<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 21 Jul 2026 16:30:20 +0000</lastBuildDate><item><title>“டெல்லி மாணவர்கள் போராட்டம்: ஒரு தலைமுறையின் ஒட்டுமொத்த கோபம்..” - இயக்குநர் பா.ரஞ்சித்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/delhi-students-protest-the-collective-anger-of-a-generation-director-pa-ranjith</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/delhi-students-protest-the-collective-anger-of-a-generation-director-pa-ranjith#comments</comments><guid isPermaLink="false">5ca82bee-f145-4e89-bce9-a18e669deffc</guid><pubDate>Tue, 21 Jul 2026 16:30:14 +0000</pubDate><atom:updated>2026-07-21T16:30:14.410Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Delhi,டெல்லி,இயக்குநர் பா.ரஞ்சித்,மாணவர்கள் போராட்டம்,Students protest,pa.ranjith</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/kxeg02h8/ranj.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/kxeg02h8/ranj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளுடன் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது.</p><p>இந்தப் போராட்டத்தை கலைக்கும் வகையில் மாணவர்கள் மீது கண்ணீர் புகைகுண்டு, தடியடி தாக்குதல் நடைபெற்றன. இதற்கு சமூக ஊடகங்களில் அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் அரசின் நடவடிக்கை குறித்து விமர்சித்து வருகின்றனர். </p><p>இந்நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>அரசுத் தேர்வுகளின் குளறுபடிக்குப் பொறுப்பேற்க கேட்டுத் தொடங்கிய ஒரு குரல், இன்றைக்கு ஒரு தலைமுறையின் ஒட்டுமொத்த கோபமாகவும், போராட்டமாகவும் மாறியிருக்கிறது. லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் ஓர் அரசாங்கத்தை இனிமேலும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று இந்தத் தலைமுறை தெளிவாக சொல்லிவிட்டது.</p><p>டெல்லி வீதிகள் முதல் நாட்டின் பல்வேறு மாநிலங்கள் வரை போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. நீட் தேர்வுக்கு எதிராகக் குரலெழுப்பி தமிழ்நாடு முதல்-அமைச்சரைச் சந்தித்த அறிவு முதல், நீதியைத் தேடும் மாணவர்கள், பெற்றோர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் இணைந்து இதை ஒரு நிஜமான மக்கள் இயக்கமாக மாற்றியிருக்கிறார்கள்.</p><p>தொடர்ந்து தோற்றுப்போகும் நமது பொதுக் கல்வி முறைக்கு மத்தியக் கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானும், மத்திய அரசும் பொறுப்பேற்க வேண்டும் என்ற அனைவரின் ஆதங்கத்தையே இது காட்டுகிறது.</p><p>அமைதியான முறையில் போராடுபவர்கள் மீது கொடூரமான வன்முறையைப் பிரயோகிப்பது, நியாயமான ஜனநாயகக் கேள்விகளுக்குப் பதிலளிக்க அரசிடம் வழியில்லை என்பதையே அம்பலப்படுத்துகிறது. அடக்குமுறையைக் கொண்டு ஒருபோதும் பொறுப்புக்கூறலை மூடிமறைத்துவிட முடியாது.</p><p>அதேவேளையில், உலகெங்கும் வாழும் இந்திய இளைஞர்களும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருவது மிகுந்த நம்பிக்கையளிக்கிறது. எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள ஒவ்வொரு இளைஞருக்குமான போராட்டம் இது.</p><p>காவல்துறையின் வன்முறைக்கு எதிராகவும், அரசியலமைப்பு தந்த ஜனநாயக உரிமையைப் பாதுகாக்க நாடாளுமன்ற வளாகத்தில் தொடர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வரும் சகோதரர் சந்திர சேகர் ஆசாத் அவர்களுக்கு எனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>கலைஞர்கள், சமூக போராளிகள், மாணவர்கள், தொழிற்சங்கங்கள், மக்கள் இயக்கங்கள் மற்றும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள ஒவ்வொரு குடிமகனும், நாடு முழுவதும் நடக்கும் இந்தப் போராட்டங்களுக்குத் தயக்கமின்றி ஆதரவாக நிற்க வேண்டிய நேரமிது.</p><p>பொறுப்புக்கூறல், நீதி, மற்றும் மக்களை ஏமாற்றாமல் அவர்களுக்கு உண்மையாக சேவை செய்யும் பொதுக் கல்வி முறைக்காக நாம் அனைவரும் உரக்கக் குரலெழுப்புவோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் பைக் விபத்தில் வாலிபர் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-dies-in-bike-accident-in-thoothukudi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-dies-in-bike-accident-in-thoothukudi#comments</comments><guid isPermaLink="false">a195ec49-cb97-4e33-ad6d-a577d87597ad</guid><pubDate>Tue, 21 Jul 2026 16:20:04 +0000</pubDate><atom:updated>2026-07-21T16:20:04.130Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Youth,வாலிபர்,Death,உயிரிழப்பு,படுகாயம்,bike accident,பைக் விபத்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/fr27m73e/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பைக் விபத்தில் வாலிபர் உயிரிழப்பு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/fr27m73e/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி அருகே பைக் நிலைதடுமாறி கீழே விழுந்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">விபத்து</a>க்குள்ளானதில், படுகாயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.</p><h2>பைக் விபத்து</h2><p>தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் சமத்துவபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் முத்துக்குமார் (வயது 24). இவர் கடந்த 17-ம் தேதி நாகலாபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு பைக்கில் சென்றுள்ளார். பைக்கை ரஞ்சித்குமார் என்பவர் ஓட்ட, மேகவர்ணராஜா, முத்துக்குமார் ஆகிய 2 பேரும் பின்னால் அமர்ந்து பயணித்துள்ளனர். எப்போதும் வென்றான் பாலத்தின் அருகே வடக்கிலிருந்து தெற்காக சென்றபோது, பைக் கட்டுப்பாட்டை இழந்து திடீரென நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.</p><h2>வாலிபர் உயிரிழப்பு</h2><p>இந்த கோர விபத்தில் வாகனத்தில் பயணித்த 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலமாக அவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முத்துக்குமார், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த ரஞ்சித்குமார், மேகவர்ணராஜா ஆகிய 2 பேரும் உள்நோயாளிகளாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து எப்போதும் வென்றான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>வருகையில்லா ஆவணப்பதிவு: 23-ம் தேதி சந்தேகங்களைத் தீர்க்கும் கலந்தாய்வுக் கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/contactless-document-registration-consultation-meeting-july-23</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/contactless-document-registration-consultation-meeting-july-23#comments</comments><guid isPermaLink="false">1e2f9aaf-3f97-4a34-9bed-d979d5b28950</guid><pubDate>Tue, 21 Jul 2026 16:05:28 +0000</pubDate><atom:updated>2026-07-21T16:05:28.543Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Resolution,consultation meeting,சந்தேகம்,கலந்தாய்வு கூட்டம்,Doubt</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/r5el6gq5/registration-minister.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/r5el6gq5/registration-minister.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வருகையில்லா ஆவணப்பதிவு: சந்தேகங்களைத் தீர்க்கும் கலந்தாய்வுக் கூட்டம் 23-ம் தேதி நடைபெறுகிறது. இது தொடர்பாக பத்திரப்பதிவு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-</p> <h2>வருகையில்லா ஆவணப்பதிவு</h2><p>தமிழ்நாடு பத்திரப் பதிவுத் துறையில் வெளிப்படைத்தன்மையையும், பொதுமக்களின் வசதியையும் மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் மனைப் பிரிவுகளின் முதல் விற்பனையை, வரும் 17/08/2026 முதல் கட்டாயமாக "வருகையில்லா ஆவணப்பதிவு"  முறையில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மற்ற ஆவணப் பதிவுகளும் இந்த முறையின் கீழ் கொண்டுவரப்பட உள்ளன.</p><h2>செயல் விளக்க காட்சி</h2><p>இந்த புதிய நடைமுறை குறித்து கட்டட விற்பனையாளர்கள், வங்கியாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்க்கவும். வருகையில்லா பதிவு முறையை செயல் விளக்க காட்சி மூலம் விளக்கவும் மாபெரும் பயிற்சி மற்றும் ஆலோசனைக்கூட்டம் வரும் 23.07.2026 அன்று காலை 10.00க்கு வணிகவரி மற்றும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20">பதிவுத்துறை அமைச்சரின் </a>தலைமையில் அம்மா மாளிகை, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p> <h2>ஒத்துழைப்பு</h2><p>எனவே. கட்டட விற்பனையாளர்கள். இந்திய கட்டுமான கூட்டமைப்பின் இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (CREDAI), வங்கியாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களின் சந்தேகங்களை தீர்த்து கொள்ளுமாறும், தங்களது கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்கி இத்திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்த தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இக்கூட்டத்தில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள நிறுவனங்கள் மற்றும் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் 8300828865 என்ற தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>விருதுநகர்: இரட்டை குழந்தைகள் பெற்றெடுத்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/virudhunagar-woman-who-gave-birth-to-twins-commits-suicide-by-hanging</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/virudhunagar-woman-who-gave-birth-to-twins-commits-suicide-by-hanging#comments</comments><guid isPermaLink="false">cf45b0bd-41a9-4cf2-9c72-8174535d1fff</guid><pubDate>Tue, 21 Jul 2026 15:59:49 +0000</pubDate><atom:updated>2026-07-21T15:59:49.392Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Virudhunagar,விருதுநகர்,Suicide by hanging,தூக்குப்போட்டு தற்கொலை,பெண்,Woman,Childbirth,பிரசவம்,twins,இரட்டை குழந்தைகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/1wtla9h3/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெண் தூக்குப்போட்டு தற்கொலை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/1wtla9h3/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர், </p><p>விருதுநகர் மாவட்டத்தில் இரட்டை குழந்தைகள் பெற்றெடுத்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">பெண் தூக்குப்போட்டு தற்கொலை</a> செய்து கொண்டார்.</p><p>விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த வத்திராயிருப்பு அருகே உள்ள துலுக்கப்பட்டியை சேர்ந்தவர் முத்தாலம்மாள். இவருடைய மகள் காயத்ரி (வயது 22). இவருக்கும் மதுரை மாவட்டம் சாப்டூரை சேர்ந்த ஜெயசீலன் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.</p><h2>பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகள்</h2><p>இந்த தம்பதிக்கு ஏற்கனவே பெண் குழந்தை உள்ளது. இதையடுத்து 2-வதாக கர்ப்பம் அடைந்த காயத்ரி பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 12 நாட்களுக்கு முன்பு அவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. </p><h2>பெண் தூக்குப்போட்டு தற்கொலை</h2><p>இந்த நிலையில் திடீரென வீட்டில் மின்விசிறியில் அந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: சாகும்வரை சிறை தண்டனை விதிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-assault-on-15-year-old-girl-life-imprisonment-imposed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-assault-on-15-year-old-girl-life-imprisonment-imposed#comments</comments><guid isPermaLink="false">da311596-fa8d-44a4-b699-a686008d5493</guid><pubDate>Tue, 21 Jul 2026 15:57:55 +0000</pubDate><atom:updated>2026-07-21T15:57:55.120Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,பாலியல் வன்கொடுமை,போக்சோ கோர்ட்டு,Pocso Court,சிறுமி,சாகும் வரை சிறை,sexual abuse,small girl,சாகும் வரை சிறை தண்டனை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/a5qewhu3/mauagg.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/a5qewhu3/mauagg.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் வீட்டுவேலை செய்துகொண்டிருந்த 15 வயது சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டிய நபருக்கு சாகும்வரை சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.</p><p>இதன்படி சிறுமியை வன்கொடுமை செய்த அசோக்நகரை சேர்ந்த பால்ராஜுக்கு போக்சோ நீதிமன்றம் சாகும் வரை சிறை தண்டனை விதித்தது. </p><p>சிறுமிக்கு வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், பால்ராஜுவுக்கு சாகும் வரை சிறை மற்றும் ரூ.1,000 அபராதம்  விதிக்கப்பட்டது. </p><p>மேலும் 2020ம் ஆண்டு வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.6.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.</p>]]></content:encoded></item><item><title>நாமக்கல்: 2 அமைச்சர்கள் பதவி விலக வலியுறுத்தி காந்தியவாதி உண்ணாவிரதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/namakkal-gandhian-fast-demanding-resignation-of-2-ministers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/namakkal-gandhian-fast-demanding-resignation-of-2-ministers#comments</comments><guid isPermaLink="false">d2cf0800-d561-4b50-8296-17ddb11e8d4e</guid><pubDate>Tue, 21 Jul 2026 15:41:12 +0000</pubDate><atom:updated>2026-07-21T15:41:12.071Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பழனி,Namakkal,நாமக்கல்,நிலம்,land,பத்திரப்பதிவு,Palani,hunger strike,உண்ணாவிரத போராட்டம்,Deed registration,Fake document,போலி ஆவணம் மூலம்,காந்தியவாதி,Gandhian</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/tfw6t5n4/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட காந்தியவாதி ரமேஷ் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/tfw6t5n4/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல், </p><p>2 தமிழக அமைச்சர்கள் பதவி விலக வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காந்தியவாதி ரமேஷ், சூரசம்கார <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்</a>.