<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 12 Jul 2026 06:52:43 +0000</lastBuildDate><item><title>திருவாரூரில் சட்டவிரோத மண் எடுப்பு: உடனடி நடவடிக்கை எடுக்க கோரி டிடிவி தினகரன் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/illegal-soil-extraction-in-thiruvarur-ttv-dhinakaran-urges-immediate-action</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/illegal-soil-extraction-in-thiruvarur-ttv-dhinakaran-urges-immediate-action#comments</comments><guid isPermaLink="false">bbf53265-6861-4486-8dd0-3ec0ddec610f</guid><pubDate>Sun, 12 Jul 2026 06:51:04 +0000</pubDate><atom:updated>2026-07-12T06:51:04.409Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thiruvarur,திருவாரூர்,TTV Dhinakaran,டிடிவி தினகரன்,soil,மண் கடத்தல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/qu82hmbp/ttv1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/qu82hmbp/ttv1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவாரூர்,</p><p>அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்திற்கு உட்பட்ட துளசேந்திரபுரம் கண்ணாரப்பேட்டை  வடக்கு ஏரியில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D">வண்டல் மண்</a> எடுப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதியை பயன்படுத்தி அளவுக்கு அதிகமான மண்ணை  எடுத்து சட்டவிரோதமாக தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p><h2>கடும் கண்டனம்</h2><p>விவசாய நிலங்களின் வளத்தை மேம்படுத்தும் வகையிலும், நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிக்கும் நோக்கத்திலும் வழங்கப்பட்ட வண்டல் மண் எடுப்புக்கான அனுமதியை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி வருவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை, அதனை தட்டிக் கேட்ட இளைஞர்களின் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.</p><h2>சட்டவிரோத செயல்</h2><p>அரசு வகுத்துள்ள விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு, அனுமதிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு அதிகமாக இயந்திரங்கள் மூலம்  இரவு, பகலாக  மண் தோண்டி எடுக்கப்பட்டு, தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுவது குறித்து பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததின் மூலம் இந்த சட்டவிரோத செயல்களுக்கு காவல்துறையும் சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகளும் உடந்தையாக இருக்கின்றரா? என்ற சந்தேகம் அப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.</p><h2>நடவடிக்கை</h2><p>எனவே, திருவாரூர் மாவட்டம் துளசேந்திரபுர கண்ணாரப்பேட்டை வடக்கு ஏரியில் நடைபெறும் மண் திருட்டை உடனடியாக தடுத்து நிறுத்திடும் நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, சட்டவிரோத மண் எடுப்பைத் தட்டிக் கேட்ட இளைஞர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தஞ்சையின் பின்வரும் பகுதிகளில் நாளை மறுநாள் மின் தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/power-outage-in-the-following-areas-of-thanjavur-the-day-after-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/power-outage-in-the-following-areas-of-thanjavur-the-day-after-tomorrow#comments</comments><guid isPermaLink="false">a08a3252-8186-418e-ac97-6400a30852eb</guid><pubDate>Sun, 12 Jul 2026 06:31:27 +0000</pubDate><atom:updated>2026-07-12T06:31:27.796Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>மின் தடை,Thanjavur,தஞ்சை,power cut</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/onjpihya/ep.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/onjpihya/ep.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர்,</p><p>தஞ்சை நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>தஞ்சை பழைய நீதிமன்ற சாலையில் அமைந்துள்ள நகர துணை மின் நிலையத்தில் துணை மின் நிலைய பராமரிப்பு மற்றும் மின்பாதை பராம ரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதையொட்டி, வருகிற 14-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதி களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.</p> <h2>மின்சாரம் நிறுத்தம்</h2><p>அதன்படி ஸ்டேடியம் மின்வழித்தடத்தில் மேம்பாலம், சிவாஜி நகர், சீதாந கர், சீனிவாசபுரம், ராஜன் ரோடு, தென்றல் நகர், கிரி ரோடு, காமராஜ் ரோடு, ஆபிரகாம் பண்டிதர் நகர் பகுதிகளிலும், திலகர் திடல் மின்வழித் தடத்தில் மேலவீதி, தெற்கு வீதி, பெரியகோவில், செக்கடி ரோடு. மேல அலங்கம், ரெயிலடி, சாந்தப்பிள்ளைகேட், மகர்நோன்பு சாவடி, வண்டிக் கார தெரு, தொல்காப்பியர் சதுக்கம், வி.பி. கோவில், சேவியர் நகர், சோழன் நகர் பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>இசையரசி  எஸ். ஜானகி அம்மாள் மறைவுக்கு அன்புமணி ராமதாஸ்  இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-ramadoss-condoles-the-passing-of-musician-s-janaki-ammal</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-ramadoss-condoles-the-passing-of-musician-s-janaki-ammal#comments</comments><guid isPermaLink="false">a4855615-5bab-4c67-b2a2-27ff09d40eda</guid><pubDate>Sun, 12 Jul 2026 06:16:25 +0000</pubDate><atom:updated>2026-07-12T06:16:25.744Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani Ramadoss,மறைவு,டாக்டர் அன்புமணி ராமதாஸ்,S. Janaki,பாடகி எஸ். ஜானகி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/2wo9b6wj/50.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/2wo9b6wj/50.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என்று போற்றப்பட்ட பாடகி  எஸ். ஜானகி அம்மையார் அவர்கள் முதுமை மற்றும்   உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து  அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.</p><p>தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும் ஐந்து தலைமுறை இசைக் கலைஞர்களுடன் இணைந்து பாடல்களை பாடிய அவர், இசை  ரசிகர்களின் செவிகள் வழியாக இதயங்களில் நுழைந்தவர். கே.வி. மகாதேவன்,  எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா ஆகியோரின் இசை அமைப்புகளிலும்  கே.ஜே.ஜேசுதாஸ்,  எஸ்.பி. பாலசுப்பிரமணியன் ஆகியோருடன் இணைந்தும், தனித்தும் அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் எரிமலைகளையும் இளக வைக்கக் கூடியவை. காந்தக் குரலுக்கு எடுத்துக்காட்டு என்றால் எஸ். ஜானகி அமமையார் தான்.</p><h2>அனைவருக்கும் பேரிழப்பு</h2><p>4 தேசிய விருதுகள், 6 தமிழக அரசு விருதுகள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றவர் அவர். இவை அனைத்துக்கும் மேலாக இசை ரசிகர்களின் அன்பையும், ஆரவாரத்தையும் தான்  பெரிய விருதாக மதித்தவர்.  அவரது மறைவு இசை ரசிகர்கள் அனைவருக்கும் பேரிழப்பு.</p><p>இசையரசி<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF"> எஸ்.ஜானகி</a> அம்மையார் அவர்களை இழந்து வாடும்  அவரது குடும்பத்தினர், நண்பர்கள், இசையுலகினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்,  அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இரும்பு தகடுகள் விழுந்து சிறுவன் உயிரிழப்பு: மேலாளர் உட்பட 3 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/boy-dies-after-falling-iron-plates-3-people-including-manager-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/boy-dies-after-falling-iron-plates-3-people-including-manager-arrested#comments</comments><guid isPermaLink="false">edd2c990-32d4-4633-a88f-ad8663474b4b</guid><pubDate>Sun, 12 Jul 2026 06:06:46 +0000</pubDate><atom:updated>2026-07-12T06:06:46.251Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,Chennai,சென்னை,கிரைம் செய்திகள்,சிறுவன்,இரும்பு தகடு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/zlf9k4lm/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/zlf9k4lm/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையை அடுத்த புழல் அருகே காவாங்கரை பகுதியில், பாதாளச் சாக்கடை பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், இன்று காலை அந்த பகுதியில் 3 வயது சிறுவன் ஷாருக் ஈஸ்வரன் தனது தந்தையுடன் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது ஜேசிபி மூலம் இரும்பு தகடு தூக்கப்பட ரோப் திடீரென அறுந்து நடந்து சென்று கொண்டிருந்த சிறுவன் மீது தகடு பலமாக விழுந்தது. </p><p>இதில் சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மகன் மீது இரும்பு தகடு விழுந்ததை பார்த்து தந்தை அதிர்ச்சி அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். </p><p>இந்த நிலையில், உயிரிழந்த 3 வயது சிறுவனின் தந்தை அளித்த புகாரில் திட்ட மேலாளர் முத்துகுமார், மேற்பார்வையாளர் வெங்கடேசன், ஜே.சி.பி.ஆபரேட்டர் ரமேஷ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரும்பு தகடுகள் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தேனியில் 2 வங்கி கிளைகளில் ரூ.14 கோடி நகைக்கடன் மோசடி: மேலாளர், ஊழியர்கள் பணிநீக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs14-crore-jewelry-loan-fraud-at-2-bank-branches-in-theni-manager-employees-fired</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs14-crore-jewelry-loan-fraud-at-2-bank-branches-in-theni-manager-employees-fired#comments</comments><guid isPermaLink="false">38eaff3f-3b29-41aa-9863-e5d087cd3aba</guid><pubDate>Sun, 12 Jul 2026 06:01:10 +0000</pubDate><atom:updated>2026-07-12T06:01:10.374Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Theni,தேனி,மோசடி,fraud,பணிநீக்கம்,employees,bank,வங்கி,நகைக்கடன்,Dismissal,ஊழியர்கள்,manager,மேலாளர்,jewelry loan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/nf9yl9ww/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நகைக்கடன் மோசடி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/nf9yl9ww/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி, </p><p>தேனி மாவட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் 2 கிளைகளில் நடந்துள்ள <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ரூ.14 கோடி நகைக்கடன் மோசடி</a> தொடர்பாக வங்கி கிளைகளின் மேலாளர், ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். </p><h2>2 வங்கி கிளைகளில் ரூ.14 கோடி நகைக்கடன் மோசடி</h2><p>தேனி மாவட்டம் ஓடைப்பட்டி மற்றும் கூழையனூர் ஆகிய பகுதிகளில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் 2 கிளைகளில் அதிகாரிகள் நடத்திய தணிக்கையில், ரூ.14 கோடி மதிப்பிலான நகைக்கடன் மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. </p><h2>வங்கி மேலாளர், ஊழியர்கள் பணிநீக்கம் </h2><p>வங்கி லாக்கரில் இருந்த பல உறைகளில் நகைகள் ஏதுமின்றி காலியாக இருந்ததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த 2 கிளைகளிலும் பணியாற்றிய வங்கி மேலாளர் மற்றும் சில ஊழியர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். </p><h2>பொதுமக்கள் யாரும் நேரடியாக பாதிக்கப்படவில்லை</h2><p>இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் பொதுமக்கள் யாரும் நேரடியாகப் பாதிக்கப்படவில்லை என்றும், வங்கியின் பணமே மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>விடுமுறை தினம்: குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-tourists-enjoy-an-enthusiastic-dip-at-courtallam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-tourists-enjoy-an-enthusiastic-dip-at-courtallam#comments</comments><guid isPermaLink="false">f6b76e79-3422-41e2-b1a6-9fa6354233a4</guid><pubDate>Sun, 12 Jul 2026 05:56:52 +0000</pubDate><atom:updated>2026-07-12T05:56:52.125Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tourists,சுற்றுலா பயணிகள்,குற்றாலம்,Courtallam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/6hcccs22/12.gif" width="753"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/6hcccs22/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,  </p><p>குற்றாலம் அருவிகளில் தற்போது தண்ணீர் சீராக விழுந்து வருகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளத்தில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வேன், பஸ், கார்களில் தங்களது குடும்பத்துடன் குற்றாலத்தில் குவிந்தனர்.</p><p>அவர்கள் அனைத்து அருவிகளிலும் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். குறிப்பாக ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் குளித்தனர்.