<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 10 Aug 2026 09:55:59 +0000</lastBuildDate><item><title>முதலிடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து: தீர்மானத்திற்கு ஆதரித்த அனைவருக்கும் நன்றி - முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-thai-vazhthu-given-top-priority-thanks-to-everyone-who-supported-the-resolution-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-thai-vazhthu-given-top-priority-thanks-to-everyone-who-supported-the-resolution-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">5748071c-b71f-4dac-b905-7e0fa8d34f7f</guid><pubDate>Mon, 10 Aug 2026 09:55:28 +0000</pubDate><atom:updated>2026-08-10T09:55:28.666Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,தமிழக அரசு,தமிழ்த்தாய் வாழ்த்து,முதல்-அமைச்சர் விஜய்,தவெக அரசு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/2p355dle/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/2p355dle/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசுத் துறை, கல்வி நிறுவன நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை கட்டாயமாக்கும் வகையில், சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu/tamilthai-vazhthu-mandatory-at-government-events-chief-minister-vijay-resolution">தனித்தீர்மானம் </a>கொண்டு வந்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><h2>தமிழ் என்றால் கெத்து</h2><p>இந்தியாவின் நெற்றியில் வைக்கக்கூடிய வெற்றிப் பொட்டுதான் நம் தமிழ்நாடு. தமிழ் என்றால் கெத்து; தமிழ் என்றால் அது தனி பவர். ஒரு பெயரே, ஒரு சொல்லே மிகப்பெரிய வரலாறுன்னா அது தமிழ்தான். தமிழ் மொழி என்றால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒன்றாக வந்து நிற்கும். தமிழ் வெறும் மொழி மட்டும் அல்ல; நம் உயிர்; பேசினால் ஓசை மட்டும் இல்லை, உணர்வும் வரும்; நம் தாய்மொழி குறித்த உணர்வை புரியவைக்க தாய் மொழி, தமிழ் மொழி என்று சொல்வதே போதும்.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிப்பதுதான் மாநில உரிமை. தமிழ்த்தாய் வாழ்த்தின் மரியாதையை பாதுகாப்பதில் தவெக அரசு சமரசம் செய்யாது. உணர்வோடு கலந்திருக்கக்கூடிய தமிழை பின்னுக்குத் தள்ளினால் எப்படி பொறுத்துக்கொள்வது?; தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலிடத்தில் இருக்க வேண்டும்; அது நம் உரிமை. தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்று கூறுவது அரசியல் சார்ந்த விவாதமாக மாற வேண்டிய அவசியம் இல்லை. கட்சி வேறுபாடுகளை கடந்து ஒன்றிணைந்து அனைத்து உறுப்பினர்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூறினார்.</p><h2>திமுக ஆதரவு</h2><p>இதனையடுத்து முதல்-அமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்துக்கு திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. திமுக சார்பில் எம்.எல்.ஏ. கோவி.செழியன் பேசுகையில், “அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற தீர்மானத்துக்கு திமுக ஆதரவு தெரிவிக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடவேண்டும் என முதலில் அரசாணை வெளியிட்டவர் முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர். தமிழ்த்தாய் வாழ்த்தை கட்டாயம் பாட வேண்டும் என 2021 டிச. 17இல் அரசாணை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின். தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இயற்றியவரின் பெயரில் உள்ள பல்கலைகழகத்திலேயே 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டது அடிக்கடி மாறுபடும் இந்த சூழலை மாற்றிட இதனை சட்டமாக மாற்ற வேண்டும் என்று கூறினார்.</p><h2>அதிமுக ஆதரவு</h2><p>தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “தமிழ்த்தாய் வாழ்த்து வெறும் பாடல் அல்ல..! அது நம் பண்பாட்டின் அடையாளம். தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது யாருக்கும் எதிரானது அல்ல; தேசப்பற்றும் மொழிப்பற்றும் வேறு வேறானது அல்ல.. அரசியலில் நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.. ஆனால் தமிழ் என்று வரும்போது நாம் அனைவரும் ஒரே குரலில் ஒலிக்க வேண்டும்” என்று கூறினார்.</p><h2>ஒருமனதாக நிறைவேற்றம்</h2><p>தொடர்ந்து முதல்-அமைச்சர் விஜய் முன்மொழிந்த தனித்தீர்மானத்திற்கு காங்கிரஸ், பாமக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், பாஜக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து தனித்தீர்மானம் அனைத்து கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் அதிகாரப்பூர்வமான அறிவித்தார்.</p><p>இந்த நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழ்நாட்டின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் கட்டாயம் முதலில் பாடப்படவேண்டும் என்ற அரசினர் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu/tamilthai-vazhthu-mandatory-at-government-events-chief-minister-vijay-resolution">தனித்தீர்மானத்தை </a>தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக நிறைவேற்றி தந்தமைக்காக நன்றி தெரிவித்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>மனமார்ந்த நன்றிகள்</h2><p>தமிழ் ஒரு மொழி மட்டுமன்று, அது ஒரு சிந்தனை-பண்பாடு-நாகரீகம்-அதோடு தமிழ் நம் உயிர்; தமிழ் நம் உணர்வு என்பதை முழுமையாக உணர்ந்ததே நமது தமிழ்நாடு அரசு.  மேலும், தமிழ் மொழியின் தொன்மை, தனித்தன்மை, பெருமை, சிறப்பு மற்றும் தமிழர்களின் உணர்வைப் போற்றிப் பாதுகாக்கும் வகையிலான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம், தமிழ்த்தாய்க்குச் செலுத்தப்படும் உயரிய மரியாதையாகும். இத்தீர்மானம் நிறைவேற்றிய இந்நன்னாள் தமிழ்நாட்டின் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். </p><p>இந்தத் தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஆதரித்து நிறைவேற்றித் தந்தமைக்காக என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  உலகெங்கும் தமிழ்த்தாயின் புகழ் ஓங்கட்டும்! தமிழ்நாட்டின் வெற்றிப் பயணம் தொடரட்டும்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘செவிலியர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்’ - மாணிக்கம் தாகூர் எம்.பி. </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-central-government-must-stop-playing-with-the-future-of-nurses-manickam-tagore-mp</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-central-government-must-stop-playing-with-the-future-of-nurses-manickam-tagore-mp#comments</comments><guid isPermaLink="false">4b566af3-dea4-4f5c-a00e-a060a696ba4c</guid><pubDate>Mon, 10 Aug 2026 09:49:52 +0000</pubDate><atom:updated>2026-08-10T09:49:52.684Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Manickam Tagore MP,மாணிக்கம் தாகூர் எம்.பி.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/y1d4xv2b/STate-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/y1d4xv2b/STate-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மத்திய பா.ஜ.க. அரசின் அலட்சியத்தால் செவிலியர்களின் எதிர்காலம் முடங்கியுள்ளதாக காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“மத்திய அரசு கொண்டு வந்த ‘தேசிய செவிலியர் பதிவு மற்றும் கண்காணிப்பு முறைமை" (NRTS) திட்டம் தொடங்கி 7 ஆண்டுகள் கடந்தும், நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு செவிலியர்கள் இன்னும் இதில் பதிவு செய்யப்படவில்லை என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.</p><p>நாட்டிலேயே அதிக செவிலியர்களைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில், மொத்தம் உள்ள 4,76,264 பதிவுசெய்த செவிலியர்களில் வெறும் 57,084 பேருக்கு மட்டுமே (12% மட்டுமே !) இந்த அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 4.19 லட்சத்திற்கும் அதிகமான தமிழ்நாட்டுச் செவிலியர்களின் விவரங்கள் இன்னும் ஒன்றிய அரசின் பட்டியலில் ஏற்றப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளன!</p><p>இந்திய தொழிலும்சார் செவிலியர் சங்கத்தின் (IPNA) இணைச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளது போல், இந்திய செவிலியர் கவுன்சிலின் (INC) போதிய மேலாண்மையின்மையும், பொறுப்பின்மையுமே இத்தகைய பின்னடைவுக்கு முக்கியக் காரணம்.</p><p>மாநிலங்களுக்கு இடையே இடம் பெயரவோ அல்லது புதிய பணிக்கு மாறவோ தேவையான 'தடையில்லாச் சான்றிதழ்” (NOC) பெற மாதக்கணக்கில் செவிலியர்கள் காத்துக்கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.</p><p>வெளிநாடுகளில் பணிபுரியச் செல்ல விரும்புவோரின் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் முடங்கியுள்ளன. செவிலியர்களின் வாழ்வாதாரமும், வேலைவாய்ப்பும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி. நட்டா உடனடியாக இதில் தலையிட வேண்டும். விடுபட்ட அனைத்துச் செவிலியர்களின் பதிவையும் விரைவுபடுத்தி, அடுத்த 6 மாதங்களுக்குள் அனைவருக்கும் ‘தேசிய தனித்துவ அடையாள அட்டைகளை" (NUID) வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>'டிஜிட்டல் இந்தியா” என மார்தட்டிக்கொள்ளும் பாஜக அரசு, நாட்டின் சுகாதாரத் தூண்களாகத் திகழும் செவிலியர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற தீர்மானம் வரவேற்புக்குரியது - மு.வீரபாண்டியன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-resolution-that-the-tamil-thai-vazhthu-must-be-sung-first-is-welcome-m-veerapandian</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-resolution-that-the-tamil-thai-vazhthu-must-be-sung-first-is-welcome-m-veerapandian#comments</comments><guid isPermaLink="false">7aa1273a-e134-4020-8123-5b1d0d909661</guid><pubDate>Mon, 10 Aug 2026 09:14:08 +0000</pubDate><atom:updated>2026-08-10T09:14:08.143Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,Communist Party of India,மு.வீரபாண்டியன்,M. Veerapandian</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/2rfyp9tc/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/2rfyp9tc/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற சட்டமன்றத் தீர்மானம் வரவேற்பிற்குரியது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>முதன்மை இடம் கிடைக்கவில்லை</h2><p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசு நிகழ்ச்சிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து எப்போதும் முதலில் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு முதல்-அமைச்சர் சட்டப்பேரவையில்  தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார். ஒருமனதாக இத்தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது வரவேற்பிற்குரியது.</p><p>தமிழ்நாட்டின் கவர்னர் மத்திய அரசின் சுற்றறிக்கையின் அடிப்படையில் அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரத்தை பாடும் நடைமுறையை கொண்டு வந்தார். அண்மையில் மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் வழிகாட்டலை பின்பற்றாமல், கவர்னர் ஆர்.வி.அர்லேக்கர் ஆலோசனை அடிப்படையில் வந்தேமாதரம் முதலில் பாடப்பட்டது. தமிழுக்கு முதன்மை இடம் கிடைக்கவில்லை.</p><h2>தீர்மானத்தை வரவேற்கிறோம்</h2><p>“வந்தேமாதரம்” பாடலில் சில வரிகள் ஒரு குறிப்பிட்ட பெரும்பான்மை மதச்சார்பு கொண்டதாகவும், சில வரிகள் சிறுபான்மை  முஸ்லீம் சமூகத்திற்கு எதிரானதாகவும் இருப்பதால், குறிப்பிட்ட அந்தப் பாடல் வரிகளை தேசிய கீதமாக ஏற்கக் கூடாது  என விடுதலை இயக்கக் காலத்திலேயே தீர்மானிக்கப்பட்டது.</p><p>இந்த நிலையில், கவர்னர் மாளிகை நிர்வாகத்தின் உத்தரவுப்படி, பல்கலைக் கழக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பட்டமளிப்பு விழா</a> நிகழ்ச்சி நிரலில் “வந்தேமாதரம்“ பாடலுக்கு முதலிடம் வழங்கி, தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் நிலையில் வைத்தது, வழக்கத்தில் இருந்து வரும் மரபை மீறிய செயலாகும். இவ்வாறு கவர்னரின் தமிழ், தமிழர் விரோத நடவடிக்கைகள் தொடரும் நிலையில், தமிழ்நாட்டின் மரபுரிமையை,  பண்பாட்டை பாதுகாக்க அரசு பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது. அரசு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை முதன்மைப்படுத்த, வழக்கத்தில் இருந்து வரும் மரபுரிமையை நிலை நாட்ட எடுத்துவரும் நடவடிக்கைகளை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது.</p><h2>வலுவான அழுத்தம் தர வேண்டும்</h2><p>தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மூன்றாம் இடத்துக்கு தள்ளிவிடும் மத்திய அரசின் சுற்றறிக்கையை திரும்பப் பெறவும்  தமிழ்நாடு அரசு வலுவான அழுத்தம் தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திரைப்பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு தமிழக அரசு பதவி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-appoints-film-producer-archana-kalpathi-to-a-post</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-appoints-film-producer-archana-kalpathi-to-a-post#comments</comments><guid isPermaLink="false">cd4207e1-d18c-47f2-9788-03de9bb4a196</guid><pubDate>Mon, 10 Aug 2026 09:07:38 +0000</pubDate><atom:updated>2026-08-10T09:07:38.001Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt,அர்ச்சனா கல்பாத்தி,Archana Kalpathi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/uf2sjyh9/STate-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/uf2sjyh9/STate-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்டின் (AGS Entertainment) தலைமை செயல் அதிகாரி(CEO) அர்ச்சனா கல்பாத்தி. இவரது நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகரும், தற்போதைய தமிழக முதல்-அமைச்சருமான விஜய் நடித்த ‘பிகில்’, ‘கோட்’ உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகின. </p><p>இந்த நிலையில், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு தற்போது தமிழக அரசு பதவி வழங்கப்பட்டுள்ளது. கோவில்களுக்கு மரபுசாரா அறங்காவலர்களை நியமிப்பதற்கான தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்யும் குழுவில் திரைப்பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இடம் பெற்றுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p> <p>“இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகைக்குட்பட்ட, ஆண்டு வருமானம் 10 லட்சத்திற்கு மேலுள்ள திருக்கோவில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களை தேர்வு செய்து உரிய பெயர்ப்பட்டியல் தயாரித்து அளித்திட, கீழ்க்கண்ட உறுப்பினர்களை கொண்ட மாநிலக்குழுவினை அமைத்து அரசு ஆணையிடுகிறது. </p><p>1. தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள் பொம்மபுரம் ஆதினம், மயிலம்   - தலைவர் </p><p>2. டாக்டர் கே.