<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 20 Jul 2026 13:48:57 +0000</lastBuildDate><item><title> மின்சார வாரியத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் ஒப்பந்தப் பணியாளர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும்- அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/contract-workers-25-years-in-electricity-board-must-be-regularised-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/contract-workers-25-years-in-electricity-board-must-be-regularised-anbumani#comments</comments><guid isPermaLink="false">73ef8639-812d-44bf-acf2-5e2b1b70af90</guid><pubDate>Mon, 20 Jul 2026 13:42:58 +0000</pubDate><atom:updated>2026-07-20T13:42:58.364Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Electricity Board,Anbumani Ramadas,மின்சார வாரியம்,contract workers,அன்புமணி ராமதஸ்,பணி நிலைப்பு,ஒப்பந்த ஊழியர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/dl66zf2u/anbumani.20.gif" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/dl66zf2u/anbumani.20.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் மின்சார வாரிய ஒப்பந்தப் பணியாளர்களை உடனடியாக பணி நிலைப்பு செய்ய வேண்டும்!</p><h2>பணி நிலைப்பு</h2><p>தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">ஒப்பந்த தொழிலாளர்கள்</a> தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தியுள்ள நிலையில். அதுகுறித்து அரசுத் தரப்பிலிருந்து உத்தரவாதம் அளிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.</p><h2>வாழ்வாதார பாதுகாப்பு</h2><p>தமிழ்நாடு மின் வாரியத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை இதே நிலையில் பணியாற்றி வருகின்றனர். வாழ்க்கையின் பெரும்பகுதியை மின்சார வாரியத்திலேயே கழித்து விட்ட நிலையில், தங்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அதை முந்தைய அரசுகள் ஏற்கவில்லை.</p><h2>போராட்டம்</h2><p>தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், தங்களுக்கு பணி நிலைப்பு கிடைக்கும் என்று அவர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். ஆனால், மின்சாரத்துறை அமைச்சரோ, அடுத்த 6 அல்லது 7 மாதங்களில் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள்; அவர்களுக்கு பதில் தமிழ்நாடு அரசு பணியாளர்  தேர்வாணையத்தின் மூலம் நிரந்தர தொழிலாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று சில வாரங்களுக்கு முன் அறிவித்தார். பணி நிலைப்புக்காக கோரிக்கை விடுத்தால், பணி நீக்கத்திற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடுவதை எதிர்த்தும், தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள மின்வாரிய ஒப்பந்தப் பணியாளர்கள் ஜூன் 22 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.</p><h2>கோரிக்கை</h2><p>ஒப்பந்த பணியாளர்களின் போராட்டம் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கும் நிலையில், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மின்சாரத் துறை அமைச்சரை ஒப்பந்தத் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் கடந்த 18-ம் தேதி மதுரையில் சந்தித்து பேச்சு நடத்தினர். ஆனால், அவர்களின் கோரிக்கைகளை ஏற்பது குறித்து அமைச்சர் உத்தரவாதம் அளிக்கவில்லை.</p><h2>தொழிலாளர் நலத்துறை</h2><p>மின்சார வாரிய ஒப்பந்த பணியாளர்களை விதிகளை பின்பற்றி பணி நிலைப்பு செய்ய வேண்டும் என  பத்தாண்டுகளுக்கு முன்பே சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மின்சார வாரியத்தில் 2 ஆண்டுகளில் 480 நாட்கள் தொடர்ந்து பணியாற்றிய ஊழியர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்பது விதியாகும். அதன்படி பணி நிலைப்பு பெற தகுதி பெற்ற கடலூர் மாவட்ட மின் வாரிய ஊழியர்கள், மாவட்ட தொழிலாளர் நலத்துறை ஆய்வாளரிடம் 20  ஆண்டுகளுக்கு முன்பு முறையிட்டனர். </p><h2>அரசுக்கு ஆணையிட்டது</h2><p>அவர்கள் தரப்பில் நியாயம் இருப்பதை உணர்ந்த தொழிலாளர் நல ஆய்வாளர்கள் அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று மின் வாரியத்திற்கு 2004 முதல் 2007 வரை பல்வேறு கட்டங்களாக ஆணையிட்டனர். ஆனால், அந்த ஆணையை அரசு செயல்படுத்தாததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். அவ்வழக்கில் 2015-ம் ஆண்டில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் 480 நாள்கள் தொடர்ந்து பணியாற்றிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிலைப்பு செய்ய அரசுக்கு ஆணையிட்டது.அவர்கள் தரப்பில் நியாயம் இருப்பதை உணர்ந்த தொழிலாளர் நல ஆய்வாளர்கள் அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று மின் வாரியத்திற்கு 2004 முதல் 2007 வரை பல்வேறு கட்டங்களாக ஆணையிட்டனர். ஆனால், அந்த ஆணையை அரசு செயல்படுத்தாததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். அவ்வழக்கில் 2015-ம் ஆண்டில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் 480 நாள்கள் தொடர்ந்து பணியாற்றிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிலைப்பு செய்ய அரசுக்கு ஆணையிட்டது.</p><h2>மீண்டும் ஆணையிட்டது</h2><p>அதை எதிர்த்து மின்வாரியம் 2 நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தது. அங்கும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. அத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு தமிழக அரசு செய்தது. உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி அந்த வழக்கை மீண்டும் விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு, மின்வாரிய தொழிலாளர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என மீண்டும் ஆணையிட்டது. ஆனால், அதன்பின் 11  ஆண்டுகளாகியும் அந்த தீர்ப்பு நடைமுறைப்படுத்த படவில்லை. ஒப்பந்த தொழிலாளர்கள் நலனில் தமிழக ஆட்சியாளர்கள் காட்டும் அக்கறை இவ்வளவு தான்.</p><h2> தேர்தல் அறிக்கை</h2><p>2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில், தவெக ஆட்சிக்கு வந்தால், 5 ஆண்டுகள் பணியாற்றிய ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு பதிலாக ஒப்பந்த தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ய முயல்பது நியாயமல்ல. தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டும், வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும்  ஒப்பந்த பணியாளர்களின் பிரதிநிதிகளை மின் துறை  அமைச்சர் அல்லது மின் துறை செயலாளர் சந்தித்து பேசி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி  அளிக்க  வேண்டும்.  அதன் மூலம் ஒரு மாதமாக நீடிக்கும் தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திமுக ஆட்சியில் ட்விட் போட்டவர்கள் மீது கூட குண்டாஸ் போடப்பட்டது: அமைச்சர் நிர்மல் குமார் பதிலடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/even-those-who-posted-tweets-during-the-dmk-regime-were-slapped-with-the-goondas-act-minister-nirmal-kumar-hits-back</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/even-those-who-posted-tweets-during-the-dmk-regime-were-slapped-with-the-goondas-act-minister-nirmal-kumar-hits-back#comments</comments><guid isPermaLink="false">50740292-871b-4846-ae02-e74bfcbb4c60</guid><pubDate>Mon, 20 Jul 2026 13:04:12 +0000</pubDate><atom:updated>2026-07-20T13:04:12.600Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,குண்டாஸ்,நிர்மல் குமார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/pmodh9pv/Nirmal-kumar.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ நிர்மல் குமார்]]></media:title><media:description type="html"><![CDATA[ நிர்மல் குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/pmodh9pv/Nirmal-kumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்ன,</p><p>சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; -நீட் தேர்வு தமிழகத்துக்கு தேவையில்லை. இந்தத் தேர்வு மாணவர்கள், பெற்றோர்களுக்கு எதிரானது. இந்தத் தேர்வு தேவையில்லை என்பதுதான் தவெக அரசின் நிலைப்பாடு. அதில் மாற்றம் கிடையாது.  நீட் தேர்வை மத்திய அரசால் தான் தடுக்க முடியும். கடந்த முறை உதயநிதி ரகசியம் இருக்கிறது என்று சொன்னார். அந்த மாதிரி பொய்யான கருத்தை, வாக்குறுதியை எங்களால் சொல்ல முடியாது. மத்திய அரசு தான் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.   விளாத்திகுளம் எம்எல்ஏ, முதல் அமைச்சரை  அச்சுறுத்தும் வகையில் பேசினால், சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கத்தான் செய்வார்கள். உங்கள்(திமுக) ஆட்சியில்  ட்விட் போட்டதற்காக எத்தனை பேர் மீது குண்டாஸ் போட்டனர். முதல்வரை எதிர்த்து ட்விட் போட்டதற்காக குண்டாஸ் போடப்பட்டது.  முதல் அமைச்சருக்கு எதிராக ஒரு வார்த்தை பேசியதற்காக 70 வயது மூதாட்டியை பிடிக்க  5  தனிப்படைகள் அமைத்தது தான் திமுக அரசு </p><h2>கைகலப்பு தான் உருவாகும்</h2><p>மூன்றாம் நபராக இருந்தால் பரவாயில்லை. எம்எல்ஏ ஒருவர் மேடையில் அவதூறாக மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினால் அது சட்டம் ஒழுங்கு பிரச்னை.  மூன்றாம் தரப்பு நபர் சாலையில் பேசினால் விட்டுச் செல்லலாம். எம்எல்ஏ மைக் பிடித்து அனைவர் முன்னால் பேசினால் சட்டம் ஒழுங்கு பிரச்னை. அந்த இடத்தில்,பொது மக்கள், தவெகவினர் கேட்கும் பட்சத்தில் பெரிய கைகலப்பு தான் உருவாகும்.  சட்டப்படி நடைபெற்றுள்ளது. இதில் எந்த விதிமீறலும் இல்லை.  கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினால் வழக்குகள் வரத்தன் செய்யும்.  </p><h2>பேசிய ஆடியோ</h2><p>மாப்பிள்ளை, மகன், முதல்வரை சொன்னால் குண்டாஸ் போட்டனர்.  கொலை மிரட்டல் முதல்வர் மீது விடுக்கப்பட்டால்  சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர், நிர்வாகிகள் விலகி வந்தால் குதிரை பேரம் என்றால் எப்படி ? எங்கள் எம்எல்ஏவிடம் பேரம் பேசினார்கள். பணம் பிடிபட்டுள்ளது. பேசியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பேசிய ஆடியோ உள்ளது.நாங்கள் யாரிடமாவது பேசி உள்ளோமா? எந்த உத்தரவாதம் எதும் கிடையாது. அவர்களாக விரும்பி, வந்துள்ளனர். எங்கள் எம்எல்ஏவிடம் பேசியது தான் குதிரை பேரம் “ என்றார். </p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-power-cut-areas-day-after-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-power-cut-areas-day-after-tomorrow#comments</comments><guid isPermaLink="false">f651fd2b-fa78-4b77-a0cb-f2ba26a24d78</guid><pubDate>Mon, 20 Jul 2026 12:36:29 +0000</pubDate><atom:updated>2026-07-20T12:36:29.242Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,maintenance work,பராமரிப்பு பணி,Power supply,மின் விநியோகம்,மின் தடை power cut</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/ng6gimpk/power-cut.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாளை மறுநாள் மின் தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/ng6gimpk/power-cut.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>சென்னையில் 22.07.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மின் வாரிய பராமரிப்பு பணி</a> காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p> <h2>கோவிலம்பாக்கம்</h2><p>வடக்குப்பட்டு ஓம் சக்தி நகர், சுபிக்ஷா அவென்யூ, சுசிலா நகர், பெரியார் சாலை, வடக்குப்பட்டு பிரதான சாலை, திருவேங்கடம் நகர், திருவள்ளூர் தெரு, நாவின்ஸ், விஷ்ராந்தி, செல்வகணபதி நகர், சத்யா நகர்.</p> <h2>ராமாபுரம்</h2><p>ராயலா நகர், காந்தி நகர், நேரு நகர், குமரன் நகர்,ஜெயபாலாஜி நகர், வள்ளுவர் சாலை, ஜி ஆர் நகர், ராஜீவ் காந்தி நகர், கங்கை அவன்யு, மாந்திநாயகம் தோட்டம், மாரியம்மன் கோயில் தெரு.</p><h2>முகலிவாக்கம்</h2><p>சுரேஷ் நகர், உதயா நகர், குருசாமி நகர், சந்தோஷ் நகர், அவலன்சேரி, லக்ஷ்மி நகர், ஒத்தவாடை தெரு, ஏவி மல்லீஸ், ப்ரைம் எக்ஸ், மேக்ஸ் வொர்த் நகர் பேஸ்1, நாராயணன் நகர் பேஸ்1, 2 , தட்டான்குளம்.</p><h2>அடையாறு</h2><p> காந்தி நகர் 1 வது முதல் 3வது பிரதான சாலை வரை.</p><h2>பல்லாவரம்</h2><p> மல்லிகா நகர், ஹரியன் தெரு, பாரத் நகர், மாரியம்மன் கோயில் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, சரோஜினி தெரு, ஆபீசர் லேன், வெட்டரன் லேன்.</p><h2>கீழ்க்கட்டளை</h2><p>ஈஸ்வரி நகர், நியூ காலனி, வேம்புலி அம்மன் கோயில் தெரு, சித்ரா டவுன்ஷிப், ஜெயின் கிரீன் ஏக்கர்ஸ், லத்தீப் காலனி, காமராஜர் நகர்.</p> <h2>ஆலந்தூர்</h2><p>எம்.கே.என். சாலை, அஷர்கானா, ஆலந்தூர் பிரதான சாலை, ரயில்வே ஸ்டேஷன் சாலை, மார்க்கெட் லேன், ஜி.எஸ்.டி. சாலை, ஈஸ்வரன் கோயில் தெரு, மதுரை தெரு, கருணீகர் தெரு, ஏரிக்கரை, ஆதம்பாக்கம் பகுதி, சாந்திநிகேதன் அபார்ட்மெண்ட்ஸ், மகாலட்சுமி அபார்ட்மெண்ட்ஸ், குரோவ் அபார்ட்மெண்ட்ஸ், மஸ்தான் கோரி அபார்ட்மெண்ட்ஸ், திருவள்ளுவர் பிரதான சாலை, வேளச்சேரி சாலை, பொன்னியம்மன் கோயில் தெரு, முத்தையால் ரெட்டி தெரு, குப்புசாமி காலனி, ஆபீஸ் காலனி, கக்கன் நகர், என்.ஜி.ஓ. காலனி, எஸ்.பி.ஐ. காலனி, மண்ணடியம்மன் மற்றும் பழனியம்மன் கோயில் தெரு, ரேஸ் கோர்ஸ் பகுதி, அம்பேத்கர் நகர், மடுவங்கரை.</p><h2>பெரும்பாக்கம்</h2><p>டிஎச்எஸ்சிபி பிளாக் எண் ஏஐ, ஏஜே, ஏகே, பிளாக் எண் 8 முதல் 86 வரை மற்றும் 152 முதல் 158 வரை, கிருஷ்ணா நகர், கோகுல் நகர், சௌமியா நகர், பெரும்பாக்கம் பிரதான சாலை, மாம்பாக்கம் பிரதான சாலை, பாரதியார் தெரு, அரசு மருத்துவமனை, நெசவாளர் நகர், அண்ணா சாலை, விமலா நகர், நல்லதம்பி தெரு, கோல்டன் அவென்யூ, சரஸ்வதி தெரு, சிவகாமி தெரு, சி.பி.ஐ. காலனி 1 வது முதல் 7 வது குறுக்குத் தெருக்கள் வரை.</p> <h2>மாங்காடு</h2><p> ஜனனி நகர், சிதம்பரம் நகர், மலையம்பாக்கம், ரகுநாதபுரம், இந்திர நகர், செல்வராஜ் நகர், சாதிக் நகர், சிவானந்த நகர், ஸ்ரீராம் நகர், சக்ரா நகர், ஓம் சக்தி நகர், முத்துசாமி நகர், வீரா ஆஞ்சநேயர் கோவில் தெரு, மல்லிகா தியேட்டர், குன்றத்தூர் பிரதான சாலை.</p><h2>ஆவடி</h2><p>சி.டி.எச் சாலை, போலீஸ் கன்வர்சன் ஹால் முதல் ஹோட்டல் ஏ மற்றும் பி வரை, சரஸ்வதி நகர், தென்றல் நகர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பொள்ளாச்சியில் லஞ்ச பணத்தைத் திருப்பி கொடுக்க கெஞ்சிய தலைமை காவலர்: ஆடியோ வைரல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pollachi-chief-cop-begs-to-return-bribe-money-audio-viral</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pollachi-chief-cop-begs-to-return-bribe-money-audio-viral#comments</comments><guid isPermaLink="false">94352fc7-a436-4669-b558-4c3c2c7d54e6</guid><pubDate>Mon, 20 Jul 2026 12:22:48 +0000</pubDate><atom:updated>2026-07-20T12:22:48.055Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>லஞ்சம்,bribe,பொள்ளாச்சி,Pollachi,Head Constable,ஆடியோ,audio,வைரல்,தலைமை காவலர்,going viral</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/ptn27463/poolachi.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பொள்ளாச்சியில் லஞ்சம் பெற்ற காவல் உதவி ஆய்வாளர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/ptn27463/poolachi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பொள்ளாச்சி,</p><p>பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் கள்ளத்தொடர்பு விவகாரம் விசாரனைக்கு வந்தவரிடம் ஐந்தாயிரம் லஞ்சம் பெற்ற காவல் உதவி ஆய்வாளர் பணத்தை திருப்பி வாங்கிக் கொள்ளுமாறு தலைமை காவலர் ஆடியோ வைரல்.</p> <h2>தற்கொலை</h2><p>பொள்ளாச்சியை சேர்ந்த முகேஷ் என்பவருக்கும், ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணுக்கும் தகாத உறவு ஏற்பட்டு, இருவரும் கோவையில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு கணவன் அந்த பெண்ணை தன்னுடன் அழைத்து வந்துள்ளார். இதை தொடர்ந்து முகேஷ் பிரச்சனை செய்ததால், கணவன்-மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.</p><h2>விசாரணை</h2><p>பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில், இது குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் பிரச்சினைக்கு காரணமான முகேஷை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு காவல் உதவி ஆய்வாளர் ஜான்சன் விசாரணை மேற்கொண்டு, இனிமேல் பிரச்சினை செய்யக்கூடாது என மிரட்டியதாக கூறப்படுகிறது.</p><h2>5000 லஞ்சம்</h2><p>பின்னர், முகேஷிடம் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D">காவல் உதவி ஆய்வாளர்</a> ஜான்சன் ரூபாய் 5,000 லஞ்சம் வாங்கியுள்ளார். லஞ்சம் வாங்கியது வெளியில் தெரியவரவே, சிறிது நேரத்திலேயே தொலைபேசியில் முகேஷை தொடர்பு கொண்ட தலைமை காவலர் நாகராஜன், "உதவி ஆய்வாளர் ஜான்சன் நீங்கள் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுக்கச் சொன்னார்; நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?" எனக் கேட்டு முகேஷிடம் பேசியுள்ளார்.</p> <h2>தீர்வு கிடைத்தால் போதும்</h2><p>அதற்கு முகேஷ், "நான் வெளியில் இருக்கிறேன், காலையில் கோவை சென்றுவிடுவேன், இப்போது வர முடியாது" எனக் கூறுகிறார். தொடர்ந்து பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு தலைமை காவலர் வற்புறுத்தவே, "காலில் வேண்டுமானாலும் விழுகிறேன், கொடுத்த பணம் கொடுத்ததாகவே இருக்கட்டும், பணம் எனக்கு வேண்டாம், இந்த பிரச்சினையிலிருந்து எனக்கு தீர்வு கிடைத்தால் போதும்" எனக் கூறுகிறார்.</p><h2>திருமணம் ஆகவில்லை</h2><p>திருமணம் ஆகவில்லை எனக்கூறி தான் அந்த பெண் என்னிடம் பழகினார். இனிமேல் நான் எந்த பிரச்சினைக்கு வரமாட்டேன் என முகேஷ் புலம்பும்  ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. </p> ]]></content:encoded></item><item><title>சென்னை சேத்துப்பட்டில் உள்ள இயற்கை எரிவாயு ஆலையில் முதல் அமைச்சர் விஜய் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-inspects-the-natural-gas-plant-in-chetpet-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-inspects-the-natural-gas-plant-in-chetpet-chennai#comments</comments><guid isPermaLink="false">4155b950-dded-4644-b1f0-e79d40e54b00</guid><pubDate>Mon, 20 Jul 2026 12:19:48 +0000</pubDate><atom:updated>2026-07-20T12:19:48.683Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Chennai,சென்னை,சேத்துப்பட்டு,CM Vijay,முதல் அமைச்சர் விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/w13fpth8/vijay-CM.