<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 08 Aug 2026 07:37:19 +0000</lastBuildDate><item><title>தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் 9-ந்தேதி விழிப்புணர்வு பேரணி - மாணிக்கம் தாகூர் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/manickam-tagore-announces-an-awareness-rally-by-the-congress-on-the-9th-against-the-constituency-delimitation-bill</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/manickam-tagore-announces-an-awareness-rally-by-the-congress-on-the-9th-against-the-constituency-delimitation-bill#comments</comments><guid isPermaLink="false">9b190c17-f9ec-4cb1-877e-44376a0ec620</guid><pubDate>Sat, 08 Aug 2026 07:37:14 +0000</pubDate><atom:updated>2026-08-08T07:37:14.542Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,Delimitation of Constituencies,Manickam Tagore,தொகுதி மறுவரையறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/7u102ylj/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/7u102ylj/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>இந்தியாவின் இறையாண்மையையும், கூட்டாட்சி முறையையும் சீர்குலைக்கின்ற வகையில் மத்திய பா.ஜ.க. அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மீண்டும் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே ஏப்ரல் 12-ந்தேதி கொண்டு வந்த மசோதாவை இந்தியா கூட்டணி கட்சிகள் மக்களவையில் தோற்கடித்தன. மீண்டும் தற்போதுள்ள எண்ணிக்கையோடு 50 சதவிகிதம் அதிகரிக்கப்படும் என ஆசைகாட்டி புதிய மசோதாவை மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வர முயற்சி செய்து வருகிறது. </p><p>இதன்படி பார்த்தால் உத்தர பிரதேச மாநிலத்தில் 80 எம்.பி.க்கள் உள்ளனர். புதிய திட்டத்தின்படி இது 120 ஆக உயரும். அதேபோல, தமிழ்நாடு 39 இல் இருந்து 58 ஆக உயரும்.  உத்தர பிரதேசத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் உண்டான இடைவெளி 41-ல் இருந்து 62 ஆக உயரும். ஒரு பன்முக கூட்டாட்சியில் ஜனநாயக பிரதிநிதித்துவத்தை வெறும் எண்களின் விகிதாச்சாரத்தை கொண்டு மட்டும் தீர்மானிக்க முடியாது என்பதை கடந்த காலங்களில்  1976 இல் இந்திரா காந்தியும், 2001-ல் ஏ.பி. வாஜ்பாயும் கொண்டு வந்த திருத்தங்களின் மூலமாக மக்களவை எண்ணிக்கை விரிவாக்கம் முடக்கப்பட்டது. </p><p>அந்த முடக்கத்தை நீக்குவதற்கான முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது. சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்கும் முன்பு தொகுதி மறுவரையறை செய்தால் பட்டியலின, பழங்குடியின பெண்கள் இடஒதுக்கீட்டு தொகுதிகளை சரியாக தீர்மானிக்க முடியாது. ஒட்டுமொத்தத்தில் தொகுதி மறுவரையறை சட்ட மசோதா தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தை பறித்து விடும். </p><p>கூட்டாட்சி, ஜனநாயகம், சமூகநீதி, சமத்துவம், மதச்சார்பின்மை ஆகிய நம் இந்திய அரசியலமைப்பின் உயரிய நோக்கங்களை குழிதோண்டிப் புதைத்துவிடும். தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த கட்சியாவது தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவினால் அது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் அநீதி மற்றும் துரோகமாகும். அப்படிப்பட்ட கட்சிகளை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். </p> <p>தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வரும் தொகுதி மறுவரையறை மசோதா குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற வகையில், விடுதலைப் போராட்ட காலத்தில் வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடந்த ஆகஸ்ட் 9 அன்று, தொகுதி மறுவரையறை மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நடைபயணம் மேற்கொள்வதென மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>அன்றைய தினம் தொகுதி மறுவரையறை மசோதாவை ரத்து செய் என்ற எழுத்து பொறிக்கப்பட்ட கருப்பு பலூன்களுடன் அமைதிப் பேரணி நடத்தப்படும். பேரணியின் இறுதியில் காந்தி சிலை அருகில் இரண்டு பலூன் காட்சி பதாகைகள் அமைக்க வேண்டும். தொகுதி மறுவரையறைக்கு முன் என்ற பதாகையும், தொகுதி மறுவரையறைக்குப் பின் என்று மற்றொரு பதாகையும் அங்கே அமைக்கப்பட்டிருக்கும். </p><p>இந்நிகழ்வில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் அல்லது மூத்த நிர்வாகி, 50 சதவிகித உயர்வு அனைவருக்கும் சமநீதியை வழங்காது, ஏற்கனவே உள்ள இடைவெளியை மேலும் அதிகரிக்கும் என்ற கருத்தை விளக்கி பதாகைகளில் உள்ள விவரங்களை மேற்கோள் காட்டி உரை நிகழ்த்தப்படும்.</p><p>அதேபோல, ஆகஸ்ட் 12 அன்று மாணவர்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் போக்குவரத்து பாதைகளில் கண்பார்வைக்குத் தெரியும் உயரத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிரான சுவரொட்டிகள் ஒட்டப்படும். அதிக மக்களை சென்றடைய பலூன் உருவகத்தை மையமாக கொண்டு குறும் படங்கள் மற்றும் போஸ்டர்களை வலைதளங்களில் ஒரே நேரத்தில் பதிவிட வேண்டும். </p><p>விடுதலைப் போராட்ட உணர்வுகளை எழுப்புகிற வகையில் ஆகஸ்ட் 9 அன்று தொடங்கி நடைபெறுகிற தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி வெற்றி பெற தமிழக மக்கள் ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>தவெக அமைச்சரவையில் காங்கிரசிற்கு இடம்: ஜி.கே.வாசன் வரவேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/congress-to-have-place-in-tvk-cabinet-gk-vasan-welcomes-it</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/congress-to-have-place-in-tvk-cabinet-gk-vasan-welcomes-it#comments</comments><guid isPermaLink="false">ee3f58be-78df-4f21-a9d5-6d7c6836c02d</guid><pubDate>Sat, 08 Aug 2026 07:29:30 +0000</pubDate><atom:updated>2026-08-08T07:29:30.626Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,சென்னை,காங்கிரஸ்,Congress,G.K.Vasan,cabinet,ஜி.கே.வாசன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/d5qvxb3v/105.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/d5qvxb3v/105.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு இடம் வழங்கப்பட்டதை வரவேற்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.</p><h2>ஜி.கே.வாசன்</h2><p>இதுதொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், காங்கிரஸ் இருந்தால் நேர்மையாக இருக்கும். கடந்த 60 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. தற்போது அமைச்சரவையில் காங்கிரசுக்கு இடம் வழங்கப்பட்டிருப்பதை வரவேற்கிறேன்” என்றார்.</p><p>மேலும், காங்கிரஸ் உடன் இணைந்து தமாகா செயல்படும் என்றும், அதே நேரத்தில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D">தமிழ் மாநில காங்கிரஸ்</a> தனது தனித்தன்மையுடன் இயங்கும் என்றும் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.</p><p>வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறும் வகையில் கூட்டணி அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மக்கள் கூடும் இடங்களில் இலவச வைபை வசதி: சென்னை மாநகராட்சி ஆணையர் ஆலோசனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/free-wi-fi-facility-in-public-gathering-places-chennai-corporation-commissioner-discusses-proposal</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/free-wi-fi-facility-in-public-gathering-places-chennai-corporation-commissioner-discusses-proposal#comments</comments><guid isPermaLink="false">cf9cb1dd-13ca-47eb-83fa-798839c46183</guid><pubDate>Sat, 08 Aug 2026 07:16:43 +0000</pubDate><atom:updated>2026-08-08T07:16:43.443Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,சென்னை மாநகராட்சி ஆணையர்,இலவச வைபை வசதி,Chennai Corporation Commissioner,இலவச வைபை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/xq6kwwq2/Untitled-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/xq6kwwq2/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கடற்கரைகள், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட மக்கள் அதிகளவில் வந்து செல்லும் பகுதிகளில் மக்களுக்கு இலவச வைஃபை (WIFI) வசதி ஏற்படுத்துவது குறித்து இணைய சேவை வழங்குநர்களுடனான (Internet Service Providers) ஆலோசணைக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>ஆய்வுக்கூட்டம்</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், திருவொற்றியூர் கடற்கரைகள், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட மக்கள் அதிகளவில் வந்து செல்லும் பகுதிகளில் மக்களுக்கு இலவச வைபை (WIFI) வசதி ஏற்படுத்துவது குறித்து இணைய சேவை வழங்குநர்களுடனான (Internet Service Providers) ஆலோசணைக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் இன்று (07.08.2026) ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.</p><p>இக்கூட்டத்தில் மாநகராட்சி இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன் மற்றும் ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio), ஹாத்வே (Hathway) மற்றும் ஏசிடி (ACT) ஆகிய இணைய சேவை வழங்குநர்கள், மாநகராட்சி தலைமைப் பொறியாளர் பாலமுரளி, கண்காணிப்புப் பொறியாளர் இளங்கோ உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p><h2>இலவச வைபை (WIFI)</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் மக்களுக்கு எளிதாக சேவைகளை வழங்கும் வகையிலும் திட்டமிட்டு செயலாற்றி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, சென்னையில் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரைப் பகுதிகள், திருவான்மியூர், திருவொற்றியூர் கடற்கரைப் பகுதிகளிலும், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட மக்கள் அதிகளவில் வந்து செல்லும் பகுதிகளில் மக்கள் தங்குதடையின்றி இணைய பயன்பாட்டினை மேற்கொள்ளும் வகையில் உயர்தரத்தில் இலவச வைபை (WIFI) வசதியினை ஏற்படுத்திட இதற்கான சேவைகளை வழங்கும் நிறுவனங்களான ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio), ஹாத்வே (Hathway) மற்றும் ஏசிடி (ACT) ஆகிய இணைய சேவை வழங்குநர்களுடன் மாநகராட்சி ஆணையாளர் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஆலோசனை </a>மேற்கொண்டு அறிவுரைகள் வழங்கினார்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வங்கி கணக்கை கொடுத்து கமிஷன்.. ஆன்லைன் மோசடி கும்பலுக்கு உதவிய வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-arrested-for-aiding-online-fraud-gang-by-providing-bank-account-for-commission</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-arrested-for-aiding-online-fraud-gang-by-providing-bank-account-for-commission#comments</comments><guid isPermaLink="false">cffaa9e5-b7d3-4824-a3eb-43806dd065a0</guid><pubDate>Sat, 08 Aug 2026 07:13:05 +0000</pubDate><atom:updated>2026-08-08T07:13:05.157Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,கைது,arrest,வங்கி கணக்கு,ராமநாதபுரம்,Ramanathapuram,Bank account,ஆன்லைன் மோசடி,Online fraud</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/xx3oqdt0/dhna.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/xx3oqdt0/dhna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>மாவட்ட செய்திகள்</category><content:encoded><![CDATA[ <p>ராமநாதபுரம், </p><p>ராமநாதபுரம் அருகே வங்கி கணக்கை கொடுத்து கமிஷன் பெற்று ஆன்லைன் மோசடி கும்பலுக்கு உதவிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.</p><h2>ஆன்லைன் மோசடி</h2><p>ராமநாதபுரம் மாவட்டத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/ஆன்லைன்-மோசடி">ஆன்லைன் மோசடி</a> குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மோசடியில் ஈடுபடும் கும்பல் போலீசாரிடம் இருந்து தப்பிக்க தங்கள் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள வங்கி கணக்குகளை கமிஷன் அடிப்படையில் வாங்கி மோசடிக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதனை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.</p><h2>கிரிப்டோ கரன்சி</h2><p>இவ்வாறு பலர் மோசடி நபர்களின் பணத்தினை தங்களது வங்கி ஏ.டி.எம். மூலம் எடுத்து அவற்றை கிரிப்டோ கரன்சியாக மாற்றி அனுப்பும் செயலில் ஈடுபடுவது தொடர்ந்து வருகிறது. இதனை கண்டறிந்த போலீசார் இதுபோன்ற குற்றவாளிகளை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.</p><p>இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் உத்தரவின்பேரில் சென்னை இணையவழி குற்றப்பிரிவு போலீசாரின் தகவலின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.</p><h2>சொகுசு வாழ்க்கை</h2><p>அப்போது ராமநாதபுரம் அருகே வாணி கிராமத்தில் அமைந்துள்ள வங்கியில் ஒரு கணக்கில் இணைய மோசடியில் பெறப்பட்ட சட்டவிரோத பணத்தை பெற்று அதனை கிரிப்டோ கரன்சியாக மாற்றி மோசடி நபர்களுக்கு தொடர்ந்து அனுப்பி வருவதாக புகார் வந்தது. </p><p>இதுகுறித்து கேணிக்கரை போலீசார் அந்த வங்கி கணக்கிற்கான நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த வங்கி கணக்கு சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த தனசேகரன் (வயது 25) என்பவருடையது என தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர் தனது வங்கி கணக்கு மூலம் ஆன்லைன் மோசடி பணத்தை பெற்று அதனை கிரிப்டோ கரன்சியாக மாற்றி கொடுத்து கமிஷன் பெற்று வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதற்காக பெருந்தொகையை கமிஷனாக பெற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.</p><h2>சிறையில் அடைப்பு</h2><p>இதைத்தொடர்ந்து தனசேகரனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், மோசடி நபர்களின் குற்றச்செயலுக்கு தனது வங்கி கணக்கை பயன்படுத்தி கமிஷன் பெற்றதும், மோசடி பணத்தை குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் கணக்கிற்கு கிரிப்டோ கரன்சியாக மாற்றி அனுப்புவதையும் வாடிக்கையாக வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட தனசேகரன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நிலையில் வருகிற 19-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>மீனவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நிரந்தர நடவடிக்கை தேவை : டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/permanent-measures-needed-to-ensure-the-safety-of-fishermen-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/permanent-measures-needed-to-ensure-the-safety-of-fishermen-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">a573814e-a708-4cda-9c67-c41933a5e0bb</guid><pubDate>Sat, 08 Aug 2026 06:56:45 +0000</pubDate><atom:updated>2026-08-08T06:56:45.515Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>மீனவர்கள்,TTV Dhinakaran,டிடிவி தினகரன்,fishermen</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/vqluzp3g/ttv.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/vqluzp3g/ttv.