<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 21 Jul 2026 12:32:21 +0000</lastBuildDate><item><title>தவெக-வின் கொள்கை வெறும் முழக்கம் மட்டும் தானா?  - வானதி சீனிவாசன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-policy-of-the-tvk-just-a-slogan-vanathi-srinivasan-questions</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-policy-of-the-tvk-just-a-slogan-vanathi-srinivasan-questions#comments</comments><guid isPermaLink="false">d6b30041-4eb9-45fa-b055-93d7081d73e5</guid><pubDate>Tue, 21 Jul 2026 12:28:15 +0000</pubDate><atom:updated>2026-07-21T12:28:15.802Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Question,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,Policy,கேள்வி,Slogan,முழக்கம்,கொள்கை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/f5grhd02/vanathi-srinivasan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/f5grhd02/vanathi-srinivasan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தவெக-வின் கொள்கை வெறும் முழக்கம் மட்டும் தானா? என்று வானதி சீனிவாசன் கேள்வி  இது தொடர்பாக, பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதில் தெரிவித்திருப்பதாவது;-</p> <h2>ஜில்லா மணி</h2><p>மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய துணைச் செயலாளராக உள்ள 'ஜில்லா மணி' என்பவர் முதியவர் ஒருவரை காரில் வைத்து தாக்கும் வீடியோவானது சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><h2>பழைய வீடியோ</h2><p>ஆனால் அது பழைய வீடியோ என்று விளக்கம் அளிப்பதால் மட்டும் இந்த மனிதாபிமானமற்ற செயல் நியாயமாகிவிடாது. தந்தை வயதுள்ள முதியவரை ஆபாச வார்த்தைகளால் திட்டி, காரில் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று தாக்கி அதனை செல்போனில் வீடியோ எடுத்திருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.</p> <h2> ஒழுங்கு நடவடிக்கை</h2><p>"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று சமத்துவம் பேசும் தவெக-வின் கொள்கை வெறும் முழக்கம் மட்டும் தானா? <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">தமிழக வெற்றிக் கழகம்</a> தலைமை உடனடியாக 'ஜில்லா மணி' மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தமிழக அரசு முதியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கூடுதல் கவனம் செலுத்தி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அ.தி.மு.க.வில் இணைந்த காங்கிரஸ், த.வெ.க. நிர்வாகிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/congress-and-tvk-functionaries-join-aiadmk</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/congress-and-tvk-functionaries-join-aiadmk#comments</comments><guid isPermaLink="false">01917e84-1c57-4895-9c99-d4431de29a2b</guid><pubDate>Tue, 21 Jul 2026 12:06:04 +0000</pubDate><atom:updated>2026-07-21T12:06:04.541Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,TVK,தவெக,Tamilnadu,அதிமுக,Chennai,சென்னை,தமிழகம்,காங்கிரஸ்,Congress,ராயப்பேட்டை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/d9cbgbxa/tvker.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/d9cbgbxa/tvker.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று (21.7.2026 செவ்வாய்க்கிழமை), காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, கன்னியாகுமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் C. ஜெகன்ராஜ், மேல்புறம் வட்டார இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் தானியேல் சிபின் ராஜேந்திரன், விளவன்கோடு தொகுதி மாணவர் காங்கிரஸ் செயலாளர் M.S. அபிஜித், காங்கிரஸ் பளுகல் பேரூராட்சி முன்னாள் செயலாளர் V. விஜின், த.வெ.க-வைச் சேர்ந்த களியக்காவிளை பேரூராட்சி தலைவர் க. சரண், அகில இந்திய கிறிஸ்தவ முன்னேற்ற சேனை மாவட்ட துணைத் தலைவர் பிரேம் ஆனந்த், மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் B. ஆன்றனி ஆகியோர் நேரில் சந்தித்து, தங்களைக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.</p><p>இந்நிகழ்வின்போது, கழக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி, கழகப் பொருளாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் C. சீனிவாசன், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் துணை அமைச்சருமான நாஞ்சில் M. வின்சென்ட், கன்னியாகுமரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் R. ஜெயசுதர்ஷன், முஞ்சிறை மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் K. ஷாஜிகுமார் ஆகியோரும் உடன் இருந்தனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கூறுவதென்ன..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chance-of-rain-in-tamil-nadu-over-the-next-6-days-what-does-the-meteorological-centre-say</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chance-of-rain-in-tamil-nadu-over-the-next-6-days-what-does-the-meteorological-centre-say#comments</comments><guid isPermaLink="false">83263365-d352-47f6-9c61-1e8b4a44ae73</guid><pubDate>Tue, 21 Jul 2026 11:40:06 +0000</pubDate><atom:updated>2026-07-21T11:40:06.957Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழ்நாடு,Chennai,சென்னை,Rain,Weather,வானிலை,Weather News,WeatherUpdate,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,வானிலை ஆய்வு மையம்,வானிலை அறிக்கை,weather condition,வானிலை தகவல்,வானிலை முன்னறிவிப்பு,weather information,Weather Status,வானிலை அறிவிப்பு,weather center,TN Rain</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/y8gjzlyx/raind.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மழை, rain]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/y8gjzlyx/raind.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>வானிலை செய்திகள் (Weather)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. </p><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p> <h2>மழை</h2><p>இதன் காரணமாக <strong>இன்று (21-07-2026):</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>நாளை (22-07-2026):</strong> தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p> <p><strong>நாளை மறுநாள் (23-07-2026):</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>24-07-2026:</strong> வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p> <p><strong>25-07-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>26-07-2026:</strong> கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>27-07-2026:</strong> தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p> <h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</strong></p><p><strong>21-07-2026 முதல் 25-07-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.</p><h2>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</h2><p><strong>21-07-2026 முதல் 25-07-2026 வரை:</strong> உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p> <h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று (21-07-2026):</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p><strong>நாளை (22-07-2026):</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p> <h2>மீனவர்களுக்கான எச்சரிக்கை:</h2><p><strong>தமிழக கடலோரப்பகுதிகள்:</strong></p><p><strong>21-07-2026 முதல் 23-07-2026 வரை</strong>: தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><h2>வங்கக்கடல் பகுதிகள்:</h2><p><strong>21-07-2026:</strong> மத்தியமேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்திய வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><h2>அரபிக்கடல் பகுதிகள்:</h2><p><strong>21-07-2026 முதல் 25-07-2026 வரை:</strong> மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>நீட் தேர்வு குறைந்த பட்ச தகுதி மதிப்பெண் உயர்வு; மாணவர்கள் அதிர்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/neet-minimum-qualifying-score-hike-students-going-for-medical-studies-abroad-affected</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/neet-minimum-qualifying-score-hike-students-going-for-medical-studies-abroad-affected#comments</comments><guid isPermaLink="false">5e12a4c4-08bc-4799-bc54-e0f9a17ff65f</guid><pubDate>Tue, 21 Jul 2026 11:27:21 +0000</pubDate><atom:updated>2026-07-21T11:27:21.700Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நீட் தேர்வு,மதிப்பெண்,NEET,Medical Council,மருத்துவம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/s8k4tvu9/neetexam33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/s8k4tvu9/neetexam33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிப்பதற்கு மாணவ, மாணவிகள் இடையே ஒவ்வொரு ஆண்டும் கடுமையான போட்டி நிலவில் வருகிறது.</p><h2>நீட் தேர்வு </h2><p>இந்த வருடம் சுமார் 22 லட்சம் மாணவர்கள் <a href="https://www.dailythanthi.com/search?q=neet%20exam">நீட் தேர்வு </a>எழுதினார்கள். அதிக மதிப்பெண் பெறக் கூடியவர்களுக்கு மட்டுமே மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது.</p><p>கடந்த ஆண்டு வரை நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் எஸ்.சி,ஓ.பி.சி. பிரிவினருக்கு 113 மதிப்பெண்ணாக இருந்தது. அது தற்போது வெளியாகி உள்ள நீட் மறுதேர்வில் 177 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல ஒ.சி பிரிவினருக்கு தகுதி மதிப்பெண் 144 ஆக இதுவரையில் இருந்தது. அவை தற்போது 213 ஆக உயர்ந்துள்ளது. இதனால் - குறைந்த மதிப் பெண் எடுத்து தேர்ச்சி பெறக்கூடிய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>தகுதி மதிப்பெண் உயர்வு</h2><p>நீட் தேர்வில் தேர்ச்சி என்ற சான்றிதழ் இருந்தால் மட்டுமே வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை படிக்க முடியும். இந்த ஆண்டு நீட் தகுதி மதிப்பெண் திடீரென உயர்த்தப்பட்டு இருப்பதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.</p><p>நீட் தேர்வில் அதிக மதிப் பெண் பெற முடியாத மாணவர்கள் வெளிநாடுகளிலோ அல்லது நிகர்  நிலை பல்கலைக்கழகங்களிலோ சேர்வது வழக்கம். அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பு  இழந்த அந்த மாணவர்கள் ரஷியா, சீனா, பிலிப்பைன்ஸ், ஜார்ஜியா உள்ளிட்ட நாடு களில் மருத்துவ படிப்பில் சேர்வது வழக்கம். ஆனால் தற்போது நீட் தகுதி மதிப்பெண் உயர்த்தப்பட்டதால் வெளிநாடுகளில் சென்று மருத்துவப் படிப்பை தொடர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>இதுகுறித்து வெளிநாடுகளில் படித்த மருத்துவ மாணவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் ஏ.நஜுரூல்</p><p>அமீன் கூறியதாவது:-</p><p>நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் இருந்து வந்த நிலையில் தற்போது அதன் தகுதிமாறா மதிப்பெண்ணையும் மத்திய அரசு உயர்த்தி உள்ளது. மருத்துவ கனவில் உள்ள மாணவர்கள் குறைந்த செலவில் வெளிநாடுகளுக்குச் சென்று படித்து வருகிறார்கள். </p><p>இந்த தகுதி மதிப்பெண் உயர்த்தப்பட்டதன் மூலம் அவர்களின் மருத்துவ கனவு சிதறடிக்கப்படுகிறது. தமிழகத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார்  5 ஆயிரம் மாணவர்கள் மருத்துவ படிப்புகளுக்கு வெளிநாடுகளுக்கு  படிக்க சொல்கிறார்கள். </p><p>ஏற்கனவே பல்வேறு சிரமங்களை சந்தித்து வரும் நீட் மாணவர்களுக்கு இந்த மதிப்பெண் உயர்வு மேலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><h2>மறு பரிசீலனை</h2><p>இந்திய மருத்துவ ஆணையம் இந்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். தகுதி மதிப்பெண்ணை உயர்த்துவதன் மூலம் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய மாண வர்களின் கல்வி தடைப்பட்டுள்ளது. இதை உணர்ந்து மத்திய அரசு நீட் தகுதி மதிப் பெண்ணை குறைக்க வேண்டும். மாணவர்கள் வெளி நாட்டுகளில் படித்து விட்டு மீண்டும் இந்தியாவில் எப்.எம்.ஜி. தேர்வு எழுதும் முறை இருப்பதால் தகுதி மதிப்பெண்ணை குறைக்க வேண்டும். </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-the-day-after-tomorrow-17</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-the-day-after-tomorrow-17#comments</comments><guid isPermaLink="false">6b97cb02-2709-48e7-aadb-703bd87873e2</guid><pubDate>Tue, 21 Jul 2026 10:59:50 +0000</pubDate><atom:updated>2026-07-21T10:59:50.495Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,monthly maintenance work,power outage,மாதாந்திர பராமரிப்பு பணி,மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/0q18w4rf/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/0q18w4rf/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், வள்ளியூர் கோட்டம், களக்காடு துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுநாள் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>வள்ளியூர் கோட்டம்</h2><p>வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>களக்காடு துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (23.7.2026, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணை மின் நிலையத்தில் மின்விநியோகம் தடை செய்யப்படும். இதன் காரணமாக பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் கீழே குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது. </p><h2>காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை</h2><p>களக்காடு நகரம், பெருமாள்குளம், சாலைபுதூர், SN பள்ளிவாசல், மாவடி, டோனாவூர், புலியூர் குறிச்சி, கோதைசேரி, வடமலைசமுத்திரம், கருவேலன்குளம், கோவிலம்மாள்புரம், வடுகச்சிமதில் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் விதிகளை மீறிய தனியார் பேருந்துக்கு ரூ.13,000 அபராதம்: போக்குவரத்து போலீசார் அதிரடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/private-bus-fined-rs13000-for-violating-rules-in-thoothukudi-traffic-police-take-action</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/private-bus-fined-rs13000-for-violating-rules-in-thoothukudi-traffic-police-take-action#comments</comments><guid isPermaLink="false">0e414798-a550-4381-b0de-0ccd4e8a58e6</guid><pubDate>Tue, 21 Jul 2026 10:49:41 +0000</pubDate><atom:updated>2026-07-21T10:49:41.131Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,Thoothukudi,தூத்துக்குடி,fine,அபராதம்,private bus,போலீசார்,தனியார் பேருந்து,traffic violation,போக்குவரத்து விதிமீறல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/n449qp18/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ போக்குவரத்து போலீசார் வாகன சோதனை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/n449qp18/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடியில் போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்பட்ட தனியார் பேருந்துக்கு ரூ.13 ஆயிரம் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">அபராதம்</a> விதித்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><h2>வாகன சோதனை</h2><p>தூத்துக்குடி - திருநெல்வேலி பிரதான சாலையில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே, தூத்துக்குடி மாநகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுனை முருகன் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முடிவைத்தானேந்தல் பகுதியில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த தனியார் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனர்.