<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 12 Sep 2026 10:07:38 +0000</lastBuildDate><item><title>8 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அப்டேட்</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-in-8-districts-today-meteorological-centre-update</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-in-8-districts-today-meteorological-centre-update#comments</comments><guid isPermaLink="false">7a1b3f23-0c0d-4a0b-8ce8-0b54df3eb64f</guid><pubDate>Sat, 12 Sep 2026 10:05:18 +0000</pubDate><atom:updated>2026-09-12T10:05:18.848Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Rain,Weather,கனமழை,வானிலை,தமிழகம்,Weather News,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,Weather update,வானிலை ஆய்வு மையம்,கன மழை,வானிலை அறிக்கை,weather condition,வானிலை தகவல்,Weather Report,வானிலை முன்னறிவிப்பு,Weather Status,வானிலை அறிவிப்பு,weather center,வானிலை அப்டேட்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/shy8gep6/vavan.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/shy8gep6/vavan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>வரும் செப்.15இல் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><h2>மழை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தெற்கு உள் கர்நாடகாவிலிருந்து மன்னார் வளைகுடா வரை தமிழகத்தின் வழியாக நீடிக்கும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (trough) தொடர்ந்து நிலவுகிறது; இது தற்போது கடல் மட்டத்திலிருந்து 1.5 கி.மீ உயரம் வரை பரவியுள்ளது.</p><p>இதன்காரணமாக <strong>இன்று (12.09.2026)</strong>, தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சேலம், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்ய வாய்ப்புள்ளது.</p><p>தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்ய வாய்ப்புள்ளது.</p><p><strong>நாளை (13.09.2026):</strong> மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் மதுரை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, வேலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்ய வாய்ப்புள்ளது.</p><p>தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்ய வாய்ப்புள்ளது.</p><p><strong>14.09.2026:</strong> மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்ய வாய்ப்புள்ளது.  </p><p>தமிழ்நாட்டின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><h2>கனமழை</h2><p><strong>15.09.2026:</strong> நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>தமிழ்நாட்டின் மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், அரியலூர், பெரம்பலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>தமிழ்நாட்டின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>16.09.2026:</strong> நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>தமிழ்நாட்டின் தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு.. வெளியான முக்கிய அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/attention-pensioners-important-announcement-released</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/attention-pensioners-important-announcement-released#comments</comments><guid isPermaLink="false">2f708523-61bc-490c-870a-c6bd1f42110e</guid><pubDate>Sat, 12 Sep 2026 09:32:27 +0000</pubDate><atom:updated>2026-09-12T09:32:27.691Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Holiday,தமிழக அரசு,TN govt,pension,ஓய்வூதியம்,தொடர் விடுமுறை,ஓய்வூதியதாரர்கள்,Pensioners</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/avxezwh1/akie.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ AI]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/avxezwh1/akie.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>ஓய்வூதியத் தொகை வரவு வைக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டாலும் பயனாளிகள் அச்சப்பட தேவையில்லை என்று <a href="https://www.dailythanthi.com/topic/tn-govt">தமிழக அரசு</a> தெரிவித்துள்ளது. </p><h2>ஓய்வூதியம்</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழ்நாடு அரசின் முன்னோடித் திட்டங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ், முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், வேளாண் தொழிலாளர்கள் உள்ளிட்ட நலிவுற்ற பிரிவினருக்கு 12 வகையான திட்டங்களின் கீழ் 35,37,372 பயனாளிகள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.</p><p>இவர்களில், சுமார் 15,56,674 ஓய்வூதியப் பயனாளிகளுக்கு ஆகஸ்ட் 2026 மாதத்திற்கான (செப்டம்பர் 2026-ல் வழங்கப்படும்) ஓய்வூதியத்தொகை அவர்களது வங்கிக் கணக்குகளில் ஏற்கனவே வரவு வைக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், தேசிய சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், இந்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், இந்திரா காந்தி தேசிய விதவையர் ஓய்வூதியத் திட்டம் மற்றும் இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று திட்டங்களின் கீழ் சுமார் 19,20,858 பயனாளிகள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.</p><p>மேற்காணும் திட்டங்களின் கீழ் ஆகஸ்ட் 2026 மாதத்திற்கான (செப்டம்பர் 2026-ல் வழங்கப்படும்) ஓய்வூதியத் தொகையை, இந்திய அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ள SNA-SPARSH நிதிப் பரிவர்த்தனை தளத்தின் மூலம் இம்மாதம் முதல் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><h2>தொடர் நடவடிக்கைகள்</h2><p>இத்திட்டங்களின் பயனாளிகளுக்கான ஓய்வூதியப் பட்டியல் தயார் செய்யப்பட்டு, இந்திய அரசின் பங்களிப்புத் தொகைக்கான ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில், 11.09.2026 முதல் 14.09.2026 வரை இந்திய அரசு அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை என்பதால், மேற்குறிப்பிட்ட திட்டங்களுக்கான ஓய்வூதியப் பட்டியலுக்கு ஒப்புதல் பெறுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.</p><p>எனவே, சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் ஓய்வூதியம் பெற்று வரும் பயனாளிகள், தங்களது ஓய்வூதியத் தொகை வரவு வைக்கப்படுவதில் ஏற்படும் தாமதம் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், ஓய்வூதியத் தொகை 14.09.2026 முதல் உரிய முறையில் வழங்குவதற்கான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் 2 தொகுதிகளில் இடைத்தேர்தல் தேவையில்லாமல் திணிப்பு - கி.வீரமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/by-elections-imposed-without-need-in-two-constituencies-in-tamil-nadu-k-veeramani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/by-elections-imposed-without-need-in-two-constituencies-in-tamil-nadu-k-veeramani#comments</comments><guid isPermaLink="false">a50320c3-d571-4ccc-b3f6-58d36f577101</guid><pubDate>Sat, 12 Sep 2026 09:27:32 +0000</pubDate><atom:updated>2026-09-12T09:27:32.595Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,இடைத்தேர்தல்,திமுக அரசு,K. Veeramani,கி.வீரமணி,தொகுதி,constituencies,by-elections</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/w80jdj0a/veeramani.jpg" width="768"><media:title type="html"><![CDATA[ கி.வீரமணி]]></media:title><media:description type="html"><![CDATA[  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/w80jdj0a/veeramani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டில் இரண்டு தொகுதிகளில் தேவையின்றி இரண்டு இடங்களில் இடைத்தேர்தல் "திணிக்கப்படுகிறது!" த.வெ.க.வின் 4 மாத ஆட்சியில் சாதனைகள் இல்லை - வேதனைகள்தான்! இதற்குப் பாடம் கற்பிக்கும் வகையிலும்,<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95"> தி.மு.க.வின்</a> கடந்த கால ஆட்சியின் மாட்சியைக் கருத்தில் கொண்டும் தேர்தல் நடைபெறும் இரு தொகுதிகளிலும் தனது ஆதரவை அளிக்கும் – பிரச்சாரமும் மேற்கொள்ளும்.</p> <h2>இடைத்தேர்தல்</h2><p>தமிழ்நாட்டில் இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் தேவையில்லாமல் திணிக்கப்பட்டுள்ளது. த.வெ.க. தலைமையில் கடந்த நான்கு மாதங்களாக நடைபெறும் ஆட்சியில், சாதனைகள் கிடையாது; வேதனைகள்தான், “குதிரை பேரங்கள்தான்". இந்த நிலையில், 4 மாத த.வெ.க. ஆட்சிக்குப் பாடம் கற்பிக்கவும், கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க ஆட்சியின் திட்டங்கள் கருதியும், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கும் நடைபெறும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தி.மு.க.வை ஆதரிப்பது என்றும், வெற்றிக்குப் பாடுபடுவது, பிரச்சாரம் செய்வது என்றும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF">கி.வீரமணி</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p> <h2>அவரது அறிக்கை வருமாறு:</h2><p>தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு, பொது தேர்தல் நடைபெற்ற சில மாதங்களிலேயே அவசியமற்ற ஓர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">இடைத்தேர்தல்</a> திணிக்கப்பட்டுள்ளது.</p> <p>மொத்தம் காலியாக உள்ள ஏழு தொகுதிகளில், பிற அய்ந்து தொகுதிகளின் வெற்றியை எதிர்த்துத் தேர்தல் வழக்கு இருப்பதால், அவற்றை விடுத்து இவ் விரண்டு தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.</p> <h2>த.வெ.க. அரசு </h2><p>இந்த இரண்டு தொகுதிகளிலும் முன்பு அ.இ.அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்றவர்கள், மக்கள் தங்களை தேர்ந்தெடுக்க காரணமான கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாக, போதிய தனி பெரும்பான்மை இல்லாத த.வெ.க. அரசு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு நடத்தியபோது அவரகளுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.</p><h2>குதிரை பேரம் </h2><p>தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத விசித்திரமான குதிரை பேரம் நடைபெற்றது. பின்னர் சில நாட்களிலேயே தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளிலிருந்து விலகி, தலைமை செயலகத்துக்குள்ளேயே அமைச்சரை சந்தித்து த.வெ.க.வில் இணைந்துவிட்டதாகக் கூறிய, தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத விசித்திரமான 'குதிரை பேரம்' நடைபெற்றது.</p><h2>அரசியல் அறவழியா?</h2><p>அதன் விளைவாக திணிக்கப்பட்டுள்ள இந்த இடைத்தேர்தல் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் கட்சி மாறி வந்தவர்களுக்கே வேட்பாளர்களாக மீண்டும் இடமளித்துள்ளது ஆளுங்கட்சி! இது அரசியல் அறவழியா? அவர்கள் முன்பு போட்டியிட்டு வெற்றிபெற்ற அ.இ.அ.தி.மு.க. இப்போது வேறு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.</p><h2>தி.மு.க. வேட்பாளர்கள்</h2><p>தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வழக்குரைஞர் பரந்தாமன் மதுராந்தகம் தொகுதிக்கும், வழக்குரைஞர் சுகன்யா தாராபுரம் தொகுதிக்கும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>அறுதி பெரும்பான்மை</h2><p>சட்டமன்ற பொது தேர்தலில் அறுதி பெரும்பான்மை பெறாத த.வெ.க.வுக்கு, அப்போது தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சில கட்சிகள் ஆதரவளித்து, ஆட்சியிலும் பங்கு பெற்றன. கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டும் வெளியில் இருந்து ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்தன.</p><h2>மக்களின் வரிப்பணம் அல்லவா?</h2><p>ஆனால் அதையும் தாண்டி, த.வெ.க.வுக்கு ஏற்பட்ட அச்ச உணர்வின் காரணமாக, அ.தி.மு.க.வில் இருந்து சில சட்டமன்ற உறுப்பினர்களை ஆசைகாட்டி இழுத்தனர். அதனால் கட்சித்தாவல் சட்டப்படி அவர்களின் பதவி பறிக்கப்படும் சூழல் ஏற்படும் என்பதால், அவர்களைப் பதவி விலகச் செய்து தற்போது இடைத்தேர்தல் நடைபெற வேண்டிய அவசியத்தை உருவாக்கியுள்ளனர்.</p><h2>மக்கள் அறிய மாட்டார்களா?</h2><p>இதற்கான தேவை என்ன? இந்த தேர்தல் நடைபெறுவதற்கு செலவழிக்கப்படும் தொகை மக்களின் வரிப்பணம் அல்லவா? இதை வீணடிக்க யார் உரிமை தந்தது? இந்தத் தேர்தலைத் திணித்து மக்கள் பணத்தை வீணடிக்க காரணம் யார் என்பதை மக்கள் அறிய மாட்டார்களா?</p><h2>அவசியம்</h2><p>தற்போது ஆட்சிக்கான பெரும்பான்மையில் எந்த பிரச்சினையுமில்லை. இந்த இடை தேர்தல் வெற்றி தோல்வி, ஆட்சியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது என்ற நிலையில், நடைபெறவுள்ள இடை தேர்தலின் முக்கியத்துவம் என்ன என்பதை சிந்தித்துப் பார்த்து, அதற்கேற்ப மக்கள் வாக்களிக்க வேண்டியது அவசியமாகும்.</p><h2>இடைத் தேர்தல் என்பது எடைத்தேர்தலே!</h2><p>கடந்த 120 நாட்களாகத் தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் த.வெ.க. ஆட்சியின் செயல்பாடுகளை அளவிடுவதற்கான வாய்ப்பே இந்த இடைத் தேர்தல்! பொதுவாக இடைத் தேர்தல்கள் என்பவையே, அரசை எடைபோட்டுப் பார்க்கும் தேர்தலே!</p><p><strong>அப்படி எடை போட்டு பார்த்தால் இந்த நான்கு மாதங்களில் ஆட்சியில் நடைபெற்றவை என்ன?</strong></p><h2>கட்சி தாவல்</h2><p>தமிழ்நாட்டில் இதுவரை அறிந்திராத குதிரை பேரங்களும், கட்சி தாவல்களும், நமது அரசியல் மாண்பை கேலிக்கு உள்ளாக்கியுள்ளன. அந்தச் சூழ்நிலைக்கு இலக்கான இரண்டு தொகுதிகளில் தான் இப்போது இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வாக்களித்த மக்களின் முடிவுக்கு எதிராகவே, கட்சி மாறிய வேட்பாளர்கள் இப்போது மீண்டும் வருகின்றனர்.</p> <h2>சட்டம்-ஒழுங்கு</h2><p> தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவரும் செய்திகள் அன்றாடம் வந்து கொண்டிருக்கின்றன. கொலைகளும், கூலி படைகளும், பாலியல் வன்கொடுமைகளும், ஆணவப் படுகொலைகளும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன.</p><h2>100 நாள் வேலை திட்டம்</h2><p> தமிழ்நாட்டை, ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை வஞ்சிக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்காமல், மக்களை பாதுகாத்து வந்தது கடந்த தி.மு.க. ஆட்சி. ஆனால், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் என்ற பெயரில் நடைபெற்றுவந்த 100 நாள் வேலை திட்டத்தை வீணடிக்கும் வகையில் மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்த திட்டத்தை ஏற்று கையொப்பமிட்டிருக்கிறது தற்போதைய த.வெ.க. அரசு.</p> <h2>பரந்தூர் விமான நிலைய திட்டம்</h2><p>தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியையும், பொருளாதார வளர்ச்சியையும் விரிவாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட கட்டமைப்பு திட்டங்களை இந்த அரசு கைவிட்டுள்ளது. அவற்றுள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவக் கூடிய பரந்தூர் விமான நிலைய திட்டம், பரந்தூர் வரையிலான மெட்ரோ விரிவாக்கம், உலகளாவிய விளையாட்டு நகரம், கிழக்கு கடற்கரை சாலை மேம்பாலத் திட்டம், சென்னை கிண்டி - வேளச்சேரி மேம்பாலத் திட்டம் ஆகியவை வெளிப்படையாக கைவிடப்பட்டுவிட்டன. இன்னும் பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.</p><h2>த.வெ.க. நிறைவேற்றவில்லை</h2><p> தேர்தலில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதற்கான காரணங்களை தேடி கொண்டிருக்கிறது த.வெ.க. அரசு. திராவிட முன்னேற்ற கழக அரசு கொண்டுவந்த மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமை தொகையை ரூ.2500 ஆக உயர்த்தி தருவோம் என்ற வாக்குறுதியைத் த.வெ.க. நிறைவேற்றவில்லை. அனைத்து வீடுகளுக்கும் ஆறு சிலிண்டர்கள் தருவோம் என்று சொன்னதை, தகுதி உடையவர்களுக்கு மூன்று சிலிண்டர் என்று மாற்றி, சொன்னதற்கு மாறாக நடந்துகொள்கிறது த.வெ.க. அரசு.</p> <h2>ஆட்சி சரியாக நடைபெறுகிறதா?