<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 31 Aug 2026 17:25:33 +0000</lastBuildDate><item><title>அமைச்சர் மரியவில்சன் மீதான வழக்கு விசாரணை 4-ம் தேதிக்கு தள்ளிவைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/hearing-of-the-case-against-minister-maria-wilson-adjourned-to-the-4th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/hearing-of-the-case-against-minister-maria-wilson-adjourned-to-the-4th#comments</comments><guid isPermaLink="false">52a21c7b-0162-45b1-9184-72954aac3d80</guid><pubDate>Mon, 31 Aug 2026 17:12:58 +0000</pubDate><atom:updated>2026-08-31T17:12:58.363Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை ஐகோர்ட்டு,Chennai High Court,maria wilson,அமைச்சர் மரிய வில்சன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/yq8g5btn/CHENNAI-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/yq8g5btn/CHENNAI-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நிதி அமைச்சர் மரியவில்சன், கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ம் தேதி புதுச்சேரி, எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குளோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மரியகுளோத், அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாக லாஸ்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். </p><p>புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் (ஜேஎம் 1) விசாரணையில் உள்ள இந்த வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் பெற ஆஜராக உத்தரவிட்ட போதும், மரிய வில்சன் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்த வழக்கை புதுச்சேரி கோர்ட்டில் ஆஜராவதில் விலக்கு அளிக்கவும், ரத்து செய்ய கோரியும் மரிய வில்சன் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.</p><p>அதற்கு, “நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டேன் எனக் கூற நிதி அமைச்சர் மரிய வில்சன் இங்கிலாந்து அரசரா” என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியதுடன் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராகவும் அறிவுறுத்தியது. அதையடுத்து ஆக.31-ம் தேதிக்குப் பிறகு அமைச்சர் மரிய வில்சன் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவார் என உறுதியளிக்கப்பட்டது.</p><p>அதைத் தொடர்ந்து புதுச்சேரி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற அனுமதித்து, தள்ளுபடி செய்யப்பட்டது.இவ்வழக்கை விசாரித்து வந்த புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் சேரலாதன் கடந்த வாரம் மாஹேவுக்கு மாற்றப்பட்டார். இச்சூழலில், இன்று முதலாவது குற்றவியல் நடுவர் மன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.</p><p>அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகவில்லை. இரண்டாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் சந்திரசேகர் முதலாவது குற்றவியல் நடுவர் மன்றத்துக்கு பொறுப்பு வகித்ததால் அவர் விசாரித்தார். அப்போது அமைச்சரின் சகோதரர் தரப்பு வழக்கறிஞர் பிரவீன் இவ்வழக்கை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி விரைந்து விசாரிக்க அறிவுறுத்தினார். அதைத்தொடர்ந்து இவ்வழக்கை வரும் 4-ம் தேதிக்கு குற்றவியல் நீதித்துறை நடுவர் தள்ளிவைத்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஜிடிபி வளர்ச்சி 7.8 சதவீதம் ஆக உயர்வு; பிரதமர் மோடியின் வலுவான பொருளாதார கொள்கை - வானதி சீனிவாசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/gdp-growth-rises-to-7-8-percent-vanathi-srinivasan-on-modi-economic-policy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/gdp-growth-rises-to-7-8-percent-vanathi-srinivasan-on-modi-economic-policy#comments</comments><guid isPermaLink="false">b355a107-0743-4ff2-b294-f849e3b91e0c</guid><pubDate>Mon, 31 Aug 2026 16:34:08 +0000</pubDate><atom:updated>2026-08-31T16:34:08.181Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரதமர் மோடி,Prime Minister Modi,வானதி சீனிவாசன்,economic,GDP,கொள்கை,பொருளாதார,Strong</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/tipr2rkr/vanathi-srinivasan.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:title><media:description type="html"><![CDATA[ முன்னாள் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/tipr2rkr/vanathi-srinivasan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பிரதமர் மோடியின் வலுவான பொருளாதார கொள்கை: 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் 7.8 சதவிதம் ஜிடிபி வளர்ச்சியடைந்துள்ளது என்று <a href="https://www.dailythanthi.com/topic/vanathi-srinivasan">வானதி சீனிவாசன்</a> தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, முன்னாள் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p> <h2>பொருளாதார மந்தநிலை</h2><p>தேசிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி  கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் (2025-2026) வரையிலான முதல் காலாண்டில் 6.5% மட்டுமே ஜிடிபி வளர்ச்சி பெற்றிருந்தது. தொடர்ந்து உலகளவில் பொருளாதார மந்தநிலை நிலவிய சூழல், தங்கம் விலை உயர்வு, அமெரிக்கா- ஈரான் போர், அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு சர்வதேச மற்றும் உள்நாட்டு காரணிகள் போன்றவை நாட்டின் பொருளாதாரத்திற்கு அழுத்தத்தை ஏற்படுத்தியது</p> <h2>ஜிடிபி வளர்ச்சி</h2><p>இந்த நிலையிலும், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF">பிரதமர் மோடி</a> தலைமையிலான மத்திய பாஜக அரசின் வலிமையான பொருளாதார கொள்கைகளால் முந்தைய ஆண்டு காலாண்டை காட்டிலும் 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் உண்மையான ஜிடிபி வளர்ச்சி 7.8 சதவிதம்  ஆக உயர்ந்துள்ளது. </p><h2>சான்றாகும்</h2><p>இந்த மகத்தான சாதனை எத்தனை சவால்கள் வந்தாலும்  நாட்டின் பொருளாதாரம் வலிமையாகவும், தொடர்ந்து முன்னேறி வருவதை பிரதிபலிக்கிறது. இந்திய பொருளாதாரம் மேலும் வலுப்பெற்று வருவதற்கு இது மகத்தான சான்றாகும்.  </p>]]></content:encoded></item><item><title>ஈளாடா தடுப்பணையில் வேகமாக குறைந்து வரும் தண்ணீர்; கோத்தகிரியில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-level-falls-fast-in-ealada-dam-kothagiri-faces-drinking-water-crisis-risk</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-level-falls-fast-in-ealada-dam-kothagiri-faces-drinking-water-crisis-risk#comments</comments><guid isPermaLink="false">66f277ea-66b7-4c72-a875-2b5f2f830a47</guid><pubDate>Mon, 31 Aug 2026 15:47:50 +0000</pubDate><atom:updated>2026-08-31T15:47:50.531Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Risk,drinking water,தண்ணீர்,Dam,கோத்தகிரி,Kotagiri,தடுப்பணை,குடிநீர் தட்டுப்பாடு,அபாயம்,low water level</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/bup2og2b/dam-water.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஈளாடா தடுப்பணை]]></media:title><media:description type="html"><![CDATA[ ஈளாடா தடுப்பணையில் வேகமாக குறைந்து வரும் தண்ணீர்; கோத்தகிரியில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/bup2og2b/dam-water.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோத்தகிரி, </p><p>ஈளாடா தடுப்பணையில் வேகமாக குறைந்து வரும் தண்ணீரினால் கோத்தகிரியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.</p><h2>மலைப்பகுதி ஊற்று </h2><p>நீர்நீலகிரி மாவட்டம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF">கோத்தகிரி</a> நகராட்சிக்கு சொந்தமான முக்கிய தடுப்பணை, கோடநாடு அருகே உள்ள ஈளாடா கிராம பகுதியில் அமைந்துள்ளது. இந்த தடுப்பணையானது சுமார் 90 மீட்டர் நீளமும், 60 மீட்டர் அகலமும் கொண்டது. மேலும், இதன் ஆழம் சராசரியாக 8 அடி முதல் 12 அடி வரை இருக்கும். </p><h2>சுத்திகரிப்பு நிலையம்</h2><p>இங்கு தேக்கப்படும் தண்ணீரானது, குழாய்கள் மூலம் சக்திமலை பகுதியில் அமைந்துள்ள நகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு தண்ணீர் முழுமையாக சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.பின்னர், இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கோத்தகிரி நேரு பூங்கா அருகே அமைந்துள்ள நீர் உந்து நிலைய தொட்டிகளுக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு தேக்கி வைக்கப்படுகிறது. அங்கிருந்து குழாய்கள் மூலமாக நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு சுழற்சி முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.</p><h2>ரூ.43 கோடியில் அம்ருத் 2.0 திட்டம்</h2><p> ஈளாடா மற்றும் அளக்கரை கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ், ‘அம்ருத் 2.0’குடிநீர் விநியோக மேம்பாட்டுத் திட்டம் தயார் செய்யப்பட்டது. தற்போது இந்த திட்டத்திற்காக மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் ரூ.43 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான குழாய்கள் பதிக்கும் பணிகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p> <h2>விவசாயிகள் கவலை</h2><p>இந்த தடுப்பணை நீரை நம்பி அப்பகுதி விவசாயத்திற்கும் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.இங்குள்ள தண்ணீரை நம்பி, சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கேரட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ் உள்ளிட்ட மலைக்காய்கறிகளை பயிரிட்டு தீவிரமாக விவசாயம் செய்து வருகின்றனர்.</p><h2>நீர்மட்டம் மளமளவென சரிந்தது</h2><p>கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோடநாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்தது. இதனால் தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அது முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. உபரிநீரும் பெருக்கெடுத்து வெளியேறியது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், கடந்த சில மாதங்களாக தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாமல் ஏமாற்றியது. </p><p>இதனால் தடுப்பணைக்கு வரும் நீர்வரத்து வெகுவாக குறைந்தது. அதேநேரம், தடுப்பணையில் இருந்து குடிநீர் விநியோகத்திற்காக தொடர்ந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வந்ததால், நீர்மட்டம் மளமளவென சரிந்து தற்போது வெறும் 7 அடியாக குறைந்து விட்டது.</p><h2>அளக்கரை குடிநீர் திட்டம்</h2><p>இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, கோத்தகிரி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஈளாடா தடுப்பணை நீரை மட்டும் நம்பி இருக்காமல், அளக்கரை திட்டத்தின் கீழும் குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் குடிநீர் தட்டுபாடு ஏற்படாது என்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் பணியாளர்களுக்கான நல அறிவிப்புகள்.. தொழிலாளர் வாழ்வுரிமைச் சங்கம் வரவேற்பு!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/welfare-announcements-for-tasmac-employees-workers-rights-association-welcomes-the-move</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/welfare-announcements-for-tasmac-employees-workers-rights-association-welcomes-the-move#comments</comments><guid isPermaLink="false">950f9ace-e188-465a-9550-ed694094ec28</guid><pubDate>Mon, 31 Aug 2026 15:38:17 +0000</pubDate><atom:updated>2026-08-31T15:38:17.542Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டாஸ்மாக்,Tasmac,Velmurugan,வேல்முருகன்,தி.வேல்முருகன்,டாஸ்மாக் ஊழியர்கள்,Tasmac employees</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/oppmo6ql/velmurugan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/oppmo6ql/velmurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>தொழிலாளர் வாழ்வுரிமைச் சங்கம் வரவேற்பு</h2><p>இன்று (31.08.2026) தமிழ்நாடு சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் க. விக்னேஷ் வெளியிட்ட டாஸ்மாக் பணியாளர்களுக்கான பல்வேறு நல அறிவிப்புகளைத் தொழிலாளர் வாழ்வுரிமைச் சங்கம் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது. டாஸ்மாக் பணியாளர்கள் நீண்டகாலமாகப் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். </p><p>இந்நிலையில், தொழிற்சங்கங்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாகப் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புகள் முக்கியமான முன்னேற்றமாகும்.</p><p>அதன்படி, 01.09.2026 முதல் டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் பணியாற்றி வரும் மேற்பார்வையாளர்களுக்கு ரூ.33,023, விற்பனையாளர்களுக்கு ரூ.30,284, உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.28,680 என ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என்றும், இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.486.90 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>வரவேற்கத்தக்கவை</h2><p>மேலும், பணியாளர்களுக்கு ரூ.20,000 பண்டிகை முன்பணம், ஆண்டுதோறும் மூன்று சீருடைகளுக்கான துணி மற்றும் தையல் செலவாக ரூ.6,000, சுழற்சி முறையில் 8 மணி நேரப் பணி, வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை, மாதத்திற்கு இரண்டு நாட்கள் ஊதியத்துடன் கூடிய தற்செயல் விடுப்பு ஆகிய அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.</p><p>டாஸ்மாக் கடைகளில் தூய்மைப் பணி மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்வதற்காக மாநகரப் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு மாதம் ரூ.5,000, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் ரூ.4,000, கிராமப்புறங்களில் ரூ.3,000 வழங்கப்படும் என்பதும், தகுதியுடைய 250 டாஸ்மாக் பணியாளர்களைச் சிறப்புத் தேர்வு மூலம் இளநிலை உதவியாளர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கவை.</p><p>பணியாளர்களின் நீண்டகாலக் கோரிக்கைகளில் சிலவற்றிற்குத் தீர்வு காணும் வகையில் இன்றைய அறிவிப்புகள் வெளியாகியிருப்பது பாராட்டுக்குரியது. இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட முதல்-அமைச்சர் விஜய்க்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் க. விக்னேஷுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் தொழிலாளர் வாழ்வுரிமைச் சங்கம் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.</p><h2>ஓய்வு வயதை உயர்த்த வேண்டும்</h2><p>அதேவேளையில், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் மற்றும் டாஸ்மாக் பணியாளர்களின் ஓய்வுபெறும் வயதை 60-ஆக உயர்த்துதல் உள்ளிட்ட இன்னும் நிலுவையில் உள்ள கோரிக்கைகளையும் அரசு பரிசீலித்து விரைந்து நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.</p><p>காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் உள்ளிட்ட நடைமுறைகளால் பணியாளர்களுக்குக் கூடுதல் பணிச்சுமையோ செலவினச் சுமையோ ஏற்படாத வகையில், தேவையான நிர்வாக நடவடிக்கைகளை டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் தொழிலாளர் வாழ்வுரிமைச் சங்கம் வலியுறுத்துகிறது.</p><p>தொழிலாளர்களின் உரிமை மற்றும் நலனைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஆதரிப்பதுடன், நிலுவையில் உள்ள கோரிக்கைகளுக்கும் அரசு விரைந்து தீர்வு காண வேண்டும் எனத் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தொழிலாளர் </a>வாழ்வுரிமைச் சங்கம் கேட்டுக்கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 15 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/15-ips-officers-transferred-in-tamil-nadu-tamil-nadu-government-orders</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/15-ips-officers-transferred-in-tamil-nadu-tamil-nadu-government-orders#comments</comments><guid isPermaLink="false">b096e5f2-832f-4a5c-8cf3-1316384dcb3e</guid><pubDate>Mon, 31 Aug 2026 15:38:09 +0000</pubDate><atom:updated>2026-08-31T15:38:09.074Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இடமாற்றம்,ஐ.பி.எஸ். அதிகாரிகள்,IPS Officers,transferred,தமிழக அரசு உத்தரவு,Tamil Nadu government orders</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/34iuu2ba/tamilnadu.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக அரசு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/34iuu2ba/tamilnadu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை:</p><p>தமிழ்நாட்டில் 15 ஐ.பி.