<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 30 Jul 2026 03:35:17 +0000</lastBuildDate><item><title>தவெகவில் இணைய ஓ.பன்னீர்செல்வம் முடிவு: விரைவில் எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/o-panneerselvam-decides-to-join-tvk-mla-will-resign-soon</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/o-panneerselvam-decides-to-join-tvk-mla-will-resign-soon#comments</comments><guid isPermaLink="false">1371a8a0-666e-43ed-a51f-abb13b334b59</guid><pubDate>Wed, 29 Jul 2026 06:45:52 +0000</pubDate><atom:updated>2026-07-29T06:45:52.384Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,திமுக,DMK,ஓ.பன்னீர்செல்வம்,O Panneer selvam,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/mxgqkl7n/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/mxgqkl7n/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>த.வெ.க.வில் இணைய ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.</p><h2>அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம்</h2><p>தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், முன்னாள் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதலால் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டார்.  அ.தி.மு.க.வை விட்டு வெளியேறிய நிலையில், கே.ஏ.செங்கோட்டையன் வழியில் அவரும் த.வெ.க.வில் சென்று இணைவார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. அவருடைய மகன் ரவீந்திரநாத்தின் விருப்பமும் அதுவாகத்தான் இருந்தது. </p><h2>தி.மு.க.வில் பதவி வழங்கப்படவில்லை</h2><p>ஆனால், சட்டசபை தேர்தலுக்கு முன்பு தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருந்த தி.மு.க., ஓ.பன்னீர்செல்வத்தை தங்கள் பக்கம் இழுத்தது. சட்டசபை தேர்தலிலும் யாரும் எதிர்பார்க்காத வகையில், த.வெ.க. ஆட்சி அமைத்ததால், தி.மு.க. எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டியதாகிவிட்டது.</p><p>தி.மு.க.வில் கடந்த பிப்ரவரி மாதமே ஓ.பன்னீர்செல்வம் இணைந்த நிலையில், இதுவரை அவருக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை. தேர்தலில் தி.மு.க.வும் தோல்வி அடைந்ததால், அடுத்து என்ன செய்வது என்று ஓ.பன்னீர்செல்வம் யோசித்து வருகிறார்.</p><h2>த.வெ.க.வில் இணைய முடிவு</h2><p>இந்த நிலையில், தற்போதுள்ள தமிழக அரசியல் சூழ்நிலையில், த.வெ.க.வில் சென்று இணைவதே சிறப்பு என்று ரவீந்திரநாத் தனது தந்தை ஓ.பன்னீர்செல்வத்திடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு ஓ.பன்னீர்செல்வமும் பச்சைக்கொடி காட்டிவிட்டதாக கூறப்படுகிறது.</p><p>அதனைத் தொடர்ந்து, அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, த.வெ.க. பொதுச் செயலாளரும், அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆகியோரிடம் ரவீந்திரநாத் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக தெரிகிறது.</p><h2>த.வெ.க. சம்மதித்தது ஏன்?</h2><p>அமைச்சர்கள் இருவரும் ஓ.பன்னீர்செல்வத்தின் விருப்பத்தை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யிடம் கூற, அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலையில், தென்மாவட்டங்களில்தான் த.வெ.க. வலுகுறைந்து காணப்படுகிறது. அதற்கு, முக்கிய அரசியல் முகம் அங்கு இல்லை என்று சொல்லப்படுகிறது. எனவே, அந்தக் குறையை ஓ.பன்னீர்செல்வம் மூலம் தீர்த்துக்கொள்வதுடன், கட்சியையும் வலுப்படுத்த முடியும் என்று த.வெ.க. தலைமை கருதுகிறது.</p><h2>விரைவில் எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா</h2><p>முன்னாள் முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இருந்ததால், த.வெ.க.வில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கவும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் ஓ.பன்னீர்செல்வம் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடைத்தேர்தலில் அதே தொகுதியில் த.வெ.க. சார்பில் மீண்டும் போட்டியிட ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார்.</p><h2>நாடாளுமன்ற தேர்தல்</h2><p>2029-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் த.வெ.க. சார்பில் களம் இறக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ராஜினாமா செய்ய காரணம் என்ன? - 4 எம்.எல்.ஏ.க்களும் விளக்கம் அளிக்க உத்தரவிட்ட சபாநாயகர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-is-the-reason-for-resigning-speaker-orders-4-mlas-to-provide-an-explanation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-is-the-reason-for-resigning-speaker-orders-4-mlas-to-provide-an-explanation#comments</comments><guid isPermaLink="false">0d664963-1219-4f63-9ae2-423f21a1aa0f</guid><pubDate>Thu, 30 Jul 2026 03:33:34 +0000</pubDate><atom:updated>2026-07-30T03:33:34.372Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,TVK,தவெக,Tamilnadu,அதிமுக,தமிழகம்,தமிழக சட்டசபை,TN Assembly,Edappadi Palanisami,அதிமுக எம்.எல்.ஏ.க்கள்,எடப்பாடி  பழனிசாமி,சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்,TVK Government,AIADMK MLAs,Speaker J.C.D. Prabhakar</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/i1ct95xr/addmk.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/i1ct95xr/addmk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>அ.தி.மு.க.வில் இருந்து ராஜினாமா செய்த 4 எம்.எல்.ஏ.க்களும் ஆகஸ்டு 4-ந் தேதி விளக்கம் அளிக்க வேண்டும் என்று <a href="https://www.dailythanthi.com/topic/jcd-prabhakar">சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்</a> அழைப்பு விடுத்துள்ளார். </p><h2>அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்</h2><p>அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்-தனி), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தனர். </p><h2>சபாநாயகர் அழைப்பு</h2><p>இவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டப்படி தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கும்படி அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற அ.தி.மு.க. தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் மனு அளித்திருந்தார். இந்த புகாருக்கு விளக்கம் அளிக்கும்படி 4 பேருக்கும் <a href="https://www.dailythanthi.com/topic/jcd-prabhakar">சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்</a> அழைப்பு விடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து அவர்கள் சபாநாயகரிடம் விளக்கம் அளித்தனர். </p><h2>ஆகஸ்டு 4-ந் தேதி</h2><p>இந்த நிலையில் மீண்டும் விளக்கம் அளிக்க 30-ந் தேதி (இன்று) வரும்படி 4 பேருக்கும் மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிசாமியும் ஆஜராக வேண்டும் என்று சபாநாயகர் அழைப்பு விடுத்திருந்தார்.இந்த நிலையில் ஆஜராக வேண்டிய தேதியை வரும் ஆகஸ்டு 4-ந் தேதிக்கு மாற்றி சட்டசபை செயலகம் அறிவுறுத்தியுள்ளது. </p><h2>எடப்பாடி பழனிசாமி</h2><p>4 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அளித்த விளக்கத்தின் நகலை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தரப்பில் சபாநாயகரிடம் கோரப்பட்டுள்ளது. அந்த விளக்கங்களை சபாநாயகர் தந்த பிறகுதான் சபாநாயகர் முன்பு ஆஜராவது குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார் என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஏற்கனவே கூறியிருக்கிறார்.</p>]]></content:encoded></item><item><title>சாதனை படைத்த விளையாட்டு வீரர்கள் பத்ம விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/athletes-with-record-achievements-can-apply-for-padma-awards-thoothukudi-collector-informs</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/athletes-with-record-achievements-can-apply-for-padma-awards-thoothukudi-collector-informs#comments</comments><guid isPermaLink="false">0a7f0cd9-f449-442c-b994-23e0c7b0ddd2</guid><pubDate>Thu, 30 Jul 2026 03:20:55 +0000</pubDate><atom:updated>2026-07-30T03:20:55.063Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Collector information,கலெக்டர் தகவல்,விளையாட்டுத்துறை,Sports,apply,விண்ணப்பிக்கலாம்,பத்ம விருதுகள்,Padma awards,Achievements,சாதனை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/g4owpvht/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D.12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/g4owpvht/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D.12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை புரிந்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">விளையாட்டு வீரர்கள்</a> 2027-ம் ஆண்டிற்கான <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பத்ம விருதுகள் </a>பெற வருகிற 31-ம் தேதிக்குள் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D">விண்ணப்பிக்கலாம்</a> என தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D">தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன்</a> வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>இந்திய அரசால் ஆண்டுதோறும் கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம், பொதுச்சேவை, விளையாட்டு உள்பட பல்வேறு துறைகளில் மிகச் சிறந்த சாதனை புரிந்த தனி நபர்களுக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் ஆகிய உயரிய விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.</p><h2>2027-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள்</h2><p>அந்த வகையில் விளையாட்டுத் துறையில் பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள், மலையேற்றம், விளையாட்டுத் துறையை மேம்படுத்தியவர்கள் மற்றும் ஊக்கப்படுத்தியவர்கள், பன்னாட்டு அளவிலான போட்டிகளை சிறப்பாக நடத்தியவர்கள், பன்னாட்டு அளவில் யோகா போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் ஆகி சாதனையாளர்களுக்கு 2027-ம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன.</p><h2>விளையாட்டுத்துறை</h2><p>தூத்துக்குடி மாவட்டத்தில் விளையாட்டுத் துறையில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை படைத்த தகுதியான நபர்கள், மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான awards.gov.in வாயிலாக விண்ணப்பங்களைப் பெற்று, வரும் 31.7.2026-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளாளர்.</p>]]></content:encoded></item><item><title>பள்ளிகளில் மத நிகழ்ச்சி நடத்தக்கூடாது - அரசு எச்சரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-warns-against-holding-religious-events-in-schools</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-warns-against-holding-religious-events-in-schools#comments</comments><guid isPermaLink="false">8148fa6a-6bbc-4234-bd33-bc1a805a11da</guid><pubDate>Thu, 30 Jul 2026 03:17:55 +0000</pubDate><atom:updated>2026-07-30T03:17:55.797Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தமிழக அரசு,பள்ளிகள்,அரசு பள்ளிகள்,Government Schools,பள்ளிகல்வித்துறை,ராஜ்மோகன்,Minister Rajmohan,அமைச்சர் ராஜ்மோகன்,Rajmohan,மத நிகழ்ச்சி,Government warns</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/oojcc3j1/tamilnadu.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/oojcc3j1/tamilnadu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>'தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி வளாகங்களிலும், அரசியல், மதம் மற்றும் ஜாதி அமைப்புக்களின் கூட்டங்கள் நடத்த அனுமதி அளித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.</p><h2>'ரீல்ஸ்' சர்ச்சை</h2><p>தமிழகத்தில், அரசு பள்ளி வளாகங்கள் மற்றும் வகுப்பறைகளில், த.வெ.க., நிர்வாகிகள் 'ரீல்ஸ்' எடுப்பது சர்ச்சையானது. இதை தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் எந்த கட்சியினரும் அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவிட்டார். இது தொடர்பாக, பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளின் வளாகத்தில், அரசியல் கட்சிகள், மத அமைப்புகள், ஜாதி சங்கங்கள் நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் சார்பில் நடத்த தடை விதிக்கப்படுகிறது. பள்ளி விடுமுறை நாட்களிலும், இது பொருந்தும். எந்த காரணத்தை கொண்டும், பள்ளி வளாகத்தை அரசியல் அல்லது மத செயல்பாடுகளுக்கு வாடகைக்கோ அல்லது இலவசமாகவோ வழங்கக் கூடாது.</p><h2>முற்றிலும் தடை</h2><p>அரசு நலத்திட்ட விழாக்கள் மற்றும் அரசின் அதிகாரப்பூர்வ பணிகளுக்கு மட்டுமே பள்ளி வளாகத்தை பயன்படுத்த வேண்டும். பள்ளி சுவர் மற்றும் வளாகத்தில், அரசியல், மதம் சார்ந்த சுவரொட்டிகள், விளம்பரங்கள், கொடிக் கம்பங்கள், சின்னங்கள் வைப்பது முற்றிலும் தடை செய்யப்படுகிறது.</p><p>பள்ளி தலைமை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஆசிரியர்கள் </a>அல்லது பள்ளி நிர்வாகிகள், அரசாணையை மீறி, அரசியல், மத நிகழ்வுகளுக்கு அனுமதி அளித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கணவருடன் தகராறு: அடி தாங்க முடியாமல் தெருவுக்கு ஓடிய பெண்.. அடுத்து நடந்த கொடூரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dispute-with-husband-woman-runs-onto-the-street-unable-to-bear-the-blows-the-horrific-incident-that-followed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dispute-with-husband-woman-runs-onto-the-street-unable-to-bear-the-blows-the-horrific-incident-that-followed#comments</comments><guid isPermaLink="false">5165121c-d3d7-44d9-8da9-e3583bfd2df1</guid><pubDate>Thu, 30 Jul 2026 02:58:47 +0000</pubDate><atom:updated>2026-07-30T02:58:47.990Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Crime News,தமிழகம்,Karaikudi,காரைக்குடி,கிரைம் செய்திகள்,சிவகங்கை,Sivagangai,குடும்ப பிரச்சினை,மனைவி கொலை,Wife murdered,family issue</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/4zjzdzlm/too.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/4zjzdzlm/too.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>காரைக்குடி, </p><p>மனைவியின் தலை முடியை பிடித்து தரதரவென இழுத்ததில் கல் தூணில் தலை மோதி அப்பெண் உயிரிழந்தார். இந்த கொடூர செயலை செய்த 2-வது கணவர் போலீசில் சரண் அடைந்தார்.</p><h2>திருமணம்</h2><p>சிவகங்கை மாவட்டம் <a href="https://www.dailythanthi.com/topic/karaikudi">காரைக்குடி</a> அருகே உள்ள கோட்டையூரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 37) இவர் கொட்டகை போடும் தொழில் செய்து வந்தார். சாக்கோட்டை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் உய்யவந்தாள் (40). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்தார். இவர் தென்னை ஓலை பின்னும் தொழில் செய்து வந்தார்.</p><p>பிரகாஷ் தனது தொழில் ரீதியாக தென்னை ஓலைகளை வாங்க அடிக்கடி உய்யவந்தாளை சந்தித்து வந்தார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்த 6 மாதங்களுக்கு முன்பு பிரகாசும், உய்யவந்தாளும் திருமணம் செய்து கொண்டனர். சென்னைக்கு சென்ற இவர்கள் மீண்டும் சாக்கோட்டைக்கு வந்து தங்களது தொழிலை செய்து வந்தனர்.</p><h2>குடும்ப பிரச்சினை</h2><p>கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்றும் இவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் பிரகாஷ் ஆத்திரம் அடைந்து மனைவி உய்யவந்தாளை கடுமையாக தாக்கினார். வலி தாங்க முடியாமல் வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்த உய்யவந்தாளை விரட்டினார்.</p><h2>கொடூர கொலை</h2><p>மனைவியின் தலைமுடியை பிடித்து தெருவில் இருந்து வீட்டுக்கு தரதரவென இழுத்துச்சென்றார். அப்போது அங்கிருந்த கல்தூணில் உய்யவந்தாளின் தலை மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார்.</p><p>உடனடியாக மனைவி முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றார். அப்போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து பிரகாஷ், மனைவியின் உடலை வீட்டுக்குள் வைத்துவிட்டு, உடலின் மேலே போர்வையை போர்த்திவிட்டு நேரடியாக காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>தீரன் சின்னமலை நினைவு தினம்: ஈரோடு மாவட்டத்தில் ஆக. 3-ந் தேதி உள்ளூர் விடுமுறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiran-chinnamalai-memorial-day-local-holiday-on-aug-3-in-erode-district</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiran-chinnamalai-memorial-day-local-holiday-on-aug-3-in-erode-district#comments</comments><guid isPermaLink="false">c0a881d6-abae-49b4-998f-8233b728f5b0</guid><pubDate>Thu, 30 Jul 2026 02:53:37 +0000</pubDate><atom:updated>2026-07-30T02:53:37.279Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஈரோடு,Local Holiday,உள்ளூர் விடுமுறை,மாவட்டம்,Erode District</media:keywords><media:content height="288" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/vl2m2oib/87.jpg" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/vl2m2oib/87.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு, </p><h2>உள்ளூர் விடுமுறை</h2><p>சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளான வருகிற 3-ந்தேதி அன்று, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தால், இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது. தேர்வுகள் முன்கூட்டி அறிவித்தபடி நடைபெறும்.</p><h2>வங்கிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது</h2><p>இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வருகிற ஆகஸ்ட் 22-ந்தேதி அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறை செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படும் விடுமுறை அல்ல என்பதால், வங்கிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">உள்ளூர் விடுமுறை</a> நாளான வருகிற 3-ந்தேதி அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு ஈரோடு மாவட்டத்திலுள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என்று ஈரோடு மாவட்ட கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பராமரிப்பு பணி: 12 எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/maintenance-work-changes-in-the-service-of-12-express-trains</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/maintenance-work-changes-in-the-service-of-12-express-trains#comments</comments><guid isPermaLink="false">b48a3796-6c57-4a96-9b53-b011b155344a</guid><pubDate>Thu, 30 Jul 2026 02:52:26 +0000</pubDate><atom:updated>2026-07-30T02:52:26.310Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எக்ஸ்பிரஸ் ரெயில்,Southern Railway,Express trains,ரெயில்,ரெயில்வே கோட்டம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/w3smair3/CHENNAI-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/w3smair3/CHENNAI-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கே.எஸ்.ஆர். பெங்களூரு ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக 12 எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி யஷ்வந்த்பூர் -மங்களூரு சென்ட்ரல் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் (16565) வருகிற 2-ந்தேதி யும், மங்களூரு சென்ட்ரல் -யஷ்வந்த்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16566) வருகிற 3-ந்தேதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.</p><p>கே.எஸ்.ஆர். பெங்களூருவிலிருந்து அதிகாலை 5.10 மணிக்கு கிளம்ப வேண்டிய கே.எஸ்.ஆர். பெங்களூரு -எர்ணாகுளம் சந்திப்பு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 26651) நாளை மறுநாள் (சனிக்கிழமை), 2, 3, 4-ந்தேதிகளில் பெங்களூரு கண்டோன்மென்ட் நிலையத்திலிருந்து புறப்படும்.</p><h2>கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில்</h2><p>கன்னியாகுமரியில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் 2-ந்தேதிகளில் புறப்பட வேண்டிய கன்னியாகுமரி -கே.எஸ்.ஆர். பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16525) மாற்றுப்பாதையில் அதாவது பைப்பன ஹள்ளியில் இருந்து எஸ்.எம்.வி.டி. பெங்களூரு வரை இயக் கப்படும். இதன் காரணமாக இந்த ரெயில் பெங்களூரு கிழக்கு, பெங்களூரு கண்டோன்மென்ட் மற்றும் கே.எஸ்.ஆர். பெங்களூரு ரெயில் நிலையங்களில் நிற்காது.</p><p>கே.எஸ்.ஆர். பெங்களூருவிலிருந்து இரவு 8.10 மணிக்கு புறப்பட வேண்டிய கே.எஸ்.ஆர். பெங்களூரு -கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16526) நாளை மறுநாள், 2, 3-ந்தேதிகளில் எஸ்.எம்.வி.டி. பெங்களூருவிலிருந்து இரவு 8.10 மணிக்கு புறப்படும்.</p><p>கோவை சந்திப்பிலிருந்து நாளை மறுநாள் 2, 3-ந்தேதிகளில் காலை 5.45 மணிக்கு புறப்பட வேண்டிய கோவை -கே.எஸ்.ஆர். பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 22666), கிருஷ்ணராஜபுரம் முதல் கே.எஸ்.ஆர். பெங்களூரு வரையிலான வழித்தடத்தில் பகுதிய ளவு ரத்து செய்யப்பட்டு, எஸ்.எம்.வி.டி. பெங்களூரு நோக்கி மாற்றியமைக்கப்படும்.</p><p>கே.எஸ்.ஆர். பெங்களூருவிலிருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட வேண்டிய கே.எஸ்.ஆர். பெங்களூரு -கோவை உதய் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 22665) நாளை மறுநாள், 2, 3-ந்தேதிகளில் எஸ்.எம்.வி.டி. பெங்களூருவிலிருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்படும். வருகிற 3-ந்தேதி இயக்கப்படும் எர்ணாகுளம் சந்திப்பு -கே.எஸ்.ஆர். பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 26652) கிருஷ்ணராஜபுரத்துடன் நிறுத்தப்படும். கிருஷ்ணராஜபுரம் முதல் கே.எஸ்.ஆர். பெங்களூரு வரை இயக்கப்படாது.</p><h2>லோக்மான்ய திலக்</h2><p>யஸ்வந்த்பூரிலிருந்து பிற்பகல் 3.55 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டுள்ள யஸ்வந்த்பூர் -சேலம் ரெயில் (வண்டி எண் 16211) நாளை மறுநாள், 2, 3-ந்தேதிகளில் பனஸ்வாடியிலி ருந்து மாலை 4.22 மணிக்கு கிளம்பி சேலம் சந்திப்பு வரை இயக்கப்படும். சேலம் சந்திப்பிலிருந்து மாலை 5.20 மணிக்கு புறப்பட திட்ட மிடப்பட்டுள்ள சேலம் -யஸ்வந்த்பூர் ரெயில் (வண்டி எண் 16212) நாளை மறுநாள், 2, 3-ந்தேதிகளில் பனஸ்வாடியுடன் நிறுத்தப்படும். பனஸ்வாடி முதல் யஸ்வந்த்பூர் வரை இயக்கப்படாது.</p><p>லோக்மான்ய திலக் முனையம் -கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 11013) இன்று (வியாழக்கிழமை) நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் வருகிற 1, 2-ந்தேதிகளில் யலஹங்கா ஓசூர் இடையே மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இதன் காரணமாக பெங்களூரு கிழக்கு. பெங்களூரு கண் டோன்மென்ட் மற்றும் கே.எஸ்.ஆர். பெங்களூரு ஆகிய ரெயில் நிலையங்களில் இந்த ரெயில் நிற்காது.</p><p>இதேபோல் கோவை -லோக்மான்ய திலக் முனையம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 11014) நாளை மறுநாள், 2, 3-ந்தேதிகளில் ஒசூர் -யலஹங்கா இடையே மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.</p><p>இதன் காரணமாக பெங்களூரு கண்டோன்மென்ட் மற்றும் கே.எஸ்.ஆர். பெங்களூரு ஆகிய நிலையங்களில் இந்த ரெயில் நிற்காது என்று சேலம் ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஈரோட்டில் கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் எரித்துக்கொலை - வாலிபர் வெறிச்செயல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-burnt-to-death-in-erode-over-fake-love-affair-youth-commits-brutal-act</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-burnt-to-death-in-erode-over-fake-love-affair-youth-commits-brutal-act#comments</comments><guid isPermaLink="false">196e5e20-64d3-48ce-9b41-a74278c1d08c</guid><pubDate>Thu, 30 Jul 2026 02:06:31 +0000</pubDate><atom:updated>2026-07-30T02:06:31.403Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,young woman,இளம்பெண்,கள்ளக்காதல்,Erode,ஈரோடு,கிரைம் செய்திகள்,fake love</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/n0x118v6/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/n0x118v6/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><h2>'இன்ஸ்டாகிராம்' பழக்கம்</h2><p>ஈரோடு பாரதி நகரை சேர்ந்த சென்னப் பன் என்பவரது மகள் வினோதினி (வயது 24). இவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சூர்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தனிஷ் (4) என்கிற மகன் உள்ளான். வினோதினிக்கும். சூர்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கணவரை பிரிந்து கடந்த 2 ஆண்டுகளாக வினோதினி மகனுடன் தனது பெற்றோர் வீட்டின் அருகே மற்றொரு வீட்டில் வசித்து வந்தார்.</p><p>இந்த நிலையில் வினோதினிக்கு 'இன்ஸ்டாகிராம்' மூலம் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சாயல்குடியை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் நவீன் என்கிற நவநீதிகிருஷ்ணன் (26) என் பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. தொடர்ந்து நவநீதகிருஷ்ணன் அவ்வப்போது வினோதினியின் வீட்டுக்கு வந்து அவரை அடிக்கடி தனிமையில் சந்தித்ததாக கூறப்படுகிறது.</p><h2>கடும் வாக்குவாதம்</h2><p>இதற்கிடையில் நவநீதகிருஷ்ணனின் நடவடிக்கை பிடிக்காததால், கடந்த சில நாட்களாக வினோதினி அவருடன் சரிவர பேசாமல் இருந்துள்ளார். இதனால், வினோதினி வேறு ஒரு நபருடன் பழகி வருவதாக நவநீதகிருஷ்ணன் சந்தேகம் அடைந்து, வினோதினியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.</p><p>இதைத்தொடர்ந்து ஈரோட்டுக்கு வந்த நவநீதகிருஷ்ணன், சம்பவத்தன்று நள்ளிரவு வீட்டில் மகனுடன் வினோதினி இருப்பதை உறுதி செய்தபிறகு வீட்டுக்குள் நுழைந்து வினோதினியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.</p><h2>உடலில் தீ வைப்பு</h2><p>இதில் ஆத்திரம் அடைந்த நவநீதகிருஷ்ணன், வீட்டில் இருந்த மண்எண் ணெயை எடுத்துவந்து வினோதினி மீது ஊற்றி தீ வைத்துள்ளார். தீ உடலில் பற்றி எரிந்ததால் வலியால் அலறி துடித்த வினோதினி அருகில் இருந்த நவநீதகிருஷ்ணனையும் இறுக பிடித்துள்ளார். வினோதினியின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் உள்ள அவரது பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இதைப்பார்த்த நவநீதகிருஷ்ணன் தீக்காயங்களுடன் அங்கிருந்து தப்பி ஓடினார்.</p><p>இதையடுத்து படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த வினோதினியை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த வினோதினியிடம், ஈரோடு கூடுதல் மகளிர் கோர்ட்டு நீதிபதி அன்புசெல்வி நேரில் மரண வாக்குமூலத்தை பதிவு செய்தார். அதில், நவநீ தகிருஷ்ணன்தான் தன் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்தார் என்று வினோதினி தெரிவித்துள்ளார்.</p><h2>கொலை வழக்குப்பதிவு</h2><p>தொடர்ந்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வினோதினி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து நவநீதகிருஷ்ணன் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, அவரை போலீசார் தேடி வந்தனர். நவநீதகிருஷ்ணன் இரு கைகள் மற்றும் முகத்தில் தீக்காயம் அடைந்து, கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது போலீசாருக்கு தெரியவந்தது.</p><p>இதுகுறித்து போலீசார் கூறுகையில், நவநீதகிருஷ்ணன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்ததும், உடனடியாக கைது செய்யப்பட்டு கோர்ட்டு உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்படுவார். தொடர்ந்து, மருத்துவமனையில் நவநீதகி ருஷ்ணனை கண்காணித்து வருகிறோம், என்றனர்.</p><p>கள்ளக்காதல் விவகாரத்தால் இளம்பெண் எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கல்தூணில் தலையை மோதி மனைவியை கொன்ற வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-arrested-for-killing-wife-by-hitting-head-on-stone-pillar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-arrested-for-killing-wife-by-hitting-head-on-stone-pillar#comments</comments><guid isPermaLink="false">9d6f2d76-81d3-4b94-be7c-b6eeb496bd92</guid><pubDate>Thu, 30 Jul 2026 02:04:57 +0000</pubDate><atom:updated>2026-07-30T02:04:57.961Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வாலிபர் கைது,கொலை,சிவகங்கை,Sivagangai,மனைவி,தலை,மோதி,கல்தூண்,Stone pillar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/f6df0csy/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கல்தூணில் தலையை மோதி மனைவி கொலை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/f6df0csy/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை, </p><p>சிவகங்கை மாவட்டத்தில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88">குடும்ப பிரச்சினை</a> காரணமாக கல்தூணில் தலையை மோதி மனைவியை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88">கொன்ற வாலிபரை</a> போலீசார் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர்.</p><h2>குடும்ப பிரச்சினை</h2><p>சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை அண்ணாநகரை சேர்ந்தவர் உய்யவந்தாள் (வயது 40). இவருக்கும் கொட்டகை போடும் தொழிலாளி பிரகாஷ்(37) என்பவருக்கும் 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில், தம்பதியரிடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.