<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 01 Sep 2026 14:30:15 +0000</lastBuildDate><item><title>அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா ஏற்புக்கு எதிரான வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-against-the-acceptance-of-aiadmk-mlas-resignations-verdict-reserved-without-a-date</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-against-the-acceptance-of-aiadmk-mlas-resignations-verdict-reserved-without-a-date#comments</comments><guid isPermaLink="false">6ff367ca-b065-40eb-b429-b8a8d09cbf85</guid><pubDate>Tue, 01 Sep 2026 14:29:10 +0000</pubDate><atom:updated>2026-09-01T14:29:10.426Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை ஐகோர்ட்டு,Chennai Highcourt,Case,வழக்கு,Resignation,ராஜினாமா கடிதம்,அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்,AIADMK MLAs</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/yged4op9/highcourt.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/yged4op9/highcourt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் உள்ளதால் அதிமுக-வைச் சேர்ந்த ஆறு எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்குகளின் தீர்ப்பை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D">சென்னை ஐகோர்ட்டு</a>, தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.</p><h2>விசாரணை</h2><p>த.வெ.க. தலைவர் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்போது கொறடா உத்தரவை மீறி, த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆறு பேருக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்தபோது, அவர்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, அ.தி.மு.க. கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள், தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது, அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கிரி மற்றும் எஸ்.ஆர். ராஜகோபால் ஆகியோர், இந்த வழக்கில் சபாநாயகர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ராஜினாமா செய்தவர்களிடம் சுயமாக பதவி விலகினார்களா என விசாரணை நடத்தி, திருப்தியடைந்த பின், ஏற்றுக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>குதிரை பேரம்</h2><p>ஆனால், இந்த விசாரணை என்பது வெறும் சம்பிரதாயம் அல்ல. அரசியல் சாசன கடமை. அர்த்தமுள்ள எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை எனக் குறிப்பிட்டனர். ராஜினாமா கடிதங்களை அளித்த சில நிமிடங்களில், தலைமைச் செயலகத்தில் அமைச்சரை சந்தித்து தவெக-வில் இணைந்திருக்கின்றனர். ஆனால் இது சம்பந்தமாக சபாநாயகர் முழுமையான விசாரணை நடத்தாமல், ராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ளார். ராஜினாமாவை ஏற்கும் முன், தகுதி நீக்க புகார் அளித்த மனுதாரரான அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு எந்த நோட்டீசும் அனுப்பப்படவில்லை. குதிரை பேரம் நடந்துள்ளது குறித்து ஆளுநருக்கும் புகார் அளிக்கப்பட்டது எனச் சுட்டிக்காட்டினர்.</p><p>சபாநாயகர் தரப்பில் ஆஜரான சி.எஸ். வைத்தியநாதன் ராஜினாமா ஏற்றுக் கொண்டதால் தகுதி நீக்க நடவடிக்கை இல்லாமல் ஆகிவிடாது. ராஜினாமாவை ஏற்றது சட்டப்படி செல்லுபடியானதுதான். ஒரு எம்.எல்.ஏ. ராஜினாமா செய்ய விரும்பினால், பதவியில் நீடிக்கும்படி நிர்பந்திக்க முடியாது. உறுப்பினர்களின் ராஜினாமாவை ஏற்காவிட்டால் அது அரசியல் சாசன கடமையை செய்யத் தவறியதாகி விடும் எனக் குறிப்பிட்டார்.</p><h2>தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு</h2><p>சுய விருப்பப்படி ராஜினாமா செய்தாரா என்பதை மட்டும்தான் விசாரிக்க முடியும். அமைச்சர் பதவி, பணத்துக்காக ராஜினாமா செய்தார்களா, குதிரைபேரம் நடந்ததா என்பதை தகுதி நீக்க நடவடிக்கையில்தான் விசாரிக்க முடியும். ராஜினாமாவின் நோக்கம் என்ன என்பதை, ராஜினாமாவை ஏற்கும்போது விசாரிக்க முடியாது. சபாநாயகர் எந்த விதிமீறலும் செய்யவில்லை. இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார். இருதரப்பு வாக்குவாதம் மற்றும் ராஜினாமா செய்த எம்.எல்.ஏ. தரப்பிலான வாக்குவாதம் ஆகியவற்றிக்குப் பிறகு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.</p>]]></content:encoded></item><item><title>ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை உடனடியாக கைவிட கோரி நெல்லையில் ஆர்ப்பாட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/protest-in-nellai-demanding-immediate-cancellation-of-smart-meter-project</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/protest-in-nellai-demanding-immediate-cancellation-of-smart-meter-project#comments</comments><guid isPermaLink="false">820b01f1-62c3-4793-b516-208d758f642f</guid><pubDate>Tue, 01 Sep 2026 14:06:25 +0000</pubDate><atom:updated>2026-09-01T14:06:25.250Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,protest,ஆர்ப்பாட்டம்,demand,Project,CITU,சிஐடியு தொழிற்சங்கத்தினர்,திட்டம்,ஸ்மார்ட் மீட்டர்,Smart Meter,கைவிட வேண்டும்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/v52dgh0b/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை உடனடியாக கைவிட கோரி நெல்லையில் ஆர்ப்பாட்டம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/v52dgh0b/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>​திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D">ஸ்மார்ட் மீட்டர்</a> திட்டத்தை உடனடியாக கைவிட கோரி நெல்லையில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.) சார்பில் கவன ஈர்ப்பு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">ஆர்ப்பாட்டம் </a>நடைபெற்றது.</p><h2>தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம்</h2><p>தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.) சார்பில், நெல்லை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ​திட்டத் தலைவர் நாகையன் தலைமை வகித்தார். <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81">சி.ஐ.டி.யு.</a> மாவட்ட தலைவர் முருகன் ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து பேசினார். </p><h2>ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட கோரிக்கை</h2><p>​இந்த ஆர்ப்பாட்டத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். 5 ஆண்டு ஒப்பந்தம் மூலம் ஒப்பந்தப் பணியாளர் நியமனம் செய்யப்படும் என்ற அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. </p><h2>பகுதி நேர ஊழியர்கள் நிரந்தரம்</h2><p>​மேலும் கேங்மேன் பணியாளர்களுக்கு கள உதவியாளர் பதவி வழங்குவது, ஊதியம் இல்லாமல் பணிபுரிந்து வரும் பகுதி நேர ஊழியர்களை நிரந்தரம் செய்வது, கணக்கீட்டுப் பிரிவில் பணிபுரியும் R.S. மற்றும் IA பணியாளர்களை கீழ்நிலை பணிகளைச் செய்ய நிர்பந்திக்கக் கூடாது, நெல்லை மின் திட்டத்தில் பணிபுரியும் களப் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பதவி உயர்வுகளை உடனடியாக வழங்குவது போன்ற கோரிக்கைகளும் எழுப்பப்பட்டன. </p><p>இந்த ஆர்ப்பாட்டத்தில் திட்ட துணை தலைவர் பூலுடையார், திட்ட துணைச் செயலாளர் தளபதி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் சுவாமிதாசன் மற்றும் கோமதி, கோட்டச் செயலாளர்கள் முருகேசன், வேல்முருகன், அய்யாத்துரை, ஜார்ஜ், திட்டப் பொருளாளர் பாலசுப்பிரமணியன், காற்றாலை பிரிவு துணைச் செயலாளர் அந்தோனி கிளமென்ட் உள்ளிட்டோர் பேசினர். ​திட்டச் செயலாளர் கந்தசாமி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார். மத்திய அலுவலகத் தலைவர் அழகர் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் திரளான மின் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். </p>]]></content:encoded></item><item><title>ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு : அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை; தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sterlite-shooting-action-needed-against-officials</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sterlite-shooting-action-needed-against-officials#comments</comments><guid isPermaLink="false">8003250b-59ed-4622-9dab-cbcc350a56d8</guid><pubDate>Tue, 01 Sep 2026 14:05:36 +0000</pubDate><atom:updated>2026-09-01T14:05:36.160Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>துப்பாக்கி சூடு,நடவடிக்கை,வலியுறுத்தல்,அதிகாரிகள்,ஸ்டெர்லைட்,CPI(M),Sterlite firing,Urges,மார்க்சிஸ்ட் கட்சி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/yu8z5zb9/34.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ பெ. சண்முகம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/yu8z5zb9/34.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது உறுதியான நடவடிக்கை தேவை !தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல். இது தொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் </a>மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><h2>துப்பாக்கிச்சூடு</h2><p>2018 ஆம் ஆண்டு<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D"> ஸ்டெர்லைட்டை</a> எதிர்த்த போராட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் பொறுப்பற்ற தன்மை, அத்துமீறல் காரணமாக கொல்லப்பட வேண்டுமென்ற நோக்கத்தோடு நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இதற்கென அமைக்கப்பட்ட நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை நடத்தி தனது பரிந்துரையை அரசுக்கு அளித்தது. </p><h2>அறிக்கை</h2><p>3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உட்பட 17 காவல்துறையினர், மாவட்ட கலெக்டர் மற்றும் 3 வட்டாட்சியர்கள் இதற்கு காரணமானவர்கள் என்று அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். அவர்கள் மீது துறைவாரியான நடவடிக்கையும், குற்ற வழக்கு பதிவு செய்து விசாரிக்கவும் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது.</p> <h2> நீதிமன்ற நிகழ்வு</h2><p>நேற்று  சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ள கருத்துக்கள் கொலைக்கு காரணமான அதிகாரிகளை பாதுகாக்கும் நோக்கத்தை கொண்டதாக உள்ளது. இவர்களில் யாரும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்பதுதான் நேற்றைய நீதிமன்ற நிகழ்வின் வெளிப்பாடாகும்.</p><h2>அடக்குமுறை கருவி</h2><p>இது ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறை கருவியாக அரசு அமைப்புகள் செயல்படும் என்பதற்கான மிக வெளிப்படையான நிகழ்வாகும். அந்த வகையில் திமுகவும் தவெகவும் அதிகாரிகளுக்கு ஆதரவான நிலைபாட்டையே எடுத்துள்ளன.</p> <h2>பன்னாட்டு முதலாளி</h2><p> சுற்றுச்சூழல் சீர்கேடுகள் குறித்து மக்கள் சுட்டிக்காட்டியபோதே, ஸ்டெர்லைட் நிர்வாகமோ அல்லது அரசு அமைப்புகளோ நடவடிக்கை எடுத்திருந்தால் இத்தகைய கொடூரம் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. பன்னாட்டு முதலாளி ஒருவரின் நலனை பாதுகாப்பதற்காகவே ஆளும் வர்க்கத்தின் அடியாளாக செயல்பட்ட இந்த அதிகாரிகள் பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை. </p> <h2>எந்த நியாயமும் கிடைக்காது</h2><p>இத்தகைய நிலைமை நீடிப்பது நிர்வாகத்தாலும், நீதித்துறையாலும், அரசாங்கத்தாலும் தங்களுக்கு எந்த நியாயமும் கிடைக்காது என்று குடிமக்களை நிராதாவாக நிற்க வைக்கும். ஜனநாயக நாட்டில் இத்தகைய நிலையை அரசாங்கம் எடுத்திருப்பது முற்றிலும் ஏற்க தக்கதல்ல.</p> <h2>குற்ற வழக்கு பதிவு</h2><p>எனவே, தமிழ்நாடு அரசு முந்தைய திமுக அரசு மேற்கொண்ட நிலையை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி, 13 பேர் கொலைக்கு காரணமான அனைத்து அதிகாரிகள் மீதும் உரிய துறைவாரியான நடவடிக்கை மற்றும் குற்ற வழக்கு பதிவு செய்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், உயிரிழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் ஆணையம் பரிந்துரைத்த இழப்பீட்டுத் தொகையை முழுவதுமாக வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நெல்லையில் பெண்ணை மிரட்டி ஆபாச படம் எடுத்து நகை, செல்போன் பறிப்பு - 3 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-threatened-stripped-filmed-robbed-in-nellai-three-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-threatened-stripped-filmed-robbed-in-nellai-three-arrested#comments</comments><guid isPermaLink="false">2fcab83e-768c-456c-9556-de5b9edb617a</guid><pubDate>Tue, 01 Sep 2026 13:41:47 +0000</pubDate><atom:updated>2026-09-01T13:41:47.001Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,கைது,arrested,பெண்,Woman,மிரட்டி நகை பறிப்பு,In Nellai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/uubg00co/manikandan.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மணிகண்டன்,சிவா]]></media:title><media:description type="html"><![CDATA[ நெல்லையில் பெண்ணை மிரட்டி ஆபாச படம் எடுத்து நகை, செல்போன் பறிப்பு - 3 பேர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/uubg00co/manikandan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி,</p><p>நெல்லையில் பெண் ஒருவரை மர்ம கும்பல் காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று, அவரை பலவந்தமாக நிர்வாணமாக்கி செல்போனில் படம் பிடித்து, நகை மற்றும் செல்போனை கொள்ளையடித்த சம்பவம் மாவட்டத்தையே உலுக்கியுள்ளது.</p><h2>காட்டுப்பகுதிக்கு கடத்தல்</h2><p>திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்து பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் சிவா ஆகியோர், 40 வயதுடைய பெண் ஒருவரை ஆள் நடமாட்டமில்லாத தனிமையான காட்டுப்பகுதிக்கு அழைத்து் சென்றனர். அங்கு வைத்து அந்தப் பெண்ணைச் சூழ்ந்து கொண்ட கும்பல், அவரை மிரட்டி ஆடை இன்றி நிர்வாணமாக்கியுள்ளது.</p><h2>படம் பிடித்து மிரட்டல்</h2><p>தொடர்ந்து, தங்களது செல்போன்கள் மூலம் அந்த பெண்ணை ஆபாசமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளனர். "நாங்கள் சொல்வதை கேட்காவிட்டால் இந்த ஆபாச படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அசிங்கப்படுத்திவிடுவோம்" என அந்த பெண்ணை மிரட்டி, அவர் அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.</p><h2>3 பேர் கைது</h2><p>இந்த அதிர்ச்சி சம்பவத்தால் நிலைகுலைந்த அந்த பெண், இதுகுறித்து உடனடியாக போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் நெல்லை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில், பெண்ணை மிரட்டி ஆபாச படம் எடுத்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88">கொள்ளையடித்த</a> கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81"> கைது </a>செய்தனர். கைதானவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகை மற்றும் குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருநெல்வேலி: இந்த ஆண்டு இதுவரை 98 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirunelveli-98-people-arrested-under-the-detention-act-so-far-this-year</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirunelveli-98-people-arrested-under-the-detention-act-so-far-this-year#comments</comments><guid isPermaLink="false">521be4af-3897-44d6-bb58-2f10fe56fa61</guid><pubDate>Tue, 01 Sep 2026 13:26:57 +0000</pubDate><atom:updated>2026-09-01T13:26:57.278Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Tirunelveli,திருநெல்வேலி,arrests,இந்த ஆண்டு,This year,இதுவரை,so far,தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டம்,Tamil Nadu Detention Act</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/yytkl02a/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/yytkl02a/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 98 பேர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின்</a> கீழ் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.</p><h2>போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கை</h2><p>திருநெல்வேலி மாவட்டத்தில் போதைப்பொருட்களின் புழக்கத்தை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில், மாவட்ட எஸ்.