<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 20 Aug 2026 03:29:56 +0000</lastBuildDate><item><title> பள்ளி வகுப்பறைக்குள் புகுந்த 7 அடி நீள சாரைப்பாம்பு: மாணவர்கள் அலறியடித்து ஓட்டம்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/7-foot-long-rat-snake-enters-school-classroom-students-scatter-in-panic</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/7-foot-long-rat-snake-enters-school-classroom-students-scatter-in-panic#comments</comments><guid isPermaLink="false">d105e7d6-127b-4726-8f53-f0fb06ea1c86</guid><pubDate>Thu, 20 Aug 2026 03:29:20 +0000</pubDate><atom:updated>2026-08-20T03:29:20.437Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thiruvallur,திருவள்ளூர்,திருத்தணி,Thiruthani</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/upvse3ou/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/upvse3ou/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருத்தணி, </p><p>திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஜெ.ஜெ. ரவி நகர் பகுதியில் அரசு உதவிபெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.</p><h2> மேஜைக்கு அடியில் பதுங்கிய பாம்பு</h2><p>நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவர்கள் வகுப்பறைகளுக்குச் சென்றனர். அப்போது 6-ம் வகுப்பு மாணவர்கள் வகுப்பறைக்குள் சென்றபோது, மேஜையின் அடியில் பாம்பு ஒன்று பதுங்கியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.</p><p>இதையடுத்து மாணவர்கள் அலறியடித்துக்கொண்டு வகுப்பறையை விட்டு வெளியே ஓடினர். இதனால் பள்ளி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.</p><h2>7 அடி நீள சாரைப்பாம்பு பிடிபட்டது</h2><p>இதுகுறித்து ஆசிரியர்கள் உடனடியாக திருத்தணி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், வகுப்பறையில் பதுங்கியிருந்த சுமார் 7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை லாவகமாக பிடித்தனர்.</p><p>பின்னர் அந்தப் பாம்பு அருகிலுள்ள வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, பாதுகாப்பாக விடப்பட்டது.</p><h2>கழிவுநீர் கால்வாயை தூர்வார கோரிக்கை</h2><p>பள்ளி அருகே உள்ள கழிவுநீர் கால்வாயை திருத்தணி நகராட்சி நிர்வாகம் முறையாக தூர்வாராமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.</p><p>இதனால் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் பள்ளி வளாகத்திற்குள் வருவதாகவும், <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மாணவர்களின் </a>பாதுகாப்பை கருத்தில் கொண்டு கழிவுநீர் கால்வாயை உடனடியாக தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>கள்ளக்கடல் நிகழ்வு: கன்னியாகுமரி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kallakadal-phenomenon-in-kanyakumari-fishermen-do-not-venture-out-to-sea</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kallakadal-phenomenon-in-kanyakumari-fishermen-do-not-venture-out-to-sea#comments</comments><guid isPermaLink="false">a2970be7-1028-491a-83d4-627a2fd56525</guid><pubDate>Thu, 20 Aug 2026 03:21:31 +0000</pubDate><atom:updated>2026-08-20T03:21:31.220Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,Kanyakumari,கள்ளக்கடல் நிகழ்வு</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/sntv680y/8.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/sntv680y/8.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி,</p><p>தென் இந்திய கடற்கரை பகுதிகளுக்கு இந்திய தேசிய கடல்சார் தகவல் சேவை மையம் 'கள்ளக்கடல்' எச்சரிக்கை விடுத்துள்ளது.  கேரளா, தென் தமிழ்நாடு (கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம்) மற்றும் லட்சத்தீவு ஆகிய பகுதிகளை தாக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>கள்ளக்கடல் என்றால் என்ன?</h2><p>'கள்ளக்கடல்' என்பது திடீரென கரைக்கு வரும் கடல் அலைகளை குறிக்கிறது. சாதாரணமாக கடல் அலைகள் காற்றால் அருகிலேயே உருவாகும். ஆனால் கள்ளக்கடல் அப்படி இல்லை, நம்மிடம் இருந்து 5,000 முதல் 10,000 கி.மீ. தொலைவில், அண்டார்டிகாவில் தென் பெருங்கடலில், பெரும்புயல் அல்லது குறைந்த காற்றழுத்தம் உருவாகும். அந்த நீண்ட அலைகள், காற்று இல்லாமலேயே சக்தியை இழக்காமல் பல நாட்கள் பயணித்து இந்திய கடற்கரைக்கு வரும்.</p><p>இந்த அலைகளின் இடைவெளி 18 முதல் 22 வினாடிகள் இருக்கும். சாதாரண அலைகளின் இடைவெளி 8 முதல் 10 வினாடிகள் தான். இந்த கள்ளக்கடல் உருவாகும் போது, கடல் பார்க்க அமைதியாக இருக்கும். வானிலை நன்றாக இருக்கும். எந்த மழையும், காற்றும் இருக்காது. திடீரென ஒரு பெரிய அலை வந்து கரையை தாண்டி, சாலை, வீடுகளுக்குள் புகுந்துவிடும். அதனால் தான் இதற்கு கள்ளக்கடல் என்று பெயர் வைத்தனர்.</p><h2>படகுகளை உடைத்துவிடும்</h2><p>முன் அறிவிப்பு இல்லாமல் வருவது போல தெரியும். சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்கும்போது உள்ளே இழுத்துச் சென்றுவிடும். கரையில் நிற்கும் படகுகளை ஒன்றோடு ஒன்று மோதச் செய்து உடைத்துவிடும். கடல் ஏற்ற நேரத்துடன் சேர்ந்தால், கடல் நீர் ஊருக்குள் புகுந்து வெள்ளம் வரும். இதற்கு முன்பு கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் கன்னியாகுமரி, கோள கடற்கரையில் இதேபோல கள்ளக்கடல் வந்து பல வீடுகள், படகுகள் சேதமானது குறிப்பிடத்தக்கது.</p><p>கள்ளக்கடல் எச்சரிக்கை காரணமாக கடலுக்குள் சிறு படகுகள் செல்ல வேண்டாம் என்றும், கரையில் நிறுத்தப்பட்டுள்ள படகுகளை இடைவெளி விட்டு நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடற்கரை சுற்றுலா, விளையாட்டு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா மையங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.</p><h2>கன்னியாகுமரி</h2><p>கன்னியாகுமரியில் கள்ளக்கடல் நிகழ்வால் 1.9 முதல் 2.1 மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் எழும்புகின்றன. காற்றின் வேகம் அதிகரிப்பால் அலைகள்  வேகமாக எழுகின்றன. கள்ளக்கடல் எச்சரிக்கை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 8 ஆயிரம் விசைப்படகுகள், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் இன்று கடலுக்கு செல்லவில்லை. </p>  ]]></content:encoded></item><item><title>வீட்டில் இருந்து நகையை தோழிக்கு கொடுத்து உதவிய பள்ளி மாணவி; பெற்றோர் கண்டிப்பால் தற்கொலை
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/schoolgirl-dies-by-suicide-after-helping-friend-with-jewellery</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/schoolgirl-dies-by-suicide-after-helping-friend-with-jewellery#comments</comments><guid isPermaLink="false">62be7b21-af4f-4c48-b796-3835152aac34</guid><pubDate>Thu, 20 Aug 2026 03:12:22 +0000</pubDate><atom:updated>2026-08-20T03:12:22.157Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>school student,பள்ளி மாணவி,நாகை,Nagai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/2gzzwe41/nptsp.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/2gzzwe41/nptsp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>நாகை</p><p>வீட்டில் இருந்து நகையை எடுத்து, தோழிக்கு கொடுத்து உதவிய பள்ளி மாணவி, பெற்றோரின் கண்டிப்பால் தற்கொலை செய்து கொண்டார்.</p><p>நாகை அந்தணப்பேட்டை புடவைக்கடை தெருவை சேர்ந்தவர் அசோக். இவரது மனைவி வாசுகி. இவர்களது மகள் மஹதி (வயது 16). இவர், நாகையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.  மஹதியின் தோழி ஒருவர் மஹதியிடம், தனது உறவினர் கடன் பிரச்சினையில் இருக்கிறார் என்றும் அவர்களுக்கு பணம் அல்லது நகை கொடுத்து உதவும்படியும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேட்டுள்ளார்.</p> <h2>தோழிக்கு உதவி</h2><p>இதனால் மஹதி தனது பெற்றோருக்கு தெரியாமல் வீட்டில் இருந்த 3 பவுன் நகையை எடுத்து தனது தோழிக்கு கொடுத்துள்ளார்.  இந்த தகவல் மஹதியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து தனது மகள் அவரது தோழிக்கு கொடுத்த நகையை மீட்டுத்தரும்படி மஹதியின் பெற்றோர், நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.</p><p>புகாரின் பேரில் போலீசார், மஹதியின் தோழியிடம் இருந்து அந்த நகையை மீட்டு மஹதியின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோருக்கும், மஹதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.</p> <h2>தற்கொலை</h2><p>இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மஹதி நேற்று முன்தினம் வீட்டின் அறையில் இருந்த மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இதுகுறித்த தகவலின் பேரில் நாகை நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மஹதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து வாசுகி கொடுத்த புகாரின் பேரில் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>தோழிக்கு நகை கொடுத்ததால் பெற்றோர் இடையே ஏற்பட்ட தகராறில் மன உளைச்சலால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.</p> ]]></content:encoded></item><item><title>அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு: 614 பேருக்கு மருத்துவ இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/75-percent-internal-quota-for-government-school-students-614-medical-seats</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/75-percent-internal-quota-for-government-school-students-614-medical-seats#comments</comments><guid isPermaLink="false">a5c02151-18f5-43bb-93c1-a0db2e4c611d</guid><pubDate>Thu, 20 Aug 2026 03:08:32 +0000</pubDate><atom:updated>2026-08-20T03:08:32.152Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,student,அரசு பள்ளி,மாணவர்கள்,Government School,மருத்துவ இடங்கள்,quota,7.5 சதவீத இடஒதுக்கீடு,Medical seat</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/3hh151pk/283.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மருத்துவர்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/3hh151pk/283.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் எம்.பி.பி. எஸ்., பி.டி.எஸ்., மருத்துவ படிப்புக்கான மாணவ சேர்க்கை கலந்தாய்வு நடந்து வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில், 614 மாணவ மாணவியருக்கு, மருத்துவ படிப்பு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.</p><p>இது குறித்து, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>படிப்புக்கான மருத்துவ கலந்தாய்வில், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில், 510 மாணவர்களுக்கு எம். பி.பி.எஸ். இடம், 104 மாணவர்களுக்கு பி.டி. எஸ்., இடம் என, மொத்தம் 614 இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.</p><h2>மருத்துவ கல்லுாரிகள்</h2><p>எம்.பி.பி.எஸ்., படிப்பை பொறுத்தவரை, 323 மாணவர்களுக்கு அரசு கல்லுாரிகள், 12 பேருக்கு இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரிகள், 166 பேருக்கு தனியார் மருத்துவ கல்லுாரிகள், 9 பேருக்கு நிகர் நிலை பல்கலையில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பி.டி.எஸ்., பொறுத்தவரை படிப்பை 16 பேருக்கு அரசு கல்லுாரிகளிலும் 88 பேருக்கு தனியார் மருத்துவ கல்லுாரிகளிலும் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.</p><p>பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய சிறந்த மாணவர்கள், மருத்துவ கல்வி பெறுவதற்கு, 7.5 சதவீத உள் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81">ஒதுக்கீடு</a> ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தரமான கல்வி வழிகாட்டுதல் மற்றும் போட்டித் தேர்வுக்கான பயிற்சி ஆகியவற்றை வழங்குவதன் வழியே, பள்ளிக்கல்வித்துறை அரசு பள்ளிகளை தொடர்ந்து வலுப்படுத்தும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சேலம் அருகே அரசு பள்ளியில் வடமாநில ஆசிரியர்கள் நியமனத்தால் சர்ச்சை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/controversy-over-the-appointment-of-teachers-from-north-india-at-a-government-school-near-salem</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/controversy-over-the-appointment-of-teachers-from-north-india-at-a-government-school-near-salem#comments</comments><guid isPermaLink="false">fa7bc5fa-d19e-43a1-a913-dc97dd7434cc</guid><pubDate>Thu, 20 Aug 2026 03:05:55 +0000</pubDate><atom:updated>2026-08-20T03:05:55.870Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,சேலம்,அரசு பள்ளி,ஆசிரியர்கள்,Teachers,Govt Schools</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/rz695srl/CHENNAI-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/rz695srl/CHENNAI-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம் அருகே அரசு மாதிரிப்பள்ளியில் வடமாநில ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.</p><h2>அரசு மாதிரிப்பள்ளி</h2><p>சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சிக்கனம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குப்பூரில் அரசு மாதிரிப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 6 முதல் பிளஸ்-2 வரை விடுதி வசதியுடன் செயல்படும் இந்த மாதிரிப்பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.</p><p>குறிப்பாக பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நீட், ஜெ.இ.இ. மற்றும் பிற தேசிய அளவிலான நுழைவு தேர்வுக ளுக்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் இந்த பள்ளியில் மாணவ, மாணவிகளை சேர்க்க பெற்றோர் அதிக மாக ஆர்வம் காட்டி வருகின்றனர். சமீபத்தில் நடந்த நீட் மறு தேர்வில் குப்பூர் அரசு மாதிரிப்பள்ளியில் படித்த 5 மாணவ, மாணவிகள் 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.</p><h2>வடமாநில ஆசிரியர்கள் நியமனம்</h2><p>இந்த நிலையில், குப்பூர் அரசு மாதிரிப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நீட், ஜெ.இ.இ. நுழைவு தேர்வு அளிப்பதற்காக தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர்களை தவிர வட மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் சில மாநிலங்களை சேர்ந்த 5 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p>இது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தமிழ் மொழி தெரியாத இந்தி தெரிந்த ஆசிரியர்களை வைத்து தமிழக மாணவர்களுக்கு எப்படி பாடம் கற்பித்து கொடுக்க முடியும்? என்றும், இதனால் அந்த பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் உளவியல் ரீதியாக மிகவும் பாதிப்பு அடைந்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.</p><h2>விசாரணை</h2><p>இதுகுறித்து சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பனிடம் கேட்டபோது, 'குப்பூரில் உள்ள அரசு மாதிரிப்பள்ளியில் வெளிமாநிலத்தை சேர்ந்த ஆசிரியர்கள் நியமனம் செய்திருப்பது தொடர்பாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலமுருகனிடம் விசாரித்து வருகிறோம். அவர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு மூலம் சம்பளம் வழங்கப்படுகிறதா? என்பது தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது' என்றார்.