுகொண்டிருந்தது.</p> <h2>யானை பதுங்கியது</h2><p>அப்போது அந்த வழியாக பேருந்து ஒன்று வந்தது. பேருந்தின் சத்தம் கேட்டதும், பலாப்பழம் அருகே நின்று கொண்டிருந்த அந்த காட்டுயானை, சட்டென்று பலா மரத்தின் அடியில் சென்று மறைந்து பதுங்கி கொண்டது. பேருந்திற்கு வழிவிடுவது போலவும், தன்னை மறைத்து கொள்வது போலவும் அந்த யானை செய்த செயல் அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.</p><h2>பயணிகள் ரசிப்பு</h2><p> பேருந்துக்குள் இருந்த பயணிகள், பட்டப்பகலில் மிக அருகில் யானை பதுங்கி நின்ற இந்த அபூர்வ காட்சியை தங்கள் மொபைல் போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.</p><h2>வனத்துறை எச்சரிக்கை</h2><p>தற்போது வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் பலாப்பழ சீசன் தீவிரமடைந்துள்ளதால், காட்டுயானைகளின் நடமாட்டம் பலமடங்கு அதிகரித்துள்ளது. எனவே, தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை வெளிவட்ட சாலை, பொதுச் சொத்தா?.. தனியார் லாபக் கருவியா? - வேல்முருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-chennai-outer-ring-road-a-public-asset-or-a-private-profit-tool-velmurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-chennai-outer-ring-road-a-public-asset-or-a-private-profit-tool-velmurugan#comments</comments><guid isPermaLink="false">0337e166-b2f6-481c-8e84-2296585db879</guid><pubDate>Sun, 12 Jul 2026 13:11:11 +0000</pubDate><atom:updated>2026-07-12T13:11:11.770Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Velmurugan,வேல்முருகன்,தி.வேல்முருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/mkzuvhwe/velmurugan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/mkzuvhwe/velmurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>மக்கள் நல ஆட்சிக்கு ஏற்றதல்ல</h2><p>சென்னை வண்டலூர் முதல் மீஞ்சூர் வரை நீளும் வெளிவட்டச் சாலை என்பது தமிழ்நாட்டின் பொருளாதார ஓட்டத்தைத் தாங்கி நிற்கும் முக்கியபா பொதுச் சொத்து. சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, சரக்குப் போக்குவரத்தையும் தொழில் வளர்ச்சியையும் வேகப்படுத்தும் இந்தக் கட்டமைப்பை, நீண்டகால வருமான உரிமையுடன் தனியாரிடம் ஒப்படைக்க முயற்சிக்கப்படுவது மிகுந்தக் கவலைக்குரியது.</p><p>தமிழ்நாடு அரசு மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கிய உள்கட்டமைப்பின் பயனை, பல ஆண்டுகள் தனியார் நிறுவனம் அனுபவிக்கும் வகையில் ஒப்பந்தம் செய்வது, எந்த வகையிலும் மக்கள் நல ஆட்சிக்கு ஏற்றதல்ல. இன்று கிடைக்கும் தொகையைக் காரணம் காட்டி, நாளைய தலைமுறைகளுக்குச் சொந்தமான தொடர்ச்சியான வருவாயைக் கைவிடுவது, பொருளாதார தொலைநோக்கின்மையின் வெளிப்பாடாகும்.</p><p>இந்தச் சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. தொழில் வளர்ச்சி, நகர விரிவாக்கம், வாகனப் பெருக்கம் ஆகியவற்றால் எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை பல மடங்கு உயரும் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. </p><h2>பதிலளிக்க வேண்டும்</h2><p>இத்தகைய மக்களுக்கு பயன் தரும் பொதுச் சொத்தை, மிகக் குறைந்த மதிப்பில் நீண்டகாலத்திற்கு தனியாரிடம் ஒப்படைப்பது, அரசின் நிதி நலனுக்கும் மக்களின் உரிமைக்கும் எதிரான நடவடிக்கையாகவே பார்க்கிறோம். பொதுச் சொத்துகளை தனியார் கைகளில் ஒப்படைப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல்.</p><p>இந்த ஒப்பந்தம் தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்கள் அனைத்தும் வெளிப்படையான முறையில் விளக்கப்பட வேண்டும். சொத்தின் உண்மையான பொருளாதார மதிப்பு என்ன? வருங்கால வருவாய் கணக்கீடு என்ன? ஏன் அரசே பராமரிக்கக்கூடாது? என்ற கேள்விகளுக்கு தமிழக அரசு மக்களிடம் தெளிவாகப் பதிலளிக்க வேண்டும்.</p><p>தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில், சென்னை வெளிவட்டச் சாலைத் தொடர்பான தனியார் ஒப்பந்த முயற்சியை, தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இந்த ஒப்பந்தத்தின் அனைத்து நிதி, தொழில்நுட்ப மற்றும் சட்ட விவரங்களையும் பொதுமக்கள் பார்வைக்கு வெளிப்படையாக வெளியிட வேண்டும். மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட பொதுச் சொத்துகள், தலைமுறைத் தலைமுறையாக மக்களுக்கே பயன்பட வேண்டுமே தவிர, சில தனியார் நிறுவனங்களின் நீண்டகால இலாபத்திற்கான கருவிகளாக மாற்றப்படக் கூடாது. பொதுச் சொத்துகளைப் பாதுகாப்பதும், மக்களின் பொருளாதார உரிமைகளை நிலைநிறுத்துவதும், அரசின் அடிப்படைப் பொறுப்பு என்பதை தமிழக அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>நாகர்கோவில்: மலிவு விலை சேலைக்கு ஆசைப்பட்டு ஜவுளிக்கடை கண்ணாடியை உடைத்த பெண்களால் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nagercoil-commotion-caused-by-women-who-smashed-a-textile-shops-glass-window-in-their-eagerness-to-get-low-priced-sarees</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nagercoil-commotion-caused-by-women-who-smashed-a-textile-shops-glass-window-in-their-eagerness-to-get-low-priced-sarees#comments</comments><guid isPermaLink="false">a121e246-c602-4569-a502-5db00b3f829c</guid><pubDate>Sun, 12 Jul 2026 12:54:13 +0000</pubDate><atom:updated>2026-07-12T12:54:13.101Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nagercoil,நாகர்கோவில்,துணிக்கடை,Saree,சேலை,clothes shop,Low price,குறைந்த விலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/gso49qzr/dress-shop.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாகர்கோவில் துணிக்கடை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/gso49qzr/dress-shop.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாகர்கோவில்,</p><p> நாகர்கோவில் மாவட்டத்தின் மையப்பகுதியான மீனாட்சிபுரத்தில் பிரபல <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9C%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88">ஜவுளிக்கடை</a> ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் விளம்பரம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.அதில், குறிப்பிட்ட நாளான இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை, ஒரு புடவை வெறும் 99 ரூபாய்க்கு சிறப்பு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.</p><h2>நீண்ட வரிசையில் பெண்கள் </h2><p>இந்த அதிரடி சலுகை அறிவிப்பை தொடர்ந்து, நாகர்கோவில் நகர் மட்டுமின்றி, சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பெண்கள் அதிகாலையிலேயே கடை முன்பு குவிய தொடங்கினர். விடிவதற்கு முன்பாகவே, அதாவது அதிகாலை முதலே பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.நேரம் செல்ல செல்ல கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதியது. இதனால் அந்தப் பகுதியே மக்கள் கடலாக காட்சியளித்தது.</p><h2>கண்ணாடி உடைந்தது</h2><p> கடையின் ஷட்டர் திறக்கப்பட்டவுடன், ஆபர் சேலைகளை முன் கூட்டியே வாங்குவதற்காக பெண்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக்கொண்டு கடையின் உள்ளே பாய்ந்தனர். இதனால் அங்கு பயங்கர தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நெரிசலை தாங்க முடியாமல் கடையின் முன்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான நுழைவாயில் கண்ணாடி பயங்கர சத்தத்துடன் உடைந்து நொறுங்கியது. </p><p>கண்ணாடி சிதறியதை கண்டு அதிர்ச்சியடைந்த பெண்கள் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில் சில பெண்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.</p><h2> கடை மூடல்</h2><p>இதுகுறித்து தகவல் அறிந்த நாகர்கோவில் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். எனினும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். இறுதியில், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, ஜவுளிக்கடையை உடனடியாக மூடுமாறு போலீசார் அதிரடியாக உத்தரவிட்டனர்.</p><p>அங்கு திரண்டிருந்த ஏமாற்றமடைந்த பெண்கள் கூட்டத்தை கலைந்து போக செய்தனர். மலிவு விலை சேலைக்கு ஆசைப்பட்டு ஜவுளிக்கடை கண்ணாடியே உடைந்த சம்பவம், நாகர்கோவிலில் இன்று பெரும் பரபரப்பான பேச்சாக மாறியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அண்ணாமலையின்  ‘வீ த லீடர்ஸ்’ முதல் மாநில மாநாடு தொடங்கியது ; திரளானவர்கள் பங்கேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/annamalais-we-the-leaders-first-state-conference-begins</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/annamalais-we-the-leaders-first-state-conference-begins#comments</comments><guid isPermaLink="false">105c2f38-bbc1-4748-bc0e-16c1ce6690c0</guid><pubDate>Sun, 12 Jul 2026 12:45:02 +0000</pubDate><atom:updated>2026-07-12T12:45:02.974Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவை,Annamalai,அண்ணாமலை,tnpolitics</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/jrmihi65/malai33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/jrmihi65/malai33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>பாஜக முன்னாள் மாநில தலைவராக இருந்தவர் அண்ணாமலை. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அவர், அந்த கட்சியில் இருந்து விலகி ‘வீ த லீடர்ஸ்’ என்ற இயக்கத்தை நிறுவினார். அந்த இயக்கத்தில் லட்ச கணக்கானோர் இணைந்துள்ளனர். இயக்கத்தில் உள்ளவர்களை அரசியல் மயப்படுத்தும் பணிகளை அவர் தொடங்கி உள்ளார்.</p><p>தமிழகம் முழுவதும் பல்வேறு முக்கிய விவகாரங்களை சுட்டிக்காட்டி, அது தொடர்பான கருத்துக்களை ‘வீ த லீடர்ஸ்’ இயக்கம் வெளிப்படுத்தி வருகிறது.</p><p>இந்நிலையில், போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் முழக்கத்துடன் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை ‘வீ த லீடர்ஸ்’ இயக்கம் ஒருங்கிணைத்து வருகிறது. நடைபயணம், மாரத்தான், சைக்கிள் பயணம் உள்ளிட்டவை இதில் அடங்கும்.</p><p>இந்நிலையில், <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அண்ணாமலை </a>தொடங்கி உள்ள வி த லீடர்ஸ் அமைப்பின் முதல் மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. கோவை பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் நடைபெறும் மாநாட்டில் அண்ணாமலை பேசுகிறார். போதையில்லா தமிழகம் என்ற பெயரில் நடக்கும் விழிப்புணர்வு மாநாட்டில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.  மாநாட்டு அரங்கில் 20 ஆயிரம் பேர் அமரும் வகையில் ஏற்பாடு செய்யபப்ட்டுள்ளது. திடலுக்கு வெளியே எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளது. </p><p>பாஜகவில் இருந்து வெளியேறிய பிறகு அண்ணாமலை நடத்தும் முதல் மாநாடு என்பதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல் வியூகங்கள் தொடர்பாக அண்ணாமலை பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>”குறைந்த கட்டணம்.. நிறைவான பயணம்...” தமிழகத்தின் முக்கிய ரெயில் நிலையங்கள், ரெயில் சேவைகள்.. ஒரு பார்வை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/low-fares-a-fulfilling-journey-a-look-at-tamil-nadus-major-railway-stations-and-train-services</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/low-fares-a-fulfilling-journey-a-look-at-tamil-nadus-major-railway-stations-and-train-services#comments</comments><guid isPermaLink="false">015fa577-f8cd-49ee-ac29-eb0e1566f36b</guid><pubDate>Sun, 12 Jul 2026 12:35:29 +0000</pubDate><atom:updated>2026-07-12T12:35:29.582Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>தெற்கு ரெயில்வே,Southern Railway,railway station,ரெயில் நிலையங்கள்,Rail Transport,ரெயில் போக்குவரத்து,ரெயில் பயணம்,Train travel,முக்கிய ரெயில்கள்,major trains</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/5i8bv0g6/14.gif" width="753"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/5i8bv0g6/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2>தெற்கு ரெயில்வே </h2><p>இந்திய ரெயில்வே பல மண்டலங்களை கொண்டது. அதில் தெற்கு ரெயில்வே மண்டலத்தின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு ரெயில் சேவை வழங்கப்படுகிறது. பேருந்து கட்டணத்தை விட ரெயில் கட்டணம் மிகவும் குறைவு. தெற்கு ரெயில்வே சார்பில் தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு ரெயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் முக்கிய ரெயில் நிலையங்கள் பின்வருமாறு;</p><h3>1. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம்: </h3><p>எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் - MGR Chennai Central) தென்னிந்தியாவின் மிக முக்கியமான மற்றும் பழமையான ரயில் போக்குவரத்து மையமாகும். 1873 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நிலையம், அதன் கம்பீரமான சிவப்பு நிறக் கட்டிடக் கலைக்காக உலகளவில் புகழ்பெற்றது. மொத்தம் 17 நடைமேடைகளைக் (Platforms) கொண்டு, தினமும் லட்சக்கணக்கான பயணிகளைக் கையாள்கிறது. இங்கிருந்து வட மாநிலங்களுக்கு பெரும்பாலான ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. </p><h3></h3><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/dzyo2qgq/19.gif" /></figure><h3>2. சென்னை எழும்பூர் ரெயில் நிலையம்:</h3><p>தமிழ்நாட்டின் மிக முக்கியமான இரண்டாவது பெரிய ரயில் நிலையமாகும். 1908 ஆம் ஆண்டு இந்தோ-சாராசெனிக் (Indo-Saracenic) கட்டிடக் கலை பாணியில் கட்டப்பட்ட இந்த நிலையம், தென் மாவட்டங்களைச் சென்னை மாநகரத்துடன் இணைக்கும் பிரதான நுழைவாயிலாகத் திகழ்கிறது. தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கன்னியாகுமரி போன்ற தென் தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் இங்கிருந்தே ரயில்கள் இயக்கப்படுகின்றன.</p><h3>3. திருச்சி ரெயில் நிலையம்</h3><p>தென்னக ரயில்வேயின் மிக முக்கியமான மற்றும் பரபரப்பான ரயில் சந்திப்புகளில் ஒன்றாகும். தமிழ்நாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த நிலையம், சென்னை எழும்பூருக்கு அடுத்தபடியாக தென் தமிழகத்தை இணைக்கும் மிகப்பெரிய ரயில்வே கோட்டத்தின் தலைமையகமாகவும் செயல்படுகிறது. சென்னை, மதுரை, கன்னியாகுமரி, காரைக்கால், ராமேஸ்வரம், கோவை, கேரளா மற்றும் கர்நாடகா செல்லும் ரயில்கள் இணையும் முக்கிய சந்திப்பாகும்.</p><h3>4. மதுரை ரெயில் நிலையம்</h3><p>தென்னக ரயில்வேயின் மிக முக்கியமான மற்றும் பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்றாகும். தூங்காநகரமான மதுரையின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த நிலையம், ஆன்மீக மற்றும் வணிக ரீதியாக வரும் லட்சக்கணக்கான பயணிகளுக்கு முதன்மை போக்குவரத்து மையமாக விளங்குகிறது. சென்னை, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், கோவை, பெங்களூரு மற்றும் மும்பை போன்ற முக்கிய நகரங்களை இணைக்கும் சந்திப்பாக இது செயல்படுகிறது.</p><h3>5. கோவை ரெயில் நிலையம்</h3><p>தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான கோவையின் முதன்மை ரயில் போக்குவரத்து மையமாகும். தொழில்துறை மற்றும் கல்வி மையமாக விளங்கும் கொங்கு மண்டலத்தை இந்தியாவின் பிற மாநிலங்களுடன் இணைப்பதில் இந்த நிலையம் முக்கிய பங்கு வகிக்கிறது. சென்னை, பெங்களூரு, கேரளா (பாலக்காடு வழியாக), மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா போன்ற இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் இங்கிருந்து நேரடி ரயில்கள் உள்ளன.</p><h2>6. சேலம் ரெயில் நிலையம்</h2><p>தமிழ்நாட்டின் மிக முக்கியமான தொழில் நகரங்களில் ஒன்றான சேலத்தின் முதன்மை ரயில் போக்குவரத்து மையமாகும். வட இந்தியாவிலிருந்து கேரளா மற்றும் தென் தமிழகம் செல்லும் ரயில்கள் அனைத்தும் கடந்து செல்லும் மிக முக்கியமான சந்திப்பாக இது விளங்குகிறது.</p><h2>7. நெல்லை ரெயில் நிலையம்</h2><p>தென் தமிழகத்தின் மிக முக்கியமான மற்றும் பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்றாகும். தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த நிலையம், நெல்லை மற்றும் அதனைச் சுற்றியுள்ள தென் மாவட்ட மக்களின் பிரதான போக்குவரத்து மையமாக விளங்குகிறது. சென்னை, மதுரை, நாகர்கோவில் மற்றும் கேரளா (தென்காசி, கொல்லம் வழித்தடம்) ஆகிய பகுதிகளை இணைக்கும் முக்கிய ரயில் சந்திப்பாகும்.</p><h2></h2><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/oenr1zx0/16.gif" /></figure><h2>தமிழகத்தில் இயக்கப்படும் முக்கிய ரெயில் சேவைகள்</h2><h3>1. நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில்</h3><p>சென்னை எழும்பூர் மற்றும் திருநெல்வேலி சந்திப்பு இடையே தினசரி இயக்கப்படும் தென்னக ரயில்வேயின் மிக முக்கியமான மற்றும் புகழ்பெற்ற சூப்பர்பாஸ்ட் (Superfast) ரயிலாகும். தென் தமிழக மக்களின் முதன்மை தேர்வாக இந்த ரயில் திகழ்கிறது.</p><p>* சென்னை எழும்பூரில் இருந்து (வண்டி எண்: 12631) இரவு 8.50 மணிக்கு புறப்படும் ரெயில், காலை 7 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து (வண்டி எண்: 12632) இரவு 8.50 மணிக்கு புறப்படும் ரெயில், காலை 7.10 க்கு நெல்லை சென்றடையும். பல முக்கிய ரெயில்நிலையங்களில் நின்று செல்லும்.