எஸ். அதிகாரிகளை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D">பணியிட மாற்றம் </a>செய்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>பணியிட மாற்றம்</h2><p>அதன்படி, தூத்துக்குடி ஊரக உதவி காவல் கண்காணிப்பாளராக ஏ.நாயர், பட்டுக்கோட்டை உதவி காவல் கண்காணிப்பாளராக பி.அங்கிதா, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு உதவி காவல் கண்காணிப்பாளராக எஸ்.அஸ்வினி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><p>திருநெல்வேலி ஊரக உதவி காவல் கண்காணிப்பாளராக பிஸ்வாஜித் பண்டா, சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளராக டி.ஜே.சத்ரிய கவின், திருவெறும்பூர் உதவி காவல் கண்காணிப்பாளராக எஸ்.இன்பா நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><p>திண்டுக்கல் உதவி காவல் கண்காணிப்பாளராக பி.மஞ்சுமா, ராசிபுரம் உதவி காவல் கண்காணிப்பாளராக மண்ணம் சுஜித் சம்பத், கோவில்பட்டி உதவி காவல் கண்காணிப்பாளராக நீல் சர்மா, ராமநாதபுரம் உதவி காவல் கண்காணிப்பாளராக கே.நேகா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.</p><p>நாகப்பட்டினம் உதவி காவல் கண்காணிப்பாளராக பிரியங்கா பார்கவ், திருவண்ணாமலை ஊரக உதவி காவல் கண்காணிப்பாளராக ராகுல் வி.கோபால், ராஜபாளையம் உதவி காவல் கண்காணிப்பாளராக சைந்தானே ஸ்வப்னிலா அனில் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><p>மேலும், மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் உதவி காவல் கண்காணிப்பாளராக தனூ சிங், மதுரை மாநகரம் அண்ணாநகர் சரக உதவி காவல் கண்காணிப்பாளராக ஆஷிஷ் புனியா நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கடலூர் அருகே மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்; ஓட்டுநர்கள் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/2-trucks-carrying-sand-seized-near-cuddalore-drivers-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/2-trucks-carrying-sand-seized-near-cuddalore-drivers-arrested#comments</comments><guid isPermaLink="false">c2773540-899e-470d-8292-72e13454a6ce</guid><pubDate>Mon, 31 Aug 2026 15:31:17 +0000</pubDate><atom:updated>2026-08-31T15:31:17.355Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Cuddalore,கடலூர்,arrest,மணல்,லாரிகள் பறிமுதல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/zipe6gdn/areest33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/zipe6gdn/areest33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர்,</p><p>கடலூர் அருகே எம். சேன்டு உட்பட கிராவல் மண் கடத்திய 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை ஒட்டி வந்த 2 ஒட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர்.</p><p>இது குறித்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">கடலூர்</a> மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்தாவது:</p><p>கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உரிய ஆவணமின்றி யூனிட் கிராவல் மண் மற்றும் யூனிட் எம். சேன்ட் ஆகியவற்றை  லாரிகளில் கடத்தி வந்த லாரிகளையும் பறிமுதல் செய்ததுடன் அதன் ஓட்டுநரை கைது செய்தனர்.</p><p>இதுகுறித்து நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து பாலூர் பகுதியைச் சேர்ந்த புஷ்பநாதன் மகன் கணேசமூர்த்தி (26). மற்றும் குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்த நாகப்பன் மகன் கோபி (25), ஆகிய ஓட்டுநர்களை கைது செய்தும், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சவால்களை தகர்த்த பிரதமர் மோடியின் ராஜதந்திரம் - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/prime-minister-modis-diplomacy-shatters-challenges-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/prime-minister-modis-diplomacy-shatters-challenges-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">2480fa08-8e3b-464b-ae5d-8bcd9ef1b45c</guid><pubDate>Mon, 31 Aug 2026 15:09:25 +0000</pubDate><atom:updated>2026-08-31T15:09:25.327Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரதமர் மோடி,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Prime Minister Modi,சவால்கள்,Challenges,Diplomacy</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/h6jn9xi3/nainar.31.08.2026.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன் ]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/h6jn9xi3/nainar.31.08.2026.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சவால்களை தகர்த்த பிரதமர் மோடியின் ராஜதந்திரம்: பொருளாதார வளர்ச்சியில் புதிய சகாப்தம் படைக்கும் பாரதம் என்று தமிழக பாஜக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன்</a> தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>ஜிடிபி  வளர்ச்சி</h2><p>2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் 7.8% என்ற மகத்தான ஜிடிபி  வளர்ச்சியை இந்தியா எட்டியிருப்பது ஒரு வரலாற்று சாதனையாகும். நமது பாரத நாடு படைத்துள்ள இந்த அசுர வளர்ச்சி,  பிரதமர் மோடி தொலைநோக்கு பார்வைக்கும், நமது நாட்டின் வலிமையான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">பொருளாதார</a> அடிப்படைகளுக்கும் சான்றாகும்.</p> <h2>உலகளாவிய சவால்கள்</h2><p>சர்வதேச அளவில் நிலவும் புவிசார் அரசியல் குழப்பங்கள், எண்ணெய் விலை உயர்வு என பல உலகளாவிய சவால்களை நாம் எதிர்கொண்ட போதிலும், நமது பிரதமர் மோடியின் ராஜதந்திர நடவடிக்கைகளும், 140 கோடி மக்களின் கூட்டு முயற்சியும் இணைந்து இந்த சவால்களை தகர்த்தெறிந்து, நாட்டை அசுர வேகத்தில் வளர்ச்சி பாதையில் அழைத்து சென்றுள்ளன. இது ஒவ்வொரு இந்தியனும் பெருமிதம் கொள்ள வேண்டிய தருணமாகும்.</p> <h2>நமது பயணம் எப்போதும் தொடரும்</h2><p>இந்தியா முன்னேறாது என்று அவநம்பிக்கையை விதைத்தவர்களின் கணிப்புகள் மீண்டும் பொய்த்து போயுள்ளன. சவால்களை சாதனைகளாக மாற்றி, பாரதத்தின் பொருளாதாரத்தை உலக அரங்கில் அசைக்க முடியாத சக்தியாக உயர்த்தும் நமது பயணம் எப்போதும் தொடரும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் மீண்டும் அமைச்சர்கள் இருக்கை அருகில் அமர்ந்த முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-again-sits-near-the-ministerial-bench-in-the-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-again-sits-near-the-ministerial-bench-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">14216094-9e1c-47ea-a01e-c2714a6f17c4</guid><pubDate>Mon, 31 Aug 2026 14:48:40 +0000</pubDate><atom:updated>2026-08-31T14:48:40.972Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,Vijay,சட்டசபை,TNAssembly,முதல்-அமைச்சர் விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/qq74k57f/assamblyone33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
சட்டசபை]]></media:title><media:description type="html"><![CDATA[  முதல்-அமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/qq74k57f/assamblyone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டமன்றத்தில் முதல் -அமைச்சர் விஜய் அமைச்சர்கள் இருக்கை அருகில் மாறி அமர்ந்தார். </p><p>தமிழக சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் விஜய், அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் எங்கு இருக்க வேண்டுமென முடிவு செய்வது சபாநாயகர்.</p><p>அந்த வரிசைப்படி தான் அமரவேண்டும். சில சமயங்களில் சட்டமன்ற உறுப்பினர்கள் மாறி அமர்ந்தால் சபாநாயகர் உறுப்பினர்களை தங்கள் இருக்கைக்கு செல்லுங்கள் எனகூறுவது உண்டு.</p><p>முதல்-அமைச்சருக்கு தனி இருக்கை அமைக்கப்பட்டிருக்கும் அதில் வெறு யாரும் அமரமாட்டார்கள்.  </p><p>கடந்த வாரம் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a>, அமைச்சர்கள் இருக்கைக்கு பக்கத்தில் அமர்ந்து அமைச்சர் செங்கோட்டையனுடன் ஆலோசனை மேற்கொண்டார். இன்று அதே போல் அமைச்சர்கள் இருக்கையில் அமர்ந்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் ஆலோசனைமேற்கொண்டு அவை நடவடிக்கைகளைபார்த்துக் கொண்டிருந்தார்.<br></p>]]></content:encoded></item><item><title>சென்னையில் சாலை விபத்துகள் குறைந்தும் உயிரிழப்புகள் அதிகரிப்பு!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/road-accidents-down-in-chennai-yet-fatalities-rise</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/road-accidents-down-in-chennai-yet-fatalities-rise#comments</comments><guid isPermaLink="false">99426192-336d-4431-86eb-4efd58cac961</guid><pubDate>Mon, 31 Aug 2026 14:47:44 +0000</pubDate><atom:updated>2026-08-31T14:47:44.532Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சாலை விபத்து,road accident,Chennai,சென்னை,road accidents,சாலை விபத்துகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/dfqjwg0u/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/dfqjwg0u/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் 2026-ம் ஆண்டின் முதல் பாதியில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் சற்றே குறைந்துள்ள நிலையில், விபத்துகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை கவலை அளிக்கும் வகையில் அதிகரித்துள்ளது.</p><p>2025-ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான முதல் 6 மாதங்களில் சென்னையில் 2,051 சாலை விபத்துகள் பதிவாகியிருந்தன. 2026-ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 2.68 சதவீதம் குறைந்து 1,996 ஆக பதிவாகியுள்ளது.</p><p>ஆனால், விபத்துகளின் எண்ணிக்கை குறைந்தபோதிலும், உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.</p><h2>உயிரிழப்புகள் 8.44 சதவீதம் அதிகரிப்பு</h2><p>கடந்த ஆண்டு முதல் பாதியில் சாலை விபத்துகளில் 237 பேர் உயிரிழந்திருந்தனர். இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8.44 சதவீதம் அதிகரித்து 257 ஆக உயர்ந்துள்ளது.</p><p>இதன் மூலம், விபத்துகளின் எண்ணிக்கை குறைந்தாலும், நிகழும் விபத்துகள் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வகையில் தீவிரமாகி வருவது தெரியவந்துள்ளது.</p><h2>தமிழகத்தின் நிலவரம் வேறுபட்டது</h2><p>சென்னையின் நிலவரம் தமிழகத்தின் ஒட்டுமொத்த சாலை விபத்து புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போது மாறுபட்டதாக உள்ளது.</p><p>தமிழகம் முழுவதும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை 5.86 சதவீதம் அதிகரித்து 37,292 ஆக பதிவாகியுள்ளது. அதே நேரத்தில், மாநில அளவில் சாலை விபத்துகளில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 0.39 சதவீதம் குறைந்து 9,461 ஆக பதிவாகியுள்ளது.</p><h2>மாநகர பகுதிகளில் சென்னை முதலிடம்</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை </a>பெருநகரப் பகுதியைச் சேர்ந்த மாநகர காவல் ஆணையரக பகுதிகளை ஒப்பிடும்போது, அதிக விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் பதிவான பகுதியாக சென்னை ஆணையரகம் முதலிடத்தில் உள்ளது.</p><p>தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 1,027 விபத்துகளில் 256 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 729 விபத்துகளில் 118 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><h2>கோவை மாவட்டத்தில் அதிக பாதிப்பு</h2><p>மாவட்ட வாரியாக பார்க்கும்போது, கோயம்புத்தூர் மாவட்டம் சாலை விபத்துகளால் அதிக பாதிப்பை சந்தித்த மாவட்டமாக உள்ளது.</p><p>அங்கு 2,078 சாலை விபத்துகள் பதிவாகியுள்ள நிலையில், 494 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><h2>அதிவேகம் முக்கிய காரணம்</h2><p>வாகனங்களை அதிவேகமாக இயக்குவது, இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாதது, கார்களில் சீட் பெல்ட் அணியாமல் செல்வது உள்ளிட்ட அலட்சியங்கள் சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.</p><p>விபத்துகளின் மொத்த எண்ணிக்கை குறைந்தாலும், நிகழும் விபத்துகள் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் அபாயகரமானதாக மாறி வருவதாக சாலை பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p>எனவே, சாலை விதிகளை முறையாக பின்பற்றுவதுடன், அதிவேக பயணத்தை கட்டுப்படுத்தவும், தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக கடைப்பிடிக்கவும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் தேசிய நெடுஞ்சாலைகளில் அங்கீகரிக்கப்படாத பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 350 வாகனங்கள் அகற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-removes-around-350-vehicles-illegally-parked-on-national-highways</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-removes-around-350-vehicles-illegally-parked-on-national-highways#comments</comments><guid isPermaLink="false">cb13189a-3fea-46d9-a1a2-2e603cf9625d</guid><pubDate>Mon, 31 Aug 2026 14:40:29 +0000</pubDate><atom:updated>2026-08-31T14:40:29.081Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,தேசிய நெடுஞ்சாலை,Vehicles,Traffic,National Highways,வாகனங்கள் பறிமுதல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/jrhon4aq/highways.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வாகனங்கள் அகற்றம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னையில் தேசிய நெடுஞ்சாலைகளில் அங்கீகரிக்கப்படாத பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 350 வாகனங்கள் அகற்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/jrhon4aq/highways.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88"> தேசிய நெடுஞ்சாலைகளில் </a>அங்கீகரிக்கப்படாத பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 350 வாகனங்கள் அகற்றம். இது தொடர்பாக, மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-</p> <h2> தேசிய நெடுஞ்சாலை ஆணையம்</h2><p>சாலை பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், தடையற்ற போக்குவரத்தை பராமரிப்பதற்கும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட செயலாக்க பிரிவு, சென்னையில் நெடுஞ்சாலையோரங்களில் உள்ள அனுமதியற்ற வாகன நிறுத்தம், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">ஆக்கிரமிப்புகளுக்கு</a> எதிரான தனது நடவடிக்கையை தொடங்கியுள்ளது. </p> <h2>சுமார் 350 வாகனங்கள் அகற்றம்</h2><p>இந்நடவடிக்கையில் தமது எல்லைக்குட்பட்ட வரம்பிற்குள் உள்ள தேசிய நெடுஞ்சாலையோரங்களில் அனுமதியின்றி நிறுத்தப்பட்டிருந்த சுமார் 350 லாரிகள், வேன்கள், வர்த்தக வாகனங்களை கண்டறிந்து, அவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தது.</p><h2>ஆய்வு</h2><p>வாகன ஓட்டுநர் ஓய்வெடுக்கும்போதும், சாலையோர உணவகங்களுக்கு செல்லும்போதும், சரக்குகளை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் காத்திருக்கும்போதும், அல்லது போக்குவரத்து காவல்துறையினரால் அமல்படுத்தப்பட்ட சென்னை நகருக்குள் நுழைவதற்கான கட்டுப்பாட்டு நேரத்திற்காக காத்திருக்கும்போதும் வாகனங்கள் சட்டவிரோதமாக நிறுத்தப்பட்டிருந்தது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. </p><h2>போக்குவரத்து நெரிசல்</h2><p>எண்ணூர் - மணலி சாலை மேம்பாட்டு திட்ட வழித்தடத்தில் அதிகபட்ச போக்குவரத்து நெரிசல் பதிவாகியுள்ளது. அங்கு மணலி, எலந்தனூர், இடையஞ்சாவடி, மாதவரம், மாத்தூர், கோசாப்பூர், ரெட் ஹில்ஸ் சுங்கச்சாவடி, திருவொற்றியூர், வடபெரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் 198 வாகனங்கள் அடையாளம் காணப்பட்டு அகற்றப்பட்டன. </p><p>மேலும், தேசிய நெடுஞ்சாலை-5 சாலையில் 142 வாகனங்களும், தேசிய நெடுஞ்சாலை-48 சாலையில் 8 வாகனங்களும், சென்னை துறைமுகம் - மதுரவாயல் பிரிவில் 4 வாகனங்களும் அகற்றப்பட்டன.</p> <h2>எச்சரிக்கை</h2><p>விதிமுறைகளை கடுமையாக பின்பற்றுவதை உறுதிசெய்ய, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சென்னை போக்குவரத்து புலனாய்வு பிரிவு, மண்டல போக்குவரத்து அலுவலர்கள், உள்ளூர் காவல்துறை, மாவட்ட நிர்வாகங்களுக்கு முறையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>3-வது குழந்தை பெறும் பெண் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் ஓராண்டு விடுப்பு - அரசாணை வெளியீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/one-year-paid-leave-for-female-government-employees-who-have-their-third-child</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/one-year-paid-leave-for-female-government-employees-who-have-their-third-child#comments</comments><guid isPermaLink="false">7614dfb9-9e1c-45b0-9974-049389bcd34d</guid><pubDate>Mon, 31 Aug 2026 14:33:42 +0000</pubDate><atom:updated>2026-08-31T14:33:42.127Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,அரசு ஊழியர்கள்,tngovt,மகப்பேறு விடுப்பு,MaternityLeave</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/ocfb905c/tngovt33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 

