<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 29 Aug 2026 19:28:19 +0000</lastBuildDate><item><title>
நாகை:  வேளாங்கண்ணி பேராலய திருவிழாவில் வெடித்து சிதறிய ஹீலியம் பலூன்; 2 பேர் படுகாயம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nagai-velankanni-basilica-festival-helium-balloon-explosion-two-injured</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nagai-velankanni-basilica-festival-helium-balloon-explosion-two-injured#comments</comments><guid isPermaLink="false">e8fcdf64-e84b-4d52-b622-2dfac3bcda63</guid><pubDate>Sat, 29 Aug 2026 19:02:34 +0000</pubDate><atom:updated>2026-08-29T19:02:34.412Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நாகை,Nagai,Velankanni,வேளாங்கண்ணி,பலூன்,balloons</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/819i47uj/ndcfc.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாகை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/819i47uj/ndcfc.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>நாகை</p><p>நாகை வேளாங்கண்ணி பேராலய திருவிழாவில் ஹீலியம் பலூன் வெடித்து சிதறியதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.</p><p>நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. 'கீழ்திசை நாடுகளின் லூர்து நகரம்' என அழைக்கப்படும் இங்கு ஆண்டுதோறும் பெருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.</p><p>அதன்படி, இந்த ஆண்டுக்கான பெருவிழா நேற்று (சனிக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மாலை 5.45 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை புனிதம் செய்து வைத்த பின், கொடி ஊர்வலம் புறப்பட்டது. பின்னர், கொடிக்கம்பத்தில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் கொடி ஏற்றினார்.</p> <h2>ஹீலியன் பலூன்</h2><p>இந்த நிலையில், வேளாங்கண்ணி கொடியேற்ற திருவிழாவில் பட்டாசுகள் பட்டு பெரிய அளவிலான அலங்கார ஹீலியன் பலூன் வெடித்து சிதறியது.  இதில் பக்தர்கள் மத்தியில் தீப்பற்றி எரிந்தபடி பலூன் விழுந்தது.  இந்த சம்பவத்தில் சென்னையை சேர்ந்த இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.</p><p>உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் திருவிழாவில் பக்தர்கள் இடையே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.</p> ]]></content:encoded></item><item><title>ரெயில் நிலையங்களில் குப்பை போட்டால் இனி ரூ.1,000 அபராதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fine-of-rs-1000-for-littering-at-railway-stations</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fine-of-rs-1000-for-littering-at-railway-stations#comments</comments><guid isPermaLink="false">5a70b088-ff67-4bdc-8f27-e65ae0446080</guid><pubDate>Sat, 29 Aug 2026 16:33:43 +0000</pubDate><atom:updated>2026-08-29T16:33:43.674Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>குப்பை,அபராதம்,Railway Stations,ரெயில் நிலையங்கள்,fine collection,attraction</media:keywords><media:content height="768" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/fiiyyrmp/train-fine.jpg" width="1366"><media:title type="html"><![CDATA[ ரெயில் நிலையங்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில் நிலையங்களில் குப்பை போட்டால் இனி ரூ.1,000 அபராதம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/fiiyyrmp/train-fine.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">ரெயில் நிலையங்கள்</a> மற்றும் ரெயில் பெட்டிகளில் கண்ட இடங்களில் குப்பை போடுபவர்களுக்கான அபராத தொகையை ரூ.1,000 ஆக உயர்த்தி ரெயில்வே நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.</p> <h2>ரூ.500 அபராதம்</h2><p>இந்திய ரெயில்வேயை தூய்மையாக வைத்திருக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த 2012-ம் ஆண்டு முதல் ரெயில்வே விதியை மீறி ரெயில் நிலையங்கள், ரெயில் பெட்டிகள் மற்றும் ரெயில்வே வளாகங்களில் கண்ட இடங்களில் குப்பை போடுபவர்கள் மற்றும் எச்சில் துப்புபவர்களுக்கு ரூ.500 அபராதமாக விதிக்கப்பட்டு வந்தது. ஆனாலும், ரெயில் நிலைய பகுதிகளில் குப்பை போடும் சம்பவங்கள் குறைந்தபாடில்லை. பயணிகள் பலர் தொடர்ந்து பொது இடங்களில் குப்பைகளை வீசி வந்தனர்.</p><h2>அபராதம் இரட்டிப்பு</h2><p>இதனால், ரெயில்வே வளாகங்களை தூய்மையாக பராமரிப்பதில் பெரும் சவால் நீடித்து வந்தது. இதையடுத்து, குப்பை போடுபவர்கள் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்த ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதன் ஒருபகுதியாக, குப்பை போடுவோருக்கான அபராதத் தொகையை இரட்டிப்பாக்க தீர்மானிக்கப்பட்டது. அந்தவகையில், இனி ரெயில் நிலைய பகுதிகள் மற்றும் ரெயில் பெட்டிகளில் விதிகளை மீறி குப்பை போடுபவர்களுக்கு ரூ.1,000 <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">அபராதம்</a> விதிக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.</p><h2>அரசிதழில் வெளியீடு</h2><p>கடந்த ஜூன் மாதம் 20-ந்தேதி முதல் அறிவிக்கப்பட்ட இந்த அபராத தொகை உயர்வு, தற்போது மத்திய ரெயில்வே துறை சார்பில் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், பயணிகள் அனைவரும் ரெயில்வே வளாகங்களை தூய்மையாக வைத்திருக்க ஒத்துழைக்க வேண்டும் என்றும், விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரெயில்வே அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பெட்ரோல் பங்க் ஊழியர் தற்கொலை: அதிர்ச்சியில் தாய் எடுத்த விபரீத முடிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/petrol-bunk-employees-suicide-mother-takes-drastic-step-in-shock</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/petrol-bunk-employees-suicide-mother-takes-drastic-step-in-shock#comments</comments><guid isPermaLink="false">c60de6a1-6736-4f01-8dd7-e5a843e31db8</guid><pubDate>Sat, 29 Aug 2026 16:12:02 +0000</pubDate><atom:updated>2026-08-29T16:12:02.303Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Cuddalore,கடலூர்,தற்கொலை,Suicide,பெட்ரோல் பங்க் ஊழியர்,petrol bunk</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/1twaqdlc/ila.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/1twaqdlc/ila.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>குறிஞ்சிப்பாடி, </p><p>குள்ளஞ்சாவடி அருகே பெட்ரோல் பங்க் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியில தாயும் தூக்குப்போட்டு இறந்தார்.</p><h2>பெட்ரோல் பங்க் ஊழியர்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/cuddalore">கடலூர்</a> மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அணுக்கம்பட்டு முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆதிமூலம் மகன் சந்தோஷ்குமார் (வயது 39). இவர் குள்ளஞ்சாவடியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு கவிதா (34) என்ற மனைவியும், லோகேஸ்வரன் (7) என்ற மகனும் உள்ளனர். ஆதிமூலம் ஏற்கனவே இறந்து விட்டதால், அவரது மனைவி ராஜகுமாரி (65) தனது மகன் சந்தோஷ்குமாருடன் வசித்து வந்தார்.</p><p>இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்த சந்தோஷ்குமார் நேற்று முன்தினம் மதியம் வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. </p><h2>தற்கொலை</h2><p>இதனால் பதறிய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நேற்று காலை பல்வேறு இடங்களில் அவரை தேடினர். அப்போது சந்தோஷ்குமார் அதே ஊரில் இருக்கும் முந்திரி தோப்பில் உள்ள மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர், வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.</p><p>இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுபற்றி கவிதா, குள்ளஞ்சாவடி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சந்தோஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><h2>அதே இடத்தில் தாயும் உயிரிழப்பு</h2><p>இதற்கிடையே மகன் இறந்ததை அறிந்து துக்கம் தாங்காமல் பரிதவித்த ராஜகுமாரி நேற்று மதியம் சந்தோஷ்குமார் தற்கொலை செய்து கொண்ட இடத்திற்கு சென்று கதறி அழுதுள்ளார். பின்னர் அவர், தனது மகன் தற்கொலை செய்து கொண்ட மரத்தின் அருகே உள்ள மற்றொரு மரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.</p><p>இந்த பரிதாப சம்பவம் பற்றி அறிந்த குள்ளஞ்சாவடி போலீசார் விரைந்து வந்து ராஜகுமாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><p>மகன், தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மு.க.ஸ்டாலினுக்கு போலீஸ் பாதுகாப்பு குறைப்பு; தி.மு.க.வினர் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-security-reduced-for-mk-stalin-dmk-members-condemn</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-security-reduced-for-mk-stalin-dmk-members-condemn#comments</comments><guid isPermaLink="false">6138e5bc-3cb3-4239-894f-e402bbd73e37</guid><pubDate>Sat, 29 Aug 2026 16:04:48 +0000</pubDate><atom:updated>2026-08-29T16:04:48.684Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,M.K.Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/htkwa5n8/dmk33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/htkwa5n8/dmk33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவியேற்றார். இதைத்தொடர்ந்து அவருக்கு 'இசட் பிளஸ்'பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. ஆட்சி அதிகாரத்தை இழந்தது. கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலினும் தோல்வி அடைந்தார்.</p><p>அவருக்கு தொடர்ந்து '<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D">இசட் பிளஸ்' பாதுகாப்பு </a>வழங்கப்பட்டு வந்தது. தினமும் 55 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு வழங்கி வந்தனர். ஒரு மாநிலத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து, முதல்-அமைச்சர் பதவி பறிபோனால் பாதுகாப்பு நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்படுவது வழக்கம். அந்த வகையில் மு.க.ஸ்டாலினுக்கான பாதுகாப்பு 'இசட்' பிரிவாக குறைக்கப்பட்டுள்ளது.</p><p>சென்னை ஆழ்வார்ப்பேட்டை செனடப் சாலையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்துக்கு செல்லும் 4 நுழைவுவாயில்களில் 20 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். தற்போது 2 நுழைவுவாயில்களில் மட்டும் 10 போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.</p><p>தமிழகத்தில் வசிக்கும் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு நடைமுறை குறித்து உளவுப்பிரிவு போலீசார் அறிக்கை அடிப்படையில் தமிழக அரசு முடிவு எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது மு.க.ஸ்டாலினுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் த.வெ.க. அரசை கண்டித்து தி.மு.க.வினர் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நில மோசடி வழக்கு விசாரணை; போலீஸ் கமிஷனரை  சந்தித்த நடிகை கவுதமி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/land-scam-case-investigation-actress-gauthami-meets-police-commissioner</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/land-scam-case-investigation-actress-gauthami-meets-police-commissioner#comments</comments><guid isPermaLink="false">274fe404-72e0-4ee6-8aad-041449f58345</guid><pubDate>Sat, 29 Aug 2026 16:04:31 +0000</pubDate><atom:updated>2026-08-29T16:04:31.039Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Police Commissioner,போலீஸ் கமிஷனர்,நடிகை கவுதமி,நில மோசடி வழக்கு,Actress Gauthami,Land scam case</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/lqpxfi94/kavuthami.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கவுதமி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/lqpxfi94/kavuthami.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நடிகை கவுதமி நில மோசடி வழக்கு விசாரணை தொடர்பாக போலீஸ் கமிஷனரை  சந்தித்தார்.</p><p>நடிகை கவுதமி, சினிமாவில் சம்பாதித்த பணத்தில் ஸ்ரீபெரும்புதூரில் 46 ஏக்கரில் இடம் வாங்கி இருந்தார். இந்த இடத்தை விற்பனை செய்வதற்கான அதிகாரத்தை காரைக்குடியை சேர்ந்த அழகப்பன் என்பவரிடம் கொடுத்திருந்தார். ஆனால் அவர், ஸ்ரீபெரும்புதூரில் கவுதமி பெயரில் இருந்த ரூ.25 கோடி மதிப்பிலான சொத்தை ரூ.6 கோடிக்கு மட்டும் விற்று மோசடியில் ஈடுபட்டார்.</p><h2>நடிகை கவுதமி உதவி கமிஷனருடன் சந்திப்பு</h2><p>இதுகுறித்து கவுதமி, தகுந்த ஆதராங்களுடன் சென்னை மத்திய குற்றப்பிரிவு நில மோசடி தடுப்பு பிரிவு போலீசாரிடம் கடந்த 2023-ம் ஆண்டு புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அழகப்பன் மற்றும் அவருடைய குடும்பத்தினரை கேரள மாநிலம் திருச்சூரில் வைத்து கைது செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை தொடர்பாக நடிகை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF">கவுதமி</a> சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவு நில மோசடி தடுப்பு பிரிவு உதவி கமிஷனரை இன்று சந்தித்துவிட்டு சென்றார்.</p>]]></content:encoded></item><item><title>நேபாளம் பனிச்சரிவு; முன்கூட்டியே கணித்த பஞ்சாங்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nepal-avalanche-almanack-predicts-in-advance</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nepal-avalanche-almanack-predicts-in-advance#comments</comments><guid isPermaLink="false">68f98dbb-5853-4c72-a297-ae3df1352fe2</guid><pubDate>Sat, 29 Aug 2026 15:36:29 +0000</pubDate><atom:updated>2026-08-29T15:36:29.135Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,பஞ்சாங்கம்,இன்றைய பஞ்சாங்கம்,நேபாளம் வெள்ளம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/7hnllmo9/depth33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
நேபாளம் பனிச்சரிவு]]></media:title><media:description type="html"><![CDATA[ 

நேபாளம் பனிச்சரிவு; முன்கூட்டியே கணித்த பஞ்சாங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/7hnllmo9/depth33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திபெத் பனிப்பாறை விபத்து குறித்த முன்கூட்டிய கணிப்புகள் பாரம்பரிய வாக்கிய பஞ்சாங்கத்தில் இடம்பெற்றுள்ளது சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>மிகப்பெரிய பனிச்சரிவு </h2><p>திபெத்தின் இமயமலை பகுதியில் கடந்த 26-ம் தேதி மிகப்பெரிய பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">நேபாளத்தை தாக்கியது</a>. அங்குள்ள ஆறுகளில் கடு ம்வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 8 மத்திய மாவட்டங்களில் பெரும் பாதிப்பை உண்டாக்கியது. வெள்ளத்துடன் பாறைகள், மண் மரங்கள் உள்ளிட்டவைகள் கலந்து அசுர வேகத்தில் பாய்ந்ததில் வீடுகள், கட்டிடங்கள், வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. இந்த காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் மாயமனார்கள்.</p><h2>4-வது நாளாக தொடரும் மீட்பு பணி</h2><p>இதனையடுத்து நேபாள ராணுவம், போலீசார், தேசிய பேரிடர் படையினர் மீட்புபடையினர் மீட்புபணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேறும் - சகதிகள் முழுவதும் பரவி உள்ள நிலையில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இதில் பலரது உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகிறது.</p><h2>2,301 பேர் பத்திரமாக மீட்பு</h2><p>நேபாளத்தில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நேபாளம் - திபெத்தில் மொத்தம் 2,400க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். நேபாளத்தில் மீட்பு பணிகள் 4-வது நாளாக நடைபெற்று வருகிறது. நேபாள பெருவெள்ளத்தில் 2,301 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணியில் 4,854 காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.</p><h2>முன்கூட்டியே கணித்த பஞ்சாங்கம்</h2><p>இந்தநிலையில், திபெத் பனிப்பாறை விபத்து மற்றும் நேபாள வெள்ளப்பெருக்கு குறித்த முன்கூட்டிய கணிப்புகள் பாரம்பரிய வாக்கிய பஞ்சாங்கத்தில் இடம்பெற்றுள்ளது சமூக வளைதளங்களில்  விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>ஆகஸ்ட் 26, 2026 அன்று திபெத்-நேபாள எல்லையில் இமயமலைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட பனிப்பாறை சரிவு (Glacier Collapse) மற்றும் பெருவெள்ளம் கடும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சூழலில், நடப்பு துர்முகி (2026-2027) தமிழ்ப் புத்தாண்டு வாக்கிய பஞ்சாங்கத்தில் இதற்கான எச்சரிக்கை முன்கூட்டியே எழுதப்பட்டிருந்ததாக ஜோதிடர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.</p><h2>வெள்ளப்பெருக்கு ஏற்படும் </h2><p> "2026 - 2027 ஆண்டுகளில் சீனா அருகில் உள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">திபெத்</a> மலையில் பனிமலை உருகி பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படும்" என்று வாக்கிய பஞ்சாங்கத்தின் பொதுப் பலன்களில் முன்கூட்டியே அச்சிடப்பட்டுள்ளது. </p><p>துல்லியமான பகுதி: விபத்து நடக்கும் பகுதி (திபெத்) மற்றும் பேரழிவின் தன்மை (பனி உருக்கம் மற்றும் வெள்ளம்) ஆகிய இரண்டும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">பஞ்சாங்கக் கணிப்பு</a>டன் பொருந்திப் போவதாக சமூக வலைத்தளங்களில் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.