<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 28 Jul 2026 06:22:00 +0000</lastBuildDate><item><title>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/controversy-at-nellai-manonmaniam-sundaranar-university-convocation-ceremony</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/controversy-at-nellai-manonmaniam-sundaranar-university-convocation-ceremony#comments</comments><guid isPermaLink="false">caadba1b-038f-42fd-955d-ff8db05f7089</guid><pubDate>Tue, 28 Jul 2026 06:09:17 +0000</pubDate><atom:updated>2026-07-28T06:09:17.945Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,பட்டமளிப்பு விழா,Convocation Ceremony,Manonmaniam Sundaranar University,மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,கவர்னர் அர்லேகர்,Governor Arlekar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/2eh69wtk/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/2eh69wtk/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><h2>மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்</h2><p>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்துகொண்டுள்ளார். இந்த விழாவில் மொத்தம் 37 ஆயிரத்து 877 பேர் பட்டம் பெற உள்ளதாகவும், கவர்னர் அர்லேகர் நேரடியாக 871 பேருக்குப் பட்டங்களை வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. </p><p>இதற்கிடையில் பட்டமளிப்பு விழாவில் 871 பேருக்கு நேரடியாகப் பட்டங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தங்கம் பதக்கம் பெறும் 113 பேருக்கு மட்டுமே கவர்னர் நேரடியாகப் பட்டங்கள் வழங்குவார் என அறிவிக்கப்பட்டது. இதனால் கவர்னரிடம் நேரடியாகப் பட்டங்களைப் பெறுவோம் என்ற நம்பிக்கையில் வந்த மாணவ, மாணவிகளுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. </p><h2>பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு</h2><p>இதனால் பட்டமளிப்பு விழாவிற்கு வந்திருந்த மாணவிகள் பலர் கண்ணீர் விட்டு அழுதனர். மேலும் இந்த அறிவிப்புக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்கலை., நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, கவர்னரே அனைவருக்கும் பட்டம் வழங்குவார் என்றும் கவர்னரின் செயலாளர் சஜன்சிங் சவான் அறிவித்தார். இதனால் பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு ஏற்பட்டது.</p><p>இந்த நிலையில் சுமார் 45 நிமிடம் தாமதமாக பட்டமளிப்பு விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் முதலில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்ததற்கு கண்டனம் தெரிவித்து உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்துள்ளார்.</p><h2>போலீஸ் பாதுகாப்பு</h2><p>இதைபோல தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்ததற்கு கண்டனம் தெரிவித்து பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக நெல்லை தவெக எம்எல்ஏ முருகன், கடையநல்லூர் எம்எல்ஏ ராஜேந்திரன் அறிவித்துள்ளனர். தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிப்பதாக அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்துவதால் பல்கலைக்கழகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை மாநகரில் புதிய திட்டங்கள்; கமிஷனர் சமீரன் ஆலோசனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-projects-in-chennai-city-commissioner-sameerans-advice</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-projects-in-chennai-city-commissioner-sameerans-advice#comments</comments><guid isPermaLink="false">1e1e524a-c4d9-420b-b12c-d01a816ef02f</guid><pubDate>Tue, 28 Jul 2026 06:05:01 +0000</pubDate><atom:updated>2026-07-28T06:05:01.318Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,மாநகராட்சி,Chennai Corporation,ஆலோசனைக்கூட்டம்,New projects,consultation meeting,புதிய திட்டங்கள்,கமிஷனர் சமீரன்,Commissioner Sameeran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/4hczedlb/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கமிஷனர் சமீரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/4hczedlb/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">சென்னை மாநகராட்சி</a>யில் புதிய திட்டங்கள் மேற்கொள்வது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">கமிஷனர் சமீரன்</a> தலைமையில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">ஆலோசனைக் கூட்டம்</a> ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. </p><h2>கமிஷனர் சமீரன் தலைமையில் கலந்தாலோசனைக் கூட்டம்</h2><p>சென்னை மாநகராட்சி கமிஷனர் சமீரன் தலைமையில் கலந்தாலோசனைக் கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் சமீரன் தலைமையில், நகர்ப்புற சவால் நிதியின் கீழ் (Urban Challenge Fund) பெருநகர சென்னை மாநகராட்சியில் புதிய திட்டங்கள் மேற்கொள்வது தொடர்பாக கலந்தாலோசனைக் கூட்டம் ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் கவிதா ராமு, இணை ஆணையாளர் (பணிகள்) சரவணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். </p><h2>நீர்நிலைகள் மேம்பாடு</h2><p>இந்த கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியில் குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் மேம்பாடு, பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையிலான நடவடிக்கைகள், பூங்கா மேம்பாடு (Blue Green Infrastructure), தண்டையார்பேட்டை - வண்ணாரப்பேட்டை - ராயபுரம், அடையாறு - பெசன்ட்நகர், தியாகராயநகர் - தேனாம்பேட்டை, ராயப்பேட்டை - திருவல்லிக்கேனி உள்ளிட்ட மாநகரப் பகுதிகளில் மேம்பாட்டுத் திட்டங்கள் (Area Developement - Neighbourhood Developement), விபத்தினைத் தடுத்து சீரான போக்குவரத்திற்கு ஏதுவாக நடைபாதைகள், சாலை சந்திப்புகள் மற்றும் சாலை வளைவுகள் மேம்பாடு (Pedestrian Footpath &amp; Junction Improvements), பெசன்ட்நகர், திருவான்மியூர், பாலவாக்கம் கடற்கரை மேம்பாடு (Beach Front) உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளுதல் தொடர்பாக கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டது. </p><p>இந்த திட்டங்களை நகர்ப்புற சவால் நிதியின் (Urban Challenge Fund) கீழ் மேற்கொள்வதற்கு ஏதுவாக விரிவான திட்ட அறிக்கை தயாரித்திட அலுவலர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல நிரந்தர தடை: அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/permanent-ban-on-transporting-minerals-to-foreign-states-anbumani-insists</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/permanent-ban-on-transporting-minerals-to-foreign-states-anbumani-insists#comments</comments><guid isPermaLink="false">873f0268-d49a-4317-9eff-27c84047f744</guid><pubDate>Tue, 28 Jul 2026 05:29:54 +0000</pubDate><atom:updated>2026-07-28T05:29:54.700Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,Mineral resources,கனிமவளங்கள்,தவெக அரசு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/gpa6zhjb/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/gpa6zhjb/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டின்  நெல்லை, தென்காசி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கேரளத்திற்கு மிகப்பெரிய அளவில் கருங்கல் பாறைகள், ஜல்லி, எம் சாண்ட் உள்ளிட்ட கனிமவளங்கள் கடத்தப்பட்டு வருகின்றன. முந்தைய திமுக ஆட்சியில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த காட்பாதரின் ஆதரவுடன் கனிமவளக் கடத்தல் உச்சக்கட்டத்தை அடைந்தது. இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று தவெக அரசு பொறுப்பேற்ற சில நாள்களிலேயே  வலியுறுத்தியிருந்தேன்.</p><p>அதைத்  தொடர்ந்து சில குவாரிகளுக்கு  கனிமவளத்துறை அமைச்சரே நேரில் சென்று ஆய்வு நடத்தினாலும்  கனிமக் கொள்ளையும், கடத்தலும் குறையவில்லை. தமிழகத்தில் பற்றாக்குறை காலங்களில் கனிமவளங்களை கேரளத்திற்கு கொண்டு செல்லக் கூடாது என்று தான் தடை விதிக்கப்பட்டிருக்கிறதே தவிர, நிரந்தரத் தடை இன்று வரை அரசால் விதிக்கப்படவில்லை; அதனால் உடனடியாக கனிமக் கடத்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கடந்த 22-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தேன்.</p><p>அதன் தொடர்ச்சியாகத் தான் வெளி மாநிலங்களுக்கு கனிமங்களைக் கடத்திச் செல்வதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும்  வகையில் அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை தற்காலிகமானதாக இருந்தாலும் வரவேற்கத்தக்கது. இந்தத் தடை முழு அளவில்  செயல்படுத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து கேரளம் செல்லும் அனைத்துச் சாலைகளிலும் கண்காணிப்பு கேமராக்களைப் பொறுத்தி கனிமவளங்கள் கடத்தப்படுகின்றனவா? என்பதைக் கண்காணிக்க வேண்டும்.</p><p>அதுமட்டுமின்றி, இப்போது 3  மாதங்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டுள்ள கனிமவளக் கடத்தலுக்கானத் தடையை நிரந்தரத் தடையாக  மாற்ற வேண்டும். மேலும், கனிமக் கொள்ளை மற்றும் கடத்தல் குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும். எந்த அளவுக்கு கனிமக் கொள்ளை நடந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதை கனிமக் கொள்ளையர்களிடம் இருந்து வசூலிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>புதுக்கோட்டையில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பஸ் பயணம்: பெற்றோர் கலக்கம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/school-students-travel-dangerously-by-bus-in-pudukkottai-parents-concerned</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/school-students-travel-dangerously-by-bus-in-pudukkottai-parents-concerned#comments</comments><guid isPermaLink="false">a96db9ba-0de7-4b21-b9e1-3224da51e1d5</guid><pubDate>Tue, 28 Jul 2026 05:29:07 +0000</pubDate><atom:updated>2026-07-28T05:29:07.699Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Pudukkottai,புதுக்கோட்டை,School students,பள்ளி மாணவர்கள்,private buses,பஸ் பயணம்</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/1luz7q1w/34.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ ஆபத்தான முறையில் பஸ்சில் பயனம் செய்யும் பள்ளி மாணவர்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆபத்தான முறையில் பஸ்சில் பயனம் செய்யும் பள்ளி மாணவர்கள்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/1luz7q1w/34.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுக்கோட்டை, </p><p>புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பஸ்சில் பயணம் செய்வதால் பெற்றோர் கலக்கமடைகின்றனர். </p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">புதுக்கோட்டை மாவட்டம்</a> மீமிசலில் இருந்து பேராவூரணி வழியாகப் பட்டுக்கோட்டை நோக்கி தினமும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடங்கும் காலை நேரத்திலும், மாலை நேரத்திலும் இந்த வழித்தடத்தில் கடுமையான கூட்ட நெரிசல் காணப்படுகிறது.</p><h2>படியில் தொங்கும் மாணவர்கள்</h2><p>போதிய பஸ் வசதிகள் இல்லாத காரணத்தினால்,<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> பள்ளி மாணவர்கள்</a> வேறு வழியின்றி இந்த தனியார் பஸ்களில் கூட்ட நெரிசலில் சிக்கி பயணம் செய்கின்றனர். குறிப்பாக, பேருந்தின் உட்புறத்தில் இடமில்லாததால் மாணவர்கள் ஆபத்தான முறையில் பின் மற்றும் முன் பக்கப் படிக்கட்டுகளில் தொங்கியபடியும், சிலர் கூரை மீது ஏறும் நிலையிலும் பயணிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.</p><h2>தொடரும் விபத்து அபாயங்கள்</h2><p>பஸ்கள் வளைவுகளில் திரும்பும்போதும், வேகத்தடைகளைக் கடக்கும்போதும் படியில் தொங்கும் மாணவர்கள் நிலைதடுமாறி கீழே விழும் அபாயம் உள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்கனவே ஆலங்குடி அருகே பஸ்சின் படிக்கட்டில் பயணித்த புவியரசன் என்ற 10-ஆம் வகுப்பு மாணவன் கீழே விழுந்து உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p><h2>பெற்றோரின் கோரிக்கை</h2><p>தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு அவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்பும் வரை பெரும் மன உளைச்சலில் இருப்பதாகப் பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே, இந்த வழித்தடத்தில் பள்ளி நேரங்களில் கூடுதல் அரசு பஸ்களை இயக்க போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விதிகளுக்குப் புறம்பாக மாணவர்களை ஏற்றிச் செல்லும் தனியார் பஸ்கள் மீது கடுமையான கண்காணிப்பு மற்றும் சட்ட நடவடிக்கை தேவை என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>
