<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 25 Jul 2026 22:32:30 +0000</lastBuildDate><item><title>மனைவி நடத்தையில் சந்தேகம்: கத்தியால் குத்திக்கொலை செய்த கணவர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wife-behaviour-suspicion-husband-stabs-to-death-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wife-behaviour-suspicion-husband-stabs-to-death-arrested#comments</comments><guid isPermaLink="false">707c2726-8c31-4eaa-ad3c-9136421c0eef</guid><pubDate>Sat, 25 Jul 2026 22:32:28 +0000</pubDate><atom:updated>2026-07-25T22:32:28.822Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கணவர்,கைது,husband,arrest,wife,மனைவி,சந்தேகம்,குத்திக்கொலை,Suspicious behavior</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/zfumdo39/family-issue.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரெபேக்கா,பாகபிரகாஷ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/zfumdo39/family-issue.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பவானிசாகர், </p><p>ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், கணவனால் இளம் தாய் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%20">கத்தியால் குத்திக்கொலை </a>செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p> <h2>இலங்கை தமிழர் முகாம்</h2><p>ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் லூர்துகுமார். அவருடைய மனைவி இந்திரகுமாரி. இவர்களுடைய மகள் ரெபேக்கா (வயது 24). இவருக்கும், ராமேசுவரத்தை சேர்ந்த தொழிலாளி பாகபிரகாஷ் (36) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர். திருமணம் முடிந்த பின்னர் பாகபிரகாசும், ரெபேக்காவும் ராமேசுவரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.</p><h2>பிரிந்து வந்த மனைவி</h2><p>இந்த நிலையில், ரெபேக்காவின் நடத்தையில் பாகபிரகாசுக்கு சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. கருத்து வேறுபாடு முற்றியதால், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கணவரை பிரிந்த ரெபேக்கா, தனது 3 குழந்தைகளுடன் தாய் வீடான பவானிசாகர் முகாமிற்கு வந்துவிட்டார்.</p><h2>சரமாரி கத்திக்குத்து</h2><p>மனைவி பிரிந்து சென்றதால் ஆத்திரத்தில் இருந்த பாகபிரகாஷ், நேற்று காலை 10 மணி அளவில் ரெபேக்காவை பார்ப்பதற்காக பவானிசாகர் முகாமிற்கு வந்தார். அப்போது ரெபேக்காவிடம், தன்னுடன் மீண்டும் ராமேசுவரத்திற்கு குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். இதற்கு ரெபேக்கா மறுப்பு தெரிவித்ததால், இருவருக்கும் இடையே பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற பாகபிரகாஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, ரெபேக்காவை சரமாரியாக குத்தினார்.</p> <h2>பரிதாப உயிரிழப்பு</h2><p>இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ரெபேக்கா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், கொலையாளி பாகபிரகாஷை பிடித்து பவானிசாகர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, வழக்குப்பதிவு செய்து பாகபிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>
சிறுமி உள்பட 9 பேரை கடித்து குதறிய வெறிநாய்.. பீதியில் பொதுமக்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rabid-dog-mauls-9-people-including-a-young-girl-public-in-a-state-of-panic</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rabid-dog-mauls-9-people-including-a-young-girl-public-in-a-state-of-panic#comments</comments><guid isPermaLink="false">cafdba21-02ed-4df9-8e88-664552c4f903</guid><pubDate>Sat, 25 Jul 2026 22:24:00 +0000</pubDate><atom:updated>2026-07-25T22:24:00.000Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>street dogs,தூத்துக்குடி,தெருநாய்கள்,சிறுமி,Tuticorin,வெறிநாய்,dog mauls</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/vaezgddw/8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ Image credits: AI]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/vaezgddw/8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்திருப்பேரை, </p><p>தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை புளியமரத்து தெரு பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அவை அந்த வழியாக நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை அவ்வப்போது விரட்டிச் சென்று கடிக்கின்றன.</p> <p>இதில் பலரும் காயமடையும் சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. நேற்று காலையில் அந்த பகுதியில் வெறிநாய் ஒன்று சாலையில் சென்ற 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை விரட்டிச்சென்று கடித்தது. அதன்பிறகு நாயின் கவனம் அந்த வழியாக நடந்து சென்ற பொதுமக்களின் மீது திரும்பியது. சாலையில் நடந்து சென்ற அதே பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி, மாரி (45), பேச்சியம்மாள் (25), கவிதா (17) ஆகியோரை விரட்டிச்சென்று கடித்து குதறியது. இதில் படுகாயமடைந்த 4 பேரும் ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே அதே நாய் தென்திருப்பேரையை சேர்ந்த பால்சாமி, சுந்தரி உள்ளிட்ட 3 பேரையும் கடித்தது.</p><p>படுகாயமடைந்த 3 பேரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுதவிர அதே பகுதியில் வெறிநாயால் கடிபட்ட மேலும் 2 பேர் அங்கு சென்று சிகிச்சை பெற்றதாகவும் தெரிகிறது.</p> ]]></content:encoded></item><item><title>மாணவர்களின் பாதுகாப்பிற்காக பதவியையே தியாகம் செய்த தர்மேந்திர பிரதான் - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dharmendra-pradhan-who-sacrificed-his-post-for-students-safety-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dharmendra-pradhan-who-sacrificed-his-post-for-students-safety-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">a409c9a8-237c-4fa1-852e-6c53a3f3ef96</guid><pubDate>Sat, 25 Jul 2026 22:03:10 +0000</pubDate><atom:updated>2026-07-25T22:03:10.086Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,பாதுகாப்பு,மாணவர்கள்,தர்மேந்திர பிரதான்,தியாகம்,பதவி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/tmkr5d9y/nainar-nagendran.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/tmkr5d9y/nainar-nagendran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாணவர்களின் பாதுகாப்பிற்காக பதவியையே தியாகம் செய்த தர்மேந்திர பிரதான் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-எதிர்க்கட்சிகளின் சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டன! இளைஞர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட்டது!</p>  <h2>தியாகம்</h2><p>மாணவர் நலனை தவிர எங்களுக்கு வேறு எதுவும் முக்கியமில்லை என்பதை வார்த்தையில் மட்டுமன்றி தனது செயலிலும் செய்து காட்டியுள்ளார், நமது பிரதமர் மோடி. சமூக விரோத சக்திகளின் சூழ்ச்சிகளில் இருந்து மாணவர்களை பாதுகாக்கும் உன்னத நோக்கத்திற்காக தனது பதவியையே துணிச்சலுடன் தியாகம் செய்துள்ளார், நமது முன்னாள் மத்திய கல்வி மந்திரி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">தர்மேந்திர பிரதான்</a>.</p><p>சுயநலத்தை ஒதுக்கிவிட்டு, பொதுநலத்தை போற்றும் இத்தகைய தலைவர்களை பெற்றதால் தான், பாஜக ஓர் பேரியக்கமாக இன்றும் வளர்ந்து கொண்டே வருகிறது. </p> <h2>சமூக விரோத அமைப்பு</h2><p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவிற்காக அமைதியான வழியில் முன்னெடுக்கப்பட்ட மாணவர் போராட்டத்திற்குள், சமூக விரோத அமைப்புகள் ஊடுருவ தொடங்கியதையும், நமது தேச ஒற்றுமைக்கும் பாதுகாப்பிற்கும் எதிரான முழக்கங்கள் ஒலிக்க ஆரம்பித்ததையும் யாரும் மறுக்க முடியாது. தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாணவர்களை குறி வைத்து காய் நகர்த்த துவங்கின. அதன் விளைவாகவே, அமைதிப் போராட்டம் அலங்கோல கலவரமாக உருவெடுக்கத் துவங்கியது. ஏராளமான பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. </p><h2>போராட்டம் நீடித்தது</h2><p>வினாத்தாள் கசிவினை கட்டுப்படுத்தும் நோக்கில், தேசிய தேர்வு முகமையின் 47  அதிகாரிகள் பணிநீக்கம், வினாத்தாள் கசிவு வழக்குகளை உடனடியாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள், வினாத்தாள் முறைகேடுகளில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 10 கோடி வரை அபராதம் மற்றும் வினாத்தாள் கசிவிற்கு எதிரான வினாத்தாள் கசிவு தடுப்பு திருத்த மசோதா 2026 உள்ளிட்ட பல கடும் நடவடிக்கைகளை நமது பிரதமர் முன்மொழிந்த பிறகும் கூட, மாணவர்கள் போராட்டம் நீடித்தது.</p><h2>மாணவர் போராட்டம்</h2><p>இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, “மாணவர் போராட்டம்” என்ற போர்வையில், பொது அமைதிக்கும், மாணவர் பாதுகாப்பிற்கும் பங்கம் விளைவிக்க, சில சமூக விரோத அமைப்புகள் காத்துக் கொண்டிருந்தன. </p><h2>தார்மீகம்</h2><p>எனவே, தேசத்தின் ஒற்றுமையை காக்கவும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், நமது மாணவர்கள் சட்டச் சிக்கல்களில் சிக்கிக் கொள்ளாமல் தங்கள் படிப்பிலும், எதிர்காலத்திலும், வாழ்க்கையிலும் கவனம் செலுத்த வேண்டுமென்ற நோக்கத்துடனும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் தர்மேந்திர பிரதான் . இதற்கு பெயர் தோல்வியல்ல, “தார்மீகம்”.</p><h2>செவிசாய்க்க தவறுவதில்லை</h2><p>இளைஞர்களின் குரலுக்கு நமது பாஜக தலைமையிலான மத்திய அரசு என்றுமே செவிசாய்க்க தவறுவதில்லை என்பதை உணர்த்தும் இந்நிகழ்வு, நமது நாட்டில் கருத்துரிமையும், அடிப்படை சுதந்திரமும் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதற்கான சான்று.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>
பைக்குக்கு பதில் குதிரை... அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த டெலிவரி பாய்! </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-horse-instead-of-a-bike-a-delivery-boy-who-made-everyone-turn-and-look</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-horse-instead-of-a-bike-a-delivery-boy-who-made-everyone-turn-and-look#comments</comments><guid isPermaLink="false">b70f4ba2-3776-4e7f-8dec-1a2ad1d92809</guid><pubDate>Sat, 25 Jul 2026 20:40:13 +0000</pubDate><atom:updated>2026-07-25T20:40:13.252Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Viral Video,ஆலந்தூர்,டெலிவரி பாய்,delivery boy,Food delivery,குதிரை,horse</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/nuoym7mf/5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/nuoym7mf/5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>ஆலந்தூர், </p><p>சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பாலவாக்கம் பகுதியில், குதிரையில் சென்று உணவு வினியோகம் செய்த ஊழியர் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த கிழக்கு கடற்கரை சாலையில், குதிரை மீது அமர்ந்தபடி உணவு பார்சல்களை எடுத்துச் செல்லும் அந்த வினியோக ஊழியரின் காட்சிகள் பொது மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன.</p><p>வழக்கமாக இருசக்கர வாகனங்களில் உணவு வினியோகம் செய்யப்படும் நிலையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க குதிரையை பயன்படுத்தியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், “ஈ.சி.ஆர். ராஜா டெலிவரி பாய்”, “டிராபிக்கை தவிர்க்க சூப்பர் ஐடியா” என நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். வித்தியாசமான இந்த முயற்சி தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>போடிநாயக்கனூர்: கிணற்றில் தள்ளி 2 பள்ளி மாணவர்கள் படுகொலை; வாலிபர் கைது
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bodinayakkanur-two-schoolboys-murdered-thrown-into-well-youth-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bodinayakkanur-two-schoolboys-murdered-thrown-into-well-youth-arrested#comments</comments><guid isPermaLink="false">ec267392-5eb6-4bbd-b9ed-1e04ff3249ac</guid><pubDate>Sat, 25 Jul 2026 20:19:27 +0000</pubDate><atom:updated>2026-07-25T20:19:27.694Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Youth,வாலிபர்,படுகொலை,murdered,well,கிணற்றில்,கைதுArrest,மாணவர்கள் students,போடிநாயக்கனூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/nfdwf3kf/well.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பள்ளி மாணவர்கள் படுகொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/nfdwf3kf/well.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>போடிநாயக்கனூர், </p><p>தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள ரங்கநாதபுரம் கிராமத்தில் நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. பள்ளி செல்லும் இரண்டு சிறுவர்கள், புறா பிடித்து தருவதாக கூறி அழைத்து செல்லப்பட்டு, கிணற்றில் தள்ளி<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88"> படுகொலை</a> செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>புறா ஆசை காட்டி கடத்தல்</h2><p>ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர். நேற்று மாலை இவர்களிடம் அதே பகுதியைச் சேர்ந்த கேசவ் பாலாஜி (வயது 19) என்ற வாலிபர் பேச்சு கொடுத்துள்ளார். சிறுவர்களிடம், "உங்களுக்கு அழகான புறாக்கள் பிடித்து தருகிறேன், என்னோடு வாருங்கள்" என்று ஆசை வார்த்தை கூறி, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.</p><h2>கிணற்றில் தள்ளி கொலை</h2><p>அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்று பகுதிக்கு சிறுவர்களை கூட்டி சென்ற கேசவ் பாலாஜி, எதிர்பாராத விதமாக இரண்டு சிறுவர்களையும் கிணற்றுக்குள் தள்ளியுள்ளார். கிணற்றில் விழுந்த சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி, பரிதாபமாக உயிரிழந்தனர். சிறுவர்கள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவர்களை பல இடங்களில் தேடினர். </p> <h2>தலைமறைவு</h2><p>சிறுவர்கள் மாயமானது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் பெற்றோர் விசாரித்தனர். அப்போது, வாலிபர் கேசவ் பாலாஜியுடன் சிறுவர்கள் சென்ற அதிர்ச்சி தகவல் அவர்களுக்கு கிடைத்தது. உடனடியாக பெற்றோர் மற்றும் கிராம மக்கள் கேசவ் பாலாஜியை தேடி புறப்பட்டனர். ஆனால், அதற்குள் அவர் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானது தெரியவந்தது.</p><h2>வாலிபர் கைது </h2><p>தகவல் கிடைத்து் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், தீயணைப்பு துறையினரும் கிணற்றிலிருந்து சிறுவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலையை அரங்கேற்றிவிட்டு வெளியூருக்கு தப்பியோட முயன்ற வாலிபர் கேசவ் பாலாஜியை (19), போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.</p><p>நள்ளிரவில் போடி அருகே உள்ள மறைவிடத்தில் அவர் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு சென்று, தப்பியோட முயன்ற வாலிபர் கேசவ் பாலாஜியை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நல்லூர் சுங்கச்சாவடியில் 4 மாதங்களில் 3வது முறையாக கட்டணம் உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nallur-toll-plaza-third-hike-in-four-months</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nallur-toll-plaza-third-hike-in-four-months#comments</comments><guid isPermaLink="false">59bed5e4-0aaa-4b99-bfe7-d6e54467e361</guid><pubDate>Sat, 25 Jul 2026 19:49:09 +0000</pubDate><atom:updated>2026-07-25T19:49:09.264Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சுங்கச்சாவடி,கட்டணம் உயர்வு,hike,நல்லூர்,Nallur,toll booth fare</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/7d7mlnsw/toll-gate.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சுங்கச்சாவடி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/7d7mlnsw/toll-gate.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><p> சென்னை அருகே சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நல்லூர் சுங்கச்சாவடியில், யாரும் எதிர்பாராத விதமாக நேற்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அடுத்தடுத்து கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்ட நிலையில், தற்போது வெறும் 4 மாத காலத்திற்குள் 3-வது முறையாக இந்த சுங்கக்கட்டணம் மீண்டும் உயர்த்தப்பட்டிருப்பது தினசரி பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p><strong>வாகனங்கள் வாரியான புதிய கட்டண விவரங்கள்:</strong></p><h2>உள்ளூர் வாகன மாதாந்திர பாஸ் </h2><p>சுங்கச்சாவடியை சுற்றியுள்ள உள்ளூர்வாசிகளுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.350-ல் இருந்து ரூ.360 ஆக (ரூ.10 உயர்வு) அதிகரிக்கப்பட்டுள்ளது.</p><h2>பேருந்து மற்றும் லாரிகள்</h2><p> கனரக மற்றும் வணிக வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் ரூ.10 முதல் ரூ.15 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற வாகனங்கள்: இலகுரக வணிக வாகனங்கள் மற்றும் மல்டி-ஆக்சில் வாகனங்களுக்கும் அதற்கேற்ப கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.</p><h2>சுங்கக் கட்டண உயர்வு</h2><p>தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழக்கமாக ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சுங்க கட்டணங்களை மாற்றியமைக்கும். ஆனால்,<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D"> நல்லூர் சுங்கச்சாவடியில்</a> கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களை தொடர்ந்து, தற்போது 4 மாதங்களுக்குள் 3-வது முறையாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.மொத்த விலை குறியீட்டு எண்  அடிப்படையிலான பணவீக்க தரவுகள் மற்றும் 'இணைப்பு காரணி' தொழில்நுட்ப மாற்றங்களின் காரணமாகவே இந்த அடுத்தடுத்த சுங்கக் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2> 3-வது முறை</h2><p>தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழக்கமாக ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சுங்க கட்டணங்களை மாற்றியமைக்கும். ஆனால், நல்லூர் சுங்கச்சாவடியில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களை தொடர்ந்து, தற்போது 4 மாதங்களுக்குள் 3-வது முறையாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.