<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 18 Sep 2026 09:57:07 +0000</lastBuildDate><item><title>முதல்வர் மருந்தகத்தில் இளம் பெண்ணுக்கு கத்திக்குத்து... இளைஞர் கைது!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-stabbed-at-chief-ministers-dispensary-youth-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-stabbed-at-chief-ministers-dispensary-youth-arrested#comments</comments><guid isPermaLink="false">f1cdcd75-d4c3-4aaa-931f-ea7b936d8258</guid><pubDate>Fri, 18 Sep 2026 09:56:52 +0000</pubDate><atom:updated>2026-09-18T09:56:52.006Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,கத்திக்குத்து,முதல்வர் மருந்தகம்,பண்ருட்டி,medical,knife attack</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/xvuss95r/14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/xvuss95r/14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பண்ருட்டி,</p><p>முதல்வர் மருந்தகத்தில் நுழைந்து இளம்பெண்ணை கத்தியால் குத்தி அங்கிருந்து தப்பிக்க முயன்ற இளைஞர் கைது செய்துள்ளனர்.</p><h2>இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து</h2><p>கடலூர் மாவட்டம் பண்ருட்டி காமராஜ் நகரில் உள்ள முதல்வர் மருந்தகத்தில் 23 வயதுடைய இளம் பெண் ஊழியர் பணியாற்றி வருகிறார். இன்று வழக்கம்போல் அவர் மருந்தகத்தில் பணியில் இருந்தபோது, அங்கு வந்த சந்தோஷ் என்ற இளைஞர் திடீரென அவரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.</p><p>இதில் பலத்த காயமடைந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, படுகாயமடைந்த இளம்பெண்ணை மீட்டு பண்ருட்டி அரசு<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88"> மருத்துவமனை</a>க்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><h2>குற்றவாளி கைது</h2><p>இதற்கிடையே, இளம்பெண்ணை கத்தியால் குத்திய பின்னர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற சந்தோஷை பொதுமக்கள் பிடித்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசாரி</a>டம் ஒப்படைத்தனர்.</p><p>இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு சந்தோஷ் வற்புறுத்தியதாகவும், அவர் திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரமடைந்து கத்தியால் குத்தியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p>பட்டப்பகலில் முதல்வர் மருந்தகத்துக்குள் புகுந்து இளம் பெண் ஊழியரை கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>“ஸ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்கும்” என மிரட்டல் விடுத்த நபர்களை தீர விசாரிக்க வேண்டும்! - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-individuals-who-issued-a-threat-that-a-bomb-would-explode-in-srivilliputhur-must-be-thoroughly-interrogated-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-individuals-who-issued-a-threat-that-a-bomb-would-explode-in-srivilliputhur-must-be-thoroughly-interrogated-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">08442500-00e0-4e81-ae76-6c6d685636a8</guid><pubDate>Fri, 18 Sep 2026 09:46:41 +0000</pubDate><atom:updated>2026-09-18T09:46:41.677Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,ஸ்ரீவில்லிபுத்தூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/ywzraznq/nainar.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/ywzraznq/nainar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக இளைஞர்களை தேச விரோதிகளாக மாற்ற ஏதேனும் பயங்கரவாத இயக்கம் பின்னிருந்து செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.</p><h2>குண்டு வெடிக்கும் என மிரட்டல்</h2><p>இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>“ஸ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்கும்” என பகிரங்கமாக மிரட்டல் விடுத்த நபர்களை தவெக அரசு தீர விசாரிக்க வேண்டும்! “பாரத் மாதா கி ஜெய் என்று சொன்னால் ஸ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்கும்" என இரு இளைஞர்கள் காவல் துறையினர் முன்பே மிரட்டல் விடும் காணொளியைக் கண்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.</p><p>சுதந்திர இந்தியாவில் "பாரத் மாதா கி ஜெய்" முழக்கத்தை கேட்டு கொதித்தெழும் அளவிற்கு இந்த இளைஞர்களின் மூளை எவ்வாறு சலவை செய்யப்பட்டது என மனம் குழம்புகிறது.</p><h2>தைரியம் கொடுத்தது யார்?</h2><p>சுற்றிலும் காவல்துறையினர் இருக்கும் போதே பயங்கரவாத தொனியில் மிரட்டும் அளவிற்கு இவர்களுக்கு தைரியம் கொடுத்தது யார்? தமிழக இளைஞர்களை தேச விரோதிகளாக மாற்ற ஏதேனும் பயங்கரவாத இயக்கம் பின்னிருந்து செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.</p><p>சம்பந்தப்பட்ட இரு இளைஞர்களை விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் அழைத்து சென்றுவிட்டு, பின்பு விடுதலை செய்துவிட்டதாக கூறப்படும் நிலையில், அந்த இளைஞர்களின் பின்னணியையும் அவர்களின் தீவிரவாத சிந்தனையையும் காவல்துறையினர் முறையாக தீர விசாரிக்க வேண்டும்.</p><p>மேலும், <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழகத்தின் </a>பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் நேராத வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசை தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பெண் அளித்த புகார்: பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் நீக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/womans-complaint-bjp-state-general-secretary-karuppu-muruganantham-removed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/womans-complaint-bjp-state-general-secretary-karuppu-muruganantham-removed#comments</comments><guid isPermaLink="false">69fdfb02-eb47-43a3-9e32-416973824136</guid><pubDate>Fri, 18 Sep 2026 09:37:28 +0000</pubDate><atom:updated>2026-09-18T09:37:28.546Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பா.ஜ.க,முருகானந்தம்,Muruganandam,நீக்கம்,removed</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/5nz5zmc2/66.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கருப்பு முருகானந்தம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/5nz5zmc2/66.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். </p><p>பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளராக கருப்பு முருகானந்தம் இருந்து வந்தார். இவர் மீது பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரை தொடர்ந்து, கட்சிப் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். </p><p>தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக அந்த பெண் அளித்த புகாரை தொடர்ந்து அவர் மீது கட்சித் தலைமை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. </p><h2>நீக்கம்</h2><p>இந்நிலையில் பாஜக மாநில பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">நீக்கம் </a>செய்யப்பட்டுள்ளார். கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தரவிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: முதல்-அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/expansion-of-the-kamarajar-breakfast-scheme-consultative-meeting-chaired-by-the-chief-minister</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/expansion-of-the-kamarajar-breakfast-scheme-consultative-meeting-chaired-by-the-chief-minister#comments</comments><guid isPermaLink="false">037413ce-4581-406b-9de9-837aa5975d27</guid><pubDate>Fri, 18 Sep 2026 09:34:15 +0000</pubDate><atom:updated>2026-09-18T09:34:15.233Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,காலை உணவுத் திட்டம்,breakfast scheme,ஆலோசனைக் கூட்டம்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,Chief Minister Vijay,காமராஜர் காலை உணவுத் திட்டம்,Kamarajar Breakfast Scheme</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/a3hmwci4/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/a3hmwci4/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தினை விரிவாக்கம் செய்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் 22.9.2026 அன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார். </p><h2>முதல்-அமைச்சர் தலைமையில் ஆலோசனை</h2><p>இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் இன்று (18.9.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத் தொடக்கம் மற்றும் செயல்படுத்துதல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.</p><p>தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தவும், பசியின்றி மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்து, கல்வியில் முழுமையான கவனம் செலுத்திடவும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையில் கடந்த 15.06.2026 அன்று நடைபெற்ற சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தின்போது, காலை உணவுத் திட்டத்தை 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு விரிவாக்கம் செய்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.</p><h2>5.30 லட்சம் மாணவர்கள் பயன்</h2><p>இத்திட்ட விரிவாக்கத்தின் மூலம், 15,454 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 15.30 லட்சம் மாணவ, மாணவியர்கள், கூடுதலாகப் பயன்பெறுவர். இதற்கென நடப்பு நிதியாண்டில் கூடுதலாக 217 கோடியே 63 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு ஒட்டுமொத்தமாக 724 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>இத்திட்டத்தை பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 447 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலமாக பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகத்தாலும், இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள பேரூராட்சிப் பகுதிகளிலுள்ள 2,150 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலமாக நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தாலும், ஊரகப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளை ஒட்டியுள்ள பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள 12,857 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலமாக சுய உதவிக் குழு உறுப்பினர்களால் அந்தந்தப் பள்ளியிலேயே காலை உணவு தயாரித்து வழங்கப்படும்.</p><p>மாணவர்களின் உடல் நலம், ஊட்டச்சத்து, பள்ளி வருகை, கற்றல் ஆகிய அம்சங்களை ஒருங்கிணைத்து, பள்ளிக் கல்வியின் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது.</p><h2>22ம் தேதி தொடக்கம்</h2><p>இதனை தமிழ்நாடு முதல்-அமைச்சர் 22.9.2026 அன்று சென்னையில் தொடங்கி வைக்கவுள்ளார். தொடக்கப்பள்ளி மாணவர்களைத் தொடர்ந்து நடுநிலைப்பள்ளி மாணவர்களையும் உள்ளடக்கும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம், மாணவர்களின் கல்விப் பயணத்திற்கும், சமூக முன்னேற்றத்திற்கும் பெரும் துணையாக அமையும்.</p><p>இக்கூட்டத்தில், <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழ்நாடு </a>முதல்-அமைச்சர், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தினை செயல்படுத்திடும் சமையல் கூடங்கள் மற்றும் உணவு பரிமாறும் இடங்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட வேண்டும் மற்றும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட வேண்டுமென்றும் உத்தரவிட்டார். மேலும், மாணாக்கர்கள் அனைவருக்கும் சூடான, சுவையான, உரிய அளவிலான, ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்கப்பட வேண்டுமென்றும், இத்திட்டத்திற்காக பணியாற்றும் அனைத்துத் துறை அலுவலர்களும் முறையாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை ஒருங்கிணைந்து செவ்வனே செய்திட வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>யுபிஐ கட்டணத்தை உடனே திரும்பப் பெறுங்கள்! - மத்திய நிதிமந்திரிக்கு ஜோதிமணி கடிதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/get-upi-charges-back-immediately-jyotimanis-letter-to-union-finance-minister</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/get-upi-charges-back-immediately-jyotimanis-letter-to-union-finance-minister#comments</comments><guid isPermaLink="false">53f11b33-647b-4f2b-99ba-e15fde67ff6c</guid><pubDate>Fri, 18 Sep 2026 09:17:48 +0000</pubDate><atom:updated>2026-09-18T09:17:48.588Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>UPI transactions,நிர்மலா சீதாராமன்,ஜோதிமணி எம்பி,Jyotimani,Union Minister Nirmala Sitaraman,யுபிஐ கட்டணம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/jplzh2bz/65.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/jplzh2bz/65.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம் வசூலிக்கப்படும் என்ற புதிய அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் எம்பி <a href="https://www.dailythanthi.com/topic/jothimani">ஜோதிமணி </a>கடிதம் எழுதி உள்ளார்.</p><p>வணிக ரீதியில் 2000 ரூபாய்க்கு மேல் யுபிஐ கட்டணம் செலுத்துபவர்களிடம் 0.4 சதவீதம் வசூலிக்கப்படும் எனவும், இந்த நடைமுறை அக்டோபர் 15-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. யுபிஐ வணிக பரிவர்த்தனைக்கு 0.4 சதவீதம் கட்டணம் மூலம் ரூ. 5000-க்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும். ரூ.75,000-க்கு மேல் யுபிஐ பரிவர்த்தனை செய்தால் ரூ.300 கட்டணம் வசூலிக்கப்படும்.</p><h2>யுபிஐ பணப் பரிவர்த்தனை</h2><p>ரெயில்வே, எரிபொருள் உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவுகளில் ரூ.2,000-க்கு மேல் ரூ.5 கட்டணம் விதிக்கப்படும். தனி நபர்களுக்கு இடையிலான யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு எந்தக் கட்டணமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரூ.2000-க்கு மேலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம் வசூலிக்கப்படும் என்ற புதிய அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடிதம் எழுதி உள்ளார். அதில்,</p><h2>கட்டணமற்ற சேவை</h2><p>அக்டோபர் 15 முதல் அமலுக்கு வரவுள்ள இந்த கட்டணம், நாடு முழுவதிலும் உள்ள சிறு வணிகர்கள், நெசவாளர்கள் மற்றும் சாதாரண மக்களைக் கடுமையாகப் பாதிக்கும். சிறு வணிகர்களின் நலனைக் காக்கவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும், யுபிஐ அனைவருக்கும் கட்டணமற்ற சேவையாகவே தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>‘புதிய சட்டமன்றம் தேவை என்பதுதான் பா.ம.க.வின் நிலைப்பாடு&apos; - சவுமியா அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-pmks-stance-is-that-a-new-legislative-assembly-is-needed-sowmya-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-pmks-stance-is-that-a-new-legislative-assembly-is-needed-sowmya-anbumani#comments</comments><guid isPermaLink="false">e4ed30fd-f64f-48c7-94a5-8b466a874510</guid><pubDate>Fri, 18 Sep 2026 09:13:39 +0000</pubDate><atom:updated>2026-09-18T09:13:39.663Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Sowmiya Anbumani,சவுமியா அன்புமணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/ns4ya4cs/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/ns4ya4cs/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பா.