<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 20 Aug 2026 01:31:16 +0000</lastBuildDate><item><title>கூட்ட நெரிசலால் விபரீதம்: அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி 9-ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-due-to-crowd-9th-grade-student-dies-after-being-hit-by-government-bus</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-due-to-crowd-9th-grade-student-dies-after-being-hit-by-government-bus#comments</comments><guid isPermaLink="false">697669a7-9a8f-48b6-bbf9-eec7f00f838f</guid><pubDate>Thu, 20 Aug 2026 01:29:25 +0000</pubDate><atom:updated>2026-08-20T01:29:25.643Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசு பஸ்,Government bus,student,மாமல்லபுரம்,உயிரிழப்பு,மாணவர்,Crowd,Die</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/l6z2oeke/281.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணவர் உயிரிழப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/l6z2oeke/281.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மாமல்லபுரம், </p><p>படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த 9-ம் வகுப்பு மாணவர், நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பலியானார்.</p><p>செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த குன்னப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் என்ற பேரம்பலம். இவரது மகன் தீனா (வயது 13). இவர், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு செல்ல காரணை பஸ் நிறுத்தத்தில் இருந்து தடம் எண் 508 என்ற அரசு பஸ்சில் ஏறினார். பஸ்சில் கூட்டம் நிரம்பி வழிந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவர் தீனா, பஸ்சின் முன்பக்க படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததாக தெரிகிறது.</p><h2>விபத்து</h2><p>வடகடம்பாடி என்ற இடத்தில் பஸ் சென்றுகொண்டிருந்தபோது மாணவர் தீனா, நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். பஸ்சின் பின்பக்க டயர் அவரது காலில் ஏறி இறங்கியது. இதில் அவரது கால் முறிந்து எலும்பு வெளியே வந்தது. உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பூஞ்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். </p><p>பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மாணவர் தீனா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.</p><p>மாணவர் பலியான சம்பவத்தால் அவர் படித்து வந்த அரசு மேல்நிலைப் பள்ளியே கடும் சோகத்தில் மூழ்கியது. இப்பகுதியில் பள்ளி நேரங்களில் குறைவான பஸ்களே இயக்கப்படுவதால் கூட்ட நெரிசல் ஏற்படுவதாகவும், இதனால் மாணவர்கள் படிக்கட்டிலேயே தொங்கியபடி பயணம் செய்வ தால் தற்போது ஒரு உயிர் பலி ஏற்பட்டு உள்ளதாகவும் அந்த பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.</p><h2>வீசாரணை</h2><p>இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் பரசுராமன் மற்றும் போலீசார் வீசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>
தமிழக சட்டசபையில் இன்றைய கூட்ட நிகழ்வுகள் என்னென்ன..?

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-proceedings-in-tamil-nadu-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-proceedings-in-tamil-nadu-assembly#comments</comments><guid isPermaLink="false">c43bb788-4b7b-42a2-b6f2-a8598f768666</guid><pubDate>Thu, 20 Aug 2026 01:11:19 +0000</pubDate><atom:updated>2026-08-20T01:11:19.109Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu Assembly,தமிழக சட்டசபை,minister,அமைச்சர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/eiv94uwo/tnaet.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/eiv94uwo/tnaet.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>தமிழக சட்டசபையில் துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.</p><p>தமிழக சட்டசபையில் இன்றைய கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.  கூட்டம் தொடங்கியதும், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவு ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசி முடிந்தவுடன் அவர்களுடைய கேள்விகளுக்கு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமணன், கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் ஆகியோர் பதிலுரை வழங்குவார்கள். நிறைவாக, தங்களுடைய துறை சார்பில் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.</p> ]]></content:encoded></item><item><title>சம்பா பருவத்துக்கு உகந்த நெல் விதைகளை மட்டுமே விற்க வேண்டும் - விதை ஆய்வு துணை இயக்குனர் அறிவுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/only-paddy-seeds-suitable-for-the-samba-season-should-be-sold-instruction-from-the-deputy-director-of-seed-inspection</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/only-paddy-seeds-suitable-for-the-samba-season-should-be-sold-instruction-from-the-deputy-director-of-seed-inspection#comments</comments><guid isPermaLink="false">5d2a492c-d78f-4583-a8c1-a8d25b6abd55</guid><pubDate>Thu, 20 Aug 2026 01:09:54 +0000</pubDate><atom:updated>2026-08-20T01:09:54.809Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thanjavur,தஞ்சாவூர்,சம்பா நெற்பயிர்,தஞ்சாவூர் செய்திகள்,சம்பா பயிர்கள்,Samba Crops</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/y3qadqc7/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/y3qadqc7/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர்,</p><p>சம்பா பருவத்துக்கு உகந்த நெல் விதைகளை மட்டுமே விற்க வேண்டும் என தஞ்சை மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதா அறிவுறுத்தியுள்ளார்.</p><p>இது தொடர்பாக அவர், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><h2>சம்பா பருவம்</h2><p>தஞ்சை மாவட்டத்தில் சம்பா பருவ நெற்பயிர் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தற்போது தயாராகி வருகின்றனர். தனியார் விதை விற்பனையாளர்கள், சான்று விதைகளில் இரு அட்டைகள் (வெள்ளை அல்லது நீல நிறம்) முறையே சான்று அட்டை மற்றும் விவர அட்டை பொருத்தப்பட்ட விதைகளை மட்டுமே விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். விவர அட்டையில் பயிர், ரகம், குவியல் எண். காலாவதி நாள், பயிர் செய்ய ஏற்ற பருவம் உள்பட 14 வகையான விவரங்கள் விதைச் சட்ட விதிகளின்படி கட்டாயம் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.</p><p>அனைத்து தனியார் விதை விற்பனையாளர்களும் விதை இருப்பு பதிவேடு மற்றும் முளைப்பு அறிக்கை ஆகியவற்றை கட்டாயம் பராமரிக்க வேண்டும். குவியல் வாரியாக தனித்தனி பக்கங்களில் விதை இருப்பு விவரங்களை பதிவிட வேண்டும். நடப்பு சம்பா பருவத்தில் 150 முதல் 160 நாட்கள் வயதுடைய நீண்டகால நெல் ரகங்களே ஏற்றவை. நீண்டகால ரகங்களான சாவித்திரி (சிஆர் 1009), சி.ஆர். 1009 சப்-1 மற்றும் ஏ.டி.டி. 51 போன்ற ரகங்களை முதலில் விற்பனை செய்ய வேண்டும்.</p><h2>2,750 டன் விதைநெல்</h2><p>அதனைத் தொடர்ந்து மத்தியகால நெல் ரகங்களான ஏ.டி.டி.38, 39, 42, 46, வெள்ளைப் பொன்னி, ஐ.ஆர். 20, கோ 43, 46, 50 மற்றும் மேம்படுத்தப்பட்ட வெள்ளைப்பொன்னி போன்ற ரகங்களை விற்பனை செய்ய வேண்டும். வெளிமாநில ரகங்களான பி.பி.டி. 5204, எம்.டி.யூ. 7029, என்.எல்.ஆர். 34449, கே.என்.எம்.1638 போன்ற விதைகளை விற்பனை செய்யும்போது விற்பனையாளர்கள் படிவம் 2-ஐ கட்டாயம் வைத்திருக்க வேண்டும். விதைகளை விற்பனை செய்யும்போது விவசாயிகளுக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும்.</p><p>நீண்டகால மற்றும் மத்தியகால நெல் ரகங்களில் சுமார் 2,750 டன் விதைநெல் தனியார் விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவற்றின் முளைப்புத்திறனை உறுதி செய்யும் வகையில் கும்பகோணம், தஞ்சை மற்றும் பட்டுக் கோட்டை விதை ஆய்வாளர்களால் அலுவலக விதை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, தஞ்சை விதை பரிசோதனை நிலையத்திற்கு முளைப்புத்திறன் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது.</p><h2>உரிய நடவடிக்கை</h2><p>எனவே சம்பா பருவத்துக்கு ஏற்ற நெல் ரகங்களை மட்டுமே விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். சம்பா பருவத்துக்கு உகந்தது அல்லாத <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நெல் ரகங்களை</a> விற்பனை செய்தாலோ அல்லது விதைச் சட்ட விதிகளை பின்பற்றாமல் விற்பனை செய்தாலோ, விதைச் சட்டம்-1966, விதை விதிகள்-1968 மற்றும் விதை கட்டுப்பாட்டு ஆணை-1983 ஆகியவற்றின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>மேற்கண்டவாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் மகளிர் திட்ட நிதியில் ரூ.125 கோடி முறைகேடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-125-crore-misappropriation-of-womens-development-scheme-funds-in-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-125-crore-misappropriation-of-womens-development-scheme-funds-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">07322d80-21b7-4ab9-874d-4e0d25cd33de</guid><pubDate>Thu, 20 Aug 2026 01:03:05 +0000</pubDate><atom:updated>2026-08-20T01:03:05.174Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>முறைகேடு,Rural development department,ஊரக வளர்ச்சித் துறை,மகளிர் மேம்பாட்டு நிறுவனம்,Women&apos;s Development Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/u5mqbh6a/CHENNAI-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/u5mqbh6a/CHENNAI-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மகளிர் திட்ட நிதியில் ரூ.125 கோடி முறைகேடு நடந்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வெளிவந்துள்ளது.</p><p>சென்னை,</p><h2>மகளிர் திட்ட நிதி</h2><p>தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் 1983-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்திற்கு மத்திய, மாநில அரசுகள் சராசரியாக ஆண்டுக்கு சுமார் ரூ.15 ஆயிரம் கோடி நிதி வழங்கி வருகிறது. தமிழகத் தில் 38 மாவட்டங்களில் 388 வட்டார அளவிலான பிளாக்குகள் மற்றும் 12,500 கிராம இயக்க அலகுகள் செயல்பட்டு வருகின்றன.</p><p>இந்த மகளிர் மேம்பாட்டுக்கு வழங்கப்படும் நிதியானது தமிழகத்தில் 186 வட்டாரத்தில் சுமார் ரூ.125 கோடி முறை கேடு நடந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடு குறித்து தேனி மாவட்டம் மேலச்சொக்கநாதபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ராமகிருஷ்ணன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><h2>ரூ.125 கோடி முறைகேடு</h2><p>அதில் கடந்த 5 மாதங்களில் மயிலாடுதுறை, திருவாரூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், தேனி, அரியலூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், தூத்துக்குடி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் சுமார் 186 பிளாக்குகளை தணிக்கை செய்ததில் சுமார் ரூ.125 கோடிக்கு மேல் போலியான பட்டியல்கள் தயார் செய்து பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது.</p><p>அந்த பணம் பயனாளிகளுக்கு செல்ல வேண்டிய நிதி, வட்டார இயக்க மேலாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், அவர்களது உறவினர்கள் மற்றும் தனிநபர்களின் வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இது தவிர பல்வேறு வழிகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளன.</p><h2>சி.பி.ஐ. விசாரணை</h2><p>இதுவரை 186 வட்டாரங்களில் மட்டுமே தணிக்கை செய்யப் பட்ட நிலையில் ரூ.124 கோடியே 74 லட்சத்து 45 ஆயிரத்து 279 முறைகேடு நடந்துள்ளது. மீதம் உள்ள வட்டாரங்களில் தணிக்கை செய்தால் பல நூறு கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றது தெரியவரும். எனவே தமிழகம் முழுவதும் எவ்வளவு முறைகேடு செய்யப்பட்டுள்ளது என்பதை அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி முறைகேடு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளத்துக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-festival-special-trains-to-kerala-via-salem</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-festival-special-trains-to-kerala-via-salem#comments</comments><guid isPermaLink="false">5cbbb538-4292-491e-a97e-63431307abb5</guid><pubDate>Thu, 20 Aug 2026 00:47:24 +0000</pubDate><atom:updated>2026-08-20T00:47:24.141Z</atom:updated><atom:author><atom:name>Ganesh S</atom:name><atom:uri>/api/author/2406201</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,Special trains,Kerala,Onam festival,ஓணம் பண்டிகை,Onam,கேரளம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/klhtg0pf/Untitled-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/klhtg0pf/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஓணம் பண்டிகையை முன்னிட்டு சேலம் வழியாக கேரளத்துக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப் படுகிறது.</p><p>இதுகுறித்து சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-</p><h2>சிறப்பு ரெயில்</h2><p>ஓணம் பண்டிகை வருகிற 26-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பெங்களூரு வில் இருந்து சேலம் வழியாக கேரளம் மாநிலம் திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத் துக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி, இன்று (வியாழக்கிழமை) மாலை 5.10 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் திருவனந்தபுரம் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06569) கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, குப்பம் வழியாக சேலத்துக்கு இரவு 9.25 மணிக்கு வந்தடையும்.</p><p>பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து 9.30 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக மறுநாள் காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்துக்கு சென் றடைகிறது. இதேபோல் மறுமார்க்கமாக நாளை மறுநாள் (சனிக்கிழமை) மதியம் 12.40 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் பெங்களூரு சிறப்பு ரெயில் (வண்டி எண் 06570) போத்தனூர், திருப்பூர், ஈரோடு வழியாக சேலத்துக்கு இரவு 11.25 மணிக்கு வந்தடைகிறது. பின்னர் 11.28 மணிக்கு ரெயில் புறப்பட்டு குப்பம், பங் காருபேட்டை வழியாக மறுநாள் காலை 6 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது.</p><h2>சென்னை சென்ட்ரல்-மங்களூரு</h2><p>இதேபோல், சென்னை சென்ட்ரல்-மங்களூரு சிறப்பு ரெயில் (06041) நாளை (வெள்ளிக்கி ழமை) மற்றும் 28-ந்தேதி ஆகிய 2 நாட்கள் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் சென்னை சென்ட்ரலில் இருந்து (வெள்ளிக்கிழமை) இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, சொரனூர், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு வழியாக மறுநாள் (சனிக்கிழமை) மாலை 5.00 மணிக்கு மங்களூரு ரெயில் நிலையத்தை சென்றடையும்.