ராமநாதன், மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி(ஓய்வு) - துணைத் தலைவர் </p><p>3. அர்ச்சனா கல்பாத்தி அகோரம் - உறுப்பினர் </p><p>4. ப.ரா.சம்பத், இ.ஆ.ப.(ஓய்வு)  - உறுப்பினர்</p><p>5. மா.சுமதி (எ) சுமதிஸ்ரீ  - உறுப்பினர்</p><p>6. த.வேல்முருகன்  - உறுப்பினர்</p><p>7. இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் - பதவி வழி உறுப்பினர்/செயலர்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>அமித்ஷாவுக்கு கேள்விகளை எதிர்கொள்ள ஏன் இவ்வளவு தயக்கம்? - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-is-amit-shah-so-hesitant-to-face-questions-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-is-amit-shah-so-hesitant-to-face-questions-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">f37659bf-acd6-4def-97b9-3204e91b0741</guid><pubDate>Mon, 10 Aug 2026 08:49:06 +0000</pubDate><atom:updated>2026-08-10T08:49:06.584Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore MP,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/fujbpm8n/manickam-tagore.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/fujbpm8n/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஜூலை 21 முதல் நாடாளுமன்றப் பக்கமே வராமல் உள்துறை மந்திரி அமித்ஷா தலைமறைவாக இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>தலைமறைவாக இருக்கும் அமித்ஷா</h2><p>'குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும்' என்பதற்கேற்ப! இன்று நாடாளுமன்றத்தில், அரசால் அவசர மற்றும் முக்கியத்துவம் கருதி கொண்டுவரப்பட்ட Supplementary List of Business பட்டியலில், உள்துறை மந்திரி அமித்ஷாவின் பெயரில் இரண்டு முக்கிய மசோதாக்கள் The Kerala (Alteration of Name) Bill, 2026 மற்றும் The National Co-operative Development Corporation (Amendment) Bill, 2026, அறிமுகத்திற்காகப் பட்டியலிடப்பட்டிருந்தன.</p><p>ஜூலை 21 முதல் நாடாளுமன்றப் பக்கமே வராமல் தலைமறைவாக இருக்கும் அவர், தன் பெயரிலேயே மசோதாக்கள் பட்டியலிடப்பட்டிருந்தும் அவைக்கே வராமல் இணை மந்திரிகளைக் கொண்டு அவற்றை நகர்த்த வைக்கிறார். இது மக்களுக்குத் தெரியாமல் இல்லை!</p><h2>ஏன் இந்த பயம்?</h2><p>திருவண்ணாமலை கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வந்த பிறகும் அமித் ஷாவுக்கு ஏன் இந்த பயம்? லோக்சபாவிற்கு வந்து கேள்விகளை எதிர்கொள்ள ஏன் இவ்வளவு தயக்கம்?</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் விசில் அடித்த தவெக கவுன்சிலர் சஸ்பெண்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-councillor-suspended-for-blowing-a-whistle-at-the-nellai-corporation-meeting</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-councillor-suspended-for-blowing-a-whistle-at-the-nellai-corporation-meeting#comments</comments><guid isPermaLink="false">ac2acd1d-38f8-4fe0-8e7d-3fe6248297a4</guid><pubDate>Mon, 10 Aug 2026 08:32:06 +0000</pubDate><atom:updated>2026-08-10T08:32:06.818Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,நெல்லை,Nellai,கவுன்சிலர்,சஸ்பெண்டு,Councillor,நெல்லை மாநகராட்சி,Nellai Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/y216xrvg/CHENNAI-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/y216xrvg/CHENNAI-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><h2>மாமன்ற கூட்டம்</h2><p>திருநெல்வேலி மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் திமுகவில் இருந்து விலகி அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 19-வது வார்டு மாமன்ற உறுப்பினர் அல்லா பிச்சையும் பங்கேற்றார்.</p><p>கூட்டத்திற்கு அல்லா பிச்சை தோளில் தவெக துண்டை அணிந்தபடியும், விசில் அடித்தபடியும் வந்தார். இதற்கு திமுக மாமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாமன்ற கூட்டத்தை கட்சிக் கூட்டம் போன்று நடத்தக்கூடாது என்றும், மன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதனால் திமுக - தவெக மாமன்ற உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. </p><h2>சஸ்பெண்ட்</h2><p>ஒரு கட்டத்தில் தவெக. உறுப்பினர் வைத்திருந்த விசிலை திமுக உறுப்பினர்கள் பிடுங்க முயன்றதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் மீண்டும் மீண்டும் விசில் அடித்ததால் மாமன்ற கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. மாமன்ற கூட்டத்தின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி அவரை கூட்டத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும், அவை நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.</p><p>இதையடுத்து, மாமன்ற கூட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் தெரிவித்தார். அதன்படி, மாமன்ற விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி 19-வது வார்டு மாமன்ற உறுப்பினர் அல்லா பிச்சையை செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறும் மாமன்ற கூட்டங்களில் கலந்து கொள்ள தடை விதித்து (சஸ்பெண்ட்) மேயர் உத்தரவிட்டார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>ரேஷன்கடை செயல்படும் நேரத்தை மாற்றலாமா? ஆய்வு செய்து  அறிக்கை அளிக்க அரசு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/can-the-working-hours-of-ration-shops-be-changed-government-orders-to-investigate-and-submit-a-report</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/can-the-working-hours-of-ration-shops-be-changed-government-orders-to-investigate-and-submit-a-report#comments</comments><guid isPermaLink="false">6a3da3d2-34d8-4009-babc-3b345f1bbe34</guid><pubDate>Mon, 10 Aug 2026 08:28:43 +0000</pubDate><atom:updated>2026-08-10T08:28:43.537Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Ration shop,report,Kanchipuram,காஞ்சிபுரம்,ரேஷன்கடை,நேரம்,investigate</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/dwe457xl/42.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரேஷன்கடை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/dwe457xl/42.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களின் வேலை நேரத்தை மாற்றுவது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க அரசு உத்தரவு.</p><h2>ரேஷன் கடை</h2><p>இது தொடர்பாக, வெளியிட்டுள்ள கூட்டுறவுத்துறை அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் கோரிக்கையில், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வேலை நேரம் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை பிற்பகல் 3.00 மணி முதல் 7.00 மணி வரை என்பதில் மதியம் இடைப்பட்ட நேரமாக இரண்டரை மணி நேரம் உட்பட சுமார் 2 மணி நேரமாகுவதால், பணியாளர்கள் மனச்சோர்வுக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள்.</p><h2>வேலை நேரம்</h2><p>மேலும், நுகர்பொருள் வாணிபக்கழக குடோனுக்கு வெள்ளிக்கிழமை வேலை நாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை, ஆனால் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88">ரேஷன் கடை</a> பணியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை ஞாயிற்றுக்கிழமை வேலை நாள் எனவும் விடுமுறை நாட்களை விடுமுறை நாளாக குடோன் பணியாளர்களோ ரேஷன் கடை பணியாளர்களோ பயன்படாத நாளாக உள்ளது.</p><p>காஞ்சிபுரம் சென்னை ஆகிய மாவட்டங்களில் வேலை நேரத்தை காலை 8.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பிற்பகல் 2.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரை மாற்றித்தருமாறும் முதல் 2 வெள்ளிக்கிழமைகளை வேலை நேரமாகவும் முதல் 2 ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாகவும் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்பாக பதிவாளர் அலுவலகத்திற்கு குறிப்புகள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு: கொள்முதல் விலையை உயர்த்தாமல் கோடை வெயிலை குறை கூறுவதா? - அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/milk-shortage-without-raising-aavin-procurement-price-blaming-summer-heat-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/milk-shortage-without-raising-aavin-procurement-price-blaming-summer-heat-anbumani#comments</comments><guid isPermaLink="false">a16fa9ec-bc82-447d-a3ca-5f097cdd9f3d</guid><pubDate>Mon, 10 Aug 2026 08:19:50 +0000</pubDate><atom:updated>2026-08-10T08:19:50.639Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,Aavin,Aavin Milk,ஆவின் பால்,ஆவின் நிர்வாகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/qizo90zm/Untitled-12.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/qizo90zm/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு குறைந்தது ரூ.10 உயர்த்தி, கொள்முதலை அதிகரிக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஆவின் பாலுக்கு கடந்த சில நாள்களாக கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஏழைகள் மற்றும் குழந்தைகளுக்கு வரப்பிரசாதமாக விளங்கும் ஆவின் பால் அனைத்து மக்களுக்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அரசு தவறியிருப்பது கவலையளிக்கிறது.</p><p>ஆவின் நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் தினமும் 31 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வந்தது. சென்னையில் மட்டும் தினமும் 16 லட்சம் லிட்டருக்கும் கூடுதலாக ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாகவே ஆவின் பால் விற்பனை படிப்படியாக குறைந்து விட்டது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் ஆவின் பால் விற்பனை மூன்றில் ஒரு பங்கு குறைக்கப்பட்டு விட்டதாகவும், சென்னையில் 20% அளவுக்கு குறைக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>ஆவின் பால் தட்டுப்பாட்டால் தமிழக மக்கள் இரு வகைகளில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். முதலில் ஆவின் நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் பால் தான் ஒப்பீட்டளவில் தூய்மையானதாகவும், கலப்படம் இல்லாததாகவும் உள்ளது. இதனால் மூத்த குடிமக்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆவின் பாலை வழங்கும்படி மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஆனால், ஆவின் பாலுக்கு கடுமையான தட்டுப்பாடு  ஏற்பட்டிருப்பதால் குழந்தைகளுக்கும், பெரியோர்களுக்கும் தரமான பாலை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.</p><p>இரண்டாவதாக, ஆவின் பால் விலை தட்டுப்பாட்டால் தனியார் நிறுவன பால்களை அதிக விலை கொடுத்து மக்கள் வாங்க வேண்டியுள்ளது. ஆவின் பாலுடன் ஒப்பிடும்போது தனியார் நிறுவனங்களின் பால் விலை லிட்டருக்கு ரூ.16 முதல் 24 வரை அதிகம் ஆகும். ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் ஏழைகள் மாதத்திற்கு குறைந்தது ரூ.750 வரை கூடுதலாக செலவு செய்ய வேண்டும். இது அவர்களுக்கு பெரும் சுமை.</p><p>ஆவின் பாலுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாட்டால் ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே பெரும் கவலையும், கோபமும் ஏற்பட்டுள்ள நிலையில், அது குறித்து ஆவின் நிறுவனம் எந்தக் கவலையும் பட்டதாக தெரியவில்லை. கோடைக்காலம் என்பதால் பால் உற்பத்தி குறைந்திருப்பதுதான் இந்த தட்டுப்பாட்டுக்கு காரணம் என்று கூறி இந்த விவகாரத்தை மிகவும் எளிதாக கடந்து செல்ல ஆவின் நிறுவனம் முயல்கிறது. இது உண்மையல்ல.</p><p>கடந்த ஐந்தாண்டுகளாகவே ஆவின் பால் கொள்முதல் படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகிறது. 2021-ம் ஆண்டில் ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் தினமும் 41 லட்சம் லிட்டராக இருந்தது. 2022-ம் ஆண்டில் 38 லட்சம் லிட்டர், 2023-ம் ஆண்டில் 30 லட்சம் லிட்டர் என குறைந்த ஆவின் பால் கொள்முதல், இப்போது 28 லட்சம் லிட்டராக குறைந்து விட்டது. அதாவது மூன்றில் இரு பங்காகி விட்டது.</p><p>ஆவின் பால்கொள்முதல் 13 லட்சம் லிட்டர் குறைந்திருப்பதற்கு காரணம் அதன் கொள்முதல் விலைகள் உயர்த்தப்படாததுதான். பசும்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.35, எருமைப்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.44  என்ற அளவில் ஆவின் நிறுவனத்தால் வழங்கப்பட்டு வந்த கொள்முதல் விலையுடன் சேர்த்து லிட்டருக்கு ரூ.3 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தனியார் நிறுவனங்கள் அதை விட லிட்டருக்கு 12 வரை கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்கின்றன. அதற்கு இணையாக ஆவின்  நிறுவனமும் பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல் அதன் கொள்முதலை அதிகரிக்க முடியாது.</p><p>ஆனால், ஆவின் நிறுவனமும், அரசும் இதை உணரவில்லை. ஆவின் பால் கொள்முதல் குறையவில்லை  என்றும், கோடை வெப்பத்தால் குறைந்த அளவு மட்டும்தான் உயர்த்தப்பட்டிருப்பதாகவும் காரணம் கூறி வருகிறது. இந்த மாயையில் இருந்து தமிழக அரசு மீள வேண்டும். ஆவின் பால் கொள்முதல் வீழ்ச்சி அடைந்திருப்பதற்கான உண்மையான காரணத்தை அறிந்து கொண்டு உடனடியாக சரி செய்ய வேண்டும்.</p><p>ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு குறைந்தது ரூ.10 உயர்த்தி, கொள்முதலை அதிகரிக்க வேண்டும். அதன் மூலம் ஆவின் பால் மாநிலம் முழுவதும் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திமுக முன்னாள் அமைச்சர் பேச்சால் குலுங்கி குலுங்கி சிரித்த முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-laughed-heartily-at-the-remarks-made-by-the-former-dmk-minister</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-laughed-heartily-at-the-remarks-made-by-the-former-dmk-minister#comments</comments><guid isPermaLink="false">2e187484-c090-4e9b-83a0-ceba790e21cb</guid><pubDate>Mon, 10 Aug 2026 08:10:02 +0000</pubDate><atom:updated>2026-08-10T08:10:02.835Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,திமுக,DMK,சட்டசபை,TN Assembly,MRK Panneerselvam,எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/6dl3y0lk/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/6dl3y0lk/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டசபையில் பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்தில் திமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேசுகையில், பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை எனவும், மாற்றம் வரும் என நினைத்த விவசாயிகளுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியதாக கூறினார்.