</p><p>சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் பாதுகாப்பு பணியிலும் அதிக அளவில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். குற்றாலம் பகுதியில் கடைகள் நடத்தி வரும் வியாபாரிகளுக்கும் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றதால் அவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>வியட்நாமில் 10 தமிழர்கள் உயிரிழப்பு: லாவா மொபைல் நிறுவனத்தின் அலட்சியம் காரணமா? - வேல்முருகன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/10-tamils-killed-in-vietnam-lava-mobile-negligence-velmurugan-question</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/10-tamils-killed-in-vietnam-lava-mobile-negligence-velmurugan-question#comments</comments><guid isPermaLink="false">c069d88e-136c-4f66-a210-5ab1d7a4d0d3</guid><pubDate>Sun, 12 Jul 2026 05:52:53 +0000</pubDate><atom:updated>2026-07-12T05:52:53.221Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Velmurugan,justice,வியட்நாம்,Vietnam,கேள்வி,நிறுவனம்,தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/5ec64ehn/229.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/5ec64ehn/229.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D">வேல்முருகன்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>வியட்நாமில் சுற்றுலா பயணத்தின்போது நிகழ்ந்த படகு விபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த முருகபிரபு (44)  உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.</p><h2>பயணிகளின் பாதுகாப்பு</h2><p>வியட்நாட்டிற்கு சுற்றுலா அழைத்துச் சென்றதாகக் கூறப்படும், லாவா மொபைல் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து இந்திய வெளியுறவுத்துறை, தமிழ்நாடு அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இணைந்து முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும். பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதா?, வானிலை எச்சரிக்கைகள் வழங்கப்பட்டனவா?, உயிர்காக்கும் உபகரணங்கள் மற்றும் அவசரகால பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனவா?, பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டனரா? மேலும் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்? என்பது குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணையில் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதோ அல்லது அலட்சியம் நடந்ததோ உறுதியானால், லாவா மொபைல் நிறுவனம் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். </p><h2>வலியுறுத்தல்</h2><p>மேலும், உயிரிழந்த முருகபிரபு உள்ளிட்ட 10 பேர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும், அனைத்து அரசு உதவிகளும் விரைவாக வழங்கப்பட வேண்டும். பத்து தமிழரின் உயிரிழப்பு வெறும் விபத்து என்ற பெயரில் மறைக்கப்படக்கூடாது. உண்மையை வெளிக்கொண்டு வந்து, பொறுப்புக்கூற வேண்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு முழுமையான நீதி கிடைப்பதைத் தமிழக அரசும், மத்திய அரசும் உறுதி செய்ய வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>’கூட்டணி ஆட்சிக்கு தயார் என்று திமுக அறிவித்திருந்தால்...’ திருமாவளவன் பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-the-dmk-had-announced-its-readiness-for-a-coalition-government-thirumavalavans-interview</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-the-dmk-had-announced-its-readiness-for-a-coalition-government-thirumavalavans-interview#comments</comments><guid isPermaLink="false">d3f9d069-29ff-4cbc-a245-142c6bc152b1</guid><pubDate>Sun, 12 Jul 2026 05:31:18 +0000</pubDate><atom:updated>2026-07-12T05:31:18.955Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமாவளவன்,Thirumavalavan,விசிக,VCK</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/vupn624b/11.gif" width="753"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/vupn624b/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது;</p><p>”கூட்டணி ஆட்சிக்கு திமுக தயார் என்று அறிவித்திருந்தால், கூட்டணி கட்சிகளின் உணர்வுகளை மதித்து அவர்கள் விரும்பிய எண்ணிக்கையை ஓரளவிற்காவது திருப்திகரமான முறையிலேயே தந்திருந்தால், விரும்பிய தொகுதிகளை தந்திருந்தால் இவ்வளவு பெரிய பின்னடைவை சந்திருக்க வாய்ப்பு இல்லை.</p><p>அதைவிட இந்த கட்சிகள் அவ்வளவு வேகமாக வெளியேற வாய்ப்பு இல்லை. இந்த கோணத்தில் யாரும் சிந்திக்கல. துரோகம் பண்ணிட்டாங்க எனச் சொல்றாங்க., துரோகம் பண்ண என்ன இருக்கு. நாளைக்கு கூட நாம் அமைச்சர் பதவியில் இருந்து வெளியேற முடியும். பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால், அதை தக்கவைப்பதற்கான அணுகுமுறையைத்தானே எடுப்பார்கள். த.வெ.க.-வுக்கு ஆதரவு, அமைச்சர் பதவி. அப்படி என்றால் த.வெ.க. அரசை புகழ்ந்து பாடிக் கொண்டே இருப்போம். இப்படித்தானே சராசரி மனிதன் முடிவு எடுக்கனும். </p><p>அதைத் தாண்டி பாஜக-வுக்கு எதிராக எல்லா கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்ற பார்வையை திருமாவளவன் முன் வைக்கிறான் என்றால், இந்த பார்வையை நீங்கள் பாராட்ட வேண்டாமா? வரவேற்க வேண்டாமா? ஒரு அட்டாச்சுடு இல்லாமல் இவன் ஏன் இப்படி பேசுகிறான் என்றால், திமுக-வில் மீண்டும் ஒட்டிக்கொள்ள நினைக்கிறான் என்கிறார்கள். திமுகவுடன் ஒட்டிக்கொள்ள தேவை என்ன வந்தது?. அர்த்தம் இல்லாத விமர்சனம் அது.”</p><p>இவ்வாறு அவர் பேசினார். </p>]]></content:encoded></item><item><title>அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையில் மரங்களை அகற்றும் பணி தீவிரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tree-removal-work-in-progress-at-factory-where-ammonia-gas-leak-occurred</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tree-removal-work-in-progress-at-factory-where-ammonia-gas-leak-occurred#comments</comments><guid isPermaLink="false">5bf27ba1-2081-4dcd-add8-ac517acc4f96</guid><pubDate>Sun, 12 Jul 2026 05:02:10 +0000</pubDate><atom:updated>2026-07-12T05:02:10.948Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவள்ளூர்,Tiruvallur,தொழிற்சாலை,Ammonia gas leak,ammonia gas,அமோனியா வாயு கசிவு,அமோனியா வாயு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/c5csh109/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/c5csh109/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர்,</p><p>திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேரில் செயல்பட்டு வந்த கடல் உணவுப்பொருட்கள் ஏற்றுமதி தொழிற்சாலையில் கடந்த மாதம் 21-ந்தேதி ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதில் 18 வடமாநில பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலர் பாதிக்கப்பட்டனர்.</p><p>விபத்துக்கு பிறகு, தொழிற்சாலையில் இருந்த அமோனியா வாயு அகற்றும் பணி 4 நாட்கள் நடைபெற்றது. பின்னர், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் அலுவலகம், குடோன், தளவாட அறை, குடியிருப்பு உள்ளிட்ட 5 பகுதிகளுக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.</p><p> தொழிற்சாலையில் கழிவுநீர் அகற்றும் பணியுடன், வளாகத்தில் உள்ள சுமார் 20 மரங்களை வெட்டி அகற்றும் பணியும்  நடைபெற்றது. இதற்காக அங்கு மின்சார இணைப்பு துண்டிக்கப் பட்டது. இந்த பணிகள் இன்று மாலை அல்லது நாளைக்குள் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தொழிற்சாலையின் பிரதான நுழைவாயிலுக்கும் அதிகாரப்பூர்வமாக 'சீல்' வைக்கப்பட உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மெரினா கடலில் ஆட்டிசம் குறைபாடுடைய 39 குழந்தைகள் 2 கி.மீ. நீந்தி சாதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/39-children-with-autism-set-a-record-by-swimming-2-km-in-the-marina-sea</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/39-children-with-autism-set-a-record-by-swimming-2-km-in-the-marina-sea#comments</comments><guid isPermaLink="false">447bbbdb-c415-4690-8874-1e2def4e9c2e</guid><pubDate>Sun, 12 Jul 2026 04:54:16 +0000</pubDate><atom:updated>2026-07-12T04:54:16.668Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,children,குழந்தைகள்,Achievement,Swimming,நீச்சல்,மெரினா கடல்,Marina Sea,சாதனை,ஆட்டிசம் குறைபாடு,Autism Spectrum Disorder</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/t2yzsofp/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மெரினா கடலில் ஆட்டிசம் குறைபாடுடைய 39 குழந்தைகள் 2 கி.மீ. நீந்தி சாதனை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/t2yzsofp/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை மெரினா கடற்கரையில், ஆட்டிசம் குறைபாடுடைய 39 குழந்தைகள் ஒன்றிணைந்து 2 கிலோ மீட்டர் தூரத்தை வெற்றிகரமாக நீந்தி சாதனை படைத்தனர்.</p><h2>ஆட்டிசம் குறைபாடுடைய குழந்தைகளின் கடல் நீச்சல் நிகழ்வு</h2><p>சென்னை மெரினா கடற்கரையில், ஆட்டிசம் குறைபாடுடைய குழந்தைகளின் திறனையும், தன்னம்பிக்கையும், மன உறுதியையும் உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் தனியார் அறக்கட்டளை சார்பில் நேற்று கடல் நீச்சல் நிகழ்வு நடைபெற்றது. </p><h2>39 குழந்தைகள் 2 கி.மீ. நீந்தி சாதனை</h2><p>இந்த கடல் நீச்சல் நிகழ்வில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஆட்டிசம் குறைபாடுடைய 39 குழந்தைகள் ஒன்றிணைந்து 2 கிலோ மீட்டர் தூரத்தை வெற்றிகரமாக நீந்தி சாதனை </a>படைத்தனர். </p><h2>கடல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு</h2><p>மெரினா கலங்கரை விளக்கத்தில் இருந்து கண்ணகி சிலை வரை குழந்தைகள் நீந்தி சென்றனர். அப்போது, ஆட்டிசம் குறித்தும், கடல்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. </p>]]></content:encoded></item><item><title>வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு அண்ணாமலை ஆழ்ந்த இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vietnam-boat-accident-annamalai-expresses-deep-condolences-to-the-families-of-the-deceased</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vietnam-boat-accident-annamalai-expresses-deep-condolences-to-the-families-of-the-deceased#comments</comments><guid isPermaLink="false">93118757-ee12-438a-865f-cddf70e94e01</guid><pubDate>Sun, 12 Jul 2026 04:45:35 +0000</pubDate><atom:updated>2026-07-12T04:45:35.933Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Annamalai,அண்ணாமலை,இரங்கல்,வியட்நாம்,Vietnam,boat accident,படகு விபத்து</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/or3s6mz1/annamalai.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அண்ணாமலை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/or3s6mz1/annamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> “வி த லீடர்ஸ்” இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>வியட்நாம் நாட்டின் பூகுவோக் தீவுக்கு அருகே <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">படகு கவிழ்ந்து </a>ஏற்பட்ட விபத்தில், 10 தமிழர்கள் உட்பட 15 இந்திய சுற்றுலா பயணிகள் உயிரிழந்த செய்தி பேரதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.</p><h2>துரித நடவடிக்கை</h2><p>இந்த துயரமான விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும், தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்கவும், உயிரிழந்தோரின் உடல்களை விரைந்து தாயகம் கொண்டு வரவும், துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மத்திய அரசையும், தமிழக அரசையும் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை: கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி பிளஸ்-1 மாணவர் பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-plus-1-student-dies-after-being-caught-in-a-giant-wave-while-bathing-in-the-sea</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-plus-1-student-dies-after-being-caught-in-a-giant-wave-while-bathing-in-the-sea#comments</comments><guid isPermaLink="false">d676c635-c581-4dfa-ab59-0ebadbbe5534</guid><pubDate>Sun, 12 Jul 2026 04:32:36 +0000</pubDate><atom:updated>2026-07-12T04:32:36.258Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,கடல்,dies,Ennore,எண்ணூர்,Plus-1 student,giant wave,பிளஸ்-1 மாணவர் பலி,ராட்சத அலையில் சிக்கி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/dzpom0d4/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிளஸ்-1 மாணவர் பலி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/dzpom0d4/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை எண்ணூரில் கடலில் குளித்தபோது <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ராட்சத அலையில் சிக்கி பிளஸ்-1 மாணவர் பலி</a>யானார். அவரது நண்பருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. </p><h2>2 மாணவர்கள்</h2><p>சென்னை எண்ணூரை அடுத்த எர்ணாவூர் பெரிய காசி கோவில் குப்பம் முதல் தெருவைச் சேர்ந்த தங்கராஜின் மகன் கவுதம் (வயது 15). இவர், அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் ஜோதிஷ்(15). இவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். </p><h2>ராட்சத அலையில் சிக்கிய மாணவர்கள்</h2><p>நேற்று மாலை நண்பர்கள் இருவரும் எண்ணூர் பெரியக்குப்பம் கடற்கரை