</p><h2>போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு</h2><p>பழனி தண்டாயுதபாணி சாமி மடத்திற்கு சொந்தமான, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலம், போலி ஆவணங்கள் மூலம் 2 கோடி ரூபாய்க்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. </p><h2>சூரசம்கார உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட காந்தியவாதி</h2><p>இந்த நிலையில் அகிம்சா சோஷியலிஸ்ட் கட்சியின் நிறுவன தலைவரும், <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF">காந்தியவாதி</a>யுமான ரமேஷ், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் ஆகியோர் பதவி விலக வலியறுத்தி, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று சூரசம்கார உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லி போராட்டம்; மத்திய அரசின் ஜனநாயக மீறல்: திரவுபதி முர்மு தலையிட வேல்முருகன் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/delhi-protest-central-government-s-democratic-violation-velmurugan-urges-droupadi-murmu-intervention</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/delhi-protest-central-government-s-democratic-violation-velmurugan-urges-droupadi-murmu-intervention#comments</comments><guid isPermaLink="false">9b482785-34ca-4c0f-a64d-c18aff2c265b</guid><pubDate>Tue, 21 Jul 2026 15:35:57 +0000</pubDate><atom:updated>2026-07-21T15:35:57.308Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Delhi,டெல்லி,திரவுபதி முர்மு,போராட்டம்,வேல்முருகன்,violation,Democracy,மீறல்,ஜனநாயக</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/327syrg1/velmurugan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/327syrg1/velmurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>"<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">டெல்லி போராட்டத்தில்</a> மத்திய அரசின் ஜனநாயக மீறல்; திரவுபதி முர்மு தலையிட வேல்முருகன் வலியுறுத்தல் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள் எதிரிகளா? </p><p>சொந்த நாட்டு மக்கள் மீது தாக்குதலா? </p><p>இதுதான் ஜனநாயக ஆட்சியா?</p> <h2>கோரிக்கை</h2><p>மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மாநில உரிமைகளை வலியுறுத்தும் மக்கள் என சமூகத்தின் பல்வேறு தரப்பினரும், தங்களது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் இந்திய பெருநிலம் முழுமைக்கும் போராடி வருகின்றனர். </p><h2>அச்சுறுத்தும் நடவடிக்கை</h2><p> அவர்களின் குரலை கேட்டு தீர்வு காண வேண்டிய மத்திய அரசு, அதிகாரத்தின் பலத்தை மட்டுமே நம்பி அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. போராடும் மக்கள் மீது தடியடி, கண்ணீர் புகைக்குண்டு, தடுப்புகள், துப்பாக்கிச்சூடு, எல்லைகளை மூடுவது, இணையங்களை முடக்குவது, போக்குவரத்தை முடக்குவது என்று, காவல்துறை மற்றும் துணை ராணுவத்தின் மூலம் அச்சுறுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. </p> <h2>கடுமையான நடவடிக்கை</h2><p>சில இடங்களில் ஆளும் கட்சியுடன் தொடர்புடையவர்கள் என கூறப்படும் நபர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஆட்சி நிர்வாகத்தில் உள்ள பாஜக, பாசிச தன்மையையே இதன் மூலம் வெளிப்படுத்துகிறதா? என்ற கேள்விகள் எழுகின்றன. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் சுயாதீனமான, வெளிப்படையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, சட்டத்தை மீறியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.</p><h2> சர்வாதிகார ஆட்சி</h2><p>சொந்த நாட்டு மக்களை எதிரிகளை போல நடத்தி, அவர்களின் ஜனநாயக உரிமைகளைப் பலவந்தமாக ஒடுக்க நினைக்கும் அரசு, மக்கள் அரசாக இருக்க முடியாது. அது நிறுவனங்களின் நலன்களுக்காக செயல்படும் கார்ப்பரேட் சர்வாதிகார ஆட்சியாக மட்டுமே வரலாற்றில் பதிவு செய்யப்படும்.</p> <h2>மக்கள் விரோதம்</h2><p>நேற்று டெல்லியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது நிகழ்த்தப்பட்ட அடக்குமுறையும், இன்று டெல்லியை நோக்கி முன்னேறும் விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கப் பாதுகாப்பு படைகளை குவித்திருப்பதும், எல்லைகளை மூடி இருப்பதும், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மக்களின் ஜனநாயக போராட்டங்கள் அடக்கப்படுவதும், இந்த மத்திய அரசின் மக்கள் விரோத அணுகுமுறையை வெளிப்படுத்துகின்றன.</p> <h2>தார்மீக உரிமை</h2><p>மக்களின் நம்பிக்கையை இழந்த எந்த அரசும், ஜனநாயகத்தின் பெயரில் தொடர்ந்து ஆட்சி நடத்துவதற்கு தார்மீக உரிமை பெற்றதாக கூற முடியாது. இத்தகைய போக்கு தொடர்ந்தால் இந்தியாவின் ஜனநாயகம், கூட்டாட்சித் தத்துவம், அரசியலமைப்பின் மாண்பு மற்றும் தேசிய ஒற்றுமை ஆகியவை கடுமையான பாதிப்பை சந்திக்கும் அபாயம் உருவாகும்.</p><h2>அசாதாரண சூழ்நிலை</h2><p> இந்திய'ஜனாதிபதி திரவுபதி முர்மு, நாட்டில் உருவாகியுள்ள இந்த அசாதாரண சூழ்நிலையை, அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் அவசரமாக பரிசீலித்து, மக்களின் ஜனநாயக உரிமைகளை தொடர்ந்து மீறும் இந்த மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து உரிய அரசியலமைப்புச் சட்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் உறுதியான நிலைப்பாடு -  தமிழக வெற்றிக் கழகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-firm-stance-is-that-the-neet-exam-should-not-be-held-at-all-tamizhaga-vettri-kazhagam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-firm-stance-is-that-the-neet-exam-should-not-be-held-at-all-tamizhaga-vettri-kazhagam#comments</comments><guid isPermaLink="false">39991b1c-04aa-454b-823d-61b16893bc0d</guid><pubDate>Tue, 21 Jul 2026 15:32:37 +0000</pubDate><atom:updated>2026-07-21T15:32:37.087Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தமிழக வெற்றிக் கழகம்,நீட் தேர்வு,NEET Exam,Tamilaga Vetri Kazhagam,NEET,நீட்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/oj6r1o3x/namade.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/oj6r1o3x/namade.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/தமிழக-வெற்றிக்-கழகம்">தமிழக வெற்றிக் கழகம்</a> சார்பில் அதன் எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>நீட் தேர்வுக் குளறுபடிகளை மட்டும் எதிர்க்கவில்லை. நீட் தேர்வு என்பது அறவே கூடாது என்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு. ஓட்டுக்காக நீட்டை நாங்களே நீக்குவோம் என்று மக்களை ஏமாற்றும் மோசடி அரசியல் வேலையில் த.வெ.க. ஒருபோதும் ஈடுபடாது.</p><p>கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்.</p><p>வெற்றித் தலைவர்அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை நம் வெற்றித் தலைவர் அவர்கள் ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறார்.</p><h2>அரசியல் மோசடி வரலாறு</h2><p>இதை மீறியும், தொடர்ந்து அவதூறு பரப்பினால், அவதூறு கழகத்தின் பழைய அரசியல் மோசடி வரலாறுகளை உலகமே தோண்டி எடுத்து அம்பலப்படுத்தும் சூழல் உருவாகும். அது அவதூறு கழக அரசியலுக்கு முடிவுரை எழுதுவதாகவும் அமையும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மறந்துவிட வேண்டாம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>கொடுங்கையூர் குப்பை கிடங்கை அகற்றக்கோரி பெண்கள் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/women-protest-by-holding-a-procession-demanding-removal-of-kodungaiyur-garbage-dum</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/women-protest-by-holding-a-procession-demanding-removal-of-kodungaiyur-garbage-dum#comments</comments><guid isPermaLink="false">5d416457-1ad8-43b6-83b7-80b7957bf959</guid><pubDate>Tue, 21 Jul 2026 14:47:27 +0000</pubDate><atom:updated>2026-07-21T14:47:27.595Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,protest,ஆர்ப்பாட்டம்,Removal,women,பெண்கள்,கொடுங்கையூர்,Kodungaiyur,குப்பை கிடங்கு,Garbage dump,demanding,ஒப்பாரி,அகற்றக்கோரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/sx0anyev/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கொடுங்கையூர் குப்பை கிடங்கை அகற்றக்கோரி எழில்நகர் பகுதியில் ஆர்ப்பாட்டம்  ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/sx0anyev/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கை அகற்றக்கோரி எழில்நகர் பகுதியில் பெண்கள் ஒப்பாரி வைத்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">ஆர்ப்பாட்டம்</a>  செய்தனர். </p><h2>கொடுங்கையூர் குப்பை கிடங்கை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்</h2><p>சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கை அகற்ற வலியுறுத்தி, <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி</a> சார்பில் கொடுங்கையூர் எழில்நகர் பகுதியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பாடை கட்டி அதில் ஒருவர் பிணம்போல் படுத்திருக்க, அங்கிருந்த பெண்கள் ஒப்பாரி வைத்தும், கையில் பதாகைகளை ஏந்தியும் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</p><h2>ரிப்பன் மாளிகை முற்றுகை போராட்டம்</h2><p>ஆர்ப்பாட்டத்தின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பெரம்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன் கூறும்போது. "சுமார் 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குப்பை கிடங்கில், வடசென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் குப்பைகள் கொண்டு வந்து கொட்டப்படுவதால் சுற்று வட்டார மக்கள் துர்நாற்றம், மூச்சுத்திணறல், கண் எரிச்சல் மற்றும் பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே குப்பை கிடங்கை அகற்றாவிட்டால் சென்னை ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்" என்றார். </p>]]></content:encoded></item><item><title>கிருஷ்ணகிரி: தின்பண்டங்கள் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்தது டிரைவர் உள்பட 2 பேர் உயிர் தப்பினர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/krishnagiri-snacks-lorry-catches-fire-two-survive</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/krishnagiri-snacks-lorry-catches-fire-two-survive#comments</comments><guid isPermaLink="false">ffa173f4-ae25-404d-9779-05a4d6d6848d</guid><pubDate>Tue, 21 Jul 2026 14:23:48 +0000</pubDate><atom:updated>2026-07-21T14:23:48.812Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Truck,டிரைவர்,லாரி,கிருஷ்ணகிரி,Krishnagiri,caught fire,தீப்பிடித்து எரிந்தது</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/j3l06gv4/lorry-fir.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ லாரி தீப்பிடித்து எரிந்தது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/j3l06gv4/lorry-fir.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ணகிரி,</p><p>கிருஷ்ணகிரியில் சிப்ஸ் உள்ளிட்ட தின்பண்டங்கள் ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்து சாம்பலானது.</p><h2> மதுரை</h2><p>ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் இருந்து சிப்ஸ் உள்ளிட்ட தின்பண்டங்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று மதுரை நோக்கி புறப்பட்டது. இந்த லாரியைப் பீகார் மாநிலத்தை சேர்ந்த கோவிந்த யாதவ் (35) என்பவர் ஓட்டி வந்தார். அவருக்கு உதவியாக மாற்று ஓட்டுநராக சந்திலால் (34) என்பவர் உடன் இருந்தார்.</p> <h2>திடீர் தீ விபத்து</h2><p>நேற்று மதியம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஏ.செட்டிப்பள்ளி பகுதியில் லாரி சென்றபோது, சாலையின் மேலே சென்ற மின்கம்பியில் லாரி உரசியதாகத் தெரிகிறது. இதைக் கவனிக்காத ஓட்டுநர் லாரியை தொடர்ந்து ஓட்டிச் சென்றார். சுமார் 1 கிலோமீட்டர் தூரம் லாரி சென்ற நிலையில், அவ்வழியாக வாகனங்களில் சென்றவர்கள் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">லாரி தீப்பிடித்து</a> எரிவதைக் கூறினர்.</p><h2>விசாரணை</h2><p>உடனே ஓட்டுநரும், மாற்று ஓட்டுநரும் லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கிப் பார்த்தனர். அதற்குள் லாரி முழுமையாகத் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தண்ணீரைப் பீய்ச்சி அடித்துத் தீயை அணைத்தனர். </p><p>இருப்பினும், லாரி முழுவதுமாகத் தீயில் எரிந்து சேதமடைந்தது. இந்தத் தீ விபத்தில் லாரியில் இருந்த தின்பண்டங்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின. இவ்விபத்து குறித்துப் பேரிகை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொலை: 6 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-brutally-hacked-to-death-in-chennai-6-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-brutally-hacked-to-death-in-chennai-6-arrested#comments</comments><guid isPermaLink="false">f8039f75-ff5f-4f6b-b491-d084dc61d6c7</guid><pubDate>Tue, 21 Jul 2026 14:09:29 +0000</pubDate><atom:updated>2026-07-21T14:09:29.249Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Youth,வாலிபர்,வெட்டிக்கொலை,முன்விரோதம்,6 பேர் கைது,hacked to death,6 arrested,previous enmity</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/s961xito/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/s961xito/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை ஓட்டேரி பகுதியில் முன்விரோதம் காரணமாக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொலை</a> செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>வாலிபர் வெட்டிக்கொலை</h2><p>சென்னை ஓட்டேரி எஸ்.வி.எம். நகர் ஐ-பிளாக்கை சேர்ந்த நாகராஜ் மகன் அஜய் (வயது 20). இவர் 'பலிஆடு' என்ற பெயரிலும் அழைக்கப்பட்டு வந்தார். இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு, ஓட்டேரியை சேர்ந்த காஜல் என்ற திருநங்கையை பைக்கில் அழைத்து வந்து, ராமதாஸ்நகர் சி-பிளாக்கில் இறக்கிவிட்டு திரும்பிச் சென்று கொண்டிருந்தார். </p><p>அப்போது ராமதாஸ்நகர் பி-பிளாக் அருகே 2 பைக்குகளில் வந்த 4-க்கும் மேற்பட்டோர் அஜயை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக வெட்டினர். இதில் தலையில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அஜய், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். </p><h2>6 பேர் கைது</h2><p>இதுகுறித்து தகவல் அறிந்த வண்ணாரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அஜயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் ஓட்டேரி பகுதியில் பதுங்கி இருந்த ஓட்டேரி எஸ்.வி.