<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 28 Jul 2026 03:40:18 +0000</lastBuildDate><item><title>உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-mlas-meeting-today-under-the-leadership-of-udhayanidhi-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-mlas-meeting-today-under-the-leadership-of-udhayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">c3140c93-d70f-4168-89f2-0a4bb544c13b</guid><pubDate>Tue, 28 Jul 2026 03:37:44 +0000</pubDate><atom:updated>2026-07-28T03:37:44.832Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,தி.மு.க.</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/f97jk8f4/8.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/f97jk8f4/8.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை, </p><p>2026-2027-ம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட் ஆகஸ்டு 5-ந் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அதற்கு அடுத்த நாள் (6-ந் தேதி) வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆகிறது. த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் என்பதால் எதிர்பார்ப்பு அதிகம் நிலவுகிறது. </p><p>இந்த நிலையில், பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. உறுப்பினர்கள், பட்ஜெட் கூட்டத் தொடரில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவுரை வழங்க இருக்கிறார். இதற்காக, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று (ஜூலை 28) மாலை 5 மணிக்கு காணொலிக்காட்சி வழியாக நடைபெற இருக்கிறது. </p><p>கூட்டத்திற்கு தலைமை தாங்கும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டசபை கூட்டத் தொடரில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், எந்தப் பிரச்சினைகளை முன்னெடுக்க வேண்டும், விவாதத்தின்போது யார் யார் பேச வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகள் வழங்க இருக்கிறார். </p>]]></content:encoded></item><item><title>காமராஜர் காலை உணவு திட்டம்: டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு நிபந்தனைகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kamaraj-breakfast-scheme-conditions-for-companies-participating-in-the-tender</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kamaraj-breakfast-scheme-conditions-for-companies-participating-in-the-tender#comments</comments><guid isPermaLink="false">22d88890-9df5-452f-860c-28e74fa3ff87</guid><pubDate>Tue, 28 Jul 2026 03:23:14 +0000</pubDate><atom:updated>2026-07-28T03:23:14.638Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt,Kamarajar,காமராஜர்,காலை உணவு திட்டம்,Kaalai Unavu Thittam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/h3zrmq7u/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/h3zrmq7u/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 6-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட் டம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 17-ந்தேதி முதல் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. காலை உணவு திட்டம் 'பெருந்தலைவர் காம ராஜர் காலை உணவு திட்டம்' என பெயர் மாற்றம் செய்யப்பட் டுள்ளது.</p><p>இந்த நிலையில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு காலை உணவு வினியோகம் செய்வது தொடர்பாக டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு நிபந்தனைகளை தமிழக அரசு வெளி யிட்டுள்ளது. அதில், ரவா உப்புமாவுடன் சாம்பார் உள்ளிட்ட 13 வகை உணவுகளில் இருந்து நாள்தோறும் ஏதேனும் ஒரு உணவு மாணவர்களுக்கு காலை உணவாக வழங்கப்படவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>காலை உணவு 150 முதல் 200 கிராம் எடையுடன் 294 கலோரி ஆற்றல் வழங்கும் விதமாக இருக்கவேண்டும். காலை 7.30 மணிக்குள் பள்ளிகளுக்கு சூடான உணவு (இன்சுலேட்டட் ஹாட் பாக்ஸ்களில் எடுத்து சென்று) வினியோகிக்கவேண்டும். தலைமை ஆசிரியரின் சான்று கிடைத்த பிறகே ஒப்பந்ததாரருக்கு மாதாந்திர பணம் வழங்கப்படும். உணவின் தரத்தை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மூன்றாம் தரப்பு ஆய்வு மூலம் கண்காணிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.17 சரிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/broiler-chicken-price-drops-by-rs-17-per-kg</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/broiler-chicken-price-drops-by-rs-17-per-kg#comments</comments><guid isPermaLink="false">11c23df7-3e52-4cb2-b7ac-6e69d403cdfb</guid><pubDate>Tue, 28 Jul 2026 03:15:19 +0000</pubDate><atom:updated>2026-07-28T03:15:19.261Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Namakkal,நாமக்கல்,கறிக்கோழி விலை,Broiler Chicken Prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/vx9dg71q/6.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/vx9dg71q/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல்,</p><p>நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.127-க்கு விற்பனை செய்யப் பட்டுவந்தது. இதற்கிடையே நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங் கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.17 குறைக்க முடிவு செய்தனர். அதன்படி கறிக்கோழி விலை கிலோ ரூ.110 ஆக குறைந்து உள்ளது. </p><p>முட்டைக்கோழி விலை கிலோ ரூ.115 ஆக இருந்தது. நேற்று நடந்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை ரூ.5 குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் முட்டைக்கோழி விலை கிலோ ரூ.110 ஆக குறைந்து உள்ளது. முட்டை கொள்முதல் விலை ரூ.630 காசுக ளாக உள்ளது. விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையா ளர்கள் தெரிவித்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>அரசு ஊழியரை நீண்டகாலம் பணியிடை நீக்கத்தில் வைத்திருக்க முடியாது - ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-employees-cannot-be-kept-on-suspension-for-a-long-time-high-court-order</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-employees-cannot-be-kept-on-suspension-for-a-long-time-high-court-order#comments</comments><guid isPermaLink="false">0194ff35-c199-4010-8817-1b9e9109853e</guid><pubDate>Tue, 28 Jul 2026 02:50:49 +0000</pubDate><atom:updated>2026-07-28T02:50:49.326Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>High Court,ஐகோர்ட்டு,அரசு ஊழியர்,government employee,பணியிடை நீக்கம்,suspension</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/iwbi8sm1/highcourt.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/iwbi8sm1/highcourt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பணியிடை நீக்கத்தில் அரசு ஊழியரை நீண்ட காலம் வைத்திருக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.</p><h2>லஞ்ச புகார்</h2><p>கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த ராமச்சந்திரன் என்பவர், பட்டா வழங்க லஞ்சம் பெற்றதாகக்கூறி லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ராமச்சந்திரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த பணியிடை நீக்கத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ராமச்சந்திரன் மனு தாக்கல் செய்தார். அதில், "தன்னை பணியிடை நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது.</p><h2>பணியிடை நீக்கம்</h2><p>அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அசன் முகமது ஜின்னா, "மனுதாரர் மீதான லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணை முடிந்து 7 மாதங்களுக்கு மேலாகி விட்டது. ஆனால், இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. துறை ரீதியிலான விசாரணை தொடர்பாக அவருக்கு எந்தவொரு குற்றக்குறிப்பாணையும் வழங்கப்படவில்லை. கடந்த 8 மாதங்களாக மனுதாரர் மீதான <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">பணியிடை நீக்கம் </a>உத்தரவு தொடர்ந்து வருகிறது.</p><p>ஒருவரை இவ்வாறு தொடர்ந்து சட்டப்பூர்வமாக இடைநீக்கத்தில் வைத்திருக்க முடியாது" என்று வாதிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வக்கீல், "மனுதாரருக்கு எதிரான லஞ்ச முறைகேடு தொடர்பான விசாரணை நிலுவையில் உள்ளதால், பணியிடை நீக்கத்தில் வைக்கப்பட்டுள்ளார்" என்று வாதிட்டார்.</p><h2>நீண்ட காலம் முடியாது</h2><p>இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை, துறை ரீதியான விசாரணை இரண்டையும் ஒன்றாக பொருத்திப் பார்க்க முடியாது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளின்படி நீண்டகாலமாக ஒருவரை இடைநீக்கத்தில் வைத்திருக்க முடியாது. அதே போல பணியிடை நீக்கத்தை மாதக்கணக்கில் தொடருவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே மனுதாரரின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்து அவரை முக்கியத்துவம் இல்லாத பணியிடத்தில் மீண்டும் அரசு பணியமர்த்த வேண்டும்" என்று உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை பல்கலைக்கழக பதிவாளரின் பதவி நீட்டிப்பு நிறுத்திவைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/suspension-of-extension-of-term-of-registrar-of-chennai-university</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/suspension-of-extension-of-term-of-registrar-of-chennai-university#comments</comments><guid isPermaLink="false">66249d12-8299-44ec-8bfa-a3744932e50b</guid><pubDate>Tue, 28 Jul 2026 02:16:28 +0000</pubDate><atom:updated>2026-07-28T02:16:28.660Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை பல்கலைக்கழகம்,University of Madras,பதவி நீட்டிப்பு</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/55ydok77/2.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/55ydok77/2.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை பல்கலை சிண்டிகேட் குழு கூட்டம், பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது. உயர்கல்வித்துறை செயலர் தீரஜ்குமார் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், சிண்டி கேட் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.</p><p>மொத்தம் 35 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு, அதுகுறித்து விவாதிக்கப்பட்டன. குறிப்பாக, பல்கலை பதிவாளர் ரீட்டா ஜான் பணி நீட்டிப்பு தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பொதுவாக, பல்கலை பதிவாளராக ஒருவர் தேர்வு செய்யப்படும்போது, ஆண்டு பதவி காலத்தில், முதல் ஆண்டு, தகுதிகாண் பருவமாக கருதப்படும். </p><p>மூன்று பதிவாளராக ஓராண்டு காலம் அவர்களின் செயல்பாடுகள் குறித்து, துணை வேந்தரின் செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில், அடுத்த இரண்டு ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்படும்.</p><p>தற்போது, சென்னை பல்கலை பதிவாளர் ரீட்டா ஜான், 2026 ஜூன் 26ம் தேதியுடன், ஓராண்டு பதவி காலத்தை நிறைவு செய்துள்ளார். இதைத் தொடர்ந்து, செயல்திறன் மதிப்பீட்டின்படி, அவரது பணி மேலும் காலத்தை இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பது தொடர்பாக, தீர்மானம் கொண்டுவரப்பட்டு, பரிசீலிக்கப்பட்டது. இதுகுறித்து 'செனட்' கூடும்போது, பரிசீலிக்கலாம் என, துணைவேந்தர் ஒருங்கிணைப்பு குழு அதிகாரிகள் தள்ளி வைத்துள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன.</p><p>இதுகுறித்து, பல்கலை வட்டாரங்கள் கூறியதாவது;</p><p>பதிவாளர் நியமனத்தில் விதிமீறல் நடந்துள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. பதிவாளர் நியமனத்துக்கு, பல்கலையின், 'செனட்' ஒப்புதல் வழங்க வேண்டும். ஆனால், ஓராண்டாக, செனட் கூடாததால், பதிவாளர் நியமனத்துக்கு இதுவரை ஒப்புதல் இல்லை. </p><p>இந்த சூழலில், அடுத்த இரண்டு ஆண்டு பணி காலத்தை நீட்டிப்பது தொடர்பாக, சிண்டிகேட்டில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. சட்டப்பிரச்னை ஏற்படாமல் இருக்க, பதிவாளரின் பணி கால நீட்டிப்பு தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. </p><p>விரைவில், 'செனட்' கூடும்போது, பணிக்கு ஒப்புதல் பெறப்பட்டு, பணி காலம் நீட்டிப்பது குறித்து பரிசீலிக்க சிண்டி கேட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு அவர்கள் கூறினர். </p> ]]></content:encoded></item><item><title>டெல்லி புத்தக வெளியீட்டு விழாவில் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்கவில்லை - வைகோ</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-not-participating-in-delhi-book-launch-event-vaiko</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-not-participating-in-delhi-book-launch-event-vaiko#comments</comments><guid isPermaLink="false">5167b3c9-d4d9-40af-84f0-1a3ff618c0da</guid><pubDate>Tue, 28 Jul 2026 02:10:25 +0000</pubDate><atom:updated>2026-07-28T02:10:25.637Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vaiko,வைகோ,புத்தக வெளியீட்டு விழா,Book launch event- புத்தக வெளியீட்டு விழா,Chief Minister Vijay,முதல் அமைச்சர் விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/bjjjsv15/vijay-vaiko.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/bjjjsv15/vijay-vaiko.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை தலைமைச் செயலகத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ  செய்தியாளர்களை சந்தித்தார்.</p><p>அப்போது அவர் பேசியதாவது:-</p><p>நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 30 ஆண்டுகளில் நான் ஆற்றிய ஆங்கில உரைகளின் தொகுப்புகள் 4 தொகுப்புகளாக அச்சிடப்பட்டு. அதை டெல்லியில் 'கான்ஸ்டிடியூஷன் கிளப்'பில் ஆகஸ்டு 4-ந் தேதியன்று வெளியிட திட்டமிடப்பட்டது. மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அந்த நூல்களை வெளியிட இருக்கிறார். அவற்றின் முதல் பிரதியை பெற்றுக்கொள்ள முதல்-அமைச்சர் விஜய் இசைவளித்தார்.