</h2><p> ஆதரவு அளித்துள்ள கட்சிகளே, இந்த அரசின் பல நிலைப்பாடுகளுக்குக் கண்டனம் தெரிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காட்சிகளே நிரம்பியிருக்கின்றனவே தவிர, ஆட்சி சரியாக நடைபெறுகிறதா?</p> <h2>புதிய தலைமை செயலகம்</h2><p> நிதிநிலையை காரணம் காட்டி, மக்கள் நலத் திட்டங்களை தவிர்க்கும் அரசு, ரூ.1200 கோடி செலவில் புதிய தலைமை செயலகம் என்றும், பல கோடி செலவில் முதல்-அமைச்சர் அலுவலகம் மாற்றம் என்றும் தேவையற்றவற்றுக்கு செலவழிக்கும் அவலம்.</p><h2>தேசிய கல்வி கொள்கை</h2><p> மத்திய பா.ஜ.க. அரசின் தேசிய கல்வி கொள்கையின் அம்சங்களை நிறைவேற்ற மறைமுகமாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தனியார் பல்கலைக்கழகங்களுக்கு சாதமாக சில சட்டங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன.</p> <h2>அரசியல் காழ்ப்புணர்ச்சி</h2><p> மக்கள் நலத் திட்டங்களுக்கு எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பணியாற்றாமல், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் கைது, வழக்குகள் தொடர்வதிலேயே இந்த அரசு குறியாக இருப்பதுடன், அதற்கு முகாந்திரங்கள் இல்லை என்று நீதிமன்றங்களின் கண்டனங்களையும் பெற்றுள்ளது. இதுவே, இதன் காழ்ப்புணர்ச்சிக்கு அடையாளமாகும்.</p> <h2>இது நியாயந்தானா? </h2><p> தமிழ்நாட்டு சட்டமன்றத்தில், தேர்தல் தொகுதி மறுவரையறைப்பற்றி, எதிர்க்கட்சிகள் உள்பட அனைவரின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றாக இருக்க, உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடந்த தென்மண்டல முதl-அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பின், அந்த முடிவு மாற்றப்பட்டதே, இது நியாயந்தானா? உரிமையை அடகு வைத்த கொடுமையல்லவா? இன்னும் இந்த 120 நாட்களில் நடைபெற்றுள்ள மக்கள் நலத் திட்டங்கள் என்று சொல்வதற்கு எதுவுமில்லை என்பதே தற்போதைய நிலை.</p> <p><strong>திராவிட முன்னேற்றக் கழகத்துக்கே நமது ஆதரவு!</strong></p><h2> மக்களுக்கான குரல்</h2><p>இந்த இடை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெற வேண்டியது அவசியமான ஒன்றாகும். கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பான ஆட்சியை வழங்கினாலும், மக்களின் மாறுபட்ட முடிவின் காரணமாக எதிர்க்கட்சியாக ஆக்கப்பட்டபோதும், ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு மக்களுக்காக குரல் கொடுத்து வருவது திராவிட முன்னேற்றக் கழகமே!</p> <h2> பாடம் கற்பிக்க முடியும்</h2><p>இன்னும், தனது பா.ஜ.க. கூட்டணியை விடாமல், அவர்களுடன் இணைந்தே போட்டியிடுகிறது அ.இ.அ.தி.மு.க! தமிழ்நாட்டில் பா.ஜ.க கூட்டணி என்பது முற்றிலும் தோற்கடிக்கப்பட வேண்டிய கூட்டணியே ஆகும்.</p> <p>இந்த தேர்தலில், தி.மு.க. வெற்றி பெறுவதன் மூலம் த.வெ.க. அரசுக்கு ஒரு பாடம் கற்பிக்க முடியும். அதன் தவறான நிலைப்பாடுகள், போக்குகள், அரசியல் காழ்ப்புணர்ச்சி ஆகியவை மக்களுக்கு விரோதமானவை என்பதை எடுத்துச் சொல்லி திருத்த முயலும் மாறுபட்ட மக்கள் தீர்ப்பு. ஆரோக்கிய அரசியல் உருவாக தோல்வி ஒரு பாடமாக ஆவதற்கு, இந்த இடைத் தேர்தல் ஒரு முக்கியமான வாய்ப்பாகும்.</p><h2>ஜனநாயக மாண்பு</h2><p>எனவே, நான்கு மாத த.வெ.க. ஆட்சிக்கு பாடம் கற்பிக்கவும், ஜனநாயகத்தின் மாண்பையும் கருதி, இவ் விரு தொகுதி மக்களும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.</p> <h2>உதவும் அல்லவா!</h2><p>போதிய பெரும்பான்மை ஆளுங்கட்சிக்கு இல்லை என்ற நிலையில், த.வெ.க.வுக்கு ஆதரவு கொடுத்த கட்சிகளே, ஆளுங்கட்சியின் நடவடிக்கைகளுக்கு விமர்சனமும், எதிர்ப்பும் தெரிவிக்கும் நிலையில், சட்டமன்ற நடவடிக்கைகளின் மரபும், மாண்பும் காணாமல் போன விசித்திரத்தை உருவாக்கிய ஆளுங்கட்சி தோற்றால், தங்களது அதிகார, ஆணவம்பற்றி அவர்களே உணர்ந்து, மாற்றத்தை ஏற்படுத்தி கொள்ள தி.மு.க.வின் வெற்றி உதவும் அல்லவா!</p><h2>நல்ல அரசியல் திருப்பம்</h2><p>திராவிடர் கழகத்தின் முழுமையான ஆதரவை திராவிட முன்னேற்ற கழகத்திற்கு வழங்கி, பிரச்சாரத்திலும் கழகம் ஈடுபடும்! மயக்கமின்றி, தயக்கமின்றி இரண்டு தொகுதி வாக்காள பெருமக்களும் ஆழ்ந்து சிந்தித்து, வாக்களித்து தி.மு.க.வை வெற்றி பெற வைத்தால், அது ஒரு நல்ல அரசியல் திருப்பம் ஆகும்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பயன்படுத்திய விவகாரம்: விநாயகர் சிலைகளை தடையின்றி விற்பனை செய்ய மதுரை ஐகோர்ட்டு கிளை அனுமதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/issue-regarding-the-use-of-plaster-of-paris-madurai-bench-of-the-high-court-permits-the-sale-of-vinayagar-idols-without-hindrance</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/issue-regarding-the-use-of-plaster-of-paris-madurai-bench-of-the-high-court-permits-the-sale-of-vinayagar-idols-without-hindrance#comments</comments><guid isPermaLink="false">9442da23-d884-403c-b857-f3e926af0990</guid><pubDate>Sat, 12 Sep 2026 09:13:49 +0000</pubDate><atom:updated>2026-09-12T09:13:49.876Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai High Court Branch,மதுரை ஐகோர்ட்டு கிளை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/6e3v466d/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/6e3v466d/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி பண்டிகை உள்ளிட்ட விழாக்களுக்கு சிலைகள் தயாரித்து விற்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் ராஜஸ்தானை சேர்ந்த வேலராம் என்பவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், அனுமதியின்றி தொழில் செய்வதாக கூறி மதுரை மாநகராட்சி நிர்வாகம் தனக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும், உரிய விளக்கமளிக்க 7 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் அதற்குள் தன்னுடைய சிலை தயாரிப்பு வளாகத்தை பூட்டி சீல் வைத்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.</p><p>மேலும் சிலைகள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மற்றும் தெர்மாகோல் போன்றவற்றிற்கு விதிக்கப்பட்ட நிபந்தனையை நீக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி விக்டோரியா கவுரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பயன்படுத்தி சிலை தயாரிக்க கூடாது என்ற நிபந்தனைக்கு இடைக்கால தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.</p><p>மேலும் விநாயகர் சிலைகளை தடையின்றி விற்பனை செய்ய அனுமதி வழங்குவதாகவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். விநாயகர் சதுர்த்தி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு சிலை தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>&apos;ப்யூஸ் போன&apos; த.வெ.க. அரசு.. - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-government-with-a-blown-fuse-udhayanidhi-stalins-criticism</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-government-with-a-blown-fuse-udhayanidhi-stalins-criticism#comments</comments><guid isPermaLink="false">d11eeee8-8cbf-4faf-b7b8-98865efe3130</guid><pubDate>Sat, 12 Sep 2026 08:53:16 +0000</pubDate><atom:updated>2026-09-12T08:53:16.619Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,திமுக,DMK,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,உதயநிதி,Udhayanidhi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/b6onhzdv/udhay.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/b6onhzdv/udhay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாமல் திண்டாடும் 'ப்யூஸ் போன' த.வெ.க. அரசு திசைதிருப்பும் வேலைகளை நிறுத்திவிட்டு, மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>போராடும் மக்கள்</h2><p>தொடர்ந்து <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழ்நாடு </a>முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்சாரம் இருந்தாலும் voltage பிரச்சினை என மக்கள் வெகுண்டெழுந்து வீதிக்கு வந்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.</p><p>ஆனால், துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரோ, இதைச் சரிசெய்யும் முயற்சிகளைச் செய்யாமல் தேவையில்லாத அவதூறுகளை உளறிக் கொண்டிருக்கிறார்.</p><h2>'ப்யூஸ் போன' அரசு</h2><p>மின்சாரம், ஆவின் பால் விநியோகம் என மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாமல் திண்டாடும் 'ப்யூஸ் போன' த.வெ.க. அரசு திசைதிருப்பும் வேலைகளை நிறுத்திவிட்டு, மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு; மல்லை சத்யா அறிவிப்பு
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/idaithearthalil-thimukavukku-aatharavu-mallai-sathya-arivippu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/idaithearthalil-thimukavukku-aatharavu-mallai-sathya-arivippu#comments</comments><guid isPermaLink="false">ebc2569d-99a8-4ebd-a1d9-f10bef3c081a</guid><pubDate>Sat, 12 Sep 2026 08:49:16 +0000</pubDate><atom:updated>2026-09-12T08:49:16.952Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,மல்லை சத்யா,Mallai Sathya,தி.மு.க.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/ybha9009/stdpe.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தி.மு.க.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/ybha9009/stdpe.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்கிறோம் என்று மல்லை சத்யா அறிவித்து உள்ளார்.</p><p>தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க. ஆட்சியமைத்து உள்ளது.  முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்று உள்ளார்.  இதில். அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற 6 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க.வில் இணைந்தனர்.</p> <p>இதனால், காலியாக உள்ள 6 தொகுதிகளில், மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) தொகுதிகளுக்கு மட்டும் அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் 9-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் களம் காண அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதன்படி, ஆளும் கட்சியான த.வெ.க. மற்றும் தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.</p> <h2>வேட்பாளர்கள் அறிவிப்பு</h2><p>இதில், மற்ற கட்சிகளை முந்திக்கொண்டு தி.மு.க. முதல் கட்சியாக 2 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது. அதன்படி மதுராந்தகத்தில் பரந்தாமனும், தாராபுரத்தில் சுகன்யாவும் போட்டியிடுகிறார்கள் என அறிவிக்கப்பட்டது.</p><p>இந்த நிலையில், இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்கிறோம் என்று திராவிட வெற்றிக்கழக தலைவர் மல்லை சத்யா அறிவித்து உள்ளார். அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, த.வெ.க. அரசுக்கு எதிராக மக்கள் மத்தியில் எதிர்ப்பு அலை வீசுகிறது என்று கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து நாளை அறிவிக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-communist-party-marxist-will-announce-its-stance-on-the-by-election-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-communist-party-marxist-will-announce-its-stance-on-the-by-election-tomorrow#comments</comments><guid isPermaLink="false">af08ed3b-4448-426e-866a-c038f5d5f6ab</guid><pubDate>Sat, 12 Sep 2026 08:41:37 +0000</pubDate><atom:updated>2026-09-12T08:41:37.952Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,TVK,தவெக,Tamilnadu,அதிமுக,திமுக,DMK,தமிழகம்,இடைத்தேர்தல்,பெ.சண்முகம்,Marxist Communist Party,மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு,byelection</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/prdeppsn/vasai.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/prdeppsn/vasai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து நாளை நடைபெறும் மாநிலக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அறிவித்துள்ளார். </p><h2>‘மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’</h2><p>மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்லுக்கு <a href="https://www.dailythanthi.com/topic/tvk">த.வெ.க.</a>, தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. இதில் ஆளும் த.வெ.க. தலைமையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து ‘மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என்ற பெயரில் ஒரு அணியை உருவாக்கி உள்ளது. இந்த அணியில் உள்ளவர்கள் த.வெ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவை தெரிவித்துள்ளனர்.</p><h2>இடைத்தேர்தல் நிலைப்பாடு</h2><p>அதே நேரம் அரசை வெளியில் இருந்து ஆதரிக்கும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இந்தநிலையில் மார்க்சிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. அதில் சட்டசபை இடைத்தேர்தலில் என்ன நிலைப்பாட்டை எடுப்பது என்பது தொடர்பாக முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. </p><p>இந்நிலையில் இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து நாளை திருச்சியில் நடைபெறும் மாநிலக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். </p><h2>மாநில குழு கூட்டம்</h2><p>இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இன்று நடைபெற்ற கூட்டத்தில் இடைத்தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. மாநில குழுவை கூட்டி, முடிவை எடுக்க திட்டமிட்டுள்ளோம். நாளை காலை அவசர மாநில குழு கூட்டம் திருச்சியில் நடக்கிறது. முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் முடிவு என்பதால், மாநில குழு கூட்டத்தில் விவாதிக்க இருக்கிறோம். நாளை மதியம் 2 மணிக்கு முடிவு அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இணக்கமான சூழல் உருவாவதை உறுதி செய்ய வேண்டும் - டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ensure-harmonious-environment-between-police-and-public-says-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ensure-harmonious-environment-between-police-and-public-says-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">5dceb04a-cf40-4de5-98ae-cc4a4528165a</guid><pubDate>Sat, 12 Sep 2026 08:22:28 +0000</pubDate><atom:updated>2026-09-12T08:22:28.753Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,TTV Dhinakaran,டிடிவி தினகரன்,அமமுக,ஆர்.கே.நகர்,RK Nagar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/5b31ug7e/Untitled-12.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/5b31ug7e/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இணக்கமான சூழல் உருவாவதை உறுதி செய்ய வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்த பெண்கள் மீது தாக்குதல் - பெண்களை இழிவுபடுத்தினால் சட்டம் தன் கடமையைச் செய்யும் என சட்டமன்றத்தில் பஞ்ச் டயலாக் பேசும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்?</p><p>சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களைப் பார்க்கச் சென்ற பெண் ஒருவரைத் தாக்கியதோடு, அதனைத் தட்டிக்கேட்ட பெண் வழக்கறிஞரையும் காவல்துறையினர் தாக்கியதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.</p><p>ஒருபுறம், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் காவல்துறையைப் பாராட்டிப் பேசுகிறார். மறுபுறம், காவல் ஆய்வாளர் மிரட்டியதாகப் புகார் அளித்த நபர் அடுத்த நாளே படுகொலை செய்யப்பட்டதாகவும், காவல் நிலையத்திற்கு வரும் பெண்கள் மிரட்டப்பட்டு, அவமதிக்கப்பட்டு, தாக்கப்படுவதாகவும் வெளியாகும் செய்திகள், தமிழகத்தில் பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையே அவர்களுக்கு அச்சுறுத்தலாக மாறிவிட்டதா என்ற கேள்வியை எழுப்புகிறது.