<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 22 Jul 2026 11:49:06 +0000</lastBuildDate><item><title>முதல்வரின் காலை உணவு திட்டம்: பெயர் மாற்றம் செய்த த.வெ.க. அரசு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-ministers-breakfast-scheme-tvk-government-changes-the-name</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-ministers-breakfast-scheme-tvk-government-changes-the-name#comments</comments><guid isPermaLink="false">158a5908-a7c8-4770-bbbc-eb719090722a</guid><pubDate>Wed, 22 Jul 2026 11:48:35 +0000</pubDate><atom:updated>2026-07-22T11:48:35.233Z</atom:updated><atom:author><atom:name>Paramasivan S</atom:name><atom:uri>/api/author/2406196</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,தமிழக அரசு,TN govt,Kamarajar,காமராஜர்,காலை உணவு திட்டம்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,Chief Minister Vijay,தவெக அரசு,TVK Government,Chief Minister Breakfast Scheme</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/ql9nkf4n/koer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/ql9nkf4n/koer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் பெயரை 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என தவெக அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. </p><h2>காலை உணவுத் திட்டம்</h2><p>கடந்த தி.மு.க. ஆட்​சி​யில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை அரசு தொடக்​கப் பள்​ளி​களில் முதல்​வரின் காலை உணவுத் திட்டம் கொண்டு வரப்​பட்​டது. கடந்த 2022 செப்​.15-ம் தேதி அண்ணா பிறந்த நாளில் இத்​திட்​டத்தை அப்​போதைய முதல்​-அமைச்சர் மு.க.ஸ்டா​லின் தொடங்​கி​வைத்​தார்.</p><p>பின்​னர், அரசு உதவி​பெறும் தொடக்​கப் பள்​ளி​களுக்​கும் இத்​திட்​டம் விரிவுபடுத்​தப்​பட்​டது. விரி​வாக்க திட்​டத்தை ஸ்டா​லின் 2023 ஆக.25-ம் தேதி தொடங்​கி​வைத்​தார். தற்​போது 17.55 லட்​சம் மாணவ, மாணவி​கள் இத்திட்​டத்​தால் பயன்​பெற்று வரு​கின்​றனர்.</p> <h2>த.வெ.க. அரசு</h2><p>இந்​த சூழலில் தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்டு த.வெ.க. அரசு பொறுப்​பேற்​றுள்ள நிலை​யில், முதல்​வரின் காலை உணவுத் திட்​டத்தை 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை விரி​வாக்​கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.</p><p>இதன்படி தன் கொள்கை தலைவரான தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17-ந்தேதி முதல் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">விஜய்</a> அறிவித்துள்ளார். இதன்மூலம் 15 லட்சம் மாணவர்கள் இனி பள்ளிகளிலேயே காலை உணவு சாப்பிடுவார்கள்.</p> <h2>பெருந்தலைவர் காமராஜர்</h2><p>சமையலறை மற்றும் உபகரணங்கள் இருக்கும் பள்ளிகளில் செப்டம்பர் 17-ந்தேதியும், மற்ற பள்ளிகளில் அடுத்த ஒரு மாதத்துக்குள்ளும் இந்த திட்டம் தொடங்கப்படஉள்ளது. ஆக தமிழ்நாட்டில் இனி 34.36 லட்சம் மாணவர்களுக்கு பசிப்பிணி தெரியாது என்று கூறப்படுகிறது. </p><p>இந்நிலையில் முதல்வரின் காலை உணவு திட்டம் என்ற பெயரை <strong>'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்'</strong> என தவெக அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. </p> <h2>சத்துணவோடு முட்டை</h2><p>முன்னதாக ஏழை மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தை கொண்டுவந்தவர் பெருந்தலைவர் காமராஜர். அடுத்து புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது 1982-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிக்கூடங்களில் சத்துணவு வழங்கும் திட்டத்தை அறிவித்தார். </p><p>இதேபோல, முதல்-அமைச்சராக கலைஞர் கருணாநிதி இருந்தபோது சத்துணவோடு முட்டை வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்தநேரத்தில், 1-வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சுவை மிகுந்த காலை உணவு வழங்கும் திட்டத்தை கொண்டுவந்தார். தற்போது <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>காற்று நிரப்பியபோது லாரி டயர் வெடித்து வாலிபர் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-young-man-died-after-a-lorry-tire-burst-while-being-filled-with-air</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-young-man-died-after-a-lorry-tire-burst-while-being-filled-with-air#comments</comments><guid isPermaLink="false">aa77b077-d0f9-4716-b47e-f2efcdb8642e</guid><pubDate>Wed, 22 Jul 2026 11:37:50 +0000</pubDate><atom:updated>2026-07-22T11:37:50.388Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,Chengalpattu,செங்கல்பட்டு,Youth,வாலிபர்,Death,lorry,உயிரிழப்பு,லாரி,டயர் வெடித்தது,tire,Burst</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/bnqxo9sm/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வாலிபர் உயிரிழப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/bnqxo9sm/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>செங்கல்பட்டு, </p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">செங்கல்பட்டு</a> மாவட்டம், திருப்போரூர் பகுதியில் காற்று நிரப்பியபோது லாரி டயர் வெடித்த விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">உயிரிழந்தார்</a>.</p><h2>லாரி டயர் வெடித்தது</h2><p>சென்னை, சோழிங்கநல்லூர், காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார் (வயது38). இவர் தனது நண்பர் ஒருவருடன் திருப்போரூர் முருகன் கோவிலுக்கு பைக்கில் சென்றார். அப்போது நாவலூரில் உள்ள பஞ்சர் கடைக்கு பைக்கின் டயருக்கு காற்று பிடிப்பதற்காக சென்றார். அங்கிருந்த ஊழியர்கள் லாரி டயர் ஒன்றுக்கு பஞ்சர் ஒட்டி காற்று பிடித்து கொண்டு இருந்தனர். அதன் அருகில் சரவணகுமார் நின்று பார்த்துக் கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் திடீரென லாரி டயர் பலத்த சத்தத்துடன் வெடித்தது. </p><h2>வாலிபர் உயிரிழப்பு</h2><p>அப்போது வெடித்த லாரி டயர் பறந்து சென்று சரவணகுமார் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த சரவணகுமாரை மீட்டு பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சரவணகுமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>இப்படி செய்தால் தான்  விஜய்யை மக்கள் ‘ஹீரோ’வாக பார்ப்பார்கள்: பிரேமலதா கூறியதென்ன..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/only-if-he-does-this-will-people-view-vijay-as-a-hero-what-did-premalatha-say</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/only-if-he-does-this-will-people-view-vijay-as-a-hero-what-did-premalatha-say#comments</comments><guid isPermaLink="false">d44aa56b-1939-4c80-9cf2-eb134015b299</guid><pubDate>Wed, 22 Jul 2026 11:05:33 +0000</pubDate><atom:updated>2026-07-22T11:05:33.110Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,DMDK,தேமுதிக,Premalatha Vijayakanth,பிரேமலதா விஜயகாந்த்,திருத்தணி,Tiruthani Murugan Temple,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/itpbfy06/jai.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/itpbfy06/jai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர், </p><p>திருத்தணி முருகன் கோவிலில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தரிசனம் செய்தார். முருகப்பெருமானுக்கு 6 அடி உயரம் கொண்ட வெள்ளி வேல் காணிக்கை வழங்கி, தொடர்ந்து தங்க தேர் இழுத்து வேண்டுதலை நிறைவேற்றினார்.</p><h2>வேல் காணிக்கை</h2><p>பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:-</p><p>தேர்தலில் வெற்றி பெற்றால் திருத்தணி கோவிலில் வேல் காணிக்கை செலுத்துவதாக வேண்டி இருந்தேன். அதனை நிறைவேற்ற வந்துள்ளேன். தமிழக அரசு கோவில்களில் பக்தர்களுக்கு பாதுகாப்பு, குடி தண்ணீர், உணவு, போக்குவரத்து வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்த வேண்டும். பழனி முருகன் கோவில் நில மோசடி வழக்கில் யார் தவறு செய்தாலும் தண்டனை பெறுவார்கள். முருகனிடம் இருந்து தப்ப முடியாது.</p><h2>தமிழக அரசின் வன்மம்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தி.மு.க. எம்.எல்.ஏ. வை இரவோடு இரவாக கைது செய்யாமல் எச்சரித்து அனுப்பி இருக்கலாம். இது அரசின் வன்மத்தை காட்டுகிறது. வருகின்ற பட்ஜெட் தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இருக்க வேண்டும்.</p><h2>தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்</h2><p>நீட் தேர்வு விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் மக்களின் எண்ணங்களை புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது. முதல்-அமைச்சர் விஜய் மின் கட்டண உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தே.மு.தி.க. சார்பில் ஆகஸ்ட் 1-ந் தேதி ஒகேனக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.</p><h2>ரியல் ஹீரோ</h2><p>விவசாயிகளை காக்க தமிழக அரசு விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யவேண்டும். விவசாயிகளை காக்க <a href="https://www.dailythanthi.com/topic/vijay">விஜய்</a> சினிமாவில் சொன்னதை ரியல் லைப்பில் நிரூபித்தால் தான் ரியல் ஹீரோவாக மக்கள் பார்ப்பார்கள். இல்லையென்றால் வெறும் கண்துடைப்பாய் போய்விடும்.</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார்.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">திருத்தணி முருகப்பெருமானுக்கு பக்தியுடன் 6 அடி உயர வெள்ளி வேலை காணிக்கையாக சமர்ப்பித்தேன். <br><br>முருகப்பெருமானை தரிசித்து, தமிழ்நாடு மக்களின் நலன், வளம், அமைதிக்காக மனமாரப் பிரார்த்தித்தேன். <br><br>முருகப்பெருமானின் அருள் அனைவருக்கும் என்றும் துணையாக இருக்கட்டும். <br><br>வெற்றி வேல்! வீர… <a href="https://t.co/SkxKZTqeut">pic.twitter.com/SkxKZTqeut</a></p>&mdash; Premallatha Vijayakant (@PremallathaDmdk) <a href="https://x.com/PremallathaDmdk/status/2079854419014013064?ref_src=twsrc%5Etfw">July 22, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>நாகர்கோவில் சிறைக் கைதி சபரிவர்மன் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nagarkovil-prisoner-sabarivarman-murder-case-transferred-to-cbcid</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nagarkovil-prisoner-sabarivarman-murder-case-transferred-to-cbcid#comments</comments><guid isPermaLink="false">a2841366-1b4f-4370-9ef9-d5ca00318565</guid><pubDate>Wed, 22 Jul 2026 10:54:45 +0000</pubDate><atom:updated>2026-07-22T10:54:45.119Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nagercoil,நாகர்கோவில்,CBCID,சிபிசிஐடி,சிறைக்கைதி,சபரிவர்மன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/njk5hvat/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/njk5hvat/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி,</p><p>கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள ஈத்தங்காட்டை சேர்ந்தவர் சபரிவர்மன் (வயது 33). மாற்றுத்திறனாளி வியாபாரியான இவர் தனது வீட்டின் அருகே பெட்டிக்கடை நடத்தி வந்தார். அவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்ததாக கூறி, தென்தாமரைக்குளம் போலீசார் கடந்த 9-ந்தேதி சபரிவர்மனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.</p><p>அங்கு விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்த அவர், கடந்த 13-ந்தேதி சிறையில் வைத்தே அடித்துக் கொல்லப்பட்டார். அவரை சிறை வார்டன்கள் 3 பேர் மற்றும் 8 விசாரணை கைதிகள் சேர்ந்து கை கால்களை கட்டிப்போட்டு கொடூரமான முறையில் அடித்து கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து நேசமணிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகர்கோவில் சிறையின் வார்டன், தலைமை வார்டன், சிறைக் காவலர் மற்றும் 8 கைதிகள் என மொத்தம் 11 பேரை கைது செய்தனர்.</p><p>கைது செய்யப்பட்ட சிறை காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, நாங்குநேரி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். நாகர்கோவில் சிறையில் இருந்த 8 கைதிகளிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அந்த 8 கைதிகளும், பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.</p><p>இந்த நிலையில் சபரிவர்மன் கொலையில் கைது செய்யப்பட்டிருக்கும் கைதிகளில் அரவிந்த், அஜய் மற்றும் ஜெகன் ஆகிய 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர். இதற்காக போலீசார் தரப்பில் நாகர்கோவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதே நேரத்தில் சபரிவர்மன் கொலை நடந்த நாகர்கோவில் சிறையில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் சபரிநாதன் கொலை நடந்த அறையில் இருந்து தடயங்கள் மற்றும் ரேகைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.</p><p>இதற்கிடையே சபரிவர்மனின் செல்போன் மாயமாகியிருக்கும் விவரம் வெளியானது. அந்த செல்போனில் சில முக்கிய வீடியோ ஆதாரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அவரது செல்போன் யாரிடம் உள்ளது? என்பது தெரியாத நிலையில், அதை தேடி கண்டுபிடிக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டனர்.</p><p>இந்த நிலையில் சபரிவர்மன் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார். இதைத்தொடர்ந்து சபரிவர்மன் கொலை வழக்கு விசாரணை உடனடியாக கன்னியாகுமரி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. சபரிவர்மன் கொலை வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம், நேசமணி நகர் போலீசார் ஒப்படைத்துள்ளனர். அதனை பெற்றுக்கொண்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்க உள்ளனர்.</p><p>முதற்கட்டமாக அவர்கள் சபரிவர்மனின் மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அதன்பிறகு கைது செய்யப்பட்டிருக்கும் சிறை வார்டன்கள் மற்றும் கைதிகளை காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சமூக ஆர்வலர்கள் மொட்டையடித்து நூதன போராட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/social-activists-shave-their-heads-in-a-unique-protest-to-remove-sidewalk-encroachments</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/social-activists-shave-their-heads-in-a-unique-protest-to-remove-sidewalk-encroachments#comments</comments><guid isPermaLink="false">9bde959b-cc6c-4144-93b4-d3e87bb5225e</guid><pubDate>Wed, 22 Jul 2026 10:52:11 +0000</pubDate><atom:updated>2026-07-22T10:52:11.162Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Removal,Kovilpatti,மொட்டை,encroachment,நூதன போராட்டம்,footpath,நடைபாதை ஆக்கிரமிப்பு,சமூக ஆர்வலர்கள்,Social activists,அகற்றக்கோரி,Innovative struggle,கோவில்பட்டி,shaving</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/8wi8bttd/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மொட்டையடித்து நூதன போராட்டம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/8wi8bttd/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>கோவில்பட்டியில் நடைபாதை, சாலையோர ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றாத நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளைக் கண்டித்து, சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் மொட்டையடித்து, சங்கு ஊதி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><h2>ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மனு</h2><p>தூத்துக்குடி மாவட்டம், <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF">கோவில்பட்டி</a> பகுதிகளில் முக்கிய நடைபாதை மற்றும் சாலை ஒரங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி அலுவலகங்களில் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை மனுக்களை அளித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகளால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட போதிலும், பணிகள் முழுமையாக நடைபெறவில்லை. நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து உயிரிழப்புகளும், தொடர் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.