</p><p>மறுமார்க்கத்தில், மங்களூரு-சென்னை சென்ட்ரல் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சிறப்பு ரெயில்</a> (06042) நாளை மறுநாள்(சனிக்கிழமை) மற்றும் 29-ந்தேதிகளில் இயக்கப்படும். இந்த ரெயில் மங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து சனிக்கிழமை இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு, காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, சொரனூர், பாலக்காடு. போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக மறு நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 11.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை சென்றடையும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-53</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-53#comments</comments><guid isPermaLink="false">52149fa2-f3a5-44cb-946f-71640d271c48</guid><pubDate>Thu, 20 Aug 2026 00:45:08 +0000</pubDate><atom:updated>2026-08-20T00:45:08.597Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல் விலை,டீசல் விலை,Petrol and diesel prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/odo66a6v/petrol.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/odo66a6v/petrol.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.</p> <p>பெட்ரோல், டீசல் விலை</p><p>இந்நிலையில், சென்னையில் இன்று (20.08.2026 வியாழக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ. 99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>வேளாண் மானிய திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம்: தமிழக அரசு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aadhaar-number-mandatory-for-agricultural-subsidy-schemes-tamil-nadu-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aadhaar-number-mandatory-for-agricultural-subsidy-schemes-tamil-nadu-government#comments</comments><guid isPermaLink="false">16d8f4d9-8897-427e-98b3-9d97b3934d14</guid><pubDate>Wed, 19 Aug 2026 23:51:50 +0000</pubDate><atom:updated>2026-08-19T23:51:50.699Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,Agricultural,வேளாண்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/x1efv6ju/Untitled-1.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/x1efv6ju/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p> <p>தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-</p> <p>வேளாண் வணிகத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மாம்பழம், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருத்திக்கான விலை குறைவுக்கான தொகை வழங்கும் திட்டங்களில் மானியம் மற்றும் சலுகைகளை பெறும் பயனாளிகள் தங்களது ஆதார் எண்ணை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் எண் இல்லாதவர்கள், புதிய ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும். ஆதார் எண் கிடைக்கும் வரை, ஆதார் பதிவு செய்ததற்கான ஒப்புகை சீட்டுடன், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம். சாதி சான்றிதழ், மாற் றுத்திறனாளி சான்றிதழ் அல்லது மருத்துவ அடையாள அட்டை உள்ளிட்ட மாற்று ஆவணங் களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பித்து சலுகைகளை பெறலாம். இந்த ஆவணங்களை அதிகாரி கள் இணையதளம் மூலம் சரிபார்ப்பார்கள்.</p>  <p>கைரேகை, முகம் அல்லது கருவிழி பதிவு மூலம் ஆதார் சரிபார்ப்பு தோல்வியடைந்தால், செல் போன் 'ஓ.டி.பி.' அல்லது 'கியூ.ஆர். கோடு' மூலம் சரிபார்க்கப்படும். 18 வயதுக்குட்பட்ட குழந் தைகளுக்கு ஆதார் எண் இல்லை என்றாலும், பெற்றோரின் ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் சலுகைகள் மறுக்கப்பட மாட்டாது. மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு சலுகைகள் மறுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, மத்திய அரசின் நேரடி மானிய பரி மாற்ற திட்டத்தின் 2017-ம் ஆண்டு வழிகாட்டுதலின்படி விதிவிலக்கு நடைமுறைகள் பின்பற்றப் படும். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>

எழும்பூரில் பராமரிப்பு பணி: 4 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/maintenance-work-at-egmore-4-express-trains-to-operate-from-tambaram</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/maintenance-work-at-egmore-4-express-trains-to-operate-from-tambaram#comments</comments><guid isPermaLink="false">2b52a8a0-8ba1-4e97-8b87-7bf8c449d6cb</guid><pubDate>Wed, 19 Aug 2026 22:35:00 +0000</pubDate><atom:updated>2026-08-19T22:35:00.000Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>train service,ரெயில்கள்,பராமரிப்பு பணி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/jmvulgvr/Untitled-1.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/jmvulgvr/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p> <p>தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p> <p>எழும்பூர் ரெயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்புப் பணி காரணமாக, எழும்பூ ரில் இருந்து புறப்படும் சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாம்பரத்திலிருந்தும். மற்ற பகுதிகளில் இருந்து எழும்பூருக்கு வரும் சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாம்பரம் வரையும் இயக்கப்படவுள்ளன. இந்த ரெயில் சேவைகள் ஏற்கனவே 19-ந்தேதி வரை மாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது இன்று (20-ந்தேதி) முதல் வருகிற 26-ந்தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எழும்பூரில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர் செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் (வண்டி எண். 16865), கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (20635), திருச்சி செல்லும் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் (12653) மற்றும் மங்களூரு எக்ஸ்பிரஸ் (16159) ஆகிய ரெயில்கள் நாளை (21-ந்தேதி) முதல் 25-ந்தேதி வரையில் தாம்பரத்தில் இருந்து புறப்படும்.</p><p>இதேபோல, தஞ்சாவூரிலிருந்து புறப்படும் உழவன் எக்ஸ்பிரஸ் (16866), கொல்லத்திலிருந்து புறப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (20636), மங்களூருவிலிருந்து புறப்படும் மங்களூரு எக்ஸ்பி ரஸ் (16160), சேலத்திலிருந்து புறப்படும் எக்ஸ்பிரஸ் (22154) ஆகிய ரெயில்கள் இன்று (20-ந்தேதி) முதல் 24-ந்தேதி வரையில் எழும்பூருக்கு பதிலாக தாம்பரம் வரை இயக்கப்படும். மேலும், திருச்சியிலிருந்து புறப்படும் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் (12654), மேற்கண்ட தேதியில் எழும்பூருக்கு பதிலாக மாம்பலம் வரை இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>
மத்திய மந்திரி அமித்ஷாவுடன் முதல்-அமைச்சர் விஜய் சந்திப்பு
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-meets-union-minister-amit-shah</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-meets-union-minister-amit-shah#comments</comments><guid isPermaLink="false">830ff37b-47d4-4614-9e5e-e832c7e38014</guid><pubDate>Wed, 19 Aug 2026 17:03:22 +0000</pubDate><atom:updated>2026-08-19T17:03:22.498Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>அமித்ஷா,முதல்-அமைச்சர் விஜய்,CMVijay‌</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/nk0dfk7g/Untitled-1.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/nk0dfk7g/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p> <p>தென் மண்டல மாநில முதல்வர்கள் மாநாடு சென்னையை அடுத்த கோவளத்தில் நாளை நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்குகிறார். தமிழக முதல் அமைச்சர் விஜய் துணைத்தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த மாநாட்டில் கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களின் முதல்-மந்திரிகளும் தலைமை செயலாளர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொள்கிறார்கள்.</p><p>இந்த மாநாட்டில் பங்கேற்க உள்துறை மந்திரி அமித்ஷா இரவு 9 மணியளவில் சென்னை வந்தார். பின்னர் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு அவர் வருகை தந்தார்.</p><p>அங்கு நட்சத்திர ஹோட்டலில் மத்திய மந்திரி அமித்ஷாவை முதல்-அமைச்சர் விஜய் பூங் கொத்து கொடுத்து வரவேற்றார். மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆந்திர முதல்-மந்திரி சந்திர பாபு நாயுடு, தெலுங்கானா துணை முதல்-மந்திரி மல்லுப்பட்டி விக்ரமர்கா, அந்தமான்-நிக் கோபர் தீவுகள் துணை நிலை கவர்னர், லட்சத்தீவு அதிகாரிகள் மற்றும் அந்தந்த மாநில உயர்அதிகாரிகள் வந்திருந்தனர்.</p><p>அவர்களும் மத்திய மந்திரி அமித்ஷாவை வரவேற்றனர். அதனை தொடர்ந்து அமித்ஷா சிறிது நேரம் கலந்துரையாடினார். அமித்ஷாவும், விஜய்யும் சந்தித்து சிறிது நேரம் பேசினர். அதன்பின் இரவு விருந்தில் அனைவரும் உணவருந்தினர். </p>]]></content:encoded></item><item><title>‘கருத்து சுதந்திரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் எதிரான நடவடிக்கைகளை த.வெ.க. அரசு கைவிட வேண்டும்’ - முகம்மது முபாரக்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tvk-government-must-abandon-actions-that-go-against-freedom-of-expression-and-democracy-muhammad-mubarak</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tvk-government-must-abandon-actions-that-go-against-freedom-of-expression-and-democracy-muhammad-mubarak#comments</comments><guid isPermaLink="false">de61b99b-05d4-4080-a8e7-1c5542af5ec3</guid><pubDate>Wed, 19 Aug 2026 16:33:46 +0000</pubDate><atom:updated>2026-08-19T16:33:46.836Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை முபாரக்,Nellai Mubarak</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/g2rxgncn/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/g2rxgncn/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை முடக்கும் தமிழக அரசின் சுற்றறிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது என எஸ்டி.பி.ஐ. கட்சியின் தலைவர் முகம்மது முபாரக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-</p><p>“அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் ஜனநாயகப் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு கல்லூரிக் கல்வி ஆணையரால் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருப்பதாக வெளியாகும் செய்திகள் கடும் அதிர்ச்சியை அளிக்கின்றன. மாணவர்களின் உரிமைகளைப் பறிக்கும் இத்தகைய நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.</p><p>மாணவர்கள் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுப்பதற்காகக் காவல்துறை, கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து செயல்பட வேண்டும் என்ற அணுகுமுறை,  இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்கு வழங்கி இருக்கும் ஜனநாயக உரிமைகளுக்கே எதிரானதாகும்.</p><p>மாணவர்கள் பாடப் புத்தகங்களை மட்டும் படிக்கும் எந்திரங்கள் அல்ல; சமூகப் பிரச்சினைகளுக்காகவும் அநீதிகளுக்கு எதிராகவும் குரல் கொடுக்கும் நாட்டின் எதிர்காலத் தூண்கள். அமைதியான வழியில் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யவும், அறப்போராட்டங்களில் ஈடுபடவும் மாணவர்களுக்கு முழு உரிமை உண்டு. அதிகார அழுத்தங்கள் மூலம் மாணவர்களின் குரலை ஒடுக்க நினைப்பது தெளிவான அடக்குமுறையாகும்.</p><p>மாற்றுக் கருத்துகளையும் கேள்விகளையும் கண்டு அச்சப்படுபவர்களே கருத்துச் சுதந்திரத்தை நசுக்க முயல்வார்கள். அதிகாரத்தைக் கொண்டு மாணவர்களின் கேள்விகளைத் தற்காலிகமாகத் தடுக்க முடியுமே தவிர, சமூகப் பொறுப்புள்ள ஒரு தலைமுறை உருவாவதை யாராலும் தடுக்க முடியாது.</p><p>எனவே, கருத்து சுதந்திரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் எதிரான இத்தகைய நடவடிக்கைகளை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். மாணவர்களை அச்சுறுத்தாமல், அவர்களின் ஜனநாயக உரிமைகளை மதித்து நடப்பதே ஒரு சிறந்த அரசிற்கு அழகாகும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>வழிபாட்டு தலங்களில் பாகுபாடு காட்டக்கூடாது - சென்னை ஐகோர்ட்டு திட்டவட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-discrimination-in-places-of-worship-says-madras-high-court</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-discrimination-in-places-of-worship-says-madras-high-court#comments</comments><guid isPermaLink="false">e4cc3534-e0fa-4ba0-9302-25fab295337e</guid><pubDate>Wed, 19 Aug 2026 15:59:13 +0000</pubDate><atom:updated>2026-08-19T15:59:13.727Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>temples,சென்னை ஐகோர்ட்டு,Chennai Highcourt,வழிபாட்டு தலங்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/ej64b7ya/Untitled-11.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/ej64b7ya/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இறைவன் முன் அனைத்து உயிர்களும் சமம் என்பதால், வழிபாட்டு தலங்களில் யாருக்கும் பாகுபாடு காட்ட இடமில்லை என்று சென்னை ஐகோர்ட்டு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.</p><h2>பாரபட்சம்</h2><p>காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள மணவாள மாமுனிகள் சன்னதியில், பிராமணர் அல்லாத தென்கலை வைணவ பக்தர்களுக்கு தீர்த்தம், பிரசாதம் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக மாதவன் ராமானுஜ தாசன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.</p><p>மேலும், பிராமணர் அல்லாத பக்தர்கள் மணவாள மாமுனிகள் சன்னதியில் பிரதான வாசல் வழியாக அனுமதிக்கப்படாமல் பக்கவாட்டு வாசல் வழியே அனுப்பப்படுவதாகவும், நாலாயிர திவ்யப்பிரபந்தம் பாட அனுமதி மறுக்கப்படுவதாகவும் மனுதாரார் குறிப்பிட்டார்.</p><h2>பாகுபாடு இல்லை</h2><p>இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோவில் நிர்வாகம் தரப்பில், "சன்னதிகள் மிகக்குறுகிய இடவசதி கொண்டதாக இருப்பதால் பொது பக்தர்கள் சன்னதிக்கு வெளியே நிறுத்தப்படுகிறார்களே தவிர, இதில் எந்தவித சாதிப்பாகுபாடும் இல்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது.</p><p>குறிப்பிட்ட காலங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் பொது பக்தர்கள் சன்னதிகளில் திவ்யப்பிரபந்தம் பாடி இறைவனை வழிபட எந்த தடையும் இல்லை எனவும், கோவிலில் தீர்த்தம், பிரசாதம் வழங்குவதில் அனைத்து பக்தர்களும் சமமாக நடத்தப்படுவார்கள், எவ்வித பாகுபாடும் காட்டப்படாது என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.