<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 19 Sep 2026 10:19:24 +0000</lastBuildDate><item><title>காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: காந்தி கிராமம் நடுநிலைப்பள்ளியில் அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆய்வு..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/expansion-of-breakfast-scheme-minister-jagadeeswari-inspects-gandhigram-middle-school</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/expansion-of-breakfast-scheme-minister-jagadeeswari-inspects-gandhigram-middle-school#comments</comments><guid isPermaLink="false">0ea7b82f-5c8a-4e4d-9758-6394aac361bf</guid><pubDate>Sat, 19 Sep 2026 10:16:12 +0000</pubDate><atom:updated>2026-09-19T10:16:12.373Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,காலை உணவுத் திட்டம்,breakfast scheme,ஜெகதீஸ்வரி,அமைச்சர் ஜெகதீஸ்வரி,Jagadeeswari,Kamarajar Breakfast Scheme,Minister Jagadeeswari</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/mzhe6n7r/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ஜெகதீஸ்வரி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/mzhe6n7r/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காமராஜர் காலை உணவுத் திட்டத்தினை விரிவாக்கம் செய்து முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைக்கவுள்ளதை முன்னிட்டு, காந்தி கிராமம் சென்னை நடுநிலைப்பள்ளியில் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கு. ஜெகதீஸ்வரி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். </p><h2>பள்ளியில் அமைச்சர் ஆய்வு</h2><p>இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் வருகின்ற 22.09.2026 அன்று அடையாறு மண்டலம், காந்தி கிராமம் சென்னை நடுநிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தினை விரிவாக்கம் செய்து தொடங்கி வைக்கவுள்ளதை முன்னிட்டு இப்பள்ளியில் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கு. ஜெகதீஸ்வரி இன்று (19.09.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். பின்னர் பள்ளியில் பயிலும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.</p><p>இந்த ஆய்வின்போது, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் ம.மரியம் பல்லவி பல்தேவ், சமூக நல இயக்குநர் டாக்டர் ரா.பிருந்தா தேவி, இணை ஆணையாளர் (கல்வி) க. கற்பகம், மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madhurantakam-tarapuram-by-elections-final-list-of-candidates-released</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madhurantakam-tarapuram-by-elections-final-list-of-candidates-released#comments</comments><guid isPermaLink="false">4eb9be41-a7f6-488a-b24a-7247f9f3d862</guid><pubDate>Sat, 19 Sep 2026 10:08:44 +0000</pubDate><atom:updated>2026-09-19T10:08:44.807Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இடைத்தேர்தல்,மதுராந்தகம்,Tarapuram,தாராபுரம்,candidates,by-elections,Madhurandakam,Final list release,இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/3mh6zkru/39.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/3mh6zkru/39.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.</p><h2>மதுராந்தகம்</h2><p>செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதியில் அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இங்கு வேட்பாளர்களாக த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பில் பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சுகந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமன் உள்ளிட்ட 48 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் 28 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது.</p><h2>தாராபுரம்</h2><p>அதேபோல் இடைத்தேர்தல் நடைபெறும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் கடந்த 9-ந் தேதி தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தொடங்கியது. கடந்த 16-ந்தேதி வேட்புமனு தாக்கல் முடிந்தது. அதன்படி, த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு மற்றும் நா.த.க. வேட்பாளர்கள் என மொத்தம் 51 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை 17-ந் தேதி நடந்தது. இதில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் சத்தியபாமா, தி.மு.க. வேட்பாளர் சுகன்யா, அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் லட்சுமணன் உள்பட 22 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. மீதமுள்ள 29 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.</p><h2>இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு</h2><p>மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D">இறுதி வேட்பாளர் பட்டியல் </a>வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 28 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை 27-ஆக ஆனது. தாராபுரம் தொகுதியில் 14 சுயேட்சை வேட்பாளர்கள் 22 பேர் போட்டியிடுகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: பெயிண்ட் ஏற்றிச் சென்ற மினி லாரி கவிழ்ந்து விபத்து - ஓட்டுநர் படுகாயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-mini-truck-carrying-paint-overturns-driver-critically-injured</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-mini-truck-carrying-paint-overturns-driver-critically-injured#comments</comments><guid isPermaLink="false">1eff7ade-2acf-42aa-b6db-453bfd54438d</guid><pubDate>Sat, 19 Sep 2026 10:05:08 +0000</pubDate><atom:updated>2026-09-19T10:05:08.836Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,Thoothukudi,தூத்துக்குடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/nl31y594/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/nl31y594/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூரில் பெயிண்ட் வாளிகளை ஏற்றிச் சென்ற மினி லாரி, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புக் கம்பியில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மதுரையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற அந்த மினி லாரியை மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் ஓட்டிச் சென்றார். </p> <p>இந்த விபத்தில் லாரியில் ஏராளமான பிளாஸ்டிக் வாளிகளில் வைக்கப்பட்டிருந்த பெயிண்ட் சாலையில் கொட்டி ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. விபத்தில் ஓட்டுநர் சக்திவேல் படுகாயமடைந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்த சக்திவேலை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். </p> <p>சாலையில் சிதறிக் கிடந்த பெயிண்ட் வாளிகளை நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் அகற்றிய நிலையில், அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>நெல்லையில் சாதி ரீதியாக பேருந்து நிலையத்தில் மாணவர்கள் மோதல்: 10-க்கும் மேற்பட்டோர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/caste-based-clash-between-students-at-nellai-bus-stand-over-10-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/caste-based-clash-between-students-at-nellai-bus-stand-over-10-arrested#comments</comments><guid isPermaLink="false">46d2ec1d-b76b-4bdb-a7a6-5abfcc072c8b</guid><pubDate>Sat, 19 Sep 2026 09:52:00 +0000</pubDate><atom:updated>2026-09-19T09:52:00.042Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,students,மோதல்,பேருந்து நிலையம்,bus stand,fight,மாணவர்களிடையே</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/yz92xkz5/35.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ நெல்லை]]></media:title><media:description type="html"><![CDATA[ பிளஸ்-2 மாணவரை கட்டையால் அடித்த சக மாணவன் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/yz92xkz5/35.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>சாதி ரீதியாக நெல்லை பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>மாணவர்களிடையே மோதல்</h2><p>திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் தினமும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் பேருந்துக்காக காத்திருப்பது வழக்கம். இந்த நிலையில், தச்சநல்லூர், கரிசல்குளம், பிராஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களில் சிலர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D">இன்ஸ்டாகிராமில்</a> சாதி ரீதியான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிர்ந்துள்ளனர். </p><p>இதனால் இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த முன்விரோதம் காரணமாக பேருந்து நிலையத்தில் மாணவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், அது கைகலப்பாக மாறியது.</p><h2>விசாரணை</h2><p>இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது குறித்து நெல்லை சந்திப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மோதலில் ஈடுபட்ட மாணவர்களை மடக்கி பிடித்தனர். சிலர் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில், 10-க்கும் மேற்பட்ட மாணவர்களை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a> பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். </p><p>கைது செய்யப்பட்ட அனைவரும் 16 முதல் 17 வயதுடைய சிறார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், மோதலுக்கான காரணம் மற்றும் இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து நெல்லை சந்திப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை: பாலியல் உறவுக்கு அழைத்த நபர் - நம்பி சென்ற இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-young-woman-stabbed-after-trusting-man-who-invited-her-for-sexual-relations</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-young-woman-stabbed-after-trusting-man-who-invited-her-for-sexual-relations#comments</comments><guid isPermaLink="false">74f2681c-ea4e-447c-8983-d6eb7b676a6c</guid><pubDate>Sat, 19 Sep 2026 09:43:25 +0000</pubDate><atom:updated>2026-09-19T09:43:25.407Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/e28e9yo5/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/e28e9yo5/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையை சேர்ந்த 31 வயது பெண்ணை, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் செல்போனில் தொடர்புகொண்டு பாலியல் உறவுக்கு வருமாறு அழைத்ததாக கூறப்படுகிறது. இதனை நம்பி அரும்பாக்கத்தில் உள்ள விடுதிக்கு அந்த பெண் சென்றுள்ளார். பின்னர் வெளியே வந்தபோது அவரை பின்தொடர்ந்து வந்த நபர், அந்த பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.</p><p>ஆனால் அப்பெண் பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த நபர், மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை குத்திவிட்டு தப்பியோடியுள்ளார். காயமடைந்த பெண்ணை பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் மீட்டு, சிகிச்சைக்காக கே.எம்.சி. மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அரும்பாக்கம் போலீசார், பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 8 கொலைகள்: சட்டம் ஒழுங்கு முற்றிலும் செயலிழப்பு - கனிமொழி எம்.பி.</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/8-murders-in-just-the-last-24-hours-law-and-order-has-completely-collapsed-mp-kanimozhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/8-murders-in-just-the-last-24-hours-law-and-order-has-completely-collapsed-mp-kanimozhi#comments</comments><guid isPermaLink="false">65d45250-21ba-4117-8b93-8aebfad523cf</guid><pubDate>Sat, 19 Sep 2026 09:32:08 +0000</pubDate><atom:updated>2026-09-19T09:32:08.722Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,கனிமொழி எம்.பி.,Kanimozhi MP,கனிமொழி,Kanimozhi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/0zhlla55/kanimoli.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கனிமொழி எம்.பி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/0zhlla55/kanimoli.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதாக கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். </p><h2>24 மணிநேரத்தில் 8 கொலைகள்</h2><p>இது தொடர்பாக தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 8 கொலைகள் நடந்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் செயலிழந்துபோயுள்ளது என்பதற்கு இந்தக் கொலைகள்தான் சாட்சி.</p><h2>காவல்துறை செயல்படுகிறதா?</h2><p>ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. தமிழ்நாட்டின் Growth Rate-ஐ உயர்த்துவார்கள் என நம்பி வாக்களித்த மக்களுக்கு, தினமும் Crime Rate -ஐ உயர்த்தி தண்டனை கொடுத்துக் கொண்டிருக்கிறது தவெக அரசு.</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழ்நாட்டில் </a>மக்களின் பாதுகாப்பு அன்றாடம் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கும்போது, என்ன செய்துகொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசு? தமிழ்நாட்டில் காவல்துறை செயல்படுகிறதா? இல்லை அதுவும் முதல்-அமைச்சரைப் போல் ஓய்வில்தான் இருக்கிறதா?</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மருத்துவக் கட்டமைப்பை பாதுகாக்க நடவடிக்கை தேவை: சிபிஎம் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/action-needed-to-protect-medical-infrastructure-cpm-insists</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/action-needed-to-protect-medical-infrastructure-cpm-insists#comments</comments><guid isPermaLink="false">2e747b53-a96d-4138-a8f8-875b3bdf2644</guid><pubDate>Sat, 19 Sep 2026 09:30:47 +0000</pubDate><atom:updated>2026-09-19T09:30:47.997Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>medical,சிபிஎம்,மருத்துவம்,CPM,Infrastructure,கட்டமைப்பு,p shanmugam,பெ சண்முகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/r9yce7n8/pshanmugam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/r9yce7n8/pshanmugam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மருத்துவக் கட்டமைப்பை பாதுகாக்க நடவடிக்கை தேவை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%86-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">பெ. சண்முகம்</a> கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் சட்டமன்றத்தில் 110 விதிகளின் கீழ் B.Sc (Naning) படிப்புக்கான 7 செவிலியர் கல்லூரிகள் புதிதாக உருவாக்கப்படும் என்று அறிவித்தார். அந்த செவிலியர் கல்லூரிகள் தொடங்குவதற்கான அரசாணை கடந்த 16.9.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த செவிலியர் கல்லூரிகளில் திருநெல்வேலி, திருச்சி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை மற்றும் நாமக்கல் ஆகிய மையங்களில் உள்ள செவிலியர் கல்லூரிகள் தொடங்குவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறை ஒன்றை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி உள்ளார்.</p><p>அந்த வழிகாட்டுதல் நெறிமுறையில் செவிலியர் கல்லூரிகளில் உருவாக்கப்படும் அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் கண்டிப்பாக தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதையும், நிரந்தரப் பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை என்பதையும், அரசாங்கத்திற்கு ஓய்வூதியம் அல்லது வேறு எந்தத் தொடர் பொறுப்புகளும் இதனால் ஏற்படாது என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும். அதன் பின்னரே செவிலியர் கல்லூரியை தொடங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>அரசாணை</h2><p>இது அரசு பணியில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டுள்ள ஊழியர்களை 5 ஆண்டுகள் நிறைவு செய்தால் நிரந்தரம் செய்வோம் என்ற தவெகவின் தேர்தல் வாக்குறுதிக்கு முற்றிலும் எதிரானதாகும். அதேபோன்று படித்து முடித்து வேலைக்கு காத்திருக்கும் செவிலியர்களும் ஒப்பந்த அடிப்படையிலேயே நியமிக்கப்படுவார்கள் என்றும், அவர்களுக்கும் அரசுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை  என்றும் 11.09.2026 அன்று ஒரு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.</p><h2>மருத்துவ கட்டமைப்பு</h2><p>இவையெல்லாம் படித்து முடித்து வேலைக்கு காத்திருக்கும் இளைஞர்களை அதிலும் குறிப்பாக பெண்களை அந்த கூலிக்கு தான் அமர்த்துவேன் என்று சொல்வதாகும். அதேபோன்று, இந்தியாவில் மிகச்சிறந்த கட்டமைப்புகளில் ஒன்றாக விளங்கக்கூடிய தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பை சீர்குலைப்பதாகும். இது சாதாரண ஏழை எளிய மக்களின் அரசு மருத்துவமனை பயன்பாட்டையும் கேள்விக்குள்ளாக்கும்.</p><p>எனவே மேற்கண்ட இரண்டு அரசாணைகளையும் அரசு திரும்பப்பெற்று செவிலியர்களை நிரந்தரமாக நியமிப்பதற்கும், செவிலியர் ஆசிரியர்களையும் நிரந்தர பணியாளர்களாக்குவதற்கும் உரிய உத்தரவு வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை விமான நிலையம்; தனியாருக்கு தாரை வார்ப்பதை விசிக ஏற்காது - வன்னி அரசு பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-airport-vck-will-not-accept-the-handover-of-the-project-to-a-private-company-vanniarasu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-airport-vck-will-not-accept-the-handover-of-the-project-to-a-private-company-vanniarasu#comments</comments><guid isPermaLink="false">d7b7cb02-3c5c-479a-8cc4-184c0c4245c8</guid><pubDate>Sat, 19 Sep 2026 09:29:39 +0000</pubDate><atom:updated>2026-09-19T09:29:39.520Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,சென்னை விமான நிலையம்,திமுக அரசு,வன்னி அரசு,minister vanni arasu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/pmffu29x/vck33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