</p><h2>மொட்டையடித்து நூதன போராட்டம்</h2><p>ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றாமல் அலட்சியம் காட்டி வரும் அதிகாரிகளை கண்டித்து கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் மற்றும் பயணியர் விடுதி முன்பு சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் மொட்டையடித்து, சங்கு ஊதி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AF%82%E0%AE%A4%E0%AE%A9%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">நூதன போராட்டம்</a> நடத்தினர். நகராட்சி அலுவலகம் முன்பு சமூக ஆர்வலர் கந்தவேல் என்பவரும், பயணியர் விடுதி முன்பு முருகன் என்பவரும் மொட்டையடித்துக்கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.</p><p>தொடர்ந்து கோரிக்கை மனுவை கோவில்பட்டி நகராட்சி பொறுப்பு பொறியாளர் சணல்குமாரிடமும், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகத்திலும் வழங்கினர். நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் மனு அளிக்கும் போது, உதவி கோட்டப் பொறியாளர் ரத்தினபாபுவிற்கும் சமூக ஆர்வலர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு சலசலப்பு நிலவியது. பின்னர் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். </p>]]></content:encoded></item><item><title>11 மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் ரூ.7.70 கோடி மதிப்பீட்டில் தீவிர சிகிச்சை பிரிவு மையம்: அமைச்சர்  தொடங்கி வைத்தார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-minister-opens-icu-centers-worth-7-7-crore-in-11-government-hospitals</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-minister-opens-icu-centers-worth-7-7-crore-in-11-government-hospitals#comments</comments><guid isPermaLink="false">7c459c51-7550-481d-8837-f20b2b34729d</guid><pubDate>Wed, 22 Jul 2026 10:42:00 +0000</pubDate><atom:updated>2026-07-22T10:42:00.263Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>hospital,intensive care,மருத்துவமனைகள்,தீவிர சிகிச்சை பிரிவு,அமைச்சர்Minister,தொடங்கி வைத்தார்,inaugurates</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/tnihoe4i/minister-arunraj.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/tnihoe4i/minister-arunraj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D">நலவாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ்</a> 11 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் ரூபாய் 7.70 கோடி மதிப்பீட்டில் 10 படுக்கை வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள தீவிர சிகிச்சை பிரிவு மையங்களை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.</p> <h2>தீவிர சிகிச்சை பிரிவு மையம்</h2><p> மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று (22.07.2026) சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள தேசிய நல்வாழ்வு குழும அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எச்டிஎப்சி வங்கி பரிவர்த்தனை நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின்கீழ் சிஎஸ்ஆர் (CSR) 11 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் ரூபாய் 7.70 கோடி மதிப்பீட்டில் 10 படுக்கை வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள தீவிர சிகிச்சை பிரிவு மையங்களை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.</p><h2>இணையதளம்</h2><p> தமிழ்நாடு முதல்-அமைச்சர் அரசு மருத்துவமனைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், நவீன மருத்துவ உபகரணங்களை கொண்டு பொதுமக்களுக்கு தரமான சிகிச்சைகளை வழங்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக தொழில் நிறுவன சமூக பொறுப்பு நிதியை (CSR) வெளிப்படைத்தன்மையுடனும், நன்கொடையாளர்கள் தாங்கள் விரும்பும் மருத்துவமனைக்கு அல்லது திட்டத்திற்கு நிதியை வழங்க ஏதுவாகவும்“நலம்TN” என்ற இணையதளம் (www.tnhealthfoundation.org) உருவாக்கப்பட்டுள்ளது.</p><h2> நவீன உபகரணங்கள்</h2><p>தற்பொழுது எச்டிஎப்சி வங்கி, பரிவர்த்தனை நிறுவனத்தின் சார்பில் கடலூர், தென்காசி, காஞ்சிபுரம், பெரம்பலூர், திருப்பத்தூர், ஈரோடு, மயிலாடுதுறை, ஓசூர், கோவில்பட்டி, பொள்ளாச்சி மற்றும் கும்பகோணம் ஆகிய 11 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் தலா ரூ.70 இ லட்சம் மதிப்பில் மொத்தம் ரூ. 7.70 கோடி மதிப்பீட்டிலான 10 படுக்கை வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவு மையங்கள் நவீன உபகரணங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த 11 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவு மையங்களை மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.</p> <h2>உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன</h2><p>ஒவ்வொரு தீவிர சிகிச்சைப் பிரிவிற்கும் 10 எண்ணிக்கையிலான ஏ.பி.எஸ் பேனல், மடக்கும் வசதி கொண்ட பக்கவாட்டு கைப்பிடிகள், 6 அங்குல சக்கரங்கள், குளுக்கோஸ் ஏற்றுவதற்கான வசதி மற்றும் 4 அங்குல மெத்தை கொண்ட 5 அம்ச மோட்டார் இயங்கு படுக்கைகள், ஒரு எக்ஸ்-ரே இயந்திரம், ஒரு ஈ.சி.ஜி இயந்திரம் , ஒரு இதயத் துடிப்பு சீராக்கி, 10 சிரிஞ்ச் பம்ப், 10 மல்டிபாரா மானிட்டர், குழந்தைகளுக்கான ஒரு வென்டிலேட்டர் , 2 பைபேப் இயந்திரம், 2 உறிஞ்சும் கருவி, ஒரு இரத்த வாயு பகுப்பாய்வி, பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஒரு வென்டிலேட்டர், ஆகிய உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.</p><p><strong>மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது,</strong></p><p>11 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 10 படுக்கை வசதி கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு எச்டிஎப்சி வங்கியின் சமூக பொறுப்பு நீதியின் கீழ் (CSR) தலா ரூபாய் 70 இலட்சம் மதிப்பில் மொத்தம் ரூபாய் 7.70 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 11 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள தீவிர சிகிச்சை பிரிவுகள் இன்றைய தினம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக அனைத்து தொழில் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் CSR மற்றும் இதர நன்கொடைகளை வழங்க வேண்டுமென இந்நிகழ்ச்சியின் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன். </p> <h2>கிட்னி திருட்டு</h2><p>கிட்னி திருட்டு தொடர்பாக வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு, தற்பொழுது நாமக்கல் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் மூலம் சம்பந்தப்பட்ட மருத்துவர்களின் மீது நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கிட்னி திருட்டு வழக்கில் நேர்மையான, எந்த ஒரு தலையீடும் இல்லாமல் சட்டத்திற்கு உட்பட்டு நியாயமான நடவடிக்கை எடுக்கப்படும்.</p><h2>டெங்கு பாதிப்பு</h2><p>தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் ஜூலை மாதத்தில் 2024 ஆம் ஆண்டில் 23000, 2025 ஆம் ஆண்டு 11000 என்ற எண்ணிக்கையில் இருந்தது. தற்போது 9000 எண்ணிக்கையில் டெங்கு பாதிப்பு உள்ளது. டெங்கு காய்ச்சலை தடுக்க அரசின் சார்பில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொசு ஒழிப்பு பணியாளர்கள் நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் கொசு ஒழிப்பு பணிகளில் நாள்தோறும் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களும் தங்கள் வசிப்பிடங்களுக்கு அருகே தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளில் பொதுமக்கள் தங்களுடைய முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.</p> <h2>அரசின் நிலைப்பாடு</h2><p>நீட் தேர்வை பொறுத்தவரையில் தமிழ்நாட்டு மக்களின் நிலைப்பாடே இந்த அரசின் நிலைப்பாடு. ஏழை கிராமப்புற மக்களை பாதிக்கும் நீட் தேர்வு தேவையில்லை என்பது இந்த அரசின் நிலைப்பாடு. நீட் தேர்வு என்பது மாநில உரிமைகளுக்கு எதிரானது. இது குறித்து ஏற்கனவே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.</p> <h2>நிரந்தர தீர்வு</h2><p>அறவழி முறையில் நடைபெறும் எந்த ஒரு போராட்டத்திற்கும் இந்த அரசு எதிராக இருக்காது. கல்வி என்பது மாநில பட்டியலில் இருக்க வேண்டும் என்பதே இது போன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு. இதை முதல்-அமைச்சர் ஏற்கனவே தெரிவித்துள்ளார். கல்வியில் அந்தந்த மாநிலங்கள் தங்களுடைய முடிவுகளை எடுக்கக் கூடிய வகையில் மத்திய அரசு உரிமைகளை வழங்க வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக நடைபெறும் மாணவர்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும்.</p> <h2>ஆலோசனைக் கூட்டம்</h2><p>நாய்க்கடி பாதிப்பு குறித்து மருத்துவத்துறை மற்றும் தொடர்புடைய துறைகளுடன் தலைமைச் செயலாளரிடம்  ஏற்கனவே ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார். இது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.</p> <h2>உரிய நடவடிக்கை</h2><p>தனியார் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் ஏற்கனவே இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. விதிமுறைகளை மீறி நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணத்தை வசூலிக்கும் கல்லூரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சித்த மருத்துவம் என்பது தமிழ்நாட்டின் பெருமை . சித்த மருத்துவத்தை தமிழ்நாட்டில் மேம்படுத்த வேண்டும். சித்த மருத்துவம் சார்ந்த வேலை வாய்ப்புகள் உருவாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்தார்.</p><p>இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு செயலாளர் தாரேஸ் அகமது, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அனீஷ் சேகர் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் சோமசுந்தரம், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் ராஜ்மோகன், எச்டிஎப்சி வங்கியின் துணைத் தலைவர் என். பிரேம் ஆனந்த், மண்டல மேலாளர்  ரமேஷ் வங்குரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p> ]]></content:encoded></item><item><title>கோவில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/deadline-extended-for-applying-for-the-appointment-of-non-hereditary-trustees-for-temples</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/deadline-extended-for-applying-for-the-appointment-of-non-hereditary-trustees-for-temples#comments</comments><guid isPermaLink="false">4ba3d011-728f-465c-a76b-382a1a01f8c0</guid><pubDate>Wed, 22 Jul 2026 10:30:10 +0000</pubDate><atom:updated>2026-07-22T10:30:10.341Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,temples,தமிழகம்,தமிழக அரசு,விண்ணப்பம்,இந்து சமய அறநிலையத்துறை,Board of Trustees,அறங்காவலர்கள்,தமிழக கோவில்கள்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,Minister ramesh,அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்,Deadline extended,tamilnadu temples</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/ke2vj97j/templ.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/ke2vj97j/templ.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 214 திருக்கோவில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. </p><h2>முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p><a href="https://www.dailythanthi.com/topic/vijay">தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்</a> அவர்களின் சீர்மிகு நல்லாட்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் அவர்களின் வழிகாட்டுதலின்படி இதுவரை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள 9,205 திருக்கோவில்களுக்கு பரம்பரை முறைவழிசாரா அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. </p><h2>அறங்காவலர்கள் நியமனம்</h2><p>இதில் சட்டப்பிரிவு 46(iii)-ன் கீழ் உள்ள 214 திருக்கோவில்களுக்கு பரம்பரை முறைவழிசாரா அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்காக கடந்த 14.06.2026 அன்று தமிழ் மற்றும் ஆங்கில முன்னணி நாளிதழ்களிலும், இத்துறையின் வலைதளத்திலும் விளம்பரம் செய்யப்பட்டது. விண்ணப்பங்களை 22.07.2026 மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><h2>இன்று இறுதிநாள்</h2><p>விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான இறுதிநாள் இன்றுடன் நிறைவடையும் நிலையில், பக்தர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, அதிகப்படியான தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக, விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் 12.08.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><h2>ஆகஸ்ட் 12ம் தேதி</h2><p>எனவே, இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுடைய விருப்பமுள்ள பக்தர்கள், நிர்ணயிக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, 12.08.2026 அன்று மாலை 5.45 மணிவரை இணையத்தளம் வாயிலாக பதிவேற்றம் செய்து / நேரில் / அஞ்சல் மூலமாக அந்தந்த திருக்கோவில் அமைந்துள்ள மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பலாம் என தெரிவிக்கப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு 10 நாட்கள் பயிற்சி முகாம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/10-day-training-camp-for-newly-appointed-district-congress-presidents</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/10-day-training-camp-for-newly-appointed-district-congress-presidents#comments</comments><guid isPermaLink="false">248bf62a-83ba-446c-8bb8-68e7c455444b</guid><pubDate>Wed, 22 Jul 2026 10:21:42 +0000</pubDate><atom:updated>2026-07-22T10:21:42.743Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,பயிற்சி முகாம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/li4am6zj/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/li4am6zj/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு 23-ந்தேதி(நாளை) தொடங்கி 1-ந்தேதி 10 நாட்கள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.