<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 06 Sep 2026 12:50:52 +0000</lastBuildDate><item><title>அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் ஆட்சி இருக்கிறதா? கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-administration-under-the-control-of-officials-minister-arunraj-clarifies-regarding-the-communist-partys-allegation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-administration-under-the-control-of-officials-minister-arunraj-clarifies-regarding-the-communist-partys-allegation#comments</comments><guid isPermaLink="false">10a6992a-ba37-4959-8ab6-c83c100d8cbd</guid><pubDate>Sun, 06 Sep 2026 12:39:48 +0000</pubDate><atom:updated>2026-09-06T12:39:48.284Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Communist,கம்யூனிஸ்ட்,அருண்ராஜ்,Arun Raj</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/kby57y98/Arun-raj.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அருண்ராஜ் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/kby57y98/Arun-raj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p> அமைச்சர் அருண்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-</p><p>தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் அறிகுறிகளுடன் வரும் நபர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. சட்டமன்றத்தில் எதிர்கட்சியினர் கேள்வி கேட்பது அவர்களின் கடமை. நியாயமான கோரிக்கைகளை கேள்வி எழுப்பும் போது அதற்கு முதல்-அமைச்சர் நிச்சயம் பதில் அளிப்பார். </p><p>சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கும் வகையில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். அவர் தனக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை. முதல்-அமைச்சர் தன்னுடைய பதிலுறையில் அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான விளக்கம் அளிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.</p><h2>வேடிக்கையானது</h2><p>அதிகாரிகளின் ஆட்சி நடப்பதாக கம்யூனிஸ்டு கட்சிகள் விமர்சனம் செய்ததது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘அதிகாரிகளின் ஆட்சி கடந்த தி.மு.க. ஆட்சியில் தான் நடந்தது. கடந்த ஆட்சியில் முதல்-அமைச்சருக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் அதிகாரிகளின் கட்டுப்பாட்டிலும், அவர்கள் சொல்வதைக் கேட்டு மட்டுமே இயங்கிய ஆட்சியாக அது இருந்தது. </p><p>ஆனால், இப்போது அப்படி இல்லை. திண்டுக்கல் மாவட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சியினரை குறிப்பிட்டு நடந்த ஒரு நிகழ்வுக்கு அரசு துறை ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த ஒரு சம்பவத்தை மட்டும் வைத்துக்கொண்டு அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் ஆட்சி இருக்கிறது எனக் கூறுவது வேடிக்கையானது. உண்மையில் ஒரு நேர்மையான, வெளிப்படையான தலைமை இருக்கிறது. ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக பொதுவாக பேச முடியாது.‘ என்றார்.</p>]]></content:encoded></item><item><title>இது தலைநகரமா, இல்லை கொலைநகரமா? - சென்னையில் அடுத்தடுத்து இரு படுகொலைகளால் கனிமொழி எம்பி வேதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-this-a-capital-or-a-murder-capital-kanimozhi-mp-pained-by-two-back-to-back-murders-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-this-a-capital-or-a-murder-capital-kanimozhi-mp-pained-by-two-back-to-back-murders-in-chennai#comments</comments><guid isPermaLink="false">21511e5b-fa74-4199-9427-ff73a904a60c</guid><pubDate>Sun, 06 Sep 2026 12:26:41 +0000</pubDate><atom:updated>2026-09-06T12:26:41.465Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,முதல்-அமைச்சர்,Chief Minister,படுகொலை,கனிமொழி எம்பி,murders,Capital</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/qxxpgwfg/kanimozhimp.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கனிமொழி எம்பி]]></media:title><media:description type="html"><![CDATA[ இது தலைநகரமா, இல்லை கொலைநகரமா? - சென்னையில் அடுத்தடுத்து இரு படுகொலைகளால் கனிமொழி எம்பி வேதனை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/qxxpgwfg/kanimozhimp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இது தலைநகரமா, இல்லை கொலைநகரமா? - சென்னையில் அடுத்தடுத்து இரு படுகொலைகளால் வேதனனை அளிப்பதாக திமுக எம்.பி. <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF">கனிமொழி </a>தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p> <h2>சரித்திர பதிவேடு குற்றவாளி </h2><p>தலைநகர் சென்னையின் மையப்பகுதியிலேயே ஒருவர் ஓட ஓட விரட்டப்பட்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">வெட்டிக் கொலை</a> செய்யப்பட்டிருக்கிறார். கொலை செய்யப்பட்ட நபர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதோடு, அண்மையில்  தவெகவில் இணைந்தவர் எனவும் கூறப்படுகிறது. மேலும், வடமாநிலத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவரும் போதை கும்பலால் அடித்துகொலை செய்யப்பட்டுள்ளார். </p><h2> கொலைநகரமா</h2><p>இது தலைநகரமா, இல்லை கொலைநகரமா என்று எண்ணும் அளவுக்கு அதிர்ச்சி அளிக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.</p> <h2>இதுவே சாட்சி</h2><p>முதல்-அமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை முழுவதுமாக செயலிழந்துவிட்டதற்கும், தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதற்கும் இதுவே சாட்சி.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>‘பிரதமர் வேட்பாளர் குறித்த த.வெ.க.வின் பிரசாரம் மக்கள் மத்தியில் எடுபடாது’ - ஐ.பெரியசாமி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvks-campaign-regarding-the-prime-ministerial-candidate-will-not-resonate-with-the-public-i-periyasamy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvks-campaign-regarding-the-prime-ministerial-candidate-will-not-resonate-with-the-public-i-periyasamy#comments</comments><guid isPermaLink="false">ea2b11f1-912f-494a-bb20-8d7985668cb3</guid><pubDate>Sun, 06 Sep 2026 12:16:19 +0000</pubDate><atom:updated>2026-09-06T12:16:19.629Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>I. Periyasamy,ஐ.பெரியசாமி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/yg9sdb2u/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/yg9sdb2u/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“தமிழக முதல்-அமைச்சர் விஜய் இதுவரை பா.ஜ.க.வைப் பற்றியை வாயை திறக்கவே இல்லை. தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய கல்விக்கான நிதியை மத்திய அரசு இன்னும் கொடுக்கவில்லை. தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதே சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி இருந்தது. </p><p>மும்மொழிக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி தருவோம் என்று மத்திய அரசு கூறுகிறது. இதுவரை இது குறித்து தமிழக அரசு எதுவும் அறிவிக்கவில்லை. பிரதமர் வேட்பாளர் குறித்து த.வெ.க.வினர் செய்து வரும் பிரசாரம் மக்கள் மத்தியில் எடுபடாது.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>நீலகிரி: ஆட்கொல்லி புலியை 17-வது நாளாக தேடும் பணி தீவிரம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-intensive-search-for-man-eating-tiger-enters-17th-day</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-intensive-search-for-man-eating-tiger-enters-17th-day#comments</comments><guid isPermaLink="false">a9771160-258d-4e23-9cf1-2fab39c6f63f</guid><pubDate>Sun, 06 Sep 2026 12:02:52 +0000</pubDate><atom:updated>2026-09-06T12:02:52.468Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nilgiris,நீலகிரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/aee7d31s/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/aee7d31s/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலி பகுதியில் கடந்த மாதம் 9-ம் தேதி ஒருவர், 21-ம் தேதி ஒருவர் என இரண்டு பேரை புலி தாக்கிக் கொன்றது. ஒரே பகுதியில் இரண்டு பேரை தாக்கிக் கொன்ற புலியை உடனடியாக பிடிக்க வேண்டும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>இதனையடுத்து புலியை கூண்டு வைத்தோ அல்லது மயக்க ஊசி செலுத்தியோ பிடிக்க முதன்மை தலைமை வன பாதுகாவலர் ராகேஷ் குமார் டோக்கரா உத்தரவிட்டார். இதன்படி புலியை கடந்த 17 நாட்களாக வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.</p><p>மலைகள், செங்குத்தான பள்ளத்தாக்குகள், பாறை குகைகளில் புலியை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கும்கி யானைகள் உதவியுடன் தேடுதல் பணி நடைபெறுகிறது. சுமார் 150-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 13 கூண்டுகள், 170 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. </p> ]]></content:encoded></item><item><title>ஆனைகட்டியில் வாரச்சந்தை திறப்பு: 10 ஆண்டு கால மக்களின் கோரிக்கை நிறைவேற்றிய எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/weekly-market-opens-in-anaikatti-mla-kanimozhi-santhosh-fulfills-10-year-demand</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/weekly-market-opens-in-anaikatti-mla-kanimozhi-santhosh-fulfills-10-year-demand#comments</comments><guid isPermaLink="false">4fdc6843-97dc-4309-bdc3-f915b67ea154</guid><pubDate>Sun, 06 Sep 2026 12:00:16 +0000</pubDate><atom:updated>2026-09-06T12:00:16.406Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>MLA,எம்.எல்.ஏ,மக்கள்,Weekly market,வாரச்சந்தை,Request கோரிக்கை,கனிமொழி சந்தோஷ்,Kanimozhi Santosh</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/bx10wbsj/weekly-santhi.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆனைகட்டியில் வாரச்சந்தை திறப்பு: 10 ஆண்டு கால மக்களின் கோரிக்கை நிறைவேற்றிய எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/bx10wbsj/weekly-santhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p> ஆனைகட்டியில் மலைவாழ் மக்கள் மற்றும் பொதுமக்களின்  10 ஆண்டு கால  கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் புதிய வாரச்சந்தை திறந்து வைக்கப்பட்டது.</p> <h2>10 ஆண்டு கோரிக்கை</h2><p>ஆனைகட்டி பகுதி மக்களின் கடந்த 10 ஆண்டுகால கோரிக்கையை கருத்தில் கொண்டு, மலைவாழ் மக்களின் உற்பத்திப் பொருட்களை நேரடியாக விற்பனை செய்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88">வாரச்சந்தை </a>அமைக்கப்பட்டுள்ளது.</p> <h2>வாடகை இடத்தில் வாரச்சந்தை</h2><p>இதற்கான இடத்தை வாடகைக்கு எடுத்து வாரச்சந்தை செயல்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முயற்சிக்கு ஒன்றிய செயலாளர் ரஞ்சித் குமார் எடுத்த முயற்சியும் முக்கிய பங்காற்றியது. வாரச்சந்தையை சட்டமன்ற உறுப்பினர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D">கனிமொழி சந்தோஷ் </a>திறந்து வைத்து, பொதுமக்கள் மற்றும் மலைவாழ் மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.</p><p><strong>அப்போது சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் பேசியததாவது:-</strong></p><h2>நேரடியாக விற்பனை</h2><p>ஆனைகட்டி மக்கள் மற்றும் மலைவாழ் மக்களின் தொழில் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு தமிழக வெற்றி கழக அரசு (தவெக அரசு) உறுதுணையாக இருக்கும் என உறுதியளித்தார். மேலும், மலைவாழ் மக்கள் தங்களது உற்பத்தி பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விற்பனை செய்யும் வகையில் சந்தை தொடர்ந்து செயல்படுவதற்கான தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.</p><p>இந்த வாரச்சந்தை மூலம் ஆனைகட்டி மற்றும் சுற்றுவட்டார மலைப்பகுதி மக்களுக்கு புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் 60,000 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி: மாநகராட்சி தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/60000-street-dogs-rabies-vaccination-in-chennai-says-corporation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/60000-street-dogs-rabies-vaccination-in-chennai-says-corporation#comments</comments><guid isPermaLink="false">3aafb705-7a0a-421c-8321-9ee6319c860d</guid><pubDate>Sun, 06 Sep 2026 11:40:02 +0000</pubDate><atom:updated>2026-09-06T11:40:02.438Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,stray dogs,Corporation,மாநகராட்சி,தெருநாய்கள்,Information,தகவல்,ரேபிஸ் தடுப்பூசி,rabies vaccination</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/62x39wgu/rabies.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ரேபிஸ் தடுப்பூசி ]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னையில் 60,000 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி: மாநகராட்சி தகவல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/62x39wgu/rabies.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> சென்னை மாநகராட்சியின் சார்பில் 11.08.2026 அன்று தொடங்கிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF">வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி</a>  மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தும் மாபெரும் அளவிலான முகாமின் மூலம் இதுவரை 60,216 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன், தகவல். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><h2>வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF"> சென்னை மாநகராட்சியில் </a>வெறிநாய்க்கடி நோய் பாதிப்பிலிருந்து பொது மக்களை காத்திடவும், வெறிநாய்க்கடி நோய் இல்லா சென்னை மாநகரை உருவாக்கிடவும் அனைத்து தெரு நாய்களுக்கும் வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி மற்றும் அகப்புற ஒட்டுண்ணி மருந்து செலுத்தும் மாபெரும் அளவிலான முகாம்  கடந்த 11.08.2026 அன்று தொடங்கப்பட்டது.</p><h2>4 மண்டலங்கள்</h2><p>இம்முகாமின் வாயிலாக திருவொற்றியூர், மணலி, தண்டையார்பேட்டை மற்றும் இராயபுரம் ஆகிய 4 மண்டலங்களிலும் உள்ள அனைத்து இடங்களிலும் உள்ள தெருநாய்களுக்கும் வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மாதவரம் மற்றும் அம்பத்தூர் மண்டலங்களில் உள்ள அனைத்து தெருக்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் உள்ள தெருநாய்களுக்கும் வெறிநாய்க்கடிநோய்த் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தப்பட்டு வருகிறது.</p><figure><img alt="இதுவரை 60,216 தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடிநோய்த் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தப்பட்டுள்ளது. " src="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/zfgjrbv2/rabies.2.jpg" /><figcaption>வெறிநாய்க்கடிநோய்த் தடுப்பூசி</figcaption></figure><p>இதுவரை 60,216 தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடிநோய்த் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தப்பட்டுள்ளது. அதன் விவரம்,</p> <p>திருவொற்றயூர் மண்டலம்             11795</p><p>மணலி மண்டலம்                               7207</p><p>தண்டையார்பேட்டை மண்டலம்  12684</p><p>இராயபுரம் மண்டலம்                       8672</p><p>அம்பத்தூர் மண்டலம்                        11895</p><p>மாதவரம் மண்டலம்                           7963</p><p>மொத்தம்                                                60,216</p><h2>2,00,000 ரேபிஸ் நோய் தடுப்பூசி</h2><p>தற்போது மாதவரம் மற்றும் அம்பத்தூர் மண்டலத்தில் தலா 10 குழுக்களை பயன்படுத்தி இந்த சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த 2 மண்டலங்களில் இந்த சிறப்பு முகாம் முடிவுற்றவுடன், பிற மண்டலங்களிலும் இம்முகாம் நடத்தப்பட்டு 50 வேலை நாட்களுக்குள் அனைத்து மண்டலங்களிலும் சுமார் 2,00,000 நாய்களுக்கு ரேபிஸ் நோய்த் தடுப்பூசியும் மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்தும்  செலுத்தப்படவுள்ளது.</p><h2>ஒத்துழைப்பு </h2><p>இந்த சிறப்பு முகாம்கள் மூலம் “வெறிநாய்க்கடிநோய் இல்லாசென்னை” என்ற இலக்கை அடைவதற்கு பொது மக்களும், செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களும் மற்றும் விலங்கு நல ஆர்வலர்களும் ஒத்துழைப்பு வழங்கிடும்படி கேட்டு கொள்ளப்படுகிறது.