</p><h2>தனியார் பேருந்துக்கு ரூ.13 ஆயிரம் அபராதம்</h2><p>அந்த பரிசோதனையில் அதிக ஒலி எழுப்பும் 6 ஏர் ஹாரன்கள், 2 ஸ்பீக்கர் பாக்ஸ்கள் பொருத்தியிருந்தது கண்டறியப்பட்டது. அரசு விதிமுறைகளை மீறிப் பேருந்துக்கு கலர் பெயிண்ட் அடித்திருந்தது உள்பட பல்வேறு விதிகளை மீறியது உறுதியானது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் அந்த பேருந்துக்கு ரூ.13 ஆயிரம் அபராதம் விதித்தனர். ஒரு பேருந்துக்கு ரூ.13 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் தனியார் பேருந்து உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நெல் கொள்முதலில் தொடரும் கையூட்டு - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bribery-continues-in-paddy-procurement-anbumani-ramadoss-alleges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bribery-continues-in-paddy-procurement-anbumani-ramadoss-alleges#comments</comments><guid isPermaLink="false">f1730e9f-e565-4351-bf29-be21332b4123</guid><pubDate>Tue, 21 Jul 2026 10:40:24 +0000</pubDate><atom:updated>2026-07-21T10:40:24.068Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,நெல் கொள்முதல்,Paddy procurement,குற்றச்சாட்டு,alleges</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/ryizieme/anubumani.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/ryizieme/anubumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நெல் கொள்முதலில் தொடரும் கையூட்டு : குவிண்டாலுக்கு ரூ.325 பறிக்கப்படுவதை தடுத்து உழவர்களை காப்பாற்ற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் குற்றசாடியுள்ளார். இது தொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-</p><h2>கையூட்டு கொடுமை </h2><p>தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக காவிரி பாசன மாவட்டங்களில் கோடை பருவ அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உழவர்களிடமிருந்து குவிண்டாலுக்கு ரூ.325 வரை கட்டாயமாக கையூட்டு பறிக்கப்படும் கொடுமை இன்னும் தொடர்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.</p><h2>கள ஆய்வு</h2><p> உணவு அமைச்சர் மேற்கொண்ட கள ஆய்விலேயே கையூட்டு வசூலிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதை தடுக்க அரசுத்தரப்பில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாதது கவலையளிக்கிறது.</p><h2>கோடை பருவ நெல் சாகுபடி</h2><p>காவிரி பாசன மாவட்டங்களில் 1.60 லட்சம் ஏக்கரில் கோடை பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. விளைந்த நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணி தீவிரமடைந்திருக்கும் நிலையில், அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்வது தான் உழவர்களுக்கு பெரும் துயரமாக மாறியிருக்கிறது.</p><h2>ஊழல் தொடர்கிறது</h2><p>ஒருபுறம் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கி கிடப்பதால், உழவர்கள் தங்களில் நெல்லை விற்பனை செய்வதற்கு ஒரு வாரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இன்னொருபுறம் கொள்முதல் நிலையங்களில் ஊழல் தொடர்கிறது.</p><h2>குற்றஞ்சாட்டு</h2><p>40 கிலோ எடை கொண்ட நெல் மூட்டையை எடை வைத்து கொள்முதல் செய்வதற்கு கையூட்டாக ரூ.40 முதல் ரூ.60 வரை உழவர்கள் தர வேண்டியுள்ளது. இது தவிர ஒவ்வொரு மூட்டைக்கும் நிர்ணயிக்கப்பட்ட எடையான 40 கிலோவுக்கு பதிலாக கூடுதலாக எடை வைத்து கொள்முதல் செய்வதன் வாயிலாகவும், பதர்களை தூற்றுவதாக கூறி ஒன்றரை கிலோ வரையிலான நெல்லை ஒதுக்குவதன் வாயிலாகவும் 3 கிலோ நெல் கூடுதலாக வாங்கப்படுவதாக உழவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். </p><h2>பெரும் அநீதி</h2><p>இந்த வகையில் மட்டும் ஒரு குவிண்டாலுக்கு ரொக்கமாக ரூ.150, நெல்லாக ரூ.175 என மொத்தம் ரூ.325 கையூட்டாக பறிக்கப்படுகிறது. தனியார் வணிகர்களை விட அரசு கொள்முதல் நிலையங்களில் குவிண்டாலுக்கு அதிகபட்சமாக ரூ.500 முதல் ரூ.600 வரை கூடுதல் விலை கிடைக்கிறது என்பதால் தான் அரசு கொள்முதல் நிலையங்களை தேடி உழவர்கள் வருகிறார்கள். அதற்காக அவர்களை வார கணக்கில் காத்திருக்க வைப்பதும், குவிண்டாலுக்கு ரூ.325 வரை கையூட்டாக பறித்து கொள்வதும் பெரும் அநீதி. </p> <h2>நியாயவிலைக் கடை</h2><p>இதே நிலை தொடர்ந்தால் உழவர்கள் தனியார் வணிகர்களிடம் நெல்லை விற்க தயாராகி விடுவார்கள். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் நியாயவிலைக் கடைகளில் வழங்குவதற்கு அரிசியே கிடைக்காத நிலை உருவாகி விடும்.</p> <h2>ஆய்வு</h2><p>காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதலில் முறைகேடுகள் நடப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை தமிழக அரசு மறுக்க முடியாது. சில நாள்களுக்கு முன் கடலூர் மாவட்டத்தில் இது குறித்து ஆய்வு செய்த உணவுத் துறை அமைச்சர், நெல் விற்பனை செய்த உழவர் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகிறார்.</p> <h2>பணியிடை நீக்கம்</h2><p>கொள்முதலுக்காக கையூட்டு ஏதேனும் கொடுத்தீர்களா? என்று அமைச்சர் கேட்டபோது, எதிர்முனையில் இருந்த உழவர் முட்டைக்கு ரூ.50 கையூட்டு கொடுத்ததாக தெரிவிக்கிறார். இதை தொடர்ந்து உழவரிடம் கையூட்டு வாங்கிய கொள்முதல் நிலைய எழுத்தரை பணியிடை நீக்கம் செய்ய அமைச்சர் ஆணை பிறப்பிக்கிறார். இவற்றைப் பார்க்கும் போது நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழல் நடப்பதைத் தடுக்க வேண்டும் என ஆட்சியாளர்கள் விரும்புவதை புரிந்து கொள்ள முடிகிறது. அது வரவேற்கத்தக்கது. </p><h2>ஊழல் ஒழியப்போவதில்லை</h2><p>கொள்முதல் நிலைய ஊழலுக்கான காரணங்களை கண்டுபிடித்து சரி செய்யாமல் அங்கொன்றும், இங்கொன்றுமாக கடைநிலை ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்வதால் ஊழல் ஒழியப்போவதில்லை; உழவர்களும் பயனடையப் போவதில்லை.</p><h2>சில நியாயங்கள்</h2><p>நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உழவர்களிடமிருந்து கையூட்டு வழங்கப்படுவதற்கு கொள்முதல் நிலையப் பணியாளர்கள் தரப்பில் சில நியாயங்கள் கூறப்படுகின்றன. நெல் கொள்முதல் நிலையங்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்படவில்லை; பணியாளர்களுக்கு போதிய ஊதியமும் வழங்கப்படுவதில்லை. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் தவிர்க்க முடியாத செலவுகளுக்காக நிரந்தர முன்வைப்பு தொகையாக ஒவ்வொரு நிலையத்திற்கும் ரூ.20 ஆயிரம் வழங்கப்பட வேண்டும். ஆனால், அந்தத் தொகை முறையாக வழங்கப் படவில்லை. </p><h2>ஊழலை ஒழிக்க முடியும்</h2><p> நெல் எடை போடும் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ரூ.10 மட்டுமே கூலியாக வழங்கப்படுவது போதுமானது அல்ல என்றெல்லாம் கொள்முதல் நிலையப் பணியாளர்கள் கூறுவதை ஒதுக்கி தள்ளிவிட முடியாது. இதை சரி செய்தால் மட்டும் தான் கொள்முதல் நிலைய ஊழலை ஒழிக்க முடியும்.</p> <h2>ஒழிக்க வேண்டும்</h2><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">நெல் கொள்முதல்</a> நிலைய கையூட்டு கலாச்சாரம் புதிதாக தோன்றியதில்லை. பல ஆண்டுகளாகவே இந்த சுரண்டல் தொடர்கிறது. இதை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே கடந்த தேர்தலில் உழவர்கள் வாக்களித்தனர். அவர்களின் விருப்பத்தை அரசு நிறைவேற்ற வேண்டும். இனியும் தாமதிக்காமல் கொள்முதல் நிலைய சுரண்டல்களை தடுத்து, உழவர்களிடமிருந்து கையூட்டு இல்லாமல் உடனுக்குடன் நெல் வாங்கப்படுவதை அரசு உறுதி செய்யவேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">நெல் கொள்முதலில் தொடரும் கையூட்டு : குவிண்டாலுக்கு ரூ.325 பறிக்கப்படுவதைத் தடுத்து உழவர்களை காப்பாற்ற வேண்டும்! <a href="https://x.com/CMOTamilnadu?ref_src=twsrc%5Etfw">@CMOTamilnadu</a> <a href="https://t.co/Rvxc2FHS6F">pic.twitter.com/Rvxc2FHS6F</a></p>&mdash; Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) <a href="https://x.com/draramadoss/status/2079496726289825875?ref_src=twsrc%5Etfw">July 21, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>நெல்லை இரட்டைக் கொலை- சம்பந்தப்பட்ட கடைசி நபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-double-murder-the-last-person-involved</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-double-murder-the-last-person-involved#comments</comments><guid isPermaLink="false">1dfcda9c-65ed-411d-bd4a-b52d90e67416</guid><pubDate>Tue, 21 Jul 2026 10:36:45 +0000</pubDate><atom:updated>2026-07-21T10:36:45.265Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,arrested,Thirunelveli,18 பேர் கைது,இரட்டைக் கொலை,Nellai double murder</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/iw91nffj/nelllai-double-murder.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ கைது செய்யப்பட்ட கந்தசாமி]]></media:title><media:description type="html"><![CDATA[ நெல்லை இரட்டைக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கடைசி நபரும் கைது செய்யப்பட்டார்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/iw91nffj/nelllai-double-murder.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>நெல்லை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">இரட்டைக் கொலை</a> வழக்கில் சம்பந்தப்பட்ட கடைசி நபரையும் போலீசார் கைது செய்தனர்.</p><h2>முன்விரோதம்</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நெல்லை மாவட்டம்</a> கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மூலச்சி கிராமத்தை சேர்ந்தவர் சித்திரபுத்திரன். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பெருமாள்பாண்டியன் குடும்பத்திற்கும் தெருக்குழாயில் தண்ணீர் பிடித்ததில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக பல ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வருகிறது. இதன் காரணமாக இருதரப்பிலும் 7 கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. </p><p>இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி சித்திரபுத்திரனின் மகன் காளிமுத்து (வயது 40) என்பவர் தனது மகன்களான சின்னத்துரை (15), ஜெயராஜ் (5) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் வீரவநல்லூர் அருகே உள்ள மாதுடையார்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை பின்தொடர்ந்து கார், மோட்டார் சைக்கிள்களில் மர்மநபர்கள் வந்தனர்.</p><h2>கொடூர கொலை</h2><p>காளிமுத்துவின் மோட்டார் சைக்கிள் மீது காரை மோத விட்ட கும்பல், காளிமுத்துவை அரிவாளால் வெட்டி தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தது. கார் மோதியதில் சிறுவன் ஜெயராஜ் உயிரிழந்தான். மர்மநபர்கள் சிறுவன் சின்னத்துரையின் காலிலும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றனர்.</p><p>தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த இரட்டைக்கொலை தொடர்பாக வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தொடர்புடைய பெருமாள்பாண்டியன் தரப்பைச் சேர்ந்த மகேஷ் உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பலரை தேடி வருகின்றனர்.</p><h2>துப்பாக்கி சூடு</h2><p>இந்த நிலையில், நெல்லை இரட்டை கொலை வழக்கில் 12-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட கிருஷ்ணன் என்ற அஜித்தை போலீசார் சுட்டுப்பிடித்தனர். வீரவநல்லூர் வனப்பகுதியில் பதுங்கி இருந்த கிருஷ்ணனை போலீசார் கைது செய்ய முயன்றபோது அவர்களை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதால் துப்பாக்கி சூடு நடந்ததாக கூறப்படுகிறது. இடதுகாலில் காயமடைந்த அஜித் மற்றும் வெட்டுக்காயம் அடைந்த காவலர் பரமசிவம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><h2>கடைசி நபர் கைது</h2><p>வழக்கில் இதுவரை 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் 3 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதையடுத்து இந்த வழக்கின் கடைசி குற்றவாளியான கந்தசாமி என்பவரை போலீசார் கைது செய்தனர். இதன் மூலம் இவ்வழக்கில் கைதானவர்களின் மொத்த எண்ணிக்கை 18-ஆக உயர்ந்தது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கைது</a> செய்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>திருப்பூர்: ஸ்கூட்டர் மீது லாரி மோதி தம்பதி பலி  </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruppur-couple-killed-after-scooter-hit-by-lorry</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruppur-couple-killed-after-scooter-hit-by-lorry#comments</comments><guid isPermaLink="false">df678317-e9a3-4096-ae59-6774bc063700</guid><pubDate>Tue, 21 Jul 2026 10:28:08 +0000</pubDate><atom:updated>2026-07-21T10:28:08.807Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,Tiruppur,திருப்பூர்,தம்பதி பலி,Couple killed</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/yl8pkchd/thiruppur-couple-accident.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ பலியான தம்பதி]]></media:title><media:description type="html"><![CDATA[ திருப்பூர் அருகே ஸ்கூட்டர் மீது லாரி மோதி தம்பதி பலி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/yl8pkchd/thiruppur-couple-accident.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><p>திருப்பூர் அருகே ஸ்கூட்டர் மீது லாரி மோதி தம்பதி பலியாகினர்.</p><h2>விபத்து</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">திருப்பூர் மாவட்டம் </a>காங்கேயம் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 55). இவரது மனைவி பேபி (வயது 47). இந்த தம்பதியினர் இன்று (செவ்வாய்க்கிழமை) தங்களது ஸ்கூட்டியில் காங்கேயம் அருகே உள்ள முக்கிய சாலையில் சென்று கொண்டிருந்தனர். </p><p>அப்போது இவர்களுக்குப் பின்னால் அதிவேகமாக வந்த கனரக லாரி ஒன்று, எதிர்பாராத விதமாக இவர்களது ஸ்கூட்டியின் மீது பயங்கரமாக மோதியது.</p><h2>தம்பதி உயிரிழப்பு</h2><p>இந்தக் கடுமையான மோதலின் தாக்கத்தால், அண்ணாமலை மற்றும் பேபி ஆகிய இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதையடுத்து 2 பேர் மீதும் லாரியின் சக்கரங்கள் ஏறி இறங்கின. இதில் உடல் நசுங்கி, தம்பதியினர் இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விபத்து</a> குறித்துத் தகவல் அறிந்து காங்கேயம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் உயிரிழந்த தம்பதியினரின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.</p><p>மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே விபத்தில் கணவன், மனைவி இருவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வுக்கு எதிராக எழுப்பப்படும் குரல்களை ஒடுக்குவதா..? - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/suppressing-voices-raised-against-the-neet-exam-udhayanidhi-stalin-condemns-the-move</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/suppressing-voices-raised-against-the-neet-exam-udhayanidhi-stalin-condemns-the-move#comments</comments><guid isPermaLink="false">abde780d-75ac-4cc1-8a77-229f1182ab9d</guid><pubDate>Tue, 21 Jul 2026 10:26:33 +0000</pubDate><atom:updated>2026-07-21T10:26:33.827Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,திமுக,DMK,தமிழகம்,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,தமிழக அரசு,TN govt,நீட் தேர்வு,NEET Exam,NEETExam,NEET,நீட்,தெருக்குரல் அறிவு,Singer Therukural Arivu,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/hqd5xjdz/mas.