</p><h2>வழக்கு முடித்துவைப்பு</h2><p>இந்த உத்தரவாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், "இறைவனின் பார்வையில் அனைத்து உயிர்களும் சமமானவர்கள், இறைவன் யாரிடமும் பாகுபாடு காட்டுவதில்லை என்ற பகவத் கீதையின் வாசகத்தை சுட்டிக்காட்டி வழிபாட்டு தலங்களில் யாருக்கும் பாகுபாடு காட்ட இடமில்லை” என திட்டவட்டமாக தெரிவித்தனர். பின்னர் கோவில் நிர்வாகம் அளித்த உத்தரவாதத்தை உறுதியாக பின்பற்றி செயல்பட உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை வந்தடைந்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/home-minister-amit-shah-has-arrived-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/home-minister-amit-shah-has-arrived-in-chennai#comments</comments><guid isPermaLink="false">27e8ba68-81c0-4c3b-a2cf-5f2dcdeb8fee</guid><pubDate>Wed, 19 Aug 2026 15:58:13 +0000</pubDate><atom:updated>2026-08-19T15:58:13.335Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அமித்ஷா,Chennai,சென்னை,Amit Sha</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/qk5e2pu3/amit-sha.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/qk5e2pu3/amit-sha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தென்மாநில முதல்-மந்திரிகள் மாநாடு நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கடந்த 2022-ம் ஆண்டுக்கு பிறகு இந்த மாநாடு நடைபெறவில்லை. இந்தநிலையில், 31-வது தென்மாநில முதல்-மந்திரிகள் மாநாடு  சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொடங்குகிறது. இந்த மாநாட்டுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை தாங்குகிறார். துணைத்தலைவராக தமிழக முதல் அமைச்சர் விஜய் அறிவிக்கப்பட்டுள்ளார். </p><p>இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா தனி விமானத்தில் இன்று சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அமித்ஷாவுக்கு பாஜகவினர் வரவேற்பு அளித்தனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக கோவளத்திற்கு அமித்ஷா சென்றார். அமித்ஷா வருகை காரணமாக சென்னையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.</p><h2>தென் மண்டல கவுன்சில் கூட்டம்: </h2><p>மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள், கூட்டுறவை பலப்படுத்துவது. கட்டமைப்பு மேம் பாடு, நீர்வள பகிர்வு, கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், பேரிடர் மேலாண்மை, குற்றங்கள் தடுப்பு, எல்லை பிரச்சினைகள் உள்ளிட்ட பல் வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படு கிறது.தற்போது காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகம் மற்றும் தமிழகம் இடையே முரண்பாடுகள் எழுந்த நிலையில் இந்த கூட்டம் மிகுந்த முக்கி யத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.  </p> ]]></content:encoded></item><item><title>அந்தியூர்: சந்தன மரம் வெட்டிய திருச்சி வாலிபர்கள் 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/andiyur-two-trichy-youths-arrested-for-cutting-sandalwood-tree</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/andiyur-two-trichy-youths-arrested-for-cutting-sandalwood-tree#comments</comments><guid isPermaLink="false">acc30358-e161-469d-a618-ab7689f8124a</guid><pubDate>Wed, 19 Aug 2026 15:51:15 +0000</pubDate><atom:updated>2026-08-19T15:51:15.113Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>arrested,திருச்சி,Trichy,2 பேர் கைது,அபராதம்,சந்தன மரம்,Sandalwood trees,அந்தியூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/71xmgn3o/sandal-wood.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ செந்தில்குமார், லோகநாதன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ அந்தியூர்: சந்தன மரம் வெட்டிய திருச்சி வாலிபர்கள் 2 பேர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/71xmgn3o/sandal-wood.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>அந்தியூர்,</p><p>அந்தியூர் அருகே விவசாய தோட்டத்தில் புகுந்து<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"> சந்தன மரத்தை </a>வெட்டி கடத்த முயன்ற திருச்சி வாலிபர்கள் 2 பேரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். அவர்களுக்கு அதிகாரிகள் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.</p> <h2>விடியற்காலையில் துணிகரம்</h2><p>ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் தாமரைக்கரை அருகே உள்ளது ஈரட்டி பீட். இதன் கட்டுப்பாட்டில் உள்ள ஒந்தனை வனப்பகுதியை ஒட்டி, ஈரண்ணன் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் விலை உயர்ந்த சந்தன மரம் ஒன்று இருந்தது. இந்நிலையில், நேற்று அதிகாலை வேளையில் மர்ம நபர்கள் இருவர் அந்தத் தோட்டத்திற்குள் புகுந்து, ரகசியமாக ரம்பத்தால் சந்தன மரத்தை அறுத்து கொண்டிருந்தனர். மரத்தை அறுக்கும் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த விவசாயி ஈரண்ணன், உடனடியாக அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். </p><h2>பொதுமக்களிடம் சிக்கினர்</h2><p>அங்கு திரண்ட பொதுமக்கள், தப்பியோட முயன்ற 2 பேரையும் நாலாபுறமும் சூழ்ந்து கையும் களவுமாக பிடித்து வைத்தனர். இதுகுறித்து அந்தியூர் வனத்துறைக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், வனவர் ஈஸ்வரமூர்த்தி தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பிடிபட்ட இருவரையும் மீட்டு தீவிர விசாரணை நடத்தினர்.</p><h2>சந்தன மரம்</h2><p>விசாரணையில் அவர்கள் திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா நெட்ட வேளாம்பட்டியை சேர்ந்த மருதை என்பவருடைய மகன் செந்தில்குமார் (வயது 35), முசிறி தாலுகா சாலக்காடு அய்யனார் கோவிலை சேர்ந்த கோவிந்தசாமி என்பவருடைய மகன் லோகநாதன் (27). இவர்கள் இருவரும் குருநாதசாமி கோவில் திருவிழாவிற்கு வந்துள்ளனர். பின்னர், பர்கூர் வனப்பகுதிக்குள் சென்று 2 நாட்கள் தங்கியிருந்து, கடத்தும் நோக்கில் சந்தன மரத்தை வெட்டியதை ஒப்புக்கொண்டனர்.</p><h2>ரூ.50 ஆயிரம் அபராதம்</h2><p>இதையடுத்து, அவர்கள் வெட்டி வைத்திருந்த சுமார் 75 கிலோ எடை கொண்ட 5 அடி நீள சந்தன மரம், மரம் அறுக்கப் பயன்படுத்திய ரம்பம் மற்றும் கத்தி ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து, மாவட்ட வன அலுவலரின் உத்தரவின் பேரில், கைது செய்யப்பட்ட செந்தில்குமார் மற்றும் லோகநாதன் ஆகிய இருவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம், மொத்தம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என முதலில் அறிவித்தவர் மு.க.ஸ்டாலின் - கனிமொழி எம்.பி.</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/stalin-first-to-announce-rahul-gandhi-as-pm-says-kanimozhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/stalin-first-to-announce-rahul-gandhi-as-pm-says-kanimozhi#comments</comments><guid isPermaLink="false">bba19432-e403-41c6-934f-a88f67b9abe0</guid><pubDate>Wed, 19 Aug 2026 15:41:08 +0000</pubDate><atom:updated>2026-08-19T15:41:08.037Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,காங்கிரஸ்,Congress,ராகுல் காந்தி,கனிமொழி,Kanimozhi,RahulGandhi,MKstalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/eain0ryk/Untitled-10.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கனிமொழி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/eain0ryk/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் 'நாளைய பிரதமர் விஜய் தான்' என்று சட்டசபையில் அமைச்சர் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது:-</p><p>இதற்கு காங்கிரஸ் இயக்கத்தில் இருக்கக்கூடிய நண்பர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். நாங்கள் கருத்து தெரிவிப்பது முக்கியமல்ல. காங்கிரஸ், திமுக கூட்டணியில் இருந்தபோதே, காங்கிரஸ் கட்சியே இதுபற்றி அறிவிக்காத காலகட்டத்தில், எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் தான் ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும் என்று முதன்முதலில் அறிவித்தார்.</p><p>தற்போது கூட்டணியில் இருந்துகொண்டு இதுபோன்ற அறிவிப்புகள் வெளியாகும்போது, அதுகுறித்து காங்கிரஸ் இயக்கத்தைச் சேர்ந்த நண்பர்கள்தான் பதிலளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் அரசு சென்ட் தொழிற்சாலை அமைக்க, தவெக அரசு முன்வர வேண்டும் - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendran-urges-tamil-nadu-govt-to-establish-scent-factory</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendran-urges-tamil-nadu-govt-to-establish-scent-factory#comments</comments><guid isPermaLink="false">88b78aac-4179-4c7b-bd2d-20699388b9e7</guid><pubDate>Wed, 19 Aug 2026 15:16:14 +0000</pubDate><atom:updated>2026-08-19T15:16:14.419Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,தமிழகம்,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,factory,தொழிற்சாலை,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,தவெக அரசு,TVK Government</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/yys7npv0/nainar-nagendheran.new.gif" width="752"><media:title type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/yys7npv0/nainar-nagendheran.new.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் அரசு சென்ட் தொழிற்சாலை அமைக்க, தவெக அரசு முன்வர வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன்</a> தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>குண்டுமல்லி பூ</h2><p>கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் போதிய விலை கிடைக்காததாலும், முறையாக சந்தைப்படுத்த முடியாததாலும் சுமார் 1.5 டன் எடையுள்ள குண்டுமல்லி பூக்களை விவசாயிகள் தென்பெண்ணை ஆற்றில் வீசி சென்றுள்ள சம்பவம் மிகுந்த வருத்தமளிக்கிறது. </p><h2> பூக்கள் சாகுபடி</h2><p>காவேரிப்பட்டினம், அவதானப்பட்டி, திம்மாபுரம், சந்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கிட்டத்தட்ட சுமார் 1500-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் பூக்கள் சாகுபடி நடந்து வரும் நிலையில், அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக இந்த முறை பருவம் தவறி குண்டுமல்லிகை பூக்கள் முன்னரே பூத்து விட்டன. இதனால் சந்தையில் ஏற்பட்ட கடும் விலை சரிவால், இந்த ஆண்டின் மகசூலை நம்பியிருந்த பூ விவசாயிகளும் தற்போது தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். </p><h2>சென்ட் தொழிற்சாலை</h2><p>காய்கறிகள் மற்றும் பழங்களை விட பூக்கள் மிக மிக மென்மையானவை, எளிதில் வாடி போகக்கூடியவை, மிக நீண்ட நாட்கள் பதப்படுத்த முடியாதவை. எனவே மல்லி, மரிக்கொழுந்து, சாமந்தி, அரளி உள்ளிட்ட பூக்கள் பெருமளவில் விளையும் பகுதிகளான மதுரை, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை, சேலம், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு சார்பில் ஒரு சென்ட் தொழிற்சாலை அமைக்க வேண்டும். </p><p>மேலும், எதிர்பாரா இயற்கை பொய்த்தலை சமாளித்து, நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், நியாயமான விலைக்கு அரசே நேரடியாக விவசாயிகளிடம் இருந்து பூக்களை கொள்முதல் செய்ய வேண்டும் என <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜயிடம்</a> கோரிக்கை வைக்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தனியார் நிறுவனம் மூலம் போக்குவரத்துக் கழகங்களில் நடத்துநர்களை நியமிப்பதா? - சீமான் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/private-firm-appointments-in-transport-corporations-seeman-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/private-firm-appointments-in-transport-corporations-seeman-condemns#comments</comments><guid isPermaLink="false">9e4875ed-1b35-485f-b39a-7829fa3798ef</guid><pubDate>Wed, 19 Aug 2026 15:13:06 +0000</pubDate><atom:updated>2026-08-19T15:13:06.597Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,Seeman,Transport,போக்குவரத்துக் கழகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/t1gkag7f/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சீமான்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/t1gkag7f/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>உத்தரப்பிரதேச தனியார் நிறுவனம் மூலம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் நடத்துநர்களை நியமிப்பது தமிழ்நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் (MTC) பேருந்துகளில் காலியாகவுள்ள 1,797 நடத்துநர் பணியிடங்களை, 61.56 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்காக, உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 'எஸ்.எஸ். எண்டர்பிரைசஸ்' (S.S. Enterprises) என்ற தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. அரசுப்பணியிடங்களில் ஊழியர்களை ஒப்பந்த முறையில் நியமனம் செய்வதைக் கைவிட்டு, நிரந்தர ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்று போராடி வரும் வேளையில், உத்தரப்பிரதேச தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை அளித்துள்ள ஊழியர்களின் உரிமைப்பறிப்பு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் இறையாண்மைக்கும் எதிரான கொடுஞ்செயலாகும்.</p><p>தமிழ்நாட்டில் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடிக்கொண்டிருக்கும் நிலையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக நடத்துநர்களை உத்தரப்பிரதேச மாநில நிறுவனத்தின் மூலம் நியமிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? இதற்குத்தான் இளைஞர்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா முதல்வர் அவர்களே? உத்தரப்பிரதேச நிறுவனம் தமிழக இளைஞர்களைப் பணியமர்த்துமா? அல்லது இந்தி பேசும் வடமாநில இளைஞர்களைப் பணியமர்த்துமா? அப்படியென்றால் அது மறைமுக இந்தி திணிப்பிற்கு வழிவகுக்காதா? ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள வங்கிகள், தொடர்வண்டி நிலையங்கள், அஞ்சலகங்கள் உட்பட மத்திய அரசு நிறுவனங்களில் இந்தி பேசும் அதிகாரிகளால் தமிழ்நாடு மக்கள் பாதிப்புக்கு ஆளாவது போதாது? தமிழ்நாடு பேருந்துகளிலும் இனி மொழி புரியாத வடமாநிலத்தவரால் தமிழ்நாட்டு மக்கள் தத்தளிக்க வேண்டுமா?</p><p>தமிழ்நாட்டிற்கான டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கர்நாடகாவைச் சேர்ந்தவரை நியமித்தபோதே நாம் தமிழர் கட்சி அதனைக் கடுமையாக எதிர்த்தது. அதற்கான பலனை கர்நாடக முதல்வரின் பதிலடியால் தற்போது தவெக அரசு எதிர்கொள்கிறது. கர்நாடக வனத்துறையால் 3 தமிழர் கொல்லப்பட்டதற்கு தமிழ்நாடு முதல்வர் கண்டனம் தெரிவித்ததற்கு, எங்கள் மாநில விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று காட்டமாக கர்நாடக முதல்வர் எதிர்வினை ஆற்றும் அளவுக்கு, மாநில நிர்வாகத்தில் மற்ற மாநிலத்தவர் தலையிடக்கூடாது என்பதில் கர்நாடக அரசு இறுக்கமாக இருக்கின்றது. கர்நாடக முதல்வரின் அடாவடி பதில் ஏற்புடையது இல்லை என்றாலும், அரச நிர்வாகத்தில் மற்ற மாநிலத்தவரின் தலையீடு இருக்க கூடாது என்ற அத்தகைய உறுதியான நிலைப்பாடு தவெக அரசுக்கு ஏன் வரவில்லை? தவெக அரசு எந்த அடிப்படையில் தமிழ்நாட்டின் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியிடங்களை உத்திரப்பிரதேச தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்கியுள்ளது? இது மாநில இறையாண்மைக்கும், தன்னாட்சிக்கும் எதிரானது இல்லையா? தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசுப்பணியிடங்களைத் தனியாருக்கு தாரைவார்ப்பதைத் தடுத்து நிறுத்துவோம், என்று வாக்குறுதியளித்த தவெக, ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன் போக்குவரத்துக் கழகப் பணியிடங்களைத் தனியாரிடம் ஒப்படைப்பது வேலையில்லாமல் திண்டாடும் லட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்குச் செய்கின்ற பெருந்துரோகமாகும்.</p><p>அரசுப்பணியிடங்களை உத்திரப்பிரதேச தனியார் நிறுவனத்திற்குத் தாரைவார்த்துவிட்டு, வேலையில்லா தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு மாதம் 4,000 ரூபாய் உதவித்தொகை தருவோம் என்று தவெக அரசு ஏமாற்றுவது வெட்கக்கேடானது. இது அரசுப்பணிக்காக இரவும் பகலும் அயராது படிக்கும் தமிழிளம் தலைமுறை பிள்ளைகளுக்குச் செய்கின்ற பெருந்துரோகமாகும்.</p><p>ஆகவே, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் நடத்துநர் பணியிடங்களை உத்தரபிரதேச தனியார் நிறுவனத்திற்குத் தாரைவார்க்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டுமெனவும், போக்குவரத்துக் கழகப் பணியாளர்களை நிரந்தர அரசுப் பணியாளர்களாக, தமிழ்நாடு அரசே தெரிவு செய்து நியமிக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தெலுங்கானா துணை முதல்-மந்திரி தமிழகம் வருகை