</p> <h2>விலை உயர்வு அபாயம்</h2><p>சுங்கக் கட்டண உயர்வால் லாரிகளின் வாடகை அதிகரிக்கும் போது, வியாபாரிகள் அந்த கூடுதல் செலவை பொருட்களின் விலையில் சேர்த்துவிடுவார்கள். இதனால் சாமானிய மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள்: நயினார் நாகேந்திரன் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pmk-founder-ramadoss-birthday-nainar-nagendran-greetings</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pmk-founder-ramadoss-birthday-nainar-nagendran-greetings#comments</comments><guid isPermaLink="false">40ecbc79-e538-425a-941c-ab9ee6f67ffa</guid><pubDate>Sat, 25 Jul 2026 17:53:40 +0000</pubDate><atom:updated>2026-07-25T17:53:40.883Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,birthday,வாழ்த்து,பிறந்தநாள்,best wishes,பாமக நிறுவனர் ராமதாஸ்,PMK founder Ramadoss</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/gboc0anl/ramdossnainar.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ராமதாஸ்,நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/gboc0anl/ramdossnainar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மருத்துவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">ராமதாஸ்</a> நல் ஆரோக்கியத்தோடு பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு வாழ வேண்டுமென, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p> <h2>சமூகநீதிப்போராளி</h2><p>பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர்; சமூகநீதிப்போராளி. மருத்துவர். ராமதாஸ், தான் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். தனக்கு பிறகு கட்சியை அன்புமணி ராமதாஸ் வழி நடத்தி  செல்வார்கள் என்றும் அறிவித்துள்ளார்.</p> <h2>சமூக நீதிக்காக போராடி சிறை சென்றவர்.</h2><p>மருத்துவர் தனது அரசியல் பணியை 40 ஆண்டுகளுக்கு மேலாக தீவிரமாக தொய்வில்லாமல் நடத்தி வந்தவர். வன்னியர் சங்கம் தொடங்கி வன்னியர்களின் சமூக நீதிக்காக போராடி சிறை சென்றவர். </p><h2>உரிமைப்போராட்டம்</h2><p>சமூக நீதி, இடஒதுக்கீடு, கிராமப்புற வளர்ச்சி, தரமான கல்வி, பொதுசுகாதாரம், விவசாய முன்னேற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பூரண மதுவிலக்கு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு போன்ற தனது கட்சியின் அடிப்படை கொள்கைகளை எந்த சமரசமும் இன்றி போராடி காத்துவருபவர் மருத்துவர் ராமசாமி படையாச்சி, மாணிக்கவேல் நாயக்கர் போன்ற மாபெரும் தலைவர்களுக்கு பின் அரசியல் களப்பணியாற்றி, அகில இந்தியாவின் கவனத்தை ஈர்த்தவர். குறிப்பாக , 1980 களில் நடந்த அவரது வன்னியர் உரிமைப்போராட்டம் அரசியல் வரலாற்றில் ஒரு அழிக்க முடியாத காவியமாக இருக்கிறது.</p><h2>போட்டியிட மாட்டேன்</h2><p>நாடாளுமன்றத்திற்கோ, சட்டமன்றத்திற்கோ தான் போட்டியிட மாட்டேன் என்று ஆரம்ப கட்ட அரசியலில் அவர் கொடுத்த வாக்குறுதியை இன்றுவரை காத்துவரும் பெரும் தலைவர்.  வன்னியர்கள், தலித்துகளை கொண்டு தன் அரசியல் பயணத்தை தொடங்கி அதற்கு விதையிட்டு அதை ஆலவிருட்சமாக வளர்த்தவர் ராமதாஸ், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மீதும் பாரதப்பிரதமர் மோடி மீதும் அளப்பரிய பற்றும், பாசமும் கொண்டவர். </p> <h2>நம்பிக்கை</h2><p>இன்று அவரது 88 வது பிறந்தநாளையொட்டி, தனது பாட்டாளி சொந்தங்களிடம் இருந்தும், தனது 40 ஆண்டுளாக தீவிர அரசியல் களத்திலிருந்தும் அவர் விடைப்பெற்று இருப்பது, மனதிற்கு சற்று ஏற்க முடியாது என்றாலும் அவரது தீர்க்கதரிசனமான முடிவு நிச்சயம் இந்திய ஜனநாயகத்திற்கு தகுந்த பலனை தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.</p><h2> வாழ்த்து</h2><p>மருத்துவர் நல் ஆரோக்கியத்தோடு பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு வாழ வேண்டுமென, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். </p><h2>பிராத்தனை</h2><p>கட்சியின் தலைமை பொறுப்பேற்று வழிநடத்த இருக்கும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தனது தந்தையார் போல, அரசியல் களத்தில் பேரும், புகழும் பெற்று சிறப்பாக பணியாற்ற இந்நேரத்தில் எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்து அவரை வாழ்த்தி மகிழ்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி விசிக ஆர்ப்பாட்டம்: தொண்டர்களுக்கு திருமாவளவன் அழைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vsk-protest-demanding-cancellation-of-neet-exam-in-chennai-thirumavalavan-calls-for-volunteers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vsk-protest-demanding-cancellation-of-neet-exam-in-chennai-thirumavalavan-calls-for-volunteers#comments</comments><guid isPermaLink="false">56e4eee9-9872-47cf-a506-6f5c21924600</guid><pubDate>Sat, 25 Jul 2026 16:24:16 +0000</pubDate><atom:updated>2026-07-25T16:24:16.277Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,திருமாவளவன்,நீட் தேர்வு,ஆர்ப்பாட்டம் Demonstration,ரத்து செய்யக்கோரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/yroeb3if/57.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருமாவளவன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/yroeb3if/57.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D">திருமாவளவன் </a>வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>இந்திய ஒன்றிய அரசு நீட் தேர்வை முற்றாக ரத்து செய்ய வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு நீட் விலக்கு சட்டத்தை இயற்றக் கோரியும் 27.7.2026 அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து சட்டமன்றத் தொகுதி மாவட்டங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.</p><h2>ஆர்ப்பாட்டம்</h2><p>தற்போது இந்த ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு முழுவதும் மையப்படுத்தப்பட்ட  ஒரே ஆர்ப்பாட்டமாக சென்னையில் எனது தலைமையில் 27.7.2026 அன்று காலை 10 மணிக்கு ராஜரத்தினம்  விளையாட்டரங்கம் அருகே நடைபெறுகிறது. </p><p>எனவே, சட்டமன்றத் தொகுதி வாரியாக ஆர்ப்பாட்டங்களை ஒருங்கிணைப்பதை விடுத்து அனைத்து பொறுப்பாளர்களும் சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>தர்மேந்திர பிரதான் பதவி விலகல்: அறவழிப் போராட்டத்துக்கு கிடைத்த மகத்தான வெற்றி - வி.சி.க.</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dharmendra-pradhans-resignation-a-massive-victory-for-the-peaceful-protest-vck</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dharmendra-pradhans-resignation-a-massive-victory-for-the-peaceful-protest-vck#comments</comments><guid isPermaLink="false">490993e7-aa0a-473c-a538-9878bf9f11bf</guid><pubDate>Sat, 25 Jul 2026 16:06:43 +0000</pubDate><atom:updated>2026-07-25T16:06:43.327Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Delhi,டெல்லி,திருமாவளவன்,Thirumavalavan,விசிக,VCK,தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,மாணவர்கள் போராட்டம்,Students protest</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/mnex8m6t/win.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/mnex8m6t/win.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்திய மத்திய அரசு நீட் தேர்வை முற்றாக கைவிட வலியுறுத்தியும், தமிழ்நாடு  அரசு நீட் விலக்கு சட்டத்தை இயற்றக் கோரியும் அதே நாளில் சென்னையில் மட்டும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று <a href="https://www.dailythanthi.com/topic/thirumavalavan">விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்</a> தெரிவித்துள்ளார்.</p><h2>தர்மேந்திர பிரதான்</h2><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p>வினாத்தாள் கசிவுகளுக்குப் பொறுப்பேற்றுக் கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகியிருப்பது  மாணவர்களின் சார்பில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியால் முன்னெடுக்கப்பட்ட அறவழிப் போராட்டத்துக்குக் கிடைத்த மகத்தான வெற்றியாகும். தர்மேந்திர பிரதான் விலகலையடுத்து அப்பொறுப்பில் கல்வியாளர் ஒருவரைக் கல்வி அமைச்சராக நியமிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறோம். </p><h2>கடந்த திமுக ஆட்சியில்</h2><p>“நீட் தேர்வு தேவையில்லை, மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை மாநில அரசுகளே நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும்” எனப் பல ஆண்டுகளாக விசிக உள்ளிட்ட பல கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. கடந்த திமுக ஆட்சியில் அதற்காக நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் அன்றைய கவர்னர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டிருந்தார். </p><p>நீதிமன்றம் தலையிட்டதால் அதைத் திருப்பி அனுப்பினார். மீண்டும் அது நிறைவேற்றப்பட்டு அவருக்கு அனுப்பப்பட்டது. அதை சட்டத்துக்குப் புறம்பாக ஜனாதிபதிக்கு அனுப்பினார். அங்கு அவர் கிடப்பில் போட்டிருந்தார். சுப்ரீம்கோர்ட்டு தலையிட்டபின் அதைத் திருப்பி அனுப்பினார். இவை யாவற்றுக்கும் பாஜக அரசே காரணம். </p><h2>ஒரே ஒரு நீதிபதியின் விருப்பம்</h2><p>கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்துக்குப் பிறகு ‘நீட் தேர்வே வேண்டாம்’ என்ற தமிழ்நாட்டின் நிலைபாட்டை இப்போது மேலும் பல மாநில அரசுகளும், கட்சிகளும் வழிமொழியத் தொடங்கியுள்ளன. எனவே, ஒட்டுமொத்தமாக நீட் தேர்வு முறையை ரத்துசெய்ய மத்திய அரசு முன்வர வேண்டும். </p><p>ஏனெனில், நீட் தேர்வு என்பது அனைத்துத் தரப்பினரின் விருப்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது அல்ல. சுப்ரீம்கோர்ட்டில் அனில் ஆர்.தவே என்ற ஒரே ஒரு நீதிபதியின் விருப்பத்தின் அடிப்படையில் நடைமுறைக்கு வந்த ஒன்றாகும். </p><h2>ஆர்ப்பாட்டம்</h2><p>மருத்துவக் கல்வியை பாதுகாக்க நீட் தேர்வை முற்றாக ஒழிப்பதுதான் ஒரே வழி. எனவே, எதிர்வரும் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரின்போது இதற்கான சட்ட மசோதாவைக் கொண்டுவந்து சட்டமாக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம். </p><p>கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நடந்து வந்த மாணவர் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தும்; நீட் தேர்வை இந்தியா முழுவதும் ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழ்நாடு  அரசு நீட் விலக்கு சட்டத்தை இயற்றக் கோரியும்  விசிக சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஜூலை 27 திங்கட்கிழமையன்று  ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. </p><h2>சென்னையில் மட்டும்</h2><p>தற்போது தர்மேந்திர பிரதான் பதவி விலகியிருப்பதால்,  அந்த ஆர்ப்பாட்டம் அதே நாளில் சென்னையில் மட்டும் எனது தலைமையில் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இயக்கத்தின் முன்னோடிகள் யாவரும் தவறாமல் பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழா: தமிழ்த்தாய் வாழ்த்து 3வது இடம்! - மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/manonmaniam-sundaranar-university-convocation-ceremony-tamil-thai-vazhthu-3rd-place-marxist-party-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/manonmaniam-sundaranar-university-convocation-ceremony-tamil-thai-vazhthu-3rd-place-marxist-party-condemns#comments</comments><guid isPermaLink="false">5b9f88f7-715d-4b74-9d95-ca3eb5c1c777</guid><pubDate>Sat, 25 Jul 2026 16:02:53 +0000</pubDate><atom:updated>2026-07-25T16:02:53.349Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>கவர்னர்,Marxist Communist,பட்டமளிப்பு விழா,பெ.சண்முகம்,Marxist Communist Party,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி,Manonmaniam Sundaranar University,மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு,Communist Party of India (Marxist),p shanmugam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/xpt696zu/shanmugam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/xpt696zu/shanmugam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி,</p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>பட்டமளிப்பு விழா</h2><p>திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா ஜூலை 28 அன்று நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் தமிழ்நாடு கவர்னர் பங்கேற்கிறார். எனவே, இந்நிகழ்வில் முதலில் வந்தே மாதரம், அதன் பிறகு தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட வேண்டும் என்று கவர்னர் அலுவலகத்திலிருந்து சுற்றறிக்கை வந்துள்ளதாகவும், அதன்படியே இந்நிகழ்ச்சி நடைபெறும் என பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என்.சந்திரசேகர் தெரிவித்துள்ளதை ஏற்க முடியாது. இது மாநில உரிமை மற்றும் மாநில மொழியின் மீது நடைபெறுகிற அத்துமீறலாகும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது.</p><h2>கவர்னர் தலையீடு</h2><p>கவர்னர் பங்கேற்கிறார் என்பதற்காகவே ஒரு மாநிலத்தின் மாநிலப் பாடலை பின் வரிசைக்கு தள்ளுவது ஏற்புடையதல்ல. மாநில அரசின் கீழ் செயல்படும் ஒரு பல்கலைக்கழகத்தில் மாநிலப் பாடல் முதலில் பாடப்பட வேண்டும் என்பது இயல்பான எதிர்பார்ப்பு ஆகும். இந்நிலையில் கவர்னர் அலுவலக சுற்றறிக்கை விரும்பத்தகாத சூழ்நிலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது அநீதியானது. மேலும் தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் இயங்குகிற ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மூன்றாவது இடம் என்பது அவருக்கு இழைக்கப்படுகிற அவமரியாதையாகும்.</p><p>மேலும் வந்தே மாதரம் பாடலின் சில வரிகள் பாடப்படுவது அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது. எனவே, வந்தே மாதரம் பாடலின் ஆட்சேபணையற்ற வரிகள் மட்டுமே பாடப்பட வேண்டும். கவர்னரின் சுற்றறிக்கை திரும்பபெறப்பட வேண்டும். கவர்னர் அலுவலக சுற்றறிக்கையின்படி நடக்காவிட்டால் தன்மீது நடவடிக்கை வரும் என்று துணைவேந்தர் கூறியிருப்பதிலிருந்தே கவர்னர் மாநில நிர்வாகத்தில் தேவையற்ற தலையீடுகள் செய்து மிரட்டலில் ஈடுபடுகிறார் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. கவர்னர் அலுவலகத்தின் அத்துமீறலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. </p><h2>முதலிடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து</h2><p>எனவே, எவ்வித நிபந்தனைகளுக்கும் அடிபணியாமல் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்திட வேண்டும். அதன் பிறகு தேசிய கீதமும், மூன்றாவதாக வந்தே மாதரத்தின் ஆட்சேபணையற்ற வரிகள் மட்டுமே பாடப்படும் வகையில் பட்டமளிப்பு விழா நடைபெற வேண்டுமென்றும் இந்த அடிப்படையில் பட்டமளிப்பு விழா நடைபெறுவதை மாநில அரசு உறுதி செய்திட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.</p><p>மேலும், இந்திய அரசியல் சாசனம் வலியுறுத்துகிற மத சுதந்திரத்துக்கும், தனிமனித உரிமைக்கும், பன்முகப் பாரம்பரியத்துக்கும் எதிரான வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட வேண்டுமென்ற மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டாய சுற்றறிக்கையை திரும்பப் பெறுவதற்கும் தமிழ்நாடு அரசு உரிய <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நடவடிக்கைகளை </a>மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் 105 இடங்களிலிருந்து 36.64 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் அகற்றம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/3664-metric-tons-of-old-materials-removed-from-105-locations-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/3664-metric-tons-of-old-materials-removed-from-105-locations-in-chennai#comments</comments><guid isPermaLink="false">47d54bfc-d491-4605-8538-fa90a5f79027</guid><pubDate>Sat, 25 Jul 2026 15:33:00 +0000</pubDate><atom:updated>2026-07-25T15:33:00.639Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/hc2mxfkz/Untitled-10.jpg" width="753"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/hc2mxfkz/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் இன்று (25.07.2026) 105 இடங்களிலிருந்து 36.64 மெட்ரிக் டன் பழைய சோபாக்கள், மெத்தைகள் உள்ளிட்ட பழைய பொருட்கள் பெறப்பட்டு, கொடுங்கையூர் எரியூட்டும் நிலையத்திற்கு கொண்டு சென்று விஞ்ஞான முறையில் எரியூட்டி அகற்றப்பட்டது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>36.64 மெட்ரிக் டன் பொருட்கள் </h2><p>பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பொதுமக்கள் முன்கூட்டியே தரும் தகவலின் அடிப்படையில், அவர்களின் வீடுகளிலிருந்து பழைய சோபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகள் ஆகிய திடக்கழிவுகளை ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பெற்று அகற்றும் பணி 11.10.2025 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.</p><p>அதனடிப்படையில், இன்று (25.07.2026) மட்டும் 105 நபர்களிடமிருந்து வரப்பெற்ற தகவலின் அடிப்படையில், 36.64 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் பெறப்பட்டு, கொடுங்கையூரில் உள்ள எரியூட்டும் நிலையத்திற்கு எடுத்துச் சென்று விஞ்ஞான முறையில் எரியூட்டி அகற்றப்பட்டது. இதற்காக 43 எண்ணிக்கையிலான வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.</p><h2>“நம்ம சென்னை” செயலி</h2><p>ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று நடைபெறும் இச்சேவையை பெறுவதற்கு, பொதுமக்கள் முன்கூட்டியே பெருநகர சென்னை மாநகராட்சியின் “நம்ம சென்னை” செயலியில் பதிவு செய்ய வேண்டும் (அல்லது) பெருநகர சென்னை மாநகராட்சியின் 1913 என்ற எண்ணிற்கு தகவல் அளிக்கப்பட வேண்டும் (அல்லது) பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலம் பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ள 94450 61913 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவலை அனுப்ப வேண்டும்.