<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 11 Jul 2026 21:02:22 +0000</lastBuildDate><item><title>படகு விபத்தில் தமிழர்களுக்கு உதவ சேலம் டி.ஐ.ஜி. வியட்நாம் செல்கிறார்-முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/boat-accident-chief-minister-vijay-orders-ips-officer-santosh-hadimani-to-rush-to-vietnam-on-behalf-of-the-tamil-nadu-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/boat-accident-chief-minister-vijay-orders-ips-officer-santosh-hadimani-to-rush-to-vietnam-on-behalf-of-the-tamil-nadu-government#comments</comments><guid isPermaLink="false">10baf82e-e41e-4892-aef6-efd66ead2bb3</guid><pubDate>Sat, 11 Jul 2026 20:56:50 +0000</pubDate><atom:updated>2026-07-11T20:56:50.814Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,வியட்நாம்,Vietnam,படகு விபத்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/6lcjgxa8/vietnam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/6lcjgxa8/vietnam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>வியட்நாமில் படகு கவிழ்ந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உள் பட இந்தியர்கள் 15 பேர் பலியாகினர். இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது. தமிழ்நாடு அரசு, இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் உள்ளது.</p><p>இதன் தொடர்ச்சியாக, முதல்-அமைச்சர் விஜய் தற்போதைய சூழ்நிலையை ஆய்வு செய்து, வியட்நாமில் உள்ள தூதரக அதிகாரிகளுடன் இணைந்து, உயிரிழந்தவர்களின் உடல்களைத் தாயகம் கொண்டு வரும் பணிகளை விரைவுபடுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை வசதிகளை எளிதாக்கவும் தமிழ்நாடு அரசின் சார்பில் சந்தோஷ் ஹடிமானி ஐ.பி.எஸ். (டி.ஐ.ஜி. சேலம்) அதிகாரியை வியட்நாமின் ஹோச மின் நகரத்திற்கு விரைந்து செல்ல உத்தரவிட்டுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>டி.டி.வி. தினகரனின் கருத்து மோசமான முன்னுதாரணம்: அமைச்சர் வன்னி அரசு காட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ttv-dhinakarans-remarks-set-a-bad-precedent-minister-vanni-arasu-criticizes-sharply</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ttv-dhinakarans-remarks-set-a-bad-precedent-minister-vanni-arasu-criticizes-sharply#comments</comments><guid isPermaLink="false">31d647b2-2cd5-4de6-8efb-246ebc7f216f</guid><pubDate>Sat, 11 Jul 2026 20:05:06 +0000</pubDate><atom:updated>2026-07-11T20:05:06.365Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,திமுக,DMK,TTV Dhinakaran,வன்னி அரசு,டி.டி.வி. தினகரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/mf68ojbl/vanni-arasu.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/mf68ojbl/vanni-arasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p> சேலம்,  </p><p>விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வா கியும், தமிழக சமூக நீதித்துறை அமைச்சரு மான வன்னியரசு நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். தமிழ்நாட்டில் பா.ஜனதாவை கண்டு அனைத்து கட்சிகளும் பயப்படுவதாக நயினார் நாகேந்திரன் கூறியது குறித்து நிருபர்களின் கேள்விக்கு, 'பாம்புகளை பார்த்தால் அனைவரும் பயப்படத்தான் செய்வார்கள்' என்றார்.</p><p>மேலும் அவர் கூறும் போது, எனது துறையில் சுதந்திரமாக செயல்படுகிறேன். மக்கள் முன்னேற்றத்திற்காக அச்சமின்றி உழைக்க முதல்-அமைச்சர் எனக்கு முழு வழிகாட்டுதலை வழங்கி உள்ளார். த.வெ.க.வை வீழ்த்துவதற்காக தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் இணைய வேண்டும் என்ற டி.டி.வி. தினகரனின் கருத்து மோசமான முன்னுதாரணம் ஆகும். கோட்பாடு அடிப்ப டையில் பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை எதிர்ப்பதற்கு இணைந்தால் மட்டுமே அது சரியாக இருக்கும்' என்றார்.</p>]]></content:encoded></item><item><title>கரூர் பேச்சுக்கு எதிர்ப்பு: விஜய் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிய வேண்டும்- தி.மு.க. புகார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/opposition-to-karur-speech-cbi-should-register-a-case-against-vijay-dmk-complaint</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/opposition-to-karur-speech-cbi-should-register-a-case-against-vijay-dmk-complaint#comments</comments><guid isPermaLink="false">c55b8633-6d27-44a5-83d5-8ac7b06a2c28</guid><pubDate>Sat, 11 Jul 2026 19:54:09 +0000</pubDate><atom:updated>2026-07-11T19:54:09.799Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர்,விஜய்,சி.பி.ஐ,தி.மு.க</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/1hgmzs2n/Karur.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/1hgmzs2n/Karur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2> கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்</h2><p>கரூரில் த.வெ.க. தலைவரும், முதல்-அமைச்சருமான விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி அன்று மேற்கொண்ட பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்த நிலையில் கரூருக்கு நேற்று முன்தினம் சென்ற முதல்-அமைச்சர் விஜய், இந்த சம் பவத்தை சுட்டிக்காட்டி முந்தைய தி.மு.க. அரசு மற்றும் காவல்துறை மீது பரபரப்பு குற்றச்சாட்டுக்களை கூறினார். அவருடைய இந்த பேச்சு வழக்கின் சாட்சிகளை அச்சுறுத்தும் வகையில் இருப்பதாகவும், எனவே அவர் மீது <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D">சி.பி.ஐ</a>. தனியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் தி.மு.க. சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>விஜய் மீது வழக்குப்பதிவு</h2><p>இதுதொடர்பாக தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்த வழக்கு விசாரணையை கண்காணிக்கும் சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான கண்காணிப்பு குழுவுக்கு புகார் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-கரூரில் கடந்த 10-ந்தேதி அன்று நடைபெற்ற கூட்டத்தில் முதல்-அமைச் சர் விஜய், கரூர் துயரச் சம்பவத்திற்கு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D">கரூர் </a>போலீஸ்துறை முழுப் பொறுப்பு போலவும், இதன் பின்னணியில் அரசியல் சதி இருப்பது போன்றும் பேசியுள்ளார். அவருடைய இந்த பேச்சு வழக்கின் முக்கிய சாட்சிகளை கலைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஏற்கனவே தமிழக அரசின் உள்துறைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள எதிர் ஆவணத்தில், த.வெ.க. அமைப்பாளர்களின் திட்டமிடப்படாத செயல்பாடுகளும், விதிமீறல்களுமே இந்த உயிரிழப்பு சம்பவத்துக்கு காரணம் என்று தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதே உள்துறையைத் தன்வசம் வைத்துள்ள முதல்-அமைச்சர் அதற்கு முற்றிலும் முரணாகப் பொதுவெளியில் பேசி சாட்சிகளைத் திசை திருப்ப முயன்றுள்ளார். எனவே அவர் மீது சி.பி.ஐ. தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.</p><h2>நீதிமன்றத்தில் ஆஜராகி...</h2><p>கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் கரூர் த.வெ.க. மாவட்ட செயலாளர் மதியழகன், த.வெ.க. பொதுச்செயலாளர்-அமைச்சர் ஆனந்த். இணை செயலாளர்-அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், அமைச்சர் ஆதவ் அர் ஜுனா, முதல்-அமைச்சரின் தனி செயலாளர் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் குற்றவாளிகள் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. சாட்சிகளைச் சிதைக்கக்கூடாது என்ற நீதிமன்றக் கட்டுப்பாடுகளும் அவர்கள் மீது விதிக்கப்படவில்லை.</p><p>எனவே வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவர்களை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகச் செய்து, சாட்சிகளை அச்சுறுத்தக்கூடாது என்ற நிபந்தனையுடன் கூடிய பிணைப் பத்திரங்களை எழுதி வாங்கவும் சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இதே கோரிக்கை அடங்கிய மனுவை டெல்லி சி.பி.ஐ. இயக்குனர் அலுவ லகத்துக்கும் ஆர்.எஸ்.பாரதி அனுப்பி வைத்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title> காலத்தால் அழியாத பாடல்களைப் பாடியவர் ஜானகி:  மு.க.ஸ்டாலின் இரங்கல்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/janaki-sang-timeless-songs-mk-stalin-offers-condolences</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/janaki-sang-timeless-songs-mk-stalin-offers-condolences#comments</comments><guid isPermaLink="false">b3ff94e2-3231-4918-9770-b6ac8de8b818</guid><pubDate>Sat, 11 Jul 2026 16:51:06 +0000</pubDate><atom:updated>2026-07-11T16:51:06.574Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஸ்டாலின்,MK Stalin&apos;,DMK leader MK Stalin,பாடகி ஜானகி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/4wj5k9a4/Janaki.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/4wj5k9a4/Janaki.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>'தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்' என்று கொண்டாடப்பட்ட பழம்பெரும் பின்னணி பாடகி ஜானகி உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அவரது மறைவு ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 88 வயதான ஜானகி  உடல் நல பாதிப்பால் மைசூருவில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில்  அனுமதிக்கப்பட்டார்.தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஜானகிக்கு சிகிச்சையின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.   பாடகி ஜானகி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.</p><p>முன்னாள் முதல் அமைச்சரும் திமுக தலைவருமான முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது;  இசைக்குயில் எஸ். ஜானகி மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் முதல் அனிருத் வரை ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய கானகோகிலம் ஜானகி அவர்களது இசைப்பயணம் மிக நீண்டது. </p><p>அவரது மறைவு என்பது, வானொலி தொடங்கி ஸ்பாட்டிஃபை வரையில் அவரது அமுதகானங்களைத் தங்கள் இல்லங்களில் ஒலிக்கவிட்டு இரசிக்கும் தமிழ்நாட்டு மக்கள் உள்ளிட்ட தென்னிந்திய மக்களுக்கும், இந்தியத் திரைத்துறைக்கும் பேரிழப்பாகும். இனிமையும் இளமையும் மாறாத தனது குரலால் காலத்தால் அழியாத பாடல்களைப் பாடிய அவர், என்றும் நம் இல்லங்களிலும் நெஞ்சங்களிலும் ஒலித்துக்கொண்டே இருப்பார். அவரது மறைவால் வாடும் திரைத்துறையைச் சேர்ந்த கலைஞர்கள், இரசிகர்கள், அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>பழம்பெரும் பின்னணி பாடகி எஸ்.ஜானகி மறைவு - முதல்-அமைச்சர் விஜய் இரங்கல் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/passing-of-veteran-playback-singer-s-janaki-chief-minister-vijay-offers-condolences</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/passing-of-veteran-playback-singer-s-janaki-chief-minister-vijay-offers-condolences#comments</comments><guid isPermaLink="false">1f9cf731-6744-44ff-9e8a-cdc32997e67b</guid><pubDate>Sat, 11 Jul 2026 16:31:57 +0000</pubDate><atom:updated>2026-07-11T16:31:57.682Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,பாடகி எஸ்.ஜானகி,singer S Janaki</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/fiz70jbm/State-15.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/fiz70jbm/State-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பாடகி எஸ்.ஜானகி வயது முதிர்வு காரணமாக மைசூரில் காலமானார். அவருக்கு வயது 88. அவரது மறைவுக்கு திரைத்துறையினரும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது;-</p><p>“இந்தியத் திரையிசை உலகில் தனது தனித்துவமான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்ற பழம்பெரும் பின்னணி பாடகி எஸ்.ஜானகி அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.</p><p>தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்தவர். பலமுறை தேசிய திரைப்பட விருதுகள் உட்பட எண்ணற்ற உயரிய விருதுகளைப் பெற்ற அவர், தனது இனிமையான குரல், உணர்வுகளை வெளிப்படுத்தும் அபார திறன் மற்றும் இசைக்கான அர்ப்பணிப்பால் ரசிகர்களின் மனங்களில் என்றும் நிலைத்திருப்பார்.</p><p>அவரது மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகினர், இசைக் கலைஞர்கள் மற்றும் உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>‘எஸ்.ஜானகி பாடிய பாடல்களின் மூலம் அவரது நினைவுகள் என்றென்றும் நிலைத்திருக்கும்’ - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/memories-of-s-janaki-will-endure-forever-through-the-songs-she-sang-communist-party-of-india-condolence</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/memories-of-s-janaki-will-endure-forever-through-the-songs-she-sang-communist-party-of-india-condolence#comments</comments><guid isPermaLink="false">7f0d48e1-0a32-4e9e-8408-add0b01d6cc1</guid><pubDate>Sat, 11 Jul 2026 16:22:15 +0000</pubDate><atom:updated>2026-07-11T16:22:15.062Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி,CPI,பாடகி எஸ்.ஜானகி,singer S Janaki</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/eleixf1m/State-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/eleixf1m/State-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பாடகி எஸ்.