<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 13 Sep 2026 02:32:30 +0000</lastBuildDate><item><title>குடி&apos;மகன்களுக்கு குட் நியூஸ்: டாஸ்மாக் கடையில் விரைவில் 25 புது ரகம் அறிமுகம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/good-news-for-tipplers-25-new-varieties-to-be-introduced-soon-at-tasmac-shops</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/good-news-for-tipplers-25-new-varieties-to-be-introduced-soon-at-tasmac-shops#comments</comments><guid isPermaLink="false">731c0067-4e60-434f-b5d3-150e947af782</guid><pubDate>Sun, 13 Sep 2026 02:29:30 +0000</pubDate><atom:updated>2026-09-13T02:29:30.768Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>டாஸ்மாக்,Tasmac,மதுபானம்,Liquor</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/8iq0wnxy/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/8iq0wnxy/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>'டாஸ்மாக்' கடைகளில், 25 புதிய மது வகைகள் விற்பனைக்கு வர உள்ளன. அவற்றுக்கு விலை நிர்ணயம் செய்ய, மதுபான நிறுவனங்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.</p><p>தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 11 மதுபான ஆலைகளிடம் இருந்து மது வகைகள், ஏழு ஆலைகளிடம் இருந்து பீர் வகைகள், ஒரு ஆலை யிடம் இருந்து ஒயின் கொள்முதல் செய்கிறது.</p><p>தமிழகத்தில் தயாரிக்கப்படும், 174 மது வகைகள், 40 பீர் வகைகள், நான்கு ஒயின்கள் மற்றும் பிற மாநில மதுபானங்களில் ஆறு மது வகைகள், ஐந்து பீர், ஐந்து ஓயின்கள் விற்கப்படுகின்றன. மேலும், 538 மது வகைகளை டாஸ்மாக் இறக் குமதி செய்து, வணிக வளாகங்களில் உள்ள மது கடைகளில் விற்கிறது.</p><p>கடந்த தி.மு.க., ஆட்சி யில், அக்கட்சிக்கு வேண்டியவர்கள் நடத்தும் சில ஆலைகளில் இருந்து தான் அதிகளவில் மது வகைகள் வாங்கப்பட்டன. இதனால், மது பிரியர்கள் விரும்பும் மது வகைகள் கிடைக்கவில்லை.</p><p>தற்போது, ஆட்சி மாற் றம் ஏற்பட்டுள்ள நிலை யில், புதிய, 'பிராண்டு' மது வகைகளை அதிகளவில் விற்க, டாஸ்மாக் முடிவு செய்துள்ளது. இதற்காக, மதுபான தயாரிப்பு ஆலை களிடம் அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர். அதில், 25 மது வகைகள் தேர்வாகியுள்ளன. இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:</p><p>புதிய பிராண்டு மதுபானம், பீர் விற்பது தொடர்பாக, 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படை யில், 25 புதிய பிராண்டுகள் தேர்வு செய்யப்பட்டு, விலை நிர்ணயம் 'செய்யும் பணி நடந்து வருகிறது. இதற்கு, டாஸ்மாக் இயக்குநர்கள் குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு, விரைவில் மது கடைகளில் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>இவ்வாறு அவர்கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இன்று முடிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/whom-to-support-in-the-by-election-cpim-to-decide-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/whom-to-support-in-the-by-election-cpim-to-decide-today#comments</comments><guid isPermaLink="false">a3545ae4-f155-4f53-9011-b2d8d35d309f</guid><pubDate>Sun, 13 Sep 2026 02:23:13 +0000</pubDate><atom:updated>2026-09-13T02:23:13.971Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இடைத்தேர்தல்,By election,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு,CPIM,Communist Party of India (Marxist)</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/ntnelt68/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/ntnelt68/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் த.வெ.க. தலைமையில் நடைபெறும் கூட்டணி ஆட்சிக்கு மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகின்றன. இந்த நிலையில், மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அக்டோபர் 6-ந் தேதி நடைபெற உள்ளது.</p><p>இந்த இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் மாநில செயற்குழு கூட்டம் நேற்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி உள்ளிட்ட மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.</p><p><strong>அதன்பின்னர் பெ.சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-</strong></p><p>தமிழ்நாட்டில் சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவித்ததன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இடைத் தேர்தலை அறிவித்து உள்ளது. அந்த வகையில், இந்த இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு பிறகு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை நாளை (அதாவது இன்று) மதியம் தெரிவிப்போம்.</p><p>அதாவது, நாளை (இன்று) மதியம் 2 மணிக்கு திருச்சியில் நடைபெற உள்ள எங்கள் கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தில் இது குறித்து விவாதிக்க உள்ளோம். இந்த கூட்டம் முடிந்த பிறகு இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்த எங்களின் இறுதி நிலைப்பாட்டை தெரிவிப்போம். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தபோதே இது ஒரு ஆரோக்கியமற்ற அரசியல்.</p><p>சந்தர்ப்பவாத நிலை என்பதை நாங்கள் ஏற்கனவே தெளிவாக விமர்சித்திருக்கிறோம். அந்த விமர்சனத் தில் எந்தவிதமான மாறுபாடும் கிடையாது. ஆளும் த.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பீர்களா? கூட்டணியில் சேர்வீர்களா? என்று கேட்கிறீர்கள். இடைத்தேர்தல் தொடர்பான அனைத்து அம்சங்களும் மாநில குழு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும். இடைத்தேர்தலை புறக்கணிப்பது அல்லது வேறு ஏதேனும் முடிவுகள் எடுப்பது குறித்து அந்த கூட்டத்திற்கு பிறகு எங்களுடைய இறுதியான மற்றும் உறுதியான முடிவை நாங்கள் முறைப்படி அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>திமுகவினரின் பேச்சை சகிக்க முடியவில்லை - மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cannot-tolerate-the-remarks-made-by-dmk-members-marxist-party-condemns-it</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cannot-tolerate-the-remarks-made-by-dmk-members-marxist-party-condemns-it#comments</comments><guid isPermaLink="false">2b0f9177-a2db-4c7d-887d-fd0a399363d9</guid><pubDate>Sun, 13 Sep 2026 01:37:36 +0000</pubDate><atom:updated>2026-09-13T01:37:36.345Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,பெ.சண்முகம்,Communist Party of India (Marxist),மார்க்சிஸ்ட் கம்ப்யூனிஸ்ட் கட்சி,p shanmugam,Marxist Party,மார்க்சிஸ்ட் கட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/fs81bng2/shanmugam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெ.சண்முகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/fs81bng2/shanmugam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நிர்மல் குமார் தாயாரை இழிவு படுத்துவதை எப்படி திமுக தலைவர் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் என பெ.சண்முகம் கேள்வி எழுப்பி உள்ளார்.</p><h2>சகிக்க முடியவில்லை</h2><p>இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது. திமுக தலைவர்களில் சிலர் தொடர்ந்து பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவதும் அதைக் கேட்டு தொண்டர்கள் ஆர்ப்பரிப்பதும் சகிக்க முடியவில்லை. அமைச்சர் நிர்மல் குமார் பேசியதை கண்டியுங்கள். அவருடைய தாயாரை இழிவு படுத்துவதை எப்படி திமுக தலைவர் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.</p><h2>கண்ணியம் தவறுவது தொடர்கிறது</h2><p>பொதுவெளியில் பெண்களை இழிவு படுத்தி பேசுபவர் யாராக இருந்தாலும் அந்தந்த கட்சி தலைமை கண்டிக்கவும், ஒழுங்குபடுத்தவும் முன்வர வேண்டும்.</p><p>சில <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu/stalin-brought-liquor-home-dmk-functionary-remark-sparks-row">திமுகவினர் </a>"கண்ணியம்" தவறுவது தொடர்கிறது. "கட்டுப்பாடு" நிலை நிறுத்தும் "கடமை"யை திமுக. தலைவர் செய்வார் என்று நம்புகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்குக் கெடு:  அக்.31-க்குள் சொத்து, கடன் விவரங்களை இணையத்தில் தாக்கல் செய்ய உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/deadline-for-tamil-nadu-government-employees-order-to-file-asset-and-liability-details-online-by-october-31</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/deadline-for-tamil-nadu-government-employees-order-to-file-asset-and-liability-details-online-by-october-31#comments</comments><guid isPermaLink="false">3bfbd33a-1558-4f55-9c0d-a2690c23a26f</guid><pubDate>Sun, 13 Sep 2026 01:28:47 +0000</pubDate><atom:updated>2026-09-13T01:28:47.485Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,Tamil Nadu Government,Government Employees,அரசு  ஊழியர்கள்</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/gqayovsq/Untitled-1.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/gqayovsq/Untitled-1.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு</p><p>சென்னை, செப்.12 தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் தங்களின் சொத்து மற்றும் கடன் விவரங்களை வரும் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><p>கடந்த ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தத்தின் தொடர்ச்சியாக, இந்த விவரங்களை தாக்கல் செய் வதற்கான காலக்கெடு மற்றும் நடைமுறைகள் தற்போது முறைப் படி அறிவிக்கப்பட்டுள்ளன.</p> <p>2025-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி நிலவரப்படி அரசு ஊழியர்களிடம் உள்ள சொத்து மற்றும் கடன் விவரங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படும். சொத்து விவரங்களை அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது காகித வடிவிலோ வழங்க வேண்டிய அவசிய மில்லை. தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பு (IFHRMS) இணையதளம் வழியாகவே முழுமையாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.</p><p>சொந்தப் பெயரில் அல்லது குடும்பத்தினர் பெயரில் உள்ள வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட விவரங்கள். நகைகள், வாகனங்கள், வங்கியில் உள்ள வைப்புத் தொகை மற்றும் பிற முதலீடுகள்.</p><p>அரசு ஊழியர்கள் பெற்றுள்ள அனைத்து விதமான கடன் தொடர்பான தகவல்களையும் தவறாமல் குறிப்பிட வேண் டும் அரசு நிர்வாகத்தில் வெளிப் படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆ. ராசாவின் சர்ச்சை பேச்சு: அமைச்சர் வன்னி அரசு கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-rajas-controversial-speech-minister-vanni-arasu-condemns-it</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-rajas-controversial-speech-minister-vanni-arasu-condemns-it#comments</comments><guid isPermaLink="false">84aebe04-b896-4931-8cf8-69bcd52b8ea2</guid><pubDate>Sun, 13 Sep 2026 01:19:06 +0000</pubDate><atom:updated>2026-09-13T01:19:06.492Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,ஆ.ராசா,வன்னி அரசு,Vanni Arasu,ஆ.ராசா எம்.பி.,A. Raja,minister vanni arasu,அமைச்சர் வன்னி அரசு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/0ze0h7i5/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வன்னி அரசு கண்டனம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/0ze0h7i5/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு ஆ. ராசாவின் சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><h2>ஆ.ராசா சர்ச்சை பேச்சு</h2><p>சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் விஜய்யின் பேச்சுக்கு பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தமிழக அரசியலில் மிசா கொடுமைகள் பற்றிய விவாதமும் எழுந்துள்ளது. இந்த நிலையில், விஜய் திமுக தலைவர் ஸ்டாலினின் தியாகத்தைக் கொச்சைப்படுத்திவிட்டதாகக் கூறி, திமுகவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தினர்.</p><p>சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர். அப்போது கூட்டத்தில் ஆ.ராசா பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.</p><p>இந்த நிலையில், சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு ஆ. ராசாவின் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu/stalin-brought-liquor-home-dmk-functionary-remark-sparks-row">சர்ச்சை </a>பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>உரையை கேட்டால்..</h2><p>கடமை,கண்ணியம், கட்டுப்பாடு முழக்கத்தை முன் வைத்த திமுக இப்போது வன்மம், வெறுப்பு மற்றும் ஆற்றாமையால் நிரம்பிக்கொண்டு இருக்கிறதோ என அய்யம் எழுகிறது.</p><p>திமுகவின் துணைப்பொதுச்செயலாளர் மட்டுமல்ல; முன்னாள் மத்திய அமைச்சராகவும் பணி ஆற்றியவர் அண்ணன் ஆ.ராசா. இந்து அறநிலையத்துறை முன்னாள் அமைச்சர் அண்ணன் சேகர் பாபு ஆகிய இருவரின் இந்த உரையை கேட்டால் அந்த ஆற்றாமை புரியும்.</p><p>“எனக்கு சந்தேகம் இருக்கு நீ யாருக்கு பிறந்த?” என கேட்பது பெண்களை இழிவுபடுத்துவது ஆகாதா?</p><p>அதனால் தான் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணியார் தமிழச்சி, ஆ.ராசா அந்த கேள்வி எழுப்பும் போது எந்தவித அசைவும் இல்லாமல் தலை கவிழ்ந்தவாறு இருப்பார்.</p><h2>என்ன வித்தியாசம்?</h2><p>முதல்-அமைச்சரை ஓடுகாலி என சேகர்பாபு உளறியதை ‘பீப்’போட்டு அவமானத்தை மறைக்கிறது கலைஞர் தொலைக்காட்சி. திமுகவின் துணைப்பொதுச்செயலாளர் கவிஞர் கனிமொழி குறித்து பாஜகவை சார்ந்த எச்.ராஜாவும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமானும் மிக இழிவாக பேசிய போது, கண்டித்த விடுதலைச்சிறுத்தைகள் இப்போது, திமுக பேச்சாளர்களின் இந்த இழிவான உரையை கண்டிக்கிறது.</p><p>திமுக ஆ. ராசா, பாஜக எச்.ராஜா, என்ன வித்தியாசம் இருக்கிறது?</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பிரிக்ஸ் தலைவர்களுக்கு பிரதமர் மோடி அளித்த விருந்தில் இடம் பெற்ற  தென்னிந்திய உணவுகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/south-indian-dishes-featured-at-the-banquet-hosted-by-prime-minister-modi-for-brics-leaders</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/south-indian-dishes-featured-at-the-banquet-hosted-by-prime-minister-modi-for-brics-leaders#comments</comments><guid isPermaLink="false">a3fc73f6-4e3f-4698-a11a-5044d6716d33</guid><pubDate>Sun, 13 Sep 2026 01:00:58 +0000</pubDate><atom:updated>2026-09-13T01:00:58.867Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டெல்லி,பிரதமர் மோடி,Modi,BRICS,பிரிக்ஸ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/jz2nf1w2/dinner.