<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 09 Jul 2026 11:35:58 +0000</lastBuildDate><item><title>விபி ஜி ராம்ஜி திட்டத்தில் 125 நாள் வேலைக்கு நிதி எங்கே? - இந்திய கம்யூ. கட்சி கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/where-is-the-fund-for-125-days-of-work-in-the-vp-g-ramji-scheme-communist-party-of-india-question</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/where-is-the-fund-for-125-days-of-work-in-the-vp-g-ramji-scheme-communist-party-of-india-question#comments</comments><guid isPermaLink="false">a5282d5d-3e1a-45d2-a09c-8aaaa4654d01</guid><pubDate>Thu, 09 Jul 2026 11:29:59 +0000</pubDate><atom:updated>2026-07-09T11:29:59.099Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,CPI,மு.வீரபாண்டியன்,M Veerapandian,விபி ஜி ராம்ஜி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/igkmn8sd/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.வீரபாண்டியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/igkmn8sd/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>இடதுசாரி கட்சிகள் நாடாளுமன்றத்தில் தலையிடும் வலிமையோடு இருந்த காலத்தில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்திய அரசு, குறைந்தபட்ச பொது வேலைத்திட்டத்தில் ஒப்புக் கொண்டபடி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் -  2005 நிறைவேற்றியது.</p><p>வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் கீழ், கிராம ஊராட்சிகள், கிராம சபா கூட்டங்கள் மூலம் வேலை வாய்ப்புத் திட்டங்களை உருவாக்க அதிகாரம் அளிக்கப்பட்டது. இதன் மூலம் திட்டத்தில் வேலை கேட்டு பதிவு செய்துள்ள குடும்பங்கள் ஆண்டுக்கு 100 நாள் வேலை பெறுவதற்கான சட்டபூர்வ உரிமை பெற்றிருந்தன.</p><p>கடந்த 2006 முதல் 20 ஆண்டுகளாக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், வேலை அட்டை பெற்றுள்ள குடும்பங்களுக்கு, எந்தவொரு ஆண்டிலும் 100 நாள் முழுமையாக வேலை வழங்கவில்லை என்பதே உண்மையாகும்.</p><p>தமிழ்நாட்டில் கடந்த 2021- 2022 முதல் 2025- 2026 வரையான ஐந்தாண்டு காலத்தில் 43 நாள் முதல் 52 நாள் வரையிலும் தான் வேலை வழங்கப்பட்டுள்ளது. பணியில் ஈடுபட்ட மொத்தத் தொழிலாளர்களில் ஐந்து விழுக்காடு தொழிலாளர்கள் கூட 100 நாட்களுக்கு முழுமையாக வேலை வாய்ப்பை பெறவில்லை என்பது அரசின் தரவுகள் வெளிப்படுத்தும் உண்மையாகும்.</p><p>இந்த நிலையில், ஊரகப் பகுதியில் உள்ள விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட உடல் உழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களின் வேலை பெறும் சட்ட உரிமையை பறித்து விட்டு, அரசையும், ஆளும் தரப்பையும் சார்ந்து இருக்கும் பயனாளிகளாக விவசாயத் தொழிலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.</p><p>தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பெயரில் சட்டம் இருப்பதை விரும்பாத, காந்தியின் மீதும், அவரது கருத்தியல் மீதும் தீரா வெறுப்பும், பகையும் கொண்டுள்ள பாஜக கூட்டணி அரசு,  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை நீக்கி விட்டு, விபி ஜி ராம்ஜி - திட்டம் 2025 யை அறிவித்துள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 125 நாள் வேலை வாய்ப்புக்கு உறுதியளிப்பதாக வாய்ச்சவடால் முழங்கி வருகிறது.</p><p>பாஜகவின் 125 நாள் வேலை வாய்ப்பு என்பது கானல் நீரை காட்டி, தாகம் தீர்த்துக் கொள்ளுங்கள் எனக் கூறும் ஏமாற்றுத்தனமாகும். பாஜக கூட்டணி மத்திய அரசு ஊரகப் பகுதித் தொழிலாளர்களை ஏமாற்றுவதுடன், மாநில அரசின் உரிமைகளைப் பறித்து, அதன் தலையில் நிதிச் சுமையை ஏற்றியுள்ளது. தமிழ்நாட்டில் நடப்பு 2026- 27ம் நிதியாண்டில் விபி ஜிராம்ஜி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ரூ.12,642 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் மாநில அரசின் பங்காக 40 சதவீதம், அதாவது ரூ.5,056 கோடி தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும். கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள தமிழ்நாடு அரசு எங்கிருந்து நிதி ஒதுக்கும்?</p><p>தற்போது திட்டப் பணியில் வேலை கேட்டு பதிவு செய்துள்ள சுமார் 90 லட்சம் குடும்பங்கள் வேலை அட்டை பெற்றுள்ளன. இவற்றில் 69.79 லட்சம் குடும்பங்கள் திட்டப் பணியில் வேலை செய்து வருகின்றன. இந்த 69.79 லட்சம் குடும்பங்களுக்கு தலா 125 நாள் வேலை வழங்க வேண்டும் எனில், ரூபாய் 30,096 கோடி நிதி தேவையாகும். இது, வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கும் செலவிற்கான தொகை மட்டும்தான். இது தவிர திட்டப் பணிகளுக்கான பொருட்கள் வகைப்பட்ட முதலீட்டு செலவுகள் உள்ளன. இவைகள் எதையும் கணக்கில் கொள்ளாமல், மத்திய அரசு, தமிழ்நாடு அரசுக்கு வெறும் ரூ 12,642 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது, மாநில அரசின் தேவையில் 40 விழுக்காடாகும். திட்டச் செலவில் 60 விழுக்காடு நிதியை குறைத்து விட்டு, மாநில அரசின் தலையில் நிதிச் சுமையை ஏற்றுவது, மாநில அரசுகள் மீது நடத்தப்படும் பொருளாதாரத் தாக்குதலாகும்.</p><p>இந்த மாதம் (ஜூலை) முதல் தேதியில் இருந்து அமலாக்கத்திற்கு வந்துள்ள விபி ஜி ராம்ஜி திட்டப்பணிக்கு, பாஜக மத்திய அரசு ரூ. 95,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் முதல்கட்டமாக ரூ 25,000 கோடி ஒதுக்கீடு செய்ததில், தமிழ்நாட்டுக்கு முதல் தவணையாக வெறும் ரூ 2,176.84 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த சிறு நிதியை வைத்துக் கொண்டு 125 நாள் வேலையும், வேலை செய்யும் நாளுக்கு தலா ரூ.345 ஊதியமும் தரப்படும் என்பது முற்றிலும் தவறான, அப்பட்டமான பொய் என்பதை உழைக்கும் மக்கள் விரைவில் உணர்ந்து கொள்ள முடியும்.</p><p>இதனை உணர்ந்த தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், விபி ஜி ராம்ஜி திட்டத்தில் உள்ள குறைபாடுகளை சுட்டிக் காட்டி, கடந்த 01.07.2026ம் தேதி பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் மேலும் பல விபரங்களை குறிப்பிட்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.</p><p>தொழிலாளர்களின் கோரிக்கைகளையும், முதல்-அமைச்சரின் வேண்டுகோளையும் ஏற்று, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை மேலும் வலுப்படுத்தி, தொடர்ந்து செயல்படுத்தவும், வேலை அட்டை பெற்றுள்ள குடும்பங்களில் உள்ள ஆண், பெண் தொழிலாளர் ஒவ்வொருவருக்கும் தலா 125 நாள் வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் 100 விழுக்காடு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்திய அரசையும், பிரதமரையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பதவியை ராஜினாமா செய்தது ஏன்?  சபாநாயகரிடம் மீண்டும் விளக்கம் அளித்த 3 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-did-they-resign-3-former-mlas-again-explain-to-the-speaker</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-did-they-resign-3-former-mlas-again-explain-to-the-speaker#comments</comments><guid isPermaLink="false">80cbfa8e-6daf-47ed-89a7-ba1bad0ecd07</guid><pubDate>Thu, 09 Jul 2026 11:29:40 +0000</pubDate><atom:updated>2026-07-09T11:29:40.019Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,ராஜினாமா,சபாநாயகர்,Resign</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/r9bn5cza/emle33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/r9bn5cza/emle33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டசபை தேர்தல் 5 தோல்விக்கு பிறகு அ. தி.மு.க.வினர் ஏராளமானோர் த.வெ.க.வில் இணைந்து வருகின்றனர். மதுராந்தகத்தை சேர்ந்த மரகதம் குமரவேல், தாரா - புரத்தை சேர்ந்த சத்யபாமா, பெருந்துறையை சேர்ந்த ஜெயக்குமார் ஆகிய 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மே 25-ந்தேதி தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க.வில் இணைந்தனர். அதன் பிறகு அம்பா சமுத்திரம் தொகுதி அ.தி. மு.க. எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா மறுநாள் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> த.வெ.க.</a>வில் இணைந்தார்.</p><p>அதைத் தொடர்ந்து விராலி மலை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சி. விஜயபாஸ்கர், கரூர் தொகுதி அ.தி.மு.க. எம். எல்.ஏ. எம்.ஆர். விஜய பாஸ்கர் ஆகியோரும் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருந்தனர்.</p><h2>குதிரை பேரம்</h2><p>அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததில் குதிரை பேரம் நடந்திருப்பதாக அ.தி.மு.க. குற்றம் சாட்டி வருகிறது. அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக அ.தி.மு.க. சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. </p><p>இந்த நிலையில் எம்.எல்.ஏ. பதவியை காரணம் குறித்து சபாநாயகர் ஜே.சி. டி.பிரபாகர் மேற்கண்ட எம்.எல்.ஏ.க்களுக்கு ராஜினாமா செய்ததற்கான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்த நோட்டீசுக்கு ஏற்கனவே மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யபாமா, பெருந் துறை ஜெயக்குமார் ஆகியோர் விளக்கம் அளித்து இருந்தனர். </p><h2>எம்.எல்.ஏக்கள் விளக்கம்</h2><p>அந்த விளக்கத்தில் சில சந்தேகங்கள் ஏற்பட்டதால் மீண்டும் நேரில் வந்து விளக்கம் அளிக்கும் படி சபாநாயகர் அவர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். இதை தொடர்ந்து மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாரா புரம் சத்யபாமா, பெருந் துறை ஜெயக்குமார் ஆகிய 3 பேரும் இன்று தலைமைச் செயலகம் சென்று சபாநாயகரை சந்தித்து 2-வது முறையாக விளக்கம் அளித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chance-of-rain-in-20-districts-of-tamil-nadu-until-7-pm</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chance-of-rain-in-20-districts-of-tamil-nadu-until-7-pm#comments</comments><guid isPermaLink="false">0356f85f-393d-4e95-afea-ffd9c254f4a7</guid><pubDate>Thu, 09 Jul 2026 11:19:28 +0000</pubDate><atom:updated>2026-07-09T11:19:28.422Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,Tamil Nadu,Rain,Weather,வானிலை,மழை</media:keywords><media:content height="270" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/93tyt6y9/State-03.jpg" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/93tyt6y9/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தெற்கு குஜராத்தில் இருந்து மத்திய கேரளா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 13-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.</p> <p>இந்த நிலையில், தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, சென்னை, கோவை, திண்டுக்கல், கரூர், பெரம்பூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, காஞ்சீபுரம், தேனி, நீலகிரி, திருவள்ளூர், திருச்சி, திருப்பத்தூர், திருப்பூர், மதுரை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் பலத்த இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கன்னியாகுமரி, தென்காரி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>மா.செ. பதவி பறிப்பு: எடப்பாடி பழனிசாமி ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த ஒசூர் எம்.எல்.ஏ</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/hosur-mla-boycotts-palaniswamis-consultation-meeting</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/hosur-mla-boycotts-palaniswamis-consultation-meeting#comments</comments><guid isPermaLink="false">d6ee942f-11c9-445e-ac17-734afe6b40fa</guid><pubDate>Thu, 09 Jul 2026 10:58:54 +0000</pubDate><atom:updated>2026-07-09T10:58:54.694Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,அதிமுக,எம்.எல்.ஏ</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/2ycbylk5/admk33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/2ycbylk5/admk33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததை தொடர்ந்து அந்த கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் எம்.எல்.ஏக்கள் ஆகியோர் தொடர்ந்து விலகி வருகின்றனர்.</p><h2>நிர்வாகிகளுடன் ஆலோசனை</h2><p>இந்தநிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 3-ம் தேதி முதல் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த 6 நாட்கள் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டம் 6-வது நாளாக நடைபெற்றது.</p><p>இன்று காலை 10 மணி அளவில் நடைபெற்ற கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினர். </p><h2>சட்டமன்ற தேர்தல்</h2><p>இந்த கூட்டத்தில் ஓசூர் தொகுதி எம்.எல்.ஏ பாலகிருஷ்ண ரெட்டி பங்கேற்கவில்லை. அவர் ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தார். சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சி.வி.சண்முகம் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் தனி அணியாக ஆலோசனை கூட்டங்களை நடத்தியபோது அவர்களுடன் பாலகிருஷ்ணன் ரெட்டி இணைந்து செயல்பட்டவர் ஆவார். இதை தொடர்ந்து அவரது மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டு அமைப்பு செயலாளர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.</p><h2>எம்.எல்.ஏக்கள் புறக்கணிப்பு</h2><p>தனது மாவட்ட செயலாளர்  பதவி பறிக்கப்பட்டதால் அதிருப்தி காரணமாகவே பாலகிருஷ்ண ரெட்டி எம். எல்.ஏ. இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனை கூட்டங்களை இதற்கு முன்னரும் எம். எல்.ஏ.க்கள் பலர் புறக்கணித்து உள்ளனர்.</p><p>நேற்று முன் தினம்  நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஆற்காடு தொகுதி அ.தி.மு.க. எம். எல்.ஏ.வான எஸ்.எம். சுகுமார், திருப்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வும். முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி ஆகியோரும் பங்கேற்காமல் புறக்கணித்து இருந்தனர்.</p><p>தேர்தல் தோல்விக்கு பிறகு  பலரும் அதிமுகவில் இருந்து விலகி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமியின்கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து தொடர்ந்து ஆலோசனை கூட்டங்களை நடத்திய</p><p>நிலையில் அந்த கூட்டங்களில் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><h2>தவெக </h2><p>அ.தி.மு.க.வில் இருந்து விலகி எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் த.வெ.க.வில் இணைந்து உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி நடத்திய கூட்டத்தை புறக்கணித்துள்ள எம்.எல். ஏ.க்களும் கட்சி மாறப் போகிறார்களா? என்ற பரபரப்பும் அரசியல் களத்தில் ஏற்பட்டு உள்ளது.</p><p>கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டம் நிறைவடைந்ததும் தர்மபுரி மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.</p><p>தொடர்ந்து 6 நாட்களாக நடைபெற்ற <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஆலோசனைக் கூட்டம்</a> இன்றுடன் நிறைவு பெற்றது. ஒவ்வொரு நாளும் நடைபெற்ற கூட்டங்களில் பேசிய எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. விலகி செல்பவர்களை பற்றி யாரும் கவலை கொள்ள வேண்டும் என்று தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் 100 மகளிர் சிறப்பு பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டதா? - தகவல் சரிபார்ப்பகம் மறுப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/have-the-services-of-100-womens-special-buses-been-stopped-in-chennai-fact-checker-denies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/have-the-services-of-100-womens-special-buses-been-stopped-in-chennai-fact-checker-denies#comments</comments><guid isPermaLink="false">b8f0c631-d824-4b2d-ad63-5c221fa5064e</guid><pubDate>Thu, 09 Jul 2026 10:51:07 +0000</pubDate><atom:updated>2026-07-09T10:51:07.318Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Fact Check Unit,Women&apos;s Free Bus Scheme,Fact check,தகவல் சரிபார்ப்பகம்,TN Fact Check,தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம்,மகளிர் இலவச பயணம்,மகளிர் இலவச பேருந்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/m4vqg4ox/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/m4vqg4ox/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>சென்னையில் 100 மகளிர் சிறப்பு பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டதாக பரவும் தவறான தகவல்</p><h2>பரவும் செய்தி</h2><p>சென்னையில் 100 மகளிர் சிறப்பு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பேருந்துகளின் </a>சேவை நிறுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.