</p><h2>கூட்ட நெரிசல்</h2><p>ஆனால், நிகழ்ச்சியில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a> பங்கேற்றால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால், அந்த நிகழ்ச்சியிலே பங்கெடுப்பதை தவிர்த்துவிடலாம் என்று முதல்-அமைச்சரிடம் கூறினேன். மேலும், அதே நூல்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு சென்னையில் வெளியிடும்போது அதில் பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டேன். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சேலம் வழியாக கொல்லம் - சென்னை இடையே சிறப்பு ரெயில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-kollam-and-chennai-via-salem</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-kollam-and-chennai-via-salem#comments</comments><guid isPermaLink="false">07bf250e-8749-4f7c-8fa3-7aa12d953fc8</guid><pubDate>Tue, 28 Jul 2026 02:00:33 +0000</pubDate><atom:updated>2026-07-28T02:00:33.081Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,Special train,Onam festival,ஓணம் பண்டிகை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/r27y6apk/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/r27y6apk/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,  </p><p>ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து சேலம் வழியாக கேர ளம் மாநிலம் கொல்லத்திற்கு வாரம் இரு முறை சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. </p><p>அதன்படி, சென்னை சென்டிரல்-கொல்லம் சிறப்பு ரெயில் (06117) வருகிற 18-ந் தேதி முதல் செப்டம்பர் 5-ந் தேதி வரை வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்படும். மறுமார்க்கத்தில், கொல்லம்-சென்னை சென்டிரல் சிறப்பு ரெயில் (06118) வருகிற 14-ந் தேதி முதல் செப்டம்பர் 6-ந் தேதி வரை வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஜல்லி, கட்டுமான கற்கள் கொண்டு செல்ல தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-transporting-gravel-and-construction-stones-from-tamil-nadu-to-other-states</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-transporting-gravel-and-construction-stones-from-tamil-nadu-to-other-states#comments</comments><guid isPermaLink="false">b50d5985-0d80-47d1-ae87-1800e50a7e2a</guid><pubDate>Tue, 28 Jul 2026 01:43:35 +0000</pubDate><atom:updated>2026-07-28T01:43:35.679Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,construction materials,கட்டுமான பொருட்கள்,ஜல்லி,Mines,jalli</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/tb45pa44/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/tb45pa44/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஜல்லி மற்றும் கட் டுமான கற்கள் கொண்டு செல்வதற்கு 3 மாதங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனர் பிரபு சங்கர் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழகத்தில் உள்கட்டமைப்பு மற்றும் வீட்டு வசதித்திட்டங்கள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. இதற்கு தேவையான ஜல்லி, கற்கள், கண்டாஸ், பாறைகள், எம்-சாண்ட், மெட்டல் ஜெல்லி, பாலாஸ்ட், மில் கற்கள் மற்றும் ஹேண்ட் சக்காய்ஸ் போன்ற கட்டுமானப் பொருட்களின் தேவை மாநிலத்துக்குள் அதிகரித்துள்ளது.</p><h2>சட்டவிரோத குவாரி</h2><p>இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து பெருமளவிலான கற்கள் மற்றும் ஜல்லிகள் அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் மாநிலத்துக்குள் கட்டுமானப் பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயர்வு மற்றும் செயற்கையான தட்டுப்பாடு உருவாகிறது. இது பொது மற்றும் தனியார் உள்கட்டமைப்புத் திட்டங்களை நேரடியாக பாதிக்கிறது. மேலும், அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகள் மற்றும் மல்டி-ஆக்சில் வாகனங்களால் உள்ளூர் சாலைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.</p><p>இந்த கனரக வாகனங்களால் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளம் மற்றும் ஆந்திராவில் கற்களுக்கு தட்டுப்பாடு இல்லை. எனினும் தமிழகத்தில் இருந்து அதிகளவில் கற்கள் கொண்டு செல்லப்படுவதால், தேவைக்கும் வினியோகத்துக்கும் இடையே பெரிய இடைவெளி உருவாகிறது. இந்த இடைவெளி, சட்டவிரோத குவாரித் தொழிலுக்கும், அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி கற்களை வெட்டி எடுப்பதற்கும் வழிவகுக்கிறது. இது மாநிலத்தின் சுற்றுச்சூழல் மற்றும் சூழலியலுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.</p><h2>கடுமையான நடவடிக்கை</h2><p>எனவே, இந்த சூழலை கருத்தில் கொண்டு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் தவிர, பிற மாநிலங்களுக்கு ஜல்லி, கற்கள் மற்றும் கட்டுமானப் பணிகளுக்கு பயன்படும் அனைத்துப் பொருட்களையும் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த தடையை மீறுபவர்கள் மீது தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>இந்த உத்தரவைச் செயல்படுத்துவதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எல்லைப் பகுதிகளில் உள்ள அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தடையை முறையாக அமல்படுத்த வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் வந்தே பாரத் ரெயில் சேவை மூலம் ரூ.163 கோடி வருவாய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/revenue-of-rs-163-crore-from-vande-bharat-train-service-in-april-and-may</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/revenue-of-rs-163-crore-from-vande-bharat-train-service-in-april-and-may#comments</comments><guid isPermaLink="false">7acb0d45-a390-4b6c-b307-e8e962905d9a</guid><pubDate>Tue, 28 Jul 2026 01:37:05 +0000</pubDate><atom:updated>2026-07-28T01:37:05.692Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தெற்கு ரெயில்வே,Southern Railway,Vande Bharat train,revenue,வருவாய்,வந்தே பாரத் ரெயில் சேவை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/w8if2d5q/vantebharat.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/w8if2d5q/vantebharat.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தெற்கு ரெயில்வேயில் கடந்த ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்களில் வந்தே பாரத் ரெயில் சேவை மூலம் ரூ.163 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகமாகும்.</p><h2>வந்தே பாரத் ரெயில்</h2><p>இந்தியாவில் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தெற்கு ரெயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 6 ரெயில்வே கோட்டங்கள் உள்ளது. இந்த கோட்டங்கள் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பல பகுதிகளை உள்ளடக்கி செயல்படுகிறது. அந்த வகையில், தெற்கு ரெயில்வேயில் முதல் வந்தே பாரத் ரெயில் சேவை சென்னை மைசூரு இடையே கடந்த 2022-ம் ஆண்டு இயக்கப்பட்டன.</p><p>தெற்கு ரெயில்வேயில் சென்னை சென்டிரல் மைசூரு. சென்டிரல் கோவை, எழும்பூர் நெல்லை, சென்டிரல் விஜயவாடா, கோவை பெங்களூரு, சென்னை எழும்பூர் - நாகர்கோவில், மதுரை பெங்களூரு மங்களூரு-திருவனந்தபுரம் உள்பட பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. எக்ஸ்பிரஸ் ரெயில்களை விட வந்தே பாரத் ரெயில்களின் பயண நேரம் குறைவு என்பதால் இச்சேவை பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதனால் வந்தே பாரத் ரெயில்களில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.</p><h2>2 மாத வருவாய்</h2><p>அதன்படி, 2026-27-ம் நிதியாண்டில் ஏப்ரல் மற்றும் மே ஆகிய 2 மாதங்களில் வந்தே பாரத் ரெயிலில் 15.21 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.162.96 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த 2025-26-ம் நிதியாண்டில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 11.41 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். ரூ.119.52 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த நிதியாண்டில் வருவாய் வெகுவாக உயர்ந்துள்ளது.</p><p>இதுகுறித்து, ரெயில்வே அதிகாரிகள் கூறியபோது, '<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">வந்தே பாரத் ரெயில்</a>களின், புறப்படுவதற்கு 15 நிமிடங்கள் வரை காலியாக உள்ள இருக்கைகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கும் தற்போதைய முன்பதிவு வசதி பயணிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்த வசதி, கடைசி நிமிடத்தில் பயணிக்க வேண்டிய எண்ணற்ற பயணிகள் சிரமமின்றி முன் பதிவைப் பெற உதவியுள்ளது. இதன் காரணமாகவும் வந்தே பாரத் ரெயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது' என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>அரசு பள்ளியில் ஆசிரியை பிரம்பால் அடித்ததில்
10 மாணவிகள் காயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/10-students-injured-after-teacher-beats-them-with-cane-at-government-school</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/10-students-injured-after-teacher-beats-them-with-cane-at-government-school#comments</comments><guid isPermaLink="false">9530e7d1-5396-4f83-9be9-0223c55ce8c3</guid><pubDate>Tue, 28 Jul 2026 01:19:10 +0000</pubDate><atom:updated>2026-07-28T01:19:10.595Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Government school teacher,மாணவிகள் காயம்,அரசு பள்ளி ஆசிரியை,students injured,பிரம்பால் தாக்குதல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/l532p8ve/67.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/l532p8ve/67.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p>அரசு பள்ளியில் ஆசிரியை பிரம்பால் அடித்ததில் 10 மாணவிகள் காயமடைந்தனர். ஆசிரியை மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>மாணவிகளுக்கு பிரம்படி</h2><p>தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வீ.கே.புதூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தேன்மரியசுகந்தி (வயது 44) என்பவர் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். 11-ம் வகுப்புக்கு பாடம் எடுக்கும் இவர், கடந்த 20-ந்தேதி மாலை சிறப்பு வகுப்புகள் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது அருகில் உள்ள மற்றொரு வகுப்பறையில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சத்தமாக பேசிக்கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த ஆசிரியை தேன்மரியசுகந்தி அந்த வகுப்பறைக்கு சென்று, மாணவ, மாணவிகளை பிரம்பால் அடித்து கண்டித்ததாக கூறப்படுகிறது.</p><h2>கைகளில் பலத்த காயம்</h2><p>இதில் மாணவிகள் பவித்ரா, சுஜித்ரா, சரண்யா, சாய்ஸ்ரீ, ஆஷா, சந்தன முத்துமாரி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. வகுப்புகள் முடிந்ததும் அந்த மாணவிகள் வீட்டுக்கு சென்று நடந்தவற்றை கூறினர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே மாணவிகளை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தனர். மாணவிகள் பவித்ரா மற்றும் சுஜித்ரா ஆகியோர் வீ.கே.புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பவித்ரா மட்டும் மேல்சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு 3 நாட்கள் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றுள்ளார்.</p><h2>ஆசிரியை மீது வழக்கு</h2><p>சரண்யா, சாய்ஸ்ரீ, ஆஷா, சந்தனமுத்துமாரி ஆகிய மாணவிகள் தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். கைகளில் இன்னும் வீக்கம் இருப்பதால், பாதிக்கப்பட்ட மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே ஓய்வெடுத்து வருவதாக பெற்றோர் தெரிவித்தனர். இதுகுறித்து மாணவி பவித்ராவின் தாயார் ராஜாத்தி வீ.கே.புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் ஆசிரியை தேன்மரியசுகந்தி மீது பி.என்.எஸ் சட்டம் பிரிவு 115(2) மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>தேர்வு எழுத முடியவில்லை</h2><p>இந்தநிலையில், பவித்ராவின் தாயார் ராஜாத்தி நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-</p><p>வீ.கே.புதூரை சேர்ந்த எனது மகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 20-ந்தேதி தேன்மரியசுகந்தி என்ற<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88"> ஆசிரியை</a> எனது மகள் உள்பட பல மாணவர்களை பிரம்பால் தாக்கினார். ஆசிரியையின் செயல்பாடு குறித்து வீ.கே.புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களுக்கு நீதி வேண்டும், எனது மகளுக்கு காயம் காரணமாக இடைப்பருவ தேர்வு எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆசிரியை மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பாம்பன் பழைய தூக்குப்பாலத்தின் ஒரு பகுதி முழுமையாக வெட்டி அகற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-section-of-the-old-pamban-bascule-bridge-has-been-cut-away-and-removed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-section-of-the-old-pamban-bascule-bridge-has-been-cut-away-and-removed#comments</comments><guid isPermaLink="false">267f3660-fe6a-4a7c-98ba-55765d70857a</guid><pubDate>Tue, 28 Jul 2026 01:07:34 +0000</pubDate><atom:updated>2026-07-28T01:07:34.951Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Pamban Bridge,பாம்பன் பாலம்,ரெயில் பாலம்,Rail Bridge</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/ts0uedw9/13.gif" width="721"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/ts0uedw9/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமேசுவரம்,  </p><h2>பழைய ரெயில் பாலம்</h2><p>ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் பழைய ரெயில் பாலம் மிக முக்கிய பங்கு வகித்து வந்தது. சுமார் 110 ஆண்டுகளுக்கு மேலாக ரெயில் போக்குவரத்து சிறப்பாக நடைபெற்று வந்த பாம்பன் பழைய ரெயில் பாலத்தின் அருகிலேயே ரூ.545 கோடியில் புதிதாக ரெயில் பாலம் திறக்கப்பட்டது. கடலுக்குள் உள்ள பழைய ரெயில் பாலத்தின் மையப்பகுதியில் உள்ள தூக்குப்பாலத்தை வெட்டி அகற்றும் பணியானது கடந்த 5 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரு கிறது. இதற்காக ரெயில்வே துறை மூலம் நிதி ஒதுக்கப்பட்டு தனியார் நிறுவனம் மூலம் பாம்பன் பழைய ரெயில் பாலத்தை வெட்டி அகற்றும் பணியானது நடைபெற்று வருகிறது. அதற்காக தூக்குப்பாலத்தின் அரு கில் கிரேன் ஒன்று நிறுத்தப்பட்டு தொழிலாளர்கள் வெல்டிங் மூலம் தூக் குப்பாலத்தின் இரும்பு கம்பிகளை பகுதி வாரியாக வெட்டி எடுக்க வருகின்றது. </p><h2>தூக்குப்பாலத்தின் ஒரு பகுதி</h2><p>இந்த நிலையில் தூக்குப்பாலத்தின் ஒரு பகுதியானது முழுமையாக வெட்டி அகற்றப்பட்டுள்ளது. இவ்வாறு வெட்டி அகற்றப்பட்ட தூக்குப்பாலத்தின் உதிரிபாகங்கள் அனைத்தும் பாம்பன் ரெயில் பாலத்தின் நுழைவுப்பகுதியில், ரெயில்வே நிலையப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் தூக்குப்பாலத்தின் மற்றொரு பகுதியை வெட்டி அகற்றும் பணியானது வருகிற ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் இருந்து தொடங்கும் என்று கூறப்படுகிறது. பருவமழை சீசன் தொடங்குவதற்கு முன்பாக தூக்குப்பாலத்தின் மற்றொரு பாதியையும் முழுமையாக வெட்டி அகற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>சென்னை விமான நிலையத்தில் ரூ.5.8 கோடி தங்கம் பறிமுதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs58-crore-gold-seized-at-chennai-airport</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs58-crore-gold-seized-at-chennai-airport#comments</comments><guid isPermaLink="false">d9c1315b-bba3-4c17-a5b9-defd817d6af5</guid><pubDate>Tue, 28 Jul 2026 01:04:15 +0000</pubDate><atom:updated>2026-07-28T01:04:15.206Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,விசாரணை,airport,விமான நிலையம்,investigation,வடமாநில வாலிபர்,தங்கம் பறிமுதல்,gold seizure,northern state youth</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/drwfk2dz/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/drwfk2dz/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை விமான நிலையத்தில் ரூ.5.8 கோடி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">தங்கம் பறிமுதல் </a>செய்யப்பட்டது தொடர்பாக பிடிபட்ட <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D">வடமாநில வாலிபரிடம்</a> சுங்க இலாகா அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்னறர். </p><h2>வடமாநில வாலிபர்</h2><p>சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு சிங்கப்பூரில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை, விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது வடமாநிலத்தை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவர், சுற்றுலா விசாவில் சிங்கப்பூர் சென்றுவிட்டு சென்னை திரும்பி வந்திருந்தார். அவர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.</p><h2>ரூ.5.8 கோடி தங்கம் பறிமுதல்</h2><p>இதையடுத்து அவரது உடைமைகளை முழுமையாக சோதனை செய்தனர். அவர் கொண்டு வந்த சூட்கேசின் மேல் பகுதியில் ரகசிய அறை அமைக்கப்பட்டு இருந்ததை கண்டு பிடித்தனர். அந்த ரகசிய அறையை பிரித்து பார்த்தபோது, அதில் தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அவற்றை வெளியே எடுத்து எடை போட்டபோது, 3 கிலோ 960 கிராம் இருப்பது தெரியவந்தது. இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.5 கோடியே 80 லட்சம் ஆகும். அந்த தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.</p><h2>சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை</h2><p>மேலும், இந்த தங்கத்தை கடத்திவர அவரை சிங்கப்பூர் அனுப்பிய நபர் யார்? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து பிடிபட்ட வாலிபரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மதுரவாயல்-துறைமுக மேம்பாலப் பணிகளில் மாற்றம்; செப்டம்பர் முதல் ஆற்றுப்பகுதியில் வேலை நிறுத்தம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/change-in-maduravoyal-harbour-flyover-works-strike-in-the-river-area-from-september</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/change-in-maduravoyal-harbour-flyover-works-strike-in-the-river-area-from-september#comments</comments><guid isPermaLink="false">60ad41cb-25ba-4964-9827-fe0049c8985a</guid><pubDate>Tue, 28 Jul 2026 00:57:53 +0000</pubDate><atom:updated>2026-07-28T00:57:53.763Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,work,Overpass,மேம்பால பணிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/bpdg3kix/66.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/bpdg3kix/66.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மதுரவாயல்- துறைமுக சாலைப்பணிகள் செப்டம்பர் முதல் ஜனவரி மாதம் வரை ஆற்றுப்பகுதிகளில் நடைபெறாது' என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h2>மதுரவாயல்-துறைமுகம் சாலை</h2><p>சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையே ரூ.5 ஆயிரத்து 600 கோடியில் ஈரடுக்கு மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அதில் தற்போது 22 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளன. கூவம் ஆற்றின் மேல்புறம் 15.5 கி.மீ. தொலைவுக்கு இந்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D">மேம்பாலம்</a> அமைகிறது. மழை காலங்களில் அதாவது, செப்டம்பர் முதல் ஜனவரி மாதம் வரை இப்பணிகள் ஆற்றுப்பகுதிகளில் நடைபெறாது. இந்த திட்டம் வருகிற 2029-ம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவடையும்.</p><h2>மேல்நிலை சாலை திட்டம்</h2><p>இதுதவிர கிளாம்பாக்கம் முதல் செங்கல்பட்டு அருகே உள்ள மகேந்திரா சிட்டி வரையிலான மேல்நிலை சாலை அமைக்கும் திட்டத்துக்கு ரூ.3 ஆயிரத்து 186 கோடி மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இத்துடன் சென்னை மெட்ரோ ரெயில் விரிவாக்கத்திட்டத்தை இணைக்கவும் ஆய்வுகள் நடந்து வருகிறது. இவை தவிர நடப்பு நிதியாண்டில் ரூ.3 ஆயிரத்து 98 கோடியில் செங்கல்பட்டு- திண்டிவனம் நெடுஞ்சாலையை 6 வழிச்சாலையாக மேம்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.</p><h2>சுங்கச்சாவடி</h2><p>அத்துடன் ரூ.147 கோடியில் திண்டிவனம்- புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையை விபத்து நேரிடாத சாலையாக 7 இடங்களில் மாற்ற விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளன. பொதுவாக தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி அமைக்கப்படுவது வழக்கம். இதைதவிர சாலையை பயன்படுத்துவோரின் சுமையைக் குறைக்கும் வகையில் இந்த தொலைவுக்குள் மேலும் சில சுங்கச் சாவடிகளையும் அமைப்பதுண்டு என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-today-9</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-today-9#comments</comments><guid isPermaLink="false">0b4bb95b-da55-475d-b526-f647474cc769</guid><pubDate>Tue, 28 Jul 2026 00:46:29 +0000</pubDate><atom:updated>2026-07-28T00:46:29.148Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,power outage,மின் தடை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/stx2vola/ep.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/stx2vola/ep.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p>அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சா வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (28.07.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,</p><h2>ஐடி காரிடார்</h2><p>எம்சிஎன் நகர் மற்றும் விரிவாக்கம், பவுண்டரி சாலை, பிள்ளையார் கோவில் தெரு, எஸ்பிஐ காலனி, கங்கையம்மன் கோவில் தெரு, 200 அடி ரேடியல் சாலை, போஸ்ட் ஆபிஸ் தெரு, வேம்புலியம்மன் கோவில் தெரு, தேரடி தெரு, பஞ்சாயத்து சாலை, மேப்பிள் அவென்யூ, குளக்கரை தெரு, ஆறுமுகம் நகர் மற்றும் குமரன் நகர், குமரன் நகர், குமரன் நகர் ஆர்.ஈ. நகர், செல்வகணபதி அவென்யூ, சரவணா நகர், கார்ப்பரேஷன் சாலை, செல்வகுமார் அவென்யூ, சீவரம், தணிகாசலம் தெரு. ராமச்சந்திரன் தெரு, காமராஜ் தெரு, இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் சாலை, எம்.ஜி. சாலை, பாலவிநாயகர் அவென்யூ, பிரகாசம் தெரு, எல்லையம்மன் நகர், ஸ்ரீபுரம் சாலை, ராமன் நகர், ஓ.எம்.ஆர்., திருமலைவ் நகர், ராமன் நகர், திருமலை, சிபிஐ நகர். மெயின் ரோடு, ஐஐடி காலனி, மீனாட்சிபுரம், மனோகர் நகர், விஜிபி சாந்தி நகர்.</p><h2>ராமாபுரம்</h2><p>மணப்பாக்கம், கிருஷ்ணா நீதிமன்றம், சிஆர்ஆர் புரம், கிருஷ்ணா நகர், பெரியார் சாலை, இந்திரா நகர், மற்றும் எம்ஜிஆர் நகர், ஸ்ரீராம் கார்டன், லட்சுமி நகர், பிள்ளையார் கோவில் தெரு. மைக்ரோ மார்வெல், தர்மராஜபுரம், காசாகிராண்ட் உட்சைட் மற்றும் கோட்டை, டி.வி.எஸ். எமரால்டு.</p> <h2>மேடவாக்கம்</h2><p>படேல் கம்பெனி சாலை, ஏரிக்கரை தெரு, சிபிஐ காலனி 1-7வது தெரு, வேளச்சேரி மெயின் ரோடு, பெல் நகர் 1-5வது தெரு, சிவகாமி நகர், பஜனை கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, ரங்கநாதபுரம், பிரின்ஸ் கல்லூரி.</p><h2>வளசரவாக்கம்</h2><p>விருகம்பாக்கம், ஆழ்வார்திரு நகர்.</p><h2>நொளம்பூர்</h2><p>எஸ்&amp;பி கார்டன், விஜிஎன் மான்டே கார்லோ, எஸ்ஆர்ஆர் நகர், ராஜா கார்டன் ஏரியா, குருசாமி சாலை, நொளம்பூர் முதல் மற்றும் இரண்டாம் யூனியன் சாலை, விஜிஎன் நகர் கட்டம் I-IV, பிளாக்ஸ் 1-8வது, கம்பர்சாலை, கவிமணிசாலை, பாரதி சாலை, அண்ணாமலை அவென்யூ, மீனாட்சி அவென்யூ, எம்.கே.லாட் பல்கலைக்கழகம், ரெட்டி. பனஞ்சோலை தெரு, மாதா கோவில் பகுதி, பெருமாள் கோவில் பகுதி, கஜலட்சுமி நகர், வேம்புலி அம்மன் பகுதி, ஸ்ரீ ராம் நகர், பச்சையப்பன் நகர், சக்தி நகர், பாடசாலை தெரு.</p><h2>ஆதம்பாக்கம்</h2><p>நிலமங்கை நகர், கேசரி நகர், சாந்தி நகர், சுரேந்தர் நகர், பாரதிதாசன் தெரு, பாரத் நகர்.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-38</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-38#comments</comments><guid isPermaLink="false">ae1a70ae-cbf4-4f7c-b012-b2eff7a34c22</guid><pubDate>Tue, 28 Jul 2026 00:40:43 +0000</pubDate><atom:updated>2026-07-28T00:40:43.333Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல் விலை,டீசல் விலை,Petrol and diesel prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/l5380fgy/1.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/l5380fgy/1.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.</p><p>பெட்ரோல், டீசல் விலை</p><p>இந்நிலையில், சென்னையில் இன்று (28.07.2026 செவ்வாய்க்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>தர்மபுரி ஏல அங்காடியில் கடந்த 6 மாதங்களில் ரூ.18 கோடியே 67 லட்சம் மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dharmapuri-silk-cocoons-auction-rs-18-67-crore-sales-in-6-months</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dharmapuri-silk-cocoons-auction-rs-18-67-crore-sales-in-6-months#comments</comments><guid isPermaLink="false">99b6dd35-ef43-4dd3-8da6-abec01e7c52f</guid><pubDate>Tue, 28 Jul 2026 00:07:37 +0000</pubDate><atom:updated>2026-07-28T00:07:37.820Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விற்பனை,sold,தர்மபுரி,Dharmapuri,அங்காடி,Big market,Silkworms,பட்டுக்கூடுகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/95s0smfx/silk.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பட்டுக்கூடுகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/95s0smfx/silk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தர்மபுரி,</p><p>தமிழ்நாட்டின் முக்கிய பட்டுக்கூடு உற்பத்தி மையங்களில் ஒன்றாக திகழும் தர்மபுரி பட்டுக்கூடு ஏல அங்காடியில், கடந்த 6 மாதங்களில் மட்டும் ரூ.18 கோடியே 67 லட்சம் மதிப்பிலான <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பட்டுக்கூடுகள்</a> விற்பனை செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p> <h2>குவியும் பட்டுக்கூடுகள்</h2><p>தர்மபுரி மாவட்டத்தில் பட்டுப்புழு வளர்ப்பு தொழில் மிக முக்கிய வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. இங்குள்ள அரசு பட்டுக்கூடு ஏல அங்காடிக்கு பட்டுக்கூடுகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தர்மபுரி மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி, இதன் சுற்றுவட்டார மாவட்டங்களான சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பட்டு விவசாயிகளும் தங்களது பட்டுக்கூடுகளை அதிக அளவில் இங்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.</p><h2>நல்ல விலை</h2><p>இங்கு கொண்டு வரப்படும் பட்டுக்கூடுகளுக்கு தரத்தின் அடிப்படையில் நல்ல விலை கிடைப்பதால் இங்கு பட்டுக்கூடுகளை கொண்டு வரும் விவசாயிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதேபோல் தமிழகத்தை சேர்ந்த வியாபாரிகள் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களை சேர்ந்தவர்களும் தர்மபுரிக்கு வந்து பட்டுக்கூடுகளை வாங்கி செல்கிறார்கள்.</p> <p><strong>இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-</strong></p><h2> பட்டுக்கூடுகள்</h2><p>தமிழ்நாட்டில் பட்டுக்கூடு உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னணி இடத்தை தர்மபுரி மாவட்டம் பெற்றுள்ளது. குறிப்பாக கடந்த 6 மாதங்களில் தர்மபுரி ஏல அங்காடிக்கு தமிழ் நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து 2 லட்சத்து 70 ஆயிரத்து 917 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. ரூ.18 கோடியே 67 லட்சம் மதிப்பில் பட்டுக்கூடகள் விற்பனை நடந்துள்ளது. இதன் மூலம் 4,100 விவசாயிகளும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகளும் பயன் அடைந்துள்ளனர்.</p><h2>பட்டு நூற்பாலை</h2><p>தர்மபுரிக்கு பட்டுக்கூடு வரத்து அதிகரித்துள்ளதால் இங்கு தேவையான கூடுதல் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தர்மபுரியில் பட்டு நூற்பாலை அமைக்கும் திட்டம் ஆய்வு நிலையில் உள்ளது. தர்மபுரியில் பட்டு சார்ந்த புதிய தொழில்கள் உருவாகுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. இதன்மூலம் அடுத்த சில ஆண்டுகளில் பட்டுக்கூடு சார்ந்த வேலை வாய்ப்புகளும் கணிசமாக அதிகரிக்கும்.