<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 10 Aug 2026 03:53:37 +0000</lastBuildDate><item><title>ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-water-inflow-in-the-cauvery-river-at-hogenakkal</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-water-inflow-in-the-cauvery-river-at-hogenakkal#comments</comments><guid isPermaLink="false">359ff1bd-9148-4036-b71f-b4f05195b26b</guid><pubDate>Mon, 10 Aug 2026 03:53:14 +0000</pubDate><atom:updated>2026-08-10T03:53:14.035Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Hogenakkal,ஒகேனக்கல்,காவிரி ஆறு,Hogenakkal Cauvery river,ஒகேனக்கல் காவிரி ஆறு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/jp234z9r/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/jp234z9r/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>ஒகேனக்கல்</h2><p>கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக கபினி அணையில் இருந்து கடந்த 1-ந் தேதி முதல் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. குறிப்பாக மழையின் தீவிரத்தை பொறுத்து அந்த மாநில அரசு தண்ணீரை அதிகரித்தும், குறைத்தும் திறந்து விட்டு வருகிறது.</p><p>இதன்காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 11 மணி நிலவரப்படி வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. தண்ணீர் வரத்து குறைந்த நிலையில், விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் பரிசல் சவாரி செய்தும், அருவியில் குளித்தும் மகிழ்ந்தனர்.</p><h2>நீர்வரத்து அதிகரிப்பு</h2><p>இந்த நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு 5,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 8,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தால் ஒகேனக்கல்லில் பரிசல் சவாரி தடை செய்ய வாய்ப்பு உள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>விஜய்யின் அரசியல் கேரளத்தில் எடுபடாது -எஸ்.டி.பி.ஐ. தேசிய தலைவர் எம்.கே.பைஜி பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vijays-politics-will-not-gain-traction-in-kerala</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vijays-politics-will-not-gain-traction-in-kerala#comments</comments><guid isPermaLink="false">cbeeaa9c-ea95-4add-a9f0-be8060e31a12</guid><pubDate>Mon, 10 Aug 2026 03:37:54 +0000</pubDate><atom:updated>2026-08-10T03:37:54.726Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,கேரளம்,keralam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/04dmoolr/Vijay.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/04dmoolr/Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மதுரை மண்டலம் சார்பாக தலைவர்கள் சங்கமம் நிகழ்ச்சி, உத்தங்குடி பகுதியில் நடந்தது. மண்டல செயலாளர் முஜிபூர் ரகு மான் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.பைஜி கலந்து கொண்டு பேசினார். தேசிய பொதுச்செய லாளர் மஜித் பைஜி, மாநில தலைவர் நெல்லை முபாரக், தேசிய பொரு ளாளர் அப்துல்சத்தார் ஆகியோர் பேசினர். தொடர்ந்து, எம்.கே. பைஜி நிரு பர்களிடம் கூறுகையில், பா.ஜனதா கட்சி மக்களின் முன்பாக மிகப்பெரிய தோல்வி கண்ட அரசாக தற்போது இருக்கிறது. நீட் வினாத்தாள் கசிவு உள்பட அனைத்து துறைகளிலும் தோல்வியை கண்டுள்ளது. இந்து சமுதாய மக்களே பா.ஜனதாவால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதான் உண்மையாக இருக்கிறது.</p> <h2>பிரித்து பார்க்க தெரிந்தவர்கள்</h2><p>டெல்லியில் இளைஞர்கள் போராட்டத்தால் தர்மேந்திர பிரதான் பதவி விலகியது இந்த ஆட்சியின் முதல் விக்கெட். 2029-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதாவின் அனைத்து விக்கெட்டும் விழும். முதல்-அமைச்சர் விஜய்யின் திரைப்படத்தை கேரளாவில் அனைவரும் ரசித்து பார்ப்பார்கள். ஆனால், அவரது அரசியல் அங்கு எடுபடாது. கேரள மக்கள் சினிமாவையும், அரசியலையும் பிரித்து பார்க்க தெரிந்தவர்கள்” என்றார். </p> <p>கூட்டத்தில், காவிரி நீர் உரிமை மற்றும் விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும், தென் மாநிலங்களில் உரிமைகளை பறிக்கும் தொகுதி மறுவரையறை மசோதாவை அனைத்து கட்சிகளும் முறியடிக்க வேண்டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சிறுபான்மையினருக்கான தனி பட்ஜெட்டை தமிழக அரசு வெளியிட வேண்டும் உள்பட 7 தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன</p>]]></content:encoded></item><item><title>கோதையாற்றில் முதலை நடமாட்டம்: வனத்துறையினர் கண்காணிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/supplementary-counseling-for-engineering-courses-applications-open-from-the-17th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/supplementary-counseling-for-engineering-courses-applications-open-from-the-17th#comments</comments><guid isPermaLink="false">b9ca55cf-b6b9-4507-bd9e-acb09aacd7f5</guid><pubDate>Mon, 10 Aug 2026 03:29:50 +0000</pubDate><atom:updated>2026-08-10T03:29:50.093Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Crocodile,முதலை,கோதையாறு,Kothaiyar River</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/6rpmah43/6.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/6rpmah43/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>குமரி,</p><h2>ஆற்றில் முதலை நடமாட்டம்</h2><p>கோதையாற்றில் கடையாலுமூடு, களியல் பகுதிகளில் கடந்த 6 மாதங்களாக முதலை நடமாட்டம் இருந்து வருகிறது. இதனை பலர் செல்போன் களில் படம்பிடித்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர். மேலும், முதலையை பிடித்து அகற்றிட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அதனை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டனர். அதன் ஒருபகுதியாக ஆற்றில் முதலை காணப்பட்ட உறைகிணற்றின் அருகில் மிதவை கூண்டு வைத்தனர். ஆனாலும் முதலை அதில் சிக்கவில்லை. அந்த முதலையானது சில நாட்கள் தென்படுவதும், பின்னர் மாயமாவதுமாக இருந்து வருகிறது.</p><h2>வல்லுனர் குழு வருகை</h2><p>ஒவ்வொரு முறையும் வெவ்வேறு இடங்களில் தென்படுகிறது. மேலும், ஆற்றுப்பகுதியில் பல கி.மீ தூரம் மிக நீண்ட பகுதியாகவும், கரையோரங்களில் செடிகள் மற்றும் புதர்கள் மண்டிக்கிடப்பதால் அந்த வழியாக வனத்துறையினர் நடந்து சென்று முதலையை கண்காணிப்பது எளிதான செயலாக இல்லை.</p><p>இந்தநிலையில் முதலை குறித்த அச்சம் மக்கள் மத்தியில் இருந்து வருவதால், அதனை பிடித்து அகற்ற வேண்டியது கட்டாயமாகியுள்ளது. இதனால் வனத்துறை மற்றும் முதலை ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய வல்லுனர் குழு களத்தில் இறங்கியுள்ளது. இந்த குழு கடந்த 2 நாட்களுக்கு மேலாக ஆற்றுப்பகுதியில் படகிலும், நடந்து சென்றும் முதலையின் நடமாட்டத்தை கண்காணித்து அதனை தேடி வருகின்றனர். அதன்படி நேற்றும் இந்த குழுவினர் ஆற்றில் படகில் சென்றவாறு முதலையை தேடினர்.</p><h2>ஆற்றில் குளிக்க...</h2><p>இந்தநிலையில் முதலையை பிடிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து களியல் வனச்சரக அலுவலர் யோகஸ்வரன் கூறுகையில், முதலையை பிடித்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் வனத்துறை தீவிரமாக உள்ளது. தற்போது ஆற்றுப்பகுதி முழுவதும் கண்காணிப்பு மற்றும் தேடுதல் பணியை தீவிரப்படுத்தி வருகிறோம். மழை காரணமாக தற்போது ஆற்றில் தண்ணீர் அதிகமாக பாய்கிறது. வனத்துறையினர் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்.</p><p>குறிப்பாக ஆற்றின் கரையோரம் உள்ள படித்துறைகளில் மக்கள் குளிப்பதையும், தூண்டில் போட்டு மீன்பிடிப்பதையும் தவிர்த்தால் முதலையின் நடமாட்டத்தை உடனுக்குடன் கண்காணித்து அதனை பிடிக்க முடியும். என்றார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை காசிமேட்டில் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fishermens-strike-in-chennais-kasimedu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fishermens-strike-in-chennais-kasimedu#comments</comments><guid isPermaLink="false">48cb9d15-05ce-4226-8c6a-bbcdde0640e4</guid><pubDate>Mon, 10 Aug 2026 03:27:00 +0000</pubDate><atom:updated>2026-08-10T03:27:00.529Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,காசிமேடு,Kasimedu,Kasimedu Fish Market,Fishermen protest,மீனவர்கள் போராட்டம்,காசிமேடு மீனவர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/3q2591d8/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/3q2591d8/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த விசைபடகு உரிமையாளர்கள் கணேசன் மற்றும் கர்ணன் என்பவருக்கு சொந்தமான 2 விசைபடகுகளில், மீன்பிடி தடை காலம் நிறைவு பெற்ற கடந்த 15-ம் தேதி 19 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். காசிமேட்டில் இருந்து மீன் பிடிக்க சென்ற இவர்களை, ஆந்திர கடல்சார் (மரைன்) போலீசார் சிறைபிடித்துள்ளனர். மேலும் அவர்கள் சென்ற இரண்டு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.</p><p>பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்டுத் தரக்கோரி மீனவர்கள் காசிமேட்டிலும், சென்னை மீன்வளத்துறை அலுவலகத்திலும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், ஆந்திர அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள விசைப்படகுகளை மீட்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>இந்த நிலையில், ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் மீட்கக் கோரி சென்னை காசிமேட்டில் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுதால் ரூ.10 கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஓசூரில் பரபரப்பு சம்பவம்; பயணிக்கு உயிர் பயம் காட்டிய பஸ் டிரைவர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sensational-incident-in-hosur-bus-driver-shows-fear-for-passengers-life</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sensational-incident-in-hosur-bus-driver-shows-fear-for-passengers-life#comments</comments><guid isPermaLink="false">12806c74-628f-4ae8-9287-8c4c88b40885</guid><pubDate>Mon, 10 Aug 2026 03:21:04 +0000</pubDate><atom:updated>2026-08-10T03:21:04.473Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>bus,driver,Hosur,பஸ் டிரைவர்,Hosur - ஓசூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/h75zqh78/bus33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பயணிக்கு உயிர் பயம் காட்டிய பஸ் டிரைவர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/h75zqh78/bus33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஓசூர்,</p><p>ஒசூரில் இருந்து பாகலூர் வழியாக பேரிகைக்கு டவுன் பஸ் சென்றது.இதனை டிரைவர் ரமேஷ் ஓட்டிச்சென்றார். இதில் பயணித்த பயணி ஒருவர், பாகலூர் அருகே அச்சந்திரம் என்ற கிராமத்தில் இறங்க வேண்டிய நிலையில், டிரைவர் அங்கு நிறுத்தாமல் அதனை கடந்து தும்மனப்பள்ளி என்ற கிராமத்தில் பஸ்சை நிறுத்தி அந்த பயணியை இறக்கி விட்ட தாக கூறப்படுகிறது.</p><p>இதனால் ஆத்திரமடைந்த பயணி,<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D"> பஸ்சின் முன்புறமாக சென்று டிரைவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். </a>ஆனால், அதனை பொருட்படுத்தாத அந்த டிரைவர், பஸ்சின் முன்புறத்தில் அந்த பயணி நிற்பதை கூட கண்டுகொள்ளாமல் பஸ்சை இயக்கினார்.</p><h2>வீடியோ வைரல்</h2><p>இதனால் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்த அந்த பயணி உயிரை காப்பாற்றி கொள்ள பஸ் சின் முன்பக்க கண்ணாடிக்கு கீழே கைகளால் இறுகப்பிடித்து தொங்கியவாறே சென்றார். ஆனாலும் டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் இயக்கினார். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் சென்ற உடன் டிரைவர் பஸ்சை நிறுத்தியதாக தெரிகிறது.</p><p>இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து பஸ் டிரைவர் ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரை பணி இடைநீக்கம் செய்து போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சம்பவம் ஓசூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் காட்டு யானை உலா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-wanders-on-the-coonoor-mettupalayam-hill-road</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-wanders-on-the-coonoor-mettupalayam-hill-road#comments</comments><guid isPermaLink="false">dbb0ee1f-4b59-46f2-b89b-a2bf67adb90d</guid><pubDate>Mon, 10 Aug 2026 03:19:50 +0000</pubDate><atom:updated>2026-08-10T03:19:50.444Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>காட்டு யானை,wild elephant,குன்னூர்,Coonoor</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/yo0iy3pf/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/yo0iy3pf/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் பலாப்பழ சீசன் நிலவுகிறது. இதனால் பலாப்பழங்களை ருசிப்பதற்கு சமவெளி பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் முகாமிட்டு உள்ளன. இந்தநிலையில் குன்னூர் மரப்பாலம், பர்லியார் பகுதிகளில் சாலை நடுவே காட்டு யானை ஒன்று உலா வந்தது. அதோடு வாகனங்களை வழிமறித்தது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். </p><p>தகவல் அறிந்த வனத்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். குன்னூர் வனச்சரகர் வீரமணி தலைமையில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மலைப்பாதையில் உலா வரும் காட்டு யானை அருகே சென்று வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காட்டு யானை சாலையை கடந்து செல்லும் போது வாகனங்களை நிறுத்தி யானை கடந்து செல்ல வழிவகை செய்யவேண்டும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர் சரிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/continued-decline-in-water-inflow-to-hogenakkal-and-mettur-dam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/continued-decline-in-water-inflow-to-hogenakkal-and-mettur-dam#comments</comments><guid isPermaLink="false">d7eef340-061b-47d8-9728-00681dda52a7</guid><pubDate>Mon, 10 Aug 2026 03:18:26 +0000</pubDate><atom:updated>2026-08-10T03:18:26.022Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Mettur dam,Hogenakkal,ஒகேனக்கல்,நீர்வரத்து,மேட்டூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/za9y2erl/Mettur-dam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மேட்டூர் அணை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/za9y2erl/Mettur-dam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஒகேனக்கல்,</p><p>கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் தீவி ரத்தை பொறுத்து அந்த மாநில அரசு தண்ணீரை அதிகரித்தும், குறைத் தும் திறந்து விட்டு வருகிறது. இதன்காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வ ரத்து கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினா டிக்கு 5 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.