</p><p>சேலத்தில் அரசு மாதிரிப்பள்ளியில் வடமாநிலத்தை சேர்ந்த ஆசிரியர்களை நியமனம் செய்திருப்பது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் கண்டன பதிவு வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>பீடி கேட்டு தகராறு: கூலித்தொழிலாளி மீது பீர் பாட்டிலால் தாக்குதல்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/altercation-over-a-beedi-daily-wage-worker-attacked-with-a-beer-bottle</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/altercation-over-a-beedi-daily-wage-worker-attacked-with-a-beer-bottle#comments</comments><guid isPermaLink="false">296dd571-15f0-4944-8900-4cf90ea586e3</guid><pubDate>Thu, 20 Aug 2026 02:58:44 +0000</pubDate><atom:updated>2026-08-20T02:58:44.757Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருப்பூர்,Tirupur</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/2fu4x9z0/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/2fu4x9z0/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><p>குமரலிங்கம் சின்னகருப்பணசாமி கோவில் வீதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (29), கூலித்தொழிலாளி. இவர் குமரலிங்கம் பகுதியில் உள்ள ஓட்டல் அருகே நின்றுகொண்டிருந்தார்.</p><h2>பீடி கேட்டு தகராறு</h2><p>அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த கர்ணன், சபரி, குணாப் ஆகிய 3 பேரும் சதீஷ்குமாரிடம் பீடி கேட்டுள்ளனர். அதற்கு அவர், தன்னிடம் பீடி இல்லை எனக் கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.</p><h2>பீர் பாட்டிலால் தாக்குதல்</h2><p>வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து சதீஷ்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், அங்கு கிடந்த பீர் பாட்டிலால் அவரது தலையில் தாக்கியதாகவும் தெரிகிறது. இதில் சதீஷ்குமார் படுகாயம் அடைந்தார்.</p><h2>மருத்துவமனையில் சிகிச்சை</h2><p>சம்பவத்தையடுத்து கர்ணன், சபரி, குணாப் ஆகிய 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">காயமடைந்த </a>சதீஷ்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு குமரலிங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.</p><h2>3 பேருக்கு போலீசார் வலை</h2><p>இதுகுறித்த புகாரின் பேரில் குமரலிங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கர்ணன், சபரி, குணாப் ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து: 3 பேர் படுகாயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-bus-overturns-on-trichy-chennai-national-highway-3-injured</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-bus-overturns-on-trichy-chennai-national-highway-3-injured#comments</comments><guid isPermaLink="false">3d79332d-c808-47ba-887c-27c334a9a18b</guid><pubDate>Thu, 20 Aug 2026 02:47:22 +0000</pubDate><atom:updated>2026-08-20T02:47:22.885Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,சென்னை,பஸ்,Government bus,injured,Highway</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/uomwwgkh/282.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பஸ் விபத்து]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/uomwwgkh/282.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மார்த்தாண்டத்தில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவு பஸ் ஒன்று நேற்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. செங்கல்பட்டு மாவட்டம், புலிப்பாக்கம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்த பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.</p><h2>சிகிச்சை</h2><p>இந்த விபத்தில் பஸ் டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். </p><p>மேலும், பஸ்சில் பயணித்த மற்ற பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, மாற்று அரசு பஸ் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.</p> <p>அரசு பஸ் சாலையின் நடுவே கவிழ்ந்ததால், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. செங்கல்பட்டு தாலுகா <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D">போலீசார் </a>மற்றும் நெடுஞ்சாலை துறையினர், விபத்துக்குள்ளான பஸ்சை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்: ஒவ்வொரு எம்.எல்.ஏ.விற்கும் மாதம் இனி எவ்வளவு தொகை கிடைக்கும்..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/key-announcements-made-by-chief-minister-vijay-how-much-monthly-allowance-will-each-mla-receive-from-now-on</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/key-announcements-made-by-chief-minister-vijay-how-much-monthly-allowance-will-each-mla-receive-from-now-on#comments</comments><guid isPermaLink="false">b48674a3-34a5-4a66-b712-aab248970639</guid><pubDate>Thu, 20 Aug 2026 02:28:11 +0000</pubDate><atom:updated>2026-08-20T02:28:11.847Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,தமிழக சட்டசபை,TN Assembly,எம்.எல்.ஏ.க்கள்,MLAs,Assembly Session,தமிழக சட்டசபை கூட்டத்தொடர்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,சட்டசபை கூட்டத் தொடர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/1nreckev/mklk.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/1nreckev/mklk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மக்கள் பணியை தடையின்றி செய்திட ஏதுவாக அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும். வாகனத்துக்கு எரிபொருள், ஓட்டுநர் உள்ளிட்ட பராமரிப்புச் செலவுகளுக்காக மாதந்தோறும் ரூ.75 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்தார். </p><h2>110 விதியின் கீழ் அறிவிப்பு</h2><p>தமிழக சட்டசபை நேற்று தொடங்கியதும், பேரவை விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் சில அறிவிப்புகளை செய்ய இருப்பதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார்.</p><p>இதையடுத்து <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> எழுந்து, 110 விதியின் கீழ் 3 அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியிட்டார். </p><p>இதுதொடர்பாக அவர் கூறுகையில், “கடந்த 12-ந்தேதியன்று காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ. ஜோதிமணி பேசும் போது, எந்தவொரு பொருளாதார பலம் இல்லாமல் சட்டமன்ற உறுப்பினர்க ளாக பணியாற்றி கொண்டிருப்பவர்கள் தங்களின் தொகுதிப்பணிகளை செய்ய சொந்த வாகனங்களோ அல்லது உதவியாளர்களையோ வைத்துக்கொள்ள முடிவதில்லை என்று தெரிவித்தார்.</p><p>தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில், எளிய பின்னணியில் இருந்து பணபலமோ, அரசியல் பின்னணியோ இன்றி மக்களின் பேராதரவோடு முதன்முறையாக சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் தலைமுறை சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைக் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.</p><h2>அரசு சார்பில் வாகனம்</h2><p>தங்களது தொகுதி மக்களின் குறைகளைக் கேட்டறியவும், அரசுத் திட்டங்கள் மக்களை சென்றடைவதை கண்காணிக்கவும், தங்களின் தொகுதி முழுவதும் தொடர் பயணங்களை சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டியுள் ளது.</p><p>பொருளாதார பலமில்லாமல் சட்டமன்ற உறுப்பினர்களாக பணியாற்றும் மற்றும் முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தங்களது மக்கள் பணியை தொய்வின்றி தொடருவதற்கு வசதியாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும்.</p><h2>குறைகளுக்கு தீர்வு காண வழிவகுக்கும்</h2><p>இந்த அறிவிப்பு, சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களின் பயணத்தேவைகளுக் காக பிறரை சார்ந்து இருப்பதை தடுத்து, அவர்கள் எவ்வித சமரசமும் இன்றி சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தங்களின் தொகுதிக்குட்பட்ட கிராமப்புற மற்றும் தொலைதூரப்பகுதிகளுக்கு எளிதாக பயணம் செய்து, தொகுதி முழு வதும் உள்ள மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளுக்கு தீர்வு காண வழிவகுக்கும்.</p><p>அதோடு மட்டுமின்றி, சட்டமன்ற உறுப்பினர்களின் பொருளாதார சுமையை குறைத்து, கடைகோடி மக்களுக்கு லஞ்ச லாவண்யமற்ற, நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை அளிக்கவும் உதவும்.</p> <h2>வாகனப்படியாக ரூ.75 ஆயிரம்</h2><p>சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு வழங்கும் வாகனத்தை பராமரிக்கும் விதமாக, வாகனத்துக்கு டிரைவர், எரிபொருள், வாகன பராமரிப்பு உள்ளிட்ட செலவினங்களுக்காக மாதந்தோறும் ரூ.75 ஆயிரம் வாகனப்படியாகவும், அலுவலகப்பணிகளில் உதவி செய்ய ஒரு உதவியாளரை நியமித்துக்கொள்ள மாதந்தோறும் ரூ.25 ஆயிரம் உதவியாளர் படியாகவும் வழங்கப்படும். இதற்காக உரிய சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொண்டு ஆணைகள் வெளியிடப்படும்” என்று முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்தார்.</p><p>இந்நிலையில் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> வெளியிட்ட அறிவிப்பால், எம்.எல்.ஏ.,க்களுக்கு மாதந்தோறும் 2.05 லட்சம் ரூபாய் கிடைக்க உள்ளது.</p><p>தமிழகத்தில் 234 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சபாநாயகருக்கு, அரசு சார்பில், 'இன்னோவா' கார் வழங்கப்பட்டு உள்ளது. இவர்களை தவிர்த்து, 199 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இவர்களுக்கு கார் வாங்க தலா, 15 லட்சம் ரூபாய் வரை அரசு ஒதுக்கவுள்ளது. </p><p>இதனால், 30 கோடி ருபாய் வரை செலவாகும். எரிபொருள், உதவியாளர் சம்பளம், டிரைவர் சம்பளம், பராமரிப்பு செலவு என, 199 பேருக்கு மாதம் 2 கோடி ருபாய் வரை செலவிடப்பட உள்ளது. இதனால், ஆண்டுக்கு 24 கோடி ருபாய் செலவாகும்.</p><p>தற்போது, </p><p>எம்.எல்.ஏ.,க்களுக்கு அடிப்படை ஊதியம்: ரூ.30 ஆயிரம்</p><p>மாதாந்திர ஈட்டுப்படி ரூ.10,000</p><p>தொகுதிப்படி ரூ.25,000</p><p>அஞ்சல் படி ரூ.2500</p><p>தொலைபேசிப்படி ரூ.7500</p><p>தொகுப்புப்படி ரூ.5000</p><p>வாகனப்படி ரூ.25,000 என மொத்தம் 1,05,000 ரூபாய் வழங்கப்படுகிறது.</p><p>இது தவிர, மருத்துவச் செலவிற்கு மாதம் 5,000 ரூபாய்; சட்டசபை நடக்கும் நாட்களில் தனியாக படி; மாலை நேரங்களில் நடக்கும் சட்டசபை கூட்டத்திற்கு கூடுதல் படி என வழங்கப்படுகிறது. மேலும், சட்டசபை கேன்டீனில் சைவ, அவைச உணவுகள், டீ, காபி, சிற்றுண்டி ஆகியவை இலவசமாக வழங்கப்படுகின்றன. சென்னையில் உள்ள எம்.எல்.ஏ., விடுதியில் இருந்து சட்டசபைக்கு வர, இலவச 'ஏசி' பஸ்களும் இயக்கப்படுகின்றன.</p><p>தற்போது டிரைவர், உதவியாளர், எரிபொருள் செலவு என கூடுதலாக 1 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. இதனால்,ஒரு எம்.எல்.ஏ., வுக்கு மாதம் 2.05 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும்.</p><p>அதே நேரத்தில், ஏற்கனவே உள்ள ஊதியத்தில் வாகனப்படியாக 25,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அந்த பணம் தொடர்ந்து வழங்கப்படுமா என்பதை நிதித்துறை முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>சேது எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் புதிய பெட்டிகளுடன் இயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sethu-express-to-operate-with-new-coaches-from-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sethu-express-to-operate-with-new-coaches-from-today#comments</comments><guid isPermaLink="false">369cde5a-bb98-490c-924b-8e733f4ac7f1</guid><pubDate>Thu, 20 Aug 2026 02:22:34 +0000</pubDate><atom:updated>2026-08-20T02:22:34.448Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சேது எக்ஸ்பிரஸ் ரெயில்,Sethu Express Train,புதிய பெட்டிகள்,New Coaches</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/6oxz1t0l/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/6oxz1t0l/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,  </p><p>மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு தினசரி இயக்கப்படும் சேது எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஐ.சி.எப். ரெயில் பெட்டிக்கு பதிலாக எல்.எச்.பி. ரெயில் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. இந்த ரெயில் பெட்டிகள் இன்று (வியாழக்கிழமை) முதல் ராமேசுவரத்தில் இருந்தும் வருகிற 22-ந் தேதி முதல் சென்னையில் இருந்து இணைக்கப்படுகின்றன. </p><p>இந்த ரெயிலுக்கு இணை ரெயிலாக இருக்கும் திருச்செந்தூர்-சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் (வ.எண்.20605/20606) ரெயிலில் சென்னையில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் எல்.எச்.பி. பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. அதனை தொடர்ந்து இந்த ரெயில்களில் ஒரு முதல் வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டி, 2 இரண்டடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 3 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பொதுப்பெட்டி இணைக்கப்பட்டிருக்கும். </p> ]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் கடந்த 7 மாதங்களில் ஏற்பட்ட விபத்துகளில் இத்தனை பேர் பலியா..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/have-this-many-people-lost-their-lives-in-accidents-in-tamil-nadu-over-the-past-seven-months</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/have-this-many-people-lost-their-lives-in-accidents-in-tamil-nadu-over-the-past-seven-months#comments</comments><guid isPermaLink="false">439efbc5-2488-41ab-a3e9-e178b8a4f433</guid><pubDate>Thu, 20 Aug 2026 02:11:54 +0000</pubDate><atom:updated>2026-08-20T02:11:54.070Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழ்நாடு,Chennai,சென்னை,accidents,road accidents,சாலை விபத்துகள்,விபத்துகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/m08s0f5p/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/m08s0f5p/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் இந்தாண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 39,716 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ள நிலையில், இதில் 10,309 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டிலேயே அதிக சாலை விபத்துகள் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>71,000 சாலை விபத்துகள்</h2><p>கடந்த ஆண்டு தமிழகத்தில் சுமார் 71,000 சாலை விபத்துகள் நிகழ்ந்ததில், 18,000 பேர் உயிரிழந்தனர். இந்தாண்டு முதல் ஏழு மாதங்களிலேயே 39,716 விபத்துகள் பதிவாகியுள்ளன.</p><p>சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்க, போக்குவரத்துத் துறை, காவல்துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் இணைந்து தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சாலை மேம்பாட்டுப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதுடன், போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.</p><h2>விபத்துகளின் எண்ணிக்கை</h2><p>நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக வாகனம் ஓட்டுவோரைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதற்காக ஒருங்கிணைந்த கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையமும் அமைக்கப்பட உள்ளது என தமிழக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><strong>ஆண்டு - உயிரிழப்புகள்</strong></p><p><strong>2022 - 17,884</strong></p><p><strong>2023 - 18,347</strong></p><p><strong>2024 - 18,007</strong></p><p><strong>2025 - 18,000</strong></p><p><strong>2026 (ஜூலை வரை) - 10,309</strong></p><p>சாலை விபத்துகளை கட்டுப்படுத்த தொழில்நுட்பக் கண்காணிப்பை அதிகரிப்பதுடன், சாலை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பாதுகாப்பு </a>விதிகளை கடுமையாக அமல்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பெண் பயணியிடம் அத்துமீற முயன்ற டிரைவர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/driver-arrested-for-trying-to-molest-female-passenger-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/driver-arrested-for-trying-to-molest-female-passenger-in-chennai#comments</comments><guid isPermaLink="false">8dfae1ed-0fcf-4500-a453-cf17bec91ad2</guid><pubDate>Thu, 20 Aug 2026 02:05:40 +0000</pubDate><atom:updated>2026-08-20T02:05:40.559Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,கைது,arrested,டிரைவர்,பெண் பயணி,female passenger,அத்துமீறல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/a36xbqpw/226.