<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 14 Jul 2026 03:43:16 +0000</lastBuildDate><item><title>வியட்நாம் படகு விபத்தில் பலியான 10 பேரின் உடல்கள் தமிழகம் வந்தன</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bodies-of-10-people-killed-in-vietnam-boat-accident-arrive-in-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bodies-of-10-people-killed-in-vietnam-boat-accident-arrive-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">083d4257-007e-47ab-a5ad-e10295094abf</guid><pubDate>Tue, 14 Jul 2026 03:25:29 +0000</pubDate><atom:updated>2026-07-14T03:25:29.250Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,வியட்நாம்,Vietnam,boat accident,படகு விபத்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/k2qo89mi/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/k2qo89mi/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்களில் இருந்து வியட்நாமுக்கு சுற்றுலா சென்றவர்கள். கடந்த 11-ந்தேதி அங்கு படகு சவாரியில் ஈடுபட்டனர். இதில் 3 பேருடன் சென்ற படகு ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.</p><p>இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 10 பேர், கேரளத்தில் இருந்து 2 பேர், ஆந்திராவில் இருந்து 3 பேர் என 15 பேர் உயிரிழந்தனர் அவர்களின் உடல்களை இந்தியா கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை ஹனோயில் உள்ள இந்திய தூதரகம் தீவிரமாக மேற்கொண்டது. </p><p>இதற்காக தமிழகத்தில் இருந்து சிறப்பு அதிகாரி ஒருவரும் அனுப்பி வைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து 15 பேரின் உடல்களும் வியட்நாம் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் நேற்றிரவு மும்பை வந்தன.</p><p>இந்த நிலையில், படகு கவிழ்ந்த விபத்தில் பலியான 10 பேரின் உடல்கள் தமிழகம் கொண்டு வரப்பட்டன. மும்பையில் இருந்து விமானம் மூலம் 4 பேரின் உடல்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. மீதம் 6 பேரின் உடல்கள் கோவை சென்றடைந்தது. அயலகத் தமிழர் நல வாரிய அதிகாரிகள் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரவர்களின் சொந்த ஊருக்கு உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டன.</p>]]></content:encoded></item><item><title>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான ஒப்பந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tamil-nadu-government-has-issued-a-tender-notification-for-the-thaimaman-thanga-mothiram-maternal-uncles-gold-ring-scheme</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tamil-nadu-government-has-issued-a-tender-notification-for-the-thaimaman-thanga-mothiram-maternal-uncles-gold-ring-scheme#comments</comments><guid isPermaLink="false">b6de0ec9-3ca8-40e0-a963-5f2e133adf2a</guid><pubDate>Tue, 14 Jul 2026 03:22:46 +0000</pubDate><atom:updated>2026-07-14T03:22:46.946Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,தமிழக அரசு,TN govt,ஒப்பந்தம்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,Tamil Nadu Chief Minister Vijay,தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்,Thaimaman Gold Ring Project</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/054j57zc/satta.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/054j57zc/satta.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான ஒப்பந்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. </p><p>அறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்.15ஆம் தேதி தாய்மாமன் தங்கம் மோதிரம் திட்டத்தை முதல்-அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">விஜய்</a> தொடங்கி வைக்க உள்ளார். </p><p>இந்நிலையில் ஒரு கிராம் தங்கம் ரூ.5,725-க்கு கொள்முதல் செய்ய டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (ஜூலை 14ம் தேதி) முதல் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை டெண்டருக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிராம் எடையுள்ள 4,41,667 தங்க மோதிரங்களை வாங்க ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>முதல்-அமைச்ர் விஜய்</h2><p>முன்னதாக "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” தொடர்பாக தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் வெளியிடப்பட்டிருந்த அரசாணையில் கூறப்பட்டிருந்ததாவது:-</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">விஜய் </a>தலைமையில், வெற்றித் தமிழகம் தொலைநோக்கு திட்டங்களுக்கு (Vetri Thamizhagam vision document) தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில் மிகவும் முக்கியமான திட்டம் "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்".</p><p>அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தையையும், மற்றும் பிரசவித்த தாயையும் கவுரவிக்கும் முகமாக "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" வடிவமைக்கப்பட்டு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.</p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/0l7wlwhf/sakihi.jpg" /></figure><h2>கர்ப்பிணிப் பெண்கள்</h2><p>தமிழ்நாடு அரசு தாய் சேய் நலனை மேம்படுத்துவதற்கு மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி, இலவச பிரசவம் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தை பராமரிப்பு சேவைகள், அவசர மகப்பேறு சிகிச்சை, ஊட்டச்சத்து அளித்தல், பிரசவத்திற்காக மருத்துவமனையை திட்டமிடும் முறை மற்றும் கர்ப்பிணி மற்றும் குழந்தைகள் கூட்டு கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு மென்பொருள் (PICME) உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு இம்முயற்சிகள் மாநிலத்தில் தாய் சேய் நலக் குறியீடுகளை குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தியுள்ளன.</p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/00l7mw84/bahar.jpg" /></figure><h2>ஒரு கிராம் தங்க மோதிரம்:-</h2><p>அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும், தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களை சார்ந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சரின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.</p><p>தமிழர் பாரம்பரியத்தில், "தாய்மாமன் சீர்" என்ற மரபின்படி, தமிழ்நாடு முதல்-அமைச்சர், தாயின் சகோதரர் புதிதாகப் பிறந்த குழந்தையை வரவேற்று வாழ்த்தும் வகையில் தங்கம் உள்ளிட்ட பரிசுகளை வழங்கும் விதமாகவும், தமிழர் பண்பாட்டு மரபை பிரதிபலிக்கும் வகையிலும், அரசு ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்மாமனின் பங்கை ஏற்று, அன்பும் அக்கறையும் நிறைந்த வரவேற்பின் அடையாளமாக ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.</p> <h2>அரசு மருத்துவமனை</h2><p>தமிழ்நாடு அரசின் சுகாதாரச் சேவைகளில் மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் நோக்கிலும், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தையின் பிறப்பை நினைவு கூறும் வகையிலும், தாய்மையின் மகிழ்ச்சி மற்றும் முக்கியத்துவத்தை கொண்டாடும் வகையிலும் "தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்" [Thaaimaaman Thanga Mothira Thittam] செயல்படுத்தப்பட உள்ளது.</p><h2>ரூ.755.83 கோடி ஒதுக்கீடு:-</h2><p>இத்திட்டத்தை மாநிலத்தில் செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதியை ஒதுக்கீடு செய்கிறது. இத்திட்டற்கான ஒப்பந்த புள்ளிகள் உடனடியாக கோருவதற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.</p><p>செப்டம்பர் 15-ந்தேதி முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்:</p><p>இத்திட்டத்தின் கீழ், 22 ஜூன் 2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் பயன் பெறுவார்கள். "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15, 2026 அன்று தமிழ்நாடு முதல்-அமைச்சரால் துவக்கி வைக்கப்படும்.</p><p>இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.</p> ]]></content:encoded></item><item><title>அ.தி.மு.க., தி.மு.க.தான் பலமான கட்டமைப்பை கொண்ட இயக்கங்கள் - ராஜேந்திர பாலாஜி பேச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-dmk-are-the-movements-with-the-strongest-structure-rajendra-balajis-speech</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-dmk-are-the-movements-with-the-strongest-structure-rajendra-balajis-speech#comments</comments><guid isPermaLink="false">f45a9cdf-8e77-4b09-92ba-592ca384043c</guid><pubDate>Tue, 14 Jul 2026 03:13:03 +0000</pubDate><atom:updated>2026-07-14T03:13:03.530Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,தவெக,விஜய்,அதிமுக,ராஜேந்திர பாலாஜி,Rajendra Balaji</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/bpl1fza3/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/bpl1fza3/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர்,</p><p>அ.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் விருதுநகரில் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>அ.தி.மு.க. என்பது பல துரோகங்களை கடந்து வந்த ஒரு வரலாற்று சிறப்புமிக்க பேரியக்கம். அன்றைக்கு தன்னுடன் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு சென்றவர், அடுத்த நாள் கருணாநிதியுடன் கைகோர்த்து பேட்டி கொடுத்த துரோகத்தை எம்.ஜி.ஆர் சந்தித்தார். அத்தனையையும் தாங்கிக்கொண்டு, மக்களின் ஆதரவோடு மீண்டும் ஆட்சியை பிடித்தார். அ.தி.மு.க. தொடங்கி 53 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், இன்றும் இளைஞர்கள் பட்டாளம் நிறைந்த கட்சியாகவே திகழ்கிறது.</p><p>விஜய் ஒரு நடிகர் என்ற காரணத்திற்காக கொஞ்சம் கூடுதலாக வாக்குகள் அவருக்கு சென்றுள்ளன. தமிழ்நாட்டில் ஏதோ ஒரு மாற்று அலை வீசுவதாக கூறுவது முற்றிலும் தவறு. அப்படி ஒரு அலை இருந்திருந்தால், 1977-ல் எம்.ஜி.ஆர். பெற்றதை போல மிகப்பெரிய மெஜாரிட்டி வெற்றியை பெற்றிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அப்படி பெறவில்லை.</p><p>த.வெ.க. ஆட்சிக்கு வந்து 60 நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள் தமிழகத்தில் எவ்வளவு பிரச்சினைகள்? தேர்தல் நேரத்தில் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆனது? மக்களை ஏமாற்றி, பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சியை பிடித்தவர் விஜய். த.வெ.க. ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது; நிலைக்காது.</p><p>அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் மட்டும்தான் தமிழ்நாட்டில் பலமான கட்டமைப்பை கொண்ட இயக்கங்கள். அதிலும் கோடிக்கணக்கான தொண்டர்களை கொண்ட ஒரே பேரியக்கம் என்பது அ.தி.மு.க. மட்டும்தான். எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த இயக்கம் மீண்டும் தமிழகத்தில் நல்லாட்சியை அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் இன்று மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-today-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-today-2#comments</comments><guid isPermaLink="false">a20ae3e7-95b4-4b35-88a9-51c1633ed919</guid><pubDate>Tue, 14 Jul 2026 02:56:32 +0000</pubDate><atom:updated>2026-07-14T02:56:32.868Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,monthly maintenance work,power outage,மாதாந்திர பராமரிப்பு பணி,மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/5ucczcw1/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/5ucczcw1/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>திருநெல்வேலி நகர்ப்புற கோட்டத்திற்கு உட்பட்ட மேலப்பாளையம், ரெட்டியார்பட்டி, புதிய பேருந்து நிலையம் துணைமின் நிலையங்களில் இன்று <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் காரணமாக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம்</h2><p>திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் ரவிராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  </p><p>மேலப்பாளையம், ரெட்டியார்பட்டி மற்றும் புதிய பேருந்து நிலையம் துணைமின் நிலையங்களில் இன்று (14.7.2026, செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும்.</p><h2>காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை</h2><p>மேலப்பாளையம், கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின் ரோடு, சந்தை பகுதிகள், குலவணிகர்புரம், மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹமீபுரம், மேலக்கருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக்குளம், அன்னை நகர், தருவை, ஓமநல்லூர், கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம், ஆஸ்பத்திரி ரோடு, தெற்கு பைபாஸ் ரோடு, மேலகுலவணிகபுரம், பஜார் திடல், ஜின்னா திடல், டவுன் ரோடு, அண்ணா வீதி, பஷீர் அப்பா தெரு, கணேசபுரம், செல்வ காதர் தெரு, உமறுப்புலவர் தெரு, ஆசாத் ரோடு, PSN கல்லூரி.</p><p>ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கன்தான்பாறை, பொன்னாக்குடி, அடைமிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி மற்றும் தாமரைச்செல்வி. </p><p>பெருமாள்புரம், பொதிகை நகர், அரசு ஊழியர் குடியிருப்பு, என்.ஜி.