</p><p>பொதுமக்களின் குறைகளைக் களைய வேண்டிய காவல்துறையினரின் தவறுகளைக் கண்டுகொள்ளாமல் கடந்து செல்வதும், அவர்களின் அதிகாரத் துஷ்பிரயோகத்திற்கு இடமளிப்பதும், அவர்கள் இழைக்கும் தவறுகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கு சமமாகும் என்பதை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உணர வேண்டும்.</p><p>எனவே, ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் காவலர்கள் பெண்களைத் தாக்கியதாக எழுந்துள்ள புகாரை விரிவாக விசாரித்து, குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இணக்கமான சூழல் உருவாவதை உறுதி செய்ய வேண்டும் என தவெக அரசையும், அதன் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும்: சென்னை ஐகோர்ட்டில் மனு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/petition-filed-in-madras-high-court-seeking-a-stay-on-the-maduranthakam-and-dharapuram-by-elections</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/petition-filed-in-madras-high-court-seeking-a-stay-on-the-maduranthakam-and-dharapuram-by-elections#comments</comments><guid isPermaLink="false">76da6a4b-546d-40c4-a315-87eaf0e21f3c</guid><pubDate>Sat, 12 Sep 2026 08:18:34 +0000</pubDate><atom:updated>2026-09-12T08:18:34.466Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இடைத்தேர்தல்,சென்னை ஐகோர்ட்,மதுராந்தகம்,தாராபுரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/zitu28wg/chennai-high-court.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/zitu28wg/chennai-high-court.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ந் தேதி தொடங்கியுள்ள நிலையில், இடைத்தேர்தலிலும் த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் ஆகிய கட்சிகள் இடையே 4 முனைப்போட்டி நிலவுகிறது. இதில், நாம் தமிழர் கட்சியை தவிர, தேர்தல் களம் காணும் 3 கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. கடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்) ஆகிய 2 பேரும் தற்போது த.வெ.க. சார்பில் அதே தொகுதிகளில் களம் காண்கின்றனர்.</p> <p>பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. சார்பில் ஐ.பரந்தாமன் (மதுராந்தகம்), எஸ்.சுகன்யா (தாராபுரம்) ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத் (மதுராந்தகம்), பானுமதி (தாராபுரம்) ஆகியோர் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. தேர்தல் நடத்துவதற்கான முழு ஏற்பாடுகளும்  நடைபெற்று வருகின்றன. </p><p>இந்த நிலையில், இடைத்தேர்தல் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமாவின் வேட்புமனுக்களை ஏற்க தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராஜினாமா செய்பவர்களை குறிப்பிட்ட காலத்துக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க சட்டம் கொண்டு வர வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>சாலமன் பாப்பையா வசித்த தெருவுக்கு அவரது பெயர்: மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் - மதுரை மேயர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-street-where-solomon-papaiah-lived-will-be-named-after-him-resolution-will-be-passed-in-the-council-meeting-madurai-mayor</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-street-where-solomon-papaiah-lived-will-be-named-after-him-resolution-will-be-passed-in-the-council-meeting-madurai-mayor#comments</comments><guid isPermaLink="false">ecf1bbff-12d3-4be2-8e98-469bcb0262e2</guid><pubDate>Sat, 12 Sep 2026 08:12:56 +0000</pubDate><atom:updated>2026-09-12T08:12:56.081Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,Mayor,தெரு,மதுரை மேயர்,council meeting,Street,சாலமன் பாப்பையா,பெயர் சூட்டல்,Solomon Papaiah</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/wye8w5qg/16.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/wye8w5qg/16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 90. மதுரையை சேர்ந்த சாலமன் பாப்பையா பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றிய இவர், தமிழ் இலக்கியங்கள் குறித்து ஆற்றிய உரைகளாலும் பிரபலமானவர். திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார்.</p><h2>உடல் தகனம்</h2><p>இந்த நிலையில், மதுரை வெப் மெமோரியல் தேவாலயத்தில் வைத்து உறவினர்கள் முன்னிலையில் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது. துப்பாக்கி குண்டுகள் முழக்கம் இல்லாமல் சாலமன் பாப்பையாவின் உடலுக்கு கவுரவ மரியாதை அளிக்கப்பட்டது. அரசு சார்பில் அமைச்சர்கள் நிர்மல்குமார், விஸ்வநாதன் ஆகியோர் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். இதையடுத்து தத்தநேரி மின் மயானத்தில் சாலமன் பாப்பையாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.</p><h2>மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம்</h2><p>இந்நிலையில் மதுரையில் பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையாவின் இல்லத்திற்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் அளித்துவிட்டு மதுரை மாநகராட்சியின் மேயர்(பொறுப்பு)  நாகராஜன் வெளியில் வந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE">சாலமன் பாப்பையா </a>வசித்த தெருவிற்கு அவரது பெயரைச் சூட்டுவதற்கு மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும், என்று அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>மதுரை முனியாண்டி கோவிலில் கிடாய் வெட்டு திருவிழா: 25,000 பேருக்கு பிரமாண்ட கறிவிருந்து </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kidai-vettu-festival-at-muniyandi-temple-madurai-a-grand-curry-feast-for-25000-people</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kidai-vettu-festival-at-muniyandi-temple-madurai-a-grand-curry-feast-for-25000-people#comments</comments><guid isPermaLink="false">be3b935b-a7df-4200-b414-7c4c483b2cc4</guid><pubDate>Sat, 12 Sep 2026 08:09:57 +0000</pubDate><atom:updated>2026-09-12T08:09:57.229Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,Festival,people,திருவிழா,அன்னதானம்,ஆடு,feast,முனியாண்டி கோவில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/80m9v5cs/1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ முனியாண்டி சாமி- அன்னதானம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மதுரை முனியாண்டி கோவிலில் கிடாய் வெட்டு திருவிழா.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/80m9v5cs/1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரை முனியாண்டி கோவிலில் நடைபெற்ற கிடாய் வெட்டு திருவிழாவில் சுமார் 25,000-க்கும் மேற்பட்டோருக்கு கறிவிருந்து அன்னதானம் வழங்கப்பட்டது.</p><h2>கிடாய் வெட்டு திருவிழா</h2><p>மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே உள்ள வெள்ளக்கல் பகுதியில் புகழ்பெற்ற 4-வது கழுங்கடி அருள்மிகு<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D"> ஸ்ரீ முனியாண்டி சுவாமி திருக்கோவில் </a>அமைந்துள்ளது. இந்த கோவிலின் 38-வது ஆண்டு கிடாய் வெட்டு திருவிழா மற்றும் மாபெரும் சமபந்தி கறிவிருந்து அன்னதானம் இன்று (சனிக்கிழமை) பெரும் விமர்சையாக நடைபெற்று வருகிறது.</p><h2>450 கிடாய்கள், 10 ஆயிரம் கிலோ அரிசி</h2><p>இத்திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய சுமார் 450 ஆட்டுக் கிடாய்கள் முனியாண்டி சுவாமிக்கு பலியிடப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, விடிய விடிய 10,000 கிலோ அரிசி மற்றும் டன் கணக்கிலான மசாலாப் பொருட்களைக் கொண்டு பிரம்மாண்டமான முறையில் கறிவிருந்து தயார் செய்யப்பட்டது.</p><h2>25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகை</h2><p>இன்று காலை முதல் நடைபெற்று வரும் இந்த மகா அன்னதானத்தில், மதுரையின் சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த 25,000-க்கும் மேற்பட்ட<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"> பக்தர்கள் </a>நீண்ட வரிசையில் காத்திருந்து ஆவி பறக்கும் கறிவிருந்தை பிரசாதமாக உண்டு மகிழ்ந்து வருகின்றனர்.</p><h2>விழா சிறப்புகள்</h2><p>திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளக்கல் கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த பாரம்பரிய விழாவில், முனியாண்டி சுவாமிக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. இதில் ஏராளமான அரசியல் பிரமுகர்கள், முக்கியப் புள்ளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மதுரையின் பாரம்பரிய முனியாண்டி விலாஸ் உணவகங்களின் பின்னணியோடு தொடர்புடைய இந்த பிரம்மாண்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE">கறிவிருந்து திருவிழா</a>, இப்பகுதியில் பெரும் திருவிழா கோலத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><figure><iframe src="https://www.facebook.com/plugins/post.php?width=552&height=500&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fwatch%2F%3Fv%3D1445189160848379" width="552" height="500" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></figure>]]></content:encoded></item><item><title>காதலித்த வாலிபர் மிரட்டியதால் சோக முடிவு: நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் கல்லூரி மாணவி தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/college-student-dies-by-suicide-after-threats-from-lover</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/college-student-dies-by-suicide-after-threats-from-lover#comments</comments><guid isPermaLink="false">98811b69-a516-4c89-8f67-0745fa99e7a3</guid><pubDate>Sat, 12 Sep 2026 08:04:08 +0000</pubDate><atom:updated>2026-09-12T08:04:08.598Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருப்பத்தூர்,தற்கொலை,Thirupathur,வாணியம்பாடி,Vaniyambadi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/6e7fpur5/Untitled-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/6e7fpur5/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பத்தூர்,</p><p>நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில், காதலித்த வாலிபர் மிரட்டியதால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.</p><h2>நாளை திருமணம்</h2><p>திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கொத்தக்கோட்டை கோடியூர் பகுதியை சேர்ந்தவர்கள் விநாயகம் அலமேலு தம்பதி. இவர்களுடைய மகள் ஸ்ரீ தர்ஷினி (20 வயது). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு கணினி அறிவியல் படித்து வந்தார்.</p><p>இவருக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து திருமணம் பேசி முடித்திருந்தனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருப்பத்தூர் அடுத்த பேராம்பட்டு மங்குண்டு பெருமாள் கோவிலில் திருமணம் நடக்க இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை மணமகன், மணமகள் வீட்டார் தீவிரமாக செய்து வந்தனர்.</p><h2>விஷம் குடித்து தற்கொலை</h2><p>மாணவியை வாலிபர் ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மாணவிக்கு திருமணம் நடக்க இருந்ததை அறிந்த அந்த வாலிபர் மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டு என்னை விட்டுவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்வாயா? என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மாணவி ஸ்ரீ தர்ஷினி மனமுடைந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அனைவரும் வழக்கம்போல் தூங்கச்சென்றனர். நேற்று காலையில் பார்த்தபோது மாணவி ஸ்ரீ தர்ஷினி படுக்கையில் பிணமாக கிடந்தார். அருகில் சென்று பார்த்தபோது அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி ஸ்ரீ தர்ஷினியின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் மாணவியை காதலித்த வாலிபர் செல்போனில் மிரட்டியது தெரிய வந்தது. இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: வீட்டின் தண்ணீர் தொட்டியில் பதுங்கிய 5 அடி நீள நல்ல பாம்பு மீட்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-5-foot-long-snake-rescued-from-water-tank-in-house</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-5-foot-long-snake-rescued-from-water-tank-in-house#comments</comments><guid isPermaLink="false">39caf11e-b6a9-40ce-b00c-2cf7bee35546</guid><pubDate>Sat, 12 Sep 2026 07:57:02 +0000</pubDate><atom:updated>2026-09-12T07:57:02.463Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Snake,House,வீடு,மீட்பு,Rescue,தண்ணீர் தொட்டி,water tank,hidden,நல்லபாம்பு,பதுங்கி இருந்த</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/pk7xx8o1/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-5-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வீட்டின் தண்ணீர் தொட்டியில் பதுங்கிய 5 அடி நீள நல்ல பாம்பு மீட்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/pk7xx8o1/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-5-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF">தண்ணீர் தொட்டி</a>யில் பதுங்கியிருந்த 5 அடி நீளமுள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">நல்ல பாம்பை</a> சிப்காட் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">தீயணைப்பு </a>மற்றும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">மீட்பு</a>ப் படையினர் பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.</p><h2>தண்ணீர் தொட்டிக்குள் சென்று பதுங்கிய நல்ல பாம்பு</h2><p>தூத்துக்குடி மடத்தூர், கல்லூரி நகர் பகுதியில் வசித்து வருபவர் மங்கேஷ்பாபு. இவரது வீட்டின் வளாகத்திற்குள் திடீரெனப் புகுந்த நல்ல பாம்பு ஒன்று, அங்கிருந்த தண்ணீர் தொட்டிக்குள் சென்று பதுங்கிக் கொண்டது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக வெளியேறி, சிப்காட் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். </p><h2>நல்ல பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைப்பு</h2><p>இதையடுத்து சிப்காட் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில், சிறப்பு நிலை அலுவலர் இசக்கிராஜன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தவசி, ஜெயக்குமார், அஜித் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீர் தொட்டிக்குள் பதுங்கியிருந்த 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பை சாதுரியமாக மீட்டு, பாதுகாப்பாக வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். சாதுரியமாக செயல்பட்டு பாம்பை மீட்ட தீயணைப்புத் துறை வீரர்களுக்கு வீட்டின் உரிமையாளர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தேரிக்காடுகளை அழிக்கும் திட்டத்தை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்: கனிமொழி எம்.பி.</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-government-must-immediately-abandon-the-plan-to-destroy-the-theri-forests-kanimozhi-mp</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-government-must-immediately-abandon-the-plan-to-destroy-the-theri-forests-kanimozhi-mp#comments</comments><guid isPermaLink="false">50d42ccc-6ebf-439b-9de3-6e4ccdb3f1f5</guid><pubDate>Sat, 12 Sep 2026 07:41:17 +0000</pubDate><atom:updated>2026-09-12T07:41:17.285Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>கனிமொழி எம்.