</p><p>மேற்கண்ட தகவலை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன், தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கடிதம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/omni-bus-owners-association-writes-to-tamil-nadu-chief-minister-regarding-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/omni-bus-owners-association-writes-to-tamil-nadu-chief-minister-regarding-vijay#comments</comments><guid isPermaLink="false">090e6dad-5845-4e89-a4ff-8c31ede770ae</guid><pubDate>Sun, 06 Sep 2026 11:36:06 +0000</pubDate><atom:updated>2026-09-06T11:36:06.265Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Omni Bus,ஆம்னி பேருந்து,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/mccpjwu2/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/mccpjwu2/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஆம்னி பேருந்துகளுக்கு பர்மிட் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், பயணிகளுக்கான போக்குவரத்து வசதியில் ஏற்படும் பற்றாக்குறை, அரசிற்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பு மற்றும் பேருந்து உரிமையாளர்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“சென்னையில் இருந்து தினசரி தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு சுமார் 1,200 ஆம்னி பேருந்துகளும், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, புதுச்சேரி, தெலங்கானா உள்ளிட்ட பகுதிகளுக்கு சுமார் 600 பேருந்துகளும் என மொத்தம் 1,800 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு, 70,000-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர். தமிழகம் முழுவதும் 6,000-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் மூலம் தினசரி 2.50 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயனடைந்து வருகின்றனர். இத்துறை பொதுமக்களின் போக்குவரத்துத் தேவையில் முக்கியப் பங்காற்றுவதுடன், அரசிற்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.900 கோடி நேரடி வருவாயும், சுமார் ரூ.3,000 கோடி மறைமுக வருவாயும் கிடைக்க முக்கியப் பங்களிப்பை வழங்கி வருகிறது.</p><p>நமது அரசு பொறுப்பேற்ற பின்னர், போக்குவரத்து ஆணையர் காலத்தில் 51 நாட்களுக்கும் மேலாக ஆம்னி பேருந்துகளுக்கான பர்மிட்கள் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தன. தற்போதைய போக்குவரத்து ஆணையர் பொறுப்பேற்றவுடன், பர்மிட் விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் செயல்படுத்த வசதி ஏற்படுத்தி, முதற்கட்டமாக சுமார் 270 பர்மிட்களை விரைவாக வழங்கினார். இருப்பினும், அதன் பின்னர் விண்ணப்பிக்கப்பட்ட சுமார் 300 பர்மிட்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளன. </p><p>மேலும், ஏற்கனவே வழங்கப்பட்ட 270 பர்மிட்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட பல பேருந்துகளுக்கு, ஒரு பேருந்துக்கு காலாண்டுக்கு சுமார் ரூ.1.50 லட்சம் சாலை வரி செலுத்தப்பட்டிருந்தும், போக்குவரத்து ஆணையரின் இறுதி ஒப்புதல் (Approval) கிடைக்காததால் அவற்றை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. </p><p>இதேபோன்று புதிய சுற்றுலா பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகளுக்கான பதிவு/ஒப்புதல் பணிகளும் ஒரு மாதத்திற்கும் மேலாக நிலுவையில் இருப்பதால், பேருந்து உரிமையாளர்களுக்கு பெரும் பொருளாதார இழப்பும், அரசிற்கு வரி வருவாய் இழப்பும், பயணிகளுக்குத் தேவையான போக்குவரத்து வசதியில் பற்றாக்குறையும் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள 22 எல்லை சுங்க சாவடிகளிலும் தலா ஒரு வாகனத்திற்கு 500 ரூபாயிலிருந்து 3000 ரூபாய் வரை கையூட்டு பெற்று வருகிறார்கள்.</p> <p>தற்போது கோயம்பேட்டில் ஆம்னி பேருந்துகளுக்காக வழங்கப்பட்டுள்ள இடத்தில் சுமார் 150 பேருந்துகளை மட்டுமே நிறுத்தக்கூடிய வசதி உள்ள நிலையில், தினசரி சுமார் 1,200 ஆம்னி பேருந்துகள் இப்பகுதி வழியாக இயக்கப்படுவதால் போதுமான பேருந்து நிறுத்தம், காத்திருப்பு (Staging), பயணிகள் ஏறும் வசதி மற்றும் பேருந்துகள் தடையின்றி வந்து செல்லும் இடவசதி இல்லாமல் சாலைகளில் தேவையற்ற நெரிசல் ஏற்படுகிறது.</p><p>தற்போது முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் உள்ள கோயம்பேடு CMDA பேருந்து நிலையத்தை ஆம்னி மற்றும் அரசு பேருந்துகளின் பயன்பாட்டிற்கு தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ வழங்க வேண்டும். கோயம்பேட்டில் மெட்ரோ ரயில், மாநகரப் பேருந்து மற்றும் தனிநபர் வாகன இணைப்பு வசதிகள் இருப்பதால், வடசென்னை, மத்திய சென்னை மற்றும் மேற்கு சென்னை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் எளிதாக பேருந்து நிலையத்தை அடைய முடியும்; பேருந்து நிலையத்தின் உள்ளேயே பயணிகளை இறக்கி/ஏற்றுவதன் மூலம் சுற்றுப்புற போக்குவரத்து நெரிசலையும் குறைக்கலாம்.</p><p>இது கிளாம்பாக்கத்திற்கு மாற்றான திட்டமல்ல; “கோயம்பேடு + கிளாம்பாக்கம்” Multi-Hub முறையில், வட/மத்திய/மேற்கு சென்னை பயணிகள் கோயம்பேட்டிலும், தென் சென்னை மற்றும் சுற்றுப்பகுதி பயணிகள் கிளாம்பாக்கத்திலும் பேருந்தில் ஏறும் வசதியை ஏற்படுத்த வேண்டும். இதனால் வட, மத்திய மற்றும் மேற்கு சென்னை பயணிகள் கிளாம்பாக்கம் செல்ல சுமார் இரண்டு மணி நேரம் வரை கூடுதலாகப் பயணித்து, இரண்டு பேருந்துகளை மாற்றிப் பிடிக்கும் சிரமம் குறைந்து, கோயம்பேட்டிலிருந்தே ஒரே பேருந்தில் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணிக்க</p><p>முடியும்; அதேவேளையில் பயணிகளுக்கு நேரம் மற்றும் செலவு மிச்சமாகி, அரசுக்கு நுழைவுக் கட்டணம் மற்றும் வணிக வசதிகள் மூலம் வருவாயும் கிடைக்கும்.</p><p>ஆகையால், தமிழ்நாடு முதல்-அமைச்சர் இக்கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையிலும், பயணிகளின் நேரம், செலவு மற்றும் பயணச் சிரமங்களைக் குறைத்து அவர்களுக்கு பெரும் பயனளிக்கும் வகையிலும் உரிய நடவடிக்கை எடுத்து உதவுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ஸ்ரீவைகுண்டம் தவெக பெண் நிர்வாகி அளித்த பாலியல் புகார்; அமைச்சர் புஸ்ஸி  ஆனந்த்தின்  சட்டமன்ற பேச்சு  ஏற்புடையது அல்ல -  மாதர்  சங்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/srivaikundam-women-official-sexual-harassment-complaint</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/srivaikundam-women-official-sexual-harassment-complaint#comments</comments><guid isPermaLink="false">3d69595e-da3e-4b62-b098-5821520aacef</guid><pubDate>Sun, 06 Sep 2026 11:11:29 +0000</pubDate><atom:updated>2026-09-06T11:11:29.003Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,Sexual harassment,Association,Srivaikundam,ஸ்ரீவைகுண்டம்,பாலியல் புகார்,பெண் நிர்வாகி,ஜனநாயக மாதர் சங்கம்,அமைச்சர் ஆனந்த்,Minister Anand</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/nzsuazar/busy-ananad.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் புஸ்ஸி  ஆனந்த்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஸ்ரீவைகுண்டம் தவெக பெண் நிர்வாகி அளித்த பாலியல் புகார்; அமைச்சர் புஸ்ஸி  ஆனந்த்தின்  சட்டமன்ற பேச்சு  ஏற்புடையது அல்ல -  மாதர்  சங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/nzsuazar/busy-ananad.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஸ்ரீவைகுண்டம் தவெக பெண் நிர்வாகி அளித்த பாலியல் புகார் தொடர்பாக, சட்டமன்றத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசிய பேச்சு ஏற்புடையது அல்ல என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, மாதர் சங்கம் மாநிலம் தழுவிய அளவில் போராட்டங்களையும் கண்டனங்களையும் பதிவு செய்துள்ளது.</p><h2> பாலியல் வன்முறை</h2><p>தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம்  தவெக நிர்வாகிகள் மீது தவெக சார்ந்த பெண் முன்வைத்துள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D">பாலியல்</a> துன்புறுத்தல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், இத்தகைய புகார்களில் அரசு எந்தவித அரசியல் சார்பும் இன்றி, பாதிக்கப்பட்ட பெண்ணின் நியாயத்தை முன்னிறுத்தி செயல்பட வேண்டியது அவசியமாகும்.</p><h2>நம்பகத்தன்மை</h2><p>இந்த விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D">அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்</a>, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றதாகவும், அந்த விசாரணையின் அடிப்படையில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் விஜி சரவணனுக்கு இச்சம்பவத்தில் தொடர்பு இல்லை என்பது தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.</p> <p>ஆனால், அமைச்சர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு பாதிக்கப்பட்ட பெண் முன்வைத்துள்ள விளக்கம் மிகுந்த அதிர்ச்சியையும், விசாரணையின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளையும் எழுப்புகிறது.</p><h2>பாதிக்கப்பட்ட பெண்</h2><p>பாதிக்கப்பட்ட பெண், தனது புகாரில் சட்டமன்ற உறுப்பினரின் பெயரை காவல் நிலையத்தில் சொன்னபோது “அவரது பெயரை சேர்க்கக்கூடாது” என்று மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் தன்னிடம் கூறியதாகவும், இந்த வழக்கு தொடர்பாக நடைபெற்றதாக கூறப்படும் விசாரணைக்கு தன்னை அழைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், விசாரணை எங்கு நடைபெற்றது, யார் விசாரணை அதிகாரிகள் என்பதுகூட தனக்கு தெரியாது எனவும் அவர் கூறியுள்ளார்.</p> <h2>விசாரணை நடைபெற்றது? </h2><p>இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணிடமே விசாரணை நடத்தப்படவில்லை என்றால், எந்த அடிப்படையில் இந்த விசாரணை நடைபெற்றது? அவரது புகாரின் முழுமையான அம்சங்கள் எவ்வாறு பரிசீலிக்கப்பட்டன? அவரது வாக்குமூலம் இல்லாமல் அவரது புகாரின் உண்மை தன்மையை எவ்வாறு மதிப்பீடு செய்தார்கள்?</p> <p>ஒரு பெண் தனக்கு நேர்ந்ததாக கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கும்போது, அதில் தலையீடு செய்வது அதன் அடிப்படையே கேள்விக்குள்ளாக்குதாகும். விசாரணையின் சில அம்சங்களை மட்டும் சுட்டிக்காட்டி வழக்கை முடித்துவிட முயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.</p><h2>உறுதி செய்யப்பட வேண்டும்</h2><p>சட்டமன்ற உறுப்பினர் விஜி சரவணனுக்கு  தொடர்பில்லை என்ற முடிவை எட்டுவதற்கு முன் நடைபெற்ற விசாரணை முழுமையானதா, நியாயமானதா, வெளிப்படையானதா என்பதும் உறுதி செய்யப்பட வேண்டும். குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டவர் அரசியல் அதிகாரம் கொண்டவர் என்பதற்காக விசாரணையிலிருந்தும் விடுவிப்பது ஏற்க முடியாது.</p> <h2>மறுவிசாரணை</h2><p>எனவே, ஸ்ரீவைகுண்டம் விவகாரத்தில் இதுவரை நடைபெற்ற விசாரணையின் முழுமையான நடைமுறையை அரசு வெளிப்படையாக விளக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணின் குற்றச்சாட்டுகளையும் அவர் எழுப்பியுள்ள கேள்விகளையும் முறையாகப் பரிசீலித்து, தேவையானால்  மறுவிசாரணை மேற்கொள்ள வேண்டும். </p><p>எந்த அரசியல் தலையீடும் இல்லாமல் உண்மை முழுமையாக வெளிக்கொணரப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகளில் சமரசத்திற்கோ, அரசியல் செல்வாக்கிற்கோ, அதிகார அழுத்தத்திற்கோ இடமிருக்கக் கூடாது.</p><h2>பாதிக்கப்பட்ட பெண்</h2><p>ஸ்ரீவைகுண்டம் விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்  பக்கம்  நிற்காமல், பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கம்  அரசு உறுதியாக நிற்க வேண்டும். அவர் எழுப்பியுள்ள அனைத்து கேள்விகளுக்கும் உரிய, வெளிப்படையான பதிலை அளித்து. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு  நீதி கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி மாணவி - தேடும் பணி தீவிரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/schoolgirl-swept-away-in-the-cauvery-river-at-hogenakkal-search-operations-intensified</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/schoolgirl-swept-away-in-the-cauvery-river-at-hogenakkal-search-operations-intensified#comments</comments><guid isPermaLink="false">bf5ee435-9cb6-4221-905d-b5f0c74e78d0</guid><pubDate>Sun, 06 Sep 2026 10:56:38 +0000</pubDate><atom:updated>2026-09-06T10:56:38.953Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Hogenakkal,ஒகேனக்கல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/kr4v9kdv/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/kr4v9kdv/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தர்மபுரி,</p><p>ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பள்ளி மாணவி அடித்துச்  செல்லப்பட்ட நிலையில் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. </p><p>தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே ஜருகு பகுதியைச் சேர்ந்த 13 வயது மாணவி அவிநிஷா, தர்மபுரியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறையை முன்னிட்டு உறவினர்களுடன் ஒகேனக்கல் சுற்றுலா வந்த மாணவி, மெயின் அருவி அருகே காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென தண்ணீரின் வேகம் அதிகரித்தது.</p><p>இதனால் அந்த மாணவி நிலைதடுமாறு ஆழமான பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்டார். அங்கிருந்தவர்கள் மாணவியை காப்பாற்ற முயன்று முடியாமல் போனதால், உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஒகேனக்கல் போலீசார் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவியை தீவிரமாக தேடத் தொடங்கினர். </p><p>ஆற்றின் ஆழமான பகுதிகள் மற்றும் கரையோரங்களில் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மாணவி இதுவரை மீட்கப்படவில்லை. இந்த சம்பவம் ஒகேனக்கல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் புதிய விமான நிலையம் எங்கே அமைகிறது? 2 இடங்களை தேர்வு செய்த தமிழக அரசு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/where-will-the-new-airport-in-chennai-be-located-tamil-nadu-government-selects-two-sites</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/where-will-the-new-airport-in-chennai-be-located-tamil-nadu-government-selects-two-sites#comments</comments><guid isPermaLink="false">d56b3972-e975-4c55-a8df-ac1a08ca5c19</guid><pubDate>Sun, 06 Sep 2026 10:17:13 +0000</pubDate><atom:updated>2026-09-06T10:17:13.884Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,airport,விமான நிலையம்,தமிழக அரசு,TN govt</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/qya9x2qv/Airport.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  விமான நிலையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/qya9x2qv/Airport.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் தற்போதுள்ள விமான நிலையத்தின் நெரிசலை குறைக்கும் வகையில், 2-வது விமான நிலையம் அமைக்க நீண்டகாலமாக திட்டமிடப்பட்டு வருகிறது. இதற்காக காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கடந்த மே மாதம் பொறுப்பேற்ற தவெக அரசு,  பரந்தூர் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தது.  தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு விமான நிலையம் அமைப்பது அவசியம் என்பதால், புதிய இடத்தில் விமான நிலையம் அமைக்கும் பணிகளில் தமிழக அரசு ஈடுபட்டது. </p><h2>சாத்தியக்கூறு ஆய்வு</h2><p>இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மானெல்லூர் ஆகிய 2 இடங்களை தமிழக அரசு தேர்வு செய்துள்ளது.. இந்த 2 இடங்களிலும் முதற்கட்ட ஆய்வுகளை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் ஏற்கனவே மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதையடுத்து, 2 இடங்களிலும் ஆரம்பகட்ட சாத்தியக்கூறு ஆய்வு நடத்துமாறு இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திடம் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">தமிழக அரசு </a>கோரிக்கை விடுத்துள்ளது. விமான நிலையங்கள் ஆணைய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் இறுதி இடம் தேர்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>மானெல்லூர் பகுதி</h2><p>செய்யூர் பகுதி தற்போதைய சென்னை விமான நிலையத்தில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள மானெல்லூர் பகுதி சென்னை நகரில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. எனினும், இந்த இரு இடங்களிலும்<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D"> விமான நிலையம்</a> அமைப்பதற்கு சில நடைமுறை மற்றும் பாதுகாப்பு சார்ந்த சவால்கள் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக செய்யூர் பகுதியில் விமானப்படை வான்வெளி தொடர்பான அனுமதிகள் பெற வேண்டிய நிலை உள்ளது. இதற்கிடையே, புதிய விமான நிலையத்தை விரைவாக செயல்பாட்டுக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வந்தாலும், திட்டம் முழுமையாக நிறைவேற குறைந்தது 5 முதல் 7 ஆண்டுகள் ஆகலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடகம் தண்ணீர் வழங்க வாய்ப்பில்லை: சம்பா சாகுபடிக்கு முழுமையாக நீர் வழங்க அரசு தெளிவுபடுத்த வேண்டும் - அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/karnataka-cannot-supply-water-government-must-clarify-irrigation-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/karnataka-cannot-supply-water-government-must-clarify-irrigation-anbumani#comments</comments><guid isPermaLink="false">6f12fc1b-4f5b-4587-8de3-693d068979df</guid><pubDate>Sun, 06 Sep 2026 08:56:29 +0000</pubDate><atom:updated>2026-09-06T08:56:29.516Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி,Government,தண்ணீர்,water,அரசு,சம்பா சாகுபடி,Samba Cultivation,கர்நாடக,Anbumani Ramadass,In Karnataka</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/r8u4rx1c/anbumani.