ஏ. திட்டத்தின் மூலம் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுக்கு நாளை 23.07.2026 முதல் 01.08.2026 ஆம் தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சிக் கழக கடற்கரை விடுதியில் 10 நாட்கள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. அழைக்கப்பட்ட மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களை தவிர, வேறு எவரும் பயிற்சி முகாமில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>சமூக விரோதிகளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை: 1,155 பேரை கைது செய்து தமிழக காவல்துறை அதிரடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-operation-against-anti-social-elements-tamil-nadu-police-take-swift-action-arresting-1155-individuals</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-operation-against-anti-social-elements-tamil-nadu-police-take-swift-action-arresting-1155-individuals#comments</comments><guid isPermaLink="false">6676af23-e08b-4902-8f63-cab8ef37e317</guid><pubDate>Wed, 22 Jul 2026 10:10:08 +0000</pubDate><atom:updated>2026-07-22T10:10:08.881Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>arrest,TN Police,தமிழக காவல்துறை,சமூக விரோதிகள்,சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள்,சிறப்பு நடவடிக்கை,Special operation</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/qq158pen/huker.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/qq158pen/huker.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/topic/தமிழக-காவல்-துறை">காவல்துறை</a> தலைமை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில், முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு காவல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத்தலைவர் மகேஷ் குமார் அகர்வால் இ.கா.ப., அவர்களின் உத்தரப்படி மாநிலம் முழுவதும் சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் (History Sheet Rowdies), (Non-History Sheet Offenders), குற்ற குணத்தார் (Bad Characters), மற்றும் பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளிகளுக்கு எதிராக தீவிர அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.</p> <h2>1,155 குற்றவாளிகள் கைது</h2><p>கடந்த 15.07.2026 முதல் 21.07.2026 வரை, சரித்திரப்பதிவேடு ரவுடிகள் மற்றும் குற்றகுணத்தார் மீது மாநிலம் முழுவதும் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நடவடிக்கைகளின் போது 31,005 சரித்திரப்பதிவேடு ரவுடிகள் மற்றும் குற்றகுணத்தார் சோதனை செய்யப்பட்டனர், அவர்களில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 1,155 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.</p> <h2>பிடியாணைகள்</h2><p>பிணையில் வெளிவர முடியாத பிடியாணைகள் நிறைவேற்றும் சிறப்பு நடவடிக்கையில் 15.07.2026 முதல் 21.07.2026 வரை மொத்தம் 2,906 பிணையில் வெளிவர முடியாத பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணைகள் (NBW) நிறைவேற்றுதல் மற்றும் தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்வதற்கான தீவிர முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ள வழக்குகளில், பிணை அல்லது பத்திரப் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறும் குற்றம் சாட்டப்பட்ட எதிரிகள் மீது, பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 269-ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 384 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p> <h2>384 வழக்குகள்</h2><p>நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ள வழக்குகளில், பிணை அல்லது பத்திரப் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறும் குற்றம் சாட்டப்பட்ட எதிரிகள் மீது, பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 269-ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 384 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><h2>பிணை ரத்து</h2><p>மேலும், பிணை நிபந்தனைகளை மீறியுள்ளதுடன், தொடர்ந்து மீண்டும் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் குற்றம் சாட்டப்பட்ட எதிரிகளுக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்ய தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, மாநிலம் முழுவதும் உள்ள மாநகர காவல் ஆணையாளர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் சிறப்பு பிரிவு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் கள் இறக்க அனுமதி? - அமைச்சர் விக்னேஷ் பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/permission-to-import-toddy-in-tamil-nadu-minister-vignesh-responds</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/permission-to-import-toddy-in-tamil-nadu-minister-vignesh-responds#comments</comments><guid isPermaLink="false">d4c75939-3707-4faa-b2c0-ab9f9b8e032e</guid><pubDate>Wed, 22 Jul 2026 10:06:32 +0000</pubDate><atom:updated>2026-07-22T10:06:32.553Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,பொள்ளாச்சி,Pollachi,கோயம்புத்தூர்,கள் இறக்க அனுமதி,Minister Vignesh,அமைச்சர் விக்னேஷ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/19bzp4mb/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் விக்னேஷ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/19bzp4mb/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு அரசு பேருந்துகள் ரங்கே கவுண்டன்புதூர் மற்றும் வீரப்பகவுண்டனூர் வரை இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த பேருந்துகளை, கேரள எல்லை வரை இயக்கும் வகையில் புதிய வழித்தடத்தை கிணத்துக்கடவு பேருந்து நிலையத்திலிருந்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.</p><p>பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விக்னேஷ், "முதல் கட்டமாக பள்ளி, கல்லூரி, கோவில்கள் அருகே உள்ள 717 கடைகளை அரசு மூடி நடவடிக்கை எடுத்துள்ளது. இன்னும் சில கடைகள் இதுபோன்ற இடங்களுக்கு அருகே உள்ளன. இந்த நடவடிக்கை மீண்டும் தொடரும்" என்று கூறினார்.</p><p>தமிழகத்தில் பல ஆண்டுகளாக கள் இறக்க அனுமதி வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருவது குறித்த கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "கள் இறக்க அனுமதி அளிப்பது குறித்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவரது வழிகாட்டுதலுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-tomorrow-12</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-tomorrow-12#comments</comments><guid isPermaLink="false">ba90859e-7401-4e7f-978d-53963cfb117f</guid><pubDate>Wed, 22 Jul 2026 10:03:08 +0000</pubDate><atom:updated>2026-07-22T10:03:08.266Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,monthly maintenance work,மாதாந்திர பராமரிப்பு பணி,Power outage tomorrow,நாளை மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/vboan8mf/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/vboan8mf/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், வள்ளியூர் கோட்டம், களக்காடு துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>வள்ளியூர் கோட்டம்</h2><p>வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>களக்காடு துணை மின் நிலையத்தில் நாளை (23.7.2026, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணை மின் நிலையத்தில் மின்விநியோகம் தடை செய்யப்படும். இதன் காரணமாக பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் கீழே குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது.</p><h2>காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை</h2><p>களக்காடு நகரம், பெருமாள்குளம், சாலைபுதூர், SN பள்ளிவாசல், மாவடி, டோனாவூர், புலியூர் குறிச்சி, கோதைசேரி, வடமலைசமுத்திரம், கருவேலன்குளம், கோவிலம்மாள்புரம், வடுகச்சிமதில் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்: வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/beedi-leaves-worth-rs-1-crore-seized-while-trying-to-smuggle-them-to-sri-lanka-youth-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/beedi-leaves-worth-rs-1-crore-seized-while-trying-to-smuggle-them-to-sri-lanka-youth-arrested#comments</comments><guid isPermaLink="false">663449ca-e614-4fed-ad9c-d39a57edf1aa</guid><pubDate>Wed, 22 Jul 2026 09:50:53 +0000</pubDate><atom:updated>2026-07-22T09:50:53.038Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்செந்தூர்,Thoothukudi,தூத்துக்குடி,Youth arrested,வாலிபர் கைது,Seizure,பறிமுதல்,beedi leaves,smuggling,பீடி இலைகள்,கடத்தல்,Tiruchendur,லோடு வாகனம்,Load vehicle</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/yqwfufzk/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பீடி இலைகள் பறிமுதல், வாலிபர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/yqwfufzk/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்புள்ள <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பீடி இலைகள்</a> மற்றும் லோடு வாகனத்தை திருச்செந்தூர் பகுதியில் பறிமுதல் செய்த கியூ பிரிவு போலீசார் ஒரு வாலிபரை கைது செய்தனர். </p><h2>கியூ பிரிவு போலீசார் ரோந்து பணி</h2><p>தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர்  காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆலந்தலை அருகில் உள்ள செந்தூர் நகர் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தபடுவதாக கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கீதன், ராமர், ஏட்டுகள் இருதயராஜகுமார், இசக்கிமுத்து, காவலர்கள் பழனி, பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோர் இன்று அதிகாலையில் செந்தூர் நகர் கடற்கரை பகுதியில் ரோந்து பணிக்கு சென்றனர். </p><h2>ரூ.1 கோடி மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்</h2><p>அப்போது அவர்கள் அப்பகுதியில் சோதனையிட்டபோது, ஒரு லோடு வேனில் இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட தலா 35 கிலோ எடை கொண்ட 79 மூட்டை பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த பீடி இலைகளின் சர்வதேச மதிப்பு ரூ.1 கோடி ஆகும். </p><h2>வாலிபர் கைது</h2><p>இந்த கடத்தலில் ஈடுபட்ட குரும்பூர், குரங்கன் தட்டு, பழைய தெருவைச் சேர்ந்த ராஜா மகன் சூர்யா (வயது 26) <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்யப்பட்டுள்ளார். கியூ பிரிவு போலீசாரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், லோடு வாகனம் மற்றும் இந்த கடத்தலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட நபரையும் சுங்கத்துறை வசம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. </p>]]></content:encoded></item><item><title>சென்னையில் வீட்டில் தூங்கிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை: நேபாள வாலிபர் கைது  </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nepali-youth-arrested-for-sexually-harassing-a-woman-sleeping-at-home-in-chennais-choolaimedu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nepali-youth-arrested-for-sexually-harassing-a-woman-sleeping-at-home-in-chennais-choolaimedu#comments</comments><guid isPermaLink="false">bc7ccfdf-3361-437e-b1b7-1b8d4095ca10</guid><pubDate>Wed, 22 Jul 2026 09:48:35 +0000</pubDate><atom:updated>2026-07-22T09:48:35.583Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,கைது,arrest,பாலியல் தொல்லை,wine,நேபாள வாலிபர்</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/6acbu35t/3.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ கைது செய்யப்பட்ட கேஷப் குமார் போகடி]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை சூளைமேட்டில் பாலியல் வழக்கில் கைதான நேபாள வாலிபர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/6acbu35t/3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை </a>சூளைமேடு பகுதியில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த நேபாள நாட்டைச் சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>நடந்தது என்ன?</h2><p>சென்னையை அடுத்த சூளைமேடு பகுதியில் நேபாள நாட்டைச் சேர்ந்த வாலிபர் கேஷப் குமார் போகடி வசித்து வந்தார்.  நேற்று நள்ளிரவு போகடி தனது காதலியின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று அளவுக்கு அதிகமாக மது அருந்தினார். பின்னர் போதை தலைக்கேறிய அவர் அருகில் இருந்த பக்கத்து வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார். </p><p>அந்த வீட்டில் அசந்து தூங்கிக் கொண்டிருந்த 48 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கு போகடி பாலியல் ரீதியாக கடும் தொந்தரவு கொடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் அலறிக் கூச்சலிட்டார். </p><h2>பொதுமக்கள் தர்ம அடி</h2><p>பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள், அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து சூளைமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.</p><h2>கைது</h2><p>சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சூளைமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நேபாள வாலிபர்</a> கேஷப் குமார் போகடியை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த அதிர்ச்சி சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஜாமீன் மனு தள்ளுபடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-mla-markandeyan-bail-plea-rejected</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-mla-markandeyan-bail-plea-rejected#comments</comments><guid isPermaLink="false">3befd987-fc67-44be-a6dc-4584e9dd4183</guid><pubDate>Wed, 22 Jul 2026 09:45:37 +0000</pubDate><atom:updated>2026-07-22T09:45:37.397Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜாமீன் மனு,bail petition,திமுக எம்.எல்.ஏ,DMK MLA,மார்க்கண்டேயன்,Markandeyan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/avflmrhg/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/avflmrhg/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன், கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.</p><h2>15 நாள் நீதிமன்ற காவல்</h2><p>இந்த வழக்கில், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வை போலீசார் நேற்று முன்தினம் காலை கைது செய்தனர். பின்னர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் வைத்து அவரிடம் சுமார் 11 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப் பிறகு, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தூத்துக்குடி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி சுமதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.</p><p>அப்போது. அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் மனு தாக்கல் செய்தனர். ஆனால், அந்த மனுவை நீதிபதி நிராகரித்ததுடன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வை ஆகஸ்ட் 3-ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.</p><h2>ஜாமீன் மனு விசாரணை</h2><p>இதற்கிடையில், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. அதன்படி, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று தூத்துக்குடி கோர்ட்டில் நடைபெற்றது.</p><h2>ஜாமீன் மனு தள்ளுபடி</h2><p>இந்த நிலையில் விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனின் ஜாமீன் மனுவை தூத்துக்குடி நீதிமன்ற நீதிபதி சுமதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் சிறையில் இருப்பார்.</p>]]></content:encoded></item><item><title>பாரதிதாசன் பல்கலை.