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/hqd5xjdz/mas.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>நீட் தேர்வை ரத்து செய்ய கோரி டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி, லத்தியால் தாக்கியது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.</p> <h2>தெருக்குரல் அறிவு</h2><p>இந்த சூழலில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. இதில் தமிழகத்தில் தலைமைச் செயலகம் முன்பு ராப் பாடகர் தெருக்குரல் அறிவு நீட் தேர்வுக்கு எதிராக முதல்-அமைச்சர் குரல் கொடுக்க வலியுறுத்தி கோஷமிட்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்ற நிலையில் மீண்டும் தலைமை செயலகத்துக்கு அழைத்து வந்தனர். இந்தசூழலில் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a>யை சந்தித்து தெருக்குரல் அறிவு பேசினார். </p><h2>உதயநிதி ஸ்டாலின்</h2><p>இந்நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- </p><p>நீட் (NEET) தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுத்ததற்காக, ராப் பாடகரும் எனது அன்புச் சகோதரருமான 'தெருக்கூரல் அறிவு' (Therukkural Arivu) அவர்களை கைது செய்துள்ள, விஜய் தலைமையிலான தமிழக அரசை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.</p><p>அவரது குரல் தமிழ்நாடு மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களின் உணர்வுகளையும் கோரிக்கைகளையும் பிரதிபலிக்கிறது.</p> <h2>தவெக அரசு</h2><p>நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான பேரணிகளும் போராட்டங்களும் தீவிரமடைந்து வரும் வேளையில், அறிவு அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையை தவெக (TVK) அரசு மேற்கொண்டுள்ளது.</p><p>நீட் தேர்வை எதிர்த்து டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாகத் தாங்களும் களமிறங்கத் திட்டமிட்டுள்ள தமிழக இளைஞர்களுக்கு, இது ஒரு கவலையளிக்கும் செய்தியை அளிக்கிறது.</p><h2>மோசடி</h2><p>நீட் தேர்வு முறைகேடுகளால் நிறைந்தது மட்டுமல்ல; அது ஒரு மிகப்பெரிய மோசடியாகவும் மாறியுள்ளது.</p><p>நீட் தேர்வுக்கு எதிராக எழுப்பப்படும் குரல்கள் கேட்கப்பட வேண்டுமே தவிர ஒடுக்கப்படக் கூடாது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I strongly condemn the TN Government led by <a href="https://x.com/actorvijay?ref_src=twsrc%5Etfw">@actorvijay</a> for arresting rap singer and my dear brother ‘Therukkural’ Arivu for speaking out against NEET.<br><br>His voice reflects the sentiments and demands of not just Tamil Nadu, but millions of people across India.<br><br>At a time when the… <a href="https://t.co/aIJyzewZAC">pic.twitter.com/aIJyzewZAC</a></p>&mdash; Udhay (@Udhaystalin) <a href="https://x.com/Udhaystalin/status/2079502309768200605?ref_src=twsrc%5Etfw">July 21, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>பனை தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/palm-oil-worker-commits-suicide-by-hanging</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/palm-oil-worker-commits-suicide-by-hanging#comments</comments><guid isPermaLink="false">7c80c7a4-7367-482f-bc5e-3c050610e724</guid><pubDate>Tue, 21 Jul 2026 10:09:26 +0000</pubDate><atom:updated>2026-07-21T10:09:26.304Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தூத்துக்குடி,Suicide by hanging,தூக்குப்போட்டு தற்கொலை,vilathikulam,விளாத்திகுளம்,மரம்,tree,Thuthukudi,பனை தொழிலாளி,palm worker</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/zgc63ktw/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பனை தொழிலாளி மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/zgc63ktw/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே கல்குமி கிராமத்தில் பனை ஏறும் தொழிலாளி மரத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">தூக்குப்போட்டு தற்கொலை</a> செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>பனை ஏறும் தொழிலாளி</h2><p>தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள கல்குமி கிராமத்தை சேர்ந்த பெத்திலேகமணி மகன் சாலமோன்ராஜா (வயது 66). <a href="https://www.dailythanthi.com/topic/தொழிலாளி">பனை ஏறும் தொழிலாளியான இவர்</a> தனது மனைவி ஐனீஷ்மரியாளுடன் கிராமத்தில் வசித்து வந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். வழக்கம் போல் பனை தொழிலுக்கு சென்ற சாலமோன்ராஜா, மதிய உணவிற்காக நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி ஐனீஷ்மரியாள் அவரை தேடி பனை தோப்பிற்கு சென்றுள்ளார்.</p><h2>தூக்குப்போட்டு தற்கொலை</h2><p>அப்போது சாலமோன்ராஜா மரத்தில் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்டிருப்பதை கண்டு அவரது மனைவி அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த விளாத்திகுளம் காவல்துறையினர், அவரது உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>பெரம்பூர் அறிவியல் தொழில்நுட்பப் பூங்கா: மேயர் பிரியா பள்ளி மாணவர்களுடன் பார்வையிட்டார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/perambur-science-and-technology-park-mayor-priya-visits-with-school-students</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/perambur-science-and-technology-park-mayor-priya-visits-with-school-students#comments</comments><guid isPermaLink="false">f1269a73-9d6e-416a-9179-7e7b1a67187a</guid><pubDate>Tue, 21 Jul 2026 09:47:10 +0000</pubDate><atom:updated>2026-07-21T09:47:10.347Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Mayor Priya,Chennai Corporation,School students,பள்ளி மாணவர்கள்,visits,பார்வையிட்டார்,மாநகராட்சி மேயர் பிரியா,அறிவியல் தொழில்நுட்பப் பூங்கா,Science and Technology Park</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/i670edzh/Untitled-2.jpg" width="753"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெரம்பூர் அறிவியல் தொழில்நுட்பப் பூங்கா: மேயர் பிரியா பள்ளி மாணவர்களுடன் பார்வையிட்டார்  ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/i670edzh/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பெருநகர <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை மாநகராட்சி மேயர் பிரியா</a>, பெரம்பூர், முரசொலிமாறன் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் தொழில்நுட்பப் பூங்காவினை சென்னை பள்ளி மாணவர்களுடன் பார்வையிட்டார்.</p><h2>அறிவியல் தொழில்நுட்பப் பூங்கா</h2><p>பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, இன்று பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு-74க்கு உட்பட்ட, பெரம்பூர் நெடுஞ்சாலையில் உள்ள முரசொலிமாறன் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் தொழில்நுட்பப் பூங்காவில் (STEM Park) உள்ள டிஜிட்டல் கோளரங்கம், அறிவியல் சார்ந்த உபகரணங்களை சென்னை பள்ளி மாணவர்களுடன் பார்வையிட்டார். </p><h2>ரூ.5.75 கோடி மதிப்பீடு</h2><p>இந்த பூங்காவானது மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் ரூ.5.75 கோடி மதிப்பீட்டில் 11,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் டிஜிட்டல் கோளரங்கம், நிறை மற்றும் மந்தநிலை (Mass and Inertia), வாட்டர் ஜெட் எரிபொருள், காந்தத்துடன் விளையாடுதல், சைன் அலை, சைக்ளோடிகல் பாதை (Cyclodical Path), நியூட்டனின் 3-வது விதி, படிக அமைப்பு, கணித சிற்பம், டி.என்.ஏ. மாதிரி, 3டி ஊசல் காசியன் தேற்றம், ஹைப்சோமீட்டர், ப்ரிஹோமேசியன் கியர் ரயில், சோலார் வாட்டர் ஹீட்டர், சூரிய சக்தியில் இயங்கும் ரேடியோ, இசைக் குழாய்கள், அலை இயக்கம், சந்திராயன், மங்கள்யான் உள்ளிட்ட அறிவியல் சார்ந்த உபகரணங்களை சென்னை பள்ளி மாணவர்களுடன் மேயர் பிரியா பார்வையிட்டார்.</p><h2>அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்</h2><p>இதனைத் தொடர்ந்து, பூங்காவில் பசுமைப் பரப்பினை அதிகரிக்கும் வகையில் மேயர் மரக்கன்றினை நட்டார். பின்னர், பூங்காவினை பராமரித்திடவும், சென்னை பள்ளி மாணவர்களை தினசரி அறிவியல் தொழில்நுட்ப பூங்காவிற்கு கல்விச் சுற்றுலா போல் அழைத்து வருமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மண்டல அலுவலர் சொக்கலிங்கம் மற்றும் அலுவலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய்யுடன் பாடகர் அறிவு சந்திப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/singer-arivu-meets-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/singer-arivu-meets-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">f31cd668-4eb8-43f9-ba9e-c4cab634db7f</guid><pubDate>Tue, 21 Jul 2026 09:39:31 +0000</pubDate><atom:updated>2026-07-21T09:39:31.415Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நீட் தேர்வு,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,பாடகர் அறிவு,Singer Arivu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/1jgop8xm/ari.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/1jgop8xm/ari.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னை தலைமைச் செயலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பாடகர் அறிவு, போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது முதல்-அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">விஜய்</a>யை சந்தித்திருக்கிறார். </p><h2>நீட் தேர்வு</h2><p>நாடு முழுவதும் நீட் (NEET) தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் மற்றும் மாணவர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, இன்று சென்னை தலைமைச் செயலகம் முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட பாடகர் அறிவு, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினார்.</p><h2>கைது </h2><p>இதையடுத்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி போலீசார் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><h2>முதல்-அமைச்சர் விஜய்யுடன் சந்திப்பு</h2><p>இந்நிலையில், விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பாடகர் அறிவு தற்போது சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்திருக்கிறார். </p>]]></content:encoded></item><item><title>புத்தகப் பை சுமை இனி குறைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன் சொன்ன முக்கிய தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/book-bag-burden-to-be-reduced-henceforth-key-information-given-by-minister-rajmohan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/book-bag-burden-to-be-reduced-henceforth-key-information-given-by-minister-rajmohan#comments</comments><guid isPermaLink="false">467eeadb-8ce9-41d9-8443-57b101b4cfa2</guid><pubDate>Tue, 21 Jul 2026 09:12:36 +0000</pubDate><atom:updated>2026-07-21T09:12:36.848Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,education,tngovt,மாணவர்கள்,புத்தகப்பை,கல்வித்துறை,Department of Education,Rajmohan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/y63bvbla/rajmogan33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ராஜ்மோகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/y63bvbla/rajmogan33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்த நொடி முதல் தமிழ்நாட்டின் கல்வி மாறப்போகிறது என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.</p><p>சென்னை கொரட்டூரில் பள்ளி பாடத்திட்ட மாற்றம் குறித்த ஆலோசனைக்கு பிறகு அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><h2>கதைகளின் வழியே கணிதம்</h2><p>படிக்கும் காலத்தில் கணிதம் வராமல் அதிகமாக அடி வாங்கி உள்ளேன். கடினமான கணிதம் இனி கதைகளின் வழியே எளிமையாக கற்பிக்கப்படும். அறிவியல், தொழில்நுட்பம், கலை என அனைத்தும் ஒருங்கிணைந்த Steam Education கற்பிக்கப்படும். குழந்தைகளை மையப்படுத்தி கல்வியாக மாற்றி அமைக்கப்படும். அனைவருக்குமான கல்வியாக இருக்கும்.</p><p>கதைகளின் வழியே கணிதத்தை கற்பிக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றப்படும்.  குழந்தைகளுக்கான கல்வியாக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழ்நாடு கல்வி முறை</a>யை மாற்ற இருக்கிறோம்.அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை, கணிதத்தை இணைத்து புதிய கல்விமுறை நடைமுறைப்படுத்தப்படும். </p><h2>புத்தக சுமை குறைகிறது</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் என்னை அமெரிக்கா அனுப்பி பலவற்றை ஆய்வு செய்து வரச் சொன்னார். அங்கே முழுக்க STEM எஜுகேஷன்தான். STEM எஜுகேஷன் என்பது Science, Technology, Engineering &amp; Mathematics</p><p>தமிழ்நாட்டில் இன்னும் ஒரு படி மேலே போய், STEM எஜுகேஷனில் இருந்து STEAM எஜுகேஷன் என்ற அப்ரோச் நோக்கி நகர்றோம். இது என்ன STEAM எஜுகேஷன்? S-T-E-A-M, அதாவது Science, Technology, Engineering உடன் Arts கலையையும் சேர்த்து Mathematics சேர்க்கிறோம்"</p><p>ஸ்டீம் கல்வி முறைக்கு தமிழ்நாடு மாற இருக்கிறது. பள்ளிகளில் ப்ராம்பட் இன்ஜினீரிங் கற்றுத்தரப்படும். </p><p>ஏஐ தொழில்நுட்பத்தை எப்படி பயன்படுத்துவது என்பது பள்ளிகளில் கற்றுத்தரப்படும்.  இந்த நொடி முதல் தமிழ்நாட்டின் கல்வி மாறுகிறது. கற்றலை இனிமையான அனுபவமாக மாற்றுவோம்.மாணவர்களின் புத்தகப் பை சுமை இனி குறைக்கப்படும்; பாடப்புத்தகங்கள் வண்ணப்பட புத்தகங்களாக மாறும்.</p><h2>எல்லாம் மாறுது.. கல்வியும் மாறுது</h2><p>எந்த அளவிற்கு புத்தகப்பை சுமை குறைகிறதோ அந்த அளவிற்கு மாணவர்களின் மனச்சுமை குறையும்.</p><p>நிலாவிற்கு சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங் கூட குறைவாகத்தான் சுமை எடுத்துச்சென்றிருப்பார்; அதனைவிட பள்ளி மாணவர்கள் அதிகம் சுமக்கின்றனர்.</p><p>முன்பு நிலாவைக் காட்டி சோறூட்டிக் கொண்டிருந்தோம். இன்று நிலாவிற்கே சந்திராயனை ஓட்டிவிட்டார்கள். முன்பு வாசலில் தள்ளுவண்டியில் பொருட்களை விற்பனை செய்வார்கள். இன்று ஷாப்பிங் மால்களில் தள்ளுவண்டியை (ட்ராலி) நம்ம கையில கொடுத்துட்டாங்க. உணவு பழக்கவழக்கம் மாறிவிட்டது. நடையுடை பாவனை மாறிவிட்டது. எல்லாம் மாறிவிட்டது. காலம் மாறிவிட்டது. இந்த நொடி முதல் தமிழ்நாட்டின் கல்வியும் மாறுகிறது.</p><h2>பெற்றோரை மதிக்கும் வகையில் புதிய பாடத்திட்டம்</h2><p>மாணவர்களின் மனச்சுமையை குறைக்கும் புதிய பாடத்திட்டம் அறிமுகம். புத்தகங்கள் இனி படங்கள் நிறைந்ததாக இருக்கும். புத்தக சுமை குறையும்போது மனச்சுமையும் குறையும்.பெற்றோரை மதிக்கும் கல்வியாக புதிய பாடத்திட்டம் அமையும்</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>