பி. விஸ்வேஸ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி உத்தரவின் பேரில், கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது போலீசார் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். </p><h2>கஞ்சா விற்பனை</h2><p>அதன் ஒரு பகுதியாக, மூலைக்கரைப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த சின்ன மூலைக்கரைப்பட்டியைச் சேர்ந்த ரவி (வயது 25), சூர்யா(24), பேச்சிமுத்து(33) மற்றும் நாங்குநேரி வட்டம், பெருமாள்நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(19) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். </p><p>இதேபோல், திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சேர்ந்த மாரிமுத்து(25) என்பவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். </p><h2>5 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது</h2><p>மேற்சொன்ன 5 பேரும் கஞ்சா விற்பனை போன்ற சட்டவிரோத குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், மூலைக்கரைப்பட்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாடசாமி மற்றும் திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் ஆகியோர், மேற்சொன்ன நபர்கள் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் பரிந்துரை செய்தனர். </p><p>அதன்பேரில் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஸ்வேஸ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி பரிந்துரையின் பேரில், திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஆனந்த் மோகன் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பித்தார். அதைத் தொடர்ந்து, மேற்சொன்ன 5 பேரும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். </p><h2>இந்த ஆண்டு இதுவரை 98 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது</h2><p>மேலும், திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 98 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றாமல் கட்டண உயர்வா? -  வேல்முருகன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/toll-hike-without-removing-expired-toll-plazas-velmurugan-condemns-the-move</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/toll-hike-without-removing-expired-toll-plazas-velmurugan-condemns-the-move#comments</comments><guid isPermaLink="false">4944c6be-8c94-44fe-9e46-c6a07c192bc6</guid><pubDate>Tue, 01 Sep 2026 13:23:19 +0000</pubDate><atom:updated>2026-09-01T13:23:19.997Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,சுங்கச்சாவடி,Velmurugan,வேல்முருகன்,கட்டணம்,Toll,Condemn</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/1awi3jby/174.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/1awi3jby/174.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றாமல் கட்டண உயர்வா என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>சுங்கச்சாவடி</h2><p>தமிழ்நாட்டின் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டண உயர்வு என வெளியாகியுள்ள செய்திகள் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளன.</p><p>சாலை அமைப்பதற்காக விதிக்கப்பட்ட சுங்கக் கட்டணம், சாலை அமைத்த செலவைத் தாண்டியும் பல ஆண்டுகளாக வசூலிக்கப்பட்டு வருகிறது. ஒப்பந்தக் காலமே முடிவடைந்த சுங்கச்சாவடிகள் கூட இன்னும் தொடர்ந்து கட்டணம் வசூலிப்பது எந்த வகையில் நியாயம்?</p><h2>கட்டணம்</h2><p>ஒப்பந்தக் காலம் முடிவடைந்த சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி பலமுறை ஒன்றிய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தியுள்ளது.  ஆனால், மக்களின் கோரிக்கைகளைப் புறக்கணித்துவிட்டு, காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றாமல் ஆண்டுதோறும் கட்டணத்தை மட்டும் உயர்த்துவது மக்கள் மீது நடத்தப்படும் பொருளாதாரத் தாக்குதல் அல்லவா?</p><p>பெட்ரோல், டீசல், அத்தியாவசியப் பொருட்கள் என அனைத்தின் விலையும் உயர்ந்துள்ள நிலையில், சுங்கக் கட்டண உயர்வு என்பது நேரடியாகவே பொதுமக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் மற்றும் சரக்கு வாகன உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும்.</p><h2>ஒப்பந்தக்காலம்</h2><p>மக்களிடம் வசூலிப்பதில் மட்டும் வேகம் காட்டும் மத்திய அரசு, காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றுவதில் ஏன் தயக்கம் காட்டுகிறது? தமிழ்நாட்டு மக்கள் மீது திணிக்கப்படும் இந்த சுங்கக் கொள்ளைக்கு மாநில அரசு எப்போது முற்றுப்புள்ளி வைக்கப் போகிறது? எனவே, சுங்கச்சாவடி கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுவதுடன், ஒப்பந்தக்காலம் முடிவடைந்த அனைத்து சுங்கச்சாவடிகளையும் உடனடியாக அகற்ற வேண்டும்.</p><p>இக்கோரிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் தொடர்ந்து புறக்கணித்தால், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">தமிழக வாழ்வுரிமைக் கட்சி</a> தமிழ்நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு, மக்கள் பங்கேற்கும் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதை எச்சரிக்கையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோவில்களில் செல்போன் வைக்க ரூ.5 கட்டணம் வசூல்; தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-5-fee-charged-for-mobile-phone-storage-at-temples-tamilisai-soundararajan-condemns-the-move</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-5-fee-charged-for-mobile-phone-storage-at-temples-tamilisai-soundararajan-condemns-the-move#comments</comments><guid isPermaLink="false">09c47569-be2e-4a0f-ae24-c6343e60fe88</guid><pubDate>Tue, 01 Sep 2026 13:21:17 +0000</pubDate><atom:updated>2026-09-01T13:21:17.263Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழிசை சவுந்தரராஜன்,Tamilisai Soundararajan,கோவில்,Temple,செல்போன்,கட்டணம்,mobile phone</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/y5u5oupp/tamilisai.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழிசை சவுந்தரராஜன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/y5u5oupp/tamilisai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கோவில்களில் செல்போன் வைக்க ரூ.5 கட்டணம் வசூல் செய்வதற்கு பாஜக மூத்த தலைவர்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88"> தமிழிசை </a>சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>இறைவனை தரிசிக்கச் செல்லும் பக்தர்களுக்கு ஏன் இத்தனை கட்டுப்பாடுகள்?கோவிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்லக்கூடாது என்பதற்காக, அதனை வைப்பதற்கே ரூ.5 கட்டணம் செலுத்த வேண்டும் என்பது கண்டிக்கத்தக்கது.</p><h2>செல்போன் வைக்க தனியாக வரிசை</h2><p>ஏற்கனவே இறைவனை தரிசிக்க வரிசையில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. இப்போது குடும்பத்தோடு வரும் பக்தர்கள், தங்களது செல்போனை வைப்பதற்காகவும் தனியாக வரிசையில் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பது மிகவும் வருந்தத்தக்கது.</p><h2>அரசின் கடமை</h2><p>கோவிலுக்கு செல்வதே ஒரு சவாலான அனுபவமாக மாறிவிடக் கூடாது. பக்தர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும், மனநிம்மதியுடனும் இறைவனை தரிசிக்க வழிவகை செய்வதே அரசின் கடமையாகும். இன்று இந்த தவெக அரசு கோவில்களிலும் பக்தர்களிடமும் விதித்து வரும் தொடர்ச்சியான கட்டுப்பாடுகள், இந்து மதத்தையும் பக்தர்களின் உணர்வுகளையும் பாதிக்கும் நடவடிக்கைகள் ஆகவும் அவர்கள் மீது தொடுக்கப்படும் மறைமுக மன தாக்குதல்களாகுமே பார்க்கப்படுகிறது </p><p>பக்தர்கள் குடும்பத்துடன் கோவிலுக்குச் சென்று, இறைவனை மனநிறைவுடன் தரிசித்து, நமது பாரம்பரியக் கலைச்சிற்பங்களை ரசித்து, கோவில் பிரசாதத்தைப் பெற்று, இறைவனின் ஆசீர்வாதத்துடன் மகிழ்ச்சியாக வீடு திரும்பும் சூழலை ஏற்படுத்த வேண்டும். கோவில் என்பது பக்தர்களுக்கு நிம்மதியும் ஆன்மிக மகிழ்ச்சியும் தரும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, கட்டுப்பாடுகளும் சிரமங்களும் நிறைந்த இடமாக மாறிவிடக் கூடாது.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் 3.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/35-kg-of-ganja-seized-in-thoothukudi-3-people-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/35-kg-of-ganja-seized-in-thoothukudi-3-people-arrested#comments</comments><guid isPermaLink="false">d519c2b8-7870-46c3-b8e3-b27b397c2a54</guid><pubDate>Tue, 01 Sep 2026 12:55:40 +0000</pubDate><atom:updated>2026-09-01T12:55:40.625Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,Thoothukudi,தூத்துக்குடி,patrol,ரோந்து பணி,3 arrested,3 பேர் கைது,கஞ்சா பறிமுதல்,போலீசார்,seized ganja</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/bxu4ym8p/3.5-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 3.5 கிலோ கஞ்சா பறிமுதல்; 3 பேர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/bxu4ym8p/3.5-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடியில் 3 கிலோ 500 கிராம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">கஞ்சாவை பறிமுதல்</a> செய்த தாளமுத்துநகர் போலீசார், இது தொடர்பாக <a href="https://www.dailythanthi.com/topic/3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">3 பேரை கைது </a>செய்தனர்.</p><h2>போலீசார் ரோந்து பணி</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> டேவிஸ்புரம் ஜங்ஷன் பகுதியில் தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே சந்தேகப்படும்படியான நபர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது, அவர்கள் சட்ட விரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. </p><h2>3.5 கிலோ கஞ்சா பறிமுதல், 3 பேர் கைது</h2><p>இது தொடர்பாக தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் வழக்குப்பதிவு செய்து சட்ட விரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த தூத்துக்குடி முத்தம்மாள்காலனி பகுதியைச் சேர்ந்த முத்துமாணிக்கம் மகன் கலைமணி (வயது 24), கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த முனியசாமி மகன் இசக்கிராஜா(22) மற்றும்  ஓம்சக்தி நகரைச் சேர்ந்த தங்கராஜ் மகன் முத்துராஜ்(எ) கார்த்திக்(34) ஆகிய 3 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 3 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தார்.</p>]]></content:encoded></item><item><title>பெண்ணை கொலை செய்து தண்ணீர் தொட்டியில் வீசிய சம்பவம்.. சமையல்காரர் கைது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-murdered-and-dumped-in-water-tank-cook-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-murdered-and-dumped-in-water-tank-cook-arrested#comments</comments><guid isPermaLink="false">e74a15f7-41f4-4ddd-b3e6-2dcf9a462ddd</guid><pubDate>Tue, 01 Sep 2026 12:51:27 +0000</pubDate><atom:updated>2026-09-01T12:51:27.799Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrest,பெண் கொலை,woman murder,Cook,சமையல்காரர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/7t7inrc1/arrest.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/7t7inrc1/arrest.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>பெண்ணை கொலை செய்து உடலை 7 துண்டுகளாக வெட்டி தண்ணீர் தொட்டியில் மூட்டை கட்டி வீசிய சம்பவம் தொடர்பாக சமையல்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>கொலை</h2><p>சேலம் மாவட்டம் அரிசிபாளையம் பகுதியில் உள்ள குணபாலன் ராமசாமி தெருவில் ரமேஷ் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் ஊருக்கு சென்றார். பின்னர் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டிற்கு திரும்பினார். மறுநாள் காலையில் வீட்டில் உள்ள குடிநீர் குழாயை திறந்தபோது துர்நாற்றம் வீசியதாக தெரிகிறது. இதனால் ரமேஷ் வீட்டின் மேல்புறம் உள்ள குடிநீர் தொட்டியை திறந்து பார்த்தார். அப்போது தண்ணீரில் 3 மூட்டைகள் கிடந்தன. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரமேஷ் உடனடியாக பள்ளபட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். </p><p>சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்து, அந்த 3 மூட்டைகளையும் பிரித்து பார்த்தனர். மூட்டைகளை பிரித்து பார்த்தபோது அதில் பெண்ணின் உடல் பாகங்கள் இருந்தன. பெண்ணின் உடல் 7 துண்டுகளாக வெட்டி மூட்டைகளில் கட்டி சின்டெக்ஸ் டேங்கில் போட்டுள்ளது தெரியவந்தது. உடல்பாகங்களை பிரேத பரிசோதனைக்காக  சேலம் மோகன் குமார மங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இந்த கொடூர கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட பெண்ணின் கையில் கணபதி என பச்சை குத்தப்பட்டிருந்தது. இதனை அறிந்து வந்த அவரது கணவர் ஜீவானந்தம், அவரது மகள் மற்றும் உறவினர் சேர்ந்து அந்த சடலத்தை அடையாளம் காட்டினர். கொலை செய்யப்பட்ட பெண், சேலம் மேட்டுப்பட்டி தாதனூர் பாலாஜி காலனியை சேர்ந்த தங்கமணி (50) என்பது தெரியவந்தது. </p><p>இவர் கடந்த ஆகஸ்ட் 22-ந்தேதி சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள டாக்டர் ஒருவரின் வீட்டில் வீட்டு வேலை செய்துவிட்டு வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது கணவர் ஆகஸ்ட் 28-ந்தேதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அளித்ததை தொடர்ந்து தங்க மணியை தேடி வந்த நிலையில் அவரது உடல் தண்ணீர் தொட்டியில் மீட்கப்பட்டார்.</p><h2>சமையல்காரர் கைது</h2><p>இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தீவிரமாக தேடி வந்த நிலையில், சமையல்காரர் செல்லத்துரை என்பவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தப்பட்டது. சமையல்காரரின் தங்கையும் தங்கமணியும் நண்பர்களாக பழகி வந்தனர். அவரின் மூலமாக சமையல்காரர் தங்கமணியிடம் அறிமுகமானார். இந்த நிலையில் தங்கமணி கொலை செய்யப்பட்ட நாளில் இருந்து சமையல்காரரின் தங்கை மொபைல் சுவிட்ச் ஆப் ஆனதால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. கொலையில் அவருக்கும் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். தீவிர விசாரணைக்குப் பிறகு சமையல்காரர் செல்லத்துரையை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்தனர். அவர் தங்கமணியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/toll-rates-hiked-at-25-toll-plazas-in-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/toll-rates-hiked-at-25-toll-plazas-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">976c998e-3ade-4811-9cca-1d65a1b24d07</guid><pubDate>Tue, 01 Sep 2026 12:43:19 +0000</pubDate><atom:updated>2026-09-01T12:43:19.266Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/63k8depo/173.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சுங்கச்சாவடி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/63k8depo/173.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 77 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் ஆண்டுக்கு 2 முறை கட்டணத்தை மாற்றி அமைப்பது வழக்கம்.</p><p>அதன்படி நேற்று நள்ளிரவு முதல் 25 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. வாகனங்களுக்கு ஏற்ப ரூ.5 முதல் ரூ.30 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.</p><h2>விக்கிரவாண்டி</h2><p>விழுப்புரம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF">சுங்கச்சாவடி </a>அமைந்துள்ளது. இந்த சுங்கச்சாவடி வழியாக செல்லும் கார், ஜீப், பயணிகள் வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கான ஒரு வழி கட்டணம் ரூ.105-ல் இருந்து ரூ.110 ஆகவும், பலமுறை பயனணிக்க ரூ.160-ல் இருந்து ரூ.165 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.</p><p>இலகுரக சரக்கு வாகனங்களுக்கு ஒரு வழி கட்டணம் ரூ.185-ல் இருந்து ரூ.190 ஆகவும், பல முறை பயணிக்க ரூ.275-ல் இருந்து 290 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஒரு வழி கட்டணம் ரூ.370-ல் இருந்து ரூ.385 ஆகவும், பல முறை பயணிக்க ரூ.555-ல் இருந்து ரூ.575 ஆகவும், உயர்த்தப்பட்டுள்ளது.</p><h2>செங்குறிச்சி</h2><p>உளுந்தூர்பேட்டையை அடுத்த செங்குறிச்சி சுங்கச்சாவடியில் கார், ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஒருமுறை பயணம் செய்வதற்கான கட்டணம் மாற்றமின்றி ரூ.70 ஆக தொடருகிறது. பலமுறை சென்று வருவதற்கான கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.105 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.