சென்னை விமான நிலையம்]]></media:title><media:description type="html"><![CDATA[ விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/pmffu29x/vck33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விழுப்புரம்,</p><p>சென்னை விமான நிலையம் தனியாருக்கு தாரை வார்ப்பது குறித்து தமிழக அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">அமைச்சர் வன்னி அரசு</a> கூறியுள்ளார்.</p><p>சென்னை விமான நிலைய நிர்வாகத்தை வேறு ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் விஜய் கடிதம் எழுதி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் </p><p>விழுப்புரத்தில் அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><h2>அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை</h2><p>பரந்தூர் விமான நிலையம் ரத்து செய்யப்பட்டவுடன், அன்றே சட்டப்பேரவையில் இதுகுறித்து விரிவாக்கம் செய்ய முடியும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஏற்கனவே சென்னை விமான நிலையத்தின் ஒரு பகுதி தனியாருக்குத்தான் தாரை வார்க்கப்பட்டுள்ளது, அப்பொழுதே விசிக எதிர்ப்பு தெரிவித்தோம். கொள்கை அடிப்படையில் தனியாருக்கு தாரை வார்ப்பதை விசிக ஏற்காது. தமிழக அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.</p><h2>திமுக அரசியல் செய்கிறது</h2><p>மாணவர் பாரதிதாசன் விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை. திமுகதான் அரசியல் செய்கிறது.</p><p>உண்மையில் திமுகவுக்கு பட்டியலின மாணவர்கள் மீது அக்கறை இருந்திருந்தால், அம்பேத்கர் அயலக கல்வி உதவித் திட்டத்தில் 601 பேர் தகுதி பெற்றிருந்த நிலையில், 153 பேருக்குதான் கொடுத்திருக்கிறார்கள். மீதியுள்ள மாணவர்களுக்கு துரோகம் இழைத்திருக்கிறார்கள்.</p><h2>வேங்கைவயல்</h2><p>வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மீது வழக்கு போட்டது திமுகதான். அதில் பாதிக்கப்பட்ட ஒரு காவலர் என்னிடம் வந்து புகார் தெரிவித்தார். எங்களுடைய தலைவர் திருமாவளவன், அப்போதைய முதல்-அமைச்சர் ஸ்டாலினிடம் சென்று இதுபற்றி கேள்வி எழுப்பினார். பட்டியலின மாணவர்கள், இளைஞர்களுக்கு மிக மோசமாக வஞ்சகம் செய்த அரசு திமுக அரசு. வேங்கைவயல் விவகாரத்தில் திமுக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>மாணவர்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே?  - வேல்முருகன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/where-is-the-guarantee-for-the-students-lives-velmurugan-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/where-is-the-guarantee-for-the-students-lives-velmurugan-asks#comments</comments><guid isPermaLink="false">137206b6-a2d1-4c6e-830a-fc647572eec0</guid><pubDate>Sat, 19 Sep 2026 09:18:21 +0000</pubDate><atom:updated>2026-09-19T09:18:21.605Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Velmurugan,வேல்முருகன்,தமிழக வாழ்வுரிமைக் கட்சி,தி.வேல்முருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/o5kn2y6e/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேல்முருகன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/o5kn2y6e/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பள்ளி வளாகங்களைச் சுற்றிலும் தாராளமாகக் கிடைக்கும் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறியது யார்? என வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.</p><h2>மாணவர்கள் கொல்லப்படும் அவலம்</h2><p>இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் இளைய தலைமுறையினர் அடுத்தடுத்து வன்முறைக்குப் பலியாகி உயிரிழக்கும் தொடர் அவலங்கள் தமிழக மக்களைப் பெருங்கவலையிலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளன. கல்வி பயில வேண்டிய இளங்குருத்துகள் கொடூரமாகக் கொல்லப்படும் அவலம் நீடிப்பது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறதோ என்ற நியாயமான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.</p><p>நடப்பு 2026 ஜூன் முதல் செப்டம்பர் 18 வரை அரங்கேறியுள்ள மரணங்கள் அரசின் கண்களுக்குத் தெரியவில்லையா?</p><ul><li><p>சிவகங்கை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பயின்ற 15 வயது மாணவர் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட கொடூரம்.</p></li><li><p>புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி அருகே 4-ஆம் வகுப்பு பயின்ற 9 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை.</p></li><li><p>தேனி மாவட்டத்தில் போடி அருகே பள்ளிக் குழந்தைகள் இருவர் கிணற்றில் தள்ளிக் கொலை.</p></li><li><p>கோவை மாவட்டத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் சக மாணவர் குழுவால் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழப்பு.</p></li><li><p>சென்னையில் திருவொற்றியூரில் பிளஸ்-2 மாணவர் அடித்துக் கொல்லப்பட்ட கொடூர வழக்கில் 12 பள்ளி மாணவர்கள் கைது.</p></li><li><p>சேலம் மாவட்டத்தில் கே.ஆர்.தோப்பூரில் 10-ஆம் வகுப்பு மாணவர் மர்ம மரணம்.</p></li></ul><p>இவை ஒவ்வொன்றும், மாணவர் சமுதாயத்தின் மனங்களில் வன்முறைக் கலாச்சாரம் எந்த அளவிற்குப் புரையோடிப்போயுள்ளது என்பதற்கான சாட்சியங்கள்.</p><h2>போதைப்பொருள் புழக்கம்</h2><p>பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, அவர்கள் பத்திரமாக வீடு திரும்புவார்களா? என்ற மரண பயத்தில் பெற்றோர் வாழும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பள்ளி வளாகங்களைச் சுற்றிலும் தாராளமாகக் கிடைக்கும் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறியது யார்? குற்றங்கள் நிகழ்ந்த பிறகு ஆட்களைப் பிடித்து அடைப்பது மட்டுமே காவல்துறையின் சாதனையா? உளவுத்துறையும் காவல்துறையும் செயலிழந்து கிடக்கின்றனவா?</p><p>வெற்று அறிக்கைகளோடு கடந்து செல்லாமல், போர்க்கால அடிப்படையில் தீர்வு காணத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?</p><h2>காவல்துறை ரோந்து கட்டாயமாக்கப்பட வேண்டும்</h2><p>போதைப்பொருள் நடமாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால், கல்வி நிலையங்களின் சுற்றுவட்டாரத்தில் போதைப்பொருள் விற்பனையை வேரறுக்கத் தயவுதாட்சண்யமற்ற அதிரடி வேட்டை நடத்தப்பட வேண்டும்.</p><p>வெறும் கண்துடைப்பாக இல்லாமல், உளவியல் நிபுணர்கள், ஆசிரியர்கள், காவல்துறை அடங்கிய ஒருங்கிணைந்த கண்காணிப்புக் குழுக்கள் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் உடனடியாகக் களமிறக்கப்பட வேண்டும்.</p><p>பள்ளி, கல்லூரி வளாகப் பகுதிகளில் காவல்துறை ரோந்துப் பணிகள் கட்டாயமாக்கப்பட வேண்டும்.</p><p>ஒவ்வொரு மாணவரின் உயிரும் ஒரு குடும்பத்தின் எதிர்காலம். அரசின் நிர்வாக அலட்சியத்தால் எதிர்காலத் தலைமுறையினர் ரத்த வெள்ளத்தில் மிதப்பதை வேடிக்கை பார்க்க முடியாது.</p><p>மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருங்கிணைந்த பாதுகாப்புத் திட்டத்தைத் தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கரூர்: மீன் வறுவல், குழம்பு லஞ்சமாக கேட்ட கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-village-administrative-officer-suspended-after-demanding-fish-fry-and-fish-curry-for-lunch</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-village-administrative-officer-suspended-after-demanding-fish-fry-and-fish-curry-for-lunch#comments</comments><guid isPermaLink="false">5b9080d2-3119-4773-9947-c9b866176e96</guid><pubDate>Sat, 19 Sep 2026 09:16:47 +0000</pubDate><atom:updated>2026-09-19T09:16:47.883Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர்,லஞ்சம்,சப்-கலெக்டர்,பணியிடை நீக்கம்,suspended,விஏஓ,village administrative officer,fish curry</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/oh1dr0gl/16.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மீன் வறுவல்- மீன் குழம்பு- கார்த்திக்]]></media:title><media:description type="html"><![CDATA[ கரூரில் மீன் வறுவல், குழம்பு லஞ்சமாக கேட்ட கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/oh1dr0gl/16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கரூர்,</p><p>கரூர் மாவட்டம் நிலத்தின் சிட்டா நகல் வழங்க லஞ்சமாக மீன் வறுவல் மற்றும் குழம்பு பார்சல் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் ஒருவரை கரூர் மாவட்ட நிர்வாகம் அதிரடியாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">பணியிடை நீக்கம் </a>செய்து உத்தரவிட்டுள்ளது.</p><h2>சிட்டா நகல் கேட்டு விண்ணப்பம்</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கரூர் மாவட்டம்</a>, கடவூர் தாலுகாவுக்குட்பட்ட தேவர்மலை கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) வங்கிக் கடன் பெறுவதற்காக தன் நிலத்தின் 'சிட்டா' நகல் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.</p><h2>லஞ்சம்</h2><p>விண்ணப்பம் குறித்து பேசுவதற்காக விவசாயியை மொபைல் மூலம் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) கார்த்திக் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது போனில் பேசியது விவசாயியின் மகன் என்று தெரியாமல், "பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள பிரண்ட்ஸ் ஹோட்டலில் இருந்து 2 மீன் வறுவல், தனியாக குழம்பு பார்சல் வாங்கி வா" என்று கார்த்திக் லஞ்சமாக கேட்டுள்ளார்.</p><h2>வைரலான ஆடியோ</h2><p>விஏஓ -வின் பேச்சைக் கேட்டு அதிர்ச்சியடைந்த விவசாயியின் மகன், "அரசாங்கம் உங்களுக்கு சம்பளம் தரவில்லையா?" என்று கார்த்திக்கை நோக்கி கேள்வி எழுப்பியதுடன், அந்த முழு உரையாடலையும் ஆடியோவாகப் பதிவு செய்துள்ளார். இந்த ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி, பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பேசுபொருளையும் ஏற்படுத்தியது.</p><h2>அதிரடி நடவடிக்கை</h2><p>இந்த வினோதமான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">லஞ்ச விவகாரம்</a> மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு சென்றதை அடுத்து, குளித்தலை சப்-கலெக்டர் சேஷத்ரி அவர்கள் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக்கை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இச்சம்பவம் கரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய் மீனவர்களின் வலியைப் புரிந்துகொள்ள வேண்டும் - எல். முருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-should-understand-the-pain-of-fishermen-l-murugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-should-understand-the-pain-of-fishermen-l-murugan#comments</comments><guid isPermaLink="false">1dfe2476-cb7c-4376-92e3-9cb00f4afdee</guid><pubDate>Sat, 19 Sep 2026 09:07:55 +0000</pubDate><atom:updated>2026-09-19T09:07:55.411Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எல்.முருகன்,BJP,விஜய்,சென்னை,L. Murugan ​,new Secretariat,புதிய தலைமைச்செயலகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/84ozx999/murugan33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ எல். முருகன்]]></media:title><media:description type="html"><![CDATA[ 
முதல்-அமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/84ozx999/murugan33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முதல்-அமைச்சர் சுறா படத்துல மீனவனா நடிச்சா மட்டும் போதாது.மீனவர்களின் வலியைப் புரிந்துகொள்ள வேண்டும் என மத்திய இணை மந்திரி எல்.  முருகன் கூறியுள்ளார்.</p><p>மீனவர்கள் வாழ்வாதாரமே கடலில்தான் இருக்கிறது. மீனவர்கள் படும் கஷ்டம் எனக்கு தெரியும்.<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a>, மீனவராக சுறா படத்தில் நடித்தார். மீனவராக நடித்தால் மட்டும் போதாது. மீனவர்களின் உண்மையான வலியை புரிந்தவராக இருக்க வேண்டும்</p><p>கடலை விட்டால் மீனவர்களுக்கு வேறு எதுவும் தெரியாது. அப்படியான மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் வகையில் உள்ள புதிய தலைமைச் செயலக அறிவிப்பை பட்டினப்பாக்கத்தில் இருந்து கைவிட வேண்டும். சென்னையில் எவ்வளவோ இடம் இருக்கிறது. அந்த இடங்களை பார்த்து கட்டிக்கொள்ளலாம்.</p><p>நவோதயா பள்ளிகளை அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு வர வேண்டும் என்பது தான் என் வேண்டுகோள்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 253 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dengue-infection-confirmed-in-253-people-in-tamil-nadu-yesterday-alone</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dengue-infection-confirmed-in-253-people-in-tamil-nadu-yesterday-alone#comments</comments><guid isPermaLink="false">6890bc5b-b63f-43f3-a138-fd35f5680b68</guid><pubDate>Sat, 19 Sep 2026 09:02:11 +0000</pubDate><atom:updated>2026-09-19T09:02:11.695Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,Tamil Nadu,டெங்கு,Dengue</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/et33lvfc/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/et33lvfc/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகளவில் உள்ளது. வெயில் மற்றும் மழை என காலநிலை மாற்றத்தால், டெங்குவை பரப்பும், 'ஏடிஸ்' வகை கொசுக்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக, மாநிலம் முழுவதும் பரவலாக டெங்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.</p><p>குறிப்பாக தினசரி, 70 முதல் 100 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு பிரத்யேக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.</p><p>இந்த நிலையில், தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 244 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நடப்பாண்டில் இதுவரை தமிழகத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,830 ஆக உயர்ந்துள்ளது. டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தவும், மருத்துவமனைகளில் காய்ச்சல் வார்டுகளை அதிகப்படுத்தவும் பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>டெங்கு காய்ச்சல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/people-should-be-made-aware-of-dengue-fever-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/people-should-be-made-aware-of-dengue-fever-anbumani#comments</comments><guid isPermaLink="false">bc233442-96a7-4fc3-91f9-8a41b50d86ef</guid><pubDate>Sat, 19 Sep 2026 09:00:56 +0000</pubDate><atom:updated>2026-09-19T09:00:56.800Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Dengue Fever,விழிப்புணர்வு,Anbumani Ramadas,Awareness,டெங்கு காய்ச்சல் பாதிப்பு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/muxiipsd/10.