ம.க. எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“தமிழ்நாட்டிற்கு புதிய சட்டமன்றம் தேவை என்பதுதான் பா.ம.க.வின் நிலைப்பாடு. எல்லா வசதிகளுடன் கூடிய, அனைத்து மக்களும் பயனடையும் வகையிலான சட்டமன்றம் அமைக்கப்பட வேண்டும். அனைத்து அதிகாரிகளின் அலுவலகங்களும், அவர்களின் இல்லங்களும் அங்கு இருக்க வேண்டும். </p><p>அப்படிப்பட்ட ஒரு நிர்வாக வளாகமாக அல்லது ஒரு நிர்வாக நகரமாக அது இருந்தால் எல்லோரும் பயனடைவார்கள். சென்னைதான் தற்போது தலைமையிடமாக இருக்கிறது. புதிய சட்டமன்றம் சென்னைக்கு அருகில் கூட இருக்கலாம். அனைத்து மாவட்டங்களை சேர்ந்தவர்களும் வந்து செல்வார்கள் என்பதால் அதற்கேற்றவாறு திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>நீதி கேட்டு போராடியவர்கள் வலுக்கட்டாயமாக கைது - டிடிவி தினகரன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/forcible-arrest-of-those-protesting-for-justice-ttv-dhinakaran-condemns-the-move</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/forcible-arrest-of-those-protesting-for-justice-ttv-dhinakaran-condemns-the-move#comments</comments><guid isPermaLink="false">3e739e88-8873-49d5-ac63-6c701a28d952</guid><pubDate>Fri, 18 Sep 2026 08:58:48 +0000</pubDate><atom:updated>2026-09-18T08:58:48.863Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,AMMK,அமமுக</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/pfjq02sj/ttv.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/pfjq02sj/ttv.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மர்மமான முறையில் உயிரிழந்த மாணவர் தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கு நீதி கேட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பினரையும் காவல்துறையினர் கைது செய்து அடக்கி ஒடுக்கியுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.</p><h2>போராடியவர்கள் கைது</h2><p>இது தொடர்பாக, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>சிவகங்கை இரட்டைக் கொலை மற்றும் மதுரையில் மாணவர் மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு போராடியவர்கள் வலுக்கட்டாயமாக கைது - குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டிய காவல்துறை, நீதி கேட்டு போராடுபவர்களை கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.</p><p>சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே பழமலைநகர்–கொடிக்காடு கண்மாயில் அடையாளம் தெரியாத கும்பலால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட இரு இளைஞர்களின் உடல்களை வாங்க மறுத்துப் போராடிய உறவினர்களும், பொதுமக்களும் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>மர்ம முறையில் மாணவர் உயிரிழப்பு</h2><p>மேலும், மதுரை மாவட்டத்தில் கடந்த 7ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்த மாணவர் தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கு நீதி கேட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பினரையும் காவல்துறையினர் கைது செய்து அடக்கி ஒடுக்கியுள்ளனர்.</p><p>ஒட்டுமொத்த தமிழகத்தையும் பதற்றமடையச் செய்யும் அளவிற்கு நடைபெற்றுள்ள இந்தப் படுகொலைச் சம்பவங்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி, தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்வதோடு, குற்றங்கள் நடைபெறாமல் தடுத்து பொதுமக்களைக் காக்க வேண்டிய காவல்துறையோ, தனது முழு அதிகாரத்தையும் நீதி கேட்டு போராடும் மக்கள் மீது ஏவி கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.</p><h2>கொலைகள் அரங்கேறாத நாட்களே இல்லை</h2><p>தவெக ஆட்சி தமிழகத்தில் அமைந்ததிலிருந்தே கொலைச் சம்பவங்கள் அரங்கேறாத நாட்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, தலைநகர் சென்னையில் தொடங்கி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கும் படுகொலைச் சம்பவங்கள், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கை சந்தி சிரிக்கச் செய்வதோடு, பொதுமக்களின் உயிர்ப் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.</p><p>அதோடு, காவல்துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்-அமைச்சரோ, சட்டத்தை மதிக்காமல் கொடிய குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை இரும்புக் கரம் கொண்டு அடக்குவதற்கு மாறாக, அக்குற்றங்கள் நடைபெறுவதற்கான பின்னணிக் காரணங்களை எடுத்துரைப்பதும், அன்றாடம் நடைபெறும் குற்றங்களுக்கும் சட்டம்-ஒழுங்கிற்கும் சம்பந்தமே இல்லை என்பதுபோல பேசிக் கொண்டிருப்பதுமே, குற்றம் செய்வோருக்கு அறவே பயமில்லாத ஓர் அசாதாரண சூழலை ஏற்படுத்தியிருப்பதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.</p><h2>சிபிசிஐடி விசாரணை</h2><p>எனவே, சிவகங்கை இரட்டைக் கொலைச் சம்பவம் மற்றும் மதுரையில் மாணவர் மர்ம மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்தி, தீவிர விசாரணை மேற்கொண்டு, குற்றங்களில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழகத்தில் </a>தொடர்ந்து அரங்கேறி வரும் கொலைச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் காவல்துறையையும், தவெக அரசையும் வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இரட்டைமலை சீனிவாசன் நினைவு தினம் - அண்ணாமலை புகழஞ்சலி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dwettamalai-srinivasan-memorial-day-annamalai-tribute</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dwettamalai-srinivasan-memorial-day-annamalai-tribute#comments</comments><guid isPermaLink="false">379f9d6f-9e86-4882-9379-60656b1cd540</guid><pubDate>Fri, 18 Sep 2026 08:54:12 +0000</pubDate><atom:updated>2026-09-18T08:54:12.171Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Annamalai,அண்ணாமலை,இரட்டைமலை சீனிவாசன்,நினைவு தினம்,Irattamalai Srinivasan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/05hiadkl/64.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/05hiadkl/64.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இரட்டைமலை சீனிவாசனின் நினைவுநாளையொட்டி,  “வி தி லீடர்ஸ்” இயக்கத்தின் நிறுவனர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">அண்ணாமலை</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- </p><h2>இரட்டைமலை சீனிவாசன் நினைவு தினம்</h2><p>சமூக நீதிக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் தனது வாழ்நாளையே அர்ப்பணித்த ஐயா இரட்டைமலை சீனிவாசனின் நினைவு தினம் இன்று. </p><p>அரை நூற்றாண்டுக்கும் மேலாக, ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, சமூக முன்னேற்றம், சமத்துவம் ஆகியவற்றுக்காகப் போராடிய முன்னோடிகளில் ஒருவர். பஞ்சமி நிலங்களை மீட்கப் போராடியவர். தீண்டாமை ஒழிப்புக்காகவும், சமத்துவ சமுதாயம் அமையவும், தளர்வில்லாமல் உழைத்தவர். </p><p>சமுதாயச் சிந்தனையாளர், ஊடகவியலாளர், அரசியல் தலைவர் எனப் பன்முகம் கொண்ட தலைவராக விளங்கிய ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்களது புகழைப் போற்றி வணங்குகிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நகர்ப்புறங்களில் சொத்து வரியை மீண்டும் உயர்த்த கூடாது - அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/property-tax-should-not-be-raised-again-in-urban-areas-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/property-tax-should-not-be-raised-again-in-urban-areas-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">17e42e7a-7d88-45c3-8a7f-e18e9e94a71d</guid><pubDate>Fri, 18 Sep 2026 08:46:17 +0000</pubDate><atom:updated>2026-09-18T08:46:17.757Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,சொத்து வரி,Property Tax,விலக்கு,Raised</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/4vl1n683/anbumani.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/4vl1n683/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நகர்ப்புறங்களில் சொத்து வரியை மீண்டும்,மீண்டும் உயர்த்த கூடாது:  மாநில நிதி ஆணைய பரிந்துரையை ஏற்க கூடாது என்று பாமக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/anbumani-ramadoss">அன்புமணி ராமதாஸ்</a> தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p> <h2>சொத்துவரி உயர்வு</h2><p>உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலையை மேம்படுத்துவதற்காக  <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF">சொத்துவரியை</a> உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை அரசுக்கு அளிக்கவுள்ளதாக ஏழாம் மாநில நிதி ஆணையத்தின் தலைவர் அலாவுதீன் தெரிவித்திருக்கிறார். உள்ளாட்சிகளின் நிதிநிலையை மேம்படுத்த ஏராளமான வழிமுறைகள் இருக்கும் போது, மீண்டும், மீண்டும் மக்களை பாதிக்கும் சொத்துவரி உயர்வையே அனைத்து அரசுகளும் கையில் எடுப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.</p><h2>நிதிநிலை</h2><p>சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு  செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் நிதிநிலையை மேம்படுத்துவதற்காக சொத்துவரி உயர்வு, வரி அல்லாத வரிவாயை அதிகரித்தல் உள்ளிட்ட மூன்று அம்சங்களை அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளதாக தெரிவித்தார். </p><p>அவருடன் இருந்த நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி , ''உள்ளாட்சி அமைப்புகளின் சொந்த வருவாயை அதிகரிக்க, சொத்து வரி உள்ளிட்டவைகளை அதிகரிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.</p><h2>அடிப்படை வசதிகள்</h2><p>உள்ளாட்சி அமைப்புகள் நிதி தற்சார்பு பெற்றால் மட்டுமே மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர முடியும்; அதனால் உள்ளாட்சி அமைப்புகளின் வருவாயை பெருக்க வேண்டும் என்பதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாற்றுக்கருத்து இல்லை.  ஆனால், அதற்காக மீண்டும், மீண்டும் சொத்துவரியை உயர்த்தி அதன் மூலம் மக்களைச்சுரண்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.</p> <h2>ஏப்ரல் மாதம்</h2><p>முந்தைய திமுக ஆட்சியில் 2022-ஆம் ஆண்டில் சென்னை உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் 150% வரை சொத்துவரி உயர்த்தப்பட்டது. அதன் சுமையையே மக்களால் தாங்க முடியாத நிலையில், ஆண்டுக்கு ஒருமுறை 6% சொத்து வரி உயர்த்தும் முறை கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. சட்டப்பேரவைத் தேர்தலின் போது மக்களின் அதிருப்தியை தவிர்ப்பதற்காக கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் சொத்துவரி உயர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.</p><h2> நிலைமை மாறவில்லை</h2><p>தவெக ஆட்சிக்கு வந்த பிறகும் நிலைமை மாறவில்லை. சென்னையில் சில மாதங்களுக்கு முன் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் 10 மடங்கு வரை  சொத்துவரி உயர்த்தப்பட்டது. அதற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து அந்த முடிவை தவெக அரசு கைவிட்டது. இத்தகைய சூழலில் மீண்டும் சொத்துவரி உயர்த்தப்படுவதை  மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது.</p> <h2>நிதிப்பகிர்வு</h2><p>மாநில அரசின் வருவாயில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பங்கை முறையாக பகிர்ந்தளித்தாலே  அவை சிறப்பாக செயல்படுவதற்கு தேவையான நிதி கிடைக்கும். ஆனால், மாநில அரசுகள் அதை செய்ய முன்வருவதில்லை. மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வில் மத்திய அரசு எத்தகைய மேலாதிக்க அணுகுமுறையை கடைபிடிக்கிறதோ, அதே அணுகுமுறையைத் தான் உள்ளாட்சிகளுக்கான நிதிப்பகிர்வில் மாநில  அரசும்  கடைபிடிக்கிறது.</p> <h2>அரசியல் ஆதாயம்</h2><p>உள்ளாட்சிகளுக்கு வருவாய் கிடைப்பதற்காக உள்ள பல வரிகளை அரசியல் ஆதாயம் தேடும் நோக்குடன் ரத்து செய்யும் மாநில அரசு,  அதனால் ஏற்படும் இழப்புகளை சொத்துவரி உயர்வு மூலம் ஈடுகட்ட விரும்புவது நியாயமல்ல.</p><h2>வருவாய் ஆதாரங்கள்</h2><p>எனவே, உள்ளாட்சிகளின் வருவாயை அதிகரிப்பதற்காக நியாயமான நிதிப்பகிர்வு, வரி அல்லாத வருவாய் ஆதாரங்களை பெருக்குவது உள்ளிட்ட பரிந்துரைகளை  மட்டுமே ஏழாம் மாநில நிதி ஆணையம் பரிந்துரைக்க வேண்டும். ஒருவேளை சொத்துவரியை உயர்த்த வேண்டும் என்று மாநில நிதி ஆணையம் பரிந்துரைத்தாலும் அதை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளக் கூடாது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கடைவீதியில் மதுபோதையில் அரிவாளுடன் ரகளை: 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-arrested-for-drunken-brawl-with-sickles-on-shopping-street</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-arrested-for-drunken-brawl-with-sickles-on-shopping-street#comments</comments><guid isPermaLink="false">e54c4964-f0a8-4574-8796-0cffeb67b8c2</guid><pubDate>Fri, 18 Sep 2026 08:27:58 +0000</pubDate><atom:updated>2026-09-18T08:27:58.618Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>drunkenness,Thoothukudi,தூத்துக்குடி,2 arrested,2 பேர் கைது,Riot,Sickle,அரிவாள்,மதுபோதை,ரகளை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/wmokkn3i/2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 2 பேர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/wmokkn3i/2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், கயத்தாறு பகுதியில் கடைவீதியில் மதுபோதையில் கையில் அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்டுப் பொதுமக்களை அச்சுறுத்திய டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>ஓட்டுநர், தொழிலாளி</h2><p>தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள காப்புலிங்கம்பட்டி கீழத்தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் சமுத்திரம் (வயது 40), தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இதே ஊரின் வடக்கு தெருவைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் மகேஷ்(33), கூலித்தொழிலாளி. </p><h2>கடைவீதியில் அரிவாளுடன் ரகளை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">நண்பர்களான</a> இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மாலையில் அதிக மதுபோதையில் கிராமத்தில் உள்ள கடைவீதிக்குச் சென்றுள்ளனர். அப்போது 2 பேரும் கைகளில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D">அரிவாள்</a>களை வைத்துக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88">ரகளை</a>யில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அச்சமடைந்த கடைவீதியில் இருந்த பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவியது. </p><h2>2 பேர் கைது</h2><p>இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக கயத்தாறு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சூரியா, சப்-இன்ஸ்பகெ்டர் காந்திராஜன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கே பொதுமக்களை மிரட்டி ரகளையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமுத்திரம், மகேஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் சாமர்த்தியமாக மடக்கிப் பிடித்தனர். மேலும் அவர்களிடமிருந்த அரிவாள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. </p><h2>சிறையில் அடைப்பு</h2><p>இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 2 பேரையும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்து கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் ஆஜர்படுத்தினர். நீதிபதியின் உத்தரவின் பேரில் 2 பேரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>ஊழல் வழக்கில் கைதான நிலையில் அனுதாபம் தேட முயற்சிப்பதா? - ஐகோர்ட்டு கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/attempting-to-garner-sympathy-after-being-arrested-in-a-corruption-case-high-court-questions</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/attempting-to-garner-sympathy-after-being-arrested-in-a-corruption-case-high-court-questions#comments</comments><guid isPermaLink="false">c627829e-caf7-45b1-a2ec-c6ddd6675eab</guid><pubDate>Fri, 18 Sep 2026 08:26:39 +0000</pubDate><atom:updated>2026-09-18T08:26:39.552Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை ஐகோர்ட்டு,Chennai High Court,Corruption case,ஊழல் வழக்கு,டாஸ்மாக் வழக்கு,TASMAC Case</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/1v8mibbu/CHENNAI-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/1v8mibbu/CHENNAI-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமங்கள் வழங்கியது, மதுபானங்களை கடைகளுக்குக் கொண்டுச் செல்ல போக்குவரத்து ஒப்பந்தப்புள்ளி வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.