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/jz2nf1w2/dinner.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>டெல்லியில் நேற்று நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்களுக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளித்தார். இந்த விருந்தில் சிறுதானியங்களை மையமாக கொண்ட, முற்றிலும் இந்திய பாணியிலான சைவ உணவு வகைகள் பரிமாறப்பட்டன. செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயில், தென்னிந்திய மசாலாப் பொருட்களில் வதக்கிய கேரட் மற்றும் பீன்ஸ் பொரியல் தேங்காய்த் துருவலுடன் வழங்கப்பட்டது.</p><p>உணவுப் பட்டியலில், புலாவ் வகைகளில் கம்பு, ரொட்டியில் சோளம் மற் றும் இனிப்பு வகையில் குதிரைவாலி என 3 வகையான சிறுதானியங்கள் இடம்பெற்றிருந்தன. தொடக்க உணவாக கடுகு, தேங்காய் மற்றும் கறிவேப் பிலை சேர்த்துத் தாளிக்கப்பட்ட, ஆவியில் வேகவைத்த கடலை மாவு உருண்டைகளைக் கொண்ட காண்ட்வி மில்லே-பியூய், கேசர் மாம்பழம், மைக்ரோ கீரைகள் மற்றும் தயிர் சாசுடன் பரிமாறப்பட்டது.</p><p>இனிப்பு வகையாக, பருவகாலப் பழங்கள் மற்றும் லேசாக அரைக்கப்பட்ட கிரீமுடன், மொறுமொறுப்பான இனிப்புப் பலகாரத்தைச் சேர்த்துத் தயாரிக் கப்பட்ட ஓல்ட் டெல்லி புரூட் கிரீம், ஜிலேபியுடன் பரிமாறப்பட்டது. பானங் களில் மாதுளைச் சாறும், இளநீரும் இருந்தன. பாரம்பரிய இசை நிகழ்ச்சி யும் நடந்தது. இந்த விருந்தில் சீன அதிபர் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம்: சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirupati-sacred-umbrella-procession-traffic-diversions-in-chennai-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirupati-sacred-umbrella-procession-traffic-diversions-in-chennai-today#comments</comments><guid isPermaLink="false">0e4eca73-9022-4367-8b84-cbb8c9fd6902</guid><pubDate>Sun, 13 Sep 2026 00:57:33 +0000</pubDate><atom:updated>2026-09-13T00:57:33.989Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,போக்குவரத்து மாற்றம்,Traffic diversions</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/umcpui0b/2.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/umcpui0b/2.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>சென்னையில் திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் நாளை நடைபெறுவதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று போலீசார் அறிவித்துள்ளனர். சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><h2>திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம்</h2><p>சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் திருப்பதி திருக்குடை ஊர்வலம், இந்த ஆண்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில், இந்த திருக்குடை பாத யாத்திரை ஊர்வலம் நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, ஊர்வலம் செல்லும் இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். அதன் விவரம் வருமாறு:-</p><h2>வால்டாக்ஸ் சாலை</h2><p>* திருக்குடை ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையை கடக்கும் வரை, காலை 8 மணி முதல் மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், ஈ.வெ.ரா.பெரியார் சாலை, ராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பிரிட்ஜ் சாலை மற்றும் பிரகாசம் சாலையை பயன்படுத்த லாம்.</p><p>* ஊர்வலம் யானைகவுனி பாலத்தை கடக்கும் வரை, மாலை 3 மணி முதல் வால்டாக்ஸ் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பேசின் பிரிட்ஜ் சாலை, மின்ட் சாலை வழியாக பிரகாசம் சாலை அல்லது ராஜாஜி சாலையை பயன்படுத்தலாம். மேலும் ஈ.வெ.ரா.பெரியார் சாலை, முத்துசாமி சாலை மற்றும் ராஜாஜி சாலையையும் பயன்படுத்தலாம்.</p><p>* ஊர்வலம் யானைக்கவுனி பாலத்தை கடக்கவரும்போது, சூளை ரவுண்டானாவில் இருந்து டெமலாஸ் சாலை நோக்கி செல்ல வாகனங்களுக்கு அனுமதி இல்லை. அத்தகைய வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை மற்றும் ராஜா முத்தையா சாலை வழியாக போகலாம்.</p><h2></h2> <h2>வேப்பேரி நெடுஞ்சாலை</h2><p>* ஊர்வலம் ராஜா முத்தையா சாலையில் வரும்போது, மசூதி சந்திப்பில் இருந்து சூளை ரவுண்டானா நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக போகலாம்.</p><p>* ஊர்வலம் சூளை நெடுஞ்சாலையில் வரும்போது, நாராயணகுரு சாலை-ஈ.வி.கே. சம்பத் சாலை சந்திப்பில் இருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக போகலாம்.</p><p>* ஊர்வலம் ஏ.பி சாலை வரும்போது, பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பில் இருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதி இல்லை.</p><p>* பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் ஊர்வலம் வரும்போது, டவுட்டன் சந்திப்பில் இருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை நோக்கி வாகனங்கள் போக முடியாது. அந்த வாகனங்கள் நாராயணகுரு சாலை வழியாக போகலாம்.</p><h2>ஓட்டேரி சந்திப்பு</h2><p>* ஊர்வலம் ஓட்டேரி சந்திப்பை அடையும்போது, மில்லர்ஸ் சாலை சந்திப்பில் இருந்து பிரிக்ளின் சாலை வழியாக, ஓட்டேரி சந்திப்பை நோக்கி வாகனங்கள் போகமுடியாது. அந்த வாகனங்கள் புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக போகலாம்.</p><p>* ஊர்வலம் கொன்னூர் பாயிண்ட் பகுதிக்கு வரும்போது, ஓட்டேரி பாலம், மேடவாக்கம் டேங்க் சாலை மற்றும் ஐ.சி.எப். சந்திப்பு ஆகிய இடங்களில் இருந்து கொன்னூர் பாயிண்ட் நோக்கி வரும் வாகனங்கள் மாற்றுப்பாதைகளில் திருப்பிவிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.</p><h2>பாதுகாப்பு ஏற்பாடுகள்</h2><p>திருப்பதி திருக்குடை ஊர்வலத்தையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஊர்வலம் செல்லும் பாதையில், போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-56</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-56#comments</comments><guid isPermaLink="false">b7629ee3-5f2c-4bfd-8942-40ba07e5a19a</guid><pubDate>Sun, 13 Sep 2026 00:53:35 +0000</pubDate><atom:updated>2026-09-13T00:53:35.448Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல் விலை,டீசல் விலை,Petrol and diesel prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/r4dl7kba/petrol.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/r4dl7kba/petrol.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.</p> <h2>பெட்ரோல், டீசல் விலை</h2><p>இந்நிலையில், சென்னையில் இன்று (13.09.2026 ஞாயிற்றுக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ. 99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>முதியோர் உதவித்தொகை 15-ந் தேதி உறுதியாக வழங்கப்படும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/senior-citizen-allowance-will-definitely-be-paid-on-the-15th-interview-with-minister-ka-sengottaiyan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/senior-citizen-allowance-will-definitely-be-paid-on-the-15th-interview-with-minister-ka-sengottaiyan#comments</comments><guid isPermaLink="false">b4d32d54-8abb-495a-9176-574e26664af2</guid><pubDate>Sun, 13 Sep 2026 00:20:55 +0000</pubDate><atom:updated>2026-09-13T00:20:55.625Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நிதியுதவி,உதவித்தொகை,Minister KA Senkottaiyan,செங்கோட்டையன் பேட்டி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/zsmdafb7/kottiyan33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
முதியோர் உதவித்தொகை ]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/zsmdafb7/kottiyan33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள காளியப்பம்பாளையத்தில் வரு வாய்த்துறை அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%87.%E0%AE%8F.%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D">கே.ஏ.செங்கோட்டையன்</a> நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>முதல்-அமைச்சர் விஜய்யின் நேரடி கண்காணிப்பில் இருப்பதால் கல்வித்து றையில் அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டில் முதியோர் உதவித்தொகை நிறுத்தி வைக்கப்படவில்லை. 5 லட்சம் பேருக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. </p><p>அந்த திட்டத்துக்கு மத்திய அரசு பெயரை மாற்றி இருக்கிறது. இதேபோல் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான உதவித்தொகை, கைம்பெண் உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை என ஏறத்தாழ 27 ஆயிரத்து 412 பேருக்கு இன்னும் வழங்கப்படவில்லை. </p><p>இதுகுறித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து இருக்கிறோம், விடுமுறை நாட்கள் வந்துவிட்டதால் விநா யகர் சதுர்த்தி முடிந்து, மறுநாள் (அதாவது வருகிற 15-ந் தேதி) வழங்க உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இடைத்தேர்தலை பொறுத்தவரை த.வெ.க. மாபெரும் வெற்றி பெறும். நாம் எங்கே சென்றாலும் அங்கே வெற்றிதான். </p><p>மற்ற தொகுதிகளுக்கு வருகிற 28-ந் தேதி அன்று தீர்ப்பு வழங்க இருக்கிறார்கள். தீர்ப்பு கிடைத்தவுடன், தேர்தல் ஆணையம் குறிப் பிட்ட நாளில் தேர்தலை அறிவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடக்கு இந்தியப் பெருங்கடலில் 3 புயல்கள் ; பேரழிவை ஏற்படுத்தும் என இஸ்ரோ அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/isro-warns-of-3-cyclones-in-north-indian-ocean-from-october-to-december-could-cause-disaster</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/isro-warns-of-3-cyclones-in-north-indian-ocean-from-october-to-december-could-cause-disaster#comments</comments><guid isPermaLink="false">95347458-a666-4538-a694-3ae450c3569f</guid><pubDate>Sat, 12 Sep 2026 20:49:25 +0000</pubDate><atom:updated>2026-09-12T20:49:25.485Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இஸ்ரோ,ISRO,வடகிழக்கு பருவமழை,Cyclone,புயல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/6lmcqt4h/sea33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ புயல்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ பேரழிவை ஏற்படுத்தும் என இஸ்ரோ அறிவிப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/6lmcqt4h/sea33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வடக்கு இந்திய பெருங்கடலில் வருகிற அக்டோபர் முதல் டிசம்பர் வரை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">3 கடுமையான புயல்கள்</a> உருவாகி பெரிய பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது' என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.</p><h2>3 தீவிர புயல்கள்</h2><p>இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ). கடற்பகுதிகளில் தீவிர வானிலை மாற்றம் குறித்து ஒரு முக்கியமான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதாவது அடுத்த மாதம் (அக்டோபர்) முதல் டிசம்பர் வரை அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் கடுமையான தாக் கத்தை ஏற்படுத்தக்கூடிய புயல்கள் உருவாக வாய்ப்பு உள்ளது.</p><p>இந்த காலகட்டத்தில் வடக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் 3 தீவிர புயல் உருவாகக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.</p><h2>கனமழைக்கு வாய்ப்பு</h2><p>இந்த முறை உருவாகும் புயல்களின் வேகம் கடந்த 44 ஆண்டுகளில் காணப்பட்ட இயல்பான சராசரியை விட 'ஆற்றல் விரயக்குறியீடு' படி 13.06 மில்லியன் நாட்ஸ் அளவை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது 7.15 மில்லியன் நாட்ஸ் என்ற வரலாற்று சராசரி அளவை விட 83 சதவீதம் அதிகமாகும்.</p><p>ஒடிசா, வடக்கு ஆந்திரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற கட லோரப் பகுதிகள், கடும் காற்று, தீவிரமான புயல் அலைகள் மற்றும் 200 முதல் 300 மில்லி மீட்டருக்கும் அதிகமான கனமழை ஆகியவற்றால் ஏற் படும் அதிக ஆபத்தை எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளது என்று இஸ்ரோ வின் செயற்கைக்கோள் தரவுகள் மற்றும் வானிலை ஆய்வு முடிவுகள் சுட் டிக்காட்டுகின்றன. 'இருமடங்கு தீவிரத்தன்மை' கொண்ட இந்த புயல்கள் வட இந்தியப் பெருங்கடலைத் தாக்கக்கூடும் என்ற தகவல், அரசுகள், பேரிடர் மேலாண்மை அமைப்புகள் மற்றும் வானிலை ஆய்வாளர்கள் என அனைத்துத் தரப்பினரிடையேயும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>அதிக அழிவை ஏற்படுத்தும்</h2><p>புயல்களின் தீவிரத்தன்மை மற்றும் காற்றில் உள்ள ஈரப்பதம், காற்றின் வேகம் ஆகியவற்றை கணக்கிடும் முறையின்படி, இந்த ஆண்டு தாக்கும் புயல்கள் அதிக அழிவை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளன.</p><p>ஆற்றல் இழப்பு குறியீடு' மூலம் அளவிடப்பட்டதில். இவற்றின் ஒட்டு மொத்த வலிமையானது தெரியவந்துள்ளது. அனைத்து கடலோர மாநிலங் களுக்கும், பேரிடர் மேலாண்மை அமைப்புகளுக்கும் இஸ்ரோ முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதனால் கடலோர மாவட்டங்கள் மற்றும் மாநில அரசுகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>மிசா சட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை - அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalin-not-arrested-under-misa-act-minister-nirmal-kumar-interview</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalin-not-arrested-under-misa-act-minister-nirmal-kumar-interview#comments</comments><guid isPermaLink="false">1ca6b5c5-9067-43e0-bc3e-1d60ddd97b87</guid><pubDate>Sat, 12 Sep 2026 20:43:21 +0000</pubDate><atom:updated>2026-09-12T20:43:21.792Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,மு.க.ஸ்டாலின்,M.K.Stalin,அமைச்சர் நிர்மல்குமார்,Nirmal Kumar,மிசா சட்டம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/xywvk3za/nirmalkumar33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/xywvk3za/nirmalkumar33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p>மிசா சட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.</p><h2>40 வருட சர்ச்சை</h2><p>மதுரையில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">அமைச்சர் நிர்மல்குமார்</a> நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட் டியில் கூறியதாவது:-</p><p>தமிழகத்தில் மதசார்பற்ற சமூக நீதி வெற்றிக்கூட்டணிைய அமைத்து உள்ளோம். எம்.பி.க்கள் இருந்தால்தான் இந்தியா கூட்டணியில் இருக்க முடியும். அதுவரை தமிழகத்தில் இதே பெயரில் கூட்டணி செயல்படும்.