பகுதியில் கடலில் குளித்து விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி 2 பேரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். </p><h2>பிளஸ்-1 மாணவர் பலி</h2><p>இதைப் பார்த்த அங்கிருந்த மீனவர்கள், உடனடியாக கடலுக்குள் சென்று, அலையில் சிக்கித் தத்தளித்த 2 பேரையும் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது, கவுதம் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மற்றொரு மாணவர் ஜோதிசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு சோதனை: ரூ.22.33 லட்சம் பறிமுதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anti-corruption-raids-in-government-offices-rs-2233-lakh-seized</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anti-corruption-raids-in-government-offices-rs-2233-lakh-seized#comments</comments><guid isPermaLink="false">e4a30333-a1a8-407b-b2b2-4bdcfc4011e7</guid><pubDate>Sun, 12 Jul 2026 04:28:38 +0000</pubDate><atom:updated>2026-07-12T04:28:38.653Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>லஞ்ச ஒழிப்புத்துறை,Anti-Corruption Police,அரசு அலுவலகம்,Govt Offices,Anti-Corruption Department,ஊழல் தடுப்பு படை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/o697uwtp/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/o697uwtp/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அருண் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><p>தமிழகத்தில் ஜூலை 4ம் தேதி முதல், 1-0ம் தேதி வரை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. அதன்படி, கிருஷ்ணகிரி, திருவள்ளுர், தேனி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தஞ்சாவூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில், 11 அரசு அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதில் கணக்கில் வராத, 12.46 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், மாநில எல்லைகளில் நடத்திய சோதனையில், 9.87 லட்சம் ரூபாய் என, மொத்தம், 22.33 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.</p><p>மேலும், 7-ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில், கட்டட வரைபட அனுமதிக்கு, 15,000 ரூபாய் லஞ்சம் பெற்ற, இளநிலை உதவியாளர் பாலமுருகன் கைது செய்யப்பட்டார். அதே நாளில், திருப்பூர் மாவட்டத்தில் பட்டா மாற்றம் செய்ய, 5,000 ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் அப்துல் ரகுமான் கைது செய்யப்பட்டார். சென்னை வேளச்சேரி காவலர் அழகுராஜா இரு சக்கர வாகனத்தின் உரிமத்தை திருப்பி தர, 1,000 ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில், 9-ம் தேதி கைது செய்யப்பட்டார்.</p><p>அதே நாளில், சிவகங்கை மாவட்டத்தில், திருமணம் செய்து வைக்க, திருப்புவனம் போலீஸ் எஸ்.ஐ., 3,000 ரூபாய் லஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டார். மேலும், அதே மாவட்டத்தில், பட்டா பெயர் மாற்ற 3,000 ரூபாய் லஞ்சம் பெற்ற, கிராம உதவியாளர் கணேசன் கைது செய்யப்பட்டார்.</p><p>கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பட்டா பெயர் மாற்றம் செய்ய, 2,500 ரூபாய் லஞ்சம் பெற்ற தாலுகா அலுவலக உதவியாளர் ஆரோன், 10-ம் தேதி கைது செய்யப்பட்டார். அதே நாளில் தென்காசி மாவட்டத்தில், பட்டா பெயர் மாற்றம் செய்ய நில அளவையர் சங்கர், 10,000 ரூபாய் லஞ்சம் பெற்றபோது சிக்கினார்.</p><p>மேலும், லஞ்சம் பெற்ற தாசில்தார் ஆதிபகவான், ஓட்டுனர் கந்தசாமி ஆகியோருக்கு, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 1,000 ரூபாய் அபராதம் விதித்து, விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தனுஷ்கோடி தெற்கு கடற்கரையில் கல் சுவர் அமைக்கும் பணி தீவிரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/work-on-constructing-a-stone-wall-along-the-southern-coast-of-dhanushkodi-is-proceeding-rapidly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/work-on-constructing-a-stone-wall-along-the-southern-coast-of-dhanushkodi-is-proceeding-rapidly#comments</comments><guid isPermaLink="false">51d72520-e415-415a-9ed4-5895354e83ff</guid><pubDate>Sun, 12 Jul 2026 04:25:49 +0000</pubDate><atom:updated>2026-07-12T04:25:49.667Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>கடற்கரை,beach,தனுஷ்கோடி,Dhanushkodi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/nd8p20rz/8.gif" width="753"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/nd8p20rz/8.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமேசுவரம்,  </p><p>கடல் சீற்றத்தால் சாலை சேதம் அடைவதை தடுக்கும் வகையில் தனுஷ்கோடி தெற்கு கடற்கரையில் கல்சுவர் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.</p><h2>தனுஷ்கோடி</h2><p>ராமேசுவரம் அருகே புயலால் அழிந்து போன தனுஷ்கோடி கடல் பகுதி உள்ளது. தனுஷ்கோடி வரையிலும் மத்திய அரசின் சார்பில் தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் புதிதாக சாலை அமைக்கப்பட்ட பின்னர் கடந்த 9 ஆண்டுகளில் ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. முகுந்தராயசத்திரம் கடற்கரையில் இருந்து 10 கிலோமீட்டர் தூரம் அரிச்சல் முனை வரையிலும் அமைக்கப்பட்டுள்ள சாலையின் பாதுகாப்பு கருதியும், கடல் சீற்றம் நீரோட்ட வேகத்தால் சாலை சேதமாவதை தடுக்கும் வகையிலும் சாலையின் இருபுறங்களிலும் கடற்கரை பகுதியில் பாறாங்கற்களை கொண்டு தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது.</p><p>தனுஷ்கோடி கடல் பகுதியில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கடல் சீற்றம் மற் றும் நீரோட்ட வேகத்தால் தெற்கு கடற்கரை பகுதியில் பல இடங்களில் தடுப்பு சுவர் பெயர்ந்து கடலில் இழுத்து செல்லப்பட்டது. இதனிடையே தனுஷ்கோடி கம்பிப்பாடுக்கும், அரிச்சல் முனைக்கும் இடைப்பட்ட தெற்கு கடற்கரை பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலையின் பாதுகாப்பு கருதி கூடுதலாக தடுப்பு சுவர்களை கட்டி, கடற்கரையை பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.</p><p>இதற்காக அருப்புக்கோட்டை பகுதியில் இருந்து கனரக லாரிகள் மூலம் பாறாங்கற்கள் தனுஷ்கோடி பகுதிக்கு கொண்டுவரப்பட்டு அரிச்சல் முனை அருகே தெற்கு கடற்கரை பகுதியில் கொட்டப்பட்டுள்ளன.</p><h2>கல் சுவர்</h2><p>இவை பொக்லைன் எந்திரம் மூலம் வரிசையாக அடுக்கி, கற்கள் சரி வதை தடுக்கும் வகையில் இரும்பு கம்பியால் கட்டி பாக்ஸ் போன்று தடுப்பு சுவர் கட்டப்பட்டு வருகிறது. இன்னும் சில மாதங்களில் இந்த தடுப்பு சுவர் கட்டும் பணி முழுமையாக முடிவடையும் என எதிர்பார்க்கப் படுகிறது.</p><p>அரிச்சல் முனை சாலை சுற்றி பாக்ஸ் வடிவில் தடுப்பு சுவர் கட்டி முடிக்கப்பட்டுள்ளதால் அங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் இந்த தடுப்பு சுவரில் நின்று கடல் மற்றும் கடற்கரை அழகை பார்த்து ரசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>மதுபானங்களுக்கு ரூ.10 கூடுதலாக செஸ் வரி வசூலிக்க பரிசீலனை: ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/consideration-to-collect-additional-cess-of-rs-10-on-alcoholic-beverages-tasmac-administration-informs-the-high-court</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/consideration-to-collect-additional-cess-of-rs-10-on-alcoholic-beverages-tasmac-administration-informs-the-high-court#comments</comments><guid isPermaLink="false">ac27baac-e5ba-494c-9dc2-c070dae759a4</guid><pubDate>Sun, 12 Jul 2026 04:21:00 +0000</pubDate><atom:updated>2026-07-12T04:21:00.829Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஐகோர்ட்டு,டாஸ்மாக்,Tasmac,Chennai High Court,மதுபானம்,Liquor,மதுபான கடை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/baxr45pc/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/baxr45pc/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுற்றுச்சூழல் மற்றும் வன விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கும் விதமாக காலி மதுபான பாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டு வருகிறது. விற்பனை செய்யும் போது பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலித்து, காலி பாட்டிலை திருப்பித்தரும்போது அந்த பணத்தை திருப்பிக் கொடுக்கும் திட்டத்தை ஐகோர்ட்டு உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் நிர்வாகம் அமல்படுத்தி வருகிறது.</p><p>இந்நிலையில், இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் காலிமது பாட்டில்களை திரும்ப வாங்கும் திட்டத்தை மாற்றியமைக்க உள்ளதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.</p><p>அதில் கூறியிருப்பதாவது, பாட்டிலுக்கு ரூ. 10 கூடுதலாக வசூலிப்பதற்கு பதிலாக அந்த தொகையை மதுபான விற்பனை விலையுடன் சேர்த்து விற்க திட்டமிடப்பட் டுள்ளது. அதன்படி, காலி மது பாட்டில்களை சேகரித்து திரும்பப் பெறுவது. கொண்டு செல்வது. மறு சுழற்சி செய் வது என அனைத்து பொறுப்புகளையும் சம்பந்தப்பட்ட மதுபான உற்பத்தி நிறுவனங்கள் வசமே ஒப்படைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, உரிய சட்ட திருத்தங்கள் மேற்கொள்ள மதுவிலக்குத் துறை ஆணையருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.</p><p>மதுபானங்களின் அதிக பட்ச விற்பனை விலையுடன் கூடுதலாக ரூ.10-ஐ செஸ் வரியாக விதிக்க அரசுக்கு வணிக வரித்துறை ஆணையர் கருத்துரு அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக மதிப்பு கூட்டுவரியின் சட்ட விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ள அரசு பரிசீலித்து வருகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதையடுத்து நீதிபதிகள், வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்கு தள்ளிவைத்து. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>ஞாயிறு விடுமுறை: காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த அசைவ பிரியர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sunday-holiday-non-vegetarian-enthusiasts-flocked-to-kasimedu-to-buy-fish</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sunday-holiday-non-vegetarian-enthusiasts-flocked-to-kasimedu-to-buy-fish#comments</comments><guid isPermaLink="false">9ab0bf1b-1e86-4201-9577-ba60e6d2feb8</guid><pubDate>Sun, 12 Jul 2026 04:05:42 +0000</pubDate><atom:updated>2026-07-12T04:05:42.017Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>காசிமேடு,Kasimedu Fish Market,மீன் சந்தை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/bg5syo57/7.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/bg5syo57/7.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காசிமேடு மீன்பிடி சந்தையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் திருவிழா போன்று கூட்டம் அலை மோதுவது வழக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காசிமேடு மீன் பிடித்துறைமுகம் சந்தை மக்கள் கூட்டத்தால் களைகட்டியது. சந்தைக்கு மீன்களின் வரத்தும் அதிகரித்துள்ளது.</p><p>வஞ்சிரம், சங்கரா, நண்டு, இறால் உள்ளிட்ட மீன் வகைகள் அதிகளவில் விற்பனையானதால், சந்தையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. மீன் பிரியர்கள், தங்களுக்கு தேவையான மீன்களை போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச்சென்றனர். </p>]]></content:encoded></item><item><title>இறந்தவர்கள் ஆன்மாவை திருப்தி செய்கிறோம் என பொருட்களை ஆற்றில் வீசுவதா? - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் அதிருப்தி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/should-we-throw-things-into-the-river-to-appease-the-spirits-of-the-dead-madurai-high-court-judges-unhappy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/should-we-throw-things-into-the-river-to-appease-the-spirits-of-the-dead-madurai-high-court-judges-unhappy#comments</comments><guid isPermaLink="false">d6a195a6-771c-4e47-9e74-a22e43e403c9</guid><pubDate>Sun, 12 Jul 2026 03:43:05 +0000</pubDate><atom:updated>2026-07-12T03:43:05.184Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தாமிரபரணி ஆறு,மதுரை,ஐகோர்ட்டு,Madurai High Court,river,ஐகோர்ட்டு நீதிபதிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/gb377qj2/227.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மதுரை ஐகோர்ட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/gb377qj2/227.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p>இறந்தவர்கள் ஆன்மாவை திருப்தி செய்கிறோம் என பொருட்களை ஆற்றில் வீசுவதா? எனக்கூறி அதிருப்தி தெரிவித்த மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள். பல்வேறு உத்தரவுகளை பிறப்பிக்க இருப்பதாகவும் அதிரடியாக அறிவித்தனர்.</p><p>நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சிவானுபாண்டியன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா விக்கிரமசிங்கபுரம் பகுதியில் உள்ள ஆனந்த விலாஸ் மண்டபத்தில் இருந்து எங்களை வெளியேறுமாறு நீர்வளத்துறை அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.