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/w13fpth8/vijay-CM.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக முதல் அமைச்சர் விஜய் தலைமை செயலகத்தில் தினமும்  தனது அலுவல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். நாள் தோறும் காலை 10 மணிக்கு தலைமை செயலகம் வரும் விஜய் மாலை 5 மணி வரை தலைமை செயலகத்தில்  பணிகளை மேற்கொண்டு வருகிறார். அவ்வப்போது மக்களுக்கு பலன் அளிக்க கூடிய திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். அந்தவகையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பாக நெம்மேலியில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் ஆய்வு மேற்கொண்டார். அண்மையில், <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை</a> சைதாப்பேட்டையில் உள்ள  மாணவர்கள் விடுதியிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்து அதனை உடனே நிவர்த்தி செய்ய உத்தரவிட்டார். </p><h2>சேத்துப்பட்டில் ஆய்வு</h2><p>இந்த நிலையில், இன்று சென்னை தலைமை செயலகத்தில்  இருந்து திடீரென முதல் அமைச்சர் விஜய், சேத்துப்பட்டு வந்தார். சேத்துபட்டில் உள்ள  இயற்கை எரிவாயு ஆலையில் ஆய்வு மேற்கொண்டார்.  நாளொன்றுக்கு 100 டன் உணவு,  காய்கறி  கழிவுகளை  மறுசுழற்சி செய்யும் திறன் கொண்ட இயற்கை எரிவாயு  ஆலையில் ஆய்வு செய்தார்.    </p><p> இந்த ஆலை கோயம்பேடு சந்தை , ஹோட்டல் கழிவுகள் மூலம் இயற்கை எரிவாயுவை தயாரிக்கிறது. பொது- தனியார் கூட்டு பங்களிப்பு முறையில் முறையில் சீனிவாசா வேஸ்ட்  மேனேஜ்மெண்ட் நிறுவனம் இயங்குகிறது.</p><p>முதல் அமைச்சர் விஜய் வருகை தருவதை அறிந்து சேத்துபட்டில் சாலையோரம் மக்கள் திரண்டனர். இதையடுத்து, ஆய்வை முடித்துவிட்டு வந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விஜய்</a>, வெளியே வந்து மக்களை பார்த்து கை அசைத்தார்.  முதல் அமைச்சர் விஜய்யை பார்த்து மக்களும் உற்சாகம் அடைந்து பதிலுக்கு கை அசைத்தனர். </p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணை விவகாரம்: சட்ட வல்லுநர்களுடன் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mekedatu-dam-issue-chief-minister-vijay-consults-legal-experts</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mekedatu-dam-issue-chief-minister-vijay-consults-legal-experts#comments</comments><guid isPermaLink="false">530cf5b0-c089-481a-8742-1f19cc0d2900</guid><pubDate>Mon, 20 Jul 2026 12:05:25 +0000</pubDate><atom:updated>2026-07-20T12:05:25.603Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மேகதாது அணை,Megha Dadu,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/znf44i4z/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/znf44i4z/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் மேகதாது விவகாரம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் இன்று (20.7.2026) தலைமை செயலகத்தில், மேட்டூர் அணைக்கு கர்நாடகத்தில் இருந்து நீர்வராத நிலையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், மேகதாது அணை விவகாரம் தொடர்பாகவும் சட்ட வல்லுநர்கள் மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழு அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. </p><p>இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என்.ஆனந்த், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், தலைமைச் செயலாளர் முனைவர் மு.சாய்குமார், அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், நீர்வளத்துறை முதன்மைச் செயலாளர் முனைவர் சத்யபிரத சாகு, சட்டத்துறைச் செயலாளர் பி.சுமதி, காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ஈரோடு: பாட்டியால் பேரக்குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்...</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-grandmothers-misfortune-befalls-her-grandson</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-grandmothers-misfortune-befalls-her-grandson#comments</comments><guid isPermaLink="false">e34ebb11-3f00-4893-9d77-45cc5c97b62d</guid><pubDate>Mon, 20 Jul 2026 11:55:42 +0000</pubDate><atom:updated>2026-07-20T11:55:42.608Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Erode,ஈரோடு,பாட்டி கைது,Grandmother Kills,பேரக்குழந்தை,infant murder</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/gxpmjuod/grandma-killed-baby.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ பாட்டி தங்கமணி]]></media:title><media:description type="html"><![CDATA[ ஈரோடு அருகே பெண் குழந்தையைக் கொன்ற பாட்டி தங்கமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/gxpmjuod/grandma-killed-baby.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>ஈரோடு மாவட்டத்தில் தனது பேரக்குழந்தையை பாட்டியே கொன்றார்.</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஈரோடு மாவட்டம்</a> பவானியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அண்மையில்<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> பெண் குழந்தை</a> ஒன்று பிறந்தது. இந்நிலையில், அந்தக் குழந்தை திடீரென உயிரிழந்தது. குழந்தையின் கழுத்து மற்றும் மூக்குப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான காயங்கள் இருப்பதை ஆஸ்பத்திரியின் நிர்வாகத்தினர் கண்டறிந்தனர். உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.</p><h2>பாட்டி விடுத்த பாசக்கயிறு</h2><p>சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். முதற்கட்ட விசாரணையில், குழந்தையின் சொந்த பாட்டியான தங்கமணி (வயது 47) என்பவரே குழந்தையைக் கழுத்தை நெரித்தும், மூக்கைப் பிடித்தும் கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.</p><h2>பாட்டி கைது</h2><p>இதனைத் தொடர்ந்து, போலீசார் தங்கமணியைக்<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> கைது</a> செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண் குழந்தை என்பதால் இந்த கொடூரக் கொலை நடந்ததா அல்லது குடும்பத் தகராறு காரணமா என்ற பல கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழகத்திற்கு உரிய பங்கு நீரைப் பெற த.வெ.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tvk-government-must-take-steps-to-secure-tamil-nadus-rightful-share-of-water-at-the-cauvery-authority-meeting-edappadi-palaniswami-urges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tvk-government-must-take-steps-to-secure-tamil-nadus-rightful-share-of-water-at-the-cauvery-authority-meeting-edappadi-palaniswami-urges#comments</comments><guid isPermaLink="false">7c00c8c4-b687-4332-822d-cef678b2ef6b</guid><pubDate>Mon, 20 Jul 2026 11:16:10 +0000</pubDate><atom:updated>2026-07-20T11:16:10.059Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,Edappadi Palanisamy</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/2yyx1939/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/2yyx1939/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழகத்திற்கு உரிய பங்கு நீரைப் பெற த.வெ.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-</p><p>“டெல்டா மாவட்ட விவசாயிகள் மற்றும் சுமார் 20-க்கும் மேற்பட்ட மாவட்ட மக்கள் குடிநீருக்காக காவிரி தண்ணீரை நம்பித்தான் உள்ளனர். சுப்ரீம் கோர்ட்டும் காவிரியில் தமிழகத்திற்கு உள்ள உரிமையை நிலைநாட்டி பல தீர்ப்புகளை வழங்கிய பின்பும், கர்நாடக ஆட்சியாளர்கள் காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கு நீரை வழங்குவதில்லை. வெள்ள உபரிநீர் வடிகாலாக மட்டுமே தமிழகத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.</p><p>கர்நாடக அரசு, காவிரியில் இருந்து ஒவ்வொரு மாதமும் தமிழகத்திற்கு தரவேண்டிய பங்கு நீரை முழுமையாக விடுவிக்கிறதா என்பதை கண்காணிப்பதுதான் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படியும் மற்றும் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் பணியாகும்.</p><p>சென்ற மாதம் காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு மாதந்தோறும் வழங்க வேண்டிய தண்ணீரைத் தரும்படி கர்நாடக அரசிற்கு அறிவுறுத்திய பிறகும், காவிரி மேலாண்மை ஆணையம், காவிரியில் தண்ணீரைத் திறக்க உத்தரவிடவில்லை; தமிழக அரசும் தண்ணீரைத் திறக்கும்படி கேட்கவில்லை; எனவே, தமிழகத்திற்கு காவிரி தண்ணீரை தரமுடியாது என்று 10 நாட்களுக்கு முன்பு கர்நாடக நீர்பாசனத் துறை அமைச்சர் உண்மைக்கு மாறாகக் கூறியிருந்தார். </p> <p>உடனடியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், தமிழகத்திற்குரிய பங்கு நீரைப் பெற உடனடியாக நடவடிக்கை எடுக்க த.வெ.க. அரசையும் வலியுறுத்தினோம். ஆனால், த.வெ.க. அரசின் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.</p><p>தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 TMC காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஜூன் மாதம் தரவேண்டிய 9.19 TMC தண்ணீருக்கு பதில் 2.91 TMC நீரை மட்டுமே கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. ஜூலை மாதம் திறக்கப்பட வேண்டிய தண்ணீர் 31.24 TMC நீர். 20 நாட்களில் சுமார் 21 TMC தண்ணீரை திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், கர்நாடக அரசு காவிரியில் ஜூன் மாதம் திறக்க வேண்டிய சுமார் 6.28 TMC நிலுவை தண்ணீரையும், ஜூலை மாதத்தில் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய பங்கு நீரையும் இன்றுவரை முழுமையாகத் திறந்துவிடவில்லை என்று செய்திகள் வந்துள்ளன. </p> <p>இந்நிலையில், கர்நாடக முதல்-அமைச்சர், கர்நாடக அணைகளில் நீர் நிரம்பிய பிறகுதான் தமிழகத்திற்கு உரிய பங்கு நீர் வழங்கப்படும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு பேசியுள்ளதாக நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. இதைக் கேட்கும்போது, 'கடலில் அலை எப்போது ஓய்வது, நாம் எப்போது குளிப்பது ? என்ற பழமொழிதான் ஞாபகம் வருகிறது. கர்நாடக அணைகளில் குறிப்பிட்ட அளவு நீர் நிரம்பினாலே திறந்துவிட வேண்டும் என்பதுதான் வழிகாட்டு நெறிமுறைகள். ஆனால், அணைகள் முழுவதும் நிரம்பினால் மட்டுமே தண்ணீர் திறந்துவிடுவோம் என்பது ஒரு மோசடித்தனமான வறட்டுப் பிடிவாதமாகும்.</p><p>சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதிக்காமலும், அரசியல் சாசன சட்டத்திற்கு எதிராகவும், சர்வாதிகாரி போல் நடப்பது ஒரு மாநில முதலமைச்சருக்கு அழகல்ல. பல ஆண்டுகளாக வழக்குகள் நடைபெற்று, காவிரி நதிநீர் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. அதை மதிக்காத கர்நாடக முதல்-அமைச்சருக்கு, தமிழக மக்களின் சார்பாக எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர், கர்நாடக அரசுடன் தொடர்புகொண்டு காவிரியில் ஜூன், ஜூலை ஆகிய இரண்டு மாதங்களாக தமிழகத்திற்குரிய பங்கு நீரைப் பெறுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காதது டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கும், தமிழக மக்களுக்கும் செய்யும் மிகப் பெரிய துரோகமாகும்.</p><p>ஏற்கெனவே, நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தல் பரப்புரையின்போது த.வெ.க. தலைவர், சிறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய வேளாண் கடன் முற்றிலுமாக ரத்து செய்யப்படும் என்றும், பெரு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய வேளாண் கடனில் 50 சதவீதம் ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்தார். </p><p>ஆனால், ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின், குறு, சிறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் ரூ. 75,000/-ம் வரை பயிர்க் கடன் பெற்றிருந்தால் அவை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும்; ரூ. 75,000/-க்கு மேல் கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் ரூ. 35,000/- மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்தார். </p><p>இதனால், தமிழகம் முழுவதும் விவசாயிகள், குறிப்பாக டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் கொதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் த.வெ.க. அரசு, டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடாததால், டெல்டா மாவட்ட விவசாயிகள் வாழ்விழந்து நிற்கிறார்கள். மேலும், விவசாயத் தொழிலையே நம்பியுள்ள லட்சக்கணக்கான விவசாயத் தொழிலாளர்களும் வேலை வாய்ப்பின்றி, அவர்களின் வாழ்வாதாரமும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>இம்மாதம் 22-ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. இக்கூட்டத்தில் கர்நாடக அரசு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழ் நாட்டிற்கு வழங்க வேண்டிய காவிரி பங்கு நீரை முழுமையாகப் பெற உறுதியான அழுத்தம் தர வேண்டும் என்று பொய்க்கால் குதிரை த.வெ.க.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>23-ம் தேதிக்காக..தமிழகம் முழுவதும் பரவும் டி-ஷர்ட் கலாசாரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/for-the-23rdt-shirt-culture-spreading-across-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/for-the-23rdt-shirt-culture-spreading-across-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">cb3949cd-3d2f-4df0-9345-0ab3286bf418</guid><pubDate>Mon, 20 Jul 2026 10:56:38 +0000</pubDate><atom:updated>2026-07-20T10:56:38.612Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,Vijay,விஜய்,Chennai,விஜய்Vijay,ஜனநாயகன்,ஜனநாயகன் படம்,டி.ஷர்ட்,t-shirt</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/u4wd3adl/vijayone33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/u4wd3adl/vijayone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர், </p><p>தமிழக முதல்- அமைச்சராக விஜய் பொறுப்பேற்பதற்கு முன்பாக, அவர் நடிப்பில் உருவாகியுள்ள கடைசித் திரைப்படமான 'ஜனநாயகன்' வருகிற 23-ந்தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த தமிழகமும் திருவிழாக் கோலம் பூண்டுள்ள நிலையில், திருப்பூரின் ஜவுளித்துறை புதியவர்த்தக உச்சத்தை தொட்டுள்ளது.</p><h2>ஜனநாயகன்</h2><p>திரைத்துறையில் இருந்து அரசியல் உலகிற்குள் நுழைந்து  தமிழகத்தின் முதல்-அமைச்சராக அரியணை ஏறியுள்ள விஜய்யின் தற்போதைய அதிகாரப்பூர்வ கடைசித் திரைப்படம் என்பதால் 'ஜனநாயகன்' படத்திற்கு ரசிகர்களிடமும், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தொண்டர்களிடமும் விண்ணை முட்டும் அளவிற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. </p><p>இத்திரைப்படத்தைக் கொண்டாடும் விதமாக, முதல் நாள் முதல் காட்சியைக் காண வரும் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் அணிவதற்காகப் பிரத்தியேக டி-ஷர்ட்கள் தயாரிக்கும் பணி திருப்பூரில் அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது.</p><h2>டி-ஷர்ட்</h2><p>திரைப்படம் வெளியாக இன்னும் 3 நாட்களே உள்ளதால், மிகக் குறுகிய காலக்கட்டமே இருப்பதால், தமிழகத்தின் முன்னணி ஜவுளி மையமான திருப்பூரில் உள்ள 700-க்கும் மேற்பட்ட பின்னல் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் முழு வீச்சில் டி-ஷர்ட் தயாரிப்பில் இறங்கியுள்ளன. <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">முதல்-அமைச்சர் விஜய்</a>யின் கம்பீரமான புகைப்படங்கள் மற்றும் கட்சியின் இலச்சினைகள் தாங்கிய வண்ணமயமான ஆடைகள் இரவும் பகலுமாகத் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த அவசரத் தேவையை எவ்விதத் தொய்வுமின்றி பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக பெரும்பாலான உள்ளூர் உற்பத்தியாளர்கள் கூடுதல் பணியாளர்களை கொண்டு  பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். </p><p>மேலும் ,தயாரிக்கப்படும் ஆடைகளை உடனடியாகக் கொண்டு சேர்க்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் அதிவேக கூரியர் மற்றும் பார்சல் சேவைகள் மூலம் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அரசியல் மாற்றத்திற்குப் பிறகு வெள்ளித்திரையில் முதல்-அமைச்சரைக் காணப்போகும் ஆவலில், ரசிகர்கள் தங்களின் அன்பை வெளிப்படுத்தும் விதமாக இந்த டி-ஷர்ட் கலாசாரத்தை கையில் எடுத்துள்ளனர். ஒட்டுமொத்த ஜவுளி தொழிலுக்கும் இது ஒரு மிகப்பெரிய பொருளாதார ஊக்கத்தை தந்துள்ளதாக தொழில்துறையினர் பெருமிதம் கொள்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கோவில் திருவிழாவில் நடந்த அதிசயம்: திருடு போன செயினை சாமியாடிய பெண் கண்டெடுத்ததால் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-woman-who-was-a-fortune-teller-found-a-stolen-chain-causing-a-stir</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-woman-who-was-a-fortune-teller-found-a-stolen-chain-causing-a-stir#comments</comments><guid isPermaLink="false">9237b84b-51d6-4849-a854-1419bcd53b6e</guid><pubDate>Mon, 20 Jul 2026 10:23:52 +0000</pubDate><atom:updated>2026-07-20T10:23:52.565Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Temple,நகை திருட்டு,gold,திருத்தணி,கோவில் திருவிழா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/9k7y19fq/gold33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/9k7y19fq/gold33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பள்ளிப்பட்டு, </p><p>திருத்தணியை அடுத்த ஆர்.கே.பேட்டை தாலுகா அய்யனேரி கிராமத்தில் திரவுபதி அம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கடந்த 2 நாட்களாக திரவுபதி அம்மன் மற்றும் அம்மன் சிலைகள் அனைத்தையும் கோவிலுக்குள் சென்று பக்தர்கள் வழிபட ஏற்பாடு செய்து இருந்தனர். இதனால் திரளான பக்தர்கள் வந்து வழிபட்டு சென்றனர். </p><h2>10 சவரன்  தங்க நகை மாயம்</h2><p>இந்த நிலையில் வெள்ளிக்கிழமை  மதியம் கோவில் நிர்வாகத்தினர் சென்று பார்த்தபோது அம்மன் சிலையில் இருந்த 10 சவரன் தங்க செயின் மாயமாகி இருந்தது. கோவிலில் பல இடங்களில் தேடியும் செயினை கண்டு பிடிக்க முடியவில்லை. அம்மனை வழிபட வந்ததுபோல் நடித்த மர்ம நபர்  செயினை திருடி சென்று இருப்பது தெரிந்தது. இதுகுறித்து ஆர்.கே. பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும் கோவிலுக்கு வந்து விசாரணை நடத்தினர். ஆனால் தங்க செயினை கண்டு பிடிக்க முடியவில்லை.</p><p>இந்த நிலையில் நேற்று மாலை கோவிலில்  மீதி திருவிழா நடைபெற்றது. முன்னதாக இதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். இதற்காக கோவிலில் திரளான பக்தர்கள் குவிந்து இருந்தார்கள்.