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/muxiipsd/10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>டெங்கு காய்ச்சல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பாமக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ் </a>கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் அண்மைக்காலங்களில் இல்லாத வகையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாலும்,  இதுவரை 9  பேர் உயிரிழந்திருப்பதாலும் மக்களிடம் பெரும் அச்சமும், கவலையும் ஏற்பட்டிருக்கிறது. டெங்கு காய்ச்சலுக்கான மருத்துவம் அளிப்பது ஒருபுறம் இருக்க, டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன?  டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் என்ன?  அவை தென்பட்டால்   என்ன செய்ய  வேண்டும்  என்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது தான் இன்றைய முதன்மைத் தேவை ஆகும்.</p><h2>உயிரிழப்புகள்</h2><p>தமிழ்நாட்டில் நடப்பாண்டில் இதுவரை 16,830 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பது சோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையே இவ்வளவு என்றால் குறைந்தபட்சம் இதை விட 10 மடங்கு பேருக்கு  டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு, அது குறித்த புரிதலும்,  விழிப்புணர்வும் இல்லாமல் சாதாரண காய்ச்சலுக்கான மருத்துவத்தை பெற்றுக் கொண்டிருக்கக் கூடும். மருத்துவ ஆய்வுகளை மேற்கொண்டு டெங்கு காய்ச்சலுக்கான  மருத்துவத்தை பெறாததால் தான்  உயிரிழப்புகள்  அதிகரித்திருக்கின்றன.</p><h2>விழிப்புணர்வு</h2><p>அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் மட்டும் மூவர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.  அவர்களில் கடைசியாக இறந்த மாணவரின் உயிரிழப்புக்கு காரணம் டெங்கு அல்ல... விஷக்காய்ச்சல் என்று அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. உண்மையில் அந்த மாணவரின் உயிரிழப்புக்கு காரணம் அலட்சியமும்,  விழிப்புணர்வு இல்லாமையும் தான்.  மாணவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு  2 அல்லது 3 நாள்களில் குணமடையாத  நிலையில், மருத்துவ ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தால் காய்ச்சலின்  தன்மையைக் கண்டறிந்து  மருத்துவம் அளித்திருக்க முடியும். அதை செய்யுமாறு அவருக்கு மருத்துவ ஆலோசனை வழங்கத் தவறியது தான் உயிரிழப்புக்கு காரணம் ஆகும். டெங்கு காய்ச்சல் குணப்படுத்த முடியாத நோய் அல்ல. அதற்கான சிகிச்சை வசதிகளும், மருந்துகளும்  அரசு மருத்துவமனைகளில் போதிய அளவில் உள்ளன.  டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி, அவர்களின் ஒத்துழைப்புடன் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தினால் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க முடியும்.</p><p>பொதுமக்களும்,  அரசு அமைப்புகளும்  இணைந்து நீர் தேங்குவதற்கான வாய்ப்புகளை சரி செய்ய வேண்டும். பயன்படுத்தப்படாமல் கிடக்கும் கொள்கலன்கள், வாகனங்களின் டயர்கள், சிரட்டைகள், பூந்தொட்டிகள், வாளிகள் உள்ளிட்டவற்றை அகற்ற உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதை ஒரு சிறப்பு இயக்கமாக நடத்த வேண்டும். பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதியில் தண்ணீர் தேங்கும் வகையில் உள்ள அனைத்துப் பொருட்களையும் அகற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். அதன் மூலம் டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும்.</p><h2>அரசு நடவடிக்கை</h2><p>டெங்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகள், அதற்காக மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள் குறித்து தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். டெங்கு காய்ச்சல் தாக்குவதைத் தடுக்க மக்களும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். நில வேம்பு கசாயம் குடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முடியும். அதேபோல், ரத்த அணுக்கள் குறையும் போது பப்பாளி சாறு அருந்தினால் அடுத்த இரு நாட்களில் ரத்த அணுக்களின் எண்ணிக்கை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். இத்தகவல்களை முதன்மை ஊடகங்கள் வாயிலாகவும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் மக்களிடம் கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை விமான நிலைய நிர்வாக மாற்றம் தொடர்பான கடிதத்திற்கு விளக்கம் தேவை - வானதி சீனிவாசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/clarification-sought-regarding-the-letter-on-the-change-in-chennai-airport-administration-vanathi-srinivasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/clarification-sought-regarding-the-letter-on-the-change-in-chennai-airport-administration-vanathi-srinivasan#comments</comments><guid isPermaLink="false">ee583f63-9f30-4078-a62a-5215c588e014</guid><pubDate>Sat, 19 Sep 2026 08:49:11 +0000</pubDate><atom:updated>2026-09-19T08:49:11.389Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/aw32l2ly/vanathi.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/aw32l2ly/vanathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை விமான நிலைய நிர்வாக மாற்றம் தொடர்பான கடிதத்திற்கு விளக்கம் தேவை முதல்-அமைச்சரே என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.</p><h2>நிர்வாகத்தை மாற்ற கோரி கடிதம்</h2><p>இது தொடர்பாக, முன்னாள் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>வரலாற்றுச் சிறப்பு மிக்க, பழமை வாய்ந்த சென்னை சர்வதேச விமான நிலையத்தின் தற்போதைய AAI நிர்வாகத்தை மாற்றி வேறு ஆபரேட்டரிடம் ஒப்படைக்க வேண்டும் என முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க தவெக அரசு முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது?</p><p>சென்னை விமான நிலையம் கடந்த 2024-25 அறிக்கையின் படி சுமார் 2.24 கோடிக்கும் அதிகமான பயணிகளைக் கையாண்டு லாப வருவாயுடன் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. மேலும் தென்னிந்தியாவின் முக்கிய சரக்கு போக்குவரத்து மையமாகவும் செயல்பட்டு வருகிறது.</p><h2>முதல்-அமைச்சர் விளக்கம் தரவேண்டும்</h2><p>இதுமட்டுமன்றி தற்போது விமான நிலைய விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கலுக்காக AAI ரூ. 2,467 கோடி நிதியில் வளர்ச்சித் திட்டத்தையும் மேற்கொண்டு வருகிறது. இப்படி தொடர்ச்சியாக வருவாய் ஈட்டுவதிலும், சரக்குகள், பயணிகளைக் கையாள்வதிலும் சிறப்புடன் செயல்பட்டுவரும் AAI நிர்வாகத்தினை மாற்ற வேண்டிய அவசியம் தவெக அரசுக்கு என்ன? இதுகுறித்து மக்களுக்கு தெளிவான விளக்கத்தை முதல்-அமைச்சர் தரப்பிலிருந்து தரவேண்டியது கடமை.</p><p>மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் எழுதப்பட்ட கடிதம எனது தற்போது வெளிவந்திருப்பதன் கால தாதமம் ஏன்? ஏற்கனவே பரந்தூர் திட்டத்தினை ரத்து செய்துவிட்டு தமிழகத்தை 10 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய தவெக அரசு அடுத்து பொதுத்துறை நிறுவனங்கள் மீதும் கைவைத்திருப்பது இந்த அரசு உண்மையாகவே மக்களுக்கான அரசாக செயல்படுகிறதா என்ற சந்தேகத்தையே எழுப்புகிறது.</p><h2>கடிதத்தினை வாபஸ் பெற வேண்டும்</h2><p>சென்னை விமான நிலையத்தின் எதிர்காலம் தொடர்பான எந்த முடிவும் பயணிகள் நலன், ஊழியர்கள் நலன், <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பொதுத்துறை </a>முதலீடுகளின் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்த பின்னரே எடுக்கப்பட வேண்டும். முதல்-அமைச்சர் விஜய் அனுப்பிய இக்கடிதத்தினை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>“கூண்டில் சிக்கியது ஆட்கொல்லி புலி..”: மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்னென்ன.? வனத்துறை விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/man-eating-tiger-trapped-in-a-cage-what-measures-were-taken-forest-department-explains</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/man-eating-tiger-trapped-in-a-cage-what-measures-were-taken-forest-department-explains#comments</comments><guid isPermaLink="false">29413766-b0e2-4bcc-9991-a8401675d53a</guid><pubDate>Sat, 19 Sep 2026 08:39:53 +0000</pubDate><atom:updated>2026-09-19T08:39:53.927Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Forest Department,வனத்துறை,நீலகிரி,புலி,Gudalur,கூடலூர்,Vandalur,வண்டலூர்,Nilgiri,ஆட்கொல்லி புலி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/aefwwns8/kala.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/aefwwns8/kala.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கூடலூர்,</p><p>கூடலூர் அருகே ஓவேலி வனச்சரகத்தில் ஆட்கொல்லி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF">புலி </a>பிடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்த வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. </p><h2>மனித-விலங்கு மோதல்</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>வனத்துறை அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித்குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமை செயலளாளர் காகர்லா உஷா, இ.ஆ.ப., முதன்மைத் தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் வனத்துறைத் தலைவர் ஆகியோரின் மேற்பார்வையில், முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை உயிரினக்காப்பாளர் அவர்களால் கூடலூர் வனக்கோட்டம், ஓவேலி வனச்சரகத்தில் மனித-விலங்கு மோதலில் ஈடுபட்ட புலியைப் பிடிப்பதற்கான உரிய உத்தரவுகள் மற்றும் தொழில் நுட்ப வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டு, 21-08-2026 அன்று புலியைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.</p><h2>305 கண்காணிப்புக் கேமராக்கள்</h2><p>அதன் அடிப்படையில் வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர், முதுமலை புலிகள் காப்பகம், மாவட்ட வன அலுவலர், உதவி வனப் பாதுகாவலர்கள், வனச்சரக அலுவலர்கள், வன கால்நடை மருத்துவர்கள், விரைவு மீட்புக் குழு கொண்ட 105 வனப் பணியாளர்கள் இப்பணியில் இரவு பகலாக ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் முதுமலை புலிகள் காப்பகத்தைச் சேர்ந்த புலிக் கண்காணிப்பாளர்களும் (Tiger Trackers), வன கால்நடை மருத்துவர்களுடன் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.</p><p>சந்தேகிக்கப்படும் புலியைப் பிடிப்பதற்காக 305 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு, புலியின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. மேலும் மூன்று வெப்ப உணரி ட்ரோன்கள் (thermal drones) இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு, சந்தேகிக்கப்படும் புலியின் நடமாட்டம் ஏதேனும் உள்ளதா என கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.</p><h2>நேற்று அதிகாலை</h2><p>குறிப்பாக வனத்துறை அமைச்சர் அவர்கள் 11.09.2026 அன்று நேரடியாகக் கள ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதி மக்களை சந்தித்து பாதுகாப்பாக இருக்குமாறும், புலியை விரைவில் பிடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.</p><p>இப்பணியானது முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை உயிரினக் காப்பாளர் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் 28 நாட்களாக எவ்விதத் தொய்வுமின்றி மேற்கொள்ளப்பட்டு வந்தது.</p><p>இந்நிலையில், புலியைப் பிடிப்பதற்காக கூடலூர் வனச்சரகப் பகுதியில், அல்லலா எஸ்டேட் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பொறிக் கூண்டில் (18.09.2026) அன்று அதிகாலை சந்தேகிக்கப்படும் புலியானது சிக்கியது.</p><h2>வண்டலூர்</h2><p>புலி உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பாக கால்நடை மருத்துவரின் ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டது. மேலும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்ட தொழில்நுட்ப வழிகாட்டுதல் குழுவின் ஆய்வு மற்றும் பரிந்துரையின் அடிப்படையில் பிடிப்பட்ட புலியானது 12 வயதுக்கு மேற்பட்டதாக இருப்பதாலும் அதன் சிங்கபற்கள் தேய்மானம் அடைந்திருப்பதாலும் உடல் நலிவுற்ற நிலையில் உள்ளதால் மேற்கொண்டு அதனை அடர்வனப்பகுதியில் விடுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என தெரியவருகிறது. அதன் அடிப்படையில் புலியானது தொடர் சிகிச்சை மற்றும் மருத்துவ மேலாண்மைக்காக சென்னை வண்டலூரில் உள்ள மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்திற்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மதுரையில் காவல் நிலையம் அருகே நடுரோட்டில் ஓட ஓட விரட்டி ரவுடி வெட்டிக்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rowdy-hacked-to-death-in-the-middle-of-the-road-near-a-police-station-in-madurai-after-being-chased-down</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rowdy-hacked-to-death-in-the-middle-of-the-road-near-a-police-station-in-madurai-after-being-chased-down#comments</comments><guid isPermaLink="false">08f96f1d-a31c-4b1d-a340-a2991cbcbd2c</guid><pubDate>Sat, 19 Sep 2026 08:36:14 +0000</pubDate><atom:updated>2026-09-19T08:36:14.773Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,murder,வெட்டிக்கொலை,ரவுடி,police enquiry,மர்ம கும்பல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/len1vta5/15.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ போலீசார் விசாரணை செய்த காட்சி]]></media:title><media:description type="html"><![CDATA[ மதுரையில் காவல் நிலையம் அருகே நடுரோட்டில் ஓட ஓட விரட்டி ரவுடி வெட்டிக்கொலை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/len1vta5/15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையம் அருகே ரவுடி ஒருவரை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>ரவுடி- நிலுவையில் உள்ள வழக்கு</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மதுரை மாவட்டம்</a> சோலை அழகுபுரம் சப்பாணிகோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 50). 'சப்பாணி சரவணன்' என்று அழைக்கப்படும் இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. சில வழக்குகளில் இவர் சிறைக்கும் சென்று வந்துள்ளார். சப்பாணி சரவணன் டீக்கடைக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை நேரத்தில், ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையம் அருகே உள்ள ஒரு டீக்கடைக்கு சரவணன் வந்துள்ளார்.</p><h2>வெட்டிக்கொலை</h2><p>அப்போது அங்கு மறைந்திருந்த 5 பேர் கொண்ட ஆயுதமேந்திய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D">மர்ம கும்பல்</a>, திடீரென சரவணனை நோக்கிப் பாய்ந்தது. அவர்களிடமிருந்து தப்பிக்க சரவணன் நடுரோட்டில் அலறியபடி ஓடியுள்ளார். எனினும், விடாமல் துரத்திய அந்த கும்பல், காவல் நிலையத்திற்கு மிக அருகிலேயே அவரை ஓட ஓட விரட்டி பயங்கரமான கத்தி அரிவாள் போன்ற ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஜெய்ஹிந்த்புரம் போலீசார், சரவணனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.</p><p>தப்பியோடிய 5 பேர் கொண்ட கொலையாளிகளைப் பிடிப்பதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டைநடத்தப்பட்டு வருகிறது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் தொடங்கும் அதிகாலை வேளையில், அதுவும் காவல் நிலையம் அருகிலேயே நடந்த இந்த துணிகர <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">படுகொலை</a> மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>8.7 கோடி இளைஞர்கள் கல்வி, வேலை இன்றி தவிப்பு: மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/87-crore-youth-are-facing-lack-of-education-and-jobs-manickam-thakur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/87-crore-youth-are-facing-lack-of-education-and-jobs-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">d4bbbbb3-cbd4-47b4-a5c1-34e68ec1ae98</guid><pubDate>Sat, 19 Sep 2026 08:34:28 +0000</pubDate><atom:updated>2026-09-19T08:34:28.359Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,education,மாணிக்கம் தாகூர்,Jobs,இளைஞர்கள்,Manickam Thakur MP</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/nplx0309/168.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/nplx0309/168.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>8.7 கோடி இளைஞர்கள் கல்வி, வேலை மற்றும் தொழிற்பயிற்சி எதுவுமின்றி முடங்கியுள்ளனர் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">மாணிக்கம் தாகூர் எம்.