</p><p>இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் என்பவர் ஜாமின் கோரி 2-வது முறையாக சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், மனுதாரரை ஏற்கெனவே, 4 நாள்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர், ஆனால், எதுவும் பறிமுதல் செய்யவில்லை. எனவே, ஜாமின் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.</p><p>அப்போது குறுக்கிட்ட நீதிபதி, பேரம் பேசி எம்.எல்.ஏ.-வை விலைக்கு வாங்க முயற்சித்த வழக்கில் மனுதாரர் சிறையில் இருந்து வருகிறார். ஊழல் வழக்கில் கைதான நிலையில் அனுதாபம் தேட முயற்சிப்பதா? என கேள்வி எழுப்பினார். இதையடுத்து, காவல்துறை தரப்பில் இந்த மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என கேட்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, காவல்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 25-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.</p>]]></content:encoded></item><item><title>
&apos;வி த லீடர்ஸ்&apos; இயக்கத்தின் அமைப்புப் பொதுச்செயலாளராக கரு.நாகராஜன் நியமனம் - அண்ணாமலை அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/karu-nagarajan-appointed-as-general-secretary-of-the-we-the-leaders-movement-annamalai-announces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/karu-nagarajan-appointed-as-general-secretary-of-the-we-the-leaders-movement-annamalai-announces#comments</comments><guid isPermaLink="false">1b96fb28-59a9-4d6f-b7f1-fcfb64d7673c</guid><pubDate>Fri, 18 Sep 2026 08:11:32 +0000</pubDate><atom:updated>2026-09-18T08:11:32.730Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Annamalai,அண்ணாமலை,கரு.நாகராஜன்,politics-அரசியல்,karu nagarajan,வி த லீடர்ஸ்,we the leaders</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/v1ory84d/12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/v1ory84d/12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>நமது அமைப்பின் வளர்ச்சியையும், அமைப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதையும் கருத்தில் கொண்டு, கரு நாகராஜன் அவர்களை, 'வி த லீடர்ஸ்'  இயக்கத்தின் அமைப்புப் பொதுச்செயலாளராக நியமிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். என 'வி த லீடர்ஸ்'  அமைப்பின் தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார். </p> <h2>'வி த லீடர்ஸ்' </h2><p>பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை, ஜூன் 5 ஆம் தேதி அக்கட்சியிலிருந்து விலகி 'வி த லீடர்ஸ்' என்ற அரசியல் இயக்கத்தை தொடங்கினார். முதலில் இயக்கமாக தொடங்கி, விரைவில் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படும் என்றும், வருகின்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார்.</p><p>இதற்கிடையில், 'வி த லீடர்ஸ்' இயக்கத்தின் அமைப்புப் பொதுச்செயலாளராக கரு. நாகராஜனை நியமிப்பதில் பெருமகிழ்ச்சி அடைவதாக வி தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார். </p>  <h2>அமைப்புப் பொதுச்செயலாளராக கரு.நாகராஜன் நியமனம்</h2><p><strong>அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,</strong> </p><p>அன்புள்ள நமது 'வி த லீடர்ஸ்'  (We The Leaders) அமைப்பின் தலைவர்களுக்கு வணக்கம்.</p><p>நமது அமைப்பின் வளர்ச்சியையும், அமைப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதையும் கருத்தில் கொண்டு, கரு நாகராஜன் அவர்களை, 'வி த லீடர்ஸ்'  இயக்கத்தின் அமைப்புப் பொதுச்செயலாளராக நியமிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். </p><p>நமது அமைப்பின் கொள்கைகள் மற்றும் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, மாநிலம் முழுவதும் அமைப்பு ரீதியான செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல், நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்துதல், நிர்வாகிகளுக்கும் களப்பணியாளர்களுக்கும் இடையே சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை அமைப்புப் பொதுச்செயலாளர் என்ற முறையில் கரு. நாகராஜன் அவர்கள் முன்னெடுத்துச் செல்வார்.</p><p>அவரது அரசியல் அனுபவம், அர்ப்பணிப்பு மற்றும் தலைமைப் பண்புகளின் மூலம், நமது 'வி த லீடர்ஸ்' அமைப்பை மேலும் வலுப்படுத்தி, மக்கள் மத்தியில் நமது அமைப்பின் செயல்பாடுகளை விரிவாகக் கொண்டு செல்வார் என்ற நம்பிக்கை உள்ளது. அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>நமது 'வி த லீடர்ஸ்' அமைப்பின் கட்டமைப்பை ஒவ்வொரு நிலையிலும் வலுப்படுத்தவும், நமது நோக்கங்களையும் செயல்பாடுகளையும் மக்கள் மத்தியில் கொண்டு பொதுச்செயலாளராக சேர்க்கவும், அமைப்புப் நியமிக்கப்பட்டுள்ள  கரு. நாகராஜன் அவர்களுக்கு, நமது அமைப்பின் அனைத்து தலைவர்கள், நிர்வாகிகள் முழுமையான மற்றும் களப்பணியாளர்களும், ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">நமது அமைப்பின் வளர்ச்சியையும், அமைப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதையும் கருத்தில் கொண்டு, திரு. கரு. நாகராஜன் அவர்களை, We The Leaders இயக்கத்தின் அமைப்புப் பொதுச்செயலாளராக நியமிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.<br> <br>நமது We The Leaders அமைப்பின் கட்டமைப்பை ஒவ்வொரு நிலையிலும்… <a href="https://t.co/C5D2Qbov3C">pic.twitter.com/C5D2Qbov3C</a></p>&mdash; K.Annamalai (@annamalai_k) <a href="https://x.com/annamalai_k/status/2100853602566951140?ref_src=twsrc%5Etfw">September 18, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>இரட்டைமலை சீனிவாசனை எந்நாளும் நினைவில் வைத்து போற்றிடுவோம்: டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-always-remember-and-honor-rettaimalai-srinivasan-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-always-remember-and-honor-rettaimalai-srinivasan-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">bedb26fe-48c5-46ac-8a97-e0ee838bb970</guid><pubDate>Fri, 18 Sep 2026 08:00:29 +0000</pubDate><atom:updated>2026-09-18T08:00:29.374Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,இரட்டைமலை சீனிவாசன்,Rettaimalai Srinivasan</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/fbkon22t/15.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/fbkon22t/15.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இரட்டைமலை சீனிவாசனின் நினைவுநாளையொட்டி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார உரிமைகளுக்காக குரல் எழுப்பியவரும், சமத்துவமும் சமூகநீதியும் நிலைபெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை இலக்காகக் கொண்டு போராடியவருமான இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு தினம் இன்று.</p> <p>தனது எழுத்து, பேச்சு மற்றும் சமூகப் பணிகளின் மூலமாகச் சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகத் தொடர்ந்து களமாடி, தன் வாழ்நாள் முழுவதையும் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகவே அர்ப்பணித்த இரட்டைமலை சீனிவாசன் அவர்களை எந்நாளும் நினைவில் வைத்து போற்றிடுவோம்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>பல பேரை காலி செய்தவர்... கே.என்.நேரு மீது பல்வேறு குற்றசாட்டுகளை அடுக்கிய துரை வைகோ</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/durai-vaiko-leveled-various-allegations-against-kn-nehru</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/durai-vaiko-leveled-various-allegations-against-kn-nehru#comments</comments><guid isPermaLink="false">a3d7aba3-7d12-417a-adb2-1ea9f461d996</guid><pubDate>Fri, 18 Sep 2026 07:54:36 +0000</pubDate><atom:updated>2026-09-18T07:54:36.724Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Durai Vaiko,துரை வைகோ,கே.என்.நேரு,KN Nehru</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/plft59rm/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/plft59rm/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>தி.மு.க. முதன்மை செயலாளரும், முன் னாள் அமைச்சருமான கே.என்.நேரு எம்.எல்.ஏ. திருச்சியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தி.மு.க. பற்றி துரை வைகோ எம்.பி. கடுமையாக விமர்சனம் செய்து வருவதாக கூறுகிறார்கள். அவர் என்ன பேசினார் என எனக்கு தெரியாது. ஆனால் அவர் பிறப்பதற்கு முன் நடந்த மிசா பற்றி எல்லாம் பேசுகிறார். </p><p>தலைவர் மு.க.ஸ்டாலின் பற்றி பேசுவதற்கு துரை வைகோவிற்கு உரிமை கிடையாது. 'எனது தந்தை கோபக்காரர். கட்சிக்கு வளர்ச்சி இல்லை. என்னால் கட்சியை நடத்த முடியாது. நான் தி.மு.க.விற்கு வந்து விடுகிறேன்' என என்னிடம் கூறியவர் தான் துரை வைகோ. அவர் சிறுபிள்ளையாக இருந்துகொண்டு அதிகமாக பேசுவதற்கு எல்லாம் நான் பதில் அளிக்க முடியாது என்றார்.</p><p><strong>இந்த நிலையில், கே.என்.நேருவின் விமர்சனத்துக்கு துரை வைகோ பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-</strong></p><p>நான் திமுகவில் இணைய விரும்பியதாக கே.என்.நேரு கூறுவது கட்டுக்கதை. எனக்கு தனிப்பட்ட அரசியல் விருப்பமோ, வேட்கையோ கிடையாது. கலைஞர் காலத்துடன் திமுக முடிந்துவிட்டது என கே.என்.நேரு என்னிடம் தெரிவித்தார். மு.க.ஸ்டாலின் அரசியல் தெரியாதவர் என்று கூறியவர்தான் கே.என்.நேரு. திமுகவில் பல பேரை காலி செய்தவர் கே.என்.நேரு. அன்பில் மகேஸ் தோல்வியடைய காரணமே கே.என்.நேருதான். திருச்சியைச் சேர்ந்த திமுகவின் முக்கியப் புள்ளி உள்ளிட்ட உடன் இருப்பவர்களையே காலி செய்துள்ளார் நேரு.</p><p>உதயநிதியை வைத்து அரசியல் செய்ய முடியாது என சொன்னவர் கே.என்.நேரு. கூட்டணியில் இருந்தபோதே திமுகவினர் என்னை பற்றி அவதூறாக பேசினர். சிறுமைப்படுத்துவது, பண்ணையார் அரசியல் செய்வது என்னிடம் நடக்காது. தனி மனித தாக்குதலுக்கு பயப்படக்கூடிய ஆள் நான் இல்லை, யாரும் என்னை மிரட்ட முடியாது. எனக்கும் நிறைய விஷயங்கள் தெரியும், அனைத்தையும் பேச வேண்டியது இருக்கும்.</p><p>நான் அரசியலுக்கு வந்தது விபத்துதான். நாடாளுமன்ற தேர்தலில் என்னை வேட்பாளராக அறிவித்த உடனே நீங்கள் சூரியன் சின்னத்தில் தான் நிற்க வேண்டும் என அழுத்தம் கொடுத்தார்கள். வேறு சின்னத்தில் நின்றால் திமுகவினரே உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க மாட்டார்கள் என்றார்கள். அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியின் மேடையிலேயே எனக்கு அழுத்தம் கொடுத்தார்கள். செத்தாலும் உதயசூரியன் சின்னத்தில் நிற்கமாட்டேன் என்று அன்றே கூறிவிட்டேன். என் தந்தை விருப்பத்திற்காக அரசியலுக்கு வந்தேன். </p><p>சிறுமைப்படுத்துவது, பண்ணையாளர் அரசியல் செய்வது என்னிடம் நடக்காது. என்னை மதித்தால் நான் மதிப்பேன். பதிலுக்கு ஏதாவது செய்தார்கள் என்றால், முழு நேரம் இதற்காக நான் ஒதுக்கி ஏதாவது செய்வேன். மிசா காலத்தில் நான் பிறக்கவே இல்லை என்று தவறான கருத்தை சொல்கிறார். அப்போது எனக்கு 3 வயது, ப்ளே ஸ்கூல் சென்று கொண்டிருந்தேன். அந்த வரலாறு கூட அவருக்கு தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மின்கம்பியில் உரசிய வைக்கோல் லாரி... தீயில் சிக்கி 17 வயது சிறுவன் பலி!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-17-year-old-boy-died-after-being-caught-in-a-fire-after-a-hay-truck-collided-with-a-power-line</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-17-year-old-boy-died-after-being-caught-in-a-fire-after-a-hay-truck-collided-with-a-power-line#comments</comments><guid isPermaLink="false">bcc48b40-479c-429d-980a-cc7b1eae9368</guid><pubDate>Fri, 18 Sep 2026 07:50:17 +0000</pubDate><atom:updated>2026-09-18T07:50:17.480Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திண்டுக்கல்,Fire,லாரி,தீ,Dindugal,சிறுவன் உயிரிழப்பு,boy death</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/hel340tv/10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தீயில் சிக்கி சிறுவன் பலி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/hel340tv/10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><p>மின்சாரக் கம்பியில் உரசிய வைக்கோல் லாரியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில், 17 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.</p><h2>வைக்கோல் லாரியில் தீ</h2><p>திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள மார்க்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர் தஞ்சை மாவட்டத்தில் இருந்து வைக்கோல் ஏற்றி வந்து, சாணார்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்து வருகிறார். இன்று இவருடன் இவரது மகன் பெரிய கருப்பன் (வயது 17) வைக்கோல் விற்பனைக்கு சென்றுள்ளான். இருவரும் மார்க்கம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் வைக்கோல் விற்பனை செய்துகொண்டிருந்தனர். அப்போது லாரியின் மேல் போடப்பட்டிருந்த தார்ப்பாயை அகற்றுவதற்காக பெரிய கருப்பன் லாரியின் மீது சென்றுள்ளான்.