யில் முஸ்லிம்களுக்கான உள் இடஒதுக்கீடு மறுப்பு: உயர்மட்ட விசாரணைக்கு எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sdpi-calls-for-high-level-inquiry-into-denial-of-internal-reservation-for-muslims-at-bharathidasan-university</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sdpi-calls-for-high-level-inquiry-into-denial-of-internal-reservation-for-muslims-at-bharathidasan-university#comments</comments><guid isPermaLink="false">28b899d3-5b2d-4e83-8745-4f4888ca8217</guid><pubDate>Wed, 22 Jul 2026 09:42:41 +0000</pubDate><atom:updated>2026-07-22T09:42:41.775Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Reservation,இட ஒதுக்கீடு,பாரதிதாசன் பல்கலைக்கழகம்,Bharathidasan University,SDPI Party,எஸ்டிபிஐ கட்சி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/6rh4ewb3/mubara.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/6rh4ewb3/mubara.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மாணவருக்கு சேர வேண்டிய சட்டப்பூர்வமான உரிமையை மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். </p><h2>பாரதிதாசன் பல்கலைக்கழகம்</h2><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 2026–2027-ஆம் கல்வியாண்டிற்கான மருத்துவ இயற்பியல் (M.Sc. Medical Physics) முதுகலைப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான (BCM) 3.5 சதவீத சமூகநீதி உள் இடஒதுக்கீடு மறுக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.  எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.</p> <p>மொத்தம் 11 இடங்கள் கொண்ட இந்தப் பாடப்பிரிவில், 1 சதவீத இடஒதுக்கீடு கொண்ட பழங்குடியினர் (ST) மற்றும் 3 சதவீத உள் இடஒதுக்கீடு கொண்ட அருந்ததியர் (SCA) பிரிவினருக்கு 200-புள்ளி சுழற்சி முறைப்படி (200-Point Roster System) இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேவேளையில், 3.5 சதவீத இடஒதுக்கீடு கொண்ட பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த தகுதியான மாணவருக்கு இடம் மறுக்கப்பட்டுள்ளது. </p><h2>உண்மைக்கு மாறானது</h2><p>பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கமும் (AUT) பாதிக்கப்பட்ட மாணவரும் சுட்டிக்காட்டியுள்ளபடி, இடஒதுக்கீட்டு விதிகள் முறையாகப் பின்பற்றப்பட்டதாகப் பல்கலைக்கழக நிர்வாகம் கூறுவது முற்றிலும் உண்மைக்கு மாறானது. எதிர்காலத்தில் சேர்க்கை இடங்களை உயர்த்தப் பரிந்துரைப்பதாகக் கூறி மழுப்புவதும், மாணவருக்கு சேர வேண்டிய சட்டப்பூர்வமான உரிமையை மறுப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது.</p><h2>சமூகநீதிக் கொள்கை</h2><p>புகாரின் அடிப்படையில் உயர்கல்வித்துறை தலையிட்டுத் தற்போது சேர்க்கைப் பட்டியலை இடைநிறுத்தி வைத்துள்ள போதிலும், இந்த விவகாரம் ஒரு தனிப்பட்ட மாணவரின் சேர்க்கைப் பிரச்சினை மட்டுமல்ல. மாறாக, தமிழ்நாடு பல தசாப்தங்களாகப் போராடிப் பாதுகாத்து வரும் 'சமூகநீதிக் கொள்கை' உயர்கல்வி நிறுவனங்களில் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்ற மிகப்பெரிய அடிப்படைக் கேள்வியை எழுப்புகிறது.</p><p>எனவே, தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களும், உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்களும் இவ்விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டு, பாரதிதாசன் பல்கலைக்கழகம் உட்பட்ட அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் சமூகநீதி இடஒதுக்கீடு சுழற்சி முறைப்படி துல்லியமாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். </p> <h2>சமூகநீதியின் முகவரி</h2><p>மேலும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இடஒதுக்கீட்டு விதிமுறைகள் மற்றும் 200-புள்ளி ரோஸ்டர் முறை முறையாகப் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து நடுநிலையான அதிகாரிகளைக் கொண்டு உயர்மட்ட விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும். இவ்விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவருக்கு எவ்வித காலதாமதமுமின்றி உடனடியாகப் பாடப்பிரிவில் சேர்க்கை வழங்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.</p><p>சமூகநீதியின் முகவரியாக திகழும் தமிழ்நாட்டில், அரசுப் பல்கலைக்கழகத்திலேயே இடஒதுக்கீடு புறக்கணிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. தவறான வழிகாட்டுதலை வழங்கிய பல்கலைக்கழக அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, மாணவர்களின் உரிமையைப் பாதுகாக்க அரசு விரைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மு.க.ஸ்டாலினுடன் காவிரி விவசாய சங்க தலைவர்கள் சந்திப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/meeting-with-mk-stalin-by-cauvery-farmers-association-leaders</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/meeting-with-mk-stalin-by-cauvery-farmers-association-leaders#comments</comments><guid isPermaLink="false">f544e980-d673-49be-b289-2f04fe19a081</guid><pubDate>Wed, 22 Jul 2026 09:02:57 +0000</pubDate><atom:updated>2026-07-22T09:02:57.516Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,Cauvery,காவிரி,சந்திப்பு,leaders,தலைவர்கள்,DMK leader MK Stalin,Farmers&apos; Associations-விவசாயிகள் சங்கத்தினர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/0pwyyyok/agriculture.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலினுடன் காவிரி விவசாய சங்க தலைவர்கள் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/0pwyyyok/agriculture.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88">தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை </a>தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க தலைவர் ஈரோடு பி.கே. தெய்வசிகாமணி அவர்கள் தலைமையில் தமிழ்நாடு காவிரி விசாயிகள் தலைவர் எல்.பழனியப்பன், கௌரவ தலைவர் எஸ்.ராமதாஸ், பொதுச்செயலாளர் என்.செந்தில்குமார் மற்றும் மாநில நிர்வாகிகள்  சந்தித்தனர்.</p><h2>அண்ணா அறிவாலயம்</h2><p>தி.மு.க தலைவர்  மு.க.ஸ்டாலினை இன்று காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவர் ஈரோடு பி.கே. தெய்வசிகாமணி தலைமையில் தமிழ்நாடு காவிரி விவாசாயிகள் தலைவர் எல்.பழனியப்பன், கௌரவ தலைவர் எஸ்.ராமதாஸ், பொதுச்செயலாளர் என்.செந்தில்குமார் மற்றும் மாநில நிர்வாகிகள் சந்தித்தனர்.</p> <h2>உடனிருந்தனர்</h2><p>அப்போது துணை பொதுச்செயலாளர் க.பொன்முடி, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு..! வானிலை மையம் கொடுத்த அப்டேட்</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-in-chennai-today-update-from-the-meteorological-centre</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-in-chennai-today-update-from-the-meteorological-centre#comments</comments><guid isPermaLink="false">1244ca81-d8cc-4a55-a587-e7fdb0b63df0</guid><pubDate>Wed, 22 Jul 2026 09:01:42 +0000</pubDate><atom:updated>2026-07-22T09:01:42.242Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,Rain,Weather,வானிலை,தமிழகம்,Weather News,WeatherUpdate,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,வானிலை ஆய்வு மையம்,வானிலை அறிக்கை,Weather Report,வானிலை முன்னறிவிப்பு,Weather Status,வானிலை அறிவிப்பு,weather center</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/7jd3muac/raindd.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rain, மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/7jd3muac/raindd.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னையில் மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><h2>மழை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இதன் காரணமாக <strong>இன்று (22-07-2026) முதல் 24-07-2026 வரை</strong>: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>25-07-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>26-07-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>27-07-2026 மற்றும் 28-07-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong><ins>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</ins></strong></p><p><strong>22-07-2026 முதல் 26-07-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.</p><p><strong><ins>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</ins></strong></p><p><strong>22-07-2026 முதல் 26-07-2026 வரை:</strong> உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p> <h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று (22-07-2026)</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p><strong>நாளை (23-07-2026)</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>மீனவர்களுக்கான எச்சரிக்கை:</h2><p><strong><ins>தமிழக கடலோரப்பகுதிகள்:</ins></strong></p><p><strong>22-07-2026:</strong> எச்சரிக்கை ஏதுமில்லை. </p><p><strong>23-07-2026:</strong> தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>24-07-2026 மற்றும் 25-07-2026:</strong> எச்சரிக்கை ஏதுமில்லை.</p><p><strong>26-07-2026:</strong> தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><h2>அரபிக்கடல் பகுதிகள்:</h2><p><strong>22-07-2026 மற்றும் 23-07-2026:</strong> மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>24-07-2026 முதல் 26-07-2026 வரை:</strong> மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இன்று</p><h2>வங்கக்கடல் பகுதிகள்:</h2><p><strong>22-07-2026 முதல் 26-07-2026 வரை:</strong> எச்சரிக்கை ஏதுமில்லை.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.</p>]]></content:encoded></item><item><title>அமைச்சர்கள் ஜனநாயகன் திரைப்பட பணிகளில் மும்முரம் காட்டி வருவது வெட்கக்கேடானது - டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ministers-focus-on-jananayagan-film-is-shameful-says-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ministers-focus-on-jananayagan-film-is-shameful-says-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">1cdab6ae-36f1-467e-8336-f495f7b3366e</guid><pubDate>Wed, 22 Jul 2026 08:55:12 +0000</pubDate><atom:updated>2026-07-22T08:55:12.926Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,Jana Nayagan,அமைச்சர்கள்,ஜனநாயகன்,முதல்-அமைச்சர் விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/xqaw10yp/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/xqaw10yp/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>மக்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டிய அரசு நிர்வாகமும், அமைச்சர்களும் அதனை புறந்தள்ளி, ரசிகர் மன்ற நிர்வாகிகளாக நாளை வெளிவரவுள்ள ஜனநாயகன் திரைப்பட பணிகளில் மும்முரம் காட்டி வருவது வெட்கக்கேடானது.</p><p>தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள ரகுராமபுரத்தில் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட முட்டையில் கோழிக்குஞ்சு இறந்து அழுகிய நிலையில் இருந்ததாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.</p><p>பச்சிளம் குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றும் அங்கன்வாடி மையங்களில் அழுகிய நிலையில் வழங்கப்பட்டிருக்கும் முட்டை குழந்தைகளின் உடல் நலனையும், அவர்களின் ஆரோக்கியத்தையும் கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்திருக்கிறது.</p><p>மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய அரசு நிர்வாகமும், அமைச்சர்களும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் நடித்து வெளிவரவுள்ள ஜனநாயகன் திரைப்படத்தை கண்டுகளிக்க ஆர்வம் காட்டுவதும் அதற்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்து கொண்டிருப்பதும் வெட்கக்கேடானது ஆகும். </p><p>எனவே, குறிப்பிட்ட அங்கன்வாடி மையத்திற்கு முட்டைகளை விநியோகம் செய்த ஒப்பந்ததாரர் மீதும், கவனக்குறைவுடன் செயல்பட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுப்பதோடு, மாநிலம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்படும் முட்டை உட்பட அனைத்து விதமான ஊட்டச்சத்து உணவுப் பொருட்களின் தரத்தை உரிய ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என சமூக நலத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுடன் இலங்கை முன்னாள் எம்.பி. சுமந்திரன் சந்திப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/former-sri-lankan-mp-sumanthiran-meets-dmk-leader-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/former-sri-lankan-mp-sumanthiran-meets-dmk-leader-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">5cd831fc-4f00-4d5a-895c-be024cdfa74e</guid><pubDate>Wed, 22 Jul 2026 08:43:01 +0000</pubDate><atom:updated>2026-07-22T08:43:01.509Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,DMK,M.K.Stalin,தி.மு.க.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/x21rjmyp/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/x21rjmyp/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை இலங்கை முன்னாள் எம்.பி. சுமந்திரன் இன்று சந்தித்துள்ளார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று (22.7.2026) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இலங்கை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சி மூத்த தலைவருமான எம்.ஏ.சுமந்திரன் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>நெல்லையில் நாளை மாஞ்சோலை தொழிலாளர் நினைவு பேரணி: காங்கிரஸ் எம்.பி. ராபர்ட் புரூஸ் பங்கேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-tomorrow-mancholai-labour-memorial-rally-congress-mp-robert-bruce-participation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-tomorrow-mancholai-labour-memorial-rally-congress-mp-robert-bruce-participation#comments</comments><guid isPermaLink="false">e47e6b49-9667-4ebc-957d-5c7f189f1e71</guid><pubDate>Wed, 22 Jul 2026 08:33:07 +0000</pubDate><atom:updated>2026-07-22T08:33:07.867Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,காங்கிரஸ்,Congress,பங்கேற்பு,மாஞ்சோலை தொழிலாளர்கள்,Manjolai,participate</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/epkmntxc/robert-bruce.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எம்.பி. ராபர்ட் புரூஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/epkmntxc/robert-bruce.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நெல்லையில் நாளை மாஞ்சோலை தொழிலாளர் நினைவு பேரணி: காங்கிரஸ் எம்.பி. ராபர்ட் புரூஸ் பங்கேற்பு. இது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் அறிவித்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-</p> <h2>நினைவு பேரணி</h2><p>திருநெல்வேலியில் நாளை மாலை 3.00 மணியளவில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F">மாஞ்சோலை தேயிலை தோட்ட </a>தொழிலாளர்களின் வாழ்வுரிமைகளை பாதுகாக்க நடைபெறவுள்ள நினைவு பேரணியில், நாடாளுமன்ற உறுப்பினர் சி. ராபர்ட் புரூஸ், மாவட்ட தலைவர்கள் ராமேஸ்வரன் மற்றும் வி.பி. துரை ஆகியோர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் பங்கேற்கிறார்கள்.