</p><p>இதற்கு பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்,"கடந்த ஆட்சியில் ரூ.309 கோடிக்கு நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும் என அறிவித்தது என்ன ஆனது.</p><p>எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திரைக்கதை, வசனம் பேசுகிறார். விவசாயிகளுக்கு கடந்த ஆட்சியில் நெல்லைச் சேமித்து வைக்க இடமில்லாத நிலை இருந்தது. நெல் கொள்முதலில் முறைகேடுகள் நடைபெற்றதாக விவசாயிகள் தெரிவித்தனர். கரும்புத் தோட்டத்தில் கான்கிரீட் போட்டு நடந்து சென்ற விவசாயி குறித்தும் அவர் எதுவும் கூறவில்லை என்று தெரிவித்தார்.</p><p>தொடர்ந்து பேசிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், "தமிழக வெற்றிக் கழகம் எப்படி ஆட்சிக்கு வந்தது என சாமி அமைச்சரை பார்த்தாலே தெரிகிறது" என்றார். இந்து சமய அறநிலைதுறை அமைச்சரை சாமி அமைச்சர் என எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறிய நிலையில் இதனை கண்ட முதல்-அமைச்சர் விஜய் அவையில் குலுங்கி குலுங்கி சிரித்தார்.</p><p>மேலும், இப்போதுதான் எப்படி பிரசாரம் செய்கிறீர்கள் என்று தெரிகின்றது. அவர் பேசுவது உண்மையா? பொய்யா? என்று தெரியாதவாறு டெக்னிக்காக பேசுகிறார் என்று எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்தார். தொடர்ந்து, தவெகவினரை நோக்கி நீங்களெல்லாம் படத்தைப் பார்த்து வந்தவர்கள். நாங்களும் அதிமுகவினரும் கொள்கையைப் படித்து, களத்தில் போராடி வந்தவர்கள்.</p><p>திமுக ஆட்சியில் ஆக்டிங் கிடையாது. ஆக்ஷன் மட்டுமே இருந்தது. தவெக எப்படி ஆட்சிக்கு வந்தது என்பது அமைச்சர் பேசும்போது டெக்னிக் தெரிகிறது என்று கூறினார். அதற்கு அமைச்சர் ரமேஷ் அந்த டெக்னிக்கை 10 நிமிடங்கள் முன்பு தான் அண்ணன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் கற்றுக்கொண்டேன் என கூறினார். இதனால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>புதுக்கோட்டை: முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pudukkottai-former-panchayat-president-beheaded-and-murdered</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pudukkottai-former-panchayat-president-beheaded-and-murdered#comments</comments><guid isPermaLink="false">e6be7736-45a2-4197-b011-ba3e7db4fba3</guid><pubDate>Mon, 10 Aug 2026 08:01:59 +0000</pubDate><atom:updated>2026-08-10T08:01:59.643Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,கொலை,Pudukkottai,புதுக்கோட்டை,நிலத்தகராறு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/r0b7luqo/pputhukottai33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/r0b7luqo/pputhukottai33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுக்கோட்டை </p><p>புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே கோங்குடிபட்டி முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் நாகராஜ் (59) வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p>புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே தன்னாங்குடியை சேரந்த முன்னாள் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D">ஊராட்சி மன்ற தலைவர் </a>நாகராஜ், இவர் இன்று காலை அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வரும் தனது மனைவியை பள்ளியில் இறக்கி விட்டு மீண்டும் பாக்குடி வழியாக வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது பாக்குடி பெரிய குடும்பம்பட்டி சாலையில் இவரை வழிமறித்த மர்ம நபர்கள், தலையை துண்டித்து படுகொலை செய்து விட்டு கண் இமைக்கும் நேரத்தில் மின்ன வேகத்தில் தப்பி ஓடி விட்டனர்.</p><p>பாக்குடி கவரச்சி குளக்கரை தார் சாலை நடுவே வெட்டுக்காயத்துடன் சடலமாகக் கிடந்தவரை போலீசார் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.</p><p>இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இவருக்கும் பக்கத்து வீட்டில் வசித்து வரும் முத்துலட்சுமி என்பவருக்கும் ஏற்கனவே இட பிரச்சினை தொடர்பாக வழக்கு இருப்பதாகவும், இந்த வழக்கில் நாகராஜ் மீது இலுப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும்  முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. </p><p>மேலும் இந்த கொலைக்கான காரணம் இடப்பிரச்சினையா அல்லது வேறு ஏதும் பிரச்சினையா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட நாகராஜ் ஏற்கனவே கோங்குடிபட்டி ஊராட்சி மன்ற தலைவராகவும் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>புதுக்கோட்டையில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. </p>]]></content:encoded></item><item><title>“மாநிலப் பாடலை 3-வது பாட வேண்டும் என மத்திய அரசின் சுற்றறிக்கையில் குறிப்பிடவில்லை” - தமிழிசை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-central-government-circular-does-not-mention-that-the-state-anthem-should-be-sung-third-tamilisai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-central-government-circular-does-not-mention-that-the-state-anthem-should-be-sung-third-tamilisai#comments</comments><guid isPermaLink="false">0e2b134d-08cc-4b92-9af5-a870c6544a1d</guid><pubDate>Mon, 10 Aug 2026 07:58:35 +0000</pubDate><atom:updated>2026-08-10T07:58:35.535Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,தமிழிசை சவுந்தரராஜன்,Central Government,Circular,சுற்றறிக்கை,மத்திய அரசின்,Tamilisai Saundarajan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/c2vmhhk6/41.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழிசை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/c2vmhhk6/41.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மத்திய உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கையில் மாநிலப் பாடலை மூன்றாவதாகப் பாட வேண்டும் என எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக, தமிழக முன்னாள் பாஜக தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%20%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D">தமிழிசை சவுந்தரராஜன்</a> தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>சுற்றறிக்கை</h2><p>சட்டமன்றத்தில் பேசிய இடது கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ஒரு புரிதல் இல்லாமல் மத்திய அரசு இதில் தலையிட முடியாது என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட வேண்டும் என்று தமிழ் தாயை பெருமை சேர்க்கும் இடத்தில் கூட மத்திய அரசின் மீது உள்ள வன்மத்தை உமிழ்ந்தார் என்பது தான் எனது கருத்து ஏனென்றால் மத்திய உள்துறை அமைச்சரிடம் இருந்து வந்த சுற்றறிக்கை அந்தந்த மாநில பாடல் மூன்றாவது பாடப்பட வேண்டும் என்று எங்கேயுமே குறிப்பிடப்படவில்லை. </p><p>அந்த சுற்றறிக்கை என்ன சொல்கிறது என்றால் புதிதாக இப்பொழுது வந்தே மாதரம் பாடல் சேர்க்கப்படுவதால் வந்தே மாதரம் பாடல் தேசிய கீதத்திற்கு முன்னால் பாடப்பட வேண்டும் அது முழுவதுமாக பாடப்பட வேண்டும் என்று தான் சொல்லப்பட்டு இருக்கிறது. அதனால் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முதல் இடம் அளிக்கப்படுவது நம் எல்லோருக்கும் பெருமைதான் ஆனால் இங்கே சிலர் ஏதோ உள்துறை அமைச்சகம் மாநில பாடலை மூன்றாவதாக பாட வேண்டும் என்று வலியுறுத்துவதாக பேசுவது சரியல்ல.</p><h2>திருக்குறள்</h2><p>இன்று திருக்குறள் நமக்கு பெருமை சேர்க்கிறது என்று தீர்மானத்தை முன்மொழிந்த முதல்-அமைச்சர் இன்று தான் சொல்கிறார் ஆனால் திருக்குறளை உலக அரங்கில் எடுத்துச் சென்றவர் நம் பிரதமர் என்பதை நான் பெருமையோடு இங்கே நினைவு கூறுகிறேன்.</p><p>அதுமட்டுமல்ல புதிய கல்விக் கொள்கையில் கூட மாநில மொழிக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது ஆனால் அதுவுமே இங்கே தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்பதை தான் நான் தெரிவித்துக் கொள்கிறேன். </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நெல் ஊக்கத்தொகை போதாது: ரூ.3,000 கொள்முதல் விலை வழங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/paddy-incentive-insufficient-rs-3000-procurement-price-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/paddy-incentive-insufficient-rs-3000-procurement-price-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">9d5e2fa5-e657-473c-b4e2-d9c08caefddf</guid><pubDate>Mon, 10 Aug 2026 07:55:53 +0000</pubDate><atom:updated>2026-08-10T07:55:53.443Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,கொள்முதல் விலை,நெல் ஊக்கத்தொகை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/26xi94fu/Untitled-11.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/26xi94fu/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நடப்பாண்டில் சாதாரண வகை நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3,000 கொள்முதல் விலை கிடைக்கும் வகையில் ஊக்கத் தொகையை ரூ.559 ஆக உயர்த்த வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டில் நடப்பாண்டில் அரசால் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு மாநில அரசின் சார்பில் வழங்கப்படும் ஊக்கத்தொகை சன்ன ரக நெல்லுக்கு ரூ.289, சாதாரண ரக நெல்லுக்கு ரூ.159 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல் கரும்புக்கான ஊக்கத்தொகை ரூ.709.50 ஆக உயர்த்தப்பட்டு டன்னுக்கு ரூ.4,000 ஆக வழங்கப்படும் என்று தவெக அரசு அறிவித்திருக்கிறது. உண்மையில் சாதாரண ரக நெல்லுக்கான ஊக்கத்தொகையை ரூ.28 மட்டும் தான் தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இது போதுமானதல்ல.</p><p>நெல்லுக்கான ஊக்கத்தொகையை தமிழ்நாடு அரசு பெரிய அளவில் உயர்த்தவில்லை. நடப்பாண்டில் சாதாரண வகை நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,441, சன்ன வகை நெல்லுக்கு ரூ.2,461 கொள்முதல் விலை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அத்துடன் தமிழக அரசின் ஊக்கத்தொகையாக சன்னரக நெல்லுக்கு ரூ.156, சாதாரண ரக நெல்லுக்கு ரூ.131 வீதம் கடந்த திமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. இப்போது தவெக அரசு சாதாரண ரக நெல்லுக்கான ஊக்கத்தொகையை குவிண்டாலுக்கு ரூ.28, சன்னரக நெல்லுக்கு ரூ.133 உயர்த்தியிருக்கிறது. இதன் காரணமாக நெல்லுக்கான கொள்முதல் விலை சன்னரக நெல்லுக்கு ரூ.2,750, சாதாரண ரக நெல்லுக்கு ரூ.2,600 ஆக உயர்ந்திருக்கிறது. இது  போதுமானதல்ல.</p><p>சாதாரண நெல்லுக்கான கொள்முதல் விலையை மத்திய அரசு குவிண்டாலுக்கு ரூ.72 உயர்த்தியுள்ளது. ஆனால், தமிழக அரசு அதன் ஊக்கத்தொகையை, மத்திய அரசால் உயர்த்தப்பட்டதை விட பாதிக்கும் குறைவாகவே உயர்த்தியுள்ளது. சன்னரக நெல்லுக்கான ஊக்கத்தொகை ரூ.289 ஆக உயர்த்தப்பட்டிருப்பதாக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. அரசால் கொள்முதல் செய்யப்படும் நெல் வகைகளில் 95 விழுக்காட்டுக்கும் கூடுதலான நெல்  சாதாரண ரகங்களைச் சேர்ந்தவை ஆகும். அதனால் சாதாரண ரக நெல்லுக்கான கொள்முதல் விலை தான் கூடுதலாக உயர்த்தப்பட வேண்டும்.</p><p>அனைவருக்கும் பயனளிக்கக் கூடிய சாதாரண ரக நெல்லுக்கான ஊக்கத்தொகையை வெறும் ரூ.28 மட்டும் உயர்த்தி விட்டு, மிகக் குறைந்த அளவில் கொள்முதல் செய்யப்படும் சன்னரக நெல்லுக்கான  ஊக்கத்தொகையை ரூ.133 உயர்த்துவதால் யாருக்கும் பயனில்லை. ஊக்கத்தொகையை உயர்த்தி விட்டோம் என்று கணக்கு காட்டி பெருமிதம் பேசுவதற்காக மட்டும்தான் தமிழக அரசின் இந்த அறிவிப்பு பயன்படும்.</p><p>ஒடிசாவில் கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.800 வீதமும், கேரளத்தில் ரூ.650 வீதமும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. நடப்பாண்டில் அந்த மாநிலங்களில் ஊக்கத்தொகை இன்னும் கூடுதலாக உயர்த்தப்படலாம். அவற்றுடன் ஒப்பிடும்போது தமிழக அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகை போதுமானதல்ல.</p><p>தமிழ்நாட்டில் ஒரு குவிண்டால் நெல் உற்பத்தி செய்ய ரூ.2,300 முதல் ரூ.2,400 வரை செலவாகிறது. அத்துடன் கூடுதலாக ரூ.200 மட்டும் சேர்த்து கொள்முதல் விலை நிர்ணயிப்பது எந்த வகையிலும் நியாயம் அல்ல. எனவே, நடப்பாண்டில் சாதாரண வகை நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3,000 கிடைக்கும் வகையில் ஊக்கத் தொகையை ரூ.559 ஆக உயர்த்த வேண்டும். அதேபோல், அடுத்த ஆண்டில் தவெகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டவாறு நெல்லுக்கான கொள்முதல் விலையை ரூ.3,500 ஆக உயர்த்த வேண்டும்.</p><p>கரும்புக்கான கொள்முதல் விலையை பொறுத்தவரை 2025-26 அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளில் பதிவு செய்து வழங்கப்பட்ட கரும்புக்கு மத்திய அரசால் டன் ஒன்றுக்கு ரூ.3,290.50  கொள்முதல் விலை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அரசின் சார்பில் ஊக்கத்தொகை எதுவும் அறிவிக்கப்படவில்லை. அதற்கு முன் 2024-25ம் ஆண்டில் கரும்புக்கு வழங்கப்பட்ட ஊக்கத் தொகையான ரூ.349 உடன் கூடுதலாக ரூ.360.50 சேர்த்து ரூ.709.50 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கரும்புக்கு டன்னுக்கு ரூ.4,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்த ஊக்கத் தொகை அறிவிப்பு விவசாயிகளுக்கு முழுமையான மகிழ்ச்சியை அளிக்காது என்றாலும், மனநிறைவு அளிக்கும்.</p><p>2026-27ம் ஆண்டுக்கான அரவைப் பருவம் வரும் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளது. வரும் பருவத்தில் கொள்முதல் செய்யப்படும் கரும்புக்கு மத்திய அரசின் கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.3,383 அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் கடந்த ஆண்டுக்கு தமிழக அரசு அறிவித்த ஊக்கத் தொகையை சேர்த்தால் டன்னுக்கு ரூ.4,092 கிடைக்கும். கடந்த ஆண்டுக்கான ஊக்கத்தொகையுடன் நடப்பாண்டில் ரூ.408 உயர்த்தி வழங்கினால் கரும்புக்கு கொள்முதல் விலையாக ரூ.4,500 கிடைக்கும். எனவே வரும் அரவைப் பருவத்தில் கரும்புக்கான கொள்முதல் விலையுடன் மாநில அரசின் ஊக்கத் தொகையாக ரூ.1,117  சேர்த்து வழங்க வேண்டும். அதற்கான அறிவிப்பை இப்போதே வெளியிட வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க: மு.க.ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/may-murasolis-journey-continue-beyond-a-hundred-years-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/may-murasolis-journey-continue-beyond-a-hundred-years-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">03d1f247-4d09-42ac-b6d6-a4af989f49c8</guid><pubDate>Mon, 10 Aug 2026 07:43:32 +0000</pubDate><atom:updated>2026-08-10T07:43:32.142Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,M.K.Stalin,முரசொலி,Murasoli</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/72yx4wpr/15.