ஜானகி வயது முதிர்வு காரணமாக மைசூரில் காலமானார். அவருக்கு வயது 88. அவரது மறைவுக்கு திரைத்துறையினரும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது;-</p><p>“பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ். ஜானகி அம்மாள் காலமானார். வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால், மைசூருவில் அவர் உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த துயரத்தை தருகிறது. 1957-ல் விதியின் விளையாட்டு என்ற திரைப்படத்தில் பாடியதன் மூலம், திரையுலகில் நுழைந்த ஜானகி, 17-க்கும் மேற்பட்ட மொழிகளில், 48,000-த்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார் என்பது மாபெரும் சாதனையாகும். அவர்  நான்கு முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.</p><p>இனிமையான குரலுக்கு சொந்தக்காரர் அவர். அவரது தாய் மொழி மலையாளமாக இருந்தாலும், தமிழ் மொழிப் பாடல்களையும் மிகச் சிறப்பாக, இனிமையாகப் பாடியவராவார். தான் பாடிய பாடல்கள் மூலம் கோடிக்கணக்கான தமிழர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவராவார்.</p><p>அவர் பாடிய பாடல்களின் மூலம் அவரது நினைவுகள் என்றென்றும் நிலைத்திருக்கும். ஜானகி அம்மாள் அவர்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலியை செலுத்துகிறது. அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>சேலத்தில் இருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தாவுக்கு விரைவில் விமான சேவை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/air-services-from-salem-to-delhi-mumbai-and-kolkata-to-start-soon</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/air-services-from-salem-to-delhi-mumbai-and-kolkata-to-start-soon#comments</comments><guid isPermaLink="false">8d411325-3d7d-4e9d-8c42-47487df6b549</guid><pubDate>Sat, 11 Jul 2026 16:19:08 +0000</pubDate><atom:updated>2026-07-11T16:19:08.198Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Delhi,டெல்லி,மும்பை,Mumbai,Salem,சேலம்,Kolkata,கொல்கத்தா,Air service,விமான சேவை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/djuszfj7/salem-airport.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சேலம் விமான நிலையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/djuszfj7/salem-airport.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலத்தில் இருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தாவிற்கு விரைவில் விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விமான நிலைய இயக்குனர் நவ்ஷாத் தெரிவித்துள்ளார்.</p><h2>கோரிக்கை</h2><p>சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காமலாபுரத்தில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu/flight-services-to-resume-in-september-from-salem-airport-1019365">சேலம் விமான நிலையம்</a> உள்ளது. இங்கிருந்து தற்போது சென்னை, கொச்சி, பெங்களூரூ, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சேவையை சேலம் மட்டுமின்றி சுற்றுவட்டார மாவட்ட மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதேசமயம், சேலம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து இரவு நேர விமான சேவை மற்றும் நாட்டின் பிற முக்கிய நகரங்களுக்கு விமான சேவையை தொடங்க வேண்டும் என பல் வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.</p><h2>  கடிதம்</h2><p>இந்நிலையில், மேட்டூரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெயபாரதி என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் 4 கேள்விகளை கேட்டு சேலம் விமான நிலைய இயக்குனர் நவ்ஷாத்திற்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், சேலத்தில் இருந்து சென்னைக்கு தினமும் காலை மற்றும் மாலையில் விமானம் இயக்க வேண்டும். அதேபோல், சேலத்தில் இருந்து மும்பை, டெல்லி, கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கு புதிய நேரடி விமான சேவைகளை அறிமுகப்படுத்துதல், விமான நிலைய முனைய விரிவாக்கம், பயணிகள் வசதிகள் மற்றும் செயல்பாட்டு வசதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பை மேம்படுத்துதல். இரவு நேர தரையிறக்க வசதிகளை செய்தல் போன்ற கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதற்கு விமான நிலைய இயக்குனர் நவ்ஷாத் பதில் அளித்து விளக்கம் தெரிவித்துள்ளார்.</p><h2>டெல்லி, கொல்கத்தா, மும்பை</h2><p>அதில், சேலத்தில் இருந்து சென்னைக்கு தினமும் கூடுதல் விமானங்களை இயக்குமாறு சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களை கேட்டு கொண்டுள்ளோம். சேலம் விமான நிலையத்தில் ஓடுபாதை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிந்த பிறகு சேலத்தில் இருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கு விமான சேவை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.</p><p>அதேபோல், இரவு நேரத்திலும் விமானம் தரையிறங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விமான நிலையம் விரிவாக்கம் செய்வதற்கான தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் முடிந்துவிட்டது. ஆனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு பணம் பட்டுவாடா கொடுக்கப்பட வில்லை. அந்த பணிகளும் விரைவில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கிறோம், என்று கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பாடகி ஜானகி மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/actor-rajinikanth-condoles-the-death-of-singer-janaki</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/actor-rajinikanth-condoles-the-death-of-singer-janaki#comments</comments><guid isPermaLink="false">2b4d8371-6217-4a48-b4d5-fe7402ef39e6</guid><pubDate>Sat, 11 Jul 2026 16:08:25 +0000</pubDate><atom:updated>2026-07-11T16:08:25.247Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514964</atom:uri></atom:author><description></description><media:keywords>ரஜினிகாந்த்,Rajinikanth,இரங்கல்,condolences,பின்னணி பாடகி,பாடகி எஸ்.ஜானகி,singer S Janaki</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/79o0gedp/Untitled-10.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/79o0gedp/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பிரபல பின்னணி பாடகியான எஸ். ஜானகி, கர்நாடக மாநிலம் மைசூரில் காலமானார். அவருக்கு வயது 88. மூச்சுதிணறல் ஏற்பட்டு மைசூரில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது. எஸ்.ஜானகி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.</p><p>அவரது மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் எஸ். ஜானகி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தன்னுடைய தேனமுதக் குரலால் தலைமுறை தலைமுறையாக மக்களை மகிழ்வித்த ஜானகி அம்மா அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தன்னுடைய தேனமுதக் குரலால் தலைமுறை தலைமுறையாக மக்களை மகிழ்வித்த ஜானகி அம்மா அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும் <a href="https://x.com/hashtag/JanakiAmma?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#JanakiAmma</a></p>&mdash; Rajinikanth (@rajinikanth) <a href="https://x.com/rajinikanth/status/2075967337195520158?ref_src=twsrc%5Etfw">July 11, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>வியட்நாம் படகு விபத்தில் இந்தியர்கள் 15 பேர் உயிரிழப்பு - எடப்பாடி பழனிசாமி இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/15-indians-killed-in-vietnam-boat-accident-edappadi-palaniswami-condoles</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/15-indians-killed-in-vietnam-boat-accident-edappadi-palaniswami-condoles#comments</comments><guid isPermaLink="false">db03273d-d87b-48e0-97e3-f0ff97b6e28d</guid><pubDate>Sat, 11 Jul 2026 15:55:42 +0000</pubDate><atom:updated>2026-07-11T15:55:42.173Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,எடப்பாடி பழனிசாமி,அதிமுக,Edappadi Palaniswami,வியட்நாம்,Vietnam,boat accident,படகு விபத்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/zvbm2dzz/Untitled-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/zvbm2dzz/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஆசியாவில் தென்சீன கடல் பகுதியில் அமைந்துள்ள நாடு வியட்நாம். இந்நாட்டில் பல்வேறு தீவுகள், சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த சுற்றுலா தலங்களுக்கு இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.</p><h2>படகு விபத்து</h2><p>இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த 32 சுற்றுலா பயணிகள் உள்பட 35 பேர் இன்று காலை பு குவாக் தீவுக்கு படகில் சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.</p><p>படகில் சென்றபோது மோசமான வானிலை காரணமாக படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணம் செய்த அனைவரும் கடலில் விழுந்து தத்தளித்துள்ளனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் 18 பேரை உயிருடன் மீட்டதாக முதற்கட்ட தகவல் வெளியானது.</p><p>ஆனாலும், இந்த சம்பவத்தில் தமிழர்கள் 10 பேர் உள்பட இந்தியர்கள் 15 பேர் உயிரிழந்தனர். மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக வியட்நாம் அரசு தெரிவித்துள்ளது.</p><h2>ஆழ்ந்த இரங்கல் </h2><p>இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>வியட்நாம் நாட்டில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.</p><p>உயிரிழந்தோர் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">குடும்பத்தாருக்கு </a>எமது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>உயிரிழந்தோர் உடல்கள் தாயகம் திரும்புவதற்கும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து நலம்பெறச் செய்யவும் வியட்நாம் நாட்டு அரசுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வியட்நாம் படகு விபத்தில் இந்தியர்கள் உயிரிழப்பு - வீரபாண்டியன் இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/indians-die-in-vietnam-boat-accident-veerapandian-expresses-condolences</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/indians-die-in-vietnam-boat-accident-veerapandian-expresses-condolences#comments</comments><guid isPermaLink="false">21c4f56c-ab5c-465c-8402-dd5894ae9b27</guid><pubDate>Sat, 11 Jul 2026 15:37:17 +0000</pubDate><atom:updated>2026-07-11T15:37:17.463Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வியட்நாம்,Vietnam,படகு விபத்து,M.Veerapandian,வீரபாண்டியன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/yc0n7s1h/State-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/yc0n7s1h/State-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-</p><p>“வியட்நாமில் உள்ள தீவிற்கு சுற்றுலா பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பியபோது படகு கவிழ்ந்ததில் தமிழர்கள் 10 பேர் உள்பட இந்திய சுற்றுலா பயணிகளில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி மிகுந்த மன வேதனையையும், துயரத்தையும் தருகிறது.</p><p>இந்தப் படகு விபத்தில் உயிரிழந்தோருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலியை செலுத்துகிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.</p><p>இந்த சம்பவத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் உடல்களை தமிழகம் கொண்டு வருவதற்கு இந்தியத் தூதரகம் வாயிலாக நடவடிக்கை எடுத்திட தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் முன்வர வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p> ]]></content:encoded></item><item><title> பராமரிப்பு பணி: மெமு ரெயில் சேவையில் நாளை முதல் மாற்றம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-memu-train-services-begin-tomorrow-partial-service-cancellation-due-to-maintenance-work</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-memu-train-services-begin-tomorrow-partial-service-cancellation-due-to-maintenance-work#comments</comments><guid isPermaLink="false">eef71055-7f95-496c-a8ac-02a7c9b59936</guid><pubDate>Sat, 11 Jul 2026 15:33:38 +0000</pubDate><atom:updated>2026-07-11T15:33:38.918Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ரத்து,மெமு ரெயில்,tomorrow,நாளை,சேவை,services,Cancel,MEMU train</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/7omjcmrq/memu-express-train.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மெமு எக்ஸ்பிரஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/7omjcmrq/memu-express-train.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பயணிகள் பாதுகாப்பு கருதி விழுப்புரம் யார்டில் பொறியியல் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக மெமு  ரெயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. வருகிற 12, 13, 14, 15, 17, 18. 25 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பின்வரும் மெமு ரெயில் சேவைகள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.