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/r8u4rx1c/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கர்நாடகம் தண்ணீர் வழங்க வாய்ப்பில்லை: சம்பா சாகுபடிக்கு முழுமையாக நீர் வழங்க முடியுமா? அரசு தெளிவுபடுத்த வேண்டும்! என்று அன்புமணி தெரிவித்தார். இது தொடர்பாக, பா.ம.க. தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ் </a>அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;-</p><h2>சம்பா சாகுபடியை தொடங்கலாமா?</h2><p>கர்நாடக அணைகளில் தொடங்கி, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%88">கல்லணை</a> வரை காவிரி நீர் தொடர்பாக வரும் செய்திகள் எதுவுமே  நம்பிக்கையளிப்பதாக இல்லை. கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வருவதற்கும், கல்லணையில்  திறக்கப்படும் நீர் கடைமடை பாசனப் பகுதிகளை சென்றடைவதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையில், காவிரி டெல்டா விவசாயிகள் சம்பா சாகுபடியை தொடங்கலாமா? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.</p> <h2>கல்லணை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF">காவிரி</a> பாசன மாவட்டங்களில் குறுவை நெற்பயிர்களை காப்பாற்றவும், சம்பா மற்றும் தாளடி சாகுபடிக்கு  உழவர்கள் தயாராகவும் வசதியாக மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஒன்றாம் தேதி முதல் காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. காவிரி நீர் கல்லணையை நேற்று வந்தடைந்த நிலையில், இன்று முதல் அங்கிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூரிலிருந்து வினாடிக்கு 7000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், கல்லணைக்கு சராசரியாக வினாடிக்கு 2500 கனஅடி நீர் மட்டுமே வருகிறது. இதை கொண்டு கல்லணையிலிருந்து காவிரி மற்றும் அதன் கிளை நதிகளில் எவ்வளவு கன அடி நீர் திறந்து விடப்படும் என்பது தெரியவில்லை.</p><h2>தண்ணீர் போதுமானதல்ல</h2><p>மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி நீர் திறந்தால் மட்டுமே, அது காவிரியின் மட்டத்தை விட சற்று அதிக உயரத்தில் இருக்கும் பாசன கால்வாய்கள் வழியாக வயல்களுக்கு செல்லும். பாசன கால்வாய்களுக்கு சென்றது போக கடைமடை பாசன பகுதிகள் வரை தண்ணீர் சென்றடைய அந்த அளவுக்கு தண்ணீர் திறக்க வேண்டியது அவசியமாகும். ஆனால், அதில் பாதிக்கும் குறைவான நீரே திறக்கப்படுவதால் பாசன கால்வாய்களில் தண்ணீர் செல்ல வாய்ப்பில்லை. கடைமடை பாசன பகுதிகளுக்கு சென்றடைவதற்கும் மேட்டூர் அணையிலிருந்து இப்போது திறக்கப்பட்டிருக்கும் தண்ணீர் போதுமானதல்ல.</p><h2>அவலநிலை ஏற்பட்டு விடும்</h2><p>அதே நேரத்தில், மேட்டூர் அணையில் 92.50 அடி, அதாவது 55.50 டி.எம்.சி மட்டுமே தண்ணீர் இருக்கும் நிலையில், வினாடிக்கு 16,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டால், அதை கொண்டு ஒரு மாதத்திற்கு மட்டுமே தண்ணீர் திறக்க முடியும். அதற்குள் சம்பா பருவத்திற்கான விதைப்பு பணிகள்  கூட நிறைவடைந்திருக்காது. தாளடி பருவத்திற்கான சாகுபடிகள் தொடங்கப்பட்டிருக்காது. ஒரு மாதத்திற்குள் மேட்டூர் அணையில் உள்ள நீர் திறக்கப்பட்டு விட்டால், ஒரு மாதத்திற்கு பிறகு பாசனத்திற்கு நீர் இருக்காது.  அப்போது சம்பா பருவ நெற்பயிர்களை காப்பாற்ற முடியாத அவலநிலை ஏற்பட்டு விடும்.</p><h2>நீர் இருப்பும் மழை கணிப்பும் காட்டுகின்றன</h2><p>இந்த நிலையை தவிர்க்க வேண்டும் என்றால், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் வழங்க வேண்டிய நீரை, பாக்கியின்றி பெற்றால் தான் சாத்தியமாகும். ஜூன் மாதம் முதல் செப்டம்பர் 5-ம் தேதி வரை 92.31 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டிய நிலையில், 31.60 டி.எம்.சி நீரை மட்டுமே காவிரியில்  தமிழ்நாட்டிற்கு கர்நாடகம் வழங்கியுள்ளது. கர்நாடக அரசு நேற்று வரை 61 டி.எம்.சி நீர் வழங்க வேண்டியுள்ளது. இந்த நீர் கிடைத்தால் சம்பா &amp; தாளடி பயிர்களை வெற்றிகரமாக சாகுபடி செய்து விட முடியும். ஆனால், அதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதையே கர்நாடக அணைகளின் நீர் இருப்பும், மழை கணிப்பும் காட்டுகின்றன.</p><h2></h2><h2>74 டி.எம்.சி நீர் மட்டுமே உள்ளது</h2><p>கர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஹாரங்கி, ஹேமாவதி, கபினி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய 4 அணைகளிலும் சேர்த்து இன்றைய நிலவரப்படி 74 டி.எம்.சி நீர் மட்டுமே உள்ளது. அதிலிருந்து அதிகபட்சமாக 51 டி.எம்.சி நீரை மட்டுமே திறக்க முடியும். ஆனால், காவிரியில் நேரடியாக தண்ணீர் திறக்கப்படும் கபினி அணையிலிருந்து இன்னும் சுமார் 1 டி.எம்.சி நீரையும், கிருஷ்ண ராஜ சாகர் அணையிலிருந்து 20 டி.எம்.சியையும் மட்டுமே வழங்க முடியும். 4 அணைகளுக்கும் சேர்த்து  வினாடிக்கு 5753 கன அடி மட்டுமே தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.</p><p>கபினி அணையிலிருந்து நீர் திறக்கப்படுவது அடுத்த ஓரிரு நாள்களில் நிறுத்தப்படும். கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் பெரும்பகுதி கர்நாடக விவசாயிகளால் பயன்படுத்தப்படுவதால் அந்த நீரும் முழுமையாக கிடைக்காது.</p><h2>தமிழக அரசின் கடமை</h2><p>இத்தகைய சூழலில் சம்பா மற்றும் தாளடி சாகுபடிகளை தொடங்கலாமா, வேண்டாமா? என்ற ஐயமும்,  எதிர்பார்த்தவாறு தண்ணீர் கிடைக்காத நிலையில் பயிர்கள் என்னவாகும்? என்ற கவலையும் உழவர்களிடம்   ஏற்பட்டிருக்கிறது. இந்த ஐயத்தையும், கவலையையும் போக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.</p><h2>இன்னொரு இழப்பு</h2><p>சம்பா மற்றும் தாளடி பருவத்தில் விதைப்பு, அடியுரமிடுதல், நடவு, மேல் உரமிடுதல் ஆகியவற்றுக்காக மட்டும் முதல் 45 நாள்களில் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவாகும். இந்த அளவுக்கு செலவு செய்து வளர்த்தெடுத்த பயிர்களை தண்ணீர் இல்லாமல் காப்பாற்ற முடியாமல் போனால், அதனால் ஏற்படும் பயிர் இழப்பையும், பொருளாதார இழப்பையும் உழவர்களால் தாங்கி கொள்ள முடியாது. ஏற்கனவே, குறுவை சாகுபடி பொய்த்து போனதால் காவிரி பாசன மாவட்ட விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், இன்னொரு இழப்பை அவர்களால் தாங்கி கொள்ள முடியாது; அதற்கு அவர்கள் தயாராகவும் இல்லை.</p> <p>எனவே, சம்பா மற்றும் தாளடி பருவம் முடியும் வரை தடையின்றி காவிரியில் தண்ணீர் வழங்குவதற்கு ஏதேனும் திட்டம் உள்ளதா? அதை நம்பி காவிரி பாசன மாவட்டங்களின் விவசாயிகள் சம்பா மற்றும் தாளடி சாகுபடிக்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ளலாமா? என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வார விடுமுறையை முறையாக அமல்படுத்த வேண்டும்: அமைச்சர் ஸ்ரீநாத்திடம் மகளிர் காவலர்கள் கோரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/women-police-officers-request-minister-srinath-to-implement-weekly-holidays-properly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/women-police-officers-request-minister-srinath-to-implement-weekly-holidays-properly#comments</comments><guid isPermaLink="false">3a917cfd-41d1-42d0-ae26-7a2085f00f40</guid><pubDate>Sun, 06 Sep 2026 08:43:05 +0000</pubDate><atom:updated>2026-09-06T08:43:05.226Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,Thoothukudi,தூத்துக்குடி,கோரிக்கை,women,Request,காவலர்கள்,speech,பேச்சு,மகளிர்,வாரவிடுமுறை,அமைச்சர் ஸ்ரீநாத்,Minister Srinath,weekly leave</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/00aurfrv/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வார விடுமுறையை முறையாக அமல்படுத்த வேண்டும்: அமைச்சர் ஸ்ரீநாத்திடம் மகளிர் காவலர்கள் கோரிக்கை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/00aurfrv/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடியில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D">மகளிர்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">காவலர்கள்</a>, தங்களுக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">வார விடுமுறை</a>யை முறையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D">அமைச்சர் ஸ்ரீநாத்</a>திடம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">கோரிக்கை</a> விடுத்தனர். </p><h2>வ.உ.சி. சிலைக்கு அமைச்சர் ஸ்ரீநாத் மரியாதை</h2><p>சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 155-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனாரின் உருவ சிலைக்கு தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.</p><h2>வாரவிடுமுறையை முறையாக அமல்படுத்த மகளிர் காவலர்கள் கோரிக்கை</h2><p>மரியாதை செலுத்திய பிறகு, அங்கே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மகளிர் காவலர்களிடம், "உங்களுக்கு ஏதேனும் கோரிக்கைகள் உள்ளதா?" என அமைச்சர் ஸ்ரீநாத் கேட்டறிந்தார். அதற்கு பதிலளித்த மகளிர் காவலர்கள், "பெண் காவலர்களுக்கு வார விடுமுறை வழங்கும் நடைமுறையை எந்தவிதத் தடங்கலுமின்றி முறையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தனர். </p><h2>காவல்துறைக்கான மானியக் கோரிக்கையில் புதிய திட்டங்கள்</h2><p>மகளிர் காவலர்களின் கோரிக்கையைக் கேட்ட அமைச்சர் ஸ்ரீநாத், "உங்களது கோரிக்கை உடனடியாக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும். திங்கள்கிழமை நடைபெற உள்ள காவல்துறைக்கான மானியக் கோரிக்கையின்போது, முதல்-அமைச்சர் காவல்துறையினருக்காக மேலும் பல்வேறு புதிய திட்டங்களை அறிவிக்க உள்ளார்" என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>புளியங்குடியில் வரத்து குறைவு.. எலுமிச்சை விலை கிடுகிடு உயர்வு.. கிலோ ரூ.225-க்கு விற்பனை..</title><link>https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/low-supply-in-puliyangudi-lemon-prices-skyrocket-selling-for-rs225-per-kg</link><comments>https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/low-supply-in-puliyangudi-lemon-prices-skyrocket-selling-for-rs225-per-kg#comments</comments><guid isPermaLink="false">ca489ccc-b9e2-40b4-b708-4fb34f25f5c3</guid><pubDate>Sun, 06 Sep 2026 08:05:53 +0000</pubDate><atom:updated>2026-09-06T08:05:53.016Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,தென்காசி,விலை உயர்வு,price hike,lemon,விவசாயிகள் கோரிக்கை,Low,Farmers demand,வரத்து குறைவு,Supply,எலுமிச்சை,Puliyangudi,புளியங்குடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/1zfg5v4j/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81.-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%B0%E0%AF%82.225-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ புளியங்குடி சந்தையில் எலுமிச்சை பழங்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/1zfg5v4j/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81.-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%B0%E0%AF%82.225-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சிறப்புக் கட்டுரைகள் (Sirappukatturaigal)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p>சுட்டெரிக்கும் வெயிலால் வரத்து குறைவு காரணமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF">தென்காசி</a> மாவட்டம், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">புளியங்குடி</a> சந்தையில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88">எலுமிச்சை</a> விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.225 வரை விற்பனையானது. </p><h2>எலுமிச்சை சாகுபடி; விற்பனை</h2><p>தென்காசி மாவட்டத்தில் புளியங்குடி, வாசுதேவநல்லூர், கடையநல்லூர், சொக்கம்பட்டி, புன்னையாபுரம், சிங்கிலிபட்டி, குமந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் எலுமிச்சை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளையும் எலுமிச்சை பழங்கள் புளியங்குடி சந்தைக்கு கொண்டு வரப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் என தினமும் சுமார் 15 முதல் 20 டன் வரை விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. </p><h2>விலை கிடுகிடு உயர்வு</h2><p>தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் எலுமிச்சை பழங்களின் தேவை அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் சுட்டெரிக்கும் வெயில், பலத்த காற்று காரணமாக செடிகளில் இருந்து பழங்கள் உதிர்ந்துவிடுவதால் அதன் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81">வரத்து குறைந்துள்ளது</a>. இதனால் எலுமிச்சை பழங்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. புளியங்குடி சந்தையில் கிலோ ரூ.170-க்கு விற்பனை செய்யப்பட்ட எலுமிச்சை பழங்கள் நேற்று கிலோ ரூ.225 வரை விற்பனை ஆனது. தரத்தை பொறுத்து ஒரு எலுமிச்சை பழம் ரூ.10 முதல் ரூ.15 வரை விற்கப்பட்டது. <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">விலை உயர்வால்</a> விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். </p><h2>காரணம் என்ன?</h2><p>எலுமிச்சை பழத்தின் விலை உயர்வு குறித்து வியாபாரிகள் கூறியதாவது:</p><p>சுபமுகூர்த்தங்கள், அம்மன் கோவில் திருவிழாக்கள் மற்றும் கேரளாவில் ஓணம் பண்டிகை உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் அடுத்தடுத்து வந்ததால் எலுமிச்சைக்கான தேவை அதிகரித்ததாலும் விலை உயர்ந்துள்ளது. கடும் வெயில், பலத்த காற்று வீசுவதும் மற்றொரு காரணமாகும். இனிவரும் நாட்களில் மேலும் விலை உயர வாய்ப்புள்ளது. </p><h2>மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை</h2><p>விலை வீழ்ச்சி மற்றும் விலை ஏற்றம் போன்ற பிரச்சினைகளில் இருந்து விவசாயிகளை பாதுகாக்கும் வகையில், எலுமிச்சை பழங்களை மூலதனமாக கொண்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை இப்பகுதியில் அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். </p><p>இவ்வாறு அவர்கள் கூறினர். </p>]]></content:encoded></item><item><title>வீடு புகுந்து புதுமாப்பிள்ளையை அரிவாளால் வெட்டியது ஏன்? - கைதான வாலிபர்கள் பரபரப்பு வாக்குமூலம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-did-they-break-into-the-house-and-hack-the-newlywed-groom-with-a-sickle-arrested-youths-give-sensational-confession</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-did-they-break-into-the-house-and-hack-the-newlywed-groom-with-a-sickle-arrested-youths-give-sensational-confession#comments</comments><guid isPermaLink="false">3bc15d30-7221-45f0-8623-afd7f7af0ebe</guid><pubDate>Sun, 06 Sep 2026 08:03:01 +0000</pubDate><atom:updated>2026-09-06T08:03:01.942Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,Thoothukudi,தூத்துக்குடி,கிரைம் செய்திகள்,Ettayapuram,எட்டயபுரம்,புதுமாப்பிள்ளை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/rr66366y/gure.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/rr66366y/gure.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>எட்டயபுரம், </p><p>வீடு புகுந்து புது மாப்பிள்ளையை அரிவாளால் வெட்டியது ஏன்? என்பது குறித்து கைதான வாலிபர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.</p><h2>அரிவாள் வெட்டு</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம் எட்டயபுரம் தெப்பக்குளம் வடக்கு ரத வீதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் முத்து கணேசன் (வயது 29). இவர் தனியார் சோலார் நிறுவனத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.</p><p>கடந்த 2-ந்தேதி மதியம் முத்து கணேசன் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்து வந்த 2 மர்மநபர்கள் திடீரென்று முத்து கணேசனை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதனைப் பார்த்த மனைவி கதறி அழுதார்.</p><h2>தீவிர சிகிச்சை</h2><p>படுகாயமடைந்த முத்து கணேசனுக்கு எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவரை நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். </p><p>பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குற்றவாளிகளை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் முருகன் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.