</p><h2> அருள்வந்து சாமியாடிய பெண்</h2><p>அப்போது கோவில் பூசாரியின் மனைவியான மகேஸ்வரிக்கு திடீரென அருள்வந்து சாமியாடினார். மேலும் அருள்வாக்கும் கூறினார். அவர் சாமியாடியபடி "எனது நகை எங்கும் போகவில்லை, இங்குதான் உள்ளது என்று கூறியபடி கோவிலை சுற்றி வந்தார். பின்னர் அவர் அவர் கருவறைக்குள் சென்று விட்டு திரும்பி வந்தபோது அவரது கையில் திருடுபோனதாக கூறப்பட்ட அம்மன் நகை இருந்தது.</p><p>"என் நகை நகை திருடு போல...இங்க தான் இருக்கு...”என்று சொல்லிய படி பக்தர்களிடம் காண்பித்தார். இதனால் பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.  </p><h2>பக்தர்கள் நிம்மதி </h2><p>அம்மன் சிலையில் இருந்து திருடப்பட்ட நகை மீண்டும் கிடைத்ததால் பொதுமக்களும், பக்தர்களும் நிம்மதி அடைந்தனர். மேலும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கோவில் திருவிழா</a>வின்போது இந்த சம்பவம் அதிசயமாக நிகழ்ந்துள்ளதாக ஊர்மக்கள் தெரிவித்தனர். சாமி சிலையில் இருந்த நகையை திருடியதால் ஏதாவது பாதிப்பு வந்து விடுமோ என்ற பயத்தில் மர்ம நபர்கள் திருடிய நகையை எடுத்துவந்து போட்டு விட்டு சென்று இருக்கலாம் என்று உள்ளூர் மக்கள் பரவசத்துடன் தெரிவித்தனர்.</p><p>மேலும் சிலர் சாமியாடிய பெண் மாயமான நகையை எப்படி கண்டுபிடித்தார்? என்ற பதில் தெரியாமலும் கேள்விகள் எழுப்பினர். எது எப்படியோ? கோவிலில் திருடுபோன நகைகிடைத்ததால் அனைவரும் நிம்மதி அடைந்தனர்.</p><p>பின்னர் கோவிலில் தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. திருடு போன அம்மன் நகையை சாமியாடிய பெண் கண்டெ டுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காவிரி, மேகதாது, முல்லைப்பெரியாறு பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ராகுல்காந்தியிடம் பேசுங்கள்: முதல்-அமைச்சர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendran-urges-cm-vijay-to-seek-rahul-gandhi-help-on-cauvery-mekadathu-mullaipperiyaaru</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendran-urges-cm-vijay-to-seek-rahul-gandhi-help-on-cauvery-mekadathu-mullaipperiyaaru#comments</comments><guid isPermaLink="false">b9a63245-75b6-4d75-b3ba-c829bafdf292</guid><pubDate>Mon, 20 Jul 2026 10:21:27 +0000</pubDate><atom:updated>2026-07-20T10:21:27.470Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Rahul Gandhi,ராகுல்காந்தி,Cauvery,முல்லைப்பெரியாறு,மேகதாது,Meghadatu,தீர்வு,Nayanar Nagendran,காவிரிCauvery,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/wmr8ueda/nainar-nagendheran.new.gif" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/wmr8ueda/nainar-nagendheran.new.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%2C%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%2C%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81">காவிரி, மேகதாது, முல்லைப்பெரியாறு</a> பிரச்சினைகளுக்கு தீர்வு; ராகுல் காந்தியிடம், முதல்-அமைச்சர் விஜய் பேச வேண்டும். இது தொடர்பாக தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:-</p><h2>அவல நிலை</h2><p>காவிரி, மேகதாது, முல்லைப்பெரியாறு அணைநீர் போன்ற  பத்துக்கு மேற்பட்ட நீர் பிரச்சனைகளுக்கு, கர்நாடகா, கேரளா மாநிலங்களுடன் பல ஆண்டுகளாக, பேச்சு வார்த்தை நடத்தியும், நிரந்தர தீர்வு காணப்படாமல் தமிழகம் பரிதவித்து நிற்கும் அவல நிலையில் உள்ளது.</p> <h2>நிரந்தரமான தீர்வுகாண வேண்டும்</h2><p>இந்நிலையில், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் தவெக கூட்டணிக்கட்சியான காங்கிரஸ்தான் ஆட்சியிலிருக்கின்றன.  மேலும், தவெக அரசில் காங்கிரஸ் அமைச்சர்களும் இருக்கிறார்கள்.  ஆகவே, தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியிடம் பேசி, காங்கிரஸ் ஆளும் கர்நாடகா, கேரளா முதல்-மந்திரிகளின் ஒத்துழைப்போடு, இந்த அணை பிரச்சனைகளுக்கு நிரந்தரமான தீர்வுகாண வேண்டும். </p><h2>கண்டிக்கத்தக்கது</h2><p> இது ஒரு புறமிருக்க, மறுபுறம் மேகதாது அணையை கட்டுவதற்கு பிரதமர் மோடி, மறைமுக அனுமதி வழங்கியிருப்பதை போல, ஜோசப் விஜயின் தோழமைகட்சி தலைவரான வைகோ போன்றவர்கள் உண்மைக்கு மாறாக, நெறி தவறி பொதுவெளியில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்,  இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.</p> <h2>உடனடி நடவடிக்கை</h2><p>முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்த கதைபோல் இல்லாமல், தமிழக மக்களின் நலனையும், விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தையும் மனதில் வைத்து தனது தோழமைக்கட்சி தலைவரான ராகுல்காந்தியிடம் பேசி, காவிரி, மேகதாது, முல்லை பெரியாறு அணை பிரச்சனைகளுக்கு நிரந்தரமான தீர்வுகாண உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை கைது செய்ய வேண்டிய அவசியமில்லை; ஆர்.எஸ்.பாரதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-no-need-to-arrest-dmk-mla-markandeyan-rs-bharathi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-no-need-to-arrest-dmk-mla-markandeyan-rs-bharathi#comments</comments><guid isPermaLink="false">ca377edb-cd47-41b8-899a-63d8f85ecd9b</guid><pubDate>Mon, 20 Jul 2026 10:20:12 +0000</pubDate><atom:updated>2026-07-20T10:20:12.691Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,ஆர்.எஸ்.பாரதி,RS Bharathi,மார்க்கண்டேயன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/8gh9otl7/RS-Bharati.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/8gh9otl7/RS-Bharati.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முதல் அமைச்சர் விஜய்யை மிரட்டும்  தொனியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டார். இதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">திமுக</a>  அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதியும்  எம்.எல்.ஏ கைது தேவையற்றது என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது; -    ஜனநாயகத்தில் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் சகிப்புத்தன்மை வேண்டும். தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்த இந்த 60 நாட்களிலேயே சகிப்புத்தன்மை அறவே இல்லை என்பதை நிரூபித்துவிட்டது. பிற கட்சிகளில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்களது பக்கம் இழுக்கும் இந்த அரசு, தி.மு.க-வில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் வைரத்தைப் போன்ற உறுதிமிக்க தொண்டர்களாக இருப்பதால் அவர்களை மாற்ற முடியாது என்ற காரணத்தால், இது போன்ற கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது</p><h2>திமுக தயார்</h2><p>அனிதா ராதாகிருஷ்ணனைத் தொடர்ந்து இரண்டாவது எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டுள்ளதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தி.மு.க-வினரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே கைது செய்கிறார்கள்.<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> நீதிமன்றத்தின்</a> மீது தங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. இந்த விவகாரங்களைச் சட்டரீதியாக எதிர்கொள்ள தி.மு.க தயாராக இருக்கிறது.தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைப் பேண வேண்டிய காவல்துறை, அதற்கு நேரமில்லாமல் தி.மு.க-வுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பதிவிடும் கல்லூரி இளைஞர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் நள்ளிரவில் சென்று அச்சுறுத்தி வருகிறது.</p><h2>சவுக்கடி கொடுத்தார்</h2><p>திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அப்படி பேசியிருந்தால் வழக்கு போடலாம்.. கைது செய்ய வேண்டிய அவசியமில்லை . சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகள் வெளிப்படுகின்றன. உண்மையாகவே தாக்க வேண்டும், கொலை செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் இருந்தால் அது வேறு விஷயம். ஆனால், பேச்சின் வேகத்தில் சில வார்த்தைகள் வந்துவிடும். 'சவுக்கடி கொடுத்தார்' என்று நாமும் பேசுவோம். அதையே ஊடகங்கள் தலைப்பாகப் போடுகின்றன. அதுபோலத்தான் இந்தப் பேச்சையும் பார்க்க வேண்டும். இதை உள்நோக்கத்துடன் திட்டமிட்டு கூறியதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. முதலமைச்சர் 'கதவை மூடுவேன்' என்று சொன்னபோது, அதற்கு பதிலாக 'வார்த்தையால் அடித்துவிட்டு வெளியே வருவோம்' என்று அவர் கூறியிருக்கலாம். இதையெல்லாம் நீதிமன்றம் பார்த்து முடிவு செய்யும்” என்றார். </p> ]]></content:encoded></item><item><title>சாத்தானின் ஆட்சி எது என்று மக்களுக்கே தெரியும்: மு.க. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/people-know-which-is-satans-rule</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/people-know-which-is-satans-rule#comments</comments><guid isPermaLink="false">985098bc-42e9-416a-80ed-79a925927a80</guid><pubDate>Mon, 20 Jul 2026 09:16:56 +0000</pubDate><atom:updated>2026-07-20T09:16:56.269Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,மு.க. ஸ்டாலின்,பதிலடி,Retaliation,M.K. Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/wni5jllh/vijay-stalin.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய், தி.மு.க. தலைவர் ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/wni5jllh/vijay-stalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சாத்தானின் ஆட்சி எது என்று மக்களுக்கே தெரியும் என மு.க. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தவெக ஐடி விங் எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>எதிர்க்கட்சி ஜனநாயகம்</h2><p>அரசியலை வியாபாரமாகவே செய்துவரும் தானியங்கி விற்பனை இயந்திரம் (Vending machine) தி.மு.க. இப்போது தன் கட்சியின் ஆபாச பேச்சாளர்களை வன்மம் ஊட்டி வளர்த்து வருகிறது. கேட்டால், அதுதான் எதிர்க்கட்சி ஜனநாயகம் என்று எகத்தாளம் பேசுகிறது. </p> <h2>அநாகரிக அரசியல் </h2><p>மேல்மட்ட தலைமை முதல் கீழ்மட்ட நிர்வாகம் வரை தரைமட்டத்திற்கும் கீழே சென்று அநாகரிக அரசியல் புரிந்து வருவதை நம் தமிழக மக்களும் தினம் தினம் பார்த்தே வருகின்றனர். ஆனால், வழக்கம்போல மக்களை மறந்து தான் என்ற திமிரில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.">தி.மு.க.</a> வழக்கம்போல அராஜகம் செய்து வருகிறது. </p> <h2>ஸ்டாலின் சார்</h2><p>ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு, ஜனநாயக பண்புகள் அறவே இன்றி தி.மு.க. செயல்பட்டதால்தான் அவர்கள் இப்போது அதன் விளைவுகளை அனுபவித்து வருகிறார்கள். (now they are enjoying the consequences). இருந்தும், அதிகார மமதை இன்னும் தலையை விட்டு இறங்காமல், இப்போதும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று காவல்துறையையே பகிரங்கமாக மிரட்டி அறிக்கை விடுகிறார் ஸ்டாலின் சார். சத்திய ஆட்சி எது?. சாத்தானின் ஆட்சி எது என்று மக்களுக்கே தெரியும் என்பது ஸ்டாலின் சாருக்கே தெரியும்.</p> <h2>தானியங்கி விற்பனை இயந்திரம்</h2><p>அடிப்படை புரிதல்கூட இல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு வழக்கு போட்டதால், ஒழுங்காக படித்துவிட்டு வாருங்கள் என்று சுப்ரீம் கோர்ட் ஓங்கி அடித்ததை மறந்துவிட்டு ஊருக்கு உபதேசம் செய்ய தொடங்கிவிட்டனர் தீயசக்தி தி.மு.க.வினர். நீதிநெறி மறந்து அரசியல் தானியங்கி விற்பனை இயந்திரம் (Vending machine) ஆன தி.மு.க. விதைத்து வருகிற வினைகளை விரைவில் மேன்மேலும் அறுவடை செய்யத்தான் போகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">அரசியலை வியாபாரமாகவே செய்துவரும் Vending machine தி.மு.க. இப்போது தன் கட்சியின் ஆபாசப் பேச்சாளர்களை வன்மம் ஊட்டி வளர்த்து வருகிறது. கேட்டால், அதுதான் எதிர்க்கட்சி ஜனநாயகம் என்று எகத்தாளம் பேசுகிறது. மேல்மட்டத் தலைமை முதல் கீழ்மட்ட நிர்வாகம் வரை தரைமட்டத்திற்கும் கீழே சென்று…</p>&mdash; TVK IT Wing Official (@TVKHQITWingOffl) <a href="https://x.com/TVKHQITWingOffl/status/2079110743237255523?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>திருப்பத்தூரில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் திருட்டு - போலீசார் விசாரணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/redwood-logs-worth-rs-50-stolen-from-tirupattur-sandalwood-warehouse</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/redwood-logs-worth-rs-50-stolen-from-tirupattur-sandalwood-warehouse#comments</comments><guid isPermaLink="false">63f717b0-ed3a-418e-8389-68bc786ec1cf</guid><pubDate>Mon, 20 Jul 2026 09:06:09 +0000</pubDate><atom:updated>2026-07-20T09:06:09.893Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirupattur,திருப்பத்தூர்,Sandalwood trees,சந்தன மரங்கள்,செம்மரக்கடத்தல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/vigmh1gp/semmaram33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
திருப்பத்தூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/vigmh1gp/semmaram33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பத்தூர், </p><p>திருப்பத்தூரில் தமிழ்நாடு வனத்துறைக்கு சொந்தமான அரசு சந்தன மர விற்பனை கிடங்கு ஒன்று உள்ளது. செம்மர வழக்குகளில் பிடிபடும் செம்மரக்கட்டைகளும் இங்குதான் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன. அந்த வகையில், பல்வேறு செம்மர வழக்குகளில் பிடிபட்ட 55 செம்மரக்கட்டைகள் இங்கு வைக்கப்பட்டிருந்தன. 1,750 கிலோ எடை கொண்ட இந்த செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். </p><h2>செம்மரக்கட்டைகள் திருட்டு</h2><p>இந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">செம்மரக்கட்டைகள்</a> கடந்த 18-ந் தேதி (நேற்று முன்தினம்) திருடு போனது. இதுகுறித்த தகவல் நேற்று கிடைத்தவுடன் திருப்பத்தூர் அரசு சந்தன மர விற்பனை கிடங்கு ஒற்றைப்பூட்டு அலுவலர் நா.ஜோதிலிங்கம், திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் எம். மகேந்திரன் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>திருப்பத்தூர் மற்றும் ஆம்பூர் வனச்சரகங்களில் செம்மர வழக்குகளில்  பறிமுதல் செய்யப்படும் செம்மரக் கட்டைகள், திருப்பத்தூர் சந்தன மரக்கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. கடந்த 18-ஆம் தேதி இரவு மர்ம நபர்கள் கிடங்கிற்குள் அத்துமீறி நுழைந்து 55 செம்மரக் கட்டைகளை திருடி சென்றதாக சந்தேகிக்கப்படுகிறது. கிடங்கில் மேற்கொள்ளப்பட்ட இருப்பு சரிபார்ப்பின்போது இந்த திருட்டு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><h2>பாதுகாப்பு அதிகரிப்பு </h2><p>திருடப்பட்ட செம்மரக் கட்டைகளின் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.  இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் கிடங்கின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், முதற்கட்ட விசாரணை நிறைவடைந்ததும் விரிவான அறிக்கை வெளியிடப்படும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p><p>திருப்பத்தூர் சந்தன மரக்கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த  ரூ.50 லட்சம் மதிப்பிலான 55 செம்மரக் கட்டைகள் மர்ம நபர்களால் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஜப்பான் ஓபன் பெண்கள் ஒற்றையர் பிரிவில்  சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்துவிற்கு நயினார் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-congratulates-pv-sindhu-on-winning-the-japan-open-womens-singles-title</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-congratulates-pv-sindhu-on-winning-the-japan-open-womens-singles-title#comments</comments><guid isPermaLink="false">b94c5232-6b9a-49d5-b6c7-76c12318a1b4</guid><pubDate>Mon, 20 Jul 2026 08:49:17 +0000</pubDate><atom:updated>2026-07-20T08:49:17.702Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,வாழ்த்து,congratulates,பி.வி.சிந்து,P.V. Sindhu,சாம்பியன் பட்டம்,Championship,Nainar Nagenthran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/nmsgvex1/nainarpvsindhu.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பி.வி.சிந்து,தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/nmsgvex1/nainarpvsindhu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- ஜப்பான் ஓபன் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றை படைத்ததற்கு பி.வி. சிந்துவிற்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்! </p><h2>இந்தியாவின் பெருமை</h2><p>பி.வி.சிந்துவின் ஒவ்வொரு வெற்றியும் இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் இன்னும் உயர்த்துகிறது. விடாமுயற்சி, ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பு தலைமுறைகளுக்கு ஒரு உத்வேகம்.</p><h2>இடைவிடாத உழைப்பு</h2><p>வெற்றி என்பது திறமையால் மட்டும் வருவதில்லை; இடைவிடாத உழைப்பு, தோல்விகளைத் தாண்டி மீண்டும் எழும் மனவலிமை மற்றும் தன்னம்பிக்கையால் உருவாகிறது என்பதை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20">பி.வி.சிந்து </a>மீண்டும் நிரூபித்துள்ளர். இந்த சாதனை ஒவ்வொரு இளம் விளையாட்டு வீரரின் கனவுக்கும் புதிய நம்பிக்கையை விதைக்கிறது.</p> <p>இன்னும் பல சர்வதேச பட்டங்களை வென்று நம் பாரத தேசியக்கொடியை உயர பறக்க செய்ய வாழ்த்துகள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">ஜப்பான் ஓபன் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றை படைத்ததற்கு பி.வி. சிந்து அவர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்! <br><br>அவரின் ஒவ்வொரு வெற்றியும் இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் இன்னும் உயர்த்துகிறது. விடாமுயற்சி, ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பு தலைமுறைகளுக்கு ஒரு… <a href="https://t.co/r5a3VuLWvm">pic.twitter.com/r5a3VuLWvm</a></p>&mdash; Nainar Nagenthran (@NainarBJP) <a href="https://x.com/NainarBJP/status/2079114514688332117?