</p><p>இன்னும் நிறைய காலம் இருக்கிறது. திரும்பத்திரும்ப அதை பற்றி பேச வேண்டாம். மிசா குறித்து முதல்-அமைச்சர் பேசியதற்கு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். அவர் பேசியதில் தவறு இல்லை.</p><h2>மிசா சட்டம்</h2><p>மு.க.ஸ்டாலினை தியாகியாக காட்ட மீண்டும் மீண்டும் முயற்சிப்பதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. தியாகி என்றெல்லாம் சொல்ல முடியாது. அவசர நிலையின்போது மிசா சட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை. வேறு ஏதோ ஒரு சில காரணங்களுக்காக கைது செய்யப்பட் டார். இது 30, 40 வருட சர்ச்சை.</p><p>மிசா சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு. ஆதாரம் ஏதாவது உள்ளதா? இதுவரைக்கும் உத்தரவு நகல் எதையும் காட்ட வில்லை. ஏதோ புத்தகத்தையும் பத்திரிகை செய்தியையும் காட்டுகிறார்கள்.</p><h2>ஆதாரம் அழிப்பு</h2><p>ஒருவரை கைது செய்திருந்தால் அதுகுறித்த டின்டேஷன் நகலை காட்ட வேண்டும். அதுபோன்ற நகல் இல்லாத தியாகிதான் அவர். மேலும் வெளியிடப்பட்ட சில ஆவணங்கள், சர்க்காரியா கமிஷனில் போடப்பட்ட சாட்சி ஆவணங்கள் என்று கூறுகிறார்கள். மு.க.ஸ்டாலின் கைது குறித்த உண்மை ஆதாரம் கிடைக்கக்கூடாது என தி.மு.க. ஆட்சி யில் அழித்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.</p><h2>டெபாசிட் கூட கிடைக்காது</h2><p>2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. என இரண்டு கட்சிகளுக்கும் டெபாசிட் கூட கிடைக்காது. இதுபற்றி நன்றாக தெரிந்ததால்தான், பரந்தாமன் என்ற எழும்பூரை சேர்ந்த வெளியூர் வேட் பாளரை மதுராந்தகத்திற்கு தி.மு.க.வினர் கொண்டு வந்திருக்கிறார்கள்.</p><p>2 தொகுதிகளிலும் திருமங்கலம் பார்முலா என எத்தனை ரூ.100 கோடி செலவு செய்தாலும், மக்கள் அதனை வாங்கிக்கொண்டு, மக்கள் என்ன செய்வார்களோ அதனை செய்வார்கள். தி.மு.க.வை மக்கள் தூக்கி எறிந்து பல நாட்கள் ஆகிவிட்டது.</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஒரு மாதத்துக்கு முன்பு பதிவு செய்த அரசு பஸ் டிக்கெட் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/passengers-suffer-as-government-bus-tickets-booked-a-month-ago-are-cancelled</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/passengers-suffer-as-government-bus-tickets-booked-a-month-ago-are-cancelled#comments</comments><guid isPermaLink="false">25d68b59-b825-434f-b305-100067208720</guid><pubDate>Sat, 12 Sep 2026 20:37:17 +0000</pubDate><atom:updated>2026-09-12T20:37:17.494Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>bus,அரசு பஸ்,தேனி,TN govt,பஸ் டிக்கெட்டுகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/flvhb592/bus33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ அரசு பஸ் டிக்கெட்]]></media:title><media:description type="html"><![CDATA[  ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/flvhb592/bus33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வண்டலூர், </p><p>விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையத்தில் நேற்று முன்தி னம் இரவு பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக திரண்டனர். விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">தமிழக அரசு</a> சார்பில் 1,250 சிறப்பு பஸ்கள் இயக் கப்பட்டன.</p><p>இந்த நிலையில் தேனிக்கு செல்வதற்காக அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்சில் பயணிகள் ஒரு மாதத்துக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். நேற்று முன்தினம் இரவு திடீரென அவர்களது செல்போன்களுக்கு டிக்கெட் ரத்து செய்யப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. அதற்கு பதிலாக இரவு நேரத்தில் இயக்கப்படும் வேறு பஸ்சில் பயணம் செய்யு மாறு தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p>இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலை யத்தில் இருந்த போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஒரு மாதத்துக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து, பயணம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். </p><p>கடைசி நேரத்தில் டிக் கெட்டை ரத்து செய்துவிட்டு, வேறு பஸ்சில் செல்லுமாறு கூறுவது எப்படி? குறிப்பிட்ட நேரத்தில் தேனிக்கு செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் முன் கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்தோம்" என்று பயணிகள் ஆவேசமாக தெரிவித்தனர். இதனால் தேனி செல்ல வேண்டிய பயணிகள் அவதிக்குள் ளானார்கள்.</p>]]></content:encoded></item><item><title>இவ்வளவு தரக்குறைவாகப் பேசுவதுதான் அரசியலா? - அமைச்சர் ரமேஷ் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-it-politics-to-speak-in-such-a-low-quality-manner-minister-ramesh-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-it-politics-to-speak-in-such-a-low-quality-manner-minister-ramesh-condemns#comments</comments><guid isPermaLink="false">50316c23-3d26-4889-8a42-14fc20b6d3d5</guid><pubDate>Sat, 12 Sep 2026 16:58:38 +0000</pubDate><atom:updated>2026-09-12T16:58:38.699Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,protest,சேகர் பாபு,Ramesh,அமைச்சர் ரமேஷ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/t4b2yk77/ramesh33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ரமேஷ் கண்டனம்]]></media:title><media:description type="html"><![CDATA[ 
இவ்வளவு தரக்குறைவாகப் பேசுவதுதான் அரசியலா?]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/t4b2yk77/ramesh33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசியல் என்ற பெயரில் ஆபாசம், அவதூறு, இரட்டை அர்த்தப் பேச்சு போன்றவற்றைப் பேசுவதையே இன்றைய திமுக வேலையாக வைத்துள்ளது என அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார்.</p><h2>விஜய்யை விமர்சித்த சேகர்பாபு</h2><p>சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அவமதிக்கும் வகையில் பேசியதாக தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யைக் கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a>யை கடுமையாக விமர்சித்து ஒருமையில் பேசினார்.</p><p>சேகர்பாபுவின் பேச்சுக்கு தற்போதைய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கண்டனம் தெரிவித்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது, “திமுகவைப் பற்றி சின்னக் குழந்தைகளிடம் கேட்டால் கூட சொல்வார்கள். ஆபாசமாக, கீழ்த்தரமாக, அவதூறாகப் பேசுவது மட்டும்தான் திமுகவுக்கு தெரியும். அவர்களுக்கு வேறு அரசியலே தெரியாது.</p><h2>அரசியல் நாகரிகம் சுத்தமாகக் கிடையாது</h2><p>அவர்களைப் பொறுத்தவரை கருத்தியல் ரீதியாகப் பேசுவதற்கு ஆட்களே கிடையாது. இன்று முன்னாள் அமைச்சர் சேகர் பாபு மிகக் கேவலமாகப் பேசியிருக்கிறார். அறநிலையத்துறை அமைச்சராக, ஆன்மீகத் தலங்களை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்தவர் கேவலமான சொற்களைப் பேசியுள்ளார். அரசியல் நாகரிகம் திமுகவில் சுத்தமாகக் கிடையாது. அவர்களிடம் அது மொத்தமாக அழிந்துவிட்டது. மூன்றாம் தர பேச்சாளர்கள் போன்று பேசி வருகின்றனர்.</p><p>இன்று சேகர் பாபு பேசியதை அவர் வீட்டுப் பேரப் பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் போட்டு காண்பிப்பாரா? இவ்வளவு தரக்குறைவாகப் பேசுவதுதான் அரசியலா? இது வன்மையான கண்டனத்திற்குரியது. இந்த மாதிரி கீழ்த்தரமாகப் பேசுவதற்கு எங்களின் முதல்-அமைச்சர் எங்களுக்குக் கற்றுத் தரவில்லை. ஒழுக்கமாக, நேர்மையாகப் பேச மட்டுமே எங்களுக்கு முதல்-அமைச்சர் கற்றுக் கொடுத்துள்ளார்.</p><p>இவர்களைப் போன்று வார்த்தை பிரயோகங்களைப் பயன்படுத்த எங்களுக்குத் தெரியாமல் இல்லை. முதல்-அமைச்சர் எங்களை அப்படி வளர்க்கவில்லை. ஆனால், முன்னாள் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் முக ஸ்டாலின் அவரின் கட்சிக்காரர்களை இப்படித்தான் வளர்த்திருக்கிறார் என்பதற்கு சேகர்பாபு பேசியது ஒரு உதாரணம். அண்ணா இருந்த திமுக மாதிரி இன்றைய திமுக கிடையாது.</p><p>அரசியல் என்ற பெயரில் ஆபாசம், அவதூறு, இரட்டை அர்த்தப் பேச்சு போன்றவற்றைப் பேசுவதையே இன்றைய திமுக வேலையாக வைத்துள்ளது</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>வேறு ஒருவருடன் செல்போனில் பேசியதால் ஆத்திரம்: வாலிபரால் கள்ளக்காதலிக்கு நேர்ந்த கொடூரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/enraged-over-her-talking-to-another-man-on-the-phone-young-man-commits-atrocity-against-illicit-lover</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/enraged-over-her-talking-to-another-man-on-the-phone-young-man-commits-atrocity-against-illicit-lover#comments</comments><guid isPermaLink="false">553f1851-bcdf-44c5-a9be-77f7a5c1b3f5</guid><pubDate>Sat, 12 Sep 2026 16:33:41 +0000</pubDate><atom:updated>2026-09-12T16:33:41.690Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,Tiruppur,திருப்பூர்,கள்ளக்காதல்,murder,கொலை,கிரைம் செய்திகள்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/d45tv9ke/kallk.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/d45tv9ke/kallk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர், </p><p>வேறு ஒருவருடன் செல்போனில் பேசியதால் ஆத்திரம் அடைந்து, கள்ளக்காதலியை கழுத்தை நெரித்து பனியன் நிறுவன தொழிலாளி கொலை செய்தார்.</p><h2>தையல் தொழிலாளி</h2><p>அரியலூர் சாத்தம்பாடியை சேர்ந்தவர் ராதிகா (வயது 36). இவருக்கு திருமணம் ஆகி மகன், மகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு ராதிகா பிரிந்தார். மகன், மகளை தனது தாயாரின் பராமரிப்பில் விட்டுவிட்டு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூருக்கு வந்தார்.</p><p>பின்னர் அவர், <a href="https://www.dailythanthi.com/topic/tiruppur">திருப்பூர்</a> பெரிச்சிப்பாளையம் மாரியம்மன் கோவில் பின்புறம் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். அந்த பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில், தையல் தொழிலாளியாக ராதிகா வேலை செய்தார்.</p><h2>கள்ளக்காதல்</h2><p>ராதிகா வேலை செய்த பனியன் நிறுவனத்தில், திருப்பூர் வெள்ளியங்காட்டை சேர்ந்த தையல் தொழிலாளி அருண்குமார் (36) என்பவரும் வேலை செய்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.</p><p>ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்ததால் அருண்குமாருக்கும், ராதிகாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இவர்கள் இருவரும், கடந்த 2 ஆண்டுகளாக அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. </p><p>இந்தநிலையில் கடந்த சில நாட்களாக ராதிகா அடிக்கடி செல்போனில் வேறு ஒருவருடன் பேசி வந்ததாக தெரிகிறது. இதனால் ராதிகா மீது அருண்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதன் காரணமாக அருண்குமாருக்கும், ராதிகாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.</p><h2>கொடூரக் கொலை</h2><p>நேற்று முன்தினம் இரவு அருண்குமாரும், ராதிகாவும் செல்போனில் பேசினர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னர் அருண்குமார், ராதிகாவின் வீட்டுக்கு நள்ளிரவு வந்தார். அப்போதும் அவர்களுக்குள் வாய்த்தகராறு அதிகரித்தது.</p><p>இதில் ஆத்திரம் அடைந்த அருண்குமார், ராதிகாவின் கழுத்தை நெரித்து கீழே தள்ளியதாக தெரிகிறது. இதில் கட்டிலில் தலை மோதியதில் ராதிகா மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அருண்குமார் அங்கிருந்து தப்பிஓடிவிட்டார். சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தனர். </p><p>அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. வீட்டுக்குள் ராதிகா பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் ராதிகாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.</p><h2>விசாரணை - கைது</h2><p>இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், நடத்தையில் சந்தேகப்பட்டு ராதிகாவை அருண்குமார் தாக்கியதில் அவர் இறந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த அருண்குமாரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>இல்லம் தேடி மதுவை கொண்டு வந்தவர் ஸ்டாலின்; திமுக நிர்வாகி பேச்சால் அதிர்ச்சி 

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/stalin-brought-liquor-home-dmk-functionary-remark-sparks-row</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/stalin-brought-liquor-home-dmk-functionary-remark-sparks-row#comments</comments><guid isPermaLink="false">0625590d-b12c-49de-adce-4df4c8f93ed0</guid><pubDate>Sat, 12 Sep 2026 16:16:26 +0000</pubDate><atom:updated>2026-09-12T16:16:26.050Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,M.K.Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/wv95j399/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/wv95j399/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமநாதபுரம்,</p><p>இல்லம் தேடி மதுவை கொண்டு வந்தவர் ஸ்டாலின் என்று திமுக நிர்வாகி பேசிய சம்பவம் கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.</p> <h2>திமுக ஆர்ப்பாட்டம்</h2><p>தமிழக முதல்-அமைச்சர் விஜய் சட்டசபையில் திமுக தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை விமர்சித்து பேசியிருந்தார். இதையடுத்து, <a href="https://www.dailythanthi.com/topic/mkstalin">மு.க.ஸ்டாலினை</a> இழிவுபடுத்திவிட்டதாகக்கூறி முதல்-அமைச்சர் விஜய்க்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p> <h2>இல்லம் தேடி மதுவை கொண்டு வந்தவர் ஸ்டாலின்</h2><p>அந்த வகையில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரே திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுக மாவட்ட செயலாளரும், ராமநாதபுரம் திமுக எம்.எல்.ஏ.வுமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுக நிர்வாகி, ’இல்லம் தேடி மதுவை கொண்டு வந்தவர் ஸ்டாலின்’ என்று பேசினார். இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.