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/72yx4wpr/15.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”கழக உடன்பிறப்புகளின் இதயத்துடிப்பு - தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றின் நாட்குறிப்பு - முத்தமிழறிஞர் கலைஞர் உதிரம் சிந்தி வளர்த்த மூத்த பிள்ளை முரசொலி! அதன் அலுவலகத்திற்குச் சென்று, என் மூத்த சகோதரனுக்கு 85-ஆவது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்!</p><p>தலைவர் கலைஞர், முரசொலி மாறன், முரசொலி செல்வம் என முரசொலியைத் தொடர்ந்து செழுமையாக வளர்த்தார்கள். நானும் முரசொலிக்காகப் பார்க்காத வேலையே இல்லை என்னும் அளவுக்கு, அனைத்து நிலைகளிலும் பணியாற்றி இருக்கிறேன்.</p><p>அறிவிப்புப் பலகைகளாக மட்டுமே இயங்கும் பல அரசியல் கட்சி இதழ்களுக்கு இடையே, கருத்தாழமிக்க கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், பொங்கல் மலர், பாசறைப் பக்கம் என அறிவாலயத்தின் அறிவாயுதமாகத் திகழும் முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க! அதன் பணிகளில் வெல்க.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>நெல், கரும்புக்கான ஆதார விலை உயர்வு, விவசாயிகளை ஏமாற்றும் வேலை: டிடிவி தினகரன்  </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/hike-in-support-prices-for-paddy-and-sugarcane-is-a-move-to-deceive-farmers-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/hike-in-support-prices-for-paddy-and-sugarcane-is-a-move-to-deceive-farmers-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">8f525c47-5e2d-47ac-a413-9501a3dd0176</guid><pubDate>Mon, 10 Aug 2026 07:35:18 +0000</pubDate><atom:updated>2026-08-10T07:35:18.777Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,தவெக அரசு,tvk govt</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/zqvnn172/ttv.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/zqvnn172/ttv.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>தவெக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி தொடங்கி நெல், கரும்புக்கான ஆதார விலை உயர்வு வரை அனைத்து அறிவிப்புகளுமே விவசாயிகளையும், மக்களையும் ஏமாற்றும் வேலை - தேர்தல் வாக்குறுதியில் சொல்வது ஒன்று ஆட்சிக்கு வந்த பின்பு செய்வது வேறு என்பதையே அடிப்படைக் கொள்கையாகக் கொண்டிருக்கும் தவெக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. </p><p>தமிழக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் ஜோசப் விஜய், சன்னரக நெல் குவிண்டாலுக்கு 2,750 ரூபாயாகவும், பொதுரக நெல் 2,600 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும் எனவும், கரும்புக்கான ஆதார விலை டன் ஒன்றுக்கு 4,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். </p><p>ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக வழங்கிய தேர்தல் அறிக்கையில், நெல் குவிண்டாலுக்கு 3,500 ரூபாயும், கரும்பு டன்னுக்கு 4,500 ரூபாயும் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்த தவெக, ஆட்சிக்கு வந்த பின்பு கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்ற மறுப்பது நம்பி வாக்களித்த விவசாயப் பெருமக்களுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம் ஆகும். </p><p>ஏற்கனவே, தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த பயிர்க்கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பை முழுமையாக நிறைவேற்றக் கோரி தமிழகம் முழுவதும் விவசாயப் பெருமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் 110 விதியின் கீழ் அறிவித்திருக்கும் இன்றைய அறிவிப்பு யானைப்பசிக்கு சோளப்பொறியா ? என்று கேட்கும் வகையில் அமைந்திருக்கிறது. </p><p>60 வயதுக்குட்பட்ட அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் தோறும் 2500 ரூபாய், ஆண்டுக்கு ஆறு கேஸ் சிலிண்டர்கள், தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயணம், பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க அஞ்சலை அம்மாள் அதிவிரைவு நீதிமன்றங்கள், 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் பணிநிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் , வேலை தேடும் பட்டதாரிகளுக்கு 4 ஆயிரம் ரூபாய் இளைஞர் நல நிதி என தவெக கொடுத்த முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்று கூட நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாத நிலையில், 110 விதியின் கீழான முதலமைச்சரின் இன்றைய அரைகுறையான அறிவிப்பு தவெக அரசு சொல்வது ஒன்று செய்வது வேறு என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. </p><p>எனவே, கொடுத்த வாக்குறுதியின் படி நெல் குவிண்டாலுக்கு 3,500 ரூபாயாகவும், கரும்பு டன்னுக்கு 4,500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கிடுவதோடு, தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை அறைகுறையாக அறிவித்து மக்களை ஏமாற்றாமல் முழுமையாக நிறைவேற்றிடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தவெக அரசையும், அதன் முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>  ]]></content:encoded></item><item><title>மேட்டூர் நீர்த்தேக்க பகுதிகளில் அரசு உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-must-immediately-inspect-mettur-reservoir-areas-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-must-immediately-inspect-mettur-reservoir-areas-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">f740f71f-b727-4d3f-af63-874e0abcab33</guid><pubDate>Mon, 10 Aug 2026 07:30:11 +0000</pubDate><atom:updated>2026-08-10T07:30:11.107Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,நயினார் நாகேந்திரன்,மேட்டூர்,Mettur,Nainar Nagenthran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/jxak5r8v/Untitled-10.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/jxak5r8v/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மேட்டூர் நீர்த்தேக்க பகுதிகளில் அரசு உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- </p><p>தருமபுரி மாவட்டம் எரியூர் அருகேயுள்ள மேட்டூர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியானது, ரசாயனக் கழிவுகள் கலந்து நிறம் மாறி பச்சை பசேலென்று காட்சியளிப்பதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் வைரல் காய்ச்சல் பரவி வருவதாகவும் வெளியாகியுள்ள செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது.</p><p>மேட்டூர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் தேங்கி நிற்கும் தண்ணீர், அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீராகவும், விளை நிலங்களுக்கு பாசன நீராகவும் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இத்தகைய சுகாதார சீர்கேடு அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பெருமளவில் பாதிக்கும். அதுமட்டுமன்றி, ஏற்கனவே சரியான நேரத்திற்கு கர்நாடக அரசு காவிரி நீர் திறந்துவிடாததால், தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் எல்லாம் வறண்டு வருகின்றன. விளைநிலங்கள் எல்லாம் பாளம் பாளமாக வெடித்து நிற்கின்றன. பயிர்கள் காய்ந்து, சருகாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், கைவசம் இருக்கும் தண்ணீரை பத்திரப்படுத்தி பாதுகாப்பதுதான் ஒரு நல்ல அரசுக்கு அழகு.</p><p>எனவே, மேட்டூர் நீர்த்தேக்கப் பகுதிகளில் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வுகள் மேற்கொண்டு, தண்ணீர் அசுத்தம் அடைதலுக்கான காரணங்களை கண்டறிவதோடு, தமிழகத்தின் அனைத்து நீர்நிலைகளும் மக்கள் பயன்பாட்டிற்கு உகந்த வகையில் முறையாகப் பராமரிக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டுமென முதல்வர் விஜய்யை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>எம்.ஜி.ஆருடனான தனது நினைவுகளை பகிர்ந்துகொண்ட சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/speaker-jcd-prabhakar-shared-his-memories-with-mgr</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/speaker-jcd-prabhakar-shared-his-memories-with-mgr#comments</comments><guid isPermaLink="false">564f231b-ee76-4c32-849d-4ade9d6e20b8</guid><pubDate>Mon, 10 Aug 2026 07:23:32 +0000</pubDate><atom:updated>2026-08-10T07:23:32.294Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,TN Assembly,MGR,எம்.ஜி.ஆர்.,ஜேசிடி பிரபாகர்,JCD Prabhakar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/18xcjsz2/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/18xcjsz2/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர்யுடனான தனது நினைவுகளை சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் சட்டசபையில் பகிர்ந்துகொண்டார்.</p><p><strong>அவர் கூறியதாவது:-</strong></p><p>"ஒரு சுவையான, மனதில் என்றும் நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு. இங்கு இப்போது சொன்னால் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். 1984-ம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 12-ம் தேதி எம்.ஜி.ஆருடன் காரில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். மேற்கு கே.கே.நகர் பக்கம் கார் சென்று கொண்டிருந்தபோது ஓரு இடத்தில் கூட்டம் அதிகம் இருந்தது. என்ன என்று கேட்டார். இது ரேஷன் கடை, வில்லிவாக்கம் தொகுதியின்கீழ் வருகிறது என்று சொன்னேன். </p><p>உடனே காரை நிறுத்துங்கள் என்று எம்.ஜி.ஆர். சொன்னார்; காரை விட்டு இறங்கி ரேஷன் கடைக்குச் சென்றார். அங்கு ஒரு சாதாரண ஸ்டூல் இருந்தது. அதில் அவரே உட்கார்ந்து கொண்டார். அரிசியை காண்பிக்கச் சொன்னார். அரிசியை கையில் வைத்து ஆய்வு செய்தார். பின்னர் எடையை பின்பக்கமாக திரும்பி பார்த்தார்; எதற்கு பார்த்தார் என்பது குறித்து உங்கள் அனைவருக்கும் தெரியும். அங்கு வரிசையில் இருந்தவர்களிடம் அனைத்து பொருட்களும் கிடைக்கிறதா? எடை சரியாக இருக்கிறதா..? கடையை ஒழுங்காக திறக்கிறார்களா?' என்று கேட்டார். ஒழுங்காகத் திறக்கிறார்கள் என்று மக்கள் சொன்னார்கள்.</p><p>பின்னர் சிரித்துக்கொண்டே காரின் அருகில் வரும்போது என் கையை பிடித்து சொன்னார். 'இது ஒழுங்காக இருக்கும் வரைக்கும் நாம் திரும்ப திரும்ப ஆட்சிக்கு வருவோம்' என்று சொன்னார். நீங்கள் எல்லாம் இதுபற்றி பேசும்போது எனக்கு நினைவு பின்னோக்கி சென்றது" என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>உடுமலை நான்குவழிச்சாலை சந்திப்பில் உயர் கோபுர மின்விளக்கு சீரமைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/renovation-of-high-tower-lighting-at-udumalai-four-lane-intersection</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/renovation-of-high-tower-lighting-at-udumalai-four-lane-intersection#comments</comments><guid isPermaLink="false">304c5ecd-3520-4810-b5a2-dc7cc39f77ef</guid><pubDate>Mon, 10 Aug 2026 07:20:47 +0000</pubDate><atom:updated>2026-08-10T07:20:47.271Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பொள்ளாச்சி,மின்விளக்கு,உயர் கோபுர மின்விளக்கு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/98zjhua5/light33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உயர் கோபுர மின்விளக்கு சீரமைப்பு
]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/98zjhua5/light33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>போடிப்பட்டி, </p><p>உடுமலை-பொள்ளாச்சி சாலையில் நான்குவழிச்சாலை சந்திப்பு பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மின்விளக்கு ஆபத்தான முறையில் தொங்கிக் கொண்டிருந்தது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல அச்சப்பட்டனர். இதனால் அதை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். </p><p>மேலும் இதுதொடர்பான செய்தி தினத்தந்தியில் பிரசுரிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக, மின்வாரிய அதிகாரிகள் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20">உயர் கோபுர மின்விளக்கை </a>சீரமைத்தனர். </p><p>இதனால் செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி மற்றும் பாராட்டுகளை தெரிவித்து உள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>தனியார் ஆஸ்பத்திரியில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-female-employee-at-private-hospital-2-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-female-employee-at-private-hospital-2-arrested#comments</comments><guid isPermaLink="false">9b7dcf1c-7a1f-4fa9-b20e-61c9c59529bb</guid><pubDate>Mon, 10 Aug 2026 07:15:59 +0000</pubDate><atom:updated>2026-08-10T07:15:59.563Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,கைது,Sexual harassment,பாலியல் தொல்லை,female employee,பெண் ஊழியர்,private hospital,arreste</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/thcjednf/40.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பாலியல் தொல்லை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/thcjednf/40.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை, </p><p>நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அசாம் வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.</p><p>அசாம் மாநிலம் காம்ருப் மாவட்டத்தை சேர்ந்தவர் காளிபார் ரகுமான், இவரின் மகன் ஹபிபர் ரகுமான் (வயது 28). இவர்கள் இவரும் அசாம் மாநிலம் சர்பரி மாவட்டத்தை சேர்ந்த அன்வர் அலி மகன் அஸிமுல் அலி (22) என்பவருடன் சேர்ந்து தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழையில் தங்கியிருந்து தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார்கள்.