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>“இலங்கை கடற்படையினரின் அத்துமீறலையும், அராஜகத்தையும் கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் - தேர்தலுக்கு முன்பாக கடந்த திராவிட ஆட்சியாளர்களை குறைகூறி வீரவசனங்களைப் பேசிய ஜோசப் விஜய், முதலமைச்சரான பின்பு மீனவர்கள் கைது தொடர்பாக மத்திய அரசிற்கு அதே கடிதம் எழுதும் நடைமுறையை தாண்டி, வேறு என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் ?  </p><p>இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 11 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தைச் சார்ந்த ஒட்டுமொத்த மீனவர்களும் இன்று ஒருநாள் முழு அளவிலான வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. </p><p>வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்க கடலுக்குச் செல்லும் மீனவர்களை எல்லை தாண்டியதாகக் கூறி கைது செய்து சிறையில் அடைப்பதோடு, அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்யும் இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறலால் மீனவ குடும்பங்கள் மன ரீதியாக மட்டுமல்லாது பொருளாதார ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.   </p><p>ஒவ்வொரு மீனவர் கைதின் போதும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிவிட்டு தூங்கச் சென்றுவிடுவதாக கடந்த திராவிட ஆட்சியாளர்கள் மீது தேர்தலுக்கு முன்பாக குற்றம் சாட்டிய  ஜோசப் விஜய், தான் முதலமைச்சராக பொறுப்பேற்ற இந்த மூன்று மாதங்களில் மீனவர்களின் கைதின் போது கடிதம் மட்டுமே எழுதியதை தவிர என்ன செய்திருக்கிறார் என்பதை விளக்க முடியுமா ? </p><p>எனவே, பல்வேறு இன்னல்களுக்கு இடையே தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடிவரும்  மீனவர்களை, அரசியல் செய்வதற்கான ஒரு கருவியாக பயன்படுத்தாமல், அவர்களின் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்திடும் வகையில் நிரந்தரமான நடவடிக்கைகளை மேற்கொண்டிட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ஆடி மாதத்தில் வீசும் பலத்த காற்று; குமரியில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/strong-winds-blowing-during-the-month-of-aadi-wind-power-generation-increases-in-kanyakumari</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/strong-winds-blowing-during-the-month-of-aadi-wind-power-generation-increases-in-kanyakumari#comments</comments><guid isPermaLink="false">7fe09491-3af6-4945-8724-4def3fcf333b</guid><pubDate>Sat, 08 Aug 2026 06:55:41 +0000</pubDate><atom:updated>2026-08-08T06:55:41.621Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Kanyakumari,குமரி,Windmill,ஆடி மாதம்,Aadi,காற்றாலை மின் உற்பத்தி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/bjr9jr8c/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/bjr9jr8c/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி,</p><p>கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆடி மாதத்தையொட்டி பலத்த சூரைக்காற்று வீசி வருவதால் ஆரல்வாய்மொழி மற்றும் முப்பந்தல் பகுதிகளில் உள்ள காற்றாலைகளில் மின் உற்பத்தி இரண்டு மடங்கு வரை அதிகரித்துள்ளது. </p><p>வழக்கமான மாதங்களை விட காற்று தீவிரமாகவும், அதிக வேகமாகவும் வீசுவதால் 250 முதல் 750 கிலோ வாட் திறன் கொண்ட காற்றாலைகளில் மின் உற்பத்தி 3 ஆயிரம் முதல் 8 ஆயிரம் யூனிட் வரை உயர்ந்துள்ளது. எனினும், அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக மின் உற்பத்தியில் சிறு ஏற்றத்தாழ்வுகள் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>பேச மறுத்ததால் ஆத்திரம்.. வீடுபுகுந்து கள்ளக்காதலியை குத்திக்கொன்ற வாலிபர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/enraged-by-refusal-to-speak-young-man-breaks-into-home-and-stabs-illicit-lover-to-death</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/enraged-by-refusal-to-speak-young-man-breaks-into-home-and-stabs-illicit-lover-to-death#comments</comments><guid isPermaLink="false">a3624b51-9358-4b6c-8311-d7c416000928</guid><pubDate>Sat, 08 Aug 2026 06:53:49 +0000</pubDate><atom:updated>2026-08-08T06:53:49.071Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Crime News,தமிழகம்,Madurai,மதுரை,கள்ளக்காதல்,வாலிபர்,கிரைம் செய்திகள்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/rzgr1rg7/kallak.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/rzgr1rg7/kallak.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p>பேச மறுத்த கள்ளக்காதலி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். தப்பி ஓடிய வாலிபரை போலீசார் தேடிவருகிறார்கள்.</p><h2>மலர்ந்த கள்ளக்காதல்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/madurai">மதுரை</a> புதுராமநாதபுரம் ரோடு கணபதி மில் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார். கீழமாசி வீதியில் ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சாந்தா (வயது 33). ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள்.</p><p>சாந்தா வேலை பார்த்த கடையில் காமராஜர் சாலை பகுதியை சேர்ந்த பஞ்சவர்ணம் என்ற பெண்ணும் வேலை பார்த்துள்ளார். இதன் காரணமாக அவரது வீட்டுக்கு சாந்தா சென்று வந்தார். அப்போது பஞ்சவர்ணத்தின் மகன் சரவண பிரபு (25), சாந்தாவிடம் நெருங்கி பழகி உள்ளார்.</p><p>இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். அதை அறிந்த செல்வகுமார், மனைவியை கண்டித்தார். அதன் காரணமாக சரவணபிரபுவுடன் பேசுவதை சாந்தா தவிர்த்துள்ளார். ஆனால் அவர் பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.</p><h2>வாக்குவாதம்</h2><p>நேற்று முன்தினம் இரவு செல்வகுமார் அவசர வேலை காரணமாக கடைக்கு சென்று விட்டார். சாந்தா தனது குழந்தைகளை தூங்க வைத்துவிட்டு அவரும் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது சரவணபிரபு மது போதையில் திடீரென்று சாந்தா வீட்டுக்குள் நுழைந்தார். மேலும் தன்னுடன் பேசாமல் இருப்பது குறித்து கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.</p><h2>கொலை</h2><p>அதனால் ஆத்திரம் அடைந்த சரவணபிரபு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சாந்தாவின் கழுத்தில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். </p><p>கழுத்தில் ரத்தம் வழிந்தநிலையில் சத்தம் போட்டுக்கொண்டு, வீட்டுக்கு வெளியே ஓடிவந்து சாந்தா மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் இந்த சத்தம் கேட்டு ஓடிவந்து பார்த்தபோது, சாந்தா உயிருக்கு போராடியதை கண்டனர். </p><p>உடனே அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சாந்தா பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>வழக்குப்பதிவு</h2><p>இதுகுறித்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தப்பிச்சென்ற சரவணபிரபுவை தேடி வருகின்றனர். கள்ளக்காதலனால் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோவில்களுக்குள் இனி செல்போன் கொண்டு செல்ல தடை: செப்டம்பர் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-taking-mobile-phones-into-temples-comes-into-effect-from-september-1st</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-taking-mobile-phones-into-temples-comes-into-effect-from-september-1st#comments</comments><guid isPermaLink="false">080d4d69-9ae3-44da-8967-4edb541c4b6f</guid><pubDate>Sat, 08 Aug 2026 06:44:26 +0000</pubDate><atom:updated>2026-08-08T06:44:26.900Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>temples,கோவில்,செல்போன்,அறநிலையத்துறை,HRCE,cellphone</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/93levuh4/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/93levuh4/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் கோவில்களுக்குள் செல்போன் கொண்டு செல்வதற்கான தடை செப்டம்பர் 1-ந்தேதி முதல் முழுமையாக அமலுக்கு வர உள்ளது என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. </p><h2>தடை உத்தரவு</h2><p>கோவில்களின் ஆன்மீக சூழல் மற்றும் அமைதியை பேணிக்காக்கும் வகையிலும், விதிகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் கோவிலுக்குள் செல்போன்களை பயன்படுத்த ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இந்த தடை உத்தரவு வரும் செப்டம்பர் 1-ந்தேதி முதல் முழுமையாக அமலுக்கு வருகிறது. </p><h2>சுற்றறிக்கை</h2><p>இது தொடர்பாக அனைத்துக் கோவில் நிர்வாகங்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி, இனி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் கோவிலுக்குள் செல்போன்களை எடுத்துச் செல்ல அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> <h2>காவல்துறையில் புகார்</h2><p>இதனை மீறி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லப்பட்டு, அதன் மூலம் புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>அதே போல், வி.ஐ.பி.க்கள், சினிமா பிரபலங்கள் கோவில்களுக்கு வரும்போது அவர்களுடன் ஊடகத்தினர் அல்லது தனிப்பட்ட நபர்கள் சென்று வீடியோ அல்லது புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>ஒகேனக்கல்லில் காவிரி நீர்வரத்து சரிவு; சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் அனுமதி!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-water-inflow-drops-at-hogenakkal-permission-granted-for-tourists-to-bathe-and-for-coracle-operations</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-water-inflow-drops-at-hogenakkal-permission-granted-for-tourists-to-bathe-and-for-coracle-operations#comments</comments><guid isPermaLink="false">d020fa3c-4219-4f55-abb0-5eb1e8d964fe</guid><pubDate>Sat, 08 Aug 2026 06:42:05 +0000</pubDate><atom:updated>2026-08-08T06:42:05.557Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Cauvery River,Boat ride,தருமபுரி,சுற்றுலாப் பயணிகள்,குளிக்க அனுமதி,Bathing allowed</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/3dctgvg2/02.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ ஒகேனக்கல் காவிரி ஆறு- படகு சவாரி]]></media:title><media:description type="html"><![CDATA[ ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும் பரிசல் இயக்குவதற்கும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/3dctgvg2/02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தருமபுரி,</p><p>ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சீராகக் குறைந்ததைத் தொடர்ந்து, கடந்த 4 நாட்களாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும் பரிசல் இயக்குவதற்கும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.</p><h2>தடை நீக்கம்</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தருமபுரி மாவட்டம்</a> ஒகேனக்கல்லில், காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த 4 நாட்களாக சுற்றுலா பயணிகள் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.</p><h2>பரிசல் இயக்க அனுமதி</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஒகேனக்கல்</a> காவிரி ஆற்றில் இன்று (சனிக்கிழமை) நீர்வரத்து கணிசமாகக் குறைந்துள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு பரிசல் இயக்கவும், குறிப்பிட்ட பாதுகாப்பான பகுதிகளில் குளிக்கவும் அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.</p><h2>மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்</h2><p>விடுமுறை தினமான சனிக்கிழமை, இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளதால் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பரிசல் ஓட்டிகளும், உள்ளூர் வியாபாரிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். பாதுகாப்புப் பணியில் போலீசாரும், தீயணைப்புத் துறையினரும் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய நீதிபதிகள் நியமனம்: முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/appointment-of-new-judges-to-the-madras-high-court-chief-minister-vijay-extends-congratulations</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/appointment-of-new-judges-to-the-madras-high-court-chief-minister-vijay-extends-congratulations#comments</comments><guid isPermaLink="false">5fda7532-6056-4ffc-b591-c9a0d4a4b463</guid><pubDate>Sat, 08 Aug 2026 06:22:20 +0000</pubDate><atom:updated>2026-08-08T06:22:20.173Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,சென்னை,வாழ்த்து,Madras High Court,சென்னை ஐகோர்டு,நீதிபதிகள் நியமனம்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,New judges</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/qgkxqz4b/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/qgkxqz4b/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை ஐகோர்ட்டில் மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. இதில் 51 நீதிபதிகள் உள்ளனர். 24 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு மாவட்ட நீதிபதிகள், வக்கீல்கள் என்று 19 பேருடைய பெயரை சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் பரிந்துரை செய்தது. </p><h2>ஜனாதிபதி உத்தரவு</h2><p>இந்த பரிந்துரையை சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் ஏற்றுக் கொண்டது. அந்த பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இந்த பரிந்துரை பரிசீலித்த மத்திய அரசு, 15 பேரை ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்டு ஜனாதிபதி நேற்று உத்தரவு பிறப்பித்தார்.</p><p>இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>முதல்-அமைச்சர் வாழ்த்து</h2><p>இந்திய ஜனாதிபதியால் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்திற்குப் புதிதாக நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கோவிந்தராஜன் </a>கிருஷ்ணசாமி, ரஜ்னிஷ் பதியில், ரமேஷ் நடராஜன், ஜி.கே.முத்துக்குமார், ராமகிருஷ்ணன் ராஜேஷ் விவேகானந்தன் மற்றும் மாண்பமை சென்னை ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள ரவீக்குமார் சங்கரநாராயணன், திலீப் குமார் நாகராஜன், எல்லப்பன் மனோகரன், பி. முருகன், எம்.டி.சுமதி, எஸ்.அல்லி, சி.திருமகள், சண்முகம் கார்த்திகேயன், முருகேசன் பாலுச்சாமி, என்.குணசேகரன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். </p><h2>பணி சிறக்கட்டும்</h2><p>நீதியின் மாண்பையும், அரசியலமைப்பின் விழுமியங்களையும் நிலைநாட்டி, மக்கள் அனைவருக்கும் சமநீதியும், சமூகநீதியும் கிடைக்கச் செய்யும் வகையில் தங்களது பணி சிறக்கட்டும்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழக சட்டசபையில் வினோதம்: முதல்-அமைச்சர் விஜய் கருத்தை வரவேற்ற பிரேமலதா, எதிர்த்த மார்க்சிஸ்ட் கட்சி!