</p> <p>அதன்படி, இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">திமுக </a>மகளிர் அணி மாவட்ட துணைச்செயலாளர் பவுசியா பானு கட்சியினர் மத்தியில் பைக்கில் பேசுகையில், இல்லம் தேடி கல்வியை தந்தவர் முதல்-அமைச்சர்... இன்று இல்லம் தேடி மதுவை கொண்டுவந்தவர் ஸ்டாலின்’ என்று கோஷம் எழுப்பினார். இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர், சுதாரித்துக்கொண்ட பவுசியா பானு, விஜய் அவர்கள் என்று திருத்திக்கூறினார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>தேனியில் வேலைவாய்ப்பு முகாம்: நியமன ஆணை வழங்கிய கம்பம் எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/job-fair-in-theni-cumbum-mla-jaganath-mishra-hands-over-appointment-orders</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/job-fair-in-theni-cumbum-mla-jaganath-mishra-hands-over-appointment-orders#comments</comments><guid isPermaLink="false">be3e2eab-f26b-4bbb-b6a1-abd7a940f74c</guid><pubDate>Sat, 12 Sep 2026 16:05:06 +0000</pubDate><atom:updated>2026-09-12T16:05:06.978Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Theni,தேனி,வேலைவாய்ப்பு முகாம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/3lw5whpi/State-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/3lw5whpi/State-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி,</p><p>தேனி மாவட்டம் கம்பம் அரசு உதவி பெறும் பள்ளியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. தமிழகம், கேரளம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களும், தேனி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 1,500-க்கும் மேற்பட்ட இளைஞர்களும் இந்த முகாமில் பங்கேற்றனர். </p><p>முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தேனி மாவட்ட கலெக்டர் வைத்தியநாதன் மற்றும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா ஆகியோர் பணி நியமன ஆணைகளை வழங்கினர். அப்போது பேசிய சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா, இளைஞர்கள் கிடைத்த வேலைவாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தொடர்ந்து முயற்சி செய்து அரசு வேலைவாய்ப்புகளை பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். </p>]]></content:encoded></item><item><title>கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் தாமதம்; ஆய்வுக்கு வந்த போக்குவரத்துத் துறை செயலாளரிடம் பயணிகள் வாக்குவாதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bus-delays-at-kilambakkam-passengers-argue-with-the-transport-department-secretary-who-arrived-for-an-inspection</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bus-delays-at-kilambakkam-passengers-argue-with-the-transport-department-secretary-who-arrived-for-an-inspection#comments</comments><guid isPermaLink="false">151661ed-80f2-4b5e-ae40-9fa7ef3ee859</guid><pubDate>Sat, 12 Sep 2026 15:45:40 +0000</pubDate><atom:updated>2026-09-12T15:45:40.575Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Kilambakkam,கிளாம்பாக்கம் பஸ் நிலையம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/xaj7u2x9/State-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/xaj7u2x9/State-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் 14-ந்தேதி(திங்கள்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. பண்டிகைக்கான ஏற்பாடுகள் களைகட்டத் தொடங்கியுள்ள நிலையில், சனி, ஞாயிறு வார விடுமுறை என்பதால் வெளியூர்களில் வசிப்பவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் விடுமுறையை கழிப்பதற்காக சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். </p><p>தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்துத் துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கும்பகோணம் செல்லும் பேருந்துகள் உரிய நேரத்தில் இயக்கப்படவில்லை என பயணிகள் குற்றம்சாட்டினர். </p><p>காலை 9 மணிக்கே பேருந்தில் அமர்ந்திருந்தும், நீண்ட நேரமாக பேருந்து இயக்கப்படவில்லை என்றும், பேருந்து புறப்படும் நேரம் மற்றும் உரிய அறிவிப்புகளை அதிகாரிகள் முறையாக தெரிவிக்கவில்லை என்றும் பயணிகள் புகார் தெரிவித்தனர்.</p><p>மேலும் பேருந்து நிலையத்தில் ஆய்வுக்கு வந்த போக்குவரத்துத் துறை செயலாளர் நிர்மல் ராஜை முற்றுகையிட்டு பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பேருந்துகள் இயக்கப்படும் நேரம் மற்றும் வழித்தடங்கள் குறித்த அறிவிப்புகளை பேருந்து நிலையத்தில் முறையாக வெளியிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை செயலாளர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>தொடர் மின்வெட்டால் அல்லல்படும் தமிழக மக்கள் - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-people-suffer-power-cuts-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-people-suffer-power-cuts-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">ca111c72-e62a-48dc-83b9-7a30a59c48ab</guid><pubDate>Sat, 12 Sep 2026 15:37:32 +0000</pubDate><atom:updated>2026-09-12T15:37:32.689Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,தமிழக மக்கள்,affected,தொடர் மின்வெட்டு,People of Tamil Nadu,Continuous power cuts</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/gzyq2wnf/nainar-nagendran.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/gzyq2wnf/nainar-nagendran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தொடர் மின்வெட்டால் அல்லல்படும் தமிழக மக்கள், மெத்தன போக்கை விடுத்துப் போர்க்கால அடிப்படையில் மின் விநியோகத்தை உறுதி செய்க என்று தமிழக பாஜக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன் </a>தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p> <h2>தொடர் மின்வெட்டு</h2><p>தமிழகம் முழுவதும், கிராமம், நகரம் என பாரபட்சமின்றி கடந்த சில வாரங்களாக நிலவி வரும் கடுமையான, தொடர் மின்வெட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கியுள்ளது. பகல், இரவு பாராமல் ஒரு நாளைக்கு 10 முதல் 20 முறைக்கு மேல் ஏற்படும் மின்வெட்டால் தமிழக மக்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். </p> <h2>போராடும் அவலநிலை</h2><p>இதன் காரணமாக பொதுமக்கள் வீதியில் இறங்கிப் போராடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்திலேயே மின்சார விநியோகத்தைக்கூட முறையாக நிர்வகிக்க முடியாமல் தத்தளிக்கிறது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய் </a>அரசு.</p><h2>கண்ணீர் வடிக்கின்றனர்</h2><p>இந்த கடுமையான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">மின்வெட்டால்</a> முதியவர்களும் பச்சிளம் குழந்தைகளும் இரவு முழுவதும் தூங்க இயலாமல் கண்விழித்து கதறும் கொடுமை அரங்கேறி வருகிறது. குறுவை சாகுபடிக்கான பாசனத்திற்கும், அன்றாட குடிநீர் தேவைக்கும்கூட மின்மோட்டார்களை இயக்க முடியாமல் விவசாயிகளும், பொதுமக்களும் கண்ணீர் வடிக்கின்றனர்.</p><h2>இந்த தவெக அரசு?</h2><p>ஆனால், மின்சார தட்டுப்பாடு இல்லை என்று குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்து வெற்று அறிக்கை விடும் முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, கள எதார்த்தத்தை வசதியாக மூடி மறைக்கிறது. தற்போது நிலவும் மின் பற்றாக்குறையை சரிசெய்ய இந்த அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது? வழக்கமாகவே கோடை  காலங்களில் மின் தேவை இன்னும் பல மடங்கு அதிகமாகும்; அப்படி இருக்கையில், வரவிருக்கும் கோடை  காலத்தை எதிர்கொள்ள என்ன திட்டங்களை வைத்துள்ளது இந்த தவெக அரசு?</p><h2>மின் விநியோகம்</h2><p>ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே மக்களை இருளில் தவிக்கவிட்டு வேடிக்கை பார்க்கும் தவெக அரசு, உடனடியாக  போர்க்கால அடிப்படையில் மின் விநியோகத்தை  சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், பாதிக்கப்பட்ட மக்களுக்காக பாரதிய ஜனதா கட்சி அறப்போராட்டங்களை முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>‘மு.க.ஸ்டாலினைப் போல் கூட்டணி கட்சிகளை அரவணைத்த தலைவர் இந்தியாவிலேயே கிடையாது’ - முன்னாள் அமைச்சர் ரகுபதி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-no-leader-in-india-who-has-embraced-alliance-parties-the-way-mk-stalin-has-former-minister-raghupathy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-no-leader-in-india-who-has-embraced-alliance-parties-the-way-mk-stalin-has-former-minister-raghupathy#comments</comments><guid isPermaLink="false">09888b64-0211-471e-815f-0d32c9c35960</guid><pubDate>Sat, 12 Sep 2026 15:22:57 +0000</pubDate><atom:updated>2026-09-12T15:22:57.736Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,M.K.Stalin,Raghupathi,ரகுபதி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/s8fbwexz/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/s8fbwexz/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் முன்னாள் அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“தி.மு.க. தலைவர், முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினைப் போல் கூட்டணி கட்சிகளை 2019 தேர்தலில் இருந்து அரவணைத்துப் போன ஒரு தலைவர் இந்தியாவிலயே கிடையாது.</p><p>கூட்டணி கட்சிகளுக்கு என்ன முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ அதை அவர் கொடுத்தார். என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தார். அத்தனை பேரும் புகழ்ந்தார்கள். அப்படித்தான் நாங்கள் நடந்து கொண்டோம். </p><p>இன்னைக்கு கூட்டணியை விட்டு வெளிய வந்த பிறகு அவர்கள் எங்களை பாராட்ட மாட்டார்கள். இருப்பினும் இன்றைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருமாளவனிடம் இருக்கிறதா? அல்லது முதல்-அமைச்சர் விஜய்யிடம் இருக்கிறதா? என்பதை திருமாவளவன் தெளிவுபடுத்த வேண்டும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p> ]]></content:encoded></item><item><title>சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/worker-sentenced-to-20-years-in-prison-for-sexually-harassing-a-minor-girl</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/worker-sentenced-to-20-years-in-prison-for-sexually-harassing-a-minor-girl#comments</comments><guid isPermaLink="false">88c399b7-03b3-4cf3-9b6b-104f9142b8ac</guid><pubDate>Sat, 12 Sep 2026 15:22:09 +0000</pubDate><atom:updated>2026-09-12T15:22:09.489Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,விழுப்புரம்,Villupuram,தொழிலாளி,சிறை தண்டனை,POCSO act,பாலியல் தொந்தரவு,சிறுமி,போக்சோ வழக்கு,Prison,sexual abuse</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/aae7gme9/koe.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/aae7gme9/koe.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விழுப்புரம்,</p><p>சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.</p><h2>பாலியல் தொந்தரவு</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/villupuram">விழுப்புரம்</a> மாவட்டம் வானூர் தாலுகா அச்சரம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 65), கூலித்தொழிலாளி. கடந்த 7.11.2020 அன்று 1-ம் வகுப்பு படிக்கும் 6 வயதுடைய சிறுமி, அச்சரம்பட்டு பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தாள்.</p><p>அப்போது அங்கு வந்த செல்வம், அந்த சிறுமியிடம் சென்று சாக்லேட் வாங்கி தருவதாக கூறி அந்த சிறுமியை அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தின் பின்புறம் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.</p><h2>20 ஆண்டு சிறை</h2><p>இதுகுறித்து சிறுமி, அழுதுகொண்டே வந்து தனது பெற்றோரிடம் கூறினாள். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இதுகுறித்து வானூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின்பேரில் செல்வம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை, விழுப்புரம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.</p><h2>சிறுமிக்கு இழப்பீடு</h2><p>இந்நிலையில் இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி வினோதா, குற்றம் சாட்டப்பட்ட செல்வத்துக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும், இந்த அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 4 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் இழப்பீடாக ரூ.4 லட்சம் வழங்க வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>காற்றின் தரம்: தமிழக அளவில் திருச்சி முதலிடம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/air-quality-trichy-tops-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/air-quality-trichy-tops-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">fc4beb15-697e-43fe-a711-750fde3f1aa0</guid><pubDate>Sat, 12 Sep 2026 15:08:55 +0000</pubDate><atom:updated>2026-09-12T15:08:55.418Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,திருச்சி,Trichy,முதலிடம்,காற்று,Air Quality,First,தரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/aduhpn2w/air.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ காற்றின் தரம்]]></media:title><media:description type="html"><![CDATA[ காற்றின் தரம்: தமிழக அளவில் திருச்சி முதலிடம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/aduhpn2w/air.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">காற்றின் தரம்</a> குறித்து ‘சுவச் வாயு சர்வேஷன் 2026’ என்ற தலைப்பில் ஆய்வு ஒன்றை நடத்தியது.1 லட்சத்திற்கும் மேல் மக்கள் வாழும் நகரங்கள் பிரிவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், திருச்சி மாநகராட்சி தேசிய அளவில் 12-வது இடத்தை சென்றுள்ளது! கடந்த ஆண்டு 9-வது இடத்தில் இருந்த திருச்சி, இந்த முறை சற்று பின்வாங்கினாலும், தமிழக அளவில் தனது ‘நம்பர் 1’  தக்க வைத்து கொண்டுள்ளது.</p> <h2>லக்னோ முதலிடம்</h2><p>காற்று மாசுபாட்டை குறைக்க நகரங்கள் எடுத்த நடவடிக்கைகள், வாகன புகை கட்டுப்பாடு, குப்பை எரிப்பை தடுத்தல், சாலை தூய்மை போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் மொத்தம் உள்ள 200 மதிப்பெண்களுக்கு, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">திருச்சி</a> மாநகராட்சி 183 மதிப்பெண்களை அள்ளியுள்ளது. இந்த தேசிய பட்டியலில் லக்னோ, இந்தூர், ஜபல்பூர் ஆகிய நகரங்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. </p> <h2>சென்னை</h2><p>தமிழகத்தின் தலைநகரமான சென்னை 35-வது இடத்திற்கும், தூங்கா நகரமான மதுரை 39-வது இடத்திற்கும் தள்ளப்பட்டு பலத்த சறுக்கலை சந்தித்துள்ளன.</p><p><strong>அதிகாரி பேட்டிஇது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி கூறுகையில்,</strong> </p><h2>வாகன புகை</h2><p>"திவாகன புகைருச்சியில் காற்றில் கலக்கும் பி.எம். 