பி.,Kanimozhi MP,தேரிக்காடுகள்,Theri Forests</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/7iceo3w7/15.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/7iceo3w7/15.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மக்களவை உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”பலவகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் வாழ்விடமாகவும், செம்மண் குன்றுகள் நிறைந்த புவியியல் முக்கியத்துவம் மிக்க பகுதியாகவும் இருப்பவை குதிரைமொழி மற்றும் சாத்தான்குளம் தேரிக்காடுகள்.</p><p>இத்தகைய தேரிக்காடுகளை வனவிலங்கு சரணாலயமாகவும், சூழலியல் உணர்திறன் மண்டலமாகவும் அறிவிக்கும் முயற்சி ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் அதே நிலப்பரப்பில் தாதுமணல் மற்றும் அரிய மண் தனிமங்களை எடுப்பதற்கான கொடிய திட்டங்களையும் தவெக அரசின் கனிமவளத்துறை முன்னெடுத்து வருகிறது.</p><p>தமிழ்நாட்டின் அரிய வகை நிலப்பரப்பாகவும், பாதுகாக்கப்பட வேண்டிய முக்கியமான சூழலியல் பகுதிகளாகவும் விளங்கும் இந்தத் தேரிக்காடுகளை அழிக்கும் திட்டத்தை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>  ]]></content:encoded></item><item><title>அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு: விடைபெற்றார் சாலமன் பாப்பையா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/funeral-with-state-honors-solomon-pappaiah-bids-farewell</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/funeral-with-state-honors-solomon-pappaiah-bids-farewell#comments</comments><guid isPermaLink="false">b503ce9e-40bd-4de9-a8a4-8118fbfeb6e3</guid><pubDate>Sat, 12 Sep 2026 07:34:27 +0000</pubDate><atom:updated>2026-09-12T07:34:27.085Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Funeral,இறுதிச்சடங்கு,சாலமன் பாப்பையா,Solomon Pappaiah</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/xbnxfgos/14.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/xbnxfgos/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சாலமன் பாப்பையா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது. </p><h2>சாலமன் பாப்பையா காலமானார்</h2><p>பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 90. மதுரையை சேர்ந்த சாலமன் பாப்பையா பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றிய இவர், தமிழ் இலக்கியங்கள் குறித்து ஆற்றிய உரைகளாலும் பிரபலமானவர். திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார்.</p><h2>அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு</h2><p>சாலமன் பாப்பையா மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். தமிழக அரசு சார்பில் அமைச்சர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் சாலமன் பாப்பையாவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். சாலமன் பாப்பையா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அமைச்சர் நிர்மல்குமார் தனது எக்ஸ் தளத்தில் இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.</p><h2>உடல் தகனம்</h2><p>இந்த நிலையில், மதுரை வெப் மெமோரியல் தேவாலயத்தில் வைத்து உறவினர்கள் முன்னிலையில் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது. துப்பாக்கி குண்டுகள் முழக்கம் இல்லாமல் சாலமன் பாப்பையாவின் உடலுக்கு கவுரவ மரியாதை அளிக்கப்பட்டது. அரசு சார்பில் அமைச்சர்கள் நிர்மல்குமார், விஸ்வநாதன் ஆகியோர் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். இதையடுத்து தத்தநேரி மின் மயானத்தில் சாலமன் பாப்பையாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் திடீர் மின்வெட்டு ஏன்? - அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-sudden-power-cuts-in-tamil-nadu-minister-nirmal-kumar-explains</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-sudden-power-cuts-in-tamil-nadu-minister-nirmal-kumar-explains#comments</comments><guid isPermaLink="false">b2e7e7a0-b3bb-4be7-8b31-e4573eb0b192</guid><pubDate>Sat, 12 Sep 2026 07:31:58 +0000</pubDate><atom:updated>2026-09-12T07:31:58.711Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Explanation,விளக்கம்,மின்வெட்டு,Minister Nirmalkumar,அமைச்சர் நிர்மல் குமார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/3mdo7kjk/Untitled-10.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல் குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/3mdo7kjk/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் கோடை காலங்களில் பொதுவாக மின் தேவை அதிகரிக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ந்தேதி, தமிழகத்தின் மின் தேவை இதுவரை இல்லாத அளவிற்கு 21,211 மெகாவாட் வரை அதிகரித்தது. கோடை காலத்திற்கு பிறகு ஜூலையில் இருந்து வெயில் குறையும்போது, மின் தேவையும் படிப்படியாக குறையும்.</p><p>ஆனால், இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் முதல் முறையாக ஜூலை 14-ந்தேதி தமிழகத்தின் மின்தேவை, 21,724 மெகாவாட்டாக அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியது. அதுமட்டுமின்றி, தினந்தோறும் மாலை நேரங்களில் மின் தேவை சராசரியாக 20 ஆயிரம் மெகாவாட்டாக இருந்து வந்த நிலையில், இந்த மாதத்தில் அது 21 ஆயிரம் மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.</p><p>இவ்வாறு மின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மின் வாரியத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனிடையே சென்னை புறநகர் உட்பட, பல இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. தினமும் ஒரு மணி நேரம், குறிப்பாக இரவு நேரங்களில் முன் அறிவிப்பின்றி மின் தடை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு ஏற்படுவதாகக் கூறி பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே தமிழகம் முழுவதும் தடையில்லா மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.</p><p>இந்த நிலையில் தமிழ்நாட்டில் திடீர் மின்வெட்டு ஏன் ஏற்படுகிறது என்பது தொடர்பாக அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>காற்றாலை மின்சாரம் தடைபட்டதால் இரண்டு நாட்கள் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாடு. நேற்று மாலை தமிழகத்திற்கு தேவையான மின்சாரம் பொது விநியோகத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. நேற்று மாலை முதல் அனைத்து இடங்களிலும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">காற்றாலை மின்சாரம் தடைபட்டதால் இரண்டு நாட்கள் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாடு.<br><br>நேற்று மாலை தமிழகத்திற்கு தேவையான மின்சாரம் பொது விநியோகத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. <br><br>நேற்று மாலை முதல் அனைத்து… <a href="https://t.co/915GqurIoq">https://t.co/915GqurIoq</a></p>&mdash; CTR.Nirmalkumar (@CTR_Nirmalkumar) <a href="https://x.com/CTR_Nirmalkumar/status/2098663751264387077?ref_src=twsrc%5Etfw">September 12, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் சொத்து வரி செலுத்த 30-ந்தேதி கடைசி நாள்: கணினி மையங்கள் சனிக்கிழமைகளிலும் இயங்கும்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/last-day-to-pay-property-tax-in-thoothukudi-is-30th-computer-centers-will-operate-on-saturdays-as-well</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/last-day-to-pay-property-tax-in-thoothukudi-is-30th-computer-centers-will-operate-on-saturdays-as-well#comments</comments><guid isPermaLink="false">3d5c673c-7f6c-42ec-b7a3-a75f76e91467</guid><pubDate>Sat, 12 Sep 2026 07:29:45 +0000</pubDate><atom:updated>2026-09-12T07:29:45.258Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Corporation,மாநகராட்சி,Announcement,அறிவிப்பு,tax,Center,Computer,open,சனிக்கிழமை,கடைசி நாள்,இயங்கும்,last day,கணினி,மையங்கள்,Centers,payment,வரி செலுத்துவோர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/ab2bbcav/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூத்துக்குடி மாநகராட்சி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/ab2bbcav/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">தூத்துக்குடி மாநகராட்சி</a> எல்லைக்குட்பட்ட பொதுமக்கள் 2026-2027-ம் நிதியாண்டின் முதலாம் அரையாண்டிற்கான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF">சொத்து வரி</a>யைச் செலுத்த வரும் செப்டம்பர் 30-ம் தேதி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D">கடைசி நாள்</a> என மாநகராட்சி நிர்வாகம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">அறிவித்துள்ளது</a>. </p><p>இதுதொடர்பாக தூத்துக்குடி மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: </p><p>பொதுமக்கள் தங்கள் கட்டிடங்களுக்கான சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரியினங்களை எவ்வித தாமதமுமின்றி உடனடியாகச் செலுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வரிகளைப் பின்வரும் வழிகளில் எளிதாக செலுத்தலாம்: </p><h2>வரி செலுத்தும் வழிமுறைகள்</h2><p>மாநகராட்சியின் கணினி வரி வசூல் மையங்கள் (Computerized Collection Centers), கியூ.ஆர். கோடு (QR Code) மூலம் நேரடியாகச் செலுத்தும் வசதி, இணையதளம் வாயிலாகச் செலுத்த www.tnurbanepay.tn.gov.in என்ற முகவரியைப் பயன்படுத்தலாம். </p><h2>சனிக்கிழமைகளில் மாநகராட்சி கணினி வரி வசூல் மையங்கள் இயங்கும்</h2><p>பொதுமக்கள் சிரமமின்றி வரி செலுத்துவதற்கு வசதியாக, அரசு பொது விடுமுறை நாட்களைத் தவிர்த்து அனைத்து சனிக்கிழமைகளிலும் மாநகராட்சி கணினி வரி வசூல் மையங்கள் காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும். எனவே பொதுமக்கள் கடைசி நேர நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வரிகளைச் செலுத்தி மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எரிசக்தி துறையை மேம்படுத்துவதில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும் - டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tvk-government-must-focus-on-improving-the-energy-sector-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tvk-government-must-focus-on-improving-the-energy-sector-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">7125e50f-f288-4011-9c8e-a1b4d668aef8</guid><pubDate>Sat, 12 Sep 2026 07:05:16 +0000</pubDate><atom:updated>2026-09-12T07:05:16.251Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,சென்னை,TTV Dhinakaran,டிடிவி தினகரன்,electricity,எரிசக்தி துறை,TVK Government</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/mxzne6ro/ttv.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/mxzne6ro/ttv.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>எரிசக்தி துறையை மேம்படுத்துவதில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>தொடர் மின்வெட்டு</h2><p>தவெக ஆட்சி அமைத்து 120 நாட்களைக் கடந்தும் தொடரும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி - வீண் விதண்டாவாதப் பேச்சுகளின் மூலம் மக்களை மடைமாற்றுவதை விட்டுவிட்டு, எரிசக்தி துறையை மேம்படுத்துவதில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும்.</p><p>தலைநகர் சென்னையில் தொடங்கி, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p><h2>எரிசக்தி துறை</h2><p>குறிப்பாக, இரவு நேரங்களில் அதிகளவில் ஏற்படும் மின்வெட்டால் பச்சிளம் குழந்தைகள் தொடங்கி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினருமே தங்களின் தூக்கத்தைத் தொலைத்து, கடும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.</p><p>மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான மின்சாரத்தைத் தடையின்றி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய துறை சார்ந்த அமைச்சர், மக்களை மடைமாற்றும் விதமாக முடிந்து போன கதைகளையும், காலம் கடந்த குற்றச்சாட்டுகளையும் தோண்டி எடுத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதிலேயே முழு கவனத்தையும் செலுத்தி, ஒட்டுமொத்த எரிசக்தி துறையையும் பாழாக்கிக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.</p><p>மின்சாரத்தை உற்பத்தி செய்து, அதனைத் தடையின்றி விநியோகிக்க வேண்டிய தவெக அரசு, அதற்கு மாறாக அறிவிக்கப்படாத மின்வெட்டுகளையும், கூடுதல் மின்கட்டணச் சுமையையும் ஏற்படுத்தி, தனது திறனற்ற நிர்வாகத்தை மறைக்க ஏழை, எளிய விளிம்புநிலைப் பொதுமக்களை வாட்டி வதைப்பது ஏற்புடையதல்ல.</p><h2>வலியுறுத்தல்</h2><p>எனவே, தமிழகத்தில் நிலவும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டுகளைத் தடுத்து நிறுத்துவதோடு, பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என எரிசக்தி துறையையும், தமிழ்நாடு அரசையும் வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>புதிய தலைமைச் செயலக இடத்தை அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி முடிவு செய்ய வேண்டும் - மார்க்சிஸ்ட்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-location-of-the-new-secretariat-should-be-decided-by-an-all-party-meeting-marxist</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-location-of-the-new-secretariat-should-be-decided-by-an-all-party-meeting-marxist#comments</comments><guid isPermaLink="false">c21df453-d5f6-41cf-a842-94d091a37009</guid><pubDate>Sat, 12 Sep 2026 07:01:54 +0000</pubDate><atom:updated>2026-09-12T07:01:54.582Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மார்க்சிஸ்ட்,Marxist,அனைத்துக் கட்சி கூட்டம்,all-party meeting,புதிய தலைமைச் செயலகம்,new Secretariat</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/u7pefbfl/shanmugam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சண்முகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/u7pefbfl/shanmugam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வடசென்னை மக்களின் அத்தியாவசிய கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட சென்னை மாவட்டக் குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், மின்ட் அருகே நேற்று நடைபெற்றது.</p><p>ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்த மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%86-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">பெ.சண்முகம்</a>, செய்தியாளர்களிடம் கூறியதாவது: போக்குவரத்து நெரிசலாலும், குடியிருப்பு நெருக்கடியினாலும், சுற்றுச்சூழல் பாதிப்பினாலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் பகுதியாகவே வட சென்னை இருந்து வருகிறது.</p><h2>கடுமையான இடநெருக்கடி</h2><p>எனவே, வடசென்னை வளர்ச்சிக்கான சிறப்பு திட்டங்களை உருவாக்குவதோடு, அதற்கான சிறப்பு நிதி ஒதுக்கீடுகளை மாநில அரசு செய்ய வேண்டும். தற்போது இருக்கக்கூடிய தலைமைச் செயலகம் கடுமையான இடநெருக்கடியிலும், போக்குவரத்து நெரிசலிலும் சிக்கியிருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.</p><h2>மீனவர்கள் கடும் எதிர்ப்பு</h2><p>ஆனால், அரசு அலுவலகங்கள் நீண்டகாலத்துக்கான கட்டுமானங்களாக இருக்க வேண்டும். எனவே, இதுபோன்ற விஷயத்தில் அரசு அவசர கதியில் செயல்படக்கூடாது. புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படவுள்ள பட்டினப்பாக்கத்தில், அப்பகுதியைச் சுற்றியுள்ள மீனவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.</p><p>அதேநேரம், சென்னைக்கு வெளியே தலைமைச் செயலகத்தை கொண்டு செல்வதும் பொருத்தமாக இருக்காது. எனவே, இவ்விவகாரத்தில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில், தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தி, அனைவரும் ஏற்கும் வகையில் பொருத்தமான இடத்தைக் கண்டறிய வேண்டும். அதுவரை, பட்டினப்பாக்கத்தில் எந்தவிதமான பணிகளையும் அரசு தொடங்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>திண்டுக்கல்: இளம்பெண் கழுத்து அறுத்து கொலை; மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dindigul-young-woman-murdered-by-slitting-her-throat-police-launch-a-net-to-nab-the-suspects</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dindigul-young-woman-murdered-by-slitting-her-throat-police-launch-a-net-to-nab-the-suspects#comments</comments><guid isPermaLink="false">376e5db3-4b31-4e7a-a1b7-8a10da7efc86</guid><pubDate>Sat, 12 Sep 2026 06:55:35 +0000</pubDate><atom:updated>2026-09-12T06:55:35.779Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திண்டுக்கல்,police,இளம்பெண்,Dindugal,young lady,கழுத்து அறுத்து கொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/wq6w2f8q/2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கொலை செய்யப்பட்ட இளம்பெண்