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-curious-turn-of-events-in-the-tamil-nadu-assembly-premalatha-welcomed-chief-minister-vijays-remarks-while-the-marxist-party-opposed-them</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-curious-turn-of-events-in-the-tamil-nadu-assembly-premalatha-welcomed-chief-minister-vijays-remarks-while-the-marxist-party-opposed-them#comments</comments><guid isPermaLink="false">61575dba-ae71-4bda-ac08-06b63715407a</guid><pubDate>Sat, 08 Aug 2026 06:19:19 +0000</pubDate><atom:updated>2026-08-08T06:19:19.444Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,DMDK,தேமுதிக,தமிழக சட்டசபை,TN Assembly,Assembly Session,சட்டசபை கூட்டத்தொடர்,Premalatha Vijayakanth,பிரேமலதா விஜயகாந்த்,Marxist-Communist,மார்க்சிஸ்ட் கம்ப்யூனிஸ்ட் கட்சி,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/j0hoi7a2/vkik.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/j0hoi7a2/vkik.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் கருத்தை பிரேமலதா வரவேற்றும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எதிர்த்தும் பேசிய வினோத சம்பவம் நடந்துள்ளது. </p><h2>நேர் எதிராக பேசிய உறுப்பினர்கள்</h2><p>தமிழகத்தில் ஆளுங்கட்சியான த.வெ.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், எதிர்க்கட்சியான தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வும் உள்ளன. ஆனால், நேற்றைய சட்டசபை கூட்டத்தில் இரு கட்சிகளும் நேர் எதிராக நடந்து கொண்டன. </p><p><a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a>யின் கருத்தை தே.மு.தி.க. உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் வரவேற்ற நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் ஆர்.செல்லசாமி எதிர்த்தார். அப்படி என்னதான் சட்டசபையில் நடந்தது. அதை தொடர்ந்து பார்ப்போம். </p><h2>கவன ஈர்ப்பு தீர்மானம்</h2><p>தமிழக சட்டசபையில் நேற்று காவிரி நீர், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. </p><p>அது தொடர்பான விவாதத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a> பேசியதாவது:-</p><p>காவிரி நமக்கு உயிர் ஆதாரம். உணர்வு ரீதியான ஒன்று. அதனால் அதை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் துளிகூட இந்த அரசுக்கு இல்லை. அதற்கான அவசியமும் இல்லை. பெங்களூரு பயணம் குறித்து பல கருத்துகள் வந்தன. </p><h2>அவமானத்தையும் தாங்குவேன்</h2><p>நான் போக நினைத்தது, ஒரு வேளை இந்த பிரச்சினை தீர்க்க ஒரு சாதகமான சூழல் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில்தான். இன்றைய காலக்கட்டத்தில் பகை நாடுகளே பேசி தீர்க்கப் பார்க்கிறார்கள். பக்கத்து மாநிலத்தோடு பேசிப் பார்த்தால் என்ன என்று நினைத்தேன். </p><p>அதனால்தான் அந்த முயற்சியை எடுக்க முடிவு செய்தோம்.  அந்த முயற்சியில் அவமானம் நேர்ந்தால் என்ன செய்வது என சிலர் கேட்டார்கள். அப்படி நடந்தால், தமிழ்நாட்டு மக்களுக்காக அதையும் தாங்க தயாராக இருக்கிறேன். </p><p>இவ்வாறு அவர் பேசினார்.  </p><h2>மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பு</h2><p>அதன்பின்னர் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் ஆர்.செல்லசாமி, முதல்-அமைச்சர் விஜய்யின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார். அவர், "தமிழக முதல்-அமைச்சர் கர்நாடகா சென்று மண்டியிட தேவையில்லை. அப்படி அவமானம் அங்கு ஏற்பட்டால், தாங்குவதற்கு தயார் என்று முதல்-அமைச்சர் சொல்கிறார். அது சரியில்லை. அப்படியொரு அவமானம் ஏற்பட்டால், தமிழ்நாட்டின் அத்தனை மக்களுக்குமான அவமானம்" என்றார். </p><h2>பிரேமலதா விஜயகாந்த் ஆதரவு</h2><p>பின்னர் பேசிய தே.மு.தி.க. உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த், முதல்-அமைச்சர் விஜய்யின் கருத்தை ஆதரித்து பேசினார். அவர், "காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா செல்ல <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> முடிவு செய்தது சரிதான். டி.கே.சிவக்குமாரும், விஜய்யும் இருமாநிலத்தின் புதிய முதல்வர்கள். அவர்கள் சந்திந்து பேசினால் என்ன?, ஏன் தடுக்கிறீர்கள்?. முதல்-அமைச்சரின் பின்னால் தமிழகம் நிற்கிறது. முதல்-அமைச்சர் கர்நாடகா செல்லும்போது அவமரியாதை ஏற்பட்டால் என்ன செய்வது? என்கிறார்கள்.  அப்படி நடக்க நாங்கள் விடமாட்டோம். <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a>க்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டால், தமிழக மக்கள் நாங்கள் சும்மா இருப்போமா?. ஒட்டுமொத்த தமிழ்நாடும் வெகுண்டெழும்" என்றார். </p>]]></content:encoded></item><item><title>‘சிறுபான்மையினருக்கான கூட்டு நடவடிக்கைக் குழுவின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்’ - மு.க.ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-central-government-should-consider-the-demands-of-the-joint-action-committee-for-minorities-mkstalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-central-government-should-consider-the-demands-of-the-joint-action-committee-for-minorities-mkstalin#comments</comments><guid isPermaLink="false">0e8e37b4-897c-4b41-a1f6-4647e881931d</guid><pubDate>Sat, 08 Aug 2026 06:18:57 +0000</pubDate><atom:updated>2026-08-08T06:18:57.093Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,M.K.Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/iqj0c1lp/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/iqj0c1lp/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-</p><p>“இந்தியாவின் பல்வேறு மதப் பிரிவுகளைச் சேர்ந்த முக்கிய மதத் தலைவர்கள் மற்றும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் ஆகியோர் அடங்கிய சிறுபான்மையினருக்கான கூட்டு நடவடிக்கைக் குழுவின் (Joint Action Forum on Minorities) பிரதிநிதிகள், கடந்த 6-ந்தேதி மத்திய உள்துறை மந்திரியை சந்தித்தனர். </p><p>மார்ச் 2026-ல் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட 'வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்ட(FCRA) திருத்த மசோதாவை திரும்பப் பெறவும், FCRA சட்டத்தின் பிரிவு 15-ஐ ரத்து செய்ய வேண்டும், அல்லது 'வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம் 2010-ன் செயல்பாடுகள் குறித்த விரிவான மறுஆய்வுடன் FCRA மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என மத்திய மந்திரியிடம் அவர்கள் வலியுறுத்தினர்.</p><p>முன்மொழியப்பட்ட மசோதாவின் விதிகள் ஏற்படுத்தக்கூடிய தொலைநோக்கு விளைவுகளை கருத்தில் கொண்டு, ஆரம்பத்தில் இருந்தே அவற்றை எதிர்த்து வரும் தி.மு.க., இந்தக் கோரிக்கையை ஆதரிக்கிறது.</p><p>சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் இக்குழுவின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும், நடைபெற்று வரும் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் இதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>சொத்து தகராறில் தாயை அடித்து கொலை செய்த மகன் கைது...</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/son-arrested-for-beating-mother-to-death-over-a-property-dispute</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/son-arrested-for-beating-mother-to-death-over-a-property-dispute#comments</comments><guid isPermaLink="false">8260d04e-5392-44c3-b46f-fa81039cd27d</guid><pubDate>Sat, 08 Aug 2026 06:10:10 +0000</pubDate><atom:updated>2026-08-08T06:10:10.497Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்சி,son arrested,மகன் கைது,police enquiry,property dispute,தாய் அடித்துக்கொலை</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/zzz6edtx/01.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ வெங்கடேசன் -செல்வி]]></media:title><media:description type="html"><![CDATA[ சொத்து தகராறில் தாயை மகன் அடித்து கொலை செய்தார்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/zzz6edtx/01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>திருச்சி மாவட்டத்தில் சொத்து தகராறு காரணமாக பெற்ற தாயை உடற்பயிற்சி டம்பள்ஸால் அடித்துக் கொலை செய்த மகனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.</p><h2>கொலையில் முடிந்த தகராறு</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">திருச்சி மாவட்டம்</a> கல்லாத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்வி (வயது 50). அவருக்கும், அவரது மகன் வெங்கடேசனுக்கும் இடையே நீண்ட நாட்களாக சொத்து பிரிப்பது தொடர்பாக குடும்பத் தகராறு இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) காலை இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு, அது கடுமையான மோதலாக மாறியது.</p><h2>அதிர்ச்சி சம்பவம்</h2><p>ஆத்திரமடைந்த வெங்கடேசன், வீட்டில் இருந்த கனமான உடற்பயிற்சி டம்பள்ஸை எடுத்து தாய் செல்வியின் தலையில் பலமாகத் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த செல்வி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>போலீஸ் நடவடிக்கை</h2><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொடூரக் கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக முயன்ற வெங்கடேசனை உடனடியாக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கைது</a> செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>யுபிஐ கட்டணம் குறித்து பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்! - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-public-should-not-believe-rumors-being-spread-about-upi-payments-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-public-should-not-believe-rumors-being-spread-about-upi-payments-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">4e38cd99-48ee-47cc-831e-3ae72c6842bc</guid><pubDate>Sat, 08 Aug 2026 06:03:33 +0000</pubDate><atom:updated>2026-08-08T06:03:33.439Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,UPI transactions,யுபிஐ,யுபிஐ பரிவர்த்தனை,UPI,UPI Service,யுபிஐ கட்டணம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/0km49j3o/Untitled-22.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/0km49j3o/Untitled-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>யுபிஐ கட்டணம் குறித்து பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>டிஜிட்டல் இந்தியா</h2><p>பாரதப் பிரதமர் மோடியின் தலைமையிலான ‘டிஜிட்டல் இந்தியா’ இன்று உலகையே வியக்க வைக்கும் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. 2016-ல் தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை, சாமானிய மக்கள் UPI மூலம் மேற்கொள்ளும் பணப்பரிவர்த்தனைகள் முற்றிலும் இலவசமாகவே இருந்து வருகின்றன. வரும் காலங்களிலும் சாமானிய மக்களிடமோ அல்லது சிறு கடைக்காரர்களிடமோ ஒரு பைசா கூட கட்டணம் வசூலிக்கப்படாது என்பதே உண்மை.</p><h2>எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது</h2><p>உலகின் மிகப்பெரிய பணப்பரிவர்த்தனை அமைப்பான UPI-ன் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யவே தற்போது நிதி ஆதாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இது வணிகர்களுக்கும் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும் இடையிலான வணிக ஒப்பந்தமே தவிர, இது சாமானிய மக்களுக்கு எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதே நிதர்சனம்.</p><h2>வதந்திகளை நம்ப வேண்டாம்</h2><p>வரி விதிப்பு தொடர்பான புதிய சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகுதான், இது குறித்து <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நிபுணர் குழு</a> உரிய ஆலோசனைகளை மேற்கொண்டு இறுதி முடிவெடுக்கும். எனவே, எதிர்க்கட்சிகள் அரசியல் லாபத்திற்காகப் பரப்பும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விளைச்சல் பாதிப்பால் தமிழகத்தில் அதிகரிக்கும் அரிசி விலை: எப்போது குறையும்.?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rice-prices-rising-in-tamil-nadu-due-to-crop-impact-when-will-they-decrease</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rice-prices-rising-in-tamil-nadu-due-to-crop-impact-when-will-they-decrease#comments</comments><guid isPermaLink="false">e717209d-8c4e-44bf-9fc8-50201965e87a</guid><pubDate>Sat, 08 Aug 2026 06:00:23 +0000</pubDate><atom:updated>2026-08-08T06:00:23.765Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>அரிசி,rice,அரிசி விலை,Rice prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/5jesgotj/11.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/5jesgotj/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டில் குறுவை சாகுபடி பாதிப்பு, கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் நெல் விளைச்சல் பாதிப்பு காரணமாக தமிழ்நாட்டில் அரிசி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அரிசி விலை உயர்வு குறித்து கோயம்பேட்டைச் சேர்ந்த அரிசி மொத்த வியாபாரிகள் கூறியதாவது:-</p><p>தமிழகத்துக்கு நமது தஞ்சை பகுதி மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் அரிசி விற்பனைக்கு வரும். பொதுவாக தமிழகத்தில் தஞ்சையில் விளையும் மோட்டா ரக அரிசியை விட கர்நாடகாவில் இருந்து விற்பனைக்கு வரும் பொன்னி சன்னரக அரிசி தான் அதிகளவில் விற்பனையாகிறது.</p><p>அதேபோன்று, சென்னையை அடுத்த ரெட்ஹில்ஸ் பகுதியை சுற்றி இருக்கும் அரிசி ஆலைகளுக்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து அதிக அளவில் நெல் அரவைக்கு வரும். ஆனால், தற்போது கர்நாடகாவில் நெல் விளைச்சல் குறைந்துள்ள காரணத்தால், அம்மாநில வியாபாரிகள் ஆந்திரா மற்றும் தஞ்சாவூர் சென்று அரிசியை வாங்கிச் செல்கின்றனர். இதனால், அரிசி விலை 10 முதல் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக பொன்னி சன்னரக அரிசி அதிகபட்சமாக 25 சதவீதமும், மோட்டா ரக அரிசி 10 சதவீதமும், பாசுமதி அரிசி 10 சதவீதமும் விலை அதிகரித்துள்ளது.</p><p>அதன்படி, ரூ.1,400-க்கு விற்பனை செய்யப்பட்ட 26 கிலோ பொன்னி சன்னரக அரிசி ரூ.1,700 ஆக அதிகரித்துள்ளது. ரூ.650-க்கு விற்பனை செய்யப்பட்ட 10 கிலோ பொன்னி சன்னரக அரிசி ரூ.800 ஆக விலை உயர்ந்துள்ளது. ரூ.350-க்கு விற்பனை செய்யப்பட்ட 5 கிலோ பொன்னி சன்னரக அரிசி ரூ.420 ஆகவும் அதிகரித்துள்ளது.</p><p>அதே போன்று கர்நாடகாவில் இருந்து விற்பனைக்கு வரும் ஸ்டீம் வகை (சிங்கிள் பாயில்) பொன்னி அரிசி 30 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது. அதன்படி, 26 கிலோ ராய்ச்சூர் பொன்னி அரிசி ரூ.1,250-ல் இருந்து ரூ.1,700 ஆக உயர்ந்துள்ளது. அதே போன்று, ரூ.2,200 முதல் ரூ.2,300 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த 30 கிலோ பாசுமதி அரிசி ரூ.2,800 முதல் ரூ.3,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. குறைந்தபட்சமாக ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ பாசுமதி அரிசி தற்போது ரூ.85 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த அரிசி விலை உயர்வு டிசம்பர் மாதத்திற்கு பிறகு குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது.”