</p><h2>ஆஸ்பத்திரி</h2><p>கடந்த சில நாட்களுக்கு முன்பு அஸிமுல் அலியின் உறவினர் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவரை பார்ப்பதற்காக நேற்று மாலையில் அஸிமுல் அலி மற்றும் ஹபிபர் ரகுமான் ஆகியோர் அந்த ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளனர். </p><h2>பாலியல் தொல்லை</h2><p>அங்கு அவர்கள் இருவரும் சேர்ந்து ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த 22 வயது பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அஸிமுல் அலி, ஹபிபர் ரகுமான் ஆகியோரை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மதுரையில் மதுப்பிரியர்களின் புகலிடமாக மாறிய மயானத்தை மீட்டெடுத்த ‘வீ தி லீடர்ஸ்’ தன்னார்வலர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-the-leaders-volunteers-restore-a-graveyard-in-madurai-that-had-become-a-haven-for-alcoholics</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-the-leaders-volunteers-restore-a-graveyard-in-madurai-that-had-become-a-haven-for-alcoholics#comments</comments><guid isPermaLink="false">580a3c9f-23c0-4afe-8f66-1d5edbb4921e</guid><pubDate>Mon, 10 Aug 2026 07:12:56 +0000</pubDate><atom:updated>2026-08-10T07:12:56.038Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,மது பிரியர்கள்,மயானம்,alcoholics,we the leaders,வீ தி லீடர்ஸ் அமைப்பு</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/wanx262d/2.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ வீ தி லீடர்ஸ் அமைப்பின் தன்னார்வாலர்கள் ]]></media:title><media:description type="html"><![CDATA[ துப்பிரியர்களின் புகலிடமாக மாறிய மயானத்தை ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தன்னார்வாலர்கள் மீட்டெடுத்தனர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/wanx262d/2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரையில் மதுப்பிரியர்களின் புகலிடமாக மாறிய மயானத்தை ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தன்னார்வாலர்கள் மீட்டெடுத்தனர்.</p><h2>மதுப்பிரியர்கள் கூடாரம்</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மதுரை மாவட்டம்</a> பாப்பாக்குடி பகுதியில் அமைந்துள்ள பொது<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> </a>மயான வளாகம், கடந்த சில மாதங்களாகப் பராமரிப்பின்றி புதர்கள் மண்டி வந்தன. இதனால், சமூக விரோதிகள் மற்றும் மதுப்பிரியர்களின் கூடாரமாக அப்பகுதி மாறி, பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அவல நிலையில் இருந்தது.</p><h2>சுற்றுச்சூழல் மாத விழிப்புணர்வுப் பணி</h2><p>இந்நிலையில், சுற்றுச்சூழல் மாதத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் ‘சுத்தமான, வளமான தமிழகம்’ இயக்கத்தின் கீழ் பல்வேறு தூய்மைப் பணிகளை ‘<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வீ தி லீடர்ஸ்</a>’அமைப்பு முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பாப்பாக்குடி மயானத்தை முற்றிலும் தூய்மைப்படுத்த அந்த அமைப்பினர் திட்டமிட்டனர்.</p><h2>அகற்றப்பட்ட டன் கணக்கிலான குப்பைகள்</h2><p>இதையடுத்து இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இந்த தூய்மைப் பணிக்கு, கே.கே. பில்டர்ஸ் கண்ணன் தலைமை தாங்கி, முன்னிலை வகித்தார். இதில் திரளான அந்த அமைப்பின் தன்னார்வலர்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். </p><p>மயான வளாகத்தில் பல வருடங்களாகக் கிடந்த நூற்றுக்கணக்கான மது பாட்டில்கள் நெகிழி (பிளாஸ்டிக்) குப்பைகள், கழிவுகள், அடர்ந்து வளர்ந்திருந்த சீமைக் கருவேல மரங்கள் மற்றும் புதர்கள் ஆகியவை நவீன உபகரணங்கள் மற்றும் அவர்களால் முழுமையாக அகற்றப்பட்டு, வளாகம் சுத்தப்படுத்தப்பட்டது.</p><h2>பொதுமக்கள் பாராட்டு</h2><p>மயானங்கள் போன்ற பொது இடங்கள் சுகாதாரமற்றுப் போவதைத் தடுத்து, அவற்றை அமைதியான சூழலாக மாற்றும் நோக்கில் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு மேற்கொண்டு வரும் இந்த தூய்மைப் பணி, மதுரை பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியையும், சமூக வலைத்தளங்களில் பரவலான பாராட்டுகளையும் பெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>சேலத்தில் களை கட்டிய வண்டி வேடிக்கை... கடவுள் வேடம் அணிந்து வந்த பக்தர்களால் பரவசம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vandi-vedikkai-comes-alive-in-salem</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vandi-vedikkai-comes-alive-in-salem#comments</comments><guid isPermaLink="false">bea694c9-e870-4a18-a735-45d669a1ce78</guid><pubDate>Mon, 10 Aug 2026 06:41:21 +0000</pubDate><atom:updated>2026-08-10T06:41:21.038Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,சேலம்,god,கடவுள்,mariamman temple,மாரியம்மன் கோவில்,வண்டி வேடிக்கை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/nigz6mbc/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/nigz6mbc/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><h2>வண்டி வேடிக்கை</h2><p>சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த 21-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து கம்பம் நடுதல், கொடியேற்றம், அலகு குத்துதல், சக்தி அழைப்பு, பொங்கல் வைத்தல், தேரோட்டம் நடை பெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான வண்டி வேடிக்கை நேற்று இரவு நடந்தது. இதில், வண்ண மின் விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பக்தர்கள் கடவுள் வேடம் அணிந்து ஊர்வலமாக வந்தனர். </p><p>செவ்வாய்பேட்டை வைஸ்ய நண்பர்கள் குழு சார்பில் கேரள மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை உருவான வரலாறு கதையை விளக்கும் வகையில் பக்தர்கள் ஆதி சங்கரன், மூகாம்பிகை, சொர்ணாம்பிகை, லட் சுமி, சரஸ்வதி, பராசக்தி, முனிவர் மற்றும் அரக்கன் ஆகியோர் வேடங்களை தத்ரூபமாக அணிந்து வண்டியில் ஊர்வலமாக வந்தனர். இது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/5lwmsmy4/CHENNAI-11.jpg" /></figure><h2>மதுரை வீரன்-கருப்பசாமி</h2><p>இதேபோல், மற்றொரு வண்டியில் அமர்நாத் பனிலிங்கத்தில் சிவன், பார்வதி, விநாயகர், சந்திரன் ஆகிய கடவுள் வேடங்க ளையும், அப்புசெட்டி தெரு நண்பர்கள் குழு சார்பில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர் என நால்வர் போன்று பக்தர்கள் வேடம் அணிந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர்.</p><p>குறிப்பாக புராண கதைகளில் வரும் கடவுள்களை போன்று பக்தர்கள் வேடமாக அணிந்து வந்தனர். இதுதவிர, மதுரை வீரன், எல்லையை காக்கும் கருப்பசாமி போன்றும் பக்தர்கள் வேடம் அணிந்து அதற்கு ஏற்ற பாடலுக்கு ஆக்ரோஷமாக ஆடியவாறு வந்தனர்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/6cxc1jgf/Untitled-1.jpg" /></figure><h2>ராவணின் வரலாறு</h2><p>இதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட மற்றொரு வண்டியில் கைலாய மலையை தூக்க முயன்று தோல்வி அடைந்த ராவணின் வரலாறு நாடகத்தை அதற்கு ஏற்ற கதாபாத்திரத்தில் பக்தர்கள் வேடம் அணிந்து மிகவும் தத்ரூபமாக பொதுமக்கள் மத்தியில் நடித்து காட்டியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இதேபோல், செவ்வாய்பேட்டையில் வசிக்கும் ராஜஸ்தான் வியாபாரிகள் சார்பில் பாபா ராம்தேவ் வேடமணிந்து வண்டியில் ஊர்வலமாக வந்தனர்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/bof0y1i5/Untitled-2.jpg" /></figure><h2>ஆட்டம், பாட்டம்</h2><p>ஒவ்வொரு அலங்கார வண்டி முன்பும் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் மேளதாளத்திற்கு ஏற்ப ஆட்டம், பாட்டத் துடன் ஊர்வலமாக வந்தனர். மேலும், குழந்தைகளை உற்சாகப்படுத்தும் வகையில் சிலர் முயல், கரடி, சிங்கம் போன்ற கார்ட்டூன் பொம்மை வேடம் அணிந்து ஆடியவாறு வந்தனர். இந்த கார்ட்டூன் முன்பு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அலங்கரிக்கப்பட்ட அனைத்து வண்டிகளும் வண்டிப்பேட்டை பகுதியில் இருந்து செவ்வாய்பேட்டை மெயின்ரோடு வழியாக தேர் நிலையம் வந்து தீயணைப்பு நிலையம் வழியாக ஊர்வலமாக சென்றது.</p><p>இந்த வண்டி வேடிக்கை நிகழ்ச்சியை காண செவ்வாய்பேட்டை, அன்னதானப்பட்டி, சூரமங்கலம், குகை, நெத்தி மேடு, டவுன் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனர். இதனால் செவ்வாய்பேட்டை மெயின்ரோட்டில எங்கு பார்த்தாலும் பொது மக்கள் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முடிவில், சிறப்பாக அலங்கரித்து ஊர்வலமாக வந்த வண்டிகளுக்கு கோவில் விழாக்குழு சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.</p>]]></content:encoded></item><item><title>ராஜேந்திர சோழனின் வீரமும் வெற்றியும் வரலாற்றுப் பக்கங்களில் கர்ஜிக்கிறது: நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-valor-and-victory-of-rajendra-chola-roar-across-the-pages-of-history-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-valor-and-victory-of-rajendra-chola-roar-across-the-pages-of-history-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">a5add3ac-0570-487c-ad9b-9a4ea54fac45</guid><pubDate>Mon, 10 Aug 2026 06:21:41 +0000</pubDate><atom:updated>2026-08-10T06:21:41.843Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,ராஜேந்திர சோழன்,Rajendra Chola</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/vgqwc70i/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/vgqwc70i/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாமன்னர் ராஜேந்திரன் சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”கடல் கடந்து கொடி நாட்டிய மாமன்னர்! கங்கை கொண்ட சோழபுரம் படைத்த பேரரசர், தமிழரின் வீரத்தையும் ஆட்சித்திறனையும் உலகறியச் செய்த மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் இன்று!</p><p>நீர்வளம், நிர்வாகம், கலை, கட்டிடக்கலை என அனைத்திலும் தொலைநோக்குப் பார்வையுடன் தடம் பதித்த மாமன்னர் ராஜேந்திர சோழன், வெறும் வரலாற்றின் மன்னர் அல்ல தமிழர் பெருமையின் அழியாத அடையாளம்! ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் அவரது வீரமும் வெற்றியும் வரலாற்றுப் பக்கங்களில் கர்ஜிக்கிறது!”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது சோகம்: பாம்பு கடித்து 8 வயது சிறுவன் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/8-year-old-boy-dies-after-snake-bite-at-home-in-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/8-year-old-boy-dies-after-snake-bite-at-home-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">7f99b8b3-d187-4bef-981c-92cbbb5e9167</guid><pubDate>Mon, 10 Aug 2026 06:19:08 +0000</pubDate><atom:updated>2026-08-10T06:19:08.264Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thiruvallur,திருவள்ளூர்,Snake,ஆவடி,பாம்பு,Aavadi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/oxep76eg/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/oxep76eg/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர்,</p><p>திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பிருந்தாவன் நகரைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் நிச்சிஷ் (8 வயது). இவர், ஆவடி கவுரி பேட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலையில் நிச்சிஷ் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் இல்லாததால் இருட்டாக இருந்துள்ளது.</p><p>இந்த நிலையில் திடீரென வீட்டில் இருந்த பூனை பயங்கரமாக சத்தமிட்டு கத்தியது. இதையடுத்து நிச்சிஷ் பூனையை தூக்குவதற்காக அருகில் சென்றார். அப்போது பூனையை கடிக்க வந்த விஷப்பாம்பு திடீரென நிச்சிசை கடித்தது. இதில் அலறித்துடித்த சிறுவனை அவரது பெற்றோர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.</p><p>அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் நாளை கூடுகிறது காவிரி நீர் ஒழுங்காற்று குழு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-cauvery-water-regulation-committee-is-set-to-meet-in-delhi-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-cauvery-water-regulation-committee-is-set-to-meet-in-delhi-tomorrow#comments</comments><guid isPermaLink="false">54a0c3e3-a0f0-4b88-bcfb-a467e33e9c55</guid><pubDate>Mon, 10 Aug 2026 06:13:35 +0000</pubDate><atom:updated>2026-08-10T06:13:35.090Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Cauvery issue,காவிரி விவகாரம்,காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்,Cauvery Water Regulation Committee</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/tka8cm3n/11.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/tka8cm3n/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>புதுடெல்லி,</p><p>சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையம் மாதம் ஒருமுறை கூடி வருகிறது. அதன் துணை அமைப்பான காவிரி ஒழுங்காற்றுக்குழுவுக்கு மாதம் இத்தனை முறை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்ற விதி இல்லை. எப்போது வேண்டுமானாலும் அது கூடும். </p><p>அந்த வகையில் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 139ஆவது கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது. </p><p>காவிரியில் இருந்து ஆகஸ்ட் மாதத்தில் திறந்துவிடப்படும் தண்ணீர் குறித்து விவாதிப்பதற்காக கூடுகிறது. </p><p>தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அதிகாரிகள் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் பங்கேற்கின்றனர். </p><p>கர்நாடக அரசு ஆகஸ்ட் மாதம் 45.5 டிஎம்சி நீர் திறந்துவிட வேண்டிய நிலையில் ஒழுங்காற்று குழு கூட்டம் நடக்கிறது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் 88 டிஎம்சி திறக்க வேண்டிய நிலையில் 10 டிஎம்சி மட்டுமே திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. </p> ]]></content:encoded></item><item><title>நாங்கள் தினம் தினம் டென்ஷனாக இருக்கிறோம்... அமைச்சர் ஆனந்த்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-are-under-tension-every-single-day-minister-anand</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-are-under-tension-every-single-day-minister-anand#comments</comments><guid isPermaLink="false">9041de27-a5e9-4ece-9698-46c167989c46</guid><pubDate>Mon, 10 Aug 2026 05:45:04 +0000</pubDate><atom:updated>2026-08-10T05:45:04.791Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,TN Assembly,எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,MRK Panneerselvam,அமைச்சர் ஆனந்த்,Minister Anand</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/jt5q24e0/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/jt5q24e0/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் பட்ஜெட் மீதான விவாத கூட்டம் நடந்து வருகிறது.  இந்தநிலையில், 2 நாள் விடுமுறை முடிந்து தமிழக சட்டசபை  காலை 9.30 மணிக்கு கூடியது. முதலில் இரங்கல் குறிப்புவாசிக்கப்பட்டது.