</p><p>புவி வெப்பமயமாதல் காரணமாக இமயமலையில் உள்ள  பனிப்பாறைகள் தொடர்ந்து உருகி வருவதே இத்தகைய தொடர் விபத்துகளுக்கு முக்கியக் காரணம் என சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>அமராவதி அணையில் இருந்து நாளை முதல் நீர் திறப்பு: முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-release-from-amaravathi-dam-to-begin-tomorrow-chief-minister-vijay-orders</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-release-from-amaravathi-dam-to-begin-tomorrow-chief-minister-vijay-orders#comments</comments><guid isPermaLink="false">975a14de-5fc6-4989-a47c-14415ed4bea4</guid><pubDate>Sat, 29 Aug 2026 15:26:42 +0000</pubDate><atom:updated>2026-08-29T15:26:42.002Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,water release,தமிழக அரசு,TN govt,நீர் திறப்பு,அமராவதி அணை,amaravathi dam,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/v6skfqi3/adamva.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/v6skfqi3/adamva.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையிலிருந்து, நீர் திறந்து விட அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.</p><p>இதுதொடர்பாக அரசு செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p><a href="https://www.dailythanthi.com/topic/vijay">தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் </a>அவர்களின் உத்தரவிற்கிணங்க, தற்போது, எல்.நினோ பாதிப்பினால் மழைப் பொழிவு இல்லாததால் அமராவதி ஆற்றில் செயல்படுத்தப்படும் குடிநீர்த் திட்டங்களுக்கு போதுமான நிலத்தடி நீர் உயர்வதற்கும், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட பொதுமக்களின் குடிநீர்த் தேவையினை பூர்த்தி செய்வதற்கும், திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையின் ஆற்று மதகு வழியாக 30.08.2026 முதல் வரை, 07.09.2026 வரை நாளொன்றுக்கு, வினாடிக்கு 1,000 அடி வீதம் 8 நாட்களுக்கும் போதிய மழைப்பொழிவு காரணமாக வரும் நாட்களில் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கும்பட்சத்தில், மேலும் 4 நாட்களுக்கு நாளொன்றுக்கு வினாடிக்கு 1,000 கன அடி வீதம், அமராவதி அணையின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை பொறுத்து, அமராவதி அணையிலிருந்து, நீர் திறந்து விட அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>வடகிழக்குப் பருவமழை: சென்னையில் முன்னெச்சரிக்கைப் பணிகள் குறித்து ஆய்வு..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-review-of-precautionary-measures-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-review-of-precautionary-measures-in-chennai#comments</comments><guid isPermaLink="false">3e94ec67-1d79-40fe-a0ef-3a82472450f6</guid><pubDate>Sat, 29 Aug 2026 15:13:31 +0000</pubDate><atom:updated>2026-08-29T15:13:31.348Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Northeast Monsoon,வடகிழக்குப் பருவமழை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/83orlhyv/Untitled-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/83orlhyv/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியில் மண்டல அளவில் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் முன்னெச்சரிக்கைப் பணிகளை இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சரின், பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணித்து உரிய மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக மண்டல அளவில் அமைச்சர் பெருமக்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலரர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார்கள்.</p><p>இதனைத் தொடர்ந்து, மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் தங்களது மண்டலங்களில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு நடைபெற்று வரும் முன்னெச்சரிக்கை பணிகளை கள ஆய்வு செய்து, பணிகளை விரைவு படுத்தி வருகின்றனர்.</p><h2>மழைநீர் வடிகால் பணிகள்</h2><p>இதன் ஒரு பகுதியாக, இன்று (29.08.2026) திரு.வி..க. நகர் மண்டல கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழகம் மேலாண்மை இயக்குநர் பி.கணேசன், திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு-77க்குட்பட்ட யானைகவுனி சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, வார்டு-73க்குட்பட்ட ஸ்டிபன்சன் சாலை, செங்கை சிவம் பாலம் பகுதியில் உள்ள ஒட்டேரி நல்லா கால்வாயில் உள்ள மோட்டார் பம்புடன் கூடிய மதகு, வார்டு-75க்குட்பட்ட எஸ்எஸ் புரம் பகுதியில் உள்ள ஒட்டேரி நல்லா கால்வாயில் கட்டப்பட்டு வரும் தடுப்புச் சுவர் கட்டும் பணி உள்ளிட்டவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திடவும், பம்புடன் கூடிய மதகினை தயார் நிலையில் வைத்திடவும் அலுவலர்களுக்கு அறிவுத்தினார்.</p><p>அண்ணாநகர் மண்டல <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கண்காணிப்பு </a>அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள சமூக பாதுகாப்புத் திட்ட இயக்குநர் காயத்ரி கிருஷ்ணன், அண்ணாநகர் மண்டலம், வார்டு-103க்குட்பட்ட அண்ணாநகர் ரவுண்டானா பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, வார்டு-99க்குட்பட்ட பிரிக்லின் சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, ஒட்டேரி நல்லா கால்வாயில் தடுப்புச் சுவர் உயர்த்திக் கட்டும் பணி உள்ளிட்டவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வேளாங்கண்ணி கொடியேற்ற திருவிழாவில் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-fire-broke-out-during-the-velankanni-flag-hoisting-festival</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-fire-broke-out-during-the-velankanni-flag-hoisting-festival#comments</comments><guid isPermaLink="false">77f84ce2-fb23-4abc-a3fb-08687df6feb0</guid><pubDate>Sat, 29 Aug 2026 15:08:01 +0000</pubDate><atom:updated>2026-08-29T15:08:01.152Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவிழா,நாகை,Velankanni,வேளாங்கண்ணி,Christian Church</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/48d19z7i/fire33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 

வேளாங்கண்ணி]]></media:title><media:description type="html"><![CDATA[ 
வேளாங்கண்ணி கொடியேற்ற திருவிழாவில் பரபரப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/48d19z7i/fire33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாகை,</p><p>நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. 'கீழ்திசை நாடுகளின் லூர்து நகரம்' என அழைக்கப்படும் இங்கு ஆண்டுதோறும் பெருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். </p><p>அதன்படி, இந்த ஆண்டுக்கான பெருவிழா இன்று (சனிக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மாலை 5.45 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை புனிதம் செய்து வைத்த பின், கொடி ஊர்வலம் புறப்பட்டது. பின்னர், கொடிக்கம்பத்தில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் கொடி ஏற்றினார். </p><p>இந்தநிலையில், <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%20">வேளாங்கண்ணி </a>கொடியேற்ற திருவிழாவில் பட்டாசுகள் பட்டு பெரிய அளவிலான அலங்கார ஹீலியன் பலூன் வெடித்து சிதறியதால் தீ பற்றியதால் கொடியேற்ற திருவிழாவில் பரபரப்பு ஏற்பட்டது.   அதிர்ஷ்டவசமாக பக்தர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை</p><p>உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. </p>]]></content:encoded></item><item><title>சென்னை: குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்ட அரசு ஊழியர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-government-employee-arrested-for-demanding-rs-6000-bribe-for-providing-water-connection</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-government-employee-arrested-for-demanding-rs-6000-bribe-for-providing-water-connection#comments</comments><guid isPermaLink="false">0799b054-3c86-467f-bcb7-17804bfa287e</guid><pubDate>Sat, 29 Aug 2026 15:07:56 +0000</pubDate><atom:updated>2026-08-29T15:07:56.626Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,arrested,லஞ்சம்,government employee,bribe,அரசு ஊழியர் கைது,Water connection,குடிநீர் இணைப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/znlhyajh/38.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/znlhyajh/38.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக ரூ.6 ஆயிரம்  லஞ்சம் கேட்ட அரசு ஊழியரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர்.</p><p>சென்னை மாவட்டம் மாதவரம் அருகே தணிக்காச்சலம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 46). இவர் தனது புதிய வீட்டிற்கு குடிநீர் இணைப்பு பெறுவதற்காக கழிவு நீரகற்று வாரியத்தின் மூலம் விண்ணப்பித்திருந்தார். அப்பகுதியில் குடிநீர் இணைப்பு உதவிப் பொறியாளராக முருகேசன் என்பவர் பணியாற்றி வந்தார். விண்ணப்பத்தை பார்த்து, இந்த வேலையை செய்வதற்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் தருமாறு ஜெயக்குமாரிடம் கேட்டுள்ளார். </p><h2>ரூ.6 ஆயிரம் லஞ்சம்</h2><p>அரசு நிர்ணயித்த தொகையை விட, தனியாக லஞ்சம் கொடுக்க மனமில்லாத ஜெயக்குமார், இதனை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவகத்திற்கு சென்று புகார் அளித்தார். இதன் அடிப்படையில், விசாரணை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் உதவிப் பொறியாளரை கையும், களவுமாக பிடிக்க திட்டம் தீட்டினர். அவர்கள் ரசாயனம் தடவிய ரூ.6 ஆயிரம் பணத்தை ஜெயக்குமாரிடம் கொடுத்து முருகேசனிடம் வழங்கும்படி கூறினர். </p><h2>கைது</h2><p>அந்த பணத்தை ஜெயக்குமார் எடுத்து சென்று அலுவலகத்தில் இருந்த முருகேசனிடம் வழங்கினார். அதை பெற்றவுடன், அங்கு சாதாரண உடையில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அவரை <a href="https://www.dailythanthi.com/topic/arrest-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்தனர். பின்னர், அவரது கைகளில் ரசாயன சோதனை நடத்தியபோது லஞ்சம் பெற்றது அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மு.க.ஸ்டாலின் இசட் பாதுகாப்பு வாபஸ்: தலைவர்களின் பாதுகாப்பில் அரசியல் காழ்ப்புணர்ச்சி கூடாது - நெல்லை முபாரக்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/withdrawal-of-z-security-for-mk-stalin-political-grudges-should-not-affect-leaders-protection-nellai-mubarak</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/withdrawal-of-z-security-for-mk-stalin-political-grudges-should-not-affect-leaders-protection-nellai-mubarak#comments</comments><guid isPermaLink="false">8fa239c6-2f9c-452f-9710-7d6bac2a6f8e</guid><pubDate>Sat, 29 Aug 2026 14:58:04 +0000</pubDate><atom:updated>2026-08-29T14:58:04.270Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,M.K.Stalin,நெல்லை முபாரக்,withdrawal,வாபஸ்,Nellai Mubarak,இசட் பாதுகாப்பு</media:keywords><media:content height="768" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/txpjq9lm/mubark.jpg" width="1366"><media:title type="html"><![CDATA[ நெல்லை முபாரக்]]></media:title><media:description type="html"><![CDATA[ எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/txpjq9lm/mubark.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>​மக்கள் தலைவர்களின் பாதுகாப்பில் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளோ, உள்நோக்கங்களோ துளியும் தலைதூக்கக் கூடாது என்று <a href="https://www.dailythanthi.com/topic/nellai-mubarak">நெல்லை முபாரக்</a> தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><h2>அதிர்ச்சி</h2><p>திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின் </a>இதுவரை வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை குறைத்திருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது.</p><h2>பாதுகாப்பு </h2><p>​ஒரு மாநிலத்தின் மிக முக்கிய அரசியல் தலைவராகவும், பிரதான எதிர்க்கட்சி தலைவராகவும் மக்கள் பணியில் தொடர்ந்து தீவிரமாக இயங்கி வருபவர் மு.க.ஸ்டாலின் பொதுவெளியில் தினமும் ஆயிரக்கணக்கான மக்களை சந்திக்கும் இத்தகைய மக்கள் தலைவர்களின் பாதுகாப்பு என்பது சமரசத்திற்கு அப்பாற்பட்டது.</p><h2>அரசியல் உள்நோக்கம்</h2><p>​சமகால அரசியல் சூழலில் தலைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது இன்றியமையாத தேவையாக உள்ள நிலையில், திடீரென பாதுகாப்பை குறைத்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதோ என்ற நியாயமான சந்தேகத்தை எழ செய்கிறது.</p><h2>அரசியல் காழ்ப்புணர்ச்சி</h2><p>​மக்கள் தலைவர்களின் பாதுகாப்பில் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளோ, உள்நோக்கங்களோ துளியும் தலைதூக்கக் கூடாது. மாற்றுக் கருத்துகள், அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பாற்பட்டு, மு.க.ஸ்டாலின் மக்கள் தொடர்பையும் முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு, அவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த அதே முழுமையான இசட் பிரிவு பாதுகாப்பை தாமதமின்றி மீண்டும் வழங்கிட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>விஜய்-ஐ அடுத்த பிரதமராக முன்னிறுத்தும் தவெகவினர்; தமிழிசை கொடுத்த பதில்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-one-can-even-think-of-another-prime-minister-on-par-with-modi-tamilisai-soundararajan-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-one-can-even-think-of-another-prime-minister-on-par-with-modi-tamilisai-soundararajan-2#comments</comments><guid isPermaLink="false">65bcb932-ab16-4cf8-9cd0-0082b80441a4</guid><pubDate>Sat, 29 Aug 2026 14:46:58 +0000</pubDate><atom:updated>2026-08-29T14:46:58.022Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,பிரதமர் மோடி,PM Modi,தமிழிசை சவுந்தரராஜன்,Tamilisai Soundararajan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/sfa5ucum/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/sfa5ucum/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[   <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/">விஜய் </a>தலைமையிலான தவெக அரசு ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே, நாட்டின்  அடுத்த பிரதமராக விஜய் வருவார் என்று தவெக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் , கட்சி நிர்வாகிகள் சிலர் கூறிவருகின்றனர். இதற்கு தவெக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் விமர்சனம், எதிர் கருத்தை தெரிவித்து வருகிறது.</p><h2>பிரதமர் மோடிக்கு இணையாக யாரையும் பேச முடியாது </h2><p>இந்நிலையில்,  மோடிக்கு இணையாக மற்றொரு பிரதமரை யாரும் சிந்தித்து பார்க்க முடியாது பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.</p><p>அடுத்த பிரதமர் என விஜய்-ஐ தவெகவினர் முன்னிறுத்துவது குறித்து பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். </p><p>அதற்கு பதில் அளித்த <a href="https://www.dailythanthi.com/">தமிழிசை </a>கூறுகையில், முதல்-அமைச்சர் விஜய்க்கு மக்கள் மிகப்பெரிய வாய்ப்பு கொடுத்துள்ளனர். அந்த வாய்ப்பை அவரும், அவரது கட்சியினரும் சரியாக பயன்படுத்த வேண்டும். மோடிக்கு இணையாக மற்றொரு பிரதமரை யாரும் சிந்தித்துக்கூட பார்க்க முடியாது. மோடி 3 முறை பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த 12 ஆண்டுகள் மட்டுமல்ல 25 ஆண்டுகள் பொதுவாழ்க்கையில் உள்ளார். அவர் நெடுங்கால அரசியல் வாழ்க்கையை பெற்றுள்ளார். </p><p>பிரதமர் மோடிக்கு இணையாக யாரையும் பேச முடியாது. விஜய் தற்போது தமிழக மக்களால் முதல்-அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அந்த வேலையை அவர் முழுமையாகவும், சரியாகவும் செய்ய வேண்டும். பிரதமர் மோடிக்கு இணையாக யாரையும் பேச முடியாது. ஜனநாயகத்தில் அனைவருக்கும் பேச உரிமை உள்ளது. ஆனால், அதைப்போல் நடக்க  முடியாது. </p><p>இவ்வாறு அவர் கூறினார்.  </p> ]]></content:encoded></item><item><title>மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalins-z-category-security-withdrawn</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalins-z-category-security-withdrawn#comments</comments><guid isPermaLink="false">15245904-88a9-4359-bc5d-9f55cbbbeca4</guid><pubDate>Sat, 29 Aug 2026 14:21:34 +0000</pubDate><atom:updated>2026-08-29T14:21:34.065Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,Security,TNPolice,ஸ்டாலின்,இசட் பாதுகாப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/q129hz8a/stalinone33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