</p><h2>உண்மை என்ன ?</h2><p><strong>இது முற்றிலும் தவறான தகவல்.</strong></p><p>இது தொடர்பாக சென்னை பெருநகரப் போக்குவரத்துக் கழகம் அளித்துள்ள விளக்கத்தில்," கடந்த மார்ச் மாதத்திலிருந்து 1,724 பேருந்துகள் மகளிர் இலவச சேவைக்காக  இயக்கப்படுவதாகவும், தற்பொழுது அப்பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><strong>தவறான தகவலைப் பரப்பாதீர் !</strong></p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காவிரியில் நீர் விவகாரம்: காங்கிரஸ் கட்சியை எச்சரிக்க முதல்-அமைச்சர் விஜய் தயாரா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-water-issue-is-chief-minister-vijay-ready-to-warn-the-congress-party-edappadi-palaniswami-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-water-issue-is-chief-minister-vijay-ready-to-warn-the-congress-party-edappadi-palaniswami-asks#comments</comments><guid isPermaLink="false">ea0bb004-a134-48e0-b098-2ab03d91f7f3</guid><pubDate>Thu, 09 Jul 2026 10:43:18 +0000</pubDate><atom:updated>2026-07-09T10:43:18.643Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,Edappadi Palanisamy,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/yuaqa33e/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/yuaqa33e/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கு நீரை கர்நாடக அரசு உடனடியாக விடுவிக்கவில்லையெனில், 'தமிழக அமைச்சரவையில் இருந்து காங்கிரஸ் அமைச்சர் விடுவிக்கப்படுவார்' என்று கர்நாடக காங்கிரஸ் கட்சியை எச்சரிக்க த.வெ.க. அரசின் முதல்-அமைச்சர் தயாரா? என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“நமது பரந்து விரிந்த பாரதத்தில் பல்வேறு மாநில ஆட்சியாளர்கள் உள்ளனர்! அவர்களில் திமிர்த்தனமும், அதிகார மமதையும், சர்வாதிகார மனப்பான்மையும், சகோதரத்துவத்தை சீர்குலைக்கும் எண்ணம் கொண்ட ஒரே ஆட்சியாளர்களாகத் திகழ்வது கர்நாடகத்தை நிர்வகிக்கும் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் என்பது நம் நாட்டின் சாபக்கேடு!</p><p>தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகள் தங்களின் வேளாண் தொழிலுக்கு காவிரி நீரை நம்பித்தான் இருக்கிறார்கள். சுமார் 20-க்கும் மேற்பட்ட மாவட்ட மக்கள் குடிநீருக்கு காவிரி நீரை பயன்படுத்தி வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் தண்ணீருக்காக நாம் அவர்களிடம் கையேந்தி நிற்க வேண்டும் என்று கர்நாடக ஆட்சியாளர்கள் நினைக்கிறார்களே தவிர, காவிரியில் நமக்குள்ள உரிமையை உணர மறுக்கிறார்கள்! </p><p>காவிரி நதிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட (Cauvery Water Disputes Tribunal) காவிரி நதிநீர் தகராறு தீர்ப்பாயமும், சுப்ரீம் கோர்ட்டும் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டி பல தீர்ப்புகளை வழங்கிய பின்பும், உதாசீனப்படுத்துவதையே கர்நாடக ஆட்சியாளர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். </p><p>அவைகளை கர்நாடக மாநிலத்தின் பெரும் வளர்ச்சிக்கு அங்கு வாழும் தமிழர்களின் உழைப்புதான் காரணம் என்பதை, தற்போது ஆட்சி செய்யும் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முதல்-அமைச்சர் டி.கே.சிவகுமார் மறந்துவிடக்கூடாது. காங்கிரஸ் அரசின் நீர்பாசனத் துறை அமைச்சர் தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என்றும், காவிரி மேலாண்மை ஆணையம் தண்ணீர் தர உத்தரவிடவில்லை என்றும், தமிழகத்திடமிருந்து காவிரியில் உரிய பங்கு நீரை திறந்துவிட எந்தக் கோரிக்கையும் விடவில்லை என்றும் கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.</p> <p>தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும் என்ற காவிரி ட்ரிபியூனல் தீர்ப்பையும், அதை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலையும், கர்நாடக அரசு முறையாக செயல்படுத்துகிறதா என்பதை கண்காணிப்பதுதான் காவிரி மேலாண்மை ஆணையத்தின் பணி. இதை மறைத்துவிட்டு, மேலாண்மை ஆணையம் உத்தரவிடவில்லை, தண்ணீர் தரமுடியாது என்று கர்நாடக நீர்பாசனத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி சொல்வது வடிகட்டிய பொய்.</p><p>தமிழக மக்களின் வாழ்வோடு கர்நாடக காங்கிரஸ் ஆட்சியாளர்கள் விளையாடுவதை, த.வெ.க. அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கக்கூடாது! கர்நாடக அரசு காவிரி நதிநீர் தீர்ப்பாயம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கர்நாடகம் தமிழகத்திற்கு தரவேண்டிய பங்கு நீரைப் பெறுவதற்கு த.வெ.க. அரசின் முதல்-அமைச்சர் கர்நாடக அரசை வலியுறுத்த வேண்டும்.</p><p>காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கு நீரை கர்நாடக அரசு உடனடியாக விடுவிக்கவில்லையெனில், 'தமிழக அமைச்சரவையில் இருந்து காங்கிரஸ் அமைச்சர் விடுவிக்கப்படுவார்' என்று கர்நாடக காங்கிரஸ் கட்சியை எச்சரிக்க த.வெ.க. அரசின் முதல்-அமைச்சர் தயாரா? 'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்' - 'ஆட்சிப் பொறுப்பில் இருந்து தவறி, மக்களுக்கு அநீதி இழைப்பவர்களை அந்த அறநெறியே, எமனாக (கூற்றாக) மாறி தண்டிக்கும்'</p><p>என்று தமிழக, கர்நாடக இரு ஆட்சியாளர்களையும் எச்சரிக்கிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>கரூர் கூட்டநெரிசல் வழக்கு: சாட்சிகளின் சுதந்திரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஆர்.எஸ்.பாரதி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-stampede-case-measures-must-be-taken-to-protect-the-freedom-of-witnesses-rs-bharathi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-stampede-case-measures-must-be-taken-to-protect-the-freedom-of-witnesses-rs-bharathi#comments</comments><guid isPermaLink="false">3fe82ef1-c43b-4703-8abe-623db0ec9009</guid><pubDate>Thu, 09 Jul 2026 10:27:41 +0000</pubDate><atom:updated>2026-07-09T10:27:41.492Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆர்.எஸ்.பாரதி,RSBharathi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/mfyeai4n/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/mfyeai4n/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான சி.பி.ஐ. விசாரணையை மேற்பார்வையிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி மேற்பார்வைக் குழுவை நியமிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கரூர் த.வெ.க. கூட்டநெரிசல் வழக்கில் சாட்சிகளின் சுதந்திரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேற்பார்வைக் குழுவுக்கு தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மேற்பார்வைக் குழுவுக்கு ஆர்.எஸ்.பாரதி மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-</p> <p>“முதல்-அமைச்சர் விஜய் 10-ந்தேதி(நாளை) கரூருக்கு சென்று த.வெ.க. கூட்டநெரிசலில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் குடும்பங்களுக்கு கருணை அடிப்படையிலான அரசுப் பணிக்கான பணி நியமன ஆணைகளை வழங்க உள்ள நிலையில், நடைபெற்று வரும் விசாரணையில் சாட்சிகளாக உள்ள அந்தக் குடும்பத்தினர் மீது எந்தவிதமான செல்வாக்கும் செலுத்தப்படவோ, அவர்களுடன் தலையீடு மேற்கொள்ளப்படவோ கூடாது என்பதற்கான போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரும் சி.பி.ஐ.யும் மேற்கொள்ளுமாறு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். </p><p>கடந்த 07.07.2026 அன்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய உத்தரவின் அடிப்படையில், சட்டரீதியான தீர்வுகளை நாடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதே கோரிக்கையுடன் ஏற்கனவே மேற்பார்வைக் குழுவிடம் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் குடும்பங்களுக்கு அரசின் நிவாரணம், கருணை அடிப்படையிலான பணி நியமனம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு தமக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை.</p> <p>ஆனால் சி.பி.ஐ. விசாரணைக்கு உட்பட்ட அதே சம்பவத்தின் முக்கிய சாட்சிகளுக்கு வழங்கப்படும் நலன்கள் தொடர்பாக - சாட்சிகளுடன் அரசு நிர்வாகம் நேரடியாக தொடர்புகொள்வது, விசாரணையின் சுதந்திரம் மற்றும் நியாயத்தன்மை குறித்து நியாயமான ஐயத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இவ்வழக்கின் சாட்சிகள் மீது இந்த நலத்திட்ட உதவிகளால் எந்தவிதமான தாக்கமும் ஏற்படாத வகையில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>காஞ்சிபுரத்தில் மின் தடையால் பள்ளிக்கு விடுமுறை; சிரமத்துடன் வீட்டிற்கு திரும்பி சென்ற மாணவர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/school-closed-due-to-power-outage-in-kanchipuram</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/school-closed-due-to-power-outage-in-kanchipuram#comments</comments><guid isPermaLink="false">9757ce7b-ba33-43b9-bc06-edc56261f20b</guid><pubDate>Thu, 09 Jul 2026 10:23:02 +0000</pubDate><atom:updated>2026-07-09T10:23:02.524Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மின் தடை,பள்ளிகளுக்கு விடுமுறை,Kanchipuram,காஞ்சிபுரம்,At school</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/vbztvmqr/kanchi33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின் தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/vbztvmqr/kanchi33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காஞ்சீபுரம் பிள்ளை யார் பாளையம் பகுதியில் தனியார் மெட்ரிக் மேல் நிலை பள்ளி இயங்கி வருகிறது. எல்.கே.ஜி. முதல் 12 -ம் வகுப்பு வரை சுமார் 900 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.</p><p>இந்த நிலையில் பிள்ள்ளையார்பாளையம் பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடைபடும் என்று மின்வாரியம் சார்பில் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.</p><p> மின்தடை காரணமாக இந்த தனியார் பள்ளிக்கு இன்று விடுமுறை அளித்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவித்து உள்ளனர்.</p><h2>பள்ளிக்கு விடுமுறை</h2><p>எனினும்பள்ளி விடு முறை என்பது தெரியாமல் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளிக்கு இன்று காலை ஏராளமான மாணவ-மாணவிகள் வந்த னர். பின்னர் மின்தடை காரணமாக பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டதை அறிந்து சிரமத்துடன் மீண்டும் வீட்டிற்கு  திரும்பி சென்றனர்.</p><p>இதுக்குறித்து பொது மக்கள் கூறுகையில், மின் தடை காரணமாக வாட்ஸ் அப் செயலி மூலம் குறுஞ் செய்தி காலை அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும் உள்ளூரில் இருந்து வரும் மாணவர்களைவிட வெளி யூரில் இருந்து பல்வேறு மாணவர்கள் விடுமுறை விடப்பட்டது தெரியாமல் வந்தனர். மின்தடை காரண மாக பள்ளிக்கு விடுமுறை விடுவது இதுதான் முதல் முறை என்றனர்.</p><h2>அறிவிக்கப்படாத மின் வெட்டு</h2><p>நேற்று இரவு காஞ்சீபுரம் நகரின் பல்வேறு மின்வெட்டு பகுதிகளில் திடீரென ஏற்பட்டது. குறிப்பாக பெரிய காஞ்சீபுரம், பிள் ளையார்பாளையம், பல்லவர்மேடு,தாயார் குளம், ஹசிங் போர்டு, ஏகாம்பரநாதர் கோவில் சன்னதி தெரு, பாண்டவ பெருமாள் கோவில் சன்னதி தெரு, ஒபி.குளம் தெரு, மாண்டுகணீஸ்வரர் கோவில் தெரு, பல்லவர் மேடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேல் மின்சாரமின்றி பொது மக்கள் தவித்தனர்.</p><p>புழுக்கத்தால் அவதிப் பட்ட அவர்கள் காற்றுக்காக வீட்டின் வாசலில் அமர்ந்து இருந்தனர். இதனால் தூக்கம் இன்றி தவித்தனர். இரவு நேரங்களில்<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> மின்தடை</a> ஏற்படுவதை தடுக்க அதி காரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதேபால் காஞ்சீபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் அடிக்கடி அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்பட்டு வருவதாக குற்றம் சாட்டி உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>உணவு சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும்  - எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-full-investigation-should-be-conducted-into-the-fire-that-broke-out-in-the-food-storage-warehouse-edappadi-palaniswami</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-full-investigation-should-be-conducted-into-the-fire-that-broke-out-in-the-food-storage-warehouse-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">fec82ef9-c1f8-4db4-a2fa-3baa8ba5bbd5</guid><pubDate>Thu, 09 Jul 2026 10:16:02 +0000</pubDate><atom:updated>2026-07-09T10:16:02.396Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,Edappadi Palaniswami,Fire accident,தீ விபத்து,Tenkasi,தென்காசி,உணவு சேமிப்பு கிடங்கு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/etieeb8a/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/etieeb8a/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக உணவு சேமிப்பு கிடங்கில் போதிய இடம் இல்லாததால், சில ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடாம்பட்டி, ஐந்தாங்கட்டளை ஊராட்சிகளுக்குட்பட்ட அரசு புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 ஆயிரம் நெல் மூட்டைகள் கருகி வீணாகியதாக செய்திகள் வந்துள்ளன.</p><p>திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் தீ விபத்து ஏற்படுவதற்கு காரணம் என்ன என்பது புரியவில்லை. மேலும் பல நாட்களாக விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட நெல்லை அரிசி மில்களுக்கு அரவைக்கு அனுப்பாமல் அதிகாரிகள் தேக்கி வைத்ததால் அவைகள் பாழ்பட்டு விட்டதாக ஒருசில விவசாயிகள் தெரிவிக்கின்றனர். </p><p>தங்களுடைய தவறுகளை மறைக்க அதிகாரிகளே ஒரு செயற்கையான தீ விபத்தை ஏற்படுத்தியிருப்பார்களோ என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலை தமிழகம் முழுவதும் ஏற்படாமல் இருக்க இந்த தீ விபத்து குறித்து முழு விசாரணை ஒன்றை நடத்தி யார் தவறு செய்திருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று த.வெ.க அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு வேலை அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும் - பெ.சண்முகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-should-stop-announcing-jobs-for-the-families-of-those-who-died-in-the-karur-stampede-p-shanmugam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-should-stop-announcing-jobs-for-the-families-of-those-who-died-in-the-karur-stampede-p-shanmugam#comments</comments><guid isPermaLink="false">ba9c3c1f-44c6-4627-b76b-565329f9927c</guid><pubDate>Thu, 09 Jul 2026 09:55:01 +0000</pubDate><atom:updated>2026-07-09T09:55:01.643Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர் கூட்டநெரிசல்,Govt job,அரசு வேலை,பெ.சண்முகம்,p shanmugam,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,தவெக அரசு,TVK Government</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/291w3a51/Untitled-4.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/291w3a51/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கடந்த ஆண்டு தவெக பிரசாரத்தின்போது கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணிக்கான ஆணை வழங்குவதற்காக தமிழக முதல்-அமைச்சர் விஜய் நாளை (வெள்ளிக்கிழமை) கரூருக்கு செல்கிறார். தொடர்ந்து அவர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.</p><p>இந்த நிலையில் கரூர் கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்கும் அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் ஏற்கனவே கரூர் வருகை தந்திருந்தபோது, அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சோக சம்பவம் நடந்தது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்போவதாகத் தமிழக அரசு தற்பொழுது அறிவித்துள்ளது.