10 நுண்துகள்களின் அளவு கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் 88 ஆக இருந்த இந்த அளவு, 2025-26 ஆண்டில் 53 ஆக குறைந்து சுத்தமான காற்று வீசுகிறது. மரக்கன்றுகள் நட்டதும், சாலைகளை தூய்மையாக வைத்திருந்ததுமே இதற்கு முக்கியக் காரணம். அதேசமயம், வாகன புகை மற்றும் குப்பை எரிப்பு போன்றவை காற்றின் தரத்தை பாதிக்கின்றன என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்:  17ம் தேதி மதுரையில் உள்ளூர் விடுமுறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/meenakshi-amman-temple-consecration-local-holiday-in-madurai-on-the-17th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/meenakshi-amman-temple-consecration-local-holiday-in-madurai-on-the-17th#comments</comments><guid isPermaLink="false">c22d411c-3d39-41a2-bf13-92b73b6b3148</guid><pubDate>Sat, 12 Sep 2026 14:55:47 +0000</pubDate><atom:updated>2026-09-12T14:55:47.280Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Kumbabhishekam,கும்பாபிஷேகம்,தமிழகம்,Madurai,மதுரை,Meenakshi Amman Temple,Local Holiday,உள்ளூர் விடுமுறை,மீனாட்சி அம்மன் கோவில்,Govt Offices,கல்வி நிறுவனங்கள்,அரசு அலுவலகங்கள்,Education Institutions</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/2n1u8mq9/banj.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/2n1u8mq9/banj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p>மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, வரும் செப். 17ஆம் தேதி (வியாழன்) மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>மகா கும்பாபிஷேகம்</h2><p>உலகப் புகழ் பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பாபிஷேகம் வரும் 17 ஆம் தேதியன்று மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. கும்பாபிஷேக  விழாவைக் காண, லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மாவட்ட நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டு வருகிறது.</p><h2>உள்ளூர் விடுமுறை</h2><p>இந்நிலையில், மதுரை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.</p><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p>கும்பாபிஷேகப் பெருவிழாவை முன்னிட்டு, விழா நடைபெறும் நாளான 17.09.2026 (வியாழன்) அன்று மதுரை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.  மதுரை மாவட்ட எல்லைக்குட்பட்ட அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இவ்விடுமுறை பொருந்தும். இவ்விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு, 26.09.2026 (சனிக்கிழமை) அன்று மதுரை மாவட்டத்தில் முழு பணி நாளாக செயல்படும்.</p><p>இந்த விடுமுறை செலாவணி முறிச் சட்டம், 1881-ன் (Negotiable Instruments Act, 1881) கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், அவசரப் பணிகளைக் கவனிக்கும் வகையில் மாவட்டக் கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் குறைந்தபட்ச பணியாளர்களுடன் இயங்கும்.</p><p>கும்பாபிஷேக விழாவினைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வருகை தருவார்கள் என்பதால், பொதுமக்களின் வசதிக்காகவும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காகவும் இந்த உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விடிந்தால் திருமணம்... வருங்கால மனைவியை தேர்வு எழுத அழைத்துச் சென்ற ராணுவ வீரர் - விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சோகம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wedding-set-for-the-next-day-army-man-takes-future-wife-to-write-an-exam-young-woman-tragically-dies-in-accident</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wedding-set-for-the-next-day-army-man-takes-future-wife-to-write-an-exam-young-woman-tragically-dies-in-accident#comments</comments><guid isPermaLink="false">d9617dc4-5718-4aff-a288-c1293fcfc7e9</guid><pubDate>Sat, 12 Sep 2026 14:44:13 +0000</pubDate><atom:updated>2026-09-12T14:44:13.527Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,Dindigul,திண்டுக்கல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/mycdgodp/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/mycdgodp/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>திண்டுக்கல் மாவட்டம் வெள்ளோடு பகுதியை சேர்ந்தவர் ஜெப பாஸ்டின்(வயது 29). இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் திண்டுக்கல் கமலாபுரத்தை சேர்ந்த மரிய வெல்சியா(வயது 26) என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. வெள்ளோடு கிறிஸ்தவ தேவாலயத்தில் நாளைய தினம் இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. </p><p>இந்நிலையில் இன்று காலை, மதுரையில் செவலியர் தேர்வு எழுதுவதற்காக ஜெப பாஸ்டின் இருசக்கரை வாகனத்தில் தனது வருங்கால மனைவி வெல்சியாவை அழைத்து சென்றிருக்கிறார். அவர்கள் வாடிப்பட்டி அருகே சானாம்பட்டி பிரிவில் சென்றபோது, கோவையில் இருந்து மதுரை சென்ற காரின் முன்பக்க டயர் வெடித்ததாக கூறப்படுகிறது.</p><p>இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் இளம்ஜோடி சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மணப்பெண் வெல்சியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ஜெப பாஸ்டின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருமணத்திற்கு ஒரு நாள் முன்பு மணப்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title> தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்; முதல்-அமைச்சர் விஜய் பிரசாரம்?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dharapuram-byelection-chief-minister-vijay-campaign</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dharapuram-byelection-chief-minister-vijay-campaign#comments</comments><guid isPermaLink="false">f011ce33-eb23-4b58-95ee-1bc63f2b49c9</guid><pubDate>Sat, 12 Sep 2026 14:43:25 +0000</pubDate><atom:updated>2026-09-12T14:43:25.857Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>campaign,இடைத்தேர்தல்,பிரசாரம்,தாராபுரம்,தொகுதி,Assembly by-election,Dharapuram,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/y25suu0r/vijaycampaign.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய் ]]></media:title><media:description type="html"><![CDATA[  தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்; முதல்-அமைச்சர் விஜய் பிரசாரம்?]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/y25suu0r/vijaycampaign.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தாராபுரம் தொகுதி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">இடைத்தேர்தல்</a> பிரசாரம் செய்ய முதல்-அமைச்சர் விஜய் வருகிறார்: த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமா தகவல்</p><h2>எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா</h2><p>கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சத்தியபாமா. பின்னர் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக அ.தி.மு.க.வில் இருந்து விலகிய அவர், தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த அவருக்கு, தற்போது நடைபெற உள்ள தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட த.வெ.க. தலைமை வாய்ப்பளித்துள்ளது.</p> <h2> பேட்டி</h2><p>இந்தநிலையில், தாராபுரம் தொகுதியில் த.வெ.க. சார்பில் போட்டியிடும் சத்தியபாமா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p> <h2>வெற்றி உறுதி</h2><p>மக்களுக்கான நல்லாட்சியை வழங்க துடிக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் எனக்கு மீண்டும் தாராபுரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சி தலைமைக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தொகுதி மக்களின் தேவைகளையும், குறைகளையும் நான் நன்கு அறிவேன். </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">தாராபுரம்</a> தொகுதி மக்கள் என் மீது எப்போதும் மிகுந்த பாசமும், நம்பிக்கையும் வைத்துள்ளனர். வரவிருக்கும் இடைத்தேர்தலில் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி என்பது ஏற்கனவே மக்களால் உறுதி செய்யப்பட்டுவிட்டது.</p><h2>குதிரை பேரமும் நடைபெறவில்லை</h2><p>அ.தி.மு.க.வில் நிலவி வரும் உட்கட்சி பூசல்கள், அக்கட்சி தலைமையின் தவறான முடிவுகள் மற்றும் தி.மு.க. கூட்டணியின் மீதான கருத்து வேறுபாடு காரணமாகவே நான் அங்கிருந்து விலகினேன். மக்களுக்கு நேர்மையாக சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கில் தான் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தேன். எனது இந்த முடிவில் எந்தவித குதிரை பேரமும் நடைபெறவில்லை.</p><p>எதிர்க்கட்சிகள் என் மீது உண்மைக்கு புறம்பான வதந்திகளை பரப்புவதையே வழக்கமாக கொண்டுள்ளன. தி.மு.க. கூட்டணியின் மக்கள் விரோத போக்கு காரணமாகவே மக்கள் நலன் கருதி இந்த இயக்கத்தில் இணைந்தேன். </p> <h2>ஆட்சியில் குளறுபடி</h2><p>எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் எவ்வித சாதனைகளும் நிகழ்த்தப்படவில்லை. அவர்களின் தன்னிச்சையான முடிவுகளால் நிர்வாகத்தில் பல குளறுபடிகளே ஏற்பட்டன. ஆனால், எங்கள் த.வெ.க. தலைமை மிகவும் நேர்மையாகவும், வெளிப்படை தன்மையோடும் செயல்பட்டு வருகிறது.</p> <h2>விஜய் பிரசாரம்</h2><p>கடந்த தேர்தலில் நான் 17,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தேன். தற்போது தமிழக வெற்றி கழகத்திற்கு மக்களிடையே எழுந்துள்ள சிறப்பான வரவேற்பால், இந்த முறை அதைவிட கூடுதலான வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பெறுவது உறுதி. விரைவில் த.வெ.க. தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">விஜய்</a>, எனக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தாராபுரத்திற்கு வரவுள்ளார்.</p><p>இவ்வாறு த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமா கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>கோடை வெப்பத்தால் அதிகரிக்கும் மின் தேவை: கூடுதலாக 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கொள்முதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rising-electricity-demand-due-to-summer-heat-additional-2000-mw-of-power-procured</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rising-electricity-demand-due-to-summer-heat-additional-2000-mw-of-power-procured#comments</comments><guid isPermaLink="false">c7b34abb-fb17-46c9-83bb-d3cfeb40485c</guid><pubDate>Sat, 12 Sep 2026 14:22:17 +0000</pubDate><atom:updated>2026-09-12T14:22:17.411Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,தமிழ்நாடு மின்சார வாரியம்,Electricity Board,மின்சார வாரியம்,மின் தேவை,summer heat,கோடை வெப்பம்,Power Consumption,மின்சாரம் கொள்முதல்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/y6t03bwo/kler.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/y6t03bwo/kler.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>நீடித்த கோடை வெப்பத்தால் அதிகரிக்கும் மின் தேவையை சமாளிக்க கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. </p><h2>மின்சாரம் கொள்முதல்</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>இந்த ஆண்டு கோடைக்காலம் எதிர்பாராத வகையில் நீடித்ததன் காரணமாக, மின்சாரத் தேவையும் அதிகரித்துள்ளது. அதேவேளையில் காற்றின் வேகம் குறைந்ததால் காற்றாலை மின் உற்பத்தியும் எதிர்பார்த்த அளவிற்கு கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக சில நேரங்களில் மின்னழுத்தக் குறைபாடு போன்ற தொழில்நுட்ப பிரச்சினைகள் ஏற்பட்டன.</p><p>இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மின்சார வாரியம் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வெளிச்சந்தையில் இருந்து கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. </p><h2>சிறப்புக் குழுக்கள்</h2><p>இதன் மூலம் தற்போது மின் தொகுப்பின் (Grid) நிலமை சீராகவும், நம்பகத்தன்மையுடனும் உள்ளது. மேலும், மின் கட்டமைப்பு மாறுபாடுகள் மற்றும் மின் விநியோக நிலைமையை தொடர்ந்து மின்வாரிய தலைமையகத்தில் உயர்மட்ட அலுவலர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து, உடனுக்குடன் உரிய உத்தரவுகள் வழங்கி வருகிறது.</p><p>மின்விநியோக பாதிப்புகளை உடனடியாக சரிசெய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் சிறப்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, மின்தடை ஏற்பட்ட பகுதிகளில் உடனடியாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு மின்விநியோகம் சீரமைக்கப்பட்டு வருகிறது.</p><h2>தடையற்ற மின்சார விநியோகம்</h2><p>மின்தடை ஏற்படும் நிகழ்வுகளை எந்தவித அலட்சியமும் இன்றி உடனடியாக சரிசெய்ய வேண்டும் என களப்பணியில் உள்ள அனைத்து அலுவலர்களுக்கும் ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.</p><p>பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு. வழக்கமான பராமரிப்புப்பணிகளுக்காக திட்டமிடப்பட்ட மின்தடைகளை இயன்றவரை தவிர்க்கவும் களப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>பொதுமக்களுக்கு நாள் முழுவதும் குறிப்பாக இரவு நேரங்களிலும், சீரான, நம்பகமான மற்றும் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் தொடர்ந்து விழிப்புடன் செயல்பட்டு வருகிறது.</p><p>மேலும், மின் நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் மின்சாரத்துறை சார்ந்த புகார்களுக்கு, 24 மணி நேரமும் இயங்கும் நுகர்வோர் சேவை மையமான 'மின்னகம்'  94987 94987" என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>நெல்லை: விநாயகர் பிரியாணி சமைப்பது போன்று வைக்கப்பட்ட விளம்பர பேனரால் அதிர்ச்சி