பி. </a>தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>இளைஞர்கள்</h2><p>2014-ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் மோடி அரசு, ஆண்டுதோறும் 2 கோடி வேலைவாய்ப்புகளை அள்ளித்தருவோம் என்று இளைஞர்களிடம் வெற்று வாக்குறுதிகளை மட்டுமே வழங்கி ஏமாற்றி வந்துள்ளது. </p><p>கடந்த ஆகஸ்ட் 2026-ல் நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையில், 15 முதல் 29 வயதுக்குட்பட்ட 8.7 கோடி இளைஞர்கள் கல்வி, வேலை மற்றும் தொழிற்பயிற்சி எதுவுமின்றி முடங்கியுள்ளனர் என்பதும், 79.6 கோடி பேர் உழைக்கும் சந்தைக்கு வெளியே தள்ளப்பட்டுள்ளனர் என்பதும் அதிகாரப்பூர்வமாக அம்பலமானது.</p><p>படித்த பட்டதாரிகளில் வெறும் 8.25 சதவீதம் பேருக்கு மட்டுமே தகுதிக்குரிய வேலை கிடைத்துள்ளது என்ற அதிர்ச்சித் தகவலும், பட்டம் பெற்ற பெண்களிடம் 20.4 சதவீதம் வேலையின்மை நிலவுவதும் மோடி அரசின் விளம்பர அரசியலின் உண்மை முகத்தைக் காட்டியது.</p><h2>நீட்</h2><p>ஒருபுறம் மருத்துவக் கனவைச் சிதைக்கும் மருத்துவ ‘நீட்’ என்றால், மறுபுறம் இளைஞர்களை வேலைக்கே போகவிடாமல் நடுத்தெருவில் நிறுத்தும் சமூக-பொருளாதார ‘நீட்’ நெருக்கடி! தற்போது செப்டம்பர் 2026-ல் மத்திய புள்ளியியல் அமைச்சகம் (MoSPI) வெளியிட்டுள்ள மாவட்ட அளவிலான PLFS அறிக்கை, இந்த அவல நிலையை உள்ளூர் அளவில் மேலும் தோலுரித்துள்ளது. </p><p>நாடு முழுவதும் 250-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 25 சதவீதக்கும் அதிகமான இளைஞர்கள் கல்வி அல்லது வேலையின்றி முடங்கிக் கிடக்கின்றனர். மொத்தமாக ஆய்வு செய்யப்பட்ட மாவட்டங்களில் கிட்டத்தட்ட 23.7 சதவீதம் பகுதிகளில் 30 சதவீதக்கும் அதிகமான இளைஞர்கள் எவ்வித எதிர்காலமுமின்றித் தவிக்கின்றனர். உ.பி., பீகார், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் பெரும்பாலான மாவட்டங்கள் வேலையின்மையில் தத்தளிப்பதோடு, 75 சதவீதம் மாவட்டங்களில் இளம்பெண்களின் ‘நீட்’ விகிதம் 25 சதவீதத்தை தாண்டியுள்ளது.</p><h2>வேலையின்மை</h2><p>மோடி அரசின் இந்த நிர்வாகத் தோல்வியும் புறக்கணிப்பும் தமிழ்நாட்டிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. தென் தமிழ்நாட்டின் முதன்மை நகரான மதுரையில் வேலையின்மை விகிதம் 7.0 சதவீதம் ஆக விஸ்வரூபமெடுத்துள்ளது. திருவள்ளூரில் 24.9 சதவீதம், திருச்சியில் 23. 9 சதவீதம், மதுரையில் 23.8 சதவீதம், சென்னையில் 22.4 சதவீதம் என இளைஞர்கள் முறையான வாழ்வாதார வழியின்றி முடங்கியுள்ளனர். கிராமப்புறத் தமிழ்நாட்டில் நிலையான ஊதிய வேலைகள் கிடைக்காமல், 30.4 சதவீதம் குடும்பங்கள் முறைசாரா தினக்கூலி வேலைகளையே நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். </p><p>இளைஞர்களுக்குத் தொழிற்பயிற்சியை வழங்குவதாகக் கூறி புதிய கல்விக் கொள்கையைத் (NEP) திணிக்கும் மத்திய அரசு, களத்தில் அவர்களுக்குக் கண்ணியமான வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தவறிவிட்டது.</p><p>தேசிய அளவில் 8.7 கோடி இளைஞர்களின் வாழ்வைச் சூறையாடியதோடு, மாவட்ட வாரியாகப் பல கோடி இளைஞர்களின் உழைப்பையும் ஆற்றலையும் வீணடித்து நடுத்தெருவில் நிறுத்தியுள்ள மோடி அரசின் பொருளாதாரத் துரோகங்களுக்கு, தங்களின் எதிர்காலத்தை இழந்து தவிக்கும் இந்த இளைய தலைமுறை ஒருபோதும் துணை நிற்காது!</p>]]></content:encoded></item><item><title>சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தீவிர கொசு ஒழிப்பு பணி: மாநகராட்சி கமிஷனர் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/intensive-mosquito-eradication-work-at-anna-university-campus-in-chennai-corporation-commissioner-inspects</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/intensive-mosquito-eradication-work-at-anna-university-campus-in-chennai-corporation-commissioner-inspects#comments</comments><guid isPermaLink="false">da48952a-5334-4e3c-ab78-73179f132b0c</guid><pubDate>Sat, 19 Sep 2026 08:29:33 +0000</pubDate><atom:updated>2026-09-19T08:29:33.108Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,inspection,Anna University,அண்ணா பல்கலைக்கழகம்,Mosquito,Corporation Commissioner,control,சுகாதார பணி,கொசு ஒழிப்பு பணி,மாநகராட்சி கமிஷனர் ஆய்வு,Health work</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/8azjwubn/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தீவிர கொசு ஒழிப்பு பணி: மாநகராட்சி கமிஷனர் ஆய்வு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/8azjwubn/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a> கிண்டி, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">அண்ணா பல்கலைக்கழக</a> வளாகத்தில் தேங்கிய குப்பைக் கழிவுகளை அகற்றுதல், கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட சுகாதாரப் பணிகளில் 100 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். </p><h2>கொசு ஒழிப்பு பணிகளை மாநகராட்சி கமிஷனர் ஆய்வு</h2><p>பெருநகர சென்னை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D">மாநகராட்சி கமிஷனர்</a> டாக்டர் ஜி.எஸ்.சமீரன் இன்று (19.9.2026) கிண்டி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீவிர சுகாதாரப் பணிகளையும், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">கொசு ஒழிப்பு</a> நடவடிக்கைகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். </p><h2>சுகாதார பணியில் 100 பணியாளர்கள்</h2><p>அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தேங்கிய குப்பைக் கழிவுகளை அகற்றுதல், கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">சுகாதாரப் பணிகளில்</a> 100 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். </p><h2>மாணவர்களை கண்காணித்து சிகிச்சை அளிக்க அறிவுறுத்தல்</h2><p>இந்த நடவடிக்கைகளை மாநகராட்சி கமிஷனர் சமீரன் ஆய்வு செய்து, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தோட்டக்கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றி சுத்தமாக வைத்திடவும், கொசுப்புழுக்கள் உருவாவதைத் தடுக்கும் விதத்தில் தண்ணீர் தேங்காமல் அகற்றிடவும், கொசு ஒழிப்பு புகை பரப்பும் பணியினை மேற்கொள்ளவும், மாணவர்களை தொடர்ந்து கண்காணித்து உரிய சிகிச்சைகளை சிறப்பாக வழங்கிடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். </p><p>மேலும், சென்னையில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இதுபோன்ற சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அலுவலர்கள் தொடர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">ஆய்வு </a>மேற்கொண்டு இந்த நடவடிக்கைகளை கண்காணித்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். </p><p>இந்த ஆய்வின்போது அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் குமரேசன், மாநகர நல அலுவலர் டாக்டர் ஜெகதீசன், இணை இயக்குநர் (சுகாதாரம்) டாக்டர் செந்தில்குமார், தலைமை பூச்சி தடுப்பு அலுவலர் டாக்டர் செல்வகுமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். </p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தல் பரப்புரைக்காக தவெக சார்பில் 40 நட்சத்திர பேச்சாளர்கள் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/40-star-speakers-announced-by-thaveka-for-by-election-campaigning</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/40-star-speakers-announced-by-thaveka-for-by-election-campaigning#comments</comments><guid isPermaLink="false">76f1fa03-98db-423b-b92f-8979ebb5d189</guid><pubDate>Sat, 19 Sep 2026 08:15:01 +0000</pubDate><atom:updated>2026-09-19T08:15:01.701Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,இடைத்தேர்தல்,by-elections</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/dnz532lm/15.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/dnz532lm/15.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதியில் அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இங்கு வேட்பாளர்களாக த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பில் பரந்தா மன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சுகந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமன் உள் ளிட்ட 48 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் 28 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது. அதேபோல, தாராபுரம் தொகுதியில் 22 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது.  </p>  <p>இன்று (சனிக்கிழமை) மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். எனவே இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. ஏற்கனவே வேட்பாளர்கள் பிரசாரத்தை தொடங்கி விட்ட நிலையில், இனி பிரசாரம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இந்த நிலையில், இடைத்தேர்தல் பரப்புரைக்காக தவெக சார்பில் 40 நட்சத்திர பேச்சாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சர் விஜய், காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ, காதர் மொய்தீர் உள்ளிட்ட 40 பேர் நட்சத்திர பேச்சாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது.</p>  ]]></content:encoded></item><item><title>மேல்மா சிப்காட் தொழிற்பூங்கா: நிலம் எடுப்பு அறிவிப்பை திரும்பப் பெற்ற தமிழ்நாடு அரசு: சி.பி.ஐ. வரவேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/melma-sipcot-industrial-park-tamil-nadu-government-withdraws-land-acquisition-notification-cpi-welcomes-the-move</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/melma-sipcot-industrial-park-tamil-nadu-government-withdraws-land-acquisition-notification-cpi-welcomes-the-move#comments</comments><guid isPermaLink="false">ae8d65a0-36a5-4cbc-bef6-6014a29c8c36</guid><pubDate>Sat, 19 Sep 2026 08:10:33 +0000</pubDate><atom:updated>2026-09-19T08:10:33.517Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழ்நாடு,தமிழகம்,சி.பி.ஐ.,இந்திய கம்யூனிஸ்டு கட்சி,CPI,சிப்காட் தொழில் பூங்கா,Tamilnadu government,Communist Party,நிலம் கையகப்படுத்துதல்,Sipcot</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/zn9m9rwe/mum.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/zn9m9rwe/mum.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>செய்யாறு மேல்மா கிராமத்தில் தொழிற் பூங்காவிற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்பட்டதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.) வரவேற்பு தெரிவித்துள்ளது</p><h2>இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி</h2><p>திருவண்ணாமலை மாவட்டம் சிப்காட் செய்யாறு தொழிற்பூங்கா 3வது நிலை விரிவாக்கத்திற்காக, மேல்மா உள்பட 11 கிராமத்தில் சிப்காட் நிலம் கையகப்படுத்துவதற்கான அரசிதழ் அறிவிப்பு திரும்பப்பெறுவதாக சிப்காட் மேலாண் இயக்குநர் அறிவித்தார். </p><p>இந்நிலையில் நிலம் கையகப்படுத்துவதற்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்பட்டதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D">மு.வீரபாண்டியன் </a>வரவேற்பு தெரிவித்துள்ளார்.</p><h2>தமிழ்நாடு அரசு</h2><p>இதுதொடபாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. </p><p>திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா கிராமத்தில் சிப்காட் தொழிற்பூங்கா நிலை-3 விரிவாக்க திட்டத்திற்காக, 22.16 ஹெக்டேர் (சுமார் 54 ஏக்கர்) புன்செய் நிலங்களை கையகப்படுத்த கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்புச் சட்டத்தின் கீழ் அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.</p><p>விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிராக விவசாயிகள் மற்றும் உள்ளூர் மக்கள் தொடர்ந்து பல்வேறு  போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இந்த நில எடுப்பு அறிவிக்கையை VI(1)/443(d-6)2026 திரும்பப் பெறுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.</p><p>அதே வேளையில், போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் எனவும், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விரைந்து டெங்குவை ஒழிக்க தமிழக அரசு முனைப்பு காட்ட வேண்டும்: ஈ.ஆர்.ஈஸ்வரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-should-take-initiative-to-eradicate-dengue-quickly-ereaswaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-should-take-initiative-to-eradicate-dengue-quickly-ereaswaran#comments</comments><guid isPermaLink="false">e1f1c7a9-2ca9-46cc-9e11-1865f6dd7a95</guid><pubDate>Sat, 19 Sep 2026 07:49:36 +0000</pubDate><atom:updated>2026-09-19T07:49:36.173Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,நடவடிக்கை,Dengue,தமிழக அரசு,report,அறிக்கை,eradication,டெங்கு ஒழிப்பு,Tamil Nadu government action,ஈ.ஆர்.ஈஸ்வரன்,E.R.Eswaran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/ionxyq86/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் அறிக்கை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/ionxyq86/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சுகாதார பணியாளர்களை முடுக்கிவிட்டு விரைந்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">டெங்கு</a>வை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">ஒழிக்க</a> தமிழக அரசு முனைப்பு காட்ட வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். </p><h2>டெங்குவால் 200-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு</h2><p>கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">ஈ.ஆர்.ஈஸ்வரன்</a> வெளியிட்டுள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">அறிக்கை</a>யில் கூறியிருப்பதாவது: </p><p>தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிதீவிரமாக பரவி வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 3 மாணவர்களோடு சேர்த்து 12 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் ஒரே நாளில் 200-க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். </p><h2>கொசு ஒழிப்பு பணிகள்</h2><p>டெங்கு பரவலை தடுக்க தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும், விழிப்புணர்வும் குறைவாக உள்ளதாகவே கருதுகிறேன். வருமுன் காப்பதே நோய் வராமல் காப்பதின் சாராம்சம் என்பதனை உணர வேண்டும். தமிழக அரசு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">டெங்கு பாதிப்பை</a> தடுக்க கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். </p><h2>விரைந்து டெங்குவை ஒழிக்க நடவடிக்கை</h2><p>சாதாரண காய்ச்சலும் தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக சளி, இருமல், உடல் சோர்வு ஆகியவையும் பொதுமக்களுக்கு அதிக அளவில் ஏற்படுகிறது. சென்னையில் பரவியுள்ள டெங்கு காய்ச்சல் தமிழகத்தின் பிற பகுதியில் அதிக அளவில் பரவுவதற்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது மிக மிக அவசியம். அனைத்து மாவட்ட தாலுகா மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">நடவடிக்கை </a>எடுப்பதுடன் சுகாதார பணியாளர்களை முடுக்கிவிட்டு விரைந்து டெங்குவை ஒழிக்க <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">தமிழக அரசு</a> முனைப்பு காட்ட வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/improvement-in-the-health-condition-of-kolathur-mla-vs-babu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/improvement-in-the-health-condition-of-kolathur-mla-vs-babu#comments</comments><guid isPermaLink="false">c6fe4430-cf46-4b97-b7c6-8c1a9a8e73cd</guid><pubDate>Sat, 19 Sep 2026 07:41:22 +0000</pubDate><atom:updated>2026-09-19T07:41:22.960Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>MLA,கொளத்தூர்,Kolathur,வி.எஸ்.பாபு,V.S. Babu MLA</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/9o611qoe/vs.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எம்எல்ஏ வி.எஸ்.பாபு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/9o611qoe/vs.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81">வி.எஸ்.பாபு</a> உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><h2>தீவிர சிகிச்சை</h2><p>கடந்த செப்டம்பர் 9-ம் தேதி வி.எஸ்.பாபுவுக்கு திடீரென கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அன்றைய தினமே அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><h2>உடல்நிலையில் முன்னேற்றம்</h2><p>இந்த நிலையில், வி.எஸ்.பாபுவின் தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது.</p><p>அதில், வி.எஸ்.