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/telangana-deputy-chief-minister-visits-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/telangana-deputy-chief-minister-visits-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">8c263a26-b8d1-44e9-a818-b59d3b0fbbf4</guid><pubDate>Wed, 19 Aug 2026 15:00:40 +0000</pubDate><atom:updated>2026-08-19T15:00:40.445Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தெலுங்கானா,Telangana,துணை முதல்-மந்திரி,Deputy CM</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/xi4rz0nr/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/xi4rz0nr/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>தென்மாநில முதல்-மந்திரிகள் மாநாடு நாளை சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ளது.  </p><p>மத்திய உள்துறை மந்திரி <a href="https://www.dailythanthi.com/">அமித்ஷா </a>தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில்  தமிழக முதல்-அமைச்சர் விஜய்,  கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், கேரளம் முதல்-மந்திரி சதீசன், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.</p><h2>தெலுங்கானா துணை முதல்-மந்திரி வருகை</h2><p>இந்நிலையில், தெலுங்கானா துணை முதல்-மந்திரி மல்லு விக்ரமர்கா தமிழகம் வந்துள்ளார். விமானம் மூலம் சென்னை வந்த அவர் கோவளத்தில் நாளை நடைபெறும் தென்மாநில முதல்-மந்திரிகள் மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளார்.  </p> ]]></content:encoded></item><item><title>தேவதானப்பட்டி அருகே பன்றிகள் அட்டகாசம்: மக்காச்சோள பயிர்கள் சேதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/maize-crops-destroyed-by-wild-boars-in-devadanpatti-region</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/maize-crops-destroyed-by-wild-boars-in-devadanpatti-region#comments</comments><guid isPermaLink="false">405a02b6-4b3b-4883-b0a9-8538d0a25dea</guid><pubDate>Wed, 19 Aug 2026 14:59:28 +0000</pubDate><atom:updated>2026-08-19T14:59:28.342Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அட்டகாசம்,damaged,சேதம்,மக்காச்சோள பயிர்கள்,Pigs,பன்றிகள்,தேவதானப்பட்டி,Maize crop</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/7jvgq87j/pig.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மக்காச்சோள பயிர்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ தேவதானப்பட்டி அருகே பன்றிகள் அட்டகாசம்: மக்காச்சோள பயிர்கள் சேதம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/7jvgq87j/pig.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேவதானப்பட்டி,</p><p>தேவதானப்பட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி மற்றும் சிந்துவம்பட்டி பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்திருந்தனர். தற்போது இந்த பயிர்கள் அனைத்தும் நன்கு வளர்ந்து, அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளன.</p> <h2>பன்றிகள் அட்டகாசம்</h2><p>இந்த நிலையில், நேற்று இரவு பயிர்கள் விளைந்துள்ள வயல்களுக்குள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">காட்டுப்பன்றிகள்</a> கூட்டம் கூட்டமாக புகுந்துள்ளன. அவை அங்கிருந்த மக்காச்சோள செடிகளை கடித்து குதறி, மிதித்து நாசப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஏக்கர் கணக்கில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம் கடுமையாக சேதமடைந்துள்ளது.</p> <h2>விவசாயிகள் வேதனை</h2><p>கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்த சூழலிலும் பல மாதங்களாக கடும் சிரமப்பட்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">மக்காச்சோளத்தை</a> சாகுபடி செய்தோம். ஆனால், அறுவடைக்கு தயாரான நேரத்தில் பன்றிகள் புகுந்து அனைத்தையும் நாசம் செய்துவிட்டன. இதனால் பெரும் மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. </p><h2>கோரிக்கை</h2><p>இப்பகுதியில் தற்போது பன்றிகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மீதமுள்ள பயிர்களையாவது காப்பாற்ற முடியுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பன்றிகளால் சேதமடைந்த பயிர்களை நேரில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பால் கொள்முதல் விலை உயர்வு - கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ. வரவேற்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/hike-in-milk-procurement-price-welcomed-by-mla-kanimozhi-santhosh</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/hike-in-milk-procurement-price-welcomed-by-mla-kanimozhi-santhosh#comments</comments><guid isPermaLink="false">0c9b103f-f941-4c1a-9e4a-3bafa99640b1</guid><pubDate>Wed, 19 Aug 2026 14:26:35 +0000</pubDate><atom:updated>2026-08-19T14:26:35.300Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Milk procurement,பால் கொள்முதல் விலை,கனிமொழி சந்தோஷ்,kanimozhi santhosh</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/5u3l8sv7/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/5u3l8sv7/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>தமிழ்நாட்டில் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 38 ரூபாயில் இருந்து 41 ரூபாயாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதற்கு கோவை கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் வரவேற்பு தெரிவித்துள்ளார். </p><p>இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் எதிர்கொள்ளும் உற்பத்தி செலவுகள் மற்றும் அவர்களின் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் வழங்கும் வகையில் இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p>லிட்டருக்கு மூன்று ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதன் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்குக் கூடுதல் வருமானம் கிடைப்பதுடன், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்த நடவடிக்கை பெரிதும் உதவும்  என அவர் தெரிவித்துள்ளார். </p><p>மேலும், பால் உற்பத்தியை ஊக்குவித்து கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்த இந்த விலை உயர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என தெரிவித்துள்ள கனிமொழி சந்தோஷ், விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் நலனுக்காக தொடர்ந்து செயல்படுவோம் என்று உறுதியளித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>14 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-till-10-pm-in-14-districts</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-till-10-pm-in-14-districts#comments</comments><guid isPermaLink="false">3310ab7f-3479-463a-aa21-6cf3ebef544d</guid><pubDate>Wed, 19 Aug 2026 14:11:23 +0000</pubDate><atom:updated>2026-08-19T14:11:23.693Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/jfeaxvtg/Untitled-8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/jfeaxvtg/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தர்மபுரி, விழுப்புரம், சேலம், நாமக்கல், பெரம்பலூர், கரூர், சிவகங்கை, மதுரை, தஞ்சாவூர், திருச்சி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்கப்படும் என்ற அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் - டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/withdraw-vehicle-announcement-for-mlas-says-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/withdraw-vehicle-announcement-for-mlas-says-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">43702209-9ffc-4aa3-a1ab-8d8be8baa3c5</guid><pubDate>Wed, 19 Aug 2026 13:40:35 +0000</pubDate><atom:updated>2026-08-19T13:40:35.380Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,தமிழக சட்டசபை,TN Assembly</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/9mlf179f/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/9mlf179f/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கப்படும் என்ற அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அரசு சார்பில் வாகனமும், ஓட்டுநரும், வாகனப் பராமரிப்புக்காக மாதந்தோறும் ரூ.75 ஆயிரமும், உதவியாளருக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்ற முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் அறிவிப்பு “கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது” போன்ற செயலாகும்.</p><p>சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே சொந்தமாக வாகனம் வைத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு கூடுதலாக அரசு சார்பில் கார் வழங்குவதும், மாதந்தோறும் ரூ.75 ஆயிரம் வாகனப் பராமரிப்புத் தொகையாக வழங்குவதும் அரசுக்கு அவசியமற்ற கூடுதல் செலவாகவே பார்க்க வேண்டியுள்ளது.</p><p>தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளாக இருந்து, தவெக சார்பில் போட்டியிட்டு முதன்முறையாக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சில உறுப்பினர்களுக்கு கார் வழங்க வேண்டும் என்றால், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தனது சொந்த செலவிலோ அல்லது கட்சி செலவிலோ வழங்கலாமே என்ற கேள்விதான் தற்போது அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.</p><p>தமிழக அரசின் கஜானா காலியாக இருப்பதாகவும், சுமார் ரூ.13 லட்சம் கோடி கடனில் இருப்பதாகவும் வெள்ளை அறிக்கை வெளியிட்டதோடு, நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, “விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்தல், அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.2,500 வழங்குதல், ஆண்டுக்கு ஆறு இலவச சிலிண்டர்கள் வழங்குதல், அனைத்து மகளிருக்கும் இலவசப் பேருந்துப் பயணம் வழங்குதல்” எனத் தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுக்கும் தவெக அரசுக்கு, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனங்கள் வாங்குவதற்கு மட்டும் நிதி எங்கிருந்து வந்தது?</p><p>“மக்கள் வரிப்பணத்திலிருந்து ஒரு பைசா கூடத் தொட மாட்டேன்; தொட்டவர்களையும் விடமாட்டேன்” என வீரவசனம் பேசிய முதல்-அமைச்சர், தற்போது அதே மக்களின் வரிப்பணத்திலிருந்து பல நூறு கோடி ரூபாய் செலவில் வாகனங்களை வாங்கி வீணடிப்பது எந்த வகையில் நியாயமாகும்?</p><p>எனவே, தனது துறையின் உச்சத்தை விட்டுவிட்டு, மக்களுக்குச் சேவை செய்வதற்காக அரசியலுக்கு வந்ததாகக் கூறும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் வாகனம் இல்லாத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தனது சொந்த செலவிலோ அல்லது கட்சி செலவிலோ வாங்கித் தர வேண்டுமே தவிர, சட்டமன்ற உறுப்பினர்களைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு, “கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது” போல் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கப்படும் என்ற தனது அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>காஞ்சிபுரம்: உயர் அழுத்த மின் கம்பி உரசி வெல்டிங் தொழிலாளி மரணம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kanchipuram-high-voltage-power-line-welder-death</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kanchipuram-high-voltage-power-line-welder-death#comments</comments><guid isPermaLink="false">ee8cbea4-57f6-4aa3-91b1-0ff541a45a31</guid><pubDate>Wed, 19 Aug 2026 13:18:19 +0000</pubDate><atom:updated>2026-08-19T13:18:19.179Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Worker,தொழிலாளி,மரணம்,Kanchipuram,காஞ்சிபுரம்,power line,மின் கம்பி,In Kanchipuram</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/mqr86x0t/kanniappan.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கன்னியப்பன்]]></media:title><media:description type="html"><![CDATA[ மின் கம்பி உரசி வெல்டிங் தொழிலாளி கன்னியப்பன் மரணம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/mqr86x0t/kanniappan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>காஞ்சிபுரம்,</p><p>காஞ்சிபுரத்தில் உயர் அழுத்த மின் கம்பி உரசி வெல்டிங் தொழிலாளி மரணம்.</p><h2>கட்டுமான பணிகள்</h2><p>காஞ்சிபுரம் புதிய ரெயில் நிலையம் அருகே வேகமாக வளர்ந்து வரும் புறநகர் பகுதியான இந்திரா நகர், ஜி.எஸ்.ஆர் அவென்யூவில் புதிய வீடு ஒன்றின் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன.​ தற்போது வீட்டின் இரண்டாவது மாடி கட்டுமான பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது.</p><h2>வெல்டிங் தொழிலாளி</h2><p>இதற்காக, மாடித் தடுப்புகள் அமைக்கும் பணிக்குத் தேவையான இரும்புச் கம்பிகளை கீழிருந்து மேலே ஏற்றும் பணியில், உக்கல் பகுதியைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி கன்னியப்பன் மற்றும் இதர தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.</p><h2>மரணம்</h2><p>பணியின் போது, இரும்பு கம்பிகளை கீழிருந்து மேல் நோக்கி உயர்த்த முயன்றபோது, எதிர்பாராதவிதமாக அருகில் சென்றுகொண்டிருந்த உயர் அழுத்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF">மின்சார கம்பியின்</a> மீது இரும்பு ராடு உரசியது. இதில் கண் இமைக்கும் நேரத்தில் இரும்பு கம்பி வழியாக பயங்கர வேகத்தில் மின்சாரம் பாய்ந்தது. மின்சார அதிர்வில் தூக்கி வீசப்பட்ட வெல்டிங் தொழிலாளி கன்னியப்பன், உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p>  <h2>மின்மாற்றி வெடித்தது</h2><p>இதற்கிடையே, மின்சாரம் தாக்கிய அதிர்வில் அருகில் இருந்த மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) திடீரென பழுதடைந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அந்த பகுதியே அதிரும் வகையில் சத்தம் கேட்டது. புகை மண்டலத்துடன் மின்மாற்றி வெடித்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அலறியடித்தபடி ஓடிவந்தனர். அங்கு கன்னியப்பன் மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.