</p><h2>கல்தூணில் தலையை மோதி மனைவி கொலை; வாலிபர் கைது</h2><p>நேற்றும் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த பிரகாஷ், மனைவி உய்யவந்தாளை தாக்கியுள்ளார். மேலும் தப்பியோடிய மனைவியின் தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்துச் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள கல்தூணில் தலை மோதியதில் உய்யவந்தாள் பரிதாபமாக உயிரிழந்தார். பிரகாஷ் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>வடசென்னை அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/600-mw-power-generation-affected-at-north-chennai-thermal-power-station</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/600-mw-power-generation-affected-at-north-chennai-thermal-power-station#comments</comments><guid isPermaLink="false">67b845e5-5942-46c4-a450-a1003c48b4b6</guid><pubDate>Thu, 30 Jul 2026 01:50:37 +0000</pubDate><atom:updated>2026-07-30T01:50:37.185Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,வடசென்னை,North Chennai,அனல்மின் நிலையம்,மின் உற்பத்தி,thermal power station,North Chennai Thermal Power Station,வடசென்னை அனல் மின் நிலையம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/8k6nbzth/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/8k6nbzth/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் அமைந்துள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தில், முதல் அலகில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.</p><h2>600 மெகாவாட் பாதிப்பு</h2><p>வடசென்னை அனல்மின் நிலையத்தில் தலா 600 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அலகுகள் மூலம் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தியாகும் மின்சாரம், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் மின் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது.</p><p>இந்நிலையில், முதல் அலகில் 'பாய்லர் டியூப் பஞ்சர்' (Boiler Tube Puncture) ஏற்பட்டதால், நேற்று அதிகாலை முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.</p><h2>கூடுதல் சவால்</h2><p>தற்போது கோடை வெயில் காரணமாக மாநிலம் முழுவதும் மின் தேவை அதிகரித்துள்ள நிலையில், 600 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டிருப்பது தமிழ்நாடு மின்வாரியத்திற்கு கூடுதல் சவாலை ஏற்படுத்தியுள்ளது. கோளாறை சரிசெய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், மின் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">உற்பத்தியை </a>விரைவில் மீண்டும் தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content:encoded></item><item><title>துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான வழக்கில்
விரைவில் தீர்ப்பு - ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-court-orders-verdict-soon-in-case-related-to-appointment-of-vice-chancellors</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-court-orders-verdict-soon-in-case-related-to-appointment-of-vice-chancellors#comments</comments><guid isPermaLink="false">472d7611-fda8-4530-a292-558a70c8f6e9</guid><pubDate>Thu, 30 Jul 2026 01:31:30 +0000</pubDate><atom:updated>2026-07-30T01:31:30.332Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஐகோர்ட்டு,Chennai High Court,University Vice-Chancellors,Appointment,நியமனம்,துணைவேந்தர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/zo5lhhqg/highcourt.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/zo5lhhqg/highcourt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான வழக்குகளின் தீர்ப்பு விரைவாக பிறப்பிக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.</p><h2>துணை வேந்தர்கள்</h2><p>தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து நெல்லையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த சட்டத்துக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தடையை ரத்து செய்து, இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு மீண்டும் விசாரிக்கவேண்டும் என்று உத்தரவிட்டது.</p><p>அப்போது, இந்த வழக்கு விசாரணை முடியும் வரை, துணை வேந்தர் நியமனங்களை மேற்கொள்ள மாட்டோம் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசும் உத்தரவாதம் அளித்தது. இந்த நிலையில், வெங்கடாஜலபதி தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி. நீதிபதி ஜி.அருள்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.</p><h2>தீர்வு காண வேண்டும்</h2><p>அதேபோல, தமிழக பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணை வேந்தர்கள் பதவிகளை நிரப்ப <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">ஐகோர்ட்டு</a> ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தலைமையில் உயர் அதிகார குழுவை நியமிக்க கோரி செங்கல்பட்டைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் தொடர்ந்த வழக்கையும் நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்தனர். அப்போது மனுதாரர் பாஸ்கர் தரப்பில், "மாநிலத்தில் மொத்தம் உள்ள 20 பல்கலைக்கழகங்களில் 15 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் இல்லை. இதனால், கல்வி தொடர்பான கொள்கை முடிவுகள் எடுக்க முடியவில்லை. நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் பல்கலைக்கழக பணிகள் மேற்கொள்ள முடியாமல் உள்ளன. இதற்கு தீர்வு காண வேண்டும்" என்று வாதிடப்பட்டது.</p><h2>சட்டம் அமலில் உள்ளது</h2><p>தமிழ்நாடு அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, "சுப்ரீம் கோர்ட்டில் அரசு அளித்த உத்தரவாதம் காரணமாக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் முடங்கியுள்ளது, இதற்கு தீர்வு காணும் வகையில் தேடுதல் குழு பரிந்துரைத்துள்ள மூன்று பேரில் ஒருவரை தேர்வு செய்ய தமிழக அரசை அனுமதிக்க வேண்டும். துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்யப்பட்டுள்ளதால், அந்த சட்டம் இன்னும் அமலில் உள்ளதாகவே கருத வேண்டும். அந்த சட்டத்தின் அடிப்படையில் துணை வேந்தர்கள் நியமனம் மேற்கொள்ள அனுமதித்தால் மகிழ்ச்சி" என்று கூறினார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்குகளின் தீர்ப்பு விரைவாக பிறப்பிக்கப்படும் என்று உத்தரவிட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-today-10</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-today-10#comments</comments><guid isPermaLink="false">b60ee615-bd03-4d35-8142-75a32573a204</guid><pubDate>Thu, 30 Jul 2026 01:30:14 +0000</pubDate><atom:updated>2026-07-30T01:30:14.482Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மின் தடை,power cut</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/f4mfxvds/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/f4mfxvds/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>சென்னையில் 30.07.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><h2>மின் தடை</h2><p><strong>தாம்பரம்</strong>: நியூ ஸ்டேட் பாங்க் காலனி, கக்கன் தெரு, லோகநாதன் தெரு, சர்வீஸ் சாலை, பட்டேல் நகர், ஜி.எஸ்.டி. சாலை, இரும்புலியூர், மங்களாபுரம், கலைஞர் நெடுஞ்சாலை, எஸ்.வி. ராகவன் சாலை, திருவள்ளுவர் தெரு, பாலாஜி தெரு, காந்தி தெரு, சூரத்தம்மன் கோயில் தெரு, மணிமேகலை தெரு, சிலப்பதிகாரம் தெரு, குண்டலகேசி தெரு, பாரதிதாசன் தெரு, நாவலர் தெரு, லட்சுமி தெரு, உமா நகர், டி.கே.சி. தெரு, அம்மன் கோயில் தெரு, வெங்கடசாமி தெரு, மணி தெரு, பாலகிருஷ்ணன் தெரு, கலைவாணி தெரு, கண்ணதாசன் தெரு, அர்ச்சனா நகர், பீர்க்கன்காரணை, ஸ்ரீராம் நகர், ஜாய் நகர், மாணிக்கம் நகர், மாடம்பாக்கம் பிரதான சாலை, ராஜம்மாள் நகர், மாருதி நகர், சதாசிவம் நகர், தேனுபுரீஸ்வரர் கோயில், டெல்லஸ் அவென்யூ, எல்.டி.எஸ். அவென்யூ, சாந்தா நகர், அன்னை அருள் பள்ளி, மணவாள நகர், ஜெயேந்திர நகர், ஐயப்பா நகர், பிரசாந்த் காலனி, செந்தில் அவென்யூ, பாக்கியம் நகர், நவநீதம் நகர், வி.ஜி.பி. பொன் நகர், கிருஷ்ணா நகர், பாலாஜி நகர் மற்றும் விரிவாக்கம், பாரத் நகர், வெங்கடாத்ரி நகர், ஏ.எல்.எஸ். கிரீன் லேண்ட், கனகம்மன் கோவில் தெரு.</p><p><strong>மேடவாக்கம்</strong>: மல்லேஸ் மற்றும் கே.ஜி. அபார்ட்மெண்ட், நூக்கம்பாளையம் சாலை, ஆர்.சி. ப்ளாசம் அபார்ட்மெண்ட், நேசமணி நகர், வரதாபுரம், ஏரிக்கரை சாலை.</p><p><strong>திருமுல்லைவாயல்</strong>: வெள்ளானுர், கொள்ளுமேடு, மகளிர் தொழிற்பேட்டை, கன்னடபாளயம், பொத்தூர் ,அரிக்கமேடு, காட்டூர், லட்சுமிபுரம், பம்மதுகுளம், கோனிமேடு, ஈஸ்வரன் நகர், எல்லம்மன் பேட்டை, காந்தி நகர், டி.எச் .சாலை , எடபாளையம் சாலை,ரெட்ஹில்ஸ்.</p><p><strong>கும்மிடிப்பூண்டி</strong>: சிறுபுழல்பேட்டை, பில்லக்குப்பம், முத்து ரெட்டி கண்டிகை, சூரவாரி கண்டிகை, புது ராஜா கண்டிகை, ஐயர் கண்டிகை, பார்த்தபாளையம், கல்லூர், எருக்குவாய், ராமச்சேரி கண்டிகை, எல்லையம்மன் நகர், புதுப்பேட்டை.</p><p><strong>கொட்டிவாக்கம்</strong>: ஜர்னலிஸ்ட் காலனி, லட்சுமண பெருமாள் நகர் 1 வது முதல் 6வது தெரு வரை, ராஜா கார்டன், ராஜாகல்யாணி தெரு, குப்பம் சாலை, நியூ காலனி 1 வது முதல் 3வது தெரு வரை, கற்பகாம்பாள் நகர் 1 வது முதல் 3வது தெரு வரை, ஸ்ரீனிவாசபுரம் 1 வது மற்றும் 2வது தெரு, நஜீமா அவென்யூ, இ.சி.ஆர். பிரதான சாலை, திருவள்ளுவர் நகர் 39 வது முதல் 43வது குறுக்குத் தெரு வரை, திருவள்ளுவர் நகர் 2 வது மற்றும் 7வது பிரதான சாலை, காவேரி நகர் 1 வது முதல் 6வது தெரு வரை, பேவாட்ச் புல்வர்டு, வள்ளலார் நகர், கொட்டிவாக்கம் குப்பம் 1வது தெரு, வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள், தென்றல் H43 முதல் H50 வரை, முல்லை H70 முதல் H78 வரை அடுக்குமாடி குடியிருப்புகள்.</p><p><strong>பல்லாவரம்</strong>: ராஜீவ் காந்தி நகர், யாதவாள் தெரு, மகாவீர் சாலை, சுபம் நகர், அம்மன் நகர்.</p><p><strong>வேளச்சேரி</strong>: விஜயா நகர் 1வது பிரதான சாலை, கோல்டன் அவென்யூ, எம்.ஜி.ஆர். நகர் 10 வது முதல் 13வது தெரு, சி.டி.இ.எஸ், வெங்கடேஸ்வரா நகர் 6வது தெரு, தேவி கருமாரியம்மன் நகர், சக்திபவுனாம்பாள் தெரு.</p><p><strong>அண்ணாசாலை</strong>: பங்காரு நாய்க்கன் தெரு, குப்பமுத்து தெரு, ஜான் முகமது தெரு, லத்தூராம் தெரு, சையத் அப்துல்லா தெரு, சையத் நூர் தெரு, அப்துல் காதர் தெரு, புராசாகிப் தெரு, பூபேகம் தெரு, வெங்கடேசன் 1வது, 2வது தெரு, ரஜாஐதர் தெரு, அமீருனிசா பேகம் தெரு, குலாம் மொய்தீன் தெரு, குமாரசாமி தெரு, குருசாமி தெரு, மாருசாகிப் தெரு, திருவல்லிக்கேனி தெரு, சுவாமி சிவானந்தா சாலை, எல்லீஸ் ரோடு, வாலாஜா ரோடு, அப்பாவு தெரு, பச்சையப்பன் தெரு, பாலமுத்து தெரு, யுன்னீஸ் சாலி மெயின் தெரு, யுன்னீஸ் சாலி 1 வது முதல் 7 வது லேன், திப்பு சாகிப் தெரு, நல்லதம்பி தெரு, முக்தரனிஸா தெரு, காமராஜர் சாலை, நேப்பியார் பாலம் முதல் பிரஸிடென்ஸி கல்லூரி வரை, தாயார்சாகிப் தெரு மற்றும் லேன், ஔலியா சாகிப் தெரு மற்றும் லேன், பாரதி சாலை, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பைகிராப்ட்ஸ் </a>சாலை, வி.ஆர். பிள்ளை தெரு, அனுமந்தராயன் தெரு, கற்பூரகன்னியம்மன் கோயில் 1 வது முதல் 4வது தெரு, விக்டோரியா ஹாஸ்டல் சாலை, அக்பர் சாகிப் தெரு, சைடோஜி தெரு, பெல்ஸ் சாலை.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடு நடந்தது எப்படி? - பரபரப்பு தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-did-the-fraud-happen-in-tasmac-sensational-information</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-did-the-fraud-happen-in-tasmac-sensational-information#comments</comments><guid isPermaLink="false">8791638c-1818-4f4e-a4aa-4dad3d2bc912</guid><pubDate>Thu, 30 Jul 2026 01:28:56 +0000</pubDate><atom:updated>2026-07-30T01:28:56.107Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டாஸ்மாக்,Tasmac,Tasmac shop,டாஸ்மாக் ஊழல்,லஞ்ச ஒழிப்பு போலீசார்,கட்சி நிதி,Party fund,tasmac bar,டாஸ்மாக் நிறுவனம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/6p8etho7/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/6p8etho7/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில், பரபரப்பு தகவல்கள் உள்ளன.</p><p><strong>விவரங்கள் வருமாறு:-</strong></p><h2>கட்சி நிதி</h2><p>டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக அரசு அனுப்பிய புகார் கடிதத்தின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மதுபான ஆலைகளில் மதுபானங்கள் கொள்முதல் செய்வது, பார்கள் நடத்துவது, வாகன போக்குவரத்து, பழைய பாட்டில் களை வாங்குவது, டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளை பணி நியமனம் செய்வது உள்ளிட்டவற்றில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் கூட்டாக சேர்ந்து, முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளனர். கடந்த 2021 முதல் 2025-ம் ஆண்டு வரை முறைகேடுகள் நடந்துள்ளன.</p><p>கொஞ்சம் கூட விதிமுறைகளை பின்பற்றாமல், அவர்கள் இஷ்டத்துக்கு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். இதைதவிர, 'பார்ட்டி பண்ட்' (கட்சி நிதி) என்ற பெயரில் கட்சி நிதியும் முறைகே டாக வசூலிக்கப்பட்டு உள்ளது. மதுப்பிரியர்களிடம் இருந்தும், ஒரு பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரை சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.</p><p>வெளிநாட்டு மதுபாட்டில்களுக்கு ரூ.500 வரை வசூலித்துள்ளார்கள். 'கரூர் கேங்' என்ற பெயரில் செயல்பட்டவர்கள் இந்த கட்டண வசூலில் ஈடுபட்டுள்ளனர். ரத்தேஷ்ராஜ் சண்முகவேலும், மூலனூர் கார்த்திக்கும் டாஸ் மாக்கில் நடந்த முறைகேடுகளுக்கு மூல காரணமாக செயல்பட்டுள்ளனர். அவர்கள் சொல்படி விசாகனும், மண்டல மேலாளர்கள் ராமதுரை முருகனும், பன்னீர் செல்வமும் மற்றும் மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகளும் செயல்பட்டுள்ளனர்.</p><h2>பார்கள் டெண்டர் முறைகேடு</h2><p>பார்கள் டெண்டர் விட்டதிலும் முறைகேடு நடந்துள்ளது. இவர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே டெண்டரில் கலந்துகொள்ள அனுமதித்திருக்கிறார்கள். இதன்மூலம் அரசுக்கு கோவை வடக்கில் ரூ.17.27 கோடியும், கோவை தெற்கில் ரூ.13.58 கோடியும், நீலகிரி மாவட்டத்தில் ரூ.1.95 கோடியும் வருமான இழப்பு ஏற்பட்டது. இந்த வருமான இழப்பு 2022 மற்றும் 2023-ம் ஆண்டில் மட்டும் கணக்கிடப்பட் டுள்ளது. டாஸ்மாக் நிறுவனம், வாகனங்கள் பயன்பாட்டுக்காக ஆண்டுக்கு ரூ.100 கோடி செலவிட்டு வருகிறது. இதிலும் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது.</p><h2>மேலோட்டமாக...</h2><p>முதல் தகவல் அறிக்கையில் மொத்தமாக அரசுக்கு எவ்வளவு வருமான இழப்பு ஏற்பட்டது என்பதை குறிப்பிடவில்லை. மேலோட்டமாக ஒவ்வொரு பிரிவு வாரியாக நடந்த, குறிப்பாக பார்களில் நடந்த முறைகேடு விவரங்கள், மதுபிரியர்களிடம் அதிகமாக நடத்திய வசூல் வேட்டை மட்டுமே கூறப்பட்டுள்ளது.</p><p>2021-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை டாஸ்மாக்கில் நடந்த முறைகேடுகள் மூலம் மொத்தமாக அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து முதல் தகவல் அறிக்கையில் கூறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக கூடுதலாக பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கையில், அரசுக்கு ஏற்பட்ட முழுமையான வருமான இழப்பு பற்றி தெரிவிக்கப்படும் என்று லஞ்சஒழிப்புதுறை வட்டாரங்கள் தெரிவித்தன.