</p><h2> ரத்து </h2><p>திருப்பதியில் இருந்து அதிகாலை 4.10 மணிக்கு புறப்படும் வண்டி எண்: 16111, திருப்பதி -புதுச்சேரி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AE%E0%AF%81%20%20%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D">மெமு  எக்ஸ்பிரஸ்</a>, முண்டியம்பாக்கம் மற்றும் புதுச்சேரி இடையே பகுதியாக செய்யப்படுகிறது. புதுச்சேரியில் இருந்து மாலை 3.35 மணிக்கு புறப்படும் வண்டி எண்: 66052, புதுச்சேரி- எழும்பூர் மெமு பயணிகள் ரெயில் புதுச்சேரி மற்றும் முண்டியம்பாக்கம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. </p><p>நாளை முதல் (12-ந் தேதி), 13, 14, 15, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பின வரும் மெமு ரெயில் சேவைகள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. விழுப்புரத்தில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்படும் வண்டி எண்: 66046, விழுப்புரம் சென்னை கடற்கரை மெமு  பயணிகள் ரெயில், விழுப்புரம் மற்றும் முண்டியம்பாக்கம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.</p> <h2>சென்னை ரெயில்வே கோட்டம்</h2><p>தாம்பரத்தில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்படும் வண்டி எண்: 66045, தாம்பரம் விழுப்புரம் மெமு பயணிகள் ரெயில், முண்டியம்பாக்கம் மற்றும் விழுப்புரம் இடை யே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. புதுச்சேரியில் இருந்து மதியம் 2.40 மணிக்கு புறப்படும் வண்டி எண்: 16112, புதுச்சேரி - திருப்பதி மெமு  எக்ஸ்பிரஸ், புதுச்சேரியில் இருந்து மாலை 3.40 மணிக்கு புறப்படும் என்று சென்னை ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>‘பா.ஜ.க. என்றால் பயம்... பாம்பை பார்த்தால் பயப்படத்தான் செய்வார்கள்’ - நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் வன்னி அரசு பதிலடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fear-of-the-bjp-people-naturally-fear-when-they-see-a-snake-minister-vanni-arasu-hits-back-at-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fear-of-the-bjp-people-naturally-fear-when-they-see-a-snake-minister-vanni-arasu-hits-back-at-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">02d40659-3b74-46a4-980f-8a6cb5476b77</guid><pubDate>Sat, 11 Jul 2026 15:28:10 +0000</pubDate><atom:updated>2026-07-11T15:28:10.571Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பா.ஜ.க.,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Vanni Arasu,அமைச்சர் வன்னி அரசு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/tvkadarb/State-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/tvkadarb/State-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, “பா.ஜ.க.வை தேசிய அளவில் வீழ்த்த தி.மு.க.வும், த.வெ.க.வும் ஒரே அணியில்(இந்தியா கூட்டணி) இணைய வேண்டும்” என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். </p><p>இதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், “பா.ஜ.க.வைப் பார்த்து அனைவருக்கும் பயம் வந்திருக்கிறது. பிரதமர் மோடியைப் பார்த்து பயந்து போய் இருக்கிறார்கள். பிரதமர் மோடி யாருக்கும் எதிராக எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை. உலக அளவில் இந்தியாவை தலைநிமிரச் செய்துள்ளார்” என்று தெரிவித்தார். </p><p>இந்நிலையில், நயினார் நாகேந்திரனின் கருத்து குறித்து அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களிடம் பேசுகையில், “பாம்புகளைப் பார்த்தால் எல்லாரும் பயப்படத்தான் செய்வார்கள்” என்றார். இதைத் தொடர்ந்து, “சமூக நீதித் துறையில் அமைச்சரா இருக்கும் நீங்கள் உங்கள் துறையில் சுதந்திரமாக செயல்படுறீர்களா? அதற்கான சுதந்திரத்தை இந்த அரசு உங்களுக்கு கொடுத்திருக்கிறதா?” என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.</p><p>இதற்கு பதிலளித்த வன்னி அரசு, “சமூகநீதி துறைக்குள் இருக்கின்ற ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை சம்பந்தமாக தமிழ்நாடு முழுக்க இது மாதிரியான செயல்பாடுகள் இதற்கு முன் இருந்திருக்கிறதா? என்கின்ற கேள்வியை நான் முன்வைக்கிறேன். நான் பதவியேற்றவுடன் முதல்-அமைச்சர் விஜய் என்னை அழைத்து, ‘நீங்கள் சுதந்திரமாக செயல்படுங்கள். எதை பற்றியும் நீங்க கவலைப்பட வேண்டியதில்லை. எதற்கும் நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை. நீங்க இந்த மக்களுக்கான முன்னேற்றத்திற்கு இந்த துறையின் மூலமாக செயல்பட வேண்டும்’ என்று எனக்கு வழிகாட்டி இருக்கிறார். </p><p>கள்ளக்குறிச்சியில் பொறுப்பு அமைச்சராகவும் என்னை நியமித்து, தமிழ்நாடு முழுக்க இந்த துறையின் மூலமாக மிகப்பெரிய செயல்பாடுகளை செய்ய முதல்-அமைச்சர் விஜய் ஊக்கப்படுத்தி வருகிறார். எனவே, இம்மாதிரியான குற்றச்சாட்டுகள் உள்நோக்கத்தோடு சொல்லப்படுகின்றது. என்னுடைய செயல்பாடுகளே அதற்கு சாட்சி” என்று தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>வியட்நாம் படகு விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உயிரிழப்பு - டிடிவி தினகரன் இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/10-people-from-tamil-nadu-lost-their-lives-in-vietnam-boat-accident-ttv-dinakaran-condoles</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/10-people-from-tamil-nadu-lost-their-lives-in-vietnam-boat-accident-ttv-dinakaran-condoles#comments</comments><guid isPermaLink="false">7bd8e64e-0efe-41e5-adce-7e6ed11e2041</guid><pubDate>Sat, 11 Jul 2026 15:19:59 +0000</pubDate><atom:updated>2026-07-11T15:19:59.581Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டிடிவி தினகரன்,AMMK,அமமுக,TTV Dinakaran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/u9e43hdj/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/u9e43hdj/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>வியட்நாம் நாட்டில் இந்தியர்கள் பயணித்த சுற்றுலாப்படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்திருப்பதாகவும், மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது.</p><h2>ஆழ்ந்த இரங்கல்</h2><p>விபத்தில் உயிரிழந்தவர்களின் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">குடும்பத்தினருக்கு </a>எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, வியட்நாமில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் உயிரிழந்தவர்களின் உடல்களை தாயகத்திற்கு கொண்டு வரவும், காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதுமலை ஜீப் சவாரி; மாலை 5.30 மணிக்கு பின்பு அனுமதிக்க கூடாது - வனத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mudumalai-jeep-safari-high-court-orders-forest-department-not-to-allow-rides-after-530-pm</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mudumalai-jeep-safari-high-court-orders-forest-department-not-to-allow-rides-after-530-pm#comments</comments><guid isPermaLink="false">8d31c6b9-f617-4110-8583-a799b7b9d77a</guid><pubDate>Sat, 11 Jul 2026 14:55:54 +0000</pubDate><atom:updated>2026-07-11T14:55:54.007Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஐகோர்ட்டு,Chennai High Court,முதுமலை,Mudumalai forest</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/kplj18pk/State-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/kplj18pk/State-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>நீலகிரி மாவட்டம் முதுமலையில் ஜீப் சவாரிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், வனவிலங்குகளுக்கு ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நள்ளிரவில் விலங்குகளை தாக்குவது போல ஜீப் ஓட்டுனர்கள் அத்துமிறலில் ஈடுபடுகிறார்கள் என்றும் வேதனை தெரிவித்தனர். </p><p>முதுமலையில் பதிவு செய்யப்பட்ட ஜீப்களில் மட்டுமே சுற்றலா பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்றும், அதிகாலை 6 மணிக்கு முன்பு ஜீப் சவாரியை அனுமதிக்க கூடாது என்றும் தெரிவித்த நீதிபதிகள், மாலை 5:30 மணிக்கு பின்பு ஜீப் சவாரியை அனுமதிக்க கூடாது என்றும் வனத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 11 இடங்களில் இன்று வெயில் சதம்</title><link>https://www.dailythanthi.com/news/weather/11-places-in-tamil-nadu-record-100-degrees-celsius-today-2</link><comments>https://www.dailythanthi.com/news/weather/11-places-in-tamil-nadu-record-100-degrees-celsius-today-2#comments</comments><guid isPermaLink="false">7ef015a6-420d-4ba3-8f10-e3db79662553</guid><pubDate>Sat, 11 Jul 2026 14:54:01 +0000</pubDate><atom:updated>2026-07-11T14:54:01.175Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Weather,வானிலை,Weather update,வெயில்,heat,வானிலை தகவல்,வெயில் சதம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/cq0z2hiq/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ வெயில் சதம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/cq0z2hiq/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பசிபிக் பெருங்கடலில் நிலவும் வலுவான எல் நினோ நிகழ்வுகள் காரணமாக, இந்தியப் பகுதிகளில் பருவமழைக் காற்று பலவீனமடைந்து. வறண்ட நிலப்பரப்பும் வெப்பமும் அதிகரிக்கின்றன. இதன் காரணமாக தமிழகத்தில் இம்மாதம் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>தென்மேற்கு பருவமழைக்காலம் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தாலும், சில பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-</p><p>மதுரை விமான நிலையம் - 103.1° பாரன்ஹீட் (39.5° செல்சியஸ்)</p><p>வேலூர் - 102.92° பாரன்ஹீட் (39.4° செல்சியஸ்)</p><p>சென்னை மீனம்பாக்கம் - 102.2° பாரன்ஹீட் (39.0° செல்சியஸ்)</p><p>திருத்தணி - 101.84° பாரன்ஹீட் (38.8° செல்சியஸ்)</p><p>மதுரை நகரம் - 101.48° பாரன்ஹீட் (38.6° செல்சியஸ்)</p><p>சென்னை நுங்கம்பாக்கம் - 101.3° பாரன்ஹீட் (38.5° செல்சியஸ்)</p><p>பரங்கிப்பேட்டை - 100.76° பாரன்ஹீட் (38.2° செல்சியஸ்)</p><p>கடலூர் - 100.76° பாரன்ஹீட் (38.2° செல்சியஸ்)</p><p>பாளையங்கோட்டை - 100.58° பாரன்ஹீட் (38.1° செல்சியஸ்)</p><p>திருச்சி - 100.58° பாரன்ஹீட் (38.1° செல்சியஸ்)</p><p>கரூர் பரமத்தி - 100.04° பாரன்ஹீட் (37.8° செல்சியஸ்)</p>]]></content:encoded></item><item><title>நாசாவில் உலக அளவில் டாப்-100-க்குள் நுழைந்து சாதனை படைத்த தமிழக மாணவர்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-student-from-tamil-nadu-achieved-a-milestone-by-ranking-among-the-global-top-100-at-nasa</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-student-from-tamil-nadu-achieved-a-milestone-by-ranking-among-the-global-top-100-at-nasa#comments</comments><guid isPermaLink="false">1e72cf44-e000-4422-8c9a-ca14f1bac7dd</guid><pubDate>Sat, 11 Jul 2026 14:53:09 +0000</pubDate><atom:updated>2026-07-11T14:53:09.934Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,student,நாசா,NASA,நாடு,தமிழக மாணவர்,சாதனை achievement</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/ufkoacuy/nasa.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/ufkoacuy/nasa.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரையை சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர், செவ்வாய் கிரகத்தில் மின்சாரம் தயாரிக்கும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து உலக விண்வெளி அரங்கில் இந்தியாவின் கொடியை பறக்கவிட்டுள்ளார்.</p> <h2>சாதனை மாணவர் அகிலேஷ் சந்திரசேகரன்</h2><p>மதுரை மாவட்டம், பசுமலையில் உள்ள சிவகாசி நாடார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவர் அகிலேஷ் சந்திரசேகரன். சர்வதேச அளவில் பள்ளி மாணவர்களின் அறிவியல் திறமைகளை வெளிக்கொண்டு வர ஒவ்வொரு ஆண்டும் 'கியூப்ஸ் இன் ஸ்பேஸ்' (Cubes in Space) என்ற பிரம்மாண்ட உலகளாவிய போட்டி திட்டத்தை <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE">நாசா</a> (NASA)  நடத்துகிறது.</p><h2>80 நாடுகள் பங்கேற்பு</h2><p>இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உட்பட உலகெங்கிலும் உள்ள சுமார் 80 நாடுகளை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தீவிரமாக பங்கேற்று தங்களது அறிவியல் மாதிரிகளை சமர்ப்பித்தனர். இந்த ஒரு லட்சம் கண்டுபிடிப்புகளையும் நாசா விஞ்ஞானிகள் குழு மிக தீவிரமாக ஆய்வு செய்தது. இறுதியில், மிகச்சிறந்த 100 கண்டுபிடிப்புகள் மட்டுமே உலக அளவில் இறுதி பட்டியலுக்கு தேர்வு செய்யப்பட்டன.</p><h2>மின்சாரம்</h2><p>அந்த சர்வதேச பட்டியலில், அகிலேஷ் சந்திரசேகரன் வடிவமைத்த கருவியும் இடம்பிடித்து விண்வெளி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மாற்று தொழில்நுட்பத்தின் அவசியம் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படும் ராக்கெட்டுகள் மற்றும் ரோவர்கள் அங்கு தொடர்ந்து இயங்குவதற்கு மின்சாரம் மிக மிக முக்கியமான தேவையாகும். </p> <h2>தடையற்ற மின்சாரம்</h2><p>தற்போது அங்கு சோலார் பேனல்கள் மூலமே மின்சாரம் பெறப்படுகிறது. இதற்கு மாற்றாக, செவ்வாய் கிரக மண்ணில் இயற்கையாகவே மின்சாரம் தயாரிக்கும் 4 சென்டிமீட்டர் அளவுள்ள சிறிய கியூப் பெட்டி. இதற்காக செயற்கையான முறையில் செவ்வாய் கிரக மண் மாதிரியை பூமியிலேயே உருவாக்கி இந்த சோதனையை வெற்றிகரமாக செய்துள்ளார். இதனால் செவ்வாய் கிரகத்தின் எந்தவொரு கடுமையான சூழ்நிலையிலும் ரோவர்களால் தொடர்ந்து இயங்க முடியும்.