<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 16 Aug 2026 15:26:29 +0000</lastBuildDate><item><title>தவெக அரசு கடந்து வந்த 100 நாட்கள்..! - வெற்றி பயணமா..?, வெற்று பயணமா..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tvk-governments-first-100-days-a-journey-to-success-or-an-empty-journey</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tvk-governments-first-100-days-a-journey-to-success-or-an-empty-journey#comments</comments><guid isPermaLink="false">7c0b1514-e1de-43fb-82c6-61fc5f7a6425</guid><pubDate>Sun, 16 Aug 2026 01:12:30 +0000</pubDate><atom:updated>2026-08-16T01:12:30.471Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,Chief Minister Vijay,தவெக அரசு,TVK Government,Tamil Nadu Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/iyz837is/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/iyz837is/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் த.வெ.க. அரசு ஆட்சி பொறுப்பேற்று நாளையுடன் (ஆகஸ்டு 17) 100 நாட்கள் ஆகிறது. இத்தனை நாட்கள் கடந்து வந்த பாதை வெற்றிப் பயணமாக அமைந்ததா?, வெற்றுப் பயணமாக இருந்ததா? என்பது தொடர்பான அலசல் இது.</p><h2>திராவிட கட்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்ட த.வெ.க.</h2><p>தமிழகத்தில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தி.மு.க., அ.தி.மு.க. என்ற இரு திராவிட கட்சிகளே மாறி.. மாறி.. ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்தன. இருபெரும் திராவிட கட்சிகளின் ஆதிக்கத்துக்கு, அரசியலில் 2½ வயது குழந்தையான த.வெ.க. முட்டுக்கட்டை போட்டது.</p><p>கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தமிழக முதல்-அமைச்சராக ஜோசப் விஜய், மே மாதம் 10-ந் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன் அன்றைய தினம் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். தொடர்ந்து, மே 21-ந் தேதி நடைபெற்ற 2-வது அமைச்சரவை விரிவாக்கத்தில் 23 பேரும், மே 22-ந் தேதி நடைபெற்ற 3-வது அமைச்சரவை விரிவாக்கத்தில் 2 பேரும் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். அனைவருக்கும் துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/v7cqro4y/Untitled-7.jpg" /></figure><h2>த.வெ.க. அரசின் செயல்பாடு எப்படி?</h2><p>இந்த நிலையில், தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்று நாளையுடன் (திங்கட்கிழமை) 100 நாட்கள் ஆகிறது. பதவியேற்ற அந்த நாள் (மே 10) முதல் இந்த நாள் (100-வது நாள்) வரை த.வெ.க. அரசின் செயல்பாடு எப்படி? என்பதை பற்றி தொடர்ந்து பார்க்கப்போகிறோம்.</p><p>முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்ற மே 10-ந் தேதி 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். "2 மாதங்களுக்கு 500 யூனிட்டுகள் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு 2 மாதங்களுக்கு 200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும். </p><p>பெண்களின் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மாநிலம் முழுவதும் உருவாக்கப்படும். தமிழ்நாட்டில் போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிக்க, 65 போதைப்பொருட்கள் தடுப்பு படை அமைக்கப்படும்" என்பவைதான் அவை. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/rh7fapx2/CHENNAI-01.jpg" /></figure><h2>717 டாஸ்மாக் கடைகள் அடைப்பு</h2><p>அதன்பிறகு, குறுகிய நாட்கள் இடைவெளியில், புதிய புதிய அறிவிப்புகள் வெளிவரத் தொடங்கின. குறிப்பாக, கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் அருகே செயல்பட்ட 717 டாஸ்மாக் மதுக்கடைகள் அடைக்கப்பட்டன. தொடர்ந்து, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டார். இதன் மூலம் 58 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்ந்தது. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/8i4w66wl/Untitled-1.jpg" /></figure><h2>பயிர்க்கடன் தள்ளுபடி</h2><p>அதன்பின்னர், மாநிலம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை சீரமைத்து சுவையுடன் கூடிய தரமான உணவுகளை விநியோகம் செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டார். தொடர்ந்து, குறு விவசாயிகள் வாங்கிய ரூ.50 ஆயிரம் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய அவர் உத்தரவிட்டார். </p><p>அதன்பிறகு, மே 27-ந் தேதி டெல்லி சென்ற முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசினார். அப்போது, மேகதாது அணை, தமிழக மீனவர் பிரச்சினை உள்பட 4 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் அளித்தார். </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/uui6m36p/Untitled-5.jpg" /></figure><h2>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம்</h2><p>ஜூன் 9-ந் தேதி குழந்தைகள், பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கிவைத்தார். அதன்பிறகு, அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை அறிவித்தார். </p><p>தொடர்ந்து, கடந்த 5-ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், "திருமணமாகும் பெண்களுக்கு திருமண நாளில் அண்ணனின் சீர் என்ற திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்க நாணயமும், ஒரு பட்டுப்புடவையும் வழங்கப்படும். குடிசை வீடுகளுக்கு பதிலாக 70 ஆயிரம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும். பிளஸ்-1 மாணவர்களுக்கு ஹெல்மெட், வாட்டர் பாட்டிலுடன் கூடிய நவீன சைக்கிள் வழங்கப்படும். அரசு கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் கொடுக்கப்படும்" என்பது உள்பட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/2gu3pidi/Untitled-2.jpg" /></figure><h2>பட்ஜெட்டில் 125 வாக்குறுதிகள் </h2><p>பட்ஜெட் தொடர்பாக கருத்து தெரிவித்த நிதி அமைச்சர் மரிய வில்சன், "த.வெ.க. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளில் 125 பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது" என்றார். </p><p>இதற்கு மத்தியில், சத்தம் இல்லாமல் ஒரு சாதனையை தமிழக தொழில் துறை செய்துள்ளது. அதாவது, 100 நாட்களில் 104 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 1 லட்சத்து 21 ஆயிரத்து 788 பேர் வேலைவாய்ப்பை பெறும் வகையில் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 514 கோடிக்கு முதலீடுகளை ஈர்த்துள்ளது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/2o8pgrn4/Untitled-5.jpg" /></figure><h2>தொழில் முதலீடுகள் ஈர்ப்பு</h2><p>குறிப்பாக, கடந்த 13-ந் தேதி நடைபெற்ற, வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் மட்டும் போடப்பட்ட 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.67,452 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இதன் மூலம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 998 பேருக்கு வேலைவாய்ப்புகளும் கிடைக்க உள்ளன.  அதுவும், தொழில் முதலீடுகள் அனைத்தும் ஒரே பகுதியில் குவிந்துவிடாமல், 23 மாவட்டங்களுக்கு பரவலாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்முறையாக தொழில் நிறுவனம் அமைய இருக்கிறது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/jqvcqxem/Untitled-7.jpg" /></figure><h2>முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்</h2><p>இப்படி, சத்தம் இல்லாமல் தொழில் புரட்சியை த.வெ.க. அரசு ஏற்படுத்தினாலும், சட்டம் - ஒழுங்கு பிரச்சினை, பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு, மின் தடை பிரச்சினை, குப்பைகள் சரியாக அகற்றப்படாதது உள்ளிட்டவை புதிய அரசின் மீது குற்றச்சாட்டுகளாக வைக்கப்படுகின்றன. </p><p>கடந்த கால ஆட்சிகளில், தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்தால், அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கும். அல்லது அ.தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்தால் தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கும். ஆனால், இப்போது புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க.வுக்கு தி.மு.க., அ.தி.மு.க. என்ற இரு திராவிட கட்சிகள் எதிர்க்கட்சிகளாக உள்ளன.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/39xmkibq/Untitled-4.jpg" /></figure><h2>100 நாள் ஆட்சி எப்படி?</h2><p>இதனால், சட்டசபையில் இரு எதிர் கட்சிகளின் கேள்விக் கணைகளை த.வெ.க. அமைச்சர்கள் சமாளிக்க வேண்டியுள்ளது. எதிரில் இருப்பவர்கள் சட்டசபை அனுபவத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் என்றாலும், ஆளும் தரப்பினரும் அதைவொரு சவாலாக ஏற்று சமாளித்து வருகின்றனர். </p><p>மொத்தத்தில், கடந்த 100 நாள் த.வெ.க. ஆட்சி, ஊழலுக்கு எதிராக தனது பார்வையை கழுகுப்பார்வையாக அதிகரித்துள்ளதுடன், ஒவ்வொரு தடைகளையும் தாண்டி வெற்றி பெற்று வருவதாகவே தெரிகிறது. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/5i4uk29j/Untitled-7.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>கர்நாடகாவில் 3 தமிழர்கள் என்கவுன்ட்டர்: தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? - சீமான் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-tamils-killed-in-an-encounter-in-karnataka-what-is-the-tamil-nadu-governments-stance-seeman-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-tamils-killed-in-an-encounter-in-karnataka-what-is-the-tamil-nadu-governments-stance-seeman-asks#comments</comments><guid isPermaLink="false">7852dfd2-0bb5-4f3f-850a-dd985edeee3a</guid><pubDate>Sun, 16 Aug 2026 15:25:54 +0000</pubDate><atom:updated>2026-08-16T15:25:54.623Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,நாதக,சீமான்,NTK,Seeman,தமிழகம்,Karnataka,கர்நாடகா,தமிழர்கள்,Tamils</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/zgkt7bcr/depam.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/zgkt7bcr/depam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா சாக்கியா அருகே காவேரி வனவிலங்கு சரணாலயத்தில் மரிமங்கலா வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் அடிக்கடி வேட்டைக்காரர்கள் புகுந்து மான் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடி வருகிறார்கள். இதனால் வனப்பகுதியில் ரோந்து பணியை வனத்துறையினர் அதிகரித்துள்ளனர். </p><p>இந்த நிலையில் சாக்கியா வனப்பகுதியில் மர்மநபர்கள் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு அவர்கள் சென்றபோது வனத்துறையினர், வேட்டைக்காரர்கள் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. அந்த சமயத்தில் வேட்டைக்காரர்கள் சுட்டதில் வனக்காவலர் ஒருவர் காயம் அடைந்தார்.</p><p>பின்னர் வேட்டைக்காரர்கள் 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அப்போது வனத்துறையினர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் 3 பேர் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது. இதனால் அவர்கள் அங்கேயே சுருண்டு விழுந்தனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார்.</p><h2>தமிழர்கள்</h2><p>என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட 3 பேரும்  ஹனூர் அருகே தோமியார்பாளையாவை சேர்ந்த அந்தோணி சாமி, பீட்டர் மற்றும் குமார் என்பதும் அவர்களின் பூர்வீக தமிழகம் என்பதும் தெரியவந்தது. இந்த நிலையில் வனத்துறையினர் 3 பேரை என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றதை அறிந்து அவர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே சாக்கியா, தோமியார்பாளையா கிராம மக்கள், வனத்துறையினரின் நடவடிக்கைக்கு எதிராக ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர்.</p><h2>வழக்கு தொடர வேண்டும்</h2><p>இந்நிலையில் கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர்கள் மானை வேட்டையாட வந்தார்கள் என்று கர்நாடக அரசு பழிபோடுவதை தமிழ்நாடு அரசு ஏற்கிறதா? எதிர்க்கிறதா? இதில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? தமிழ்நாடு வனத்துறை அமைச்சர், தமிழ்நாடு முதல்-அமைச்சரின் கருத்து என்ன?</p><p>வனத்துறை அமைச்சர் தலைமையில் ஆய்வுக்குழுவை அனுப்புக. கர்நாடக வனத்துறை மீது கொலை வழக்குப்பதிந்து சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>
கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் குறித்து பேசும் புதிய அரசியலை முன்னெடுப்போம்: அண்ணாமலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-champion-a-new-brand-of-politics-that-focuses-on-education-employment-technology-and-the-environment-annamalai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-champion-a-new-brand-of-politics-that-focuses-on-education-employment-technology-and-the-environment-annamalai#comments</comments><guid isPermaLink="false">3c4705e8-c42d-4eea-8fe7-a1de2c77a512</guid><pubDate>Sun, 16 Aug 2026 15:22:35 +0000</pubDate><atom:updated>2026-08-16T15:22:35.765Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Annamalai,அண்ணாமலை,we the leaders,வீ தி லீடர்ஸ் அமைப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/zqhnycub/Untitled-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/zqhnycub/Untitled-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் நல்லாட்சி குறித்து பேசும் புதிய அரசியலை நாம் முன்னெடுத்துச் செல்வோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வீ த லீடர்ஸ் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>நமது இலக்கு 20 லட்சம் மரங்கள்</h2><p>இன்று மாலை, நமது வீ த லீடர்ஸ் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியில், பெரும் திரளெனக் கூடியிருந்த சகோதர சகோதரிகளுடன் பங்கேற்றதில் பெரும் மகிழ்ச்சி. இந்தப் பேரணியில் பங்கேற்றுச் சிறப்பித்த, சின்னக் கலைவாணர், அண்ணன் அமரர் விவேக்கின் மனைவி அருள்செல்விக்கு, எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இயற்கையைப் பாதுகாப்பது என்பது வெறும் மரங்களை நடுவது மட்டும் அல்ல. நமது நீர்வளம், கிராமப்புற வளர்ச்சி, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலத் தலைமுறையின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதும் தான். காவிரி நதி நீர் பிரச்சினை, மேகதாது அணைத் திட்டம் போன்ற விவகாரங்களில் தமிழ்நாட்டின் நீர்வள உரிமைகளைப் பாதுகாப்பது அவசியம். அதேபோல், நமது கிராமங்களில் உள்ள ஏரிகள், குளங்கள், ஊரணிகள், கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளைப் பாதுகாத்து, மழைநீரை சேமிக்கும் வகையில் அவற்றை மேம்படுத்த வேண்டியதும் நமது கடமை.</p><p>கடந்த 16 நாட்களில் நமது வீ த லீடர்ஸ் சார்பில், 6,25,760 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மாதத்திற்கான நமது இலக்கு 20 லட்சம் மரங்கள். இன்னும் 15 நாட்களில் 14 லட்சம் மரங்களை நட்டு இந்த இலக்கை எட்ட வேண்டும். அண்ணன், சின்னக் கலைவாணர் அமரர் விவேக்கின் பசுமைப் பணியை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். அவர் ஏற்கனவே 37 லட்சம் மரக்கன்றுகளை நட்டு உருவாக்கிய பசுமைப் பாதையை, வரும் மாதங்களில் மீதமுள்ள மரங்களை நட்டு, அவரது 1 கோடி மரங்கள் என்ற கனவை நிறைவேற்றும் பணியில் நாமும் பங்கெடுப்போம்.</p><h2>இளைஞர்கள் விரும்புவதில்லை</h2><p>தமிழக முதல்-அமைச்சர் விஜய்யிடம் ஒரு வேண்டுகோள். ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை வழங்க வேண்டும் என்ற உங்கள் நிலைப்பாட்டை வரவேற்கிறோம். ஆனால், உங்கள் அமைச்சரவையில் சிலர் லஞ்சம் பெறுவதாக வரும் குற்றச்சாட்டுகளை விசாரித்து, தவறு நடந்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவது உங்கள் பொறுப்பு.</p><p>இன்றைய இளைஞர்களின் குரலை நாம் கேட்க வேண்டும். அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டு, அவர்களின் எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ள வேண்டும். பிறர் குடும்பத்தைப் பற்றி தரக்குறைவாகப் பேசுவது, தனிப்பட்ட தாக்குதல்கள் செய்வது போன்ற, அநாகரிக அரசியலை, இன்றைய இளைஞர்கள் விரும்புவதில்லை. கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் நல்லாட்சி குறித்து பேசும் புதிய அரசியலை நாம் முன்னெடுத்துச் செல்வோம்.</p><p>நீர்நிலைகளை காப்போம்; மரங்களை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வளர்ப்போம்</a>; அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவோம். கிராமங்களை முன்னேற்றுவோம். நம் குழந்தைகளின் எதிர்காலத்தை சிறப்பாக்குவோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் சட்டசபையில் நாளை தொடங்குகிறது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/debates-on-demands-for-grants-begin-in-the-legislative-assembly-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/debates-on-demands-for-grants-begin-in-the-legislative-assembly-tomorrow#comments</comments><guid isPermaLink="false">ce1f2047-9a78-4cde-a79f-1c6a6c8f620d</guid><pubDate>Sun, 16 Aug 2026 14:49:07 +0000</pubDate><atom:updated>2026-08-16T14:49:07.920Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,தமிழக சட்டசபை,TN Assembly,Assembly Session,Budget,மானிய கோரிக்கை,Budget 2026,சட்டசபை கூட்டத் தொடர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/w8vqfukr/kolee.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/w8vqfukr/kolee.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக பட்ஜெட்டை தொடர்ந்து துறை ரீதியான மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நாளை தொடங்குகிறது.</p><h2>சட்டசபை கூட்டம்</h2><p>தமிழக சட்டசபையில் கடந்த 5-ந் தேதி, 2026-2027-ம் ஆண்டுக்கான <a href="https://www.dailythanthi.com/topic/budget">பொது பட்ஜெட்</a>டும், 6-ந் தேதி <a href="https://www.dailythanthi.com/topic/budget">வேளாண் பட்ஜெட்</a>டும் தாக்கல் செய்யப்பட்டது.</p><p>இந்த நிலையில், கடந்த 7, 10, 11 ஆகிய தேதிகளில் 3 நாட்கள், பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.</p><h2>4 நாட்கள் விடுமுறை</h2><p>அதனைத் தொடர்ந்து, சட்டசபையில் இன்று, 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோர் பதில் அளித்தனர். அதனைத் தொடர்ந்து, சட்டசபை கூட்டம் நிறைவடைந்தது.</p><p>இதனைத் தொடர்ந்து வியாழன்  (13-ந் தேதி) மற்றும் வெள்ளிக்கிழமை (14-ந் தேதி) சட்டசபை கூட்டம் நடைபெறவில்லை. நேற்று (15-ந் தேதி) சுதந்திர தினம் என்பதால், அரசு விடுமுறை நாளாகும். அடுத்த நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இப்படி, தொடர்ந்து 4 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது</p><h2>நாளை மானியக் கோரிக்கை விவாதம்</h2><p>இந்நிலையில் நாளை  17-ந் தேதி (திங்கட்கிழமை) சட்டசபை மீண்டும் கூட இருக்கின்றது. அதில் முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதமும் தொடங்குகிறது.</p><p>முதல் நாளில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகியவை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>லேப்டாப்புக்கு சார்ஜ் போட்டபோது மின்சாரம் தாக்கி பிளஸ்-1 மாணவர் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/plus-1-student-dies-after-being-electrocuted-while-charging-laptop</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/plus-1-student-dies-after-being-electrocuted-while-charging-laptop#comments</comments><guid isPermaLink="false">2c13321f-6d69-4acd-a534-7a10636f7e0f</guid><pubDate>Sun, 16 Aug 2026 14:29:37 +0000</pubDate><atom:updated>2026-08-16T14:29:37.806Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>லேப்டாப்,மின்சாரம் தாக்கி உயிரிழப்பு,மாணவர்,Plus-1 student,Laptop,Charge,சார்ஜ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/27iovfw5/death.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/27iovfw5/death.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர், </p><p>லேப்டாப்புக்கு சார்ஜ் போட்டபோது மின்சாரம் தாக்கி பிளஸ்-1 மாணவர் பரிதாபமாக இறந்தார்.</p><h2>மின்சாரம் தாக்கியது</h2><p>திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 27-வது வார்டு கற்குழாய் சாலை பகுதியை சேர்ந்தவர் செந்தில். பெயிண்டர். இவருக்கு கவிதா என்கிற மனைவியும், சீனிவாசன் (15), ஜீவா, ரித்தி என 3 மகன்களும் உள்ளனர். மூத்த மகனான சீனிவாசன் திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்த நிலையில் சீனிவாசன் தனது நண்பரின் லேப்டாப்பை வாங்கி கொண்டு வந்து வீட்டில் வைத்து கேம் விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து சார்ஜ் இல்லாததால் லேப்டாப்பை சார்ஜ் போடுவதற்காக சென்றார். அப்போது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">மின்சாரம் </a>தாக்கி அவர் மயங்கி கீழே விழுந்தார்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>அதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் செந்தில் தனது மகனை திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சீனிவாசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தென்காசியில் நடைபெற்ற ஸ்கேட்டிங் மாரத்தான்: 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/skating-marathon-in-tenkasi-over-400-students-participate</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/skating-marathon-in-tenkasi-over-400-students-participate#comments</comments><guid isPermaLink="false">439a4639-7909-4826-989e-26160408849e</guid><pubDate>Sun, 16 Aug 2026 14:14:26 +0000</pubDate><atom:updated>2026-08-16T14:14:26.066Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,தென்காசி,மாணவர்கள்,marathon,மாரத்தான்,பங்கேற்பு,skating,ஸ்கேட்டிங்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/zkt1j87l/skate.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஸ்கேட்டிங் மாரத்தான்]]></media:title><media:description type="html"><![CDATA[ தென்காசியில் நடைபெற்ற ஸ்கேட்டிங் மாரத்தான்: 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/zkt1j87l/skate.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><p>நாட்டின் 80-வது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE">சுதந்திர தின விழாவை </a>முன்னிட்டு, தென்காசி மாவட்டம் மத்தளம்பாறையில் உலக சாதனை படைக்கும் நோக்கத்துடன் இந்த ஸ்கேட்டிங் மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது </p> <h2>உலக சாதனை</h2><p>குளோபல் டேலண்ட் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட், யுனிவர்சல் ஸ்போர்ட்ஸ் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் மற்றும் எலைட் லெஜெண்ட்ஸ் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் ஆகிய 3 முக்கிய உலக சாதனை அமைப்புகளின் புத்தகங்களில் இடம் பிடிக்கும் வகையில் இந்த சாதனை முயற்சி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.</p><h2>400 மாணவ-மாணவிகள் குவிந்தனர்</h2><p>இந்த மாரத்தான் போட்டியில் தென்காசி மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தங்களது ஸ்கேட்டிங் காலணிகளுடன் ஆவலோடு வந்து குவிந்தனர்.</p><h2>80 நிமிடங்கள் இடைவிடாத சாதனை</h2><p>போட்டி தொடங்கியதும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து மாணவர்களும் கைகளில் தேசிய கொடியை ஏந்தியபடி, சாலைகளில் விறுவிறுப்பாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D">ஸ்கேட்டிங் </a>செய்ய தொடங்கினர். சற்றும் சளைக்காமல், 80 நிமிடங்கள் இடைவிடாது ஸ்கேட்டிங் செய்து அவர்கள் இலக்கை நோக்கி பாய்ந்தனர். மாணவர்களின் இந்த அசாத்திய வேகம் மற்றும் திறமையை கண்டு அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் பெற்றோர் வியப்பில் ஆழ்ந்தனர்.</p><h2> சான்றிதழ்கள்</h2><p>வெற்றிகரமாக உலக சாதனை இலக்கை எட்டிய அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் பங்கேற்ற அனைத்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">மாணவர்களுக்கும்</a> சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. </p>]]></content:encoded></item><item><title>கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை: வைகோ கடும் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-tamils-shot-dead-in-karnataka-forest-area-vaiko-strongly-condemns-the-incident</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-tamils-shot-dead-in-karnataka-forest-area-vaiko-strongly-condemns-the-incident#comments</comments><guid isPermaLink="false">97ad3ee1-f4af-4202-867a-38e2e1702660</guid><pubDate>Sun, 16 Aug 2026 13:49:07 +0000</pubDate><atom:updated>2026-08-16T13:49:07.253Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Crime News,தமிழகம்,Vaiko,வைகோ,Karnataka,கர்நாடகா,கிரைம் செய்திகள்,மதிமுக,MDMK |</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/pxpf0cow/klerer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/pxpf0cow/klerer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்திற்கு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/vaiko">வைகோ</a> கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><h2>துப்பாக்கி சூடு</h2><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>கர்நாடக மாநிலம் சாம்ராஜநகர் மாவட்டத்தின் ஹானூர் தாலுகாவில் மரியமங்கலம் கிராமம் அமைந்துள்ளது. இந்த ஊர் காவிரி வனவிலங்கு சரணாலய வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.</p><p>இன்று அதிகாலை தோமையார்பாளையம் மற்றும் சாக்யா குறுவட்ட வன அலுவலர்கள் அந்தப் பகுதிக்கு ரோந்து சென்றுள்ளனர். தோமையார்பாளையம், மரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த தமிழர்கள் காட்டுக்குள் மேச்சலுக்கு போன தங்கள் மாடுகளை தேடி சென்று உள்ளனர். அவர்கள் மீது மான் வேட்டையாடச் சென்றதாக சாக்யா பகுதி வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.</p><p>கர்நாடக வனத்துறையினரின் வெறித்தனமான துப்பாக்கிச் சூட்டில் ஜகன்னாததொட்டி என்ற இடத்தைச் சேர்ந்த பெரியநாயகம் என்பவரின் மகனான அந்தோணிசாமி (வயது 50), மரியமங்கலத்தை சேர்ந்த யாகூப் என்பவரின் மகன் ஜான்ரோஸ் பீட்டர் (வயது 42), லாசர்தொட்டி என்ற இடத்தைச் சேர்ந்த சவேரியப்பன் என்பவரின் மகன் குமார் (33) ஆகிய மூவர் உயிரிழந்துள்ளனர்.</p><p>மரியமங்கலத்தைச் சேர்ந்த பெஞ்சமின் என்பவரின் மகன் மகிமைதா° (வயது-48) என்பவர் காயமடைந்துள்ளார். மரியமங்கலம் ஊரை அடுத்துள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில், சிலர் துப்பாக்கியுடன் மான் வேட்டையில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்ததாகவும் அதனால் அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கர்நாடக வனத்துறையினர் கூறுகின்றனர்.</p><p>வேட்டையில் ஈடுபட்டவர்கள் வசம் ஆயுதங்கள் இருந்தன. இது ஒரு என்கவுன்டர் சம்பவம். “என கர்நாடகா வனத்துறை அமைச்சர் ராமலிங்கா ரெட்டி தெரிவித்திருப்பது  ஏற்கத்தக்கது அல்ல. கடும் கண்டனத்துக்குரியது.</p><p>மான் வேட்டையாட சென்றார்கள் என்று காரணம் கற்பித்து மூன்று தமிழர்களின் உயிரை பறித்துப் பச்சை படுகொலை நடத்தியுள்ள கர்நாடக மாநில அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.</p><p>மேய்ச்சலுக்கு போன மாடுகளை தேடி வனப்பகுதிக்குள் சென்ற அப்பாவித் தமிழர்களை சுட்டுக் கொன்ற வனத்துறை அலுவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்வதுடன் அவர்களை கைது செய்து கூண்டில் நிறுத்த வேண்டும்.</p><p>உயிரிழந்த தமிழர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு தொகையையும் கர்நாடக மாநில அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற வாகை சந்திரசேகர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vaakai-chandrasekar-meets-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vaakai-chandrasekar-meets-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">83af062b-4c52-4bdc-821f-23c527fc4dde</guid><pubDate>Sun, 16 Aug 2026 13:46:05 +0000</pubDate><atom:updated>2026-08-16T13:46:05.565Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,வாழ்த்து,Wishes,met,M.K. Stalin,வாகை சந்திரசேகர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/693kpvex/vagai.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வாகை சந்திரசேகர்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற வாகை சந்திரசேகர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/693kpvex/vagai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/mkstalin">திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை</a> சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று முக்கிய பிரமுகர்கள் அடுத்தடுத்து நேரில் சந்தித்து வாழ்த்துகளையும், நன்றியையும் பரிமாறி கொண்டனர். இதனால் இன்று காலை முதலே பரபரப்புடன் காணப்பட்டது.</p> <h2>தேசிய விருது</h2><p> இயல் இசை நாடக மன்றத்தின் முன்னாள் தலைவருமான பிரபல நடிகர் வாகை சந்திரசேகர், கலை துறையில் ஆற்றிய சாதனைக்காக அண்மையில் இந்திய குடியரசு தலைவரிடமிருந்து உயரிய 'சங்கீத நாடக அகாடமி' (அகாதெமி புரஸ்கார்) <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81">தேசிய விருதை</a> பெற்றார். </p><h2>ஸ்டாலின் வாழ்த்து</h2><p>இந்த நிலையில், இன்று அவர் தனது டெல்லி பயணத்தை முடித்து கொண்டு, பெற்ற விருதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். வாகை சந்திரசேகரின் சாதனையை பாராட்டி மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். </p> <figure><img alt="பி.வில்சன் எம்பி திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/dacdr4qz/wilson.jpg" /><figcaption>பி.வில்சன் எம்பி</figcaption></figure><h2>பி.வில்சன் எம்பி</h2><p>இதனை தொடர்ந்து, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த வழக்குரைஞருமான பி.வில்சன் எம்பி திமுக தலைவரை சந்தித்து பேசினார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வெளிநாட்டு நிதி பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து மிக வலுவான குரல் எழுப்பி வருகிறார்.</p><h2>கிறித்தவ அமைப்புகளின் சார்பில் நன்றி</h2><p>திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தொடர் எதிர்ப்பின் காரணமாக, இந்த மசோதா தற்போது நாடாளுமன்ற கூட்டு நடவடிக்கை குழுவின் தீவிர பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த திருப்பத்தை அடுத்து, சிறுபான்மையினர் கூட்டு நடவடிக்கை மன்றத்தின் தலைவர் என்ற முறையில், சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக தொடர்ந்து சமரசமின்றி குரல் கொடுத்து வரும் கழக தலைமைகளுக்கு கிறித்தவ அமைப்புகளின் சார்பில் நன்றி தெரிவித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>மனித உயிர்களைப் பறிப்பதற்கு எந்த அரசுக்கும் அதிகார அமைப்பிற்கும் உரிமை கிடையாது - கனிமொழி எம்.