</p><p>இவ்வாறு அவர்கள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>11 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் அடைப்பு: ராமேஸ்வரத்தில் இன்று வேலை நிறுத்தம் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/11-tamil-nadu-fishermen-imprisoned-in-sri-lanka-strike-announced-in-rameswaram-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/11-tamil-nadu-fishermen-imprisoned-in-sri-lanka-strike-announced-in-rameswaram-today#comments</comments><guid isPermaLink="false">698f2ecf-78fd-4b95-aa65-64f7552a2515</guid><pubDate>Sat, 08 Aug 2026 05:52:45 +0000</pubDate><atom:updated>2026-08-08T05:52:45.677Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Rameswaram,தமிழக மீனவர்கள்,ராமேஸ்வரம்,strike,இலங்கை சிறை,வேலை நிறுத்தம்,தமிழக மீனவர்கள் கைது,TN Fishermen,Rameshwaram</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/2lvalzus/lott.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/2lvalzus/lott.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமேஸ்வரம்,</p><p>11 தமிழக மீனவர்களை இலங்கையில் சிறையில் அடைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து <a href="https://www.dailythanthi.com/topic/rameswaram">ராமேஸ்வரத்தில்</a> இன்று ஒருநாள் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>படகு என்ஜின் பழுது</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/rameswaram">ராமேஸ்வரத்தில்</a> இருந்து 2 நாட்களுக்கு முன்பு ரமேஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு ஒன்றில் 11 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று இருந்தனர். நடுக்கடலில் மீன்பிடித்தபோது படகு என்ஜின் பழுதாகியதால் கடல் அலை மற்றும் காற்றின் வேகத்தில் அந்த படகு இழுத்துச் செல்லப்பட்டு இலங்கை பகுதியில் கரை ஒதுங்கியது.</p><h2>மீனவர்கள் கைது</h2><p>அந்த நேரத்தில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் பழுதான படகில் பரிதவித்த 11 மீனவர்களையும் சிறைபிடித்து கைது செய்து, நெடுந்தீவு கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.</p><h2>சிறையில் அடைப்பு</h2><p>பின்னர் 11 பேரும் நேற்று நெடுந்தீவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். எல்லை தாண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்கள். அப்போது, 11 மீனவர்களையும் வருகிற 21-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி நளினி உத்தரவிட்டார். இதையடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.</p><h2>மனிதாபிமான அடிப்படையில்</h2><p>படகு பழுதானதால் கைது நடவடிக்கையில் சிக்கிய 11 மீனவர்களும் மனிதாபிமான அடிப்படையில் படகுடன் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்த்த நிலையில் சிறையில் அடைக்க இலங்கை கோர்ட்டு உத்தரவிட்டது, அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் <a href="https://www.dailythanthi.com/topic/rameswaram">ராமேஸ்வரம்</a> மீனவர்களை கவலை அடையச் செய்திருந்தது.</p><h2>வேலை நிறுத்தம்</h2><p>இந்நிலையில் 11 தமிழக மீனவர்களை இலங்கையில் சிறையில் அடைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரத்தில் இன்று ஒருநாள் (சனிக்கிழமை) வேலை நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை நடந்தால் தமிழக மக்களவை தொகுதிகள் 59 ஆக உயரும்: உத்தேச பட்டியல் இதோ!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-constituency-delimitation-takes-place-the-number-of-lok-sabha-constituencies-in-tamil-nadu-will-rise-to-59-here-is-the-tentative-list</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-constituency-delimitation-takes-place-the-number-of-lok-sabha-constituencies-in-tamil-nadu-will-rise-to-59-here-is-the-tentative-list#comments</comments><guid isPermaLink="false">df3c5b06-9de1-4e8a-bd59-d79cc7f5ff64</guid><pubDate>Sat, 08 Aug 2026 05:25:37 +0000</pubDate><atom:updated>2026-08-08T05:25:37.798Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,தமிழ்நாடு அரசு,TN government,MPs,Delimitation of Constituencies,தொகுதி மறுவரையறை,Delimitation,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,மக்களவை தொகுதிகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/2trna345/sonss.jpg" width="1125"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/2trna345/sonss.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>சிறப்பு செய்திகள்</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தொகுதி மறுவரையறை நடந்தால் தமிழக மக்களவை தொகுதிகள் 39-ல் இருந்து 59 ஆக உயர வாய்ப்பு உள்ளது. அவ்வாறு உயர்ந்தால், 59 தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. </p><h2>தொகுதி மறுவரையறை</h2><p>நடைபெற்று வரும் நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத் தொடரில், திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளின் எல்லைகள் வரையறுக்கப்பட இருப்பதால், மக்கள்தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன</p><h2>தமிழகம் எதிர்ப்பு</h2><p>தொகுதி மறுவரையறை சட்ட மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறினால், நாடு முழுவதும் தற்போதுள்ள 543 தொகுதிகள் 850 ஆக உயரும். குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், 59 ஆக உயர வாய்ப்பு உள்ளது. </p><p>ஆனால், மக்கள்தொகையை கட்டுப்படுத்தாத மாநிலங்களுக்கு இதைவிட அதிக தொகுதிகள் கிடைக்கும் என்பதால், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. </p><h2>எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம்</h2><p>இந்த நிலையில், தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்க தமிழக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டத்தை <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a> இன்று மாலை 3 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் கூட்டியுள்ளார். </p><p>ஆனால், இந்த கூட்டத்தை தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. என்றாலும், நாடாளுமன்ற இரு அவைகளில் தொகுதி மறுவரையறை சட்ட மசோதா நிறைவேறினால், தமிழ்நாட்டில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகள் 59 ஆக உயரும். அவ்வாறு உயர்ந்தால், என்னென்ன பெயர்களில் மக்களவை தொகுதிகள் இருக்கும் என்ற உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. </p><p>அதன் விவரம் வருமாறு:-</p><p>1) திருத்தணி</p><p>2) திருவள்ளூர்</p><p>3) சென்னை வடக்கு</p><p>4) சென்னை கிழக்கு</p><p>5) சென்னை மத்திய</p><p>6) சென்னை தெற்கு</p><p>7) சென்னை மேற்கு</p><p>8) தாம்பரம்</p><p>9) செங்கல்பட்டு</p><p>10) காஞ்சிபுரம்</p> <p>11) வேலூர்</p><p>12) திருப்பத்தூர்</p><p>13) ராணிப்பேட்டை</p><p>14) திருவண்ணாமலை</p><p>15) வந்தவாசி / ஆரணி </p><p>16) திண்டிவனம்</p><p>17) விழுப்புரம்</p><p>18) கள்ளக்குறிச்சி </p><p>19) கடலூர்</p><p>20) சிதம்பரம்</p> <p>21) ஓசூர்</p><p>22) கிருஷ்ணகிரி</p><p>23) தர்மபுரி</p><p>24) சேலம்</p><p>25) மேட்டூர்</p><p>26) ராசிபுரம்</p><p>27) நாமக்கல்</p><p>28) ஈரோடு</p><p>29) கோபிசெட்டிபாளையம்</p><p>30) திருப்பூர்</p><p>31) தாராபுரம் (அல்லது) பழனி </p><p>32) பொள்ளாச்சி</p><p>33) கோவை கிழக்கு</p><p>34) கோவை மேற்கு</p><p>35) நீலகிரி</p><p>36) கரூர் </p><p>37) பெரம்பலூர்</p><p>38) அரியலூர் (அல்லது) லால்குடி</p><p>39) திருச்சிராப்பள்ளி</p><p>40) தஞ்சாவூர் </p> <p>41) கும்பகோணம்</p><p>42) மயிலாடுதுறை</p><p>43) நாகபட்டினம்</p><p>44) திருவாரூர்</p><p>45) புதுக்கோட்டை</p><p>46) சிவகங்கை</p><p>47) ராமநாதபுரம்</p><p>48) தூத்துக்குடி</p><p>49) திருச்செந்தூர்</p><p>50) திருநெல்வேலி </p> <p>51) நாங்குநேரி (அல்லது) கன்னியாகுமரி</p><p>52) கன்னியாகுமரி (அல்லது) நாகர்கோவில் </p><p>53) தென்காசி</p><p>54) சிவகாசி</p><p>55) விருதுநகர்</p><p>56) தேனி</p><p>57) மதுரை கிழக்கு</p><p>58) மதுரை மேற்கு</p><p>59) திண்டுக்கல் </p> ]]></content:encoded></item><item><title>தமிழகத்துக்கு முதலிடம் அளிப்பவர்கள் அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிச்சயம் பங்கேற்பார்கள் - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/those-who-give-priority-to-tamil-nadu-will-definitely-participate-in-the-all-party-meeting-manickam-thakur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/those-who-give-priority-to-tamil-nadu-will-definitely-participate-in-the-all-party-meeting-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">ba8c69ed-e9c3-4e97-bec3-e265da10f6ce</guid><pubDate>Sat, 08 Aug 2026 05:02:19 +0000</pubDate><atom:updated>2026-08-08T05:02:19.665Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,அனைத்துக்கட்சி கூட்டம்,மாணிக்கம் தாகூர்,Future,all-party meeting,ManickamThakur</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/9ag2m3li/103.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/9ag2m3li/103.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்துக்கு முதலிடம் அளிப்பவர்கள் அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிச்சயம் பங்கேற்பார்கள் என்று <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">மாணிக்கம் தாகூர்</a> தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-                                                                                                                           </p><h2>அனைத்துக்கட்சி கூட்டம்</h2><p>தமிழகத்தின் நலன்களை விடத் தங்கள் அரசியலுக்கு முன்னுரிமை அளிப்பவர்கள் இதில் பங்கேற்காமல் இருக்கலாம். ஆனால், தமிழகத்திற்கு முதலிடமும் அரசியலுக்கு அடுத்த இடமும் அளிப்பவர்கள், தமிழக முதல்-அமைச்சர் கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிச்சயம் பங்கேற்பார்கள்.</p><p>இது கட்சி அரசியல் சார்ந்த விவகாரம் அல்ல. இது தமிழகத்தின் உரிமைகள், நலன்கள் மற்றும் எதிர்காலம் சார்ந்தது. தமிழக மக்கள் அனைத்தையும் பார்த்து கொண்டிருக்கிறார்கள், இக்கட்டான சூழலில் தமிழகத்துடன் உறுதியாக நின்றது யார் என்பதை அவர்கள் நினைவில் கொள்வார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>11 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை மந்திரிக்கு மாணிக்கம் தாகூர் கடிதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/manickam-tagore-writes-to-the-external-affairs-minister-urging-the-release-of-11-fishermen</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/manickam-tagore-writes-to-the-external-affairs-minister-urging-the-release-of-11-fishermen#comments</comments><guid isPermaLink="false">549139d0-9399-4754-b1ec-922cb59a5634</guid><pubDate>Sat, 08 Aug 2026 05:02:16 +0000</pubDate><atom:updated>2026-08-08T05:02:16.379Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore MP,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/ori2kodx/manickam-tagore.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/ori2kodx/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>இலங்கை கடற்படையினரால் 11 மீனவர்கள் கைது செய்யபட்டதாகவும்,  அவர்களை விடுவிக்க கோரி மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>வெளியுறவுத்துறை மந்திரிக்கு கடிதம் </h2><p>இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 11 இந்திய மீனவர்களையும், அவர்களின் படகையும் உடனடியாக விடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.</p><p>ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நம் மீனவர்களின் படகில் ஏற்பட்ட எதிர்பாராத எஞ்சின் கோளாறு காரணமாகவே அவர்கள் எல்லை தாண்டிச் செல்ல நேரிட்டது. எனவே, கேரளாவைச் சேர்ந்த ரோஹன் உட்பட கைது செய்யப்பட்டுள்ள 11 மீனவர்களையும் உடனடியாக தாயகம் திருப்ப தூதரக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளேன்.</p><h2>படகை ஒப்படைக்க வேண்டும்</h2><p>மேலும், வாழ்வாதார ஆதாரமான படகை உரிமையாளர் ரமேஷிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்றும், இதுபோன்று தொழில்நுட்பக் கோளாறால் எல்லை தாண்டும் மீனவர்களைக் குற்றவாளிகளாகப் பார்க்காமல் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்ப இருநாடுகளும் இணைந்து தெளிவான வழிகாட்டு நெறிமுறையை உருவாக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஈரோடு: தம்பதியை வழிமறித்து 4 பவுன் தங்க சங்கிலி பறிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-couple-waylaid-4-sovereign-gold-chain-snatched</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-couple-waylaid-4-sovereign-gold-chain-snatched#comments</comments><guid isPermaLink="false">087ecef1-0a8d-44dd-8033-3c32b1b59e21</guid><pubDate>Sat, 08 Aug 2026 04:21:59 +0000</pubDate><atom:updated>2026-08-08T04:21:59.703Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Erode,ஈரோடு,நகை பறிப்பு,chain snatching</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/3frmz875/chainsnatching.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/3frmz875/chainsnatching.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,  </p><p>ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள காட்டூர் பகுதியை சேர்ந்தவர் மாதவன். இவரு டைய மனைவி வனிதா (வயது 35) விவசாயி. இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து அறச்சலூர் சந்தைக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.</p> <p>அப்போது இவர்கள் மொபட்டை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், தம்பதியை வழிமறித்து, வனிதா கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத் தில் தப்பி சென்றனர். இதைத்தொடர்ந்து வனிதா இதுகுறித்து அறச்சலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக் குப்பதிவு செய்து, வனிதாவிடம் நகையை பறித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் இன்று எம்.பி.க்கள் கூட்டம்: அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/all-party-meeting-of-mps-today-under-the-leadership-of-chief-minister-vijay-aiadmk-boycotts</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/all-party-meeting-of-mps-today-under-the-leadership-of-chief-minister-vijay-aiadmk-boycotts#comments</comments><guid isPermaLink="false">618262cd-28bc-4aa1-80ee-92e56a856927</guid><pubDate>Sat, 08 Aug 2026 04:14:51 +0000</pubDate><atom:updated>2026-08-08T04:14:51.653Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,TVK,தவெக,Vijay,Tamilnadu,தமிழ்நாடு,விஜய்,அதிமுக,திமுக,DMK,DMDK,தேமுதிக,All Party Meeting,தமிழக அரசு,TN government,மக்கள் நீதி மய்யம்,MNM,அனைத்து கட்சிகள் கூட்டம்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/be0nvcss/kike.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/be0nvcss/kike.