]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/wq6w2f8q/2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><p>இளம்பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p><h2>இளம்பெண் கழுத்து அறுத்து கொலை</h2><p>திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள் (வயது 26). அவருடைய கணவர் ஜெயசீலன் நில அளவைத் துறையில் சார் ஆய்வாளராக அரசு பணியில் இருந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காளியம்மாள் கணவரை விட்டுப் பிரிந்து தனது குழந்தையுடன் அப்பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை அக்கம்பக்கத்தினர் காளியம்மாளை பார்ப்பதற்கு வீட்டிற்கு சென்ற போது, அவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து <a href="https://www.dailythanthi.com/topic/போலீசாருக்கு">போலீசாருக்கு</a> தகவல் தெரிவித்தனர்.</p><h2>மர்ம நபர்களுக்கு வலை வீச்சு</h2><p>இது குறித்து தகவலறிந்த திண்டுக்கல் மாவட்ட போலீசார் காளியம்மாள் உடலைக் கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">கொலை </a>குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் முதற்கட்ட விசாரணையில், காளியம்மாள் கொலை செய்யப்பட்ட நேரத்தில் இருந்து அவரது கணவரின் செல் போன் சுவிட்ச் ஆப்பில் உள்ளது. இதனால் சந்தேகித்த போலீசார் தலைமறைவாக உள்ள ஜெயசீலனை தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சாலமன் பாப்பையா மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது - துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/solomon-pappaiya-demise-deeply-painful-vice-president-cp-radhakrishnan-condoles</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/solomon-pappaiya-demise-deeply-painful-vice-president-cp-radhakrishnan-condoles#comments</comments><guid isPermaLink="false">72944503-af90-48c3-ad8e-a15c46a2831e</guid><pubDate>Sat, 12 Sep 2026 06:55:16 +0000</pubDate><atom:updated>2026-09-12T06:55:16.402Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Vice President,CP Radhakrishnan,துணை ஜனாதிபதி,இரங்கல்,condolence,சி.பி. ராதாகிருஷ்ணன்,சாலமன் பாப்பையா,Solomon Pappaiah</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/hoddap1v/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சி.பி. ராதாகிருஷ்ணன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/hoddap1v/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 90. சாலமன் பாப்பையா மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.</p><p>இந்த நிலையில் சாலமன் பாப்பையா மறைவுக்கு துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. பட்டிமன்ற மரபின் வழியாக தமிழ் மொழியின் செழுமையை எண்ணற்ற இல்லங்களுக்குக் கொண்டு சென்று, தலைமுறைகளை ஊக்குவித்தவர். தமிழ்மொழி, இலக்கியம் மற்றும் பண்பாட்டிற்காக அவர் ஆற்றிய வாழ்நாள் முழுவதுமான பணி என்றும் நினைவுகூரப்படும்.</p><p>அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்கள், மாணவர்கள் மற்றும் அன்பர்களுக்கும், தமிழ் இலக்கிய உலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.<br><br>பட்டிமன்ற மரபின் வழியாக தமிழ் மொழியின் செழுமையை எண்ணற்ற இல்லங்களுக்குக் கொண்டு சென்று, தலைமுறைகளை ஊக்குவித்தவர். தமிழ்மொழி, இலக்கியம் மற்றும் பண்பாட்டிற்காக அவர் ஆற்றிய வாழ்நாள் முழுவதுமான பணி என்றும்… <a href="https://t.co/w17NxlLvyp">pic.twitter.com/w17NxlLvyp</a></p>&mdash; Vice-President of India (@VPIndia) <a href="https://x.com/VPIndia/status/2098633796304392671?ref_src=twsrc%5Etfw">September 12, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>அரசுப் பேருந்தின் கதவில் சிக்கி பயணிக்கு மூக்கு, வாய் உடைந்தது- ஓட்டுநருடன் பயணிகள் வாக்குவாதம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/passengers-nose-and-mouth-broken-after-getting-caught-in-government-bus-door-passenger-argues-with-driver</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/passengers-nose-and-mouth-broken-after-getting-caught-in-government-bus-door-passenger-argues-with-driver#comments</comments><guid isPermaLink="false">bb5ef9d2-893c-471b-b42d-212bf0c103e0</guid><pubDate>Sat, 12 Sep 2026 06:52:07 +0000</pubDate><atom:updated>2026-09-12T06:52:07.532Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Accident,கோவை,Government bus,driver,Video viral,அரசுப்பேருந்து,காயம் injured,பயணிகள் அதிர்ச்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/l6e3qzw5/0.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பேருந்து ஓட்டுநர்- காயமடைந்த பெண்]]></media:title><media:description type="html"><![CDATA[ அரசுப் பேருந்தின் கதவில் சிக்கி பயணிக்கு மூக்கு, வாய் உடைந்தது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/l6e3qzw5/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவையில் அரசு டவுன் பேருந்தின் ஆட்டோமேட்டிக் கதவு திடீரென மூடப்பட்டதில், பேருந்தில் ஏறிக்கொண்டிருந்த பெண் பயணி ஒருவரின் முகம் மற்றும் மூக்கு கதவுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தார். இந்த சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகள் ஓட்டுநர் மற்றும் நடத்துநரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில்  பரபரப்பு ஏற்பட்டது.</p><h2>திடீரென முடிய பேருந்தின் கதவு</h2><p>உக்கடத்தில் இருந்து சோமனூர் நோக்கிச் சென்ற 30எச் வழித்தட எண் கொண்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">அரசு டவுன் பேருந்து</a>, நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு கோவை - திருச்சி சாலையில் உள்ள இருகூர் பிரிவு பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக நின்றது. அப்போது, பேருந்தின் பின்பக்க படிக்கட்டு வழியாக வயதான பெண்கள் மற்றும் பெண் பயணிகள் பேருந்திற்குள் ஏறிக்கொண்டிருந்தனர். பயணிகள் முழுமையாக ஏறி முடிப்பதற்குள், ஓட்டுநர் பேருந்தின் பின்புறம் என்ன நடக்கிறது என்று கவனிக்காமல், அவசரமாக ஆட்டோமேட்டிக் கதவை மூடியுள்ளார். அதே நேரத்தில் பேருந்தையும் இயக்கத் தொடங்கியுள்ளார்.</p><h2>முகத்தில் பலத்த காயம்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81">கதவு</a> மூடிய தருணத்தில் படியில் ஏறிக்கொண்டிருந்த பெண் பயணி ஒருவரின் முகம் மற்றும் மூக்கு கதவுகளுக்கு இடையே மாட்டி நசுங்கியது. இதில் அவரது வாய் மற்றும் மூக்குப் பகுதியில் இருந்து ரத்தம் கொட்டியதுடன், பலத்த காயமும் ஏற்பட்டது. பேருந்து நகரத் தொடங்கியதால் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்ட அவரைப் பார்த்து சக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பயணிகள்</a> அச்சத்தில் கூச்சலிட்டனர். இதையடுத்து பயணிகள் உடனடியாக சத்தம் போட்டு பேருந்தை நிறுத்தச் செய்தனர்.</p><h2>ஓட்டுநர், நடத்துநருடன் பயணிகள் வாக்குவாதம்</h2><p>பேருந்து நிறுத்தப்பட்டதும், நடத்துநர் மற்றும் ஓட்டுநரின் இந்த அசாத்திய அலட்சிய போக்கைக் கண்டு ஆத்திரமடைந்த சக பயணிகள் மற்றும் பொதுமக்கள் பேருந்தை முற்றுகையிட்டனர். ”பின்னாடி பயணிகள் ஏறுவதைக்கூடப் பார்க்காமல் வண்டியை இப்படி ஓட்டுகிறீர்களே, மூக்கில் ரத்தம் கொட்டுகிறது பாருங்கள்" என்று ஓட்டுநரிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.</p><p>இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும், பரபரப்பான சூழலும் நிலவியது. தற்போது இந்த விபத்து மற்றும் பொதுமக்கள் வாக்குவாதம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பயணியர்களிடையே அரசுப் பேருந்துகளின் பாதுகாப்பு குறித்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/Fl-TZwJxXIM"></iframe></figure>]]></content:encoded></item><item><title>என் தலைவரை தொட்டது யாராக இருந்தாலும் விடமாட்டோம் - சென்னை மேயர் பிரியா ஆவேசம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-not-spare-anyone-who-touches-my-leader-chennai-mayor-priya-declares-vehemently</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-not-spare-anyone-who-touches-my-leader-chennai-mayor-priya-declares-vehemently#comments</comments><guid isPermaLink="false">6f410515-decf-4315-940d-b3c997cbde53</guid><pubDate>Sat, 12 Sep 2026 06:51:28 +0000</pubDate><atom:updated>2026-09-12T06:51:28.263Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,மேயர் பிரியா,சட்டசபை,Chennai Mayor Priya</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/o3yec9f7/Chennai-mayor.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மேயர் பிரியா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/o3yec9f7/Chennai-mayor.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் மிசா குறித்தும் ஸ்டாலின் குறித்தும் பேசியதைக் கண்டித்து தி.மு.க. சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மேயர் பிரியா பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>மிசா சட்டத்தை பற்றி உங்களுக்கு என்ன தெரியும். நீங்கள் எல்லாம் தி.மு.க.வை பார்த்து கேள்வி கேட்கலாமா? அந்த தகுதி உங்களுக்கு இருக்கிறதா? சட்டசபையில் வந்து என்ன பேச வேண்டும் என்று அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு சொல்லித்தரவில்லை. இதில் பயிற்சி புரோகிராம் வேறு கொடுத்தீர்கள். யாரை சீண்டிப் பார்த்து இருக்கிறீர்கள். என்ன மாதிரியான ஒரு கழகத்தை சீண்டிப் பார்த்து இருக்கிறீர்கள் என்று தெரியாமல் சீண்டியுள்ளீர்கள். நாங்களாக பிரச்சினைக்கு போக மாட்டோம். ஆனால் வருகிற பிரச்சினையை என்னைக்குமே விட மாட்டோம். நீங்களே விட்டாலும் நாங்கள் அதை விட மாட்டோம்.</p><p>திரைப்படத்தில் 3 மணி நேரம் படம் நடிப்பது போல ஒரு மணி நேரம் சட்டசபையில் வந்து பேசிவிட்டு போகிறார் முதல்-அமைச்சர். தமிழ்நாட்டின் வரலாறு என்ன? அண்ணா, கருணாநிதி மற்றும் தலைவர் ஸ்டாலின் தமிழையும் தமிழ்நாட்டையும் வளர்ப்பதற்கு எவ்வளவு பாடுபட்டு உள்ளார்கள் என்று தமிழ்நாட்டு மக்கள் பார்த்து இருக்கிறார்கள்.இன்று மிசா சட்டத்தை சட்டமன்றத்தில் பேசுகிறீர்கள். மிசா சட்டம் என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியும். </p><p>முதுகை காட்டிக்கொண்டு ஓடு ஓடு ஓடு என்று ஓடிவிட்டு உதயநிதி ஸ்டாலினை போகக்கூடாது என்று சொல்கிறீர்கள். அப்படி சொல்லிவிட்டு நீங்கள் ஓடுகிறீர்கள். மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். "என் தாயைப் பழித்தவனை யார் தடுத்தாலும் விட மாட்டேன்" என்று சொல்லுவார்கள். அதேபோல் என் தலைவரை தொட்டது யாராக இருந்தாலும்... மாண்புமிகுவாக இருந்தாலும் நாங்கள் விடமாட்டோம்” என்று பேசினார்.</p> ]]></content:encoded></item><item><title>திடக்கழிவுகளை உருவாகும் இடத்திலேயே தரம் பிரித்து ஒப்படைக்க சென்னை மாநகராட்சி ஆணையாளர் வேண்டுகோள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/segregate-solid-waste-at-source-appeals-chennai-corporation-commissioner</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/segregate-solid-waste-at-source-appeals-chennai-corporation-commissioner#comments</comments><guid isPermaLink="false">560f60e1-c26b-4c89-9bfa-5be1c2e37873</guid><pubDate>Sat, 12 Sep 2026 05:05:16 +0000</pubDate><atom:updated>2026-09-12T06:33:09.533Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,Solid Waste,திடக்கழிவு,திடக்கழிவு மேலாண்மை,மாநகராட்சி ஆணையாளர்,Solid Waste Management</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/68q53l20/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/68q53l20/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகராட்சியில் திடக்கழிவுகளை உருவாகும் இடத்திலேயே பொதுமக்கள் தரம் பிரித்து ஒப்படைத்திட மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>சென்னை மாநகராட்சி, அனைத்து குடியிருப்புவாசிகள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் (Bulk Waste Generators) ஆகியோர் திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-ன் படி திடக்கழிவுகளை உருவாகும் இடத்திலேயே தரம் பிரித்து சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைத்திட அன்புடன் கேட்டுக்கொள்ப்படுகிறார்கள்</p><p>திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-ன் படி, கழிவுகளை பின்வரும் நான்கு வகைகளாகப் பிரித்து வழங்க வேண்டும்:</p><p><strong>மக்கும் கழிவுகள்</strong> (பச்சை நிறக் குப்பைத்தொட்டி): உணவுக் கழிவுகள், காய்கறி மற்றும் பழத்தோல்கள், பூக்கள் மற்றும் பிற மக்கும் கழிவுகள்.</p><p><strong>மக்காத கழிவுகள்</strong> (நீல நிறக் குப்பைத்தொட்டி): காகிதம், பிளாஸ்டிக், உலோகம், அட்டைப்பெட்டிகள், துணி மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள்.</p><p><strong>சுகாதாரக் கழிவுகள்</strong> (சிவப்பு நிறக் குப்பை தொட்டி): பயன்படுத்தப்பட்ட சானிட்டரி நாப்கின்கள், டயப்பர்கள், பயன்படுத்தப்பட்ட மருத்துவக்கட்டுப் பொருட்கள் போன்றவற்றை பாதுகாப்பாக சுற்றி தனியாக வழங்க வேண்டும்.</p><p><strong>வீட்டு அபாயகரக் கழிவுகள் / சிறப்பு கவனம் தேவைப்படும் கழிவுகள்</strong> (கருப்பு நிறக் குப்பைத்தொட்டி): பேட்டரிகள், மின் விளக்குகள், டியூப் லைட்கள், மின்னணுக் கழிவுகள், காலாவதியான மருந்துகள், பெயிண்ட் டப்பாக்கள் உள்ளிட்ட அபாயகரக் கழிவுகளை தனியாக ஒப்படைக்க வேண்டும்.</p><p>கழிவுகளை உருவாகும் இடத்திலேயே தரம் பிரிப்பது ஒவ்வொரு தனிநபரின் பொறுப்பாகும். இதன் மூலம் மக்கும் கழிவுகளை உரமாக மாற்றவும், மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை மீட்டெடுக்கவும், குப்பைக் கிடங்குகளுக்கு அனுப்பப்படும் கழிவுகளின் அளவை குறைக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்தவும் முடியும்.</p><p>சென்னை மாநகராட்சி, 200 வார்டுகளிலும் வீடு தோறும் தரம் பிரிக்கப்பட்ட கழிவுகளை சேகரிக்க அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-ல் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு வகை கழிவு தரம் பிரிப்பு முறையை திறம்பட செயல்படுத்தும் வகையில், மாநகராட்சியின் அனைத்து பேட்டரி மூலம் இயக்கப்படும் கழிவு சேகரிப்பு வாகனங்களிலும் (Battery Operated Vehicles - BOVs), கழிவுகளின் நான்கு வகைகளையும் தனித்தனியாக சேகரிப்பதற்காக நான்கு வண்ண அடையாளங்களுடன் கூடிய தனித்தனி குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.