</p><p>தவெக பிரசாரத்தின்போது இறந்தவர்கள் என்பதால், தவெக அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வேலைவாய்ப்பை வழங்குகிறதா என்கிற நியாயமான கேள்வி முன் வருகிறது. மேலும், 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. அதற்குள் இப்படியான அறிவிப்புகள் வெளியாவது, வழக்கின் தன்மையை நீர்த்து போக செய்யும்.</p><p>சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி பொறுப்பேற்று, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவது என்பது வேறு, அரசு வேலை வழங்குவது என்பது முற்றிலும் வேறானது. எனவே, பல்வேறு முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் அரசு வேலை வழங்குவது தொடர்பாக முறையான ஒரு பொது வழிகாட்டுதலை (Guidelines) அரசு உருவாக்க வேண்டும். அதுவரை, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேலை வழங்கும் அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>துணைவேந்தர் நியமனத்தில் மாநில சுயாட்சி காக்கப்பட வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/state-autonomy-should-be-protected-in-the-appointment-of-vice-chancellors-stpi-party-insists</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/state-autonomy-should-be-protected-in-the-appointment-of-vice-chancellors-stpi-party-insists#comments</comments><guid isPermaLink="false">82ade599-6965-474f-9682-28cb6f6b65a3</guid><pubDate>Thu, 09 Jul 2026 09:48:38 +0000</pubDate><atom:updated>2026-07-09T09:48:38.715Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>எஸ்டிபிஐ,STPI,STPI Party,நெல்லை முபாரக்,துணைவேந்தர் நியமனம்,எஸ்டிபிஐ கட்சி,Nellai Mubarak,முகம்மது முபாரக்,எஸ்டிபிஐ வலியுறுத்தல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/1czvq7pb/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/1czvq7pb/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:</p><h2>ஆபத்தான நகர்வு</h2><p>தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட அரசுப் பல்கலைக்கழகங்களில் நீண்ட நாட்களாகத் துணைவேந்தர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் நியமனத்தில் கவர்னர் ஏற்படுத்திய முட்டுக்கட்டை காரணமாக,  தமிழக அரசே துணைவேந்தர்களை நியமிக்கும் வகையில் பலகட்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு முந்தைய திமுக அரசால் கொண்டுவரப்பட்ட சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை காரணமாகவே புதிய துணைவேந்தர்களை நியமிப்பதில் காலதாமதம் நிலவி வருகிறது. இதனால் கல்வி நிர்வாகம் முடங்கிக் கிடக்கும் சூழலில், துணைவேந்தர்களைத் தேர்வு செய்வதற்கான 'தேடுதல் குழுவின்' கட்டமைப்பில் தவெக அரசு மேற்கொள்ளத் துணியும் மாற்றங்கள் அதிர்ச்சியையும், பெருங்கவலையையும் அளிக்கின்றன.</p><p>துணைவேந்தர் தேடுதல் குழுவில் தற்போதுள்ள 3 உறுப்பினர்களின் எண்ணிக்கையை 5 ஆக உயர்த்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ள அறிவிப்பு, கவர்னர் தரப்பின் அழுத்தங்களுக்கும், பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) பிரதிநிதியை இக்குழுவில் நுழைப்பதற்கான மத்திய அரசின் மறைமுக தந்திரங்களுக்கும் தமிழ்நாடு அரசு பணிந்து போகிறதோ என்ற பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்கலைக்கழகங்களின் தேடுதல் குழுவில், கவர்னரின் விருப்பப்படி யுஜிசி பிரதிநிதியை இணைப்பது என்பது, தமிழ்நாட்டின் உயர்கல்வித் தன்னாட்சி அதிகாரத்தை முற்றிலுமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லும் ஓர் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஆபத்தான </a>நகர்வாகும்.</p><h2>சற்றும் ஏற்புடையதல்ல</h2><p>"துணைவேந்தர்களை நியமிக்கும் முழு அதிகாரம் மாநில அரசுக்கே வழங்கப்பட வேண்டும்" என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாவை முந்தைய திமுக அரசு கொண்டு வந்தபோது, அப்போதைய கவர்னர் ஆர்.என்.ரவி அதற்கு முட்டுக்கட்டை போட்டார். அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று மாநில அரசு தனது உரிமைகளை நிலைநாட்டியது. தற்போது இது தொடர்பான மற்றொரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதோடு, மாநில அரசுக்குச் சாதகமாகவே தீர்ப்பு அமையும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. இத்தகைய சூழலில், திடீரென இந்நிலைப்பாட்டில் மாற்றம் செய்வது சற்றும் ஏற்புடையதல்ல.</p><p>எனவே, துணைவேந்தர்கள் தேடுதல் குழுவின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 5 ஆக உயர்த்தும் திட்டத்தையும், அதில் யுஜிசி பிரதிநிதியைச் சேர்க்கும் ஆபத்தான முடிவையும் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கை, திறமையான வழக்கறிஞர்களைக் கொண்டு வலுவாக நடத்தி, பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை நியமிப்பதில் தமிழ்நாட்டின் பிரத்தியேக உரிமைகளை அரசு நிலைநாட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும், கல்வி என்பது மாநிலப் பட்டியலில் நீடிக்க வேண்டிய மிக முக்கிய உரிமையாகும். அதில் மத்திய அரசின் மறைமுக அரசியலுக்கு இடம் தராமல், தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் காக்கவும், மாநில சுயாட்சியைக் காக்கவும் தமிழக அரசு உறுதியான, சமரசமற்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>
ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு... 2,670 பேருக்கு வேலைவாய்ப்பு... விக்ரம் சோலார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-15-thousand-crore-investment-employment-for-2670-people-mou-signed-with-vikram-solar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-15-thousand-crore-investment-employment-for-2670-people-mou-signed-with-vikram-solar#comments</comments><guid isPermaLink="false">d416161f-0ebe-450f-b37c-8f760d8e3f76</guid><pubDate>Thu, 09 Jul 2026 09:38:37 +0000</pubDate><atom:updated>2026-07-09T09:38:37.788Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>புரிந்துணர்வு ஒப்பந்தம்,MoU,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,சோலார் நிறுவனம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/puyfkbmy/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/puyfkbmy/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் இன்று (9.7.2026) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், திருநெல்வேலி மாவட்டம், சிப்காட் கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில், 15,037 கோடி ரூபாய் முதலீட்டில், 2,670 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், விக்ரம் சோலார் நிறுவனத்தின் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (Battery Energy Storage Systems - BESS) உற்பத்தி ஆலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.  இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><h2>விக்ரம் சோலார் நிறுவனம்</h2><p>விக்ரம் சோலார் குழுமம் தமிழ்நாட்டில், ஒரகடம் மற்றும் வல்லம் ஆகிய இரண்டு இடங்களில் சூரியஒளி மின்னழுத்த (Solar PV) தொகுதி உற்பத்தி ஆலைகளை நிறுவியுள்ளது. மேலும், திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானில் சூரியஒளி மின்னழுத்த செல்கள் மற்றும் தொகுப்புகளுக்கான ஒருங்கிணைந்த உற்பத்தி வளாகத்தையும் நிறுவியுள்ளது.</p><h2>புரிந்துணர்வு ஒப்பந்தம்</h2><p>இந்நிலையில், இன்று (9.7.2026) திருநெல்வேலி மாவட்டம், சிப்காட் கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில், 15,037 கோடி ரூபாய் முதலீட்டில், 2,670 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், விக்ரம் சோலார் நிறுவனத்தின் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (Battery Energy Storage Systems - BESS) உற்பத்தி ஆலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.</p><p>இந்நிகழ்வில், தொழில் துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா, தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/heavy-rain-likely-in-2-districts-of-tamil-nadu-today</link><comments>https://www.dailythanthi.com/news/weather/heavy-rain-likely-in-2-districts-of-tamil-nadu-today#comments</comments><guid isPermaLink="false">66730927-8e29-486e-8a85-b409e98ef4bc</guid><pubDate>Thu, 09 Jul 2026 09:18:44 +0000</pubDate><atom:updated>2026-07-09T09:18:44.340Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,heavy rain,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு,வானிலை முன்னறிவிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/cbprlhhd/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/cbprlhhd/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:</h2><p>சராசரி கடல் மட்டத்தில், தெற்கு குஜராத்திலிருந்து வடக்கு கேரளா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><p><strong>09-07-2026 மற்றும் 10-07-2026:</strong> கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>11-07-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>12-07-2026 மற்றும் 13-07-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>14-07-2026 மற்றும் 15-07-2026:</strong> தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><h3>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</h3><p><strong>09-07-2026 மற்றும் 10-07-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.</p><p><strong>11-07-2026 முதல் 13-07-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும்.</p><h3>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</h3><p><strong>09-07-2026 மற்றும் 10-07-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.</p><p><strong>11-07-2026 முதல் 13-07-2026 வரை:</strong> தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3° செல்சியஸ் உயர்ந்தும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p><strong>நாளை</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு குறித்த ஆய்வுக் கூட்டம்: முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நடந்தது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-study-meeting-on-business-and-investment-promotion-was-held-under-the-chairmanship-of-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-study-meeting-on-business-and-investment-promotion-was-held-under-the-chairmanship-of-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">77ceea31-09ea-40d8-854c-f2ad366a0e4e</guid><pubDate>Thu, 09 Jul 2026 09:15:57 +0000</pubDate><atom:updated>2026-07-09T09:15:57.871Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,விஜய்,தமிழக அரசு,ஆய்வுக்கூட்டம்,TamilNadu Goverment,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,தவெக அரசு,TVK Government</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/2h44miwk/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/2h44miwk/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக சட்டசபையில் இம்மாத இறுதியில், 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இது என்பதால், தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட பல்வேறு வாக்குறுதிகள் இதில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><h2>ஆய்வுக் கூட்டம்</h2><p>இந்த நிலையில், பட்ஜெட் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. பட்ஜெட்டில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்பது குறித்து, ஒவ்வொரு துறை அமைச்சர்கள், <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அதிகாரிகளுடன் </a>முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தினமும் ஆலோசனை நடத்தி வருகிறார். </p><p>அந்த வகையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.</p><p>முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தொழில்துறை அமைச்சர் எஸ்.கீர்த்தனா, நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் நெ.மரிய வில்சன், தலைமை செயலாளர் மு.சாய்குமார், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமை செயலாளர் ச.விஜயகுமார், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மு.அ.சித்திக் மற்றும் துறைத் தலைவர்கள் கலந்து கொண்டனர். </p>]]></content:encoded></item><item><title>லுக் அவுட் நோட்டீசுக்கு தடை... 15-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக எ.வ.வேலுவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/lookout-notice-stays-hc-orders-ev-velu-to-appear-for-hearing-on-15th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/lookout-notice-stays-hc-orders-ev-velu-to-appear-for-hearing-on-15th#comments</comments><guid isPermaLink="false">f88370a4-aaf2-48c7-8731-6b9fe2830962</guid><pubDate>Thu, 09 Jul 2026 09:03:39 +0000</pubDate><atom:updated>2026-07-09T09:03:39.000Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை ஐகோர்ட்டு,Chennai Highcourt,எ.வ.வேலு,Ev Velu,லுக் அவுட் நோட்டீஸ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/n4w2s2k3/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ எ.வ.வேலு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/n4w2s2k3/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>அறப்போர் இயக்கம் சார்பில் தி.மு.க., முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதில் மாநில நெடுஞ்சாலைத் துறையில்  ஒப்பந்த பணி மேற்கொள்ளாமலேயே பல கோடி ரூபாய் ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருப்பூர், கரூரில் இந்த ஊழல் நடந்துள்ளது என்று கூறப்பட்டு இருந்தது.</p><p>இந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது கடந்த ஜூன் 26-ந்தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அவர் ஏற்கனவே மனு தாக்கல் செய்துள்ளார்.</p><p>அதே நேரம் சிகிச்சைக்காக அவர் வெளிநாடு சென்று விட்டார். இதையடுத்து அவரை தேடப்படும் நபராக அறிவித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் 'லுக் அவுட் நோட்டீஸ்' பிறப்பித்தனர். இந்த 'லுக் அவுட் நோட்டீசை' ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் எ.வ.வேலு, புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். </p><p>இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜூலை 15-ம்தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் விசாரணைக்கு எ.வ.வேலு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.</p><p>மேலும் வழக்கை ரத்து செய்யக்கோரும் எ.வ.வேலு மனுவுக்கு ஜூலை 27-ம்தேதிக்குள் லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க வேண்டும் என்றும், அதுவரை எ.வ.வேலுவுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் கூடாது என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பிரபல தாதா துப்பாக்கி முனையில் கைது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/notorious-gangster-arrested-at-gunpoint-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/notorious-gangster-arrested-at-gunpoint-in-chennai#comments</comments><guid isPermaLink="false">a29681c6-f51b-4a8d-9ecd-187a2caf3acf</guid><pubDate>Thu, 09 Jul 2026 09:01:55 +0000</pubDate><atom:updated>2026-07-09T09:01:55.710Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,கைது,arrest,பிரபல தாதா</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/gngk4n5f/thanan.