<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 17 Jul 2026 18:31:49 +0000</lastBuildDate><item><title>வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை: ரூ.82 லட்சம் பறிமுதல்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anti-corruption-raid-at-tahsildar-offices-rs-82-lakh-seized</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anti-corruption-raid-at-tahsildar-offices-rs-82-lakh-seized#comments</comments><guid isPermaLink="false">a3082526-c635-4ae8-8c28-49c1a4ae0205</guid><pubDate>Fri, 17 Jul 2026 17:53:33 +0000</pubDate><atom:updated>2026-07-17T17:53:33.686Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,raid,Anti-corruption,லஞ்ச ஒழிப்புத்துறை,வட்டாட்சியர் அலுவலகம்,Anti-Corruption Department,லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை,அதிரடி சோதனை,Tahsildar Office,Anti-corruption police raid</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/xfsqgt7b/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/xfsqgt7b/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.82 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>அதிகாரிகள் திடீர் சோதனை</h2><p>பட்டா மாறுதல், வருமானம், இருப்பிடம், சமூகச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு சேவைகளை வழங்குவதற்காக சில வட்டாட்சியர் அலுவலகங்களில் அதிகளவில் லஞ்சம் பெறப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் பல்வேறு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.</p><p>41 இடங்களில் சோதனை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 35 தாலுகா அலுவலகங்களில் கணக்கில் காட்டப்படாத ரொக்க பணம் சிக்கியது.  இதில், கணக்கில் காட்டப்படாத ரொக்கமாக ரூ.13 லட்சமும், ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரூ.68 லட்சமும் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தமாக ரூ.82 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.</p><h2>தீவிர விசாரணை</h2><p>சோதனையின்போது முக்கிய <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஆவணங்கள் </a>மற்றும் பரிவர்த்தனை தொடர்பான பதிவுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் விவகாரம்: தமிழக அரசின் இரட்டை நிலைப்பாடு ஏன்? - வேல்முருகன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmak-issue-why-tamil-nadu-governments-double-stand-velmurugan-question</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmak-issue-why-tamil-nadu-governments-double-stand-velmurugan-question#comments</comments><guid isPermaLink="false">730b6136-0614-46c5-8dbf-b249bb014c54</guid><pubDate>Fri, 17 Jul 2026 17:35:30 +0000</pubDate><atom:updated>2026-07-17T17:35:30.759Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டாஸ்மாக்,Velmurugan,வேல்முருகன்,டாஸ்மாக் கடை,தி.வேல்முருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/b3zwr72m/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/b3zwr72m/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>54 வகையான மதுபானங்கள்</h2><p>தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் புதியதாக 54 வகையான மதுபானங்களை அறிமுகப்படுத்தும் முயற்சி, அரசின் கொள்கைக்கும் செயலுக்கும் இடையே உள்ள முரண்பாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.</p><p>இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அது மக்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும், படிப்படியாக டாஸ்மாக் கடைகள் குறைக்கப்படும் என்றும் தமிழக மக்களுக்கு உறுதியளிக்கப்பட்டது.</p><h2>எதற்காக?</h2><p>அப்படியிருக்க, தற்போது புதிய 54 வகையான மதுபானங்களை அறிமுகப்படுத்துவது எதற்காக?</p><p>டாஸ்மாக் கடைகளைக் குறைப்பதே அரசின் நோக்கமென்றால், புதிய மதுபானங்களை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் என்ன? மதுப்பழக்கத்தை ஒழிப்பதே இலக்கென்றால், புதிய பிராண்டுகள் மூலம் விற்பனையை விரிவுபடுத்துவது யாருடைய நலனுக்காக?</p><p>ஏற்கனவே மதுப்பழக்கத்தால் ஆயிரக்கணக்கானக் குடும்பங்கள் சீரழிந்துள்ளன. குடும்ப வன்முறைகள், சாலை விபத்துகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், கொலை, கொள்ளை உள்ளிட்ட பல குற்றச் செயல்களில், மதுபோதையும் ஒரு முக்கியக் காரணியாக, காவல்துறை விசாரணைகளில் அடிக்கடிப் பதிவாகி வருகிறது. </p><h2>இரட்டை நிலைப்பாடு</h2><p>மதுவால் குடும்பங்கள் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பொருளாதார </a>ரீதியாக மட்டுமல்ல, மனநல மற்றும் சமூக ரீதியிலும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. இந்த நிலையில், மதுப்பழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக புதிய மதுபான வகைகளை அறிமுகப்படுத்துவது, சமூகப் பொறுப்புள்ள அரசின் செயலாக கருத முடியாது.</p><p>ஒரு புறம் டாஸ்மாக் கடைகளை மூடுகிறோம் என்று கூறிவிட்டு, மறுபுறம் 54 புதிய மதுபானங்களை அறிமுகப்படுத்துகிறோம் என்று அறிவிப்பது மக்களை ஏமாற்றும் இரட்டை நிலைப்பாடு அல்லவா?</p><h2>திட்டத்தை திரும்பப் பெற வேண்டும்</h2><p>தமிழக மக்களின் நலனில் அரசுக்கு அக்கறை இருக்கிறது என்றால், மது விற்பனையைக் குறைத்து, மதுபான கடைகளைக் குறைத்து, மக்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை கொடுப்பதையே உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும். </p><p>எனவே, புதிய 54 வகையான மதுபானங்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மது விற்பனையை விரிவுபடுத்தும் திட்டங்களைக் கைவிட்டு, இளைஞர்களின் எதிர்காலத்தையும், பெண்களின் பாதுகாப்பையும், குடும்பங்களின் அமைதியையும், சமூகத்தின் ஒழுக்கத்தையும் பாதுகாக்கும் கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வாழ்வுரிமைக் </a>கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் தனது தோழமைக் கட்சியிடம் பேசி தமிழகத்தின் உரிமைகளைப் பெற வேண்டும்! - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-chief-minister-must-speak-with-his-alliance-partner-and-secure-tamil-nadus-rights-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-chief-minister-must-speak-with-his-alliance-partner-and-secure-tamil-nadus-rights-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">6b707ff9-a14c-4853-95d1-d7c7c3f1f0ba</guid><pubDate>Fri, 17 Jul 2026 17:05:44 +0000</pubDate><atom:updated>2026-07-17T17:05:44.608Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/u605h5t8/nainar.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/u605h5t8/nainar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>அணை நீர் பிரச்சினை</h2><p>தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், தமிழகத்தின் உரிமைகளையும் ஒருசேர கேள்விக்குறியாக்கும், காவிரி, மேகதாது, முல்லை பெரியாறு உள்ளிட்ட அணை நீர் பிரச்சினைகளை வைத்து இதற்கு முந்தைய அரசு அரசியல் மட்டும் தான் செய்ததே தவிர, தீர்வு காணவில்லை. பல ஆண்டுகளாக நீடிக்கும் இப்பிரச்சினைகளுக்காக கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுடன் பலமுறை பேச்சு வார்த்தைகள் நடத்தியும் எவ்வித பலனுமில்லை. </p><p>இதற்கிடையில், மேகதாது அணையை கட்டுவதற்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மறைமுக அனுமதி <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வழங்கியிருப்பதைப் </a>போல, ஜோசப் விஜய்யின் கூட்டணிக் கட்சி தலைவரான வைகோ போன்றவர்கள் பொய் பரப்புரைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற உண்மைக்கு புறம்பான செய்திகளை பொதுவெளியில் பரப்புவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அறநெறியிலான அரசியலுக்கு நேர் எதிரானது. </p><h2>தீர்வு காண வேண்டும்</h2><p>எனவே, தமிழகத்தில் தற்போது ஆட்சியில் இருக்கும் தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், இந்த நீண்டகால பிரச்சினைகளுக்கும், தேவையற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்! கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்த கதை போல் இல்லாமல், தனது கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தலைவர் ராகுல் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">காந்தியிடம் </a>பேசி, காங்கிரஸ் ஆளும் கர்நாடகா, கேரளா மாநில முதல்-மந்திரியின் ஒத்துழைப்போடு, இந்த அணைப் பிரச்சனைகளுக்கு நிரந்தரமான தீர்வு காண வேண்டும்! விவசாயப் பெருமக்களின் துயர் துடைக்க வேண்டும்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் தினமும் அம்மா உணவகங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 1.04 லட்சமாக உயர்வு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/number-of-daily-users-of-amma-unavagams-in-chennai-rises-to-104-lakh</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/number-of-daily-users-of-amma-unavagams-in-chennai-rises-to-104-lakh#comments</comments><guid isPermaLink="false">7dc78461-8f7a-4664-abf8-329184469a37</guid><pubDate>Fri, 17 Jul 2026 16:24:16 +0000</pubDate><atom:updated>2026-07-17T16:24:16.143Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,அம்மா உணவகங்கள்,amma hotel</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/deqb9d81/State-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/deqb9d81/State-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் உள்ள 383 அம்மா உணவகங்களை தினசரி சராசரியாக பயன்படுத்துவோர் எண்ணிக்கை 67,164ல் இருந்து 1,04,102 ஆக உயர்ந்துள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“சென்னை மாநகரில் வாழும் ஏழை எளிய மக்கள், கூலி வேலை செய்பவர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், கட்டிட தொழிலாளர்கள், பாரம் தூக்குபவர்கள் என குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்கள் மற்றும் சென்னைக்கு பணி நிமித்தமாக வந்து செல்பவர்கள் பயன் பெறும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் மற்றும் நோயாளிகள், அவர்களின் துணைவருபவர்கள் பயன்பெறும் வகையில் ராயபுரம், அண்ணாநகர் மற்றும் தேனாம்பேட்டை ஆகிய 3 மண்டலங்களில் உள்ள 7 அரசு மருத்துவமனைகளிலும் என மொத்தம் தற்போது 383 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.</p> <p>இத்திட்டத்தின் கீழ் காலை நேரத்தில் ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும், பொங்கல் ஐந்து ரூபாய்க்கும், மதிய நேரத்தில் சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம் மற்றும் கருவேப்பிலை சாதம் தலா ஐந்து ரூபாய்க்கும், தயிர் சாதம் மூன்று ரூபாய்க்கும் மற்றும் மாலை நேரத்தில் இரண்டு சப்பாத்திகள் மூன்று ரூபாய்க்கும் வழங்கப்பட்டு வருகிறது.</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவின்படி, அம்மா உணவகங்களை மேம்படுத்தி தரமான உணவுகளை மக்களுக்கு வழங்கிட மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் தினசரி சராசரியாக 67,164 பயனாளிகள் அம்மா உணவகங்களில் சாப்பிட்டு பயனடைந்து வந்த நிலையில் தற்போது தினசரி சராசரியாக 1,04,102 பயனாளிகள் அம்மா உணவகங்களில் சாப்பிட்டு பயனடைந்து வருகின்றனர். அம்மா உணவகங்களின் வாயிலாக கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.87,60,489/- வருவாய் வரப்பெற்ற நிலையில் தற்போது ரூ.1,35,78,548/- ஆக உயர்ந்துள்ளது.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>  குதிரை பேரம் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற கோரிய பொதுநல மனு தள்ளுபடி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/horse-trading-case-cbi-probe-public-interest-plea-dismissed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/horse-trading-case-cbi-probe-public-interest-plea-dismissed#comments</comments><guid isPermaLink="false">53d3a133-76a5-4c9b-823a-ca29b8531f14</guid><pubDate>Fri, 17 Jul 2026 16:21:20 +0000</pubDate><atom:updated>2026-07-17T16:21:20.182Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>CBI,சிபிஐ விசாரணை,குதிரை பேரம்,horse trading</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/6prrdr1c/High-Curt.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/6prrdr1c/High-Curt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ-வான இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தியதாக திருவல்லிக்கேணி போலீசார் பதிவு செய்துள்ள வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் திருப்பூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் விசாரித்து, பிறப்பித்த தீர்ப்பில், ‘‘உள்ளூர் போலீசார் சரி வர வழக்கை விசாரிக்க வில்லை என்றாலோ, உண்மையை கண்டறிய முடியவில்லை என்றாலோ அல்லது சமரசமாக சென்றாலோ வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றலாம். </p><p>இதுபோன்ற ஒரு சூழ்நிலையைக்கூட மனுதாரர் எடுத்துக்கூறி நிரூபிக்கவில்லை. செய்திதாள் வந்த செய்திகள், சமூக ஊடகங்களில் வந்த தகவல்கள் ஆகியவற்றிந் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணைக்கு கேட்டு வழக்கு தொடர்ந்துள்லார், இவர் கூறும் காரணத்துக்காக சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற முடியாது. பொதுநல வழக்கு என்பது வலிமைமிக்க ஒரு ஆயுதம். </p><p>அது குரலற்றவர்களின் குரலாக ஒலிக்கூடியது. இந்த குதிரை பேரம் வழக்கில் ஏற்கனவே பலரை போலீசார் கைது செய்துள்ளனர். எனவே, சரி பார்க்கப்படாத ஊடக செய்திகளின் அடிப்படையில் புலன்விசாரணையை மாற்ற முடியாது. இந்த பொதுநல வழக்கை தள்ளுபடி செய்கிறோம்’’ என்று கூறியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை அண்ணாநகர் டி.வி.எஸ். கால்வாயில் மேம்பாட்டுப் பணிகள் - விரைந்து முடிக்க துணை ஆணையாளர் கவுஷிக் உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/improvement-works-on-the-tvs-canal-in-anna-nagar-chennai-deputy-commissioner-kaushik-orders-speedy-completion</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/improvement-works-on-the-tvs-canal-in-anna-nagar-chennai-deputy-commissioner-kaushik-orders-speedy-completion#comments</comments><guid isPermaLink="false">6b0d67c0-253d-4d24-8462-6334b65efda6</guid><pubDate>Fri, 17 Jul 2026 16:17:57 +0000</pubDate><atom:updated>2026-07-17T16:17:57.501Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/tp7nt1hw/State-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/tp7nt1hw/State-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“அண்ணாநகர் மண்டலத்திற்குப்பட்ட, இயந்திர வாகனங்கள் பனிமனை, டி.வி.எஸ். கால்வாய், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், அரசு ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளி ஆகியவற்றினை மத்திய வட்டார துணை ஆணையாளர் கவுஷிக் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.</p><p>இன்று (17.07.2026) மத்திய வட்டார துணை ஆணையாளர் கவுஷிக், பெருநகர சென்னை மாநகராட்சி அண்ணாநகர் மண்டலம், வார்டு-94க்குட்பட்ட டி.வி.எஸ். கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், ராஜமங்கலம், 1-வது தெருவில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், 2-வது தெருவில் உள்ள அரசு ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளி, இயந்திர வாகனங்கள் பனிமனை உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, வட்டார துணை ஆணையாளர் அலுவகலத்தில், வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.