பி.</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-government-or-authority-has-the-right-to-take-human-lives-kanimozhi-mp</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-government-or-authority-has-the-right-to-take-human-lives-kanimozhi-mp#comments</comments><guid isPermaLink="false">c8b4ae53-93ff-47cb-b41f-c43c8cbfe31b</guid><pubDate>Sun, 16 Aug 2026 13:22:21 +0000</pubDate><atom:updated>2026-08-16T13:22:21.869Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,கனிமொழி எம்.பி.,Kanimozhi MP,கனிமொழி,Kanimozhi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/g571y6na/Untitled-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/g571y6na/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,   </p><p>மனித உயிர்களைப் பறிப்பதற்கு எந்த அரசுக்கும் அதிகார அமைப்பிற்கும் உரிமை கிடையாது என தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>தமிழர்கள் சுட்டுக்கொலை</h2><p>கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில், கர்நாடக வனத்துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று தமிழர்கள் உயிரிழந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>மனித உயிர்களைப் பறிப்பதற்கு எந்த அரசுக்கும் அதிகார அமைப்பிற்கும் உரிமை கிடையாது.</p><h2>நிவாரணம் வழங்க வேண்டும்</h2><p>உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் எழுப்பியுள்ள சந்தேகங்களைக் கருத்தில் கொண்டு வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும். உயிரிழந்த மூன்று பேரின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு உரிய <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நிவாரணம் </a>வழங்குவதோடு, இந்தச் சம்பவத்தில் உண்மை நிலையை வெளிக்கொணர கர்நாடக அரசிற்கு தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோழித்தீவன உற்பத்தியால் மக்காச்சோளத்துக்கு மவுசு அதிகரிப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/poultry-feed-production-increases-maize-prices-farmers-happy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/poultry-feed-production-increases-maize-prices-farmers-happy#comments</comments><guid isPermaLink="false">374cc4b8-0c2f-45a7-b62d-fdef5a560b04</guid><pubDate>Sun, 16 Aug 2026 13:17:18 +0000</pubDate><atom:updated>2026-08-16T13:17:18.803Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Price,maize,மக்காச்சோளம்,விவசாயிகள் மகிழ்ச்சி,விலை அதிகரிப்பு,farmers happy</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/zjxg8wg5/corn.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/zjxg8wg5/corn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>போடிப்பட்டி, </p><p>கோழித்தீவன உற்பத்தியால் மக்காச்சோளத்துக்கு மவுசு அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.</p><h2>எத்தனால் உற்பத்தி</h2><p>இந்திய அளவில் முக்கிய விவசாயப்பயிராக மக்காச்சோளம் உள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, மத்தியப்பிரதேசம், ஆந்திரா, மேற்குவங்காளம் மாநிலங்களில் அதிக அளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.</p><p>இந்திய அளவில் ஆண்டுதோறும் சுமார் 2 கோடியே 65 லட்சம் ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் தமிழ்நாட்டின் பங்களிப்பு சுமார் 13 லட்சத்து 34 ஆயிரம் ஏக்கராக உள்ளது. தமிழ்நாட்டின் தேவையில் 50 சதவீத அளவுக்கே சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கோழித்தீவன உற்பத்தியில் முக்கிய மூலப்பொருளாக உள்ள மக்காச்சோளத்துக்கு சமீப காலங்களாக மவுசு அதிகரித்துள்ளது. பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலக்கப்பட்டு வரும் நிலையில், எத்தனால் உற்பத்தியில் முக்கிய மூலப்பொருளாக மக்காச்சோளம் உள்ளது.</p><h2>விலை உயர்வு</h2><p>எளிதில் மக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் பைகள் தயாரிப்பிலும் மக்காச்சோளம் பயன்படுத்தப்படுகிறது. இதைத்தவிர வழக்கமான பயன்பாடுகளிலும் மக்காச்சோளம் உள்ளது. இதனால் மக்காச்சோளத்தின் தேவை அதிகரித்து, விலை ஏறுமுகமாகவே உள்ளது. தற்போது ஒரு குவிண்டால் மக்காச்சோளம் ரூ.2 ஆயிரத்து 700 க்கு மேல் விற்பனையாகிறது.</p><p>பருவமழை கைவிட்டதால், வரும் காலங்களில் உற்பத்தி குறைந்து, விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் நீர் இருப்பு போதுமான அளவில் இருப்பவர்கள் மக்காச்சோளம் சாகுபடி செய்யலாம் என்று வேளாண்மைத்துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.</p><p>மேலும் அறுவடை செய்த மக்காச்சோளத்தை இருப்பு வைத்து விவசாயிகள் விற்பனை செய்வதன் மூலம் அதிக லாபம் பெற வாய்ப்பு உள்ளது. ஆனால் வெளிமாநில வரத்து எந்த அளவுக்கு இருக்கும் என்ற கணக்கீடுகளைப் பெற்று வேளாண்மைத்துறையினர் உரிய ஆலோசனைகள் வழங்கினால் விலை சரிவால் இழப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம். தற்போது நிலவி வரும் விலை உயர்வு விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவே உள்ளது.</p><h2>பொருளாதார பாதுகாப்பு</h2><p>இதுகுறித்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF">விவசாயிகள் </a>கூறுகையில், படைப்புழுக்களிடமிருந்து பாதுகாக்க அதிக அளவில் மருந்து தெளிக்க வேண்டியது உள்ளது. மேலும் உரம், கூலி என அனைத்து செலவினங்களும் உயர்ந்துள்ளன. இதனால் மக்காச்சோள சாகுபடி அதிக செலவுபிடிக்கும் விஷயமாக மாறி விட்டது. மக்காச்சோளத்துக்கு ஆதார விலையாக குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரத்து 410 நிர்ணயம் செய்யப்பட்டிருந்தும், அதைவிடக் குறைவாகவே கொள்முதல் செய்து வந்தனர்.</p><p>தற்போதுதான் விலை உயர்ந்துள்ளது. இனிவரும் காலங்களில் ஆதார விலையைவிட குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யும் நிலை வரக்கூடாது. விலை குறைவு ஏற்பட்டால் அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியான பாதுகாப்பு கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கோவை மாணவர் கொலை வழக்கு: கைது எண்ணிக்கை மேலும் உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-student-murder-case-number-of-arrests-rises-further</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-student-murder-case-number-of-arrests-rises-further#comments</comments><guid isPermaLink="false">b1c723f9-f74a-4906-8ab6-5bad8289fbf7</guid><pubDate>Sun, 16 Aug 2026 13:09:06 +0000</pubDate><atom:updated>2026-08-16T13:09:06.695Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,Tamilnadu,கோவை,Crime News,தமிழகம்,கிரைம் செய்திகள்,கோயம்புத்தூர்,மாணவர் கொலை,Kovai,College student murder</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/rkhnxhit/pon.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/rkhnxhit/pon.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/coimbatore">கோவை</a> தனியார் கல்லூரியில் சக மாணவர்களால் அமுதன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ஏற்கனவே 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><h2>மாணவர் கொலை</h2><p>கள்ளக்குறிச்சி வடக்கனந்தல் பகுதியை சேர்ந்தவர் அமுதன் (வயது 19). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.கடந்த 10-ந்தேதி அமுதனை சக மாணவர்கள் தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது.</p><p>மாணவர்களுக்கு இடையேயான மோதலில் அமுதன் உயிரிழந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், போதைப்பொருள் விவகாரம் தொடர்பாகவே தனது மகன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அமுதனின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், இந்த போதைப்பொருள் குற்றச்சாட்டை கோவை மாவட்ட போலீசாரும் கல்லூரி நிர்வாகமும் மறுத்துள்ளன.</p><h2>வழக்குப்பதிவு</h2><p>இதனிடையே, அமுதனின் பெற்றோரை தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அமுதனின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை உறுதுணையாக இருப்பதாக தெரிவித்தார். மேலும், இச்சம்பவம் குறித்து நாளை ( திங்கள்கிழமை) சட்டப்பேரவையில் விரிவாக பேசவிருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.</p><p>இச்சம்பவம் குறித்து அமுதனின் நண்பர் அளித்த புகாரின் பேரில், செட்டிபாளையம் போலீசார் 14 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதன்படி கலவரத்தில் ஈடுபடுதல், சட்டவிரோதமாக வழிமறித்தல், சட்டவிரோதமாக அடைத்து வைத்தல், கடத்தல், கொலை முயற்சி, கொலை ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது ‘தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்பிரிவு’ கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளது.</p> <h2>10 பேர் கைது</h2><p>இவ்வழக்கை விசாரிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஏற்கனவே 9 மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தேனியைச் சேர்ந்த மேலும் ஒரு மாணவரும்  கைது செய்யப்பட்டார். இதன் மூலம் கைதானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது. தலைமறைவாக இருந்த மேலும் 4 மாணவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். </p><h2>மேலும் 4 பேர் கைது</h2><p>இந்நிலையில் கோவை மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ஏற்கனவே 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 4 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>முன்னதாக  கள்ளக்குறிச்சி வடக்கனந்தலில் உள்ள அமுதன் குடும்பத்தினரை சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். தொடர்ந்து சமூக நீதித்துறையின் சார்பில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் முதற்கட்டமாக ரூ.6 லட்சம் நிதியுதவிக்கான ஆணையை அமுதனின் பெற்றோரிடம் அமைச்சர்கள் வழங்கினர்.</p> ]]></content:encoded></item><item><title>வார விடுமுறையையொட்டி ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-flock-to-ooty-for-the-weekend</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-flock-to-ooty-for-the-weekend#comments</comments><guid isPermaLink="false">bd2604bf-27da-44a2-b132-ef604f48fda5</guid><pubDate>Sun, 16 Aug 2026 12:54:18 +0000</pubDate><atom:updated>2026-08-16T12:54:18.975Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஊட்டி,Ooty,Weekend,வார விடுமுறை,Tourists flock,ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/9zl2q1jp/ooty.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/9zl2q1jp/ooty.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கவும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் முதலாவது சீசனும், அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2-வது சீசனும் நடைபெறுகிறது.</p><h2>குவிந்த சுற்றுலா பயணிகள் </h2><p>இந்த நிலையில், வார விடுமுறை நாளான இன்று ஊட்டியில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளம் போன்ற மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்தனர்.</p><p>அரசு தாவரவியல் பூங்கா, ஊட்டி படகு இல்லம், உள்ளிட்ட பல இடங்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் இருந்தது. அங்கு செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். </p><p>அதைபோல ஊட்டி தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்தனர். தொட்டபெட்டா மலை சிகரம் சென்ற சுற்றுலா பயணிகள் தொலைநோக்கி மூலம் மலைகள், பள்ளத்தாக்குகளை கண்டு ரசித்தனர். குறிப்பாக மலைச் சிகரத்தில் இருந்து தெரியும்<a href="https://www.dailythanthi.com/topic/ooty"> ஊட்டி</a> நகர வனப்பகுதிகள், கோவை, மேட்டுப்பாளையம் மற்றும் மலைகளில் தவழ்ந்து சென்ற மேகக் கூட்டங்களையும் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் மூவர் சுட்டுக்கொலை: பிரேமலதா கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-tamils-shot-dead-in-karnataka-forest-area-premalatha-condemns-incident</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-tamils-shot-dead-in-karnataka-forest-area-premalatha-condemns-incident#comments</comments><guid isPermaLink="false">f9f65fd0-baa8-42b8-bc6a-6e87350abb11</guid><pubDate>Sun, 16 Aug 2026 12:53:01 +0000</pubDate><atom:updated>2026-08-16T12:53:01.250Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>DMDK,தேமுதிக,பிரேமலதா விஜயகாந்த்,பிரேமலதா,Premalatha Vijayakand,Premalatha</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/pzrgm52b/premalatha.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/pzrgm52b/premalatha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மனித உயிர்களின் மதிப்பை சிறிதும் கருத்தில் கொள்ளாமல் நிகழ்த்தப்பட்டுள்ள இந்தக் கொடூரச் சம்பவத்தை தேமுதிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>தமிழர்கள் மூவர் சுட்டுக்கொலை</h2><p>கர்நாடக மாநிலம் ஹானூர் அருகே உள்ள மரிமங்கலம் பகுதியில், மான் வேட்டையில் ஈடுபட்டதாகக் கூறி கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழர்களான அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர் மற்றும் ஜெபஸ்டின் டேவிட் குமார் ஆகிய மூவர் உயிரிழந்திருக்கும் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் எற்படுத்தியுள்ளது.</p><p>வேட்டையில் ஈடுபட்டதாகவும், வனத்துறை அலுவலர்களைத் தாக்கியதாகவும் கூறப்படும் நிலையில், மூன்று பேரின் உயிரையும் பறிக்கும் அளவிற்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. மனித உயிர்களின் மதிப்பை சிறிதும் கருத்தில் கொள்ளாமல் நிகழ்த்தப்பட்டுள்ள இந்தக் கொடூரச் சம்பவத்தை தேமுதிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.</p><h2>இழப்பீடு வழங்க வேண்டும்</h2><p>சட்டத்தை அமல்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள வனத்துறையினர், தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி உயிரைப் பறிக்கும் வகையில் செயல்பட்டிருந்தால், அதற்கு உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தச் சம்பவம் தொடர்பாக உடனடியாக கொலை வழக்குப் பதிவு செய்து, வெளிப்படைத்தன்மை மிக்க, பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும். விசாரணையின் மூலம் உண்மை வெளிக்கொண்டு வரப்பட்டு, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>மேலும், உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கும் தமிழக அரக உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் குடும்பங்களில் தகுதியான ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.