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நடக்கும் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  </p><h2>முதல்​-அமைச்சர் விஜய்</h2><p>தொகுதி மறு​வரையறை மசோதா குறித்து விவா​திப்​ப​தற்​கான அனைத்​துக் கட்​சிகளின் எம்​.பி.க்​கள் கலந்​தாய்​வுக் கூட்​டம் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்​-அமைச்சர் விஜய்</a> தலை​மை​யில் சென்​னை​யில் இன்று (சனிக்கிழமை) நடை​பெறுகிறது.</p><h2>தொகுதி மறு​வரையறை மசோ​தா</h2><p>நாடாளு​மன்​றத்​தின் மழைக்​காலக் கூட்​டத்​தொடர் கடந்த ஜூலை 20-ம் தேதி தொடங்கி நடை​பெற்று வரு​கிறது. இதில் திருத்​தப்​பட்ட தொகுதி மறு​வரையறை மசோ​தாவை மீண்​டும் கொண்​டுவர மத்​திய அரசு முயற்​சிப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகி​ இருந்தன.</p><h2>எம்​.பி.க்​கள் ஆலோ​சனைக் கூட்​டம்</h2><p>இந்​த சூழலில் தொகுதி மறு​வரையறை பணி​கள் குறித்து விவா​திப்​ப​தற்​காக தமிழக எம்​.பி.க்​கள் ஆலோ​சனைக் கூட்​டத்​துக்கு <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்​-அமைச்சர் விஜய்</a> அழைப்பு விடுத்​திருந்தார். </p><p>இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்டிருந்த அறி​விப்​பில், “மத்​திய அரசால் மேற்​கொள்ள உத்​தேசிக்​கப்​பட்​டுள்​ள தொகுதி மறு​வரையறை பணி​கள் மற்​றும் அதனால் தமிழகத்​துக்கு ஏற்​படும் தாக்​கங்​கள் குறித்​து, மாநில எம்​.பி.க்​களின் கலந்​தாய்​வுக் கூட்​டம் இன்று (சனிக்​கிழமை) மதி​யம் 3 மணிக்கு சென்னை கலை​வாணர் அரங்​கத்​தில் நடத்​தப்பட உள்​ளது. இதற்கு முதல்​-அமைச்சர் விஜய் தலைமை வகிப்​பார். இதற்​கான அழைப்​பிதழ் டெல்​லி​யில் உள்ள தமிழ்​நாடு இல்​லத்​தின் மூலம் அனைத்து மக்​களவை மற்​றும் மாநிலங்​களவை உறுப்​பினர்​களுக்கும் அனுப்​பப்​பட்டு வரு​கிறது” என்று கூறப்​பட்டிருந்தது.</p><h2>அ.தி.மு.க. பங்கேற்காது</h2><p>இந்நிலையில் தொகுதி மறுவரையறை தொடர்பாக இன்று முதல்-அமைச்சர் விஜய் கூட்டியுள்ள அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் அ.தி.மு.க. பங்கேற்காது என தகவல் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க. எம்.பி.க்கள் தம்பிதுரை, இன்பதுரை உள்ளிட்டோர் டெல்லியில் உள்ளதாக தெரிகிறது. </p><h2>தி.மு.க. பங்கேற்காது</h2><p>அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட நிபந்தனை விதித்துள்ளதால் தி.மு.க. எம்.பி.க்களும் பங்கேற்க வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகி இருந்தது.</p><p>இந்நிலையில் தொகுதி மறுவரையறை குறித்து முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் எம்.பி.க்கள் கூட்டத்தை தி.முக. புறக்கணித்துள்ளது</p><p>இதுதொடர்பாக கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொகுதி மறுவரையறையில் தி.மு.க.வின் முந்தைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. எம்.பி.க்கள் கலந்தாய்வுக் கூட்டம் என்ற பெயரில் த.வெ.க. அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் தி.மு.க. பங்கேற்காது” என்று தெரிவித்துள்ளார்.</p><h2>தே.மு.தி.க.</h2><p>இதேபோல தொகுதி மறுவரையறை தொடர்பாக முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் அனைத்து கட்சிக் கூட்டத்தில் தே.மு.தி.க. பங்கேற்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் எம்.பி. சுதீஷ் பங்கேற்க மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. </p><h2>மக்கள் நீதி மய்யம்</h2><p>தொகுதி மறுவரையறை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கவில்லை. மக்கள் நீதி மய்யத்தின் ராஜ்ய சபா எம்.பியான கமல்ஹாசன் அமெரிக்காவில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. </p><h2>கூட்டத்தில் பங்கேற்கும் கட்சிகள்</h2><p>அமைச்சர் விஜய் தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்கும் கட்சிகளின் பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி இக்கூட்டத்தில் பின்வரும் கட்சிகளின் உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்:</p><p>காங்கிரஸ் - 12</p><p>வி.சி.க. - 2</p><p>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) - 2</p><p>இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) - 1</p><p>ம.தி.மு.க. (MDMK) - 1</p><p>தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. மற்றும் மக்கள் நீதி மய்யம் (MNM) ஆகிய கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.</p> ]]></content:encoded></item><item><title>
விபத்தில் உதவியபோது மலர்ந்த கள்ளக்காதல்...விபரீதத்தில் முடிந்தது...பணத்தால் வந்த வினை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-love-affair-that-blossomed-while-helping-in-an-accident-ended-in-tragedy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-love-affair-that-blossomed-while-helping-in-an-accident-ended-in-tragedy#comments</comments><guid isPermaLink="false">4156fe9e-813b-4af3-a22d-adf036dc1065</guid><pubDate>Sat, 08 Aug 2026 04:06:10 +0000</pubDate><atom:updated>2026-08-08T04:06:10.006Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருப்பூர்,கள்ளக்காதல்,பணம்,money,Tirupur</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/2ujim3yt/love33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
விபத்தில் உதவியபோது மலர்ந்த கள்ளக்காதல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/2ujim3yt/love33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>உடுமலை, </p><p>வழக்கை வாபஸ் பெறாத ஆத்திரத்தில் மண்வெட்டியால் பெண்ணை வெட்டிக்கொன்ற கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். விபத்தில் உதவியபோது உருவான கள்ளக்காதல் விபரீதத்தில் முடிந்தது.</p><h2>பஸ்க்காக காத்திருப்பு</h2><p>திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பாலப்பம்பட் டியை சேர்ந்தவர் பானுமதி(வயது45). கருத்துவேறுபாடு கார ணமாக கணவரை பிரிந்த இவர், தனது மகளுடன் வசித்து வந்தார். ஒருநாள் வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக இந்திரா நகர் பஸ் நிறுத்தத்தில் பானுமதி காத்து நின்றார். அப்போது அவரது கண் முன்னே நடந்த ஒரு விபத்தில், ஆனைமலையை சேர்ந்த பிரபாகரன் (39) என்பவர் படுகாயம் அடைந்தார்.</p><p>மனிதநேயத்துடன் அவரை மீட்ட பானுமதி, ஆஸ்பத்திரியில் சேர்த்து அனைத்து உதவிகளையும் செய்தார். இந்த மருத்து வமனை பழக்கம். நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.</p><h2>டீ மாஸ்டர்</h2><p>இதேபோல் பிரபாகரனையும் அவரது மனைவி ஏற்கனவே பிரிந்துவிட்டதால், உடுமலையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்த அவர் பானுமதியுடன் கணவன்- மனைவி போல வாழத் தொடங்கினார். அவ்வப்போது பானுமதிக்கு பண உதவியும் செய்து வந்தார். இந்தநிலையில், பானுமதியின் மகளுக்கு திருமணம் முடிந்ததை அடுத்து, பிரபாகரன் அடிக்கடி<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D"> வீட்டிற்கு வந்து சென்று உல்லாசமாக இருந்து விட்டு சென்றுள்ளார்.</a> இதற்கு பானு மதியின் மருமகன் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கள்ளக்காதலை கைவிடுமாறு பானுமதியை வற்புறுத்தினார். இதனால் பிரபாகரனுடன் பேசுவதை பானுமதி தவிர்த்தார்.</p><p>இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன், தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டு பானுமதியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார்.</p> <p>இதனால் பிரபாகரன் மீது பானுமதி உடுமலை போலீசில் புகார் அளிக்க, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் பானுமதி மீது அவர் கடும் கோபத்தில் இருந்தார். இந்தநிலையில் ஜாமீனில் வெளியே வந்த பிரபாகரன், பானுமதியை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் பானுமதி அவரது அழைப்புகளை தவிர்த்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பாலப்பம்பட்டியில் உள்ள பானுமதி வீட்டுக்கு பிரபாகரன் வந்தார். அப்போது பானுமதி தனது உறவினர் மயில்சாமியுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பிரபாகரன், தன் மீது போட்ட வழக்கை வாபஸ் பெறுமாறு வலியுறுத்தினார். அதற்கு பானுமதி மறுக்கவே. இருவருக்கும் இடையே பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டது.</p> <h2>வாக்குவாதம் முற்றியதால்</h2><p>இந்த வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த பிரபாகரன், அருகில் கிடந்த மண்வெட்டியை எடுத்து பானுமதியின் தலையில் வெட்டினார். இதனை தடுக்க முயன்ற உறவினர் மயில்சாமியையும் கல்லால் தாக்கினார். இதில் நிலைகுலைந்து மயில்சாமி கீழே விழ, பிரபாகரன் தொடர்ந்து தாக்கியதில் பானுமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். </p><p>இது குறித்து தகவல றிந்து வந்த போலீசார் பானுமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். காயமடைந்த மயில்சாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த கொலை தொடர் பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, பிரபாகரனை கைது செய்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>சைபர் குற்றவாளிகளுக்கு ‘வங்கி கணக்கு’ கொடுத்த ஏஜெண்டுகள்: தமிழகம் முழுவதும் அதிரடி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/agents-who-gave-bank-accounts-to-cyber-criminals-arrests-made-across-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/agents-who-gave-bank-accounts-to-cyber-criminals-arrests-made-across-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">7a69ce8a-b27e-41e8-bb6d-85c0bdf802be</guid><pubDate>Sat, 08 Aug 2026 03:55:31 +0000</pubDate><atom:updated>2026-08-08T03:55:31.349Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,வங்கி கணக்கு,Bank account,சைபர் குற்றங்கள்,Agent,cyber crime,ஏஜெண்டு கைது</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/ym68a0va/101.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சைபர் குற்றவாளி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/ym68a0va/101.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சைபர் குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்பட்டு, அவர்கள் நூதனமான முறையில் கொள்ளையடித்த கோடிக்கணக்கான பணத்தை தங்களது வங்கிக்கணக்கு மூலம் பங்கு போட்ட நூற்றுக்கணக்கான ஏஜெண்டுகளை தமிழகம் முழுவதும் நேற்று போலீசார் கைது செய்தனர்.</p><h2>டிஜிட்டல் கைது</h2><p>தற்போது நாடு முழுக்க சைபர் குற்றவாளிகளின் ஆதிக்கம்தான் பொதுமக்களை ஆட்டிப்படைத்து வருகிறது. எங்கோ ஒரு மூலையில் இருந்துகொண்டு, ஆன்லைன் மூலமாக சைபர் குற்றவாளிகள் நூதனமான முறையில் பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்து வருகிறார்கள். 'டிஜிட்டல் கைது' என்ற பெயரில் பொதுமக்களிடம் சைபர் குற்றவாளிகள் கொள்ளை வேட்டையை நடத்தி வருகிறார்கள். இவ்வாறு கொள்ளையில் ஈடுபட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்த 14 சைபர் குற்றவாளிகளை, சென்னை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D">சைபர் கிரைம்</a> போலீசார் கைது செய்து, அழைத்து வந்து சமீபத்தில் சிறையில் அடைத்தார்கள்.</p><h2>வங்கி கணக்கு</h2><p>இவ்வாறு சைபர் குற்றவாளிகள் நூதனமான முறையில் கொள்ளையடிக்கும் கோடிக்கணக்கான பணத்தை, அவர்கள் வங்கிகள் மூலம் தான் பரிமாற்றம் செய்கின்றனர். கொள்ளையடிக்கும் பணத்தை மற்றவர்களின் வங்கிக்கணக்குகளில் போட வைத்து, பின்னர் பங்கு போட்டு கொள்கிறார்கள். கொள்ளையடித்த பணத்தை பங்கு போடுவதற்கு, தமிழகம் முழுவதும் பெரிய அளவில் 'நெட்வொர்க்' அமைத்து, ஏஜெண்டுகளை நியமித்து அவர்களின் வங்கிக்கணக்குகளில் பணத்தை போடவைக்கிறார்கள்.</p><p>பின்னர் அவர்கள் மூலம் பணத்தை பங்கு போடுகிறார்கள் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதற்காக கமிஷன் அடிப்ப டையில், ஏஜெண்டுகள் செயல்பட்டனர். இவர்களை ஒட்டுமொத்தமாக கூண்டோடு கைது செய்ய, மாநில சைபர் கிரைம் போலீசார் நேற்று அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்கள்.</p><h2>ஏஜெண்டுகள் கைது</h2><p>தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் இரவில் இருந்து இந்த கைது நடவடிக்கை தொடங்கியது. நூற்றுக்கணக்கான கமிஷன் ஏஜெண் டுகள் கைது செய்யப்பட்டனர். சென்னை நகர சைபர் கிரைம் போலீசாரும், 77 பேரை கைது செய்தனர். அவர்களை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து நேற்று பகலில் விசாரணை மேற்கொண்டனர்.</p><p>நேற்று இரவு வரை இவர்களிடம் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">விசாரணை</a> நீடித்தது. கைதானவர்களின் உறவினர்கள் ஏராளமான பேர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு திரண்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த கைது நடவடிக்கை சைபர் குற்றவாளிகளுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தென்மாவட்ட பல்வேறு ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-train-services-in-southern-districts</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-train-services-in-southern-districts#comments</comments><guid isPermaLink="false">6d98121a-48f0-480b-a8ba-0f0f8fe18936</guid><pubDate>Sat, 08 Aug 2026 03:48:00 +0000</pubDate><atom:updated>2026-08-08T03:48:00.591Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,திருச்செந்தூர்,Tiruchendur,ரெயில் போக்குவரத்து,Train Services</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/4nq8kgtq/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/4nq8kgtq/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,  </p><h2>திருச்செந்தூர் ரெயில்கள்</h2><p>மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்து வரும் தண்ட வாள சீரமைப்பு பணிகளுக்காக தென்மாவட்டங்களுக்கான பல ரெயில்க ளின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.</p><p>நெல்லை-திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில், திருச்செந்தூர்-நெல்லை பாசஞ்சர் ரெயில் (வ.எண்.56751/56754) ஆகிய ரெயில்கள் வருகிற 12, 13-ந் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.</p><p>திருச்செந்தூர்-நெல்லை பாசஞ்சர் ரெயில், நெல்லை-திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில் (வ.எண்.56003/56004) ஆகிய ரெயில்கள் வருகிற 13,14-ந் தேதி, 17-ந் தேதி, 22, 24 மற்றும் 25-ந் தேதிகளில் ரத்து செய்யப்பட் டுள்ளது.</p><h2>ஈரோடு-செங்கோட்டை</h2><p>ஈரோடு-செங்கோட்டை ரெயில் (வ.எண். 16845) இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 10-ந் தேதி வரை மற்றும் 12-ந் தேதிகளில் திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் செங்கோட்டை-ஈரோடு ரெயில் (வ.எண்.16846) இன்று, நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் வரு கிற 11-ந் தேதி வரை மற்றும் 13-ந் தேதிகளில் திண்டுக்கல் வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.</p><h2>மதுரை-ராமேசுவரம்</h2><p>மதுரை-ராமேசுவரம் பாசஞ்சர் ரெயில் (வ.எண்56711) வருகிற 11-ந் தேதி, 18-ந் தேதி, 25-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை மண்டபம் வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் ராமேசுவரம்-மதுரை பாசஞ்சர் ரெயில் (வ.