</p><p>இந்த ஆய்வுகளின்போது, மத்திய வட்டார துணை ஆணையாளர் கவுஷிக், கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடித்திடவும், சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள், பணியாளர்கள் வருகை மற்றும் மக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் அலுவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தொழில்நுட்பத்தை சமூக நன்மைக்காக பயன்படுத்துங்கள் - சென்னை ஐ.ஐ.டி.யில் சான்சிபார் அதிபர் ஹுசைன் அலி பேச்சு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/use-technology-for-social-good-zanzibar-president-hussein-ali-speaks-at-iit-madras</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/use-technology-for-social-good-zanzibar-president-hussein-ali-speaks-at-iit-madras#comments</comments><guid isPermaLink="false">4d58da21-7ba6-4bc2-97b9-ccc177b1ba88</guid><pubDate>Fri, 17 Jul 2026 16:10:32 +0000</pubDate><atom:updated>2026-07-17T16:10:32.503Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>IIT Chennai,சென்னை ஐ.ஐ.டி.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/voytrnn5/State-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/voytrnn5/State-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவின் கட்டுப்பாட்டில் சான்சிபார் என்ற தீவுக்கூட்டம்(Archipelago) அமைந்துள்ளது. இதன் அதிபரான ஹுசைன் அலி மின்யி சென்னை ஐ.ஐ.டி. கல்லூரியில் நடைபெற்ற 63-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பேசியதாவது;-</p> <p>“ஒரு புதிய கண்டுபிடிப்பு நம்மை வியக்க வைக்கும்போது மட்டுமல்ல, மனித வாழ்வின் கண்ணியத்தை மேம்படுத்தும்போதுதான் அதன் மிகச்சிறந்த நிலையை அடைகிறது. உங்கள் பணிகள் சமூகத்தில் ஏற்படுத்தும் மாற்றமே உங்கள் வெற்றிக்கான அளவுகோலாகும். தொழில்நுட்பத்தை சமூக நன்மைக்காக பயன்படுத்துங்கள்.</p><p>கல்வி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளால் ஏற்படும் மாற்றத்தை உருவாக்கும் ஆற்றல் இந்தியாவிற்கு உள்ளது. ஒரு நாடு அறிவியலில் முதலீடு செய்யும்போது, ​​அது தனது எதிர்காலத்தில் முதலீடு செய்கிறது. சிறந்த கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்குக் கல்வி அளிப்பதோடு மட்டுமல்லாமல், சமூகங்களை வடிவமைக்கவும், பொருளாதாரங்களை வலுப்படுத்தவும், தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கவும் செய்கின்றன.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-filed-against-a-man-for-marrying-a-second-time-without-his-first-wifes-knowledge</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-filed-against-a-man-for-marrying-a-second-time-without-his-first-wifes-knowledge#comments</comments><guid isPermaLink="false">74bd3a68-4599-4324-9880-544e25fa86f8</guid><pubDate>Fri, 17 Jul 2026 16:04:17 +0000</pubDate><atom:updated>2026-07-17T16:04:17.260Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமணம்,Marriage,வழக்குப்பதிவு,Case filed</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/ofpbjy46/police.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/ofpbjy46/police.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வீரவனூர் பகுதியை சேர்ந்தவர் ராமர் (வயது 34). இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். ராமருக்கு ஏற்கனவே திருமணமாகி கவுசல்யா என்ற மனைவி உள்ளார். அவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். </p><p>இந்த நிலையில் ராமர் இளம்பெண்ணை 2-வதாக திருமணம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முதல் மனைவி கவுசல்யா ராமரிடம் இதுகுறித்து கேட் டுள்ளார். அப்போது கோபமடைந்த ராமர், கவுசல்யாவை சரமாரியாக தாக்கி உள்ளார். </p><p>இதுகுறித்த புகாரின்பேரில் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசார் ராமர், அவரது சகோதரி நித்யா, அண்ணன் பரிமணன் ஆகிய 3 பேர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p> ]]></content:encoded></item><item><title>சைபர் அடிமைத்தனம், வேலைவாய்ப்பு மோசடி தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளி கைது - காவல்துறை தகவல் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/key-suspect-arrested-in-cyber-slavery-and-job-fraud-case-police-statement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/key-suspect-arrested-in-cyber-slavery-and-job-fraud-case-police-statement#comments</comments><guid isPermaLink="false">6b019f28-4857-46a6-b0c7-92f0613c64c3</guid><pubDate>Fri, 17 Jul 2026 15:48:05 +0000</pubDate><atom:updated>2026-07-17T15:48:05.033Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,police,கைது,காவல்துறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/1y3elk3q/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/1y3elk3q/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சைபர் அடிமைதனம் மற்றும் வேலைவாய்ப்பு மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற பெயரில் இந்திய இளைஞர்களை ஏமாற்றி, கம்போடியா, வியட்நாம் மற்றும் லாவோஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பி, அங்கு இணையவழி மோசடி (Cyber Scam) நிறுவனங்களில் சைபர் அடிமைகளாக கட்டாயப்படுத்தி பணியமர்தப்பட்டது தொடர்பாக இந்திய அரசு மற்றும் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (I4C) மேற்கொண்ட நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்கள் அவ்வாறு மீட்க்கப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் சி.பி.சி.ஐ.டியில் 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. </p><p>கம்போடியாவில் இருந்து மீட்கப்பட்ட நபர்களில் வெற்றிவேல் (த/பெ. செல்வகுமார்), வயது 48, அழகரசன் நகர், 2-வது தெரு, நாகை ரோடு, தஞ்சாவூர் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், தஞ்சாவூர் சி.பி.சி.ஐ.டி. குற்ற எண் 05/2024, ச/பி 120(B), 420, 368, 371 இதச மற்றும் பிரிவு 10 இந்திய குடியேற்றச் சட்டம், 1983 ன் படி கடந்த 10.08.2024 ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.</p><p>இவ்வழக்கில் சுந்தர் (எ) சுந்தராஜூலு என்பவர் 03.10.2024 அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இவர் தஞ்சாவூரை சேர்ந்த ஆறு நபர்களிடம் கம்போடியாவில் கால் சென்டர் வேலை என்றும் அதிக சம்பளம் கிடைக்கும் என்றும் நம்ப வைத்து வேலைக்கு சேர்ப்பதற்கென்று லட்சகணக்கில் புகார்தாரர் உட்பட ஐந்து நபர்களிடம் பணம் பெற்றும் மலேசியாவில் வசித்து வரும் தேனி மாவட்டம் பந்துவார்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெய் (எ) பாபு (த/பெ. காளியப்பன்) என்பவர் மூலம் விமான டிக்கெட் மற்றும் மற்ற ஏற்பாடுகளை செய்து தாய்லாந்து மூலம் கம்போடியாவிற்கு மேற்படி 6 நபர்களையும் அனுப்பியுள்ளார் என தெரிய வந்தது. </p><p>இந்த வழக்கில் ஜெய் (எ) பாபு கம்போடியாவிற்கு இணையதள மோசடி வேலைகள் செய்வதற்கு சைபர் அடிமைகளாக அனுப்பும் குற்ற செயல்களில் முக்கிய ஆட்சேர்ப்பு முகவராக செயல்பட்டுள்ளார் என்பதும் இவர் கம்போடியாவில் உள்ள ஏஜென்டுகளுடன் நேரடி தொடர்பில் இருந்து சுந்தர் அனுப்பிய மேற்படி ஆறு நபர்களையும் கம்போடியாவில் உள்ள "பாவெட்" (Pavet) என்ற நகரத்தில் உள்ள இணையதள மோசடி மையங்களில் (cybercrime compound) சைபர் அடிமைகளாக விற்று அதற்காக கம்போடியா முகவர்களிடம் பணம் பெற்றுள்ளனர். </p> <p>இவ்வாறு விற்கப்பட்டவர்களை கம்போடியா cybercrime compound-ல் உள்ள ஏஜென்டுகள் போலியாக உருவாக்கிய பிட்காயின் முதலீட்டு செயலிகளில் பொதுமக்களிடம் இணையவழி மோசடி செய்ய கட்டாயப்படுத்தும் வேலையை செய்யவைத்து வற்புறுத்தியுள்ளனர். அவர்களது கடவுச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு வெளியேற முடியாமல் தடுத்து வைக்கப்பட்டதும் அவர்கள் வேலை செய்ய மறுத்தபோது உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தப்பட்டதும் தெரியவந்தது.</p><p>மேற்படி இருவர் மீது வழக்கு விசாரணை முடித்து ஜெய் தலைமறைவானதாக நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றம் இவர் மீது பிடிவாரண்ட் பிறப்பிந்திருந்த நிலையில் ஜெய் மலேசியா நாட்டில் இருந்ததால் இவர் மீது Lookout Circular பிறப்பிக்க சி.பி.சி.ஐ.டியில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. மேற்படி ஜெய் (எ) பாபு என்பவர் 16.07.2026 ஆம் தேதி மலேசியாவில் இருந்து பாங்காங் வழியாக இந்தியாவின் பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்தபோது அவர் தஞ்சாவூர் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது உரிய சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஊழல் குற்றச்சாட்டுகளில் வேகமான நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/swift-action-on-corruption-allegations-minister-sengottaiyan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/swift-action-on-corruption-allegations-minister-sengottaiyan#comments</comments><guid isPermaLink="false">949af90e-940e-4107-a196-a36c448e47e9</guid><pubDate>Fri, 17 Jul 2026 15:42:53 +0000</pubDate><atom:updated>2026-07-17T15:42:53.361Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஊழல் குற்றச்சாட்டு,corruption charges,action நடவடிக்கை,அமைச்சர் செங்கோட்டையன்,Minister Sengottaiyan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/p68lxgzq/minister-shenkottaiyan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் செங்கோட்டையன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/p68lxgzq/minister-shenkottaiyan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை </p><p>ஊழல் குற்றச்சாட்டுகளில் வேகமான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காரணம் இன்றி டெண்டர்கள் ரத்து செய்யப்படாது என  கோவையில் வருவாய்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.</p> <p>கோவை விமான நிலையத்தில் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.</p> <h2>ரேஸ் கோர்ஸ்</h2><p>கோவை செம்மொழி பூங்கா அமைப்பில் ரூ.40 கோடி ஊழல் நடைபெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து கேட்கப்பட்டபோது, புதிய அரசு தற்போது தான் பொறுப்பேற்றுள்ளதாகவும், இதுபோன்ற விவகாரங்கள் முந்தைய ஆட்சிக் காலத்தில் நடைபெற்றவை என்றும் தெரிவித்தார். தவறுகள் குறித்து அரசு ஏற்கனவே நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதாகவும், ரேஸ் கோர்ஸ் தொடர்பான சில டெண்டர்களும் கூடுதல் மதிப்பீடுகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.</p><h2>அரசு உறுதி</h2><p>மேலும், "<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a> தலைமையிலான ஆட்சியில் எந்த தவறும் நடக்க கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி டெண்டர்களின் காலக்கெடு அடுத்த ஆண்டு வரை இருப்பதால் அதுவரை காத்திருக்க வேண்டும். காரணமின்றி எந்த டெண்டரையும் ரத்து செய்ய முடியாது. தேவையான ஆய்வுகளின் அடிப்படையில் முதல்-அமைச்சர் தெளிவான முடிவுகளை எடுப்பார்" என்றார்.</p><h2>வரவேற்கத்தக்க நடவடிக்கை</h2><p>ஆம்னி பேருந்துகள் அரசு பேருந்துகளுக்கான கட்டணத்திலேயே சேவையை இயக்குவதாக அறிவித்திருப்பது குறித்து பேசிய அவர், "இது வரவேற்கத்தக்க நடவடிக்கை. கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் அரசு நிர்ணயித்த கட்டணத்திலேயே சேவையை வழங்குவது பொதுமக்களுக்கு பயனுள்ளதாகவும், நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவதாகவும் அமையும்" என்றார்.</p><h2>ரெஸ்ட்ரோ பார்</h2><p>ரெஸ்ட்ரோ பார் விவகாரம் குறித்து கேட்கப்பட்டபோது, போதைப்பொருள் ஒழிப்பில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும், தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகள் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து முதல்-அமைச்சர் படிப்படியாக தேவையான முடிவுகளை எடுப்பார் என்றும் கூறினார்.</p> <h2>காலப்போக்கில் தெரியும்</h2><p>"பழனிக்கே மொட்டை போட்டுவிட்டார்கள்" என்ற எதிர்க்கட்சியினரின் விமர்சனம் குறித்து கேட்கப்பட்டபோது, "பழனிக்கு மொட்டை போட்டவர் யார் என்பது காலப்போக்கில் தெரியும்" என்று அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>தணிக்கைத் துறை தொடர்பான மக்களின் குறைகளுக்கு தீர்வு காண புதிய தளம் - தமிழக அரசு அறிவிப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-platform-to-address-public-grievances-regarding-the-audit-department-tamil-nadu-government-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-platform-to-address-public-grievances-regarding-the-audit-department-tamil-nadu-government-announcement#comments</comments><guid isPermaLink="false">9a8c2c7a-60e4-4cdf-9e14-310ad4d93b7a</guid><pubDate>Fri, 17 Jul 2026 15:32:54 +0000</pubDate><atom:updated>2026-07-17T15:32:54.107Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/zi5hkqg5/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/zi5hkqg5/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தணிக்கைத் துறை தொடர்பான மக்களின் குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண புதிதாக ‘பொதுமக்கள் குறைதீர்த்திடும் தளம்’ (Public Grievance Portal) உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“தலைமை தணிக்கை இயக்குநர் கட்டுப்பாட்டில் ஐந்து தணிக்கை துறைகளான உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை, மாநில அரசு தணிக்கைத் துறை, கூட்டுறவு தணிக்கைத் துறை, இந்து சமய அறநிறுவனங்களின் தணிக்கைத் துறை மற்றும் பால் கூட்டுறவுகளின் தணிக்கைத் துறை இயங்கி வருகின்றது. தணிக்கைத் துறையில் வெளிப்படைத்தன்மையும், தணிக்கை நிறுவனங்கள் மற்றும் தணிக்கையாளர்களின் வசதிகளையும் மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>இதன் ஒரு பகுதியாக, பொதுமக்கள் மற்றும் தணிக்கை நிறுவனங்கள் தங்களது குறைகளை எளிதாக தீர்க்கவும், தேவையான விவரங்களை உடனுக்குடன் பெறவும் புதியதாக பொதுமக்கள் குறைகள் தீர்த்திடும் தளம் (Public Grievance Portal) CAMS வலைதளத்தின் ஒரு பகுதியாக புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.</p><p>இத்தளத்தின் மூலம் பொதுமக்கள் மற்றும் தணிக்கை மேற்கொள்ளப்படும் நிறுவனங்கள் தங்களது குறைகளை / சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. அதன் விவரம் பின்வருமாறு;-</p><p>URL ID: https://cams.tn.gov.in</p><p>Menu Name: Public Grievance Portal”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>திருப்பூரில் நாளை மின் தடை செய்யப்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-tiruppur-where-power-supply-will-be-suspended-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-tiruppur-where-power-supply-will-be-suspended-tomorrow#comments</comments><guid isPermaLink="false">d95abbe4-3107-46ab-a4ce-c3e5a39ba293</guid><pubDate>Fri, 17 Jul 2026 15:29:24 +0000</pubDate><atom:updated>2026-07-17T15:29:24.724Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்,மின் தடை,power cut</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/4xkzue46/ep.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/4xkzue46/ep.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><p>திருப்பூர் சந்தைப்பேட்டை துணைமின்நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதை யொட்டி, அரண்மனைப்புதூர், தட்டான்தோட்டம், எம்.ஜி.புதூர், கரட்டாங் காடு, அரசு மருத்துவமனை, செரீப்காலனி, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், கல்லாங்காடு, வெள்ளியங்காடு, கே.எம்.நகர். கே.எம்.ஜி.