</p><p>இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘நடிகர் ராஜ்குமார் மீட்பில் தமிழர்களின் பங்கு குறித்து டி.கே.சிவக்குமார் மறந்துவிட்டார்’ - பழ.நெடுமாறன் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dk-shivakumar-has-forgotten-the-role-played-by-tamils-in-the-rescue-of-actor-rajkumar-pazhanedumaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dk-shivakumar-has-forgotten-the-role-played-by-tamils-in-the-rescue-of-actor-rajkumar-pazhanedumaran#comments</comments><guid isPermaLink="false">3fc54bda-4361-4259-a4c5-6b8641315f66</guid><pubDate>Wed, 19 Aug 2026 13:12:14 +0000</pubDate><atom:updated>2026-08-19T13:12:14.989Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டி.கே.சிவக்குமார்,DK Sivakumar,பழ.நெடுமாறன்,Pazha.Nedumaran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/mgir9mte/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/mgir9mte/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“எங்கள் மாநிலத்தின் சட்ட ஒழுங்கை எவ்வாறு பாதுகாப்பது என்பது எங்களுக்குத் தெரியும். தமிழகத் தலைவர்கள் எங்கள் மாநில விவகாரத்தில் தலையிட கூடாது என கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.</p><p>மேய்ச்சலுக்குச் சென்ற தங்கள் மாடுகள் திரும்பவில்லை என்பதற்காக அவற்றைத் தேடி காட்டுக்குள் சென்ற மூன்று தமிழர்களை கர்நாடக வனத்துறையினர் சுட்டுப் படுகொலை செய்திருப்பதை தமிழ்நாட்டு முதல்-அமைச்சரும், அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் கண்டித்திருக்கிறார்கள். இதுவொரு மனிதநேயப் பிரச்சனை. எந்த மாநிலத்திலும் மனிதநேயம் மீறப்படுமானால், அதைக் கண்டிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு.</p><p>2000-ம் ஆண்டில் கர்நாடக எல்லைக்குள் கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தி கர்நாடக காட்டுக்குள் சிறை வைத்திருந்தபோது, அப்போதைய கர்நாடக முதல்-மந்திரி கிருஷ்ணா, மூன்று முறை தமிழகத்திற்கு ஓடோடி வந்து அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதியிடம் ராஜ்குமாரை மீட்க உதவும்படி வேண்டிக்கொண்டார். அப்போது வீரப்பன் தமிழக முதல்-அமைச்சருக்கு அனுப்பிய செய்தியில் “நெடுமாறனை அனுப்பினால் பேசுவதற்குத் தயார்” என்று குறிப்பிட்டிருந்தார். </p><p>அதற்கிணங்க தமிழக முதல்-அமைச்சர் என்னை வேண்டிக்கொண்டபடியும், கர்நாடக முதல்-மந்திரி கிருஷ்ணா என்னை அழைத்து என்னிடம் வேண்டிக்கொண்டபடியும், நானும், நக்கீரன் கோபால், கொளத்தூர் மணி, பேரா.கல்யாணி, சுகுமார் ஆகிய தமிழர்கள் காட்டுக்குள் சென்று ஐந்து நாட்கள் வீரப்பன் குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அதற்குப்பின் நடிகர் ராஜ்குமார், அவர் மருமகன் கோவிந்தராஜ் ஆகியோரை விடுவித்துப் பத்திரமாக அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தோம். அந்த நிகழ்ச்சி நடைபெற்றபோது, “இது எங்கள் மாநிலப் பிரச்சனை; தமிழர்கள் எதற்காக வருகிறீர்கள் என்று யாராவது கேட்டார்களா? அன்று நாங்கள் மனிதநேயத்துடன் செயல்பட்டிருக்காவிட்டால், இரு மாநிலங்களிலும் இனக்கலவரங்கள் மூண்டெழுந்து விரும்பத்தகாத நிகழ்ச்சிகள், படுகொலைகள் நடைபெற்றிருக்கும். </p><p>எந்தவித குற்றச்செயலிலும் ஈடுபடாத அப்பாவித் தமிழர்கள் மூவரைப் படுகொலை செய்துவிட்டு அதை திரையிட்டு மறைக்க கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் சிறிதளவும் மனசாட்சியில்லாமல் பேசுவதைப் பார்க்கும்போது, அண்ணல் காந்தியடிகள் தலைமை தாங்கி நடத்திய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்தானா? என்ற ஐயம் எழுகிறது. முதல்-மந்திரி போன்ற பொறுப்பான பதவிகளில் இவரைப் போன்றவர்கள் தொடர்ந்து இருக்க அனுமதிப்பது அவர் சார்ந்துள்ள கட்சிக்குப் பேரிழுக்காகும்.   </p><p>தமிழர்கள் அனைவரையும் மட்டுமல்ல, மாந்தநேயம் கொண்டவர்கள் அனைவரையும் பதைபதைக்க வைத்திருக்கும் மூன்று தமிழர்களின் படுகொலைக்குக் காரணமானவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தரவும், எதிர்காலத்தில் கர்நாடகம் வாழ் தமிழர்கள் யாருக்கும் இத்தகைய நிலை ஏற்படாமல் பாதுகாக்கவும், தேசிய மனித உரிமை ஆணையத்திற்கோ அல்லது சுப்ரீம் கோர்ட்டுக்கோ இப்பிரச்சனையை உடனடியாக கொண்டுசெல்ல உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதல்-அமைச்சரை வேண்டிக்கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>ஓராண்டுக்கு பிறகும் நினைவில் வைத்து சாலை அமைக்க சொன்ன விஜய்- சட்டசபையில் அமைச்சர் ஆனந்த் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vijay-remembered-the-request-to-lay-the-road-even-after-a-yearminister-anand-shares-details-in-the-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vijay-remembered-the-request-to-lay-the-road-even-after-a-yearminister-anand-shares-details-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">ff704f6a-0afd-4039-8c7c-1019d19e9a31</guid><pubDate>Wed, 19 Aug 2026 13:11:38 +0000</pubDate><atom:updated>2026-08-19T13:11:38.083Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,சட்டசபை,Bussy Anand,Assembly</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/541qavt6/bussy-anand.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/541qavt6/bussy-anand.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சட்டசபையில் மானியக்கோரிக்கை விவாதத்தின் போது, தி.மு.க. உறுப்பினர் பெரியசாமி, 'எங்கள் ஆட்சியில் மலையில் இருக்கும் கிராமங்களுக்கு முதல்-அமைச்சர் சாலைதிட்டம் மட்டுமல்லாது, அத்தனை திட்டங்களிலும் சாலைகள் அமைத்து கொடுத்து இருக்கிறோம். மலைப்பகுதிகளில் இருக்கும் சாலைகளை இணைக்கும் பகுதிகளை முடித்துள்ளோம். 5 சாலைகள் மட்டும்தான் மீதம் இருக்கிறது. அதுவும் வனத்துறை அனுமதி கிடைக்காததால்தான். அந்த திட்டத்துக்காக ரூ.100 கோடி ஒதுக்கியிருக்கிறீர்கள்' என்றார்.</p><p>அதற்கு அமைச்சர் ஆனந்த் எழுந்து பதிலளித்தபோது, 'திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தாண்டிக்குடி பஞ்சாயத்தில் கடந்த ஆண்டு மே மாதம் எங்கள் தலைவர் படப்பிடிப்புக்காக சென்றிருந்தார். ஒரு காட்சி எடுக்க கரடுமுரடான பாதையில் ஜீப்பில் சென்றார். நானும் கூட சென்றிருந்தேன். கீழே வரும்போது ஒரு மணி நேரம் தனியாக நடந்து வந்தார். வந்தவுடன் 15 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை. சொந்த செலவில் சாலைகள் அமைக்கலாமா? என்றார். அப்போது நம்மல பேனர் வைக்கவே விடல... இதுல எங்க ரோடு போட விடுவாங்க சார் என்று நான் சொன்னேன். நம்முடைய ஆட்சி வந்ததும் சாலை அமைத்துவிடலாம் என்றேன். உடனே சிரித்தார். நான் பதவி ஏற்ற 5-வது நாளில் முதல்-அமைச்சர் அலுவலகத்தில் இருந்து நோட் சீட் வருகிறது. தாண்டிக்குடி கிராமத்துக்கு சாலை அமைக்க வேண்டும் என தெரிவித்திருந்தது. நான் மறந்துவிட்டேன். அவர் நினைவில் வைத்து உத்தரவிட்டார். இப்போது ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டு வேலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது' என்றார்.</p><p>அதனைத்தொடர்ந்து பெரியசாமி கூறுகையில், 'கூடம் நகர்தான் அமைச்சர் சொல்கிறார். பிரதான சாலைகளில் அது இல்லை. கூடம்நகருக்கு நாங்கள் சாலைகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அதில் டெண்டர் எடுத்த வீரக்குமார் என்பவர் இறந்துவிட்டார். அதன் பிறகு மீண்டும் டெண்டர் வைத்து அதில்தான் இப்போது பணி நடக்கிறது. அதற்கு டெண்டர் கொடுத்ததும் எங்கள் ஆட்சிதான்' என்றார்.</p> ]]></content:encoded></item><item><title>2 நாட்களுக்கு &apos;கள்ளக்கடல்&apos; எச்சரிக்கை: கடற்கரை சுற்றுலா மையங்கள் தீவிர கண்காணிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/two-day-freak-sea-warning-coastal-tourism-centers-under-strict-monitoring</link><comments>https://www.dailythanthi.com/news/weather/two-day-freak-sea-warning-coastal-tourism-centers-under-strict-monitoring#comments</comments><guid isPermaLink="false">d7632d70-c1ae-4a1e-9b03-55b6a0564b79</guid><pubDate>Wed, 19 Aug 2026 12:51:28 +0000</pubDate><atom:updated>2026-08-19T12:51:28.581Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>warning,எச்சரிக்கை,கண்காணிப்பு,கள்ளக்கடல்,சுற்றுலா மையங்கள்,Swell Surge</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/l5xq6bv4/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/l5xq6bv4/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தென் இந்திய கடலோரப் பகுதிகளில் கள்ளக்கடல் நிகழ்வு நடைபெறக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><h2>கள்ளக்கடல் எச்சரிக்கை</h2><p>தென் இந்திய கடற்கரை பகுதிகளுக்கு இந்திய தேசிய கடல்சார் தகவல் சேவை மையம் 'கள்ளக்கடல்' எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 13-ந்தேதி தென் இந்தியப் பெருங்கடலில், இந்திய கடற்கரையில் இருந்து சுமார் 10,000 கி.மீ. தொலைவில் உருவான உயர் ஆற்றல் கொண்ட நீண்ட அலைகள், தற்போது வடக்கு நோக்கி நகர்ந்து வருகின்றன. இந்த அலைகளின் கால அளவு சுமார் 21 வினாடிகள் என்பதால், அதிக சக்தியுடன் கரையைத் தாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>2 நாட்கள் இருக்கும்</h2><p>இந்த அலைகள் இன்று (19-ந்தேதி) அதிகாலை முதல் இந்தியாவின் தென் முனையை தாக்கத் தொடங்கி, மாலை நேரத்தில் உச்சத்தை அடையும் என கணிக்கப்பட்டுள்ளது. கேரளா, தென் தமிழ்நாடு (கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம்) மற்றும் லட்சத்தீவு ஆகிய பகுதிகளை தாக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இன்று அதிகாலை 2.30 மணி முதல் நாளை (20-ந்தேதி) மாலை 5.30 மணி வரை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப்போது உயர் அலைகளுடன் கடல் ஏற்றமும் சேர்வதால், தாழ்வான கடற்கரை பகுதிகளில் கடல் நீர் திடீரென உட்புகுந்து வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது.</p><aside><cite>'கள்ளக்கடல்' என்பது திடீரென கரைக்கு வரும் கடல் அலைகளை குறிக்கிறது. சாதாரணமாக கடல் அலைகள் காற்றால் அருகிலேயே உருவாகும். ஆனால் கள்ளக்கடல் அப்படி இல்லை, நம்மிடம் இருந்து 5,000 முதல் 10,000 கி.மீ. தொலைவில், அண்டார்டிகாவில் தென் பெருங்கடலில், பெரும்புயல் அல்லது குறைந்த காற்றழுத்தம் உருவாகும். அந்த நீண்ட அலைகள், காற்று இல்லாமலேயே சக்தியை இழக்காமல் பல நாட்கள் பயணித்து இந்திய கடற்கரைக்கு வரும்.</cite>கள்ளக்கடல் என்றால் என்ன?</aside><aside><cite>இந்த அலைகளின் இடைவெளி 18 முதல் 22 வினாடிகள் இருக்கும். சாதாரண அலைகளின் இடைவெளி 8 முதல் 10 வினாடிகள் தான். இந்த கள்ளக்கடல் உருவாகும் போது, கடல் பார்க்க அமைதியாக இருக்கும். வானிலை நன்றாக இருக்கும். எந்த மழையும், காற்றும் இருக்காது. திடீரென ஒரு பெரிய அலை வந்து கரையை தாண்டி, சாலை, வீடுகளுக்குள் புகுந்துவிடும். அதனால் தான் இதற்கு கள்ளக்கடல் என்று பெயர் வைத்தனர்.</cite></aside><aside><cite>முன் அறிவிப்பு இல்லாமல் வருவது போல தெரியும். சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்கும்போது உள்ளே இழுத்துச் சென்றுவிடும். கரையில் நிற்கும் படகுகளை ஒன்றோடு ஒன்று மோதச் செய்து உடைத்துவிடும். கடல் ஏற்ற நேரத்துடன் சேர்ந்தால், கடல் நீர் ஊருக்குள் புகுந்து வெள்ளம் வரும். இதற்கு முன்பு கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் கன்னியாகுமரி, கோள கடற்கரையில் இதேபோல கள்ளக்கடல் வந்து பல வீடுகள், படகுகள் சேதமானது குறிப்பிடத்தக்கது.</cite>படகுகளை உடைத்துவிடும்</aside><p>கள்ளக்கடல் எச்சரிக்கை காரணமாக கடலுக்குள் சிறு படகுகள் செல்ல வேண்டாம் என்றும், கரையில் நிறுத்தப்பட்டுள்ள படகுகளை இடைவெளி விட்டு நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடற்கரை சுற்றுலா, விளையாட்டு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா மையங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.</p><h2>ராமநாதபுரம், கன்னியாகுமரி</h2><p>ராமநாதபுரம் மாவட்டத்தில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகு, நாட்டுப்படகுகள் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் 8 ஆயிரம் விசைப்படகுகள், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் இந்த கள்ளக்கடல் எச்சரிக்கை காரணமாக இன்று கடலுக்கு செல்லவில்லை.</p><h2>நெல்லை, தூத்துக்குடி</h2><p>நெல்லை மாவட்டத்தில் 10 மீனவ கிராமங்களை சேர்ந்த 1,500 பைபர் படகுகள், தூத்துக்குடி மாவட்டத்தில் தருவை குளம் மற்றும் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 800 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>8 நாட்களில் 22,158 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி - சென்னை மாநகராட்சி தகவல் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rabies-vaccines-administered-to-22158-stray-dogs-in-8-days-chennai-corporation-statement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rabies-vaccines-administered-to-22158-stray-dogs-in-8-days-chennai-corporation-statement#comments</comments><guid isPermaLink="false">87f8b29a-d427-4cae-9be2-6b70a5bef4f4</guid><pubDate>Wed, 19 Aug 2026 12:51:19 +0000</pubDate><atom:updated>2026-08-19T12:51:19.039Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Corporation,சென்னை மாநகராட்சி,ரேபிஸ் தடுப்பூசி,Rabies vaccine</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/eas6v2iv/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/eas6v2iv/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கடந்த 11-ந்தேதி தொடங்கிய வெறிநாய்க்கடிநோய்த் தடுப்பூசி (Anti Rabies Vaccination) மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தும் மாபெரும் அளவிலான முகாமின் மூலம் இதுவரையிலான 8 நாட்களில் 22,158 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“பெருநகர சென்னை மாநகராட்சியில் வெறிநாய்க்கடி நோய் பாதிப்பில் இருந்து பொது மக்களை காத்திடவும், வெறிநாய்க்கடி நோய் இல்லா சென்னை மாநகரை உருவாக்கிடவும் அனைத்து தெரு நாய்களுக்கும் வெறிநாய்க்கடிநோய்த் தடுப்பூசி (Anti Rabies Vaccination) மற்றும் அகப்புற ஒட்டுண்ணி மருந்து செலுத்தும் மாபெரும் அளவிலான முகாம் (Mass Anti Rabies Vaccination and Endectoparasiticidal camp) கடந்த 11.08.2026 அன்று திருவொற்றியூர், மணலி மற்றும் தண்டையார்பேட்டை ஆகிய 3 மண்டலங்களில் தொடங்கப்பட்டது.</p><p>இம்முகாமின் வாயிலாக இந்த 3 மண்டலங்களிலும் உள்ள அனைத்து தெருக்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் உள்ள தெருநாய்களுக்கும் வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி மற்றும் அகபுற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து இதுவரை 8 நாட்களில் (ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து) 22,158 தெருநாய்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.