</p><h3>2. பொதிகை எக்ஸ்பிரஸ்</h3><p>சென்னை எழும்பூர் மற்றும் செங்கோட்டை இடையே தினசரி இயக்கப்படும் தென்னக ரயில்வேயின் மிக முக்கியமான மற்றும் புகழ்பெற்ற சூப்பர்பாஸ்ட் (Superfast) ரயிலாகும். தென்காசி, குற்றாலம் மற்றும் செங்கோட்டை பகுதி மக்களின் முதன்மை தேர்வாக இந்த ரயில் விளங்குகிறது.</p><p>சென்னை எழும்பூரில் இருந்து (வண்டி எண்: 12661) இரவு 7.35 மணிக்கு புறப்படும் ரெயில், காலை 6.40 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மறுமார்க்கமாக செங்கோட்டையில் இருந்து (வண்டி எண்: 12662) இரவு 6.50 மணிக்கு புறப்படும் ரெயில், காலை 5.55க்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.</p><h3>3 பாண்டியன் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ்: (வண்டி எண்: 12637/12638)</h3><p>சென்னை எழும்பூர் மற்றும் மதுரை சந்திப்பு இடையே தினசரி இயக்கப்படும் தென்னக ரயில்வேயின் மிக முக்கியமான மற்றும் மிகவும் புகழ்பெற்ற ஒரு முதன்மை ரயிலாகும். எழும்பூரில் இருந்து இரவு 9.40 மணிக்கு புறப்படும் ரெயில், காலை 5.25 மணிக்கு மதுரை சென்றடையும். மறுமார்க்கமாக மதுரையில் இருந்துஇரவு 9.25 மணிக்கு புறப்படும் ரெயில், காலை 5.20 மணிக்கு சென்னை சென்றடையும்.</p><h3>4. வைகை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12635 / 12636)</h3><p>சென்னை எழும்பூர் மற்றும் மதுரை சந்திப்பு இடையே தினசரி இயக்கப்படும் தென்னக ரயில்வேயின் மிக முக்கியமான மற்றும் புகழ்பெற்ற பகல் நேர அதிவேக (Intercity Superfast) ரயிலாகும். சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 1.15 மணிக்கு புறப்படும் ரெயில், இரவு 8.35 மணிக்கு மதுரை சென்றடையும். மறுமார்க்கமாக மதுரையில் இருந்துகாலை 6.45 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் ரெயில், மதியம் 2.15 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.</p><h3>5. முத்துநகர் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (12693 / 12694)</h3><p>இது சென்னை எழும்பூர் மற்றும் தூத்துக்குடி இடையே தினசரி இயக்கப்படும் இரவு நேர ரயிலாகும். எழும்பூரில் இருந்து இரவு 7.15 மணிக்கு புறப்படும் ரெயில், காலை 5.55 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். மறுமார்க்கமாக தூத்துக்குடியில் இருந்து இரவு 9.05 மணிக்கு புறப்படும் ரெயில், மறுநாள் காலை 7.35 மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும்.</p><h3>6. திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ்: (16105 / 16106)</h3><p>சென்னை எழும்பூர் மற்றும் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான திருச்செந்தூர் இடையே தினசரி இயக்கப்படும் ஒரு முக்கியமான எக்ஸ்பிரஸ் ரயிலாகும் [செய்திகள்]. தூத்துக்குடி மாவட்டத்தின் கடற்கரைப் பகுதி மக்களுக்கும், அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கும் இது ஒரு முதன்மை போக்குவரத்து சேவையாக விளங்குகிறது.</p><h3>7. ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (16713 / 16714)</h3><p>சென்னை எழும்பூர் மற்றும் உலகப் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான ராமேஸ்வரம் இடையே தினசரி இயக்கப்படும் ஒரு மிக முக்கியமான எக்ஸ்பிரஸ் ரயிலாகும். இந்தியாவின் மிக நீண்ட கடல் பாலமான பாம்பன் பாலம் (Pamban Bridge) வழியாகப் பயணிக்கும் இந்த ரயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் ஒரு முதன்மை போக்குவரத்து சேவையாக விளங்குகிறது.</p><h3>8. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்: (12633 / 12634)</h3><p>சென்னை எழும்பூர் மற்றும் இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரி இடையே தினசரி இயக்கப்படும் மிக முக்கியமான ஒரு முதன்மை (Premium) சூப்பர்பாஸ்ட் ரயிலாகும். சுற்றுலாப் பயணிகள் மற்றும் தென் மாவட்ட மக்களின் மிக முக்கியமான இரவு நேரப் போக்குவரத்துச் சேவையாக உள்ளது.</p><h3>9. குருவாயூர் எக்ஸ்பிரஸ்: (16127 / 16128)</h3><p>சென்னை எழும்பூர் - கேரளாவின் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான குருவாயூர் இடையே இயக்கப்படும் மிக முக்கியமான தினசரி எக்ஸ்பிரஸ் ரயிலாகும். இந்த ரயில் இரு மாநிலங்களின் முக்கிய கடற்கரை மற்றும் உட்புற நகரங்களை பகல் நேரத்தில் இணைப்பதால், வணிகர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஆன்மீகப் பக்தர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக உள்ளது.</p><h3>10. அந்தியோதயா எக்ஸ்பிரஸ்: (வண்டி எண்: 20691 / 20692)</h3><p>ரயில்வேயால் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வசதிக்காக அறிமுகப்படுத்தப்பட்ட முழுக்க முழுக்க முன்பதிவு இல்லாத (Unreserved), அதிவேக சூப்பர்பாஸ்ட் ரயில் சேவையாகும். தாம்பரம் - நாகர்கோவில் இடையே இது இயக்கப்பட்டு வருகிறது.</p><h2></h2><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/g95r212h/20.gif" /></figure><h2>பிற முக்கிய ரெயில் சேவைகள்:</h2><p>* பல்லவன் எக்ஸ்பிரஸ்: (Train No: 12605 / 12606) சென்னை எழும்பூர் மற்றும் காரைக்குடி சந்திப்பு இடையே தினசரி இயக்கப்படும் ஒரு புகழ்பெற்ற பகல் நேர அதிவேக இன்டர்சிட்டி ரயிலாகும்.</p><p>* சேரண் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (12674): கோவை - சென்னை இடையே தினசரி இயக்கப்படும் மிகவும் புகழ்பெற்ற இரவு நேர ரயில்.</p><p>* கோவை - மயிலாடுதுறை ஜன் சதாப்தி (12084): திருச்சி, தஞ்சாவூர் வழியாக டெல்டா மாவட்டங்களை இணைக்கும் ரயில்.</p><p>* அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (16823/16824): சென்னை எழும்பூர் முதல் திருவனந்தபுரம் வரை, நாகர்கோவில் வழியாக இயக்கப்படும் தினசரி சேவை.</p><p>* நெல்லை - மேட்டுப்பாளையம் எக்ஸ்பிரஸ் (16617/16618): தென் மாவட்ட மக்கள் ஊட்டி, கோவை செல்ல வாராந்திர அடிப்படையில் இயக்கப்படும் ரயில்.</p><h2>பயணிகள் ரெயில் சேவை:</h2><p>எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தப்படாத மிகச் சிறிய கிராமப்புற ரயில் நிலையங்களிலும் இந்த ரயில்கள் நின்று செல்லும். பேருந்து கட்டணத்தை விடப் பல மடங்கு குறைவு. உதாரணமாக, ₹10 முதல் ₹30 வரை மட்டுமே இருக்கும். இந்த ரயில்களில் படுக்கை வசதி (Sleeper) கிடையாது. அனைத்தும் பொதுப் பெட்டிகளாக (General Unreserved) மட்டுமே இருக்கும்.</p><p>* தமிழ்நாட்டின் முக்கிய பயணிகள் ரயில் வழித்தடங்கள்:</p><p>* தமிழ்நாட்டில் இயக்கப்படும் சில முக்கியமான பயணிகள் ரயில் சேவைகள் பின்வருமாறு;</p><p>* மதுரை - ராமேஸ்வரம் பயணிகள் ரயில்</p><p>* திருநெல்வேலி - திருச்செந்தூர் பயணிகள் ரயில்</p><p>* மதுரை - விழுப்புரம் பயணிகள் ரயில்</p><p>* திருநெல்வேலி - செங்கோட்டை பயணிகள் ரயில்</p><p>* ஈரோடு - கோயம்புத்தூர் மெமு (MEMU) ரயில்</p><p>* சேலம் - கரூர் பயணிகள் ரயில்</p><p>* கோயம்புத்தூர் - மேட்டுப்பாளையம் பயணிகள் ரயில்</p><p>* திருச்சி - காரைக்கால் பயணிகள் ரயில்</p><p>* மயிலாடுதுறை - தஞ்சாவூர் பயணிகள் ரயில்</p><p>* திருச்சி - திண்டுக்கல் பயணிகள் ரயில்</p><h2></h2><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/dcbinpho/15.gif" /></figure><h2>வந்தே பாரத் ரெயில் சேவை</h2><p>இந்திய ரயில்வேயால் வடிவமைக்கப்பட்டு இயக்கப்படும் அதிநவீன, அதிவேக மற்றும் சொகுசான அரை-அதிவேக (Semi-High-Speed) ரயில் சேவையாகும். தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையையும், பிற முக்கிய நகரங்களையும் மிகக் குறைந்த நேரத்தில் இணைக்க இந்த ரயில்கள் பெரிதும் உதவுகின்றன. ஆனால் பிற ரெயில்களை விட வந்தே பாரத் ரெயில் டிக்கெட் விலை சற்று அதிகம் ஆகும்.</p><p>1. சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் (20643 / 20644) பயண நேரம்: வெறும் 5 மணி நேரம் 50 நிமிடங்கள்.</p><p>2. சென்னை எழும்பூர் - திருநெல்வேலி (20665 / 20666) பயண நேரம்: சுமார் 7 மணி நேரம் 50 நிமிடங்கள்.</p><p>3. சென்னை எழும்பூர் - நாகர்கோவில் (20627 / 20628) பயண நேரம்: சுமார் 8 மணி நேரம் 40 நிமிடங்கள்.</p><p>4. கோயம்புத்தூர் - பெங்களூரு (20641 / 20642) பயண நேரம்: 6 மணி நேரம் 30 நிமிடங்கள்.</p><p>5. சென்னை சென்ட்ரல் - மைசூர் (20607 / 20608) பயண நேரம்: 6 மணி நேரம் 30 நிமிடங்கள்.</p><p>6. சென்னை சென்ட்ரல் - விஜயவாடா (20677 / 20678) பயண நேரம்: 6 மணி நேரம் 40 நிமிடங்கள்.</p><h2></h2><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/175gqyj0/17.gif" /></figure><h2>நீலகிரி மலை ரயில் (சுற்றுலா ரயில்)</h2><p>தமிழ்நாட்டின் மிக முக்கியமான சுற்றுலா ரயில், உலகப் புகழ்பெற்ற ஊட்டி மலை ரயில் ஆகும். இது யுனெஸ்கோ (UNESCO) அமைப்பால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் வழியில் அடர்ந்த காடுகள், ஆழமான பள்ளத்தாக்குகள், 250 க்கும் மேற்பட்ட பாலங்கள் மற்றும் 16 குகைகளைக் கடந்து செல்வது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாகும்.</p><p>இன்றும் குன்னூர் வரை பாரம்பரிய நிலக்கரி/டீசல் நீராவி எஞ்சின் மூலம் இயக்கப்படுவது இதன் தனிச்சிறப்பு.</p><h2></h2><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/m0dupki4/18.gif" /></figure><h2>ரெயில் பயணச்சீட்டு (Ticket) பெறும் முறைகள்</h2><p>ரயில் நிலைய கவுண்டர்கள்: பயணத்திற்குச் சற்று முன்பு நிலையத்திற்குச் சென்று நேரடியாகத் பெற்றுக் கொள்ளலாம்.</p><h3>ரெயில் ஒன் மொபைல் செயலி:</h3><p>நீண்ட வரிசையில் நிற்பதைத் தவிர்க்க, 'ரெயின் ஒன்' ஆப் மூலம் மொபைலிலேயே முன்பதிவு, முன்பதிவு இல்லாத பயணச்சீட்டுகளை எளிதாக எடுத்துக்கொள்ளலாம்.</p><h2>ரெயில் போக்குவரத்தின் நன்மைகள்:</h2><p>மற்ற போக்குவரத்துகளுடன் ஒப்பிடும்போது ரயில் கட்டணம் மிகவும் குறைவு.</p><p>மலைகள், வயல்வெளிகள், ஆறுகள் மற்றும் பாலங்கள் போன்ற இயற்கைக் காட்சிகளை ஜன்னல் வழியாக ரசிக்கலாம்.</p><p>பேருந்தைப் போல ஒரே இடத்தில் அமர்ந்திருக்காமல், ரயிலுக்குள் எழுந்து நடமாட முடியும்.</p><p>வாகன நெரிசல் (Traffic) மற்றும் காற்று மாசுபாடு இல்லாத நிம்மதியான பயணம்</p><p>மற்ற அனைத்து பொதுப் போக்குவரத்தை விடவும் ரயிலின் பயணக் கட்டணம் மிகவும் குறைவு.</p><p>ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகக் குறைந்த செலவில் இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் எளிதாகச் செல்ல இது உதவுகிறது.</p><p>சாலைப் போக்குவரத்தோடு ஒப்பிடும்போது ரயில்களில் விபத்து நடப்பதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு.</p><p>ரயிலிலேயே கழிப்பறை, குடிநீர், மொபைல் சார்ஜிங் பாயிண்ட் மற்றும் உணவு (Pantry Car) போன்ற அனைத்து அத்தியாவசிய வசதிகளும் உள்ளன.</p><p>நீண்ட தூரப் பயணங்களுக்குப் படுக்கை வசதி (Sleeper/AC Class) இருப்பதால், பயணிகள் நிம்மதியாக உறங்கிக் கொண்டே பயணிக்கலாம். என இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம். இந்தியாவின் ஏழை, நடுத்தர மக்களின் நண்பனாக ரெயில் போக்குவரத்து உள்ளது என்றால் அது மிகையாகாது.</p> ]]></content:encoded></item><item><title>சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி மாஞ்சோலை எஸ்டேட் வனத்துறையிடம் ஒப்படைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/manjolai-estate-handed-over-to-the-forest-department-in-accordance-with-the-supreme-courts-order</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/manjolai-estate-handed-over-to-the-forest-department-in-accordance-with-the-supreme-courts-order#comments</comments><guid isPermaLink="false">932baf89-56b9-41ad-8fd4-53676a326702</guid><pubDate>Sun, 12 Jul 2026 12:30:55 +0000</pubDate><atom:updated>2026-07-12T12:30:55.580Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,சுப்ரீம் கோர்ட்டு,மாஞ்சோலை,Manjolai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/lwga9lra/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/lwga9lra/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,  </p><p>நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அமைந்திருக்கக்கூடிய மாஞ்சோலை எஸ்டேட் பகுதி, மிகப் பிரபலமான தேயிலை தோட்டமாக விளங்கி வருகிறது. இந்த பகுதி பல்வேறு வனவிலங்குகளின் வாழ்விடமாகவும் உள்ளது. யானைகள், சிறுத்தைகள், கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளும் இங்கு உள்ளன.</p><p>இதற்கிடையில், சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வலியுறுத்தி, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் நேரடி கண்காணிப்பில இந்த அடர்வனப் பகுதிகளை முழுவதும் கொண்டு வர வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவின்படி தற்போது அந்த மாஞ்சோலை வனப்பகுதி முழுவதுமே வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. </p><p>ஏற்கனவே மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த சூழலில், தற்போது இந்த மாஞ்சோலை எஸ்டேட் தேயிலை தோட்டம் முழுவதுமே வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையானது இன்று முதல் அமலுக்கு வந்ததாகவும் வனத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. </p><p>முன்னதாக மாஞ்சோலையில் பி.பி.டி.சி. தேயிலை நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவுற்ற நிலையில், தற்போது மாஞ்சோலை எஸ்டேட் முழுவதும் வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான அந்த நகலும் அந்த பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. </p> ]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டின் வலுவான மருத்துவக்கட்டமைப்பு சரியான கைகளுக்கு சென்றுள்ளது - ஜோதிமணி பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadus-robust-medical-infrastructure-has-been-entrusted-to-capable-hands-jothimanis-post</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadus-robust-medical-infrastructure-has-been-entrusted-to-capable-hands-jothimanis-post#comments</comments><guid isPermaLink="false">a8e87d9f-d013-4565-8f0a-ba0a8c855155</guid><pubDate>Sun, 12 Jul 2026 12:26:14 +0000</pubDate><atom:updated>2026-07-12T12:26:14.775Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர்,hospital,மருத்துவமனை,ஜோதிமணி,Infrastructure,In Tamil Nadu,Jothimani,தமிழ்நாட்டை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/1vw0mm0b/jothimani-with-minister-aru.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜோதிமணி,சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/1vw0mm0b/jothimani-with-minister-aru.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கரூர்,</p><p>கரூர் எம்பி ஜோதிமணி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:- கரூர் மாவட்ட மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் உடன் இணைந்து, கரூர் புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பழைய அரசு மருத்துவமனை கட்டிடத்தை நேரில் ஆய்வு செய்தோம்.</p><h2>கோரிக்கை</h2><p> அமைச்சர் மிகுந்த பொறுமையுடன் அனைத்து கோரிக்கைகளையும் கவனமாக கேட்டார். தானே ஒரு மருத்துவர் என்பதால், மருத்துவ துறையின் நிலவரத்தையும்,<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"> கரூர் மக்கள்</a> எதிர்கொள்ளும் சிரமங்களையும் மிக நன்றாக புரிந்துகொண்டார். தமிழ்நாட்டின் வலுவான மருத்துவக்கட்டமைப்பு சரியான கைகளுக்கு சென்றுள்ளது என்பதை உறுதியாக உணர்ந்தேன்.</p><h2>கடிதம்</h2><p>புதிய மருத்துவமனையின் செயல்பாடுகளை பார்வையிட்ட பின்னர், தற்போது பயன்பாட்டில் இல்லாத பழைய அரசு மருத்துவமனை கட்டிடத்தை துணை மருத்துவம் &amp; செவிலியர் கல்லூரியாக மாற்றியமைக்க வேண்டும் என முதல்-அமைச்சருக்கும், சுகாதாரத்துறை அமைச்சருக்கும் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளோம்.</p> <p><strong>இக்கல்லூரி நிறுவப்பட்டால்:</strong></p><p>1. கரூர் மாவட்டத்தின் இளைஞர்களுக்கு மருத்துவத் துறையில் உயர்கல்வி பயிற்சி பெறுவதற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும். </p><p>2. மாவட்டத்தில் நிலவும் சுகாதாரப் பணியாளர் பற்றாக்குறை படிப்படியாக நிவர்த்தியாகும். </p><p>3. கரூர் மாவட்டம் சுகாதாரக் கல்வியின் முக்கிய மையமாக உருவெடுக்கும்.</p> <p>மேலும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை வலுப்படுத்த பின்வரும் முக்கிய கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளோம்:</p><p>- மூளை மற்றும் நரம்பியல் சிறப்பு மருத்துவர் &amp; அறுவை சிகிச்சை நிபுணர்கள் (4 பணியிடங்கள் - ரூ, 1 கோடி)</p><p>- 300 படுக்கைகள் கொண்ட மகப்பேறு அவசர சிகிச்சை பிரிவு </p><p>- 200 படுக்கைகள் கொண்ட உயர் சிறப்பு சிகிச்சை பிரிவு </p> <p>- புற்றுநோயாளிகளுக்கான ரேடியோ தெரபி சிகிச்சை மையம் (ரூ. 35 கோடி)</p><p>- ரூ. 3.40 கோடி மதிப்பிலான நவீன மருத்துவ உபகரணங்கள்</p><p>இந்த கோரிக்கைகள் விரைவில் நிறைவேற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ராமேஸ்வரம்: கேரள வாகன ஓட்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டிராபிக் போலீசார் - வைரல் வீடியோ