</p><p>இதனடிப்படையில் மாநகராட்சிப் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பணியாளர்கள் </a>பதிவு செய்த நபர்களின் வீடுகளுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் நேரடியாகச் சென்று, பழைய சோபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகள் உள்ளிட்ட பொருட்களை சேகரித்து பாதுகாப்பாகவும், அறிவியல் முறையிலும் அகற்றும் பணிகளை மேற்கொள்வார்கள். இச்சேவையினை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தர்மேந்திர பிரதான் பதவிவிலகல்: இளம் தலைமுறையினர் போராட்டத்திற்கு  கிடைத்த மாபெரும் வெற்றி - சி.பி.ஐ.</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dharmendra-pradhans-resignation-a-massive-victory-for-the-younger-generations-protest-cpi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dharmendra-pradhans-resignation-a-massive-victory-for-the-younger-generations-protest-cpi#comments</comments><guid isPermaLink="false">b322becd-8577-4ed5-b53d-9e3e55283e22</guid><pubDate>Sat, 25 Jul 2026 15:20:05 +0000</pubDate><atom:updated>2026-07-25T15:20:05.205Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,Tamilnadu,தமிழகம்,மத்திய அரசு,Central Govt,CPI,தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,மாணவர்கள் போராட்டம்,Students protest,M Veerapandian,மு. வீரபாண்டியன்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/eribkyxq/nikkar.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/eribkyxq/nikkar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அறவழியில் போராடிய இளம் போராளிகளுக்கு கிடைத்த வரலாற்று  சிறப்பு மிக்க மாபெரும் வெற்றியாகும் இது என்று <a href="https://www.dailythanthi.com/topic/m-veerapandian">இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்</a> தெரிவித்துள்ளார்.</p><h2>உயர் கல்விக் கனவுகள்</h2><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>மத்திய அரசு தேசிய தேர்வு முகமை மூலம் நடத்திய நீட் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் வினாத்தாள் கசிவு உட்பட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றன. இதனால், லட்சக்கணக்கான மாணவர்கள் உயர் கல்விக்  கனவுகள் சிதைக்கப்பட்டன.  </p><h2>தர்மேந்திர பிரதான்</h2><p>அதேபோல், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 12 ம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டில் ஏற்பட்ட தவறுகள், தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்தத் தவறுகளுக்கு  பொறுப்பேற்று மத்தி கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், பதவி விலக வேண்டும், நீட் தேர்வு பிரச்சினையால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கிட வேண்டும், போராட்டம் தொடர்பான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்பது  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இயக்கத்தினர்  மற்றும் மாணவர் - இளைஞர்களோடு இணைந்து, தலைநகர் டெல்லியில் ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். </p><h2>கடும் தாக்குதல்</h2><p>கடந்த ஜூன் 20 ஆம் தேதி தொடங்கிய இளைய தலைமுறையின் போராட்டத்தை  மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி காவல்துறை, ஆர்.பி.எப்., துணை ராணுவப் படை போன்றவைகள் ஏவப்பட்டு, போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது கடும் தாக்குதலை நடத்தியது. இதில் 150-க்கும் மேற்பட்ட போராளிகள் படுகாயமடைந்தனர். இதன் விளைவாக  போராட்டம்  நாடு முழுவதும் விரிவடைந்து தீவிரமானது.</p><h2>வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி</h2><p>இளைய தலைமுறையின் போராட்டத்திற்கு அடிபணிந்து, மத்திய அரசு  அரசு தர்மேந்திர பிரதானை பதவி விலகச் செய்துள்ளது. இது அறவழியில் போராடிய இளம் போராளிகளுக்கு கிடைத்த வரலாற்று  சிறப்பு மிக்க மாபெரும் வெற்றியாகும்.</p><p>போராட்டத்தை முன்னெடுத்த சி.ஜே.பி. இயக்கத்திற்கும், அதனுடன்  உறுதியோடு நின்று  போராடிய இளம் போராளிகளுக்கும், ஆதரித்து களம் இறங்கிய இடதுசாரி மாணவர், இளைஞர் அமைப்புகளுக்கும், பொதுவாழ்வு பிரமுகர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் அனைவருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு நன்றி பாராட்டி,  வாழ்த்துகளையும்  பாராட்டுகளையும்  தெரிவித்துக் கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பெங்களூர் செல்லும் முன் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: முதல்-அமைச்சர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/all-party-meeting-must-be-convened-before-visiting-bengaluru-edappadi-palaniswami-urges-chief-minister</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/all-party-meeting-must-be-convened-before-visiting-bengaluru-edappadi-palaniswami-urges-chief-minister#comments</comments><guid isPermaLink="false">084f1b76-a3f0-41c6-9e48-3e048fe5babc</guid><pubDate>Sat, 25 Jul 2026 14:50:14 +0000</pubDate><atom:updated>2026-07-25T14:50:14.454Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,TVK,தவெக,Vijay,Tamilnadu,விஜய்,எடப்பாடி பழனிசாமி,அதிமுக,தமிழகம்,காங்கிரஸ்,Congress,Karnataka,பெங்களூரு,Bengaluru,All Party Meeting,அனைத்து கட்சி கூட்டம்,கர்நாடகா,காவிரி பிரச்சினை,Edappadi Palaniasamy,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/uu0hom9k/kathu.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/uu0hom9k/kathu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>காவிரி மற்றும் மேகதாது பிரச்சனையில் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்ட த.வெ.க.-காங்கிரஸ் கூட்டணி அரசின் முதல்-அமைச்சரை வலியுறுத்துவதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.</p><h2>முதல்-அமைச்சர்</h2><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருந்தும், அணை நிரம்பினால்தான் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியும் என்று கர்நாடக காங்கிரஸ் அரசின் முதல்-மந்திரி அவர்கள் கூறுவது சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பிற்கு எதிரானதாகும்.</p><p>சட்ட ரீதியாகவும், தார்மீக அடிப்படையிலும் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு அழுத்தம் கொடுத்து தண்ணீரைப் பெற வேண்டிய த.வெ.க.-காங்கிரஸ் கூட்டணி அரசின் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர்</a> இன்றுவரை வாய்மூடி மௌனியாக இருக்கிறார்.</p> <h2>காவிரிப் பிரச்சனை</h2><p>சுப்ரீம்கோர்ட்டு, 2012-ஆம் ஆண்டு காவிரிப் பிரச்சனை குறித்து மீண்டும் ஒருமுறை கர்நாடகாவோடு தமிழகத்தின் முதல்-அமைச்சர் பேச வேண்டும் என்ற ஒரு யோசனையைத் தெரிவித்தது. அப்போது முதல்-அமைச்சராக இருந்த புரட்சித் தலைவி அம்மா அவர்கள், கர்நாடக அரசோடு பேசிப் பயனில்லை என்றாலும், சுப்ரீம்கோர்ட்டின் ஆலோசனையை ஏற்று கர்நாடக முதல்-மந்திரியோடு ஒருமுறை பேசுகிறேன் என்று அறிவித்தார். அதன்படி 2012-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ஆம் தேதி புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பெங்களூரு சென்று அப்போதைய கர்நாடக மாநில முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் துறை அமைச்சர்களுடன் மூன்று மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். </p><h2>14 வருடங்கள்</h2><p>பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 'தமிழகத்தின் உண்மை நிலையை கர்நாடக அரசில் உள்ளவர்கள் எப்போதுமே புரிந்துகொள்வதில்லை. சுப்ரீம்கோர்ட்டு ஒரு நல்லது நடக்கும் என்ற நினைப்பில் பேச்சுவார்த்தை நடத்தச் சொன்னதால், நான் இங்கு வந்தேன். பேசியதில் எந்தப் பயனும் இல்லை என்ற நிலையில் நான் சென்னைக்கு திரும்பிச் செல்கிறேன்' என்று கூறினார். இது நடந்து 14 வருடங்கள் ஆனபின்னரும் 'தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்' என்று கர்நாடக காங்கிரஸ் ஆட்சியாளர்கள் அடம் பிடிக்கிறார்கள்.</p><h2>டி.கே.சிவக்குமார்</h2><p>பிறகு, தற்போது, 'தமிழக முதல்-அமைச்சர், காவிரிப் பிரச்சனையில் பேச்சுவார்த்தைக்காக கர்நாடக முதல்-மந்திரியை சந்திக்கப் போகிறேன்' என்று சொன்ன 'யார் வேண்டுமானாலும் வரட்டும், யாரோடும் நாங்கள் பேசத் தயார், எங்கள் நிலையில் எந்த மாற்றமும் இல்லை' என்று கர்நாடகாவின் காங்கிரஸ் முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் அவர்கள் கூறியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.</p><h2>டெல்டா மாவட்ட விவசாயிகள்</h2><p>மேலும், தமிழ் நாட்டை பாலைவனமாக்கும், 'மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டும் விவகாரம் குறித்து பெங்களூரு வரும் தமிழக முதல்-அமைச்சரிடம் பேசுவேன்' என்று கர்நாடக முதல்-மந்திரி கூறியதாகச் செய்திகள் வந்துள்ளன. </p><p>மேகதாது விவகாரம் குறித்து தமிழக முதல்-அமைச்சர் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி அவர்களது கருத்துகளைக் கேட்டும்; டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து அவர்களுடைய கருத்துகளைக் கேட்டறிந்தும், பிறகு அனைவரது கருத்துகளின் அடிப்படையில் சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து உரிய முடிவை எடுக்க வேண்டும். எனவே, உடனடியாக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்துகிறேன்.</p> <h2>த.வெ.க.-காங்கிரஸ் கூட்டணி</h2><p>ஏற்கெனவே காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டு இறுதித் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளவாறு, கர்நாடக அரசு காவிரியில் நமக்கு வழங்க வேண்டிய உரிய பங்கு நீரை வழங்க மறுப்பது கண்டிக்கத்தக்கது. சுப்ரீம்கோர்ட்டு அளித்த இறுதித் தீர்ப்பின்படி கர்நாடக அரசு நடந்துகொள்ள வேண்டும். காவிரியில் நமக்குரிய பங்கு நீரைப் பெற வேண்டும் என்று த.வெ.க.-காங்கிரஸ் கூட்டணி அரசின் முதல்-அமைச்சரை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>சென்னை மாநகராட்சி பள்ளி பாலின மன்ற ஆசிரியர்களுக்கு உளவியல் வழிகாட்டுதல் நிகழ்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/psychological-guidance-program-for-gender-forum-teachers-of-chennai-corporation-schools</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/psychological-guidance-program-for-gender-forum-teachers-of-chennai-corporation-schools#comments</comments><guid isPermaLink="false">d44d2008-467e-4ede-b462-efeb74bd2926</guid><pubDate>Sat, 25 Jul 2026 14:25:06 +0000</pubDate><atom:updated>2026-07-25T14:25:06.003Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,சென்னை மாநகராட்சி பள்ளி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/7hujietw/Untitled-9.jpg" width="753"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/7hujietw/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரனின் உத்தரவுவின்படியும், இணை ஆணையாளர் (கல்வி) க.கற்பகமின் வழிகாட்டுதலின்படியும் பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகம் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சிப் பள்ளிகளின் பாலினமன்ற ஆசிரியர்களுக்கான உளவியல் வழிகாட்டுதல் நிகழ்ச்சி ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் இன்று (25.07.2026) நடைபெற்றது.</p><h2>உளவியல் வழிகாட்டுதல் நிகழ்ச்சி</h2><p>இந்நிகழ்ச்சியின் நோக்கமானது குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தினரின் உளவியல் குறித்த ஆசிரியர்களின் புரிதலை வலுப்படுத்துவதையும், மாணவர்களின் உணர்வுசார் நல்வாழ்வு மற்றும் நேர்மறையான வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கான நடைமுறை அணுகுமுறைகளை அவர்களுக்கு வழங்குவதுமாகும்.</p><p>இந்நிகழ்ச்சியை பெருநகர சென்னை மாநகராட்சியின் கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார். குழந்தைகளின் தன்னம்பிக்கை, நடத்தை மற்றும் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஆசிரியர்களின் முக்கியப் பங்கை அவர் எடுத்துரைத்தார். நேர்மறை வலுவூட்டல், ஊக்கம் மற்றும் பரிவுள்ள வழிகாட்டுதல் ஆகியவை ஒரு குழந்தையின் சுயமரியாதையை மாற்றி, அவர்களின் திறனை உணர்த்திட உதவும் என்று தெரிவித்தார்.</p><h2>ஆசிரியர்களுக்கு ஊக்குவிப்பு</h2><p>இந்நிகழ்ச்சியில், சுவிட்சர்லாந்தின் சூரிச்சைச் சேர்ந்த சர்வதேச பகுப்பாய்வு உளவியலாளரும், சூரிச் ISAP-இன் மெட்ரிகுலேட்டட் தணிக்கையாளருமான டாக்டர் அக்ஷயா ராஜா சிறப்புரையாற்றினார். ஒவ்வொரு குழந்தையின் நடத்தையும் ஒரு வகையான தகவல்தொடர்பு என்பதை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், குழந்தைகளை திருத்தும் முயற்சியில் ஈடுபடுவதற்கு முன்பு அவர்களது உணர்வுகளைப் புரிந்து கொள்வதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். குழந்தைகளின் பலத்தினை அங்கீகரிக்கவும், அவர்களின் முயற்சிகளைப் பாராட்டவும், உணர்வு ரீதியாக மீள்திறன் கொண்ட மற்றும் தன்னம்பிக்கையான தனிநபர்களை வளர்க்க நேர்மறையான வழிகாட்டுதலைப் பயன்படுத்தவும் ஆசிரியர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.</p><p>மேலும், பாலினமன்ற <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஆசிரியர்களுக்கு </a>வகுப்பறை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும், நடத்தை சார்ந்த கவலைகள், உணர்வு, நல்வாழ்வு, சக வயது உறவுகள் மற்றும் குழந்தைகளுக்கு ஆதரவளிப்பதற்கான பயனுள்ள அணுகுமுறைகள் குறித்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&quot;போராடி வெற்றியை சாத்தியமாக்கிய இளைஞர்களுக்கு வாழ்த்துகள்! ­மு.க.ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-farmers-of-india-did-it-first-the-youth-have-done-it-today-mkstalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-farmers-of-india-did-it-first-the-youth-have-done-it-today-mkstalin#comments</comments><guid isPermaLink="false">e9fe434e-6bad-4d7f-9581-e60f2c64a265</guid><pubDate>Sat, 25 Jul 2026 14:16:03 +0000</pubDate><atom:updated>2026-07-25T14:16:03.107Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,சென்னை,மாணவர்கள் போராட்டம்,கரப்பான் பூச்சி கட்சி,cjp,JantarMantar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/wwoaan9t/stalinone33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/wwoaan9t/stalinone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 20ம் தேதி முதல் போரட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டம் 36வது நாளை எட்டிய நிலையில், மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக தர்மேந்திர பிரதான் அறிவித்தார்.</p><p>இதைத்தொடர்ந்து<a href="https://www.dailythanthi.com/search?q=m.k.stalin">, மத்திய அரசு</a> மற்றும் சிஜேபி இயக்கத்தினர் இன்று 3வது கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். மத்திய மந்திரிகள் ஜே.பி.நட்டா மற்றும் ஜிதேந்தர் சிங் ஆகியோருடன் சிஜேபி இயக்கத்தைச் சேர்ந்த சவுரவ் தாஸ் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அமைச்சர்கள் மற்றும் சிஜேபி இயக்கத்தினர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.</p> <p>கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டன; போராட்டத்தில் ஈடுபடுவோர் உடனடியாக போராட்டத்தை கைவிட்டு அமைதியாக வீடு திரும்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.எங்கள் எதிர்காலத் திட்டம் அல்லது பிற விஷயங்கள் குறித்து நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்போம் என கரப்பான் ஜனதா கட்சி செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><p>நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தால் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள், தற்போது தங்களது போராட்டம் முடிவுக்கு வந்ததால் அங்கிருந்து கலைந்து செல்லத் தொடங்கியுள்ளனர்.</p> <p>இந்தநிலையில், அன்று விவசாயிகள் போராடி வென்றது போல, இன்று நாடு முழுவதும் இணையத்திலும் களத்திலும் போராடி வெற்றியைச் சாத்தியமாக்கிய இந்திய இளைஞர்களுக்கு வாழ்த்துகள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.</p><p>இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-</p><p>“அன்று விவசாயிகள் போராடி வென்றது போல, இன்று நாடு முழுவதும் இணையத்திலும் களத்திலும் போராடி வெற்றியைச் சாத்தியமாக்கிய இந்திய இளைஞர்களுக்கு வாழ்த்துகள்!</p><p>மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் எவ்வாறு திரும்பப் பெறப்பட்டதோ, நீட் தேர்வும் நிச்சயமாக ரத்து செய்யப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம் என அதில் பதிவிட்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">The farmers of India did it first.<br>The youth have done it today.<br>Congratulations to the youth of India who protested across the country, both offline and online, and made this victory possible.<br><br>Just as the farm laws were repealed, we shall ensure that <a href="https://x.com/hashtag/NEET?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#NEET</a> is also abolished.… <a href="https://t.co/QgxFe6thhp">pic.twitter.com/QgxFe6thhp</a></p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2081004300311085382?ref_src=twsrc%5Etfw">July 25, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>சென்னை வெற்றிப்போர் நினைவிடம்: போர் டாங்கி, போர்க்கப்பல் மாதிரிகளுடன் ராணுவ பாரம்பரிய வளாகமாக மாற்றம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-victory-memorial-transformed-into-a-military-heritage-complex-with-war-tank-and-warship-models</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-victory-memorial-transformed-into-a-military-heritage-complex-with-war-tank-and-warship-models#comments</comments><guid isPermaLink="false">8ab23605-a37f-4453-a9fb-f4fe6d39c0d6</guid><pubDate>Sat, 25 Jul 2026 13:53:42 +0000</pubDate><atom:updated>2026-07-25T13:53:42.881Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,போர் விமானம்,வீரம்,நினைவிடம்,ஆயுத படைகள்,போர் கப்பல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/gmsrxgc9/83.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ போர் டாங்கி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/gmsrxgc9/83.