</p><p>இலகுரக வணிக வாகனங்களுக்கான ஒருமுறை ஆயண கட்டணம் ரூ.125 (பழைய கட்டணம் ரூ.120), பலமுறை பயண கட்டணம் ரூ.185 (பழைய கட்டணம் ரூ.180) ஆக உயர்த்தப்பட்டுள்ளது. லாரி மற்றும் பஸ்களுக்கான ஒருமுறை பயண கட்டணம் ரூ.240-ல் இருந்து ரூ.250 ஆகவும், பலமுறை கட்டணம் ரூ.355-ல் இருந்து ரூ.375 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.</p><h2>ஈரோடு</h2><p>ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சுங்கச்சாவடியில் கார், பயணிகள் வேன் மற்றும் ஜீப் ஆகியவை ஒரு முறை பயணத்திற்கு ரூ.70-ல் இருந்து ரூ.75ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பல முறை பயணிக்க ரூ.105-ல் இருந்து ரூ.110 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இலகுரக வணிக வாகனம் ஒருமுறை பயணத்திற்கு கட்டண மாற்றமின்றி ரூ.125 ஆக உள்ளது. பலமுறை பயணிக்க ரூ.165-ல் இருந்து ரூ.190 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பஸ், லாரி ஒரு முறை பயணத்திற்கு ரூ.345-ல் இருந்து ரூ.255 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பல முறை பயணிக்க ரூ.370-ல் இருந்து ரூ.380 ஆக  உயர்த்தப்பட்டுள்ளது.</p><h2>கொழிஞ்சிபட்டி</h2><p>திண்டுக்கல் - மதுரை 4 வழிச்சாலையில் கொடை ரோடு கொழிஞ்சிபட்டியில் வேன் ஆகிய வாகனங்களுக்கான சுங்கச்சாவடியில் கார், ஜீப், ஒருமுறை பயண கட்டணம் ரூ75-ல் இருந்து ரூ.80 ஆகவும். இருமுறை பயண கட்டணம் ரூ.115-ல் இருந்து ரூ.120 ஆகவும் உயர்ந்தது.</p><p>இலகுரக வணிக வாகனங்களுக்கான ஒருமுறை கட்டணம் ரூ.135-ல் இருந்து ரூ.140 ஆகவும், இருமுறை பயண கட்டணம் ரூ.200-ல் இருந்து ரூ.310 ஆகவும் அதிகரிந்தது. பஸ், லாரிக்கு ஒருமுறை பயன கட்டணம் ரூ.270-ல் இருந்து ரூ.280 ஆகவும், இருமுறை பயண கட்டணம் ரூ.405-ல் இருந்து ரூ. 470 ஆகவும் உயர்ந்தது.</p>]]></content:encoded></item><item><title>பிராட்வே பேருந்து நிலைய பணிகள் தீவிரம்; அதிகாரிகளுக்கு ஆணையாளர் முக்கிய உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/work-at-broadway-bus-terminus-intensifies-commissioner-issues-key-directive-to-officials</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/work-at-broadway-bus-terminus-intensifies-commissioner-issues-key-directive-to-officials#comments</comments><guid isPermaLink="false">a09a9044-1457-4775-b4d7-af2ad6c57f76</guid><pubDate>Tue, 01 Sep 2026 12:39:40 +0000</pubDate><atom:updated>2026-09-01T12:39:40.581Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Commissioner,பணிகள் தீவிரம்,ஆணையாளர்,பிராட்வே பேருந்து நிலையம்,Broadway Bus Terminal</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/rb1obxdi/18.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/rb1obxdi/18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வடகிழக்குப் பருவமழை முடியும் வரை மழைநீர் வடிகாலை அகற்ற வேண்டாம் என ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.</p><p>சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>பெருநகர <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">சென்னை மாநகராட்சி</a>, இராயபுரம் மண்டலத்தில் உள்ள பிராட்வே பேருந்து நிலையத்தில் ரூ.822.70 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணியினை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (01.09.2026) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இப்பணிகளை உரிய தொழில்நுட்ப வழிகாட்டுதலின்படி, மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><h2>உரிய நடவடிக்கை</h2><p>இந்த பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகளை முன்னிட்டு, இவ்விடத்தில் அமையப்பெற்றுள்ள இரண்டு கட்டடங்களை அகற்றி, அதற்கு மாற்று ஏற்பாடு செய்திடவும், இப்பகுதியில் உள்ள 20 குடும்பத்தினருக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்து வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், இந்தகட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியில் ஏற்கனவே அமையப்பெற்றுள்ள மழைநீர் வடிகாலினை வடகிழக்குப் பருமழையினை முன்னிட்டு தற்சமயம் அதனை அகற்றாமல், வடகிழக்குப் பருவமழை முடிவுற்றதற்குப் பின்னர் அதனை அகற்றி அதற்கு பதிலாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் ஆணையாளர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>இந்த ஆய்வின்போது, வடக்கு வட்டார துணை ஆணையாளர் ஸ்வேதா சுமன், இ.ஆ.ப., சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் அலுவலர்கள் (CMAML) மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சமூக வலைதளத்தில் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட முன்னாள் காதலன்: திருமணம் நின்றதால் இளம்பெண் தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ex-boyfriend-posts-intimate-photo-on-social-media-young-woman-commits-suicide-after-wedding-is-called-off</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ex-boyfriend-posts-intimate-photo-on-social-media-young-woman-commits-suicide-after-wedding-is-called-off#comments</comments><guid isPermaLink="false">eb9f8113-a838-4a3b-97a6-fe0c9f5ac2f5</guid><pubDate>Tue, 01 Sep 2026 12:36:22 +0000</pubDate><atom:updated>2026-09-01T12:36:22.535Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>social media,உறவினர்கள் போராட்டம்,wedding,பெண் தற்கொலை,ex-boyfriend,திருமணம் ரத்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/shz1ih1b/-.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ சரிதா- திருமண பத்திரிக்கை]]></media:title><media:description type="html"><![CDATA[ திருமணம் ரத்து செய்யப்பட்டதால் இளம்பெண் தற்கொலை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/shz1ih1b/-.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமநாதபுரம்,</p><p>திருமணத்திற்கு சில மணி நேரங்களே இருந்த நிலையில், முன்னாள் காதலன் ஜோடியாக எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D">திருமணம்</a> நின்றுபோன அதிர்ச்சியில், மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ராமநாதபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>காதல் முறிவு</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ராமநாதபுரம் மாவட்டம் </a>உச்சிப்புளி அருகே உள்ள மூப்பன்வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் சரிதா (வயது 22). அவரும், பிரம்பன்வலசை கிராமத்தைச் சேர்ந்த லோகேஷ் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் லோகேஷின் குணம் மற்றும் செயல்பாடுகள் பிடிக்காததால், சரிதா அவரிடமிருந்து விலகியுள்ளார். அதனைத் தொடர்ந்து, சரிதாவின் பெற்றோர் அவருக்கு வேறு ஒரு மாப்பிள்ளையுடன் திருமண நிச்சயம் செய்தனர்.</p><h2>இன்ஸ்டாவில் வெளியான புகைப்படங்கள்</h2><p>அவர்களின் திருமணம் கடந்த 30-ந்தேதி நடைபெறவிருந்தது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில், சரிதாவுக்குத் திருமணம் நடப்பதை அறிந்த லோகேஷ் கடும் ஆத்திரமடைந்தார். எனவே பழிவாங்கும் நோக்கில், சரிதாவுடன் முன்பு எடுத்த நெருக்கமான புகைப்படங்களை தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் சமூக வலைதளங்களில் லோகேஷ் பதிவிட்டார்.</p><h2>நின்ற திருமணம் - பெண் தற்கொலை</h2><p>அந்த புகைப்படங்கள் மணமகன் வீட்டாருக்கு தெரியவந்ததை அடுத்து, அவர்கள் அதிர்ச்சியடைந்து திருமணத்தை அதிரடியாக நிறுத்தினர். உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் முன்னிலையில் திருமணம் நின்றதால், சரிதா கடுமையான அவமானத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளானார். அதனால் விரக்தியடைந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">தூக்கிட்டுத் தற்கொலை </a>செய்து கொண்டார்.</p><h2>உறவினர்கள் போராட்டம்</h2><p>தகவலறிந்து வந்த உச்சிப்புளி போலீசார், சரிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்ப முயன்றனர். ஆனால், சரிதாவின் தற்கொலைக்கு காரணமான லோகேஷை உடனடியாக கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. தலைமறைவாக உள்ள லோகேஷை தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">காதலன் வெளியிட்ட புகைப்படம் - நின்ற திருமணம் - பெண் தற்கொலை <a href="https://t.co/2RbAueAQyz">https://t.co/2RbAueAQyz</a> <a href="https://x.com/hashtag/love?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#love</a> <a href="https://x.com/hashtag/photo?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#photo</a> <a href="https://x.com/hashtag/death?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#death</a> <a href="https://x.com/hashtag/marriage?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#marriage</a> <a href="https://x.com/hashtag/thanthitv?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#thanthitv</a></p>&mdash; Thanthi TV (@ThanthiTV) <a href="https://x.com/ThanthiTV/status/2094738641235141067?ref_src=twsrc%5Etfw">September 1, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>நிதி நிறுவனத்தில் போலி நகைகள் அடகுவைத்து பணம் மோசடி: ஒருவர் கைது; 2 பேருக்கு வலைவீச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/one-arrested-for-defrauding-financial-institution-by-pawning-fake-jewelry-2-others-nabbed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/one-arrested-for-defrauding-financial-institution-by-pawning-fake-jewelry-2-others-nabbed#comments</comments><guid isPermaLink="false">255c291a-7cb3-4599-a3ce-46ddeb308afa</guid><pubDate>Tue, 01 Sep 2026 12:25:25 +0000</pubDate><atom:updated>2026-09-01T12:25:25.477Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Thoothukudi,தூத்துக்குடி,பணம் மோசடி,Tenkasi,தென்காசி,arrest,money laundering,நிதி நிறுவனம்,fake jewelry,financial institution,போலி நகைகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/lrfhsg7x/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நகைகள் அடகுவைத்து பணம் மோசடி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/lrfhsg7x/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் தனியார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">நிதி நிறுவனத்தில்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">போலி நகைகளை</a> அடகு வைத்து பல லட்சம் ரூபாய் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF">பணம் மோசடியில்</a> ஈடுபட்ட ஒருவரை கைது செய்த போலீசார் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.</p><h2>நிதி நிறுவனம்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF">தென்காசி</a> மாவட்டம், கீழப்பாவூரைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 35) என்பவர் பாவூர்சத்திரத்தில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் நிதி நிறுவனங்களில் அடகு வைத்து திருப்ப முடியாமல் இருக்கும் நகைகளை மீட்டுத் தரும் தொழிலையும் செய்து வருகிறார்.</p><h2>போலி நகைகள் மூலம் பணம் மோசடி</h2><p>ஸ்ரீவைகுண்டம் அருகே சாமியாத்து பராக்கிரம பாண்டியபுரத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம்(42) என்பவர் ராஜ்குமாரை அணுகி, பேய்க்குளம் தனியார் நிதி நிறுவனத்தில் தான் அடகு வைத்துள்ள நகைகளை மீட்டுத் தருமாறு கேட்டுள்ளார். அதனை நம்பிய ராஜ்குமார், ரூ. 4.14 லட்சம் செலுத்தி நகையை மீட்டு, முத்துராமலிங்கத்திடம் ரூ.1.78 லட்சத்தைக் கொடுத்துவிட்டு நகைகளை வாங்கியுள்ளார். மேலும், முத்துராமலிங்கத்தின் நண்பரான முக்கூடலைச் சேர்ந்த கார்த்திகேயனிடம் 4 கிராம் மோதிரத்தை வாங்கி ரூ. 45 ஆயிரம் கொடுத்துள்ளார். தான் வாங்கிய 53 கிராம் நகைகளை தென்காசியில் உருக்கிப் பார்த்தபோது, அவை மாற்றுக்குறைந்த போலி நகைகள் என்பது ராஜ்குமாருக்கு தெரியவந்தது. இதுகுறித்து முத்துராமலிங்கத்திடம் கேட்டபோது அவர் முறையான பதில் அளிக்கவில்லை. </p><p>ஏற்கெனவே கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் பேய்க்குளம் நிதி நிறுவன ஆய்வின்போது, முத்துராமலிங்கம் அடகு வைத்த நகை போலி என கண்டறியப்பட்டு, அதைத் திருப்புமாறு அறிவுறுத்தப்பட்டும், அவர் நகையை மீட்காமல் ஏமாற்றி வந்தது விசாரணையில் தெரியவந்தது.</p><h2>ஒருவர் கைது; 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு</h2><p>பாதிக்கப்பட்ட ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில், சாத்தான்குளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மருதுபாண்டியன் வழக்குப்பதிவு செய்து முத்துராமலிங்கத்தை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அவரது நண்பர்களான கார்த்திகேயன் மற்றும் மகேஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பின்னலாடை தயாரிப்பு நூல் விலை கிலோவுக்கு ரூ.7 உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/price-of-yarn-for-knitwear-manufacturing-rises-by-rs-7-per-kg</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/price-of-yarn-for-knitwear-manufacturing-rises-by-rs-7-per-kg#comments</comments><guid isPermaLink="false">734ba2c3-9625-41d7-8227-e3594ee2f38f</guid><pubDate>Tue, 01 Sep 2026 12:18:07 +0000</pubDate><atom:updated>2026-09-01T12:18:07.722Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருப்பூர்,பின்னலாடை உற்பத்தியாளர்கள்,Rise,நூல் விலை உயர்வு,Yarn price</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/9dmvoj2e/172.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நூல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/9dmvoj2e/172.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><p>திருப்பூரில் பின்னலாடை தயாரிப்புக்கான நூல் விலை கிலோவுக்கு ரூ.7 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அதிரடி விலை உயர்வு ஜவுளி மற்றும் பின்னலாடை தொழில்துறையினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>பஞ்சு விலை உயர்வு</h2><p>பருத்தி விலை அதிகரிப்பு காரணமாக பஞ்சு விலை உயர்ந்துள்ளது. ரூ.60 ஆயிரமாக இருந்த ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு, ரூ.74 ஆயிரமாக விலை உயர்ந்துள்ளது. அதேபோல், பின்னலாடை தயாரிப்புக்கான நூலும் கிலோவுக்கு ரூ.7 அதிகரித்துள்ளது. </p><p>10-ம் நம்பர் கோல்டு நூல் கிலோ ரூ.265-க்கும் 16-ம் நம்பர் நூல் கிலோ ரூ.274-க்கும், 20ஆம் நம்பர் கோல்டு நூல் ரூ.333-க்கும் 40-ம் நம்பர் நூல் கிலோ ரூ.383-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>நேபாளம் வெள்ளத்தை அன்றே சொன்னேன் - சீமான் பேச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-told-you-about-the-nepal-floods-the-same-day-seemans-speech</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-told-you-about-the-nepal-floods-the-same-day-seemans-speech#comments</comments><guid isPermaLink="false">6577047f-7da4-40cb-ac51-82001f949ed6</guid><pubDate>Tue, 01 Sep 2026 12:06:32 +0000</pubDate><atom:updated>2026-09-01T12:06:32.942Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,NTK,Seeman,நேபாளம்,மதுரை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/cj1bi932/seeman33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ சீமான் பேச்சு]]></media:title><media:description type="html"><![CDATA[ 
நேபாளம் வெள்ளத்தை அன்றே சொன்னேன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/cj1bi932/seeman33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>நேபாளம் வெள்ளத்தை அன்றே சொன்னேன் என மதுரையில் மூவர் நினைவேந்தல் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.</p><p>மதுரையில் மூவர் நினைவேந்தல் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">சீமான்</a> பேசியதாவது:-</p><p>கிறிஸ்தவம், இஸ்லாம், இந்து இப்போது வந்தது இப்போது தான் வந்தது கிறிஸ்தவம், இப்போது தான்</p><p>வந்தது இஸ்லாம், எப்போது வந்தது இந்து? எப்போது வந்தது பௌத்தம்? நாம் யார்? உலகின் முதல் மொழி தமிழ், முதல் மாந்தன் தமிழன்.</p><h2>சர்க்கார் போஸ்டர் தான் பிரச்சினையா?</h2><p>நாங்கள் நீண்ட நாட்களாக பல்வேறு பிரச்சினைகளுக்கு களத்தில் போராடியிருக்கிறோம். சர்க்கார் படத்தின் போஸ்டர் கிழித்தது தான், சர்வதேச பிரச்சினையாகியுள்ளது. அதனால் தான் ஆட்சிக்கு வரவில்லை என அமைச்சர், அதை சபையில் பேசுகிறார். தமிழ்நாட்டில் அவ்வளவு பிரச்சனை நடந்திருக்கிறது, அதெல்லாம் பிரச்சினை இல்லையாம், சர்க்கார் போஸ்டர் தான் பிரச்சினையாம்.</p><h2>ரூல் இல்லை ரீல் தான் நடக்குது</h2><p>எங்கள் மக்கள் கொஞ்சம் மயக்கத்திலும், பெருங்காதலிலும் இருக்கிறார்கள். 5 ஆண்டு ஆட்சி நடக்கப் போவதில்லை, காட்சி தான் நடக்கும். ரூல் நடக்காது, ஒன்லி ரீல் தான்.</p><p>"அமெரிக்காவில் என்னிடம் விசாரணை நடத்திய போது, ‘உன்னை எப்படி உன் நாட்டில் உயிரோடு விட்டுள்ளார்கள்?’ என்று கேட்டனர். பாஸ் என்று தான் என்னை அழைத்தார்கள். 'நாம் தமிழர் கட்சியின் கொள்கை என்ன என்று கேட்டார்கள்', சொன்னால் என் கட்சியில் சேர்வீர்களா என்று கேட்டேன், சிரித்துவிட்டனர்.</p><h2>நேபாள் வெள்ளத்தை அன்றே சொன்னேன்</h2><p>நான் போதிக்கும் போது உனக்கு தெரியாது, பாதிக்கும் போது தான் தெரியும் என்று பலமுறை கூறியிருக்கிறேன். நேபாளில் வெள்ளம் வந்து இறந்த பிறகு, நான் பேசியதை வெட்டி இப்போது போடுகிறார்கள். அமெரிக்க விஞ்ஞானி சொல்வதற்கு முன்பே,அரணையூர் விஞ்ஞானி நான் சொன்னதை யாரும் கேட்கவில்லை. நம்மாழ்வார் எழுதியதை படித்து தான், தெரு தெருவாக கத்தினேன்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை மெட்ரோ ரெயில்களில் கடந்த மாதம் 1.04 கோடி பேர் பயணம்