பெண் அரசு ஊழியர்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/ocfb905c/tngovt33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>3-வது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பை 12 வாரங்களிலிருந்து 365 நாள்களாக (ஓராண்டு) உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.</p><p>இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசின் மனிதவளத்துறை முதன்மைச் செயலாளர் சமயமூர்த்தி இன்று (31-ம் தேதி) அரசாணை வெளியிட்டுள்ளார்.</p><p> அதில், 'தமிழ்நாட்டில் அரசுப் பணியில் உள்ள, <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">திருமணமான பெண் அரசு ஊழியர்களுக்கு </a>இரண்டு குழந்தைகளுக்கு மகப்பேறு விடுப்பு என்ற விதிமுறை முன்பு நடைமுறையில் இருந்தது. .</p><p>அதனைத் தொடர்ந்து 2021ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாணையில், இரண்டு குழந்தைகளைக் கொண்ட திருமணமான பெண் அரசு ஊழியர்களுக்கு, முழு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பை 9 மாதங்களிலிருந்து (270 நாட்கள்) 12 மாதங்களாக (365 நாட்கள்) உயர்த்தி உத்தரவு வெளியிடப்பட்டது.</p><p>அதனைத் தொடர்ந்து 2026 மார்ச் மாதம் வெளியிடப்பட்ட அரசாணையில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட திருமணமான பெண் அரசு ஊழியர்களுக்கு, 12 வாரங்களுக்கு மிகாமல் முழு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கி ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.</p><p>இந்த நிலையில், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர், 2026-2027-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின்போது, 18.8.2026 அன்று சட்டமன்றத்தில் அறிவிப்பை வெளியிட்டார். அதில் அவர், 'தமிழ்நாடு அரசில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு, அவர்களது மூன்றாவது குழந்தைக்கு தற்போது வழங்கப்படும் மகப்பேறு விடுப்புக்காலம், 12 வாரங்களிலிருந்து 365 நாட்களாக உயர்த்தப்படும்' என அறிவித்தார்.</p><p>தற்போது ​​அரசு பெண் ஊழியர்களுக்கு, அவர்களின் மூன்றாவது குழந்தைக்கு 12 வாரங்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சரின் அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், நிரந்தர அல்லது நிரந்தரமற்ற பணியில் உள்ள திருமணமான பெண் அரசு ஊழியர்களுக்கு, அவர்களது மூன்றாவது குழந்தைக்கு அனுமதிக்கப்படும் 12 வார மகப்பேறு விடுப்பை, முழு ஊதியத்துடன் கூடிய 365 நாட்களாக உயர்த்தி அரசு ஆணையிடுகிறது.</p><p>இந்த விடுப்புக் காலத்தை, பிரசவத்திற்கு முந்தைய ஓய்வு மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய காலம் எனப் பிரித்துக்கொள்ளும் வசதி சம்பந்தப்பட்ட பெண் அரசு ஊழியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வழங்கப்படும். இந்த ஆணை 2026 ஆகஸ்ட் 25 ந் தேதி முதல் அமல்படுத்தப்படும். ஆனால் ஆகஸ்ட் 25ஆம் தேதிக்கு முன்னதாகவே 3வது குழந்தைக்கான மகப்பேறு விடுப்பில் சென்றிருந்து, அத்தேதியிலோ அல்லது அதற்குப் பின்னரோ தொடர்ந்து விடுப்பில் இருக்கும் பெண் அரசு ஊழியர்களும், மொத்தம் 12 மாதங்கள் (365 நாட்கள்) வரையிலான மகப்பேறு விடுப்பைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/yikivry6/certicakte33.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>செப்டம்பர் 6- ந் தேதி அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-district-secretaries-meeting-on-september-6</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-district-secretaries-meeting-on-september-6#comments</comments><guid isPermaLink="false">b145a96b-6ff7-4514-835d-182b077cae0e</guid><pubDate>Mon, 31 Aug 2026 14:31:53 +0000</pubDate><atom:updated>2026-08-31T14:31:53.791Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>AIADMK,District Secretaries Meeting,மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்,அ.தி.மு.க</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/ctehw1zh/56.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அ.தி.மு.க.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/ctehw1zh/56.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>செப்டம்பர் 6- ந் தேதி அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. </p><p>இது குறித்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">அதிமுக </a>தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி  தலைமையில், சென்னை, இராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், </p><h2>ஆலோசனைக் கூட்டம்</h2><p>6.9.2026 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் ஆய்வு..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monsoon-preparedness-measures-in-chennai-zonal-monitoring-officers-conduct-inspections</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monsoon-preparedness-measures-in-chennai-zonal-monitoring-officers-conduct-inspections#comments</comments><guid isPermaLink="false">ebe99fdf-4bcf-4376-86a8-c963f2b12a27</guid><pubDate>Mon, 31 Aug 2026 14:21:57 +0000</pubDate><atom:updated>2026-08-31T14:21:57.755Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/xiki5ty8/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கண்காணிப்பு அலுவலர்கள் ஆய்வு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/xiki5ty8/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>கண்காணிப்பு அலுவலர்கள் கள ஆய்வு</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர், பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணித்து உரிய மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மண்டல அளவில் அமைச்சர் பெருமக்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.</p><p>இதனைத் தொடர்ந்து, மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் தங்களது மண்டலங்களில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு நடைபெற்று வரும் முன்னெச்சரிக்கை பணிகளை கள ஆய்வு செய்து, பணிகளை விரைவுப்படுத்தி வருகின்றனர்.</p><h2>பல்வேறு இடங்களில் தூர்வாரும் பணி</h2><p>இதன் ஒரு பகுதியாக, இன்று (31.08.2026) தேனாம்பேட்டை மண்டல கண்காணிப்பு அலுவலர்/நில அளவை மற்றும் தீர்வாயத்தின் இயக்குநர் டி. கிறிஸ்துராஜ், தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-122க்குட்பட்ட வெங்கட நாராயண சாலையில் உள்ள மாம்பலம் கால்வாயில் மேற்கொள்ளப்படும் தூர்வாரும் பணி, வார்டு-117க்குட்பட்ட தியாகராய சாலையில் உள்ள மாம்பலம் கால்வாயில் மேற்கொள்ளப்படும் தூர்வாரும் பணி, வார்டு-122க்குட்பட்ட நந்தனம் கால்வாயில் நீர் வெளியேறும் இடம், வார்டு-121க்குட்பட்ட சிவசாமி சாலை சந்திப்புப் பகுதியில் உள்ள மழைநீர் வடிகால்களின் திசைமாற்றுப் பகுதி, வார்டு-116, டாக்டர் பெசன்ட் சாலையில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் மழைநீர் வடிகால் வெளியேறும் இடம், லயோலா கல்லூரி அருகில் உள்ள மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வண்டல்கள் தூர்வாரும் பணி, வார்டு-109க்குட்பட்ட நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள டிரஸ்ட்புரம் கால்வாயில் நீர் வெளியேறும் இடம், வார்டு-110க்குட்பட்ட நுங்கம்பாக்கம் மயானபூமியில் உள்ள நீர் வெளியேறும் இடம், வார்டு-112க்குட்பட்ட புலியூர் 2ஆவது பிரதான சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.</p><p>பெருங்குடி மண்டல கண்காணிப்பு அலுவலர்/கலை மற்றும் கலாச்சாரத் துறை இயக்குநர் மகேஸ்வரி ரவிக்குமார், பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட ரேடியல் சாலையில் உள்ள பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகத்தின் கசிவுநீர் வெளியேறும் இடத்தில் குறுக்குக் கால்வாய் கட்டி நீர் வெளியேற்றப்படுவதையும், நாராயணபுரம் ஏரியில் நீர் வெளியேறும் இடம், வார்டு-191ல் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்வது தொடர்பாகவும், ரேடியல் சாலையில் உள்ள குழாய் பாலங்களின் கீழ் சதுப்பு நில நீர்வழியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வண்டல்கள் தூர்வாரும் பணி, ரேடியல் சாலையில் உள்ள 17 மதகுகளின் முகப்புப் பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணி, எம்.ஜி.ஆர். சாலை சந்திப்பில் மாற்று வடிகால் அமைப்பது தொடர்பாகவும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வார்டு-191, ஜல்லடியான்பேட்டை, பெரிய ஏரியினை பார்வையிட்டு ஆய்வு செய்து, உபரிநீர் வெளியேறும் இடத்தில் மதகு அமைத்து நீரினை வெளியேற்றுவது குறித்து நீர்வளத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><h2>மழைநீர் வடிகால் கட்டும் பணி</h2><p>மணலி மண்டல கண்காணிப்பு அலுவலர்/தமிழ்நாடு மாநில திட்டக் குழு உறுப்பினர்/செயலர் பி.குமரவேல் பாண்டியன், மணலி மண்டலம், வார்டு-18க்குட்பட்ட ஆமுல்லவாயல் பாலத்தின் புழல் உபரிநீர் கால்வாய் மற்றும் மணலி விரைவுச் சாலையின் பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கோடம்பாக்கம் </a>மண்டல கண்காணிப்பு அலுவலர்/நில நிர்வாக ஆணையரகத்தின் கூடுதல் ஆணையர் எஸ். கோபால சுந்தர ராஜ், கோடம்பாக்கம் மண்டலம், மாசி தெருவில் உள்ள விருகம்பாக்கம் கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணி மற்றும் காளியம்மன் கோயில் தெருவில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் கட்டும் பணி ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.</p><h2>அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்</h2><p>சோழிங்கநல்லூர் மண்டல கண்காணிப்பு அலுவலர்/அருங்காட்சியக இயக்குநர் டி. பாஸ்கர பாண்டியன், சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு.193, துரைப்பாக்கம் பகுதியில் நடைபெற்று வரும் மூடிய வடிகால் கட்டும் பணியினையும், ஆலந்தூர் மண்டல கண்காணிப்பு அலுவலர்/தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வாகே சங்கேத் பல்வந்த், ஆலந்தூர் மண்டலம், வார்டு-158, சென்னை வர்த்தக நிறுவனம் அருகில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சார்பில் நடைபெற்று வரும் விடுபட்ட மழைநீர் வடிகால் கட்டும் பணியினையும், ராயபுரம் மண்டல கண்காணிப்பு அலுவலர்/இயற்கை சூழல் மற்றும் பருவமநிலை மாற்றத்துறை இயக்குநர் ஆஷா அஜித், ராயபுரம் மண்டலம், வார்டு-57, யானைக் கவுனி பால கால்வாயினையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, நடைபெற்று வரும் பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.</p><p>மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் ஆகியவற்றை பருவமழைக் காலத்திற்கு முன்னதாக முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.</p><p>இந்த ஆய்வுகளின் போது, மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எப்.கியூ.எல் முதலீட்டு மோசடி வழக்குகள் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fql-investment-fraud-cases-transferred-to-economic-crimes-division</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fql-investment-fraud-cases-transferred-to-economic-crimes-division#comments</comments><guid isPermaLink="false">a57aed60-baa2-4f39-8f4e-b5b355802473</guid><pubDate>Mon, 31 Aug 2026 14:19:14 +0000</pubDate><atom:updated>2026-08-31T14:19:14.251Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>fraud case,மோசடி வழக்கு,மாற்றம்,பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்,முதலீட்டு தொகை,Investment in business,Economic Crimes Division</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/8i86cd9x/55.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பொருளாதார குற்றப்பிரிவு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/8i86cd9x/55.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கிரிப்டோ முதலீட்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">மோசடி வழக்கு</a>கள் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>கடந்த ஏழு மாதங்களாக மதுரை, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில்  "FQL Investment Trading", "FQL Exchange App" "VG Investment Group Syndicate" ஆகிய பெயர்களில் பல்நிலை சந்தைப்படுத்தல் (MLM)-உடன் கூடிய கிரிப்டோகரன்சி வர்த்தக மோசடி நடைபெற்றுவந்தது தொடர்பாக புகார்கள் எழுந்தன. இத்திட்டத்துடன் தொடர்புடைய முகவர்கள், பொதுமக்களிடம் பணத்தை முதலீடு செய்யுமாறு கூறி, அசாதாரணமான தினசரி வெகுமதிகள் கிடைக்கும் என்றும், கிரிப்டோகரன்சி வர்த்தகம் மூலம் முதலீடு செய்த தொகை 40-45 நாட்களில் இரட்டிப்பாகும் என்றும் தவறான தகவல்களைத் தெரிவித்து. பொதுமக்களை முதலீடு செய்யத் தூண்டியதாகக் கூறப்படுகிறது.</p><h2>விசாரணை</h2><p>மேற்கண்ட நான்கு மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடமிருந்து மனுக்கள்/புகார்கள் பெறப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் செயல்பாடுகள் தொடர்பாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில், மதுரை மாவட்ட காவல்துறையினர். சம்பந்தப்பட்ட முகவர்கள் மற்றும் பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டு, கூறப்படும் கிரிப்டோகரன்சி வர்த்தக நடவடிக்கையின் தன்மை மற்றும் செயல்படும் விதம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.</p><h2>வங்கிக் கணக்குகள் முடக்கம்</h2><p>குறிப்பிட்ட புகார்கள் பெறப்பட்டு, ஆரம்பகட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கண்ட மோசடி தொடர்பாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 3 வழக்குகள் மதுரை மாவட்டத்திலும், திண்டுக்கல், விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் தலா 1 வழக்கும் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை 17 குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் தொடர்புடைய 13 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.</p><p>முதற்கட்ட விசாரணையில், உள்ளூர் முகவர்கள் மூலம் பொதுமக்களிடம் ரொக்கம் மற்றும் G-Pay/UPI பரிவர்த்தனைகள் வழியாக கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் முதலீடு செய்யத் தூண்டப்பட்டுள்ளனர். பெறப்பட்ட தொகையின் ஒரு பகுதி Tether (USDT) உள்ளிட்ட கிரிப்டோகரன்சியாக மாற்றப்பட்டு, FQL/VG செயலிகள் மூலம் பராமரிக்கப்பட்டதாகக் கூறப்படும் வாலெட்டுகளில் வரவு வைக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. பின்னர் பணத்தைத் திரும்பப் பெறும் பரிவர்த்தனைகள் தோல்வியடைந்ததுடன். கணக்கில் காட்டப்பட்ட தொகைகள் எடுக்க முடியாமலும், கூடுதல் தொகை செலுத்துமாறு கோரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம்</h2><p>பின்னர் செயலி முடக்கப்பட்டதால், முதலீட்டாளர்கள் தங்களது கணக்குகளில் காட்டப்பட்டிருந்ததாகக் கூறப்படும் தொகைகளை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவரின் பங்கு, பரந்து விரிந்த மோசடி கும்பலின் தொடர்பு. பல மாவட்டங்களில் நடைபெற்றுள்ள மோசடிகள், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, அதிகமான நிதியிழப்பு. USDT. Binance வாலெட்டுகள் உள்ளிட்ட கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள் மற்றும் சந்தேகிக்கப்படும் சர்வதேச தொடர்புகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, முறையான, தீவிர விசாரணையின் தேவை மற்றும் பொதுநலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, காவல்துறை தலைமை இயக்குநர்/ படைத்தலைவர். முனைவர் மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் இன்று மேற்சொன்ன 6 வழக்குகளையும் பொருளாதார குற்றப்பிரிவுக்கு  (Economic Offences Wing- EOW) மாற்றி உத்தரவிட்டுள்ளார்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மேட்டூர் அணை திறப்பு: முதல்-அமைச்சர் விஜய் நாளை சேலம் வருகை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mettur-dam-opening-chief-minister-vijay-to-visit-salem-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mettur-dam-opening-chief-minister-vijay-to-visit-salem-tomorrow#comments</comments><guid isPermaLink="false">36f98c8d-13a9-42d3-85fb-072d1a7dd815</guid><pubDate>Mon, 31 Aug 2026 13:35:03 +0000</pubDate><atom:updated>2026-08-31T13:35:03.130Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,மேட்டூர் அணை,Mettur dam,முதல்-அமைச்சர் விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/5c4br2a7/vijay33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