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>‘எலும்புகள் எல்லோருக்கும் உண்டு’ - அமைச்சர் வன்னி அரசு பதிலடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/everyone-has-bones-minister-vanni-arasu-responds-to-dmk-mlas-speech</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/everyone-has-bones-minister-vanni-arasu-responds-to-dmk-mlas-speech#comments</comments><guid isPermaLink="false">7e513bc4-2c0c-4ac6-991e-de25d197cdbf</guid><pubDate>Mon, 20 Jul 2026 08:23:18 +0000</pubDate><atom:updated>2026-07-20T08:23:18.605Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,வன்னி அரசு,Vanni Arasu,DMK MLA,திமுக எம்.எல்.ஏ.,மார்க்கண்டேயன்,Markandeyan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/u14wqh2a/CHENNAI-15.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/u14wqh2a/CHENNAI-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><p>“சட்டமன்றத்துக்குள் வைத்து தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜயின் எலும்புகளை உடைப்பேன்” என்று வன்முறையை தூண்டும் வகையில் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசியுள்ளார். ஏற்கனவே முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். </p><p>இவர்கள் மட்டுமல்ல  பலரும் மிக மோசமான தாக்குதலை தொடுத்து வருகின்றனர். மக்களுக்காக சேவையாற்றும் தளமாக அரசியல் களத்தை பார்க்காமல், ஆட்சி அதிகாரத்தை தனிநபர் வளர்ச்சிக்கான வாய்ப்பாக கருதி வந்ததால், தோல்வியின் விரக்தியில் இவ்வாறு அநாகரிகமாக செயல்பட்டு வருகின்றனர். இத்தகைய போக்கு கடும் கண்டனத்திற்குரியது.</p><p>சட்டமன்றத்துக்குள் முதலமைச்சருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோம் என்று திரு. மார்க்கண்டேயன் பேசியுள்ள நிலையில், அவர மீது சபாநாயகர் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என்பதை தான்  நினைவுபடுத்த விரும்புகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>2026-27 வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார் அன்புமணி!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-released-the-2026-27-agriculture-shadow-budget-report</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-released-the-2026-27-agriculture-shadow-budget-report#comments</comments><guid isPermaLink="false">92330fc7-4937-492e-b2f9-16cc13201613</guid><pubDate>Mon, 20 Jul 2026 08:11:57 +0000</pubDate><atom:updated>2026-07-20T08:11:57.033Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாமக,அன்புமணி,Anbumani Ramadas,agriculture budget,வேளாண் நிதிநிலை அறிக்கை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/ww45drip/anbumani.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/ww45drip/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழக மக்கள் மாமன்றத்தில் முன்வைக்கும் தமிழக அரசிற்கான 2026 - 2027ஆம் ஆண்டின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை</p><h2>முக்கிய அம்சங்கள்</h2><p>1.  2026-27ஆம் ஆண்டிற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் 19ஆம் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை மொத்தம் ரூ.93,000 கோடி மதிப்பு கொண்டதாக இருக்கும். இதில் ரூ.68,000 கோடி வேளாண்துறை மூலம் செலவிடப்படும். இதுதவிர, பாசனத் திட்டங்களுக்காக நீர்வளத்துறை மூலம் ரூ.25,000 கோடி செலவிடப்படும்.</p><p>2. 2025-26ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் வேளாண்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.15,230.30 கோடியுடன் ஒப்பிடும் போது, இது 446% அதிகம்.</p><p>3. வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் ரூ.13,000 கோடி உழவர்கள் இடுபொருள் மானியத்திற்கு செலவிடப்படும்.</p><p>4. வேளாண் கட்டமைப்பு, வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டங்களுக்கு ரூ.25,000 கோடி செலவிடப்படும்.</p><p>5. பயிர்க் காப்பீடு உள்ளிட்ட பிற திட்டங்களுக்கு ரூ.30,000 கோடி செலவிடப்படும்.</p><h2>வேளாண் சார்ந்த துறைகளுக்கு ரூ.1.5 லட்சம் கோடி</h2><p>6. தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை மதிப்பில் 25% வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பது பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். அதன்படி, நடப்பாண்டின் நிதிநிலை அறிக்கை மதிப்பான ரூ.6 லட்சம் கோடியில் ரூ.1.5 லட்சம் கோடி வேளாண்மை சார்ந்த துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>7. வேளாண்மை, நீர்வளத்துறைக்கு மட்டும் ரூ.93,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், வேளாண்மை சார்ந்த கால்நடைத்துறை, பால்வளத்துறை, மீன்வளத்துறை, கூட்டுறவுத்துறை, உணவுத்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகியவற்றில் வேளாண்மை சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்காக மட்டும் ரூ.57,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><h2>குறுவை சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.5,000 சிறப்பு மானியம்</h2><p>8. குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாத நிலையில், பாசனத் தேவைகளுக்கு ஏற்படும் கூடுதல் செலவை கருத்தில் கொண்டு ஏக்கருக்கு ரூ.5,000 சிறப்பு மானியம் வழங்கப்படும்.</p><p>9. நிலத்தடி நீர் ஆதாரம் இல்லாத பகுதிகளில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படாததால் ஏற்படும் இழப்பைக் கருத்தில் கொண்டு, உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 இழப்பீடு வழங்கப்படும்.</p><p>10. உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.12,000 இடுபொருள் மானியம் வழங்கப்படும். அதிகபட்சமாக 3 ஏக்கருக்கு ரூ.36,000 வழங்கப்படும்.</p><p>11. மத்திய அரசால் வழங்கப்படும் ரூ.6,000-யும் சேர்த்து ரூ.42,000 வழங்கப்படும். 4 அல்லது 5 ஏக்கர் நிலம் வைத்துள்ள உழவர்களுக்கும் இதே தொகை இடுபொருள் மானியமாக வழங்கப்படும்.</p><h2>பயிர்க் கடன் முழுமையாக தள்ளுபடி: அரசே கடனை செலுத்தும்</h2><p>12. கூட்டுறவு வங்கிகளில் இருந்து உழவர்கள் வாங்கிய பயிர்க் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். இதற்கான தொகையை அரசே வெளிச் சந்தையில் இருந்து கடனாக வாங்கி, கூட்டுறவு வங்கிகளுக்கு செலுத்தும்.</p><p>13. பொதுத்துறை வங்கிகளில் சிறு மற்றும் குறு விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன்களில் ரூ.1 லட்சம் வரையிலான தொகையை அரசே ஏற்றுக் கொண்டு நேரடியாக செலுத்தும்.</p><p>14. கூட்டுறவு வங்கிகளில் உழவர்கள் பெறும் குறுகியகால கடன்களுக்கு 10% மானியம் வழங்கப்படும். ரூ.1 லட்சம் கடன் வாங்கினால், ரூ.90,000 திருப்பி செலுத்தினால் போதுமானது.</p><p>15. பாமக தேர்தல் அறிக்கையை நிறைவேற்றும் வகையில், வேளாண் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.24,000 உரிமைத் தொகை வழங்கப்படும். இது 3 தவணைகளில் வழங்கப்படும்.</p><p>16. உழவர்களின் வாரிசுகளுக்கு முதுநிலை பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும். தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு இக்கட்டணத்தை அரசே செலுத்தும்.</p><h2>வேளாண்துறை பங்களிப்பை 20%ஆக உயர்த்த சிறப்புத் திட்டங்கள்</h2><p>17. 2023-24, 2024-25 ஆகிய ஆண்டுகளில் வேளாண்துறை வீழ்ச்சியடைந்ததால், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்திக்கு (ஜிஎஸ்டிபி) அத்துறையின் பங்களிப்புக்கு 2.99%ஆக குறைந்திருக்கிறது. இதை அடுத்த 5 ஆண்டுகளில் 20%ஆக உயர்த்த சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதற்கான அடித்தளம் அமைக்கும் சிறப்பாண்டாக நடப்பாண்டு கடைபிடிக்கப்படும்.</p><p>18. வேளாண்துறையை லாபகரமாக மாற்றுதல், ஆண்டுக்கு குறைந்தது 6% வளர்ச்சியை எட்டுதல் ஆகியவற்றுக்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைக்க வல்லுநர் குழு அமைக்கப்படும்.</p><h2>நெல்லுக்கு ரூ.3,500, கரும்புக்கு ரூ.5,000</h2><p>19. நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்புக்கு டன்னுக்கு ரூ.5,000 ஆக உயர்த்தப்படும்.</p><p>20. வேளாண் விளைபொருட்களை கொள்முதல் செய்வதற்காக தனி வாரியம் ஏற்படுத்தப்படும்.</p><p>21.நெல் உள்ளிட்ட விளைபொருட்களை கொள்முதல் செய்ய 6,000 நிலையங்கள் அமைக்கப்படும்.</p><p>22.கொள்முதல் பணிகளை மேற்கொள்ள 38,866 பருவகாலப் பணியாளர்கள் பணிநிலைப்பு செய்யப்படுவார்கள். 12,000 பணியாளர்கள் புதிதாக நியமிக்கப்படுவார்கள்.</p><h2>கொள்முதலை கட்டாயமாக்க சிறப்புச் சட்டம்</h2><p>23.தமிழ்நாட்டில் அனைத்து வகையான வேளாண் விளைபொருட்களையும் அரசே கொள்முதல் செய்வதை கட்டாயமாக்கும் வகையில், வேளாண் விளைபொருட்கள் (கொள்முதல் விலை நிர்ணயம் மற்றும் கொள்முதல்) சட்டம் - 2026 இயற்றப்படும்.-</p><p>24.வேளாண் சிறப்புப் பொருளாதார மண்டலம், வேளாண்மை சார்ந்த தொழிற்சாலைகள் ஆகியவற்றை அமைக்க முதலீடு திரட்டும் நோக்குடன், வேளாண்துறை முதலீட்டாளர் மாநாடு  நடத்தப்படும்.</p><p>25.வேளாண் துறையில் 250 புத்தொழில் (ஸ்டார்ட்அப்) நிறுவனங்களை ஏற்படுத்த ஊக்கமளிக்கப்படும். அவற்றுக்கு ரூ.25 லட்சம் மானியம், ரூ.1 கோடி வரை முதலீடு அரசால் வழங்கப்படும்.</p><p>26. நெல் உற்பத்தித் திறனை ஹெக்டேருக்கு 6 டன்னாக உயர்த்த சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.</p><h2>நெல் கொள்முதல் கட்டமைப்பு வலுப்படுத்தப்படும்</h2><p>27. கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைவதைத் தடுக்கும்  வகையில், உழவர்கள் கொண்டுவரும் நெல் மூட்டைகள் அதே நாளில் கொள்முதல் செய்யப்படும்.</p><p>28. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாத்து வைப்பதற்காக, அரசு கிடங்குகளின் எண்ணிக்கை இப்போதுள்ள 302-லிருந்து அடுத்த 3 ஆண்டுகளில் 1000ஆக உயர்த்தப்படும்.</p><p>29. காய்கறிகள், பழங்கள், மலர்கள் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களை வீணாகாமல் பாதுகாத்து வைக்க அனைத்து வட்டங்களிலும் குளிர்ப்பதனக் கிடங்கு அமைக்கப்படும்.</p><p>30. அனைத்து மாவட்டங்களிலும் உணவுப் பதனத் தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.</p><p>31. நெல் கொள்முதல் அளவு ரூ.70 லட்சம் டன்னாக அதிகரிக்கப்படும்.</p><h2>பருப்பு, எண்ணெய்வித்து உற்பத்தியைப் பெருக்க சிறப்புத் திட்டம்</h2><p>32. தமிழ்நாட்டில் துவரம்பருப்பு சாகுபடி செய்யப்படும் பரப்பு இப்போதுள்ள 1.25 இலட்சம் ஏக்கரில் இருந்து அடுத்த 3 ஆண்டுகளில் 3 லட்சம் ஏக்கராக உயர்த்தப்படும்.</p><p>33. துவரம் பருப்பு சாகுபடி செய்யும் உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்.</p><p>34. எண்ணெய் வித்துப் பயிர்களான எள் சாகுபடி பரப்பு ஆண்டுக்கு 50 ஆயிரம் ஏக்கர் வீதமும், சூரியகாந்தி சாகுபடி பரப்பு ஆண்டுக்கு 25 ஆயிரம் வீதமும் அதிகரிக்கப்படும்.</p><p>35. நிலக்கடலை சாகுபடி பரப்பு 5.62 லட்சம் ஏக்கரில் இருந்து 7 லட்சம் ஏக்கராக உயர்த்தப்படும்.</p><p>36.எண்ணெய் வித்துப் பயிர்களை சாகுபடி செய்ய ஏக்கருக்கு ரூ.7 ஆயிரம் ஊக்கத்தொகை.</p><h2>நியாயவிலைக் கடைகளில் நாட்டுச் சர்க்கரை, சமையல் எண்ணெய்</h2><p>37.மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு உழவர்களிடம் இருந்து நாட்டுச் சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு, மானிய விலையில் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும்.</p><p>38.நல்லெண்ணெய், கடலெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவையும் நியாய விலைக் கடைகள் மூலம் மானிய விலையில் வழங்கப்படும்.</p><h2>காவிரியில் மேகதாது அணை கட்டப்படுவது தடுக்கப்படும்</h2><p>39.காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அரசியல் மற்றும் சட்டப்போராட்டம் மூலம் இந்த முயற்சி முறியடிக்கப்படும்.</p><p>40.மேகதாது அணை சிக்கலுக்கு தீர்வுகாண புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற யோசனையை பாட்டாளி மக்கள் கட்சி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.</p><p>41.முல்லைப்பெரியாறு அணை சிக்கல் தொடர்பாக கேரள அரசுடன் பேச்சு நடத்தப்படாது. பேபி அணையை வலுப்படுத்துவதன் மூலம் அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்படும்.</p><h2>நீர்ப்பாசன திட்ட செயலாக்க ஆணையம்</h2><p>42. நீர்ப்பாசனத் திட்டங்களை புத்தெழுச்சியுடன் செயல்படுத்த தமிழ்நாடு நீர்ப்பாசனத் திட்ட செயலாக்க ஆணையம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்படும்.</p><p>43.தமிழ்நாட்டின் சாகுபடி பரப்பு அடுத்த 5 ஆண்டுகளில் 40 லட்சம் ஏக்கர் அதிகரிக்கப்படும்.</p><p>44.தமிழ்நாட்டில் கடந்த சில பத்தாண்டுகளில் 15,000 ஏரிகள் காணாமல் போய்விட்டன. 27,000 ஏரிகளின் கொள்ளளவு ஆக்கிரமிப்பால் குறைந்துவிட்டது. காணாமல்போன ஏரிகளில் சாத்தியமானவற்றை மீட்டெடுக்கவும், ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகளை மீட்டெடுக்கவும் ஏரிகள் மேலாண்மை வாரியம் என்ற அமைப்பு உருவாக்கப்படும்.</p><p>45. காவிரி - தருமபுரி உபரிநீர்த் திட்டம், அரியலூர்: சோழர் பாசனத் திட்டம் ஆகியவற்றுக்கு வரும் அக்டோபர் மாதம் அடிக்கல் நாட்டப்படும்.</p><h2>காவிரி - குண்டாறு இணைப்பு: 3 ஆண்டுகளில் நிறைவடையும்</h2><p>46.  கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களின் வறட்சியைப் போக்குவதற்கான காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தின் முதல்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.</p><p>47.இத்திட்டத்திற்கு நடப்பாண்டில் ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் காவிரி - குண்டாறு இணைப்புப் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.</p><h2>அத்திக்கடவு - அவிநாசி திட்டம் 2.0</h2><p>48.கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களின் பாசனத் தேவைக்காக செயல்படுத்தப்பட்டுள்ள  அத்திக்கடவு - அவிநாசி திட்டம் முழுமையாக பயனளிக்கவில்லை என்பதால், அத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் செயல்படுத்தப்படும்.</p><p>49. பாண்டியாறு - புன்னம்புழா திட்டத்தை கேரள அரசின் ஒத்துழைப்புடன் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம், ஆண்டுக்கு 14 டிஎம்சி கூடுதல் நீர் பெறப்படும்.</p><p>50. சேலம் மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு மட்டும் பயனளிக்கும் வகையில், அரை குறையாக செயல்படுத்தப்பட்டுள்ள மேட்டூர் உபரிநீர்த் திட்டம் விரிவாக்கப்பட்டு, காவிரி - சரபங்கா - திருமணிமுத்தாறு கால்வாய் இணைப்புத் திட்டமாக செயல்படுத்தப்படும்.</p><p>51. நொய்யல் ஆற்றை தூய்மைப்படுத்தும் திட்டம் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.10,000 கோடிகளில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்காக நடப்பாண்டில் ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><h2>கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம்</h2><p>52. கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் தமிழ்நாட்டிற்கு மிகவும் பயனளிக்கும் திட்டம் என்றாலும் கூட, அத்திட்டத்தை செயல்படுத்துவது என்பது மிகவும் சவாலான ஒன்றுதான். இத்திட்டம் குறித்து கருத்தொற்றுமை ஏற்படுத்த 4 முறை நடத்தப்பட்ட கலந்தாய்வுகள் வெற்றிபெறவில்லை.</p><p>53.கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் குறித்து சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் கருத்தொற்றுமை ஏற்படுத்துவதற்காக சிறப்புப் பணிக்குழு ஒன்றை அமைக்கும்படி மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும். இதற்காக தமிழக அமைச்சர்கள் குழு தில்லி சென்று, மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் பேச்சு நடத்தும்.</p><h2>ஒரு லட்சம் கோடியில் நீர்ப்பாசனத் திட்டம்</h2><p>54.தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு நீர்ப்பாசனத் திட்ட செயலாக்க ஆணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.25,000 கோடி மதிப்பில் பாசனத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.</p><p>55.பாலாறு பாசனத் திட்டம்: பாலாற்றில் வீணாகும் நீரை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் நல்லாத்தூர், ஆலப்பாக்கம், பழவேலி, பாலூர், திருமுக்கூடல் ஆகிய பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்படும். அடுத்தகட்டமாக காஞ்சிபுரம் வட்டம் பெரும்பாக்கம்; உத்திரமேரூர் வட்டம் திருமுக்கூடல்; செங்கல்பட்டு வட்டம் ஆலப்பாக்கம்; மதுராந்தகம் வட்டம் எல்.என்.புரம் என, நான்கு இடங்களில் தடுப்பணை கட்டப்படும். இத்திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கப்படும்.</p><p>56. தென்பெண்ணை - துரிஞ்சலாறு இணைப்பு: நந்தன் கால்வாய் திட்டத்தின் நீர் ஆதாரமாக திகழ்வது துரிஞ்சலாறு ஆகும். துரிஞ்சலாறு ஒரு காட்டாறு என்பதால் மழைக்காலத்தில் மட்டும் நந்தன் கால்வாயில் தண்ணீர் வரும். இது நந்தன் கால்வாயை நம்பியுள்ள பல லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு இந்த தண்ணீர் போதுமானதல்ல. நந்தன் கால்வாய் திட்டம் முழுமையான பயனளிக்க வேண்டுமானால், தென்பெண்ணையாற்றுடன் நந்தன் கால்வாயை இணைப்பது தான் சிறந்த வழியாகும். இதற்காக ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.</p><h2>மணல் குவாரிகள் அனுமதிக்கப்படாது</h2><p>57. தமிழ்நாட்டில் புதிய மணல் குவாரிகள் தொடங்கப்படாது. ஒரு சில இடங்களில் செயல்பட்டு வரும் மணல் குவாரிகள் மூடப்படும்.</p><p>58. மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதன் மூலமும் எம்-சாண்ட் ஆலைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலமும் தமிழ்நாட்டில் கட்டுமானத் தேவைகளுக்கு மணல் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ளப்படும்.</p><h2>இயற்கை சீற்றங்களால் பயிர்களுக்கு பாதிப்பு: நிலையான நிவாரணத் திட்டம்</h2><p>59. தமிழ்நாட்டில் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு நியாயமான இழப்பீடு கிடைப்பதை உறுதி செய்ய புதிய பயிர்க்காப்பீட்டு நிறுவனத்தை தமிழக அரசே தொடங்கும்.</p><p>60. இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு அரசின் சார்பில் நிவாரணம் வழங்க நிலையான நிவாரணத் திட்டம் வகுக்கப்படும்.</p><p>61.இந்தத் திட்டத்தின்படி, வறட்சியால் முழுமையாக பாதிக்கப்படும் குறுவைப் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000, ஓரளவு பாதிக்கப்படும் பயிர்களுக்கு ரூ.25,000 வீதம் இழப்பீடு வழங்கப்படும்.</p><p>62. கரும்புக்கு ரூ.1.2 லட்சம், நிலக்கடலைக்கு ரூ.33,000, பிற பணப் பயிர்களுக்கு ரூ.1.25 இலட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும்.</p><p>63. வனவிலங்குகளால் தாக்கப்படும் மனிதர்களுக்கு இழப்பீடு வழங்க புதிய கொள்கை உருவாக்கப்படும்.</p><p>64.  