நீட் தேர்வுக்கு எதிராக சென்னை தலைமைச் செயலகத்திற்குள் புகுந்து போராட முயற்சி - பாடகர் தெருக்குரல் அறிவு கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/protest-demanding-the-cancellation-of-the-neet-exam-singer-arivu-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/protest-demanding-the-cancellation-of-the-neet-exam-singer-arivu-arrested#comments</comments><guid isPermaLink="false">48867152-688b-4756-b490-7ceef477830d</guid><pubDate>Tue, 21 Jul 2026 08:55:35 +0000</pubDate><atom:updated>2026-07-21T08:55:35.889Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>போராட்டம்,நீட் தேர்வு,தலைமைச் செயலகம்,NEET,பாடகர் அறிவு,Singer Arivu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/toecrph6/ari.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/toecrph6/ari.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னை தலைமைச் செயலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பாடகர் அறிவு</a> கைது செய்யப்பட்டுள்ளார். </p><h2>நீட் தேர்வு</h2><p>நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பல்வேறு அமைப்புகள் மற்றும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பாடகர் அறிவு இன்று சென்னை தலைமைச் செயலகம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.</p><h2>போராட்டம் </h2><p>நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பிய அவர், தலைமைச் செயலகத்திற்குள் புகுந்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.</p><h2>பாடகர் அறிவு கைது</h2><p>பின்னர், தலைமைச் செயலகத்திற்குள் அனுமதியின்றி புகுந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக கூறி பாடகர் அறிவுவை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>பெரம்பூர் தொகுதி வெற்றி: முதல்-அமைச்சர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/perambur-constituency-victory-high-court-orders-notice-to-be-sent-to-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/perambur-constituency-victory-high-court-orders-notice-to-be-sent-to-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">d5dcf942-03be-428f-a6f6-40aadea5fb16</guid><pubDate>Tue, 21 Jul 2026 08:27:16 +0000</pubDate><atom:updated>2026-07-21T08:27:16.192Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Perambur,பெரம்பூர் தொகுதி,CM Vijay,Perambur constituency</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/a8kssccr/CHENNAI-15.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/a8kssccr/CHENNAI-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு</h2><p>நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய் 1,20,365 வாக்குகளைப் பெற்று 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் 66,650 வாக்கு பெற்றிருந்தார்.</p><p>பெரம்பூர் தொகுதியில் முதல்-அமைச்சர் விஜய் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் தொகுதி வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்தனர்.</p><h2>முதல்-அமைச்சர் விஜய்க்கு நோட்டீஸ்</h2><p>திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் தாக்கல் செய்திருந்த தேர்தல் வழக்கில், “வேட்பு மனுவில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கி இருப்பதாகவும். சொத்துக்கள் விவரங்கள் மற்றும் வழக்குகள் விவரங்கள் முறையாக தெரிவிக்கவில்லை என்பதால் விஜய்யின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த வழக்கு, நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள முதல்-அமைச்சர் விஜய், தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ் சென்றடையவில்லை என, ஆர்.டி.சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதி முதல்-அமைச்சர் விஜய், தேர்தல் அதிகாரி உள்ளிட்டோருக்கு புதிதாக நோட்டீஸ் அனுப்ப  உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.</p>]]></content:encoded></item><item><title>கேரளக் கழிவுகளை உடனடியாக திருப்பி அனுப்புங்கள்; தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/send-back-kerala-waste-immediately-nayinar-nagendran-urges-tamil-nadu-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/send-back-kerala-waste-immediately-nayinar-nagendran-urges-tamil-nadu-government#comments</comments><guid isPermaLink="false">1634ab96-c841-4953-9200-218661d60c58</guid><pubDate>Tue, 21 Jul 2026 07:58:04 +0000</pubDate><atom:updated>2026-07-21T07:58:04.769Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Kerala,Tamil Nadu Government,தமிழக அரசு,Nayinar Nagendran,waste,கழிவுகள்,கேரளம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/2q41n5bg/nainar.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/2q41n5bg/nainar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>தென்காசி கீழக்கடையத்தில் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலத்தில் சுமார் 10 டன் எடையுள்ள கேரளக் கழிவுகள் கொட்டப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டை குப்பைத் தொட்டியாக நினைக்கும் அண்டை மாநிலத்தின் போக்கையும், அதைத் தடுக்கத் தவறிய தவெக அரசின் மெத்தனத்தையும் வன்மையாக கண்டிக்கிறேன்.</p><h2>10 டன் கழிவுகள்</h2><p>இங்கு வீசப்பட்டுள்ள மூட்டைகளில் மலையாள எழுத்துகளும், கேரள வாகன எண்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பிளாஸ்டிக், மின்னணுக் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">கழிவுகள்</a> (e-waste) மற்றும் காலாவதியான மருந்து மாத்திரைகளால் ஜம்பு நதியும், விளைநிலங்களும், நிலத்தடி நீரும் மாசடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எல்லைக் கண்காணிப்பிலும், கோவில் நிலங்களைப் பாதுகாப்பதிலும் தவெக அரசு முற்றிலும் தோல்வியடைந்துள்ளதையே இந்தச் சம்பவம் காட்டுகிறது.</p><p>எனவே, இந்த 10 டன் கழிவுகளையும் உடனடியாகக் கேரளாவிற்கே திருப்பி அனுப்ப அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்றும், சட்டவிரோதக் கழிவுகளைக் கொட்டுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தவெக அரசின் ஆணவத்திற்கு மக்கள் முடிவுகட்டுவர்: மு.க.ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/people-will-put-an-end-to-the-arrogance-of-the-tvk-government-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/people-will-put-an-end-to-the-arrogance-of-the-tvk-government-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">47fb021f-2292-4734-802f-cce3fbe4a480</guid><pubDate>Tue, 21 Jul 2026 07:37:04 +0000</pubDate><atom:updated>2026-07-21T07:37:04.965Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,M.K.Stalin,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/k5yyw044/CHENNAI-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/k5yyw044/CHENNAI-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முதல்-அமைச்சர் விஜய் பற்றி அவதூறாக பேசியதாக விளாத்திகுளம் தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதனையடுத்து நீதிபதி வருகிற 3-ந் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி, மார்க்கண்டேயனை போலீசார் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.</p><p>திமுக எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டதை கண்டித்து அக்கட்சி நிர்வாகிகள் பலரும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். <strong>அந்த வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-</strong></p><p>ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை எல்லாம் கிரிமினல் சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்தி அடக்கிடப் பார்க்கும் த.வெ.க. அரசின் போக்கைக் கடுமையாகச் சாடியுள்ளது தனியார் ஆங்கில நாளிதழின் இன்றைய தலையங்கம்.</p><p>நம் முதல்-அமைச்சருக்குப் புரிவதுபோல சொல்ல வேண்டுமென்றால், இந்தியா முழுவதும் வெளியாகும் பத்திரிகையின் நடுப்பக்கம் அவரது தலையில் நங்கு நங்கென்று குட்டியிருக்கிறது. ஆட்சியின் அலங்கோலங்களை எல்லாம் கைது நடவடிக்கைகளால் சரிக்கட்டி விடலாம் என்று இந்த அரசு எண்ணினால் மக்களே அந்த ஆணவத்துக்குச் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கல்குவாரிகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தி  சாகும் வரை உண்ணாவிரதத்தை துவக்கிய விவசாயி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmer-begins-hunger-strike-to-demand-permanent-closure-of-quarries</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmer-begins-hunger-strike-to-demand-permanent-closure-of-quarries#comments</comments><guid isPermaLink="false">865efacc-ff8c-4886-ab3a-e40b71c814a8</guid><pubDate>Tue, 21 Jul 2026 07:35:40 +0000</pubDate><atom:updated>2026-07-21T07:35:40.930Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கல்குவாரி,farmer,விவசாயி,பொள்ளாச்சி,Pollachi,உண்ணாவிரதம்,quarries</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/4o4parz1/64.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/4o4parz1/64.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பொள்ளாச்சி,  </p><p>பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு பகுதியில் உள்ள அனைத்து கல்குவாரிகளையும் நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயி ஒருவர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.</p><p>பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கடவு ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் 40க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. அரசின் அனுமதி காலம் முடிந்த நிலையிலும் சில குவாரிகள் முறைகேடாக இயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவையும் மீறி வெடிவைத்து கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாக விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர். அதோடு இந்த குவாரிகளால் நிலத்தடி நீர்மட்டம் பாதித்து கிணறுகளில் நீர் வற்றி விவசாயம் பாதிப்பதாகவும்  கனிம வளத்துறை மற்றும் வருவாய் துறை உயர் அதிகாரிகளுக்கு விவசாயிகள் அடிக்கடி புகார் மனுவும் அனுப்பி வருகின்றனர்.</p><h2>சாகும் வரை உண்ணாவிரதம்</h2><p>இந்நிலையில் நம்பர் 10 முத்தூரைச் சேர்ந்த விவசாயி முருகானந்தம், கல்குவாரிகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக கூறி நேற்று தனது போராட்டத்தை துவக்கினார். இது குறித்து முருகானந்தம் செய்தியாளர்களிடம் கூறுகையில், கிணத்துக்கடவு வட்டாரத்தில் அனுமதி பெற்றும், அனுமதியின்றியும் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த குவாரிகளில் அதிக அளவு வெடிபொருட்கள் பயன்படுத்தி கற்கள் வெட்டி எடுப்பதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கிறது. கிணறுகளில் நீர் வற்றி விவசாயம் பெரிதும் பாதிக்கிறது. இது குறித்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து புகார் மனு கொடுத்து வருகிறோம்.</p><h2>நடவடிக்கை</h2><p>ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது புதிதாக பொறுப்பேற்ற அரசிடமும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">குவாரிகள்</a> மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு கொடுத்தோம். தலைமைச் செயலர் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் உள்ளிட்டோரிடம் புகார் மனு கொடுத்தோம். நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக அவர்களும் உறுதி அளித்தனர். ஆனால் இங்குள்ள மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர், தாசில்தார் உள்ளிட்டோர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர்.</p><p>கிணறுகளில் நீர் வற்றி விவசாயம் பாதித்த நிலையில், தற்போது குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே கிணத்துக்கிடவு வட்டாரத்தில் உள்ள ஒட்டுமொத்த குவாரிகளையும் நிரந்தரமாக மூட வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். தகவல் அறிந்து வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து முருகானந்தம் மற்றும் விவசாயிகளிடம்  பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது: சபாநாயகர் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-mla-markandeyan-arrested-speaker-explains</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-mla-markandeyan-arrested-speaker-explains#comments</comments><guid isPermaLink="false">a964b202-2614-4c9d-a88a-2f164d081cbb</guid><pubDate>Tue, 21 Jul 2026 07:24:05 +0000</pubDate><atom:updated>2026-07-21T07:24:05.639Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,DMK MLA,திமுக எம்.எல்.ஏ.,சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்,Speaker J.C.T. Prabhakar,மார்க்கண்டேயன்,Markandeyan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/kg5q4rxl/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/kg5q4rxl/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது தொடர்பாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கம் அளித்து கூறியதாவது:-</p><p>பேரவை தலைவரை கேட்டுவிட்டுதான் கைது செய்ய வேண்டும் என்கிற விதி இல்லை. 291-வது விதி என்ன சொல்கிறது என்றால்.. “பேரவைத் தலைவர் முன் அனுமதியின்றி எவரையும் பேரவை அமைப்பு எல்லைக்குள் கைது செய்யக்கூடாது. அதைபோன்று உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தின் கட்டளையையோ, அறிவிப்பையோ பேரவை தலைவர் முன் அனுமதியின்றி பேரவையின் அமைப்பு எல்லைக்குள் சேர்ப்பித்தல் கூடாது.</p><p>அமைப்பு எல்லை என்பது சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பொதுமக்களும் தெரிய வேண்டும் என்பதை கடமையாக கருதுகிறேன். பேரவையின் அமைப்பு எல்லை என்பது சட்டமன்ற உறுப்பினர்களை பொறுத்தவரை பேரவை மண்டபம், அதன் புறக்கூடங்கள், அதனை சார்ந்த அலுவலகங்கள், அமைச்சர்களின் அறைகள், நூலகம், சிற்றுண்டி சாலை, தலைமை செயலகத்தில் உள்ள குழுக்கள் கூடும் அறை, அண்ணா சாலை அரசினர் தோட்டத்தில் உள்ள உறுப்பினர் குடியிருப்புக்குள் உள்ள குழுக்கள் கூடும் அறை, நூலகம் மற்றும் பேரவை தலைவரால் அவ்வப்போது குறிப்பிடப்படும் இடங்கள் உள்ளிட்ட அனைத்தும் பொருந்தும்.</p><p>வெளியே நடைபெறும் சம்பவங்களில் கைது செய்ய பேரவைத் தலைவரின் அனுமதி தேவையில்லை. திமுக எம்.எல்.ஏ.வை கைது செய்த உடன் அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எனக்கு தகவல் தெரிவித்தார். 24 மணி நேரத்திற்கு மேல் காவலில் வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், நான் முறையாக மற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்; அதன்படி அனைத்து உறுப்பினர்களுக்கும் மார்க்கண்டேயன் கைது குறித்து தகவல் தெரிவிக்கப்படும்.</p><p>பேரவை தலைவரை பொறுத்தவரைக்கும் என் கவனத்திற்கு இந்த பிரச்சினை கொண்டு வரப்படுமானால் என்ன நடவடிக்கை எடுக்கலாம்? எந்த காலக்கட்டத்தில் எடுக்கலாம்? என்பது பற்றி நான் முக்கியமாக முடிவு எடுப்பேன். என்னிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால் அதை முறையாக சட்டவிதிகளுக்கு உட்பட்டு, சபை விதிகளுக்கு உட்பட்டு நிச்சயமாக நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-guruvayur-express-train-service</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-guruvayur-express-train-service#comments</comments><guid isPermaLink="false">d0cfbbba-d8f6-4cbf-afeb-473ecf8859d7</guid><pubDate>Tue, 21 Jul 2026 07:14:42 +0000</pubDate><atom:updated>2026-07-21T07:14:42.758Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>ரெயில் சேவை,train service,குருவாயூர் எக்ஸ்பிரஸ்,Guruvayur Express</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/fbcmybmb/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/fbcmybmb/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>திருச்சி கோட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், திருச்சி வழியாக செல்லும் ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம்; </p><p>மாற்றுப்பாதையில்... </p><p>நாகர்கோவில் -மும்பை சி.