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>இந்திய அரசின் பாதுகாப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளியிட்டுள்ள தெரிவித்திருப்பதாவது:-</p><p>சென்னையில் உள்ள வெற்றிப் போர் நினைவிட வளாகத்தில், பயன்பாட்டிலிருந்து ஓய்வுபெற்ற  டி-55 பிரதான போர் டாங்கி ஒன்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மேடையில் பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன், இந்திய கடற்படைக் கப்பல்களான ஐ.என்.எஸ். விக்ராந்த், ஐ.என்.எஸ். அஞ்சதீப் ஆகியவற்றின் மாதிரிகளும் இவ்வளாகத்தில் இடம்பெற்றுள்ளன.</p><h2>இந்திய பாதுகாப்பு படை</h2><p>விரைவில், ஒரு மிக்-21 ரக போர் விமானம் உயர்பீடத்தின்மேல் நிறுவப்பட்டு இந்த நினைவிடம் மேலும் மேம்படுத்தப்படும். கூடுதலாக, இந்திய கடலோரக் காவல்படையின் கடல்சார் மற்றும் வான்சார் சொத்துக்கள், இந்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5">ராணுவ</a> பாரம்பரிய வளாகத்தின் ஒரு பகுதியாக காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிப் போர் நினைவிடத்தை ஒரு அழகிய  இராணுவ பாரம்பரிய வளாகமாக மாற்றுவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இவை அமைகின்றன. இந்திய பாதுகாப்பு படைகளின் வீரம், தியாகம் மற்றும் சிறப்பான சேவையை நினைவுகூரும் நோக்கில், கவனமாகத் திட்டமிடப்பட்ட தொடர் முயற்சிகள்  நடைபெற்று வருகின்றன.</p><p>புகழ்பெற்ற மெரினா கடற்கரை மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க புனித ஜார்ஜ் கோட்டைப் பகுதி சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ள இந்த நினைவிடம், தேச சேவைக்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரமிக்க ஆண்களுக்கும் பெண்களுக்கும்  அஞ்சலி செலுத்தும் பாரம்பரிய நினைவுச்சின்னமாக திகழ்கிறது.</p><h2>வெற்றிப் போர் நினைவிடம்</h2><p>முதலாம் உலகப் போரின்போது (1914–1918) நேச நாடுகளின் வெற்றியை நினைவுகூரும் வகையில் இது முதலில் கட்டப்பட்டது. பின்னர், இரண்டாம் உலகப் போருக்குப் (1939–1945) பிறகு, இரண்டு உலகப் போர்களின்போதும் தங்கள் உயிரைத் தியாகம் செய்த பழைய  மதராஸ் மாகாணத்தைச் சேர்ந்த வீரர்களின் நினைவாக, இது வெற்றிப் போர் நினைவிடம் என அர்ப்பணிக்கப்பட்டது.</p><p>பல தசாப்தங்களாக, இந்த வெற்றிப் போர் நினைவிடம் அதன் தன்மையிலும் முக்கியத்துவத்திலும் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த நினைவகம் முதலில் முதலாம் உலகப் போரை நினைவுகூரும் கல்வெட்டுகளை மட்டுமே கொண்டிருந்தது. இரண்டாம் உலகப் போர் மற்றும் சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில் இந்திய ஆயுதப் படைகள் பங்கேற்ற அனைத்து முக்கியப் போர்கள் மற்றும் ராணுவ நடவடிக்கைகளை உள்ளடக்கும் வகையில் இது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தேசத்திற்குச் சிறப்பாகப் பணியாற்றிய இந்திய ராணுவ வீரர்கள், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களின் துணிச்சல், வீரம் மற்றும் உன்னத தியாகத்தைப் போற்றும் ஒரு தேசிய அஞ்சலியாக இந்த நினைவகம் விளங்குகிறது.</p><p>அண்மையில் மெரினா கடற்கரையோரத்தில் இரண்டு முக்கிய இடங்களில் புகழ்பெற்ற செஞ்சுரியன் டாங்கிகளை வெற்றிகரமாக நிறுவியதைத் தொடர்ந்து, இந்திய ராணுவத்தின் தெற்குப்பகுதி தலைமையகம் வெற்றிப் போர் நினைவகத்தை, இராணுவப் பாரம்பரியம், தேசியப் பெருமை ஆகியவற்றின் ஒரு துடிப்பான மையமாக மேம்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்த முயற்சி, இந்திய ஆயுதப் படைகளின் பெருமைமிக்க பாரம்பரியத்தைப் பாதுகாப்பதோடு, இராணுவத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்தவும் முயல்கிறது.</p><p>தமிழ்நாடு அரசு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் நெருங்கிய ஒத்துழைப்பு மற்றும் ஆதரவின் மூலமே வெற்றிப் போர் நினைவிடத்தின் உருமாற்றம் சாத்தியமாகியுள்ளது. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பீடங்கள், மேடைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உள்கட்டமைப்புகளை உருவாக்குவதில் அவர்கள் மிகுந்த ஒத்துழைப்பை அளித்தனர்.</p><h2>கவசப்படை திறன்</h2><p>இந்தியாவின் கவசப் போர் வாகன (AFV) உற்பத்தியில் சென்னை ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. கனரக வாகனத் தொழிற்சாலை (HVF), ஆவடி இயந்திரத் தொழிற்சாலை (EFA), போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (CVRDE) மற்றும் அதனுடன் தொடர்புடைய தர உறுதி அமைப்புகளை உள்ளடக்கிய கவச வாகன நிறுவனம் சென்னையில் அமைந்திருப்பதுடன், வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவடி ஆயுதக்கிடங்கும் இங்கு  அமைந்துள்ளது. 1941-ல் இந்திய ராணுவத்தின் பீரங்கிகளுக்கான முக்கிய கிடங்காக உருவாக்கப்பட்ட  இக்கிடங்கு, புதிதாகத் தயாரிக்கப்பட்ட மற்றும் சீரமைக்கப்பட்ட கவச வாகனங்கள் மற்றும் உபகரணங்களைப் பெறுதல், வழங்குதல், பாதுகாத்தல் மற்றும் நாடு முழுவதும் உள்ள இராணுவப் பிரிவுகளுக்கு அனுப்பி வைப்பதில் ஒரு முக்கியப் பங்காற்றுகிறது. இந்த நிறுவனங்கள் சென்னையை இந்தியாவின் கவசப்படை திறனின் தொட்டிலாக மாறியுள்ளன.</p><p>மெரினா கடற்கரையோரம் இரண்டு முக்கிய இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள செஞ்சுரியன் டாங்கிகள், இந்திய ராணுவத்தின் கவசப் படை வரலாற்றில் மிகச் சிறந்த அத்தியாயங்களில் ஒன்றை நினைவுகூர்கின்றன. 1965-ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரின்போது, ​​குறிப்பாக வரலாற்றுச் சிறப்புமிக்க அசல் உத்தர் போரில், செஞ்சுரியன் டாங்கிகள்,  எதிரியின் நவீன கவச வாகனங்களுக்கு பெரும் தோல்வியைப் அளிப்பதில் தீர்க்கமான பங்காற்றின. இதன் விளைவாக, அந்தப் போர்க்களம் 'பத்தான் நகர்' என்ற அழியாத புகழைப் பெற்றது.</p><p>தற்போது போர் நினைவுச்சின்னத்தில் பொருத்தப்பட்டுள்ள டி-55 போர்க் கவச வாகனம், இந்தியாவின் கவசப் போர் வரலாற்றில் மற்றொரு புகழ்பெற்ற அத்தியாயத்தைக் குறிக்கிறது. பல தசாப்தங்களாக, டி-55 டாங்கியானது இந்திய ராணுவத்தின் கவசப்படையின் முதுகெலும்பாகத் திகழ்ந்தன.</p><h2>போர்க்கப்பல்</h2><p>ஐஎன்எஸ் விக்ராந்தின் மாதிரி வடிவம், இந்தியக் கடற்படையின் புதிய, உள்நாட்டிலேயே கட்டப்பட்ட விமானம் தாங்கி கப்பலை குறிக்கிறது. இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், பாதுகாப்பு உற்பத்தித் துறையில் நாட்டின் வளர்ந்து வரும் தன்னிறைவையும், உலக தரம் வாய்ந்த சிக்கலான போர்க்கப்பல்களை வடிவமைத்து உருவாக்கும் அதன் குறிப்பிடத்தக்க திறனையும் அடையாளப்படுத்துகிறது. ஐஎன்எஸ் அஞ்சதீப்பின் மாதிரி வடிவம் இந்தியாவின் உற்பத்தித்திறனை எடுத்துக்காட்டுகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் குறித்து சென்னை மாநகராட்சியில் ஆய்வுக் கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/meeting-on-solid-waste-management-works-at-chennai-corporation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/meeting-on-solid-waste-management-works-at-chennai-corporation#comments</comments><guid isPermaLink="false">e3a589b9-59d9-4c26-a73d-3c9321a05e6c</guid><pubDate>Sat, 25 Jul 2026 13:15:00 +0000</pubDate><atom:updated>2026-07-25T13:15:00.200Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,ஆய்வுக் கூட்டம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/c8uareo8/Untitled-7.jpg" width="753"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/c8uareo8/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் தொடர்பாக அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>இன்று (25.07.2026) மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் தொடர்பாக அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.</p><h2>அபராதம் விதித்து நடவடிக்கை</h2><p>இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் பணிகளை ஆய்வு செய்து பேசும்போது தெரிவித்ததாவது:</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். பெருமளவு திடக்கழிவுகளை உருவாக்குபவர்கள் திடக்கழிவுகள் உருவாகும் இடத்திலேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதாரக் கழிவுகள், அபாயகரமான கழிவுகளை தனித்தனியே பிரித்து வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதைப்போல. குடியிருப்புகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலிருந்தும் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்குவதற்கு உரிய விழிப்புணர்வுப் பணியினைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும், கட்டட இடிபாட்டுக் கழிவுகளை முறையாக அகற்றி மறுசுழற்சிக்குட்படுத்தும் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.</p><p>சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள உரிமையாளர்கள் மற்றும் கட்டுமான நிறுவனத்தினர் பின்பற்றிடவும், மீறுபவர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளவும் வேண்டும். சாலைகள், தெருக்கள், பேருந்து நிறுத்தங்கள், மயானபூமி, பூங்காக்கள் உள்ளிட்ட அனைத்து பொது இடங்களிலும் தூய்மைப் பணியினை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். சாலைகளில் இரவு நேரங்களில் இயந்திரப் பெருக்கிகளைப் பயன்படுத்தி தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.</p><h2>பணிகளை விரைவுபடுத்த வேண்டும்</h2><p>கொடுங்கையூர்,பெருங்குடி குப்பை கிடங்குகளில் குப்பைகளை உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் அகற்றிடும் பணியினை தொடர்ந்து கண்காணித்து பணிகளை விரைவுபடுத்த வேண்டும். பெருநகர சென்னை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மாநகராட்சிப் </a>பகுதிகளில் திடக்கழிவுப் பணிகளை அலுவலர்கள் கண்காணித்து சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்று பேசினார்.</p><p>இக்கூட்டத்தில் இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன், காணொலி காட்சியின் வாயிலாக வட்டார துணை ஆணையாளர்கள் ஸ்வேதா சுமன், (வடக்கு), எச்.ஆர்.கௌஷிக், (மத்தியம்), அதாப் ரசூல்,  (தெற்கு), தலைமைப் பொறியாளர் பாலமுரளி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் சிக்காதீர்: முதல்-அமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dont-get-caught-in-the-trap-of-negotiations-mk-stalins-request-to-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dont-get-caught-in-the-trap-of-negotiations-mk-stalins-request-to-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">ad65ae14-a521-4c0f-90e4-558d63fe920f</guid><pubDate>Sat, 25 Jul 2026 13:01:31 +0000</pubDate><atom:updated>2026-07-25T13:01:31.726Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழ்நாடு,மு.க.ஸ்டாலின்,Karnataka,கர்நாடகா,காவிரி விவகாரம்,MKstalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/n3dzyy3s/staline33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/n3dzyy3s/staline33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காவிரி நீருக்காக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் முதல்-அமைச்சர் சிக்க வேண்டாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><p>இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,</p><p>காவிரி நீர்ப் பங்கீட்டில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட நாம் எடுத்த முயற்சிகளின் வரலாறு மிக நீண்டது.  1960-களில் தொடங்கி 1990 வரை பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தத் தீர்வும் கிடைக்காததால்தான் அது கைவிடப்பட்டு, உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் ஆட்சிக்காலத்தில் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அதன்பிறகும் தமிழ்நாட்டுக்கான தண்ணீரை வழங்குவதில் அநீதி இழைத்து வந்தது கர்நாடக மாநில அரசு.</p><p>கடந்த காலங்களில் காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற யோசனை சொல்லப்பட்டபோதெல்லாம், அதனை உறுதியாகத் திராவிட முன்னேற்றக் கழக அரசு நிராகரித்தது. ஏனென்றால், பேசுவது ஒன்றும் செய்வது ஒன்றுமாகவே கர்நாடக மாநில அரசு செயல்படும். உரிமையை நிலைநாட்டுவதாக இல்லாமல் பிரச்சினையை இழுப்பதாகவே அப்பேச்சுவார்த்தைகள் அமையும்.</p><p>அதிலும் குறிப்பாக, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தமிழ்நாட்டின் உரிமையை முற்றிலுமாக நிராகரிப்பதாகும். எனவே, இதுகுறித்து கர்நாடக அரசுடன் எத்தகைய பேச்சுவார்த்தையும் நடத்துவதால் பயனில்லை என்பதே நமது நிலைப்பாடாகும்.</p><p>மேகதாது குறித்து பேசுவதற்காக, கர்நாடக முதல்-மந்திரி. எடியூரப்பா அவர்கள் அழைப்பு விடுத்தபோது, முதல்-அமைச்சராக இருந்த நான், “அந்தப் பேச்சுக்கே இடமில்லை” என மறுத்தேன். அப்போது நீர்வளத்துறை அமைச்சராக இருந்த  துரைமுருகன் அவர்களும், “பேச்சுவார்த்தைக்கே இடமில்லை” எனத் திட்டவட்டமாக அறிவித்தார். முற்றிலும் தமிழ்நாட்டுக்கும் மக்களுக்கும் உழவர் பெருமக்களுக்கும் விரோதமானது அந்தத் திட்டம். அதில் பேசுவதற்கு என்ன இருக்கிறது? என்பதே ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் எண்ணம்.</p><p>இந்நிலையில், கர்நாடகம் சென்று அம்மாநில முதல்-மந்திரியுடன் முதல்-அமைச்சர் விஜய் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார் என  வேளாண்துறை அமைச்சரே தெரிவித்திருப்பது விவசாயிகள் மத்தியில் பெருங்கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது கர்நாடக அரசிடம், தமிழ்நாடு பணிந்து போகும் நிலையாகும்.</p><p>மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்றும், அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கிவிட்டது என்றும், யார் எதிர்த்தாலும் கட்டியே தீருவோம் என்றும் கர்நாடக மாநில அரசு வெளிப்படையாக, தொடர்ச்சியாகச் சொல்லும் போது, அவர்களிடம் பேசி என்ன ஆகப் போகிறது? அவர்களது பிடிவாதக் குணத்தை நேரில் கேட்டுத் தெரிந்து கொள்ளப் போகிறோமா?</p> <p>காவிரி நீர் திறக்க உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் ஏற்கனவே ஒரு “ஸ்கீம்” உருவாக்கப்பட்டு, எந்தெந்த மாதம் எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்பதும் உச்சநீதிமன்றத்தால் இறுதி செய்து வெளியிடப்பட்டு விட்டது. அதைச் செயல்படுத்தக் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவை அமைக்கப்பட்டு விட்டன. இந்த நிலையில், பேச்சுவார்த்தைக்குச் செல்வது என்பது  தமிழ்நாடு அரசின் 30 ஆண்டுகாலச் சட்டப் போராட்டத்தைச் சிதைப்பதாக அமைந்துவிடும். பேச்சுவார்த்தைக்குத் முதல்-அமைச்சர் விஜய் கர்நாடகம் செல்வது, தமிழ்நாட்டின் நிலையைக் குறைப்பதாகவும் அமைந்துவிடும்.</p><p>ஏற்கெனவே உள்ள சட்டப்பூர்வ உரிமையைச் சிதைக்க “பேச்சுவார்த்தை” எனக் கர்நாடகம் தற்போது விரித்திருக்கும் சதிவலையில் வலியச் சென்று <a href="https://www.dailythanthi.com/search?q=m.k.stalin">தமிழ்நாடு முதல்-அமைச்சர் </a>சிக்குவது ஏன்? தமிழ்நாட்டின் உரிமையைத் தாரைவார்க்கும் விதமாக முதலமைச்சர் செய்யும் இந்தச் செயலைப் பார்த்துக் காவிரி டெல்டா விவசாயிகள் கொதித்துப் போயிருக்கிறார்கள்.</p><p>கர்நாடக மாநிலத்தை ஆள்வது காங்கிரஸ் கட்சி அரசாகும். தமிழ்நாடு அரசிலும் காங்கிரஸ் கட்சி பங்கு வகிக்கிறது. எனவே கண்துடைப்புக்காக இதுபோன்ற பேச்சுவார்த்தை நாடகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது. 'நாங்கள் நேரிலேயே போய்ப் பேச்சுவார்த்தை நடத்தினோமே' என்று கணக்குக் காட்டுவதற்கு வேண்டுமானால் இது பயன்படலாமே தவிர, வேறு எந்தப் பயனும் ஏற்படப் போவது இல்லை.</p><p>காவிரி நீர் உரிமைப் பங்கீட்டுப் போராட்டம் நீண்ட நெடியது. தமிழ்நாட்டின் காவிரி உரிமை சட்டப்பூர்வமாக நிலைநாட்டப்பட்ட ஒன்று. காவிரி நீர் உரிமையின் ஆழ அகலங்களைப் புரிந்துகொண்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் தனது செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.</p><p>தமிழ்நாட்டிற்குக் காவிரி நீர் தரக் கர்நாடகம் மறுத்தால், அது நீதிமன்ற அவமதிப்பு; சட்ட மீறல்! மேகதாது அணை கட்ட முயற்சிப்பது உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பை மீறுவது. காவிரி போன்ற தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினைகளில் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனையையும் - விவசாயச் சங்கங்களின் கருத்துகளையும் பெற்ற பின்பே செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். காவிரி உரிமை தொடர்பாகப் பேச்சுவார்த்தைக்குக் கர்நாடகம் செல்லும் தவறான முயற்சியை  முதல்-அமைச்சர்கைவிட வேண்டும் என்று காவிரி டெல்டா விவசாயிகள் சார்பாகவும் - தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>நாடு முழுவதும் இளைஞர்களுடைய போராட்டத்திற்கு கிடைத்திருக்கக்கூடிய மிகப்பெரிய வெற்றி - கனிமொழி எம்.பி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-massive-victory-for-the-youths-protests-across-the-country-kanimozhi-mp</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-massive-victory-for-the-youths-protests-across-the-country-kanimozhi-mp#comments</comments><guid isPermaLink="false">0c75769d-b38f-41c6-b870-392acd6d3a6a</guid><pubDate>Sat, 25 Jul 2026 12:51:45 +0000</pubDate><atom:updated>2026-07-25T12:51:45.320Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,கனிமொழி எம்.பி,தூத்துக்குடி விமான நிலையம்,நீட் வினாத்தாள் கசிவு,Kanimozhi Karunanidhi,Thoothukkudi</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/import/h-upload/2024/12/17/28367098-untitled-1.webp" width="750"><media:title type="html"><![CDATA[ கனிமொழி எம்.பி]]></media:title><media:description type="html"><![CDATA[ தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/import/h-upload/2024/12/17/28367098-untitled-1.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தூத்துக்குடி</a> விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி. பேசியதாவது:-</p><p>நாடு முழுவதும் இளைஞர்களுடைய போராட்டத்திற்கு கிடைத்திருக்கக்கூடிய மிகப்பெரிய வெற்றி, மத்திய அரசாங்கம் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நீட் வினாத்தாள் கசிவுக்கு </a> பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்று  தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டுருந்தார்கள்.