எம். நகர் சி-பிளாக்கை சேர்ந்த அருண்(எ) அருண்ராஜ்(27), தனுஷ்(22), தமிழரசன்(29), சிவா(23), சுனில்(எ) சூர்யா(20) மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட சிறுவன் ஆகிய 6 பேரை தனிப்படை போலீசார் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்து விசாரணை நடத்தினர். </p><h2>முன்விரோதம்</h2><p>போலீசார் மேற்கொண்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்தது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள 3 பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாகவும், கொலை செய்யப்பட்ட அஜய், தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் 'சி' வகை சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் போலீசார் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக சிவா நியமனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/siva-appointed-as-chairman-of-tamil-nadu-housing-board</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/siva-appointed-as-chairman-of-tamil-nadu-housing-board#comments</comments><guid isPermaLink="false">817d9bee-d5a7-4e9e-959a-45628f177034</guid><pubDate>Tue, 21 Jul 2026 13:37:00 +0000</pubDate><atom:updated>2026-07-21T13:37:00.113Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,தமிழ்நாடு,DMK,வாழ்த்து,Congratulations,தி.மு.க.,In Tamil Nadu,முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/f1t3i0k7/tvk-siva.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவர் சிவா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/f1t3i0k7/tvk-siva.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவராக இருந்த பூச்சி முருகன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய தலைவராக தமிழக வெற்றிக் கழகத்தின் வடசென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் வி. சிவா அதிரடியாக நியமிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.</p><h2>முதல்-அமைச்சரிடம் வாழ்த்து</h2><p>இந்த புதிய நியமனத்திற்கான அரசாணையை பெற்றுக்கொண்ட வி. சிவா, தலைமைச் செயலகத்தில்<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF.%20%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%88"> தமிழக முதல்-அமைச்சர் சி. ஜோசப் விஜய்யை </a>நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இவருக்கு தவெக தொண்டர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தீவிர வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.</p><h2>விஜய் நெகிழ்ச்சி</h2><p>நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசுகையில், "எனக்காக தனது சொந்த பெரம்பூர் தொகுதியை விட்டு கொடுத்தவர் சிவா" என மேடையில் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>நண்பன் இறந்த அதிர்ச்சியில் விசைப்படகு ஓட்டுநர் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/motorboat-driver-dies-in-shock-over-friends-death</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/motorboat-driver-dies-in-shock-over-friends-death#comments</comments><guid isPermaLink="false">86c54fad-a1ba-4536-9969-2c81f9228e04</guid><pubDate>Tue, 21 Jul 2026 13:35:12 +0000</pubDate><atom:updated>2026-07-21T13:35:12.073Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Death,மரணம்,driver,உயிரிழப்பு,விசைப்படகு,நண்பன்,ஓட்டுநர்,loss of life,shock,அதிர்ச்சி,friend,Ennore,எண்ணூர்,news,செய்தி,speedboat</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/c8qr7aa5/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரகாஷ், ஏகாம்பரம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/c8qr7aa5/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை அருகே எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் நண்பர் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் விசைப் படகு ஓட்டுநர் பரிதாபமாக இறந்தார். </p><h2>டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு</h2><p>சென்னை அருகே எண்ணூர் பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 46). இவர் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இவருக்கு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D">டெங்கு காய்ச்சல்</a> ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பிரகாஷ் நேற்று இரவு மருத்துவமனையில் உயிரிழந்தார். </p><h2>விசைப்படகு ஓட்டுநர் அதிர்ச்சியில் உயிரிழப்பு</h2><p>பெரியகுப்பத்தை சேர்ந்த பிரகாசின் நண்பர் ஏகாம்பரம்(47) என்பவர் விசைப்படகு ஒட்டும் தொழில் செய்து வருகிறார். நேற்று மீன் பிடித்துக் கொண்டு இன்று காலை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு. அதிகாலை 2 மணிக்கு வந்தார். அப்போது அவரது நண்பர் பிரகாஷ் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">உயிரிழந்த செய்தி</a>யை கேட்டுள்ளார். உடனே கதறி அழுதபடி அவரது செல்போனில் பிரகாசின் புகைப்படத்தை பார்த்த ஏகாம்பரம் அதிர்ச்சியில் ஓட்டுநர் இருக்கையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>மீனவர்களிடையே சோகம்</h2><p>இந்த சம்பவம் குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நண்பன் இறந்த செய்தி கேட்டு விசைப்படகு ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் மீனவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பெரியகுப்பம் மீனவ கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் பார்களில் சிகரெட், பீடி, புகையிலை விற்பனை செய்ய தடை - தமிழக அரசு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-sale-of-cigarettes-beedis-and-tobacco-in-tasmac-bars-tamil-nadu-government-order</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-sale-of-cigarettes-beedis-and-tobacco-in-tasmac-bars-tamil-nadu-government-order#comments</comments><guid isPermaLink="false">1092c40f-328b-4c5c-9f39-6c942e222ea6</guid><pubDate>Tue, 21 Jul 2026 13:32:20 +0000</pubDate><atom:updated>2026-07-21T13:32:20.555Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,தமிழக அரசு,TN govt,டாஸ்மாக்,Tasmac,மதுபானம்,liquor bar,Cigarettes,சிகரெட்,புகையிலை,tasmac bar</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/gi046rjx/tasmc.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/gi046rjx/tasmc.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>டாஸ்மாக் பார்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. </p><h2>புகையிலை விற்பனை செய்ய தடை</h2><p>இதுதொடர்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், <a href="https://www.dailythanthi.com/topic/tasmac">டாஸ்மாக்</a> பார்களில் சிகரெட், பீடி, புகையிலை விற்பனை செய்ய தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தண்ணீர் பாட்டில், நொறுக்கு தீணிகள் அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடைக்கு சீல் வைக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. </p><h2>விலைப்பட்டியல்</h2><p>தின்பண்ட உரிமம் பெற்ற ஒப்பந்ததாரர் தான் விற்பனை செய்யும் தின்பண்டங்களுக்கான விலைப்பட்டியலை பார்வைக்கு வைப்பதுடன் தின்பண்டங்கள் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டதாகவும், சுத்தமாக பராமரிக்கப்பட்டதாகவும் அது தொடர்பான அரசின் அத்தனை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டனவாகவும் இருத்தல் அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>ISI தரச்சான்று</h2><p>இந்த தின்பண்ட பொருள்கள் உணவு பொருள் தரக்கட்டுபாடு  (FSSAI) சோதனைக்கு உட்படுத்தப்படும். குளிர்பானங்கள், குடிநீர் ஆகியவற்றில் ISI தரச்சான்று பெற்றவையே பயன்படுத்த வேண்டும்.</p><p>மதுக்கூடத்தில் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்களை வைக்கக்கூடாது. மதுக்கூடத்தில், கீற்றுக் கொட்டகை போன்றவை பயன்படுத்தல் கூடாது. தமிழக அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மட்காத, மறுசுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் பொருட்களை மதுபான சில்லரை விற்பனைக்கடைகளுடன் இணைந்துள்ள மதுக்கூடங்களில் பயன்பாட்டில் இருக்கக் கூடாது.</p><h2>வேலை நேரம்</h2><p>மதுக்கூடத்தில் அரசால் தடை செய்யப்பட்ட எந்த பொருளும் விற்கக் கூடாது. டாஸ்மாக் நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்படும் நேரத்தில் மட்டுமே மதுகூடங்கள் செயல்பட வேண்டும். நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்படும் வேலை நேரத்தின்போது மட்டுமே ஒப்பந்ததாரருக்கு/அவரது பணியாளருக்கு மதுக்கூடத்தில் அனுமதியளிக்கப்படும். </p><h2>மது விற்கக்கூடாது</h2><p>பார்களில் மது விற்கக்கூடாது. டாஸ்மாக் கடையின் விடுமுறை நாட்களிலோ அல்லது நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்படும் வேலை நேரத்திற்கு அப்பாற்பட்டோ மதுக்கூடம் திறந்து வைத்திருந்தால் உடனடியாக இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். மேலும் காப்புத் தொகையை திரும்பப் பெற இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஹஜ் பயணம்: விண்ணப்பிக்க ஜூலை 24 கடைசி நாள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/apply-online-for-hajj-2027-last-date-july-24</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/apply-online-for-hajj-2027-last-date-july-24#comments</comments><guid isPermaLink="false">232a9f6e-bb53-4fcb-98b0-3c95a9ff9df2</guid><pubDate>Tue, 21 Jul 2026 13:10:01 +0000</pubDate><atom:updated>2026-07-21T13:10:01.578Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விண்ணப்பிக்கலாம்,can apply,ஹஜ் பயணம்,Last Date,கடைசி நாள்,Haj Travel</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/5ozry5jt/haj.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஹஜ் பயணம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/5ozry5jt/haj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்த ஆண்டு (ஹஜ் 2027, ஹிஜிரி 1448) ஹஜ் பயணம் செல்ல விரும்புவோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 24.7.2026 என்று ஹஜ் குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, மும்பை இந்திய ஹஜ் குழு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:-</p><h2>கால அவகாசம் நீடிக்கப்பட மாட்டாது</h2><p>தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் இந்த ஆண்டு (ஹஜ் 2027, ஹிஜிரி 1448) <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B9%E0%AE%9C%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D">ஹஜ் பயணம்</a> செல்ல விரும்புவோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 24.7.2026, இரவு 11:59 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கால அவகாசம் நீடிக்கப்பட மாட்டாது என மும்பை இந்திய ஹஜ் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><h2>குலுக்கல் தேர்வு</h2><p>விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் முடிந்தவுடன் 30.7.2026 அன்று காலை 11.00 மணிக்கு கணிணி வழி குலுக்கல் தேர்வு நடைபெறும். இத்தேர்வு முறை https://www.hajcommittee.gov.in என்ற இணையதளத்தில் நேரலை (Livestream) செய்யப்படும் என்றும்,</p> <h2>குறுஞ்செய்தி</h2><p>இதன் மூலம் தற்காலிகமாக தேர்வு பெற்றவர்கள் (Provisionally selected pilgrims) மற்றும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்களின் பட்டியல் இந்திய ஹஜ் குழுவின் இணையதளத்தில் வெளியிடப்படுவதுடன், குறுஞ்செய்தி (SMS) மூலமாகவும் தெரிவிக்கப்படும் என்றும்,</p><h2>முதல் தவணை</h2><p>தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட புனிதப்பயணிகள் ஒவ்வொருவரும் முதல் தவணையாக ரூ. 1,52,300/-ஐ 10.8.2026-க்குள் செலுத்த வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை மறுநாள் மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-power-cut-schedule-july-23-2026</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-power-cut-schedule-july-23-2026#comments</comments><guid isPermaLink="false">5bf08636-d9a3-44a2-92ab-fd9f8782f74d</guid><pubDate>Tue, 21 Jul 2026 12:49:33 +0000</pubDate><atom:updated>2026-07-21T12:49:33.631Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Power outages,The day after tomorrow,நாளை மறுநாள்,மின் நிறுத்தம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/rb0lsjtx/pwer-cut.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின் தடை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/rb0lsjtx/pwer-cut.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><strong>காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை</strong></p><p>சென்னையில் 23.07.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">பராமரிப்பு பணி</a> முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><h2>அயப்பாக்கம்</h2><p> ஐ.சி.எப் காலனி, செல்லியம்மன் நகர், கங்கை சாலை, காவேரி தெரு, டி.என்.எச்.பி. கட்டம் I முதல் III வரை, திருவேற்காடு பிரதான சாலை, அம்பத்தூர், வானகரம் சாலை, அத்திப்பட்டு, பாரதி மேடு தெரு, தினேஷ் தெரு, ரோஜா தெரு, குப்பம், கே.எஸ்.ஆர். நகர், வி.ஜி.என். சாந்தி நகர், மதுரவாயல், செட்டியார் தெரு, விஜயா நகர், பச்சையப்பா நகர், சென்னை நியூ சிட்டி, ஈடன் அவென்யூ, கொன்ராஜ் குப்பம், அக்கிரஹாரம், தேவி நகர், சின்ன கோலடி, ஜோதி நகர், மூன்று நகர், எழில் நகர், அண்ணனூர்.</p><h2>அடையாறு</h2><p>சாஸ்திரி நகர், எல்.பி. சாலை, கலாஷேத்ரா சாலை, ஆர்.கே.நகர், ஸ்ரீராம் நகர், சாந்தி அவென்யூ, சிவசுந்தர் அவென்யூ.</p><h2>பாரிவாக்கம்</h2><p>அணைகட்டுசேரி, காவல்சேரி, சோரன்சேரி, சித்துகாடு, திருமணம், அமுதுர்மேடு, வயலானல்லூர், திருகோயில்பத்து.</p> <h2>பள்ளிக்கரணை</h2><p> 200 அடி ரேடியல் சாலை, ராம் நகர் தெற்கு விரிவாக்கம், நாராயணபுரம், வி.ஜி.பி. ராஜேஷ் நகர், கணேஷ் அவென்யூ, வி.எம். சாலை, ஜெயின் அபார்ட்மெண்ட், ரமணியம் ஓஷன் டியூ அபார்ட்மெண்ட், சர்வம் அபார்ட்மெண்ட்.</p> <h2>சித்தாலப்பாக்கம்</h2><p>மாம்பாக்கம் பிரதான சாலை, பாபு நகர், நீலா நகர், விமலா நகர், பிரின்ஸ் கல்லூரி சாலை, சிவகாமி நகர், நல்லதம்பி நகர், அண்ணா சாலை, நெசவாளர் நகர், பச்சையம்மன் கோயில் தெரு, பத்மாவதி நகர், மகேஸ்வரி தெரு.</p> <h2>கௌரிவாக்கம்</h2><p>சாந்தி நகர், சிவகாமி நகர், பழனியப்பா நகர், சந்தானம்மாள் நகர், வேளச்சேரி பிரதான சாலை, எஸ்.ஐ.வி.டி. கல்லூரி.</p> <h2>கே.கே. நகர்</h2><p> கன்னிகாபுரம் 1 வது முதல் 3வது தெரு வரை, விஜயராகவபுரம் 1வது முதல் 5வது தெரு வரை, மற்றும் குறுக்குத் தெரு, பீரான்சாஹிப் தெரு, ஆற்காடு சாலை, ராஜமன்னார் சாலை, சத்யா கார்டன், சாஸ்த்ரா கல்லூரி, ஏ.