</p><h2>தொடர் சரிவு</h2><p>தண்ணீர் வரத்து குறைந்த நிலையில், விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் பரிசல் சவாரி செய்தும், அருவியில் குளித்தும் மகிழ்ந்தனர். இதன் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் தொடர் சரிவை சந்தித்து வருகிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு 10 ஆயிரத்து 808 அடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 5 ஆயிரத்து 543 கனஅடியாக குறைந்தது.</p><h2>தண்ணீர் திறப்பு அதிகரிப்பு</h2><p> நேற்று முன்தினம் 78.03 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலையில் 78.37 அடியாக மட்டுமே உயர்ந்துள்ளது.இதனிடையே கர்நாடகாவில் இருந்து நேற்று முன்தினம் வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. மேலும் மழை அந்த பகுதியில் நீடித்து வருவதால் காவிரி ஆற்றில் நீர்வ ரத்து வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது குறிப் பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>சென்னை விமான நிலையத்தில் ரூ.4 கோடி உயர்ரக கஞ்சா பறிமுதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-grade-ganja-worth-4-crore-seized-at-chennai-airport</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-grade-ganja-worth-4-crore-seized-at-chennai-airport#comments</comments><guid isPermaLink="false">bb14f3e6-d009-42a7-92f2-fcb01b04a9f4</guid><pubDate>Mon, 10 Aug 2026 02:29:20 +0000</pubDate><atom:updated>2026-08-10T02:29:20.472Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Airport,சென்னை விமான நிலையம்,Ganja,கஞ்சா</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/odqigbe9/4.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/odqigbe9/4.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பய ணம் செய்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் சுமார் 25 வயதுடைய மலேசிய நாட்டைச் சேர்ந்த வாலிபர் ஒரு வரது உடைமைகளை சோதனை செய்தபோது, சூட்கேசுக்குள் துணிகளுக்கு மத்தியில் 4 பாக்கெட்டுகள் இருந்தது. அந்த பாக்கெட்டுகளை திறந்து சோதனை செய்தபோது, அதில் பதப்படுத்தப்பட்ட உயர்ரக கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. </p><p>மொத்தம் 4 கிலோ 33 கிராம் உயர்ரக கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.4 கோடி என கூறப்படுகிறது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள், மலேசிய வாலிபரை கைது செய்து, அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பட்டதாரி என்பதும், வேலை இல்லாததால் பணத்துக்காக கஞ்சா கடத்தல் கும்பலுக்கு துணையாக செயல்பட்டதும் தெரிய வந்தது.</p>]]></content:encoded></item><item><title>மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rank-list-for-medical-courses-released-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rank-list-for-medical-courses-released-today#comments</comments><guid isPermaLink="false">18cc622d-1c22-4064-a209-b7a3ddcad325</guid><pubDate>Mon, 10 Aug 2026 02:28:09 +0000</pubDate><atom:updated>2026-08-10T02:28:09.426Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,தரவரிசை,Medical course,மருத்துவ படிப்பு,வெளியீடு,Rank List,Released</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/m81bo1dd/35.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மருத்துவ படிப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/m81bo1dd/35.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.</p><h2>மருத்துவ கல்லூரி</h2><p>தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 13,999 எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. அந்தவகையில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு, நிர்வாக ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கான கலந்தாய்வை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் நடத்துகிறது. </p><h2>தரவரிசை பட்டியல்</h2><p>அதன்படி, நடப்பாண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு நிறைவு பெற்றது. அதில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பித்தனர். மொத்தம் 72,627 விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருந்தன. </p><p>தரவரிசை பட்டியல் எப்போது வெளியிடப்படும்? கலந்தாய்வு எப்போது தொடங்கும்? என மாணவ-மாணவிகள், அவர்களுடைய பெற்றோர் எதிர்பார்த்த நிலையில் விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88">தரவரிசை</a> பட்டியல் இன்று பிற்பகல் வெளியிடப்பட உள்ளது. மேலும், கலந்தாய்வு குறித்த அட்டவணையும் வெளியாக இருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>ஓடும் லாரியில் பூட்டை உடைத்து 10 மடிக்கணினிகள் திருட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/10-laptops-stolen-after-breaking-lock-on-moving-lorry</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/10-laptops-stolen-after-breaking-lock-on-moving-lorry#comments</comments><guid isPermaLink="false">62608c6f-5a31-4fc8-bfdc-2c48404838b7</guid><pubDate>Mon, 10 Aug 2026 02:08:05 +0000</pubDate><atom:updated>2026-08-10T02:08:05.923Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கள்ளக்குறிச்சி,lorry,லாரி,Breaking the lock,பூட்டை உடைத்து,Laptop,போலீசார்,மடிக்கணினி,திருட்டுtheft</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/h25q692i/34.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மடிக்கணினிகள் திருட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/h25q692i/34.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>கள்ளக்குறிச்சி, </p><p>கள்ளக்குறிச்சியில் ஓடும் லாரியில் 10 மடிக்கணினிகள் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>சென்னையில் இருந்து தனியார் கூரியர் நிறுவனம் மூலம், செல்போன்கள், மடிக்கணினிகள், டி.வி.க்கள், கார் மற்றும் இருசக்கர வாகன உதிரி பாகங்கள் உள்ளிட்டவற்றை ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் கொச்சி நோக்கி கன்டெய்னருடன் கூடிய மினிலாரி ஒன்று புறப்பட் டது. இந்த மினிலாரியை திண்டுக்கல்லை சேர்ந்த கோட்டை பெருமாள் மகன் தங்கராசு (வயது 26) என்பவர் ஓட்டினார். </p><h2>சென்சார்</h2><p>இந்த மினிலாரி கள்ளக்குறிச்சியை அடுத்த மாடூர் சுங்கச்சாவடியை கடந்து வந்து கொண்டிருந்தபோது, லாரியின் கன்டெய்னர் பூட்டு உடைக்கப்பட்டதாக சென்சார் மூலம் மினிலாரி உரிமையாளர் செல்போனுக்கு தகவல் சென்றது.</p><p>இதையடுத்து மினிலாரி உரிமையாளர் டிரைவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு இச்சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். உடனே டிரைவர் தங்கராசு, மினிலாரியை சாலையோரமாக நிறுத்தி விட்டு கீழே இறங்கி சென்று பார்த்துள்ளார். அப்போது கன்டெய்னர் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததுடன், உள்ளே வைக்கப்பட்டிருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன.</p><h2>விசாரணை</h2><p>இதையடுத்து டிரைவர் தங்கராசு, தன்னிடம் இருந்த மற்றொரு பூட்டை எடுத்து கன்டெய்னரை பூட்டிவிட்டு கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு மினிலாரியை எடுத்து வந்தார். பின்னர் போலீஸ் நிலையம் வந்து பார்த்தபோது. தங்கராசு போட்டிருந்த பூட்டும் உடைக்கப்பட்டு கிடந்தது. இதையடுத்து கள்ளக்குறிச்சி போலீசார் மற்றும் தனியார் கூரியர் நிறுவனத்தினர் மினிலாரியில் இருந்த பொருட்களை கீழே இறக்கி சோதனை செய்தனர். </p><p>அதில் 10 மடிக்கணினிகளை காணவில்லை. மாடூர் சுங்கச்சாவடியை கடந்து மினிலாரி வந்த போது, அதில் மர்ம நபர்கள் ஏறி மடிக்கணினிகளை திருடி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இருப்பினும் இந்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">திருட்டு </a>சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதுடன் அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக அரசு பஸ்கள் இன்று கர்நாடகத்துக்கு செல்லுமா? - எல்லையில் பதற்றம்; போலீஸ் குவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-tamil-nadu-government-buses-run-to-karnataka-today-tension-at-the-border-heavy-police-deployment</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-tamil-nadu-government-buses-run-to-karnataka-today-tension-at-the-border-heavy-police-deployment#comments</comments><guid isPermaLink="false">75b4d334-ea33-464d-9e6d-7c2b487f8fa6</guid><pubDate>Mon, 10 Aug 2026 02:04:51 +0000</pubDate><atom:updated>2026-08-10T02:04:51.009Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசு பஸ்,Karnataka,தமிழக அரசு,TN govt,Govt Buses,மேகதாது அணை,Mekedatu dam,கர்நாடகம்,Mekedatu Dam Issue</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/ayl0n3sl/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/ayl0n3sl/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>தென்மேற்கு பருவமழை</h2><p>கர்நாடகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதனால் காவிரியில் தமிழகத்துக்கு கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முடி யாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணை நிரம்பி விட்டதால் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.</p><p>இதற்கிடையே காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடக விவசாயிகளும், கன்னட அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னட கூட்டமைப்பு சார்பில் வருகிற 13-ந்தேதி கர்நாடகத்தில் முழுஅடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.</p><h2>அத்திப்பள்ளியில் போராட்டம்</h2><p>அந்த போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று கன்னட கூட்ட மைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் நேற்று அவர் பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-</p><p>காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்பட வேண்டும். அதுபோல் கர்நாடக விவசாயிகளுக்கே தண்ணீர் இல்லாதபோது காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது. இதை கர்நாடக அரசு கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (அதாவது இன்று) அத்திப் பள்ளியில் உள்ள கர்நாடகா-தமிழ்நாடு எல்லையில் கன்னட கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்படும். காலை 11 மணிக்கு போராட்டத்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.</p><h2>எல்லையில் பதற்றம்</h2><p>அப்போது நாங்கள் தமிழ்நாட்டில் இருந்து வரும் தமிழக அரசு பஸ்கள் உள்பட அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்த உள்ளோம். தமிழகத்தில் இருந்து வரும் வாகனங்களை கர்நாடகத்துக்குள் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.</p><p>கன்னட கூட்டமைப்பினரின் இந்த போராட்ட அறிவிப்பால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் இருமாநில எல்லையிலும் போலீசாரும் குவிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் இன்று (திங்கட்கிழமை) தமிழக அரசு பஸ்கள் உள் பட தமிழ்நாட்டில் இருந்து அத்திப்பள்ளி வழியாக அனைத்து வாகனங்களும் கர்நாடகத்துக்குள் அனுமதிக்கப்படுமா?, இல்லை எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்படுமா? என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பாக்கு மட்டைக்கு தட்டுப்பாடு: தட்டு உற்பத்தியாளர்கள் கவலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/shortage-of-areca-plates-large-plate-makers-worried</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/shortage-of-areca-plates-large-plate-makers-worried#comments</comments><guid isPermaLink="false">51415d8d-dfce-4e51-bd7b-192747dd3fc1</guid><pubDate>Mon, 10 Aug 2026 02:02:45 +0000</pubDate><atom:updated>2026-08-10T02:02:45.893Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர்,Karur,shortage,தட்டுப்பாடு,பாக்கு மட்டை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/fkkzf31z/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ பாக்கு மட்டை தட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/fkkzf31z/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கரூர்,</p><p>பாக்கு காய் சீசன் துவங்கியதால், பெரிய பாக்கு மட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், தட்டு உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். பாக்கு மரத்தில் இருந்து காய்ந்து விழும் மட்டைகளை பயன்படுத்தி தட்டுகள் தயாரிக்கும் தொழில், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. பாக்கு மட்டைகளை கொண்டு 8, 10 மற்றும் 12 இன்ச் அளவுகளில் தட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இதற்காக பல்வேறு வடிவங்களில் இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன.</p><p>தற்போது மூலப்பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பாக்கு மட்டை தட்டு உற்பத்தியாளர் கூறியதாவது:-</p><p>சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இருந்தும், கர்நாடகா மாநிலம் தும்கூரில் இருந்தும், பாக்கு மட்டை கொண்டு வரப்படுகிறது. வழக்கமாக வைகாசி, ஆனி, ஆடி, மாதங்களில் பாக்கு காய் உற்பத்தி துவங்கும். இதனால் பெரிய அளவிலான மட்டை விற்பனைக்கு கிடைக்காது. சிறிய மட்டைதான் விற்பனைக்கு வரும்.