</p><h2>பரபரப்பு வாக்குமூலம்</h2><p>இதில், அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் மகன் விஷ்வா (23), அவருடைய சித்தப்பா மகன் கருப்பசாமி (20) ஆகிய 2 பேரும் சேர்ந்து, வீடுபுகுந்து முத்து கணேசனை அரிவாளால் வெட்டியது தெரிய வந்தது. </p><p>மதுரையில் பதுங்கியிருந்த அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேரும் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர். அதில், முத்து கணேசனின் தம்பி மாரிசெல்வம் ஒரு சிறுமியுடன் சேர்ந்து இருந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின்பேரில், மாரிசெல்வத்தை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சிறுமியை மாரிசெல்வம் அவமானப்படுத்திய ஆத்திரத்தில் அவரது அண்ணன் முத்து கணேசனை அரிவாளால் வெட்டியதாக தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>குளறுபடியின்றி சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் - மு.க. ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/caste-wise-population-census-should-be-conducted-without-any-irregularities-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/caste-wise-population-census-should-be-conducted-without-any-irregularities-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">1ff88d16-2407-4c95-8beb-c5456801f6cc</guid><pubDate>Sun, 06 Sep 2026 07:33:55 +0000</pubDate><atom:updated>2026-09-06T07:33:55.008Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு,மு.க. ஸ்டாலின்,caste-wise census,M.K. Stalin</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/ucv5ntnt/stalin.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.க. ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/ucv5ntnt/stalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என திமுக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/mkstalin">மு.க. ஸ்டாலின்</a> தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>ஓபிசி மக்களின் உரிமையைக் காப்பாற்றச் சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்ற வேண்டும். தற்போது எடுக்கப்பட்டு வரும்  கணக்கெடுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தோரைக் கணக்கிட ‘open-ended format to record caste details without a pre-determined drop-down list or standardized menu’ முறையை மத்திய அரசு பயன்படுத்தும் என்று வெளியாகியுள்ள அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது. ஓபிசி பட்டியலில் இடம்பெற்றுள்ளவை வகுப்புகள்தானே தவிர, அவை சாதிகள் அல்ல என்று மத்திய அரசு தரப்பில் தரப்பட்டுள்ள விளக்கம் ஏற்புடையது அல்ல!</p><p>மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இடம்பெற்றுள்ள சாதிகளின் பட்டியலைப் பெற்று, தொகுத்து, பதிவேற்றி, அதில் இடம்பெற்றுள்ள சாதிகளில் ஒன்றைத் தெரிவு செய்யும் வாய்ப்பை மக்களுக்கு வழங்கும் வழிமுறையே குழப்பங்களுக்கு இடம் தராது. மாறாக, பொதுமக்கள் கூறும் சாதியின் பெயரைப் பதிவேற்றுவது குழப்பங்களுக்கே வழிவகுக்கும்.</p><h2>ஓபிசி பட்டியல்</h2><p>இதனால் இந்தியாவில் 46 லட்சம் சாதிகள் இருப்பதாகக் குளறுபடியான கணக்கு வரும் என்ற ஆபத்தைச் சமூகநீதியில் அக்கறை கொண்ட பலரும் சுட்டிக்காட்டுவதை அரசு புறந்தள்ளிவிடக் கூடாது. சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் நோக்கமே பட்டியலினச் சமூக மக்களின் எண்ணிக்கையைப் போல, ஓபிசி மக்களின் உண்மையான எண்ணிக்கையையும் அவர்களது கல்வி, சமுதாய, பொருளாதார நிலைமையையும் அறிந்துகொள்வதுதான். அப்போதுதான் அவர்கள் அதிகாரம் பெறுவதற்கான இடஒதுக்கீட்டுக் கொள்கைகளை வகுக்கவும், அவர்தம் முன்னேற்றத்துக்குத் தேவையான திட்டங்களைத் தீட்டவும் அரசுகளால் இயலும். அப்படி இருக்கையில், மத்திய, மாநில அரசுகளின் ஓபிசி சாதிகளின் பட்டியலை வைத்து, அதிலிருந்து மக்கள் சாதிப்பெயரைத் தேர்வு செய்யும் முறையைப் பின்பற்றினால்தான் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படுவதன் நோக்கம் நிறைவேறும்.</p><h2>திருத்த நடவடிக்கை</h2><p>தற்போதைய முறையைத் தொடர்ந்தால், மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்காகச் செலவிடப்படும் சுமார் ரூ.12 ஆயிரம் கோடியும், லட்சக்கணக்கான அரசு ஊழியர்களின் உழைப்பும் வீணடிக்கப்படும். இதனால் எந்தப் பயனும் இல்லை. இது வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாக அமைந்துவிடும் ஆபத்தைப் புறந்தள்ளக் கூடாது. பொருத்தமற்ற விளக்கங்களைக் கூறி, ஒரு தவறை நியாயப்படுத்தாமல், குளறுபடிகளுக்கு இடம் தராமல், சாதிவாரிக் கணக்கெடுப்பின் உண்மையான நோக்கம் நிறைவேறுவதற்கான திருத்த நடவடிக்கைகளை உடனடியாக மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்.</p><h2>சிறப்புத் தீர்மானம்</h2><p>கோடானுகோடி பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமையை உறுதிசெய்து, நீதி வழங்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன். தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே இதற்கான சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றி, உரிய அழுத்தத்தை மத்திய அரசுக்கு வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>தென்காசி: காட்டுப்பன்றி குறுக்கே பாய்ந்ததால் ஆட்டோ கவிழ்ந்து வாலிபர் பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tenkasi-a-young-man-died-after-his-auto-overturned-after-a-wild-boar-ran-across-him</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tenkasi-a-young-man-died-after-his-auto-overturned-after-a-wild-boar-ran-across-him#comments</comments><guid isPermaLink="false">6ccf5ff2-e789-4019-a655-b0ce1233d0e9</guid><pubDate>Sun, 06 Sep 2026 07:20:30 +0000</pubDate><atom:updated>2026-09-06T07:20:30.077Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,தென்காசி,வாலிபர் பலி,wild boar,youth killed,ஆட்டோ கவிழ்ந்து விபத்து,Auto overturned,காட்டுப்பன்றி,குறுக்கே வந்தது,came across</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/c8ixkck0/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விபத்தில் பலியான ராஜகுரு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/c8ixkck0/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF">தென்காசி</a> மாவட்டம், இலத்தூர் பகுதியில் கார், வேன் மோதி தீப்பிடித்து விபத்து ஏற்பட்டதால், அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோ <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88">மாற்றுப்பாதையில்</a> சென்றபோது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF">காட்டுப்பன்றி</a> குறுக்கே பாய்ந்ததால் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">ஆட்டோ கவிழ்ந்த விபத்தில்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF">வாலிபர் உடல் நசுங்கி பலி</a>யானார்.</p><h2>குற்றாலத்துக்கு சென்றவர்கள்</h2><p>தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள ஆவுடையாள்புரத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் ராஜகுரு (வயது 26). இவருக்கு திருமணமாகி துரைச்செல்வி என்ற மனைவி உள்ளார். ராஜகுரு நேற்று முன்தினம் கடையநல்லூர் அருகே மங்களாபுரத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்றார். பின்னர் தனது மனைவி துரைச்செல்வி, மாமியார் உள்பட சிலருடன் குற்றாலத்திற்கு குளிக்க சென்றார். அங்கு குளித்துவிட்டு அனைவரும் ஒரு ஆட்டோவில் நேற்று அதிகாலையில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். </p><h2>கார், வேன் மோதி தீப்பிடித்து விபத்து; மாற்றுப்பாதையில் சென்ற வாகனங்கள்</h2><p>இலத்தூர் விலக்கு பகுதியில் ஆட்டோ வந்தபோது அங்கு ஏற்கனவே கார், வேன் மோதி தீப்பிடித்து விபத்து ஏற்பட்டதால் மாற்றுப்பாதையில் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். எனவே ராஜகுரு பயணித்த ஆட்டோ டிரைவரும், ஆய்க்குடி வழியாக திரும்பி சென்று கொண்டிருந்தார். </p><h2>காட்டுப்பன்றி குறுக்கே பாய்ந்ததால் ஆட்டோ கவிழ்ந்து வாலிபர் பலி</h2><p>ஆய்குடி தனியார் கல்லூரி அருகே சென்றபோது திடீரென காட்டுப்பன்றி ஒன்று ஆட்டோவின் குறுக்கே பாய்ந்தது. இதனால் ஆட்டோ கவிழ்ந்தது. அப்போது ஆட்டோவின் முன்பகுதியில் அமர்ந்திருந்த ராஜகுரு மீது ஆட்டோ விழுந்ததில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டிரைவர் மற்றும் ராஜகுருவின் குடும்பத்தினர் காயமின்றி தப்பினர். இதுகுறித்து தகவலறிந்ததும் இலத்தூர் போலீசார் விரைந்து வந்து ராஜகுருவின் உடலை கைப்பற்றி தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். </p>]]></content:encoded></item><item><title>&quot;மதிப்பூதிய உயர்வு முதல் டாஸ்மாக் கட்டுப்பாடு வரை...&quot; - முதல்-அமைச்சர் விஜய்க்கு கமல்ஹாசன் கடிதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/from-honorarium-hikes-to-tasmac-regulation-kamal-haasan-writes-to-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/from-honorarium-hikes-to-tasmac-regulation-kamal-haasan-writes-to-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">9ecd21b8-8319-46fd-b45a-4c7cb8178ad2</guid><pubDate>Sun, 06 Sep 2026 07:07:25 +0000</pubDate><atom:updated>2026-09-06T07:07:25.820Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,Tamilnadu,தமிழ்நாடு,விஜய்,தமிழக அரசு,TN govt,டாஸ்மாக்,Tasmac,Kamal Haasan,மக்கள் நீதி மய்யம்,MNM,கமல் ஹாசன்,grama saba meeting,கிராம சபை,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/57co561g/kannam.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/57co561g/kannam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஒரு கிராமத்தில் புதிய டாஸ்மாக் கடையைத் திறப்பதற்கு முன்பாக கிராம சபையின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார். </p><p>இதுதொடர்பாக <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a>க்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>மாண்புமிகு முதல்-அமைச்சர் அவர்களே,</p><p>தமிழ்நாடு தங்கள் தலைமையின் மீது நம்பிக்கை வைத்து, மாநிலத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லும் பொறுப்பைத் தங்களிடம் ஒப்படைத்துள்ளது. அரசின் சேவைகளை மக்களிடம் நெருக்கமாகக் கொண்டு சேர்க்கும் ஜனநாயக மற்றும் நிர்வாக அமைப்புகளை மேலும் வலுப்படுத்தவும் ஆழப்படுத்தவும் தங்கள் தலைமையின் கீழ் ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது.</p><p>தமிழ்நாடு முழுவதும் அடுத்த கிராம சபைக் கூட்டங்கள் 2 அக்டோபர் 2026 அன்று நடைபெறவுள்ள நிலையில், கிராம சபையை அடித்தள ஜனநாயகத்தின் மிகவும் அர்த்தமுள்ள மற்றும் பயனுள்ள அமைப்பாக மாற்றுவதற்கான சில ஆலோசனைகளைத் தங்கள் மேலான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.</p><p>அரசியலமைப்பின் 243A பிரிவின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட கிராம சபையானது, பங்கேற்பு ஜனநாயகத்தின் மிக நேரடியான வெளிப்பாடாகும். இங்குதான் குடிமக்கள் ஒன்றுகூடி, தங்கள் குறைகளை வெளிப்படுத்தவும், தங்கள் சமூகத்தைப் பாதிக்கும் விவகாரங்கள் குறித்து விவாதிக்கவும், உள்ளாட்சி நிர்வாகத்தில் நேரடியாகப் பங்கேற்கவும் முடிகிறது.</p><p>பஞ்சாயத்து ராஜ் கட்டமைப்பின் கீழ் கிராம சபைகள் செயல்படுவதில் தமிழ்நாடு மூன்று தசாப்த கால அனுபவத்தைக் கொண்டுள்ளது. இக்காலகட்டத்தில், அடித்தள ஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்தத் தொடர்ந்து வந்த அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. அந்த அடித்தளத்தின் மீது மேலும் கட்டமைத்து, கிராம சபையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லவும், அதை அதிக பங்கேற்புத்தன்மை கொண்டதாகவும், மக்களின் தேவைகளுக்கு விரைந்து பதிலளிப்பதாகவும், ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் மாற்றியமைக்கத் தங்கள் தலைமையின் கீழ் இப்போது ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதாக நான் நம்புகிறேன்.</p> <p>இது தொடர்பாக, பின்வரும் ஆலோசனைகளை நான் முன்வைக்கிறேன்:</p><h2>1. பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கான மதிப்பூதியத்தை கணிசமாக உயர்த்துதல்.</h2><p>கிராம பஞ்சாயத்துத் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் மக்களுடன் மிக நெருக்கமாக இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆவர்; மேலும் அவர்கள் குறிப்பிடத்தக்க பொறுப்புகளை வகிக்கின்றனர்.</p><p>தற்போது வழங்கப்படும் மதிப்பூதியம் முற்றிலும் போதுமானதாக இல்லை. உதாரணமாக, கிராம ஊராட்சித் தலைவர்களின் மாத மதிப்பூதியம் 2021-ஆம் ஆண்டில் ரூ.1,000-லிருந்து ரூ.2,000-ஆக மாற்றியமைக்கப்பட்டது.</p><p>எனவே, அரசு இந்த மதிப்பூதியத்தை கணிசமாக உயர்த்தி பின்வருமாறு நிர்ணயிக்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்:</p><p>கிராம ஊராட்சித் தலைவர் - மாதம் ரூ.16,000</p><p>கிராம ஊராட்சித் துணைத் தலைவர் - மாதம் ரூ.10,000</p><p>கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் - மாதம் ரூ.8,000</p><p>இந்த உயர்வு, உள்ளாட்சி நிர்வாகத்தில் உள்ள நேரம், பொறுப்பு மற்றும் பொதுச் சேவை ஆகியவற்றை அங்கீகரிப்பதாக அமைய வேண்டும்.</p> <h2>2. உள்ளூர் டாஸ்மாக் (TASMAC) கடைகள் குறித்து கிராம சபைக்குத் தீர்க்கமான அதிகாரத்தை அளித்தல்</h2><p>கிராமங்களில் உள்ள மதுபானக் கடைகள் தொடர்பான முடிவுகளில் உள்ளூர் மக்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.</p><p>முறையாகக் கூட்டப்பட்ட கிராம சபை, ஏற்கனவே செயல்படும் டாஸ்மாக் கடைக்கு எதிராகத் தெளிவான மற்றும் உறுதியான எதிர்ப்பைத் தெரிவிக்கும் பட்சத்தில், அத்தீர்மானத்தின் மூலம் அந்தக் கடையின் செயல்பாட்டைத் தடுப்பதற்கான (veto) நடைமுறையை அரசு உருவாக்க வேண்டும்; இதற்கான தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளும் நடைமுறைகளும் பின்பற்றப்பட வேண்டும்.</p><p>அதேபோல, ஒரு கிராமத்தில் புதிய டாஸ்மாக் கடையைத் திறப்பதற்கு முன்பாக கிராம சபையின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.</p><p>வருவாய் குறித்த காரணங்கள், சமூக அக்கறைகள் மற்றும் உள்ளூர் மக்களின் கூட்டுக்குரல் ஆகியவற்றை முழுமையாக மீறுவதாக இருக்கக்கூடாது.</p><h2>3. விழிப்புணர்வையும் பங்கேற்பையும் அதிகரித்தல்; முன்மாதிரி கிராம சபைகளை முன்னிலைப்படுத்துதல்</h2><p>கிராம சபையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும், பொதுமக்களின் பங்கேற்பை அதிகரிக்கவும் அரசு தொடர்ச்சியான விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும்.</p><p>ஒரு முன்னோடி முயற்சியாக, தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் சிறந்த கிராம சபைக் கூட்டங்களை, முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் நேரலையாக ஒளிபரப்பலாம். துடிப்பான மற்றும் மக்கள் பங்கேற்பு மிக்க கிராம சபை எவ்வாறு செயல்பட முடியும் என்பதை இது எடுத்துக்காட்டுவதுடன், மாநிலம் முழுவதும் மக்கள் பங்கேற்பை அதிகரிக்கவும் உதவும்.</p><p>மேலும், கிராம சபைக் கூட்டங்களுக்கு முன்னதாகவே செய்தித்தாள்கள், தொலைக்காட்சி மற்றும் பிற பொருத்தமான ஊடகங்கள் வாயிலாக விழிப்புணர்வுச் செய்திகளை வெளியிடுவதையும் அரசு பரிசீலிக்கலாம்.</p><h2>4. கிராம சபைத் தீர்மானங்களைச் திறம்படச் செயல்படுத்துவதை உறுதி செய்தல்</h2><p>கிராம சபையின் நம்பகத்தன்மை என்பது கூட்டத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதிலேயே தங்கியுள்ளது. கிராம சபைத் தீர்மானங்கள் மீது காலக்கெடுவுடன் கூடிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்; அத்தீர்மானங்களின் செயல்பாட்டு நிலை குறித்த விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும். முந்தைய தீர்மானங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை, அடுத்தடுத்த கிராம சபைக் கூட்டங்களின் முக்கிய அங்கமாக அமைய வேண்டும்.</p><p>தங்கள் தீர்மானங்கள் நடைமுறை நடவடிக்கைகளாக மாறுவதைக் காணும்போது, ​​இம்முறையின் மீதான மக்களின் பங்கேற்பும் நம்பிக்கையும் இயல்பாகவே அதிகரிக்கும்.</p><h2>5. கிராம சபை நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிப்பதில் குடிமக்களுக்கு அதிகப் பங்களிப்பை அளித்தல்</h2><p>கிராம சபையைக் கூட்டுவதற்கு குறைந்தது ஏழு நாட்களுக்கு முன்னதாகவே நிகழ்ச்சி நிரலுடன் கூடிய பொது அறிவிப்பை வெளியிட வேண்டும் என்ற தற்போதைய அரசு விதிமுறை கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும். </p><p>மேலும், கிராம சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்களை முன்மொழிய குடிமக்களுக்குத் தெளிவான மற்றும் எளிமையான வழிமுறை இருக்க வேண்டும். நியாயமான நடைமுறை விதிமுறைகளுக்கு உட்பட்டு, குடிமக்கள் முன்மொழிந்த இத்தகைய விஷயங்கள் கிராம சபையில் விவாதத்திற்காக வைக்கப்பட வேண்டும்.</p><p>டெங்கு தடுப்பு, பேரிடர் தயார்நிலை, நீர் பாதுகாப்பு அல்லது பிற பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை மாநிலம் தழுவிய அளவில் அனைத்து கிராம சபைகளிலும் விவாதிக்க அரசு முன்வைக்கலாம்; ஆனால், உள்ளூர் சமூகத்தினர் எழுப்பும் விஷயங்களுக்கு மாற்றாக இவை அமையாமல், அவற்றுக்குத் துணையாகவே இவை இருக்க வேண்டும்.