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-shock-over-vinayagar-biryani-ad-banner</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-shock-over-vinayagar-biryani-ad-banner#comments</comments><guid isPermaLink="false">d3a489dc-ee5d-47b1-bd82-1c69fe5d5f68</guid><pubDate>Sat, 12 Sep 2026 14:22:02 +0000</pubDate><atom:updated>2026-09-12T14:22:02.878Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,கிரைம் செய்தி,நெல்லை,Nellai,Ganesh Chaturthi,விநாயகர் சதுர்த்தி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/kefowzi0/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/kefowzi0/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>     நெல்லை,</p><p>நெல்லையில் இந்து மதக்கடவுள் விநாயகர் பிரியாணி சமைப்பது போன்று ஓட்டலில் விளம்பர பேனர் வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p> <p>நெல்லை மாவட்டம் வி.எம்.சத்திரத்தில் அசைவ ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலில் இந்து மதப்பண்டிகையான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">விநாயகர் சதுர்த்தி</a> பண்டிகையொட்டி அரபிக் ஸ்டைல் சிக்கன் பிரியாணி சலுகை விலையில் வழங்கப்படுவதாக விளம்பர பேனர் வைக்கப்பட்டிருந்தது.</p> <h2>விநாயகர் பிரியாணி சமைப்பது போன்று வைக்கப்பட்ட விளம்பர பேனர்</h2><p>அந்த  விளம்பர பேனரில் இந்து மதக்கடவுள் விநாயகர் பிரியாணி சமைப்பது போன்ற படம் இடம்பெற்றிருந்தது. இந்த விளம்பரம் இந்து மதத்தினரின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பிரியாணி கடையில் இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்றினர்.</p><p>அதேவேளை, ஓட்டல் உரிமையாளர் வேற்று மதத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியான நிலையில் அவரது பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீசார் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>கண்ணியம் என்பது திமுகவின் மேடைகளில் வெறும் வெற்று முழக்கம்தானா? - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-dignity-merely-an-empty-slogan-on-dmk-platforms-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-dignity-merely-an-empty-slogan-on-dmk-platforms-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">88c4619f-e70b-42dd-9730-a1580df60b25</guid><pubDate>Sat, 12 Sep 2026 14:20:30 +0000</pubDate><atom:updated>2026-09-12T14:20:30.699Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore MP,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/7avn5y10/manickam-tagore.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/7avn5y10/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கண்ணியம் என்பது திமுகவின் மேடைகளில் வெறும் வெற்று முழக்கம்தானா? என்று <a href="https://www.dailythanthi.com/topic/manickam-tagore">மாணிக்கம் தாகூர்</a> எம்.பி. கேள்வி எழுப்பினார்.</p><p>தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>பொதுமேடைகளில் வரம்பு மீறும் திமுக</h2><p>திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுவெளியிலும் தொண்டர்கள் கூட்டத்திலும் "அரசியல் களத்தில் யாரை விமர்சித்தாலும் கண்ணியத்தோடும் நாகரிகத்தோடும் பேசுங்கள்" என்று உபதேசம் செய்கிறார். ஆனால் எதார்த்த களத்தில் நடப்பதோ அதற்கு முற்றிலும் நேர்மாறாக இருக்கிறது.</p><p>முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் ஆர்.எஸ்.பாரதி போன்ற மூத்த உறுப்பினர்கள் பொதுமேடைகளில் வரம்பு மீறி, முதல்-அமைச்சர் விஜய்யை ஒருமையில் விளிப்பதும், "ஓடுகாலி நாய்" எனத் தரம் கெட்ட வன்மச் சொற்களைப் பயன்படுத்துவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசியல் களத்தில் கொள்கை ரீதியான முரண்பாடுகளும் கருத்து மோதல்களும் இருப்பது இயல்புதான்; ஆனால் ஒரு மாநிலத்தின் முதல்-அமைச்சரை நோக்கி தனிநபர் வன்மத்தையும், அநாகரிகமான வசவுகளையும் வீசுவது ஒட்டுமொத்த ஜனநாயக மாண்புகளுக்கு விடுக்கப்படும் பெரும் அச்சுறுத்தல். கட்சித் தலைவரின் குடும்பம் முதல் முக்கிய நிர்வாகிகள் வரை இந்த எல்லை மீறல்களைத் தொடர்ந்து அரங்கேற்றுவதை திமுக தலைமை கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏன்?</p><h2>வீழ்ச்சிக்கான அறிகுறி</h2><p>மக்கள் தீர்ப்பை மதிக்காமல் மாநில முதல்-அமைச்சரையே பொதுமேடைகளில் ஒருமையில் இழிவுபடுத்துவது, பெண்களுக்கு எதிரான தொடர் அவமதிப்புகள் மீது தன் கட்சிக்குள் உரிய நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காப்பது, அதிகாரத்தை இழந்த விரக்தியில் பொதுவெளியில் தரம் தாழ்ந்து கூச்சலிடுவது என திமுக இன்று தன் நம்பகத்தன்மையை இழந்து மூழ்கும் கப்பலாக மாறிக் கொண்டிருக்கிறது.</p><p>பொது அமைதியையும் அரசியல் நாகரிகத்தையும் சீர்குலைக்கும் வகையில் முன்னாள் அமைச்சர்களும் நிர்வாகிகளும் இப்படி நாவடக்கமின்றிப் பேசுவதை திமுகவின் தலைமை கண்டும் காணாமல் இருப்பது அவர்களின் வீழ்ச்சிக்கான தெளிவான அறிகுறி. அரசியல் களம் மக்கள் நலனுக்கான ஆரோக்கியமான விவாதக் களமாக இருக்க வேண்டுமே தவிர, இத்தகைய நாகரிகமற்ற தனிநபர் வசவுகளுக்கான கூடாரமாக ஒருபோதும் மாறக்கூடாது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் பெண்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாக புகார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/complaint-alleging-police-assault-on-women-at-the-chennai-rk-nagar-police-station</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/complaint-alleging-police-assault-on-women-at-the-chennai-rk-nagar-police-station#comments</comments><guid isPermaLink="false">2878ea0f-4ac6-478f-b2b8-bca8dd29159e</guid><pubDate>Sat, 12 Sep 2026 14:08:24 +0000</pubDate><atom:updated>2026-09-12T14:08:24.287Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/387gyxiv/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/387gyxiv/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>சென்னை ஆர். கே நகர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நபர்களை பார்ப்பதற்காக ஆர்.கே.நகரில் வசித்து வரும் வள்ளி அவரது மகள் உள்ளிட்டோர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது போலீசார் அவர்களை மிரட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. </p><p>பெண்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலை வீடியோ எடுத்த மற்றொரு பெண்ணின் செல்போனை போலீசார் பறித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு காவல்துறை தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், குற்றவாளிகள் மீது கைது நடவடிக்கை எடுக்க விடாமல் பெண்கள் தடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் ஆர்.கே.நகர் காவல் நிலைய வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. </p>]]></content:encoded></item><item><title>தாராபுரம்: தகராறில் அரிவாள் வெட்டில் துண்டான கையுடன் ஆஸ்பத்திரிக்கு வந்த தொழிலாளி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dharapuram-worker-hand-severed-in-coconut-cutting-dispute</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dharapuram-worker-hand-severed-in-coconut-cutting-dispute#comments</comments><guid isPermaLink="false">bf9f0187-3d13-411a-b023-53ea5db40918</guid><pubDate>Sat, 12 Sep 2026 14:05:00 +0000</pubDate><atom:updated>2026-09-12T14:05:00.970Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தொழிலாளி,hospital,ஆஸ்பத்திரி,தாராபுரம்,Agricultural Workers,கை,அரிவாள்வெட்டு,Dharapuram</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/xh71gn78/muniyandi.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ முனியாண்டி]]></media:title><media:description type="html"><![CDATA[ தாராபுரம்: தகராறில் அரிவாள் வெட்டில் துண்டான கையுடன் ஆஸ்பத்திரிக்கு வந்த தொழிலாளி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/xh71gn78/muniyandi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தாராபுரம், </p><p>திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தேங்காய் வெட்டும் வேலை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தொழிலாளியின் கை துண்டிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p> <h2>தோட்ட தொழிலாளி</h2><p>தாராபுரம் அடுத்த கவுண்டையன் வலசு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவருக்கு சொந்தமான தோட்டத்தில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள வெள்ளோடு பகுதியை சேர்ந்த ரஞ்சித் (வயது 32) என்பவர் கடந்த பல ஆண்டுகளாக தேங்காய் வெட்டும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.</p> <h2>அரிவாள் வெட்டு</h2><p>இந்த நிலையில் திண்டுக்கல் சேர்ந்த மாவட்டத்தைச் முனியாண்டி என்பவர் புதிதாக தேங்காய் வெட்டுவதற்காக ஈஸ்வரன் தோட்டத்திற்கு புதிதாக வருகை புரிந்தார். சம்பவத்தன்று தோட்டத்தில் தேங்காய் வெட்டும் வேலை தொடர்பாக ரஞ்சித்துக்கும், அங்கு புதிதாக வேலைக்கு வந்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முனியாண்டி என்பவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த ரஞ்சித் தன் கையில் வைத்திருந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D">அரிவாளை</a> எடுத்து முனியாண்டியின் கையை துண்டாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த முனியாண்டி வலி தாங்க முடியாமல் அலறியுள்ளார்.</p><h2>பிளாஸ்டிக் கவர்</h2><p> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">வெட்டுப்பட்ட</a> கையை பிளாஸ்டிக் கவரில் வைத்துக்கொண்டு உடனடியாக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். தாராபுரம் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாததால் துண்டான கையை ஐஸ் பேக்கில் வைத்து கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><h2>வழக்கு பதிவு</h2><p>இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு தொழிலாளிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவரின் கையை மற்றொருவர் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.</p> ]]></content:encoded></item><item><title>தொடர் விடுமுறை: போக்குவரத்து துறையால் செய்யப்பட்ட முன்னேற்பாடுகள், நடவடிக்கைகள் என்னென்ன..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/extended-holidays-what-arrangements-and-measures-have-been-taken-by-the-transport-department</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/extended-holidays-what-arrangements-and-measures-have-been-taken-by-the-transport-department#comments</comments><guid isPermaLink="false">53b6f197-3468-4937-bd87-faaeecd2d889</guid><pubDate>Sat, 12 Sep 2026 13:53:18 +0000</pubDate><atom:updated>2026-09-12T13:53:18.182Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,தமிழகம்,போக்குவரத்து,Transport Corporation,தொடர் விடுமுறை,Holidays,விநாயகர் சதுர்த்தி,முன்னேற்பாடுகள்,Vinayagar Chathurthi</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/h53a5j1c/bus.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/h53a5j1c/bus.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தொடர் விடுமுறை முன்னிட்டு போக்குவரத்து துறையால் செய்யப்பட்ட முன்னேற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.  </p><h2>விநாயகர் சதுர்த்தி</h2><p>இது தொடர்பாக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p><a href="https://www.dailythanthi.com/topic/vinayagar-chaturthi">விநாயகர் சதுர்த்தி</a> பண்டிகையை முன்னிட்டு 12.09.2026, 13.09.2026 மற்றும் 14.09.2026 ஆகிய மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், சென்னையிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் பயணம் மேற்கொள்வார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு. அவர்களின் பயணம் சிரமமின்றி அமையும் வகையில் போக்குவரத்துத் துறை சார்பில் மேற்கொள்ள வேண்டிய விரிவான முன்னேற்பாடுகள் தொடர்பாக, போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டம் 09.09.2026 அன்று நடைபெற்றது.</p><p>அக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்களால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலின்படி, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து வழக்கமாக இயக்கப்படும் 1,099 பேருந்துகளுடன், கூடுதலாக 1.255 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 2.351 பேருந்துகள் இயக்க தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.</p> <h2>கூடுதல் கட்டணம்</h2><p>அதன்படி, 11.09.2026 இரவு, இயக்க உத்தேசிக்கப்பட்ட 2,354 பேருந்துகளில், அன்றைய பயணிகளின் எண்ணிக்கை மற்றும் பயணத் தேவையின் அடிப்படையில் 2,213 பேருந்துகள் பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டன.</p><p>முன்னேற்பாடாக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மீதமுள்ள 141 பேருந்துகளில், 12.09.2026 காலை முதல் பயணிகளின் தேவைக்கேற்ப 41 பேருந்துகள் பல்வேறு மாவட்டங்களுக்கு தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன.</p><p>மேலும். தொடர் விடுமுறையை பயன்படுத்தி சில ஆம்னி பேருந்துகளில் நடைமுறையில் உள்ள கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகளிடமிருந்தும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் புகார்கள் பெறப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய சிறப்பு குழுக்கள் 10.09.2026 அன்று அமைக்கப்பட்டு உடனடியாக தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.</p> <h2>அபராதம்</h2><p>அதன்படி, 10.09.2026 முதல் 12.09.2026 அதிகாலை வரை தமிழ்நாடு முழுவதும் 2,379 ஆம்னி பேருந்துகள் தணிக்கை செய்யப்பட்டன. இத்தணிக்கையின் போது, பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளிடம் நேரடியாக பயணக் கட்டணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக கண்டறியப்பட்ட இடங்களில், அவ்வாறு வசூலிக்கப்பட்ட கூடுதல் தொகையை சம்பந்தப்பட்ட பயணிகளுக்கு திருப்பி வழங்குவதற்கான நடவடிக்கைகள் போக்குவரத்துத் துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டன.</p><p>இந்த சிறப்பு தணிக்கையின் போது. 400 ஆம்னி பேருந்துகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, அவற்றிற்கு தணிக்கை அறிக்கை மற்றும் இ-சலான் வழங்கப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களிடம் விளக்கம் கோரி அறிவிப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.</p><p>மேலும் விதிமீறல்களுக்காக ரூபாய்: 10.31,500/- இணக்கக் கட்டணம் (அபராதம்) நிர்ணயிக்கப்பட்டு. அதில் ரூபாய்.1,60,500/- உடனடியாக வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு தமிழ்நாட்டில் இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளிடமிருந்து தமிழ்நாட்டிற்கு செலுத்த வேண்டிய வரியாக ரூபாய்.15,33,220/- வசூலிக்கப்பட்டுள்ளது.</p> <h2>ஆன்லைன் மூலம் பதிவு</h2><p>மேலும், தகுதிச் சான்றிதழ் இல்லாமலும், உரிய சாலை வரி செலுத்தாமலும் இயக்கப்பட்ட 4 வெளிமாநில ஆம்னி பேருந்துகள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன. அப்பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளுக்கு உடனடியாக மாற்றுப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு, அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சிரமமின்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.</p><p>பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காலங்களில் பொதுமக்கள் எந்தவித சிரமமும் இன்றி பயணம் மேற்கொள்வதை உறுதி செய்யவும். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும். அனுமதி, வரி. தகுதிச் சான்றிதழ் உள்ளிட்ட விதிமீறல்களை கட்டுப்படுத்தவும். 