</p><h2>தண்டிக்கப்பட வேண்டும்</h2><p>தமிழ்நாடு - கர்நாடக எல்லைப் பகுதிகளில் வாழும் தமிழர்களின் உயிருக்கும், உடைமைக்கும், உரிமைகளுக்கும் உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது இரு மாநில அரசுகளின் கடமையாகும். எனவே, தமிழ்நாடு அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, கர்நாடக அரசிடம் உரிய முறையில் வலியுறுத்தி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>தமிழர்களின் உயிரிழப்பை சாதாரணமாகக் கடந்து செல்லாமல், இந்தச் சம்பவத்திற்கு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">காரணமானவர்கள் </a>சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கைகளை கர்நாடக அரக மேற்கொள்ள வேண்டும் என தேமுதிக சார்பில் வலியுறுத்துகிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தவெக அரசுக்கு ஓராண்டு காலம் அவகாசம் கொடுப்போம் - அண்ணாமலை பேச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-give-the-tvk-government-a-one-year-grace-period-annamalais-remarks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-give-the-tvk-government-a-one-year-grace-period-annamalais-remarks#comments</comments><guid isPermaLink="false">d2383618-917e-4f1a-ab45-f639dc57f71b</guid><pubDate>Sun, 16 Aug 2026 12:28:47 +0000</pubDate><atom:updated>2026-08-16T12:28:47.780Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Annamalai,அண்ணாமலை,Chennai,சென்னை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/zcl07fid/Untitled-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அண்ணாமலை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/zcl07fid/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை ,</p><p>சென்னை அண்ணாமலையின் தலைமையில் வீ த லீடர்ஸ் அமைப்பு சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் சுமார் 1,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். மரங்களை வளர்த்து, நீர்நிலைகளை பாதுகாக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த பேரணி நடைபெற்றது.</p><h2>73 நாட்களில் 20 லட்சம் பேர் இணைவு</h2><p>தவெக ஆட்சியில் ஊழல் குறையவில்லை தொடங்கியுள்ளது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேரணியில் வீ த லீடர்ஸ் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை பேசியதாவது;-</p><p>நமது அமைப்பை அரசியலாக மாற்றி மக்களுக்கான அரசியலாக செயல்படப்போகிறோம். சேவை மனப்பான்மையோடு வருபவர்களால் மட்டும்தான் அடிப்படை அரசியலை மாற்ற முடியும். வீ த லீடர்ஸ் அமைப்பை தொடங்கிய 73 நாட்களில் 20 லட்சம் தன்னார்வலர்கள் இணைந்துள்ளனர்.</p><p>தலைவர்கள் டெல்லியில் அமர்ந்து தமிழ்நாட்டின் முடிவை எடுக்கக்கூடாது. டெல்லி, சென்னை ஜார்ஜ் கோட்டை, போயஸ் கார்டன், பனையூரில் இருந்து முடிவெடுப்பேன் என்ற காலம் மாறிவிட்டது.</p><h2>எதிர்க்கட்சிகள் ஆட்சியை கவிழ்க்க முயற்சி</h2><p>நான் அரசியல் பேசவில்லை என கூறுகின்றனர். உலகத்தில் அரசியல் பேசுவதுதான் எளிமையான வேலை. அரசியலை செய்வதற்கு அண்ணாமலை வேண்டாம். புதிதாக வந்துள்ளவர்களுக்கு ஓராண்டு தருவோம். ஓராண்டுக்கு பிறகு செயல்பாடு சரியில்லை என்றால் முதல் ஆளாக குரல் கொடுப்போம். ஆளுங்கட்சியை கவிழ்த்து ஆட்சிக்கு வர வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சியின் அரசியலாக உள்ளது. அட்ஜெஸ்ட்மெண்ட் அரசியலை விட்டுவிட்டு மக்களுக்கான அரசியலை எதிர்க்கட்சிகள் செய்ய வேண்டும்.</p><p>மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு நியாயமான தீர்ப்பை தமிழகத்துக்கு தர வேண்டும். மேகதாது கட்டுவதில் பிரச்சினை இல்லை என மத்திய அரசு கூறுவதை கேட்கும்போது நெஞ்சு வலிக்கிறது. பள்ளிகள், நீர்நிலைகள், கிராமப்புறங்களை சீரமைக்க முதல்-அமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறேன்.</p><p>வீ த லீடர்ஸ் அமைப்பு மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்க்கிறது. பிரதமர் மோடியை நான் நம்புகிறேன். அவர் நேர்மையான மனிதர். தவறு செய்யாத மனிதர். எனவே அவர் இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினையை தீர்க்க யோசித்து முடிவு எடுக்க வேண்டும். இரு மாநில முதல்-அமைச்சர்களையும் அமர வைத்து பேச வேண்டும்.</p><h2>ஊழல் குறையவில்லை</h2><p>அமித் ஷாவை பார்த்தார். அதனால் பாஜகவின் பீ டீம் என என்னைப் பற்றி பேசுகிறார்கள். டெல்லியில் பொறுப்பெடுத்து 3 ஆண்டுகள் அங்கிருக்கும்படி அமித் ஷா கூறினார். அவரிடம் வேண்டாம் என சொல்லிவிட்டேன். தமிழ்நாட்டிலேயே மக்கள் சேவை செய்து, அரசியல் செய்கிறேன் என அமித் ஷாவிடம் கூறினேன்.</p><p>தவெக ஆட்சியில் ஊழல் குறைந்துள்ளது என கூறிகிறார்கள். ஆனால் ஊழல் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">குறையவில்லை </a>தொடங்கியுள்ளது. டெண்டருக்கு அமைச்சர்கள் பணம் வாங்குகிறார்கள். அது குறித்து என்னிடம் ஆடியோவே உள்ளது. சில அமைச்சர்கள் ஊழல் செய்கிறார்கள். ஊழல் செய்பவர்களுக்கு எதிராக முதல்-அமைச்சர் கடிவாளம் போட வேண்டும். நமது காலத்தில் ஊழலை ஒழிக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>அந்தியூர் அருகே 85 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/elderly-woman-raped-in-remote-hill-village-anthiyur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/elderly-woman-raped-in-remote-hill-village-anthiyur#comments</comments><guid isPermaLink="false">908402ae-3bed-4929-9e35-9a0f988fb0be</guid><pubDate>Sun, 16 Aug 2026 12:26:59 +0000</pubDate><atom:updated>2026-08-16T12:26:59.466Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>old woman,மூதாட்டி,பாலியல் பலாத்காரம்,sexually assaulted,அந்தியூர்,Anthiyur</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/34pobgj1/grandma-rape.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 85 வயது மூதாட்டி]]></media:title><media:description type="html"><![CDATA[ அந்தியூர் அருகே 85 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/34pobgj1/grandma-rape.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு, </p><p>ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே, வீட்டில் தனியாக இருந்த 85 வயது மூதாட்டி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">பாலியல் பலாத்காரம்</a> செய்யப்பட்ட கொடூர சம்பவம் மாவட்டத்தையே உலுக்கியுள்ளது.</p> <h2>மலைப்பகுதியில் தனி வீடு</h2><p>ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியை ஒட்டியுள்ளது கரும்பாறை கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்து வீட்டில் 85 வயது மதிக்கத்தக்க <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF">மூதாட்டி</a> ஒருவர் தனியாக வசித்து வந்தார். இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். </p> <h2>பாலியல் பலாத்காரம்</h2><p>இந்த நிலையில் தனியாக வீட்டில் வசித்து வந்த மூதாட்டி நேற்று இரவு வழக்கம் போல் தூங்கி கொண்டிருந்தார். அப்போது இரவில் மூதாட்டி வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடீரென மூதாட்டி வாயை பொத்தி மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். </p><h2> சிகிச்சை</h2><p>மறுநாள் காலை மூதாட்டியின் உறவினர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்தனர். மூதாட்டி ஆடைகள் கலைந்த நிலையில், ரத்த வெள்ளத்தில் படுக்கையில் கிடந்து துடித்துள்ளார்.அவரை மீட்டு உடனடியாக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமைமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். </p> <h2>போலீஸ் விசாரணை</h2><p>இது குறித்து அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமரா காட்சி காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் விசா  ரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.</p><p>இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஒரே குடும்பம்... 3 நீட் வெற்றியாளர்கள்! மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்த சகோதரர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/one-family-3-neet-winners-brothers-who-secured-a-place-in-medical-college</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/one-family-3-neet-winners-brothers-who-secured-a-place-in-medical-college#comments</comments><guid isPermaLink="false">b8a649a0-d203-484f-9133-e08df5b9f35d</guid><pubDate>Sun, 16 Aug 2026 12:15:43 +0000</pubDate><atom:updated>2026-08-16T12:15:43.343Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,வெற்றி,winners,சகோதரர்கள்,Brothers,மருத்துவக் கல்லூரி,medical college,NEET,நீட்,ஒரே குடும்பம்,one family</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/onhe42os/115.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/onhe42os/115.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே வெள்ளாங்குளி பகுதியைச் சேர்ந்தவர் நெசவாளரான ராம்குமார் (வயது 49). இவருடைய மனைவி மங்கையர் திலகம். இந்த தம்பதிக்கு வெங்கட் ஸ்ரீ, அருண், தரண் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் 3 பேரும் வெள்ளாங்குளி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்தனர். மூத்த மகன் வெங்கட் ஸ்ரீ கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர் கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதியும் போதிய மதிப்பெண்கள் கிடைக்கவில்லை. இந்த ஆண்டும் அவர் நீட் தேர்வு எழுதியதில் 720-க்கு 440 மதிப்பெண்கள் பெற்றார்.</p><h2>மருத்துவக் கல்லூரிகளில் இடம்...</h2><p>இதேபோன்று அவருடைய தம்பிகளான இரட்டையர்கள் அருண், தரண் ஆகியோரும் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்று <a href="https://www.dailythanthi.com/topic/neet-exam">நீட் தேர்வு </a>எழுதினர். இதில் அவர்கள் முறையே 511 மற்றும் 494 மதிப்பெண்கள் பெற்றனர். இதையடுத்து 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வில் 3 பேருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. வெங்கட் ஸ்ரீக்கு நாகர்கோவில் பல் மருத்துவக் கல்லூரியிலும், அருணுக்கு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியிலும், தரணுக்கு கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது. எனவே சகோதரர்களை அனைவரும் பாராட்டினர்.</p>]]></content:encoded></item><item><title>சேலத்தில் அகில இந்திய அளவிலான நாய்கள் கண்காட்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/all-india-dog-show-in-salem</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/all-india-dog-show-in-salem#comments</comments><guid isPermaLink="false">c9afc28d-1cad-45c8-8f95-2a0976e55f35</guid><pubDate>Sun, 16 Aug 2026 11:52:03 +0000</pubDate><atom:updated>2026-08-16T11:52:03.331Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,சேலம்,கண்காட்சி,நாய்,participated,Dog show</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/d4ncollt/all-india-dog-show.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ நாய்கள் கண்காட்சி]]></media:title><media:description type="html"><![CDATA[ சேலத்தில் அகில இந்திய அளவிலான நாய்கள் கண்காட்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/d4ncollt/all-india-dog-show.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம், </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D">சேலத்தில்</a> நடைபெற்ற அகில இந்திய நாய் கண்காட்சியில், பல்வேறு மாநிலங்களில் இருந்து 400-க்கும் மேற்பட்ட நாய் வகைகள் பங்கேற்று பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. </p> <h2>பிரம்மாண்ட கண்காட்சி</h2><p>சேலம் மாநகரில் அகில இந்திய அளவிலான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">நாய் கண்காட்சி</a> மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த கண்காட்சியில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மற்றும் டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து நாய் வளர்ப்போர் தங்களது செல்ல பிராணிகளுடன் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.</p><h2>400-க்கும் மேற்பட்ட நாய்கள்</h2><p>இக்கண்காட்சியில் ஜெர்மன் ஷெப்பர்ட், ராட்வீலர், டாபர்மேன், லேப்ரடார், கோல்டன் ரெட்ரீவர், பக்  உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட நாய்கள் அணிவகுத்து நின்றன. மேலும், நம் நாட்டுக்கே பெருமை சேர்க்கும் சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை, ராஜபாளையம் போன்ற பாரம்பரிய நாட்டு நாய் வகைகளும் கம்பீரமாக இடம்பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.</p> <h2>பார்வையாளர்கள் உற்சாகம்</h2><p>கண்காட்சியில் பங்கேற்ற நாய்களின் சுறுசுறுப்பு, கீழ்ப்படிதல், அதன் உடலமைப்பு மற்றும் ஓட்டப்பந்தயம் ஆகியவற்றின் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டு சிறந்த நாய்களுக்கு பரிசுகளும், கோப்பைகளும் வழங்கப்பட்டன. வண்ண வண்ண உடைகளுடனும், விதவிதமான சிகை அலங்காரங்களுடனும் வலம் வந்த நாய்களை காண சேலம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் நாய் பிரியர்கள் கண்காட்சிக்கு திரண்டு வந்தனர். </p>]]></content:encoded></item><item><title>முதியோர்கள் பாதுகாப்பில் கோட்டை விடும் தவெக அரசு - வானதி சீனிவாசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-government-fails-to-ensure-the-safety-of-the-elderly-vanathi-srinivasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-government-fails-to-ensure-the-safety-of-the-elderly-vanathi-srinivasan#comments</comments><guid isPermaLink="false">1ec81ee5-63ef-49ea-936c-561dbb9a8fbe</guid><pubDate>Sun, 16 Aug 2026 11:46:42 +0000</pubDate><atom:updated>2026-08-16T11:46:42.262Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/c207agur/vanathi.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/c207agur/vanathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மூத்த குடிமக்களுக்கான நலத்திட்டங்களுடன், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் சிறப்பு திட்டங்களையும் தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை</h2><p>ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தனியாக வசித்து வந்த 85 வயது மூதாட்டி மர்ம நபரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.</p><p>இதேபோல் கடந்த வாரம் மட்டும் சென்னையில் மூதாட்டி நகைக்காக கொலை செய்யப்பட்ட சம்பவம், கோவையில் பெண் படுகொலை என தொடர்ந்து பெண்கள் மற்றும் முதியோர்கள் குறிவைக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது, மூத்த குடிமக்களின் பாதுகாப்பில் தவெக அரசு மெத்தனமாக செயல்படுவதையே காட்டுகிறது.</p><h2>கூடுதல் கவனம் தேவை</h2><p>தங்கள் வாழ்நாள் அனுபவங்களையும் நினைவுகளையும் சுமந்து நிம்மதியாக வாழ வேண்டிய முதியோர்கள், இன்று தனிமையிலும் அச்சத்திலும் வாழும் நிலைக்குத் தள்ளப்படுவது வேதனைக்குரியது.</p><p>எனவே மூத்த குடிமக்களுக்கான நலத்திட்டங்களுடன், அவர்களின் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பாதுகாப்பை </a>உறுதி செய்யும் சிறப்பு திட்டங்களையும் தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்.</p><p>மேலும் முதியோர்களின் முதுமைக் காலத்தை அச்சமற்றதும் மகிழ்ச்சியானதுமாக மாற்ற குடும்பத்தினரும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பும் மக்கள்.. உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/people-returning-to-chennai-after-the-holidays-severe-traffic-congestion-at-the-ulundurpet-toll-plaza</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/people-returning-to-chennai-after-the-holidays-severe-traffic-congestion-at-the-ulundurpet-toll-plaza#comments</comments><guid isPermaLink="false">dfedd77d-4081-4ef4-886e-ad65389f90a9</guid><pubDate>Sun, 16 Aug 2026 11:09:41 +0000</pubDate><atom:updated>2026-08-16T11:09:41.321Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,உளுந்தூர்பேட்டை,உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி,Ulundurpet,Ulundurpet Tollbooth</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/p2lj7iyd/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/p2lj7iyd/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>உளுந்தூர்பேட்டை,</p><p>சுதந்திர தின விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வந்ததால், சென்னையில் வசிக்கும் தென்மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் குடும்பத்தினருடன் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இவர்களில் சிலர் அரசு சார்பில் இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களிலும், ஆம்னி பஸ்களிலும், தங்களது சொந்த வாகனங்களிலும் புறப்பட்டு சென்றனர்.