</p><h2>6. உள்ளாட்சி நிர்வாகம் சார்ந்த திறன் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சியை வலுப்படுத்துதல்</h2><p>தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிப்பதற்கான நிறுவனக் கட்டமைப்பு, 'மாநில ஊரக வளர்ச்சி நிறுவனம்' (SIRD) மூலம் தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ளது.</p><p>இருப்பினும், உள்ளாட்சி நிர்வாகம் சார்ந்த திறன் மேம்பாடு, பயிற்சி, ஆவணப்படுத்துதல் மற்றும் ஆராய்ச்சி ஆகிய அமைப்புகளை நாம் கணிசமாக வலுப்படுத்த வேண்டியுள்ளது.</p><p>உள்ளாட்சி நிர்வாகம் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்காக வலுவானதொரு நிறுவனத்தை அரசு உருவாக்க வேண்டும். இந்நிறுவனம் அதிக தன்னாட்சி அதிகாரம் மற்றும் விரிவான செயல்பாட்டுத் திட்டங்களைக் கொண்டிருக்க வேண்டும்; அத்துடன் கிராம சபையின் செயல்பாடு, பங்கேற்பு நிர்வாகம், பரவலாக்கப்பட்ட திட்டமிடல் மற்றும் புதுமையான பஞ்சாயத்து நடைமுறைகள் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.</p><h2>7. கிராம மேம்பாட்டில் பங்கேற்பு சார்ந்த திட்டமிடலை நோக்கி நகர்தல்</h2><p>கிராமங்கள் தங்கள் சொந்த மேம்பாட்டுத் தேவைகளைத் தாங்களே கண்டறிந்து முன்னுரிமைப்படுத்தும் ஒரு களமாக 'கிராம சபை' படிப்படியாக மாற வேண்டும்.</p><p>அரசாங்கத்தால் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட திட்டங்களைப் பற்றி குடிமக்களுக்குத் தெரிவிப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல், நீர், சுகாதாரம், சாலைகள், வாழ்வாதாரம், கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பான தங்கள் முன்னுரிமைகளை வெளிப்படுத்தவும், தங்கள் கிராம ஊராட்சி மேம்பாட்டுத் திட்டத்தை (VPDP) வடிவமைப்பதில் அர்த்தமுள்ள வகையில் பங்கேற்கவும் இச்செயல்முறை சமூகங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.</p><h2>8. அடித்தள நிலையில் பொறுப்புக்கூறும் கலாச்சாரத்தை உருவாக்குதல்</h2><p>இறுதியில், பொது நிறுவனங்களை குடிமக்கள் எவ்வளவு திறம்படப் பொறுப்புக்கூற வைக்கிறார்கள் என்பதைக் கொண்டே ஒரு ஜனநாயகத்தின் வலிமை அளவிடப்படுகிறது.</p><p>எனவே, கிராம சபையானது வெறும் சட்டப்பூர்வமான கூட்டமாக மட்டும் இல்லாமல், குடிமக்கள் கேள்வி கேட்கவும், விவாதிக்கவும், முன்னுரிமைப்படுத்தவும் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தைப் பொறுப்புக்கூற வைக்கவும் கூடிய ஒரு உண்மையான தளமாக உருவெடுக்க வேண்டும்.</p><p>வரவிருக்கும் 2 அக்டோபர் 2026 கிராம சபைக் கூட்டங்கள், இச்செயல்முறையை வலுப்படுத்தவும், அடித்தள ஜனநாயகத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லவும் ஒரு வாய்ப்பை வழங்குகின்றன.</p><p>தாங்கள் இக்குறிப்புகளைப் பரிசீலித்து, தங்கள் தலைமையின் கீழ் தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராம சபைகளை வலுப்படுத்துவதற்கான ஒரு விரிவான முயற்சியைத் தொடங்குவீர்கள் என்று நம்புகிறேன்; இதன் மூலம் அவை அதிக பங்கேற்புத்தன்மை, தன்னாட்சி, அனைவரையும் உள்ளடக்கிய தன்மை மற்றும் பயன்-சார்ந்த செயல்பாடுகளைக் கொண்டவையாக அமையும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>பூண்டு விலை கிடுகிடு உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/garlic-prices-have-skyrocketed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/garlic-prices-have-skyrocketed#comments</comments><guid isPermaLink="false">ef538904-6f19-4447-ab7c-2b85c16c6f0d</guid><pubDate>Sun, 06 Sep 2026 06:59:31 +0000</pubDate><atom:updated>2026-09-06T06:59:31.657Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>விழுப்புரம்,Villupuram,பூண்டு விலை,Garlic</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/dl8zmffj/14.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/dl8zmffj/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விழுப்புரம்,</p><h2>பூண்டு விலை உயர்வு</h2><p>எல்நினோ காலநிலை மாற்றத்தினால் மளிகைப் பொருட்களின் விலை உயரத்தொடங்கி இருக் கிறது. ஏற்கனவே மளிகை பொருட்களில் பருப்பு வகைகளின் விலை உயர்ந்து உள்ளது. அதன் தொடர்ச்சியாக மளிகை பொருட்களில் வரும் பூண்டு விலையும் தற்போது கிடுகிடுவென உயர்ந்து இருக்கிறது.</p><p>மராட்டிய மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு பூண்டின் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. அதிலும் நாளொன்றுக்கு விழுப்புரம் மார்க்கெட் டுக்கு மட்டும் சுமார் 10 டன் முதல் 15 டன் வரை பூண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில வாரமாக பூண்டு வரத்து குறைந்து விட்டதாகவும், தற்போது நாள் ஒன்றுக்கு 5 டன் பூண்டு வரத்து வருவதாகவும், இதன் காரணமாக விலை அதிரடியாக உயர்ந்து இருப்பதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.</p><h2>ரூ.300 வரை விற்பனை</h2><p>கடந்த மாதத்தில் ஒரு கிலோ பூண்டு ரூ.80 முதல் ரூ.100 வரை கிடைத் தது. நல்ல தரமான உயர்ரக பூண்டு ஒரு கிலோ ரூ.120 முதல் ரூ.140-க்கு கிடைத்து வந்தது. ஆனால் தற்போது அது தலைகீழாக மாறிவிட்டது. ஒரு கிலோ பூண்டு ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p><p>அதாவது நாட்டுப்பூண்டு சிறிய ரகம் கிலோ ரூ.150 முதல் ரூ.160 வரை யும், நடுத்தரம் கிலோ ரூ.180 முதல் ரூ.220 வரையும், பெரிய அளவிலான நல்ல தரமான உயர்ரக பூண்டு கிலோ ரூ.280 முதல் ரூ.300 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல் ஒரு கிலோ மலைப்பூண்டு கடந்த மாதம் ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.350-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><h2>இல்லத்தரசிகள் அதிர்ச்சி</h2><p>விளைச்சல் பாதிப்பு ஒரு பக்கம் கூறப்பட்டாலும், மராட்டிய மாநிலத்தில் இருந்து உக்ரைன் நாட்டுக்கு பூண்டு ஏற்றுமதி செய்யப்படுவதும் வரத்து குறைவுக்கு ஒரு காரணம் என்றும், இனி வரும் நாட்களில் மேலும் பூண்டு விலை சற்று உயரக்கூடும் என்று உணவு தானிய மொத்த சந்தை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். பூண்டு விலை உயர்வினால் இல்லத்தரசிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>“விஞ்ஞானிகளை பகடைக்காயாக்கும் பாஜக” – மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு   </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bjp-is-making-scientists-look-like-dice-manickam-thakur-alleges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bjp-is-making-scientists-look-like-dice-manickam-thakur-alleges#comments</comments><guid isPermaLink="false">6672eb7c-5e7a-4ba5-96e3-7076dd89cd8d</guid><pubDate>Sun, 06 Sep 2026 06:53:48 +0000</pubDate><atom:updated>2026-09-06T06:53:48.473Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Scientists,விஞ்ஞானிகள்,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Thakur MP</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/t4s1215m/manikam-takore.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/t4s1215m/manikam-takore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>“விஞ்ஞானிகளை பாஜக பகடைக்காயாக்குகிறது” என  <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">மாணிக்கம் தாகூர் </a>எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-   </p><p>விண்வெளி சாதனைகளின் பின்னணியில் உள்ள சொல்லொணா வலியை மறந்துவிட முடியுமா? ஒருபுறம் வானத்தை முட்டும் ராக்கெட்டுகள், நிலவையும் சூரியனையும் எட்டும் பெருமிதம், விரைவில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் பிரம்மாண்டத் திட்டங்கள்... ஆனால், தேசமே கொண்டாடும் இந்த வெற்றிகளின் மறுபக்கம் என்ன? ​இரவு பகல் பாராமல் குடும்பங்களை மறந்து உழைத்த நமது விஞ்ஞானிகளின் தியாகம், தோல்விகளைக் கடந்து சிந்திய கண்ணீர், அவர்களின் கடுமையான பணிச்சுமை மற்றும் மன அழுத்தம்.</p><h2>அவல நிலை</h2><p>இதைவிடப் பெருங்கொடுமை என்னவென்றால் - ஒருபுறம் உலகமே வியக்கும் ராக்கெட்டுகளை விண்ணுக்கு அனுப்பும் அதே கைகள், மறுபுறம் தங்கள் வேலைப் பாதுகாப்புக்காகவும், முறையான ஊதியத்திற்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் அதிகார வர்க்கத்திடம் கோரிக்கை மனுக்களையும் கண்ணீர்க் கடிதங்களையும் அனுப்ப வேண்டிய அவல நிலை நிலவுகிறது!நினைவிருக்கட்டும்! 1969 ஆகஸ்ட் 15 அன்று, தொலைநோக்குப் பார்வையோடு பண்டித நேருவும், அன்னை இந்திரா காந்தியும், விக்ரம் சாராபாய் போன்ற மேதைகளும் இணைந்து, பொதுத்துறையின் வலிமையான அரணாக இஸ்ரோவுக்கு (ISRO) அடித்தளமிட்டது காங்கிரஸ் பேரியக்கம்.</p><h2>சிதைக்கத் துடிக்கிறது பாஜக அரசு</h2><p>கிட்டத்தட்ட 60 ஆண்டு காலம் தன்னிறைவுக்காகக் கட்டியெழுப்பப்பட்ட நமது விஞ்ஞானிகளின் மாபெரும் உழைப்பையும் லட்சியத்தையும், இன்று கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தாரைவார்த்து, ஊழியர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி சிதைக்கத் துடிக்கிறது பாஜக அரசு! விஞ்ஞானிகள் சாதனை படைக்கும்போது மட்டும் ஓடிவந்து கேமரா வெளிச்சத்தில் நின்று போட்டோஷூட் நடத்தும் பிரதமர் மோடி, அதே விஞ்ஞானிகள் தங்கள் பணிக்காகவும் உரிமைக்காகவும் கடிதம் எழுதித் தவிக்கும்போது கண்களை மூடிக்கொள்வது ஏன்? </p><p>சாதனைக்கு சொந்தம் கொண்டாடும் மோடி அரசுக்கு, அந்த சாதனையை நிகழ்த்தும் உழைக்கும் கைகளின் வலி ஏன் புரிவதில்லை? விளம்பர அரசியலுக்காக விஞ்ஞானிகளைப் பகடைக் காயாக்கும் பாஜகவின் துரோகத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இஸ்ரோ என்பது இந்தியாவின் அடையாளம். அதைத் தனியாருக்குத் தாரைவார்த்து அழிக்க விடமாட்டோம். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கரூர் மாவட்ட எல்லையை வந்தடைந்த அமராவதி தண்ணீர்: விவசாயிகள் மகிழ்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/amaravathi-water-reaches-karur-district-border-farmers-rejoice</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/amaravathi-water-reaches-karur-district-border-farmers-rejoice#comments</comments><guid isPermaLink="false">4dd53898-92ce-4537-a821-1add20c51f09</guid><pubDate>Sun, 06 Sep 2026 06:53:26 +0000</pubDate><atom:updated>2026-09-06T06:53:26.103Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Farmers,விவசாயிகள்,அமராவதி அணை,amaravathi dam</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/rj74n3h7/13.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/rj74n3h7/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கரூர், </p><p>அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கரூர் மாவட்ட எல்லையை வந்தடைந்தது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.</p><h2>அமராவதி அணை</h2><p>திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் 90 அடியாகும். இந்த அணையின் தண்ணீர் திருப்பூர், கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. மேலும் 54 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இதன் மூலம் மஞ்சள் தென்னை, நெல், வாழை, கரும்பு, பருத்தி, சேனைக்கிழங்கு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.</p><p>அமராவதி அணையில் இருந்து கடந்த 5 மாதங்களுக்கு மேலாக தண்ணீர் திறக்கப்படாததால் கரூர் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வந்தது. மேலும் தென்னை மரங்கள் காய்ந்து வந்தன. இந்தநிலையில் தமிழக அரசு கடந்த 31-ந் தேதி அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் வீதம் 8 நாட்களுக்கு திறந்து விட உத்தரவு பிறப்பித்தது.</p><h2>விவசாயிகள் மகிழ்ச்சி</h2><p>அதன்படி அமராவதி அணையில் இருந்து 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் இந்த தண்ணீர் கரூர் மாவட்ட எல்லைக்கு வந்து சேராது. எனவே உயர் நீதிமன்ற ஆணைப்படி 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டுமென பொதுமக்களும், விவசாயிகளும், தி.மு.க.. அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் இணைந்து கடந்த 1-ந் தேதி சின்னதா ராபுரம் அருகே உள்ள கரூர் மாவட்ட எல்லையான ஒத்தமாந்துறையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து கரூர் மாவட்ட கடைமடை பகுதி வரை தண்ணீர் வரும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.</p><p>இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை கரூர் மாவட்ட எல்லையான கோடந்தூர் ஊராட்சி வடகரை பகுதிக்கு அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் வந்து சேர்ந்தது. இதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், விவசாயிகள் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் நேற்று மாலை 6 மணிக்கு சின்னதாராபுரம் அருகே சாலை மறியல் நடந்த ஒத்தமாந்துறை எனும் இடத்திற்கு தண்ணீர் வந்து சேர்ந்தது. இதேயளவு தண்ணீர் வந்தால் நாளை (திங்கட்கிழமை) இரவு கரூர் நகருக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>நீர்மட்டம்</h2><p>90 அடி கொண்ட அமராவதி அணையில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி 48.76 கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 93 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு 2 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையில் தற்போது ஆயிரத்து 114 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 87.90 அடி தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் தவெக நிர்வாகி படுகொலை... 5 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/5-arrested-in-chennai-tvk-functionary-murdered-case</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/5-arrested-in-chennai-tvk-functionary-murdered-case#comments</comments><guid isPermaLink="false">c3cab239-5c6b-4614-8b6d-53159b58ee48</guid><pubDate>Sun, 06 Sep 2026 06:42:09 +0000</pubDate><atom:updated>2026-09-06T06:42:09.425Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Crime News,Chennai,சென்னை,கிரைம் செய்திகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/n5hz75em/chennai-murder.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ தவெக நிர்வாகி கொலை]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னையில் ஆளுங்கட்சியான தவெக நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/n5hz75em/chennai-murder.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை: </p><p>சென்னையில் தவெக நிர்வாகி கண்ணன் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>சென்னை பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். சமீபத்தில் தவெகவில் இணைந்த இவர், நேற்று இரவு வண்ணாந்துறை பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுபற்றி தகவல் அறிந்த சாஸ்திரி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><p>மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது. கொலை நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை அடையாளம் காணும் பணி உடனடியாக மேற்கொள்ளப்பட்டது. தீவிர விசாரணைக்குப் பிறகு 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.</p><h2>பழிக்குப் பழியா?</h2><p>அடையாறில் கடந்த 2009 <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">சிவா என்பவர் கொலை</a> செய்யப்பட்டார். இந்த கண்ணனுக்கு தொடர்பு இருக்கலாம் என கூறப்படும் நிலையில், சிவா தரப்பினர் நேற்றிரவு கண்ணனை கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>போலீசாரின் B பிரிவு சரித்திர பதிவேறு குற்றவாளிகள் பட்டியலில் இருந்தார் கண்ணன். அவர் மீது 2 <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">கொலை வழக்கு</a>, 2 கொலை முயற்சி வழக்கு என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. </p>]]></content:encoded></item><item><title>தவெகவில் இணைந்த குற்றவாளி கொலை: ’இதுதான் வெற்றி சட்டம்-ஒழுங்கு நிலை’ - உதயநிதி தாக்கு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/murder-of-a-criminal-who-joined-tvk-this-is-the-state-of-law-and-order-udhayanidhi-lashes-out</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/murder-of-a-criminal-who-joined-tvk-this-is-the-state-of-law-and-order-udhayanidhi-lashes-out#comments</comments><guid isPermaLink="false">406992aa-4b67-4624-9080-442e8eef1418</guid><pubDate>Sun, 06 Sep 2026 06:27:58 +0000</pubDate><atom:updated>2026-09-06T06:27:58.595Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/bjw8gf7x/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/bjw8gf7x/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”நாளை மாண்புமிகு முதலமைச்சர் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் மீது பதிலுரை அளிப்பதற்கு முன்பாக அவரது கட்சிப் பிரமுகர் ஒருவரே தலைநகரில் கொலைக்கு ஆளாகியுள்ளார்.