விலங்குகள் தாக்கி உயிரிழப்போருக்கு ரூ.25 லட்சம், முடங்கும் அளவுக்கு காயமடைவோருக்கு ரூ.15 லட்சம், லேசான காயமடைவோருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.</p><h2>வேளாண்துறையில் 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்</h2><p>65.வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறையில் 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்த வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.</p><p>66. கிராமப்புறங்களில் வேளாண்மை மற்றும் பொறியியல் பட்டதாரிகளை ஒருங்கிணைத்து வேளாண்மை மற்றும் தோட்டக்கலை ஆலோசனை மையங்கள் ஏற்படுத்தப்படும். அவர்கள் அந்தந்தப் பகுதிகளில் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் சந்தைப் படுத்துதல் குறித்த ஆலோசனைகளையும், சேவைகளையும் வழங்குவார்கள். இதன் மூலம் 5 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்.</p><p>67. தென்னை மரங்களில் இருந்து இறக்கப்படும் நீரா பானத்தை பாதுகாப்பான முறையில் உறைகளில் அடைத்து தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டத்தின் மூலமாக, தமிழகத்தில் 1 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 2 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை கிடைக்கும்.</p><p>68. கிராமப்புற சுயஉதவிக் குழுக்கள் மூலம் ஆடுகள், கோழிகள், வான்கோழிகள், மீன்கள் ஆகியவை விற்பனை செய்யப்படும். பட்டதாரி இளைஞர் குழுக்கள் மூலம் முக்கிய நகரங்களிலும், சாலையோரங்களிலும் நவீன உணவகங்கள் அமைக்கப்பட்டு, சுயஉதவிக் குழுக்கள் வளர்க்கும் ஆடுகள், கோழிகள், மீன்கள் ஆகியவை சுவையாக சமைத்து வழங்கப்படும். இதனால், பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.</p><p>69.தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்படவிருக்கும் வேளாண் விளைபொருட்கள் கொள்முதல்  வாரியத்திற்கு 50,000 பணியாளர்கள் புதிதாக நியமிக்கப்படுவார்கள்.</p><p>70.தமிழ்நாடு முழுவதும் புதிதாக திறக்கப்படவுள்ள 30 ஆயிரம் காவிரி பல்பொருள் அங்காடிகளில் பணியாற்ற ஒரு லட்சம் ஊழியர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.</p><h2>காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் 9 மாவட்டங்களுக்கு விரிவாக்கம்</h2><p>71. காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக விரிவாக்கப்படும். இதற்கான சட்டத்திருத்தம் நடப்பு தொடரில் நிறைவேற்றப்படும்.</p><p>72. காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வேளாண்மை தவிர்த்த பிற தொழில் திட்டங்கள் அனைத்தும் தடை செய்யப்படும். அதற்கேற்ற வகையில் சட்டத்திருத்தம் செய்யப்படும்.</p><p>73. என்.எல்.சி. 3ஆவது சுரங்கம் திட்டம், முதல் இரு சுரங்கங்களை விரிவாக்கும் திட்டம் ஆகியவற்றுக்கு தடைவிதிக்கப்படும். இதற்காக 25,000 ஏக்கர் நிலம் எடுக்க அனுமதிக்கப்படாது.</p><p>74. அரியலூர் மாவட்டத்தில் புதிய சிமெண்ட் ஆலைகள் அமைக்க தடை விதிக்கப்படும்.</p><p>75.பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படாது. இதன் மூலம் தமிழ்நாடு ஹைட்ரோ கார்பன் திட்டம் இல்லாத மாநிலமாக திகழும்.</p><h2>சிப்காட் தொழில்பேட்டைகளுக்கு நிலங்களை கையகப்படுத்த தடை</h2><p>76. செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக மேல்மா உள்ளிட்ட கிராமங்களில் 3,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் திட்டம் கைவிடப்படும். அரசு நிலங்களில் இந்த விரிவாக்கம் செய்யப்படும்.</p><p>77.சிப்காட் உள்ளிட்ட எந்த தொழில் திட்டத்திற்கும் வேளாண் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படாது.</p><p>78. கிழக்குக் கடற்கரை சாலைப் பகுதி பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழிடமாக அறிவிக்கப்படும்.</p><h2>உழவு, நடவு, அறுவடை எந்திரங்களுக்கு கூடுதல் மானியம்</h2><p>79.  உழவு, நடவு, அறுவடை எந்திரங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதால், அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>80.  வேளாண் எந்திரங்களை வாங்குவதற்கான மானியம் பட்டியலினத்தவருக்கு 60% ஆகவும், பிற சமுதாயத்தினருக்கு 50%ஆகவும் உயர்த்தப்படும்.</p><p>81. வேளாண் பொறியியல் துறை, கூட்டுறவுத்துறை வாயிலாக வழங்கப்படும் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ.600 முதல் ரூ.950ஆக குறைக்கப்படும்.</p><p>82.  உழவு எந்திரங்கள் மற்றும் பிற எந்திரங்களுக்கான வாடகை மணிக்கு ரூ.300ஆக குறைப்பு.</p><h2>தோட்டக்கலை பல்கலைக் கழகம்</h2><p>83. சேலம் மாவட்டம் கருமந்துறையில் உள்ள தமிழக அரசு தோட்டக்கலை பண்ணை வளாகத்தில் புதிய தோட்டக்கலை பல்கலைக் கழகம் அமைக்கப்படும். தமிழகத்தில் உள்ள 4 தோட்டக்கலைக் கல்லூரிகள் அதனுடன் இணைக்கப்படும்.</p><p>84. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பட்டுப்புழு வளர்ப்புப் பண்ணையில் புதிய பட்டுப்புழு வளர்ப்புக் கல்லூரி அமைக்கப்படும். இது அடுத்த கல்வி ஆண்டில் செயல்பாட்டுக்கு வரும்.</p><p>85. மிழ்நாட்டிலேயே சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியில் விளையும் மானாவாரி தக்காளி மற்றும் வாழை ரகங்களை மேம்படுத்தி புதிய ரகங்கள் ஆராய்ச்சி மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை போன்றவற்றால் ஈடுபட மேச்சேரியில் மானாவாரி பயிர்களுக்கு ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.</p><h2>வேளாண் கல்வி - 3 புதிய பல்கலைக் கழகங்கள்</h2><p>86. தமிழகத்தை 4 மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு வேளாண் பல்கலைக் கழகம் அமைக்கப்படும். கோவையில் ஏற்கெனவே வேளாண் பல்கலைக் கழகம் உள்ள நிலையில், தஞ்சாவூர், வேலூர், நெல்லை ஆகிய நகரங்களில் புதியப் பல்கலைக் கழகங்கள் அமைக்கப்படும்.</p><h2>திண்டிவனத்தில் வேளாண் கல்லூரி</h2><p>87. நான்கு மாவட்டங்களுக்கு ஒரு வேளாண்மைக் கல்லூரி அமைக்கப்படும். ஒவ்வொரு பல்கலைக் கழகமும் அதன் ஆளுகைக்கு உட்பட்ட வேளாண் கல்லூரிகளுடன் இணைந்து, அப்பகுதிகளில் வேளாண்மை உற்பத்தி மற்றும் உழவர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண உதவும்.</p><p>88. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 140 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் எண்ணெய் வித்து ஆராய்ச்சி மையத்தில் புதிய அரசு வேளாண் கல்லூரி அமைக்கப்படும். இது வடமாவட்டங்களில் அமைக்கப்படும் 2வது வேளாண் கல்லூரி ஆகும். இக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை அடுத்த கல்வி ஆண்டில்  தொடங்கும்.</p><p>89. தஞ்சாவூரில் நெல் உற்பத்தியைப் பெருக்க நெல் தொழில்நுட்பப் பூங்கா (ஸிவீநீமீ ஜிமீநீலீஸீஷீறீஷீரீஹ் றிணீக்ஷீளீ) அமைக்கப்படும். இதன் மூலம் நவீன தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு பயிற்றுவிக்கப்படும்.</p><h2>125 நாள் வேலைத்திட்டம் 150 நாள்களாக அதிகரிக்கப்படும்</h2><p>90. மத்திய அரசால் மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு மாற்றாக அறிவிக்கப்பட்டுள்ள வளர்ச்சியடைந்த பாரதம் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்படி, வேலை வழங்கப்படும் நாள்களின் எண்ணிக்கை 125-லிருந்து 150ஆக உயர்த்தப்படும்.</p><p>91. இத்திட்டத்தின்கீழ் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கை 150ஆக உயர்த்தப்படும். இத்திட்டம் விவசாயப் பணிகளுக்கும் நீட்டிக்கப்படும். வேளாண் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தில் நில உரிமையாளர்கள் சார்பில் சிறிய பங்கு வழங்கப்படும். மீதமுள்ள ஊதியத்தை அரசு வழங்கும்.</p><h2>பால் உற்பத்தி இரட்டிப்பாக்கப்படும்</h2><p>92.தமிழகத்தில் உள்ள பாரம்பரிய மாடு வகைகளான காங்கேயம், உம்பலாச்சாரி போன்ற இனங்கள் மீண்டும் புத்துயிரூட்டப்பட்டு பராமரிக்கப்படும்.</p><p>93.எருமை வகைகளில் அதிகப்படியாக பால் கொடுக்கும் முர்ரா வகை இனங்கள் உற்பத்தி செய்யப்பட்டு உழவர்களுக்கு வழங்கப்படும். இதன் மூலம் தமிழகத்தின் பால் உற்பத்தி அடுத்த 5 ஆண்டுகளில் இரு மடங்காக்கப்படும்.</p><p>94.காவிரி டெல்டா மாவட்டங்களில் தனியார் பங்களிப்பு மற்றும் அரசு மானியத்துடன் குட்டைகள் தோண்டப்பட்டு, மீன் வளர்ப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>95.இந்தப் பணிகளை ஒருங்கிணைக்க தமிழ்நாடு குழுவில் 1000 உழவர் - மீனவர் அமைப்புகள் ஏற்படுத்தப்படும்.</p><p>96. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஏரிகள், குளங்கள் மற்றும் அணைகளில் நீர் இருப்புக்கு ஏற்றவாறு புதிய மீன் இரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>97.இந்தியாவில் ஒட்டுமொத்தமாக காய்கறி பயிரிடப்படும் பரப்பில் 3.36%, பழங்கள் பயிரிடப்படும் பரப்பில் 4.59% மட்டுமே தமிழ்நாட்டில் உள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் இந்தப் பரப்பை 50% அதிகரிக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் உழவர்களின் வருமானம் உயரும்.</p><p>98. ஒரே நிலத்தில் பலவகைப் பயிர்களைப் பயிரிட்டு உழவர்கள் அதிக இலாபம் பெறும் தொழில்நுட்பம் வழங்கப்படும்.</p><p>99. தமிழ்நாட்டில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்குடன், அடுத்த 5 ஆண்டுகளில் 300 கோடி மரக்கன்றுகள் நடப்படும். இத்திட்டத்திற்கு பசுமைத் தமிழகம் என்று பெயரிடப்பட்டுள்ளது.</p><p>100. வேளாண்துறை வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கு வசதியாக மொத்தம் 82 தலைப்புகளில் 226 யோசனைகளை தமிழக அரசுக்கு தெரிவித்திருக்கிறோம். இவற்றை பா.ம.க.வின் திட்டங்களாக கருதாமல், வேளாண் பெருமக்களின் கோரிக்கையாக கருதி  இவற்றில் அரசுக்கு சாத்தியமானவற்றை ஆகஸ்ட் மாதத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள தமிழக  அரசின் ஆறாம் வேளாண் நிதிநிலை அறிக்கையில் சேர்க்க வேண்டும்; நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%BE.%E0%AE%AE.%E0%AE%95.">பா.ம.க.வின் </a>விருப்பமும் வேண்டுகோளும் ஆகும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நீலகிரி: மசினகுடி சாலையில் சுற்றுலா வாகனங்களுக்கு இன்று முதல் தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-ban-on-tourist-vehicles-on-the-masinagudi-road-starting-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-ban-on-tourist-vehicles-on-the-masinagudi-road-starting-today#comments</comments><guid isPermaLink="false">89484cad-d61e-4382-8630-4c3404b79a80</guid><pubDate>Mon, 20 Jul 2026 08:01:04 +0000</pubDate><atom:updated>2026-07-20T08:01:04.447Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சுற்றுலா வாகனங்கள்,Nilgiris,நீலகிரி,tourist vehicles</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/velg3z2r/15.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/velg3z2r/15.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கல்லட்டி மலைப்பாதை வழியாக மசினகுடி, தெப்பக்காடு பகுதி, அபாயகர சரிவுகள் மற்றும் 36 குறுகிய வளைவுகளை உடையது. இங்கு சுற்றுலா வாகனங்கள் சென்று வந்தன.  இதனால், அந்த வழியாக செல்லும் வெளியூர் சுற்றுலா பயணிகள் கல்லட்டி மலைப்பாதையில் விபத்தில் சிக்கி வருவது தொடர்கதையாக உள்ளது.</p><p>இந்த சூழலில் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த சாலைகள் வழியாக சுற்றுலா பயணிகள் செல்ல கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் உள்ளூர் மக்களை தவிர்த்து வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்தது. மசினகுடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற இணைப்புச் சாலைகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது.</p><p>ஆனால் நீதிமன்றத்தின் தடை இதனால் வரைக்கும் அமல்படுத்தாமல் இருந்து வந்தது .இந்த சூழலில், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை உத்தரவு இன்று முதல் அமல்படுத்த உள்ளதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மசனகுடி சிங்காரம் மாயா மற்றும் வெகாபுரம் விபூதி மலை சாலையில் செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் மசினகுடி, மாயார், சிங்காரா, விபூதி மலை சாலைகளில் இன்று முதல் அங்கீகரிக்கப்பட்ட சவாரி ஜீப்கள் மற்றும் உள்ளூர் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வெளியூர் மற்றும் சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி இல்லை. அதேநேரத்தில் உள்ளூர் வாகனங்கள் மேற்கண்ட சாலைகளை பயன்படுத்த எந்தவித தடையும் இல்லை என்று தெரிவித்து உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பழனி முருகன் கோவில் செல்வோர்
கவனத்திற்கு...வெளியான முக்கிய அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-murugan-temple-goersattentionimportant-announcement-released</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-murugan-temple-goersattentionimportant-announcement-released#comments</comments><guid isPermaLink="false">22335508-43e7-447a-a013-79f2c21e69e0</guid><pubDate>Mon, 20 Jul 2026 07:38:10 +0000</pubDate><atom:updated>2026-07-20T07:38:10.540Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பழனி முருகன் கோவில்,Palani,ரோப் கார் சேவை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/lcvmewjs/palani33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பழனி முருகன் கோவில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/lcvmewjs/palani33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><p>வருடாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பழனி கோயில் ரோப் கார் சேவை இன்று (ஜூலை 20ஆம் தேதி) முதல் 45 நாட்களுக்கு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ரோப்கார் சேவை </p><p>உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவில், மலை மீது அமைந்துள்ளது. அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை பிரதான வழிகளாக உள்ளன. இதுதவிர பக்தர்கள் மலைக்கோவிலுக்கு எளிதில் சென்றுவர ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகள் பயன்பாட்டில் உள்ளது. இதில் ரோப்கார் வழியாக விரைவாகவும், பழனி மலையின் இயற்கை அழகை பார்த்து ரசித்தபடியும் செல்லலாம் என்பதால் பெரும்பாலானோர் ரோப்காரில் செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் இந்த ரோப்கார் சேவை பக்தர்களுக்கு சிறந்த சுற்றுலா அனுபவத்தை கொடுக்கிறது.</p><h2>பராமரிப்பு பணி</h2><p>பழனி ரோப்கார் நிலையத்தில் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாதாந்திர, வருடாந்திர <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பராமரிப்பு பணி </a>நடைபெறுவது வழக்கம். அப்போது ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டு பணி மேற்கொள்ளப்படும். அதன்படி பழனி முருகன் கோவில் ரோப்கார் நிலையத்தில், வருடாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஜூலை 20) முதல் செப்டம்பர் 14 வரை  45 நாட்களுக்கு ரோப் கார் சேவை இயங்காது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. </p><p>பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மலையேறுவதற்கு படிவழிப் பாதை, யானைப் பாதை, மின்இழுவை ரெயில், கம்பிவட ஊர்தி ஆகியவற்றைப் பயன்படுத்தி மலைக்கு சென்று சாமி தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்ட்ள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பழனி கோவில் நிலம் அபகரிக்கப்பட்டது எப்படி? - வெளியானது பத்திரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-was-palani-temple-land-seized-deeds-leaked</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-was-palani-temple-land-seized-deeds-leaked#comments</comments><guid isPermaLink="false">cdcb6d3f-25e9-4c5e-9d22-276868133b2b</guid><pubDate>Mon, 20 Jul 2026 07:38:05 +0000</pubDate><atom:updated>2026-07-20T07:38:05.179Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பழனி,Palani Murugan Temple,பழனி முருகன் கோவில்,land issue,Palani,CBCID Police,சிபிசிஐடி போலீஸ்,Palani temple,பத்திரம்,பழனி கோவில்,நிலம் மோசடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/antm83ea/CHENNAI-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பழனி தண்டபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமான நிலம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/antm83ea/CHENNAI-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>பழனி,</p><h2>ரூ.100 கோடி நிலமோசடி</h2><p>பழனி அடிவாரம் பகுதியில் தண்டபாணி சுவாமி மடத்தின் அறக்கட்டளைக்கு சொந்தமான 1 ஏக்கர் 40 சென்ட் நிலம் உள்ளது. அதன் மதிப்பு ரூ.100 கோடி என்று கூறப்படுகிறது. பழனி முருகன் கோவில் நிர்வாகம், அந்த நிலத்தை நிர்வகித்து வருகிறது. மேலும் கடந்த ஆண்டு முருக பக்தர்களின் வாகன நிறுத்துமிடமாக மாற்றப்பட்டது. இந்தநிலையில் கடந்த 6-ந்தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில், ரூ.2 கோடிக்கு கிரையமாக அந்த நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டது.</p><p>இதுகுறித்து அறிந்ததும் கோவில் நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் பழனி சார்பதிவாளர் ஜஸ் டின் மணிகண்டன், விழுப்புரத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர் முருகதாஸ், திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பாப்பன்குளத்தை சேர்ந்த வெள்ளத்துரை, பழனி டி.கே.என்.புதூரை சேர்ந்த சேதுபதி ஆகிய 4 பேர் மீது முதற்கட்டமாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.</p><h2>சிபிசிஐடி விசாரணை</h2><p>தமிழகத்தையே அதிர்ச்சியடைய செய்யும் வகையில் நடந்த சம்பவத்தின் எதிரொலியாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண டன், மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் பணி இடைநீக் கம் செய்யப்பட்டனர். இதற்கிடையே அந்த நிலத்தை தனியாருக்கு பத்திரப்பதிவு செய்தது செல்லாது என்று மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது. அதோடு நில மோசடி வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது.</p><p>அதன்படி. நில மோசடி தொடர்பாக திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. மேலும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு சஜிதா, துணை சூப்பிரண்டு அஜய் தங்கம் மற்றும் 5 மாவட்டங்களை சேர்ந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் திண்டுக்கல்லில் கடந்த சில நாட்களாக முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>பத்திரம் வெளியானது</h2><p>இந்த நிலையில், பழனி கோவில் நிலம் அபகரிக்கப்பட்டது எப்படி? என்பது குறித்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. </p><p><strong>பத்திரத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-</strong></p><p>ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தில் தண்டபாணி மடம் தனியார் அறக்கட்டளை என குறிப்பிடப்பட்டுள்ளது. தண்டபாணி மடத்திற்கு சொந்தமான நிலங்கள் மூலம் வருவாய் ஈட்டி தர்மகாரியங்கள் செய்வது வழக்கம் என பத்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மூலம் எதிர்பார்த்த வருவாய் கிடைக்காத காரணத்தினால் விற்பனை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ரூ.100 கோடி நிலத்தை ரூ.2 கோடிக்கு கேட்டுள்ளதே அதிக விலை எனவும் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 27-ம் தேதி கையெழுத்தான விற்பனை பத்திரம் ஜூன் 6-ம் தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/tp3znozt/Untitled-3.jpg" /></figure><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/k5un4dd9/Untitled-2.jpg" /></figure><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/pol1opak/Untitled-4.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜயுடன் போர்டு நிறுவனத்தின் உயர்மட்டக் குழுவினர் சந்திப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ford-high-level-delegation-meets-chief-minister-vijayford-high-level-delegation-meets-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ford-high-level-delegation-meets-chief-minister-vijayford-high-level-delegation-meets-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">ac9150b4-57a5-4afc-bd83-2eb1861725cf</guid><pubDate>Mon, 20 Jul 2026 07:37:26 +0000</pubDate><atom:updated>2026-07-20T07:37:26.047Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Ford,ஃபோர்டு ஆலை,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/uwi7qfx9/65.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/uwi7qfx9/65.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p> முதல்-அமைச்சர் விஜய்யை இன்று (20.7.2026) தலைமைச் செயலகத்தில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனமான போர்டு நிறுவனத்தின் துணைத் தலைவர் மேத்யூ கோட்லெவ்ஸ்கி (Thiru. Mathew Godleweski) தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் சந்தித்துப் பேசினர்.</p><p>இந்தச் சந்திப்பின்போது, இந்நிறுவனம், தமிழ்நாட்டில் தனது உற்பத்தி திட்டத்தை மீண்டும் தொடங்குவது பற்றியும், தற்போது நிறுவியுள்ள உலகளாவிய திறன் மையங்கள் விரிவாக்கம் தொடர்பாகவும், இனிவரும் காலங்களில், உற்பத்தித் துறையில் மேற்கொள்ளப்படவுள்ள விரிவாக்க திட்டங்கள் குறித்தும் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.</p><h2>போர்டு நிறுவனம்</h2><p>போர்டு நிறுவனம், சென்னையில், ஒரு மிகப்பெரிய உலகளாவிய திறன் மையம் ஒன்றினை செயல்படுத்தி வருகிறது. 12,000 தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், சமீபத்தில்தான், இந்நிறுவனம், கோயம்புத்தூரில் ஒரு உலகளாவிய திறன் மையம் நிறுவியுள்ளது. அதுமட்டுமின்றி, தற்போது உள்ள மறைமலை நகர் உற்பத்திச் சாலையில், 3250 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், இன்ஜின்கள் உற்பத்தி தொடங்க உள்ளது.</p><h2>விரிவாக்க திட்டங்கள்</h2><p>இச்சந்திப்பின்போது, போர்டு நிறுவனத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையேயான 30 வருட உறவை நினைவுகூர்ந்த முதல்-அமைச்சர், விரைவில் இந்நிறுவனம் மேற்கொள்ளப்பட உள்ள உற்பத்தித் திட்டத்திற்கு அனைத்து ஒத்துழைப்பையும் அரசு வழங்கும் என்று முதல்-அமைச்சர் உறுதியளித்தார்கள். மேலும், மறைமலைநகர் உற்பத்திச் சாலையை முழு அளவிற்கும் பயன்படுத்திடும் வகையில், போர்டு நிறுவனம், மீண்டும் தனது உற்பத்தியையும், விரிவாக்க திட்டங்களையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர்</a> கேட்டுக் கொண்டார்கள்.</p><p>இந்நிகழ்வில், தொழில் துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ச. விஜயகுமார், ஐ.ஏ.எஸ்., வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் தீபக் ஜேக்கப், ஐ.ஏ.எஸ்., போர்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சிமோனெட்டா வெர்டி (Ms. Simonetta Verdi), போர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவு இயக்குநர் தீரஜ் தீக்ஷித், Country Director முனைவர் ஸ்ரீபாத் பட், இயக்குநர்  வி. ராஜா விமல குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஆக.5-ல் உள்ளூர் விடுமுறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/local-holiday-for-thoothukudi-district-on-august-5</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/local-holiday-for-thoothukudi-district-on-august-5#comments</comments><guid isPermaLink="false">6b1c4344-9cf3-4890-b17d-c26f0ee876c2</guid><pubDate>Mon, 20 Jul 2026 07:06:54 +0000</pubDate><atom:updated>2026-07-20T07:06:54.281Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Local Holiday,உள்ளூர் விடுமுறை</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/mm1ecnnq/13.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/mm1ecnnq/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி, தூய பனிமய மாதா திருத்தலப் பேராலய பெருவிழா ஆகஸ்ட் 5-ம்தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு வருகிற 5.8.2026 (புதன் கிழமை) தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.</p><p>இந்த விடுமுறை மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த விடுமுறைக்கு மாற்றாக மற்றொரு சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ஈரோடு: போதை மாத்திரை விற்பனை செய்த 3 இளைஞர்கள் கைது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-3-youths-arrested-for-selling-narcotic-pills</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-3-youths-arrested-for-selling-narcotic-pills#comments</comments><guid isPermaLink="false">6737ed9c-1ea7-4509-a8a9-87242f33dc1a</guid><pubDate>Mon, 20 Jul 2026 06:57:50 +0000</pubDate><atom:updated>2026-07-20T06:57:50.548Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Erode,போதை மாத்திரை,அந்தியூர்,3 youths arrested,Narcotic Pills</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/7pwd49eo/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கைது]]></media:title><media:description type="html"><![CDATA[ ஈரோடு அருகே போதை மாத்திரை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/7pwd49eo/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே போதை மாத்திரை விற்பனை செய்த 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.</p><h2>அதிரடி சோதனை</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஈரோடு மாவட்டம்</a> அந்தியூர் போலிசாருக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் குந்துபாயூர், தவிட்டுப்பாளையம், மற்றும் புதுப்பாளையம் போன்ற இடங்களில் நேற்று அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். </p><h2>3 பேர் கைது</h2><p>அப்போது குந்துபாயூரை சேர்ந்த ஜாபர் அலி (வயது 21), தவிட்டுப்பாளையம் வேங்கையன் வீதி விக்னேஷ்(வயது 26), மற்றும் புதுப்பாளையம் வ.உ.சி. நகர் ஞானராஜ் (வயது31), ஆகியோர் வீட்டில் சோதனையிட்டபோது, போதை மாத்திரை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. </p><p>எனவே மூவரையும் போலீசார்<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> கைது </a>செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 30 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ஆவினுக்கு பால் வழங்க தயக்கம் காட்டும் விவசாயிகள்... காரணம் என்ன...?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmers-are-reluctant-to-provide-milk-to-aavin-what-is-the-reason</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmers-are-reluctant-to-provide-milk-to-aavin-what-is-the-reason#comments</comments><guid isPermaLink="false">d00792ee-a7f8-44da-9192-c299cfcf2c35</guid><pubDate>Mon, 20 Jul 2026 06:54:33 +0000</pubDate><atom:updated>2026-07-20T06:54:33.707Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Farmers,விவசாயிகள்,Aavin,ஆவின்,ஆவின் நிறுவனம்,Aavin Milk,ஆவின் பால்,Aavin Company,ஆவின் பால் பண்ணை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/ieq3ip3k/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/ieq3ip3k/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>ஆவின் பால்</h2><p>தமிழகத்தின் அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் கொள்முதல் செய்து வருகிறது. ஆரம்ப காலங்களில் பெரும்பாலான விவசாயிகள் இந்த பால் கூட்டுறவு சங்கங்களுக்கு சென்று பால் விற்பனை செய்து வந்தனர்.</p><p>ஆனால் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை அதிகரிக்கவில்லை. இதனால் ஆவினுக்கு பால் வழங்குவதற்கு தயக்கம் காட்டி வருகிறார்கள். இதனால் தனியார் நிறுவனங்களுக்கு விவசாயிகள் பால் விற்பனை செய்து வருகின்றனர்.</p><p>ஆவின் நிறுவனம் சராசரியாக 1 லிட்டர் பாலை ரூ.34-க்கு கொள்முதல் செய்கிறது. அதே நேரத்தில் தனியார் நிறுவனங்கள் 1 லிட்டர் பாலை ரூ.50 வரை விலை கொடுத்து வாங்குகின்றனர். இதனால் தனியார் நிறுவனங்களுக்கு பால் விற்பதற்கே விவசாயிகள் முன்னுரிமை அளிக்கின்றனர்.</p><h2>மேய்ச்சல் நிலங்கள் குறைந்தன</h2><p>கடந்த காலங்களில் கிராமங்களில் வீடுகள்தோறும் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் வளர்க்கப்படும். இந்த கால்நடைகள் காலையில் மேய்ச்சல் நிலங்களுக்கு சென்றால் மாலையில் வீடு திரும்பும். இதனால் அந்த கால்நடைகளுக்கு பசுந்தீவனங்களை விலை கொடுத்து வாங்க வேண்டியது இல்லை. தவிடு, புண்ணாக்கு உள்ளிட்டவற்றை குறைந்த அளவில் மட்டும் வாங்கினால் போதும். வறட்சி காலங்களில் தங்களது வீடுகளில் இருப்பில் உள்ள வைக்கோலை மாடுகளுக்கு உணவாக வழங்குவர். மேலும் சோளத்தட்டை வளர்க்கப்பட்டு, அவையும் கால்நடைகளுக்கு உணவாக வழங்கப்படும்.</p><h2>இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-</h2><p>தற்போது மேய்ச்சல் நிலங்கள் குறைந்து விட்டன. இதனால் மாடுகளுக்கு பெரும்பாலும் பசுந்தீவனங்களை விலை கொடுத்து வாங்க வேண்டி உள்ளது. அது கிடைக்காத பட்சத்தில் தவிடு, புண்ணாக்கு உள்ளிட்டவற்றை அதிகமாக வாங்க வேண்டி உள்ளது. ஆனால் அந்த தீவனங்களின் விலையும் அதிகரித்து வரு கிறது. புண்ணாக்கு 50 கிலோ கொண்ட மூட்டை ரூ.1,800-க்கு விற்பனையாகிறது. இவ்வாறு செலவு அதிகரிப்பதால் 1 லிட்டர் பாலை ரூ.34-க்கு விற்பதில் எந்த லாபமும் கிடைப்பது இல்லை.</p><h2>பால் வினியோகம்</h2><p>இதனால் பெரும்பாலானவர்கள் மாடுகள் வளர்ப்பதை தவிர்த்து வருகின்றனர். அத்துடன் தனியார் நிறுவனங்கள் 1 லிட்டர் பாலுக்கு ரூ.50 வரை கொள்முதல் விலை கொடுப்பதால் பலரும் அங்கேயே பால் விற்பனை செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். இது தவிர வீடுகளுக்கு நேரடியாக பால் வினியோகம் செய்யும்போது 1 லிட்டர் பாலை ரூ.62 வரை விற்க முடிகிறது. இதுபோன்ற காரணங்களால் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வினியோகம் செய்வது குறைந்து உள்ளது.</p><p>இது தவிர நோய் பாதிப்பால் மாடுகள் இறப்பது. பால் உற்பத்தி குறைவது உள்ளிட்டவையும் மற்றொரு காரணமாக உள்ளது. எனவே தனியார் நிறுவனங்களுக்கு இணையாக ஆவின் நிறுவனமும் கொள்முதல் விலையை உயர்த்தினால் விவசாயிகள் தடை யின்றி பால் வினியோகிக்க முன்வருவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா? - மு.க. ஸ்டாலின் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-what-is-happening-in-tamil-nadu-the-rule-of-law-or-the-rule-of-satan-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-what-is-happening-in-tamil-nadu-the-rule-of-law-or-the-rule-of-satan-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">8d91e7c1-35ed-4e93-ac2a-2d3597a4c6ff</guid><pubDate>Mon, 20 Jul 2026 06:45:29 +0000</pubDate><atom:updated>2026-07-20T06:45:29.157Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழ்நாடு,திமுக,DMK,மு.க. ஸ்டாலின்,M.K. Stalin</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/1e3ecq8r/stalin.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/1e3ecq8r/stalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>கடும் கண்டனம்</h2><p>ஜனநாயக பண்புகள் அறவே இன்றி செயல்படும் த.வெ.க. ஆட்சியில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டிருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.%20">தி.மு.க. </a>முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது Take Diversion Model த.வெ.க. அரசு. "அவதூறு வழக்குகளில் கூட எதற்கு தொடர்பில்லாத குற்றப்பிரிவுகளைச் சேர்க்கிறீர்கள்?" என நீதிமன்றத்திடம் சமீபத்தில்தானே குட்டு வாங்கினீர்கள்?</p><p>கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் தனது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்கக் கூட மறுக்கப்பட்டுள்ளார். அவருக்கான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் தடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரின் அடிப்படை சட்ட உரிமைகளும் மனித உரிமைகளும்கூட மறுக்கப்பட்டுள்ளன.</p><h2>சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?</h2><p>தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா? மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர் மீதும், சொந்தக் கட்சி பெண் உறுப்பினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குமே நடவடிக்கை எடுக்க வக்கற்ற த.வெ.க. அரசு அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்? ஆட்சியாளர்களின் சட்டத்துக்குப் புறம்பான உத்தரவுகளை எல்லாம் நிறைவேற்றி அவர்களின் மனதைக் குளிர்விப்பது காவல்துறையினரின் பணி அல்ல! சட்டப்படியும் மனசாட்சிப்படியும் செயல்படுங்கள். இல்லாவிட்டால், பின்விளைவுகள் ஏற்படும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மின் கணக்கீட்டில் உள்ள குளறுபடிகளை போக்க வேண்டும்: டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/discrepancies-in-electricity-billing-must-be-rectified-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/discrepancies-in-electricity-billing-must-be-rectified-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">faf27a6e-8e57-4c43-9d95-7a1d02097d32</guid><pubDate>Mon, 20 Jul 2026 06:29:03 +0000</pubDate><atom:updated>2026-07-20T06:29:03.959Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,மின்சாரம்,electricity</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/xbtggqny/11.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/xbtggqny/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>“தவெக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள் முதலே, தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் தொடங்கி, விவசாயிகள், வணிகர்கள், சிறு,குறு நடுத்தர தொழில் முனைவோர்கள் என அனைத்து தரப்பினரும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், தற்போது மின்கட்டணமும் இருமடங்காக அதிகரித்திருப்பதாக மின் நுகர்வோர்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது. </p><p>ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் என தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதியளித்த தவெக, ஆட்சிக்கு வந்த பின்பு இரு மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என அறிவித்து மக்களை ஏமாற்றிய கையேடு, இலவசமாக வழங்கப்படும் மின்சாரத்துக்கான தொகையையும் மக்களிடமே மறைமுகமாக மின்கட்டணத்தின் மூலம் வசூல் செய்ய முற்படுவது கடும் கண்டனத்திற்குரியது.  </p><p>ஏற்கனவே, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால், தமிழக மக்கள் பொருளாதார ரீதியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆண்டுதோறும் உயர்த்தப்படும் மின்கட்டணம் நடப்பாண்டில் உயர்த்தப்படாது  என பத்திரிகையாளர்கள் முன்னிலையில்  பொய் வாக்குறுதி அளித்துவிட்டு, பொதுமக்களின் கண்களில் மண்ணை தூவி மறைமுகமாக மின்கட்டணத்தை உயர்த்தும் நடவடிக்கையில் மின்வாரியம் இறங்கியிருக்கிறதோ? என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. </p><p>மின் கணக்கீட்டு முறையில் குறைபாடுகள் ஏற்பட்டிருப்பதால் தவறான மற்றும் அதிகப்படியான கட்டணங்கள் விதிக்கப்பட்டிருப்பதாக மின்வாரிய தலைமைப் பொறியாளர்களே ஒப்புக் கொண்டிருக்கும் நிலையில், மின் நுகர்வோர்களிடம் இருந்து இதுவரை அதிகமாக பெறப்பட்ட மின்கட்டணங்களை  திருப்பியளிப்பதோடு, தமிழகம் முழுவதும் குளறுபடிகள் குறித்த முறையான விசாரணை மேற்கொண்டு, அவை சரிசெய்யப்படும் வரை மின்கட்டணம்  வசூலிக்கப்பட மாட்டாது என மின்வாரியம் அறிவிக்கவேண்டும்.  </p><p>பொதுமக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டிய பொறுப்புமிக்க பதவியில் இருக்கும் மின்சாரத்துறை அமைச்சர், தன் துறையில் நடைபெறும் சாதனத் திருட்டுகளையும், நிர்வாகக் குளறுபடிகளையும்  களைய உருப்படியான சீர்த்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல்,  காலை - மாலை என இரு வேளைகளிலும் தன் குறைகளை மறைப்பதற்காகவும், பிரச்சனைகளை மடைமாற்றுவதற்காகவும்,  எதிர்க்கட்சித் தலைவர்களை எப்படி இழிவாக விமர்சிக்கலாம் என்பதிலேயே முழு கவனத்தை செலுத்தி வருவதே மின்சாரத்துறையில் நடைபெற்றிருக்கும் இத்தகைய குளறுபடிகளுக்கு முக்கிய காரணமாக அமைத்திருக்கிறது. </p><p>எனவே, மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் மின்சாரத்துறை மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமே தவிர, குழப்பமான, குளறுபடிகள் நிறைந்த கணக்கீடுகளின் மூலம் மக்களை சுரண்டும் அமைப்பாக செயல்படக்கூடாது என்பதை இனியாவது உணர்ந்து, தடையற்ற மின்சாரத்தை எந்தவித குளறுபடிகளுமின்றி விநியோகம் செய்திட வேண்டும் என மின்வாரியத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>வன்னியர் சங்கத்தின் 47-ம் ஆண்டு: &apos;சமூகநீதியை வென்றெடுக்க உறுதியேற்போம்&apos; - அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/47th-anniversary-of-the-vanniyar-sangam-let-us-pledge-to-secure-social-justice-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/47th-anniversary-of-the-vanniyar-sangam-let-us-pledge-to-secure-social-justice-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">7826c59d-e065-4aa7-b30e-801625a82a5a</guid><pubDate>Mon, 20 Jul 2026 06:09:08 +0000</pubDate><atom:updated>2026-07-20T06:09:08.183Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/muxx1nlr/anbu.