</p><h2>கடும் போக்குவரத்து நெரிசல்</h2><p>இந்த நிலையில் விடுமுறை முடிவடைந்ததையொட்டி சொந்த ஊருக்கு சென்றவர்கள் அரசு பஸ், தனியார் பஸ், கார், வேன் போன்ற பல்வேறு வாகனங்களில் இன்று சென்னைக்கு திரும்பி வருகின்றனர். ஒரே நாளில் சென்னைக்கு ஏராளமான வாகனங்கள் படையெடுத்து வருவதால், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.</p><p>வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்தபடியே சுங்கச்சாவடியை கடந்து செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர். <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">போக்குவரத்து </a>நெரிசலை சரிசெய்யும் பணியில் சுங்கச்சாவடி பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடகாவில் தமிழர்கள் 3 பேர் சுட்டுக் கொலை: வானதி சீனிவாசன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/3-tamils-shot-dead-in-karnataka-vanathi-srinivasan-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/3-tamils-shot-dead-in-karnataka-vanathi-srinivasan-condemns#comments</comments><guid isPermaLink="false">eb979ab3-edcc-4330-b9ff-1f06dcd4e3ea</guid><pubDate>Sun, 16 Aug 2026 10:56:36 +0000</pubDate><atom:updated>2026-08-16T10:56:36.228Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Karnataka,கர்நாடகா,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,சுட்டுக் கொலை,தமிழர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/lisxhyx7/vanathi-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/lisxhyx7/vanathi-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாஜக தேசிய மகளிரணி தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D">வானதி சீனிவாசன்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>3 தமிழர்கள் உயிரிழப்பு</h2><p>கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹானூர் தாலுகா, காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தோமையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி சாமி, பீட்டர், குமார் ஆகிய 3 தமிழர்கள் உயிரிழந்ததாகவும், ஒருவர் காயமடைந்ததாகவும் வெளியாகியுள்ள செய்தி கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.</p><h2>துப்பாக்கிச்சூடு</h2><p>அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய கர்நாடக வனத்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. உயிரிழந்தவர்கள் மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகளைத் தேடிச் சென்றதாக அவர்களின் குடும்பத்தினர் கூறும் நிலையில், அவர்கள் வேட்டையாடச் சென்றதாக கர்நாடக வனத்துறை தெரிவிக்கிறது. எனவே, இந்த சம்பவம் குறித்து பாரபட்சமற்ற முறையில் உரிய விசாரணை நடத்தி, உண்மையை கர்நாடக அரசு விரைவில் வெளிக்கொணர வேண்டும்.</p><p>மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடும், காயமடைந்தவருக்கு தேவையான மருத்துவ உதவியும் வழங்கிட கர்நாடக அரசை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடக வனத்துறையினரால் தமிழர்கள் 3 பேர் சுட்டுக் கொலை: மு.க.ஸ்டாலின் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-tamils-shot-dead-by-karnataka-forest-department-personnel-mk-stalin-condemns-the-incident</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-tamils-shot-dead-by-karnataka-forest-department-personnel-mk-stalin-condemns-the-incident#comments</comments><guid isPermaLink="false">0399491a-c2cd-47ac-9058-3a8e25215e40</guid><pubDate>Sun, 16 Aug 2026 10:40:21 +0000</pubDate><atom:updated>2026-08-16T10:40:21.291Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,M.K. Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/og9olp76/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/og9olp76/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மேகதாது விவகாரம் போல இதிலும் வாய்மூடி இருக்காமல், இச்சம்பவத்தில் தமிழ்நாடு அரசு கர்நாடக அரசுக்குத் தனது கண்டனத்தைப் பதிவுசெய்திட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>தமிழர்கள் சுட்டுக் கொலை</h2><p>கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் மூவரை அம்மாநில வனத்துறையினர் அநியாயமான முறையில் சுட்டுக் கொன்றிருக்கும் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. மனித உயிர்கள் குறித்த எந்த மதிப்பும் இல்லாமல் நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்தக் கொடூரச் செயல் கடும் கண்டனத்துக்குரியது.</p><p>குற்றமிழைத்தவர்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் கர்நாடக வனத்துறையினர் ஈடுபடுவதாகத் தெரிகிறது. அது தவிர்க்கப்பட்டு, இதனைக் கொலை வழக்காகப் பதிந்து, வெளிப்படைத்தன்மை மிக்க, பாரபட்சமற்ற நீதி விசாரணை நடைபெற்று இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இனி இப்படி ஒரு குற்றத்தில் ஈடுபடும் துணிச்சல் எவருக்கும் வராது.</p><h2>அரசுப் பணி வழங்க வேண்டும்</h2><p>மேகதாது விவகாரம் போல இதிலும் வாய்மூடி இருக்காமல், இச்சம்பவத்தில் தமிழ்நாடு அரசு கர்நாடக அரசுக்குத் தனது கண்டனத்தைப் பதிவுசெய்திட வேண்டும்.</p><p>உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தருவதோடு, அவர்களுக்கு அரசுப் பணியும் கிடைக்கச் செய்ய <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழ்நாடு </a>அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திற்பரப்பு அருவியில் மிதமாக விழும் தண்ணீரில்  சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-take-a-refreshing-dip-in-the-gently-falling-water-of-thirparappu-falls</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-take-a-refreshing-dip-in-the-gently-falling-water-of-thirparappu-falls#comments</comments><guid isPermaLink="false">c2979bfa-ffc8-4819-8e87-aa992b16a133</guid><pubDate>Sun, 16 Aug 2026 10:30:41 +0000</pubDate><atom:updated>2026-08-16T10:30:41.629Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tourists,Thirparappu Falls,திற்பரப்பு அருவி,சுற்றுலாப் பயணிகள்,Exciting bath உற்சாக குளியல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/q7fhzcpe/thirparappu-falls.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/q7fhzcpe/thirparappu-falls.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி,</p><p>திற்பரப்பு அருவியில் மிதமாக விழும் தண்ணீரில்  சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல் போட்டு மகிழ்ந்தனர்.</p><h2><strong>திற்பரப்பு அருவி</strong></h2><p>குமரிக் குற்றாலம்' என்று திற்பரப்பு அருவி அழைக்கப்படுகிறது. குமரி மாவட்டத்தின் சிறப்புவாய்ந்த சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது. இந்த அருவியைக்காண பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கிறார்கள். அருவியில் தண்ணீர் விழும் நேரங்களில் சுற்றுலாப்பயணிகள் ஆனந்தக்குளியல் போட்டு மகிழ்கிறார்கள்.</p> <p>தற்போது அருவிக்கு மிதமான அளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், விடுமுறை தினத்தை முன்னிட்டு திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருகை தந்தனர். அவர்கள் அருவிகளில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர். அதைத்தொடர்ந்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF">திற்பரப்பு அருவியின் </a>மேல் பகுதியில் உள்ள தடுப்பணையில் படகு சவாரி சென்றும், செல்பி படம் எடுத்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு அழுத்தம் தர அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கு அன்புமணி கடிதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/caste-based-census-anbumani-writes-to-mps-of-all-parties-urging-them-to-pressure-the-central-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/caste-based-census-anbumani-writes-to-mps-of-all-parties-urging-them-to-pressure-the-central-government#comments</comments><guid isPermaLink="false">bd937815-b2c2-484e-9243-f7e89081cd56</guid><pubDate>Sun, 16 Aug 2026 10:29:27 +0000</pubDate><atom:updated>2026-08-16T10:29:27.185Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK,தமிழகம்,மத்திய அரசு,சாதிவாரி கணக்கெடுப்பு,Central Government,எம்.பி.க்கள்,caste wise census,MPs</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/s8814lgj/varie.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/s8814lgj/varie.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சாதிவாரி கணக்கெடுப்புக்கான செயலியில் சாதிகள் பட்டியலை இணைத்து அதிலிருந்து சாதியை தேர்ந்தெடுத்து நிரப்பும் முறையை கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த ஓபிசி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/anbumani-ramadass">அன்புமணி ராமதாஸ்</a> வலியுறுத்தியுள்ளார்.</p><h2>புதிய அத்தியாயம்</h2><p>இது தொடர்பாக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அஞ்சல் வாயிலாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. </p><p>அவற்றின் விவரம்:</p><p>அன்பிற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கு, வணக்கம்!</p><p>இந்தியாவின் சமூகநீதி வரலாற்றில் இன்னும் சில வாரங்களில் புதிய அத்தியாயம் பிறக்கப் போகிறது. ஆம்.... நாம் அனைவரும் பல பத்தாண்டுகளாக போராடி வந்த சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டமாக மக்கள்தொகை எண்ணிக்கையுடன், சாதியையும் பதிவு செய்யும் பணி வரும் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கவுள்ளது. </p><h2>சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு</h2><p>இந்தப் பணி நாம் அனைவரும் எதிர்பார்த்தவாறு பயனுள்ள வகையில் இருப்பதை உறுதி செய்வதற்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக சமூகநீதியில் அக்கறை கொண்ட கட்சியின் தலைவர் என்ற முறையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.</p><p>இந்தியாவில் 2021ஆம் ஆண்டில் நடத்தப்பட வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, 2026-27ஆம் ஆண்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதை தாங்கள் அறிவீர்கள். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டமான வீட்டுப்பட்டியல் தயாரிப்பு பணி தமிழ்நாடு உள்ளிட்ட அண்மையில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற சில மாநிலங்களைத் தவிர இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது.</p><h2>செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல்</h2><p>அடுத்தக்கட்டமாக, மக்களை எண்ணும் பணிகள் மலைப்பிரதேசங்களில் உள்ள மாநிலங்களில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதலும், மற்ற மாநிலங்களில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி முதலும் நடைபெறவுள்ளன. இந்த பணியின் போது, சாதி என்ற கேள்விக்கான பதிலை குறிப்பிடும் பகுதியை காலியாக விட்டு விடுவதென்றும், அந்த இடத்தில் மக்கள் குறிப்பிடும் சாதியின் பெயரை அப்படியே பதிவு செய்வதென்றும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளும் இந்தியத் தலைமைப் பதிவாளர் முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.</p><h2>பல மடங்கு அதிக சாதிகள்</h2><p>இந்த முறையில் மக்களின் சாதி விவரம் சேகரிக்கப்பட்டால், நிறைய சிக்கல்கள் ஏற்படும். நாடு முழுவதும் ஒவ்வொரு சாதியிலும் பல உட்பிரிவுகள் உள்ளன. பெரும்பான்மையான மக்கள் சாதியின் பெயரைக் கடந்து உள்பிரிவுகளால் தங்களை அழைத்துக் கொள்வார்கள். ஆனால், அந்த உட்பிரிவுகளின் பெயர்கள் அரசால் பயன்படுத்தப்படும் சாதிகளின் பட்டியலில் இடம் பெற்றிருக்காது. இத்தகைய சூழலில், மக்கள் தெரிவிக்கும் சாதியின் பெயரை அப்படியே நிரப்பி, அது சாதியின் பெயராக இல்லாமல், உட்பிரிவின் பெயராக இருந்தால், அரசின் பட்டியலில் உள்ள சாதிகளின் எண்ணிக்கையை விட பல மடங்கு அதிக சாதிகள் இருப்பதாக கணக்கில் காட்டப்படும். இது சரி செய்ய முடியாத குழப்பத்தை உண்டாக்கி, இந்தக் கணக்கெடுப்பின் தரவுகளை பயன்படுத்த முடியாத நிலையை உருவாக்கிவிடும்.</p> <h2>46.70 லட்சம் சாதிகள்</h2><p>2011-ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சார்பில் சமூக, பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பு மத்திய அரசால் நடத்தப்பட்டது. அதற்கான வினாக்கள் பட்டியலில் இதே போல் தான் சாதி என்ற வினாவுக்கு எதிரில் காலியிடம் விடப்பட்டு, மக்கள் தெரிவிக்கும் சாதியின் பெயரை அதில் குறிப்பிடும் முறை பின்பற்றப்பட்டது. அதன் விளைவு அந்தக் கணக்கெடுப்பில் நாடு முழுவதும் 46 லட்சத்து 70 ஆயிரம் சாதிகள் இருப்பதாக தெரியவந்தது. </p><p>இந்தியாவில் 1931ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பில் 4,147 சாதிகள் மட்டுமே அறிவிக்கப்பட்ட நிலையில், 2011 கணக்கெடுப்பில் 46.70 லட்சம் சாதிகள் இருப்பதாகக் கூறப்பட்டது விமர்சனங்களுக்கு உள்ளானது. அதனால், அந்தக் கணக்கெடுப்பு தரவுகள் சமூகநீதிக்காக பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்டு விட்டன.</p><p>இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு என்ற நமது கனவு எளிதில் நனவாகிவிடவில்லை. 1931-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சியில் தான் கடைசியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தட் பட்டது. இந்திய விடுதலைக்குப் பிறகு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கர், சோஷலிசத் தலைவர் இராம் மனோகர் லோகியா, பிகார் முன்னாள் முதலமைச்சர் பாரத் ரத்னா கர்ப்பூரி தாக்கூர், பி.பி.மண்டல் உள்ளிட்ட தலைவர்கள் குரல் கொடுத்தனர்.</p><h2>சுமார் நூறு ஆண்டுகளாக</h2><p>1980-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாசு அய்யா, பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கான்ஷிராம், வட இந்தியப் பெரியார் என்றழைக்கப்பட்ட ராம் அவதேஷ்சிங், பெரியாரின் பெருந்தொண்டர் வே. ஆனைமுத்து, ஜனதாதள தலைவர்கள் முலாயம்சிங் யாதவ், சரத் யாதவ், லாலு பிரசாத் யாதவ், நிதிஷ்குமார், ராம்விலாஸ் பாஸ்வான், தேசியவாத காங்கிரஸ் நிறுவனர் சரத்பவார், அண்மைக் காலங்களில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்தனர். 2004-09 காலத்தில் நான் மத்திய அமைச்சராக இருந்த போது, 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்தக் கோரி நம்மில் பலர் உட்பட 150க்கும் மேற்பட்ட ஓபிசி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துகளைப் பெற்று 24.10.2008ஆம் நாள் அன்றைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலிடம் மனு அளித்தது நம்மில் பலருக்கு நினைவிருக்கலாம்.