</p>]]></content:encoded></item><item><title>இன்று கொட்டப்போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா..?  </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/heavy-rain-set-to-lash-down-today-do-you-know-which-districts-will-be-affected</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/heavy-rain-set-to-lash-down-today-do-you-know-which-districts-will-be-affected#comments</comments><guid isPermaLink="false">afc16dea-d461-4fc3-a066-3cda59bdb151</guid><pubDate>Thu, 30 Jul 2026 01:15:10 +0000</pubDate><atom:updated>2026-07-30T01:15:10.714Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Rain,Weather,கனமழை,வானிலை,தமிழகம்,Weather News,WeatherUpdate,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,வானிலை ஆய்வு மையம்,heavy rain,வானிலை அறிக்கை,வானிலை தகவல்,வானிலை முன்னறிவிப்பு,Weather Status,வானிலை அறிவிப்பு,weather center,TN Rain</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/3dvyk7bj/kott.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மழை, rain]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/3dvyk7bj/kott.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>வானிலை செய்திகள் (Weather)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><h2>கனமழை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இதன் காரணமாக <strong>இன்று (30-07-2026):</strong> <ins>நீலகிரி</ins> மற்றும் <ins>கோயம்புத்தூர்</ins> மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88">கனமழை</a> பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>நாளை (31-07-2026</strong>):  கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88">கனமழை</a> பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>01-08-2026:</strong> கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88">கனமழை</a> பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>02-08-2026 முதல் 04-08-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p> <h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong><ins>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</ins></strong></p><p><strong>30-07-2026 முதல் 31-07-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.</p><p><strong>01-08-2026 மற்றும் 02-08-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று குறையக்கூடும்.</p><p><strong><ins>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</ins></strong></p><p><strong>30-07-2026 முதல் 31-07-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.</p><p><strong>01-08-2026 மற்றும் 02-08-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.</p> <h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று (30-07-2026)</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>மீனவர்களுக்கான எச்சரிக்கை:</h2><p><strong>தமிழக கடலோரப்பகுதிகள்:</strong></p><p>30-07-2026: தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>31-07-2026:</strong> எச்சரிக்கை ஏதுமில்லை.</p><p><strong>01-08-2026 மற்றும் 02-08-2026:</strong> தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><h2>வங்கக்கடல் பகுதிகள்:</h2><p><strong>30-07-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வீசக்கூடும்.</p><p><strong>31-07-2026:</strong> எச்சரிக்கை ஏதுமில்லை.</p><p><strong>01-08-2026 மற்றும் 02-08-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p> <h2>அரபிக்கடல் பகுதிகள் :</h2><p><strong>30-07-2026 முதல் 02-08-2026 வரை:</strong> மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவறுக்கப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>சென்னை மாநகராட்சி நிதி பற்றாக்குறை ரூ.1,970 கோடியாக உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-corporations-financial-deficit-rises-to-rs-1970-crore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-corporations-financial-deficit-rises-to-rs-1970-crore#comments</comments><guid isPermaLink="false">69b1c81c-baab-4c2a-8f10-cf0ab24e2959</guid><pubDate>Thu, 30 Jul 2026 01:14:45 +0000</pubDate><atom:updated>2026-07-30T01:14:45.024Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Corporation,சென்னை மாநகராட்சி,நிதி பற்றாக்குறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/tbqt3wps/corporation.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/tbqt3wps/corporation.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை மாமன்ற கூட்டத்தில் 3 மாதங்களாக கவுன்சிலர் நிதி ஒதுக்காதது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மாநகராட்சி நிதி பற்றாக்குறை ரூ.1,970 கோடியாக உயர்ந்துள்ளதாக கமிஷனர் சமீரன் விளக்கம் அளித்துள்ளார்.</p><h2>மன்ற கூட்டம்</h2><p>சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நேற்று. ஜூலை மாதத்திற்கான மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு, துணை மேயர் மகேஷ் குமார், கமிஷனர் சமீரன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். தொடர்ந்து நேரமில்லா நேரத்தில் நிலைக்குழு தலைவர் சர்பஜெயதாஸ் பேசியதாவது:-</p><p>2026-27-ம் ஆண்டுக்கான கவுன்சிலர்கள் வார்டு மேம்பாட்டு நிதி இதுவரை ஒதுக்கப்படவில்லை. புதிய அரசு பொறுப்பேற்று 3 மாதங்களாகியும் இதுவரை கவுன்சிலர் நிதி ஒதுக்கப்படவில்லை. கவுன்சிலர் மேம்பாட்டு நிதி ஒதுக்கப்படாமல் இருப்பதால் அடிப்படை பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><h2>நிலைக்குழு தலைவர் சிற்றரசு:-</h2><p>உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை இதுவரை வழங்காததால் பல பணிகள் முடிக்கப்படாமல் இருக்கிறது. சென்னை மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் இந்த நிலை இருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் திட்டங்கள் அறிவித்தால் 60 நாட்களில் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெறும். தி.மு.க. கவுன்சிலர்களை மக்களை குறை சொல்ல வேண்டும் என்று திட்டமிட்டே தற்போதைய ஆட்சியாளர்கள் நிதியை ஒதுக்கவில்லை.</p><h2>மேயர் பிரியா:-</h2><p>பிப்ரவரி மாதத்துடன் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிகிறது. கவுன்சிலர் மேம்பாடு நிதி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">சென்னை மாநகராட்சி </a>மூலதன நிதியிலிருந்து வழங்கப்படுகிறது. விரைந்து நிதி ஒதுக்க நகராட்சி நிர்வாக செயலாளரிடம் வலியுறுத்தப்படும்.</p><h2>ரூ.1,970 கோடி பற்றாக்குறை</h2><p>இதற்கு பதில் அளித்து கமிஷனர் சமீரன் பேசுகையில், 'சென்னை மாநகராட்சியின் மொத்த நிதி பற்றாக்குறை ரூ.1,970 கோடியாக உள்ளது. கவுன்சிலர்கள், பொதுமக்கள், மேம்பால பணிகள், வெள்ள தடுப்பு பணிகள் ஆகியவை மிக முக்கிய பணிகள் ஆகும். 2022-23-ம் ஆண்டு நிதி பற்றாக்குறை ரூ.325 கோடியாக இருந்தது. 2025-26-ம் ஆண்டு முடியும் போது அதாவது கடந்த மார்ச் மாதம் இறுதியுடன் நிதி பற்றாக்குறை ரூ.1,970 கோடியாக பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேலான பணம் நிலுவையில் உள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் கவுன்சிலர்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கவுன்சிலர்கள் நிதியை ரத்து செய்யவில்லை. அடுத்த 3 மாதங்களில் நிதி சூழலை பொறுத்து நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து முடிவு செய்யப்படும்' என்றார்.</p>]]></content:encoded></item><item><title>125 நாள் வேலை செய்யும் பெண்ணுக்கு ரூ.2.7 கோடி வரி செலுத்தும்படி நோட்டீஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-who-worked-for-125-days-gets-notice-to-pay-rs27-crore-in-tax</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-who-worked-for-125-days-gets-notice-to-pay-rs27-crore-in-tax#comments</comments><guid isPermaLink="false">fede43b2-bb3b-44e1-a797-afba07dc6b02</guid><pubDate>Thu, 30 Jul 2026 01:07:11 +0000</pubDate><atom:updated>2026-07-30T01:07:11.785Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirupattur,திருப்பத்தூர்,பெண்,Woman,ஜி.எஸ்.டி.,Notice,பரபரப்பு,stir,நோட்டீஸ்,125 நாள் வேலை திட்டம்,125 days work,G.S.T.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/3jy5ezyc/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ருக்மணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/3jy5ezyc/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பத்தூர், </p><p>திருப்பத்தூர் மாவட்டத்தில் <a href="https://www.dailythanthi.com/search?q=125%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88">125 நாள் வேலை</a> செய்யும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">பெண்ணுக்கு</a>, ரூ.2.7 கோடி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9C%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%9F%E0%AE%BF.">ஜி.எஸ்.டி.</a> செலுத்துமாறு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D">நோட்டீஸ் </a>வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.</p><h2>125 நாள் வேலை</h2><p>திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த புதூர் படவேட்டம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகேசன் மனைவி ருக்மணி (வயது 56). இவர் 125 நாள் வேலை திட்டத்தில் ஏரி வேலைக்கு சென்று குடும்பம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் 125 நாள் வேலை திட்டத்தில் வந்த கூலி பணத்தை எடுப்பதற்காக நேற்று சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்றுள்ளார்.</p><h2>ரூ.2.7 கோடி வரி ஏய்ப்பு</h2><p>அங்கு வங்கியில் இருந்த ஊழியர்கள் நீங்கள் ஆர்.எம்.டிரேடர்ஸ் என்ற பெயரில் தொழில் நிறுவனம் நடத்துவதாகவும், அதன் மூலம் ஜி.எஸ்.டி. செலுத்தாமல் ரூ.2 கோடியே 79 லட்சத்து 19 ஆயிரத்து 420 வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் ஆம்பூர் வட்ட வணிகவரித்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்துள்ளது. அதன்பேரில் உங்களுடைய வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.</p><h2>பரபரப்பு</h2><p>இதனால் அதிர்ச்சியடைந்த ருக்மணி, தான் அதுபோன்று தொழில் நிறுவனம் எதுவும் நடத்தவில்லை என்றும், 125 நாள் வேலைக்கு சென்று குடும்பம் நடத்தி வருவதாகவும் கூறியிருக்கிறார். மேலும் தனது வங்கி கணக்கு முடக்கப்பட்டதால் அதில் இருந்து கூலி பணத்தை எடுக்க முடியாமல் திரும்பி உள்ளார். 125 நாள் வேலை செய்யும் பெண்ணுக்கு ரூ.2.7 கோடி ஜி.எஸ்.டி. செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இனி ஆண்டுதோறும் அரசின் திரைப்பட விருது அமைச்சர் ராஜ்மோகன் உறுதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-rajmohan-confirms-that-government-film-awards-will-be-presented-annually-from-now-on</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-rajmohan-confirms-that-government-film-awards-will-be-presented-annually-from-now-on#comments</comments><guid isPermaLink="false">0b7f815a-ce3a-4835-96d4-a0ea5af4f272</guid><pubDate>Thu, 30 Jul 2026 01:03:24 +0000</pubDate><atom:updated>2026-07-30T01:03:24.614Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சினிமா,Cinema,awards,திரைப்பட விருதுகள்,அமைச்சர் ராஜ்மோகன்,Rajmohan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/49v71y4a/1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/49v71y4a/1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னையில் நடந்த ஒரு சினிமா விழாவில் தமிழக அரசின் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் இயக்குனரும், நடிகருமான ரவி மரியா பேசும்போது, 'திரைத்துறையினரை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு ஒவ்வொரு வருடமும் விருது வழங்கி வருகிறது. ஆனால் இந்த விருதுகளை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறையோ, 8 ஆண்டுகளுக்கு ஒருமுறையோ சேர்த்து சேர்த்து கொடுக்கிறார்கள். சில சமயம் விருது கிடைக்கும்போது சம்பந்தப்பட்ட கலைஞர்கள் இல்லாமல்கூட போகிறார்கள். விருதுகள் உடனே கொடுத்தால் தான் மதிப்பாக இருக்கும்', என வேண்டுகோள் விடுத்தார்.</p>  <p>இதையடுத்து அமைச்சர் ராஜ்மோகன் பேசும்போது, "5 ஆண்டுக்கு ஒரு முறை கொடுத்தால் அது விருது கிடையாது. ஆண்டுதோறும் கொடுத்தால் தான் விருது. முதல்-அமைச்சர் விஜய்யின் அனுமதி பெற்று. இனி வெள்ளித்திரை, சின்னத்திரை, தமிழ் திரை விருதுகள் இனி ஆண்டு தோறும் தரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.</p> ]]></content:encoded></item><item><title>உற்சவர் சிலை சேதமடைந்ததால் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆடி கருட சேவை ரத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kanchipuram-varadaraja-perumal-aadi-garuda-service-cancelled-due-to-damage-to-the-festival-idol</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kanchipuram-varadaraja-perumal-aadi-garuda-service-cancelled-due-to-damage-to-the-festival-idol#comments</comments><guid isPermaLink="false">c91074c4-1e69-49fb-9f26-37918450a440</guid><pubDate>Thu, 30 Jul 2026 01:00:15 +0000</pubDate><atom:updated>2026-07-30T01:00:15.165Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காஞ்சிபுரம்,கருட சேவை,வரதராஜ பெருமாள் கோவில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/8bq1ilib/CHENNAI-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/8bq1ilib/CHENNAI-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>காஞ்சிபுரம்,</p><h2>ஆடி கருட சேவை</h2><p>காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற இருந்த ஆடி கருட சேவை உற்சவம் நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்தது. </p><p>இதுகுறித்து விசாரித்தபோது, கடந்த 3-ந்தேதி உற்சவர் வரதராஜ பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றபோது, கவசங்களை அகற்றி சுத்தம் செய்யும் பணியின்போது பழமையான உற்சவர் சிலையில் சேதம் ஏற்பட்டிருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது.</p><h2>இந்து சமய அறநிலையத்துறை</h2><p>இதையடுத்து, சிலையை சீரமைக்க இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தமிழக அரசின் பல்வேறு நிலைகளில் அனுமதி பெறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அனுமதிகள் கிடைப்பதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக ஆடி கருட சேவை உற்சவத்தை நடத்த முடியவில்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p>மேலும், இன்னும் சில நாட்களில் தேவையான அனுமதிகள் கிடைக்கும் என்றும், அதன்பின் உற்சவர் சிலை சீரமைப்புப் பணிகள் தொடங்கப்படும் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காமராஜர் காலை உணவுத் திட்டம் தொடர்பாக பரவும் தவறான தகவல் - சரிபார்ப்பகம் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/misinformation-circulating-regarding-the-kamarajar-breakfast-scheme-fact-check-units-clarification</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/misinformation-circulating-regarding-the-kamarajar-breakfast-scheme-fact-check-units-clarification#comments</comments><guid isPermaLink="false">f37619f1-67f2-4053-a44d-4ad5b7f9cc2d</guid><pubDate>Thu, 30 Jul 2026 00:59:15 +0000</pubDate><atom:updated>2026-07-30T00:59:15.974Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Fact Check Unit,Fact check,தவறான தகவல்,misinformation,தகவல் சரிபார்ப்பகம்,TN Fact Check,தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம்,Fact-check,காமராஜர் காலை உணவுத் திட்டம்,Kamarajar Breakfast Scheme</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/6pikl2gi/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/6pikl2gi/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>காமராஜர் காலை உணவுத் திட்டம் தொடர்பாக பரவும் தவறான தகவல்</p><h2>பரவும் செய்தி</h2><p>காமராஜர் காலை உணவுத் திட்டம் தொடர்பான பணிகள், தற்பொழுது புதிதாக தனியாருக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டு வருகிறது.</p><h2>உண்மை என்ன ?</h2><p>இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில், "கடந்த 2022-ஆம் ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் நகர்ப்புறப் பகுதிகளில் தொடங்கப்பட்டதிலிருந்து, ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்ட சேவை வழங்குநர்கள் (Service Providers) மூலம்  உணவு தயாரிக்கப்பட்டு பள்ளிகளுக்கு கொண்டு சேர்க்கப்படுகிறது. தற்பொழுதும் அதே நடைமுறையே <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பின்பற்றப்படுகிறது</a>" என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தவறான தகவலைப் பரப்பாதீர் !</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மின் கட்டண உயர்வு புகார்: 3.70 லட்சம் வீடுகளில் நேரில் ஆய்வு - மின்சார வாரியம் நடவடிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/electricity-tariff-hike-complaint-in-person-inspection-of-370-lakh-homes-electricity-board-takes-action</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/electricity-tariff-hike-complaint-in-person-inspection-of-370-lakh-homes-electricity-board-takes-action#comments</comments><guid isPermaLink="false">ec6c9c0c-713c-4def-9426-d1748c49c8ec</guid><pubDate>Thu, 30 Jul 2026 00:59:12 +0000</pubDate><atom:updated>2026-07-30T00:59:12.060Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Electricity Board,inspection,மின்சார வாரியம்,Complaint,புகார்,Electricity tariff hike,மின் கட்டண உயர்வு,நேரில் ஆய்வு</media:keywords><media:content height="270" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/cbgm7eoy/eb.jpg" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/cbgm7eoy/eb.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மின் கட்டண உயர்வு புகார் வந்ததை தொடர்ந்து 3.70 லட்சம் வீடுகளில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய மின்சார வாரியம் உத்தரவிட்டு உள்ளது.</p><h2>மின் கட்டண உயர்வு</h2><p>தமிழகத்தில் ஜூலை மாத மின் கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து அதிக அளவில் புகார்கள் வந்தது. இதையடுத்து. மின் நுகர்வு கணக்கீட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆய்வு செய்ய தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">மின்சார வாரியம்</a> முடிவு செய்துள்ளது. இதற்காக மூத்த அதிகாரிகள் மூலம் மறு ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. கடந்த மே மாதம் வழங்கப்பட்ட மின் கட்டணத்துடன் ஒப்பிடும்போது, ஜூலை மாதம் மின் நுகர்வில் அதிக மாற்றம் காணப்பட்ட 3.70 லட்சம் மின் இணைப்புகளில் இந்த ஆய்வு  மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஆய்வை ஆகஸ்ட் 7-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.</p><h2>இணைப்புகள் ஆய்வு</h2><p>இந்த ஆய்வில் தலைமைப் பொறியாளர் 25 இணைப்புகளையும், மேற்பார்வைப் பொறியாளர் 50 இணைப்புகளையும், கோட்டப் பொறியாளர் 75 இணைப்புகளையும் ஆய்வு செய்ய வேண்டும். அதேபோல், துணை நிதி கட்டுப்பாட்டாளர் 50, உதவி கோட்டப் பொறியாளர் 100, வருவாய் புலனாய்வு பிரிவு கணக்கு அலுவலர் 150, மூத்த மதிப்பீட்டு அலுவலர் 150, வருவாய் பிரிவு உதவி கணக்கு அலுவலர் 100. மதிப்பீட்டு அலுவலர் 150 மற்றும் உதவிப் பொறியாளர் 100 மின் இணைப்புகளை ஆய்வு செய்ய வேண்டும். இந்த ஆய்வின்போது ஏதேனும் தவறுகள் கண்டறியப்பட்டால், அவற்றை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் வி.அருண் ராய் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் எனக்கூறி ஆசிரியரிடம் ரூ.57.45 லட்சம் மோசடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/online-trading-high-profit-claim-private-school-teacher-cheated-rs-57-45-lakh</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/online-trading-high-profit-claim-private-school-teacher-cheated-rs-57-45-lakh#comments</comments><guid isPermaLink="false">508b52bb-092e-422f-a059-ffb305019794</guid><pubDate>Thu, 30 Jul 2026 00:17:36 +0000</pubDate><atom:updated>2026-07-30T00:17:36.314Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thanjavur,மோசடி,தஞ்சாவூர்,Duping</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/1umd1e30/Untitled-12.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மோசடி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/1umd1e30/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர்,</p><p>தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 41 வயது நிரம்பியவர் தற்போது தஞ்சையில் தங்கி ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ந்தேதி அவரது பேஸ்புக் மற்றும் வாட்ஸ்-அப்பிற்கு ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.</p><p>மேலும் மர்ம நபர் ஒருவர் அவரை தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது ஆன்லைன் வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் திட்டம் குறித்து கூறி அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.</p><p>தொடர்ந்து அந்த மர்ம நபர் தெரிவித்த வங்கி கணக்குகளில் 11 தவணையாக ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் ஆசிரியர் மொத்தம் ரூ.57 லட்சத்து 45 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். ஆனால் அந்த மர்மநபர் கூறியது போன்று எவ்வித லாப பணமும் வரவில்லை. இதையடுத்து மர்மநபரை அவர் தொடர்பு கொள்ள முயன்றார். அப்போது செல்போன் எண் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை ஆசிரியர் உணர்ந்துள்ளார்.</p><p>இது குறித்து தஞ்சை சைபர் கிரைம் போலீசில் ஆசிரியர் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ஆசிரியர் பணம் அனுப்பிய வங்கி கணக்குகள் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம், கர்நாடகா, மராட்டிய மாநிலங்களில் உள்ளது தெரிய வந்தது. தொடர்ந்து பண மோசடி செய்த மர்மநபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கருணை திட்டத்துக்கு பொருத்தமான பெயர்</title><link>https://www.dailythanthi.com/others/thalayangam/a-suitable-name-for-the-compassionate-scheme</link><comments>https://www.dailythanthi.com/others/thalayangam/a-suitable-name-for-the-compassionate-scheme#comments</comments><guid isPermaLink="false">de4dc629-32ff-4655-ac0e-ab12c4f08ff4</guid><pubDate>Wed, 29 Jul 2026 23:59:30 +0000</pubDate><atom:updated>2026-07-29T23:59:30.639Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தலையங்கம்,Thalayangam,காலை உணவு திட்டம்,மதிய உணவு திட்டம்,காலை உணவு திட்டம் விரிவாக்கம்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/wl276i53/Untitled-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/wl276i53/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலையங்கம் (Thalayangam)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பள்ளி மாணவர்களுக்கு உணவு அளிக்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் எல்லா முதல்-அமைச்சர்களின் பங்களிப்பும் இருக்கிறது. இந்த திட்டத்துக்கு பிதாமகன் பெருந்தலைவர் காமராஜர்தான் என்றாலும், அதற்கு தொடக்கவுரை எழுதியது நீதிக்கட்சிதான். 1920-ல் நீதிக்கட்சி ஆட்சியில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்பட்டது. காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது சேரன்மகாதேவிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அவர் சென்ற வழியில் ரெயில்வே கேட் அடைக்கப்பட்டு இருந்ததால் கார் நிறுத்தப்பட்டது. காரில் இருந்து இறங்கி நின்ற காமராஜர், அங்கு ஒரு சிறுவன் மாடு மேய்த்துக் கொண்டிருந்ததை பார்த்து அவனை அழைத்து, “நீ ஏன் பள்ளிக்கூடத்துக்குச் செல்லவில்லை?" என்று கேட்டார். அந்த நேரத்தில், அவர் முதல்-அமைச்சர் என்று தெரியாமல், "பள்ளிக்கூடத்துக்குப் போனால் யார் சோறு போடுவார்கள்?" என்று அந்த சிறுவன் அளித்த பதில் காமராஜரின் நெஞ்சை தொட்டது. "சோறு போட்டால் பள்ளிக்கூடம் போவாயா?" என்று அவர் கேட்டதற்கு, "ஓ! போவேனே" என்று சிறுவன் அளித்த பதில், மதிய உணவு திட்டத்துக்கான விதையை அவருடைய மனதில் விதைத்தது.</p><p>அந்த சிறுவனின் பதிலால் உந்தப்பட்டு, அவர் 1956-57-ம் ஆண்டு பட்ஜெட்டில் மதிய உணவு திட்டத்தை அறிவித்து நடைமுறைக்கு கொண்டு வந்தார். பள்ளிகளில் மாணவர் வருகை கூடியது. இதேபோல், சிறுவயதில் பசிக்கொடுமையை உணர்ந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர்., அனைத்து பள்ளிகளிலும் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். அப்போது 'தினத்தந்தி' அதிபர் மறைந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார், இந்த திட்டத்துக்காக முதல் சத்துணவு கூடத்தை தனது தந்தையார் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவாக திருச்சி மாவட்டம் பாப்பாக்குறிச்சியில் கட்டிக்கொடுத்தார். முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். அங்கு நேரில் சென்று அந்த சத்துணவு கூடத்தை திறந்து வைத்து இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.</p><p>தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் வயிறார சத்துணவை சாப்பிட்டு மகிழ்ந்தனர். பின்பு, சத்துணவு சத்தான உணவாக இருக்கும் வகையில், சத்துணவோடு முட்டை வழங்கும் திட்டத்தை மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி அறிமுகப்படுத்தினார். ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது தினமும் முட்டை வழங்குவதையும், கலவை சாதம் வழங்குவதையும் நடைமுறைப்படுத்தினார். முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்த நேரத்தில் சென்னை அசோக்நகர் பள்ளிக்கு ஆய்வுக்கு சென்றார். அப்போது காலை உணவு சாப்பிடாத மாணவிகள் சோர்வாக இருந்ததை பார்த்து, 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கினார். இது மாணவர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.</p><p>முதல்-அமைச்சர் விஜய் ஆட்சிக்கு வந்தவுடன், இந்த காலை உணவு திட்டத்தை 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விரிவுபடுத்துவதாகவும், இந்த திட்டம் பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ந்தேதி முதல் தொடங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இதனால் இனி காலை உணவு சாப்பிடும் மாணவர்களின் எண்ணிக்கை 35 லட்சமாக உயரும். மாணவர்கள் வீட்டில் அவசர, அவசரமாக சாப்பிடும் நிலை மாறி பள்ளிகளுக்கு வந்து பசியாறிவிட்டு, ஏட்டு கல்வியை தொடருவார்கள். இதுமட்டுமல்லாமல், காலை உணவு திட்டத்துக்கு, பள்ளிகளில் உணவளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்திய பெருந்தலைவர் காமராஜரின் பெயரையே சூட்டியுள்ளார். ஒரு உன்னத திட்டத்துக்கு அவரது கொள்கை தலைவரும், கருணைமிகு தலைவருமான காமராஜரின் பெயர் வைத்தது மிகப்பொருத்தமானது மட்டுமின்றி வரவேற்புக்குரியதும் ஆகும். காமராஜருடைய புகழுக்கு மேலும் பெருமை சேர்ப்பதாகும்.</p>]]></content:encoded></item><item><title>கிணத்துக்கடவு பகுதியில் 6 கல்குவாரிகளின் உரிமம் ரத்து - கலெக்டர் உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/temporary-cancellation-of-licenses-for-six-lime-quarries-in-kinathukadavu-collectors-order</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/temporary-cancellation-of-licenses-for-six-lime-quarries-in-kinathukadavu-collectors-order#comments</comments><guid isPermaLink="false">a468743d-c6fb-4453-82e8-86854e798de4</guid><pubDate>Wed, 29 Jul 2026 23:28:23 +0000</pubDate><atom:updated>2026-07-29T23:28:23.962Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>cancellation,License,உரிமம் ரத்து,quarries,கிணத்துக்கடவு,கல்குவாரிகள்,Collectors order கலெக்டர் உத்தரவு,Kinathukadavu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/vqzsqzmr/stone.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கல்குவாரி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/vqzsqzmr/stone.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பொள்ளாச்சி,</p><p>கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள நெம்பர்.10 முத்தூர் பகுதியில் சில கல்குவாரிகள் அரசு விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்தன. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகக் கூறி, அந்த குவாரிகளை கண்டுபிடித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயி முருகானந்தம் என்பவர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். விவசாயியின் இந்த போராட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><h2>கலெக்டர் பவன்குமார்</h2><p>இதுபற்றி தகவல் அறிந்த கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில், பொள்ளாச்சி சப்-கலெக்டர் ராமகிருஷ்ணசாமி தலைமையில், கனிம வளத்துறை உதவி இயக்குனர் மெகபூகான் உள்ளிட்ட 8 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் அதிரடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் உண்ணாவிரதம் இருந்த விவசாயி முருகானந்தத்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.