பாபுவின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும், தற்போது அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைக்கு அவரது உடல்நிலை ஒத்துழைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், அவரது உடல்நிலை தொடர்ந்து மருத்துவக் குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்க கோருவது ஏற்புடையதல்ல: டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/handing-over-the-airport-to-the-private-sector-is-unacceptable-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/handing-over-the-airport-to-the-private-sector-is-unacceptable-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">bc1c1789-00cc-4689-9f04-0086fc448694</guid><pubDate>Sat, 19 Sep 2026 07:37:29 +0000</pubDate><atom:updated>2026-09-19T07:37:29.709Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,Chennai Airport,சென்னை விமான நிலையம்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/i127meqj/ttv.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/i127meqj/ttv.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (Airport Authority of India) கட்டுப்பாட்டில் உள்ள சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை வேறொரு நிறுவனத்திடமோ அல்லது தனியாரிடமோ மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் கடிதம் எழுதியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. </p><p>ஏற்கனவே, பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த அரசுகள், அந்தந்த மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களைத் தனியார் வசம் ஒப்படைக்கக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு தாமாக முன்வந்து விமான நிலையத்தைத் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசைக் கோருவது கடும் கண்டனத்திற்குரியது.</p> <p>சென்னை விமான நிலையத்தின் செயல்பாடுகள், உட்கட்டமைப்பு மற்றும் பயணிகள் வசதிகளில் குறைபாடுகள் இருக்கும் பட்சத்தில், அதனை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வு காண வேண்டுமே தவிர, பொதுத்துறை நிறுவனத்தைத் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறுவது ஏற்புடையதல்ல.</p><p>பொதுமக்களுக்குப் பாதுகாப்பான, தரமான மற்றும் குறைந்த செலவில் சேவைகளை வழங்கும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் வசம் ஒப்படைக்கும் பட்சத்தில், லாபமே முதன்மை நோக்கமாக மாறும் என்பதோடு, பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தக்கூடும் என்ற விமர்சனமும் பரவலாக எழத் தொடங்கியுள்ளது.</p><p>எனவே, சென்னை விமான நிலையத்தைத் தனியார் வசம் ஒப்படைக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகளில் உண்மை இருக்கும் பட்சத்தில், அத்தகைய முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் &quot;காற்றில் பறக்கும் சட்டம் ஒழுங்கு&quot; - உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/law-and-order-in-tamil-nadu-is-blowing-in-the-wind-udhayanidhi-stalins-scathing-criticism</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/law-and-order-in-tamil-nadu-is-blowing-in-the-wind-udhayanidhi-stalins-scathing-criticism#comments</comments><guid isPermaLink="false">4cae60a4-53e7-4ccd-9a27-1bf33d3f010b</guid><pubDate>Sat, 19 Sep 2026 07:31:40 +0000</pubDate><atom:updated>2026-09-19T07:31:40.245Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Tamilnadu,திமுக,DMK,தமிழகம்,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,சிவகங்கை,Sivagangai,double murder,இரட்டை கொலை,தவெக அரசு,TVK Government</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/9subdm4m/dmk.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/9subdm4m/dmk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சிவகங்கை இரட்டைக் கொலை குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/udhayanidhi-stalin">உதயநிதி ஸ்டாலின்</a> வலியுறுத்தி உள்ளார். </p><h2>சட்டம் ஒழுங்கு</h2><p>இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>Dummy முதல்-அமைச்சரின் ஆட்சி அமைந்த நாள் முதல் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. </p><p>ராமநாதபுரம் கீழக்கரையில் கடந்த 15-ஆம் தேதியும், சிவகங்கை காளையார்கோவிலில் அதற்கு அடுத்த நாளும்  இரட்டைக்கொலைகள் நடந்து இருப்பது தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.</p><p>காளையார்கோவில் சம்பவத்தில் ஆள் மாறி கொலை செய்துவிட்டோம் என்று கூலிப்படையை சேர்ந்தவர்கள் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், கூலிப்படையை ஏவியவர்களை கைது செய்யாமல் காவல்துறை காலம் தாழ்த்துவது ஏன்?</p><p>‘குற்றவாளிகளை காவல்துறை பாதுகாக்கக் கூடாது’ என்று கொலையானவர்களின் உறவினர்கள் காளையார்கோவில் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். </p><h2>இரட்டைக்கொலை</h2><p>அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவோ, குற்றவாளிகளை கண்டுபிடிக்கவோ வக்கற்று, போராடுவோரின் மீது காவல்துறை தடியடி நடத்தி இருக்கிறது. காவல்துறையின் இந்த அடக்குமுறையை வன்மையாக கண்டிக்கிறேன். </p><p>இந்த இரட்டைக்கொலை சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். இதனால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும், நீதியும் கிடைக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>கோவையில் இருந்து பெங்களூருவுக்கு புதிய விமான சேவை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-flight-service-from-coimbatore-to-bengaluru</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-flight-service-from-coimbatore-to-bengaluru#comments</comments><guid isPermaLink="false">50726578-4a6c-4461-a6df-3e4b39bca995</guid><pubDate>Sat, 19 Sep 2026 07:14:42 +0000</pubDate><atom:updated>2026-09-19T07:14:42.028Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,Air service,விமான சேவை</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/pw37sn9k/13.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/pw37sn9k/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p>கோவையில் இருந்து பெங்களூருவுக்கு அடுத்த மாதம் 25-ந் தேதி முதல் புதிய விமான சேவை தொடங்குகிறது.</p><h2>கோவை விமான நிலையம்</h2><p>கோவையில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கி ருந்து சென்னை. பெங்களூரு, புதுடெல்லி, மும்பை உள்பட உள்நாட்டு நகரங்களுக்கும், சார்ஜா, அபுதாபி, துபாய் உள்பட வெளிநாட்டு நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் 28 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.</p><p>இந்த நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் கடந்த 1-ந் தேதி முதல் கோவை-மும்பை இடையே தினந்தோறும் 2 புதிய விமான சேவையை தொடங்கியது. இதைத்தொடர்ந்து கோவை-பெங்களூரு இடையே தினமும் 2 முறை விமானங்களை இயக்க உள்ளது. அதன்படி கோவையில் காலை 9.10 மணிக்கு புறப்படும் விமானம் பெங்களூரு விமான நிலையத்தை காலை 10.05 மணிக்கு சென்றடையும். இதுபோன்று இரவு 9.50 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் மற்றொரு விமானம் இரவு 10.45 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.</p> <p>மறுமார்க்கமாக பெங்களூருவில் இருந்து காலை 7.20 மணிக்கு புறப்படும் விமானம் காலை 8.25 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு வந்து சேரும். இதுபோன்று இரவு 7.10 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப் படும் மற்றொரு விமானம் இரவு 8.15 மணிக்கு கோவையை வந்தடையும். இந்த புதிய விமான சேவை முதற்கட்டமாக அடுத்த மாதம் (அக்டோபர்) 25-ந் தேதி முதல் தொடங்கும் என்றும், அதன்பின்னர் நவம்பர் 1-ந் தேதி முதல் முழுமையான விமான சேவையாக இயக்கப்படும் என்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.</p><p>இதன் மூலம் இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இயக் கும் கோவை-பெங்களூரு இடையேயான விமான சேவைகளின் எண்ணிக்கை தினமும் 5 ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>மலேசியாவில் படிக்கும் மாணவன் பாரதிதாசனுக்கு ரூ.23.95 லட்சம் விடுவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-2395-lakh-released-for-bharathidasan-a-student-studying-in-malaysia</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-2395-lakh-released-for-bharathidasan-a-student-studying-in-malaysia#comments</comments><guid isPermaLink="false">3d1ed304-4ed5-44f9-b5d8-496558eb7795</guid><pubDate>Sat, 19 Sep 2026 07:06:35 +0000</pubDate><atom:updated>2026-09-19T07:06:35.903Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Malaysia,மலேசியா,தமிழகம்,தமிழ்நாடு அரசு,Medical student,மருத்துவ மாணவர்,கல்வி நிதி,Tamilnadu government,education fund</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/zurcu14s/j-ker.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/zurcu14s/j-ker.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மலேசியாவில் படிக்கும் மாணவன் பாரதிதாசனுக்கு ரூ.23.95 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது. </p><h2>ஆராய்ச்சி படிப்பு</h2><p>அண்ணல் அம்பேத்கர் உயர் கல்வித் திட்டத்தின்கீழ், மலேசியாவில் திசு பொறியியல் மற்றும் மீளுருவாக்கம் பிரிவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர் பாரதிதாசன்.</p><p>இவர் சில மாதங்களுக்கு முன்பு, தனக்கு அண்ணல் அம்பேத்கர் உயர்கல்வித் திட்டத்தின்கீழ் கிடைக்கக் கூடிய நிதி வரவில்லை. ஆகையால், சக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களிடம் இருந்த கடன் பெற்று தன்னுடைய ஆராய்ச்சி படிப்பை தொடர்ந்து வருவதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.</p><h2>விமர்சனம்</h2><p>இந்த வீடியோ தமிழ்நாடு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆகையால், இந்த விவகாரம் ஆளும்கட்சியான தவெக மீதான விமர்சனங்களுக்கு வழி வகுத்தது. அதேசமயம், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, அரசு தரப்பில் அவ்வப்போது விளக்கம் அளித்து வருகிறார்.</p><p>அந்த வகையில், மாணவன் பாரதிதாசனின் இரண்டாம் ஆண்டு படிப்புக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது தொடர்பாக சமூக நீதித்துறை நேற்று முன்தினம் (செப்டம்பர் 17) மீண்டும் விளக்கம் அளித்திருந்தது.</p><h2>கல்விக் கட்டணம்</h2><p>இந்த சூழலில் இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந் திப்பில் பேசிய அமைச்சர் வன்னி அரசு, “வெளிநாட்டில் படிக்கும் மாணவர் பாரதிதாசன் விவகாரம் குறித்து துறை ரீதியாக நேற்று முழு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அந்த மாணவரின் படிப்புக்கு தமிழ்நாடு அரசு முழு உதவி செய்யும். மூளை திசுக்கள் தொடர்பான பி.எச்.டி. ஆராய்ச்சியை தமிழ்நாட்டிலேயே அவர் மட்டுமே மேற்கொள்கிறார். அவர், படித்து முடித்து வர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.</p><p>இந்த ஆண்டுக்கான கல்விக் கட்டணம் ரூ.6 லட்சம், வாழ்வாதார தொகை ரூ.6 லட்சம் அனுப்பப்பட்டு விட்டது. ஆராய்ச்சி பொருட்களுக்கான தொகை கேட்டுள்ளார். அதுவும் ஓரிரு நாட்களில் அவரை சென்றடையும். இதில் அரசியல் செய்ய வேண்டாம். கடந்த தி.மு.க. ஆட்சியில் அயோத்திதாசர் வெளிநாட்டுக்கல்வி உதவித் திட்டத்தில் 609 பேர் விண்ணப்பித்ததில் 601 பேர் தகுதி பெற்றும் 181 பேருக்கு மட்டுமே ரூ.84.89 கோடி வழங்கப்பட்டது. நாங்கள் இந்த ஆண்டு 437 விண்ணப்பங்களில் 365 பேருக்கு ரூ.131 கோடி ஒதுக்கியுள்ளோம். 15 ஆண்டுகளுக்குப் பிறகு யு.ஜி. மாணவர்களுக்கான உதவித்தொகை ரூ.4,750-ல் இருந்து ரூ.12 ஆயிரமாகவும், பி.எச்.டி. மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரமாகவும் உயர்த்தியுள்ளோம்” என்று தெரிவித்திருந்தார்.</p><h2>சமூக நீதித் துறை</h2><p>இந்நிலையில் மலேசிய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பு பயின்று வரும் மாணவர் பாரதிதாசனுக்கு அயலக கல்வி உதவித்தொகையாக ரூ.23.95 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு கல்விக்காக ஏற்கனவே ரூ.12 லட்சம் விடுவிக்கப்பட்ட நிலையில் மேலும் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. </p><p>தனக்கான கல்வி நிதி விடுவிக்கப்படவில்லை என மாணவர் பாரதிதாசன் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், தமிழக அரசின் அம்பேத்கர் அயலக உயர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக சமூக நீதித் துறை தகவல் தெரிவித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பட்டப்பகலில் பயங்கரம்... நடுரோட்டில் ரவுடியை வெட்டிக் கொலை செய்த மர்ம கும்பல்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/horror-in-broad-daylight-a-mysterious-gang-hacked-and-killed-a-rowdy-in-the-middle-of-the-road</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/horror-in-broad-daylight-a-mysterious-gang-hacked-and-killed-a-rowdy-in-the-middle-of-the-road#comments</comments><guid isPermaLink="false">a9493422-e9e8-470f-aba9-a0be327553bc</guid><pubDate>Sat, 19 Sep 2026 07:03:44 +0000</pubDate><atom:updated>2026-09-19T07:03:44.869Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>புதுச்சேரி,murder,கொலை,Rowdy,ரவுடி,Pudhucherry</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/pk49c1u2/12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கொலை
]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/pk49c1u2/12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுச்சேரி,</p><p>பட்டப்பகலில் ரவுடியை ஓட ஓட வெட்டிக்கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p><h2>ரவுடி வெட்டி கொலை</h2><p>புதுச்சேரி கருவடிக்குப்பம் கோமாதா கோவில் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 32). இவர் மீது 2 கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், பிறந்தநாள் தினமான நேற்று ஆனந்த் கருவடிக்குப்பம் சிவாஜி சிலை மற்றும் கிருஷ்ணா நகர் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து 5 பைக்கில் வந்த 8 பேர் கொண்ட மர்ம கும்பல், ஆனந்தின் பைக்கை இடித்து அவரை கீழே தள்ளியது.</p><p>பின்னர் கீழே விழுந்த ஆனந்தை அந்த கும்பல் சுற்றி வளைத்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றது. இதில் படுகாயமடைந்த ஆனந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>விசாரணை</h2><p>இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற லாஸ்பேட்டை போலீசார், ஆனந்தின் உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி <a href="https://www.dailythanthi.com/topic/மருத்துவமனை">மருத்துவமனைக்கு</a> அனுப்பி வைத்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.</p><p>மேலும், கடந்த ஆண்டு புதுச்சேரி நவீனா கார்டன் பகுதியில் நடைபெற்ற பாஜக பிரமுகர் விக்கி கொலை வழக்கில் ஆனந்த் முக்கிய குற்றவாளியாக இருந்ததாக தெரிகிறது . இதனால் அந்த கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் ஆனந்த் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர். இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த <a href="https://www.dailythanthi.com/topic/போலீசார்">போலீசார்</a> தப்பிச் சென்ற மர்ம கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் கருவடிக்குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கண்டெய்னர் லாரி மீது காய்கறி லாரி மோதி விபத்து: உரிமையாளர் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vegetable-truck-collides-with-container-truck-in-accident-owner-dies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vegetable-truck-collides-with-container-truck-in-accident-owner-dies#comments</comments><guid isPermaLink="false">8a8e4d53-9cb0-4cc5-8c45-4ba05b658d4b</guid><pubDate>Sat, 19 Sep 2026 06:51:38 +0000</pubDate><atom:updated>2026-09-19T06:51:38.282Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,காய்கறி,Death,lorry,உயிரிழப்பு,லாரி,உரிமையாளர்,owner,பாளையங்கோட்டை,container lorry,கண்டெய்னர் லாரி,Palayankottai,vegetable</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/3p7genfc/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கண்டெய்னர் லாரி மீது காய்கறி லாரி மோதி விபத்து.