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/a36xbqpw/226.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>டெல்லியை சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை வந்தார். நுங்கம்பாக்கத்தில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்த அவர், நேற்று முன்தினம் அங்கிருந்து அரும்பாக்கம் செல்வதற்காக ஆன்லைன் மூலம் காரை முன்பதிவு செய்தார். </p><h2>அத்துமீறல்</h2><p>அந்த பெண். காரில் சென்று கொண்டிருந்தபோது, டிரைவர் அரும்பாக்கம் செல்லாமல் மதுரவாயல் மேம்பாலம் அருகே காரை நிறுத்தி, அந்த பெண்ணை மிரட்டி, அவரது பர்சில் இருந்த பணத்தை பறித்ததுடன், அவரிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சத்தம் போட்டார். உடனே டிரைவர் அவரை காரில் இருந்து கீழே இறக்கி விட்டு, அங்கிருந்து காரில் தப்பிச்சென்றார். </p><h2>வழக்குப்பதிவு</h2><p>பின்னர் அந்த பெண் தனது நண்பரின் உதவியுடன் நுங்கம்பாக்கத்தில் தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்றார். இதுகுறித்து வானகரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.</p><p>பின்னர் சம்பவம் தொடர்பாக பீர்க்கன்கரணை பகுதியை சேர்ந்த கார் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D">டிரைவர் </a>கோபிநாத் (வயது 21) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக சட்டசபையில் இன்று எந்தெந்த துறைகள் மீது விவாதம்...?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/which-departments-are-up-for-discussion-in-the-tamil-nadu-legislative-assembly-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/which-departments-are-up-for-discussion-in-the-tamil-nadu-legislative-assembly-today#comments</comments><guid isPermaLink="false">5c63faa3-4c5f-44dc-a7f9-80de2aafd8f5</guid><pubDate>Thu, 20 Aug 2026 02:05:19 +0000</pubDate><atom:updated>2026-08-20T02:05:19.948Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,தமிழக சட்டசபை,TN Assembly</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/u5zvffqa/CHENNAI-0r.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/u5zvffqa/CHENNAI-0r.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. கூட்டம் தொடங்கியதும் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, கூட்டுறவு துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளுக்கு தேவையான கோரிக்கைகளை முன்வைத்து பேசுவார்கள்.</p><p>அனைவரும் பேசி முடிந்தவுடன் அவர்களுடைய கேள்விகளுக்கு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமணன், கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் ஆகியோர் பதிலுரை வழங்குவார்கள். நிறைவாக, தங்களுடைய துறை சார்பில் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.</p>]]></content:encoded></item><item><title>தென்மாநில முதல்-மந்திரிகள் மாநாடு சென்னையில் இன்று நடக்கிறது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-conference-of-chief-ministers-from-southern-states-is-being-held-in-chennai-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-conference-of-chief-ministers-from-southern-states-is-being-held-in-chennai-today#comments</comments><guid isPermaLink="false">a1c96170-cb21-4e91-b9e6-31f34cc1a7c5</guid><pubDate>Thu, 20 Aug 2026 01:48:57 +0000</pubDate><atom:updated>2026-08-20T01:48:57.049Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,அமித்ஷா,Amitsha,Chennai,சென்னை,CM Vijay,முதல்-மந்திரிகள் மாநாடு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/mobswiym/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/mobswiym/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மத்திய மந்திரி அமித்ஷா தலைமையில் 31-வது தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு சென்னை மாமல்லபுரத்தை அடுத்துள்ள கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டெல்லியில் இருந்து நேற்று மாலை தனி விமானத்தில் புறப்பட்டு இரவு 9 மணி அளவில் சென்னை வந்தடைந்தார்.</p><p>இன்று காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை அதே ஓட்டலில் தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு மற்றும் தென் மண்டல குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் தென் மண்டல குழுவின் தலைவராக அமித்ஷாவும், துணை தலைவராக முதல்-அமைச்சர் விஜய்யும் உள்ளனர். </p><p>இந்த மாநாட்டில் மாநிலங்களுக்கிடையே ஒத்துழைப்பு, பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள், நீர் பங்கீடு, கல்வி, சுகாதாரம், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைவாக விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுகிறது.</p><p>நாட்டின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, பிரதமர் மோடியின் கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் பாரத குழு' என்ற தொலைநோக்குப் பார்வையுடன் அமைக்கப்பட் டுள்ள மண்டல குழு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறது. மேலும் மத்திய-மாநில அரசுகளின் உறவை மேம்படுத்தும் வகையிலும் இம்மாநாடு நடைபெறுகிறது.</p><p>மாநாட்டில் தொகுதி மறுசீரமைப்பு, காவிரி நதிநீர் பங்கீடு, மேகதாது அணை விவகாரம், 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப் பட்ட விவகாரத்தில் கர்நாடகாவிடம் தமிழக அரசு தரப்பில் பேசி விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இந்த மாநாட்டில், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா துணை முதல்-மந்திரி மல்லுப்பட்டி விக் ரமர்கா, கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், கேரளம் முதல்-மந்திரி சதீசன், புதுச்சேரி மாநில கவர்னர் கைலாஷ்நாதன், அந்தமான்-நிக்கோபர் தீவுகள் துணை நிலை கவர்னர், லட்சத்தீவு அதிகாரிகள் மற்றும் அந்தந்த மாநில உயர்அ திகாரிகள் பங்கேற்க உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>போலீசார் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம்.. செல்போன் எண்கள் வெளியீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/complaints-can-be-lodged-if-police-demand-a-bribe-mobile-numbers-released</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/complaints-can-be-lodged-if-police-demand-a-bribe-mobile-numbers-released#comments</comments><guid isPermaLink="false">defc6a01-b18b-4cf7-8314-e766a56f7b6a</guid><pubDate>Thu, 20 Aug 2026 01:46:36 +0000</pubDate><atom:updated>2026-08-20T01:46:36.263Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,போலீஸ்,தமிழகம்,லஞ்சம்,TN Police,bribe,DGP Office,cellphone,டி.ஜி.பி. அலுவலகம்,செல்போன் எண்,வாட்ஸ்அப் எண்,WhatsApp number</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/t702svq4/poli.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/t702svq4/poli.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>போலீசார் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்க தனிப்பிரிவை தொடங்கி டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.</p><h2>தனிப்பிரிவு</h2><p>இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:-</p><p>எனது அறிவுறுத்தலின்படி, <a href="https://www.dailythanthi.com/topic/tn-police">தமிழக காவல்துறையின்</a> அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகர கமிஷனரகங்களிலும் 'உள்நாட்டு விஜிலென்ஸ் குழுக்கள்' (அதாவது லஞ்சஒழிப்பு குழுக்கள்) அமைக்கப்பட்டுள்ளன. போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ்காரர்களுக்கு எதிரான ஊழல், முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பிற ஒழுங்கீனமான செயல்களை தடுப்பது, கண்காணிப்பது மற்றும் இதுதொடர்பான புகார்களை விசாரணை செய்வது இந்த குழுக்களின் முக்கிய நோக்கமாகும்.</p><h2>' செல்போன், 'வாட்ஸ்அப்' எண்கள்</h2><p>இதுபோன்ற புகார்களை பொதுமக்கள் எளிதில் தெரிவிக்கும் வகையில், மாவட்டம் மற்றும் மாநகரம் வாரியாக 'உள்நாட்டு விஜிலென்ஸ் குழுக்களுக்கு' செல்போன் மற்றும் 'வாட்ஸ்அப்' எண்கள் கீழ்க்கண்டவாறு வழங்கப்பட்டுள்ளன.</p><p>பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்தி தங்களது முழுமையான ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.</p><h2>ரகசியம்</h2><p>புகார்தாரர்கள் மற்றும் சாட்சிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் அவர்களது அடையாளங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். புகார் அளித்ததற்காக எந்தவொரு புகார்தாரரும் எவ்வித துன்புறுத்தல், அச்சுறுத்தல் அல்லது பழிவாங்கும் நடவடிக்கைக்கும் உட்படுத்தப்படமாட்டார்கள் என்று புகார்தாரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு 'உள்நாட்டு விஜிலென்ஸ் குழுக்கள்' உறுதியளிக்கிறது.</p><p>பெறப்படும் அனைத்து புகார்களும் நியாயமான, பாரபட்சமற்ற மற்றும் உரிய காலக்கெடுவுக்குள் விசாரிக்கப்பட்டு, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன்.</p><h2>கண்காணிப்பு</h2><p>'உள்நாட்டு விஜிலென்ஸ் குழுக்களின்' செயல்பாடுகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், சரக டி.ஐ.ஜி.க்கள், மண்டல ஐ.ஜி.க்கள் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர்கள், கூடுதல் டி.ஜி.பி.க்கள் ஆகியோரால் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.</p><p>என்னுடைய நேரடி கண்காணிப்பும் இந்த குழுக்கள் மீது இருக்கும். பொதுமக்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் புகார்களை தெரிவிக்கலாம்.</p><h2>செல்போன் எண்கள்</h2><p><strong><ins>செல்போன் மற்றும் வாட்ஸ்அப் எண்கள் விவரம் வருமாறு:-</ins></strong></p><p>1. சென்னை கமிஷனரகம் - <strong>7871723000</strong></p><p>2.தாம்பரம் கமிஷனரகம் - <strong>6374514428</strong></p><p>3. ஆவடி கமிஷனரகம் - <strong>9840018110</strong></p><p>4. காஞ்சிபுரம் மாவட்டம் - <strong>9940031700</strong></p><p>5. செங்கல்பட்டு - <strong>9500779100</strong></p><p>6. திருவள்ளூர் - <strong>9498181359</strong></p><p>இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/change-in-malaikottai-express-train-service</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/change-in-malaikottai-express-train-service#comments</comments><guid isPermaLink="false">b03d1b62-ca77-4a08-8bbc-37e87e899ef2</guid><pubDate>Thu, 20 Aug 2026 01:46:34 +0000</pubDate><atom:updated>2026-08-20T01:46:34.776Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்சி,Trichy,மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ்,Malaikottai Express</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/r8gbw6us/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/r8gbw6us/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,  </p><p>சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக, திருச்சி-சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் (எண்:12653/12654) ரெயில் சேவையில் 5 நாட்கள் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி-சென்னை எழும்பூர் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் (எண்:12654), இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 24-ந்தேதி வரை சென்னை எழும்பூருக்கு பதிலாக மாம்பலம் ரெயில் நிலையத்தில் தனது சேவையை நிறைவு செய்யும். </p><p>அதேபோல், சென்னை எழும்பூர்- திருச்சி மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் (எண்:12653) நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 25-ந்தேதி வரை சென்னை எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து இரவு 12.05 மணிக்கு புறப்படும் என்று திருச்சி கோட்ட தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. பயணிகள் இந்த மாற்றத்தை கவனத்தில் கொண்டு தங்க ளது பயணத்தை திட்டமிடுமாறு ரெயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>கூட்ட நெரிசலால் விபரீதம்: அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி 9-ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-due-to-crowd-9th-grade-student-dies-after-being-hit-by-government-bus</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-due-to-crowd-9th-grade-student-dies-after-being-hit-by-government-bus#comments</comments><guid isPermaLink="false">697669a7-9a8f-48b6-bbf9-eec7f00f838f</guid><pubDate>Thu, 20 Aug 2026 01:29:25 +0000</pubDate><atom:updated>2026-08-20T01:29:25.643Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசு பஸ்,Government bus,student,மாமல்லபுரம்,உயிரிழப்பு,மாணவர்,Crowd,Die</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/l6z2oeke/281.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணவர் உயிரிழப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/l6z2oeke/281.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மாமல்லபுரம், </p><p>படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த 9-ம் வகுப்பு மாணவர், நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பலியானார்.</p><p>செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த குன்னப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் என்ற பேரம்பலம். இவரது மகன் தீனா (வயது 13). இவர், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு செல்ல காரணை பஸ் நிறுத்தத்தில் இருந்து தடம் எண் 508 என்ற அரசு பஸ்சில் ஏறினார். பஸ்சில் கூட்டம் நிரம்பி வழிந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவர் தீனா, பஸ்சின் முன்பக்க படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததாக தெரிகிறது.</p><h2>விபத்து</h2><p>வடகடம்பாடி என்ற இடத்தில் பஸ் சென்றுகொண்டிருந்தபோது மாணவர் தீனா, நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். பஸ்சின் பின்பக்க டயர் அவரது காலில் ஏறி இறங்கியது. இதில் அவரது கால் முறிந்து எலும்பு வெளியே வந்தது. உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பூஞ்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். </p><p>பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மாணவர் தீனா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.</p><p>மாணவர் பலியான சம்பவத்தால் அவர் படித்து வந்த அரசு மேல்நிலைப் பள்ளியே கடும் சோகத்தில் மூழ்கியது. இப்பகுதியில் பள்ளி நேரங்களில் குறைவான பஸ்களே இயக்கப்படுவதால் கூட்ட நெரிசல் ஏற்படுவதாகவும், இதனால் மாணவர்கள் படிக்கட்டிலேயே தொங்கியபடி பயணம் செய்வ தால் தற்போது ஒரு உயிர் பலி ஏற்பட்டு உள்ளதாகவும் அந்த பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.</p><h2>வீசாரணை</h2><p>இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் பரசுராமன் மற்றும் போலீசார் வீசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>
தமிழக சட்டசபையில் இன்றைய கூட்ட நிகழ்வுகள் என்னென்ன..?