</p><h2>அறிக்கை</h2><p>அதிகாரிகள் குழுவினர் நெம்பர்.10 முத்தூர் பகுதியில் இயங்கி வரும் கல்குவாரிகளுக்கு நேரில் சென்று அங்குள்ள நிலவரங்கள் குறித்து அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், சம்பந்தப்பட்ட <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">கல்குவாரிகளில்</a> ஒரு சில விதிமீறல்களும், குறைகளும் இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. இதுகுறித்த விரிவான விசாரணை அறிக்கையை அதிகாரிகள் குழுவினர் மாவட்ட கலெக்டர் பவன்குமாரிடம் சமர்ப்பித்தனர். அதிகாரிகளின் அறிக்கையைத் தொடர்ந்து தவறு செய்த குவாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் சாட்டை சுழற்றியுள்ளது. </p> <h2>தற்காலிகமாக ரத்து</h2><p>நெம்பர்.10 முத்தூர் பகுதியில் விதிகளை மீறி செயல்பட்டு வந்த 6 கல்குவாரிகளின் உரிமங்களையும் தற்காலிகமாக ரத்து செய்து கலெக்டர் பவன்குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கலெக்டரின் இந்த அதிரடி நடவடிக்கையை அடுத்து விவசாயி முருகானந்தம் தனது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>குற்றாலத்தில் சாரல் திருவிழா நாளை தொடக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/saaral-thiruvizhaa-begins-tomorrow-in-courtallam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/saaral-thiruvizhaa-begins-tomorrow-in-courtallam#comments</comments><guid isPermaLink="false">0fe2d368-4585-4e0b-9ada-96648e4ca5da</guid><pubDate>Wed, 29 Jul 2026 23:26:20 +0000</pubDate><atom:updated>2026-07-29T23:26:20.710Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>குற்றாலம்,சாரல் திருவிழா,Kuttralam,Saaral Thiruvizhaa</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/g035tmgn/Untitled-10.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/g035tmgn/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><h2>சாரல் திருவிழா</h2><p>குற்றாலத்தில் ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் சாரல் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சாரல் திருவிழா, குற்றாலம் கலைவாணர் அரங்கில் நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 1 மணிக்கு தொடங்குகிறது. மாவட்ட கலெக்டர் ரஞ்சித் சிங் தலைமை தாங்குகிறார்.</p><p>சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சருமான டாக்டர் ராஜீவ் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். தொடர்ந்து கடையம், கீழப்பாவூர் வட்டார பள்ளி மாணவ, மாணவிகளின் பல்சுவை நிகழ்ச்சிகள் நடக்கிறது. தொடர்ந்து கிராமிய கலைநிகழ்ச்சிகள், பரதநாட்டியம், கரகம், காவடி, மயிலாட்டம் போன்றவை நடைபெறுகிறது.</p><h2>கலைநிகழ்ச்சிகள்</h2><p>1-ந்தேதி காலை 10 மணிக்கு கொழு கொழு குழந்தைகள் போட்டி, காலை 11 மணிக்கு யோகாசனம் மற்றும் ஆணழகன் போட்டி, நண்பகல் 12 மணிக்கு குருவிகுளம் மற்றும் வாசுதேவநல்லூர் வட்டார பள்ளி மாணவ, மாணவிகளின் பல்சுவை நிகழ்ச்சிகள், பிற்பகல் 2 மணிக்கு செல்ல நாய்கள் கண்காட்சி, மாலை 4.30 மணிக்கு பல்கிஷ் கிராமியக் கலைக்குழு கிராமிய பல்சுவை நிகழ்ச்சி, மாலை 4 மணிக்கு செங்கல்பட்டு விநாயகா நாட்டியாலயா கலைக்குழுவினர் பரதநாட்டியம், மாலை 5 மணிக்கு ஹரிணி வழங்கும் மேஜிக் ஷோ, மாலை 5.30 மணிக்கு முத்துச்சந்திரன் கலைக்குழு தோல்பாவை கூத்து நடக்கிறது.</p><p>மாலை 6 மணிக்கு மொறப்பூர் பாரதி கிராமிய கலைவளர்ச்சி மையம் கிராமிய பல்சுவை நிகழ்ச்சி, மதுரை பாலா கலைக்குழுவினர் கரகாட்டம், திருநங்கைகள் பங்குபெறும் பல்சுவை நிகழ்ச்சி, இரவு 7 மணிக்கு தென்காசி, ஐயம்மாள் கலைக்குழு வில்லிசை, சென்னை, ஏஞ்சல் கலைக்குழு கிராமிய பல்சுவை நிகழ்ச்சி, அபிநயகீதம் குழுவினர் திரைப்பட மெல்லிசை நடை பெறும். இதேபோன்று வருகிற 5-ந்தேதி வரையிலும் தினமும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.</p>]]></content:encoded></item><item><title>இன்ஸ்டாகிராமில் பழக்கம்: ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்திய வாலிபர் - போக்சோவில் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/instagram-habit-youth-kidnaps-girl-with-sweet-talk-arrested-under-pocso</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/instagram-habit-youth-kidnaps-girl-with-sweet-talk-arrested-under-pocso#comments</comments><guid isPermaLink="false">4dbc7872-1ade-4642-900b-9ac79f833486</guid><pubDate>Wed, 29 Jul 2026 22:53:55 +0000</pubDate><atom:updated>2026-07-29T22:53:55.681Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Virudhunagar,விருதுநகர்,arrest,இன்ஸ்டாகிராம்,Instagram,போக்சோ,POCSO</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/20hv268i/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/20hv268i/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர்,</p><p>விருதுநகர் மாவட்டம் செங்குன்றாபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் மைசுலான். இவருடைய மகன் கருப்பசாமி (22 வயது). இவருக்கு தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த சிறுமி 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு தற்போது வீட் டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமாகினார்.</p><p>இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார், வாசுதேவநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சிறுமி மாயம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் விசாரணையில், இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமியுடன் நெருங்கி பழகிய கருப்பசாமி, ஆசை வார்த்தை கூறி சிறுமியை விருதுநகருக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.</p><p>உடனே போலீசார் அங்கு சென்று தேடிய நிலையில், கருப்பசாமியுடன் சிறுமி இருப்பதை கண்டுபிடித்தனர். சிறுமியை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து புளியங்குடி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர். பின்னர் அவரை சிவகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>7 மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-till-4-am-in-7-districts</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-till-4-am-in-7-districts#comments</comments><guid isPermaLink="false">b47de394-6580-48fd-86e1-f08193ec4b72</guid><pubDate>Wed, 29 Jul 2026 20:37:49 +0000</pubDate><atom:updated>2026-07-29T20:37:49.654Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/wmjnbqbt/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/wmjnbqbt/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக இன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருவண்ணாமலையில் 2-வது நாளாக பக்தர்கள் கிரிவலம் - கூட்டம் அலைமோதியது</title><link>https://www.dailythanthi.com/devotional/devotees-crowd-tiruvannamalai-girivalam-second-day</link><comments>https://www.dailythanthi.com/devotional/devotees-crowd-tiruvannamalai-girivalam-second-day#comments</comments><guid isPermaLink="false">d1bb6be6-6754-400f-afce-c0177732379d</guid><pubDate>Wed, 29 Jul 2026 19:00:23 +0000</pubDate><atom:updated>2026-07-29T19:00:23.789Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிகச் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514969</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,Thiruvannamalai,அருணாசலேஸ்வரர் கோவில்,Girivalam,Arunachaleshwarar Temple,பக்தர்கள் கிரிவலம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/aptwms7v/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/aptwms7v/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (Devotional)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை,</p><h2>ஆடி பவுர்ணமி</h2><p>திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இந்நிலையில் ஆடி மாதத்துக்கான பவுர்ணமி நேற்று முன்தினம் இரவு 7.32 மணி அளவில் தொடங்கி நேற்று இரவு 8.54 மணிக்கு நிறைவடைந்தது.</p><p>இதையொட்டி நேற்று முன்தினம் மாலை முதல் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் செல்ல தொடங்கினர். இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இதனால் நேற்று முன்தினம் இரவில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.</p><h2>2-வது நாள் கிரிவலம்</h2><p>2-வது நாளாக நேற்று காலை விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் காணப்பட்டனர். கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் காலை 11 மணி வரையில் பரவலாகவே காணப்பட்டது. பின்னர் பக்தர்கள் கூட்டம் குறைய தொடங்கியது. இருப்பினும் தொடர்ந்து பக்தர்கள் கிரிவலம் சென்றபடியே காணப்பட்டனர்.</p><p>மீண்டும் மாலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. நேற்று இரவு 8.54 மணி வரையில் பவுர்ணமி இருந்ததால் நள்ளிரவு வரையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் காணப்பட்டது. கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு கிரிவலப்பாதையில் பல்வேறு இடங்களில் தண்ணீர், மோர், அன்னதானம் போன்றவை தொடர்ந்து வழங்கப்பட்டது.</p><h2>கோவிலில் கூட்டம்</h2><p>இதற்கிடையில் பவுர்ணமி கிரிவலம் சென்று முடித்த பக்தர்கள் நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவிலில் பக்தர்கள் பொது தரிசனமாக ராஜகோபுரம் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 4 மணி நேரத்திற்கும் மேலானதாக தெரிவித்தனர்.</p><p>வரிசையில் சென்ற பக்தர்களுக்கு கோவில் இணை ஆணையர் பரணிதரன் தலைமையிலான பணியாளர்களால் குடிநீர், மோர், வாழைப்பழம், தர்பூசணி, பிஸ்கெட் போன்றவை வழங்கப்பட்டது. மேலும் கிரிவலப்பாதை மற்றும் கோவிலில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.</p><h2>ரெயில் நிலையம்</h2><p>கிரிவலம் சென்று முடித்த பக்தர்கள் தங்கள் பகுதிகளுக்கு செல்ல ரெயில் நிலையம் மற்றும் தற்காலிக பேருந்து நிலையங்களில் குவிந்தனர். இதனால் அங்கும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ரெயில் நிலையத்தில் வேலூர் மார்க்கமாகவும், விழுப்புரம் மார்க்கமாகவும் சென்ற ரெயில்களில் பக்தர்கள் அமர்ந்து செல்லும் வகையில் இடம் பிடிப்பதற்காக ஒருவரை ஒருவர் முண்டியடித்தபடி ஏறி இடம் பிடித்தனர்.</p><p>அதேபோல் தற்காலிக பேருந்து நிலையங்களிலும் பக்தர்கள் பேருந்துகளில் அமர்ந்து செல்லும் வகையில் ஓடி, ஓடி சென்று ஏறி இடம் பிடித்தனர். இதனால் தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் ரெயில் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி - நயினார் நாகேந்திரன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/lizard-found-in-breakfast-served-to-sanitation-workers-nainar-nagendran-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/lizard-found-in-breakfast-served-to-sanitation-workers-nainar-nagendran-condemns#comments</comments><guid isPermaLink="false">5dd0f5b6-df9d-4b46-a2f3-3921cf352e08</guid><pubDate>Wed, 29 Jul 2026 18:08:42 +0000</pubDate><atom:updated>2026-07-29T18:08:42.760Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Sanitation workers,தூய்மைப் பணியாளர்கள்,Nainar Nagenthran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/q4mg8mub/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/q4mg8mub/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சென்னை ஆவடியில், மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி கிடந்ததாகவும், அதை சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் அலட்சியத்திற்கு மற்றுமொரு சான்று.</p><p>நமது சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்தி, சமூகத்தின் ஆரோக்கியத்தைப் பேணுவதில் முக்கியப் பங்கு வகிக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு, சுத்தமான, சத்தான உணவை அரசால் வழங்க முடியவில்லை என்பது வெட்கக்கேடு. தேர்தல் நேரங்களில் மட்டும் தூய்மைப் பணியாளர்களோடு ஒன்றாக அமர்ந்து, சிரித்து, பேசி, உணவு உண்டு விதவிதமாக வீடியோக்கள் எடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டும் அரசியல் கட்சிகள், ஆட்சிப் பொறுப்பு கையில் வந்தவுடன் அம்மக்களுக்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டுமென நினைப்பதே  இல்லை.</p><p>அதிலும், விஜய் முதல்வராகப் பொறுப்பேற்றதில் இருந்து, தூய்மைப் பணியாளர்களை காலணிகளை சுத்தம் செய்ய வைப்பது, எச்சில் இலைகளை அப்புறப்படுத்த வைப்பது என தவெகவினர் செய்யும் அராஜகங்களுக்கு அளவில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. எனவே, கழிவுகளை அகற்றும் தூய்மைப் பணியாளர்களை கணிவன்புடன் நடத்துமாறு தனது கட்சியினருக்கு அறிவுறுத்துவதோடு, அவர்களுக்கு தரமான, சுத்தமான உணவு வழங்குவதற்கும் முதல்வர் ஜோசப் விஜய் வழிவகை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய்யை காண உ.பி.யில் இருந்து சென்னை வந்த தீவிர ரசிகர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/uttar-pradesh-youths-2700km-walk-to-see-cm-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/uttar-pradesh-youths-2700km-walk-to-see-cm-vijay#comments</comments><guid isPermaLink="false">89923c1f-903d-4f76-9406-d5f67013a506</guid><pubDate>Wed, 29 Jul 2026 17:55:51 +0000</pubDate><atom:updated>2026-07-29T17:55:51.990Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,உ.பி.,விஜய்Vijay,ரசிகர்,Fan,முதல்-அமைச்சர்Chief Minister</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/nku7wqiz/north-indian-vijay-fans.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  அமன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/nku7wqiz/north-indian-vijay-fans.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின்</a> மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு வாலிபர் சென்னைக்கு நடைபயணமாக வந்துள்ளார். </p> <h2>விஜய் மீது ஈர்ப்பு</h2><p>உத்தரப்பிரதேசம், அலிகார் பகுதியை சேர்ந்தவர் அமன் (வயது 24). இவர் தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின்  தீவிர ரசிகர் ஆவார். திரையிலும், நிஜத்திலும் மக்கள் நலனுக்காக முதல்-அமைச்சர் விஜய் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்ட அமன், அவரை நேரில் சந்தித்து வாழ்த்து கூற ஆசைப்பட்டார்.</p><h2>2,700 கி.மீ. நடைபயணம்</h2><p>இதற்காக, கடந்த ஜூலை மாதம் 3-ந்தேதி தனது சொந்த ஊரான அலிகாரில் இருந்து சென்னை நோக்கி தனது நீண்ட நெடிய நடைபயணத்தை தொடங்கினார். கையில் இந்தியாவின் தேசிய கொடியை ஏந்தியபடி, தேசப்பற்றை வலியுறுத்தி சுமார் 6 மாநிலங்களை கடந்து, 2,700 கிலோ மீட்டர் தூரம் அவர் கால்நடையாகவே நடந்து வந்துள்ளார். சுமார் 25 நாட்கள் கடுமையான பயணத்திற்கு பிறகு, அமன் நேற்று சென்னை வந்தடைந்தார்.