</p><h2>பங்கேற்பார்கள்</h2><p>இந்நிகழ்ச்சியில் மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற இந்நாள்- முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், மாநகர, நகர, வட்டார, பேரூர் மற்றும் கிராம கமிட்டி நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் அதன் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்பார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஜனநாயகத்திற்கு எதிரானது: ராகுல் காந்தி கைதுக்கு முதல்-அமைச்சர் விஜய் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/against-democracy-chief-minister-vijay-condemns-rahul-gandhis-arrest</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/against-democracy-chief-minister-vijay-condemns-rahul-gandhis-arrest#comments</comments><guid isPermaLink="false">c464a93b-846d-47f9-bc66-698ee02653cc</guid><pubDate>Wed, 22 Jul 2026 08:32:28 +0000</pubDate><atom:updated>2026-07-22T08:32:28.952Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Delhi,TVK,தவெக,Vijay,Tamilnadu,விஜய்,டெல்லி,தமிழகம்,protest,கைது,காங்கிரஸ்,Congress,ராகுல் காந்தி,Rahul Gandhi,arrest,போராட்டம்,மத்திய அரசு,Central Govt,நீட் தேர்வு,NEET Exam,மாணவர்கள்,students,NEET,நீட்,ஒன்றிய அரசு,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/wran0hva/cho.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/wran0hva/cho.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>டெல்லியில் ‘நீட்' தேர்வு முறைகேடு மற்றும் இளைஞர்கள் மீது தாக்குதல் நடந்த விவகாரத்தில், பிரதமர் மோடி பதவி விலகக்கோரி அவரது வீடு அருகே ராகுல்காந்தி, பிரியங்கா உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.</p><p>டெல்லியில் பிரதமர் இல்லம் இப்படி ஒரு முற்றுகைப் போராட்டத்தை இதுவரை கண்டதில்லை என்பதுபோல நேற்றைய போராட்டம் இருந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. </p><p>இந்நிலையில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு<a href="https://www.dailythanthi.com/topic/vijay"> தமிழக முதல்-அமைச்சர் விஜய்</a> கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><h2>மத்திய அரசுக்கு கண்டனம் </h2><p>துதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.</p><h2>த.வெ.க. ஆதரவு</h2><p>நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.</p><p>நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு. மாணவர்களை மட்டுமல்லாது அவர்களது குடும்பங்களையும்  வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம்.</p><h2>மாநிலப் பட்டியலில் கல்வி</h2><p>நீட் தேர்வு போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமெனில், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். </p><p>அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை, கட்சி தொடங்கியபோதே, நம் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவிலேயே ஆழமாக வலியுறுத்தி இருக்கிறோம்.</p><h2>நீட் தேர்வு அகற்றப்பட வேண்டும்</h2><p>நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும். இந்தச் சிக்கலுக்கு இது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பெண் பணியாளர்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு ...தமிழக அரசுக்கு ஐகோர்ட் பரிந்துரை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-court-recommends-menstrual-leave-for-female-employees-to-the-tamil-nadu-government%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-court-recommends-menstrual-leave-for-female-employees-to-the-tamil-nadu-government%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88#comments</comments><guid isPermaLink="false">c590a832-760f-44f7-94ec-9ea0deec6532</guid><pubDate>Wed, 22 Jul 2026 08:18:50 +0000</pubDate><atom:updated>2026-07-22T08:18:50.252Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai High Court,பெண்கள்,மதுரை ஐகோர்ட்,மாதவிடாய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/k8izl396/Madurai-hih-Court.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஐகோர்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/k8izl396/Madurai-hih-Court.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு உள்ளது. எனவே அனைத்து தரப்பு பெண் பணியாளர்களுக்கும் மாதவிடாய் கால விடுமுறை வழங்கு வது குறித்து முடிவு எடுப்பதுடன், கூலி வேலைக்கு செல்பவர்களும் பயன்பெறும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை இருக்க வேண்டும் என <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%20%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D">மதுரை ஐகோர்ட்டு</a> பரிந்துரைத்தது. மதுரை கோமதிபுரத்தை சேர்ந்த நர்மதா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-  தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டவைகளில் பணியாற்றும் பல பெண்கள், கடுமையான மாதவிடாய் கால வலியால் அவதிப்படுகின்ற னர். அதனை சமாளித்தபடியே பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது. இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டபோது, தமிழகத் தில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் கால விடுப்பு வழங்கும் கொள்கை இல்லை என தெரிவிக்கப்பட்டது.</p> <h2>சாத்தியக்கூறுகள் ஆய்வு</h2><p>பெண்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்க மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் மாதவிடாய் கால விடுப்பு கொள்கையை உருவாக்குவது நலத்திட்ட நடவடிக்கைதான். எனவே தமிழகத்தில் பணியாற்றும் பெண்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு வழங்கும் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய மாநில அளவிலான குழுவை அமைக்கவும், பெண்கள் நலனை கருத்தில் கொண்டு முழுமை யான ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குவது குறித்த கொள்கையை அரசு உருவாக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.</p><h2>கர்நாடகம், பீகார், கேரளம்</h2><p>இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்தி வேல் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில், இந்த விவகாரத்தை பொறுத்தவரை கர்நாடகம், பீகார், கேரளம் போன்ற மாநிலங்களில் ஏற்கனவே விடுமுறை உள்ளிட்ட வசதி கள் செய்யப்பட்டு உள்ளன. இதனை தமிழகத்திலும் அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என வாதாடினார். </p><p>பின்னர் நீதிபதிகள், தற்போது தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு உள்ளது. எனவே இப்போது மனுதாரரின் கோரிக்கை நிறைவேற்றுவது குறித்து அரசு உரிய ஆலோசனை நடத்தலாமே? இதில் நிறுவனங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் மட்டுமல்லாமல் கூலி வேலை செய்பவர்கள் உள்ளிட்ட பெண்கள் பயன்பெறும் வகையில் உரிய முடிவு எடுக்கலாமே? என கேள்வி எழுப்பி, பரிந்துரையாகவும் தெரிவித்தனர். முடிவில், இதுதொடர்பாக தொழிலாளர் நலத்துறை செயலாளர் வருகிற 28ந்தேதி பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title> மோடி அரசு அநாகரீக அணுகுமுறையை  கடைபிடிக்கிறது - மாணிக்கம் தாகூர் சாடல்

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/modi-government-adopts-an-uncivilized-approach-manickam-tagore-slams</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/modi-government-adopts-an-uncivilized-approach-manickam-tagore-slams#comments</comments><guid isPermaLink="false">1c5465ab-84cb-497f-a259-639f4fc8275b</guid><pubDate>Wed, 22 Jul 2026 08:14:44 +0000</pubDate><atom:updated>2026-07-22T08:14:44.026Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/f6lqz42s/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/f6lqz42s/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>மோடி அரசு அநாகரீக அணுகுமுறையைக் கடைபிடித்து ராகுல் காந்தியை கைது செய்ததாக தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. விமர்சனம் செய்துள்ளார். </p><h2>இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், </h2><h2></h2><p>நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் இளைஞர்கள் மீது தாக்குதல் நடைபெற்ற விவகாரத்தில் பிரதமர் மோடி, தர்மேந்திர பிரதானை பதவி நீக்க கோரி அவரது வீட்டின் அருகே தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த கொடுமை நிகழ்ந்துள்ளது. மக்களவை எதிர்கட்சித் தலைவர் என்ற பொறுப்பில் இருக்கும் ராகுல்காந்தியை மோடி அரசு இத்தகைய அநாகரீக அணுகுமுறையை கடைபிடித்து கைது செய்ததை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கின்றேன்.</p> <p><a href="https://www.dailythanthi.com/">நீட் வினாத்தாள்</a> கசிவு விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு தோல்வி காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20 ஆம் தேதி முதல் மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்ட சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கும் நாளில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்வதாக அறிவித்தார். தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அவர் சில நாட்களில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதேநாளில், நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்திய ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது, அமித்ஷாவின் காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. ஜனநாயக நாட்டில் ஊர்வலமாக சென்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தும் உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. மாணவர்கள் மீது தடியடி நடத்தியதில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் களத்தில் நின்று பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்டது ஆட்சியாளர்களை திக்குமுக்காடச் செய்துள்ளது.</p> <p>மாணவர்களின் எழுச்சியை சகித்துக் கொள்ள முடியாத பா.ஜ.க. அரசு இத்தகைய அடக்குமுறைகளை ஏவி வருகிறது. சர்வாதிகார நாட்டில் தான் இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளை காண முடியும். ஆனால், மோடி ஆட்சியில் சர்வாதிகார அணுகுமுறையோடு மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க நினைக்கும் நடவடிக்கைகளுக்கு மோடி அரசு மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன்.</p><p>இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்; தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rice-price-hike-must-be-controlled-anbumani-ramadoss-urges-tamil-nadu-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rice-price-hike-must-be-controlled-anbumani-ramadoss-urges-tamil-nadu-government#comments</comments><guid isPermaLink="false">34b44514-a35c-41c6-9e53-c30e3cb1c667</guid><pubDate>Wed, 22 Jul 2026 08:02:45 +0000</pubDate><atom:updated>2026-07-22T08:02:45.581Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,அரிசி,rice</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/qw0b7z3n/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/qw0b7z3n/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>15 நாளில் அரசி கிலோவுக்கு  ரூ.30 வரை உயர்ந்துள்ளதாகவும் அரிசி விலை உயர்வை  கட்டுப்படுத்த  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு பாமக தலைவர் <a href="https://www.dailythanthi.com/">அன்புமணி </a>ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். </p><h2>இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், </h2> <p>தமிழ்நாட்டில் கடந்த 15  நாள்களுக்கு முன் அரிசி விலை கிலோவுக்கு  ரூ.15 வரை உயர்ந்திருந்த நிலையில், இப்போது மீண்டும் கிலோவுக்கு  ரூ.3 முதல் ரூ.15 வரை உயர்த்தப்பட்டுள்ளது. வெறும் 15 நாள் இடைவெளியில் சாப்பாட்டு அரிசியின் விலை  கிலோவுக்கு ரூ.30 வரை உயர்ந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.</p> <p>இரு நாள்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.52க்கு விற்பனை செய்யப்பட்ட சாதாரண ரக பொன்னி அரிசி விலை இப்போது ரூ.8 விலை உயர்ந்து ரூ.60 ஆகியுள்ளது. மைசூர் பொன்னி, ஆந்திரா பொன்னி ஆகிய அரிசி வகைகளின் விலை 50 ரூபாயிலிருந்து ரூ.65 ஆக உயர்ந்துள்ளது. சன்னரக அரிசி விலை ரூ.64-லிருந்து ரூ.75 ஆக உயர்ந்திருக்கிறது. இட்லி அரிசி விலை கிலோ ரூ.43-லிருந்து ரூ.50 ஆக அதிகரித்துள்ளது. 26 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டை லை ரூ.250 முதல் ரூ.400 வரை உயர்ந்திருக்கிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>பருவ மழை பெய்யாததால் காவிரி பாசன மாவட்டங்களில் கோடை மற்றும் குறுவை பருவ சாகுபடி குறைந்தது தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டில் குறுவை, சம்பா, தாளடி ஆகிய 3 பருவங்களிலும் நெல் அமோகமாக விளைந்ததாலும், நடப்பாண்டில் குறுவை பருவம் இன்னும் முடிவடையாததாலும் இந்த காரணத்தை ஏற்க முடியவில்லை.</p> <p>அடுத்த சில மாதங்களில் அரிசி வரத்து குறையும் என்பதை எதிர்பார்த்து வணிகர்கள் செயற்கையாக விலையை உயர்த்தியிருப்பதாகவே உழவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. காரணம் என்னவாக இருந்தாலும் அரிசி விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படக் கூடாது.</p><p>அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த இந்தியாவிலிருந்து அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும்; மொத்த வணிகர்களின் அரிசி கையிருப்புக்கு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளின் மூலம் சந்தையில் அரிசியின் புழக்கத்தை அதிகரித்து விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>அதேபோல், மாநில அரசும் அதன் பங்குக்கு விலைக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அரிசி ஆலைகள், மொத்த வணிகர்கள் ஆகியோரிடம் உள்ள அரிசியில் 20 விழுக்காட்டை அடக்க விலைக்கு அரசே கொள்முதல் செய்து நியாயவிலைக்கடைகள், கூட்டுறவு விற்பனை அங்காடிகள் ஆகியவற்றின் மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முன்வர வேண்டும்.</p><p>இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் மாணவர்கள் மீது காவல்துறை தாக்குதல் - வைகோ கண்டனம் 