நகர், பட்டுக்கோட்டையார்நகர், திரு.வி.க.நகர், கருப்பகவுண்டம்பா ளையம், கோபால்நகர், பெரிச்சிப்பாளையம், கருவம்பாளையம், வாலிபா ளையம், ஊத்துக்குளி ரோடு, யூனியன் மில் ரோடு, மிஷன் வீதி, காமராஜர் ரோடு, புதுமார்க்கெட் வீதி, ராயபுரம், ஸ்டேட் பாங்க் காலனி, காதர் பேட்டை, சந்திராபுரம், புதூர் மெயின் ரோடு, கரட்டாங்காடு, செரங்காடு, டி.ஏ.பி.நகர், என்.பி.நகர், பூம்புகார் நகர், இந்திராநகர், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு வித்யாலயம், பாரதிநகர், குளத்துப்பாளையம், செல்வலட்சுமிநகர், வீரபாண்டி, பொதுசுத்திகரிப்பு நிலைய பகுதிகள், கருப் பகவுண்டன்பாளையம், கே.ஆர்.ஆர்.தோட்டம் ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது. </p><p>இதேபோல், பல்லடம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பல்லடம் நகரம், மங்கலம் ரோடு, கொசவம்பாளையம், ரோடு, செட்டிபாளையம் ரோடு, மாணிக்காபுரம் ரோடு, திருச்சி ரோடு ஒரு பகுதி, வடுகபாளையம், சித்தம்பலம், புள்ளியப்பன்பாளையம், வெங்கிட்டாபுரம், பனப்பாளையம், மாதப்பூர், ராசாகவுண்டன்பாளையம், ராயர்பாளையம், அனுப்பட்டி, அம்மாபாளையம், மகாலட்சுமி நகர் மற்றும் கானூர்புதூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்டகானூர், அல்லப்பாளையம், கஞ்சப் பள்ளி, ராமநாதபுரம். செட்டிபுதூர், ஆலத்தூர், தொட்டிபாளையம், குமாரபாளையம், மொன்டிபாளையம், தாசராபாளையம், ஆம்போதி, பசூர் ஒரு பகுதி, பெத்தநாயக்கன்பாளையம் ஒரு பகுதி, ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். </p> ]]></content:encoded></item><item><title>பழனி முருகன் கோவில் நில மோசடியில் மிகப்பெரிய சதி - திமுக குற்றச்சாட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-murugan-temple-land-scam-major-conspiracy-dmk-allegation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-murugan-temple-land-scam-major-conspiracy-dmk-allegation#comments</comments><guid isPermaLink="false">0ebe8442-7936-4cc0-9d3e-f96723672636</guid><pubDate>Fri, 17 Jul 2026 15:15:34 +0000</pubDate><atom:updated>2026-07-17T15:15:34.063Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,பழனி,முருகன் கோவில்,Palani temple</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/1t8cr21y/DMK-Paranthaman.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/1t8cr21y/DMK-Paranthaman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 1.41 ஏக்கர் நிலத்தை தனியார் இருவர் பதிவு செய்துள்ளனர். இதுபற்றி இரண்டு அமைச்சர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசி வருகின்றனர். இந்த நிலம் கோவிலுக்கு சொந்தமானது, இதை பதிவு செய்ய கூடாது என சார்பதிவாளர் அலுவலகத்திற்கு<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> கோவில்</a> தரப்பில் இருந்து ஏற்கனவே கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த தி.மு.க. ஆட்சியில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த நிலத்தை கைப்பற்றி கோவில் கார் பார்க்கிங்கிற்காக பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்த நிலம் இப்போது திடீரென தனியார் பெயரில் பதிவு செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. இதன் பின்னால் சதி நடந்துள்ளது. பினாமி பெயரில் பத்திரப்பதிவு நடந்துள்ளது.</p><h2>பழனிக்கே மொட்டை</h2><p>இந்துக்களுக்கு எதிரி என்று எங்களின் மீது போலியாக அவதூறு பரப்பினார்கள். ஆனால் எங்களின் தி.மு.க. ஆட்சியில் இந்த இடம் பாதுகாக்கப்பட்டது. ஆனால் இந்த ஆட்சியில் நிலம் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. பழனிக்கு மொட்டை போடுவாங்க என்று தான் நாமெல்லாம் பார்த்தோம். ஆனால் பழனிக்கே விஜய் ஆட்சி மொட்டை போட்டுள்ளது. </p> <h2>நீதிமன்றம் செல்வோம்</h2><p>தூய்மையான ஆட்சி என்று சொல்லக்கூடிய <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விஜய்</a> அரசாங்கம் இன்றைக்கு கோவிலோட நிலத்தை இன்னொருத்தருக்கு ‘ரிஜிஸ்டர்’ பண்ணி கொடுத்துருக்கும்போது, நீங்க எப்படி எங்களை பார்த்து குற்றம் சுமத்த முடியும்? மக்கள் முன்னாடி வந்து உண்மையாக பேசணுமே தவிர, தேவையில்லாத அரசியல் சர்ச்சைகளை உருவாக்கி பிரச்சினைகளை திசை திருப்புவதற்காக மட்டுமே அமைச்சர் பிரஸ் மீட் நடைபெற்றிருக்கிறது.வழக்கு விசாரணை சரியாக நடைபெறவில்லை என்று சொன்னால், தி.மு.க. இது குறித்து நீதிமன்றத்திற்கு செல்வதற்கு தயங்காது. இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>‘வி.சி.க. தேர்தலுக்காக உருவான இயக்கம் அல்ல, மக்களின் தேவைக்காக உருவானது’ - திருமாவளவன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vck-is-not-a-movement-formed-for-elections-it-was-formed-for-the-needs-of-the-people-thirumavalavan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vck-is-not-a-movement-formed-for-elections-it-was-formed-for-the-needs-of-the-people-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">6932be1e-f55e-4d95-a9fc-0ef0aa4dd3be</guid><pubDate>Fri, 17 Jul 2026 14:54:51 +0000</pubDate><atom:updated>2026-07-17T14:54:51.579Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமாவளவன்,Thirumavalavan,VCK,வி.சி.க.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/545cbpp1/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/545cbpp1/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 'தமிழ் தேசிய எழுச்சி மாநாடு' தொடர்பான செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் பேசியதாவது;-</p><p>“ஒரு இயக்கம் உயிர்ப்போடு இருக்க வேண்டுமானால் 2 விஷயங்கள் தேவை. ஒன்று கொள்கை, கோட்பாடு என்கிற உயிர்ப்பு ஆற்றல். இன்னொன்று அதற்கான களமும், பணிகளும், போராட்டங்களும். கொள்கை, கோட்பாட்டை மட்டும் வைத்துக் கொண்டு எதுவும் செய்ய முடியாது. வெறும் கோட்பாட்டை பேசிக்கொண்டு எதுவும் செய்ய முடியாது. அதற்கான களம் அமைப்பது, அந்த களத்தில் நின்று போராடுவது என்பதுதான் ஒரு இயக்கத்தை உயிர்ப்தோடு வைத்திருப்பதற்கான அடிப்படை தேவைகளில் ஒன்று.</p><p>இது வெறும் தேர்தலுக்காக உருவான இயக்கம் இல்லை. மக்களின் தேவைக்காக உருவான இயக்கம். பெரும் பதவி அதிகாரம் என்கிற வேட்கையில் உருவான இயக்கம் இல்லை. இது மக்களின் பாதுகாப்புக்காக உருவான இயக்கம். இது பதவிக்கானது அல்ல, பாதுகாப்புக்கானது.</p><p>எப்படியெல்லாம் வேலை செய்தால் ஓட்டு வாங்க முடியும் என்று சிந்திக்காமல் எப்படியெல்லாம் வேலை செய்தால் மக்களை பாதுகாக்க முடியும் என்று சிந்திக்கிற இயக்கம் இந்த இயக்கம். எப்படியெல்லாம் வேலை செய்தால் தொகுதி பங்கீடு செய்து கொள்ள முடியும் என்று சிந்திக்கிற இயக்கம் இல்லை இந்த இயக்கம். எப்படியெல்லாம் வேலை செய்தால் மக்கள் சந்திக்கிற சவால்களை எதிர்கொள்ள முடியும் என்று சிந்திக்கிற இயக்கம். ஆகவேதான் எத்தனை சுனாமிகள் அடித்தாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சேதப்படாமல் இருக்கிறது. </p><p>இப்படித்தான் நாம் தொடக்க காலத்தில் இருந்தே இந்த இயக்கத்தை உயிர்ப்போடு வைத்திருக்கிறோம். இந்த இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்ட ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த பங்களிப்பை செலுத்தியதன் அடிப்படையில்தான் இந்த இயக்கம் நாளுக்கு நாள் வலிமை பெற்று இன்றைக்கு தமிழகத்தில் ஒரு மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றிருக்கிறது.</p> <p>பொருளாதார வலிமை பெற்ற யாரும் நம்மோடு இல்லை. தொழிலதிபர்களோ, பெரு வணிகர்களோ, ஒப்பந்ததாரர்களோ இந்த இயக்கத்தில் யாருமில்லை. இந்த இயக்கத்திற்கு பெரிதாக கொடை அளிப்பதற்கும், துணை இருப்பதற்கும் தொழிலதிபர்களோ, பெரு வணிகர்களோ, ஒப்பந்ததாரர்களோ தயாராகவும் இல்லை.</p><p>சமகாலத்தில் நம்மோடு களத்திற்கு வந்த எத்தனையோ பல இயக்கங்கள் காணாமலும் போயிருக்கின்றன, வலுவிழந்து நீர்த்தும் போயிருக்கின்றன. ஆனால் எந்த பின்புலமும் இல்லாமல், யாருடைய தயவும் இல்லாமல், நம் சொந்த கைகளை ஊன்றி கரணம் போட்டு ‘அந்தரத்திலே பந்தல் கட்டுவது’ என்பார்களே, அப்படி அந்தரத்தில் பந்தல் கட்டி இன்றைக்கு ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக இந்த இயக்கம் பரிணாமம் அடைந்திருக்கிறது. அதை பெருமையோடு சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன்.</p><p>அதிலும் இந்த இயக்கத்தின் கிளைகள் எங்கு வேண்டுமானாலும் பரவி தழைத்திருக்கலாம். ஆனால் இந்த இயக்கத்தின் ஆணிவேர் மதுரை மண்தான் என்பதை என்றென்றைக்கும் பெருமையோடு பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன். இந்த இயக்கம் இன்றைக்கு எளிய மக்களுக்குக்கான ஒரு பாதுகாப்பு அரணாக விளங்குகிறது.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>பணி நியமனம் வழங்கக்கோரி எழும்பூரில் ஆசிரியர்கள் கண்கட்டி உண்ணாவிரத போராட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/teachers-blindfold-hunger-strike-chennai-job-appointments</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/teachers-blindfold-hunger-strike-chennai-job-appointments#comments</comments><guid isPermaLink="false">60917c38-f169-4022-ab04-0909888a428b</guid><pubDate>Fri, 17 Jul 2026 14:53:06 +0000</pubDate><atom:updated>2026-07-17T14:53:06.419Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எழும்பூர்,ஆசிரியர்கள்,Chennai Egmore,hunger strike,உண்ணாவிரத போராட்டம்,Graduate Teachers</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/6vt8sreh/tea.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆசிரியர்கள் கண்கட்டி உண்ணாவிரத போராட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/6vt8sreh/tea.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் தகுதி தேர்வு மற்றும் நியமன தேர்வுகளில் தேர்ச்சி பெற்றும் இன்னும் பணி நியமனம் வழங்கப்படாததை கண்டித்து, ஆசிரியர்கள் சென்னையில் இன்று நூதன முறையில் கண்களில் சிவப்பு துணி கட்டி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">உண்ணாவிரத போராட்டத்தில்</a> ஈடுபட்டனர்.</p> <h2>ஆசிரியர்கள் உண்ணாவிரதம் </h2><p>தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் மற்றும் 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இன்று காலை சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே திரண்டனர். அவர்கள் தங்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கக்கோரி திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><h2>கண்கட்டி நூதன போராட்டம்</h2><p>போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அனைவரும் தங்களது கண்களில் சிவப்பு நிற ரிப்பன்களை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தனர். தங்களின் வாழ்வாதார போராட்டத்தை அரசு இன்னும் கவனித்து பார்க்கவில்லை என்பதை உணர்த்தும் விதமாக இந்த நூதன முறையை கையாண்டதாக அவர்கள் தெரிவித்தனர். </p><h2>உடனடியாக பணி நியமனம்</h2><p>2024 நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களில் குறைந்த அளவில் ஆசிரியர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய அனைத்து ஆசிரியர்களுக்கும் உடனடியாக பணி நியமனம் வழங்க வேண்டும். எந்தவொரு மறுதேர்வும் இன்றி, தகுதி பட்டியலில் உள்ளவர்களுக்கு நேரடியாக வேலை வழங்கப்பட வேண்டும். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். 1 ஆசிரியர் மட்டுமே உள்ள அரசு பள்ளிகளை மாற்றி, குறைந்தபட்சம் 5 ஆசிரியர்களை கொண்ட பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும். </p><h2>10 அம்ச கோரிக்கை</h2><p>இது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. ஆசிரியர்களின் இந்த கண்கட்டி போராட்டம் அந்த வழியே சென்ற பொதுமக்களின் கவனத்தை ஈர்த்ததுடன், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழலை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மத்திய அரசுக்கு திமுக ஆதரவா? ஆர்.எஸ்.பாரதி பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/does-the-dmk-support-the-central-government-on-the-issue-of-constituency-delimitation-rs-bharathi-responds</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/does-the-dmk-support-the-central-government-on-the-issue-of-constituency-delimitation-rs-bharathi-responds#comments</comments><guid isPermaLink="false">29ab5acc-0384-4fa9-9983-f852c44887b6</guid><pubDate>Fri, 17 Jul 2026 14:30:17 +0000</pubDate><atom:updated>2026-07-17T14:30:17.398Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,ஆர்.எஸ்.பாரதி,RS Bharati,தொகுதி மறுசீரமைப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/tm8mekh3/RS-bharati.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/tm8mekh3/RS-bharati.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p> நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 13-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை சில திருத்தங்களுடன் தாக்கல் செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.தற்போது ‘இந்தியா’ கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதால், இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு தி.மு.க. மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளிடம் ஆதரவு கேட்கும் முயற்சியில் பா.ஜனதா ஈடுபட்டுள்ளது என்றும், அவர்கள் இந்த மசோதாவை ஆதரிக்க கூடாது என்றும் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><p>இந்த நிலையில்,  தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டியில் கூறியதாவது:- 20-ந்தேதி தொடங்கும் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய பாஜக அரசால் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ள முன்மொழியப்பட்ட மசோதாவின் திருத்தப்பட்ட வரைவைப் பார்த்த பிறகுதான் தொகுதி மறுவரையறை பிரச்சினை குறித்து தி.மு.க. முடிவெடுக்கும். நாங்கள் தொகுதி மறுவரையறை மசோதாவை ஏற்கனவே தோற்கடித்துள்ளோம். </p><p>எனவே இந்த மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்படும்போது அதன் உள்ளடக்கத்தை நாங்கள் பரிசீலிப்போம். அது தமிழ்நாடு உள்பட தென்னிந்திய மாநிலங்களின் நலன்களுக்கு எதிராக இருந்தால் தி.மு.க. அதை எதிர்க்கும். நாங்கள் ஏற்கனவே அளித்துள்ள பரிந்துரைகளைச் மத்திய அரசு சேர்த்திருந்தால், தி.மு.க. அதை எதிர்க்க வேண்டிய அவசியமில்லை.மாநில உரிமைகளுக்கான தனது போராட்டத்தில் தி.மு.க. என்றைக்கும் உறுதியாக இருக்கும். தி.மு.க. அளித்துள்ள பரிந்துரைத்த மாற்றங்கள் மசோதாவில் சேர்க்கப்பட்டால், பா.ஜனதா தனது நிலைப்பாட்டை தளர்த்தியுள்ளது என்று அர்த்தம்’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பொறியியல், கலை மற்றும் அறிவியல் மாணவர்களுக்கு பிணையில்லா கல்விக்கடன்: அமைச்சர் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/interest-free-education-loans-for-engineering-arts-and-science-students-minister-announces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/interest-free-education-loans-for-engineering-arts-and-science-students-minister-announces#comments</comments><guid isPermaLink="false">79086c03-9cdc-481e-b337-67c5d5e0bcf5</guid><pubDate>Fri, 17 Jul 2026 13:54:02 +0000</pubDate><atom:updated>2026-07-17T13:54:02.055Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Announcement,Education Loan,கல்விக்கடன்,Engineering,பொறியியல்,மாணவர்கள்students,கலை மற்றும் அறிவியல்,அமைச்சர் அறிவிப்பு,Minister for Higher Education</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/io7cmoov/minister-viswanathan.