காமன்வெல்த்: வெள்ளி பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு கமல்ஹாசன் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/commonwealth-kamal-haasan-congratulates-silver-medalist-raja-muthupandi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/commonwealth-kamal-haasan-congratulates-silver-medalist-raja-muthupandi#comments</comments><guid isPermaLink="false">914a4737-bb62-45d2-9ef5-a2c61fa59eba</guid><pubDate>Tue, 28 Jul 2026 05:18:21 +0000</pubDate><atom:updated>2026-07-28T05:18:21.025Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கமல்ஹாசன்,Kamal Haasan,Commonwealth Games,காமன்வெல்த்,வெள்ளி பதக்கம்,ராஜா முத்துப்பாண்டி,Raja Muthupandi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/7necipbv/7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/7necipbv/7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வருகிறது. இதில் 74 நாடுகளில் இருந்து 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.</p><p>நேற்று முன்தினம் பளுதூக்குதலில் மீராபாய் சானு தங்கமும், ரிஷிகாந்தா சிங் வெள்ளிப்பதக்கமும் வென்று பிரமாதப்படுத்தினர். அதனை தொடர்ந்து நள்ளிரவில் நடந்த போட்டியில் தமிழக பளுதூக்குதல் வீரர் ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப்பதக்கம் வென்று முத்திரை பதித்தார்.</p> <p>ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி ஸ்னாட்ச் முறையில் 126 கிலோ, கிளீன் அண்ட் ஜெர்க் முறையில் 160 கிலோ என மொத்தம் 286 கிலோ எடை தூக்கி 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை முத்தமிட்டார். </p><p>அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன், ராஜா முத்துப்பாண்டிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை  வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பளு தூக்கும் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தந்திருக்கும் வெற்றி இளைஞர் ராஜா முத்துப்பாண்டியை வாழ்த்துகிறேன். சிறு நகரங்களில் இருக்கும் விளையாட்டு வீரர்களும் வெற்றியின் ருசியை அறிய இவரது பதக்கம் உதவும். வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>பின்னலாடை தயாரிப்பு நூல் விலை கிலோவுக்கு ரூ.5 உயர்வு: உற்பத்தியாளர்கள் கவலை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/knitting-yarn-prices-rise-by-rs-5-per-kg-manufacturers-concerned</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/knitting-yarn-prices-rise-by-rs-5-per-kg-manufacturers-concerned#comments</comments><guid isPermaLink="false">ba31156e-ece0-4ac4-9fdc-5fa19251067e</guid><pubDate>Tue, 28 Jul 2026 05:16:56 +0000</pubDate><atom:updated>2026-07-28T05:16:56.774Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பின்னலாடை உற்பத்தியாளர்கள்,Rise,கவலை,நூல் விலை உயர்வு,knitwear manufacturers,Yarn price</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/xw4hkkud/69.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/xw4hkkud/69.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர், </p><p>பின்னலாடை தயாரிப்புக்கான ஒசைரி நூல் விலை கிலோவுக்கு ரூ.5 உயர்ந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். </p><h2>பஞ்சு விலை உயர்வு </h2><p>சர்வதேச சந்தையில் பஞ்சு விலை தொடர்ந்து உயரத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, நம் நாட்டிலும் பஞ்சு விலை உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, ரூ.68 ஆயிரமாக இருந்த ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு, ரூ.70 ஆயிரமாக விலை உயர்ந்துள்ளது. அதேபோல், பின்னலாடை தயாரிப்புக்கான ஒசைரி நூலும் கிலோவுக்கு ரூ.5 அதிகரித்துள்ளது. கடந்த மாத (ஜூன்) தொடக்கத்தில், ஒசைரி நூல் விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்தது. ஆனால், கடந்த 22-ந் தேதி ரூ.5-ம், நேற்று ரூ.5-ம் விலை உயர்ந்து பழைய  நிலையை எட்டியுள்ளது. </p><h2>உற்பத்தியாளர்கள் கவலை </h2><p>நூல் விலை தொடர்ந்து இவ்வாறு உயர்வதால், உற்பத்தி செலவு அதிகரித்து, நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்படுவதாக ஜவுளி தொழில் துறையினர் கவலை தெரிவித்துள்ளனர். நூல் விலை உயர்வு குறித்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பின்னலாடை உற்பத்தியாளர்கள்</a> கூறும்போது, "பஞ்சு இறக்குமதிக்கான வரி விலக்கு குறுகிய காலத்திற்கு அளிக்கப்படுவதால் எந்தப் பயனும் இல்லை. தற்போதைய விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், 2027 பிப்ரவரி மாதம் வரையிலான வரி விலக்கு சலுகை நீட்டிக்கப்பட வேண்டும்" என்று கூறினர். </p>]]></content:encoded></item><item><title>மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. தொகுப்பூதிய
ஊழியர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் - அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/manonmaniam-sundaranar-university-staff-members-should-be-given-permanent-positions-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/manonmaniam-sundaranar-university-staff-members-should-be-given-permanent-positions-anbumani#comments</comments><guid isPermaLink="false">da67e615-855b-4834-9817-a4daca628ca8</guid><pubDate>Tue, 28 Jul 2026 04:55:23 +0000</pubDate><atom:updated>2026-07-28T04:55:23.456Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,தொகுப்பூதிய பணியாளர்கள்,Jobs,permanent,Manonmaniam Sundaranar University,மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,பணி நிலைப்பு,Anbumani Ramadas MP</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/tmt7x14q/anbumani.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/tmt7x14q/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில்  தினக்கூலி பணியாளர்களாகவும், தொகுப்பூதிய பணியாளர்களாகவும் பணியாற்றி வரும்  53  தொழிலாளர்களுக்கு 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணி நிலைப்பு வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் மறுப்பதாக  குற்றச்சாட்டுகள்  எழுந்துள்ளன. அறத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டிய பல்கலைக்கழகத்திலேயே அறமும், மனிதநேயமும் மீறப்படுவது கண்டிக்கத்தக்கது.</p><h2>தொகுப்பூதிய பணியாளர்கள்</h2><p>மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில்  தூய்மைப் பணியாளர்கள், இரவுக் காவலர்கள், பாதுகாவலர்கள், மின்னியலாளர்கள்,  அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட பணிகளில்  தொகுப்பூதிய பணியாளர்களாக 53 பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அதே பல்கலைக்கழகத்தில்  17 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை  பணியாற்றி வருகின்றனர். அவர்களின் பணிச் செயல்பாடுகள் குறித்து  எந்தப் புகாரும் இதுவரை  எழவில்லை.</p><h2>53 பணியாளர்கள்</h2><p>மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விதிகளின்படி தினக்கூலி பணியாளராக சேரும் ஒருவர் ஐந்தாண்டுகள் பணி செய்த பின்னர் தொகுப்பூதிய பணியாளராக மாற்றப்படுவார். அடுத்த பத்தாண்டுகள்  தொகுப்பூதிய பணியாளராக பணி செய்த பின்னர் பணி நிலைப்பு செய்யப்பட வேண்டும். ஆனால், இந்த 53 பணியாளர்கள் விஷயத்தில் மட்டும் இந்த விதிகளை பல்கலைக்கழக நிர்வாகம் கடைபிடிக்க மறுக்கிறது.</p><h2>துணை வேந்தரிடம் மனு</h2><p>தொகுப்பூதிய பணியாளர்களாக பணியாற்றும்  53  பேரும்  50 வயதைக் கடந்தவர்கள். இந்த வயதில் அவர்களால் வேறு எங்கும்  சென்று வேலை தேட முடியாது. பணி நிலைப்பு என்பது அவர்களின் உரிமை. இந்த உரிமையை பெறுவதற்காக தகுதியை அவர்கள்  2 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே பெற்று விட்டனர். அதனடிப்படையில் பணி நிலைப்பு வழங்குங்கள் என முந்தைய துணை வேந்தரிடம் 3 முறையும், இப்போதைய துணை வேந்தரிடம் இரு முறையும் மனு கொடுத்துள்ளனர். ஆனாலும் நீதி வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் மறுக்கிறது.</p><h2>கடுமையான பொருளாதார நெருக்கடி</h2><p>பணி நிலைப்பு கிடைக்காத மன உளைச்சலில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்;  ஒருவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு பணி செய்ய முடியாத அளவுக்கு படுக்கையில் வீழ்ந்துள்ளார்.  இதனால் அவர்களின் குடும்பங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இதே நிலை பிற பணியாளர்களுக்கு ஏற்பட்டு விடக் கூடாது.</p><h2>பணி நிலைப்பு</h2><p>தொகுப்பூதிய பணியாளர்களின் தேவைகளும், மனித உரிமைகளும்  மதிக்கப்பட வேண்டும். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 17 முதல் 25 ஆண்டுகளாக பணியாற்றி வரும்  தொகுப்பூதிய பணியாளர்களுக்கு பணி நிலைப்பு  வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் முன்வர வேண்டும். தொகுப்பூதிய பணியாளராக 10 ஆண்டுகளை எப்போது அவர்கள் நிறைவு செய்தார்களோ, அப்போது முதல் அவர்கள் நிரந்தரப் பணியாளர்களாக கருதப்பட்டு பணி மூப்பு வழங்கப்பட வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>225 ஆடுகளை பலியிட்டு கறிவிருந்து... ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோவில் திருவிழா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/225-goats-sacrificed-and-feasted-temple-festival-attended-only-by-men</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/225-goats-sacrificed-and-feasted-temple-festival-attended-only-by-men#comments</comments><guid isPermaLink="false">3c650dbc-de79-4ca6-b2e7-9b1d5ac34561</guid><pubDate>Tue, 28 Jul 2026 04:51:19 +0000</pubDate><atom:updated>2026-07-28T04:51:19.696Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Namakkal,நாமக்கல்,Temple festival,கோவில் திருவிழா,ஆண்கள்,goat,man,ஆடு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/gz3xzrel/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/gz3xzrel/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல்,</p><h2>பொங்களாயி அம்மன் கோவில் திருவிழா</h2><p>நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ளது மலையாம்பட்டி கிராமம். இக்கிராமத்தில் மலையாள தெய்வம் பொங்களாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு கிடா வெட்டி, பொங்கல் வைத்து திருவிழா நடைபெறுவது சிறப்பாகும்.</p><p>அதன்படி, இந்தாண்டு கோவில் திருவிழா நேற்று முன்தினம் இரவு சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. இதையொட்டி பொங்களாயி அம்மன், விநாயகருக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.</p><p>தொடர்ந்து பொங்கல் வைத்து பூஜை செய்யப்பட்டது. பின்னர் இரவு முதலில் பெண் ஆட்டை பலி கொடுத்துவிட்டு, வேண்டுதலுக்காக கொடுக்கப்பட்ட மற்ற ஆட்டு கிடாக்களை வெட்டி இரவு முழுவதும் அங்கேயே சமையல் செய்தனர்.</p><h2>பக்தர்களின் நம்பிக்கை</h2><p>இந்த சமபந்தி விருந்துக்காக 225 கிடாக்கள் வெட்டப்பட்டன. மொத்தம் 3 ஆயிரம் கிலோ கறி சமைக்கப்பட்டு, 500 கிலோக்கும் மேலான அரிசியை பொங்கல் வைத்தனர். பின்னர் நேற்று காலை 6 மணிக்கு ஆண்கள் மட்டுமே பங்கேற்ற சமபந்தி கறிவிருந்து தொடங்கியது. இந்த விருந்து மதியம் 12.30 மணி வரை நடந்தது. </p><p>இதில் சேலம், கரூர், திருச்சி, தர்மபுரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நீண்டவரிசை யில் நின்று அவர்கள் உணவுகளை தட்டுகளில் வாங்கி சாப்பிட்டனர்.</p><p>கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் கனமழை பெய்தபோது அங்கு சென்று கொண்டிருந்த கர்ப்பிணியான மலையாள பெண்ணுக்கு யாரும் உதவி செய்யவில்லை. இதனால் கோபமடைந்த அந்த பெண் சாபம் விட்டதாகவும், இதனால் பெண்கள் விழாவில் பங்கேற்பதில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த கோவிலில் வேண்டுதல் வைத்தால் திருமண தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>திருவண்ணாமலை: இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு செல்லும் முகப்பில் தடுப்பு வேலி - உடல் பருமன் உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruvannamalai-barrier-fence-at-the-entrance-to-idukku-pillayar-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruvannamalai-barrier-fence-at-the-entrance-to-idukku-pillayar-temple#comments</comments><guid isPermaLink="false">709f5ac8-2f03-4d5c-95e0-8d9304b3710a</guid><pubDate>Tue, 28 Jul 2026 04:50:07 +0000</pubDate><atom:updated>2026-07-28T04:50:07.924Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,ஆந்திரா,பக்தர்கள்,Tiruvannamalai,உடல் பருமன்,Tiruvannamalai temple,Idukku Pillaiyar Temple,இடுக்குபிள்ளையார் கோவில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/if79zau4/thiruvannamalai33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