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-attack-on-students-in-delhi-vaiko-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-attack-on-students-in-delhi-vaiko-condemns#comments</comments><guid isPermaLink="false">724b9fcb-54dc-4bcb-b97a-9db9317220c2</guid><pubDate>Wed, 22 Jul 2026 07:56:24 +0000</pubDate><atom:updated>2026-07-22T07:56:24.957Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vaiko,வைகோ,மாணவர்கள் போராட்டம்,Students protest</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/7g1kq5md/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/7g1kq5md/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/">வைகோ </a>கண்டனம் தெரிவித்துள்ளார். </p><h2>வைகோ கண்டனம்</h2><p>இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், </p><p>நீட் தேர்வை  ரத்து செய்யக் கோரியும், நீட் கேள்வித் தாள் வெளியானதற்குக் காரணமான மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரியும் டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூலை 20 ஆம் நாள் இலட்சக்கணக்கான மாணவர்களும், கரப்பான் பூச்சி இயக்கத்தினரும் அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் காவல்துறை குண்டாந்தடிகளைக் கொண்டு போராட்டக்காரர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தியது. கண்ணீர்ப் புகை பிரயோகிக்கப்பட்டது. பல மாணவ - மாணவிகள் படுகாயமுற்றனர். டெல்லி நகரம் ஒரு ராணுவ கூடாரம் போல் காட்சி அளித்தது.</p> <p>தடியடியால் காயப்பட்ட மாணவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சியினரால் ஆங்காங்கு பாதுகாக்கப்பட்டனர். தடியடியில் காயமுற்ற மாணவர்கள் டெல்லியில் மண்டி ஹவுஸ் என்று அழைக்கப்படும் இடத்தில் உள்ள சுர்ஜித் பவனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் பேபி அவர்களும், அக்கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான பிருந்தா காரத் அம்மையாரும், நானும் ஆங்காங்கு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை ஊக்கப்படுத்திக் கொண்டே சுர்ஜித் பவனுக்குச் சென்றோம். தடியடியில் காயப்பட்ட மாணவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறி, உங்கள் போராட்டத்திற்கு நாங்கள் தோள் கொடுப்போம் - துணை நிற்போம் என்று உறுதி கூறினோம்.</p> <p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாணவர் பிரிவான எஸ்.எப்.ஐ. அமைப்பைச் சேர்ந்த மாணவ - மாணவியர் காலவரையறையற்ற உண்ணாநிலை அறப்போரில் ஈடுபட்டிருந்ததால் அதனைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு வேண்டி தோழர் பேபி அவர்கள், அவர்களுக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாநிலை அறப்போரை முடித்து வைத்தார்.</p><p>நான் அம் மாணவர்களிடையே போராட்டத்தை ஆதரித்து உரையாற்றும்போது,</p><p>“இந்த மாணவர் போராட்டம் நியாயமான காரணங்களுக்காக வெடித்து எழுந்த உரிமைப் போராட்டமாகும். தர்மேந்திர பிரதான் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும். நீட் தேர்வு முழுமையாக இரத்து செய்யப்பட வேண்டுமூ, நீட் கேள்வித் தாள் வெளியானதற்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மாணவ - மாணவிகள் மீது அராஜக தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறையினரை உடனடியான பணி நீக்கம் செய்ய வேண்டும். இப்போராட்டத்தை அடக்குமுறையால் ஒடுக்கிவிட முடியாது என மத்திய அரசுக்கு எச்சரிக்கிறேன்” என்று குறிப்பிட்டேன்.</p> <p>கரப்பான் பூச்சி இயக்கத்தினரும், எண்ணற்ற இளைஞர்களும் இப்போராட்டத்தில் எதற்கும் அஞ்சாமல் உறுதியாக நின்று போராடுகிறார்கள். இப்போராட்டத்திற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழம் தன்னுடைய முழுமையான ஆதரவை தெரிவிப்பதுடன், மத்திய அரசுக்கும், டெல்லி மாநில அரசுக்கும், காவல்துறைக்கும் வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதோடு, உரிமைக்காக, நியாயத்திற்காக, நீட் தேர்வை இரத்து செய்ய வேண்டும் என்பதற்காக கிளர்ந்தெழும் போராட்டத்தை காவல்துறையைக் கொண்டும், துணை இராணுவத்தைக் கொண்டும் அடக்க மேலும் முனைந்தால் அது புரட்சியாக வெடிக்கும் என எச்சரிக்கிறேன்.</p><p>இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் இன்று ஆலோசனை

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-secretary-to-hold-consultations-with-district-collectors-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-secretary-to-hold-consultations-with-district-collectors-today#comments</comments><guid isPermaLink="false">129ddc02-4063-459a-b042-8e8510e50c36</guid><pubDate>Wed, 22 Jul 2026 07:49:37 +0000</pubDate><atom:updated>2026-07-22T07:49:37.147Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chief Secretary,கலெக்டர்,தலைமை செயலாளர்,Collectors</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/g3gpb9ff/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/g3gpb9ff/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>தமிழக அரசின் தலைமை செயலாளர் <a href="https://www.dailythanthi.com/">சாய்குமார்</a>. இவர் இன்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.</p> <h2>மாலை ஆலோசனை</h2><p>காணொலி வாயிலாக இந்த ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம், வருவாய் உள்பட முக்கிய துறைகளின் செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து மாவட்ட கலெட்கர்களுடன் அவர் ஆய்வு செய்கிறார். இன்று மாலை 4.30 மணிக்கு ஆலோசனை கூட்டம் தொடங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி, சிவகங்கை மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-sivaganga-district-sps-change</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-sivaganga-district-sps-change#comments</comments><guid isPermaLink="false">a63f7561-8d1f-4e49-a1d1-9f2d5f8b3b5f</guid><pubDate>Wed, 22 Jul 2026 07:25:30 +0000</pubDate><atom:updated>2026-07-22T07:25:30.848Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,சிவகங்கை,Sivagangai,ஐ.பி.எஸ். அதிகாரிகள்,IPS Officers,எஸ்.பி.,tamilnadu police</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/0azxg8yw/CHENNAI-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/0azxg8yw/CHENNAI-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் 5 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.</p><p>அதன்படி, திருச்சி ஆயுதப்படை டி.ஐ.ஜி. எம்.விஜயலட்சுமி, சென்னை ஊர்க்காவல் படை டி.ஐ.ஜி.யாகவும், சென்னை சிபிசிஐடி எஸ்.பி. டி.சண்முகபிரியா, சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கு சரக எஸ்.பி.யாகவும், ராமேஸ்வரம் கோட்ட உதவி கண்காணிப்பாளர் பி.ஆர்.மீரா, சென்னை தலைமையிட கணினி பிரிவுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.</p><p>மேலும் தூத்துக்குடி எஸ்.பி. அபிஷேக் குப்தா, சிவகங்கை எஸ்.பி.யாகவும், சிவகங்கை எஸ்.பி. சிவபிரசாத், தூத்துக்குடி எஸ்.பி.யாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை: சாலையில் சென்ற தனியார் நிறுவன அதிகாரியிடம்  தங்கச் சங்கிலி பறிப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-gold-chain-snatched-from-a-private-company-official-on-the-road</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-gold-chain-snatched-from-a-private-company-official-on-the-road#comments</comments><guid isPermaLink="false">88d8b93e-6378-42e5-9656-69bbd9218251</guid><pubDate>Wed, 22 Jul 2026 07:16:11 +0000</pubDate><atom:updated>2026-07-22T07:16:11.809Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,கைது,arrest,தங்க சங்கிலி பறிப்பு,Gold chain snatched f</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/import/h-upload/2025/07/11/44173193-1.webp" width="750"><media:title type="html"><![CDATA[ தங்க சங்கிலி பறிப்பு]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை மயிலாப்பூர் சாலையில் நடந்து சென்ற அதிகாரியிடம் நகை பறிப்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/import/h-upload/2025/07/11/44173193-1.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மயிலாப்பூர்</a> சாலையில் நடந்து சென்ற தனியார் நிறுவன அதிகாரியிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டது.</p><p>வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன் (வயது 58). அவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். கிருஷ்ணன் தனது அலுவலக வேலை சம்பந்தமாக கடந்த 18- ந்தேதி சென்னை வந்தார். </p><h2>சங்கிலி பறிப்பு</h2><p>அவர்<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> சென்னை </a>மயிலாப்பூர் பகுதியில் உள்ள ஆர்.கே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பெண் ஒருவர் தனது பைக்கில் ஒரு ஆணை பின்னால் அமர வைத்து சென்றார். பைக்கின் பின்னால் உக்கார்ந்திருந்த நபர் கோபால கிருஷ்ணன் கழுத்தில் இருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்தார். பின்னர் அந்த நபர் பைக்கில் வந்த பெண்ணுடன் மின்னல் வேகத்தில் தப்பியோடிவிட்டார்.</p><h2>கைது</h2><p>இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணன் ராயப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். சம்பவம் நடந்த இடத்திலிருந்த கேமராவில் இந்த திருட்டு சம்பவம் பதிவாகியிருந்தது.</p><p>இதனைத் தொடர்ந்து தங்க சங்கிலியை பறித்த புளியந்தோப்பை சேர்ந்த முகமது உசேன் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தங்க சங்கிலி</a> மீட்கப்பட்டது. பைக்கை ஓட்டி வந்தது உசேனின் மனைவி என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கோவில் நில மோசடி விவகாரம்: பழனியில் 25-ந்தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-temple-land-scam-aiadmk-protest-in-dindigul-on-the-25th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-temple-land-scam-aiadmk-protest-in-dindigul-on-the-25th#comments</comments><guid isPermaLink="false">87925569-83af-4413-922b-4be1acc0f86e</guid><pubDate>Wed, 22 Jul 2026 05:57:10 +0000</pubDate><atom:updated>2026-07-22T07:12:47.035Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,Dindigul,திண்டுக்கல்,Palani temple,land scam,நில மோசடி,பழனி கோவில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/7a816wjm/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/7a816wjm/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><p>பழனி தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான, சுமார் ரூ. 100 கோடி மதிப்புள்ள நிலத்தை தனியாருக்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்த விவகாரம் பக்தர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மடத்திற்குச் சொந்தமான நிலம் சம்பந்தமாக முந்தைய திமுக ஆட்சியிலிருந்தே பல்வேறு புகார்கள் எழுப்பப்பட்டு வந்தன. ஐகோர்ட்டு மதுரை கிளையில் ஏற்கெனவே வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதாகத் தெரியவருகிறது.</p><p>இந்த மோசடியில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் மூன்று பேர் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களை காவல் துறையினர் தேடி வருவதாகவும் அரசு தரப்பிலேயே கூறப்படுகிறது. எனவே, பழனி, தண்டபாணி சுவாமிகள் மடம் நில விவகாரத்தில், இந்த அரசின் செயல்பாடுகள் சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது. இந்த கண்ணாமூச்சி விளையாட்டு நிறுத்தப்பட வேண்டுமென்றால், நடுநிலையான அமைப்பு ஒன்றின் சார்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.</p><p>இந்த நிலையில், பழனி தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த த.வெ.க. அரசைக் கண்டித்தும்; இவ்வழக்கை உடனடியாக சிபிஐ வசம் ஒப்படைக்க பொய்க்கால் குதிரை த.வெ.க. அரசை வலியுறுத்தியும், அதிமுக திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தின் சார்பில், 25-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9.30 மணியளவில், பழனியில் மயில் ரவுண்டானா, மத்திய பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.</p><p>இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், அதிமுக பொருளாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெறும். ஆர்ப்பாட்டத்தில், திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த, தலைமைக் கழக நிர்வாகிகள், கழக சட்டமன்ற உறுப்பினர்கள், கழகம் மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகளும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தென் மாவட்ட கனிமக் கொள்ளையை தடுக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mineral-theft-in-the-southern-district-must-be-stopped-anbumani-urges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mineral-theft-in-the-southern-district-must-be-stopped-anbumani-urges#comments</comments><guid isPermaLink="false">4885f080-0518-472b-a7f9-fc53723fb087</guid><pubDate>Wed, 22 Jul 2026 07:11:27 +0000</pubDate><atom:updated>2026-07-22T07:11:27.703Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,சென்னை,Anbumani Ramadas,கனிம வளக்கொள்ளை,Mineral resources,கனிம வளங்கள்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/import/h-upload/2026/01/11/44545852-chennai-11.webp" width="750"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ தென் மாவட்ட கனிமக் கொள்ளையை தடுக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தல்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/import/h-upload/2026/01/11/44545852-chennai-11.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டின் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களிலிருந்து கேரளத்திற்கு கனிமவளங்கள் கடத்தப் படுவது தொடர்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக பா.ம.க. தலைவர் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அன்புமணி ராமதாஸ் </a>வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டின் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களிலிருந்து கேரளத்திற்கு<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> கனிமவளங்கள் </a>கடத்தப்படுவது தொடர்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தின் வழியாக கனிமங்களைக்  கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ள நிலையில், தமிழ்நாட்டையும், கேரளத்தையும் இணைக்கும்  தேசிய நெடுஞ்சாலை 66-இன் வழியாக கனிமங்கள் கடத்தப்படுவது மட்டும் தான் நிறுத்தப்பட்டிருக்கிறதே தவிர,  தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து கேரளத்திற்கு தொடர்ந்து கனிமம் கடத்தப்படுவது கவலையளிக்கிறது.</p><h2>இந்தியாவின் பொக்கிஷம்</h2><p>இந்தியாவிற்கு இயற்கை கொடுத்த கொடையான மேற்குத் தொடர்ச்சி மலை குஜராத் மாநிலத்தில் தொடங்கி தமிழ்நாட்டில் 8 மாவட்டங்கள் வழியாக பயணித்து கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பு பகுதி வரை நீள்கிறது. பொக்கிஷமாக பாதுகாக்கப்பட வேண்டிய இந்த மலைப்பகுதி தமிழ்நாட்டில் கொலை செய்யப்படுகிறது. குறிப்பாக தென்காசி, நெல்லை மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதிகளில் கல்குவாரிகள் அமைக்கப்பட்டு கனிமக் கொள்ளை எல்லையில்லாமல் நடக்கிறது. கடந்த திமுக ஆட்சியில்தான் இந்தக் கொள்ளை உச்சத்தை அடைந்தது. நெல்லை, தென்காசி, குமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள குவாரிகளில் இருந்து கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு கேரளத்திற்கு கடத்தப்படுவது குறித்தும், திமுகவைச் சேர்ந்தவர் இந்தக் கடத்தலுக்கு காட்பாதராக திகழ்ந்தது குறித்தும் கடந்த காலங்களில் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினேன். திமுக ஆட்சி அகற்றப்படுவதற்கு கனிமவளக்கொள்ளையும் காரணமாக இருந்தது.</p><h2>கனிமங்கள் கடத்தல்</h2><p>முதலமைச்சர் விஜய்  தலைமையில் புதிய அரசு அமைக்கப்பட்ட பிறகாவது கனிமக் கொள்ளைக்கு முடிவு கட்டப்படும் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். அவர்களின் நம்பிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் பல மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலோட்டமாகப் பார்க்கும்போது இவை வரவேற்கத்தக்க மாற்றங்களாகத் தோன்றினாலும் களத்தில் இன்று வரை எந்த மாற்றமும் நிகழவில்லை; தென்காசி மாவட்டம் செங்கோட்டை, கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கனிமங்கள் கேரளத்திற்கு கடத்தப்படுவது இப்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது என புகார்கள் எழுந்துள்ளன.