</p><p>எனினும் மத்திய அரசை எதிர்த்து கேள்வி கேட்க முடியாது என்று பிம்பத்தை பரப்ப கூடிய சூழலில் ,</p><p>இந்தியாவில் இருக்கக்கூடிய இளைஞர்கள் நாடு முழுவதும் போராட்டத்தைக் கையில் எடுத்து மத்திய அரசாங்கத்தை எதிர்த்து வெற்றி பெற்றிருக்கிறார்கள்.</p><p>மத்திய அரசாங்கம் எந்தக் கேள்விக்குமே பதில் சொல்லாது என்ற சூழ்நிலையில் இருந்ததை, நாட்டு மக்களுக்கு நீங்கள் பதில் சொல்லி ஆக வேண்டும் என்று பெற்றிருக்கக்கூடிய வெற்றி.</p><p>மேலும் அடுத்த கோரிக்கையாக, மாநிலப் பட்டியலுக்கு கல்வியைக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் வைத்திருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து முன்வைக்கக்கூடிய கோரிக்கை அதுவே. இதில் வெற்றி பெற்றால் நிச்சயமாக நாங்களும் வெற்றி அடைவோம்.</p><p>மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வந்தால் நிச்சயமாக நீட் ரத்து செய்வதற்கான எல்லா வாய்ப்புகளும் இருக்கிறது.</p><p>அருணாச்சலத்தின் குடும்பத்தைதான் சந்திப்பதற்காக நான் இங்கே வந்திருக்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் காவல் மரணம் குறித்து பலமுறை பேசியிருக்கிறார்கள். முதல்-அமைச்சர் காவல் நிலைய கொலைகளைப் பற்றி வாய் திறப்பதே கிடையாது என்ற குற்றச்சாட்டை எங்களுடைய தலைவர் நேற்று முன்வைத்திருக்கிறார். </p><p>தமிழ்நாட்டில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த காவல்துறையைப் பயன்படுத்தாமல், தங்களுக்கு யாரெல்லாம் எதிரியாக நினைக்கிறார்களோ அவர்களுக்கு எதிராக காவல்துறை பயன்படுத்தப்படுகிறது, தமிழ்நாட்டில் போராடிய மாணவர்கள் மீது காவல்துறையினுடைய வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது என்பதை நாம் பார்க்கிறோம்.</p><p>இவ்வாறு அவர் கூறியிருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-that-will-experience-power-outages-tomorrow%E0%AE%9F%E0%AF%8D</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-that-will-experience-power-outages-tomorrow%E0%AE%9F%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">e332d97a-92e1-4aa7-95fa-b9a5bdeaa196</guid><pubDate>Sat, 25 Jul 2026 12:47:59 +0000</pubDate><atom:updated>2026-07-25T12:47:59.616Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,தாம்பரம்,maintenance work,வேளச்சேரி,மின் தடை power cut,இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/df0wj95v/82.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  மின் தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/df0wj95v/82.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சென்னையில் 27.07.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">பராமரிப்பு பணி</a> காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><h2>மின் தடை ஏற்படும் இடங்கள்</h2><p><strong>வேளச்சேரி:</strong> விஜயா நகர் 3 வது, 6 வது, 9 வது முதல் 11வது தெருக்கள் வரை, ராம் நகர் 4 வது முதல் 7 வது தெருக்கள் வரை, கோமதி நகர் 8 வது தெரு, வேளச்சேரி பிரதான சாலை.</p><p><strong>கொட்டிவாக்கம்:</strong> சாஸ்திரி நகர், வால்மீகி நகர், 2வது சீவார்டு சாலை முதல் 4வது சீவார்டு சாலை வரை, பாலகிருஷ்ணன் சாலை, கே.கே. சாலை, ராஜா ரங்கசாமி அவென்யூ, சுப்பிரமணியம் அவென்யூ, திருவள்ளுவர் நகர் 7வது முதல் 33வது குறுக்குத் தெருக்கள் வரை, திருவள்ளுவர் நகர் 1 மற்றும் 3 முதல் 6வது பிரதான சாலைகள் வரை, 1 மற்றும் 3வது அவென்யூ, வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் எச்12 முதல் எச்40 மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.</p><p><strong>சித்தாலப்பாக்கம்:</strong> பெரியபாளையத்தம்மன் கோவில் தெரு, நற்குணம் அவென்யூ, ஸ்ரீ சாய் கார்டன், நூக்கம்பாளையம் பிரதான சாலை, இந்திரா நகர் பிரதான சாலை , காமராஜ் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, ரோஸ் கார்டன் சாலை, டி.என்.யு.எச்.டி.பி. ஏ பிளாக் முதல் யூ வரை, ஏஏ முதல் எச் , மற்றும் 209 முதல் 212 பிளாக் வரை.</p><p><strong>தாம்பரம் :</strong> இரும்புலியூர் சர்வீஸ் சாலை, இன்விகான் பிளாட், TTK நகர், ஜெருசீலம் நகர், சர்ச் சாலை, ரத்தின குமார் அவென்யூ, மருதம் பிளாட், ஏ.எஸ்.ராஜன் நகர், ஜி.கே.மூப்பனார் அவென்யூ.</p><p><strong>திருமுல்லைவாயல்:</strong> கிரீன் ஃபீல்ட், சோமசுந்தரம் அவென்யூ, வெங்கடாசலம் நகர், கமலம் நகர், லலிதாம்பாள் நகர், அன்னை தெரசா நகர், மாசிலாமணீஸ்வரர் நகர், வெங்கடேஸ்வரா நகர், ஒரகடம் சொசைட்டி.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விழுப்புரம் அருகே அடுத்தடுத்து 4 கடைகளில் துணிகர கொள்ளை: பொதுமக்கள்- வியாபாரிகள் அச்சம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/daring-burglaries-at-four-consecutive-shops-near-villupuram-public-and-traders-alarmed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/daring-burglaries-at-four-consecutive-shops-near-villupuram-public-and-traders-alarmed#comments</comments><guid isPermaLink="false">b9580b77-e3cb-4283-a674-430da93d45c6</guid><pubDate>Sat, 25 Jul 2026 12:43:06 +0000</pubDate><atom:updated>2026-07-25T12:43:06.874Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விழுப்புரம்,Villupuram,கொள்ளை,Robbery,public panic,பொதுமக்கள் அச்சம்</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/q7dbmqxb/19.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ கொள்ளையடிக்கப்பட்ட கடை -மோப்பநாய்]]></media:title><media:description type="html"><![CDATA[ விழுப்புரம் அருகே 4 கடைகளில் கொள்ளை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/q7dbmqxb/19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விழுப்புரம்,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விழுப்புரம் மாவட்டம்</a> அருகே அடுத்தடுத்து 4 கடைகளில் நடந்த கொள்ளையால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அச்சமடைந்தனர். </p><h2>நள்ளிரவில் துணிகர கொள்ளை</h2><p>விழுப்புரம் அடுத்த பிடாகம் பகுதியில் பல்வேறு வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் இயங்கி வருகின்றன. நேற்று இரவு வியாபாரிகள் தங்களது கடைகளைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றனர். இன்று காலை வழக்கம் போல் கடைகளைத் திறக்க வந்தபோது, அடுத்தடுத்து நான்கு கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். </p><h2>ரூ.25,000 -பொருட்கள் திருட்டு</h2><p>மர்ம நபர்கள் கடைகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 25,000 ரூபாய் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்தனர். மேலும், கடையிலிருந்த விலை உயர்ந்த சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் இதர பொருட்களையும் அள்ளிச் சென்றனர். ஒரே இரவில் அடுத்தடுத்து நான்கு கடைகளில் இந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">துணிகர கொள்ளை</a> அரங்கேறியது.</p><h2>போலீசார் தீவிர விசாரணை</h2><p>இது குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மோப்ப நாய் </a>வரவழைக்கப்பட்டு, கொள்ளையர்களின் கைரேகைகள் மற்றும் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.</p><h2>பொதுமக்கள் அச்சம்</h2><p>நெருக்கடி மிகுந்த பகுதியில் ஒரே நள்ளிரவில் 4 கடைகளில் கொள்ளை போயிருப்பது அப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரங்களில் போலீஸ் ரோந்து பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தலைமறைவாக உள்ள கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>காதலுக்கு மறுப்பு;  காதலி வேறு  நபருடன் திருமணம் - முன்னாள் காதலன் செய்த விபரீத செயல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rejection-of-love-ex-girlfriend-marries-another-man-ex-boyfriend-commits-a-drastic-act</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rejection-of-love-ex-girlfriend-marries-another-man-ex-boyfriend-commits-a-drastic-act#comments</comments><guid isPermaLink="false">b6d61e31-62f7-4220-8ac3-5f3362c0f6e6</guid><pubDate>Sat, 25 Jul 2026 12:39:46 +0000</pubDate><atom:updated>2026-07-25T12:39:46.936Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர்,Karur,கத்தி குத்து,ex-boyfriend,woman injured,முன்னாள் காதலன் கைது</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/import/h-upload/2025/12/13/44538026-national-04.webp" width="750"><media:title type="html"><![CDATA[ கத்தி குத்து]]></media:title><media:description type="html"><![CDATA[ திருமணமான இளம்பெண்ணை முன்னாள் காதலன் கத்தியால் குத்தினார்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/import/h-upload/2025/12/13/44538026-national-04.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கரூர்,</p><p>கரூர் மாவட்டம் குளித்தலையில் திருமணமான இளம்பெண் ஒருவரை அவரது முன்னாள் காதலன் கத்தியால் கொடூரமாக குத்தினார். </p><h2>காதலும் திருமணமும்</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கரூர் </a>மாவட்டத்தின் ஒரு இளம்பெண்ணும், ஒரு வாலிபரும் காதலித்து வந்தனர். ஆனால் சில காரணங்களால் இவர்களது காதல் தடைபட்டது. இதையடுத்து, அந்தப் பெண்ணுக்கு வேறொரு நபருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகும் முன்னாள் காதலன் அந்தப் பெண்ணை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார்.</p><h2>பொதுவெளியில் கொடூர தாக்குதல்</h2><p>இன்று (சனிக்கிழமை) குளித்தலை பகுதியில் அந்தப் பெண் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முன்னாள் காதலன் திடீரென அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எனவே, ஆத்திரமடைந்த அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்தப் பெண்ணை சரமாரியாகக் குத்தினார். அதனால் அந்த பெண் வலியில் அலறிக் கூச்சலிட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு சுற்றியிருந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பொது மக்கள்</a> ஓடி வந்தனர்.</p><h2>குற்றவாளிக்கு தர்மஅடி</h2><p>பொதுமக்கள், ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்த பெண்ணை உடனடியாக மீட்டு, சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், தப்பியோட முயன்ற முன்னாள் காதலனை அங்கிருந்த பொதுமக்கள் மடக்கிப் பிடித்து, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தர்மஅடி </a>கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.</p><h2>போலீஸ் விசாரணை</h2><p>இதுகுறித்து கரூர் குளித்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்ட நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>தனியார் பஸ் மோதி தந்தை கண்முன்னே கல்லூரி மாணவி உயிரிழப்பு  </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/college-student-dies-after-being-hit-by-a-private-bus-right-before-her-fathers-eyes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/college-student-dies-after-being-hit-by-a-private-bus-right-before-her-fathers-eyes#comments</comments><guid isPermaLink="false">2e22b42a-4323-4492-9d0f-ec7045f14ed5</guid><pubDate>Sat, 25 Jul 2026 12:39:45 +0000</pubDate><atom:updated>2026-07-25T12:39:45.557Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,திருவண்ணாமலை,Thiruvannamalai,தனியார் பஸ்,மாணவி பலி,College student dies</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/3nkf2iua/22.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ துர்கா தேவி ]]></media:title><media:description type="html"><![CDATA[ விபத்தில் துர்கா தேவி உயிரிழந்தார்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/3nkf2iua/22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">திருவண்ணாமலை</a> செய்யாறு சாலையில் பைக் மீது தனியார் பஸ் மோதி தந்தை கண்முன்னே கல்லூரி மாணவி உயிரிழந்தார்.</p><h2>விபத்து</h2><p>திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் துர்கா தேவி . இவர் செய்யாறு பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். வழக்கம்போல இன்று (சனிக்கிழமை) காலை அவர் தனது தந்தையுடன் பைக்கில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது செய்யாறு அருகே உள்ள ஒரு சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த தனியார் பஸ் எதிர்பாராத விதமாக அவர்களது <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பைக்</a> மீது பலமாக மோதியது.</p><h2>தந்தை கண்முன்னே நேர்ந்த சோகம்</h2><p>அந்த பயங்கர விபத்தில் துர்கா தேவி பைக்கிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவர் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தந்தை சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். எனினும், தனது கண்முன்னே மகள் உயிரிழந்ததைக் கண்டு அவர் கதறி அழுதது அங்கிருந்தோரை சோகத்தில் ஆழ்த்தியது.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>விபத்து குறித்து தகவல் அறிந்த உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ் ஓட்டுநரை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கைது</a> செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் 5-வது மாடியிலிருந்து விழுந்த தள்ளுவண்டி: கீழே குளித்த வடமாநில தொழிலாளி பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pushcart-falls-from-5th-floor-in-chennai-north-indian-worker-bathing-below-killed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pushcart-falls-from-5th-floor-in-chennai-north-indian-worker-bathing-below-killed#comments</comments><guid isPermaLink="false">625a5213-733f-4395-b6aa-ffa66f91f86b</guid><pubDate>Sat, 25 Jul 2026 12:38:32 +0000</pubDate><atom:updated>2026-07-25T12:38:32.314Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Accident,Chennai,சென்னை,பலி,வடமாநில தொழிலாளி,North Indian worker</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/2dmcne8f/18.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ தள்ளுவண்டி]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை 5-வது மாடியில் இருந்து தள்ளுவண்டி கீழே விழுந்ததில் கீழே குளித்துக் கொண்டிருந்த வடமாநில தொழிலாளி பலி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/2dmcne8f/18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை தரமணியில் 5-வது மாடியிலிருந்த தள்ளுவண்டி, கீழே குளித்துக் கொண்டிருந்த வடமாநில தொழிலாளியின் மீது விழுந்ததில் அவர் பலியாகினார்.</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை </a>தரமணி பகுதியில் அடுக்குமாடி கட்டிட கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்று (சனிக்கிழமை) காலை, கட்டிடத்தின் 5-வது தளத்தில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, சிமெண்ட் மற்றும் கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்படும் 'வீல் பாரோ' எனப்படும் தள்ளுவண்டி நிலைதடுமாறி திடீரென கீழே விழுந்தது. </p><h2>வடமாநில தொழிலாளி பலி</h2><p>அந்த சமயத்தில், கட்டிடத்தின் கீழே தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த பகுதியில் அஸ்ரபுல் ஆலம் (வயது 31) என்ற <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வடமாநில தொழிலாளி</a> குளித்துக் கொண்டிருந்தார். 5-வது மாடியில் இருந்து அதிவேகமாக வந்த அந்த இரும்பு வண்டி, அஸ்ரபுல் ஆலம் மீது பலமாக விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை</h2><p>இந்த விபத்தின் போது அஸ்ரபுல் ஆலம் அருகில் நின்று கொண்டிருந்த முகமது ஸ்ரேல் என்ற மற்றொரு தொழிலாளி மீதும் வண்டி மோதியதில், அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>விபத்து குறித்து தகவல் அறிந்த தரமணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் அஸ்ரபுல் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கட்டுமான தளத்தில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் வலைகள் பொருத்தப்படாததே இந்த விபத்திற்கு காரணமா என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>இந்திய அளவில் முதலிடம்: தமிழகத்தில் 15 ஆயிரத்தை கடந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/first-in-india-tamil-nadu-has-over-15000-startups</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/first-in-india-tamil-nadu-has-over-15000-startups#comments</comments><guid isPermaLink="false">865dd5ef-69d2-47b0-bf98-15b7c01f7ebf</guid><pubDate>Sat, 25 Jul 2026 12:23:44 +0000</pubDate><atom:updated>2026-07-25T12:23:44.985Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,சென்னை,பெண்கள்,தொழில் முனைவோர்,StartUp</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/wukyugae/81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஸ்டார்ட் அப்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/wukyugae/81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தொழில் மற்றும் உள்புற வர்த்தக மேம்பாட்டுத்துறையால்  அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 15,037 ஆக உயர்ந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.</p><h2>ஸ்டார்ட் அப்</h2><p>சமீபத்திய தரவுகளின் படி, தமிழ்நாட்டில் பெண்கள் தொழில் முனைவோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. பெண்களால் நடத்தப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7,572 ஆக பதிவாகியுள்ள நிலையில், ஆண்களால் நடத்தப்படும் நிறுவனங்கள் 7,465 ஆக உள்ளன. இதன் மூலம், பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஆண்களை விட சற்றே அதிகமாக இருப்பது பாலின சமத்துவத்தின் முக்கிய அடையாளமாகக் கருதப்படுகிறது.</p><p>மாநிலத்தின் ஸ்டார்ட் அப் வளர்ச்சியில் சென்னை தொடர்ந்து முன்னணியில் உள்ளது. தலைநகரில் மட்டும் 5,134 அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இது மாநிலத்தின் மொத்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமாகும்.</p><p>சென்னையைத் தொடர்ந்து கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2,011 நிறுவனங்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,318 நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. மேலும், திருவள்ளூர் (916), செங்கல்பட்டு (815), மதுரை (497), திருச்சி (446), சேலம் (403) ஆகிய மாவட்டங்களும் ஸ்டார்ட் அப் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளன.</p><p>தமிழ்நாட்டில் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் அரசின் பல்வேறு திட்டங்கள், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் புதுமை சார்ந்த சூழல் காரணமாக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D">ஸ்டார்ட் அப்</a> நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>129 அரசு கலைக்கல்லூரிகளுக்கு விரைவில் புதிய முதல்வர்கள் நியமனம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-principals-to-be-appointed-soon-for-129-government-arts-colleges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-principals-to-be-appointed-soon-for-129-government-arts-colleges#comments</comments><guid isPermaLink="false">6b8e327f-5eb1-4cb7-88db-e865ebd99e92</guid><pubDate>Sat, 25 Jul 2026 12:21:45 +0000</pubDate><atom:updated>2026-07-25T12:21:45.201Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Higher Education Department,உயர்கல்வித்துறை,அரசு கலைக்கல்லூரி,Government Colleges,கல்லூரி முதல்வர்,Government Arts Colleges</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/xr6idsup/Untitled-6.jpg" width="753"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/xr6idsup/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>129 அரசு கலைக்கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள். இரண்டாம் நிலை கல்லூரிகளின் முதல்வர்களாகப் பணியாற்ற இணைப் பேராசிரியர்களுக்குப் பதவி உயர்வு அளிப்பதற்கான அரசாணையை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக உயர் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:</p><h2>அரசாணை வெளியீடு</h2><p>நீண்ட காலமாக நிரந்தர முதல்வர்கள் இல்லாமல் தவித்து வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு ஒரு முக்கிய நிவாரணமாக, 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான இரண்டாம் நிலை கல்லூரி முதல்வர்களாகப் பதவி உயர்வு பெறுவதற்கான 129 இணைப் பேராசிரியர்கள் அடங்கிய பட்டியலுக்கு உயர்கல்வித்துறை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அரசாணை ஜூலை21 அன்று வெளியிடப்பட்டது.</p><p>அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இரண்டாம் நிலை முதல்வர் பணியிடங்களுக்கான 129 காலி இடங்களை அரசு ஏற்கனவே நிர்ணயித்திருந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் முடிவுக்கு உட்பட்டே இந்தப் பட்டியல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கல்லூரிக்கல்வி இயக்குநரின் பரிந்துரைகளின் அடிப்படையில் இப்பதவி உயர்வுக்கான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெறாததால் அதிருப்தி அடைந்தவர்கள், அது குறித்து முறையீடுகளைச் சமர்ப்பிக்க இரண்டு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அரசாணை குறிப்பிடுகிறது.</p><h2>ஆகஸ்ட் மாத இறுதிக்குள்..</h2><p>நிரந்தர முதல்வர்கள் இல்லாமல் செயல்படும் அரசு கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்த கவலைகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாத இறுதிக்குள் பணி நியமன நடைமுறைகளைத் துறை நிறைவு செய்யும். இந்தப்பட்டியல் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வெளியிடப்பட்டதைத் </a>தொடர்ந்து, புதிய கல்வியாண்டு முழுவீச்சில் தொடங்குவதற்கு முன்னதாகவே, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இந்த நியமன நடைமுறை வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>பட்டியல் இப்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பதவி உயர்வு மற்றும் பணி இடங்களுக்கான கலந்தாய்வு நடைமுறைகளை நாங்கள் மேற்கொள்வோம்; ஆகஸ்ட் மாத இறுதிக்குள் நிரந்தர முதல்வர்களை நியமிக்கும் பணி நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>&quot;நீட் வேண்டாம்: மாணவர்களின் குரல் நாடு முழுவதும் ஒலிக்கிறது&quot; -  கனிமொழி எம்.பி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-to-neet-students-voices-echo-across-the-country-kanimozhi-mp</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-to-neet-students-voices-echo-across-the-country-kanimozhi-mp#comments</comments><guid isPermaLink="false">bd408bac-0c0f-43b9-8d8c-90cdcfe8ea2e</guid><pubDate>Sat, 25 Jul 2026 11:27:43 +0000</pubDate><atom:updated>2026-07-25T11:27:43.737Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,கனிமொழி எம்பி,MP Kanimozhi,நீட்,போராட்டம்protest</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/q3khgz9h/80.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கனிமொழி எம்.பி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/q3khgz9h/80.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மருத்துவக் கல்வி சேர்க்கைக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஜூன் 6-ம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டத்திற்கு நாளுக்கு நாள் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. இதில் பல்வேறு மாணவர் அமைப்புகளும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், போராட்டக் களம் மேலும் வலுப்பெற்றுள்ளது.</p><h2>கனிமொழி </h2><p>இந்நிலையில், சென்னை பாலன் இல்லத்தில்  <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D">நீட் தேர்வுக்கு</a> எதிராகப் போராடி வரும் மாணவர்களை திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. நேரில் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது:-</p><p>ஒன்றிய அரசாங்கத்தை யாருமே எதிர்க்க முடியாது என்று நம்பிய ஒரு ஆட்சியை எதிர்த்துப்போராடிக் கொண்டிருக்கக்கூடிய அத்தனை இளைஞர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்த போராட்டத்தின் மிகப்பெரிய வெற்றி, இந்த நாட்டுக்கே நீங்கள் அனைவரும் வழிகாட்டியாக மாறி உள்ளீர்கள். எந்த இடத்தில் போராட்டம் நடந்தாலும், அவர்களை ஒன்னும் பண்ண முடியாது, அவர்களை யாரும் அசைக்க முடியாது, அவர்களை எதிர்த்து கேள்வி கேட்க முடியாது. நாங்களே நாடாளுமன்றத்தில் பல நாட்கள் வெளியில் தூக்கி எறியப்பட்டிருப்போம், சஸ்பெண்ட் செய்யப்பட்ட வாசலில்  உட்கார்ந்து இருக்க வேண்டிய நிலைமை எல்லாம் சந்தித்துள்ளோம். </p><h2>போராட்டம்</h2><p>எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிர்க்கட்சியில் இருக்கக்கூடிய அத்தனை பேரையும் சஸ்பெண்ட் செய்திருக்கக்கூடிய ஒரு ஆட்சி இருக்கும் என்றால், அது  ஒன்றியத்தில் இருக்கக்கூடிய பாஜகவின் ஆட்சிதான். நாங்கள் எல்லோரும் கேட்க முடியாதது, நாங்க எல்லோரும் செய்ய முடியாதது, அவர்களின் இடத்துக்கு போய் பார்க்க முடியாத சூழல் இருந்தது ஆனால் நேற்று டெல்லியிலே ஜந்தர் மந்தரில் போராடிய மாணவர்களைப் பார்ப்பதற்காக பாஜக அரசு முன்வந்து பார்த்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. அது உங்களுடைய மிகப்பெரிய வெற்றி. உங்கள் அத்தனை பேருக்கும் நன்றாக தெரியும், நீட் வேண்டாம் என்று முதன் முதலில் வந்த எதிர்ப்பு குரல் தமிழகத்திலிருந்து வந்த குரல்தான். நீட் இருக்கக்கூடாது என நீதிமன்றத்திற்குப் போனவர் நமது சகோதரி அனிதா என்ற மாணவி. அதன்படி நாம் ஆரம்பித்த போராட்டம், இன்றைக்கு நாடு முழுவதும் எதிரொலிக்க துவங்கி இருக்கிறது. மாணவர்கள் டெல்லியில் மட்டுமின்றி, நாடு முழுவதும் ஒவ்வொரு பகுதியிலேயும் நீட்டுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார்கள். </p><h2>தலைசிறந்த மருத்துவர்கள்</h2><p>நாங்க படித்துவிட்டு செல்கிறோம், ஆனால் வினாத்தாள் வெளியாகிறது என்றால் நீட் தேர்வு நேர்மையாக நடக்கவில்லை. இந்த தேர்வு அப்படின்னு போராடிக் கொண்டிருக்கக்கூடிய சூழலைத் தாண்டி, இங்கே பேசிய மாணவர் சொன்னது போல, நம்ம படிக்கிற பாடம் வேற, நம்ம பள்ளியில படிக்கக்கூடிய விஷயங்கள் வேற, நீங்க பரீட்சை வெச்சு எங்களை கேட்கிற கேள்விகள் வேறயாக உள்ளது. ஆனால் இதுவரைக்கும் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய பல நாடுகளில், பல பெரிய மருத்துவமனைகளில்  தமிழ்நாட்டிலிருந்து பயின்று சென்ற மருத்துவர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்த மருத்துவர்கள் எல்லாரும் கொண்டாடக்கூடிய இடத்தில் இருக்காங்க. அவர்கள் எந்த நீட் தேர்வையும் எழுதி பாஸ் செய்து மருத்துவராகவில்லை. இன்றைக்கு நாடு முழுவதும் இருக்கக்கூடிய மிகச்சிறந்த, தலைசிறந்த மருத்துவர்கள் வந்து தமிழ்நாட்டிலிருந்து கல்வி பயின்றவர்கள். அவர்கள் யாரும் நீட்டெல்லாம் தாண்டி வரவேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால் அப்போது மருத்துவத்துறை மீது ஆர்வம் இருந்தவர்கள் படித்தார்கள். </p><p>நீட் வருவதற்கு முன்பு யாருக்கெல்லாம் மருத்துவர்கள் ஆக வேண்டுமோ, மக்களைச் சந்திக்க வேண்டுமோ, உதவி செய்ய வேண்டுமோ, அவர்கள் ஆர்வத்துடன் படித்தார்கள். ஆனால் இப்போது யாருக்கெல்லாம் வசதி வாய்ப்பு இருக்கிறதோ, யாரெல்லாம் கோச்சிங் சென்டருக்குப் போக முடியுமோ, அவர்கள்மட்டும் இன்னைக்கு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D">நீட் தேர்வில் தேர்ச்சி</a> பெற்று மருத்துவராக போகக்கூடிய ஒரு சூழலை இந்த நீட் தேர்வு முறை உருவாக்கியுள்ளது. அதனாலதான் தொடர்ந்து, நீட்டை தடை செய்யுங்கள், நீட் வேண்டாம் என்கிறோம்.</p><p>டெல்லியில் நடக்கக்கூடிய போராட்டத்துக்கும், நமக்கும் இருக்கக்கூடிய ஒரு சின்ன இடைவெளி அதுதான். நாம் நீட் தேர்வே வேண்டாம் என்கிறோம், அவர்கள் நீட் தேர்வை ஒழுங்கா நடத்துங்கள் என்கிறார்கள். நீட்டை நடத்தக்கூடிய அமைச்சரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்கள். நேற்று வரைக்கும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடிய ஒன்றிய அரசாங்கம் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை, இன்றைக்கு மறுபடியும் வந்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். நிச்சயமாக வழிக்கு வருவார்கள் என்கிற நம்பிக்கை இங்கே இருக்கக்கூடிய அத்தனை பேருக்கும் இருக்கிறது.</p><h2>ஆளுநர் கையெழுத்து</h2><p>தொடர்ந்து நீட்டை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். எப்பொழுதுமே தமிழ்நாடு ஹிந்தியை திணிக்காதீர்கள் என சொல்ல நினைத்தால் யாரும் காது கொடுத்து கேட்க மாட்டார்கள். தமிழ்நாடு ஏதோ தனியாக பேசுவதாக எண்ணுவார்கள்.  சிறிது காலத்தில், தன்னுடைய மொழி தன்னிடம் இருந்து பறிக்கப்படும் பொழுது அதை உணர்ந்து கொண்டு ஹிந்தி வேண்டாம் என நாடு முழுவதும் நமது கருத்தை எதிரொலிக்கும். அதேபோல தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பிலே இருந்த திராவிட முன்னேற்றக் கழகம், இன்றைக்கு வரைக்கும் நீட் வேண்டாம் என்று நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபொழுது சட்டமன்றத்தில் இதற்காக சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் அதனை ஏற்று ஆளுநர் கையெழுத்து போடவில்லை. நம் மாநிலத்தின் நலம் சார்ந்து எதை அனுப்பினாலும் கையெழுத்து போட மாட்டார்கள். அதன் பின் பெரிய போராட்டத்திற்குப் பிறகு கையெழுத்து போட்டு இப்போது டெல்லியில் தூங்குகிறது.</p><p>இந்தப் போராட்டத்திற்குப் பிறகாவது அங்கே இருக்கக்கூடியவர்கள், மாணவர்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D">நீட்</a> வேண்டாம் என்பதை உணர்ந்து கொள்வார்கள்.  அவ்வாறு உணரவில்லை என்றால் தமிழ்நாடு அதை உணர வைக்கும். டெல்லியில போராட கூடிய மாணவர்கள் தடியடியை எதிர்கொள்கிறார்கள். பெண்கள் பலபேர் இன்றைக்கு சோசியல் மீடியாவில் பேசும்போது பார்க்கிறோம். நாங்க சக போராட்டக்காரர்களுடன் இருக்கும்போது தான் பாதுகாப்பாக உணர்கிறோம். அங்கே இருக்கக்கூடிய காவல்துறையைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. எங்களிடம் தவறாக நடந்து கொள்ளக்கூடிய ஒரு சூழல் உள்ளது என கூறுகிறார்கள்.  </p><p>மேலும், எங்களை பாதுகாக்க வேண்டியவர்களை பார்த்தால் எங்களுக்குப் பயமாக இருக்கிறது என்று அங்கே போராடக்கூடிய பெண்கள் சொல்லக்கூடிய ஒரு நிலை மிகவும் கவலை அளிக்கிறது. மாணவர்கள் எந்த அளவுக்குத் தாக்கப்பட்டார்கள் என்பதை நம்ம பார்த்தோம். ஆனால் அதையும் அசால்ட்டாக டீல் செய்யக்கூடிய மாணவர்களை நாம் அங்கு தான் சந்தித்தோம். நீங்கள் மாணவர்களை விரட்ட தண்ணீரை பாய்ச்சினால், அதில் நடனம் ஆடுகிறார்கள். அதனால் இந்த இளைஞர்கள் கூட்டத்தை யாராலும் வெற்றி பெற முடியாது.   அதை இன்று ஒன்றிய அரசாங்கம் உணர்ந்து இருக்கும். யாருக்காகவும் இறங்கி வரமாட்டோம், யாருடைய கோரிக்கைக்கும் செவி சாய்க்க மாட்டோம் என்ற மமதையில் இருந்த பாஜகவை இறங்கி வர வைத்ததே உங்களுடைய பெரிய வெற்றி எங்களுக்குக் காது கிடையாது என கூறிய ஒன்றிய அரசாங்கம்,  உங்களோடு பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய நிலைக்குக் கொண்டு வந்திருக்கக்கூடியதே பெரிய வெற்றி. அதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.</p><p>இங்கே நிறைய கோரிக்கைகள் தற்போது இருக்கக்கூடிய ஆட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. மெரினாவைத் திறந்து விடுங்கள், போராட விடுங்கள். தமிழ்நாட்டிலும் நீட் வேண்டாம் என்று தொடர்ந்து போராடக்கூடிய சூழலில் மாணவர்கள் போராட்டத்திற்கு எதிர்ப்பு இருக்கிறது. குறிப்பாக மாணவர்கள், மதுரையில் போராடிய மாணவர்கள் மிக மோசமாக தாக்கப்பட்டிருக்கிறார்கள். டெல்லியில் இருக்கிறோமா தமிழ்நாட்டுல இருக்கிறோமா என தெரியாத அளவிற்கு மாணவர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். இங்க கைதுகள், அச்சுறுத்தல்கள், போராடுறதுக்கு இடம் இல்லாம இந்த இடத்துல எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் இங்கேயே போராட வேண்டும் என்ற நிலையுள்ளது.</p><h2>வாழ்த்துக்கள்</h2><p>அதனால் மாணவர்களுடைய நியாயமான போராட்டம், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த குரலை எதிரொலிக்கக்கூடிய இந்தப் போராட்டத்திற்கு, அரசு துணை நிற்க வேண்டும். அதை இங்கே இருக்கக்கூடிய ஆட்சியாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.</p><p>யார் உங்களோடு இருந்தாலும் இல்லாவிட்டாலும், நாங்கள் உங்களோடு நிற்போம். நீங்கள் இங்க போராடினாலும் நிற்போம், வேறு எந்த இடத்தில் போராடினாலும் உடன் நிற்போம். எந்த அச்சுறுத்தல் வந்தாலும் திராவிட முன்னேற்றக் கழகமும், நானும் உங்களோடு எப்பொழுதும் நிற்போம் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் இங்கே போராடிக் கொண்டிருக்கக்கூடிய அத்தனை இளைஞர்களுக்கு, இளம் பெண்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். உங்களுடைய போராட்டம் நிச்சயமாக வெற்றி பெறும் என்றார்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>தர்மேந்திர பிரதான் ராஜினாமா: &apos;இந்திய இளைஞர்களின் மகத்தான வெற்றி!&apos;  - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dharmendra-pradhan-resignation-great-victory-of-indian-youth-manickam-thakur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dharmendra-pradhan-resignation-great-victory-of-indian-youth-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">b1ae1319-e748-4d5f-b90e-7e8504277876</guid><pubDate>Sat, 25 Jul 2026 11:05:30 +0000</pubDate><atom:updated>2026-07-25T11:05:30.718Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Delhi,காங்கிரஸ்,Congress,NEET Exam,மாணிக்கம் தாகூர்,தர்மேந்திர பிரதான்,NEET,மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்,Manickam Tagore MP,தமிழ்நாடு காங்கிரஸ்,மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான்,டெல்லி போராட்டம்,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Tagore,tamilnadu congress,delhi protest,Neet Protest</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/e9g9dxli/Untitled-5.jpg" width="753"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/e9g9dxli/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>மக்களின் வெற்றி</h2><p>உங்கள் எழுச்சியும், உறுதியும், போராட்டமும் தான் திறமையற்ற, ஊழல் கறைபடிந்த, பொறுப்பற்ற மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானை பதவி விலகச் செய்துள்ளது!. இது இந்திய மக்களின் வெற்றி. கல்வி அமைப்பில் பொறுப்புணர்வையும், நீதி நிலைநாட்டலையும் கோரி போராடிய ஒவ்வொருவரின் வெற்றி.</p><p>நீட் வினாத்தாள் கசிவு வெளிச்சத்துக்கு வந்த முதல் நாளிலிருந்தே, இந்திய தேசிய காங்கிரஸும், குறிப்பாக மாணவர்களின் குரலாக இடைவிடாது போராடிய ராகுல் காந்தியும், தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு, பொறுப்புக்கூறலைக் கோரி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தன.</p><h2>மன்னிப்பு கேட்க வேண்டும்</h2><p>ஆனால், எங்கள் போராட்டம் இத்துடன் முடிவடையவில்லை. மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அமைதியான முறையில் தங்கள் உரிமைக்காக போராடிய மாணவர்கள் சந்தித்த கொடுமைகளுக்காக பிரதமர் நாட்டின் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.</p><p>அதையும் தாண்டி, கல்வித் துறையில் அடிப்படை சீர்திருத்தங்கள் நடைபெறும் வரை, மாணவர்களுக்கு நீதியும் சமத்துவமும் கிடைக்கும் வரை, அவர்கள் எதிர்கொள்ளும் தேவையற்ற அழுத்தங்கள் குறைக்கப்படும் வரை, கல்வித் தரம் உயர்த்தப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.</p><h2>வீர வணக்கம்!</h2><p>இந்த அரசை தலைகுனிய வைத்த இந்தியாவின் கோடிக்கணக்கான மாணவர்களுக்கு எனது வீர வணக்கம்!</p><p>இந்தப் போராட்டத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை மாணவர்களின் உண்மையான, உறுதியான, அசைக்க முடியாத குரலாக இருந்த மக்கள் தலைவர் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ராகுல் காந்திக்கும்</a> எனது மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பேச்சுவார்த்தைக்காக கர்நாடகம் செல்லும் முடிவை முதல்-அமைச்சர் கைவிட வேண்டும்: மு.க.ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cm-should-drop-decision-to-go-to-karnataka-for-talks-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cm-should-drop-decision-to-go-to-karnataka-for-talks-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">ff2b5517-f8ae-499e-bdde-7c55d333e11a</guid><pubDate>Sat, 25 Jul 2026 10:57:12 +0000</pubDate><atom:updated>2026-07-25T10:57:12.730Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Meeting,கர்நாடகம்,முதல்-அமைச்சர்Chief Minister,மு.