மேட்டூர் அணை திறப்பு]]></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/5c4br2a7/vijay33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மேட்டூர், </p><p>மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்காக நாளை (செவ்வாய்க்கிழமை) முதல்-அமைச்சர் விஜய் சேலம் வருகிறார். இதையொட்டி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை சரிவர பெய்யாத காரணத்தால் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேட்டூர் அணை</a>க்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறைந்தது.</p><h2>முதல்-அமைச்சர் விஜய்</h2><p>இதனால் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லாததால் குறிப்பிட்ட நாளான ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட வில்லை. இதனிடையே, கர்நாடக மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழை காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு பரவலாக தண்ணீர் வருவதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.</p><p>இந்தநிலையில், மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதற்காக முதல்-அமைச்சர் விஜய் நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வருகிறார். ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வரும் அவர், அங்கிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக மேட்டூர் செல்கிறார். பின்னர் அவர் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைக்கிறார்.</p><h2>பாதுகாப்பு ஏற்பாடுகள்</h2><p>முதல்-அமைச்சர் விஜய் சேலம் வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் போலீஸ் பாது காப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மேட்டூர் அணையில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து முதல்-அமைச்சர் விஜய் வரும் வழிநெடுகிலும் சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதாவது முதல்-அமைச்சர் விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் பொதுமக்கள் அதிகளவு வருவார்கள் என்பதால் அவர் செல்லும் வழியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அணையின் வலது கரையில் விழாவுக்காக பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.</p><p>மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தண்ணீர் திறக்க உள்ள நிலையில் அணை முழுவதும் காவல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. மேட்டூர் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட காவலர்கள் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><h2>திறந்து வைக்கும் நேரம் அறிவிப்பு</h2><p>இந்த நிலையில், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் நாளை(செப். 1) மதியம் 12 மணிக்கு மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைக்கிறார்.</p><p>இதனைத் தொடர்ந்து, மேட்டூர் அணையில் நீர்வளத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மேட்டூர் அணை குறித்த விளக்கப் புகைப்படக் கண்காட்சியை முதல்-அமைச்சர் விஜய் பார்வையிடுகிறார்.</p><p>தொடர்ந்து, மேட்டூர் அணை மின் நிலையத்தைப் பார்வையிடும் முதல்-அமைச்சர் விஜய், அங்கிருந்து சேலம். காமலாபுரம் விமான நிலையம் புறப்படுகிறார். அங்கிருந்து, விமானம் மூலம் சென்னை வந்தடைகிறார்.</p> ]]></content:encoded></item><item><title>அனந்தபுரி எக்ஸ்பிரஸ் இனி பெண்ணாடம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-ananthapuri-express-will-now-halt-at-pennadam-railway-station</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-ananthapuri-express-will-now-halt-at-pennadam-railway-station#comments</comments><guid isPermaLink="false">35c99bd2-ba0a-4127-a016-775c8ceaba66</guid><pubDate>Mon, 31 Aug 2026 13:31:56 +0000</pubDate><atom:updated>2026-08-31T13:31:56.254Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Cuddalore,கடலூர்,Kollam-Chennai,Chennai - Kollam,கொல்லம்-சென்னை,கொல்லம்,Ananthapuri Express,பெண்ணாடம்,Ananthapuri,Pennadam,Pennadam Railway Station,சென்னை-கொல்லம்,பெண்ணாடம் ரெயில் நிலையம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/afjlsh5w/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெண்ணாடம் ரெயில் நிலையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/afjlsh5w/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை எழும்பூர்-கொல்லம்-சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் அனந்தபுரி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில், பெண்ணாடம் ரெயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்ல ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.</p><p>இதன்படி, 20635/20636 என்ற எண் கொண்ட அனந்தபுரி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு பெண்ணாடம் நிலையத்தில் சோதனை அடிப்படையில் ஒரு நிமிட தற்காலிக நிறுத்தம் வழங்கப்படுகிறது.</p><h2>செப்டம்பர் 2-ந் தேதி முதல் அமல்</h2><p>20635 சென்னை எழும்பூர்-கொல்லம் அனந்தபுரி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் பெண்ணாடம் நிலையத்தில் இரவு 11.23 மணிக்கு வந்து, 11.24 மணிக்கு புறப்படும். இந்த புதிய நிறுத்தம் 2.9.2026 முதல் அமலுக்கு வருகிறது.</p><p>அதேபோல், 20636 கொல்லம்-சென்னை எழும்பூர் அனந்தபுரி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் பெண்ணாடம் நிலையத்தில் காலை 1.07 மணிக்கு வந்து, 1.08 மணிக்கு புறப்படும். இந்த நிறுத்தம் 2.9.2026 முதல் நடைமுறைக்கு வருகிறது.</p><p>பெண்ணாடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பயணிகளின் வசதிக்காக, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அனந்தபுரி எக்ஸ்பிரஸ்</a> ரெயிலுக்கு இந்த ஒரு நிமிட தற்காலிக நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மார்த்தாண்டத்தில் பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-plus-one-student-in-marthandam-youth-gets-10-years-jail</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-plus-one-student-in-marthandam-youth-gets-10-years-jail#comments</comments><guid isPermaLink="false">d63e7ed2-024e-4a17-a1b8-8ae3bfac89c6</guid><pubDate>Mon, 31 Aug 2026 13:31:56 +0000</pubDate><atom:updated>2026-08-31T13:31:56.219Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Sexual harassment,பாலியல் தொல்லை,வாலிபர்,பிளஸ்-1 மாணவி,Marthandam,மார்த்தாண்டம்,10 ஆண்டு சிறை,10 years in prison</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/ybkog83l/jeslin-rajkumar.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஜெஸ்லின் ராஜ்குமார்]]></media:title><media:description type="html"><![CDATA[ மார்த்தாண்டத்தில் பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/ybkog83l/jeslin-rajkumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாகர்கோவில், </p><p>குற்றவாளி ஜெஸ்லின் ராஜ்குமாருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.மேலும், அவருக்கு ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது.</p> <h2>பாலியல் தொல்லை</h2><p>கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கடந்த 2019-ஆம் ஆண்டு 11-ம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி ஒருவருக்கு, அதே பகுதியை சேர்ந்த ஜெஸ்லின் ராஜ்குமார் என்பவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88">பாலியல் தொல்லை</a> கொடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.</p><h2>போக்சோ</h2><p>போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஜெஸ்லின் ராஜ்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நாகர்கோவிலில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி சுந்தரையா இன்று தீர்ப்பு வழங்கினார்.</p> <h2>சிறை தண்டனை</h2><p>மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளி ஜெஸ்லின் ராஜ்குமாருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">சிறை தண்டனை</a> விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.மேலும், அவருக்கு ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குற்றவாளி ஜெஸ்லின் ராஜ்குமார் சிறையில் அடைக்கப்பட்டார்.</p> ]]></content:encoded></item><item><title>திருக்குறளின் சிறப்பை உலக அரங்கில் எடுத்துரைத்த பிரதமர் மோடி – எல்.முருகன் பாராட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pm-modi-highlights-the-importance-of-thirukkural-on-the-world-stage-l-murugan-praises</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pm-modi-highlights-the-importance-of-thirukkural-on-the-world-stage-l-murugan-praises#comments</comments><guid isPermaLink="false">688923aa-e4ab-4f2c-97ac-81bf7acde607</guid><pubDate>Mon, 31 Aug 2026 13:31:55 +0000</pubDate><atom:updated>2026-08-31T13:31:55.705Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எல்.முருகன்,பிரதமர் மோடி,PM Modi,L. Murugan ​</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/n0472uu1/54.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எல்.முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/n0472uu1/54.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திருக்குறளின் சிறப்பை உலக அரங்கில் எடுத்துரைத்த பிரதமர் மோடிக்கு மத்திய இணை மந்திரி <a href="https://www.dailythanthi.com/topic/l-murugan">எல்.முருகன் </a>பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்  தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>பாரதப் பிரதமர் மோடிஜி அவர்கள் தாஷ்கண்ட், உஸ்பெகிஸ்தானில் திருக்குறளின் சிறப்பையும், அதன் உலகளாவிய முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தது ஒவ்வொரு தமிழருக்கும் பெருமை தரும் தருணம்.</p><p>“பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழில் எழுதப்பட்ட திருக்குறள், இன்றும் ஆன்மிகம், தத்துவம் மற்றும் நடைமுறை வாழ்க்கை என அனைத்து துறைகளிலும் ஆழ்ந்த உத்வேகத்தை அளிக்கிறது” என்று பிரதமர் அவர்கள் குறிப்பிட்டார்.</p><h2>மகத்தான முயற்சி</h2><p>மேலும், திருக்குறளை உஸ்பெக் மொழியில் மொழிபெயர்க்கும் பணியை முன்னெடுக்க வேண்டும் என்ற பிரதமரின் அழைப்பு, உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழின் செழுமையையும், திருவள்ளுவரின் பேரறிவையும் உலகெங்கும் கொண்டு செல்லும் மகத்தான முயற்சியாகும். திருக்குறள் உலகப் பொதுமறை என்பதை பிரதமரின் இந்த வார்த்தைகள் மீண்டும் உலகிற்கு எடுத்துரைக்கின்றன.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தென்னிந்திய பகுதி தலைமை கட்டளையிலிருந்து லெப்டினன்ட் ஜெனரல் வி. ஸ்ரீஹரி பணி ஓய்வு..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/lieutenant-general-v-srihari-retires-from-the-south-india-area-headquarters</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/lieutenant-general-v-srihari-retires-from-the-south-india-area-headquarters#comments</comments><guid isPermaLink="false">3fbd30bb-6d8f-48a1-aebf-f75066475bd4</guid><pubDate>Mon, 31 Aug 2026 13:19:30 +0000</pubDate><atom:updated>2026-08-31T13:19:30.638Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,இந்திய ராணுவம்,indian army,ராணுவ தளபதி,லெப்டினன்ட் ஜெனரல்,வி. ஸ்ரீஹரி,Lieutenant General</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/7vqy7g0z/Untitled-2.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/7vqy7g0z/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>இந்திய ராணுவத்தின் தெற்குப்பகுதி தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் வி. ஸ்ரீஹரி, தனது நாற்பதாண்டுகால சேவைக்குப்பின் இன்று பணி நிறைவு பெற்றார். தனது பிரியாவிடை நிகழ்வின் ஒரு பகுதியாக, தேச சேவைக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரர்களுக்கு அவர் சென்னை போர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.</p><h2>பல்வேறு பதக்கங்கள் பெற்றவர்</h2><p>ஜூன் 1987-ல் 16 சீக்கிய இலகு காலாட்படையில் அதிகாரியாகப் பொறுப்பேற்ற லெப்டினன்ட் ஜெனரல் ஸ்ரீஹரி, பின்னர் பாராசூட் சிறப்புப் படைபிரிவில் இணைந்தார். தனது பணிக்காலத்தில், அவர் பல்வேறு நிலப்பரப்புகளிலும் களங்களிலும் செயல்பட்டார். அவரது சிறப்பான சேவைக்காக ஷவ்ரிய சக்ரா, சேனா பதக்கம், அதி விசிஷ்ட சேவா பதக்கம் உள்ளிட்ட பல கவுரவங்கள் வழங்கப்பட்டன.</p><p>1977-ல் அமராவதி நகரில் உள்ள சைனிக் பள்ளியில் ஒரு இளம் மாணவராக இருந்து, ராணுவ தென் பகுதியின் தலைவராக உயர்ந்த அவரது பயணம், ஒழுக்கம், விடாமுயற்சி, தொழில்திறன், அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கு ஒரு குறிப்பிடத்தக்க சான்றாகும்.</p><p>ராணுவ தென் பகுதியின் தளபதியாக இருந்த காலத்தில், லெப்டினன்ட் ஜெனரல் ஸ்ரீஹரி, பாதுகாப்புப் படைகளுக்கும் மக்களுக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்துவதற்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்தார்.</p><h2>ஒலி-ஒளிக்காட்சி நிகழ்ச்சிகள்</h2><p>சென்னையில் உள்ள போர் நினைவிடத்தில் பொதுமக்களின் ஈடுபாட்டை அதிகரிபதில் அவர் சிறப்பு கவனம் செலுத்தினார். டி-55 பீரங்கி மற்றும் ஐ.என்.எஸ் விக்ராந்த், ஐ.என்.எஸ் அஞ்சதீப் ஆகிய கடற்படைக்கப்பல்களின் மாதிரிகள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டன. குடிமை நிர்வாகத்திற்கும் ஆயுதப் படைகளுக்கும் உள்ள ஆழமான உறவை பிரதிபலிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் தீவிர ஒத்துழைப்பு மற்றும் ஆதரவால் இந்த முன்னெடுப்புகள் மேலும் வலுப்பெற்றன.</p><p>சென்னை போர் நினைவிடத்தில் தமிழ் தலைப்புகளுடன் கூடிய ஒலி-ஒளிக்காட்சி நிகழ்ச்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலையில் தொடர்ந்து நடத்தப்படவுள்ளன. இந்த முயற்சி குடிமக்கள், குறிப்பாக இளம் தலைமுறையினர், இந்திய வீரர்களின் தியாகங்களைப் புரிந்துகொள்ளவும், ஆயுதப் படைகளின் மீது ஆழ்ந்த மதிப்பை வளர்த்துக்கொள்ளவும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.</p><p>லெப்டினன்ட் ஜெனரல் ஸ்ரீஹரி, அவசரகாலத் தயார்நிலை, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் (HADR) போன்ற துறைகளில் பாதுகாப்புப்படைகள், அரசு, தனியார் துறை போன்றவற்றுடன் சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தார். முன்னாள் ராணுவ வீரர்களின் நலன், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அவர் சிறப்பு கவனம் செலுத்தினார்.</p><h2>வாழ்த்துகள் தெரிவிப்பு</h2><p>இந்திய ராணுவ தென்பகுதி தலைமையக அதிகாரிகள், இளநிலை அதிகாரிகள், இதர நிலையினர், சிவில் பணியாளர்கள் ஆகியோர், <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu/lieutenant-general-v-srihari-takes-charge-as-new-army-commander-for-southern-region-1171668">லெப்டினன்ட் ஜெனரல்</a> ஸ்ரீஹரிக்கு அவரது அர்ப்பணிப்புடன் கூடிய நாற்பதாண்டு சேவைக்கு மரியாதை செலுத்தியதுடன், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நிறைவான பணிக்குப் பிந்தைய வாழ்க்கை அமைய தங்கள் நல்வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>எப்.கியூ..எல் முதலீட்டு மோசடி; பணம் போச்சே... மன உளைச்சலில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-young-man-made-a-tragic-decision-in-a-state-of-depression</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-young-man-made-a-tragic-decision-in-a-state-of-depression#comments</comments><guid isPermaLink="false">74b3d237-a413-4108-8f95-6ec31a5ef1ce</guid><pubDate>Mon, 31 Aug 2026 12:52:17 +0000</pubDate><atom:updated>2026-08-31T12:52:17.898Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,பண மோசடி,FinancialScam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/xwk5gvt8/money33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