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/3p7genfc/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பாளையங்கோட்டை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88">பாளையங்கோட்டை</a> அருகே நான்குவழிச் சாலையில் கண்டெய்னர் லாரி மீது காய்கறி லாரி மோதிய கோர விபத்தில், லாரியின் உரிமையாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். </p><h2>காய்கறி லாரி</h2><p>மதுரையிலிருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு நாகர்கோவில் நோக்கி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF">மினி லாரி</a> ஒன்று, இன்று அதிகாலை 5 மணியளவில் சென்று கொண்டிருந்தது. லாரியை ஓட்டுநர் கலைக்குமார் ஓட்டிச் சென்றுள்ளார். லாரியின் முன்பக்க இடதுபுற இருக்கையில் லாரியின் உரிமையாளரான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த சங்கரன் மகன் காசிலிங்கம் (வயது 56) அமர்ந்திருந்தார். </p><h2>கண்டெய்னர் லாரி</h2><p>பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் பகுதி நான்கு வழிச்சாலையில் லாரி சென்று கொண்டிருந்தபோது, முன்னர் சென்று கொண்டிருந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF">கண்டெய்னர் லாரி</a>யின் பின்பகுதியில் எதிர்பாராதவிதமாக காய்கறி லாரி பலமாக மோதி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">விபத்து</a>க்குள்ளானது.</p><h2>விபத்தில் லாரி உரிமையாளர் உயிரிழப்பு</h2><p>இந்த கோர விபத்தில் லாரியின் இடதுபக்கம் பலத்த சேதமடைந்ததில், அங்கு அமர்ந்திருந்த லாரி உரிமையாளர் காசிலிங்கம் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">உயிரிழந்தார்</a>. ஓட்டுநர் கலைக்குமார் எந்தவித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். </p><h2>போலீசார் விசாரணை</h2><p>இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாளையங்கோட்டை மீட்புப் படையினர் மற்றும் போலீசார், லாரியின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த காசிலிங்கத்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>செவிலியர் நியமனத்தில் ஒப்பந்த முறையை கைவிடுக: தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/abandon-contract-system-in-recruitment-of-nurses-stbi-urges-tamil-nadu-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/abandon-contract-system-in-recruitment-of-nurses-stbi-urges-tamil-nadu-government#comments</comments><guid isPermaLink="false">39e340c0-a40f-4221-bc87-63b0bf0f5b02</guid><pubDate>Sat, 19 Sep 2026 06:36:36 +0000</pubDate><atom:updated>2026-09-19T06:36:36.265Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,recruitment,வலியுறுத்தல்,ஆசிரியர்கள்,நியமனம்,செவிலியர்,SDPI Party,எஸ்டிபிஐ கட்சி,nurs</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/botyauqu/368.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எஸ்டிபிஐ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/botyauqu/368.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>லட்சக்கணக்கான இளைஞர்களின் நிரந்தர அரசுப் பணிக் கனவைச் சிதைக்கும் அரசாணைகளைத் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90">எஸ்டிபிஐ</a> கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><h2>செவிலியர் கல்லூரிகள்</h2><p>தேர்தல் வாக்குறுதிகளுக்கு முற்றிலும் முரணாக, படித்த இளைஞர்களின் நிரந்தர அரசு வேலைவாய்ப்புக் கனவுகளைச் சிதைத்து, உழைப்புச் சுரண்டலைத் தீவிரப்படுத்தும் தமிழக அரசின் நடவடிக்கைகள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை.</p><p>சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் ‘7 புதிய செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படும்’ என அறிவித்துவிட்டு, கடந்த செப்டம்பர் 16 அன்று வெளியிடப்பட்ட அரசாணை (எண்: 261) மூலம் அரசு தனது பொறுப்பை அடியோடு கைகழுவியுள்ளது ஏற்புடையதல்ல. நாமக்கல், திருச்சி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் அமையவுள்ள புதிய அரசு செவிலியர் கல்லூரிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்யாது என்றும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகமே ரூ.270.27 கோடியைத் திரட்டிக்கொள்ள வேண்டும் என்றும் அறிவித்திருப்பது பெரும் நிர்வாகச் சீர்கேடாகும். பல்கலைகழகம் அந்த நிதியை எந்த வகையில் திரட்டும் என்கிற கேள்வி எழுகிறது. அந்த நிதி திரட்டலுக்கு மாணவர்கள் கட்டண உயர்வு மூலம் பலிகடா ஆக்கப்படுவார்களோ என்கிற சந்தேகம் எழுகிறது.</p><p>மேலும், இக்கல்லூரிகளுக்குத் தேவைப்படும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் அனைவரும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலேயே நியமிக்கப்படுவர் என்றும், அவர்களுக்கு நிரந்தரப் பணியிடங்களோ ஓய்வூதியப் பலன்களோ கிடையாது என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டிருப்பது ஏற்க முடியாத ஒன்று.</p><h2>அரசாணை</h2><p>அதேபோன்று, செப்டம்பர் 11 அன்று வெளியிடப்பட்ட அரசாணை (எண்: 258) மூலம், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட செவிலியர்களில் ஒரு சதவீதத்தினரை மட்டுமே (4,724), அதுவும் சொற்ப ஊதியத்தில் ஒப்பந்த முறையில் நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது.</p><p>"ஒப்பந்தப் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்" என வாக்குறுதி அளித்துவிட்டு, இன்று உயர்கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைகளில் ஒப்பந்த முறையைத் திணிப்பது இளைஞர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.</p><p>கார்ப்பரேட் நிறுவனங்களைப் போல அரசே ஒப்பந்த முறையைப் புகுத்தி உழைப்பைச் சுரண்டினால், தனியார் துறையின் தொழிலாளர் உரிமை மீறல்களை அரசு எவ்வாறு தட்டிக்கேட்க முடியும்? இத்தகைய கொள்கைகளால் அரசு மருத்துவக் கட்டமைப்பு சீர்குலையும் சூழலே உருவாகும்.</p><h2>வலியுறுத்தல்</h2><p>எனவே, இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் செப்டம்பர் 11 மற்றும் செப்டம்பர் 16 ஆகிய தேதிகளின் அரசாணைகளைத் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். புதிய செவிலியர் கல்லூரிகளுக்குத் தேவையான முழு நிதியையும் அரசே ஏற்றுக்கொண்டு, செவிலியர்கள் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியிடங்களையும் காலமுறை ஊதியத்துடன் கூடிய நிரந்தரப் பணிகளாக உடனே நிரப்ப வேண்டும் என <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90">எஸ்டிபிஐ </a>கட்சியின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை விமான நிலையத்தை  தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிடுக: இந்தியக் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/abandon-the-move-to-privatize-chennai-airport-cpi-urges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/abandon-the-move-to-privatize-chennai-airport-cpi-urges#comments</comments><guid isPermaLink="false">17506441-4fd5-45e0-a961-c4d41756cf27</guid><pubDate>Sat, 19 Sep 2026 06:34:37 +0000</pubDate><atom:updated>2026-09-19T06:34:37.960Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,Communist Party of India,Chennai Airport,சென்னை விமான நிலையம்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/xmhkin0w/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/xmhkin0w/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை, </p><p>சென்னை விமான நிலையத்தை  தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிடுமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் விடப்பட்டுள்ள ஊடகங்களுக்கான செய்தி பின்வருமாறு;</p><p>”சென்னை விமான நிலையத்தை நிர்வகித்து வரும் இந்திய விமான நிலைய ஆணையத்தின் (கிகிமி) இடத்தில் வேறு ஒரு இயக்குநரை நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பது, சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்கும் முயற்சியாகும். இந்த நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.</p><p>சென்னை விமான நிலையம் ஒரு சாதாரண வணிக நிறுவனம் அல்ல. அது தனிநபர் சொத்தல்ல, மக்களின் பொதுச்சொத்தாகும். நாட்டின் முக்கியமான பொது உள்கட்டமைப்பாகும். தமிழ்நாட்டின் தொழில், வர்த்தகம், சுற்றுலா மற்றும் சரக்கு போக்குவரத்தின் முக்கியமான பங்களிப்பை அது செலுத்துகிறது.</p> <p>சென்னை விமான நிலையத்தில் நிர்வாகக் குறைபாடுகள் இருந்தால் அவற்றைச் சரிசெய்ய வேண்டும். பயணிகள் சேவை, விமான இயக்கம், சரக்கு கையாளுதல், சாலை இணைப்பு உள்ளிட்டவற்றை மேம்படுத்த வேண்டும். அதைவிடுத்து, விமான நிலையத்தை&nbsp;&nbsp;தனியார்மயமாக்குதல் அதற்கு தீர்வல்ல.</p><p>கிகிமி நாடு முழுவதும் விமான நிலையங்களை இயக்குவதன் மூலம் குறிப்பிடத்தக்க வருவாயும் லாபமும் ஈட்டி வருகிறது. 2025-26 நிதியாண்டில் கிகிமி-யின் நிகர லாபம் ரூ.6,522 கோடியாக இருந்ததாக அதன் நிதிநிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>சென்னை விமான நிலையமும் 2024-25ல் கிகிமி நிர்வகிக்கும் விமான நிலையங்களில் அதிக லாபம் ஈட்டிய விமான நிலையங்களில் இரண்டாவது இடத்தில் இருந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதன் லாபம் சுமார் ரூ.492.48 கோடி என தரவுகள் காட்டுகின்றன.</p><p>அப்படியிருக்க, லாபகரமாக இயங்கும் பொதுத்துறை நிறுவனமான&nbsp;சென்னை விமான நிலையத்தை தனியார் நிர்வாகத்திடம் ஒப்படைப்பது அவசியமற்றது. பொதுமக்களின் பணத்தில் உருவாக்கப்பட்ட, சென்னை விமான நிலையத்தின் உள்கட்டமைப்பால் கிடைக்கும் வருவாயும், லாபமும் அரசின் பொதுவளமாகத் தொடர வேண்டும். தனியார் நிறுவனத்தின் லாபமாக மாற்றப்படக் கூடாது.</p><p>சென்னை விமான நிலையம் தமிழ்நாட்டின் தொழில் மற்றும் ஏற்றுமதி-இறக்குமதி பொருளாதாரத்திற்கு முக்கியமான&nbsp;சரக்கு போக்குவரத்து மையமாகும்.</p><p>கிகிமி-யின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, சென்னை விமான நிலைய சரக்கு முனையம் இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் சரக்கு இடமாற்றங்களை கையாள்கிறது. தற்போது சரக்கு முனையத்தில் நெரிசலைக் குறைக்க 19.06 ஏக்கர் நிலத்தை ரூ.278 கோடிக்கு கிகிமி பெறும் நடவடிக்கையும் நடைபெற்று வருகிறது. ஏற்றுமதியாளர்கள் மற்றும் சரக்கு அனுப்பும் முகவர்கள் எதிர்கொள்ளும் தாமதங்களைத் தீர்ப்பதே இதன் நோக்கம். மேலும், சென்னை விமான நிலையத்தின் சரக்கு இயக்கத்தை மேம்படுத்த 5.2 கி.மீ சரக்கு வழித்தடம் உள்ளிட்ட திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன. பயணிகள் விமானங்களில் கொண்டு செல்லப்படும் சரக்கு ஏற்றுமதி சென்னை விமானச் சரக்குப் போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.</p><p>எனவே, விமான நிலையத்தை, தனியார் லாப நோக்கில் இயக்குவது என்பது,&nbsp;பயணிகள் சேவை தொடர்பான பிரச்சினை மட்டும் அல்ல. அது,&nbsp;&nbsp;தமிழ்நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி, தொழில் வளர்ச்சி மற்றும் சரக்கு விநியோகச் சங்கிலியுடனும் தொடர்புடைய பிரச்சினையாகும்.</p><p>பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டுள்ள&nbsp;&nbsp;நிலையில், சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்தி ஐந்தாவது முனையத்தை (ஜிமீக்ஷீனீவீஸீணீறீ-5) அமைப்பதற்கான திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தப் பயணிகள் கையாளும் திறனை ஆண்டு தோறும் 5.5 கோடியாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் 5 வது முனையம் திட்டம் இன்னும் ஆரம்பக் கருத்தாக்க நிலையிலேயே இருப்பதாகவும், முழுமையான தொழில்நுட்ப மற்றும் போக்குவரத்து ஆய்வுகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கிகிமி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>பொதுத்துறை திட்டமிடப்பட்டு, பொதுமுதலீடு செய்யப்பட்டு, உள்கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. அதன் பலனை தனியார் லாபத்திற்கு விடுவது தேசவிரோதச் செயலாகும். பரந்தூரில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. அது வரவேற்கத்தக்கது.</p> <p>ஆனால் விவசாய நிலத்தைப் பாதுகாப்பது மட்டும் பொதுநலன் அல்ல. மாறாக,&nbsp;&nbsp;பொதுச்சொத்து, பொதுத்துறை நிறுவனங்கள், தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் அரசின் வருவாயையும் பாதுகாப்பதே பொதுநலனாகும். தமிழ்நாட்டிற்கு நவீன விமான நிலையம் வேண்டும். பயணிகளுக்கு உலகத்தரமான வசதிகள் வேண்டும். சரக்குப் போக்குவரத்து வேகமாகவும் திறமையாகவும் நடைபெற வேண்டும். விமான நிலையத்தின் திறன் விரிவுபடுத்தப்பட வேண்டும். ஆனால் நவீனமயமாக்கலுக்கு தனியார்மயமாக்கல் அவசியம் என்ற வாதத்தை ஏற்க முடியாது.</p><p>கிகிமி-யின் நிர்வாகக் குறைபாடுகள் இருந்தால் அவற்றைச் சரிசெய்ய வேண்டும். தேவையான அதிகாரம், முதலீடு, தொழில்நுட்ப வசதி மற்றும் நிர்வாகத் திறன் வழங்கப்பட வேண்டும்.பொதுச்சொத்தை தனியார் லாபத்திற்காக ஒப்படைப்பது வளர்ச்சி அல்ல. பொதுத்துறை விமான நிலையத்தை வலுப்படுத்துவதே மாற்று வழி. தமிழ்நாடு அரசு பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தைத் திரும்பப் பெற வேண்டும்.</p><p>சென்னை விமான நிலையத்தை கிகிமி-யின் பொதுத்துறை நிர்வாகத்தின் கீழேயே நவீனப்படுத்தி விரிவுபடுத்த வேண்டும் , இதன் மூலமே இட ஒதுக்கீட்டுடன் கூடிய வேலைவாய்ப்புகளையும், சமூக நிதியையும் காக்க முடியும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஒன்றிய - மாநில அரசுகளுக்கு &nbsp;&nbsp;வலியுறுத்தி தெரிவித்துக் கொள்கிறது.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>கிருஷ்ணகிரி அருகே இளைஞர் கல்லால் அடித்துக் கொலை - சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-bludgeoned-to-death-with-a-stone-near-krishnagiri-cctv-footage-sparks-a-sensation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-bludgeoned-to-death-with-a-stone-near-krishnagiri-cctv-footage-sparks-a-sensation#comments</comments><guid isPermaLink="false">cb5847d8-6e28-406b-bd9e-e808a489ca7a</guid><pubDate>Sat, 19 Sep 2026 06:25:17 +0000</pubDate><atom:updated>2026-09-19T06:25:17.490Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>arrest,வாலிபர் கைது,murder,கிருஷ்ணகிரி,டாஸ்மாக் கடை,police enquiry,இளைஞர் அடித்துக் கொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/w3eo4kdh/14.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மது- இளைஞரை கல்லால் அடித்து கொல்லும் காட்சி]]></media:title><media:description type="html"><![CDATA[ கிருஷ்ணகிரி அருகே இளைஞர் கல்லால் அடித்துக் கொலை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/w3eo4kdh/14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ணகிரி,</p><p>கிருஷ்ணகிரி அருகே டாஸ்மாக் கடையில் காலி மதுபாட்டிலை திரும்பக் கொடுத்துவிட்டு 10 ரூபாய் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில், தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் கல்லால் அடித்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">கொடூரமாக கொலை </a>செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.</p><h2>காலி பாட்டில் தகராறு</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நீலகிரி மாவட்டம்</a> ஊட்டி நஞ்சநாடு பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது 33). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் வேளாண் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு அருண்குமார் அவரது நண்பர்களான ஊத்தங்கரை அடுத்த வெங்கடதாம்பட்டியை சேர்ந்த தீபன்ராஜ், இன்பசேகர், மதன் மற்றும் பாரதிராஜா ஆகியோருடன் கிருஷ்ணகிரி அருகே உள்ள ஆர். பூசாரிப்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தியுள்ளார்.</p><p>மது அருந்தி முடித்த பின், காலி பாட்டிலை அங்கிருந்த கடையில் திரும்ப கொடுத்துவிட்டு, அதற்குரிய 10 ரூபாய் பணத்தைக் கேட்டுள்ளார். அப்போது கடையில் இருந்த கோவிந்தராஜ் (வயது 48) மற்றும் அவரது மகன் கார்த்திக் (வயது 24) ஆகியோருக்கும், அருண்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.</p><h2>கல்லால் அடித்து கொலை</h2><p>வாக்குவாதம் முற்றியதைத் தொடர்ந்து, அருண்குமார் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். எனினும் ஆத்திரமடங்காத கார்த்திக், சுமார் 50 மீட்டர் தூரம் அருண்குமாரைப் பின்தொடர்ந்து சென்று, அங்கிருந்த பெரிய கல்லை எடுத்து அவரது தலையில் ஓங்கி அடித்தார். இதில் பலத்த காயமடைந்த அருண்குமார், இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>வாலிபர் கைது</h2><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கிருஷ்ணகிரி போலீசார், அருண்குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த கொலையாளி கார்த்திக்கை அதிரடியாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் உயிரிழந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">கிருஷ்ணகிரி அருகே இளைஞர் கல்லால் அடித்துக்கொலை <a href="https://t.co/u92eDfSks5">https://t.co/u92eDfSks5</a> <a href="https://x.com/hashtag/kirishnagiri?