எஸ்.டி.எம். எக்ஸ்பிரஸ் ரெயில் (16352) வரு கிற 23,26 மற்றும் 30-ந்தேதிகளிலும், கன்னியாகுமரி ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12666) வருகிற 25-ந்தேதியிலும், கன்னியாகுமரி-ஐதராபாத் எக்ஸ்பிரஸ் ரெயில் (17070) வருகிற 24 மற்றும் 31-ந்தேதிகளிலும், செங்கோட்டை - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (16848) வருகிற 23,24,25,26,27,28,30,31-ந்தேதிகளிலும் மதுரை, மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி வந்து செல்லும். </p><p>இதேபோல் குருவாயூர் சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128) வருகிற 22,23,24,25,26,27,29,30,31-ந்தேதிகளில் மதுரை சந்திப்பை தவிர்த்து விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி வந்து செல்லும். </p><p>மேலும், மதுரை பிகானேர் அனுவ்ரத் ஏசி அதிவிரைவு ரெயில் (22631) வருகிற 23-ந்தேதியில் மதுரையில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி வந்து செல்லும். கடலூர் துறைமுகம் -மைசூர் எக்ஸ்பி ரஸ் ரெயில் (16231) வருகிற 31-ந்தேதி கார்மேலாரம், பையப்பனஹள்ளி கேபின், பானஸ்வாடி, யஷ்வந்த்பூர் கேபின், சிக்பானவர், ஹசன் வழி யாக திருப்பி விடப்படும்.</p><p>காரைக்குடி திருச்சி பாசஞ்சர் ரெயில் (56832) நாளை (புதன்கிழமை) முதல் 31-ந்தேதி வரை காரைக்குடியில் இருந்து 25 நிமிடம் தாமதமாக காலை 10.15 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும். இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்து உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசுவதா? காவல்துறையினர் கண்ணியம் தவறக்கூடாது - நயினார் நாகேந்திரன் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/addressing-journalists-in-a-disrespectful-singular-tone-police-personnel-must-not-compromise-on-dignity-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/addressing-journalists-in-a-disrespectful-singular-tone-police-personnel-must-not-compromise-on-dignity-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">740b43b6-2612-4076-b917-727ee5a33dc7</guid><pubDate>Tue, 21 Jul 2026 07:03:11 +0000</pubDate><atom:updated>2026-07-21T07:03:11.106Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,காவல்துறை</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/3ikd5cbs/13.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/3ikd5cbs/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>காவல்துறையினர் கண்ணியம் தவறக் கூடாது! </p><p>முதல்வர் மீது அவதூறு பரப்பியதாகக் கூறி தமிழகக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. மார்க்கண்டேயன் அவர்களிடம் பேட்டி பெற முயன்ற பத்திரிக்கையாளர்களைத் தாக்கியதோடு, நாக்கைத் துருத்திக் கொண்டு அவர்களை “வாடா, போடா” என ஒருமையில் சாடியுள்ள, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. திபு அவர்களின் நாகரிகமற்ற செயல் கண்டனத்திற்குரியது. </p><p>காக்கிச் சட்டைக்கென்று ஒரு தனி மரியாதையும், கண்ணியமும் உண்டு என்பதை மறந்து விட்டு, காவல்துறையின் உயரிய பொறுப்பில் இருக்கும் காவல் அதிகாரியே “பேட்டை ரவுடி” போல இப்படி பொதுவெளியில் சண்டைக்கு நிற்பது ஒட்டுமொத்த காவல்துறையின் பிம்பத்தையும் சிதைத்து விடும். ஏற்கனவே தமிழகத்தில் தொடரும் லாக்-அப் மரணங்களால், காவல்துறையின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கையும், பாதுகாப்புணர்வும் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து வரும் நிலையில், காவல்துறையினர் மிகுந்த கவனத்துடன் தங்களது “Decorum”-மை கடைபிடிக்க வேண்டும். </p><p>மேலும், காவல்துறையைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இயக்கும் முதல்-அமைச்சர் விஜய், காவல்துறையை வெறும் “ஏவல்துறை”யாக மட்டும் பயன்படுத்தக் கூடாது எனவும், ஜனநாயகத்தின் முக்கியத் தூண்களில் ஒன்றான பத்திரிக்கைத் துறையின் அடிப்படை உரிமைகள் மீது தொடரும் இதுபோன்ற அடக்குமுறைகளை தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆவின் பால் தட்டுப்பாட்டை உடனே சரி செய்ய வேண்டும் -  தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aavin-milk-shortage-should-be-resolved-immediately-tamilisai-soundararajan-insists</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aavin-milk-shortage-should-be-resolved-immediately-tamilisai-soundararajan-insists#comments</comments><guid isPermaLink="false">7271bed1-6f45-4911-a265-a69d6cf9fc8a</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:58:16 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:58:16.006Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழிசை சவுந்தரராஜன்,Tamilisai Soundararajan,shortage,தட்டுப்பாடு,Aavin Milk,ஆவின் பால்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/1gplj9k0/tamilisai.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழிசை சவுந்தரராஜன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/1gplj9k0/tamilisai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D">ஆவின் பால் </a>விநியோகம் குறைந்துள்ளதாகவும் சில இடங்களில் தினசரி 30- லிருந்து 50 லிட்டர் வரையில் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் பச்சை மற்றும் ஆரஞ்சு பால் பாக்கெட்டுகள் கிடைப்பது சிக்கல் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன இது குழந்தைகள் முதியவர்கள் நோயாளிகள் என அன்றாடம் பாலை நம்பி வாழும் லட்சக்கணக்கான குடும்பங்களை நேரடியாக பாதிக்கும் ஒரு விஷயம்... அது மட்டுமல்ல குடும்பங்கள் பால் காபி போன்றவர்களுக்கு தினமும் பயன்படுத்தும் பச்சை பால் கிடைப்பதில் தட்டுப்பாடு இருக்கிறது என்பதும்.. அதிக அடர்த்தியுடைய ஆரஞ்சு பால் கேட்பவர்களுக்கு இதற்கு பதிலாக பதப்படுத்தப்பட்ட நீலப் பால் கொடுப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆவின் நிர்வாகம் இதை உடனே சரி செய்ய வேண்டும் மரியாதைக்குரிய தமிழக முதல்-அமைச்சர்   இதில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் அதுமட்டுமல்ல விவசாயிகளிடமிருந்தும் பால் உற்பத்தியாளர்களிடமிருந்தும் பால் கொள்முதல் செய்வது ஆவின் ஒரு லிட்டருக்கு ரூ.35 கொடுப்பதாகவும் இதே தனியார் பால் நிறுவனங்கள் ஒரு லிட்டருக்கு ரூ.50 கொடுப்பதால்.. ஆவினுக்கு பால் கிடைப்பதிலும் சிரமம் இருக்கிறது என்பதையும் சில அதிகாரிகள் தெரியப்படுத்தி இருக்கிறார்கள்.</p><h2>நெய் விலை உயர்வு</h2><p>பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல் அதே  சமயத்தில் நெய்யின் விலையை  ஏற்றி இருப்பதும் கண்டனத்திற்குரியது. 500 எம்எல் நெய் ரூ.332.4-லிருந்து ரூ.342.6-க்கும் உயர்த்தப்பட்டிருப்பது ஒரு லிட்டர் பெட் பாட்டில் நெய் ரூ.650.72-லிருந்து ரூ.664.78-ஆக ஏற்றப்பட்டிருப்பது.. பொதுமக்கள் மீது சுமையை ஏற்றுவதாகும்.  ஆக ஆவின் நிர்வாகம் உடனே தனி கவனம் செலுத்தி பால் கொள்முதல் விலையை உயர்த்தி.. கிடைக்க வேண்டிய பாலின் அளவு குறையாமல் பார்த்து எந்த மாவட்டத்திற்கும் பால் தட்டுப்பாடு இல்லாமல் விநியோகம் செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பரந்தூர் விமான நிலையம்: மத்திய அரசு முக்கிய பதில் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/parandur-airport-central-governments-important-response</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/parandur-airport-central-governments-important-response#comments</comments><guid isPermaLink="false">5f91c67d-8ba7-4823-8108-717d877afec2</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:44:33 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:44:33.077Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,மத்திய அரசு,Central Govt,Parandur,பரந்தூர்,பரந்தூர் விமான நிலையம்,Parandur Airport</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/rktmjcs5/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/rktmjcs5/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் எழுப்பிய கேள்விக்கு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணை மந்திரி முரளிதர் மோஹோல் அளித்த பதில் பின்வருமாறு;-</p><p><strong>கேள்வி:</strong> சென்னை, பரந்தூரில் முன்மொழியப்பட்டுள்ள பசுமை வழி விமான நிலையத்தின் தற்போதைய நிலை, கட்டம் வாரியான முன்னேற்றம், மொத்த மதிப்பிடப்பட்ட திட்டச் செலவு, இதுவரை ஒதுக்கப்பட்ட வரவு-செலவு நிதி மற்றும் அதை முடிப்பதற்கான எதிர்பார்க்கப்படும் காலக்கெடு ஆகிய விவரங்கள்; தருக.</p><p><strong>பதில் :</strong> பரந்தூரில் சர்வதேச பசுமை வழி விமான நிலையத்தை அமைப்பதற்காக, தமிழ்நாடு அரசின் நிறுவனமான தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் 07.04.2025 அன்று 'கொள்கை அளவிலான' ஒப்புதலை வழங்கியுள்ளது. செப்டம்பர் 2024-இல் TIDCO சமர்ப்பித்த கொள்கை அளவிலான விண்ணப்பத்தின்படி, கட்டம்-1க்கான மதிப்பிடப்பட்ட திட்டச் செலவு தோராயமாக ரூ. 10,500 கோடி ஆகும்.</p><p>பசுமை வழி விமான நிலையக் கொள்கை, 2008-இன் படி, நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு, நிதி திரட்டுதல், சுற்றுச்சூழல் அனுமதிகளைப் பெறுதல் உள்ளிட்ட பசுமைப் புல விமான நிலையத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான பொறுப்பு சம்பந்தப்பட்ட விமான நிலைய உருவாக்குநர் அல்லது மாநில அரசைச் சேர்ந்ததாகும். விமான நிலையத் திட்டங்களை முடிப்பதற்கான காலக்கெடு நிலம் கையகப்படுத்துதல், கட்டாய அனுமதிகள் கிடைப்பது, நிதி நிருவாக முடிவு போன்ற பல காரணிகளைப் பொறுத்தது.</p><p><strong>கேள்வி:</strong> பசுமைப் வழி விமான நிலையத்திற்காக முன்மொழியப்பட்ட இடத்தை மாற்றுமாறு புதிய தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதா, ஆம் எனில், அத்தகைய கோரிக்கையின் தேதி வாரியான விவரங்கள் மற்றும் அதற்கு அரசின் பதில் என்ன.?</p><p><strong>பதில்:</strong>  இல்லை.</p><p><strong>கேள்வி:</strong> சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருச்சிராப்பள்ளி, மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகிய விமான நிலையங்களின் விரிவாக்கம் மற்றும் வளர்ச்சிப் பணிகளின் தற்போதைய நிலை, திட்டம் வாரியான பட்ஜெட் ஒதுக்கீடு, புவியியல் மற்றும் நிதி முன்னேற்றம், எதிர்பார்க்கப்படும் நிறைவு தேதி மற்றும் பிற தொடர்புடைய விவரங்களைக் குறிப்பிடவும்?</p><p><strong>பதில்:</strong> தற்போதைய விமான நிலையங்களை மேம்படுத்துவது/ நவீனப்படுத்துவது என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். சென்னை, திருச்சிராப்பள்ளி மற்றும் கோயம்புத்தூர் விமான நிலையங்களில் மேற்கொள்ளப்படும் முக்கிய விரிவாக்கம் மற்றும் வளர்ச்சிப் பணிகள் வருமாறு:</p><p>சென்னையில் ரூ. 2,467 கோடி செலவில் இரண்டாம் கட்ட நவீனமயமாக்கல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் புவியியல் மற்றும் நிதி முன்னேற்றம் முறையே தோராயமாக 81% மற்றும் 71% ஆக உள்ளது. மேலும், மழைநீர் வடிகால் சீரமைப்பு (ரூ. 209.01 கோடி), முனையம் 1-ஐப் புதுப்பித்தல் (ரூ. 81.8 கோடி) மற்றும் ஏர்சைட் உட்கட்டமைப்பு மேம்பாடு (ரூ. 480.06 கோடி) போன்ற கூடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p><p>திருச்சியில் ரூ. 80.17 கோடி செலவில் புதிய ATC கோபுரம் மற்றும் தொழில்நுட்பக் கூடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் புவியியல் மற்றும் நிதி முன்னேற்றம் முறையே தோராயமாக 76% மற்றும் 49% ஆக உள்ளது.</p><p>கோயம்புத்தூரில் புதிதாகக் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் ரூ. 51.31 கோடி செலவில் சுற்றடைப்புச் சுவர் கட்டுதல் மற்றும் ரூ. 13.71 கோடி செலவில் தற்போதுள்ள முனையக் கட்டிடத்தை விரிவாக்கம் செய்தல் மற்றும் மாற்றியமைத்தல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என பதில் அளிக்கப்பட்டது. </p><h2>தவெக அரசு</h2><p>பரந்தூருக்கு மாற்றாக வேறு இடம் தேர்வு செய்யப்படும் என கூறி, பரந்தூர் விமானநிலைய பணிகள் தவெக அரசால் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மாற்று இடம் பற்றி மத்திய அரசிடம் எந்த கோரிக்கையுமே இதுவரை தவெக அரசு வைக்கவில்லை என்ற தகவல் வெளிவந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மேயர் பிரியாவுக்கு சிக்கல்: மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவித்த 90 திட்டங்களின் மதிப்பீடு மறு ஆய்வு செய்ய அரசு உத்தரவு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/trouble-for-mayor-priya-government-orders-a-review-of-the-cost-estimates-for-90-projects-announced-in-the-corporation-budget</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/trouble-for-mayor-priya-government-orders-a-review-of-the-cost-estimates-for-90-projects-announced-in-the-corporation-budget#comments</comments><guid isPermaLink="false">d9cea290-b358-4e5a-982d-7ad72daef5e8</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:22:34 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:22:34.857Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Mayor Priya,மேயர் பிரியா,சென்னை மாநகராட்சி பட்ஜெட்,Chennai Corporation budget,தவெக அரசு,TVK Government</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/jv9e00wy/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/jv9e00wy/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 90 திட்டங்களின் மதிப்பீட்டை மறு ஆய்வு செய்ய த.வெ.க. அரசு உத்தரவிட்டுள்ளதால், மேயர் பிரியாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. </p><h2>பற்றாக்குறை பட்ஜெட் </h2><p>பெருநகர சென்னை மாநகராட்சியின் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் 90 புதிய திட்டங்களுக்கான அறிவிப்பை மேயர் பிரியா வெளியிட்டார். </p><p>பட்ஜெட்டில் மொத்த வரவு ரூ.7,717 கோடியாகவும், செலவு ரூ.9,319 கோடியாகவும் இருக்கும்  என்று தெரிவிக்கப்பட்டது. இதனால், நிதி பற்றாக்குறை ரூ.1,602 கோடியாக இருக்கும் என்றும் கூறப்பட்டது. </p><h2>ரூ.2 ஆயிரம் கோடி கடன் </h2><p>இதுபோக, ஏற்கனவே உலக வங்கி, ஜப்பான் வளர்ச்சி வங்கி உள்ளிட்டவைகளில் வாங்கிய ரூ.2 ஆயிரம் கோடி கடனுக்கு ஆண்டுக்கு ரூ.95 கோடியே 20 லட்சம் வட்டி செலுத்தப்பட்டு வருவதாகவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. </p><p>மேயர் பிரியா அறிவித்த முக்கிய திட்டங்களான மாநகராட்சி பள்ளிகளுக்கு 50 கி.மீ. பாதுகாப்பான வழித்தடங்கள் அமைக்க ரூ.200 கோடி, 30 நீர்நிலைகளை சீரமைக்க ரூ.100 கோடி, 60 பூங்காக்களை அறிவியல்பூர்வமாக பொலிவூட்ட ரூ.60 கோடி, நீர்வழி கால்வாய்களில் வெள்ள தடுப்பு சுவர் அமைக்க ரூ.55 கோடி என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. </p><h2>மேயர் பிரியாவுக்கு சிக்கல் </h2><p>அதில் ஒன்று, 100 பள்ளிகளுக்கு 60 லட்சம் மதிப்பில் பிரிண்டர் வாங்கப்படும் என்பது. ஆனால், புதிதாக பொறுப்பேற்ற த.வெ.