</p><p>இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>கொய்யாப்பழம் பறித்த போது பரிதாபம்: மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/guava-plucking-tragedy-woman-falls-from-terrace-dies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/guava-plucking-tragedy-woman-falls-from-terrace-dies#comments</comments><guid isPermaLink="false">4b6dcbfc-3a98-4493-a04a-916ff827612d</guid><pubDate>Mon, 27 Jul 2026 23:35:38 +0000</pubDate><atom:updated>2026-07-27T23:35:38.787Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,Kanniyakumari,கொய்யா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/kligmsem/Untitled-10.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/kligmsem/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி,</p><p>கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே உள்ள ஈத்தவிளை பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி அமுதா (55 வயது). இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டின் மாடியில் ஏறி, அதனை ஒட்டியபடி உள்ள மரத்தில் கொய்யாப்பழம் பறித்துள்ளார். அந்த சமயத்தில் ஆஸ்பெட்டாஸ் சீட் விளிம்பில் மிதித்தபோது உடைந்து விட்டதாக தெரிகிறது.</p><p>இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அமுதா படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அமுதா நேற்று பரிதாபமாக இறந்தார்.</p><p>மேலும் இதுகுறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொய்யாப்பழம் பறித்த பெண், மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>கோவை சாடிவயல் யானைகள் முகாம்: பொதுமக்களை அனுமதிக்க வனத்துறை தீவிர பரிசீலனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kovai-sadivayal-elephant-camp-public-entry-under-consideration</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kovai-sadivayal-elephant-camp-public-entry-under-consideration#comments</comments><guid isPermaLink="false">667b11e2-c316-4df1-9dcb-4e850ec4d60f</guid><pubDate>Mon, 27 Jul 2026 23:32:54 +0000</pubDate><atom:updated>2026-07-27T23:32:54.860Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,பொதுமக்கள்,Forest Department,வனத்துறை,அனுமதி,Public,Elephant Camp,யானைகள் முகாம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/50v9ung4/tourist.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கோவை சாடிவயல் யானைகள் முகாம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/50v9ung4/tourist.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவை குற்றாலம் செல்லும் வழியில் சாடிவயல் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D">யானைகள் முகாம்</a> அமைந்துள்ளது. . இங்கு முத்து, காவிரி, ஜான் மற்றும் சுமங்கலா ஆகிய 4 யானைகள் வனத்துறையின் பராமரிப்பில் உள்ளன. இங்குள்ள இயற்கை சூழலை ரசிக்கவும், யானைகளை நேரில் காணவும் சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் ஆர்வம் இருந்து வருகிறது.</p><h2>வனத்துறை பரிசீலனை</h2><p>முதுமலை தெப்பக்காடு மற்றும் ஆனைமலை கோழிகமுத்தி யானைகள் முகாம்களில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல, சாடிவயல் முகாமிலும் பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனை ஏற்று, சாடிவயல் யானைகள் முகாமிற்கு பார்வையாளர்களை அனுமதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர்.</p><p><strong>இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-</strong></p><h2>சுற்றுலா பயணிகள்</h2><p>சாடிவயல் யானைகள் முகாமுக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது பரிசீலனையில் உள்ளது. இது தொடர்பாக வனத்துறை கால்நடை டாக்டர்களிடம் கருத்துகள் கோரப்பட்டு உள்ளது. கோவை குற்றாலத்திற்கு காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். முகாமில் யானைகளுக்கு காலை 8.30 மணி மற்றும் மாலை 5.30 மணிக்கு உணவளிக்கப்படும். ஆனால் மாலை 4.30 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகளுக்கு வனப்பகுதிக்குள் இருப்பதற்கு அனுமதி இல்லை.</p><h2>அன்றாட செயல்பாடு</h2><p>எனவே யானைகள் முகாமின் அன்றாட செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், சுற்றுலா பயணிகள் பார்வையிட ஏற்ற நேரம் மற்றும் பிற அம்சங்கள் குறித்து ஆராய்ந்து உயர் அதிகாரிகளுக்கு முன்மொழிவு அனுப்பப்படும். அது ஏற்கப்பட்டால் யானைகள் முகாமை பார்வையிட சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்.</p><p>இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை கிண்டி மருத்துவமனையில் அதிர்ச்சி: விபத்தில் மீட்கப்பட்ட வாலிபர்  திடீர் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/shock-at-chennai-guindy-hospital-youth-rescued-from-accident-dies-suddenly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/shock-at-chennai-guindy-hospital-youth-rescued-from-accident-dies-suddenly#comments</comments><guid isPermaLink="false">bbbc8a7b-2846-4c59-a437-8577fb466c0a</guid><pubDate>Mon, 27 Jul 2026 23:16:40 +0000</pubDate><atom:updated>2026-07-27T23:16:40.396Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Accident,Chennai,சென்னை,dies,உயிரிழப்பு,மருத்துவமனை,At the hospital,விபத்தில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/c1ngszhf/dharshan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணவர் பலி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/c1ngszhf/dharshan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கத்திப்பாரா மேம்பாலத்தில்  பஸ் மோதி விபத்தில் மீட்கப்பட்ட <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%20%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">வாலிபர்  திடீர் உயிரிழப்பு</a>. வேளச்சேரி டி.என்.எச்.பி. காலனியைச் சேர்ந்தவர் அய்யனாரப்பன். எலக்ட்ரீஷியன். இவரது மகன் தர்ஷன் (வயது 19). இவர், பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.</p> <h2>தர்ஷன்</h2><p>கடந்த 16-ந்தேதி அய்யனாரப்பன், தனது மகன் தர்ஷனுடன் மோட்டார் சைக்கிளில் அசோக்நகர் நோக்கி சென்று கொண்டிருந்தார். கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் சென்றபோது, கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி வந்த அரசு மின்சார பஸ், இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தந்தை-மகன் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.</p> <h2>மீட்பும் சிகிச்சையும்</h2><p>விபத்து ஒன்றில் சிக்கிய தந்தை அய்யனாரப்பன் மற்றும் அவரது மகன் தர்ஷன் ஆகிய இருவரும் உடனடியாக மீட்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் தந்தை அய்யனாரப்பன் பூரண உடல்நலம் தேறினார். ஆனால், மகன் தர்ஷனுக்கு காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக மருத்துவர்கள் தீவிர அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.</p><h2>திடீர் மரணம்</h2><p>அறுவை சிகிச்சை முடிந்து வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த தர்ஷனுக்கு, கடந்த சனிக்கிழமை இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி நேற்று தர்ஷன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>உறவினர்கள் குற்றச்சாட்டு</h2><p>தர்ஷனின் திடீர் மரணம் குறித்து அவரது உறவினர்கள் கூறும்போது, "அறுவை சிகிச்சை நன்றாக முடிந்தது என்றுதான் கூறினார்கள். ஆனால் நுரையீரல் தொற்று  காரணமாகவே தர்ஷன் உயிரிழந்து விட்டதாக தற்போது டாக்டர்கள் கூறுகிறார்கள்" என கண்ணீருடன் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>கணவர் இறந்த துக்கத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-dies-by-suicide-in-grief-over-husbands-death</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-dies-by-suicide-in-grief-over-husbands-death#comments</comments><guid isPermaLink="false">d52a82f7-1ef9-4cb7-8fbb-df8455d85641</guid><pubDate>Mon, 27 Jul 2026 23:13:36 +0000</pubDate><atom:updated>2026-07-27T23:13:36.564Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Namakkal,நாமக்கல்,இளம்பெண் தற்கொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/4p4xctpw/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/4p4xctpw/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல்,</p><p>ஒடிசா மாநிலம் நாகராங்பூர் மாவட்டம், ராங்கர் பகுதியை சேர்ந்தவர் முணாகோண்ட். இவரது மனைவி சுனிதா கோண்ட் (25 வயது). இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பின்னர் இருவரும் நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள சின்ன தளிகையில் உள்ள கோழிப்பண்ணையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தனர். இதனிடையே கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது.</p><p>கடந்த 10-ந்தேதி முணாகோண்ட் மது அருந்திவிட்டு வந்ததால் மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த முணாகோண்ட் வீட்டுக்கு வெளியே ஜன்னல் கம்பியில் துண்டால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் தற்கொலை செய்து கொண்டதால் மனமுடைந்து காணப்பட்ட சுனிதா கோண்ட் அதேபகுதியில் உள்ள உறவினர் ஜிதேந்தர் கோண்ட் என்பவரது வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார்.</p><p>இந்த நிலையில் கணவர் இறந்த துக்கத்தில் நேற்று காலை சுனிதா கோண்ட் வீட்டில் உள்ள கம்பியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு கொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஜிதேந்தர் கோண்ட் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது சுனிதா கோண்ட் ஏற்கனவே இறந்து விட் டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>கணவர் இறந்த துக்கத்தில் 17-வது நாளில் மனைவியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழப்பு - தோட்ட உரிமையாளர் உள்பட இருவர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-electrocuted-two-arrested-including-estate-owner</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-electrocuted-two-arrested-including-estate-owner#comments</comments><guid isPermaLink="false">72e64fdf-69fa-459b-80cc-97d407e38683</guid><pubDate>Mon, 27 Jul 2026 22:47:32 +0000</pubDate><atom:updated>2026-07-27T22:47:32.320Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காட்டு யானை,wild elephant,மின்சாரம் தாக்கி உயிரிழப்பு,கோயம்புத்தூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/tu4sfght/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/tu4sfght/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோயம்புத்தூர்,</p><p>கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனத்துறையினர் சிக்கதாசம்பாளையம் ஊராட்சி வேடர் காலனி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வாழை பயிரிடப்பட்டிருந்த குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் ஒரு ஆண் காட்டு யானை இறந்து கிடந்தது தெரிய வந்தது.</p><p>இதுகுறித்து தகவல் கிடைக்கப்பெற்றதும் சிறுமுகை வனச்சரக அலுவலர் தினேஷ் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் நேற்று முன்தினம் இரவு தோட்டத்தை சுற்றிலும் அமைக்கப்பட்டு இருந்த சோலார் மின்சார வேலிக்கு சட்டவிரோதமாக வீட்டில் இருந்து உயர் அழுத்த மின்சாரம் வழங்கப்பட்டு இருக்கிறது. நேற்று காலை அந்த வழியாக யானை கடந்து சென்ற போது மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தது தெரிய வந்தது. இறந்த யானைக்கு 25 வயது இருக்கும்.</p><p>இதைத்தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, அரசு வன கால்நடை மருத்துவ அலுவலர்கள் விஜயராகவன், வெண்ணிலா, கால்நடை மருத்துவர்கள் பிரதீப், யோகேஷ், பிரபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.</p><p>இதைத்தொடர்ந்து மின்சாரம் தாக்கி இறந்த ஆண் காட்டு யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கிடையே மின்சார வாரிய செயற்பொறியாளர் சத்யா, உதவி செயற்பொறியாளர் சுரேஷ்குமார், உதவி பொறியாளர் விநாயகமூர்த்தி மற்றும் பணியாளர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து தோட்ட உரிமையாளர் குமார் (65 வயது), விவசாய கூலி தொழிலாளி பாக்கியராஜ் (42 வயது) ஆகிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை விமான நிலையத்தில் ஒரே மாதத்தில் 16 ஆயிரம் டன் சரக்குகளை கையாண்டு சாதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-airport-handles-16000-tonnes-in-single-month-record</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-airport-handles-16000-tonnes-in-single-month-record#comments</comments><guid isPermaLink="false">cb0ee37e-18ca-4855-9cfd-18f35a10613e</guid><pubDate>Mon, 27 Jul 2026 20:26:26 +0000</pubDate><atom:updated>2026-07-27T20:26:26.671Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Airport,சென்னை விமான நிலையம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/27fdwe97/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை விமான நிலையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/27fdwe97/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>சரக்கு போக்குவரத்து</h2><p>சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நாளுக்கு நாள் சரக்கு போக்குவரத்து அதிகரித்து வருகிறது. சென்னை விமான நிலைய கார்கோ மூலம் தோல் பொருட்கள், ஆயத்த ஆடைகள், ஜவுளி வகைகள், எந்திர உதிரிபாகங்கள், தங்க நகைகள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதேபோல் வெளிநாடுகளில் இருந்து தங்க கட்டிகள், மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள், எந்திரங்கள் உள்ளிட்டவை அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன.</p><h2>20 விமானங்கள்</h2><p>இதனால் சென்னை விமான நிலைய கார்கோ பகுதி 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தினமும் 15 முதல் 20-க்கும் மேற்பட்ட சரக்கு விமானங்கள் வந்து, சரக்குகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. சரக்கு கையாளும் பணிகளை விரைவுபடுத்துவதற்காக நவீன வசதிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னை விமான நிலைய கார்கோவில், கடந்த 2024-2025-ம் ஆண்டை விட 2025-2026-ம் ஆண்டில் 11.7 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தேசிய அளவில் சரக்கு போக்குவரத்து வளர்ச்சி சராசரியாக 6.2 சதவீதமாக உள்ளது.