</p><p>தொடர்ந்து பட்ஜெட் பொது விவாதத்தின் போது "நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்; நாங்கள் அனைவரும் டென்ஷனாக இருக்கிறோம் என்று சட்டமன்றத்தில் திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசினார். இதற்கு  நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் பதில் அளித்து கூறுகையில்,</p><h2>தினம் தினம் டென்ஷன்</h2><p>“சின்ன வாய்க்கால் பிரச்சினைதான்... இன்று காலையில்கூட போன்செய்து சரியாகிவிட்டாதா என்று கேட்கக்கூடிய முதல்-அமைச்சர்தான் இருக்கிறார்; நீங்களாவது. 5 வருஷம் டென்ஷனாக இருந்தீங்க. நாங்கள் தினம் தினம் டென்ஷனாக இருக்கிறோம்; சின்ன விஷயமாக இருந்தாலும் எங்களுக்கு அப்படியொரு பயம் இருக்கிறது. என்று அவர் கூறினார்.</p><p>தொடர்ந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறுகையில், “அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் எப்போதும் பிசி ஆனந்தாக வலம் வருகிறார்... அனைத்து கட்சித் தொண்டர்களும் அவரை பார்த்து வருகின்றனர்; புதிதாக வந்த இயக்கம்.. இனிமேல் தான் உங்களுக்கு தெரியபோகிறது. பேசுவது எளிது; அதை செயல்படுத்தும்போது தான் கஷ்டங்கள் தெரியும்” என்று பேசினார். இதனால் அவையில் சிறிது நேரம் கலகலப்பு ஏற்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்த்தாய் தனித்தீர்மானம் மீதான விவாதம்;  அமைச்சர் வன்னி அரசு பேச்சால்  அவையில் சலசலப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/debate-on-the-tamil-thai-special-resolution-minister-vanni-arasus-remarks-cause-a-stir-in-the-house</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/debate-on-the-tamil-thai-special-resolution-minister-vanni-arasus-remarks-cause-a-stir-in-the-house#comments</comments><guid isPermaLink="false">61fb97db-85c3-469c-bf0a-611b96b99fb4</guid><pubDate>Mon, 10 Aug 2026 05:31:42 +0000</pubDate><atom:updated>2026-08-10T05:31:42.709Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Assembly,வன்னி அரசு,Vanni Arasu,தனித்தீர்மானம்,தமிழ்த்தாய்,tamil thai valthu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/7eqbffvt/assembly.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வன்னி அரசு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/7eqbffvt/assembly.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக கவர்னர் பங்கேற்கும் நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை என தொடர்ச்சியாக சர்ச்சை எழுந்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு, தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பின்னுக்கு தள்ளப்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.  முதல் அமைச்சராக  விஜய் பதவியேற்கும் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் வந்தே மாதரம் பாடப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அதனை தொடர்ந்து, அமைச்சரவை விரிவாக்கத்திற்கான பதவியேற்பு விழாவில் கூட அதே போல் பாடப்பட்டது.  </p><h2>கவர்னர் மாளிகை</h2><p>சமீபத்தில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை எழுதிய மனோன்மனியம் சுந்தரனார் பெயர் கொண்ட பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முன்னதாக இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை என்றால் தன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கவர்னர் மாளிகை உத்தரவிட்டிருந்ததாக பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் தெரிவித்திருந்தார்.</p><h2>தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம்</h2><p>இந்நிலையில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என தனித் தீர்மானத்தை சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் இன்று கொண்டு வந்துள்ளார். கல்வி நிறுவனம், அரசு அலுவலகம் என அனைத்து பொதுத்துறை நிறுவனம் நிறுவனங்களிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயமாக பாட வேண்டும் என்ற தனித் தீர்மானத்தை  முதல் அமைச்சர் விஜய் கொண்டு வந்து உரையாற்றினார்.  இந்த தீர்மானம் மீது அனைத்து கட்சி எம்.எல்.ஏக்களும் பேசினர். பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலமாக இந்த  தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது. </p> <h2>அவையில் சலசலப்பு</h2><p>முன்னதாக இந்த தீர்மானம் மீது பேசிய அமைச்சர் வன்னி அரசு கூறிய கருத்தால் அவையில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. வன்னி அரசு கூறும் போது, தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக முதலமைச்சர் கொண்டு வந்த தனி தீர்மானத்திற்கு ஆளும் கட்சி வரிசையில் தான் கைத்தட்டி வரவேற்றார்கள்; எல்லோரும் வரவேற்க வேண்டும்; இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க முக்கியமான தீர்மானம்” என்றார். இதற்கு எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து பேசிய வன்னி அரசு எல்லோரும் வரவேற்றால் மகிழ்ச்சி..நான் குறையாக சொல்லவில்லை என்றார்.</p>]]></content:encoded></item><item><title>’தமிழ்த்தாய் வாழ்த்து ’ பாடலுக்கு விளக்கம் கொடுத்த அமைச்சர் ராஜ்மோகன் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-rajmohan-explained-the-significance-of-the-invocation-to-tamil-thai-vazhthu-tamil-thai-vazhthu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-rajmohan-explained-the-significance-of-the-invocation-to-tamil-thai-vazhthu-tamil-thai-vazhthu#comments</comments><guid isPermaLink="false">7ab03b0a-3153-4026-b08e-4351b3f1626b</guid><pubDate>Mon, 10 Aug 2026 05:29:21 +0000</pubDate><atom:updated>2026-08-10T05:29:21.702Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்த்தாய் வாழ்த்து,Minister Rajmohan,அமைச்சர் ராஜ்மோகன்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/kap8id3r/10.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/kap8id3r/10.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதனை ஆதரித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது;</p><p>”உலகில் உள்ளவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தாய் மொழியில் பெயர் வைப்பார்கள். ஆனால் தாய் மொழியையே பெயராக வைக்கக்கூடிய கூட்டம் இந்த தமிழ் கூட்டம். தமிழரசன், தமிழழகன், தமிழழகி என மொழியின் பெயரையே தங்கள் பிள்ளைகளுக்கு வைத்து அழகுப் பார்க்கக்கூடிய கூட்டம் நம் தமிழ்க்கூட்டம். இந்த கூட்டம் தமிழ் தாயை வாழ்த்தும் பாடல் தான் தமிழ்த்தாய் வாழ்த்து.</p><h2>தமிழ்த்தாய் வாழ்த்து</h2><p>ஆனால் இது தமிழ்த்தாய்க்கான வாழ்த்து மட்டுமல்ல. இந்த பூமித்தாயை வாழ்த்தும் வாழ்த்து. இந்த நிலம், நிலத்தை சுற்றி கடல், அந்த நீல நிற கடலை புடவையாக சுற்றியிருக்கிறாளாம் பூமித்தாய். 'நீராரும் கடலுடுத்த நிலமடந்தை'. அந்த பூமித்தாய்க்கு ஒரு அழகான முகம். 'சீராரும் வதனமென' வதனம் என்றால் முகம். அந்த சீராரும் வதனம் எதுவென்று பார்த்தால் அது 'திகழ்பரத கண்டமெனில்' இந்த பூமித்தாயின் முகம் பாரதத்தாய், அவளுக்கு சிறு பிறை போன்ற நெற்றி, அது தென்னிந்தியா, அந்த நெற்றிக்கு அழகு அதில் வைக்கிற ஒரு பொட்டு. அது தமிழ்நாடு என்கிற தாய். அந்த பொட்டு நெற்றிக்கு மட்டுமா வாசம் தருகிறது. எட்டுத் திக்கும் மணமாக வீசுகிறது. அப்படி எட்டுத் திக்கும் புகழோடு இருப்பவள் தமிழ்த் தாய். இத்தனை காலங்கள் இருந்தால் தாய்க்கு வயதாகும் தானே.</p><h2>உலகத் தாய் வாழ்த்து</h2><p>ஆனால் இத்தனாயிரம் ஆண்டுகள் வளர்ந்த பின்னும் நீ எப்படி இன்னும் இளமையாக இருக்கிறாய்! உன் இளமையை வாழ்த்துகிறேன் என்று, தமிழை, தமிழ்நாட்டை வாழ்த்தி, தென்னிந்தியாவை சொல்லி, பாரத்தாயை வாழ்த்தி, உலகத் தாயையே வாழ்த்தும் இந்த தமிழ்த்தாய் வாழ்த்தை உலகத் தாய் வாழ்த்து என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன்.இருகரம் கூப்பி வணங்கி வாழ்த்துகிறேன். </p><p>இனி பொது நிகழ்ச்சிகளில், கல்வி நிலையங்களில், எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே முதலில் ஒலிக்கும். அதற்காக தீர்மானம் நிறைவேற்றியவர் என்ற சரித்திரத்தில் முதல்வரின் பெயரே நிலைக்கும். அவரை வாழ்த்தி இந்த தீர்மானத்தை வரவேற்கிறேன்." </p><p>இவ்வாறு அவர் பேசினார். </p>]]></content:encoded></item><item><title>கூடுவாஞ்சேரியில் 2 சிறுவர்களை கடித்த குரங்கு - கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monkey-bites-two-boys-in-guduvancheri-forest-department-sets-trap</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monkey-bites-two-boys-in-guduvancheri-forest-department-sets-trap#comments</comments><guid isPermaLink="false">4d2434bf-a074-4d42-a937-a40431a588bd</guid><pubDate>Mon, 10 Aug 2026 05:25:14 +0000</pubDate><atom:updated>2026-08-10T05:25:14.897Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chengalpattu,செங்கல்பட்டு,வனத்துறை,குரங்கு,monkey,கூடுவாஞ்சேரி,Guduvanchery</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/4n9unhzs/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/4n9unhzs/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வண்டலூர்,</p><p>கூடுவாஞ்சேரியில் 2 சிறுவர்களை கடித்த குரங்கை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.</p><h2>சிறுவர்களை கடித்த குரங்கு</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">செங்கல்பட்டு </a>மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் 2-வது தெருவில், நேற்று காலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுவர்களை அப்பகுதியில் சுற்றித்திரிந்த குரங்கு திடீரென கடித்துக் குதறியது. இதில் சிறுவர்கள் காயம் அடைந்தனர். இதையடுத்து, சிறுவர்களை அவர்களது பெற்றோர், அருகில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.</p><h2>வனத்துறைக்கு தகவல்</h2><p>இதுகுறித்து அப்பகுதி நகராட்சி கவுன்சிலர் கவுசல்யா பிரகாஷ், வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். குரங்கை பிடிப்பதற்காக அப்பகுதியில் கூண்டு வைக்கப்பட்டு, அதற்குள் வாழைப்பழத்தை வைத்து குரங்கை பிடிக்க வனத்துறை ஊழியர்கள் முயற்சி மேற்கொண்டனர். அந்த குரங்கு அங்கிருந்து திடீரென மாயமானது. தொடர்ந்து குரங்கை பிடிக்க அப்பகுதியில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.</p><h2>தொடர்ந்து அட்டகாசம்</h2><p>கடந்த சில தினங்களுக்கு முன்பு நந்திவரம் பகுதியில் உள்ள புதுப்பாளையத்தம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த 5 பக்தர்களை குரங்கு கடித்துக் குதறியது. கடந்த 20 நாட்களுக்கு முன்பு நந்திவரம் அங்கன்வாடி மையம் அருகே தெருவில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள் மற்றும் தெருவில் விளையாடி கொண்டிருந்த சிறுவர்களை குரங்கு கடித்தது.</p><p>இந்த நிலையில், மீண்டும் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பகுதிகளில் குரங்குகள் சுற்றித்திரிந்து குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் பெரியவர்களை கடித்து அட்டகாசம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.</p><h2>பொதுமக்களுக்கு வேண்டுகோள்</h2><p>இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, "தெருக்களில் சுற்றித்திரியும் குரங்குகளுக்கு பொதுமக்கள் உணவு மற்றும் தின்பண்டங்களை வழங்கக்கூடாது. குரங்குகளுக்கு தொடர்ந்து உணவு வழங்கினால், அந்தப் பகுதியில் உணவு கிடைக்கும் என்ற எண்ணத்தில் அவை மீண்டும் மீண்டும் அங்கு வரத் தொடங்கும். ஒரு கட்டத்தில் உணவு கிடைக்காதபோது, பொதுமக்களை அச்சுறுத்துவதுடன், கடிக்கவும் தொடங்குகின்றன. எனவே, குரங்குகளுக்கு உணவு வழங்குவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்" என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>நெல், கரும்பு கொள்முதலுக்கான ஊக்கத்தொகை உயர்வு: சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/incentive-for-paddy-sugarcane-purchase-hike-chief-minister-vijays-announcement-in-the-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/incentive-for-paddy-sugarcane-purchase-hike-chief-minister-vijays-announcement-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">65af624b-4c8e-40c8-8632-915891e64cc6</guid><pubDate>Mon, 10 Aug 2026 05:14:46 +0000</pubDate><atom:updated>2026-08-10T05:14:46.565Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>ஊக்கத்தொகை,Paddy,நெல்,Incentive,sugarcane,கரும்பு,Chief Minister Vijay</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/hhgb2ty5/9.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/hhgb2ty5/9.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு சட்டசபையின் 110 விதியின் கீழ் நெல் கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை குறித்து முதல்-அமைச்சர் விஜய் கூறியதாவது;</p><h2>ஊக்கத்தொகை</h2><p>விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் நோக்கில் நெல், கரும்புக்கான ஊக்கத்தொகையை அதிகரிக்க முடிவு செய்து உள்ளோம். சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.289, பொதுரக நெல் குவிண்டாலுக்கு ரூ.150ம் உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் விவசாயிகளுக்கு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு  ரூ.2,750, பொது நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,600 கிடைக்கும். </p><p>சர்க்கரை ஆலைகளில் கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு மத்திய அரசு ரூ.3290.50வழங்குகிறது. அத்துடன்  கரும்புக்கான ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூ.709.50 தமிழக அரசு சார்பில் வழங்கப்படும். இதன் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 4,000 விலையாக கிடைக்கும். </p><h2>வரலாற்றிலேயே முதல் முறை</h2><p>நெல்லுக்கு ரூ.150 வரை உயர்த்தப்பட்டுள்ளது வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை. அதேபோல, கரும்பு டன் 134க்கு மேல் வழங்குவதும் இதுதான் முதல் முறையாகும். நமது அரசு விவசாயிகளை விட்டுவிடாமல் தோளோடு தோள் கொடுத்து, விவசாயிகளுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும்.” என்றார். </p> ]]></content:encoded></item><item><title>கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா பிறந்தநாள்: வானதி சீனிவாசன் வாழ்த்து </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/grand-master-praggnanandhas-birthday-vanathi-srinivasan-wishes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/grand-master-praggnanandhas-birthday-vanathi-srinivasan-wishes#comments</comments><guid isPermaLink="false">f5dfa7c1-0657-4d0f-b5b4-30af89e0e4ed</guid><pubDate>Mon, 10 Aug 2026 05:05:36 +0000</pubDate><atom:updated>2026-08-10T05:05:36.026Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Birthday Wish,வாழ்த்து,வானதி சீனிவாசன்,பிறந்தநாள்,பிரக்ஞானந்தா,செஸ் கிராண்ட் மாஸ்டர்,Grand Master,Praggnanandha</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/e9r24kxk/38.