எப்.கியூ..எல் முதலீட்டு மோசடி]]></media:title><media:description type="html"><![CDATA[ மன உளைச்சலில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/xwk5gvt8/money33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>எப்.கியூ..எல் முதலீட்டு மோசடியில் பணத்தை இழந்த இளைஞர் ராசு என்பவர் மன உளைச்சலால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p><h2>செல்போன் செயலிகள்</h2><p>மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பொது மக்களிடம் பலர், எப்.கியூ..எல். நிறுவனம் என்ற நிதி நிறுவனம் சார்பில் செல்போன் செயலிகள் மூலம் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக நேரில் வந்து ஆசைவார்த்தை கூறியுள்ளனர். குறிப்பாக பெண்களிடம் பேசினர். இதற்காக ஏஜெண்டுகள் செயல்பட்டனர். </p><p>இந்த செயலிகளை நம்பி ஆயிரக்கணக்கானோர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81">கடன் வாங்கி முதலீடு</a> செய்தனர். ஆனால் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு பணத்தை இரட்டிப்பு செய்து தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் மேலூர், சிவகங்கையில் தொடர்ந்து போலீசாரிடம் புகார்கள் தெரிவித்து வருகின்றனர்.</p><h2>17 பேர் கைது</h2><p>எப்.கியூ..எல். முதலீட்டு மோசடி வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>மன உளைச்சலில் </h2><p>இந்தநிலையில், பணத்தை இரட்டிப்பாக்குவதாக நடந்த ஆன்லைன் மோசடியில் பாதிக்கப்பட்ட நத்தம் பகுதியைச் சேர்ந்த ராசு (வயது 26) என்ற இளைஞர்  உயிரை மாய்த்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என நினைத்திருந்த நிலையில் மோசடியால் பணம் போச்சே என்ற நிலையில் ராசு சில நாட்களாக மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.</p><p>மோசடி மீது நடவடிக்கை எடுக்க கோரியும், இளைஞர் மரணத்துக்கு நீதி வேண்டியும் திண்டுக்கல் - மதுரை சாலையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>வாணியம்பாடி அருகே கபடி விளையாடியபோது திடீரென மயங்கி விழுந்த பள்ளி மாணவர் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/school-student-dies-after-suddenly-collapsing-while-playing-kabaddi-near-vaniyambadi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/school-student-dies-after-suddenly-collapsing-while-playing-kabaddi-near-vaniyambadi#comments</comments><guid isPermaLink="false">6ad10ebf-852c-4bad-a477-3f7aea0b336c</guid><pubDate>Mon, 31 Aug 2026 12:50:16 +0000</pubDate><atom:updated>2026-08-31T12:50:16.433Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>kabadi,திருப்பத்தூர்,கபடி,Student death,police enquiry,மாணவன் பலி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/ifcwy9yh/-.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மாணவன் முகேஷ்- நண்பர்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ மாணவன் திடீரென மரணம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/ifcwy9yh/-.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பத்தூர்,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">திருப்பத்தூர் மாவட்டம்</a> வாணியம்பாடி அருகே பள்ளிகளுக்கு இடையேயான கபடி போட்டியின் போது, விளையாடிக் கொண்டிருந்த 12-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். </p><h2>விளையாட்டு மைதானத்தில் நேர்ந்த விபரீதம்</h2><p>திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி மைதானத்தில் பள்ளிகளுக்கு இடையேயான கபடி போட்டிகள் நடைபெற்றன. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு விளையாடினர். அப்போது, போட்டியில் தீவிரமாக விளையாடிக்கொண்டிருந்த அரசுப் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D">பள்ளி மாணவர் முகேஷ்</a> (வயது 17) என்பவர், எதிர்பாராத விதமாக மைதானத்திலேயே திடீரென சுருண்டு விழுந்து மயங்கினார்.</p><h2>ஆஸ்பத்திரியில் ஏமாற்றம்</h2><p>அதிர்ச்சியடைந்த சக மாணவர்களும் ஆசிரியர்களும் உடனடியாக முகேஷை மீட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். விளையாடிக்கொண்டிருந்த போதே மாணவனின் மூச்சு நின்றுபோனது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது.</p><h2>நண்பர்கள் கதறல்</h2><p>துடிப்போடு தங்களுடன் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF">கபடி </a>விளையாடிய நண்பன், கண் இமைக்கும் நேரத்தில் பிணமாக கிடப்பதைக் கண்ட சக மாணவர்கள் மற்றும் நண்பர்கள், அவரது உடலைப் பார்த்து ஆஸ்பத்திரியில் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களைக் கலங்க செய்தது.</p><h2>போலீஸ் விசாரணை</h2><p>இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், மாணவனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விளையாட்டு மைதானத்தில் மாணவர் உயிரிழந்ததற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">BREAKING || கபடி விளையாடும் போதே நின்றுபோன மூச்சு... நண்பனின் உடலை பார்த்து கதறி அழும் மாணவர்கள் <a href="https://t.co/iq0ec3Dlhe">https://t.co/iq0ec3Dlhe</a><a href="https://x.com/hashtag/kabaddi?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#kabaddi</a> <a href="https://x.com/hashtag/student?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#student</a> <a href="https://x.com/hashtag/thanthitv?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#thanthitv</a></p>&mdash; Thanthi TV (@ThanthiTV) <a href="https://x.com/ThanthiTV/status/2094387709326561510?ref_src=twsrc%5Etfw">August 31, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>கோவையில் ரூ.400 கோடியில் டிஜிட்டல் நிதி மையம் ; முதல்-அமைச்சர் அறிவிப்புக்கு  தவெக எம்.எல்.ஏ. கனிமொழி  வரவேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-400-crore-digital-finance-hub-in-coimbatore-mla-kanimozhi-welcomes-cms-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-400-crore-digital-finance-hub-in-coimbatore-mla-kanimozhi-welcomes-cms-announcement#comments</comments><guid isPermaLink="false">08ce60a5-b70f-46d6-9dd1-1d1fcddf98a6</guid><pubDate>Mon, 31 Aug 2026 12:49:31 +0000</pubDate><atom:updated>2026-08-31T12:49:31.815Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,முதல்-அமைச்சர்,அறிவிப்பு,கனிமொழி,வரவேற்பு,Digital,kanimozhi santhosh,tvk mla,தவெக எம்.எல்.ஏ.,டிஜிட்டல் நிதி மையம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/1k65cihh/kanimozhi-santhosh.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கனிமொழி சந்தோஷ்]]></media:title><media:description type="html"><![CDATA[ சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/1k65cihh/kanimozhi-santhosh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோயம்புத்தூரில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம் ரூ.400 கோடி மதிப்பீட்டில் “கோயம்புத்தூர் டிஜிட்டல் நிதி மையம்” எனும் டிஜிட்டல் நிதி மையம் அமைக்கப்படும் என்ற தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அறிவிப்புக்கு, கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D">கனிமொழி சந்தோஷ்</a> வரவேற்பு தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><h2>மகிழ்ச்சியளிக்கிறது</h2><p>“கோயம்புத்தூரின் தொழில் வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும், இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும் ரூ.400 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் நிதி மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.</p><h2>டிஜிட்டல் நிதி மையம்</h2><p>உலகத் தரத்திலான அலுவலகங்கள், புத்தொழில் நிறுவனங்களுக்கான வசதிகள், நவீன ஆராய்ச்சி மற்றும் ஆய்வக வசதிகள், பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு மையங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இந்த டிஜிட்டல் நிதி மையம் உருவாக்கப்பட உள்ளது.</p><h2> வேலைவாய்ப்பு</h2><p>இந்த திட்டம் உலகளாவிய முதலீடுகளை கோவைக்கு ஈர்ப்பதற்கும், நிதிநுட்ப துறையில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கும், இளைஞர்களுக்கு உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்.</p> <h2>கோயம்புத்தூர்</h2><p>தொழில், தொழில்முனைவு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளில் ஏற்கனவே முன்னணி நகரமாக திகழும் கோயம்புத்தூர், இந்தத் திட்டத்தின் மூலம் இந்தியாவின் முக்கிய டிஜிட்டல் நிதி மையங்களில் ஒன்றாகவும், சர்வதேச அளவில் கவனம் பெறும் தொழில்நுட்ப நகரமாகவும் மேலும் உயர்வடையும்.</p><h2>மனதார வரவேற்கிறேன்</h2><p>கோவை மக்களின் நீண்டகால வளர்ச்சி, இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கான பொருளாதார வாய்ப்புகளை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ள இந்த சிறப்புமிக்க திட்டத்தை கவுண்டம்பாளையம் தொகுதி மக்களின் சார்பிலும், கோவை மக்களின் சார்பிலும் மனதார வரவேற்கிறேன்.</p> <h2>தமிழ்நாடு அரசு</h2><p>கோயம்புத்தூரின் தொழில் வளர்ச்சிக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வரும் தமிழ்நாடு அரசுக்கும், இந்த முக்கியமான திட்டத்தை அறிவித்துள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சருக்கும்</a> எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு;  முதல்-அமைச்சருக்கு ஈ.ஆர்.ஈஸ்வரன் நன்றி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/milk-procurement-price-hiked-by-rs3-er-eswaran-thanks-chief-minister</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/milk-procurement-price-hiked-by-rs3-er-eswaran-thanks-chief-minister#comments</comments><guid isPermaLink="false">95d731d5-62ec-4bec-ad6c-a3ebba4fd1b4</guid><pubDate>Mon, 31 Aug 2026 12:35:45 +0000</pubDate><atom:updated>2026-08-31T12:35:45.277Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Price,Milk procurement,பால் கொள்முதல் விலை,ஈ.ஆர்.ஈஸ்வரன்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,E.R. Eswaran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/lcnuixbe/53.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஈ.ஆர்.ஈஸ்வரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/lcnuixbe/53.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக முதல்-அமைச்சர் பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி லிட்டருக்கு ரூ.44 என அறிவித்ததற்கு விவசாயிகள் சார்பாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/er-eswaran">ஈ.ஆர்.ஈஸ்வரன்</a> நன்றி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>இன்று தமிழக சட்டமன்ற பேரவையில் பால் கொள்முதல் விலையை மேலும் மூன்று ரூபாய் உயர்த்தி லிட்டருக்கு ரூ.44 என அறிவித்த தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். தீவனங்களின் விலை உயர்வு மற்றும் பராமரிப்புச் செலவுகள் அதிகரித்துள்ள சூழலில், பால் உற்பத்தியாளர்களின் சிரமங்களைப் புரிந்து கொண்டு அரசு இந்த அறிவிப்பை அறிவித்தது வரவேற்கத்தக்கது. </p><h2>விவசாயிகள் சார்பாக நன்றி</h2><p>இந்தாண்டு விவசாயத்திற்கு காவிரியில் நீர் திறக்காதது, முழுமையாக பயிர்கடன் தள்ளுபடி செய்யாதது போன்ற பல்வேறு பிரச்சினைகளை விவசாயிகள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பால் கொள்முதல் விலை உயர்வு என்பது அவர்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கும். இந்த அறிவிப்பை அறிவித்த தமிழக முதல்-அமைச்சர் அவர்களுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாகவும், விவசாயிகள் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.               </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>குடிநீர் குழாய் உடைந்ததால் பொதுமக்கள் அவதி...!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/public-suffering-due-to-broken-water-pipe</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/public-suffering-due-to-broken-water-pipe#comments</comments><guid isPermaLink="false">dd6ae982-a936-4f00-b4a1-b9e5a60b3c4a</guid><pubDate>Mon, 31 Aug 2026 12:17:47 +0000</pubDate><atom:updated>2026-08-31T12:17:47.448Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,People are suffering,water pipe,பொதுமக்கள் அவதி,குடிநீர் குழாயில் உடைப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/8ha84p9g/4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ குடிநீர் குழாய் உடைந்தது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/8ha84p9g/4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>குடிநீர் குழாய் உடைந்து சாலையில் சூழ்ந்ததால் பொதுமக்களும் வாகன ஓட்டுநர்களும் பெரும் அவதியில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>மதுரை மாவட்டம் சோழவந்தான் திருவேங்கடம் பள்ளிவாசல் பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த குடிநீர் குழாய் சோழவந்தானிலிருந்து திருமங்கலம் வழியே செல்கிறது. இது கடந்த 3 நாட்களுக்கு முன்பு உடைந்து பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி சாலையில் பெருகி கொண்டிருக்கிறது. இதனால் அந்த வழியே செல்லும் <a href="https://www.dailythanthi.com/topic/பொதுமக்கள்">பொதுமக்களும்</a> வாகனஓட்டிகளும் சிரமப்பட்டு சாலையை கடந்து செல்கின்றனர்.</p><h2>பொதுமக்கள் குற்றச்சாட்டு</h2><p>இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் வேதனையில் ஈடுபட்டு வருகின்றனர். <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D">குடிநீர் குழாய்</a> உடைந்தது பற்றி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் அதனை சரி செய்ய எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>‘ராகுல் காந்தியின் குரலை எப்.ஐ.ஆரால் நசுக்க முடியாது’ - ஜோதிமணி எம்.பி. ஆவேசம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rahul-gandhis-voice-cannot-be-stifled-by-an-fir-mp-jothimani-speaks-vehemently</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rahul-gandhis-voice-cannot-be-stifled-by-an-fir-mp-jothimani-speaks-vehemently#comments</comments><guid isPermaLink="false">d334158b-2a2c-4d34-bd10-053049eafa74</guid><pubDate>Mon, 31 Aug 2026 12:15:37 +0000</pubDate><atom:updated>2026-08-31T12:15:37.551Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,ராகுல் காந்தி,Rahul Gandhi,ஜோதிமணி,ஜோதிமணி எம்.பி.,Jothimani,jothimani mp</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/u85q21lz/jothimani-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜோதிமணி ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/u85q21lz/jothimani-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ராகுல் காந்தியின் சமூக நீதிக்கான சமரசமற்ற குரலை உங்களின் எந்தக் கோழைத்தனமான எப்.ஐ.ஆர்-களாலும் நசுக்கிவிட முடியாது என காங்கிரஸ் எம்.பி. <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF">ஜோதிமணி </a>தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>ராகுல் காந்தி மீது எப்.ஐ.ஆர்.</h2><p>அகில இந்திய காங்கிரஸ் தலைவர் அண்ணன் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்புக்கும், சமூகப் பாகுபாட்டிற்கும் எதிராகக் குரல் கொடுத்ததற்காக எங்கள் தலைவர் ராகுல் காந்தி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்திருப்பது பாஜக-வின் அப்பட்டமான மனுவாத, சாதிய ஆதிக்க மனநிலையின் உச்சக்கட்டம்! வெட்கக்கேடானது!</p><p>இந்த நாட்டின் கோடிக்கணக்கான ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களின் குரலாக நின்று தீண்டாமைக்கு எதிராகப் பேசுவது குற்றமா? சாதியப் பாகுபாட்டிற்கு எதிராகப் பேசுபவர்களைக் குற்றவாளிகளாக்குவதும், சாதிய அநீதிகளைக் காப்பாற்றுபவர்களுக்கு அரசு ஆதரவு தருவதும்தான் மோடி அரசின் 'வளர்ச்சி மாடலா'?</p><p>அண்ணல் அம்பேத்கர் தந்த அரசமைப்புச் சட்டத்தையும், சமத்துவக் கோட்பாடுகளையும் காலில் போட்டு மிதிக்கும் இந்த மனுவாதக் கூட்டத்தைப் பார்த்து நான் கேட்க விரும்புவது:</p><p>ஒடுக்கப்பட்ட மக்களின் சுயமரியாதைக்காக நீங்கள் எப்போதாவது ஒரு துரும்பையாவது அசைத்தது உண்டா?</p><p>சமத்துவத்திற்காகப் போராடிய ஒரு வரலாற்றுத் தியாகத்தையாவது உங்களால் காட்ட முடியுமா? முடியாது!</p><h2>நாங்கள் ஒன்றும் அடிமைகள் அல்ல</h2><p>ஏனென்றால் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வை நிலைநிறுத்துவதே உங்கள் சித்தாந்தம்.</p><p>பாஜக அரசுக்கு நாங்கள் மிகத் தெளிவாகச் சொல்கிறோம், எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், மிரட்டல்களுக்குப் பயந்து பின்வாங்குவதற்கு நாங்கள் ஒன்றும் உங்கள் அடிமைகள் அல்ல;</p><p>பெரியாரும் அம்பேத்கரும் காந்தியும் விதைத்த சமத்துவக் களத்தில் நிற்பவர்கள்!</p><p>ராகுல் காந்தியின் சமூக நீதிக்கான சமரசமற்ற குரலை உங்களின் எந்தக் கோழைத்தனமான எப்.