வி.எம். அஸ்டா, ஏ.வி.எம். ஸ்டுடியோ, கபெல்லா, குமரன் காலனி பிரதான சாலை , சாலிகிராமம், 80 அடி சாலை, ராணி அண்ணா நகர், பி.டி. ராஜன் சாலை, 14 வது மற்றும் 15வது செக்டர், கே.கே. நகர் 94-வது முதல் 104-வது தெரு வரை, எஸ்.எஸ்.பி. நகர், எஸ்.வி. லிங்கம் சாலை, அழகர்பெருமாள் கோவில் தெரு, விஜயா தெரு, ஒட்டகப்பாளையம்.</p> <h2>செம்பரம்பாக்கம்</h2><p> பெங்களூர் நெடுஞ்சாலை, நசரத்பேட்டை சந்திப்பிலிருந்து ஹோட்டல் நெடுஞ்சாலை வரை.</p><h2>குமணன்சாவடி</h2><p> பூந்தமல்லி புற வழி சாலை, அம்பாள் நகர், ஆவடி சாலை, சென்னீர்குப்பம், மேட்டு தெரு.</p> <h2>தாம்பரம்</h2><p>சி.டி.ஓ. காலனி, சசி வரதன் நகர், எஃப்.சி.ஐ. நகர், காசா கிராண்ட், குட்வில் நகர், மூகாம்பிகை நகர், பாரதி நகர், ராமகிருஷ்ணா நகர், சிட்லபாக்கம் ராமகிருஷ்ணா நகர் 1வது முதல் 6வது தெருக்கள் வரை, பாம்பன் சாமிகள் சாலை, ஐ.சி.ஐ.சி.ஐ., வைத்தியலிங்கம் சாலை, எம்.எம்.டி.ஏ. நகர், சர்மா நகர், முனியாத்தி தெரு, பிரதாப் அவென்யூ, ஆபிரகாம் லிங்கன் தெரு, நசீப் அவென்யூ, மருதுபாண்டியர் தெரு, பாபு தெரு.</p> <h2>ஆவடி</h2><p>திருமலைவாசன் நகர், அசோக் நகர், பூம்பொழில் நகர், கன்னடபாளையம், பாரதி நகர், திருமுல்லைவாயல் சாலை, ராமகிருஷ்ணா நகர்.</p> <h2>பல்லாவரம்</h2><p>ராஜாஜி நகர், சக்தி நகர், சஞ்சய் காந்தி நகர், நார்த் செயின்ட் மேரிஸ் சாலை, பி.வி. ஆச்சாரியா தெரு, சரோஜினி தெரு, ஜவாது உசேன் தெரு, சுந்தரேசன் தெரு, எத்திராஜ் தெரு, சாலமன் தெரு.</p> <p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இரவு 7 மணி வரை சென்னை உள்பட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chance-of-rain-in-12-districts-including-chennai-until-7-pm</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chance-of-rain-in-12-districts-including-chennai-until-7-pm#comments</comments><guid isPermaLink="false">ced211e3-a1fe-4efa-9e3b-95e1c5acb3a7</guid><pubDate>Tue, 21 Jul 2026 12:43:57 +0000</pubDate><atom:updated>2026-07-21T12:43:57.826Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,சென்னை,Rain,Weather,வானிலை,தமிழகம்,Weather News,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,weather forecast,வானிலை ஆய்வு மையம்,வானிலை அறிக்கை,weather condition,வானிலை தகவல்,Weather Report,வானிலை முன்னறிவிப்பு,வானிலை அறிவிப்பு,weather center,TN Rain</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/ovojzdlp/koer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மழை, rain]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/ovojzdlp/koer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>வானிலை செய்திகள் (Weather)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழகத்தில் இரவு 7 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.</p><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இதன் காரணமாக இன்று (21-07-2026): மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. </p> <h2>மழை</h2><p>இந்நிலையில் இரவு 7 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி, ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், கோவை, திருப்பூர், திருப்பத்தூர் ஆகிய 12 மாவட்டங்களில் <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a>க்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>தென்காசி: புதிய மின் இணைப்புக்கு ரூ.2,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் கைது!  </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tenkasi-electricity-board-employee-arrested-for-accepting-a-bribe-of-rs-2000-for-a-new-electricity-connection</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tenkasi-electricity-board-employee-arrested-for-accepting-a-bribe-of-rs-2000-for-a-new-electricity-connection#comments</comments><guid isPermaLink="false">4abac677-c1a2-48e1-8e44-d05e063fdb79</guid><pubDate>Tue, 21 Jul 2026 12:39:15 +0000</pubDate><atom:updated>2026-07-21T12:39:15.118Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,தென்காசி,arrest,bribe,Electricity Board employee,லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது,ரூ. 2000</media:keywords><media:content height="542" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/import/Images/Article/201711190341582084_Electricity-Board-engineer-arrested-for-accepting-bribe-of_SECVPF.gif" width="794"><media:title type="html"><![CDATA[ கைது]]></media:title><media:description type="html"><![CDATA[ தென்காசியில் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியரை போலீசார் கைது செய்தனர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/import/Images/Article/201711190341582084_Electricity-Board-engineer-arrested-for-accepting-bribe-of_SECVPF.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><p>தென்காசியில் புதிய மின் இணைப்புக்கு ரூ.2,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியரை போலீசார் கைது செய்தனர்.</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தென்காசி </a>பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது புதிய வீட்டிற்கு மின் இணைப்பு மீட்டர் பொருத்துவதற்காக மின்வாரிய அலுவலகத்தை அணுகினார். அப்போது அங்கு வயர்மேனாக பணியாற்றி வரும் ஆறுமுகசாமி (வயது 53) என்பவர், மீட்டர் பொருத்த ரூ.2,000 லஞ்சம் கேட்டுள்ளார். </p><h2>லஞ்சம்- கைது</h2><p>லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர், இதுகுறித்து தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, போலீசாரின் ஆலோசனையின்படி அந்த நபர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஆறுமுகசாமியிடம் வழங்கினார்.</p><p>அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், லஞ்சப் பணத்தை வாங்கிய ஆறுமுகசாமியை கையும் களவுமாகப் பிடித்து<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> கைது </a>செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சுடுகாட்டில் நரபலி என வதந்தி: குழியைத் தோண்டிய போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rumors-of-human-sacrifice-in-a-crematorium-near-palladam-the-shock-that-awaited-the-police-who-dug-the-pit</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rumors-of-human-sacrifice-in-a-crematorium-near-palladam-the-shock-that-awaited-the-police-who-dug-the-pit#comments</comments><guid isPermaLink="false">0720c3bc-cfb6-40ed-b372-f797a074b67e</guid><pubDate>Tue, 21 Jul 2026 12:37:46 +0000</pubDate><atom:updated>2026-07-21T12:37:46.264Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வதந்தி,Palladam,Rumour,நரபலி,பல்லடம் அருகே,dog dead body</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/t2rsc5qc/palladam-dog-dead-body.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ ஆறாக்குளம் சுடுகாடு]]></media:title><media:description type="html"><![CDATA[ பல்லடம் அருகே ஆறாக்குளம் சுடுகாட்டில் நரபலி கொடுக்கப்பட்டதாக வதந்தி பரவியது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/t2rsc5qc/palladam-dog-dead-body.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><p>திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சுடுகாட்டில் நரபலி கொடுக்கப்பட்டுள்ளது என்ற வதந்தியால் குழியைத் தோண்டிய போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.</p><h2>நரபலி வதந்தி</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">திருப்பூர் மாவட்டம்</a> பல்லடத்தை அடுத்த ஆறாக்குளம் சுடுகாட்டுப் பகுதியில் மர்மமான முறையில் புதிய குழி ஒன்று தோண்டப்பட்டு மலர்களால் தூவி மூடப்பட்டிருந்தது. இதனால், மர்ம நபர்கள் யாரையோ<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> நரபலி </a>கொடுத்துவிட்டு ரகசியமாக புதைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்தது. இந்த தகவல் சமூக வலைத்தளங்களிலும் வேகமாகப் பரவி, பொதுமக்கள் மத்தியில் பெரும் திகிலையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது.</p><h2>விசாரணையில் வந்த உண்மை</h2><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் போலீசார், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் சந்தேகத்திற்குரிய அந்த குழியைத் தோண்டினர். குழிக்குள் மனித உடல் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உள்ளே இறந்த நாய் ஒன்றின் சடலம் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.</p><p>திகிலாகத் தொடங்கி இறுதியாக நகைச்சுவையாக முடிந்த இந்த சம்பவத்தால், அங்கு கூடியிருந்த போலீசாரும் பொதுமக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். மேலும், பொதுமக்கள் யாரும் இது போன்ற தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என போலீசார் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>தவெக-வின் கொள்கை வெறும் முழக்கம் மட்டும் தானா?  - வானதி சீனிவாசன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-policy-of-the-tvk-just-a-slogan-vanathi-srinivasan-questions</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-policy-of-the-tvk-just-a-slogan-vanathi-srinivasan-questions#comments</comments><guid isPermaLink="false">d6b30041-4eb9-45fa-b055-93d7081d73e5</guid><pubDate>Tue, 21 Jul 2026 12:28:15 +0000</pubDate><atom:updated>2026-07-21T12:28:15.802Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Question,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,Policy,கேள்வி,Slogan,முழக்கம்,கொள்கை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/f5grhd02/vanathi-srinivasan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/f5grhd02/vanathi-srinivasan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தவெக-வின் கொள்கை வெறும் முழக்கம் மட்டும் தானா? என்று வானதி சீனிவாசன் கேள்வி  இது தொடர்பாக, பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதில் தெரிவித்திருப்பதாவது;-</p> <h2>ஜில்லா மணி</h2><p>மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய துணைச் செயலாளராக உள்ள 'ஜில்லா மணி' என்பவர் முதியவர் ஒருவரை காரில் வைத்து தாக்கும் வீடியோவானது சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><h2>பழைய வீடியோ</h2><p>ஆனால் அது பழைய வீடியோ என்று விளக்கம் அளிப்பதால் மட்டும் இந்த மனிதாபிமானமற்ற செயல் நியாயமாகிவிடாது. தந்தை வயதுள்ள முதியவரை ஆபாச வார்த்தைகளால் திட்டி, காரில் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று தாக்கி அதனை செல்போனில் வீடியோ எடுத்திருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.</p> <h2> ஒழுங்கு நடவடிக்கை</h2><p>"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று சமத்துவம் பேசும் தவெக-வின் கொள்கை வெறும் முழக்கம் மட்டும் தானா? <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">தமிழக வெற்றிக் கழகம்</a> தலைமை உடனடியாக 'ஜில்லா மணி' மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தமிழக அரசு முதியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கூடுதல் கவனம் செலுத்தி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அ.தி.மு.க.வில் இணைந்த காங்கிரஸ், த.வெ.க. நிர்வாகிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/congress-and-tvk-functionaries-join-aiadmk</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/congress-and-tvk-functionaries-join-aiadmk#comments</comments><guid isPermaLink="false">01917e84-1c57-4895-9c99-d4431de29a2b</guid><pubDate>Tue, 21 Jul 2026 12:06:04 +0000</pubDate><atom:updated>2026-07-21T12:06:04.541Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,TVK,தவெக,Tamilnadu,அதிமுக,Chennai,சென்னை,தமிழகம்,காங்கிரஸ்,Congress,ராயப்பேட்டை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/d9cbgbxa/tvker.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/d9cbgbxa/tvker.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று (21.7.2026 செவ்வாய்க்கிழமை), காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, கன்னியாகுமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் C. ஜெகன்ராஜ், மேல்புறம் வட்டார இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் தானியேல் சிபின் ராஜேந்திரன், விளவன்கோடு தொகுதி மாணவர் காங்கிரஸ் செயலாளர் M.S. அபிஜித், காங்கிரஸ் பளுகல் பேரூராட்சி முன்னாள் செயலாளர் V. விஜின், த.வெ.க-வைச் சேர்ந்த களியக்காவிளை பேரூராட்சி தலைவர் க. சரண், அகில இந்திய கிறிஸ்தவ முன்னேற்ற சேனை மாவட்ட துணைத் தலைவர் பிரேம் ஆனந்த், மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் B. ஆன்றனி ஆகியோர் நேரில் சந்தித்து, தங்களைக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.</p><p>இந்நிகழ்வின்போது, கழக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி, கழகப் பொருளாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் C. சீனிவாசன், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் துணை அமைச்சருமான நாஞ்சில் M. வின்சென்ட், கன்னியாகுமரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் R. ஜெயசுதர்ஷன், முஞ்சிறை மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் K. ஷாஜிகுமார் ஆகியோரும் உடன் இருந்தனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கூறுவதென்ன..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chance-of-rain-in-tamil-nadu-over-the-next-6-days-what-does-the-meteorological-centre-say</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chance-of-rain-in-tamil-nadu-over-the-next-6-days-what-does-the-meteorological-centre-say#comments</comments><guid isPermaLink="false">83263365-d352-47f6-9c61-1e8b4a44ae73</guid><pubDate>Tue, 21 Jul 2026 11:40:06 +0000</pubDate><atom:updated>2026-07-21T11:40:06.957Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழ்நாடு,Chennai,சென்னை,Rain,Weather,வானிலை,Weather News,WeatherUpdate,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,வானிலை ஆய்வு மையம்,வானிலை அறிக்கை,weather condition,வானிலை தகவல்,வானிலை முன்னறிவிப்பு,weather information,Weather Status,வானிலை அறிவிப்பு,weather center,TN Rain</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/y8gjzlyx/raind.