திருவண்ணாமலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/if79zau4/thiruvannamalai33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை,</p><p>திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அஷ்டலிங்க கோவில் களில் 7-வது லிங்கமான குபேர லிங்கம் கோவில் அருகில் இடுக்கு பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. அருணாச லேஸ்வரர் கோவில் நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்த கோவி லில் குகை போன்ற வாசல் உள்ளது. இந்த குகை போன்ற வாசலில் பின்புறத்தில் இருந்து உள்ளே நுழைந்து முன்பக் கம் வழியாக வந்து வழிபாடு செய்வார்கள்.</p><p>கடந்த 24-ந்தேதி நள்ளிரவில் குடும்பத்தினருடன் <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">கிரிவலம்</a> வந்த ஆந்திராவை சேர்ந்த சேர்ந்த மணிக்குமார் என்பவர் இடுக்கு பிள்ளையார் கோவிலில் வழிபாடு செய்தபோது குகை போன்ற வாசலில் உள்ளே நுழைந்து உள்ளார். இதில் சிக்கி மூச்சுதிணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p>இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்கு முன்பு நேற்று முன்தினம் கிரிவலம் வந்த ஆந்தி ராவை சேர்ந்த பெண் ஒருவர் சிக்கியதாக வீடியோ ஒன்று வைரலாக பரவியது. அடுத்தடுத்த சம்பவங்களால் பக்தர்களிைேடய பரபரப்பு ஏற்பட்டது.</p><p>இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். அதனைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் இடுக்கு பிள்ளையார் கோவிலில் அறிவிப்பு பலகை நேற்று வைக்கப்பட்டது. </p><p>அதில், இடுக்கு பிள்ளையார் கோவிலின் வாயில் மிக குறுகலாக உள்ளதால் உடல்பருமன் உள்ளவர்கள், உடல் நலக்குறைவு உள்ளவர்கள் மற்றும் வயதானவர்கள் உள்ளே செல்ல அனுமதியில்லை. மேலும் பக்தர்கள் வரிசையில் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்புகளின் முகப்பு பகுதியில் இரண்டு கம்பிகள் வைத்து வெல்டிங் செய்யப்பட்டு உள்ளது. அந்த இருகம்பிகள் வழியாக உள்ளே செல்ல முடிந்த பக்தர்கள் மட்டுமே இடுக்கு பிள்ளையார் கோவில் குகை போன்ற வாசல் வழியாக செல்ல கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&apos;சூப்பர் எல் நினோ&apos; தாக்குதல்: நீலகிரியில் தேயிலை சாகுபடி பாதிப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/super-el-nino-attack-tea-cultivation-in-nilgiris-affected</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/super-el-nino-attack-tea-cultivation-in-nilgiris-affected#comments</comments><guid isPermaLink="false">ef5f5271-d442-4b9b-b320-b60e376eb725</guid><pubDate>Tue, 28 Jul 2026 04:45:12 +0000</pubDate><atom:updated>2026-07-28T04:45:12.947Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nilgiris,நீலகிரி,சூப்பர் எல் நினோ,தேயிலை சாகுபடி,Super El Niño,Tea Cultivation</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/j80sgpd5/10.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/j80sgpd5/10.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஊட்டி, </p><p>'சூப்பர் எல் நினோ' தாக்கத்தால் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம், நீலகிரியில் தேயிலை சாகுபடியை பாதிக்கும் என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வறிக்கையின் மூலம் வெளிவந்துள்ளது. இதுகுறித்து, யுபாசி தேயிலை ஆராய்ச்சி அறக்கட்டளை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><h2>தேயிலை செடிகளை நேரடியாக பாதிக்கும்</h2><p>தேயிலை செடிகளில் இருந்து இளம் தளிர்கள் தொடர்ந்து பறிக்கப்படுவதால், 'சூப்பர் எல் நினோ'வால் அதிகரிக்கும் வெப்பநிலை, மண்ணின் ஈரப்பதம், காற்றின் ஈரப்பதம், மகசூல் மற்றும் தேயிலையின் தரத்தை நேரடியாக பாதிக்கின்றன. நீலகிரியில் சராசரி வெப்பநிலை 0.50 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. மேலும், பனிப்பொழிவு, ஆலங்கட்டி மழையின் தாக்கம் அதிகரித்துள்ளதால், தேயிலை செடிகளின் வளர்ச்சியும், மகசூலும் பாதிக்கப்பட்டுள்ளது. </p><h2>தாக்கத்தை சமாளிப்பது எப்படி?</h2><p>'சூப்பர் எல் நினோ' தாக்கத்தை சமாளிக்க, கிளிரிசிடியா போன்ற நிழல் தரும் மரங்களை வளர்க்க வேண்டும். மேலும், மண் - நீர் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும். வறட்சியை தாங்கும் சாகுபடி முறைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது</p>]]></content:encoded></item><item><title>நாட்டையும் காக்க தெரியவில்லை, இளைஞர்களின் எதிர்காலத்தையும் காக்க தெரியவில்லை! - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/they-dont-know-how-to-protect-the-country-they-dont-know-how-to-protect-the-future-of-the-youth-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/they-dont-know-how-to-protect-the-country-they-dont-know-how-to-protect-the-future-of-the-youth-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">362c6853-b9d5-4213-ab51-b2725b6df9a4</guid><pubDate>Tue, 28 Jul 2026 04:35:56 +0000</pubDate><atom:updated>2026-07-28T04:35:56.952Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Youth,இளைஞர்கள்,Manickam Tagore MP,Future,எதிர்காலம்,மாணிக்கம் தாகூர் எம்.பி.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/0ip0vdtn/manikam-takore.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/0ip0vdtn/manikam-takore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>நீட்/ நெட் தேர்வு வினாத்தாள் கசிந்த ஆட்சியில், இப்போது DRDO-வின் 31 GB இராணுவ ரகசியத் தரவுகள் &amp; விஞ்ஞானிகளின் கையொப்பங்கள் டார்க் வெப்பில் 8,000 டாலருக்கு விற்பனை செய்துள்ளது.</p><p>Alibi Global சுட்டிக்காட்டி உளவுத்துறையை எச்சரித்தும், பாதுகாப்பு அமைச்சகமும் மத்திய<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%AA%E0%AE%BE.%E0%AE%9C.%E0%AE%95%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81"> பா.ஜ.க அரசு</a>ம் அலட்சியம் காட்டுவது ஏன்?வினாத்தாள் கசிவு'மாடலில் இருந்து தேசிய பாதுகாப்பு கசிவு வரை நாட்டின் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கியுள்ளது மோடி அரசு. </p><h2>சைபர் அச்சுறுத்தல்கள்</h2><p>நாட்டையும் காக்கத் தெரியவில்லை, இளைஞர்களின் எதிர்காலத்தையும் காக்கத் தெரியவில்லை. நாட்டின் முக்கியமான தரவுகள் கசிவது இது முதன்முறையல்ல! தொடர் சைபர் அச்சுறுத்தல்கள் இருந்தும், எந்தவொரு தீவிரமான சைபர் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளோ அல்லது நடவடிக்கைகளோ  எடுக்காமல் மோடி அரசு மௌனம் காப்பது ஆபத்தானது.</p><p> பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் அவர்களே, நாட்டின் மிக முக்கிய இராணுவ ரகசியங்களே டார்க் வெப்பில் விற்பனைக்கு வரும் நிலைக்கு யார் பொறுப்பு? மோடி அரசின் இந்த இமாலயப் பாதுகாப்பு வீழ்ச்சிக்கு எப்போது பதில் சொல்லப் போகிறீர்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு ஜாமின் கிடைக்குமா? - இன்று விசாரணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-dmk-mla-markandeyan-get-bail-hearing-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-dmk-mla-markandeyan-get-bail-hearing-today#comments</comments><guid isPermaLink="false">26995b9e-2387-46b1-92ee-6adcfa3bd1e4</guid><pubDate>Tue, 28 Jul 2026 04:14:01 +0000</pubDate><atom:updated>2026-07-28T04:14:01.273Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,சென்னை ஐகோர்ட்டு,மார்க்கண்டேயன்,Markandeyan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/lq8mkfm6/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/lq8mkfm6/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>தி.மு.க. எம்.எல்.ஏ.</h2><p>தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில், விளாத்திகுளம் தி.மு.க. எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன், முதல்-அமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில், அவதூறாக பேசியதாக தூத் துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனுவை தூத்துக்குடி மாவட்ட கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் ஜாமின் கேட்டு மார்க்கண்டேயன் மனு தாக்கல் செய்தார்.</p><h2>சட்டத்துக்கு எதிரானது</h2><p>இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மார்க்கண்டேயன் தரப்பில், "சட்டசபை கதவுகள் பூட் டப்படும் எனக்கூறிய முதல்-அமைச்சருக்கு பதிலளிக்கும் வகையில்தான் எம்.எல்.ஏ. பேசினார். கைதுக்கான காரணங்களை தெரிவிக்காதது அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்ப தால், மனுதாரரை கோர்ட்டு காவலில் சிறையிலடைத்து தூத்துக்குடி கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது.</p><p>கைது செய்வதற்கு முன்பு விசாரணைக்கு வரும்படி போலீசார் நோட்டீஸ் கொடுக்கவில்லை. கடந்த 18-ந்தேதி நடந்த சம்ப வத்துக்கு 19-ந்தேதி நள்ளிரவில் புகார் அளிக்கப்பட்டு, 20-ந்தேதி அதிகாலையில் வழக்குப்பதிவு செய்து, அன்றைய தினம் மனுதாரரை போலீசார் கைது செய்துள்ளனர். எந்த ஆரம்பகட்ட விசாரணையும் நடத்தப்படவில்லை. பொது அமை திக்கு பங்கம் விளைவிக்கும் உள்நோக்கத்துடன் மனுதாரர் பேசவில்லை" என்று வாதிடப்பட்டது.</p><h2>ஜாமின் கிடைக்குமா?</h2><p>மனுதாரர் தரப்பு வாதங் கள் முடிவடையாததை அடுத்து விசாரணையை இன்று (செவ்வாய்க்கிழமை) தள்ளிவைத்து நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார். அதன்படி மார்க்கண்டேயன் ஜாமின் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இதில் அவருக்கு ஜாமின் கிடைக்குமா? அல்லது மனு தள்ளுபடி செய்யப்படுமா? என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>கொரோனா பரவுகிறது என கூறி பெண்களை மொட்டை அடிக்க வைத்த ஆசாமி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/man-forces-women-to-shave-their-heads-claiming-it-spreads-coronavirus</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/man-forces-women-to-shave-their-heads-claiming-it-spreads-coronavirus#comments</comments><guid isPermaLink="false">1faf1823-ca51-435f-b1b2-12bfb9dbd16c</guid><pubDate>Tue, 28 Jul 2026 04:07:23 +0000</pubDate><atom:updated>2026-07-28T04:07:23.133Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,சேலம்,பெண்கள்,மொட்டை,Bald</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/82y602l5/mottai33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
கொரோனா ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/82y602l5/mottai33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்:</p><p>சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி பகுதியை சேர்ந்த பெண்ணிடம் செல்போனில் பேசிய நபர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து தாம் பேசுவதாகவும், கொரோனா பரவி வரும் நிலையில் அதை தடுக்க மொட்டை அடித்துக் கொள்ளுங்கள் எனகூறியுள்ளார்.</p>  <p>மொட்டை அடித்தால் ஆண்களுக்கு 6,000 ரூபாயும், பெண்களுக்கு 15,000 ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்றும் அந்த நபர் கூறியதாக சொல்லப்படுகிறது. </p><p>பெண்கள் சிலர் <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">மொட்டை</a> அடித்தது போன்ற படங்களையும் வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார் அவர். இதை நம்பி 20 பேர் மொட்டை அடிக்க தயாரான நிலையில், 3 பெண்கள் மொட்டையும் போட்டுள்ளனர். பின்னர் அந்த நபரை தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்த நிலையில், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர்.</p><p>இது தொடர்பாக மோசடி நபர் குறித்து போலீசாரிடம் பெண்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து பெண்களை மோசடி செய்த நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சப்பாத்தி கள்ளி பழம்: சுவையும் சத்தும் நிறைந்த இயற்கை வரப்பிரசாதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chapati-kalli-fruit-a-natural-boon-full-of-flavor-and-nutrients</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chapati-kalli-fruit-a-natural-boon-full-of-flavor-and-nutrients#comments</comments><guid isPermaLink="false">c6767319-3475-40fe-9035-e55a63385047</guid><pubDate>Tue, 28 Jul 2026 04:01:47 +0000</pubDate><atom:updated>2026-07-28T04:01:47.456Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இயற்கை,Natural Food,சத்து,சப்பாத்தி கள்ளி பழம்,Chapati Kalli Fruit</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/235pk6xr/68.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/235pk6xr/68.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>சிறப்புக் கட்டுரைகள் (Sirappukatturaigal)</category><content:encoded><![CDATA[ <h2>சப்பாத்தி கள்ளி பழம்</h2><p>சப்பாத்தி கள்ளி பழம் இந்தியாவின் கிவி என்று அழைக்கப்படுகிறது. இதனை நாகதாளி என்றும் சொல்வார்கள். சப்பாத்தி கள்ளிப்பழம் பார்ப்பதற்கு சிவப்பு கலரில் இருக்கும். தித்திப்பாக இருக்கும். வறண்ட நிலங்களில் ஆடு மாடு மேய்க்கும் விவசாயிகளுக்கு இந்த பழம்தான், புத்துணர்ச்சியையும், குளிர்ச்சியையும் தந்து பேருதவி புரிகிறது. பழங்குடியினர் இன்றுவரை சிறந்த உணவாக இந்த சப்பாத்தி கள்ளியை பயன்படுத்தி வருகிறார்கள். பொட்டாசியம் அதிகமாக உள்ளதால், ரத்த அழுத்தம் அதிகமாகாமல் சீராக வைத்து கொள்ள இப்பழம் உதவுகிறது.</p><h2>நிறைய முட்கள்</h2><p>இந்த பழத்தை பறிப்பதே பெரிய கஷ்டம். காரணம், குட்டி குட்டியாக நிறைய முட்கள் நிறைந்திருக்கும். அதனால், இந்தப் பழத்தின் தோலை நீக்கிவிட்டே சாப்பிட வேண்டும். அல்லது இந்த சப்பாத்தி கள்ளி பழத்திலிருந்து ஜூஸ் செய்து குடிக்கலாம். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். பிறகு, முட்களை விலக்கி, எடுக்கப்பட்ட வெறும் பழத்தை, அந்த தண்ணீரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும். இப்போது, தண்ணீரிலிருந்து சப்பாத்தி கள்ளியை வெளியே எடுத்து வைத்து, ஆறவிட்டு, அதன் தோலை நீக்கி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். இதில், எலுமிச்சை ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ், இளநீர் போன்றவற்றை சேர்த்து, மிக்ஸியில் அரைத்து, இறுதியில் வடிகட்டி குடிக்கலாம்.</p><h2>குடல் ஆரோக்கியம்</h2><p>உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், இந்த சப்பாத்தி கள்ளி பழத்தை தாராளமாக கையிலெடுக்கலாம். காரணம், மிகக்குறைந்த கலோரிகள் இதில் உள்ளன. இதனால், கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. கொழுப்பு படிவதை தடுப்பதால், இதயம் காக்கப்படுகிறது. செரிமானம் அதிமாவதால், மலச்சிக்கல் தீர்ந்து, குடல் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">ஆரோக்கியம் </a>பாதுகாக்கப்படுகிறது. அத்துடன், பெருங்குடலை சுற்றியுள்ள நச்சுக்களும் வெளியேறுகின்றன.</p><h2>அருமருந்து</h2><p>பெண்கக்கு இந்த சப்பாத்தி கள்ளி அருமருந்து என்றே சொல்லலாம். காரணம், மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் அடிவயிற்று வலியை தடுக்கிறது. அதுமட்டுமல்ல, இன்றைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு பிசிஓடி என்ற கருப்பை நீர்க்கட்டி பிரச்சினை அதிகமாகி கொண்டிருக்கிறது. இது கருமுட்டையை பலமில்லாமல் போகச்செய்து, குழந்தை பேற்றில் சிக்கலை உண்டாக்கிவிடும். </p><h2>குழந்தைப்பேறு</h2><p>சிலசமயம் கருச்சிதைவையும் உண்டு பண்ணிவிடும். இந்த சினை நீர்க்கட்டிகளை கரைப்பதற்கு உதவுவதுதான் இந்த சப்பாத்தி கள்ளி பழம். வாரம் 3 முறை சாப்பிட்டுவந்தால், கர்பப்பையில் இருக்கும் நீர்க்கட்டிகள் அழிந்து விடும். இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால், குழந்தைப்பேறு உண்டாவதுடன், கரு முட்டை வளர்ச்சியும் சீராகும். அதுவும் கர்ப்ப காலத்தில், இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால், குழந்தை சிவப்பமாக பிறக்கும் என்பார்கள். அதாவது, குங்குமப்பூவை விட, இந்த சப்பாத்திக்கள்ளி பழம் சிறந்தது என்றே சொல்லலாம்.