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#kirishnagiri</a> <a href="https://x.com/hashtag/murder?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#murder</a> <a href="https://x.com/hashtag/police?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#police</a> <a href="https://x.com/hashtag/thanthitv?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#thanthitv</a></p>&mdash; Thanthi TV (@ThanthiTV) <a href="https://x.com/ThanthiTV/status/2101183550968197209?ref_src=twsrc%5Etfw">September 19, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>லாட்ஜில் ஒன்றாக தங்கியிருந்த போது பெண்ணை கொன்றது ஏன்..? - கைதான டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-did-he-kill-the-woman-while-staying-together-at-the-lodge-arrested-driver-makes-sensational-confession</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-did-he-kill-the-woman-while-staying-together-at-the-lodge-arrested-driver-makes-sensational-confession#comments</comments><guid isPermaLink="false">5ea086e4-9978-4d0f-a72a-a9a7a7a5d1e9</guid><pubDate>Sat, 19 Sep 2026 06:24:53 +0000</pubDate><atom:updated>2026-09-19T06:24:53.376Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Crime News,தமிழகம்,Nagercoil,நாகர்கோவில்,கிரைம் செய்திகள்,பெண் கொலை,வாக்குமூலம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/5zuoctel/kloer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/5zuoctel/kloer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி, </p><p>லாட்ஜில் ஒன்றாக தங்கியிருந்த போது ரூ.20 ஆயிரத்தை அபகரிக்க முயன்றதால் பெண்ணை கொலை செய்ததாக கைதான டிரைவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.</p><h2>வழக்குப்பதிவு</h2><p>மேலகிருஷ்ணன்புதூர் அருகே உள்ள ஆத்திக்காட்டுவிளையை சேர்ந்தவர் செல்வி (வயது 50). இவர் கடந்த 16-ந் தேதி <a href="https://www.dailythanthi.com/topic/கன்னியாகுமரி">கன்னியாகுமரி</a> விவேகானந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுதொடர்பாக கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வியை கொலை செய்த ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியை சேர்ந்த செல்வராஜை (31) கைது செய்தனர். </p><h2>லாட்ஜில் அறை</h2><p>அவர் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியதாவது:-</p><p>நான் சென்னையில் வாடகை கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறேன். சவாரி இல்லாத நாட்களில் வெளியூர் செல்வது வழக்கம். அதன்படி கன்னியாகுமரியை சுற்றி பார்ப்பதற்காக வந்தேன். அப்போது வடசேரி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த செல்வி அறிமுகமானார். அவரை அழைத்து கொண்டு கன்னியாகுமரி விவேகானந்தபுரம் வந்து ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினோம்.</p><h2>வாக்குவாதம்</h2><p>பின்னர் நான் குளித்து விட்டு வந்த போது என்னிடம் இருந்த ரூ.20 ஆயிரத்தை செல்வி எடுத்தார். இதைப்பார்த்த நான் பணத்தை கொடுக்கும்படி கேட்டேன். அப்போது அவர், உன்னிடம் நிறைய பணம் இருக்கிறது. ஆனால் எனக்கு குறைவாக ரூபாய் தருகிறாய், என்று என்னிடம் வாக்குவாதம் செய்தார். இதில் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது நான் ஆத்திரத்தில் செல்வியை கீழே தள்ளி தலையணையால் முகத்தை அழுத்தினேன். இதில் மயக்கமடைந்தார்.</p><h2>தனிப்படை போலீசார்</h2><p>இதையடுத்து நான் அவரது கம்மலை பறித்து விட்டு பஸ் மூலம் கோவைக்கு தப்பி சென்றேன். ஆனால், தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி என்னை கோவையில் வைத்து கைது செய்தனர். அப்போதுதான் செல்வி இறந்தது தெரியும். இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து செல்வராஜை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சேலத்தில் குப்பை எரிஉலை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-plan-to-set-up-a-garbage-incinerator-in-salem-should-be-abandoned-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-plan-to-set-up-a-garbage-incinerator-in-salem-should-be-abandoned-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">f3a08c99-81ff-4e7f-acc0-42fcf5ea78cd</guid><pubDate>Sat, 19 Sep 2026 06:03:30 +0000</pubDate><atom:updated>2026-09-19T06:03:30.959Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,சென்னை,சேலம்,Plan,In Salem,திட்டத்தை,Garbage குப்பைகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/w9iqzi3a/198.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/w9iqzi3a/198.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சேலத்தில் குப்பை எரிஉலை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>குப்பை எரிஉலை திட்டம்</h2><p>சேலம் மாநகரம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் 92 ஏக்கர் பரப்பளவில் குப்பை எரிஉலை அமைத்து குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் சாயப்பட்டறைகளுடன் கூடிய ஜவுளிப்பூங்கா, குப்பை எரியுலை உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்தி சேலம் மாநகர மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தத்துடிப்பது கண்டிக்கத்தக்கது.</p><p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி அவை விதி எண் 110-இன் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்-அமைச்சர் விஜய், சேலம் மாநகராட்சியில் ரூ.291 கோடியில் 10 மெகாவாட் திறனுக்கும், நெல்லையில் ரூ.256 கோடியில் 9 மெகாவாட் அளவுக்கும் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் வெள்ளக்கல்பட்டியில் கொங்கு எஸ்.ஆர்.வி பள்ளிக்கு எதிரில் உள்ள அரசுக்கு சொந்தமான 92.49 ஏக்கர் பரப்பளவில் திடக்கழிவு குப்பைகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை அமைக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இது சேலம் மாநகரத்திற்கு பேரழிவை ஏற்படுத்திவிடும்.</p><h2>நச்சுத் துகள்கள்</h2><p>குப்பை எரிஉலைகள் உலகெங்கும் தோல்வியடைந்த திட்டம் ஆகும். உலகின் வளர்ந்த நாடுகள் பலவும் இந்தத் திட்டத்திற்கு தடை விதித்துள்ளன. குப்பை எரிஉலையில் பிளாஸ்டிக் உள்ளிட்ட அனைத்து குப்பைகளும் ஒன்றாக எரிக்கப்படும் என்பதால், அதிலிருந்து டையாக்சின், சல்பர் டையாக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் டையாக்சைடு, பாதரசம், கரியமில வாயு, டையாக்சைடு, பியூரன் உள்ளிட்டவை வெளியாகும். காற்றில் மிதக்கும் PM 2.5, PM 10  நச்சுத் துகள்கள், ஆவியாகும் கரிமச் சேர்மங்கள்  ஆகியவை வெளியாகும். இவற்றில் பல ரசாயனங்கள் சுற்றுச்சூழலுடன் கலந்து அழியாமல் நிலைத்திருக்கக் கூடிய மிகக் கொடிய நச்சுத்தன்மை கொண்டவை; இவை மனித உடலுக்குள் சென்ற பின்னரும் கூட அழியாமல் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானவை.</p><p>மின்சார உற்பத்தி தொழில் நுட்பங்களில் மிகவும் மாசுபடுத்தக்கூடியது குப்பை எரிஉலைதான். நிலக்கரி அனல்மின் நிலையத்தை விட 28 மடங்கு  டையாக்சின், 3 மடங்கு  நைட்ரஜன் ஆக்சைடு, 14 மடங்கு அதிக பாதரசம், 6 மடங்கு  சல்பர் டையாக்சைடு, இரண்டரை மடங்கு கரியமிலவாயு ஆகிய மாசுக்கள் குப்பை எரிஉலையில் இருந்து வெளியாகின்றன. இந்த நச்சு ரசாயனங்களால் புற்றுநோய், இருதய நோய்கள், மூச்சுக்குழல் நோய்கள், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பதிப்புகள் ஏற்படும். தோல்நோய், ஈரல் பாதிப்பு, ஆஸ்துமா என பல கேடுகளுக்கு குப்பை எரிப்பு வழிவகுக்கும். குழந்தைகளும் வயதானவர்களும் அதிகம் பாதிக்கப்படுவார்கள். காற்று மாசு மட்டுமல்லாமல், எரிஉலை சாம்பலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. போபால் நகரில் விஷவாயுக் கசிவால் ஒரே நாளில் ஏற்பட்ட பாதிப்புகள் குப்பை எரிஉலைகளால் படிப்படியாக ஏற்படும் ஆபத்து உள்ளது.</p><h2>தவெக அரசு</h2><p>இந்த உண்மைகள் அனைத்தும் தெரிந்திருந்து தான் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வடசென்னை கொடுங்கையூர், தென்சென்னை பெருங்குடி, செங்கல்பட்டு மாவட்டம் கீரப்பாக்கம், கோவை வெள்ளலூர் ஆகிய இடங்களில் ஆபத்தான குப்பை எரிஉலை திட்டத்தை அறிவித்து அதற்கான பணிகளை கடந்த ஆட்சியாளர்கள் மேற்கொண்டனர். இந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு, அதன் பங்குக்கு சேலம் ஜாகிர் அம்மாபாளையம், திருநெல்வேலி ஆகிய இடங்களிலும் குப்பை எரிஉலை அமைக்கத் துடித்து வருகிறது.</p><p>சேலம் ஜாகிர் அம்மாபாளையம் குப்பை எரிஉலைத் திட்டம் கூட கடந்த ஆட்சியில் உருவாக்கப்பட்ட திட்டம் தான். இதற்கான திட்டம் வகுக்கப்பட்டது முதல் இடம் அடையாளம் காணப்பட்டு, இறுதி செய்யப்பட்டது வரை அனைத்தும் திமுக ஆட்சியில் தான் இறுதி செய்யப்பட்டது. திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை ரத்து செய்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95">தவெக அரசு</a>, இந்த பேரழிவுத் திட்டத்தை மட்டும் செயல்படுத்தத் துடிப்பது ஏன்?</p><p>சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இருந்தும், கரூர் மாவட்டத்தில் கரூர் மாநகராட்சியில் இருந்தும் திடக்கழிவு குப்பைகள் சாலைவழியாக் கொண்டு வரப்பட்டு சேலம் குப்பை எரிஉலையில் எரிக்கப்படும். இவற்றில் 60 சதவீதம் வரை ஈரக்கழிவுகள் இருப்பதால், அவை கொண்டு வரப்படும் பாதை நெடுகிலும் துர்நாற்றம், சுற்றுச்சூழல் சீர்கேடு, நோய்ப்பரவல் உள்ளிட்ட கேடுகளை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி, இந்த ஆலைக்காக தினமும் ஒன்றரை லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இதில் ஒரு பகுதி கழிவுநீரை சுத்திகரிப்பதன் மூலம் பெறப்படும் என்றாலும், பெரும்பகுதி நீர்  நிலத்திலிருந்து தான் எடுக்கப்படும் என்பதால் நிலத்தடி நீர்மட்டத்தின் மீது மிகப்பெரும் அழுத்தம் ஏற்படும்.</p><h2>ஜவுளி பூங்கா</h2><p>சேலம் ஜாகிர்பாளையத்தில் ஏற்கனவே 119 ஏக்கர் பரப்பளவில் ஜவுளி பூங்கா அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ரூ.800 கோடியில் அமைக்கப்படும் இந்த ஜவுளி பூங்காவில்  60-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் அமைக்கப்படவுள்ளன. அதற்காக ஒருபுறம் நிலத்தடி நீர் பெருமளவில்  உறிஞ்சப்படுவது மட்டுமின்றி, சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் வேதிப்பொருள்களும், நச்சுப் பொருள்களும் கலந்த கழிவுநீர் நிலம், நீர், வாயு ஆகிய மூன்றையும் நஞ்சாக்கி விடும். அதே பகுதியில் தான் இப்போது குப்பை எரிஉலை அமைக்கப்படவுள்ளது என்பதால், அதையொட்டி 30 கி.மீ சுற்றளவில் வாழும் மக்களுக்கு அவர்கள் சுவாசிக்கும் காற்று, குடிநீர் ஆகியவையே புற்றுநோய், இதயநோய் என பட்டியலிட முடியாத எண்ணிக்கையில் நோய்களை ஏற்படுத்தி விடும். இவ்வளவு பேரழிவுகளையும் ரூ.291 கோடி மக்களின் வரிப்பணத்தைக் கொட்டிக் கொடுத்து வாங்க வேண்டுமா? என்பது தான் பா.ம.க.வின் வினா.</p> <h2>ஹிட்லர்</h2><p>இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரின் நாஸி படைகளால் பிடிக்கப்பட்ட  யூதர்கள் ஜெர்மனியில் அமைக்கப்பட்டிருந்த கொலை முகாம்களில் அடைக்கப்பட்டு, நச்சுவாயு செலுத்தப்பட்டு  கொல்லப்பட்டனர். சேலம் ஜாகிர் அம்மாபாளையம் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்படும் குப்பை எரிஉலைகளும் அவற்றுக்கு சற்றும் குறைந்தவை அல்ல. </p><h2>திடக்கழிவு மேலாண்மை விதி</h2><p>எனவே, சேலம் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் குப்பை எரிஉலைகளை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். மாறாக, உச்சநீதிமன்றம் ஆணையிடவாறு,  வீடுகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து  கழிவுகளை ஈரமான குப்பை, உலர்ந்த குப்பை, சுகாதாரக் கழிவுகள், சிறப்புக் கவனம் தேவைப்படும் கழிவுகள் என 4 வகைகளாகப் பிரித்து  சேகரிக்கும் சேகரிக்கப்படும் கழிவுகளை மத்திய அரசின் 2026 ஆம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை விதிகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பெண் தீக்குளித்து தற்கொலை; காப்பாற்ற முயன்ற வடமாநில தொழிலாளி காயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-commits-suicide-by-setting-herself-on-fire-worker-from-northern-state-injured-while-trying-to-save-her</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-commits-suicide-by-setting-herself-on-fire-worker-from-northern-state-injured-while-trying-to-save-her#comments</comments><guid isPermaLink="false">408a0b72-4608-4d38-a53b-fcdfdb5c4f0c</guid><pubDate>Sat, 19 Sep 2026 05:55:56 +0000</pubDate><atom:updated>2026-09-19T05:55:56.032Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/2f0pzdfz/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெண் தீக்குளித்து தற்கொலை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/2f0pzdfz/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a>யில் கணவரைப் பிரிந்து வசித்து வந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D">பெண்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">தீக்குளித்து தற்கொலை</a> செய்து கொண்டார். அவரைப் போராடி மீட்க முயன்ற வடமாநில தொழிலாளி தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><h2>கணவருடன் கருத்து வேறுபாடு</h2><p>ராமநாதபுரம் மாவட்டம், ராஜசூரியமடை பசும்பொன்நகரைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் மனைவி மாணிக்கவேல் (வயது 35). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்த மாணிக்கவேல், தனது மகள் சசி(13), மகன் விஷால்(7) ஆகியோருடன் தனியாக வசித்து வந்தார்.</p><h2>பெண் தீக்குளிப்பு</h2><p>கடந்த சில மாதங்களாக தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் கீரைத்தோட்டத் தெருவில் குடியிருந்து வந்த அவர், அருகே எம்ப்ராய்டரி தொழில் செய்து வந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF">வடமாநில தொழிலாளர்களுக்கு</a> சமையல் செய்து கொடுத்து வந்தார். சம்பவத்தன்று மாலை பணி செய்யும் இடத்தில் உள்ள ஒரு அறையை உட்புறமாக பூட்டிக்கொண்ட மாணிக்கவேல், தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். </p><h2>காப்பாற்ற முயன்ற வடமாநில தொழிலாளி காயம்</h2><p>அவரது அலறல் சத்தம் கேட்டு, பக்கத்து அறையில் வேலை செய்து கொண்டிருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளி அல்டெப் நஸ்கர்ப்(31) என்பவர் கதவை உடைத்து உள்ளே சென்று அவரை மீட்கப் போராடியுள்ளார். இருப்பினும், மாணிக்கவேல் தீயில் கருகி உயிருக்குப் போராடிய நிலையில், அவரை காப்பாற்ற முயன்ற அல்டெப் நஸ்கர்ப்பிற்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. </p><h2>பெண் உயிரிழப்பு</h2><p>அங்கிருந்த சக தொழிலாளர்கள் 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணிக்கவேல், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p>தாயின் உடலை பார்த்து அவரது குழந்தைகள் கதறி அழுத காட்சி அங்கே இருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. காயமடைந்த வடமாநில தொழிலாளி அல்டெப் நஸ்கர்ப் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மதுரையில் இளைஞர் வெட்டி கொலை - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-hacked-to-death-in-madurai-police-launch-net-to-nab-mysterious-persons</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-hacked-to-death-in-madurai-police-launch-net-to-nab-mysterious-persons#comments</comments><guid isPermaLink="false">a20dec5b-ed66-4de2-b2c1-0739f318836e</guid><pubDate>Sat, 19 Sep 2026 05:51:23 +0000</pubDate><atom:updated>2026-09-19T05:51:23.213Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,Madurai,மதுரை,murder,கொலை,இளைஞர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/m36fd8i1/11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வெட்டி கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/m36fd8i1/11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>இளைஞரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p><h2>இளைஞர் கொலை</h2><p>மதுரை மாவட்டம் மேலூர் அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறம் இளைஞர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக மேலூர் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஏ.எஸ்.பி சிவக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">விசாரணை</a> நடத்தினர்.</p><p>பின்னர் கொலை செய்யப்பட்ட இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் சிவகங்கை மாவட்டம் மேலப்பூவண்டி பகுதியைச் சேர்ந்த செல்லப்பாண்டியின் மகன் செல்லத்துரை என்பது தெரியவந்தது.