</p><h2>ஆய்வு நடத்துவது குறைவு</h2><p>கனிமக் கொள்ளையை கட்டுப்படுத்துவதற்காகாக தமிழக அரசுத் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் எந்த பயனும் விளையவில்லை. அரசு இயந்திரத்தை விட அதிநுட்பமான வலைப்பின்னலைக் கொண்டிருக்கும் கனிமவள மாஃபியா அதிகாரிகள் துணையுடன் அமைச்சரையும், அரசையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை ஆகும். கனிமவளக் கொள்ளை குறித்து ஆய்வு செய்ய அமைச்சர் அல்லது உயரதிகாரிகள் வருவதாக இருந்தால் அது குறித்து கனிமக் கொள்ளையர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படுகின்றன. அவர்களும் சுதாரித்துக் கொண்டு கனிமக் கொள்ளை நடக்கவில்லை என்று அமைச்சரை நம்ப வைப்பதற்கு தேவையான அனைத்தையும் செய்து விடுகின்றனர். அதுமட்டுமின்றி, கல் குவாரிகளில் அமைச்சர் ஆய்வு நடத்துவதும் அண்மைக்காலமாக குறைந்து விட்டது.</p><h2>கடத்தலின் போது ஏற்படும் விபத்துகள்</h2><p>தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு ஏற்பட்டிருக்கும் ஒரே மாற்றம் என்னவென்றால், நெடுஞ்சாலைகள் வழியாக இல்லாமல் குறுக்கு வழிகளில் கனிமங்கள் கடத்தப்படுவது தான். கன்னியாகுமரியை மராட்டிய மாநிலம் பன்வேலியுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 66இல் களியக்காவிளை சோதனைச்சாவடி வழியாகத் தான் கனிமவளங்கள் பெருமளவில் கடத்தப்பட்டு வந்தன. அதை நானே நேரடியாக பார்த்து பல தருணங்களில் ஆட்சியாளர்களுக்கு தெரிவித்தேன். அதுமட்டுமின்றி அதிக எண்ணிக்கையில் கனிமம் ஏற்றிச் செல்லும் சரக்குந்துகள் சென்றதால் ஏராளமான விபத்துகளும் ஏற்பட்டன. அதனால், களியக்காவிளை சோதனைச்சாவடி வழியாக கனிமங்களைக் கடத்திச் செல்வது குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.</p><h2>அளவுக்கு அதிகமாக நடைபெறும் கனிமக் கொள்ளை</h2><p>அதே நேரத்தில் தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச்சாவடி வழியாக வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையில் கனிமங்கள் கடத்திச் செல்லப்படுகின்றன. அதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையின் வழியாகத் தான் கனிமவளங்கள் கடத்தப்படவில்லையே தவிர, அம்மாவட்டத்தின் கொல்லங்கோடு, கோழிப்போர் விளை, ஊரம்பு, களியல் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக குறுக்கு சாலைகளில் புகுந்து கனிமங்களை ஏற்றிச் செல்லும் சரக்குந்துகள் கேரளத்திற்கு பயணிக்கின்றன. இதனால், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து கேரளத்திற்கு கனிமங்கள் கடத்தப்படுவது தடையின்றி தொடர்கிறது. இதனால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனிமக்கொள்ளையும் அளவுக்கு அதிகமாக நடைபெறுகிறது.</p><h2>தடை விதிக்க வேண்டும்</h2><p>தென் மாவட்டங்களில் கனிமக் கொள்ளையை தடுக்க வேண்டும் என்றால், தமிழ்நாட்டிலிருந்து கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு கருங்கல் ஜல்லி உள்ளிட்ட கனிமங்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட வேண்டும். ஆனால், அத்தகைய தடை இன்று வரை விதிக்கப்படவில்லை. அண்மையில் கூட, தமிழகத்தில் பற்றாக்குறை காலங்களில் கனிமவளங்களை கேரளத்திற்கு கொண்டு செல்லக் கூடாது என்று தான் தடை விதிக்கப்பட்டிருக்கிறதே தவிர, நிரந்தரத் தடை இன்று வரை அரசால் விதிக்கப்படவில்லை.</p><h2>குவாரிகள் மூட வேண்டும்</h2><p>தென் மாவட்டங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கனிமக் கொள்ளையை தடுத்து நிறுத்துவது முடியாத காரியமல்ல. அதற்குத் தேவை அரசியல் துணிச்சல் தான். கனிமக் கொள்ளை மாஃபியா உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து வரும் அழுத்தங்களைப் பற்றி கவலைப்படாமல் துணிச்சலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதன் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து கேரளா உள்ளிட்ட எந்த மாநிலத்திற்கும் கனிமவளங்களைக் கொண்டு செல்ல தமிழக அரசு தடைவிதிக்க வேண்டும்.- இரண்டாம் கட்டமாக, தென் மாவட்டங்களில் இருந்து கேரளம் செல்லும் சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கண்காணிப்பு காமிரா பொருத்துவதன் மூலம் கனிமவளம் கடத்தப்படுவதை கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் அவரது அலுவலக அறையிலிருந்தே கண்காணிக்க முடியும்; இதன் முலம் கனிமக் கடத்தல் குறையும். அடுத்ததாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் செயல்படும் சட்டவிரோத குவாரிகளை கருணை காட்டாமல் மூட வேண்டும்.</p><p>நான்காவதாக, சட்டவிரோதமாக கனிமங்களை வெட்டி எடுப்பவர்களுக்கு பெயரளவில் தண்டம் விதிப்பதை கைவிட வேண்டும்; மாறாக அவர்கள் வெட்டி எடுத்த கனிமத்தின் சந்தை மதிப்பை விட 100 மடங்கு அதிக தண்டம் விதிப்பதுடன், குற்றவாளிகளின் சொத்துகளை முழுமையாக முடக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><h2>சிபிஐ விசாரணை</h2><p>இவை அனைத்தையும் விட முக்கியமானது கடந்த காலங்களில் கனிமக் கடத்தலில் ஈடுபட்டவர்களையும், அவர்களை ஊக்குவித்தவர்களையும் தண்டிப்பது தான். முந்தைய திமுக ஆட்சியில் அதிகாரம் பெற்றிருந்த காட்பாதர்களும், மாஃபியாக்களும் தான் கனிமக் கடத்தலுக்கு துணையாக இருந்தன. இது இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் இது குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும். எந்த அளவுக்கு கனிமக் கொள்ளை நடந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதை கனிமக் கொள்ளையர்களிடம் இருந்து வசூலிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய துணிச்சலான நடவடிக்கைகள் மூலம் கனிமவளக் கொள்ளையை அரசு முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>செந்தில் பாலாஜி கோரிக்கை நிராகரிப்பு - கைது செய்ய போலீஸ் திட்டம்?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/senthil-balajis-request-rejected-police-plan-to-arrest-him</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/senthil-balajis-request-rejected-police-plan-to-arrest-him#comments</comments><guid isPermaLink="false">d88a4f37-2c4d-4cfa-b6ca-6942a446fa7e</guid><pubDate>Wed, 22 Jul 2026 07:04:54 +0000</pubDate><atom:updated>2026-07-22T07:04:54.416Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>போலீஸ்,சென்னை ஐகோர்ட்டு,Chennai High Court,Senthil Balaji,செந்தில் பாலாஜி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/jud0fw6x/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/jud0fw6x/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுக்களில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><p>ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் எங்களுக்கு ஐகோர்ட்டு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. ஐகோர்ட்டு விதித்துள்ள  நிபந்தனையை கண்டிப்புடன் பின்பற்ற தயாராக உள்ளோம். அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கணக்கு தீர்க்க வேண்டியுள்ளதாக வெளிப்படையாக பேசியுள்ளார். </p><h2>துன்புறுத்தக் கூடாது</h2><p>அதன்படி, ஏதேனும் ஒரு வழக்கில் எங்களை கைது செய்ய காவல் துறையினருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. குதிரை பேர வழக்கில் தங்களை காவலில் வைத்து விசாரிக்க அவசியமில்லை என ஐகோர்ட்டு முன் ஜாமீன் வழங்கிய பின்னும், தொடர்ந்து சோதனைகள் நடத்தப்படுகின்றன. சட்டப்படியான எந்த புலன் விசாரணையயும் தடுக்கவில்லை.</p><p>காவல் துறையில் நிலுவையில் உள்ள ஏதேனும் வழக்குகளின் விசாரணைக்கு நாங்கள் தேவைப்படுவதாக இருந்தால், பிஎன்எஸ்எஸ் சட்டத்தின் 35(3) வது பிரிவின் கீழ் முறையாக நோட்டீஸ் அனுப்ப காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும். எந்த விசாரணைக்கும் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதால், சோதனை, விசாரணை என்ற பெயரில் எங்களை துன்புறுத்தக்கூடாது என காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருப்பந்தது.</p><h2>மனுக்கள் தள்ளுபடி</h2><p>இந்த மனுக்கள், நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவில் பொத்தாம் பொதுவான உத்தரவை கோருவதாலும், பல குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளதாலும், மனுவுக்கு விரிவான பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என அரசு தலைமை குற்றவியல் வக்கீல் ஜான் சத்யன் கோரிக்கை விடுத்தார்.</p><p>செந்தில்பாலாஜி, அசோக்குமார் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, குதிரை பேர வழக்கில் முன் ஜாமீன் பெற்ற மனுதார்ர்களை வேறு வழக்குகளில் கைது செய்யக் கூடும் என அச்சம் உள்ளது. வழக்குகளின் விசாரணையில் தலையிடவில்லை. மாறாக விசாரணைக்கு அழைத்து சட்டப்படி நோட்டீஸ் அனுப்பவேண்டும் என மட்டுமே கேட்கின்றோம். விசாரணை என்ற பெயரில் துன்புறுத்த கூடாது என உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.</p><p>இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குதிரை பேர வழக்கில் முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மனுதாரர்கள் இன்னும் சரணடைந்து முன் ஜாமின் பெறவில்லை. இந்த சூழ்நிலையில், தங்களை துன்புறுத்தக் கூடாது என கோர முடியாது. மற்ற வழக்குகளை பொருத்தவரை, முன்கூட்டியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், மனுதாரர் கோரியபடி எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, இருவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.</p><p>இதன்மூலம் செந்தில் பாலாஜியின் கோரிக்கையை ஐகோர்ட்டு நிராகரித்துள்ளது. மேலும் கோர்ட்டு உத்தரவுபடி இன்று வரை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி, சகோதரர் அசோக் குமார் ஆஜராகாததால் அவர்களை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>மெரினாவில் ரூ.78.40 லட்சம் மதிப்பில் குளிா்சாதன பேருந்து நிறுத்தம் - டெண்டர் வெளியீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tender-for-construction-of-air-conditioned-bus-stand-at-marina-worth-rs-7840-lakhs</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tender-for-construction-of-air-conditioned-bus-stand-at-marina-worth-rs-7840-lakhs#comments</comments><guid isPermaLink="false">42fd346d-68cc-43dc-bb99-86e63297368c</guid><pubDate>Wed, 22 Jul 2026 05:33:10 +0000</pubDate><atom:updated>2026-07-22T05:33:10.113Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மெரினா,மெரினா கடற்கரை,Marina beach,பேருந்து நிறுத்தம்,Bus Stops,AC Bus</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/skybexw3/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/skybexw3/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் மாநகர பஸ் சேவையை நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இதேபோல, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மூலம் நாள்தோறும் 3 ஆயிரத்து 600 பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.</p><p>இந்த நிலையில் அதிகரித்து வரும் வெயில் தாக்கத்தை கருத்தில் கொண்டு ஏ.சி. வசதி கொண்ட பஸ் நிறுத்தங்கள் அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் முடிவு செய்தது. அந்த வகையில் சென்னையில் பெரம்பூர், கொளத்தூர், ராயபுரம், துறைமுகம் ஆகிய 4 இடங்களில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் ஏ.சி.வசதியுடன் கூடிய பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டது.</p><p>இதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா காமராஜர் சாலையில் உள்ள அண்ணா சதுக்கத்தில் ஏ.சி. வசதியுடன் கூடிய நவீன பஸ் நிறுத்தம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான டெண்டரை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. மொத்தம் ரூ.78.40 லட்சம் மதிப்பீட்டில் இந்த பஸ் நிறுத்தம் அமைக்கப்பட இருக்கிறது. விருப்பமுள்ள ஒப்பந்ததாரர்கள் ஆகஸ்டு 5-ந் தேதிக்குள் இணையதளம் வாயிலாக டெண்டர் கோரி விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வு ரத்தே நிரந்தர தீர்வு: மு.க.ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/neet-exam-rate-is-a-permanent-solution-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/neet-exam-rate-is-a-permanent-solution-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">53701240-4153-4cb5-899b-69f5ddbbb3ae</guid><pubDate>Wed, 22 Jul 2026 05:08:20 +0000</pubDate><atom:updated>2026-07-22T05:08:20.904Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,M.K.Stalin,நீட் தேர்வு,NEET Exam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/kynd0c8o/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/kynd0c8o/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><p>டெல்லியில் மாணவர்கள் நடத்தும் போராட்டம் தற்போது நாடுமுழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. பெரிய அளவிலான முறைகேடுகளை சாத்தியமாக்கும் வகையில் நீட் தேர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று நாங்கள் தான் முதலில் எச்சரித்தோம். </p><p>அதனால்தான் திமுக ஆரம்பத்திலிருந்தே நீட் தேர்வை எதிர்த்து, அது ஏற்படுத்தும் ஆபத்துகளை தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது. சமூக நீதியைப் பாதுகாப்பதில் இந்தியாவிற்கு தலைமை தாங்கி, முதல் அரசியலமைப்பு சட்ட திருத்தத்திற்கு வழிவகுத்த தமிழ்நாட்டிற்கு ஒரே ஒரு கோரிக்கைதான் உள்ளது. அது நீட் ஒழிப்பு. </p><p>மற்ற எந்த கோரிக்கையையும் விட, நீட் தேர்வை ஒழிப்பதுதான் இந்தப் போராட்டங்களின் மையமாக இருக்க வேண்டும். நீட் தேர்வை ஒழிப்பது மட்டுமே இந்தப் பிரச்சினைகள் அனைத்திற்கும் ஒரு நிரந்தரத் தீர்வை வழங்கும். #நீட் தேர்வை தடை செய்யுங்கள் #மாணவர்களை காப்பாற்றுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை: ரெயில் பயணிகளின் செல்போன்களை பறித்த இளைஞர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-youth-arrested-for-snatching-cellphones-from-train-passengers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-youth-arrested-for-snatching-cellphones-from-train-passengers#comments</comments><guid isPermaLink="false">32027450-a384-4c86-b118-4b422ac2345f</guid><pubDate>Wed, 22 Jul 2026 04:57:50 +0000</pubDate><atom:updated>2026-07-22T04:57:50.508Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,கிரைம் செய்தி,Chennai,சென்னை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/tfc82krw/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/tfc82krw/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/">சென்னை </a>பேசின்பிரிட்ஜ் - வியாசர்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே இயக்கப்படும் ரெயில்களில் தண்டவாள ஓரத்தில் நின்று ரெயில் பயணிகளை குச்சியால் தாக்கி செல்போன்கள் பறிப்பு சம்பவங்கள் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.