மு.க.ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/q129hz8a/stalinone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.</p><p>இசட் பிளஸ் பாதுகாப்பு என்பது மத்திய அரசு வழங்கும் மிக உயர்ந்த பாதுகாப்பு வகைகளில் ஒன்றாகும். உயிருக்கு மிகுந்த ஆபத்து உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.</p><p>முக்கியமாக நாட்டின் பிரதமர், ஜனாதிபதி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, மாநில முதல்-மந்திரிகள், முக்கிய அரசியல் தலைவர்களுக்கு இந்த பாதுகாப்பு வழங்கப்படும்.</p><h2>இசட் பிளஸ் பாதுகாப்பின் முக்கிய அம்சங்கள்</h2><p>ஒரு நாளைக்கு 36 பேர் கொண்ட பாதுகாப்பு குழு மூன்று வேளைகளில் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்கள் இதில் அடங்குவர்.</p><p>இந்த பாதுகாப்பு குழுவினருக்கு நவீன துப்பாக்கிகள், தகவல் தொடர்பு சாதனங்கள், குண்டு துளைக்காத வாகனங்கள் வழங்கப்படும். இசட் பிளஸ் பாதுகாப்பு என்பது இசட் பாதுகாப்பை விட அதிகமான பாதுகாப்பு அளிக்கும் மிக உயர்நிலை பாதுகாப்பு முறையாகும்.</p><h2>இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ்</h2><p>இந்தநிலையில், மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இருந்தபோது இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.  ஆட்சி மாறியதும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20">இசட் பிளஸ் பாதுகாப்பு </a>இசட் பிரிவு பாதுகாப்பாக குறைக்கப்பட்டிருந்தது.   இந்தநிலையில் முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. </p><p>முன்னாள் முதல்-அமைச்சர்  பழனிசாமிக்கு வழங்கப்பட்ட அதே பாதுகாப்புதான் இனி ஸ்டாலினுக்கும் இனி ஒரு எஸ்ஐ தலைமையில் தமிழக போலீசார் 4 பேர் மட்டுமே பாதுகாப்பு அளிப்பர். </p><p>தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரான மு.க.ஸ்டாலினின் பாதுகாப்புப் பிரிவு திடீரெனக் குறைக்கப்பட்டிருப்பது, தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வருங்கால மனைவிக்கு திருமண பரிசாக நிலவில் 1 ஏக்கர் நிலம் வாங்கிய புது மாப்பிள்ளை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/groom-buys-one-acre-on-moon-for-future-wife</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/groom-buys-one-acre-on-moon-for-future-wife#comments</comments><guid isPermaLink="false">3a84c301-4969-4b66-a4d7-0c915acce86e</guid><pubDate>Sat, 29 Aug 2026 14:16:21 +0000</pubDate><atom:updated>2026-08-29T14:16:21.648Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மனைவி,நிலம்,land,Moon,wedding,நிலா,புது மாப்பிள்ளை,திருமண பரிசு,பரிசு gift</media:keywords><media:content height="768" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/2s6ghwch/moon.jpg" width="1366"><media:title type="html"><![CDATA[ அசோக் சரவணன்]]></media:title><media:description type="html"><![CDATA[ வருங்கால மனைவிக்கு திருமண பரிசாக நிலவில் 1 ஏக்கர் நிலம் வாங்கிய புது மாப்பிள்ளை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/2s6ghwch/moon.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல், </p><p>நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர், நிஜமாகவே <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE">நிலவில்</a> ஒரு ஏக்கர் நிலத்தைத் தனது வருங்கால மனைவிக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81">திருமண பரிசாக </a>வாங்கி, ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.</p><h2>கட்டிட பொறியாளர்</h2><p>நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் அசோக் சரவணன் (வயது 32). கட்டிடப் பொறியாளரான இவருக்கும், ராதிகா (என்ற வர்ஷினி) என்ற பெண்ணுக்கும் வருகிற செப்டம்பர் மாதம் 17-ந் தேதி திருமணம் நடக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தனது வருங்கால மனைவிக்கு வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு பரிசை வழங்க அசோக் சரவணன் திட்டமிட்டார். </p><h2>நிலவில் 1 ஏக்கர் நிலம்</h2><p>வழக்கமாக திருமணத்தின் போது மணப்பெண்ணுக்கு தங்க நகைகள், சொகுசு கார்கள் அல்லது பட்டு புடவைகள் வழங்குவதுதான் வழக்கம். ஆனால், அசோக் சரவணன் இந்த வழக்கமான பாணியை முற்றிலுமாக தள்ளி வைத்தார். விண்வெளியில் உள்ள நிலவில் தனது காதல் மனைவிக்கு இடம் வாங்கி தர ஆசைப்பட்டார். இதற்காக, லண்டனில் வசித்து வரும் தனது சகோதரியின் உதவியை அவர் நாடினார். அவரது வழிகாட்டுதலின்படி, சர்வதேச நிலவு நிலப் பதிவேடு  இணையதளம் மூலம் ஆன்லைனில் தொடர்பு கொண்டு, நிலவில் வெற்றிகரமாக 1 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கினார்.</p><h2>மக்கள் பாராட்டு</h2><p>நிலா நிலத்திற்கான அதிகாரப்பூர்வ பத்திரப்பதிவு மற்றும் உரிமை சான்றிதழ்கள் லண்டனில் இருந்து அசோக் சரவணனின் கைக்கு வந்து சேர்ந்தன. இதனை தனது வருங்கால மனைவி ராதிகாவிடம் காண்பித்து அவர் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இந்த விபரத்தை அறிந்த உறவினர்களும், நாமகிரிப்பேட்டை பகுதி பொதுமக்களும், "இப்படியும் ஒரு காதலா!" என்று ஆச்சரியமடைந்து, புது மாப்பிள்ளையின் இந்த வித்தியாசமான முயற்சிக்கு தங்களின் மனமார்ந்த பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 675ஆக உயர்வு; 2,400-க்கும் மேற்பட்டோர் இன்னும் காணவில்லை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nepal-flash-floods-death-toll-rises-to-675-over-2400-still-missing</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nepal-flash-floods-death-toll-rises-to-675-over-2400-still-missing#comments</comments><guid isPermaLink="false">fa2d6130-78c6-47b1-9aa0-296839ccdcb3</guid><pubDate>Sat, 29 Aug 2026 13:57:30 +0000</pubDate><atom:updated>2026-08-29T13:57:30.750Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,India,Nepal,நேபாளம்,Rescue,death toll rises,மீட்புப்பணிகள்,வெள்ளப் பெருக்கு,nepal flood,நேபாளம் வெள்ளம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/bz7x17vs/car.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/bz7x17vs/car.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>காத்மாண்டு,</p><p>மத்திய நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று (சனிக்கிழமை) 675-ஆக உயர்ந்தது. பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து உடல்களை மீட்டு வருகின்றனர். ஆகஸ்ட் 26 அன்று இமயமலை நாடான நேபாளத்தைத் தாக்கிய இந்த பேரிடரைத் தொடர்ந்து, 2,400-க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.</p><h2>8 மாவட்டங்கள் </h2><p><a href="https://www.dailythanthi.com/topic/nepal">நேபாள</a> காவல்துறை வெளியிட்ட தகவலின்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களிலும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சித்வான் மாவட்டத்தில் அதிகபட்சமாக 248 சடலங்கள் மீட்கப்பட்டன. அதைத் தொடர்ந்து நவல்ப்பராசி கிழக்கு (158), நவல்ப்பராசி மேற்கு (75) மற்றும் கோர்கா (54) ஆகிய மாவட்டங்களில் சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும், தாடிங் (49), நுவாகோட் (41), தனஹு (31) மற்றும் ரசுவா (13) ஆகிய மாவட்டங்களிலிருந்தும் சடலங்கள் மீட்கப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/dedqrzkf/sedd.jpg" /></figure><h2>பனிப்பாறை சரிவு </h2><p><a href="https://www.dailythanthi.com/topic/nepal">நேபாள</a>-திபெத் எல்லைக்கு அருகே ஏற்பட்ட பனிப்பாறை சரிவைத் தொடர்ந்து நிகழ்ந்த பனி மற்றும் பாறைச் சரிவு (ice-rock avalanche) காரணமாக இந்த பேரிடர் ஏற்பட்டது. இதன் விளைவாக உருவான நீர், சேறு மற்றும் குப்பைகள் கலந்த பெருவெள்ளம் கீழ்நோக்கிப் பாய்ந்து, நகரங்கள் மற்றும் கிராமங்களைச் சீரழித்தது. சாலைகள் மற்றும் பிற முக்கிய உள்கட்டமைப்புகளை சேதப்படுத்தியதுடன், நீர்மின் நிலையங்களையும் அழித்தது.</p><p>பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்தபோதிலும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பேரிடர் பாதித்த பகுதிகளிலிருந்து 163 வெளிநாட்டினர் உட்பட சுமார் 2,500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். </p><p>தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் 5,000-க்கும் மேற்பட்ட நேபாள ராணுவ வீரர்கள் உட்பட மொத்தம் 11,000-க்கும் அதிகமான பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்களைக் கண்டறியவும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைச் சென்றடையவும் தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் (NDRRMA) தலைமையிலான குழுக்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/je5i7ko0/there.jpg" /></figure><h2>மீட்கப்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்</h2><p>வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை தொடர்ந்து, இதுவரை 184 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் மூவருடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் நேபாள சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது. இந்தத் தகவல்களின்படி, மொத்தம் 187 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர் அல்லது அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளனர்; அதேவேளையில், 420 வெளிநாட்டினர் குறித்த விவரங்கள் இன்னும் தெரியவரவில்லை.</p><p>மீட்கப்பட்டவர்களில் 114 இந்தியர்கள், 27 சீனர்கள் மற்றும் 20 தென் கொரிய சுற்றுலாப் பயணிகள் அடங்குவர்; மீதமுள்ளவர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் பல உடல்களை மீட்கவும், காணாமல் போனவர்களைக் கண்டறியவும், பரவலான பாதிப்புகளுக்குள்ளான மக்களுக்கு உதவிகளை வழங்கவும் அதிகாரிகள் பணியாற்றி வருவதால், தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>ஊட்டி, கொடைக்கானலில் பாக்கெட் பால் விற்பனைக்கு தடை - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-sale-of-packet-milk-in-ooty-kodaikanal-madras-high-court-orders</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-sale-of-packet-milk-in-ooty-kodaikanal-madras-high-court-orders#comments</comments><guid isPermaLink="false">60353524-c52f-43f8-91c8-c3ffb4349fa2</guid><pubDate>Sat, 29 Aug 2026 13:46:03 +0000</pubDate><atom:updated>2026-08-29T13:46:03.958Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை ஐகோர்ட்டு,ஊட்டி,Ooty,கொடைக்கானல்,Kodaikanal,milk,பால்,Ban on sale,Madras High Court,விற்பனைக்கு தடை,பாக்கெட்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/2ny5cp47/37.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/2ny5cp47/37.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தனியார் பால் நிறுவனங்களுக்கு பாக்கெட் பால் விற்பனைக்கு தடை விதித்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%90%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">சென்னை ஐகோர்ட்டு</a> உத்தரவிட்டுள்ளது.</p><h2>பாக்கெட் பால் விற்பனைக்கு தடை</h2><p>சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைவாசஸ்தலங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பாக்கெட் பால் விற்பனையைத் தவிர்த்து தானியங்கி பால் விற்பனை எந்திரங்களை பயன்படுத்துமாறு தனியார் பால் நிறுவனங்களுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.</p><p>மலைப்பகுதிகளில் பிளாஸ்டிக் தடையை முழுமையாக அமல்படுத்துவது தொடர்பான வழக்கு, சென்னை ஐகோர்ட்டு சிறப்பு அமர்வு முன்பு விசாரணையில் உள்ளது. இதன் போது, பிளாஸ்டிக் கவர்களில் பால் விற்பனை செய்வதற்கு மாற்று வழிகளை உருவாக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனர்.</p><h2>தானியங்கி பால் விற்பனை எந்திரம்</h2><p>இதனைத் தொடர்ந்து, ஆவின் நிறுவனம் ஊட்டி மற்றும் கொடைக்கானலில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சோதனை அடிப்படையில் தானியங்கி பால் விற்பனை எந்திரங்களை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் கே. ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கொடைக்கானலில் தானியங்கி எந்திரங்கள் மூலம் முதல் இரண்டு நாட்களில் 40 லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டதாகவும், ஊட்டியில் வெறும் 6 லிட்டர் மட்டுமே விற்பனையானதாகவும் தெரிவிக்கப்பட்டது. </p><h2>போதிய விழிப்புணர்வு</h2><p>இந்த விவரங்களை கவனித்த நீதிபதிகள், தானியங்கி பால் விற்பனை முறை குறித்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை என அதிருப்தி தெரிவித்தனர். மேலும், தானியங்கி பால் விற்பனை எந்திரங்கள் குறித்து விரிவான விளம்பரங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும், அவை பயன்பாட்டுக்கு வந்துள்ள பகுதிகளில் பாக்கெட் பால் விற்பனையை முழுமையாக நிறுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.</p><p>ஆவின் நிறுவனத்தைப் போலவே, தனியார் பால் நிறுவனங்களும் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைவாசஸ்தலங்களில் தங்களது சொந்த தானியங்கி பால் விற்பனை எந்திரங்களை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.</p>]]></content:encoded></item><item><title>வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை: கண்காணிப்பு அலுவலர்களுடன் ககன்தீப் சிங் பேடி ஆலோசனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-northeast-monsoon-review-gagandeep-singh-bedi-holds-coordination-meeting</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-northeast-monsoon-review-gagandeep-singh-bedi-holds-coordination-meeting#comments</comments><guid isPermaLink="false">21f23b17-1c91-4804-9eb3-a780a5135435</guid><pubDate>Sat, 29 Aug 2026 13:15:51 +0000</pubDate><atom:updated>2026-08-29T13:15:51.485Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Northeast Monsoon,வடகிழக்கு பருமழை,முன்னெச்சரிக்கை,monitoring,Consultation,ஆலோசனை,Gagandeep Singh Bedi,ககன்தீப் சிங் பேடி,கண்காணிப்பு</media:keywords><media:content height="768" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/8n8fxw2l/badi.jpg" width="1366"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை: கண்காணிப்பு அலுவலர்களுடன் ககன்தீப் சிங் பேடி ஆலோசனை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/8n8fxw2l/badi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF">ககன்தீப் சிங் பேடி</a>, தலைமையில், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மண்டல வாரியாக நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.</p><h2>மீட்பு நடவடிக்கை</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">சென்னை மாநகராட்சியில்</a> வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு, மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணித்து உரிய மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக மண்டல அளவில் அமைச்சர் பெருமக்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலரர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார்கள். </p> <h2>ஆலோசனைக்கூட்டம்</h2><p>இதனைத் தொடர்ந்து, இன்று நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தலைமையில், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மண்டல வாரியாக நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் ரிப்பன் கட்டட அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.</p><p>இக்கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆஷிஷ் சட்டர்ஜி,  மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன், கண்காணிப்பு அலுவலர்கள், மாநகராட்சி இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், சென்னை குடிநீர் வாரியம், நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத் துறை, தேசிய நெடுஞ்சாலைத் துறை, மின்சாரத் துறை, இரயில்வே, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம், மீன்வளத்துறை, காவல் துறை, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் உள்ளிட்ட தொடர்புடைய சேவைத் துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p> <p>இக்கூட்டத்தில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பேசும்போது தெரிவித்ததாவது:-</p><h2>நடவடிக்கை</h2><p> சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள நீர்வழிக்கால்வாய்கள், ஆறுகள், நீர்நிலைகள், மழைநீர் வடிகால்கள், வண்டல் வடிகட்டித் தொட்டிகள் உள்ளிட்டவற்றில் தூர்வாரும் பணிகளையும், மேம்பாட்டு பணிகளையும் கண்காணிப்பு அலுவலர்கள் கண்காணித்து செப்டம்பர் மாத இறுதிக்குள் அனைத்து பணிகளையும் விரைந்து முடித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.</p><h2>மோட்டார் பம்புகள்</h2><p>ஒவ்வொரு மண்டலத்திலும் மழைநீர் தேங்க கூடிய தாழ்வான பகுதிகளில் மழைநீரை வெளியேற்றுவதற்கு தேவையான மோட்டார் பம்புகள் முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திட வேண்டும். மழைநீர் வடிகால் இணைப்பு இல்லாத பகுதிகளில் இணைப்பினை உருவாக்கிடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கால்வாய்கள் மற்றும் ஆறுகள் சேரும் இடங்களிலும், முகத்துவாரத்திலும் மழை வெள்ளம் நீர் தங்குதடையின்றி செல்கின்ற வகையில் அடைப்பினை நீக்கிட வேண்டும்.</p><h2>முன்னெச்சரிக்கை பணிகள்</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, வடகிழக்குப் பருவமழை மற்றும் எல் நினோ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகாலில் தூர்வாருதல், வார்டு வாரியாக முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளுதல், சாலை சீரமைப்புப் பணிகள், தேவையான மோட்டார் பம்புகள், மோட்டார் பம்புகள் பழுது பார்த்தல், மழைக்கால பணிக்காக வார்டு ஒன்றிற்கு 5 பணியாளர்கள் வீதம் 1000 பணியாளர்கள் நியமித்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை பணிகளுக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><h2>215 வெள்ள நிவாரண மையங்கள்</h2><p>சென்னை மாநகராட்சியில் 36 படகுகளும், மீனவளத்துறையின் சார்பில் மினவர்களிடமிருந்து 275 படகுகளும் இதனை இயக்குவதற்கான நபர்கள் தயார் நிலையில் உள்ளதையும் உறுதி செய்திட வேண்டும். வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, 215 வெள்ள நிவாரண மையங்கள் மற்றும் 111 சமையல் கூடங்களை ஆய்வு செய்து, தேவையான வசதிகளை மேற்கொண்டு ஆயத்த நிலையில் வைத்திட வேண்டும்.