ஓ. காலனி, மகிழ்ச்சிநகர், திருநகர், திருமால்நகர், ராமச்சந்திரா கார்டன், ராமச்சந்திராநகர், பரணி பார்க், அரசு பொறியியல் கல்லூரி பகுதி மற்றும் புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கச்சா எண்ணெய் விலை 10 சதவீதம் உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/crude-oil-prices-rise-10-percent</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/crude-oil-prices-rise-10-percent#comments</comments><guid isPermaLink="false">4a96e112-14ac-4d50-88f6-d6f87bad6127</guid><pubDate>Tue, 14 Jul 2026 02:50:16 +0000</pubDate><atom:updated>2026-07-14T02:50:16.593Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கச்சா எண்ணெய்,Crude oil,கச்சா எண்ணெய் விலை,Strait of Hormuz,ஹார்முஸ் நீரிணை,Crude oil price</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/z1s3sd7u/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/z1s3sd7u/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>ஹார்முஸ் நீரிணை</h2><p>உலக எண்ணெய் வர்த்தகத்தின் இதயமாக கருதப்படும் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுப்போர் தாக்குதல் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி 3 மாதங்களுக்கு ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டது. </p><p>இதனால் உலகநாடுகளில் எரி பொருள் பற்றாக்குறை ஏற்பட்டு அவசரநிலை பிரகடனப்படுத்தப் பட்டது. பல நாடுகளில் கியாஸ், பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. அமைதி பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>இதனால் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த வகையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 2020-ம் ஆண்டுக்கு பிறகு இன்று ஒரே நாளில் சுமார் 10 சதவீதம் உயர்ந்துள்ளது. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை 9.62 சதவீதம் உயர்ந்து ஒரு பேரல் 83.32 டாலராகவும் , WTI கச்சா எண்ணெய் விலை 9.4 சதவீதம் உயர்ந்து ஒரு பேரல் 78.14 டாலர் ஆகவும் வர்த்தகமாகிறது.</p><p>மேலும் ஈரான்-அமெரிக்க போரால் பெட்ரோல், டீசல் விலை நேற்று கணிசமாக உயர்ந்தது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 1.69 ரூபாய் உயர்ந்து, லிட்டர் ரூ.109.46-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 1.71 ரூபாய் உயர்ந்து ரூ.101.26-க்கும் விற்பனையானது. பெட்ரோல், டீசல் விலை ஒரே நேரத்தில் உயர்ந்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த விலை உயர்வு தொடரும் என்றே கணிக்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>பயணிகள் கவனத்திற்கு.. சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் கிடைக்கும் வசதிகள் என்னென்ன தெரியுமா?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/do-you-know-what-facilities-are-available-at-chennai-egmore-railway-station</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/do-you-know-what-facilities-are-available-at-chennai-egmore-railway-station#comments</comments><guid isPermaLink="false">5c363817-125a-405e-8781-e3323ed3574e</guid><pubDate>Tue, 14 Jul 2026 02:39:25 +0000</pubDate><atom:updated>2026-07-14T02:39:25.687Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,தமிழகம்,Chennai Egmore,Egmore railway station,எழும்பூர் ரெயில் நிலையம்,சென்னை எழும்பூர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/5pbpkelu/chennai.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை எழும்பூர் ரெயில் நிலையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/5pbpkelu/chennai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக மக்களுக்கு சென்னையில் உள்ள சென்டிரல் ரெயில் நிலையத்தை வேண்டுமென்றால் தெரியாமல் இருக்கலாம். ஆனால், <a href="https://www.dailythanthi.com/topic/egmore">எழும்பூர்</a> ரெயில் நிலையத்தை தெரியாமல் இருக்க முடியாது. </p><h2>சென்னை எழும்பூர்</h2><p>காரணம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்தே ரெயில்கள் இயக்கப்படுகின்றன. கோவை, சேலம், ஈரோடு, திருப்பூருக்கு மட்டும் சென்டிரலில் இருந்து சில ரெயில்கள் செல்கின்றன. </p><p>சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து சென்றாலும், பல பேருக்கு இன்னும் ரெயில் நிலையத்தில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன என்பது தெரியாமலேயே இருக்கிறது. அதைப்பற்றி இங்கே பார்ப்போம். </p><p>ரெயிலில் இருந்து ரெயில் நிலையத்திற்கு வெளியே பயணிகளின் உடைமைகளை எடுத்துச் செல்லும் சுமை தூக்கிகளுக்கு (போர்ட்டர்) 45 கிலோ எடை வரை எடுத்து செல்ல கட்டணம் ரூ.70 ஆகும். </p><p>டிராலி மூலம் 120 கிலோ வரை பொருட்களை இழுத்து செல்ல ரூ.125 கட்டணம் ஆகும். இதேபோல், சக்கர நாற்காலி மற்றும் ஸ்ட்ரெச்சருக்கான கட்டணம் ரூ.65 ஆகும். </p><h2>பேட்டரி கார்</h2><p>சக்கர நாற்காலி தேவைக்கு பிளாட்பாரம் 4-ல் உள்ள துணை ரெயில்வே ஸ்டேஷன் மாஸ்டரை தொடர்பு கொள்ளவும். ஏதாவது, புகார்கள் அளிக்க வேண்டும் என்றால், 9003061958 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். </p><p>இதுபோக, பேட்டரி கார் பயணத்திற்கு பயணி ஒருவருக்கு ரூ.20 கட்டணம் ஆகும். மேலும், ரெயில் நிலையத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் உடைமைகளை வைத்துக்கொள்ள ஒரு நாள் வரை கட்டணம் ரூ.20 வசூலிக்கப்படுகிறது. அதற்கு மேற்பட்ட ஒவ்வொரு நாளுக்கும் ரூ.30 கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ராமநாதபுரம்: ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ramanathapuram-surveyor-arrested-for-accepting-a-bribe-of-rs5000</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ramanathapuram-surveyor-arrested-for-accepting-a-bribe-of-rs5000#comments</comments><guid isPermaLink="false">e47d74bc-0412-4e8f-8fe4-1e72c335da06</guid><pubDate>Tue, 14 Jul 2026 02:19:02 +0000</pubDate><atom:updated>2026-07-14T02:19:02.836Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rameswaram,ராமேசுவரம்,கைது,arrest,ராமநாதபுரம்,Ramanathapuram,லஞ்சம்,bribe,தாலுகா அலுவலகம்,Taluk office,Surveyor,சர்வேயர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/0pbeg5gx/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ராமேசுவரம் தாலுகா அலுவலக சர்வேயர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/0pbeg5gx/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமநாதபுரம், </p><p>ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு நபரிடம், பட்டா நிலத்தை அளந்து கணினியில் பதிவேற்றம் செய்ய <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயரை</a> லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். </p><h2>ராமேசுவரம் தாலுகா அலுவலக சர்வேயர்</h2><p>ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியை சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 34). இவர் ராமேசுவரம் தாலுகா அலுவலகத்தில் சர்வேயராக பணிபுரிந்து வருகிறார். இந்த தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த ஒருவர், தனது பட்டா நிலத்தை அளந்து அதனை கணினியில் பதிவேற்றம் செய்யுமாறு சத்யராஜிடம் கூறியுள்ளார். </p><h2>ரூ.5 ஆயிரம் லஞ்சம், கைது</h2><p>அதற்கு அவர் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் என கூறியுள்ளார். பணம் கொடுக்க விரும்பாத அந்த நபர், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார், ரகசியமாக கண்காணித்து சர்வேயர் சத்யராஜை லஞ்சம் வாங்கும்போது கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். </p>]]></content:encoded></item><item><title>செலவுக்கு பணம் தர மறுத்ததால் ஆத்திரம்: மனைவி, 2 மகள்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த தொழிலாளி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/worker-pours-petrol-on-wife-2-daughters-sets-them-on-fire-after-being-refused-money-for-expenses</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/worker-pours-petrol-on-wife-2-daughters-sets-them-on-fire-after-being-refused-money-for-expenses#comments</comments><guid isPermaLink="false">8e2bc4f2-510b-4959-9302-ebc242e590bc</guid><pubDate>Tue, 14 Jul 2026 02:00:40 +0000</pubDate><atom:updated>2026-07-14T02:00:40.788Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrest,Thanjavur,தஞ்சாவூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/64b3olih/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/64b3olih/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர்,</p><p>தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை லெட்சத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (65 வயது) கூலித்தொழிலாளி. இவரது மனைவி விஜயலெட்சுமி (60 வயது). இவர்களது மகள்கள் மேனகா (38 வயது), மவுனிகா (25 வயது). மேனகா திருமணமாகி கணவரை பிரிந்த நிலையில் தாய் வீட்டில் வசித்து வந்தார். மவுனிகாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.</p><h2>அடிக்கடி தகராறு</h2><p>செல்வராஜ் அடிக்கடி பணம் கேட்டு தனது மனைவியை தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.</p><h2>மனைவி, மகள்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு</h2><p>நேற்று முன்தினம் இரவு தனது மனைவி மற்றும் மகள்களிடம் பணம் கேட்டு செல்வராஜ் தகராறு செய்துள்ளார். ஆனால் பணம் தர விஜயலெட்சுமி மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த செல்வராஜ் நேற்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி மற்றும் 2 மகள்கள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.</p><h2>3 பேரும் படுகாயம்</h2><p>அவர்கள் 3 பேரும் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது விஜயலெட்சுமி மற்றும் அவரது மகள்கள் மீது தீப்பற்றி எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் மீது எரிந்த தீயை அணைத்தனர். இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.</p><h2>கைது</h2><p>இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செலவுக்கு பணம் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த தொழிலாளி தனது மனைவி மற்றும் மகள்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இன்றைய அரசியலை 36 ஆண்டுகளுக்கு முன்பே கணித்து சொன்ன சோ! - அப்படி என்ன கூறினார்..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cho-predicted-todays-politics-36-years-ago-what-exactly-did-he-say</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cho-predicted-todays-politics-36-years-ago-what-exactly-did-he-say#comments</comments><guid isPermaLink="false">e35236da-f344-45cb-8149-71cf9dbfc42f</guid><pubDate>Tue, 14 Jul 2026 01:45:48 +0000</pubDate><atom:updated>2026-07-14T01:45:48.976Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,TVK,தவெக,Vijay,Tamilnadu,விஜய்,எடப்பாடி பழனிசாமி,அதிமுக,திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,தமிழகம்,அரசியல் களம்,MKstalin,தமிழக அரசியல்,Edappadi Palaniasamy,tn politics,சோ ராமசாமி,cho ramasamy</media:keywords><media:content height="720" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/2hk5e6qk/vali.jpg" width="1280"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/2hk5e6qk/vali.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>74 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றில், 59 ஆண்டுகளாக கோலோற்றிய திராவிட கட்சிகளின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது. </p><p>தி.மு.க., அ.தி.மு.க. என்ற இருபெரும் கட்சிகள், மாறி.. மாறி ஆட்சி செய்து வந்த நிலையில், கட்சி தொடங்கிய 2½ ஆண்டுகளில், தான் சந்தித்த முதல் சட்டசபை தேர்தலிலேயே வெற்றி பெற்று <a href="https://www.dailythanthi.com/topic/tvk">த.வெ.க. </a>ஆட்சி அமைத்துள்ளது. </p><p>நடந்து முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களில் வெற்றி பெற்ற <a href="https://www.dailythanthi.com/topic/tvk">த.வெ.க.</a>, கூட்டணி ஆட்சி அமைக்க முயன்றது. </p><h2>தி.மு.க. - அ.தி.மு.க. கூட்டணியா?  </h2><p>அதே நேரத்தில், இரு துருவங்களாக இருந்த <a href="https://www.dailythanthi.com/topic/dmk">தி.மு.க.</a> - <a href="https://www.dailythanthi.com/topic/admk">அ.தி.மு.க.</a> ஆகிய இரு கட்சிகள் பகைமையை மறந்து கைகோர்த்து ஆட்சி அமைக்க முயன்றதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின. </p><p>இதை தி.மு.க. கூட்டணியில் இருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும் உறுதிப்படுத்தினார்கள். </p><h2>அன்றே சொன்னார், சோ!</h2><p>இது எப்படி சாத்தியமாகும் என்று பொதுமக்கள் இன்று வரை யோசித்துக் கொண்டிருக்கும் நிலையில், 36 ஆண்டுகளுக்கு முன்பே அரசியல் விமர்சகரும், 'துக்ளக்' ஆசிரியருமான சோ, இந்தக் கருத்தை கூறியிருக்கிறார். </p><p>1990-ம் ஆண்டில் 'துக்ளக்' இதழில் வாசகர் ஒருவரின் கேள்விக்கு சோ இவ்வாறு பதில் அளித்து இருந்தார்.</p><h2>அரசியல் தீர்க்கதரிசி</h2><p>அதாவது, வாசகர் ஒருவர், "<strong>தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டணி சேருவார்களா?