க.ஸ்டாலின் MK Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/3v6w9g9c/79.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/3v6w9g9c/79.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திமுக தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>காவிரி நீருக்காகக் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் சிக்கக் கூடாது. வேண்டாம் இந்த விஷப் பரீட்சை.</p><p>நாம் பல்லாண்டுகள் சட்டப்பூர்வமாகப் போராடிப் பெற்ற உரிமைகளைச் சிதைப்பதாகவே பேச்சுவார்த்தை முயற்சிகள் அமையும். நீதிமன்றத்தில் பின்னடைவை ஏற்படுத்திவிடும். இதனால்தான், கடந்த காலங்களில் இந்த யோசனை முன்வைக்கப்பட்ட போதெல்லாம் உறுதியாக அதனை நிராகரித்தது தி.மு.க.</p><h2>கர்நாடகம் செல்லும் முடிவை கைவிட வேண்டும்</h2><p>கூட்டணி மயக்கத்தில் தமிழ்நாட்டின் காவிரி உரிமை பணயமாகிடக்கூடாது என்பதே டெல்டா விவசாயிகளின் ஒருமித்த குரல். அனைத்து கட்சிக்கூட்டத்தைக் கூட்டி; விவசாயச் சங்கத்தினருடன் பேசி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம். பேச்சுவார்த்தைக்காகக் கர்நாடகம் செல்லும் முடிவை முதல்-அமைச்சர் விஜய் கைவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">காவிரி நீருக்காகக் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் தமிழ்நாடு முதலமைச்சர் சிக்கக் கூடாது. வேண்டாம் இந்த விஷப் பரீட்சை!<br><br>நாம் பல்லாண்டுகள் சட்டப்பூர்வமாகப் போராடிப் பெற்ற உரிமைகளைச் சிதைப்பதாகவே பேச்சுவார்த்தை முயற்சிகள் அமையும். நீதிமன்றத்தில் பின்னடைவை… <a href="https://t.co/0hSlApqHU0">pic.twitter.com/0hSlApqHU0</a></p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2080964180614828359?ref_src=twsrc%5Etfw">July 25, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>வங்கி மேலாளர் கன்னத்தில் பளார் விட்ட மு.க.அழகிரி மகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-alagiris-daughter-slapped-the-bank-manager-on-the-cheek</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-alagiris-daughter-slapped-the-bank-manager-on-the-cheek#comments</comments><guid isPermaLink="false">b8f01e81-47c8-4d52-8787-93dea6329428</guid><pubDate>Sat, 25 Jul 2026 10:52:02 +0000</pubDate><atom:updated>2026-07-25T10:52:02.531Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,SBI,எஸ்.பி.ஐ,மு.க.அழகிரி,கயல்விழி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/q2tb5srh/kayalvizi33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/q2tb5srh/kayalvizi33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அடையாறில் கயல்விழிக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வரும் எஸ்பிஐ வங்கியின் மேலாளரை கன்னத்தில் </p><p>அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><p>தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் சகோதரர் அழகிரி, தி.மு.க.,வில் தென்மண்டல அமைப்பு செயலராகவும், முன்னாள் மத்திய அமைச்சராகவும் இருந்தவர். தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டதால், கட்சி பணிகளில் இருந்து, அவர் ஒதுங்கி இருக்கிறார்.</p><p>சமீபத்திய சட்டசபை தேர்தலில், தி.மு.க., தோல்வி அடைந்து, த.வெ.க., ஆட்சி அமைந்துள்ளது. முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற விஜய்க்கு, அழகிரியின் மகள் கயல்விழி, ஏற்கனவே வாழ்த்து தெரிவித்து இருந்தார்.</p><p>சமீபத்தில் சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்-அமைச்சர் விஜயை, கயல்விழி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.</p><p>இந்தநிலையில் கயல்விழிக்கு அடையாறில் சொந்தமாக ஒரு கட்டிட வளாகம் உள்ளது. இதில் எஸ்பிஐ வங்கி செயல்பட்டு வருகிறது.   எஸ்.பி.ஐ வங்கி செயல்படும் கட்டிடத்தின் லிப்ட் செயல்படாததாதால் உரிமையாளரான கயல்விழியிடம் புகார் அளித்துள்ளனர். </p><p>இந்தநிலையில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். அப்போது </p><p>கயல்விழி கோபமாக பேசுவதை வங்கி மேலாளர் ஹர்ஷீன் சிங் கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு  ஆசுவாசுமாக கேட்டிருந்ததால்  நான் பேசும் போது கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பாயா என கூறி ஆவேசமாக கன்னத்தில் பளார் என்று விட்டார். உடன் கயல்விழியுடன் இருந்தவர் எழுந்து அவரை சமாதானம் செய்துள்ளார். </p><p>இந்த சம்பவம் தொடர்பாக வங்கி மேலாளர் கன்னத்தில் பளார் என அறைந்த கயல்விழி மீது காவல் நிலையத்தில்ப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள்: முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pmk-founder-ramadoss-birthday-cm-vijay-wishes-him</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pmk-founder-ramadoss-birthday-cm-vijay-wishes-him#comments</comments><guid isPermaLink="false">2250cf1f-1635-4e34-9dfc-25a54bb27835</guid><pubDate>Sat, 25 Jul 2026 10:10:20 +0000</pubDate><atom:updated>2026-07-25T10:10:20.938Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,பா.ம.க,வாழ்த்து,பாமக நிறுவனர் ராமதாஸ்,முதல்-அமைச்சர் விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/ma8ezuq0/77.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/ma8ezuq0/77.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது 88-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து,  தமிழக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>வாழ்த்துகள்</h2><p>பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் மருத்துவர் ராமதாசுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் பல்லாண்டு வாழ உளமார வாழ்த்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ச. இராமதாசு அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.<br><br>தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் பல்லாண்டு வாழ உளமார வாழ்த்துகிறேன்.<a href="https://x.com/hashtag/CMJosephVijay%E2%80%8C?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CMJosephVijay‌</a> <a href="https://x.com/TVKVijayHQ?ref_src=twsrc%5Etfw">@TVKVijayHQ</a> <a href="https://x.com/drramadoss?ref_src=twsrc%5Etfw">@drramadoss</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2080955969237135772?ref_src=twsrc%5Etfw">July 25, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>வழிப்பறியில் ஈடுபட்ட நபருக்கு 7 ஆண்டு சிறை: கோர்ட் அதிரடி தீர்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/man-involved-in-robbery-sentenced-to-7-years-in-prison-courts-dramatic-verdict</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/man-involved-in-robbery-sentenced-to-7-years-in-prison-courts-dramatic-verdict#comments</comments><guid isPermaLink="false">c86b1acd-d6c5-40d9-92d0-8d1c538da0bb</guid><pubDate>Sat, 25 Jul 2026 10:00:31 +0000</pubDate><atom:updated>2026-07-25T10:00:31.295Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,கைது,arrest,கொள்ளை,robbery case,thiruvanamalai,கோர்ட் உத்தரவு</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/2tvjy9x4/21.jpg" width="753"><media:title type="html"><![CDATA[  குற்றவாளி பிரேம்குமார் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரேம்குமாருக்கு 7 ஆண்டு சிறை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/2tvjy9x4/21.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வழிப்பறியில் ஈடுபட்ட நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">திருவண்ணாமலை</a> நகரில் வசித்து வரும் தனியார் பள்ளி பெண் ஆசிரியர் ஒருவர், பணி முடிந்து தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர் ஒருவர், திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி மிரட்டினார். </p><h2>தங்கச் சங்கிலி கொள்ளை</h2><p>மேலும், அவர் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடினார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர் அளித்த புகாரின் பேரில், திருவண்ணாமலை நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.</p><h2>குற்றவாளி கைது</h2><p>போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டை மற்றும் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில், வழிப்பறியில் ஈடுபட்டது திருவண்ணாமலையைச் சேர்ந்த பிரேம்குமார் (வயது 35) என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை அதிரடியாகக்<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> கைது </a>செய்து, சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட தங்கச் சங்கிலியையும் பறிமுதல் செய்யதனர்.</p><h2>கோர்ட் உத்தரவு</h2><p>இது தொடர்பான வழக்கு திருவண்ணாமலை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கின் அனைத்து சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் விசாரணை செய்யப்பட்டு, பிரேம்குமார் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன.</p><p>இதனைத் தொடர்ந்து, வழிப்பறியில் ஈடுபட்ட பிரேம்குமாருக்கு 7 ஆண்டுகள் கடுமையான சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிபதி இன்று (சனிக்கிழமை) தீர்ப்பளித்தார். அந்த அதிரடி தீர்ப்பு அப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை விமான நிலைய 2-ம் கட்ட விரிவாக்க பணிகள் தீவிரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-airport-phase-2-expansion-work-intensifies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-airport-phase-2-expansion-work-intensifies#comments</comments><guid isPermaLink="false">2ea031e8-6cc0-4ea9-bd63-30c5eeb7182b</guid><pubDate>Sat, 25 Jul 2026 09:41:20 +0000</pubDate><atom:updated>2026-07-25T09:41:20.824Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai Airport,விமான நிலையம்,Infrastructure,உள்கட்டமைப்பு,பணிwork</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/hi9z4t5e/76.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை விமான நிலையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/hi9z4t5e/76.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் 2 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. முதல் கட்டப் பணிகள் 2023-ல் நிறைவடைந்து, ஆண்டுக்கு 2.3 கோடி பயணிகளை கையாளும் புதிய முனையம் பயன்பாட்டுக்கு வந்தது. தற்போது 2-ம் கட்டமாக, ஆண்டுக்கு 3.5 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்ட உள்கட்டமைப்பை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. </p><h2>சென்னை விமான நிலையம்</h2><p>இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய விமானப் போக்குவரத்துத்துறை மந்திரி முரளிதர மகாலி, கடந்த 5 ஆண்டுகளில் சென்னை விமான நிலைய உள்கட்டமைப்புக்காக ரூ.236.75 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.</p><p>மேலும், 2022-23 முதல் பயணிகள் போக்குவரத்தின் அடிப்படையில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">சென்னை விமான நிலையம்</a> தொடர்ந்து நாட்டின் 5-வது பரபரப்பான விமான நிலையமாக இருப்பதாகவும், விமான நேர ஒதுக்கீட்டில் எந்தத் தட்டுப்பாடும் இல்லை என்றும் அவர் கூறினார்.</p><p>அதேபோல், திருச்சி விமான நிலையத்தில் ரூ.80 கோடியில் கட்டப்படும் புதிய ஏ.டி.சி. கோபுரப் பணிகள் 76 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், கோவை விமான நிலையத்தில் ரூ.51 கோடியில் எல்லைச் சுவர் மற்றும் ரூ.14 கோடியில் முனையக் கட்டிட மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர்  தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>டாக்டர் ராமதாஸ் 37 ஆண்டுகள் கடந்து வந்த அரசியல் பாதை: சற்று பின்நோக்கி பார்ப்போமா?</title><link>https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/dr-ramadosss-political-journey-spanning-37-years-shall-we-take-a-look-back</link><comments>https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/dr-ramadosss-political-journey-spanning-37-years-shall-we-take-a-look-back#comments</comments><guid isPermaLink="false">0a711b7a-8d46-40e3-83d0-03d8fb48896a</guid><pubDate>Sat, 25 Jul 2026 09:26:02 +0000</pubDate><atom:updated>2026-07-25T09:26:02.161Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,ராமதாஸ்,பாமக,Ramadoss,PMK,தமிழகம்,டாக்டர் ராமதாஸ்,Dr Ramadoss,Pattali Makkal Katchi,பாட்டாளி மக்கள் கட்சி,DrRAMADOSS,Doctor Ramadoss,தமிழக அரசியல்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/r4w5e6z3/aathier.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/r4w5e6z3/aathier.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சிறப்புக் கட்டுரைகள் (Sirappukatturaigal)</category><category>சிறப்பு செய்திகள்</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தனது 88-வது பிறந்த நாளை இன்று கொண்டாடிய பா.ம.க. நிறுவனர் டாக்டர் <a href="https://www.dailythanthi.com/topic/drramadoss">ராமதாஸ்</a>, அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த நேரத்தில், அவர் கடந்து வந்த 37 ஆண்டு கால அரசியல் பாதையை சற்று பின்நோக்கி பார்ப்போம். </p><h2>கீழ்சிவிரி கிராமம்</h2><p>பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், 1939-ம் ஆண்டு ஜூலை 25-ந் தேதி, விழுப்புரம் மாவட்டம் கீழ்சிவிரி கிராமத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே படிப்பில் சிறந்து விளங்கிய அவர், 1959-1965-ம் ஆண்டு காலத்தில், சென்னை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பை மேற்கொண்டார். பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்ட அவர், உறவினர்கள், ஆசிரியர்களின் உதவியுடனேயே மருத்துவம் படித்து முடித்தார்.</p><h2>3 ரூபாய் டாக்டர்</h2><p>1965-ம் ஆண்டு முதல் 3 ஆண்டுகள் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் ராமதாஸ் மருத்துவராக பணிபுரிந்தார். பின்னர், தனியாக ஆஸ்பத்திரி தொடங்கிய அவர் 3 ரூபாய் கட்டணத்தில் மருத்துவம் பார்த்தார். இதனால், அவரை 3 ரூபாய் டாக்டர் என்றே மக்கள் அழைத்தனர். </p><p>தன்னிடம் மருத்துவம் பார்க்க வரும் ஏழை நோயாளிகள், பணம் இல்லை என்று கூறினால், இலவசமாகவே மருத்துவம் பார்த்து மருந்து, மாத்திரைகள் கொடுத்து அனுப்பினார். 10 ஆண்டுகளுக்கு பிறகே 5 ரூபாயாக சிகிச்சை கட்டணத்தை உயர்த்தினார். </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/n6irkw1t/ayya.jpg" /></figure><h2>வன்னியர் இடஒதுக்கீடு</h2><p>திண்டிவனம் வன்னியர்கள் அதிகம் வாழும் பகுதி என்பதால், அவர்களுக்கு டாக்டராக சிகிச்சை அளித்தபோதே, கல்வி-வேலை வாய்ப்பில் அவர்கள் பின்தங்கியிருப்பதை உணர்ந்தார். இதனால், 1980-ம் ஆண்டு வன்னியர் சங்கத்தை டாக்டர் ராமதாஸ் தொடங்கினார். அன்று முதல், வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு குறித்து போராடத் தொடங்கினார். </p><p>1987-ம் ஆண்டு வன்னியர்கள் இடஒதுக்கீடு போராட்டம் தீவிரமடைந்தது. அந்த போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 21 பேர் பலியானார்கள். அப்போது, முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரை டாக்டர் ராமதாஸ் சந்தித்து, வன்னியர் இடஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்தார். மேலும், பல தலைவர்களிடமும் இதே கோரிக்கையை முன்வைத்தபோதும் அதற்கு தீர்வு கிடைக்கவில்லை. </p> <h2>பா.ம.க. தொடக்கம்</h2><p>1989-ம் ஆண்டு கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது, வன்னியர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை கொண்டுவந்தார். இது டாக்டர் ராமதாசின் வெற்றியாகவே பார்க்கப்பட்டது. வன்னியர்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கையும் பெற்றுத்தந்தது. </p><p>அதனைத் தொடர்ந்து, 1989-ம் ஆண்டு ஜூலை 16-ந் தேதி பா.ம.க.வை டாக்டர் ராமதாஸ் தொடங்கினார். கட்சியின் பொதுச் செயலாளராக பட்டியல் இனத்தை சேர்ந்த ஒருவர்தான் வர முடியும் என்று கொள்கையை வகுத்தார். இளைஞரணி தலைவர் பொறுப்பிலும் இஸ்லாமியரையே வைத்தார்.</p><h2>வாக்கு வங்கி</h2><p>1991-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை முதன் முதலாக பா.ம.க. எதிர்கொண்டது. 199 தொகுதிகளில் போட்டியிட்ட போதிலும், பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டும் வெற்றி பெற்றார். 1996-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வாழப்பாடி ராமமூர்த்தியின் திவாரி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்த பா.ம.க., 116 இடங்களில் போட்டியிட்டு, அதில் 4 இடங்களில் வெற்றி பெற்றது. என்றாலும், 6 சதவீதம் அளவுக்கு வாக்கு வங்கியை வைத்திருந்தது. </p><p>1998-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து பா.ம.க. போட்டியிட்டது. 5 இடங்களில் போட்டியிட்டு 4-ல் வெற்றி பெற்றது. மத்திய அமைச்சரவையில் இடம் கிடைத்தது. பட்டியலின சமூகத்தை சேர்ந்த தலித் எழில்மலை மந்திரியானார். </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/ux1inosc/dmk.jpg" /></figure><p>1999-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. மற்றும் தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பா.ம.க., 7 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி பெற்றது. 2001-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற பா.ம.க. 27 இடங்களில் போட்டியிட்டு 20 இடங்களில் வெற்றி பெற்றது. </p><p>2004 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் பா.ம.க. இடம்பெற்றது. 6 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் வெற்றி பெற்றது. மத்திய சுகாதாரத்துறை மந்திரியாக டாக்டர் அன்புமணி பதவி வகித்தார். </p><h2>தி.மு.க. கூட்டணி</h2><p>2006 சட்டசபை தேர்தலில் மீண்டும் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம்பெற்றது. 31 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றது. 2009 நாடாளுமன்ற தேர்தலில் பின்னடைவை சந்தித்த பா.ம.