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/gngk4n5f/thanan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>வடசென்னையில் பிரபல தாதாவாக வலம் வருபவர், எண்ணூர் தனசேகரன். இவரது மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால், போலீசார் அவரை கைது செய்ய தேடி வந்தனர். </p><p>இந்த நிலையில், <a href="https://www.dailythanthi.com/topic/chennai">சென்னை</a> கிண்டி அருகே உள்ள நட்சத்திர விடுதியில் எண்ணூர் தனசேகரன் பதுங்கியிருக்கும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது. அதன் அடிப்படையில், குறிப்பிட்ட நட்சத்திர விடுதிக்கு போலீசார் சென்றனர். எண்ணூர் தனசேகரனிடம் துப்பாக்கி இருப்பதை தெரிந்துகொண்ட போலீசார், துப்பாக்கியுடன் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். </p> <p>துப்பாக்கி முனையில் எண்ணூர் தனசேகரனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு துப்பாக்கி, கார், செல்போன் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><h2>வழக்குப்பதிவு</h2><p>முன்னதாக ஒப்பந்ததாரர் ஒருவரை ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில், எண்ணூர் தனசேகரன் தலைமறைவாகி இருந்தார். இந்த வழக்கில் எண்ணூர் தனசேகரன் மீது போலீசார் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>ஓய்வூதியர்களுக்கான புதிய காப்பீடு திட்ட குறைகளை நீக்கி அரசாணை  வெளியிட வேண்டும் - வேல்முருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-government-decree-should-be-issued-to-eliminate-the-shortcomings-of-the-new-insurance-scheme-for-pensioners-velmurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-government-decree-should-be-issued-to-eliminate-the-shortcomings-of-the-new-insurance-scheme-for-pensioners-velmurugan#comments</comments><guid isPermaLink="false">1e13b213-21ab-4ff0-b1e1-07b155636ad4</guid><pubDate>Thu, 09 Jul 2026 09:01:20 +0000</pubDate><atom:updated>2026-07-09T09:01:20.055Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Velmurugan,வேல்முருகன்,தமிழக வாழ்வுரிமைக் கட்சி,தி.வேல்முருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/gesfbldb/velmurugan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/gesfbldb/velmurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஓய்வூதியர்களுக்கான புதிய காப்பீடு திட்ட குறைகளை நீக்கி திருத்தப்பட்ட அரசாணை  வெளியிடவேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- </p><h2>புதிய காப்பீடு திட்டம்</h2><p>ஓய்வூதியர்களுக்கான புதிய காப்பீடு திட்டத்தில் ஏராளமான மோசடிகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், புதிய காப்பீடு திட்ட குறைகளை நீக்கி திருத்தப்பட்ட அரசாணை வெளியிடவேண்டும்.</p><p>தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட மருத்துவக் காப்பீடு திட்டம் கடந்த 1-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் கட்டணமில்லா சிகிச்சைக்கு பதிலாக 'பேக்கேஜ்' அடிப்படையில் சிகிச்சை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 'பேக்கேஜ்' எவ்வளவு வழங்கப்படும் என்று அரசாணையில் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.</p><h2>'பேக்கேஜ்' முறை</h2><p>இத்திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்த 'பேக்கேஜ்' காப்பீட்டு நிறுவனத்தின் வளர்ச்சிக்கேற்ப 'பேக்கேஜ்' முறையாகவே உள்ளது.</p><p>முந்தைய காப்பீட்டுத் திட்டங்களில் சிகிச்சைக்காகும் செலவில் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை காப்பீட்டு நிறுவனம் வழங்கி வந்தது. இப்போது உள்ள 'பேக்கேஜ்' திட்டத்தில் 15 சதவீதம் முதல் 25 சதவீதம் தான் கிடைக்கும் என்று தெரியவருகிறது.</p><h2>இரண்டு வகையான சிகிச்சை</h2><p>காப்பீட்டுத் திட்டத்தில் இரண்டு வகையான சிகிச்சை முறைகள் உள்ளன. ஒன்று மெடிக்கல் மேனேஜ்மென்ட், மற்றொன்று அறுவை சிகிச்சை. மெடிக்கல் மேனேஜ்மென்ட்டில் இதய அடைப்பு, ரத்த அடைப்பு, தீவிர சுவாசப் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பிரச்சினை</a>, டெங்கு உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை உண்டு.</p><p>எந்த ஒரு மெடிக்கல் மேனேஜ்மென்ட்டாக இருந்தாலும் இந்த 'பேக்கேஜ்' திட்டத்தில் ரூ.10 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும். 3 நாட்களுக்குள் டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும். ஏசி அறை கிடையாது. பொது வார்டில்தான் தங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தில் கண்புரை அறுவை சிகிச்சைக்கு ரூ.30 ஆயிரமாக இருந்த உச்ச வரம்பு ரூ.13 ஆயிரமாகக் குறைக்கப்பட்டு, லென்ஸ் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>குறைகளை நீக்க வேண்டும்</h2><p>மேலும் ஆஞ்சியோ பிளாஸ்டி, இரண்டு ஸ்டெண்ட் வைத்தாலும் ரூ.85 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும். இப்படி ஒவ்வொரு சிகிச்சைக்கும் வழங்கப்படும் 'பேக்கேஜ்' தொகை மிகக் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த 'பேக்கேஜ்'க்கு மருத்துவத் துறை ஒப்புதல் அளித்ததாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் 5 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.</p><p>இதில் ஓய்வூதியர்களுக்கான திட்டத்தில் ஏராளமான மோசடிகள் நடந்துள்ளதாக தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.</p><p> புதிய காப்பீடு திட்ட குறைகளை நீக்கி திருத்தப்பட்ட அரசாணை  வெளியிடவேண்டும்.  என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மகளிர் விடியல் பயணம் பெயர் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/womens-vidyal-payanam-name-changed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/womens-vidyal-payanam-name-changed#comments</comments><guid isPermaLink="false">14a59ec3-f4a7-4337-aad9-f31134d46674</guid><pubDate>Thu, 09 Jul 2026 08:58:08 +0000</pubDate><atom:updated>2026-07-09T08:58:08.646Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,விஜய்,திமுக,DMK,திமுக அரசு,அரசு பேருந்து,தவெக அரசு,மகளிர் விடியல் பயணம்,TVKGovt,GovtBus</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/2jcf65x8/bus33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
மகளிர் விடியல் பயணம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/2jcf65x8/bus33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவ கனவுத் திட்டமான மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் பெயரில் இருக்கும் விடியலை நீக்கி, 'மாற்றம்' செய்துள்ளது தவெக அரசு.</p><h2>‘மகளிர் விடியல் பயணம்’ </h2><p>அரசு சாதாரண கட்டண நகரப் பஸ்களில் பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பொருளாதாரச் சுமையின்றி பயணம் செய்யும் வகையில் இலவசப் பயணத் திட்டம் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவுத் திட்டமான இத்திட்டத்திற்கு ‘மகளிர் விடியல் பயணம்’ என்று பெயரிடப்பட்டு, பஸ்களின் முகப்பு மற்றும் பின்புறக் கண்ணாடிகளில் டிஸ்பிளே போர்டுகளில் அவ்வாறே காட்சிப்படுத்தப்பட்டது. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/mx3srfmh/busone33.jpg" /></figure><h2>தவெக அரசு</h2><p>பணிக்குச் செல்லும் பெண்கள், சிறு தொழில் புரியும் மகளிர் மற்றும் கல்லூரி மாணவிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இத்திட்டம், புதிய அரசின் கீழும் எவ்வித தடையுமின்றித் தொடர்கிறது. தற்போது தமிழகத்தில் புதியதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, திமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் பெயர்களை அதிரடியாக மாற்றம் செய்து வருகிறது.</p> <h2>மகளிர் பயணம்</h2><p>அந்த வரிசையில் ‘மகளிர் விடியல் பயணம்’ என்ற திட்டத்தின் பெயரில் ‘விடியல்’ என்ற வார்த்தையை நீக்கிவிட்டு, சுருக்கமாக ‘மகளிர் பயணம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து மண்டலப் பேருந்துகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.</p><p>நெல்லை, தென்காசி, திருப்பூர், குமரி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் செல்லும் நகரப் பேருந்துகள் வரை அனைத்திலும் பழைய ‘மகளிர் விடியல் பயணம்’ பதிவுகள் முழுமையாக அகற்றப்பட்டு வருகின்றன. அதற்குப் பதிலாக, ‘<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மகளிர் பயணம்</a>’ என்று விளம்பரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை விரைந்து முடிக்குமாறு அனைத்துப் போக்குவரத்துக் கழக கிளை மேலாளர்களுக்கும் தலைமை அலுவலகத்திலிருந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p>புதுக்கோட்டையில் 'விடியல்' நீக்கப்பட்டு மகளிர் பயணம் என்ற பெயருடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நகரப் பேருந்துகளில் 90 சந்தவீத பேருந்துகளில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. </p><p>கன்னியாகுமரி மாவட்டத்தில் இயக்கப்பட்டு வந்த 366 பேருந்துகளிலும் விடியல் பயண திட்ட பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. நான் முதல்வன், முதல்-அமைச்சர் படைப்பகம் பெயர்கள் மாற்றப்பட்ட நிலையில் விடியல் பயண திட்டம் பெயரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  2021ல் திமுக ஆட்சி அமைந்தவுடன் மகளிர் விடியல் பயணம் திட்டத்திற்குதான் தனது முதல் கையெழுத்தை பதிவு செய்தார்.</p>]]></content:encoded></item><item><title>வீட்டின் கதவை உடைத்து பணம், வெள்ளி கொலுசுகள் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-net-mysterious-individuals-who-broke-down-the-door-of-a-house-and-stole-money-and-silver-rings</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-net-mysterious-individuals-who-broke-down-the-door-of-a-house-and-stole-money-and-silver-rings#comments</comments><guid isPermaLink="false">93d40e47-8549-4da6-a105-c6bad29888d1</guid><pubDate>Thu, 09 Jul 2026 08:30:34 +0000</pubDate><atom:updated>2026-07-09T08:30:34.688Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,திருட்டு,silver,mysterious persons,மர்ம நபர்கள்,பணம்,money,வீட்டின் கதவை உடைத்து,வெள்ளி,Theft,போலீசார் வலைவீச்சு,house breaking,police net sweep</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/ndhh2xkg/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வீட்டின் கதவை உடைத்து திருட்டு, போலீசார் வலைவீச்சு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/ndhh2xkg/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், கடலையூரில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணம், வெள்ளி கொலுசுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூர் அருகே உள்ள கடலையூர், முதலியார் தெருவைச் சேர்ந்தவர் வெயில்முத்து. இவருடைய மனைவி சத்யா (வயது 55). இவர் நேற்று முன்தினம் காலையில் எட்டையாபுரத்தில் வசிக்கும் தனது மகள் சசிகலாவின் வீட்டிற்குச் சென்றுள்ளார். </p><h2>வீட்டின் கதவை உடைத்து பணம், வெள்ளி கொலுசு திருட்டு</h2><p>இந்த நிலையில், நேற்று காலையில் சத்யா தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன் பக்கக் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் அறையிலிருந்த பீரோவின் கதவும் திறக்கப்பட்டிருந்தது. </p><p>பீரோவை சோதித்தபோது, அதில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் 2 ஜோடி வெள்ளி கொலுசுகள் திருடு போயிருப்பது தெரியவந்தது. சத்யா ஊரில் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நள்ளிரவில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வீட்டின் கதவை உடைத்து இந்த திருட்டு</a> சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். </p><h2>மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு</h2><p>இதுகுறித்து சத்யா அளித்த புகாரின் பேரில், நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>திருமாவளவனுக்கு நோபல் பரிசு; கிண்டலடித்ததை வாபஸ் பெற்ற வைகோ</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nobel-prize-for-thirumavalavan-vaiko-retracts-his-sarcasm</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nobel-prize-for-thirumavalavan-vaiko-retracts-his-sarcasm#comments</comments><guid isPermaLink="false">21d06d74-45e5-462d-ad80-9cf093f52846</guid><pubDate>Thu, 09 Jul 2026 08:21:44 +0000</pubDate><atom:updated>2026-07-09T08:21:44.210Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vaiko,வைகோ,திருமாவளவன்,Thirumavalavan,நோபல் பரிசு,nobel prize</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/gpkacvei/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/gpkacvei/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே சத்திரப்பட்டி கிராமத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:- </p><h2>நோபல் பரிசு</h2><p>முதல்-அமைச்சர் விஜய் கரூர் போகக்கூடாது; பேசக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றனர். ஆனால் கோர்ட்டு தி.மு.க.வுக்கு சாட்டையடி கொடுத்து உள்ளது. தொடர்ந்து அவரிடம் நிருபர்கள், த.வெ.க.ஆட் சியில் இடம் பெற்றிருந்தாலும் தி.மு.க.வுடன் கூட்டணி தொடர்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்த கருத்து குறித்து கேட்டனர். அதற்கு பதில் அளித்த வைகோ, அவருக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டிய கருத்து அவ்வளவு தான்' என்றார்.</p><p>இதனையடுத்து அரியலூரில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவனிடம் வைகோ உங்களுக்கு நோபல் பரிசு தரலாம் என்று கூறியகருத்து பற்றி கேட்டபோது, 'நோபல் பரிசுக்கு பரிந்துரைத்தமைக்கு நன்றி. பரிசு கிடைத்தாலும் அவருக்கு நன்றி' என்று தெரிவித்தார். இருவரிடையேயான பேச்சு தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><h2>வாபஸ் பெற்ற வைகோ</h2><p>இந்த நிலையில், திருமாவளவனுக்கு நோபல் பரிசு வழங்கலாம் என்று கிண்டலடித்ததை வாபஸ் பெற்றுக்கொள்வதாக வைகோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “15 ஆண்டுகளுக்கு மேலாக அவருக்கு (திருமாவளவன்) ஊக்கம் அளித்துதான் வந்திருக்கிறேன்; என்னால் இயன்ற அளவுக்கு பக்கபலமாக தான் இருந்திருக்கிறேன்; எதிர்காலத்திலும் அப்படிதான் இருப்பேன்.</p><p>நான் பேசிய வார்த்தையால் அவர் மனம் புண்பட்டிருந்தால், நான் பேசிய என் வார்த்தைகளை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்; "விசிக தலைவர் திருமாவளவனை புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. எனக்கு இம்மியளவுகூட அவர் மீது கோபமோ, வருத்தமோ கிடையாது. திருமாவளவன் ஒரு நல்ல தலைவர்” என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>திருச்சி -சார்லபள்ளி வாராந்திர சிறப்பு ரெயில் நிரந்தரமாக இயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/trichy-charlapalli-weekly-special-train-permanently-operational</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/trichy-charlapalli-weekly-special-train-permanently-operational#comments</comments><guid isPermaLink="false">8351b248-2a33-4e7b-af90-b10464782f7f</guid><pubDate>Thu, 09 Jul 2026 08:14:48 +0000</pubDate><atom:updated>2026-07-09T08:14:48.697Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,Special train,திருச்சி,Trichy</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/fwnytbhh/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/fwnytbhh/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>ஸ்ரீரங்கம், </p><p>திருச்சி -சார்லபள்ளி (ஐதராபாத்) சிறப்பு வாராந்திர ரெயில் தற்காலிகமாக இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயிலை நிரந்தர வாராந்திர சிறப்பு ரெயிலாக இயக்க வலியுறுத்தி துரை வைகோ எம்.பி. ரெயில்வே மந்திரி, திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளருக்கு கடிதம் எழுதினார். </p><p>இதனையடுத்து அந்த ரெயில் நேற்று முதல் நிரந்தர வாராந்திர சிறப்பு ரெயிலாக இயக்கப்பட்டது. அந்த ரெயிலுக்கு நேற்று மாலையில் ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் துரை வைகோ எம்.பி. வரவேற்பு அளித்தார். மேலும் பயணிகளுக்கு இனிப்பு வழங்கினார்.</p>]]></content:encoded></item><item><title>மெரினா கடற்கரையில் நடைபெற்று வரும் தூய்மை பணிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cleanup-efforts-underway-at-marina-beach</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cleanup-efforts-underway-at-marina-beach#comments</comments><guid isPermaLink="false">d177823f-0dca-4683-8c76-17761d88897f</guid><pubDate>Thu, 09 Jul 2026 08:09:40 +0000</pubDate><atom:updated>2026-07-09T08:09:40.256Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,கடற்கரை பகுதி,மெரினா கடற்கரை,Marina beach,தூய்மைப் பணிகள்,are underway,Cleanup</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/ntwey88b/214.