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/muxx1nlr/anbu.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>பா.ம.க.  தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;</p><p>”தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின, சிறுபான்மை சமூகங்களுக்கு முழுமையான சமூகநீதியை வென்றெடுக்கும் நோக்கத்துடன்  46 ஆண்டுகளுக்கு முன் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட நாள் இன்று.  சமூகநீதிக் காவலர் மருத்துவர் அய்யா அவர்களால் தொடங்கப்பட்ட வன்னியர் சங்கத்தின் 47-ஆம் தொடக்க நாளில் பாட்டாளி சொந்தங்களுக்கும், சமூகநீதிக்காக போராடி வருபவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட நாள் தான் தமிழ்நாட்டில் சமூகநீதி வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள் என்பதை எவராலும் மறுக்க முடியாது. இந்த நாளில் தான் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதனடிப்படையில் ஒவ்வொரு சாதிக்கும், அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ப கல்வி, வேலை வாய்ப்புகளில் வகுப்புவாரி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்;  தமிழ்நாட்டில் 2 கோடி மக்கள்தொகை கொண்ட மிகப் பெரிய சமுதாயமாக இருக்கிற வன்னியர்களுக்கு மாநிலத்தில் இருபது சதவிகிதமும் மத்தியில் இரண்டு சதவிகிதமும் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் ; தமிழ்நாட்டில்  தாழ்த்தப்பட்டவர்களுக்கான  18  விழுக்காடு இட ஒதுக்கீட்டை அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக 22 விழுக்காடாக உயர்த்த வேண்டும் ஆகிய 3 புரட்சிகரமான தீர்மானங்களை மருத்துவர் அய்யா நிறைவேற்றச் செய்தார்.</p><p>மருத்துவர் அய்யாவால் அப்போது  தொடங்கப்பட்ட சமூகநீதி போராட்டம் இப்போது முக்கியக் கட்டத்தை அடைந்திருக்கிறது. மத்தியிலும், மாநிலத்திலும்  சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளன.  இவை நமது சமூகநீதி போராட்டத்தில்  எட்டப்பட்ட முதல் மைல்கல் தான்.  அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க வேண்டும் என்பது தான் நமது இலக்கு. அந்த இலக்கை வென்றெடுக்க இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்றுக் கொள்வோம்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>உலக சதுரங்க நாள் - முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/world-chess-day-greetings-from-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/world-chess-day-greetings-from-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">21588628-ee2f-4e94-93a7-20d6afbdc923</guid><pubDate>Mon, 20 Jul 2026 05:55:05 +0000</pubDate><atom:updated>2026-07-20T05:55:05.989Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chess,வாழ்த்து,நாள்,சதுரங்கம்,முதல்-அமைச்சர் விஜய்,Tamil Nadu Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/xggmet42/63.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/xggmet42/63.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முதல்-அமைச்சர் விஜய் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது.</p><h2>உலக சதுரங்க நாள்</h2><p>உலக சதுரங்க நாளை முன்னிட்டு சதுரங்கத்தை நேசிக்கும் அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும், பயிற்சியாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான இளம் கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கி தமிழ்நாடு சாதனை படைத்து வருகிறது. 1988-ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தொடங்கி, குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி உள்ளிட்ட பல இளம் கிராண்ட் மாஸ்டர்கள் சர்வதேச அளவிலான <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF">சதுரங்கப் போட்டிகளில் </a>வெற்றிபெற்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருகின்றனர். அவர்களுக்கு இந்நாளில் எனது நல்வாழ்த்துகள்.</p><h2>இளைய தலைமுறையினர்</h2><p>உலக அரங்கில் சதுரங்கத்தின் தலைநகராக தமிழ்நாடு முன்னேறிவரும் நிலையில், இளைய தலைமுறையினர் சதுரங்க நுட்பங்களை கற்றுத்தேர்ந்து, சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும். இத்தகைய முயற்சிகளுக்கு நமது அரசு அனைத்து வகையிலும் துணை நின்று எல்லா உதவிகளையும் வழங்கும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கன்னியாகுமரி: கல் குவாரி பள்ளத்தில் விழுந்த 2 இளைஞர்கள் உயிரிழப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kanyakumari-2-youths-die-after-falling-into-quarry-pit</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kanyakumari-2-youths-die-after-falling-into-quarry-pit#comments</comments><guid isPermaLink="false">7bd63b6a-7408-4855-8620-eca810abd1dc</guid><pubDate>Mon, 20 Jul 2026 05:37:43 +0000</pubDate><atom:updated>2026-07-20T05:37:43.046Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,கன்னியாகுமரி,Kanyakumari,2 பேர் உயிரிழப்பு,2 youths death,quarry pit</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/j7u9gff2/kanyakumari-kal-kuvaari-acc.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ கல்குவாரி]]></media:title><media:description type="html"><![CDATA[ கன்னியாகுமரி அருகே கல்குவாரியில் விழுந்து 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/j7u9gff2/kanyakumari-kal-kuvaari-acc.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி,</p><p>கன்னியாகுமரி அருகே கல் குவாரி பள்ளத்தில் விழுந்து 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.</p><h2>விபத்து- உயிரிழப்பு</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கன்னியாகுமரி, மாவட்டம் </a>விருசடி பகுதியில் நாகராஜ், டிராவிட் ஆகியோர் அதிவேகமாக பைக்கில் சென்றனர். அப்போது பைக் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து  பாழடைந்த கல் குவாரி பள்ளத்தில் விழுந்தது. இதில் கல் குவாரியில் இருந்த தண்ணீரில் மூழ்கி அந்த 2 இளைஞர்களும் உயிரிழந்தனர். </p><h2>போலீசார் விசாரணை</h2><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அஞ்சுகிராமம் </a>போலீசார், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துயர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து விலகல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/more-than-500-supporters-of-cv-shanmugam-quit-aiadmk</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/more-than-500-supporters-of-cv-shanmugam-quit-aiadmk#comments</comments><guid isPermaLink="false">8630f094-206e-4a4e-90ba-34878c7a138e</guid><pubDate>Mon, 20 Jul 2026 05:17:57 +0000</pubDate><atom:updated>2026-07-20T05:17:57.251Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,எடப்பாடி பழனிசாமி,அதிமுக,Edappadi Palaniswami,விழுப்புரம்,Villupuram,சி.வி.சண்முகம்,CV Shanmugam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/dez2fpfv/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/dez2fpfv/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>போர்க்கொடி</h2><p>தமிழக சட்டமன்ற தேர்தல் தோல்வியால் சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி தலைமையில் சில எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதனால் அ.தி.மு.க. 2-ஆக உடைந்து மீண்டும் ஒன்றிணைந்தது. இருப்பினும் சி.வி.சண்முகம் மட்டும் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். இதற்கிடையே சி.வி.சண்முகத்திற்கு பதில் விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக பசுபதியை நியமித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.</p><p>இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு அணியும், மாவட்ட செயலாளர் பசுபதி தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வருகிறது. மேலும் இருதரப்பி னர் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நாட்டார்மங்கலத்தில் மாவட்ட செயலாளர் பசுபதி தலைமையில் நடந்த அ.தி.மு.க. கூட்டத்தில் சி.வி.சண்முகம் தரப்பினருக்கும், பசுபதி தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><h2>நிர்வாகிகள் நீக்கம்</h2><p>இந்த நிலையில், சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேரை பதவியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. இணைச்செய லாளர் ஆனந்தி, மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஜெயப்பிரகாஷ், அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாஸ்கரன் உள்ளிட்ட 11 பேர் கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். அடுத்தடுத்து அ.தி.மு.க.வில் இருந்து முக்கிய நிர்வாகிகள் நீக்கப்பட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><h2>கூண்டோடு விலகல்</h2><p>இந்நிலையில், விழுப்புரத்தில் சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து விலக முடிவு செய்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து விலகல் கடிதம் அளிக்க சென்னைக்கு புறப்பட்டுள்ளனர். மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து விலக முடிவெடுத்து பேருந்துகள் மற்றும் கார்களில் சென்னைக்கு புறப்பட்டுள்ளனர்.</p><p>சிவி சண்முகத்தின் ஆதரவாளர்கள் 300 பேர் தங்களது அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக உதவி ஆய்வாளர் தலைமையில் 10 காவலர்கள் பணியில் இருக்கும் நிலையில், தற்போது 3 உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 30 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.</p><p>விழுப்புரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு விலக முடிவெடுத்துள்ளதால், அக்கட்சி அங்கு வலுவிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தேர்வு தோல்வியை தட்டிக் கேட்ட தாயை அடித்துக் கொன்ற மகன் கைது  </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/son-arrested-for-beating-mother-to-death-after-she-complained-about-failing-exams</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/son-arrested-for-beating-mother-to-death-after-she-complained-about-failing-exams#comments</comments><guid isPermaLink="false">864111e4-06aa-4498-ad0a-f59d799f7a36</guid><pubDate>Mon, 20 Jul 2026 05:13:12 +0000</pubDate><atom:updated>2026-07-20T05:13:12.985Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>arrest,mother death,மாணவன் கைது,தாய் அடித்துக்கொலை,தேர்வு தோல்வி,exam failure</media:keywords><media:content height="542" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/import/Articles/2018/Aug/201808300238500426_The-driver-who-hit-the-lover--Arrested-with-brother_SECVPF.gif" width="794"><media:title type="html"><![CDATA[ மகன் கைது]]></media:title><media:description type="html"><![CDATA[ தாயை அடித்துக் கொன்ற மகன் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/import/Articles/2018/Aug/201808300238500426_The-driver-who-hit-the-lover--Arrested-with-brother_SECVPF.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை பெருங்குடியில் தேர்வு தோல்வியை தட்டிக் கேட்ட தாயை அடித்துக் கொன்ற பிளஸ் 2 மாணவனை போலீசார் கைது செய்தனர். </p><h2>தேர்வில் தோல்வி</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை பெருங்குடி </a>பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவர் ஒருவர் சமீபத்தில் வெளியான பொதுத்தேர்வில் தோல்வி அடைந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய், மகனைத் தொடர்ந்து கண்டித்து வந்தார். தேர்வு எழுதாமல் சரியாகப் படிக்காதது குறித்தும், எதிர்காலம் குறித்தும் தாய் தட்டிக் கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.</p><h2>நள்ளிரவில் கொடூரம்</h2><p>இந்த நிலையில், நேற்று நள்ளிரவு நேரத்தில் தந்தை வீட்டில் இல்லாத சமயம் பார்த்து, தூங்கிக் கொண்டிருந்த தாயின் மீது மகன் திடீரென தாக்குதல் நடத்தினார். ஆத்திரத்தில் தாயின் கழுத்தை நெரித்ததோடு மட்டுமன்றி, கத்தியால் குத்தியும், வீட்டிலிருந்த கல்லால் தலையில் அடித்தும் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.</p><h2>கைது</h2><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தாயின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தாயைக் கொலை செய்த மகனைக் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கைது</a> செய்து விசாரணை நடத்தினர். </p><p>முதற்கட்ட விசாரணையில், கொலை செய்த இளைஞர் கடந்த சில மாதங்களாக மனநலப் பாதிப்பிற்கு உள்ளாகி, அதற்கான சிகிச்சையில் இருந்து வந்தது தெரியவந்துள்ளது.</p><p>இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் பொருட்காட்சியில் தகராறு: தவெகவினர் 10 பேர் மீது வழக்கு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dispute-at-an-exhibition-in-thoothukudi-case-filed-against-10-tvks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dispute-at-an-exhibition-in-thoothukudi-case-filed-against-10-tvks#comments</comments><guid isPermaLink="false">60259a83-f15c-4715-abbb-62abcdcc164a</guid><pubDate>Mon, 20 Jul 2026 04:56:09 +0000</pubDate><atom:updated>2026-07-20T04:56:09.177Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Thoothukudi,தூத்துக்குடி,Exhibition,பொருட்காட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/073s3f8x/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/073s3f8x/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா வருகிற 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஆலயம் அருகே உள்ள மைதானத்தில் பொருட்காட்சிக்கான பணிகள் நடந்து வருகின்றன. </p><p>இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு பொருட்காட்சி அமைக்கும் பணிகள் நடந்து கொண்டு இருந்தன. அப்போது, அங்கு வந்த த.வெ.க.வை சேர்ந்த திவாகர் உள்ளிட்ட 10 பேர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அங்கு இருந்த நாற்காலி, டியூப் லைட் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார்களாம். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. </p><p>இது குறித்து தகவல் அறிந்த தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து பொருட்காட்சி ஏற்பாட்டாளர் டென்சிங் கொடுத்த புகாரின் பேரில் த.வெ.க.வை சேர்ந்த திவாகர் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அடுத்த இன்னிங்ஸை ஆரம்பிக்கலாமா...! - உதயநிதி ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/shall-we-start-the-next-innings-udhayanidhi-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/shall-we-start-the-next-innings-udhayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">efb65330-e5de-47e3-a925-435a26dc736c</guid><pubDate>Mon, 20 Jul 2026 04:48:54 +0000</pubDate><atom:updated>2026-07-20T04:48:54.787Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/eefn622e/uthayanithistalin.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/eefn622e/uthayanithistalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>47-வது ஆண்டு</h2><p>திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மைப் பிரிவுகளில் ஒன்றான தி.மு.க. இளைஞர் அணி இன்று தனது 47-வது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி,<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%A4%E0%AE%BF.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95."> தி.மு.க. </a>இளைஞர் அணி செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறி இருப்பதாவது:-</p><h2>அடுத்த இன்னிங்ஸ்</h2><p>கழகம் நெருக்கடியில் இருந்த நேரத்தில், கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான மிசா Batch-ஐ கொண்டு தொடங்கப்பட்ட நம் திமுக இளைஞரணி  இன்றைக்கு 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கொள்கைப் பணி-மக்கள் பணிகளைக் களத்திற்கும் காலத்திற்கும் ஏற்றார் போல் முன்னெடுக்கக் காத்திருக்கும் கழக இளைஞர் அணியின் அடுத்த  இன்னிங்ஸை  ஆரம்பிக்கலாமா..!</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>100 சேவல்கள் பலியிட்டு அன்னதானம்... ஆண்கள் மட்டும் பங்கேற்ற ஆடி படையல் திருவிழா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/100-roosters-sacrificed-for-charity-aadi-badayal-festival-where-only-men-participated</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/100-roosters-sacrificed-for-charity-aadi-badayal-festival-where-only-men-participated#comments</comments><guid isPermaLink="false">12874f5c-379c-4547-a094-895af03df6f8</guid><pubDate>Mon, 20 Jul 2026 04:39:16 +0000</pubDate><atom:updated>2026-07-20T04:39:16.248Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,Aadi festival,ஆடி திருவிழா,ஆண்கள்,Rooster,சேவல்,mens</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/p9opyh1o/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/p9opyh1o/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள மங்களாம்பட்டியில் மழை வேண்டி ஆண்கள் மட்டுமே படையல் வைத்து வழிபடும் வினோத திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு ஆடி படையல் திருவிழா நேற்று நடைபெற்றது. </p><p>இதையொட்டி கிரா மத்தினர் பலரும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக மதுரைவீரன் சுவாமிக்கு சேவல்களை பலியிட்டு வழிபாடு நடத்தினர். அதன்படி 100-க்கும் மேற்பட்ட சேவல்கள் பலியிடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பெண்களும், ஆண்களும் கலந்து கொண்டு வழிபட்டனர். </p><p>தொடர்ந்து பலியிடப்பட்ட 100-க்கும் மேற்பட்ட சேவல்கள் பெரிய, பெரிய பாத்திரங்களில் சமைக்கப்பட்டன. சேவல் கறியுடன், மொச்சைப்பயறு கலந்து உணவு சமைக்கப்பட்டது. இந்த உணவுகளை ஆண்கள் மட்டுமே சமைத்தனர். இதை தொடர்ந்து அப்பகுதியில் வாழை இலை போட்டு பக்தர்களுக்கு சுடச்சுட உணவு பரிமாறப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதானத்தில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு சாப்பிட்டனர். </p><p>பெண்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். பெண்களுக்கு அன்னதானம் சாப்பிட அனுமதி இல்லை என பொதுமக்கள் தெரிவித்தனர். இவ்வாறு வழிபடுவதால் மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாகும். இதற்கிடையே நேற்று விழா நடக்கும்போது திடீரென அப்பகுதியில் சாரல் மழை பெய்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>ஆடி மாதம் பிறந்தும் குறையாத மீன் விலை: என்ன காரணம்? </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fish-prices-remain-high-despite-the-onset-of-the-aadi-month-what-is-the-reason</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fish-prices-remain-high-despite-the-onset-of-the-aadi-month-what-is-the-reason#comments</comments><guid isPermaLink="false">50a47e4c-51b0-4b9c-a282-cb337b0e624f</guid><pubDate>Mon, 20 Jul 2026 04:29:49 +0000</pubDate><atom:updated>2026-07-20T04:29:49.662Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>மீன்கள்,Aadi Month,ஆடி மாதம்,மீன் விலை,Fish prices rise,மீன் விலை உயர்வு,fish prices</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/3z039cpi/8.