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-proceedings-in-tamil-nadu-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-proceedings-in-tamil-nadu-assembly#comments</comments><guid isPermaLink="false">c43bb788-4b7b-42a2-b6f2-a8598f768666</guid><pubDate>Thu, 20 Aug 2026 01:11:19 +0000</pubDate><atom:updated>2026-08-20T01:11:19.109Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu Assembly,தமிழக சட்டசபை,minister,அமைச்சர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/eiv94uwo/tnaet.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/eiv94uwo/tnaet.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>தமிழக சட்டசபையில் துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.</p><p>தமிழக சட்டசபையில் இன்றைய கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.  கூட்டம் தொடங்கியதும், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவு ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசி முடிந்தவுடன் அவர்களுடைய கேள்விகளுக்கு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமணன், கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் ஆகியோர் பதிலுரை வழங்குவார்கள். நிறைவாக, தங்களுடைய துறை சார்பில் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.</p> ]]></content:encoded></item><item><title>சம்பா பருவத்துக்கு உகந்த நெல் விதைகளை மட்டுமே விற்க வேண்டும் - விதை ஆய்வு துணை இயக்குனர் அறிவுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/only-paddy-seeds-suitable-for-the-samba-season-should-be-sold-instruction-from-the-deputy-director-of-seed-inspection</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/only-paddy-seeds-suitable-for-the-samba-season-should-be-sold-instruction-from-the-deputy-director-of-seed-inspection#comments</comments><guid isPermaLink="false">5d2a492c-d78f-4583-a8c1-a8d25b6abd55</guid><pubDate>Thu, 20 Aug 2026 01:09:54 +0000</pubDate><atom:updated>2026-08-20T01:09:54.809Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thanjavur,தஞ்சாவூர்,சம்பா நெற்பயிர்,தஞ்சாவூர் செய்திகள்,சம்பா பயிர்கள்,Samba Crops</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/y3qadqc7/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/y3qadqc7/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர்,</p><p>சம்பா பருவத்துக்கு உகந்த நெல் விதைகளை மட்டுமே விற்க வேண்டும் என தஞ்சை மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதா அறிவுறுத்தியுள்ளார்.</p><p>இது தொடர்பாக அவர், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><h2>சம்பா பருவம்</h2><p>தஞ்சை மாவட்டத்தில் சம்பா பருவ நெற்பயிர் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தற்போது தயாராகி வருகின்றனர். தனியார் விதை விற்பனையாளர்கள், சான்று விதைகளில் இரு அட்டைகள் (வெள்ளை அல்லது நீல நிறம்) முறையே சான்று அட்டை மற்றும் விவர அட்டை பொருத்தப்பட்ட விதைகளை மட்டுமே விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். விவர அட்டையில் பயிர், ரகம், குவியல் எண். காலாவதி நாள், பயிர் செய்ய ஏற்ற பருவம் உள்பட 14 வகையான விவரங்கள் விதைச் சட்ட விதிகளின்படி கட்டாயம் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.</p><p>அனைத்து தனியார் விதை விற்பனையாளர்களும் விதை இருப்பு பதிவேடு மற்றும் முளைப்பு அறிக்கை ஆகியவற்றை கட்டாயம் பராமரிக்க வேண்டும். குவியல் வாரியாக தனித்தனி பக்கங்களில் விதை இருப்பு விவரங்களை பதிவிட வேண்டும். நடப்பு சம்பா பருவத்தில் 150 முதல் 160 நாட்கள் வயதுடைய நீண்டகால நெல் ரகங்களே ஏற்றவை. நீண்டகால ரகங்களான சாவித்திரி (சிஆர் 1009), சி.ஆர். 1009 சப்-1 மற்றும் ஏ.டி.டி. 51 போன்ற ரகங்களை முதலில் விற்பனை செய்ய வேண்டும்.</p><h2>2,750 டன் விதைநெல்</h2><p>அதனைத் தொடர்ந்து மத்தியகால நெல் ரகங்களான ஏ.டி.டி.38, 39, 42, 46, வெள்ளைப் பொன்னி, ஐ.ஆர். 20, கோ 43, 46, 50 மற்றும் மேம்படுத்தப்பட்ட வெள்ளைப்பொன்னி போன்ற ரகங்களை விற்பனை செய்ய வேண்டும். வெளிமாநில ரகங்களான பி.பி.டி. 5204, எம்.டி.யூ. 7029, என்.எல்.ஆர். 34449, கே.என்.எம்.1638 போன்ற விதைகளை விற்பனை செய்யும்போது விற்பனையாளர்கள் படிவம் 2-ஐ கட்டாயம் வைத்திருக்க வேண்டும். விதைகளை விற்பனை செய்யும்போது விவசாயிகளுக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும்.</p><p>நீண்டகால மற்றும் மத்தியகால நெல் ரகங்களில் சுமார் 2,750 டன் விதைநெல் தனியார் விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவற்றின் முளைப்புத்திறனை உறுதி செய்யும் வகையில் கும்பகோணம், தஞ்சை மற்றும் பட்டுக் கோட்டை விதை ஆய்வாளர்களால் அலுவலக விதை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, தஞ்சை விதை பரிசோதனை நிலையத்திற்கு முளைப்புத்திறன் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது.</p><h2>உரிய நடவடிக்கை</h2><p>எனவே சம்பா பருவத்துக்கு ஏற்ற நெல் ரகங்களை மட்டுமே விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். சம்பா பருவத்துக்கு உகந்தது அல்லாத <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நெல் ரகங்களை</a> விற்பனை செய்தாலோ அல்லது விதைச் சட்ட விதிகளை பின்பற்றாமல் விற்பனை செய்தாலோ, விதைச் சட்டம்-1966, விதை விதிகள்-1968 மற்றும் விதை கட்டுப்பாட்டு ஆணை-1983 ஆகியவற்றின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>மேற்கண்டவாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் மகளிர் திட்ட நிதியில் ரூ.125 கோடி முறைகேடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-125-crore-misappropriation-of-womens-development-scheme-funds-in-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-125-crore-misappropriation-of-womens-development-scheme-funds-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">07322d80-21b7-4ab9-874d-4e0d25cd33de</guid><pubDate>Thu, 20 Aug 2026 01:03:05 +0000</pubDate><atom:updated>2026-08-20T01:03:05.174Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>முறைகேடு,Rural development department,ஊரக வளர்ச்சித் துறை,மகளிர் மேம்பாட்டு நிறுவனம்,Women&apos;s Development Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/u5mqbh6a/CHENNAI-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/u5mqbh6a/CHENNAI-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மகளிர் திட்ட நிதியில் ரூ.125 கோடி முறைகேடு நடந்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வெளிவந்துள்ளது.</p><p>சென்னை,</p><h2>மகளிர் திட்ட நிதி</h2><p>தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் 1983-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்திற்கு மத்திய, மாநில அரசுகள் சராசரியாக ஆண்டுக்கு சுமார் ரூ.15 ஆயிரம் கோடி நிதி வழங்கி வருகிறது. தமிழகத் தில் 38 மாவட்டங்களில் 388 வட்டார அளவிலான பிளாக்குகள் மற்றும் 12,500 கிராம இயக்க அலகுகள் செயல்பட்டு வருகின்றன.</p><p>இந்த மகளிர் மேம்பாட்டுக்கு வழங்கப்படும் நிதியானது தமிழகத்தில் 186 வட்டாரத்தில் சுமார் ரூ.125 கோடி முறை கேடு நடந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடு குறித்து தேனி மாவட்டம் மேலச்சொக்கநாதபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ராமகிருஷ்ணன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><h2>ரூ.125 கோடி முறைகேடு</h2><p>அதில் கடந்த 5 மாதங்களில் மயிலாடுதுறை, திருவாரூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், தேனி, அரியலூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், தூத்துக்குடி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் சுமார் 186 பிளாக்குகளை தணிக்கை செய்ததில் சுமார் ரூ.125 கோடிக்கு மேல் போலியான பட்டியல்கள் தயார் செய்து பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது.</p><p>அந்த பணம் பயனாளிகளுக்கு செல்ல வேண்டிய நிதி, வட்டார இயக்க மேலாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், அவர்களது உறவினர்கள் மற்றும் தனிநபர்களின் வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இது தவிர பல்வேறு வழிகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளன.</p><h2>சி.பி.ஐ. விசாரணை</h2><p>இதுவரை 186 வட்டாரங்களில் மட்டுமே தணிக்கை செய்யப் பட்ட நிலையில் ரூ.124 கோடியே 74 லட்சத்து 45 ஆயிரத்து 279 முறைகேடு நடந்துள்ளது. மீதம் உள்ள வட்டாரங்களில் தணிக்கை செய்தால் பல நூறு கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றது தெரியவரும். எனவே தமிழகம் முழுவதும் எவ்வளவு முறைகேடு செய்யப்பட்டுள்ளது என்பதை அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி முறைகேடு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளத்துக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-festival-special-trains-to-kerala-via-salem</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-festival-special-trains-to-kerala-via-salem#comments</comments><guid isPermaLink="false">5cbbb538-4292-491e-a97e-63431307abb5</guid><pubDate>Thu, 20 Aug 2026 00:47:24 +0000</pubDate><atom:updated>2026-08-20T00:47:24.141Z</atom:updated><atom:author><atom:name>Ganesh S</atom:name><atom:uri>/api/author/2406201</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,Special trains,Kerala,Onam festival,ஓணம் பண்டிகை,Onam,கேரளம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/klhtg0pf/Untitled-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/klhtg0pf/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஓணம் பண்டிகையை முன்னிட்டு சேலம் வழியாக கேரளத்துக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப் படுகிறது.</p><p>இதுகுறித்து சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-</p><h2>சிறப்பு ரெயில்</h2><p>ஓணம் பண்டிகை வருகிற 26-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பெங்களூரு வில் இருந்து சேலம் வழியாக கேரளம் மாநிலம் திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத் துக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி, இன்று (வியாழக்கிழமை) மாலை 5.10 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் திருவனந்தபுரம் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06569) கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, குப்பம் வழியாக சேலத்துக்கு இரவு 9.25 மணிக்கு வந்தடையும்.</p><p>பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து 9.30 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக மறுநாள் காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்துக்கு சென் றடைகிறது. இதேபோல் மறுமார்க்கமாக நாளை மறுநாள் (சனிக்கிழமை) மதியம் 12.40 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் பெங்களூரு சிறப்பு ரெயில் (வண்டி எண் 06570) போத்தனூர், திருப்பூர், ஈரோடு வழியாக சேலத்துக்கு இரவு 11.25 மணிக்கு வந்தடைகிறது. பின்னர் 11.28 மணிக்கு ரெயில் புறப்பட்டு குப்பம், பங் காருபேட்டை வழியாக மறுநாள் காலை 6 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது.</p><h2>சென்னை சென்ட்ரல்-மங்களூரு</h2><p>இதேபோல், சென்னை சென்ட்ரல்-மங்களூரு சிறப்பு ரெயில் (06041) நாளை (வெள்ளிக்கி ழமை) மற்றும் 28-ந்தேதி ஆகிய 2 நாட்கள் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் சென்னை சென்ட்ரலில் இருந்து (வெள்ளிக்கிழமை) இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, சொரனூர், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு வழியாக மறுநாள் (சனிக்கிழமை) மாலை 5.00 மணிக்கு மங்களூரு ரெயில் நிலையத்தை சென்றடையும்.</p><p>மறுமார்க்கத்தில், மங்களூரு-சென்னை சென்ட்ரல் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சிறப்பு ரெயில்</a> (06042) நாளை மறுநாள்(சனிக்கிழமை) மற்றும் 29-ந்தேதிகளில் இயக்கப்படும். இந்த ரெயில் மங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து சனிக்கிழமை இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு, காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, சொரனூர், பாலக்காடு. போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக மறு நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 11.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை சென்றடையும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-53</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-53#comments</comments><guid isPermaLink="false">52149fa2-f3a5-44cb-946f-71640d271c48</guid><pubDate>Thu, 20 Aug 2026 00:45:08 +0000</pubDate><atom:updated>2026-08-20T00:45:08.597Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல் விலை,டீசல் விலை,Petrol and diesel prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/odo66a6v/petrol.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/odo66a6v/petrol.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.</p> <p>பெட்ரோல், டீசல் விலை</p><p>இந்நிலையில், சென்னையில் இன்று (20.08.2026 வியாழக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ. 99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>வேளாண் மானிய திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம்: தமிழக அரசு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aadhaar-number-mandatory-for-agricultural-subsidy-schemes-tamil-nadu-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aadhaar-number-mandatory-for-agricultural-subsidy-schemes-tamil-nadu-government#comments</comments><guid isPermaLink="false">16d8f4d9-8897-427e-98b3-9d97b3934d14</guid><pubDate>Wed, 19 Aug 2026 23:51:50 +0000</pubDate><atom:updated>2026-08-19T23:51:50.699Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,Agricultural,வேளாண்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/x1efv6ju/Untitled-1.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/x1efv6ju/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p> <p>தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-</p> <p>வேளாண் வணிகத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மாம்பழம், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருத்திக்கான விலை குறைவுக்கான தொகை வழங்கும் திட்டங்களில் மானியம் மற்றும் சலுகைகளை பெறும் பயனாளிகள் தங்களது ஆதார் எண்ணை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் எண் இல்லாதவர்கள், புதிய ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும். ஆதார் எண் கிடைக்கும் வரை, ஆதார் பதிவு செய்ததற்கான ஒப்புகை சீட்டுடன், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம். சாதி சான்றிதழ், மாற் றுத்திறனாளி சான்றிதழ் அல்லது மருத்துவ அடையாள அட்டை உள்ளிட்ட மாற்று ஆவணங் களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பித்து சலுகைகளை பெறலாம். இந்த ஆவணங்களை அதிகாரி கள் இணையதளம் மூலம் சரிபார்ப்பார்கள்.</p>  <p>கைரேகை, முகம் அல்லது கருவிழி பதிவு மூலம் ஆதார் சரிபார்ப்பு தோல்வியடைந்தால், செல் போன் 'ஓ.டி.பி.' அல்லது 'கியூ.ஆர். கோடு' மூலம் சரிபார்க்கப்படும். 18 வயதுக்குட்பட்ட குழந் தைகளுக்கு ஆதார் எண் இல்லை என்றாலும், பெற்றோரின் ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் சலுகைகள் மறுக்கப்பட மாட்டாது. மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு சலுகைகள் மறுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, மத்திய அரசின் நேரடி மானிய பரி மாற்ற திட்டத்தின் 2017-ம் ஆண்டு வழிகாட்டுதலின்படி விதிவிலக்கு நடைமுறைகள் பின்பற்றப் படும். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>