எண்.56714) வருகிற 11, 18, 25-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை மண் டபத்தில் இருந்து புறப்படும்.</p><h2>திருச்செந்தூர்-பாலக்காடு</h2><p>திருச்செந்தூர்-பாலக்காடு ரெயில் (வ.எண்.16732) வருகிற 12, 13-ந் தேதி களில் நெல்லை வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.16731) அன்றைய தினம் திருச் செந்தூரில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக நெல்லையில் இருந்து வழக் கமான நேரத்தில் புறப்படும்.</p><h2>செங்கோட்டை-நெல்லை</h2><p>செங்கோட்டை-நெல்லை பாசஞ்சர் ரெயில் (வ.எண்.56742) வருகிற 14, 17, 18, 24, 25-ந் தேதிகளில் சேரன்மாதேவி வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் நெல்லை-செங்கோட்டை பாசஞ்சர் ரெயில் (வ.எண்.56743) மேற்கண்ட நாட்களில் சேரன்மாதேவியில் இருந்து வழக்கமான நேரத்துக்கு செங்கோட்டைக்கு புறப்பட்டு செல்லும்.</p><h2>செங்கோட்டை-மயிலாடுதுறை</h2><p>செங்கோட்டை-மயிலாடுதுறை ரெயில் (வ.எண்.16848) இன்று முதல் 11-ந் தேதி வரை, 13-ந் தேதி, 20, 27-ந் தேதி வரை விருதுநகரில் இருந்து மது ரைக்கு பதிலாக மானாமதுரை வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.</p><h2>நாகர்கோவில்-கோவை</h2><p>நாகர்கோவில்-கோவை ரெயில் (வ.எண்.16321) வருகிற 17-ந் தேதி, 22. 25, 27 மற்றும் 29-ந்தேதிகளில் விருதுநகரில் இருந்து காரைக்குடி வழி யாக இயக்கப்படும்.</p><p>கோவை-நாகர்கோவில் ரெயில் (வ.எண்.16322) அடுத்த மாதம் 3-ந் தேதி கரூரில் இருந்து திருச்சி, காரைக்குடி, மானாமதுரை வழியாக விருதுநகர் வந்து சேரும்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் இன்று கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-camp-for-fingerprint-registration-at-all-ration-shops-across-tamil-nadu-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-camp-for-fingerprint-registration-at-all-ration-shops-across-tamil-nadu-today#comments</comments><guid isPermaLink="false">bf34e3a1-b057-4380-a85e-d45af163f772</guid><pubDate>Sat, 08 Aug 2026 03:45:04 +0000</pubDate><atom:updated>2026-08-08T03:45:04.454Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Ration shop,ரேசன் கடை,ration shops,ரேசன் கடைகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/r1hha5vf/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/r1hha5vf/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் வருகிற இன்று,. நாளையும் இகேஒய்சி (eKYC) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><h2>இன்றும், நாளையும் முகாம்</h2><p>தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் விரல் ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை (eKYC) மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதும் இடையூறுமின்றி இப்பணியினை செய்திட அறிவுறுத்தப்பட்டு கடந்த அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் விரல் ரேகை சரிபார்ப்பு (eKYC) பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 95.86% eKYC பணியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>இந்த eKYC பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு 08.08.2026 (இன்று) மற்றும் 09.08.2026 (நாளை) ஆகிய நாட்களில் தமிழகத்திலுள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும் சிறப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.</p><h2>கைரேகை பதிவு</h2><p>ஆகவே, நியாயவிலைக்கடைகளில் கைரேகை பதிவு (eKYC) செய்யப்படாமல் விடுபட்டுள்ள குடும்ப <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அட்டைதாரர்கள் </a>கைரேகை விரல் (eKYC) பதிவு செய்ய வருகின்ற 08.08.2026 மற்றும் 09.08.2026 ஆகிய இரண்டு நாட்கள் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும் நடைபெறும் சிறப்பு முகாமினை பயன்படுத்தி விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் eKYC பதிவினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருவண்ணாமலை கோவிலுக்கு இன்று அமித்ஷா வருகை: 3 அடுக்கு பாதுகாப்புடன் போலீசார் குவிப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/amit-shah-to-visit-tiruvannamalai-temple-today-heavy-police-deployment-with-three-tier-security</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/amit-shah-to-visit-tiruvannamalai-temple-today-heavy-police-deployment-with-three-tier-security#comments</comments><guid isPermaLink="false">d24184a8-7149-49f4-9422-d86e4cf73089</guid><pubDate>Sat, 08 Aug 2026 03:42:44 +0000</pubDate><atom:updated>2026-08-08T03:42:44.670Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,அமித்ஷா,தமிழகம்,திருவண்ணாமலை,Amith Shah,Tiruvannamalai,amitshah,மத்திய மந்திரி அமித்ஷா,கிரிவலப்பாதை,போலீசார் குவிப்பு,அண்ணாமலையார் கோவில்,Thiruvannamalai Temple,Thiruvannamalai Arunasaleeswarar Temple,ரமண ஆசிரமம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/f0s61d34/vettaika.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/f0s61d34/vettaika.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை, </p><p>மத்திய மந்திரி அமித்ஷா இன்று திருவண்ணாமலைக்கு வருகிறார். இதனையொட்டி திருவண்ணாமலையில் டிரோன்கள் பறக்க 2 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>அமித்ஷா வருகை</h2><p>மத்திய உள்துறை மந்திரி <a href="https://www.dailythanthi.com/topic/amit-shah">அமித்ஷா</a> தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி மராட்டிய மாநில நிகழ்ச்சிகளை இன்று (சனிக்கிழமை) முடித்தபின் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலைக்கு இன்று மாலை 4.20 மணியளவில் வருகிறார்.</p><h2>அருணாசலேஸ்வரர் கோவில்</h2><p>ஹெலிகாப்டரிலிருந்து இறங்கும் <a href="https://www.dailythanthi.com/topic/amit-shah">அமித்ஷா</a> காரில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ரமண ஆசிரமத்திற்கு செல்கிறார். அங்கு சுமார் 1 மணி நேரம் நடைபெற உள்ள சிறப்பு பூஜையில் பங்கேற்கும் அவர் பின்னர் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார்.</p><p>இதைத்தொடர்ந்து அமித்ஷா மாலை 6 மணியளவில் திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு கார் மூலம் சாலை மார்க்கமாக புதுச்சேரி செல்கிறார்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/d6jgy1k8/ten.jpg" /></figure><h2>ஹெலிகாப்டர் ஒத்திகை</h2><p>இதையொட்டி திருவண்ணாமலையில் பாதுகாப்பு பணிகள் மற்றும் அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் ஹெலிபேடு தயார் செய்யும் பணிகளில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல் துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மற்றும் கிரிவலப்பாதை உண்ணாமலை அம்மன் நகரில் உள்ள ஹெலிபேடுகள் தயார் செய்யப்பட்டு உள்ளது.</p><p>நேற்று இந்த ஹெலிபேடுகளில் மத்திய ரிசர்வ் காவல் படையினர் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் ஹெலிகாப்டரை இறக்கி ஒத்திகை பார்க்கப்பட்டது. மேலும் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த மத்திய உள்துறை மேம்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் கலெக்டர் வந்தனா கார்க் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உதயகுமார் ஆகியோருடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்தனர். தொடர்ந்து துறை சார்ந்த அலுவலர்களுடனும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.</p><h2>ரமண ஆசிரமம்</h2><p>அதன்பின்னர் பாதுகாப்பு அதிகாரிகள் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இருந்து ரமண ஆசிரமம் மற்றும் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு செல்லும் சாலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்து புறப்பட்டு புதுச்சேரிக்கு செல்லும் சாலை மார்க்கம் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் ரமண ஆசிரமம் மற்றும் அருணாசலேஸ்வரர் கோவிலில் மேற்கொள்ளப்பட்டு உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.</p><h2>ஆயிரக்கணக்கான போலீசார்</h2><p>இந்த நிலையில் மேற்படி இடங்கள், ஹெலிபேடு மற்றும் குறிப்பிட்ட மிக முக்கிய நபர் பயணிக்கும் வழியின் சுற்றுப்புறங்களில் டிரோன்கள், ரிமோட் கட்டுப்பாட்டு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>ஆளில்லா வான்வழி வாகனங்களின் அங்கீகரிக்கப்படாத பயன்பாடு மூலம் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படா வண்ணம் பொது பாதுகாப்பின் நலனுக்காகவும், மத்திய உள்துறை மந்திரியின் முழுமையான பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் இன்றும், நாளையும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் வந்தனா கார்க் தெரிவித்து உள்ளார்.</p><p>மத்திய மந்திரி அமித்ஷா இன்று திருவண்ணாமலை வருகையையொட்டி 3 அடுக்கு பாதுகாப்புடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>கோவில்களில் விஐபி தரிசனம்: அறநிலையத் துறை வழிகாட்டுதல் வெளியீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vip-darshan-at-temples-department-of-charities-issues-guidelines</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vip-darshan-at-temples-department-of-charities-issues-guidelines#comments</comments><guid isPermaLink="false">3b0fb329-af74-4299-accc-b084bb0eef40</guid><pubDate>Sat, 08 Aug 2026 03:28:27 +0000</pubDate><atom:updated>2026-08-08T03:28:27.900Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>VIP security,விஐபி தரிசனம்,இந்து சமய அறநிலையத் துறை,Temples of Perumal,VIP,VIPDarshan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/vp1xugq5/temple33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அறநிலையத் துறை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/vp1xugq5/temple33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கோவில்களில் விஐபி தரிசனத்தின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.</p><p>கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வருகையில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை,</p><p>* பக்தர்கள் தரிசனத்துக்கு இடையூறு ஏற்படாதபடி கோவிலில் விஐபிக்களின் வருகையை ஒழுங்குபடுத்த வேண்டும்</p><p>* கோவில்களுக்கு முக்கியப் பிரமுகர்கள் வருகை குறித்து ஒருநாள் முன்னதாகவே நிர்வாகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்</p><p>* முக்கியப் பிரமுகர்களை கோவில் வளாகத்தினுள் புகைப்படம், வீடியோ எடுக்க அனுமதி தரக்கூடாது</p><p>*  விஐபிக்கள் வருகையின்போது கோவிலின் புனிதத்தன்மை, மரபுசார்ந்த விஷயங்கள் பாதிக்கக்கூடாது</p><p>* விஐபிக்களின் வருகை குறித்த வழிகாட்டுதல்களை அனைத்து கோவில்களிலும் பின்பற்ற <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">அறநிலையத் துறை </a>சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மது பாட்டிலுக்கு ரூ.20 உயர்கிறதா..?  சட்டசபையில் மசோதா தாக்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/price-of-liquor-bottle-to-rise-by-rs-20-bill-tabled-in-the-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/price-of-liquor-bottle-to-rise-by-rs-20-bill-tabled-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">5bafde78-0bd3-4268-8a54-6458261f4514</guid><pubDate>Sat, 08 Aug 2026 03:18:32 +0000</pubDate><atom:updated>2026-08-08T03:18:32.731Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,தமிழக சட்டசபை,டாஸ்மாக்,Tasmac,TN Assembly,Assembly Session,மசோதா தாக்கல்,மது பாட்டில்கள்,liquor bottles,சட்டமன்ற கூட்டத்தொடர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/6kr5b30c/vett.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/6kr5b30c/vett.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மதுபானங்கள் மீது ‘சுற்றுச் சூழல் மற்றும் சமூக நலத்தீர்வை’ என்ற புதிய வரியை விதிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு மற்றும் மதுப்பழக்க மீட்புத் திட்டங்களுக்கு இந்த வரி பயன்படுத்தப்பட உள்ளது.</p><h2>20 ரூபாய்</h2><p>தமிழகத்தில், '<a href="https://www.dailythanthi.com/topic/tasmac">டாஸ்மாக்</a>' கடைகள் வாயிலாக, மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் விற்பனைக்கு பின் காலி மது பாட்டில்களை மறுசுழற்சி செய்வதில் பிரச்னை எழுகிறது. இதை கட்டுப்படுத்த புதிதாக வரி விதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. </p><p>இந்நிலையில் தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில் ஒன்றுக்கு, 20 ரூபாய்க்கு மிகாமல், சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத்தீர்வை விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மதிப்புக்கூட்டு வரி சட்டத்தில் திருத்தம் செய்யவும் முடிவு செய்துள்ளது. இதற்காக, மதிப்புக்கூட்டு வரி சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா சட்ட சபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. </p><h2>மறு சுழற்சி முறை</h2><p>தமிழகத்தில் மது விற்கும் வணிகர்கள், இந்த தீர்வை வரி செலுத்த பொறுப்பாகிறார்கள். மதுபான வகைகள், அளவுகளை பொறுத்தும், மதுபானம் அடங்கிய கொள்கலன் அதாவது பாட்டிலின் வகையை பொறுத்தும், வெவ்வேறு கட்டண வீதங்களை குறிப்பிடலாம். இவ்வாறு கிடைக்கும் வருவாயை, மதுபான பாட்டில்களை மறு சுழற்சி முறையில் அப்புறப்படுத்தவும், மறு பயன்பாட்டை எளிதாக்கவும் பயன்படுத்தலாம். </p><h2>வன விலங்குகள் பாதுகாத்தல்</h2><p>மது பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு மற்றும் மதுப்பழக்க மீட்பு திட்டங்களை செயல்படுத்தவும் பயன்படுத்தலாம். மது பழக்க அடிமைத் தனத்தால் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பங்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த பயன்படுத்தலாம். மது அருந்துவதால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களுக்கும் பயன்படுத்தலாம். சூழலியல், காடுகள் மற்றும் வன விலங்குகள் பாதுகாத்தல் மற்றும் மீட்பு பணிகளுக்கும் பயன்படுத்தப்படும். இந்த நோக்கத்துக்காக, 2006ம் ஆண்டு மதிப்புக்கூட்டு வரிச்சட்டத்தில் திருத்தம் செய்யப்படுகிறது.