16.09.2026 வரை தமிழ்நாடு முழுவதும் சிறப்பு வாகனத் தணிக்கையை தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ள போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>அவர்களால் ஆம்னி பேருந்துகளில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டு, வாகன உரிமையாளர்களால் ரத்து செய்யப்படும் நேர்வில், அப்பயணிகளுக்கு மாற்றுப்பேருந்தில் பயணம் செய்ய அந்த வாகன உரிமையாளர்கள் ஏற்பாடு செய்யவேண்டும். தவறும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட ஆம்னி பேருந்தின் அனுமதிச்சீட்டின் மீது மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.</p><p>மேலும். 10.09.2026 முதல் 16.09.2026 வரை பொதுமக்களின் தேவைக்கேற்ப பேருந்துகள் தங்குதடையின்றி இயக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பொது மேலாளர்கள் மற்றும் துணை மேலாளர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.</p><h2>நேரடி கண்காணிப்பு</h2><p>அத்துடன், தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய பேருந்து நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கையை தொடர்ந்து கண்காணித்து, தேவைக்கேற்ப கூடுதல் அரசு சிறப்பு பேருந்துகளை உடனுக்குடன் இயக்குவதற்கும் சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழகங்களின் மேலாண்மை இயக்குநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, அந்தந்த பகுதிகளின் பொது மேலாளர்கள். துணை மேலாளர்கள் மற்றும் பணிமனை மேலாளர்கள் பேருந்து நிலையங்களில் நேரடி கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>மேற்கண்ட அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்து கண்காணிக்கும் பொருட்டு. போக்குவரத்துத் துறை செயலாளர் மற்றும் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் ஆகியோர் நிலைமையை தொடர்ந்து ஆய்வு செய்து, அதன் விவரங்களை உடனுக்குடன் அளித்து வருகின்றனர்.</p><p>பொதுமக்களின் பாதுகாப்பான, சிரமமற்ற மற்றும் தடையற்ற பண்டிகைக்காலப் பயணத்தை உறுதி செய்ய போக்குவரத்துத் துறை சார்பில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை, கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளும் போக்குவரத்து துறையால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>18 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chance-of-rain-in-18-districts-until-10-pm</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chance-of-rain-in-18-districts-until-10-pm#comments</comments><guid isPermaLink="false">882d5ea1-d6f9-47fe-b24e-d77103ab778b</guid><pubDate>Sat, 12 Sep 2026 13:42:20 +0000</pubDate><atom:updated>2026-09-12T13:42:20.146Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,மழை,மழை செய்திகள்,Rain News,Rain Alert,மழை எச்சரிக்கை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/8y8ta54q/rain2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/8y8ta54q/rain2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><h2>18 மாவட்டங்களில் மழை</h2><p>இந்த நிலையில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழகத்தில் </a>18 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி திண்டுக்கல், கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், தேனி, அரியலூர், கோவை, தர்மபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, மதுரை, பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்திடம் அரிய ஓலைச்சுவடிகளை ஒப்படைத்த ஈரோடு விவசாயி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-farmer-hands-over-rare-palm-leaf-manuscripts-to-chennai-siddha-research-centre</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-farmer-hands-over-rare-palm-leaf-manuscripts-to-chennai-siddha-research-centre#comments</comments><guid isPermaLink="false">0f780eaa-9ec8-4082-8be2-e099ff8ae787</guid><pubDate>Sat, 12 Sep 2026 13:35:00 +0000</pubDate><atom:updated>2026-09-12T13:35:00.159Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,farmer,விவசாயி,Erode,ஈரோடு,Research,Siddha,சித்த மருத்துவம்,ஓலைச்சுவடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/sogfp8ay/palmleaves.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஜெகநாதன்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்திடம் அரிய ஓலைச்சுவடிகளை ஒப்படைத்த ஈரோடு விவசாயி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/sogfp8ay/palmleaves.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்திடம் அரிய ஓலைச்சுவடிகளை ஈரோடு விவசாயி ஒப்படைத்தார்.</p><h2>விவசாயி</h2><p>ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோவில் அருகே உள்ள பொன்னாண்டான்வலசு பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். விவசாயியான இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இவருடைய முன்னோர்கள் தங்களது வீட்டில் தலைமுறை தலைமுறையாக சில பண்டைய கால <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%93%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF">ஓலைச்சுவடிகளை</a> பாதுகாப்பாக வைத்து வந்துள்ளனர்.</p><h2>மருத்துவ குறிப்புகள்</h2><p>இந்த ஓலைச்சுவடிகளை ஜெகநாதன் பராமரித்து வந்ததோடு, அதில் இருந்த அரிய மருத்துவக் குறிப்புகள் சிலவற்றையும் அவ்வப்போது படித்து புரிந்து கொண்டுள்ளார். ஒரு கட்டத்தில், இந்த ஓலைச்சுவடிகளில் மனித குலத்திற்கு பயன்படக்கூடிய ஏராளமான ரகசிய மருத்துவ குறிப்புகள் இருப்பதை அவர் கண்டறிந்தார். </p><h2>சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம்</h2><p>இந்த அரிய தகவல்கள் தனக்கு மட்டுமே பயன்படாமல், உலக மக்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்று அவர் விரும்பினார். இதனையடுத்து, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D">சித்த மருத்துவ ஆராய்ச்சி</a> குழும அதிகாரிகளை ஜெகநாதன் தொடர்பு கொண்டு, தன்னிடம் உள்ள ஓலைச்சுவடிகள் குறித்த விபரங்களை தெரிவித்தார்.</p><h2>அரிய பொக்கிஷம்</h2><p>அவரது தகவலின் பேரில், அந்த ஓலைச்சுவடிகளை பெற்று ஆய்வு செய்த சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் வல்லுநர்கள், அதில் பழங்கால அரிய சித்த மருத்துவ முறைகள் அடங்கியிருப்பதை உறுதி செய்தனர். சுயநலமின்றி, மக்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த ஓலைச்சுவடிகளை அரசிடம்  விவசாயி ஜெகநாதன் ஒப்படைத்தார்.</p><p><strong>இது குறித்து சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தைச் சேர்ந்த அலுவலர் மாணிக்கவாசகம் கூறியதாவது:-</strong></p> <h2>பராமரிப்பு</h2><p>பொதுமக்கள் பலரும் இதுபோன்ற ஓலைச்சுவடிகளை முறையாக பராமரிக்க வேண்டும். தமிழ் மருத்துவத்தின் பாரம்பரிய சித்த மருத்துவ குறிப்புகள் ஓலைச்சுவடிகளில்தான் அதிகம் உள்ளன. நீங்கள் இதுபோன்ற ஓலைச்சுவடிகளை முறையாக பராமரிப்பது மட்டுமின்றி, அரிய மருத்துவ குறிப்புகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதாகவும் கூறியுள்ளீர்கள். </p> <h2>புத்தகம்</h2><p>சித்த மருத்துவம் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய பிரசாதம் ஆகும். இதுபோன்ற ஓலைச்சுவடிகளின் குறிப்புகளை புத்தகம் மற்றும் ஆன்லைன் போர்டல் மூலம் நாங்கள் வெளிப்படுத்தி வருகிறோம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம் இடைத்தேர்தல்:  ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்யும் தி.மு.க., த.வெ.க. வேட்பாளர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/maduranthakam-by-election-dmk-and-tvk-candidates-to-file-nomination-papers-on-the-same-day</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/maduranthakam-by-election-dmk-and-tvk-candidates-to-file-nomination-papers-on-the-same-day#comments</comments><guid isPermaLink="false">91c08439-acb0-400d-afcc-690703f5f9e3</guid><pubDate>Sat, 12 Sep 2026 13:15:00 +0000</pubDate><atom:updated>2026-09-12T13:15:00.344Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Tamilnadu,திமுக,DMK,தமிழகம்,இடைத்தேர்தல்,வேட்புமனு தாக்கல்,மதுராந்தகம்,candidates,Maduranthakam,வேட்பாளர்கள்,Nomination,byelection</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/15s4d0ki/koer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/15s4d0ki/koer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுவை தி.மு.க., த.வெ.க. வேட்பாளர்கள் ஒரேநாளில் தாக்கல் செய்ய உள்ளனர்.</p><h2>இடைத்தேர்தல்</h2><p>தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ந் தேதி தொடங்கியுள்ள நிலையில், இடைத்தேர்தலிலும் த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் ஆகிய கட்சிகள் இடையே 4 முனைப்போட்டி நிலவுகிறது. </p><p>இதில், நாம் தமிழர் கட்சியை தவிர, தேர்தல் களம் காணும் 3 கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன.  கடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்) ஆகிய 2 பேரும் தற்போது த.வெ.க. சார்பில் அதே தொகுதிகளில் களம் காண்கின்றனர். </p><h2>தி.மு.க., த.வெ.க.</h2><p>பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. சார்பில் ஐ.பரந்தாமன் (மதுராந்தகம்), எஸ்.சுகன்யா (தாராபுரம்) ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத் (மதுராந்தகம்), பானுமதி (தாராபுரம்) ஆகியோர் போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை நாளை (ஞாயிற்றுக்கிழமை) அறிவிக்க உள்ளது. இடைத்தேர்தல் என்ற போதிலும் கடுமையான போட்டி நிலவுவதால், வெற்றி பெற அரசியல் கட்சிகள் பல்வேறு வியூகம் வகுத்து வருகின்றன.</p><h2>வேட்புமனு தாக்கல்</h2><p>இந்நிலையில் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் த.வெ.க., தி.மு.க. வேட்பாளர்கள் செப்.15ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். இதன்படி த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேல், தி.மு.க. வேட்பாளர் பரந்தாமன் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் செப்.16ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. </p>]]></content:encoded></item><item><title>கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யும் தமிழக அரசு..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/procurement-of-an-additional-2000-mw-of-electricity-tamil-nadu-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/procurement-of-an-additional-2000-mw-of-electricity-tamil-nadu-government#comments</comments><guid isPermaLink="false">04c1f2b7-8ec5-497b-8823-ada57b6c6148</guid><pubDate>Sat, 12 Sep 2026 13:06:09 +0000</pubDate><atom:updated>2026-09-12T13:06:09.805Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,மின்சாரம்,electricity,Tamil Nadu Government,தமிழக அரசு,மின்வாரியம்,Electricity Board,தமிழ்நாடு மின்வாரியம்,Tamilnadu Electricity Board,மின்சாரம் கொள்முதல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/ulm9ntwk/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு மின்சார வாரியம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/ulm9ntwk/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>நீடித்த கோடை வெப்பத்தால் அதிகரிக்கும் மின் தேவையை சமாளிக்க கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.</p><h2>மின்சாரத் தேவை அதிகரிப்பு</h2><p>இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>இந்த ஆண்டு கோடைக்காலம் எதிர்பாராத வகையில் நீடித்ததன் காரணமாக, மின்சாரத் தேவையும் அதிகரித்துள்ளது. அதேவேளையில், காற்றின் வேகம் குறைந்ததால் காற்றாலை மின் உற்பத்தியும் எதிர்பார்த்த அளவிற்கு கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக சில நேரங்களில் மின்னழுத்தக் குறைபாடு போன்ற தொழில்நுட்ப பிரச்சினைகள் ஏற்பட்டன.</p><p>இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மின்சார வாரியம் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வெளிச்சந்தையில் இருந்து கூடுதலாக 2000 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் தற்போது மின் தொகுப்பின் (Grid) நிலைமை சீராகவும், நம்பகத்தன்மையுடனும் உள்ளது. மேலும், மின் கட்டமைப்பு மாறுபாடுகள் மற்றும் மின் விநியோக நிலைமையை தொடர்ந்து மின்வாரிய தலைமையகத்தில் உயர்மட்ட அலுவலர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து, உடனுக்குடன் உரிய உத்தரவுகள் வழங்கி வருகிறது.</p><h2>பணியாளர்களுக்கு அறிவுறுத்தல்</h2><p>மின்விநியோக பாதிப்புகளை உடனடியாக சரிசெய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் சிறப்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, மின்தடை ஏற்பட்ட பகுதிகளில் உடனடியாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு மின்விநியோகம் சீரமைக்கப்பட்டு வருகிறது.</p><p>மின்தடை ஏற்படும் நிகழ்வுகளை எந்தவித அலட்சியமும் இன்றி உடனடியாக சரிசெய்ய வேண்டும் என களப்பணியில் உள்ள அனைத்து அலுவலர்களுக்கும் ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, வழக்கமான பராமரிப்புப் பணிகளுக்காக திட்டமிடப்பட்ட மின்தடைகளை இயன்றவரை தவிர்க்கவும் களப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>விழிப்புடன் செயல்பட்டு வரும் மின்வாரியம்</h2><p>பொதுமக்களுக்கு நாள் முழுவதும், குறிப்பாக இரவு நேரங்களிலும், சீரான, நம்பகமான மற்றும் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்ய <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழ்நாடு </a>மின்சார வாரியம் தொடர்ந்து விழிப்புடன் செயல்பட்டு வருகிறது.</p><p>மேலும், மின் நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் மின்சாரத்துறை சார்ந்த புகார்களுக்கு, 24 மணி நேரமும் இயங்கும் நுகர்வோர் சேவை மையமான 'மின்னகம்' தை "94987 94987'' என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>செவிலியர் பணி நிரந்தரம்: வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு - டிடிவி தினகரன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/permanent-status-for-nurses-tvk-government-reneges-on-promise-ttv-dhinakaran-condemns-the-move</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/permanent-status-for-nurses-tvk-government-reneges-on-promise-ttv-dhinakaran-condemns-the-move#comments</comments><guid isPermaLink="false">2ea4fead-d848-47a8-b673-9089fa05af11</guid><pubDate>Sat, 12 Sep 2026 12:47:37 +0000</pubDate><atom:updated>2026-09-12T12:47:37.788Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,AMMK,அமமுக</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/qm5kc66r/ttv.