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/3z039cpi/8.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><h2>அதிகரித்து வரும் மீன் விலை</h2><p>தமிழ் மாதமான ஆடி மாதம் பிறந்து 3 நாட்கள் ஆகிறது. அம்மன் மற்றும் முருகனுக்கு இது உகந்த மாதம் என்பதால், அசைவப் பிரியர்களில் பெரும்பாலானோர் ஆடி மாதத்தில் இறைச்சி சாப்பிடுவதில்லை. </p><p>இதனால், ஆடி மாதத்தில் மீன் விலை வழக்கமாக குறையும். ஆனால், இந்த ஆண்டு குறைவதற்கு பதில் அதிகரித்து வருவது அசைவப் பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><h2>காசிமேட்டில் அலைமோதிய கூட்டம்</h2><p>சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கடந்த 6 மாதங்களாக மீன் விலை குறையவே இல்லை. மீன்பிடி தடைக்காலத்திற்கு பிறகாவது மீன் விலை குறையும் என்று எதிர்பார்த்தால், மீன் பிரியர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. </p><p>தடைக்காலம் முடிந்து ஒரு மாதம் முடிவடைந்துள்ள நிலையில், ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று மீன் விலை குறைந்திருக்கும் என்ற நம்பிக்கையில் ஏராளமான மீன் பிரியர்கள் காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு வருகை தந்தனர். </p><h2>மீன்களுக்கு தட்டுப்பாடு</h2><p>கடலுக்கு சென்றிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் கரைக்கு திரும்பின. ஆனாலும், மீன்களுக்கு தட்டுப்பாடு நிலவியதால் மீன் விலை குறையவில்லை. கடுமையாக உயர்ந்திருந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அசைவப் பிரியர்கள் வேறு வழியில்லாமல் சிறிய வகை மீன்களையே வாங்கிச் சென்றனர். </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/av7eeams/8.gif" /></figure><h2>என்ன காரணம்.?</h2><p>இதுகுறித்து மீன் வாங்க வந்த சிலர் கூறியதாவது:-</p><p>கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது மீன் வரத்து குறைவாகவே உள்ளது. ஆனாலும், வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் மீன்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதனால், உள்ளூர் மக்களுக்கு மீன்கள் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் விலை அதிகமாக இருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால், மீன்பிடி துறைமுகத்திலேயே மீன்கள் கிடைக்காமல் போகும். எனவே, மீன்வளத்துறை அதிகாரிகள் இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.</p><h2>விலை பட்டியல்</h2><p>இந்த நிலையில், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று வஞ்சிரம் (ஒரு கிலோ) ரூ.1,300-க்கும், ஐ வவ்வால் ரூ.1,900-க்கும், வெள்ளை வவ்வால் ரூ.1,400-க்கும், கறுப்பு வவ்வால் ரூ.1,100-க்கும், பாறை ரூ.700-க்கும், கடல் விரால் ரூ.600-க்கும், சீலா ரூ.600-க்கும், சங்கரா ரூ.400-க்கும், கடம்பா ரூ.400-க்கும், நெத்திலி ரூ.250-க்கும், கானாங்கத்தை ரூ.300-க்கும் விற்பனை ஆனது.</p> ]]></content:encoded></item><item><title>தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும் - கனிமொழி எம்.பி.</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tvk-government-will-be-taught-a-lesson-through-democratic-means-kanimozhi-mp</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tvk-government-will-be-taught-a-lesson-through-democratic-means-kanimozhi-mp#comments</comments><guid isPermaLink="false">77841ced-1200-4234-a5ac-f513a1478ed6</guid><pubDate>Mon, 20 Jul 2026 03:41:50 +0000</pubDate><atom:updated>2026-07-20T03:41:50.368Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,திமுக,DMK,கைது,arrest,கனிமொழி,Kanimozhi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/m59bjd6i/kanimozi33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கனிமொழி எம்.பி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/m59bjd6i/kanimozi33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முதல்-அமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும், மிரட்டும் வகையிலும் பேசிய புகாரில் </p><p>திமுக எம்.எல்.ஏ மார்கண்டேயன் கைது செய்யப்பட்டார். அவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது காவல்துறை.  மிரட்டல், அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், வெறுப்புணர்வை தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>இந்தநிலையில், திமுக எம்.எல்.ஏ மார்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-</p><p>விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன்  அவர்களை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அராஜகமான முறையில் கைது</a> செய்திருக்கும் தவெக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கதக்கது. விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும்.  உடனடியாக, மார்கண்டேயன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என அதில் பதிவிட்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. <a href="https://x.com/mlavilathikulam?ref_src=twsrc%5Etfw">@mlavilathikulam</a> அவர்களை அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் தவெக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கதக்கது.<br><br>விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க…</p>&mdash; Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) <a href="https://x.com/KanimozhiDMK/status/2079041444044771512?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தியையொட்டி வேலூரில் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/idol-making-work-intensifies-in-vellore-ahead-of-vinayagar-chaturthi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/idol-making-work-intensifies-in-vellore-ahead-of-vinayagar-chaturthi#comments</comments><guid isPermaLink="false">b5ae54d5-27e7-41a1-a91b-e680ea31e7f1</guid><pubDate>Mon, 20 Jul 2026 03:39:55 +0000</pubDate><atom:updated>2026-07-20T03:39:55.946Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Vinayagar Chaturthi,விநாயகர் சதுர்த்தி,சிலைகள்,Idols</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/2epqvqal/4.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/2epqvqal/4.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வேலூர்,</p><p>வேலூரில் சிறிய விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.</p><h2>விநாயகர் சதுர்த்தி</h2><p>விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வருகிற செப்டம்பர் மாதம் 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வேலூர் மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பொதுமக்கள் வழிபடுவார்கள். 1 அடி சிலை முதல் 10 அடிக்கும் மேலான பிரம்மாண்ட சிலைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும்.</p><p>அன்றைய தினம் சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவார்கள். கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடக்கும். பின்னர் ஆங்காங்கே வைக்கப்பட்ட 2 நாட்கள் கழித்து சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலை களில் கரைப்பார்கள்.</p><p>பக்தர்கள் பலர் தங்கள் வீடுகளிலும் விநாயகர் சதுர்த்தி விழாவை உற்சாகமாக கொண்டாடுவார்கள். அப்போது களிமண்ணால் தயாரிக்கப்பட்ட சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வீட்டில் வைத்து அருகம்புல் சாத்தி, கொழுக்கட்டை படைத்து வழிபடுவார்கள். இதையொட்டி வேலூரில் சிறிய சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.</p><h2>பணிகள் தீவிரம்</h2><p>இதுகுறித்து விநாயகர் சிலை தயாரிக்கும் தொழிலாளர்கள் கூறுகையில், விநாயகர் சதுர்த்தியையொட்டி கைகளால் சிலைகள் தயாரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம். ஆண்டு தோறும் எங்களுக்கு மண் தட்டுப் பாடு ஏற்படும்.</p><p>ஏரியில் களிமண் எடுக்க உரிய காலத்துக்குள் விரைந்து அனுமதி அளிக்கப்பட வேண்டும். கைகளால் தயாரிக்கும் சிலைகளை பொதுமக்களும் பலர் ஆர்வமுடன் வாங்கி செல்வார்கள். தற்போது வெயில் தாக்கம் உள் ளதால் தற்போதே நாங்கள் சிலை தயாரிப்பு பணியை தொடங்கி விட் டோம். சிலை அளவுக்கு ஏற்ப ரூ.200 முதல் ரூ.2,000 வரை விற்பனை செய்கிறோம், என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>திமுகவின் கட்டப்பா நான் - நடிகர் சத்யராஜ் பேச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-am-dmks-kattappa-actor-sathyaraj</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-am-dmks-kattappa-actor-sathyaraj#comments</comments><guid isPermaLink="false">b31111da-a089-4ba9-a2af-14f974ae9bcb</guid><pubDate>Mon, 20 Jul 2026 03:27:52 +0000</pubDate><atom:updated>2026-07-20T03:27:52.379Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,நடிகர் சத்யராஜ்,Actor Sathyaraj,கட்டப்பா,kattappa</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/p4ktho69/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/p4ktho69/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கலைஞர் கணினி கல்வியகம், மகளிர் திறன் மேம்பாட்டு மையத்தில் கணினி, தையல் மற்றும் அழகுக் கலை பயிற்சி முடித்தவர்களுக்கு பட்டம் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பயிற்சி முடித்த 250 மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் நடிகர் சத்யராஜ் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினார்.</p><p><strong>இந்த நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது:-</strong></p><p>திமுக தேர்தலில் பங்கேற்க தொடங்கப்பட்ட கட்சி அல்ல, சமூகத் தொண்டு, சமூக சேவை செய்வதற்காக தொடங்கப்பட்ட இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். மக்களுக்கு செய்கின்ற சேவைதான், தொண்டர்களுக்கும் தலைவர்களுக்கும் என்றும் முக்கியமானதாக இருக்கும், சமூகத்தில் கீழ் நிலையில் இருப்பவர்களை மேல்நிலைக்கு கொண்டு வருவதுதான் இவர்களின் முக்கியமான நோக்கம். </p><p>ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, இதுதான் அவர்களின் முக்கிய குறிக்கோள். கிண்டி ரேஸ் கோர்ஸில் அமைக்கப்பட்டு வரும் பூங்காவை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக வந்து திறக்க வாய்ப்பு இருக்கிறது என நான் நம்புகிறேன். யார் கட்சி தொடங்கினாலும் ஆட்சி நடத்தினாலும் கொள்கைத் தலைவர்களாக பெரியாரையும் அம்பேத்கரையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.</p><p>முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி எண்ணற்ற சாதனைகளை செய்துள்ளார். கல்வி, வேலைவாய்ப்பு, வளர்ச்சி திட்டம், நலத்திட்டம் ஆகியவற்றில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உருவானது மு.க.ஸ்டாலின் ஆட்சியில்தான். அதனை தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் திட்டங்களின் பெயரை வேண்டுமானால் மாற்றிக்கொள்ளுங்கள்.</p><p>ஆனால் திட்டங்களை மாற்றாதீர்கள். ஏனெனில் மக்கள் நலன் முக்கியம். தற்போது ஆட்சியில் இருப்பவர்கள், திமுக வகுத்த பாதையில் செல்வதுதான் நாட்டுக்கு நல்லது‌. இன்னைக்கு யார் அமைச்சர்னு தெரியல.. ஆனா என்னைக்கும் என் அன்புத்தம்பி மா.சுப்பிரமணியன்தான் சுகாதாரத்துறை அமைச்சர்.</p><p>இந்த இயக்கம் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழ்நாட்டின் நலனுக்காக பாடுபட்டு கொண்டிருக்கும். திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் நிச்சயம் அதற்கு உறுதுணையாக இருப்பேன், ஆளுங்கட்சியாக இருக்கும்போது அட்டையாக ஒட்டிக் கொள்பவன் நான் அல்ல, திமுகவின் கட்டப்பா நான் என்று கூட சொல்லி கொள்ளுங்கள். எங்களுக்கு சினிமாவில் நான்கு காசு கிடைக்கிறது என்றால், அதற்கு தமிழ்நாடு நன்றாக இருப்பதுதான் காரணம். திமுக இயக்கம், தமிழ்நாட்டிற்கு எப்போதும் காவலனாக இருக்கும்.</p><p>நாம வாங்கி கொடுத்த ஆட்டோவில் வேறு ஏதோ கொடி பறக்குதே என சொன்னார்கள். எவ்வளவு நாள் பறக்கிறது என்று பார்க்கலாம். அவசரப்பட்டு மாற்றம் மாற்றம் என சொல்லி ஓட்டு போட்டு விட்டோம். குழந்தைகள், நண்பா, நண்பீஸ் எல்லாம் பெரியவர்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி விட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>தேயிலை விற்பனையில் புதிய சாதனை... தென் மாநில ஏலத்தில் ரூ. 53 கோடி வருவாய்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-record-in-tea-sales-rs-53-crore-revenue-in-southern-state-auction</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-record-in-tea-sales-rs-53-crore-revenue-in-southern-state-auction#comments</comments><guid isPermaLink="false">4566566f-7427-4e84-a4ef-a04fa9c78673</guid><pubDate>Mon, 20 Jul 2026 02:47:04 +0000</pubDate><atom:updated>2026-07-20T02:47:04.471Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விற்பனை,Sale,revenue,வருவாய்,Tea,தேயிலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/x5b79rc5/tea.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/x5b79rc5/tea.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>குன்னூர்</p><p>தென் மாநில அளவில் நடைபெற்ற, 29வது வார தேயிலை ஏலத்தில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வர்த்தகம் வளர்ச்சியை கண்டு உள்ளது.</p><p>குன்னுார், டீசர்வ், கோவை, கொச்சி என நான்கு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20">தேயிலை</a> ஏல மையங்களில் வாரந்தோறும் இரு நாட்கள் ஏலம் நடக்கிறது.</p><h2>வருவாய் உயர்வு</h2><p>தென் மாநில அளவில் நடந்த 29வது ஏலத்தில், 47.02 லட்சம் கிலோ தேயிலை வரத்து இருந்த நிலையில், 41.69 லட்சம் கிலோ விற்று,  ரூ.52.96 கோடி வருவாய் கிடைத்தது. கடந்தாண்டு, இதே காலக்கட்டத்தில் 43.65 லட்சம் கிலோவந்ததில், 32.95 லட்சம் கிலோ விற்பனையாகி,  ரூ.36.31 கோடி  மொத்த வருவாய் கிடைத்தது. இதை ஒப்பிடுகையில், நடப்பாண்டு  ரூ.16.65 கோடி வருவாய் உயர்ந்துள்ளது.</p><h2>அபார வளர்ச்சி</h2><p>குன்னுார் ஏல மையத்தில் விற்பனையும், சராசரி விலையும் அதிகரித்து அபார வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தது. கொச்சி மற்றும் கோவை மையங்களும் விற்பனையளவில் வளர்ச்சியை எட்டின.  ‘டீசர்வ்’ மையம் மட்டும் விற்பனை வருவாயில் கடந்த ஆண்டை விட சற்று சரிவை சந்தித்தது.</p>]]></content:encoded></item><item><title>நீலகிரியில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-the-nilgiris-experiencing-power-outages-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-the-nilgiris-experiencing-power-outages-today#comments</comments><guid isPermaLink="false">c027f07d-bff0-4228-89a2-8a04bc2820a2</guid><pubDate>Mon, 20 Jul 2026 02:25:16 +0000</pubDate><atom:updated>2026-07-20T02:25:16.720Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>power outage,மின் தடை,Nilgiris,நீலகிரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/h529xrvj/ep.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/h529xrvj/ep.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>கூடலூர், சேரம்பாடி மற்றும் உப்பட்டி துணை மின் நிலையங்களில் இன்று (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோ கம் இருக்காது. இதன்படி கூடலூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கூடலூர், நந்தட்டி, சூண்டி, மரப்பாலம், செம்பாலா, ஓவேலி, 1-வது மைல், 2-வது மைல், காந்திநகர், முதுமலை, அத்திபள்ளி, தொரப்பள்ளி, பாடாந் தொரை, ஸ்ரீமதுரை, மண்வயல், தெப்பக்காடு, பாட்டவயல், நெலாக் கோட்டை, கார்குடி, தேவர்சோலை ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது.</p><p>இதேபோல் சேரம்பாடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சேரம்பாடி டவுன், எருமாடு, சோலாடி, கன்னம்வயல், தாளூர், நாயக்கன்சோலை, பொன்னச்சேரர், கையுன்னி, கக்குண்டி ஆகிய பகுதிகளிலும், உப்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட உப்பட்டி, அத்திகுன்னா, குந்தலாடி. பொன்னானி, கொளப்பள்ளி, ராக்வுட், தேவாலா, எல்லமாலா, அய்யன் கொல்லி, பந்தலூர், நாடுகாணி மற்றும் வுட் பிரேர் நம்பர் 3 டிவிஷன் ஆகிய பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.</p><p>இதேபோல் குந்தா துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் குந்தா துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மஞ்சூர், கீழ்குந்தா, தோட்ட கம்பை, பிக்கட்டி, முள்ளிகூர், கரியமலை, தாய்சோலை, கோரகுந்தா, கிண்ணக்கொரை, இரிய சீகை, மஞ்சக்கொம்பை, குந்தா பாலம், பெங்கால் மட்டம். முக்கிமலை, எடக்காடு, காயகண்டி, எமரால்டு, அண்ணாநகர், தூனேரி, மட்ட கண்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என்று நீலகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தெரிவித்து உள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>