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-metro-rail-last-month-1-04-crore-passengers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-metro-rail-last-month-1-04-crore-passengers#comments</comments><guid isPermaLink="false">c3db6b14-b591-4e36-9fcc-3423592ba400</guid><pubDate>Tue, 01 Sep 2026 11:29:37 +0000</pubDate><atom:updated>2026-09-01T11:29:37.907Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,மெட்ரோ ரெயில்,சென்னை மெட்ரோ,Chennai Metro Train,chennai metro,சென்னை மெட்ரோ ரெயில்,Metro train</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/j10dz363/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/j10dz363/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த மாதம் 1.04 கோடி பேர் பயணம் செய்துள்ளனர்.</p> <p>சென்னையில் மக்களின் போக்குவரத்தில் பஸ்கள், புறநகர் ரெயில்கள், மெட்ரோ ரெயில்கள் முக்கிய பங்காற்றுகின்றன. குறிப்பாக, மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல், புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்க மெட்ரோ நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.</p> <h2>1.04 கோடி பேர் பயணம்</h2><p>இந்நிலையில், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B">சென்னை மெட்ரோ</a> ரெயில்களில் கடந்த மாதம் (ஆகஸ்ட்) 1 கோடியே 4 லட்சத்து 4 ஆயிரத்து 98 பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதில் அதிகபட்சமாக 14.08.2026 அன்று 4 லட்சத்து 1 ஆயிரத்து 607 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளனர்.</p><p>சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி 52 லட்சத்து 84 ஆயிரத்து 196 பேரும், க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 20 லட்சத்து 20 ஆயிரத்து 687 பேரும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p> <h2>இது தொடர்பாக சென்னை மெட்ரோ வெளியிட்ட எக்ஸ் பதிவில்,</h2><p>சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 1,04,04,098 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p> <p>அதிகபட்சமாக 14.08.2026 அன்று 4,01,607 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.</p> <p>2026, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 52,84,196 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி (Single Journey Paper QR 20,20,687; Online QR – 1,56,385; Static QR 2,28,732; Whatsapp - 4,69,198; Paytm 3,09,569; ONDC – 12,47,168; PhonePe – 2,73,438; CMRL Mobile App (SVP) 1,04,251; Chennai One App – 3,10,474) பயணிகளும் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.</p> <p>சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், Digital SVP, க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, Whatsapp - (+91 83000 86000), Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு 20% கட்டணத் தள்ளுபடியை வழங்குகிறது. மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு கவுண்டர்களில் வாங்கப்படும் ஒற்றைப் பயணத்துக்கான காகித QR பயணச்சீட்டுகளுக்கு (Single Journey Paper QR tickets) இந்தத் தள்ளுபடி கிடையாது.</p><p>மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.</p><p>இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனை ரத்து: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/six-month-prison-sentence-imposed-on-h-raja-set-aside-madras-high-court-order</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/six-month-prison-sentence-imposed-on-h-raja-set-aside-madras-high-court-order#comments</comments><guid isPermaLink="false">904c9060-ca79-4e3b-8de7-69420f6e54ed</guid><pubDate>Tue, 01 Sep 2026 11:24:00 +0000</pubDate><atom:updated>2026-09-01T11:24:00.015Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,ஐகோர்ட்டு,சிறை தண்டனை,ரத்து,எச்.ராஜா,H. Raja,Prison,Madras High Court</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/uxf87clg/171.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எச்.ராஜா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/uxf87clg/171.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பெரியார் சிலை உடைப்பு தொடர்பான கருந்து தெரிவித்தது, தி.மு.க. எம்.பி. கனிமொழியை விமர்சனம் செய்ததாக தமிழக பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜாவுக்கு எதிரான இரு வழக்குகளில் தலா 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு விதித்த தீர்ப்பை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.</p><p>பாரதிய ஜனதா கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா, கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் தனது எக்ஸ் தளத்தில் திரிபுராவில் லெனின் சிலை உடைக்கபட்டது போல், தமிழகத்தில் பெரியார் சிலையை அகற்றுவோம் என பதிவிட்டிருந்தார். இதே போல் 2018-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் தி.மு.க, எம்.பி. கனிமொழிக்கு எதிராக எக்ஸ் தளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டிருந்தார். </p><h2>புகார்</h2><p>இது தொடர்பாக தந்தை பெரியர் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், ஈரோடு போலீசார் எச். ராஜாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர். இந்த இரு வழக்குகளையும் விசாரித்த சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு, எச். ராஜாவுக்கு தலா 6 மாதம் சிறை தண்டனை விதித்து, கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். </p><h2>உத்தரவு</h2><p>இந்த வழக்கில் நீதிபதி வி. லட்சுமி நாராயணன் இன்று பிறப்பித்த தீர்ப்பில், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE">எச். ராஜாவின்</a> பதிவுகளால் சமூகத்தில் இடையூறுகள் ஏற்பட்டது என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனக்கூறி, இரு வழக்குகளிலும் தண்டனை விதித்து பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>ரேஷன் கடையில் கிலோ ரூ.35க்கு வெங்காயம் விற்பனை; அமைச்சர் வெங்கடரமணன் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/onions-sold-at-ration-shops-for-rs-35-per-kg-minister-venkataramanan-informs</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/onions-sold-at-ration-shops-for-rs-35-per-kg-minister-venkataramanan-informs#comments</comments><guid isPermaLink="false">fc9e9622-bb1d-41d1-8c14-a6fb7572ab27</guid><pubDate>Tue, 01 Sep 2026 10:59:58 +0000</pubDate><atom:updated>2026-09-01T10:59:58.219Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,Vijay,விஜய்,வெங்காயம்,Onion price,அமைச்சர் வெங்கடரமணன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/q5cceokh/vengkayam33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
ரேஷன் கடை]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் வெங்கடரமணன் தகவல்
]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/q5cceokh/vengkayam33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வருகிற 3-ந் தேதி முதல் 1 கிலோ வெங்காயம் ரூ. 35க்கு வழங்கப்படும் என அமைச்சர் வெங்கடரமணன் கூறியுள்ளார்.</p><p>உணவுப்பொருள் பாதுகாப்புத்துறை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D%20">அமைச்சர் வெங்கடரமணன் </a>சட்டசபையில் பேசியதாவது:-</p><p>ஈரான் போர் காரணமாக வாகன எரிவாயு விலை ஏற்றத்தால் போக்குவரத்து செலவு உயர்வு, அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள் போன்றவற்றின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக, அதிகளவில் வெங்காய உற்பத்தி செய்யக்கூடிய மத்திய பிரதேசம் மற்றும் மராட்டிய மாநிலத்தில் இருந்து வெங்காய வரத்து குறைந்ததன் காரணமாக வெளிச்சந்தையில் வெங்காயம் கிலோ 56 முதல் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. </p><p>ஏழை எளிய நடுத்தர மக்களின் நலனை கருத்தில்கொண்டு, வெங்காய விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை நிலையம், தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலமாக முதற்கட்டமாக 1000 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு நியாயமாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>முதற்கட்டமாக நகர்ப்பகுதியில் ஒரு கிலோ வெங்காயம் 35 ரூபாய்க்கு கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பிரதான விற்பனை பண்டகசாலைகள் வழியாக அமுதம் அங்காடிகள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் அமைந்துள்ள நியாயவிலை கடைகள் மூலமாக விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. நியாயவிலை கடைகளில், </p><p>வருகிற 3-ந் தேதி முதல் 1 கிலோ வெங்காயம் ரூ. 35க்கு வழங்கப்படும். </p><p>இவ்வாறு அவர் பேசினார்</p>]]></content:encoded></item><item><title>விவசாயி வீட்டிற்கு சென்று பாட்டிக்கு கூலிங்கிளாஸ்  பரிசளித்த முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-visited-a-farmers-house-and-gifted-a-pair-of-sunglasses-to-the-grandmother</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-visited-a-farmers-house-and-gifted-a-pair-of-sunglasses-to-the-grandmother#comments</comments><guid isPermaLink="false">d2373df9-755a-4014-bb65-fd9838924a68</guid><pubDate>Tue, 01 Sep 2026 10:58:40 +0000</pubDate><atom:updated>2026-09-01T10:58:40.411Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>farmer,விவசாயி,பரிசு,gift,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/s1fjzp1t/17.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/s1fjzp1t/17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மேட்டூர்,</p><p>மேட்டூர் அணையைத் திறந்து வைத்த முதல்-அமைச்சர் விஜய், அங்கிருந்து சேலம் நோக்கி திரும்பியபோது சின்னக்காவூர் பகுதியில் பொதுமக்களை சந்தித்துப் பேசினார். அப்போது அப்பகுதியில் உள்ள விவசாயி ஒருவரின் வீட்டிற்கும் அவர் நேரில் சென்று குடும்பத்தினருடன் கலந்துரையாடினார்.</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a>யை வரவேற்க சின்னக்காவூர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர். அவர்களை சந்தித்து பேசிய விஜய், பின்னர் அங்கிருந்த விவசாயி ஒருவரின் வீட்டிற்குச் சென்றார். அவரது வருகையால் அந்தப் பகுதியே உற்சாகமடைந்தது.</p><h2>பாட்டிக்கு கூலிங்கிளாஸ்   பரிசு</h2><p>விவசாய குடும்பத்தினரை சந்தித்த விஜய், அவர்கள் மேற்கொண்டு வரும் விவசாயம், அதன் மூலம் கிடைக்கும் வருமானம் உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார். அதற்கு, வீட்டின் பின்புறம் வாழை மரங்களை வளர்த்து வருவதாகவும், அதுவே தங்களது முக்கிய வாழ்வாதாரம் என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும், தங்களது குடும்பத்திற்கு என்னென்ன உதவிகள் தேவை என்பது குறித்தும் விஜய் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். இதையடுத்து, விஜய்யை வழியனுப்ப விவசாய குடும்பத்தைச் சேர்ந்த பாட்டியும் அவருடன் கைகோர்த்தபடி வந்தார். அப்போது அவருக்கு பிரியாவிடை கொடுத்த விஜய், தான் அணிந்திருந்த கூலிங்கிளாஸ்-ஐ அந்தப் பாட்டிக்கு அணிவித்து மகிழ்ந்தார்.</p><p>விஜய்யுடன் கைகோர்த்தபடி வந்த பாட்டியைப் பார்த்து அங்கு கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சியுடன் கையசைத்தனர். அப்போது விஜய்யும் மக்களை நோக்கி கையசைத்ததுடன், பாட்டியையும் மக்களை நோக்கி கையசைக்குமாறு கூறினார். இதையடுத்து பாட்டியும் விஜய்யுடன் சேர்ந்து மக்களை நோக்கி கையசைத்தார்.</p><h2>மக்களிடையே நெகிழ்ச்சி</h2><p>விஜய் அணிந்திருந்த கூலிங்கிளாஸ்-ஐ அணிந்துகொண்ட பாட்டிக்கு மகிழ்ச்சியும் வெட்கமும் கலந்த உணர்வு ஏற்பட்டது. அந்தக் கண்ணாடியை அணிந்திருப்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதற்கிடையில், விஜய் அணிந்திருந்த கண்ணாடியை பாட்டி அணிந்திருந்ததைப் பார்த்த அப்பகுதி இளைஞர்களும் ஆர்வம் காட்டினர். பின்னர் அவர்கள் பாட்டியிடம் நெருங்கி வந்து அந்தக் கண்ணாடியை அணிந்து பார்த்ததுடன், அதனை அணிந்தபடி புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டனர். விஜய்–பாட்டி இடையேயான இந்த அன்பான சந்திப்பு, அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>பூலித்தேவனின் 311-வது பிறந்தநாள்: சீமான் புகழாரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/puli-thevars-311th-birth-anniversary-seeman-pays-tribute</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/puli-thevars-311th-birth-anniversary-seeman-pays-tribute#comments</comments><guid isPermaLink="false">8c177ca2-5d1f-44be-9f98-fe81f629c4db</guid><pubDate>Tue, 01 Sep 2026 10:57:09 +0000</pubDate><atom:updated>2026-09-01T10:57:09.754Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,Seeman,தென்காசி,நாம் தமிழர் கட்சி,Tribute,பூலித்தேவர் பிறந்த நாள்,Puli Thevar,birth anniversary</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/i4t7bdpw/170.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சீமான் புகழாரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/i4t7bdpw/170.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><p>மாமன்னர் பூலித்தேவனின் 311-வது பிறந்தநாளையொட்டி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">சீமான்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>புகழாரம்</h2><p>நம் பரம்பரை வீரத்தை பாருக்கு காட்டிய தென்னவன்..! பரங்கியரை போரிட்டு விரட்டிய மன்னவன்..! </p><p>தமிழ்ப்பேரினத்தின் வீரப்பெரும் பாட்டன் மாமன்னர் பூலித்தேவன் புகழைப்போற்றும் திருநாள் இன்று!</p><p>அன்னைத்தமிழ் நிலம் ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் அடிமைப்பட்டு கிடந்தபோது  அதன் விடுதலைக்குக் கிளர்ந்தெழுந்த மாவீரர்களில் முதன்மையான பெருமகனார் நம்முடைய பாட்டன் மாமன்னன் பூலித்தேவன்.</p><p>'நெற்கட்டான் செவ்வயலில் யாரோ பூலித்தேவனாமே' என ஏளனமாக எண்ணி படையைத்திரட்டி வந்த ஆங்கிலேயர்களை, வெறும் வாளும், வேலும் கொண்ட வீரத்தமிழ் மறவர் படை நடத்தி, களத்தில் நேருக்கு நேர் எதிர்கொண்டு போரிட்டு வென்ற மாவீரன்! </p><p>எந்த இடத்திலிருந்து ஆங்கிலேயர் படைதிரட்டி வந்தனரோ அதுவரை திருப்பி அடித்து விரட்டிய வீரத்திருமகன் பூலித்தேவன். அவர் போரிட்டுக் காட்டிய பிறகுதான் பல மன்னர்கள் தாங்களும் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட முடியும் என்ற பெருநம்பிக்கை கொண்டனர்.</p><p>பீரங்கி குண்டுகளால் கூடத் துளைக்க முடியாத கோட்டையைக் கட்டி ஆண்ட பேரரசன் பூலித்தேவன் அவர்களின் வீரத்தைப் போற்றுவதில் வழிவழியே வருகின்ற மானத்தமிழ்ப் பிள்ளைகள் பெருமிதமடைகிறோம்! நம்முடைய வீரப்பெரும்பாட்டன் மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் வீரப்புகழ் போற்றுவோம்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்க ஜனாதிபதியாக கூட விஜய் ஆகலாம் - எடப்பாடி பழனிசாமி கிண்டல் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ministers-do-not-answer-departmental-questions-edappadi-palaniswami-alleges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ministers-do-not-answer-departmental-questions-edappadi-palaniswami-alleges#comments</comments><guid isPermaLink="false">beecdbda-8c43-4bfb-afc0-c7fd87cc6299</guid><pubDate>Tue, 01 Sep 2026 10:48:32 +0000</pubDate><atom:updated>2026-09-01T10:48:32.572Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,எடப்பாடி பழனிசாமி,கோயம்புத்தூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/605f8oye/saami33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[  எடப்பாடி பழனிசாமி ]]></media:title><media:description type="html"><![CDATA[ 