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூய்மை பணிகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/ntwey88b/214.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கடற்கரைப் பகுதிகளை பொதுமக்களின் பொழுதுபோக்கிற்கு உகந்த வகையில் மேம்படுத்திட மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><h2>தூய்மை பணியாளர்கள்</h2><p>அதனடிப்படையில், மெரினா கடற்கரை, பெசன்ட் நகர், திருவான்மியூர், பாலவாக்கம், நீலாங்கரை, அக்கரை, திருவொற்றியூர் கடற்கரை பகுதியில் தூய்மை பணியாளர்கள் மற்றும் இயந்திரங்கள் கொண்டு நாள்தோறும் சுழற்சி முறைகளில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.</p><p>இதன் ஒரு பகுதியாக, மெரினாவில் உள்ள 2 நீலக்கொடி கடற்கரை திட்டப்பகுதிகள் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் நாள்தோறும் பெரும்பாலான பொதுமக்கள் பொழுதுபோக்கிற்காக வந்து செல்கின்றனர். </p><p>மேலும், வார இறுதி நாட்களில் இங்கு நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. இதனால் இந்த பகுதிகளைத் தூய்மையாக பராமரிக்கும் வகையில் தூய்மை பணியாளர்கள் மற்றும் இயந்திரங்கள் மூலம் நாள்தோறும் சுழற்சி முறையில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">தூய்மை பணிகள்</a> மேற்கொள்ளப்பட்டுப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>கொப்பரை, தோதாபுரி மாம்பழ கொள்முதலுக்கு மத்திய அரசு ஒப்புதல் - நயினார் நாகேந்திரன் நன்றி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/central-government-approves-procurement-of-koparai-dodapuri-mangoes-nainar-nagendran-thanks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/central-government-approves-procurement-of-koparai-dodapuri-mangoes-nainar-nagendran-thanks#comments</comments><guid isPermaLink="false">5c08e7cb-9f59-4d69-a02c-53b445df8a19</guid><pubDate>Thu, 09 Jul 2026 08:04:28 +0000</pubDate><atom:updated>2026-07-09T08:04:28.303Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,procurement,கொள்முதல்,Central Government,மத்திய அரசு ஒப்புதல்,கொப்பரை தேங்காய் கொள்முதல்,தோதாபுரி மாம்பழம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/wz0772nv/8.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/wz0772nv/8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டு, தமிழகத்தில் இருந்து ஒரு குவிண்டாலுக்கு ரூ. 1,545 என்ற விலையில் 96,879 டன் தோதாபுரி மாம்பழங்களும், மொத்த ஆதரவு விலை ரூ. 1,049 கோடி என்ற மதிப்பில் 8,226 டன் கொப்பரைத் தேங்காயும் கொள்முதல் செய்யப்படும் என அறிவித்துள்ள நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சவுகான் சிவராஜ்-க்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். </p><h2>நியாயமான விலை</h2><p>சந்தையில் ஏற்பட்ட மாம்பழ விலை வீழ்ச்சியால், டன் கணக்கான மாம்பழங்களை குப்பையில் கொட்டி வந்த தமிழக விவசாயிகளை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றி, அவர்களுக்கு நியாயமான விலை கிடைக்க வழிவகை செய்துள்ள நமது <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">மத்திய அரசின்</a> இந்த முன்னெடுப்பால், தமிழக கிராமப்புறங்களின் பொருளாதாரம் வலுப்படும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம், தமிழக விவசாயிகளை தாயுள்ளத்துடன் அணுகும் நமது பாரதப் பிரதமர் அவர்களுக்கு ஒட்டுமொத்த தமிழகமே கடமைப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மனைவியுடன் குடும்ப தகராறு: கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/family-dispute-with-wife-construction-worker-commits-suicide-by-hanging</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/family-dispute-with-wife-construction-worker-commits-suicide-by-hanging#comments</comments><guid isPermaLink="false">033a1bb2-02eb-4e73-bf5e-9da520932de1</guid><pubDate>Thu, 09 Jul 2026 07:56:40 +0000</pubDate><atom:updated>2026-07-09T07:56:40.725Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Family dispute,குடும்ப தகராறு,Suicide by hanging,தூக்குப்போட்டு தற்கொலை,Construction worker,கட்டிட தொழிலாளி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/b0zmojhq/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/b0zmojhq/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் அருகே மது போதையில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை</a> செய்து கொண்டார்.</p><h2>குடும்ப தகராறு</h2><p>தூத்துக்குடி மாவட்டம், தாப்பாத்தி இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த வசந்தகுமார் (வயது 38), கட்டிட தொழிலாளி. தற்போது தாப்பாத்தி முகாமில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், வசந்தகுமார் தனது மனைவி பரமேஸ்வரி மற்றும் குழந்தைகளுடன் கடந்த ஒரு மாதமாக எட்டையபுரம் கோட்டை மேல தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். வசந்தகுமாருக்கு மதுப்பழக்கம் இருந்ததால், போதையில் மனைவியுடன் அடிக்கடி குடும்பத் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.</p><h2>கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை</h2><p>இந்த நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல் பரமேஸ்வரி வேலைக்கும், குழந்தைகள் பள்ளிக்கும் சென்றுவிட்டனர். மதியம் 3 மணியளவில் பரமேஸ்வரி வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் உள்ளே வசந்தகுமார் ஆஸ்பெஸ்டாஸ் கூரை கம்பியில் சேலையால் தூக்குப்போட்டு தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அலறியுள்ளார். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது வசந்தகுமார் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எட்டையபுரம் காவல் நிலைய போலீசார், வசந்தகுமாரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கரூர் விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க மதுரை ஐகோர்ட்டு மறுப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-issue-madurai-high-court-refuses-to-hear-it-as-an-urgent-case</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-issue-madurai-high-court-refuses-to-hear-it-as-an-urgent-case#comments</comments><guid isPermaLink="false">30f1b453-da2e-4730-8883-5298caba508f</guid><pubDate>Thu, 09 Jul 2026 07:50:47 +0000</pubDate><atom:updated>2026-07-09T07:50:47.443Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர்,Tamilnadu,தமிழகம்,Karur,Madurai High Court,மதுரை ஐகோர்ட்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/uygz73vk/kerer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/uygz73vk/kerer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>கரூர் நெரிசலில் இறந்த 41 பேரது குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு பணி வழங்கும் நிகழ்ச்சி நாளை (வெள்ளிக்கிழமை) முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறவுள்ளது. </p> <p>இந்த சூழலில், கரூர் நெரிசலில் இறந்தோர் குடும்பத்தினருக்கு அரசுப்பணி வழங்க எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில நிர்வாகி சீனி அகமது வழக்கு தொடர்ந்திருந்தார். </p><p>இந்நிலையில் கரூர் நெரிசலில் இறந்தோர் குடும்பத்தினருக்கு அரசுப்பணி வழங்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கை அவசரமாக விசாரிக்க ஐகோர்ட்டு மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்திற்கான நீரை கர்நாடகாவிடம் கேட்டுப்பெற வேண்டும்: தவெக அரசுக்கு உதயநிதி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-for-tamil-nadu-should-be-requested-from-karnataka-udhayanidhi-urges-the-tvk-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-for-tamil-nadu-should-be-requested-from-karnataka-udhayanidhi-urges-the-tvk-government#comments</comments><guid isPermaLink="false">ec1b06b8-60f5-4da1-b2d4-2c5525a18d6a</guid><pubDate>Thu, 09 Jul 2026 07:50:03 +0000</pubDate><atom:updated>2026-07-09T07:50:03.059Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,உதயநிதி,நீர்,முதல்-அமைச்சர்Chief Minister,Karnataka - கர்நாடகா,TVK Government,Udhayanidhi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/os7xylk4/213.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/os7xylk4/213.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதிஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>‘கர்நாடகத்தில் இருந்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88">காவிரி நீரைத்</a> திறந்து விட முடியாது’ என்றும், ‘நீர் வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் யாரும் கேட்கவில்லை’ என்றும் அம்மாநில நீர்ப்பாசன அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியிருப்பது, நம் விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.</p><h2>பயிர்க்கடன் தள்ளுபடி</h2><p>ஏற்கனவே பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றிய முதல்-அமைச்சர், கர்நாடக அமைச்சரின் இந்தப்பேச்சுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?</p><p>கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில், கடந்த 5 ஆண்டுகள் முழுவதும், சரியாக ஜுன் 12 அன்று மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு இன்று வரை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. </p><p>மேகதாது அணைக் கட்டும் கர்நாடகத்தின் முயற்சிக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, அந்த தீர்மானத்தைத் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிப்பிரதிநிதிகளும் ஒன்றாகச் சென்று ஒன்றிய அரசிடம் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தேன்.</p><p>காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பின்படி, ஜுன் மாதம் வழங்க வேண்டிய 9.91 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறக்காதது குறித்தும் பேசி இருந்தேன்.</p><h2>முதல்-அமைச்சர் கேட்டுப்பெற வேண்டும்</h2><p>இதற்கெல்லாம் முதல்-அமைச்சர் பதில் ஏதும் சொல்லாத நிலையில், தற்போது ஜூலை மாதம் தர வேண்டிய 32 டிஎம்சி தண்ணீரையும் கர்நாடகம் தர மறுக்கிறது. ஆளுங்கட்சியுடன் திடீர் கூட்டணி அமைத்திருக்கும் கட்சியின் ஆட்சி நடைபெறும் கர்நாடகத்திடம் இருந்து, தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய தண்ணீரை முதல்-அமைச்சர் கேட்டுப்பெற வேண்டும். </p><p>எம்.எல்.ஏ.க்களை வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், கர்நாடகாவிடம் இருந்து நமக்கு வர வேண்டிய தண்ணீரை வாங்குவதில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு மின்சார வாரியம் -  ஐஐடி சென்னை இடையே அமைச்சர் நிர்மல் குமார் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mou-signed-between-tamil-nadu-electricity-board-and-iit-chennai-in-the-presence-of-minister-nirmal-kumar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mou-signed-between-tamil-nadu-electricity-board-and-iit-chennai-in-the-presence-of-minister-nirmal-kumar#comments</comments><guid isPermaLink="false">68bbc1ab-4b76-4fc4-b5cc-2447676d1897</guid><pubDate>Thu, 09 Jul 2026 07:37:13 +0000</pubDate><atom:updated>2026-07-09T07:37:13.882Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu Electricity Board,தமிழ்நாடு மின்சார வாரியம்,புரிந்துணர்வு ஒப்பந்தம்,சென்னை ஐஐடி,IIT Chennai,MoU signed,அமைச்சர் நிர்மல் குமார்,Minister Nirmal Kumar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/lsxfgd0q/43.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/lsxfgd0q/43.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு மின்சாரவாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>உலகத் தரத்திலான நவீன தொழில்நுட்பத்தை தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நடைமுறைப்படுத்திட தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB Ltd) – ஐஐடி, சென்னை (IIT Madras) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) எரிசக்தி மற்றும் சட்டத்துறை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF.%20%E0%AE%9F%E0%AE%BF.%20%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமார்</a> முன்னிலையில் கையெழுத்தானது</p><h2>புரிந்துணர்வு ஒப்பந்தம்</h2><p>இன்று (09.07.2026) காலை 10.00 மணியளவில், சென்னை, தமிழ்நாடு மின்சார வாரியத் தலைமையகத்தில், தமிழ்நாடு முதல்-அமைச்சர்   விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசின்  எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமார்  முன்னிலையில், தமிழ்நாட்டின் மின்கட்டமைப்பை தொழில்நுட்ப ரீதியாக மேலும் வலுப்படுத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒருங்கிணைப்பை மேம்படுத்தி, மின் சேவைகளின் நம்பகத்தன்மை, செயல்திறன் மற்றும் தரத்தினை உயர்த்தும் நோக்கில், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகம், சென்னை ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தினை தமிழ்நாடு மின்வாரிய தலைவர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ்., சென்னை ஐ.ஐ.டி.யின் தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சியின் தலைவர் முனைவர். மனு சந்தானம் ஆகியோர் பரிமாறிக் கொண்டனர்.</p><h2>நீண்டகால ஒத்துழைப்பு</h2><p>மாநிலத்தின் மின்துறையை உலகத் தரத்திற்கேற்ப நவீனமயமாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், மின் உற்பத்தி, மின் பரிமாற்றம், மின் பகிர்மானம் மற்றும் பசுமை எரிசக்தித் துறைகளில் புதிய மற்றும் புதுமையான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல், மின்கட்டமைப்பை மேம்படுத்துதல், செயல்திறனை உயர்த்துதல், செலவினச் சிக்கனத்தை ஏற்படுத்துதல், நிபுணத்துவ தொழில்நுட்ப ஆய்வுகள் (Technical Expert Audits), ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&amp;D) பணிகளை ஊக்குவித்தல், செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திரக் கற்றல் (ML), தரவு பகுப்பாய்வு (Data Analytics), டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் தரவுவழி சார்ந்து முடிவெடுத்தல் (Data-driven Decision Making) ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான நீண்டகால ஒத்துழைப்பிற்கு வழிவகுக்கிறது.</p><p>மேலும், மின்கட்டமைப்பின் நிகழ்நேர கண்காணிப்பு, மையப்படுத்தப்பட்ட தரவுக் களஞ்சியம் (Data Centre), மையப்படுத்தப்பட்ட மின் கணக்கியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பாதுகாப்பான ஒருங்கிணைப்பு, மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (Battery Energy Storage Systems – BESS), டிஜிட்டல் ட்வின் (Digital Twin), விரிவாக்கப்பட்ட மெய்நிகர் தொழில்நுட்பங்கள் (AR/VR), அனல்மின் நிலைய செயல்திறன் மேம்பாடு, புதிய தொழில்நுட்ப விளக்கத் திட்டங்கள், திறன் மேம்பாடு மற்றும் அதிகாரிகள், பொறியாளர்களுக்கான சிறப்புப் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படவும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகுக்கும்.</p><h2>நீடித்த மின்கட்டமைப்பு</h2><p>இந்த ஒப்பந்தத்தின் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் துணை நிறுவனங்களான தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL), தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் (TANTRANSCO), தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம் (TNPGCL) மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழகம் (TNGECL) ஆகியவை எதிர்கொள்ளும் தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு சவால்களுக்கு ஐஐடி சென்னை தனது உலகளாவிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தின் மூலம் தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் புதுமையான தீர்வுகளை வழங்கும். மேலும், கூட்டு ஆராய்ச்சி, கொள்கை ஆய்வுகள், தொழில்நுட்ப மதிப்பீடுகள், திறன் மேம்பாடு மற்றும் எதிர்கால மின்துறை தேவைகளுக்கான புதிய தீர்வுகளை உருவாக்குவதற்கான நீண்டகால கூட்டாண்மைக்கும் இவ்வொப்பந்தம் வலுவான அடித்தளமாக அமையும். மேலும், இதன்மூலமாக நிலைத்த மற்றும் நீடித்த மின்கட்டமைப்பினை உறுதி செய்து, தடையற்ற மின் விநியோகம் வழங்க இயலும்.