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/qm5kc66r/ttv.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு என டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். </p><p>இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>செவிலியர்கள் பெரும் ஏமாற்றம்</h2><p>தமிழ்நாட்டில் காலியாக உள்ள 4,724 செவிலியர் பணியிடங்களை தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பாணைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.</p><p>தமிழகத்தில் 4.75 லட்சம் செவிலியர்கள் பதிவு செய்து அரசு வேலைக்காக காத்திருக்கும் நிலையில், அப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க அறிவிப்பாணையை வெளியிட்டிருக்கும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயல்பாடு அவர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>அரசாணையை ரத்து செய்க</h2><p>ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதியளித்த தவெக, ஆட்சிக்கு வந்த பிறகும் அவர்களை பணி நிரந்தரம் செய்யாமல், புதிதாக பணிக்கு எடுப்பவர்களையும் ஒப்பந்த அடிப்படையிலேயே நியமிக்க முற்படுவது கடும் கண்டனத்திற்குரியது.</p><p>எனவே, தற்காலிக அடிப்படையில் பணிநியமனம் செய்வதற்கான அறிவிப்பாணையை உடனடியாக ரத்து செய்துவிட்டு, அரசு மருத்துவமனைகளில் நிலவும் செவிலியர் காலிப்பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் பதிவுசெய்து காத்திருப்போரை கொண்டு நிரப்பிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையையும், <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழக </a>அரசையும் வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘ஜனநாயகத்தில் அநாகரிக அரசியல் ஒருபோதும் ஏற்புடையதல்ல’ - மாணிக்கம் தாகூர் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/uncivilized-politics-is-never-acceptable-in-a-democracy-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/uncivilized-politics-is-never-acceptable-in-a-democracy-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">14596d4a-bbec-4227-b7c5-938f6ae3a81c</guid><pubDate>Sat, 12 Sep 2026 12:38:14 +0000</pubDate><atom:updated>2026-09-12T12:38:14.887Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/3im707jx/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/3im707jx/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“அரசியல் நாகரிகத்தை அடியோடு குழிதோண்டிப் புதைத்து, பொதுவெளியில் தரம் தாழ்ந்த பேச்சுகளைப் பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கொள்கை முழக்கம் போடும் தி.மு.க.வின் எம்.பி. ஆ.ராசாவின் இந்த அருவருக்கத்தக்க போக்கு தலைகுனிவானது. </p><p>மக்கள் தீர்ப்பை இன்னும் ஏற்றுக்கொள்ள முடியாமல் விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு, மாற்றுக் கருத்துக்களைக் கூட எதிர்கொள்ள முதிர்ச்சியின்றி பெண்களையும், தாய்மையையும் கொச்சைப்படுத்துவது தங்களின் அப்பட்டமான பலவீனத்தையே காட்டுகிறது. தோல்வியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மனமில்லாமல், விரக்தி வரும்போதெல்லாம் பெண்களை குறிவைத்து தாக்குவதை தி.மு.க. வழக்கமாகக் கொண்டுள்ளது. உதயநிதி தொடங்கி இன்று வரை அக்கட்சியினர் அனைவரும் இதே மோசமான பாணியையே தொடர்ந்து பின்பற்றுகின்றனர்.</p><p>முதல்-அமைச்சர் விஜய் குறிப்பிட்ட 'ஆபாச நதி' என்று சொன்னது போல, தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள ஆ.ராசா எம்.பி. இன்று பேசிய பேச்சு அமைந்துள்ளது. அக்கட்சியினர் பெண்களைத் தொடர்ந்து இழிவாகப் பேசுவது சற்றும் குறைந்தபாடில்லை; பெண்களே தி.மு.க.வை முற்றிலுமாக நிராகரித்து வருவதற்குக் காரணம் இவர்களின் இந்த வக்கிர சிந்தனைதான்.</p><p>கருத்து மோதல்களை எதிர்கொள்ள முடியாமல், த.வெ.க. அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமாரின் தாயாரை குறிவைத்து இத்தகைய தரம் தாழ்ந்த தனிநபர் வசைபாடல்களையும் அச்சுறுத்தல்களையும் தொடுப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஜனநாயகத்தில் இந்த அநாகரிக அரசியல் ஒருபோதும் ஏற்புடையதல்ல.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-corporation-commissioner-reviews-precautionary-measures</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-corporation-commissioner-reviews-precautionary-measures#comments</comments><guid isPermaLink="false">8cbd2c7a-78a8-4752-865e-24947fe1438a</guid><pubDate>Sat, 12 Sep 2026 12:31:07 +0000</pubDate><atom:updated>2026-09-12T12:31:07.301Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,தமிழகம்,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,வடகிழக்கு பருவமழை,Northeast Monsoon,முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/s7ry4b3q/pp.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/s7ry4b3q/pp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, மணலி மற்றும் மாதவரம் மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.</p><p>இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>பெருநகர <a href="https://www.dailythanthi.com/topic/chennai">சென்னை</a> மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (12.09.2026) வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, மணலி மற்றும் மாதவரம் மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.</p><p>மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாதவரம் மண்டலம், வார்டு-24க்குட்பட்ட மாதவரம்-ரெட்ஹில்ஸ் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மற்றும் புழல் உபரிநீர் கால்வாயில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, ஶ்ரீ பாலாஜி நகர் 3ஆவது பிரதான சாலைப் பகுதியில் அம்பத்தூர் மற்றும் கொரட்டூர் ஏரியில் இருந்து வரும் உபரி நீர் கால்வாய் சேரும் பகுதியினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.</p><p>பின்னர், மணலி மண்டலம், வார்டு-18க்குட்பட்ட சி.பி.சி.எல். பாட்டில் பாலப் பகுதி மற்றும் ஆமுல்லாவயில் பாலப் பகுதியில் உள்ள புழல் உபரிநீர் கால்வாயினைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, ஆகாயத் தாமரைகள், செடிகள் மற்றும் தூவாரும் பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>இந்த ஆய்வுகளின்போது, மாநகராட்சி, சென்னை குடிநீர் வாரியம், நீர்வளத்துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட சேவைத் துறைகளின் அலுவலர்கள் உடனிருந்தனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்திக்கு சென்று திரும்ப மானாமதுரையில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-from-manamadurai-to-tambaram-for-vinayagar-chaturthi-and-return</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-from-manamadurai-to-tambaram-for-vinayagar-chaturthi-and-return#comments</comments><guid isPermaLink="false">ce2ea1a6-d1ba-4f8f-9878-441bfb69f1c6</guid><pubDate>Sat, 12 Sep 2026 12:16:23 +0000</pubDate><atom:updated>2026-09-12T12:16:23.040Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,சிறப்பு ரெயில்,தாம்பரம்,தெற்கு ரெயில்வே,Southern Railway,மானாமதுரை,Manamadurai,Special Train ​,Vinayagar Chaturthi,விநாயகர் சதுர்த்தி,Thambaram</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/vm4y3pwo/sumi.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/vm4y3pwo/sumi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>விநாயகர் சதுர்த்திக்கு சென்று திரும்ப மானாமதுரையில் இருந்து தாம்பரத்திற்கு முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரெயில் இயக்கப்படுகிறது. </p><h2>தெற்கு ரெயில்வே</h2><p>இது தொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/topic/southern-railway">தெற்கு ரெயில்வே</a> வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p>விநாயகர் சதுர்த்திக்கு சென்று திரும்பும் பயணிகள் வசதிக்காக மானாமதுரையில் இருந்து தாம்பரத்திற்கு முன்பதிவில்லாத மெமு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. </p><p>மானாமதுரையில் இருந்து வரும் 14-ந் தேதி மதியம் 2.30 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரெயில் அன்று இரவு 11.55 மணிக்கு தாம்பரத்தை வந்தடைகிறது.</p><p>12 பெட்டிகளை கொண்ட இந்த மெமு ரெயில், திருபுவனம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, அம்பாத்துறை, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம்,  செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>ராசிபுரம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 4 இளைஞர்கள் படுகாயம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/terrible-accident-in-which-two-wheelers-collide-head-on-near-rasipuram-4-youths-seriously-injured</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/terrible-accident-in-which-two-wheelers-collide-head-on-near-rasipuram-4-youths-seriously-injured#comments</comments><guid isPermaLink="false">0cfaac0b-9b5c-4cd0-94b1-c29740d796e6</guid><pubDate>Sat, 12 Sep 2026 12:13:40 +0000</pubDate><atom:updated>2026-09-12T12:13:40.697Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,hospital,bike accident,மோதி விபத்து,போலீசார் விசாரணை,இரு சக்கர வாகனம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/bibikh4x/11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மோதிய இரு சக்கர வாகனங்கள்
]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/bibikh4x/11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல்,</p><p>ராசிபுரம் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 4 இளைஞர்கள் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><h2>வாகனங்கள் மோதி விபத்து</h2><p>நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சாலையில் உள்ள ஏடிஎம் சிட்டி பகுதியில் ஆசிக் என்ற இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென சாலையை கடக்க முயன்றார். இதனிடையெ அந்த சாலை வழியே அதிவேகமாக வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் ஆசிக்கின் வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆசிக்கும் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த அன்புச்செல்வன், கார்த்தி மற்றும் தீபேஸ் ஆகிய 4 இளைஞர்களும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்து படுகாயமடைந்தனர்.</p><p>இந்த விபத்தை நேரில் கண்ட பொதுமக்கள் காயமடைந்த 4 பேரையும் மீட்டு ராசிபுரம் அரசு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">ஆஸ்பத்திரிக்கு</a> அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த ராசிபுரம்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D"> போலீசார் </a>வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த விபத்து அதிவேகம் காரணமாக நடந்ததா இல்லையெனில் கவனக்குறைவு காரணமாக நடந்ததா என்று இளைஞர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்: தன்னார்வலர்களுடன் மாநகராட்சி கலந்தாய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monsoon-preparedness-measures-intensified-in-chennai-corporation-holds-consultation-with-volunteers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monsoon-preparedness-measures-intensified-in-chennai-corporation-holds-consultation-with-volunteers#comments</comments><guid isPermaLink="false">cbf32b9d-1703-4831-a296-1b4b97dcd72c</guid><pubDate>Sat, 12 Sep 2026 12:07:23 +0000</pubDate><atom:updated>2026-09-12T12:07:23.554Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,பருவமழை,பருவமழை முன்னெச்சரிக்கை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/l72joe2q/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாநகராட்சி கலந்தாய்வு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/l72joe2q/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தெற்கு வட்டாரத்தில் உள்ள வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் உள்ள குடியிருப்பு நலச்சங்கப் பிரதிநதிகள் மற்றும் தன்னார்வலர்களுடன் மாநகராட்சி உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. </p><p>சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>கலந்தாய்வுக் கூட்டம்</h2><p>பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், அவசர காலங்களில் மேற்கொள்ளப்படும் மீட்பு நடவடிக்கைகள் செயல் விளக்கங்கள் குறித்தும் குடியிருப்பு நலச்சங்கங்கள் உள்ளிட்ட தன்னார்வலர்கள் பங்கேற்ற, சேவையாற்றுவது குறித்தும், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் உள்ள குடியிருப்பு நலச்சங்கப் பிரதிநதிகள் மற்றும் தன்னார்வலர்களுடன் மாநகராட்சி உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் பங்கேற்று கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.</p><p>இக்கூட்டங்களில் மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நடைபெற்று வரும் பணிகள், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன வெள்ள மீட்பு மற்றும் நிவாரண மையங்கள், மையப்படுத்தப்பட்ட சமையல் கூடங்கள், மருத்துவமனைகள், அவசரகால அழைப்புகள், மீட்புப் படகுகள் வைக்கப்பட்டுள்ள விவரங்கள், குடிநீர் விநியோகம், தன்னார்வலர்களாக நம்ம சென்னை செயலியில் பதிவு செய்தல், குடியிருப்பு நலச் சங்கங்கத்தினர் உள்ளிட்ட தன்னார்வலர்களின் பங்களிப்பு உள்ளிட்ட அனைத்துத் தகவல்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி அலுவலர்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.</p><h2>மக்களை மீட்க செயல்விளக்கங்கள்</h2><p>மேலும் அரக்கோணத்தில் இருந்து வருகை புரிந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அவசர காலங்களில் மக்களுக்கான முன்னெச்சரிக்கைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள், குழந்தைகள் உள்ளிட்ட மக்களை மீட்டு பாதுகாத்திடும் செயல்விளக்கங்கள் வழங்கப்பட்டது.</p><p>இந்நிகழ்வுகளில், மாமன்ற உறுப்பினர்கள், பெருநகர <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை </a>மாநகராட்சி, சென்னை குடிநீர் வாரியம், நீர்வளத்துறை, மின்சாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, காவல் துறை உள்ளிட்ட தொடர்புடைய துறைகளின் அலுவலர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், அனைத்து குடியிருப்பு நல சங்கத்தினர், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>