</strong>" என்று கேள்வி எழுப்பி இருந்தார். </p><p>அதற்கு பதில் அளித்த சோ, "நிச்சயமாக வரும் காலத்தில் 2 கட்சிகளும் ஜெயிக்க முடியாத சூழல் உருவாகும். அப்போது கூட்டணி அமைப்பார்கள்" என்று கூறியிருந்தார். </p><p>தற்போது, தி.மு.க. - அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்கவில்லை என்றாலும், அதுபோன்ற சூழ்நிலை உருவானதை பார்க்கும்போது, சோ ஒரு அரசியல் தீர்க்கதரிசி என்றுதான் சொல்ல வேண்டும். </p>]]></content:encoded></item><item><title>திருவள்ளூர்:  தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து ஒருவர் பலி; 4 பேர் காயம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvallur-one-dead-4-injured-in-boiler-explosion-at-factory</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvallur-one-dead-4-injured-in-boiler-explosion-at-factory#comments</comments><guid isPermaLink="false">96f95a03-db38-49ab-84bd-a44b2485a72c</guid><pubDate>Tue, 14 Jul 2026 01:18:30 +0000</pubDate><atom:updated>2026-07-14T01:18:30.282Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thiruvallur,திருவள்ளூர்,பாய்லர்,Boiler</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/miy569ip/tpeop.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருவள்ளூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/miy569ip/tpeop.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>திருவள்ளூர்</p><p>திருவள்ளூரில் உள்ள தொழிற்சாலையில் <a href="https://www.dailythanthi.com/news/world">பாய்லர் </a>வெடித்ததில் ஒருவர் பலியாகி உள்ளார்.  4 பேர் காயம் அடைந்தனர்.</p> <h2>பாய்லர் வெடித்தது</h2><p>திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்சாலையில் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது, ராட்சத பாய்லர் ஒன்று திடீரென்று வெடித்து பெரும் விபத்து ஏற்பட்டு உள்ளது.</p><p>இந்த சம்பவத்தில், ஆலையில் வேலை செய்து வந்த ரவி என்பவர் பலியாகி உள்ளார். அவர் வடமாநில தொழிலாளி என தெரிய வந்துள்ளது. இதுதவிர 4 பேர் படுகாயம் அடைந்தனர்.</p>  <h2>தீயணைப்பு வீரர்கள்</h2><p>அவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.</p><p>ஆலையில், பாய்லர் வெடித்ததில் தீ மளமளவென பரவியது.  தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.  பாய்லர் வெடித்ததற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை.  அதுபற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chance-of-rain-today-in-western-ghats-districts</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chance-of-rain-today-in-western-ghats-districts#comments</comments><guid isPermaLink="false">9f5107b4-c134-48c3-9e13-c3c7beeea4aa</guid><pubDate>Tue, 14 Jul 2026 01:14:51 +0000</pubDate><atom:updated>2026-07-14T01:14:51.269Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Rain,Weather,வானிலை,தமிழகம்,Weather News,WeatherUpdate,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,வானிலை ஆய்வு மையம்,வானிலை அறிக்கை,weather condition,வானிலை முன்னறிவிப்பு,Weather Status,வானிலை அறிவிப்பு,TN weather</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/bmqm0rd9/we.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rain, tn rain]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/bmqm0rd9/we.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>வானிலை செய்திகள் (Weather)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (14-07-2026) மற்றும் நாளை (15-07-2026): மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். </p><p>ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். அவ்வப்போது ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2>மழை</h2><p>16-07-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>17-07-2026 முதல் 19-07-2026 வரை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p> <h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</strong></p><p><strong>14-07-2026 முதல் 16-07-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-4° செல்சியஸ் வரை உயரக்கூடும்.</p><p><strong>17-07-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.</p><h2>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</h2><p><strong>14-07-2026 முதல் 16-07-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.</p><p><strong>17-07-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.</p><p><strong>14-07-2026 முதல் 15-07-2026 வரை:</strong> அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம்.</p> <h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று (14-07-2026)</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படக்கூடும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நடப்பு நிதியாண்டில் ஐ.சி.எப். தொழிற்சாலையில் 670 ரெயில் பெட்டிகள் தயாரிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/in-the-current-financial-year-670-railway-coaches-were-produced-at-the-icf-factory</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/in-the-current-financial-year-670-railway-coaches-were-produced-at-the-icf-factory#comments</comments><guid isPermaLink="false">ec9617da-cf30-45a7-918d-d4841a50bac3</guid><pubDate>Tue, 14 Jul 2026 01:01:23 +0000</pubDate><atom:updated>2026-07-14T01:01:23.688Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ரெயில் பெட்டி,ICF,train coaches,ஐ.சி.எப். தொழிற்சாலை,ICF factory</media:keywords><media:content height="675" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/tv43b9k2/CHENNAI-01.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/tv43b9k2/CHENNAI-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில் 2025-26-ம் நிதியாண்டில் 4,300 பெட்டிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதை மேலும் அதிகரிக்கும் வகையில் நடப்பு நிதியாண்டில் (2026-27) 4,500 ரெயில் பெட்டிகள் தயாரிக்க இலக்கு கொடுக்கப்பட்டது. அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடை பெற்று வருகிறது.</p><p>இதுகுறித்து ஐ.சி.எப். அதிகாரிகள் கூறியபோது, 'ஐ.சி.எப். தொழிற்சாலையில் ஆண்டுதோறும் தயாரிக்கப்படும் ரெயில் பெட்டிகளில் எண்ணிக்கை அதிகரிக்கும் வகையில் பணிகள் நடைபெறுகிறது. இந்த நிதியாண்டில் இலக்கை விரைந்து முடித் திடும் வகையில் தற்போது ரெயில் பெட்டி தயாரிக்கப்பட்டு வருகிறது.</p><p>நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரையில் 670 ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகமாக எல்.எச்.பி. பெட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய பெட்டிகள் தேவைக்கு ஏற்ப தயாரிக்கும் பணிகள் நடைபெ றுகிறது' என்றார்கள்.</p>]]></content:encoded></item><item><title>திருவள்ளூர்: பெண்ணை கொடூரமாக கொன்று 15 சவரன் நகை கொள்ளை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvallur-woman-brutally-murdered-15-sovereigns-of-jewellery-stolen</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvallur-woman-brutally-murdered-15-sovereigns-of-jewellery-stolen#comments</comments><guid isPermaLink="false">20c1070f-208f-4012-b360-ab5ef758e89a</guid><pubDate>Tue, 14 Jul 2026 00:59:55 +0000</pubDate><atom:updated>2026-07-14T00:59:55.235Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thiruvallur,திருவள்ளூர்,பெண்,Woman,நகை கொள்ளை,Jewelry robbery,கொடூர கொலை,Brutal murder</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/z3j9w4my/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெண் கத்தியால் குத்திக்கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/z3j9w4my/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர், </p><p>திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தியால் குத்திக்கொலை செய்து 15 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.</p><h2>மளிகை கடைக்காரர் மனைவி</h2><p>திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் அப்பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி வனஜா (வயது 55) வீட்டில் இட்லி மாவு விற்பனை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். 3 பேருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வரும் நிலையில், ராதாகிருஷ்ணன் மற்றும் வனஜா ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.</p><h2>கழுத்தில் கத்திக்குத்து</h2><p>நேற்று காலை ராதாகிருஷ்ணன் வழக்கம்போல் தனது மளிகை கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது வனஜா, கடைக்கு சென்று கணவருக்கு டீ கொடுத்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பினார். மதிய உணவு இடைவேளையின்போது ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வந்தபோது, கதவு பூட்டப்பட்டிருந்தது. வீட்டை திறந்து உள்ளே சென்றபோது, வனஜா கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.</p><h2>15 சவரன் நகை கொள்ளை</h2><p>அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து பார்த்து, திருப்பாலைவனம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், இட்லி மாவு வாங்குவது போல் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், வனஜாவை கழுத்தில் கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த தங்கத்தாலி, காதில் அணிந்திருந்த கம்மல் உள்ளிட்ட சுமார் 15 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து, கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தடயங்களை சேகரித்தனர். பின்னர், வனஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><h2>பொதுமக்கள் அச்சம்</h2><p>மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். வீட்டில் தனியாக வசித்து வருவதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் திட்டமிட்டு இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பட்டப்பகலில் வீடு புகுந்து நகைக்காக பெண் கொலை</a> செய்யப்பட்ட சம்பவம் பழவேற்காடு பகுதியில் பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மோட்டார் சைக்கிளை வழிமறித்து தாக்குதல்: காதல் ஜோடி போலீசில் தஞ்சம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/couple-seeks-police-protection-after-motorcycle-hijacking</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/couple-seeks-police-protection-after-motorcycle-hijacking#comments</comments><guid isPermaLink="false">a2205c9e-78bc-457e-ac41-7c442d5bd7b5</guid><pubDate>Mon, 13 Jul 2026 23:49:41 +0000</pubDate><atom:updated>2026-07-13T23:49:41.696Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காதல் ஜோடி,couple,Motorcycle,மோட்டார் சைக்கிள்,Police protection,போலீசில் தஞ்சம்,Assault; தாக்குதல்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/c311mi6g/lovers.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/c311mi6g/lovers.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தாரமங்கலம், </p><p>மோட்டார் சைக்கிளில் வந்த போது உறவினர்கள் வழிமறித்து தாக்கியதால் இளம்பெண் காதலனுடன் போலீசில் தஞ்சம் அடைந்தார்.</p><p>தாரமங்கலம் அருகே சூரப்பள்ளி கிராமம் நொரைச்சிவளவு பகுதியை சேர்ந்தவர் சின்னக்கண்ணு. இவருடைய மகன் பூபதி (வயது 24), டிரைவர். இவரும் ஜலகண்டாபுரம் அருகில் உள்ள காப்பரத்தான்பட்டி பகுதியைச் சேர்ந்த கீர்த்திகா (21) என்பவரும் கடந்த 7 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். காதலர்கள் இருவரும் போன் மூலமாகவும் நேரில் பேசியும், பழகியும் தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். தொடர்ந்து நேற்று சேலத்தில் உள்ள ஒரு துணி கடைக்கு இன்டர்வியூ செல்ல வேண்டும் என்று பூபதியை அழைத்துள்ளார் கிருத்திகா. இதனால் இருவரும் மோட்டார் சைக்கிளில் சேலத்திற்கு சென்று நேர்முகத்தேர்வு முடித்துவிட்டு அங்கு ஒரு சினிமா தியேட்டரில் படம் பார்த்துள்ளனர்.</p><h2>போலீஸ் நிலையத்தில் தஞ்சம் </h2><p>மீண்டும் மாலையில் தாரமங்கலத்திற்கு திரும்பி வந்துள்ளனர். அப்போது தாரமங்கலம் பஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது கிருத்திகாவின் உறவினர்கள் பார்த்து விட்டனர். உடனே மோட்டார் சைக்கிளை அவர்கள் வழிமறித்து கிருத்திகாவை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதனால் பதற்றம் அடைந்த காதல் ஜோடி இருவரும் அவர்களிடமிருந்து தப்பித்து தாரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு ஓடி வந்து<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D"> தஞ்சம்</a> அடைந்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் பற்றிய தகவல் இரு வீட்டாருக்கும் தெரிய வரவே உறவினர்கள் போலீஸ் நிலையத்தில் குவிய தொடங்கினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.