எழும்பூரில் பராமரிப்பு பணி: 4 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/maintenance-work-at-egmore-4-express-trains-to-operate-from-tambaram</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/maintenance-work-at-egmore-4-express-trains-to-operate-from-tambaram#comments</comments><guid isPermaLink="false">2b52a8a0-8ba1-4e97-8b87-7bf8c449d6cb</guid><pubDate>Wed, 19 Aug 2026 22:35:00 +0000</pubDate><atom:updated>2026-08-19T22:35:00.000Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>train service,ரெயில்கள்,பராமரிப்பு பணி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/jmvulgvr/Untitled-1.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/jmvulgvr/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p> <p>தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p> <p>எழும்பூர் ரெயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்புப் பணி காரணமாக, எழும்பூ ரில் இருந்து புறப்படும் சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாம்பரத்திலிருந்தும். மற்ற பகுதிகளில் இருந்து எழும்பூருக்கு வரும் சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாம்பரம் வரையும் இயக்கப்படவுள்ளன. இந்த ரெயில் சேவைகள் ஏற்கனவே 19-ந்தேதி வரை மாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது இன்று (20-ந்தேதி) முதல் வருகிற 26-ந்தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எழும்பூரில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர் செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் (வண்டி எண். 16865), கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (20635), திருச்சி செல்லும் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் (12653) மற்றும் மங்களூரு எக்ஸ்பிரஸ் (16159) ஆகிய ரெயில்கள் நாளை (21-ந்தேதி) முதல் 25-ந்தேதி வரையில் தாம்பரத்தில் இருந்து புறப்படும்.</p><p>இதேபோல, தஞ்சாவூரிலிருந்து புறப்படும் உழவன் எக்ஸ்பிரஸ் (16866), கொல்லத்திலிருந்து புறப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (20636), மங்களூருவிலிருந்து புறப்படும் மங்களூரு எக்ஸ்பி ரஸ் (16160), சேலத்திலிருந்து புறப்படும் எக்ஸ்பிரஸ் (22154) ஆகிய ரெயில்கள் இன்று (20-ந்தேதி) முதல் 24-ந்தேதி வரையில் எழும்பூருக்கு பதிலாக தாம்பரம் வரை இயக்கப்படும். மேலும், திருச்சியிலிருந்து புறப்படும் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் (12654), மேற்கண்ட தேதியில் எழும்பூருக்கு பதிலாக மாம்பலம் வரை இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>
மத்திய மந்திரி அமித்ஷாவுடன் முதல்-அமைச்சர் விஜய் சந்திப்பு
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-meets-union-minister-amit-shah</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-meets-union-minister-amit-shah#comments</comments><guid isPermaLink="false">830ff37b-47d4-4614-9e5e-e832c7e38014</guid><pubDate>Wed, 19 Aug 2026 17:03:22 +0000</pubDate><atom:updated>2026-08-19T17:03:22.498Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>அமித்ஷா,முதல்-அமைச்சர் விஜய்,CMVijay‌</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/nk0dfk7g/Untitled-1.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/nk0dfk7g/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p> <p>தென் மண்டல மாநில முதல்வர்கள் மாநாடு சென்னையை அடுத்த கோவளத்தில் நாளை நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்குகிறார். தமிழக முதல் அமைச்சர் விஜய் துணைத்தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த மாநாட்டில் கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களின் முதல்-மந்திரிகளும் தலைமை செயலாளர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொள்கிறார்கள்.</p><p>இந்த மாநாட்டில் பங்கேற்க உள்துறை மந்திரி அமித்ஷா இரவு 9 மணியளவில் சென்னை வந்தார். பின்னர் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு அவர் வருகை தந்தார்.</p><p>அங்கு நட்சத்திர ஹோட்டலில் மத்திய மந்திரி அமித்ஷாவை முதல்-அமைச்சர் விஜய் பூங் கொத்து கொடுத்து வரவேற்றார். மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆந்திர முதல்-மந்திரி சந்திர பாபு நாயுடு, தெலுங்கானா துணை முதல்-மந்திரி மல்லுப்பட்டி விக்ரமர்கா, அந்தமான்-நிக் கோபர் தீவுகள் துணை நிலை கவர்னர், லட்சத்தீவு அதிகாரிகள் மற்றும் அந்தந்த மாநில உயர்அதிகாரிகள் வந்திருந்தனர்.</p><p>அவர்களும் மத்திய மந்திரி அமித்ஷாவை வரவேற்றனர். அதனை தொடர்ந்து அமித்ஷா சிறிது நேரம் கலந்துரையாடினார். அமித்ஷாவும், விஜய்யும் சந்தித்து சிறிது நேரம் பேசினர். அதன்பின் இரவு விருந்தில் அனைவரும் உணவருந்தினர். </p>]]></content:encoded></item><item><title>‘கருத்து சுதந்திரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் எதிரான நடவடிக்கைகளை த.வெ.க. அரசு கைவிட வேண்டும்’ - முகம்மது முபாரக்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tvk-government-must-abandon-actions-that-go-against-freedom-of-expression-and-democracy-muhammad-mubarak</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tvk-government-must-abandon-actions-that-go-against-freedom-of-expression-and-democracy-muhammad-mubarak#comments</comments><guid isPermaLink="false">de61b99b-05d4-4080-a8e7-1c5542af5ec3</guid><pubDate>Wed, 19 Aug 2026 16:33:46 +0000</pubDate><atom:updated>2026-08-19T16:33:46.836Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை முபாரக்,Nellai Mubarak</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/g2rxgncn/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/g2rxgncn/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை முடக்கும் தமிழக அரசின் சுற்றறிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது என எஸ்டி.பி.ஐ. கட்சியின் தலைவர் முகம்மது முபாரக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-</p><p>“அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் ஜனநாயகப் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு கல்லூரிக் கல்வி ஆணையரால் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருப்பதாக வெளியாகும் செய்திகள் கடும் அதிர்ச்சியை அளிக்கின்றன. மாணவர்களின் உரிமைகளைப் பறிக்கும் இத்தகைய நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.</p><p>மாணவர்கள் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுப்பதற்காகக் காவல்துறை, கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து செயல்பட வேண்டும் என்ற அணுகுமுறை,  இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்கு வழங்கி இருக்கும் ஜனநாயக உரிமைகளுக்கே எதிரானதாகும்.</p><p>மாணவர்கள் பாடப் புத்தகங்களை மட்டும் படிக்கும் எந்திரங்கள் அல்ல; சமூகப் பிரச்சினைகளுக்காகவும் அநீதிகளுக்கு எதிராகவும் குரல் கொடுக்கும் நாட்டின் எதிர்காலத் தூண்கள். அமைதியான வழியில் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யவும், அறப்போராட்டங்களில் ஈடுபடவும் மாணவர்களுக்கு முழு உரிமை உண்டு. அதிகார அழுத்தங்கள் மூலம் மாணவர்களின் குரலை ஒடுக்க நினைப்பது தெளிவான அடக்குமுறையாகும்.</p><p>மாற்றுக் கருத்துகளையும் கேள்விகளையும் கண்டு அச்சப்படுபவர்களே கருத்துச் சுதந்திரத்தை நசுக்க முயல்வார்கள். அதிகாரத்தைக் கொண்டு மாணவர்களின் கேள்விகளைத் தற்காலிகமாகத் தடுக்க முடியுமே தவிர, சமூகப் பொறுப்புள்ள ஒரு தலைமுறை உருவாவதை யாராலும் தடுக்க முடியாது.</p><p>எனவே, கருத்து சுதந்திரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் எதிரான இத்தகைய நடவடிக்கைகளை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். மாணவர்களை அச்சுறுத்தாமல், அவர்களின் ஜனநாயக உரிமைகளை மதித்து நடப்பதே ஒரு சிறந்த அரசிற்கு அழகாகும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>வழிபாட்டு தலங்களில் பாகுபாடு காட்டக்கூடாது - சென்னை ஐகோர்ட்டு திட்டவட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-discrimination-in-places-of-worship-says-madras-high-court</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-discrimination-in-places-of-worship-says-madras-high-court#comments</comments><guid isPermaLink="false">e4cc3534-e0fa-4ba0-9302-25fab295337e</guid><pubDate>Wed, 19 Aug 2026 15:59:13 +0000</pubDate><atom:updated>2026-08-19T15:59:13.727Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>temples,சென்னை ஐகோர்ட்டு,Chennai Highcourt,வழிபாட்டு தலங்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/ej64b7ya/Untitled-11.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/ej64b7ya/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இறைவன் முன் அனைத்து உயிர்களும் சமம் என்பதால், வழிபாட்டு தலங்களில் யாருக்கும் பாகுபாடு காட்ட இடமில்லை என்று சென்னை ஐகோர்ட்டு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.</p><h2>பாரபட்சம்</h2><p>காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள மணவாள மாமுனிகள் சன்னதியில், பிராமணர் அல்லாத தென்கலை வைணவ பக்தர்களுக்கு தீர்த்தம், பிரசாதம் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக மாதவன் ராமானுஜ தாசன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.</p><p>மேலும், பிராமணர் அல்லாத பக்தர்கள் மணவாள மாமுனிகள் சன்னதியில் பிரதான வாசல் வழியாக அனுமதிக்கப்படாமல் பக்கவாட்டு வாசல் வழியே அனுப்பப்படுவதாகவும், நாலாயிர திவ்யப்பிரபந்தம் பாட அனுமதி மறுக்கப்படுவதாகவும் மனுதாரார் குறிப்பிட்டார்.</p><h2>பாகுபாடு இல்லை</h2><p>இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோவில் நிர்வாகம் தரப்பில், "சன்னதிகள் மிகக்குறுகிய இடவசதி கொண்டதாக இருப்பதால் பொது பக்தர்கள் சன்னதிக்கு வெளியே நிறுத்தப்படுகிறார்களே தவிர, இதில் எந்தவித சாதிப்பாகுபாடும் இல்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது.</p><p>குறிப்பிட்ட காலங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் பொது பக்தர்கள் சன்னதிகளில் திவ்யப்பிரபந்தம் பாடி இறைவனை வழிபட எந்த தடையும் இல்லை எனவும், கோவிலில் தீர்த்தம், பிரசாதம் வழங்குவதில் அனைத்து பக்தர்களும் சமமாக நடத்தப்படுவார்கள், எவ்வித பாகுபாடும் காட்டப்படாது என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.</p><h2>வழக்கு முடித்துவைப்பு</h2><p>இந்த உத்தரவாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், "இறைவனின் பார்வையில் அனைத்து உயிர்களும் சமமானவர்கள், இறைவன் யாரிடமும் பாகுபாடு காட்டுவதில்லை என்ற பகவத் கீதையின் வாசகத்தை சுட்டிக்காட்டி வழிபாட்டு தலங்களில் யாருக்கும் பாகுபாடு காட்ட இடமில்லை” என திட்டவட்டமாக தெரிவித்தனர். பின்னர் கோவில் நிர்வாகம் அளித்த உத்தரவாதத்தை உறுதியாக பின்பற்றி செயல்பட உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை வந்தடைந்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/home-minister-amit-shah-has-arrived-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/home-minister-amit-shah-has-arrived-in-chennai#comments</comments><guid isPermaLink="false">27e8ba68-81c0-4c3b-a2cf-5f2dcdeb8fee</guid><pubDate>Wed, 19 Aug 2026 15:58:13 +0000</pubDate><atom:updated>2026-08-19T15:58:13.335Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அமித்ஷா,Chennai,சென்னை,Amit Sha</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/qk5e2pu3/amit-sha.