ஐ.ஆர்.-களாலும் நசுக்கிவிட முடியாது. சமூக நீதி வெல்லும் வரை எங்கள் போராட்டம் தொடரும்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சட்டப்பேரவை கண்ணியத்தை காக்கும் வகையில் உறுப்பினர்கள் பேச வேண்டும் - ஜேசிடி பிரபாகர் அறிவுரை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/members-should-speak-in-a-manner-that-preserves-the-dignity-of-the-legislative-assembly-jct-prabhakar-advises</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/members-should-speak-in-a-manner-that-preserves-the-dignity-of-the-legislative-assembly-jct-prabhakar-advises#comments</comments><guid isPermaLink="false">74e47f40-73b7-4a97-a447-1d8e68967496</guid><pubDate>Mon, 31 Aug 2026 12:13:43 +0000</pubDate><atom:updated>2026-08-31T12:13:43.681Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Assembly,members,உறுப்பினர்கள்,சட்டப்பேரவை,ஜேசிடி பிரபாகர்,JCD Prabhakar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/qz08oqx0/speaker.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜேசிடி பிரபாகர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/qz08oqx0/speaker.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை:</p><p>சட்டப்பேரவையில் தெரிவிக்கப்படும் கருத்துகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படும் அளவுக்கு இல்லாமல், அவையின் கண்ணியத்தையும் மாண்பையும் காக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று உறுப்பினர்களுக்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவுறுத்தினார். இது குறித்து சட்டப்பேரவையில் அவர் கூறியதாவது:-</p><p>அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படும் கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவி வருவதாக கடந்த வாரம் சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.</p><p>இந்த நிலையில், திண்டுக்கல்லில் தனியார் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது, அரசியல் கட்சிகளுடன் தொடர்பில்லாத இளைஞர்கள் சிலர் தன்னை சந்தித்ததாக சபாநாயகர் தெரிவித்தார். அரசியல் குறித்து அறிந்துகொண்டு, அதில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் தங்களுக்கு ஏற்பட்டுள்ளதாக அந்த இளைஞர்கள் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.</p><h2>தவிர்க்க வேண்டும்...</h2><p>அப்போது, சட்டப்பேரவையில் இருந்து நீக்கப்படும் அளவுக்கு ஏன் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்றும், உறுப்பினர்கள் பேசும்போதே அவைக் குறிப்பில் இடம்பெறாத வகையிலான கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்றும் அந்த இளைஞர்கள் தன்னிடம் கூறியதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.</p><p>சட்டப்பேரவையில் பேசும் உறுப்பினர்கள் தங்களை கட்டுப்படுத்தி, முறையாகவும் நெறிமுறையுடனும் கருத்துகளை தெரிவிக்க வேண்டும். அவையின் கண்ணியம், உறுப்பினர்களின் கௌரவம் மற்றும் வாக்காளர்களின் மதிப்பு ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் பேச்சு இருக்க வேண்டும்.</p><h2>விரிவான முடிவு</h2><p>அவ்வாறு செயல்பட்டால் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாது. அதையும் மீறி அவையின் மாண்பை குறைக்கும் வகையில் செயல்பாடுகள் இருந்தால், அவற்றை வெளிக்கொண்டு வருவதில் தவறில்லை என மக்கள் கருதுகின்றனர். எனவே, இந்த விவகாரம் குறித்து அனைத்து உறுப்பினர்களிடமும் ஆலோசனை நடத்தி விரிவான முடிவு எடுக்கப்படும்.</p><p>இவ்வாறு சபாநாயகர் <a href="https://www.dailythanthi.com/topic/jcd-prabhakar">ஜேசிடி பிரபாகர்</a> தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>நெல்லைச் சுமக்கும் தொழிலாளர்களின் உழைப்பை மதிக்குமா தமிழக அரசு? - வேல்முருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-tamil-nadu-government-value-the-labor-of-workers-who-transport-paddy-velmurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-tamil-nadu-government-value-the-labor-of-workers-who-transport-paddy-velmurugan#comments</comments><guid isPermaLink="false">997ff84f-7177-4874-8a01-0d2946fc4adc</guid><pubDate>Mon, 31 Aug 2026 12:02:34 +0000</pubDate><atom:updated>2026-08-31T12:02:34.271Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Velmurugan,வேல்முருகன்,தமிழக வாழ்வுரிமைக் கட்சி,தி.வேல்முருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/0yr5bzsy/velmurugan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/0yr5bzsy/velmurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நெல்லைச் சுமக்கும் தொழிலாளர்களின் உழைப்பை மதிக்குமா தமிழக அரசு? என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>உழைப்புக்கு உரிய கூலி</h2><p>திருவாரூர் மாவட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள், விவசாயிகள் கொண்டுவரும் நெல் மூட்டைகளைக் கையாளும் கடினமான பணியைத் தினந்தோறும் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் உடல் உழைப்புக்கு உரிய கூலி கிடைக்க வேண்டும் என்பது முற்றிலும் நியாயமான கோரிக்கையாகும்.</p><p>இவர்கள் சுமப்பது வெறும் நெல் மூட்டைகள் மட்டுமல்ல. விவசாயியின் பல மாத உழைப்பின் பயனை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்லும் முக்கியப் பொறுப்பையும் சுமக்கின்றனர்.</p><p>நெல் கொள்முதல் செய்யப்பட்டு அரிசியாக மாற்றப்படுகிறது. அந்த அரிசிதான் மக்களின் அன்றாட உணவின் அடிப்படை. எனவே, நெல் கொள்முதல் சங்கிலியில் ஏற்படும் எந்தவொரு தடங்கலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பையும் நேரடியாகப் பாதிக்கக்கூடியது.</p><h2>விவசாயிகள் பரிதவிப்பு</h2><p>தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரி ஒரு வாரத்திற்கும் மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், நெல் கொள்முதல் பணிகள் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மூட்டைகள் தேங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அறுவடை செய்த நெல்லை உடனுக்குடன் விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் பரிதவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.</p><p>எனவே, சுமை தூக்கும் தொழிலாளர்களின் நியாயமான கூலி உயர்வு கோரிக்கைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும். நெல் கொள்முதல் பணிகளைத் தடையின்றி நடத்தி, விவசாயிகளின் விளைபொருள்கள் மழையிலோ, வெயிலிலோ வீணாகாமல் பாதுகாக்கத் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழக அரசு</a> போர்க்கால அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சவுமியா அன்புமணியின் பேச்சுக்கு துணை சபாநாயகர்  பாராட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/deputy-speaker-praises-soumya-anbumanis-speech</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/deputy-speaker-praises-soumya-anbumanis-speech#comments</comments><guid isPermaLink="false">a60b6911-b18c-4bd7-a566-fdfea7c2ce70</guid><pubDate>Mon, 31 Aug 2026 11:56:25 +0000</pubDate><atom:updated>2026-08-31T11:56:25.945Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சவுமியா அன்புமணி,Deputy Speaker,Soumya Anbumani,துணை சபாநாயகர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/ya7hn1zp/52.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சவுமியா அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/ya7hn1zp/52.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை:</p><p>சட்டமன்ற உறுப்பினர்கள் அவையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை சவுமியா அன்புமணியை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என துணை சபாநாயகர் ரவிசங்கர் தெரிவித்தார்.</p><p>சட்டப்பேரவையில் மதுவிலக்கு தொடர்பாக <a href="https://www.dailythanthi.com/topic/soumya-anbumani">சவுமியா அன்புமணி</a> எம்.எல்.ஏ. பேசுகையில், குடும்பங்களின் பொருளாதாரத்தை டாஸ்மாக் மதுபான விற்பனை பாதிப்பதாக குற்றம் சாட்டி அவர் கூறியதாவது:-</p><p>பெண்களின் சுதந்திரத்தையும், குடும்பங்களின் பொருளாதார நிலையையும் டாஸ்மாக் பாதிக்கிறது. 2025-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையில் ரூ.789.95 கோடிக்கும், 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையில் ரூ.725.56 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.</p><p>குழந்தைகளின் கல்வி, மகள்களின் திருமணம், வீடு கட்டுதல் போன்றவற்றுக்காக குடும்பங்கள் சேமிக்க வேண்டிய பணம் மதுபானத்துக்காக செலவிடப்படுகிறது. எனவே, மதுவிலக்கை குறைந்தபட்சம் கொள்கையாகவாவது அரசு அறிவிக்க வேண்டும்.</p><h2>மிகப்பெரிய சாதனை</h2><p>மேலும், மதுவிலக்குக்காக பா.ம.க. மேற்கொண்ட சட்டப் போராட்டத்தின் மூலம் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். தவெக அரசு பொறுப்பேற்ற முதல் நாளிலேயே 717 மதுக்கடைகளை மூடுவதற்கான உத்தரவில் கையெழுத்திட்டது மிகப்பெரிய சாதனை என்றும் சவுமியா அன்புமணி தெரிவித்தார்.</p><h2>துணைசபாநாயகர் பாராட்டு</h2><p>இதைத்தொடர்ந்து பேசிய பேரவை துணைசபாநாயகர் ரவிசங்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் அவையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை சவுமியா அன்புமணியை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் எனவும், அவர்  சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக பேசுவதாகவும் பாராட்டு தெரிவித்தார்.</p><p>மேலும் அவர் கூறுகையில், மதுவிலக்கு தொடர்பாக கையெழுத்திட கடந்த கால அரசுகள் தயக்கம் காட்டின. தவெக அரசு ஆட்சிக்கு வந்து 100 நாட்கள்தான் கடந்துள்ளன. மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னர் தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால், அது தவெக அரசால்தான் சாத்தியமாகும் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>புதிய டிசைனில் வேட்டி, சேலை வழங்க முடிவு - அமைச்சர் விஜய் பாலாஜி விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/decision-to-provide-dhoti-and-saree-in-new-design-minister-vijay-balaji-explains</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/decision-to-provide-dhoti-and-saree-in-new-design-minister-vijay-balaji-explains#comments</comments><guid isPermaLink="false">4ad92bdd-ac87-4c73-8679-9d4ec8484f3f</guid><pubDate>Mon, 31 Aug 2026 10:36:05 +0000</pubDate><atom:updated>2026-08-31T10:36:05.591Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Saree,இலவச வேட்டி சேலை,Dhoti,Vijay Balaji,அமைச்சர் விஜய் பாலாஜி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/8uafal4q/minister-vijay-balaji.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் விஜய் பாலாஜி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/8uafal4q/minister-vijay-balaji.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை:</p><p>தமிழ்நாட்டில் 4-ல் 3 பங்கு மக்கள் 4 முழ வேட்டியையே விரும்புவதால், 2027-ம் ஆண்டு பொங்கல் திருநாளில் 4 முழ வேட்டி வழங்கப்படும் என்று கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்தார்.</p><p>சட்டசபையில் திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின், பொங்கல் திருநாளில் வழங்கப்படும் விலையில்லா வேட்டியின் அளவை 8 முழத்தில் இருந்து 4 முழமாக குறைத்திருப்பதால் நெசவாளர்கள் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF">அமைச்சர் விஜய் பாலாஜி </a>கூறியதாவது:-</p><p>தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களில், பல ஆண்டுகளாக ஒரே ரகத்தில் வேட்டி, சேலைகள் வழங்கப்படுவதாகவும், இந்த முறை புதிய வடிவமைப்பில் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வந்தன.</p><h2>4 முழ வேட்டி, ஜரிகை தைத்த சேலை</h2><p>இதையடுத்து முதல்-அமைச்சரின் உத்தரவின்பேரில் அனைத்து மாவட்டங்களிலும் துறைச் செயலாளர்கள் மற்றும் சரக அதிகாரிகள் மூலம் பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. இதில் பெரும்பாலானோர் வெளுக்கப்படாத 8 முழ வேட்டிக்கு பதிலாக வெளுக்கப்பட்ட 4 முழ வேட்டியே விருப்பம் என தெரிவித்தனர். அதன் அடிப்படையில்தான் 4 முழ வேட்டியும், ஜரிகை தைத்த சேலையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>மேலும், திருவள்ளூர் சரகத்தில் பெடல் தறிகளில் தொடர் வேலைவாய்ப்பு மூலம் உற்பத்தி செய்யப்பட்ட 5 லட்சத்து 25 ஆயிரம் சேலைகளையும் அரசு கொள்முதல் செய்யும். நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு வழங்குவதற்காக அரசு வழங்கிய மூலப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்பட்ட வேட்டி, சேலைகளும் முழுமையாக கொள்முதல் செய்யப்படும்.</p><p>இவ்வாறு அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>விவசாயிகள் எதிர்க்கும் வெளிமாநில மக்காச்சோள விதைகளை திணிக்கக்கூடாது - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmers-oppose-import-of-foreign-maize-seeds-tamil-nadu-farmers-association</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmers-oppose-import-of-foreign-maize-seeds-tamil-nadu-farmers-association#comments</comments><guid isPermaLink="false">e3eeec0d-7120-46ee-b54f-a2c03c25fc45</guid><pubDate>Mon, 31 Aug 2026 10:15:30 +0000</pubDate><atom:updated>2026-08-31T10:15:30.180Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Farmers,விவசாயிகள்,Tamil Nadu Farmers Association,தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,maize,மக்காச்சோளம்,விதைகள்,seeds,Foreign,வெளிமாநிலம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/9izks8wg/14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/9izks8wg/14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><p>விவசாயிகள் எதிர்த்தும், அண்டை மாநில மக்காச்சோள விதைகளை திணிப்பதை தமிழ்நாடு வேளாண் துறை நிறுத்திட வேண்டும்.. விதைகள், விவசாயிகளின் உரிமை என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF">பி.எஸ்.மாசிலாமணி </a>வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>வேளாண் துறையால் திணிக்கப்படும், விவசாயிகள் விரும்பாத மக்காச்சோள விதைகளால் மகசூல் பேரிழப்பு. இந்த நிலையில் விவசாயிகளின் போராட்டங்கள் தீவிரமாகி வருகிறது. மக்காச்சோளம் என்பது கோழி உள்ளிட்ட கால்நடைகள் தீவனத்திற்கும், எத்தனால் தயாரிப்பிற்கும் பெருமளவு தேவைப்படுகிறது. எதிர் வரும் காலங்களில் இதன் சாகுபடி பரப்பை அதிகரிக்க வேளாண் துறையும், மகசூலை உயர்த்திட விவசாயிகளும் விரும்பும் சூழல் ஏற்பட்டு உள்ளது.</p><h2>மாநில அளவிலான ஒப்பந்தம்</h2><p>இதை பயன்படுத்தி வேளாண் உயர் அலுவலர்கள், வீரிய ரகம், உயர் விளைச்சல் எனக்கூறி கர்நாடகம் மற்றும் ஆந்திராவிலிருந்து, அட்லாண்டா -752 எனும் வெளி மாநில புதிய மக்காச்சோள விதைகளை கடந்த சில ஆண்டுகளாக மாநில அளவிலான ஒப்பந்தம் செய்து கொண்ட ஒரே நபர் மூலம் தமிழ்நாட்டில் வேளாண் துறையின் மூலம் விற்பனை செய்யப்ப்பட்டு வருகிறது. தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் மூலம் இவ்விதைகளை  கிலோ 100 ரூபாய் மானியத்தில் விற்பனை செய்யப்படுகிறது. </p><h2>விவசாயிகள் ஏமாற்றம்</h2><p>உயர்விளைச்சல், என வேளாண்துறை பிரசாரம் செய்த நிலையில் விவசாயிகள் அனைவரும் இந்த விதைகளை வாங்கி விதைத்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவு மகசூல் கிடைக்கவில்லை என்பதுடன் கடந்த காலத்தில் விதைக்கப்பட்ட உள்ளூர் ரக விதைகளின் மகசூலில் 50 சதம் மட்டுமே கிடைத்த சூழலில் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் தொடர்ந்து ஏற்படும் இழப்பால் பல விவசாயிகள், அரசு வழங்கும் மானியம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை தனியார் கடைகளிடம் வாங்கி விதைக்கலாம் என மாறிவருகின்றனர். ஆனாலும் தொடர்ந்து வேளாண்துறை வெளி மாநில விதைகளை வாங்கிட விவசாயிகளை நிர்பந்தித்து வருகிறது. ஒரு ஏக்கருக்கு 4 கிலோ விதை தேவை. 4 கிலோவுக்கு ரூ.400 அரசு மானியம் போக, ரூ.1600 உடன் விவசாயிகள் செலுத்தி இவ்விதைகளை வாங்கிட வேண்டும்.  </p><h2>குறைவான மகசூல்</h2><p>தமிழ்நாட்டில் பெரம்பலூர், சேலம், கடலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. மாநிலம் அளவில் சுமார் 5  லட்சம் ஏக்கர் பாசனம் மற்றும் மானாவாரியாக சாகுபடி செய்யப்படுகிறது. இதனுடைய தேவை அதிகரிப்பில் சாகுபடி பரப்பு கூடுதலாகி வருகிறது. தமிழ்நாடு அளவில் கடந்த ஆட்சியிலும், நடப்பு ஆட்சியிலும் ஹில் என்ற ஒரே ஒப்பந்தகாரருக்கு டெண்டர் கொடுத்து, ஒவ்வொரு ஆண்டும் 1000 மெட்ரிக் டன்னுக்கும் மேல் விற்பனைக்கு வருவதாக கூறப்படுகிறது. 