</p><p>இந்த நிலையில் கிருத்திகாவை அவரது பெற்றோர் அழைத்து செல்ல முற்பட்டபோது அவர்களுடன் செல்ல மறுத்து விட்டார். இந்த நிலையில் காதலன் பூபதியுடன் தான் செல்வேன் என்று விடாப்பிடியாக கூறியதால் வேறு வழியின்றி போலீசார் கீர்த்திகாவை காதலனுடன் அனுப்பி வைத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை விமான நிலையத்தில் 4½ கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/45-kg-of-high-quality-cannabis-seized-at-chennai-airport</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/45-kg-of-high-quality-cannabis-seized-at-chennai-airport#comments</comments><guid isPermaLink="false">2418a7fa-85c5-45f8-98a7-83fe388522ff</guid><pubDate>Mon, 13 Jul 2026 23:09:16 +0000</pubDate><atom:updated>2026-07-13T23:09:16.540Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Airport,சென்னை விமான நிலையம்,கஞ்சா,Cannabis</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/nvbncqj5/kanja.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/nvbncqj5/kanja.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை விமான நிலையத்தில் 4% கிலோ உயர்ரக கஞ்சாவை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அதனை மலேசியாவில் இருந்து கடத்தி வந்த வாலிபரை கைது செய்தனர்.</p><h2>கஞ்சா பறிமுதல்</h2><p>சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு மலேசியாவில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, 28 வயது மதிக்கத் தக்க வாலிபர் ஒருவர், சுற்றுலா விசாவில் சென்றுவிட்டு திரும்பி வந்திருந் தார். அவர் மீது சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு சந்தே கம் ஏற்பட்டது.</p><p>இதையடுத்து, அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில், சூட் கேசுக்குள் துணிகளுக்கு மத்தியில் 49 பதப்படுத்தப்பட்ட உணவு பாக்கெட் டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.</p><p>சந்தேகத்தின்பேரில் அந்த உணவு பாக்கெட்டுகளை திறந்து பார்த்தபோது, அதற்குள் பதப்படுத்தப்பட்ட உயர்ரக கஞ்சா 4 கிலோ 639 கிராம் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சுங்க இலாகா அதிகாரிகள் அந்த வாலிபரை கைது செய்தனர்.</p><p>அவர் கடத்தி வந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கஞ்சாவையும் </a>பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வாலிபரிடம் நடத்திய விசாரணையில், பட்டதாரியான அவர், வேலை இல் லாததால் பணத்துக்காக கஞ்சா கடத்தல் கும்பலுக்கு துணையாக செயல் பட்டது தெரியவந்தது. அவரிடம் கஞ்சா கடத்தி வரச் சொன்ன கும்பல் குறித்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கள்ளச்சந்தையில் கலப்பட டீசல் விற்பனை; 4 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/4-arrested-for-selling-adulterated-diesel-in-the-black-market</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/4-arrested-for-selling-adulterated-diesel-in-the-black-market#comments</comments><guid isPermaLink="false">1052fb3f-8736-468f-b7cb-58db617d1284</guid><pubDate>Mon, 13 Jul 2026 22:37:37 +0000</pubDate><atom:updated>2026-07-13T22:37:37.601Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>diesel,டீசல்,கைது,arrest,விற்பனை,கள்ளச்சந்தை,black market</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/rgb7pdkt/arest.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/rgb7pdkt/arest.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாகப்பட்டினம்,</p><p>நாகை மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் கலப்பட டீசல் விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.</p><p>நாகை மாவட்டத்தில் மீன்பிடி விசைப்படகில் கலப்பட டீசல் கொண்டுவரப்பட்டு கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக குடிமை பொருள் வளங்கள் மற்றும் குற்ற புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மயிலாடுதுறை சரக துணை போலீஸ் சூப்பிரண்டு சுதர்லால் தலைமையில் போலீசார் நாகை அருகே அக்கரைப்பேட்டை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.</p><h2>கலப்பட டீசல்</h2><p>அப்போது முதலாவது கடற்கரை சாலையில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த கேரளா மாநிலத்தைச் சேர்ந்த டேங்கர் லாரி மற்றும் மற்றொரு சரக்கு வாகனத்தையும் சோதனை செய்தனர்.</p><p>இதில் கேரள மாநில டேங்கர் லாரியில்<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%20%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D"> கலப்பட டீசல்</a> இருப்பதும் அதை மற்றொரு வாகனத்திற்கு மாற்றியதும் தெரிய வந்தது. இதையடுத்து கேரள மாநிலத்தைச் சேர்ந்த டேங்கர் லாரி, நாகையைச் சேர்ந்த சரக்கு வாகனம் ஆகிய 2 வாகனங்கள் மற்றும் அதில் இருந்த 9 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலையும் பறிமுதல் செய்தனர்.</p><h2>4 பேர் கைது</h2><p>இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கலப்பட டீசல் விற்றதாக அக்கரைப்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்த சிலம்பு செல்வன் (வயது 46) டேங்கர் லாரி டிரைவர் கேரளம் மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த சரத் முரளி (35), மற்றொரு சரக்கு வாகன டிரைவரான நாகை வெளிப்பாளையம் வண்டிப்பேட்டையை சேர்ந்த இருசப்பன் (32), வாகன உதவியாளரான நாகை நம்பியார் நகரை சேர்ந்த ரமேஷ் (40) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.</p>]]></content:encoded></item><item><title>திசையன்விளையில் கார் தீ வைத்து எரிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/car-set-on-fire-in-tisaiyanvilai-police-launch-manhunt-for-unidentified-persons</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/car-set-on-fire-in-tisaiyanvilai-police-launch-manhunt-for-unidentified-persons#comments</comments><guid isPermaLink="false">3add23f6-5be4-457a-9401-ac6c50f36c10</guid><pubDate>Mon, 13 Jul 2026 22:35:22 +0000</pubDate><atom:updated>2026-07-13T22:35:22.277Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,திசையன்விளை,Tisaiyanvilai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/7x7qve6l/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/7x7qve6l/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>திசையன்விளை மன்னராஜா கோவில் தெருவைச் சேர்ந்த சுஜின் (25), திசையன்விளை–சாத்தான்குளம் செல்லும் எம்.எல்.தேரி சாலையில் கார் கேரேஜ் மற்றும் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார்.</p><h2>காருக்கு தீ வைப்பு</h2><p>நேற்று முன்தினம் வழக்கம்போல் பணிகளை முடித்து ஒர்க்ஷாப்பை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றிருந்தார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள், ஒர்க்ஷாப் முன்பு நிறுத்தப்பட்டிருந்த சுஜினுக்கு சொந்தமான காருக்கு தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.</p><p>இதுகுறித்து தகவல் அறிந்த திசையன்விளை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், கார் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">முழுவதுமாக </a>தீயில் எரிந்து சேதமடைந்தது.</p><h2>மர்ம நபர்களுக்கு வலைவீச்சு</h2><p>தகவலறிந்து திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் எழில் சுரேஷ்சிங், சப்-இன்ஸ்பெக்டர்கள் அபினேஷ் மற்றும் ராமநாதன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.</p><p>இந்த சம்பவம் முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா என்ற கோணத்திலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காருக்கு தீ வைத்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பழங்குடியினர் பிரச்சினைகள் குறித்த படைப்புகளுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-1-lakh-scholarship-for-works-on-tribal-issues</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-1-lakh-scholarship-for-works-on-tribal-issues#comments</comments><guid isPermaLink="false">97221a42-8fcd-42ff-88b0-c821e80bfe89</guid><pubDate>Mon, 13 Jul 2026 21:30:17 +0000</pubDate><atom:updated>2026-07-13T21:30:17.846Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>உதவித்தொகை,tribal,பழங்குடியினர்,எழுத்தாளர்,Apply for scholarship</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/ket7n9oj/15.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/ket7n9oj/15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஊட்டி,</p><p>பழங்குடியினர் பிரச்சினைகள் பற்றிய படைப்புகளை வெளியிடும் எழுத்தாளர்களுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும். இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டு சங்கத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் எழுத்தாளர்களின் சிறந்த இலக்கிய படைப்பை வெளியிட உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.</p><h2>ரூ.1 லட்சம் உதவித்தொகை</h2><p>இதில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய ஆதிதிராவிடரான 9 எழுத்தாளர்கள் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரச்சினைகளை பற்றி எழுதும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் அல்லாத ஒரு எழுத்தாளர் மற்றும் பழங்குடியினர் பற்றி எழுதும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் அல்லாத ஒரு எழுத்தாளர் தேர்ந்தெடுக்கப்படுவர். இதனை ஊக்குவிக்கும் வண்ணம், இவர்களது சிறந்த இலக்கிய படைப்பை வெளியிட தலா ரூ.1 லட்சம் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88">உதவித்தொகை</a> நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கப்படுகிறது. எழுத்தாளர்களுக்கு வயது வரம்பு இல்லை.</p><h2>தமிழ் மொழி படைப்பு</h2><p>கதை, கட்டுரை, கவிதை, வரலாறு மற்றும் புதினம் ஆகியவை எதுவாகவும், இருக்கலாம். ஆனால் தமிழ் மொழியிலேயே படைப்பு இருக்க வேண்டும். பிறமொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்ட சிறந்த தமிழ் மொழி படைப்பாகவும் இருக்கலாம். எம்.பில்., பி.எச்.டி. போன்ற படிப்புகளுக்கு தயாரிக்கப்படும் ஆராய்ச்சி கட்டுரைகளுக்கு அவை அரிதான சிறப்புடையதாக இருக்க வேண்டும்.</p><h2>ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்</h2><p>படைப்புகள் 90 பக்கங்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும். ஒரு முறை விருதுக்கு தேர்வு செய்யபட்ட எழுத்தாளர் 5 ஆண்டுகளுக்கு பிறகே விண்ணப்பிக்க வேண்டும். படைப்புகளை தேர்ந்தெடுத்தல் குறித்து அரசால் அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழுவின் முடிவே இறுதியானது ஆகும்.</p><p>நீலகிரி மாவட்டத்தில் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இதற்கான விண்ணப்பங்களை நீலகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் வேலை நாட்களில் பெற்று கொள்ளலாம். அல்லது tn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து தங்களது படைப்பினை இரு நகல்களிலும் டிஜிட்டல் முறையில் விண்ணப்பிக்க வேண்டும் உரிய படிவத்தில் தவறாமல் செல்போன் எண்ணை குறிப்பிட்டு வருகிற ஆகஸ்டு மாதம் 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தஞ்சை: ஆற்றில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து; குழந்தை உள்பட 5 பேர் படுகாயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thanjavur-auto-rickshaw-overturns-into-river-5-people-including-a-child-seriously-injured</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thanjavur-auto-rickshaw-overturns-into-river-5-people-including-a-child-seriously-injured#comments</comments><guid isPermaLink="false">f7eb67fb-4866-48a1-871c-ce11e4bc7d6a</guid><pubDate>Mon, 13 Jul 2026 21:26:05 +0000</pubDate><atom:updated>2026-07-13T21:26:05.074Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thanjavur,தஞ்சை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/f3z2mcg1/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/f3z2mcg1/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சை,</p><p>தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்துள்ள வெங்கரை மாஞ்சக்காடு பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவருடைய மனைவி பத்மினி (வயது45), சுரேஷ் மனைவி இலக்கியா (35), மகாலிங்கம் மனைவி நிவேதா (30), நிவேதாவின் மகன் சுபாஷ் (4) ஆகிய 4 பேரும் பெரிய கோட்டைக்காடு பகுதியை சேர்ந்த ஆனந்தன் (55) ஓட்டிச் சென்ற ஆட் டோவில் கரம்பவிடுதியில் நடைபெற்ற ஒரு வளைகாப்பு விழாவுக்கு சென் றனர். நிகழ்ச்சி முடிந்ததும் 4 வயது குழந்தை உள்பட 5 பேரும் ஊருக்கு திரும்பினர். ஆனந்தன் ஆட்டோவை ஓட்டினார்.</p><h2>ஆற்றில் கவிழ்ந்தது</h2><p>ஊரணிபுரம் வெங்கரை சாலையில் வெட்டுவாக்கோட்டை பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையில் ஏற்பட்டுள்ள ஒரு பள் ளத்தில் ஆட்டோ சென்றது. அப்போது திடீரென டிரைவர் ஆனந்தனின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த கல்லணை கால்வாய் புது ஆற்றில் ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் பத்மினி மற்றும் ஆட்டோ டிரைவர் ஆனந்தன் இலக்கியா, நிவேதா, 4 வயது குழந்தை சுபாஷ் ஆகியோர் காயமடைந்தனர். </p><p>காயமடைந்த 5 பேரையும் அருகில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">இருந்தவர்கள் </a>மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆற்றில் தண்ணீர் இல்லாததால் 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர். இது குறித்து திருவோணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ரெயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த 411 பேர் சிக்கினர்; ரூ.3.68 லட்சம் அபராதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/411-people-caught-travelling-without-tickets-in-train-fined-rs-368-lakh</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/411-people-caught-travelling-without-tickets-in-train-fined-rs-368-lakh#comments</comments><guid isPermaLink="false">e6032528-4c4b-4c55-9f24-57679abd04da</guid><pubDate>Mon, 13 Jul 2026 20:51:09 +0000</pubDate><atom:updated>2026-07-13T20:51:09.475Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ரெயில் டிக்கெட்,train,பயணம்,Travel,fine அபராதம்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/lkmy88rt/train.