</p>]]></content:encoded></item><item><title>திருமங்கலம் மெட்ரோ பணி; ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம் - காவல்துறை தகவல் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thirumangalam-metro-work-traffic-diversion-for-one-year-police-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thirumangalam-metro-work-traffic-diversion-for-one-year-police-announcement#comments</comments><guid isPermaLink="false">b6821fe7-1b53-4a7a-bbbd-aa2aadad57fb</guid><pubDate>Sat, 11 Jul 2026 14:41:20 +0000</pubDate><atom:updated>2026-07-11T14:41:20.739Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Metro,Thirumangalam,திருமங்கலம்,மெட்ரோ பணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/8oa1sql3/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/8oa1sql3/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மெட்ரோ ரெயில் பணிகள் காரணமாக சென்னை திருமங்கலம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மாற்றமானது ஓராண்டு காலம் நடைமுறையில் இருக்கும் எனவும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தின் ஒரு பகுதியாக திருமங்கலம் 100 அடி சர்வீஸ் சாலையில் மேம்பால பாதை கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனையொட்டி வரும் ஜூலை 13-ந்தேதி முதல் அடுத்த வருடம் ஜூலை 12-ந்தேதி வரை தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>100 அடி சாலையின் இடதுபுற சர்வீஸ் சாலையில் அனைத்து வாகனங்களுக்கும் போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டிருக்கிறது. பாடி மேம்பாலத்தில் இருந்து அம்பத்தூர் நோக்கி செல்லும் வாகனங்கள் 18-வது பிரதான சாலை அல்லது 6-வது அவென்யூ வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>கோயம்பேடு செல்லும் வாகனங்கள் பாடி மேம்பாலத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி செல்ல வழக்கம் போல் திருமங்கலம் மேம்பாலம் வழியாக செல்லலாம். அந்த வழியில் எந்த மாற்றமும் இன்றி பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மெட்ரோ கட்டுமான பணிகள் திட்டமிட்டு காலக்கெடுவில் நிறைவடையும் எனவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் அப்பகுதி குடியிருப்பவர்கள் போக்குவரத்து மாற்றங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘விவசாயிகள் பயனடையும் வகையில் வேளாண் பட்ஜெட் இருக்கும்’ - அமைச்சர் வினோத் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-agriculture-budget-will-be-designed-to-benefit-farmers-minister-vinoth</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-agriculture-budget-will-be-designed-to-benefit-farmers-minister-vinoth#comments</comments><guid isPermaLink="false">540c5a29-8e70-4011-a208-37ef40fbac88</guid><pubDate>Sat, 11 Jul 2026 14:18:39 +0000</pubDate><atom:updated>2026-07-11T14:18:39.966Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வேளாண் பட்ஜெட்,அமைச்சர் வினோத்,Minister Vinoth</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/vwhlz6z0/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/vwhlz6z0/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத், அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் 17.5 சதவீத ஈரப்பதத்தில் நெல்லை கொள்முதல் செய்ய உத்தரவிட்டுள்ளார். மழைக்கால பாதிப்புகளை தவிர்க்க நெல் சேமிப்பு கிடங்குகளில் நேரில் ஆய்வு செய்த அவர், விவசாயிகள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார்.</p> <p>அந்த வகையில், நெல்லையில் இன்று விவசாயிகளை சந்தித்து அமைச்சர் வினோத் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆலோசனைக் கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் கருத்துகளை கூறியிருக்கிறார்கள். இந்த மண்டலத்தில் உள்ள ஏரிகளை தூர்வாரவும், தடுப்பணைகள் கட்டவும் விவசாயிகள் கேட்டுக் கொண்டனர். விவசாயிகள் பயனடையும் வகையில் வேளாண் பட்ஜெட் இருக்கும்” என்றார். </p><p>அப்போது செய்தியாளர் ஒருவர், “ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு தட்கல் திட்டத்தில் இன்னும் மின்சார இணைப்பு வழங்கப்படாமல் இருக்கிறது. அது எப்போது வழங்கப்படும்?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் வினோத், “அது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். பட்ஜெட்டில் அது பற்றி அறிவிப்போம்” என்றார். </p>]]></content:encoded></item><item><title>டி.சி. வாங்க சென்றபோது மதுபோதையில் அரசுப் பள்ளி ஆசிரியரை தாக்கிய தொழிலாளி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/worker-arrested-for-assaulting-government-school-teacher</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/worker-arrested-for-assaulting-government-school-teacher#comments</comments><guid isPermaLink="false">b4339355-556f-411f-8cc5-13d66df4350c</guid><pubDate>Sat, 11 Jul 2026 14:16:49 +0000</pubDate><atom:updated>2026-07-11T14:16:49.780Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தாக்குதல்,கைது,arrest,புதுக்கோட்டை,Pudukottai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/hvbhdokk/Untitled-8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/hvbhdokk/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுக்கோட்டை,</p><p>புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள வீரப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக மணிபாலா (59 வயது) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், நேற்று அதே பகுதியை சேர்ந்த தச்சு தொழிலாளி மருதுபாண்டியன் (33 வயது) என்பவர் தான் குடும்பத்துடன் புதுக்கோட்டைக்கு செல்ல இருப்பதாக கூறி அங்கு படிக்கும் தனது மகன்களின் பள்ளி மாற்றுச்சான்றிதழை (டி.சி.) பள்ளி தலைமையாசிரியரிடம் கேட்டுள்ளார். அப்போது மருதுபாண்டியன் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.</p><p>இதையடுத்து, பள்ளி தலைமையாசிரியர் நீங்கள் நிதானமாக இல்லை. எனவே உங்களது மனைவியை அழைத்து வாருங்கள், மாற்றுச்சான்றிதழ் தருகிறேன் என கூறியுள்ளார். அப்போது மருதுபாண்டியன் 'பள்ளியில் சேர்க்கும்போது ஒருவர் வந்து சேர்த்தால் போதும். இப்போது மாற்றுச்சான்றிதழ் வாங்கும்போது இருவர் வந்து வாங்க வேண்டுமா? இப்போதே மாற்றுச்சான்றிதழை தர வேண்டும்' என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.</p><p>அப்போது அங்கு வந்த இடைநிலை ஆசிரியர் ஜெரால்டு (38 வயது), மருதுபாண்டியனிடம் சத்தம் போட வேண்டாம் என்று கூறி அவரை சமாதானம் செய்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த மருதுபாண்டியன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆசிரியர் ஜெரால்டை தனது செல்போனால் தலை மற்றும் நெஞ்சில் தாக்கி உள்ளார். மேலும், மாணவர்கள் முன்பு தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், அவரது சட்டையை கிழித்ததாகவும் கூறப்படுகிறது.</p><p>இதையடுத்து ஆசிரியர் ஜெரால்டு உள்பட 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அன்னவாசல் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். அதன் பேரில் அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியரை தாக்கிய மருதுபாண்டியனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு புகார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/land-grabbing-complaint-against-former-dmk-minister-thamo-anbarasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/land-grabbing-complaint-against-former-dmk-minister-thamo-anbarasan#comments</comments><guid isPermaLink="false">54a18b3a-f591-4017-b2ce-cbe125992452</guid><pubDate>Sat, 11 Jul 2026 14:12:22 +0000</pubDate><atom:updated>2026-07-11T14:12:22.768Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,தேர்தல்,திமுக எம்எல்ஏ,தமோ அன்பரசன்,நில அபகரிப்பு புகார்,LandGrabbing</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/bissan0v/anbu33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தா.மோ. அன்பரசன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/bissan0v/anbu33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p> தன்னுடைய சொத்தை திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடந்த 2 ஆண்டுகளாக சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ளதாக சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர்  ராஜேஷ் சோமசுந்தரம் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.</p><p>முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் ராஜேஷ் சோமசுந்தரம் என்பவர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது; </p> <h2>6 மாத குத்தகை</h2><p>பரங்கிமலையில் 2024ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின் போது <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தேர்தல் பணிமனை</a>க்காக கொடுத்த இடத்தை 5500 சதுர அடி நிலத்தை திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் திருப்பி தர மறுக்கிறார். அன்பரசனின் உதவியாளர் என்ற பெயரில் ஒருவர் வந்து கேட்டதன் பேரில் அந்த இடம் தரப்பட்டது. இதற்கென கட்டாயப்படுத்தி 6 மாத குத்தகை ஒப்பந்தமும் ஏற்படுத்தினர். ஆனால், குத்தகை காலம் முடிந்தும் இடத்தை காலி செய்து தரவில்லை. 2 ஆண்டுகளாக வாடகையும் தரவில்லை.</p><p>குத்தகை ஒப்பந்தம் சிலரது பெயரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, அவர்கள் போலியாக முகவரி கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. தற்போது சட்டவிரோதமாக என்னுடைய நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். வாடகை கூட தராமல் இழுத்தடிக்கப்பட்ட நிலையில், கடந்த ஜூன் 19ம் தேதி முன்னாள் அமைச்சர் அன்பரசன் என்னை சந்தித்தார்.</p><h2>நிலத்தை மீட்டுத்தர வேண்டும்</h2><p>அப்போது, ஒருவாரத்தில் அந்த நிலத்தை தன்னிடம் ஒப்படைக்குமாறும், பணம் கொடுத்து விடுவதாகவும் கூறினார். ஆனால் நிலத்தை விற்க எனக்கு விருப்பமில்லை. எனக்கு அந்த நிலம் தேவைப்படுகிறது என்று உறுதியாக தெரிவித்து விட்டேன். ஒரு வாரம் கழித்து பேசுவதாக கூறிச் சென்றவர், பிறகு எந்த பதிலும் கூறவில்லை. பல முறை தொடர்பு கொள்ள முயற்சித்தும், தொடர்பு கொள்ள முடியவில்லை. எனது நிலத்தை மீட்டுத்தர வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>ஏற்கனவே, திமுக முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, ஏ.வ.வேலு, சிவசங்கர் ஆகியோர் மோசடி, ஊழல் வழக்குகளில் விசாரணை வளையத்தில் உள்ள நிலையில், தா.மோ.அன்பரசன் மீதும் நில அபகரிப்பு புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்று 32.33 டன் பழைய பொருட்கள் பெறப்பட்டு அகற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/3233-tons-of-old-materials-received-and-disposed-of-in-chennai-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/3233-tons-of-old-materials-received-and-disposed-of-in-chennai-today#comments</comments><guid isPermaLink="false">d064335d-1d20-40bf-8108-5303847563d0</guid><pubDate>Sat, 11 Jul 2026 14:09:42 +0000</pubDate><atom:updated>2026-07-11T14:09:42.828Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/qy53udlu/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/qy53udlu/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் இன்று (11.07.2026) 138 இடங்களிலிருந்து 32.33 மெட்ரிக் டன் பழைய சோபாக்கள், மெத்தைகள் உள்ளிட்ட பழைய பொருட்கள் பெறப்பட்டு, கொடுங்கையூர் எரியூட்டும் நிலையத்திற்கு கொண்டு சென்று விஞ்ஞான முறையில் எரியூட்டி அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>138 நபர்களிடமிருந்து..</h2><p>பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பொதுமக்கள் முன்கூட்டியே தரும் தகவலின் அடிப்படையில், அவர்களின் வீடுகளிலிருந்து பழைய சோபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகள் ஆகிய திடக்கழிவுகளை ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பெற்று அகற்றும் பணி 11.10.2025 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.</p><p>அதனடிப்படையில், இன்று (11.07.2026) மட்டும் 138 நபர்களிடமிருந்து வரப்பெற்ற தகவலின் அடிப்படையில், 32.33 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் பெறப்பட்டு, கொடுங்கையூரில் உள்ள எரியூட்டும் நிலையத்திற்கு எடுத்துச் சென்று விஞ்ஞான முறையில் எரியூட்டி அகற்றப்பட்டது. இதற்காக 45 எண்ணிக்கையிலான வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.</p><h2>நம்ம சென்னை செயலி</h2><p>ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று நடைபெறும் இச்சேவையை பெறுவதற்கு, பொதுமக்கள் முன்கூட்டியே பெருநகர சென்னை மாநகராட்சியின் “நம்ம சென்னை” செயலியில் பதிவு செய்ய வேண்டும் (அல்லது) பெருநகர சென்னை மாநகராட்சியின் 1913 என்ற எண்ணிற்கு தகவல் அளிக்கப்பட வேண்டும் (அல்லது) பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலம் பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ள 94450 61913 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவலை அனுப்ப வேண்டும்.