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tn-traffic-police-argue-with-kerala-driver-in-rameswaram-viral-video</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tn-traffic-police-argue-with-kerala-driver-in-rameswaram-viral-video#comments</comments><guid isPermaLink="false">36fe9776-639a-48c5-a2d0-3ed66aa9013d</guid><pubDate>Sun, 12 Jul 2026 11:58:43 +0000</pubDate><atom:updated>2026-07-12T11:58:43.557Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rameswaram,Viral Video,வைரல் வீடியோ,ராமேஸ்வரம்,Traffic Police</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/71y0gwfh/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/71y0gwfh/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமேஸ்வரம்,</p><p>ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.</p><p>இந்நிலையில், ராமேஸ்வரத்திற்கு வந்த கேரள வாகன ஓட்டியிடம் டிராபிக் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. </p><h2>வைரல் வீடியோ</h2><p>கேரளாவை சேர்ந்த நபர் காரில் ராமேஸ்வரத்திற்கு வந்துள்ளார். ராமேஸ்வரம் - தனுஷ்கோடி சாலையில் அரசு பஸ்சுக்கு பின்னே அந்த கேரள நபர் தனது காரை ஓட்டி சென்றுள்ளார். அப்போது, அவரது காரை இடைமறித்த டிராபிக் போலீசார், இது வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதி ( திஸ் இஸ் நோ எண்ட்ரி) என்று கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த கேரள வாகன ஓட்டி முன்னால் சென்ற அரசு பஸ்சை காட்டி, இவ்வளவு பெரிய பஸ் முன்னே செல்கிறது இது நோ எண்ட்ரி பகுதியா? என்று கேள்வி எழுப்பினார். </p><p>அதற்கு பதில் அளித்த போக்குவரத்து போலீஸ், அது அரசு பஸ்.. என்று கூறினார். அப்போது, அரசு பஸ்சுக்கு ஒரு சட்டம், மற்றவர்களுக்கு ஒரு சட்டமா? என கேள்வி எழுப்பினார். அப்போது, பைக்கில் ஹெல்மெட் அணியாமல் வந்த மற்றொரு டிராபிக் போலீஸ் அதிகாரி, அந்த கேரள நபரின் கார் எண்ணை தனது செல்போனில் புகைப்படம் எடுத்தார். பின்னர், அந்த வாகன ஓட்டியிடம் டிராபிக் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவங்கள் அனைத்தையும் கேரள வாகன ஓட்டி தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. </p>  <figure><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DaqmRY0SEG2/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:658px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DaqmRY0SEG2/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a></div></blockquote>
<script async src="//platform.instagram.com/en_US/embeds.js"></script></figure>]]></content:encoded></item><item><title>தாம்பரம் போலீசார் அதிரடி : 1,100 போதை மாத்திரைகள், 5 கிலோ கஞ்சா பறிமுதல் - 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tambaram-police-take-action-1100-narcotic-pills-5-kg-of-ganja-seized-2-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tambaram-police-take-action-1100-narcotic-pills-5-kg-of-ganja-seized-2-arrested#comments</comments><guid isPermaLink="false">7030ac20-1a22-4950-bdc7-986d734883c4</guid><pubDate>Sun, 12 Jul 2026 11:25:59 +0000</pubDate><atom:updated>2026-07-12T11:25:59.902Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tambaram,தாம்பரம்,கஞ்சா,கஞ்சா கடத்தல்,போதை மாத்திரைகள்,Ganja seized,Narcotic Pills,Chennai Tambaram,தாம்பரம் போலீசார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/ay1pk08c/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/ay1pk08c/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தாம்பரம் போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>தீவிர கண்காணிப்பு</h2><p>தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத போதைப்பொருள் பழக்கத்தை முற்றிலுமாக ஒடுக்கும் பொருட்டு, தாம்பரம் மாநகர காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>இதன் ஒரு பகுதியாக, 11.07.26 அன்று மேற்கு தாம்பரம், முடிச்சூர் சாலையில் உள்ள கூரியர் நிலையத்திற்கு மருத்துவமனையின் பெயரில் சந்தேகத்திற்கிடமான ஒரு பார்சல் வந்திருப்பதாக தாம்பரம் காவல் நிலைய <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">போலீசாருக்கு </a>தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அந்த பார்சலை வாங்குவதற்காக வந்த குரோம்பேட்டை, லட்சுமிபுரத்தைச் சேர்ந்த லீஸ்ரீ என்பவரை மடக்கிப் பிடித்து சோதனையிட்டனர். விசாரணையில், பார்சலில் அரசால் தடை செய்யப்பட்ட 1,100 'Tapentadol' போதை மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன.</p><h2>5 கிலோ கஞ்சா</h2><p>அதேபோல், சிங்கப்பெருமாள் கோவில் காவல் நிலைய போலீசார், காசிமேடு காவல் நிலையத்தின் 'பி' பிரிவு சரித்திரப் பதிவேடு குற்றவாளியான செந்தில் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சா, ரூ. 60,000 ரொக்கப் பணம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட இருவர் மீதும் போதைப்பொருள் மற்றும் மனநிலை மாற்றும் பொருட்கள் தடுப்புச் சட்டம் (NDPS Act)-ன் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.</p><p>தாம்பரம் மாநகர <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">காவல்துறை</a>, நகரில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் இத்தகைய தீவிர நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களை போதைப்பொருள் பழக்கத்திலிருந்து பாதுகாக்கவும், நகரின் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநிறுத்தவும் காவல்துறையின் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விருதுநகர்: சாலை தடுப்புச்சுவர் மீது ஜீப் மோதி விபத்து - 3 பேர் பலி

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/jeep-accident-in-virudhunagar-kills-3</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/jeep-accident-in-virudhunagar-kills-3#comments</comments><guid isPermaLink="false">bcd0b934-c813-4c18-baf7-63de037a1afd</guid><pubDate>Sun, 12 Jul 2026 11:15:17 +0000</pubDate><atom:updated>2026-07-12T11:15:17.422Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,Virudhunagar,விருதுநகர்,ஜீப்,Jeep</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/23nahl69/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/23nahl69/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>விருதுநகர்,</p><p><a href="https://www.dailythanthi.com/">விருதுநகர் </a>மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று மாலை ஜீப் சென்றுகொண்டிருந்தது. அந்த ஜீப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பயணம் செய்தனர்.</p><h2>3 பேர் பலி</h2><p>ஸ்ரீவில்லிபுத்தூர் நத்தம்பட்டி அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.</p><p>இந்த விபத்தில் ஜீப்பில் பயணம் செய்த பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். எஞ்சிய 6 பேர் படுகாயமடைந்தனர். </p><p>தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் குடும்பத்தினர் கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது ஜீப் விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் பள்ளி மாணவர்களுக்காக நாளை முதல் 41 சிறப்பு பேருந்துகள் இயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/41-special-buses-to-operate-for-school-students-in-chennai-from-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/41-special-buses-to-operate-for-school-students-in-chennai-from-tomorrow#comments</comments><guid isPermaLink="false">afb8d141-6077-442e-8d87-d6f7b1282a87</guid><pubDate>Sun, 12 Jul 2026 11:06:03 +0000</pubDate><atom:updated>2026-07-12T11:06:03.177Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,special buses,சிறப்பு பேருந்துகள்,School students,பள்ளி மாணவர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/zsk2mqip/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/zsk2mqip/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>பேருந்து வசதி வேண்டி கோரிக்கை</h2><p>சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ம.அருள் பிரகாசம் சைதாப்பேட்டை தொகுதியில் உள்ள 2 அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பேருந்து வசதி வேண்டி கடந்த 30.06.2026 அன்று போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், கடந்த 10 நாட்களாக சைதாப்பேட்டை மற்றும் பல்வேறு பகுதிகளில், பள்ளிகள் அமைந்துள்ள இடங்களில் மாநகர் போக்குவரத்துக் கழக அலுவலர்களை கொண்டு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதுடன், அப்பகுதிகளைச் சார்ந்த மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கருத்துக்களின் அடிப்படையில் அறிக்கை தயார் செய்யப்பட்டு, தமிழ்நாடு முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.</p><h2>முதல்-அமைச்சர் உத்தரவு</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் உத்தரவின்படி, பள்ளி மாணவர்கள் கூட்ட நெரிசலின்றி, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பாதுகாப்பான </a>பயணம் மேற்கொள்ள வசதியாக, மாணவர்களை அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்களிலிருந்து பள்ளிக்கும், பள்ளியிலிருந்து அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்களுக்கும் காலை மற்றும் மாலை நேரங்களில் அழைத்து சென்றுவர ஏதுவாக, ஏற்கனவே சென்னையில் உள்ள 25 பள்ளிகளுக்கு 25 பேருந்துகள் மூலம் 50 பயண நடைகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் நாளொன்றுக்கு 41 சிறப்பு பேருந்துகள் வாயிலாக 84 பயண நடைகள் 13.07.2026 திங்கட்கிழமை அன்று முதல் இயக்கப்படவுள்ளது. அப்பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் இன்று (11.07.2026) பார்வையிட்டார், உடன் மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் த. மோகன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் இருந்தனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>பயணிகளின் கவனத்திற்கு.. வைகை, சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவையில் மாற்றம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/attention-passengers-change-in-vaigai-and-cholan-express-train-services</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/attention-passengers-change-in-vaigai-and-cholan-express-train-services#comments</comments><guid isPermaLink="false">bcb5a8b9-605c-49c0-bd0e-273363697bf9</guid><pubDate>Sun, 12 Jul 2026 10:17:30 +0000</pubDate><atom:updated>2026-07-12T10:17:30.451Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>train service,வைகை எக்ஸ்பிரஸ்,Vaigai Express,vaigai,வைகை,Cholan Express,சோழன் எக்ஸ்பிரஸ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/088qe234/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/088qe234/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திருச்சிராப்பள்ளி ரெயில்வே கோட்டத்தில் உள்ள பொன்மலை யார்டில் புதிய 8-வது பாதையை (Road No. 8) இயக்கத்துக்கு கொண்டு வரும் பணிகள் நடைபெறுவதால், சில ரெயில்களின் இயக்கத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.</p><h2>எழும்பூர் - மதுரை</h2><p>அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு செல்லும் 12635 வைகை சூப்பர்பாஸ்ட் விரைவு ரெயில், ஜூலை 13, 2026 (திங்கட்கிழமை) பிற்பகல் 1.15 மணிக்கு புறப்படவுள்ளது. இந்த ரெயில் வழித்தடத்தில் சுமார் 40 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.</p><h2>எழும்பூர்- திருச்சி</h2><p>அதேபோல், சென்னை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">எழும்பூரில் </a>இருந்து திருச்சிராப்பள்ளிக்கு செல்லும் 22675 சோழன் சூப்பர்பாஸ்ட் விரைவு ரெயில், ஜூலை 15, 2026 (புதன்கிழமை) காலை 8.00 மணிக்கு புறப்படவுள்ளது. இந்த ரெயிலும் வழித்தடத்தில் 40 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.</p><p>பயணிகள் இதனை கருத்தில் கொண்டு தங்களது பயணத் திட்டங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறு ரெயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மெரினாவில் காங்கிரஸ் சார்பில் காமராஜர் மணற்சிற்பம்: நாளை மாலை திறப்பு!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kamaraj-sand-sculpture-by-congress-in-marina-opening-tomorrow-evening</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kamaraj-sand-sculpture-by-congress-in-marina-opening-tomorrow-evening#comments</comments><guid isPermaLink="false">aee0e844-3a25-44f3-af62-084c7b13d01f</guid><pubDate>Sun, 12 Jul 2026 10:04:41 +0000</pubDate><atom:updated>2026-07-12T10:04:41.370Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,மெரினா கடற்கரை,Marina beach,காமராஜர்,Kamaraj,Sand Sculpture,மணற்சிற்பம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/xe5z71c2/manickam-tagore.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/xe5z71c2/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெருந்தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D124-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88">காமராஜர்124-வது பிறந்த தினத்தை</a> முன்னிட்டு, நாளை  மாலை 5.00 மணியளவில், சென்னை மெரினா கடற்கரையில் (விவேகானந்தர் இல்லம் அருகில்), உலகப்புகழ் பெற்ற மணற்சிற்பக் கலைஞரும் சுற்றுச்சூழல் பாதுகாவலருமான கஜேந்திரன் ஏழுமலையான், காமராஜரின் உருவத்துடன் கூடிய பிரம்மாண்ட மணற்சிற்பத்தை அமைக்கிறார்.</p><h2>காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்பு </h2><p>இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  ப. மாணிக்கம் தாகூர், எம்.பி., சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான எஸ். ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ., காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் டாக்டர் ஏ. செல்லகுமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் கே.வீ.தங்கபாலு,  கே.எஸ்.அழகிரி, அகில இந்திய தொழில் வல்லுநர்கள் காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான  பிரவீன் சக்ரவர்த்தி, எம்.பி., நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் பொருளாளர்  விஜய் வசந்த், எம்.பி, அகில இந்திய காங்கிரஸ் வார் ரூம் தலைவர் சசிகாந்த் செந்தில், எம்.பி., எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி, செல்வி. சுதா ராமகிருஷ்ணன் எம்.பி, மூத்த காங்கிரஸ் தலைவர் சா. பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.</p><h2>மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும்</h2><p>அமைச்சர் பெருமக்கள், முன்னணி காங்கிரஸ் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் பார்வையிடுகின்ற வகையில் 13.07.2026 முதல் 19.07.2026 வரை தொடர்ந்து 6 நாட்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 3 ஆண்டுகளில் 7.39 லட்சம் வீழ்ச்சி: அன்புமணி கவலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-enrollment-in-tamil-nadu-government-schools-drops-by-739-lakh-in-3-years-anbumani-concerned</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-enrollment-in-tamil-nadu-government-schools-drops-by-739-lakh-in-3-years-anbumani-concerned#comments</comments><guid isPermaLink="false">4e079c2e-4ef5-492f-a6ce-bf726a8d88fb</guid><pubDate>Sun, 12 Jul 2026 09:38:36 +0000</pubDate><atom:updated>2026-07-12T09:38:36.016Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK,அன்புமணி,Anbumani</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/7o0cef2c/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/7o0cef2c/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>மாணவர் சேர்க்கை வீழ்ச்சி</h2><p>தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் எண்ணிக்கை கடந்த ஓராண்டில்  1.15 லட்சம் குறைந்திருப்பதாகவும், அதே நேரத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 2.07 லட்சம் வீழ்ச்சி அடைந்திருப்பதாகவும் மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதை தமிழ்நாடு அரசு எச்சரிக்கை மணியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.</p><p>ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி தகவல் அமைப்பு வெளியிட்ட தரவுகளில் தான் இந்த புள்ளிவிவரங்கள் இடம் பெற்றுள்ளன. கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்பதைப் போல,  அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவது பாட்டாளி மக்கள் கட்சிக்கு தெரிந்த ஒன்று தான் என்பதால் இந்த புள்ளிவிவரங்கள்  அதிர்ச்சியளிக்கவில்லை.  இன்னும் கேட்டால் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக  அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், உண்மையில் கடந்த 10 ஆண்டுகளாகவே சில விதிவிலக்குகளைத் தவிர இதே நிலை தான் தொடர்கிறது.</p><p>அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">எண்ணிக்கை </a>கடந்த 2024-25ஆம் ஆண்டில் 45  லட்சத்து10,612  ஆக இருந்தது. 2025-26 ஆம் ஆண்டில்  இந்த எண்ணிக்கை 43.03 லட்சமாக குறைந்து விட்டது. அதாவது ஒரே ஆண்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 2.07 லட்சம் குறைந்துள்ளது.</p><h2>43.02%  குறைவு</h2><p>இதற்கு முன் 2022-23ஆம் ஆண்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்து 42,026 ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடும் போது  3 ஆண்டுகளில் அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 7.39 லட்சம் குறைந்துள்ளது.