</p><h2>16 ஆயிரம் டன்</h2><p>கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சென்னை விமான நிலைய கார்கோவில் ஒரே மாதத்தில் 16 ஆயிரம் டன் சரக்குகள் கையாளப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. சென்னை விமான நிலைய கார்கோ வரலாற்றில் ஒரே மாதத்தில் இந்த அளவு அதிக எடையுள்ள சரக்குகளை கையாண்டது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. விமான நிலையத்தில் சரக்கு போக்குவரத்து ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால், சரக்குகளை கையாளுவதற்கு கூடுதல் இடவசதி தேவை ஏற்பட்டுள்ளது.</p><h2>5-வது சேட்டிலைட் முனையம்</h2><p>இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் 5-வது சேட்டிலைட் முனையம் அமைக்க இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. இந்த 5-வது புதிய சேட்டிலைட் முனையம், தற்போதுள்ள 4-வது முனையத்தின் தெற்கு பகுதியில், பல்லாவரம் திசையில் அமைக்கப்பட உள்ளது. விமான நிலையத்தின் 2-ம் கட்ட கட்டுமான பணிகள் நிறைவடைந்ததும், 5-வது சேட்டிலைட் முனையத்தின் கட்டுமான பணிகள் தொடங்கும் என கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>திருமணமான 5 மாதங்களில் புதுப்பெண் வெட்டிக்கொலை - குடும்பத்தகராறில் கணவர் வெறிச்செயல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/newlywed-bride-hacked-to-death-in-5-months-of-marriage</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/newlywed-bride-hacked-to-death-in-5-months-of-marriage#comments</comments><guid isPermaLink="false">271f90c5-ce97-4187-b109-7f083fc77bde</guid><pubDate>Mon, 27 Jul 2026 20:02:59 +0000</pubDate><atom:updated>2026-07-27T20:02:59.843Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,தென்காசி,murder,கொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/cz4tc6vy/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/cz4tc6vy/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><p>தென்காசி மங்கம்மாள் சாலை சாஸ்தா கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சக்தி வீரமணிகண்டன் (33 வயது). இருசக்கர வாகன பழுதுநீக்கும் தொழிலாளி. இவரது மனைவி அன்னலட்சுமி (23 வயது). இவர்களுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.</p><p>திருமணமான முதல் வாரத்தில் இருந்தே இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து அன்னலட்சுமி தென்காசி அனைத்து மகளிர் போலீசார் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அறிவுரை வழங்கியும் பிரச்சினை தீரவில்லை.</p><p>இந்த நிலையில், நேற்று காலை ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சக்தி வீரமணிகண்டன், அரிவாளால் அன்னலட்சுமியை சரமாரியாக வெட்டினார். இதில் உடலில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.</p><p>இதையடுத்து தப்பியோடிய சக்தி வீரமணிகண்டன் தென்காசி குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அன்னலட்சுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>வாசீஸ்வரர் கோவில் புனிதத்தைக் கெடுக்கும் சமூக விரோதிகள்: அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vaseeswarar-temple-desecration-anti-social-elements</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vaseeswarar-temple-desecration-anti-social-elements#comments</comments><guid isPermaLink="false">5930444d-ad2e-4645-879e-6d0c87a452a0</guid><pubDate>Mon, 27 Jul 2026 18:29:09 +0000</pubDate><atom:updated>2026-07-27T18:29:09.596Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Thiruvallur,திருவள்ளூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/cij2b6ve/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/cij2b6ve/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>திருவள்ளூர் மாவட்டம், திருப்பாச்சூரில் அமைந்துள்ள 1,800 ஆண்டுகள் பழமையான வாசீஸ்வரர் கோவில் சுற்றுச்சுவர் அருகே, மர்ம நபர்கள் தொடர்ந்து மாட்டிறைச்சிக் கழிவுகளைக் கொட்டி வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பாடல் பெற்ற இப்புனிதத்தலத்தில், திட்டமிட்டு இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இத்தகைய கீழ்த்தரமான செயல்கள் அரங்கேறி வரும் வேளையில், விஜய்யின் அரசும் அதன் இந்து சமய அறநிலையத்துறையும் இதனைக் கண்டுகொள்ளாமல் மெத்தனமாக இருப்பது கண்டனத்திற்குரியது.</p><p>கோவிலின் சுற்றுச்சுவர் அருகே கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளைத் தெருநாய்கள் கோவில் வளாகத்திற்குள் கவ்விக்கொண்டு வருவதால், பிரகாரத்தின் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவிலுக்குச் சொந்தமான 2.15 ஏக்கர் நிலத்தின் சுற்றுச் சுவருக்குள்ளேயே மாட்டிறைச்சிக் கழிவுகள் வீசப்பட்டு, கடுமையான சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகப் பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.</p><p>எனவே கோவிலின் புனிதத்தைக் காக்கத் தவறிய விஜய்யின் அரசு, உடனடியாகத் தனது அலட்சியப் போக்கைக் கைவிட்டு, இச்செயலில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் வளாகத்தையும் அதற்குச் சொந்தமான இடங்களையும் தூய்மைப்படுத்தி, தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>15 லட்சம் பணம் கொடுத்தால் அரசு வழக்கறிஞர் பணியா? இது தான் ஊழலற்ற ஆட்சியின் லட்சணமா? - டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/15-laksham-panam-koduthal-arasu-vazhakkarignar-paniya-ithu-than-oozhalatra-aatchiyin-latchanama-tdtv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/15-laksham-panam-koduthal-arasu-vazhakkarignar-paniya-ithu-than-oozhalatra-aatchiyin-latchanama-tdtv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">895f902e-49da-4ee3-9fad-5eb8d5f75e73</guid><pubDate>Mon, 27 Jul 2026 17:24:56 +0000</pubDate><atom:updated>2026-07-27T17:24:56.508Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,லஞ்சம்,Bribery,ஊழல்,அரசு வழக்கறிஞர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/mn55atyd/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/mn55atyd/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வழக்கறிஞர் நியமனத்திற்காக பெண் ஒருவரிடம் தவெக நிர்வாகி 15 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் பத்து நாட்களில் பணிநியமனம் வழங்கப்படும் என கூறும் தொலைபேசி உரையாடல் ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.</p><p>ஆடு திருட்டு வழக்கில் தொடர்புடையவர் அரசு வழக்கறிஞராக நியமனம், மூத்த அமைச்சர் ஒருவர் அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு லஞ்சம் கேட்பதாக வழக்கு தொடர்ந்த தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம் என அரசு வழக்கறிஞர் நியமனம் தொடர்பான தொடர் புகாரில் தற்போது கன்னியாகுமரி மாவட்ட தவெக நிர்வாகி ஒருவரும் சிக்கியிருக்கிறார்.</p><p>யாராவது லஞ்சம் கேட்டால் “விஜய் ஆட்சி என்றும், கொடுக்க முடியாது எனவும் துணிச்சலுடன் சொல்லுங்கள்” என பொதுமக்கள் மத்தியில் முழங்கிய முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தற்போது தன்னுடைய சொந்தக் கட்சி நிர்வாகிகளே லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்குவதாக எழுந்திருக்கும் புகாருக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ? முதல்-அமைச்சரின் அறிவுரை பொதுமக்களுக்கு மட்டும் தானா? தவெக நிர்வாகிகளுக்குப் பொருந்தாதா?</p><p>தகுதி மற்றும் திறமையை அடிப்படையாக வைத்து நடக்க வேண்டிய அரசு வழக்கறிஞர் நியமனம், தவெக ஆட்சிக்கு வந்த பின்பு லஞ்சமாக பணம் கொடுத்தாலே நடக்கும் என்ற நிலை உருவாகியிருப்பது, சட்டத்தின் மீதும் நீதித்துறையின் மீதான பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை ஒட்டுமொத்தாக சீர்குலைக்கும் செயலாகும்.</p><p>எனவே, நீதித்துறையுடன் நேரடி தொடர்புடைய, முக்கிய பொறுப்புகளில் ஒன்றான அரசு வழக்கறிஞர் நியமனத்தில் எழுந்திருக்கும் லஞ்சப் புகாரை விரிவான விசாரணைக்கு உட்படுத்திடுவதோடு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என  முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>6 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/rain-possibility-till-1-am-in-6-districts</link><comments>https://www.dailythanthi.com/news/weather/rain-possibility-till-1-am-in-6-districts#comments</comments><guid isPermaLink="false">c02c688c-3b9d-4eec-a366-9c4c8cfd27df</guid><pubDate>Mon, 27 Jul 2026 17:08:59 +0000</pubDate><atom:updated>2026-07-27T17:08:59.255Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு,வானிலை முன்னறிவிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/pvg4jgcm/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/pvg4jgcm/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று வடகடலோர தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின், ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று நள்ளிரவு 1 மணி வரை மழை வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நீலகிரியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கரடியை துரத்திய வளர்ப்பு நாய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dog-chases-bear-in-residential-area-of-nilgiris</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dog-chases-bear-in-residential-area-of-nilgiris#comments</comments><guid isPermaLink="false">ab180410-8d0b-4569-8e7f-589b901e0c28</guid><pubDate>Mon, 27 Jul 2026 17:02:55 +0000</pubDate><atom:updated>2026-07-27T17:02:55.893Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நீலகிரி,கரடி,bear,வளர்ப்பு நாய்,pet dog,தேயிலை தோட்டம்,Tea Estate</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/0j9i0849/bear.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கரடி, நாய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/0j9i0849/bear.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p> நீலகிரியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கரடியை, வளர்ப்பு நாய் ஒன்று உயிரை பணயம் வைத்து வீரத்துடன் துரத்தியடித்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.</p> <h2>குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கரடி</h2><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF">நீலகிரி</a> மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கன்னிகாதேவி காலனி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் அடர்ந்த தேயிலை தோட்டங்களை ஒட்டி அமைந்துள்ளது. இந்நிலையில், நேற்று உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறிய கரடி ஒன்று, சாவகாசமாக இந்த குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.</p> <h2>அலறிய மக்கள்... பாய்ந்த நாய்</h2><p>தெருவில் கரடி உலா வருவதை பார்த்த பொதுமக்கள், பயத்தில் அலறியடித்து கொண்டு தங்களது வீடுகளுக்குள் ஓடி உடனே கதவுகளை பூட்டிக்கொண்டனர். அப்போது, அங்குள்ள ஒரு வீட்டின் வாசலில் இருந்த வளர்ப்பு நாய், கரடியை பார்த்ததும் ஆக்ரோஷமாக குரைக்க தொடங்கியது. கரடி பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தாலும், நாய் சற்றும் அஞ்சவில்லை. கரடியை நோக்கி நேருக்கு நேர் சீறியது. </p><h2>ஓட்டம் பிடித்த கரடி</h2><p>நாயின் சத்தத்தை கேட்டு தைரியம் வரப்பெற்ற பொதுமக்களும் சத்தம்போட்டு கரடியை விரட்ட முயன்றனர். வளர்ப்பு நாயின் அசாத்திய வீரத்தாலும், மக்களின் சத்தத்தாலும் நிலைகுலைந்த கரடி, அங்கிருந்து தேயிலை தோட்டத்தின் வழியாக அடர்ந்த வனப்பகுதிக்குள் ஓட்டம் பிடித்தது.</p> <h2>பொதுமக்கள் கோரிக்கை</h2><p>நாய் கரடியை விரட்டும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. "நல்லவேளை, அந்த நாய் இருந்ததால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது" என நிம்மதி பெருமூச்சு விடும் அப்பகுதி மக்கள், "சமீபகாலமாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், வனத்துறையினர் உடனடியாக கூண்டு வைத்து கரடியை பிடிக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>&quot;மேகதாது அணைக்கு தமிழக அரசின் ஒப்புதல் தேவையில்லை என்பது ஏற்க முடியாது&quot; - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-unacceptable-that-the-meghadadu-dam-does-not-require-the-approval-of-the-tamil-nadu-government-manickam-thakur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-unacceptable-that-the-meghadadu-dam-does-not-require-the-approval-of-the-tamil-nadu-government-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">26f23378-15ee-4957-b381-60a42be6649e</guid><pubDate>Mon, 27 Jul 2026 16:17:04 +0000</pubDate><atom:updated>2026-07-27T16:17:04.405Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,சென்னை,Meghadadu Dam,மேகதாது அணை,தமிழ்நாடு காங்கிரஸ்,மாணிக்கம் தாகூர் எம்.பி.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/fhj5x9by/168.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/fhj5x9by/168.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">மாணிக்கம் தாகூர்</a> எம்.பி. எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதற்கு "தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை" என பாராளுமன்றத்தில் ஜல் சக்தி துறை இணை மந்திரி ராஜ்பூஷன் அளித்திருக்கும் எழுத்துப்பூர்வமான பதில் மிகவும் ஆபத்தானது; முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.</p><h2>பாராளுமன்றம்</h2><p>தமிழ்நாட்டிற்கும் நமது விவசாயிகளுக்கும் எதிராகத்தான் மோடி அரசு எப்போதும் செயல்படுகிறது என்பதை நாங்கள் தொடர்ந்து கூறிவருகிறோம். மந்திரின் இந்தப் பதில் மூலம் பாஜகவின் தமிழ்நாட்டு எதிரான மக்கள் விரோதப்போக்கு மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><p>தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளையும், நமது விவசாயிகளின் நலனையும் காக்க இந்த முடிவை எதிர்த்து பாராளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் காங்கிரஸ் கட்சி உறுதியாகக் குரல் எழுப்பும்.