</p><p>இந்நிகழ்வில், தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறை அரசு செயலாளர் அனில் மேஷ்ராம், ஐ.ஏ.எஸ்., தமிழ்நாடு மின்சார வாரிய நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ்., ஐஐடி சென்னையின் இயக்குநர் பேராசிரியர் டாக்டர் வி. காமகோடி, தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர ம. கோவிந்த ராவ், ஐ.ஏ.எஸ்.,  தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் பி. என். ஸ்ரீதர், ஐ.ஏ.எஸ்., தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் இணை மேலாண்மை இயக்குநர் (நிதி) ஐ. சா. மெர்சி ரம்யா, ஐ.ஏ.எஸ்., ஐஐடி சென்னை பேராசிரியர்கள் மற்றும் மின்வாரிய உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பிறந்தநாள் கொண்டாட்டம்: பாடல் போட மறுத்த ஆட்டோ டிரைவரை தாக்கிய த.வெ.க. நிர்வாகி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/birthday-celebration-tvk-executive-arrested-for-attacking-auto-driver-who-refused-to-play-song</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/birthday-celebration-tvk-executive-arrested-for-attacking-auto-driver-who-refused-to-play-song#comments</comments><guid isPermaLink="false">a1f9909f-b393-4199-9752-f33c27dab647</guid><pubDate>Thu, 09 Jul 2026 07:34:15 +0000</pubDate><atom:updated>2026-07-09T07:34:15.930Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,கைது,arrest,road,சாலை,birthday,பாடல்,song,கொண்டாட்டம்,celebration,பிறந்தநாள்,Dispute,தகராறு,த.வெ.க. நிர்வாகி,T.V.K. Executive</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/sp9dlg46/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ த.வெ.க. நிர்வாகி கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/sp9dlg46/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம் பகுதியில் நடுரோட்டில் பிறந்தநாள் கொண்டாடியபோது, பாடல் போட மறுத்த ஆட்டோ டிரைவரை தாக்கிய <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">த.வெ.க. நிர்வாகி கைது</a> செய்யப்பட்டார்.</p><h2>நடுரோட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம்</h2><p>சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம், பூத்தப்பேடு, குப்புசாமி நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). ஆட்டோ டிரைவரான இவர், நேற்று முன்தினம் இரவு ராமாபுரம், ஏழுமலை தெரு வழியாக ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது த.வெ.க. நிர்வாகி பிரீத்குமார் என்பவர் தனது பிறந்த நாளை நண்பர்களுடன் நடுரோட்டில் கொண்டாடியதாகவும், அனைவரும் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.</p><h2>ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்</h2><p>அப்போது மணிகண்டனின் ஆட்டோவை மறித்த பிரீத்குமார் மற்றும் அவரது நண்பர்கள், ஆட்டோவில் உள்ள ஸ்பீக்கர் மூலம் சினிமா பாடல்களை ஒலிக்கச் செய்யுமாறு கேட்டனர். அதற்கு மணிகண்டன் மறுத்ததால் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த த.வெ.க. நிர்வாகி மற்றும் அவரது நண்பர்கள், ஆட்டோ டிரைவர் மணிகண்டனை சரமாரியாக தாக்கினர்.</p><h2>த.வெ.க. நிர்வாகி கைது</h2><p>இதில் காயமடைந்த மணிகண்டன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் கொடுத்த புகாரின்பேரில் ராமாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட த.வெ.க. நிர்வாகி பிரீத்குமார் என்பவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மரணத்திலும் இணைபிரியாத தம்பதி: கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்தார் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-couple-inseparable-even-in-death-wife-passes-away-in-grief-over-husbands-death</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-couple-inseparable-even-in-death-wife-passes-away-in-grief-over-husbands-death#comments</comments><guid isPermaLink="false">4c5e7b09-e147-4b26-b154-e90c521bca02</guid><pubDate>Thu, 09 Jul 2026 07:15:57 +0000</pubDate><atom:updated>2026-07-09T07:15:57.741Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Ramanathapuram,Death,இறப்பு,கணவன் - மனைவி,husband and wife,சோகம்,sad</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/u1sq30q4/Elderly-couple.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/u1sq30q4/Elderly-couple.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமநாதபுரம்,</p><p>ராமநாதபுரத்தில் கணவர் இறந்த துக்கத்தில் இறப்பிலும் இணைபிரியாத அவரது மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.  </p><h2>கணவர் உயிரிழப்பு</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ராமநாதபுரம் மாவட்டம் </a>முதுகுளத்தூர் அருகே உள்ள கீழச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாமணி (வயது 68). விவசாயியான இவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.</p><p>இதையடுத்து அவர் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று (வியாழக்கிழமை) காலை ராஜாமணி பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>அதிர்ச்சியில் பிரிந்த உயிர்</h2><p>ஆஸ்பத்திரியில் கணவர் இறந்த தகவலை உறவினர்கள் வீட்டில் இருந்த அவரது <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மனைவி</a> அங்காளம்மைக்கு (வயது 63) தெரிவித்தனர். கணவரின் மரணச் செய்தியைக் கேட்டதும் நிலைகுலைந்து போன அங்காளம்மை, நெஞ்சு வலியால் துடித்து சம்பவ இடத்திலேயே கண்ணீர் விட்டபடி உயிரிழந்தார்.</p><h2>கிராமமே சோகம்</h2><p>இறப்பிலும் இணைபிரியாத இந்த தம்பதியருக்கு ஒரு மகனும், மூன்று மகள்களும் உள்ளனர். நீண்ட காலம் ஒன்றாக வாழ்ந்து, மரணத்திலும் அடுத்தடுத்து இணைந்த இந்த தம்பதியின் பாசப் பிணைப்பைக் கண்டு ஒட்டுமொத்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.</p><p>இவர்களது இறுதிச் சடங்கு இன்று மாலை கீழச்சிறுபோது கிராமத்தில் நடைபெற உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஓய்வூதியர்களுக்கான புதிய காப்பீடு திட்ட குறைகளை நீக்கி திருத்தப்பட்ட அரசாணை  வெளியிடவேண்டும் - வேல்முருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-revised-government-decree-should-be-issued-to-eliminate-the-shortcomings-of-the-new-insurance-scheme-for-pensioners-velmurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-revised-government-decree-should-be-issued-to-eliminate-the-shortcomings-of-the-new-insurance-scheme-for-pensioners-velmurugan#comments</comments><guid isPermaLink="false">bf2ad204-a790-4554-8ada-a91bbf906366</guid><pubDate>Thu, 09 Jul 2026 07:02:00 +0000</pubDate><atom:updated>2026-07-09T07:02:00.946Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Velmurugan,Pensioners,மருத்துவ காப்பீடு திட்டம்,Insurance Scheme,ஓய்வூதியர்கள்,தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/53lxhf9k/velmurugan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/53lxhf9k/velmurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்  <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D">வேல்முருகன் </a>தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>ஓய்வூதியர்களுக்கான புதிய காப்பீடு திட்டத்தில் ஏராளமான மோசடிகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், புதிய காப்பீடு திட்ட குறைகளை நீக்கி திருத்தப்பட்ட அரசாணை  வெளியிடவேண்டும்.</p><h2>மருத்துவக் காப்பீடு திட்டம்</h2><p>தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட மருத்துவக் காப்பீடு திட்டம் கடந்த 1-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் கட்டணமில்லா சிகிச்சைக்கு பதிலாக 'பேக்கேஜ்' அடிப்படையில் சிகிச்சை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 'பேக்கேஜ்' எவ்வளவு வழங்கப்படும் என்று அரசாணையில் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. இத்திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்த 'பேக்கேஜ்' காப்பீட்டு நிறுவனத்தின் வளர்ச்சிக்கேற்ப 'பேக்கேஜ்' முறையாகவே உள்ளது. முந்தைய காப்பீட்டுத் திட்டங்களில் சிகிச்சைக்காகும் செலவில் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை காப்பீட்டு நிறுவனம் வழங்கி வந்தது. இப்போது உள்ள 'பேக்கேஜ்' திட்டத்தில் 15 சதவீதம் முதல் 25 சதவீதம் தான் கிடைக்கும் என்று தெரியவருகிறது.</p><h2>'பேக்கேஜ்' திட்டம்</h2><p>காப்பீட்டுத் திட்டத்தில் இரண்டு வகையான சிகிச்சை முறைகள் உள்ளன. ஒன்று மெடிக்கல் மேனேஜ்மென்ட், மற்றொன்று அறுவை சிகிச்சை. மெடிக்கல் மேனேஜ்மென்ட்டில் இதய அடைப்பு, ரத்த அடைப்பு, தீவிர சுவாசப் பிரச்சினை, டெங்கு உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை உண்டு. எந்த ஒரு மெடிக்கல் மேனேஜ்மென்ட்டாக இருந்தாலும் இந்த 'பேக்கேஜ்' திட்டத்தில் ரூ.10 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும். 3 நாட்களுக்குள் டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும். ஏசி அறை கிடையாது. பொது வார்டில்தான் தங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தில் கண்புரை அறுவை சிகிச்சைக்கு ரூ.30 ஆயிரமாக இருந்த உச்ச வரம்பு ரூ.13 ஆயிரமாகக் குறைக்கப்பட்டு, லென்ஸ் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>ஏராளமான மோசடிகள்</h2><p>மேலும் ஆஞ்சியோ பிளாஸ்டி, இரண்டு ஸ்டெண்ட் வைத்தாலும் ரூ.85 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும். இப்படி ஒவ்வொரு சிகிச்சைக்கும் வழங்கப்படும் 'பேக்கேஜ்' தொகை மிகக் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த 'பேக்கேஜ்'க்கு மருத்துவத் துறை ஒப்புதல் அளித்ததாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் 5 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் ஓய்வூதியர்களுக்கான திட்டத்தில் ஏராளமான மோசடிகள் நடந்துள்ளதாக தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். புதிய காப்பீடு திட்ட குறைகளை நீக்கி திருத்தப்பட்ட அரசாணை  வெளியிடவேண்டும்.  என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் தயாராகும்: இஸ்ரோ தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kulasekarapattinam-rocket-launch-site-to-be-ready-by-march-next-year-isro</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kulasekarapattinam-rocket-launch-site-to-be-ready-by-march-next-year-isro#comments</comments><guid isPermaLink="false">75db285c-587a-4052-b8a3-59de6f1efbd2</guid><pubDate>Thu, 09 Jul 2026 07:00:34 +0000</pubDate><atom:updated>2026-07-09T07:00:34.282Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இஸ்ரோ,ISRO,குலசேகரன்பட்டினம்,ராக்கெட் ஏவுதளம்,Kulasekharapatnam,rocket launcher</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/fz6it218/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/fz6it218/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>குலசேகரன்பட்டினம் ஏவுதளம்</h2><p>ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள 2 ஏவுதளங்களில் இருந்து மட்டுமே தற்போது ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட்டு வருகின்றன. அதிக எடையை தாங்கி செல்லும் ராக்கெட்டுகளை ஏவுவதற்காக 3-வது ஏவுதளம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைக்கப்பட்டு வருகிறது.</p><p>இந்தநிலையில், தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட் டத்தில் உள்ள <a href="https://www.dailythanthi.com/topic/குலசேகரன்பட்டினம்">குலசேகரன்பட்டினத்தில்</a> 2-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக சுமார் 2 ஆயிரத்து 233 ஏக்கர் பரப்பளவு இடத்தை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கான பணிகளை பிரதமர் மோடி கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரியில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இது இந்திய விண்வெளி உள்கட்டமைப்பில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது. </p><h2>புரட்சியில் இந்தியா...</h2><p>தொடர்ந்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் தளத்திற்கான அடித்தளப் பணிகள் மேல் ஒருங்கிணைப்பு வசதிகள், ஏவுதள சேவைக் கட்டிடம், தரைவழிச் சோதனைகள் மையம், டெலிமெட்ரி அமைப்புகள் மற்றும் எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளுக்கான தனியான ஏவுதளம் அமைக்கப்படுகிறது. ஒருங்கிணைப்புக் கட்டிடத்தின் கட்டுமானம் நடந்து வருகிறது. வருகிற டிசம்பர் மாதம் பணிகளை முடிக்க இலக்கு வைத்திருந்த நிலையில், தற்போது 2027-ம் ஆண்டு மார்ச் மாதம் இங்கிருந்து ராக்கெட்டுகளை ஏவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>உலகளவில் விண்வெளித் துறை அதிக நெரிசலாகவும், வணிகமயமாகவும் மாறிவரும் நிலையில், வேகமாக வளர்ந்து வரும் சிறிய செயற்கைக்கோள் புரட்சியில் இந்தியா போட்டித் தன்மையுடனும், கலாசார ரீதியாக சுறுசுறுப்பாகவும் இருப்பதை குலசேகரன்பட்டினத்தில் அமைக்கப்படும் இந்த வசதி உறுதி செய்கிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர். 'இந்தியாவின் 2-வது விண்வெளி ஏவுதளம் குலசேகரன்பட்டி னத்தில் அடுத்த ஆண்டு (2027) மார்ச் மாதத்திற்குள் தயாராகும்', என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பனகல் அரசர் பிறந்தநாள்: முதல்-அமைச்சர் விஜய் புகழ் வணக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/panagal-kings-birthday-chief-minister-vijay-pukala-pays-tribute</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/panagal-kings-birthday-chief-minister-vijay-pukala-pays-tribute#comments</comments><guid isPermaLink="false">e8b48026-305b-4126-8a26-c4868a4ed062</guid><pubDate>Thu, 09 Jul 2026 06:59:10 +0000</pubDate><atom:updated>2026-07-09T06:59:10.051Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,birthday,Tribute,பிறந்தநாள்,முதல்-அமைச்சர் விஜய்,Tamil Nadu Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/bj42ed9m/212.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விஜய் புகழ் வணக்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/bj42ed9m/212.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக முதல்-அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/search?q=vijay">விஜய் </a>வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சென்னை மாகாணத்தின் இரண்டாவது முதல்-அமைச்சர் பனகல் அரசர் பிறந்தநாளில் அவருக்கு எனது புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.</p><h2>பனகல் அரசர்</h2><p>நீதிக்கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவராகத் திகழ்ந்த அவர், அனைவருக்கும் சமமான வாய்ப்பை உறுதிப்படுத்தினார். அவரது முற்போக்கான சீர்திருத்தங்கள், பின்னாளில் தந்தை பெரியார் முன்னெடுத்த சுயமரியாதை மற்றும் சமூக நீதிப் போராட்டங்களுக்கு வலுவான அடித்தளமாக அமைந்தன. </p><p>கல்வி வளர்ச்சிக்கான அவரது அக்கறை, மக்கள் நலன் சார்ந்த நிர்வாகப் பார்வை ஆகியவை இன்றும் வழிகாட்டும் உயரிய மரபுகளாகத் திகழ்கின்றன. பனகல் அரசரின் புகழ் தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">சென்னை மாகாணத்தின் இரண்டாவது முதலமைச்சர் பனகல் அரசர் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.