</p><h2>சிறுவன் உடல் கருகி பலி</h2><p>அப்போது லாரியின் மீது சென்ற மின்சாரக் கம்பி, லாரியில் இருந்த வைக்கோல் மீது உரசியுள்ளது. இதையடுத்து வைக்கோல் திடீரென தீப்பற்றி, லாரி முழுவதும் தீ மளமளவென பரவியது. தார்ப்பாயை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பெரிய கருப்பன் தீயில் சிக்கி, உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.</p><p>தீயை அணைக்க அப்பகுதி பொதுமக்கள் முயற்சி செய்தும், தீ கட்டுக்குள் வரவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு தீ கட்டுக்குள் வந்தது. பின்னர், உயிரிழந்த சிறுவனின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு <a href="https://www.dailythanthi.com/topic/மருத்துவமனை">மருத்துவமனை</a>க்கு அனுப்பி வைத்தனர்.</p><p>விசாரணை</p><p>இந்த தீ விபத்து குறித்து சாணார்பட்டி <a href="https://www.dailythanthi.com/topic/போலீசார்">போலீசார்</a> வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் மதுபாட்டிலால் தாக்கி கொத்தனார் கொடூர கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bricklayer-brutally-murdered-with-a-liquor-bottle-in-thoothukudi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bricklayer-brutally-murdered-with-a-liquor-bottle-in-thoothukudi#comments</comments><guid isPermaLink="false">7110b57c-a179-47a0-8471-17338dc182a1</guid><pubDate>Fri, 18 Sep 2026 07:49:45 +0000</pubDate><atom:updated>2026-09-18T07:49:45.169Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தாக்குதல்,Thoothukudi,தூத்துக்குடி,murder,கொலை,attack,police investigation,alcohol,மதுபாட்டில்,Bottle,கொத்தனார்,போலீசார் விசாரணை,Bricklayer</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/hp6f2i4y/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கொத்தனார் கொலை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/hp6f2i4y/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> அருகே புதுக்கோட்டை பகுதியில் நண்பர்களுடன் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில், கொத்தனார் மதுபாட்டிலால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார். </p><h2>கொத்தனாரை மதுபாட்டிலால் தாக்கிய 3 பேர்</h2><p>தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை கே.சுப்பிரமணியபுரம் தெற்கு தெருவை சேர்ந்த ராமமூர்த்தி மகன் கணேஷ்குமார் (வயது 28), <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">கொத்தனாராக</a> வேலை செய்து வந்தார். இவர் கடந்த 14-ம் தேதி இரவு தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து புதுக்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியின் பின்புறம் அமர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே, ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து கணேஷ்குமாரை மதுபாட்டிலால் தலையில் சரமாரியாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். </p><h2>கொத்தனார் உயிரிழப்பு</h2><p>இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த கணேஷ்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். </p><h2>2 பேரை பிடித்து போலீசார் விசாரணை</h2><p>இச்சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">கொலை</a> வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், சந்தேகத்தின்பேரில் அதே பகுதியைச் சேர்ந்த 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை வலைவீசி தேடி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>திருச்சியில் சோகம்: பைக்கில் சென்ற புதுமாப்பிள்ளை மின்னல் தாக்கி பலி

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/trichiyil-sogam-paikkil-sendra-puthumaappillai-minnal-thaakki-pali</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/trichiyil-sogam-paikkil-sendra-puthumaappillai-minnal-thaakki-pali#comments</comments><guid isPermaLink="false">49d07168-6fee-4652-ad05-23228fe440f4</guid><pubDate>Fri, 18 Sep 2026 07:34:27 +0000</pubDate><atom:updated>2026-09-18T07:34:27.731Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்சி,Trichy,புதுமாப்பிள்ளை,மின்னல்,lightning</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/w8vre1mb/0.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ AI Photo]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/w8vre1mb/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>திருச்சியில் பைக்கில் சென்ற புதுமாப்பிள்ளை மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p> <p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">திருச்சி </a>மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அய்யம்பாளையத்தை சேர்ந்த இளைஞர் கார்த்திக் (வயது 32). இவருக்கு கடந்த 7 மாதங்களுக்குமுன் திருமணம் நடைபெற்றது.</p> <h2>மின்னல் தாக்கி புதுமாப்பிள்ளை பலி</h2><p>இந்நிலையில், புதுமாப்பிள்ளை கார்த்திக் இன்று திருச்சி மண்ணச்சநல்லூர் புறவழிச்சாலையில் பைக்கில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். புறவழிச்சாலையில் பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்துகொண்டிருந்தது. அப்போது, பைக்கில் சென்ற கார்த்திக்கை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D">மின்னல் </a>தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே கார்த்திக் துடிதுடித்து உயிரிழந்தார்.</p> <p>இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், விரைந்து சென்று கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>திருமணம் முடிந்த 7 மாதங்களே ஆன புதுமாப்பிள்ளை கார்த்திக் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அய்யம்பாளையம் கிராமத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தென்காசி செல்லும் பயணிகள் கவனத்திற்கு.. திருவனந்தபுரம் - தாம்பரம் சிறப்பு ரெயில் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/attention-passengers-traveling-to-tenkasi-thiruvananthapuramtambaram-special-train-extended-by-another-month</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/attention-passengers-traveling-to-tenkasi-thiruvananthapuramtambaram-special-train-extended-by-another-month#comments</comments><guid isPermaLink="false">26d937df-4865-40df-ab9f-9583592b43cf</guid><pubDate>Fri, 18 Sep 2026 07:32:56 +0000</pubDate><atom:updated>2026-09-18T07:32:56.611Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,Tambaram,தாம்பரம்,தெற்கு ரெயில்வே,Southern Railway,Special train,Tenkasi,தென்காசி,Thiruvananthapuram,திருவனந்தபுரம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/p587a5ef/kkler.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/p587a5ef/kkler.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>திருவனந்தபுரம் சென்டிரல் - தாம்பரம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. </p><h2>சிறப்பு ரெயில்</h2><p>இதுதொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/topic/southern-railway">தெற்கு ரெயில்வே</a> வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p>திருவனந்தபுரம் சென்டிரலில் இருந்து தாம்பரத்திற்கு வாரந்தோறும் புதன்கிழமை இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06110) செப்டம்பர் 23-ந் தேதி முதல் அக்டோபர் 28-ந் தேதி வரை மேலும் 6 சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. </p><h2>முன்பதிவு</h2><p>இதேபோல், தாம்பரத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்டிரலுக்கு வாரந்தோறும் வியாழக்கிழமை இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06109) செப்டம்பர் 24-ந் தேதி முதல் அக்டோபர் 29-ந் தேதி வரை மேலும் 6 சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது. </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p><h2>நின்று செல்லும் ரெயில் நிலையங்கள்</h2><p>கேரள மாநிலம் திருவனந்தபுரம் சென்டிரல் - தாம்பரம் இடையேயான இந்த சிறப்பு ரெயில், தமிழ்நாட்டில் செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, கொடை ரோடு, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். </p>]]></content:encoded></item><item><title>மதுரை: மாணவர் மரணத்தில் நீதி கேட்டு போராடியவர்கள் குண்டுக்கட்டாக கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-protesters-demanding-justice-for-a-students-death-were-forcibly-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-protesters-demanding-justice-for-a-students-death-were-forcibly-arrested#comments</comments><guid isPermaLink="false">6e705698-5cba-4c5a-ab78-5c0803574eb1</guid><pubDate>Fri, 18 Sep 2026 07:24:50 +0000</pubDate><atom:updated>2026-09-18T07:24:50.865Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,school student,பள்ளி மாணவர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/nl5v2ik5/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/nl5v2ik5/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரை ஆனையூர் அருகே உள்ள வள்ளலார் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி. காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி யோகலட்சுமி. இவர்களுடைய மகன் தமிழ்ச்செல்வன் (வயது 16). இவன் ஆரப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தான். கடந்த 6-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கு விடுமுறை என்பதால், நண்பர்களுடன் சேர்ந்து வீட்டை விட்டு வெளியே சென்றான். நீண்ட நேரமாகியும் அவன் வீடு திரும்பவில்லை. </p><p>இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில், அவரது நண்பர்கள் வீட்டில் என பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதைதொடர்ந்து, கூடல்புதூர் போலீஸ் நிலையத்தில் யோக லட்சுமி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்ப திவு செய்து தேடிவந்தனர்.</p><p>இதற்கிடையில், கூடல்நகர் பகுதியில் அப்துல்கலாம் நகரில் உள்ள கண்மாய் தண்ணீரில் மாணவன் தமிழ்ச்செல்வன் பிணமாக மிதந்தது தெரியவந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மாணவனின் உடலை மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.</p><p>முதற்கட்ட விசாரணை குறித்து போலீ சார் கூறும்போது, நண்பர்களுடன் சேர்ந்து குளிக்கச்சென்ற போது, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம். வீட்டுக்கு தெரிந்தால் சிக்கிக்கொள்வோம் என கருதி அவருடன் சென்ற நண்பர்கள் இதை மறைத்து இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், மாணவனை யாராவது கடத்தி கொலை செய்தார்களா என்ற கோணத்திலும் விசாரித்து வரு கிேறாம் என போலீசார் தெரிவித்தனர்.</p><p>பின்னர் மாணவனின் குடும்பத்தினர், உறவினர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரி பிணவறை முன்பு திரண்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தமிழ்ச்செல்வன் வேறொரு சமூகத்தை சேர்ந்த மாணவியை காதலிப்பதாக கூறி பழகியதாக தெரிகிறது. அந்த மாணவியின் தந்தை தமிழ்ச்செல்வனை கண்டித்து மிரட்டி உள்ளார்.</p><p>ஒருமுறை நண்பர்களுடன் சென்ற போது, அவர் தமிழ்ச்செல்வன் கையை பிடித்து திருகி தாக்கியுள்ளார். அந்த நபர் மீது எங்களுக்கு சந்தேகம் உள்ளது. அவரது மகளுடன் பழகிய ஆத்திரத்தில் தமிழ்ச்செல்வனை கடத்திக் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம், அவரிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் கொடுத்துள்ளோம். மேலும், சம்பவத்தன்று தமிழ்ச்செல்வனு டன் இருந்த நண்பர்களையும் விசாரிக்க வேண்டும்.</p><p>போலீஸ் முறையாக விசாரிக்கவில்லை என்றால், உடலை வாங்கமாட் டோம். பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்கவேண்டும் என ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் வலியுறுத்தி உள்ளோம்” என்றனர். மாணவியுடன் பழகியதால் இந்த சம்பவம் நடந்ததா? என்பது பற்றியும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருவதாக தெரிவித்தனர்.</p><p>இந்த நிலையில், மாணவர் தமிழ்ச்செல்வன் மரணத்தில் நீதி கேட்டு SFI, DYFI, AIDWA, TNUF அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். சந்தேகத்திற்குரிய மரணம் எனப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை, கொலை வழக்காக மாற்றி முறையான விசாரணை மேற்கொள்ள மாணவர்கள்&nbsp;வலியுறுத்தினர். தமிழ்ச்செல்வன் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டி, உடலைப் பெற மறுத்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பெண்ணை வீட்டுக்குள் பூட்டி வைத்து தாக்குதல்: கணவர் உள்பட 3 பேருக்கு 5 ஆண்டு சிறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-5-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-5-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88#comments</comments><guid isPermaLink="false">c0332f6c-4a5e-450d-b547-5e409e193f46</guid><pubDate>Fri, 18 Sep 2026 07:11:27 +0000</pubDate><atom:updated>2026-09-18T07:11:27.807Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கணவர்,தாக்குதல்,Thoothukudi,தூத்துக்குடி,சிறை தண்டனை,பெண்,Woman,assault,3 people,3 பேர்,jailed</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/swq1dt9r/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 3 பேருக்கு சிறை தண்டனை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/swq1dt9r/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D">பெண்</a>ணை வீட்டுக்குள் பூட்டி வைத்து தாக்கிய வழக்கில், கணவர், அவரது சகோதரர் மற்றும் மாமியார் ஆகிய 3 பேருக்குத் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. </p><h2>பெண்ணை வீட்டுக்குள் பூட்டி வைத்து தாக்குதல்</h2><p>தூத்துக்குடி அருகேயுள்ள தருவைக்குளம் மேலத்தெருவைச் சேர்ந்த முருகன் (வயது 46) மனைவி குறியீஸ்வரி(35). இந்த நிலையில் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக, முருகன் அவரது சகோதரர் சண்முகசுந்தரராஜ்(41) மற்றும் தாயார் (மாமியார்) பூச்சம்மாள்(75) ஆகியோர் சேர்ந்து குறியீஸ்வரியை வீட்டுக்குள் பூட்டி வைத்து தீவிரமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">தாக்கியுள்ளனர்</a>. இதில் குறியீஸ்வரி பலத்த காயமடைந்தார்.</p><h2>3 பேர் கைது</h2><p>இந்த சம்பவம் குறித்து குறியீஸ்வரி அளித்த புகாரின் பேரில், தருவைக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணவர் முருகன் உள்பட 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-1-ல் நடைபெற்று வந்தது.