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/qk5e2pu3/amit-sha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தென்மாநில முதல்-மந்திரிகள் மாநாடு நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கடந்த 2022-ம் ஆண்டுக்கு பிறகு இந்த மாநாடு நடைபெறவில்லை. இந்தநிலையில், 31-வது தென்மாநில முதல்-மந்திரிகள் மாநாடு  சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொடங்குகிறது. இந்த மாநாட்டுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை தாங்குகிறார். துணைத்தலைவராக தமிழக முதல் அமைச்சர் விஜய் அறிவிக்கப்பட்டுள்ளார். </p><p>இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா தனி விமானத்தில் இன்று சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அமித்ஷாவுக்கு பாஜகவினர் வரவேற்பு அளித்தனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக கோவளத்திற்கு அமித்ஷா சென்றார். அமித்ஷா வருகை காரணமாக சென்னையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.</p><h2>தென் மண்டல கவுன்சில் கூட்டம்: </h2><p>மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள், கூட்டுறவை பலப்படுத்துவது. கட்டமைப்பு மேம் பாடு, நீர்வள பகிர்வு, கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், பேரிடர் மேலாண்மை, குற்றங்கள் தடுப்பு, எல்லை பிரச்சினைகள் உள்ளிட்ட பல் வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படு கிறது.தற்போது காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகம் மற்றும் தமிழகம் இடையே முரண்பாடுகள் எழுந்த நிலையில் இந்த கூட்டம் மிகுந்த முக்கி யத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.  </p> ]]></content:encoded></item><item><title>அந்தியூர்: சந்தன மரம் வெட்டிய திருச்சி வாலிபர்கள் 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/andiyur-two-trichy-youths-arrested-for-cutting-sandalwood-tree</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/andiyur-two-trichy-youths-arrested-for-cutting-sandalwood-tree#comments</comments><guid isPermaLink="false">acc30358-e161-469d-a618-ab7689f8124a</guid><pubDate>Wed, 19 Aug 2026 15:51:15 +0000</pubDate><atom:updated>2026-08-19T15:51:15.113Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>arrested,திருச்சி,Trichy,2 பேர் கைது,அபராதம்,சந்தன மரம்,Sandalwood trees,அந்தியூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/71xmgn3o/sandal-wood.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ செந்தில்குமார், லோகநாதன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ அந்தியூர்: சந்தன மரம் வெட்டிய திருச்சி வாலிபர்கள் 2 பேர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/71xmgn3o/sandal-wood.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>அந்தியூர்,</p><p>அந்தியூர் அருகே விவசாய தோட்டத்தில் புகுந்து<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"> சந்தன மரத்தை </a>வெட்டி கடத்த முயன்ற திருச்சி வாலிபர்கள் 2 பேரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். அவர்களுக்கு அதிகாரிகள் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.</p> <h2>விடியற்காலையில் துணிகரம்</h2><p>ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் தாமரைக்கரை அருகே உள்ளது ஈரட்டி பீட். இதன் கட்டுப்பாட்டில் உள்ள ஒந்தனை வனப்பகுதியை ஒட்டி, ஈரண்ணன் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் விலை உயர்ந்த சந்தன மரம் ஒன்று இருந்தது. இந்நிலையில், நேற்று அதிகாலை வேளையில் மர்ம நபர்கள் இருவர் அந்தத் தோட்டத்திற்குள் புகுந்து, ரகசியமாக ரம்பத்தால் சந்தன மரத்தை அறுத்து கொண்டிருந்தனர். மரத்தை அறுக்கும் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த விவசாயி ஈரண்ணன், உடனடியாக அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். </p><h2>பொதுமக்களிடம் சிக்கினர்</h2><p>அங்கு திரண்ட பொதுமக்கள், தப்பியோட முயன்ற 2 பேரையும் நாலாபுறமும் சூழ்ந்து கையும் களவுமாக பிடித்து வைத்தனர். இதுகுறித்து அந்தியூர் வனத்துறைக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், வனவர் ஈஸ்வரமூர்த்தி தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பிடிபட்ட இருவரையும் மீட்டு தீவிர விசாரணை நடத்தினர்.</p><h2>சந்தன மரம்</h2><p>விசாரணையில் அவர்கள் திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா நெட்ட வேளாம்பட்டியை சேர்ந்த மருதை என்பவருடைய மகன் செந்தில்குமார் (வயது 35), முசிறி தாலுகா சாலக்காடு அய்யனார் கோவிலை சேர்ந்த கோவிந்தசாமி என்பவருடைய மகன் லோகநாதன் (27). இவர்கள் இருவரும் குருநாதசாமி கோவில் திருவிழாவிற்கு வந்துள்ளனர். பின்னர், பர்கூர் வனப்பகுதிக்குள் சென்று 2 நாட்கள் தங்கியிருந்து, கடத்தும் நோக்கில் சந்தன மரத்தை வெட்டியதை ஒப்புக்கொண்டனர்.</p><h2>ரூ.50 ஆயிரம் அபராதம்</h2><p>இதையடுத்து, அவர்கள் வெட்டி வைத்திருந்த சுமார் 75 கிலோ எடை கொண்ட 5 அடி நீள சந்தன மரம், மரம் அறுக்கப் பயன்படுத்திய ரம்பம் மற்றும் கத்தி ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து, மாவட்ட வன அலுவலரின் உத்தரவின் பேரில், கைது செய்யப்பட்ட செந்தில்குமார் மற்றும் லோகநாதன் ஆகிய இருவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம், மொத்தம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என முதலில் அறிவித்தவர் மு.க.ஸ்டாலின் - கனிமொழி எம்.பி.</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/stalin-first-to-announce-rahul-gandhi-as-pm-says-kanimozhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/stalin-first-to-announce-rahul-gandhi-as-pm-says-kanimozhi#comments</comments><guid isPermaLink="false">bba19432-e403-41c6-934f-a88f67b9abe0</guid><pubDate>Wed, 19 Aug 2026 15:41:08 +0000</pubDate><atom:updated>2026-08-19T15:41:08.037Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,காங்கிரஸ்,Congress,ராகுல் காந்தி,கனிமொழி,Kanimozhi,RahulGandhi,MKstalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/eain0ryk/Untitled-10.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கனிமொழி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/eain0ryk/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் 'நாளைய பிரதமர் விஜய் தான்' என்று சட்டசபையில் அமைச்சர் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது:-</p><p>இதற்கு காங்கிரஸ் இயக்கத்தில் இருக்கக்கூடிய நண்பர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். நாங்கள் கருத்து தெரிவிப்பது முக்கியமல்ல. காங்கிரஸ், திமுக கூட்டணியில் இருந்தபோதே, காங்கிரஸ் கட்சியே இதுபற்றி அறிவிக்காத காலகட்டத்தில், எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் தான் ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும் என்று முதன்முதலில் அறிவித்தார்.</p><p>தற்போது கூட்டணியில் இருந்துகொண்டு இதுபோன்ற அறிவிப்புகள் வெளியாகும்போது, அதுகுறித்து காங்கிரஸ் இயக்கத்தைச் சேர்ந்த நண்பர்கள்தான் பதிலளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் அரசு சென்ட் தொழிற்சாலை அமைக்க, தவெக அரசு முன்வர வேண்டும் - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendran-urges-tamil-nadu-govt-to-establish-scent-factory</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendran-urges-tamil-nadu-govt-to-establish-scent-factory#comments</comments><guid isPermaLink="false">88b78aac-4179-4c7b-bd2d-20699388b9e7</guid><pubDate>Wed, 19 Aug 2026 15:16:14 +0000</pubDate><atom:updated>2026-08-19T15:16:14.419Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,தமிழகம்,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,factory,தொழிற்சாலை,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,தவெக அரசு,TVK Government</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/yys7npv0/nainar-nagendheran.new.gif" width="752"><media:title type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/yys7npv0/nainar-nagendheran.new.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் அரசு சென்ட் தொழிற்சாலை அமைக்க, தவெக அரசு முன்வர வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன்</a> தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>குண்டுமல்லி பூ</h2><p>கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் போதிய விலை கிடைக்காததாலும், முறையாக சந்தைப்படுத்த முடியாததாலும் சுமார் 1.5 டன் எடையுள்ள குண்டுமல்லி பூக்களை விவசாயிகள் தென்பெண்ணை ஆற்றில் வீசி சென்றுள்ள சம்பவம் மிகுந்த வருத்தமளிக்கிறது. </p><h2> பூக்கள் சாகுபடி</h2><p>காவேரிப்பட்டினம், அவதானப்பட்டி, திம்மாபுரம், சந்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கிட்டத்தட்ட சுமார் 1500-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் பூக்கள் சாகுபடி நடந்து வரும் நிலையில், அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக இந்த முறை பருவம் தவறி குண்டுமல்லிகை பூக்கள் முன்னரே பூத்து விட்டன. இதனால் சந்தையில் ஏற்பட்ட கடும் விலை சரிவால், இந்த ஆண்டின் மகசூலை நம்பியிருந்த பூ விவசாயிகளும் தற்போது தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். </p><h2>சென்ட் தொழிற்சாலை</h2><p>காய்கறிகள் மற்றும் பழங்களை விட பூக்கள் மிக மிக மென்மையானவை, எளிதில் வாடி போகக்கூடியவை, மிக நீண்ட நாட்கள் பதப்படுத்த முடியாதவை. எனவே மல்லி, மரிக்கொழுந்து, சாமந்தி, அரளி உள்ளிட்ட பூக்கள் பெருமளவில் விளையும் பகுதிகளான மதுரை, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை, சேலம், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு சார்பில் ஒரு சென்ட் தொழிற்சாலை அமைக்க வேண்டும். </p><p>மேலும், எதிர்பாரா இயற்கை பொய்த்தலை சமாளித்து, நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், நியாயமான விலைக்கு அரசே நேரடியாக விவசாயிகளிடம் இருந்து பூக்களை கொள்முதல் செய்ய வேண்டும் என <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜயிடம்</a> கோரிக்கை வைக்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தனியார் நிறுவனம் மூலம் போக்குவரத்துக் கழகங்களில் நடத்துநர்களை நியமிப்பதா? - சீமான் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/private-firm-appointments-in-transport-corporations-seeman-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/private-firm-appointments-in-transport-corporations-seeman-condemns#comments</comments><guid isPermaLink="false">9e4875ed-1b35-485f-b39a-7829fa3798ef</guid><pubDate>Wed, 19 Aug 2026 15:13:06 +0000</pubDate><atom:updated>2026-08-19T15:13:06.597Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,Seeman,Transport,போக்குவரத்துக் கழகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/t1gkag7f/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சீமான்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/t1gkag7f/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>உத்தரப்பிரதேச தனியார் நிறுவனம் மூலம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் நடத்துநர்களை நியமிப்பது தமிழ்நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் (MTC) பேருந்துகளில் காலியாகவுள்ள 1,797 நடத்துநர் பணியிடங்களை, 61.56 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்காக, உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 'எஸ்.எஸ். எண்டர்பிரைசஸ்' (S.S. Enterprises) என்ற தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. அரசுப்பணியிடங்களில் ஊழியர்களை ஒப்பந்த முறையில் நியமனம் செய்வதைக் கைவிட்டு, நிரந்தர ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்று போராடி வரும் வேளையில், உத்தரப்பிரதேச தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை அளித்துள்ள ஊழியர்களின் உரிமைப்பறிப்பு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் இறையாண்மைக்கும் எதிரான கொடுஞ்செயலாகும்.</p><p>தமிழ்நாட்டில் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடிக்கொண்டிருக்கும் நிலையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக நடத்துநர்களை உத்தரப்பிரதேச மாநில நிறுவனத்தின் மூலம் நியமிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? இதற்குத்தான் இளைஞர்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா முதல்வர் அவர்களே? உத்தரப்பிரதேச நிறுவனம் தமிழக இளைஞர்களைப் பணியமர்த்துமா? அல்லது இந்தி பேசும் வடமாநில இளைஞர்களைப் பணியமர்த்துமா? அப்படியென்றால் அது மறைமுக இந்தி திணிப்பிற்கு வழிவகுக்காதா? ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள வங்கிகள், தொடர்வண்டி நிலையங்கள், அஞ்சலகங்கள் உட்பட மத்திய அரசு நிறுவனங்களில் இந்தி பேசும் அதிகாரிகளால் தமிழ்நாடு மக்கள் பாதிப்புக்கு ஆளாவது போதாது? தமிழ்நாடு பேருந்துகளிலும் இனி மொழி புரியாத வடமாநிலத்தவரால் தமிழ்நாட்டு மக்கள் தத்தளிக்க வேண்டுமா?</p><p>தமிழ்நாட்டிற்கான டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கர்நாடகாவைச் சேர்ந்தவரை நியமித்தபோதே நாம் தமிழர் கட்சி அதனைக் கடுமையாக எதிர்த்தது. அதற்கான பலனை கர்நாடக முதல்வரின் பதிலடியால் தற்போது தவெக அரசு எதிர்கொள்கிறது. கர்நாடக வனத்துறையால் 3 தமிழர் கொல்லப்பட்டதற்கு தமிழ்நாடு முதல்வர் கண்டனம் தெரிவித்ததற்கு, எங்கள் மாநில விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று காட்டமாக கர்நாடக முதல்வர் எதிர்வினை ஆற்றும் அளவுக்கு, மாநில நிர்வாகத்தில் மற்ற மாநிலத்தவர் தலையிடக்கூடாது என்பதில் கர்நாடக அரசு இறுக்கமாக இருக்கின்றது. கர்நாடக முதல்வரின் அடாவடி பதில் ஏற்புடையது இல்லை என்றாலும், அரச நிர்வாகத்தில் மற்ற மாநிலத்தவரின் தலையீடு இருக்க கூடாது என்ற அத்தகைய உறுதியான நிலைப்பாடு தவெக அரசுக்கு ஏன் வரவில்லை? தவெக அரசு எந்த அடிப்படையில் தமிழ்நாட்டின் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியிடங்களை உத்திரப்பிரதேச தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்கியுள்ளது? இது மாநில இறையாண்மைக்கும், தன்னாட்சிக்கும் எதிரானது இல்லையா? தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசுப்பணியிடங்களைத் தனியாருக்கு தாரைவார்ப்பதைத் தடுத்து நிறுத்துவோம், என்று வாக்குறுதியளித்த தவெக, ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன் போக்குவரத்துக் கழகப் பணியிடங்களைத் தனியாரிடம் ஒப்படைப்பது வேலையில்லாமல் திண்டாடும் லட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்குச் செய்கின்ற பெருந்துரோகமாகும்.</p><p>அரசுப்பணியிடங்களை உத்திரப்பிரதேச தனியார் நிறுவனத்திற்குத் தாரைவார்த்துவிட்டு, வேலையில்லா தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு மாதம் 4,000 ரூபாய் உதவித்தொகை தருவோம் என்று தவெக அரசு ஏமாற்றுவது வெட்கக்கேடானது. இது அரசுப்பணிக்காக இரவும் பகலும் அயராது படிக்கும் தமிழிளம் தலைமுறை பிள்ளைகளுக்குச் செய்கின்ற பெருந்துரோகமாகும்.</p><p>ஆகவே, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் நடத்துநர் பணியிடங்களை உத்தரபிரதேச தனியார் நிறுவனத்திற்குத் தாரைவார்க்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டுமெனவும், போக்குவரத்துக் கழகப் பணியாளர்களை நிரந்தர அரசுப் பணியாளர்களாக, தமிழ்நாடு அரசே தெரிவு செய்து நியமிக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தெலுங்கானா துணை முதல்-மந்திரி தமிழகம் வருகை