</p><p>எனவே, பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் அனைவரும் உருவாகும் ஈரக் கழிவுகள் மற்றும் உலர் கழிவுகளை உருவாகும் இடத்திலேயே தரம் பிரித்து, தனித்தனியாக ஒதுக்கப்பட்ட ஈரக்கழிவு மற்றும் உலர் கழிவுகளுக்கான குப்பைத் தொட்டிகளில் வைத்து, சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.</p><p>கழிவுகள் உருவாகும் இடத்திலேயே பிரித்தல் மற்றும் அறிவியல் முறையிலான திடக்கழிவு மேலாண்மையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை மாநகராட்சி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தகவல் - கல்வி - தொடர்பு (IEC) நடவடிக்கைகள், பள்ளிகள் மற்றும் சமூக அமைப்புகள் மூலம் தொடர்ச்சியான விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.</p><p>தூய்மையான, ஆரோக்கியமான மற்றும் நிலைத்தன்மை வாய்ந்த சென்னையை உருவாக்குவதில் பொதுமக்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். எனவே, அனைத்து பொதுமக்களும் தங்களது வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் தினந்தோறும் உருவாகும் கழிவுகளை கழிவு உருவாகும் இடத்திலேயே (மூலத்திலேயே) முறையாகத் தரம் பிரித்து, ஈரக் கழிவுகள் மற்றும் உலர் கழிவுகளை தனித்தனி வீட்டு உபயோகக் குப்பைத் தொட்டிகளில் சேகரித்து, சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களிடம் தனித்தனியாக ஒப்படைத்து, சென்னை மாநகராட்சியின் தூய்மை மற்றும் சுகாதாரப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் திடக்கழிவுகளை உருவாகும் இடத்திலேயே தரம் பிரிக்கத் தவறுதல் அல்லது திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026 மற்றும் சென்னை மாநகராட்சியின் விதிமுறைகளை மீறுதல் ஆகியவற்றிற்கு சட்டப்படியாக விதிக்கப்படும் அபராதம் மற்றும் பிற நடவடிக்கைகளைத் தவிர்த்திடுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p>"திடக்கழிவுகளை உருவாகும் இடத்திலேயே தரம் பிரிப்போம் - தூய்மையான, பசுமையான, ஆரோக்கியமான சென்னையை உருவாக்குவோம்." மேற்கண்டவாறு சென்னை மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>குளத்தில் மீன்பிடிக்க சென்ற விவசாயி வலையில் சிக்கி உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmer-dies-after-being-caught-in-net-while-fishing-in-pond</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmer-dies-after-being-caught-in-net-while-fishing-in-pond#comments</comments><guid isPermaLink="false">9b2cea25-c0e8-42b5-87ee-f7d4e68fcb24</guid><pubDate>Sat, 12 Sep 2026 06:12:32 +0000</pubDate><atom:updated>2026-09-12T06:12:32.632Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,farmer,விவசாயி,net,உயிரிழப்பு,Fishing,pond,குளம்,drowning death,மீன்பிடிக்க,வலை,தண்ணீரில் மூழ்கி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/3qvhf9hf/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மீன் வலையில் சிக்கி, நீரில் மூழ்கி விவசாயி உயிரிழப்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/3qvhf9hf/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், குரும்பூர் அருகே கடம்பா <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">குளத்திற்கு</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95">மீன்பிடிக்க</a>ச் சென்ற <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF">விவசாயி</a> ஒருவர், எதிர்பாராதவிதமாக தனது மீன் வலையிலேயே சிக்கி தண்ணீரில் மூழ்கி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">உயிரிழந்தார்</a>. </p><h2>மீன்பிடிக்க சென்ற விவசாயி</h2><p>தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே உள்ள கீழக்கல்லாம்பாறை கிராமத்தைச் சேர்ந்த பட்டானி மகன் இசக்கிமுத்து (வயது 55). விவசாயியான இவர், நேற்று முன்தினம் தனது குடும்பத்தினரிடம் கடம்பா குளத்தில் மீன்பிடிக்கச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டுச் சென்றுள்ளார். ஆனால் இரவாகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மறுநாள் (நேற்று) கடம்பா குளத்திற்குச் சென்று தீவிரமாகத் தேடினர். </p><h2>வலையில் சிக்கி, நீரில் மூழ்கி உயிரிழப்பு</h2><p>அப்போது குளத்து நீரில் வீசப்பட்ட மீன்வலையில் இசக்கிமுத்து சிக்கிய நிலையில் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து உடனடியாக குரும்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், இசக்கிமுத்துவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து குரும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருச்செந்தூரில் திடீரென 50 அடிக்கு உள்வாங்கிய கடல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sea-recedes-by-50-feet-suddenly-at-tiruchendur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sea-recedes-by-50-feet-suddenly-at-tiruchendur#comments</comments><guid isPermaLink="false">a2f02d91-8053-4c9c-b542-51d60897d65e</guid><pubDate>Sat, 12 Sep 2026 06:08:52 +0000</pubDate><atom:updated>2026-09-12T06:08:52.764Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>sea,கடல்,திருச்செந்தூர்,Tiruchendur</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/y9q0o2p5/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/y9q0o2p5/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்செந்தூர்,</p><p>அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இங்குள்ள கடலில் புனித நீராடிவிட்டு சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். </p><p>இதனிடையே, ஒவ்வொரு மாதமும் வழக்கமாக அமாவாசை, பவுர்ணமி நாட்கள் மற்றும் அதற்கு முன்தினம், மறுதினங்களில் காலையில் கடல் உள்வாங்குவதும், மாலையில் இயல்பு நிலைக்கு திரும்புவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது.</p> <p>இந்நிலையில், திருச்செந்தூரில் இன்று காலை திடீரென கடல் உள்வாங்கியது. சுமார் 50 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியது. கடல் உள்வாங்கியுள்ள பகுதிகளில் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிகின்றன.</p><p>கடல் உள்வாங்கியுள்ள நிலையில் பக்தர்கள் பாதுகாப்பாக கடலில் குளிக்கும்படி கோவில் நிர்வாகம், காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கடமலைக்குண்டு அருகே 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/4000-year-old-rock-paintings-discovered-near-kadamalaikundu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/4000-year-old-rock-paintings-discovered-near-kadamalaikundu#comments</comments><guid isPermaLink="false">572c9813-9ae9-49ae-8620-ff3aaff8d9ac</guid><pubDate>Sat, 12 Sep 2026 06:01:32 +0000</pubDate><atom:updated>2026-09-12T06:01:32.329Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கண்டுபிடிப்பு,Rock,Painting,discovered,கடமலைக்குண்டு,பாறை ஓவியங்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/zqjxmlpt/15.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பாறை ஓவியங்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/zqjxmlpt/15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி,</p><p>கடமலைக்குண்டு அருகே தேன்பாறை மலை அடிவாரத்தில் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பாறை ஓவியங்கள்</a>, புதிய கற்காலச் சாணைத் தடங்கள் மற்றும் பெருங்கற்கால வழிபாட்டு எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளது. </p><p>இங்குள்ள குகைத்தளங்களில் வெண்சாந்தினால் வரையப்பட்ட மனித உருவங்கள், விலங்குகள் மற்றும் வேட்டைச் சடங்குகளை உணர்த்தும் ஓவியங்கள் உள்ளன. பாறையின் சாய்வான பகுதியில் கற்கோடாரிகள், இரும்பு ஆயுதங்களை கூர்மையாக்கப் பயன்படுத்திய 3 சாணைத் தடங்கள் காணப்படுகின்றன.</p><h2>பாறைக்கீறல்</h2><p>மேலும், வழிபாட்டின் போது விளக்கேற்றப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படும் வட்ட வடிவிலான கப்-மார்க் குடைவுகளும், ஒளிக்கதிர்கள் போன்ற பாறைக்கீறல்களும் உள்ளன. வைகை ஆற்றிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள இந்த தளம், புதிய கற்காலம் முதல் சங்க காலம் வரை மனிதர்களின் வாழ்விடமாகவும், தொழிற்கூடமாகவும், வழிபாட்டிடமாகவும் திகழ்ந்துள்ளதை நிரூபிக்கிறது. வருசநாட்டுப் பகுதியின் வரலாற்றை வெளிப்படுத்தும் இந்த குகைத்தளங்களை அரசு தொல்லியல் துறை பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்க வேண்டும். மேற்கண்ட தகவலை தொல்லியல் ஆய்வாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஆந்திராவைப் போல தமிழகத்திலும் விநாயகர் பந்தல்களுக்கு இலவச மின்சாரம் - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/free-electricity-for-vinayagar-pandals-in-tamil-nadu-just-like-in-andhra-pradesh-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/free-electricity-for-vinayagar-pandals-in-tamil-nadu-just-like-in-andhra-pradesh-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">e071bd78-c379-405e-b7b1-9a2b5fa536da</guid><pubDate>Sat, 12 Sep 2026 05:58:21 +0000</pubDate><atom:updated>2026-09-12T05:58:21.175Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Vinayagar Chaturthi,விநாயகர் சதுர்த்தி,Free electricity,இலவச மின்சாரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/lu51frjn/317.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/lu51frjn/317.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஆந்திராவைப் போலத் தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்திப் பந்தல்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.</p><h2>விநாயகர் சதுர்த்தி</h2><p>இது தொடர்பாக, நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>"பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா!" என்று விநாயகப் பெருமானிடம் சங்கத் தமிழையே வரமாகக் கேட்டார் ஔவையார். அப்படித் தமிழ் மொழியோடு பின்னிப் பிணைந்த முழுமுதற் கடவுள்தான் நம் விநாயகப் பெருமான். அந்த வேழமுகத்தோனின் திருவிழாவை உலக மக்கள் அனைவரும் பக்தி பரவசத்துடன் கொண்டாட தயாராகி வரும் வேளையில், அத்திருவிழாவை மறைமுகமாக முடக்கும் வேலையில் முதல்-அமைச்சரின் அரசு ஈடுபடுகிறதோ என்கிற வலுவான ஐயம் எழுகிறது.</p><h2>மின்சாரம்</h2><p>பொதுமக்கள் தங்களின் பக்தி உணர்வோடு அமைக்கும் வழிபாட்டுப் பந்தல்களுக்கு, தற்காலிக மின் இணைப்பு மீட்டருக்கு ரூ.3,800, 'டெபாசிட்' தொகையாக ரூ.4,000 செலுத்த வேண்டியுள்ளது. அதோடு வயரிங் செலவு உள்ளிட்ட பணிகளுக்கென ஒரு விநாயகர் சிலை மின் இணைப்புக்கு மட்டுமே சுமார் ரூ.15,000 வரை செலவாவதோடு, 'கமர்சியல்' கட்டணம் என்ற பெயரில் கூடுதல் சுமை சுமத்தப்படுவதாக விழா அமைப்பாளர்களும் பொதுமக்களும் குற்றம்சாட்டுகின்றனர்.</p><h2>வலியுறுத்தல்</h2><p>அண்டை மாநிலமான ஆந்திராவில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு எவ்விதத் தடையுமின்றி அரசே முன்வந்து இலவச மின்சாரம் வழங்கிப் பக்தர்களை உற்சாகப்படுத்தும் வேளையில், தமிழகத்தில் மட்டும் இந்துக்களின் வழிபாட்டு உரிமைகளை நசுக்கும் வகையில் தவெக அரசு செயல்படுவதாக மக்கள் நினைக்கின்றனர். எனவே, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D">முதல்-அமைச்சர்</a> விஜயின் அரசு வணிகக் கட்டண முறையை ரத்து செய்வதோடு, விநாயகர் சதுர்த்திப் பந்தல்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி இலவச மின்சாரம் வழங்கிட உத்தரவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் யார் யார் தெரியுமா?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madhuranthakam-and-dharapuram-by-elections-do-you-know-who-the-tvk-election-in-charges-are</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madhuranthakam-and-dharapuram-by-elections-do-you-know-who-the-tvk-election-in-charges-are#comments</comments><guid isPermaLink="false">7c361aae-76db-4ca8-b84d-1b8dd715b386</guid><pubDate>Sat, 12 Sep 2026 05:53:15 +0000</pubDate><atom:updated>2026-09-12T05:53:15.450Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,மதுராந்தகம்,தாராபுரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/bkrrjx61/vijay.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/bkrrjx61/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ந் தேதி தொடங்கியுள்ள நிலையில், இடைத்தேர்தலிலும் த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் ஆகிய கட்சிகள் இடையே 4 முனைப்போட்டி நிலவுகிறது.இதில், நாம் தமிழர் கட்சியை தவிர, தேர்தல் களம் காணும் 3 கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. கடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்) ஆகிய 2 பேரும் தற்போது த.வெ.க. சார்பில் அதே தொகுதிகளில் களம் காண்கின்றனர். பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. சார்பில் ஐ.பரந்தாமன் (மதுராந்தகம்), எஸ்.சுகன்யா (தாராபுரம்) ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத் (மதுராந்தகம்), பானுமதி (தாராபுரம்) ஆகியோர் போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை நாளை அறிவிக்க உள்ளது. இடைத்தேர்தல் என்ற போதிலும் கடுமையான போட்டி நிலவுவதால்,  வெற்றி பெற அரசியல் கட்சிகள் பல்வேறு  வியூகம் வகுத்து வருகின்றன. </p><p>அந்த வகையில், தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்து அக்கட்சியின் தலைவரும் முதல் அமைச்சருமான விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:</p><h2>தேர்தல் கண்காணிப்பாளர்கள்:</h2><p>அமைச்சர் என்.ஆனந்த்</p><p>அமைச்சர் செங்கோட்டையன்</p><p> அமைச்சர் நிர்மல் குமார்</p><h2>தேர்தல் பணிக்குழு</h2><p>மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதி:</p><p>பொறுப்பாளர்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</p><p>இணைப் பொறுப்பாளர்கள்:</p><p>அமைச்சர்ராஜ்குமார்</p><p>அமைச்சர் தென்னரசு</p><p>அமைச்சர் வினோத்</p><h2>துணைப் பொறுப்பாளர்கள்:</h2><p>எம்.எல்.ஏ சரவணமூர்த்தி;</p><p>எம்.எல்.ஏ தியாகராஜன் </p><p>எம்.எல்.ஏ விஜயராஜ்</p><p>எம்.எல்.ஏ காமாட்சி</p><p>எம்.எல்.ஏ பாலாஜி (எ) மணிகண்டன்</p><h2>தாராபுரம்; </h2><p>பொறுப்பாளர்:  அமைச்சர் அருண்ராஜ்</p><p>இணைப் பொறுப்பாளர்கள்:</p><p>1. அமைச்சர்  விஜய் பாலாஜி</p><p>2. அமைச்சர்  விஜயலட்சுமி</p><p>3. அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்</p><p><strong>துணைப் பொறுப்பாளர்கள்:</strong></p><p>1..பாலமுருகன்  எம்.எல்.ஏ. -திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி</p><p>2. சத்தியபாமா எம்.எல்.ஏ -திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி</p><p>3. ராம்குமார்  எம்.எல்.ஏ, -பல்லடம் சட்டமன்றத் தொகுதி</p><p>4. திலீப் எம்.எல்.ஏ -நாமக்கல் சட்டமன்றத் தொகுதி</p><p>5. சத்யா எம்.எல்.