</p><h2>வண்டல்கள் அகற்றும் பணி</h2><p>சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 1671 கீ.மி. நீளத்தில் மழைநீர் வடிகாலில் இருந்து வண்டல்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. 1,10,082 வண்டல் வடிகட்டி தொட்டிகளில் மழைநீர் சீராக செல்லும் வகையில் வண்டல்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><h2> தயார் நிலை</h2><p>வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு, சென்னை மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகனங்கள், இயந்திரங்கள், மோட்டார் பம்புகள், மர அறுவை இயந்திரங்கள் ஆகியவை தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.</p><h2>20 இடங்களில் நீர் தேக்கத்தொட்டி</h2><p>சென்னை மாநகராட்சி பகுதிகளில் பாதிப்புக்குள்ளாகக்கூடிய இடங்களாக கண்டறியப்பட்ட 207 பகுதிகளில் 117 இடங்களில் மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்டுள்ளன. 20 இடங்களில் நீர் தேக்கத்தொட்டி அமைத்து, நீர் வெளியேற்றும் மோட்டார் பம்புகள் பொருத்தப்பட்டுள்ளன. 48 இடங்களில் தேங்கும் மழைநீரை வெளியேற்றுவதற்கு மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன. மீதமுள்ள பகுதிகளில் இதர நடவடிக்கைகள் மூலம் மழைநீரை வெளியேற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p> <h2>தன்னார்வலர்கள் பதிவு செயலி</h2><p> சென்னை மாநகராட்சியில் மழைக்காலங்களில் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவிடும் வகையில் 1000த்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உள்ளனர். குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் 721 நபர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும், செப்டம்பர் முதல் வாரத்தில் மாநகராட்சியால் உருவாக்கப்பட்ட தன்னார்வலர்கள் பதிவு செயலி  பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது. இதில் பதிவு செய்யும் தன்னார்வலர்கள் மழைக்காலவ நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.</p><h2>1913 தொலைபேசி</h2><p>ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகள் மற்றும் பொதுமக்கள் குறைகளை தீர்க்கும் வகையில் 1913 தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்களின் வாயிலாக வரப்பெறும் புகார்களின் மீது உடனக்குடன் நடவடிக்கை எடுத்தல் ஆகியவற்றினை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.</p><h2>36 டீசல் ஜெனரேட்டர்கள்</h2><p> சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மொத்தம் 115 எண்ணிக்கையிலான விடுப்பட்ட இணைப்புகள் உள்ளன. இதில் 42 எண்ணிக்கையிலான மழைநீர் வடிகால் இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களில் இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டு மழைக்காலத்திற்கு முன்பு முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்காமல் உடனுக்குடன் அகற்றிடும் வகையில் பம்ப் அறைகளில் ஏற்கனவே 132 பம்புகளும் 36 டீசல் ஜெனரேட்டர்களும் உள்ளன.</p><h2>ரெயில்வே மதகுகள்</h2><p>சென்னை மாநகராட்சியில் 28 எண்ணிக்கையிலான ரெயில்வே மதகுகள் உள்ளன. இதில் 3 ரெயில்வே மதகுகளில் தூர்வாரும் பணிகள் முடிவடைந்துள்ளது. தொடர்ந்து, மீதமுள்ள ரெயில்வே மதகுகளில் மழைக்காலத்திற்கு முன்பு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்படும். மேலும், இப்பணிகளை கண்காணிப்பதற்காக இரயில்வே துறையின் சார்பில் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு இதுவரை 50625 எண்ணிக்கையிலான மரங்களின் கிளைகள் கத்தரிக்கப்பட்டுள்ளது.</p><h2>மின் கசிவு</h2><p>நீர்வளத்துறை சார்பில் ஆறுகள் மற்றும் கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும். மின் சாரத் துறையில் மின் இணைப்புபெட்டிகளை தரையில் இருந்து உயர்த்தி வைப்பதோடு, மின்சார கேபிள்கள் வெளியில் தெரியாத வகையிலும், மின்கசிவு இல்லாமலும் தரையின் அடியில் செல்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மின் கசிவு காரணமாக எந்த ஒரு உயிர் இழப்பும் ஏற்படுவதை தவிர்த்திட வேண்டும்.</p><h2>செப்டம்பர் மாதம்</h2><p>சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு மண்டலத்திலும் நடைபெற்று வரும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை அலுவலர்கள் கண்காணித்து விரைந்து மேற்கொள்ள வேண்டும். நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத் துறை, சென்னை குடிநீர் வாரியம், மின்சாரத் துறை, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், ரெயில்வே துறை உள்ளிட்ட சேவைத் துறைகளுடன் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொண்டு செப்டம்பர் மாதம் இறுதிக்குள் அனைத்துப் பணிகளையும் முடித்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 1 முதல் 15 வரையிலான மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள்</p><p><strong>வ.எண் மண்டலம் கண்காணிப்பு அலுவலர்களின் பெயர்</strong></p><p>1. திருவொற்றியூர் கே.பாலசுப்பிரமணியம், இயக்குநர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை</p><p>2. மணலி பி.குமரவேல் பாண்டியன், உறுப்பினர்/செயலர், தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழு</p><p>3. மாதவரம் எஸ்.அருண்ராஜ், கூடுதல் இயக்குநர், சர்க்கரை இயக்ககம்</p><p>4. தண்டையார்பேட்டைஆர்.கண்ணன்,  சர்க்கரைத் துறை ஆணையர்</p><p>5. இராயபுரம் ஆஷா அஜித், இயக்குநர், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம்</p> <p>6. திரு.வி.க. நகர் பி.கணேசன், மேலாண்மை இயக்குநர், புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழகம்</p><p>7. அம்பத்தூர் கே.விவேகானந்தன், அரசு சிறப்புச் செயலாளர், தொழில்கள், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வணிகத் துறை</p><p>8. அண்ணாநகர் பி.காயத்ரி கிருஷ்ணன், இயக்குநர், சமூக பாதுகாப்பு திட்டங்கள்</p><p>9. தேனாம்பேட்டை டி.கிறிஸ்துராஜ், இயக்குநர், நில அளவை மற்றும் நில வரித் திட்டம்</p><p>10. கோடம்பாக்கம் எஸ்.கோபால சுந்தர ராஜ், கூடுதல் ஆணையர், நில நிர்வாக ஆணையரகம்</p> <p>11. வளசரவாக்கம் ஜெ.விஜய ராணி, இயக்குநர், தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை</p><p>12. ஆலந்தூர் வாகே சங்கேத் பல்வந்த், நிர்வாக இயக்குநர், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம்</p><p>13. அடையாறுகே.செந்தில் ராஜ்,  இயக்குநர் ஆதி திராவிடர் நலன்</p><p>14. பெருங்குடி மகேஷ்வரி ரவிகுமார், கலை பண்பாட்டுத் துறைத்துறை இயக்குநர்</p><p>15. சோழிங்கநல்லூர் டி.பாஸ்கர பாண்டியன்,  அருங்காட்சியக இயக்குநர்</p>]]></content:encoded></item><item><title>வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றதுடன் தொடங்கியது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-annual-festival-of-the-holy-mother-of-health-cathedral-velankanni-began-with-the-hoisting-of-the-flag</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-annual-festival-of-the-holy-mother-of-health-cathedral-velankanni-began-with-the-hoisting-of-the-flag#comments</comments><guid isPermaLink="false">624a6501-3193-4892-98b9-e2c94896ebfd</guid><pubDate>Sat, 29 Aug 2026 13:02:59 +0000</pubDate><atom:updated>2026-08-29T13:02:59.444Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Flag hoisting,Velankanni Matha Temple,வேளாங்கண்ணி மாதா பேராலயம்,கொடியேற்றத்துடன் தொடங்கியது</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/0y1qr49d/annai33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/0y1qr49d/annai33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வேளாங்கண்ணி,</p><p>வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றதுடன் தொடங்கியது.</p><h2>கொடியேற்றம்</h2><p>நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. 'கீழ்திசை நாடுகளின் லூர்து நகரம்' என அழைக்கப்படும் இங்கு ஆண்டுதோறும் பெருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான பெருவிழா இன்று (சனிக்கிழமை) மாலை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-flagging">கொடியேற்றத்துடன் </a>தொடங்கியது. முன்னதாக மாலை 5.45 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை புனிதம் செய்து வைத்த பின், கொடி ஊர்வலம் புறப்பட்டது. பின்னர், கொடிக்கம்பத்தில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் கொடி ஏற்றினார். தொடர்ந்து, திருத்தல கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசி, தமிழில் திருப்பலி நிறைவேற்றுதல் ஆகியவை நடைபெறுகிறது.</p><h2>சிலுவைப்பாதை ஊர்வலம்</h2><p>தொடர்ந்து, நாளை (30-ந்தேதி) முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி வரை பேராலயம், விண்மீன் ஆலயம், மாதாகுளம், மேல் கோயில், கீழ்கோயில் ஆகிய இடங்களில் தமிழ், மராத்தி, ஆங்கிலம், கொங்கனி, கன்னடம், தெலுங்கு, இந்தி, கிழக்கத்திய மராத்தி ஆகிய மொழிகளில் இரவு, பகலாக சிறப்பு திருப்பலிகள் நடைபெறுகிறது. இதனிடையே வருகிற 1-ந்தேதி சிலுவைப்பாதை ஊர்வலம் நடக்கிறது.</p><h2>பெரிய தேர்பவனி</h2><p>விழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர்பவனி வருகிற 7-ந்தேதி நடக்கிறது. தேர்பவனியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, 8-ந்தேதி விண்மீன் ஆலயத்தில் அன்னையின் பிறந்தநாளை முன்னிட்டு, அன்று காலை தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் தலைமையில் சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்பட்டு. கொடி இறக்கம் செய்யப்பட்டு விழா நிறைவடைகிறது.</p>]]></content:encoded></item><item><title>கோவை: கயிறு கட்டி பற்களால் மினி பஸ்ஸை இழுத்து சாதனை படைத்த 15 வயது பள்ளி மாணவன் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-15-year-old-school-student-sets-a-record-by-pulling-a-mini-bus-with-his-teeth-using-a-rope</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-15-year-old-school-student-sets-a-record-by-pulling-a-mini-bus-with-his-teeth-using-a-rope#comments</comments><guid isPermaLink="false">ca5020fa-53dd-4027-bf79-aa6d692b884c</guid><pubDate>Sat, 29 Aug 2026 12:50:55 +0000</pubDate><atom:updated>2026-08-29T12:50:55.911Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,உலக சாதனை,பள்ளி மாணவன்,Guinness Book of World Records,Teeth</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/ef7rcuk7/00000000000000000000000000.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பிரதியுமன்]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரதியுமன் உலக சாதனை படைத்தார்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/ef7rcuk7/00000000000000000000000000.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>கோயம்புத்தூர்,</p><p>கோயம்புத்தூரில் பற்களால் 3.5 டன் எடையுள்ள மினி பஸ்ஸை இழுத்து 15 வயது பள்ளி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D">மாணவன்</a> ஒருவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.</p><h2>கோவை பள்ளி மாணவர்</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கோவை</a> ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த மாணவன் பிரதியுமன் (வயது 15). அந்த மாணவன், அங்குள்ள தனியார் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். கராத்தே கலையையும் கற்று வரும் அவர், தனது அசாத்திய உடல் வலிமையை நிரூபிக்கும் வகையில் இந்த சாதனை முயற்சியில் ஈடுபட்டார். கடந்த 27-ந்தேதி அன்று அந்த மாணவர் படிக்கும் பள்ளியின் வளாகத்தில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.</p><h2>சாதனை</h2><p>அந்த நிகழ்வில், சுமார் 3,500 கிலோ (3.5 டன்) எடையுள்ள மினி பஸ்ஸை தனது பற்களால் கயிற்றைக் கவ்விப் பிடித்து, பிரதியுமன் வெற்றிகரமாக இழுத்துக் காட்டினார். அவருடைய இந்த வியக்கத்தக்க முயற்சியைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் சக மாணவர்கள் அனைவரும் கைதட்டி பாராட்டி தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.</p><h2>உலக சாதனைக்கான சான்றிதழும் பதக்கமும்</h2><p>மாணவன் பிரதியுமனின் இந்த அசாத்திய முயற்சி சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டு, ‘<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88">புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்</a>’ சாதனைப் புத்தகத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. சாதனை நிகழ்த்தப்பட்ட உடனே, அந்த இடத்திலேயே அவருக்கு உலக சாதனைக்கான சான்றிதழும் பதக்கமும் நடுவர்களால் வழங்கி கவுரவிக்கப்பட்டது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பற்களால் மினி பஸ்சை  இழுத்து உலக சாதனை படைத்த பள்ளி மாணவன்  இவரது இந்த அசாத்திய முயற்சி சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டு ‘புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்’ (Book of World Records) சாதனைப் புத்தகத்தில் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது  <a href="https://x.com/hashtag/schoolstudents?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#schoolstudents</a> <a href="https://x.com/hashtag/teeth?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#teeth</a> <a href="https://x.com/hashtag/bus?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#bus</a>… <a href="https://t.co/i2t3hjR2aw">pic.twitter.com/i2t3hjR2aw</a></p>&mdash; Thanthi TV (@ThanthiTV) <a href="https://x.com/ThanthiTV/status/2093658665731735919?ref_src=twsrc%5Etfw">August 29, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>பெசன்ட்நகர்: அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழா கொடியேற்றம் கோலாகலம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/besantnagar-flag-hoisting-ceremony-at-the-annai-velankanni-mata-temple-festival</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/besantnagar-flag-hoisting-ceremony-at-the-annai-velankanni-mata-temple-festival#comments</comments><guid isPermaLink="false">4776fa39-8955-46e7-9908-57ad1467e698</guid><pubDate>Sat, 29 Aug 2026 12:49:53 +0000</pubDate><atom:updated>2026-08-29T12:49:53.683Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கொடியேற்றம்,Velankanni Matha Temple,வேளாங்கண்ணி மாதா பேராலயம்,பெசன்ட்நகர்,Besantnagar,Temple Festival- ஆலய திருவிழா,Flag hoisting ceremony</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/8cptj2cc/35.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/8cptj2cc/35.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, ஆக.29</p><p>பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழா <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-flagging">கொடியேற்றம் </a>கோலாகலமாக தொடங்கியது.</p><p>சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலய 54-வது ஆண்டு திருவிழா இன்று (சனிக்கிழமை) தொடங்கி செப்டம்பர் 8-ந் தேதி வரை தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற உள்ளது.</p><p>அதன்படி பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் திருவிழா இன்று மாலை 5.45 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. சென்னை மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணிசாமி 75 அடி உயர கொடிக்கம்பத்தில் 12 அடி நீளம் கொண்ட அன்னையின் உருவம் பொறித்த கொடியை ஏற்றி, கூட்டு திருப்பலியை நடத்தினார். தொடர்ந்து தினமும் காலை, மாலை திருப்பலிகள் நடக்கின்றன.</p><h2>7-ந்தேதி தேர்ப்பவனி </h2><p>அடுத்த மாதம் 7-ந் தேதி மாலை 5 மணிக்கு கூட்டுத் திருப்பலியும், தொடர்ந்து அன்னையின் தேர்பவனியும் நடைபெற உள்ளது. இதில், பல ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்து கொள்வார்கள். 8-ந்தேதி அன்னையின் பிறந்தநாளையொட்டி அதிகாலை 2 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து திருப்பலிகள் நடைபெற உள்ளன. காலை 7.45 மணிக்கு ஆங்கில திருப்பலியும், 9.30 மணிக்கு நடைபெறும் தமிழ் திருப்பலியும், அன்னைக்கு மணிமுடி சூட்டும் விழாவும் நடைபெறும், அன்றைய தினம் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் திருப்பலியை தொடர்ந்து ஆண்டுக்கான திருவிழா கொடி இறக்க நிகழ்வுடன் நிறைவடைகிறது. </p><h2>பக்தர்கள் குவிந்தனர் </h2><p>இந்த ஆண்டு அமைதி என்ற மையக்கருத்தை வைத்து திருவிழா நடத்தப்படுகிறது. திருவிழாவிற்கு சென்னை மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும், புதுச்சேரியில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடைபயணமாக வேண்டுதல்களுடன் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.  பக்தர்களுக்கு ஆலய வளாகம் மற்றும் பெசன்ட்நகர் சுடற்கரை பகுதியில் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விழாவை முன்னிட்டு மாநகர் போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்களை இயக்க உள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விலை உயர்வை கட்டுப்படுத்த 840 டன் வெங்காயம் சென்னைக்கு வருகை..