</p><p>ஒவ்வொரு மண்டலத்திலும் தலா 10 குழுக்களை பயன்படுத்தி ஒரே சமயத்தில் 3 மண்டலங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த 3 மண்டலங்களில் இந்த சிறப்பு முகாம் முடிவுற்றவுடன், பிற மண்டலங்களிலும் இம்முகாம் நடத்தப்பட்டு 75 வேலை நாட்களுக்குள் அனைத்து மண்டலங்களிலும் சுமார் 2,00,000 நாய்களுக்கு ரேபிஸ் நோய்த் தடுப்பூசியும் மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்தும் (Anti Rabies Vaccination and Endectoparasiticidal) செலுத்தப்படவுள்ளது.</p><p>இந்த சிறப்பு முகாம்கள் மூலம் “வெறிநாய்க்கடிநோய் இல்லாசென்னை” (Rabies Free Chennai) என்ற இலக்கை அடைவதற்கு பொது மக்களும், செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களும் மற்றும் விலங்கு நல ஆர்வலர்களும் ஒத்துழைப்பு வழங்கிடும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  </p>]]></content:encoded></item><item><title>காஞ்சிபுரம்: பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த பசு மாடு ஜே.சி.பி. மூலம் மீட்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kanchipuram-cow-rescued-using-a-jcb-after-falling-into-a-pit-dug-for-underground-drainage-work</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kanchipuram-cow-rescued-using-a-jcb-after-falling-into-a-pit-dug-for-underground-drainage-work#comments</comments><guid isPermaLink="false">7c63bae1-fbe4-413d-b689-f213863f43d0</guid><pubDate>Wed, 19 Aug 2026 12:33:11 +0000</pubDate><atom:updated>2026-08-19T12:33:11.290Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Kanchipuram,காஞ்சிபுரம்,ஜேசிபி</media:keywords><media:content height="906" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/g6raucmp/State-05.jpg" width="1600"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/g6raucmp/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>காஞ்சிபுரம்,</p><p>காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. இவற்றில் 40 வார்டுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்புகள் கடந்த 1978-ம் ஆண்டு கொடுக்கப்பட்டன. மீதமுள்ள 11 வார்டுகள் ஊராட்சிகளாக இருந்து காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டவை. அதனால் அந்த பகுதிகளில் பாதாள சாக்கடை இணைப்பு இல்லாமல் இருந்தது. அந்த பகுதிகளில் புதிதாக பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்க ரூ.254 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.</p><p>இந்த திட்டத்தின் மூலம் 180.243 கி.மீ தூரத்துக்கு பாதாள சாக்கடைக்கான குழாய்கள் அமைக்கப்பட உள்ளன. பிரதான குழாய்கள் மட்டும் 14.101 கி.மீ தூரத்துக்கு செல்கிறது. அடைப்பு ஏற்பட்டால் ஆங்காங்கே சுத்தம் செய்வதற்கு வசதியாக 9 மீட்டர் தூரத்துக்கு ஒன்று என மேல்நோக்கிய ஆளிறங்கும் அளவிலான குழாய்கள் மொத்தம் 7,437 அமைக்கப்பட உள்ளன. மொத்தம் 15,652 வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p><p>இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 48-வது வார்டு வர்த்தமான் நகர் பகுதியில் அவ்வழியாக போடப்பட்ட பாதாள சாக்கடை பள்ளம் முறையாக மூடப்படாததால் அமைதியாக சென்ற பசு மாடு ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. அப்பகுதி மக்கள் நீண்ட நேரம் முயற்சி செய்தும் பள்ளத்தில் சிக்கிய பசுமாட்டை மீட்க முடியாததால், ஜே.சி.பி. இயந்திரம் வரவழைக்கப்பட்டு பசு மாடு பத்திரமாக மீட்கப்பட்டது. இந்த விபத்திற்கு பிறகு பள்ளத்தை சுற்றி மாநகராட்சி ஊழியர்கள் தடுப்புகளை அமைத்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் சிறந்த சமூகக் கண்ணாடி புகைப்படம்: முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/best-social-mirror-photo-that-carries-history-to-next-generation-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/best-social-mirror-photo-that-carries-history-to-next-generation-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">930930f5-db4f-492f-a041-4318b9ccc5a3</guid><pubDate>Wed, 19 Aug 2026 12:21:52 +0000</pubDate><atom:updated>2026-08-19T12:21:52.933Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Greetings,வாழ்த்து,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,உலக புகைப்பட நாள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/l1ncljbl/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/l1ncljbl/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>உலக புகைப்பட நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:-</p><p>ஓடும் காலத்தின் பக்கங்களை ஒரு கணத்தில் உறையச் செய்து, வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் சிறந்த சமூகக் கண்ணாடியே புகைப்படமாகும்.</p><p>வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் வாழ்நாள் நினைவாக மாற்றுவதோடு, வார்த்தைகளால் சொல்ல இயலாத நிகழ்வுகளை கலைநயம் மிக்க புகைப்படங்களால் உணர்த்தும் அனைத்து புகைப்படக் கலைஞர்களுக்கும் எனது 'உலக புகைப்பட நாள்' நல்வாழ்த்துகள்! உங்களின் கலைப் பயணம் சிறக்கட்டும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு: ஒன்றாக களம் இறங்கும் சீமான் -கிருஷ்ணசாமி- வேல்முருகன்: இடைத்தேர்தலில் போட்டி?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-politics-seeman-krishnasamy-and-velmurugan-forming-alliance-for-by-election</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-politics-seeman-krishnasamy-and-velmurugan-forming-alliance-for-by-election#comments</comments><guid isPermaLink="false">7e5f10ca-1642-46d2-bc8d-3acd728084ff</guid><pubDate>Wed, 19 Aug 2026 12:17:42 +0000</pubDate><atom:updated>2026-08-19T12:17:42.792Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,DMK,சீமான்,இடைத் தேர்தல்,தமிழக அரசியல்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/vazkzqpy/19.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ சீமான் -வேல்முருகன் -கிருஷ்ணசாமி]]></media:title><media:description type="html"><![CDATA[ சீமான் -கிருஷ்ணசாமி- வேல்முருகன் இணைந்து இடைத்தேர்தலில் ஒன்றாக களம் இறங்குகிறார்கள்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/vazkzqpy/19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக அரசியல் களத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D">சீமான்</a>, கிருஷ்ணசாமி, வேல்முருகன் ஆகியோர் புதிய கூட்டணியாக இணைந்து இடைத்தேர்தலில் ஒன்றாக களம் இறங்குகிறார்கள்.</p><h2>த.வெ.க. வெற்றி</h2><p>தமிழக அரசியல் களத்தில் தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுக்கும் மாற்றாக பல்வேறு அரசியல் கட்சிகள் முளைத்து தங்களது பணிகளை தீவிரமாக செய்தபோதிலும், அதற்கு வெற்றி கிடைக்கவில்லை. அதே நேரத்தில் த.வெ.க. தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி வெற்றி பெற்றுள்ளது. தமிழக அரசியல் களத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக வேறு எந்த கட்சிகளும் செய்யாத சாதனைகளை<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D"> முதல்-அமைச்சர் விஜய் </a>செய்து காட்டியிருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்துகளை தெரிவித்து உள்ளனர்.</p><h2>புதிய கூட்டணி</h2><p>தி.மு.க, அ.தி.மு.கவுக்கு மாற்றாக இதற்கு முன்பு பல்வேறு கூட்டணிகள் அமைக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக முதல்-அமைச்சர் வேட்பாளராக விஜயகாந்தை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட மக்கள் நலக்கூட்டணி தோல்வியையே தழுவியது. </p><p>இந்த நிலையில் சட்ட மன்ற தேர்தலுக்குப் பிறகு சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் மற்றும் வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகியவை ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருகின்றன. சட்டமன்ற தேர்தலின்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி அது தோல்வியில் முடிந்த நிலையில் கிருஷ்ணசாமி குறிப்பிட்ட தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.</p><p>தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த வேல்முருகனும் கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிட்டார். நாம் தமிழர் கட்சி எப்போதும் போல தனித்து களம் கண்டது. இந்த தேர்தலில் விஜய் ஏற்படுத்திய தாக்கத்தால் தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய கட்சிகளே பின்னுக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் மற்ற கட்சிகளும் படுதோல்வியை தழுவின.</p><h2>மாற்றத்தை ஏற்படுத்துமா?</h2><p>இந்த நிலையில் தான் தமிழக அரசியல் களத்தில் புதிதாக சீமான், வேல்முருகன், கிருஷ்ணசாமி ஆகியோர் பல்வேறு கட்சிகள் அமைப்புகளோடு புதிய கூட்டணியை ஏற்படுத்தி இருக்கிறார்கள். வருகிற சட்டமன்ற இடைத்தேர்தலில் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர். இந்த கூட்டணி மாற்றத்தை ஏற்படுத்துமா? இல்லை இன்னொரு மக்கள் நலக் கூட்டணியாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>பாலின் கொள்முதல் விலை உயர்வு: தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் நன்றி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/milk-procurement-price-hike-thank-you-to-tamil-nadu-chief-minister-from-milk-agents-workers-welfare-association</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/milk-procurement-price-hike-thank-you-to-tamil-nadu-chief-minister-from-milk-agents-workers-welfare-association#comments</comments><guid isPermaLink="false">d90b5774-7762-4612-bf16-7caae27e3cd2</guid><pubDate>Wed, 19 Aug 2026 12:11:57 +0000</pubDate><atom:updated>2026-08-19T12:11:57.357Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>முதல்-அமைச்சர்,milk,thanks,நன்றி,Aavin Milk,ஆவின் பால்,கொள்முதல் விலை உயர்வு,procurement price hike</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/vr9pznty/cm-vijay.03.jpg" width="682"><media:title type="html"><![CDATA[ தமிழ்நாடு முதல்-அமைச்சர்]]></media:title><media:description type="html"><![CDATA[ பாலின் கொள்முதல் விலை உயர்வு: தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் நன்றி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/vr9pznty/cm-vijay.03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88">பால் கொள்முதல் விலை</a> உயர்வுக்கு, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி. பாலுற்பத்தியாளர்களின் கஷ்டங்களை போல பால் முகவர்களின் கஷ்டங்களையும் கவனத்தில் கொண்டு, 110-வது விதியின் கீழான அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது குறித்து பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க மாநிலத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-</p> <h2>ஆவின் நிறுவனம்</h2><p>கடந்த ஆட்சியாளர்கள் செய்த தவறினால் அழிவின் விளிம்பில் <a href="https://www.dailythanthi.com/topic/aavin-milk">ஆவின்</a> நிறுவனம் இருந்து வருவதோடு, தமிழ்நாடு முழுவதும் கடந்த நான்காண்டு காலமாக ஆவின் பால் தட்டுப்பாடு நிலவி வருவதையும், தற்போது அது அதிகரித்துள்ளதையும் அனைவரும் நன்கறிவோம்.</p><h2>கமிஷன் தொகை</h2><p>ஆவின் பால் தட்டுப்பாட்டை உடனடியாக சரி செய்ய வேண்டுமானால் ஆவினுக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களுக்கான பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவதோடு, விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தை மீண்டும் அமுல்படுத்த வேண்டும் அத்துடன் பால் முகவர்களுக்கு ஆவின் பால் விற்பனைக்கான கமிஷன் தொகை வரம்பை உயர்த்தி வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு முதல்-அமைச்சர் . ச.ஜோசப் விஜய்க்கும், பால்வளத்துறை அமைச்சர் சி.விஜயலட்சுமிக்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் தொடர்ந்து கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வந்தது.</p><h2>விலையில்லா கறவை மாடுகள்</h2><p>ஆவினுக்கான பால் கொள்முதலை அதிகரிக்க விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தை மீண்டும் அறிமுகம் செய்து அதனை ஆண்டுக்கு' கடந்த ஆட்சியாளர்கள் செய்த தவறினால் அழிவின் விளிம்பில் ஆவின் நிறுவனம் இருந்து வருவதோடு, தமிழ்நாடு முழுவதும் கடந்த நான்காண்டு காலமாக ஆவின் பால் தட்டுப்பாடு நிலவி வருவதையும், தற்போது அது அதிகரித்துள்ளதையும் அனைவரும் நன்கறிவோம்.</p> <h2>தவெக அரசு</h2><p>ஆவினுக்கான பால் கொள்முதலை அதிகரிக்க முடிவெடுத்த தவெக அரசு விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தை மீண்டும் அறிமுகம் செய்து அதனை ஆண்டுக்கு 10ஆயிரம் பெண்களுக்கு வழங்க முடிவு செய்து அதற்கான அறிவிப்பை நிதியமைச்சர் மரிய வில்சன் நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் கடந்த வாரம் அறிவித்தார்.</p> <h2>நன்றி</h2><p>இந்த நிலையில் ஆவினுக்கான பால் கொள்முதல் அதிகரிக்க பால் கொள்முதல் விலையையும் உயர்த்தப்பட வேண்டும், அது ஏற்கனவே இழப்பில் இருக்கும் ஆவின் நிறுவனத்தையும் பாதிக்கக்கூடாது என்பதை சிந்தித்தும், தவெக அரசுக்கு உள்ள கடும் நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டும் பால் உற்பத்தியாளர்களுக்கு மாநில அரசிடமிருந்து லிட்டருக்கு 2.00ரூபாயும், ஆவின் தரப்பிலிருந்து லிட்டருக்கு 1.00ரூபாயும் ஆக மொத்தம் லிட்டருக்கு 3.00ரூபாய் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதாக சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ள தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்க்கும், பால்வளத்துறை அமைச்சர் சி.விஜயலட்சுமி க்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.</p><h2>பால் முகவர்கள்</h2><p>மேலும் அத்தியாவசிய உணவு பொருளாக விளங்கும் பால் பொதுமக்களுக்கு ஆண்டு முழுவதும் தங்குதடையின்றி கிடைத்திட வேண்டுமானால் பாலினை உற்பத்தி செய்யக்கூடிய விவசாய பெருமக்கள் எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தவர்களோ அது போல வெயில், புயல், கனமழை, பெருவெள்ளம், மூடுபனி போன்ற எந்த இயற்கை பேரிடர் காலங்களானாலும், கொரோனா போன்ற பல்வேறு நோய் பெருந்தொற்று காலங்களானாலும் தங்களை வருத்தி கொண்டும், தங்கள் உடல் நலன் மீதான அக்கறையை தள்ளி வைத்தும் ஆண்டின் 365நாட்களும் பாலினை பொதுமக்களுக்கு தங்குதடையின்றி விநியோகம் செய்யக்கூடிய பால் முகவர்களும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் ஆவர்.</p><h2>கமிஷன் தொகை</h2><p>குறிப்பாக சொல்ல வேண்டுமானால் பால் உற்பத்தியாளர்களும், பால் முகவர்களும் மனிதனுக்கு இரண்டு கண்கள் மற்றும் நாணயத்தின் இருபக்கங்களை போன்றவர்கள் என்பதால் அதில் ஒரு கண்ணில் மட்டும் வெண்ணையை தடவி விட்டு, மற்றொரு கண்ணை புறக்கணிப்பதும், நாணயத்தின் ஒரு பக்கத்தை மட்டும் எடுத்து கொண்டு மற்றொரு பக்கத்தை தவிர்ப்பதும் ஏற்புடையதல்ல என்பதை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ஆகியோருக்கு சுட்டி காட்டி பால் கொள்முதல் விலையை உயர்த்தியது போல ஆவின் பால் விற்பனைக்கான கமிஷன் தொகை வரம்பையும் உயர்த்திடும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.</p><h2>நடவடிக்கை</h2><p>எனவே தற்போது 110விதியின் கீழ் வெளியிடப்பட்டுள்ள பால் கொள்முதல் விலை ஊக்கத்தொகை இன்றி லிட்டருக்கு 1.00ரூபாய் என்பதை மறுபரிசீலனை செய்து லிட்டருக்கு 10.00ரூபாய் வரையிலும், பால் முகவர்களுக்கு ஆவின் பால் விற்பனைக்கான கமிஷன் தொகை வரம்பை லிட்டருக்கு 2.00ரூபாய் என்பதை 5.00ரூபாய் வரையிலும் உயர்த்தி வழங்க ஆவண செய்திட வேண்டும் எனவும், அதற்கான அறிவிப்பை அடுத்து வரவிருக்கும் பால் மானிய கோரிக்கையில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ச.ஜோசப் விஜய்யையும், பால்வளத்துறை அமைச்சர் சி.விஜயலட்சுமியையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நெல்லை: பேப்பர் மில்லில் பயங்கர தீ விபத்து