</p><p>இதனடிப்படையில் மாநகராட்சிப் பணியாளர்கள் பதிவு செய்த நபர்களின் வீடுகளுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் நேரடியாகச் சென்று, பழைய சோபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகள் உள்ளிட்ட பொருட்களை சேகரித்து பாதுகாப்பாகவும், அறிவியல் முறையிலும் அகற்றும் பணிகளை மேற்கொள்வார்கள். இச்சேவையினை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வியட்நாம் படகு விபத்து - முதல்-அமைச்சர் விஜய் இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vietnam-boat-accident-chief-minister-vijay-expresses-condolences</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vietnam-boat-accident-chief-minister-vijay-expresses-condolences#comments</comments><guid isPermaLink="false">647bba1b-e61d-4eff-8053-9757bca97bb0</guid><pubDate>Sat, 11 Jul 2026 13:54:51 +0000</pubDate><atom:updated>2026-07-11T13:54:51.316Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வியட்நாம்,Vietnam,boat accident,படகு விபத்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/pxycu8tu/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/pxycu8tu/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வியட்நாம் நாட்டில் நிகழ்ந்த சுற்றுலா படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்-அமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-</p><p>“வியட்நாம் நாட்டின் ஆன் தோய் கடல் பகுதியிலுள்ள ஹான் மே ருட் ங்வோய் (Hon May Rut Ngoai) தீவிற்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் பயணித்த படகு இன்று காலை விபத்தில் சிக்கியதில் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும், துயரமும் அடைந்தேன்.</p><p>இப்படகு விபத்தில் சிக்கிய தமிழர்களின் விவரங்களைப் பெற்று அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்திடும் வகையில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரக உயர் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்.</p><p>இவ்விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கிட இந்தியத் தூதரக உயர் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும், இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவருவதற்கு இந்தியத் தூதரகம் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு மேலும் 100 இடங்களை அளித்த பிரதமருக்கு நன்றி -  நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendran-thanks-the-prime-minister-for-allocating-an-additional-100-seats-to-government-medical-colleges-in-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendran-thanks-the-prime-minister-for-allocating-an-additional-100-seats-to-government-medical-colleges-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">0efdfe32-16ea-4ffb-8c5d-d46486a930c7</guid><pubDate>Sat, 11 Jul 2026 13:27:29 +0000</pubDate><atom:updated>2026-07-11T13:27:29.577Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,தமிழக அரசு,பிரதமர்,thanks,நன்றி,Medical Colleges,மருத்துவ கல்லூரிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/hj04tmpj/nainar-nagendheran.new.gif" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/hj04tmpj/nainar-nagendheran.new.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-</p><p>தமிழகத்தில் உள்ள <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">அரசு மருத்துவ கல்லூரிகளில்</a> கூடுதலாக 100 மருத்துவ இடங்களை வழங்குவதற்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. </p><h2>மாணவர்களின் மருத்துவராகும் கனவு</h2><p>நாமக்கல் மற்றும் திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரிகளில் தலா 50 மருத்துவ இடங்களை உயர்த்தி, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளிலுள்ள மொத்த மருத்துவ இடங்களை 5,150-ஆக மாற்றும் இந்த அறிவிப்பின் மூலம் தமிழக மாணவர்களின் மருத்துவராகும் கனவு எளிதில் நனவாகுவதோடு, தமிழக மக்களின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை! </p> <h2>நன்றி</h2><p>தமிழகத்தின் கல்வியிலும் சுகாதாரத்திலும் முக்கிய மைல்கல்லான இத்தகைய சீரிய நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ள நமது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசிற்கு தமிழக மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.</p> ]]></content:encoded></item><item><title>வியட்நாம் படகு விபத்தில் இந்தியர்கள் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது - அன்புமணி இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/shocking-loss-of-indians-in-vietnam-boat-accident-anbumani-condoles</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/shocking-loss-of-indians-in-vietnam-boat-accident-anbumani-condoles#comments</comments><guid isPermaLink="false">0b9396cf-9a6a-446f-b067-2526aae72b35</guid><pubDate>Sat, 11 Jul 2026 13:18:35 +0000</pubDate><atom:updated>2026-07-11T13:18:35.750Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK,அன்புமணி,Anbumani,வியட்நாம்,Vietnam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/5yq93gq0/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/5yq93gq0/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பா.ம.க.  தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>வியட்நாம் நாட்டின்  ஹான் மே ரூட் ங்வோய்  ( Hon May Rut Ngoai) தீவில்  இன்று மாலை நிகழ்ந்த மோசமான படகு விபத்தில்  தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேர் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டதாக வெளியாகியுள்ள செய்திகள்  பெரும் அதிர்ச்சியும்,  வேதனையும் அளிக்கின்றன.  அவர்களை இழந்து வாடும்  குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்,  அனுதாபங்களையும்  தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2>படகு கவிழ்ந்து விபத்து</h2><p>தமிழ்நாடு,  கர்நாடகம் உள்ளிட்ட தென் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மாநிலங்களைச் </a>சேர்ந்த  30-க்கும் மேற்பட்டோர் வியட்நாம் நாட்டுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்தனர்.  அவர்கள் Hon May Rut Ngoai தீவுக்கு அருகில்  பயணம் மேற்கொண்டிருந்த போது படகு கவிழ்ந்ததில் அதில் இருந்த அனைவரும் கடலில்  தூக்கி வீசப்பட்டனர். அவர்களில் 15 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.  உயிரிழந்த 15 பேரில்  8 பேர் சென்னை, தருமபுரி, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.</p><p>உயிரிழந்த தமிழர்கள் உள்ளிட்ட அனைவரின் உடல்களையும் உடனடியாக மீட்டு,  சொந்த ஊர்களுக்கு கொண்டு வர மத்திய அரசும், மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்,</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கிரில் கம்பிக்குள் சிக்கிய சிறுமியின் தலை - பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/girls-head-stuck-in-grill-wire-firefighters-safely-rescue-her</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/girls-head-stuck-in-grill-wire-firefighters-safely-rescue-her#comments</comments><guid isPermaLink="false">922dc765-429f-4edd-af4d-838587d5d139</guid><pubDate>Sat, 11 Jul 2026 13:14:44 +0000</pubDate><atom:updated>2026-07-11T13:14:44.724Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>புதுக்கோட்டை,Pudukottai,தீயணைப்புத் துறையினர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/y2fsd8nr/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/y2fsd8nr/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுக்கோட்டை,</p><p>புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் சந்தனபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவா. இவரது மகள் தியாழினி (4 வயது). சம்பவத்தன்று சிறுமி வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் முன்பு உள்ள கிரில் கம்பியில் அவரது தலை சிக்கிக்கொண்டது. இதில் வலி தாங்க முடியாமல் சிறுமி அலறி துடித்தார்.</p><p>இதையடுத்து, சிறுமியை மீட்க அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் முயற்சி செய்துள்ளனர். ஆனால் முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) நாகேந்திரன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று இரும்பு கம்பியை அறுத்து சிறுமியை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>பாஜகவினர் வழக்கம்போல தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர் - ஜோதிமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bjp-is-spreading-wrong-information-as-usual-jothimani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bjp-is-spreading-wrong-information-as-usual-jothimani#comments</comments><guid isPermaLink="false">9b461a90-1169-43dc-98ee-11e93a6b0345</guid><pubDate>Sat, 11 Jul 2026 13:10:46 +0000</pubDate><atom:updated>2026-07-11T13:10:46.922Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Information,wrong,ஜோதிமணி எம்பி,தவறான தகவல்,jothimani mp</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/il98kf07/jothimani.11.07.2026.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கரூர் எம்பி ஜோதிமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/il98kf07/jothimani.11.07.2026.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பாரதிய ஜனதா கட்சியினர் வழக்கம்போல தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இது தொடர்பாக கரூர் எம்பி ஜோதிமணி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-</p><h2>மனமார்ந்த நன்றி</h2><p>கரூர் மாவட்டம் புகழூர், வாங்கல், குப்பிச்சிபாளையம், வெஞ்சமாங்கூடலூர் மேல்பாகம், கீழ்பாகம், புங்கம்பாடி மற்றும் கரூர்  உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு சொந்தமான 3,084.95 ஏக்கர் நிலங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பத்திரப்பதிவு தடையை நீக்கி, மீண்டும் பத்திரப்பதிவு நடைபெற வழிவகை செய்த  முதல்-அமைச்சருக்கும், வருவாய்த் துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">கரூர் மாவட்ட மக்கள்</a> சார்பாக எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2>மக்களின் பிரச்சினை</h2><p>இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஒரு மாத காலமாக தமிழ்நாடு அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை எடுத்து சென்றோம். அறநிலைய துறை அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்  இடையே நேரடி சந்திப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டன. </p><p>தொடர்ந்து வருவாய் துறை அமைச்சரையும் நேரில் சந்தித்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தினேன். முதல்-அமைச்சரிடமும் பிரச்சினையின் தன்மை மற்றும் தீவிரம் குறித்து விரிவாக விளக்கிக்கூறினேன். அவரும் பொறுமையுடன் கேட்டு மக்களின் பிரச்சினைகளை புரிந்துகொண்டார்.</p><h2>பாஜக பொய் பிரச்சாரம்</h2><p>இதன் அடிப்படையில் இப்பொழுது பாதிக்கப்பட்ட  எமது மக்களின் ஒரு பகுதியினருக்கு  நியாயமான தீர்வு கிடைத்துள்ளது. இந்த நிலங்கள் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியினர் வழக்கம்போல தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். ரூ.25,000 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்களை அரசு கரூர்  மக்களுக்கு  பட்டா போட்டு வழங்கிவிட்டது என்ற பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.</p> <h2>அநீதி</h2><p>உண்மை என்னவென்றால், இந்நிலங்கள் நூற்றாண்டுகளாக மக்களின் பயன்பாட்டிலும் உரிமையிலும் இருந்து வரும் நிலங்கள். 1967ஆம் ஆண்டு இனாம் நில ஒழிப்பு சட்டத்தின் கீழ் இந்நிலங்களுக்கு ரயத்துவாரி பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் நில உரிமை தொடர்பான பதிவுகள் முறையாக மாற்றப்பட வேண்டியிருந்த நிலையில்,  அறநிலைய துறை ஆவணங்களில் மட்டும் மக்களின் பெயரில் பட்டா உள்ள நிலங்களையும் சேர்த்து கோவில் பெயரிலேயே வைத்து கொண்டது மட்டுமல்லாமல், சட்டத்திற்கு புறம்பாக,வருவாய்த்துறையினருக்கு தெரிவிக்காமல் பத்திரப்பதிவை நிறுத்தி வைக்க கடிதம் கொடுக்கப்பட்டு பத்திரப்பதிவு துறையும் எவ்வித ஆவணங்களையும் கோராமல், வருவாய்த்துறையிடம் கருத்து கேட்காமல் பத்திரப்பதிவை அநீதியாக நிறுத்தி வைத்தது.  </p><h2>பத்திரப்பதிவு தடை</h2><p> சம்பந்தப்பட்ட  துறைகளின் உரிய ஆய்வு மற்றும் வருவாய் துறையின் சரிபார்ப்பு இல்லாமல் பத்திரப்பதிவுக்கு தடைகள் விதிக்கப்பட்டதால், விவசாயிகள், நடுத்தர மக்கள், ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.</p><p>இந்த நிலங்களில் ஒரு சென்ட் நிலம் கூட கோவில் நிலம் அல்ல. இவை முழுமையாக மக்களின் உரிமையில் உள்ள, மக்களின் பெயரில் பட்டா பெற்றுள்ள நிலங்கள். விவசாய நிலங்களாக இருந்தால் மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர்; குடியிருப்பு பகுதிகளாக இருந்தால் மக்கள் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.</p><h2>நம்பிக்கை உள்ளது</h2><p>மக்களின் உரிமைகளை பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுபோன்ற பிரச்சினைகள் உள்ள பிற பகுதிகளிலும் உரிய ஆய்வு செய்து படிப்படியாக தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.</p><h2>பாராட்டுக்குரியது</h2><p>இந்த நேரத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையனின் நெடிய அனுபவம் மிகுந்த,விரைவான  செயல்பாடுகளையும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் அர்ப்பணிப்பு மிகுந்த, விரைவான, நடவடிக்கைகளையும் நன்றியோடு நினைவுகூற விரும்புகிறேன். கோவில் நிலங்களை பாதுகாப்பதில் உறுதியோடு உள்ள அதே நேரத்தில் மக்களுக்கு உரிமையுள்ள நிலங்களை தவறாக கையகப்படுத்திவிடக்கூடாது என்கிற அவரது கவனம் பாராட்டுக்குரியது. </p><p>இந்த முயற்சியில் எங்கள் தரப்பு நியாத்தை புரிந்துகொண்டு செயல்பட்ட  வருவாய்த்துறை மற்றும்  இந்து சமய அறநிலையத்துறை  அதிகாரிகள், கரூர் மாவட்ட ஆட்சியர்  முத்துக்குமரன் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன்  உள்ளிட்ட அனைவருக்கும் எனது  இதயப்பூர்வமான நன்றிகள்.