2023-ல் இவ்விதைகளை வாங்கி விதைத்ததில் சோளக்கதிர்கள் வரவே இல்லை. 2024-ஆம் ஆண்டு விவசாயிகள் வாங்க மறுக்கவே, இது வேறு ரகம் எனக்கூறி விவசாயிகளின்  தலையில் கட்டப்பட்டது. அது மிகக் குறைவான மகசூல் கொடுத்துள்ளது. முளைப்பு திறனும் 20 சதம் இல்லை. 2025-ம் ஆண்டு இதே எதிர்ப்பு இருந்தும் தற்போதும் இது வேளாண் டெப்போவில் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இதர ஊட்டச்சத்து பொருட்கள் வேண்டுமென்றால் இதை வாங்கியாக வேண்டும் என்று நிர்ப்பந்திக்க படுகிறார்கள். இதை எதிர்த்து போராட்டம் தீவிரமடைந்துள்ளது.</p><h2>எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்</h2><p>தனியார் விதை விற்பனை கடைகளில் ஒரு ஏக்கருக்கான விதைகள் ரூ. 3000. கூடுதலாக இருந்தாலும் நாங்கள் அதை வாங்கி விதைக்கிறோம். ஏனெனில் இது ஒரு ஏக்கருக்கு 30 முதல் 35 மூட்டைகள் மகசூல் கிடைக்கும். வேளாண் துறை வழங்கும் விதைகள் மூலம் 20 மூட்டைகள் கூட கிடைக்காது, என விவசாயிகள் கூறுகின்றனர்.  இந்த நிலையில் நடப்பு பருவத்திற்கான விதைகளை கோவை மாவட்டத்தில் இருந்து லாரிகளில்  சேலம் மாவட்ட கிடங்குகளில் இறக்கி வைக்க வந்தபோது, பெத்தநாயக்கன் பாளையம், தலைவாசல், கெங்கவல்லி ஆகிய வட்டார கிடங்குகளில் முன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். லாரிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.        </p><h2>தரமற்றவிதைகள்</h2><p>இந்தநிலையில், விவசாயிகள் தனியார் விற்பனை கடைகளின் விதைகளை வாங்கி விதைக்கிறோம், வேளாண் துறையினர் பார்வையிட்ட பின், கிலோ ஒன்றுக்கு  ரூ.100 அரசு பின்னேற்பு மானியமாக கொடுத்தால் போதும் என்று விவசாயிகள் வற்புறுத்தியும் வேளாண் துறை மறுத்து, வேளாண் துறை கொடுக்கும் விதைகளை வாங்கினால் தான் மானியம் என்று வற்புறுத்துவதாக விவசாயிகள் கூறுகிறார்கள். டெண்டர் எடுத்தவரின் பங்கீட்டை ஈடு செய்ய, தரமற்றவிதைகள், முளைப்பு திறன் குறைந்த விதைகளை  விவசாயிகள்  பலர் வாங்காததால் கடந்த ஆண்டு ஒரு பகுதி விதை திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. விற்பனை இல்லாமல் போனால் வேளாண்துறையின் கள அலுவலர்கள் தான் இதற்கான தொகையை செலுத்த வேண்டும். தமிழகத்தில் சுமார் 1000 மெ.டன் மேல் ஐந்து ரக விதைகள் ஒவ்வொரு ஆண்டும் இப்படி வருகிறது.</p><h2>அவசர நடவடிக்கை</h2><p>தமிழகத்தின் மண், நீர், மற்றும் சுற்றுச்சூழலுக்கு  இவ்விதைகள் பொருத்தமில்லை. பராமரிப்பு செலவு கூடுதல் ஆகிறது. மண் விரும்பும் விதையைத் தான் விவசாயிகள் விரும்புவர், விநியோகஸ்தரின் விருப்பத்திற்கு வேளாண் துறை செல்லலாமா...?விதைகளை தேர்வு செய்யும் உரிமை, சுதந்திரம் விவசாயிகளுக்கே... எதிர்வினையாற்றும் வேளாண் துறைக்கு அல்ல..!!! வேளாண்துறை அமைச்சர் அவர்கள் உடன் தலையிட்டு, விவசாயிகள் விரும்பும் மக்காச்சோள உள்ளூர் ரக விதைகளை, மானியத்தை உயர்த்தி தேவையான அளவு வழங்கிட அவசர நடவடிக்கை எடுத்திட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக் கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பெண்களுக்கு போக்குவரத்து சுதந்திரம் தேவை! -  சவுமியா அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/women-need-freedom-of-transport-soumya-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/women-need-freedom-of-transport-soumya-anbumani#comments</comments><guid isPermaLink="false">dd20c3c7-87b6-46d4-8e1e-e1a2e16ac904</guid><pubDate>Mon, 31 Aug 2026 09:48:20 +0000</pubDate><atom:updated>2026-08-31T09:48:20.987Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>போக்குவரத்து,பெண்கள்,சுதந்திரம்,freedom,சவுமியா அன்புமணி,Soumya Anbumani,woman bus</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/l31td27b/51.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சவுமியா அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/l31td27b/51.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> 2 நாள் விடுமுறைக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு தமிழக சட்டசபை மீண்டும் கூடியது. முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. கேள்வி நேரம் முடிந்ததும். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை. சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.</p><h2>போக்குவரத்து சுதந்திரம்</h2><p>இந்நிலையில் சட்டசபையில் பாமக எம்.எல்.ஏ. <a href="https://www.dailythanthi.com/topic/soumya-anbumani">சவுமியா அன்புமணி</a> பேசுகையில் மகளிர் இலவசப் பேருந்துப் பயணம் கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. தற்போது அந்தத் திட்டம் நீட்டிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், கிராமப்புறங்களுக்கு போதுமான அளவு பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். மினி பேருந்து சேவைகளையும் அதிகரித்து, பெண்களுக்கு போக்குவரத்து சுதந்திரத்தை வழங்க வேண்டும்.</p><h2>அரசின் கடமை</h2><p>பெண்கள் வேலைக்குச் செல்லவும், சொந்தமாகத் தொழில் தொடங்கவும் தடையற்ற, பாதுகாப்பான போக்குவரத்து வசதி முதன்மைத் தேவையாகும். உயர்கல்வி கற்க விரும்பும் மாணவிகள், போக்குவரத்து வசதிகள் இல்லாததால் படிப்பைப் பாதியில் நிறுத்தும் நிலை மாற வேண்டும். பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவது அரசின் கடமையாகும். </p><p>இவ்வாறு அவர் பேசியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>உஸ்பெகிஸ்தான் இதயங்களில் திருக்குறளை விதைத்த பிரதமருக்கு நெஞ்சார்ந்த நன்றி! - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/heartfelt-thanks-to-the-prime-minister-for-sowing-the-seeds-of-the-thirukkural-in-the-hearts-of-the-people-of-uzbekistan-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/heartfelt-thanks-to-the-prime-minister-for-sowing-the-seeds-of-the-thirukkural-in-the-hearts-of-the-people-of-uzbekistan-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">37688f8f-ac29-4e72-a577-d05b7d73eb3b</guid><pubDate>Mon, 31 Aug 2026 09:42:03 +0000</pubDate><atom:updated>2026-08-31T09:42:03.982Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,பிரதமர் மோடி,PM Modi,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,திருக்குறள்,Thirukkural,உஸ்பெகிஸ்தான்,Uzbekistan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/j3w6arzj/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/j3w6arzj/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>உஸ்பெகிஸ்தான் இதயங்களில் திருக்குறளை விதைத்த பிரதமருக்கு நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சி</h2><p>கடல் கடந்து செல்லும் தமிழின் நறுமணமாய், திசை எட்டும் பரவும் உலகப் பொதுமறையாம் திருக்குறளின் புகழை, உஸ்பெகிஸ்தான் மண்ணில் ஓங்கி ஒலிக்கச் செய்திருக்கிறார் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி.</p><p>தாஷ்கண்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், “திருக்குறள் இன்றும் வாழ்வியலின் அனைத்துத் துறைகளுக்கும் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்வதாகப் பேசிய பிரதமர் மோடி, ஆன்மிகம், தத்துவம் மற்றும் நடைமுறை அறிவு பொதிந்த திருக்குறளை உஸ்பெக் மொழியில் மொழிபெயர்க்க விடுத்த வேண்டுகோள், தமிழின் ஞானச்செறிவை மத்திய ஆசிய நாடுகளின் இதயங்களுக்குக் கொண்டு செல்லும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியாகும்.</p><h2>நெஞ்சார்ந்த நன்றிகள்</h2><p>காசி தமிழ்ச் சங்கமம் முதல் நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவியது வரை, தமிழுக்கு புகழ் சேர்த்து வரும் பிரதமரின் செயல் போற்றுதலுக்குரியது. ஏற்கனவே பல இந்திய மற்றும் உலக மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளதோடு, வள்ளுவத்தின் வாய்மையை வையகமெங்கும் கொண்டு செல்லும் பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய முயற்சிகளுக்குத் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழக மக்கள்</a> சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அம்பேத்கரை தன்னுடைய  தலைவர் என்று போற்றியவர் பெரியார் - அமைச்சர் வன்னியரசு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/periyar-hailed-ambedkar-as-his-leader-minister-vanniarasu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/periyar-hailed-ambedkar-as-his-leader-minister-vanniarasu#comments</comments><guid isPermaLink="false">b3fe851a-f2f2-4209-a68b-b9bcea08ee15</guid><pubDate>Mon, 31 Aug 2026 09:27:55 +0000</pubDate><atom:updated>2026-08-31T09:27:55.368Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>leader,தலைவர்,பெரியார்,Periyar,அம்பேத்கர்,அமைச்சர் வன்னியரசு,minister vanni arasu</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/n363v5er/vanni-arasu.gif" width="750"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் வன்னியரசு]]></media:title><media:description type="html"><![CDATA[ அம்பேத்கரை தன்னுடைய  தலைவர் என்று போற்றியவர் பெரியார் - அமைச்சர் வன்னியரசு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/n363v5er/vanni-arasu.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அம்பேத்கரை தன்னுடைய  தலைவர் என்று போற்றியவர் பெரியார் என்று வன்னியரசு தெரிவித்தார். இது தொடர்பாக, தமிழக சமூக நீதித்துறை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">அமைச்சர் வன்னியரசு </a>பதிவிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p> <h2>நன்றி</h2><p> சட்டப்பேரவையில் கடந்த 28.8.2026 அன்று சமூக நீதித்துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதற்கு விடையளித்து நான் உரையாற்றியபோது, திண்டிவனம் தொகுதியில் விடுதலைச்சிறுத்தைகளின் வெற்றிக்கு பாடாற்றிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">திமுக</a> உள்ளிட்ட தோழமை கட்சியினருக்கு நன்றி கூறினேன்.</p><h2>அரசியல் ஆசான் திருமாவளவன்</h2><p>அப்போது, "நாங்கள் மட்டுமே நன்றி சொல்லிக்கொண்டு இருக்கிறோம்; திமுக தரப்பிலிருந்து நன்றி சொல்லவே இல்லை" என்று சொன்னேன். அது ஒரு விளையாட்டாக சொன்னது தான்.  ஆனால், எதிர்க்கட்சி தலைவர்  உதயநிதி ஸ்டாலின் சட்டென எழுந்து பேசினார். "எங்களுடைய தலைவருக்கும் திருமாவளவனுக்கும் இருப்பது தேர்தல் கூட்டணி மட்டுமல்ல; அது கொள்கை கூட்டணி. என்னுடைய அரசியல் ஆசான் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D">திருமாவளவன்</a> என முன்பும் சொன்னேன்.</p><h2>உதயநிதிக்கு நன்றி</h2><p>இப்போதும் சொல்கிறேன்” -என்றார். அப்படி அவர் மனம் திறந்து பேசியதற்கு உடனே நன்றி கூறினேன். இப்போதும் லட்சக்கணக்கான சிறுத்தைகளின் சார்பில் உதயநிதிக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.</p><h2>கரிசனம் வந்துவிட்டது?..</h2><p>ஆனால், பெரியாரை ஆசான் என சொல்லும் உதயநிதி, திருமாவளவனை ஆசான் என சொல்வதா? என சிலர் நஞ்சை கக்குகின்றனர். பெரியாருக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சனாதனக்கும்பலோடு கொஞ்சி குலவியவர்களுக்கு  திடீரென பெரியார் மீது கரிசனம் வந்துவிட்டது?..</p> <h2> தந்தை பெரியார்</h2><p>புரட்சியாளர் அம்பேத்கரை தன்னுடைய  தலைவர் என்று போற்றியவர் தந்தை பெரியார். அவரை போல இன்று  உதயநிதி எழுச்சித்தமிழரை தனது அரசியல் ஆசான் என வெளிப்படையாக பேசும் பக்குவத்தையும் துணிச்சலையும் பெற்றுள்ளார். பெரியாரை கன்னடர் என்று திராவிட இயக்கத்துக்கு எதிராக வெறுப்பைக்கக்கும் கும்பலோடு கைகோர்த்து கொண்டு பெரியார் மீது கரிசனம் காட்டுவது வியப்பாக உள்ளது.</p> <h2>கொள்கை உறவு </h2><p>விசிக இன்று தவெகவுடன் இணைந்து நின்றாலும் திராவிட இயக்கங்களுடன் உள்ள கொள்கை உறவு மாறாது என்பதை தான் உதயநிதிஸ்டாலின் கூற்று தெளிவுபடுத்துகிறது. இதனை ஏற்கவும் சகிக்கவும் இயலாதவர்கள் பொறுமை இழந்து புலம்புகின்றனர். இந்நிலையில் அய்யன் திருவள்ளுவர் சொல்லுவது தான் நினைவுக்கு வருகிறது.</p><p>அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் வழுக்கியும் கேடீன் பது. (அழுக்காறாமை)</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக புதிய திட்டங்கள்; சட்டசபையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-schemes-for-the-welfare-of-the-differently-abled-minister-jagatheeswari-announces-in-the-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-schemes-for-the-welfare-of-the-differently-abled-minister-jagatheeswari-announces-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">c7c8c8e2-acd8-4d4c-aadf-d41762e27a53</guid><pubDate>Mon, 31 Aug 2026 09:22:58 +0000</pubDate><atom:updated>2026-08-31T09:22:58.382Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,Assembly,மாற்றுத்திறனாளிகள்,new schemes,புதிய திட்டங்கள்,differently-abled,அமைச்சர் ஜெகதீஸ்வரி,Minister Jagatheeswari</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/ori56s3m/50.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/ori56s3m/50.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டசபையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 9 புதிய அறிவிப்புகளை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF">அமைச்சர் ஜெகதீஸ்வரி</a> வெளியிட்டார்.</p><p>அதன்படி, உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளின் அன்றாட பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் பெட்ரோல் அல்லது மின்சாரத்தில் இயங்கும் உபகரணங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p><h2>மாற்றுத்திறனாளிகள் இல்லங்கள்</h2><p>மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் 10 இல்லங்கள் அமைக்க ரூ.1.82 கோடியும், அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சியுடன் கூடிய 10 இல்லங்கள் அமைக்க ரூ.1.77 கோடியும் ஒதுக்கப்படும்.</p><p>மேலும், முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக 2 இல்லங்கள் ரூ.49 லட்சம் செலவில் அமைக்கப்படும். மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக அறிவுசார், செவித்திறன் மற்றும் பார்வை குறைபாடுகளுக்கு ஏற்ப மொத்தம் 6 ஆண்டு நிலை பயிற்சி மையங்கள் அமைக்க ரூ.97 லட்சம் ஒதுக்கப்படும்.</p><p>கடலூர் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அறிவுசார் மாற்றுத்திறனாளிகள் என 100 பேர் பயன்பெறும் வகையில் 1.5 ஏக்கர் பரப்பளவில் 2 இல்லங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்படும்.</p><h2>இலவச பேருந்து பயணம்</h2><p>தனித்து பயணம் செய்ய இயலாத மாற்றுத்திறனாளிகள், UDID அட்டையை பயன்படுத்தி தங்களுடன் ஒரு துணையாளருடன் மாநகர, நகர தாழ்தள, விரைவு, டீலக்ஸ், புறநகர் மற்றும் மலைப்பகுதி பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்படும்.</p><p>செவித்திறன் குறைபாடுடைய மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் மெய்நிகர் கற்றல் முறையை அறிமுகப்படுத்த ரூ.64 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.</p><h2>உதவித்தொகை</h2><p>மேலும், பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்விக்கு உதவும் வாசிப்பாளர்களுக்கான உதவித்தொகையும் 2026-27-ம் ஆண்டு முதல் உயர்த்தப்பட உள்ளது.</p><p>இவ்வாறு மாற்றுத்திறனாளிகளின் கல்வி, வேலைவாய்ப்பு, பயணம் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 9 புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>கணவன், மனைவியை கட்டிப் போட்டு 40 பவுன் நகை, ரூ.40 லட்சம் பணம் கொள்ளை.. முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/namakkal-masked-robbers-looted-40-sovereigns-gold-and-40-lakh-cash-after-tied-up-gusband-and-wife</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/namakkal-masked-robbers-looted-40-sovereigns-gold-and-40-lakh-cash-after-tied-up-gusband-and-wife#comments</comments><guid isPermaLink="false">97b86ffd-a1e7-4307-b5a1-a1c0f59469a0</guid><pubDate>Mon, 31 Aug 2026 09:10:11 +0000</pubDate><atom:updated>2026-08-31T09:10:11.393Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Namakkal,நாமக்கல்,நகை திருட்டு,கொள்ளை,முகமூடி கொள்ளையர்கள்,Robbery,Jewellery theft</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/elkr1ghy/house.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கொள்ளை நடந்த வீடு]]></media:title><media:description type="html"><![CDATA[ நாமக்கல் மாவட்டம் பிலிக்கல் பாளையம் அருகே முகமூடி கொள்ளையர்கள் 40 பவுன் நகை, 40 லட்சம் பணத்தை கொள்ளையடித்தனர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/elkr1ghy/house.