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-paper-mill-fire-accident</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-paper-mill-fire-accident#comments</comments><guid isPermaLink="false">9932d0f7-1902-4c0e-9031-8c5e7da11cea</guid><pubDate>Wed, 19 Aug 2026 11:59:46 +0000</pubDate><atom:updated>2026-08-19T11:59:46.210Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Fire accident,தீ விபத்து,நெல்லை,Nellai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/9t3c2335/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/9t3c2335/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>நெல்லை,</p><p><a href="https://www.dailythanthi.com/">நெல்லை </a>மாவட்டம் கொண்டாநகரம் அருகே உள்ள கல்லூர் பகுதியில் தனியார் பேப்பர் மில் செயல்பட்டு வருகிறது. இந்த பேப்பர் மில்லில் கழிவு பேப்பர்கள் பண்டல் பண்டலாக அடுக்கி&nbsp;வைக்கப்பட்டுள்ள அவை அட்டை தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன.</p><h2>தீ விபத்து</h2><p>இந்நிலையில், இந்த பேப்பர் மில்லில் இன்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பண்டல் பண்டலாக அடுக்கு வைக்கப்பட்டுள்ள பேப்பரில் தீ வேகமாக பற்றி எரிந்து வருகிறது.</p><p>இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த தீ விபத்தில் லட்சக்கணக்கான மதிப்பிலான பேப்பர்கள் எரிந்து நாசமாகியுள்ளன. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>டாக்டர்களுக்கு தனித்துவ அடையாள எண்; இந்தியா முழுவதும் பயிற்சி மேற்கொள்ளலாம் - தேசிய மருத்துவ ஆணையம் புதிய நடைமுறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/unique-identification-number-for-doctors-practice-allowed-across-india-new-procedure-by-the-national-medical-commission</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/unique-identification-number-for-doctors-practice-allowed-across-india-new-procedure-by-the-national-medical-commission#comments</comments><guid isPermaLink="false">482ba0c8-84b8-4e7f-a279-70092034e2b5</guid><pubDate>Wed, 19 Aug 2026 11:55:44 +0000</pubDate><atom:updated>2026-08-19T11:55:44.856Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>doctors,டாக்டர்கள்,தேசிய மருத்துவ ஆணையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/rglbl7ma/State-04.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/rglbl7ma/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மருத்துவர்கள் பதிவு மற்றும் மருத்துவ உரிம திருத்த விதிமுறைகள் 2026 வரைவு விதிகளில் தேசிய மருத்துவ ஆணையம் மாற்றங்கள் செய்து அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதன்படி, டாக்டர்கள் மாநில மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்தவுடன், தேசிய மருத்துவ ஆணையத்தின் நெறிசார் வாரியம் மூலமாக அவர்களுக்கு தனித்துவமான அடையாள எண் உருவாக்கப்படும். </p><p>இந்த எண் வழங்கப்பட்ட பிறகு, அந்த மருத்துவர் நாட்டின் எந்த மாநிலத்திலோ அல்லது யூனியன் பிரதேசத்திலோ தனியாக மீண்டும் பதிவு செய்ய தேவையில்லாமல் இந்தியா முழுவதும் மருத்துவ பயிற்சி மேற்கொள்ள தகுதி பெறுவார். மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தின் குறியீடு, மாநில மருத்துவ கவுன்சில் பதிவு எண் ஆகியவை உள்ளடங்கியிருக்கும் வகையிலான தனித்துவ அடையாள எண்ணாக இது இருக்கும்.</p><p>தனித்துவ அடையாள எண் முறை மூலம் ஒரு மருத்துவருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை மாநில பதிவேட்டிலும், தேசிய பதிவேட்டிலும் உடனே அறிந்து கொள்ள முடியும். ஏற்கெனவே மாநில மருத்துவ கவுன்சில்களில் பதிவு செய்துள்ள டாக்டர்கள் தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதளத்தில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தங்களது விவரங்களை புதுப்பித்து தனித்துவ அடையாள எண்ணை பெற்றுக்கொள்ள வேண்டும்.</p><p>இதற்காக எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்படாது. இதுதொடர்பாக பொதுமக்கள் மற்றும் மருத்துவத்துறை சார்ந்தவர்கள் தங்களின் கருத்துகளையும், ஆட்சேபனைகளையும் 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்கலாம் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>‘அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் வாகனம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்’ - டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-announcement-regarding-the-provision-of-vehicles-to-all-mlas-must-be-withdrawn-ttv-dhinakaran-urges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-announcement-regarding-the-provision-of-vehicles-to-all-mlas-must-be-withdrawn-ttv-dhinakaran-urges#comments</comments><guid isPermaLink="false">6c954e8e-48d0-4023-bd1e-5d21fffdcea7</guid><pubDate>Wed, 19 Aug 2026 11:41:54 +0000</pubDate><atom:updated>2026-08-19T11:41:54.531Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டி.டி.வி.தினகரன்,TTV Dinakaran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/8x4yiehg/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/8x4yiehg/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அரசு சார்பில் வாகனமும், ஓட்டுநரும், வாகனப் பராமரிப்புக்காக மாதந்தோறும் ரூ.75 ஆயிரமும், உதவியாளருக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்ற முதல்-அமைச்சர் விஜய்யின் அறிவிப்பு “கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது” போன்ற செயலாகும்.</p><p>சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே சொந்தமாக வாகனம் வைத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு கூடுதலாக அரசு சார்பில் கார் வழங்குவதும், மாதந்தோறும் ரூ.75 ஆயிரம் வாகனப் பராமரிப்புத் தொகையாக வழங்குவதும் அரசுக்கு அவசியமற்ற கூடுதல் செலவாகவே பார்க்க வேண்டியுள்ளது.</p><p>தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளாக இருந்து, த.வெ.க. சார்பில் போட்டியிட்டு முதன்முறையாக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சில உறுப்பினர்களுக்கு கார் வழங்க வேண்டும் என்றால், முதல்-அமைச்சர் விஜய் தனது சொந்த செலவிலோ அல்லது கட்சி செலவிலோ வழங்கலாமே என்ற கேள்விதான் தற்போது அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.</p><p>தமிழக அரசின் கஜானா காலியாக இருப்பதாகவும், சுமார் ரூ.13 லட்சம் கோடி கடனில் இருப்பதாகவும் வெள்ளை அறிக்கை வெளியிட்டதோடு, நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, “விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்தல், அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.2,500 வழங்குதல், ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் வழங்குதல், அனைத்து மகளிருக்கும் இலவசப் பேருந்துப் பயணம் வழங்குதல்” எனத் தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுக்கும் த.வெ.க. அரசுக்கு, அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் வாகனங்கள் வாங்குவதற்கு மட்டும் நிதி எங்கிருந்து வந்தது?</p> <p>“மக்கள் வரிப்பணத்தில் இருந்து ஒரு பைசா கூடத் தொட மாட்டேன்; தொட்டவர்களையும் விடமாட்டேன்” என வீரவசனம் பேசிய முதல்-அமைச்சர், தற்போது அதே மக்களின் வரிப்பணத்தில் இருந்து பல நூறு கோடி ரூபாய் செலவில் வாகனங்களை வாங்கி வீணடிப்பது எந்த வகையில் நியாயமாகும்?</p><p>எனவே, தனது துறையின் உச்சத்தை விட்டுவிட்டு, மக்களுக்குச் சேவை செய்வதற்காக அரசியலுக்கு வந்ததாகக் கூறும் முதல்-அமைச்சர் விஜய், வாகனம் இல்லாத எம்.எல்.ஏ.க்களுக்கு தனது சொந்த செலவிலோ அல்லது கட்சி செலவிலோ வாங்கித் தர வேண்டுமே தவிர, எம்.எல்.ஏ.க்களைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு, “கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது” போல் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் வாகனம் வழங்கப்படும் என்ற தனது அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>17 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-till-7-pm-in-17-districts</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-till-7-pm-in-17-districts#comments</comments><guid isPermaLink="false">ba13bd9a-ac66-4eeb-a2b7-168b4ce4b33b</guid><pubDate>Wed, 19 Aug 2026 11:24:30 +0000</pubDate><atom:updated>2026-08-19T11:24:30.920Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/sxe5d5hn/Untitled-4.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/sxe5d5hn/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி ராணிப்பேட்டை, வேலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, புதுக்கோட்டை, சிவகங்கை, பெரம்பலூர், திருச்சி மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அமித்ஷா தலைமையில் நடைபெறும் தென்மண்டல கவுன்சில் குழுவில் விஜய்க்கு முக்கிய பொறுப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vijay-to-hold-a-key-role-in-the-southern-zonal-council-committee-led-by-amit-shah</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vijay-to-hold-a-key-role-in-the-southern-zonal-council-committee-led-by-amit-shah#comments</comments><guid isPermaLink="false">0665b22c-e944-419f-9eae-66219ef2ffac</guid><pubDate>Wed, 19 Aug 2026 10:55:40 +0000</pubDate><atom:updated>2026-08-19T10:55:40.016Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,அமித்ஷா,Amitsha,தென்மண்டல கவுன்சில் கூட்டம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/v78ke43v/VIjay.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/v78ke43v/VIjay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மாமல்லபுரத்தில் நாளை நடைபெறும் தென்னிந்திய முதல்வர்கள் மாநாட்டுக்கான குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் விஜய் துணைத்தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் ஆந்திரா, கர்நாடகா,கேரளா, தமிழ்நாடு ,தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் முதல் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.</p><h2>தென் மண்டல கவுன்சில்  மாநாடு</h2><p>மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தென்மாநில முதல்-மந்திரிகள் மாநாடு நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கடந்த 2022-ம் ஆண்டுக்கு பிறகு இந்த மாநாடு நடைபெறவில்லை. இந்தநிலையில், 31-வது தென்மாநில முதல்-மந்திரிகள் மாநாடு இன்று  சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொடங்குகிறது.இந்த மாநாட்டுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை தாங்குகிறார். இதில் தமிழக முதல்-அமைச்சர் விஜய், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், கேரளம் முதல்-மந்திரி சதீசன், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி  ஆகியோர் பங்கேற்க உள்ளனர். மேலும், அந்தந்த மாநில தலைமை செயலாளர்கள், உள்துறை செயலா ளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்துகொள்கிறார்கள்.</p> <h2>என்ன ஆலோசிக்கப்படும்?</h2><p>மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள், கூட்டுறவை பலப்படுத்துவது, கட்டமைப்பு மேம் பாடு, நீர்வள பகிர்வு, கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், பேரிடர் மேலாண்மை, குற்றங்கள் தடுப்பு, எல்லை பிரச்சினைகள் உள்ளிட்ட பல் வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது. தற்போது காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகம் மற்றும் தமிழகம் இடையே முரண்பாடுகள் எழுந்த நிலையில் இந்த கூட்டம் மிகுந்த முக்கி யத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.</p><h2>அமித்ஷா வருகை</h2><p>இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய மந்திரி அமித்ஷா இன்று மாலை 4.50 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை புறப்படுகிறார். இரவு 7.40 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்த டைகிறார். விமான நிலையத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் கட்சியினர் வரவேற்கி றார்கள். பின்னர் அவர், காரில் கோவளம் செல்கிறார். இரவு 9 மணி முதல் 9.30 மணி வரை ஆய்வுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய் மற்றும் 5 மாநில முதல்-மந்திரிகள் கலந்து கொள்கிறார்கள்.</p> ]]></content:encoded></item><item><title>பூட்டை உடைக்க முடியாததால் ஏமாற்றம்: வீட்டின் வெளியே காய வைத்த துணிகளை அள்ளிச் சென்ற திருடன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/frustrated-thief-steals-clothes-after-failing-to-break-lock</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/frustrated-thief-steals-clothes-after-failing-to-break-lock#comments</comments><guid isPermaLink="false">7bae54ed-0462-44fa-bfc4-a29c3cae8b8c</guid><pubDate>Wed, 19 Aug 2026 10:47:13 +0000</pubDate><atom:updated>2026-08-19T10:47:13.648Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vellore,வேலூர்,திருட்டு,Theft,குடியாத்தம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/epfox6ye/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/epfox6ye/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வேலூர்,</p><p>பூட்டை உடைக்க முடியாததால் நொந்துபோன திருடன் வீட்டிற்கு வெளியே கொடியில் காய வைத்திருந்த சட்டைகளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>வேலூர் மாவட்டம், குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் எதிரில் உள்ள ஆற்றோரம் பகுதியை சேர்ந்தவர் சி.செல்வம் (47 வயது). இவர் நேற்று முன்தினம் சென்னைக்கு சென்றார். இந்த நிலையில் அவரது வீட்டுக்கு திருடன் வந்துள்ளார். வீட்டு கதவில் உள்ள பூட்டை திருடன் உடைக்க முயற்சி செய்துள்ளார். நீண்ட நேரம் போராடியும் பூட்டை உடைக்க முடியவில்லை.