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மழை, rain]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/y8gjzlyx/raind.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>வானிலை செய்திகள் (Weather)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. </p><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p> <h2>மழை</h2><p>இதன் காரணமாக <strong>இன்று (21-07-2026):</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>நாளை (22-07-2026):</strong> தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p> <p><strong>நாளை மறுநாள் (23-07-2026):</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>24-07-2026:</strong> வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p> <p><strong>25-07-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>26-07-2026:</strong> கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>27-07-2026:</strong> தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p> <h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</strong></p><p><strong>21-07-2026 முதல் 25-07-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.</p><h2>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</h2><p><strong>21-07-2026 முதல் 25-07-2026 வரை:</strong> உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p> <h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று (21-07-2026):</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p><strong>நாளை (22-07-2026):</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p> <h2>மீனவர்களுக்கான எச்சரிக்கை:</h2><p><strong>தமிழக கடலோரப்பகுதிகள்:</strong></p><p><strong>21-07-2026 முதல் 23-07-2026 வரை</strong>: தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><h2>வங்கக்கடல் பகுதிகள்:</h2><p><strong>21-07-2026:</strong> மத்தியமேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்திய வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><h2>அரபிக்கடல் பகுதிகள்:</h2><p><strong>21-07-2026 முதல் 25-07-2026 வரை:</strong> மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>நீட் தேர்வு குறைந்த பட்ச தகுதி மதிப்பெண் உயர்வு; மாணவர்கள் அதிர்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/neet-minimum-qualifying-score-hike-students-going-for-medical-studies-abroad-affected</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/neet-minimum-qualifying-score-hike-students-going-for-medical-studies-abroad-affected#comments</comments><guid isPermaLink="false">5e12a4c4-08bc-4799-bc54-e0f9a17ff65f</guid><pubDate>Tue, 21 Jul 2026 11:27:21 +0000</pubDate><atom:updated>2026-07-21T11:27:21.700Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நீட் தேர்வு,மதிப்பெண்,NEET,Medical Council,மருத்துவம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/s8k4tvu9/neetexam33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/s8k4tvu9/neetexam33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிப்பதற்கு மாணவ, மாணவிகள் இடையே ஒவ்வொரு ஆண்டும் கடுமையான போட்டி நிலவில் வருகிறது.</p><h2>நீட் தேர்வு </h2><p>இந்த வருடம் சுமார் 22 லட்சம் மாணவர்கள் <a href="https://www.dailythanthi.com/search?q=neet%20exam">நீட் தேர்வு </a>எழுதினார்கள். அதிக மதிப்பெண் பெறக் கூடியவர்களுக்கு மட்டுமே மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது.</p><p>கடந்த ஆண்டு வரை நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் எஸ்.சி,ஓ.பி.சி. பிரிவினருக்கு 113 மதிப்பெண்ணாக இருந்தது. அது தற்போது வெளியாகி உள்ள நீட் மறுதேர்வில் 177 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல ஒ.சி பிரிவினருக்கு தகுதி மதிப்பெண் 144 ஆக இதுவரையில் இருந்தது. அவை தற்போது 213 ஆக உயர்ந்துள்ளது. இதனால் - குறைந்த மதிப் பெண் எடுத்து தேர்ச்சி பெறக்கூடிய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>தகுதி மதிப்பெண் உயர்வு</h2><p>நீட் தேர்வில் தேர்ச்சி என்ற சான்றிதழ் இருந்தால் மட்டுமே வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை படிக்க முடியும். இந்த ஆண்டு நீட் தகுதி மதிப்பெண் திடீரென உயர்த்தப்பட்டு இருப்பதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.</p><p>நீட் தேர்வில் அதிக மதிப் பெண் பெற முடியாத மாணவர்கள் வெளிநாடுகளிலோ அல்லது நிகர்  நிலை பல்கலைக்கழகங்களிலோ சேர்வது வழக்கம். அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பு  இழந்த அந்த மாணவர்கள் ரஷியா, சீனா, பிலிப்பைன்ஸ், ஜார்ஜியா உள்ளிட்ட நாடு களில் மருத்துவ படிப்பில் சேர்வது வழக்கம். ஆனால் தற்போது நீட் தகுதி மதிப்பெண் உயர்த்தப்பட்டதால் வெளிநாடுகளில் சென்று மருத்துவப் படிப்பை தொடர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>இதுகுறித்து வெளிநாடுகளில் படித்த மருத்துவ மாணவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் ஏ.நஜுரூல்</p><p>அமீன் கூறியதாவது:-</p><p>நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் இருந்து வந்த நிலையில் தற்போது அதன் தகுதிமாறா மதிப்பெண்ணையும் மத்திய அரசு உயர்த்தி உள்ளது. மருத்துவ கனவில் உள்ள மாணவர்கள் குறைந்த செலவில் வெளிநாடுகளுக்குச் சென்று படித்து வருகிறார்கள். </p><p>இந்த தகுதி மதிப்பெண் உயர்த்தப்பட்டதன் மூலம் அவர்களின் மருத்துவ கனவு சிதறடிக்கப்படுகிறது. தமிழகத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார்  5 ஆயிரம் மாணவர்கள் மருத்துவ படிப்புகளுக்கு வெளிநாடுகளுக்கு  படிக்க சொல்கிறார்கள். </p><p>ஏற்கனவே பல்வேறு சிரமங்களை சந்தித்து வரும் நீட் மாணவர்களுக்கு இந்த மதிப்பெண் உயர்வு மேலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><h2>மறு பரிசீலனை</h2><p>இந்திய மருத்துவ ஆணையம் இந்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். தகுதி மதிப்பெண்ணை உயர்த்துவதன் மூலம் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய மாண வர்களின் கல்வி தடைப்பட்டுள்ளது. இதை உணர்ந்து மத்திய அரசு நீட் தகுதி மதிப் பெண்ணை குறைக்க வேண்டும். மாணவர்கள் வெளி நாட்டுகளில் படித்து விட்டு மீண்டும் இந்தியாவில் எப்.எம்.ஜி. தேர்வு எழுதும் முறை இருப்பதால் தகுதி மதிப்பெண்ணை குறைக்க வேண்டும். </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-the-day-after-tomorrow-17</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-the-day-after-tomorrow-17#comments</comments><guid isPermaLink="false">6b97cb02-2709-48e7-aadb-703bd87873e2</guid><pubDate>Tue, 21 Jul 2026 10:59:50 +0000</pubDate><atom:updated>2026-07-21T10:59:50.495Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,monthly maintenance work,power outage,மாதாந்திர பராமரிப்பு பணி,மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/0q18w4rf/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/0q18w4rf/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், வள்ளியூர் கோட்டம், களக்காடு துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுநாள் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>வள்ளியூர் கோட்டம்</h2><p>வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>களக்காடு துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (23.7.2026, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணை மின் நிலையத்தில் மின்விநியோகம் தடை செய்யப்படும். இதன் காரணமாக பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் கீழே குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது. </p><h2>காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை</h2><p>களக்காடு நகரம், பெருமாள்குளம், சாலைபுதூர், SN பள்ளிவாசல், மாவடி, டோனாவூர், புலியூர் குறிச்சி, கோதைசேரி, வடமலைசமுத்திரம், கருவேலன்குளம், கோவிலம்மாள்புரம், வடுகச்சிமதில் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் விதிகளை மீறிய தனியார் பேருந்துக்கு ரூ.13,000 அபராதம்: போக்குவரத்து போலீசார் அதிரடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/private-bus-fined-rs13000-for-violating-rules-in-thoothukudi-traffic-police-take-action</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/private-bus-fined-rs13000-for-violating-rules-in-thoothukudi-traffic-police-take-action#comments</comments><guid isPermaLink="false">0e414798-a550-4381-b0de-0ccd4e8a58e6</guid><pubDate>Tue, 21 Jul 2026 10:49:41 +0000</pubDate><atom:updated>2026-07-21T10:49:41.131Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,Thoothukudi,தூத்துக்குடி,fine,அபராதம்,private bus,போலீசார்,தனியார் பேருந்து,traffic violation,போக்குவரத்து விதிமீறல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/n449qp18/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ போக்குவரத்து போலீசார் வாகன சோதனை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/n449qp18/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடியில் போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்பட்ட தனியார் பேருந்துக்கு ரூ.13 ஆயிரம் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">அபராதம்</a> விதித்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><h2>வாகன சோதனை</h2><p>தூத்துக்குடி - திருநெல்வேலி பிரதான சாலையில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே, தூத்துக்குடி மாநகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுனை முருகன் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முடிவைத்தானேந்தல் பகுதியில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த தனியார் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனர்.</p><h2>தனியார் பேருந்துக்கு ரூ.13 ஆயிரம் அபராதம்</h2><p>அந்த பரிசோதனையில் அதிக ஒலி எழுப்பும் 6 ஏர் ஹாரன்கள், 2 ஸ்பீக்கர் பாக்ஸ்கள் பொருத்தியிருந்தது கண்டறியப்பட்டது. அரசு விதிமுறைகளை மீறிப் பேருந்துக்கு கலர் பெயிண்ட் அடித்திருந்தது உள்பட பல்வேறு விதிகளை மீறியது உறுதியானது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் அந்த பேருந்துக்கு ரூ.13 ஆயிரம் அபராதம் விதித்தனர். ஒரு பேருந்துக்கு ரூ.13 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் தனியார் பேருந்து உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நெல் கொள்முதலில் தொடரும் கையூட்டு - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bribery-continues-in-paddy-procurement-anbumani-ramadoss-alleges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bribery-continues-in-paddy-procurement-anbumani-ramadoss-alleges#comments</comments><guid isPermaLink="false">f1730e9f-e565-4351-bf29-be21332b4123</guid><pubDate>Tue, 21 Jul 2026 10:40:24 +0000</pubDate><atom:updated>2026-07-21T10:40:24.068Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,நெல் கொள்முதல்,Paddy procurement,குற்றச்சாட்டு,alleges</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/ryizieme/anubumani.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/ryizieme/anubumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நெல் கொள்முதலில் தொடரும் கையூட்டு : குவிண்டாலுக்கு ரூ.325 பறிக்கப்படுவதை தடுத்து உழவர்களை காப்பாற்ற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் குற்றசாடியுள்ளார். இது தொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-</p><h2>கையூட்டு கொடுமை </h2><p>தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக காவிரி பாசன மாவட்டங்களில் கோடை பருவ அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உழவர்களிடமிருந்து குவிண்டாலுக்கு ரூ.325 வரை கட்டாயமாக கையூட்டு பறிக்கப்படும் கொடுமை இன்னும் தொடர்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.</p><h2>கள ஆய்வு</h2><p> உணவு அமைச்சர் மேற்கொண்ட கள ஆய்விலேயே கையூட்டு வசூலிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதை தடுக்க அரசுத்தரப்பில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாதது கவலையளிக்கிறது.</p><h2>கோடை பருவ நெல் சாகுபடி</h2><p>காவிரி பாசன மாவட்டங்களில் 1.60 லட்சம் ஏக்கரில் கோடை பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. விளைந்த நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணி தீவிரமடைந்திருக்கும் நிலையில், அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்வது தான் உழவர்களுக்கு பெரும் துயரமாக மாறியிருக்கிறது.</p><h2>ஊழல் தொடர்கிறது</h2><p>ஒருபுறம் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கி கிடப்பதால், உழவர்கள் தங்களில் நெல்லை விற்பனை செய்வதற்கு ஒரு வாரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இன்னொருபுறம் கொள்முதல் நிலையங்களில் ஊழல் தொடர்கிறது.</p><h2>குற்றஞ்சாட்டு</h2><p>40 கிலோ எடை கொண்ட நெல் மூட்டையை எடை வைத்து கொள்முதல் செய்வதற்கு கையூட்டாக ரூ.40 முதல் ரூ.60 வரை உழவர்கள் தர வேண்டியுள்ளது. இது தவிர ஒவ்வொரு மூட்டைக்கும் நிர்ணயிக்கப்பட்ட எடையான 40 கிலோவுக்கு பதிலாக கூடுதலாக எடை வைத்து கொள்முதல் செய்வதன் வாயிலாகவும், பதர்களை தூற்றுவதாக கூறி ஒன்றரை கிலோ வரையிலான நெல்லை ஒதுக்குவதன் வாயிலாகவும் 3 கிலோ நெல் கூடுதலாக வாங்கப்படுவதாக உழவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். </p><h2>பெரும் அநீதி</h2><p>இந்த வகையில் மட்டும் ஒரு குவிண்டாலுக்கு ரொக்கமாக ரூ.150, நெல்லாக ரூ.175 என மொத்தம் ரூ.325 கையூட்டாக பறிக்கப்படுகிறது. தனியார் வணிகர்களை விட அரசு கொள்முதல் நிலையங்களில் குவிண்டாலுக்கு அதிகபட்சமாக ரூ.500 முதல் ரூ.600 வரை கூடுதல் விலை கிடைக்கிறது என்பதால் தான் அரசு கொள்முதல் நிலையங்களை தேடி உழவர்கள் வருகிறார்கள். அதற்காக அவர்களை வார கணக்கில் காத்திருக்க வைப்பதும், குவிண்டாலுக்கு ரூ.325 வரை கையூட்டாக பறித்து கொள்வதும் பெரும் அநீதி. </p> <h2>நியாயவிலைக் கடை</h2><p>இதே நிலை தொடர்ந்தால் உழவர்கள் தனியார் வணிகர்களிடம் நெல்லை விற்க தயாராகி விடுவார்கள். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் நியாயவிலைக் கடைகளில் வழங்குவதற்கு அரிசியே கிடைக்காத நிலை உருவாகி விடும்.</p> <h2>ஆய்வு</h2><p>காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதலில் முறைகேடுகள் நடப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை தமிழக அரசு மறுக்க முடியாது. சில நாள்களுக்கு முன் கடலூர் மாவட்டத்தில் இது குறித்து ஆய்வு செய்த உணவுத் துறை அமைச்சர், நெல் விற்பனை செய்த உழவர் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகிறார்.</p> <h2>பணியிடை நீக்கம்</h2><p>கொள்முதலுக்காக கையூட்டு ஏதேனும் கொடுத்தீர்களா? என்று அமைச்சர் கேட்டபோது, எதிர்முனையில் இருந்த உழவர் முட்டைக்கு ரூ.50 கையூட்டு கொடுத்ததாக தெரிவிக்கிறார். இதை தொடர்ந்து உழவரிடம் கையூட்டு வாங்கிய கொள்முதல் நிலைய எழுத்தரை பணியிடை நீக்கம் செய்ய அமைச்சர் ஆணை பிறப்பிக்கிறார். இவற்றைப் பார்க்கும் போது நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழல் நடப்பதைத் தடுக்க வேண்டும் என ஆட்சியாளர்கள் விரும்புவதை புரிந்து கொள்ள முடிகிறது. அது வரவேற்கத்தக்கது. </p><h2>ஊழல் ஒழியப்போவதில்லை</h2><p>கொள்முதல் நிலைய ஊழலுக்கான காரணங்களை கண்டுபிடித்து சரி செய்யாமல் அங்கொன்றும், இங்கொன்றுமாக கடைநிலை ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்வதால் ஊழல் ஒழியப்போவதில்லை; உழவர்களும் பயனடையப் போவதில்லை.</p><h2>சில நியாயங்கள்</h2><p>நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உழவர்களிடமிருந்து கையூட்டு வழங்கப்படுவதற்கு கொள்முதல் நிலையப் பணியாளர்கள் தரப்பில் சில நியாயங்கள் கூறப்படுகின்றன. நெல் கொள்முதல் நிலையங்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்படவில்லை; பணியாளர்களுக்கு போதிய ஊதியமும் வழங்கப்படுவதில்லை. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் தவிர்க்க முடியாத செலவுகளுக்காக நிரந்தர முன்வைப்பு தொகையாக ஒவ்வொரு நிலையத்திற்கும் ரூ.20 ஆயிரம் வழங்கப்பட வேண்டும். ஆனால், அந்தத் தொகை முறையாக வழங்கப் படவில்லை. </p><h2>ஊழலை ஒழிக்க முடியும்</h2><p> நெல் எடை போடும் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ரூ.10 மட்டுமே கூலியாக வழங்கப்படுவது போதுமானது அல்ல என்றெல்லாம் கொள்முதல் நிலையப் பணியாளர்கள் கூறுவதை ஒதுக்கி தள்ளிவிட முடியாது. இதை சரி செய்தால் மட்டும் தான் கொள்முதல் நிலைய ஊழலை ஒழிக்க முடியும்.</p> <h2>ஒழிக்க வேண்டும்</h2><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">நெல் கொள்முதல்</a> நிலைய கையூட்டு கலாச்சாரம் புதிதாக தோன்றியதில்லை. பல ஆண்டுகளாகவே இந்த சுரண்டல் தொடர்கிறது. இதை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே கடந்த தேர்தலில் உழவர்கள் வாக்களித்தனர். அவர்களின் விருப்பத்தை அரசு நிறைவேற்ற வேண்டும். இனியும் தாமதிக்காமல் கொள்முதல் நிலைய சுரண்டல்களை தடுத்து, உழவர்களிடமிருந்து கையூட்டு இல்லாமல் உடனுக்குடன் நெல் வாங்கப்படுவதை அரசு உறுதி செய்யவேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">நெல் கொள்முதலில் தொடரும் கையூட்டு : குவிண்டாலுக்கு ரூ.325 பறிக்கப்படுவதைத் தடுத்து உழவர்களை காப்பாற்ற வேண்டும்! <a href="https://x.com/CMOTamilnadu?ref_src=twsrc%5Etfw">@CMOTamilnadu</a> <a href="https://t.co/Rvxc2FHS6F">pic.twitter.com/Rvxc2FHS6F</a></p>&mdash; Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) <a href="https://x.com/draramadoss/status/2079496726289825875?ref_src=twsrc%5Etfw">July 21, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>நெல்லை இரட்டைக் கொலை- சம்பந்தப்பட்ட கடைசி நபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-double-murder-the-last-person-involved</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-double-murder-the-last-person-involved#comments</comments><guid isPermaLink="false">1dfcda9c-65ed-411d-bd4a-b52d90e67416</guid><pubDate>Tue, 21 Jul 2026 10:36:45 +0000</pubDate><atom:updated>2026-07-21T10:36:45.265Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,arrested,Thirunelveli,18 பேர் கைது,இரட்டைக் கொலை,Nellai double murder</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/iw91nffj/nelllai-double-murder.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ கைது செய்யப்பட்ட கந்தசாமி]]></media:title><media:description type="html"><![CDATA[ நெல்லை இரட்டைக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கடைசி நபரும் கைது செய்யப்பட்டார்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/iw91nffj/nelllai-double-murder.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>நெல்லை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">இரட்டைக் கொலை</a> வழக்கில் சம்பந்தப்பட்ட கடைசி நபரையும் போலீசார் கைது செய்தனர்.</p><h2>முன்விரோதம்</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நெல்லை மாவட்டம்</a> கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மூலச்சி கிராமத்தை சேர்ந்தவர் சித்திரபுத்திரன். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பெருமாள்பாண்டியன் குடும்பத்திற்கும் தெருக்குழாயில் தண்ணீர் பிடித்ததில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக பல ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வருகிறது. இதன் காரணமாக இருதரப்பிலும் 7 கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. </p><p>இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி சித்திரபுத்திரனின் மகன் காளிமுத்து (வயது 40) என்பவர் தனது மகன்களான சின்னத்துரை (15), ஜெயராஜ் (5) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் வீரவநல்லூர் அருகே உள்ள மாதுடையார்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை பின்தொடர்ந்து கார், மோட்டார் சைக்கிள்களில் மர்மநபர்கள் வந்தனர்.</p><h2>கொடூர கொலை</h2><p>காளிமுத்துவின் மோட்டார் சைக்கிள் மீது காரை மோத விட்ட கும்பல், காளிமுத்துவை அரிவாளால் வெட்டி தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தது. கார் மோதியதில் சிறுவன் ஜெயராஜ் உயிரிழந்தான். மர்மநபர்கள் சிறுவன் சின்னத்துரையின் காலிலும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றனர்.</p><p>தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த இரட்டைக்கொலை தொடர்பாக வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தொடர்புடைய பெருமாள்பாண்டியன் தரப்பைச் சேர்ந்த மகேஷ் உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பலரை தேடி வருகின்றனர்.</p><h2>துப்பாக்கி சூடு</h2><p>இந்த நிலையில், நெல்லை இரட்டை கொலை வழக்கில் 12-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட கிருஷ்ணன் என்ற அஜித்தை போலீசார் சுட்டுப்பிடித்தனர். வீரவநல்லூர் வனப்பகுதியில் பதுங்கி இருந்த கிருஷ்ணனை போலீசார் கைது செய்ய முயன்றபோது அவர்களை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதால் துப்பாக்கி சூடு நடந்ததாக கூறப்படுகிறது. இடதுகாலில் காயமடைந்த அஜித் மற்றும் வெட்டுக்காயம் அடைந்த காவலர் பரமசிவம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><h2>கடைசி நபர் கைது</h2><p>வழக்கில் இதுவரை 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் 3 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதையடுத்து இந்த வழக்கின் கடைசி குற்றவாளியான கந்தசாமி என்பவரை போலீசார் கைது செய்தனர். இதன் மூலம் இவ்வழக்கில் கைதானவர்களின் மொத்த எண்ணிக்கை 18-ஆக உயர்ந்தது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கைது</a> செய்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>திருப்பூர்: ஸ்கூட்டர் மீது லாரி மோதி தம்பதி பலி  </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruppur-couple-killed-after-scooter-hit-by-lorry</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruppur-couple-killed-after-scooter-hit-by-lorry#comments</comments><guid isPermaLink="false">df678317-e9a3-4096-ae59-6774bc063700</guid><pubDate>Tue, 21 Jul 2026 10:28:08 +0000</pubDate><atom:updated>2026-07-21T10:28:08.807Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,Tiruppur,திருப்பூர்,தம்பதி பலி,Couple killed</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/yl8pkchd/thiruppur-couple-accident.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ பலியான தம்பதி]]></media:title><media:description type="html"><![CDATA[ திருப்பூர் அருகே ஸ்கூட்டர் மீது லாரி மோதி தம்பதி பலி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/yl8pkchd/thiruppur-couple-accident.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><p>திருப்பூர் அருகே ஸ்கூட்டர் மீது லாரி மோதி தம்பதி பலியாகினர்.</p><h2>விபத்து</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">திருப்பூர் மாவட்டம் </a>காங்கேயம் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 55). இவரது மனைவி பேபி (வயது 47). இந்த தம்பதியினர் இன்று (செவ்வாய்க்கிழமை) தங்களது ஸ்கூட்டியில் காங்கேயம் அருகே உள்ள முக்கிய சாலையில் சென்று கொண்டிருந்தனர். </p><p>அப்போது இவர்களுக்குப் பின்னால் அதிவேகமாக வந்த கனரக லாரி ஒன்று, எதிர்பாராத விதமாக இவர்களது ஸ்கூட்டியின் மீது பயங்கரமாக மோதியது.</p><h2>தம்பதி உயிரிழப்பு</h2><p>இந்தக் கடுமையான மோதலின் தாக்கத்தால், அண்ணாமலை மற்றும் பேபி ஆகிய இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதையடுத்து 2 பேர் மீதும் லாரியின் சக்கரங்கள் ஏறி இறங்கின. இதில் உடல் நசுங்கி, தம்பதியினர் இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விபத்து</a> குறித்துத் தகவல் அறிந்து காங்கேயம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் உயிரிழந்த தம்பதியினரின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.</p><p>மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே விபத்தில் கணவன், மனைவி இருவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வுக்கு எதிராக எழுப்பப்படும் குரல்களை ஒடுக்குவதா..? - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/suppressing-voices-raised-against-the-neet-exam-udhayanidhi-stalin-condemns-the-move</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/suppressing-voices-raised-against-the-neet-exam-udhayanidhi-stalin-condemns-the-move#comments</comments><guid isPermaLink="false">abde780d-75ac-4cc1-8a77-229f1182ab9d</guid><pubDate>Tue, 21 Jul 2026 10:26:33 +0000</pubDate><atom:updated>2026-07-21T10:26:33.827Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,திமுக,DMK,தமிழகம்,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,தமிழக அரசு,TN govt,நீட் தேர்வு,NEET Exam,NEETExam,NEET,நீட்,தெருக்குரல் அறிவு,Singer Therukural Arivu,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/hqd5xjdz/mas.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/hqd5xjdz/mas.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>நீட் தேர்வை ரத்து செய்ய கோரி டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி, லத்தியால் தாக்கியது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.</p> <h2>தெருக்குரல் அறிவு</h2><p>இந்த சூழலில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. இதில் தமிழகத்தில் தலைமைச் செயலகம் முன்பு ராப் பாடகர் தெருக்குரல் அறிவு நீட் தேர்வுக்கு எதிராக முதல்-அமைச்சர் குரல் கொடுக்க வலியுறுத்தி கோஷமிட்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்ற நிலையில் மீண்டும் தலைமை செயலகத்துக்கு அழைத்து வந்தனர். இந்தசூழலில் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a>யை சந்தித்து தெருக்குரல் அறிவு பேசினார். </p><h2>உதயநிதி ஸ்டாலின்</h2><p>இந்நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- </p><p>நீட் (NEET) தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுத்ததற்காக, ராப் பாடகரும் எனது அன்புச் சகோதரருமான 'தெருக்கூரல் அறிவு' (Therukkural Arivu) அவர்களை கைது செய்துள்ள, விஜய் தலைமையிலான தமிழக அரசை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.</p><p>அவரது குரல் தமிழ்நாடு மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களின் உணர்வுகளையும் கோரிக்கைகளையும் பிரதிபலிக்கிறது.</p> <h2>தவெக அரசு</h2><p>நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான பேரணிகளும் போராட்டங்களும் தீவிரமடைந்து வரும் வேளையில், அறிவு அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையை தவெக (TVK) அரசு மேற்கொண்டுள்ளது.</p><p>நீட் தேர்வை எதிர்த்து டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாகத் தாங்களும் களமிறங்கத் திட்டமிட்டுள்ள தமிழக இளைஞர்களுக்கு, இது ஒரு கவலையளிக்கும் செய்தியை அளிக்கிறது.</p><h2>மோசடி</h2><p>நீட் தேர்வு முறைகேடுகளால் நிறைந்தது மட்டுமல்ல; அது ஒரு மிகப்பெரிய மோசடியாகவும் மாறியுள்ளது.</p><p>நீட் தேர்வுக்கு எதிராக எழுப்பப்படும் குரல்கள் கேட்கப்பட வேண்டுமே தவிர ஒடுக்கப்படக் கூடாது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I strongly condemn the TN Government led by <a href="https://x.com/actorvijay?ref_src=twsrc%5Etfw">@actorvijay</a> for arresting rap singer and my dear brother ‘Therukkural’ Arivu for speaking out against NEET.<br><br>His voice reflects the sentiments and demands of not just Tamil Nadu, but millions of people across India.