</p><p>கடந்த மாதம் எட்டு ரூபாய்க்கு விற்ற மட்டை தற்போது, 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் எட்டு இன்ச் தட்டு, மூன்று ரூபாயில் இருந்து நான்கு ரூபாய்க்கும், 10 இன்ச் தட்டு, ஐந்து ரூபாயில் இருந்து ஆறு ரூபாய்க்கும், 12 இன்ச் தட்டு, ஐந்து ரூபாயில் இருந்து, 6.50 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இவ்வாறு கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையின் குடிநீர் ஏரிகளில் மழை: நீர் இருப்பு நிலவரம் என்ன?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rain-in-chennais-drinking-water-lakes-what-is-the-water-balance</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rain-in-chennais-drinking-water-lakes-what-is-the-water-balance#comments</comments><guid isPermaLink="false">d649d584-1806-4593-b48e-afde9b769b01</guid><pubDate>Mon, 10 Aug 2026 01:45:25 +0000</pubDate><atom:updated>2026-08-10T01:45:25.628Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Rain,மழை,குடிநீர்,drinking water,Need</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/uc0paeyk/33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பூண்டி ஏரி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/uc0paeyk/33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை, </p><p>சென்னை மாநகருக்கு தேவையான குடிநீர் வழங்கும். பூண்டி, சோழவரம், புழல், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. </p><h2>மழை</h2><p>அந்தவகையில் நேற்று முன்தினம் காலை 8 மணியிலிருந்து, நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் பூண்டி ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் 10 மி.மீ. என்ற அளவில் மழை பதிவானது. அதேபோல் சோழவரம் 13, புழல் 5, கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை 13, செம்பரம்பாக்கம் 15 என்ற அளவில் மழை பதிவானது. </p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF">பூண்டி ஏரிக்கு</a> கிருஷ்ணா நதி நீர் கால்வாய் மூலம் 400 கன அடி வந்து கொண்டிருக்கிறது. இதுதவிர, சோழவரம் 30, புழல் 240, கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை 36, செம்பரம்பாக்கம் 154 கன அடி தண்ணீர் வந்துள்ளது.</p><h2>நீர் இருப்பு</h2><p>குடிநீர் தேவைக்காக பூண்டியிலிருந்து 286 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதேபோல் சோழவரம் 8, புழல் 203, கண்ணன் கோட்டை தேர்வாய்கண்டிகை 19. செம்பரம்பாக்கம் 205 கன அடி வீதம் திறந்து விடப்பட்டுள்ளது.</p><p>பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய ஏரிகளில் மொத்த இருப்பு 5.56 டி.எம்.சி. ஆகும். இது 42.09 சதவீதமாகும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 7.84 டி.எம்.சி. கையிருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் தனியாரிடம் ஒப்படைப்பா? - விஞ்ஞானிகள் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-kulasekarapattinam-rocket-launch-site-be-handed-over-to-the-private-sector-scientists-explain</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-kulasekarapattinam-rocket-launch-site-be-handed-over-to-the-private-sector-scientists-explain#comments</comments><guid isPermaLink="false">b9860ae2-5b07-4241-942f-bda804aa12a2</guid><pubDate>Mon, 10 Aug 2026 01:32:06 +0000</pubDate><atom:updated>2026-08-10T01:32:06.079Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rocket,விஞ்ஞானிகள்,குலசேகரன்பட்டினம்,ராக்கெட் ஏவுதளம்,Kulasekaranpatnam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/mvmk9kjj/kulasekaran-pattinam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ குலசேகரன்பட்டினம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/mvmk9kjj/kulasekaran-pattinam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராக்கெட் ஏவுதளம்</p><p>ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. தொடர்ந்து நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளம், தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமைக்கப்படுகிறது. பூமத்திய ரேகைக்கு மிக அருகில் இப்பகுதி அமைந்துள்ளதால் குறைந்த எரிபொருளில் ராக்கெட்டுகளை செலுத்தி, செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்த முடியும். இதற்காக குலசேகரன்பட்டினத்தில் 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, ரூ.986 கோடியில் கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு (2027) மார்ச் மாதத்துக்குள் கட்டுமான பணிகள் நிறைவுபெற்று, இங்கிருந்து சிறியரக செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இங்கு இஸ்ரோ அலுவலகம், ராக்கெட் ஏவுதளகட்டிடம், பராமரிப்பு பணி மனை மற்றும் ஒரே நேரத்தில் 3 ஹெலிகாப்டர்கள் தரையிறங்கும் வகையிலான ஹெலிபேடு போன்றவை அமைக்கப்பட்டு உள்ளன.</p><h2>தனியாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை</h2><p>ராக்கெட் ஏவுதள கட்டுமான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், இதன் செயல்பாடு மற்றும் நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, ஏவுதளத்தின் செயல்பாடு, மேலாண்மை பணிகளை மேற்கொள்ள இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட தகுதியான தனியார் நிறுவனங்களிடம் இருந்து விருப்பம் கோருவதற்கான நடவடிக்கையை இந்திய தேசிய விண் வெளி அங்கீகார மற்றும் மேம்பாட்டு மையம் (இன்-ஸ்பேஸ்) மேற் கொண்டுள்ளது.தேர்வு செய்யப்படும் தனியார் நிறுவனமானது, குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தின் அன்றாட செயல்பாடுகள் மற்றும் நிர்வாக பணிகளை மேற்கொள்ளும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் தனியார் விண்வெளி நிறுவனங்கள் தங்களது ராக்கெட்டு கள், செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான வசதியை அதிகளவில் பயன் படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>விஞ்ஞானிகள் விளக்கம்</h2><p>இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகையில், "குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் தனியாருக்கு விற்பனை செய்யப்படவில்லை. ஏவுதளத்தின் உரிமையை தனியாரிடம் ஒப்படைப்பது தொடர்பான அறிவிப்பு எதுவும் இல்லை. மாறாக, ஏவுதளத்தின் செயல்பாடு மற்றும் நிர்வாகத்தை தனியார் நிறுவனத்திடம் வழங்குவதற்கான நடவடிக்கையே தற்போது மேற்கொள்ளப்படுகிறது. இந்த நடவடிக்கை இந்தியாவின் விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிக்கும்" என்றனர்.</p><h2>பொதுமக்கள் எதிர்ப்பு</h2><p>எனினும் ராக்கெட் ஏவுதள செயல்பாடுகள், நிர்வாகம் தனியார்மயமாவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தை தனியாரிடம் ஒப்படைப்பது ஏற்புடையது அல்ல. இஸ்ரோவுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு இங்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்” என்றனர். இதனால் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட காவிரி நீர் திருச்சி வந்தது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-water-released-from-mettur-dam-has-reached-trichy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-water-released-from-mettur-dam-has-reached-trichy#comments</comments><guid isPermaLink="false">562ffa6b-29b4-42c2-b953-812b5b74efa3</guid><pubDate>Mon, 10 Aug 2026 01:28:11 +0000</pubDate><atom:updated>2026-08-10T01:28:11.147Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur dam,காவிரி நீர்,Cauvery water</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/rc9ve324/2.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/rc9ve324/2.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p> மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் திருச்சிக்கு வந்தது. கம்பரசம்பேட்டை தடுப்பணையில் சுற்றலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர்.</p><h2>மேட்டூர் அணை</h2><p>மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 78.37 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,500 கன அடி மட்டும் திறந்து விடப்படுகிறது. ஆனால் கடந்த வாரம் கர்நாடக மாநிலத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக அங்கிருந்து மேட்டூர் அணைக்கு 25 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது.</p><p>இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் உயர்ந்தது. இதனை தொடர்ந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பாக மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.</p><h2>காவிரி நீர் வந்தது</h2><p>அந்த தண்ணீர் தற்போது மாயனூர் தடுப்பணை, முக்கொம்பு மேலணையை தாண்டி திருச்சிக்கு நேற்று வந்து சேர்ந்தது. திருச்சி கம்பரசம் பேட்டை தடுப்பணையில் தண்ணீர் சீறிப்பாய்ந்து வருவதால் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த இளைஞர்களும் குளிப்பதற்காக தடுப்பணையில் குவிந்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் கடைகளில் ஒரு சதவீதத்துக்கும் குறைவான அளவிலேயே ஆன்லைன் மதுவிற்பனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/online-liquor-sales-account-for-less-than-one-percent-of-total-sales-at-tasmac-outlets</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/online-liquor-sales-account-for-less-than-one-percent-of-total-sales-at-tasmac-outlets#comments</comments><guid isPermaLink="false">f593a184-0a60-43c8-8ae1-2fc19b9af07d</guid><pubDate>Mon, 10 Aug 2026 01:25:18 +0000</pubDate><atom:updated>2026-08-10T01:25:18.418Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆன்லைன்,டாஸ்மாக்,Tasmac,liquor sales,Tasmac Shops,டாஸ்மாக் கடை,மதுவிற்பனை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/22kzesps/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/22kzesps/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>ஆன்லைன் மதுவிற்பனை</h2><p>தமிழ்நாடு மாநில வாணிபக் கழகமான டாஸ்மாக் சார்பில், கடைகளில் நீண்ட வரிசையில் நிற்பதைத் தவிர்க்கும் வகையில் ஆன்லைன் மதுவிற்பனை முறை கடந்த 7-ந்தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது வீடு தேடி மதுபாட்டில்கள் விநியோகிக்கும் திட்டம் அல்ல. tasmac.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து கடைகளில் பெற்றுக்கொள்ளும் வசதியாகும்.</p><p>ஆனால் இதில் சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக கடை ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் சில கடைகளில் மதுப்பிரியர்கள்-கடை ஊழியர்கள் இடையே வாக்குவாதமும் ஏற்படுவதாக சொல்லப்பட்டது. </p><h2>குறைவாகவே பதிவு</h2><p>இத்திட்டம் தொடங்கப்பட்ட முதல் நாளில் ரூ.11.62 லட்சமும், இரண்டாவது நாளான நேற்றுமுன்தினம் 3 ஆயிரம் முன்பதிவுகள் வாயிலாக ரூ.9 லட்சம் மதிப்பிலுமான மதுபாட்டில்களே ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.</p><p>அன்றைய தினம் டாஸ்மாக் கடைகளின் மொத்த மதுவிற்பனை ரூ.162 கோடியே 37 லட்சமாக இருந்த நிலையில், ஆன்லைன் விற்பனை ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே பதிவாகியுள்ளது. இதனால், ஆன்லைன் மதுவிற்பனைக்கு மதுப்பிரியர்கள் வரவேற்பு காட்டவில்லையோ? என்ற கேள்வி எழுந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி மாரத்தான்: 91 வயது முதியவர் 21 கி.மீ. ஓடி அசத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/marathon-to-protect-fireworks-industry-91-year-old-runs-21-km</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/marathon-to-protect-fireworks-industry-91-year-old-runs-21-km#comments</comments><guid isPermaLink="false">3b1ef196-1a8e-43a2-accf-6debef53229b</guid><pubDate>Mon, 10 Aug 2026 01:20:46 +0000</pubDate><atom:updated>2026-08-10T01:23:04.421Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Sivakasi,சிவகாசி,marathon,மாரத்தான்,பட்டாசு தொழில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/znnlgkym/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/znnlgkym/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர்,</p><p>சிவகாசியில் பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 91 வயது முதியவர் 21 கி.மீ. ஓடி அசத்தினார்.</p><h2>விழிப்புணர்வு மாரத்தான்</h2><p>விருதுநகர் மாவட்டம் சிவகாசியின் பிரதான தொழிலான பட்டாசு தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு மாரத்தான் போட்டி சிவகாசியில் நேற்று காலை நடைபெற்றது.</p><p>இந்த மாரத்தான் ஓட்டத்தில் 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். ஆண்களுக்கு 42 மற்றும் 21 கி.மீ. தூரமும், பள்ளி மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு 10 கி.மீ. தூரமும், பள்ளி மாணவிகளுக்கு 5 கி.மீ. தூரமும் நிர்ணயம் செய்யப்பட்டு 5 பிரிவுகளாக போட்டி நடைபெற்றது.</p><h2>91 வயது முதியவர்</h2><p>இவர்களுடன் இணைந்து 91 வயது ராஜேந்திரன் 21 கி.மீ. பிரிவில் ஓடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இவர் சர்வதேச முதியோர் தடகள போட்டியில் பங்கேற்று இந்தியாவிற்காக ஏராளமான பதக்கங்களை குவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் 10 இடங்களை பிடித்த அனைவருக்கும் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.</p>]]></content:encoded></item><item><title>முத்ரா கடன் வழங்குவதில் தமிழகம் 2-ம் இடம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-ranks-2nd-in-mudra-loans</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-ranks-2nd-in-mudra-loans#comments</comments><guid isPermaLink="false">d9521298-8453-4baa-a6a4-b874d52ae801</guid><pubDate>Mon, 10 Aug 2026 01:02:18 +0000</pubDate><atom:updated>2026-08-10T01:02:18.071Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,தமிழகம்,Loans,Place,முத்ரா யோஜனா திட்டம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/kigjkhz5/32.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/kigjkhz5/32.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோருக்கு நிதியுதவி வழங்கும் நோக்கில், மத்திய அரசால் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் 8-ந் தேதி பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டம் தொடங்கப்பட்டது. பிணையம் அல்லது சொத்து அடமானம் ஏதுமின்றி இத்திட்டத்தில் எளிய முறையில் கடன் வழங்கப்படுகிறது.