<br><br>நீதிக்கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவராகத் திகழ்ந்த அவர், அனைவருக்கும் சமமான வாய்ப்பை உறுதிப்படுத்தினார். அவரது முற்போக்கான சீர்திருத்தங்கள், பின்னாளில்…</p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2075100282191847696?ref_src=twsrc%5Etfw">July 9, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: 12-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை- போலீசார் விசாரணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-12th-grade-student-commits-suicide-by-hanging-police-investigating</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-12th-grade-student-commits-suicide-by-hanging-police-investigating#comments</comments><guid isPermaLink="false">f219617c-6574-4cbf-98ee-db2d6c069c08</guid><pubDate>Thu, 09 Jul 2026 06:56:17 +0000</pubDate><atom:updated>2026-07-09T06:56:17.447Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணவி,Thoothukudi,தூத்துக்குடி,தூக்குப்போட்டு தற்கொலை,கயத்தாறு,commits suicide by hanging,Police investigating,போலீசார் விசாரணை,12-ம் வகுப்பு,Gayatharu,12th standard student</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/ihw5klrq/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 12-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/ihw5klrq/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே பள்ளிக்கு செல்லுமாறு தாய் அறிவுறுத்தியதால் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">12-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை</a> செய்து கொண்டார்.</p><h2>12-ம் வகுப்பு மாணவி பள்ளிக்கு செல்லவில்லை</h2><p>தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள ஆத்திகுளம் கிராமம் காலனி தெருவைச் சேர்ந்த ராஜ்குமார், விவசாயி மற்றும் தினக்கூலி தொழிலாளி. இவரது மகள் வர்ஷா(17), 12-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த இரண்டு வாரங்களாக வர்ஷா பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். </p><h2>தாய் அறிவுரை; மகள் தூக்குப்போட்டு தற்கொலை</h2><p>இதனால் வர்ஷாவின் தாயார், மகளிடம் பள்ளிக்கு செல்லுமாறு அறிவுரை கூறிவிட்டு காட்டு வேலைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வர்ஷா அறையின் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய தாயார் கதவை திறந்து பார்த்தபோது, மகள் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். </p><h2>போலீசார் விசாரணை</h2><p>இதுகுறித்து கயத்தாறு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சகோதரரை தாக்கிய வழக்கு: புதுச்சேரி கோர்ட்டில் அமைச்சர் மரிய வில்சன் ஆஜராக விலக்கு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-regarding-assault-on-younger-brother-minister-maria-wilson-granted-exemption-from-appearing-in-puducherry-court</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-regarding-assault-on-younger-brother-minister-maria-wilson-granted-exemption-from-appearing-in-puducherry-court#comments</comments><guid isPermaLink="false">602bf737-7175-4600-beb9-03d3f9bf372e</guid><pubDate>Thu, 09 Jul 2026 06:49:50 +0000</pubDate><atom:updated>2026-07-09T06:49:50.946Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,புதுச்சேரி,வழக்கு,puduchery,அமைச்சர் மரிய வில்சன்,Minister Maria Wilson</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/s73k8pt3/tess.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் மரிய வில்சன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/s73k8pt3/tess.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுச்சேரி,</p><p>புதுச்சேரியை சேர்ந்தவர் நெஸ்தோர். இவரது மகன்கள் மரிய குளோத் (வயது 47) <a href="https://www.google.com/search?q=%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+daily+thanthi&amp;sca_esv=f3ea53565e54e9f4&amp;biw=1536&amp;bih=730&amp;tbm=nws&amp;sxsrf=APpeQnt4Du5z2pCr68QFeOPDYnUyzsb8Hg%3A1783578353268&amp;ei=8T5Patn_D86ZseMP9t2yyQ8&amp;ved=0ahUKEwiZvLOR-8SVAxXOTGwGHfauLPkQ4dUDCA0&amp;uact=5&amp;oq=%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+daily+thanthi&amp;gs_lp=Egxnd3Mtd2l6LW5ld3MiMOCuruCusOCuv-CuryDgrrXgrr_grrLgr43grprgrqngr40gZGFpbHkgdGhhbnRoaTIJECEYChigARgqSKMbUFNYnRZwAHgAkAEAmAG3AqABwBmqAQcwLjMuOS4yuAEDyAEA-AEBmAIOoAKDGsICDRAAGIAEGIoFGEMYsQPCAgUQABiABMICChAAGIAEGIoFGEPCAgYQABgWGB7CAggQABgWGB4YCsICCBAAGIAEGKIEwgIFEAAY7wXCAgUQIRigAZgDAIgGAZIHBzAuMy45LjKgB5YysgcHMC4zLjkuMrgHgxrCBwgwLjEwLjMuMcgHJYAIAQ&amp;sclient=gws-wiz-news">மரிய வில்சன்</a> (வயது 44). இதில் மரிய வில்சன் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது தமிழக நிதி அமைச்சராக உள்ளார்.</p><h2>கொலை மிரட்டல்</h2><p>முன்னதாக மரிய வில்சனுக்கும், அவரது அண்ணன் மரிய குளோத்துக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்துள்ளது. கடந்த 8.8.2022-ந் தேதிஅன்று மரிய வில்சன், அவரது தந்தை நெஸ்தோர் ஆகியோர், புதுவை 'எழில் நகரில் உள்ள மரிய குளோத் வீட்டுக்குள் புகுந்து அவரையும், அவரது மனைவி கேர்லின் குளோத்தையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.மேலும் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.</p> <h2>6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு</h2><p>இது குறித்து கேர்லின் குளோத் புதுவையில் உள்ள லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் மரிய வில்சன், நெஸ்தோர் ஆகியோர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி முதன்மை குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி சேரலாதன் முன்னிலையில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் மரிய வில்சன் மீதான குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர்.</p> <h2>விசாரணை</h2><p>இந்த குற்றப்பத்திரிகை நகலை தமிழக அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராகி பெற வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு கடந்த சனிக்கிழமை அன்று விசாரணைக்கு வந்த நிலையில், சகோதரர் மற்றும் அவரது மனைவியை வீடு புகுந்து தாக்கிய வழக்கில் அமைச்சர் மரிய வில்சன்  ஆஜராகாத நிலையில் நாளை (ஜூலை 10ம் தேதி) ஆஜராக புதுச்சேரி கோர்ட்டு மீண்டும் உத்தரவு பிறப்பித்தது.</p><h2>சமரச தீர்வு மையம்</h2><p>இந்நிலையில் புதுச்சேரி கோர்ட்டில் நிதி அமைச்சர் மரிய வில்சன் நாளை (ஜூலை 10ம் தேதி) ஆஜராவதில் இருந்து சென்னை ஐகோர்ட்டு விலக்கு அளித்துள்ளது  .</p><p>சொத்து தகராறில் சகோதரர், அவரது மனைவியை தாக்கியதாக நிதி அமைச்சர் மரிய வில்சன் மீது பதியப்பட்ட குடும்ப பிரச்னை தொடர்பான வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி நீதிபதி இளந்திரையன் உத்தரவு பிறப்பித்தார். மேலும் வரும் 13 ஆம் தேதி சென்னை ஐகோர்ட்டின் சமரச தீர்வு மையத்தில் ஆஜராக அமைச்சர் மரிய வில்சனுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை முடக்கும் முயற்சியில் விஜய் அரசு இறங்கியிருக்கிறது - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vijay-government-is-trying-to-stall-the-paranthur-airport-project-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vijay-government-is-trying-to-stall-the-paranthur-airport-project-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">6e0942b1-e63f-43e5-9e30-4153bd6872a4</guid><pubDate>Thu, 09 Jul 2026 06:37:06 +0000</pubDate><atom:updated>2026-07-09T06:37:06.066Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,சென்னை,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,பரந்தூர் விமான நிலையம்,Paranthur Airport,Chief Minister S.Joseph Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/xntohga4/211.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/xntohga4/211.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன்</a> தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>அமைச்சர் நிர்மல் குமாரின் பொய் பிரசாரமும், தமிழகத்தின் எதிர்காலத்திற்கு தவெக அரசு செய்யும் துரோகமும்!</p><p>தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கும் முட்டுக்கட்டை போடும் வகையில், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை முடக்கும் முயற்சியில் ஜோசப் விஜய் அரசு இறங்கியிருக்கிறது! மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் விரிவான ஆய்வுகளுக்குப் பின் முறைப்படி அனுமதி பெற்ற ஒரு திட்டத்திற்கு, 'ஓடுதளம் அமைக்க முடியாது' என்று தவெக அமைச்சர்  </p><h2>விரிவான ஆய்வுகள்</h2><p>நிர்மல் குமார் கூறுவது அப்பட்டமான பொய்யாகும்; மேலும், இது தமிழகத்தின் எதிர்காலத்திற்கு செய்யும் துரோகமாகும் அமைச்சர் நிர்மல் குமார், இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவை விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு, நீர்நிலைகளைக் கணக்கில் கொண்டுதான் கொள்கை அளவிலான அனுமதியை வழங்கின என்பது உங்களுக்குத் தெரியாதா?</p><p>ஏற்கனவே தொழில்நுட்ப நிபுணர் குழுக்கள் நீர்நிலைகளைப் பாதுகாத்து ஓடுதளம் அமைப்பதற்கான பொறியியல் தீர்வுகளைப் பரிந்துரைத்திருக்கும்போது, இப்போது திடீரெனப் புதிய சிக்கலை உருவாக்குவது ஏன்?</p><p>இது உண்மையான தொழில்நுட்பப் பிரச்சினையா? அல்லது, உங்கள் கட்சியின் மலிவான ஓட்டு வங்கி அரசியலுக்காக மாநிலத்தின் வளர்ச்சியைப் பலியிடும் செயலா?</p><h2>வலியுறுத்தல்</h2><p>இட நெருக்கடி காரணமாக சென்னை விமான நிலையத்தை மேலும் விரிவுபடுத்த இயலாத நிலையில், இத்திட்டத்தைத் தாமதப்படுத்துவது தமிழகத்தின் சர்வதேச வர்த்தக வாய்ப்புகளைப் பறித்துவிடும். எனவே, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் காலதாமதமின்றி உடனடியாகத் தொடர மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தீ விபத்து: ரூ.3 கோடி மதிப்பிலான நிலக்கரி எரிந்து சேதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fire-at-thoothukudi-thermal-power-plant-coal-worth-rs-3-crores-burnt-and-damaged</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fire-at-thoothukudi-thermal-power-plant-coal-worth-rs-3-crores-burnt-and-damaged#comments</comments><guid isPermaLink="false">a275d686-ac53-4deb-9fc5-1768f49a8f01</guid><pubDate>Thu, 09 Jul 2026 06:02:39 +0000</pubDate><atom:updated>2026-07-09T06:02:39.980Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தீ விபத்து,Fire,Thoothukudi,தூத்துக்குடி,thermal power plant,அனல்மின் நிலையம்,Damage,சேதம்,நிலக்கரி,coal,ரூ.3 கோடி,Rs.3 crore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/utr1j7f5/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தீ விபத்து ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/utr1j7f5/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி என்.டி.பி.எல். <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அனல்மின் நிலைய நிலக்கரி சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீ </a>விபத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான நிலக்கரி எரிந்து  சேதமடைந்தது.</p><h2>அனல்மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து </h2><p>தூத்துக்குடி துறைமுக சாலையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான என்.டி.பி.எல். அனல்மின் நிலையத்தில் தலா 500 மெகாவாட் திறன் கொண்ட 2 மின் உற்பத்தி அலகுகள் இயங்கி வருகின்றன. மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, சேமிப்புக் கிடங்குகளில் குவித்து வைக்கப்படுகிறது. இந்த நிலையில், நிலக்கரி குவியலில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு திடீரென தீப்பிடித்தது.</p><h2>5 தீயணைப்பு வாகனங்கள்</h2><p>அப்போது வீசிய பலத்த காற்றின் காரணமாகத் தீ மளமளவெனப் பரவியது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் 5 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அனல்மின் நிலைய பொறியாளர்களும், பணியாளர்களும் இணைந்து அருகிலிருந்த பிற நிலக்கரி குவியல்களுக்கும், மின் உற்பத்தி அமைப்புகளுக்கும் தீ பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.</p><h2>ரூ.3 கோடி மதிப்புள்ள நிலக்கரி எரிந்து சேதம்</h2><p>இருப்பினும் இந்த தொழில்நுட்ப விபத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான நிலக்கரி சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தால் மின் உற்பத்தியில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அனல்மின் நிலைய நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்துக்கான தொழில்நுட்பக் குறைபாடுகள் குறித்து தெர்மல்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பனகல் அரசர் பிறந்தநாள் - மு.க.ஸ்டாலின் புகழாரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/birthday-of-the-king-of-panagal-mk-stalins-eulogy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/birthday-of-the-king-of-panagal-mk-stalins-eulogy#comments</comments><guid isPermaLink="false">e0ead687-b550-432c-9b52-4db0276f3300</guid><pubDate>Thu, 09 Jul 2026 06:00:32 +0000</pubDate><atom:updated>2026-07-09T06:00:32.385Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,மு.க.ஸ்டாலின்,பிறந்தநாள்,M.K. Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/x43r3v8q/42.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/x43r3v8q/42.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தி.மு.க. தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின்</a>  தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>"தேடற்கரிய ஒப்புயர்வற்ற நமதருமைத் தலைவர்" எனத் தந்தை பெரியாரால் போற்றப்பட்ட பனகல் அரசரின் பிறந்தநாள் இன்று!</p><p>பனகல் அரசர் குறித்த புத்தகமே முத்தமிழறிஞர் கலைஞருக்கு அரசியலில் ஆர்வத்தை விதைத்தது.</p><h2>பெண்களுக்கு வாக்குரிமை</h2><p>சமூகநீதியின் அடித்தளமான வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணை, இந்து சமய அறநிலையப் பாதுகாப்புச் சட்டம், பெண்களுக்கு வாக்குரிமை, மருத்துவம் பயில சமஸ்கிருதம் கட்டாயமில்லை என்ற உத்தரவு எனத் தமது ஆட்சிக்காலத்தில் அவர் செய்த சாதனைகள்தாம் நம் திராவிட மாடலுக்கு அடிப்படை!</p><p>நம் கொள்கை முன்னோர்கள் நமக்குத் பெற்றுத் தந்த உரிமைகளை உயிரெனக் காப்போம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அண்டை மாநிலங்களையும் கவரும் முதல்-அமைச்சர் விஜய்யின் அரசியல் நடவடிக்கை: தூக்கி வைத்து கொண்டாடும் மக்கள்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijays-political-move-is-attracting-attention-from-neighboring-states-people-are-celebrating</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijays-political-move-is-attracting-attention-from-neighboring-states-people-are-celebrating#comments</comments><guid isPermaLink="false">a3bc07d6-2870-49b6-a8bf-04b261a63352</guid><pubDate>Thu, 09 Jul 2026 05:36:52 +0000</pubDate><atom:updated>2026-07-09T05:36:52.610Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,அரசியல்,tvk vijay,tn politics,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,Chief Minister Vijay,Tamil Nadu Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/p5mbkvnv/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/p5mbkvnv/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <h2>சினிமா வரலாறு</h2><p>நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பது தமிழகத்திற்கு ஒன்றும் புதிதல்ல. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, சிவாஜிகணேசன் என்று அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஆனால், சினிமா உலகில் கொடிகட்டிப் பறந்து, அதன்பிறகு மார்க்கெட் இழக்கும்போதுதான் பலர் அரசியலுக்கு வந்திருக்கின்றனர். இதுதான், கடந்த கால சினிமா வரலாறு.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/p8jwsxuq/Untitled-7.jpg" /></figure><h2>2½ ஆண்டுகளில் ஆட்சி அமைப்பு</h2><p>ஆனால், உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருந்த போதே, திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர் நடிகர் விஜய். அதுவும் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கிய 2½ ஆண்டு காலத்திலேயே தமிழகத்தில் ஆட்சியையும் பிடித்துவிட்டார். </p><p>பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடிக்கவில்லை என்றாலும், அவர் முதலில் சொன்னதுபோல கூட்டணி ஆட்சியை ஏற்படுத்திக்கொண்டு, தி.