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/lkmy88rt/train.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு, </p><p>கோவை-சில்சார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஓசி பயணம் செய்த 411 பேரிடம் இருந்து ரூ.3½ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.</p><p>கோவையில் இருந்து, அசாம் மாநிலம் சில்சார் வரை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 15627) இயக்கப்படுகிறது. திருப்பூர், ஈரோடு. சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக செல்லும் இந்த ரெயிலில், முன்பதிவு பெட்டிகளில் டிக்கெட் இல்லாமல் பலர் பயணம் செய்வதாக புகார் எழுந்தது.</p><h2>டிக்கெட் பரிசோதனை</h2><p>இதையடுத்து சேலம் ரெயில்வே கோட்ட வணிக பிரிவை சேர்ந்த 19 டிக்கெட் பரிசோதனை பணியாளர்கள் மற்றும் 5 ரெயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் கோவை -சில்சார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீவிர டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டனர். இதில் ரெயிலில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.</p><h2>411 பேர் ஓ.சி. பயணம்</h2><p>முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்த 80-க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத பயணிகள் கீழே இறக்கப்பட்டு, பொதுப்பெட்டிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். மேலும் டிக்கெட் இல்லாமலும், முறையான அனுமதியின்றியும் பயணம் மேற்கொண்ட 411 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர். இதையடுத்து ஓசி பயணம் செய்தவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்து 68 ஆயிரம் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">அபராதம் </a>வசூலிக்கப்பட்டது. இதுபோன்று தீவிர டிக்கெட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு டிக்கெட் இல்லாமல் பயணம் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலம் கோட்ட ரெயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பராமரிப்பு பணி: ஜோலார்பேட்டை-பெங்களூரு பயணிகள் ரெயில் பகுதி நேர ரத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/maintenance-work-jolarpettai-bengaluru-passenger-train-partially-cancelled</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/maintenance-work-jolarpettai-bengaluru-passenger-train-partially-cancelled#comments</comments><guid isPermaLink="false">5397770e-7b61-48dd-b8a3-af9c9803ab5d</guid><pubDate>Mon, 13 Jul 2026 20:39:28 +0000</pubDate><atom:updated>2026-07-13T20:39:28.011Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தெற்கு ரெயில்வே,Southern Railway,பெங்களூரு,Bengaluru,jolarpettai,ஜோலார்பேட்டை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/t6p1hwr6/railway.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/t6p1hwr6/railway.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>அரக்கோணம்-ஜோலார்பேட்டை வழித்தடத்தில் இன்று (14-ந்தேதி) மதியம் 2.10 மணி முதல் மாலை 4.10 மணி வரையில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.</p><h2>பெங்களூரு - ஜோலார்பேட்டை</h2><p>அதன்படி, பெங்களூருவில் இருந்து காலை 8.45 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை செல்லும் பயணிகள் ரெயில் (வண்டி எண்.66550), <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சோமநாயக்கன்பட்டி</a>-ஜோலார்பேட்டை இடையேயும், மறுமார்க்கமாக, ஜோலார்பேட்டையில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு செல்லும் பயணிகள் ரெயில் (66549), ஜோலார்பேட்டை-சோமநாயக்கன்பட்டி இடையேயும் பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அரசு பள்ளிகளில் 6-12-ம் வகுப்பு வரை  ஏ.ஐ., காலநிலை அறிவியல் பாடம்: முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ai-climate-science-subject-for-classes-6-12-in-government-schools-chief-minister-vijay-suggests</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ai-climate-science-subject-for-classes-6-12-in-government-schools-chief-minister-vijay-suggests#comments</comments><guid isPermaLink="false">859b0891-7331-46e1-8fa3-f3d4c6c6fae4</guid><pubDate>Mon, 13 Jul 2026 20:18:26 +0000</pubDate><atom:updated>2026-07-13T20:18:26.125Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>AI technology,அரசு பள்ளி,ஏ.ஐ,Government Schools,பாடம்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/uq8hvojb/cm-vijay.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/uq8hvojb/cm-vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை செயற்கை நுண்ணறிவு, காலநிலை அறிவியல் பாடங்களை கொண்டு வருவது குறித்து அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார்.</p><p>சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய் கடந்த ஒரு வார காலமாக தினமும் ஒவ்வொரு துறையாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன், நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன், நிதித்துறை செயலாளர் சித்திக், பள்ளிக்கல்வித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் டாக்டர் சந்திரமோகன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்கள் பங்கேற்றனர்.</p><h2>செயற்கை நுண்ணறிவு பாடம்</h2><p>தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு கட்டாயம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ள நிலையில் தமிழகத்தில் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று பணியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் தகுதித்தேர்வு எழுதாமல் பணியில் உள்ள ஆசிரியர்கள் தகவல்களையும் முதல்-அமைச்சர் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை செயற்கை நுண்ணறிவு மற்றும் காலநிலை அறிவியல் பாடங்களை கொண்டு வருவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.</p><h2>பள்ளிகளில் நவீன வகுப்பறைகள்</h2><p>2031-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் அனைத்து பள்ளி நவீன வகுப்பறைகளும் 'ஸ்மார்ட் கிளாஸ்' அறைகளாக மாற்றப்படுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அரசு பள்ளி ஆசிரியர்களின் தகுதியை மேம்படுத்தும் விதமாக தேர்வு செய்யப்படும் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக்கல்வியில் சிறந்து விளங்கும் சிங்கப்பூர் மற்றும் பின்லாந்து நாடுகளில் பயிற்சி பெறும் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.</p><h2>முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை</h2><p>அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்தும், அரசு பள்ளி ஆசிரியர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை திறன் பட கற்றுக்கொள்ள ஏதுவாக செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் கல்வி திறன் மேம்படுத்தும் திட்டம் பற்றி ஆலோசனை மேற்கொண்டதாக தெரிகிறது. பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக என்னென்ன புதிய அறிவிப்புகளை இடம்பெறச் செய்யலாம் என்பது பற்றியும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a> ஆலோசனை மேற்கொண்டார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-today-4</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-today-4#comments</comments><guid isPermaLink="false">fe552825-77e6-4b4f-919f-a7c561b6f4e0</guid><pubDate>Mon, 13 Jul 2026 20:17:00 +0000</pubDate><atom:updated>2026-07-13T20:17:00.705Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மின் தடை,power cut</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/uh409520/min.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/uh409520/min.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>சென்னையில் 14.07.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><h2>மின் தடை ஏற்படும் இடங்கள்</h2><p><strong>ஐய்யப்பந்தாங்கல்</strong>: காட்டுப்பாக்கம், செந்தூர்புரம், ஸ்ரீ நகர், விஜயலட்சுமி நகர், ஜானகியம்மாள் நகர், சொர்ணபுரி நகர், அடிசன் நகர், ஸ்ரீனிவாசபுரம், கிருஷ்ணா நகர், மாருதி நகர், நூம்பல், மவுண்ட் பூந்தமல்லி சாலை, ஆயில் மில் சாலை, அட்கோ நகர், சுப்பையா நகர், கிருஷ்ணவேணி அம்மாள் நகர், வசந்தம் நகர், சிவராமன் கிருஷ்ணா நகர், விஜயலட்சுமி அவென்யூ, ஸ்டெப் ஸ்டோன், போஹன்வில்லா, வசந்தபுரம், முத்து நகர், பொன்முத்து நகர், பரணிபுத்தூர்</p><p><strong>போரூர்</strong>: நசரத்பேட்டை பனிமலர் பொறியியல் கல்லூரி, வரதராஜபுரம்.</p><p><strong>தாம்பரம்</strong>: சிட்லபாக்கம், பாம்பன் சுவாமிகள் சாலை, சி.வி. ராமன் தெரு, லெனின் தெரு, சுதா அவென்யூ மற்றும் 2வது தெரு, வள்ளியம்மை தெரு, கலைவாணர் தெரு, உ.வே. சாமிநாதன் தெரு, வியாசர் தெரு, விஸ்வாமித்திரர் தெரு, சரஸ்வதி நகர், வீரவாஞ்சி தெரு, குரு ஹோம்ஸ், பாரத் அவென்யூ, கல்யாணசுந்தரம் தெரு, சத்திரபதி சிவாஜி தெரு.</p><p><strong>காரம்பாக்கம்</strong> : சமயபுரம் பிரதான சாலை மற்றும் சமயபுரம் 1 முதல் 9 வரை தெரு, ஸ்ரீராம் நகர், காந்தி நகர், தேவி நகர், அருணாசலம் நகர் கார்டன், கோலவிழி அப்பார்ட்மெண்ட்.</p><p><strong>அம்பத்தூர்</strong> <strong>தொழிற்பேட்டை</strong>: தெற்கு பகுதி, 1 மற்றும் 2 வது பிரதான சாலை, முகப்பேர் தொழிற்பேட்டை தெற்கு அவென்யூ, ரெட்டி தெரு, கவரை தெரு, முனுசாமி தெரு, எஸ்.எஸ்.ஓ.ஏ. வளாகம், கல்யாணி எஸ்டேட், நடேசன் நகர்.</p><p><strong>அடையாறு</strong>: கேனால் வங்கி சாலை.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தண்ணீர், தமிழ்நாட்டு மக்களின் உரிமையா?.. பன்னாட்டு நிறுவனங்களின் வணிகமா? - வேல்முருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-water-the-right-of-the-people-of-tamil-nadu-or-a-business-for-multinational-corporations-velmurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-water-the-right-of-the-people-of-tamil-nadu-or-a-business-for-multinational-corporations-velmurugan#comments</comments><guid isPermaLink="false">d34ef46d-2625-4751-a9e1-1ba37270564d</guid><pubDate>Mon, 13 Jul 2026 20:10:14 +0000</pubDate><atom:updated>2026-07-13T20:10:14.169Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Velmurugan,வேல்முருகன்,தி.வேல்முருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/ijie2j3f/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/ijie2j3f/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>ஏற்புடையதல்ல</h2><p>அனைத்து உயிர்களின் அடிப்படை இயக்கத்திற்கும், இயற்கையின் கொடையாக விளங்கும் நீர்வளத்தைத் தன்னிச்சையாக வர்த்தகப் பொருளாக மாற்றுவது சகித்துக்கொள்ள முடியாத அத்துமீறலாகும். </p><p>பன்னாட்டு ஏகபோகச் சுரண்டலில் ஈடுபட்டு, உலக அரங்கில் பல்வேறு இறையாண்மை மிக்க நாடுகளால் துரத்தியடிக்கப்பட்ட 'சூயஸ்' (Suez) நிறுவனத்திற்குத் தமிழக மண்ணில் சென்னை, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில், சிவப்புக் கம்பள வரவேற்பு அளிப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.</p><h2>நேரடித் தாக்குதல்</h2><p>குடிநீர் விநியோகக் கட்டமைப்பைப் பன்னாட்டு முதலாளித்துவத்தின் வசம் ஒப்படைப்பது, தமிழ் குடிகளின் வாழ்வுரிமை மீது தொடுக்கப்படும் நேரடித் தாக்குதலாகும்.</p><p>இந்நிறுவனத்தின் ஊடுருவல் என்பது ஏழை, எளிய மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை நசுக்குவதாகவே அமையும். இனிவரும் காலங்களில் நம் மக்கள் தங்களின் தாகத்தைத் தணித்துக் கொள்ளும் ஒவ்வொரு துளி நீருக்கும் பெருந்தொகையைக் விலையாகச் செலுத்த வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்படுவார்கள்.</p><h2>அநீதி</h2><p>நீர் என்பது சந்தையில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விற்கப்படும் </a>நுகர்வுப் பண்டமல்ல. அது நமது மக்களின் பிரிக்க முடியாத உயிராதாரம். அதைத் தாராளமயமாக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை.</p><p>எனவே, இந்த விவகாரத்தில் முதல்-அமைச்சர் விஜய் உடனடியாகத் தலையிட்டு, மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் இந்த அநீதியான சூயஸ் ஒப்பந்தத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸால் தகராறு: காதல் மனைவியை தாக்கிய ஐ.டி. ஊழியர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dispute-over-whatsapp-status-it-employee-arrested-for-attacking-his-loving-wife</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dispute-over-whatsapp-status-it-employee-arrested-for-attacking-his-loving-wife#comments</comments><guid isPermaLink="false">27b40138-bb1a-4def-ab1b-8d2d6393b43b</guid><pubDate>Mon, 13 Jul 2026 19:39:13 +0000</pubDate><atom:updated>2026-07-13T19:39:13.578Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrested,IT employee,wife,மனைவி,WhatsApp status,காதல்,ஐ.