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வானதி சீனிவாசன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/e9r24kxk/38.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வானதி சீனிவாசன் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.</p><h2>வாழ்த்து</h2><p>இது தொடர்பாக, தேசிய பாஜக மகளிரணி தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D">வானதி சீனிவாசன்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>இந்தியாவின் சதுரங்க நாயகன், கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். </p><p>உங்களது அர்ப்பணிப்பு, அபாரத் திறமை, விடாமுயற்சி ஆகியவை இந்தியாவின் இளம் சதுரங்க வீரர்களுக்கு மிகப்பெரும் உத்வேகமாகத் திகழ்கின்றன. உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை மேலும் உயர்த்தி, பல வெற்றிகளைப் பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-resolution-moved-by-chief-minister-vijay-passed-unanimously</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-resolution-moved-by-chief-minister-vijay-passed-unanimously#comments</comments><guid isPermaLink="false">f6b49299-032e-419d-be72-47c4e3d2f577</guid><pubDate>Mon, 10 Aug 2026 05:01:00 +0000</pubDate><atom:updated>2026-08-10T05:01:00.703Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,சட்டசபை,TN Assembly,தமிழ்த்தாய் வாழ்த்து,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,Chief Minister Vijay,TamilThai Vazhthu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/2hkwp7a7/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/2hkwp7a7/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசுத் துறை, கல்வி நிறுவன நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை கட்டாயமாக்கும் வகையில், சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><h2>தமிழ் என்றால் கெத்து</h2><p>இந்தியாவின் நெற்றியில் வைக்கக்கூடிய வெற்றிப் பொட்டுதான் நம் தமிழ்நாடு. தமிழ் என்றால் கெத்து; தமிழ் என்றால் அது தனி பவர். ஒரு பெயரே, ஒரு சொல்லே மிகப்பெரிய வரலாறுன்னா அது தமிழ்தான். தமிழ் மொழி என்றால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒன்றாக வந்து நிற்கும். தமிழ் வெறும் மொழி மட்டும் அல்ல; நம் உயிர்; பேசினால் ஓசை மட்டும் இல்லை, உணர்வும் வரும்; நம் தாய்மொழி குறித்த உணர்வை புரியவைக்க தாய் மொழி, தமிழ் மொழி என்று சொல்வதே போதும்.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிப்பதுதான் மாநில உரிமை. தமிழ்த்தாய் வாழ்த்தின் மரியாதையை பாதுகாப்பதில் தவெக அரசு சமரசம் செய்யாது. உணர்வோடு கலந்திருக்கக்கூடிய தமிழை பின்னுக்குத் தள்ளினால் எப்படி பொறுத்துக்கொள்வது?; தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலிடத்தில் இருக்க வேண்டும்; அது நம் உரிமை. தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்று கூறுவது அரசியல் சார்ந்த விவாதமாக மாற வேண்டிய அவசியம் இல்லை. கட்சி வேறுபாடுகளை கடந்து ஒன்றிணைந்து அனைத்து உறுப்பினர்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூறினார்.</p><h2>திமுக ஆதரவு</h2><p>இதனையடுத்து முதல்-அமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்துக்கு திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. திமுக சார்பில் எம்.எல்.ஏ. கோவி.செழியன் பேசுகையில், “அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற தீர்மானத்துக்கு திமுக ஆதரவு தெரிவிக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடவேண்டும் என முதலில் அரசாணை வெளியிட்டவர் முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர். தமிழ்த்தாய் வாழ்த்தை கட்டாயம் பாட வேண்டும் என 2021 டிச. 17இல் அரசாணை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின். தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இயற்றியவரின் பெயரில் உள்ள பல்கலைகழகத்திலேயே 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டது அடிக்கடி மாறுபடும் இந்த சூழலை மாற்றிட இதனை சட்டமாக மாற்ற வேண்டும் என்று கூறினார்.</p><h2>அதிமுக ஆதரவு</h2><p>தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “தமிழ்த்தாய் வாழ்த்து வெறும் பாடல் அல்ல..! அது நம் பண்பாட்டின் அடையாளம். தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது யாருக்கும் எதிரானது அல்ல; தேசப்பற்றும் மொழிப்பற்றும் வேறு வேறானது அல்ல.. அரசியலில் நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.. ஆனால் தமிழ் என்று வரும்போது நாம் அனைவரும் ஒரே குரலில் ஒலிக்க வேண்டும்” என்று கூறினார்.</p><h2>ஒருமனதாக நிறைவேற்றம்</h2><p>தொடர்ந்து முதல்-அமைச்சர் விஜய் முன்மொழிந்த தனித்தீர்மானத்திற்கு காங்கிரஸ், பாமக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், பாஜக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து தனித்தீர்மானம் அனைத்து கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் அதிகாரப்பூர்வமான அறிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது கட்டாயம் - சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் தனித்தீர்மானம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamilthai-vazhthu-mandatory-at-government-events-chief-minister-vijay-resolution</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamilthai-vazhthu-mandatory-at-government-events-chief-minister-vijay-resolution#comments</comments><guid isPermaLink="false">94f24607-f564-4ffc-b6d2-45e3b25cc042</guid><pubDate>Mon, 10 Aug 2026 04:10:26 +0000</pubDate><atom:updated>2026-08-10T04:12:00.728Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN Assembly,தனித்தீர்மானம்,தமிழ்த்தாய் வாழ்த்து,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,Tamil Thai Vazhthu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/8jje0xje/Untitled-6-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/8jje0xje/Untitled-6-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசுத் துறை, கல்வி நிறுவன நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை கட்டாயமாக்கும் வகையில், சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். </p><h2>முதல்-அமைச்சர் விஜய் பேச்சு </h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழக</a> சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியதும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் என்ற கோமுகி மணியன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அரசினர் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்து முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- </p><h2>தமிழ்த்தாய் வாழ்த்து</h2><p>தமிழ் உலகின் தொன்மை வாய்ந்த செம்மொழியாகவும், தமிழர் நாகரிகம் உலகின் மிகப் பழமையான பண்பாட்டு மரபுகளில் ஒன்றாகவும் திகழ்வதை இப்பேரவை பெருமையுடன் பதிவு செய்கிறது. மனோன்மணியம் சுந்தரனாரால் 1891-ம் ஆண்டு எழுதப்பட்ட மனோன்மணியம் என்ற நாடக நூலின் பாயிரத்தில் இருந்து எடுக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து 1970-ம் ஆண்டு நவம்பர் 23 முதல் அரசு விழாக்களில் முதலில் பாடப்பட வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/7iw1gddc/Untitled-6.jpg" /></figure><h2>அதிகாரபூர்வ அங்கீகாரம்</h2><p>2021-ம் ஆண்டு டிசம்பர் 12 முதல் மாநில பாடலாக அதிகாரபூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டு தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படும் என்று ஆணையிடப்பட்டது. </p><p>இந்த நிலையில், மத்திய அரசின் உள்துறை  அமைச்சகத்தால் 2026-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ந்தேதிய கடிதத்தில், மாநில பாடல் பாடப்படுவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1970-ம் ஆண்டில் இருந்து அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் முதலில் பாடப்படுவது மரபுத்தன்மையாகவும், அரசாணைகளின் வாயிலாகவும் பின்பற்றப்பட்டு வருகிறது. </p><h2>முதலில் பாடப்படுவது கட்டாயம்</h2><p>ஆகவே, தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்மொழிக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் செலுத்தப்படும் மரியாதையின் வெளிப்பாடாகும் என்பதை இப்பேரவை வலியுறுத்துகிறது. இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளின் அடிப்படையில், தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளத்தை நிலைநிறுத்தும் வகையில், தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து  கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஏகமனதாக தீர்மானிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.</p><p>முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கொண்டுவந்த இந்த அரசினர் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>பட்ஜெட் மீதான 2-வது நாள்; தமிழக சட்டசபை கூடியது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-assembly-convenes-for-2nd-day-on-budget</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-assembly-convenes-for-2nd-day-on-budget#comments</comments><guid isPermaLink="false">3c9977f8-3de1-40c9-a0e7-8611dcab489f</guid><pubDate>Mon, 10 Aug 2026 04:11:32 +0000</pubDate><atom:updated>2026-08-10T04:11:32.455Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,விஜய்,தமிழக சட்டசபை,பட்ஜெட்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/tlj983zl/tvk33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/tlj983zl/tvk33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் பட்ஜெட் மீதான விவாத கூட்டம் நடந்து வருகிறது.  இந்தநிலையில், 2 நாள் விடுமுறை முடிந்து தமிழக சட்டசபை  காலை 9.30 மணிக்கு கூடியது. முதலில் இரங்கல் குறிப்புவாசிக்கப்பட்டது. </p> <p>அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழ கங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என்ற தனித்தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டது. அதாவது, </p><p>நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என்று <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">சட்டசபையில் அரசு தனித்தீர்மானம்</a> கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை முதல்-அமைச்சர் விஜய் முன்மொழிந்து பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>முத்துப்பேட்டை அலையாத்தி காடுகளில் கரை ஒதுங்கிய திமிங்கலம் பாதுகாப்பாக மீட்பு!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/whale-that-washed-ashore-in-the-forests-of-muthupettai-has-been-safely-rescued</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/whale-that-washed-ashore-in-the-forests-of-muthupettai-has-been-safely-rescued#comments</comments><guid isPermaLink="false">d5c020e8-b25b-4de2-baed-0ba512431f57</guid><pubDate>Mon, 10 Aug 2026 04:07:07 +0000</pubDate><atom:updated>2026-08-10T04:07:07.692Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவாரூர்,அலையாத்தி காடுகள்,Alaiyathi Forest,rescued,திமிங்கலம்,Whale,Muthupettai,கரை ஒதுங்கியது</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/n974d5gd/37.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கரை ஒதுங்கிய திமிங்கலம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/n974d5gd/37.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவாரூர்,</p><p>முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் பகுதியில் கரை ஒதுங்கிய சுமார் 3 டன் எடை கொண்ட பிரைடி இன திமிங்கலத்தை, வனத்துறையினர் மற்றும் மீனவர்கள் இணைந்து பாதுகாப்பாக மீட்டு மீண்டும் கடலில் விட்டனர்.</p><h2>திமிங்கலம்</h2><p>திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உலகப் புகழ்பெற்ற அலையாத்தி காடுகள் அமைந்துள்ளன. இதன் லகூன் (Lagoon) எனப்படும் ஆழமற்ற கடல் பகுதியில், சுமார் 30 அடி நீளமும், 3 டன் எடையும் கொண்ட பிரைடி  இனத்தைச் சேர்ந்த பிரம்மாண்ட திமிங்கலம் ஒன்று திடீரென கரைஒதுங்கியது. இதைப்பார்த்த அப்பகுதி மீனவர்கள் உடனடியாக வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். </p><h2>மீட்பு பணி</h2><p>சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் உள்ளூர் மீனவர்கள் இணைந்து கூட்டு மீட்புப் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, அந்த ராட்சத <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D">திமிங்கலம் </a>எவ்வித காயமும் இன்றி பத்திரமாக ஆழ்கடலுக்குள் திருப்பி அனுப்பப்பட்டது. </p><p>இதுகுறித்து தகவல் தெரிவித்த வனத்துறையினர், "கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை. அதன் உடல்நலமும் ஆரோக்கியமாகவே காணப்பட்டது" என்று உறுதிபடுத்தியுள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் என கூறி வாலிபரிடம் ரூ.7.50 லட்சம் மோசடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-cheated-of-rs-7-5-lakh-in-share-market-investment-scam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-cheated-of-rs-7-5-lakh-in-share-market-investment-scam#comments</comments><guid isPermaLink="false">44b6bb91-8df0-4035-88b9-c9c05f43a9a6</guid><pubDate>Mon, 10 Aug 2026 03:58:43 +0000</pubDate><atom:updated>2026-08-10T03:58:43.504Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மோசடி,Erode,ஈரோடு,Duping</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/fuxerezh/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மோசடி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/fuxerezh/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்று கூறி வாலிபரிடம் ரூ.7.50 லட்சம் மோசடி செய்த மர்மநபர்களை சைபர் கிரைம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p><p>ஈரோடு அத்தப்பம்பாளையத்தை சேர்ந்த 35 வயது வாலிபரை சமூகவலைதளம் மூலமாக பெண் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகும் என்று ஆசை வார்த்தை கூறினார். அவர் கூறியதைபோல ஒரு செயலியை பதிவிறக்கம் செய்த வாலிபர், அதில் ரூ.10 ஆயிரத்தை முதலீடு செய்தார். அப்போது லாபத்துடன் சேர்த்து பணம் திரும்ப வந்தது. </p><p>இதனால் மகிழ்ச்சி அடைந்த வாலிபர், கடந்த மாதம் 1-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை மொத்தம் ரூ.7 லட்சத்து 95 ஆயிரத்தை முதலீடு செய்து உள்ளார். ஆனால் அதில் அவருக்கு ரூ.45 ஆயிரம் மட்டுமே திரும்ப கிடைத்தது. மீதமுள்ள தொகை கிடைக்கவில்லை. தொடர்ந்து அவர் அந்த செயலியை பயன்படுத்தியபோது, திடீரென அது செயலிழந்தது.