</p><p>இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-</p><p>இந்த வழக்கு விசாரணையின்போது. பாபநாசம் முதல் தாமிரபரணி ஆற்றின் படித்துறைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கான சடங்குகளை செய்வதற்காக கூடுகிறார்கள் என்று தாமிரபரணி வடிநில கோட்ட உதவி செயற்பொறியாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.</p><h2>மக்களுக்கு விழிப்புணர்வு</h2><p>இந்த சடங்குகளின்போது. ஆடைகள், துண்டுகள், செருப்புகள், இறந்தவர்களின் பொருட்களை ஆற்றில் வீசும் வழக்கம் உள்ளது. தாமிரபரணியில் டன் கணக்கில் வீசப்பட்ட ஆடைகள் அகற்றப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆறு 2 வகையான ஆமைகளின் வாழ்விடமாக உள்ளது. இவற்றின் சராசரி ஆயுட்காலம் நூறு ஆண்டுகளுக்கு குறையாது. ஆனால், ஆமைகள் ஆற்றில் வீசப்பட்ட ஆடைகளில் சிக்கி இறக்கின்றன. புகைப்படங்களின் சட்டங்களைக்கூட ஆற்றில் வீசுவதால் கண்ணாடி உடைந்து நீர்வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.</p><h2>தாமிரபரணி</h2><p>இதுசம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாசுபடுவதற்கு அனுமதிக்கக்கூடாது. மதத்தின் பெயரால்கூட நீர்நிலையை மாசுபடுத்த யாருக்கும் உரிமை இல்லை என்பதை சட்டம் உறுதிப்படுத்துகிறது. நீர்நிலையை அழித்து வருவதால், நாங்கள் இதில் தலையிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இறந்தவர்களின் ஆன்மாக்களை திருப்திப்படுத்துகிறோம் என பொருட்களை ஆற்றில் வீசுவதா? இந்த பழக்கத்தில் இருந்து மக்களை விடுவிக்க வேண்டும்.</p><p>சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமலும், மற்றவர்களின் உரிமைகளை மீறாமலும் ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் தங்களுக்கு பயனளிக்கும் செயல்களை செய்யலாம். ஆனால் இறந்தவர்களுக்கு சடங்குகளை செய்வதற்காக கோடிக்கணக்கான மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வற்றாத ஜீவநதியாக திகழும் தாமிரபரணி ஆறு மாசுபடுவதற்கு அனுமதிக்கக்கூடாது. </p><p>இந்த வழக்கை வருகிற 16-ந்தேதிக்கு ஒத்திவைக்கிறோம். அன்றையதினம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பிப்போம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>சுற்றுலாத்துறை சார்பில், இன்று ஏற்காட்டில் சிக்கன் பிரியாணி திருவிழா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chicken-biryani-festival-in-yercaud-today-on-behalf-of-the-tourism-department</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chicken-biryani-festival-in-yercaud-today-on-behalf-of-the-tourism-department#comments</comments><guid isPermaLink="false">5128a4ca-e49d-48a0-81aa-e24486b8833e</guid><pubDate>Sun, 12 Jul 2026 03:37:22 +0000</pubDate><atom:updated>2026-07-12T03:37:22.349Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவிழா,ஏற்காடு,Yercaud,சுற்றுலாத்துறை,Tourism Department,Chicken Biryani,சிக்கன் பிரியாணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/yxhdbd7g/briyani.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/yxhdbd7g/briyani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம், </p><p>சுற்றுலாத்துறை சார்பில் ஏற்காட்டில் இன்று சிக்கன் பிரியாணி திருவிழா நடக்கிறது. ரூ.99-க்கு பிரியாணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஒகேனக்கல், கொல்லிமலை, கன்னியாகுமரி, வண்டலூர் உள்பட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு வாரவிடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஏற்கனவே சுற்றுலாத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஓட்டல்களிலும், அமுதம் உணவகங்களிலும் சுற்றுலா பயணிகளுக்கு சைவம் மற்றும் அசைவ உணவுகள் தயாரித்து வழங்கப்படுகின்றன.</p><h2>பிரியாணி திருவிழா</h2><p>இந்நிலையில், <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">சுற்றுலா வளர்ச்சி கழகம்</a> சார்பில் புதிய முயற்சியாக கடந்த 5-ந் தேதி சுற்றுலா தலங்களில் செயல்படும் தமிழ்நாடு ஓட்டல்கள், அமுதம் உணவகங்கள், படகு இல்லங்கள் என 21 இடங்களில் குறைந்த விலைக்கு அதாவது ரூ.99-க்கு சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப் பட்டது. இந்த திட்டத்திற்கு பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து சுற்றுலா தலங்களிலும் ரூ.99-க்கு சிக்கன் பிரியாணி (பார்சல்) வழங்கும் திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><h2>மலிவு விலை சிக்கன் பிரியாணி</h2><p>அந்த வகையில் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் உள்ள படகு இல்லம் முன்பு ரூ.99-க்கு சிக்கன் பிரியாணி திருவிழா (பார்சல் மட்டும்) நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, மதியம் 12.30 முதல் ரூ.99-க்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப்படும். முதலில் வரும் 100 பேருக்கு மட்டும் பிரியாணி வழங்கப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுற்றுலா பயணிகளுக்கு மலிவு விலையில் தரமான சிக்கன் பிரியாணி கிடைக்கும் வகையில் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் ஏற்காட்டிற்கு இன்று வரும் சுற்றுலா பயணிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மருத்துவ கல்லூரியில் ‘சீட்’ வாங்கி தருவதாக ரூ.5.8 லட்சம் மோசடி: வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-cheating-rs-58-lakhs-by-promising-to-buy-a-seat-in-a-medical-college</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-cheating-rs-58-lakhs-by-promising-to-buy-a-seat-in-a-medical-college#comments</comments><guid isPermaLink="false">ad93c3bf-eda7-400b-b0fa-6b567b883962</guid><pubDate>Sun, 12 Jul 2026 03:27:30 +0000</pubDate><atom:updated>2026-07-12T03:27:30.712Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Youth arrested,வாலிபர் கைது,money laundering,பணமோசடி,medical college,மருத்துவ கல்லூரி,சீட்,seat</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/4c05u4g9/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பண மோசடி, வாலிபர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/4c05u4g9/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னையில் ஒரு பெண்ணின் மகனுக்கு மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ரூ.5.8 லட்சம் மோசடி</a> செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>மருத்துவ கல்லூரி சீட்டுக்கு ரூ.5.8 லட்சம்</h2><p>சென்னை பெரவள்ளூர் பேப்பர் மில்ஸ் சாலையைச் சேர்ந்தவர் சுகன்யா லட்சுமி (வயது 37). இவர், நண்பர் மூலம் அறிமுகமான சென்னையை அடுத்த கரையான்சாவடியைச் சேர்ந்த சக்தி(27) என்பவரிடம், தனது மகனுக்கு தனியார் கல்லூரியில் மருத்துவ படிப்புக்கான 'சீட்' வாங்கித் தருவதற்காக ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் கொடுத்துள்ளார். </p><p>ஆனால், பணத்தை வாங்கிய சக்தி, சொன்னபடி மருத்துவ கல்லூரியில் 'சீட்' வாங்கி தரவில்லை. மேலும் சுகன்யா லட்சுமியிடம் வாங்கிய பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. </p><h2>பண மோசடி, வாலிபர் கைது</h2><p>இந்த பண மோசடி குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி சுகன்யா லட்சுமி, திரு.வி.க. நகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மருத்துவ கல்லூரியில் 'சீட்' வாங்கி தருவதாக சக்தி மோசடி செய்தது உறுதியானது. இதையடுத்து சக்தியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>நயினார் நாகேந்திரனுக்கு ரூ.25 ஆயிரம் கோடி பரிசு: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் பேச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nayinar-nagendran-to-receive-rs-25000-crore-reward-tamil-nadu-farmers-association-presidents-speech</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nayinar-nagendran-to-receive-rs-25000-crore-reward-tamil-nadu-farmers-association-presidents-speech#comments</comments><guid isPermaLink="false">051884f1-3613-4a05-8050-305700b85b28</guid><pubDate>Sun, 12 Jul 2026 03:21:54 +0000</pubDate><atom:updated>2026-07-12T03:21:54.029Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Farmers,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,விவசாயிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/14zyb53a/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/14zyb53a/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- </p><p>கரூர் மாவட்டத்தில் இனாம் ஒழிப்பு சட்டத்தின் கீழ், 3,085 ஏக்கர் நிலங்களுக்கு பத்திரப்பதிவு தடை விதித்திருப்பதை நீக்கி அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதற்கு எதிராக ரமேஷ் என்பவர் உண்மைகளை மறைத்து, இனாம் நிலங்களை கோவில் நிலம் என்று தெரிவித்ததோடு, ரூ.25 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துகள் என கற்பனையான மதிப்பை குறிப்பிட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு இந்த நிலங்களை தமிழ்நாடு அரசு தாரை வார்த்து இருப்பதாக தவறாக ஒரு பதிவு செய்துள்ளார்.</p><p>அதன் உண்மைத்தன்மை குறித்து ஆராயாமல், பா. ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதை வழிமொழிந்து அறிக்கை வெளியிட்டிருப்பது தமிழ்நாட்டில் இனாம் நில பிரச்சினையில் பாதிக்கப்பட்ட 30 லட்சம் மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே அவரின் தவறான அறிக்கையை உடனடி யாக திரும்பப் பெற வேண்டும்.</p><p>இனாம் நில விவசாயிகள் பொதுமக்களின் நில உரிமைக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். அப்படி இனாம் நிலங்களை கோவில் நிலம் என்று நிரூபித்தால் நயினார் நாகேந்திரனுக்கு ரூ.25 ஆயிரம் கோடி பரிசு வழங்க தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது அவருடன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் சண்முகசுந்தரம், திருப்பூர் மாவட்ட தலைவர் ரமேஷ், பல்லடம் ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், நடராஜ், பல்லடம் நகர செயலாளர் கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மறுநாள் மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-thoothukudi-the-day-after-tomorrow-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-thoothukudi-the-day-after-tomorrow-2#comments</comments><guid isPermaLink="false">22fbf019-0515-4a4c-944f-f5393e86e8fd</guid><pubDate>Sun, 12 Jul 2026 02:52:39 +0000</pubDate><atom:updated>2026-07-12T02:52:39.992Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,monthly maintenance work,power outage,மாதாந்திர பராமரிப்பு பணி,மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/40kht5f9/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/40kht5f9/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி சிப்காட் துணை மின்நிலையத்தில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் நடைபெற உள்ளதால் நாளை மறுநாள் (14.7.2026, செவ்வாய்க்கிழமை) மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை</h2><p>இது தொடர்பாக தூத்துக்குடி நகர் மின் விநியோகப் பிரிவு செயற்பொறியாளர் சின்னத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (14.7.2026, செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். </p><p>அதன்படி மடத்தூர், மடத்தூர் மெயின் ரோடு, முருகேசநகர், கதிர்வேல்நகர், தேவகிநகர், சிப்காட் வளாகம், திரவியரத்தின நகர், அசோக் நகர், ஆசிரியர் காலனி, ராஜீவ் நகர், சின்னமணிநகர், 3வதுமைல், புதுக்குடி, டைமண்ட்காலனி, EB காலனி, ஏழுமலையான் நகர், மில்லர்புரம், ஹவுசிங் போர்டு பகுதிகள், அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு குடியிருப்புகள், ராஜகோபால் நகர், பத்தினாதபுரம், </p><p>சங்கர் காலனி, FCI குடோன் பகுதிகள், நிகிலேசன் நகர், சோரிஸ்புரம், மதுரை பைபாஸ் ரோடு, ஆசீர்வாத நகர், சில்வர்புரம், சுப்பிரமணியபுரம், கங்கா பரமேஸ்வரி காலனி, லாசர் நகர், ராஜரத்தின நகர், பாலையாபுரம், வி.எம்.எஸ். நகர், முத்தம்மாள் காலனி, நேதாஜி நகர், லூசியா காலனி, மகிழ்ச்சி புரம், ஜோதி நகர், பால்பாண்டி நகர், முத்துநகர், கந்தன் காலனி, காமராஜ் நகர், NGO காலனி, அன்னை தெரசா நகர், </p><p>பர்மா காலனி, TMB காலனி, அண்ணாநகர் 2வது நகர் மற்றும் 3வது நகர், கோக்கூர், சின்னக்கண்ணுபுரம், பாரதி நகர், புதூர்பாண்டியபுரம் மெயின் ரோடு, கிருபை நகர், அகில இந்திய வானொலி நிலையம், ஹரிராம்நகர், கணேஷ்நகர், புஷ்பாநகர், ஸ்டெர்லைட் குடியிருப்புகள், கலெக்டர் அலுவலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>விடுமுறை தினம்: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-tourists-flock-to-kanyakumari-11</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-tourists-flock-to-kanyakumari-11#comments</comments><guid isPermaLink="false">d2033642-c24d-435a-ac7b-8ff9f3748c87</guid><pubDate>Sun, 12 Jul 2026 02:48:37 +0000</pubDate><atom:updated>2026-07-12T02:48:37.677Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,Tourists,சுற்றுலா பயணிகள்,Kanyakumari</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/r6gcr0ce/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/r6gcr0ce/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி, </p><p>சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள்.