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உயர்கல்வித் துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/io7cmoov/minister-viswanathan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பொறியியல், பலவகை தொழில்நுட்பம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணாக்கர்களுக்கு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%20">பிணையில்லா கல்விக் கடன் </a>மாவட்ட அளவில் கல்விக் கடன் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் வாயிலாக விரைவான சேவை வழங்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்தார்.</p><p>இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது :-</p> <h2>பிணையில்லா கல்விக் கடன்</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையில் 06.07.2026 அன்று நடைபெற்ற உயர்கல்வி துறை ஆய்வு கூட்டத்தில், பொறியியல், பலவகை தொழில்நுட்பம், கலை மற்றும் அறிவியல், கல்லூரிகளில் மாணாக்கர்கள் சேர்க்கையினை மேலும் அதிகரிப்பதற்கும், பொருளாதார காரணங்களால் எந்தவொரு மாணவரும் உயர்கல்வியை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்படாத வகையில், தகுதியான மாணாக்கர்களுக்கு பிணையில்லா கல்விக் கடன் வழங்குவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.</p> <h2>ஒருங்கிணைப்பு அலுவலர்</h2><p>அதனை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் கல்விக்கடன் வழங்குவதை திறம்பட செயல்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உதவி பேராசிரியர் நிலையில் ஒருங்கிணைப்பு அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சேவைக்கென ஒவ்வொரு ஒருங்கினைப்பு அலுவலருக்கும் பிரத்தியேகமான தெலைப்பேசி எண் வழங்கப்பட்டுள்ளது. </p><h2> பயிற்சி</h2><p>இந்த ஒருங்கிணைப்பு அலுவலர்கள், பொறியியல், பலவகை தொழில்நுட்பம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை பெற்றுள்ள மாணாக்கர்கள் கல்விக் கடன் பெறுவதற்கு தேவையான வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் வழங்குவார்கள். ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கு வங்கிக் கடன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த பயிற்சி, முன்னணி வங்கிகளின் உயர் அலுவலர்கள் வாயிலாக அளிக்கப்பட்டுள்ளது.</p><h2>இணைப்பு பாலம்</h2><p>கல்விக் கடன் பெற விரும்பும் மாணாக்கர்கள் இந்த ஒருங்கிணைப்பு அலுவலர்களை தொடர்பு கொண்டால் கல்வி கடன் குறித்த அனைத்து விவரங்களையும் மாணவர்களுக்கு வழங்குவதோடு, மாவட்ட முன்னணி வங்கி மேலாளர்  தொடர்பு கொண்டு மாணாக்கர்களுக்கும், வங்கிக்கும் ஒரு இணைப்பு பாலமாக ஒருங்கிணைப்பு அலுவலர்கள் செயல்படுவர்.</p> <h2>கலெக்டர்</h2><p>மேலும், ஏற்கனவே மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கல்லூரிகளில் மாணாக்கர் சேர்க்கை வழிகாட்டல் மற்றும் உதவி மையமாக செயல்படும் கட்டுப்பாட்டு அறையில் உள்ள பொறுப்பு அலுவலருடன் இந்த ஒருங்கிணைப்பு அலுவலர் இணைந்து செயல்படுவார். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருங்கிணைப்பாளர் வாயிலாக பெறப்படுகின்ற கல்வி கடன் குறித்த தகவல்கள் மற்றும் வங்கி விவரங்கள் மாவட்ட கலெக்டருக்கு தொடர்ந்து தெரிவிக்கப்படும்.</p><h2>ஆய்வுக் கூட்டம்</h2><p>மாவட்ட  கலெக்டர், அனைத்து வங்கிகளின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கல்விக் கடன் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பொறுப்பு அலுவலர்களுடன் அவ்வப்போது ஆய்வுக் கூட்டம் நடத்தி வங்கி வாரியாக மாணாக்கர்களுக்கு கல்விக்கடன் எளிதாகவும், விரைவாகவும் வழங்கிட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வார். மேலும், இந்த ஆய்வுக் கூட்டத்தில் கல்லூரி வாரியாகவும் வங்கிகள் வாரியாகவும் கல்விக்கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கப்பட்ட மாணாக்கர்களின் எண்ணிக்கை, வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ள கடன்களின் விவரம் மற்றும் நிலுவையிலுள்ள விண்ணப்பங்களின் மீது உடனடியாக கல்விக்கடன் வழங்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு மேற்கொள்வார்.</p><p> தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையிலான இந்த அரசின் முன்னெடுப்பின் மூலம், பொருளாதார காரணங்களால் உயர்கல்வி பாதிக்கப்படாமல், தகுதியான பொறியியல், பலவகை தொழில்நுட்பம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணாக்கர்கள் எளிதில் கல்விக் கடன் பெற்று தங்களது கல்வியை தொடரும் வாய்ப்பு உறுதி செய்யப்படுவதுடன், உயர்கல்வி துறையில் மாணாக்கர் சேர்க்கையும் மேலும் அதிகரிக்கும்.</p> <p>இவ்வாறு உயர்கல்வித்துறை அமைச்சர்  தெரிவித்தார்.</p><p>இந்நிகழ்வின் போது, கல்லூரிக் கல்வி ஆணையர் பி.பொன்னையா, தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் பி.ரத்தின சாமி, ஆகியோர் உடனிருந்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற தி.மு.க.விடம் ஆதரவு  கேட்போம்: மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-seek-dmk-support-for-delimitation-bill-ramdas-athawale</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-seek-dmk-support-for-delimitation-bill-ramdas-athawale#comments</comments><guid isPermaLink="false">711daf58-076f-4308-87f8-c2a46d711a36</guid><pubDate>Fri, 17 Jul 2026 13:40:23 +0000</pubDate><atom:updated>2026-07-17T13:40:23.838Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ராம்தாஸ் அத்வாலே</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/7q1bijhc/Ramdas.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/7q1bijhc/Ramdas.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை மந்திரியும், இந்திய குடியரசு கட்சியின் தேசிய தலைவருமான ராம்தாஸ் அத்வாலே சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் தலித்கள் மீதான வன்கொடுமைகள், கொலை சம்பவங்களும் அதிகரித்துள்ளது. இதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 8 ஆயிரத்து 352 கலப்பு திருமணங்கள் நடந்துள்ளன. இது வரவேற்கத்தக்கது. அமைச்சர்கள் சம்பத்குமார், வன்னியரசு அளித்த துறை சம்பந்தமான கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும்.</p><h2>மசோதாக்கள்</h2><p>கடந்த முறை தோல்வி அடைந்த பெண்களுக்கான இட ஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை ஆகிய 2 மசோதாக்களும் வருகிற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பெரும்பான்மையுடன் நிறைவேறும்.இந்தியா கூட்டணியில் காங்கிரஸ்- தி.மு.க. இடையே உறவில் பிளவு, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசில் இருந்து 20 எம்.பி.க்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு மூலம் இந்த மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற வாய்ப்பு உள்ளது.</p><h2>திமுக </h2><p>காங்கிரசுக்கு எதிரான நிலைப்பாட்டை தி.மு.க. எடுக்கும் அல்லது நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பை புறக்கணிக்கும் என எதிர்பார்க்கிறோம். இல்லையென்றாலும் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற ஆதரவு தெரிவிக்குமாறு தி.மு.க.விடம் பா.ஜனதா தலைமை பேச்சுவார்த்தை நடத்தும். தமிழகத்தில் ஆணவ படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு வருவது வரவேற்கத்தக்கது.</p><h2>தேசிய ஜனநாயக கூட்டணி</h2><p>த.வெ.க. அரசு ஆட்சியமைக்க தேசிய ஜனநாய கூட்டணி கட்சியின் ஆதரவை கேட்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் தி.மு.க. கூட்டணியை சேர்ந்த இதர கட்சிகளின் ஆதரவு பெற்று ஆட்சி அமைத்தது. தமிழக அரசுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும். தமிழக அரசு ஆதிதிராவிடர் நலத்துறையை சமூகநீதி துறை என பெயர் மாற்றியது வரவேற்கத்தக்கது.இவ்வாறு ராம்தாஸ் அத்வாலே கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது - உதயநிதி ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-recruitment-should-not-be-postponed-udhayanidhi-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-recruitment-should-not-be-postponed-udhayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">cfd9d79e-9948-4276-956f-02d07dc6be8f</guid><pubDate>Fri, 17 Jul 2026 13:36:41 +0000</pubDate><atom:updated>2026-07-17T13:36:41.107Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,காவலர் தேர்வு,Police Recruitment</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/to2s5cvt/11.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/to2s5cvt/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்தது முதலே குற்றச்சம்பவங்கள் பெருகி வரும் நிலையில், முன்பை விட கூடுதலாக தற்போது காவலர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் நடப்பாண்டுக்கான காவலர்கள் நியமனத்தை இன்னும் ஓராண்டுக்கு இந்த அரசு தள்ளி வைத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.</p><p>சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பின்படி அடுத்த ஆண்டுதான் காவலர்கள் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகவிருக்கிறது. </p><p>இது, காவல்துறை பணிக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது. இதன் மூலம், ஏற்கெனவே சீர்கெட்டுக் கிடக்கும் சட்டம் ஒழுங்கையும், காவல்துறை பணியின் மீது ஆர்வம் கொண்ட இளைஞர்களின் எதிர்காலத்தையும் ஒருசேர கேள்விக்குறியாக்கி இருக்கிறது இந்த அரசு. </p><p>எனவே, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் தற்போது வெளியிட்டிருக்கும் அட்டவணையை உடனடியாக திரும்பப் பெற்று, நடப்பு ஆண்டிலேயே காவலர்களை நியமிப்பதற்கான பணிகளை தொடங்க வேண்டுமென்று இந்த அரசை கேட்டுக்கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தென்காசி: கோட்டை மலையில் பயங்கர தீ.. அரியவகை மூலிகைகள் கருகி நாசம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tenkasi-massive-fire-on-kottai-malai-rare-medicinal-plants-destroyed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tenkasi-massive-fire-on-kottai-malai-rare-medicinal-plants-destroyed#comments</comments><guid isPermaLink="false">bb8ef3eb-60c1-440d-a124-4f153f9b5f2a</guid><pubDate>Fri, 17 Jul 2026 13:16:40 +0000</pubDate><atom:updated>2026-07-17T13:16:40.735Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,தென்காசி,forest fire,காட்டுத் தீ</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/uix1lrnv/10.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/uix1lrnv/10.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><p>தென்காசி மாவட்டம் புளியங்குடி வனச்சரகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள கோட்டை மலை பீட் பகுதியில் திடீரென நேற்று மதியம் காட்டுத்தீ ஏற்பட்டது. காற்றின் வேகம் காரணமாக தீ வேகமாக பல்வேறு இடங்களில் பரவி வருகிறது. தகவலறிந்த புளியங்குடி வனச்சரக அலுவலர் தலைமையில் வனத்துறையினர் 15-க்கும் மேற்பட்டோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.</p><p>இந்த காட்டுத்தீயால் வனப்பகுதியில் காணப்படும் அரிய வகை மூலிகைச் செடிகள் கருகியதாக கூறப்படுகிறது. மேலும் வனவிலங்குகளும் பாதிப் புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை மாநகராட்சி அறிவிப்பு: இன்று முதல் மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு இணையதளப் பதிவு தொடக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-corporation-announcement-online-self-census-registration-from-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-corporation-announcement-online-self-census-registration-from-today#comments</comments><guid isPermaLink="false">e7369f02-036d-43bc-96d8-8d6056dcb93d</guid><pubDate>Fri, 17 Jul 2026 13:15:41 +0000</pubDate><atom:updated>2026-07-17T13:15:41.403Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Online,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,இணையதளம்,மக்கள் தொகை கணக்கெடுப்பு,Census</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/tnwi8tyr/sameeran.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/tnwi8tyr/sameeran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> சென்னை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்ட பணியாக இன்று 17.07.2026 முதல் 31.07.2026 வரை பொதுமக்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே தங்கள் குடும்பத்தின் விவரங்களை இணையம் வழியாக https://se.census.gov.in என்ற சுய கணக்கெடுப்பு இணையதளத்தில் பதிவு செய்து, கொள்ளலாம்.</p><p>இது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- </p><h2>மக்கள் தொகை கணக்கெடுப்பு</h2><p>இன்று மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்ட பணிகள் தொடங்குகின்றன. <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">மக்கள் தொகை கணக்கெடுப்பு</a> என்பது வெறும் மக்கள் எண்ணிக்கையை கணக்கிடும் பணி மட்டும் இன்றி, எதிர்கால வளர்ச்சிக்கான அடித்தளமாக இது அமைகிறது.</p><h2>தகவல்கள்</h2><p>கல்வி, மருத்துவம், குடிநீர், சாலை, வீட்டு வசதி, சமூகப் பாதுகாப்பு, மக்கள் நலத் திட்டங்கள் என அரசின் அனைத்து திட்டங்களையும் சரியாக திட்டமிடுவதற்கு மக்கள் தொகை கணக்கெடுப்பின் தகவல்கள் தான் அடிப்படையாக அமைகின்றது. அதனால், ஒவ்வொரு குடும்பமும் சரியான தகவல்களை அளிப்பது மிகவும் முக்கியம்.</p><h2>வீடுகள் கணக்கெடுப்பு</h2><p>இந்தியாவில் முதல்முறையாக, இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு முழுமையாக டிஜிட்டல் முறையில் நடைபெறுகிறது. இந்த கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமான வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு 2026 ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30 வரை நடைபெறும். அதற்கு முன்பாக, இன்று (17.07.2026 ) முதல் 31.07.2026 வரை, முதன்முறையாக சுயக் கணக்கெடுப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது.</p> <h2> இணையதள பதிவு</h2><p>இதன் மூலம், மக்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே தங்களது குடும்பத்தின் விவரங்களை தாங்களே இணையம் வழியாக https://se.census.gov.in என்ற சுய கணக்கெடுப்பு இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். தங்களது சுய கணக்கெடுப்பை பதிவு செய்த பின் வழங்கப்படும் சுயகணக்கெடுப்பு பதிவு எண்ணை தங்கள் இல்லத்திற்கு வரும் கணக்கெடுப்பாளரிடம் வழங்கினால் போதுமானது.</p><h2>நாளைய வளர்ச்சி</h2><p>எனவே, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் இந்த சுய கணக்கெடுப்பிலும், மக்கள் தொகை கணக்கெடுப்பிலும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்படுகிறது.</p><p>மக்கள் வழங்கும் அனைத்து தகவல்களும் சட்டப்படி முழுமையான ரகசியத்துடன் பாதுகாக்கப்படும். எந்த தயக்கமும் இல்லாமல், உண்மையான மற்றும் துல்லியமான தகவல்களை வழங்கலாம். மக்களின் நலனே அரசின் முதன்மையான நோக்கம். இன்று எடுக்கும் சரியான தகவல்கள் தான் நாளைய வளர்ச்சிக்கான வலுவான அடித்தளமாக அமையும். மக்கள் நலனுக்காக, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027-ஐ வெற்றிகரமாக நடத்துவோம்.</p><p>மேற்கண்ட தகவலை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பழனி முருகன் கோவிலில் 20-ந்தேதி முதல் ரோப் கார் சேவை நிறுத்தம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rope-car-service-at-palani-murugan-temple-suspended-from-the-20th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rope-car-service-at-palani-murugan-temple-suspended-from-the-20th#comments</comments><guid isPermaLink="false">07037650-2e9b-4c02-9d4a-03ad7c7c3a38</guid><pubDate>Fri, 17 Jul 2026 13:01:35 +0000</pubDate><atom:updated>2026-07-17T13:01:35.604Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Palani Murugan Temple,பழனி முருகன் கோவில்,ரோப் கார் சேவை,Rope Car Service</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/2v4w9e47/9.