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/840-tonnes-of-onions-arrive-in-chennai-to-curb-price-rise</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/840-tonnes-of-onions-arrive-in-chennai-to-curb-price-rise#comments</comments><guid isPermaLink="false">85a001bd-eaa8-4f95-b250-485ae0c28c24</guid><pubDate>Sat, 29 Aug 2026 12:43:16 +0000</pubDate><atom:updated>2026-08-29T12:43:16.898Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,வெங்காயம்,Onions</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/pyr65hw0/Untitled-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/pyr65hw0/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வெங்காய விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, மத்திய அரசு தனது கையிருப்பில் இருந்து 840 டன் வெங்காயத்தை இன்று (ஆகஸ்ட் 29) சென்னைக்கு அனுப்ப தயாராகி வருகிறது. இதற்காக மராட்டிய மாநிலம் மன்மாட் பகுதியில் வெங்காயத்தை சரக்கு ரெயிலில் ஏற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.</p><h2>டெல்லிக்கு 500 டன் அனுப்பி வைப்பு</h2><p>வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் சிறப்பு நடவடிக்கையாக, ‘கண்டா’ எனப்படும் சிறப்பு சரக்கு ரெயில்கள் மூலம் முக்கிய நகரங்களுக்கு வெங்காயத்தை மத்திய அரசு அனுப்பி வருகிறது. சமீபத்தில் டெல்லிக்கு 500 டன் வெங்காயம் அனுப்பப்பட்ட நிலையில், தற்போது சென்னைக்கு 840 டன் அனுப்பப்பட உள்ளது.</p><h2>பருவமழை தாமதத்தால் விலை உயர்வு</h2><p>பருவமழை தாமதம் மற்றும் சில பகுதிகளில் குறைந்த மழைப்பொழிவு காரணமாக வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு சந்தைகளில் வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லி, சென்னை, கேரளா, அசாம் உள்ளிட்ட பகுதிகளில் சில்லறை விலை உயர்ந்துள்ளது.</p><h2>கிலோ ரூ.50 முதல் ரூ.65 வரை விற்பனை</h2><p>பல நகரங்களில் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.50 முதல் ரூ.65 வரை விற்பனை செய்யப்படும் நிலையில், விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு கையிருப்பு வெங்காயத்தை சந்தைகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.</p><h2>ரெயில் மட்டுமின்றி சாலை வழியாகவும் விநியோகம்</h2><p>வெங்காயத்தை விரைவாக சந்தைகளுக்கு கொண்டு சேர்க்க ரெயில் போக்குவரத்துடன், சாலை வழி விநியோகத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களில் டெல்லி மற்றும் குவஹாத்திக்கு லாரிகள் மூலம் வெங்காயம் அனுப்பப்பட்டுள்ளன. மேலும், அதிக விலை நிலவும் பல்வேறு நகரங்களுக்கும் கையிருப்பு வெங்காயத்தை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2>மொத்த விலையிலும் சரிவு தொடக்கம்</h2><p>மத்திய அரசின் நடவடிக்கையின் தாக்கம் மராட்டிய மாநிலம் நாசிக் பகுதியில் உள்ள மொத்த வெங்காய சந்தைகளிலும் தெரியத் தொடங்கியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய வெங்காயச் சந்தைகளில் ஒன்றான லாசல்கான் ஏபிஎம்சியில், கடந்த நான்கு நாட்களில் சராசரி விலை சுமார் 10 சதவீதம் குறைந்துள்ளது.</p><h2>குவிண்டாலுக்கு ரூ.4,250-ல் இருந்து ரூ.3,800 ஆக குறைவு</h2><p>லாசல்கான் சந்தையில் குவிண்டாலுக்கு ரூ.4,250 ஆக இருந்த சராசரி வெங்காய விலை தற்போது ரூ.3,800 ஆக குறைந்துள்ளது. முக்கிய சந்தைகளுக்கு மத்திய அரசின் கையிருப்பில் இருந்து வெங்காயம் தொடர்ந்து விடுவிக்கப்படுவதே இந்த விலை சரிவுக்கு காரணம் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.</p><h2>விலை உயர்வை தடுக்க மத்திய அரசு தீவிரம்</h2><p>சில்லறை சந்தையில் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில், கையிருப்பு வெங்காயத்தை அதிக விலை நிலவும் பகுதிகளுக்கு விரைந்து கொண்டு செல்ல மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ரெயில் மற்றும் சாலை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">போக்குவரத்து </a>ஆகிய இரு வழிகளிலும் விநியோகத்தை ஒருங்கிணைத்து செயல்படுத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>மு.க.அழகிரியின் மகனுக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை நடத்த சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cbi-court-orders-fresh-medical-examination-for-mk-alagiris-son</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cbi-court-orders-fresh-medical-examination-for-mk-alagiris-son#comments</comments><guid isPermaLink="false">4ca0fecd-0f75-4ef9-ba27-57881099f4ff</guid><pubDate>Sat, 29 Aug 2026 12:42:03 +0000</pubDate><atom:updated>2026-08-29T12:42:03.823Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,Tamilnadu,தமிழகம்,Madurai,மதுரை,மு.க.அழகிரி,துரை தயாநிதி,M.K.Alagiri,Dayanidhi Azhagiri</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/xzjvxsim/kiere.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/xzjvxsim/kiere.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மு.க.அழகிரியின் மகன் தயாநிதிக்கு புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்ய மதுரை சி.பி.ஐ கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.</p><h2>சி.பி.ஐ. கோர்ட்டு</h2><p>முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு மீண்டும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்ய <a href="https://www.dailythanthi.com/topic/மதுரை">மதுரை</a> சி.பி.ஐ, கோர்ட்டு இன்று (29.08.2026) உத்தரவு பிறப்பித்துள்ளது. ரூ.256.44 கோடி பணமோசடி வழக்கில் 3-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள துரை தயாநிதி பக்கவாதம், ஞாபக மறதியால் விசாரணையை எதிர்கொள்ளும் நிலையில் இல்லை என ஏற்கெனவே அறிக்கை சமர்பிக்கப்பட்டிருந்தது.</p><h2>துரை தயாநிதி</h2><p>இந்த சூழலில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துரை தயாநிதி, கிரிக்கெட் போட்டியை பார்த்ததாகவும், தேர்தலில் வாக்களித்ததாகவும் வெளியான காணொளியை சுட்டிக்காட்டி துரை தயாநிதியை மருத்துவப் பரிசோதனை செய்ய சி.பி.ஐ மனு தாக்கல் செய்திருந்தது. </p><p>இந்நிலையில் துரை தயாநிதியின் உடல் மற்றும் மனநிலையை மீண்டும் பரிசோதிக்க உத்தரவிட்ட கோர்ட்டு, மருத்துவர் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டது. </p><h2>நீதிபதி கேள்வி</h2><p>மேலும், கிரிக்கெட் போட்டியை நேரில் சென்று பார்ப்பதும், தேர்தலில் வாக்களிப்பதும் சாத்தியப்படும்போது, நீதிமன்றத்தில் ஆஜராகி விசாரணையை எதிர்கொள்வதில் என்ன தடை இருக்க முடியும் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.</p>]]></content:encoded></item><item><title>மோடிக்கு இணையாக இன்னொரு பிரதமரை யாரும் சிந்தித்துக் கூட பார்க்க முடியாது - தமிழிசை சவுந்தரராஜன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-one-can-even-think-of-another-prime-minister-on-par-with-modi-tamilisai-soundararajan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-one-can-even-think-of-another-prime-minister-on-par-with-modi-tamilisai-soundararajan#comments</comments><guid isPermaLink="false">aa6d9009-7db6-4458-bf2a-93efd6d5fb6f</guid><pubDate>Sat, 29 Aug 2026 12:23:05 +0000</pubDate><atom:updated>2026-08-29T12:23:05.687Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Modi,தமிழிசை சவுந்தரராஜன்,Tamilisai Soundararajan,மோடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/v383tz5e/34.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/v383tz5e/34.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக மூத்த தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88">தமிழிசை சவுந்தரராஜன்</a> சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார், அப்போது அவர் பேசியதாவது:- </p><p>தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கு மக்கள் தற்போது மிகப்பெரிய வாய்ப்பை வழங்கியுள்ளதாகவும், அந்த வாய்ப்பை அவர் தலைமையிலான அரசும், அவரது கட்சியும் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பிரதமர் நரேந்திர மோடிக்கு இணையாக நாட்டின் பிரதமர் பதவிக்கு வேறு ஒருவரை தற்போது யாராலும் சிந்தித்துக்கூட பார்க்க முடியாது என அவர் திட்டவட்டமாகக் கூறினார்.</p><h2>நீண்ட அரசியல் அனுபவம்</h2><p>நரேந்திர மோடி தொடர்ந்து மூன்று முறை நாட்டின் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டதுடன், அதற்கு முன்பு 12 ஆண்டுகள் மாநில முதல்-மந்திரியாகவும் பணியாற்றியவர். இதன் மூலம் 25 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட அரசியல் அனுபவத்தை அவர் பெற்றுள்ளார். எனவே, அவரது அரசியல் அனுபவத்துக்கு இணையாக வேறு யாரையும் ஒப்பிட முடியாது.</p><h2>எளிதான விஷயம் அல்ல...</h2><p>ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கவும், எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கவும் உரிமை உள்ளது. இருப்பினும், பிரதமர் மோடிக்கு இணையாக செயல்படுவது கூட எளிதான விஷயம் அல்ல என்றும் அவர் கூறினார். தென் மாநிலங்கள், வட மாநிலங்கள் என பிரதமர் மோடி எந்தவித பாகுபாடும் காட்டுவதில்லை என்றும், குறிப்பாக தென் மாநிலங்களின் வளர்ச்சியில் அவர் அதிக அக்கறை செலுத்தி வருகிறார்.</p><h2>ஆரோக்கியமான விவாதங்கள்</h2><p>தமிழர்களின் பெருமையான திருக்குறளை உலக அளவில் பிரதமர் மோடி எடுத்துச் சென்ற அளவுக்கு வேறு யாரும் செயல்பட்டதாகக் கூற முடியாது. மேலும், சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமான மற்றும் ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற வேண்டும். சட்டப்பேரவை சண்டை மன்றமாக மாறக்கூடாது.</p><p>இவ்வாறு அவர் பேசியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கோவை மாவட்டத்தில் இருந்து நேபாளம் சென்ற 12 பேரில்  4 பேர் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/4-out-of-12-people-who-went-to-nepal-from-coimbatore-district-are-reported-to-be-safe</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/4-out-of-12-people-who-went-to-nepal-from-coimbatore-district-are-reported-to-be-safe#comments</comments><guid isPermaLink="false">def66a3a-a3be-4df0-aa3a-6401ca82ea51</guid><pubDate>Sat, 29 Aug 2026 12:07:45 +0000</pubDate><atom:updated>2026-08-29T12:07:45.088Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,Nepal,நேபாளம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/q1lumksv/kovai33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
கோவை ]]></media:title><media:description type="html"><![CDATA[  4 பேர் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்
]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/q1lumksv/kovai33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>நேபாளம் சென்ற 4 பேர் பாதுகாப்பாக உள்ளதாக கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D">திபெத்தின் இமயமலை</a> பகுதியில் கடந்த 26-ம் தேதி மிகப்பெரிய பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம், நேபாளத்தை தாக்கியது. அங்குள்ள ஆறுகளில் கடு ம்வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 8 மத்திய மாவட்டங்களில் பெரும் பாதிப்பை உண்டாக்கியது. வெள்ளத்துடன் பாறைகள், மண் மரங்கள் உள்ளிட்டவைகள் கலந்து அசுர வேகத்தில் பாய்ந்ததில் வீடுகள், கட்டிடங்கள், வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. இந்த காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் மாயமனார்கள்.</p><p>இதனையடுத்து நேபாள ராணுவம், போலீசார், தேசிய பேரிடர் படையினர் மீட்புபடையினர் மீட்புபணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேறும் - சகதிகள் முழுவதும் பரவி உள்ள நிலையில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இதில் பலரது உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகிறது.</p><p>நேபாளத்தில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நேபாளம் - திபெத்தில் மொத்தம் 2,400க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். நேபாளத்தில் மீட்பு பணிகள் 4-வது நாளாக நடைபெற்று வருகிறது.</p><p>இந்தநிலையில், கோவை மாவட்டத்தில் இருந்து நேபாளம் சென்ற 12 பேர் காணாமல்போனநிலையில், 4 பேர் பாதுகாப்பாக இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோவையைச் சேர்ந்த ஐடிஎல் டூர் அண்ட் ட்ரெக்கிங் நிறுவனம் மூலம் கைலாஷ் யாத்திரை சென்ற தேவராஜ், லோகநாதன், சுவாமிநாதன், வேல்முருகன் நலமாக இருக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது,.</p>]]></content:encoded></item><item><title>யுனெஸ்கோ பாரம்பரிய சின்னம்; குன்னூர் மலை ரெயிலின் 128-வது ஆண்டு விழா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/unesco-heritage-nilgiri-mountain-railway-128th-anniversary</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/unesco-heritage-nilgiri-mountain-railway-128th-anniversary#comments</comments><guid isPermaLink="false">ea7ded67-e9f3-4685-8ac9-8719f244d982</guid><pubDate>Sat, 29 Aug 2026 12:07:17 +0000</pubDate><atom:updated>2026-08-29T12:07:17.771Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மலை ரெயில்,குன்னூர்,Coonoor,யுனெஸ்கோ,UNESCO,Mountain Railway</media:keywords><media:content height="768" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/fmi6rvzl/mountain-train.jpg" width="1366"><media:title type="html"><![CDATA[ குன்னூர் மலை ரெயில்]]></media:title><media:description type="html"><![CDATA[ யுனெஸ்கோ பாரம்பரிய சின்னம்; குன்னூர் மலை ரெயிலின் 128-வது ஆண்டு விழா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/fmi6rvzl/mountain-train.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>குன்னூர், </p><p>உலக புகழ்பெற்ற நீலகிரி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">மலை ரெயில்</a>, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாக திகழ்ந்து வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டு, தற்போது யுனெஸ்கோ உலக பாரம்பரிய அந்தஸ்து பெற்றுள்ள இந்த மலை ரெயிலின் 128-வது ஆண்டு விழா இன்று குன்னூர் ரெயில் நிலையத்தில் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.</p> <h2>ஆங்கிலேயர் காலத்துத்தொடக்கம்</h2><p> மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரையிலான முதல் மலை ரெயில் பாதை 1899-ஆம் ஆண்டு ஜூன் மாதம் திறக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, குன்னூரில் இருந்து உதகமண்டலம்  வரையிலான மலை ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டு 1898 ஆகஸ்ட் 29 அன்று முறைப்படி மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இன்றுடன் இந்த தடம் 128 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.</p><h2>தேசியக்கொடி ஏற்றி மரியாதை</h2><p>128-வது ஆண்டு விழாவை முன்னிட்டு,  தேசப்பற்றை போற்றும் வகையில் ரெயில்வே உயர் அதிகாரிகள் முன்னிலையில் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.</p><h2>வண்ண பலூன்கள் பறந்தன</h2><p>பாரம்பரியமிக்க மலை ரெயில் என்ஜின் மற்றும் அதன் பெட்டிகள் அனைத்தும் விதவிதமான வண்ண மலர்களாலும், தோரணங்களாலும் அடுக்கடுக்காக அலங்கரிக்கப்பட்டிருந்தன. ரெயில் நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முன்னிலையில், நூற்றுக்கணக்கான வண்ண வண்ண பலூன்கள் விண்ணில் பறக்கவிடப்பட்டு விழா விறுவிறுப்பாக தொடங்கியது.</p><h2>சுற்றுலாப் பயணிகள் நெகிழ்ச்சி</h2><p>நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் இதயத்தை கவர்ந்த இந்த மலை ரெயிலின் 128-வது பிறந்தநாளை, தாங்கள் பயணம் செய்யும் அதே நாளில் கொண்டாடுவதில் பெரும் பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைவதாக பயணிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். தொடர்ந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மலை ரெயில் ஊட்டி நோக்கி தனது எழில்மிகு பயணத்தை தொடங்கியது.</p>]]></content:encoded></item><item><title>உயர்கல்வி நுழைவுத் தேர்வு சிறப்பு பயிற்சி நிறுத்தப்பட்டதா? - தகவல் நம்பகத்தன்மை பிரிவு விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/has-the-special-coaching-for-higher-education-entrance-exams-been-discontinued-clarification-from-the-information-verification-wing</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/has-the-special-coaching-for-higher-education-entrance-exams-been-discontinued-clarification-from-the-information-verification-wing#comments</comments><guid isPermaLink="false">d94b46ce-0ee6-4e3d-9cdc-e68152a9af93</guid><pubDate>Sat, 29 Aug 2026 12:02:30 +0000</pubDate><atom:updated>2026-08-29T12:02:30.838Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Fact Check Unit,Fact check,சிறப்பு பயிற்சி,தகவல் சரிபார்ப்பகம்,TN Fact Check,தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம்,தகவல் நம்பகத்தன்மை,தகவல் நம்பகத்தன்மை பிரிவு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/j12z4rdo/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/j12z4rdo/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>உயர்கல்வி நுழைவுத் தேர்வு சிறப்பு பயிற்சி நிறுத்தம் என பரவும் தவறான தகவல் குறித்து தகவல் நம்பகத்தன்மை பிரிவு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>பரவும் செய்தி</h2><p>சமூக நீதித்துறையின் கீழ் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உயர்கல்வி நுழைவுத் தேர்வு சிறப்பு பயிற்சி நிறுத்தப்பட்டதாக திமுக நிர்வாகி ஒருவர் பேசியுள்ளார்.