</p><h2>3 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை</h2><p>இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி, குற்றம் சாட்டப்பட்ட முருகன், சண்முகசுந்தரராஜ் மற்றும் பூச்சம்மாள் ஆகிய 3 பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவர்கள் 3 பேருக்கும் தலா 5 ஆண்டுக்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">சிறை தண்டனை</a> வழங்கி தீர்ப்பளித்தார். </p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் அமையள்ள முதல் உலகளாவிய திறன் மையம்: முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/first-global-capability-centre-to-be-set-up-in-tamil-nadu-mou-signed-in-the-presence-of-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/first-global-capability-centre-to-be-set-up-in-tamil-nadu-mou-signed-in-the-presence-of-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">575821e0-0d6b-4681-b9d4-b73313ce624f</guid><pubDate>Fri, 18 Sep 2026 07:08:57 +0000</pubDate><atom:updated>2026-09-18T07:08:57.529Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,அமெரிக்கா,America,தமிழகம்,தமிழ்நாடு அரசு,புரிந்துணர்வு ஒப்பந்தம்,TamilNadu Govt,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/a7s28op3/nija.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/a7s28op3/nija.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டில் அமைய முதல் உலகளாவிய திறன் மையத்திற்கான (Global Capability Centre - GCC) புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதல்-அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">ச.ஜோசப் விஜய்</a> முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.</p><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழ்நாடு அரசால் புதிதாக அறிவிக்கப்பட்ட OMR GCC வழித்தடத்தில் அமைந்துள்ள DLF Downtown தரமணி வளாகத்தில் 250 நபர்களுக்கு உயர் மதிப்பு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட வால்கிரீன்ஸ் (Wall Greens) இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் முதல்முறையாக இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் அமைக்கவுள்ள தனது முதல் உலகளாவிய திறன் மையத்திற்கான (Global Capability Centre - GCC) புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதல்-அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">ச.ஜோசப் விஜய்</a> அவர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">ச.ஜோசப் விஜய் </a>அவர்கள் முன்னிலையில் இன்று (18.9.2026) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், தமிழ்நாடு அரசால் சென்னையில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள OMR GCC வழித்தடத்தில் அமைந்துள்ள DLF Downtown தரமணி வளாகத்தில், முதலாம் ஆண்டு 250 நபர்களுக்கு உயர் மதிப்பு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலும், வரும் ஆண்டுகளில் விரிவாக்கம் மேற்கொள்ளும் வகையிலும் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட வால்கிரீன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அமைக்கவுள்ள தனது முதல் உலகளாவிய திறன் மையத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.</p><h2>வால்கிரீன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்</h2><p>அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட வால்கிரீன்ஸ் நிறுவனம், உலகளவில் முன்னணி சுகாதார மற்றும் மருந்தக சேவை நிறுவனமாக விளங்குகிறது. மருந்தகச் சேவைகள், சுகாதாரப் பராமரிப்பு மற்றும் நுகர்வோர் சுகாதாரப் பொருட்கள் துறைகளில் செயல்பட்டுவரும் இந்நிறுவனம், தனது முதல் உலகளாவிய திறன் மையத்தை (Global Capability Centre – GCC) இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் அமைக்க முன்வந்துள்ளது. </p><p>தொழில்நுட்பம் மற்றும் வணிக சேவைகளை மையமாக கொண்டு அமையவுள்ள இம்மையம், தமிழ்நாடு அரசால் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள OMR GCC வழித்தடத்தில் அமைந்துள்ள DLF Downtown தரமணி வளாகத்தில் நிறுவப்படவுள்ளது.</p><p>இன்று தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர்</a> அவர்கள் முன்னிலையில், முதல் ஆண்டு 250 நபர்களுக்கு உயர் மதிப்பு வேலைவாய்ப்பு மற்றும் வரும் ஆண்டுகளில் விரிவாக்கம் என்ற வகையில் இந்நிறுவனத்தின் உலகளாவிய திறன் மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. </p><p>இந்நிறுவனம் இந்தியாவிலேயே முதன் முறையாக அமைக்கவுள்ள உலகளாவிய திறன் மையம் தமிழ்நாட்டில் அமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், GCC துறையில் உயர்மதிப்புக் கொண்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தமிழ்நாடு அரசின் கொள்கைக்கு மேலும் ஊக்கமளிப்பதுடன், தமிழ்நாட்டின் GCC வளர்ச்சிப் பயணத்தில் வால்கிரீன்ஸ் இணைவது, மாநிலம் உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் வணிகச் சேவை மையமாக உருவெடுத்து வருவதையும் எடுத்துக்காட்டுகிறது.</p><p>இந்நிகழ்வின்போது, தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர்</a> அவர்கள், தமிழ்நாட்டிலுள்ள Tier-II &amp; Tier-III நகரங்களிலுள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட கேட்டுக்கொண்டார்.</p><p>இந்நிகழ்வில், தொழில் துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா, தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், இ.ஆ.ப., தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ச. விஜயகுமார், இ.ஆ.ப., வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் தீபக் ஜேக்கப், இ.ஆ.ப., வால்கிரீன்ஸ் உலகளாவிய திறன் மையத்தின் தலைவர் உமாபதி விஸ்வநாதன், வால்கிரீன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் மசூத் அகமது மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: முதல்-அமைச்சர் விஜய் 4 நாட்கள் பிரசாரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madhuranthakam-dharapuram-by-elections-chief-minister-vijay-to-campaign-4-days</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madhuranthakam-dharapuram-by-elections-chief-minister-vijay-to-campaign-4-days#comments</comments><guid isPermaLink="false">085524fb-b943-4269-989e-2b77a78d9bd7</guid><pubDate>Fri, 18 Sep 2026 06:47:17 +0000</pubDate><atom:updated>2026-09-18T06:47:17.298Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,தேர்தல் பிரசாரம்,இடைத்தேர்தல்,By election,election campaign,மதுராந்தகம்,தாராபுரம்,Madhuranthakam,Dharapuram,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/v7krwk05/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/v7krwk05/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலையொட்டி முதல்-அமைச்சர் விஜய் 4 நாட்கள் பிரசாரம் மேற்கொள்கிறார்.</p><h2>இடைத்தேர்தல்</h2><p>தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் (தனி) மற்றும் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில் ஆளும் த.வெ.க., பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர், கம்யூனிஸ்டு கட்சிகள் தனித்தனியாக களம் காண்கின்றன. இதனால் 5 முனைப் போட்டி நிலவுகிறது.</p><p>மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. வேட்பாளராக பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஜானகிராமன் ஆகியோர் களம் இறங்கி உள்ளனர். தாராபுரத்தில் த.வெ.க. சார்பில் சத்தியபாமா, தி.மு.க. வேட்பாளராக சுகன்யா, அ.தி.மு.க. சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்டு சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் வேட்பாளராக கார்த்திகா ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.</p><h2>விஜய் பிரசாரம்</h2><p>2 தொகுதிகளிலும் போட்டியிடுபவர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து வருகிற 20-ந்தேதிக்கு பிறகு (அடுத்த வாரம்) அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்து இருக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மேற்கொண்டு உள்ளனர்.</p><p>இந்த நிலையில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளில் முதல்-அமைச்சர் விஜய் 4 நாட்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். இந்த மாதம் இறுதி மற்றும் அடுத்த மாதம் தொடக்கத்தில் ஒரு தொகுதிக்கு தலா 2 நாட்கள் என 4 நாட்கள் முதல்-அமைச்சர் விஜய் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். முதல்-அமைச்சர் விஜய் பேசுவதற்காக மதுராந்தகம், தாராபுரத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.</p><p>தாராபுரம் உடுமலை சாலையில் உள்ள திருமலைபாளையம் பகுதியில் பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் த.வெ.க. இருப்பதால் முதல்-அமைச்சர் விஜய்யின் பிரசாரம் அதற்கு கை கொடுக்கும் என்று கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.</p><h2>பலத்த பாதுகாப்பு</h2><p>கடந்த சட்டமன்ற தேர்தலில் முதல்-அமைச்சர் விஜய் பிரசாரம் மேற்கொண்ட போது அவரை பார்ப்பதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது. அவரது பிரசாரக் கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. இந்த நிலையில் தான் தற்போது முதல்-அமைச்சராக விஜய் தேர்தல் பிரசாரத்திற்கு செல்ல உள்ளார். இதையொட்டி 2 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. த.வெ.க. ஆளும் கட்சியான பிறகு முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் என்பதால் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.</p><h2>மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி</h2><p>தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கம்யூனிஸ்டு தலைவர்களும் 2 தொகுதிகளிலும் பிரசாரத்திற்கு தயாராகி வருகிறார்கள். மதுராந்தகம், தாராபுரம் 2 தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் பிரசாரம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார். இதேபோன்று எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பிரசார திட்டமும் தயாராகி வருகிறது.</p><h2>களை கட்டும் தேர்தல் களம்</h2><p>இப்படி இடைத்தேர்தல்களில் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட ஆயத்தமாகி வருவதால் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் தேர்தல் களம் களை கட்டுகிறது. தங்களது கட்சித் தலைவர்களை வரவேற்பதற்காக அனைத்து கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழுவீச்சில் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>
அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறேன் - சரத்குமார் பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-am-staying-away-from-politics-sarathkumars-interview</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-am-staying-away-from-politics-sarathkumars-interview#comments</comments><guid isPermaLink="false">ec9478f3-6c0a-4eaa-beaa-0f84bcb03144</guid><pubDate>Fri, 18 Sep 2026 06:41:32 +0000</pubDate><atom:updated>2026-09-18T06:41:32.613Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நாகர்கோவில்,Sarathkumar,சரத்குமார்,அரசியல்,politics,திருமண விழா,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/7ra2uqnb/9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/7ra2uqnb/9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>நாகர்கோவில், </p><p>"நான் அரசியலில் தற்போது இல்லை, ஒதுங்கி இருக்கிறேன். தமிழக அரசின் செயல்பாடு குறித்த கேள்விக்கு பதில் அளிக்க நிறைய பேர் உள்ளனர்" என்று மழுப்பலாக கூறிவிட்டு சென்றார். </p><h2>திருமண விழாவில் சரத்குமார்</h2><p>நாகர்கோவிலில் நடந்த ஒரு திருமண விழாவில் பிரபல நடிகரும், பா.ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினருமான சரத்குமார் கலந்து கொண்டார். அவர் மணமக்களை வாழ்த்தியதோடு, பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி மணமக்களுடன் இணைந்து ஏழைகளுக்கு தையல் எந்திரங்களை வழங்கினார்.</p><h2>நான் அரசியலில் தற்போது இல்லை..</h2><p>பின்னர் நிருபர்கள், சரத்குமாரிடம் கேள்வி எழுப்பினர். அதாவது "தமிழக முதல்-அமைச்சர் விஜய் வெளிநாட்டிற்கு சென்று முதலீடுகளை ஈர்த்து இருப்பதாக கூறியிருக்கிறார். அதுபற்றி என்ன சொல்கிறீர்கள்" என்று கேட்டனர். அதற்கு அவர் உடனடியாக பதில் அளிக்காமல் நகர்ந்து சென்றார். நடந்து சென்று கொண்டே அவர் கூறுகையில் "நான் அரசியலில் தற்போது இல்லை, ஒதுங்கி இருக்கிறேன். தமிழக அரசின் செயல்பாடு குறித்த கேள்விக்கு பதில் அளிக்க நிறைய பேர் உள்ளனர். மாநில தலைவர் இருக்கிறார், அவர் பதில் அளிப்பார்" என்று மழுப்பலாக கூறிவிட்டு சென்றார். சரத்குமாரின் இந்த பதில் அங்கு இருந்தவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.</p> ]]></content:encoded></item><item><title>தாராபுரம் த.வெ.க. வேட்பாளர் காரை தாக்கியதாக அ.தி.மு.க. வேட்பாளர் உட்பட 9 பேர் மீது வழக்கு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-registered-against-9-people-including-the-aiadmk-candidate-for-attacking-the-car-of-the-tvk-candidate-from-dharapuram</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-registered-against-9-people-including-the-aiadmk-candidate-for-attacking-the-car-of-the-tvk-candidate-from-dharapuram#comments</comments><guid isPermaLink="false">5d8d0786-76dd-43f0-8c09-51761bf87bd5</guid><pubDate>Fri, 18 Sep 2026 06:36:31 +0000</pubDate><atom:updated>2026-09-18T06:36:31.965Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,TVK,தவெக,Tamilnadu,அதிமுக,தமிழகம்,வழக்குப்பதிவு,இடைத்தேர்தல்,case registration,தாராபுரம்,byelection,Dharapuram</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/l44vn72p/sathya.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/l44vn72p/sathya.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தாராபுரம், </p><p>தவெக வேட்பாளர் சத்தியபாமாவின் காரை தாக்கியதாக அ.தி.மு.க. வேட்பாளர் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.</p><p>திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரு கிற 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில், கடந்த 9-ந்தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. அதன்படி நேற்று முன்தினத்தோடு வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. மொத்தம் 51 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. </p><p>இதனையடுத்து வேட்புமனு பரிசீலனை தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. பெலிக்ஸ் ராஜா தலைமையில் நேற்று நடைபெற்றது. தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 22 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. </p><p>இதேபோல் சுயேட்சை வேட்பாளர்கள் 13 பேரின் வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மொத்தம் தாக்கலான 51 மனுக்களில், 22 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மீதமுள்ள 29 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. நாளை (சனிக்கிழமை) மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். அன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.</p><p>இந்நிலையில் தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமாவின் காரை தாக்கியதாக அ.தி.மு.க. வேட்பாளர் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக வேட்புமனுத்தாக்கல் செய்ய சென்ற போது அ.தி.மு.க.வினர், சத்தியபாமாவின் காரை தடுத்து நிறுத்தி தாக்கியதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் கடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பி.