</p><p>முன்னதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் அளித்த விளக்க உரையில் இதுதொடர்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது. </p>]]></content:encoded></item><item><title>நீலகிரி: தேயிலை தோட்டத்தில் சிறுத்தை உலா - தொழிலாளர்கள் பீதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-leopard-wanders-through-tea-estate-workers-in-a-state-of-panic</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-leopard-wanders-through-tea-estate-workers-in-a-state-of-panic#comments</comments><guid isPermaLink="false">8c13fae8-18e7-401a-b1d6-1ed27456688f</guid><pubDate>Sat, 08 Aug 2026 03:03:33 +0000</pubDate><atom:updated>2026-08-08T03:03:33.925Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nilgiris,நீலகிரி,leopard,சிறுத்தை</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/er48cppd/6.gif" width="768"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/er48cppd/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி, </p><p>நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே மேங்கோரேஞ்ச், செம்மன் வயல், கல்லட்டி, இந்திரா நகர், இண்கோநகர், இரும்பு பாலம் உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தை இரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்து ஆடு, மாடுகள், வளர்ப்பு நாய்களை வேட் டையாடி வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மேங்கோ ரேஞ்ச் பகுதியில் சைனி என்பவரது வீட்டின் அருகே உள்ள தேயிலை தோட்டத்தில் சிறுத்தை உலா வந்தது. </p><p>இதனால் வீட்டில் இருந்தவர்கள் பீதி அடைந்தனர். மேலும் தனியார் தேயிலை தொழிற்சாலையில் பணி முடிந்து வீட்டிற்கு புறப்பட்ட தொழிலாளர்களும் அச்சம் அடைந்தனர். எனவே, சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து தேவாலா வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க ரூ.288.97 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-orders-allocation-of-rs-28897-crore-to-provide-uninterrupted-drinking-water-to-the-people</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-orders-allocation-of-rs-28897-crore-to-provide-uninterrupted-drinking-water-to-the-people#comments</comments><guid isPermaLink="false">722e9118-c82f-442f-ae6e-c25e840b436e</guid><pubDate>Sat, 08 Aug 2026 03:03:26 +0000</pubDate><atom:updated>2026-08-08T03:03:26.747Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,குடிநீர்,drinking water,order,நிதி ஒதுக்கீடு,Allocation,வறட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/n51un0yh/100.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தலமைசெயலகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/n51un0yh/100.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவில் இல்லாததாலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவும் கடும் வறட்சி மற்றும் வறண்ட வானிலை காரணமாகவும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.</p><h2>நிதி ஒதுக்கீடு</h2><p>இந்த சூழலில், பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்வதை உறுதி செய்யும் வகையில், போர்க்கால அடிப்படையில் குடிநீர் வினியோகப் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட பணிகளை நிறைவு செய்யவும் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.288.97 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.</p><p>இது தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு தொடர்பான செலவினங்கள், 2026-2027-ம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீட்டில் சேர்க்கப்பட இருக்கிறது. இந்த பணிகள் அனைத்தும் வறட்சி காலங்களில் பொதுமக்களுக்கு தடையின்றி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D">குடிநீர்</a> கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மேட்டூர் அணையின் நீர்மட்டம் 4 நாளில்  4½ அடி உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mettur-dams-water-level-has-risen-by-4-feet-in-four-days</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mettur-dams-water-level-has-risen-by-4-feet-in-four-days#comments</comments><guid isPermaLink="false">7593d240-be97-43b2-ab3c-f611c8d7e7fd</guid><pubDate>Sat, 08 Aug 2026 02:49:28 +0000</pubDate><atom:updated>2026-08-08T02:49:28.061Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur dam,water level,நீர்மட்டம்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/jdk7ojbz/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/jdk7ojbz/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த 4-ந்தேதி இரவு மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 19 ஆயிரத்து 264 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது.</p><p>அதன்படி நேற்று மாலை 4 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 13 ஆயிரத்து 674 கனஅடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் 77.57 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கடந்த 4-ந்தேதி அணையின் நீர்மட்டம் 73.08 அடியாக இருந்தது. கடந்த 4 நாட்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 4½ அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>நீண்ட தூர அரசு பேருந்துகளில் ரூ.10-க்கு ‘பயணி’ குடிநீர் பாட்டில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/passenger-drinking-water-bottle-for-rs10-in-long-distance-government-buses</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/passenger-drinking-water-bottle-for-rs10-in-long-distance-government-buses#comments</comments><guid isPermaLink="false">bd1a8e28-3043-4311-af3d-dddf9b61a954</guid><pubDate>Sat, 08 Aug 2026 02:47:13 +0000</pubDate><atom:updated>2026-08-08T02:47:13.083Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Government bus,குடிநீர்,water,அரசு பேருந்து,bus passengers,விஜய் தமிழன் பார்த்திபன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/eqakfqyw/99.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அரசு பேருந்து]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/eqakfqyw/99.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் நீண்ட தூர பேருந்துகளில் பயணிகளுக்கு ரூ.10-க்கு சுத்திகரிக்கப்பட்ட ‘பயணி’ குடிநீர் பாட்டில் வழங்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. சென்னை பல்லவன் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D">விஜய் தமிழன் பார்த்திபன்</a> திட்டத்தை தொடங்கி வைத்தார்.</p><p>தமிழகத்தில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 1,080-க்கும் மேற்பட்ட விரைவு மற்றும் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். கடந்த 2013-ஆம் ஆண்டு ‘அம்மா குடிநீர்’ திட்டத்தின் கீழ் ரூ.10-க்கு ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில் விற்பனை செய்யப்பட்டது. கும்மிடிப்பூண்டி அரசு குடிநீர் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு உள்ளிட்ட காரணங்களால் 2021-ஆம் ஆண்டு இத்திட்டம் நிறுத்தப்பட்டது.</p><h2>நீண்டதூர பேருந்து</h2><p>இந்நிலையில், நீண்டதூரப் பேருந்து பயணிகளின் வசதிக்காக ‘பயணி’ என்ற பெயரில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ரூ.10-க்கு வழங்கும் திட்டம் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் நீண்டதூர பேருந்துகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை: முதல்-அமைச்சர் விஜய் இன்று நடத்தும் எம்.பி.க்கள் கூட்டத்தில் தி.மு.க.பங்கேற்குமா?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/constituency-delimitation-will-the-dmk-participate-in-the-meeting-of-mps-convened-by-chief-minister-vijay-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/constituency-delimitation-will-the-dmk-participate-in-the-meeting-of-mps-convened-by-chief-minister-vijay-today#comments</comments><guid isPermaLink="false">1e894143-e639-48a2-a90b-0a93617c83c0</guid><pubDate>Sat, 08 Aug 2026 02:37:03 +0000</pubDate><atom:updated>2026-08-08T02:37:03.355Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,திமுக,தமிழகம்,உதயநிதி ஸ்டாலின்,தமிழக சட்டசபை,எம்.பி.க்கள் கூட்டம்,தொகுதி மறுசீரமைப்பு,முதல்-அமைச்சர் விஜய்,சட்டசபை கூட்டத் தொடர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/k8hr8bih/solla.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய், உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/k8hr8bih/solla.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a>, இன்று நடத்தும் எம்.பி.க்கள் கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்குமா? என்பது குறித்து சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்தார்.</p><h2>தொகுதி மறுவரையறை</h2><p>தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> இன்று நடத்தும் எம்.பி.க்கள் கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்குமா? என்ற கேள்வி சட்டமன்றத்தில் எழுந்தது. </p><p>இதுபற்றிய விவாதம் வருமாறு:-</p><p><strong><ins>தி.மு.க. உறுப்பினர் ரகுபதி:-</ins></strong>  </p><p>இந்த அரசு மத்திய அரசிடம் சரண்டராகிவிட்டது என்பதற்கான எடுத்துக்காட்டு 'வெற்றி 150 நாட்கள்' திட்டம். 'விபி ஜி ராம் ஜி' என்ற மத்திய அரசின் திட்டத்தை நாங்கள் வேண்டாம் என்றோம். இதனால் அப்போது எங்களுக்கு ரூ.3,591 கோடி வரவில்லை. எனினும் உங்களிடம் (மத்திய பா.ஜனதா அரசு) எந்த காலத்திலும் பணியமாட்டோம் என்று சொல்லி விட்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்தான் வேண்டும் என்று வலியுறுத்தினோம். 'விபி ஜி ராம் ஜி' திட்டத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் நீங்கள் தேர்தலில் எப்படி சத்தமே இல்லாமல் வந்தீர்களோ, அதே போல் சத்தமே இல்லாமல் இதை செய்துள்ளீர்கள்.</p><h2>தி.மு.க. எம்.பி.க்கள் பங்கேற்பார்களா?</h2><p><strong><ins>அமைச்சர் ஆதவ் அர்ஜுனா:-</ins></strong> </p><p>மத்திய அரசிடம் அமைதியாக சரண்டராகி விட் டோம் என்று உறுப்பினர் சொல்கிறார். தமிழ்நாட்டின் பிரச்சினை, தென்மாநிலங்களின் பிரச்சினையான தொகுதி மறுவரையறை குறித்து முதல்-அமைச்சர் அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை நாளை (இன்று) கூட்டி இருக்கிறார். இந்த கூட்டத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் கலந்து கொள்வார்களா? இல்லையா? என்பதை எதிர்க்கட்சி தலைவரிடம் கேட்கிறேன். (மேலும் ஒரு தகவலை அமைச்சர் கூறினார். அதை அவைக்குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்கினார்).</p><p><strong><ins>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்:-</ins></strong> </p><p>தொகுதி மறுவரையறை பிரச்சினை குறித்து இந்தியாவிலேயே முதலில் பேசியது தி.மு.க. தான், எங்களுடைய தலைவர்தான். சென்ற ஆண்டு தென்மாநிலங்களை சேர்ந்த அனைத்து முதல்-மந்திரிகளையும் சென்னைக்கு வரவழைத்து மிகப்பெரிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி, தொகுதி மறுவரையறையை எதிர்த்து இந்தியாவிலேயே முதல் முதலாக எங்களுடைய தலைவர்தான் குரல் கொடுத்தார்.</p><p><ins>இந்த விவகாரத்தில் அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்டுகிறீர்கள். இதற்கு சரியான முடிவை எங்களுடைய தலைவர் ஆலோசனை செய்து எடுப்பார்</ins>.</p><p><strong><ins>அமைச்சர் ஆனந்த்:-</ins></strong> </p><p>சென்ற ஆட்சியில் 2026-27-ம் இடைக்கால பட்ஜெட்டில் ரூ.3 ஆயிரம் கோடி 'விபி ஜி ராம் ஜி' திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டது. சென்ற ஆட்சியில் இந்த திட்டத்தை எதிர்க்கவில்லை.</p><p>இவ்வாறு விவாதம் நடைபெற்றது.</p>]]></content:encoded></item><item><title>செங்கோட்டை-மயிலாடுதுறை, நாகர்கோவில்-கோவை ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-sengottaimayiladuthurai-and-nagercoilcoimbatore-train-services</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-sengottaimayiladuthurai-and-nagercoilcoimbatore-train-services#comments</comments><guid isPermaLink="false">de0ec9cc-d225-4503-9856-0d68f8645993</guid><pubDate>Sat, 08 Aug 2026 02:28:25 +0000</pubDate><atom:updated>2026-08-08T02:28:25.234Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,செங்கோட்டை,Rail Transport,ரெயில் போக்குவரத்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/ia87rk9z/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/ia87rk9z/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,  </p><p>செங்கோட்டை-மயிலாடுதுறை ரெயில் (வ.எண்.16848) இன்று முதல் 11-ந் தேதி வரை மற்றும் 13-ந் தேதி, 20, 27-ந் தேதிகளில் விருதுநகரில் இருந்து மதுரைக்கு பதிலாக மானாமதுரை வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். </p><p>நாகர்கோவில்-கோவை ரெயில் (வ.எண்.16321) வருகிற 17-ந் தேதி. 22, 25, 27 மற்றும் 29-ந்தேதிகளில் விருதுநகரில் இருந்து காரைக்குடி வழியாக இயக்கப்படும். கோவை-நாகர்கோவில் ரெயில் (வ.எண்.16322) அடுத்த மாதம் 3-ந் தேதி கரூரில் இருந்து திருச்சி, காரைக்குடி, மானாமதுரை வழியாக விருதுநகர் வந்து சேரும்.</p>]]></content:encoded></item><item><title>பெரம்பூர்: கார் டிரைவரை கத்தியால் வெட்டிய 4 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/perambur-4-arrested-for-stabbing-car-driver</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/perambur-4-arrested-for-stabbing-car-driver#comments</comments><guid isPermaLink="false">d59d10c1-90c6-4db8-a431-34fd94432d15</guid><pubDate>Sat, 08 Aug 2026 02:24:48 +0000</pubDate><atom:updated>2026-08-08T02:24:48.235Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,கைது,car driver,கார் டிரைவர்,பெரம்பூர்,Perambur,arreste</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/men26sf9/92.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/men26sf9/92.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பெரம்பூர், </p><p>முன்விரோதம் காரணமாக கார் டிரைவரை கத்தியால் வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>முன்விரோதம்</h2><p>சென்னை ஏழுகிணறு தையப்பன் தெருவைச் சேர்ந்தவர் முகம்மது செரிப் (வயது 47). கார் டிரைவரான இவருக்கும், மண்ணடி இப்ராகிம் தெருவைச் சேர்ந்த சாதிக் அலி (45) என்பவருக்கும் இடையே <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">முன்விரோதம் </a>இருந்து வந்தது. நேற்று முன்தினம் காலை முகம்மது செரிப் தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.</p><p>அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர், அவரை வழிமறித்து, சாதிக் அலி குடும்பத்தினரிடம் ஏன் பிரச்சினை செய்கிறாய்? என கேட்டு கத்தியால் அவரை சரமாரியாக வெட்டியதுடன், கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பிச்சென்றனர்.</p><h2>கைது</h2><p>இதில் பலத்த காயமடைந்த முகம்மது செரிப், சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் முத்தியால்பேட்டை போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் சம்பவம் தொடர்பாக சாதிக் அலி, பைசல் ரகுமான் (32), மைதீன் (37), அப்துல் காசிம் (35) ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொருவரை தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>17-ந்தேதி முதல் ஆன்லைன் பத்திரப்பதிவு கட்டாயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/online-document-registration-becomes-mandatory-from-the-17th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/online-document-registration-becomes-mandatory-from-the-17th#comments</comments><guid isPermaLink="false">f4e3bec0-a048-400f-af93-1b3446a7c449</guid><pubDate>Sat, 08 Aug 2026 02:22:44 +0000</pubDate><atom:updated>2026-08-08T02:22:44.109Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பத்திரப்பதிவு,Document Registration,ஆன்லைன் பத்திரப்பதிவு,Online Document Registration</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/8pcea7jp/3.