</p><p>2015-16ஆம் ஆண்டில் அரசு பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை 75.52 லட்சமாக இருந்தது. ஆனால், 11 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை 32 லட்சத்து 49 ஆயிரம் குறைந்திருக்கிறது.  அதாவது 11 ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 43.02%  குறைந்துள்ளது.</p><p>அதே நேரத்தில் கடந்த ஆண்டில் மட்டும் தனியார் பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை 60.26 லட்சத்திலிருந்து 62.03 லட்சமாக, அதாவது 1.77 லட்சம்  அதிகரித்துள்ளது.  கடந்த  11 ஆண்டுகளைக் கணக்கில் கொண்டால் 36.56 லட்சமாக இருந்த தனியார் பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை இப்போது  62.03 லட்சமாக அதிகரித்து விட்டது.  அரசு பள்ளிகளின் வீழ்ச்சியில் தான் தனியார் பள்ளிகள் வளருகின்றன. இதை நினைத்து கவலைப்படாமல் இருக்க முடியாது.</p><h2>நடவடிக்கை எடுக்க வேண்டும்</h2><p>அரசு பள்ளிகளில் போதிய <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கட்டமைப்பு </a>வசதிகள் இல்லாததும், ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதும் தான் இதற்கு காரணம் ஆகும்.  அரசு பள்ளிகளில் ஒரு லட்சத்திற்கும் கூடுதலான வகுப்பறைகளுக்கு ஆசிரியர்கள்  இல்லாத சூழலில்  அரசு பள்ளிகளை எவ்வாறு மேம்படுத்த முடியும்? எவ்வாறு புத்துயிரூட்ட முடியும்? இந்த உண்மையை உணர்ந்து கொண்டு அரசு பள்ளிகளில் கட்டமைப்பை வலுப்படுத்தவும்,  ஆசிரியர்களின்  எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஸ்ரீபெரும்புதூரில் இஎஸ்ஐசி மருத்துவமனையை காணொலி வாயிலாக மத்திய மந்திரி தொடங்கி வைக்கிறார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/union-minister-to-inaugurate-100-bed-esic-hospital-in-sriperumbudur-via-video-conference</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/union-minister-to-inaugurate-100-bed-esic-hospital-in-sriperumbudur-via-video-conference#comments</comments><guid isPermaLink="false">ecda5305-63c6-44d8-b950-4fa00514d88c</guid><pubDate>Sun, 12 Jul 2026 09:25:34 +0000</pubDate><atom:updated>2026-07-12T09:25:34.027Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>hospital,மருத்துவமனை,Union Minister Mansukh Mandaviya,மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா,Sriperumbudur,ஸ்ரீபெரும்புதூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/uya16d8v/central-minister-Mansukh-Ma.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஸ்ரீபெரும்புதூரில் இஎஸ்ஐசி மருத்துவமனை,மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/uya16d8v/central-minister-Mansukh-Ma.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஸ்ரீபெரும்புதூர் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏழு இஎஸ்ஐ சுகாதாரத் திட்டங்கள் - வரும் 14-ம் தேதி தொடங்கி வைக்கிறார் மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா.</p> <h2>சுகாதார திட்டங்கள்</h2><p>நாளை மறுநாள் தெலங்கானா மாநிலம் சனத்நகரில் உள்ள தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகமான இஎஸ்ஐசி (ESIC) மருத்துவமனையிலிருந்து, நாடு முழுவதும் உள்ள ஏழு தொழிலாளர் அரசு காப்பீட்டு (இஎஸ்ஐ - ESI) சுகாதார திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, சனத்நகரில் உள்ள இஎஐஸ்ஐசி மருத்துவமனையின் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டடத்தை திறந்து வைப்பார். </p><p><strong>அதன் பின் ஆறு திட்டங்களையும் காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.</strong></p><p>* அசாம் மாநிலம் பெல்டோலாவில் உள்ள மேம்படுத்தப்பட்ட 200 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐசி மருத்துவமனை;</p><p>* ஸ்ரீபெரும்புதூரில் உள்ள 100 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐசி மருத்துவமனை;</p><p>* ஆந்திரப் பிரதேசம் மாநிலம் ராஜமகேந்திரவரத்தில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனை;</p><p>* குஜராத் மாநிலம் சுரேந்திரநகரில் உள்ள இஎஸ்ஐ மருந்தகம், கிளை அலுவலகம்;</p> <p>* ராஜஸ்தான் மாநிலம் கோட்டா உத்யோக் நகரில் உள்ள இஎஸ்ஐ மருந்தகம், கிளை அலுவலகம்;</p><p>* ராஜஸ்தான் மாநிலம் பவானி மண்டியில் உள்ள இஎஸ்ஐ மருந்தகம்.</p><p>சுமார் ரூ. 668 கோடி மதிப்பிலான இந்த மருத்துவ திட்டங்கள், நாடு முழுவதும் உள்ள ஏறத்தாழ 53 லட்சம் பயனாளிகளின் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்யும்.</p> <h2>கௌரவிப்பார்</h2><p>தொழிலாளர் நல துறைக்கான மத்திய இணைமந்திரி ஷோபா கரந்த்லாஜேவும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வார். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, தெலங்கானா மாநிலம் சனத்நகரில் உள்ள இஎஸ்ஐசி மருத்துவமனையின் புறநோயாளி பிரிவு கட்டடத்தின் வளர்ச்சிக்கு பங்களித்த கட்டுமான தொழிலாளர்களை டாக்டர் மாண்டவியா கௌரவிப்பார். மேலும், தொழிலாளர் நலனுக்கான அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையில், அவர் இஎஸ்ஐ பயனாளிகளுக்கு பண பலன்களையும் வழங்குவார்.</p><h2>மருத்துவ வசதி</h2><p>ஸ்ரீபெரும்புதூரில் 100 படுக்கைகள் கொண்ட <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88">இஎஸ்ஐசி மருத்துவமனை</a>, இந்தியாவின் முன்னணி உற்பத்தி, மின்னணு மையங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு அறை, அறுவை சிகிச்சை அரங்கம், தீவிர சிகிச்சைப் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, எக்ஸ்-ரே பிரிவு, ஆய்வக மருந்தகம் போன்ற வசதிகள் கிடைக்கப்பெறுவதால், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து 5.5 லட்சத்திற்கும் மேற்பட்ட காப்பீடு பெற்ற நபர்கள் மருத்துவ வசதிகளை பெறுவது எளிதாகும்.</p>]]></content:encoded></item><item><title>டிஜிட்டல் இந்தியா... வெறும் புளுகு மூட்டை! - மாணிக்கம் தாகூர் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/digital-india-just-a-bundle-of-rubbish-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/digital-india-just-a-bundle-of-rubbish-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">ac6555eb-d939-460b-ad34-65f37ca521a8</guid><pubDate>Sun, 12 Jul 2026 09:20:56 +0000</pubDate><atom:updated>2026-07-12T09:20:56.685Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore MP,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Tagore,தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி,tamilnadu congress</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/sycwlgab/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/sycwlgab/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>டிஜிட்டல் இந்தியா... வெறும் புளுகு மூட்டை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>மத்திய பா.ஜ.க அரசின் மவுனம் எதைக் காட்டுகிறது? 'டிஜிட்டல் இந்தியா' என மேடைக்கு மேடை முழங்கும் மத்திய அரசே, உங்கள் மவுனத்தின் நிழலில் இன்று கோடிக்கணக்கான டாலர் மதிப்புள்ள ஒரு மாபெரும் தேர்வு மோசடி மாபியா உருவாகியுள்ளது.</p><p>கல்வி முறையை டிஜிட்டல் ஆக்குவதற்குப் பதிலாக, இந்தத் தேர்வு மோசடித் தொழிற்சாலையைத் தான் நீங்கள் டிஜிட்டல் மயமாக்கி மாபெரும் சாம்ராஜ்ஜியமாக வளர்த்துள்ளீர்கள்!</p><h2>தரவுகள் பொய் சொல்லாது:</h2><p>- 2015-க்குப் பிந்தைய காலகட்டத்தில் தேர்வு மோசடிகளில் கேள்வித்தாள் கசிவு மட்டும் 70% ஆக விண்ணைத் தொட்டு நிற்கிறது.</p><p>- இதயமற்ற இந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">முறைகேடுகளாலும்</a>, தேர்வுகள் ரத்து மற்றும் மறுதேர்வு அறிவிப்புகளாலும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி, நாடு முழுவதும் பல அப்பாவி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளனர்! இது வெறும் பேப்பர் லீக் அல்ல, இளைஞர்களின் உயிரோடு விளையாடும் கொலைக் களம்!</p><p>- எல்லையைப் பாதுகாக்க வேண்டிய ராணுவப் படைகளை இன்று கேள்வித்தாள்களைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்ல பயன்படுத்த வேண்டிய அவல நிலைக்கு இந்த ஆட்சியில் கல்வித் துறை தள்ளப்பட்டுள்ளது!</p><p>- 'குஜராத் மாடல்', 'டபுள் இன்ஜின்' என மார்தட்டும் குஜராத்தில் 2015-க்கு முன் பூஜ்யமாக இருந்த மோசடி வழக்குகள், இன்று 13 வழக்குகளாகப் பெருகியுள்ளன.</p><p>- தேசிய அளவில் வழக்குகள் 27 ஆக அதிகரித்துள்ளது.</p><p>- பி.ஜே.பி ஆளும் மாநிலங்களில் 60, கூட்டணிக் கட்சிகளின் மாநிலங்களில் 39 என மொத்தம் 100-க்கும் மேற்பட்ட மோசடிகள்!</p><h2>பதவி விலக வேண்டும்</h2><p>பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த கோச்சிங் சென்டர்களாலும், இந்த மோசடி நெக்ஸஸ்ஸாலும் கல்வித் துறை அதிகாரிகளும் முதலாளிகளும் மட்டுமே கோடிகளைக் குவிக்கிறார்கள்; மாணவர்களுக்கு மிஞ்சுவது மரணமும் ஏமாற்றமும் மட்டுமே!</p><p>நீங்கள் நடத்துவது அரசாங்கமா, இல்லை 'கேள்வித்தாள் ஆலோசனை மையமா'? </p><p>இதற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘எல்லோருக்கும் நம்மை பிடிக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது’ - நடிகை ரம்யா பாண்டியன் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-not-necessary-for-everyone-to-like-us-actress-ramya-pandian</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-not-necessary-for-everyone-to-like-us-actress-ramya-pandian#comments</comments><guid isPermaLink="false">2e315248-7912-47bf-9214-a7906168cda4</guid><pubDate>Sun, 12 Jul 2026 09:08:16 +0000</pubDate><atom:updated>2026-07-12T09:08:16.276Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ரம்யா பாண்டியன்,Ramya Pandian</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/hj4tfp4x/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/hj4tfp4x/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி.சரவணன் தயாரிப்பில், கணேஷ் விநாயகன் இயக்கத்தில் அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், காளிவெங்கட், வி.டி.வி.கணேஷ், கிருத்திகா உள்ளிட்டோர் நடித்துள்ள 'அருள்வான்' படம் வரும் 17-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், ‘அருள்வான்’ படக்குழுவினர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினர். </p> <p>அப்போது நடிகை ரம்யா பாண்டியனிடம், ‘உங்களைப் பற்றி வரும் டிரோல்களை எப்படி கையாள்கிறீர்கள்?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “டிரோல்கள் என்னை பெரிதாக பாதித்தது கிடையாது. கேலி செய்பவர்களின் ஆக்‌ஷன் எனது கட்டுப்பாட்டில் இல்லை. எனது ரியாக்‌ஷன்தான் என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது. எனவே, டிரோல் செய்பவர்களை நான் கண்டுகொள்ள மாட்டேன், தவிர்த்து விடுவேன். </p><p>எந்த ஒரு இயக்குநரும், ‘இந்த நடிகையை டிரோல் செய்துவிட்டார்கள், இவர் நமது கதைக்கு வேண்டாம்’ என்று நினைக்கவில்லை. எல்லோருக்கும் நம்மை பிடிக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. பிடித்தவர்கள் என்னை ஏற்றுக் கொள்கிறார்கள், பிடிக்காதவர்கள் அவர்களுக்கு தெரிந்த விதத்தில் டிரோல் செய்கிறார்கள். அது என்னை பாதிப்பதில்லை” என்று தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>தொடர்ந்து தொல்லை கொடுத்த தொழிலாளி.. வெளிநாட்டில் இருக்கும் கணவருக்கு மெசேஜ் அனுப்பி விட்டு பெண் எடுத்த விபரீத முடிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-takes-drastic-step-after-messaging-husband-abroad-about-a-worker-who-kept-harassing-her</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-takes-drastic-step-after-messaging-husband-abroad-about-a-worker-who-kept-harassing-her#comments</comments><guid isPermaLink="false">ae567f68-4bbd-4d0d-a688-87a21eaac8e3</guid><pubDate>Sun, 12 Jul 2026 08:54:52 +0000</pubDate><atom:updated>2026-07-12T08:54:52.217Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,police investigation,தற்கொலை,Suicide,Kulasekaram,குலசேகரம்,போலீசார் விசாரணை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/g4xfk35z/kanya.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/g4xfk35z/kanya.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>குலசேகரம், </p><p>குலசேகரம் அருகே வெளிநாட்டில் வசிக்கும் கணவருக்கு குறுந்தகவல் அனுப்பி விட்டு பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><h2>தகராறு செய்த தொழிலாளி</h2><p>குமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள திருநந்திக்கரை மூலைப்பாகம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (வயது 40). இவர் துபாயில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி அனிஷா (33). இந்த தம்பதிக்கு 1-ம் வகுப்பு படிக்கும் ஒரு பெண் குழந்தை உண்டு. பட்டதாரியான அனிஷா குலசேகரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.</p><p>இந்தநிலையில் மகேஷ் சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்து விட்டு குடும்பத்தினரிடம் உற்சாகமாக பொழுதை கழித்தார். பிறகு கடந்த 20 நாட்களுக்கு முன்பு அவர் மீண்டும் துபாய்க்கு சென்றார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் வீட்டில் இருந்த அனிஷாவிடம், ரப்பர் மரம் வெட்டும் தொழிலாளி ஒருவர் தகராறு செய்ததாக தெரிகிறது.</p><h2>நான் இனி வாழ விரும்பவில்லை</h2><p>இதனை தொடர்ந்து அனிஷா மனமுடைந்த நிலைக்கு சென்றார். நேற்று அதிகாலையில் செல்போன் மூலம் அனிஷா, வெளிநாட்டில் உள்ள கணவருக்கு மெசேஜ் ஒன்றை அனுப்பினார். அதில், நான் அவன் மேல் விருப்பப்பட்டு பழகியது கிடையாது. என்னால் இனி வாழ முடியாது. குழுவில் கட்ட வேண்டிய பணத்தை எனக்காக கட்டி விடுங்கள். </p><p>நான் இனி வாழ விரும்பவில்லை. என்னை அவன் வாழ விடமாட்டான். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். மகளை பார்த்துக் கொள்ளுங்கள் என உருக்கமாக அனுப்பியுள்ளார்.</p><p>இந்த குறுந்தகவலை சிறிது நேரம் கழித்து பார்த்த மகேஷ், அதிர்ச்சி அடைந்தார். உடனே தனது மனைவிக்கு செல்போனில் அழைத்துள்ளார். ஆனால் அவர் செல்போனை எடுக்கவில்லை. இதனை தொடர்ந்து தன்னுடைய தந்தையை தொடர்பு கொண்டு பதற்றத்துடன் நடந்த விவரத்தை கூறியுள்ளார்.</p><h2>விபரீத முடிவு</h2><p>இதையடுத்து மகேஷின் தந்தை, தன்னுடைய மற்றொரு மகனை அழைத்து கொண்டு அனிஷாவின் அறைக்கு சென்றுள்ளார். அங்கு கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை தட்டி பார்த்தபோது உள்ளே இருந்து எந்தவொரு சத்தமும் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் உடனடியாக குலசேகரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.</p><p>விரைந்து வந்த போலீசார் அறையின் கதவை உடைத்து பார்த்த போது, அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அனிஷா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். பின்னர் அனிஷா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.</p><p>மேலும் இதுகுறித்து மகேஷின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>பரபரப்பு தகவல்</h2><p>போலீசார் நடத்திய விசாரணையில், ரப்பர் மரம் வெட்டும் தொழிலாளி ஒருவர், தன்னுடன் தொடர்ந்து பழக வேண்டும் என கூறி அனிஷாவுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததால் அவர் மனவேதனையில் இருந்துள்ளார். இதனால் தன்னுடைய கணவருக்கு குறுந்தகவல் அனுப்பி விட்டு அனிஷா உயிரை மாய்த்துக் கொண்டது அம்பலமானது. அனிஷாவுக்கு தொந்தரவு கொடுத்த தொழிலாளிக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.</p><p>இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த தொழிலாளியை தேடி போலீசார் விரைந்தனர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். எனவே அவரை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>ஓடவில்லை.. ஒளியவில்லை.. பதுங்கவில்லை - விஜய்க்கு எ.வ.வேலு பதிலடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/didnt-run-didnt-hide-didnt-hide-ev-velus-reply-to-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/didnt-run-didnt-hide-didnt-hide-ev-velus-reply-to-vijay#comments</comments><guid isPermaLink="false">33436d62-693d-44c9-888b-4be8d024a812</guid><pubDate>Sun, 12 Jul 2026 08:31:30 +0000</pubDate><atom:updated>2026-07-12T08:31:30.483Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,திமுக,DMK,எ.வ.வேலு,Ev Velu,தமிழக அரசியல்,tn politics,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/tzyq73x3/CHENNAI-15.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/tzyq73x3/CHENNAI-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>லஞ்ச ஒழிப்புத்துறை</h2><p>தமிழகத்தில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் சாலைகளை மேம்படுத்த ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. எந்த இடத்திலும் பணிகளே நடைபெறாத நிலையில், முன்கூட்டியே தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு கோடிக்கணக்கில் தொகை விடுவிக்கப்பட்டு முறைகேடு நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையில் கடந்த 2022-ம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது.</p><h2>சிங்கப்பூர் பயணம்</h2><p>தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்து, தவெக அரசு அமைந்த பிறகு, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, துறை அதிகாரிகள், தனியார் ஒப்பந்ததாரர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். எ.