ஏ, -கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி</p>  <p>மேற்கண்ட குழுவினர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்வார்கள். தேர்தல் கண்காணிப்பாளர்கள், இரண்டு தொகுதிகளின் தேர்தல் பணிகளைக் கண்காணிப்பார்கள். அந்தந்தச் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட கழகத் தோழர்கள் அனைவரும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். விசில் சின்னம், மீண்டும் வாகை சூட வேண்டும். இடைத்தேர்தல் வரலாற்றிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர் என்கிற புதிய வரலாறு படைக்கும் வகையில் அனைவரும் தேர்தல் பணியாற்றிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இந்தத் தொகுதிகளில் நம் வெற்றி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நமது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளைத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விரைவில் முன்னெடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: அனைத்து செலவுகளையும் அரசே ஏற்பதை உறுதி செய்ய வேண்டும் - டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/breakfast-scheme-expansion-government-must-bear-all-costs-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/breakfast-scheme-expansion-government-must-bear-all-costs-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">7aac84f6-217e-405f-81f4-e4e558ae8d42</guid><pubDate>Sat, 12 Sep 2026 05:51:05 +0000</pubDate><atom:updated>2026-09-12T05:51:05.761Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,AMMK,அமமுக,காலை உணவுத் திட்டம்,Kaalai Unavu Thittam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/xsouc79o/Untitled-8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/xsouc79o/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காலை உணவுத் திட்ட விரிவாக்கத்திற்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் வரும் 17-ம் தேதி முதல் விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், அந்நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் பள்ளித் தலைமை ஆசிரியர்களே தங்களது சொந்த செலவில் மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி உட்பட, அரசால் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் நிலையில், அதற்குத் தேவையான பெயர்ப்பலகை, மின்விளக்கு, குடிநீர் உள்ளிட்ட தொடக்க நிகழ்வுக்கான ஏற்பாடுகளுக்கான செலவினங்களைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் தலையில் சுமத்துவது ஏற்புடையதல்ல.</p><p>பல ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயன்பெறக்கூடிய ஒரு திட்டத்தை விரிவாக்கம் செய்யும்போது, அதற்கான ஏற்பாட்டுச் செலவுகளுக்குத் தேவையான நிதியை ஒதுக்க மறுப்பதும், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மீது பொருளாதாரச் சுமையை ஏற்றுவதும், அரசு நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள நிர்வாகச் சிக்கல்களையும் அதிகாரக் குளறுபடிகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.</p><p>எனவே, செப்டம்பர் 17-ம் தேதி நடைபெற உள்ள பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்திற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு நிதியின் மூலமாகவே மேற்கொள்ள வேண்டும் என்பதோடு, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மீது தேவையற்ற பொருளாதாரச் சுமையை ஏற்றும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும் தவெக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ganesha-idols-are-being-sold-in-thoothukudi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ganesha-idols-are-being-sold-in-thoothukudi#comments</comments><guid isPermaLink="false">491b029c-9508-4791-807a-27c3ce1623ea</guid><pubDate>Sat, 12 Sep 2026 05:49:16 +0000</pubDate><atom:updated>2026-09-12T05:49:16.481Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,விற்பனை,Sale,விநாயகர் சதுர்த்தி,Ganesha Chaturthi,சிலைகள்,மும்முரம்,Idols,busy</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/qllkvv25/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/qllkvv25/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88">விநாயகர் சதுர்த்தி பண்டிகை</a> நாளை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a>யில் பூஜைக்கான விநாயகர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">சிலைகள்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88">விற்பனை</a> தீவிரமாக நடைபெற்று வருகிறது. </p><h2>விநாயகர் சதுர்த்தி பண்டிகை</h2><p>விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக விநாயகர் சிலைகள் உள்ளிட்ட பூஜைக்கான பல்வேறு பொருட்களையும் வாங்குவதற்காக மக்கள் முக்கிய கடை வீதிகளில் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஒட்டி, தூத்துக்குடி மாநகரில் சிவன் கோவில் அருகே உள்ள கடைகளில் பல்வேறு அளவுகளிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்குக் குவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வைத்துப் பூஜை செய்வதற்காக ஆர்வத்துடன் விநாயகர் சிலைகளை வாங்கிச் செல்கின்றனர்.  </p><h2>விநாயகர் சிலைகள் ரூ.20 முதல் ரூ.3 ஆயிரம் வரை விற்பனை</h2><p>பொதுமக்களின் வசதிக்காக சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் முதல் பெரிய அளவிலான வண்ணச் சிலைகள் வரை விற்பனை செய்யப்படுகின்றன. இந்த கடைகளில் விநாயகர் சிலைகள் ரூ.20 முதல் ரூ.3 ஆயிரம் வரை பல்வேறு விலைகளில் கிடைக்கின்றன. பண்டிகை நாளையொட்டி தூத்துக்குடி மாநகர கடை வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>சென்னையில் கள்ளநோட்டு கொடுத்து பால் வாங்க முயன்ற பெண் கைது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-arrested-in-chennai-for-trying-to-buy-milk-with-counterfeit-notes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-arrested-in-chennai-for-trying-to-buy-milk-with-counterfeit-notes#comments</comments><guid isPermaLink="false">e9cd86a3-0f35-4383-8726-3c5eef82e9bc</guid><pubDate>Sat, 12 Sep 2026 05:37:38 +0000</pubDate><atom:updated>2026-09-12T05:37:38.751Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,பெண் கைது,milk,police enquiry,கள்ளநோட்டு,counterfeit notes</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/6hglnrpy/0.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ அமைந்தகரை காவல் நிலையம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னையில் கள்ளநோட்டு கொடுத்து பால் வாங்க முயன்ற பெண் கைது. ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/6hglnrpy/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை அமைந்தகரை பகுதியில் கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விட முயன்ற பெண் ஒருவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து பல்லாயிரக்கணக்கான  மதிப்பிலான<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"> கள்ள ரூபாய் நோட்டுகள்</a> பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><h2>ஆவின் பூத்தில் சிக்கிய பெண்</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை</a> அமைந்தகரை பகுதியில் உள்ள ஆவின் பால் பூத்திற்கு இன்று (சனிக்கிழமை) அலமேலு என்ற பெண் பால் வாங்குவதற்காக வந்துள்ளார். அவர் பால் வாங்கிவிட்டு அதற்குரிய பணமாக ரூபாய் நோட்டு ஒன்றை அங்குள்ள ஊழியரிடம் கொடுத்தார். அந்த நோட்டின் மீது சந்தேகமடைந்த கடை ஊழியர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர், அது கள்ள நோட்டு என்பதை உறுதி செய்தனர். உடனடியாக இது குறித்து அமைந்தகரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.</p><h2>போலீஸ் விசாரணை – வீட்டில் ரூ.42,000 சிக்கியது</h2><p>தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கள்ள நோட்டு மாற்ற முயன்ற அலமேலுவை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அவரது வீட்டில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.42,000 மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.</p><h2>குப்பைத் தொட்டியில் கிடைத்ததா?</h2><p>போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த பெண் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு இந்த கள்ள நோட்டுகள் அனைத்தும் குப்பைத் தொட்டியில் இருந்துதான் கிடைத்ததாக அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.</p><p>இருப்பினும், இந்த பதிலை ஏற்காத போலீசார், கள்ள நோட்டு கும்பலுடன் அந்த பெண்ணுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா? அல்லது கள்ள நோட்டுகளை அச்சடிக்கும் பெரிய கும்பல் ஏதேனும் இதன் பின்னணியில் செயல்படுகிறதா? என்ற கோணத்தில் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/eAdBMtLsRck"></iframe></figure>]]></content:encoded></item><item><title>
நாளை திருமணம்: விபத்தில் இன்று பலியான மணப்பெண்: மணமகன் கண்முன்னே நடந்த சோகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wedding-tomorrow-bride-dies-in-accident-today-tragedy-unfolds-before-grooms-eyes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wedding-tomorrow-bride-dies-in-accident-today-tragedy-unfolds-before-grooms-eyes#comments</comments><guid isPermaLink="false">ebd087f3-913d-457c-bbae-f79a05c132bb</guid><pubDate>Sat, 12 Sep 2026 05:36:51 +0000</pubDate><atom:updated>2026-09-12T05:36:51.529Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,Madurai,மணப்பெண்,wedding day</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/qagz8359/accident.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/qagz8359/accident.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>திண்டுக்கல் மாவட்டம் வெள்ளோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெபபாஸ்டின். 29 வயதான இவர்  இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் காமலாபுரம் சக்கையா நாயக்கனூரைச் சேர்ந்த மானுவேல் மகள் மரிய வெல்சியா (26)  என்பவருக்கும் நாளை  திருமணம் நடைபெற இருந்தது.வெள்ளோடு கிறிஸ்தவ தேவாலயத்தில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. </p> <p>இந்த நிலையில், இன்று காலை மதுரையில் செவிலியர் தேர்வு எழுதுவதற்காக மணமகள் வெல்சியாவை மணமகன் ஜெப பாஸ்டின் தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு  அதிகாலை சென்று கொண்டிருந்தார்.   அதிகாலை 3 மணிக்கு திண்டுக்கல் - மதுரை தேசிய நான்கு வழிச்சாலையில் இவர்கள் கொண்டிருந்தனர். அப்போது,  வாடிப்பட்டி அருகே சாணாம்பட்டி பிரிவு அருகே அவர்கள் சென்ற போது கோவையில் இருந்து மதுரைக்கு சென்ற காரின் முன்புற டயர் திடீரென வெடித்து தாறுமாறாக ஓடியது. கட்டுப்பாட்டை இழந்த கார்  பைக் மீது மோதியது.</p><p>இதில் ஜெப பாஸ்டினும், மரிய வெல்சியாவும் தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே மரிய வெல்சியா பரிதாபமாக உயிரிழந்தார். இதில் காயமடைந்த மணமகன் ஜெபபாஸ்டின் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில், மணமகன் கண் முன்னே மணப்பெண்  பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஹூப்ளி - திருவனந்தபுரம் இடையே சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக சிறப்பு ரெயில் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-hubli-and-thiruvananthapuram-via-salem-erode-and-tiruppur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-hubli-and-thiruvananthapuram-via-salem-erode-and-tiruppur#comments</comments><guid isPermaLink="false">3e54c9cb-d6e1-45d3-8938-11c8b9767914</guid><pubDate>Sat, 12 Sep 2026 05:26:36 +0000</pubDate><atom:updated>2026-09-12T05:26:36.383Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,Special train,Salem,சேலம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/ye7h0xwd/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/ye7h0xwd/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>ஹூப்ளி - திருவனந்தபுரம் இடையே சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p>கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து கேரளம் மாநிலம் திருவனந்தபுரம் வடக்கிற்கு சிறப்பு ரெயில் (வண்டி எண் 07325) இயக்கப்படுகிறது. ஹூப்ளியில் இருந்து இன்று (செப்.12) காலை 8.30 மணிக்கு புறப்பட்டுள்ள இந்த ரெயில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்தை சென்றடைகிறது.  </p> <p>மறுமார்க்கத்தில், திருவனந்தபுரம் வடக்கில் இருந்து வரும் 14-ந் தேதி மதியம் 2 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07326) மறுநாள் மதியம் 3.45 மணிக்கு ஹூப்ளியை சென்றடைகிறது. 20 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில், தமிழ்நாட்டில் சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.</p><p>திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்தில் இருந்து ஹூப்ளி செல்லும் சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (செப்.13) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருப்பரங்குன்றம் கோவிலில் நாளை ஒரே நாளில் 102 ஜோடிகளுக்கு திருமணம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/102-couples-to-get-married-in-one-day-at-thiruparankundram-temple-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/102-couples-to-get-married-in-one-day-at-thiruparankundram-temple-tomorrow#comments</comments><guid isPermaLink="false">0e8d5beb-4ae4-475e-82f3-2686ef4d3137</guid><pubDate>Sat, 12 Sep 2026 05:19:02 +0000</pubDate><atom:updated>2026-09-12T05:19:02.839Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமணம்,Marriage,Thiruparankundram,திருப்பரங்குன்றம்,couples,ஜோடிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/75e75zgz/tiruparankundram.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருப்பரங்குன்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/75e75zgz/tiruparankundram.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பரங்குன்றம்,</p><p>முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடாக விளங்கும் திருப்பரங்குன்றம் கோவிலில், நாளை ஒரே நாளில் 102 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற உள்ளது.</p><p>திருப்பரங்குன்றம் கோவிலில் முருகப்பெருமான் அமர்ந்த நிலையில் திருமணக் கோலத்தில் அருள்பாலிப்பது சிறப்பாகும். இக்கோவிலில் திருமணம் செய்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் முகூர்த்த நாட்களில் ஏராளமான ஜோடிகள் இங்கு திருமணம் செய்து வருகின்றனர்.</p><h2>102 ஜோடிகள்</h2><p>கடந்த 23-ந்தேதி நடைபெற்ற ஆவணி மாத முதல் வளர்பிறை முகூர்த்த நாளில் ஒரே நாளில் 104 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் முகூர்த்த நாளில் திருமணம் செய்ய 102 ஜோடிகள் பதிவு செய்துள்ளனர். மேலும், வருகிற 17-ந்தேதிக்கான திருமணத்துக்கு இதுவரை 52 ஜோடிகள் பதிவு செய்துள்ள நிலையில், தொடர்ந்து முன்பதிவு நடைபெற்று வருகிறது.</p><h2>20 நாட்களுக்கு முன்பே பதிவு</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D">திருப்பரங்குன்றம் </a>கோவிலில் முதல் திருமணம் செய்ய உள்ள ஜோடிகளுக்கு மட்டுமே திருமணம் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. திருமணத்துக்கு குறைந்தபட்சம் 20 நாட்களுக்கு முன்பாக பதிவு செய்ய வேண்டும்.