</p><h2>விந்து உயிரணுக்கள்</h2><p>பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் இந்த சப்பாத்தி கள்ளி தரும் நன்மைகள் ஏராளம். விந்து உயிரணுக்கள் ஆரோக்கியமாக இல்லாமல் இருந்தால், இந்த பழம் அவர்களுக்கு கை கொடுக்கும். ஆனால், குழந்தை பேறுக்காக இந்த பழத்தை சாப்பிடுபவர்கள், டீ, காபி சாப்பிடக்கூடாது என்பார்கள். எனினும் இதுகுறித்து மருத்துவர்களின் ஆலோசனையை கட்டாயம் பெற்றே சாப்பிட வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>நெல்லையில் நாய் கடித்த ஆத்திரத்தில் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/petrol-bomb-thrown-at-house-in-anger-over-dog-bite-in-nellai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/petrol-bomb-thrown-at-house-in-anger-over-dog-bite-in-nellai#comments</comments><guid isPermaLink="false">401bedaa-47d2-4704-8612-bc1f3fc4f9a9</guid><pubDate>Tue, 28 Jul 2026 04:00:26 +0000</pubDate><atom:updated>2026-07-28T04:00:26.495Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,போலீஸ் வலைவீச்சு,House,வீடு,Dog bite,நாய்க்கடி,petrol bomb attack,பெட்ரோல் குண்டு வீச்சு,Anger,ஆத்திரம்,police net sweep</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/a5gkvtc5/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல் குண்டு வீச்சு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/a5gkvtc5/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை, </p><p>நெல்லை மேலப்பாளையம் பகுதியில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF">நாய் கடி</a>த்த ஆத்திரத்தில் வீடு மீது <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81">பெட்ரோல் குண்டு வீசிய </a>வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p><h2>நாய் கடித்த ஆத்திரத்தில் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு</h2><p>நெல்லை மேலப்பாளையம், வீரமாணிக்கபுரத்தை சேர்ந்தவர் அந்தோணி சகாயசேவியர் (வயது 55). இவர் தனது வீட்டோடு சேர்த்து பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மகன் வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த வழியாக சென்ற வாலிபரை ஒரு நாய் கடித்தது. </p><p>நேற்று முன்தினம் இரவு அங்கு வந்த வாலிபர், அந்தோணி சகாய சேவியர் வீட்டில் உள்ள நாய் தான் தன்னை கடித்ததாக நினைத்து, அங்கு சென்று தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் முற்றியதால் ரோட்டில் கிடந்த கற்களை எடுத்து அந்தோணி சகாயசேவியரின் வீட்டுக்குள் வீசிச் சென்றுள்ளார். மேலும் ஆத்திரம் அடங்காத அந்த வாலிபர் நேற்று அதிகாலையில் ஒரு பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி எடுத்து வந்துள்ளார். அந்தோணி சகாய சேவியர் வீட்டின் சுவரில் அந்த பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பிச்சென்றுவிட்டார். </p><h2>வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு</h2><p>இதில் சுவரில் தீப்பிடித்து கரும்புகை படிந்தது. பயங்கர சத்தம் கேட்டு எழுந்த அந்தோணி சகாயசேவியர் மற்றும் குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் அந்த பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டனர். இதில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி மாரித்தங்கம் (வயது 32) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை பிடிக்க போலீசார் பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>அரசு பேருந்தில் செல்லும் பயணிகள் கவனத்திற்கு... வெளியான முக்கிய அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/important-announcement-for-the-attention-of-passengers-traveling-in-government-buses</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/important-announcement-for-the-attention-of-passengers-traveling-in-government-buses#comments</comments><guid isPermaLink="false">69b75c22-432a-49ce-ad71-11e65fa7391c</guid><pubDate>Tue, 28 Jul 2026 03:48:38 +0000</pubDate><atom:updated>2026-07-28T03:48:38.031Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசு பேருந்து,அரசு போக்குவரத்துறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/77rusig7/bus33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ போக்குவரத்துறை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/77rusig7/bus33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கடந்த சில காலங்களாகவே, அரசுப் பேருந்துகளில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிக்க விடுவதாகவும், இதனால் பேருந்திற்குள் ஒருவித இரைச்சல் சூழல் நிலவுவதாகவும் பயணிகளிடமிருந்து புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன. குறிப்பாக, நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ளும் மூத்த குடிமக்கள், தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் மற்றும் உடல்நலக் குறைபாடுகளால் அவதிப்படுவோருக்கு இந்த அதிகப்படியான சத்தம் பெரும் மன உளைச்சலைத் தருவதாகத் போக்குவரத்துறை அமைச்சருக்கு புகார்கள் வந்தன. </p><p>இந்தநிலையில், அரசு போக்குவரத்துத்துறை செயலாளர் நிர்மல் ராஜ்  தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அரசு பேருந்துகளில் பயணிகள் செல்போன் பயன்பாட்டுக்கு புதிய நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், </p><p>* சக பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் செல்போன் பயன்படுத்தவும் ஸ்பீக்கர் போனில் பேசுவது, வீடியோ பார்ப்பது தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>* பேருந்தில் பயணிகள் இயர்போன், ஹெட்போன் பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. </p><p>* <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20">ஓட்டுநர்கள் </a>பேருந்துகளில் சத்தமான பாடல்களை ஒலிக்க விடக்கூடாது. அனைத்து பேருந்துகளிலும் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்ட உத்தரவு பிறப்பிக்கவேண்டும். </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-mlas-meeting-today-under-the-leadership-of-udhayanidhi-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-mlas-meeting-today-under-the-leadership-of-udhayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">c3140c93-d70f-4168-89f2-0a4bb544c13b</guid><pubDate>Tue, 28 Jul 2026 03:37:44 +0000</pubDate><atom:updated>2026-07-28T03:37:44.832Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,தி.மு.க.</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/f97jk8f4/8.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/f97jk8f4/8.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை, </p><p>2026-2027-ம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட் ஆகஸ்டு 5-ந் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அதற்கு அடுத்த நாள் (6-ந் தேதி) வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆகிறது. த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் என்பதால் எதிர்பார்ப்பு அதிகம் நிலவுகிறது. </p><p>இந்த நிலையில், பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. உறுப்பினர்கள், பட்ஜெட் கூட்டத் தொடரில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவுரை வழங்க இருக்கிறார். இதற்காக, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று (ஜூலை 28) மாலை 5 மணிக்கு காணொலிக்காட்சி வழியாக நடைபெற இருக்கிறது. </p><p>கூட்டத்திற்கு தலைமை தாங்கும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டசபை கூட்டத் தொடரில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், எந்தப் பிரச்சினைகளை முன்னெடுக்க வேண்டும், விவாதத்தின்போது யார் யார் பேச வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகள் வழங்க இருக்கிறார். </p>]]></content:encoded></item><item><title>காமராஜர் காலை உணவு திட்டம்: டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு நிபந்தனைகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kamaraj-breakfast-scheme-conditions-for-companies-participating-in-the-tender</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kamaraj-breakfast-scheme-conditions-for-companies-participating-in-the-tender#comments</comments><guid isPermaLink="false">22d88890-9df5-452f-860c-28e74fa3ff87</guid><pubDate>Tue, 28 Jul 2026 03:23:14 +0000</pubDate><atom:updated>2026-07-28T03:23:14.638Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt,Kamarajar,காமராஜர்,காலை உணவு திட்டம்,Kaalai Unavu Thittam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/h3zrmq7u/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/h3zrmq7u/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 6-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட் டம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 17-ந்தேதி முதல் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. காலை உணவு திட்டம் 'பெருந்தலைவர் காம ராஜர் காலை உணவு திட்டம்' என பெயர் மாற்றம் செய்யப்பட் டுள்ளது.</p><p>இந்த நிலையில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு காலை உணவு வினியோகம் செய்வது தொடர்பாக டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு நிபந்தனைகளை தமிழக அரசு வெளி யிட்டுள்ளது. அதில், ரவா உப்புமாவுடன் சாம்பார் உள்ளிட்ட 13 வகை உணவுகளில் இருந்து நாள்தோறும் ஏதேனும் ஒரு உணவு மாணவர்களுக்கு காலை உணவாக வழங்கப்படவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>காலை உணவு 150 முதல் 200 கிராம் எடையுடன் 294 கலோரி ஆற்றல் வழங்கும் விதமாக இருக்கவேண்டும். காலை 7.30 மணிக்குள் பள்ளிகளுக்கு சூடான உணவு (இன்சுலேட்டட் ஹாட் பாக்ஸ்களில் எடுத்து சென்று) வினியோகிக்கவேண்டும். தலைமை ஆசிரியரின் சான்று கிடைத்த பிறகே ஒப்பந்ததாரருக்கு மாதாந்திர பணம் வழங்கப்படும். உணவின் தரத்தை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மூன்றாம் தரப்பு ஆய்வு மூலம் கண்காணிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.17 சரிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/broiler-chicken-price-drops-by-rs-17-per-kg</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/broiler-chicken-price-drops-by-rs-17-per-kg#comments</comments><guid isPermaLink="false">11c23df7-3e52-4cb2-b7ac-6e69d403cdfb</guid><pubDate>Tue, 28 Jul 2026 03:15:19 +0000</pubDate><atom:updated>2026-07-28T03:15:19.261Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Namakkal,நாமக்கல்,கறிக்கோழி விலை,Broiler Chicken Prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/vx9dg71q/6.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/vx9dg71q/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல்,</p><p>நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.127-க்கு விற்பனை செய்யப் பட்டுவந்தது. இதற்கிடையே நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங் கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.17 குறைக்க முடிவு செய்தனர். அதன்படி கறிக்கோழி விலை கிலோ ரூ.110 ஆக குறைந்து உள்ளது. </p><p>முட்டைக்கோழி விலை கிலோ ரூ.115 ஆக இருந்தது. நேற்று நடந்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை ரூ.5 குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் முட்டைக்கோழி விலை கிலோ ரூ.110 ஆக குறைந்து உள்ளது. முட்டை கொள்முதல் விலை ரூ.630 காசுக ளாக உள்ளது. விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையா ளர்கள் தெரிவித்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>அரசு ஊழியரை நீண்டகாலம் பணியிடை நீக்கத்தில் வைத்திருக்க முடியாது - ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-employees-cannot-be-kept-on-suspension-for-a-long-time-high-court-order</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-employees-cannot-be-kept-on-suspension-for-a-long-time-high-court-order#comments</comments><guid isPermaLink="false">0194ff35-c199-4010-8817-1b9e9109853e</guid><pubDate>Tue, 28 Jul 2026 02:50:49 +0000</pubDate><atom:updated>2026-07-28T02:50:49.326Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>High Court,ஐகோர்ட்டு,அரசு ஊழியர்,government employee,பணியிடை நீக்கம்,suspension</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/iwbi8sm1/highcourt.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/iwbi8sm1/highcourt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பணியிடை நீக்கத்தில் அரசு ஊழியரை நீண்ட காலம் வைத்திருக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.</p><h2>லஞ்ச புகார்</h2><p>கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த ராமச்சந்திரன் என்பவர், பட்டா வழங்க லஞ்சம் பெற்றதாகக்கூறி லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ராமச்சந்திரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த பணியிடை நீக்கத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ராமச்சந்திரன் மனு தாக்கல் செய்தார். அதில், "தன்னை பணியிடை நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது.</p><h2>பணியிடை நீக்கம்</h2><p>அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அசன் முகமது ஜின்னா, "மனுதாரர் மீதான லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணை முடிந்து 7 மாதங்களுக்கு மேலாகி விட்டது. ஆனால், இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. துறை ரீதியிலான விசாரணை தொடர்பாக அவருக்கு எந்தவொரு குற்றக்குறிப்பாணையும் வழங்கப்படவில்லை. கடந்த 8 மாதங்களாக மனுதாரர் மீதான <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">பணியிடை நீக்கம் </a>உத்தரவு தொடர்ந்து வருகிறது.</p><p>ஒருவரை இவ்வாறு தொடர்ந்து சட்டப்பூர்வமாக இடைநீக்கத்தில் வைத்திருக்க முடியாது" என்று வாதிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வக்கீல், "மனுதாரருக்கு எதிரான லஞ்ச முறைகேடு தொடர்பான விசாரணை நிலுவையில் உள்ளதால், பணியிடை நீக்கத்தில் வைக்கப்பட்டுள்ளார்" என்று வாதிட்டார்.</p><h2>நீண்ட காலம் முடியாது</h2><p>இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை, துறை ரீதியான விசாரணை இரண்டையும் ஒன்றாக பொருத்திப் பார்க்க முடியாது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளின்படி நீண்டகாலமாக ஒருவரை இடைநீக்கத்தில் வைத்திருக்க முடியாது. அதே போல பணியிடை நீக்கத்தை மாதக்கணக்கில் தொடருவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே மனுதாரரின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்து அவரை முக்கியத்துவம் இல்லாத பணியிடத்தில் மீண்டும் அரசு பணியமர்த்த வேண்டும்" என்று உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை பல்கலைக்கழக பதிவாளரின் பதவி நீட்டிப்பு நிறுத்திவைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/suspension-of-extension-of-term-of-registrar-of-chennai-university</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/suspension-of-extension-of-term-of-registrar-of-chennai-university#comments</comments><guid isPermaLink="false">66249d12-8299-44ec-8bfa-a3744932e50b</guid><pubDate>Tue, 28 Jul 2026 02:16:28 +0000</pubDate><atom:updated>2026-07-28T02:16:28.660Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை பல்கலைக்கழகம்,University of Madras,பதவி நீட்டிப்பு</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/55ydok77/2.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/55ydok77/2.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை பல்கலை சிண்டிகேட் குழு கூட்டம், பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது. உயர்கல்வித்துறை செயலர் தீரஜ்குமார் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், சிண்டி கேட் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.</p><p>மொத்தம் 35 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு, அதுகுறித்து விவாதிக்கப்பட்டன. குறிப்பாக, பல்கலை பதிவாளர் ரீட்டா ஜான் பணி நீட்டிப்பு தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பொதுவாக, பல்கலை பதிவாளராக ஒருவர் தேர்வு செய்யப்படும்போது, ஆண்டு பதவி காலத்தில், முதல் ஆண்டு, தகுதிகாண் பருவமாக கருதப்படும். </p><p>மூன்று பதிவாளராக ஓராண்டு காலம் அவர்களின் செயல்பாடுகள் குறித்து, துணை வேந்தரின் செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில், அடுத்த இரண்டு ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்படும்.</p><p>தற்போது, சென்னை பல்கலை பதிவாளர் ரீட்டா ஜான், 2026 ஜூன் 26ம் தேதியுடன், ஓராண்டு பதவி காலத்தை நிறைவு செய்துள்ளார். இதைத் தொடர்ந்து, செயல்திறன் மதிப்பீட்டின்படி, அவரது பணி மேலும் காலத்தை இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பது தொடர்பாக, தீர்மானம் கொண்டுவரப்பட்டு, பரிசீலிக்கப்பட்டது. இதுகுறித்து 'செனட்' கூடும்போது, பரிசீலிக்கலாம் என, துணைவேந்தர் ஒருங்கிணைப்பு குழு அதிகாரிகள் தள்ளி வைத்துள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன.</p><p>இதுகுறித்து, பல்கலை வட்டாரங்கள் கூறியதாவது;</p><p>பதிவாளர் நியமனத்தில் விதிமீறல் நடந்துள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. பதிவாளர் நியமனத்துக்கு, பல்கலையின், 'செனட்' ஒப்புதல் வழங்க வேண்டும். ஆனால், ஓராண்டாக, செனட் கூடாததால், பதிவாளர் நியமனத்துக்கு இதுவரை ஒப்புதல் இல்லை. </p><p>இந்த சூழலில், அடுத்த இரண்டு ஆண்டு பணி காலத்தை நீட்டிப்பது தொடர்பாக, சிண்டிகேட்டில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. சட்டப்பிரச்னை ஏற்படாமல் இருக்க, பதிவாளரின் பணி கால நீட்டிப்பு தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. </p><p>விரைவில், 'செனட்' கூடும்போது, பணிக்கு ஒப்புதல் பெறப்பட்டு, பணி காலம் நீட்டிப்பது குறித்து பரிசீலிக்க சிண்டி கேட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு அவர்கள் கூறினர். </p> ]]></content:encoded></item><item><title>டெல்லி புத்தக வெளியீட்டு விழாவில் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்கவில்லை - வைகோ</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-not-participating-in-delhi-book-launch-event-vaiko</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-not-participating-in-delhi-book-launch-event-vaiko#comments</comments><guid isPermaLink="false">5167b3c9-d4d9-40af-84f0-1a3ff618c0da</guid><pubDate>Tue, 28 Jul 2026 02:10:25 +0000</pubDate><atom:updated>2026-07-28T02:10:25.637Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vaiko,வைகோ,புத்தக வெளியீட்டு விழா,Book launch event- புத்தக வெளியீட்டு விழா,Chief Minister Vijay,முதல் அமைச்சர் விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/bjjjsv15/vijay-vaiko.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/bjjjsv15/vijay-vaiko.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை தலைமைச் செயலகத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ  செய்தியாளர்களை சந்தித்தார்.</p><p>அப்போது அவர் பேசியதாவது:-</p><p>நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 30 ஆண்டுகளில் நான் ஆற்றிய ஆங்கில உரைகளின் தொகுப்புகள் 4 தொகுப்புகளாக அச்சிடப்பட்டு. அதை டெல்லியில் 'கான்ஸ்டிடியூஷன் கிளப்'பில் ஆகஸ்டு 4-ந் தேதியன்று வெளியிட திட்டமிடப்பட்டது. மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அந்த நூல்களை வெளியிட இருக்கிறார். அவற்றின் முதல் பிரதியை பெற்றுக்கொள்ள முதல்-அமைச்சர் விஜய் இசைவளித்தார்.</p><h2>கூட்ட நெரிசல்</h2><p>ஆனால், நிகழ்ச்சியில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a> பங்கேற்றால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால், அந்த நிகழ்ச்சியிலே பங்கெடுப்பதை தவிர்த்துவிடலாம் என்று முதல்-அமைச்சரிடம் கூறினேன். மேலும், அதே நூல்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு சென்னையில் வெளியிடும்போது அதில் பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டேன். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சேலம் வழியாக கொல்லம் - சென்னை இடையே சிறப்பு ரெயில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-kollam-and-chennai-via-salem</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-kollam-and-chennai-via-salem#comments</comments><guid isPermaLink="false">07bf250e-8749-4f7c-8fa3-7aa12d953fc8</guid><pubDate>Tue, 28 Jul 2026 02:00:33 +0000</pubDate><atom:updated>2026-07-28T02:00:33.081Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,Special train,Onam festival,ஓணம் பண்டிகை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/r27y6apk/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/r27y6apk/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,  </p><p>ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து சேலம் வழியாக கேர ளம் மாநிலம் கொல்லத்திற்கு வாரம் இரு முறை சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. </p><p>அதன்படி, சென்னை சென்டிரல்-கொல்லம் சிறப்பு ரெயில் (06117) வருகிற 18-ந் தேதி முதல் செப்டம்பர் 5-ந் தேதி வரை வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்படும். மறுமார்க்கத்தில், கொல்லம்-சென்னை சென்டிரல் சிறப்பு ரெயில் (06118) வருகிற 14-ந் தேதி முதல் செப்டம்பர் 6-ந் தேதி வரை வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஜல்லி, கட்டுமான கற்கள் கொண்டு செல்ல தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-transporting-gravel-and-construction-stones-from-tamil-nadu-to-other-states</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-transporting-gravel-and-construction-stones-from-tamil-nadu-to-other-states#comments</comments><guid isPermaLink="false">b50d5985-0d80-47d1-ae87-1800e50a7e2a</guid><pubDate>Tue, 28 Jul 2026 01:43:35 +0000</pubDate><atom:updated>2026-07-28T01:43:35.679Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,construction materials,கட்டுமான பொருட்கள்,ஜல்லி,Mines,jalli</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/tb45pa44/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/tb45pa44/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஜல்லி மற்றும் கட் டுமான கற்கள் கொண்டு செல்வதற்கு 3 மாதங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனர் பிரபு சங்கர் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழகத்தில் உள்கட்டமைப்பு மற்றும் வீட்டு வசதித்திட்டங்கள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. இதற்கு தேவையான ஜல்லி, கற்கள், கண்டாஸ், பாறைகள், எம்-சாண்ட், மெட்டல் ஜெல்லி, பாலாஸ்ட், மில் கற்கள் மற்றும் ஹேண்ட் சக்காய்ஸ் போன்ற கட்டுமானப் பொருட்களின் தேவை மாநிலத்துக்குள் அதிகரித்துள்ளது.</p><h2>சட்டவிரோத குவாரி</h2><p>இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து பெருமளவிலான கற்கள் மற்றும் ஜல்லிகள் அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் மாநிலத்துக்குள் கட்டுமானப் பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயர்வு மற்றும் செயற்கையான தட்டுப்பாடு உருவாகிறது. இது பொது மற்றும் தனியார் உள்கட்டமைப்புத் திட்டங்களை நேரடியாக பாதிக்கிறது. மேலும், அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகள் மற்றும் மல்டி-ஆக்சில் வாகனங்களால் உள்ளூர் சாலைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.</p><p>இந்த கனரக வாகனங்களால் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளம் மற்றும் ஆந்திராவில் கற்களுக்கு தட்டுப்பாடு இல்லை. எனினும் தமிழகத்தில் இருந்து அதிகளவில் கற்கள் கொண்டு செல்லப்படுவதால், தேவைக்கும் வினியோகத்துக்கும் இடையே பெரிய இடைவெளி உருவாகிறது. இந்த இடைவெளி, சட்டவிரோத குவாரித் தொழிலுக்கும், அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி கற்களை வெட்டி எடுப்பதற்கும் வழிவகுக்கிறது. இது மாநிலத்தின் சுற்றுச்சூழல் மற்றும் சூழலியலுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.</p><h2>கடுமையான நடவடிக்கை</h2><p>எனவே, இந்த சூழலை கருத்தில் கொண்டு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் தவிர, பிற மாநிலங்களுக்கு ஜல்லி, கற்கள் மற்றும் கட்டுமானப் பணிகளுக்கு பயன்படும் அனைத்துப் பொருட்களையும் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த தடையை மீறுபவர்கள் மீது தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>இந்த உத்தரவைச் செயல்படுத்துவதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எல்லைப் பகுதிகளில் உள்ள அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தடையை முறையாக அமல்படுத்த வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் வந்தே பாரத் ரெயில் சேவை மூலம் ரூ.163 கோடி வருவாய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/revenue-of-rs-163-crore-from-vande-bharat-train-service-in-april-and-may</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/revenue-of-rs-163-crore-from-vande-bharat-train-service-in-april-and-may#comments</comments><guid isPermaLink="false">7acb0d45-a390-4b6c-b307-e8e962905d9a</guid><pubDate>Tue, 28 Jul 2026 01:37:05 +0000</pubDate><atom:updated>2026-07-28T01:37:05.692Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தெற்கு ரெயில்வே,Southern Railway,Vande Bharat train,revenue,வருவாய்,வந்தே பாரத் ரெயில் சேவை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/w8if2d5q/vantebharat.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/w8if2d5q/vantebharat.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தெற்கு ரெயில்வேயில் கடந்த ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்களில் வந்தே பாரத் ரெயில் சேவை மூலம் ரூ.163 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகமாகும்.</p><h2>வந்தே பாரத் ரெயில்</h2><p>இந்தியாவில் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தெற்கு ரெயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 6 ரெயில்வே கோட்டங்கள் உள்ளது. இந்த கோட்டங்கள் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பல பகுதிகளை உள்ளடக்கி செயல்படுகிறது. அந்த வகையில், தெற்கு ரெயில்வேயில் முதல் வந்தே பாரத் ரெயில் சேவை சென்னை மைசூரு இடையே கடந்த 2022-ம் ஆண்டு இயக்கப்பட்டன.</p><p>தெற்கு ரெயில்வேயில் சென்னை சென்டிரல் மைசூரு. சென்டிரல் கோவை, எழும்பூர் நெல்லை, சென்டிரல் விஜயவாடா, கோவை பெங்களூரு, சென்னை எழும்பூர் - நாகர்கோவில், மதுரை பெங்களூரு மங்களூரு-திருவனந்தபுரம் உள்பட பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. எக்ஸ்பிரஸ் ரெயில்களை விட வந்தே பாரத் ரெயில்களின் பயண நேரம் குறைவு என்பதால் இச்சேவை பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதனால் வந்தே பாரத் ரெயில்களில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.</p><h2>2 மாத வருவாய்</h2><p>அதன்படி, 2026-27-ம் நிதியாண்டில் ஏப்ரல் மற்றும் மே ஆகிய 2 மாதங்களில் வந்தே பாரத் ரெயிலில் 15.21 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.162.96 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த 2025-26-ம் நிதியாண்டில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 11.41 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். ரூ.119.52 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த நிதியாண்டில் வருவாய் வெகுவாக உயர்ந்துள்ளது.</p><p>இதுகுறித்து, ரெயில்வே அதிகாரிகள் கூறியபோது, '<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">வந்தே பாரத் ரெயில்</a>களின், புறப்படுவதற்கு 15 நிமிடங்கள் வரை காலியாக உள்ள இருக்கைகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கும் தற்போதைய முன்பதிவு வசதி பயணிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்த வசதி, கடைசி நிமிடத்தில் பயணிக்க வேண்டிய எண்ணற்ற பயணிகள் சிரமமின்றி முன் பதிவைப் பெற உதவியுள்ளது. இதன் காரணமாகவும் வந்தே பாரத் ரெயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது' என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>அரசு பள்ளியில் ஆசிரியை பிரம்பால் அடித்ததில்