</p><h2>தமிழ்நாடு</h2><p>இந்நிலையில், 2015 முதல் நடப்பாண்டு ஜூன் வரையிலான நிலவரப்படி, இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக பீகாரில் 4.78 கோடி பெண் தொழில் முனைவோருக்கு ரூ.2 லட்சத்து 14 ஆயிரத்து 863 கோடியே 3 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் அந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இதற்கடுத்தபடியாக, தமிழ்நாட்டில் 4.33 கோடி பெண் தொழில் முனைவோர்கள் ரூ.2 லட்சத்து 4 ஆயிரத்து 537 கோடியே 79 லட்சம் கடன் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.</p><p>இந்த பட்டியலில் மேற்கு வங்காளம் 3-ம் இடத்திலும், கர்நாடகம் 4-ம் இடத்திலும் உள்ளன. முதல் 10 மாநிலங்கள் பட்டியலில் தென் மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகியவை இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தில் தமிழ்நாட்டில் பெண் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D">தொழில் முனைவோர்களின்</a> எண்ணிக்கை சமூகவலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடக ரசாயன கழிவுகளால் பச்சை நிறமாக மாறிய மேட்டூர் நீர்த்தேக்க பகுதி - நோய் பரவும் அபாயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/karnataka-chemical-waste-turns-mettur-reservoir-green-disease-risk</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/karnataka-chemical-waste-turns-mettur-reservoir-green-disease-risk#comments</comments><guid isPermaLink="false">8e365cbe-4cbd-4c7a-95aa-255b107b1eab</guid><pubDate>Mon, 10 Aug 2026 00:59:30 +0000</pubDate><atom:updated>2026-08-10T00:59:30.701Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மபுரி,Dharmapuri,மேட்டூர்,Mettur,ரசாயன கழிவு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/kih3t94o/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/kih3t94o/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தர்மபுரி,</p><p>கர்நாடக ரசாயன கழிவுகளால் மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதி பச்சை நிறமாக மாறி காட்சி அளிக்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.</p><h2>மேட்டூர் நீர்த்தேக்க பகுதி</h2><p>தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே நாகமரை, ஒட்டனூர், செல்லமுடி, பூச்சூர், சித்திரபட்டி, கவுண்டனூர் உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் காவிரி கரையோரத்தில் மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியாக உள்ளன.</p><p>இந்த கிராம மக்கள் மீன்பிடி தொழில், சிறு, குறு விவசாயம் செய்து வருகிறார்கள். மேலும் குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்காகவும், இந்த மேட்டூர் நீர்த்தேக்கத்தை நம்பியே வாழ்கின்றனர். இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்த்தேக்க காவிரி கரையோரங்களில் உள்ள நீரானது பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. மேலும் துர்நாற்றம் வீசுகிறது.</p><h2>சுகாதார கேடு</h2><p>இதன் காரணமாக இந்த நீரை விவசாயத்திற்கு மட்டுமல்லாமல் குடிநீருக்கும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் காவிரி கரையோர பகுதி முழுவதும் இந்த ரசாயன கழிவுகளால் சுகாதார கேடு அடைந்துள்ளது. காவிரி கரையோர கிராமங்களில் ஆங்காங்கே தற்போது வைரஸ் காய்ச்சல் பரவ தொடங்கி உள்ளது.</p><p>மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் தேங்கி நிற்கும் தண்ணீர் பச்சை நிறமாக மாறி காட்சி அளிப்பது ஏன்? என்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அதாவது, கர்நாடக பகுதிகளில் இருந்து ரசாயன கழிவுகளை காவிரி ஆற்றில் கலந்து விடுவதால் காவிரி நீர் அசுத்தம் அடைந்து பச்சை நிறமாக மாறி காட்சி அளிக்கிறது.</p><h2>வெள்ளக் காலங்களில்...</h2><p>மழை வெள்ளம் அதிகமாக வரும்போது காவிரி ஆற்றில் பாய்ந்து வரும் தண்ணீரில் ரசாயன கழிவுகளும் சேர்ந்து ஆற்றில் அடித்து செல்லப்படும். அந்த தண்ணீர் ஒகேனக்கல்லை கடந்து வேகமாக வரும்போது, அதில் ரசாயனம் கலந்திருப்பது பெரிதாக தெரிவது இல்லை. அதே நேரத்தில் மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் அந்த தண்ணீர் தற்போது தேக்கம் அடைந்து நிற்கும்போது ரசாயன கழிவுகள் அப்படியே தண்ணீரில் கலந்து விடுகிறது. இதனால்தான் கரையோர பகுதிகளில் காவிரிஆறு பச்சை நிறமாக மாறி உள்ளது.</p><p>இதுகுறித்து அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கரையோர கிராம மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.</p><h2>நடவடிக்கை</h2><p>ஏற்கனவே காவிரியில் தண்ணீர் தர கர்நாடக அரசு மறுத்து வரும் நிலையில், இந்த ரசாயன கழிவுகளால் காவிரி பாசன விவசாயிகளும், காவிரி குடிநீரை நம்பி இருக்கும் மக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே இதுகுறித்து தமிழக அதிகாரிகள், கர்நாடக அரசிடம் பேசி தமிழ்நாட்டின் உயிர்நாடியான காவிரியில் ரசாயன கழிவுகள் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.</p><p>மேட்டுர் அணை நீர்த்தேக்க பகுதியில் பச்சை நிறமாக தண்ணீர் மாறி உள்ளது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது. 'அணையின் நீர்த்தேக்க பகுதிகளில் தண்ணீர் வரத்து தற்போது வினாடிக்கு சுமார் 5 ஆயிரம் கனஅடியாக தான் உள்ளது. ஏரியூர் அருகே நாகமரை சுற்றுவட்டாரத்தில் உள்ள அணையின் நீர்த்தேக்க பகுதிகளை நாங்கள் பார்வையிட உள்ளோம். அங்கு தண்ணீர் பச்சை நிறமாக மாறி இருந்தால் அது குறித்து விசாரித்து எதனால் இந்த தண்ணீர் நிறம் மாறி உள்ளது என கண்டறிந்து அரசுக்கு முறைப்படி தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்கள்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-45</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-45#comments</comments><guid isPermaLink="false">a06fbef1-6c63-4cc1-b05e-a85ad21152cf</guid><pubDate>Mon, 10 Aug 2026 00:59:04 +0000</pubDate><atom:updated>2026-08-10T00:59:04.505Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல் விலை,டீசல் விலை,Petrol and diesel prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/nhs1j511/petrol.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/nhs1j511/petrol.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.</p> <h2>பெட்ரோல், டீசல் விலை</h2><p>இந்நிலையில், சென்னையில் இன்று (10.08.2026 திங்கட்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ. 99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cervical-cancer-awareness-marathon-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cervical-cancer-awareness-marathon-in-chennai#comments</comments><guid isPermaLink="false">820f9e23-ccab-472b-9165-cc29f8205d2e</guid><pubDate>Sun, 09 Aug 2026 21:41:11 +0000</pubDate><atom:updated>2026-08-09T21:41:11.050Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>மாரத்தான் போட்டி,Chennai Marathon,Womens Safety Awareness,Cervical Cancer,கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு,சிங்கப்பெண் சிறப்புப்படை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/flon4fpm/9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/flon4fpm/9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் நடந்த கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் சுமார் 3 ஆயிரம் பெண்கள் பங்கேற்றனர்.</p> <h2>விழிப்புணர்வு மாரத்தான்</h2><p>கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சென்னை மத்திய மாவட்ட ரோட்டரி கிளப், இன்னர்வீல் கிளப்புகள் மற்றும் சிங்கப்பெண் சிறப்புப்படை 'இணைந்து 'சிங்கப்பெண் மாரத்தான்' என்ற பெயரில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை நடத்தின. இந்த மாரத்தான் ஓட்டத்தை சிங்கப்பெண் சிறப்புப் படை ஐ.ஜி. பவானீஸ்வரி ஒலிம்பிக் தீபம் வழங்கி தொடங்கி வைத்தார்.</p><p>இந்த மாரத்தான் ஓட்டமானது சிறுமிகளுக்கு (12 வயதுக்கு உட்பட்டவர்கள்) தீவுத் திடலில் இருந்து கடற்கரை சாலையில் கண்ணகி சிலை வரை சென்று மீண்டும் தீவுத்திடலை வந்த டைதல் (4 கிலோ மீட்டர்). பெரியவர்களுக்கு தீவுத் திடலில் தொடங்கி போர் நினைவுச் சின்னம், நேப்பியர் பாலம், உழைப்பாளர் சிலை வழியாக கலங்கரை விளக்கம் வரை சென்று மீண்டும் அதே பாதையில் திரும்பி வந்து தீவுத்திடலை வந்து அடையும் (8 கிலோ மீட்டர்) வகையில் நடத்தப்பட்டது.</p><h2>3 ஆயிரம் பெண்கள் பங்கேற்பு</h2><p>பெரியவர்கள் பிரிவில் 13 வயது முதல் 20 வயது வரை, 21 வயது முதல் 40 வயது வரை, 41 வயதுக்கு மேல் என மொத்தத்தில் 4 பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்டது. 4 பிரிவுகளுக்கும் தனித்தனியே முதல் பரிசு ரூ.25 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.15 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.2 லட்சம் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனி வண்ணத்தில் பனியன்கள் வழங்கப்பட்டு இருந்தது. இந்த மாரத்தான் போட்டியில் சுமார் 3 ஆயிரம் பெண்கள் பங்கேற்றனர். இந்த மாரத்தான் போட்டியில் சிங்கப்பெண் சிறப்புப் படையினரும் பங்கேற்றனர் என ஐ.ஜி. பவானீஸ்வரி தெரிவித்தார்.</p><p>சிங்கப்பெண் மாரத்தான் தலைவர் நல்லம்மை ராமநாதன், ரோட்டரி சங்கத்தின் முன்னாள் மாவட்ட ஆளுனர் அபிராமி ராமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.</p> ]]></content:encoded></item><item><title>12 ஆண்டுகளாக வளர்த்த மரங்கள்... கண் முன்னே வெட்டப்படுவதை பார்த்து கதறி அழுத பெண் - வைரல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-wails-as-she-watches-trees-she-nurtured-for-12-years-being-cut-down-right-before-her-eyes-video-goes-viral</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-wails-as-she-watches-trees-she-nurtured-for-12-years-being-cut-down-right-before-her-eyes-video-goes-viral#comments</comments><guid isPermaLink="false">06026e32-de06-4808-995f-e93f795c977b</guid><pubDate>Sun, 09 Aug 2026 20:00:55 +0000</pubDate><atom:updated>2026-08-09T20:00:55.955Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கள்ளக்குறிச்சி,Video,மரங்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/56psg4t2/ma.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே, மின்கோபுரம் அமைப்பதற்காக விவசாய நிலத்தில் வளர்த்து வந்த 89 மரங்கள் வெட்டப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மரங்களை குழந்தைகளைப் போல வளர்த்து வந்த பெண், அவை வெட்டப்படுவதை பார்த்து கதறி அழுத காட்சி அப்பகுதி மக்களை கண்கலங்க வைத்தது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/56psg4t2/ma.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சி,</p><p>கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே, மின்கோபுரம் அமைப்பதற்காக விவசாய நிலத்தில் வளர்த்து வந்த 89 மரங்கள் வெட்டப்பட்டநிலையில்,  மரங்களை வளர்த்து வந்த பெண், அவை வெட்டப்படுவதை பார்த்து கதறி அழுத காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. </p><h2>12 ஆண்டுகளாக வளர்த்த மரங்கள்</h2><p>வடதொரசலூர் கிராமத்தைச் சேர்ந்த லோகநாதனின் மனைவி செல்வி (58), தனது விவசாய நிலத்தில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு மகோகனி, தேக்கு, தென்னை உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வந்தார்.</p><p>இதற்கிடையில், அவரது விவசாய நிலத்தின் வழியாக உயர் அழுத்த மின்பாதை அமைக்க மின்வாரிய அதிகாரிகள் திட்டமிட்டனர். இதற்கு செல்வியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. தங்கள் நிலத்தில் பல ஆண்டுகளாக மரங்களை வளர்த்து வருவதால், வேறு வழியாக மின்பாதையை அமைக்குமாறு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.</p><h2>உயர் அழுத்த மின்கோபுரம் அமைப்பு</h2><p>இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்வியின் நிலத்தில் உயர் அழுத்த மின்கம்பத்திற்கான கோபுரம் அமைக்கப்பட்டு, மின் கம்பிகளும் பொருத்தப்பட்டன. அப்போது மரங்களுக்கு இழப்பீடாக ரூ.97 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p>இந்நிலையில், விவசாய நிலத்தில் இருந்த 89 மரங்களை மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் வெட்டி அகற்றினர்.</p><h2>மரங்களை கட்டிப்பிடித்து கதறி அழுத செல்வி</h2><p>தான் பல ஆண்டுகளாக வளர்த்து வந்த மரங்கள் வெட்டப்படுவதை பார்த்த செல்வி அதிர்ச்சியடைந்தார். மரங்களை வெட்ட வேண்டாம் என கதறிய அவர், வெட்டப்பட இருந்த மரங்களை கட்டிப்பிடித்துக் கொண்டு கண்ணீர் விட்டு அழுதார்.</p><h2>அரசு பள்ளிக்கு நிலம் தானம்</h2><p>செல்வி, அதே பகுதியில் அரசு பள்ளி கட்டுவதற்காக 40 சென்ட் நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="und" dir="ltr">“10 ஆண்டுகளாக வளர்த்த மரங்கள்!” | Kallakurichi | trees <a href="https://t.co/pPn9ovQOIo">https://t.co/pPn9ovQOIo</a> <a href="https://x.com/hashtag/Kallakurichi?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Kallakurichi</a> <a href="https://x.com/hashtag/TamilNadu?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TamilNadu</a> <a href="https://x.com/hashtag/TreeCutting?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TreeCutting</a> <a href="https://x.com/hashtag/Farmers?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Farmers</a></p>&mdash; Thanthi TV (@ThanthiTV) <a href="https://x.com/ThanthiTV/status/2086485993839030641?ref_src=twsrc%5Etfw">August 9, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>என்ஜினீயரிங் படிப்புக்கான துணை கலந்தாய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/supplementary-counselling-for-engineering-studies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/supplementary-counselling-for-engineering-studies#comments</comments><guid isPermaLink="false">1a0bf400-c4fa-4c6c-b318-6075e4021ce3</guid><pubDate>Sun, 09 Aug 2026 19:40:41 +0000</pubDate><atom:updated>2026-08-09T19:40:41.056Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Directorate of Technical Education,தொழில்நுட்ப கல்வி இயக்ககம்,என்ஜினீயரிங் கலந்தாய்வு,பொறியியல் சேர்க்கை,Engineering Admission,engineering counseling</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/rvopgjx2/6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/rvopgjx2/6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பிளஸ்-2 துணைத் தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவ- மாணவிகள் மற்றும் பொதுக்கலந்தாய்வில் விண்ணப்பிக்காதவர்கள் வருகிற 17-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். </p><p>என்ஜினீயரிங் படிப்புக்கான இதுவரை நடந்து முடிந்த சிறப்பு கலந்தாய்வு மற்றும் முதல் சுற்று கலந்தாய்வில், 28 ஆயிரத்து 979 மாணவ-மாணவிகளுக்கு ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப் பட்டு சேர்க்கை பெற்று வருகின்றனர். பி.