</p><p>இந்தநிலையில் இன்று ஞாயிறு விடுமுறையையொட்டி காலையில் இருந்தே கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை, சன்ரைஸ் பாயின்ட் போன்ற பகுதிகளில் நள்ளிரவு முதல் காத்திருந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர்.</p><p>அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். படகுத்துறையில் இருந்து சுற்றுலா பயணிகள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்த்து ரசித்து வருகின்றனர். காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள தமிழன்னை பூங்கா, சன்செட் பாயிண்ட், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.</p><p>கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>வைகை அணை நீர்மட்டம் 34 அடியாக உயர்வு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம் நீங்கியது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vaigai-dam-water-level-rises-to-34-feet-danger-of-water-shortage-eliminated</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vaigai-dam-water-level-rises-to-34-feet-danger-of-water-shortage-eliminated#comments</comments><guid isPermaLink="false">4bc0efa3-c2c0-40d2-8ff6-5e124a9768a2</guid><pubDate>Sun, 12 Jul 2026 02:42:43 +0000</pubDate><atom:updated>2026-07-12T02:42:43.273Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vaigai Dam,வைகை அணை,குடிநீர் தட்டுப்பாடு,water shortage</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/mwbex6j9/CHENNAI-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/mwbex6j9/CHENNAI-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>வைகை அணை</h2><p>தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக விளங்குகிறது. இந்த நிலையில் ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. </p><p>போதிய மழை இல்லாததால் கடந்த மாதம் வைகை அணையின் நீர்மட்டம் 20 அடியாக சரிந்தது. இதனால் வைகை அணையை நம்பியுள்ள பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதற்கிடையே முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஓரளவு மழை பெய்தது. இதனால் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி வீதம் வைகை அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. </p><h2>நீர்மட்டம் உயர்வு</h2><p>இதன்மூலம் வைகை அணையின் நீர்மட்டம் மெல்ல, மெல்ல உயரத்தொடங்கியது. முழுமையாக மழை பெய்யாத நிலையிலும் முல்லைப்பெரியாறு அணையின் தயவால் வைகை அணை, தனது அபாய கட்டத்தில் இருந்து மீண்டுள்ளது. இன்றைய நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 34 அடியாக உயர்ந்து காணப்படுகிறது. அணையில் தற்போது இருப்பில் உள்ள தண்ணீரின் மூலம் 2 மாதங்களுக்கு அனைத்து பகுதிகளுக்கும் தடையின்றி குடிநீர் வழங்க முடியும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.</p><p>மேலும் அவர்கள் கூறும்போது, "வைகை அணையின் நீர்மட்டம் 34 அடியை எட்டியுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் நீங்கியது. இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு தண்ணீர் திறப்பதற்கு வாய்ப்பே இல்லை. வரும் நாட்களில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து அணைக்கான நீர்வரத்து கணிசமாக அதிகரிக்கும் பட்சத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது” என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சோற்றுக்குள் பாத்தி கட்டி பார்த்திருக்கிறோம்:  ஆற்றுக்குள் குளத்தை  வெட்டி பார்த்திருக்கிறீர்களா?- இந்த கொடுமை நடந்தது தமிழ்நாட்டில் தான்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/have-you-ever-seen-a-pond-dug-right-inside-a-river-this-atrocity-took-place-in-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/have-you-ever-seen-a-pond-dug-right-inside-a-river-this-atrocity-took-place-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">bf654a53-5c1b-42e2-acf1-5e51e8dc4376</guid><pubDate>Sun, 12 Jul 2026 02:29:47 +0000</pubDate><atom:updated>2026-07-12T02:29:47.210Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,river,Kancheepuram,காஞ்சீபுரம்,குளம்,125 நாள் வேலை திட்டம்,125 days work,வேகவதி ஆறு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/zgqtqafh/puthi.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆற்றுக்குள் குளம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/zgqtqafh/puthi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>"வேலைக்காரன்" படத்தில் நடிகர் ரஜினிகாந்த்,  "தோட்டத்தில பாத்தி கட்டி பாத்திருக்கேன்.. பாத்திருக்கேன்.. சோற்றுக்குள்ள பாத்திய கட்டுற பட்டணம் பட்டணமே.." என்று ஒரு பாடல் பாடியிருப்பார். </p><p>அதுபோல, ஆற்றுக்குள் குளத்தை வெட்டிய கதை ஒன்று தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது. அதுவும் தலைநகர் சென்னை அருகே உள்ள <a href="https://www.dailythanthi.com/topic/காஞ்சீபுரம்">காஞ்சீபுரம்</a> மாவட்டத்தில்தான் அரங்கேறியிருக்கிறது.</p><p>காஞ்சீபுரம் அருகே வேகவதி ஆற்றுக்குள் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஏற்கனவே குளம் வெட்டப்பட்டு சேதமடைந்துள்ள நிலையில், தற்போது அதே இடத்தில் மீண்டும் குளம் வெட்டும் பணி நடந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.</p><h2>ஆற்றுக்குள் குளம் வெட்டுவதால் சர்ச்சை</h2><p>அதாவது, காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட முத்தியால்பேட்டை ஊராட்சியில், வேகவதி ஆற்றில் தற்போது குளம் வெட்டும் பணி நடந்து வருகிறது. ஆற்றுக்குள்ளேயே குளத்தை வெட்டுவது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. </p><p>கடந்த 2022-ம் ஆண்டு இதே  ஆற்றுப்பகுதியில் ரூ.9 லட்சத்து 65 ஆயிரம் செலவில் குளம் ஒன்று வெட்டப்பட்டது. ஆனால்,  ஆற்றில் இயல்பான நீரோட்டத்தின்போது அந்த குளம் பெருமளவில் சேதமடைந்தது.</p><h2>அரசு நிதி வீண்</h2><p>இந்த நிலையில், அந்த இடத்தின் அருகிலேயே மீண்டும் 125 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை பயன்படுத்தி, புதிய குளம் வெட்டும் பணி தொடங்கியிருக்கிறது. இது அப்பகுதி மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆற்றில் மழைக்காலத்தில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடி வரும் என்பது தெரிந்தும், அதே இடத்தில் மீண்டும் அரசு நிதியை செலவழித்து குளம் அமைப்பது ஏன் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். </p><p>இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- </p><p>விதி மீறல் இருந்தால் நடவடிக்கை </p><p>வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் பகுதியில் மீண்டும் மீண்டும் குளம் வெட்டுவது மக்களின் வரிப் பணத்தை வீணடிக்கும் செயலாகும். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பல இடங்களில் 125 நாள் திட்ட பணிகள் நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. </p><p>குளம் வெட்டும் திட்டம் உண்மையான பயனாளிகளுக்காக இல்லாமல், நிதியை செலவிட்டதாக கணக்கு காட்டும் திட்டமா என்ற சந்தேகம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, அனுமதி வழங்கிய அதிகாரிகள்,  தொழில்நுட்பத்தை ஆய்வு செய்த பொறுப்பாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். </p><p>இவ்வாறு அவர் கூறினார். </p><p>வட்டார வளர்ச்சி அலுவலர் கூறும்போது, "குளம் வெட்டப்பட்டுள்ள இடத்தை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட பொறியாளர்களுடன் ஆலோசித்து, விதிமீறல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>உயர்கல்வி சேர்க்கையில் கோவை அசத்தல்; தொடர்ந்து 2-வது ஆண்டாக மாநிலத்தில் முதலிடம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-excels-in-higher-education-admissions-tops-the-state-for-the-second-consecutive-year</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-excels-in-higher-education-admissions-tops-the-state-for-the-second-consecutive-year#comments</comments><guid isPermaLink="false">5f6b1135-c3d1-450b-97b9-31371b7813d9</guid><pubDate>Sun, 12 Jul 2026 02:05:33 +0000</pubDate><atom:updated>2026-07-12T02:05:33.030Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,Higher Education,Admissions,உயர்கல்வி சேர்க்கை,தொடர்ந்து முதலிடம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/np7rfoep/clg-students.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/np7rfoep/clg-students.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் தொடர்ந்து 2-வது ஆண்டாக கோவை முதலிடம் பிடித்து உள்ளது.</p><p>தமிழக அளவில் அரசு பள்ளிகளில் பிளஸ்-2 முடித்து உயர் கல்வியில் சேரும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கையில் கோவை முன்னிலையில் உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த பிளஸ்-2 பொதுத்தேர்வை 11 ஆயிரத்து 251 பேர் எழுதினர். இதில் 10 ஆயிரத்து 307 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 210 பேர் தவிர்த்து மீதம் உள்ள மாணவ-மாணவிகள்<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88"> உயர்கல்வியில் </a>சேர விண்ணப்பித்து உள்ளனர். தேர்ச்சி பெறாத மாணவ-மாணவிகள் 944 பேரில் அடுத்த கட்ட படிப்பிற்காக 288 பேர் விண்ணப்பித்து உள்ளனர். 656 பேர் விண்ணப்பிக்காமல் உள்ளனர்.</p><p>மாநில அளவில் முதலிடம்</p><p>அதன்படி கோவையில் அரசு பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகளில் 87 சதவீதம் பேர் உயர்கல்வியில் சேர்ந்து உள்ளனர். அத்துடன் மாநில அளவில் தொடர்ந்து 2-வது ஆண்டாக கோவை முதலிடம் பிடித்து உள்ளது. கடந்த ஆண்டு 95.45 சதவீத மாணவ-மாணவிகள் உயர் கல்வியில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன் உயர்கல்வியில் சேராத மாணவ-மாணவிகளை கண்டறிந்து அவர்களை உயர்கல்வியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>மேம்படுத்தப்பட்ட ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம்: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/improved-irctc-website-coming-soon</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/improved-irctc-website-coming-soon#comments</comments><guid isPermaLink="false">1981b7ae-1442-4448-a21a-6e2e4d681d92</guid><pubDate>Sun, 12 Jul 2026 01:52:20 +0000</pubDate><atom:updated>2026-07-12T01:52:20.738Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய ரெயில்வே,Indian Railway,IRCTC,IRCTC Website,ஐ.ஆர்.சி.டி.சி.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/s1ghwdga/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/s1ghwdga/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>டிக்கெட் முன்பதிவு</h2><p>இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் மற்றும் அதன் செயலியில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். தற்போதுள்ள நிலவரப்படி, 82 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் முன்பதிவு செய்கின்றனர். </p><p>ஆனால், தட்கல் முன்பதிவின்போது, அடிக்கடி 'சர்வர்' பிரச்சினை ஏற்படுகிறது. 'கேப்ட்சா' குறியீடுகளும் கடினமாக இருக்கிறது. தொழில்நுட்ப கோளாறுகளால் டிக்கெட் முன்பதிவு அடிக்கடி தோல்வியில் முடிகிறது. இதனால், பயணிகள் முன்பதிவு செய்ய முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து ரெயில்வே நிர்வாகத்திற்கு பல்வேறு புகார்களை பயணிகள் தெரிவித்துள்ளனர்.</p><h2>ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம்</h2><p>இந்தநிலையில், பயணிகள் சிரமம் இல்லாமல் எளிதில் முன்பதிவு செய்யும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ள ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.</p><p><strong>இதுகுறித்து, தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-</strong></p><p>பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் ஐ.ஆர்.சி.டி.சி. இணைதளம் மேம்படுத்தப்பட்டு தற்போது தயாராக உள்ளன. இதற்கான, முன்னோட்ட பணிகளும் நடந்து வருகின்றன. டிக்கெட் முன்பதிவை எளிமையாகவும், தடையின்றியும் செய்வதை நோக்கமாகக் கொண்டு 4 முக்கிய மேம்பாட்டு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளன.</p><p>முன்பதிவு செய்யும்போது தேவையற்ற கேப்ட்சாக்களை நீக்குதல், தேவையற்ற பாப்-அப்களை அகற்றுதல், ஒளிரும் கிராபிக்ஸ், கவனச்சிதறல்களை ஏற்படுத்தும் அம்சங்கள் நீக்கப்படும். அனைத்து வகுப்புகளிலும் இருக்கை கிடைப்பது ஒரே பார்வையில் பார்க்கலாம். இவ்வாறாக டிக்கெட் பதிவு செய்யும் முறைகள் எளிமைப்படுத்தி இருப்பது பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>திருச்சி வழியாக திருச்செந்தூருக்கு கூடுதல் ரெயில்களை இயக்க பயணிகள் கோரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/passengers-request-additional-trains-to-tiruchendur-via-trichy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/passengers-request-additional-trains-to-tiruchendur-via-trichy#comments</comments><guid isPermaLink="false">8ad1e347-baf5-4cfb-9a45-c03cff4f38c5</guid><pubDate>Sun, 12 Jul 2026 01:52:19 +0000</pubDate><atom:updated>2026-07-12T01:52:19.623Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்செந்தூர்,ரெயில் சேவை,train service,Tiruchendur,பயணிகள்,passengers</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/fc5ba3pj/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/fc5ba3pj/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,  </p><p>தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சி வழியாக பல்வேறு பகுதிகளுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, திருச்சி வழியாக சென்னை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி போன்ற மாவட்டங்க ளுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு மாநிலங்க ளுக்கும் திருச்சி வழியாக ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. </p><p>திருச்சியை சுற்றியுள்ள தஞ்சாவூர், மயிலாடுதுறை, காரைக்கால், வேளாங்கண்ணி போன்ற பகுதிகளுக்கு பயணிகள் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் திருச்சி வழியாக திருச்செந்தூருக்கு இயக்கப்படும் ரெயிலில் எப்போதும் கூட்டம் அலைமோதுகிறது. திருச்செந்தூருக்கு ஒரு ரெயில் மட் டுமே இயக்கப்படுகிறது. எனவே திருச்சி வழியாக திருச்செந்தூருக்கு செல்ல மேலும் சிறப்பு ரெயில்கள், வாரந்திர ரெயில்கள் மற்றும் கூடுதலாக தினசரி ரெயில்கள் இயக்க பக்தர்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் பிறப்பு விகிதம் குறைவு - அமைச்சர் அருண்ராஜ் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/birth-rate-is-low-in-tamil-nadu-minister-arunraj</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/birth-rate-is-low-in-tamil-nadu-minister-arunraj#comments</comments><guid isPermaLink="false">4c108fdc-2f17-40bd-b638-a9207411393e</guid><pubDate>Sun, 12 Jul 2026 01:42:40 +0000</pubDate><atom:updated>2026-07-12T01:42:40.364Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>குறைவு,பிறப்பு விகிதம்,For Tamil Nadu,birth rate,Minister Arunraj,அமைச்சர் அருண்ராஜ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/2ig318p1/minister-arunraj.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/2ig318p1/minister-arunraj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை தேனாம்பேட்டை செம்மொழி பூங்காவில் மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.</p><p>இந்த பேரணியை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர். மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, டி.எம்.எஸ் வளாகத்தில் நடந்த உலக மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில், சிறப்பாக பணிபுரிந்த சுகாதார பணியாளர்கள் மற்றும், நிறுவனங்களுக்கு விருதுகளை வழங்கி அமைச்சர் அருண்ராஜ் பேசியதாவது:-</p><p>உலகின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இன்று திகழும் இந்தியா, தன்னுடைய திருப்புமுனையில் நிற்கிறது. நமது தேசியக் கருவுறுதிறன் விகிதம் அதாவது ஒரு  பெண்ணுக்கு பிறக்கும் சராசரி குழந்தைகளின் எண்ணிக்கை 1.9 சதவீதமாக ஆகக்குறைந்து. ஈடு செய் நிலைக்கும் கீழே சென்றுவிட்டது.</p><h2>பிறப்பு விகிதம்</h2><p>நமது தமிழ்நாடோ கடந்த 1993-ம் ஆண்டிலேயே இந்தியாவிலேயே முதன்மையான மாநிலங்களில் ஒன்றாக மக்கள்தொகை ஈடுசெய் நிலையை எட்டியது. தமிழகத்தில் தற்போது இன்று கருவுறுதிறன் விகிதம் 1.3 சதவீதம், <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">பிறப்பு விகிதம்</a> ஆயிரத்திற்கு 12 ஆக உள்ளது. இரண்டுமே இந்தியாவிலேயே மிகக்குறைவு. எனவே, மக்கள்தொகையை கட்டுப்படுத்துவது இனி தமிழ்நாட்டின் சவால் அல்ல. மக்களின் நல்வாழ்வுதான் நமது சவாலாக உள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி முதல், தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தின் வழியாக. முதல்-அமைச்சர், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்மாமனாக நின்று, ஒரு கிராம் தங்க மோதிரத்தை அக்குழந்தையின் கைகளில் அணிவிக்க இருக்கிறார்.</p><p>இவ்வாறு அவர் பேசியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. நிகழ்ச்சியை பள்ளியில் ஒளிபரப்பிய மேலும் ஒரு தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/another-headmistress-suspended-for-broadcasting-tv-show-in-school</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/another-headmistress-suspended-for-broadcasting-tv-show-in-school#comments</comments><guid isPermaLink="false">3bc522dd-9a92-4df3-bde4-969dffac7644</guid><pubDate>Sun, 12 Jul 2026 01:38:52 +0000</pubDate><atom:updated>2026-07-12T01:38:52.133Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர்,த.வெ.க,பணியிடை நீக்கம்,suspended,தலைமை ஆசிரியை,Headmistress,Show.நிகழ்ச்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/widupwne/224.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ லைமை ஆசிரியை பணியிடை நீக்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/widupwne/224.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ணராயபுரம், </p><p>கரூரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நேற்று முன்தினம் தமிழக முதல்-அமைச்சர் விஜய் கலந்து கொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை கரூர் மாவட்டம். கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள வகுப்பறையில் எல்.இ.டி. திரையில் மாணவர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. இதனையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியை மல்லிகாவை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.</p><h2>பணியிடை நீக்கம்</h2><p>இந்நிலையில் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மகாதானபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் முதல்-அமைச்சர் விஜய் கலந்து கொண்ட த.வெ.க.வின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மாணவர்களுக்கு ஒளிபரப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியை ராஜேஸ்வரியை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">பணியிடை நீக்கம்</a> செய்து மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) சண்முகவேல் உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பா..? வானிலை மையம் வெளியிட்ட தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-there-a-chance-of-rain-in-tamil-nadu-today-information-released-by-the-meteorological-centre-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-there-a-chance-of-rain-in-tamil-nadu-today-information-released-by-the-meteorological-centre-2#comments</comments><guid isPermaLink="false">d7f2409f-7240-4899-a26c-50492fbd6409</guid><pubDate>Sun, 12 Jul 2026 01:35:55 +0000</pubDate><atom:updated>2026-07-12T01:35:55.078Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Rain,Weather,வானிலை,தமிழகம்,Weather News,WeatherUpdate,மழை,வானிலை செய்திகள்,வானிலை ஆய்வு மையம்,weather condition,weather information,வானிலை அறிவிப்பு,weather center,வானிலை முன்ன்றிவிப்பு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/g64u3ea6/rain.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மழை, rain]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/g64u3ea6/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>வானிலை செய்திகள் (Weather)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>சுமார் 0.9 கிமீ உயரத்தில், தமிழகக்கடலோரப்பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><h2>மழை</h2><p>இதன் காரணமாக <strong>இன்று (12-07-2026)</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>13-07-2026 முதல் 16-07-2026 வரை:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.</p><p><strong>17-07-2026:</strong> தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p> <h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</strong></p><p><strong>12-07-2026 முதல் 15-07-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும்.</p><h2>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</h2><p><strong>12-07-2026 முதல் 15-07-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்</p><p>அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று (12-07-2026):</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது</p>]]></content:encoded></item><item><title>பள்ளி மாணவர்களுக்காக நாளை முதல் கூடுதல் பஸ்கள்: போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-buses-for-school-students-from-tomorrow-transport-minister-reviews</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-buses-for-school-students-from-tomorrow-transport-minister-reviews#comments</comments><guid isPermaLink="false">105a629b-930f-48f4-a1ad-ea8a844d1596</guid><pubDate>Sun, 12 Jul 2026 01:18:36 +0000</pubDate><atom:updated>2026-07-12T01:18:36.245Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,அரசு சிறப்பு பஸ்கள்,school student,Transport Minister,additional buses,போக்குவரத்துத்துறை அமைச்சர்,விஜய் தமிழன் பார்த்திபன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/2slip2l0/223.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ போக்குவரத்துத்துறை அமைச்சர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/2slip2l0/223.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னையில் பள்ளி மாணவர்கள் கூட்ட நெரிசல் இன்றி, பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளும் வகையில் அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தங்களில் இருந்து பள்ளிக்கும், பள்ளியில் இருந்து அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தங்களுக்கும் காலை மற்றும் மாலை நேரங்களில் அழைத்து சென்றுவர ஏதுவாக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 25 பள்ளிகளுக்கு 25 பஸ்கள் மூலம் 50 பயண நடைகள் இயக்கப்பட்டு வந்தது.</p><h2>சிறப்பு பஸ்</h2><p>இந்தநிலையில் முதல்-அமைச்சர் விஜய் உத்தரவின்படி பள்ளி மாணவர்களுக்காக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 41 சிறப்பு பஸ்கள் வாயிலாக 84 பயண நடைகள் நாளை முதல் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு பஸ்களை போக்குவரத்து அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D">விஜய் தமிழன் பார்த்திபன்</a> நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் மோகன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>மதுபோதையில் சாலையில் மயங்கி கிடந்த இளம்பெண், வாலிபர்கள்... குமரியில் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-and-teenagers-lying-unconscious-on-the-road-under-the-influence-of-alcohol</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-and-teenagers-lying-unconscious-on-the-road-under-the-influence-of-alcohol#comments</comments><guid isPermaLink="false">812b3b64-086e-4834-b2ec-bd09451c2b9e</guid><pubDate>Sun, 12 Jul 2026 01:14:25 +0000</pubDate><atom:updated>2026-07-12T01:14:25.632Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,கன்னியாகுமரி,young woman,இளம்பெண்,Kanyakumari,கிரைம் செய்திகள்,மதுபோதை,Liquor</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/d8cm7jip/CHENNAI-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/d8cm7jip/CHENNAI-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>குமரி,</p><h2>மதுபோதை</h2><p>கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்புக்கு தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அருமனை-களி யல் சாலையில் ஒரு இளம்பெண் மற்றும் 3 வாலிபர்கள் மதுபோதையில் நடக்க முடியாமல் தள்ளாடி சாலையில் படுத்து இருந்தனர். அதில் 2 வாலிபர்கள் உடலிலும், முகத்திலும் ரத்த காயத்துடன் காணப்பட்டனர். அருகில் ஒரு மோட்டார் சைக்கிளும் இருந்தது.</p><p>அப்போது பணிக்கு செல்ல அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கடையாலுமூடு போலீஸ் நிலைய பெண் ஏட்டு பிரேமலதா, போதையில் சாலையில் வாலிபர்களுடன் இளம்பெண் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் அந்த பகுதி தங்கள் போலீஸ் நிலைய எல்லைக்குள் வராத போதிலும், உடனடியாக அவர் வாகனத்தை சாலையோரமாக நிறுத்திவிட்டு அவர்களின் அருகில் சென்றார். அப்போது 3 வாலிபர்களில் ஒருவர் அங்கிருந்து நைசாக நழுவி சென்றுவிட்டார். </p><h2>மருத்துவமனையில் அனுமதி</h2><p>பின்னர் மற்ற 2 வாலிபர்கள் மற்றும் இளம்பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்புவதற்கான முயற்சியில் ஏட்டு பிரேமலதா ஈடுபட்டார். ஆனால் இதற்கு 2 வாலிபர்களும் சிகிச்சைக்கு செல்ல மறுத்து அடம் பிடித்ததாக தெரிகிறது. இதனால் சந்தேகம் அடைந்த ஏட்டு பிரேமலதா அந்த வாலிபர்கள் தப்பிச்செல்லாத வண்ணம் பார்த்துக் கொண்டார்.