</p><p>இவ்வாறு  அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்-அமைச்சர் அலுவலகம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-ministers-office-shifting-to-namakkal-kavignar-maligai-official-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-ministers-office-shifting-to-namakkal-kavignar-maligai-official-announcement#comments</comments><guid isPermaLink="false">7197aba6-9ed7-4da9-9313-a0c2a19f697d</guid><pubDate>Mon, 27 Jul 2026 15:54:56 +0000</pubDate><atom:updated>2026-07-27T15:54:56.615Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,Vijay,விஜய்,Chennai,சென்னை,மெரினா கடற்கரை,சென்னை மெரினா,Chennai Merina,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,நாமக்கல் கவிஞர் மாளிகை,முதல்-அமைச்சர் அலுவலகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/zmqsne6e/Untitled-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/zmqsne6e/Untitled-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்திற்கு, இட நெருக்கடியின் காரணமாகவும் முதல்-அமைச்சரின் அலுவலகம், முதல்-அமைச்சரின் செயலாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் அறை மாற்றம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாலும், நிர்வாகக் காரணங்களினாலும் கீழ்க்கண்ட முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன :-</p><ul><li><p>நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் தற்போது உள்ள செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் அலுவகத்தின் பிரிவுகள், வரவு செலவு பிரிவு, பொருட்காட்சி அனுமதிப்பிரிவு, முதல்-அமைச்சசரின் சமூக ஊடகப்பிரிவு (CMO Social Media), செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் இயக்குநர் திரு. அருள், தமிழ் வளர்ச்சி மற்றும் மொழிபெயர்ப்பு, செய்தித்துறை, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையைச் சார்ந்த திருவாளர்கள். பாஸ்கரன், ரவிச்சந்திரன், அ. வே. சுரேந்திரன் மற்றும் த. கலைச் செல்வன் ஆகிய அலுவலர்களின் அலுவலகம் மற்றும் எழுதுப்பொருட்கள் அறை அனைத்தும் உடனடியாக, தரைத்தளம் (500 சதுர அடி), இரண்டாம் தளம் (400 சதுர அடி) மற்றும் மூன்றாம் தளம் (2000 சதுர அடி) ஆகியவற்றில் காலியாக உள்ள சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்திற்கு மாற்றம் செய்யப்படுகின்றன.</p></li><li><p>செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் காலியாக உள்ள இடத்தினை ஆய்வு செய்து, மேலே கூறப்பட்ட அலுவலர்கள் மற்றும் பிரிவுகளுக்கு தேவையான இடத்தினை ஒதுக்கீடு செய்து, அவர்கள் பணிபுரிய தேவையான அனைத்து வசதிகளையும் உடனடியாக செய்து தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்.</p></li><li><p>நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் தற்போது செயல்பட்டு வரும் சுற்றுலா துறையின் எழுதுப்பொருட்கள் அறையினை அத்துறை அமைந்துள்ள 9-வது தளத்திற்கு மாற்றம் செய்து கொள்ளுமாறு அத்துறைக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.</p></li><li><p>கோட்டப் பொறியாளர் (கட்டடங்கள்), பொதுப் பணித்துறையை, மேலே மாற்றம் செய்யப்பட உள்ள அலுவலர்கள் மற்றும் பிரிவுகளுக்கு தேவையான மேஜை, நாற்காலி, சோபா, கணிணி, கோப்புகள் மற்றும் தொடர்புடைய அனைத்தையும் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திலிருந்து சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்திற்கு மாற்றம் செய்துதருமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்.</p></li></ul><p>2. முதல்-அமைச்சரின் அலுவலகம் 10-வது தளத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளதால் தற்போது அத்தளத்தில் செயல்பட்டு வரும் அலுவலகங்கள் மற்றும் அலுவலர்களின் அறைகள் அனைத்தும் (பின்வரும் பட்டியலில்) அதற்கு எதிரே தெரிவிக்கப்பட்டுள்ள இடத்திற்கு தற்காலிகமாக மாற்றம் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">செய்யப்படுகின்றன </a>:-</p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/gi7vdp8q/Untitled-13.jpg" /></figure><p>3. நாமக்கல் கவிஞர் மாளிகையில் 1, 3, 5, 7 மற்றும் 8 ஆகிய தளங்களில் அமைந்துள்ள கூட்ட அரங்குகள் உடனடியாக பொது (கட்டடங்கள்)த்துறைக்கு ஒப்படைக்குமாறு சம்மந்தப்பட்ட துறைகளின் உயர் அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். மேலும் கூட்ட அரங்கில் விலை மதிப்புள்ள பொருட்கள் இருப்பின் அதை எடுத்துப் பாதுகாக்குமாறு சம்மந்தப்பட்ட துறையின் அலுவலக நடைமுறைப் பிரிவு கேட்டுக் கொள்ளப்படுகிறது.</p><p>4. உதவி செயற்பொறியாளர் (கட்டடம்), பொதுப்பணித் துறை மேலே மாற்றம் செய்யப்பட்டுள்ள இடங்களுக்கு தேவையான மேஜை, நாற்காலிகள் அனைத்தையும் இட மாற்றம் செய்து தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்.</p><p>5. உதவி செயற்பொறியாளர் (மின்சாரம்) மாற்றம் செய்யப்பட்ட அனைத்து அறைகளிலும் அலுவலர்கள் அனைவரும் உடனடியாக பணிபுரிய ஏதுவாக மின்சார வசதிகள் சம்மந்தமாக அனைத்து பணிகளையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்.</p><p>6. பொதுத்துறையின் அலுவலக நடைமுறை-II பிரிவு தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் மற்றும் பிரிவுகளுக்கு இணைய வசதி (Internet) செய்து தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.</p><p>7. பொதுத்துறையின் தொலைபேசிகள் பிரிவு, தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் மற்றும் பிரிவுகளுக்கு ஏற்கெனவே உள்ளவாறு தொலைபேசி வசதி செய்து தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">இம்மாற்றங்கள் </a>அனைத்தும் உடனடியாக நடைமுறைக்கு வருகின்றன.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை ஏரிகளில் அதிநவீன சென்சார் தொழில்நுட்பம்: நீர்வளத்துறையின் புதிய திட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/state-of-the-art-sensor-technology-in-chennai-lakes-water-resources-departments-new-project</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/state-of-the-art-sensor-technology-in-chennai-lakes-water-resources-departments-new-project#comments</comments><guid isPermaLink="false">9e525323-4a9f-4a7b-a988-98b2a957045c</guid><pubDate>Mon, 27 Jul 2026 15:51:03 +0000</pubDate><atom:updated>2026-07-27T15:51:03.689Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,திருவள்ளூர்,ஏரி,Water Resources Department,நீர்வளத்துறை,New Project,சென்சார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/whkyn99l/252.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/whkyn99l/252.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர்,</p><p>சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் மேற்பார்வை, கட்டுப்பாடு மற்றும் தரவு சேகரிப்பு உள்ளிட்டவற்றிற்கு தொழில்நுட்பம் சார்ந்த தானியக்க நீர்த்தேக்க செயல்பாடுகளை தொலை தூர இடங்களில் இருந்து அப்போதைய தரவை சேகரித்து செயல்பாட்டு நிலைகளைக் கட்டுப்படுத்தும் சென்சார் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.</p><p>இதற்கான மென்பொருள் பொருத்தமட்டு சோதனை அடிப்படையில் பணிகள் நடந்து வருகின்றன. ஏரிகளில் நீர் இருப்பு மற்றும் மதகுகளின் நிலை, வெள்ளத்தின் போது அவசரக்கால நீர் வெளியேற்றம், நீரைத் தேக்கி வைத்தல் மற்றும் குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்துதல் போன்ற முடிவுகளை நீர்வளத்துறை அதிகாரிகள் தங்களது நிர்வாகத்துறை அலுவலகத்தில் இருந்தே தானியக்க முறையில் செயல்படுத்த முடியும். </p><h2>சென்சார் தொழில் நுட்பம்</h2><p>இதுகுறித்து நீர்வளத்துறையின் அதிகாரி ஒருவர் கூறும்போது, நீர்த்தேக்கத்தில் உள்ள உபரிநீர் வெளியேற்றும் இணைப்பு கால்வாய் மதகு, பேபி கால்வாய் மதகு என மொத்தம் 22 மதகுகளும். செம்பரம்பாக்கம் ஏரியில் 24 மதகுகளும், புழல் நீர்த்தேக்கத்தில் மதகுகளும் உள்ளன. </p><p>தற்போது பொருத்தப்பட்டு உள்ள சென்சார் தொழில் நுட்பம் மூலம் சரியான நேரத்தில் தகவல் பெறுதல், வெளிப்படையான நீர் விநியோகம், அணைக்கு நீர் கிடைப்பதை உறுதி செய்தல், வெள்ளத்தை கண்காணித்தல் மற்றும் வெளியேற்றுதல், பல்வேறு நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு அளவுகளைச் சீர மைத்தல் ஆகியவை செய்ய முடியும். பூண்டி ஏரியில் முதன்மைக் கட்டுப்பாட்டு மையமும் அதனுடன் செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளிலும் இணைக்கப்பட்டு உள்ளது. </p><p>இந்த கட்டுப்பாட்டு அறைகள் சேப்பாக்கத்தில் உள்ள <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">நீர்வளத்துறை</a> அதிகாரிகளால் கண்காணிக்கப்படும். இத்திட்டத்தின் மொத்தச்செலவு ரூ.32 கோடியாகும். சென்னை குடிநீர் வாரியம் மற்றும் சென்னை மாநகராட்சி ஆகியவற்றுடன் இணைந்து நீர்வளத்துறை இந்தத் தானியக்க தொழில்நுட்பத்தை நிறுவி உள்ளது என்றார்.</p>]]></content:encoded></item><item><title>
கொட்டும் மழையில் காத்திருந்த மக்கள்... ஆய்வு பணியை முடித்து குடையுடன் வந்து கையசைத்த முதல்-அமைச்சர் விஜய்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/people-waiting-in-heavy-rain-cm-vijay-waves-with-umbrella-after-inspection</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/people-waiting-in-heavy-rain-cm-vijay-waves-with-umbrella-after-inspection#comments</comments><guid isPermaLink="false">d54d1e60-3220-4db8-9c68-296dc0f3cfe4</guid><pubDate>Mon, 27 Jul 2026 15:44:19 +0000</pubDate><atom:updated>2026-07-27T15:44:19.636Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,முதல்-அமைச்சர்,TN,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/vtbewrwe/tncoi.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/vtbewrwe/tncoi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>சென்னை கோயம்பேட்டில் செயல்பட்டு வரும் மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்-அமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டார்.</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் இன்று சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் சென்னை, கோயம்பேட்டில் உள்ள 45 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட எதிர்மறை சவ்வூடு பரவல் முறையிலான மூன்றாம் நிலை (Tertiary Treatment Reverse Osmosis - TTRO) சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.</p><p>சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில், 438 கழிவு நீரேற்று நிலையங்கள் மற்றும் 22 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் மூலம் கழிவுநீர் மேலாண்மை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை மாநகரின் நீர் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், சுழற்சி நீர் பொருளாதாரத்தை (Circular Water Economy) நடைமுறைப்படுத்தவும், கோயம்பேடு மற்றும் கொடுங்கையூரில் நாளொன்றுக்கு தலா 45 மில்லியன் லிட்டர் (MLD) திறன் கொண்ட எதிர்மறை சவ்வூடு பரவல் முறையிலான மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.</p>  <h2>90 மில்லியன் லிட்டர்</h2><p>இந்த இரண்டு நிலையங்களும் நாளொன்றுக்கு 90 மில்லியன் லிட்டர் கழிவு நீரை சுத்திகரித்து வருகின்றன.  இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை மேலும் உயர்தரத்தில் சுத்திகரித்து, தொழிற்சாலைகளுக்கு தேவையான தரமான நீரை வழங்குவதாகும். இதன்மூலம் குடிநீர் மற்றும் நிலத்தடி நீரின் பயன்பாடு குறைக்கப்படுவதுடன், தொழிற்சாலைகளுக்கு நிலையான மாற்றுநீர் ஆதாரம் உருவாக்கப்படுவதோடு, சென்னை மாநகரின் நீண்டகால நீர் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>நாளொன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் உயர்தர மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் தொழிற்துறைக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டு வந்த குடிநீர், தற்போது பொதுமக்களின் குடிநீர் தேவைகளுக்காக வழங்கப்பட்டு வருகிறது.  இதன்மூலம், நிலத்தடி நீர்ப்பயன்பாடு குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கப்பட்டுள்ளதுடன், கட்டுமானத்துறை, ரெடிமிக்ஸ் கான்கிரீட் (RMC) மற்றும் கான்கிரீட் பிளாக் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மறுசுழற்சி செய்யப்பட்ட நீரின் பயன்பாடும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.</p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/fg752sqn/tncoit.jpg" /></figure> <h2>நீர் பாதுகாப்பு</h2><p>இத்திட்டம் சுற்றுச்சூழல், பொருளாதார மற்றும் சமூக ரீதியாக பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. நன்னீர் வளங்கள் பாதுகாக்கப்படுவதோடு, கழிவுநீர் வெளியேற்றம் குறைக்கப்படுகிறது. நிலத்தடிநீர் மற்றும் இயற்கை நீர்நிலைகள் பாதுகாக்கப்படுவதுடன், சென்னை மாநகரின் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறனும் அதிகரிக்கிறது. தொழிற்சாலைகளுக்கு நம்பகமான மாற்றுநீர் ஆதாரம் கிடைப்பதால் தொழில் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுவதோடு, குடிநீர் தேவைகளுக்காக கூடுதல் நீர் கிடைப்பதால் பொதுமக்களின் நீர் பாதுகாப்பும் மேம்படுகிறது.</p><p>கோயம்பேடு மற்றும் கொடுங்கையூரில் செயல்படும் TTRO நிலையங்களின் மூலம் கழிவுநீரை மதிப்புமிக்க வளமாக மாற்றி, சுழற்சி நீர் பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்துவதோடு, நிலையான வளர்ச்சி இலக்குகளை (Sustainable Development Goals) அடைவதற்கும் முக்கிய பங்காற்றி வருகிறது.</p>  <h2>கொட்டும் மழையில்</h2><p>இந்த ஆய்வின்போது, அரசு தலைமை கொறடா ரா.சபரிநாதன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் த.ஆனந்த், இ.ஆ.ப., சென்னை குடிநீர் வாரிய பொறியியல் இயக்குநர் உ. பர்வீஸ், தலைமை பொறியாளர்கள் ஏ.இராதாகிருஷ்ணன், கு.பா.வைதேகி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.</p><p>இந்த நிகழ்ச்சியின்போது, கோயம்பேடு பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தது.  