ஆர்க். கலந்தாய்வில் பொது பிரிவில் 622 பேரும் மற்றும் அரசு பள்ளியில் படித்து 7.5 சதவீத ஒதுக்கீட்டில் 40 பேரும் ஒதுக்கீட்டு ஆணைகள் பெற்றுள்ளனர். அவ்வாறு இறுதியாக ஒதுக்கப்பட்ட இடங்கள் www.tneaonline.org என்ற இணையத ளத்தில் வெளிப்படைத்தன்மையுடன் கொடுக்கப்பட்டுள்ளது. </p><p>தற்போது 2-வது சுற்று கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 60 ஆயிரத்து 508 ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட் டுள்ளன. 2-வது சுற்று கலந்தாய்வு செயல்பாடுகள் 17-ந்தேதி வரை நடைபெற இருக்கின்றன. அதனைத் தொடர்ந்து 3-வது சுற்று கலந்தாய்வு தொடங்கி நடைபெறும்.</p><p>அதன் தொடர்ச்சியாக துணைக்கலந்தாய்வு நடைபெற உள்ளது. அதற்காக பிளஸ்-2 துணைத் தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவ- மாணவிகள் மற்றும் பொதுக்கலந்தாய்வில் விண்ணப்பிக்காதவர்கள் வருகிற 17-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கான துணைக்கலந்தாய்வு அடுத்த மாதம் (செப்டம்பர்) 3-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை நடைபெறும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.</p><p>கலந்தாய்வு மற்றும் ஒதுக்கீடு பற்றிய விளக்கங்கள் தேவைப்படின் தமிழ்நாடு முழுவதும் உள்ள 110 தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையங்களை தொடர்பு கொண்டோ அல்லது நேரில் சென்றோ தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளலாம். அதன் முகவரி மற்றும் தொடர்பு எண்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மாணாக்கர்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைபேசி மூலம் தங்கள் கலந்தாய்வு தொடர்பான சந்தேகங்களையும் மற்றும் ஒதுக்கீட்டாணை பற்றிய விளக்கங்கள் பெற வேண்டி பத்து இணைப்புகளுடன் கூடிய அழைப்பு மையம் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அழைப்பு எண்: 1800-425-0110. இது தொடர்பாக, மாணாக்கர்கள் tneacare@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மாநில சட்ட ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி நியமனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/retired-chief-justice-appointed-as-chairman-of-state-law-commission</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/retired-chief-justice-appointed-as-chairman-of-state-law-commission#comments</comments><guid isPermaLink="false">89185d8b-3267-4b90-b433-614b46643c73</guid><pubDate>Sun, 09 Aug 2026 19:18:18 +0000</pubDate><atom:updated>2026-08-09T19:18:18.347Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>TN State Law Commission,Tamil Nadu Legal Department,தமிழ்நாடு மாநில சட்ட ஆணையம்,தமிழ்நாடு சட்டத்துறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/uz1e1ovi/5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/uz1e1ovi/5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்தின் தலைவராக மணிப் பூர் ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், உறுப்பினராக சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி ஆர்எம்டி. டீக்காராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>சட்ட ஆணையம்</h2><p>இதுகுறித்து தமிழ்நாடு சட்டத்துறை செயலாளர் பி.சுமதி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு சட்ட ஆணையம் ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒருமுறை அமைக்கப்படும். ஏற்கனவே அமைக்கப்பட்ட ஆணையம் கடந்த ஜூன் 18-ந்தேதியுடன் முடிவுக்கு வந்து விட்டது. அதனால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு புதிய சட்ட ஆணையம் அமைக்கப்படுகிறது. இந்த மாநில சட்ட ஆணையத்தின் தலைவராக, மணிப்பூர் ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் நியமிக்கப்படுகி றார். அதேபோல இந்த ஆணையத்தின் முழு நேர உறுப்பினராக சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி ஆர்எம்டி. டீக்காராமன், முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர் டி.கே.ராமச்சந்திரன், முன்னாள் செயலாளர் ஏ.அருணகிரி. பகுதி நேர உறுப்பினர்களாக முன்னாள் மாவட்ட நீதிபதிகள் பி.மோகன்தாஸ், ஆர்.கோவிந்தராஜன் ஆகியோர் நியமிக்கப் படுகின்றனர். இந்த ஆணையத்தின் உறுப்பினர் செயலராக சட்டத்துறை செயலாளர் செயல்படுவார்.</p><h2>தலைவர்-உறுப்பினர்கள்</h2><p>இந்த சட்ட ஆணையம், ஏற்கனவே உள்ள சட்டங்களை மாற்றி அமைக்கவும், அதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யவும் பரிந்துரைகளை வழங்கும். அதுபோல சமூக, பொருளாதார ரீதியான சட்டங்களை கொண்டு வரவும், நீதி நிர்வாகம் செயல்பாடுகளை விரைவுபடுத்தவும். சீர்த்திருத்தங்களை கொண்டு வரவும், மத்திய, மாநில அரசுகளுடன் உறவுகளை மேம்படுத்துவது, மாநில அரசின் சட்டம் மட்டுமல்லாமல், மத்திய அரசின் சட்டத்திலும் திருத்தம் கொண்டு வருவது போன்ற நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளை செய்யும். தலைவர். உறுப்பினர்களின் பதவிக்காலம் என்பது அவர்கள் பதவியேற்ற நாளில் இருந்து 3 ஆண்டுகள் ஆகும்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்... சட்டமன்றத்தில் இன்று தனித்தீர்மானம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/priority-for-tamil-thai-vazhthu-at-government-events-special-resolution-in-the-assembly-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/priority-for-tamil-thai-vazhthu-at-government-events-special-resolution-in-the-assembly-today#comments</comments><guid isPermaLink="false">be9e2495-ccdc-41f9-bd14-e5bb06cc29fd</guid><pubDate>Sun, 09 Aug 2026 18:31:20 +0000</pubDate><atom:updated>2026-08-09T18:31:20.090Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Assembly,தனித்தீர்மானம்,தமிழ்த்தாய் வாழ்த்து,தமிழக சட்டமன்றம்,Tamil Thai Vazhthu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/1hgort3q/vj.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் கட்டாயம் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் விஜய் இன்று தனித்தீர்மானம் கொண்டு வருகிறார். ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/1hgort3q/vj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் கட்டாயம் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">விஜய் </a>இன்று தனித்தீர்மானம் கொண்டு வருகிறார். </p><h2>பரபரப்பு</h2><p>ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் முதலில் வந்தே மாதரம் பாடப்படுவது தொடர்பாக தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தத் தீர்மானம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.</p><h2>தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம்</h2><p>கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.</p><h2>ஒருமனதாக நிறைவேறுமா?</h2><p>சட்டமன்றத்தில் கொண்டுவரப்படும் இந்தத் தீர்மானத்தின் மீது அனைத்து கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களும் பேச உள்ளனர். தீர்மானத்தின் மீதான விவாதம் நிறைவடைந்த பின்னர், சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>‘பட்ஜெட் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை’ - மு.வீரபாண்டியன் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/budget-did-not-meet-expectations-m-veerapandian</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/budget-did-not-meet-expectations-m-veerapandian#comments</comments><guid isPermaLink="false">5a64a211-7aed-4769-9acc-9ec9f05f8315</guid><pubDate>Sun, 09 Aug 2026 15:40:26 +0000</pubDate><atom:updated>2026-08-09T15:40:26.793Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பட்ஜெட்,Budget,மு.வீரபாண்டியன்,M.Veerapandian</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/vglxm6iu/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/vglxm6iu/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல்,</p><p>இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் நாமக்கலில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“தமிழ்நாடு அரசின் பட்ஜெட் நிச்சயமாக எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. இது நிறைவான பட்ஜெட் அல்ல. இருப்பினும் இந்த அரசு புதிய அரசு. அமைச்சர்கள் எல்லோரும் புதியவர்கள், கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கலாம். </p><p>விவசாயிகளின் பயிர்க்கடன் முழுவதுமாக ரத்து செய்யப்பட வேண்டும் என்பதுதான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கை. நிதிநிலை இடம்தராவிட்டாலும், படிப்படியாக முழுவதுமாக விவசாயிகளின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும். தமிழகத்திற்கு மத்திய அரசு உரிய நிதியை வழங்க வேண்டும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p> ]]></content:encoded></item><item><title>நெல்லையில் இந்த ஆண்டு இதுவரை 88 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/88-people-have-been-arrested-under-the-detention-act-in-nellai-so-far-this-year</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/88-people-have-been-arrested-under-the-detention-act-in-nellai-so-far-this-year#comments</comments><guid isPermaLink="false">75a34352-4fac-4717-b19d-8ea0ba5c0b11</guid><pubDate>Sun, 09 Aug 2026 15:35:04 +0000</pubDate><atom:updated>2026-08-09T15:35:04.179Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Tirunelveli,திருநெல்வேலி,arrests,இந்த ஆண்டு,This year,இதுவரை,so far,தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டம்,Tamil Nadu Detention Act</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/wi8j16uc/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/wi8j16uc/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டம், களக்காடு பகுதியில் கஞ்சா விற்பனை, கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 2 பேர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ்</a> கைது செய்யப்பட்டனர். </p><h2>கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல்</h2><p>திருநெல்வேலி மாவட்டம், களக்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த திருநெல்வேலி மாவட்டம், களக்காடு பகுதியைச் சேர்ந்த நயினார் மகன் ஆறுமுகம்(எ) அருண் (வயது 19) மற்றும் முத்துக்குட்டி மகன் முத்து பாலன்(25) ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். </p><h2>2 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் கைது</h2><p>இந்த நிலையில் மேற்சொன்ன 2 பேரும் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் போன்ற சட்டவிரோத குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், களக்காடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கண்ணா காந்தி மேற்சொன்ன நபர்கள் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.யிடம் பரிந்துரை செய்தார். </p><p>அதன்பேரில், திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி பரிந்துரையின் பேரில், திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஆனந்த் மோகன் பிறப்பித்த தடுப்புக் காவல் உத்தரவின் பேரில், மேற்சொன்ன 2 பேரும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். </p><h2>இந்த ஆண்டு இதுவரை 88 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது</h2><p>திருநெல்வேலி மாவட்டத்தில், இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 88 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>காஞ்சிபுரம்: விவசாய நிலத்தில் திரிந்த நட்சத்திர ஆமை மீட்பு - வனத்துறையினர் விசாரணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/star-tortoise-rescued-in-kanchipuram-farmland-forest-officials-investigate</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/star-tortoise-rescued-in-kanchipuram-farmland-forest-officials-investigate#comments</comments><guid isPermaLink="false">c43d4445-8526-4ad8-9762-203efb1b0114</guid><pubDate>Sun, 09 Aug 2026 15:34:06 +0000</pubDate><atom:updated>2026-08-09T15:34:06.287Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காஞ்சிபுரம்,Kancheepuram,agricultural land,விவசாய நிலம்,மீட்பு Recovery,நட்சத்திர ஆமை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/xuz5u8wa/turtule.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ நட்சத்திர ஆமை]]></media:title><media:description type="html"><![CDATA[ விவசாய நிலத்தில் திரிந்த நட்சத்திர ஆமை மீட்பு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/xuz5u8wa/turtule.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>காஞ்சிபுரம், </p><p>காஞ்சிபுரம் அடுத்த அருங்குன்றம் பகுதியில் விவசாய நிலத்திற்குள் புகுந்த அரிய வகை நட்சத்திர ஆமையை பொதுமக்கள் பத்திரமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>விவசாய நிலத்தில் ஆமை</h2><p>காஞ்சிபுரம் மாவட்டம் அருங்குன்றம் கிராமப் பகுதியில் விவசாய நிலங்கள் உள்ளன. இங்குள்ள ஒரு விவசாய நிலத்தில் நேற்று விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் வழக்கம்போல் விவசாயப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள புதர் மறைவில் விசித்திரமான ஆமை ஒன்று நகர்ந்து செல்வதை கண்டு அவர்கள் அருகில் சென்று பார்த்தனர். அதன் ஓட்டின் மீது நட்சத்திர வடிவிலான புள்ளிகள் இருப்பதைக் கண்டு வியப்படைந்தனர்.