</p><p>அப்போது அந்த வழியாக வந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அங்கு வந்த அருமனை போலீசார் போதையில் கிடந்த இளம் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கும், 2 வாலிபர்களையும் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.</p><h2>தனியார் நிறுவன ஊழியர்கள்</h2><p>தொடர்ந்து அருமனை போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் 2 வாலிபர்களில் ஒருவர் அருமனையை சேர்ந்தவர் என்பதும், இன்னொருவர் தென்காசியை சேர்ந்தவர் என்பதும், இளம்பெண் புதுக்கோட்டையை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. சென்னையில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் இவர்கள் கடந்த 5-ந் தேதி திற்பரப்புக்கு சுற்றுலா வந்து ஓட்டலில் அறை எடுத்து தங்கி உள்ளனர். பின்னர் அங்கிருந்த இடங்களை சுற்றி பார்ப்பதற்காக வந்தபோது போதையில் காயங்களுடன் சாலையில் மயங்கி கிடந்தது தெரியவந்தது.</p><p>அவர்கள் இடங்களை சுற்றிபார்க்க சென்றபோது விபத்தில் சிக்கி காயம் ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து அருமனை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>வியட்நாமில் பலியான தமிழர்கள்: வாட்ஸ்-அப்பில் வைத்த கடைசி &apos;ஸ்டேட்டஸ்&apos;.. உருக்கமான தகவல்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamils-who-lost-their-lives-in-vietnam-their-final-whatsapp-status-updates-heart-wrenching-details</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamils-who-lost-their-lives-in-vietnam-their-final-whatsapp-status-updates-heart-wrenching-details#comments</comments><guid isPermaLink="false">25be16e6-c96e-4e9b-b7a5-1ffe4c5043f8</guid><pubDate>Sun, 12 Jul 2026 01:14:24 +0000</pubDate><atom:updated>2026-07-12T01:14:24.348Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,சுற்றுலா,வியட்நாம்,Vietnam,தமிழர்கள்,boat accident,படகு விபத்து,Tamils</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/xi77rw1u/viter.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வியட்நாம், படகு விபத்து]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/xi77rw1u/viter.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வியட்நாமில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள் தெரியவந்துள்ளது.</p><h2>வாட்ஸ்-அப்பில் வைத்த கடைசி 'ஸ்டேட்டஸ்'</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D">வியட்நாம் படகு விபத்தில்</a> இறந்த பழனியைச் சேர்ந்த முருகபிரபு, செல்போன் கடை உரிமையாளர் ஆவார். செல்போன் விற்பனையில் சிறப்பாக செயல்பட்டதால் சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனம் சார்பில் முருகபிரபு, அவரது நண்பர் நிர்மல்குமார் ஆகியோரை வியட்நாம் நாட்டுக்கு சுற்றுலா அழைத்து சென்றது. படகுசவாரி சென்றபோது படகு கவிழ்ந்து முருகபிரபு உயிரிழந்துள்ளார். அவருடன் சென்ற நிர்மல்குமார், மற்றொரு படகில் சென்றதால் உயிர் தப்பினார்.</p><p>உயிரிழந்த முருகபிரபு, நேற்று காலை தனது செல்போனில் வியட்நாமில் சுற்றுலா சென்ற இடங்களில் எடுத்த படங்களை வாட்ஸ்-அப்பில் 'ஸ்டேட்டஸ்' வைத்துள்ளார். அதனை அவரது நண்பர்கள், உறவினர்கள் பார்த்துள்ளனர். அதுவே அவரது கடைசி 'ஸ்டேட்டஸ்' ஆக அமைந்துவிட்டது.</p><h2>பிறந்த நாளில் இறந்த சோகம்</h2><p>இந்த விபத்தில் தர்மபுரி மாவட்டம் கடத்தூரை சேர்ந்த தொழிலதிபர் செந்தில் குமார் என்பவரும் இறந்தார். செல்போன் டீலராக இருந்த இவர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரங்கள் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தார். தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பில் உறுப்பினராக இருந்த செந்தில்குமார் சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வந்தார்.</p><p>பலியான தொழிலதிபர் செந்தில்குமாருக்கு நேற்று பிறந்த நாள் ஆகும். இதனால் அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் செல்போன் மூலம் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை அனுப்பினார்கள். தர்மபுரியில் உள்ள ஒரு மாற்றுத்திறனாளி குழந்தைகள் இல்லத்தில் அவருடைய பிறந்தநாளை கொண் டாடும் வகையில் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.</p><p>பிறந்த நாளில் மகிழ்ச்சியாக வியட்நாமில் பொழுதை கழித்துக் கொண்டிருந்த அவர் படகு கவிழ்ந்த விபத்தில் பலியான சோக சம்பவம் உறவினர்கள், நண்பர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/e08cbx40/phot.jpg" /></figure><h2>திருச்சியைச் சேர்ந்த 3 பேர்</h2><p>படகு கவிழ்ந்து உயிரிழந்தவர்களில் அழகுராஜன், பாலாஜி, ஷேக் அப்துல்லா ஆகிய 3 பேரும் திருச்சியை சேர்ந்தவர்கள். இதில் அழகுராஜன் தனியார் செல்போன் நிறுவனத்தின் திருச்சி, கரூர், புதுக்கோட்டை மாவட்ட விற்பனை மேலாளராக பணியாற்றி வந்தார். பாலாஜி செல்போன் வினியோகஸ்தர் ஆவார்.</p><p>தொழில் அதிபரான ஷேக் அப்துல்லா செல்போன் விற்பனை நிறுவனம் நடத்தி வந்தார். 3 மாத விற்பனை இலக்கை எட்டி சாதனை படைத்ததால் செல்போன் கம்பெனி சார்பில் அழகுராஜன், வினியோகஸ்தர்களான பாலாஜி, ஷேக் அப்துல்லா ஆகியோர் உள்பட பலரை வியட்நாம் நாட்டுக்கு சுற்றுலாவுக்காக அனுப்பி வைத்துள்ளது.</p> <h2>அழகுராஜன்</h2><p>இந்த விபத்தில் இறந்த அழகுராஜன் திருச்சி கிராப்பட்டி அருணாசலம் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி பெயர் சரவண பிரியா (34) தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு சிவசாய்ராம் (14), சிவசாய் நிரஞ்சன் (7) என்ற 2 மகன்கள் உள்ளனர். சுற்றுலா சென்ற இடத்தில் அழகுராஜன் இறந்து விட்டார் என்ற தகவல் வெளியானதும் அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் கதறி அழுதனர். இதனால் அவர்களது வீடு மட்டுமின்றி அந்த தெருவே சோகமாக காணப்படுகிறது.</p> <h2>பாலாஜி</h2><p>விபத்தில் இறந்த பாலாஜி திருச்சி திருவானைக்காவல் கீழக்கொண்டயம்பேட்டையை சேர்ந்தவர். விஷ்ணுபிரியா (41) என்ற மனைவியும், 8-ம் வகுப்பு படிக்கும் ரமேஷ்ஜி, 5-ம் வகுப்பு படிக்கும் ஸ்ரீசித்து ஆகிய மகன்களும் உள்ளனர்.</p><p>கடந்த 9-ந் தேதி திருச்சியில் இருந்து பாலாஜி புறப்பட்டு சென்றுள்ளார். தொடர்ந்து குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்த பாலாஜி, நேற்று முன்தினம் இரவு வெகுநேரம் செல்போனில் பேசியுள்ளார். நேற்று யாரிடமும் பேசவில்லை. இதுகுறித்து பாலாஜியின் சித்தப்பா கோவிந்தன் கூறுகையில் ‘படகில் பயணித்த யாருக்கும் உயிர் காக்கும் ‘லைப் ஜாக்கெட்' கொடுக்கவில்லை. இதனால்தான் பாலாஜி உள்ளிட்டோர் அநியாயமாக உயிரிழந்தனர். மத்திய, மாநில அரசுகள் உயிரிழந்தோரின் குடும்பத்தின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு உரிய நிவாரண தொகையை வழங்க வேண்டும். அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்' என்றார்.</p><h2>ஷேக் அப்துல்லா</h2><p>படகு விபத்தில் இறந்த ஷேக் அப்துல்லா திருச்சி பீமநகர் யானைக்கட்டி மைதானம் பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவர் ஒரு ஹார்டுவேர்ஸ் நிறுவனத்தின் பங்குதாரராகவும், செல்போன் விற்பனை நிறுவனத்தின் உரிமையாளராகவும் இருந்தார். இவருக்கு நசிமாபானு என்ற மனைவியும், சாகில் என்ற மகனும், சபானா என்ற மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகிவிட்டது. மகன் சாப்ட்வேர் என்ஜினீயர் ஆவார். செல்போன் விற்பனையில் இலக்கை எட்டியதற்காக சுற்றுலா செல்வதற்கான வாய்ப்பை தனியார் நிறுவனம் வழங்கியபோது ஷேக் அப்துல்லா தனது மகனை அனுப்பலாம் என்று கூறியுள்ளார். ஆனால் அவரது மகன் தனக்கு வேலை இருக்கிறது என்று கூறிவிட்டதால், அரைமனதோடு சுற்றுலா சென்றிருக்கிறார்.</p><p>கடந்த புதன்கிழமை திருச்சியில் இருந்து புறப்பட்டு சென்ற இவர் நாளை (திங்கட்கிழமை) திருச்சிக்கு திரும்புவதாக இருந்தது. சுற்றுலா பயணத்தில் இருந்தபோது தினமும் குடும்பத்தினருடன் செல்போன் மூலம் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார். நேற்று காலை 10 மணி அளவில் கூட பேத்தியிடம் பேசி கொஞ்சியிருக்கிறார். இந்த நிலையில் தான் படகு விபத்தில் சிக்கி உயிரிழந்து உள்ளார்.</p> <h2>தொழில் அதிபர்</h2><p>இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, கோட்டக்கரையை சேர்ந்த தொழில் அதிபர் பாபுவும் இந்த விபத்தில் இறந்தார். ரேவதி (43) என்ற மனைவியும், ஜஸ்வந்த் (21) என்ற மகனும், நேகா (19) என்ற மகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.</p><h2>தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உயிரிழப்பு</h2><p>வியட்நாம் நாட்டில் சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 15 இந்தியர்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது.</p><p>உயிரிழந்த 15 பேரில், 10 நபர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><strong>முழு விவரம்:-</strong></p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/3ppc72w7/janag.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>மெட்ரோ பணிகள்: சென்னையில் பின்வரும் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/metro-works-traffic-diversions-in-the-following-areas-of-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/metro-works-traffic-diversions-in-the-following-areas-of-chennai#comments</comments><guid isPermaLink="false">79b3bb82-5de6-4957-a6e2-1c646a5d0fdf</guid><pubDate>Sun, 12 Jul 2026 01:04:22 +0000</pubDate><atom:updated>2026-07-12T01:04:22.366Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,போக்குவரத்து மாற்றம்,traffic diversion</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/7l9rws3f/2.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/7l9rws3f/2.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் 2-ம் கட்டப் பணிகளுக்காக (வழித்தடம்-5), திருமங்கலம் சர்வீஸ் சாலையில் மேம்பால பாதை கட்டுமான பணிகள் நடைபெற உள்ளன. எனவே, இப்பகுதியில் நாளை (திங்கட்கிழமை) முதல் 12.07.2027 வரை ஓராண்டு காலத்துக்கு போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தப்படுவதாக போக்குவரத்து போலீசார் அறிவித்து உள்ளனர். அதன் விவரம் வருமாறு:-</p><p>* 100 அடி சாலையின் இடதுபக்க சர்வீஸ் சாலையில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படுகிறது.</p><p>* பாடி மேம்பாலத்தில் இருந்து அம்பத்தூர் நோக்கிச் செல்லும் வாகனங் கள், 18-வது பிரதான சாலை அல்லது 6-வது அவென்யூ வழியாகச் சென்று, இடதுபுறம் திரும்பி 13-வது பிரதான சாலையில் இணைந்து, பின்னர் வலதுபுறம் திரும்பி 2-வது அவென்யூவுக்குச் செல்ல வேண்டும். அங்கி ருந்து மீண்டும் வலதுபுறம் திரும்பி 100 அடி சர்வீஸ் சாலையை அடைந்து, பின் இடதுபுறம் திரும்பி அம்பத்தூர் எஸ்டேட் சாலையை சென்றடையலாம்.</p><p>* பாடி மேம்பாலத்தில் இருந்து கோயம்பேடு நோக்கிச் செல்லும் வாகனங் கள். வழக்கம்போல் திருமங்கலம் மேம்பாலத்தைப் பயன்படுத்திச் செல்லலாம்.</p><p>போக்குவரத்து சீராக நடைபெறுவதற்கும், இப்பணிகள் தொய்வின்றி முடிவதற்கும், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் அப்பகுதி குடியிருப்பாளர்கள் இந்த போக்குவரத்து மாற்றங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் தலைமையில் மாநில தகவல் ஆணையரை தேர்வு செய்ய குழு அமைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/committee-formed-to-select-state-information-commissioner-under-the-chairmanship-of-retired-judge-rs-ramanathan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/committee-formed-to-select-state-information-commissioner-under-the-chairmanship-of-retired-judge-rs-ramanathan#comments</comments><guid isPermaLink="false">693d064e-912a-4333-b844-27bb261be295</guid><pubDate>Sun, 12 Jul 2026 01:01:20 +0000</pubDate><atom:updated>2026-07-12T01:01:20.039Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,தேர்வு,Committee,Retired Judge,ஓய்வு பெற்ற நீதிபதி,தமிழக அரசு உத்தரவு,selection,குழு அமைப்பு,structure,Tamil Nadu Government Order,மாநில தகவல் ஆணையர்,State Information Commissioner</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/6n5qxynw/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக அரசு உத்தரவு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/6n5qxynw/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் தலைமையில் மாநில தகவல் ஆணையரை தேர்வு செய்ய குழு</a> அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.</p><h2>மாநில தகவல் ஆணையரை தேர்வு செய்ய குழு அமைப்பு</h2><p>தமிழக அரசின் மாநில தலைமை தகவல் ஆணையராகப் பணியாற்றி வந்த ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி முகம்மது ஷகீல் அக்தரின் பதவிக்காலம் கடந்த மாதம் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து புதிய தலைமை தகவல் ஆணையர், மாநில தகவல் ஆணையர்களை (4 பேர்) தேர்வு செய்வதற்கு தமிழக அரசு குழுவை அமைத்துள்ளது. </p><h2>ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன்</h2><p>இந்த குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழக அரசின் மனிதவள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் சி.