கொட்டும் மழையிலும் முதல்-அமைச்சர் விஜய்யை காண்பதற்காக பாலத்திற்கு கீழேயும், சுற்றியுள்ள பகுதிகளிலும் மக்கள் காத்திருந்தனர்.  இதனால், கொட்டும் மழையிலும் காத்திருந்த மக்களை காண்பதற்காக, காரை விட்டு கீழே இறங்கி குடையுடன் வந்த முதல்-அமைச்சர் விஜய், அவர்களை நோக்கி கையசைத்து விட்டு சென்றார்.</p> ]]></content:encoded></item><item><title>நீதிமன்ற தீர்ப்பை ஏற்று அரசு பணி வழங்கியதை தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும் - மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tamil-nadu-government-should-withdraw-the-government-job-it-granted-in-compliance-with-the-court-verdict-m-veerapandian-insists</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tamil-nadu-government-should-withdraw-the-government-job-it-granted-in-compliance-with-the-court-verdict-m-veerapandian-insists#comments</comments><guid isPermaLink="false">d1264447-d0df-4d6d-8f92-4815158f5679</guid><pubDate>Mon, 27 Jul 2026 15:21:02 +0000</pubDate><atom:updated>2026-07-27T15:21:02.109Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Government job,ரத்து,வலியுறுத்தல்,அரசு பணி,அரசுப்பணி,மு.வீரபாண்டியன்,M. Veerapandian</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/r5n33yry/251.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.வீரபாண்டியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/r5n33yry/251.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><p>கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணையை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. </p><p>இவ்வாறு வேலை வழங்குவது கருணை அடிப்படையிலானது என்றாலும், இது சட்டத்திற்கு புறம்பானது மற்றும் தவறான முன்னுதாரணமாகும். எனவே, இது குறித்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சி</a> உட்பட பல தரப்பினராலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த எதிர்ப்பை கவனத்தில் கொள்ளாமல் அரசு வேலை வழங்கியது. நீதிமன்றம் தற்போது அதற்கு தடைவிதித்துள்ளது.</p><h2>மேல் முறையீடு</h2><p>எனவே, நீதிமன்ற தீர்ப்பை ஏற்று அரசு பணி வழங்கியதை தமிழ்நாடு அரசு திரும்பப் பெறவேண்டும் என்றும் இந்த வழக்கில் மேல் முறையீடு செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறது.</p><p>அதே வேளையில், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தேவையான வேலைவாய்ப்பு ,மற்றும் பொருளாதார உதவிகளை தவெக தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்று செய்திட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தவெக தலைமையை&nbsp;&nbsp;வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே கல்லூரி மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல்: 2 பேர் தீவிர சிகிச்சை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/murderous-attack-on-college-students-near-central-railway-station-2-in-intensive-care</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/murderous-attack-on-college-students-near-central-railway-station-2-in-intensive-care#comments</comments><guid isPermaLink="false">2b164bd7-ff37-4df0-b61a-bd0749f317b9</guid><pubDate>Mon, 27 Jul 2026 15:03:32 +0000</pubDate><atom:updated>2026-07-27T15:03:32.129Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Central Railway Station,student,attack,போலீசார் விசாரணை,மாணவர்கள் மோதல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/nlm8cgbo/250.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/nlm8cgbo/250.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த 2 மாணவர்கள் இன்று காலை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இறங்கி மெட்ரோ சுரங்கப்பாதை வழியாக புங்கா பூங்கா ரெயில் நிலையம் சென்று கொண்டிருந்தனர். </p><p>அப்போது 20 பேர் கொண்ட மாணவர் கும்பல் அவர்கள் இருவரையும் வழிமறித்து சரமாரியாக கத்தியால் தாக்கினார்கள். தலை, கழுத்து, உடல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெட்டு காயத்துடன் 2 மாணவர்களும் கீழே மயங்கி விழுந்தனர்.</p><h2>தீவிர சிகிச்சை</h2><p>இதைப் பார்த்த பயணிகள் பதறி அடித்து ஓட்டம் பிடித்தனர். ரத்தகாயங்களுடன் கிடந்த 2 மாணவர்களையும் பெரியமேடு போலீசார் மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><p>இதுகுறித்து பெரியமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவர்கள் மோதலில் காயம் அடைந்த ஒரு மாணவரின் பெயர் நிதீஷ்குமார் (19) இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மற்றொரு மாணவர் பெயர் ஹேமந்த் குமார் (17) முதலாம் ஆண்டு படித்து வருகிறார். <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">மாணவர்கள் மோதலுக்கான</a> காரணம் என்ன என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>அரசு பணி ரத்து: நாளை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு - அமைச்சர் நிர்மல்குமார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-job-cancellation-appeal-to-supreme-court-tomorrow-minister-nirmal-kumar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-job-cancellation-appeal-to-supreme-court-tomorrow-minister-nirmal-kumar#comments</comments><guid isPermaLink="false">4dd426cc-6c5b-4563-9f25-107255e4a351</guid><pubDate>Mon, 27 Jul 2026 14:34:37 +0000</pubDate><atom:updated>2026-07-27T14:34:37.431Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர் கூட்ட நெரிசல்,Supreme Court,சென்னை,Government job,ரத்து,High Court Madurai Branch,அரசுப்பணி,அமைச்சர் நிர்மல்குமார்,Minister Nirmal Kumar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/0orxr8mo/249.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/0orxr8mo/249.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கடந்த 2025 செப்டம்பர் 27 அன்று கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகி இருந்தனர். </p><p>இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, இந்த சம்பவத்தில் பலியான 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கி முதல்-அமைச்சர் விஜய் உத்தரவுகளை நேரில் வழங்கி இருந்தார்.</p><p>இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கானது இன்று ஐகோர்ட் மதுரை கிளைக்கு விசாரணைக்கு வந்தது. </p><h2>மேல்முறையீடு</h2><p>இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப்பணி ஆணையை ரத்து செய்து ஐகோர்ட் மதுரை கிளை இன்று உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யவுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் வாதங்களை கேட்காமலேயே ஐகோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும், இதனால் நாளையே மேல்முறையீடு செய்யப்போவதாகவும் சட்டத்துறை அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">நிர்மல்குமார்</a> தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை: தொழிலாளர் நலன் குறித்த பயிற்சி கருத்தரங்கை தொடங்கி வைத்த அமைச்சர் முகமது பர்வேஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-minister-mohammad-parvez-inaugurated-a-training-seminar-on-labor-welfare</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-minister-mohammad-parvez-inaugurated-a-training-seminar-on-labor-welfare#comments</comments><guid isPermaLink="false">22d3ed38-9dbb-49da-a4f9-b672a9810ff4</guid><pubDate>Mon, 27 Jul 2026 13:28:21 +0000</pubDate><atom:updated>2026-07-27T13:28:21.449Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,inaugurated,தொழிலாளர்,Labor Welfare Board,அமைச்சர் முகமது பர்வேஸ்,Minister Mohammad Parvez</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/7xww0ch4/248.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் முகமது பர்வேஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/7xww0ch4/248.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>இன்று சென்னையில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D">அமைச்சர் முகமது பர்வேஸ்</a> தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சார்பில், “சமூக உரையாடல், பணியிட ஒத்துழைப்பு மற்றும் குறைதீர் நடைமுறைகள்” குறித்த ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கினை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்கள்.</p><h2>ஒரு நாள் பயிற்சி</h2><p>இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசியபோது அமைச்சர், முதல்வர் சார்பாக மியாமோட்டோ மிச்சிகோ, பல்லவி மான்சிங், அரசு அலுவலர்கள் மற்றும் இப்பயிற்சியின் பங்கேற்பாளர்களை நான் உளமார வரவேற்கிறேன் என்றும், நான் இன்று தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாய் விளங்கும் ஒவ்வொரு தொழிலாளரின் குரலாக உங்கள் முன்னிலையில் நின்று, இந்த ஒரு நாள் பயிற்சியை துவக்கி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்றும், தமிழக முதல்-அமைச்சரின் தலைமையில், ஒவ்வொரு தொழிலாளரும் பாதுகாப்பாகவும், மதிப்புடன் நடத்தப்படுபவராகவும், முன்னேறும் வாய்ப்பை பெறுபவராகவும் இருக்கும் வெற்றி தமிழகத்தினை உருவாக்கிடும் நோக்கில் நாம் உறுதியாக செயல்பட்டு வருகிறோம். இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் முன்னணியில் மட்டுமல்லாமல், <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D">தொழிலாளர்</a> நலனிலும் நாட்டிற்கே முன்மாதிரியாகத் திகழும் மாநிலமாக தமிழ்நாட்டை நாம் அனைவரும் இணைந்து உருவாக்குவோம் என்றும், மேலும் பயிற்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களை உளமார வரவேற்கிறேன் என்றும் இன்று தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை உருவாக்கும் ஒவ்வொரு தொழிலாளரின் கண்ணியம் மற்றும் கடின உழைப்பின் குரலாக நிற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் பேசினார்கள் .</p><h2>பங்கேற்பு</h2><p>இந்நிகழ்ச்சியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசு செயலாளர் வீரராகவ ராவ், தொழிலாளர் ஆணையர் முனைவர் மா.வள்ளலார், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக இயக்குநர் திரு. செ.ஆனந்த், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இயக்குநர் மியாமோட்டோ மிச்சிக்கோ, தேசிய திட்ட ஒருங்கிணைப்பாளர் பல்லவி மான்சிங், முதுநிலை நிகழ்ச்சி அலுவலர், திவ்யா வர்மா, தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய இயக்குநர் செந்தில் குமாரி, இணை இயக்குநர்கள் சுப்ரமணியன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். </p><p>இந்நிகழ்ச்சியில், மனிதவள துறை வல்லுநர்கள், நலப்பணி அதிகாரிகள், தொழிலாளர் சட்டங்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் குறிப்பாக மின்னணுவியல் உற்பத்தித் துறைகள் மற்றும் பிற துறைகளைச் சார்ந்தவர்கள் பங்குபெற்றனர்.</p>]]></content:encoded></item><item><title>வீட்டிலேயே புதுச்சேரி சாராயம் விற்பனை - வெளியான வீடியோ </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/puducherry-liquor-sold-from-home-video-released</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/puducherry-liquor-sold-from-home-video-released#comments</comments><guid isPermaLink="false">d4000101-bf60-41b7-82bc-19349dc0b9f4</guid><pubDate>Mon, 27 Jul 2026 12:46:54 +0000</pubDate><atom:updated>2026-07-27T12:46:54.955Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Mayiladuthurai,மயிலாடுதுறை,home,police enquiry,போலீசார் விசாரணை,சாராயம் விற்பனை</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/2ylsnn35/33.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ வீட்டிலேயே புதுச்சேரி சாராயம் விற்பனை]]></media:title><media:description type="html"><![CDATA[ மயிலாடுதுறையில் வீட்டிலேயே புதுச்சேரி சாராயம் விற்பனை செய்யப்பட்டது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/2ylsnn35/33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மயிலாடுதுறை,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மயிலாடுதுறை மாவட்டம்</a> அருகே வீடுகளிலேயே புதுச்சேரி சாராயம் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் அதிரவைக்கும் வீடியோ ஆதாரங்கள் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>தடையின்றி நடக்கும் 24 மணி நேர விற்பனை</h2><p>மயிலாடுதுறை மாவட்டம், அன்னவாசல் பகுதியில் சட்டவிரோதமான மது மற்றும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சாராயம் விற்பனை </a>படுஜோராக நடைபெற்று வருகிறது. எவ்வித அச்சமும் இன்றி, 24 மணி நேரமும் தொடர்ச்சியாக வீடுகளிலேயே அந்த புதுச்சேரி சாராயம் விற்கப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் குடியிருப்பு பகுதிகளில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்படுவதோடு, பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படுவதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.