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/2v4w9e47/9.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><p>உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவில், மலை மீது அமைந்துள்ளது. அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை பிரதான வழிகளாக உள்ளன. இதுதவிர பக்தர்கள் மலைக்கோவிலுக்கு எளிதில் சென்றுவர ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகள் பயன்பாட்டில் உள்ளது. இதில் ரோப்கார் வழியாக விரைவாகவும், பழனி மலையின் இயற்கை அழகை பார்த்து ரசித்தபடியும் செல்லலாம் என்பதால் பெரும்பாலானோர் ரோப்காரில் செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் இந்த ரோப்கார் சேவை பக்தர்களுக்கு சிறந்த சுற்றுலா அனுபவத்தை கொடுக்கிறது. </p><p>பழனி ரோப்கார் நிலையத்தில் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாதாந்திர, வருடாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவது வழக்கம். அப்போது ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டு பணி மேற்கொள்ளப்படும். அதன்படி பழனி முருகன் கோவில் ரோப்கார் நிலையத்தில், வருடாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக வருகிற 20-ந்தேதி முதல் 45 நாட்களுக்கு ரோப் கார் சேவை இயங்காது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p>எனவே பக்தர்கள் மின்இழுவை ரெயில், படிப்பாதையை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை பள்ளிகளில் மாணவிகளுக்கு பாதுகாப்பான  கல்விச் சூழலை உருவாக்கும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/awareness-programs-aimed-at-creating-a-safe-educational-environment-for-female-students-in-chennai-schools</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/awareness-programs-aimed-at-creating-a-safe-educational-environment-for-female-students-in-chennai-schools#comments</comments><guid isPermaLink="false">7346d200-465f-4c7d-b7d9-ced0c20f14fe</guid><pubDate>Fri, 17 Jul 2026 12:59:54 +0000</pubDate><atom:updated>2026-07-17T12:59:54.726Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,schools,விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/ie9lh4j4/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/ie9lh4j4/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், சென்னை பள்ளிகளில் மாணவிகளுக்கு பாதுகாப்பான மற்றும் உள்ளடக்கிய கல்வி சூழலை உருவாக்கும் நோக்கில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“பெருநகர சென்னை மாநகராட்சியானது, பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகம் (Gender and Policy Lab - GPL) மூலம், மாணவர்களுக்கு, குறிப்பாக வளர் இளம் பெண் மாணவிகளுக்கு பாதுகாப்பான மற்றும் உள்ளடக்கிய கல்வி சூழலை உருவாக்கும் நோக்கில், அனைத்து சென்னை பள்ளிகளிலும் பாதுகாப்பு தணிக்கைகளை (Safety Audits) மேற்கொண்டு வருகிறது.</p><p>இம்முயற்சியை, குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகளை மேலும் வலுப்படுத்தவும், தேவையான ஆதரவு சேவைகளுக்கு உரிய பரிந்துரைகளை வழங்கவும், மாநகராட்சி பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்ய ஒருங்கிணைந்த அணுகுமுறையை ஏற்படுத்தவும், குழந்தைகள் நலத்துறையுடன் இணைந்து சென்னை மாநகராட்சியின் பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகம் செயல்படுத்தி வருகிறது.</p><p>இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை மாநகராட்சியின் பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுடன் (District Child Protection Unit - DCPU) இணைந்து, பெண் மாணவிகளுக்கான குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.</p> <p>மேலும், ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களைச் சேர்ந்த தகுதியான மாணவர்கள் ஒற்றைக் குழந்தை ஆதரவுத் திட்டத்தில் (Single Child Sponsorship Programme) சேர்க்கப்படுவதற்காக அடையாளம் காணப்படுகின்றனர். பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடல்கள் நடத்தி, பள்ளிக்குள்ளும் பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அவர்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு சார்ந்த கருத்துகள் மற்றும் சவால்கள் அறியப்படுகின்றன. </p><p>அதேவேளையில், வகுப்பறைகள், கழிப்பறை வசதிகள், விளக்குகள், அணுகல்தன்மை மற்றும் பிற அத்தியாவசிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட பள்ளி உள்கட்டமைப்புகளும் பாதுகாப்பு தணிக்கையின் மூலம் மதிப்பீடு செய்யப்படுகின்றன. பாதுகாப்பு தணிக்கைகள் மற்றும் மாணவர்களுடனான கலந்துரையாடல்களின் மூலம் பெறப்படும் தகவல்கள், பள்ளி பாதுகாப்பை மேம்படுத்தவும், பாலின சமத்துவத்தை மையமாகக் கொண்ட திட்டமிடலை வலுப்படுத்தவும் ஆதாரப்பூர்வமான பரிந்துரைகளை உருவாக்கவும் உதவும். </p><p>அனைத்து குழந்தைகளுக்கும் பாதுகாப்பான, உள்ளடக்கிய மற்றும் குழந்தை நட்பு கல்விச் சூழலை உருவாக்குவதில் சென்னை மாநகராட்சி தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது. இதன் ஒரு பகுதியாக, நேற்று (16.07.2026) பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-170க்குட்பட்ட சின்னமலை, சென்னை மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு, துண்டுப் பிரசுரங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு, பள்ளியின் சுவர்களில் ஒட்டப்பட்டது.</p><p>இதன் தொடர்ச்சியாக, இன்று (17.07.2026) பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-141க்குட்பட்ட சி.ஐ.டி. நகர், சென்னை மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு, துண்டுப் பிரசுரங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு, பள்ளியின் சுவர்களில் ஒட்டப்பட்டது.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>சென்னை மாநகராட்சியில் 12 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/plan-to-plant-1-2-million-saplings-in-chennai-corporation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/plan-to-plant-1-2-million-saplings-in-chennai-corporation#comments</comments><guid isPermaLink="false">626fe320-1792-4f8f-a3b8-49a4ff5f6a74</guid><pubDate>Fri, 17 Jul 2026 12:42:14 +0000</pubDate><atom:updated>2026-07-17T12:42:14.264Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Corporation,சென்னை மாநகராட்சி,திட்டம்project,முதல்-அமைச்சர்Chief Minister,Saplings மரக்கன்றுகள்</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/wiy1cm3z/plants.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை 12 லட்சம் மரக்கன்றுகள் நடவு திட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/wiy1cm3z/plants.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகராட்சியில் பசுமைப் பரப்பினை அதிகரித்திடும் வகையில் நடப்பு ஆண்டில் 12 லட்சம் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81">மரக்கன்றுகள் நடவு</a> செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- </p> <h2>19 நர்சரி தோட்டம்</h2><p>இதற்காக, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பூங்காக்களில் 19 நர்சரி தோட்டம் வாயிலாக 121 நாற்றங்கால் பண்ணைகள் அமைக்கப்பட்டு, மரக்கன்றுகள் உருவாக்கப்படுகிறது. தமிழ்நாடு முதல்-அமைச்சர்  பசுமை பரப்பினை அதிகரிக்கும் வகையில் தமிழ்நாட்டில் திறந்தவெளி நிலங்கள், பூங்காக்கள், சாலை மைய தடுப்புகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் மற்றும் செடிகள் நட்டு தொடர்ந்து பராமரித்திட மாவட்ட கலெக்டர் மாநாட்டில் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><h2>அழகுபடுத்தும் பணி</h2><p> தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மண்டலம் 1 முதல் 15 வரை உள்ள திறந்தவெளி நிலங்கள், பூங்காக்கள், சாலை மையத்தடுப்புகள், போக்குவரத்து தீவுத்திட்டுகள், சாலையோர பூங்காக்கள் மற்றும் மாநகராட்சி அலுவலக வளாகங்கள், பள்ளி கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் மற்றும் அழகிய வண்ணப்பூக்கள் பூக்கும் குறுவகை செடிகள் போன்றவை கொண்டு அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p> <h2>பராமரிப்பு</h2><p>கடந்த ஆண்டில் சென்னை மாநகராட்சி மூலமாக, 44,165 எண்ணிக்கையிலான 28 வகையான நாட்டு வகை மரக்கன்றுகள் மற்றும் தமிழ்நாடு அரசு வனத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, 42,635 எண்ணிக்கையிலான மரக்கன்றுகள் என மொத்தம் 86,800 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சாலை மைய தடுப்புகள், போக்குவரத்து தீவுத்திட்டுகள், வனத்துறையின் மூலம் 10,000 எண்ணிக்கையிலான அழகிய வண்ணப்பூக்கள் பூக்கும் குறுவகை செடிகள் நடவு செய்யப்பட்டு சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது.</p><h2>மரக்கன்றுகள் நடவு</h2><p> சென்னை மாநகராட்சி வனத்துறையுடன் இணைந்து தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-125க்குட்பட்ட கைலாசபுரம் இடுகாடு/சுடுகாடு (மைலாப்பூர்) மற்றும் பெருங்குடி மண்டலம், மாடம்பாக்கம் ஆகிவற்றில் இதற்கான நர்சரி பண்ணைகள் உருவாக்கப்பட்டு மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில் ஜூன் மற்றும் ஜூலை 2026 மாதத்தில் 1,00,000 எண்ணிக்கையிலான மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டு, அதற்காக மேற்கண்ட நர்சரியில் இருந்து இதுநாள்வரை 40,993 எண்ணிக்கையிலான மரக்கன்றுகள் பெறப்பட்டு மண்டலம் 1 முதல் 15 வரை நடவு செய்யப்பட்டு மண்டலங்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.</p><h2>பூங்கா</h2><p>மேலும், சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களில் முதற்கட்டமாக திருவொற்றியூர் மண்டலம், வார்டு-7க்குட்பட்ட எம்.ஆர்.எப். பூங்கா மற்றும் தாழங்குப்பம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புப் பூங்கா, மணலி மண்டலம், வார்டு-19, 2ஆவது பிரதான சாலையில் உள்ள எம்.எம்.டி.ஏ. பூங்கா, மாதவரம் மண்டலம், வார்டு-24க்குட்பட்ட சில்வர் ஸ்கை பூங்கா, தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-43க்குட்பட்ட சி.டி.எச். பூங்கா, இராயபுரம் மண்டலம், வார்டு-51க்குட்பட்ட மின்ட் பூங்கா, வார்டு-58க்குட்பட்ட மை லேடிஸ் நர்சரி, திரு.வி.க.நகர்.</p> <h2>60,500 மரக்கன்றுகள்</h2><p>மண்டலம், வார்டு-75க்குட்பட்ட ஹெர்பல் பூங்கா, அம்பத்தூர் மண்டலம், வார்டு-83க்குட்பட்ட கலெக்டர் நகர் காலி இடம், அண்ணாநகர் மண்டலம், வார்டு-103க்குட்பட்ட அண்ணாநகர் டவர் பூங்கா, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-122க்குட்பட்ட டர்ன்புல்ஸ் சாலை பூங்கா, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-133க்குட்பட்ட நடேசன் பூங்கா, வார்டு-127க்குட்பட்ட ஜெய் நகர் பூங்கா, வளசரவாக்கம் மண்டலம், வார்டு-150க்குட்பட்ட எம்.எஸ்.சுவாமி நாதன் பூங்கா, ஆலந்தூர் மண்டலம், வார்டு-157க்குட்பட்ட எல் &amp; டி பூங்கா, அடையாறு மண்டலம், வார்டு-173க்குட்பட்ட இந்திரா நகர், 4வது குறுக்குத் தெரு மற்றும் தொல்காப்பியப் பூங்கா, பெருங்குடி மண்டலம், வார்டு-191க்குட்பட்ட மாடம்பாக்கம் நர்சரி, சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-198க்குட்பட்ட தேவராஜ் நகர், 2ஆவது பிரதான சாலையில் உள்ள பூங்கா என 19 எண்ணிக்கையிலான பூங்காக்களில் 121 நாற்றங்கால் பண்ணைகள் (Nursery Bed) உருவாக்கப்பட்டு, அதன் மூலம் தற்போது முதற்கட்டமாக 60,500 மரக்கன்றுகள் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. </p><p>இதில் நீர்மருது, பாதாம், சரக்கொன்றை, பூவரசு, பூங்கன், வேப்பம், குண்டு மணி உள்ளிட்ட பல்வகை நாட்டு மரக்கன்றுகள் உருவாக்கப்படுகிறது.</p><h2> நடவடிக்கை</h2><p>சென்னை நுழைவாயில், மீனம்பாக்கம் விமான நிலையம் முதல் கிண்டி கத்திப்பார சாலை வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் சுமார் 6 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலையோர பூங்காக்கள், சுவற்றில் வர்ணம் பூசுதல், கண்கவரும் அழகிய வண்ணங்களுடன் மிளிரக்கூடிய மின்விளக்குகள் மற்றும் சாலை மைய தடுப்புகளில் அழகிய வண்ணப்பூ பூக்கும் மற்றும் அழகிய வண்ண இலைகளுடன் கூடிய செடிகள் கொண்டு அழகுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது</p><p>இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையர் பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/when-will-by-elections-be-held-for-the-vacant-constituencies-in-tamil-nadu-election-commissioner-responds</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/when-will-by-elections-be-held-for-the-vacant-constituencies-in-tamil-nadu-election-commissioner-responds#comments</comments><guid isPermaLink="false">c2ee8c7a-d3e1-42fa-8b10-39043552700e</guid><pubDate>Fri, 17 Jul 2026 12:26:54 +0000</pubDate><atom:updated>2026-07-17T12:26:54.251Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,தேர்தல் ஆணையம்,Election Commision,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/98ubx5r8/Gneshkumar.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தேர்தல் ஆணையர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/98ubx5r8/Gneshkumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><p>கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற முதல் அமைச்சர்  விஜய், பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி பதவியை ராஜினாமா செய்தார்.  அதிமுக தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக  கரூர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற எம்.ஆர். விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி சி. விஜயபாஸ்கர், பெருந்துறை தொகுதி ஜெயக்குமார் மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதி இசக்கி சுப்பையா, மதுராந்தகம் தொகுதி மரகதம் குமாரவேல்,   தாராபுரம்  சத்யபாமா ஆகியோரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.  </p><h2>ராஜினாமா</h2><p>இதனால் தமிழகத்தில் 7 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த வேண்டியுள்ளது.  எம்.எல்.ஏக்கள் ராஜினாமா விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது. இதனால், இந்த  7 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் எப்போது நடைபெறும்  என்ற கேள்வி எழுந்துள்ளது</p><h2>ஞானேஷ்குமர் பேட்டி</h2><p>இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரிடம் செய்தியாளர்கள் இதுபற்றி கேட்டனர். அதற்கு ஞானேஷ் குமார் அளித்த பதிலில் கூறியதாவது; தமிழகத்தில் காலியாக உள்ள 7 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த  6 மாத கால அவகாசம் உள்ளது.  தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதை கருத்தில் கொண்டுள்ளோம். தேர்தல் வழக்குகள் முடிந்த பின் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும்” என்றார். </p> ]]></content:encoded></item><item><title>மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு: தமிழக மக்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் அழைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/self-enumeration-for-the-census-chief-minister-vijay-appeals-to-the-people-of-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/self-enumeration-for-the-census-chief-minister-vijay-appeals-to-the-people-of-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">658fb628-d1a1-4b18-812e-115aa783ca0d</guid><pubDate>Fri, 17 Jul 2026 12:08:28 +0000</pubDate><atom:updated>2026-07-17T12:08:28.784Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>மக்கள் தொகை கணக்கெடுப்பு,Census,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/acz4ltxx/8.