க. அரசு 100 பள்ளிகளுக்கும் ரூ.22 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பிலேயே பிரிண்டர்களை வாங்கி கொடுத்துள்ளது. இதனால், ரூ.37 லட்சத்து 78 ஆயிரம் அரசுக்கு மிச்சமாகியுள்ளது. </p><p>அதனைத் தொடர்ந்து, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கான நிதி குறித்து ஆராயப்பட்டது. அதில் பல திட்டங்களின் மதிப்பீடு கூடுதலாக இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, சென்னை மாநகராட்சி பட்ஜெட்டின்போது மேயர் பிரியா அறிவித்த 90 திட்டங்களின் மதிப்பை மறு ஆய்வு செய்ய த.வெ.க. அரசு உத்தரவிட்டுள்ளது. இது மேயர் பிரியாவுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.  </p>]]></content:encoded></item><item><title>தமிழக பட்ஜெட் ஆகஸ்டு 5-ந் தேதி தாக்கல் - சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவிப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-budget-to-be-presented-on-august-5th-speaker-jct-prabhakar-announces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-budget-to-be-presented-on-august-5th-speaker-jct-prabhakar-announces#comments</comments><guid isPermaLink="false">122edf03-b9e6-428a-a254-440d8b1a933d</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:17:05 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:17:05.560Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,சட்டசபை,TN Assembly,சபாநாயகர்,பட்ஜெட் தாக்கல்,தமிழக பட்ஜெட்,Tamilnadu Budget,TN Budget,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/unbwi7a1/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/unbwi7a1/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>முதல் சட்டசபை கூட்டம்</h2><p>தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள த.வெ.க. அரசின் முதல் சட்டசபை கூட்டம் கடந்த மாதம் (ஜூன்) 18-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜூன் 19, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது. நிறைவு நாளில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பதிலுரை வழங்கினார்.</p><h2>பட்ஜெட் கூட்டத் தொடர்</h2><p>அதனைத் தொடர்ந்து, 4 நாட்கள் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து, 2026-27-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை கூட்டம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.</p><h2>5-ந்தேதி பட்ஜெட் தாக்கல்</h2><p>இந்த நிலையில், தமிழக சட்டசபை கூட்டம் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 5-ந்தேதி தொடங்கும் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், சென்னை தலைமைச்செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- </p><p>தமிழக சட்டசபையில் ஆகஸ்டு 5-ந் தேதி காலை 10 மணிக்கு 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அடுத்த நாள் (6-ந் தேதி) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் மீதான விவாதத்தை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.</p><h2>மானியக் கோரிக்கை விவாதம்</h2><p>முதல் நாளில், 2026-27-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அம்சங்களை பட்டியலிட்டு பேசுவார். அடுத்த நாள், 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. வேளாண் துறை அமைச்சர் வினோத், இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்வார். தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதமும், அமைச்சர்களின் பதிலுரையும் இடம்பெறும். அதன்பின்னர், துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறும்.</p><h2>முக்கிய அறிவிப்புகள் இடம்பெறுமா?</h2><p>தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இது என்பதால், தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளில் பல்வேறு அறிவிப்புகள் இதில் இடம்பெறும் என்று தெரிகிறது. குறிப்பாக, மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பை பெண்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர். என்றாலும், த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் முத்தான பட்ஜெட்டாக இருக்குமா? என்பது சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பிறகே தெரியவரும்.</p>]]></content:encoded></item><item><title>மல்லிகார்ஜுன கார்கே பிறந்தநாள்: முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mallikarjun-kharges-birthday-chief-minister-vijay-extends-wishes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mallikarjun-kharges-birthday-chief-minister-vijay-extends-wishes#comments</comments><guid isPermaLink="false">30aed2e9-dd75-40ea-a8b5-5c51b86b363f</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:08:36 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:08:36.213Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Mallikarjun Kharge,மல்லிகார்ஜுன கார்கே,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/sy6kex83/11.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/sy6kex83/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று தனது 84-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து முதல்-அமைச்சர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>“இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மதிப்பிற்குரிய மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், மக்கள் நலப் பணிகளைத் தொடர்ந்து சிறப்பாக ஆற்றிட எனது உளமார்ந்த வாழ்த்துகள்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>83வது பிறந்தநாள் விழாவை ரத்து செய்த வைகோ... &quot;யாரும் கொண்டாட வேண்டாம்&quot; என உருக்கமான வேண்டுகோள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vaiko-cancels-83rd-birthday-party-heartfelt-request-no-one-should-celebrate</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vaiko-cancels-83rd-birthday-party-heartfelt-request-no-one-should-celebrate#comments</comments><guid isPermaLink="false">df64d8f4-bf4a-4f12-bdf7-15999e0c1644</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:02:52 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:02:52.724Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ரத்து,பிறந்தநாள் விழா,birthday party,Cancel,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,MDMK General Secretary Vaiko</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/70570dby/vaiko.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வைகோ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/70570dby/vaiko.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>நான் 1944 ஆம் ஆண்டு, செப்டம்பர் 22 ஆம் நாள் பிறந்தேன். ஆனால், கலிங்கப்பட்டி ஆரம்ப பாடசாலையில் என்னை சேர்க்கும் போது வயது குறைவாக இருக்கிறது என்று கூறி, நான்கு மாதங்கள் முன்னதாக மே 22 இல் நான் பிறந்தேன் என்று பள்ளி ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டது. என்னுடைய இறுதி வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) சான்றிதழில் எனது பிறந்த நாள் மே 22 என்று குறிக்கப்பட்டுள்ளது. எனக்கு வாழ்த்துக் கூற விரும்புகிறவர்கள் பல நேரங்களில் மே 22 ஆம் நாள் அன்று வாழ்த்துக் கூறுவார்கள். இந்த நாள் எனது பிறந்தநாள் அல்ல என்று தெரிவித்துவிடுவேன்.</p><p>எம் இயக்கத்தில் யாரும் எனது பிறந்தநாளைக் கொண்டாடக் கூடாது என்று திட்டவட்டமாகக் கூறி வந்தேன். 2002 ஆம் ஆண்டு மே 22 ஆம் நாள் அன்று காலையில் அன்றைய இந்திய தலைமை மந்திரி அடல்பிகாரி வாஜ்பாய் என்னை அலைபேசியில் தொடர்புகொண்டு, இந்த இனிய நாள் மீண்டும் மீண்டும் உங்களுக்கு வருவதாக என்று வாழ்த்தினார். நான் உடனே அவரிடம், இந்த நாள் எனது பிறந்தநாள் அல்ல. பள்ளியில் சேர்ப்பதற்காக முன்னதாக உள்ள நாளை சேர்த்துவிட்டார்கள் என்றேன்.</p><h2>வாஜ்பாய் வாழ்த்து</h2><p>வாஜ்பாய் கவிஞர் அல்லவா? கணமும் தாமதிக்காமல் ஒரு வருடத்தில் 365 நாட்கள் உள்ளன. அதில் ஏதாவது ஒரு நாள் உங்கள் பிறந்தநாளாகத்தானே இருக்கும்! என்னுடைய வாழ்த்துகள் அந்த நாளுக்கு போய்ச் சேரட்டும் என்றார். திராவிட இயக்கத் தலைவர்கள் பலர் 40 வயதிலேயே பிறந்தநாள் விழா கொண்டாட ஆரம்பித்துவிட்டார்களே! நீங்கள் ஏன் இப்படி மறுக்கிறீர்கள்? என்று கூறி வந்தனர். பின்னர் எப்படியோ எனது பிறந்த நாள் செப்டம்பர் 22 என்று அறிந்துகொண்டார்கள். எனக்குத் தெரியாமலேயே பல இடங்களில் அந்த நாளைக் கொண்டாடினார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளாக இன்றைய துணைப் பொதுச்செயலாளர் சகோதரர் ஜீவன் பலரிடமும் கூறி, என் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் என்று எனக்குத் தெரியாமலேயே நடத்தி வந்தார்.</p><h2>மாபெரும் மாநாடு</h2><p>இந்தப் பின்னணியில், கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு “அண்ணே, இந்த வருடம் நீங்கள் எங்களை ஏமாற்ற விடமாட்டோம். செப்டம்பர் 22ஐ மிகப் பெரிய விழாவாகக் கொண்டாட கழக முன்னணியினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து முடிவு செய்திருக்கிறோம். நீங்கள் மறுக்கவே கூடாது” என்று பிடிவாதமாக நிர்பந்தித்தார்கள். நான் அரை மனதுடன் அதற்கு இசைவு அளித்தேன். உடனே அவர்கள் எழும்பூரில், ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தை பதிவு செய்து, முன்பணமும் செலுத்திவிட்டார்கள். ஆனால் கடந்த சில நாட்களாக என் மனதில் இந்த ஏற்பாடு உறுத்தலாகவே இருந்தது. அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை நமது இயக்கம் தோன்றிய நாள் முதல் மாபெரும் மாநாடுகளாக தொடர்ந்து நடத்தி வருகிறோம். அறிஞர் அண்ணாவின் 100ஆவது பிறந்த நாள் விழாவை செப்டம்பர் 15 இல் தி.மு.க. கொண்டாடவில்லை. மதுரை மாநகரே குலுங்கும் வகையில் நாம் எழுச்சி மாநாடாக நடத்தினோம்.</p><h2>திமுக மாநாடு</h2><p>தி.மு.கழகம், அண்ணா பிறந்த நாளுக்கு அகில இந்திய தலைவர்களையோ, இந்திய தலைமை மந்திரியையோ அழைத்து நடத்தவில்லை. அதற்கு மாறாக அந்த ஆண்டில் அவர்கள் செப்டம்பர் 15க்குப் பதிலாக செப்டம்பர் 21 ஆம் நாளில் காஞ்சிபுரத்தில் நடத்தினார்கள். “தி.மு.க தலைவர் தனது பிறந்தநாளை ஜூன் 3 ஆம் தேதிக்குப் பதிலாக வேறு நாளில் நடத்துவாரா?” என்று மாநாட்டில் கேட்டேன்.</p><h2>அண்ணா பிறந்தநாள் விழா</h2><p>தி.மு.க ஆட்சியில் இருந்த காலத்திலும், இந்தியாவின் தலைமை மந்திரியை அழைத்துக் கொண்டு வந்து அண்ணா பிறந்தநாளை நடத்தும் எண்ணமாவது வந்ததா? இல்லை. ஆனால் நாங்கள் 1998 செப்டம்பர் 15 இல் தலைமை மந்திரி வாஜ்பாய், உள்துறை மந்திரி அத்வானி, காஷ்மீர் முதல்-மந்திரி டாக்டர் பரூக் அப்துல்லா , பஞ்சாப்  முதல்-மந்திரி பர்காஷ்சிங் பாதல், இராணுவ  மந்திரி ஜார்ஜ் பெர்ணான்டஸ், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் ராமதாஸ் ஆகியோரை பங்கேற்கச் செய்து, மெரினா கடற்கரையில் விடியற்காலை இரண்டரை மணி வரை நடத்தினோம். இயக்கத்தில் தோழர்கள் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை நடத்திவிட்டு, எனக்கு தெரியாமல் பொருட் செலவு செய்து, எனது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதை அறிந்து மிகவும் வேதனைப்பட்டேன்.</p><h2>வைகோ 83 இலச்சினை</h2><p>இந்த ஆண்டு ‘<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B">வைகோ</a> 83’ என்று இலச்சினை தயாரித்திருக்கிறார்கள். அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை மிகச் சிறப்பாக ஆண்டுதோறும் நடத்துவது மட்டும்தான் கழகத்தின் கடமை ஆகும். எனக்கு பிறந்தநாள் விழா எடுப்பதை நான் முற்றிலும் விரும்பவில்லை. இந்த ஆண்டு மட்டுமல்ல, நான் வாழும் காலம் வரையிலும் செப்டம்பர் 22 ஆம் நாளை என் பிறந்தநாள் விழாவாக கழகத் தோழர்கள் நடத்தக் கூடாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>அந்த நாளில் யாரும் என்னைச் சந்திக்க முற்பட வேண்டாம். நான் எங்காவது பிறர் அறியாவண்ணம் அமைதியாக கழிக்க நினைக்கிறேன். என் புகைப்படம் போட்ட சுவரொட்டிகளை ஒட்டுவது, பேனர் அடிப்பது போன்ற செயல்களில் கழகத் தோழர்கள் ஈடுபட்டு என் மனதைப் புண்படுத்த வேண்டாம். ‘வைகோ 83’ என்ற தலைப்பில் என் பிறந்தநாள் விழாவைக் கொண்டாட எவரும் முற்பட வேண்டாம் என்பதை மீண்டும் அழுத்தம் திருத்தமாகக் கூறிக் கொள்கிறேன். இந்த ஏற்பாட்டில் ஈடுபட்டவர்கள் மனம் காயப்படுமானால் என் மன அமைதிக்காக, என் எண்ணத்தைச் செயல்படுத்துமாறு உரிமையுடனும், நீங்காத பற்றுடனும் வேண்டிக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் அண்ணாமலை தலைமையில் ’வீ த லீடர்ஸ்’ மாநில மாநாடு

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-the-leaders-state-conference-in-chennai-led-by-annamalai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-the-leaders-state-conference-in-chennai-led-by-annamalai#comments</comments><guid isPermaLink="false">7f05a048-db61-408a-9571-47f7968e3c31</guid><pubDate>Tue, 21 Jul 2026 05:48:32 +0000</pubDate><atom:updated>2026-07-21T05:48:32.972Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Annamalai,அண்ணாமலை,வி தி லீடர்ஸ்,we the leaders</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/5pcn27on/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/5pcn27on/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p> <p>பாஜக முன்னாள் மாநில தலைவராக இருந்தவர் <a href="https://www.dailythanthi.com/">அண்ணாமலை</a>. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அவர், பாஜகவில் இருந்து விலகி ‘வீ த லீடர்ஸ்’ என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளார். அந்த இயக்கத்தில் லட்சக்கணக்கானோர் இணைந்துள்ளனர். இயக்கத்தில் உள்ளவர்களை அரசியல் மயப்படுத்தும் பணிகளை அவர் தொடங்கி உள்ளார்.</p><h2>சென்னையில் மாநாடு</h2><p>தமிழகம் முழுவதும் பல்வேறு முக்கிய விவகாரங்களை சுட்டிக்காட்டி, அது தொடர்பான கருத்துக்களை ‘வீ த லீடர்ஸ்’ இயக்கம் வெளிப்படுத்தி வருகிறது. மேலும், போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் முழக்கத்துடன் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை ‘வீ த லீடர்ஸ்’ இயக்கம் ஒருங்கிணைத்து வருகிறது.</p><p>இதையடுத்து, அண்ணாமலை தலைமையில் வீ த லீடர்ஸ் இயக்கத்தின் முதல் மாநில மாநாடு கடந்த 12ம் தேதி கோவையில் நடைபெற்றது. </p><p>இந்நிலையில், வீ த லீடர்ஸ்  இயக்கத்தின் 2வது மாநில மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. சென்னையில் அடுத்த மாதம் இம்மாநாட்டை நடத்த வீ த லீடர்ஸ் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2வது மாநில மாநாட்டிற்கான இடம், தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>விருதுநகர்: 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/virudhunagar-elderly-man-arrested-for-sexually-harassing-7-year-old-girl</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/virudhunagar-elderly-man-arrested-for-sexually-harassing-7-year-old-girl#comments</comments><guid isPermaLink="false">1d8712f7-9ed5-4837-aaff-7cd91dee339a</guid><pubDate>Tue, 21 Jul 2026 05:43:14 +0000</pubDate><atom:updated>2026-07-21T05:43:14.956Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Virudhunagar,விருதுநகர்,பாலியல் தொல்லை,Elderly man arrested,முதியவர் கைது,sexually abusing</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/6p4e2bdf/small-brother-arrested.