</p><h2>உண்மை என்ன ?</h2><p>இது முற்றிலும் தவறான தகவலாகும்.</p><p>இது தொடர்பாக சமூக நீதித்துறை அளித்துள்ள விளக்கத்தில், "மாணவ - மாணவிகளுக்கு அளிக்கப்படும் IIT, JEE, NEET உள்ளிட்ட 19 வகை உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி நிறுத்தப்படவில்லை. கடந்த ஆண்டு 187 பேர் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற நிலையில், நடப்பு ஆண்டில் IITTM - நொய்டா, NIT - ஆந்திரா, NIFT - சென்னை மற்றும் பெங்களூரு, FDDI - சென்னை உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இதுவரை 357 மாணவ - மாணவிகள் சேர்க்கை பெற்றுள்ளனர். இந்த பயிற்சி தொடர்ந்து நடைபெறுவதோடு, அனைத்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தவறான தகவலைப் பரப்பாதீர் !</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அவசரமாக முடிப்பதைவிட முழுமையாக நிறைவேற்றுவதே நோக்கம்; சுற்றுச்சூழல் பணிகள் நீட்டிப்பு-அண்ணாமலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-aim-is-to-complete-rather-than-rush-extension-of-environmental-work-annamalai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-aim-is-to-complete-rather-than-rush-extension-of-environmental-work-annamalai#comments</comments><guid isPermaLink="false">ae4c269e-ca5d-4ff2-9ac5-2557cda92fa3</guid><pubDate>Sat, 29 Aug 2026 11:57:49 +0000</pubDate><atom:updated>2026-08-29T11:57:49.167Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Annamalai,அண்ணாமலை,work,சுற்றுச்சூழல்,பணிகள்,Extension,நீட்டிப்பு,Environmental</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/fq456r8z/33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/fq456r8z/33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வி தி லீடர்ஸ் இயக்கத்தின் நிறுவனர் <a href="https://www.dailythanthi.com/topic/annamalai">அண்ணாமலை </a>வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>எதிர்காலத் சமூகத்தின் நலனுக்காகவும் நமது தலைமுறைகளின் நலனுக்காகவும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னலமற்ற முறையில் தொடர்ந்து பணியாற்றி வரும் நமது வி தி லீடர்ஸ் அமைப்பின் அனைத்து தலைவர்களுக்கும் தன்னார்வலர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாற்றம் என்பது ஒரு நாளில் நடக்கக் கூடியது அல்ல. அது ஒரு தொடர்ச்சியான பயணம் சமூகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன், உங்கள் விடுமுறை நாட்கள் ஓய்வு நேரங்களை எல்லாம். நமது அமைப்பின் பணிகளுக்காக நீங்கள் செலவிட்டு வருவது மிகவும் பாராட்டுக்குரியது.</p><h2>பசுமைப் பணிகள்</h2><p>தூய்மையான மற்றும் சூரிய ஒளி நிறைந்த தமிழ்நாடு என்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாதம் என்ற நோக்கில் ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை 1400 க்கும் மேற்பட்ட Major Iivean அதாவது பெரிய நிகழ்ச்சிகளை நாம் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளோம். பல்வேறு இடங்களில் தூய்மைப் பணிகள் கழிவுகளை முறையாகப் பிரித்தல், மரக்கன்றுகள் நடுதல் பசுமைப் பணிகள் மற்றும் நீர்நிலைகளைப் பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளோம் அனைத்து மாவட்டங்களிலும், நமது சகோதர, சகோதரிகள் தொடர்ந்து இந்தப் பணிகளை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள்.</p><h2>கூடுதல் கால அவகாசம்</h2><p>இன்று வரை தமிழகம் முழுவதுமாக 175 டன் குப்பைகளை அகற்றியுள்ளோம். லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை மாநிலம் முழுவதும் நட்டுள்ளோம் பல இடங்களில் ஆரம்பித்த பணிகளை முழுமையாக நிறைவேற்றுவதும், மேலும் இவை தொடர்பாக மக்கள் வைத்துள்ள கோரிக்கைகள் மூலம் புதிதாகக் கண்டறிந்துள்ள பணிகளையும் நிறைவேற்றுவதும் அவசியம். சில திட்டங்களுக்கு அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதிகளைப் பெறுவதில் எதிர்பாராத தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள பணிகளை நிறைவு செய்யவும் கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது</p><p>இந்தப் பணிகளை அவசர அவசரமாக முடிப்பதைவிட அவை திட்டமிட்டபடி முழுமையாக நிறைவேற்றப்பட்டு, அதன் பலன் அந்தப் பகுதிகளுக்கும், மக்களுக்கும் நீண்ட காலத்திற்கு கிடைக்க வேண்டும் என்பதே நமது நோக்கம். சமீபத்தில் நேபாளில் பனிப்பாறை சரிவைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் இயற்கைச் சூழலில் ஏற்படும் மாற்றங்கள் எத்தகைய பேரிடர்களை உருவாக்கக்கூடும் என்பதையும். அவற்றின் தீவிரத்தையும் நமக்கு உணர்த்தியுள்ளது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது என்பது சிறந்த எதிர்காலத்திற்கான முன்னெடுப்பு மட்டுமல்ல. </p><h2>தொடர்ந்து நடைபெறும்...</h2><p>எதிர்காலத் தலைமுறைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நமது தலையாய பொறுப்பும்கூட. எனவே, நமது வி தி லீடர்ஸ் அமைப்பின் ஒவ்வொரு தலைவரும் மேற்கொண்ட தன்னலமற்ற உழைப்பிற்கும் முழுமையான பலன் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தூய்மையான மற்றும் சூரிய ஒளி நிறைந்த தமிழ்நாடு பிரச்சாரத்தை, மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கிறோம். ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கிய பணிகளை முழுமையாக நிறைவேற்றி, நாம் எடுத்துக்கொண்ட இலக்கை தொடர்ந்து நிலைத்திருக்கச் செய்வதே நமது உழைப்பின் உண்மையான வெற்றியாகும். எனவே செப்டம்பர் மாத இறுதி வரை, நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும். செப்டம்பர் மாதத்திற்கான, பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் குறித்த நமது சமூகப் பணிகள் அக்டோபர் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆந்திர பெண் கொலையில் வாலிபர் சிக்கினார்; பரபரப்பு தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-caught-in-andhra-pradesh-womans-murder-sensational-news</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-caught-in-andhra-pradesh-womans-murder-sensational-news#comments</comments><guid isPermaLink="false">926cdc78-a524-40e7-bfa3-988b81b45c68</guid><pubDate>Sat, 29 Aug 2026 11:46:11 +0000</pubDate><atom:updated>2026-08-29T11:46:11.199Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,Andhra,ஆந்திரா,பெண் கொலை,போலீசார் விசாரணை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/6szd506h/andhra33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பெண் கொலை]]></media:title><media:description type="html"><![CDATA[ 

ஆந்திர பெண் கொலையில் வாலிபர் சிக்கினார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/6szd506h/andhra33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் நகரி அருகே உள்ள நின்றறை சவரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாதன் மனைவி அருணா (வயது 43). இவர் சம்பவத்தன்று திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகிலுள்ள தாமரைப் பாக்கம் கூட்டுச்சாலை அருகே உள்ள வதட்டூர் கண்டிகை கிராமத்தில் தனது உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்ள வந்தார்.</p><h2>வயல்வெளியில் கொலை</h2><p>பின்னர் அங்கிருந்து சொந்த ஊருக்குப் புறப்பட்டார். இந்த நிலையில் அவர் ஊத்துக்கோட்டை அருகே தொட்டாரெட்டி குப்பம் கிராமம் அருகே வயல்வெளியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது முகம் ஆசிட் ஊற்றி சிதைக் கப்பட்டிருந்தது.</p><p>தகவல் அறிந்த ஊத்துக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அருணாவின் கழுத்து நெரிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் காணப் பட்டன. அவர் அணிந்திருந்த தாலி, கம்மல் உள்ளிட்ட நகைகள் அப்படியே இருந்தன.</p><h2>திருட்டுக்காக நடந்த கொலை அல்ல</h2><p>இதனால் இது திருட்டுக்காக நடந்த கொலை அல்ல என்பது தெரியவந்தது.  மேலும், இது பாலியல் வன்கொடுமையால் நடந்த கொலையும் இல்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>கொலையாளிகள்  அருணாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததோடு, அவரது அடையாளங்களை அழிப்பதற்காக முகத்தில் ஆசிட் அல்லது சிதைவை ஏற்படுத்தும் வேதிப்பொருளை ஊற்றி உள்ளனர்.</p><h2>கொலைக்கான காரணம் என்ன?</h2><p>அவரை கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று விசாரணை நடைபெற்று வருகிறது. கொலை செய்யப்பட்ட அருணாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.</p><h2>தனிப்படைகள் அமைப்பு</h2><p>கொலையாளிகளை பிடிக்கவும், கொலை பற்றி துப்பு துலக்கவும் ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி வினோத் தலைமையில்  தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அருணாவின் பிணத்திற்கு அருகில் ஒரு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D">செல்போன்</a> கிடந்தது. அதில் பதிவான அழைப்ப விவரங்கள் மற்றும் தகவல்களை கொண்டு அவரது உறவினர்கள் மற்றும் சில முக்கிய சந்தேக நபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>அருணா கொலை செய்யப்பட்டு கிடந்த பகுதியில் தொட்டாரெட்டி குப்பம்,வெள்ளக்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவில் கேமரா காட்சிகளை தனிப்படை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.</p><h2>தடய அறிவியல் துறையினர் ஆய்வு</h2><p>அருணா திருமணம் வீட்டில் இருந்து கிளம்பியது முதல் கொலை நடக்கும் வரை யார் யாரை சந்தித்தார் என்பதை இதன் மூலம் கண்டறிய முயல்கின்றனர்.</p><p>அருணாவின் முகத்தில் ஊற்றப்பட்டது ஆசிட் மட்டும்தானா அல்லது அடையாளம் தெரியாமல் இருக்க கல் உப்பு மற்றும் பிற வேதிப்பொருட்களைக் கலந்து ஊற்றினார்களா என்பது குறித்தும், அவர் கொலை செய்யப்பட்ட இடத்திலேயே உடல் வீசப்பட்டதா? அல்லது வேறு இடத்தில் கொலை செய்து இங்கு கொண்டு வரப்பட்டாரா? என்றும் தடய அறிவியல் துறையினர் ஆய்வு செய்கின்றனர்.</p><p>அனைத்து கோணங்களிலும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளதால், விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே அவரது செல்போன் அழைப்பு பதி வான விவரங்களை வைத்து ஒரு வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.</p><p>அவரிடம் இருந்து கொலைக்கான காரணங்கள் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பெண் கொலையில் வாலிபர் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>திருவண்ணாமலை கோவிலில் பக்தர்கள் செல்போன் வைப்பு மையம் அமைக்கும் பணிகள் தீவிரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/work-is-in-full-swing-to-set-up-a-mobile-phone-drop-off-center-for-devotees-at-the-tiruvannamalai-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/work-is-in-full-swing-to-set-up-a-mobile-phone-drop-off-center-for-devotees-at-the-tiruvannamalai-temple#comments</comments><guid isPermaLink="false">9174ae2d-3f9a-416c-a304-5b787eef41d1</guid><pubDate>Sat, 29 Aug 2026 11:21:19 +0000</pubDate><atom:updated>2026-08-29T11:21:19.022Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பக்தர்கள்,Devotees,செல்போன்,கட்டுப்பாட்டு மையம்,mobile phone,தீவிரம்,திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்,அமைக்கும் பணிகள்,Tiruvannamalai temple</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/bk1yqtg1/32.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/bk1yqtg1/32.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை,</p><p>திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வழக்கமாக விடுமுறை நாட்கள் மற்றும் விஷேச நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும்.</p><h2>கைபேசி வைப்பு மையம்</h2><p>இந்நிலையில் <a href="https://www.dailythanthi.com/topic/thiruvannamalai">திருவண்ணாமலை</a> அண்ணாமலையார் கோவிலில் வருகின்ற செப்டம்பர் 1-ந் தேதி  முதல் பக்தர்கள் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், 4 பிரதான கோபுரங்களின் அருகிலும் 5 இடங்களில் கைபேசி வைப்பு மையம் (mobile phone deposit centre) அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>பரந்தூர் விமானநிலையம்: &quot;வளர்ச்சித் திட்டங்களை தயவுசெய்து அரசியலாக்க வேண்டாம்&quot; - டி.ஆர்.பி. ராஜா வேண்டுகோள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/parandur-airport-please-do-not-politicize-development-projects-trb-raajas-appeal</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/parandur-airport-please-do-not-politicize-development-projects-trb-raajas-appeal#comments</comments><guid isPermaLink="false">a73142a2-e931-4539-b736-8b07e8fe9101</guid><pubDate>Sat, 29 Aug 2026 11:08:49 +0000</pubDate><atom:updated>2026-08-29T11:08:49.510Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,முன்னாள் அமைச்சர்,தமிழக அரசு,TRB Raja,டி.ஆர்.பி.ராஜா,Paranthur Airport,பரந்தூர் விமானநிலையம்,TamilNadu Goverment</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/zsoobezn/srier.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/zsoobezn/srier.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஒவ்வொரு முறையும் திட்டத்தை ஆரம்ப நிலையிலிருந்தே மீண்டும் வடிவமைக்க தொடங்கும் நிலையை தமிழ்நாடு தாங்கிக்கொள்ள முடியாது என்று முன்னாள் அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/topic/trb-raja">டி.ஆர்.பி. ராஜா</a> தெரிவித்துள்ளார். </p><h2>உள்கட்டமைப்பு எதிர்காலம்</h2><p>இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- </p><p>இந்த வாரத்தில் நிகழ்ந்த இரண்டு சம்பவங்கள் தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு எதிர்காலம் குறித்த ஒரு செய்தியை உணர்த்துகின்றன.</p><p>✈️ பரந்தூர் விமான நிலையம்: ஒப்புதல்கள் பெறப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இத்திட்டம் இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் புதிய இடத்தைத் தேடும் நிலை ஏற்பட்டுள்ளது.</p><p>️ உலகளாவிய விளையாட்டு நகரம் (Global Sports City): அடிக்கல் நாட்டப்பட்டு, ஒப்பந்தம் வழங்கப்பட்டு, கட்டுமானப் பணிகளைத் தொடங்கத் தயாராக இருந்த நிலையில், இப்போது அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மீண்டும் வடிவமைக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.</p><h2>மறுபரிசீலனை</h2><p>திட்டங்களை மறுபரிசீலனை செய்ய அரசுகளுக்கு முழு உரிமை உண்டு என்பதை மறுக்க முடியாது; ஆனால், அவற்றை மீண்டும் புதிதாகத் தொடங்குவது என்பது எவ்விதச் செலவும் இல்லாத ஒன்றல்ல.</p><p>ஒவ்வொரு முறை திட்டத்தை மாற்றியமைப்பதும் கால விரயம், ஒப்பந்தச் சிக்கல்கள், அதிகரிக்கும் செலவுகள் மற்றும் உள்கட்டமைப்புப் பணிகளில் தாமதம் ஆகியவற்றுக்கே வழிவகுக்கும்.</p><p>தேவைக்கு முன்பே திட்டமிட்டு, விரைவாகச் செயல்படுத்தக் கற்றுக்கொண்டதால்தான் தமிழ்நாடு இந்தியாவின் உற்பத்தித் துறையின் மையமாகத் திகழ்கிறது.</p><h2>அரசியலாக்காதீர்கள்</h2><p>பெரிய கனவுகளைக் காண்பதும், திட்டங்களை மேம்படுத்துவதும், பிரம்மாண்டமாக உருவாக்குவதும் வரவேற்கத்தக்கதே; ஆனால், ஒவ்வொரு முறையும் திட்டத்தை ஆரம்ப நிலையிலிருந்தே மீண்டும் வடிவமைக்கத் தொடங்கும் நிலையைத் தமிழ்நாடு தாங்கிக்கொள்ள முடியாது.</p><p>தயவுசெய்து வளர்ச்சியை அரசியலாக்காதீர்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மனித கறி சமைக்கப்பட்ட சம்பவம்: தம்பதி கைது - போலீசார் வெளியிட்ட தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/incident-involving-the-cooking-of-human-flesh-couple-arrested-police-release-details</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/incident-involving-the-cooking-of-human-flesh-couple-arrested-police-release-details#comments</comments><guid isPermaLink="false">31f332fc-fb56-4648-bae8-6a8f018aa4f1</guid><pubDate>Sat, 29 Aug 2026 10:46:05 +0000</pubDate><atom:updated>2026-08-29T10:46:05.855Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Crime News,தமிழகம்,கிரைம் செய்திகள்,TN Police,போலீசார்,கூடுவாஞ்சேரி,Guduvancheri</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/l3lu8x52/arrest.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/l3lu8x52/arrest.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கூடுவாஞ்சேரி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தம்பதி, மணிப்பூர் மாநிலம், ஜிரிபாம் மாவட்டம், காஷிம்பூர் பகுதியில் கைது செய்யப்பட்டனர்.</p><h2>எக்ஸ்பிரஸ் ரெயில்</h2><p>இதுதொடர்பாக காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p><a href="https://www.dailythanthi.com/topic/guduvancheri">கூடுவாஞ்சேரி</a> காவல் நிலைய போலீசார், இம்மாத தொடக்கத்தில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் உள்ள சூட்கேஸில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். மாணிக் உத்தீன் லஸ்கர் (22) மற்றும் பகாபதி மாஜி ஆகிய இருவரும் மணிப்பூர் மாநிலம், ஜிரிபாம் மாவட்டம், காஷிம்பூர் பகுதியில் கைது செய்யப்பட்டனர். இருவரும் மணிப்பூரில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, Transit Warrant பெறப்பட்ட பின்னர் சென்னைக்கு அழைத்து வரப்பட உள்ளனர்.