</p><p>இப்படியாக கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளின் பயனாகவே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு சாத்தியமானது. சுமார் நூறு ஆண்டுகளாக இந்தக் கோரிக்கையை ஆட்சியாளர்கள் ஏற்காத நிலையில் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தான் ஏற்றுக்கொண்டு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆணையிட்டிருக்கிறார்.</p><p>இந்தியாவின் தலைசிறந்த சமூகநீதித் தலைவர்கள் உள்ளிட்ட 3 தலைமுறை தலைவர்கள் தொடர்ந்து போராடியதன் பயனாகவே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு சாத்தியமானது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது கடைபிடிக்கப்படும் தவறான நடைமுறையால் நமது அனைத்து உழைப்பும் வீணாகிப் போவதை நாம் அனுமதிக்கக் கூடாது. அது சமூகநீதிக்கு நாம் செய்யும் துரோகமாகிவிடும்.</p><h2>துல்லியமான விவரங்கள்</h2><p>இந்த சிக்கலுக்கான தீர்வு மிகவும் எளிதானது. இந்தியாவில் என்னென்ன சாதிகள் உள்ளன? என்பது குறித்த பட்டியல் மத்திய அரசிடமும், மாநில அரசுகளிடமும் உள்ளன. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தேசிய அளவில் மத்திய அரசால் நடத்தப்படும் நிலையில், அந்தப் பட்டியலை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான செயலியின் மென்பொருளில் இணைத்து, அந்தப் பட்டியலில் இருந்து மக்கள் தங்கள் சாதியை தேர்வு செய்யும் முறையை பின்பற்றுவது தான் சரியான தீர்வாகும்.</p><p>கடந்த 2023-ஆம் ஆண்டு பீகார் மாநிலத்திலும், 2024-ஆம் ஆண்டு தெலுங்கானா மாநிலத்திலும் நடத்தப்பட்ட சாதிவாரி சர்வேயில், அரசின் பட்டியலில் உள்ள சாதிகள் வரிசைப்படுத்தப்பட்டு, அதை மக்கள் தேர்ந்தெடுத்து நிரப்பும் முறை கடைபிடிக்கப்பட்டது. அதன் பயனாக பீகார் மாநில சாதிவாரி சர்வேயில் துல்லியமான விவரங்கள் கிடைத்தன. அதனால் அதே முறையை இந்த கணக்கெடுப்பிலும் பின்பற்றலாம்.</p><p>சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதிகளை பதிவு செய்யும் பணிகள் இன்னும் இரு வாரங்களில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அது சமூகநீதிக்கு வலிமை சேர்க்கும் வகையில் முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டியது நமது கடமை ஆகும்.</p><h2>மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்</h2><p>அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில் மக்களை எண்ணும் பணியின் போது மத்திய அரசின் சாதிகள் பட்டியலைக் காட்டி, அதிலிருந்து அவர்களின் சாதி மற்றும் எண்ணை பதிவு செய்யும் முறை கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நாம் அனைவரும் அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த முறையும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்கள் துல்லியமாக அமையாவிட்டால், இனி ஒரு முறை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதோ, அவற்றில் முக்கியமான தரவுகள் கிடைப்பதை உறுதி செய்வதோ சாத்தியமில்லை. </p><p>எனவே, இப்போது நமக்கு கிடைத்துள்ள வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது சாதிகளை துல்லியமாக பதிவு செய்யும் முறையை பின்பற்றும்படி நாம் தனிப்பட்ட முறையிலும், நமது கட்சித் தலைமையின் சார்பிலும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்; இதை மிகவும் அவசர, அவசியமான பணியாகக் கருதி மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சென்னை: பிளாஸ்டிக் பாட்டிலை போட்டால் &apos;மஞ்சப்பை&apos; வருவதை பார்த்து வியந்த ஜெர்மனி பயணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-german-tourist-amazed-by-yellow-bag-for-plastic-bottle</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-german-tourist-amazed-by-yellow-bag-for-plastic-bottle#comments</comments><guid isPermaLink="false">bf9d8b7e-38fb-4e7d-8ae6-200074c28705</guid><pubDate>Sun, 16 Aug 2026 10:10:45 +0000</pubDate><atom:updated>2026-08-16T10:10:45.640Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,பயணி,ஜெர்மனி,German,பிளாஸ்டிக் பாட்டில்,Plastic bottle,Traveler,மஞ்சப்பை,Manjapai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/64aqi5jr/plastic-bottle.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஜெர்மனி பயணி]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை: பிளாஸ்டிக் பாட்டிலை போட்டால் 'மஞ்சப்பை' வருவதை பார்த்து வியந்த ஜெர்மனி பயணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/64aqi5jr/plastic-bottle.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE">மெரினா</a> கடற்கரையில் வைக்கப்பட்டிருக்கும் 'ஸ்மார்ட் ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்' என்ற தொழில்நுட்பத்தை பார்த்து, ஜெர்மனி நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் வியந்து பாராட்டிய வீடியோ இணையத்தில் செம ட்ரெண்டாகி வருகிறது.</p><h2>மஞ்சப்பை</h2><p>மெரினா பீச்சுக்கு வந்த வெளிநாட்டு பயணி, கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த ஒரு வித்தியாசமான நீல நிற மெஷினை பார்த்தார்.  தன் கையில் இருந்த பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டிலை மெஷினுக்குள் தூக்கி போட்டுள்ளார். அடுத்த நொடியே, 'சடசடவென' மற்றொரு மெஷினில் இருந்து ஒரு  <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88">மஞ்சப்பை</a> (துணிப்பை) வெளியே வந்துள்ளது. </p> <h2>பாராட்டு</h2><p>காசுக்கு கூடப் பெறாமல், குப்பையாகத் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு மாற்றாகத் துணிப்பை வழங்கும் தமிழர்களின் இந்த அசாத்திய தொழில்நுட்பத்தைக் கண்டு வியந்த பயணி ஒருவர், இந்த சுற்றுச்சூழல் முயற்சியை வெகுவாக பாராட்டியுள்ளார்.</p> <p> பொதுமக்கள் பிளாஸ்டிக் கழிவுகளை கடற்கரை மணலிலோ அல்லது கடலிலோ வீசி எறிவதை தவிர்த்து, அவற்றை முறையாக மறுசுழற்சி செய்ய ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். இதன் மூலம் மெரினா கடற்கரை தூய்மையாகவும், பிளாஸ்டிக் இல்லாத மண்டலமாகவும் பராமரிக்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>கள்ளக்குறிச்சி: நாட்டு துப்பாக்கி தயாரித்து விற்பனை செய்த தந்தை - மகன் உள்பட 3 பேர் கைது

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kallakurichi-country-made-gun-father-son-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kallakurichi-country-made-gun-father-son-arrested#comments</comments><guid isPermaLink="false">fe969476-6f2a-4c79-a654-c8eb4f2e8568</guid><pubDate>Sun, 16 Aug 2026 10:06:35 +0000</pubDate><atom:updated>2026-08-16T10:06:35.022Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கள்ளக்குறிச்சி,Kallakurichi,Crime News,கிரைம் செய்தி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/6hwlsc7m/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/6hwlsc7m/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>கள்ளக்குறிச்சி,</p><p><a href="https://www.dailythanthi.com/">கள்ளக்குறிச்சி </a>மாவட்டம் சின்னசேலம் அருகே நாகக்குப்பம் என்ற கிராமத்தில் நாட்டு துப்பாக்கி தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.</p><p>இந்த தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், நாட்டு துப்பாக்கி தயாரித்து விற்பனை செய்த சாமிதுரை மற்றும் அவரது மகன் உள்பட 3 பேரை கைது செய்தனர். </p><p>கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3 ஒற்றை குழல் நாட்டு துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். </p> ]]></content:encoded></item><item><title>கர்நாடகா வனப்பகுதியில் தமிழகத்தை சேர்ந்த மூன்று விவசாயிகள் சுட்டுக் கொலை - சி.பி.ஐ. கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-farmers-from-tamil-nadu-shot-dead-in-karnataka-forest-area-cbi-condemns-incident</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-farmers-from-tamil-nadu-shot-dead-in-karnataka-forest-area-cbi-condemns-incident#comments</comments><guid isPermaLink="false">1e3abd17-66ae-4161-8896-f1f8f7f58c82</guid><pubDate>Sun, 16 Aug 2026 09:36:23 +0000</pubDate><atom:updated>2026-08-16T09:36:23.212Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,Tamilnadu,Farmers,தமிழகம்,Karnataka,கர்நாடகா,விவசாயிகள்,இந்திய கம்யூனிஸ்டு,CPI,சுட்டுக்கொலை,மு.வீரபாண்டியன்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/svdgd28i/kaithu.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/svdgd28i/kaithu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் வனப்பகுதியில் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட மூன்று விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். </p><h2>சுட்டுக் கொலை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p><a href="https://www.dailythanthi.com/topic/karnataka">கர்நாடக மாநிலம்</a> சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹானூர் தாலுகா, தோமையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த, தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட விவசாயிகள் வனப்பகுதியில் ஆடுமாடுகளை மேய்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.</p><p>அந்த வனப்பகுதிக்குள் காணாமல் போன மாடுகளைத் தேடிச் சென்ற அந்தோணி ராஜ், ஜான், குமார் ஆகிய மூவரை  கர்நாடக மாநில வனத்துறையினர் நேற்று சுட்டுக் கொலை செய்துள்ளனர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இதை வன்மையாக கண்டிக்கிறது.</p><h2>பொய்யான குற்றச்சாட்டு</h2><p>வனத்துறையினர் தங்களது கொலைக் குற்றத்தை திசை திருப்ப அவர்கள் வேட்டையாடினார்கள் என பொய்யான குற்றச்சாட்டை சுமத்துகின்றனர். இந்த கொலையை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இக்கொலையை செய்த வனத்துறையினரைப் பணிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும். கொலைக் குற்றமாக வழக்கை கர்நாடக அரசு பதிவு செய்ய வேண்டும். இது தொடர்பாக மத்திய புலானாய்வுத் துறையின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.</p><h2>உரிய நிவாரணம்</h2><p>கொலை செய்யப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு கர்நாடக அரசு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும். இக்கொலை குறித்து, தமிழ்நாடு அரசு தனது கண்டனத்தை கர்நாடக அரசுக்கு தெரிவிக்க வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தீர்மானம் நிறைவேற்றம்

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-resolution-condemns-udayanidhi-stalin-arrest</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-resolution-condemns-udayanidhi-stalin-arrest#comments</comments><guid isPermaLink="false">4c4a4519-eb26-4e22-ba42-dc1c18902ac6</guid><pubDate>Sun, 16 Aug 2026 09:32:58 +0000</pubDate><atom:updated>2026-08-16T09:32:58.303Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/tjndudaj/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/tjndudaj/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[   <p>சென்னை,</p><p>திமுக தலைமையில் அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் <a href="https://www.dailythanthi.com/">திமுக </a>சட்டத்துறை ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக வடக்கு மண்டல வழக்கறிஞர்கள் அணியினர் கலந்து கொண்டனர் . இதில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டர்.</p><h2>தீர்மானம் நிறைவேற்றம்</h2><p>இந்த நிகழ்ச்சியில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, தஞ்சையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த கைதை கண்டித்து தவெக அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.</p><p>மேகதாது அணை விவகாரத்தில் தவெக அரசு அலட்சியப்போக்குடன் செயல்படுவதாகவும், அதை கண்டித்தும் திமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.</p><p>வாக்கு எந்திரத்திற்கு மாற்றாக வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.</p><p>இதனிடையே, கடந்த 3ம் தேதி தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.  </p><h2>தஞ்சை ஆர்ப்பாட்டத்தின்போது உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, </h2><p> கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் வந்திருக்க வேண்டும். காவிரியில் ஒருசொட்டு தண்ணீர் கூட வரவில்லை. ஆனால் இதுபற்றி இன்று இருக்கும் முதல்-அமைச்சர் வாயை திறந்து பேசவில்லை.</p><p>முதல்-அமைச்சருக்கு இருக்கும் ஒரே கவலை திமுக மீது என்ன பொய் வழக்கு போடலாம் என்பதுதான்’ என்றார்.</p><p>அப்போது அங்கு கூடியிருந்த திமுகவினர், நடிகை ஒருவரின் பெயரை கூறி கூச்சலிட்டனர். </p><p>அப்போது தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், எங்கே தண்ணீர் வருகிறதோ இல்லையோ அங்கே தண்ணீர் வர வேண்டும்... நான் காவிரியை கூறினேன்’ என்றார். </p><p>இந்த பேச்சு இரட்டை அர்த்தம் கொண்டதாகவும், சர்ச்சைக்குரிய வகையிலும், ஆபாசமாகவும் இருந்ததாக கூறி உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. </p> ]]></content:encoded></item><item><title>ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்; பரிசல் பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-flock-to-okenakkal-disappointed-as-travel-ban-imposed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-flock-to-okenakkal-disappointed-as-travel-ban-imposed#comments</comments><guid isPermaLink="false">4a207a23-533b-4571-9dce-18e4ccf0e7a9</guid><pubDate>Sun, 16 Aug 2026 09:32:39 +0000</pubDate><atom:updated>2026-08-16T09:32:39.141Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஒகேனக்கல்,சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்,Tourists flock,Okenakkal</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/2z0haa7t/114.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/2z0haa7t/114.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தர்மபுரி,</p><p>தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தற்போது வார விடுமுறை தினம் என்பதால், ஒகேனக்கலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.</p><h2>பரிசலில் பயணம் செய்ய தடை</h2><p>இந்த நிலையில், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருவதால், காவிரியில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரியில் 4.500 கன அடியில் இருந்து 7,000 கன அடியாக நீர் வரத்து உயர்ந்துள்ளது. இந்த நிலையில் வார விடுமுறை தினமான இன்று<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%92%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D"> ஒகேனக்கலில்</a> சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. அங்குள்ள அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலாபயணிகள் பரிசலில் பயணம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>“நான் கூட இதுக்காக தான் கைது பண்றாங்கன்னு நினைச்சேன்..?!” - உதயநிதி ஸ்டாலின் பேச்சு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-too-thought-that-was-the-reason-i-was-being-arrested-udhayanidhi-stalins-remarks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-too-thought-that-was-the-reason-i-was-being-arrested-udhayanidhi-stalins-remarks#comments</comments><guid isPermaLink="false">4acdf983-ea9f-47e1-8f09-81e29db5635b</guid><pubDate>Sun, 16 Aug 2026 09:14:47 +0000</pubDate><atom:updated>2026-08-16T09:14:47.104Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,திமுக,DMK,தமிழகம்,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,அரசியல்,tn politics,தவெக அரசு,TVK Government,tvk govt</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/h5k58myu/matter.