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/acz4ltxx/8.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மக்கள் தொகை சுய கணெக்கெடுப்பு முறையில் முதல்-அமைச்சர் விஜய், தனது விபரங்களை பதிவு செய்துள்ளார். அத்துடன், தமிழக மக்கள் அனைவரும் சுய கணக்கெடுப்பு முறையில் தங்களது விபரங்களை பதிவு செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு;</p><h2>எல்லா திட்டங்களுக்குமான அடிப்படை</h2><p>”அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம்! நம் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது. இது வெறும் எண்ணிக்கை இல்லை,  நீங்கள் வழங்கும் தகவல்கள்தான் எல்லா திட்டங்களுக்குமான அடிப்படையாகும்.  எனவே, ஒவ்வொரு குடும்பமும் உண்மையான தகவல்களைக் கொடுங்கள்.  </p><p>இணையவழியில் சுய கணக்கெடுப்பு (Self Enumeration) செய்யலாம் – நான் பதிவு செய்துள்ளேன்!  உங்கள் தகவல்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும். வாங்க, எல்லோரும் சேர்ந்து இதை வெற்றிகரமாகச் செய்து முடிப்போம். மக்கள் நலனுக்காக மக்கள்தொகை கணக்கெடுப்பு!  வணக்கம்!”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சைதாப்பேட்டை சமூகநீதி விடுதியில் முதல்-அமைச்சர் விஜய் திடீர் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cm-vijay-surprise-inspection-saithapet-social-justice-hostel</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cm-vijay-surprise-inspection-saithapet-social-justice-hostel#comments</comments><guid isPermaLink="false">9ad2e2e1-2807-45bf-8948-1526889cebb9</guid><pubDate>Fri, 17 Jul 2026 12:01:32 +0000</pubDate><atom:updated>2026-07-17T12:01:32.998Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Social justice,சமூகநீதி,கவர்னர் மாளிகை,விடுதி,hostel,Sudden study திடீர் ஆய்வு,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/0n91mp5k/cm-vijay.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chief Minister Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/0n91mp5k/cm-vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சைதாப்பேட்டை சமூக நீதி விடுதியில் முதல்-அமைச்சர் விஜய் திடீர் ஆய்வு: கவர்னர் மாளிகைக்கு செல்வதுபோல் புறப்பட்டு வந்தார் </p><h2>எழும்பூர் மருத்துவமனையில் ஆய்வு</h2><p>தமிழக முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்ற பிறகு, ஒரு சில இடங்களில் திடீர் ஆய்வை மேற்கொண்டார். கடந்த வாரம் சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு அவர் சென்று ஆய்வு பணியில் ஈடுபட்டார். </p><h2>போலீசார் திணல்</h2><p>இந்த நிலையில், சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று பணிகளை முடித்து கொண்டு காரில் புறப்பட்ட <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%2C">முதல்-அமைச்சர் விஜய்,</a> கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை செல்லுமாறு கூறினார். ஆனால், கார் சைதாப்பேட்டையை நெருங்கும்போது அங்குள்ள சமூக நீதி விடுதிக்கு செல்லுமாறு கூறினார். இதனால், கார் மாற்றுப்பாதையில் சென்றதால், பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசாரே திணறிப்போனார்கள். </p> <h2>பொதுமக்கள் வரவேற்பு</h2><p>சமூக நீதி விடுதிக்கு வந்த முதல்-அமைச்சர் விஜயை பார்த்து அங்குள்ள ஊழியர்கள் அதிர்ந்து போனார். ஒவ்வொரு இடமாக சென்று அவர் ஆய்வு செய்தார். மாணவர்களுக்கு வழங்கும் உணவுகள் குறித்தும் கேட்டறிந்தார். முதல்-அமைச்சர் விஜய்யின் இந்த திடீர் ஆய்வுப் பணி பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-arun-raj-inspects-kilpauk-government-hospital</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-arun-raj-inspects-kilpauk-government-hospital#comments</comments><guid isPermaLink="false">24b940b2-d678-4ea2-99b4-e2aaa6ccd5a3</guid><pubDate>Fri, 17 Jul 2026 11:53:22 +0000</pubDate><atom:updated>2026-07-17T11:53:22.626Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Government Hospital,அரசு மருத்துவமனை,Minister Arunraj,அமைச்சர் அருண் ராஜ்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/u8gizmcr/7.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/u8gizmcr/7.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் க. அருண் ராஜ் இன்று கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் திடிர் ஆய்வு மேற்கொண்டார்.</p><h2>தூய்மையாக பராமரிக்க..</h2><p>கீழ்ப்பக்கம் அரசு மருத்துவமனையில் உயர் சிறப்பு சிகிச்சை பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, பார்வையாளர்கள் தங்கும் விடுதி, ஒருங்கிணைந்த அவசரகால தாய் சேய் பராமரிப்பு பிரிவு, அம்மா உணவகம் மற்றும் கல்லூரி மாணவர் விடுதி ஆகிய பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாண்புமிகு அமைச்சர், மருத்துவமனையின் கழிவறைப் பகுதிகளை எப்பொழுதும் தூய்மையாக பராமரிக்க அலுவலர்களுக்கும், ஒப்பந்ததாரருக்கும் அறிவுறுத்தினார். </p><p>மேலும் உயர் சிறப்பு சிகிச்சை பிரிவு கழிவறை பகுதிகளை தூய்மையாக பராமரிக்காத ஒப்பந்ததாரருக்கு விளக்கம் கேட்டு தாக்கீது வழங்கவும் உத்தரவிட்டார். தொடர்ந்து, அமைச்சர் மருத்துவமனையின் பழைய மகப்பேறு கட்டிடப் பகுதிகளில் உள்ள குழாய்களில் ஏற்பட்டுள்ள நீர் கசிவினை உடனடியாக சீர்செய்ய பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்காக வரும் பொது மக்களின் பதிவுகள் மேற்கொள்ளும் முறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.</p><p>தமிழ்நாடு அரசின் சிறந்த முன்னெடுப்பான “நலம் AI” whatsapp செயலி குறித்து விழிப்புணர்வு பதாகைகளை புறநோயாளிகள் பிரிவின் வெளிப்புற பகுதிகளில் காட்சிப்படுத்தவும், அச்செயலி குறித்து மருத்துவமனை பணியாளர்கள் அல்லது தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கி, அதன் மூலம் பொதுமக்களுக்கு புறநோயாளிகளுக்கான பதிவினை “நலம் AI” மூலம் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மருத்துவமனை முதல்வரிடம் தெரிவித்தார். </p><h2>சிகிச்சை முறைகள் குறித்து..</h2><p>மேலும் புறநோயாளிகள் பிரிவில் இருந்த பொதுமக்களிடம் மருத்துவமனையில் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். மருத்துவமனை முதல்வர் மற்றும் நிலைய அலுவலர் ஆகியோரை புறநோயாளிகள் பிரிவினை முழுவதுமாக ஆய்வு மேற்கொண்டு, இப்பிரிவில் உள்ள குறைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க அமைச்சர் அறிவுறுத்தினார்.</p><p>சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக இடிக்கப்பட்ட ஒருங்கிணைந்த அவசரகால தாய் சேய் பராமரிப்பு பிரிவின் ஒரு பகுதியை மறு சீரமைப்பது குறித்து மருத்துவத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின்போது கட்டடத்தின் நிலைத்தன்மை குறித்த சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT) சான்றிதழை பெறவும் அறிவுறுத்தினார்.</p><h2></h2><h2>அம்மா உணவகம்</h2><p>பின்னர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர், பொதுமக்களுக்கு சமைக்கப்பட்ட உணவின் தரத்தினை சுவைத்து பார்த்து ஆய்வு செய்தார். காலையில் 500 நபர்களுக்கு இட்லி மற்றும் பொங்கல் சமைக்கப்பட்டதாகவும், மதியம் 400 நபர்களுக்கு சாம்பார் சாதம் மற்றும் எலுமிச்சை சாதம் சமைக்கப்பட்டதாகவும் பணியாளர்கள் தெரிவித்தனர். இந்த உணவு வகைகளுடன் கூடுதலாக தயிர் சாதம் சமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், அம்மா உணவக வளாகத்தில் உள்ள தேவையற்ற, பழுதடைந்த பொருட்களை அப்புறப்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சி சுகாதார துறை அலுவலர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.</p><p>இதன் பின்னர் அமைச்சர் அருண் ராஜ் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,</p><h2>நலம் ஏஐ வாட்ஸ் அப் செயலி</h2><p>”தரமான மருத்துவ சேவைகள் அனைத்து பொதுமக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியத்தை நோக்கமாக கொண்டு முதலமைச்சர் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக “நலம் AI” Whatsapp chatbot அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை இந்த செயலியை 1,25,000 நபர்கள் பயன்படுத்தி உள்ளனர். இச்சேவை 22 மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக 22 மாவட்டங்களில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு பொது மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் புறநோயாளிகள் பதிவு செய்து கொள்ளலாம். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் நெஞ்சக நோய் பிரிவில் மருத்துவர் சந்திப்பு பதிவு (Appointment Booking) வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது. நெஞ்சக நோய் பிரிவில் மட்டும் இதுவரை 500 நபர்கள் அப்பாயிண்ட்மெண்ட் பதிவு செய்து சேவையை பயன்படுத்தி உள்ளனர். இச்சேவை விரைவில் மற்ற மாவட்டங்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும். இதன்மூலம் புறநோயாளிகள் காத்திருப்பு நேரம் குறையும்.</p><p>முதலமைச்சரால் தமிழ்நாடு சுகாதார அறக்கட்டளைக்கு (Health Foundation) நன்கொடை பெற "நலம் TN" என்ற இணையதள சேவையை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரிய தொழில் நிறுவனங்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் நன்கொடை வழங்கலாம். அரசு மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த பலர் நன்கொடை வழங்கியுள்ளனர். நலம் TN தொடங்கப்பட்ட ஒரு சில நாட்களிலேயே இதுவரை ரூ. 2.80 கோடி, நன்கொடை கிடைத்துள்ளது. இந்த தமிழ்நாடு சுகாதார அறக்கட்டளைக்கு பெறப்படும் நன்கொடை 100% வெளிப்படை தன்மையுடன் இருக்கும். பொதுமக்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் வழங்கும் ஒவ்வொரு ரூபாயும் பொது மக்களின் பயன்பாட்டிற்காக முழுவதுமாக பயன்படுத்தப்படும்.</p><h2>நீட் தேர்வு முடிவுகள்</h2><p>தற்பொது நீட் தேர்வு (NEET) முடிவுகள் வந்துள்ளது.. அதில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் வாழ்த்துக்கள். வெற்றி பெற முடியாத மாணவர்கள் மனம் உடைந்து போகத் தேவையில்லை. கண்டிப்பாக அவர்களுக்கான வாய்ப்புகள் நிறைய உள்ளது. தேர்வில் வெற்றி பெற முடியாத மாணவர்களுக்கு மனம் வருத்தம் இருக்கும். வெற்றி பெற முடியாத மாணவர்களளுக்கு பெற்றோர் உறுதுணையாக இருக்க வேண்டும். மனநல ஆலோசனைகள் தேவைப்படும் மாணவர்கள் அரசின் 104 உதவி உண்ணில் தொடர்பு கொண்டு ஆலோசனைகள் பெறலாம்.</p><p>இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்களை வருகின்ற ஜூலை 23ஆம் தேதி மாலை 5 மணி வரை வழங்கலாம். அதன் பிறகு கலந்தாய்விற்க்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்படும். தற்பொழுது தமிழ்நாட்டில் மருத்துவ துறையின் சரியான முன்னெடுப்புகளின் காரணமாக மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 இடங்கள் வீதம் 150 இடங்கள் கூடுதலாக கிடைக்கப்பெற்றுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு மொத்தம் 13,999 மருத்துவ இடங்கள் உள்ளது. அதில் அரசு மருத்துவ கல்லூரிகளில் மட்டும் 5,349 இடங்களும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் 8,650 இடங்களும் உள்ளன. இந்த ஆண்டு மட்டும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 950 இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளது.</p><p>மாலை நேர அம்மா கிளினிக் தொடங்குவது குறித்து முதலமைச்சர் நிதிநிலை அறிக்கையில் தெரிவிப்பார்கள். இது மக்களுக்கு தேவையான ஒரு திட்டம்.”</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>கடந்த ஆட்சியில் ரூ.5 லட்சம் கொடுத்தோம்;  இப்போ ஒரு ரூபாய் லஞ்சம் இல்லை- ஆம்னி பஸ் உரிமையாளர்கள் பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-paid-5-lakh-in-previous-regime-now-no-bribes-say-omni-bus-owners</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-paid-5-lakh-in-previous-regime-now-no-bribes-say-omni-bus-owners#comments</comments><guid isPermaLink="false">5ea307c1-621e-4fc5-a917-610c14c0f962</guid><pubDate>Fri, 17 Jul 2026 11:46:10 +0000</pubDate><atom:updated>2026-07-17T11:46:10.654Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,ஆம்னி பஸ்,தமிழக அரசு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/kff0nsza/Omni-bus.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/kff0nsza/Omni-bus.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் சங்கத்தினர்  முதல் அமைச்சர் விஜய்யை சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:  விழாக்காலங்களில் கட்டண உயர்வு என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து பல்வேறு ஆண்டுகளாக  வைக்கப்பட்டு வருகிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், எங்கள் சங்கத்தை சேர்ந்த 500 <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பேருந்துகள்</a> வருடம் முழுவதும் அரசு பேருந்து கட்டணத்திலேயே இயக்குவதற்கு அனுமதி கோரி விண்ணப்பம் கொடுத்து இருக்கிறோம். 500 பேருந்துகளை அரசு பேருந்து கட்டணத்திலேயே இயக்க தயாராக இருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறோம். முடிவு செய்து சொல்வதாக கூறியிருக்கிறார்கள்.  ஆம்னி பேருந்துகளுக்கு தனியாக பெர்மிட்டும் சுற்றுலா பேருந்துகளுக்கு பெர்மிட் தனியாகவும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கயை வைத்துள்ளோம். அது பரிசீலனையில் இருப்பதாக கூறியுள்ளார்.</p><h2>ஒரு ரூபாய் லஞ்சம் இல்லை</h2><p>சுற்றுலா பேருந்துகளுக்கு அனுமதி கொடுத்தால் சுற்றுலா வளர்ச்சி அடையும். பக்கத்து மாநிலங்களுக்கு தனித்தனி பெர்மிட் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான்  இல்லை அதை சுட்டிக்காட்டியிருக்கிறோம். மற்ற மாநிலங்களில் வரி எவ்வளவு வாங்குகிறார்கள்  என்ற  விவரங்களையும் நாங்கள் கொடுத்து இருக்கிறோம்.  ஒரு ரூபாய் லஞ்சம் இல்லாமல் 40 பேருந்துகளுக்கு பெர்மிட்  கிடைத்துள்ளது. இதே பெர்மிட் வாங்க, போன ஆட்சியில் 5 லட்சம் ரூபாய் கொடுத்தோம்.. ஆர்டிஒ அலுவலகத்துல தான் முதல் ஊழலே இருக்கும் ஆனா இப்போ யாருமே லஞ்சம் கேக்குறதே இல்ல.. இந்த மாற்றத்தை நாங்க வரவேற்கிறோம். முன்பு அமைச்சர்களிடம் போய்விட்டுத்தான் வரவேண்டும். </p><h2>அதிகாரிகளே பெர்மிட் கொடுக்கிறார்கள்</h2><p>இப்போது அதிகாரிகளே கொடுக்கிறார்கள். இந்த மாதிரி மாற்றம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  இப்போது எல்லா வேலைகளும் எந்த லஞ்சமும் இல்லாமல் நடக்கிறது. அதிகாரிகளை மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். இடைத்தரகர்களுக்கு வேலை நடப்பது இல்லை. <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">இடைத்தரகர்கள்</a> மறுபடியும் பணம் கொடுக்க முயற்சி செய்கிறார்கள். அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத பட்சத்தில் யூடியூப் மூலமாக பொய்யான தகவலை சொல்லி இடமாற்றம் செய்ய வைக்கிறார்கள். 40 நாளில் ஒரு போக்குவரத்து கமிஷனரை மாற்றிவிட்டார்கள். ஏன் என்று கேட்டால் பணம் வங்கியதாக சொல்கிறார்கள். அவர் எந்த ஒரு பைசாவும் வாங்கவில்லை.வேலை சரியாக நடந்தது” என்று கூறினர். </p> ]]></content:encoded></item><item><title>மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு: தமிழக மக்கள் பங்கேற்க வேண்டும் - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/self-enumeration-for-the-census-nainar-nagendran-urges-the-people-of-tamil-nadu-to-participate</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/self-enumeration-for-the-census-nainar-nagendran-urges-the-people-of-tamil-nadu-to-participate#comments</comments><guid isPermaLink="false">8186e0b3-bd37-451e-adaf-e851c4fe997a</guid><pubDate>Fri, 17 Jul 2026 11:28:16 +0000</pubDate><atom:updated>2026-07-17T11:28:16.572Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,மக்கள் தொகை கணக்கெடுப்பு,Census</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/6ji3r38r/7.