வ.வேலு மற்றும் தொடர்பு உடையவர்களின் வீடுகளில் கடந்த ஜூன் 25-ம் தேதி சோதனை நடத்தினர். அடுத்த நாளான 26-ம் தேதி எ.வ.வேலு மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றார் அங்கு உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.</p><h2>விஜய் விமர்சனம்</h2><p>இதற்கிடையில், கரூரில் நேற்று முன்தினம் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் விஜய் பேசுகையில், ஒருவர் வெளிநாட்டில் போய் ஒளிந்து கொண்டார். வெளிநாடு என்றதும், ஸ்டாலின் சார் என்று நினைத்துவிட போகிறீர்கள். அவர் இல்லை. எனக்கு எப்போதுமே ஸ்டாலின் சார் மேல் தனி பாசம் உண்டு. அவர் கிடையாது. சிங்கப்பூருக்கு செக்கப்புக்கு போனாரே அவர் என்று எ.வ.வேலுவை தாக்கி விஜய் பேசினார்.</p><h2>எலிசபெத் மருத்துவமனை</h2><p>இந்த நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மருத்துவ சிகிச்சை முடித்துக்கொண்டு சிங்கப்பூரில் இருந்து இன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>சிங்கப்பூரில் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் 2016 முதல் இதயப் பிரச்சினைக்கு சிகிச்சை பெற்று வருகிறேன்; சிங்கப்பூர் செல்ல கடந்த மாதம் 15ம் தேதியே விசாவுக்கு விண்ணப்பித்தேன். 15ம் தேதி விண்ணப்பித்து விசா கிடைத்தவுடன் 17ம் தேதி டிக்கெட் எடுத்தேன். சிங்கப்பூர் புறப்பட்டுக் கொண்டிருந்த அன்றுதான் போலீசார் சோதனைக்கு வந்தார்கள். போலீசார் சோதனைக்கு வந்ததால் சிங்கப்பூர் பயண டிக்கெட்டை மாற்றி புக் செய்தேன். லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டதால் அன்று முழு ஒத்துழைப்பு கொடுத்தேன்.</p><p>ஒவ்வாமை, நரம்பு மற்றும் இதயம் சார்ந்த பிரச்சனைகள் எனக்கு உள்ளது; சிங்கப்பூரில் ஜூன் 29ம் தேதி நியூரோ பிரச்சனைக்காக சிகிச்சை பெற்றேன்; 30ம் தேதியன்று வயிறு தொடர்பான பிரச்சனைக்கு சிகிச்சை பெற்றேன்; ஜூலை 3-ம் தேதி இதய மருத்துவரிடம் சிகிச்சை பெற்றேன். நான் சிகிச்சை பெற்றதற்கான ஆவணங்கள் அனைத்தும் என்னிடம் உள்ளது; அவற்றை காண்பிக்க தயார்.</p><h2>ஓடுகிறேன். ஒளிகிறேன்</h2><p>ஜூலை 3ஆம் தேதி ஆஜராக சம்மன் கொடுக்கப்பட்டது. அதற்கு உரிய மரியாதை கொடுத்து பதில் கடிதம் கொடுத்தேன். ஜூலை 3இல் கொடுத்த சம்மனுக்கு 10 நாள்களுக்குப் பிறகு வருவதாக கடிதம் மூலம் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பதில் அளித்தேன். மீண்டும் 9ஆம் தேதி வரச்சொல்லி லஞ்ச ஒழிப்புத் துறை சம்மன் அளித்தது. விசாரணைக்கு ஒத்துழைப்பதாக நான் கூறியும் ஓடுகிறேன். ஒளிகிறேன் எனக் கூறுகின்றனர்.</p><p>நான் ஓடவில்லை. ஒளியவில்லை. பதுங்கவில்லை; ஓடுவது, ஒளிவது, பதுங்குவது திமுகவினரின் பழக்கம் இல்லை. திமுக எங்களை அப்படி வளர்க்கவில்லை; நான் எந்த குற்றமும் செய்யவில்லை, வரும் 15-ம் தேதி விசாரணைக்கு ஆஜராவேன். ஒத்துழைப்பதாக எனது பயணம் பற்றி தங்களின் கற்பனைகளை அவிழ்த்துவிட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சிவகாசியில் தொழிலதிபர் வீட்டில் 75 சவரன் நகைகள் கொள்ளை: 4 பேர் கைது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/75-sovereigns-worth-of-jewellery-stolen-from-businessmans-house-in-sivakasi-4-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/75-sovereigns-worth-of-jewellery-stolen-from-businessmans-house-in-sivakasi-4-arrested#comments</comments><guid isPermaLink="false">5baeec66-52e5-4e3d-acdb-f3ebb33f2c63</guid><pubDate>Sun, 12 Jul 2026 08:30:12 +0000</pubDate><atom:updated>2026-07-12T08:30:12.587Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Virudhunagar,விருதுநகர்,House,4 பேர் கைது,4 people arrested,வீடு,Sivakasi,சிவகாசி,நகை கொள்ளை,Jewelry robbery,தொழிலதிபர்,businessman</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/qa7000i1/Untitled-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நகை கொள்ளை, 4 பேர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/qa7000i1/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர், </p><p>விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதியில் தொழிலதிபர் வீட்டில் 75 சவரன் நகைகளை கொள்ளையடித்த வழக்கில், தூத்துக்குடியைச் சேர்ந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">4 பேர் கைது</a> செய்யப்பட்டுள்ளனர். </p><h2>தொழிலதிபர் வீட்டில் 75 சரவன் &nbsp;<strong>நகைகள்</strong> கொள்ளை</h2><p>விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஐயப்பன்காலனி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரீஅரவிந்த்ராம் வீட்டில், முகமூடி அணிந்த நபர்கள் நுழைந்து 75 சவரன் நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து சிவகாசி டி.எஸ்.பி. அனில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. </p><h2>4 பேர் கைது</h2><p>டி.எஸ்.பி. அனில்குமார் தலைமையிலான தனிப்படையினர் மதுரை, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தங்களது விசாரணையை முடுக்கிவிட்டனர். இதில், முகமூடி கொள்ளையர்களுக்கு பின்னணியில் இருந்து உதவியாக செயல்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த பேச்சிமுத்து (வயது 21), சோமசுந்தரம்(24), ப்ரித்விராஜன்(28), மனோஜ்குமார்(24) ஆகிய 4 பேரை சிவகாசி போலீசார் அதிரடியாக கைது செய்து அழைத்து வந்தனர். </p><p>கைது செய்யப்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த 4 பேரிடமும் சிவகாசியில் உள்ள காவல் நிலையத்தில் வைத்து போலீசார் தனித்தனியாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 75 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட முக்கிய வழக்கில், தொடர்புடைய நபர்களை சிவகாசி டி.எஸ்.பி. அனில்குமார் தலைமையிலான தனிப்படையினர் 5 நாட்களுக்குள் விரைந்து கைது செய்ததற்கு உயர் போலீஸ் அதிகாரிகளும், சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்தனர். </p>]]></content:encoded></item><item><title>அதிமுகவின் வெற்றிக்கு பாமகவே முக்கிய காரணம் - அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pmk-is-the-main-reason-for-aiadmks-victory-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pmk-is-the-main-reason-for-aiadmks-victory-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">7c172b64-a661-48cf-aa51-1f8fdb1ed928</guid><pubDate>Sun, 12 Jul 2026 08:06:58 +0000</pubDate><atom:updated>2026-07-12T08:06:58.838Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK,அதிமுக</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/mizuhvxf/CHENNAI-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/mizuhvxf/CHENNAI-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டு அரசியலின் வழித்திசையை தீர்மானிக்கும் சக்தியாகவும், ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின்  உரிமைக்குரலாகவும் விளங்கும் பாட்டாளி மக்கள் கட்சி வரும் ஜூலை 16-ம் தேதி 37 ஆண்டுகளை நிறைவு செய்து  38-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த தருணத்தில் உலகெங்கும் வாழும் பாட்டாளி சொந்தங்களாகிய உங்கள் அனைவருக்கும் நமது நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் சார்பிலும், எனது சார்பிலும் உளமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>மருத்துவர் அய்யா ராமதாசின்  நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான அவர் வகுத்துக் கொடுத்தப் பாதையிலிருந்து கொஞ்சமும் விலகாமல் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். ஓர் அரசியல் இயக்கத்தின் வெற்றி ஆட்சியைப் பிடிப்பது மட்டும் தானா என்றால் இல்லை. அதிகாரத்திற்கு வராமலேயே அரசு இயந்திரத்தையும், அதிகார மையத்தையும் இயங்கச் செய்வது தான் ஓர் அரசியல் இயக்கத்தின் உண்மையான வெற்றி. அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சி தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.</p><p>அடித்தட்டு மக்களில் தொடங்கி அரசு ஊழியர்கள் வரை அனைவரும் தங்களின் சிக்கல்களை பாட்டாளி மக்கள் கட்சி பேசினால், அதற்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புவது இதற்கு சான்று ஆகும். இந்தியாவின் அரசியல் என்பது 16-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வணிகம் செய்ய வந்த காலத்தில் தொடங்குகிறது. அதற்கு வயது குறைந்தபட்சம் 500 ஆண்டுகள். சுதந்திர இந்தியாவின் ஜனநாயக அரசியல் 78 ஆண்டுகளைக் கடந்து தொடர்கிறது.</p><p>இந்த காலகட்டங்களில் நாடு முழுவதும் 100 கோடிக்கும் கூடுதலான மக்கள் பயனடையும் வகையில் மொத்தம் 6 இட ஒதுக்கீடுகளை வென்றெடுத்துக் கொடுத்த ஒரே இயக்கம் பாட்டாளி மக்கள் கட்சி தான். பாட்டாளிகளுக்கு இதைவிட வேறு பெருமை தேவையில்லை. பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரையிலான 37 ஆண்டுகளில் தமிழக மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளையும், உடமைகளையும் மீட்டெடுத்துக் கொடுத்த இயக்கம் பாட்டாளி மக்கள் கட்சி தான்.</p><p>கல்வி, வேலைவாய்ப்பு, சமூகநீதி, வேளாண்மை, நீர்ப்பாசனம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளில் பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்ட இயக்கங்களாலும், பணிகளாலும் தமிழ்நாட்டில் பயனடையாத குடும்பங்களே இருக்க முடியாது என்பதை நினைத்து நாம் அனைவரும் பெருமிதப்படலாம். தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் காலத்திற்கு ஏற்றவாறு நம்மை பாராட்டியிருக்கலாம்; விமர்சித்திருக்கலாம்; ஆனால், மக்களுக்காகவும், தமிழகத்திற்காகவும் பாட்டாளி மக்கள் கட்சி ஆற்றிய பணிகளை எந்தவொரு இயக்கத்தாலும் மறுக்க முடியாது.</p><p>தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகவும், உறுதியாகவும் பாட்டாளி மக்கள் கட்சி இன்றளவும் நிலைத்திருப்பதற்கு காரணம் நமது உழைப்பும், அர்ப்பணிப்பும் தான். 2026 சட்டசபை தேர்தலில் நாம் அங்கம் வகிக்கும் கூட்டணி தான் ஆட்சியைக் கைப்பற்றும் என்று உறுதியாக நம்பினோம். நான் பரப்புரைக்கு சென்ற இடங்களில் எல்லாம் கிடைத்த மக்களின் அமோக ஆதரவு நமது நம்பிக்கையை உறுதி செய்தது. ஆனால், எவருமே எதிர்பாராத அலை வீசியதால் தேர்தல் முடிவுகள் மாறின.</p><p>ஆனாலும் கூட நாம் மலை போல வலுவாக உள்ள பகுதிகளில் அந்த அலையால் எதுவும் செய்ய முடியவில்லை. 35-க்கும் மேற்பட்ட இடங்களில் நமது கூட்டணி கட்சி வெற்றி பெற நாம் தான் காரணமாக இருந்திருக்கிறோம். நாம் 4 இடங்களில் தான் வெற்றி பெற்றோம் என்றாலும் இன்றைய சூழலில் நாம் பெற்ற அந்த 4 இடங்கள் 40 இடங்களுக்கு சமமானது என்பதை பாட்டாளி சொந்தங்களாகிய நீங்கள் அறிவீர்கள்.</p><p>சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்த பிறகு நாம் ஓய்வெடுக்கவில்லை. நமது மக்கள் பணி முன்பை விட வேகமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சாதிவாரி சர்வே நடத்தப்பட வேண்டும் என்பது நமது 46 ஆண்டு கால கோரிக்கை ஆகும். கடந்த கால ஆட்சியாளர்கள் அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற முன்வராத நிலையில் இன்றைய ஆட்சியாளர்களிடம் அந்தக் கோரிக்கையை முன்வைத்து, தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே நடத்தப்படும் என்று கவர்னர் உரை மூலம் அறிவிக்கச் செய்திருக்கிறோம். இதை விட மகிழ்ச்சியும், மனநிறைவும் அளிக்கக் கூடிய நற்செய்தி நமக்கு இருக்க முடியுமா?.</p><p>நமது குரல் சட்டப்பேரவையில் ஓங்கி ஒலித்திருக்கிறது. அதன் எதிரொலி தமிழ்நாடு முழுவதும் கேட்கத் தொடங்கியுள்ளது. இதை விட வேறு என்ன பேறு வேண்டும்?. ஆட்சியில் இல்லாவிட்டாலும், மக்களுக்காக களத்தில் இறங்கி போராடுவதில் அன்றும், இன்றும் பாட்டாளி மக்கள் கட்சி தான் உண்மையான எதிர்க்கட்சியாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கும் நிலையை எட்ட வேண்டும் என்பதே மருத்துவர் ராமதாசின் கனவு; அது தான் நம் அனைவரின் நோக்கம். மருத்துவர் அய்யா ராமதாசின் கனவை நனவாக்கும் பயணத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் 38-ம் ஆண்டு புதிய தொடக்கமாக அமையும். இந்த ஆண்டின் அரசியலிலும், சமூகநீதியிலும் மேலும் பல சாதனைகளை படைக்கப் போகிறோம்.</p><p>பாட்டாளி மக்கள் கட்சியின் 38-ம் ஆண்டு தொடக்கவிழாவை தமிழ்நாடு மட்டுமின்றி, அண்டை மாநிலங்களிலும் உள்ள பாட்டாளி சொந்தங்கள் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். அனைத்துக் கிளைகளிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியேற்று விழாக்கள் நடத்தப்பட வேண்டும்; வாய்ப்புள்ள இடங்களில் பொதுக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அடுத்தடுத்து நடைபெறவிருக்கும் நமக்கு வெற்றியும், மகிழ்ச்சியும் அளிக்கும் நிகழ்வுகளில் உங்களை சந்திக்க காத்துக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் அம்பேத்கர் சிலை திறக்க எதிர்ப்பு... சேலத்தில் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/protest-against-opening-of-ambedkar-statue-sitting-cross-legged-uproar-in-salem</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/protest-against-opening-of-ambedkar-statue-sitting-cross-legged-uproar-in-salem#comments</comments><guid isPermaLink="false">b962b67b-2e48-4e09-8998-8616ad110dfa</guid><pubDate>Sun, 12 Jul 2026 07:50:15 +0000</pubDate><atom:updated>2026-07-12T07:50:15.157Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,சேலம்,Ambedkar statue,அம்பேத்கர் சிலை,அம்பேத்கர்,Ambedkar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/5a7zickl/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/5a7zickl/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><h2>அம்பேத்கர் சிலை</h2><p>சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே ஒதியத்தூர் ஊராட்சியில் உள்ள நான்கு ரோடு ரவுண்டானா பகுதியில் 2020-ம் ஆண்டு அம்பேத்கர் சிலை ஒரு தரப்பினரால் அமைக்கப்பட்டது. நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பதுபோல் அம்பேத்கர் சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்த சிலையை 2021-ம் ஆண்டுதிறக்க முற்பட்டபோது, மற்றொரு தரப்பினர் இந்த பகுதியில் சிலையை திறக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்ததால் பதற்றமான சூழல் நிலவியது.</p><p>அப்போது பணியில் இருந்த தாசில்தார் வெங்கடேசன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், அந்த சிலை மூடப்பட்டு எதுவாக இருந்தாலும் பேசி முடிவு செய்த பின்பு சிலையை திறக்க வேண்டும் என்றும் கூறினார்கள். இதையடுத்து கடந்த 5 ஆண்டுகளாக சிலை திறக்காமல் துணியால் கட்டப்பட்டிருந்தது.</p><h2>கோர்ட்டு அனுமதி</h2><p>இந்த நிலையில் நேற்று திடீரென்று சிலை திறக்கப்பட்டு இருந்தது. இதைபார்த்து அந்த பகுதியில் உள்ள ஒரு தரப்பினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் உடனடியாக சிலையை மூட வேண்டும் என்று ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இன்னொரு தரப்பினர் சிலை திறக்கப்பட்டு விட்டதால் இனிமேல் மூட மாட்டோம் என்று கூறியதால் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக கெங்கவல்லி போலீசார் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.</p><p>இதையடுத்து ஆத்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் இரு தரப்பினரையும் அழைத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அம்பேத்கர் சிலை அருகே உள்ள காமராஜர் மற்றும் ராஜீவ் காந்தி சிலை என 3 சிலைகளையும் தற்போது தற்காலிகமாக வருவாய்த்துறை உதவியுடன் தகரம் அடித்து மூட முடிவு செய்து உள்ளோம். எதுவாக இருந்தாலும் கோர்ட்டு அனுமதி பெற்ற பின்பு அம்பேத்கர் சிலையை திறக்க வேண்டும் என்றும், மேலும் தற்போது 2 சிலைகள் தற்காலிகமாக மூடப்படுகிறது என்றும் உதவி கலெக்டர் தமிழ் மணி முத்தரப்பு பேச்சுவார்த்தையில் கூறினார்.</p><h2>போலீசார் குவிப்பு</h2><p>இதனிடையே நேற்று இரவு 9 மணி அளவில் ஆத்தூர் உதவி கலெக்டர் தமிழ்மணி மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று 3 சிலைகளையும் தகரம் அடித்து மூடும் பணியை தொடங்கினர். அப்போது போலீசாருக்கும், அம்பேத்கர் சிலையை திறக்க வலியுறுத்தும் தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறை வாகனத்தின் மூலம் பொது மக்கள் கலைந்து செல்வதற்காக தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.</p><p>அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் பெண் போலீஸ் உள்பட 3 போலீசாருக்கும், ஒரு தரப்பை சேர்ந்த 3 பெண்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் கெங்கவல்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையொட்டி ஒதியத்தூர் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>‘வாட்டர்மெலன் ஸ்டார்&apos; திவாகர் மதுரையில் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/watermelon-star-divakar-arrested-in-madurai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/watermelon-star-divakar-arrested-in-madurai#comments</comments><guid isPermaLink="false">5dbd1964-9a32-4d23-9138-c0310395efa0</guid><pubDate>Sun, 12 Jul 2026 07:37:40 +0000</pubDate><atom:updated>2026-07-12T07:37:40.181Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,கைது,arrest,Watermelon,பிக்பாஸ் திவாகர்,Bigg Boss Diwakar,வாட்டர்மெலன்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/mx5dbrld/watermelan.