10 மாணவிகள் காயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/10-students-injured-after-teacher-beats-them-with-cane-at-government-school</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/10-students-injured-after-teacher-beats-them-with-cane-at-government-school#comments</comments><guid isPermaLink="false">9530e7d1-5396-4f83-9be9-0223c55ce8c3</guid><pubDate>Tue, 28 Jul 2026 01:19:10 +0000</pubDate><atom:updated>2026-07-28T01:19:10.595Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Government school teacher,மாணவிகள் காயம்,அரசு பள்ளி ஆசிரியை,students injured,பிரம்பால் தாக்குதல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/l532p8ve/67.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/l532p8ve/67.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p>அரசு பள்ளியில் ஆசிரியை பிரம்பால் அடித்ததில் 10 மாணவிகள் காயமடைந்தனர். ஆசிரியை மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>மாணவிகளுக்கு பிரம்படி</h2><p>தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வீ.கே.புதூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தேன்மரியசுகந்தி (வயது 44) என்பவர் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். 11-ம் வகுப்புக்கு பாடம் எடுக்கும் இவர், கடந்த 20-ந்தேதி மாலை சிறப்பு வகுப்புகள் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது அருகில் உள்ள மற்றொரு வகுப்பறையில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சத்தமாக பேசிக்கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த ஆசிரியை தேன்மரியசுகந்தி அந்த வகுப்பறைக்கு சென்று, மாணவ, மாணவிகளை பிரம்பால் அடித்து கண்டித்ததாக கூறப்படுகிறது.</p><h2>கைகளில் பலத்த காயம்</h2><p>இதில் மாணவிகள் பவித்ரா, சுஜித்ரா, சரண்யா, சாய்ஸ்ரீ, ஆஷா, சந்தன முத்துமாரி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. வகுப்புகள் முடிந்ததும் அந்த மாணவிகள் வீட்டுக்கு சென்று நடந்தவற்றை கூறினர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே மாணவிகளை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தனர். மாணவிகள் பவித்ரா மற்றும் சுஜித்ரா ஆகியோர் வீ.கே.புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பவித்ரா மட்டும் மேல்சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு 3 நாட்கள் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றுள்ளார்.</p><h2>ஆசிரியை மீது வழக்கு</h2><p>சரண்யா, சாய்ஸ்ரீ, ஆஷா, சந்தனமுத்துமாரி ஆகிய மாணவிகள் தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். கைகளில் இன்னும் வீக்கம் இருப்பதால், பாதிக்கப்பட்ட மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே ஓய்வெடுத்து வருவதாக பெற்றோர் தெரிவித்தனர். இதுகுறித்து மாணவி பவித்ராவின் தாயார் ராஜாத்தி வீ.கே.புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் ஆசிரியை தேன்மரியசுகந்தி மீது பி.என்.எஸ் சட்டம் பிரிவு 115(2) மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>தேர்வு எழுத முடியவில்லை</h2><p>இந்தநிலையில், பவித்ராவின் தாயார் ராஜாத்தி நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-</p><p>வீ.கே.புதூரை சேர்ந்த எனது மகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 20-ந்தேதி தேன்மரியசுகந்தி என்ற<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88"> ஆசிரியை</a> எனது மகள் உள்பட பல மாணவர்களை பிரம்பால் தாக்கினார். ஆசிரியையின் செயல்பாடு குறித்து வீ.கே.புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களுக்கு நீதி வேண்டும், எனது மகளுக்கு காயம் காரணமாக இடைப்பருவ தேர்வு எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆசிரியை மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பாம்பன் பழைய தூக்குப்பாலத்தின் ஒரு பகுதி முழுமையாக வெட்டி அகற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-section-of-the-old-pamban-bascule-bridge-has-been-cut-away-and-removed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-section-of-the-old-pamban-bascule-bridge-has-been-cut-away-and-removed#comments</comments><guid isPermaLink="false">267f3660-fe6a-4a7c-98ba-55765d70857a</guid><pubDate>Tue, 28 Jul 2026 01:07:34 +0000</pubDate><atom:updated>2026-07-28T01:07:34.951Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Pamban Bridge,பாம்பன் பாலம்,ரெயில் பாலம்,Rail Bridge</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/ts0uedw9/13.gif" width="721"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/ts0uedw9/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமேசுவரம்,  </p><h2>பழைய ரெயில் பாலம்</h2><p>ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் பழைய ரெயில் பாலம் மிக முக்கிய பங்கு வகித்து வந்தது. சுமார் 110 ஆண்டுகளுக்கு மேலாக ரெயில் போக்குவரத்து சிறப்பாக நடைபெற்று வந்த பாம்பன் பழைய ரெயில் பாலத்தின் அருகிலேயே ரூ.545 கோடியில் புதிதாக ரெயில் பாலம் திறக்கப்பட்டது. கடலுக்குள் உள்ள பழைய ரெயில் பாலத்தின் மையப்பகுதியில் உள்ள தூக்குப்பாலத்தை வெட்டி அகற்றும் பணியானது கடந்த 5 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரு கிறது. இதற்காக ரெயில்வே துறை மூலம் நிதி ஒதுக்கப்பட்டு தனியார் நிறுவனம் மூலம் பாம்பன் பழைய ரெயில் பாலத்தை வெட்டி அகற்றும் பணியானது நடைபெற்று வருகிறது. அதற்காக தூக்குப்பாலத்தின் அரு கில் கிரேன் ஒன்று நிறுத்தப்பட்டு தொழிலாளர்கள் வெல்டிங் மூலம் தூக் குப்பாலத்தின் இரும்பு கம்பிகளை பகுதி வாரியாக வெட்டி எடுக்க வருகின்றது. </p><h2>தூக்குப்பாலத்தின் ஒரு பகுதி</h2><p>இந்த நிலையில் தூக்குப்பாலத்தின் ஒரு பகுதியானது முழுமையாக வெட்டி அகற்றப்பட்டுள்ளது. இவ்வாறு வெட்டி அகற்றப்பட்ட தூக்குப்பாலத்தின் உதிரிபாகங்கள் அனைத்தும் பாம்பன் ரெயில் பாலத்தின் நுழைவுப்பகுதியில், ரெயில்வே நிலையப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் தூக்குப்பாலத்தின் மற்றொரு பகுதியை வெட்டி அகற்றும் பணியானது வருகிற ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் இருந்து தொடங்கும் என்று கூறப்படுகிறது. பருவமழை சீசன் தொடங்குவதற்கு முன்பாக தூக்குப்பாலத்தின் மற்றொரு பாதியையும் முழுமையாக வெட்டி அகற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>சென்னை விமான நிலையத்தில் ரூ.5.8 கோடி தங்கம் பறிமுதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs58-crore-gold-seized-at-chennai-airport</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs58-crore-gold-seized-at-chennai-airport#comments</comments><guid isPermaLink="false">d9c1315b-bba3-4c17-a5b9-defd817d6af5</guid><pubDate>Tue, 28 Jul 2026 01:04:15 +0000</pubDate><atom:updated>2026-07-28T01:04:15.206Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,விசாரணை,airport,விமான நிலையம்,investigation,வடமாநில வாலிபர்,தங்கம் பறிமுதல்,gold seizure,northern state youth</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/drwfk2dz/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/drwfk2dz/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை விமான நிலையத்தில் ரூ.5.8 கோடி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">தங்கம் பறிமுதல் </a>செய்யப்பட்டது தொடர்பாக பிடிபட்ட <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D">வடமாநில வாலிபரிடம்</a> சுங்க இலாகா அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்னறர். </p><h2>வடமாநில வாலிபர்</h2><p>சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு சிங்கப்பூரில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை, விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது வடமாநிலத்தை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவர், சுற்றுலா விசாவில் சிங்கப்பூர் சென்றுவிட்டு சென்னை திரும்பி வந்திருந்தார். அவர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.</p><h2>ரூ.5.8 கோடி தங்கம் பறிமுதல்</h2><p>இதையடுத்து அவரது உடைமைகளை முழுமையாக சோதனை செய்தனர். அவர் கொண்டு வந்த சூட்கேசின் மேல் பகுதியில் ரகசிய அறை அமைக்கப்பட்டு இருந்ததை கண்டு பிடித்தனர். அந்த ரகசிய அறையை பிரித்து பார்த்தபோது, அதில் தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அவற்றை வெளியே எடுத்து எடை போட்டபோது, 3 கிலோ 960 கிராம் இருப்பது தெரியவந்தது. இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.5 கோடியே 80 லட்சம் ஆகும். அந்த தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.</p><h2>சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை</h2><p>மேலும், இந்த தங்கத்தை கடத்திவர அவரை சிங்கப்பூர் அனுப்பிய நபர் யார்? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து பிடிபட்ட வாலிபரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மதுரவாயல்-துறைமுக மேம்பாலப் பணிகளில் மாற்றம்; செப்டம்பர் முதல் ஆற்றுப்பகுதியில் வேலை நிறுத்தம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/change-in-maduravoyal-harbour-flyover-works-strike-in-the-river-area-from-september</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/change-in-maduravoyal-harbour-flyover-works-strike-in-the-river-area-from-september#comments</comments><guid isPermaLink="false">60ad41cb-25ba-4964-9827-fe0049c8985a</guid><pubDate>Tue, 28 Jul 2026 00:57:53 +0000</pubDate><atom:updated>2026-07-28T00:57:53.763Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,work,Overpass,மேம்பால பணிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/bpdg3kix/66.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/bpdg3kix/66.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மதுரவாயல்- துறைமுக சாலைப்பணிகள் செப்டம்பர் முதல் ஜனவரி மாதம் வரை ஆற்றுப்பகுதிகளில் நடைபெறாது' என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h2>மதுரவாயல்-துறைமுகம் சாலை</h2><p>சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையே ரூ.5 ஆயிரத்து 600 கோடியில் ஈரடுக்கு மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அதில் தற்போது 22 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளன. கூவம் ஆற்றின் மேல்புறம் 15.5 கி.மீ. தொலைவுக்கு இந்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D">மேம்பாலம்</a> அமைகிறது. மழை காலங்களில் அதாவது, செப்டம்பர் முதல் ஜனவரி மாதம் வரை இப்பணிகள் ஆற்றுப்பகுதிகளில் நடைபெறாது. இந்த திட்டம் வருகிற 2029-ம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவடையும்.</p><h2>மேல்நிலை சாலை திட்டம்</h2><p>இதுதவிர கிளாம்பாக்கம் முதல் செங்கல்பட்டு அருகே உள்ள மகேந்திரா சிட்டி வரையிலான மேல்நிலை சாலை அமைக்கும் திட்டத்துக்கு ரூ.3 ஆயிரத்து 186 கோடி மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இத்துடன் சென்னை மெட்ரோ ரெயில் விரிவாக்கத்திட்டத்தை இணைக்கவும் ஆய்வுகள் நடந்து வருகிறது. இவை தவிர நடப்பு நிதியாண்டில் ரூ.3 ஆயிரத்து 98 கோடியில் செங்கல்பட்டு- திண்டிவனம் நெடுஞ்சாலையை 6 வழிச்சாலையாக மேம்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.