சமயமூர்த்தி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.சுடலைக்கண்ணன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். </p><p>இந்த குழு, மாநில தலைமை தகவல் ஆணையர் மற்றும் மாநில தகவல் ஆணையர்கள் பதவிகளுக்கு தகுதியான நபர்கள் பட்டியலை தயார் செய்து அரசுக்கு பரிந்துரை செய்யும். அதனடிப்படையில் மாநில தலைமை தகவல் ஆணையர் மற்றும் மாநில தகவல் ஆணையர்கள் நியமிக்கப்படுவார்கள்.</p>]]></content:encoded></item><item><title>பராமரிப்பு பணியில் மாற்றம்: மின்சார ரெயில்கள் இன்று வழக்கம் போல இயக்கப்படும்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/change-in-maintenance-schedule-suburban-trains-will-operate-as-usual-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/change-in-maintenance-schedule-suburban-trains-will-operate-as-usual-today#comments</comments><guid isPermaLink="false">374095fb-2a53-4a3a-9c66-60d607e04f48</guid><pubDate>Sun, 12 Jul 2026 00:55:42 +0000</pubDate><atom:updated>2026-07-12T00:55:42.313Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மின்சார ரெயில்கள்,suburban trains</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/0gkxtbsc/1.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/0gkxtbsc/1.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>சென்னையில் தண்டவாள பராமரிப்பு பணியின் காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை மின்சார ரெயில் சேவை ரத்துசெய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. </p><p>ரெயில்வே பராமரிப்பு பணி காலை 11 முதல் மாலை 3 மணி வரை மாற்றப்பட்டுள்ளது. இதனால் ரத்து செய்யப்பட்டதில் 8 ரெயில்கள் ' வழக்கமான நேரத்தில் இயக்கப்படும். அதன்படி சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணி, மாலை 3.15 மணி, மாலை 3.45 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள், செங்கல்பட்டுக்கு காலை 10.45 மணி புறப்படும் ரெயில், இதேபோல செங் கல்பட்டில் இருந்து காலை 9.30 மணி, மதியம் 2.25 மணிக்கு கடற்கரைக்கு புறப்படும் ரெயில்கள், தாம்பரத்தில் இருந்து காலை 10.45 மணி, மாலை 3.30 மணிக்கு கடற்கரைக்கு புறப்படும் ரெயில்கள் வழக்கம் போல இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>படகு விபத்தில் தமிழர்களுக்கு உதவ சேலம் டி.ஐ.ஜி. வியட்நாம் செல்கிறார்-முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/boat-accident-chief-minister-vijay-orders-ips-officer-santosh-hadimani-to-rush-to-vietnam-on-behalf-of-the-tamil-nadu-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/boat-accident-chief-minister-vijay-orders-ips-officer-santosh-hadimani-to-rush-to-vietnam-on-behalf-of-the-tamil-nadu-government#comments</comments><guid isPermaLink="false">10baf82e-e41e-4892-aef6-efd66ead2bb3</guid><pubDate>Sat, 11 Jul 2026 20:56:50 +0000</pubDate><atom:updated>2026-07-11T20:56:50.814Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,வியட்நாம்,Vietnam,படகு விபத்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/6lcjgxa8/vietnam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/6lcjgxa8/vietnam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>வியட்நாமில் படகு கவிழ்ந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உள் பட இந்தியர்கள் 15 பேர் பலியாகினர். இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது. தமிழ்நாடு அரசு, இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் உள்ளது.</p><p>இதன் தொடர்ச்சியாக, முதல்-அமைச்சர் விஜய் தற்போதைய சூழ்நிலையை ஆய்வு செய்து, வியட்நாமில் உள்ள தூதரக அதிகாரிகளுடன் இணைந்து, உயிரிழந்தவர்களின் உடல்களைத் தாயகம் கொண்டு வரும் பணிகளை விரைவுபடுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை வசதிகளை எளிதாக்கவும் தமிழ்நாடு அரசின் சார்பில் சந்தோஷ் ஹடிமானி ஐ.பி.எஸ். (டி.ஐ.ஜி. சேலம்) அதிகாரியை வியட்நாமின் ஹோச மின் நகரத்திற்கு விரைந்து செல்ல உத்தரவிட்டுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>டி.டி.வி. தினகரனின் கருத்து மோசமான முன்னுதாரணம்: அமைச்சர் வன்னி அரசு காட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ttv-dhinakarans-remarks-set-a-bad-precedent-minister-vanni-arasu-criticizes-sharply</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ttv-dhinakarans-remarks-set-a-bad-precedent-minister-vanni-arasu-criticizes-sharply#comments</comments><guid isPermaLink="false">31d647b2-2cd5-4de6-8efb-246ebc7f216f</guid><pubDate>Sat, 11 Jul 2026 20:05:06 +0000</pubDate><atom:updated>2026-07-11T20:05:06.365Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,திமுக,DMK,TTV Dhinakaran,வன்னி அரசு,டி.டி.வி. தினகரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/mf68ojbl/vanni-arasu.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/mf68ojbl/vanni-arasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p> சேலம்,  </p><p>விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வா கியும், தமிழக சமூக நீதித்துறை அமைச்சரு மான வன்னியரசு நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். தமிழ்நாட்டில் பா.ஜனதாவை கண்டு அனைத்து கட்சிகளும் பயப்படுவதாக நயினார் நாகேந்திரன் கூறியது குறித்து நிருபர்களின் கேள்விக்கு, 'பாம்புகளை பார்த்தால் அனைவரும் பயப்படத்தான் செய்வார்கள்' என்றார்.</p><p>மேலும் அவர் கூறும் போது, எனது துறையில் சுதந்திரமாக செயல்படுகிறேன். மக்கள் முன்னேற்றத்திற்காக அச்சமின்றி உழைக்க முதல்-அமைச்சர் எனக்கு முழு வழிகாட்டுதலை வழங்கி உள்ளார். த.வெ.க.வை வீழ்த்துவதற்காக தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் இணைய வேண்டும் என்ற டி.டி.வி. தினகரனின் கருத்து மோசமான முன்னுதாரணம் ஆகும். கோட்பாடு அடிப்ப டையில் பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை எதிர்ப்பதற்கு இணைந்தால் மட்டுமே அது சரியாக இருக்கும்' என்றார்.</p>]]></content:encoded></item><item><title>கரூர் பேச்சுக்கு எதிர்ப்பு: விஜய் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிய வேண்டும்- தி.மு.க. புகார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/opposition-to-karur-speech-cbi-should-register-a-case-against-vijay-dmk-complaint</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/opposition-to-karur-speech-cbi-should-register-a-case-against-vijay-dmk-complaint#comments</comments><guid isPermaLink="false">c55b8633-6d27-44a5-83d5-8ac7b06a2c28</guid><pubDate>Sat, 11 Jul 2026 19:54:09 +0000</pubDate><atom:updated>2026-07-11T19:54:09.799Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர்,விஜய்,சி.பி.ஐ,தி.மு.க</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/1hgmzs2n/Karur.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/1hgmzs2n/Karur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2> கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்</h2><p>கரூரில் த.வெ.க. தலைவரும், முதல்-அமைச்சருமான விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி அன்று மேற்கொண்ட பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்த நிலையில் கரூருக்கு நேற்று முன்தினம் சென்ற முதல்-அமைச்சர் விஜய், இந்த சம் பவத்தை சுட்டிக்காட்டி முந்தைய தி.மு.க. அரசு மற்றும் காவல்துறை மீது பரபரப்பு குற்றச்சாட்டுக்களை கூறினார். அவருடைய இந்த பேச்சு வழக்கின் சாட்சிகளை அச்சுறுத்தும் வகையில் இருப்பதாகவும், எனவே அவர் மீது <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D">சி.பி.ஐ</a>. தனியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் தி.மு.க. சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>விஜய் மீது வழக்குப்பதிவு</h2><p>இதுதொடர்பாக தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்த வழக்கு விசாரணையை கண்காணிக்கும் சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான கண்காணிப்பு குழுவுக்கு புகார் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-கரூரில் கடந்த 10-ந்தேதி அன்று நடைபெற்ற கூட்டத்தில் முதல்-அமைச் சர் விஜய், கரூர் துயரச் சம்பவத்திற்கு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D">கரூர் </a>போலீஸ்துறை முழுப் பொறுப்பு போலவும், இதன் பின்னணியில் அரசியல் சதி இருப்பது போன்றும் பேசியுள்ளார். அவருடைய இந்த பேச்சு வழக்கின் முக்கிய சாட்சிகளை கலைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஏற்கனவே தமிழக அரசின் உள்துறைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள எதிர் ஆவணத்தில், த.வெ.க. அமைப்பாளர்களின் திட்டமிடப்படாத செயல்பாடுகளும், விதிமீறல்களுமே இந்த உயிரிழப்பு சம்பவத்துக்கு காரணம் என்று தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதே உள்துறையைத் தன்வசம் வைத்துள்ள முதல்-அமைச்சர் அதற்கு முற்றிலும் முரணாகப் பொதுவெளியில் பேசி சாட்சிகளைத் திசை திருப்ப முயன்றுள்ளார். எனவே அவர் மீது சி.பி.ஐ. தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.</p><h2>நீதிமன்றத்தில் ஆஜராகி...</h2><p>கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் கரூர் த.வெ.க. மாவட்ட செயலாளர் மதியழகன், த.வெ.க. பொதுச்செயலாளர்-அமைச்சர் ஆனந்த். இணை செயலாளர்-அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், அமைச்சர் ஆதவ் அர் ஜுனா, முதல்-அமைச்சரின் தனி செயலாளர் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் குற்றவாளிகள் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. சாட்சிகளைச் சிதைக்கக்கூடாது என்ற நீதிமன்றக் கட்டுப்பாடுகளும் அவர்கள் மீது விதிக்கப்படவில்லை.</p><p>எனவே வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவர்களை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகச் செய்து, சாட்சிகளை அச்சுறுத்தக்கூடாது என்ற நிபந்தனையுடன் கூடிய பிணைப் பத்திரங்களை எழுதி வாங்கவும் சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இதே கோரிக்கை அடங்கிய மனுவை டெல்லி சி.பி.ஐ. இயக்குனர் அலுவ லகத்துக்கும் ஆர்.எஸ்.பாரதி அனுப்பி வைத்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title> காலத்தால் அழியாத பாடல்களைப் பாடியவர் ஜானகி:  மு.க.ஸ்டாலின் இரங்கல்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/janaki-sang-timeless-songs-mk-stalin-offers-condolences</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/janaki-sang-timeless-songs-mk-stalin-offers-condolences#comments</comments><guid isPermaLink="false">b3ff94e2-3231-4918-9770-b6ac8de8b818</guid><pubDate>Sat, 11 Jul 2026 16:51:06 +0000</pubDate><atom:updated>2026-07-11T16:51:06.574Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஸ்டாலின்,MK Stalin&apos;,DMK leader MK Stalin,பாடகி ஜானகி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/4wj5k9a4/Janaki.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/4wj5k9a4/Janaki.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>'தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்' என்று கொண்டாடப்பட்ட பழம்பெரும் பின்னணி பாடகி ஜானகி உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அவரது மறைவு ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 88 வயதான ஜானகி  உடல் நல பாதிப்பால் மைசூருவில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில்  அனுமதிக்கப்பட்டார்.தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஜானகிக்கு சிகிச்சையின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.   பாடகி ஜானகி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.</p><p>முன்னாள் முதல் அமைச்சரும் திமுக தலைவருமான முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது;  இசைக்குயில் எஸ். ஜானகி மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் முதல் அனிருத் வரை ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய கானகோகிலம் ஜானகி அவர்களது இசைப்பயணம் மிக நீண்டது. </p><p>அவரது மறைவு என்பது, வானொலி தொடங்கி ஸ்பாட்டிஃபை வரையில் அவரது அமுதகானங்களைத் தங்கள் இல்லங்களில் ஒலிக்கவிட்டு இரசிக்கும் தமிழ்நாட்டு மக்கள் உள்ளிட்ட தென்னிந்திய மக்களுக்கும், இந்தியத் திரைத்துறைக்கும் பேரிழப்பாகும். இனிமையும் இளமையும் மாறாத தனது குரலால் காலத்தால் அழியாத பாடல்களைப் பாடிய அவர், என்றும் நம் இல்லங்களிலும் நெஞ்சங்களிலும் ஒலித்துக்கொண்டே இருப்பார். அவரது மறைவால் வாடும் திரைத்துறையைச் சேர்ந்த கலைஞர்கள், இரசிகர்கள், அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.</p> ]]></content:encoded></item></channel></rss>