டி. ஊழியர்,வாட்ஸ்-அப்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/g1tcq1tr/arest.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/g1tcq1tr/arest.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>மாமியார் வேலை பார்ப்பது போன்ற வீடியோவை வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் வைத்ததால் ஏற்பட்ட தகராறில், காதல் மனைவியை தாக்கிய சென்னை ஐ.டி. ஊழியரை போலீசார் கைது செய்தனர்.</p><p>சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (வயது 24). இவர், சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அபிராமி என்பவரை காதலித்து பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு புதுமண தம்பதி சென்னையில் வாடகை வீட்டில் குடியேறி குடும்பம் நடத்தி வந்தனர்.</p><h2>வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்</h2><p>இந்நிலையில், சமூக வலைதளங்களில் வந்த மாமியார், மருமகள் ரீல்ஸ் வீடியோவை அபிராமி தனது செல்போனில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B8%E0%AF%8D%20">வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்</a></p><p> வைத்துள்ளார். அந்த வீடியோவில், மருமகள், மாமியாரை வேலை செய்ய சொல்வது போன்று இருந்தது. இதனை ஸ்ரீகாந்தின் தங்கை பார்த்துவிட்டு, நமது தாயாரை பற்றி உனது மனைவி ரீல்ஸ் வைத்துள்ளார் என கூறியுள்ளார்.</p><h2>மனைவியுடன் தகராறு</h2><p>இதனால் ஆவேசம் அடைந்த ஸ்ரீகாந்த், மனைவியிடம் ஏன் எனது தாயாரை பற்றி ரீல்ஸ் வீடியோவை ஸ்டேட்டஸ் வைத்துள்ளாய்? என கேட்டு கண்டித்தார். அதற்கு அபிராமி, இதனை காமெடி வீடியோவாக எடுத்துக்கொள்ள வேண்டியது தானே? என கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அபிராமி கணவரிடம் கோபித்துக்கொண்டு சேலத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். அதன்பிறகு ஸ்ரீகாந்தும் சேலத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார்.</p><h2>கணவர் கைது</h2><p>இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலத்தில் மாமியாரின் வீட்டிற்கு ஸ்ரீகாந்த் சென்றபோது, அங்கிருந்த அபிராமியுடன் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, மனைவியை அவர் அடித்து தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அபிராமி, ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று ஸ்ரீகாந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு ஸ்டேட்டஸ் வைத்த விவகாரத்தால் காதல் திருமணம் செய்த மனைவியை தாக்கிய கணவர் இன்றைக்கு சிறைக்கு செல்லும் நிலைக்கு வந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>76 மின் திருட்டுகள் மற்றும் 24 வீதிமீறல்கள் கண்டுபிடிப்பு; ரூ.98 லட்சம் அபராதம் விதித்து நடவடிக்கை!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/76-cases-of-electricity-theft-and-24-violations-detected-action-taken-with-fines-totaling-98-lakh-imposed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/76-cases-of-electricity-theft-and-24-violations-detected-action-taken-with-fines-totaling-98-lakh-imposed#comments</comments><guid isPermaLink="false">28e3441d-1211-4a7c-b91d-a0ef0190becb</guid><pubDate>Mon, 13 Jul 2026 18:27:52 +0000</pubDate><atom:updated>2026-07-13T18:27:52.279Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு மின்சார வாரியம்,Electricity Board,மின்சார வாரியம்,மின் திருட்டு,Electricity Theft</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/3kt75mgh/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/3kt75mgh/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை வடக்கு, கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு, ஈரோடு, சேலம், நாமக்கல், தேனி, மதுரை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், மற்றும் திண்டுக்கல் ஆகிய அனைத்து மின் பகிர்மான வட்டங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது 76 மின் திருட்டுகள் மற்றும் 24 மின் வீதிமீறல்கள் கண்டறியப்பட்டது. </p><p>இதற்கான இழப்பீட்டு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தொகையாக </a>சென்னை கோட்ட அமலாக்க பிரிவின் மூலமாக ரூ.12 லட்சத்து 44 ஆயிரத்து 812 அத்துடன், ரூ.36 லட்சத்து 6 ஆயிரத்து 867 மற்றும் மதுரை, திருச்சியில் ரூ.29 லட்சத்து 28 ஆயிரத்து 826 உட்பட ரூ.98 லட்சத்து 39 ஆயிரத்து 594 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p>மின்நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து அதற்குரிய சமரசத் தொகையாக ரூ.4 லட்சத்து 77 ஆயிரத்து 500 செலுத்தியதால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் குற்றவியல் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்று மின்சார வாரிய அதிகாரிகள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>தனியார் பள்ளி கூட்டமைப்பு நிர்வாகிக்கு அன்பில் மகேஷ் நோட்டீஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anbil-mahesh-notice-to-private-school-federation-administrator</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anbil-mahesh-notice-to-private-school-federation-administrator#comments</comments><guid isPermaLink="false">10c953a5-e309-4bb6-9734-d750ed4bef55</guid><pubDate>Mon, 13 Jul 2026 18:23:22 +0000</pubDate><atom:updated>2026-07-13T18:23:22.659Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தனியார் பள்ளி,private school,நிர்வாகி,Anbil Mahesh Poiyamozhi,அன்பில் மகேஷ்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/hah1mxa6/anbil-mahes.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்பில் மகேஷ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/hah1mxa6/anbil-mahes.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் வாங்கப்பட்டதாக குற்றம் சாட்டிய தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் அலுவலகப் பொறுப்பாளர் நந்தகுமாருக்கு எதிராக முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். வழக்கறிஞர் வில்சன் வாயிலாக அனுப்பப்பட்டுள்ள அந்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D">நோட்டீஸில்</a>, 48 மணிநேரத்திற்குள் நந்தகுமார் பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும் எனவும், அவதூறுக்காக ரூ.50 கோடி இழப்பீடு வழங்கவேண்டும் எனவும், இல்லையென்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><h2>நோட்டீஸ்</h2><p>முந்தைய தி.மு.க ஆட்சியில் பள்ளி அங்கீகாரத்தைப் புதுப்பிக்கவும், தடையில்லா சான்றிதழ் பெறவும் பெருமளவில் லஞ்சம் பெறப்பட்டதாகத் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அண்மையில் குற்றம் சாட்டியிருந்தது. இது தொடர்பாகப் பதிவு செய்யப்படாத சங்கம் ஒன்றின் தலைவரான அரசகுமார் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளார். இந்த லஞ்சப் புகார்களில் தன்னுடைய பெயரும் தொடர்புபடுத்திப் பேசப்பட்டதை அடுத்து, தன் மீதான அவதூறுகளுக்கு எதிராக அன்பில் மகேஷ் இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தலைமைச் செயலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/commotion-caused-by-a-woman-attempting-self-immolation-in-front-of-the-secretariat</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/commotion-caused-by-a-woman-attempting-self-immolation-in-front-of-the-secretariat#comments</comments><guid isPermaLink="false">e33e7dd7-83f5-4c6c-a9ad-a2a4904cd062</guid><pubDate>Mon, 13 Jul 2026 17:27:51 +0000</pubDate><atom:updated>2026-07-13T17:27:51.708Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,General Secretariat,தலைமைச் செயலகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/svrb2dcu/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தலைமைச் செயலகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/svrb2dcu/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>திண்டிவனத்தைச் சேர்ந்தவர் சாமுண்டீஸ்வரி. இவர் சென்னை தலைமைச் செயலகத்திற்கு இன்று வந்தார். திடீரென்று தலைமைச் செயலகத்தின் எதிரில் நின்ற நிலையில் தனது உடலில் டீசலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி, கையில் இருந்த டீசல் கேனை பறிமுதல் செய்து, உடலில் தண்ணீரை ஊற்றினர்.</p><h2>திடீர் பரபரப்பு</h2><p>இதுகுறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில், ‘ஏற்கனவே முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் வழங்கிய புகார் மீது நடவடிக்கை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">எடுக்கவில்லை</a>, என்பதால் டீசலை ஊற்றிக் தற்கொலைக்கு முயன்றதாக' கூறினார். தொடர்ந்து கோட்டை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் சென்னை தலைமைச் செயலகம் முன்பு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>மணலி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-dies-after-motorcycle-hits-lorry-near-manali</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-dies-after-motorcycle-hits-lorry-near-manali#comments</comments><guid isPermaLink="false">a40967d2-4149-4f2e-bebb-90d0d8024a7f</guid><pubDate>Mon, 13 Jul 2026 16:25:17 +0000</pubDate><atom:updated>2026-07-13T16:25:17.211Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,lorry,உயிரிழப்பு,Manali,திருவொற்றியூர்,Motorcycle,மோட்டார் சைக்கிள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/z0jvu9zc/116.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உயிரிழப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/z0jvu9zc/116.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவொற்றியூர்,</p><p>திருவொற்றியூர், கலைஞர் நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் திவாகர் (வயது 25). சவுதி அரேபியாவில் வெல்டிங் வேலை செய்து வந்த இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்தார்.</p> <h2>விபத்து</h2><p>இந்த நிலையில் நேற்று இரவு அவரும் நண்பரான சக்தி நகரை சேர்ந்த ராஜ்குமார் என்பவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் மணலி விரைவுச்சாலையில் எண்ணூர் நோக்கி சென்றனர். வி.பி.நகர் அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை ஓரம் இருளில் நிறுத்தப்பட்டு இருந்த கண்டெய்னர் லாரி மீது மோதியது.</p><p>இதில் பலத்தகாயம் அடைந்த திவாகர் சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் வந்த ராஜ்குமார் பலத்த காயம் அடைந்தார். அவருக்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து செங்குன்றம் - போக்குவரத்து புலனாய்வு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a> வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தவெகவில் சேர சொல்லி யாரும் அழுத்தம் தரவில்லை - எம்.ஆர்.விஜய பாஸ்கர் விளக்கம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-one-pressured-me-to-join-thaveka-mr-vijayabaskar-explains</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-one-pressured-me-to-join-thaveka-mr-vijayabaskar-explains#comments</comments><guid isPermaLink="false">55c79c35-0caf-41e3-acb5-1482632049fc</guid><pubDate>Mon, 13 Jul 2026 16:17:07 +0000</pubDate><atom:updated>2026-07-13T16:17:07.487Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,MRVijayabhaskar,TVKVijay‌</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/0ps4k9du/basakar33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