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/8pcea7jp/3.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>தமிழகத்தில் பத்திரப்பதிவு பணிகளுக்காக, 'ஸ்டார் 3.0' மென் பொருள் அறிமுகமாகி உள்ளது. இதன்படி, புதிய திட்டங்களில் வீடு, மனை விற்பனைக்கான பத்திரங்களை, சார் - பதிவாளர் அலுவலகம் செல்லாமல் பதிவு செய்து கொள்ளலாம். இது தொடர்பாக கட்டுமான நிறுவனங்களுக்கு, பதிவுத்துறை தலைவர் அருண் சுந்தர் தயாளன் எழுதிய கடிதம் பின்வருமாறு;</p><p>புதிய திட்டங்களில் வீடு, மனை விற்பனை பத்திரங்களை, ஆக., 17 முதல் ஆன்லைன் முறையில் மட்டுமே பதிவு செய்ய முடியும்; 'மேனுவல்' முறையில் சார் - பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது. இதன்படி வீடு, மனை வாங்குவோர், சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவன அலுவலகத்தில் இருந்தபடியே பத்திரப்பதிவு செய்யலாம். இதற்காக அந்த அலுவலகங்களில், குறிப்பிட்ட சில வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். </p><p>* பத்திரப்பதிவுக்காக, 'வெப் கேமரா' வாயிலாக புகைப்படம் எடுக்கும் இடத்தில், பின்னணி திரை தெளிவாக, எவ்வித படங்களும் இன்றி இருக்க வேண்டும் </p><p>* பத்திரப்பதிவு செய்வோரை படம் பிடிப்பதற்கு ஏதுவாக, தரமான, 'வெப் கேமரா' இருக்க வேண்டும்.</p><p>* சொத்து விற்பவர், வாங்குபவர் விரல் ரேகை மற்றும் 'பயோமெட்ரிக்' விபரங்களை பதிவு செய்ய, பதிவுத்துறை மென்பொருளுடன் ஒத்துப்போகக்கூடிய கருவியை அமைக்க வேண்டும்.</p><p>* கருவிழி பதிவுக்கான கருவிகள் நவீன முறையில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.</p><p>* பத்திரப்பதிவு நடக்கும் இடத்தில், 100 எம்.பி.பி.எஸ்., வேகத்தில் இணையதள சேவை இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.</p><p>* பதிவுத்துறை இணையதளத்தில், 'லாக் இன்' எனப்படும் நுழைவு வசதியை முன்கூட்டியே ஏற்படுத்தி இருக்க வேண்டும்.</p><p>* கட்டுமான நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள், நிதி நிறுவனங்கள், வங்கிகள் ஆகியோர், இதற்கான வசதிகளை உரிய முறையில் ஏற்படுத்த வேண்டும். ஆன்லைன் பத்திரப்பதிவு வெற்றிகரமாக நடக்க, அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரூ.100 கோடி மதிப்பிலான பழனி கோவில் நில மோசடி: கைதானவர் சிறையில் உயிரிழப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-100-crore-palani-temple-land-scam-arrested-individual-dies-in-prison</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-100-crore-palani-temple-land-scam-arrested-individual-dies-in-prison#comments</comments><guid isPermaLink="false">f3c4dba4-1377-41a9-aaec-3d317729adba</guid><pubDate>Sat, 08 Aug 2026 02:15:51 +0000</pubDate><atom:updated>2026-08-08T02:15:51.229Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,பழனி,தமிழகம்,Madurai,உயிரிழப்பு,Palani,Palani temple,நில மோசடி,பழனி கோவில்,Land fraud case,மதுரை சிறை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/zcdxfthe/ara.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/zcdxfthe/ara.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p>ரூ.100 கோடி மதிப்பிலான பழனி கோவில் நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் என்பவர் உயிரிழந்தார்.</p><h2>மோசடி பத்திரப்பதிவு</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/palani">பழனி கோவில்</a> அடிவாரம் பகுதியில் தண்டபாணி சுவாமிகள் மடத்தின் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் உள்ளது.</p><p>இந்த நிலம் கடந்த மாதம் 6-ந்தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில், தனி நபர்களுக்கு ரூ.2 கோடிக்கு கிரையமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது.</p><p>தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த மோசடி தொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் நிலத்தை விற்பனை செய்த விழுப்புரத்தைச் சேர்ந்த ஆசிரியர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை (60), சேதுபதி (67) அவர்களுக்கு உதவிய பழனி கவுண்டன்குளம் பகுதியை சேர்ந்த வக்கீல் அன்வர்தீன் (65) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து கடந்த 3 நாட்களாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.</p><h2>நேரில் விசாரணை</h2><p>அதேநேரம் இந்த வழக்கில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் நெஞ்சுவலி காரணமாக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதனால் அவரை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்த முடியவில்லை. இதையடுத்து மாஜிஸ்திரேட் பாக்கியராஜ் அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் வந்து ஜஸ்டின் மணிகண்டனிடம் விசாரணை நடத்தினார். பின்னர் அவரை வருகிற 21-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுச்சென்றார்.</p><h2>நீதிமன்ற காவல்</h2><p>திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஜஸ்டின் மணிகண்டனுக்கு 2 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட இருக்கிறது. அதன் பிறகு அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டால் மதுரை சிறைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.</p><p>இதனிடையே ஆசிரியர் முருகதாஸ், சேதுபதி, அன்வர்தீன் ஆகியோர் தரப்பில் ஜாமீன் கேட்டு திண்டுக்கல் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுக்களை தள்ளுபடி செய்து நேற்று கோர்ட்டு உத்தரவிட்டது.</p><p>இதையடுத்து மாலையில் ஆசிரியர் முருகதாஸ் உள்பட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 12-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் பாக்கியராஜ் உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.</p><h2>உயிரிழப்பு</h2><p>இந்நிலையில் பழனி கோவில் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அன்வர்தீன் என்பவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. </p><p>மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது, வழியில் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. </p>]]></content:encoded></item><item><title>நில வழிகாட்டி மதிப்புகளை 60% வரை உயர்த்த கிராம வாரியாக பட்டியல் தயாரிப்பு - பத்திரப்பதிவு வருவாயை அதிகரிக்க நடவடிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/preparation-of-village-wise-list-to-hike-guideline-values-by-up-to-60-move-to-boost-registration-revenue</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/preparation-of-village-wise-list-to-hike-guideline-values-by-up-to-60-move-to-boost-registration-revenue#comments</comments><guid isPermaLink="false">e2b457fe-1615-4354-a430-defd7a617ea3</guid><pubDate>Sat, 08 Aug 2026 02:11:57 +0000</pubDate><atom:updated>2026-08-08T02:11:57.968Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பத்திரப்பதிவு,revenue,வருவாய்,Registration,வழிகாட்டி மதிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/q1bapxi7/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/q1bapxi7/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் கடந்த 2012-ம் ஆண்டுக்கு பின், வழிகாட்டி மதிப்புகள்(Guideline Value) ஒட்டு மொத்த மொத்த அளவில் சீரமைக்கப்படவில்லை. இந்நிலையில், தமிழக நிதிநிலை குறித்து, சமீபத்தில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. அப்போது, நில வழிகாட்டி மதிப்புகளில் காணப்படும் முரண்பாடுகளால், வருவாய் கிடைப்பதில் கசிவு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், பத்திரப்பதிவில் வருவாய் கசிவு ஏற்படும் வழிகளை சரிசெய்ய, பதிவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டது.</p><p>அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் அடிப்படையில், வழிகாட்டி மதிப்புகளை சந்தை நிலவரத்துக்கு ஏற்ப சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதனால், நில வழிகாட்டி மதிப்பு சீரமைப்பு அறிக்கை அளிக்க, சார் பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-</p><p>“தமிழக அரசின் உத்தரவுப்படி, வழிகாட்டி மதிப்பு சீரமைப்புக்கான பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. கிராம வாரியாக தற்போதைய மதிப்பு, உயர்த்தப்பட வேண்டிய புதிய மதிப்பு விவரங்கள், பட்டியல் வடிவில் பெறப்படுகின்றன. இதன்படி, நகர்ப்புற வளர்ச்சி அடிப்படையில் மாநகராட்சிகளில், 60 சதவீதம் வரை வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. இதற்கு அடுத்தபடியாக நகராட்சிகள், பேரூராட்சிகளில் அவை அமைந்துள்ள பகுதிகளின் தன்மை அடிப்படையில், 50 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்பு உள்ளது.</p><p>நகர்ப்புற வளர்ச்சி தாக்கம் இல்லாத ஊரக பகுதிகளில், 30 சதவீதம் வரை வழிகாட்டி மதிப்புகள் திருத்தப்பட உள்ளன. அத்துடன் விவசாய நிலங்களின் குறைந்தபட்ச விலை மதிப்பு தற்போது, 2 முதல் 5 லட்சம் ரூபாய் வரை உள்ளது. இதை, 10 முதல் 15 லட்சம் ரூபாய் வரை உயர்த்துவதற்கான பரிந்துரையும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டுதான் தற்போது பத்திரப்பதிவு வருவாய் இலக்கு, 35,000 கோடி ரூபாயாக திருத்தி அமைக்கப்பட்டு உள்ளது.” </p><p>இவ்வாறு கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>என்ஜினீயரிங் 2-ம் சுற்று கலந்தாய்வு: 79,403 மாணவர்களுக்கு தற்காலிக ஆணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/engineering-second-round-counseling-provisional-allotment-orders-for-79403-students</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/engineering-second-round-counseling-provisional-allotment-orders-for-79403-students#comments</comments><guid isPermaLink="false">70e89781-9b18-4c6a-8733-c8ddbb9332c3</guid><pubDate>Sat, 08 Aug 2026 02:03:38 +0000</pubDate><atom:updated>2026-08-08T02:03:38.091Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>என்ஜினீயரிங்,Engineering College,என்ஜினீயரிங் கலந்தாய்வு,பொறியியல் கல்லூரிகள்,engineering counseling,என்ஜினீயரிங்  கலந்தாய்வு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/49j69h8r/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/49j69h8r/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதில் 2-ம் சுற்று கலந்தாய்வில் பங்கேற்ற 79,403 மாணவ-மாணவிகளுக்கு பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான தற்காலிக இட ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டுள்ளது.</p><h2>முதல் சுற்றில் 28,979 பேருக்கு இடம்</h2><p>பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த 13-ம் தேதி தொடங்கியது. பொதுப்பிரிவினருக்கான முதல் சுற்று கலந்தாய்வு ஜூலை 20-ம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை நடைபெற்றது.</p><p>முதல் சுற்றில் பொதுப்பிரிவைச் சேர்ந்த 26,802 மாணவ-மாணவிகளுக்கும், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் 2,177 மாணவ-மாணவிகளுக்கும் என மொத்தம் 28,979 பேருக்கு பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.</p><h2> 2-ம் சுற்று கலந்தாய்வு</h2><p>இதைத்தொடர்ந்து பொறியியல் 2-ம் சுற்று கலந்தாய்வு கடந்த 3-ம் தேதி தொடங்கியது. இதில் 93,117 மாணவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.</p><p>அழைக்கப்பட்ட மாணவர்கள் கடந்த 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை தங்களுக்கு விருப்பமான கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்தனர். இதையடுத்து, அவர்கள் தேர்வு செய்த விருப்பங்களின் அடிப்படையில் தற்காலிக இட ஒதுக்கீடு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.</p><h2>79,403 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடு</h2><p>2-ம் சுற்று கலந்தாய்வில் பொதுப்பிரிவைச் சேர்ந்த 68,388 மாணவர்களுக்கும், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் 11,015 மாணவர்களுக்கும் என மொத்தம் 79,403 மாணவ-மாணவிகளுக்கு பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான தற்காலிக<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> இட ஒதுக்கீடு </a>ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.</p><h2>இன்று மாலை 5 மணி வரை அவகாசம்</h2><p>தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிக இட ஒதுக்கீட்டை மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும். இதற்காக இன்று மாலை 5 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.</p><p>மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இறுதி இட ஒதுக்கீடு ஆணை நாளை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்று குடிநீர் வாரிய குறை தீர்க்கும் கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-supply-board-grievance-redressal-meeting-in-chennai-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-supply-board-grievance-redressal-meeting-in-chennai-today#comments</comments><guid isPermaLink="false">59b97947-002a-433a-af40-189a8c8bebd7</guid><pubDate>Sat, 08 Aug 2026 01:57:46 +0000</pubDate><atom:updated>2026-08-08T01:57:46.029Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Meeting,குறை தீர்க்கும் கூட்டம்,சென்னை குடிநீர் வாரியம்,Water Supply Board</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/rzyas0dg/98.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ குடிநீர் வாரிய குறை தீர்க்கும் கூட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/rzyas0dg/98.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னையில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ஒவ்வொரு பகுதி அலுவலகங்களிலும் ஒரு மேற்பார்வை என்ஜினீயர் தலைமையில்<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D"> குறை தீர்க்கும் கூட்டம்</a> நடைபெறும். இதுதொடர்பாக, சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><h2>குறை தீர்க்கும் கூட்டம்</h2><p>சென்னை குடிநீர் வாரியம் சார்பில் இந்த மாதத்துக்கான குறை தீர்க்கும் கூட்டம் இன்று 15 மண்டலங்களில் உள்ள குடிநீர் வாரிய அனைத்து பகுதி அலுவலகங்களிலும் நடை பெறுகிறது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ஒவ்வொரு பகுதி அலுவலகங்களிலும் ஒரு மேற்பார்வை என்ஜினீயர் தலைமையில் கூட்டம் நடைபெறும்.</p><p>இதில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர், கழிவுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், குடிநீர், கழிவு நீர் வரி மற்றும் கட்டணங்கள், நிலுவையில் உள்ள குடிநீர், கழிவுநீர் புதிய இணைப்புகள் தொடர்பான சந்தேகங்களை மனுக்கள் வாயிலாக தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>