<br><br>At a time when the… <a href="https://t.co/aIJyzewZAC">pic.twitter.com/aIJyzewZAC</a></p>&mdash; Udhay (@Udhaystalin) <a href="https://x.com/Udhaystalin/status/2079502309768200605?ref_src=twsrc%5Etfw">July 21, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>பனை தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/palm-oil-worker-commits-suicide-by-hanging</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/palm-oil-worker-commits-suicide-by-hanging#comments</comments><guid isPermaLink="false">7c80c7a4-7367-482f-bc5e-3c050610e724</guid><pubDate>Tue, 21 Jul 2026 10:09:26 +0000</pubDate><atom:updated>2026-07-21T10:09:26.304Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தூத்துக்குடி,Suicide by hanging,தூக்குப்போட்டு தற்கொலை,vilathikulam,விளாத்திகுளம்,மரம்,tree,Thuthukudi,பனை தொழிலாளி,palm worker</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/zgc63ktw/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பனை தொழிலாளி மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/zgc63ktw/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே கல்குமி கிராமத்தில் பனை ஏறும் தொழிலாளி மரத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">தூக்குப்போட்டு தற்கொலை</a> செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>பனை ஏறும் தொழிலாளி</h2><p>தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள கல்குமி கிராமத்தை சேர்ந்த பெத்திலேகமணி மகன் சாலமோன்ராஜா (வயது 66). <a href="https://www.dailythanthi.com/topic/தொழிலாளி">பனை ஏறும் தொழிலாளியான இவர்</a> தனது மனைவி ஐனீஷ்மரியாளுடன் கிராமத்தில் வசித்து வந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். வழக்கம் போல் பனை தொழிலுக்கு சென்ற சாலமோன்ராஜா, மதிய உணவிற்காக நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி ஐனீஷ்மரியாள் அவரை தேடி பனை தோப்பிற்கு சென்றுள்ளார்.</p><h2>தூக்குப்போட்டு தற்கொலை</h2><p>அப்போது சாலமோன்ராஜா மரத்தில் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்டிருப்பதை கண்டு அவரது மனைவி அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த விளாத்திகுளம் காவல்துறையினர், அவரது உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>பெரம்பூர் அறிவியல் தொழில்நுட்பப் பூங்கா: மேயர் பிரியா பள்ளி மாணவர்களுடன் பார்வையிட்டார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/perambur-science-and-technology-park-mayor-priya-visits-with-school-students</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/perambur-science-and-technology-park-mayor-priya-visits-with-school-students#comments</comments><guid isPermaLink="false">f1269a73-9d6e-416a-9179-7e7b1a67187a</guid><pubDate>Tue, 21 Jul 2026 09:47:10 +0000</pubDate><atom:updated>2026-07-21T09:47:10.347Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Mayor Priya,Chennai Corporation,School students,பள்ளி மாணவர்கள்,visits,பார்வையிட்டார்,மாநகராட்சி மேயர் பிரியா,அறிவியல் தொழில்நுட்பப் பூங்கா,Science and Technology Park</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/i670edzh/Untitled-2.jpg" width="753"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெரம்பூர் அறிவியல் தொழில்நுட்பப் பூங்கா: மேயர் பிரியா பள்ளி மாணவர்களுடன் பார்வையிட்டார்  ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/i670edzh/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பெருநகர <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை மாநகராட்சி மேயர் பிரியா</a>, பெரம்பூர், முரசொலிமாறன் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் தொழில்நுட்பப் பூங்காவினை சென்னை பள்ளி மாணவர்களுடன் பார்வையிட்டார்.</p><h2>அறிவியல் தொழில்நுட்பப் பூங்கா</h2><p>பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, இன்று பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு-74க்கு உட்பட்ட, பெரம்பூர் நெடுஞ்சாலையில் உள்ள முரசொலிமாறன் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் தொழில்நுட்பப் பூங்காவில் (STEM Park) உள்ள டிஜிட்டல் கோளரங்கம், அறிவியல் சார்ந்த உபகரணங்களை சென்னை பள்ளி மாணவர்களுடன் பார்வையிட்டார். </p><h2>ரூ.5.75 கோடி மதிப்பீடு</h2><p>இந்த பூங்காவானது மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் ரூ.5.75 கோடி மதிப்பீட்டில் 11,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் டிஜிட்டல் கோளரங்கம், நிறை மற்றும் மந்தநிலை (Mass and Inertia), வாட்டர் ஜெட் எரிபொருள், காந்தத்துடன் விளையாடுதல், சைன் அலை, சைக்ளோடிகல் பாதை (Cyclodical Path), நியூட்டனின் 3-வது விதி, படிக அமைப்பு, கணித சிற்பம், டி.என்.ஏ. மாதிரி, 3டி ஊசல் காசியன் தேற்றம், ஹைப்சோமீட்டர், ப்ரிஹோமேசியன் கியர் ரயில், சோலார் வாட்டர் ஹீட்டர், சூரிய சக்தியில் இயங்கும் ரேடியோ, இசைக் குழாய்கள், அலை இயக்கம், சந்திராயன், மங்கள்யான் உள்ளிட்ட அறிவியல் சார்ந்த உபகரணங்களை சென்னை பள்ளி மாணவர்களுடன் மேயர் பிரியா பார்வையிட்டார்.</p><h2>அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்</h2><p>இதனைத் தொடர்ந்து, பூங்காவில் பசுமைப் பரப்பினை அதிகரிக்கும் வகையில் மேயர் மரக்கன்றினை நட்டார். பின்னர், பூங்காவினை பராமரித்திடவும், சென்னை பள்ளி மாணவர்களை தினசரி அறிவியல் தொழில்நுட்ப பூங்காவிற்கு கல்விச் சுற்றுலா போல் அழைத்து வருமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மண்டல அலுவலர் சொக்கலிங்கம் மற்றும் அலுவலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய்யுடன் பாடகர் அறிவு சந்திப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/singer-arivu-meets-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/singer-arivu-meets-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">f31cd668-4eb8-43f9-ba9e-c4cab634db7f</guid><pubDate>Tue, 21 Jul 2026 09:39:31 +0000</pubDate><atom:updated>2026-07-21T09:39:31.415Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நீட் தேர்வு,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,பாடகர் அறிவு,Singer Arivu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/1jgop8xm/ari.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/1jgop8xm/ari.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னை தலைமைச் செயலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பாடகர் அறிவு, போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது முதல்-அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">விஜய்</a>யை சந்தித்திருக்கிறார். </p><h2>நீட் தேர்வு</h2><p>நாடு முழுவதும் நீட் (NEET) தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் மற்றும் மாணவர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, இன்று சென்னை தலைமைச் செயலகம் முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட பாடகர் அறிவு, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினார்.</p><h2>கைது </h2><p>இதையடுத்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி போலீசார் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><h2>முதல்-அமைச்சர் விஜய்யுடன் சந்திப்பு</h2><p>இந்நிலையில், விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பாடகர் அறிவு தற்போது சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்திருக்கிறார். </p>]]></content:encoded></item><item><title>புத்தகப் பை சுமை இனி குறைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன் சொன்ன முக்கிய தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/book-bag-burden-to-be-reduced-henceforth-key-information-given-by-minister-rajmohan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/book-bag-burden-to-be-reduced-henceforth-key-information-given-by-minister-rajmohan#comments</comments><guid isPermaLink="false">467eeadb-8ce9-41d9-8443-57b101b4cfa2</guid><pubDate>Tue, 21 Jul 2026 09:12:36 +0000</pubDate><atom:updated>2026-07-21T09:12:36.848Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,education,tngovt,மாணவர்கள்,புத்தகப்பை,கல்வித்துறை,Department of Education,Rajmohan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/y63bvbla/rajmogan33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ராஜ்மோகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/y63bvbla/rajmogan33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்த நொடி முதல் தமிழ்நாட்டின் கல்வி மாறப்போகிறது என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.</p><p>சென்னை கொரட்டூரில் பள்ளி பாடத்திட்ட மாற்றம் குறித்த ஆலோசனைக்கு பிறகு அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><h2>கதைகளின் வழியே கணிதம்</h2><p>படிக்கும் காலத்தில் கணிதம் வராமல் அதிகமாக அடி வாங்கி உள்ளேன். கடினமான கணிதம் இனி கதைகளின் வழியே எளிமையாக கற்பிக்கப்படும். அறிவியல், தொழில்நுட்பம், கலை என அனைத்தும் ஒருங்கிணைந்த Steam Education கற்பிக்கப்படும். குழந்தைகளை மையப்படுத்தி கல்வியாக மாற்றி அமைக்கப்படும். அனைவருக்குமான கல்வியாக இருக்கும்.</p><p>கதைகளின் வழியே கணிதத்தை கற்பிக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றப்படும்.  குழந்தைகளுக்கான கல்வியாக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழ்நாடு கல்வி முறை</a>யை மாற்ற இருக்கிறோம்.அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை, கணிதத்தை இணைத்து புதிய கல்விமுறை நடைமுறைப்படுத்தப்படும். </p><h2>புத்தக சுமை குறைகிறது</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் என்னை அமெரிக்கா அனுப்பி பலவற்றை ஆய்வு செய்து வரச் சொன்னார். அங்கே முழுக்க STEM எஜுகேஷன்தான். STEM எஜுகேஷன் என்பது Science, Technology, Engineering &amp; Mathematics</p><p>தமிழ்நாட்டில் இன்னும் ஒரு படி மேலே போய், STEM எஜுகேஷனில் இருந்து STEAM எஜுகேஷன் என்ற அப்ரோச் நோக்கி நகர்றோம். இது என்ன STEAM எஜுகேஷன்? S-T-E-A-M, அதாவது Science, Technology, Engineering உடன் Arts கலையையும் சேர்த்து Mathematics சேர்க்கிறோம்"</p><p>ஸ்டீம் கல்வி முறைக்கு தமிழ்நாடு மாற இருக்கிறது. பள்ளிகளில் ப்ராம்பட் இன்ஜினீரிங் கற்றுத்தரப்படும். </p><p>ஏஐ தொழில்நுட்பத்தை எப்படி பயன்படுத்துவது என்பது பள்ளிகளில் கற்றுத்தரப்படும்.  இந்த நொடி முதல் தமிழ்நாட்டின் கல்வி மாறுகிறது. கற்றலை இனிமையான அனுபவமாக மாற்றுவோம்.மாணவர்களின் புத்தகப் பை சுமை இனி குறைக்கப்படும்; பாடப்புத்தகங்கள் வண்ணப்பட புத்தகங்களாக மாறும்.</p><h2>எல்லாம் மாறுது.. கல்வியும் மாறுது</h2><p>எந்த அளவிற்கு புத்தகப்பை சுமை குறைகிறதோ அந்த அளவிற்கு மாணவர்களின் மனச்சுமை குறையும்.</p><p>நிலாவிற்கு சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங் கூட குறைவாகத்தான் சுமை எடுத்துச்சென்றிருப்பார்; அதனைவிட பள்ளி மாணவர்கள் அதிகம் சுமக்கின்றனர்.</p><p>முன்பு நிலாவைக் காட்டி சோறூட்டிக் கொண்டிருந்தோம். இன்று நிலாவிற்கே சந்திராயனை ஓட்டிவிட்டார்கள். முன்பு வாசலில் தள்ளுவண்டியில் பொருட்களை விற்பனை செய்வார்கள். இன்று ஷாப்பிங் மால்களில் தள்ளுவண்டியை (ட்ராலி) நம்ம கையில கொடுத்துட்டாங்க. உணவு பழக்கவழக்கம் மாறிவிட்டது. நடையுடை பாவனை மாறிவிட்டது. எல்லாம் மாறிவிட்டது. காலம் மாறிவிட்டது. இந்த நொடி முதல் தமிழ்நாட்டின் கல்வியும் மாறுகிறது.</p><h2>பெற்றோரை மதிக்கும் வகையில் புதிய பாடத்திட்டம்</h2><p>மாணவர்களின் மனச்சுமையை குறைக்கும் புதிய பாடத்திட்டம் அறிமுகம். புத்தகங்கள் இனி படங்கள் நிறைந்ததாக இருக்கும். புத்தக சுமை குறையும்போது மனச்சுமையும் குறையும்.பெற்றோரை மதிக்கும் கல்வியாக புதிய பாடத்திட்டம் அமையும்</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>
நீட் தேர்வுக்கு எதிராக சென்னை தலைமைச் செயலகத்திற்குள் புகுந்து போராட முயற்சி - பாடகர் தெருக்குரல் அறிவு கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/protest-demanding-the-cancellation-of-the-neet-exam-singer-arivu-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/protest-demanding-the-cancellation-of-the-neet-exam-singer-arivu-arrested#comments</comments><guid isPermaLink="false">48867152-688b-4756-b490-7ceef477830d</guid><pubDate>Tue, 21 Jul 2026 08:55:35 +0000</pubDate><atom:updated>2026-07-21T08:55:35.889Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>போராட்டம்,நீட் தேர்வு,தலைமைச் செயலகம்,NEET,பாடகர் அறிவு,Singer Arivu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/toecrph6/ari.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/toecrph6/ari.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னை தலைமைச் செயலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பாடகர் அறிவு</a> கைது செய்யப்பட்டுள்ளார். </p><h2>நீட் தேர்வு</h2><p>நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பல்வேறு அமைப்புகள் மற்றும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பாடகர் அறிவு இன்று சென்னை தலைமைச் செயலகம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.</p><h2>போராட்டம் </h2><p>நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பிய அவர், தலைமைச் செயலகத்திற்குள் புகுந்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.</p><h2>பாடகர் அறிவு கைது</h2><p>பின்னர், தலைமைச் செயலகத்திற்குள் அனுமதியின்றி புகுந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக கூறி பாடகர் அறிவுவை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>பெரம்பூர் தொகுதி வெற்றி: முதல்-அமைச்சர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/perambur-constituency-victory-high-court-orders-notice-to-be-sent-to-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/perambur-constituency-victory-high-court-orders-notice-to-be-sent-to-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">d5dcf942-03be-428f-a6f6-40aadea5fb16</guid><pubDate>Tue, 21 Jul 2026 08:27:16 +0000</pubDate><atom:updated>2026-07-21T08:27:16.192Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Perambur,பெரம்பூர் தொகுதி,CM Vijay,Perambur constituency</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/a8kssccr/CHENNAI-15.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/a8kssccr/CHENNAI-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு</h2><p>நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய் 1,20,365 வாக்குகளைப் பெற்று 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் 66,650 வாக்கு பெற்றிருந்தார்.</p><p>பெரம்பூர் தொகுதியில் முதல்-அமைச்சர் விஜய் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் தொகுதி வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்தனர்.