</p><p>கோவிலின் திருவாட்சி மண்டப வளாகத்தில் உள்ள முத்துக்குமாரசுவாமி-தெய்வானை அம்பாள் சன்னதியில் திருமணம் நடைபெறும். திருமண ஜோடி மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்ட 20 பேருக்கு கருவறை தரிசனத்துக்கான அனுமதி டிக்கெட், திருமண பதிவு கட்டணம் உள்ளிட்டவற்றுக்காக ஒரு ஜோடிக்கு ரூ.4,500 வசூலிக்கப்படுகிறது. அதன்படி, நாளை 102 ஜோடிகள் திருமணம் செய்ய பதிவு செய்துள்ளதால், கோவிலுக்கு ரூ.4 லட்சத்து 59 ஆயிரம் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>வீடு புகுந்து கந்துவட்டி கேட்டு பல்கலைக்கழக பேராசிரியரை தாக்கியவர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/man-arrested-for-breaking-into-house-assaulting-university-professor-over-extortion</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/man-arrested-for-breaking-into-house-assaulting-university-professor-over-extortion#comments</comments><guid isPermaLink="false">afe6b302-685c-49f4-b756-6bfdc343756f</guid><pubDate>Sat, 12 Sep 2026 05:15:59 +0000</pubDate><atom:updated>2026-09-12T05:15:59.353Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தாக்குதல்,கைது,Tirunelveli,திருநெல்வேலி,arrest,attack,மிரட்டல்,Intimidation,University,Professor,பல்கலைக்கழக பேராசிரியர்,high interest,கந்துவட்டி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/fwhqjygm/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/fwhqjygm/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a>யில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">வீடு புகுந்து</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF">கந்துவட்டி</a> கேட்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D">பல்கலைக்கழகப் பேராசிரியரை</a> தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>ரூ.2 லட்சம் கடன்</h2><p>நெல்லை அருகே உள்ள வி.எம்.சத்திரம் பகுதியைச் சேர்ந்த பாலகுமாரன் (வயது 40), நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வம்(45) என்பவரிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கியிருந்தார். பின்னர் சில மாதங்கள் கழித்து மீண்டும் ரூ.1 லட்சம் கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது. அந்தப் பணத்தில் ரூ.50 ஆயிரத்தை திருப்பிக் கொடுத்த பாலகுமாரன், மீதி பணத்தை விரைவில் தருவதாகக் கூறியுள்ளார். </p><h2>கந்துவட்டி கேட்டு மிரட்டல், தாக்குதல்</h2><p>இந்த நிலையில் சம்பவத்தன்று, செல்வம் வி.எம்.சத்திரத்தில் உள்ள பாலகுமாரன் வீட்டிற்குச் சென்று பாக்கியுள்ள பணத்தைக் கேட்டுள்ளார். அப்போது அதிக கந்துவட்டி கேட்டு மிரட்டியதுடன், பாலகுமாரனை சாதி பெயரைச் சொல்லி திட்டி கொடூரமாகத் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">தாக்கிய</a>தாகக் கூறப்படுகிறது.</p><h2>கைது</h2><p>இந்த தாக்குதலில் காயமடைந்த பேராசிரியர் பாலகுமாரன், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பெருமாள்புரம் போலீசார், பேராசிரியரை தாக்கிய செல்வத்தை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பெயர் மாற்றத்தில் காட்டும் ஆர்வத்தை முறையான நிதி ஒதுக்கீட்டில் அரசு காட்டுவதில்லை - அன்பில் மகேஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-shows-no-interest-in-proper-funding-while-keen-on-name-changes-anbil-mahes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-shows-no-interest-in-proper-funding-while-keen-on-name-changes-anbil-mahes#comments</comments><guid isPermaLink="false">177f61dd-4be0-4e07-b199-22f76b77fb12</guid><pubDate>Sat, 12 Sep 2026 05:15:29 +0000</pubDate><atom:updated>2026-09-12T05:15:29.747Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,Anbil Mahesh,நிதி ஒதுக்கீடு,காலை உணவு திட்டம் விரிவாக்கம்,அன்பில் மகேஸ்,Kaalai Unavu Thittam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/n5v74c8z/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/n5v74c8z/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஆசிரியர்களின் மீது நிதிச் சுமையை ஏற்றுவதும், அவர்களைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் மனநிலையையும் இந்த அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>நிர்வாகத் திறனற்ற டேக் டைவர்ஷன் (Take Diversion) அரசு பெயர் மாற்றத்தில் காட்டும் ஆர்வத்தை முறையான நிதி ஒதுக்கீட்டில் காட்டுவதில்லை!</p><p>முதல்-அமைச்சர் காலை உணவுத் திட்டத்தை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்து, அதற்கான பெயர்ப் பலகை மாற்றுவதற்கான செலவை ஆசிரியர்கள் மீதே சுமத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பலகையை மாற்றச் செலவு செய்வதோடு மட்டுமல்லாமல், மாற்றியதற்கான ஆதாரமாகப் பெயர்ப் பலகையோடு நின்று புகைப்படமும் எடுத்து அனுப்ப வேண்டுமாம்!</p><p>இதுபோல ஆசிரியர்களின் மீது நிதிச் சுமையை ஏற்றுவதும், அவர்களைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் மனநிலையையும் இந்த அரசு உடனடியாக கைவிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">நிர்வாகத் திறனற்ற Take Diversion அரசு பெயர் மாற்றத்தில் காட்டும் ஆர்வத்தை முறையான நிதி ஒதுக்கீட்டில் காட்டுவதில்லை!<br><br>முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்து, அதற்கான பெயர்ப் பலகை மாற்றுவதற்கான செலவை ஆசிரியர்கள் மீதே…</p>&mdash; Dr. Anbil Mahesh (@Anbil_Mahesh) <a href="https://x.com/Anbil_Mahesh/status/2098625073527808259?ref_src=twsrc%5Etfw">September 12, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>திருமூர்த்தி அணை கால்வாய்களை தூர்வார ரூ.14.98 கோடி ஒதுக்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/annamalai-urges-allocation-of-1498-crore-to-desilt-the-thirumoorthy-dam-canals</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/annamalai-urges-allocation-of-1498-crore-to-desilt-the-thirumoorthy-dam-canals#comments</comments><guid isPermaLink="false">9e5fac2b-9508-4641-9d6a-f9c6bf848872</guid><pubDate>Sat, 12 Sep 2026 05:07:22 +0000</pubDate><atom:updated>2026-09-12T05:07:22.712Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Annamalai,அண்ணாமலை,சென்னை,Canal,கால்வாய்,வலியுறுத்தல்,திருமூர்த்தி அணை,தூர்வாரும் பணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/s775bmyu/137.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அண்ணாமலை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/s775bmyu/137.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திருமூர்த்தி அணை கால்வாய்களை தூர்வார ரூ.14.98 கோடி ஒதுக்க வேண்டும் என்று வி தி லீடர்ஸ் இயக்கத்தின் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>திருமூர்த்தி அணை</h2><p>திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையின் 2 மற்றும் 3-ம் மண்டல பாசன வாய்க்கால்களைத் தூர்வாருவதற்காக 1,801.27 கி.மீ. நீளமுள்ள கால்வாய்களில் ரூ.14.98 கோடி மதிப்பீட்டில் சிறப்பு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள முன்மொழிவு பரிசீலனையில் உள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் மானியக் கோரிக்கையில் அறிவித்திருந்தார். </p><p>ஆனால் இதுவரை நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படவில்லை. இந்த நிலையில், நேற்று விவசாயிகள், வாய்க்கால் பாசன அலுவலகத்தில், உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் இந்தப் பாசனத்தை நம்பியுள்ளன. வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் இருந்தால், வறட்சி மற்றும் குறைந்த மழை சூழலில் கடைமடை வரை பாசனத்துக்குத் தண்ணீர் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படும். இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் நேரடியாகப் பாதிக்கப்படும்.</p><h2>வலியுறுத்தல்</h2><p>நிதி ஒதுக்கீட்டிற்குப் பிறகு, பணிகளைத் தொடங்கி முடிக்க குறைந்தது ஒரு மாதம் தேவைப்படும் என்பதால், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF">விவசாயிகளின்</a> வாழ்வாதாரத்தைக் காக்க, தவெக அரசு ரூ.14.98 கோடி நிதியை உடனடியாக ஒதுக்கி, தூர்வாரும் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையின் 2 மற்றும் 3ஆம் மண்டல பாசன வாய்க்கால்களைத் தூர்வாருவதற்காக 1,801.27 கி.மீ. நீளமுள்ள கால்வாய்களில் ₹14.98 கோடி மதிப்பீட்டில் சிறப்பு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள முன்மொழிவு பரிசீலனையில் உள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் மானியக் கோரிக்கையில்…</p>&mdash; K.Annamalai (@annamalai_k) <a href="https://x.com/annamalai_k/status/2098629043562455333?ref_src=twsrc%5Etfw">September 12, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>சமூகநீதி குறித்து திருமாவளவனுக்கு பாடம் எடுக்க யாருக்கும் தகுதி இல்லை! - வன்னி அரசு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-one-is-qualified-to-take-lessons-from-thirumavalavan-on-social-justice-vanni-arasu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-one-is-qualified-to-take-lessons-from-thirumavalavan-on-social-justice-vanni-arasu#comments</comments><guid isPermaLink="false">f14a0c22-e89f-435d-973e-ded9f9a48a51</guid><pubDate>Sat, 12 Sep 2026 04:57:02 +0000</pubDate><atom:updated>2026-09-12T04:57:02.964Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமாவளவன்,Thirumavalavan,வன்னி அரசு,Vanni Arasu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/68ak6h8n/14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வன்னி அரசு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/68ak6h8n/14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சமூகநீதி குறித்து எமது தலைவர் தொல்காப்பியன் திருமாவளவனுக்கு பாடம் எடுக்க யாருக்கும் தகுதி இல்லை! என சமூகநீதித்துறை அமைச்சரும் விசிக துணை பொதுச்செயலாளருமான  <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">வன்னி அரசு</a> கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கு, கடந்த 2019ஆம் ஆண்டு சனவரி 8 அன்று 103வது அரசியலமைப்பு திருத்த மசோதாவை மத்திய அரசு மக்களவையில் அறிமுகப்படுத்தி நிறைவேற்றியது. அடுத்த நாள் சனவரி 9 அன்று மாநிலங்களவையில் கொண்டு வந்து நிறைவேற்றியது. சனவரி 12 இந்த சட்டத்துக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்தார்.</p><h2>சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு</h2><p>இதனை எதிர்த்து எமது தலைவர் எழுச்சித்தமிழர் தொல்காப்பியன் திருமாவளவன் மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் முனைவர் ரவிக்குமார் இருவரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு (W.P.(C) No. 182/2019) தொடர்ந்தனர். இந்த வழக்கில் நாட்டிலேயே மிகச்சிறந்த அரசியலமைப்பு சட்ட அறிஞரான வழக்கறிஞர் கௌதம் பாட்டியா தலைமையிலான வழக்கறிஞர் குழு EWS சட்டத்தை எதிர்த்து மிகவும் விரிவான 70 பக்க Affidavit தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணைக்கு வந்த போது, மூத்த வழக்கறிஞர் மீனாட்சி அரோரா அவர்கள் தலைவர் எழுச்சித்தமிழர் சார்பில் 34 பக்க எழுத்துப்பூர்வ வாதத்தை சமர்பித்தும், நேரில் வாதாடவும் செய்தார். எமது தலைவர் எழுச்சித்தமிழர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோரின் வழக்கில் 2022 நவ. 11 அன்று பொருளாதார அளவுகோலின்படி இடஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்பு சட்டத்திருத்தம் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு 3:2 என்ற கணக்கில் தீர்ப்பளித்தது.</p><h2>ஓபிசி இடஒதுக்கீடு</h2><p>மருத்துவப் படிப்புக்கான மத்திய தொகுப்பு இடங்களில் ஓபிசி  பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை இந்திய மத்திய அரசு வழங்க வேண்டும் என்று நாட்டிலேயே முதல் கட்சியாக எமது தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் 27.06.2019 அன்று அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்களை சந்தித்து வலியுறுத்தினார். அதற்கு பின்னர் தான் திமுக உள்ளிட்ட தமிழ்நாட்டு கட்சிகள் இந்த விவகாரத்தை கையிலெடுத்து சட்டப் போராட்டம் நடத்தியது. ஓபிசி சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தலைவர் அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.</p><p>கோவிட் பெருந்தொற்று காலகட்டத்தில், 10.07.2020 அன்று கிரிமிலேயர் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இணையவழியில் தலைவர் எழுச்சித்தமிழர் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், அப்போதைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தோழர் முத்தரசன் அவர்கள் பங்கேற்று உரையாற்றினார். இதே கோரிக்கையை வலியுறுத்தி, கோவிட் உச்சம் தொட்ட நிலையிலும் 16.10.2020 அன்று தமிழ்நாடு முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் போராட்டம் நடத்தினர். புதுச்சேரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் பங்கேற்றார்.</p><p> 2021ஆம் ஆண்டு ஒன்றிய அரசு ஓபிசி  பிரிவினருக்கு மருத்துவப் படிப்புக்கான மத்திய தொகுப்பு இடங்களில் இடஒதுக்கீடு வழங்க முன்வந்தது. இது சமூகநீதி இயக்கங்களுக்கு கிடைத்த வெற்றி என்று பிரகடனப்படுத்தினார். அப்போதும் கூடவே முன்னேறிய சாதியினருக்கு தரப்படும் EWS 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை 30.07.2021 அன்று விரிவான கண்டன அறிக்கை மூலமாக விடுதலைச் சிறுத்தைகள் கடுமையாக எதிர்த்தது.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திருநெல்வேலி: இந்த ஆண்டில் இதுவரை 103 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirunelveli-103-people-arrested-under-the-detention-act-so-far-this-year</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirunelveli-103-people-arrested-under-the-detention-act-so-far-this-year#comments</comments><guid isPermaLink="false">a688c07c-5537-4d2b-979f-d3faa2fc84e9</guid><pubDate>Sat, 12 Sep 2026 04:43:54 +0000</pubDate><atom:updated>2026-09-12T04:43:54.997Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Tirunelveli,திருநெல்வேலி,arrests,இந்த ஆண்டு,This year,இதுவரை,so far,தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டம்,Tamil Nadu Detention Act</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/e2bvh0pj/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/e2bvh0pj/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டத்தில், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">இந்த ஆண்டில் </a>இதுவரை மொத்தம் 103 பேர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின்</a> கீழ் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்து, தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். </p><h2>எஸ்.பி. உத்தரவு</h2><p>திருநெல்வேலி மாவட்டத்தில் போதைப்பொருட்களின் புழக்கத்தை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில், மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி உத்தரவின் பேரில், கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது காவல்துறையினர் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். </p><p>மேற்சொன்ன வாலிபர் கஞ்சா விற்பனை போன்ற சட்டவிரோத குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அம்பாசமுத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மேற்சொன்ன வாலிபர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் பரிந்துரை செய்தார். </p><h2>வாலிபர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் கைது</h2><p>அதன்பேரில் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி பரிந்துரையின்பேரில், திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஆனந்த் மோகன் உத்தரவின்படி, மேற்சொன்ன வாலிபர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். </p><h2>இந்த ஆண்டில் இதுவரை 103 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது</h2><p>திருநெல்வேலி மாவட்டத்தில், இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 103 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து, தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item></channel></rss>