</p><p>அதுவும், தனது உயிருக்குப் பாதுகாப்பு வேண்டி ஆளும் த.வெ.க.வில் இணைந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி சாலையில் ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இதுதான் தமிழ்நாட்டின் ‘வெற்றி சட்டம்-ஒழுங்கு’ நிலை!</p><p>தலைநகரிலேயே சாலையில், இப்படி ஒரு கொலை நடக்கும் அளவு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயிருப்பதை நினைத்து வருந்துவதா?</p><p>இல்லை, சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டியாகத் த.வெ.க. இருப்பதை நினைத்து வருந்துவதா?</p><p>இதற்கும் தி.மு.க.வை எப்படி குற்றம் சொல்லலாம் என யோசிப்பதை நிறுத்திவிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>கூடலூர்: வனத்துறையினர் கட்டுப்பாட்டில் இருந்து தப்பிய புலி - டிரோன் மூலம் தேடும் பணி தீவிரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/gudalur-tiger-escapes-forest-department-custody-intensive-search-using-drones-underway</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/gudalur-tiger-escapes-forest-department-custody-intensive-search-using-drones-underway#comments</comments><guid isPermaLink="false">b41ae28c-11c1-4c10-803a-e0d38ead815d</guid><pubDate>Sun, 06 Sep 2026 06:27:12 +0000</pubDate><atom:updated>2026-09-06T06:27:12.595Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Forest Department,வனத்துறை,Tiger,புலி,Gudalur,கூடலூர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/7oix38zp/velrain.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/7oix38zp/velrain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கூடலூர், </p><p>கூடலூர் அருகே நள்ளிரவில் வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்து புலி தப்பியது. அதை டிரோன் மூலம் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.</p><h2>2 பேரை கொன்ற புலி</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/gudalur">கூடலூர்</a> அருகே ஓவேலி லாரஸ்டன் 4-ம் நெம்பர் பகுதியில் கடந்த மாதம் 2 பேரை புலி கடித்து கொன்றது. இதைத்தொடர்ந்து 21-ந் தேதி முதல் புலியை பிடிக்கும் பணி தொடங்கியது. புலி அடர்ந்த காடுகளிலும், பாறைகளிலும் மறைந்து வாழ்வதால் அதன் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை தொழில்நுட்பங்களை பயன்படுத்தி 2 வாரங்களாக தேடி வருகின்றனர்.</p><h2>130 தானியங்கி கேமராக்கள்</h2><p>முதுமலை, கோவை, தேனி மற்றும் பல்வேறு கோட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 90-க்கும் மேற்பட்ட வனத்துறை பணியாளர்கள், வன எலைட் படையினர் மற்றும் 3 கால்நடை மருத்துவ குழுவினர் மயக்க ஊசி துப்பாக்கிகளுடன் மொத்தம் 150-க்கும் மேற்பட்டோர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>இது தவிர புலியை கண்டறிந்து பிடிக்க 3 அதிநவீன தெர்மல் டிரோன்கள் மூலம் தேடப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் குடியிருப்புகள், தேயிலை தோட்டங்கள், வனம் உள்பட பல்வேறு முக்கிய இடங்களில் 130 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 13 இரும்பு கூண்டுகளையும் வைத்துள்ளனர்.</p><h2>வனத்துறை</h2><p>இந்த நிலையில் நேற்று முன்தினம் பகல் 2 மணி அளவில் கூடலூர் கெவிப்பாரா பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் பாறை மீது புலி ஒன்று நடமாடுவதை அப்பகுதி மக்கள் கண்டனர். தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்தனர். மேலும் புலியும் அங்கிருந்து இடம் பெயர்ந்து லாரஸ்டன் வனத்துக்குள் செல்வதை டிரோன்கள் மூலம் வனத்துறையினர் கண்காணித்தபடி சுற்றி வளைத்தனர்.</p><h2>தொடர் கண்காணிப்பு</h2><p>இந்த நிலையில் லாரஸ்டனில் இருந்த புலி வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்து தப்பி பாரம் பகுதிக்கு இடம் பெயர்ந்து சென்றதை நள்ளிரவில் வனத்துறையினர் உறுதி செய்தனர். இருப்பினும் விடிய விடிய அப்பகுதியில் முகாமிட்டு புலி வேறு இடத்துக்கு சென்று விடாமல் இருக்க வனத்துறையினர் இன்று 17-வது நாளாக தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் இதுவரை உறுதி செய்யவில்லை. இதனால் வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். </p><h2>2 கும்கி யானைகள்</h2><p>இதுகுறித்து வனத்துறையினர் தரப்பில் கூறும்போது, டிரோன்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் சுமார் 8 முதல் 10 வயது வரையிலான ஆண் புலி என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் நல்ல ஆரோக்கியமான நிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். தொடர்ந்து டிரோனில் புலியை தேடி வருகிறார்கள்.</p><p>இதனிடையே 2 கும்கி யானைகளும் புலியை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தென்காசி: வேன்-கார் தீப்பிடித்து எரிந்து வங்கி உதவி மேலாளர் பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tenkasi-bank-assistant-manager-dies-in-van-car-fire</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tenkasi-bank-assistant-manager-dies-in-van-car-fire#comments</comments><guid isPermaLink="false">a429db56-cc9a-414a-b802-fe71e483142c</guid><pubDate>Sun, 06 Sep 2026 06:11:55 +0000</pubDate><atom:updated>2026-09-06T06:11:55.399Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,Virudhunagar,Fire,விருதுநகர்,Tenkasi,தென்காசி,Car,van,கார்,வேன்,பலி,bank,dead,வங்கி உதவி மேலாளர்,தீப்பிடித்தது,assistant manager</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/vf04wn0a/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேன்-கார் தீப்பிடித்து எரிந்து வங்கி உதவி மேலாளர் பலி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/vf04wn0a/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF">தென்காசி</a> மாவட்டம் இலத்தூர் பகுதியில் வேனும் காரும் நேருக்குநேர் மோதி, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81">தீப்பிடித்து எரிந்த விபத்தில்</a> விருதுநகரைச் சேர்ந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D">வங்கி உதவி மேலாளர்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF">பலி</a>யானார்.</p><h2>வங்கி உதவி மேலாளர்</h2><p>விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் குமாரசாமி ராஜா நகரை சேர்ந்த விஜய் ஆனந்த் (வயது 34), சிவகாசியில் உள்ள கனரா வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவில் இவர் தனது காரில் குற்றாலம் சென்று விட்டு சிவகாசி நோக்கி சென்று கொண்டி ருந்தார். எதிர்திசையில் சிவகாசியில் இருந்து குற்றாலத்தை நோக்கி 13 பேர் கொண்ட குழுவினர் ஒரு வேனில் சுற்றுலாவுக்காக வந்து கொண்டிருந்தனர். </p><h2>விபத்தில் வேன்-கார் தீப்பிடித்து எரிந்தது</h2><p>நேற்று அதிகாலை இலத்தூர் விலக்கு அருகே திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது எதிர்பாராதவிதமாக விஜய் ஆனந்த் ஓட்டி வந்த காரும், சுற்றுலா வேனும் நேருக்குநேர் மோதின. அதில் 2 வாகனங்களும் அப்பளம்போல் நொறுங்கியதோடு திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கின. வேனில் இருந்த 13 பேரும் அலறியடித்துக்கொண்டு கீழே இறங்கி உயிர் தப்பினர். </p><h2>வங்கி உதவி மேலாளர் பலி</h2><p>அவர்களில் சுப்பிரமணியபுரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த காசிஅலி மகள் நர்கீஸ்பானு(18), அதே பகுதியை சேர்ந்த ரியாஸ்தீன் மனைவி பல்கீஸ்பானு(21), சைபுல்லா மனைவி ஹசீனாபானு(42) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த விஜய் ஆனந்த் காருக்கு உள்ளேயே தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். </p><p>இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தென்காசி தீயணைப்பு படையினர், மாவட்ட எஸ்.பி. அசோக்குமார், இலத்தூர் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. </p><h2>மாற்றுப்பாதையில்</h2><p>தீயணைப்பு படை வீரர்கள் 2 வாகனங்களிலும் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் அவை தீயில் கருகி நாசமாகின. விபத்து காரணமாக திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. </p><p>விபத்து குறித்து இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரும், வேனும் மோதி தீப்பிடித்த விபத்தில் வங்கி அதிகாரி உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் தண்ணீர் திறப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-released-at-kallanai-for-delta-irrigation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-released-at-kallanai-for-delta-irrigation#comments</comments><guid isPermaLink="false">ee5b5dbf-cab2-413e-9c92-adba4fe5c4f3</guid><pubDate>Sun, 06 Sep 2026 05:57:28 +0000</pubDate><atom:updated>2026-09-06T05:57:28.003Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>water release,நீர் திறப்பு,Kallanai,கல்லணை,டெல்டா பாசனம்,Delta irrigation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/n0d9itwe/105.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கல்லணை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/n0d9itwe/105.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சை,</p><p>டெல்டா மாவட்டங்களின் சம்பா சாகுபடிக்காக கல்லணையில் இருந்து இன்று காலை 11 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. </p><p>மேட்டூர் அணையை கடந்த 1-ந்தேதி தமிழக முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் திருச்சி மாவட்டம் முக்கொம்பு அணையை தாண்டி நேற்று காலை கல்லணையை எட்டியது. திறக்கப்பட்ட தண்ணீர் குறைவான அளவிலேயே வந்ததால் நேற்று மாலை வரை கல்லணை நிரம்பவில்லை. கல்லணையில் உள்ள காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆறுகளின் மதகுகளின் ஓரமாக தண்ணீர் தேங்கி நின்றது. </p><h2>தண்ணீர் திறப்பு</h2><p>இதையடுத்து தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் சம்பா சாகுபடிக்காக கல்லணையில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வேளாண்துறை அமைச்சர் வினோத் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் ஆகியோர் கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைத்துள்ளனர்.</p><h2>பாசன வசதி</h2><p>இந்த நிகழ்ச்சியில் டெல்டா மாவட்ட விவசாயிகள், மாவட்ட கலெக்டர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு மற்றும் கல்லணை கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்படுவதன் மூலம் சுமார் 16 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.</p>]]></content:encoded></item><item><title>மூக்கையாத்தேவரின் பெரும்புகழ் போற்றுவோம்: சீமான்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-celebrate-the-great-renown-of-mookkaiya-thevar-seeman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-celebrate-the-great-renown-of-mookkaiya-thevar-seeman#comments</comments><guid isPermaLink="false">f269f1fa-a6ab-4d53-a1d7-c9751c6270ae</guid><pubDate>Sun, 06 Sep 2026 05:47:10 +0000</pubDate><atom:updated>2026-09-06T05:47:10.799Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,Seeman,மூக்கையாத்தேவர்,Mookkaiya Thevar</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/t9vmhfmo/11.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/t9vmhfmo/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;</p><p>“தமிழ்நாட்டில் என் இராமநாதபுரம் தொகுதியில் உள்ள கட்சத்தீவை எங்கள் அனுமதி இல்லாமல் இலங்கைக்குத் தாரைவார்க்க நீங்கள் யார்?  பல்லாயிரம் மீனவர் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. பலநூறு மீன்பிடி படகுகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. நீங்கள் சனநாயகம் பேசிக் கொண்டு சர்வாதிகாரி போல் நடக்கிறீர்கள்" என்று இந்திராகாந்தி அரசைக் கண்டித்து இந்திய நாடாளுமன்றத்தில்  முழங்கியபோது, இடைமறித்த காங்கிரசாரை நோக்கி,  'நீங்கள் எங்களின் துரோகிகள்' என்று அன்றே அடையாளப்படுத்தி வெளிநடப்பு செய்த  உறங்காப்புலி..!</p><p>களம் கண்ட அனைத்து தேர்தல்களிலும் தொகுதி மாறாது வென்று சரித்திர சாதனை படைத்த ஒப்பற்ற தலைவர்..!</p><p>உசிலம்பட்டி, நீலித்தநல்லூர், கமுதி ஆகிய இடங்களில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரில் கல்லூரிகளை நிறுவி சாதி, மதம் பாராது ஏழை குழந்தைகளுக்கு இலவச தங்குமிடமும், உணவும், கல்வியும் தந்த வள்ளல்..!</p><p>வட இந்தியாவில் குடியேறும் அகதிகளைவிட  தமிழ்நாட்டு மக்களுக்கு குறைவான நிதி ஒதுக்குவதாக அன்றே இந்திய அரசை  கண்டித்து தமிழர் உரிமைக்கு குரல் கொடுத்த பெருந்தகை..!</p><p>இந்திய கட்சிக்குத் தலைமையேற்றபோதிலும், இந்தியைத் திணித்தால் இந்நாட்டின் ஒருமைப்பாடு உடைபடும் என்று இந்திய அரசை துணிவுடன் எச்சரித்த தீரர்..!</p><p>முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை  உயர்த்தி தென்மாவட்ட வறட்சியைப் போக்க வேண்டும்(1965), கிருஷ்ணா நதிநீரைக் கொண்டுவந்து சென்னையின் குடிநீர் தேவை தீர்க்க வேண்டும் (1969),  தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் (1975), நதிநீர் பிரச்சனைகளைத் தீர்க்க நதிகளை நாட்டுடைமையாக்க வேண்டும் (1969) என்று தமிழ்நாட்டின் தீர்க்க முடியா சிக்கல்களுக்கு தீர்க்கத்தரிசனத்தோடு தீர்வு சொன்ன தேவர் தந்த தேவர் நம்முடைய தாத்தா மூக்கையாத்தேவரின் நினைவைப்போற்றுகின்ற இந்நாளில் அவரைப்போலவே உண்மையும், நேர்மையுமாக நின்று மண்ணுக்கும், மக்களுக்கும் பாடுபடுவோம் என்று உறுதியேற்போம்!</p><p>'தேவர் தந்த தேவர்' உறங்காப்புலி தாத்தா மூக்கையாத்தேவர் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மூக்கையா தேவரின் சேவை என்றும் போற்றத்தக்கது - நயினார் நாகேந்திரன் புகழஞ்சலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-service-of-mookkaiah-thevar-is-also-commendable-nainar-nagendran-pays-tribute</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-service-of-mookkaiah-thevar-is-also-commendable-nainar-nagendran-pays-tribute#comments</comments><guid isPermaLink="false">29027d47-ab1e-40ef-8b63-e6382a491339</guid><pubDate>Sun, 06 Sep 2026 05:28:44 +0000</pubDate><atom:updated>2026-09-06T05:28:44.962Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/psc0nvf5/102.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/psc0nvf5/102.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மூக்கையா தேவரின் நினைவு நாளையொட்டி தமிழக பாஜக தலைவர் <a href="https://dailythanthi.com/topic/nainar-nagendran">நயினார் நாகேந்திரன்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>மூக்கையா தேவர் நினைவு நாள்</h2><p>அகில இந்திய பார்வர்டு பிளாக் இயக்கத்தின் முக்கியத் தலைவர், தென் தமிழக மக்களின் உரிமைகளுக்காக உறுதியான குரலாக விளங்கிய “உறங்காப்புலி” பி. கே. மூக்கையா தேவர் அவர்களின் நினைவு நாள் இன்று.</p><p>அரசியலைத் தாண்டி, கல்வியே ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கான அடித்தளம் என்பதை உணர்ந்து செயல்பட்டவர் மூக்கையா தேவர். குறிப்பாக சமூகத்தின் பின்தங்கிய மக்களிடையே உயர்கல்வி வளர வேண்டும் என்ற நோக்கில் கள்ளர் கல்விக் கழகத்தை உருவாக்கியதோடு, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரில் உசிலம்பட்டி, கமுதி, மேலநீலிதநல்லூர் ஆகிய இடங்களில் கல்லூரிகள் உருவாக முக்கியப் பங்காற்றினார்.</p><h2>உறங்காப்புலி</h2><p>இந்த நாளில் “உறங்காப்புலி” என்று போற்றப்பட்ட பி. கே. மூக்கையா தேவர் அவர்களின் பொதுவாழ்க்கை, மக்களுக்காகவும், கல்விக்காகவும், சமூக முன்னேற்றத்திற்காகவும் அவர் செய்த பணிகளை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்துவோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>காவலர் தினம்:  “அரச காவல்” ஹெல்மெட் விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-day-royal-police-helmet-awareness-short-film-released</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-day-royal-police-helmet-awareness-short-film-released#comments</comments><guid isPermaLink="false">d1a38790-3fa9-4af3-840c-e12a36ba7677</guid><pubDate>Sun, 06 Sep 2026 05:07:43 +0000</pubDate><atom:updated>2026-09-06T05:07:43.146Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,Release,கலெக்டர்,collector,DIG,வெளியீடு,short film,குறும்படம்,helmet awareness,ஹெல்மெட் விழிப்புணர்வு,திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி.,காவலர் தினம்,Police Day</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/olezdsef/%E2%80%9C%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E2%80%9D-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “அரச காவல்” ஹெல்மெட் விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/olezdsef/%E2%80%9C%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E2%80%9D-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>செப்டம்பர் 6-ம் தேதி காவலர் தினத்தை முன்னிட்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாநகரம் மேலப்பாளையத்தில் “அரச காவல்” என்ற <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">ஹெல்மெட் விழிப்புணர்வு</a> குறித்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">குறும்படம்</a> வெளியிடப்பட்டது. </p><h2>தமிழ்நாடு காவலர் தினம்</h2><p>செப்டம்பர் 6-ம் தேதி ஆண்டுதோறும் தமிழ்நாடு காவலர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த சிறப்பு தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையத்தில் உள்ள அலங்கார் திரையரங்கில் ACS நிறுவனம் தயாரித்து இயக்கிய “அரச காவல்” என்ற குறும்படம் வெளியிடப்பட்டது. </p><h2>போலீசாரின் அர்ப்பணிப்பு, அன்றாட வாழ்க்கை</h2><p>ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த சுபாஷ் சந்திரன் எழுதி, தயாரித்து, இயக்கிய இந்த குறும்படம் காவல்துறையினரின் பணிச்சுமை, அர்ப்பணிப்பு மற்றும் அன்றாட வாழ்க்கையை எடுத்துரைக்கிறது. </p><h2>திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி., கலெக்டர் பங்கேற்பு</h2><p>இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி சரக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%90%E0%AE%9C%E0%AE%BF">டி.