</p><h2>முதல்-அமைச்சர் விஜய்க்கு நோட்டீஸ்</h2><p>திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் தாக்கல் செய்திருந்த தேர்தல் வழக்கில், “வேட்பு மனுவில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கி இருப்பதாகவும். சொத்துக்கள் விவரங்கள் மற்றும் வழக்குகள் விவரங்கள் முறையாக தெரிவிக்கவில்லை என்பதால் விஜய்யின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த வழக்கு, நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள முதல்-அமைச்சர் விஜய், தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ் சென்றடையவில்லை என, ஆர்.டி.சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதி முதல்-அமைச்சர் விஜய், தேர்தல் அதிகாரி உள்ளிட்டோருக்கு புதிதாக நோட்டீஸ் அனுப்ப  உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.</p>]]></content:encoded></item><item><title>கேரளக் கழிவுகளை உடனடியாக திருப்பி அனுப்புங்கள்; தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/send-back-kerala-waste-immediately-nayinar-nagendran-urges-tamil-nadu-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/send-back-kerala-waste-immediately-nayinar-nagendran-urges-tamil-nadu-government#comments</comments><guid isPermaLink="false">1634ab96-c841-4953-9200-218661d60c58</guid><pubDate>Tue, 21 Jul 2026 07:58:04 +0000</pubDate><atom:updated>2026-07-21T07:58:04.769Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Kerala,Tamil Nadu Government,தமிழக அரசு,Nayinar Nagendran,waste,கழிவுகள்,கேரளம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/2q41n5bg/nainar.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/2q41n5bg/nainar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>தென்காசி கீழக்கடையத்தில் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலத்தில் சுமார் 10 டன் எடையுள்ள கேரளக் கழிவுகள் கொட்டப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டை குப்பைத் தொட்டியாக நினைக்கும் அண்டை மாநிலத்தின் போக்கையும், அதைத் தடுக்கத் தவறிய தவெக அரசின் மெத்தனத்தையும் வன்மையாக கண்டிக்கிறேன்.</p><h2>10 டன் கழிவுகள்</h2><p>இங்கு வீசப்பட்டுள்ள மூட்டைகளில் மலையாள எழுத்துகளும், கேரள வாகன எண்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பிளாஸ்டிக், மின்னணுக் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">கழிவுகள்</a> (e-waste) மற்றும் காலாவதியான மருந்து மாத்திரைகளால் ஜம்பு நதியும், விளைநிலங்களும், நிலத்தடி நீரும் மாசடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எல்லைக் கண்காணிப்பிலும், கோவில் நிலங்களைப் பாதுகாப்பதிலும் தவெக அரசு முற்றிலும் தோல்வியடைந்துள்ளதையே இந்தச் சம்பவம் காட்டுகிறது.</p><p>எனவே, இந்த 10 டன் கழிவுகளையும் உடனடியாகக் கேரளாவிற்கே திருப்பி அனுப்ப அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்றும், சட்டவிரோதக் கழிவுகளைக் கொட்டுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தவெக அரசின் ஆணவத்திற்கு மக்கள் முடிவுகட்டுவர்: மு.க.ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/people-will-put-an-end-to-the-arrogance-of-the-tvk-government-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/people-will-put-an-end-to-the-arrogance-of-the-tvk-government-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">47fb021f-2292-4734-802f-cce3fbe4a480</guid><pubDate>Tue, 21 Jul 2026 07:37:04 +0000</pubDate><atom:updated>2026-07-21T07:37:04.965Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,M.K.Stalin,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/k5yyw044/CHENNAI-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/k5yyw044/CHENNAI-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முதல்-அமைச்சர் விஜய் பற்றி அவதூறாக பேசியதாக விளாத்திகுளம் தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதனையடுத்து நீதிபதி வருகிற 3-ந் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி, மார்க்கண்டேயனை போலீசார் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.</p><p>திமுக எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டதை கண்டித்து அக்கட்சி நிர்வாகிகள் பலரும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். <strong>அந்த வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-</strong></p><p>ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை எல்லாம் கிரிமினல் சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்தி அடக்கிடப் பார்க்கும் த.வெ.க. அரசின் போக்கைக் கடுமையாகச் சாடியுள்ளது தனியார் ஆங்கில நாளிதழின் இன்றைய தலையங்கம்.</p><p>நம் முதல்-அமைச்சருக்குப் புரிவதுபோல சொல்ல வேண்டுமென்றால், இந்தியா முழுவதும் வெளியாகும் பத்திரிகையின் நடுப்பக்கம் அவரது தலையில் நங்கு நங்கென்று குட்டியிருக்கிறது. ஆட்சியின் அலங்கோலங்களை எல்லாம் கைது நடவடிக்கைகளால் சரிக்கட்டி விடலாம் என்று இந்த அரசு எண்ணினால் மக்களே அந்த ஆணவத்துக்குச் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கல்குவாரிகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தி  சாகும் வரை உண்ணாவிரதத்தை துவக்கிய விவசாயி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmer-begins-hunger-strike-to-demand-permanent-closure-of-quarries</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmer-begins-hunger-strike-to-demand-permanent-closure-of-quarries#comments</comments><guid isPermaLink="false">865efacc-ff8c-4886-ab3a-e40b71c814a8</guid><pubDate>Tue, 21 Jul 2026 07:35:40 +0000</pubDate><atom:updated>2026-07-21T07:35:40.930Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கல்குவாரி,farmer,விவசாயி,பொள்ளாச்சி,Pollachi,உண்ணாவிரதம்,quarries</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/4o4parz1/64.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/4o4parz1/64.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பொள்ளாச்சி,  </p><p>பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு பகுதியில் உள்ள அனைத்து கல்குவாரிகளையும் நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயி ஒருவர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.</p><p>பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கடவு ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் 40க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. அரசின் அனுமதி காலம் முடிந்த நிலையிலும் சில குவாரிகள் முறைகேடாக இயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவையும் மீறி வெடிவைத்து கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாக விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர். அதோடு இந்த குவாரிகளால் நிலத்தடி நீர்மட்டம் பாதித்து கிணறுகளில் நீர் வற்றி விவசாயம் பாதிப்பதாகவும்  கனிம வளத்துறை மற்றும் வருவாய் துறை உயர் அதிகாரிகளுக்கு விவசாயிகள் அடிக்கடி புகார் மனுவும் அனுப்பி வருகின்றனர்.</p><h2>சாகும் வரை உண்ணாவிரதம்</h2><p>இந்நிலையில் நம்பர் 10 முத்தூரைச் சேர்ந்த விவசாயி முருகானந்தம், கல்குவாரிகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக கூறி நேற்று தனது போராட்டத்தை துவக்கினார். இது குறித்து முருகானந்தம் செய்தியாளர்களிடம் கூறுகையில், கிணத்துக்கடவு வட்டாரத்தில் அனுமதி பெற்றும், அனுமதியின்றியும் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த குவாரிகளில் அதிக அளவு வெடிபொருட்கள் பயன்படுத்தி கற்கள் வெட்டி எடுப்பதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கிறது. கிணறுகளில் நீர் வற்றி விவசாயம் பெரிதும் பாதிக்கிறது. இது குறித்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து புகார் மனு கொடுத்து வருகிறோம்.</p><h2>நடவடிக்கை</h2><p>ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது புதிதாக பொறுப்பேற்ற அரசிடமும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">குவாரிகள்</a> மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு கொடுத்தோம். தலைமைச் செயலர் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் உள்ளிட்டோரிடம் புகார் மனு கொடுத்தோம். நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக அவர்களும் உறுதி அளித்தனர். ஆனால் இங்குள்ள மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர், தாசில்தார் உள்ளிட்டோர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர்.</p><p>கிணறுகளில் நீர் வற்றி விவசாயம் பாதித்த நிலையில், தற்போது குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே கிணத்துக்கிடவு வட்டாரத்தில் உள்ள ஒட்டுமொத்த குவாரிகளையும் நிரந்தரமாக மூட வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். தகவல் அறிந்து வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து முருகானந்தம் மற்றும் விவசாயிகளிடம்  பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது: சபாநாயகர் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-mla-markandeyan-arrested-speaker-explains</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-mla-markandeyan-arrested-speaker-explains#comments</comments><guid isPermaLink="false">a964b202-2614-4c9d-a88a-2f164d081cbb</guid><pubDate>Tue, 21 Jul 2026 07:24:05 +0000</pubDate><atom:updated>2026-07-21T07:24:05.639Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,DMK MLA,திமுக எம்.எல்.ஏ.,சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்,Speaker J.C.T. Prabhakar,மார்க்கண்டேயன்,Markandeyan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/kg5q4rxl/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/kg5q4rxl/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது தொடர்பாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கம் அளித்து கூறியதாவது:-</p><p>பேரவை தலைவரை கேட்டுவிட்டுதான் கைது செய்ய வேண்டும் என்கிற விதி இல்லை. 291-வது விதி என்ன சொல்கிறது என்றால்.. “பேரவைத் தலைவர் முன் அனுமதியின்றி எவரையும் பேரவை அமைப்பு எல்லைக்குள் கைது செய்யக்கூடாது. அதைபோன்று உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தின் கட்டளையையோ, அறிவிப்பையோ பேரவை தலைவர் முன் அனுமதியின்றி பேரவையின் அமைப்பு எல்லைக்குள் சேர்ப்பித்தல் கூடாது.</p><p>அமைப்பு எல்லை என்பது சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பொதுமக்களும் தெரிய வேண்டும் என்பதை கடமையாக கருதுகிறேன். பேரவையின் அமைப்பு எல்லை என்பது சட்டமன்ற உறுப்பினர்களை பொறுத்தவரை பேரவை மண்டபம், அதன் புறக்கூடங்கள், அதனை சார்ந்த அலுவலகங்கள், அமைச்சர்களின் அறைகள், நூலகம், சிற்றுண்டி சாலை, தலைமை செயலகத்தில் உள்ள குழுக்கள் கூடும் அறை, அண்ணா சாலை அரசினர் தோட்டத்தில் உள்ள உறுப்பினர் குடியிருப்புக்குள் உள்ள குழுக்கள் கூடும் அறை, நூலகம் மற்றும் பேரவை தலைவரால் அவ்வப்போது குறிப்பிடப்படும் இடங்கள் உள்ளிட்ட அனைத்தும் பொருந்தும்.</p><p>வெளியே நடைபெறும் சம்பவங்களில் கைது செய்ய பேரவைத் தலைவரின் அனுமதி தேவையில்லை. திமுக எம்.எல்.ஏ.வை கைது செய்த உடன் அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எனக்கு தகவல் தெரிவித்தார். 24 மணி நேரத்திற்கு மேல் காவலில் வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், நான் முறையாக மற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்; அதன்படி அனைத்து உறுப்பினர்களுக்கும் மார்க்கண்டேயன் கைது குறித்து தகவல் தெரிவிக்கப்படும்.</p><p>பேரவை தலைவரை பொறுத்தவரைக்கும் என் கவனத்திற்கு இந்த பிரச்சினை கொண்டு வரப்படுமானால் என்ன நடவடிக்கை எடுக்கலாம்? எந்த காலக்கட்டத்தில் எடுக்கலாம்? என்பது பற்றி நான் முக்கியமாக முடிவு எடுப்பேன். என்னிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால் அதை முறையாக சட்டவிதிகளுக்கு உட்பட்டு, சபை விதிகளுக்கு உட்பட்டு நிச்சயமாக நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-guruvayur-express-train-service</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-guruvayur-express-train-service#comments</comments><guid isPermaLink="false">d0cfbbba-d8f6-4cbf-afeb-473ecf8859d7</guid><pubDate>Tue, 21 Jul 2026 07:14:42 +0000</pubDate><atom:updated>2026-07-21T07:14:42.758Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>ரெயில் சேவை,train service,குருவாயூர் எக்ஸ்பிரஸ்,Guruvayur Express</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/fbcmybmb/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/fbcmybmb/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>திருச்சி கோட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், திருச்சி வழியாக செல்லும் ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம்; </p><p>மாற்றுப்பாதையில்... </p><p>நாகர்கோவில் -மும்பை சி.எஸ்.டி.எம். எக்ஸ்பிரஸ் ரெயில் (16352) வரு கிற 23,26 மற்றும் 30-ந்தேதிகளிலும், கன்னியாகுமரி ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12666) வருகிற 25-ந்தேதியிலும், கன்னியாகுமரி-ஐதராபாத் எக்ஸ்பிரஸ் ரெயில் (17070) வருகிற 24 மற்றும் 31-ந்தேதிகளிலும், செங்கோட்டை - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (16848) வருகிற 23,24,25,26,27,28,30,31-ந்தேதிகளிலும் மதுரை, மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி வந்து செல்லும். </p><p>இதேபோல் குருவாயூர் சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128) வருகிற 22,23,24,25,26,27,29,30,31-ந்தேதிகளில் மதுரை சந்திப்பை தவிர்த்து விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி வந்து செல்லும். </p><p>மேலும், மதுரை பிகானேர் அனுவ்ரத் ஏசி அதிவிரைவு ரெயில் (22631) வருகிற 23-ந்தேதியில் மதுரையில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி வந்து செல்லும். கடலூர் துறைமுகம் -மைசூர் எக்ஸ்பி ரஸ் ரெயில் (16231) வருகிற 31-ந்தேதி கார்மேலாரம், பையப்பனஹள்ளி கேபின், பானஸ்வாடி, யஷ்வந்த்பூர் கேபின், சிக்பானவர், ஹசன் வழி யாக திருப்பி விடப்படும்.</p><p>காரைக்குடி திருச்சி பாசஞ்சர் ரெயில் (56832) நாளை (புதன்கிழமை) முதல் 31-ந்தேதி வரை காரைக்குடியில் இருந்து 25 நிமிடம் தாமதமாக காலை 10.15 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும். இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்து உள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>