</p><h2>பொதுமக்கள் மீட்பு</h2><p>அது அரிய வகை <a href="https://www.dailythanthi.com/topic/tortoise">‘நட்சத்திர ஆமை</a>’ என்பதை உணர்ந்த கிராம மக்கள், அதனை பத்திரமாக மீட்டனர். பின்னர், இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினரிடம், பொதுமக்கள் அந்த நட்சத்திர ஆமையை ஒப்படைத்தனர்.</p><h2>வனத்துறை விசாரணை</h2><p>மீட்கப்பட்ட நட்சத்திர ஆமையை வனத்துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>கோவை: 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - 3 பேர் உயிரிழப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-car-plunges-into-300-foot-gorge-3-dead</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-car-plunges-into-300-foot-gorge-3-dead#comments</comments><guid isPermaLink="false">97c0ed31-f4be-4608-8e6f-3a1d840e2c0d</guid><pubDate>Sun, 09 Aug 2026 15:19:07 +0000</pubDate><atom:updated>2026-08-09T15:19:07.245Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,Coimbatore,கோவை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/l8qq8a8p/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/l8qq8a8p/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். </p><p>இந்த விபத்தில் கார் முழுவதுமாக சேதமடைந்த நிலையில், காரில் பயணம் செய்த ஊட்டியை சேர்ந்த போஜன், ராஜ்கண்ணன், ராதிகா ஆகிய 3 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். </p> ]]></content:encoded></item><item><title>நெல் கொள்முதலில் அலட்சியம் காட்டும் அரசு - டி.டி.வி. தினகரன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-negligence-in-paddy-procurement-tdv-dhinakaran-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-negligence-in-paddy-procurement-tdv-dhinakaran-condemns#comments</comments><guid isPermaLink="false">47f928c0-c5a1-4a67-9d5e-12eeeeaabb71</guid><pubDate>Sun, 09 Aug 2026 15:16:32 +0000</pubDate><atom:updated>2026-08-09T15:16:32.530Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல் கொள்முதல்,Paddy procurement,கண்டனம்,அரசு,condemns,டி.டி.வி. தினகரன்,அலட்சியம்,negligence,Goverment,ttv.Dinakaran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/4ulz78n6/103.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ டி.டி.வி. தினகரன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/4ulz78n6/103.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நெல் கொள்முதல் செய்வதில் காட்டும் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது என்று  அ.ம.மு.க. பொதுச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/ttv-dhinakaran">டி.டி.வி. தினகரன்</a> தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p> <h2>கண்டனம்</h2><p>தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் - விவசாயிகளின் உழைப்பில் உற்பத்தியான நெல்லை உரிய நேரத்தில் கொள்முதல் செய்ய மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது.</p><h2>வேதனையை அளிக்கின்றன</h2><p>தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">நெல் கொள்முதல்</a> நிலையங்களில் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் கிடப்பில் போட்டு வைத்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையை அளிக்கின்றன.</p> <h2>விவசாயிகள்</h2><p>இயற்கையின் சவால்களையும், இடர்பாடுகளையும் எதிர்கொண்டு, மக்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் மகத்தான பணியில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், அரும்பாடுபட்டு விளைவித்த நெல்லை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்தி கொண்டிருப்பதே, அவ்வப்போது பெய்யும் மழையில் நெல் மூட்டைகள் நனைந்து வீணாவதற்கு அடிப்படை காரணமாக அமைந்துள்ளது.</p><h2>அலட்சியம்</h2><p>விவசாயப் பெருமக்களின் உழைப்பை மதித்து அவர்களின் நெல்லை உரிய நேரத்தில் கொள்முதல் செய்ய வேண்டிய அரசு நிர்வாகம், நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு ஏற்றி செல்ல வாகனங்கள் இல்லை எனக்கூறி விவசாயிகளை அலைக்கழித்து, நெல் கொள்முதல் செய்வதில் காட்டும் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது.</p> <h2>பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்றம்</h2><p>காவிரி நீர் பற்றாக்குறை, கடுமையான வறட்சி, பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்றம், பொய்த்து போன குறுவை சாகுபடி ஆகியவற்றால் உணவு உற்பத்தி குறைந்து அரிசி விலையும் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், விவசாயிகள் விளைவித்த நெல்லை கூட உடனடியாக கொள்முதல் செய்ய முடியாதது தவெக அரசின் நிர்வாக திறமையின்மையை வெளிப்படுத்துகிறது.</p> <h2> கொள்முதல் </h2><p>எனவே, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் மூட்டைகள் அனைத்தையும் உடனடியாக கொள்முதல் செய்திடுவதோடு, அவற்றை முறைப்படி கிடங்குகளுக்கும், அரவை ஆலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். </p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>12-ந்தேதி உப்பள தொழிலாளர்களுக்கான சிறப்பு சேவை முகாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-service-camp-for-salt-workers-on-the-12th-thoothukudi-collector-information</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-service-camp-for-salt-workers-on-the-12th-thoothukudi-collector-information#comments</comments><guid isPermaLink="false">6634d6c9-a71a-48c5-884b-323e698e787b</guid><pubDate>Sun, 09 Aug 2026 14:39:15 +0000</pubDate><atom:updated>2026-08-09T14:39:15.954Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Collector information,கலெக்டர் தகவல்,Special camp,சிறப்பு முகாம்,service,Salt Workers,உப்பள தொழிலாளர்கள்,சேவை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/xedfyfyv/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உப்பளத் தொழிலாளர்கள் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/xedfyfyv/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி, ஏரல், விளாத்திகுளம் வட்டங்களில் வருகிய ஆகஸ்ட் 12-ந்தேதி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">உப்பள தொழிலாளர்களுக்கான</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88">சிறப்பு சேவை</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D">முகாம்</a> நடைபெற உள்ளது. </p><p>இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><h2>சிறப்பு சேவை முகாம்கள்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டத்தின் பிரதான தொழிலான உப்பு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலனை பேணி காக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு சேவை முகாம்கள் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. </p><h2>வசிப்பிடங்களுக்கு நேரடியாகச் சென்று சேவை</h2><p>அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் அனைத்துத் தரப்பினருக்கும் நேரடியாகச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், உப்பள தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளுக்கே நேரடியாகச் சென்று பல்வேறு அரசுத் துறைகளின் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. </p><p>வருவாய்த்துறை, பொதுவிநியோகத் திட்டம், அடையாள அட்டைச் சேவைகள், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (CMCHIS), மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, சமூக நீதித்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, முன்னோடி வங்கி மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆகிய துறைகள் சார்பில் இச்சேவைகள் வழங்கப்படுகின்றன. </p><h2>தூத்துக்குடி, ஏரல், விளாத்திகுளம் வட்டங்களில் 12-ந்தேதி முகாம்</h2><p>இதன் தொடர்ச்சியாக, கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி உப்பளத் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் முதற்கட்ட முகாம்கள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து, 12.8.2026 அன்று ஏரல் வட்டத்தில் அன்னை பரிபூரண மக்கள் மன்றம் பழையகாயல், தூத்துக்குடி வட்டத்தில் பஞ்சாயத்து மற்றும் கிராம நிர்வாக அலுவலக வளாகம், முள்ளகாடு-02, விளாத்திகுளம் வட்டத்தில் முனியசாமி கோவில் மண்டபம் மேல்மந்தை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. </p><p>மேற்சொன்ன முகாமினை உப்பள தொழிலாளர்கள் பயன்படுத்தி தங்களுக்கு தேவையான அரசு திட்டங்களில் பயனுற்று மற்றும் சான்றிதழ்களை பெற்று பயனடையலாம். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தென்மலை அருகே எஸ்டேட்டில் குட்டி ஈன்ற காட்டு யானை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/baby-elephant-born-in-ambanadu-estate-near-thenmalai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/baby-elephant-born-in-ambanadu-estate-near-thenmalai#comments</comments><guid isPermaLink="false">cf1dc332-5ba4-4083-9dd8-538f81e73caa</guid><pubDate>Sun, 09 Aug 2026 14:35:01 +0000</pubDate><atom:updated>2026-08-09T14:35:01.626Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,calf,குட்டி,The wild elephant காட்டுயானை,Tea Estate,எஸ்டேட்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/dg93zndx/elepphnt.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ காட்டு யானை]]></media:title><media:description type="html"><![CDATA[ தென்மலை அருகே எஸ்டேட்டில் குட்டி ஈன்ற காட்டு யானை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/dg93zndx/elepphnt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p> திருநெல்வேலி,</p><p>தமிழக - கேரள மாநில எல்லைப்பகுதியில், தென்மலை அருகே உள்ள அம்பநாடு எஸ்டேட் பகுதியில்,  பிரசவ வலியால் துடித்த பெண் யானை ஒன்றுக்கு அழகிய குட்டி பிறந்தது. குட்டி பிறந்த அடுத்த கணமே, அதை வேட்டையாடும் விலங்குகளிடமிருந்தும், மனித நடமாட்டத்திலிருந்தும் பாதுகாக்க, கூட்டத்தில் இருந்த மற்ற யானைகள் அனைத்தும் ஒன்று திரண்டன. </p><h2>நடுவழியில் பிரசவ வலி</h2><p> தென்மலை அருகே உள்ள அம்பநாடு தேயிலை தோட்டம் வழியாக ஒரு காட்டு<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D"> யானைக்கூட்டம்</a> வனப்பகுதிக்குள் நகர்ந்து கொண்டிருந்தது. அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு கர்ப்பிணி யானைக்கு திடீரென கடுமையான பிரசவ வலி ஏற்பட்டது.வலி தாங்க முடியாமல் தவித்த அந்த யானை, ஒரு அழகான குட்டியை ஈன்றெடுத்தது.</p><h2>உடனடி பாதுகாப்பு</h2><p> குட்டி பிறந்து கீழே விழுந்த அடுத்த நொடியே, கூட்டத்தில் இருந்த பெரிய யானைகள் அலறியபடி தாய் யானையை நோக்கி ஓடி வந்தன. குட்டியையும், பலவீனமாக இருந்த தாய் யானையையும் நடுவில் நிறுத்திக்கொண்டு, மற்ற யானைகள் அனைத்தும் வெளிப்பக்கமாக நின்றுகொண்டன.</p><h2>ஆக்ரோஷ எச்சரிக்கை</h2><p> எஸ்டேட் தொழிலாளர்களோ அல்லது வனத்துறையினரோ தவறிக்கூட அருகில் நெருங்கி விடக் கூடாது என்பதால், தும்பிக்கையை உயர்த்திப் பிளிறியபடி ஆக்ரோஷமாக எச்சரிக்கை விடுத்தன.  பிறந்த குட்டி யானை உடனடியாக எழுந்து நிற்க முடியாமல் தள்ளாடியது. அது தட்டுத்தடுமாறி எழுந்து, தாயிடம் பால் குடித்து, சொந்தக் காலில் நடக்க தொடங்கும் வரை சுமார் பல மணி நேரம் சக யானைகள் அந்த இடத்தை விட்டு ஒரு அடியும் நகரவில்லை.</p><h2>பாதுகாப்பான பயணம்</h2><p> குட்டி ஓரளவுக்கு நடை பழகியதை உறுதி செய்த பின்னரே, அரணாக நின்ற யானைகள் மெதுவாக அதை தங்களின் நடுவே கூட்டி கொண்டு அடர்ந்த காட்டு பகுதிக்குள் நிதானமாக நடந்து சென்றன.ரப்பர் எஸ்டேட் மற்றும் தேயிலை தோட்டங்களிலும் யானைகள் முகாமிடுவதால், அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அச்சு றுத்தல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், குட்டி யானையுடன் கூட்டம் வனப்பகுதிக்குள் சென்றது எஸ்டேட் மீண்டும் நிர்வாகத்தினருக்கும், தொழிலாளர்களுக்கும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>ஆடி மாதத்தில் மனைவி ஊருக்கு சென்றதும் பக்கத்து வீட்டு பெண்ணுக்கு தூதுவிட்ட இளைஞர்... அடங்காத ஆசையால் தொலைந்த நிம்மதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-young-man-sent-a-message-to-the-woman-next-door-after-his-wife-left-town-during-the-month-of-aadi-uncontrollable-desire-cost-him-his-peace-of-mind</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-young-man-sent-a-message-to-the-woman-next-door-after-his-wife-left-town-during-the-month-of-aadi-uncontrollable-desire-cost-him-his-peace-of-mind#comments</comments><guid isPermaLink="false">e1eb7bc2-690c-4125-8eb7-6195f96e249f</guid><pubDate>Sun, 09 Aug 2026 14:30:37 +0000</pubDate><atom:updated>2026-08-09T14:30:37.683Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மனைவி,ஆடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/1gmt7r52/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/1gmt7r52/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் சுதர்சன். இவரது மனைவி ஆடி மாதத்தை முன்னிட்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்நிலையில் சுதர்சனின் பார்வை தனது பக்கத்து வீட்டில் இருந்த நமீதா என்ற இளம்பெண் மீது விழுந்துள்ளது. அந்த பெண்ணுடன் சுதர்சன் பேச ஆரம்பித்துள்ளார். </p><p>இளம்பெண் நமீதாவை சுதர்சனுக்கு மிகவும் பிடித்துப்போன நிலையில், அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் நேரடியாக நமீதாவிடம், ‘உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. என்னை கல்யாணம் செய்துகொள். நான் உன்னை நன்றாக வைத்து பார்த்துக் கொள்வேன்’ என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். இது குறித்து நமீதா உடனடியாக பதில் எதுவும் தெரிவிக்கவில்லை. </p> <p>ஆனால் சுதர்சன் பேசியதை தனது செல்போனில் நமீதா ரகசியமாக ரெக்கார்டு செய்து வைத்துள்ளார். பின்னர் தனது ஆண் நண்பர் ஒருவரை அழைத்துக் கொண்டு சுதர்சனை சந்தித்த நமீதா, அந்த ஆடியோ பதிவை போட்டுக்காட்டி, ‘என்னிடம் எப்படி இந்த மாதிரியெல்லாம் நீ பேசலாம்? என் காலில் விழுந்து மன்னிப்பு கேள்’ என்று அடித்து மிரட்டியுள்ளார். இதையடுத்து சுதர்சனும் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். </p><p>இருப்பினும் நமீதாவும், அவரது ஆண் நண்பரும் இந்த விஷயத்தை இத்துடன் விடாமல், சுதர்சனிடம் இருந்து பணம் பறிக்க திட்டமிட்டுள்ளனர். இந்த திட்டத்தில் அவரது தோழிகளான வழக்கறிஞர் மோனிஷா, கேரளாவை சேர்ந்த சிவரஞ்சனி மற்றும் ஒரு ஆண் நண்பர் ஆகிய 3 பேரை அவர்கள் சேர்த்துக் கொண்டனர். </p><p>இவர்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டு சுதர்சனை மிரட்டி அவரை ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு வரவழைத்துள்ளனர். சுதர்சன் அந்த இடத்திற்கு சென்றபோது, அவரிடம் ஆடியோ பதிவை போட்டுக்காட்டி, ‘எங்களுக்கு 5 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ஆடியோவை உனது மனைவிக்கு அனுப்பி விடுவோம்’ என்றும் மிரட்டியுள்ளனர். இதற்கு சுதர்சன் சம்மதிக்காத நிலையில், அவரை கட்டி வைத்து, பிளாஸ்டிக் பைப் உள்ளிட்ட பொருட்களை வைத்து அடித்து துன்புறுத்த தொடங்கினர். மேலும் சிகரெட்டால் அவரது உடலில் சூடு வைத்துள்ளனர்.