சத்தியபாமா. இவர் உள்ளாட்சித்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, திருப்பூர் மாவட்ட ஊராட்சி தலைவராக பொறுப்பு வகித்தார். </p><p>சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பின்னர், அ.தி.மு.க.வில் நிலவி வந்த உட்கட்சி பூசல்கள் மற்றும் தலைமை மீது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அதிருப்தி அடைந்தார்.</p><p>இதனை தொடர்ந்து, அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகியதோடு, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். பின்னர் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">விஜய்</a> தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தில் (த.வெ.க) அதிகாரப்பூர்வமாக தன்னை இணைத்துக்கொண்டார்.</p>]]></content:encoded></item><item><title>சமத்துவமும் சமூக நீதியும் தழைத்திட அயராது பாடுபட்டவர் இரட்டைமலை சீனிவாசன்: கனிமொழி எம்.பி.</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/irattamalai-srinivasan-worked-tirelessly-to-promote-equality-and-social-justice-kanimozhi-mp</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/irattamalai-srinivasan-worked-tirelessly-to-promote-equality-and-social-justice-kanimozhi-mp#comments</comments><guid isPermaLink="false">4976c635-4862-4e43-8ade-fa3dfe69d818</guid><pubDate>Fri, 18 Sep 2026 06:32:06 +0000</pubDate><atom:updated>2026-09-18T06:32:06.237Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,X Page,எக்ஸ் பதிவு,Kanimozhi MP,நினைவு நாள்,Memorial Day,இரட்டைமலை சீனிவாசன்,கனிமொழி எம்.பி.,Irattamalai Srinivasan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/3l2n566d/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாள்: கனிமொழி எம்.பி. பதிவு. ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/3l2n566d/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D">இரட்டைமலை சீனிவாசன்</a> நினைவு நாளையொட்டி தி.மு.க. துணை பொதுச் செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF">கனிமொழி எம்.பி.</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:</p><h2>'திராவிட மணி' இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாள்</h2><p>ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, உரிமை, அரசியல் பிரதிநிதித்துவத்திற்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்த சமூகப் போராளியும், திராவிட இயக்கத்தின் முன்னோடியுமான 'திராவிட மணி' இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D">நினைவு நாள்</a> இன்று. </p><p>சமத்துவமும் சமூக நீதியும் தழைத்திட அயராது பாடுபட்ட அன்னாரின் நினைவைப் போற்றி வணங்குகிறேன்.</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இரட்டைமலை சீனிவாசனார் பெரும்புகழ் போற்றுவோம் - சீமான்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-extol-the-great-renown-of-rettaimalai-srinivasanar-seeman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-extol-the-great-renown-of-rettaimalai-srinivasanar-seeman#comments</comments><guid isPermaLink="false">349a8bc6-9ef1-4f71-a9b6-85ef1d6e89f1</guid><pubDate>Fri, 18 Sep 2026 06:25:34 +0000</pubDate><atom:updated>2026-09-18T06:25:34.867Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,Seeman,இரட்டைமலை சீனிவாசன்,Rettaimalai Srinivasan</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/00fbu7ny/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/00fbu7ny/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இரட்டைமலை சீனிவாசனின் நினைவு நாளையொட்டி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>“தமிழ்நாட்டில் சாதிய அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட மக்களின் இழிவு நீங்கவும், சமவுரிமை பெற்றுக் கண்ணியமாக வாழவும் பாடுபட்டதோடு, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய  சமூகநீதிப்போராளி..! </p><p>“எந்தச் சொல் உன்மீது இழிச்சொல்லாகச் சுமத்தப்படுகிறதோ, அந்தச் சொல்லை நீ எழுச்சிச் சொல்லாக மாற்றாத வரை உனக்கு விடுதலை இல்லை” என்று முழங்கிய புரட்சியாளர்!</p><p>வர்ணாசிரம கோட்பாட்டிற்கு எதிராக ஒரு மாற்றுக் கோட்பாட்டை நீ உருவாக்கிக்கொள்ளாத வரை உனக்கு விடுதலை இல்லை என்று கற்பித்த பெருந்தகை..! இலண்டன் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்குக் குரல்கொடுத்த போராளி..!</p> <p>சாதியக் கொடுமைகளுக்கு எதிராக சட்டமன்றத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களை முன்மொழிந்து அவை நிறைவேற காரணமான சமூகச் சீர்திருத்தவாதி..! அண்ணல் காந்தியடிகளுக்கு தமிழ்ப் படிக்கவும், தமிழில் கையெழுத்திடவும் கற்றுக்கொடுத்த தமிழறிஞர்..!</p><p>தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் நினைவு நாளில் சமத்துவச் சமுதாயம் உருவாக்கிட வேண்டும் என்ற அவருடைய உயரிய கனவினை நிறைவேற்ற தொடர்ந்து அயராது பாடுபடுவோம் என்ற உள உறுதியோடு, அவருடைய பேரப்பிள்ளைகளாகிய நாம் பெருமிதத்தோடும், திமிரோடும் நம்முடைய புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்! நம்முடைய தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் பெரும்புகழ் போற்றுவோம்!”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சென்னை வங்கியில் ரூ.3.15 கோடி நகைகள் திருட்டு வழக்கில் 6 ஊழியர்கள் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/six-employees-arrested-in-rs-315-crore-jewelry-theft-case-at-a-chennai-bank</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/six-employees-arrested-in-rs-315-crore-jewelry-theft-case-at-a-chennai-bank#comments</comments><guid isPermaLink="false">8e63acd6-98f9-4082-a86d-a27989e9bfab</guid><pubDate>Fri, 18 Sep 2026 06:04:47 +0000</pubDate><atom:updated>2026-09-18T06:04:47.015Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,jewelry theft,பஞ்சாப் நேஷனல் வங்கி,Punjab National Bank,நகைகள் திருட்டு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/enn8wnhk/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/enn8wnhk/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை அயனாவரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் பொதுமக்கள் அடமானம் வைத்த ரூ.3 கோடி மதிப்புள்ள நகைகளை அந்த வங்கியின் மேலாளரே திருடிய சம்பவம் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியது. உண்மையான அடகு நகைகளை திருடிவிட்டு, அதற்கு பதில் போலியான நகைகளை வைத்து நூதன திருட்டு நடந்தது.</p><p>இதுதொடர்பாக, வங்கி நிர்வாகம் அளித்த புகாரின்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த வங்கியின் மேலாளரை கைது செய்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பாக, சென்னை கீழ்ப்பாக்கத்தில் செயல்படும் பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையிலும் இதுபோன்ற ஒரு அடகு நகை திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.</p><p>குறிப்பிட்ட அந்த வங்கியில் பணியாற்றும் மேலாளர்கள் உள்பட ஊழியர்கள் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பொதுமக்கள் அடகு வைத்த உண்மையான நகைகளை திருடிவிட்டு, அவற்றிற்கு பதில் போலி நகைகளை வைத்துள்ளனர். இந்த வங்கியிலும் ரூ.3.15 கோடி அளவிற்கு அடமான நகைகள் திருடப்பட்டுள்ளன.</p><p>இதுதொடர்பாக வங்கி ஊழியர்களான புழல் பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் (வயது 58), கொரட்டூரைச் சேர்ந்த சரவண பாபு (58), கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியைச் சேர்ந்த கோபிகா (30), மணலி சேக்காடு பகுதியைச் சேர்ந்த துரைபாபு ஜனார்த்தனன் (50), புரசைவாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் (36) மற்றும் சுனிதா (51) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.</p><p>இவர்களில் புருஷோத்தமன் உதவியாளராக உள்ளார். சரவண பாபு சீனியர் மேலாளராக உள்ளார். கோபிகா துணை மேலாளராகவும், துரைபாபு ஜனார்த்தனன் மேலாளராகவும், விக்னேஷ் தூய்மை பணியாளராகவும், சுனிதா குமாஸ்தாவாகவும் பணியாற்றினார்கள். கைதான இவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் தொழிலதிபர் வீட்டில் ரூ.3 கோடி மதிப்புள்ள நகை கொள்ளை: 3 பேர் கைது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/jewellery-worth-3-crore-stolen-from-businessmans-house-in-delhi-3-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/jewellery-worth-3-crore-stolen-from-businessmans-house-in-delhi-3-arrested#comments</comments><guid isPermaLink="false">549299a1-c443-4db6-b86c-93cc86dab013</guid><pubDate>Fri, 18 Sep 2026 05:59:29 +0000</pubDate><atom:updated>2026-09-18T05:59:29.269Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrest,புதுடெல்லி,கொள்ளை,police enquiry,Robbery,உணவகம்,The businessman</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/ujt4h0jm/7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ தேவ சந்திர சா- கமல் (அனில் காமத்) ]]></media:title><media:description type="html"><![CDATA[ டெல்லியில் தொழிலதிபர் வீட்டில் ரூ.3 கோடி மதிப்புள்ள நகை கொள்ளை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/ujt4h0jm/7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><p>டெல்லியில் தொழிலதிபர் ஒருவர் வீட்டில் ரூ.3 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் ரூ.4.31 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவை கொள்ளையடிக்கபட்டன. இந்த சம்பவம் தொடர்பாக வீட்டு வேலைக்காரன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.</p><h2>வெளிநாடு சென்ற உரிமையாளர்- கொள்ளை</h2><p><a href="https://www.dailythanthi.com/news/india">டெல்லி </a>வடக்கு மாவட்டத்தின் மால் ரோடு பகுதியில் வசிப்பவர் ஒரு பிரபல தொழிலதிபர். இவருடைய குடும்பத்தினர் கடந்த 2-ந்தேதி அன்று வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றனர். வீட்டில் யாரும் இல்லாத இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட இவர்களது புதிய வீட்டு வேலைக்காரனான கமல் (அனில் காமத்) மற்றும் அவனது கூட்டாளிகள், கடந்த 5-ந்தேதி இரவில் வீட்டின் பூட்டை உடைத்து லாக்கரில் இருந்த ரூ.3 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88">கொள்ளையடித்து</a> தப்பியோடினர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இதையடுத்து கடந்த 6-ந்தேதி அன்று காலை வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை அறிந்த மேலாளர், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.வடக்கு டெல்லி டிசிபி தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல்களைக் கொண்டு தீவிர விசாரணையை தொடங்கினர்.</p><h2>அதிரடி சோதனை</h2><p>விசாரணையில் குற்றவாளிகள் டெல்லியிலிருந்து தப்பி ஜார்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு சென்றது தெரியவந்தது. டெல்லி போலீசார் உடனடியாக ஜார்கண்ட் விரைந்து, அங்கு மறைந்திருந்த 17 வயது சிறுவன் ஒருவனைப் பிடித்தனர். அவன் கொடுத்த தகவலின் பேரில், பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் உள்ள சுகா நகர் கிராமத்திற்கு விரைந்தனர். அங்கு கமலின் மாமனார் தேவ சந்திர சா (வயது 49) என்பவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.</p><h2>தரைக்கு அடியில் புதைக்கப்பட்ட 'புதையல்'</h2><p>வீட்டில் சோதனையிட்ட போது நகைகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், வீட்டின் ஒரு அறையின் தரைப்பகுதி புதிதாக பூசப்பட்டிருப்பது குறித்து போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. எனவே, அந்த இடத்தை 5 அடி ஆழத்திற்கு தோண்டிய போது, உள்ளே ஒரு பை மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பையை திறந்து பார்த்தபோது போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அந்த பையில் 117 தங்க மற்றும் வைர நகை பொருட்கள் (நெக்லஸ்கள், வளையல்கள், மோதிரங்கள்) மற்றும் ரூ.4.31 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவை பத்திரமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தன.</p><h2>கைது</h2><p>இதற்கிடையில், போலீசாரிடம் சிக்காமல் தப்பியோடிய முக்கிய குற்றவாளியான கமல், கடந்த 16-ந்தேதி அன்று டெல்லியின் ஆனந்த் விகார் பகுதியில் வைத்து போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.</p><h2>நேபாளத்தில் 'கபே' வைக்க திட்டம்</h2><p>திருடப்பட்ட ரூ.3 கோடி நகைகளை சில மாதங்கள் கழித்து விற்றுவிட்டு, அந்த பணத்தைக் கொண்டு நேபாளத்திற்கு தப்பிச் சென்று அங்கு ஒரு ஆடம்பர உணவகம் அல்லது கபே தொடங்க அவர் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. ஆனால், அவரது திட்டத்தை முறியடித்த டெல்லி போலீசார், திருடப்பட்ட அனைத்து நகைகளையும் பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>
சிவகாசியில் பயங்கரம்...கட்டிங் இயந்திரத்தில் சிக்கி பெண் பலி!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/horror-in-sivakasi-woman-dies-after-getting-stuck-in-cutting-machine</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/horror-in-sivakasi-woman-dies-after-getting-stuck-in-cutting-machine#comments</comments><guid isPermaLink="false">cc957865-779a-4ca0-aad1-acf59117c465</guid><pubDate>Fri, 18 Sep 2026 05:42:32 +0000</pubDate><atom:updated>2026-09-18T05:42:32.179Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,Sivakasi,சிவகாசி,பெண் பலி,எந்திரம்,lady died</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/dut12zqw/8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இயந்திரத்தில் சிக்கி பெண் பலி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/dut12zqw/8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகாசி,</p><p>சிவகாசியில் கட்டிங் செய்யும் இயந்திரத்தில் சிக்கி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>பெண் பலி</h2><p>சிவகாசியை சேர்ந்த பாண்டியம்மாள் என்பவர் அங்குள்ள காகித அட்டை தயாரிக்கும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">நிறுவனத்தில்</a> கட்டிங் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். இன்று காலையில் வழக்கம்போல் கம்பெனிக்குச் சென்று வேலை செய்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அவரது சேலை இயந்திரத்தில் சிக்கி இயந்திரத்தினுள் இழுத்து சென்றது. </p><p>இந்த விபத்தில் பாண்டியம்மாளின் கை துண்டாகி, அதிக அளவில் ரத்தம் வெளியேறியது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p>இது குறித்து தகவல் அறிந்த சிவகாசி கிழக்கு காவல் நிலைய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார் </a>சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாண்டியம்மாளின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>