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திவாகர் மதுரையில் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/mx5dbrld/watermelan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p>யூடியூப் சேனல் ஊழியரை ஒரு லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில் வாட்டர் மெலன் ஸ்டார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D">திவாகர்</a> மதுரையில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>வாட்டர்மெலன் ஸ்டார்</h2><p>மதுரையை சேர்ந்தவர் திவாகர். இவர் பிசியோதெரபிஸ்ட் படித்து முடித்தவர். இவர் இன்ஸ்டாகிராமில் 'வாட்டர்மெலன் ஸ்டார்' என்ற பெயரில் புகழ்பெற்றவர். கஜினி திரைப்படத்தில் நடிகர் சூர்யா, சஞ்சய் ராமசாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த படத்தில் வரும் பாடல் ஒன்றில் அவர் தனது கையில் 'தர்பூசணி' பழத்தை வைத்து கொண்டு தனக்கு சல்யூட் அடிப்போரை அங்கிருந்து செல்லும்படி கூறுவார்.</p><p>அந்த சீனை வேடிக்கையாக நடித்து பிரபலமானவர் தான் இந்த திவாகர். தமிழ் 'பிக்பாஸ் -9' சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். அதன்பிறகு யூடியூப் சேனல்களுக்கு பேட்டி, இன்ஸ்டாகிராமில் வேடிக்கையாக வீடியோ போன்றவற்றை பதிவிட்டு வருகிறார். மேலும் சில படங்களிலும், டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.</p><p>இந்நிலையில் 'வாட்டர்மெலன் ஸ்டார்' திவாகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டார். அதில், பல தரப்பினர் மீது குற்றம் சாட்டி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.</p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/pb6732hi/kllerer.jpg" /></figure><h2>கொலை மிரட்டல்</h2><p>இந்த வீடியோவை தொடர்ந்து குறிப்பிட்ட யூடியூப் சேனலை சேர்ந்த நபர் வீடியோவை டெலிட் செய்யும்படி திவாகரிடம் கூறியுள்ளார். அதற்கு திவாகர் அவரிடம் ரூ.1 லட்சம் பணம் கேட்டு, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த நபர், திவாகர் மீது சென்னை கீழ்பாக்கம் போலீசில் புகார் செய்தார். </p><h2>கைது</h2><p>இதையடுத்து போலீசார் கொலை மிரட்டல், பணம் கேட்டு மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் திவாகர் மீடு வழக்குப்பதிவு செய்தனர். திவாகரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் இன்று மதுரை சென்று திவாகரை கைது செய்துள்ளனர். யூடியூபர் ஒருவரை மிரட்டி ரூ.1 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆதியோகி வளாகத்தில் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/breast-cancer-screening-camp-for-women-at-isha-yoga-center</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/breast-cancer-screening-camp-for-women-at-isha-yoga-center#comments</comments><guid isPermaLink="false">b8ee30a5-4177-44de-9812-fa4bb11a4126</guid><pubDate>Sun, 12 Jul 2026 07:34:29 +0000</pubDate><atom:updated>2026-07-12T07:34:29.559Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஈஷா யோகா மையம்,Isha,மார்பக புற்றுநோய்,Adiyogi,ஆதியோகி,மருத்துவ பரிசோதனை முகாம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/40vkgo5h/Breast-cancer-camp2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஈஷா, கங்கா மருத்துவமனை சார்பில் இலவச மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/40vkgo5h/Breast-cancer-camp2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p>ஈஷா அவுட்ரீச்&nbsp; இயக்கம் மற்றும் கங்கா மருத்துவமனை இணைந்து நடத்திய கிராமப்புற மற்றும் மலைவாழ் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D">பரிசோதனை முகாம்</a>, ஈஷா ஆதியோகி வளாகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (12.07.2026) நடைபெற்றது. இம்முகாமில் ஈஷாவைச் சுற்றியுள்ள பழங்குடியின கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். </p><p>அவர்களுக்கு கங்கா மருத்துவமனையின் சார்பில் நவீன கருவிகள் மூலமாக மார்பகப் புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.</p><figure><img alt="ஈஷா, கங்கா மருத்துவமனை சார்பில் இலவச மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம்" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/7o3tpjbn/Breast-cancer-camp1.jpg" /><figcaption>மார்பக புற்றுநோய் கண்டறிதல் முகாம்</figcaption></figure><h2>இலவச பரிசோதனை</h2><p>இந்த முகாம் குறித்து கங்கா மருத்துவமனையின் மார்பகப் புற்றுநோய் அறுவைச்சிகிச்சை மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் மருத்துவர் ராஜா சண்முக கிருஷ்ணன் கூறிதாவது, “கங்கா மருத்துவமனை சார்பில் 2020-ஆம் ஆண்டு முதல் ப்ராஜக்ட் சக்தி திட்டத்தில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் <a href="https://www.dailythanthi.com/topic/மருத்துவ-பரிசோதனை-முகாம்">பரிசோதனை முகாம்</a> மேற்கொண்டு வருகிறோம். இந்த முகாம் எங்களது 150-ஆவது முகாம். இதுவரை சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு  இந்தப் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளோம். அதில் புற்றுநோய் கண்டறியப்பட்ட 81 மார்பகப் புற்றுநோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளித்துள்ளோம். </p><p>அந்த வகையில் அதிகளவிலான சேவைப்பணிகளை மேற்கொண்டு வரும் ஈஷா அறக்கட்டளையுடன்  இணைந்து எங்களின் 150-ஆவது முகாமை ஆதியோகி வளாகத்தில் ஏற்பாடு செய்தோம். இங்கு அனைத்து பரிசோதனைகளும் முழுவதும் இலவசமாக மேற்கொள்ளப்படடன. இத்துடன், பெண்களுக்கு தேவையான ஆலோசனைகளும் வழங்கியுள்ளோம்” என்றார்.</p><h2>இலவச சிகிச்சை</h2><p>ஈஷா அவுட்ரீட் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ம.சந்திரகாசா கூறியதாவது, “மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு மேற்கொள்வதில் கங்கா மருத்துவமனை மிகப்பெரிய பங்கு வகித்துள்ளது. அவர்கள் இதுவரை நடத்தியுள்ள இலவச <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D">மார்பகப் புற்றுநோய்</a> பரிசோதனை முகாம்களில், ஈஷா அவுட்ரீச் இயக்கம் 18 முகாம்களில் இணைந்து பணியாற்றி உள்ளது. இந்த 18 முகாம்களில் 873 பெண்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 7 பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளித்து, பூரண குணமடையும் வரை தங்கள் பங்களிப்பை கங்கா மருத்துவமனை அளித்துள்ளது. </p><p>பழங்குடியின பெண்கள் பெரும்பாலும் இதுபோன்ற மருத்துவப் பரிசோதனை முகாம்களுக்கு செல்ல மாட்டார்கள். இதுதொடர்பாக, நாம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகு அவர்கள் முகாம்களுக்கு வரத் தொடங்கியுள்ளனர். பழங்குடியின பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து கங்கா மருத்துவமனை 150-ஆவது மருத்துவ பரிசோதனை முகாமை நடத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுடன் இணைந்து செயல்படுவதில் பெருமைப்படுகிறோம்” என்றார்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-worker-dies-after-falling-into-well</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-worker-dies-after-falling-into-well#comments</comments><guid isPermaLink="false">38046e3c-aa7e-4768-9c6f-0b8d443ad281</guid><pubDate>Sun, 12 Jul 2026 07:34:07 +0000</pubDate><atom:updated>2026-07-12T07:34:07.658Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,dies,Worker,தொழிலாளி,உயிரிழப்பு,well,கிணறு,தவறி விழுந்து,Falls</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/rem6kskf/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தொழிலாளி உயிரிழப்பு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/rem6kskf/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி அருகே கீழ தட்டப்பாறை பகுதியில் உள்ள தோட்டத்துக் கிணற்றில் தவறி விழுந்து <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கூலித் தொழிலாளி உயிரிழந்தார்</a>.</p><h2>கரிமூட்டம் போடும் பணி</h2><p>தூத்துக்குடி அருகே கீழ தட்டப்பாறையைச் சேர்ந்த சுப்பையா(எ) மணி (வயது 45), கூலித் தொழிலாளி. கீழ தட்டப்பாறை கைலாசபுரம் பகுதியில் பெங்களூரைச் சேர்ந்த ராஜன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் சுப்பையா, சக்தி, அய்யனடைப்பைச் சேர்ந்த முனியசாமி ஆகிய 3 பேரும் கரிமூட்டம் போடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.</p><h2>கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி</h2><p>கரி தயாரிக்க எரியும் நெருப்பில் தண்ணீர் ஊற்றுவதற்காக தோட்டத்தில் உள்ள கிணற்றிலிருந்து சுப்பையா தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கிணற்றிற்குள் தவறி விழுந்தார். அவர் கிணற்றில் விழுந்ததை அடுத்து, சக தொழிலாளர்கள் அவரை மீட்க முயன்றும் பலனளிக்கவில்லை. </p><h2>உயிரிழப்பு</h2><p>தண்ணீரில் மூழ்கிய சுப்பையா கிணற்றிலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: நெல்லை, தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-nellai-tenkasi-the-day-after-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-nellai-tenkasi-the-day-after-tomorrow#comments</comments><guid isPermaLink="false">4305ed27-24ad-4c18-8e22-40e87c59b7f5</guid><pubDate>Sun, 12 Jul 2026 07:18:36 +0000</pubDate><atom:updated>2026-07-12T07:18:36.720Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,Tenkasi,monthly maintenance work,power outage,தென்காசி,மாதாந்திர பராமரிப்பு பணி,மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/b7vt9o9e/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/b7vt9o9e/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி AMRL துணை மின் நிலையம் மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள மங்கம்மாள் சாலை துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுநாள் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மின்தடை </a>செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>வள்ளியூர் கோட்டம்</h2><p>வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்டள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>நாங்குநேரி AMRL துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (14.7.2026, செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையத்தில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குறிப்பிட்டுள்ள நேரங்களில்  மின்விநியோகம் இருக்காது. </p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>நாங்குநேரி, ராஜக்கள்மங்களம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி, பெருமளஞ்சி கீழ் ஊர், பெருமளஞ்சி மேல் ஊர், ஆச்சியூர், வாகைகுளம், கோவனேரி, AMRL தொழிற்கூடம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  </p><h2>தென்காசி கோட்டம்</h2><p>தென்காசி கோட்ட செயற்பொறியாளர் ஸ்ரீ வனஜா வெளியிட்டள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>மங்கம்மாள் சாலை துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (14.7.2026, செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.</p><h2>காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை</h2><p>தென்காசி புதிய பேருந்து நிலையம், மங்கம்மாள் சாலை பகுதிகள், சக்தி நகர், காளிதாசன் நகர், ஹவுசிங் போர்டு காலனி மற்றும் கீழப்புலியூர், தென்காசி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>பழம்பெரும் பின்னணி பாடகி எஸ். ஜானகி மறைவு:  ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்; கண்ணீர் அஞ்சலி செலுத்த திரண்ட பொதுமக்கள்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/passing-of-veteran-playback-singer-s-janaki-condolences-from-the-president-and-prime-minister-public-gathers-to-pay-tearful-tributes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/passing-of-veteran-playback-singer-s-janaki-condolences-from-the-president-and-prime-minister-public-gathers-to-pay-tearful-tributes#comments</comments><guid isPermaLink="false">05a3698f-a867-4681-ac4a-00dc8c4f0136</guid><pubDate>Sun, 12 Jul 2026 07:13:54 +0000</pubDate><atom:updated>2026-07-12T07:13:54.817Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பொதுமக்கள்,Tribute,Public,singer S. Janaki,பாடகி எஸ். ஜானகி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/9q90eyg8/fpsjt.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/9q90eyg8/fpsjt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>மைசூரு</p><p>பழம்பெரும் பின்னணி பாடகி எஸ். ஜானகி மறைவை அடுத்து அவருடைய உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்த பொதுமக்கள் திரளாக சென்று வருகின்றனர்.</p><p>இந்திய சினிமாவின் பழம்பெரும் பின்னணி பாடகி <a href="https://www.dailythanthi.com/">எஸ். ஜானகி </a>வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.  அவருக்கு வயது 88.  ஜானகியம்மா, கான கோகிலா, தென்னிந்தியாவின் நைட்டிங்கேல், இசை அரசி என்று பல்வேறு பட்டங்களில் புகழப்படும் எஸ்.ஜானகி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.</p>  <h2>முதல் பயணம்</h2><p>1938-ம் ஆண்டு ஏப்ரல் 23-ந்தேதி ஆந்திர பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டம் பள்ளபட்லா கிராமத்தில் பிறந்த எஸ். ஜானகி, சிறுவயதில் இருந்தே இசையில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், நாதஸ்வர மேதை பைடிசாமி என்பவரிடம் ஓராண்டு காலம் முறையாக இசைப்பயிற்சி பெற்றவர். தனது மாமாவின் ஆலோசனையின்பேரில் சென்னைக்கு குடிபெயர்ந்த அவர், ஏ.வி.எம். ஸ்டூடியோவில் பின்னணி பாடகியாக தனது திரை பயணத்தை தொடங்கினார்.</p><p>1957-ம் ஆண்டு வெளியான 'விதியின் விளையாட்டு' என்ற திரைப்படத்தில் 'பெண் என் ஆசை பாழானது ஏனோ...' என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மறுநாளே தெலுங்கு படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.  அந்த வகையில் 'எம்.எல்.ஏ.' என்ற படத்தில் 'நீயாசா அடியார்...' என்ற பாடலை கண்டசாலாவுடன் இணைந்து பாடி தெலுங்கு சினிமாவிலும் அடியெடுத்து வைத்தார்.</p>  <h2>காலத்தால் அழியாத பாடல்கள்</h2><p>1957 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில், ஜானகி தனது தனித்துவமான குரலால் பல தலைமுறை இசையமைப்பாளர்கள் மற்றும் நடிகர்களின் பாடல்களுக்கு உயிரூட்டினார். எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் இவர் பாடிய பாடல்கள் இன்றும் காலத்தால் அழியாதவை. தனது தாய்மொழியான தெலுங்கு மட்டுமின்றி, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, ஒடிசா, பெங்காலி, மராத்தி, துளு, உருது, குஜராத்தி, பஞ்சாபி, கொங்கனி, அசாமி, சிந்து, ஆங்கிலம், ஜப்பான், அரபு, ஜெர்மன், சிங்களம் உள்ளிட்ட மொழிகளில் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.  பல பக்தி பாடல்களை தானே எழுதி, இசையமைத்து பாடியுள்ளார்.</p>  <h2>தேசிய விருதுகள்</h2><p>ஜானகியின் அசாத்திய குரல் திறமைக்காக எண்ணற்ற விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 4 முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார்.  இதன்படி 1976-ல் பதினாறு வயதினிலே படத்தின் செந்தூரப்பூவே, 1980-ல் மலையாள படத்தின் எட்டுமனூரம்பழத்தில், 1984-ல் தெலுங்கு படத்தின் வெண்ணெல்லோ கோதாரி அந்தம், 1992-ல் தேவர் மகன் படத்தில் இஞ்சி இடுப்பழகா ஆகிய பாடல்களுக்காக நான்கு தேசிய விருதுகளை வென்றார்.</p><p>தமிழகம், கேரளம், கர்நாடகா போன்ற பல்வேறு மாநில அரசுகளின் திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார்.  1992-ல் இலங்கையில் அவருக்கு "ஞான கான சரஸ்வதி" என்ற சிறப்பு பட்டம் வழங்கப்பட்டது.</p>  <h2>இசையமைப்பாளர்கள்</h2><p>எம்.எஸ். விஸ்வநாதன், கே.வி. மகாதேவன், இளையராஜா, கங்கை அமரன், தேவா, ஏ.ஆர். ரஹ்மான், வித்யாசாகர், எஸ்.ஏ. ராஜ்குமார், யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் எண்ணற்ற மறக்க முடியாத பாடல்களை பாடினார்.</p>  <h2>மகன் மறைவு</h2><p>2016-ம் ஆண்டுக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய எஸ்.ஜானகி மைசூருவில் தனது மகன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவரது ஒரே மகன் முரளி கிருஷ்ணா கடந்த ஜனவரி மாதம் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். மருமகள் உமா மற்றும் பேரப்பிள்ளைகளுடன் மைசூருவிலேயே ஜானகி வசித்து வந்தார்.</p><p>தனது ஒரே மகன் இறந்த துயரத்தில் இருந்த ஜானகியை உடல் நலக்குறைவும் பற்றிக்கொண்டது. கடந்த சில மாதங்களாகவே அவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். நேற்று அவரது உடல்நிலை மோசம் அடையவே உடனடியாக மைசூருவில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஜானகிக்கு சிகிச்சையின்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.  அவருடைய மறைவு இந்திய திரையிசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாக பார்க்கப்படுகிறது.</p><p>அவருடைய மறைவுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், திரைத்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p>  <h2>ஜனாதிபதி இரங்கல்</h2><p>ஜனாதிபதி திரவுபதி முர்மு, பாடகி எஸ்.ஜானகி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், </p><p>புகழ்பெற்ற பின்னணி பாடகி எஸ். ஜானகி அம்மா அவர்களின் மறைவால், இந்தியா ஒரு இசைச் சிகரத்தை இழந்துள்ளது. அவரது அபாரமான குரல்வளம் பல தலைமுறையினரை மெய்சிலிர்க்க வைத்தது. ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த அவரது சிறப்பான இசைப் பயணத்தில், இந்தி, ஒடியா, துளு, உருது, பஞ்சாபி மற்றும் பெங்காலி உள்ளிட்ட சுமார் 20 இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை அவர் பாடியுள்ளார்.</p><p>காலத்தால் அழியாத அவரது இசை என்றும் மதிப்புமிக்கதாக திகழும். அவரது குடும்பத்தினருக்கும், எண்ணற்ற ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>  <h2>துணை ஜனாதிபதி இரங்கல்</h2><p>துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், புகழ்பெற்ற பின்னணி பாடகி எஸ்.ஜானகியின் மறைவால் ஆழ்ந்த வருத்தம் அடைகிறேன். அவரது அசாதாரணக்குரல் இந்திய இசையை வளப்படுத்தி, தலைமுறைகள் கடந்து எண்ணற்ற இதயங்களை தொட்டது.</p><p>தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களால் 6 தசாப்தங்களுக்கும் மேலாக பார்வையாளர்களை கவர்ந்தார். அவர் பாரம்பரிய, பக்தி மற்றும் நாட்டுப்புற பாடல்களில் சமமான தேர்ச்சியை வெளிப்படுத்தினார்.</p><p>ஜானகியின் மறைவு இசை உலகத்துக்கும், தேசத்தின் கலைப்பாரம்பரியத்துக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது குடும்பத்தினர், அபிமானிகள் மற்றும் ஒட்டுமொத்த இசைத்துறைக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும். ஓம் சாந்தி.  இவ்வாறு தெரிவித்து உள்ளார்.</p> <h2>பிரதமர் இரங்கல்</h2><p>பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,</p><p>புகழ்பெற்ற பின்னணி பாடகி எஸ். ஜானகி அம்மாவின் மறைவு, இசை மற்றும் கலாசார உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். பல்வேறு மொழிகளில் அமைந்த அவரது பாடல்கள், தலைமுறை தலைமுறையாக பிரபலமாக இருந்தன. அவை, ஈடு இணையற்ற நளினத்துடனும் பன்முகத்தன்மையுடனும் ஒவ்வொரு உணர்விற்கும் குரல் கொடுத்தன. </p><p>அவரது மெல்லிசை, வரும் ஆண்டுகளிலும் கேட்போரைத்தொடர்ந்து வசீகரிக்கும்.  இந்த துயர நேரத்தில், அவரது குடும்பத்தினருக்கும், எண்ணற்ற ரசிகர்களுக்கும், ஒட்டுமொத்த இசைத்துறைக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி.  இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>  <h2>முதல்-அமைச்சர் விஜய் இரங்கல்</h2><p>முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,</p><p>இந்திய திரையிசை உலகில் தனது தனித்துவமான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்ற பழம்பெரும் பின்னணி பாடகி எஸ்.ஜானகி மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.</p><p>தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி, இசை உலகில் அழியாத முத்திரையை பதித்தவர். பலமுறை தேசிய திரைப்பட விருதுகள் உள்பட எண்ணற்ற உயரிய விருதுகளை பெற்ற அவர், தனது இனிமையான குரல், உணர்வுகளை வெளிப்படுத்தும் அபார திறன் மற்றும் இசைக்கான அர்ப்பணிப்பால் ரசிகர்களின் மனங்களில் என்றும் நிலைத்திருப்பார்.</p><p>அவரது மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகினர், இசைக்கலைஞர்கள் மற்றும் உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.  அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என தெரிவித்து உள்ளார்.</p>  <h2>முதல்-மந்திரிகள் இரங்கல்</h2><p>பாடகி எஸ்.ஜானகி மறைவுக்கு தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த்ரெட்டி வெளியிட்ட இரங்கல் பதிவில், 'ஜானகியின் மறைவு இந்திய திரையுலகுக்கு மட்டுமல்ல, கோடிக்கணக்கான இசை ரசிகர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று கூறியுள்ளார்.  ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, கேரள முதல்-மந்திரி வி.டி.சதீசன், கர்நாடக முதல்-மந்திரி சிவக்குமார் முன்னாள் முதல்-அமைச்சர் மற்றும் தி.மு.க. தலைவரான மு.க. ஸ்டாலின், முன்னாள் முதல்-அமைச்சர் மற்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.</p>  <h2>அரசியல் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள்</h2><p>இதேபோல, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.</p><p>முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், நடிகை சிம்ரன், இசையமைப்பாளர்கள் இளையராஜா, தேவா, அனிருத், இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தமிழ் குமரன் உள்ளிட்ட திரையுலகினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.</p>  <h2>இறுதிச்சடங்கு</h2><p>அவருடைய உடல் மகாராஜா கல்லூரி மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள், ரசிகர்கள் இன்று அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டு உள்ளது.  இதனை தொடர்ந்து, பொதுமக்கள்  ஆயிரக்கணக்கில் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.</p><p>அதன்பின்னர் பிற்பகல் 3 மணிக்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, கனியனகுந்தி என்ற இடத்தில் இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டு ஜானகியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>விடுமுறை தினத்தையொட்டி திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள்  குளித்து மகிழ்ந்தனர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-enjoyed-bathing-at-thirparappu-falls-on-the-occasion-of-the-holiday</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-enjoyed-bathing-at-thirparappu-falls-on-the-occasion-of-the-holiday#comments</comments><guid isPermaLink="false">440a4a8e-8dd3-4378-9b7a-77b159583ef6</guid><pubDate>Sun, 12 Jul 2026 07:11:03 +0000</pubDate><atom:updated>2026-07-12T07:11:03.490Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Holiday,Thirparappu Falls,திற்பரப்பு அருவி,விடுமுறை தினம்,Tourists flocked சுற்றுலா பயணிகள் குவிந்தனர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/bkvrv3jp/thirparappu.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/bkvrv3jp/thirparappu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி,</p><p>கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலா தளங்களில் மிக முக்கியமான ஒன்று <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF">திற்பரப்பு அருவி</a>யாகும். வார விடுமுறை தினத்தையொட்டி இன்று தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். குமரி மாவட்ட மலையோரப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.</p><h2>சுற்றுலா பயணிகள்</h2><p>இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அருவியில் கொட்டும் தண்ணீரில் நீண்ட நேரம் நீராடி மகிழ்வதுடன் அருகில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் அடித்தும் மகிழ்கின்றனர். மேலும் அருவியின் மேற்பகுதியில் உள்ள சுற்றுலா படகு துறையில் படகு சவாரி செய்தும் மகிழ்கின்றனர்.</p><h2>மாத்தூர் தொட்டிப்பாலம்</h2><p>திருவட்டார் அருகே உள்ள மாத்தூர் தொட்டிப்பாலத்திலும்  ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் பாலத்தில் நடந்து சென்று இயற்கை அழகை ரசித்தனர். பாலத்தில் இருந்து கீழே இறங்கி தொட்டிப்பாலத்தின் பிரமாண்டமான தூண்களை பார்த்து ரசித்தனர். மேலும் கீழ் பகுதியில் ஓடும் பரளியாற்றில் குளித்து மகிழ்ந்தனர். அத்துடன் குறைந்த விலையில் கிடைக்கும் அன்னாசிப்பழங்களை வாங்கி சாப்பிட்டனர். அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வந்ததால் மாத்தூர் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மொத்தத்தில் வார விடுமுறையான இன்று திற்பரப்பு, மாத்தூர் தொட்டிப்பாலம் பகுதிகள் 'களை' கட்டியது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் மீன் வரத்து குறைவால் விலை அதிகரிப்பு: மீனவர்கள் மகிழ்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fish-prices-increase-due-to-reduced-fish-supply-in-thoothukudi-fishermen-happy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fish-prices-increase-due-to-reduced-fish-supply-in-thoothukudi-fishermen-happy#comments</comments><guid isPermaLink="false">aa6d1354-a6a4-470a-88c1-639deb5271dc</guid><pubDate>Sun, 12 Jul 2026 07:10:20 +0000</pubDate><atom:updated>2026-07-12T07:10:20.332Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மீனவர்கள்,fishermen,Fish,Thoothukudi,தூத்துக்குடி,மீன்,சந்தை,market,happiness,மகிழ்ச்சி,Low,price increase,வரத்து குறைவு,Supply,விலை அதிகரிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/skbk38wl/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மீன் வரத்து குறைவால், விலை அதிகரிப்பு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/skbk38wl/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி, திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களின் வரத்து குறைவாக இருந்தபோதிலும், சந்தையில் மீன்களுக்கு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி</a> அடைந்துள்ளனர்.</p><h2>மீன்வரத்து குறைவு</h2><p>தூத்துக்குடி, திரேஸ்புரத்திலிருந்து கடலுக்குச் சென்ற நாட்டுப்படகுகள் கரை திரும்பின. கடல் பகுதியில் பலத்த காற்று வீசியதன் காரணமாக, வலைகளில் சிக்கிய மீன்களின் வரத்து வழக்கத்தைவிட குறைவாகவே காணப்பட்டது.</p><h2>விலை அதிகரிப்பு</h2><p>மீன் வரத்து குறைந்த சூழலில், திரேஸ்புரம் மீன் ஏலக்கூடத்தில் மீன்களை வாங்குவதற்காகப் பொதுமக்கள், வியாபாரிகள் அதிக அளவில் திரண்டனர். இதனால் ஏற்பட்ட கடுமையான போட்டி காரணமாக மீன்கள் அனைத்தும் கூடுதல் விலைக்கு விற்பனையாகின. </p><h2>சீலா மீன் ஒரு கிலோ ரூ.1,300க்கு விற்பனை</h2><p>இந்த நிலையில் தூத்துக்குடியில் மீன் சந்தையில் மீன்களின் விலை நிலவரம் பின்வருமாறு இருந்தது. சீலா மீன் ஒரு கிலோ ரூ.1,300, விளை மீன் கிலோ ரூ.650, நண்டு கிலோ ரூ.600, பாறை மீன் கிலோ ரூ.500, ஊழி மீன் ஒரு கிலோ ரூ.450 என்றும், சாளை மீன் ஒரு கூடை ரூ.3,000க்கும் விற்பனை செய்யப்பட்டன. </p><h2>மீனவர்கள் மகிழ்ச்சி</h2><p>வழக்கத்தைவிட கூடுதல் லாபம் கிடைத்ததால், தொழில் பாதிப்பிலிருந்து சற்று நிம்மதி ஏற்பட்டுள்ளது என மீனவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். </p>]]></content:encoded></item><item><title>திருவாரூரில் சட்டவிரோத மண் எடுப்பு: உடனடி நடவடிக்கை எடுக்க கோரி டிடிவி தினகரன் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/illegal-soil-extraction-in-thiruvarur-ttv-dhinakaran-urges-immediate-action</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/illegal-soil-extraction-in-thiruvarur-ttv-dhinakaran-urges-immediate-action#comments</comments><guid isPermaLink="false">bbf53265-6861-4486-8dd0-3ec0ddec610f</guid><pubDate>Sun, 12 Jul 2026 06:51:04 +0000</pubDate><atom:updated>2026-07-12T06:51:04.409Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thiruvarur,திருவாரூர்,TTV Dhinakaran,டிடிவி தினகரன்,soil,மண் கடத்தல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/qu82hmbp/ttv1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/qu82hmbp/ttv1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவாரூர்,</p><p>அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்திற்கு உட்பட்ட துளசேந்திரபுரம் கண்ணாரப்பேட்டை  வடக்கு ஏரியில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D">வண்டல் மண்</a> எடுப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதியை பயன்படுத்தி அளவுக்கு அதிகமான மண்ணை  எடுத்து சட்டவிரோதமாக தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p><h2>கடும் கண்டனம்</h2><p>விவசாய நிலங்களின் வளத்தை மேம்படுத்தும் வகையிலும், நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிக்கும் நோக்கத்திலும் வழங்கப்பட்ட வண்டல் மண் எடுப்புக்கான அனுமதியை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி வருவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை, அதனை தட்டிக் கேட்ட இளைஞர்களின் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.</p><h2>சட்டவிரோத செயல்</h2><p>அரசு வகுத்துள்ள விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு, அனுமதிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு அதிகமாக இயந்திரங்கள் மூலம்  இரவு, பகலாக  மண் தோண்டி எடுக்கப்பட்டு, தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுவது குறித்து பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததின் மூலம் இந்த சட்டவிரோத செயல்களுக்கு காவல்துறையும் சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகளும் உடந்தையாக இருக்கின்றரா? என்ற சந்தேகம் அப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.</p><h2>நடவடிக்கை</h2><p>எனவே, திருவாரூர் மாவட்டம் துளசேந்திரபுர கண்ணாரப்பேட்டை வடக்கு ஏரியில் நடைபெறும் மண் திருட்டை உடனடியாக தடுத்து நிறுத்திடும் நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, சட்டவிரோத மண் எடுப்பைத் தட்டிக் கேட்ட இளைஞர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தஞ்சையின் பின்வரும் பகுதிகளில் நாளை மறுநாள் மின் தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/power-outage-in-the-following-areas-of-thanjavur-the-day-after-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/power-outage-in-the-following-areas-of-thanjavur-the-day-after-tomorrow#comments</comments><guid isPermaLink="false">a08a3252-8186-418e-ac97-6400a30852eb</guid><pubDate>Sun, 12 Jul 2026 06:31:27 +0000</pubDate><atom:updated>2026-07-12T06:31:27.796Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>மின் தடை,Thanjavur,தஞ்சை,power cut</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/onjpihya/ep.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/onjpihya/ep.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர்,</p><p>தஞ்சை நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>தஞ்சை பழைய நீதிமன்ற சாலையில் அமைந்துள்ள நகர துணை மின் நிலையத்தில் துணை மின் நிலைய பராமரிப்பு மற்றும் மின்பாதை பராம ரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதையொட்டி, வருகிற 14-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதி களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.</p> <h2>மின்சாரம் நிறுத்தம்</h2><p>அதன்படி ஸ்டேடியம் மின்வழித்தடத்தில் மேம்பாலம், சிவாஜி நகர், சீதாந கர், சீனிவாசபுரம், ராஜன் ரோடு, தென்றல் நகர், கிரி ரோடு, காமராஜ் ரோடு, ஆபிரகாம் பண்டிதர் நகர் பகுதிகளிலும், திலகர் திடல் மின்வழித் தடத்தில் மேலவீதி, தெற்கு வீதி, பெரியகோவில், செக்கடி ரோடு. மேல அலங்கம், ரெயிலடி, சாந்தப்பிள்ளைகேட், மகர்நோன்பு சாவடி, வண்டிக் கார தெரு, தொல்காப்பியர் சதுக்கம், வி.பி. கோவில், சேவியர் நகர், சோழன் நகர் பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>இசையரசி  எஸ். ஜானகி அம்மாள் மறைவுக்கு அன்புமணி ராமதாஸ்  இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-ramadoss-condoles-the-passing-of-musician-s-janaki-ammal</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-ramadoss-condoles-the-passing-of-musician-s-janaki-ammal#comments</comments><guid isPermaLink="false">a4855615-5bab-4c67-b2a2-27ff09d40eda</guid><pubDate>Sun, 12 Jul 2026 06:16:25 +0000</pubDate><atom:updated>2026-07-12T06:16:25.744Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani Ramadoss,மறைவு,டாக்டர் அன்புமணி ராமதாஸ்,S. Janaki,பாடகி எஸ். ஜானகி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/2wo9b6wj/50.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/2wo9b6wj/50.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என்று போற்றப்பட்ட பாடகி  எஸ். ஜானகி அம்மையார் அவர்கள் முதுமை மற்றும்   உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து  அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.</p><p>தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும் ஐந்து தலைமுறை இசைக் கலைஞர்களுடன் இணைந்து பாடல்களை பாடிய அவர், இசை  ரசிகர்களின் செவிகள் வழியாக இதயங்களில் நுழைந்தவர். கே.வி. மகாதேவன்,  எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா ஆகியோரின் இசை அமைப்புகளிலும்  கே.ஜே.ஜேசுதாஸ்,  எஸ்.பி. பாலசுப்பிரமணியன் ஆகியோருடன் இணைந்தும், தனித்தும் அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் எரிமலைகளையும் இளக வைக்கக் கூடியவை. காந்தக் குரலுக்கு எடுத்துக்காட்டு என்றால் எஸ். ஜானகி அமமையார் தான்.</p><h2>அனைவருக்கும் பேரிழப்பு</h2><p>4 தேசிய விருதுகள், 6 தமிழக அரசு விருதுகள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றவர் அவர். இவை அனைத்துக்கும் மேலாக இசை ரசிகர்களின் அன்பையும், ஆரவாரத்தையும் தான்  பெரிய விருதாக மதித்தவர்.  அவரது மறைவு இசை ரசிகர்கள் அனைவருக்கும் பேரிழப்பு.</p><p>இசையரசி<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF"> எஸ்.