</p><p>அவர்களின் சித்ரவதை தாங்காமல், பணம் தருகிறேன் என்று சுதர்சன் ஒப்புக்கொண்டதையடுத்து அவரை அவர்கள் விடுவித்துள்ளனர். பின்னர் வீட்டிற்கு வந்த சுதர்சன், வேறு வழியின்றி நடந்த அத்தனை விஷயங்களையும் தனது மனைவியிடம் கூறிவிட்டார். அவரது மனைவி முதலில் கோபமடைந்தாலும், தன் கணவரின் நிலையை புரிந்து கொண்டு உடனடியாக இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்று கூறியுள்ளார். </p><p>இதன்படி இருவரும் காவல்நிலையத்திற்கு சென்று இளம்பெண் நமீதா மற்றும் அவரது கூட்டாளிகள் மீது புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி நமீதா, மோனிஷா, சிவரஞ்சனி, கணேஷ் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 5 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஆடி மாதத்தில் மனைவி ஊருக்கு சென்ற நேரத்தில், வேறொரு பெண் மீது ஏற்பட்ட ஆசை காரணமாக இளைஞர் நிம்மதியை தொலைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்: வீடு புகுந்து தாய், மகளை தாக்கிய வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/angry-over-rejection-of-love-youth-arrested-for-breaking-into-home-and-attacking-mother-and-daughter</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/angry-over-rejection-of-love-youth-arrested-for-breaking-into-home-and-attacking-mother-and-daughter#comments</comments><guid isPermaLink="false">ac77b8a1-2519-4fdb-b31b-768ebb010b01</guid><pubDate>Sun, 09 Aug 2026 14:23:30 +0000</pubDate><atom:updated>2026-08-09T14:23:30.094Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தாக்குதல்,Thoothukudi,தூத்துக்குடி,Youth arrested,வாலிபர் கைது,attack,Love,கொலை மிரட்டல்,Rejection,Death threats,காதலிக்க மறுப்பு,Anger,வீடு புகுந்து,ஆத்திரம்,house breaking</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/dtv3g4y1/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/dtv3g4y1/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">காதலிக்க மறுத்ததால்</a> இளம்பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து அவரையும், அவரது தாயாரையும் தாக்கி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D">கொலை மிரட்டல்</a> விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>வாலிபரை காதலிக்க மறுத்த இளம்பெண்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், ஆறுமுகநேரி, செல்வராஜபுரம் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் இசக்கி ராஜேஷ் (வயது 25). கூலித் தொழிலாளியான இவர், அதே பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண்ணைக் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த இளம்பெண் அந்த வாலிபரிடம் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார்.</p><h2>வீடு புகுந்து தாய், மகளை தாக்கி, கொலை மிரட்டல்</h2><p>இதனால் ஆத்திரமடைந்த வாலிபர், இளம்பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த இளம்பெண்ணைத் தாக்கி, "என்னை ஏன் காதலிக்க மறுக்கிறாய்?" எனக் கூறி கீழே தள்ளியுள்ளார். இதைத் தடுக்க முயன்ற அந்த இளம்பெண்ணின் தாயாரையும் அந்த வாலிபர் தாக்கியுள்ளார். மேலும், தன்னைத் திருமணம் செய்யாவிட்டால் தாய், மகள் 2 பேரையும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.</p><h2>வாலிபர் கைது</h2><p>இதுகுறித்த புகாரின் பேரில், ஆறுமுகநேரி காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோயில்பிள்ளை வழக்குப்பதிவு செய்து தாய், மகளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் தேசியக்கொடி யாத்திரை - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tricolour-rally-in-chennai-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tricolour-rally-in-chennai-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">abf6c10b-81a8-4011-9973-48d26a51bb0b</guid><pubDate>Sun, 09 Aug 2026 13:54:17 +0000</pubDate><atom:updated>2026-08-09T13:54:17.469Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,national flag,தேசியக்கொடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/o7q9iwzj/112.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/o7q9iwzj/112.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> சென்னையில் தேசியக்கொடி யாத்திரை நடைபெற்றது.  இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன் </a>வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2> மூவர்ணம் இயக்கம்</h2><p>மாபெரும் நமது<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF"> தேசியக்கொடியின்</a> யாத்திரை சென்னையில் நம் பிரதமர் மோடி விடுத்துள்ள அழைப்பினை ஏற்று, தேசத்தின் மீது கொண்டுள்ள பேரன்பையும், அளவற்ற நாட்டுப்பற்றையும் பறைசாற்றும் வகையில், “ஹர் கர் திரங்கா” – வீடு தோறும் மூவர்ணம் இயக்கத்தின் ஒரு பகுதியாக மாபெரும் திரங்கா யாத்திரை இன்று சென்னையில் எழுச்சியுடன் நடைபெற்றது.</p><h2>கமலாலயம்</h2><p>தி.நகர் ம.பொ.சி. சிலையிலிருந்து, தமிழக பாஜக மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயம் வரை நடைபெற்ற இந்த மாபெரும் மூவர்ணக் கொடி யாத்திரை, தேசபக்தியின் பேரெழுச்சியாகவும், தேசிய உணர்வின் சங்கமமாகவும் திகழ்ந்தது.</p> <h2>திருவிழா</h2><p>எங்கு பார்த்தாலும் பறந்த மூவர்ணக்கொடிகள்… எதிரொலித்த தேசபக்தி முழக்கங்கள்… பெருக்கெடுத்த மக்களின் பேராதரவு…இவை அனைத்தும் இணைந்து சென்னையின் வீதிகளை தேசப்பற்றின் திருவிழாவாக மாற்றின! </p><p>இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திரங்கா யாத்திரையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் மற்றும் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மற்றும் தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் பொங்குலேட்டி சுதாகர் ரெட்டி மற்றும் மாநில மற்றும் மாவட்ட, மண்டல் நிர்வாகிகள், காரியகர்த்தாக்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.</p><p>ஒவ்வொரு இல்லத்திலும் மூவர்ணம் பறக்கட்டும்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் &quot;மியூல் வங்கி கணக்கு&quot; வைத்திருந்த 837 சைபர் குற்றவாளிகள் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/837-cybercriminals-with-mule-bank-accounts-arrested-in-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/837-cybercriminals-with-mule-bank-accounts-arrested-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">466197cf-4e27-49f6-a039-765d9b5051d8</guid><pubDate>Sun, 09 Aug 2026 13:05:36 +0000</pubDate><atom:updated>2026-08-09T13:05:36.630Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சைபர் கிரைம்,தமிழ்நாடு காவல்துறை,குற்றவாளிகள் கைது,Criminal Arrested,Tamil Nadu Police Department,நடவடிக்கை action,ciber crime</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/n9xu4yuo/cyber.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மகேஷ் குமார் அகர்வால்]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழகத்தில் "மியூல் வங்கி கணக்கு" வைத்திருந்த 837 சைபர் குற்றவாளிகள் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/n9xu4yuo/cyber.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் "மியூல் வங்கி கணக்கு" வைத்திருந்த 837 சைபர் குற்றவாளிகள் கைது. இது தொடர்பாக, காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>மியூல் வங்கி கணக்கு</h2><p>மாநிலம் முழுவதும் "மியூல் வங்கி கணக்கு" வைத்திருப்பவர்களுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் சைபர் குற்ற வலையமைப்பை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">தமிழ்நாடு காவல்துறையின்</a> இணையவழி குற்ற பிரிவு சார்பில் 06.08.2026 மற்றும் 07.08.2026 ஆகிய இரண்டு நாட்களில் 48 மணி நேர "மாநிலம் முழுவதும் மியூல் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை" மேற்கொள்ளப்பட்டது. இந்நடவடிக்கையின் மூலம் மாநிலம் முழுவதும் 837 சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.</p><h2>சிறப்பு நடவடிக்கை</h2><p>சைபர் மோசடிகள் மூலம் பெறப்படும் பணத்தை பெறுதல். பரிமாற்றம் செய்தல், பல்வேறு கணக்குகளுக்கு மாற்றுதல் மற்றும் பணமாக எடுத்தல் போன்ற செயல்களுக்கு வங்கி கணக்குகளை திறந்து கொடுப்பது. பயன்படுத்த அனுமதிப்பது. இயக்குவது மற்றும் இதற்கு உடந்தையாக இருப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பதே இச்சிறப்பு நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.</p><h2>மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு</h2><p>குறிப்பாக, பணம் அல்லது கமிஷன் பெற்றுக்கொண்டு வங்கி கணக்குகளை திறந்து கொடுத்தல் அல்லது பயன்படுத்த அனுமதித்தல் போன்ற செயல்களும் இந்நடவடிக்கையின் கீழ் கண்காணிக்கப்பட்டன. இச்சிறப்பு நடவடிக்கை, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் /படைத்தலைவர் மகேஷ் குமார் அகர்வால்,ஐ.பி.எஸ் உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. </p> <h2>நிகழ்நேர கண்காணிப்பு</h2><p>சைபர் கிரைம் பிரிவினரால் முறையாக திட்டமிடப்பட்ட இந்நடவடிக்கை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகரங்களிலும் ஒருங்கிணைந்த முறையில் மேற்கொள்ளப்பட்டது. இணையவழி குற்ற பிரிவு டி.ஜி.பி  பாலா நாகதேவி, ஐ.பி.எஸ் இணையவழி குற்ற பிரிவு தலைமையகத்திலிருந்து இம்முழு நடவடிக்கையையும் மேற்பார்வையிட்டு, அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகரங்களுடன் சீரான ஒருங்கிணைப்பு மற்றும் நிகழ்நேர கண்காணிப்பை உறுதி செய்தார்.</p> <h2>பண பரிவர்த்தனை</h2><p>இந்த பெரிய அளவிலான நடவடிக்கையானது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் தேசிய சைபர் குற்றப்புகார் இணையதளத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட குற்றவாளிகளின் சுயவிவர பகுப்பாய்வை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்டது. மேலும், சைபர் குற்ற வலையமைப்புகளின் நிதி பரிவர்த்தனைகள் தொடர்பான தரவுகளை பகுப்பாய்வு செய்து கண்டறியப்பட்ட பண பரிவர்த்தனை தடங்கள் மூலம் இச்சுயவிவரப்பகுப்பாய்வு மேலும் வலுப்படுத்தப்பட்டது.</p> <h2>சைபர் குற்றவாளிகள் மோசடி</h2><p>சைபர் குற்றவாளிகள் மோசடி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் பெறப்படும் பணத்தை பெறுவதற்கும். பரிமாற்றம் செய்வதற்கும், பல்வேறு கணக்குகளுக்கு மாற்றி அதன் மூலத்தை மறைப்பதற்கும், பணமாக எடுத்துக்கொள்வதற்கும் பயன்படுத்தும் வங்கி கணக்குகள் "மியூல் வங்கி கணக்குகள்" எனப்படுகின்றன. தங்களது வங்கி கணக்குகளை இதுபோன்ற பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்த அனுமதிக்கும் நபர்கள், சட்டவிரோத பண பரிவர்த்தனைக்கு வழிவகுக்கும் வகையில் சைபர் குற்றவாளிகளுக்கு உதவுகின்றனர்.</p> <h2> 837 சைபர் குற்றவாளிகளை கைது</h2><p>இச்சிறப்பு நடவடிக்கையில், மொத்தம் 9,804 தேசிய இணையக் குற்றப் புகாரளிப்பு இணையதளம் புகார்களுடன் தொடர்புடைய, .545,27,27,809/-அளவிலான மோசடி பண பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய நபர்கள் குறிவைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டனர். இந்நடவடிக்கையின் போது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களும், அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்களின் மேற்பார்வையில் செயல்பட்டு. சைபர் குற்ற வழக்குகளில் பதிவு செய்யப்பட்ட 601 முதல் தகவல் அறிக்கைகளில்  தொடர்புடைய 837 சைபர் குற்றவாளிகளை கைது செய்தனர். மேலும், சைபர் மோசடிகளுக்கு மியூல் வங்கி கணக்குகளை பயன்படுத்துதல் மற்றும் இயக்குதல் ஆகியவற்றை தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் 157 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.</p><h2>58 வங்கி கணக்கு</h2><p>மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இச்சிறப்பு நடவடிக்கையின் போது, 204 செல்போன்கள். 185 சிம் கார்டுகள், 4 லேப்டாப்/டெஸ்க்டாப் கணினிகள். 1 பென் டிரைவ்/சேமிப்பு சாதனம், ரூ.1,02,000/- ரொக்கம், 114 வங்கி பாஸ்புக்குகள், 29 காசோலைப் புத்தகங்கள். 73 ஏ.டி.எம்/டெபிட் கார்டுகள், 1 கிரெடிட் கார்டு மற்றும் 2 இதர மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், தொடர் விசாரணை மற்றும் பகுப்பாய்விற்காக 155 செல்போன் எண்கள் மற்றும் 58 வங்கி கணக்கு விவரங்கள் கண்டறியப்பட்டன.</p><h2>முக்கிய சாதனை</h2><p>இந்த கைது நடவடிக்கைகள். நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ஒருங்கிணைக்கப்பட்ட சைபர் குற்ற வலையமைப்பை சீர்குலைத்து, அதன் செயல்பாடுகளை முறியடிப்பதில் ஒரு முக்கிய சாதனையாகும். சைபர் குற்றச் சூழலின் முக்கிய அங்கமான மியூல் வங்கி கணக்குகள் மூலம் சட்டவிரோத பணத்தைப் பெறுதல், பல்வேறு கணக்குகளுக்கு மாற்றுதல் மற்றும் பரிமாற்றம் செய்தல் ஆகியவற்றைத் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கை, இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய ஒருங்கிணைந்த நடவடிக்கைகளில் ஒன்றாகும்.