அமைச்சர்கள் துறைசார்ந்த கேள்விகளுக்கு பதில் அளிப்பதில்லை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/605f8oye/saami33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>தமிழக சட்டசபை சினிமாவில் வருவது போல் நடைபெறுகிறது. நேரலையாக பேரவை நடவடிக்கைகள் ஒளிப்பரப்பினால்தான் மக்களுக்கு என்ன நடக்கிறது என தெரியும். பேரவையை 24 மணி நேரம் கூட சபாநாயகர் நடத்துவார்.</p><p>பெரும்பாலான அமைச்சர்கள் துறை சார்ந்த கேள்விகளுக்கு பதிலளிப்பது இல்லை.  <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95">தவெக</a> ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது.  அரசிடம் நிதி இல்லாத நிலையில் அதிக அறிவிப்புகள் ஏன்?</p><p>இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது. அப்படியே நீடித்தாலும் ரூ.10 லட்சம் கோடி கடன் வாங்குவார்கள்.  கடனை அதிகம் வாங்கும் தவெக அரசு வருவாயை பெருக்குவதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை. </p><p>எங்கு பார்த்தாலும் ஊழல், ஊழல் என்கிறார்கள். அது அதிகமாக இருப்பதே தவெக ஆட்சியில்தான்.  தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தொடர்கிறது.</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p><h2>அமெரிக்க ஜனாதிபதியாக கூட விஜய் ஆகலாம் </h2><p>“டிரம்புக்கு பதிலாக அமெரிக்க ஜனாதிபதியாக கூட அவர் ஆகலாம். தவறில்லை. அது அவரின் விருப்பம்”</p><p>அடுத்த பிரதமர் விஜய் என தவெகவினர் பேசிவருவது குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>முன்விரோதத்தில் வீட்டின் மீது பெட்ரோல் நிரப்பிய பாட்டில் வீச்சு: வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-throwing-petrol-bottle-at-house-over-enmity</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-throwing-petrol-bottle-at-house-over-enmity#comments</comments><guid isPermaLink="false">4b485b6a-24a6-4752-9665-7fbe87f9c811</guid><pubDate>Tue, 01 Sep 2026 10:40:06 +0000</pubDate><atom:updated>2026-09-01T10:40:06.945Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>petrol,பெட்ரோல்,Tirunelveli,திருநெல்வேலி,Youth arrested,வாலிபர் கைது,முன்விரோதம்,previous enmity,பாட்டில் வீச்சு,bottle throwing</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/qib4u4t6/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வீட்டின் மீது பெட்ரோல் நிரப்பிய பாட்டில் வீச்சு; வாலிபர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/qib4u4t6/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொட்டல் காலனி பகுதியில், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">முன்விரோதம்</a> காரணமாக வீட்டின் மீது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D">பெட்ரோல்</a> நிரப்பிய பாட்டில் வீசி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை முக்கூடல் போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். </p><h2>பெட்ரோல் நிரப்பிய பாட்டில் வீச்சு</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டம், முக்கூடல் அருகே பொட்டல் காலனியைச் சேர்ந்த பால்துரை (வயது 25) என்பவருக்கும், அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த மணி(25) என்பவருக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, மணி என்பவர் பதிவு எண் இல்லாத பைக்கில் வந்து, பால்துரையின் வீட்டின் மீது பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீசியதுடன், பால்துரையை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.</p><h2>வாலிபர் கைது</h2><p>இதுகுறித்து முக்கூடல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து, முக்கூடல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, தலைமறைவாக இருந்த அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த வேம்பு மகன் மணியை இன்று கைது செய்தனர். பின்னர் மேற்சொன்ன வாலிபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, சட்டப்படி நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>பூலித்தேவர் பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி புகழாரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/puli-thevars-birth-anniversary-edappadi-palaniswami-pays-tribute</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/puli-thevars-birth-anniversary-edappadi-palaniswami-pays-tribute#comments</comments><guid isPermaLink="false">a7df3919-4479-4660-a3db-0107d7823e00</guid><pubDate>Tue, 01 Sep 2026 10:28:56 +0000</pubDate><atom:updated>2026-09-01T10:28:56.782Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தென்காசி,Tribute,பிறந்தநாள்,பூலித்தேவர்,Puli Thevar,Edappadi Palanisamy எடப்பாடி பழனிசாமி,birth anniversary</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/mmuo1bu3/169.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  பழனிசாமி புகழாரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/mmuo1bu3/169.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><p>பூலித்தேவனின் 311-ஆவது பிறந்த நாளையொட்டி தென்காசி மாவட்டம், நெற்கட்டும்செவலில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. </p><p>இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>புகழாரம்</h2><p>இந்திய விடுதலைக்காகத் தெற்கிலிருந்து வீறுகொண்டு எழுந்த நெற்கட்டான் செவலின் மாவீரர், இளம் வயதிலேயே துணிச்சலோடு “வெள்ளையனே வெளியேறு”என வீர முழக்கமிட்டதோடு, </p><p>போர்க்களத்தில் வீழ்த்தவே முடியாத தீரராகத் திகழ்ந்து, வீரத்தில் மட்டுமல்லாமல் இறைபணியிலும் சிறந்து விளங்கிய மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் பிறந்தநாளில், அவர்தம் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன். </p><p>தென்காசி மாவட்டம், 'நெற்கட்டும்செவல்' என்ற இடத்தில் அமைந்துள்ள மாமன்னர் பூலித்தேவன் அவர்களுடைய திருஉருவச்சிலைக்கு, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">அதிமுக </a>சார்பில் தலைமைக் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சட்டமன்ற நேரத்தை சரியாக பயன்படுத்தும் சவுமியா அன்புமணி; கமல்ஹாசன் பாராட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kamal-haasan-praises-soumya-anbumani-for-using-assembly-time-wisely</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kamal-haasan-praises-soumya-anbumani-for-using-assembly-time-wisely#comments</comments><guid isPermaLink="false">6a94e1a0-758f-4376-9ee7-a4acfeb01d77</guid><pubDate>Tue, 01 Sep 2026 10:10:54 +0000</pubDate><atom:updated>2026-09-01T10:10:54.475Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கமல்ஹாசன்,Kamalhasan,தமிழக சட்டசபை,TNAssembly,Sowmiya Anbumani,சவுமியா அன்புமணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/nes4b31y/savmiyaa33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ சவுமியா அன்புமணி]]></media:title><media:description type="html"><![CDATA[ சவுமியா அன்புமணிக்கு  கமல்ஹாசன் பாராட்டு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/nes4b31y/savmiyaa33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு சட்டசபையில் பாமக எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணியின் நடவடிக்கைகளுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் எம்.பி.யுமான கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.</p><p>தமிழக சட்டசபை தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த நிர்வாகி சவுமியா அன்புமணி, முதல்முறையாக எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றுள்ளார்.</p><p>பாமக சார்பில் 4 பேர் சட்டசபை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலையில், கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக சவுமியா அன்புமணி செயல்பட்டு வருகிறார்.</p><p>தற்போது தமிழ்நாடு சட்டசபையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நடைபெறும் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள், கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் உள்ளிட்டவற்றில் பங்கேற்று <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF">சவுமியா அன்புமணி</a> முன்வைக்கும் கருத்துகள் கட்சி கடந்து பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளைப் பெற்று வருகின்றன.</p><p>இந்த நிலையில், சட்டசபையில் உரையாற்றும் சவுமியா அன்புமணியின் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ள கமல்ஹாசன், அவருக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் கமல்ஹாசன் தெரிவித்திருப்பதாவது:</p><p>அருமை. சட்டமன்றத்தில் தனக்குக் கிடைக்கும் நேரத்தை மிகச் சரியாகவும், துல்லியமான தகவல்களோடும் மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தும் சகோதரி சவுமியா அன்புமணியைப் பாராட்டுகிறேன் என அதில் பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: வடமாநில வாலிபர் அதிரடி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/northern-state-youth-arrested-for-sexually-harassing-9-year-old-girl</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/northern-state-youth-arrested-for-sexually-harassing-9-year-old-girl#comments</comments><guid isPermaLink="false">bffd915d-e2a7-4de7-915a-d73e0cfcf358</guid><pubDate>Tue, 01 Sep 2026 10:03:03 +0000</pubDate><atom:updated>2026-09-01T10:03:03.726Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,arrested,பாலியல் தொந்தரவு,சிறுமி,Minor girl,sexually harassed,வடமாநில வாலிபர் கைது,northern state youth</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/fa7fyym4/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வடமாநில வாலிபர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/fa7fyym4/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>திருநெல்வேலி மாவட்டத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81">சிறுமிக்கு பாலியல் தொந்தரவு</a> அளித்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D">வடமாநில வாலிபர்</a> சி.சி.டி.வி. கேமரா மூலம் அதிரடியாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்யப்பட்டார்.</p><h2>சிறுமிக்கு பாலியல் தொந்தரவு</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி </a>மாவட்டம், வள்ளியூர் உட்கோட்டம், ராதாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 25.8.2026 அன்று அதிகாலை வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில், வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.</p><h2>புகார்</h2><p>சம்பவத்தன்று அதிகாலை சிறுமி அழுததையடுத்து, பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தபோது, வீட்டிற்குள் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நுழைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.  பின்னர் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேற்சொன்ன சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.</p><h2>முதற்கட்ட விசாரணை</h2><p>வழக்கின் ஆரம்ப கட்டத்தில் எதிரியின் அடையாளம் தெரியாத நிலையில், வள்ளியூர் உட்கோட்ட டி.எஸ்.பி. வெங்கடேஷ், ராதாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர், வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் பணகுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் தலைமையில் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அப்பகுதி பொதுமக்களிடம் முதற்கட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டது.</p><h2>சி.சி.டி.வி. கேமரா பதிவுகள்</h2><p>மேலும், சம்பவம் நடைபெற்ற இடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சி.சி.டிவி. (CCTV) கேமரா பதிவுகள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டன. அதில், சம்பவம் நடைபெற்ற நேரத்தில் வீட்டின் பின்புறம் வழியாக சுமார் 25 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சென்றது தெரியவந்தது. சி.சி.டி.வி. பதிவுகள் மற்றும் காவல்துறையினரின் தொடர் விசாரணையின் அடிப்படையில், குற்றவாளியின் அடையாளம் கண்டறியப்பட்டது.</p><h2>வடமாநில வாலிபர் கைது</h2><p>அதைத் தொடர்ந்து, மேற்சொன்ன வழக்கின் குற்றவாளியான மேற்கு வங்காள மாநிலம், கூச் பெஹார் மாவட்டம், பக்சிகஞ்ச் பகுதியைச் சேர்ந்த கௌரங்கா ராய் மகன் சூரஜ்தேவ்ராய் (வயது 27) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.</p><h2>எஸ்.பி. பாராட்டு</h2><p>மேற்சொன்ன வழக்கில் துரிதமாக செயல்பட்டு சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை தொடர்ந்து ஆய்வு செய்து, குற்றவாளியின் அடையாளத்தை கண்டறிந்து குற்றவாளியை  கைது செய்த வள்ளியூர் உட்கோட்ட டி.எஸ்.பி. வெங்கடேஷ், ராதாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர், வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை, திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஸ்வேஸ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி பாராட்டினார். மேற்சொன்ன வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>வ.உ.சி. 155-வது பிறந்தநாள்: ஓட்டப்பிடாரம் நினைவு இல்லத்தில் அதிமுக சார்பில் மரியாதை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/v-u-c-155th-birthday-aiadmk-tribute-ottapidaram</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/v-u-c-155th-birthday-aiadmk-tribute-ottapidaram#comments</comments><guid isPermaLink="false">7cb4c38b-42f7-442c-88ef-053612326994</guid><pubDate>Tue, 01 Sep 2026 09:59:59 +0000</pubDate><atom:updated>2026-09-01T09:59:59.863Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அதிமுக,AIADMK,birthday,Memorial Hall,நினைவு இல்லம்,மரியாதை,வ.உ.சி. பிறந்த நாள்,ஓட்டப்பிடாரம்,Ottapidaram</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/m6gz9dh6/aiadmk.jpg" width="768"><media:title type="html"><![CDATA[ அதிமுக ]]></media:title><media:description type="html"><![CDATA[ வ.உ.சி. 155-வது பிறந்தநாள்: ஓட்டப்பிடாரம் நினைவு இல்லத்தில் அதிமுக சார்பில் மரியாதை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/m6gz9dh6/aiadmk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் அவர்களின் 155-ஆவது பிறந்த நாளையொட்டி அவரது உருவ சிலைக்கு, கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல்! இது குறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- </p> <h2>வ.உ. சிதம்பரம் பிள்ளை</h2><p>இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர்களில் முக்கியமான ஒருவராக திகழ்ந்தவரும், வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்க தலைவர் என பன்முக தன்மை பெற்றவருமான 'கப்பலோட்டிய தமிழன்', 'செக்கிழுத்த செம்மல்' வ.உ. சிதம்பரம் பிள்ளையின் 155-ஆவது பிறந்த நாளான 5.9.2026 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில், தூத்துக்குடி வடக்கு மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ. சிதம்பரம் பிள்ளை நினைவு இல்லத்தில் அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு <a href="https://www.dailythanthi.com/topic/aiadmk">அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் </a>சார்பில்,</p><p> என். தளவாய்சுந்தரம், எம்.எல்.ஏ.,</p><p>கழக அமைப்பு செயலாளர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர்</p><p> ப. மோகன்,</p><p>கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர்</p><p> பா. வளர்மதி,</p><p>கழக மகளிர் அணிச் செயலாளர் கழக செய்தித் தொடர்பாளர் முன்னாள் அமைச்சர்</p> <p> எஸ்.பி.சண்முகநாதன்,</p><p>கழக அமைப்பு செயலாளர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர் (பொறுப்பு) முன்னாள் அமைச்சர்</p><p> சி.