</p><h2>சுங்கச்சாவடி</h2><p>அத்துடன் ரூ.147 கோடியில் திண்டிவனம்- புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையை விபத்து நேரிடாத சாலையாக 7 இடங்களில் மாற்ற விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளன. பொதுவாக தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி அமைக்கப்படுவது வழக்கம். இதைதவிர சாலையை பயன்படுத்துவோரின் சுமையைக் குறைக்கும் வகையில் இந்த தொலைவுக்குள் மேலும் சில சுங்கச் சாவடிகளையும் அமைப்பதுண்டு என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-today-9</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-today-9#comments</comments><guid isPermaLink="false">0b4bb95b-da55-475d-b526-f647474cc769</guid><pubDate>Tue, 28 Jul 2026 00:46:29 +0000</pubDate><atom:updated>2026-07-28T00:46:29.148Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,power outage,மின் தடை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/stx2vola/ep.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/stx2vola/ep.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p>அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சா வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (28.07.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,</p><h2>ஐடி காரிடார்</h2><p>எம்சிஎன் நகர் மற்றும் விரிவாக்கம், பவுண்டரி சாலை, பிள்ளையார் கோவில் தெரு, எஸ்பிஐ காலனி, கங்கையம்மன் கோவில் தெரு, 200 அடி ரேடியல் சாலை, போஸ்ட் ஆபிஸ் தெரு, வேம்புலியம்மன் கோவில் தெரு, தேரடி தெரு, பஞ்சாயத்து சாலை, மேப்பிள் அவென்யூ, குளக்கரை தெரு, ஆறுமுகம் நகர் மற்றும் குமரன் நகர், குமரன் நகர், குமரன் நகர் ஆர்.ஈ. நகர், செல்வகணபதி அவென்யூ, சரவணா நகர், கார்ப்பரேஷன் சாலை, செல்வகுமார் அவென்யூ, சீவரம், தணிகாசலம் தெரு. ராமச்சந்திரன் தெரு, காமராஜ் தெரு, இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் சாலை, எம்.ஜி. சாலை, பாலவிநாயகர் அவென்யூ, பிரகாசம் தெரு, எல்லையம்மன் நகர், ஸ்ரீபுரம் சாலை, ராமன் நகர், ஓ.எம்.ஆர்., திருமலைவ் நகர், ராமன் நகர், திருமலை, சிபிஐ நகர். மெயின் ரோடு, ஐஐடி காலனி, மீனாட்சிபுரம், மனோகர் நகர், விஜிபி சாந்தி நகர்.</p><h2>ராமாபுரம்</h2><p>மணப்பாக்கம், கிருஷ்ணா நீதிமன்றம், சிஆர்ஆர் புரம், கிருஷ்ணா நகர், பெரியார் சாலை, இந்திரா நகர், மற்றும் எம்ஜிஆர் நகர், ஸ்ரீராம் கார்டன், லட்சுமி நகர், பிள்ளையார் கோவில் தெரு. மைக்ரோ மார்வெல், தர்மராஜபுரம், காசாகிராண்ட் உட்சைட் மற்றும் கோட்டை, டி.வி.எஸ். எமரால்டு.</p> <h2>மேடவாக்கம்</h2><p>படேல் கம்பெனி சாலை, ஏரிக்கரை தெரு, சிபிஐ காலனி 1-7வது தெரு, வேளச்சேரி மெயின் ரோடு, பெல் நகர் 1-5வது தெரு, சிவகாமி நகர், பஜனை கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, ரங்கநாதபுரம், பிரின்ஸ் கல்லூரி.</p><h2>வளசரவாக்கம்</h2><p>விருகம்பாக்கம், ஆழ்வார்திரு நகர்.</p><h2>நொளம்பூர்</h2><p>எஸ்&amp;பி கார்டன், விஜிஎன் மான்டே கார்லோ, எஸ்ஆர்ஆர் நகர், ராஜா கார்டன் ஏரியா, குருசாமி சாலை, நொளம்பூர் முதல் மற்றும் இரண்டாம் யூனியன் சாலை, விஜிஎன் நகர் கட்டம் I-IV, பிளாக்ஸ் 1-8வது, கம்பர்சாலை, கவிமணிசாலை, பாரதி சாலை, அண்ணாமலை அவென்யூ, மீனாட்சி அவென்யூ, எம்.கே.லாட் பல்கலைக்கழகம், ரெட்டி. பனஞ்சோலை தெரு, மாதா கோவில் பகுதி, பெருமாள் கோவில் பகுதி, கஜலட்சுமி நகர், வேம்புலி அம்மன் பகுதி, ஸ்ரீ ராம் நகர், பச்சையப்பன் நகர், சக்தி நகர், பாடசாலை தெரு.</p><h2>ஆதம்பாக்கம்</h2><p>நிலமங்கை நகர், கேசரி நகர், சாந்தி நகர், சுரேந்தர் நகர், பாரதிதாசன் தெரு, பாரத் நகர்.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-38</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-38#comments</comments><guid isPermaLink="false">ae1a70ae-cbf4-4f7c-b012-b2eff7a34c22</guid><pubDate>Tue, 28 Jul 2026 00:40:43 +0000</pubDate><atom:updated>2026-07-28T00:40:43.333Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல் விலை,டீசல் விலை,Petrol and diesel prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/l5380fgy/1.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/l5380fgy/1.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.</p><p>பெட்ரோல், டீசல் விலை</p><p>இந்நிலையில், சென்னையில் இன்று (28.07.2026 செவ்வாய்க்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>தர்மபுரி ஏல அங்காடியில் கடந்த 6 மாதங்களில் ரூ.18 கோடியே 67 லட்சம் மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dharmapuri-silk-cocoons-auction-rs-18-67-crore-sales-in-6-months</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dharmapuri-silk-cocoons-auction-rs-18-67-crore-sales-in-6-months#comments</comments><guid isPermaLink="false">99b6dd35-ef43-4dd3-8da6-abec01e7c52f</guid><pubDate>Tue, 28 Jul 2026 00:07:37 +0000</pubDate><atom:updated>2026-07-28T00:07:37.820Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விற்பனை,sold,தர்மபுரி,Dharmapuri,அங்காடி,Big market,Silkworms,பட்டுக்கூடுகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/95s0smfx/silk.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பட்டுக்கூடுகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/95s0smfx/silk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தர்மபுரி,</p><p>தமிழ்நாட்டின் முக்கிய பட்டுக்கூடு உற்பத்தி மையங்களில் ஒன்றாக திகழும் தர்மபுரி பட்டுக்கூடு ஏல அங்காடியில், கடந்த 6 மாதங்களில் மட்டும் ரூ.18 கோடியே 67 லட்சம் மதிப்பிலான <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பட்டுக்கூடுகள்</a> விற்பனை செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p> <h2>குவியும் பட்டுக்கூடுகள்</h2><p>தர்மபுரி மாவட்டத்தில் பட்டுப்புழு வளர்ப்பு தொழில் மிக முக்கிய வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. இங்குள்ள அரசு பட்டுக்கூடு ஏல அங்காடிக்கு பட்டுக்கூடுகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தர்மபுரி மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி, இதன் சுற்றுவட்டார மாவட்டங்களான சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பட்டு விவசாயிகளும் தங்களது பட்டுக்கூடுகளை அதிக அளவில் இங்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.</p><h2>நல்ல விலை</h2><p>இங்கு கொண்டு வரப்படும் பட்டுக்கூடுகளுக்கு தரத்தின் அடிப்படையில் நல்ல விலை கிடைப்பதால் இங்கு பட்டுக்கூடுகளை கொண்டு வரும் விவசாயிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதேபோல் தமிழகத்தை சேர்ந்த வியாபாரிகள் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களை சேர்ந்தவர்களும் தர்மபுரிக்கு வந்து பட்டுக்கூடுகளை வாங்கி செல்கிறார்கள்.</p> <p><strong>இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-</strong></p><h2> பட்டுக்கூடுகள்</h2><p>தமிழ்நாட்டில் பட்டுக்கூடு உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னணி இடத்தை தர்மபுரி மாவட்டம் பெற்றுள்ளது. குறிப்பாக கடந்த 6 மாதங்களில் தர்மபுரி ஏல அங்காடிக்கு தமிழ் நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து 2 லட்சத்து 70 ஆயிரத்து 917 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. ரூ.18 கோடியே 67 லட்சம் மதிப்பில் பட்டுக்கூடகள் விற்பனை நடந்துள்ளது. இதன் மூலம் 4,100 விவசாயிகளும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகளும் பயன் அடைந்துள்ளனர்.</p><h2>பட்டு நூற்பாலை</h2><p>தர்மபுரிக்கு பட்டுக்கூடு வரத்து அதிகரித்துள்ளதால் இங்கு தேவையான கூடுதல் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தர்மபுரியில் பட்டு நூற்பாலை அமைக்கும் திட்டம் ஆய்வு நிலையில் உள்ளது. தர்மபுரியில் பட்டு சார்ந்த புதிய தொழில்கள் உருவாகுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. இதன்மூலம் அடுத்த சில ஆண்டுகளில் பட்டுக்கூடு சார்ந்த வேலை வாய்ப்புகளும் கணிசமாக அதிகரிக்கும்.</p><p>இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>கொய்யாப்பழம் பறித்த போது பரிதாபம்: மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/guava-plucking-tragedy-woman-falls-from-terrace-dies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/guava-plucking-tragedy-woman-falls-from-terrace-dies#comments</comments><guid isPermaLink="false">4b6dcbfc-3a98-4493-a04a-916ff827612d</guid><pubDate>Mon, 27 Jul 2026 23:35:38 +0000</pubDate><atom:updated>2026-07-27T23:35:38.787Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,Kanniyakumari,கொய்யா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/kligmsem/Untitled-10.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/kligmsem/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி,</p><p>கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே உள்ள ஈத்தவிளை பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி அமுதா (55 வயது). இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டின் மாடியில் ஏறி, அதனை ஒட்டியபடி உள்ள மரத்தில் கொய்யாப்பழம் பறித்துள்ளார். அந்த சமயத்தில் ஆஸ்பெட்டாஸ் சீட் விளிம்பில் மிதித்தபோது உடைந்து விட்டதாக தெரிகிறது.</p><p>இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அமுதா படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அமுதா நேற்று பரிதாபமாக இறந்தார்.</p><p>மேலும் இதுகுறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொய்யாப்பழம் பறித்த பெண், மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>கோவை சாடிவயல் யானைகள் முகாம்: பொதுமக்களை அனுமதிக்க வனத்துறை தீவிர பரிசீலனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kovai-sadivayal-elephant-camp-public-entry-under-consideration</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kovai-sadivayal-elephant-camp-public-entry-under-consideration#comments</comments><guid isPermaLink="false">667b11e2-c316-4df1-9dcb-4e850ec4d60f</guid><pubDate>Mon, 27 Jul 2026 23:32:54 +0000</pubDate><atom:updated>2026-07-27T23:32:54.860Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,பொதுமக்கள்,Forest Department,வனத்துறை,அனுமதி,Public,Elephant Camp,யானைகள் முகாம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/50v9ung4/tourist.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கோவை சாடிவயல் யானைகள் முகாம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/50v9ung4/tourist.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவை குற்றாலம் செல்லும் வழியில் சாடிவயல் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D">யானைகள் முகாம்</a> அமைந்துள்ளது. . இங்கு முத்து, காவிரி, ஜான் மற்றும் சுமங்கலா ஆகிய 4 யானைகள் வனத்துறையின் பராமரிப்பில் உள்ளன. இங்குள்ள இயற்கை சூழலை ரசிக்கவும், யானைகளை நேரில் காணவும் சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் ஆர்வம் இருந்து வருகிறது.</p><h2>வனத்துறை பரிசீலனை</h2><p>முதுமலை தெப்பக்காடு மற்றும் ஆனைமலை கோழிகமுத்தி யானைகள் முகாம்களில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல, சாடிவயல் முகாமிலும் பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனை ஏற்று, சாடிவயல் யானைகள் முகாமிற்கு பார்வையாளர்களை அனுமதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர்.</p><p><strong>இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-</strong></p><h2>சுற்றுலா பயணிகள்</h2><p>சாடிவயல் யானைகள் முகாமுக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது பரிசீலனையில் உள்ளது. இது தொடர்பாக வனத்துறை கால்நடை டாக்டர்களிடம் கருத்துகள் கோரப்பட்டு உள்ளது. கோவை குற்றாலத்திற்கு காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். முகாமில் யானைகளுக்கு காலை 8.30 மணி மற்றும் மாலை 5.30 மணிக்கு உணவளிக்கப்படும். ஆனால் மாலை 4.30 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகளுக்கு வனப்பகுதிக்குள் இருப்பதற்கு அனுமதி இல்லை.</p><h2>அன்றாட செயல்பாடு</h2><p>எனவே யானைகள் முகாமின் அன்றாட செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், சுற்றுலா பயணிகள் பார்வையிட ஏற்ற நேரம் மற்றும் பிற அம்சங்கள் குறித்து ஆராய்ந்து உயர் அதிகாரிகளுக்கு முன்மொழிவு அனுப்பப்படும். அது ஏற்கப்பட்டால் யானைகள் முகாமை பார்வையிட சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்.</p><p>இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை கிண்டி மருத்துவமனையில் அதிர்ச்சி: விபத்தில் மீட்கப்பட்ட வாலிபர்  திடீர் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/shock-at-chennai-guindy-hospital-youth-rescued-from-accident-dies-suddenly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/shock-at-chennai-guindy-hospital-youth-rescued-from-accident-dies-suddenly#comments</comments><guid isPermaLink="false">bbbc8a7b-2846-4c59-a437-8577fb466c0a</guid><pubDate>Mon, 27 Jul 2026 23:16:40 +0000</pubDate><atom:updated>2026-07-27T23:16:40.396Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Accident,Chennai,சென்னை,dies,உயிரிழப்பு,மருத்துவமனை,At the hospital,விபத்தில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/c1ngszhf/dharshan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணவர் பலி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/c1ngszhf/dharshan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கத்திப்பாரா மேம்பாலத்தில்  பஸ் மோதி விபத்தில் மீட்கப்பட்ட <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%20%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">வாலிபர்  திடீர் உயிரிழப்பு</a>. வேளச்சேரி டி.என்.எச்.பி. காலனியைச் சேர்ந்தவர் அய்யனாரப்பன். எலக்ட்ரீஷியன். இவரது மகன் தர்ஷன் (வயது 19). இவர், பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.