</p><p>செல்லத்துரை கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மேலூர் கஸ்தூரிபாய் நகரில் தனது சகோதரி செல்விபிரியா வீட்டில் தங்கியிருந்தார். மேலும், தனது உறவினரான முருகனின் மெக்கானிக் கடையில் உதவியாளராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. </p><p>இந்த நிலையில், நேற்று இரவு தனது சகோதரியிடம் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு செல்லத்துரை வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால், அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.இதனிடையே, மேலூர் அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறம் அவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.</p><h2>விசாரணை</h2><p>அவரை கொலை செய்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்லத்துரைக்கு நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என <a href="https://www.dailythanthi.com/topic/போலீசார்">போலீசார்</a> சந்தேகித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருட சென்ற வீட்டில் நகை, பணம் இல்லாததால் பொருட்கள் உடைப்பு: “சாரி” என சுவரில் எழுதிச் சென்ற மர்ம ஆசாமி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/property-damaged-after-finding-no-cash-or-jewelry-in-house-targeted-for-burglary-mysterious-intruder-leaves-sorry-written-on-the-wall</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/property-damaged-after-finding-no-cash-or-jewelry-in-house-targeted-for-burglary-mysterious-intruder-leaves-sorry-written-on-the-wall#comments</comments><guid isPermaLink="false">67c794c8-18cc-453f-a1a5-18cab30d7ad5</guid><pubDate>Sat, 19 Sep 2026 05:49:56 +0000</pubDate><atom:updated>2026-09-19T05:49:56.738Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,திருட்டு,Theft,கோயம்புத்தூர்,Kovai,நகை பணம் திருட்டு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/qv0yqre7/vijji.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/qv0yqre7/vijji.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>திருட சென்ற வீட்டில் நகை, பணம் இல்லாததால் பொருட்களை உடைத்து அட்டகாசம் செய்த ஆசாமி சுவரில் 'சாரி' என எழுதி வைத்துவிட்டு தப்பிச்சென்றார்.</p><h2>மர்ம ஆசாமி</h2><p>தங்கம் விலை உயர்ந்துள்ள சூழலில் வீடு புகுந்து நகை திருடுவது மற்றும் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபடுவது போன்ற குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஆட்கள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு பூட்டை உடைத்து திருடும் கும்பல், சில நேரங்களில் அங்கேயே சமைத்து சாப்பிடுவது, ஓய்வெடுப்பது போன்ற செயல்களிலும் ஈடுபடுவதுண்டு.</p><p>இந்த நிலையில், <a href="https://www.dailythanthi.com/topic/coimbatore">கோவையில்</a> உள்ள ஒரு வீட்டில் புகுந்த மர்ம ஆசாமி, அங்கு திருடுவதற்கு நகை, பணம் இல்லாத விரக்தியில் அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்திவிட்டு, சுவரில் 'சாரி' என்று எழுதி வைத்துவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>பெரும் அதிர்ச்சி</h2><p>இது சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-</p><p><a href="https://www.dailythanthi.com/topic/coimbatore">கோவை</a> ராமநாதபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 45). ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு, கேரளம் மாநிலம் பாலக்காட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.</p><p>சில நாட்கள் கழித்து மீண்டும் வீடு திரும்பியபோது, முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்ற அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. சில பொருட்கள் உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டன.</p><p>உடனடியாக படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது, அங்குள்ள பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் அனைத்தும் கீழே கொட்டப்பட்டு இருந்தன. மேலும், கட்டிலில் இருந்த மெத்தை, சோபா, வாஷிங் மிஷின் மற்றும் பிரிட்ஜ் ஆகியவையும் சேதப்படுத்தப்பட்டு இருந்தது.</p><h2>சாரி</h2><p>வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமி பக்கவாட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டது உள்ளார். ஆனால் நகை, பணம் எதுவும் இல்லாத ஆத்திரத்தில், அந்த நபர் பொருட்களை சேதப்படுத்திவிட்டு, சுவரில் ஆங்கிலத்தில் 'சாரி' என்று எழுதி வைத்துவிட்டு தப்பி சென்றுள்ளார். இது குறித்து ராமநாதபுரம் போலீசில் கிருஷ்ணமூர்த்தி புகார் அளித்தார்.</p><p>அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>திருவனந்தபுரம் -தாம்பரம் சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/extension-of-thiruvananthapuramtambaram-special-train-service</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/extension-of-thiruvananthapuramtambaram-special-train-service#comments</comments><guid isPermaLink="false">245b4d81-9b3f-4876-b1bd-55e20360d123</guid><pubDate>Sat, 19 Sep 2026 05:45:11 +0000</pubDate><atom:updated>2026-09-19T05:45:11.570Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,Special train,திருச்சி,Trichy</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/8n1wyb15/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/8n1wyb15/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி, </p><p>திருவனந்தபுரம் தாம்பரம் இடையே திருச்சி வழியாக இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. அதன்படி, திருவனந்தபுரத்தில் இருந்து தாம்பரத்திற்கு வாராந்தோறும் புதன்கிழமை இயக்கப்பட்டு வரும் திருவனந்தபுரம் - தாம்பரம் சிறப்பு ரெயில் (வண்டி எண் : 06110) வருகிற 23, 30 மற்றும் அடுத்த மாதம் 7, 14, 21, 28-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. </p> <p>இதேபோல் மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு வாராந்தோறும் வியாழக்கிழமை இயக்கப்படும் தாம்பரம் - திருவனந்தபுரம் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06109) வருகிற 24 மற்றும் அடுத்த மாதம் 1, 8, 15, 22, 29-ந்தேதி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உளுந்தூர்பேட்டை நகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sanitation-workers-in-ulundurpet-municipality-stage-a-sudden-strike</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sanitation-workers-in-ulundurpet-municipality-stage-a-sudden-strike#comments</comments><guid isPermaLink="false">a5bb3eb0-d1de-4cbf-8ea9-408723683c82</guid><pubDate>Sat, 19 Sep 2026 05:30:40 +0000</pubDate><atom:updated>2026-09-19T05:30:40.827Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கள்ளக்குறிச்சி,Sanitation workers,தூய்மைப் பணியாளர்கள்,municipality,பொதுமக்கள் கோரிக்கை,போராட்டம் protest,Ulundurpettai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/wfj3tlx8/13.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ தூய்மைப் பணியாளர்கள் ]]></media:title><media:description type="html"><![CDATA[ உளுந்தூர்பேட்டை நகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/wfj3tlx8/13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சி,</p><p>கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தூய்மைப் பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நகராட்சிப் பகுதிகளில் குப்பைகள் தேங்கி, சுகாதார பணிகள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.</p><h2>திடீர் போராட்டம்</h2><p>கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சியில் பணிபுரியும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">தூய்மைப் பணியாளர்கள்</a>, தங்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (சனிக்கிழமை) காலையில் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நகராட்சியில் தினசரி துப்புரவு மற்றும் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டு வரும் தங்களுக்கு, நிர்வாக தரப்பில் இருந்து முறையான வாழ்வாதார உரிமைகள் வழங்கப்படவில்லை என பணியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அவர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.</p><h2>தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள்</h2><p>பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மாத ஊதியத்தை எவ்வித தாமதமும் இன்றி உரிய காலத்தில் தடையின்றி வழங்க வேண்டும். நகரின் பல்வேறு வார்டுகளில் குப்பைகளை அள்ளுவதற்கும், சாக்கடைகளைத் தூய்மைப்படுத்துவதற்கும் தேவையான கையுறைகள், முகக்கவசங்கள், கூடைகள் மற்றும் உரிய தூய்மைப் பணி உபகரணங்களை நகராட்சி நிர்வாகமே வழங்க வேண்டும்.</p><h2>பாதிப்புகள் </h2><p>தூய்மைப் பணியாளர்களின் இந்த திடீர் போராட்ட அறிவிப்பால் உளுந்தூர்பேட்டை நகராட்சியின் முக்கிய வீதிகள், வணிக வளாக பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வழக்கம் போல் நடைபெறும் குப்பை சேகரிப்பு பணிகள் இன்று காலை முதல் முடங்கியுள்ளன. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.</p><h2>பொதுமக்கள் கோரிக்கை</h2><p>கொசுத்தொல்லை மற்றும் தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதால், நகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">பொதுமக்கள் கோரிக்கை</a> விடுத்துள்ளனர். தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் உரிய முறையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்து, அவற்றை நிறைவேற்றும் வரை தங்களது போராட்டம் தொடரும் என தூய்மைப் பணியாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>10-ம் வகுப்பு மாணவனை கொன்று தொழிலாளி தற்கொலை: காரணம் என்ன..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/worker-kills-10th-grade-student-and-commits-suicide-what-is-the-reason</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/worker-kills-10th-grade-student-and-commits-suicide-what-is-the-reason#comments</comments><guid isPermaLink="false">de651ecd-6295-461f-8da1-c54b20411e4a</guid><pubDate>Sat, 19 Sep 2026 05:18:51 +0000</pubDate><atom:updated>2026-09-19T05:18:51.090Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,Salem,கிரைம் செய்திகள்,சேலம்,student murder,தொழிலாளி தற்கொலை,மாணவன் கொலை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/5dywzci4/kad.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/5dywzci4/kad.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம், </p><p>10-ம் வகுப்பு மாணவனை கழுத்தை நெரித்துக்கொன்று விட்டு தறித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>நண்பர்கள்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/salem">சேலம்</a> மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மனைவி விஜயலட்சுமி. கூலித்தொழிலாளர்கள். இவர்களுடைய மகன் தவுசிக் (வயது 15). இவன் கே.ஆர்.தோப்பூர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். தவுசிக்கும், இடங்கணசாலை அருகே உள்ள சிட்டனூரை சேர்ந்த வடிவேல் என்பவரின் மகனும், விசைத்தறி தொழிலாளியுமான சிவராஜ் (24) என்பவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.</p><p>நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டில் இருந்த தவுசிக்கை, சிவராஜ் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வெளியில் சென்று உள்ளார். பின்னர் அவர்கள் 2 பேரும் வீடு திரும்பவில்லை.</p><p>இதையடுத்து அவர்களது பெற்றோர் 2 பேரையும் இரவு முழுவதும் பல இடங்களில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து மகுடஞ்சாவடி போலீசில் புகார் கொடுத்தனர்.</p><h2>கழுத்தை நெரித்துக்கொலை</h2><p>இந்த நிலையில் கே.ஆர்.தோப்பூர் சாலையில் உள்ள மேட்டுக்காடு பகுதியில் இரும்பாலைக்கு சொந்தமான இடத்தில் தவுசிக், கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தான். இது பற்றி தகவல் அறிந்த பெற்றோர் விரைந்து சென்று தவுசிக் உடலை பார்த்து கதறி அழுதனர். அப்போது சிவராஜ் தான் தங்கள் மகனை கொலை செய்து இருப்பான் என்று கூச்சலிட்டனர். </p><p>இதைத்தொடர்ந்து போலீசார் சிவராஜை தேடத்தொடங்கினர். அதே நேரத்தில், தாரமங்கலம் அருகே உள்ள பெரியபட்டி சுடுகாடு பகுதியில் ஒரு மரத்தில் சிவராஜ் தூக்கில் பிணமாக தொங்கினார். இந்த சம்பவம் தொடர்பாக மகுடஞ்சாவடி போலீசார் கொலை வழக்கும், தாரமங்கலம் போலீசார் தற்கொலை வழக்கும் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>என்ன காரணம்..?</h2><p>இது குறித்து போலீசார் கூறியதாவது:- </p><p>தவுசிக், சிவராஜ் 2 பேரும் நண்பர்களாக பழகி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் பேசாமல் இருந்து உள்ளனர். நேற்று முன்தினம் தவுசிக்கை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றபோது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு இருக்கலாம். இதில் ஆத்திரம் அடைந்த சிவராஜ், தவுசிக்கின் கழுத்தை நெரித்து கொலை செய்து இருக்கலாம். பின்னர் பயத்தால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்து உள்ளது. மேலும் இவர்கள் செல்போனில் பிரிபயர் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் அடிக்கடி ஈடுபட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. குடிபோதையில் கொலை செய்து விட்டு தற்கொலை நடந்ததா? அல்லது ஓரினச்சேர்க்கை விவகாரத்தில் இந்த கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளோம். </p><p>இவ்வாறு அவர்கள் கூறினர். </p>]]></content:encoded></item><item><title>ஊர்வலத்தில் ரகளை; போலீசாருக்கு கொலை மிரட்டல்- 2 வாலிபர்கள் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/riot-at-procession-2-youths-arrested-for-threatening-to-kill-police</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/riot-at-procession-2-youths-arrested-for-threatening-to-kill-police#comments</comments><guid isPermaLink="false">b3d54836-0b33-491b-8f3a-5cc1bbce40ed</guid><pubDate>Sat, 19 Sep 2026 05:10:47 +0000</pubDate><atom:updated>2026-09-19T05:10:47.864Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,Riot,Kovilpatti,கோவில்பட்டி,கொலை மிரட்டல்,Procession,ஊர்வலம்,Death threats,ரகளை,2 வாலிபர்கள் கைது,2 youths arrested,போலீசாருக்கு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/tc0lq6x8/2-pg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 2 வாலிபர்கள் கைது. ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/tc0lq6x8/2-pg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவில்பட்டி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF">கோவில்பட்டி</a>யில் விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு நடந்த ஊர்வலத்தில் ரகளையில் ஈடுபட்டு போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.</p><h2>ஊர்வலம்</h2><p>விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பின்புறம் உள்ள விஸ்வகர்மா உயர்நிலைப் பள்ளியில் இருந்து கடந்த வியாழக்கிழமை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D">ஊர்வலம்</a> புறப்பட்டுச் சென்றது.</p><h2>பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் நடனம்</h2><p>அப்போது, ஊர்வலத்தில் பங்கேற்ற விளாத்திகுளம் அரசு மருத்துவமனை சாலையைச் சேர்ந்த சேகர் மகன் சுபாஷ் (வயது 22) மற்றும் தென்காசி மாவட்டம் வீரணம் காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் கருப்பசாமி(21) ஆகிய 2 பேரும் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81">இடையூறா</a>க சாலையில் நடனம் ஆடிக்கொண்டே வந்துள்ளனர்.</p><h2>போலீசாருக்கு கொலை மிரட்டல்</h2><p>அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a> அவர்களைக் கண்டித்து, முறைப்படுத்தி செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த சுபாஷ் மற்றும் கருப்பசாமி ஆகிய 2 பேரும் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசாரை ஏளனமாகப் பேசி, அவதூறான வார்த்தைகளால் திட்டி, பணி செய்யவிடாமல் தடுத்ததோடு, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D">கொலை மிரட்டலும்</a> விடுத்துள்ளனர். </p><h2>2 வாலிபர்கள் கைது</h2><p>இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு, தலைமறைவாக இருந்த சுபாஷ் மற்றும் கருப்பசாமி ஆகிய 2 பேரையும் நேற்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். </p>]]></content:encoded></item></channel></rss>