</p><h2>வைரலாகும் வீடியோ - அதிரடி நடவடிக்கை கோரிக்கை</h2><p>வீடுகளில் சாராயம் விற்கப்படும் தெளிவான காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சட்டவிரோத கும்பல் மீது மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினரும், மயிலாடுதுறை போலீசாரும் உடனடியாக தலையிட்டு கடுமையான கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பொதுமக்கள் கோரிக்கை</a> விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 4 பேர் பலி: முதல்-அமைச்சர் விஜய் நிவாரணம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/4-killed-in-sivakasi-firecracker-factory-explosion-chief-minister-vijay-announces-relief</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/4-killed-in-sivakasi-firecracker-factory-explosion-chief-minister-vijay-announces-relief#comments</comments><guid isPermaLink="false">98f29b00-50c9-42ed-8ec9-5550e7a8bc2c</guid><pubDate>Mon, 27 Jul 2026 12:44:18 +0000</pubDate><atom:updated>2026-07-27T12:44:18.958Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,விருதுநகர்,Sivakasi,சிவகாசி,வெடி விபத்து,firecracker factory,Firecracker Factory Accident,சிவகாசி பட்டாசு ஆலை,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/0hjbdkun/Untitled-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/0hjbdkun/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், செங்கமலப்பட்டி பகுதியில் இயங்கிவந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சம் நிதியுதவியை முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>4 பேர் உயிரிழப்பு</h2><p>விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், செங்கமலப்பட்டி பகுதியில் நேற்று (26.07.2026) காலை தனியாருக்குச் சொந்தமான இடத்தில் முறையான அனுமதி பெறாமல் இயங்கிவந்த பட்டாசு ஆலையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ராம்பிரகாஷ் (வயது 32), ராமச்சந்திரன் (வயது 40), இன்னாசிமுத்து (வயது 44) மற்றும் நாரணாபுரத்தைச் சேர்ந்த பாண்டித்துரை (வயது 35) ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.</p><h2>ரூ. 4 லட்சம் நிவாரணம்</h2><p>இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா நான்கு லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.</p><h2>நடவடிக்கை </h2><p>மேலும், முறையான அனுமதி பெறாமல் சட்டத்திற்குப் புறம்பாக பட்டாசு ஆலைகள் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நடத்தப்படுகின்றனவா </a>என்பதனை ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழக பொறியியல் சேர்க்கை: ஒதுக்கீடு பெற்ற மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-engineering-admissions-important-notice-for-reserved-students</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-engineering-admissions-important-notice-for-reserved-students#comments</comments><guid isPermaLink="false">bb18f777-b591-4ab8-8f52-736aaeeed721</guid><pubDate>Mon, 27 Jul 2026 12:40:26 +0000</pubDate><atom:updated>2026-07-27T12:40:26.757Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,College,Notice,Engineering,பொறியியல் சேர்க்கை,முக்கிய அறிவிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/wnb1c5rl/247.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக பொறியியல் சேர்க்கை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/wnb1c5rl/247.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திரிப்பதாவது:-</p><p>தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை-2026 கால அட்டவணையில் கொடுக்கப்பட்டிருந்த படி சிறப்பு கலந்தாய்வு, அரசு பள்ளியில் பயின்ற மற்றும் பொது பிரிவினருக்கு 13.07.2026 முதல் 19.07.2026 வரை நடைபெற்றது. இதில் 950 இடங்கள் ஒதுக்கப்பட்டு மாணாக்கர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர்.</p><p>அதை தொடர்ந்து முதல் சுற்று கலந்தாய்விற்கான விருப்பப்பட்டியல் உள்ளீடு செய்தல் 20.07.2026 முதல் 22.07.2026 வரை நடைபெற்றது. இதில் 32,250 மாணாக்கர்கள் தங்கள் விருப்ப கல்லூரி மற்றும் பாடங்களை பதிவு செய்திருந்தனர். அவர்களில் 28,550 பேருக்கு மாணாக்கர்களின் தரவரிசை, கல்லூரியில் உள்ள இடங்கள் மற்றும் விருப்ப பட்டியலின் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.</p><h2>மாணவர் சேர்க்கை</h2><p>மாணாக்கர்களுக்கு ஒதுக்கீட்டானண வெளியிடுவதற்கு முன்பாக 23.07.2026 அன்று ஒதுக்கீட்டானைகளை 11 அரசு பொறியியற் கல்லூரிகளில் இருந்து 33 பேராசிரியர்கள் நேரில் வரவழைக்கப்பட்டு தரவரிசை மற்றும் விருப்ப பட்டியலின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது என்று நேரடி சரிபார்ப்பு செய்யப்பட்டது. தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை பெற்ற மாணவர்கள், தங்கள் விருப்பத் தேர்வில் குறிப்பிட்டுள்ள TFC (Tamil Nadu Facilitation Centre) மையத்திற்கும், இறுதி ஒதுக்கீட்டு ஆணை பெற்ற மாணவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கல்லூரியிலும் நேரடியாகச் சென்று 26.07.2026 முதல் 30.07.2026 வரை அசல் சான்றிதழ்கள் மற்றும் கல்விக் கட்டணத்தை செலுத்தி சேர்க்கை பெறவேண்டும்.</p><p>மாணாக்கர்கள் தங்களது விருப்ப பட்டியலில் எத்தனை கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவு விருப்பங்கள் வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். அதனை கையாளும் வகையில் திறன்மிகுந்த மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பு கொண்ட மென்பொருள் வடிவமைத்து செயலாக்கப்பட்டுள்ளது.</p><p>மாணாக்கர்கள் சேர்க்கை பற்றிய விளக்கங்கள் அளிப்பதற்காக அனைத்து கல்லூரி முதல்வர்கள் மற்றும் சேர்க்கை மைய அலுவலர்களுக்கு தொழில் நுட்ப கல்வி இயக்குநர் தலைமையில் அண்ணா பல்கலைக்கழகம் விவேகானந்தா அரங்கில் 16.07.2026 அன்று கூட்டம் நடைபெற்றது. அதில் 423 கல்லூரிகளில் இருந்து உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் இணையதளம் மூலம் மாணாக்கர் சேர்க்கையை உறுதி செய்வது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் தொழில் நுட்ப கல்வி இயக்குநர் அவர்கள், கல்லூரி முதல்வர்களிடம் அரசு பள்ளியில் பயின்ற மாணாக்கர்களிடம் இருந்து எந்த ஒரு கட்டணமும் வசூலிக்க கூடாது என்றும், வேறுவிதமாக மாணாக்கர்களின் விவரங்களை கொண்டு தவறான சேர்க்கைகளை செய்ய கூடாதென்றும் வலியுறுத்தினார். மேலும் இந்த நடைமுறையை பின்பற்றாத கல்லூரிகள் மற்றும் நடைமுறையில் வேறு புகார்கள் ஏதேனும் தெரியவந்தால், அதன் மீது விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.</p><h2>புகார் தெரிவிக்க...</h2><p>ஏதேனும் புகார்கள் இருப்பின் கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கலாம். tndote@tndote.com. கலந்தாய்வு மற்றும் ஒதுக்கீடு பற்றிய விளக்கங்கள் தேவைப்படின் தமிழ்நாடு முழுவதும் உள்ள 110 தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">பொறியியல் சேர்க்கை</a> சேவை மையங்களை தொடர்பு கொண்டோ அல்லது நேரில் சென்றோ தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளலாம். அதன் முகவரி மற்றும் தொடர்பு எண்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. </p><p>மாணாக்கர்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைபேசி மூலம் தங்கள் கலந்தாய்வு தொடர்பான சந்தேகங்களையும் மற்றும் ஒதுக்கீட்டானண பற்றிய விளக்கங்கள் பெற வேண்டி பத்து இணைப்புகளுடன் கூடிய அழைப்பு மையம் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அழைப்பு எண்: 1800-425-0110. இது தொடர்பாக, மாணாக்கர்கள் tneacare@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கரூர் கூட்ட நெரிசல்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசு பணி ரத்து!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-stampede-government-jobs-granted-to-the-families-of-the-deceased-cancelled</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-stampede-government-jobs-granted-to-the-families-of-the-deceased-cancelled#comments</comments><guid isPermaLink="false">53000868-f210-49b0-9a9f-8aca7ee2fff8</guid><pubDate>Mon, 27 Jul 2026 12:12:19 +0000</pubDate><atom:updated>2026-07-27T12:12:19.278Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர் கூட்ட நெரிசல்,Karur Stampede,கரூர்,High Court,ஐகோர்ட்டு,Karur,Government job,ஐகோர்ட்டு மதுரை கிளை,High Court Madurai,high court order,ஐகோர்ட்டு உத்தரவு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/yk7ewswy/Untitled-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/yk7ewswy/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கிய அரசாணையை ரத்து செய்து ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><h2>31 பேருக்கு அரசு வேலை</h2><p>கடந்த 2025 செப்டம்பர் 27 அன்று&nbsp;கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகி இருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, இந்த சம்பவத்தில் பலியான 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கி முதல்-அமைச்சர் விஜய் உத்தரவுகளை நேரில் வழங்கி இருந்தார்.</p><h2>பொதுநல வழக்கு தாக்கல்</h2><p>இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சூளையைச் சேர்ந்த வழக்கறிஞர் என்.பிரபாகரன், நாம் தமிழகர் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் கிளிட்டஸ் மற்றும் அரசு வேலைக்கு படித்து வரும் ஒருவர் என 3 பேர் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஏற்கனவே அரசு 10 லட்சம் ரூபாயும், த.வெ.க. சார்பில் 20 லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ள நிலையில் அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.</p><h2>விசாரணையில் தலையீடு</h2><p>கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக கடந்த 2020 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையில், அரசியல் கூட்டங்களில் உயிரிழந்தவர்களுக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வழக்கு புலன் விசாரணையில் உள்ள போது பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்குவது விசாரணையில் தலையிடுவதைப் போல உள்ளதாகவும், இது சாட்சியத்தை மாற்றிக் கொடுக்க நிர்பந்திக்கும் வகையில் உள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>அரசாணை ரத்து</h2><p>இந்த நிலையில் கரூரில் உயிரிழந்தவர்களுக்கு அரசு வேலை வழங்கியதற்கான வழக்கு விசாரணை ஐகோர்ட்டு மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் கரூர் கூட்ட நெரிசலில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">உயிரிழந்தவர்களின் </a>குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கிய அரசாணையை ரத்து செய்து ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><h2>நீதிபதிகள் கேள்வி</h2><p>மேலும் "ஏன் சுயத்தொழில் முனைவோராக மாற்றக்கூடாது?  திறன் வளர் பயிற்சிகளை வழங்கி பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்திற்கு உதவலாமே? அரசு தரப்பில் சாதாரண பணி வழங்குவதாக கூறுவதை ஏற்க இயலாது. தினந்தோறும் சாலை விபத்தில், பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலர் உயிரிழக்கின்றனர். </p><p>அவர்களுக்கெல்லாம் அரசு வேலை வழங்க முடியுமா? அரசு விதிகளை மீறி கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள விதிகளை தமிழ்நாடு அரசு மீறியுள்ளது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.</p>]]></content:encoded></item><item><title>கருவில் இருந்த குழந்தையின் பாலினத்தை அறிவித்த விவகாரம்: யூடியூபர் இர்பானை மீண்டும் விசாரிக்க முடிவு 

</title><link>https://www.dailythanthi.com/cinema/cinemanews/youtuber-irfan-to-face-legal-action-again-for-revealing-gender-of-his-unborn-child</link><comments>https://www.dailythanthi.com/cinema/cinemanews/youtuber-irfan-to-face-legal-action-again-for-revealing-gender-of-his-unborn-child#comments</comments><guid isPermaLink="false">a03b83af-1669-4d22-93cd-35197d2a471a</guid><pubDate>Mon, 27 Jul 2026 12:04:37 +0000</pubDate><atom:updated>2026-07-27T12:04:37.089Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>YouTuber,யூடியூபர்,Irfan,யூடியூபர் இர்பான்,இர்பான்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/fp4o9d8z/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/fp4o9d8z/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தை சேர்ந்த பிரபல யூடியூபர் <a href="https://www.dailythanthi.com/">இர்பான்</a>. இவர் தமிழகத்தில் உள்ள ஓட்டல்களுக்கு சென்று உணவு சாப்பிட்டு அதற்கு ரிவ்யூ கொடுத்து பிரபலமானார்.</p><h2>குழந்தையின் பாலினம் அறிவிப்பு</h2><p>இதனிடையே, யூடியூபர் இர்பான் கடந்த 2024ம் ஆண்டு தனது மனைவி ஆசிபா கர்ப்பமான இருந்தபோது துபாய்க்கு சென்றுள்ளார். அங்கு மனைவியின் கருவில் இருந்த குழந்தையின் பாலினத்தை கண்டறிய மருத்துவமனையில் பரிசோதனை நடத்தியுள்ளார். பின்னர்,  துபாயில் வைத்து கருவில் இருந்த குழந்தையின் பாலினத்தை விழா நடத்தி அறிவித்தார். தனக்கு பெண் குழந்தை பிறக்கப்போவதாக அறித்தார். இதை தனது யூடியூப் பக்கத்திலும் பதிவிற்றம் செய்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.</p><p>இந்தியாவில் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிவதும், அதை அறிவிப்பதும் சட்டப்படி குற்றமாகும். இதனால், மனைவியின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவித்த இர்பான் மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். </p><h2>விசாரணை முடித்து வைப்பு</h2><p>ஆனால், கடந்த திமுக ஆட்சியின் இர்பான் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக, இந்த விவகாரத்தில் சுகாதாரத்துறைக்கு இர்பான் மன்னிப்புக்கடிதம் மட்டும் கொடுத்தார். அந்த கடிதத்தை ஏற்றுக்கொண்ட சுகாதாரத்துறை இர்பான் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், இர்பான் மீதான விசாரணையும் கடந்த திமுக ஆட்சியில் முடித்து வைக்கப்பட்டது. இர்பான் மீது எந்தவித சட்டநடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அதேவேளை, இர்பானுக்கு கடந்த 2024 ஜுலை மாதம் பெண் குழந்தை பிறந்தது.</p><h2>வழக்கு</h2><p>இதனிடையே, இந்த விவாரத்தில் விசாரணையை சுகாதாரத்துறை முடித்து வைத்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கும் மனு அளிக்கப்பட்டது. இந்த வழக்கு  விசாரணை ஐகோர்ட்டில் வந்தது. அப்போது கருவில் இருந்த குழந்தையின் பாலினத்தை இர்பான் அறிவித்த விவகாரத்தில் 8 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.  </p><h2>மீண்டும் விசாரணை </h2><p>இந்நிலையில், கருவில் இருந்த குழந்தையின் பாலினத்தை அறிவித்த விவகாரத்தில் யூடியூபர் இர்பானுக்கு சம்மன் அனுப்ப தமிழக மருத்துவத்துறை முடிவு செய்துள்ளது. மேலும், அவரை நேரில் அழைத்து விசாரிக்கவும் மருத்துவத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக இர்பானுக்கு சம்மன் அனுப்ப மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனரகம் முடிவு செய்துள்ளது. இதனால், இந்த வழக்கில் இர்பானிடம் விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  </p> ]]></content:encoded></item></channel></rss>