மு.க. - அ.தி.மு.க. என்ற இருபெரும் திராவிட கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் ஆட்சியை நடத்த தொடங்கியிருக்கிறார்.</p><p>அவருடைய 2 மாத கால ஆட்சியில், பெண்கள் - சிறுமிகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள், மின்தடை பிரச்சினை ஆகியவை அதிகரித்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். மற்றபடி, த.வெ.க. அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் முந்தைய ஆட்சிக்கு பரவாயில்லை என்று பொதுமக்கள் சொல்லும் அளவுக்கே உள்ளது. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/vr5kvy63/Untitled-8.jpg" /></figure><h2>அண்டை மாநிலங்களில் விஜய்</h2><p>முதல்-அமைச்சர் விஜய், நடிகராக இருந்தபோது அவருடைய திரைப்படங்களில் பல, தமிழைத் தாண்டி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் 'டப்' செய்து வெளியிடப்பட்டிருக்கின்றன.  இதனால், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மராட்டியம் ஆகிய மாநிலங்களிலும் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம். பல இடங்களில் அவருக்கு ரசிகர் மன்றங்களும் செயல்பட்டு வருகின்றன. </p><p>இந்த நிலையில், தமிழகத்தில் முதல்-அமைச்சர் விஜய் கொண்டுவரும் திட்டங்கள், அவருடைய செயல்பாடுகளை அண்டை மாநில தனியார் தொலைக்காட்சிகளும் செய்தியாக வெளியிட்டு வருகின்றன. இது விஜய்யினுடைய அண்டை மாநில ரசிகர்களையும், அங்குள்ள பொதுமக்களையும் ஈர்த்து வருகின்றன. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/ld9o5wh8/Untitled-9.jpg" /></figure><h2>தமிழக மக்கள் கொடுத்து வைத்தவர்கள்...</h2><p>அந்த வகையில், நேற்று முதல்-அமைச்சர் விஜய், சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பச்சிளம் குழந்தைகளை தூக்கி கொஞ்சினார்.  இந்தக் காட்சி, கர்நாடக மாநிலத்தில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் செய்தியாக வெளியிடப்பட்டதுடன், அந்நிறுவனத்தின் சமூக வலைதளங்களிலும் வீடியோவாக காட்சிப்படுத்தப்பட்டது. இது அங்குள்ள விஜய் ரசிகர்களையும், பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்தது. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/9b7u9w4g/Untitled-5.jpg" /></figure><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/3uguf8sp/Untitled-4.jpg" /></figure><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/5de3orc1/Untitled-1.jpg" /></figure><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/4cp5w8iy/Untitled-2.jpg" /></figure><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/5q02e9dg/Untitled-6.jpg" /></figure><p>பலர் அந்த வீடியோவுக்கு கீழே, 'கமெண்ட்' பகுதியில் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில், "இப்படி ஒரு முதல்வரை பெற்ற தமிழக மக்கள் கொடுத்து வைத்தவர்கள்", "கர்நாடகாவில் இவர்தான் நிக்கிறாரு", "இந்த தலைவர் நம்ம கர்நாடகாவுக்கு வரனும்", "கர்நாடகாவுக்கு இந்த தலைவனை கொடு இறைவா", "தமிழக மக்கள் ரொம்ப அதிர்ஷ்டம் செய்திருக்கிறார்கள்", "தமிழக மக்கள் சரியாக தேர்வு செய்திருக்கிறார்கள்" என்று பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>விஜய்யின் புகழ்</h2><p>மொத்தத்தில், தமிழகத்தையும் தாண்டி அண்டை மாநிலங்களிலும் முதல்-அமைச்சர் விஜய்யின் புகழ் பரவத் தொடங்கியிருக்கிறது. அங்குள்ள ரசிகர் மன்றங்களும் அரசியல் இயக்கமாக உருவெடுத்தால், தென்மாநில முக்கிய அரசியல் தலைவராக விஜய் உருவெடுப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. </p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/x6nqha92/Untitled-3.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் மீண்டும் தேர்தல் நடந்தால்; விஜய் 180 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவார்: வைகோ பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-elections-are-held-again-in-tamil-nadu-vijay-will-win-more-than-180-seats-vaiko-interview</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-elections-are-held-again-in-tamil-nadu-vijay-will-win-more-than-180-seats-vaiko-interview#comments</comments><guid isPermaLink="false">8f83af64-de24-46d9-acd9-976d8117ce8b</guid><pubDate>Thu, 09 Jul 2026 05:21:34 +0000</pubDate><atom:updated>2026-07-09T05:21:34.606Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Election,தேர்தல்,Thoothukudi,தூத்துக்குடி,வெற்றி,Interview,பேட்டி,Victory,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,MDMK General Secretary Vaiko,த.வெ.க. தலைவர் விஜய்,T.V.K. leader Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/4p4u6z5b/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/4p4u6z5b/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தமிழகத்தில் இப்போது மீண்டும் தேர்தல் நடந்தால் கூட விஜய் 180 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவார் என்பதே தற்போதைய கள நிலவரம் என்று <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ </a>தெரிவித்தார்.</p><h2>சீமை கருவேல மரங்கள் அகற்றும் திட்டம்</h2><p>சுற்றுச்சூழலுக்குப் பெரும் கேடு விளைவிக்கும் சீமை கருவேல மரங்களை தமிழ்நாட்டில் இருந்து வேரோடு அகற்றுவதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நீண்ட காலமாக தீவிர சட்டப் போராட்டங்களை முன்னெடுத்து வருவதோடு, களப்பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள வில்லிசேரி பகுதிக்கு உட்பட்ட சத்திரப்பட்டியில் சீமை கருவேல மரங்களை அகற்றும் திட்டத்தை வைகோ கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.</p><p>அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ கூறியதாவது: </p><p>ஸ்டெர்லைட் பிரச்சினை, முல்லை பெரியாறு அணை பிரச்சினை, சீமை கருவேல மரங்கள் அகற்றம் என பல்வேறு பிரச்சினைகளுக்காக 20 ஆண்டு காலமாக போராடி வருகிறேன். முல்லை பெரியாறு அணையை உடைக்க கேரளா அரசு தீவிரமாக இருந்தபோது, அதை எதிர்த்து நடைபயணம், மறியல் என போராட்டங்களை நடத்தினோம். </p><p>தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த பிரதமர் நரேந்திர மோடி முயற்சி செய்தபோது, அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தடை வாங்கப்பட்டது. மேகதாது அணை பிரச்சினைக்கு எதிராகவும் கட்சி பாகுபாடின்றி போராடினோம். தமிழக அரசு சீமை கருவேல மரங்களை அகற்றுவதை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும். </p><h2>ஊழல் என்னும் கொடிய நோய் ஒழிப்பு</h2><p>பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்பது தொடக்க கால கோரிக்கை. ஆனால், நிதி நெருக்கடிக்கு இடையே அதை எப்படி செயல்படுத்த முடியும்? கல்வி நிறுவனங்கள் தொடங்க கூடுதல் கட்டணம் கேட்கப்படுகிறது. தமிழகத்தில் தலைவிரித்து ஆடிய ஊழல் என்னும் கொடிய நோயை த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய் ஒழித்துள்ளார்.</p><h2>விஜய் 180 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவார்</h2><p>தற்போதைய சூழலில் த.வெ.க. தலைமையிலான கூட்டணியில் ம.தி.மு.க. இடம்பெற்றுள்ளது. செந்தில் பாலாஜி அண்ணா தி.மு.க.வில் இருந்தபோது எவ்வளவு ஊழல் நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். தமிழகத்தில் இப்போது மீண்டும் தேர்தல் நடந்தால் கூட விஜய் 180 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவார் என்பதே தற்போதைய கள நிலவரம். </p><p>இவ்வாறு அவர்  கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பள்ளிக்கரணை சதுப்பு நிலம் சூறையாடப்படுவதை அனுமதிக்க
கூடாது - அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-pallikaranai-swampland-should-not-be-allowed-to-be-plundered-anbumani-insists</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-pallikaranai-swampland-should-not-be-allowed-to-be-plundered-anbumani-insists#comments</comments><guid isPermaLink="false">b6ae742d-1731-4683-bb0a-966f5bfa891f</guid><pubDate>Thu, 09 Jul 2026 05:00:01 +0000</pubDate><atom:updated>2026-07-09T05:00:01.555Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,அன்புமணி,பள்ளிக்கரணை சதுப்பு நிலம்,Pallikaranai Swamp,Anbumani Ramadas,வலியுறுத்தல்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/9y5xmhwt/anbumani.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-09/9y5xmhwt/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றிலும் ஒரு கி.மீ தொலைவுக்கு புதிய கட்டுமானங்களை மேற்கொள்ள பசுமைத் தீர்ப்பாயம் ஆணையிட்டிருப்பதால், ரூ.72,000 கோடி அளவுக்கு பொருளாதார நடவடிக்கைகள் முடங்கிக் கிடப்பதாகவும், அந்தத் தடையை அரசு நீக்க வேண்டும் என்றும் கிரடாய் எனப்படும் ரியல் எஸ்டேட்  சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. பொருளாதாரம் என்ற இனிப்பு பூசி முன்வைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழலை சூறையாடக் கூடிய இந்த நச்சுக் கோரிக்கை மிகவும் ஆபத்தானதும், கண்டிக்கத்தக்கதுமாகும்.</p><h2>பள்ளிக்கரணை சதுப்பு நிலம்</h2><p>பள்ளிக்கரணையொட்டிய பகுதிகளில் சதுப்பு நிலங்களும், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்பட வேண்டுமா? அல்லது அடுக்குமாடி வீடுகளைக் கட்டி பொருளாதார நடவடிக்கைகளை பெருக்க வேண்டுமா? என்று கேட்டால், முதல் வாய்ப்பைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். உலகில் சில விஷயங்களை பொருளாதார அளவு கோல் கொண்டு அளவிட முடியாது; அவற்றில் முதன்மையானது சுற்றுச்சூழல் ஆகும். அதுமட்டுமின்றி, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பள்ளிக்கரணை சதுப்பு நிலம்</a> என்பது இப்போதுள்ள வெறும் 1725 ஏக்கர் சார்ந்த ஒன்றல்ல... ஒட்டுமொத்த சென்னையையும் வெள்ளத்திலிருந்து பாதுகாக்கும் இயற்கை அரணாக அது செயல்பட்டு வருகிறது; அது சீரழிக்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது.</p><h2>பாதுகாக்கப்பட்ட இடம்</h2><p>ஒரு காலத்தில் அடையாற்றின் உட்புறத்தில் தொடங்கி பக்கிங்காம் கால்வாய் வரையிலும், கிண்டி முதல் சிறுசேரி வரையிலும் 15,000 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம், ஆக்கிரமிப்புகள் காரணமாக இப்போது 1725 ஏக்கராக சுருங்கிவிட்டது. கடந்த பல பத்தாண்டுகளாகவே இந்த சீரழிவு தொடர்ந்து வரும் நிலையில், அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்க வேண்டும்; ராம்சர் தளங்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 2003-ஆம் ஆண்டு பள்ளிக்கரணை முதல் சோழிங்கநல்லூர் வரை மிதிவண்டி பரப்புரை பயணம் மேற்கொண்டேன். அதன் பிறகும் பா.ம.க.வும், பசுமைத் தாயகம் அமைப்பும் தொடர் இயக்கங்களை மேற்கொண்டதன் பயனாகவே பள்ளிக்கரணை சதுப்பு நிலம் இராம்சர் ஈரநிலமாக 2022 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் நாள் அறிவிக்கப்பட்டது.</p><h2>ஈரநிலங்கள் ஆணையம்</h2><p>தமிழ்நாடு அரசின் சதுப்புநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள் 2017 (The Wetlands (Conservation and Management) Rules, 2017) சதுப்புநிலங்களை பாதுகாப்பதற்காக அதன் எல்லைகள் வரையறை செய்யப்பட்டு அறிவிக்கையாக வெளியிடப்பட வேண்டும். பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ஈரநிலமாக அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், அதன் எல்லைகளையும், தாக்கப்பகுதிகளையும் வரையறுத்து சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் தெரிவிக்க வேண்டியது அதை நிர்வகிக்கும் அதிகாரம் கொண்ட ஈரநிலங்கள் ஆணையத்தின் கடமையாகும். அவ்வாறு செய்வதன் மூலம் அந்தப் பகுதியில் கட்டுமானம் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் தடை செய்யப்படும். ஆனால், இந்தக் கடமைகள் எதையும் தமிழக அரசும், ஈர நிலங்கள் ஆணையமும் செய்யவில்லை.</p><p>இன்னொருபுறம், இஸ்ரோ அமைப்பின் SAC Wetlands Atlas 2021 பட்டியலில் உள்ள 2.25 ஹெக்டேருக்கு கூடுதலான பரப்பளவு கொண்ட தமிழகத்தின் 26,883 சதுப்புநிலங்களின் எல்லைகளை மூன்று மாத காலத்திற்குள் வரையறை செய்து தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் என 11.12.2024-ஆம் நாள் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவையும் அரசு செயல்படுத்தவில்லை. அதற்கு காரணம், தங்களுக்கு கிடைக்கும்  ஆதாயங்களுக்காக  பள்ளிக்கரணை சதுப்பு நிலம் உள்ளிட்ட அனைத்து ஈர நிலப் பகுதிகளிலும் கட்டுமானப் பணிகள் தொடர வேண்டும் என்று ஆட்சியாளர்கள் நினைத்தது தான். அதனால் தான் பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் ரூ.2000 கோடி செலவில் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டுவதற்கு தனியார் நிறுவனத்திற்கு திமுக அரசு அனுமதி அளித்தது.</p><h2>சென்னையின் அடையாளம்</h2><p>பள்ளிக்கரணை சதுப்பு நிலமும், சென்னை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ஈர நிலங்களும் இயற்கை நமக்கு அளித்த கொடை ஆகும். பல பத்தாண்டுகளுக்கு முன்பு வரை சென்னை வெள்ளத்தால் பெரிய அளவில் பாதிக்கப்படாமல் இருந்ததற்கு காரணம் பள்ளிக்கரணை சதுப்பு நிலங்கள் மிகச்சிறந்த வடிகாலாக திகழ்ந்தது தான். அதை பாதுகாப்பதற்கு பதிலாக ஆக்கிரமிக்க அனுமதித்ததன் விளைவு தான் 2005, 2015, 2023, 2024-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டது ஆகும். எவ்வளவு வெள்ளம் வந்தாலும் அதை முழுமையாக ஈர்த்துக் கொள்ளும் திறன் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு உண்டு. அதை பாதுகாக்க வேண்டும். </p><p>சென்னையின் அடையாளமாக திகழ்ந்த 250 ஏரிகள் குடியிருப்புகளை கட்டுவதற்காக அழிக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன. இத்தகைய சூழலில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் மீதமுள்ள பகுதிகளையும் பொருளாதார நடவடிக்கைகள் என்ற பெயரில் சூறையாட அனுமதிக்கக் கூடாது. பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலம் என்பதற்காக மட்டுமல்ல... அது சென்னைக்கு இயற்கை கொடுத்த ஆகச்சிறந்த வடிகால் என்ற வகையிலும் அதை நாம் பாதுகாக்க வேண்டும்.</p><h2>பறவைகள் வாழிடம்</h2><p>பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு இன்னொரு பெருமையும் உண்டு. அது சிறந்த பறவைகள் வாழிடமாகவும் திகழ்கிறது.பள்ளிக்கரணை மற்றும் பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் சுற்றுச்சூழல் மாசு, ஒலி மாசு ஆகிய அனைத்து தீமைகளும் இருந்தாலும் கூட அவற்றை சகித்துக் கொண்டு யுரேஷியா கழுகு ஆந்தை, கோனமூக்கு உள்ளான், தட்டைவாயன் வாத்து, நாமத்தலை வாத்து, ஊசிவால் வாத்து, கரண்டி வாயன், நீலத்தாழைக் கோழி, நைட் ஹெரான், நீர்க்காகம், நாமக்கோழி, மஞ்சள் குருகு, நெடுங்கால் உள்ளான் உள்ளிட்ட 115 வகை பறவைகள் லட்சக்கணக்கில் இந்த சதுப்பு நிலங்களுக்கு வலசை வந்து செல்கின்றன. அதுமட்டுமின்றி, தனித்துவமான இறால் வகைகள்,  குள்ள கவுராமி (Dwarf Gourami)), பாப்பான் (Chromide) உள்ளிட்ட 46 வகையான மீன்கள், 5 வகை ஒட்டு மீன்கள், 21 ஊர்வன வகைகள்,  9 வகையான ஒட்டு மீன்கள் ஆகியவையும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் வாழ்கின்றன. வணிகம் என்ற பெயரில் இவற்றை அழிக்க அனுமதிக்கக் கூடாது.</p><p>பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் எஞ்சியிருக்கும் பகுதிகளை பாதுகாப்பது மட்டுமின்றி, ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளையும் மீட்டெடுக்க வேண்டும். என்ன விலை கொடுத்தாலும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாத்தே தீர வேண்டும். அதற்கான நடவடிக்கைகளின் முதல் கட்டமாக தமிழ்நாடு அரசின் சதுப்புநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகளின்படி பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் எல்லைகளை வரையறுத்து அறிவிக்கை செய்ய வேண்டும்; அதுமட்டுமின்றி, அதை சென்னை இரண்டாவது பெருந்திட்டத்தில் சேர்க்க வேண்டும்; அதன் மூலம் அப்பகுதியில் நிகழ்த்தப்படும் கட்டுமானங்களையும், ஆக்கிரமிப்புகளையும் தடுக்க வேண்டும். மேலும், உச்சநீதிமன்றம் ஆணையிட்டவாறு தமிழ்நாட்டில் உள்ள 26,883 சதுப்பு நிலங்களின் எல்லைகளையும் வரையறுத்து அறிவிக்கை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>