“மாணவனை வஞ்சித்து கண்ணீர் சிந்த விடுவதற்கா ஆட்சி?” - போஸ் வெங்கட் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-this-administration-meant-to-deceive-a-student-and-leave-him-in-tears-bose-venkat-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-this-administration-meant-to-deceive-a-student-and-leave-him-in-tears-bose-venkat-asks#comments</comments><guid isPermaLink="false">6a712652-9ec2-49f4-beee-6335ed381f29</guid><pubDate>Fri, 18 Sep 2026 05:40:55 +0000</pubDate><atom:updated>2026-09-18T05:40:55.925Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>போஸ் வெங்கட்,Director Bose Venkat,Vanni Arasu,பாரதிதாசன்,Bharathidasan,TVK Government,தலித் மாணவன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/dbixhwgs/8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/dbixhwgs/8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஒரு தலித் மாணவனையே வஞ்சித்து, கண்ணீர் சிந்த விடுவதற்குத்தான் நீங்கள் ஆட்சியதிகாரத்தில் பங்குகேட்டீங்களா திருமா அண்ணே? இதுவெல்லாம் தலித் விரோதப்போக்கு இல்லையா? என்று இயக்குநர் போஸ் வெங்கட் கேள்வி எழுப்பி உள்ளார்.</p>  <h2>கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட மாணவன்</h2><p>தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருபவர் மாணவர் பாரதிதாசன். தனக்கு கடந்த சில மாதங்களாக கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என்றும், கல்லூரியிலிருந்து வெளியேற்றும் நிலை உருவாகியுள்ளதாகவும் கூறி அவர் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் தலைவர்கள் பலரும் கவலை தெரிவித்து அரசை வலியுறுத்தினர்.</p> <h2>இது உண்மைக்கு புறம்பானது - தமிழக சமூக நீதித்துறை</h2><p>மாணவர் பாரதிதாசன் வெளியிட்டுள்ள காணொலி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று தமிழக சமூக நீதித்துறை விளக்கம் அளித்துள்ளது. ஏற்கனவே அவரது படிப்புக்கு மொத்தம் ரூ.48 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.மேலும், ரூ.19.50 லட்சம் செலவின கோரிக்கை தொடர்பாக சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாகவும், பல்கலைக்கழகத்திடம் இருந்து பதில் கிடைத்தவுடன் கல்வி உதவித்தொகை விடுவிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.</p>  <h2>இயக்குநர் போஸ் வெங்கட் பதிவு</h2><p>இந்த நிலையில், மாணவர் பாரதிதாசனுக்கு ஆதரவாக இயக்குநர் போஸ் வெங்கட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது, </p><p>5,000 கோடி ரூபாய்க்கு மேல் குடும்பச்சொத்தாக வைத்திருப்பதாகக் கூறிய லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோசுக்கும் 34 இலட்ச ரூபாய் மதிப்பில் கார் வழங்குவதாக அறிவித்த வெட்கங்கெட்ட தவெக அரசு, மாணவர் பாரதிதாசனுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குவதற்குக் கணக்குப் பார்ப்பதும், தயங்குவதும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்!</p><p>ஒரு தலித் மாணவனையே வஞ்சித்து, கண்ணீர் சிந்த விடுவதற்குத்தான் நீங்கள் ஆட்சியதிகாரத்தில் பங்குகேட்டீங்களா திருமா அண்ணே? இதுவெல்லாம் தலித் விரோதப்போக்கு இல்லையா?</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்... நேற்று ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-recorded-244-dengue-fever-cases</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-recorded-244-dengue-fever-cases#comments</comments><guid isPermaLink="false">75d29e76-c03b-446c-bc8c-b3e11e6c64a7</guid><pubDate>Fri, 18 Sep 2026 05:15:17 +0000</pubDate><atom:updated>2026-09-18T05:15:17.818Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,டெங்கு காய்ச்சல்,Dengue Fever</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/nuvqe7zt/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/nuvqe7zt/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகளவில் உள்ளது. வெயில் மற்றும் மழை என காலநிலை மாற்றத்தால், டெங்குவை பரப்பும், 'ஏடிஸ்' வகை கொசுக்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக, மாநிலம் முழுவதும் பரவலாக டெங்கு பாதிப்பு உள்ளது.</p><p>குறிப்பாக தினசரி, 70 முதல் 100 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிகள், மாவட்ட ஆஸ்பத்திரிகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு பிரத்யேக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.</p><p>இந்த நிலையில், தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 244 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் டெங்குவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,577ஆக உயர்ந்துள்ளது. டெங்கு பாதிப்பால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் 87 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு காய்சல் பாதிப்பு அதிகமாக உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கொசு ஒழிப்பு பணியில் 25,000க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். காய்ச்சல் ஏற்பட்டால் பொதுமக்கள் மருந்தகங்களுக்குச் சென்று தாங்களாகவே மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வீடுகளின் அருகில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதன் மூலம் கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுத்து. டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எம்.பி.பி.எஸ். படிக்காமல் சிகிச்சை: போலி டாக்டரை கைது செய்த போலீசார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/treating-patients-without-an-mbbs-degree-police-arrest-quack</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/treating-patients-without-an-mbbs-degree-police-arrest-quack#comments</comments><guid isPermaLink="false">3eae4987-5f03-4229-9de2-824749c97efa</guid><pubDate>Fri, 18 Sep 2026 04:55:36 +0000</pubDate><atom:updated>2026-09-18T04:55:36.038Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Dindigul,திண்டுக்கல்,தமிழகம்,கைது,வடமதுரை,போலி டாக்டர்,fake doctor,north madurai</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/vm7q9y3z/poli.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/vm7q9y3z/poli.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வடமதுரை, </p><p>போலி டாக்டர் அந்தோணிதாசை  கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><h2>ஆங்கில வைத்தியம்</h2><p>திண்டுக்கல் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் பாரதி தலைமையிலான மருத்துவத்துறை அதிகாரிகள், நேற்று முன்தினம் வடமதுரை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கொம்பேறிபட்டியில் செயல்பட்டு வந்த ஆஸ்பத்திரியில், அந்தோணிதாஸ் (வயது 68) என்பவர் முறையான கல்வித் தகுதி (எம்.பி.பி.எஸ்.) இன்றி நோயாளிகளுக்கு ஆங்கில வைத்தியம் பார்த்து வந்தது கண்டறியப்பட்டது.</p><h2>கைது</h2><p>மேலும், அந்த ஆஸ்பத்திரியில் காலாவதியான கருக்கலைப்பு மாத்திரைகள் மற்றும் ஆங்கில மாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவ அதிகாரிகள் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்ததைதொடர்ந்து, போலி டாக்டராக செயல்பட்ட அந்தோணிதாசை போலீசார் கைது  செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>இந்த மருத்துவமனை அப்பகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது</p> ]]></content:encoded></item><item><title>இரட்டைமலை சீனிவாசனின் புகழைத் தலைமுறைகள் தொடர்ந்து நினைவுகூரட்டும்: நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/may-generations-continue-to-cherish-the-legacy-of-rettaimalai-srinivasan-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/may-generations-continue-to-cherish-the-legacy-of-rettaimalai-srinivasan-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">8fafe199-b3da-404e-95c8-006dd0d7b0b1</guid><pubDate>Fri, 18 Sep 2026 04:54:30 +0000</pubDate><atom:updated>2026-09-18T04:54:30.393Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,இரட்டைமலை சீனிவாசன்,Rettaimalai Srinivasan</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/s8l74dy4/9.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/s8l74dy4/9.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இரட்டைமலை சீனிவாசனின் நினைவு நாளையொட்டி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”சமூக நீதிக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் அயராது பாடுபட்ட இரட்டைமலை சீனிவாசனின் நினைவு நாள் இன்று!</p> <p>‘பறையன்’ இதழைத் தொடங்கி, கல்வி, சமூக முன்னேற்றம், சமத்துவம் மற்றும் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தவர். தாழ்த்தப்பட்ட மக்களின் குரலை அரசியல் மற்றும் சமூகத் தளங்களில் வலிமையாக ஒலிக்கச் செய்த முன்னோடிகளில் ஒருவர் இரட்டைமலை சீனிவாசன்.</p><p>சமத்துவமும் சுயமரியாதையும் நிறைந்த சமூகத்தை உருவாக்க அவர் மேற்கொண்ட அரும்பணிகள் என்றும் நம் நினைவில் நிலைத்திருக்கும். அவரது சமூக நீதிப் பயணத்தையும் சீர்திருத்தச் சிந்தனைகளையும் இந்நாளில் போற்றி வணங்கி, அவரது புகழைத் தலைமுறைகள் தொடர்ந்து நினைவுகூரட்டும்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>லண்டன் முதலீடுகள் மற்றும் புதிய திட்டங்கள்: முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/london-investments-and-new-projects-chief-minister-vijay-to-hold-consultations-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/london-investments-and-new-projects-chief-minister-vijay-to-hold-consultations-today#comments</comments><guid isPermaLink="false">8320964d-9c21-429e-bfe4-ec40bff1e772</guid><pubDate>Fri, 18 Sep 2026 04:24:47 +0000</pubDate><atom:updated>2026-09-18T04:24:47.339Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,முதலீடு,காலை உணவு திட்டம்,Investments,CM Vijay,Kaalai Unavu Thittam,தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்,Thaimaman Gold Ring Project</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/xj9xoj1g/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/xj9xoj1g/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>லண்டன் முதலீடுகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சர் விஜய் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.</p><h2>லண்டன் பயணம்</h2><p>தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் பயணம் மேற்கொண்ட முதல்-அமைச்சர் விஜய் 12-ந்தேதி. உலகத்தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் தமிழ்நாட் டில் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டுக்கு நேரில் சென்று, அங்குள்ள 'ரேஸ் கண்ட்ரோல்' மற்றும் 'ரேஸ் சர்க்யூட் பகுதிகளை பார்வையிட்டார்.</p><p>14-ந்தேதி முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் லண்ட னில் வாகன உதிரிபாக உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் மின்கட்டமைப்பு உபகரணங்கள் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், புதிய தொழில் முதலீட்டுக்கான கடிதம் என மொத்தம் 15,300 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.</p><h2>முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை</h2><p>இந்த நிலையில், லண்டனில் மேற்கொள்ளப்பட்ட ரூ.15,300 கோடி முதலீட்டு ஒப்பந்தங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். அதைபோல வரும் 22-ம் தேதி காலை உணவு திட்ட விரிவாக்கம் மற்றும் 25-ம் தேதி 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம் தொடக்கம் தொடர்பான நடைமுறைகள் குறித்தும் ஆலோசனை நடத்துகிறார்.</p><p>அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் மோதிரம் வழங்கப்பட உள்ளது. தங்கமோதிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கும் தேதி, இடம் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.</p>]]></content:encoded></item><item><title>திடீர் மாரடைப்பு.. பயணிகளை பத்திரமாக காப்பாற்றிவிட்டு உயிரிழந்த அரசு பஸ் டிரைவர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sudden-heart-attack-government-bus-driver-dies-after-safely-saving-passengers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sudden-heart-attack-government-bus-driver-dies-after-safely-saving-passengers#comments</comments><guid isPermaLink="false">fce606c4-8c58-4e69-8358-d57bd5e00fac</guid><pubDate>Fri, 18 Sep 2026 04:10:53 +0000</pubDate><atom:updated>2026-09-18T04:10:53.946Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,மரணம்,மாரடைப்பு,Government bus driver,Heart attack,குடியாத்தம்,Gudiyatham,அரசு பஸ் டிரைவர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/j0sk4oze/bus.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/j0sk4oze/bus.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>குடியாத்தம், </p><p>25 பயணிகளுடன் சென்ற அரசு பஸ் டிரைவர், திடீர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், பயணிகளை பத்திரமாக காப்பாற்றிவிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>திருப்பத்தூர் மாவட்டம் அம்பலூர் அருகே தெக்குப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடசாமி (வயது 59), அரசு பஸ் டிரைவர். இவருக்கு பேபி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். தற்போது வெங்கடசாமி குடும்பத்துடன் வேலூர் காட்பாடி கழிஞ்சூர் பகுதியில் வசித்து வந்தார். </p><p>இவரது மனைவி பேபி அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வெங்கடசாமி நேற்று காலை 8 மணி அளவில் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் இருந்து 25 பயணிகளுடன் குடியாத்தம் வழியாக சேலம் செல்லும் பஸ்சை ஓட்டிச் சென்றார். இறைவன்காடு பகுதியைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் கண்டக்டராக இருந்தார்.</p><h2>சிகிச்சை பலனின்றி</h2><p>இந்த பஸ் குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றோரம் புதிய பைபாஸ் சாலையில் வந்தபோது வெங்கடசாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் சாமர்த்தியமாக பஸ்சை வேகமாக இயக்காமல் மெதுவாக ஓட்டி வந்து சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு மயங்கினார். இதனைப் பார்த்த பயணிகள் அவரை மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடசாமி பரிதாபமாக இறந்தார்.