த. செல்லப்பாண்டியன், கழக வர்த்தக அணி செயலாளர் தூத்துக்குடி மாநகர கழக செயலாளர் முன்னாள் அமைச்சர்</p><p>என். சின்னத்துரை, கழக அமைப்பு செயலாளர், கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை துணை செயலாளர்</p><p> எஸ். சரவணபெருமாள், கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.</p> <h2>நிகழ்ச்சி</h2><p>இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கழக அமைப்பு செயலாளரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன், மிகச் சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.</p><h2>மரியாதை</h2><p>வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களுக்கு மரியாதை செலுத்தும் இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விஜய் பிரதமராக வேண்டும் என்பது தவெகவின் ஆசை; சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம்-பெ. சண்முகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-tvks-wish-for-vijay-to-become-prime-minister-this-should-not-be-taken-seriously-p-shanmugam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-tvks-wish-for-vijay-to-become-prime-minister-this-should-not-be-taken-seriously-p-shanmugam#comments</comments><guid isPermaLink="false">90edb9ac-bca6-4341-a384-526e533021a0</guid><pubDate>Tue, 01 Sep 2026 09:46:37 +0000</pubDate><atom:updated>2026-09-01T09:46:37.390Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>P. Shanmugam,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,CPIM,பெ. சண்முகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/ux3mbqd6/15.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெ. சண்முகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/ux3mbqd6/15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>விஜய் பிரதமராக வேண்டும் என்பது தமிழக வெற்றிக் கழகத்தினரின் விருப்பமாகவும், ஆசையாகவும் இருக்கலாம். அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.</p><p>வரும் 2029 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக முதல்-அமைச்சர் விஜய் நாட்டின் அடுத்த பிரதமராக வேண்டும் என தவெகவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இதற்கிடையே, ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக தவெகவினர் ஆதரிக்கவில்லை என்றால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வோம் என காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ் குமார் தெரிவித்திருந்தார்.</p><p>இந்நிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த<a href="https://www.dailythanthi.com/topic/p-shanmugam"> பெ. சண்முகத்திடம்</a> இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.</p><h2>தவெகவின் ஆசை</h2><p>அதற்கு பதிலளித்த அவர், “தவெக கட்சியினர் தங்களுடைய விருப்பத்தையும் ஆசைகளையும் தெரிவித்துள்ளனர். இதனை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஒரு குறிப்பிட்ட மாநிலத்திற்குள் செயல்படும் கட்சிக்கு உடனடியாக பிரதமராகும் வாய்ப்பு கிடைப்பது சாத்தியமில்லை. இந்தியா போன்ற பரந்த நாட்டில், ஒரு மாநிலத்தில் மட்டும் செயல்படும் கட்சி பிரதமரை உருவாக்கும் எனக் கூறுவது அந்தக் கட்சியின் ஆசையாக இருக்கலாம்” என்றார்.</p><h2>இடம்பெற மாட்டோம்</h2><p>மேலும், தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறுமா என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்தார். “தவெகவுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்கும் நிலைப்பாடு தொடர்ந்து நீடிக்கும். எதிர்காலத்திலும் அமைச்சரவையில் இடம்பெற மாட்டோம்” என பெ. சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>மாமன்னர் பூலித்தேவர் பிறந்தநாள்: டிடிவி தினகரன் புகழாரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/great-king-puli-thevars-birth-anniversary-ttv-dhinakaran-pays-tribute</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/great-king-puli-thevars-birth-anniversary-ttv-dhinakaran-pays-tribute#comments</comments><guid isPermaLink="false">43f50f29-983b-4f81-98ea-43fa479cbd92</guid><pubDate>Tue, 01 Sep 2026 09:28:54 +0000</pubDate><atom:updated>2026-09-01T09:28:54.704Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,பூலித்தேவர் பிறந்த நாள்,Puli Thevar,birth anniversary</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/3w3594q9/14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/3w3594q9/14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாமன்னர் பூலித்தேவர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>பூலித்தேவர் பிறந்த தினம்</h2><p>நெற்கட்டும்செவலைத் தலைமையிடமாகக் கொண்டு திறம்பட ஆட்சி செய்த மாமன்னரும், அந்நியர்களின் ஆதிக்கத்திற்கு அடிபணிய மறுத்து, துணிச்சலுடன் எதிர்த்து நின்ற முன்னோடித் தமிழர்களில் முதன்மையானவருமான மாமன்னர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D">பூலித்தேவர் </a>அவர்களின் பிறந்த தினம் இன்று.</p><p>ஆங்கிலேயர்களின் படைபலத்தைக் கண்டு துளியளவும் பின்வாங்காமல், தாய்மண்ணைக் காக்கத் தொடர்ந்து முன்னேறிச் சென்று, பல வெற்றிகளைக் கண்டு, வீரத்தையும் விடுதலை உணர்வையும் மக்கள் மத்தியில் விதைத்த மாமன்னர் பூலித்தேவர் அவர்களின் தீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றி வணங்குவோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பயணிகளுக்கு புதிய வசதி: 11 இடங்களில் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-facility-for-commuters-in-chennai-air-conditioned-bus-shelters-at-11-locations</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-facility-for-commuters-in-chennai-air-conditioned-bus-shelters-at-11-locations#comments</comments><guid isPermaLink="false">8fd40470-c5a2-41d8-8070-c8fbf297ea47</guid><pubDate>Tue, 01 Sep 2026 09:24:21 +0000</pubDate><atom:updated>2026-09-01T09:24:21.325Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,bus,பயணிகள்,பேருந்து நிறுத்தம்,new facility</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/an47bfp0/168.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/an47bfp0/168.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகராட்சியில் பயணிகளுக்கு புதிய வசதி: 11 இடங்களில் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று மேற்கொள்ளப்பட்டது. </p><p>இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவின்படி பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் மக்களுக்கும், பயணிகளுக்கும் உரிய பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் அமைப்பதற்கான முன்னோட்டமாக தற்போது பெருநிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் அனைத்து வசதிகளுடன் கூடிய 11 குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்படவுள்ளது.</p><p>அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன், சென்னை பெருநகர காவல் ஆணையர் அ. அமல்ராஜ், ஆகியோர் முன்னிலையில் பங்களிப்பாளர்களுடன் இன்று ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் மேற்கொள்ளப்பட்டது.</p><h2>குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுந்தங்கள் அமைக்கப்படவுள்ள விவரம் </h2><p><strong>வ. எண் நிறுவனங்களின் பெயர் மண்டலங்கள் இடங்கள்</strong></p><p>1. அப்பல்லோ மருத்துவமனை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். அண்ணாசாலை தேனாம்பேட்டை மயிலாப்பூர் பேருந்து நிறுத்தம்</p><p>2. காவேரி மருத்துவமனை கோடம்பாக்கம் ஜவஹர்லால் நேரு சாலை, வடபழனி</p><p>3. குருநானக் கல்லூரி அடையாறு விஜயநகர் பேருந்து முனையம், வேளச்சேரி</p><p>4. சிம்ஸ் மருத்துவமனை கோடம்பாக்கம் வடபழனி பேருந்து நிறுத்தம் அருகில், சிம்ஸ் மருத்துவமனைக்கு வரும் வழி கோடம்பாக்கம் வடபழனி பேருந்து நிறுத்தம் அருகில், சிம்ஸ் மருத்துவமனையிலிருந்து செல்லும் வழி</p><p>5. ரோகினி ஹோட்டல்ஸ், கிண்டி அடையாறு சின்னமலை, கிண்டி</p><p>6. எஸ்.ஆர்.எம். பிரைம் மருத்துவமனை கோடம்பாக்கம் ஆவிச்சி பள்ளி, ஆற்காடு சாலை ஆலந்தூர் ஆலந்தூர் மெட்ரோ</p><p>7. ஃப்ரையர் இன்டர்நேஷனல் லாஜிஸ்டிக் இராயபுரம் எழும்பூர் வடக்குப் பகுதி இராயபுரம் எழும்பூர் தெற்குப் பகுதி</p><h2>இந்த குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்களில் மேற்கொள்ளப்படும் வசதிகள்</h2><p>1. குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறை (Air Conditioned Waiting Hall)</p><p>2. கண்காணிப்புக் கேமராக்கள் (CCTV Camera)</p><p>3. வைஃபை வசதிகள் (Wi-fi facility)</p><p>4. சாய்வு தளப் பாதை (Accessible ramp, preferably integrated with the footpath)</p><p>5. பேருந்து வழித்தடத் தகவல்கள் (Bus Route information)</p><p>6. மின்விளக்கு வசதி (Lighting)</p><p>7. வெயில் தாங்கும் கூரை அமைப்பு (Puff panel roofing)</p><p>8. உறுதியான பாதுகாப்பான கண்ணாடி (Toughened / laminated Safety glass)</p><p>9. USB சார்ஜிங் வசதிகள் (USB charging points)</p><p>தொடர்ந்து இதுபோன்ற குளிரூட்டப்பட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">பேருந்து நிறுத்தங்கள்</a> தேவைப்படும் இடங்களில் பெருநிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் மேற்கொள்ளப்படும்.</p><p>இந்நிகழ்வில், சென்னை பெருநகர கூடுதல் காவல் ஆணையாளர் பா. சாமுண்டீஸ்வரி, இணை ஆணையாளர் (பணிகள்) சரவணன், தலைமைப் பொறியாளர் (பொது) பி.சங்கரவேலு, கண்காணிப்புப் பொறியாளர் (பேருந்து சாலைகள்) எம்.பழனி, பங்களிப்பாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஏகாதிபத்திய எதிர்ப்பு களத்தில் போரிட்ட மாவீரர் பூலித்தேவன் - மு.க.ஸ்டாலின் புகழாரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalin-pays-tribute-to-anti-imperialist-hero-pulithevan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalin-pays-tribute-to-anti-imperialist-hero-pulithevan#comments</comments><guid isPermaLink="false">f06d77a9-1dfb-4edb-9785-2410706f2c7f</guid><pubDate>Tue, 01 Sep 2026 09:18:36 +0000</pubDate><atom:updated>2026-09-01T09:18:36.879Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,பிறந்தநாள்,புகழாரம்,praises,M.K. Stalin,மாவீரன் பூலித்தேவன்,Poolithevan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/uwml9f25/144.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின் ]]></media:title><media:description type="html"><![CDATA[ தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/uwml9f25/144.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஏகாதிபத்திய எதிர்ப்பு களத்தில் போரிட்ட மாவீரர் பூலித்தேவனுக்கு மு.க.ஸ்டாலின் புகழாரம்.</p><h2>சிப்பாய்க்கலகம்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D">பூலித்தேவன்</a> (1715–1767), தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், நெல்கட்டும்செவலை ஆண்ட தமிழ் பாளையக்காரர் ஆவார். இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். விடுதலைப்போர் என கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாக கருதப்படுகிறார்.</p><h2>பூலித்தேவன் பிறந்தநாள்</h2><p>இந்திய சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 311-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் பூலித்தேவன் பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின்</a> புகழ் வணக்கத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>புகழ் வணக்கம்</h2><p>“சிப்பாய் புரட்சிக்கு நூறாண்டு முன்பே அந்நியர் ஆட்சிக்கு எதிராக வெகுண்டெழுந்த தமிழ் வீரர் பூலித்தேவர் பிறந்தநாள். தன்னலத்தை விடுத்து தமிழ்நிலத்தின் தன்மானமே பெரிதெனக் கருதி ஏகாதிபத்திய எதிர்ப்புக் களத்தில் போரிட்ட மாவீரர் பூலித்தேவருக்கு என் புகழ் வணக்கத்தை உரித்தாக்குகிறேன்! என்று தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content:encoded></item><item><title>பயணிகள் கவனத்திற்கு.. 14 சிறப்பு ரெயில்களின் சேவை மேலும் நீட்டிப்பு..</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/attention-passengers-service-of-14-special-trains-further-extended</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/attention-passengers-service-of-14-special-trains-further-extended#comments</comments><guid isPermaLink="false">3a6bb85c-22ac-44a0-b192-b5bfec311a3e</guid><pubDate>Tue, 01 Sep 2026 09:17:31 +0000</pubDate><atom:updated>2026-09-01T09:17:31.977Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,Chennai,சென்னை,தமிழகம்,Special trains,சிறப்பு ரெயில்கள்,பயணிகள்,passengers,service extension,attention,சேவை நீட்டிப்பு,கவனத்திற்கு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/tiob2wim/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு ரெயில்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/tiob2wim/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழகத்தில் 14 <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">சிறப்பு ரெயில்களின்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88">சேவை</a> மேலும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">நீட்டிக்கப்பட்டுள்ளதாக</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">தெற்கு ரெயில்வே அறிவிப்பு</a> வெளியிட்டுள்ளது.</p><h2>14 சிறப்பு ரெயில்களின் சேவை நீட்டிப்பு</h2><p>பயணிகளின் வசதிக்காக 14 சிறப்பு ரெயில்களின் சேவை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளன. </p><p>இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: </p><h2>தாம்பரம் - போடிநாயக்கனூர்</h2><p>தாம்பரத்தில் இருந்து போடிநாயக்கனூருக்கு சனிக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06059) செப்டம்பர் 12-ந்தேதி முதல் அக்டோபர் 24-ந்தேதி வரை 7 சேவைகளும், போடிநாயக்கனூரில் இருந்து தாம்பரத்திற்கு ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06060) செப்டம்பர் 13-ந்தேதி முதல் அக்டோபர் 25-ந்தேதி வரை 7 சேவைகளும் நீட்டிக்கப்படுகிறது.