ஜானகி</a> அம்மையார் அவர்களை இழந்து வாடும்  அவரது குடும்பத்தினர், நண்பர்கள், இசையுலகினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்,  அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இரும்பு தகடுகள் விழுந்து சிறுவன் உயிரிழப்பு: மேலாளர் உட்பட 3 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/boy-dies-after-falling-iron-plates-3-people-including-manager-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/boy-dies-after-falling-iron-plates-3-people-including-manager-arrested#comments</comments><guid isPermaLink="false">edd2c990-32d4-4633-a88f-ad8663474b4b</guid><pubDate>Sun, 12 Jul 2026 06:06:46 +0000</pubDate><atom:updated>2026-07-12T06:06:46.251Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,Chennai,சென்னை,கிரைம் செய்திகள்,சிறுவன்,இரும்பு தகடு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/zlf9k4lm/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/zlf9k4lm/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையை அடுத்த புழல் அருகே காவாங்கரை பகுதியில், பாதாளச் சாக்கடை பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், இன்று காலை அந்த பகுதியில் 3 வயது சிறுவன் ஷாருக் ஈஸ்வரன் தனது தந்தையுடன் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது ஜேசிபி மூலம் இரும்பு தகடு தூக்கப்பட ரோப் திடீரென அறுந்து நடந்து சென்று கொண்டிருந்த சிறுவன் மீது தகடு பலமாக விழுந்தது. </p><p>இதில் சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மகன் மீது இரும்பு தகடு விழுந்ததை பார்த்து தந்தை அதிர்ச்சி அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். </p><p>இந்த நிலையில், உயிரிழந்த 3 வயது சிறுவனின் தந்தை அளித்த புகாரில் திட்ட மேலாளர் முத்துகுமார், மேற்பார்வையாளர் வெங்கடேசன், ஜே.சி.பி.ஆபரேட்டர் ரமேஷ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரும்பு தகடுகள் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தேனியில் 2 வங்கி கிளைகளில் ரூ.14 கோடி நகைக்கடன் மோசடி: மேலாளர், ஊழியர்கள் பணிநீக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs14-crore-jewelry-loan-fraud-at-2-bank-branches-in-theni-manager-employees-fired</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs14-crore-jewelry-loan-fraud-at-2-bank-branches-in-theni-manager-employees-fired#comments</comments><guid isPermaLink="false">38eaff3f-3b29-41aa-9863-e5d087cd3aba</guid><pubDate>Sun, 12 Jul 2026 06:01:10 +0000</pubDate><atom:updated>2026-07-12T06:01:10.374Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Theni,தேனி,மோசடி,fraud,பணிநீக்கம்,employees,bank,வங்கி,நகைக்கடன்,Dismissal,ஊழியர்கள்,manager,மேலாளர்,jewelry loan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/nf9yl9ww/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நகைக்கடன் மோசடி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/nf9yl9ww/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி, </p><p>தேனி மாவட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் 2 கிளைகளில் நடந்துள்ள <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ரூ.14 கோடி நகைக்கடன் மோசடி</a> தொடர்பாக வங்கி கிளைகளின் மேலாளர், ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். </p><h2>2 வங்கி கிளைகளில் ரூ.14 கோடி நகைக்கடன் மோசடி</h2><p>தேனி மாவட்டம் ஓடைப்பட்டி மற்றும் கூழையனூர் ஆகிய பகுதிகளில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் 2 கிளைகளில் அதிகாரிகள் நடத்திய தணிக்கையில், ரூ.14 கோடி மதிப்பிலான நகைக்கடன் மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. </p><h2>வங்கி மேலாளர், ஊழியர்கள் பணிநீக்கம் </h2><p>வங்கி லாக்கரில் இருந்த பல உறைகளில் நகைகள் ஏதுமின்றி காலியாக இருந்ததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த 2 கிளைகளிலும் பணியாற்றிய வங்கி மேலாளர் மற்றும் சில ஊழியர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். </p><h2>பொதுமக்கள் யாரும் நேரடியாக பாதிக்கப்படவில்லை</h2><p>இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் பொதுமக்கள் யாரும் நேரடியாகப் பாதிக்கப்படவில்லை என்றும், வங்கியின் பணமே மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>விடுமுறை தினம்: குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-tourists-enjoy-an-enthusiastic-dip-at-courtallam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-tourists-enjoy-an-enthusiastic-dip-at-courtallam#comments</comments><guid isPermaLink="false">f6b76e79-3422-41e2-b1a6-9fa6354233a4</guid><pubDate>Sun, 12 Jul 2026 05:56:52 +0000</pubDate><atom:updated>2026-07-12T05:56:52.125Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tourists,சுற்றுலா பயணிகள்,குற்றாலம்,Courtallam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/6hcccs22/12.gif" width="753"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/6hcccs22/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,  </p><p>குற்றாலம் அருவிகளில் தற்போது தண்ணீர் சீராக விழுந்து வருகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளத்தில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வேன், பஸ், கார்களில் தங்களது குடும்பத்துடன் குற்றாலத்தில் குவிந்தனர்.</p><p>அவர்கள் அனைத்து அருவிகளிலும் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். குறிப்பாக ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் குளித்தனர்.</p><p>சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் பாதுகாப்பு பணியிலும் அதிக அளவில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். குற்றாலம் பகுதியில் கடைகள் நடத்தி வரும் வியாபாரிகளுக்கும் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றதால் அவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>வியட்நாமில் 10 தமிழர்கள் உயிரிழப்பு: லாவா மொபைல் நிறுவனத்தின் அலட்சியம் காரணமா? - வேல்முருகன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/10-tamils-killed-in-vietnam-lava-mobile-negligence-velmurugan-question</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/10-tamils-killed-in-vietnam-lava-mobile-negligence-velmurugan-question#comments</comments><guid isPermaLink="false">c069d88e-136c-4f66-a210-5ab1d7a4d0d3</guid><pubDate>Sun, 12 Jul 2026 05:52:53 +0000</pubDate><atom:updated>2026-07-12T05:52:53.221Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Velmurugan,justice,வியட்நாம்,Vietnam,கேள்வி,நிறுவனம்,தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/5ec64ehn/229.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/5ec64ehn/229.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D">வேல்முருகன்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>வியட்நாமில் சுற்றுலா பயணத்தின்போது நிகழ்ந்த படகு விபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த முருகபிரபு (44)  உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.</p><h2>பயணிகளின் பாதுகாப்பு</h2><p>வியட்நாட்டிற்கு சுற்றுலா அழைத்துச் சென்றதாகக் கூறப்படும், லாவா மொபைல் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து இந்திய வெளியுறவுத்துறை, தமிழ்நாடு அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இணைந்து முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும். பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதா?, வானிலை எச்சரிக்கைகள் வழங்கப்பட்டனவா?, உயிர்காக்கும் உபகரணங்கள் மற்றும் அவசரகால பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனவா?, பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டனரா? மேலும் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்? என்பது குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணையில் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதோ அல்லது அலட்சியம் நடந்ததோ உறுதியானால், லாவா மொபைல் நிறுவனம் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். </p><h2>வலியுறுத்தல்</h2><p>மேலும், உயிரிழந்த முருகபிரபு உள்ளிட்ட 10 பேர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும், அனைத்து அரசு உதவிகளும் விரைவாக வழங்கப்பட வேண்டும். பத்து தமிழரின் உயிரிழப்பு வெறும் விபத்து என்ற பெயரில் மறைக்கப்படக்கூடாது. உண்மையை வெளிக்கொண்டு வந்து, பொறுப்புக்கூற வேண்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு முழுமையான நீதி கிடைப்பதைத் தமிழக அரசும், மத்திய அரசும் உறுதி செய்ய வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>’கூட்டணி ஆட்சிக்கு தயார் என்று திமுக அறிவித்திருந்தால்...’ திருமாவளவன் பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-the-dmk-had-announced-its-readiness-for-a-coalition-government-thirumavalavans-interview</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-the-dmk-had-announced-its-readiness-for-a-coalition-government-thirumavalavans-interview#comments</comments><guid isPermaLink="false">d3f9d069-29ff-4cbc-a245-142c6bc152b1</guid><pubDate>Sun, 12 Jul 2026 05:31:18 +0000</pubDate><atom:updated>2026-07-12T05:31:18.955Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமாவளவன்,Thirumavalavan,விசிக,VCK</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/vupn624b/11.gif" width="753"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/vupn624b/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது;</p><p>”கூட்டணி ஆட்சிக்கு திமுக தயார் என்று அறிவித்திருந்தால், கூட்டணி கட்சிகளின் உணர்வுகளை மதித்து அவர்கள் விரும்பிய எண்ணிக்கையை ஓரளவிற்காவது திருப்திகரமான முறையிலேயே தந்திருந்தால், விரும்பிய தொகுதிகளை தந்திருந்தால் இவ்வளவு பெரிய பின்னடைவை சந்திருக்க வாய்ப்பு இல்லை.</p><p>அதைவிட இந்த கட்சிகள் அவ்வளவு வேகமாக வெளியேற வாய்ப்பு இல்லை. இந்த கோணத்தில் யாரும் சிந்திக்கல. துரோகம் பண்ணிட்டாங்க எனச் சொல்றாங்க., துரோகம் பண்ண என்ன இருக்கு. நாளைக்கு கூட நாம் அமைச்சர் பதவியில் இருந்து வெளியேற முடியும். பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால், அதை தக்கவைப்பதற்கான அணுகுமுறையைத்தானே எடுப்பார்கள். த.வெ.க.-வுக்கு ஆதரவு, அமைச்சர் பதவி. அப்படி என்றால் த.வெ.க. அரசை புகழ்ந்து பாடிக் கொண்டே இருப்போம். இப்படித்தானே சராசரி மனிதன் முடிவு எடுக்கனும். </p><p>அதைத் தாண்டி பாஜக-வுக்கு எதிராக எல்லா கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்ற பார்வையை திருமாவளவன் முன் வைக்கிறான் என்றால், இந்த பார்வையை நீங்கள் பாராட்ட வேண்டாமா? வரவேற்க வேண்டாமா? ஒரு அட்டாச்சுடு இல்லாமல் இவன் ஏன் இப்படி பேசுகிறான் என்றால், திமுக-வில் மீண்டும் ஒட்டிக்கொள்ள நினைக்கிறான் என்கிறார்கள். திமுகவுடன் ஒட்டிக்கொள்ள தேவை என்ன வந்தது?. அர்த்தம் இல்லாத விமர்சனம் அது.”</p><p>இவ்வாறு அவர் பேசினார். </p>]]></content:encoded></item><item><title>அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையில் மரங்களை அகற்றும் பணி தீவிரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tree-removal-work-in-progress-at-factory-where-ammonia-gas-leak-occurred</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tree-removal-work-in-progress-at-factory-where-ammonia-gas-leak-occurred#comments</comments><guid isPermaLink="false">5bf27ba1-2081-4dcd-add8-ac517acc4f96</guid><pubDate>Sun, 12 Jul 2026 05:02:10 +0000</pubDate><atom:updated>2026-07-12T05:02:10.948Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவள்ளூர்,Tiruvallur,தொழிற்சாலை,Ammonia gas leak,ammonia gas,அமோனியா வாயு கசிவு,அமோனியா வாயு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/c5csh109/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/c5csh109/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர்,</p><p>திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேரில் செயல்பட்டு வந்த கடல் உணவுப்பொருட்கள் ஏற்றுமதி தொழிற்சாலையில் கடந்த மாதம் 21-ந்தேதி அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதில் 18 வடமாநில பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலர் பாதிக்கப்பட்டனர்.</p><p>விபத்துக்கு பிறகு, தொழிற்சாலையில் இருந்த அமோனியா வாயு அகற்றும் பணி 4 நாட்கள் நடைபெற்றது. பின்னர், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் அலுவலகம், குடோன், தளவாட அறை, குடியிருப்பு உள்ளிட்ட 5 பகுதிகளுக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.</p><p> தொழிற்சாலையில் கழிவுநீர் அகற்றும் பணியுடன், வளாகத்தில் உள்ள சுமார் 20 மரங்களை வெட்டி அகற்றும் பணியும்  நடைபெற்றது. இதற்காக அங்கு மின்சார இணைப்பு துண்டிக்கப் பட்டது. இந்த பணிகள் இன்று மாலை அல்லது நாளைக்குள் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தொழிற்சாலையின் பிரதான நுழைவாயிலுக்கும் அதிகாரப்பூர்வமாக 'சீல்' வைக்கப்பட உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மெரினா கடலில் ஆட்டிசம் குறைபாடுடைய 39 குழந்தைகள் 2 கி.மீ. நீந்தி சாதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/39-children-with-autism-set-a-record-by-swimming-2-km-in-the-marina-sea</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/39-children-with-autism-set-a-record-by-swimming-2-km-in-the-marina-sea#comments</comments><guid isPermaLink="false">447bbbdb-c415-4690-8874-1e2def4e9c2e</guid><pubDate>Sun, 12 Jul 2026 04:54:16 +0000</pubDate><atom:updated>2026-07-12T04:54:16.668Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,children,குழந்தைகள்,Achievement,Swimming,நீச்சல்,மெரினா கடல்,Marina Sea,சாதனை,ஆட்டிசம் குறைபாடு,Autism Spectrum Disorder</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/t2yzsofp/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மெரினா கடலில் ஆட்டிசம் குறைபாடுடைய 39 குழந்தைகள் 2 கி.மீ. நீந்தி சாதனை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/t2yzsofp/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை மெரினா கடற்கரையில், ஆட்டிசம் குறைபாடுடைய 39 குழந்தைகள் ஒன்றிணைந்து 2 கிலோ மீட்டர் தூரத்தை வெற்றிகரமாக நீந்தி சாதனை படைத்தனர்.</p><h2>ஆட்டிசம் குறைபாடுடைய குழந்தைகளின் கடல் நீச்சல் நிகழ்வு</h2><p>சென்னை மெரினா கடற்கரையில், ஆட்டிசம் குறைபாடுடைய குழந்தைகளின் திறனையும், தன்னம்பிக்கையும், மன உறுதியையும் உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் தனியார் அறக்கட்டளை சார்பில் நேற்று கடல் நீச்சல் நிகழ்வு நடைபெற்றது. </p><h2>39 குழந்தைகள் 2 கி.மீ. நீந்தி சாதனை</h2><p>இந்த கடல் நீச்சல் நிகழ்வில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஆட்டிசம் குறைபாடுடைய 39 குழந்தைகள் ஒன்றிணைந்து 2 கிலோ மீட்டர் தூரத்தை வெற்றிகரமாக நீந்தி சாதனை </a>படைத்தனர். </p><h2>கடல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு</h2><p>மெரினா கலங்கரை விளக்கத்தில் இருந்து கண்ணகி சிலை வரை குழந்தைகள் நீந்தி சென்றனர். அப்போது, ஆட்டிசம் குறித்தும், கடல்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. </p>]]></content:encoded></item><item><title>வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு அண்ணாமலை ஆழ்ந்த இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vietnam-boat-accident-annamalai-expresses-deep-condolences-to-the-families-of-the-deceased</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vietnam-boat-accident-annamalai-expresses-deep-condolences-to-the-families-of-the-deceased#comments</comments><guid isPermaLink="false">93118757-ee12-438a-865f-cddf70e94e01</guid><pubDate>Sun, 12 Jul 2026 04:45:35 +0000</pubDate><atom:updated>2026-07-12T04:45:35.933Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Annamalai,அண்ணாமலை,இரங்கல்,வியட்நாம்,Vietnam,boat accident,படகு விபத்து</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/or3s6mz1/annamalai.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அண்ணாமலை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/or3s6mz1/annamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> “வி த லீடர்ஸ்” இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>வியட்நாம் நாட்டின் பூகுவோக் தீவுக்கு அருகே <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">படகு கவிழ்ந்து </a>ஏற்பட்ட விபத்தில், 10 தமிழர்கள் உட்பட 15 இந்திய சுற்றுலா பயணிகள் உயிரிழந்த செய்தி பேரதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.</p><h2>துரித நடவடிக்கை</h2><p>இந்த துயரமான விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும், தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்கவும், உயிரிழந்தோரின் உடல்களை விரைந்து தாயகம் கொண்டு வரவும், துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மத்திய அரசையும், தமிழக அரசையும் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>