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ கைது செய்யப்பட்ட சின்ன அண்ணன்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/6p4e2bdf/small-brother-arrested.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர்,</p><p>விருதுநகர், திருச்சுழி அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>பாலியல் தொல்லை</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விருதுநகர் மாவட்டம் </a>திருச்சுழி பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர், தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சின்ன அண்ணன் (வயது 69) என்ற முதியவர், அந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார்.</p><h2>முதியவர் கைது</h2><p>இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், உடனடியாக திருச்சுழி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். பின்னர் சின்ன அண்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரைக்<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> கைது</a> செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>தென்காசி: வீட்டிற்குள் புகுந்த நாகப் பாம்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tenkasi-cobra-that-entered-house-rescued-forest-department-takes-action</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tenkasi-cobra-that-entered-house-rescued-forest-department-takes-action#comments</comments><guid isPermaLink="false">5b504dc0-93d5-4411-b704-006b63d95183</guid><pubDate>Tue, 21 Jul 2026 05:40:39 +0000</pubDate><atom:updated>2026-07-21T05:40:39.108Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,தென்காசி,Snake,வனத்துறை அதிகாரிகள்,பாம்பு புகுந்தது,Forest Officer</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/vz44wnlz/snake-thenkasi.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ பிடிபட்ட நாகப்பாம்பு]]></media:title><media:description type="html"><![CDATA[ தென்காசியில் வீட்டிற்குள் புகுந்த நாகப்பாம்பு மீட்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/vz44wnlz/snake-thenkasi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><p>தென்காசி அருகே வீட்டிற்குள் புகுந்த 5 அடி நீள நாகப் பாம்பை வனத்துறையினர் லாவகமாகப் பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் பத்திரமாக விடுவித்தனர்.</p><h2>வீட்டிற்குள் புகுந்த பாம்பு</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தென்காசி மாவட்டம்</a> குற்றாலம் அடுத்துள்ள மேலகரம் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது வீட்டின் சமையலறைக்குள் இன்று காலை நச்சுத்தன்மை கொண்ட நாகப்பாம்பு ஒன்று திடீரென புகுந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி, குற்றாலம் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.</p><h2>பாம்பு மீட்பு</h2><p>தகவலறிந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வனத்துறை போலீசார் </a>சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் சமையலறைப் பொருட்களுக்கு இடையே மறைந்திருந்த நாகப் பாம்பை பிரத்யேகக் கருவிகள் மூலம் லாவகமாகப் பிடித்தனர். மீட்கப்பட்ட பாம்பு சுமார் 5 அடி நீளத்தில் இருந்தது.</p><h2>பொதுமக்கள் பாராட்டு</h2><p>பின்னர், பிடிபட்ட <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நாகப் பாம்பு </a>பாதுகாப்பான பெட்டியில் அடைக்கப்பட்டு, செங்கோட்டை அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு பத்திரமாக விடுவிக்கப்பட்டது. வனத்துறையினரின் இந்த விரைவான மற்றும் துரிதமான நடவடிக்கையை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.</p>]]></content:encoded></item><item><title>பழனி விவகாரத்தில் அதிகாரிகள் மட்டத்தில் ஒரு கூட்டு மோசடி: பெ.சண்முகம் குற்றச்சாட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/p-shanmugam-alleges-collusion-at-official-level-in-palani-issue</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/p-shanmugam-alleges-collusion-at-official-level-in-palani-issue#comments</comments><guid isPermaLink="false">a92c062b-3180-4155-bb22-70f1f87be12c</guid><pubDate>Tue, 21 Jul 2026 05:37:18 +0000</pubDate><atom:updated>2026-07-21T05:37:18.583Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பழனி,பெ.சண்முகம்,land issue,Palani,பழனி கோவில,Palani temple,நில மோசடி,P.Shanmugam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/n9gnvksl/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/n9gnvksl/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பழனி கோவில் நில மோசடி குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறியதாவது:-</p><p>பழனி கோவில் நில மோசடி என்பதில் மேலிருந்து கீழ் வரை பல அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். மோசடியில் ஈடுபட்டவர்கள் எவ்வளவு பெரிய முக்கிய பிரமுகராக இருந்தாலும் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.</p><p>பழைய வழக்குகளை நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லாமல் மறைத்து, நீதிமன்றத்தையே ஏமாற்றி இந்த மிகப்பெரிய மோசடியைச் செய்துள்ளனர். தமிழ்நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய மோசடி என்றே பழனி விவகாரத்தை சொல்லலாம். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அந்த விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும்.</p><p>இந்த நில மோசடி விவகாரத்தில் அரசுக்கோ அல்லது அமைச்சர்களுக்கோ நேரடியாகத் தொடர்பு இருக்கிறது என்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை; அதுபோன்ற எந்த விவரங்களும் வரவில்லை. மாறாக, பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளைக் கொண்டு வந்து வைத்துப் பத்திரப்பதிவு செய்துள்ளனர்.</p><p>அதிகாரிகள் மட்டத்தில் ஒரு கூட்டு மோசடி நடைபெற்றிருக்கிறது என்பதுதான் இப்போது வரை வந்துள்ள விவரம். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரே நேரடியாகத் தலையிட்டு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். எனவே, உயர்மட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இந்த மோசடியில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>உழவர்களிடம் தொடரும் கையூட்டு வசூல்... உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/continued-collection-of-bribes-from-farmers-immediate-action-must-be-taken-anbumani-urges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/continued-collection-of-bribes-from-farmers-immediate-action-must-be-taken-anbumani-urges#comments</comments><guid isPermaLink="false">f97dd46e-31fd-492d-9623-1718cdd5055f</guid><pubDate>Tue, 21 Jul 2026 05:21:15 +0000</pubDate><atom:updated>2026-07-21T05:21:15.382Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி,நெல் கொள்முதல்,உழவர்கள்,Dr Anbumani Ramadoss,Delta farmers</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/au5itf20/anbumani.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/au5itf20/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக காவிரி பாசன மாவட்டங்களில் கோடை பருவ அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உழவர்களிடமிருந்து குவிண்டாலுக்கு ரூ.325 வரை கட்டாயமாகக் கையூட்டு பறிக்கப்படும் கொடுமை இன்னும் தொடர்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உணவு அமைச்சர் மேற்கொண்ட கள ஆய்விலேயே கையூட்டு வசூலிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதைத் தடுக்க அரசுத் தரப்பில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாதது கவலையளிக்கிறது.</p><h2>நெல் மூட்டைகள் தேக்கம்</h2><p>காவிரி பாசன மாவட்டங்களில் 1.60 லட்சம் ஏக்கரில் கோடை பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. விளைந்த நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணி தீவிரமடைந்திருக்கும் நிலையில், அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்வது தான் உழவர்களுக்கு பெரும் துயரமாக மாறியிருக்கிறது. ஒருபுறம் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதால், உழவர்கள்&nbsp;தங்களின் நெல்லை விற்பனை செய்வதற்கு  ஒரு வாரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இன்னொருபுறம் கொள்முதல் நிலையங்களில் ஊழல் தொடர்கிறது.</p><h2>கையூட்டு</h2><p>40 கிலோ எடை கொண்ட நெல் மூட்டையை எடை வைத்து கொள்முதல் செய்வதற்கு கையூட்டாக ரூ.40 முதல் ரூ.60 வரை உழவர்கள் தர வேண்டியுள்ளது. இது தவிர ஒவ்வொரு மூட்டைக்கும் நிர்ணயிக்கப்பட்ட எடையான 40 கிலோவுக்கு பதிலாக கூடுதலாக எடை வைத்து கொள்முதல் செய்வதன் வாயிலாகவும், பதர்களைத் தூற்றுவதாகக் கூறி ஒன்றரை கிலோ வரையிலான நெல்லை ஒதுக்குவதன் வாயிலாகவும் 3 கிலோ நெல் கூடுதலாக வாங்கப்படுவதாக உழவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த வகையில் மட்டும் ஒரு குவிண்டாலுக்கு ரொக்கமாக ரூ.150, நெல்லாக ரூ.175 என மொத்தம்  ரூ.325 கையூட்டாக பறிக்கப்படுகிறது. தனியார் வணிகர்களை விட அரசு  கொள்முதல் நிலையங்களில் குவிண்டாலுக்கு அதிகபட்சமாக ரூ.500 முதல் ரூ.600 வரை கூடுதல் விலை கிடைக்கிறது என்பதால் தான் அரசு கொள்முதல் நிலையங்களைத் தேடி உழவர்கள் வருகிறார்கள். அதற்காக அவர்களை வாரக் கணக்கில் காத்திருக்க வைப்பதும், குவிண்டாலுக்கு ரூ.325 வரை கையூட்டாக பறித்துக் கொள்வதும் பெரும் அநீதி. இதே நிலை தொடர்ந்தால் உழவர்கள் தனியார் வணிகர்களிடம் நெல்லை விற்கத் தயாராகி விடுவார்கள்.அப்படி  ஒரு நிலை ஏற்பட்டால் நியாயவிலைக் கடைகளில் வழங்குவதற்கு அரிசியே கிடைக்காத நிலை உருவாகி விடும்.</p><h2>நெல் கொள்முதலில் முறைகேடுகள்</h2><p>காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதலில் முறைகேடுகள் நடப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை  தமிழக அரசு மறுக்க முடியாது. சில நாள்களுக்கு முன் கடலூர் மாவட்டத்தில் இது குறித்து ஆய்வு செய்த உணவுத் துறை அமைச்சர், நெல் விற்பனை செய்த உழவர் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகிறார். கொள்முதலுக்காக கையூட்டு ஏதேனும் கொடுத்தீர்களா? என்று அமைச்சர் கேட்டபோது, எதிர்முனையில் இருந்த உழவர் மூட்டைக்கு ரூ.50 கையூட்டு கொடுத்ததாக தெரிவிக்கிறார். இதைத் தொடர்ந்து உழவரிடம் கையூட்டு வாங்கிய கொள்முதல் நிலைய எழுத்தரை பணியிடை நீக்கம் செய்ய அமைச்சர் ஆணை பிறப்பிக்கிறார். இவற்றைப் பார்க்கும் போது நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழல் நடப்பதைத் தடுக்க வேண்டும் என ஆட்சியாளர்கள் விரும்புவதை புரிந்து கொள்ள முடிகிறது. அது வரவேற்கத்தக்கது. ஆனால், கொள்முதல் நிலைய  ஊழலுக்கான காரணங்களை கண்டுபிடித்து சரி செய்யாமல் அங்கொன்றும், இங்கொன்றுமாக கடைநிலை ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்வதால் ஊழல் ஒழியப்போவதில்லை; உழவர்களும் பயனடையப் போவதில்லை.</p><h2>நிரந்தர முன்வைப்புத் தொகை</h2><p>நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உழவர்களிடமிருந்து கையூட்டு வாங்கப்படுவதற்கு கொள்முதல் நிலையப் பணியாளர்கள் தரப்பில் சில நியாயங்கள் கூறப்படுகின்றன.  நெல் கொள்முதல் நிலையங்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்படவில்லை; பணியாளர்களுக்கு போதிய ஊதியமும் வழங்கப்படுவதில்லை. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின்  தவிர்க்க முடியாத செலவுகளுக்காக நிரந்தர முன்வைப்புத் தொகையாக ஒவ்வொரு நிலையத்திற்கும் ரூ.20 ஆயிரம் வழங்கப்பட வேண்டும். ஆனால், அந்தத் தொகை முறையாக வழங்கப்படவில்லை. அதே போல், நெல் எடை போடும் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ரூ.10 மட்டுமே கூலியாக வழங்கப்படுவது போதுமானது அல்ல என்றெல்லாம் கொள்முதல் நிலையப் பணியாளர்கள் கூறுவதை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. இதை சரி செய்தால் மட்டும் தான் கொள்முதல் நிலைய ஊழலை ஒழிக்க முடியும்.</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">நெல் கொள்முதல்</a> நிலைய கையூட்டு கலாசாரம் புதிதாக தோன்றியதில்லை. பல ஆண்டுகளாகவே இந்த சுரண்டல்  தொடர்கிறது. இதை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே கடந்த தேர்தலில் உழவர்கள் வாக்களித்தனர். அவர்களின் விருப்பத்தை அரசு நிறைவேற்ற வேண்டும். இனியும் தாமதிக்காமல் கொள்முதல் நிலைய சுரண்டல்களை தடுத்து, உழவர்களிடமிருந்து கையூட்டு இல்லாமல் உடனுக்குடன் நெல் வாங்கப்படுவதை அரசு உறுதி செய்யவேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய் அறை இடம் மாறுகிறதா?: பரபரப்பு தகவல்கள் 

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-chief-minister-vijays-secretariat-office-moving</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-chief-minister-vijays-secretariat-office-moving#comments</comments><guid isPermaLink="false">17064aa8-2f19-475a-a378-0c5132761756</guid><pubDate>Tue, 21 Jul 2026 05:16:31 +0000</pubDate><atom:updated>2026-07-21T05:16:31.801Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,முதல்-அமைச்சர்,தலைமை செயலகம்,Secretariat,Chief Secretariat,Cheif Minister</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/qs3lx89k/1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/qs3lx89k/1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/">சென்னை </a>தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய்யின் அறை இடம் மாறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><h2>முதல்-அமைச்சர் அறை </h2><p>சென்னை காமராஜர் சாலையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழக அரசின் தலைமைச்செயலகம் இயங்கிவருகிறது. </p><p>கோட்டை கட்டிடத்தின் முதல் தளத்தில், முதல்-அமைச்சர் அறை மற்றும் அலுவலகம் உள்ளது. இதேபோல், அமைச்சர்கள் அலுவலகம், சட்டசபை கூட்ட அரங்கம், தலைமைச் செயலாளர் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த செயலாளர்களின் அலுவலகங்கள், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அறை, நூலகம் உள்ளிட்டவை அந்தக் கட்டிடத்தில்தான் இயங்கி வருகின்றன. </p><h2></h2><h2>10-வது மாடிக்கு மாற்ற திட்டம்</h2> <p>இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜயை சந்திக்க நாள்தோறும் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள் என பலரும் வந்து செல்கின்றனர்.</p><p>இதனால், தற்போதுள்ள முதல்-அமைச்சர் அலுவலகத்தில் இடநெருக்கடி ஏற்படுவதால், அவரை சந்திக்க வருபவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக கூறப்படுகிறது. இதனால், முதல்-அமைச்சர் அறை மற்றும் அலுவலகத்தை, கோட்டை கட்டிடத்திற்கு அருகே உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><h2></h2><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/r8z0u45z/0.jpg" /></figure><h2>மாற்றத்துக்கான காரணம் என்ன?</h2><p>தற்போது, அங்கு கருத்தரங்க கூடமும், ஆய்வு கூட்டங்களில் பங்கேற்பவர்களுக்கான உணவருந்தும் கூடமும் உள்ளது. அவற்றை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு, 10-வது மாடி முழுவதுமே முதல்-அமைச்சர் அறை மற்றும் அலுவலக பயன்பாட்டிற்காக எடுத்துக்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.