</p> <h2>தர்ஷன்</h2><p>கடந்த 16-ந்தேதி அய்யனாரப்பன், தனது மகன் தர்ஷனுடன் மோட்டார் சைக்கிளில் அசோக்நகர் நோக்கி சென்று கொண்டிருந்தார். கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் சென்றபோது, கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி வந்த அரசு மின்சார பஸ், இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தந்தை-மகன் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.</p> <h2>மீட்பும் சிகிச்சையும்</h2><p>விபத்து ஒன்றில் சிக்கிய தந்தை அய்யனாரப்பன் மற்றும் அவரது மகன் தர்ஷன் ஆகிய இருவரும் உடனடியாக மீட்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் தந்தை அய்யனாரப்பன் பூரண உடல்நலம் தேறினார். ஆனால், மகன் தர்ஷனுக்கு காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக மருத்துவர்கள் தீவிர அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.</p><h2>திடீர் மரணம்</h2><p>அறுவை சிகிச்சை முடிந்து வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த தர்ஷனுக்கு, கடந்த சனிக்கிழமை இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி நேற்று தர்ஷன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>உறவினர்கள் குற்றச்சாட்டு</h2><p>தர்ஷனின் திடீர் மரணம் குறித்து அவரது உறவினர்கள் கூறும்போது, "அறுவை சிகிச்சை நன்றாக முடிந்தது என்றுதான் கூறினார்கள். ஆனால் நுரையீரல் தொற்று  காரணமாகவே தர்ஷன் உயிரிழந்து விட்டதாக தற்போது டாக்டர்கள் கூறுகிறார்கள்" என கண்ணீருடன் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>கணவர் இறந்த துக்கத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-dies-by-suicide-in-grief-over-husbands-death</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-dies-by-suicide-in-grief-over-husbands-death#comments</comments><guid isPermaLink="false">d52a82f7-1ef9-4cb7-8fbb-df8455d85641</guid><pubDate>Mon, 27 Jul 2026 23:13:36 +0000</pubDate><atom:updated>2026-07-27T23:13:36.564Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Namakkal,நாமக்கல்,இளம்பெண் தற்கொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/4p4xctpw/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/4p4xctpw/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல்,</p><p>ஒடிசா மாநிலம் நாகராங்பூர் மாவட்டம், ராங்கர் பகுதியை சேர்ந்தவர் முணாகோண்ட். இவரது மனைவி சுனிதா கோண்ட் (25 வயது). இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பின்னர் இருவரும் நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள சின்ன தளிகையில் உள்ள கோழிப்பண்ணையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தனர். இதனிடையே கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது.</p><p>கடந்த 10-ந்தேதி முணாகோண்ட் மது அருந்திவிட்டு வந்ததால் மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த முணாகோண்ட் வீட்டுக்கு வெளியே ஜன்னல் கம்பியில் துண்டால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் தற்கொலை செய்து கொண்டதால் மனமுடைந்து காணப்பட்ட சுனிதா கோண்ட் அதேபகுதியில் உள்ள உறவினர் ஜிதேந்தர் கோண்ட் என்பவரது வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார்.</p><p>இந்த நிலையில் கணவர் இறந்த துக்கத்தில் நேற்று காலை சுனிதா கோண்ட் வீட்டில் உள்ள கம்பியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு கொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஜிதேந்தர் கோண்ட் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது சுனிதா கோண்ட் ஏற்கனவே இறந்து விட் டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>கணவர் இறந்த துக்கத்தில் 17-வது நாளில் மனைவியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழப்பு - தோட்ட உரிமையாளர் உள்பட இருவர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-electrocuted-two-arrested-including-estate-owner</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-electrocuted-two-arrested-including-estate-owner#comments</comments><guid isPermaLink="false">72e64fdf-69fa-459b-80cc-97d407e38683</guid><pubDate>Mon, 27 Jul 2026 22:47:32 +0000</pubDate><atom:updated>2026-07-27T22:47:32.320Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காட்டு யானை,wild elephant,மின்சாரம் தாக்கி உயிரிழப்பு,கோயம்புத்தூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/tu4sfght/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/tu4sfght/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோயம்புத்தூர்,</p><p>கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனத்துறையினர் சிக்கதாசம்பாளையம் ஊராட்சி வேடர் காலனி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வாழை பயிரிடப்பட்டிருந்த குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் ஒரு ஆண் காட்டு யானை இறந்து கிடந்தது தெரிய வந்தது.</p><p>இதுகுறித்து தகவல் கிடைக்கப்பெற்றதும் சிறுமுகை வனச்சரக அலுவலர் தினேஷ் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் நேற்று முன்தினம் இரவு தோட்டத்தை சுற்றிலும் அமைக்கப்பட்டு இருந்த சோலார் மின்சார வேலிக்கு சட்டவிரோதமாக வீட்டில் இருந்து உயர் அழுத்த மின்சாரம் வழங்கப்பட்டு இருக்கிறது. நேற்று காலை அந்த வழியாக யானை கடந்து சென்ற போது மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தது தெரிய வந்தது. இறந்த யானைக்கு 25 வயது இருக்கும்.</p><p>இதைத்தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, அரசு வன கால்நடை மருத்துவ அலுவலர்கள் விஜயராகவன், வெண்ணிலா, கால்நடை மருத்துவர்கள் பிரதீப், யோகேஷ், பிரபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.</p><p>இதைத்தொடர்ந்து மின்சாரம் தாக்கி இறந்த ஆண் காட்டு யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கிடையே மின்சார வாரிய செயற்பொறியாளர் சத்யா, உதவி செயற்பொறியாளர் சுரேஷ்குமார், உதவி பொறியாளர் விநாயகமூர்த்தி மற்றும் பணியாளர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து தோட்ட உரிமையாளர் குமார் (65 வயது), விவசாய கூலி தொழிலாளி பாக்கியராஜ் (42 வயது) ஆகிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை விமான நிலையத்தில் ஒரே மாதத்தில் 16 ஆயிரம் டன் சரக்குகளை கையாண்டு சாதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-airport-handles-16000-tonnes-in-single-month-record</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-airport-handles-16000-tonnes-in-single-month-record#comments</comments><guid isPermaLink="false">cb0ee37e-18ca-4855-9cfd-18f35a10613e</guid><pubDate>Mon, 27 Jul 2026 20:26:26 +0000</pubDate><atom:updated>2026-07-27T20:26:26.671Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Airport,சென்னை விமான நிலையம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/27fdwe97/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை விமான நிலையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/27fdwe97/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>சரக்கு போக்குவரத்து</h2><p>சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நாளுக்கு நாள் சரக்கு போக்குவரத்து அதிகரித்து வருகிறது. சென்னை விமான நிலைய கார்கோ மூலம் தோல் பொருட்கள், ஆயத்த ஆடைகள், ஜவுளி வகைகள், எந்திர உதிரிபாகங்கள், தங்க நகைகள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதேபோல் வெளிநாடுகளில் இருந்து தங்க கட்டிகள், மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள், எந்திரங்கள் உள்ளிட்டவை அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன.</p><h2>20 விமானங்கள்</h2><p>இதனால் சென்னை விமான நிலைய கார்கோ பகுதி 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தினமும் 15 முதல் 20-க்கும் மேற்பட்ட சரக்கு விமானங்கள் வந்து, சரக்குகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. சரக்கு கையாளும் பணிகளை விரைவுபடுத்துவதற்காக நவீன வசதிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னை விமான நிலைய கார்கோவில், கடந்த 2024-2025-ம் ஆண்டை விட 2025-2026-ம் ஆண்டில் 11.7 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தேசிய அளவில் சரக்கு போக்குவரத்து வளர்ச்சி சராசரியாக 6.2 சதவீதமாக உள்ளது.</p><h2>16 ஆயிரம் டன்</h2><p>கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சென்னை விமான நிலைய கார்கோவில் ஒரே மாதத்தில் 16 ஆயிரம் டன் சரக்குகள் கையாளப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. சென்னை விமான நிலைய கார்கோ வரலாற்றில் ஒரே மாதத்தில் இந்த அளவு அதிக எடையுள்ள சரக்குகளை கையாண்டது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. விமான நிலையத்தில் சரக்கு போக்குவரத்து ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால், சரக்குகளை கையாளுவதற்கு கூடுதல் இடவசதி தேவை ஏற்பட்டுள்ளது.</p><h2>5-வது சேட்டிலைட் முனையம்</h2><p>இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் 5-வது சேட்டிலைட் முனையம் அமைக்க இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. இந்த 5-வது புதிய சேட்டிலைட் முனையம், தற்போதுள்ள 4-வது முனையத்தின் தெற்கு பகுதியில், பல்லாவரம் திசையில் அமைக்கப்பட உள்ளது. விமான நிலையத்தின் 2-ம் கட்ட கட்டுமான பணிகள் நிறைவடைந்ததும், 5-வது சேட்டிலைட் முனையத்தின் கட்டுமான பணிகள் தொடங்கும் என கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>திருமணமான 5 மாதங்களில் புதுப்பெண் வெட்டிக்கொலை - குடும்பத்தகராறில் கணவர் வெறிச்செயல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/newlywed-bride-hacked-to-death-in-5-months-of-marriage</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/newlywed-bride-hacked-to-death-in-5-months-of-marriage#comments</comments><guid isPermaLink="false">271f90c5-ce97-4187-b109-7f083fc77bde</guid><pubDate>Mon, 27 Jul 2026 20:02:59 +0000</pubDate><atom:updated>2026-07-27T20:02:59.843Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,தென்காசி,murder,கொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/cz4tc6vy/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/cz4tc6vy/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><p>தென்காசி மங்கம்மாள் சாலை சாஸ்தா கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சக்தி வீரமணிகண்டன் (33 வயது). இருசக்கர வாகன பழுதுநீக்கும் தொழிலாளி. இவரது மனைவி அன்னலட்சுமி (23 வயது). இவர்களுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.</p><p>திருமணமான முதல் வாரத்தில் இருந்தே இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து அன்னலட்சுமி தென்காசி அனைத்து மகளிர் போலீசார் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அறிவுரை வழங்கியும் பிரச்சினை தீரவில்லை.</p><p>இந்த நிலையில், நேற்று காலை ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சக்தி வீரமணிகண்டன், அரிவாளால் அன்னலட்சுமியை சரமாரியாக வெட்டினார். இதில் உடலில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.</p><p>இதையடுத்து தப்பியோடிய சக்தி வீரமணிகண்டன் தென்காசி குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அன்னலட்சுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>வாசீஸ்வரர் கோவில் புனிதத்தைக் கெடுக்கும் சமூக விரோதிகள்: அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vaseeswarar-temple-desecration-anti-social-elements</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vaseeswarar-temple-desecration-anti-social-elements#comments</comments><guid isPermaLink="false">5930444d-ad2e-4645-879e-6d0c87a452a0</guid><pubDate>Mon, 27 Jul 2026 18:29:09 +0000</pubDate><atom:updated>2026-07-27T18:29:09.596Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Thiruvallur,திருவள்ளூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/cij2b6ve/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/cij2b6ve/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>திருவள்ளூர் மாவட்டம், திருப்பாச்சூரில் அமைந்துள்ள 1,800 ஆண்டுகள் பழமையான வாசீஸ்வரர் கோவில் சுற்றுச்சுவர் அருகே, மர்ம நபர்கள் தொடர்ந்து மாட்டிறைச்சிக் கழிவுகளைக் கொட்டி வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பாடல் பெற்ற இப்புனிதத்தலத்தில், திட்டமிட்டு இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இத்தகைய கீழ்த்தரமான செயல்கள் அரங்கேறி வரும் வேளையில், விஜய்யின் அரசும் அதன் இந்து சமய அறநிலையத்துறையும் இதனைக் கண்டுகொள்ளாமல் மெத்தனமாக இருப்பது கண்டனத்திற்குரியது.</p><p>கோவிலின் சுற்றுச்சுவர் அருகே கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளைத் தெருநாய்கள் கோவில் வளாகத்திற்குள் கவ்விக்கொண்டு வருவதால், பிரகாரத்தின் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவிலுக்குச் சொந்தமான 2.15 ஏக்கர் நிலத்தின் சுற்றுச் சுவருக்குள்ளேயே மாட்டிறைச்சிக் கழிவுகள் வீசப்பட்டு, கடுமையான சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகப் பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.</p><p>எனவே கோவிலின் புனிதத்தைக் காக்கத் தவறிய விஜய்யின் அரசு, உடனடியாகத் தனது அலட்சியப் போக்கைக் கைவிட்டு, இச்செயலில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் வளாகத்தையும் அதற்குச் சொந்தமான இடங்களையும் தூய்மைப்படுத்தி, தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>