</p><h2>அனுமதி மறுப்பு</h2><p>சென்னை வந்த அவர், முதல்-அமைச்சர் விஜய்யை சந்திப்பதற்காக நேராக  தமிழக அரசின் தலைமை செயலகத்திற்கு சென்றார். ஆனால், முதல்-அமைச்சரை சந்திக்க அவர் முன்கூட்டியே முறைப்படி அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவரை தலைமை செயலகத்திற்குள் செல்ல அனுமதிக்கவில்லை. </p><h2>வைரல் வீடியோ</h2><p>இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமன், "முதல்-அமைச்சர் விஜய் தேசிய அரசியலிலும் பங்காற்ற வேண்டும் என்பது எனது விருப்பம். அவரை சந்திக்காமல் நான் சென்னையை விட்டு திரும்ப மாட்டேன்" என்று நம்பிக்கையுடன் கூறினார். தலைமைச் செயலகத்தின் வெளியே தேசிய கொடியுடன் அந்த வாலிபர் காத்திருக்கும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல பரவி பெரும் வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>12 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chance-of-rain-until-1-am-in-12-districts</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chance-of-rain-until-1-am-in-12-districts#comments</comments><guid isPermaLink="false">72706362-d666-429a-b1c0-1c2a9ccc5a7b</guid><pubDate>Wed, 29 Jul 2026 17:22:26 +0000</pubDate><atom:updated>2026-07-29T17:22:26.911Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/7cimqokb/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/7cimqokb/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, தேனி, திருவள்ளூர், வேலூர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தூய்மைப் பணியாளர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் - டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ensure-quality-food-for-sanitation-workers-says-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ensure-quality-food-for-sanitation-workers-says-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">208749ea-d79c-4688-be7a-bd859f2582d6</guid><pubDate>Wed, 29 Jul 2026 17:02:03 +0000</pubDate><atom:updated>2026-07-29T17:02:03.715Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,உணவு,food,Sanitation workers,தூய்மைப் பணியாளர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/0gszhsya/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/0gszhsya/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>நாகர்கோவில் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவு தரமற்ற நிலையில் இருந்ததாகவும், ஆவடி மாநகராட்சியில் வழங்கப்பட்ட உணவில் இறந்த நிலையில் பல்லி இருந்ததாகவும் அடுத்தடுத்து ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.</p><p>ஏற்கனவே, தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்தபின்பு பல்வேறு மாநகராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கான காலை உணவுத் திட்டம் முடங்கியிருப்பதாகப் புகார் எழுந்திருக்கும் நிலையில், ஒரு சில மாநகராட்சிகளில் வழங்கப்படும் உணவும் தரமற்றதாக இருப்பது தூய்மைப் பணியாளர்களின் உடல்நலத்தையும், ஆரோக்கியத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.</p><p>சாலைகள், தெருக்கள், கழிவுநீர் கால்வாய்கள் என நகரத்தின் அனைத்து அசுத்தமான இடங்களையும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் முன்களப் பணியாளர்களான தூய்மைப் பணியாளர்களுக்கு ஒருவேளை உணவைக் கூட தரமானதாகவும், சுகாதாரமானதாகவும் வழங்க முடியாத தவெக அரசின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது.</p><p>மக்கள் நலனை மையமாகக் கொண்டு அளப்பரிய பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத அரசு, மறுபுறம் தூய்மைப் பணியாளர்களுக்காக நல முகாம் நடத்துகிறோம் எனும் பெயரில் அவர்களை அமைச்சர்களும், அவரது உறவினர்களும் ரீல்ஸ் எடுக்கும் விளம்பரப் பொருளாகப் பயன்படுத்திக் கொண்டிருப்பது வெட்கக்கேடானது.</p><p>எனவே, தூய்மைப் பணியாளர்களுக்குத் தரமற்ற உணவை வழங்கிய ஒப்பந்ததாரர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனி வரும் நாட்களில் தரமான, சுத்தமான, ஆரோக்கியமான உணவு தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தவெக அரசையும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் சிரட்டை பதப்படுத்தும் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கரும்புகை - பொதுமக்கள் அவதி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thick-black-smoke-emanating-from-a-coconut-shell-processing-unit-in-thoothukudi-causes-distress-to-the-public</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thick-black-smoke-emanating-from-a-coconut-shell-processing-unit-in-thoothukudi-causes-distress-to-the-public#comments</comments><guid isPermaLink="false">feecb164-17eb-4ce1-9a07-c1fa37dd84f3</guid><pubDate>Wed, 29 Jul 2026 16:43:11 +0000</pubDate><atom:updated>2026-07-29T16:43:11.585Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தூத்துக்குடி,Tuticorin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/wdpzqxk0/State-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/wdpzqxk0/State-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே, குடியிருப்பு பகுதிக்கு அருகில் செயல்படும் தேங்காய் சிரட்டை பதப்படுத்தும் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கரும்புகையால் சுகாதார பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.</p><p>சிரட்டைகளுடன் பிளாஸ்டிக் மற்றும் நெகிழி கழிவுகளும் எரிக்கப்படுவதால், அடர்ந்த கரும்புகை பரவி மூச்சுத்திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. </p><p>மேலும், நட்டாத்தி–மீனாட்சிபட்டி சாலையில் புகை சூழ்வதால் வாகன ஓட்டிகளும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகமும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் உடனடியாக ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>நெல்லையில் சாதியை குறிப்பிட்டு மாணவரை தாக்கியதாக பள்ளி தலைமை ஆசிரியர் மீது பெற்றோர் புகார் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/parents-in-nellai-lodge-a-complaint-against-a-school-headmaster-for-assaulting-a-student-while-making-caste-based-remarks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/parents-in-nellai-lodge-a-complaint-against-a-school-headmaster-for-assaulting-a-student-while-making-caste-based-remarks#comments</comments><guid isPermaLink="false">2a439d41-ac5c-4d7e-8fc4-222566d5fd88</guid><pubDate>Wed, 29 Jul 2026 16:31:18 +0000</pubDate><atom:updated>2026-07-29T16:31:18.898Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Tirunelveli</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/i5gwb4uj/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/i5gwb4uj/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>நெல்லை டவுண் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும்  பள்ளியில், 10-ம் வகுப்பு மாணவரை தலைமை ஆசிரியர் ரத்தக்காயம் ஏற்படும் அளவிற்கு தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட மாணவருக்கு கை மற்றும் கழுத்துப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். </p><p>முன்னதாக பள்ளியில் சிறுநீர் கழிக்கச் சென்றபோது ஏற்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்து, பள்ளியின் தலைமை ஆசிரியர் அந்த மாணவரை சரமாரியாக தாக்கியதுடன், அவரது சாதியை குறிப்பிட்டு திட்டியதாக மாணவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>மேல்நிலை பொதுத்தேர்வு: சென்னை விமான நிலையத்தில் கைவரிசை: சுங்க அதிகாரி எனக்கூறி 12 பவுன் நகையுடன் மர்மநபர் தப்பி ஓட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-airport-heist-man-pretends-to-be-a-customs-officer-and-flees-with-12-pounds-of-jewelry</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-airport-heist-man-pretends-to-be-a-customs-officer-and-flees-with-12-pounds-of-jewelry#comments</comments><guid isPermaLink="false">f61c0884-c181-4393-8ec0-e25de8a0fa5c</guid><pubDate>Wed, 29 Jul 2026 16:28:13 +0000</pubDate><atom:updated>2026-07-29T16:28:13.812Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,சென்னை விமான நிலையத்தில்,Jewelry flush - நகை பறிப்பு,At Chennai airport</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/gz31jfuv/258.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை விமான நிலையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/gz31jfuv/258.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஆலந்தூர், </p><p>சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் நந்த கோபால். விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று இரவு கோவையில் இருந்து, சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கொண்டு வந்த கவரை வாங்கிக்கொண்டு இருவரும் 1-வது முனையம் வளாகத்தில் நடந்து வந்துகொண்டிருந்தனர். </p><p>அப்போது டிப்டாப் வாலிபர் ஒருவர், அவர்களை நிறுத்தி, நான் சுங்கத்துறை அதிகாரி. இந்த கவரில் கடத்தல் தங்க நகை இருக்கிறது. எனவே அது குறித்து விசாரிக்க வேண்டும் என்று கூறினார். மேலும் நந்தகோபால் கையில் வைத்திருந்த கவரை வலுக்கட்டாயமாக பறித்துக்கொண்டு, என்னை பின்தொடர்ந்து வாருங்கள் என்று கூறிவிட்டு அந்த நபர் வேகமாக சர்வதேச முனையம் நோக்கி சென்றார்.</p><h2>சுங்க அதிகாரி</h2><p>பின்னர் அவர் மாயமாகி விட்டார். அந்த கவரில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள 12 பவுன் நகை இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நந்தகோபால் விசாரித்தபோது மர்மநபர் சுங்க அதிகாரி போல் நடித்து நகை இருந்த கவரை பறித்து சென்றது தெரிந்தது. இதுகுறித்து சென்னை விமான நிலைய போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">விமான நிலையத்தின்</a> உள்ளேயே மர்ம நபர் சுங்க அதிகாரி போல் நடித்து நகையை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோவையில் காணாமல் போன மகன்.. பஞ்சாப்பில் கொத்தடிமை வாழ்க்கை - 23 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துடன் இணைந்தார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/son-who-went-missing-from-coimbatore-lived-as-a-bonded-labourer-in-punjab-reunited-with-family-after-23-years</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/son-who-went-missing-from-coimbatore-lived-as-a-bonded-labourer-in-punjab-reunited-with-family-after-23-years#comments</comments><guid isPermaLink="false">e270c2c2-8a98-4e4b-b5fd-3abd54f23d81</guid><pubDate>Wed, 29 Jul 2026 16:21:50 +0000</pubDate><atom:updated>2026-07-29T16:21:50.387Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,Punjab,பஞ்சாப்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/8a4pxuuj/National-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/8a4pxuuj/National-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சண்டிகர்,</p><p>கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ராமமூர்த்தி-சுந்தரி தம்பதிக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், கடந்த 2003-ம் ஆண்டு, இவர்களின் மூத்த மகன் பிரகாசம், அவரது 16-வது வயதில் தனது சகோதரனுடன் இரு சக்கர வாகனம் ஓட்டுவது தொடர்பாக ஏற்பட்ட சிறு சண்டையால் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டுச் சென்றுள்ளார். </p><p>அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் பிரகாசம் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதன் பின்னர் ராமமூர்த்தி-சுந்தரி தம்பதி மற்றும் அவர்களது இளைய மகன் பிரபு ஆகிய மூவரும் நீலாம்பூர் ஆச்சாங்குளத்துக்குக் குடிபெயர்ந்தனர். </p><p>மின்சாதன உதவியாளர், காவலாளி உள்ளிட்ட பணிகளுக்குச் சென்று குடும்பத்தை நடத்தி வந்த ராமமூர்த்தி, கடந்த 2021-ம் ஆண்டில் புற்றுநோயால் இறந்துவிட்டார். இதையடுத்து சுந்தரியும், அவரது மகன் பிரபுவும் ஒரு ஓட்டு வீட்டில் வசித்தபடி, மாடு மேய்ப்பது, குத்தகை நிலத்தில் காய்கறி பயிரிடுவது போன்ற வேலைகளை செய்து வருகின்றனர்.</p><p>இந்த சூழலில், கடந்த ஜூன் மாத இறுதியில், சுந்தரியைத் தேடி வந்த திருப்பூரைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் முத்தையா, அவரது மகன் பிரகாசம் பஞ்சாப்பில் ஒரு காப்பகத்தில் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். அவருடைய புகைப்படத்தைக் காண்பித்து, அலைபேசியிலும், வீடியோ காலிலும் பேசவைத்துள்ளார். அப்போதுதான் அவருடைய மகன் உயிருடன் இருந்ததே சுந்தரிக்குத் தெரியவந்தது.</p><p>பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லையில் உள்ள அஜ்னாலா என்ற ஊரிலுள்ள ஒரு விவசாயப் பண்ணையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பிரகாசம் கொத்தடிமையாக வைக்கப்பட்டிருந்தார். கடந்த 2022-ம் ஆண்டு பட்டியாலாவில் உள்ள அப்னா பர்ஸ் சேவா சொசைட்டி என்ற அரசு சாரா அமைப்பினர், அங்கிருந்து பிரகாசத்தை மீட்டு காப்பகத்தில் பாதுகாத்துள்ளனர்.</p><p>கடந்த 2023-ம் ஆண்டு அரியானா சட்டப்பேரவையின் முன்னாள் செயலாளர் சுபாஷ் சந்தர், காப்பகங்களுக்கு சென்று கலந்தாய்வு நடத்தும்போது பிரகாசத்தை சந்தித்துள்ளார். அப்போது பிரகாசம் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசியிருக்கிறார். அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்ட நிலையில், தனது சொந்த ஊர் தமிழ்நாட்டில் உள்ள கோவை மாவட்டம் என்பதை தெரிவித்துள்ளார். </p><p>இது குறித்து சென்னை தலைமைச் செயலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பிரகாசத்தின் குடும்பத்தினரை கண்டறிய உதவி கோரப்பட்டது. இந்த தகவல் பத்திரிக்கையாளர் முத்தையாவுக்கு தெரியவந்த நிலையில், அவர் பிரகாசத்தின் சொந்த ஊருக்கு சென்று அவரது குடும்பத்தை ஒருவழியாக கண்டுபிடித்தார். பின்னர் அவர்களிடம் பிரகாசம் பஞ்சாப்பில் இருக்கிறார் என்ற தகவலை தெரியப்படுத்தினார்.  </p><p>இதன் பின்னர் பிரகாசம் சுந்தரியின் மகன்தான் என்பதை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் சுந்தரியிடம் பழைய ரேஷன் கார்டு தவிர பிரகாசம் குறித்த எந்த ஆவணமும் இல்லாததால், இது தொடர்பாக கோவை மாவட்ட கலெக்டரிடம் உதவி கோரப்பட்டது. இதைத் தொடர்ந்து, தேவையான சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு, பிரகாசம் அவரது தாயார் சுந்தரியிடம் ஒப்படைக்கப்பட்டார்.</p><p>இதற்காக சுந்தரி பஞ்சாப் மாநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு காப்பகத்தில் இருந்த தனது மகனை 23 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த சுந்தரி, அவரை கட்டியணைத்து கண்ணீர் விட்டார். இந்த சந்திப்பு அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.