</p><h2>சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி</h2><p>இதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06045) செப்டம்பர் 4-ந்தேதி முதல் செப்டம்பர் 25-ந்தேதி வரை 4 சேவைகளும், கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06046) செப்டம்பர் 6-ந்தேதி முதல் செப்டம்பர் 27-ந்தேதி வரை 4 சேவைகளும் நீட்டிக்கப்படுகிறது. </p><h2>மங்களூரு சென்டிரல் - சென்னை எழும்பூர்</h2><p>மேலும், மங்களூரு சென்டிரலில் இருந்து சென்னை எழும்பூருக்கு திங்கட்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06126) செப்டம்பர் 7-ந்தேதி முதல் அக்டோபர் 26-ந்தேதி வரை 8 சேவைகளும், சென்னை எழும்பூரில் இருந்து மங்களூரு சென்டிரலுக்கு செவ்வாய்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06125) செப்டம்பர் 8-ந்தேதி முதல் அக்டோபர் 27-ந்தேதி வரை 8 சேவைகளும் நீட்டிக்கப்படுகின்றன. </p><h2>போத்தனூர் - சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்</h2><p>போத்தனூரில் இருந்து சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரலுக்கு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06028) செப்டம்பர் 4-ந்தேதி முதல் நவம்பர் 29-ந்தேதி வரை 39 சேவைகளும், சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரலில் இருந்து போத்தனூருக்கு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06027) செப்டம்பர் 4-ந்தேதி முதல் நவம்பர் 29-ந்தேதி வரை 39 சேவைகளும் நீட்டிக்கப்படுகிறது. </p><h2>திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்</h2><p>இதேபோல், திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06030) செப்டம்பர் 6-ந்தேதி முதல் நவம்பர் 29-ந்தேதி வரை 13 சேவைகளும், மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு திங்கட்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06029) செப்டம்பர் 7-ந்தேதி முதல் நவம்பர் 30-ந்தேதி வரை 13 சேவைகளும் நீட்டிக்கப்படுகிறது. </p><h2>நெல்லை - தாம்பரம் (ஞாயிற்றுக்கிழமை)</h2><p>மேலும், நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06166) செப்டம்பர் 6-ந்தேதி முதல் செப்டம்பர் 27-ந்தேதி வரை 4 சேவைகளும், தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு திங்கட்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06165) செப்டம்பர் 7-ந்தேதி முதல் செப்டம்பர் 28-ந்தேதி வரை 4 சேவைகளும் நீட்டிக்கப்படுகிறது. </p><h2>நெல்லை - தாம்பரம் (வியாழக்கிழமை)</h2><p>இதேபோல், திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்திற்கு வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06070) செப்டம்பர் 3-ந்தேதி முதல் அக்டோபர் 29-ந்தேதி வரை 9 சேவைகளும், தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06069) செப்டம்பர் 4-ந்தேதி முதல் அக்டோபர் 30-ந்தேதி வரை 9 சேவைகளும் நீட்டிக்கப்பட்டுள்ளன. </p><p>இந்த 14 சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>திருநெல்வேலிக்கு பெருமை சேர்த்த இளம் கிரிக்கெட் வீரர்  பிஜுமுகேஷனுக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendran-congratulates-young-cricketer-biju-mukesh-who-has-brought-pride-to-tirunelveli</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendran-congratulates-young-cricketer-biju-mukesh-who-has-brought-pride-to-tirunelveli#comments</comments><guid isPermaLink="false">e3a0ac66-5755-41be-bc57-f61e86426811</guid><pubDate>Tue, 01 Sep 2026 09:12:41 +0000</pubDate><atom:updated>2026-09-01T09:12:41.268Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Tirunelveli,திருநெல்வேலி,கிரிக்கெட் வீரர்,cricketer</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/h1yqu1qf/13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/h1yqu1qf/13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>திருநெல்வேலிக்கு பெருமை சேர்த்த இளம் கிரிக்கெட் வீரர்  பிஜுமுகேஷனுக்கு தமிழக பாஜக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன் </a>வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- </p><h2>தமிழகத்திற்கு பெருமை</h2><p>திருநெல்வேலி முத்தமிழ் பப்ளிக் பள்ளியில் (சிபிஎஸ்இ) பயிலும் மாணவர் பிஜுமுகேஷன் அவர்கள், 14 வயதிற்குட்பட்ட சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கான நான்கு மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் விளையாடத் தேர்வு செய்யப்பட்டிருப்பது, திருநெல்வேலி மாவட்டத்திற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் மகிழ்ச்சியான செய்தியாகும்.</p><h2>பாராட்டு</h2><p>இளம் வயதிலேயே தனது திறமையையும் விடாமுயற்சியையும் வெளிப்படுத்தி, மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ள மாணவர் பிஜுமுகேஷன் அவர்களை இன்று எனது திருநெல்வேலி இல்லத்திற்கு நேரில் அழைத்து, எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டேன்.</p><p>அவரது விளையாட்டுத் திறமை மேலும் சிறந்து, எதிர்காலத்தில் பல்வேறு உயரங்களைத் தொட்டு, திருநெல்வேலிக்கும், தமிழகத்திற்கும், நம் பாரத தேசத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன். இந்த நிகழ்வில் திருநெல்வேலி வடக்கு மாவட்ட தலைவர் முத்து பலவேசம் அவர்கள் உடன் இருந்தார்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>“நீரை சிக்கனமாக பயன்படுத்துவோம்.. கடைமடை வரை பகிர்ந்தளிப்போம்..” - தமிழ்நாடு அரசு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-use-water-judiciously-and-distribute-it-right-up-to-the-tail-end-areas-government-of-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-use-water-judiciously-and-distribute-it-right-up-to-the-tail-end-areas-government-of-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">8f94ff3c-06d5-49f0-8d2f-5b9c2a52f8f1</guid><pubDate>Tue, 01 Sep 2026 08:32:07 +0000</pubDate><atom:updated>2026-09-01T08:32:07.523Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,மேட்டூர் அணை,Mettur dam,water release,தமிழ்நாடு அரசு,நீர் திறப்பு,TN government,தமிழ்நாடு முதல்-அமைச்சர்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/vp7m4w6k/pai.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/vp7m4w6k/pai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மேட்டூர் அணையிலிருந்து குடிநீர்த் தேவை மற்றும் 2026-27 ஆம் ஆண்டிற்கான காவிரி டெல்டா பாசனத்திற்காக <a href="https://www.dailythanthi.com/topic/vijay">தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்</a> இன்று (01.09.2026) தண்ணீர் திறந்து வைத்தார். </p><h2>முதல்-அமைச்சர் விஜய்</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p><a href="https://www.dailythanthi.com/topic/vijay">தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்</a> அவர்கள் இன்று (1.9.2026) சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக திகழும் காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடியை மேற்கொள்ளவும், காவிரிப் படுகைப் பகுதிகளின் குடிநீர்த் தேவைகளை நிறைவு செய்யவும் தண்ணீரைத் திறந்து வைத்தார்.</p><p>இன்று (1.9.2026) காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91.56 அடியாகவும், நீர் இருப்பு 54.452 டி.எம்.சி. ஆகவும், நீர்வரத்து வினாடிக்கு 10,857 கன அடியாகவும் உள்ளது. அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்து ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பாசனத் தேவைக்கேற்ப நீர் வெளியேற்றம் படிப்படியாக முறைப்படுத்தப்படும்.</p> <h2>மேட்டூர் அணை</h2><p>இதுதொடர்பாக, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, நீர்வளத்துறை மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆகிய துறைகள் மாவட்ட நிர்வாகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளன.</p><p>மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் ஒவ்வொரு கனஅடி நீரும் விவசாயிகளின் நலனுக்காக முறையாகப் பயன்படுத்தப்படுவது உறுதிசெய்யப்படும். காவிரி ஆறு மற்றும் கால்வாய்களின் வழித்தடங்களில் சட்டவிரோதமாக மின்மோட்டார்கள் மூலம் தண்ணீர் உறிஞ்சுதல், அனுமதியின்றி நீர் எடுத்தல் மற்றும் அனுமதிக்கப்பட்ட நீரேற்றுத் திட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக நீர் எடுப்பது ஆகியவை கண்டிப்பாகத் தடுக்கப்படும்.</p><h2>விட்டுக்கொடுக்க மாட்டோம்</h2><p>இதற்காக நீர்வளத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, காவல்துறை மற்றும் தமிழ்நாடு மின்பகிர்மானக் கழக அலுவலர்களைக் கொண்ட கூட்டுக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, இரவு–பகலாக ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்படும்.</p><p>காவிரி நீர் என்பது நடுவர்மன்றத் தீர்ப்பாலும் மாண்பமை சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பாலும் உறுதிசெய்யப்பட்ட நமது சட்டப்பூர்வ உரிமையாகும். அந்த உரிமையை எந்தச் சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம். காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு மற்றும் மாண்பமை சுப்ரீம்கோர்ட்டின் 16.02.2018-ஆம் நாளிட்ட தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு உரிய நீரைப்பெற அரசு தொடர்ந்து உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.</p><h2>எல் நினோ தாக்கம்</h2><p>மாண்பமை சுப்ரீம்கோர்ட்டையும் அணுகி, தமிழ்நாட்டின் சட்டப்பூர்வ நீர்ப்பங்கையும், டெல்டா விவசாயிகளின் உரிமையையும் பாதுகாப்பதற்கான அனைத்து சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.</p><p>தென்மேற்குப் பருவமழை பற்றாக்குறை மற்றும் தீவிர எல் நினோ தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, தற்போது நீர் திறப்பது, வரையறுக்கப்பட்ட நீரைச் சிக்கனமாகவும், திறம்படவும் நிர்வகித்து சம்பா சாகுபடியைப் பாதுகாப்பதற்கான திட்டமிட்ட நடவடிக்கையாகும். எனவே, விவசாயிகள் குறைந்த நீர்த் தேவையுள்ள மத்திய கால நெல் இரகங்களையும், நேரடி நெல் விதைப்பு உள்ளிட்ட நீர்ச் சிக்கன சாகுபடி முறைகளையும் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><h2>சம்பா சாகுபடி</h2><p>“நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவோம்; கடைமடை வரை பகிர்ந்தளிப்போம்; சம்பா சாகுபடியை வெற்றிபெறச் செய்வோம்.”</p><p>இந்த நிகழ்வில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ந.ஆனந்த், போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆ.விஜய் தமிழன் பார்த்திபன், சட்டமன்ற உறுப்பினர்கள்  சோ.லட்சுமணன், கா. சிவக்குமார், மே.ச. பழனிவேல், நீர்வளத்துறை செயலாளர் பிரசாந்த் மு.வடநெரே, இ.ஆ.ப., சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், இ.ஆ.ப., நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது) எஸ். கோபாலகிருஷ்ணன், திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர்  ஏ.ஜெயகுமாரி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாயப் பெருங்குடிமக்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி - நரசப்பூர் சிறப்பு ரெயிலுக்கு கூடுதலாக 2 நிறுத்தங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-narasapur-special-train-gets-two-extra-stops</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-narasapur-special-train-gets-two-extra-stops#comments</comments><guid isPermaLink="false">c940192e-e9e8-4791-ba2d-8d57f71b22ec</guid><pubDate>Tue, 01 Sep 2026 08:21:32 +0000</pubDate><atom:updated>2026-09-01T08:21:32.707Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,தெற்கு ரெயில்வே,Southern Railway,Special train,Thoothukudi,தூத்துக்குடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/1j4sr7kq/Untitled-12.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/1j4sr7kq/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தூத்துக்குடி - நரசப்பூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயிலுக்கு கூடுதலாக 2 நிறுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p>தூத்துக்குடி - நரசப்பூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்கள் 06019/ 06020) பண்ருட்டி மற்றும் நாயுடுபேட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும். தூத்துக்குடியில் இருந்து திங்கட்கிழமை இரவு 11.30 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் காலை 9.03 மணிக்கு பண்ருட்டி ரெயில் நிலையத்தில் 1 நிமிடமும், மாலை 3.18 மணிக்கு நாயுடுபேட்டை ரெயில் நிலையத்தில் 2 நிமிடமும் நின்று செல்லும்.</p><p>மறுமார்க்கத்தில், நரசப்பூரில் இருந்து புதன்கிழமை காலை 4 மணிக்கு புறப்படும் ரெயில், நாயுடுபேட்டையில் பகல் 12.03 மணி முதல் 2 நிமிடமும், பண்ருட்டியில் மாலை 6.11 மணி முதல் 1 நிமிடமும் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரூ.1,000 கோடி நிதி நிறுவன மோசடி:  இளைஞர் தற்கொலைக்கு காவல்துறையே பொறுப்பேற்க வேண்டும் - அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-1000-crore-financial-fraud-police-must-own-responsibility-for-youth-suicide-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-1000-crore-financial-fraud-police-must-own-responsibility-for-youth-suicide-anbumani#comments</comments><guid isPermaLink="false">5bd7d8e6-c3b8-4203-aeda-cd8fecdecdec</guid><pubDate>Tue, 01 Sep 2026 08:03:07 +0000</pubDate><atom:updated>2026-09-01T08:03:07.244Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK,Duping,நிதி நிறுவன மோசடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/70q8zcn2/Untitled-11.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/70q8zcn2/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>எப்.க்யூ.எல் (FQL) நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த மக்களுக்கு அவர்களின் பணத்தை உடனடியாக மீட்டுத் தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் முதலீடு செய்த தொகையை இரட்டிப்பாக்கித் தருவதாக ஆசைகாட்டி ரூ.1,000 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும்  எப்.க்யூ.எல் (FQL) நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த திண்டுக்கல் மாவட்ட இளைஞர் இராசு தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் ஆண்டுக்கு ஒருமுறை இத்தகைய மோசடிகள் அரங்கேற்றப்படும் நிலையில், அதை காவல்துறையினர் தடுக்கத் தவறியது கண்டிக்கத்தக்கது.</p><p>மதுரை மாவட்டம் மேலூர், அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட எப்.க்யூ.எல் நிதி நிறுவனம், தங்களிடம் முதலீடு செய்தால் அந்தப் பணத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து மிகக் குறுகிய காலத்தில் இரட்டிப்பாக்கித் தருவதாக ஆசை காட்டி விளம்பரங்கள் செய்தது. இதற்காக தனிச் செயலி ஒன்றையும் அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின்படி மக்களிடம் சென்று முதலீடுகளைத் திரட்டுவதற்காக பெருமளவில் முகவர்களும் நியமிக்கப்பட்டனர். எப்.க்யூ.எல் நிதி நிறுவனத்தின் விளம்பரங்களை நம்பிய மக்களும் தங்களிடமிருந்த பணத்தை லட்சக்கணக்கில் முதலீடு செய்தனர். பலர் அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு தங்களின் நிலம் உள்ளிட்ட உடமைகளை விற்றும், அடகு வைத்தும் முதலீடு செய்தனர். ஆனால், உறுதியளித்த காலத்தில் முதலீட்டைத் திருப்பித் தராமல் ஏமாற்றி வந்த நிறுவனம் சில நாள்களுக்கு முன் மூடப்பட்டு விட்டது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்நிறுவனம் ரூ.1,000 கோடி அளவுக்கு மோசடி செய்திருப்பதாக முதலீட்டாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.</p><p>திண்டுக்கல் மாவட்டம் காசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இராசு என்ற இளைஞர் இந்த நிறுவனத்தில் பெரும் தொகையை முதலீடு செய்ததுடன், முகவராகவும் செயல்பட்டு லட்சக்கணக்கில் முதலீடு திரட்டிக் கொடுத்து உள்ளார். மோசடி நிதி நிறுவனம் மூடப்பட்டு விட்ட நிலையில், பணத்தை திருப்பிக் கேட்ட முதலீட்டாளர்களுக்கு பதில் கூற முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது தற்கொலைக்கு நீதி கேட்டு அவரது உறவினர்களும், பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருவதால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. பணம் கட்டி ஏமாந்த மக்களும் மதுரை மாவட்ட காவல்துறையில் கூட்டம், கூட்டமாக வந்து புகார் அளித்து வருகின்றன. மோசடியின் தன்மை மற்றும் அளவைக் கருத்தில் கொண்டு இந்த மோசடி வழக்கின் விசாரணையை பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு மாற்றி காவல்துறை தலைமை இயக்குனர் ஆணையிட்டுள்ளார். ஆனால், பணம் கட்டி ஏமாந்த மக்களுக்கு எப்போது பணமும், நீதியும் கிடைக்கும் என்பது மட்டும் தெரியவில்லை.</p><p>தமிழ்நாட்டில் திடீர், திடீரென மோசடி நிதிநிறுவனங்கள் தொடங்கப்படுவதும், அவை மக்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை மோசடி செய்து விட்டு மூடப்படுவதும் புதிதல்ல. சராசரியாக ஓராண்டு அல்லது ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை இத்தகைய மோசடிகள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் சென்னையில் ஆரூத்ரா, வேலூரில் எல்.என்.எஸ். சர்வதேச நிதிச்சேவை நிறுவனம், திருச்சியில் எல்பின்ஸ் ஆகிய  3 நிதி நிறுவனங்கள், அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி, மாநிலம் முழுவதும் 2 லட்சம் பேரிடமிருந்து ரூ.8,625 கோடி வசூலித்து மோசடி செய்தன. கோவையைச் சேர்ந்த மை வி 3 ஆட்ஸ் (MY V3 Ads) நிறுவனம் பொதுமக்களிடம்  ரூ.2,000 கோடி மோசடி செய்ததுடன், அதை அம்பலப்படுத்திய பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்தது. இதுதொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பலர் கைது செய்யப்பட்ட போதிலும், ஏமாற்றப்பட்ட பொதுமக்களுக்கு இன்னும் ஒரு ரூபாய் கூட மீட்டுத் தரப்படவில்லை.</p><p>ஒன்றரை ஆண்டுகளில் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகவும், ஆண்டுக்கு 30 சதவீதம் வரை வட்டி வழங்குவதாகவும் மோசடி நிதி நிறுவனங்கள் கூறியதை மக்கள் அப்படியே நம்பியதுதான் இந்த மோசடிக்கு காரணம் ஆகும். அதிக வட்டி, நட்சத்திர விடுதிகளில் அறிமுக நிகழ்ச்சிகளை நடத்துதல், முதலீடு செய்தவர்களில் ஒரு சிலருக்கு அதிக வட்டியை வழங்கி, அவர்கள் மூலம் மக்களிடம் வாய்மொழி பிரசாரம் செய்ய வைத்தல் போன்றவற்றின் மூலம்தான் மோசடி நிறுவனங்கள் கவர்ந்திழுத்து ஏமாற்றுகின்றன.