தவெக]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/0ps4k9du/basakar33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டசபை தேர்தலில் தேர்தலில்  தவெகவிற்கு ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை கிடைக்காததால் குதிரை பேரத்தில் ஈடுபட்டு மாற்றுக் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் வசம் இழுக்கின்றனர் என்று எதிர்க்கட்சியினர் தொடர்ச்சியாக  குற்றம் சாட்டி வருகின்றனர்.  </p><p>கவர்னரிடம் அதிகாரப்பூர்வமாக இதுதொடர்பாக ஏற்கனவே திமுகவினர் புகார் கடிதம் அளித்துள்ளனர்.</p><p>இந்நிலையில், முன்னாள் அதிமுக அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்த பின்னர், நாங்கள் யாரும் பதவிக்கு ஆசைப்பட்டு செல்லவில்லை என்றும், தவெகவினர் அழைத்ததால் கட்சியில் இணைந்தோம் என்று கூறியிருந்தார்.</p> <p> இதுதொடர்பாக, திமுகவினர் தற்போது  கவர்னரிடம் புகார் கடிதம் அளித்துள்ளனர். இந்நிலையில், தான் சொந்த விருப்பத்தின் பேரிலேயே தவெகவில் இணைந்ததாகவும், இதற்காக யாரும் தனக்கு அழுத்தம் கொடுக்கவோ, தவெகவில் சேர அழைக்கவோ இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.</p>  <p>இதுகுறித்து எம்ஆர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: </p><p>மகாபலிபுரத்தில் தவெகவில் இணைந்த போது அளித்த பேட்டியின்போது நான் பேசியதை தவறாகப் புரிந்து கொண்டனர். தவெகவில் இருந்து என்னை யாரும் அழைக்கவில்லை. அதிமுக தலைமை மீதான அதிருப்தியின் காரணமாக சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏ, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் என கொத்து கொத்தாக அனைவரும் சென்று தவெகவில் இணைந்தனர். </p><p>கரூரிலும் அதிமுக நிர்வாகிகள் பலரும் தவெகவில் இணைய கூறி வற்புறுத்தினர். இதுதொடர்பாக எல்லா நிர்வாகிகளையும் அழைத்து கருத்து கேட்டோம். பெரும்பாலானோர் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தவெகவில் </a>இணையலாம் என்று கூறியதையடுத்து தவெகவில் இணைந்தோம். இதைத்தான் பேட்டியின்போதும் கூறினோம். அதனை தவறாகப் புரிந்து கொண்டனர். </p> <p>நாங்கள் கட்சியில் இணையும் வரை தவெகவினர் எங்களை அழைக்கவில்லை.  எங்களுடைய நிர்வாகிகளின் எண்ணமும் தவெகவில் இணைய வேண்டும் என்பதாக இருந்தது. அதனால் தான் நகரச் செயலாளர்கள், பகுதி செயலாளர்கள் என்னோடு சேர்ந்து தவெகவில் இணைந்துள்ளனர்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>தவெக அரசு; ஏழை முருக பக்தர்களின் தலையில் பேரிடியை இறக்கியுள்ளது- நயினார் நாகேந்திரன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-rainfall-on-poor-muruga-devotees-nainar-nagendran-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-rainfall-on-poor-muruga-devotees-nainar-nagendran-condemns#comments</comments><guid isPermaLink="false">cd6890f1-e0a2-449b-bbec-30db7185ba32</guid><pubDate>Mon, 13 Jul 2026 16:15:19 +0000</pubDate><atom:updated>2026-07-13T16:15:19.503Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,பழனி,நயினார் நாகேந்திரன்,கண்டனம்,condemns,Nayanar Nagendran,chiefMinister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/593afxgi/nainar-nagendheran.new.gif" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/593afxgi/nainar-nagendheran.new.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஏழை முருக பக்தர்களின் தலையில் பேரிடியை இறக்கியுள்ளது. இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:- பழனி கோவிலில் கட்டண கொள்ளை- ஜோசப் விஜய் அரசின் ஆன்மிக விரோத போக்கிற்கு கண்டனம். </p><h2>அநியாய கட்டண கொள்ளை</h2><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில்</a> விடுதிகளின் கட்டணங்களை இன்று முதல் ஜோசப் விஜய் அரசு வரலாறு காணாத வகையில் ரூ. 300 முதல் ரூ. 1,500 வரை உயர்த்தி, அறைகள் இன்றி அவதியுறும் ஏழை முருகப் பக்தர்களின் தலையில் பேரிடியை இறக்கியுள்ளது. முதல்-அமைச்சர் விஜய் அரசின் இந்த அநியாய கட்டண கொள்ளையை பாஜக வன்மையாக கண்டிக்கிறது.</p> <h2>வருவாய் ஈட்டும் வணிக கூடங்கள்</h2><p>ஆட்சி பொறுப்பேற்றதும் கோவில்களை தங்களின் நேரடி கண்காணிப்பில் வைத்திருப்போம் என வீராப்பு பேசிய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்  ஏழை எளிய முருக பக்தர்களுக்கு வழங்கும் பரிசு இதுதானா? பராமரிப்பு செலவு என்ற வெற்று மழுப்பல் காரணத்தை  கூறி, ஆன்மிக தலங்களை வெறும் வருவாய் ஈட்டும் வணிக கூடங்களாக மட்டுமே பார்க்கும்  ஜோசப் விஜய் அரசின் போக்கு வெளிப்பட்டுள்ளது.</p> <h2>நடவடிக்கை</h2><p>எனவே, உயர்த்தப்பட்ட தங்குமிட கட்டணத்தை தவெக அரசு உடனடியாக திரும்ப பெறவதோடு, போதிய தங்குமிட வசதி இல்லாத சூழலை பயன்படுத்தி தனியார் விடுதிகள் நடத்தும் கட்டண கொள்ளையில் இருந்து ஏழை பக்தர்களை பாதுகாக்க தவெக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வலியுறுத்திகேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பழனிக் கோயிலில் கட்டணக் கொள்ளை- திரு. ஜோசப் விஜய் அரசின் ஆன்மிக விரோதப் போக்கிற்கு கண்டனம்!<br><br>பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் விடுதிகளின் கட்டணங்களை இன்று (ஜூலை 13) முதல் திரு. ஜோசப் விஜய் அரசு வரலாறு காணாத வகையில் ரூ. 300 முதல் ரூ. 1,500 வரை உயர்த்தி, அறைகள் இன்றி… <a href="https://t.co/xL6rol3beZ">pic.twitter.com/xL6rol3beZ</a></p>&mdash; Nainar Nagenthran (@NainarBJP) <a href="https://x.com/NainarBJP/status/2076684747884134910?ref_src=twsrc%5Etfw">July 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் இன்று 15 இடங்களில் சதமடித்த வெயில் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/temperatures-hit-the-100f-378c-mark-at-15-locations-in-tamil-nadu-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/temperatures-hit-the-100f-378c-mark-at-15-locations-in-tamil-nadu-today#comments</comments><guid isPermaLink="false">6b214c85-b48a-45dd-adf2-9ffaa59a3e4f</guid><pubDate>Mon, 13 Jul 2026 15:36:46 +0000</pubDate><atom:updated>2026-07-13T15:36:46.733Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,Tamil Nadu,வெயில்,heat</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/kyrizdcf/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/kyrizdcf/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பசிபிக் பெருங்கடலில் நிலவும் வலுவான எல் நினோ நிகழ்வுகள் காரணமாக, இந்தியப் பகுதிகளில் பருவமழைக் காற்று பலவீனமடைந்து. வறண்ட நிலப்பரப்பும் வெப்பமும் அதிகரிக்கின்றன. இதன் காரணமாக தமிழகத்தில் இம்மாதம் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>தென்மேற்கு பருவமழைக்காலம் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தாலும், சில பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 15 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><p>இதன்படி சென்னை நுங்கம்பாக்கம், சென்னை, கடலூர், ஈரோடு, கரூர் பரமத்தி, காரைக்கால், மதுரை நகரம், மதுரை விமான நிலையம், நாகப்பட்டினம், பாளையங்கோட்டை, திருச்சி, திருத்தணி, வேலூர், நாமக்கல் மற்றும் பரங்கிப்பேட்டை ஆகிய 15 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. </p> ]]></content:encoded></item><item><title>தஞ்சாவூர் அருகே பூட்டிய காருக்குள் மூச்சுத்திணறி 6 வயது சிறுவன் பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/6-year-old-boy-dies-after-suffocating-in-locked-car-near-thanjavur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/6-year-old-boy-dies-after-suffocating-in-locked-car-near-thanjavur#comments</comments><guid isPermaLink="false">5a99925d-564d-4a43-83c7-2a4b6a8d069f</guid><pubDate>Mon, 13 Jul 2026 15:32:06 +0000</pubDate><atom:updated>2026-07-13T15:32:06.549Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thanjavur,தஞ்சாவூர்,சிறுவன் உயிரிழப்பு,Die,கார்car</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/unrcpevr/116.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறுவன் பலி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/unrcpevr/116.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர்,</p><p>தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே கக்கரைக்கோட்டை வடக்குநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் தனபால். இவரது மகன் தமன் (வயது 6). இவர் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.</p><h2>பூட்டிய காருக்குள்</h2><p>இந்த நிலையில் நேற்று விடுமுறை நாள் என்பதால் தனது பெரியப்பா மகன் பிரவீன்குமார் என்பவரின் காரில் சிறுவன் தமன் வெளியில் சென்றுள்ளார். பின்னர், வீட்டிற்கு வந்ததும் அதே பகுதியில் பிரவீன்குமார் காரை பூட்டிய நிலையில் நிறுத்தி விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் காருக்குள் இருந்த சிறுவன் செய்வதறியாமல் திணறி வந்துள்ளார். மேலும், மூச்சு விட முடியாததால் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்.. கூச்சலிட்டவாறு இருந்துள்ளார். ஆனால், ஜன்னல்கள் அடைக்கப்பட்டு இருந்ததால் சிறுவனின் அபயக்குரல் வளியில் கேட்கவில்லை.</p><p>இதனிடையே மற்றொரு புறம் தமன் எங்கே சென்றான்? என்பது தெரியாமல் அவரது பெற்றோர்கள், உறவினர்கள் அவரை தீவிரமாக தேடிக்கொண்டிருந்தனர். வீட்டின் அனைத்து வீட்டிற்கு அறைகளிலும், வெளியேயும் என நாலாபுறமும் தமனை தேடி பார்த்துள்ளனர். ஆனால், அவர் கிடைக்கவில்லை. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு இரவு காருக்குள் உறவினர்கள் பார்த்த போது தமன் மூச்சுப்பேச்சு இன்றி கிடந்துள்ளார். பின்னர், காரை திறந்து பார்க்கையில் தமன் மூச்சுத்திணறி இறந்தது தெரியவந்தது. இதனை கண்ட அவரது பெற்றோர்கள் மகனின் உடலை மாரோடு அணைத்துக்கொண்டு சுதறி துடித்தனர். தனது மகன் இறந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் பெற்றோர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை எற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மயிலாப்பூர்: நொச்சிக்குப்பம் மாநகராட்சி தொடக்க பள்ளியில் அமைச்சர்  ப.வெங்கடரமணன் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mylapore-minister-p-venkataramanan-inspected-nochikuppam-municipal-corporation-primary-school</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mylapore-minister-p-venkataramanan-inspected-nochikuppam-municipal-corporation-primary-school#comments</comments><guid isPermaLink="false">131483f4-f738-43de-984a-19752b17b6de</guid><pubDate>Mon, 13 Jul 2026 15:29:26 +0000</pubDate><atom:updated>2026-07-13T15:29:26.705Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆய்வு,Mylapore,மயிலாப்பூர்,government schools-அரசு பள்ளி,inspect,Minister P. Venkataramanan,அமைச்சர் வெங்கடரமணன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/tkl6puvb/minister-school-visit.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்  ப.வெங்கடரமணன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/tkl6puvb/minister-school-visit.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இன்று மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி நொச்சிக்குப்பம் மாநகராட்சி தொடக்க பள்ளியில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்  ப.வெங்கடரமணன் ஆய்வு மேற்கொண்டார்.</p><h2>கருத்துக்களை கேட்டறிந்தார்</h2><p>இவ்வாய்வின் போது,  முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் விதத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவின் தரம், சுவை, சுகாதாரம், ஊட்டச்சத்து, மற்றும் உணவு தயாரிப்பு குறித்து ஆய்வு செய்து, மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் கருத்துக்களை கேட்டறிந்தார். தொடர்ந்து, மாணவர்களுடன் கலந்துரையாடி, காலை உணவு திட்டத்தின் பயன்கள் மற்றும் பள்ளி வருகை, கற்றல் திறன் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து கேட்டறிந்தார்.</p> <h2>காலை உணவு திட்டம்</h2><p>மேலும், <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">காலை உணவு திட்டம்</a> தினந்தோறும் தரமாகவும், சுகாதாரமான முறையிலும், குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து மாணவர்களுக்கும் வழங்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.</p><h2>அடிப்படை வசதி</h2><p>அதனை தொடர்ந்து, பள்ளியின் வகுப்பறைகள், குடிநீர் வசதி, கழிப்பறை பராமரிப்பு, தூய்மை மற்றும் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளையும் ஆய்வு செய்து, மாணவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான கல்வி சூழலை தொடர்ந்து உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tamil-nadu-government-has-issued-an-order-transferring-three-ias-officers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tamil-nadu-government-has-issued-an-order-transferring-three-ias-officers#comments</comments><guid isPermaLink="false">add70407-cc74-4dc7-bae7-bfb7257f296b</guid><pubDate>Mon, 13 Jul 2026 15:12:47 +0000</pubDate><atom:updated>2026-07-13T15:12:47.507Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,Tamil Nadu,இடமாற்றம்,ஐ.ஏ.எஸ்.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/w8lovsr4/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/w8lovsr4/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டில் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் சாய் குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். </p><p>இதன்படி, கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ சேவைகள் துறை இயக்குநராக கிருஷ்ணனுன்னி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநராக ஷில்பா பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதே போல், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக மேலாண்மை இயக்குநராக அம்ரித் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>சேலம்: வரி பாக்கியை நூதன முறையில் வசூல் செய்த ஊராட்சி செயலாளர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-the-panchayat-secretary-collected-the-tax-arrears-in-a-new-way</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-the-panchayat-secretary-collected-the-tax-arrears-in-a-new-way#comments</comments><guid isPermaLink="false">717f7236-12ed-4c1e-b38c-72a696b25235</guid><pubDate>Mon, 13 Jul 2026 15:12:26 +0000</pubDate><atom:updated>2026-07-13T15:12:26.259Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வசூல்,சேலம்,ஊராட்சி செயலாளர்,Tax Collection,Village Panchayat,வரி பாக்கி,In Salem</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/yj07vmgu/officer.