ஐ.ஜி</a>. திருநாவுக்கரசு மற்றும் மாவட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D">கலெக்டர்</a> ஆனந்த் மோகன் ஆகியோர் குறும்படத்தை வெளியிட்டு, படக்குழுவினரைப் பாராட்டினர். தயாரிப்பாளர்-இயக்குநர் சுபாஷ் சந்திரன், ஒளிப்பதிவாளர்கள் ராஜா, மாரியப்பன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. </p>]]></content:encoded></item><item><title>தீபாவளி முன்பதிவு; தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/diwali-bookings-tickets-sold-out-within-minutes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/diwali-bookings-tickets-sold-out-within-minutes#comments</comments><guid isPermaLink="false">de0b8918-a088-4b2f-a8e3-5cada1ff9cb5</guid><pubDate>Sun, 06 Sep 2026 04:59:21 +0000</pubDate><atom:updated>2026-09-06T04:59:21.196Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Ticket Booking,Diwali,தீபாவளி,முன்பதிவு டிக்கெட்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/gvucprlt/101.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/gvucprlt/101.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன. </p><p>தீபாவளி பண்டிகை நவம்பர் 8-ந்தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிடும் வகையில், 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை ரெயில்வே வாரியம் வழங்குகிறது.</p><p>அதன்படி, தீபாவளி ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது. அதாவது, நவம்பர் 5-ந்தேதி (வியாழக்கிழமை) சொந்த ஊர்களுக்கு பயணிப்பதற்கான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81">டிக்கெட் முன்பதிவு </a>இன்று தொடங்கியது. </p><h2>விற்று தீர்ந்தன</h2><p>அதன்படி பயணிகள் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம், செல்போன் செயலி மற்றும் ரெயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்கள் மூலமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர்.  இந்நிலையில், டிக்கெட்டுகள் சில நிமிடங்களிலேயே முன்பதிவு செய்யப்பட்டு விற்றுத் தீர்ந்துள்ளன. இதில் தென்மாவட்ட ரெயில்களில் பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்று  தீர்ந்தன. இதனைத்தொடர்ந்து, அடுத்தடுத்த நாட்களில் மற்ற தேதிகளுக்கான முன்பதிவு நடைபெற உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருப்பதி திருக்குடை ஊர்வலம் வரும் 13-ந்தேதி சென்னையில் தொடக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirupati-thirukkudai-procession-to-begin-in-chennai-on-the-13th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirupati-thirukkudai-procession-to-begin-in-chennai-on-the-13th#comments</comments><guid isPermaLink="false">1f5847b6-f960-4910-af45-bf25e523a72c</guid><pubDate>Sun, 06 Sep 2026 04:34:15 +0000</pubDate><atom:updated>2026-09-06T04:34:15.036Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,திருப்பதி ஏழுமலையான் கோவில்,begins,தொடக்கம்,Tirupati Thirukkudai procession,திருக்குடை ஊர்வலம்,Tirumala Tirupati Temple</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/96zioag8/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருப்பதி திருக்குடை ஊர்வலம்-கோப்புப்படம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/96zioag8/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>இந்து தர்மார்த்த சமிதி சார்பில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF">திருமலை திருப்பதி</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D">திருக்குடை ஊர்வலம் </a>வரும் 13-ம் தேதி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a>யில் சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் காலை 10 மணிக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">தொடங்க</a> உள்ளது. </p><h2>திருப்பதி ஏழுமலையான் கோவில் புரட்டாசி மாத பிரம்மோத்சவம்</h2><p>ஆந்திர மாநிலம், திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில், புரட்டாசி மாத பிரம்மோத்சவத்தின்போது ஏழுமலையான் கருட சேவைக்கு, தமிழக பக்தர்கள் சார்பில், வெண்பட்டு திருக்குடைகள் காணிக்கையாக செலுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் இருந்து வெண்பட்டு குடைகள் காணிக்கையாக செலுத்தப்படுகிறது.</p><h2>திருப்பதி திருக்குடை ஊர்வலம் 13-ம் தேதி தொடக்கம்</h2><p>நடப்பாண்டு இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சார்பில் திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம் வரும் 13-ம் தேதி, சென்னை சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. மதியம் 12:30 மணிக்கு பைராகி மடத்தை அடைகிறது. பின் மாலை 4 மணிக்கு திருக்குடைகள் வால்டாக்ஸ் சாலை வழியாக கவுனி தாண்டுகின்றன. பின் சூளை நெடுஞ்சாலை, ஓட்டேரி மேம்பாலம் வழியாக அயனாவரம் காசி விசுவநாதர் கோவிலுக்கு செல்கிறது. </p><h2>சவுமிய தாமோதர பெருமாள் கோவில்</h2><p>மறுநாள் அதாவது செப்டம்பர் 14-ம் தேதி காலை 6 மணிக்கு திருக்குடை ஊர்வலம் தொடங்கி, பெரம்பூர், திரு.வி.க.நகர் வழியாக வில்லிவாக்கம் சென்று, சவுமிய தாமோதர பெருமாள் கோவில் அடைகிறது. செப்டம்பர் 15-ம் தேதி பாடி, முகப்பேர், அம்பத்துார் வழியாக இரவு திருமுல்லைவாயல் செல்கிறது. செப்டம்பர் 16-ம் தேதி ஆவடி இந்து கல்லுாரி, பட்டாபிராம், திருநின்றவூர் வழியாக வெங்கடேஸ்வரா திருமண மண்டபம் செல்கிறது.</p><h2>ஊர்வலத்தில் பங்கேற்க அழைப்பு</h2><p>செப்டம்பர் 17-ம் தேதி திருப்பாச்சூர், கனகம்மாள்சத்திரம் வழியாக, கீழ்த்திருப்பதி எஸ்.எம்.எஸ்.ஓ., சபா கல்யாண மண்டபம் செல்கிறது. செப்டம்பர் 18-ம் தேதி காலை 6 மணிக்கு திருப்பதி அடைந்து, மாலை 3 மணிக்கு பெருமாளுக்கு திருக்குடைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன. இந்த திருக்குடை ஊர்வலத்தில் பக்தர்கள் பங்கேற்று ஏழுமலையான் அருள் பெற இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி  அழைப்பு விடுத்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>காவல்துறையின் வீரமும் தியாகமும் என்றும் மறக்க முடியாது; முதல்-அமைச்சர் விஜய் காவலர் தின வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-bravery-and-sacrifice-of-the-police-will-never-be-forgotten-chief-minister-vijay-extends-police-day-greetings</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-bravery-and-sacrifice-of-the-police-will-never-be-forgotten-chief-minister-vijay-extends-police-day-greetings#comments</comments><guid isPermaLink="false">8d1af00b-5424-4e1a-a2a6-4aaeb6cb52f4</guid><pubDate>Sun, 06 Sep 2026 04:33:35 +0000</pubDate><atom:updated>2026-09-06T04:33:35.275Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,காவலர்,தினம்,day,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/zyyjd81d/cm-vijay.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/zyyjd81d/cm-vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முதல்-அமைச்சர் விஜய் காவலர் தினத்தையொட்டி காவல்துறையினர் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>காவலர் தினம்</h2><p>1859-ஆம் ஆண்டு மெட்ராஸ் மாவட்டக் காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்புரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட நாளை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படும் காவலர் நாளை முன்னிட்டு, சமூகத்தில் அமைதி நிலவிடவும், சட்டத்தின் ஆட்சி நிலைபெறவும் தன்னலமின்றிப் பணியாற்றிவரும் காவல்துறையினர் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த காவலர் தினம் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2>என்றும் போற்றத்தக்கவை</h2><p>நமது மாநிலத்தில், குற்றங்களைத் தடுத்து, சட்ட ஒழுங்கைப் பேணுவதுடன், ஆபத்தான சூழல்களிலும், பேரிடர் காலங்களிலும் மக்களின் உயிர், உடைமை மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் துணிவுடன் நின்று களப்பணி ஆற்றிவரும் காவல்துறையினரின் வீரமும் தியாகமும் என்றும் போற்றத்தக்கவை. </p><p>காவல்துறையினரின் பணிச்சுமையைக் குறைத்து, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அவர்களின் பணித்திறனை மேம்படுத்தி, காவலர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் தேவையான நலத்திட்டங்களை உறுதிசெய்வதற்கும் நமது அரசு முன்னுரிமை அளிக்கும். </p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் உயர்கிறது அகவிலைப்படி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dearness-allowance-for-central-government-employees-to-increase-by-3-percent</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dearness-allowance-for-central-government-employees-to-increase-by-3-percent#comments</comments><guid isPermaLink="false">d0343e10-a1f2-4b05-8aa4-a40063e518de</guid><pubDate>Sun, 06 Sep 2026 04:03:20 +0000</pubDate><atom:updated>2026-09-06T04:03:20.860Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,அரசு ஊழியர்கள்,மத்திய அரசு,Central Govt,அகவிலைப்படி உயர்வு,அகவிலைப்படி,Central Government Employees,ஓய்வூதியதாரர்கள்,Pensioners</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/vauznub2/amimi.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/vauznub2/amimi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.</p><p>ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகைகளுக்காக அரசு அகவிலைப்படி உயர்வை 2 - 3 மாதங்கள் தாமதமாக அறிவிப்பது வழக்கம். விதிகளின்படி அகவிலைப்படி 50 சதவீதத்தைக் கடக்கும் போது அது அடிப்படை சம்பளம் மற்றும் ஓய்வூதியத்துடன் இணைக்கப்பட வேண்டும். கடந்த 2024 ஜனவரி 1ம் தேதி அன்றே அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டியது. ஆனாலும் அது அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படவில்லை.</p><p>இது தொடர்பாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் கூட்டமைப்பு சார்பில், மத்திய மந்திரிசபை செயலருக்கு கடிதம் எழுதப்பட்டது. ஆனால் இத்தகைய இணைப்பை அரசு செயல்படுத்தாது என்று மத்திய நிதித்துறை இணை மந் திரி பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் ஏற்கனவே தெளிவுபடுத்தி இருந்தார்.</p><p>இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து மத்திய அரசு விரைவில் அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அகவிலைப்படி உயர்வானது 3 சதவீதம் வரையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் 49 லட்சம் அரசு ஊழியர்களும் 69 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர் என்று கூறப்படுகிறது.</p><p>மத்திய அமைச்சரவை விரைவில் கூட உள்ளநிலையில், அங்கு ஒப்புதல் கிடைத்தவுடன் அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் நிலுவையுடன் கூடிய நிதிச் சலுகைகள் கிடைக்கும். தற்போது வரை 60 சதவீதமாக உள்ள அகவிலைப்படி விகிதம், இந்த 3 சதவீத உயர்விற்குப் பின் 63 சதவீதத்தை எட்டும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. </p>]]></content:encoded></item><item><title>விடுமுறை தினம்: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-tourists-flock-to-kanyakumari-15</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-tourists-flock-to-kanyakumari-15#comments</comments><guid isPermaLink="false">79759e78-9880-4174-ac0b-fde8768b79ef</guid><pubDate>Sun, 06 Sep 2026 03:58:13 +0000</pubDate><atom:updated>2026-09-06T03:58:13.337Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,Tourists,சுற்றுலா பயணிகள்,Kanyakumari</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/yczz1sv1/7.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/yczz1sv1/7.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி, </p><p>சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள். </p><p>இந்தநிலையில் இன்று ஞாயிறு விடுமுறையையொட்டி காலையில் இருந்தே கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை, சன்ரைஸ் பாயின்ட் போன்ற பகுதிகளில் நள்ளிரவு முதல் காத்திருந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். </p><p>அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். படகுத்துறையில் இருந்து சுற்றுலா பயணிகள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்த்து ரசித்து வருகின்றனர். காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள தமிழன்னை பூங்கா, சன்செட் பாயிண்ட், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.  </p> ]]></content:encoded></item><item><title>மீன்கள் வரத்து அதிகரிப்பால் விலை சரிவு... தூத்துக்குடியில் குவிந்த மீன் பிரியர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/prices-fall-due-to-increased-fish-arrival-fish-lovers-flocked-to-thoothukudi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/prices-fall-due-to-increased-fish-arrival-fish-lovers-flocked-to-thoothukudi#comments</comments><guid isPermaLink="false">3380e31a-f970-4b73-b9ea-fad2c5b74a68</guid><pubDate>Sun, 06 Sep 2026 03:57:09 +0000</pubDate><atom:updated>2026-09-06T03:57:09.286Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மீன்கள்,Fish,Thoothukudi,தூத்துக்குடி,விலை சரிவு,prices fall,வரத்து அதிகரிப்பு,மீன் பிரியர்கள்,Fish Lovers</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/qd9j76ic/99.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மீன்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/qd9j76ic/99.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடியில் மீன்கள் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது. எனவே பொதுமக்கள் ஆர்வமுடன் மீன்களை வாங்கி சென்றனர்.</p><h2>பெரிய மீன்கள்</h2><p>தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஏராளமான நாட்டு படகு மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாட்டுப்படகு மீனவர்கள் கரைக்கு திரும்பினர்.</p><p>கரைக்கு திரும்பிய மீனவர்களுக்கு மீன்பாடு நன்றாக இருந்ததால் அவர்கள் பெரிய அளவிலான மீன்களை அதிகம் கொண்டு வந்தனர். இதனால் தூத்துக்குடி திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் நேற்று அதிகளவில் மீன்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது.</p><h2>விலை குறைந்தது</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">மீன்கள்</a> வரத்து அதிகம் காணப்பட்டதாலும், தசரா திருவிழா தொடங்கியதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் திருவிழாவிற்காக மாலை அணிந்து விரதம் இருந்து வருவதாலும் நேற்று குறைந்த அளவு பொதுமக்களை மீன்கள் வாங்க வந்திருந்தனர். இதனால் மீன்கள் விலையும் சற்று குறைந்தது.