</p><p>ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய மோசடிகளால் ஏராளமானமானோர் பாதிக்கப்படுகிறார்கள் என்ற போதிலும், அதனால் விழிப்புணர்வு பெறாத பொதுமக்கள் போட்டிப் போட்டுக் கொண்டு மீண்டும், மீண்டும் முதலீடு செய்து ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதற்கு காரணம் அவர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததுதான். முதலீடு செய்யப்படும் தொகைக்கு அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை காட்டப்படும்போது அதை நம்பி பொதுமக்கள் ஏமாறுவது இயல்புதான். நேர்மையான நிதி நிறுவனங்களையும், மோசடி நிறுவனங்களையும் பகுத்துப் பார்த்து முதலீடு செய்யும் அளவுக்கு ஊரக, கல்வியறிவற்ற மக்கள் விழிப்புணர்வு பெறவில்லை.</p><p>இத்தகைய சூழலில், மோசடி நிறுவனங்களை தொடக்கத்திலேயே அடையாளம் கண்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதையாவது பொருளாதாரக் குற்றப்பிரிவு செய்திருக்க வேண்டும். அதிக வட்டி தருவதாகவும், பரிசுகளை அள்ளி வழங்குவதாகவும் அந்த நிறுவனங்கள் துண்டறிக்கைகள் மூலமாகவும், முழுபக்க விளம்பரங்கள் மூலமாகவும் தொடர் விளம்பரங்களை செய்து தான் முதலீடு திரட்டுகின்றன. இவை எதுவும் தமிழக காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பு இல்லை. அவ்வாறு இருக்கும் போது, இத்தகைய நிறுவனங்களில் முதலீடு செய்யக் கூடாது என்று காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு தடுத்திருக்க வேண்டும். அதுதான் அவற்றின் முதன்மைக் கடமையும் கூட. அதைச் செய்யத் தவறிய காவல்துறைதான் இந்த மோசடிக்கும், உயிரிழப்புக்கும் பொறுப்பேற்க வேண்டும்.</p><p>கடந்த காலங்களிலும், இப்போதும் மோசடி செய்த நிதி நிறுவனங்கள் மீது, இந்திய தண்டனை சட்டம் 420 போன்ற சாதாரண பிரிவுகளில்தான் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இதிலிருந்து அந்நிறுவன உரிமையாளர்கள் எளிதாக தப்பிவிடக் கூடும். இதைத் தடுப்பதற்காக மோசடியாளர்கள் மீது இன்னும் கடுமையான பிரிவுகளில் வழக்குகள் தொடரப்பட வேண்டும். மோசடியாளர்களின் பெயர்களில் மட்டுமின்றி, அவர்களைச் சார்ந்தவர்கள், நெருக்கமானவர்கள் பெயர்களில், மோசடி நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்திற்கு பின்னர் வாங்கப்பட்ட சொத்துகளையும் முடக்க வேண்டும்; மேலும், நிதி நிறுவனங்கள் தொடங்குவதற்கு பொருளாதாரக் குற்றப்பிரிவில் தடையின்மைச் சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். அதற்கு வாய்ப்பில்லாத சூழலில் தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.</p><p>மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்கள் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் எப்.க்யூ.எல் (FQL) நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த மக்களுக்கு அவர்களின் பணத்தை உடனடியாக மீட்டுத் தர தமிழக அரசும், காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>விமான நிலையம் முதல் வங்கிகள் வரை: இன்று முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய விதிமுறைகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/from-airports-to-banks-key-regulations-coming-into-effect-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/from-airports-to-banks-key-regulations-coming-into-effect-today#comments</comments><guid isPermaLink="false">a52a5759-7012-4da9-96ad-1d3167d23e79</guid><pubDate>Tue, 01 Sep 2026 07:58:02 +0000</pubDate><atom:updated>2026-09-01T07:58:02.627Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழ்நாடு,airport,விமான நிலையம்,வங்கிகள்,banks,விதிமுறைகள்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/umcb61d1/kioerer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/umcb61d1/kioerer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>விமான நிலையம் முதல் வங்கிகள் வரை, இன்று (செப்டம்பர் 1ம் தேதி) முதல் சில முக்கிய விதிமுறைகள் நடைமுறைக்கு வருகின்றன. </p><h2>போர்டிங் பாஸ்</h2><p><strong>*</strong> அந்த வகையில், வெளிநாடு செல்லும் பயணிகள், விமான நிலையங்களில் குடியுரிமை கவுன்டர்களில் போர்டிங் பாஸில் முத்திரை பெற வேண்டிய அவசியம் இல்லை. மின்னணு அல்லது அச்சிடப்பட்ட போர்டிங் பாசை காண்பித்தால் போதும். </p><h2>எல்.பி.ஜி. சிலிண்டர்</h2><p><strong>*</strong> அதேபோல், எல்.பி.ஜி. இணைப்பில் இ-கே.ஒய்.சி. செய்யாவிட்டால் வீட்டு உபயோக சிலிண்டரை சலுகை விலையில் பெற முடியாது. இதனால், செப்டம்பர் மாதத்திற்கான எல்.பி.ஜி. சிலிண்டர் விலை மாற வாய்ப்பு இருக்கிறது. </p><h2>காலை 10.10 மணிக்குள்</h2><p><strong>*</strong> மேலும், ரூ.3 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட வைப்பு தொகைகளுக்கான வட்டி விகித விவரங்களை ஒவ்வொரு நாளும் வங்கிகள் காலை 10.10 மணிக்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும். </p><p>ஒரே நாளில் ஒரே தொகைக்கான வைப்பு தொகைக்கு வெவ்வேறு கிளைகள் வெவ்வேறு வட்டி விகிதங்களை வழங்க முடியாது. வட்டி விகிதங்களில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவர இந்த விதி கொண்டுவரப்பட்டுள்ளது.  </p>]]></content:encoded></item><item><title>தஞ்சாவூர்: அரசலாற்றை தூர்வார வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thanjavur-farmers-demand-dredging-of-arasala-river</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thanjavur-farmers-demand-dredging-of-arasala-river#comments</comments><guid isPermaLink="false">8ecd669a-48d1-43cb-b95f-12ed5fce2edd</guid><pubDate>Tue, 01 Sep 2026 07:30:54 +0000</pubDate><atom:updated>2026-09-01T07:30:54.964Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தஞ்சாவூர்,விவசாயிகள்,river,Kumbakonam,தூர்வாரும் பணி,Tanjaore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/0pb5lcrr/4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விவசாயிகள் கோரிக்கை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/0pb5lcrr/4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கும்பகோணம்</p><p>காவிரி டெல்டா பாசனத்தின் முக்கிய கிளை ஆறுகளில் ஒன்றான அரசலாற்றை உடனடியாக தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><h2>இது தொடர்பாக விவசாயிகள் கூறியதாவது:-</h2><p>தஞ்சாவூர் மாவட்டம் கும்பக்கோணத்தில் தொடங்கும் அரசலாறு திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் வழியே சென்று காரைக்கால் கடலில் கலக்கிறது. மேலும், இந்த ஆறு அப்பகுதிகளை சுற்றியுள்ள 1.40 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களின் சாகுபடிக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.</p><p>இந்த ஆண்டு காவிரி சமவெளி மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளுக்காக மிக குறைவான அளவு நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், <a href="https://www.dailythanthi.com/topic/தூர்வாரும்-பணிகள்">தூர்வாரும் பணிகள்</a> நடக்காமல், அரசலாற்றில் புல், பூண்டுகள், செடிகொடிகள் மற்றும் மரங்கள் அதிக அளவில் வளர்ந்து நீர் செல்லும் பாதையை அடைத்துள்ளன.</p><p>இந்த நிலையில், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் கடைமடை வரை எப்படி செல்லும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். அரசலாற்றை முழுமையாக சுத்தம் செய்தால் மட்டுமே அதன் கிளை ஆறுகளான நாட்டாறு, நண்டலாறு, கீர்த்தி மானாறு ஆகிய ஆறுகள் வழியாக, இறுதி வரை உள்ள விவசாய நிலங்களுக்கு நீர் சென்றடையும். எனவே, விவசாய நிலங்களையும் <a href="https://www.dailythanthi.com/topic/விவசாயிகள்">விவசாயிகளையும்</a> காப்பதற்காக அரசலாற்றில் உள்ள மரம் செடிகளை அகற்றி, ஆற்றை முழுமையாக தூர்வார வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு - எவ்வளவு தெரியுமா..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/commercial-cylinder-price-hike-how-much-you-know</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/commercial-cylinder-price-hike-how-much-you-know#comments</comments><guid isPermaLink="false">5d315b65-3907-48fa-8525-93912e68d01e</guid><pubDate>Tue, 01 Sep 2026 01:39:14 +0000</pubDate><atom:updated>2026-09-01T07:24:12.266Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,சிலிண்டர் விலை,எண்ணெய் நிறுவனங்கள்,விலை உயர்வு,price hike,cylinder</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/37qz3cjf/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிலிண்டர் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/37qz3cjf/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இன்று மாதத்தின் முதல் நாள் என்பதால், சிலிண்டர் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது.</p><h2>எண்ணெய் நிறுவனங்கள்</h2><p>பாரத், இந்துஸ்தான், இந்தியன் ஆயில் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும், சமையல் கியாஸ் சிலிண்டர்களை நாடு முழுவதும் வினியோகம் செய்து வருகின்றன.</p><h2>விலை நிர்ணயம்</h2><p>சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலைகளை நிர்ணயித்து வருகின்றன. இதில் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலைகளை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைத்து வருகின்றன.</p><h2>விலை உயர்வு</h2><p>இந்த நிலையில், இன்று மாதத்தின் முதல் நாள் என்பதால், சிலிண்டர் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.10.50 உயர்ந்து, ரூ.2,916.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமுமின்றி ரூ.957.50-க்கு விற்பனையாகிறது.</p>]]></content:encoded></item><item><title>&apos;நந்தன்&apos; சினிமா பட பாணியில் இன்னும் தொடரும் சாதிய அடக்குமுறை - வானதி சீனிவாசன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nandan-cinema-pada-paaniyil-innum-thodarum-saathiya-adakkumurai-vanathi-srinivasan-kandanam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nandan-cinema-pada-paaniyil-innum-thodarum-saathiya-adakkumurai-vanathi-srinivasan-kandanam#comments</comments><guid isPermaLink="false">184b23d0-a31e-4df4-9d3b-d81c193dffb4</guid><pubDate>Tue, 01 Sep 2026 07:23:04 +0000</pubDate><atom:updated>2026-09-01T07:23:04.947Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,சாதிய அடக்குமுறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/rc6m1hi3/Untitled-10.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/rc6m1hi3/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமர மக்களுக்கான சமூக நீதி என்பது தவெக அரசில் முற்றிலும் கேள்விக்குறியாகி உள்ளது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தாழ்த்தப்பட்ட இன மக்களும், பெண்களும் அதிகாரத்திற்கு வரும்பொழுது இன்னும் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்பதற்கு இந்த செய்தியே சாட்சி. விழுப்புரம் மாவட்டம், கொடுங்கால் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகிக்கும் மலர்விழி தனக்கான அதிகாரத்தை முறையாகப் பயன்படுத்த விடவில்லை என்று கூறி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படும் செய்தி கடும் அதிர்ச்சி அளிக்கிறது.</p><p>தனக்கான தலைவர் நாற்காலி தரவில்லை எனவும், சுதந்திரதினத்தன்று கொடியேற்ற விடுவதில்லை என்றும் அவர் கூறியதாகக் வெளிவந்துள்ள செய்தியானது இன்னும் தொடர்கின்ற சமூக நீதியின் பேரவலம். பதவியில் உள்ள ஊராட்சி மன்ற தலைவருக்கே இவ்வாறான சாதிய கொடுமைகள் நடக்கும்போது பாமர மக்களுக்கான சமூக நீதி என்பது தவெக அரசில் முற்றிலும் கேள்விக்குறியாகி உள்ளது.</p><p>சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு என்ன பதில் சொல்லப் போகிறார்? தவெக அரசின் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் கொள்கை' இதுதானா முதல்-அமைச்சர் அவர்களே! இவரைப் போன்றே இன்னும் நிறைய 'நந்தன்'கள் தங்களுக்கான உரிமைகள் இருந்தும் சாதிய அடக்கு முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.</p><p>சமூக நீதித்துறை என்பது வெறும் மனுக்களை நின்று கொண்டு வாங்குவதும், அவர்களது வீட்டில் உண்பது மட்டும் இல்லை அமைச்சர் வன்னி அரசு அவர்களே! மலர்விழி போன்றவர்களின் அதிகாரமும், உரிமைகளும் எப்போது முழுமையாகப் பயன்படுத்தப்படுகிறதோ அப்போதுதான் உண்மையான சமூக நீதி விடுதலை என்பதற்கான அடையாளம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அனிதா நினைவேந்தல் கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு ஏன்? - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-was-permission-denied-for-the-anitha-memorial-meeting-opposition-leader-udhayanidhi-questions</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-was-permission-denied-for-the-anitha-memorial-meeting-opposition-leader-udhayanidhi-questions#comments</comments><guid isPermaLink="false">eed43092-7d02-4bf2-95ce-ac399a7cc20e</guid><pubDate>Tue, 01 Sep 2026 07:01:27 +0000</pubDate><atom:updated>2026-09-01T07:01:27.384Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,தமிழக சட்டசபை,TN Assembly,Assembly Session,அனிதா,Anita,சட்டமன்ற கூட்டத்தொடர்,அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,Minister Adhav Arjuna</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/8b7y0bq4/ani.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/8b7y0bq4/ani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>அனிதாவின் 9-ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டத்திற்கு அரசு அனுமதி மறுத்த விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/udhayanidhi-stalin">உதயநிதி ஸ்டாலினுக்கும்</a>, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.</p><h2>நினைவேந்தல் நிகழ்ச்சி</h2><p>அப்போது  <a href="https://www.dailythanthi.com/topic/udhayanidhi-stalin">உதயநிதி ஸ்டாலின்</a> பேசுகையில், “தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு மற்றும் அனிதாவின் குடும்பம் சார்பில் அமைதியான நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஏன் அனுமதி வழங்கவில்லை. பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய கொடியேற்றம் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்ட சூழலில், ஜனநாயக ரீதியில் அமைதியாக நடைபெற இருந்த அனிதாவின் நினைவேந்தல் கூட்டத்துக்கு அரசு அனுமதி கொடுக்காதது ஏன்?. </p><p>பெசன்ட் நகர் மாதா கோவிில் கொடியேற்றத்தைக் காரணம் காட்டி அனிதாவின் 9ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. ஆனால், அங்கு அந்த அளவில் கூட்டம் இல்லை; உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். அல்லது மாற்று இடத்தை கொடுக்க வேண்டும். அனிதா மரணத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் தனக்கு இல்லை” என்று தெரிவித்தார்.</p><h2>அனிதா நினைவு நாள்</h2><p>அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகளை கருத்தில் கொண்டே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதில் எந்தவித அரசியலும் இல்லை. எனினும், நினைவேந்தல் கூட்டத்தை நடத்துவதற்கு ஏதுவான மாற்று இடத்தை தேர்வு செய்ய அரசு தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.</p><p>தொடர்ந்து பெசிய அவர், “இன்றைய நாள் தங்கை அனிதா நினைவு நாள். தன்னுடைய கோரிக்கைக்காக சுப்ரீம்கோர்ட்டு வரை சென்று கோரிக்கை நிறைவேறாததால் உயிரிழந்தார். 3 மாநில முதல்வர்கள் நீட்டுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியும் மத்திய அரசு நீக்கவில்லை.</p><p>வரக்கூடிய காலங்களில் தேர்தல் சூழ்நிலை மாறும் நிலையில், உறுதியாக மாறும். 2029ல் தேர்தல் சூழ்நிலை மாறும் போது, சட்டமன்றத்தில் ஒலித்த குரல், பாராளுமன்றத்தில் நீட் தூக்கி எறியப்படும் நாளாக மாறும். அனிதாவின் தியாகம், கண்ணீர், உழைப்பு, உணர்வு நிறைவேறும்” என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.</p><h2>ஆதவ் அர்ஜுனாவுக்கு அறிவுரை</h2><p>முன்னதாக அனிதாவின் நினைவு நாள் நினைவேந்தலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து எதிர்கட்சி தலைவர் உதயநிதி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தன் பேச்சின் நிறைவில், "அனிதாவின் நினைவு நாளான இன்றாவது, அரசியல் செய்ய வேண்டாம்" என கூற, திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். </p><p>உடனே குறிக்கிட்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், "அரசின் கவனத்திற்கு எதிர்கட்சி தலைவர் கொண்டு வந்துள்ளார், அத்தோடு அதை முடித்துவிடவும்" என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு அறிவுரை வழங்கினார்.</p>]]></content:encoded></item></channel></rss>