</p><h2>பயணிகள் கண்ணீர்</h2><p>பஸ்சில் வந்த பயணிகள் கூறுகையில், 25-க்கும் அதிகமான பயணிகள் இந்த பஸ்சில் வந்தோம். டிரைவர் வெங்கடசாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது தாறுமாறாக பஸ்சை ஓட்டி இருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். மேலும் கெங்கையம்மன் பாலத்தை இடித்துக் கொண்டு ஆற்றில் விழும் அபாயமும் ஏற்பட்டிருக்கும். ஆனால் பயணிகளை காப்பாற்றும் நோக்கில் மிகவும் ஜாக்கிரதையுடன் பஸ்சை மெதுவாக இயக்கியபடி எங்களை பாதுகாப்பாக குடியாத்தம் நகருக்குள் கொண்டு வந்தார் என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>போதிய மழையின்றி, மாடுகளுக்கு தீவனமாகும் மக்காச்சோள பயிர்: விவசாயிகள் கவலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/maize-crop-turning-into-cattle-fodder-due-to-lack-of-rain-farmers-concerned</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/maize-crop-turning-into-cattle-fodder-due-to-lack-of-rain-farmers-concerned#comments</comments><guid isPermaLink="false">31e9c042-0240-4255-9444-ca2a5c926b61</guid><pubDate>Fri, 18 Sep 2026 03:57:53 +0000</pubDate><atom:updated>2026-09-18T03:57:53.754Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>monsoon,பருவமழை,maize,மக்காச்சோளம்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/1wxflz9b/6.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/1wxflz9b/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் மக்காச்சோளம் பயிர் கருகியது. இதனால் சோகத்தில் மாடுகளுக்கு மக்காச்சோள பயிரை தீவனமாக விவசாயிகள் கொடுக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.</p><h2>தென்மேற்கு பருவமழை</h2><p>தம்மம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளான செந்தாரப்பட்டி, கொண்டையம் பள்ளி, வாழக்கோம்பை, நாகியம்பட்டி, உலிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய தொழிலே பிரதானம் ஆகும். இங்கு ஆண்டுதோறும் மானாவாரி பயிராக, அதிகளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது.</p><p>இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையை நம்பி கடந்த மாதம் வரை மக்காச்சோளத்தை அதிக பரப்பளவில் சாகுபடி செய்தனர். 'எல்நினோ' தாக்கத்தால் தென்மேற்கு பருவமழை பொய்த்தது. இதனால் சாகுபடி செய்த மக்காச்சோளம் பயிர்கள், ஈரப்பதம் இல்லாததாலும், அதிக வெப்பத்தாலும் காய்ந்து கருகியதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். </p><h2></h2><h2>மக்காச்சோளம் காய்ந்தது</h2><p>இதனால் வேதனையடைந்த விவசாயிகள் சிலர் காய்ந்த மக்காச்சோள வயலில் கறவை மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு வருகின்றனர். இதுகுறித்து தம்மம்பட்டி கருமாயி பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில்,</p><p>”ஆண்டுதோறும், தென்மேற்கு பருவமழை காலத்தில் மழையின் ஈரப்பதத்தை பயன்படுத்தி, நிலத்தை உழுது, மக்காச்சோளத்தை விதைப்பு செய்வோம். பின், வடகிழக்கு பருவமழையின் போது மக்காச்சோளம் நன்கு செழிப்புடன் வளர்ந்து மகசூல் கிடைக்கும்.</p><p>நடப்பாண்டில் ஒரு மாதத்திற்கு முன்பு நிலத்தை உழுது, மக்காச்சோளத்தை விதைத்தோம். இதற்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவானது. ஆனால், மழை இல்லாததால் மக்காச்சோள பயிர்கள் வளராமல் காய்ந்து போனது. இதனால் சோகத்தில் வேறுவழியின்றி கறவை மாடுகளை, காய்ந்த மக்காச்சோளம் வயலில் கட்டி மேய விடுகிறோம்.”</p><p>என்றார்.</p>]]></content:encoded></item><item><title>ஸ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்கும் - போலீசார் முன் மிரட்டல் விடுத்த இளைஞர்

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bomb-will-explode-in-srivilliputhur-youth-threatens-police</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bomb-will-explode-in-srivilliputhur-youth-threatens-police#comments</comments><guid isPermaLink="false">8e8917ae-730a-4241-a168-e64ead56ada5</guid><pubDate>Fri, 18 Sep 2026 03:42:54 +0000</pubDate><atom:updated>2026-09-18T03:42:54.629Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Virudhunagar,ஸ்ரீவில்லிபுத்தூர்,Srivilliputhur,Vinayagar Chaturthi,விநாயகர் சதுர்த்தி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/ryku5053/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/ryku5053/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>விருதுநகர்,</p><p>ஸ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்கும் என்று போலீசார் முன் இளைஞர் மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p> <p>விருதுநகர் மாவட்டம் <a href="https://www.dailythanthi.com/topic/ஸ்ரீவில்லிப்புத்தூர்">ஸ்ரீவில்லிபுத்தூரில் </a>இந்து மத பண்டிகையான விநாயகர் சதுர்த்தியின்போது கடந்த 16ம் தேதி விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, அப்பகுதியில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலம் வழியாக விநாயகர் ஊர்வலம் சென்றுள்ளது. அப்போது, இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.</p> <h2>வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர்</h2><p>இது தொடர்பாக இஸ்லாமிய மத வழிபாட்டு தலத்தில் போலீசார் விசாரணைக்கு சென்றனர். அப்போது, அங்கு இருந்த இளைஞர், பாரத மாதவுக்கு ஜெய் என்று கூச்சலிடுவார்கள்.. நாங்கள் கேட்டுக்கொண்டு இருக்க வேண்டுமா? என்று கூறினார்.</p><p>அப்போது மற்றொரு இளைஞர் வேகமாக ஓடி வந்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்கும் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்... என்று போலீசார் முன் கோஷம் எழுப்பினார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த இரு இளைஞர்களையும் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.</p><p>ஸ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்கும் என்று போலீசார் முன் இளைஞர் மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>நீலகிரி: கஞ்சா சாக்லேட் விற்க முயன்ற வடமாநில வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-youth-from-another-state-arrested-for-attempting-to-sell-cannabis-laced-chocolates</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-youth-from-another-state-arrested-for-attempting-to-sell-cannabis-laced-chocolates#comments</comments><guid isPermaLink="false">c452dbd6-8053-4d4f-ae11-60dddc7a228d</guid><pubDate>Fri, 18 Sep 2026 03:28:21 +0000</pubDate><atom:updated>2026-09-18T03:28:21.891Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrest,Youth,Nilgiris,நீலகிரி,விற்பனை,North Indian,sales,வடமாநில வாலிபர்,கஞ்சா சாக்லேட்,cannabis chocolates</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/ypr90yk3/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கஞ்சா சாக்லேட் விற்க முயன்ற வடமாநில வாலிபர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/ypr90yk3/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF">நீலகிரி</a> மாவட்டம் ஊட்டியில் கஞ்சா சாக்லேட் விற்க முயன்ற வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர். </p><h2>வடமாநில வாலிபரிடம் போலீசார் சோதனை</h2><p>நீலகிரி மாவட்டம், ஊட்டி பஸ் நிலையத்துக்கு நேற்று முன்தினம் வந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D">வடமாநில வாலிபர் </a>ஒருவர் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தார். இதையடுத்து ஊட்டி மேற்கு போலீசார் அவரது பையை சோதனை செய்தனர். அதில் சாக்லேட்டுகள் இருந்தது. </p><h2>கஞ்சா சாக்லேட் வைத்திருந்தவர் கைது</h2><p>போலீசார் மேற்கொண்ட விசாரணையின்போது, அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சர்பராஸ்அன்சாரி (வயது 27) என்பதும், கட்டிட ஒப்பந்ததாரராக பணியாற்றி வந்த அவர் பையில் வைத்திருந்தது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D">கஞ்சா கலந்த சாக்லேட்டுகள்</a> என்பதும் தெரியவந்தது. மேலும் சர்பராஸ்அன்சாரியை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். </p>]]></content:encoded></item><item><title>நீலகிரி: கூண்டில் சிக்கியது ஆட்கொல்லி புலியா..? வனத்துறையினர் ஆய்வு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-is-it-a-man-eating-tiger-caught-in-the-cage-forest-department-officials-inspect</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-is-it-a-man-eating-tiger-caught-in-the-cage-forest-department-officials-inspect#comments</comments><guid isPermaLink="false">41432525-8dbf-46d5-ac7a-06408990616b</guid><pubDate>Fri, 18 Sep 2026 03:26:59 +0000</pubDate><atom:updated>2026-09-18T03:26:59.952Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Forest Department,வனத்துறை,நீலகிரி,Tiger,கூடலூர்,Nilgiri,ஆட்கொல்லி புலி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/g1tnfvvg/pilk.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/g1tnfvvg/pilk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கூடலூர், </p><p>நீலகிரி மாவட்டம் கூடலூர் சில்வர் கிளவுட் பகுதியில் வனத்துறையினர் வைத்த கூண்டில் <a href="https://www.dailythanthi.com/topic/புலி">புலி</a> ஒன்று சிக்கி உள்ளது.</p><h2>3 அதிநவீன டிரோன்கள்</h2><p>கூடலூர் அருகே ஓவேலி லாரஸ்டன் பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவரை கடந்த மாதம் 9-ந் தேதியும், ரவிச்சந்திரனை 21-ந் தேதியும் அடுத்தடுத்து <a href="https://www.dailythanthi.com/topic/புலி">புலி</a> ஒன்று கடித்து கொன்றது. இந்த ஆட்கொல்லி புலியை பிடிக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். </p><p>இதைத்தொடர்ந்து லாரஸ்டன், கெவிப்பாரா, பாரம், கோக்கல் உள்ளிட்ட பகுதிகளில் முதற்கட்டமாக 70-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் களத்தில் இறங்கி புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இரவு, பகல் என எந்த நேரத்திலும் செயல்படக்கூடிய 3 அதிநவீன டிரோன்களை கொண்டு நிலப்பரப்பில் புலி எந்த இடத்தில் பதுங்கி உள்ளது என தேடும் பணியும் நடைபெற்று வந்தது.</p><h2>போக்கு காட்டிய புலி</h2><p>மேலும் 70-க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்கள் புலியின் வழித்தடங்களாக கருதப்பட்ட இடங்களில் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. இதனிடையே கன்றுக்குட்டி, ஆடுகள் கட்டப்பட்ட 13 இரும்பு கூண்டுகளையும் வனத்துறையினர் பல இடங்களில் வைத்து கண்காணித்து வந்தனர். 2 கும்கி யானைகள் மீது அமர்ந்தும் தேடும் பணி நடந்து வந்தது. ஆனால், வனத்துறையினருக்கு போக்கு காட்டும் வகையில் <a href="https://www.dailythanthi.com/topic/புலி">புலி</a> பிடிபடாமல் தப்பி வந்தது. </p><p>இதனால் முதுமலை, கூடலூர், நீலகிரி கோட்டம், கோவை, மதுரை, தேனி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கூடுதலாக வனத்துறையினர் வரவழைக்கப்பட்டு கூடலூர் பகுதியில் புலியை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. அப்போது சில இடங்களில் ஆட்கொல்லி புலியின் நடமாட்டம் இருப்பதை வனத்துறையினர் உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், சமதள நிலப்பரப்பில் புலி வராமல் அடர்ந்த புதர்களுக்குள் பதுங்கியதால் வனத்துறையினரால் மயக்க ஊசி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.</p><h2>தொழிலாளர்கள் பாதிப்பு</h2><p>இருப்பினும், இரவு நேரத்தில் புலி இரையை தேடி வரலாம் என்ற கோணத்தில் இரவிலும் படம் பிடிக்கும் (நைட் விஷன்) டிரோன்கள் மூலம் வனத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஆனால், மழை மற்றும் கடும் பனிமூட்டம் உள்பட மோசமான காலநிலையால் <a href="https://www.dailythanthi.com/topic/புலி">புலி</a> இடம் பெயர்ந்தவாறு உள்ளது. இதனிடையே புலி அச்சுறுத்தல் காரணமாக தொழிலாளர்கள் வீடுகளுக்குள் முடங்கினர். அவர்களின் குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு வாகனத்தில் காலை மற்றும் மாலை நேரத்தில் வனத்துறையினர் அழைத்து சென்று வருகின்றனர். மேலும் தோட்ட வேலைக்கு செல்லாததால் பொருளாதார ரீதி யாக தொழிலாளர்கள் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டனர்.</p><p>இந்தநிலையில் வனத்துறையினர் நடுவட்டம், சிங்காரா, கார்குடி வனப்பகுதிக்கு புலி இடம்பெயர்ந்து இருக்கலாம் என கருதினர்.</p><h2>சிக்கிய புலி</h2><p>இதைத்தொடர்ந்து முதுமலை எல்லையோர பகுதிகளில் தானியங்கி கேமராக் கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது. மொத்தம் 244 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டன. நேற்றுடன் (17.9.2026) 28 நாட்கள் ஆகியும் புலி வனத்துறையினரிடம் சிக்காமல் இருந்து வந்தது.அதே நேரத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/புலி">புலி</a> சிக்காததால் அந்த பகுதி மக்கள் தொடர்ந்து கிலியில் இருந்து வந்தனர். </p><p>இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் சில்வர் கிளவுட் பகுதியில் வனத்துறையினர் வைத்த கூண்டில் புலி ஒன்று சிக்கி உள்ளது. வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் 28 நாட்களுக்குப் பின்னர் புலி சிக்கி உள்ளது. அது 2 பேரை கொன்ற ஆட்கொல்லி புலியா என வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>காங்கிரஸ் தலைவரின் தந்தை மீது தாக்குதல்: தி.மு.க. நிர்வாகிக்கு போலீஸ் வலைவீச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/attack-on-congress-leaders-father-police-on-the-lookout-for-dmk-functionary</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/attack-on-congress-leaders-father-police-on-the-lookout-for-dmk-functionary#comments</comments><guid isPermaLink="false">1f150f84-7362-42f6-9b35-f2c9c91fddb7</guid><pubDate>Fri, 18 Sep 2026 03:15:11 +0000</pubDate><atom:updated>2026-09-18T03:15:11.725Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,தாக்குதல்,காங்கிரஸ்,Congress,Thoothukudi,தூத்துக்குடி,போலீஸ் வலைவீச்சு,attack,Father,leader,தலைவர்,தந்தை,administrator,திமுக நிர்வாகி,police netting</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/n6mshihh/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காங்கிரஸ் தலைவரின் தந்தை மீது தாக்குதல்: தி.மு.க. நிர்வாகிக்கு போலீஸ் வலைவீச்சு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/n6mshihh/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> முள்ளக்காடு பகுதியில் காங்கிரஸ் தலைவரின் தந்தைய அவரது வீட்டிற்குள் புகுந்து தாக்கிய தி.மு.க. நிர்வாகியை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81">போலீசார் வலைவீசி </a>தேடி வருகின்றனர். </p><h2>காங்கிரஸ் தலைவரின் தந்தை போலீசில் புகார்</h2><p>தூத்துக்குடி முள்ளக்காடு அருகே உள்ள நேசமணிநகரைச் சேர்ந்தவர் மரியவின்சென்ட் (வயது 72). இவர் தூத்துக்குடி மாநகர் மாவட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D">காங்கிரஸ் தலைவர்</a> சகாயராஜின் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88">தந்தை</a> ஆவார். சமூக ஆர்வலரான மரிய வின்சென்ட் தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் மதுபான கடைகள் மூடப்பட்ட பின்னரும் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீசில் புகார் தெரிவித்துள்ளார். </p><h2>வீடு புகுந்து தாக்கிய தி.மு.க. நிர்வாகிக்கு போலீஸ் வலைவீச்சு</h2><p>இதனை அறிந்த நேசமணிநகரை சேர்ந்த பொன்கற்பகராஜ்(35) என்பவர் மரியவின்சென்ட் வீட்டிற்குள் புகுந்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF">தி.மு.க. நிர்வாகி </a>பொன்கற்பகராஜை போலீசார் வலைவீசி தேடி வருகினறனர்.</p>]]></content:encoded></item></channel></rss>