</p> ]]></content:encoded></item><item><title>திருவண்ணாமலையில் கிரிவலத்தின்போது பக்தர்களின் செல்போன்களை திருட முயன்ற தம்பதி உள்பட 3 பேர் கைது  </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-people-including-a-couple-were-arrested-for-attempting-to-steal-devotees-mobile-phones-during-the-girivalam-procession-in-tiruvannamalai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-people-including-a-couple-were-arrested-for-attempting-to-steal-devotees-mobile-phones-during-the-girivalam-procession-in-tiruvannamalai#comments</comments><guid isPermaLink="false">705a8c60-3d22-4bd3-bcd2-0ce62cb44f7b</guid><pubDate>Wed, 29 Jul 2026 15:51:25 +0000</pubDate><atom:updated>2026-07-29T15:51:25.356Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,Tiruvannamalai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/wfa62o7s/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/wfa62o7s/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை,</p><p>திருவண்ணாமலையில் ஆடி மாத பௌர்ணமி கிரிவலத்தின்போது, பக்தர்களின் செல்போன்களை திருட முயன்றதாகக் கூறப்படும் கணவன்-மனைவி உள்ளிட்ட 3 பேரை சக பக்தர்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.</p><p>திருவண்ணாமலையில் ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டிருந்த நிலையில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி பக்தர்களின் செல்போன்களை திருடும் முயற்சியில் சிலர் ஈடுபட்டனர்.</p><p>இதையடுத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்ட 3 பேரை பக்தர்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்த நிலையில், அங்கு ரோந்து பணியில் இருந்த காவலர்கள் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.</p><p>இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், திருட்டில் ஈடுபட்டது புதுச்சேரியைச் சேர்ந்த தம்பதி மற்றும் சென்னையை சேர்ந்த இளைஞர் என தெரியவந்த நிலையில், போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>மேல்நிலை பொதுத்தேர்வு: அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் நாளை முதல் விநியோகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/secondary-education-public-examination-original-mark-certificates-to-be-distributed-from-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/secondary-education-public-examination-original-mark-certificates-to-be-distributed-from-tomorrow#comments</comments><guid isPermaLink="false">e0f7460e-4a31-48b6-9871-b3376632940c</guid><pubDate>Wed, 29 Jul 2026 15:45:44 +0000</pubDate><atom:updated>2026-07-29T15:45:44.295Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,பொதுத்தேர்வு,விநியோகம்,Certificate,public Examination,அசல் மதிப்பெண் சான்றிதழ்,Distributed</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/2gx00v68/257.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மதிப்பெண் சான்றிதழ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/2gx00v68/257.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மேல்நிலைப் பொதுத்தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் நாளை முதல் சான்றிதழ்கள் பெறலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.</p><p>அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-</p><p>மார்ச் 2026 மேல்நிலை பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட) மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு அசல் ம<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">திப்பெண் சான்றிதழ்கள்</a>, மதிப்பெண் பட்டியல் நாளை முதல் வழங்கப்படும். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை, மதிப்பெண் பட்டியலினை பெற்றுக்கொள்ளலாம். </p><h2>தேர்வு மையம்</h2><p>மேலும், விவரங்களை www.dge.tn.gov. in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். தனித்தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது சமர்ப்பித்த பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை இதுவரை அவர்கள் பெற்றுக்கொள்ளாமல் இருப்பின் அவரவர் தேர்வெழுதிய தேர்வு மையத்திலேயே பெற்று கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆடிப்பெருக்கை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-buses-are-being-operated-to-various-parts-of-tamil-nadu-for-aadi-perukku</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-buses-are-being-operated-to-various-parts-of-tamil-nadu-for-aadi-perukku#comments</comments><guid isPermaLink="false">8475232c-fd99-4b57-b105-ae652ff9f6b2</guid><pubDate>Wed, 29 Jul 2026 14:46:13 +0000</pubDate><atom:updated>2026-07-29T14:46:13.036Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>special buses,சிறப்பு பேருந்துகள்,ஆடிப்பெருக்கு,aadi perukku</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/3yg8nf5f/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/3yg8nf5f/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ் மாதமான ஆடியின் 18-வது நாள் ஆடிப்பெருக்கு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. பொதுவாக ஆடி மாதத்தில் சுப காரியங்கள் செய்வதை தவிர்த்தாலும், சுப காரிய பேச்சுக்களை தொடங்கவும், புதிய முயற்சிகளை தொடங்கவும் ஏற்ற நாளாக ஆடிப்பெருக்கு கருதப்படுகிறது. எனவே ஆடிப்பெருக்கை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். </p><p>அவ்வாறு பயணம் செய்யும் மக்களின் வசதிக்காக, ஆடிப்பெருக்கை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இதன்படி வரும் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 3 வரை இயக்கப்படும் இந்த சிறப்பு பேருந்துகளில், கிளாம்பாக்கத்தில் இருந்து 1,020 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து 295 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.</p><p>அதே போல், பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப ஞாயிற்றுக் கிழமையன்று 420 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மாதவரம், பெங்களூரு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>திமுக ஆட்சியில் தாரைவார்க்கப்பட்ட தமிழ்நாடு மருத்துவர்களின் உரிமைகளை மீட்டெடுத்தது தவெக அரசு - அமைச்சர் அருண் ராஜ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-government-has-restored-the-rights-of-tamil-nadu-doctors-who-were-denied-during-the-dmk-regime-minister-arun-raj</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-government-has-restored-the-rights-of-tamil-nadu-doctors-who-were-denied-during-the-dmk-regime-minister-arun-raj#comments</comments><guid isPermaLink="false">19bdfb2c-b986-4f79-87a3-0016f458653d</guid><pubDate>Wed, 29 Jul 2026 14:36:46 +0000</pubDate><atom:updated>2026-07-29T14:36:46.508Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,doctor,திமுக அரசு,மருத்துவ இடங்கள்,தவெக அரசு,Minister Arunraj,Medical seat,அமைச்சர் அருண் ராஜ்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/8b7bwg9e/2.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் அருண் ராஜ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/8b7bwg9e/2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திமுக ஆட்சியில் தாரைவார்க்கப்பட்ட தமிழ்நாடு மருத்துவர்களின் உரிமைகளை மீட்டெடுத்தது தவெக அரசு என்று அமைச்சர் அருண் ராஜ் கூறினார்.</p><p>சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D">அமைச்சர் அருண் ராஜ் </a>எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- </p><h2>உயர் சிறப்பு மருத்துவ இடங்களை</h2><p>கடந்த கால திமுக ஆட்சியில், தங்களின் நிர்வாகத் திறமையின்மையாலும், மெத்தனப் போக்கினாலும் தமிழகத்திற்கு உரிய உயர் சிறப்பு மருத்துவ இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு (All India Quota) தாராளமாக தாரைவார்த்துவிட்டு, இன்று மக்கள் செல்வாக்கை இழந்து அமர்ந்திருக்கும் ஸ்டாலின் தவறான தகவல்களின் அடிப்படையிலும், பொய்களின் அடிப்படையிலும் முதலைக் கண்ணீர் வடிப்பது வேடிக்கையாக உள்ளது.</p><p>கடந்த ஆண்டுகளில் உயர் சிறப்பு மருத்துவ கலந்தாய்வு முடிந்தபின், மாநில ஒதுக்கீட்டில் அரசு மருத்துவர்களை கொண்டு நிரப்ப முடியாத இடங்கள் அனைத்தும் எவ்வித நிபந்தனையும் இன்றி அகில இந்திய தொகுப்பிற்கு ஒப்படைக்கப்பட்டன. அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட பிறகு, அவ்விடங்களை ஒன்றிய அரசு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை குறைத்து, அகில இந்திய தரவரிசைப் பட்டியல் மூலம் நிரப்பி வந்தது. இதனால்  தமிழ்நாட்டு அரசு மருத்துவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.  குறிப்பாக, கடந்த ஆட்சிக்காலங்களில் 2024-ல் 119 இடங்களும், 2025-ல் 145 இடங்களும் அகில இந்திய தொகுப்பிற்கு ஒப்படைக்கப்பட்டன என்பது மறுக்க முடியாத வரலாறு. அதனால் தமிழ்நாடு மருத்துவர்களின் வாய்ப்புகள் முற்றிலும் பறிபோனதை இந்த நாடே அறியும். </p><p>அன்று நீங்கள் இழைத்த வரலாற்று துரோகத்தை மூடிமறைக்க, இன்று எங்கள் தமிழ்நாடு முதல்-அமைச்சர்  தலைமையிலான தவெக அரசு பெற்ற வெற்றியை சகித்துக்கொள்ள முடியாமல், வெற்று அறிக்கை ஒன்றை நீங்கள் வெளியிட்டதன் மூலம் உங்கள் அரசின் தவறுகளையும், தோல்விகளையும் மறந்திருந்த மக்களுக்கு நீங்களே மீண்டும் நினைவுப்படுத்தியுள்ளீர்கள்.</p><h2>சட்ட போராட்டம்</h2><p>இந்த ஆண்டு, 151 உயர்சிறப்பு மருத்துவ இடங்கள் காலியாக இருந்தபோதும், முந்தைய ஆட்சியைப் போல அவற்றை உடனடியாக ஒப்படைக்க நமது அரசு மறுத்துவிட்டது. அரசு மருத்துவர்களின் நலனைப் பாதுகாக்கும் பொருட்டு தகுதி மதிப்பெண் குறைக்கப்படமாட்டாது என்ற திட்டவட்டமான உத்தரவாதம் அளித்தால் மட்டுமே இடங்கள் ஒப்படைக்கப்படும் என்ற உறுதியான நிலைப்பாட்டை எடுத்து, சுப்ரீம் கோர்டில் தமிழ்நாடு அரசு சட்டப் போராட்டத்தை முன்னெடுத்தது.</p><p>தவெக அரசு சுப்ரீம் கோர்டில் நடத்திய சமரசமற்ற, தீவிரமான சட்டப் போராட்டத்தின் விளைவாகத்தான் நேற்றைய தினம் தமிழ்நாட்டிற்கு ஆதரவான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு கிடைத்துள்ளது. தலைசிறந்த சட்ட வல்லுநர்களின் பங்களிப்பு தமிழ்நாடு அரசின் சார்பில் மாநில உரிமைகளையும் அரசு மருத்துவர்களின் எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்காக, சுப்ரீம் கோர்டில் வாதாட மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி உள்ளிட்ட தலைசிறந்த சட்ட வல்லுநர்கள் நியமிக்கப்பட்டனர். </p><h2>சுப்ரீம் கோர்டில் உத்தரவின் முக்கிய அம்சங்கள்</h2><p>நிரப்பப்படாமல் உள்ள 151 உயர் சிறப்பு மருத்துவ இடங்களை 29.07.2026 அன்று DGHS-இடம் திருப்பி ஒப்படைத்து, அதே தகுதி மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p> <h2>முக்கிய சட்டப் பாதுகாப்பு</h2><p>ஒருவேளை இரண்டாம் கட்ட கலந்தாய்விற்குப் பிறகு, நிரப்பப்படாத மருத்துவ இடங்கள் இருப்பின் அதனை நிரப்புவதற்காக தகுதி மதிப்பெண் குறைக்க முடிவு செய்யப்பட்டால், அந்த இடங்களில் 50 சதவீதம் இடங்கள் உடனடியாக தமிழ்நாடு அரசிற்கே திருப்பி அளிக்கப்பட வேண்டும் என்ற நமது வாதங்களை ஏற்று சுப்ரீம் கோர்ட் தற்பொழுது உத்தரவிட்டுள்ளது. </p><p>முந்தைய ஆண்டுகளில் நடந்ததைப் போல, ஒட்டுமொத்த இடங்களும் பறிபோகும் என்ற நிலை முற்றிலுமாக மாற்றப்பட்டு, தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டால், காலியாக உள்ள இடங்களில் 50 சதவீதம் இடங்கள் கட்டாயமாகத் தமிழ்நாட்டிற்கே திரும்ப வழங்கப்பட வேண்டும் என்ற உரிமையை தவெக அரசு நிலைநாட்டியுள்ளது.  </p><p>தமிழ்நாடு மருத்துவர்களின் நலனையும், மாநில உரிமைகளையும் அடகு வைத்த திமுக, இனிமேலும் மக்களை ஏமாற்ற முடியாது. மாநில சுயாட்சியையும், மருத்துவக் கல்வி உரிமைகளையும் பாதுகாப்பதில் தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D">முதல்-அமைச்சர்</a> தலைமையிலான தவெக அரசு எப்போதும் ஒரு படி முன்னேதான் இருக்கும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">திமுக ஆட்சியில் தாராளமாக தாரைவார்க்கப்பட்ட தமிழ்நாடு மருத்துவர்களின் உரிமைகளை மீட்டெடுத்து வரலாறு படைத்துள்ளது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தவெக அரசு.<br><br>கடந்த கால திமுக ஆட்சியில், தங்களின் நிர்வாகத் திறமையின்மையாலும், மெத்தனப் போக்கினாலும் தமிழகத்திற்கு…</p>&mdash; Arunraaj TVK (@arunraajkg) <a href="https://x.com/arunraajkg/status/2082433578286334180?ref_src=twsrc%5Etfw">July 29, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>கத்திப்பாரா மெட்ரோ பணி - நேரில் ஆய்வு செய்த முதல்-அமைச்சர் விஜய் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-inspected-the-kathipara-metro-work-in-person</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-inspected-the-kathipara-metro-work-in-person#comments</comments><guid isPermaLink="false">fcb14dae-2b28-4caf-9a35-f1eb995ce500</guid><pubDate>Wed, 29 Jul 2026 14:26:02 +0000</pubDate><atom:updated>2026-07-29T14:26:02.025Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Kathipara flyover,கத்திப்பாரா,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/grlakzzp/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/grlakzzp/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், தினமும் தலைமைச் செயலகம் வந்து அரசுப் பணிகளை கவனிப்பதும், அவ்வப்போது பிற்பகலில் சில இடங்களுக்கு சென்று ஆய்வும் நடத்தி வருகிறார். அந்த வகையில், சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரெயில் தலைமை அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் விஜய் இன்று ஆலோசனை நடத்தினார்.</p><p>முன்னதாக தலைமை செயலகத்தில் இருந்து ஓமந்தூரார் அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு காரில் வந்த அவரை மெட்ரோ அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதன் பின்னர், அங்கிருந்து மெட்ரோ ரெயிலில் முதல்-அமைச்சர் விஜய் பயணிகளுடன் பயணம் மேற்கொண்டார். </p><p>இதையடுத்து நந்தனம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இறங்கிய அவர், அங்குள்ள மெட்ரோ ரெயில் தலைமை அலுவலகத்திற்கு சென்றார். இதைத் தொடர்ந்து, கிண்டி கத்திப்பாரா சென்ற முதல்-அமைச்சர் விஜய், அங்கு நடைபெறும் 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவரிடம் மெட்ரோ பணிகளின் நிலவரம் குறித்து அதிகாரிகள் விளக்கமளித்தனர். </p>]]></content:encoded></item></channel></rss>