</p><h2>பொதுமக்கள் மகிழ்ச்சி</h2><p>தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று சீலா மீன் கிலோ ரூ.1000 வரையும், விளை மீன் கிலோ ரூ.600 வரையும், பாறை மீன் கிலோ ரூ.350 வரையும், ஊளி மீன் கிலோ ரூ.400 வரையும், நண்டு கிலோ ரூ.700 வரையும்</p><p>தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை குறைந்து வருவதால் பொதுமக்களும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்து ஆர்வமுடன் வாங்கி சென்றனர். அதுபோல் மீன்பாடு நன்றாக இருப்பதால் மீனவர்களும் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>கீழடி அகழாய்வில் 8 அடுக்கு உறைகிணறு கண்டுபிடிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/eight-tiered-ring-well-discovered-at-the-keeladi-excavation-site</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/eight-tiered-ring-well-discovered-at-the-keeladi-excavation-site#comments</comments><guid isPermaLink="false">6d33d09f-5b48-47ca-b9d7-9b67dd47b621</guid><pubDate>Sun, 06 Sep 2026 03:29:43 +0000</pubDate><atom:updated>2026-09-06T03:29:43.796Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Excavation,Excavation work,கீழடி அகழாய்வு,உறைகிணறு</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/ylgf40g2/6.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/ylgf40g2/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை, </p><p>சிவகங்கை மாவட்டம், கீழடியில் வாழ்ந்த மக்கள், நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியதற்கு சான்றாக ஒவ்வொரு கட்ட அகழாய்விலும், இரண்டு முதல், ஏழு அடுக்குகள் வரையுள்ள உறைகிணறுகள் கிடைத்து வருகின்றன. குடிநீர்,பாசனம் மற் றும் சாயத்தொழிலுக்கு உறைகிணறுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.</p><p>கீழடி, 11ம் கட்ட அகழாய்வில், ஒரே குழியில் அடுத்தடுத்து மூன்றுவித வடிகால் அமைப்புகள் கண்டறியப்பட்டன. ஏற்கனவே, இரண்டு அடுக்கு உறைகிணறு கண்டறியப்பட்டது. இரண்டாவதாக கண்டறியப்பட்ட உறைகிணறில், எட்டு அடுக்குகள் வரை வெளிப்பட்டுள்ளன. சேதமடையாமல் உள்ள அந்த உறைகிணற்றில், மேலும் சில அடுக்குகள் இருக்க வாய்ப்புள்ளதால், தொடர்ச்சியாக அகழாய்வு பணி நடக்கிறது. </p>]]></content:encoded></item><item><title>கோவை: திருடிய வீட்டில் 5 நாட்கள் தங்கி சமைத்து சாப்பிட்டு தூங்கிய கொள்ளையர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-robbers-stayed-in-the-house-they-robbed-for-5-days-cooking-eating-and-sleeping</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-robbers-stayed-in-the-house-they-robbed-for-5-days-cooking-eating-and-sleeping#comments</comments><guid isPermaLink="false">b5bbfec4-0c7a-4745-8480-a1a5d6c8234a</guid><pubDate>Sun, 06 Sep 2026 03:18:06 +0000</pubDate><atom:updated>2026-09-06T03:18:06.512Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,திருட்டு,House,வீடு,robbers,கொள்ளையர்கள்,Theft,6 பேர் கைது,Auditor,ஆடிட்டர்,6 arrested</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/sa3s31du/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/sa3s31du/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88">கோவை</a>யில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D">ஆடிட்டர் </a>வீட்டில் ரூ.15 லட்சம் பொருட்களை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88">கொள்ளை</a>யடித்த வழக்கில் 6 பேரை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். அவர்கள் திருடிய வீட்டில் 5 நாட்கள் தங்கி சமைத்து சாப்பிட்டு தூங்கிச்சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. </p><h2>ஆடிட்டர் வீடு</h2><p>கோவை ஒப்பணக்கார வீதியை சேர்ந்த சேஷகிரி (வயது 70), ஆடிட்டர். இவருடைய மகன் பெங்களூருவில் உள்ளார். எனவே அவர் தனது மகனை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கடந்த மாதம் பெங்களூரு சென்றார். பின்னர் அவர் நேற்று முன்தினம் கோவை திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் கீழே சிதறி கிடந்தன. </p><h2>ரூ.15 லட்சம் நகை கொள்ளை</h2><p>பூஜை அறையில் இருந்த வெள்ளித்தட்டு, வெள்ளி பூஜை பொருட்கள், சமையல் அறையில் பயன்படுத்தும் வெள்ளி பொருட்கள் என 9 கிலோ வெள்ளி பொருட்களும், 7 கிலோ பித்தளை பொருட்களும் திருடப்பட்டு இருந்தது. அதன் மதிப்பு ரூ.15 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. </p><h2>6 பேர் கைது</h2><p>இது குறித்த புகாரின்பேரில் வெரைட்டிஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கோவையை சேர்ந்த வெங்கடேஷ்(45), ராஜசேகர்(37), டேவிட் லிவிங்ஸ்டன்(56), மணிகண்டன்(எ) விக்கி(26), மணிகண்டன்(எ) சிறுத்தைமணி(27), ஜமீசா(45) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்புள்ள வெள்ளி, பித்தளை பொருட்கள் மீட்கப்பட்டன. </p><h2>திருடிய வீட்டில் 5 நாட்கள் தங்கி சமைத்து சாப்பிட்டு தூங்கிய கொள்ளையர்கள்</h2><p>இதுகுறித்து போலீசார் கூறும்போது, ஆடிட்டர் வீட்டை பூட்டிச்சென்றதை நோட்டமிட்ட 6 பேரும் கதவை உடைத்து உள்ளே சென்று பொருட்களை திருடி உள்ளனர். அத்துடன் அவர்கள் திருடிய வீட்டில் 5 நாட்கள் வரை தங்கி இருந்து சமையல் செய்து சாப்பிட்டு, தூங்கி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து புகார் தெரிவித்து 24 மணி நேரத்துக்குள் 6 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்றனர். </p>]]></content:encoded></item><item><title>மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்... இந்த மாத இறுதிக்குள் வழங்கப்படும்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/free-bus-passes-for-students-to-be-given-by-the-end-of-this-month</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/free-bus-passes-for-students-to-be-given-by-the-end-of-this-month#comments</comments><guid isPermaLink="false">05740cf4-804f-44c8-8f9f-6fd51c07da98</guid><pubDate>Sun, 06 Sep 2026 03:09:05 +0000</pubDate><atom:updated>2026-09-06T03:09:05.679Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணவர்கள்,students,Free bus pass,இலவச பஸ் பாஸ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/c1tnnbfg/98.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/c1tnnbfg/98.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பஸ் பாஸிற்காக, பள்ளிக்கல்வித்துறையின் ‘எமிஸ்’ தளம் மூலம் 70 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ஸ்மார்ட் பஸ் பாஸ் அச்சிடும் பணிகள் இந்த வாரம் தொடங்க உள்ளதாக போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, 30 கிலோமீட்டர் தூரம் வரை இலவசமாக பயணம் செய்வதற்கான பஸ் பாஸ் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான மாணவர்களின் விவரங்கள் பள்ளிக்கல்வித்துறையின் ‘எமிஸ்’ தளம் வாயிலாக போக்குவரத்துக்கழகங்களுக்கு அனுப்பப்படுகின்றன.</p><p>மதுரை, கோவை, விழுப்புரம், சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட 8 போக்குவரத்துக்கழக கோட்டங்களில் இருந்து 70 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான பஸ் பாஸ் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. நீலகிரி, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை கோட்டத்தில் மட்டும் 9.13 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.</p><h2>செப்டம்பர் மாத இறுதிக்குள்...</h2><p>ஆகஸ்டு 31-ந்தேதிக்குள் பஸ் பாஸ் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பள்ளிக்கல்வித்துறை மற்றும் போக்குவரத்துக்கழக அதிகாரிகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு பணிகளில் ஏற்பட்ட தாமதத்தால், பஸ் பாஸ் அச்சிடும் பணிகள் தள்ளிப்போனது. தற்போது இந்த வாரம் அச்சிடும் பணி தொடங்கப்பட்டு, செப்டம்பர் மாத இறுதிக்குள் பஸ் பாஸ்கள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதற்கிடையே, புதிய <a href="https://www.dailythanthi.com/topic/free-bus-pass">பஸ் பாஸ்</a> கிடைக்கும் வரை மாணவர்கள் தங்களிடம் உள்ள பழைய பஸ் பாஸை பயன்படுத்தி பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி சீருடையில் வரும் மாணவர்களை பஸ் பாஸ் வைத்திருப்பவர்களாக கருதி பயணம் செய்ய அனுமதிக்குமாறு நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பன்றியை பிடிக்க புதைத்து வைத்திருந்த கண்ணிவெடி வெடித்து 2-ம் வகுப்பு மாணவி படுகாயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-2nd-grade-student-was-seriously-injured-when-a-landmine-buried-to-catch-a-pig-exploded</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-2nd-grade-student-was-seriously-injured-when-a-landmine-buried-to-catch-a-pig-exploded#comments</comments><guid isPermaLink="false">ce67c4e9-fbec-498d-b34b-3874e7d17bb3</guid><pubDate>Sun, 06 Sep 2026 02:18:13 +0000</pubDate><atom:updated>2026-09-06T02:18:13.642Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கள்ளக்குறிச்சி,Kallakurichi,Cuddalore,கடலூர்,police investigation,படுகாயம்,பள்ளி மாணவி,seriously injured,Schoolgirl,landmine,கண்ணிவெடி,போலீசார் விசாரணை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/1uhf8au5/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கண்ணிவெடி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/1uhf8au5/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">கள்ளக்குறிச்சி</a> மாவட்டம் தியாகதுருகம் அருகே அசகளத்தூரில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF">பன்றி</a>யை பிடிக்க புதைத்து வைத்திருந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF">கண்ணிவெடி</a> வெடித்து 2-ம் வகுப்பு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">மாணவி படுகாயம் </a>அடைந்தார்.</p><h2>2-ம் வகுப்பு மாணவி</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">கடலூர்</a> மாவட்டம், வேப்பூர் அருகே ஜா.ஏந்தல் கிராமத்தை சேர்ந்த மணிமாறன் (வயது 34) மகள் நிஷாந்தனா(7). இந்த சிறுமி அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறாள். </p><h2>கண்ணிவெடி வெடித்து மாணவி படுகாயம்</h2><p>இந்த நிலையில் ஜா.ஏந்தல் கிராமத்தையொட்டி உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே அசகளத்தூரில் தனிநபர் நிலத்திற்கு நேற்று முன்தினம் மாலை நிஷாந்தனா இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு பன்றிகளை பிடிக்க புதைத்து வைத்திருந்த கன்னிவெடியை நிஷாந்தனா மிதித்துள்ளார். இதில் அந்த வெடி வெடித்து சிதறியது. இதில் நிஷாந்தனாவின் இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டதால் வலியால் அலறி துடித்தாள். </p><h2>போலீசார் விசாரணை</h2><p>இந்த சத்தம் கேட்டதும் ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் உடனே அவளை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நிஷாந்தனாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வரஞ்சரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>கூடலூர் நகருக்குள் உலா வரும் காட்டு யானை: பொதுமக்கள் அச்சம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-wanders-into-gudalur-town-public-alarmed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-wanders-into-gudalur-town-public-alarmed#comments</comments><guid isPermaLink="false">b94966dc-b62a-4eb4-a669-bcad23907535</guid><pubDate>Sun, 06 Sep 2026 02:13:04 +0000</pubDate><atom:updated>2026-09-06T02:13:04.043Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>நீலகிரி,காட்டு யானை,wild elephant,Nilgiri</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/snemylca/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/snemylca/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>கூடலூர் நகருக்குள் உலா வரும் காட்டு யானையால் நிம்மதியை இழந்த மக்கள் தீப்பந்தம் மூலம் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.</p><h2>ஊருக்குள் உலா வரும் காட்டு யானை</h2><p>நீலகிரி காவட்டம் கூடலூர் நகருக்குள் காட்டு யானை ஒன்று முகாமிட்டு வருகிறது. மேல் கூடலூர், கெவிப்பாரா, அரசு மேல்நிலைப்பள்ளி, செம்பாலா, கோத்தர்வயல், மார்த்தோமா நகர், புத்தூர்வயல் என நகராட்சி பகுதிகளில் பொதுமக்கள் குடியிருப்புகளை தினமும் முற்றுகையிட்டு வருகிறது.</p> <p>இதனால் பொதுமக்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாமல் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இதேபோல் வீடுகளில் பராமரிக்கப் பட்டு வரும் வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களையும் தின்று பழகி விட்டதால் காட்டு யானையை வனத்துறையினர் விரட்டினாலும் தொடர்ந்து ஊருக்குள் வந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் கூடலூர் மரப்பாலம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் காட்டு யானை நுழைந்தது. </p><h2>தீப்பந்தம் மூலம் விரட்டும் மக்கள்</h2><p>நாள்தோறும் காட்டு யானையால் மிகுந்த பாதிப்புக்கு ஆளாவதாக பொதுமக்கள் தங்களது வேதனையை தெரிவித்தனர்.  மேலும் அதை விரட்டினாலும் தொடர்ந்து ஊருக்குள் வருவதால் பாதுகாப்பற்ற நிலை காணப்படுவதாகவும் தெரிவித்தனர். இந்த நிலையில் ஊருக்குள் நுழைந்த காட்டு யானை தீப்பந்தம் மூலம் பொதுமக்கள் விரட்டினர். இதனால் யானை அங்கிருந்து சென்றது.</p> <p>இதேபோல் செம்பாலாவிலும் காட்டு யானை நுழைந்து பொதுமக்கள் வீடுகளை சுற்றி அமைத்திருந்த தடுப்புகளை உடைத்து சேதப்படுத்தியது. இது குறித்து பொதுமக்கள் கூறும் போது. தினமும் குடியிருப்பு பகுதியில் வளைந்து பாதுகாப்பு சுற்றுச்சுவர் மற்றும் தடுப்புகளை காட்டு யானை சேதப்படுத்துகிறது. எனவே வனத்துறையினர் இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.</p><p>இவ்வாறு அவர்கள் கூறினர்.</p> ]]></content:encoded></item><item><title>நைனாமலை பக்தர்களுக்கு சூப்பர் வசதி! ரூ.30 கோடியில் மலைச்சாலை பணி நிறைவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/super-facilities-for-nainamalai-devotees-hill-road-work-completed-at-a-cost-of-rs-30-crore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/super-facilities-for-nainamalai-devotees-hill-road-work-completed-at-a-cost-of-rs-30-crore#comments</comments><guid isPermaLink="false">f3798135-fabb-478a-a49b-086db3ba3104</guid><pubDate>Sun, 06 Sep 2026 02:08:49 +0000</pubDate><atom:updated>2026-09-06T02:08:49.686Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பக்தர்கள்,சேந்தமங்கலம்,Completed,road work,நிறைவு,சாலை பணிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/b4kbw96b/97.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நைனாமலை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/b4kbw96b/97.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேந்தமங்கலம், </p><p>சேந்தமங்கலம் நைனாமலை கோவிலுக்கு ரூ.30 கோடியில் மலைச்சாலை அமைக்கும் பணி முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து நேற்று வாகனங்களில் பக்தர்கள் ஆர்வமாக சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பினர்.</p><h2>நைனாமலை கோவில்</h2><p>நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் இருந்து புதன்சந்தை செல்லும் வழியில் சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் வரலாற்று புகழ்வாய்ந்த நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. அடிவாரத்தில் இருந்து சுமார் 3 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள அந்த மலை கோவிலுக்கு பக்தர்கள் வழக்கமாக சுமார் 2 ஆயிரத்து 500 படிக்கட்டுகளை கடந்து சென்று பெருமாள் மற்றும் குவலயவல்லி தாயாரை வணங்கிவிட்டு திரும்புவார்கள்.</p><p>மலைமேல் ஏற முடியாத பக்தர்கள் அடிவாரத்தில் உள்ள பெருமாளை வணங்கி நிற்கும் பக்த ஆஞ்சநேயரை வணங்கி விட்டு திரும்புவார்கள். இந்த நிலையில் மலைக்கோவிலில் உள்ள பெருமாளை தரிசிக்க மலைச்சாலை அமைத்து அங்கு பஸ்சில் பயணம் செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளாக பக்தர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.</p><h2>ரூ.30 கோடியில் தார்சாலை</h2><p>இந்தநிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நெடுஞ்சாலை துறை மூலமாக ரூ.30 கோடி செலவில் அடிவாரத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவிற்கு மலைச்சாலை அமைக்கும் பணி முடிவுற்றது. அதைத் தொடர்ந்து அந்த மலைச்சாலை வழியாக அரசு பஸ் இயக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகத்தினர் சமீபத்தில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் மதுபாலனை சந்தித்து முறையிட்டனர். அதைத் தொடர்ந்து அவர் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் அந்த மலைச்சாலையை ஆய்வு செய்த பின் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பக்தர்கள்</a> பஸ்சில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.</p><p>இந்தநிலையில் நேற்று பக்தர்கள் ஆர்வமாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அந்த மலைக்கு சென்று பெருமாளை தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்கினர். வருகிற 11-ந் தேதி முதல் 5 வாரங்களுக்கு அந்த கோவிலில் புரட்டாசி திருவிழா நடைபெறுகிறது.</p>]]></content:encoded></item></channel></rss>