</p>]]></content:encoded></item><item><title>யானை வழித்தடங்கள் குறித்து விரைந்து அறிவிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-court-orders-tamil-nadu-government-to-promptly-notify-elephant-corridors</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-court-orders-tamil-nadu-government-to-promptly-notify-elephant-corridors#comments</comments><guid isPermaLink="false">04ce72f7-9684-44d7-b9e2-51924679b83e</guid><pubDate>Sat, 11 Jul 2026 13:05:38 +0000</pubDate><atom:updated>2026-07-11T13:05:38.181Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஐகோர்ட்டு,Chennai High Court,யானை வழித்தடம்</media:keywords><media:content height="288" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/9pggqap9/State-06.jpg" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/9pggqap9/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>யானைகள் வழித்தடங்களை அறிவிப்பது தொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார், நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. </p><p>அப்போது வனத்துறை தரப்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் 41 யானைகள் வழித்தடங்கள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக அதில், “ஜவளகிரி, அஞ்சட்டி, பில்லிக்கல் உள்ளிட்ட 3 வழித்தடங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இது தவிர 12 வழித்தடங்களை இறுதி செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன. ஒரு சில வழித்தடங்கள் கைவிடப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இறுதி செய்யப்பட்ட 3 யானை வழித்தடங்கள் குறித்து விரைந்து அறிவிப்பு வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். </p><p>இதேபோல தடாகம் பள்ளத்தாக்கில் சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்துவது தொடர்பான வழக்கில், சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு ஆரம்ப கட்ட நிதி ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் மாவட்டங்களில் உள்ள பசுமை நிதியை பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என்றும் நீதிபதிகள் அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். </p> ]]></content:encoded></item><item><title>திண்டுக்கல் அருகே நடந்த பாச போராட்டம்: பெற்றோரை உதறிவிட்டு காதலுடன் சென்ற இளம்பெண்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-love-protest-near-dindigul-a-young-woman-who-left-her-parents-and-went-with-her-lover</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-love-protest-near-dindigul-a-young-woman-who-left-her-parents-and-went-with-her-lover#comments</comments><guid isPermaLink="false">f4918d7b-c724-479e-a3e1-e3e7129a5406</guid><pubDate>Sat, 11 Jul 2026 12:52:09 +0000</pubDate><atom:updated>2026-07-11T12:52:09.200Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Dindigul,திண்டுக்கல்,இளம்பெண்,lover,காதலர்,Parents</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/3m7uuzkb/love33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காதலுடன் சென்ற இளம்பெண்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/3m7uuzkb/love33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><p>திண்டுக்கல் அருகே சாணார்பட்டி ஒன்றியம் வி.எஸ்.கோட்டை சில்வார்பட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன்.இவரது மனைவி செல்வி. இவர்க ளது மகள் ராஜபிரியா (வயது 23). இவர் எம்.டெக். பட்டதாரி. இவரும் வையாளிபட்டியைச் சேர்ந்தவர் முத்துராமன் மகன் பாலமுருகன் (25) என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் ராஜபிரியாவின் வீட்டிற்கு தெரிய வந்தது. அவர்கள் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.</p><h2>கோவிலில் திருமணம்</h2><p>அதனை பொருட்படுத்தாத ராஜபிரியா வீட்டை விட்டு வெளியேறி பாலமுருகனுடன் சென்று விட்டார். இவர்கள் 2 பேரும் மதுரையில் உள்ள ஒரு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கோவிலில் திருமணம்</a> செய்து கொண்டனர். அதன் பின்னர் சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.</p><p>இதையடுத்து போலீசார் சமரச பேச்சுவார்த்தைக்காக இருவரது பெற்றோர்களை யும் வர வைத்தனர். அப்போது போலீஸ் நிலையத்திற்கு வந்த ராஜ பிரியாவின் பெற்றோர் தங்களது மகள் காதல் கணவனுடன் இருப்பதை பார்த்ததும் கதறி அழுதனர். படிக்க வைத்து ஆளாக்கி அழகு பார்த்த எங்களுக்கு இப்படி ஒரு துரோகம் செய்து விட்டாயே எனக் கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அப்போது அவர்கள் தங்களது மகளை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து செல்வதற்கு முயற்சி செய்தனர். ஆனால் அதற்கு ராஜ பிரியா மறுத்துவிட்டார்.</p><h2>பெற்றோருடன் செல்ல மறுப்பு</h2><p>இதனால் அதிர்ச்சி அடைந்த தந்தை ராமச்சந்திரன், தாய் செல்வி மகள் என்றும் பாராமல் ராஜபிரியாவின் காலை பிடித்து எங்களுடன் வீட்டுக்கு வந்துவிடு என்று கெஞ்சியபடி கதறி அழுதக் காட்சி அங்கே இருந்தவர்களை கண்கலங்க வைத்தது. இதையடுத்து சாணார்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் ராஜ பிரியாவின் விருப்ப த்தின் பேரில் அவரது கணவன் பாலமுருகனுடன் அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து ராமச்சந்திரன், மனைவி செல்வி மற்றும் அவர்களது உறவினர்கள் அங்கிருந்து அழுதபடியே வீட்டிற்கு சென்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/places-in-chennai-that-will-experience-power-outages-the-day-after-tomorrow-13</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/places-in-chennai-that-will-experience-power-outages-the-day-after-tomorrow-13#comments</comments><guid isPermaLink="false">992e54fd-bd61-4582-b380-8b68fcb213c7</guid><pubDate>Sat, 11 Jul 2026 12:43:05 +0000</pubDate><atom:updated>2026-07-11T12:43:05.328Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மின் தடை,power cut</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/elbp7byj/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/elbp7byj/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>சென்னையில் 13.07.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><h2>மின் தடை ஏற்படும் இடங்கள்</h2><p><strong>ஆவடி</strong>: சிவசங்கரபுரம், ஜாக் நகர், குளக்கரை தெரு, சி.டி.எச். சாலை , சரஸ்வதி நகர், அண்ணா நகர் 1 முதல் 4வது தெருக்கள் வரை, எம்.ஜி.ஆர். நகர், நேரு நகர், வைஷ்ணவி நகர் 1 முதல் 10வது தெருக்கள் வரை, சாந்திபுரம், ஸ்ரீதேவி வைஷ்ணவி நகர் எ மற்றும் பி தெருக்கள், இந்திரா காந்தி நகர், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, டி.ஆர்.ஆர். தெரு, நேதாஜி நகர், முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரி, செக் போஸ்ட், என்.எம். சாலை, திருமலைராஜபுரம், நந்தவனம் மேட்டூர், கன்னிகாபுரம், நேரு பஜார் , கஸ்தூரிபாய் நகர்.</p><p><strong>அனகாபுத்தூர்</strong>: 7வது பிரதான சாலை, 2வது முதல் 8வது குறுக்குத் தெருக்கள் வரை, காந்தி சாலை, இந்திரா காந்தி தெரு, நேரு தெரு, ராஜாஜி தெரு, கலைஞர் ரோடு, கலைஞர் குறுக்குத் தெரு, பெரியார் தெரு, இளங்கோ தெரு, சிக்னல் ஆபீஸ் சாலை, கிருபா தெரு, லட்சுமி நாராயணன் தெரு, எஸ்.பி.ஐ. காலனி, கிறிஸ்டோபர் 1, 2, மற்றும் 3வது தெருக்கள், மாருதி தெரு, ராதாகிருஷ்ணன் தெரு.</p><p><strong>பம்மல்</strong>: இரட்டை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பிள்ளையார் </a>கோவில் தெரு, ஏழுமலை தெரு, நந்தனார் தெரு, நடராஜன் தெரு, பஜனை கோவில் தெரு, தேவதாஸ் தெரு, ராமானுஜம் தெரு, ரங்கசாமி தெரு, எச்.ஐ. காலனி 1வது பிரதான சாலை, தியாகராஜன் தெரு, பிரபாகரன் தெரு, வடிவேல் தெரு, கக்கன் தெரு, மருதுபாண்டி தெரு, வீரராகவன் தெரு, நல்லதம்பி சாலை .</p><p><strong>ஐடி. காரிடார்</strong>: ஹிரானந்தனி அபார்ட்மெண்ட்ஸ், ரேடியன்ஸ் அபார்ட்மெண்ட்ஸ், ஒலிம்பியா பனாசே மற்றும் ஒலிம்பியா ஓபலைன் அபார்ட்மெண்ட்ஸ், ஓ.எம்.ஆர். சாலை, நாவலூர், விஜயகணபதி நகர், எகாட்டூர் கிராமம், எமாமி தேஜோமயா அபார்ட்மெண்ட், முட்டுக்காடு, கானத்தூர் கிராமம், ஸ்ரீனிவாசா அபார்ட்மெண்ட், டிவிஎச் டாஸ் அபார்ட்மெண்ட், விர்டூசா எச்.டி. சேவை (எண்: 636), இந்தஸ் அனந்த்யா அபார்ட்மெண்ட், கிரியேஷன்ஸ் அபார்ட்மெண்ட்.</p><p><strong>பெசன்ட் நகர்</strong>: சாஸ்திரி நகர் காமராஜர் சாலை, வால்மீகி தெரு, கலாஷேத்ரா சாலை மற்றும் அவென்யூ, லட்சுமிபுரம், ஸ்ரீ ராம் நகர், குமரகுரு 1 முதல் 4வது தெருக்கள் வரை, பிள்ளையார் கோயில் தெரு , முத்துலட்சுமி தெரு.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தேனியில் அரசு பஸ்சின் பின்னால் நிஜ ‘ஸ்பைடர் மேன்’- வீடியோ வைரல் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/real-life-spider-man-spotted-behind-government-bus-in-theni-video-goes-viral</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/real-life-spider-man-spotted-behind-government-bus-in-theni-video-goes-viral#comments</comments><guid isPermaLink="false">6158a0b2-f2cc-4dc0-a356-546270700ece</guid><pubDate>Sat, 11 Jul 2026 12:40:53 +0000</pubDate><atom:updated>2026-07-11T12:40:53.828Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசு பஸ்,Government bus,ஸ்பைடர்மேன்,Theni,தேனி,Spider Man</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/vylor1lm/bus-spider.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ பஸ்சில் ஸ்பைடர் மேன் போல தொங்கிய வாலிபர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ தேனி நிஜ ஸ்பைடர் மேன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/vylor1lm/bus-spider.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தேனி</a> மாவட்டத்தில் அரசு பஸ்சின் பின்னால் உள்ள ஏணியில் ஸ்பைடர் மேன் போல தொங்கிய வாலிபரின் வீடியோ வைரல் ஆனது.</p><h2>ஆபத்தான பயணம்</h2><p>தேனியில் இருந்து பூதிப்புரம் நோக்கி அரசு நகர<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> பஸ்</a> ஒன்று கோடாக்கிப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ்சின் பின்புறம் உள்ள ஏணியில், வாலிபர் ஒருவர் எந்தவித பயமும் இன்றி, ' ஸ்பைடர் மேன்' திரைப்பட பாணியில் கைகளையும் கால்களையும் நீட்டியபடி ஆபத்தான முறையில் பஸ்சில் ஒட்டியபடி தொங்கிக்கொண்டே பயணித்தார்.  நிஜ ஸ்பைடர் மேன் போல  மக்களுக்கு காட்சி அளித்தது.</p><h2>பயணிகள் அதிர்ச்சி</h2><p>சுமார் 500 மீட்டருக்கும் மேல் நீடித்த இந்த ஆபத்தான பயணத்தை, பின்னால் வந்த வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மிக வேகமாக வைரலானது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.</p><p>முதற்கட்ட விசாரணையில், பேருந்தின் பின்னால் தொங்கிச் சென்ற நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலும், தனது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலும் செயல்பட்ட அந்த நபரை போலீசார் மீட்டு எச்சரித்து அனுப்பி வைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மாணிக்கம் தாகூர் இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/manickam-thakur-condoles-with-families-of-those-killed-in-vietnam-boat-accident</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/manickam-thakur-condoles-with-families-of-those-killed-in-vietnam-boat-accident#comments</comments><guid isPermaLink="false">d02b250f-8c75-4a81-886c-468a334f6117</guid><pubDate>Sat, 11 Jul 2026 12:36:18 +0000</pubDate><atom:updated>2026-07-11T12:36:18.292Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>இரங்கல்,மாணிக்கம் தாகூர்,condolences,வியட்நாம்,Vietnam,boat accident,படகு விபத்து,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/qc0lusit/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/qc0lusit/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வியட்நாமின் பு குவாக் தீவுக்கு இந்தியாவை சேர்ந்த 32 சுற்றுலா பயணிகள் உள்பட 35 பேர் இன்று காலை படகில் சுற்றுலா சென்றனர். மோசமான வானிலை காரணமாக படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் 18 பேரை உயிருடன் மீட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.</p><p>இந்த விபத்தில் இந்தியர்கள் 15 பேர் உயிரிழந்தனர். மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக வியட்நாம் அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. ​பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம் உடனடியாக தலையிட்டு, உயிரிழந்தவர்களின் உடல்களை தாயகம் கொண்டு வரவும், காயமடைந்தவர்களுக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை கிடைக்கவும் விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அரியலூர்: டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாணவர்கள்-பொதுமக்கள் போராட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ariyalur-students-and-public-protest-against-tasmac-shop</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ariyalur-students-and-public-protest-against-tasmac-shop#comments</comments><guid isPermaLink="false">eb273f11-4375-4743-ae37-1c33feb33066</guid><pubDate>Sat, 11 Jul 2026 12:34:08 +0000</pubDate><atom:updated>2026-07-11T12:34:08.454Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அரியலூர்,மாணவர்கள்,students,wine shop,டாஸ்மாக் கடை,பொதுமக்கள் போராட்டம்,Ariyalur District</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/pwm6f129/ariyalur-wine-shop.