</p><h2>டிஜிட்டல் ஆதாரங்கள்</h2><p>கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட டிஜிட்டல் ஆதாரங்கள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு. குற்ற வலையமைப்பின் அடுத்தடுத்த அடுக்குகளில் செயல்படும் நபர்கள் மற்றும் நாடு முழுவதும் அவர்களுடன் தொடர்புடைய கூட்டாளிகளை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனுடன், இவ்வலையமைப்பில் தொடர்புடைய மேலும் பலரை கண்டறிந்து கைது செய்தல், மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்டெடுத்தல் மற்றும் நாடு முழுவதும் செயல்படும் சைபர் குற்ற உள்ள தொடர்புகளை கண்டறிதல் உள்ளிட்ட வலையமைப்புகளுடன் நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><h2>சட்ட நடவடிக்கை</h2><p>கைது செய்யப்பட்ட நபர்கள் மீது சட்ட விதிகளின்படி கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், வங்கி கணக்குகளை பிறருக்கு வழங்குதல் அல்லது தவறாகப் பயன்படுத்த அனுமதித்தல் மூலம் சைபர் மோசடிகளுக்கு உதவும் நபர்களுக்கு இக்கைது நடவடிக்கைகள் ஒரு வலுவான எச்சரிக்கையாகவும் தடுப்பு நடவடிக்கையாகவும் அமையும்.</p> <h2>பாதுகாப்பை உறுதி செய்தல் </h2><p>மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இந்த "மியூல் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை". சைபர் குற்றங்களுக்கு ஆதரவாக செயல்படும் நிதி உள்கட்டமைப்பை சீர்குலைத்தல். மாநிலத்தின் சைபர் குற்ற அமலாக்க நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துதல் மற்றும் இணையவழியில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றில் ஒரு முக்கியமான முன்னெடுப்பாகும்.</p> <h2>பொதுமக்களுக்கான அறிவுரை</h2><p><strong>கமிஷனுக்காக உங்கள் வங்கி கணக்கை ஒருபோதும் வழங்க வேண்டாம்:</strong></p><p>கமிஷன் அல்லது பணப் பலனுக்காக உங்கள் வங்கி கணக்கு விவரங்களை மற்றவர்களுடன் பகிரவோ அல்லது உங்கள் கணக்கை பயன்படுத்த அனுமதிக்கவோ வேண்டாம்.</p> <p><strong>பண ஆதாயத்திற்காக வங்கி கணக்கு விவரங்களை வழங்க வேண்டாம்:</strong></p><p>பணப் பலனுக்காக வங்கி கணக்கு விவரங்களைப் பகிர்வது அல்லது உங்கள் வங்கி கணக்கை பிறர் பயன்படுத்த அனுமதிப்பது, அது தெரிந்தோ தெரியாமலோ செய்யப்பட்டிருந்தாலும், சைபர் குற்றங்களுக்கு வழிவகுக்கக்கூடும் மற்றும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படலாம்.</p> <p><strong>ஆன்லைன் சூதாட்டம் மற்றும் பண பரிவர்த்தனை கொண்ட கேமிங் செயலிகளை பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்கவும்:</strong> </p><p>பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படும் ஆன்லைன் சூதாட்டம் அல்லது கேமிங் செயலிகளை பயன்படுத்தும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதுபோன்ற தளங்கள் மூலம் பணத்தை பெறுதல் அல்லது பரிமாற்றம் செய்தல் சைபர் குற்ற வலையமைப்புகளுடன் தொடர்புடையதாக இருக்கக்கூடும். இதனால் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு ஆளாகும் வாய்ப்பும் உள்ளது. எனவே. பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து, இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><h2>கடவுச்சொல் பகிர வேண்டாம்: </h2><p>ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP) அல்லது இதர முக்கியமான ரகசிய குறியீடுகளை யாரிடமும் பகிர வேண்டாம். தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கவும்: கடவுச்சொற்கள், (OTP), வங்கி கணக்கு விவரங்கள் உள்ளிட்ட முக்கியமான தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிர வேண்டாம்.</p><p><strong>ஆன்லைன் கடன் வழங்குவதாக கூறும் அறிமுகமில்லாத நபர்களின் அழைப்புகளில் எச்சரிக்கையாக இருக்கவும்:</strong></p><p>அறிமுகமில்லாத நபர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு கடன் வழங்குவதாகக் கூறி புதிய வங்கி கணக்கு/நடப்புக் கணக்கு (Current Account) தொடங்குமாறோ அல்லது இணைய வங்கி சேவை தொடர்பான ரகசிய விவரங்களைப் பகிருமாறோ கேட்டால், அதற்கு பதிலளிக்க வேண்டாம். இத்தகைய கோரிக்கைகள் உங்கள் வங்கி கணக்கு தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு வழிவகுக்கக்கூடும். </p><p><strong>பயன்பாட்டில் இல்லாத வங்கி கணக்குகளை மூடவும்:</strong> </p><p>பயன்பாட்டில் இல்லாத அல்லது நீண்ட காலமாக பரிவர்த்தனை மேற்கொள்ளப்படாத வங்கி கணக்குகளை உரிய வங்கி நடைமுறைகளின்படி மூடுமாறு கணக்கு வைத்திருப்பவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இத்தகைய செயலற்ற கணக்குகள் சைபர் குற்றவாளிகளால் குற்றச் செயல்களின் மூலம் பெறப்பட்ட பணத்தைப் பெறுவதற்கும் பரிமாற்றம் செய்வதற்கும் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.</p><h2>புகார் அளித்தல்</h2><p>நீங்கள் சைபர் குற்றத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், சைபர் கிரைம் பிரிவின் கட்டணமில்லா உதவி எண்ணான 1930-ஐ தொடர்பு கொள்ளவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உங்கள் புகாரைப் பதிவு செய்யவும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் தீக்குளித்த முதியவர் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/elderly-man-dies-after-setting-himself-on-fire-at-thiruvottriyur-police-station</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/elderly-man-dies-after-setting-himself-on-fire-at-thiruvottriyur-police-station#comments</comments><guid isPermaLink="false">71b46d2d-1cc4-45fe-8338-cbd9ce8f5d93</guid><pubDate>Sun, 09 Aug 2026 12:36:08 +0000</pubDate><atom:updated>2026-08-09T12:36:08.657Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Fire,police station,போலீஸ் நிலையம்,திருவொற்றியூர்,Elderly man dies,முதியவர் உயிரிழப்பு,தீக்குளித்து,Thiruvottriyur</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/ke2t57px/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதியவர் தீக்குளித்து உயிரிழப்பு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/ke2t57px/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவொற்றியூர், </p><p>சென்னை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">திருவொற்றியூர்</a> போலீஸ் நிலையத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4">தீக்குளித்த </a><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D">முதியவர்</a> மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். </p><h2>போலீஸ் நிலையத்தில் புகார்</h2><p>சென்னை திருவொற்றியூர், காலடிப்பேட்டையை சேர்ந்தவர் குமார் (வயது 67). இவருக்கு உஷா, பாரதி, மாரி ஆகிய 3 மனைவிகளும், 5 பிள்ளைகளும் உள்ளனர். ஆனாலும் இவர்கள் யாரும் தனக்கு உணவு, தண்ணீர் கொடுத்து கவனிக்காமல் வீட்டை விட்டு விரட்டி விட்டதாக நேற்று முன்தினம் மதியம் திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். </p><h2>தீக்குளித்த முதியவர் உயிரிழப்பு</h2><p>பின்னர் திடீரென போலீஸ் நிலைய வளாகத்தில் அவர் தயாராக வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளித்தார். அதிர்ச்சி அடைந்த போலீசார், அவரது உடலில் எரிந்த தீயை அணைத்து, அவரை சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் குமார் பரிதாபமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">உயிரிழந்தார்</a>. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்; சட்டமன்றத்தில் நாளை தனித்தீர்மானம் கொண்டு வரும் முதல் அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/priority-for-tamil-thai-vazhthu-chief-minister-vijay-to-move-a-special-resolution-in-the-assembly-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/priority-for-tamil-thai-vazhthu-chief-minister-vijay-to-move-a-special-resolution-in-the-assembly-tomorrow#comments</comments><guid isPermaLink="false">e5543c4c-7165-4c4a-bdbc-c7fc8936f5da</guid><pubDate>Sun, 09 Aug 2026 12:11:14 +0000</pubDate><atom:updated>2026-08-09T12:11:14.681Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தனித்தீர்மானம்,சட்டமன்றம்,தமிழ்த்தாய் வாழ்த்து,CM Vijay,முதல் அமைச்சர் விஜய்,tamil thai valthu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/a6m4nkpw/vijay.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல் அமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/a6m4nkpw/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் முதலில் கட்டாயம் பாடப்பட வேண்டும் என வலியுறுத்தி சட்டமன்றத்தில் முதல் அமைச்சர் விஜய் நாளை தனித்தீர்மானம் கொண்டு வருகிறார். ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் முதலில் வந்தே மாதரம் பாடப்படுவது தமிழக அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பிய சூழலில், நாளை சட்டமன்றத்தில் முதல் அமைச்சர்  விஜய் தனித்தீர்மானம் கொண்டு வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.</p><p>கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் , பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யும் விதமாக  இந்த தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.  தீர்மானத்தின் மீது அனைத்து கட்சி எம்.எல்.ஏக்களும் பேசுவார்கள். இதையடுத்து சட்டமன்றத்தில் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்படும் எனத்தெரிகிறது.</p>]]></content:encoded></item><item><title>முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 123 அடியை நெருங்கியது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mullaipperiyaaru-dam-water-level-nears-123-feet</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mullaipperiyaaru-dam-water-level-nears-123-feet#comments</comments><guid isPermaLink="false">bf0e2da2-db73-49f3-ac7f-ef4129f313c7</guid><pubDate>Sun, 09 Aug 2026 11:43:58 +0000</pubDate><atom:updated>2026-08-09T11:43:58.552Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Water level increased,நீர்மட்டம் உயர்வு,முல்லைப்பெரியாறு அணை,Mullaperiyar Dam,விவசாயிகள் மகிழ்ச்சி,farmers are happy</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/xx24u7vg/mullaiperiyar.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ முல்லைப்பெரியாறு அணை]]></media:title><media:description type="html"><![CDATA[ முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 123 அடியை நெருங்கியது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/xx24u7vg/mullaiperiyar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கூடலூர்,</p><p>கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">முல்லைப்பெரியாறு அணையின்</a> நீர்மட்டம் தற்போது வேகமாக உயர்ந்து 123 அடியை நெருங்கியுள்ளது. இதனால் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.</p><h2>பலத்த மழை</h2><p>முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, பெரியாறு மற்றும் தேக்கடி ஆகிய அணை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையினால் அணைக்கு வரும் நீரின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது. </p><h2>நீர்மட்டம் உயர்வு</h2><p>தொடர் நீர்வரத்து காரணமாக, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் தற்போது வேகமாக உயர்ந்து 123 அடியை எட்டும் நிலையை நெருங்கியுள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 142 அடிகளாக உள்ள நிலையில், தற்போதைய நீர்மட்ட உயர்வு பாசனப்பகுதி விவசாயிகளிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>விவசாயிகள் மகிழ்ச்சி</h2><p>அணையிலிருந்து தமிழக பகுதிக்கு குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. விவசாயிகள் மகிழ்ச்சிஅணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி மற்றும் தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தங்களது விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அணைக்கு வரும் நீரின் அளவை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.</p><h2>வைகை அணை</h2><p>71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 34.06 அடியாக உள்ளது. 40 கன அடி நீர் வருகிறது. குடிநீர் திட்டங்களுக்காக 126 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 555 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 28.10 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 55.76 அடியாக உள்ளது. 4 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 26.25 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. மஞ்சளாறு 4. உத்தமபாளையம் 5.8.  கூடலூர் 5.6, பெரியாறு அணை 17, தேக்கடி 12.6, சண்முகாநதி 7.4 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>தாளவாடி அருகே யானை தாக்கி விவசாயி பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmer-killed-by-elephant-near-thalawadi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmer-killed-by-elephant-near-thalawadi#comments</comments><guid isPermaLink="false">56a2be92-3409-42ce-95f5-7de8c1e2d943</guid><pubDate>Sun, 09 Aug 2026 11:40:27 +0000</pubDate><atom:updated>2026-08-09T11:40:27.904Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>farmer,விவசாயி,dies,Erode,ஈரோடு,தாளவாடி,Garden,தோட்டம்,elephant attack,யானை தாக்கி பலி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/e152slhm/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ யானை தாக்கி விவசாயி பலி ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/e152slhm/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,  </p><p>ஈரோடு மாவட்டம், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF">தாளவாடி</a>, ஜீரகள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட காமையன்புரம் அருகே ஒற்றை காட்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF">யானை தாக்கி</a>யதில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF">விவசாயி பலி</a>யானார். </p><h2>மஞ்சள், உருளைக்கிழங்கு மக்காச்சோளம் சாகுபடி</h2><p>ஈரோடு மாவட்டம், தாளவாடி, ஜீரகள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட காமையன்புரம் கிராமத்தை சேர்ந்தவர் பசவசெட்டி (வயது 62). இவர் 5 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வருகிறார். தற்போது தன்னுடைய தோட்டத்தில் மஞ்சள், உருளைக்கிழங்கு மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளார். </p><h2>யானை மிதித்து விவசாயி பலி</h2><p>இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் ஒற்றை காட்டு யானை தோட்டத்துக்குள் புகுந்துள்ளது. இதனை கண்ட விவசாயி டார்ச் லைட் அடித்து யானையை விரட்ட முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென யானை விவசாயியை துரத்தி காலால் மிதித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். </p>]]></content:encoded></item></channel></rss>