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/h5k58myu/matter.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>த.வெ.க. ஆட்சியில் எதற்கெடுத்தாலும் கைது செய்யும் நிலை உள்ளது என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். </p><h2>நின்னா கைது, நடந்தா கைது, பேசுனா கைது</h2><p>இதுதொடர்பாக திமுக வழக்கறிஞர் அணி கூட்டத்தில் அவர் பேசியதாவது:-</p><p>தவெக ஆட்சிக்கு வந்த பிறகு வழக்கறிஞரின் பணி மிக அவசியமானதாக இருக்கிறது. கடந்த 100 நாட்களில் Busy-ஆக இருப்பது வழக்கறிஞர் அணி தான்.  தவெக ஆட்சியில் எதற்கெடுத்தாலும் கைது செய்யும் நிலை உள்ளது. ஏனென்றால் நின்னா கைது, நடந்தா கைது, பேசுனா கைது, சமூக ஊடகங்களில் போஸ்ட் போட்டா கைது என ஒரு மோசமான பாசிச அரசாக தவெக அரசு செயல்பட்டு வருகிறது.</p><p>அந்தளவுக்கு இந்த அரசுக்கு In-Security ரொம்ப அதிகம். தூங்கி எழுந்தா இன்னைக்கு யாரை கைது செய்ய வேண்டும்? என Time Table போட்டு கைது செய்து வருகிறது</p><p>தோல்விக்கு பிறகு ஜென் z இளைஞர்களை எழுப்பி விட்டுள்ளோம். ஜென் z இளைஞர்களையும் டார்கெட் செய்து கைது செய்கிறார்கள்.</p><h2>கோவை கல்லூரி மாணவர் கொலை</h2><p>முதல்-அமைச்சரையே சிறைக்கு அனுப்பியது திமுக சட்டத்துறை. தவெக அரசு கைது செய்தபோதே திமுக வழக்கறிஞர் அணி சட்டப்போராட்டம் நடத்தியது.  சோர்ந்து போயிருந்த நாம் அரசின் கைது நடவடிக்கை மூலம் மீண்டு வந்துள்ளோம்.</p><p>சீட்டுக்கட்டுல 52ம் ஜோக்கர்.. அடைமொழி வெச்சி கூப்பிட்டாதான் அமைச்சர்கள் யார்னு தெரியுது. யார் எந்த துறை அமைச்சர்னு.. முதல்-அமைச்சருக்கே தெரியாது. </p><p>கோவை கல்லூரி மாணவர் அமுதனின் கொலையை கோஷ்டி பூசல் என தவெக அமைச்சர் சொல்கிறார். 10 பேருக்கும் 10 பேருக்கும் தகராறு நடந்தால் அதுக்கு பெயர் கோஷ்டி பூசல். ஆனால், 10 பேர் சேர்ந்து ஒரு பையனை அடிச்சா அதுக்கு பெயர் கொலை. அது என்ன கோஷ்டி பூசலா? கொலை செய்யப்பட்ட மாணவருக்கு திமுக நிச்சயம் நீதி வாங்கிக் கொடுக்கும்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/as1e2634/arart.jpg" /></figure><h2>காவிரியில் தண்ணி வரவேண்டும்</h2><p>டம்மி முதலமைச்சர், வெட்கம்கெட்ட அரசு, கேடுகெட்ட அரசு, எதற்கும் துப்பில்லை, தைரியம் இல்லை, விவசாயிகளை நடுரோட்டில் விட்டுவிட்டீர்கள் என இதையெல்லாம் சொன்னேன். இதற்குத்தான் கைது செய்ய வந்திருக்கிறார்கள் என நினைத்தேன். ஆனால் அதற்கு எந்த ரியாக்சனும் இல்லை. இறுதியாக காவிரியில் தண்ணி வரவேண்டும் என சொன்னதற்காக கைதானேன்.</p><p>ஜாலியா TRIP போற மாதிரிதான் போனோம்.. அரசே செலவு செய்து இலவசமாக ‘ரோடு ஷோ’ நடத்தி காட்டினார்கள்</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p> <h2>தீர்மானம்</h2><p>இதனிடையே மேகதாது விவகாரம், தமிழ்நாட்டில் அதிகரிக்கும் குற்றங்கள் ஆகியவற்றை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தலைமையில் நடந்த திமுக வழக்கறிஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கோவை மாணவர் கொலையை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/sjAjg7vX2tE"></iframe></figure>]]></content:encoded></item><item><title>கொசஸ்தலையாற்றில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதப்பது ஏன்?  - வேல்முருகன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-are-tons-of-dead-fish-floating-in-the-kosasthalaiyar-river-velmurugan-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-are-tons-of-dead-fish-floating-in-the-kosasthalaiyar-river-velmurugan-asks#comments</comments><guid isPermaLink="false">e705bb58-f172-4302-a807-31cfcd8282c5</guid><pubDate>Sun, 16 Aug 2026 09:05:38 +0000</pubDate><atom:updated>2026-08-16T09:05:38.468Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Kosasthalai river,கொசஸ்தலை ஆறு,Velmurugan,வேல்முருகன்,தி.வேல்முருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/dpwhugge/velmurugan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/dpwhugge/velmurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாசுபாட்டிற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தித் கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>மீன்கள் செத்து மிதப்பு</h2><p>சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே கொசஸ்தலையாற்றில் டன் கணக்கில் மீன்கள், இறால், நண்டு உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள் செத்து மிதப்பது அதிர்ச்சியளிப்பதோடு, தமிழக அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் தீவிரமானக் கேள்வியை எழுப்புகிறது.</p><p>மீன்கள் கொத்துக்கொத்தாக செத்து மிதக்கின்றன என்றால், அந்தத் தண்ணீரில் ஏதோ மிகப்பெரிய தவறு நடந்திருக்கிறது என்பதே பொருள். ரசாயனக் கழிவுகள் கலந்திருக்கலாம் என மீனவர்கள் குற்றஞ்சாட்டும் நிலையில், இதை வெறும் சந்தேகம் என புறந்தள்ள முடியாது. எண்ணூர்,மணலி தொழிற்பகுதியைச் சுற்றியுள்ள நீர்நிலைகள் நீண்டகாலமாக மாசுபாடு பிரச்சினையை எதிர்கொண்டு வருவது ஏற்கனவே பல்வேறு ஆய்வுகள் மற்றும் அரசு ஆவணங்களில் பதிவாகியுள்ளது.</p><p>ஒவ்வொரு முறையும் மீன்கள் செத்து மிதந்த பிறகுதான் ஆற்றின் நிலை குறித்து அதிகாரிகளுக்கு நினைவு வர வேண்டுமா?</p><h2>இதுதான் வளர்ச்சிக் கொள்கையா?</h2><p>மீனவர்களின் படகுக் கடன், வலைச் செலவு, குடும்ப உணவு, குழந்தைகளின் கல்வி என மீனவக் குடும்பத்தின் வாழ்வாதாரமே மீன்வளத்துடன் இணைந்திருக்கிறது.</p><p>இன்று மீன்கள் அழிகின்றன. தொடர்ந்து நீர்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டால், மீன்வளம் குறைந்து, எண்ணூர் மீனவ மக்களின் தலைமுறை வாழ்வாதாரமே ஆபத்துக்குள்ளாகும்.</p><p>தமிழ்நாட்டிற்கு தொழில் வளர்ச்சியும் வேலைவாய்ப்புகளும் தேவை. ஆனால் நிறுவனங்களின் லாபத்திற்காக ஆறுகளையும் கடலையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிப்பதை வளர்ச்சி என்று ஏற்க முடியாது.</p><p>நிறுவனங்களுக்கு லாபம். மக்களுக்கு மாசு. இதுதான் தமிழகத்தின் வளர்ச்சிக் கொள்கையா?</p><p>இந்தச் சம்பவத்தை வழக்கமான விசாரணையாக முடித்துவிடாமல், சுற்றுச்சூழல் அவசரநிலையாகக் கருதி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><h2>பரிசோதிக்க வேண்டும்</h2><p>நீர், படிவம், இறந்த உயிரினங்களின் மாதிரிகளைச் சேகரித்து சுயாதீன ஆய்வகங்களில் பரிசோதிக்க வேண்டும்.</p><p>கரைந்த ஆக்சிஜன், அமோனியா, ஹைட்ரோகார்பன்கள், கன உலோகங்கள் உள்ளிட்ட முக்கிய அளவுருக்களை ஆய்வு செய்ய வேண்டும். சுற்றுவட்டார தொழிற்சாலைகளின் கழிவுநீர் வெளியேற்றம் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டும்.</p><p>சட்டவிரோத கழிவு வெளியேற்றம் நடந்துள்ளதா? என்பதைக் கண்டறிய வேண்டும்.</p><h2>கடுமையான சட்ட நடவடிக்கை</h2><p>ஆய்வு முடிவுகளை முழுமையாக மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். மாசுபாட்டிற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உடனடி நிவாரணத்துடன் வாழ்வாதார இழப்பிற்கான உரிய இழப்பீடும் வழங்க வேண்டும்.</p><p>கொசஸ்தலையாற்றை பாதுகாக்க வேண்டும். மீனவர்களின் தலைமுறை வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும். மாசுபாட்டிற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தித் கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வாஜ்பாய் நினைவு தினம்- தமிழிசை சவுந்தரராஜன் புகழஞ்சலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vajpayees-death-anniversary-tamilisai-soundararajans-tribute</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vajpayees-death-anniversary-tamilisai-soundararajans-tribute#comments</comments><guid isPermaLink="false">cb179e38-7f70-4b4d-a8eb-8cf30f91bb57</guid><pubDate>Sun, 16 Aug 2026 09:02:37 +0000</pubDate><atom:updated>2026-08-16T09:02:37.019Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழிசை சவுந்தரராஜன்,Tamilisai Soundararajan,நினைவு தினம்,Vajpayee,வாஜ்பாய்,புகழஞ்சலி,death anniversary</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/0o4ddinu/113.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/0o4ddinu/113.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை.</p><p>தமிழக முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் நினைவு நாளில்,  மரியாதையுடன் நினைவுகூர்கிறேன். முதுகலை மருத்துவ மாணவியாக தமிழக பாஜகவில் சேர்ந்த போது அவரதுசிறந்த பேச்சாற்றல் மற்றும் தலைமைப் பண்பால் ஈர்க்கப்பட்டேன்.</p><p>பல ஆண்டுகளுக்குப் பிறகு, விதி எனக்கு ஒரு மிகுந்த வேதனையான அதே நேரத்தில் பெரும் பாக்கியமான பொறுப்பை வழங்கியது. பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த நான், அன்றைய தேசியத் தலைவர் அமித் ஷா அவர்களிடமிருந்து, நமது  பிரதமர் நரேந்திரமோடியின் முன்னிலையில், வாஜ்பாய் அவர்களின் அஸ்தியைப் பெற்றுக்கொள்ளும் புனிதமான வாய்ப்பைப் பெற்றேன்.</p><p>மேலும், பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வை ஏற்பாடு செய்யும் பெரும் பொறுப்பும் எனக்குக் கிடைத்தது. உணர்வுபூர்வமான இந்த  நிகழ்வுகள் என் வாழ்வில், என்றும் மறக்க முடியாத அத்தியாயமாகும். <a href="https://www.dailythanthi.com/topic/vajpayee">வாஜ்பாய் </a>அவர்கள் நம் இதயங்களில் வாழ்கிறார். </p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>3 தமிழர்கள் சுட்டுக்கொலை: கர்நாடக அரசிடம் விளக்கம் கேட்க வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/shooting-death-of-3-tamils-explanation-must-be-sought-from-the-karnataka-government-ttv-dhinakaran-urges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/shooting-death-of-3-tamils-explanation-must-be-sought-from-the-karnataka-government-ttv-dhinakaran-urges#comments</comments><guid isPermaLink="false">e31a2c3f-13eb-4bf6-83e2-cf4a25193e7d</guid><pubDate>Sun, 16 Aug 2026 08:44:30 +0000</pubDate><atom:updated>2026-08-16T08:44:30.616Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/9faceqpz/ttv.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/9faceqpz/ttv.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கர்நாடக மாநில வனப்பகுதிக்கு அருகே வசித்து வந்த அப்பாவி தமிழர்கள் மூவர் அம்மாநில வனத்துறையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து நீதி விசாரணையின் மூலம் உண்மை வெளிவருவதை தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>துப்பாக்கிச் சூடு</h2><p>கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில், அம்மாநில வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று தமிழர்கள் உயிரிழந்திருப்பதாகவும், ஒருவர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கின்றன.</p><p>பன்னெடுங்காலமாக வனப்பகுதிகளுக்கு அருகில் உள்ள கிராமங்களில் விவசாயம் செய்தும், மாடுகளை மேய்த்தும் தங்களது வாழ்வாதாரத்தை நடத்திக் கொண்டிருக்கும் அப்பாவி தமிழர்களை சுட்டுக் கொலை செய்யும் அளவிற்கான அதிகாரம் அம்மாநில வனத்துறைக்கு கொடுத்தது யார் ? இப்படுகொலையை கண்டித்து அப்பகுதி தமிழர்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராடும் நிலையில், மான் வேட்டையாடியதாலே சுட்டுக் கொன்றதாக அம்மாநில வனத்துறை அளித்திருக்கும் விளக்கம் ஏற்புடையதல்ல.</p><h2>விளக்கம் கேட்க வேண்டும்</h2><p>எனவே, கர்நாடக மாநிலத்தில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழர்கள் </a>மீது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு குறித்து அம்மாநில அரசிடம் உரிய விளக்கம் கேட்பதோடு, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணையின் மூலம் உண்மை வெளிக்கொண்டுவரப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் இன்று எந்தெந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு..? வானிலை மையம் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/weather/which-areas-in-tamil-nadu-are-likely-to-receive-rain-today-meteorological-department-provides-details-2</link><comments>https://www.dailythanthi.com/news/weather/which-areas-in-tamil-nadu-are-likely-to-receive-rain-today-meteorological-department-provides-details-2#comments</comments><guid isPermaLink="false">56c785b9-ef0b-47cd-b7ca-212067990df2</guid><pubDate>Sun, 16 Aug 2026 08:42:44 +0000</pubDate><atom:updated>2026-08-16T08:42:44.460Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Rain,Weather,கனமழை,வானிலை,தமிழகம்,Weather News,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,Weather update,வானிலை ஆய்வு மையம்,கன மழை,heavy rain,வானிலை அறிக்கை,weather condition,வானிலை தகவல்,Weather Status,வானிலை அறிவிப்பு,weather center</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/iwz6zety/mulka.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/iwz6zety/mulka.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>வரும் 18-ம் தேதி செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><h2>மழை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><p><strong>16-08-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><h2>பலத்த காற்றுடன் கூடிய கனமழை</h2><p><strong>17-08-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>18-08-2026:</strong> செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <a href="https://www.dailythanthi.com/topic/rain">கனமழை</a> பெய்யக்கூடும்.</p><p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். </p><h2>கனமழை</h2><p><strong>19-08-2026:</strong> நீலகிரி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <a href="https://www.dailythanthi.com/topic/rain">கனமழை</a> பெய்யக்கூடும்.