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ அரியலூர் மாணவர்கள்-பொதுமக்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ டாஸ்மாக்கை அகற்றக் கோரி போராட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/pwm6f129/ariyalur-wine-shop.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>அரியலூர்,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அரியலூர்</a> மாவட்டம் கோடாலியில் உள்ள டாஸ்மாக் கடையை நிரந்தரமாக அகற்ற  கோரி<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> மாணவர்கள் </a>மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். </p><h2>பள்ளி மாணவர்களின் ஆவேச போராட்டம்</h2><p>அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோடாலி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் குடியிருப்பு மற்றும் பள்ளி செல்லும் வழிக்கு அருகே டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வந்தனர்.</p><p>மதுப்பிரியர்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்ததால், ஆத்திரமடைந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பொதுமக்கள்</a> மற்றும் பள்ளி சீருடை அணிந்த மாணவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.</p><h2>தடுப்புகளை உடைத்தெறிந்த மக்கள்</h2><p>அரசின் கட்டுப்பாடுகளையும் மீறி தொடர்ந்து தொல்லை கொடுத்து வரும் இந்த மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தின் போது ஆவேசமடைந்த பொதுமக்கள், மதுக்கடைக்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை அதிரடியாக உடைத்தெறிந்து, கடையை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.</p><h2>போக்குவரத்து பாதிப்பு - அதிகாரிகள் பேச்சுவார்த்தை</h2><p>இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் ஜெயங்கொண்டம் - திருச்சி பிரதான சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.</p><p>"மக்களின் கோரிக்கையை ஏற்று, இந்த டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யவோ அல்லது மூடவோ உரிய உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதிகாரிகளின் இந்த உறுதிமொழியைத் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் தற்காலிகமாக போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வியட்நாம் படகு விபத்து: 10 தமிழர்கள் பலி
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vietnam-boat-accident-10-tamils-killed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vietnam-boat-accident-10-tamils-killed#comments</comments><guid isPermaLink="false">bf0919ed-7ef6-4bb7-915a-ce52de344e6a</guid><pubDate>Sat, 11 Jul 2026 12:27:59 +0000</pubDate><atom:updated>2026-07-11T12:27:59.879Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வியட்நாம்,Vietnam,boat accident,படகு விபத்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/heh6bqdg/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/heh6bqdg/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>திண்டுக்கல்,</p><p>ஆசியாவில் தென்சீன கடல் பகுதியில் அமைந்துள்ள நாடு <a href="https://www.dailythanthi.com/">வியட்நாம்</a>. இந்நாட்டில் பல்வேறு தீவுகள், சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த சுற்றுலா தலங்களுக்கு இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.</p><h2>இந்தியர்கள்</h2><p>இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த 32 சுற்றுலா பயணிகள் உள்பட 36 பேர் இன்று காலை  பு குவாக் தீவுக்கு  படகில் சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.</p><h2>படகு விபத்து</h2><p>மோசமான வானிலை காரணமாக படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணம் செய்த அனைவரும் கடலில் விழுந்து தத்தளித்துள்ளனர். தகவலறிந்து  விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் 18 பேரை மீட்டனர். ஆனாலும், இந்த விபத்தில் இந்தியாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 15 பேர் உயிரிழந்தனர்.</p><h2>10 தமிழர்கள்</h2><p>இந்நிலையில், இந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களில் 10 பேர் தமிழ்நாட்டை (திண்டுக்கல், சேலம், திருச்சி, தருமபுரி) சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  </p><p>செந்தில் குமார், முருக பிரபு, ஸ்ரீதர், ஷேக் அப்துல்லா, பாலாஜி, வினய குமார், ரவி சங்கர், பாபு, சந்தோஷ் குமார் மற்றும் அழகு ராஜன் உள்ளிட்ட 10 தமிழர்கள் பலியாகி உள்ளனர்.</p><p>படகு விபத்தில் லாவா மொபைல் நிறுவன ஊழியர்கள் சிலரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>சிறந்த வணிக செயல்பாட்டிற்காக செல்போன் கடை உரிமையாளர்கள், நிறுவன ஊழியர்கள் உள்பட சிலரை லாவா மொபைல் நிறுவனம் வியட்நாமிற்கு சுற்றுலா அழைத்து சென்றுள்ளது. அவர்களும் இந்த படகு விபத்தில் சிக்கியுள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>ஆந்திரா: கடலில் மூழ்கிய படகு..அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 8 தமிழக மீனவர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/boat-sinks-off-the-coast-of-andhra-8-tamil-nadu-fishermen-have-a-lucky-escape</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/boat-sinks-off-the-coast-of-andhra-8-tamil-nadu-fishermen-have-a-lucky-escape#comments</comments><guid isPermaLink="false">564c2cce-fb53-4efc-966a-b3301ba0aec2</guid><pubDate>Sat, 11 Jul 2026 12:26:18 +0000</pubDate><atom:updated>2026-07-11T12:26:18.701Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மீனவர்கள்,sea,ஆந்திரா,கடல்,boat capsized,படகு கவிழ்ந்தது,8 fisher,catching fish</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/poqset2h/ship-in-water.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ படகு மூழ்கியது]]></media:title><media:description type="html"><![CDATA[ படகு மூழ்கியதில் அதிஷ்டவசமாக 8 மீனவர்களும் உயிர் தப்பினர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/poqset2h/ship-in-water.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஆந்திர நடுக்கடலில்<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> மீன்</a> பிடித்து கொண்டிருந்த மீனவர்களின் படகு மூழ்கி நிலையில், 8 மீனவர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். </p><h2>படகில் இயந்திரக் கோளாறு</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை</a> திருவொற்றியூரைச் சேர்ந்த பிரசாத் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், காசிமேடு பகுதியை சேர்ந்த 8 மீனவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.</p><p>ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபட்டினம் அருகே நடுக்கடலில் அவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது படகின் இயந்திரத்தில் திடீரென்று பழுது ஏற்பட்டது.</p><h2>மூழ்கிய படகு</h2><p>இயந்திர கோளாறு காரணமாகப் படகு கட்டுப்பாட்டை இழந்து, கடலில் மெல்ல மூழ்கத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள், தங்களைக் காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர். சற்றும் எதிர்பாராத விதமாக படகு கடலுக்குள் முழுமையாக மூழ்கியது.</p><h2>துரிதமாகச் செயல்பட்ட சக மீனவர்கள்</h2><p>அதே கடற்பகுதியில் அவர்களுக்கு அருகே மற்றுமொரு விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். ஆபத்தில் சிக்கியவர்களின் அலறல் சத்தத்தைக் கேட்டு உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 8 மீனவர்களையும் அவர்கள் துரிதமாகச் செயல்பட்டு பத்திரமாக மீட்டனர்.</p><h2>அதிகாரிகள் விசாரணை</h2><p>மீட்கப்பட்ட<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> மீனவர்கள்</a> அனைவரும் சென்னை காசிமேடு கடற்கரைக்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர். இந்த விபத்து மற்றும் மீட்பு நடவடிக்கை குறித்து கடலோரப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>நடுக்கடலில் விசைப்படகு மூழ்கிய சம்பவமும், மீனவர்கள் நூலிழப்பில் உயிர் தப்பியதும் சென்னை கடலோரப் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&quot;போதையில்லா தமிழகம்&quot; - பொள்ளாச்சியில் நடைபெறும் விழிப்புணர்வு மாநாட்டு பந்தல் பணி தீவிரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/drug-free-tamil-nadu-awareness-conference-to-be-held-in-pollachi-in-full-swing</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/drug-free-tamil-nadu-awareness-conference-to-be-held-in-pollachi-in-full-swing#comments</comments><guid isPermaLink="false">d6dc4fd6-2ff3-4869-a7cc-8d051fcb1556</guid><pubDate>Sat, 11 Jul 2026 12:21:35 +0000</pubDate><atom:updated>2026-07-11T12:21:35.894Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,Annamalai,அண்ணாமலை,பொள்ளாச்சி,Pollachi,Conference,மாநாடு,கோயம்புத்தூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/yamg61z1/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/yamg61z1/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பொள்ளாச்சி,</p><p>கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் "WE THE LEADERS"  அமைப்பின் முதல் மாநாடு "போதையில்லா தமிழகம்" என்ற தலைப்பில் விழிப்புணர்வு மாநாடு நாளை (ஜூலை 12, ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது.</p><p>மாநாட்டுக்காக பொள்ளாச்சி கோவை நெடுஞ்சாலையில் ஆட்சி பட்டி அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு கடந்த 2-ம் தேதி அதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த மாநாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகளில் இருந்து 25,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>அதற்காக மாநாடு நடைபெறும் இடத்தில் தற்போது மாநாட்டு பந்தல், மேடை, இருக்கைகள் அமைக்கும் பணிகள் மற்றும் வாகன நிறுத்தம் இடம் ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மாநாடு நடைபெறும் இடத்தின் நுழைவுவாயிலில் அண்ணாமலையை வரவேற்கும் விதமாக பிளக்ஸ் பேனர்கள் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>125 நாள் வேலையில் முறைகேடு புகார்:  மாறி, மாறி மண்ணை வாரி தூற்றி தகராறில் ஈடுபட்ட பெண்கள்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/allegation-of-irregularities-in-the-125-day-employment-scheme-women-engaged-in-a-scuffle-hurling-soil-at-each-other</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/allegation-of-irregularities-in-the-125-day-employment-scheme-women-engaged-in-a-scuffle-hurling-soil-at-each-other#comments</comments><guid isPermaLink="false">8b6e9ea8-e62d-4bff-b994-d0885ea504c3</guid><pubDate>Sat, 11 Jul 2026 12:15:47 +0000</pubDate><atom:updated>2026-07-11T12:15:47.236Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பெண்கள்,womens,முறைகேடு புகார்,irregularities,125 நாள் வேலை திட்டம்,125-day work plan</media:keywords><media:content height="271" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/cnead6s0/street-fight.jpg" width="551"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மண்ணை வாரி தூற்றி தகராறில் ஈடுபட்ட பெண்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/cnead6s0/street-fight.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><p>திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஸ்ரீராமபுரம் ஊராட்சியில், <a href="https://www.dailythanthi.com/search?q=125%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">125 நாள் வேலை திட்டத்தில்</a> பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக வந்த புகாரை அடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் சென்று அதிரடி விசாரணை நடத்தியுள்ளார்.</p> <h2>புகார் மனு</h2><p>வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). இவர், ஸ்ரீராமபுரம் ஊராட்சியில் மத்திய,மாநில அரசுகளின் 125 நாள் வேலை திட்டம் (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்) செயல்படுத்தப்படுவதில் முறைகேடுகள் நடப்பதாக வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாக ஒரு புகார் மனு அளித்தார்.</p><p>அந்த மனுவில், ஸ்ரீராமபுரம் ஊராட்சியில் நூறு நாள் வேலை திட்டத்தின் பணித்தள பொறுப்பாளராக பணியாற்றி வரும் அம்பிகா என்பவர், தொழிலாளர்களின் பணிப்பதிவேடு மற்றும் திட்டப்பணிகளில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டிருந்தார்.</p><h2>அதிரடி நடவடிக்கை</h2><p>அதிகாரி நேரில் விசாரணைபொதுமக்களிடம் இருந்து வந்த இந்த பரபரப்பு புகாரை அடுத்து, வேடசந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கற்பகம் உடனடியாக அதிரடி நடவடிக்கையில் இறங்கினார். அவர் நேற்று பூத்தாம்பட்டியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு நேரடியாக சென்றார்.