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  வரி பாக்கி காலில் விழுந்து வசூல் செய்த ஊராட்சி செயலாளர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/yj07vmgu/officer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>அரசு அதிகாரி ஒருவர் கிராம மக்களின் கால்களில் விழுந்து வரி வசூல் செய்யும் நெகிழ்ச்சியான சம்பவம் சேலம் அருகே அரங்கேறியுள்ளது.</p> <h2>நீண்ட நாள் வரி பாக்கி</h2><p>சேலம் மாவட்டம், நங்கவள்ளி அருகே உள்ள சாணாரப்பட்டி ஊராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்துள்ளன. இந்த ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் பலர் நீண்ட நாட்களாக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%2C%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF">வீட்டு வரி, குடிநீர் வரி</a> உள்ளிட்ட உள்ளாட்சி வரிகளை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.</p> <h2> அதிரடி முடிவு</h2><p>அதிகாரிகள் எத்தனையோ முறை நோட்டீஸ் அனுப்பியும், நேரில் கேட்டுப்பார்த்தும் பொதுமக்கள் வரி செலுத்த முன்வரவில்லை. இதனால், கிராமத்தின் வளர்ச்சி பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து, சாணாரப்பட்டி ஊராட்சி செயலாளர் மாதவன் ஒரு அதிரடி மற்றும் உருக்கமான முடிவை எடுத்தார். அதன்படி அப்பகுதிக்கு நேரில் சென்றார்.  வீதி வீதியாக சென்ற அவர், திடீரென  வரி பாக்கி வைத்துள்ள பொதுமக்களின்  கால்களில் விழுந்து வணங்கினார்.</p><h2>வேண்டுகோள்</h2><p> கிராமத்தின் முன்னேற்றத்திற்காக வரிப் பாக்கியை உடனே செலுத்துங்கள்" என்று கைகூப்பி, காலில் விழுந்து வேண்டுகோள் விடுத்தார். கடந்த 2 நாட்களாக ஊராட்சி செயலாளர் மாதவன் இப்படி வீடு வீடாக சென்று மக்களின் கால்களில் விழுந்து வரி வசூல் செய்து வரும் நடவடிக்கை, அந்த பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும், கவனத்தையும் ஈர்த்துள்ளது. </p> <h2>வரி செலுத்தி வருகின்றனர்</h2><p>ஒரு அரசு அதிகாரி, தன்மானத்தை பார்க்காமல் கிராமத்தின் வளர்ச்சிக்காக மக்களின் கால்களில் விழுந்ததை பார்த்த பலரும், தங்களது வரி பாக்கியை உடனே செலுத்தி வருகின்றனர். அரசு அதிகாரியின் இந்த நூதன மற்றும் பாச போராட்டம்,  தற்போது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>சட்டமன்றத்த சந்தைக்கடையா ஆக்கிட்டாங்க -  செல்லூர் ராஜு தாக்கு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/they-have-turned-the-legislative-assembly-into-a-market-stall-sellur-raju-attacks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/they-have-turned-the-legislative-assembly-into-a-market-stall-sellur-raju-attacks#comments</comments><guid isPermaLink="false">cdfbcf24-8c9a-4638-9c4e-5de60d48a136</guid><pubDate>Mon, 13 Jul 2026 15:00:23 +0000</pubDate><atom:updated>2026-07-13T15:00:23.091Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,TVK,மதுரை,செல்லூர் ராஜு,sellurraju,EPS,முதல்-அமைச்சர் விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/w86ytu54/raju33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ செல்லூர் ராஜு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/w86ytu54/raju33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரையில் நடந்த அதிமுக கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, </p><p>வாயில் வந்ததையெல்லாம் பேசுபவன் தலைவன் அல்ல. முதல்-அமைச்சர் விஜய் ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும். ஒரு தலைமுறையையே விஜய் பாழ்படுத்தி கொண்டிருக்கிறார். ஒரு சட்டமன்ற வரலாற்றில் முதல்-அமைச்சருக்கு ஒரு தகுதியுள்ளது. ஒரு நடிகராக பேசுவது வேறு. முதல்-அமைச்சராக பேசுவது வேறு. சட்டமன்றத்தில் உரையாற்றும் போது மிகவும் நாகரீகமாக பேச வேண்டும். ராஜாஜி, காமராஜர், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடியார், ஸ்டாலின் ஆகியோர் அந்த நாற்காலியில் அமர்ந்துள்ளனர்.</p><h2>சட்டமன்றமா, சந்தக்கடையா</h2><p>சட்டமன்றத்தில் இவரை போல யாராவது பேசியுள்ளார்களா. சட்டமன்றத்தில் செய்கை காண்பிப்பது எல்லாம் காரியம். அது சட்டமன்றமா, சந்தக்கடையா. பதவி வரும்போது பணிவு வர வேண்டும், துணிவு வரவேண்டும் தோழா என்று எங்கள் தலைவர் சொன்னது. என் தலைவரை உச்சரிக்க உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது. </p> <p>மாண்புமிகு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">முதல்-அமைச்சர் விஜய் </a>அவர்களே நீ யோக்கியமானவர் என்று சொல்ல முடியுமா. ஒரு படத்திற்கு எவ்வளவு வாங்கினாய். அதில் எவ்வளவு வெளியே சொன்னாய். நீ நடித்த புலி படத்திற்கு ரூ.15 கோடி வாங்கி குறைந்த கணக்கு காண்பித்து, ரூ.1.5 கோடி அபராதம் கட்டியது மறந்துவிட்டதா. நீயே ஒரு களவாணி. உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது. நீ ஒரு விரலில் சுட்டி காட்டலாம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பெரம்பூர் மக்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்த பிரத்யேக செயலி பயன்பாட்டிற்கு வந்தது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-special-app-launched-by-chief-minister-vijay-for-the-people-of-perambur-has-been-launched</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-special-app-launched-by-chief-minister-vijay-for-the-people-of-perambur-has-been-launched#comments</comments><guid isPermaLink="false">d80f24e8-391b-4176-a576-0b5ae6ce0518</guid><pubDate>Mon, 13 Jul 2026 13:51:11 +0000</pubDate><atom:updated>2026-07-13T13:51:11.564Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,பெரம்பூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/fpfs3cub/perambure33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/fpfs3cub/perambure33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முதல்-அமைச்சர் விஜய் சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதில் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பெரம்பூர் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.தொகுதி மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, பெரம்பூர் தொகுதி அலுவலகம் சென்னை வியாசர்பாடி சர்மா நகர் 1-வது தெருவில் தொடங்கப்பட்டுள்ளது. </p> <p>இந்தநிலையில், இந்த அலுவலகத்தை முதல்-அமைச்சர் விஜய் இன்று மாலை திறந்து வைத்தார்.  தொடர்ந்து எம்.எல்.ஏ அலுவலக வளாகத்தில் இ -சேவை மையத்தை திறந்து வைத்தார்.</p><p>இந்தநிலையில்,  எம்.எல்.ஏ. அலுவலகத்தில் தொகுதி மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக செயலி ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. செல்போன் செயலியான அதில், பொதுமக்கள் தங்களது குறைகளை எந்த நேரத்திலும் தெரிவிக்கலாம். <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பெரம்பூர் தொகுதி</a> மக்கள் தங்களது குறைகளையும் புகார்களையும் தொகுதி எம்.எல்.ஏ.வான முதல்-அமைச்சரிடம் நேரடியாகத் தெரிவிக்கும் வகையில் தொடங்கப்பட உள்ள இந்த செயலிக்கு ‘மக்கள் சேவை தளம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. </p><p>இந்தநிலையில், பெரம்பூர் மக்களுக்கு  முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்த பிரத்யேக செயலி பயன்பாட்டிற்கு வந்தது. http://Tvkcm.com மூலம் சேவை தளத்தை மக்கள் தொடர்பு கொள்ளலாம். 9498500444 என்ற வாட்ஸ்ஆப் எண் மூலம் பெரம்பூர் மக்கள் புகார் தெரிவிக்கலாம்.</p>]]></content:encoded></item><item><title>மூத்த படைப்பாளி பூமணி மறைவு - சிபிஐ(எம்) இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/passing-of-veteran-writer-poomani-cpim-condoles</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/passing-of-veteran-writer-poomani-cpim-condoles#comments</comments><guid isPermaLink="false">8d7b732b-115f-4f5b-8b5f-0f77c1c50882</guid><pubDate>Mon, 13 Jul 2026 13:46:06 +0000</pubDate><atom:updated>2026-07-13T13:46:06.736Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இரங்கல்,condoles,CPI(M),சிபிஐ(எம்),Writer Poomani,பூமணி மறைவு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/y0y1glyf/communist.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பெ. சண்முகம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/y0y1glyf/communist.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மூத்த படைப்பாளி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81">பூமணி மறைவு</a> - சிபிஐ(எம்) இரங்கல். இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><h2>சாகித்திய அகாடமி விருது</h2><p>சாகித்திய அகாடமி விருது பெற்ற தமிழின் மூத்த படைப்பாளி பூமணியின் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. கரிசல் வட்டார மக்களின் வாழ்வியலை, குறிப்பாக பட்டியலின மக்களின் வாழ்க்கையை, அழுத்தமான குரலில் பதிவு செய்த பூமணியின் படைப்புகள் தமிழ் இலக்கிய உலகில் நீங்கா இடம் பெற்றவை. </p><h2>சாதி எதிர்ப்புணர்வு</h2><p>அஞ்ஞாடி நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற அவர், மார்க்சியத்தையே தன் வாழ்க்கை கண்ணோட்டமாக கொண்ட இடதுசாரி சிந்தனையாளராக வாழ்ந்தார். அவரது எழுத்துக்களில் வெளிப்பட்ட சாதி எதிர்ப்புணர்வும், உழைக்கும் மக்கள் மீதான அவரது நேசமும் ஒரு முற்போக்கு படைப்பாளிக்குரிய பண்பாகும். தமிழின் இந்த மகத்தான படைப்பாளியை இழந்திருப்பது தமிழ் இலக்கிய உலகிற்கும், முற்போக்கு சிந்தனைப் பரப்பிற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.</p> <p>தோழர் பூமணி மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும். இலக்கிய நேசர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறது.</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் பாசன பகுதிக்கு  தண்ணீர் திறப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-release-from-bhavanisagar-dam-to-the-kalingarayan-irrigation-area</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-release-from-bhavanisagar-dam-to-the-kalingarayan-irrigation-area#comments</comments><guid isPermaLink="false">217efd46-6af8-4cdd-98f4-d2c1c5785857</guid><pubDate>Mon, 13 Jul 2026 13:17:42 +0000</pubDate><atom:updated>2026-07-13T13:17:42.730Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Release,Bhavanisagar Dam,பவானிசாகர் அணை,தண்ணீர்,திறப்பு,additional water</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/22q527w5/bavani-dam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பவானிசாகர் அணை
]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/22q527w5/bavani-dam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>ஈரோடு மாவட்ட விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, பவானிசாகர் அணையிலிருந்து நாளை முதல் சிறப்பு தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 15,743 ஏக்கர் விவசாய நிலங்கள் கருகாமல் காப்பாற்றப்படும். </p><h2>குடிநீர் தட்டுப்பாடு</h2><p>ஈரோடு மாவட்டம் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">பவானிசாகர் அணையின்</a> மூலம் லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. தற்போதைய கோடைக்கால சூழலில், காலிங்கராயன் வாய்க்கால் பாசனப் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் தண்ணீரின்றி கருகும் நிலைக்கு தள்ளப்பட்டன. மேலும், கிராமப்புறங்களில் கால்நடைகளுக்கான குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வந்தது.</p><p>முதல்-அமைச்சர் அதிரடி உத்தரவுவிவசாயிகளின் இந்த நியாயமான கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் தண்ணீரை திறக்க அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–</p> <h2>15 நாட்கள் தண்ணீர்</h2><p>ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து 2026–2027 ஆம் ஆண்டு காலிங்கராயன் வாய்க்காலிலுள்ள பாசன நிலங்களில் நிலுவையிலுள்ள பயிர்களை காப்பற்றும் பொருட்டும், கால்நடைகளின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டும் சிறப்பு நனைப்பிற்கு தண்ணீர் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.15 நாட்கள் தண்ணீர் நாளை முதல் ஜூலை 28ஆம் தேதி வரை மொத்தம் 15 நாட்களுக்கு இந்த தண்ணீர் தங்கு தடையின்றி திறந்து விடப்படும்.</p><h2>15,743 ஏக்கர் பாசன வசதி</h2><p> மொத்தம் 648 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீரைத் திறந்துவிட தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 15,743 ஏக்கர் நிலங்கள் பலன்அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கீழ்க்கண்ட வட்டங்கள் பெருமளவில் பயனடைய உள்ளன: ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி இந்த மூன்று வட்டங்களில் உள்ள சுமார் 15,743 ஏக்கர் பாசன நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறும். </p> <h2>விவசாயிகள் மகிழ்ச்சி</h2><p> முதல்-அமைச்சரின் இந்த திடீர் உத்தரவால் கருகும் நிலையில் இருந்த தங்களது பயிர்கள் உயிர் பெறும் என ஈரோடு மாவட்ட விவசாயிகள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சரியான நேரத்தில் தண்ணீரை திறக்க உத்தரவிட்ட முதல்-அமைச்சர்  ச. ஜோசப் விஜய்க்கு இப்பகுதி மக்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.</p>]]></content:encoded></item></channel></rss>