</p><p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>20-08-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>21-08-2026 மற்றும் 22-08-2026:</strong> தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong><ins>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</ins></strong></p><p><strong>16-08-2026 முதல் 20-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் வட உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><p><strong><ins>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</ins></strong></p><p><strong>16-08-2026 முதல் 20-08-2026 வரை:</strong> வட உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று (16-08-2026) மற்றும் நாளை (17-08-2026)</strong>: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>மீனவர்களுக்கான எச்சரிக்கை:</h2><p><strong><ins>தமிழக கடலோரப்பகுதிகள்:</ins></strong></p><p><strong>16-08-2026 முதல் 20-08-2026 வரை:</strong> தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடலின் ஒரு சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><h2>வங்கக்கடல் பகுதிகள்:</h2><p><strong>16-08-2026 மற்றும் 17-08-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய மத்திய வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>18-08-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>19-08-2026 20-08-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><h2>அரபிக்கடல் பகுதிகள் :</h2><p><strong>16-08-2026 முதல் 20-08-2026 வரை:</strong> மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. </p>]]></content:encoded></item><item><title>கன்னியாகுமரி: பொருட்காட்சியில் ‘டிராகன் ரெயில்’ தடம்புரண்டு விபத்து - 7 பேர் காயம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kanyakumari-dragon-rail-derails-at-exhibition-7-injured</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kanyakumari-dragon-rail-derails-at-exhibition-7-injured#comments</comments><guid isPermaLink="false">cddf73ba-e1f9-47f7-b27a-2fc62ac7915a</guid><pubDate>Sun, 16 Aug 2026 08:42:10 +0000</pubDate><atom:updated>2026-08-16T08:42:10.399Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,Kanyakumari</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/7w9hlce8/State-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/7w9hlce8/State-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி,</p><p>கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சி சார்பில் தாமிரபரணி ஆற்றின் கரையில் வாவுபலி பொருட்காட்சி கடந்த 29-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதனை தினமும் ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்து வருகிறார்கள். </p><p>இந்த நிலையில் நேற்று சுதந்திர தின விடுமுறையையொட்டி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் பொருட்காட்சியை காண வந்திருந்தனர். அவர்கள் வாவுபலி திடலில் அமைக்கப்பட்டிருந்த ராட்டினங்களில் ஏறி உற்சாகமாக பொழுதை களித்துக் கொண்டிருந்தனர். 10 அடி உயரத்தில் 6 பெட்டிகள் கொண்ட டிராகன் ரெயிலில் பொதுமக்கள் ஏறி உற்சமாக பயணம் செய்தனர். </p> <p>ஒரு பெட்டியில் 3 முதல் 4 பேர் வரை அமர்ந்திருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக 2 பெட்டி கள் தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டு கீழே சரிந்து விழுந்தன. அதில் பய ணம் செய்த 4 குழந்தைகள் உள்பட 7 பேர் கீழே விழுந்து காயம் அடைந்த னர். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் பொருட்காட்சி மூடப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>சுதந்திர தின விழாவில் மயங்கி விழுந்து உயிரிழந்த போலீஸ்காரரின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிதியுதவி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/financial-assistance-of-30-lakh-for-the-family-of-the-police-officer-who-collapsed-and-died-during-the-independence-day-celebrations</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/financial-assistance-of-30-lakh-for-the-family-of-the-police-officer-who-collapsed-and-died-during-the-independence-day-celebrations#comments</comments><guid isPermaLink="false">9c29010d-ad46-453e-843e-bf09f8ac9e18</guid><pubDate>Sun, 16 Aug 2026 08:27:31 +0000</pubDate><atom:updated>2026-08-16T08:27:31.780Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,போலீஸ்,சுதந்திர தினம்,Independence Day,சுதந்திர தின விழா,Independence Day Celebration,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/gnkfs3x6/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/gnkfs3x6/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><p>சென்னை, ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படைப்பயிற்சி மையத்தின் இசைக்குழுவைச் சேர்ந்த முதல்நிலைக் காவலர் தர்மராஜ் (வயது 56) நேற்று (15.08.2026) புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின அணிவகுப்புப் பணியின்போது திடீரென மயங்கி விழுந்து சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.</p><p>முதல்நிலைக் காவலர் தர்மராஜின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல் துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். தர்மராஜை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: விசாரணை தேவை - அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dead-fish-found-floating-in-the-ennore-kosasthalai-river-inquiry-needed-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dead-fish-found-floating-in-the-ennore-kosasthalai-river-inquiry-needed-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">9c0288cd-ce8b-4bf6-8553-80d2e8ed76db</guid><pubDate>Sun, 16 Aug 2026 08:12:12 +0000</pubDate><atom:updated>2026-08-16T08:12:12.444Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,Kosasthalai river,கொசஸ்தலை ஆறு</media:keywords><media:content height="270" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/a2rvjccl/15.gif" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/a2rvjccl/15.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;</p><p>“எண்ணூர் கழிமுகம் பகுதியில்  கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்து கிடப்பது குறித்து </p><p>விசாரணை; மீனவர்களுக்கு இழப்பீடு தேவை!</p><p>சென்னையை அடுத்த எண்ணூர் அருகே கடலில் கலக்கும் இடத்திற்கு சற்று முன்பாக கொசஸ்தலை ஆற்றில் டன் கணக்கில் மீன்கள் இறந்து மிதப்பதால் அப்பகுதி மீனவர்கள் பெரும் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர்.  இதனால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய்கள் பரவும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.</p><p>அப்பகுதியில் செயல்பட்டு வரும் அனல் மின்நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றில் இருந்து வெளியேற்றப்படும் வேதிக்கழிவுகள் கடலில் கலக்கவிடப்பட்டது தான் இதற்கு காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கழிவுகளை வெளியேற்றிய நிறுவனங்களின் செயல்பாடுகளும், அதைத் தடுக்கத் தவறிய அதிகாரிகளின் அலட்சியமும் கண்டிக்கத்தக்கவை.</p><p>கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதக்கும் நிகழ்வுகள் ஏற்கனவே பலமுறை நிகழ்ந்துள்ளன. ஆனாலும், இத்தகைய நிகழ்வுகளைத் தடுக்க அரசும், அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்காததை  மன்னிக்க முடியாது.  இதே பகுதியில் உள்ள கன்னிகைப்பேர் பகுதியில்  செயல்பட்டு வந்த  கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்த விபத்தில் வடமாநில  தொழிலாளர்கள் 18 பேர் உயிரிழந்தனர். அதன்பிறகாவது சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் விழித்துக் கொண்டிருந்தால் இத்தகைய நிகழ்வுகள் ஏற்பட்டிருக்காது.</p><p>எண்ணூர் பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரங்களில் முதன்மையானது  கொசஸ்தலை ஆற்றில் மீன்பிடிப்பது ஆகும். மீன்கள் செத்து மிதப்பதால் அடுத்த சில வாரங்களுக்கு அந்தப் பகுதியில் மீன் பிடிப்பது சாத்தியமல்ல. இத்தகைய நிகழ்வுகள் தொடர்ந்து நடப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். </p><p>கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்து மிதப்பது குறித்து  விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.  இதற்கு காரணமான நிறுவனங்களிடமிருந்து தண்டத்  தொகை வசூலித்து மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.  ஆற்றில் செத்து மிதக்கும் மீன்களை அகற்றி அப்பகுதியில் தொற்று நோய் பரவாமல் தடுக்க வேண்டும்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-arrested-for-harassing-a-young-woman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-arrested-for-harassing-a-young-woman#comments</comments><guid isPermaLink="false">a2f6614f-2192-4c95-87d4-f752e6777ce9</guid><pubDate>Sun, 16 Aug 2026 08:07:13 +0000</pubDate><atom:updated>2026-08-16T08:07:13.559Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrest,Love,காதல் தொல்லை</media:keywords><media:content height="270" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/x8n48v1r/13.gif" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/x8n48v1r/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பத்தூர், </p><p>திருப்பத்தூரை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 27). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரும், திருப்பத்தூரை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணும் 2 ஆண்டுகளாக காதலித்தனர். </p><p>இளம்பெண் திடீரென விக்னேசை பிடிக்கவில்லை என கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ் இளம் பெண்ணை மிரட்டி உள்ளார். மேலும் காதல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து இளம்பெண் கொடுத்த புகாரின்பேரில் திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேசை நேற்று கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>திருவண்ணாமலை: குடும்பத் தகராறில் மாமனாருக்கு அரிவாள் வெட்டு - மெடிக்கல் கடைக்காரர் வெறிச்செயல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruvannamalai-medical-shop-owner-hacks-father-in-law-with-a-sickle-following-a-family-dispute</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruvannamalai-medical-shop-owner-hacks-father-in-law-with-a-sickle-following-a-family-dispute#comments</comments><guid isPermaLink="false">546287ca-65ce-49e0-a58b-0eb67fd63c1a</guid><pubDate>Sun, 16 Aug 2026 08:02:31 +0000</pubDate><atom:updated>2026-08-16T08:02:31.571Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,Tiruvannamalai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/ceusya5q/State-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/ceusya5q/State-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை,</p><p>திருவண்ணாமலை மாவட்டம் ஊசாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர் அதே பகுதியில் மெடிக்கல் கடை நடத்தி வருகிறார். முருகனுக்கும், அவரது மாமனார் பரசுராமனுக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. </p><p>இந்த நிலையில், ஊசாம்பாடி அருகே உள்ள திருவண்ணாமலை-வேலூர் நெடுஞ்சாலையில் முருகன் பட்டப்பகலில் தனது மாமனார் பரசுராமனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த பரசுராமனை, அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். </p><p>தற்போது திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பரசுராமன், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதே சமயம், பரசுராமனை வெட்டிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பியோட முயன்ற முருகனை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். </p> ]]></content:encoded></item><item><title>லஞ்ச வழக்கில் சிக்கிய அதிகாரிக்கு சுதந்திர தின விழாவில் நற்சான்றிதழ் வழங்கப்பட்டதால் சர்ச்சை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/controversy-arises-after-an-official-implicated-in-a-bribery-case-is-awarded-a-certificate-of-merit-at-the-independence-day-celebration</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/controversy-arises-after-an-official-implicated-in-a-bribery-case-is-awarded-a-certificate-of-merit-at-the-independence-day-celebration#comments</comments><guid isPermaLink="false">9f5f2173-06a6-4ea1-89d4-2b68aa31f69f</guid><pubDate>Sun, 16 Aug 2026 07:58:49 +0000</pubDate><atom:updated>2026-08-16T07:58:49.276Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சுதந்திர தின விழா,லஞ்ச வழக்கு,நற்சான்றிதழ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/n4z6r70k/official.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/n4z6r70k/official.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் கடந்த ஜூலை 3-ந்தேதி லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கணக்கில் வராத ரூ.3.66 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் நகராட்சி வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் ஜிபே கணக்கை ஆய்வு செய்தபோது. கடந்த 3 ஆண்டுகளில் ஜிபே மூலம் ரூ.25 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது. </p> <p>இதற்கு முறையான கணக்கு தெரிவிக்காததால் அவர் மீது ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்ததாக தெரிகிறது. இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஒரு மாதம் ஆனநிலையில் நேற்று நடந்த சுதந்திரதின விழாவில் ராமநாதபுரம் நகராட்சியில் சிறப்பாக செயல்பட்டதற்காக வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயனுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.</p> <h2>திரும்பப் பெறப்பட்டது</h2><p>இதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையாளரிடம் கேட்டபோது, அவர் கூறுகையில், "நகராட்சி ஆய்வாளர் கார்த்திகேயன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தது தெரிய வந்தவுடன் அந்த சான் றிதழ் திரும்ப பெறப்பட்டது” என கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>கர்நாடக வனத்துறையால் தமிழர்கள் சுட்டுக்கொலை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamils-shot-dead-by-karnataka-forest-department-communist-party-of-india-marxist-condemns-the-incident</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamils-shot-dead-by-karnataka-forest-department-communist-party-of-india-marxist-condemns-the-incident#comments</comments><guid isPermaLink="false">09c3220d-1188-4412-aff8-4be936651eb3</guid><pubDate>Sun, 16 Aug 2026 07:45:23 +0000</pubDate><atom:updated>2026-08-16T07:45:23.986Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Karnataka,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,CPIM</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/is2g81rc/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/is2g81rc/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-</p><p>“கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹானூர் தாலுகா, தோமையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த, தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட விவசாயிகள் வழக்கமாக மாடு மேய்க்கும் வனப்பகுதிக்குள் காணாமல் போன மாடுகளைத் தேடிச் சென்ற அந்தோணி ராஜ், ஜான், குமார் ஆகியோரை கர்நாடக மாநில வனத்துறையினர் நேற்று சுட்டுக் கொலை செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.</p><p>தங்கள் குற்றத்தை மறைக்க, அவர்கள் வேட்டையாடினார்கள் என்று வனத்துறையினர் பொய்யான குற்றச்சாட்டைத் தெரிவிக்கின்றனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டுக் கொலையை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. சம்பந்தப்பட்ட வனத்துறையினரைப் பணிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும். கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் என்ற அடிப்படையில், தமிழ்நாடு அரசு தனது கண்டனத்தை கர்நாடக அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p> ]]></content:encoded></item></channel></rss>