அங்கு சம்பந்தப்பட்ட ஆவணங்கள், வேலைக்கு வந்தவர்களின் விவரங்கள் மற்றும் பணிப்பதிவேடுகளை கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டார். </p><p>சுரேஷ் தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்தார். விசாரணை முடிந்ததை அடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் கற்பகம் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அவர் சென்ற அடுத்த சில நிமிடங்களிலேயே ஊராட்சி அலுவலக வளாகத்தில் திடீர் மோதல் வெடித்தது.</p> <h2>நீங்கள் எப்படி கூறலாம்?</h2><p>அங்கு வந்த வார்டு உறுப்பினர் மகேஸ்வரியின் மகள் புவனேஸ்வரி, பணித்தள பொறுப்பாளர் அம்பிகாவை நோக்கிச் சென்று பாய்ந்தார். என் தாயார் (வார்டு உறுப்பினர் மகேஸ்வரி) இந்த திட்டத்தில் கமிஷன் வாங்கியதாக நீங்கள் எப்படி கூறலாம்?" என்று கேட்டு அம்பிகாவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாய்த்தகராறு ஏற்பட்டது.</p> <h2>கமிஷன்</h2><p>புவனேஸ்வரியின் கேள்விக்கு பணித்தள பொறுப்பாளர் அம்பிகா ஆவேசமாக பதிலடி கொடுத்தார். அப்போது அவர், முறைகேடாக வந்த பணத்தை நான் மட்டும் தனியாக வைத்து கொள்ளவில்லை. இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் என அனைவருக்கும் சமமாக பிரித்து கொடுத்துவிட்டேன்" என்று அங்கிருந்தவர்கள் முன்னிலையில் பகிரங்கமாக கூறினார். அதிகாரி விசாரணை நடத்தி சென்ற உடனே, மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் கமிஷன் பிரித்து கொடுக்கப்பட்ட விவகாரத்தை அவரே ஒப்புக்கொண்டது வேடசந்தூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>மண்ணை வாரி மோதல்</h2><p> இதனால், வார்டு உறுப்பினர் மகேஸ்வரியின் மகள் புவனேஸ்வரிக்கும், அம்பிகாவுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு எல்லை மீறி முற்றியது. ஆத்திரமடைந்த இருவரும் ஊராட்சி அலுவலகத்தை விட்டு வெளியேறி, பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பார்க்கும் படி முக்கிய சாலைக்கு வந்தனர். அங்கு மாறி, மாறி மண்ணை வாரி தூற்றி மோதல்அங்கு நடுத்தெருவில் நின்றுகொண்டு, சினிமா பாணியில் ஒருவர் மீது ஒருவர் மண்ணை வாரி தூற்றி சாபமிட்டபடி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். </p><h2>போலீசார் விசாரணை</h2><p>சண்டை உச்சக்கட்டத்தை எட்டியதில், ஆத்திரமடைந்த இரு பெண்களும் ஒருவரையொருவர் தலைமுடியை பிடித்துக் கொண்டு சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர். இதில் காயம் அடைந்த புவனேஸ்வரி வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.</p> ]]></content:encoded></item><item><title>நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை புதிய உச்சம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/egg-purchase-price-hits-new-high-in-namakkal</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/egg-purchase-price-hits-new-high-in-namakkal#comments</comments><guid isPermaLink="false">dd7b1c9a-7f4d-4445-870e-ea9568c95677</guid><pubDate>Sat, 11 Jul 2026 12:13:47 +0000</pubDate><atom:updated>2026-07-11T12:13:47.472Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Namakkal,நாமக்கல்,முட்டை விலை,egg price,முட்டை,egg,Egg price hike,முட்டை கொள்முதல் விலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/zw19va3r/Untitled-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/zw19va3r/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல்,</p><p>நாமக்கல் மாவட்டத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.</p><h2>கொள்முதல் விலை உயர்வு</h2><p>முட்டை கொள்முதல் விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுதான் நிர்ணயம் செய்கிறது. இதனிடையே, மேற்காசிய போர் ஏற்பட்டதால் கோழி தீவன மூலப்பொருள்களின் விலை உயர்வு, வெளிநாடு ஏற்றுமதி உள்ளிட்ட காரணங்களால் சமீபகாலமாக முட்டையின் விலை உயர்ந்து, கொள்முதல் விலையாக ரூ.6.50 என்று உயர்ந்தது. இந்த நிலையில், முட்டையின் பண்ணை கொள்முதல் விலை மேலும் 5 காசுகள் உயர்ந்து ரூ.6.55 என்ற புதிய உச்சத்தை தொட்டிருந்தது.</p><p>இந்த நிலையில், இன்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த நிர்வாகிகள் முடிவு செய்தனர். எனவே நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலையில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">இதுவரையில் </a>இல்லாத புதிய உச்சமாக மேலும் 5 காசுகள் உயர்ந்து 660 காசுகளாக (ரூ.6.60) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><h2>மூலப்பொருட்களின் விலை உயர்வு</h2><p>தமிழ்நாட்டில் முட்டை ஒன்றின் கொள்முதல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.6.60 என்ற புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அதிகரித்த விற்பனை, கோழித்தீவன மூலப்பொருட்களின் கடுமையான விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் விலையேற்றம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பெரும்பாலான கடைகளில் சில்லறை விற்பனையில் தற்போது ரூ.8 என்றிருக்கும் நிலையில், மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நாமக்கல், திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் ஒதுக்கீடு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-student-admission-seats-allocated-to-namakkal-and-tiruppur-government-medical-colleges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-student-admission-seats-allocated-to-namakkal-and-tiruppur-government-medical-colleges#comments</comments><guid isPermaLink="false">631e8a6f-24be-4556-86d9-52a036bce089</guid><pubDate>Sat, 11 Jul 2026 11:59:21 +0000</pubDate><atom:updated>2026-07-11T11:59:21.536Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்,Namakkal,நாமக்கல்,மாணவர் சேர்க்கை,மருத்துவ கல்லூரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/gu7k9bux/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/gu7k9bux/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில மருத்துவ படிப்பு சேர்க்கைக்காக மாணவர்கள் இணைய வழியில விண்ணப்பம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாறியதன் காரணமாக ஒரு 700 மருத்துவ இடங்கள் அரசு ஒதுக்கீட்டில் இருந்து குறைகிறது என்ற ஒரு தகவலை மந்திரி ஏற்கனவே தெரிவித்திருந்தார். </p> <p>இந்த சூழலில், தமிழகத்தில் 2 அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடங்கள் அதிகரிக்கப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. திருப்பூர் மற்றும் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரிகளில் தலா 50 எம்.பி.பி.எஸ். இடங்கள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கான உத்தரவை மத்திய அரசு வழங்கி இருப்பதாக மருத்துவக் கல்வி இயக்குனராக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். இது 100 இடங்கள் அதிகரிப்பு என்பது தமிழக மாணவர்களுக்கு, குறிப்பாக அரசு பள்ளிகளில் படிக்கும் 7.5 விழுக்காட்டின் கீழ் வரக்கூடிய மாணவர்களுக்கு மிகுந்த ஒரு பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>உங்கள் குற்றவுணர்ச்சிக்கு எங்கள் இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கி விடாதீர்கள் - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dont-let-your-guilt-ruin-the-future-of-our-youth-nayinar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dont-let-your-guilt-ruin-the-future-of-our-youth-nayinar-nagendran#comments</comments><guid isPermaLink="false">6e0dfc99-2b9b-4fdb-9c5f-66397f631125</guid><pubDate>Sat, 11 Jul 2026 11:46:24 +0000</pubDate><atom:updated>2026-07-11T11:46:24.470Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Nayinar Nagendran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/am15ly5f/Untitled-22.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/am15ly5f/Untitled-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>உங்கள் குற்றவுணர்ச்சிக்கு எங்கள் இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கி விடாதீர்கள் ஜோசப் விஜய்யே!</p><p>கடந்த ஆண்டு கரூரில் தங்களின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உயிரிழந்தவர்களை, அப்பொழுது கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்த நீங்கள், முதல்-அமைச்சரான பிறகு அவர்களுக்கு “அரசுப்பணி” வழங்கி ஆறுதல் கூற முயன்றதை மனிதாபிமான அடிப்படையில் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், அரசுப் பணிகளை மட்டுமே இலக்காக வைத்து. இரவும் பகலும் கடுமையாக போராடிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு, நீங்கள் என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?</p><h2>காலிப்பணியிடங்கள் </h2><p>1. தமிழகத்தில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 125 கல்லூரிகளில் முதல்வர் காலிப்பணியிடங்கள் உள்ளன.</p><p>2. அதே கல்லூரிகளில் சுமார் 9000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாகக் கிடக்கின்றன.</p><p>3. சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பல்கலைக்கழகம்</a>, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியப் பல்கலைக் கழகங்களில் 50% -க்கும் மேற்பட்ட பேராசிரியப் பணியிடங்கள் காலியாக உள்ளன.</p><p>4. அரசுப் பள்ளிகளில் 30,000-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியப் பணியிடங்களும், 20,000-க்கும் பணியிடங்களும் காலியாகக் கிடக்கின்றன. மேற்பட்ட பட்டதாரி ஆசிரியப்</p><p>5. 7000-க்கும் மேற்பட்ட அரசு செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர்.</p><p>6. நீலகிரி மின்சார வாரியத்தில் மட்டும் கிட்டத்தட்ட 61% காலிப்பணியிடங்கள் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>7. தமிழ்நாடு மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை, தகுதியின் அடிப்படையில் தங்களுக்கு வழங்க வேண்டுமென கேங்க்மேன்கள் போராடி வருகின்றனர்.</p><p>8. அதுமட்டுமின்றி, தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் உட்பட பல பிரிவினர் நிரந்தர அரசு வேலை வேண்டி கோரிக்கை விடுத்து, தொடர்ந்து போராடி வருகின்றனர்.</p><h2>மெத்தனம் காட்டுவது ஏன்?</h2><p>ஆனால் நீங்களோ இந்த ஆண்டிற்கான TNPSC குரூப்-1 தேர்விற்கு வெறும் 26 காலிப்பணியிடங்களை மட்டுமே அறிவித்து, அரசு வேலையை மட்டுமே நம்பியிருந்த லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவுகளில் மண்ணை வாரி தூற்றியுள்ளீர்கள்.</p><p>உங்களின் குற்றவுணர்ச்சியை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">திருப்திப்படுத்திக் </a>கொள்வதற்காக அத்தனை அரசுப் பணிகளை யோசிக்காமல் உடனே தூக்கிக் கொடுத்த நீங்கள், அரசு கல்விக் கூடங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட மற்ற அரசு துறைகளில் உள்ள அரசு காலிப் பணியிடங்களை நிரப்புவதில் மட்டும் மெத்தனம் காட்டுவது ஏன்? TET, TRB உள்ளிட்ட அரசுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பல்லாயிரக் கணக்கானவர்கள் அரசு பணி நியமன ஆணைக்காக காத்துக் கொண்டிருக்கையில், துறை வாரியான ஆள்சேர்ப்பு மற்றும் பணி நியமனத்திற்கான கால அட்டவணையை உங்கள் அரசு ஏன் வெளியிடவில்லை?</p><p>எனவே, உங்கள் தனிப்பட்ட பாவச் செயல்களுக்கு, அதிகாரத்தைப் பயன்படுத்தி பரிகாரம் தேடுவதற்காக மட்டும் மக்கள் உங்களைத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை உணர்ந்து பொறுப்புடன் செயல்படுங்கள் ஜோசப் விஜய்யே! கரூர் மக்களுக்கு எப்படி ஜெட் வேகத்தில் அரசு பணி நியமன ஆணைகளை வழங்கினீர்களோ அதே போல, மற்ற அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நீங்கள் உடனே நிரப்ப வேண்டும்! அரசு வேலையை நம்பி காத்துக் கொண்டிருக்கும் லட்சோப லட்ச இளைஞர்களின் உழைப்பிற்கு மதிப்பு தர வேண்டும்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாமல்லபுரத்தில் சோகம்: மின்சாரம் தாக்கி 4 பேர் பலி

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-in-mamallapuram-4-killed-by-electrocution</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-in-mamallapuram-4-killed-by-electrocution#comments</comments><guid isPermaLink="false">17377658-1bfe-4c44-a6b9-b115f6afeedd</guid><pubDate>Sat, 11 Jul 2026 11:32:46 +0000</pubDate><atom:updated>2026-07-11T11:32:46.672Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Mamallapuram,மாமல்லபுரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/mfo1nh65/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/mfo1nh65/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>செங்கல்பட்டு,</p><p><a href="https://www.dailythanthi.com/">செங்கல்பட்டு </a>மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதி வளாகத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி இன்று நடைபெற்றது. இதில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். </p><h2>4 பேர் பலி</h2><p>ஆழ்துளை குழாயை பொருத்த இரும்பு பைப்பை உயர்த்தியபோது மேலே சென்ற மின்சார கேபிள் மீது உரசியுள்ளது. இதனால் இரும்பு பைப் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. அப்போது, இரும்பு பைப்பை பிடித்திருந்த 4 தொழிலாளர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் பிரபு (வயது 22), பாட்ஷா (வயது 45), ராஜேந்திரன் (55), பாலாஜி (வயது 32) ஆகிய 4 தொழிலாளர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், 4 தொழிலாளர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆழ்துளை கிணறு அமைக்கும்போது மின்சாரம் தாக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>