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/telangana-deputy-chief-minister-visits-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/telangana-deputy-chief-minister-visits-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">8c263a26-b8d1-44e9-a818-b59d3b0fbbf4</guid><pubDate>Wed, 19 Aug 2026 15:00:40 +0000</pubDate><atom:updated>2026-08-19T15:00:40.445Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தெலுங்கானா,Telangana,துணை முதல்-மந்திரி,Deputy CM</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/xi4rz0nr/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/xi4rz0nr/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>தென்மாநில முதல்-மந்திரிகள் மாநாடு நாளை சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ளது.  </p><p>மத்திய உள்துறை மந்திரி <a href="https://www.dailythanthi.com/">அமித்ஷா </a>தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில்  தமிழக முதல்-அமைச்சர் விஜய்,  கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், கேரளம் முதல்-மந்திரி சதீசன், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.</p><h2>தெலுங்கானா துணை முதல்-மந்திரி வருகை</h2><p>இந்நிலையில், தெலுங்கானா துணை முதல்-மந்திரி மல்லு விக்ரமர்கா தமிழகம் வந்துள்ளார். விமானம் மூலம் சென்னை வந்த அவர் கோவளத்தில் நாளை நடைபெறும் தென்மாநில முதல்-மந்திரிகள் மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளார்.  </p> ]]></content:encoded></item><item><title>தேவதானப்பட்டி அருகே பன்றிகள் அட்டகாசம்: மக்காச்சோள பயிர்கள் சேதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/maize-crops-destroyed-by-wild-boars-in-devadanpatti-region</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/maize-crops-destroyed-by-wild-boars-in-devadanpatti-region#comments</comments><guid isPermaLink="false">405a02b6-4b3b-4883-b0a9-8538d0a25dea</guid><pubDate>Wed, 19 Aug 2026 14:59:28 +0000</pubDate><atom:updated>2026-08-19T14:59:28.342Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அட்டகாசம்,damaged,சேதம்,மக்காச்சோள பயிர்கள்,Pigs,பன்றிகள்,தேவதானப்பட்டி,Maize crop</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/7jvgq87j/pig.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மக்காச்சோள பயிர்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ தேவதானப்பட்டி அருகே பன்றிகள் அட்டகாசம்: மக்காச்சோள பயிர்கள் சேதம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/7jvgq87j/pig.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேவதானப்பட்டி,</p><p>தேவதானப்பட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி மற்றும் சிந்துவம்பட்டி பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்திருந்தனர். தற்போது இந்த பயிர்கள் அனைத்தும் நன்கு வளர்ந்து, அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளன.</p> <h2>பன்றிகள் அட்டகாசம்</h2><p>இந்த நிலையில், நேற்று இரவு பயிர்கள் விளைந்துள்ள வயல்களுக்குள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">காட்டுப்பன்றிகள்</a> கூட்டம் கூட்டமாக புகுந்துள்ளன. அவை அங்கிருந்த மக்காச்சோள செடிகளை கடித்து குதறி, மிதித்து நாசப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஏக்கர் கணக்கில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம் கடுமையாக சேதமடைந்துள்ளது.</p> <h2>விவசாயிகள் வேதனை</h2><p>கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்த சூழலிலும் பல மாதங்களாக கடும் சிரமப்பட்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">மக்காச்சோளத்தை</a> சாகுபடி செய்தோம். ஆனால், அறுவடைக்கு தயாரான நேரத்தில் பன்றிகள் புகுந்து அனைத்தையும் நாசம் செய்துவிட்டன. இதனால் பெரும் மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. </p><h2>கோரிக்கை</h2><p>இப்பகுதியில் தற்போது பன்றிகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மீதமுள்ள பயிர்களையாவது காப்பாற்ற முடியுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பன்றிகளால் சேதமடைந்த பயிர்களை நேரில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பால் கொள்முதல் விலை உயர்வு - கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ. வரவேற்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/hike-in-milk-procurement-price-welcomed-by-mla-kanimozhi-santhosh</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/hike-in-milk-procurement-price-welcomed-by-mla-kanimozhi-santhosh#comments</comments><guid isPermaLink="false">0c9b103f-f941-4c1a-9e4a-3bafa99640b1</guid><pubDate>Wed, 19 Aug 2026 14:26:35 +0000</pubDate><atom:updated>2026-08-19T14:26:35.300Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Milk procurement,பால் கொள்முதல் விலை,கனிமொழி சந்தோஷ்,kanimozhi santhosh</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/5u3l8sv7/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/5u3l8sv7/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>தமிழ்நாட்டில் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 38 ரூபாயில் இருந்து 41 ரூபாயாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதற்கு கோவை கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் வரவேற்பு தெரிவித்துள்ளார். </p><p>இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் எதிர்கொள்ளும் உற்பத்தி செலவுகள் மற்றும் அவர்களின் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் வழங்கும் வகையில் இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p>லிட்டருக்கு மூன்று ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதன் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்குக் கூடுதல் வருமானம் கிடைப்பதுடன், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்த நடவடிக்கை பெரிதும் உதவும்  என அவர் தெரிவித்துள்ளார். </p><p>மேலும், பால் உற்பத்தியை ஊக்குவித்து கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்த இந்த விலை உயர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என தெரிவித்துள்ள கனிமொழி சந்தோஷ், விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் நலனுக்காக தொடர்ந்து செயல்படுவோம் என்று உறுதியளித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>14 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-till-10-pm-in-14-districts</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-till-10-pm-in-14-districts#comments</comments><guid isPermaLink="false">3310ab7f-3479-463a-aa21-6cf3ebef544d</guid><pubDate>Wed, 19 Aug 2026 14:11:23 +0000</pubDate><atom:updated>2026-08-19T14:11:23.693Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/jfeaxvtg/Untitled-8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/jfeaxvtg/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தர்மபுரி, விழுப்புரம், சேலம், நாமக்கல், பெரம்பலூர், கரூர், சிவகங்கை, மதுரை, தஞ்சாவூர், திருச்சி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்கப்படும் என்ற அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் - டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/withdraw-vehicle-announcement-for-mlas-says-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/withdraw-vehicle-announcement-for-mlas-says-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">43702209-9ffc-4aa3-a1ab-8d8be8baa3c5</guid><pubDate>Wed, 19 Aug 2026 13:40:35 +0000</pubDate><atom:updated>2026-08-19T13:40:35.380Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,தமிழக சட்டசபை,TN Assembly</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/9mlf179f/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/9mlf179f/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கப்படும் என்ற அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அரசு சார்பில் வாகனமும், ஓட்டுநரும், வாகனப் பராமரிப்புக்காக மாதந்தோறும் ரூ.75 ஆயிரமும், உதவியாளருக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்ற முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் அறிவிப்பு “கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது” போன்ற செயலாகும்.</p><p>சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே சொந்தமாக வாகனம் வைத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு கூடுதலாக அரசு சார்பில் கார் வழங்குவதும், மாதந்தோறும் ரூ.75 ஆயிரம் வாகனப் பராமரிப்புத் தொகையாக வழங்குவதும் அரசுக்கு அவசியமற்ற கூடுதல் செலவாகவே பார்க்க வேண்டியுள்ளது.</p><p>தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளாக இருந்து, தவெக சார்பில் போட்டியிட்டு முதன்முறையாக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சில உறுப்பினர்களுக்கு கார் வழங்க வேண்டும் என்றால், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தனது சொந்த செலவிலோ அல்லது கட்சி செலவிலோ வழங்கலாமே என்ற கேள்விதான் தற்போது அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.</p><p>தமிழக அரசின் கஜானா காலியாக இருப்பதாகவும், சுமார் ரூ.13 லட்சம் கோடி கடனில் இருப்பதாகவும் வெள்ளை அறிக்கை வெளியிட்டதோடு, நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, “விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்தல், அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.2,500 வழங்குதல், ஆண்டுக்கு ஆறு இலவச சிலிண்டர்கள் வழங்குதல், அனைத்து மகளிருக்கும் இலவசப் பேருந்துப் பயணம் வழங்குதல்” எனத் தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுக்கும் தவெக அரசுக்கு, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனங்கள் வாங்குவதற்கு மட்டும் நிதி எங்கிருந்து வந்தது?</p><p>“மக்கள் வரிப்பணத்திலிருந்து ஒரு பைசா கூடத் தொட மாட்டேன்; தொட்டவர்களையும் விடமாட்டேன்” என வீரவசனம் பேசிய முதல்-அமைச்சர், தற்போது அதே மக்களின் வரிப்பணத்திலிருந்து பல நூறு கோடி ரூபாய் செலவில் வாகனங்களை வாங்கி வீணடிப்பது எந்த வகையில் நியாயமாகும்?</p><p>எனவே, தனது துறையின் உச்சத்தை விட்டுவிட்டு, மக்களுக்குச் சேவை செய்வதற்காக அரசியலுக்கு வந்ததாகக் கூறும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் வாகனம் இல்லாத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தனது சொந்த செலவிலோ அல்லது கட்சி செலவிலோ வாங்கித் தர வேண்டுமே தவிர, சட்டமன்ற உறுப்பினர்களைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு, “கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது” போல் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கப்படும் என்ற தனது அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>காஞ்சிபுரம்: உயர் அழுத்த மின் கம்பி உரசி வெல்டிங் தொழிலாளி மரணம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kanchipuram-high-voltage-power-line-welder-death</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kanchipuram-high-voltage-power-line-welder-death#comments</comments><guid isPermaLink="false">ee8cbea4-57f6-4aa3-91b1-0ff541a45a31</guid><pubDate>Wed, 19 Aug 2026 13:18:19 +0000</pubDate><atom:updated>2026-08-19T13:18:19.179Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Worker,தொழிலாளி,மரணம்,Kanchipuram,காஞ்சிபுரம்,power line,மின் கம்பி,In Kanchipuram</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/mqr86x0t/kanniappan.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கன்னியப்பன்]]></media:title><media:description type="html"><![CDATA[ மின் கம்பி உரசி வெல்டிங் தொழிலாளி கன்னியப்பன் மரணம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/mqr86x0t/kanniappan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>காஞ்சிபுரம்,</p><p>காஞ்சிபுரத்தில் உயர் அழுத்த மின் கம்பி உரசி வெல்டிங் தொழிலாளி மரணம்.</p><h2>கட்டுமான பணிகள்</h2><p>காஞ்சிபுரம் புதிய ரெயில் நிலையம் அருகே வேகமாக வளர்ந்து வரும் புறநகர் பகுதியான இந்திரா நகர், ஜி.எஸ்.ஆர் அவென்யூவில் புதிய வீடு ஒன்றின் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன.​ தற்போது வீட்டின் இரண்டாவது மாடி கட்டுமான பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது.</p><h2>வெல்டிங் தொழிலாளி</h2><p>இதற்காக, மாடித் தடுப்புகள் அமைக்கும் பணிக்குத் தேவையான இரும்புச் கம்பிகளை கீழிருந்து மேலே ஏற்றும் பணியில், உக்கல் பகுதியைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி கன்னியப்பன் மற்றும் இதர தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.</p><h2>மரணம்</h2><p>பணியின் போது, இரும்பு கம்பிகளை கீழிருந்து மேல் நோக்கி உயர்த்த முயன்றபோது, எதிர்பாராதவிதமாக அருகில் சென்றுகொண்டிருந்த உயர் அழுத்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF">மின்சார கம்பியின்</a> மீது இரும்பு ராடு உரசியது. இதில் கண் இமைக்கும் நேரத்தில் இரும்பு கம்பி வழியாக பயங்கர வேகத்தில் மின்சாரம் பாய்ந்தது. மின்சார அதிர்வில் தூக்கி வீசப்பட்ட வெல்டிங் தொழிலாளி கன்னியப்பன், உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p>  <h2>மின்மாற்றி வெடித்தது</h2><p>இதற்கிடையே, மின்சாரம் தாக்கிய அதிர்வில் அருகில் இருந்த மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) திடீரென பழுதடைந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அந்த பகுதியே அதிரும் வகையில் சத்தம் கேட்டது. புகை மண்டலத்துடன் மின்மாற்றி வெடித்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அலறியடித்தபடி ஓடிவந்தனர். அங்கு கன்னியப்பன் மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.</p><p>இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘நடிகர் ராஜ்குமார் மீட்பில் தமிழர்களின் பங்கு குறித்து டி.கே.சிவக்குமார் மறந்துவிட்டார்’ - பழ.நெடுமாறன் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dk-shivakumar-has-forgotten-the-role-played-by-tamils-in-the-rescue-of-actor-rajkumar-pazhanedumaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dk-shivakumar-has-forgotten-the-role-played-by-tamils-in-the-rescue-of-actor-rajkumar-pazhanedumaran#comments</comments><guid isPermaLink="false">3fc54bda-4361-4259-a4c5-6b8641315f66</guid><pubDate>Wed, 19 Aug 2026 13:12:14 +0000</pubDate><atom:updated>2026-08-19T13:12:14.989Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டி.கே.சிவக்குமார்,DK Sivakumar,பழ.நெடுமாறன்,Pazha.Nedumaran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/mgir9mte/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/mgir9mte/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“எங்கள் மாநிலத்தின் சட்ட ஒழுங்கை எவ்வாறு பாதுகாப்பது என்பது எங்களுக்குத் தெரியும். தமிழகத் தலைவர்கள் எங்கள் மாநில விவகாரத்தில் தலையிட கூடாது என கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.</p><p>மேய்ச்சலுக்குச் சென்ற தங்கள் மாடுகள் திரும்பவில்லை என்பதற்காக அவற்றைத் தேடி காட்டுக்குள் சென்ற மூன்று தமிழர்களை கர்நாடக வனத்துறையினர் சுட்டுப் படுகொலை செய்திருப்பதை தமிழ்நாட்டு முதல்-அமைச்சரும், அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் கண்டித்திருக்கிறார்கள். இதுவொரு மனிதநேயப் பிரச்சனை. எந்த மாநிலத்திலும் மனிதநேயம் மீறப்படுமானால், அதைக் கண்டிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு.</p><p>2000-ம் ஆண்டில் கர்நாடக எல்லைக்குள் கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தி கர்நாடக காட்டுக்குள் சிறை வைத்திருந்தபோது, அப்போதைய கர்நாடக முதல்-மந்திரி கிருஷ்ணா, மூன்று முறை தமிழகத்திற்கு ஓடோடி வந்து அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதியிடம் ராஜ்குமாரை மீட்க உதவும்படி வேண்டிக்கொண்டார். அப்போது வீரப்பன் தமிழக முதல்-அமைச்சருக்கு அனுப்பிய செய்தியில் “நெடுமாறனை அனுப்பினால் பேசுவதற்குத் தயார்” என்று குறிப்பிட்டிருந்தார். </p><p>அதற்கிணங்க தமிழக முதல்-அமைச்சர் என்னை வேண்டிக்கொண்டபடியும், கர்நாடக முதல்-மந்திரி கிருஷ்ணா என்னை அழைத்து என்னிடம் வேண்டிக்கொண்டபடியும், நானும், நக்கீரன் கோபால், கொளத்தூர் மணி, பேரா.கல்யாணி, சுகுமார் ஆகிய தமிழர்கள் காட்டுக்குள் சென்று ஐந்து நாட்கள் வீரப்பன் குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அதற்குப்பின் நடிகர் ராஜ்குமார், அவர் மருமகன் கோவிந்தராஜ் ஆகியோரை விடுவித்துப் பத்திரமாக அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தோம். அந்த நிகழ்ச்சி நடைபெற்றபோது, “இது எங்கள் மாநிலப் பிரச்சனை; தமிழர்கள் எதற்காக வருகிறீர்கள் என்று யாராவது கேட்டார்களா? அன்று நாங்கள் மனிதநேயத்துடன் செயல்பட்டிருக்காவிட்டால், இரு மாநிலங்களிலும் இனக்கலவரங்கள் மூண்டெழுந்து விரும்பத்தகாத நிகழ்ச்சிகள், படுகொலைகள் நடைபெற்றிருக்கும். </p><p>எந்தவித குற்றச்செயலிலும் ஈடுபடாத அப்பாவித் தமிழர்கள் மூவரைப் படுகொலை செய்துவிட்டு அதை திரையிட்டு மறைக்க கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் சிறிதளவும் மனசாட்சியில்லாமல் பேசுவதைப் பார்க்கும்போது, அண்ணல் காந்தியடிகள் தலைமை தாங்கி நடத்திய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்தானா? என்ற ஐயம் எழுகிறது. முதல்-மந்திரி போன்ற பொறுப்பான பதவிகளில் இவரைப் போன்றவர்கள் தொடர்ந்து இருக்க அனுமதிப்பது அவர் சார்ந்துள்ள கட்சிக்குப் பேரிழுக்காகும்.   </p><p>தமிழர்கள் அனைவரையும் மட்டுமல்ல, மாந்தநேயம் கொண்டவர்கள் அனைவரையும் பதைபதைக்க வைத்திருக்கும் மூன்று தமிழர்களின் படுகொலைக்குக் காரணமானவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தரவும், எதிர்காலத்தில் கர்நாடகம் வாழ் தமிழர்கள் யாருக்கும் இத்தகைய நிலை ஏற்படாமல் பாதுகாக்கவும், தேசிய மனித உரிமை ஆணையத்திற்கோ அல்லது சுப்ரீம் கோர்ட்டுக்கோ இப்பிரச்சனையை உடனடியாக கொண்டுசெல்ல உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதல்-அமைச்சரை வேண்டிக்கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>ஓராண்டுக்கு பிறகும் நினைவில் வைத்து சாலை அமைக்க சொன்ன விஜய்- சட்டசபையில் அமைச்சர் ஆனந்த் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vijay-remembered-the-request-to-lay-the-road-even-after-a-yearminister-anand-shares-details-in-the-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vijay-remembered-the-request-to-lay-the-road-even-after-a-yearminister-anand-shares-details-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">ff704f6a-0afd-4039-8c7c-1019d19e9a31</guid><pubDate>Wed, 19 Aug 2026 13:11:38 +0000</pubDate><atom:updated>2026-08-19T13:11:38.083Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,சட்டசபை,Bussy Anand,Assembly</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/541qavt6/bussy-anand.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/541qavt6/bussy-anand.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சட்டசபையில் மானியக்கோரிக்கை விவாதத்தின் போது, தி.மு.க. உறுப்பினர் பெரியசாமி, 'எங்கள் ஆட்சியில் மலையில் இருக்கும் கிராமங்களுக்கு முதல்-அமைச்சர் சாலைதிட்டம் மட்டுமல்லாது, அத்தனை திட்டங்களிலும் சாலைகள் அமைத்து கொடுத்து இருக்கிறோம். மலைப்பகுதிகளில் இருக்கும் சாலைகளை இணைக்கும் பகுதிகளை முடித்துள்ளோம். 5 சாலைகள் மட்டும்தான் மீதம் இருக்கிறது. அதுவும் வனத்துறை அனுமதி கிடைக்காததால்தான். அந்த திட்டத்துக்காக ரூ.100 கோடி ஒதுக்கியிருக்கிறீர்கள்' என்றார்.</p><p>அதற்கு அமைச்சர் ஆனந்த் எழுந்து பதிலளித்தபோது, 'திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தாண்டிக்குடி பஞ்சாயத்தில் கடந்த ஆண்டு மே மாதம் எங்கள் தலைவர் படப்பிடிப்புக்காக சென்றிருந்தார். ஒரு காட்சி எடுக்க கரடுமுரடான பாதையில் ஜீப்பில் சென்றார். நானும் கூட சென்றிருந்தேன். கீழே வரும்போது ஒரு மணி நேரம் தனியாக நடந்து வந்தார். வந்தவுடன் 15 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை. சொந்த செலவில் சாலைகள் அமைக்கலாமா? என்றார். அப்போது நம்மல பேனர் வைக்கவே விடல... இதுல எங்க ரோடு போட விடுவாங்க சார் என்று நான் சொன்னேன். நம்முடைய ஆட்சி வந்ததும் சாலை அமைத்துவிடலாம் என்றேன். உடனே சிரித்தார். நான் பதவி ஏற்ற 5-வது நாளில் முதல்-அமைச்சர் அலுவலகத்தில் இருந்து நோட் சீட் வருகிறது. தாண்டிக்குடி கிராமத்துக்கு சாலை அமைக்க வேண்டும் என தெரிவித்திருந்தது. நான் மறந்துவிட்டேன். அவர் நினைவில் வைத்து உத்தரவிட்டார். இப்போது ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டு வேலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது' என்றார்.</p><p>அதனைத்தொடர்ந்து பெரியசாமி கூறுகையில், 'கூடம் நகர்தான் அமைச்சர் சொல்கிறார். பிரதான சாலைகளில் அது இல்லை. கூடம்நகருக்கு நாங்கள் சாலைகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அதில் டெண்டர் எடுத்த வீரக்குமார் என்பவர் இறந்துவிட்டார். அதன் பிறகு மீண்டும் டெண்டர் வைத்து அதில்தான் இப்போது பணி நடக்கிறது. அதற்கு டெண்டர் கொடுத்ததும் எங்கள் ஆட்சிதான்' என்றார்.</p> ]]></content:encoded></item><item><title>2 நாட்களுக்கு &apos;கள்ளக்கடல்&apos; எச்சரிக்கை: கடற்கரை சுற்றுலா மையங்கள் தீவிர கண்காணிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/two-day-freak-sea-warning-coastal-tourism-centers-under-strict-monitoring</link><comments>https://www.dailythanthi.com/news/weather/two-day-freak-sea-warning-coastal-tourism-centers-under-strict-monitoring#comments</comments><guid isPermaLink="false">d7632d70-c1ae-4a1e-9b03-55b6a0564b79</guid><pubDate>Wed, 19 Aug 2026 12:51:28 +0000</pubDate><atom:updated>2026-08-19T12:51:28.581Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>warning,எச்சரிக்கை,கண்காணிப்பு,கள்ளக்கடல்,சுற்றுலா மையங்கள்,Swell Surge</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/l5xq6bv4/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/l5xq6bv4/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தென் இந்திய கடலோரப் பகுதிகளில் கள்ளக்கடல் நிகழ்வு நடைபெறக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><h2>கள்ளக்கடல் எச்சரிக்கை</h2><p>தென் இந்திய கடற்கரை பகுதிகளுக்கு இந்திய தேசிய கடல்சார் தகவல் சேவை மையம் 'கள்ளக்கடல்' எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 13-ந்தேதி தென் இந்தியப் பெருங்கடலில், இந்திய கடற்கரையில் இருந்து சுமார் 10,000 கி.மீ. தொலைவில் உருவான உயர் ஆற்றல் கொண்ட நீண்ட அலைகள், தற்போது வடக்கு நோக்கி நகர்ந்து வருகின்றன. இந்த அலைகளின் கால அளவு சுமார் 21 வினாடிகள் என்பதால், அதிக சக்தியுடன் கரையைத் தாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>2 நாட்கள் இருக்கும்</h2><p>இந்த அலைகள் இன்று (19-ந்தேதி) அதிகாலை முதல் இந்தியாவின் தென் முனையை தாக்கத் தொடங்கி, மாலை நேரத்தில் உச்சத்தை அடையும் என கணிக்கப்பட்டுள்ளது. கேரளா, தென் தமிழ்நாடு (கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம்) மற்றும் லட்சத்தீவு ஆகிய பகுதிகளை தாக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இன்று அதிகாலை 2.30 மணி முதல் நாளை (20-ந்தேதி) மாலை 5.30 மணி வரை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப்போது உயர் அலைகளுடன் கடல் ஏற்றமும் சேர்வதால், தாழ்வான கடற்கரை பகுதிகளில் கடல் நீர் திடீரென உட்புகுந்து வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது.</p><aside><cite>'கள்ளக்கடல்' என்பது திடீரென கரைக்கு வரும் கடல் அலைகளை குறிக்கிறது. சாதாரணமாக கடல் அலைகள் காற்றால் அருகிலேயே உருவாகும். ஆனால் கள்ளக்கடல் அப்படி இல்லை, நம்மிடம் இருந்து 5,000 முதல் 10,000 கி.மீ. தொலைவில், அண்டார்டிகாவில் தென் பெருங்கடலில், பெரும்புயல் அல்லது குறைந்த காற்றழுத்தம் உருவாகும். அந்த நீண்ட அலைகள், காற்று இல்லாமலேயே சக்தியை இழக்காமல் பல நாட்கள் பயணித்து இந்திய கடற்கரைக்கு வரும்.</cite>கள்ளக்கடல் என்றால் என்ன?</aside><aside><cite>இந்த அலைகளின் இடைவெளி 18 முதல் 22 வினாடிகள் இருக்கும். சாதாரண அலைகளின் இடைவெளி 8 முதல் 10 வினாடிகள் தான். இந்த கள்ளக்கடல் உருவாகும் போது, கடல் பார்க்க அமைதியாக இருக்கும். வானிலை நன்றாக இருக்கும். எந்த மழையும், காற்றும் இருக்காது. திடீரென ஒரு பெரிய அலை வந்து கரையை தாண்டி, சாலை, வீடுகளுக்குள் புகுந்துவிடும். அதனால் தான் இதற்கு கள்ளக்கடல் என்று பெயர் வைத்தனர்.</cite></aside><aside><cite>முன் அறிவிப்பு இல்லாமல் வருவது போல தெரியும். சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்கும்போது உள்ளே இழுத்துச் சென்றுவிடும். கரையில் நிற்கும் படகுகளை ஒன்றோடு ஒன்று மோதச் செய்து உடைத்துவிடும். கடல் ஏற்ற நேரத்துடன் சேர்ந்தால், கடல் நீர் ஊருக்குள் புகுந்து வெள்ளம் வரும். இதற்கு முன்பு கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் கன்னியாகுமரி, கோள கடற்கரையில் இதேபோல கள்ளக்கடல் வந்து பல வீடுகள், படகுகள் சேதமானது குறிப்பிடத்தக்கது.</cite>படகுகளை உடைத்துவிடும்</aside><p>கள்ளக்கடல் எச்சரிக்கை காரணமாக கடலுக்குள் சிறு படகுகள் செல்ல வேண்டாம் என்றும், கரையில் நிறுத்தப்பட்டுள்ள படகுகளை இடைவெளி விட்டு நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடற்கரை சுற்றுலா, விளையாட்டு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா மையங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.</p><h2>ராமநாதபுரம், கன்னியாகுமரி</h2><p>ராமநாதபுரம் மாவட்டத்தில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகு, நாட்டுப்படகுகள் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் 8 ஆயிரம் விசைப்படகுகள், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் இந்த கள்ளக்கடல் எச்சரிக்கை காரணமாக இன்று கடலுக்கு செல்லவில்லை.</p><h2>நெல்லை, தூத்துக்குடி</h2><p>நெல்லை மாவட்டத்தில் 10 மீனவ கிராமங்களை சேர்ந்த 1,500 பைபர் படகுகள், தூத்துக்குடி மாவட்டத்தில் தருவை குளம் மற்றும் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 800 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item></channel></rss>