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/6ji3r38r/7.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>“நாட்டின் 16-வது மக்கள்தொகை கணக்கெடுப்பு: சுய கணக்கெடுப்பு (Self-Enumeration) முறையில் தமிழக மக்கள் பங்கேற்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்!</p><p>நாட்டின் 16-வது மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் தமிழகத்தில் இன்று (ஜூலை 17) முதல் தொடங்குகின்றன. அதன் ஒரு பகுதியாக, பொதுமக்கள் தங்களின் வீடு மற்றும் குடும்ப விவரங்களை இணையதளம் வழியாகத் தாங்களாகவே பதிவு செய்யும் (Self-enumeration) வசதி இன்று தொடங்குகிறது.</p><p>பொதுமக்கள் தங்களின் வீடுகளின் நிலை, குடிநீர், சுகாதாரம், மின்சாரம், இணைய வசதி உள்ளிட்ட 33 விவரங்கள் அடங்கிய தங்களின் சுயவிவரங்களை, வரும் ஜூலை 31-ம் தேதிக்குள் https://se.census.gov.in என்ற இணையதளத்தில் எளிதாகப் பதிவேற்றம் செய்யலாம்.</p><p>2027-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நாட்டின் எதிர்காலத் திட்டமிடலுக்கு மிக அவசியமானது. எனவே, தமிழக மக்கள் அனைவரும் தங்களின் சுயவிவரங்களை இணையவழியில் சுயமாகப் பதிவேற்றம் செய்து, இந்த தேசிய டிஜிட்டல் பணியில் முழுமையாகப் பங்கேற்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் தவெக அரசு - நயினார் நாகேந்திரன் விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-bjp-chief-nainar-nagendran-criticizes-liquor-shops-plan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-bjp-chief-nainar-nagendran-criticizes-liquor-shops-plan#comments</comments><guid isPermaLink="false">185e85c7-a5d3-410d-b498-c5392dd8b339</guid><pubDate>Fri, 17 Jul 2026 10:28:41 +0000</pubDate><atom:updated>2026-07-17T10:28:41.612Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,விமர்சனம்,Tasmac Shops,Criticism,டாஸ்மாக் கடைகள்,முதல்-அமைச்சர்Chief Minister</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/bzusi315/nainar-nagendheran.new.gif" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/bzusi315/nainar-nagendheran.new.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் தவெக அரசு! </p><h2>சுய விளம்பரம்</h2><p>டாஸ்மாக் கடைகளை மூடுகிறோம்” என பக்கத்திற்கு பக்கம் சுய விளம்பரம் செய்து கொண்டிருக்கும், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, தமிழகத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகளில் மேலும் 54 நிறுவனங்களின் மதுபான வகைகளை அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக வெளியாகியுள்ள ஊடக செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது. </p> <h2>ஆளும் அரசு உணர வேண்டும்</h2><p>கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் என தமிழகத்தில் நாளுக்கு நாள் பெருகி வரும் குற்றங்களின் பின்னணியில், பெரும்பாலும் போதை பழக்கமே ஒளிந்திருக்கையில், மது உள்ளிட்ட போதை பொருட்களை கட்டுப்படுத்துவது தான் ஒரு நல்ல அரசுக்கு அழகு. அதை விட்டு விட்டு, மதுபான வகைகளை கூட்டி, மக்களை போதைக்கு அடிமையாக்குவது அல்ல. </p><h2>அதிக தேர்வுகள், அதிக வாய்ப்புகள்</h2><p>எப்போவாவது வெளியூர்களுக்கு டூர் சென்றால் மட்டும் தான் குறிப்பிட்ட வகை மதுபானம் கிடைக்கும் என்றிருக்கும் நிலையை மாற்றி, கைக்கு எட்டும் தூரத்திலேயே எல்லா வகை மதுபானங்களையும் கொண்டு வருவது, இளைஞர்களிடையே குடிப்பழக்கத்தை அதிகரிக்கும் என்பதை ஆளும் அரசு உணர வேண்டும். அதிக தேர்வுகள், அதிக வாய்ப்புகள் (“More Choices, More chances”)</p><h2>கைவிட வேண்டும்!</h2><p>எனவே, ஒருவேளை முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய்க்கு, அதிகளவிலான மதுபானங்களை டாஸ்மாக் கடைகளில் அறிமுகம் செய்யும் திட்டம் இருந்தால் அதை உடனடியாக கைவிட வேண்டும்! முடிந்தவரையில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20">டாஸ்மாக் கடைகளை குறைத்து </a>தமிழகத்தில் மதுவிற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சாலை விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்குக! - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/provide-financial-aid-to-families-of-road-accident-victims</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/provide-financial-aid-to-families-of-road-accident-victims#comments</comments><guid isPermaLink="false">2e4ee3c2-20d5-4986-a33d-16811cbcf405</guid><pubDate>Fri, 17 Jul 2026 10:04:29 +0000</pubDate><atom:updated>2026-07-17T10:04:29.850Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சாலை விபத்து,Communist Party of India,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி,நிதி உதவி,வேண்டுகோள்,Financial Assistance,Appeal</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/u79l2jvg/veerapandiyan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/u79l2jvg/veerapandiyan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சாலை விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள். இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- </p> <h2>3 பேர் உயிரிழந்தனர்</h2><p>விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகில் உள்ள நத்தம்பட்டி நான்கு வழி சாலையில் கடந்த 12.07.2026 ஆம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் வத்திராயிருப்பு, மேலப்பாளையத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் பூபதி, கார்த்திக், அங்காள ஈஸ்வரி, ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.</p><h2>சிகிச்சை</h2><p>இவர்கள் தவிர சேர்வை, அவரது மனைவி வீரலட்சுமி, மகள்கள் காவியா, தனலட்சுமி, மகன் அஸ்வின், உறவினர் லட்சுமி ஆகிய ஆறு பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை ராஜாஜி அரசினர் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.</p> <h2>நிதியுதவி செய்ய வேண்டும் </h2><p>இதில் சேர்வை சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது. உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு விரைந்து நிதியுதவி செய்ய வேண்டும். </p><h2>மருத்துவ சிகிச்சை</h2><p>சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தேவையான சிறப்பு மருத்துவ சிகிச்சைகளுக்கான உதவிகள் வழங்க வேண்டும் என <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">இந்தியக் கம்யூனிஸ்டு</a> கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.</p><p>இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் புதிய சிகிச்சை மையம்: அமைச்சர் அருண் ராஜ் தொடங்கி வைத்தார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-treatment-centre-at-omanthurar-government-hospital-minister-arun-raj-inaugurates</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-treatment-centre-at-omanthurar-government-hospital-minister-arun-raj-inaugurates#comments</comments><guid isPermaLink="false">e02ebd93-0132-4900-9d56-d07f5578ef10</guid><pubDate>Fri, 17 Jul 2026 09:52:22 +0000</pubDate><atom:updated>2026-07-17T09:52:22.986Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஓமந்தூரார் அரசு மருத்துவமனை,Specialized treatment center சிறப்பு சிகிச்சை மையம்,Chennai Government Hospital,Minister Arunraj,அமைச்சர் அருண்ராஜ்,inaugurates</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/hfe4t0ep/minister-arun-raj-omanthur.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மருத்துவ கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கோ.க.அருண் ராஜ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/hfe4t0ep/minister-arun-raj-omanthur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு அரசு பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் அதிஅழுத்த பிராண வாயு சிகிச்சை மையத்தை  மருத்துவம், மருத்துவ கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கோ.க.அருண் ராஜ் பொது மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- </p><h2>அதிஅழுத்த பிராண வாயு சிகிச்சை மையம்</h2><p> மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கோ.க.அருண் ராஜ் இன்று (17.07.2026) சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையின் கை சீரமைப்பு மற்றும் நுண் அறுவை சிகிச்சை பிரிவில் ரூபாய் 2 கோடி மதிப்பிலான அதிஅழுத்த பிராண வாயு சிகிச்சை மையத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.</p> <h2>உயர்சிறப்பு மருத்துவமனை</h2><p>சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஒரே இடத்தில் முழுமையான மற்றும் கட்டணமில்லா அதிஅழுத்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88">பிராணவாயு சிகிச்சை</a> வழங்கும் நோக்கத்துடன் அரசு பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் இப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. </p> <p>அரசு பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் தற்பொழுது 1978 க்கும் மேற்பட்ட மருத்துவ பயனாளர்கள் நீண்ட கால புண்கள், சிரை சார்ந்தப் புண்கள் மற்றும் நீரிழிவு பாத புண்கள் போன்ற சிகிச்சைகள் பெற்று வருகின்றனர். இதுபோன்ற புண்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அதிஅழுத்த பிராணவாயு சிகிச்சை வசதி அவசியமாக உள்ளது.</p><h2>ரோட்டரி சங்கம்</h2><p>சென்னை ரோட்டரி சங்கத்தின் சார்பில் அரசு பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் அதிஅழுத்த பிராணவாயு சிகிச்சைக்கு தேவையான அனைத்து அடிப்படை கட்டமைப்புகளும் மற்றும் நவீன மருத்துவ உபகரணங்களும் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதியின்கீழ் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.</p> <h2>கட்டணமில்லாமல் சிகிச்சை</h2><p>கடந்த காலங்களில் அதிஅழுத்த பிராணவாயு சிகிச்சை வசதி இல்லாத காரணத்தால் சிகிச்சைக்கு வரும் பயனாளர்கள் மேல்சிகிச்சைக்காக பிற மேம்பட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் பயனாளர்களுக்கு சிகிச்சை தாமதம், நீண்ட தூர பயணம், கூடுதல் பொருளாதார சுமையும் ஏற்பட்டது. அதிஅழுத்த பிராணவாயு சிகிச்சை மேற்கொள்ள தனியார் மருத்துவமனைகளில் குறைந்தபட்சம் ஒரு லட்சம் வரை செலவாகும்.</p> <p>தற்போது அரசு பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் அதிஅழுத்த பிராணவாயு சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதால் சிகிச்சை தேவைப்படும் பொதுமக்கள் கட்டணமில்லாமல் சிகிச்சை பெற்றுப் பயனடையலாம்.</p><p>இந்நிகழ்ச்சியில் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் ஆர்.சுகந்தி ராஜகுமாரி, அரசு பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை இயக்குநர் ஆர்.மணி, நிலைய மருத்துவ அலுவலர் தளவாய் சுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>திமுக ஆட்சியின் மற்றொரு ஊழல் முறைகேடு இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது - வானதி சீனிவாசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vanathi-srinivasan-says-new-dmk-corruption-case-comes-to-light</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vanathi-srinivasan-says-new-dmk-corruption-case-comes-to-light#comments</comments><guid isPermaLink="false">3468a110-c3b1-47aa-8c10-b9e5cf9fad7a</guid><pubDate>Fri, 17 Jul 2026 09:34:38 +0000</pubDate><atom:updated>2026-07-17T09:34:38.122Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Corruption,ஊழல்,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,DMK Government,முறைகேடு,திமுக ஆட்சி,Malpractice</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/sbnqn8yn/vanathi-srinivasan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/sbnqn8yn/vanathi-srinivasan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திமுக ஆட்சியின் மற்றொரு ஊழல் முறைகேடு இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>அதிர்ச்சி அளிக்கிறது</h2><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE">கோவை செம்மொழி பூங்கா</a> திட்டப்பணிகளில் சுமார் ரூ.40 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக தென்மண்டல ஒப்பந்ததாரர்கள் சங்கம் புகார் அளித்துள்ளதாக கூறப்படும் செய்தியானது கடும் அதிர்ச்சி அளிக்கிறது.</p><h2> போலி பில்கள்</h2><p>எந்த திட்டங்களில் எவ்வளவு கமிஷன் கிடைக்கும், எவ்வளவு ஊழல் செய்யலாம் என்று நாடி நரம்பெல்லாம் ஊழல் ஊறிப்போன கடந்த கால திமுக ஆட்சியின் மற்றொரு ஊழல் முறைகேடு இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சுமார் 40 கோடி ரூபாய் அளவிற்கு போலி பில்கள் தயாரித்து கோவை மாநகராட்சி நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுவது மக்கள் வரிப்பணம் எந்த அளவிற்கு குறிப்பிட்ட சிலரால் சூறையாடப்பட்டிருக்கிறது என்பதற்கான சாட்சி.</p> <h2>பேரதிர்ச்சி</h2><p>மேலும் அதே புகாரில் தேர்தல் செலவுக்காக 5 ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்ட சாலைகளை தேர்வு செய்து மீண்டும் அதில் பணிகள் மேற்கொண்டு அதிலும் முறைகேடு செய்திருப்பதாக கூறப்படுவது அதிர்ச்சியிலும் பேரதிர்ச்சி. இவற்றையெல்லாம் பார்க்கும் போது ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..‘ என்னும் பாடல் தான் நினைவுக்கு வருகிறது.</p><p>இந்த முறைகேடு குறித்து இன்றைய கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்திலும் விவாதம் எழுப்பப்பட்டு சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. </p> <h2>வழக்குப் பதிவு</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் ஊழல் கறைபடியாத ஆட்சி அமைப்பேன் என்று உறுதி கூறி பதவியேற்றிருக்கும் உங்கள் அரசு இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யார் என கண்டறிந்து, அதற்கு துணைபோன அதிகாரிகள், ஒப்பந்தகாரர்கள் ஆகியோரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை மூலம் வழக்குப் பதிவு செய்து, முறைகேடாக பயன்படுத்தப்பட்ட மக்களின் வரிப்பணத்தினை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு - விசாரணை விரைவாக நடைபெறும் வகையில் நீதிமன்றம் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madapuram-ajithkumar-murder-case-court-changed-to-expedite-the-trial</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madapuram-ajithkumar-murder-case-court-changed-to-expedite-the-trial#comments</comments><guid isPermaLink="false">a95653e5-7229-417e-a938-5e51a5ff018e</guid><pubDate>Fri, 17 Jul 2026 09:13:17 +0000</pubDate><atom:updated>2026-07-17T09:13:17.919Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கொலை வழக்கு,நீதிமன்றம்,மடப்புரம் அஜித்குமார்,Madapuram Ajithkumar</media:keywords><media:content height="288" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/taauzf10/State-01.jpg" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/taauzf10/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் மீது மதுரையை சேர்ந்த நிகிதா என்ற பெண், கடந்த ஆண்டு ஜூன் மாதம் நகை திருட்டு புகார்  அளித்தார். அந்த புகாரின்பேரில் அஜித்குமாரை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர். இந்த விசாரணையின்போது போலீசார் கடுமையாக தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். </p> <p>இந்த கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் மானாமதுரை தனிப்படை போலீஸ்காரர்கள் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன், மற்றொரு போலீஸ்காரர் ராமச்சந்திரன் ஆகியோர் கைது செய் யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சம்பவத்தின்போது மானாமதுரை டி.