</p><h2>பெண்ணின் உடல்</h2><p>கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி, ரெயில் எண் 12621-ன் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில், ரெயில் ஆக்ராவை சென்றடைந்தபோது சிவப்பு நிற சூட்கேஸிலிருந்து துர்நாற்றம் வீசியதை பயணிகள் கவனித்தனர். இதையடுத்து, அரசு ரெயில்வே போலீசார் அந்த சூட்கேஸை திறந்து பார்த்தபோது, தலை துண்டிக்கப்பட்டு பல துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் பெண்ணின் உடல் இருப்பது கண்டறியப்பட்டது.</p><p>பின்னர், உயிரிழந்த பெண் ஹயாத்துன் நிஷா (38) என்பதும், அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பதிவான CCTV காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில், அந்த சூட்கேஸை எடுத்துச் சென்ற ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் நடமாட்டம் கண்டறியப்பட்டது.</p> <h2>வழக்குப் பதிவு</h2><p>தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் உள்ள வாடகை வீட்டிற்கு போலீசார் சென்றனர். அங்கு ஒரு பெரிய சமையல் பாத்திரத்தில் பெண்ணின் உடலின் மேலும் சில பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.</p><p>இச்சம்பவம் தொடர்பாக T8 கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் முதலில் பெண் காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பின்னர் கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது.</p><p>விசாரணையில், மாணிக் உத்தீன் லஸ்கர், த/பெ. மோனிருதீன் லஸ்கர், தக்ஷிண் கிருஷ்ணபூர், சோனாபரிகாட், கச்சார் மாவட்டம், அசாம் மாநிலம் மற்றும் அவரது மனைவி பகாபதி மாஜி, த/பெ. சோட்ரே மாஜி, ராத்பூர், கேந்துஜார், ஒடிசா 758016 ஆகியோர் சந்தேக நபர்களாக போலீசாரால் அடையாளம் காணப்பட்டனர். இதையடுத்து, தலைமறைவாக இருந்த தம்பதியரை கைது செய்ய போலீஸ் தனிப்படைகள் பல்வேறு இடங்களில் தேடுதல் மேற்கொண்டனர்.</p> <h2>கைது</h2><p>29.08.2026 இன்று, குற்றம்சாட்டப்பட்ட மாணிக் உத்தீன் லஸ்கர் மற்றும் அவரது மனைவி பகாபதி மாஜி ஆகிய இருவரும் மணிப்பூர் மாநிலம், ஜிரிபாம் மாவட்டம், காஷிம்பூர் பகுதியில் கைது செய்யப்பட்டனர். அவர்களை Transit Warrant பெற்று தாம்பரத்திற்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இந்நிலையில் தகாத உறவின் காரணமாக கொலை நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிஷா உடனான தொடர்பை மனைவி பகமதி மாஜி கண்டித்ததால் கொலை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சென்னை: மெட்ரோ பணியாளர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-special-safety-awareness-program-for-metro-staff</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-special-safety-awareness-program-for-metro-staff#comments</comments><guid isPermaLink="false">92b052d3-20f2-4ccb-8cd7-0ba73f3169b3</guid><pubDate>Sat, 29 Aug 2026 10:27:21 +0000</pubDate><atom:updated>2026-08-29T10:27:21.850Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,சென்னை மெட்ரோ,chennai metro,சென்னை மெட்ரோ ரெயில்,Chennai Metro Rail,விழிப்புணர்வு நிகழ்ச்சி,safety awareness</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/iemtx0d0/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/iemtx0d0/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-II கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கான சிறப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி 28.08.2026 அன்று நந்தனத்தில் உள்ள மெட்ரோஸ் அரங்கில் நடைபெற்றது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>விழிப்புணர்வு நிகழ்ச்சி</h2><p>தமிழ்நாடு அரசின் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் (DISH - Directorate of Industrial Safety and Health) சார்பில், கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தின் (BOCW - Building and Other Construction Workers Welfare Board) இணை இயக்குநர் ராஜ்குமார் தலைமையில், துணை இயக்குநர்கள் மணிசங்கர் மற்றும் சுவேதா ஆகியோர் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தினர்.</p><p>இந்த நிகழ்ச்சி சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் பொது ஆலோசகர் குழுவின் பாதுகாப்பு அணியினரால் கூட்டாக நடத்தப்பட்டது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இணை பொது மேலாளர் கவுண்டின்ய போஸ் (பாதுகாப்பு மற்றும் தரம்), பொது ஆலோசகர் குழுவின் தலைவர் முருகமூர்த்தி, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் பொது ஆலோசகர் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.</p><h2>முக்கிய பாதுகாப்பு அம்சங்கள்</h2><p>கட்டுமானப் பணிகளின்போது விபத்துகளைத் தடுப்பது, பாதுகாப்பற்ற செயல்கள் மற்றும் சூழ்நிலைகளை கண்டறிந்து தடுப்பது, பாதுகாப்பான முறையில் பணிகளை மேற்கொள்வது, சட்டபூர்வமான பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுவது மற்றும் பணியாளர்களை திறம்படக் கண்காணிப்பது உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்து இந்நிகழ்ச்சியில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.</p><p>இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் பொது ஆலோசகர்கள் மற்றும் கட்டம்-II-ன் ஒப்பந்ததாரர் நிறுவனங்களைச் சேர்ந்த பணிகளை நேரடியாகக் கண்காணிக்கும் பொறியாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் மேஸ்திரிகள் உள்ளிட்ட சுமார் 200 பேர் பங்கேற்றனர்.</p><h2>பாதுகாப்பே முதன்மை</h2><p>சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-II கட்டுமானப் பணிகளில் பாதுகாப்பு நடைமுறைகளை மேலும் வலுப்படுத்துவதுடன், அனைத்து நிலைகளிலும் “பாதுகாப்பே முதன்மை” என்ற பணிச்சூழலை உருவாக்குவதன் அவசியம் இந்நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.</p><p>கட்டம்-II திட்டப் பணிகளில் பாதுகாப்புத் தரங்களை மேலும் மேம்படுத்துவதற்கான மதிப்புமிக்க வழிகாட்டுதல்கள் மற்றும் ஆதரவை வழங்கிய தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகத்திற்கு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை மெட்ரோ</a> ரெயில் நிறுவனம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வீடுகளுக்கான கியாஸ் சிலிண்டர் விநியோகம் சீரடைந்ததா..? - இந்தியன் ஆயில் அதிகாரி விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/has-the-distribution-of-domestic-gas-cylinders-normalized-indian-oil-official-explains</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/has-the-distribution-of-domestic-gas-cylinders-normalized-indian-oil-official-explains#comments</comments><guid isPermaLink="false">fd2a385f-c1a2-4ace-85cf-e2f6fd7d07d5</guid><pubDate>Sat, 29 Aug 2026 10:18:57 +0000</pubDate><atom:updated>2026-08-29T10:18:57.693Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,சமையல் எரிவாயு,Gas Cylinder,கியாஸ் சிலிண்டர்,சமையல் எரிவாயு சிலிண்டர்,cooking gas cylinder,இந்தியன் ஆயில்,Indian Oil</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/5hi24dp5/india.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/5hi24dp5/india.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p>வீடுகளுக்கான கியாஸ் சிலிண்டர் விநியோகம் சீரடைந்தா? என்பது குறித்து <a href="https://www.dailythanthi.com/topic/இந்தியன்-ஆயில்">இந்தியன் ஆயில்</a> அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். </p><h2>சமையல் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு </h2><p>ஈரான் - இஸ்ரேல் இடையே தாக்குதல்கள் தொடர்ந்த நிலையில், ஹார்மூஸ் நீரிணை வழியாக வரும் சரக்கு கப்பல்கள் சேவை தடைபட்டது. இதனால், சமையல் கியாஸ் சிலிண்டர் விநியோகிப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டது. </p><p>மாதங்கள் கடந்தாலும் தற்போது வரை சமையல் கியாஸ் சிலிண்டர் விநியோகம் சீரடையவில்லை. இந்த நிலையில், கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பாஷா என்பவர், சமையல் கியாஸ் சிலிண்டர் விநியோகம் எப்போது சீரடையும் என்று <a href="https://www.dailythanthi.com/topic/இந்தியன்-ஆயில்">இந்தியன் ஆயில்</a> நிறுவன அதிகாரிக்கு கடிதம் எழுதியிருந்தார். </p><p>அதற்கு அவர் பதில் கடிதம் அனுப்பியுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-​</p><h2>புவிசார் அரசியல் சூழல்</h2><p>பெட்ரோலியத் துறையைப் பாதித்துள்ள தற்போதைய உலகளாவிய புவிசார் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, வீட்டு உபயோக நுகர்வோருக்குத் தடையின்றி சமையல் கியாஸ் சிலிண்டர் கிடைப்பதை உறுதிசெய்ய எண்ணெய் நிறுவனங்கள் விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. </p><p>விநியோக தளவாடங்களை உன்னிப்பாகக் கண்காணித்தல், சுத்திகரிப்பு நிலைய உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு உள்ளிருப்புகளை சரியாகப் பகிர்ந்தளித்தல் ஆகியவை இதில் அடங்கும். </p><h2>சமமான முறையில் சிலிண்டர் விநியோகம்</h2><p>இதன் காரணமாக, தற்போது வீட்டு உபயோக நுகர்வோருக்கான சமையல் கியாஸ் சிலிண்டர் விநியோகம் சீராக உள்ளது.  ​மேலும், வீட்டு உபயோக நுகர்வோருக்கு முன்னுரிமை அளித்து தடையின்றியும் சரியான நேரத்திலும் சிலிண்டர்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் உள்ள விதிகளை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.</p><p>​கூடுதலாக, அனைத்து நுகர்வோருக்கும் சமமான முறையில் சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்யவும், உண்மையான தேவையை பூர்த்தி செய்யவும், வீட்டு உபயோக எல்.பி.ஜி. முன்பதிவுக்கான கால இடைவெளியில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.</p><h2>கியாஸ் சிலிண்டர் முன்பதிவு</h2><p>தற்போதைய நிலவரப்படி, நகர்ப்புறங்களில் 25 நாட்களுக்குப் பிறகும், கிராமப்புறங்களில் 45 நாட்களுக்குப் பிறகும் அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்துகொள்ளலாம். பொதுமக்கள் பதற்றத்தில் தேவையின்றி முன்பதிவு செய்வதைத் தடுப்பதே இந்நடவடிக்கையின் நோக்கமாகும். நிலவி வரும் சர்வதேச அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டே இந்த முன்பதிவுக் கட்டுப்பாடுகள் தற்காலிகமாக அமல்படுத்தப்பட்டுள்ளன.</p><p>​சிலிண்டர் விநியோகத்திற்கும் அடுத்த முன்பதிவுக்கும் இடையே 25 மற்றும் 45 நாட்கள் இடைவெளி நிர்ணயிக்கப்பட்டுள்ளதற்கான காரணம், பொதுமக்களின் சராசரி பயன்பாட்டு முறை மற்றும் சமச்சீரான விநியோகத் தேவையின் அடிப்படையில் அமைந்தது.</p><h2>8 சிலிண்டர்கள் பெற முடியும்</h2><p>அ) கிராமப்புறங்களைப் பொறுத்தவரை, நிர்ணயிக்கப்பட்டுள்ள 45 நாட்கள் முன்பதிவு இடைவெளியின்படி, ஒரு நுகர்வோர் ஆண்டிற்கு அதிகபட்சமாக சுமார் 8 சிலிண்டர்கள் வரை பெற முடியும். எனினும், 2025–26 நிதியாண்டில் கிராமப்புற நுகர்வோரின் உண்மையான தனிநபர் பயன்பாடு (14.2 கிலோ சிலிண்டர் கணக்கீட்டின்படி) ஆண்டிற்குச் சராசரியாக 5.07 சிலிண்டர்களாக மட்டுமே இருந்தது. இது அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள்ளேயே உள்ளது.</p><p>​ஆ) நகர்ப்புறங்களைப் பொறுத்தவரை, நிர்ணயிக்கப்பட்டுள்ள 25 நாட்கள் முன்பதிவு இடைவெளியின்படி, ஒரு நுகர்வோர் ஆண்டிற்கு அதிகபட்சமாக சுமார் 14 சிலிண்டர்கள் வரை பெற முடியும். 2025–26 நிதியாண்டில் நகர்ப்புற நுகர்வோரின் உண்மையான தனிநபர் பயன்பாடு ஆண்டிற்குச் சராசரியாக 6.41 சிலிண்டர்களாக மட்டுமே இருந்தது. இதுவும் அனுமதிக்கப்பட்ட வரம்பை விடக் கணிசமாகக் குறைவாகும்.</p><p>​எனவே, நுகர்வோரின் தற்போதைய பயன்பாட்டு முறைகள், சமச்சீரான விநியோகம், நிறுவனத்தின் செயல்பாட்டுத் தேவைகள் மற்றும் முறையற்ற அல்லது அளவுக்கு அதிகமான முன்பதிவுகளைத் தடுப்பது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்த மறுபதிவு இடைவெளிகள் முறைப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>​இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோவையில் அடுத்தடுத்து 20 சிலிண்டர்கள் வெடித்து விபத்து..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/accident-involving-a-series-of-20-cylinder-explosions-in-coimbatore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/accident-involving-a-series-of-20-cylinder-explosions-in-coimbatore#comments</comments><guid isPermaLink="false">a9392c8e-ef5d-47d3-9554-b0bde5998cd1</guid><pubDate>Sat, 29 Aug 2026 10:12:41 +0000</pubDate><atom:updated>2026-08-29T10:12:41.477Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,கோவை செய்திகள்,சிலிண்டர் வெடிப்பு,cylinder explosion,Gyas cylinder explodes</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/w86o2rj3/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/w86o2rj3/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவை நவஇந்தியா அருகே உள்ள பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், அடுத்தடுத்து சுமார் 20 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்ட தகர வீடுகள் உடைந்து சேதமடைந்தன.</p><h2>உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை</h2><p>சம்பவம் நடைபெற்றபோது அப்பகுதியில் வசித்து வந்த வடமாநில தொழிலாளர்கள் பணிக்கு சென்றிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும், தொழிலாளர்களின் வீடுகளில் இருந்த உடமைகள் மற்றும் பொருட்கள் தீயில் சிக்கி சேதமடைந்தன.</p><h2>அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடிப்பு</h2><p>தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கிருந்த சிலிண்டர்களில் இருந்து எரிவாயு வெளியேறி, அடுத்தடுத்து <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சிலிண்டர்கள் </a>வெடித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து வெடிப்பு சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.</p><h2>தீயணைப்பு வீரர்கள் போராட்டம்</h2><p>விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் 30-க்கும் மேற்பட்ட வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு கொழுந்துவிட்டு எரிந்த தீயை நீண்ட நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.</p><p>மேலும், தீப்பற்றாமல் இருந்த சிலிண்டர்களை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தி மீட்டனர். இதன் மூலம் மேலும் விபத்து ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.</p><h2>தொழிலாளர்களின் உடமைகள் தீயில் நாசம்</h2><p>இந்த தீ விபத்தில் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்களின் உடமைகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. 50-க்கும் மேற்பட்ட தகர வீடுகள் சேதமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2>கோவையில் பெரும் பரபரப்பு</h2><p>20-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததுடன், ஆபத்தான நிலையில் இருந்த சிலிண்டர்களையும் பாதுகாப்பாக மீட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.</p><p>இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கடையநல்லூர்: மூதாட்டியிடம் நகையை திருடிய 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kadayanallur-2-arrested-for-stealing-jewellery-from-an-elderly-woman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kadayanallur-2-arrested-for-stealing-jewellery-from-an-elderly-woman#comments</comments><guid isPermaLink="false">4540b06e-78da-47b8-aa8b-62bcdb7e675e</guid><pubDate>Sat, 29 Aug 2026 09:55:34 +0000</pubDate><atom:updated>2026-08-29T09:55:34.464Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>போலீஸ்,மூதாட்டி,Elderly woman,Police action,தென்காசி மாவட்டம்,Tenkasi District</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/xnghcshe/3.jpeg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மூதாட்டியும் அவரிடமிருந்து நகை  திருடிய கோகுல கண்ணன் மற்றும் வேலம்மாள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/xnghcshe/3.jpeg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கடையநல்லூர்,</p><p>கடையநல்லூர் அருகே மூதாட்டியிடம் இருந்து 44 கிராம் தங்க நகைகளை வீடு புகுந்து திருடிய வழக்கில் பக்கத்து வீட்டு பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>நகை திருட்டு</h2><p>தென்காசி மாவட்டம் மேல கடையநல்லூர் அருகே மூதாட்டி கணபதி அம்மாள் (வயது 73) வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் ஓட்டைபிறித்து வீட்டிற்குள் குதித்தனர். பின்னர், அங்கிருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு நகையை கழத்தி கொடுக்குமாறு கத்தியைக் காட்டி மிரட்டினர். இதற்கு பயந்த அவர் தனது காதில் இருந்த கம்மல் மற்றும் கழுத்தில் இருந்த 44 கிராம் தங்க நகைகளை கழத்தி கொடுத்துள்ளார். இது குறித்து கடையநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கடையநல்லூர் போலீஸ் ஆய்வாளர் திரு.கிறிஸ்டி என்பவர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>விசாரணையின்போது அந்த பகுதியில் உள்ள தோப்பில் ஆரங்சு நிற பைக் ஒன்று ஒரே இடத்தில் நீண்ட நேரமாக இருந்தது. பைக் உரிமையாளர் வராததால் சந்தேகமடைந்த போலீசார் அந்த பைக்கின் நம்பர் பிளேட் எண்ணை வைத்து விசாரணை செய்து வந்தனர். அப்போது, அந்த பைக்கின் உரிமையாளர் காஞ்சிபுரத்தை சேர்ந்த கோகுல் கண்ணன் (வயது 36) என்பது தெரியவந்தது. அதன் மூலமாக கோகுல கண்ணனின் மொபைல் சிக்னலை வைத்து அவரது இருப்பிடத்தை கண்காணித்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a> அவர் சென்னையில் இருப்பதை கண்டுபிடித்து அங்கு சென்று அதிரடியாக அவரை மடக்கிப்பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன.</p><h2>கைது</h2><p>மூதாட்டியின் வீட்டின் அருகில் வசிக்கும் வேலம்மாள் (வயது 48) என்பவர் மற்றும் தனது ஆண் நண்பர் சுரேஷ் என்பவருடன் இணைந்து இந்த திருட்டு சம்பவத்தை நடத்தியது விசாரணையில் தெரிய வந்தது. கோகுல கண்ணன் திருடுவதற்கு தனது பைக்கை கொடுத்ததும், கூட்டாளியாக செயல்பட்டதையும் தெரிவித்தார். இதையடுத்து வேலம்மாள் மற்றும் கோகுல கண்ணனை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்து, அவர்கள் திருடிய  44 கிராம் நகையையும் மீட்டு மூதாட்டியிடம் கொடுத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சுரேஷ் என்பவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.. - பிரேமலதா விஜயகாந்த்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-rise-in-prices-of-essential-commodities-must-be-curbed-premalatha-vijayakanth</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-rise-in-prices-of-essential-commodities-must-be-curbed-premalatha-vijayakanth#comments</comments><guid isPermaLink="false">497bb9ae-9490-41a5-914b-b727da30a877</guid><pubDate>Sat, 29 Aug 2026 09:38:45 +0000</pubDate><atom:updated>2026-08-29T09:38:45.678Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>DMDK,தேமுதிக,பிரேமலதா விஜயகாந்த்,பிரேமலதா,Premalatha Vijayakand,Premalatha</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/1hwhmzqy/premalatha.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரேமலதா விஜயகாந்த்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/1hwhmzqy/premalatha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தி சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>பொருட்களின் விலை உயர்வு</h2><p>தமிழகத்தில் அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய மளிகைப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவது மிகுந்த கவலையளிக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வால் சாமானிய ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்களது அன்றாட குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். வருமானம் அதிகரிக்காத நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மட்டும் தொடர்ந்து உயர்ந்து வருவதால், பொதுமக்களின் குடும்பப் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் மாதாந்திர வருமானத்தில் பெரும்பகுதி உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கே செலவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு இதனை வெறும் விலை உயர்வாக பார்க்காமல், சாமானிய மக்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய முக்கியப் பிரச்சினையாக கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><h2>விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்</h2><p>அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, சாமானிய ஏழை மற்றும் நடுத்தர மக்களும் எந்தவித பொருளாதார நெருக்கடியும் இல்லாமல், நிம்மதியாகவும் கண்ணியமாகவும் நம் தமிழ்நாட்டில் வாழ முடியும் என்ற நிலையை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழக அரசு</a> உருவாக்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி, மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பா..? வானிலை மையம் கூறுவதென்ன..?</title><link>https://www.dailythanthi.com/news/weather/is-there-a-chance-of-rain-in-tamil-nadu-today-what-does-the-meteorological-centre-say</link><comments>https://www.dailythanthi.com/news/weather/is-there-a-chance-of-rain-in-tamil-nadu-today-what-does-the-meteorological-centre-say#comments</comments><guid isPermaLink="false">c3777edb-3d1a-4a05-a498-7a8a0dc2f3b8</guid><pubDate>Sat, 29 Aug 2026 09:15:30 +0000</pubDate><atom:updated>2026-08-29T09:15:30.385Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Rain,Weather,வானிலை,தமிழகம்,Weather News,மழை,வானிலை செய்திகள்,Weather update,வானிலை ஆய்வு மையம்,வானிலை அறிக்கை,weather condition,வானிலை தகவல்,Weather Report,வானிலை முன்னறிவிப்பு,Weather Status,வானிலை அறிவிப்பு,weather center,வானிலை அப்டேட்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/6woeaqp8/patt.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/6woeaqp8/patt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><h2>மழை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><p><strong>29-08-2026 மற்றும் 30-08-2026:</strong> தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>31-08-2026:</strong> தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>01-09-2026 மற்றும் 02-09-2026:</strong> வடகடலோர தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>03-09-2026:</strong> வடகடலோர தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>04-09-2026:</strong> தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong><ins>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</ins></strong></p><p><strong>29-08-2026 முதல் 02-09-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும்.</p><p><strong><ins>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</ins></strong></p><p><strong>29-08-2026 முதல் 02-09-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகத்தில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று (29-08-2026) மற்றும் நாளை (30-08-2026):</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38 ° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>மீனவர்களுக்கான எச்சரிக்கை:</h2><p><strong><ins>தமிழக கடலோரப்பகுதிகள்:</ins></strong></p><p><strong>29-08-2026 முதல் 02-09-2026 வரை:</strong> தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong><ins>வங்கக்கடல் பகுதிகள்:</ins></strong></p><p><strong>29-08-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>30-08-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் மத்திய வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>31-08-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>01-09-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகள், மத்தியகிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>02-09-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong><ins>அரபிக்கடல் பகுதிகள் :</ins></strong></p><p><strong>29-08-2026 முதல் 02-09-2026 வரை:</strong> மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்! - மாணிக்கம் தாகூர் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/neet-must-be-completely-scrapped-out-of-respect-for-the-sentiments-of-tamil-nadu-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/neet-must-be-completely-scrapped-out-of-respect-for-the-sentiments-of-tamil-nadu-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">7fdb8b8a-2a93-4b24-823a-49f40d25a872</guid><pubDate>Sat, 29 Aug 2026 09:07:43 +0000</pubDate><atom:updated>2026-08-29T09:07:43.429Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,நீட் தேர்வு,NEET,நீட்,Manickam Tagore MP,நீட் தேர்வு ரத்து,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/2cbijxxr/manickam-tagore.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/2cbijxxr/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>மாணவி தற்கொலை</h2><p>நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த மாணவி ஸ்ருதிலயா, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் கலந்தாய்வில் இடம் கிடைக்காத மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டுள்ள செய்தி நெஞ்சை உலுக்குகிறது. மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு கடினமாக உழைத்த ஒரு இளம் மகளை நாம் இழந்திருப்பது தாங்க முடியாத வேதனையளிக்கிறது. மாணவி ஸ்ருதிலயாவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ்சும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் மாணவியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவர்.</p><p>தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 7.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவச் செல்வங்கள் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள்; அதில் லட்சக்கணக்கான மாணவர்கள் மருத்துவக் கனவோடு நீட் தேர்வெழுதுகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள மொத்த மருத்துவ இடங்களோ வெறும் 13,999 மட்டுமே. தமிழ்நாட்டில் நீட் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 2025-இல் 76,181 ஆக இருந்து, 2026-இல் 61,306 ஆகக் குறைந்து 19.5% கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. சுமார் 15,000 தகுதியுடைய மாணவர்கள் குறைந்து போயிருப்பது, இந்த முறைகேடான தேர்வு முறையின் மீது மாணவர்களுக்குத் துளியும் நம்பிக்கையற்றுப் போய்விட்டதையே காட்டுகிறது.</p><h2>எந்த உயிரும் பறிபோகக் கூடாது</h2><p>நீட் தேர்வு என்ற கொடூரமான முறை தமிழ்நாட்டு மாணவர்களின் உயிர்களையும் கனவுகளையும் தொடர்ந்து பறிப்பது எப்போது முடிவுக்கு வரும்?</p><p>நீட் கொடுமையால் இனி எந்தவொரு மாணவரின் உயிரும் பறிபோகக் கூடாது. தமிழ்நாடு தொடர்ந்து போராடியும் மாணவர்களின் மரணங்களைக் கண்டும் காணாமல் இருக்கும் மோடி அரசின் கல் நெஞ்சமும் பிடிவாதமுமே இந்த தொடர் துயரங்களுக்குக் காரணம். மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதை மோடி அரசும், மத்திய கல்வி மந்திரி பிரஹலாத் ஜோஷியும் உடனடியாக நிறுத்திவிட்டு, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழ்நாட்டின் </a>உணர்வுகளுக்கு மதிப்பளித்து நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆன்லைன் முதலீட்டு மோசடிகளை தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ய வேண்டும் - வேல்முருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/online-investment-scams-should-be-investigated-across-tamil-nadu-velmurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/online-investment-scams-should-be-investigated-across-tamil-nadu-velmurugan#comments</comments><guid isPermaLink="false">455f8b42-4da4-45a5-91a5-3182f6013999</guid><pubDate>Sat, 29 Aug 2026 09:06:39 +0000</pubDate><atom:updated>2026-08-29T09:06:39.609Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Velmurugan,வேல்முருகன்,ஆன்லைன் மோசடி,online scam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/lhg4tcni/velmurugan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/lhg4tcni/velmurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/velmurugan">வேல்முருகன்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ‘FQL’ என்ற ஆன்லைன் செயலி மூலம் அதிக லாபம், இரட்டிப்பு லாபம் கிடைக்கும் எனக் கூறி பொதுமக்களிடம் முதலீடுகள் பெறப்பட்டு, தற்போது பெரும் மோசடி நடைபெற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.</p><h2>கடுமையான நடவடிக்கை</h2><p>இந்த மோசடி தொடர்பாக இதுவரை 1,500-க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது உழைப்பால் ஈட்டிய பணத்தை இழந்திருக்கக்கூடும் என்ற நிலையில், இந்த மோசடியின் உண்மையான அளவு மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையை முழுமையான விசாரணையின் மூலம் அரசு உடனடியாகக் கண்டறிய வேண்டும். இந்த மோசடியின் பின்னணியில் செயல்பட்டவர்கள், அவர்களுக்கு உதவியவர்கள், முகவர்கள் உள்ளிட்ட அனைவரையும் சட்டப்படி கைது செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><h2>முதலீட்டு மோசடி புகார்</h2><p>மேலும், இந்தச் சம்பவம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுடன் மட்டுமே தொடர்புடையதா? அல்லது தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் வெவ்வேறு செயலிகள், முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களில் இதேபோன்ற மோசடிகள் நடைபெற்று வருகின்றனவா? என்பதையும் அரசு விரிவாக விசாரிக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் பதிவாகியுள்ள இணையவழி மற்றும் முதலீட்டு மோசடி புகார்களை ஒருங்கிணைத்து ஆய்வு செய்து, ஒரே மாதிரியான செயல்முறைகள், வங்கிக் கணக்குகள், பணப் பரிமாற்றங்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் முகவர் வலையமைப்புகள் ஏதேனும் தொடர்புடையவையா? என்பதை புலனாய்வு செய்ய வேண்டும்.</p><h2>உரிய சட்ட உதவி</h2><p>குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களின் வங்கிக் கணக்குகள், சட்டவிரோதமாகப் பெறப்பட்டதாகக் கண்டறியப்படும் சொத்துகள் மற்றும் பணப் பரிமாற்றங்களை சட்டப்படி உடனடியாக முடக்கி, மோசடியில் பறிபோன பொதுமக்களின் பணத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும். அதேபோல், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரிடமிருந்தும் முறையாக புகார் பெற்று, அவர்களின் பண இழப்பு குறித்த முழுமையான ஆவணங்களைச் சேகரித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய சட்ட உதவியும் வழங்க வேண்டும்.</p><p>எளிய மக்களின் பல ஆண்டுகால உழைப்பையும் சேமிப்பையும் ஆசை வார்த்தைகளைக் கூறிச் சுரண்டும் இத்தகைய இணையவழி மற்றும் முதலீட்டு மோசடிகளை அரசு அலட்சியப்படுத்தக் கூடாது. மேலூர் FQL மோசடி தொடர்பாக உண்மையான இழப்புத் தொகை, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, மோசடியில் ஈடுபட்டவர்களின் முழு வலையமைப்பு ஆகியவற்றை வெளிக்கொண்டு வந்து, குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து, பாதிக்கப்பட்ட மக்களின் பணத்தை விரைந்து மீட்டுத்தர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தி.மு.க. முப்பெரும் விழாவில் 110 மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுகம்: மு.க.ஸ்டாலின் அதிரடி திட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/introduction-of-110-district-in-charges-at-the-dmks-grand-tripartite-event-mk-stalins-bold-plan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/introduction-of-110-district-in-charges-at-the-dmks-grand-tripartite-event-mk-stalins-bold-plan#comments</comments><guid isPermaLink="false">c6d58f2d-a94c-4966-9f1d-a8d0967019dd</guid><pubDate>Sat, 29 Aug 2026 08:51:33 +0000</pubDate><atom:updated>2026-08-29T08:51:33.992Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,M.K.Stalin,தமிழகம்,முப்பெரும் விழா,தமிழக அரசியல்,tn politics</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/ecf3ohn6/jiki.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தி.மு.க. முப்பெரும் விழாவில் 110 மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/ecf3ohn6/jiki.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தி.மு.க. முப்பெரும் விழாவில் 110 மாவட்ட பொறுப்பாளர்களையும் அறிமுகம் செய்ய,<a href="https://www.dailythanthi.com/topic/mkstalin"> கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின்</a> திட்டமிட்டுள்ளார். </p><h2>மாவட்ட செயலாளர்கள் 110 ஆக உயர்வு</h2><p>தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. அடைந்த தோல்விக்கு காரணங்கள் குறித்து ஆராய குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் அளித்த அறிக்கையின் அடிப்படையில், தி.மு.க.வை வலுப்படுத்த 77 ஆக இருந்த மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 110 ஆக உயர்த்த கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான <a href="https://www.dailythanthi.com/topic/mkstalin">மு.க.ஸ்டாலின்</a> முடிவு செய்தார். </p><p>அதன்படி, நேற்று கட்சி ரீதியாக தி.மு.க.வில் பிரிக்கப்பட்ட 110 மாவட்டங்கள் எவை? என்பதும், அதில் என்னென்ன சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றுள்ளன? என்பதுவும் வெளியானது. </p><h2>மாவட்ட செயற்குழு கூட்டம்</h2><p>தற்போதுள்ள 77 மாவட்ட செயலாளர்கள், புதிதாக உதயமாகும் 110 மாவட்டங்களில், எந்தெந்த ஒன்றியம், நகரம், பேரூர் பகுதிகள் இடம்பெற வேண்டும் என்பது குறித்து மாவட்ட செயற்குழுவை கூட்டி, அதற்கான பரிந்துரைகளை 15 நாட்களுக்குள் கட்சித் தலைமைக்கு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>பொதுவாக, தி.மு.க.வில் மாவட்ட செயலாளர்கள், கட்சி தேர்தல் நடத்தியே நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அதற்கு முன்பாக குறிப்பிட்ட மாவட்டத்தை கவனிக்க பொறுப்பாளர்கள் தான் நியமிக்கப்படுவார்கள். தேர்தல் மூலம் மாவட்ட செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வரை பொறுப்பாளர்களே நிர்வகிப்பார்கள். </p><h2>தி.மு.க. முப்பெரும் விழாவில் அறிமுகம்</h2><p>அந்த வகையில், தி.மு.க.வில் புதிதாக உதயமாகியுள்ள 110 மாவட்டங்களுக்கும் விரைவில் பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அவர்கள் அனைவரையும் செப்டம்பர் 17-ந் தேதி நடைபெறும் தி.மு.க. முப்பெரும் விழாவில் அறிமுகம் செய்து வைக்க, கட்சியின் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/mkstalin">மு.க.ஸ்டாலின்</a> திட்டமிட்டுள்ளார். முப்பெரும் விழா நடைபெறும் இடம் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.</p>]]></content:encoded></item></channel></rss>