</p><p>இதனால் நொந்துபோன திருடன் வீட்டிற்கு வெளியே கொடியில் காய வைத்திருந்த சட்டைகளை திருடிவிட்டு சென்றுள்ளார். சென்னையில் இருந்து வீடு திரும்பிய செல்வம் துணிகள் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.</p><p>மேலும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக குடியாத்தம் பகுதியில் இது போன்ற சிறு சிறு திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>டெண்டர் முடியாமல் எப்படி பணிகளை துவங்க முடியும்? - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-can-works-start-without-tender-minister-athav-arjuna-questioned-by-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-can-works-start-without-tender-minister-athav-arjuna-questioned-by-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">2f763975-7798-460b-a72f-c3f3ace8ceaa</guid><pubDate>Wed, 19 Aug 2026 10:30:11 +0000</pubDate><atom:updated>2026-08-19T10:30:11.565Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Aadhav Arjuna,tender,டெண்டர்,அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,Nainar Nagenthran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/kva38c6d/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[  கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/kva38c6d/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அலுவலர்களின் வசதிக்காக என்றாலும் கூட, டெண்டர் முடியாமல் எப்படி பணிகளை துவங்க முடியும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்களே? என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>முதல்வர் அலுவலகம் மாற்றத்திற்கான டெண்டரில் உள்ள குளறுபடிகள் குறித்து சட்டமன்றத்தில் எழுந்த கேள்விகளுக்கு, “இன்னும் டெண்டரே முடியவில்லை, எல்லாம் அரசு அதிகாரிகளின் வசதிக்காகத் தான், எங்கள் முதல்வர் எளிமையானவர்” என்றெல்லாம் வசனம் பேசிய நீங்கள், ஒரு “Flow”-ல் பல உண்மைகளையும் உளறிவிட்டீர்கள்.</p><p>அதாவது, டெண்டரே இன்னும் முடியவில்லை என்றால், எதன் அடிப்படையில் முதல்வர் அறைக்கான புதுப்பித்தல் பணிகள் துவங்கப்பட்டன? இன்னாருக்கு தான் கொடுக்கப் போகிறோம் என்று ஏற்கனவே “Setting” செய்துவிட்டீர்களா? இதற்கு முன்பு இப்படி டெண்டர் விடாமல் இப்படி பணிகள் நடந்துள்ளனவா? மேலும், செய்தித்தாள் விளம்பரத்தில் 5.54 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டுவிட்டு, ஆன்லைன் டெண்டரில் தொகையைக் குறிப்பிடாமல் 'NA' என்று பதிவிட்டது ஏன்? மற்ற ஒப்பந்ததாரர்கள் பங்கேற்பதைத் தடுக்கவே இந்தச் சதியா?</p><p>பின்பு உங்கள் பித்தலாட்டங்களுக்கு புரட்சித் தலைவி அம்மாவின் பெயரை இழுக்கிறீர்களே, புரட்சித் தலைவி அம்மா ஒட்டுமொத்த தலைமை செயலகத்தையே வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று தான் நினைத்தாரே தவிர, தனது அலுவலகத்தை மட்டும் நவீனப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால், உங்கள் முதல்வர் தனது துறைக்கான அலுவலகத்தை மட்டும் புதுப்பித்துக் கொள்ள நினைப்பது ஏன்?</p><p>"அரசு அதிகாரிகளின் வசதிக்காகத் தான் இந்த மாற்றம்" என்று நீங்கள் கூறுவது, "பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்பது போலானது". காரணம், அனைத்து அரசு அமைச்சர்களுக்கும் செயலாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களை எல்லாம் ஓரம்கட்டிவிட்டு, முதல்வருக்கு மட்டும் சொகுசு அறையை உருவாக்குவது “ஆடம்பரம்” இன்றி வேறென்ன? எனவே, முதல்வரின் அறையை ஆடம்பரமாக்குவதன் உண்மைக் காரணத்தையும், அதன் டெண்டர்களில் நடக்கும் ஊழல்களையும் ஆதாரங்களுடன் மக்கள் முன் சமர்ப்பியுங்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>முதல் அமைச்சர் விஜய்க்கு புகழ்ச்சி பிடிக்காது: ஆதவ் அர்ஜுனா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-dislikes-flattery-aadhav-arjuna</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-dislikes-flattery-aadhav-arjuna#comments</comments><guid isPermaLink="false">acf2f122-9a68-497b-b180-6be63348997e</guid><pubDate>Wed, 19 Aug 2026 10:28:05 +0000</pubDate><atom:updated>2026-08-19T10:28:05.183Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,Vijay,விஜய்,Aadhav Arjuna,ஆதவ் அர்ஜுனா,முதல் அமைச்சர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/caqb6l1h/Adhav-arjuna.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஆதவ் அர்ஜுனா]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆதவ் அர்ஜுனா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/caqb6l1h/Adhav-arjuna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p> தமிழக சட்டசபையில் பேசும் எம்.எல்.ஏக்கள் தங்கள் கட்சியின் தலைவர்கள் புகழ்ந்து பேசுவதை பார்க்க முடிகிறது.  ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என பாரபட்சம் இல்லாமல் அனைத்து எம்.எல்.ஏக்களும் புகழ்ந்து பேசுகிறார்கள். அந்த வகையில், இன்று  முதல் அமைச்சர் விஜய்யை த.வெ.க எம்.எல்.ஏ ரெட்டியார்பட்டி நாராயணன் புகழ்ந்து பேசினார்.</p><p>பாரிக்கரையிலே மண்டபம் ஒன்றை வளர்ந்து நாரியர்கள் கூடி நாடெங்கும் வாசமிட்டு ஒரு குடைக்குள் ஆள்வாய் உன் காலம் என் மகனே என்று பாடல் பாடி புகழ்ந்து கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "நம்முடைய முதல் அமைச்சர் விஜய் மற்ற முதல் அமைச்சர் போல் இல்லை. நம்முடைய முதல் அமைச்சருக்கு புகழாரம் பிடிக்காது. தங்களுடைய தொகுதி சார்ந்த தேவைகளை குறித்து மட்டும் பேசுங்கள். சட்டப்பேரவையில் தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர்கள் தொகுதி சார்ந்த தேவைகளை குறித்து மட்டும் பேச வேண்டும்" என்றார்.</p><p> அப்போது எழுந்து பேசிய முன்னாள் அமைச்சர் நேரு, "முதல் அமைச்சருக்கு புகழ்ச்சி பிடிக்காது என்று சொல்வதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் மற்ற முதல் அமைச்சர்களை போன்று எங்கள் முதல் அமைச்சர் இல்லை என்று சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் புகழ்ச்சி  பிடிக்காது.  தன்னை சட்டமன்ற உறுப்பினர்களை புகழ்ந்து பேச வேண்டாம் என பேரவையிலேயே எழுந்து நின்று சொன்னவர் தான்   மு க ஸ்டாலின்" என்றார்.</p> ]]></content:encoded></item><item><title>மாணவர்கள், இளைஞர்களின் ஜனநாயக உரிமையை தமிழ்நாடு அரசு பறிக்கக் கூடாது - இந்தியக் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-must-not-deprive-students-youth-of-democratic-rights</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-must-not-deprive-students-youth-of-democratic-rights#comments</comments><guid isPermaLink="false">e12652ad-cb91-4e54-839b-ccef60be309f</guid><pubDate>Wed, 19 Aug 2026 10:07:25 +0000</pubDate><atom:updated>2026-08-19T10:07:25.355Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu Government,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி,வலியுறுத்தல்,மாணவர்கள்,CPI,college students,இளைஞர்கள்,A youth,Urges</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/updo4svo/veerapandiyan.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மு.வீரபாண்டியன்]]></media:title><media:description type="html"><![CDATA[ இந்தியக் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/updo4svo/veerapandiyan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாணவர்கள், இளைஞர்களின் ஜனநாயக உரிமையை தமிழ்நாடு அரசு பறிக்கக் கூடாது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழுக் கூட்டம் வலியுறுத்தல். இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D">மு.வீரபாண்டியன்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-</p> <h2>நிர்வாகக்குழு கூட்டம்</h2><p>இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழு கூட்டம் இன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான சென்னை பாலன் இல்லத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் க.சந்தானம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி, மாநில துணைச் செயலாளர்கள் நா.பெரியசாமி, எம்.ரவி, பொருளாளர் எம்.ஆறுமுகம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.சுப்பராயன், வை.செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.</p> <p><strong>கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.</strong></p><h2>கண்டனம்</h2><p>தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள், இடதுசாரி கட்சிகள், தமிழ்நாடு காக்ரோச் கட்சி   நடத்தும் போராட்டங்கள் மற்றும் கிளர்ச்சிகளில் பங்கேற்பதை தடுப்பதற்காக பள்ளிக்கல்வி, உயர்கல்வி, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு உத்திரவிட்டுள்ளதை  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.</p> <h2>ஜனநாயக உரிமை</h2><p>இந்திய குடிமக்களுக்கு அரசியல் சிந்தனை, சமூக அக்கறை, கருத்துரிமை, அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை ஆகியவை அரசியலமைப்பு சட்டத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளன. மாணவர்களும், இளைஞர்களும் நாட்டின் குடிமக்களாவர். கல்வி நிறுவனங்களில் பயில்கிறார்கள் என்பதற்காக, அந்த அடிப்படை ஜனநாயக உரிமைகளை பறிக்க முடியாது.</p> <h2>முக்கிய சக்தி</h2><p> 18 வயதானவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டிருக்கும் போது, அவர்கள் தமது அரசியல் செயல்பாட்டை வெளிப்படுத்தக்கூடாது என்று அரசு தடுப்பது, கல்வி நிறுவனங்களை ஜனநாயக விவாதங்களிலிருந்து துண்டித்து, இளைஞர், மாணவர்களை அரசியலற்றவர்களாக மாற்ற முயலும் அதிகார வர்க்க அணுகுமுறையாகும்.</p> <p>நாட்டின் விடுதலை போராட்டம் உள்ளிட்டு, வரலாற்றில் மாணவர்களும், இளைஞர்களும் சமூக மாற்றத்தின் முக்கிய சக்தியாக திகழ்ந்துள்ளனர்.</p><h2>குற்றச்செயலாகும்</h2><p>அந்த போராட்ட வரலாற்றை மறுப்பதும், மாணவர்களின் அரசியல் உணர்வை குற்றமாக கருதுவதும் ஜனநாயகத்தின் அடிப்படைக்கே எதிரானதாகும். அரசியலமைப்புச்சட்டம் வழங்கும் உரிமைகளை குடிமக்கள் அனுபவிக்க விடாமல் தடுப்பதுதான் குற்றச்செயலாகும்.</p> <h2>திமாகி நக்சல்</h2><p>நாட்டின் விடுதலை திருநாளன்று செங்கோட்டையில் தேசிய கொடியேற்றிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF">பிரதமர் மோடி</a>, அரசு கொள்கைகளுக்கு மாற்றாக சிந்திப்பவர்களை, “திமாகி நக்சல்” என்றும், அவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.</p> <h2>துறைவாரி நடவடிக்கை</h2><p>திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் பட்டியலை, முகவரியோடு ஒரே நாளில் தயாரித்து தருமாறு வட்டாட்சியர் உத்திரவிட்டார்.</p> <p>இதன் தொடர்ச்சியாகவே, இந்த உத்திரவும் வந்துள்ளது என்றே கருத வேண்டியுள்ளது. இந்த ஆணைகள் தற்போது திரும்ப பெறப்பட்டிருந்தாலும், இவற்றுக்கு காரணமானவர்களை கண்டறிந்து கடுமையான துறைவாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.</p> <h2>ஜனநாயக மாண்புகள்</h2><p>மாணவர்களின் அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வை தடுப்பதற்கு பதிலாக, அரசியலமைப்பு சட்ட உரிமைகள், ஜனநாயக மாண்புகள், சமூகநீதி, மதச்சார்பின்மை, சமத்துவம் ஆகியவற்றை கல்வி நிறுவனங்களில் வலுப்படுத்த வேண்டும். மாணவர்கள் தங்கள் கருத்துகளை அமைதியான மற்றும் ஜனநாயக வழிகளில் வெளிப்படுத்துவதற்கான உரிமையை அரசு முழுமையாக பாதுகாக்க வேண்டும். </p> <h2>மாணவர் பேரவை தேர்தல்</h2><p>கடந்த 30 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள, கல்வி நிறுவன மாணவர் பேரவை தேர்தல்களை உடனடியாக நடத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழுக் கூட்டம் வலியுறுத்துகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘குற்ற வழக்கு உள்ளவர்கள் கபடியில் பங்கேற்க தகுதியற்றவர்கள்’ - மதுரை ஐகோர்ட்டு கிளை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/individuals-with-criminal-cases-pending-against-them-are-ineligible-to-participate-in-kabaddi-madurai-bench-of-the-high-court</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/individuals-with-criminal-cases-pending-against-them-are-ineligible-to-participate-in-kabaddi-madurai-bench-of-the-high-court#comments</comments><guid isPermaLink="false">bae7b20e-5638-4756-9dc6-17ac2f59ea25</guid><pubDate>Wed, 19 Aug 2026 10:02:05 +0000</pubDate><atom:updated>2026-08-19T10:02:05.548Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai High Court Branch,மதுரை ஐகோர்ட்டு கிளை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/9rr0lfeo/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/9rr0lfeo/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரை மாவட்டம் சோழவந்தான் சங்கக்கோட்டை கிராமத்தில் மந்தைக்களத்தில் வரும் 29, 30-ந்தேதிகளில் கபடி போட்டி நடத்த அனுமதி மற்றும் காவல்துறை பாதுகாப்புக் கோரி காவல் ஆய்வாளரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் போட்டிக்கு அனுமதி வழங்க மறுத்து காவல் ஆய்வாளர் உத்தரவிட்டார். இந்நிலையில், திட்டமிட்ட தேதிகளில் கபடி போட்டி நடத்த அனுமதி மற்றும் காவல்துறை பாதுகாப்புக்கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் சோழவந்தானை சேர்ந்த முகேஷ் என்பவர் மனுத்தாக்கல் செய்தார்.</p><p>இந்த மனு இன்று மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதி எல்.விக்டோரியா கவுரி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எல்.விக்டோரியா கவுரி, “ஆகஸ்ட் 29, 30-ந்தேதிகளில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கபடி போட்டி நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. போட்டியை நடத்துபவர்கள், பங்கேற்பவர்கள் என யாரும் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது கட்சித் தலைவர், சாதி, சமூகம் அல்லது மதப்பிரிவு ஆகியவற்றுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ கூச்சலிடவோ அல்லது முழக்கம் எழுப்பவோ கூடாது.</p><p>பொது அமைதி மற்றும் நிம்மதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான எந்தவொரு விரும்பத்தகாத சம்பவமும் இந்த கபடி போட்டியில் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். குற்றவியல் வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் கபடி போட்டியில் பங்கேற்க தகுதியற்றவர்கள் ஆவர். மேலும், போட்டியில் பங்கேற்பவர்கள் எவ்வித போதைப் பொருட்களையோ அல்லது மதுவையோ உட்கொள்ளக் கூடாது.</p><p>சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலான ஆட்சேபனைக்குரிய வாசகங்கள் அல்லது மதம் மற்றும் அரசியல் தலைவர்களின் படங்கள் அச்சிடப்பட்ட ஆடைகளை போட்டியின் போது அணியக் கூடாது. மதத் தலைவர்களை புகழ்ந்து பாடும் அல்லது மத உணர்வுகளைத் தூண்டும் வகையிலான பாடல்களை போட்டி நடைபெறும் இடத்தில் ஒலிக்கவிடக் கூடாது.</p><p>குறிப்பிட்ட சமூகம் அல்லது தலைவரைக் குறிக்கும் வகையிலான எந்தவொரு விளம்பரப் பலகைகளையும் வைக்கக் கூடாது. இந்த நிபந்தனைகள் மீறப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், தேவைப்பட்டால் கபடி போட்டியை நிறுத்தவும் காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது” என்று உத்தரவிட்டார்.</p> ]]></content:encoded></item></channel></rss>