எஸ்.பி.யாக இருந்த சண்முகசுந்தரம், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார், போலீஸ்காரர் இளையராஜா ஆகியோருக்கும் இந்த கொலையில் தொடர்பு இருப்பதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p><p>இந்நிலையில், அஜித்குமார் கொலைவழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகை தொடர்பான வழக்கு விசாரணை மதுரை மாவட்ட 5-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி வரும் ஜூலை 29-ந்தேதியில் இருந்து மதுரை மாவட்ட 5-வது கூடுதல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> <p>இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அங்கு அதிக வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அஜித்குமார் கொலை வழக்கு விசாரணையை விரைந்து முடிப்பதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி இனி இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. இதன் மூலம் இந்த வழக்கு விசாரணை விரைவாக நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தியாகிகள் தினத்தை முன்னிட்டு அரசு சார்பில் மாலை அணிவித்து அமைச்சர்கள் மரியாதை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/on-martyrs-day-ministers-pay-respects-on-behalf-of-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/on-martyrs-day-ministers-pay-respects-on-behalf-of-government#comments</comments><guid isPermaLink="false">2805da8d-4233-4055-841a-bae79d9c8135</guid><pubDate>Fri, 17 Jul 2026 09:10:56 +0000</pubDate><atom:updated>2026-07-17T09:10:56.658Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tribute,தியாகிகள் தினம்,மாலை அணிவித்து மரியாதை,அரசு சார்பில்,On behalf of the government,Martyrs&apos; Day</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/0r0b6rxf/Martyrs.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தியாகிகள் தினம்,அமைச்சர்கள் மரியாதை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/0r0b6rxf/Martyrs.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தியாகி சங்கரலிங்கனார், தியாகி ஆர்யா (என்கிற) பாஷ்யம், தியாகி செண்பகராமன் ஆகிய தியாகிகளின் திருவுருவச்சிலைகளுக்கு அமைச்சர் பெருமக்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இது தொடர்பாக இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p>  <h2>மலர் தூவி மரியாதை</h2><p>தமிழ்நாடு அரசின் சார்பில்,<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88"> தியாகிகள் தினத்தை</a> முன்னிட்டு, இன்று சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள தியாகி சங்கரலிங்கனார், தியாகி ஆர்யா (என்கிற) பாஷ்யம், தியாகி செண்பகராமன் ஆகிய தியாகிகளின் திருவுருவ சிலைகளுக்கு அமைச்சர் பெருமக்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.</p><h2>பாஷ்யம்</h2><p>தியாகி ஆர்யாவின் இயற்பெயர் பாஷ்யம். தஞ்சாவூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள சேரன்குளத்தில் 1907-ஆம் ஆண்டு பிறந்தார். மன்னார்குடியில் பள்ளிப்படிப்பையும் திருச்சி நேஷனல் கல்லூரியில் பட்டப்படிப்பையும் படித்தார். இந்திய சுதந்திர போராட்டத்தில் அதிக அக்கறை கொண்டவராக திகழ்ந்தார்.</p><h2>சைமனே திரும்பி போ</h2><p>நீடாமங்கலத்தில் நடைபெற்ற மகாத்மா காந்தி சொற்பொழிவை கேட்டு, இந்திய தேசத்தின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தவும் தன்னை தயார்ப்படுத்தி கொண்டார். நீடாமங்கலத்தில் நடைபெற்ற ‘சைமனே திரும்பி போ’ போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டார்.</p> <h2>தேசிய கொடி</h2><p>மேலும், சென்னை தலைமை செயலகம் அமைந்திருக்கும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருக்கும் கொடிக்கம்பத்தில் உள்ள பிரிட்டிஷ் கொடியான யூனியன் ஜாக்கை இறக்கி விட்டு, இந்திய தேசிய கொடியை ஏற்றிய மாவீரர் தியாகி ஆர்யா (எ) பாஷ்யம் ஆவார்.</p> <h2>சிறந்த ஓவியர்</h2><p>ஓவிய கலையில் சிறந்து விளங்கியதால் அரசியல் கருத்து படங்கள், கதைகளுக்கான சித்திரங்கள், ஏடுகளுக்கான முகப்புப் படங்கள் போன்றவற்றை வரைந்த மிகச்சிறந்த ஓவியர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், மகாகவி பாரதியார் ஆகியோரின் படங்கள் இவரால் வரையப்பட்டவையாகும்.</p><p>தியாகி சங்கரலிங்கனார் விருதுநகரில் உள்ள மண்மலைமேடு கிராமத்தில் பெரிய கருப்பசாமி நாடார் – வள்ளியம்மை தம்பதியினருக்கு 1895-ஆம் ஆண்டு மகனாக பிறந்தார்.</p><h2> சத்தியாகிரகம்</h2><p>1914-ஆம் ஆண்டு பெண் கல்வி மேம்பாட்டை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட சங்கத்தின் செயலாளராக பணியாற்றினார், கதர் இயக்கத்தில் சேர்ந்து கதர் வளர்ச்சி பணியையும் மேற்கொண்டார். 1917-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து திருச்சியில் நடைபெற்ற சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டமைக்காக 6 மாதம் சிறை தண்டனை பெற்றார்.</p> <h2>தமிழ்நாடு</h2><p>1920-ஆம் ஆண்டு ராஜாஜியை சந்தித்து அவரது சீடரானார். இன்றைய தமிழகத்தின் பெயர் சென்னை மாகாணம் என இருந்தபோது, அப்பெயரை மாற்றி ‘தமிழ்நாடு’என பெயரிட வேண்டுமென கோரி தியாகி சங்கரலிங்கனார் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து தனது 58-ஆவது வயதில் உயிர் துறந்தார்.</p> <h2>ஜெய்ஹிந்த்</h2><p>தியாகி செண்பகராமன் திருவனந்தபுரத்தில் 15.9.1891 அன்று பிறந்தார். பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது ஆங்கில அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்தார். தாய்நாட்டை வணங்கி ‘ஜெய்ஹிந்த்’ எனும் கோஷத்தை முழங்கியவர் தியாகி செண்பகராமன் அவர்கள். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்திற்கு முன்னோடியாக இருந்த இந்திய தேசியத் தொண்டர் படையை உருவாக்கியவர்.</p><p>26.5.1934 அன்று தியாகி செண்பகராமன் உயிர் நீத்தார். சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள தியாகிகள் மணிமண்டபம் 2.10.1998 அன்று திறந்து வைக்கப்பட்டது.</p> <h2>சிலைகள்</h2><p>இதனை தொடர்ந்து அம்மண்டபத்தின் முகப்பில் அமைந்துள்ள தியாகி ஆர்யா (எ) பாஷ்யம், தியாகி சங்கரலிங்கனார் ஆகியோரின் மார்பளவு சிலைகள் 17.7.1999 அன்றும், தியாகி செண்பகராமன்திருவுருவச்சிலை 17.7.2008 அன்றும் திறந்து வைக்கப்பட்டன.</p><h2>தியாகிகள் தினம்</h2><p>இந்திய நாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்டு இன்னுயிர் நீத்த விடுதலை போராட்ட தியாகிகள் சங்கரலிங்கனார், ஆர்யா (எ) பாஷ்யம், செண்பகராமன் ஆகியோரின் பெரும் தொண்டினை போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் ஜூலை 17-ஆம் தேதி தியாகிகள் தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.</p><p>இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப.வெங்கடரமணன், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் நெ.மரிய வில்சன், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.அருள்பிரகாசம், ஆர்.அபிஷேக், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் அ.அருண் தம்புராஜ். மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி - பாலக்காடு: பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலில் 20-ந் தேதி முதல் எல்.எச்.பி. பெட்டிகள் இணைப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/lhb-coaches-to-be-attached-to-the-thoothukudipalakkad-palaruvi-express-starting-from-the-20th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/lhb-coaches-to-be-attached-to-the-thoothukudipalakkad-palaruvi-express-starting-from-the-20th#comments</comments><guid isPermaLink="false">62259a8b-79c9-444b-a015-e96599fcfe9c</guid><pubDate>Fri, 17 Jul 2026 08:55:27 +0000</pubDate><atom:updated>2026-07-17T08:55:27.621Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,பாலக்காடு,பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில்,Palaruvi Express</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/wwm7apb5/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/wwm7apb5/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தூத்துக்குடி - பாலக்காடு இடையே இயக்கப்பட்டு வரும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலில் புத்தம் புதிய எல்.எச்.பி. பெட்டிகள் இணைக்கப்படுகிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p>”தூத்துக்குடியில் இருந்து பாலக்காடு செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 16791) ரெயிலில் ஜூலை 20-ந் தேதி முதல் எல்.எச்.பி. பெட்டிகள் இணைக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில், பாலக்காட்டில் இருந்து தூத்துக்குடி வரும் ரெயிலில் ஜூலை 21-ந் தேதி முதல் எல்.எச்.பி. பெட்டிகள் இணைக்கப்படுகிறது. </p><p>அதாவது, 1 மூன்றாம் வகுப்பு ஏ.சி. பெட்டி, 5 தூங்கும் வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 1 சரக்கு பெட்டி இணைக்கப்பட்டிருக்கும். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பெண்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பை உருவாக்க செயல் திட்டம் உருவாக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/statewide-plan-to-boost-women-employment</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/statewide-plan-to-boost-women-employment#comments</comments><guid isPermaLink="false">f824e123-b7e4-4d0f-bdbd-e3541897971c</guid><pubDate>Fri, 17 Jul 2026 08:29:45 +0000</pubDate><atom:updated>2026-07-17T08:29:45.714Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வேலைவாய்ப்பு,job opportunities,தமிழக அரசு,TN govt,பெண்கள்,Jobs,womens</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/y1b0qtaq/CHENNAI-15.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/y1b0qtaq/CHENNAI-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் த.வெ.க. அரசு ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், இம்மாத இறுதியில் 2026-2027-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறது.  தற்போது, பட்ஜெட் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக துறை வாரியாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.</p><p>இந்த நிலையில், தமிழகத்தில் பெண்களுக்கு அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்க WOMEN'S QUALITY EMPLOYMENT PLAN என்ற மாநில அளவிலான செயல் திட்டத்தை உருவாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளை மேம்படுத்த ஆலோசனை நிறுவனத்தை தேர்வு செய்ய அரசு ஒப்பந்தம் கோரியுள்ளது.</p><p>மாவட்ட வாரியாக எந்தெந்த துறைகளில் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்? என்பதை கண்டறிய முடிவு செய்துள்ளது. பெண்கள் வேலைக்குச் செல்வதில் உள்ள சவால்களை கண்டறிந்து களையவும், குழந்தை பராமரிப்புக்கு இடையே பெண்கள் வேலைக்குச் செல்வதில் உள்ள சவாலை கண்டறிந்து களையவும் அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது.</p><p>குழந்தை பராமரிப்பு, போக்குவரத்து மற்றும் இதர சமூக காரணங்களையும் கண்டறிந்து களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. தேர்வு செய்யப்படும் ஆலோசனை நிறுவனம் 6 வாரங்களுக்குள் ஆய்வு மற்றும் செயல்திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பயணிகளுக்கு குட்நியூஸ்.. நாகர்கோவில் - கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக தூங்கும் வசதி பெட்டி ஒன்று இணைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/an-additional-sleeper-coach-has-been-attached-to-the-nagercoil-coimbatore-express-train</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/an-additional-sleeper-coach-has-been-attached-to-the-nagercoil-coimbatore-express-train#comments</comments><guid isPermaLink="false">a3bcfae3-ab98-4b74-a293-dcb7ca946616</guid><pubDate>Fri, 17 Jul 2026 08:22:50 +0000</pubDate><atom:updated>2026-07-17T08:22:50.732Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,Tamilnadu,கோவை,Covai,தமிழகம்,Express train,Nagercoil,நாகர்கோவில்,எக்ஸ்பிரஸ் ரெயில்,தெற்கு ரெயில்வே,Southern Railway,கூடுதல் பெட்டி இணைப்பு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/9k7gdw3c/expre.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/9k7gdw3c/expre.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு நாகர்கோவில் - கோவை இடையே இயக்கப்படும் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக ஒரு தூங்கும் வசதி பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படுவதாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87">தெற்கு ரெயில்வே</a> தெரிவித்துள்ளது. </p><p>இதனால், காத்திருப்போர் பட்டியலில் இடம்பெற்றிருந்த 72 பேருக்கு ரெயிலில் பயணிக்க வாய்ப்பு கிடைக்கும்.</p><h2>தெற்கு ரெயில்வே</h2><p>இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p>நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஜூலை 17-ந் தேதி (இன்று) முதல் ஜூலை 30-ந் தேதி வரை தற்காலிகமாக ஒரு தூங்கும் வசதி முன்பதிவு பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது.</p><h2>சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்</h2><p>மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து நாகர்கோவில் செல்லும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இதே நடைமுறை ஜூலை 17-ந் தேதி (இன்று) முதல் ஜூலை 31-ந் தேதி வரை தொடரும். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/western-ghats-north-coastal-tamil-nadu-rain-today</link><comments>https://www.dailythanthi.com/news/weather/western-ghats-north-coastal-tamil-nadu-rain-today#comments</comments><guid isPermaLink="false">f5e1318c-ca8f-4cd9-82f7-bd69e8b9859a</guid><pubDate>Fri, 17 Jul 2026 08:07:13 +0000</pubDate><atom:updated>2026-07-17T08:07:13.599Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு,வானிலை முன்னறிவிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/hnfjci25/Untitled-13.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/hnfjci25/Untitled-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சுமார் 7.6 கி.மீ. உயரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் முதல் வடக்கு லட்சத்தீவு பகுதிகள் வரை வட தமிழகம், தெற்கு உள் கர்நாடகா மற்றும் வடக்கு கேரளா வழியாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><p><strong>17-07-2026 மற்றும் 18-07-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>19-07-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><h3>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</h3><p><strong>17-07-2026 முதல் 21-07-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.</p><h2>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</h2><p><strong>17-07-2026 முதல் 21-07-2026 வரை:</strong> உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p><strong>17-07-2026:</strong> அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் (Hot and Humid) இருக்கும் நிலையில் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று</strong> மற்றும் <strong>நாளை</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>