</p><p>அதன்பிறகு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாலிபர் ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை மோசடி செய்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-water-inflow-in-the-cauvery-river-at-hogenakkal</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-water-inflow-in-the-cauvery-river-at-hogenakkal#comments</comments><guid isPermaLink="false">359ff1bd-9148-4036-b71f-b4f05195b26b</guid><pubDate>Mon, 10 Aug 2026 03:53:14 +0000</pubDate><atom:updated>2026-08-10T03:53:14.035Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Hogenakkal,ஒகேனக்கல்,காவிரி ஆறு,Hogenakkal Cauvery river,ஒகேனக்கல் காவிரி ஆறு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/jp234z9r/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/jp234z9r/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>ஒகேனக்கல்</h2><p>கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக கபினி அணையில் இருந்து கடந்த 1-ந் தேதி முதல் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. குறிப்பாக மழையின் தீவிரத்தை பொறுத்து அந்த மாநில அரசு தண்ணீரை அதிகரித்தும், குறைத்தும் திறந்து விட்டு வருகிறது.</p><p>இதன்காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 11 மணி நிலவரப்படி வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. தண்ணீர் வரத்து குறைந்த நிலையில், விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் பரிசல் சவாரி செய்தும், அருவியில் குளித்தும் மகிழ்ந்தனர்.</p><h2>நீர்வரத்து அதிகரிப்பு</h2><p>இந்த நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு 5,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 8,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தால் ஒகேனக்கல்லில் பரிசல் சவாரி தடை செய்ய வாய்ப்பு உள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>விஜய்யின் அரசியல் கேரளத்தில் எடுபடாது -எஸ்.டி.பி.ஐ. தேசிய தலைவர் எம்.கே.பைஜி பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vijays-politics-will-not-gain-traction-in-kerala</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vijays-politics-will-not-gain-traction-in-kerala#comments</comments><guid isPermaLink="false">cbeeaa9c-ea95-4add-a9f0-be8060e31a12</guid><pubDate>Mon, 10 Aug 2026 03:37:54 +0000</pubDate><atom:updated>2026-08-10T03:37:54.726Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,கேரளம்,keralam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/04dmoolr/Vijay.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/04dmoolr/Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மதுரை மண்டலம் சார்பாக தலைவர்கள் சங்கமம் நிகழ்ச்சி, உத்தங்குடி பகுதியில் நடந்தது. மண்டல செயலாளர் முஜிபூர் ரகு மான் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.பைஜி கலந்து கொண்டு பேசினார். தேசிய பொதுச்செய லாளர் மஜித் பைஜி, மாநில தலைவர் நெல்லை முபாரக், தேசிய பொரு ளாளர் அப்துல்சத்தார் ஆகியோர் பேசினர். தொடர்ந்து, எம்.கே. பைஜி நிரு பர்களிடம் கூறுகையில், பா.ஜனதா கட்சி மக்களின் முன்பாக மிகப்பெரிய தோல்வி கண்ட அரசாக தற்போது இருக்கிறது. நீட் வினாத்தாள் கசிவு உள்பட அனைத்து துறைகளிலும் தோல்வியை கண்டுள்ளது. இந்து சமுதாய மக்களே பா.ஜனதாவால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதான் உண்மையாக இருக்கிறது.</p> <h2>பிரித்து பார்க்க தெரிந்தவர்கள்</h2><p>டெல்லியில் இளைஞர்கள் போராட்டத்தால் தர்மேந்திர பிரதான் பதவி விலகியது இந்த ஆட்சியின் முதல் விக்கெட். 2029-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதாவின் அனைத்து விக்கெட்டும் விழும். முதல்-அமைச்சர் விஜய்யின் திரைப்படத்தை கேரளாவில் அனைவரும் ரசித்து பார்ப்பார்கள். ஆனால், அவரது அரசியல் அங்கு எடுபடாது. கேரள மக்கள் சினிமாவையும், அரசியலையும் பிரித்து பார்க்க தெரிந்தவர்கள்” என்றார். </p> <p>கூட்டத்தில், காவிரி நீர் உரிமை மற்றும் விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும், தென் மாநிலங்களில் உரிமைகளை பறிக்கும் தொகுதி மறுவரையறை மசோதாவை அனைத்து கட்சிகளும் முறியடிக்க வேண்டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சிறுபான்மையினருக்கான தனி பட்ஜெட்டை தமிழக அரசு வெளியிட வேண்டும் உள்பட 7 தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன</p>]]></content:encoded></item><item><title>கோதையாற்றில் முதலை நடமாட்டம்: வனத்துறையினர் கண்காணிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/supplementary-counseling-for-engineering-courses-applications-open-from-the-17th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/supplementary-counseling-for-engineering-courses-applications-open-from-the-17th#comments</comments><guid isPermaLink="false">b9ca55cf-b6b9-4507-bd9e-acb09aacd7f5</guid><pubDate>Mon, 10 Aug 2026 03:29:50 +0000</pubDate><atom:updated>2026-08-10T03:29:50.093Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Crocodile,முதலை,கோதையாறு,Kothaiyar River</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/6rpmah43/6.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/6rpmah43/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>குமரி,</p><h2>ஆற்றில் முதலை நடமாட்டம்</h2><p>கோதையாற்றில் கடையாலுமூடு, களியல் பகுதிகளில் கடந்த 6 மாதங்களாக முதலை நடமாட்டம் இருந்து வருகிறது. இதனை பலர் செல்போன் களில் படம்பிடித்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர். மேலும், முதலையை பிடித்து அகற்றிட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அதனை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டனர். அதன் ஒருபகுதியாக ஆற்றில் முதலை காணப்பட்ட உறைகிணற்றின் அருகில் மிதவை கூண்டு வைத்தனர். ஆனாலும் முதலை அதில் சிக்கவில்லை. அந்த முதலையானது சில நாட்கள் தென்படுவதும், பின்னர் மாயமாவதுமாக இருந்து வருகிறது.</p><h2>வல்லுனர் குழு வருகை</h2><p>ஒவ்வொரு முறையும் வெவ்வேறு இடங்களில் தென்படுகிறது. மேலும், ஆற்றுப்பகுதியில் பல கி.மீ தூரம் மிக நீண்ட பகுதியாகவும், கரையோரங்களில் செடிகள் மற்றும் புதர்கள் மண்டிக்கிடப்பதால் அந்த வழியாக வனத்துறையினர் நடந்து சென்று முதலையை கண்காணிப்பது எளிதான செயலாக இல்லை.</p><p>இந்தநிலையில் முதலை குறித்த அச்சம் மக்கள் மத்தியில் இருந்து வருவதால், அதனை பிடித்து அகற்ற வேண்டியது கட்டாயமாகியுள்ளது. இதனால் வனத்துறை மற்றும் முதலை ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய வல்லுனர் குழு களத்தில் இறங்கியுள்ளது. இந்த குழு கடந்த 2 நாட்களுக்கு மேலாக ஆற்றுப்பகுதியில் படகிலும், நடந்து சென்றும் முதலையின் நடமாட்டத்தை கண்காணித்து அதனை தேடி வருகின்றனர். அதன்படி நேற்றும் இந்த குழுவினர் ஆற்றில் படகில் சென்றவாறு முதலையை தேடினர்.</p><h2>ஆற்றில் குளிக்க...</h2><p>இந்தநிலையில் முதலையை பிடிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து களியல் வனச்சரக அலுவலர் யோகஸ்வரன் கூறுகையில், முதலையை பிடித்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் வனத்துறை தீவிரமாக உள்ளது. தற்போது ஆற்றுப்பகுதி முழுவதும் கண்காணிப்பு மற்றும் தேடுதல் பணியை தீவிரப்படுத்தி வருகிறோம். மழை காரணமாக தற்போது ஆற்றில் தண்ணீர் அதிகமாக பாய்கிறது. வனத்துறையினர் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்.</p><p>குறிப்பாக ஆற்றின் கரையோரம் உள்ள படித்துறைகளில் மக்கள் குளிப்பதையும், தூண்டில் போட்டு மீன்பிடிப்பதையும் தவிர்த்தால் முதலையின் நடமாட்டத்தை உடனுக்குடன் கண்காணித்து அதனை பிடிக்க முடியும். என்றார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை காசிமேட்டில் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fishermens-strike-in-chennais-kasimedu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fishermens-strike-in-chennais-kasimedu#comments</comments><guid isPermaLink="false">48cb9d15-05ce-4226-8c6a-bbcdde0640e4</guid><pubDate>Mon, 10 Aug 2026 03:27:00 +0000</pubDate><atom:updated>2026-08-10T03:27:00.529Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,காசிமேடு,Kasimedu,Kasimedu Fish Market,Fishermen protest,மீனவர்கள் போராட்டம்,காசிமேடு மீனவர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/3q2591d8/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/3q2591d8/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த விசைபடகு உரிமையாளர்கள் கணேசன் மற்றும் கர்ணன் என்பவருக்கு சொந்தமான 2 விசைபடகுகளில், மீன்பிடி தடை காலம் நிறைவு பெற்ற கடந்த 15-ம் தேதி 19 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். காசிமேட்டில் இருந்து மீன் பிடிக்க சென்ற இவர்களை, ஆந்திர கடல்சார் (மரைன்) போலீசார் சிறைபிடித்துள்ளனர். மேலும் அவர்கள் சென்ற இரண்டு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.</p><p>பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்டுத் தரக்கோரி மீனவர்கள் காசிமேட்டிலும், சென்னை மீன்வளத்துறை அலுவலகத்திலும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், ஆந்திர அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள விசைப்படகுகளை மீட்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>இந்த நிலையில், ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் மீட்கக் கோரி சென்னை காசிமேட்டில் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுதால் ரூ.10 கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஓசூரில் பரபரப்பு சம்பவம்; பயணிக்கு உயிர் பயம் காட்டிய பஸ் டிரைவர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sensational-incident-in-hosur-bus-driver-shows-fear-for-passengers-life</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sensational-incident-in-hosur-bus-driver-shows-fear-for-passengers-life#comments</comments><guid isPermaLink="false">12806c74-628f-4ae8-9287-8c4c88b40885</guid><pubDate>Mon, 10 Aug 2026 03:21:04 +0000</pubDate><atom:updated>2026-08-10T03:21:04.473Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>bus,driver,Hosur,பஸ் டிரைவர்,Hosur - ஓசூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/h75zqh78/bus33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பயணிக்கு உயிர் பயம் காட்டிய பஸ் டிரைவர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/h75zqh78/bus33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஓசூர்,</p><p>ஒசூரில் இருந்து பாகலூர் வழியாக பேரிகைக்கு டவுன் பஸ் சென்றது.இதனை டிரைவர் ரமேஷ் ஓட்டிச்சென்றார். இதில் பயணித்த பயணி ஒருவர், பாகலூர் அருகே அச்சந்திரம் என்ற கிராமத்தில் இறங்க வேண்டிய நிலையில், டிரைவர் அங்கு நிறுத்தாமல் அதனை கடந்து தும்மனப்பள்ளி என்ற கிராமத்தில் பஸ்சை நிறுத்தி அந்த பயணியை இறக்கி விட்ட தாக கூறப்படுகிறது.</p><p>இதனால் ஆத்திரமடைந்த பயணி,<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D"> பஸ்சின் முன்புறமாக சென்று டிரைவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். </a>ஆனால், அதனை பொருட்படுத்தாத அந்த டிரைவர், பஸ்சின் முன்புறத்தில் அந்த பயணி நிற்பதை கூட கண்டுகொள்ளாமல் பஸ்சை இயக்கினார்.</p><h2>வீடியோ வைரல்</h2><p>இதனால் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்த அந்த பயணி உயிரை காப்பாற்றி கொள்ள பஸ் சின் முன்பக்க கண்ணாடிக்கு கீழே கைகளால் இறுகப்பிடித்து தொங்கியவாறே சென்றார். ஆனாலும் டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் இயக்கினார். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் சென்ற உடன் டிரைவர் பஸ்சை நிறுத்தியதாக தெரிகிறது.</p><p>இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து பஸ் டிரைவர் ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரை பணி இடைநீக்கம் செய்து போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சம்பவம் ஓசூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் காட்டு யானை உலா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-wanders-on-the-coonoor-mettupalayam-hill-road</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-wanders-on-the-coonoor-mettupalayam-hill-road#comments</comments><guid isPermaLink="false">dbb0ee1f-4b59-46f2-b89b-a2bf67adb90d</guid><pubDate>Mon, 10 Aug 2026 03:19:50 +0000</pubDate><atom:updated>2026-08-10T03:19:50.444Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>காட்டு யானை,wild elephant,குன்னூர்,Coonoor</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/yo0iy3pf/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/yo0iy3pf/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் பலாப்பழ சீசன் நிலவுகிறது. இதனால் பலாப்பழங்களை ருசிப்பதற்கு சமவெளி பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் முகாமிட்டு உள்ளன. இந்தநிலையில் குன்னூர் மரப்பாலம், பர்லியார் பகுதிகளில் சாலை நடுவே காட்டு யானை ஒன்று உலா வந்தது. அதோடு வாகனங்களை வழிமறித்தது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். </p><p>தகவல் அறிந்த வனத்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். குன்னூர் வனச்சரகர் வீரமணி தலைமையில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மலைப்பாதையில் உலா வரும் காட்டு யானை அருகே சென்று வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காட்டு யானை சாலையை கடந்து செல்லும் போது வாகனங்களை நிறுத்தி யானை கடந்து செல்ல வழிவகை செய்யவேண்டும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item></channel></rss>