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல், </p><p>நாமக்கல் மாவட்டம் பிலிக்கல்பாளையம் அருகே வீடு புகுந்து கணவன், மனைவியை கட்டிப் போட்டு 40 பவுன் நகை, 40 லட்சம் பணத்தை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><p>நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் அருகே சினிமா கொட்டகை மேடு பகுதியில் இருந்து சின்னமருதூர் செல்லும் சாலையின் அருகே குடியிருந்து வருபவர் வைரவன் (60). இவர் கடந்த 20 வருடங்களாக வெல்லம் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சுமதி(55). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. வீட்டில் கணவன்-மனைவி மட்டும் வசித்து வருகின்றனர்.</p><p>இந்நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் முகமூடி அணிந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல், வைரவனின் வீட்டு காம்பவுண்ட் சுவரின் மீது ஏறி குதித்து உள்ளே சென்றுள்ளனர். முதலில் மேல் மாடியில் உள்ள அறைகளை பார்த்து விட்டு மேலே ஒன்றும் இல்லாததால் கீழ்பகுதியில் உள்ள வீட்டின் கதவை உடைத்து உள்ளனர். </p><h2>துணிகர கொள்ளை</h2><p>அப்போது வைரவன் மனைவி சுமதி எழுந்து வந்தபோது கதவை உடைத்து உள்ளே புகுந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">முகமூடி கொள்ளையர்கள்</a>, கணவன், மனைவி இருவரையும் கட்டிப் போட்டனர். பின்னர் பணம், நகை எங்கே உள்ளது? என்று கேட்டு மிரட்டி உள்ளனர். அதற்கு பதில் கூறாதால் வைரவனை கத்தியால் கிழித்துள்ளனர். அதன்பின் இருவரையும் நன்றாக கட்டி வைத்துவிட்டு வீட்டில் உள்ள பீரோவை உடைத்து பீரோவுக்குள் இருந்த 40 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.40 லட்சம் பணம் ஆகியவற்றை <a href="https://www.dailythanthi.com/topic/robbery">திருடிக் கொண்டு</a> மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.</p><p>இது குறித்து உடனடியாக வைரவன் ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர பாண்டியன், பரமத்தி வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமா சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். </p><h2>விசாரணை தீவிரம்</h2><p>பின்னர் இது குறித்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரீஸ் அசோக் மற்றும் பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு துணைப் போலீஸ் சூப்பிரண்டு வெண்ணிலா ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து இரு அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். </p><p>அதனை தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். மோப்பநாய் வீட்டில் இருந்து புறப்பட்டு சின்ன மருதூர் செல்லும் சாலைக்கு ஓடிச் சென்று, அந்த வழியில் சிறிது தூரம் ஓடிச் சென்றது. கைரேகை நிபுணர்கள், வீட்டின் பல்வேறு இடங்களில் பதிவான ரேகைகளை பதிவு செய்தனர். </p><p>இந்த <a href="https://www.dailythanthi.com/topic/robbery">கொள்ளை சம்பவம்</a> குறித்து ஜேடர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் நள்ளிரவில் பதிவான பதிவுகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். இந்த கொள்ளைச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தீண்டாமைக்கு எதிராகப் பேசுவது குற்றமல்ல; தீண்டாமையைப் பாதுகாப்பதே குற்றம் - செல்வப்பெருந்தகை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/speaking-out-against-untouchability-is-not-a-crime-upholding-untouchability-is-the-crime-selvaperunthagai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/speaking-out-against-untouchability-is-not-a-crime-upholding-untouchability-is-the-crime-selvaperunthagai#comments</comments><guid isPermaLink="false">b0afdcc6-e0f4-4dbb-8493-2b8a99392352</guid><pubDate>Mon, 31 Aug 2026 09:04:40 +0000</pubDate><atom:updated>2026-08-31T09:04:40.848Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>செல்வப்பெருந்தகை,காங்கிரஸ்,Congress,Selvaperunthagai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/zwyumxbp/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ செல்வப்பெருந்தகை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/zwyumxbp/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>ராகுல்காந்தி மீது எப்.ஐ.ஆர்.</h2><p>காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் தீண்டாமை மற்றும் அவமதிப்பு குறித்து குரல் எழுப்பியதற்காக அவர் மீது எப்.ஐ.ஆர். (FIR) பதிவு செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.</p><p>தீண்டாமை மற்றும் சாதிய பாகுபாட்டுக்கு எதிராகக் குரல் கொடுப்பதே குற்றம் என்ற நிலையை பாஜக அரசு உருவாக்க முயல்வது, அதன் எதேச்சதிகாரப் போக்கையும், பழிவாங்கும் அரசியலையும் வெளிப்படுத்துகிறது.</p><p>நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் தீண்டாமையைத் தெளிவாக ஒழித்திருக்கிறது. சாதியின் பெயரால் ஒரு மனிதர் அவமதிக்கப்படுவதையோ, பாகுபாடு காட்டப்படுவதையோ இந்திய அரசியலமைப்பு ஒருபோதும் அனுமதிப்பதில்லை. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் உருவாக்கிய சமத்துவம், சமூகநீதி, மனித கண்ணியம் ஆகிய கொள்கைகளே இந்திய ஜனநாயகத்தின் அடித்தளமாகும்.</p><h2>எந்த வகையான ஜனநாயகம்?</h2><p>அத்தகைய சமூகநீதிக் கொள்கைகளுக்காகப் போராடிய வரலாறு காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. தீண்டாமையை அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் ஒழித்ததும், பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க SC/ST (Prevention of Atrocities) Act போன்ற சட்டப் பாதுகாப்புகளை உருவாக்கியதும் சமூகநீதிக்கான காங்கிரஸ் கட்சியின் உறுதியான பங்களிப்புகளாகும்.</p><p>ஆனால், இன்று தீண்டாமை மற்றும் சாதிய பாகுபாட்டுக்கு எதிராக ஒருவர் குரல் எழுப்பும்போது, அந்தக் குரலை ஒடுக்க எப்.ஐ.ஆர்.-ஐ ஆயுதமாகப் பயன்படுத்துவது எந்த வகையான ஜனநாயகம்?</p><p>பாதிக்கப்பட்டவருக்காகக் குரல் கொடுப்பவரையே குற்றவாளியாக்குவது என்பது நீதியின் அடிப்படைக் கொள்கைகளையே கேள்விக்குள்ளாக்குகிறது. பாஜக அரசு தனது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர்களை அச்சுறுத்தவும், அவர்களின் குரலை ஒடுக்கவும் முயல்வதை மக்கள் அமைதியாக வேடிக்கை பார்க்க மாட்டார்கள்.</p><h2>காங்கிரஸ் தொடர்ந்து போராடும்</h2><p>ராகுல்காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் பதிலளிக்க வேண்டிய பாஜக, எப்.ஐ.ஆர். மற்றும் அதிகார அமைப்புகளைப் பயன்படுத்தி அவரை மிரட்ட முயல்வது கண்டிக்கத்தக்கது.</p><p>தீண்டாமைக்கு எதிராகப் பேசுவது குற்றமல்ல; தீண்டாமையைப் பாதுகாப்பதே குற்றம்.</p><p>சாதிய பாகுபாடு மற்றும் சமூக அநீதிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும். மல்லிகார்ஜுன கார்கேவுக்கும், ராகுல்காந்திக்கும் எதிராக எடுக்கப்படும் எந்தவொரு பழிவாங்கும் நடவடிக்கைக்கும் <a href="https://www.dailythanthi.com/topic/congress">காங்கிரஸ் </a>கட்சி அஞ்சாது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருக்குறளின் பெருமையை உலகமெங்கும் பறைசாற்றும் பிரதமருக்கு வானதி சீனிவாசன் நன்றி...!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vanathi-srinivasan-thanks-the-prime-minister-for-spreading-the-glory-of-thirukkural-all-over-the-world</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vanathi-srinivasan-thanks-the-prime-minister-for-spreading-the-glory-of-thirukkural-all-over-the-world#comments</comments><guid isPermaLink="false">4e29b7af-db42-4e08-b0af-ce285ff16705</guid><pubDate>Mon, 31 Aug 2026 08:49:20 +0000</pubDate><atom:updated>2026-08-31T08:49:20.670Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Modi,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,திருக்குறள்,Thirukkural,மோடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/29vr0c66/49.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/29vr0c66/49.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முன்னாள் பாஜக தேசிய மகளிரணி தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/vanathi-srinivasan">வானதி சீனிவாசன்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ள பிரதமர் மோடி  அவர்கள் அங்குள்ள தாஷ்கண்ட் பல்கலைக்கழகத்தின் ஆண்டுவிழாவில் பங்கேற்று உலகப் பொதுமறையான திருக்குறளின் பெருமையைக் குறிப்பிட்டுப் பேசியதுடன் அதனை உஸ்பெக் மொழியில் மொழிமாற்றம் செய்து வெளியிடவும் ஆலோசனை விடுத்தது, திருக்குறளின் பெருமையை உலகமெங்கும் பறைசாற்றும் பிரதமரின் முயற்சி பெருமை அளிக்கும் நிகழ்வாகும்.</p><h2>உலகப் பொதுமறைக்கு மணிமகுடம்</h2><p>பிரதமர் அவர்கள் திருக்குறள் குறித்து பேசும் போது, “தமிழ் நூல்களில் உன்னதப் படைப்பான திருக்குறளை மொழிமாற்றம் செய்து படிப்பதன் மூலம் இருநாடுகளுக்கும் இடையேயான கலாசார உறவுகள் மற்றும், பரஸ்பர புரிதல்கள் மேலும் வலுவடையும் என்பதையும், மேலும் திருக்குறளின் ஆழ்ந்த கருத்துக்களுடன் உஸ்பெக் மக்கள் எளிதாகத் தங்களை தொடர்புபடுத்திக் கொள்ள முடியும்” என்றும் கூறி உலகப் பொதுமறைக்கு மணிமகுடம் சூட்டியிருக்கிறார்.</p><p>தான் செல்லும் இடங்களிளெல்லாம் தமிழ் மொழியின் பெருமை, தமிழ் அறிஞர்களின் பெருமை, தமிழர்களின் வரலாறு உள்ளிட்டவற்றை தொடர்ந்து பறைசாற்றி வரும் பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சட்டமன்றத்தில் இருக்கை மாற்றம்.. நிர்வாக நடைமுறையின் ஒரு பகுதிதான் - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/change-of-seating-in-the-assembly-is-merely-part-of-administrative-procedure-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/change-of-seating-in-the-assembly-is-merely-part-of-administrative-procedure-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">e25564ce-5fbf-4f91-b433-6ba7c864eff2</guid><pubDate>Mon, 31 Aug 2026 08:41:11 +0000</pubDate><atom:updated>2026-08-31T08:41:11.636Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore MP,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/2ecjs7j9/manickam-tagore.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/2ecjs7j9/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சட்டமன்றத்தில் இருக்கை மாற்றம் என்பது வழக்கமான நிர்வாக நடைமுறையின் ஒரு பகுதிதான் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>இருக்கை மாற்றம்</h2><p>சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் புதிய தலைவர் நியமிக்கப்பட்டதன் காரணமாக, இருக்கை மாற்றப்பட்டுள்ளது.</p><p>மேலும், கூட்டணிக் கட்சிகளின் சட்டமன்றக் கட்சித் தலைவர்களின் அமர்வை கருத்தில் கொண்டு, காங்கிரஸ் கட்சியின் இரண்டு அமைச்சர்களும் முதல் வரிசையில் அமர்ந்துள்ளனர்.</p><h2>வரவேற்கத்தக்கது</h2><p>பேரவைத் தலைவர் இந்த மாற்றத்தை செய்திருப்பது வரவேற்கத்தக்கது. ஒரு வழக்கமான இருக்கை மாற்றத்தை வைத்து, இல்லாத அரசியல் அர்த்தங்களை கற்பனை செய்து பரப்ப வேண்டாம்.</p><p>செய்தியை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">செய்தியாகவே </a>பாருங்கள்;</p><p>அரசியலை கற்பனையாக உருவாக்க வேண்டாம்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வருவாய் ஆய்வாளரை கண்டுபிடித்து தரக்கோரி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மனைவி, மகள்கள் தர்ணா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wife-and-daughters-stage-a-sit-in-protest-at-the-villupuram-collectors-office-demanding-that-the-revenue-inspector-be-found</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wife-and-daughters-stage-a-sit-in-protest-at-the-villupuram-collectors-office-demanding-that-the-revenue-inspector-be-found#comments</comments><guid isPermaLink="false">1b1a7acd-c837-4b4e-9374-efe2bfdd18b7</guid><pubDate>Mon, 31 Aug 2026 08:40:03 +0000</pubDate><atom:updated>2026-08-31T08:40:03.570Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விழுப்புரம்,Viluppuram</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/4k1n8fe3/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/4k1n8fe3/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விழுப்புரம்,</p><p>விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், காணாமல் சென்றதாகக் கூறப்படும் வருவாய் ஆய்வாளரை கண்டுபிடித்து தரக்கோரி அவரது மனைவியும் இரு மகள்களும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.</p><p>விழுப்புரம் அருகே செஞ்சி பகுதியில் வருவாய்த்துறையில் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர், கடந்த சில நாட்களாக குடும்பத்தினரை விட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. அவர் தன்னுடன் பணியாற்றிய மற்றொரு வருவாய் ஆய்வாளருடன் பழகி வந்ததாகவும், பின்னர் அவரை திருமணம் செய்து கொண்டதாகவும் குடும்பத்தினர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.</p><p>ஏற்கனவே திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ள நிலையில், கணவர் குடும்பத்தினரை விட்டு சென்றுவிட்டதாக அவரது மனைவி வேதனையுடன் தெரிவித்தார். கணவரை கண்டுபிடித்து, தங்களது குடும்பத்துடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.</p><p>இதனைத் தொடர்ந்து, மனைவியும் அவரது மகள்களும் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. </p>]]></content:encoded></item><item><title>கடல் கடந்து மலர்ந்த காதல்: வெளிநாட்டு பெண்ணை கரம் பிடித்த மயிலாப்பூர் வாலிபர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/love-blossoms-across-borders-mylapore-man-marries-woman-from-abroad</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/love-blossoms-across-borders-mylapore-man-marries-woman-from-abroad#comments</comments><guid isPermaLink="false">8811e513-42be-4570-9b5f-f8d167b93f47</guid><pubDate>Mon, 31 Aug 2026 08:23:54 +0000</pubDate><atom:updated>2026-08-31T08:23:54.126Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமணம்,Marriage,Youth,Love,திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்,காதல்,ரஷ்யா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/bfb7aipb/.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ உதயசங்கர்-மரியா]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம். ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/bfb7aipb/.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ரஷ்ய நாட்டுப் பெண்ணை தமிழ் பாரம்பரிய முறைப்படி திருச்செந்தூர் முருகன் கோவிலில்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D"> திருமணம்</a> செய்துகொண்டார்.</p><h2>காதல் டூ கல்யாணம்</h2><p>சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் உதயசங்கர். அவர் சீனாவில் உள்ள ஒரு கார் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவர் பணியாற்றி வரும் அதே நிறுவனத்தில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த மரியா என்ற பெண்ணும் பணியாற்றி வந்தார். இதையடுத்து அவர்கள் இவருக்கும் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் நட்பு காதலாக மலர்ந்தது. அவர்களது காதலுக்கு இருவீட்டு பெற்றோர்களும் பச்சைக்கொடி காட்டினர்.</p><h2>திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடந்த திருமணம்</h2><p>இதனைத் தொடர்ந்து, உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி மாவட்டம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி</a> கோவிலில் இவர்களது திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. தமிழ் கலாச்சார முறைப்படி, மணமகள் பட்டுப்புடவை உடுத்தியும், மணமகன் பட்டு வேட்டி-சட்டை அணிந்து பாரம்பரிய உடைகளில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கோவிலுக்கு வந்தனர்.</p><p>அங்கு இருவீட்டு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில், வேத மந்திரங்கள் முழங்க, கெட்டிமேள சத்தத்துடன் உதயசங்கர், ரஷ்யப் பெண்ணிற்கு தாலி கட்டினார். மேலும் மணப்பெண் மரியா தனது பெயரை கீர்த்தனா என்றும் மாற்றிக்கொண்டார். சர்வதேச எல்லைகளைக் கடந்து, தமிழ்நாட்டுப் பாரம்பரியத்தை மதித்து திருச்செந்தூர் முருகன் சாட்சியாக நடந்துள்ள இந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">காதல்</a> திருமணத்திற்கு இணையவாசிகள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item></channel></rss>