க., தமிழகத்தில் 6, புதுச்சேரியில் 1 இடம் என 7 இடங்களில் போட்டியிட்டும் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. </p><p>2011 சட்டசபை தேர்தலில் மீண்டும் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற பா.ம.க. 30 இடங்களில் போட்டியிட்டு 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. இடம்பெற்ற நிலையில், 8 இடங்களில் போட்டியிட்டு தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட டாக்டர் அன்புமணி ராமதாஸ் மட்டும் வெற்றி பெற்றார். </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/71vhsq9e/karape.jpg" /></figure><h2>அ.தி.மு.க. கூட்டணி</h2><p>2016 சட்டசபை தேர்தலின்போது, "இனி திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை.  தனியாக ஆட்சி அமைப்பதே இலக்கு" என்று, "மாற்றம்.. முன்னேற்றம்.. அன்புமணி" என்ற முழக்கத்துடன் பா.ம.க. தனித்து போட்டியிட்டது. 234 தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்றில்கூட வெற்றி பெற முடியவில்லை. முதல்-அமைச்சர் வேட்பாளரான அன்புமணி ராமதாசே தோல்வியடைந்தார். </p><p>2019 நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்ற பா.ம.க., 7 இடங்களில் போட்டியிட்டு ஒன்றில்கூட வெற்றி பெறவில்லை. 2021 சட்டசபை தேர்தலில், அதே அ.தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்த பா.ம.க., 23 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/j4az4t5q/modi.jpg" /></figure><h2>சமச்சீர் கல்வி</h2><p>2012-2014 காலக்கட்டத்தில் டாக்டர் ராமதாஸ் உருவாக்கிய அனைத்து சமுதாய பேரமைப்பு மிகப்பெரிய விமர்சனங்களை சந்தித்தது. அவருக்கு கெட்டப் பெயரையும் ஏற்படுத்திக் கொடுத்தது.  </p><p>தேர்தலை தாண்டி, பா.ம.க.வின் சாதனை என்று பார்த்தால், தமிழகத்தில் அதிகமான அம்பேத்கர் சிலைகளை திறந்தது, மது ஒழிப்புக்கு எதிரான போராட்டங்களை நடத்தியது, சமச்சீர் கல்வி அமல்படுத்த காரணமாக இருந்தது ஆகியவற்றை சொல்லலாம். </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/k4k361og/kier.jpg" /></figure><h2>மகன் அன்புமணி இடையே பிரச்சினை</h2><p>மக்களுக்கான பிரச்சினைகள், ஆட்சியாளர்களின் நடவடிக்கை குறித்து உடனுக்குடன் அறிக்கை வெளியிட்டு சுட்டிக்காட்டிய டாக்டர் ராமதாஸ், பா.ம.க. சார்பில் 2002-ம் ஆண்டு முதல் நிழல் பட்ஜெட்டையும், 2008-ம் ஆண்டு முதல் வேளாண் நிழல் பட்ஜெட்டையும் வெளியிட்டு வருகிறார். </p><p>சட்டசபை தேர்தலுக்கு முன்பு டாக்டர் ராமதாஸ், மகன் அன்புமணி இடையே பிரச்சினை ஏற்பட்ட போதிலும், தேர்தலுக்கு பிறகு அந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. இனி டாக்டர் அன்புமணியை கட்சியை நடத்துவார் என்று டாக்டர் ராமதாசே கூறிவிட்டார். </p><p>ஆனாலும், தனது 37 ஆண்டு கால அரசியல் வாழ்வில், கடைசி வரை, தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற கொள்கையில் இருந்து <a href="https://www.dailythanthi.com/topic/drramadoss">டாக்டர் ராமதாஸ்</a> மாறவே இல்லை.</p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/4pmtownk/image.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>தலைமை செயலகத்தில் புதிய இடத்திற்கு மாறும் முதல்-அமைச்சரின் அலுவலகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-chief-ministers-office-will-move-to-a-new-location-in-the-secretariat</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-chief-ministers-office-will-move-to-a-new-location-in-the-secretariat#comments</comments><guid isPermaLink="false">5744ce98-de71-4d3a-aa54-84647aeb6d5e</guid><pubDate>Sat, 25 Jul 2026 09:08:34 +0000</pubDate><atom:updated>2026-07-25T09:08:34.941Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,அலுவலகம்,tngovt,CMVijay,தலைமைசெயலகம்,CMO</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/8xon49gp/vijay33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  முதல்-அமைச்சரின் அலுவலகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/8xon49gp/vijay33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>புனித ஜார்ஜ் கோட்டையில், புதிய இடத்திற்கு முதல்-அமைச்சர் விஜயின் அலுவலகம் மாறுகிறது</p><p>சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தின் முதன்மைக் கட்டடத்தில்தான் முதல்-அமைச்சரின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இட நெருக்கடி காரணமாக, முதல்-அமைச்சரின் அலுவலகம் இட மாற்றம் செய்யப்படவுள்ளது.</p><p>தற்போது, தலைமைச் செயலகத்தின் முதன்மைக் கட்டடத்தில் இயங்கி வரும் முதல்-அமைச்சர் அலுவலக அறையை, அதே வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>தலைமைச் செயலகத்தில் இட நெருக்கடி காரணமாகவும், பொது மக்களின் வருகை அதிகரிப்பைக் கருத்தில்கொண்டும் முதல்-அமைச்சரின் அலுவலக அறையை இட மாற்றம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, 10 அடுக்குமாடிகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்-அமைச்சர் விஜய்யின் அலுவலக அறை, அவரது செயலாளர்கள் 4 பேரின் அறைகள் அனைத்தும் 10-ஆவது மாடியில் அமைய விருக்கிறது. இந்தத் தளத்திலிருந்து கடலின் அழகை ரசிக்கும்வகையில் அமையப் பெற்றுள்ளது.</p><p>நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-ஆவது தளத்தில் பெரிய மாநாடு கூடம் மற்றும் உணவகப் பகுதியை முதல்-அமைச்சரின் அலுவலகமாக மாற்றும் பணியை பொதுப்பணித் துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.</p><p>முதல்-அமைச்சரின் அலுவலக அறை மாற்றப்படும் இந்தத் தளத்தில் ஏற்கெனவே இயங்கி வரும் தகவல் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை, வணிக வரித் துறையின் சில பிரிவுகளும் வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்படவுள்ளன. ஆகஸ்ட் மாதம் முடிவதற்குள் முதல்-அமைச்சரின் அலுவலக அறை இட மாற்றம் முடிவடைந்து விடும் எனக் கூறப்படுகிறது.</p><p>தமிழக முதல்-அமைச்சர்களிலேயே பாரம்பரிய அலுவலகக் கட்டடத்திலிருந்து புதிய இடத்துக்கு அலுவலகத்தை மாற்றும் முதல் <a href="https://www.dailythanthi.com/search?q=vijay">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a>தான் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pmk-founder-ramadoss-birthday-mk-stalin-wishes-him</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pmk-founder-ramadoss-birthday-mk-stalin-wishes-him#comments</comments><guid isPermaLink="false">82d6561d-7ae7-42db-8fc7-2098e1705186</guid><pubDate>Sat, 25 Jul 2026 09:03:55 +0000</pubDate><atom:updated>2026-07-25T09:03:55.370Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ராமதாஸ்,சென்னை,பா.ம.க,PMK.,Doctor Ramadoss,மு.க.ஸ்டாலின் MK Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/xdwxkv9r/75.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின் வாழ்த்து]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/xdwxkv9r/75.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது 88-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து, திமுக தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின் </a>வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>வாழ்த்துகள்</h2><p>பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்-க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். சமூகநீதிக்கான பல போராட்டங்களை முன்னெடுத்து, முக்கியக் குரலாக ஒலித்து வந்த தாங்கள் அரசியலில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கும் நிலையில், தங்களது ஓய்வுக்காலம் மனநிறைவோடும் மகிழ்ச்சியோடும் திகழ்ந்திட விழைகிறேன். </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் தொடங்கிய போராட்டம் இன்று நாடு முழுவதும் எதிரொலிக்கிறது’ - கனிமொழி எம்.பி. </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-protest-against-the-neet-exam-that-began-in-tamil-nadu-is-now-resonating-across-the-country-kanimozhi-mp</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-protest-against-the-neet-exam-that-began-in-tamil-nadu-is-now-resonating-across-the-country-kanimozhi-mp#comments</comments><guid isPermaLink="false">5cbe9b70-e106-46f9-bd49-919d1d5dca86</guid><pubDate>Sat, 25 Jul 2026 08:41:41 +0000</pubDate><atom:updated>2026-07-25T08:41:41.605Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கனிமொழி எம்.பி.,Kanimozhi MP,நீட் தேர்வு,NEET</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/1qnjjz6s/State-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/1qnjjz6s/State-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>'நீட்' வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகவும், 'நீட்' தேர்வு தோல்வி காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்தது போன்றவற்றுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ந்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.</p><p>இதற்கிடையில், கடந்த 20-ந்தேதி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினர். இந்த பேரணியில் நாடு முழுவதும் இருந்து பல ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்றனர். இவர்களை தடுக்க பல இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன. ஆனாலும் கூட்டம் கட்டுப்படுத்த முடியாதபடி இருந்ததால் தடியடியும், கண்ணீர் புகைக்குண்டுகளும் வீசப்பட்டன. பதிலுக்கு போலீசார் மீது கல்வீச்சும் நடந்ததாக கூறப்படுகிறது.</p><p>போலீசார் நடத்திய தடியடியில் பல இளைஞர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் நாடாளுமன்றம் அருகே உள்ள ஆர்.எம்.எஸ். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்களும், இளைஞர்களும் தாக்கப்பட்ட இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. </p><p>டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி தாக்குதலை கண்டித்தும், நீட் முறைகேடு உள்ளிட்ட விவகாரங்களுக்கு எதிராகவும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர் அமைப்பினர் தற்போது போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அந்த வகையில், சென்னை தியாகராய நகரில் நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். </p><p>இந்த போராட்டத்திற்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். அப்போது பேசிய அவர், “நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களாகிய நாங்களே பல நாட்கள் தூக்கி வெளியே எறியப்பட்டுள்ளோம். எதிர்க்கட்சிகளில் இருக்கும் அத்தனை எம்.பி.க்களையும் சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட அரசுதான் மத்திய பா.ஜ.க. அரசு. </p><p>ஆனால் எங்களால் கூட செய்ய முடியாததை, மாணவர்கள் செய்துள்ளனர். டெல்லியில் ஜந்தர் மந்தரில் போராடி வரும் மாணவர்களை பார்த்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசே முன்வந்துள்ளது. இது மாணவர்களின் மிகப்பெரிய வெற்றி. </p><p>நீட் தேர்வுக்கு எதிராக வந்த முதல் குரல், தமிழ்நாட்டில் இருந்து வந்ததுதான். நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் தொடங்கிய போராட்டம் இன்று நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. நாடு முழுவதும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார்கள். நீட் தேர்வில் மட்டும் முறைகேடு நடக்கவில்லை, நீட் தேர்வே முறைகேடுதான்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p> ]]></content:encoded></item><item><title>தேனியில் மூதாட்டி கொலை செய்யப்பட்டு நகை-பணம் திருட்டு; வானதி சீனிவாசன் வேதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/an-old-woman-was-murdered-in-theni-and-jewellery-and-money-were-stolen-vanathi-srinivasan-is-in-anguish</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/an-old-woman-was-murdered-in-theni-and-jewellery-and-money-were-stolen-vanathi-srinivasan-is-in-anguish#comments</comments><guid isPermaLink="false">42ba500b-5654-44da-9eda-a4765c81a598</guid><pubDate>Sat, 25 Jul 2026 08:33:57 +0000</pubDate><atom:updated>2026-07-25T08:33:57.307Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Theni,தேனி,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,தேனி மாவட்டம்,THENI DISTRICT</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/ndosxgus/vanathi.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/ndosxgus/vanathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி,</p><p>பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>மூத்தாட்டி கொலை</h2><p>தேனி மாவட்டம், தேனி நகர் பகுதியில் இன்று அதிகாலை 60 வயது பெண் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு, அவரது வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டதாகக் கூறப்படும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.</p><p>முந்தைய திமுக ஆட்சியில்கூட தனியாக வீட்டில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பு குறித்து கவலைகள் எழுந்தன. ஆனால் தற்போதைய தவெக ஆட்சியிலோ குற்றச் சம்பவங்கள் ஒருபடி மேலே சென்று தனியாக வசிக்கும் முதியவர்களை கொலை செய்து பணம், நகைகளைத் திருடும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது.</p><h2>குற்றங்கள் பெருகி வருவதே நிஜம்</h2><p>தவெக ஆட்சி சிறப்பாக இருக்கும் என்று மக்கள் எதிர்பார்த்தபோதும், மாற்றாக தொடர்ந்து குற்றங்கள் பெருகி வருவதே நிஜம். பொதுவாக சிங்கங்கள் அதிக நேரம் தூங்கும் இயல்புடையவை; பசித்தால் மட்டுமே இரை தேடும். அதுபோலத்தான் பெண்களின் பாதுகாப்பிற்காக ஆரம்பித்து வைத்த சிங்கப் பெண் படையும் கும்பகர்ணத் தூக்கத்தில் இருக்கிறது போலும். கணக்கு காட்ட வேண்டுமே என்பதற்காக அங்கொன்றும் இங்கொன்றுமாக வழக்குகளைப் பதிந்து “நாங்களும் இருக்கிறோம்” என்று <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">காட்டிக்கொள்ளும் </a>அளவில்தான் அவர்களின் செயல்பாடு உள்ளதாகத் தெரிகிறது.</p><p>எனவே சிங்கப் பெண் படையை முழுவீச்சில் களமிறக்கி, சுறுசுறுப்புடன் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்து குற்றங்களைத் தடுக்க வேண்டும் என தமிழக காவல்துறையை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘கோவில் சொத்துகளை அபகரிக்கும் முயற்சிகளை அனுமதிக்க கூடாது’ - அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/attempts-to-usurp-temple-properties-must-not-be-allowed-hrce-minister-ramesh-orders-officials</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/attempts-to-usurp-temple-properties-must-not-be-allowed-hrce-minister-ramesh-orders-officials#comments</comments><guid isPermaLink="false">7e95d20c-cc29-4922-b76c-7231d40bdcb0</guid><pubDate>Sat, 25 Jul 2026 08:27:01 +0000</pubDate><atom:updated>2026-07-25T08:27:01.717Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Minister ramesh,அமைச்சர் ரமேஷ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/1m2qxo7d/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/1m2qxo7d/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், கோவில்களின் நிர்வாகம், கோவில் சொத்துகள் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக அதிகாரிகளுக்கு பல்வேறு முக்கிய உத்தரவுகளையும், அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-</p><p>“கோவில்களில் நேர்மையான, வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டும். கோவில் சொத்துகளை அபகரிக்கும் முயற்சிகளை அனுமதிக்க கூடாது. கோவில் நிலங்கள் அபகரிப்பு தொடர்பாக உடனடியாக முதல் தகவல் அறிக்கை(FIR) பதிவு செய்ய வேண்டும். </p><p>மேலும் இதுகுறித்து அமைச்சர், ஆணையரின் கவனத்திற்கு அதிகாரிகள் உடனடியாக கொண்டு வர வேண்டும். கோவில்களில் பக்தர்கள் சீரான தரிசனத்தை உறுதி செய்ய வேண்டும். அலட்சியமாக இருக்கும் அதிகாரிகள் மீது சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>கல்லூரி அருகே கஞ்சா விற்ற 2 வடமாநில தொழிலாளர்கள் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/2-northern-state-workers-arrested-for-selling-ganja-near-college</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/2-northern-state-workers-arrested-for-selling-ganja-near-college#comments</comments><guid isPermaLink="false">812fc002-37ac-4204-b5b0-5b133fb282bd</guid><pubDate>Sat, 25 Jul 2026 08:26:40 +0000</pubDate><atom:updated>2026-07-25T08:26:40.547Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,2 arrested,2 பேர் கைது,sale of ganja,கஞ்சா விற்பனை,வடமாநில தொழிலாளர்கள்,Northern State workers,Private College,தனியார் கல்லூரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/smvd6fgi/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கஞ்சா விற்பனை, கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/smvd6fgi/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு காவல் நிலைய சரகம், மருதகுளம் அருகே தனியார் கல்லூரி பகுதியில் 130 கிராம் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">கஞ்சா பறிமுதல்</a> செய்த போலீசார் 2 வடமாநில தொழிலாளர்களை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். </p><h2>போலீசார் சோதனை</h2><p>திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட மருதகுளம் அருகே உள்ள தனியார் கல்லூரி பகுதியில் 23.7.2026 அன்று மதியம் 1.30 மணியளவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களான ஸ்ரவன்பஸ்வான் (வயது 37), ஷேக்சமீர்(26) ஆகிய 2 பேரை சோதனை செய்தனர்.</p><h2>வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் கைது, கஞ்சா பறிமுதல்</h2><p>அப்போது அரசால் தடை செய்யப்பட்ட, மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 130 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக அவர்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து மூன்றடைப்பு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, ஸ்ரவன்பஸ்வான், ஷேக்சமீர் ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 130 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item></channel></rss>