</p><p>இடநெருக்கடியால், முதல்-அமைச்சர் அறை மாற்றப்பட இருப்பதாக கூறப்பட்டாலும், வாஸ்துப்படி தற்போதைய அறை சரியில்லை என்று, அவருடைய ஆஸ்தான ஜோதிடர் கூறியதாகவும், தொடர்ந்து உச்சத்தில் இருக்க உயரமான கட்டிடத்தில் முதல்-அமைச்சர் அலுவலகம் செயல்பட வேண்டும் என்று கூறியதாகவும், அதுவும் கடலை பார்த்தபடி முதல்-அமைச்சர் அறை இருக்க வேண்டும் என்று கூறியதாகவும் தெரிகிறது. அதன்படியே, முதல்-அமைச்சர் அறை மற்றும் அலுவலகம் மாற்றப்பட இருப்பதாக சொல்லப்பட்டாலும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.</p> ]]></content:encoded></item><item><title>கட்டுமான அனுமதிக்கான கட்சி நிதி வசூல் நிறுத்தம்: வீடுகள் விலை குறைய வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/party-funding-for-construction-permits-suspended-housing-prices-likely-to-fall</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/party-funding-for-construction-permits-suspended-housing-prices-likely-to-fall#comments</comments><guid isPermaLink="false">02eb1c4f-7ec6-46ef-9ab6-d15ee91b01ad</guid><pubDate>Tue, 21 Jul 2026 05:07:01 +0000</pubDate><atom:updated>2026-07-21T05:07:01.236Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TN govt,House,வீடுகள்,construction companies,கட்டுமான திட்டம்,கட்சி நிதி,Party fund</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/nr9d7h4a/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/nr9d7h4a/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>கட்சி நிதி</h2><p>சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., சார்பிலும், நகர் ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி. சார்பிலும், கட்டுமான திட்ட அனுமதிகள் வழங்கப்படுகின்றன. இதில், அடுக்குமாடி திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கும்போது சதுர அடிக்கு ரூ.27 முதல் ரூ.35 வரை கட்சி நிதி என்ற பெயரில், கடந்த காலங்களில் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.</p><p>கட்டிட அனுமதிக்கான கோப்புகள் அதிகாரிகள் வசம் இருந்தாலும், அதில் உள்ள விபரங்களை பெறும் அரசியல் புள்ளிகள் கட்டுமான நிறுவனங்களை அணுகி கட்சி நிதி கேட்பது உண்டு. இதற்கு உடன்படாத நிறுவனங்களுக்கு, கட்டிட அனுமதி நிறுத்தி வைக்கப்படும். இதில் கட்சிநிதி கொடுப்பதற்கான செலவையும் கட்டுமான நிறுவனங்கள், வீட்டின் விலையில் சேர்த்து, மக்களிடம் வசூலித்து வந்தன. இதனால், வீடுகளின் விலைகள் வெகுவாக உயர்ந்தன.</p><h2>வீடுகள் விலை</h2><p>இந்த நிலையில், கட்டிட அனுமதி வழங்க கட்சி நிதி வசூலிக்க கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அரசின் முடிவை, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய், இந்திய கட்டுமான வல்லுனர் சங்கத்தின் தென்னக மையம் ஆகியவை வரவேற்றுள்ளன.</p><p>இதுகுறித்து கட்டுமான துறையினர் கூறியதாவது:</p><p>கட்சி நிதி வசூலிப்பது நிறுத்தப்பட்டதால், கட்டுமான நிறுவனங்களுக்கு செலவு மிச்சமாகி. உள்ளது. இதன் பயனை மக்களுக்கு அளிக்க வேண்டும் என்பதில், மாற்று கருத்து இல்லை. புதிதாக அறிவிக்கப்படும் குடியிருப்பு திட்டங்களில், வீடுகள் விலையை சதுரடிக்கு 100 ரூபாய் வரை குறைப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>மீனாட்சி அம்மன் கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: ஐகோர்ட்டில் அரசு தரப்பில் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/removal-of-encroachments-on-meenakshi-amman-temple-lands-government-informs-high-court</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/removal-of-encroachments-on-meenakshi-amman-temple-lands-government-informs-high-court#comments</comments><guid isPermaLink="false">247992d0-33a1-4b22-aac9-983b7d24cd66</guid><pubDate>Tue, 21 Jul 2026 05:06:41 +0000</pubDate><atom:updated>2026-07-21T05:06:41.657Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Meenakshi Amman Temple,மீனாட்சி அம்மன் கோவில்,encroachments</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/m0bqbixc/9.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/m0bqbixc/9.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,  </p><p>திருத்தொண்டர் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-</p><p>2021-ம் ஆண்டில் தமிழகம் முழுவதும் உள்ள கோவில் சொத்துகளை முறையாக பராமரிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்த ரவிட்டது. அதன்படி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களுக்கு சொந்தமாக மதுரை, திண்டுக்கல், திருச்சி, புதுக் கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள சொத்துகளை முறையாக பராமரித்து பாதுகாக்கவும், மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை விரைவாக நடத்தவும் உத்தரவிட வேண்டும்.</p><p>இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.</p><p>இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, மீனாட்சி அம்மன் கோவில் வீரவசந்தராயர் மண்டப சீரமைப்பு பணிகளின் நிலை என்ன, பிரசாத சமையல் அறை எவ்வாறு செயல்படுகிறது உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்டு இருந்தது.</p><p>இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது அரசு வக்கீல் ஆஜராகி, வீரவசந்தராயர் மண்டப பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. புதிய நவீன சமையலறை அமைப்பதற்கான பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் 10-ந்தேதிக்குள் பணிகள் நிறைவடைந்துவிடும். இந்த கோவிலின் கும்பாபிஷேகம் செப்டம்பர் மாதம் 17-ந்தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.</p><p>பின்னர் மனுதாரர் ஆஜராகி, மீனாட்சி அம்மன் கோவிலின் ஆக்கிரமிப்புகள் முறையாக அகற்றப்படவில்லை. தணிக்கை அறிக்கையின் அடிப்படையில் வசூலிக்கப்பட வேண்டிய தொகை வசூலிக்கப்படாமல் உள்ளது என்றார்.</p><p>இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த விசாரணையை வருகிற 29-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.</p> ]]></content:encoded></item><item><title>அவதூறு வழக்குகளில் சட்டமன்ற உறுப்பினர்களை அவசரமாக கைது செய்வது தவிர்க்கப்பட வேண்டும் - ஈ.ஆர். ஈஸ்வரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/hasty-arrest-of-mlas-in-defamation-cases-should-be-avoided-er-easwaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/hasty-arrest-of-mlas-in-defamation-cases-should-be-avoided-er-easwaran#comments</comments><guid isPermaLink="false">cd94a6f4-f853-4a1f-af09-7a34040d2e15</guid><pubDate>Tue, 21 Jul 2026 04:59:24 +0000</pubDate><atom:updated>2026-07-21T04:59:24.251Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,சட்டமன்ற உறுப்பினர்,ஈ.ஆர்.ஈஸ்வரன்,E.R. Easwaran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/f0y5eelv/eswaran.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/f0y5eelv/eswaran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><p>கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p> தவெக அரசாங்கம் தொடர்ந்து அரசுக்கு எதிரான விமர்சனங்களை வைத்து ஆலோசனை சொல்பவர்களை அதிரடியாக கைது செய்வது ஜனநாயகத்தில் ஏற்புடையதல்ல. சமூக வலைதளங்களில் எதிர் கருத்து பதிவிடுபவர்களையும், அரசியல் மேடைகளில் அரசுக்கு எதிரான கருத்துக்களை பேசுபவர்களையும் அதிரடியாக கைது செய்வது என்பது ஆட்சியாளர்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை என்பதை காட்டுகிறது. எதிர்க்கட்சித் தலைவர்களை மட்டுமல்ல சட்டமன்ற உறுப்பினர்களையும் கைது செய்வது தொடர் கதையாக இருக்கிறது. அரசியல்வாதிகளை மட்டுமில்லாமல் பத்திரிகையாளர்களையும் கைது செய்வதும், அலைக்கழிக்கப்படுவதையும் சர்வாதிகாரப் போக்காக பார்க்கப்படுகிறது. ஆனால் அதே சமயத்தில் குற்றம் செய்திருக்கின்ற ஆளுங்கட்சிக்காரர்கள் மீது வழக்கு போடாமல் இருப்பதையும், கைது செய்யாமல் இருப்பதையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.</p><h2>நீதிமன்றம் முடிவு செய்யட்டும்</h2><p>புதிதாக அமைந்திருக்கின்ற தமிழக அரசு ஆக்கப்பூர்வமான மக்கள் நலத்திட்டங்களை தீட்டுவதிலும், நடைமுறைப்படுத்துவதிலும் சுணக்கம் காட்டுவதை திசை திருப்புவதற்காக இதைப் போன்ற செயல்பாடுகள் செய்யப்படுகிறதா? சட்டமன்ற உறுப்பினர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்கண்டேயன், பழனி மோசடி பத்திரப்பதிவை விமர்சித்தவர்களையும், தொழில்துறை அமைச்சர் மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டியவர்களையும் கைது செய்வதன் மூலமாக எதிர்க்கட்சியில் இருக்கிற தலைவர்களுக்கு இந்த அரசை பற்றி எதுவும் பேசக்கூடாது என்று எச்சரிக்கை விடப்படுகிறதா? தனி மனிதர்களைப் பற்றி பேசினால் வழக்கு போடுங்கள் நீதிமன்றம் முடிவு செய்யட்டும். காவல்துறை அதிரடியாக சட்டமன்ற உறுப்பினர்களையும், பத்திரிகையாளர்களையும்<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81"> கைது</a> செய்வது எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்குவதாக அமையும். முன்னாள் முதல்-அமைச்சரை  பற்றி தனிப்பட்ட முறையில் எவ்வளவோ எதிர் கருத்துக்களை கடந்த காலங்களில் பேசியிருக்கிறார்கள் என்பதையும் அரசு நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் அமலாக்கத்துறை சோதனை

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ed-raid-at-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ed-raid-at-chennai#comments</comments><guid isPermaLink="false">59a846f7-17d3-4673-9375-064b6c1df8af</guid><pubDate>Tue, 21 Jul 2026 04:55:37 +0000</pubDate><atom:updated>2026-07-21T04:55:37.474Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Enforcement Directorate,Chennai,அமலாக்கத்துறை,சென்னை,ED Raid,அமலாக்கத்துறை சோதனை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/ndo69eqd/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/ndo69eqd/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>சென்னையில் 2 இடங்களில் இன்று அதிகாலை முதல் <a href="https://www.dailythanthi.com/">அமலாக்கத்துறை </a>அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.</p><h2>சட்டவிரோத பண பரிவர்த்தனை</h2><p>அதன்படி, சென்னை  தேனாம்பேட்டையில் உள்ள ஓய்வுபெற்ற ஆர்டிஓ அதிகாரி (போக்குவரத்து அலுவலக அதிகாரி) வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். </p><p>அதேபோல், திருவொற்றியூரில் உள்ள தொழிலதிபர் முருகேசன் என்பவரின் வீட்டிலும் அதிகாலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  மத்திய பாதுகாப்புப்படை வீர‌ர்கள் உதவியுடன் சோதனை நடைபெற்று வருகிறது. சட்டவிரோத பண பரிவர்த்தனை உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>கோவில் திருவிழா பேனரில் அம்மன் வேடத்தில் திரிஷா: 2 பேர் மீது வழக்குப்பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/trisha-dressed-as-amman-in-temple-festival-banner-case-registered-against-2-people</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/trisha-dressed-as-amman-in-temple-festival-banner-case-registered-against-2-people#comments</comments><guid isPermaLink="false">8909395f-2fe3-40ed-adb6-37cdda4e8433</guid><pubDate>Tue, 21 Jul 2026 04:27:40 +0000</pubDate><atom:updated>2026-07-21T04:27:40.071Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Trisha,நடிகை திரிஷா,Salem,சேலம்,Temple festival,கோவில் திருவிழா,திரிஷா,Actress Trisha,Trisha Krishnan,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/yar1ebwb/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/yar1ebwb/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><h2>அம்மன் வேடத்தில் திரிஷா</h2><p>சேலம் மாவட்டம், ஆத்துார் பெரிய மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு ஆத்துார் பயணியர் மாளிகை பகுதியில் பேனர்கள் வைக்கப்பட்டன. அதில் ஒரு பேனரில் தமிழகம் முதல்-அமைச்சர் விஜய்யின் மிகப்பெரிய படமும், அதற்கு பின்னால், ராவணன் தலை இருப்பது போன்றும். அதற்கு கீழே நடிகை திரிஷா அம்மன் வேடத்தில் இருப்பது போன்ற படம் அச்சிடப்பட்டிருந்தது.</p><p>இந்த பேனரின் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. கோவில் திருவிழாவில் நடிகையின் போட்டோவை அம்மன் வேடத்தில் வைத்து பேனர் அடிக்க வேண்டிய அவசியம் என்ன? கடவுள் திருவிழாவிற்கு சினிமா பிரபலங்களுக்கும் சம்பந்தமே இல்லாத விஷயத்தை ஏன் இப்படி செய்கிறார்கள்? என்று விவாதத்திற்குள்ளானது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/di9zv13p/CHENNAI-09.jpg" /></figure><h2>2 பேர் மீது வழக்குப்பதிவு</h2><p>மேலும் பேனர்கள் வைப்பது தொடர்பாக நீதிமன்றங்களும் அரசும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தும் பேனர்கள் எப்படி வைக்கப்படுகின்றன? கோவில் திருவிழா என்ற பெயரில் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் அச்சிடிட்டு வைக்கலாமா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து இரவோடு இரவாக பேனரில் இருந்து நடிகை திரிஷா புகைப்படம் மாற்றப்பட்டது. திரிஷா படம் இருந்த இடத்தில் வேறு ஒரு பெண் அம்மன் வேடத்தில் இருப்பது போன்ற படத்தை ஒட்டி வைத்தனர்.</p><p>இந்த நிலையில், ஆத்தூர் பயணியர் மாளிகை முன்பு அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வைக்கப்பட்ட பேனர்களை போலீசார் அகற்றினர். இதுகுறித்த புகாரின்பேரில் ஆத்தூர் டவுன் போலீசார் கடைவீதியை சேர்ந்த சந்துரு, தலைவாசல் பகுதியை சேர்ந்த கோகுல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு என்றும் தமிழர் நெஞ்சங்களில் நிலைத்திருக்கும் - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-memory-of-actor-thilakam-sivaji-ganesan-will-always-remain-in-the-hearts-of-tamils-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-memory-of-actor-thilakam-sivaji-ganesan-will-always-remain-in-the-hearts-of-tamils-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">7f78068e-3522-47af-a4a2-24d107d95505</guid><pubDate>Tue, 21 Jul 2026 04:09:20 +0000</pubDate><atom:updated>2026-07-21T04:09:20.274Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Memorial Day,Actor Sivaji Ganesan,நினைவு தினம்,நடிகர் திலகம் சிவாஜி கணேசன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/ib9uvs50/63.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/ib9uvs50/63.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>தமிழ் திரையுலகின் ஒப்பற்ற கலை மேதை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு நாள் இன்று, தனது அபாரமான நடிப்பாலும், உணர்வுகளை உயிர்ப்பிக்கும் வசன உச்சரிப்பாலும், தலைமுறைகள் கடந்தும் ரசிகர்களின் இதயங்களில் அழியாத முத்திரையைப் பதித்தவர்.</p><h2>பெரும் ஆளுமை</h2><p>ஒரு நடிகராக மட்டுமல்லாமல், தமிழ் மொழியின் பெருமையையும் கலை உலகின் உயர்வையும் உலக அரங்கில் எடுத்துச் சென்ற பெரும் ஆளுமை அவர். அவர் ஏற்ற ஒவ்வொரு கதாபாத்திரமும், வெளிப்படுத்திய ஒவ்வொரு உணர்வும், இன்றளவும் போற்றப்படுகிறது.</p><p>காலம் கடந்தாலும் அவரது புகழும், கலைப் பாரம்பரியமும் என்றும் நிலைத்திருக்கும். நடிகர் திலகம்<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D"> சிவாஜி கணேசன் </a>அவர்களின் நினைவு என்றும் தமிழர் நெஞ்சங்களில் நிலைத்திருக்கும்.</p><p>இவ்வறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>