</p><h2>இளைஞர் கைது</h2><p>தகவலின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பேசின்பிரிட்ஜ் - வியாசர்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள ஓரத்தில் நின்று ரெயில் பயணிகளை குச்சியால் தாக்கி செல்போன் பறித்து வந்த ஹரி பாபு (வயது 24) என்ற இளைஞரை கைது செய்தனர். </p><p>கைது செய்யப்பட்ட  ஹரி பாபு மீது ஏற்கனவே 25 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட ஹரி பாபுவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். </p> ]]></content:encoded></item><item><title>தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசப்பட்ட விவகாரம்:  கரூரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முகாம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/issue-regarding-attempted-bargaining-with-tvk-mla-enforcement-directorate-officials-camp-in-karur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/issue-regarding-attempted-bargaining-with-tvk-mla-enforcement-directorate-officials-camp-in-karur#comments</comments><guid isPermaLink="false">5590d63f-ce35-4a0e-9e1e-2a5d487d2b3a</guid><pubDate>Wed, 22 Jul 2026 04:36:31 +0000</pubDate><atom:updated>2026-07-22T04:36:31.587Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,கரூர்,Enforcement Directorate,அமலாக்கத்துறை,Karur</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/0zdhjlyj/ED.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமலாக்கத்துறை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/0zdhjlyj/ED.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக வெற்றிக் கழக ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் பேரம் பேசப்பட்ட வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் ரூ.3 கோடிக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட் டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. </p><h2>டவுன் போலீசார் சோதனை</h2><p>ஆனால், அவர்கள் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து முன்ஜாமீன் பெற்றுக்கொண்ட னர். இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக கடந்த 18-ந் தேதி இரவு கரூ ரில் உள்ள கனகராஜ் என்பவருக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் கரூர் டவுன் போலீசார் சோதனை நடத்தி அந்த நிறுவனத்திற்கு 'சீல்' வைத்திருந்தனர். </p> <h2>அமலாக்கத்துறை முகாம்</h2><p>இந்த சோதனையில் குதிரை பேர வழக்கு தொடர்பாக சில ஆவணங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக அமலாக்கத் துறை அதிகாரிகள் 6 பேர் கரூர் சென்று முகாமிட்டுள்ளனர். த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசப்பட்ட வழக்கு தொடர்பாக கரூரில் உள்ள அலுவலகங்களில் விரைவில் சோதனை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>லோடு ஆட்டோவை ஏற்றி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/man-who-killed-police-sub-inspector-by-loading-auto-gets-life-sentence</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/man-who-killed-police-sub-inspector-by-loading-auto-gets-life-sentence#comments</comments><guid isPermaLink="false">c4a61e86-f98d-46f2-b73a-de2bd46b2538</guid><pubDate>Wed, 22 Jul 2026 04:17:33 +0000</pubDate><atom:updated>2026-07-22T04:17:33.227Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,police,Thoothukudi,தூத்துக்குடி,ஆயுள் தண்டனை,கிரைம் செய்திகள்,life sentence,Sub Inspector,போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/b43unnlz/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/b43unnlz/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே வாழவல்லான் கொற்கை விலக்கு பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால். இவருடைய மகன் முருகவேல் (வயது 44). மெக்கானிக்கான இவர் மோட்டார் சைக்கிள் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். இவர் கடந்த 31.1.2021 அன்று இரவு மது குடித்து விட்டு ஏரல் பாரதியார் ரோட்டில் தள்ளுவண்டி கடையில் தகராறு செய்தார். இதுகுறித்து ஏரல் போலீஸ் நிலையத்துக்கு தொலைபேசி மூலம் தகவல் கிடைத்தது.</p><h2>மோட்டார் சைக்கிள் பறிமுதல்</h2><p>உடனே போலீஸ்காரர் பொன் சுப்பையா சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது, குடிபோதையில் இருந்த முருகவேலின் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றார். பின்னர் அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் பாலு (55) மோட்டார் வாகன வழக்கு பதிவு செய்து, மோட்டார் சைக்கிளை போலீஸ் நிலையத்தில் நிறுத்தி உள்ளனர். மறுநாள் விசாரணைக்கு ஆஜராகி மோட்டார் சைக்கிளை எடுத்து செல்லுமாறு கூறி அனுப்பி உள்ளனர்.</p><h2>லோடு ஆட்டோவை ஏற்றி கொலை</h2><p>பின்னர் 1.2.2021 அன்று அதிகாலை 12.45 மணிக்கு கொற்கை நாலுமுக்கு ரோட்டில் சப்-இன்ஸ்பெக்டர் பாலு, போலீஸ்காரர் பொன் சுப்பையா ஆகியோர் மோட்டார் சைக்கிளில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு லோடு ஆட்டோவில் முருகவேல் நின்று கொண்டு இருந்தார். அவரை போலீசார் சத்தம் போட்டு விட்டு சென்றனர்.</p><p>இதனால் ஆத்திரமடைந்த முருகவேல், தான் திருடி வைத்து இருந்த லோடு ஆட்டோவை வேகமாக ஓட்டி சென்று, வாழவல்லான் ஊர்காத்த சுவாமி கோவில் முன்பு சென்று கொண்டிருந்த போலீசாரின் மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இதில் பலத்த காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் பாலு பரிதாபமாக இறந்தார். போலீஸ்காரர் பொன் சுப்பையா காயம் அடைந்தார்.</p><h2>ஆயுள் தண்டனை</h2><p>பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து, ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி 2-வது கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா, குற்றம் சாட்டப்பட்ட முருகவேலுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சேவியர் ஞானப்பிரகாசம் ஆஜரானார்.</p>]]></content:encoded></item><item><title>ராகுல் காந்தி கைது: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rahul-gandhis-arrest-minister-aadhav-arjuna-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rahul-gandhis-arrest-minister-aadhav-arjuna-condemns#comments</comments><guid isPermaLink="false">abe39c8d-c37c-40ae-8512-22587fe18bcb</guid><pubDate>Wed, 22 Jul 2026 03:03:08 +0000</pubDate><atom:updated>2026-07-22T03:03:08.648Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Aadhav Arjuna,ஆதவ் அர்ஜுனா,ராகுல் காந்தி,Rahul Gandhi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/vua68fkb/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/vua68fkb/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பொதுப்பணி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><p>'நீட் தேர்வு' என்ற தகுதித் தேர்வு மருத்துவ மாணவர்களுக்கு கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பு வந்தபோதே, அதற்கான முதல் எதிர்ப்புக் குரல் தமிழகத்தில் இருந்துதான் ஒலித்தது; தொடர்ந்து தமிழகத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. </p><p>தமிழகத்தின் எதிர்ப்புக் குரலை இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் எதிரொலிக்கிறது. அகில இந்திய அளவில் மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிரான அறப் போராட்டங்களை ஜனநாயக வழியில் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அந்த மாணவர்களின் அறவழிப் போராட்டத்தின் நியாயங்களை உணராமல் அவர்களை குண்டுக்கட்டாகத் தூக்கியும், கடுமையாகத் தாக்கியும் மத்திய அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. </p><p>அதேபோல், டெல்லியில் நடைபெற்ற இளைஞர்களின் அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தியும் டெல்லி காவல்துறையால் இழுத்துச்செல்லப்பட்டும் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றும் கைது செய்யப்பட்டிருப்பது ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமான தாக்குதல்; வன்மையான கண்டனத்திற்குரிய செயல்.</p><p>மாணவர்களின் நலனுக்கு எதிராக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வை எதிர்த்து, எழுச்சிமிக்க போராட்டத்தை முன்னெடுக்கும் மாணவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, மத்திய அரசு உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். அதுபோல், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ஒவ்வொரு அடியையும் மிக உறுதியாக எடுத்து வைப்போம். மாணவர்கள் நலனுக்கும், மாணவர்கள் உரிமைக் குரலுக்கும் என்றும் துணையிருப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டு மக்களுக்கு பட்டால்தான் புத்தி வரும் - திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF#comments</comments><guid isPermaLink="false">b9182dbf-95ea-4f95-beaf-a7af007ef5f0</guid><pubDate>Wed, 22 Jul 2026 02:54:58 +0000</pubDate><atom:updated>2026-07-22T02:54:58.634Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,சிவாஜி கிருஷ்ணமூர்த்தி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/yybd8ai9/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/yybd8ai9/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/">திமுக </a>தலைமை கழக பேச்சாளர் பொறுப்பில் இருந்தவர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. இவர் கவர்னர் ஆர்.என்.ரவி, பாஜக நிர்வாகி குஷ்பு உள்ளிட்டோரை ஆபாசமாக பேசி சர்ச்சையில் சிக்கினார். இந்த சர்ச்சை பேச்சை தொடர்ந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு பின்னர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார். அதேவேளை, ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் ஜாமினில் உள்ளார்.</p><p>இந்நிலையில், சென்னையில் நேற்று திமுக நிர்வாகியின் கட்பீஸ் பழனியின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி கலந்துகொண்டார்.</p><p>இந்த நிகழ்ச்சியில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பங்கேற்றார். அப்போது அவர் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையிலான கருத்துகளை தெரிவித்தார்.</p><h2>சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது, </h2><p>சில பேருக்கு சொன்னால் புரியும்... சில பேருக்கு அனுபவித்தால்தான் தெரியும். ஆனால் தமிழக மக்களுக்கு பட்டால்தான் புத்தி வரும் என்பதற்கு உதாரணம் இந்த 2026 தேர்தல்.</p><p>திமுக தொடங்கி 75 ஆண்டு காலத்தில் தமிழகத்திற்கும், மக்களுக்கும் பல்வேறு திட்டங்களை கொடுத்தோம். கடந்த 5 ஆண்டில் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அள்ளி  வழங்கினார். ஒருநாளைக்கு 24 மணிநேரம் அதில் 21 மணிநேரம் மக்களுக்காக உழைத்து தன் வாழ்வை தேய்த்துக்கொண்டவர் மு.க.ஸ்டாலின் தவிர இந்த உலகில்&nbsp;யாரும் இல்லை. </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><p>தமிழக மக்களுக்கு பட்டால்தான் புத்தி வரும் என்பதற்கு உதாரணம் என்று சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>லண்டனில் இருந்து முதல்-அமைச்சர் விஜய்க்கு வந்த புகார்... என்ன தெரியுமா...?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/complaint-received-from-london-to-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/complaint-received-from-london-to-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">178bba7d-ed1a-4fa1-9a0f-9569071ef124</guid><pubDate>Wed, 22 Jul 2026 02:47:47 +0000</pubDate><atom:updated>2026-07-22T02:47:47.542Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,London,லண்டன்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/u9vaqabw/CHENNAI-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/u9vaqabw/CHENNAI-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>விருதுநகர் மாவட்டம், என்.ஜி.ஓ., காலனியை சேர்ந்தவர் சீனித்தாய், ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரிடம், ஓய்வூதிய பலன், மாதம் ஓய்வூதியம் பெற, கள்ளிக்குடி வட்டார கல்வி அலுவலர் முத்துக்குமார், 40,000 ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.</p><p>இந்நிலையில் லண்டனில் பொறியாளராக பணியாற்றும் அந்த ஆசிரியையின் மகன் சதீஷ், அங்கிருந்து முதல்-அமைச்சர் விஜய் அறிவித்த 'லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கும்' தமிழக அரசின் வாட்ஸ்-அப் எண் மூலம், முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பியுள்ளார்.</p><p>அதில், என் தாய் சீனித்தாய் ஓய்வு பெற்ற பின் ஓய்வூதிய ஒப்புதல் நடவடிக்கைகளுக்கு தடையில்லா மற்றும் நிலுவையில்லா சான்று பெற, பி.இ.ஓ.,வுக்கு, 40,000 ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளார். ஓய்வூதிய பலன்கள் கிடைத்த நிலையில், மாத ஓய்வூதியம் கிடைக்கவிடாமல் இழுத்தடிக்கின்றனர். ஓய்வூதியம் கிடைக்கவும், 40,000 ரூபாயை திரும்ப பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>இதுதொடர்பாக முத்துக்குமார் கூறுகையில்," இதுகுறித்த புகார் மீது திருமங்கலம் தொடக்கக்கல்வி டி.இ.ஓ., விசாரணை நடத்தி புகாரில் உண்மை இல்லை என அறிக்கை அளித்து விட்டார். நான் யாரிடமும் பணம் கேட்கவில்லை" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>அன்று.. தவறை தட்டி கேட்ட போலீஸ் அதிகாரி; இன்று.. தவறை சுட்டிக்காட்டும் ஆசிரியை!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/back-then-the-police-officer-who-asked-for-a-mistake-today-the-teacher-who-points-out-the-mistake</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/back-then-the-police-officer-who-asked-for-a-mistake-today-the-teacher-who-points-out-the-mistake#comments</comments><guid isPermaLink="false">8a4a0bed-ca48-475a-96b9-42cac0c8fa46</guid><pubDate>Wed, 22 Jul 2026 02:03:54 +0000</pubDate><atom:updated>2026-07-22T02:03:54.276Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Teacher,ஆசிரியை,போலீஸ் அதிகாரி,Police Officer,Chennai police,சீமா அகர்வால்,Seema Agrawal</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/tksk4dv9/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/tksk4dv9/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>ஐ.பி.எஸ். அதிகாரி</h2><p>தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் டி.ஜி.பி.யாக இருந்த சீமா அகர்வால் கடந்த மாதம் (ஜூன்) ஓய்வு பெற்றார். கடந்த 1990-ம் ஆண்டு பேட்ஜ் ஐ.பி.எஸ். அதிகாரியான இவர், தமிழ்நாடு காவல்துறையில் பல முக்கிய பொறுப்புகளில் பதவி வகித்து திறமையாக பணியாற்றியுள்ளார். இவர் காவல் துறை பணியோடு சமூக நலனிலும் அக்கறை கொண்டவர். பணியில் இருந்தபோதே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் மாநகராட்சி பள்ளியில் 6, 7, 8-ம் வகுப்புகளில் மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடம் நடத்தினார்.</p><h2>உயர்நிலைப்பள்ளி</h2><p>இந்தநிலையில் ஓய்வு பெற்ற சீமா அகர்வால், தனது சமூக பணிக்கு ஓய்வு கொடுக்காமல், சென்னை தேனாம்பேட்டையில் எல்டாம்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 6, 7-ம் வகுப்புகளுக்கு ஆங்கிலம், கணித பாடம் நடத்துகிறார். இதற்காக அவர் ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்ததில் மாநகராட்சியும் அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து கடந்த 3 வாரங்களுக்கு முன்பு அவர் தனது ஆசிரியை பணியை தொடங்கியுள்ளார். காலையில் தலா 40 நிமிடம் என 2 பாட வேளையை நடத்தி வருகிறார்.</p><h2>ஒரு அம்மாவாக...</h2><p>இதுகுறித்து சீமா அகர்வால் 'தினத்தந்தி' நிருபரிடம் கூறுகையில், "பணி ஓய்வு பெற்ற பின் ஏழை மாணவர்களுக்காக சிறு சேவையாக இதனை செய்கிறேன். 'கற்றலில் மகிழ்ச்சி' என்பதில் மாணவர்கள் எளிதில் புரிந்து படிக்கும் வகையில் ஆங்கிலம், கணித பாடங்களை நடத்துகிறேன்.</p><p>மாணவர்களுக்கு வீட்டில் சொல்லிக்கொடுப்பதற்கு சில நேரங்களில் பெற்றோரால் முடியாது. அதனால் என்னால் முடிந்த சிறு உதவியாக ஒரு அம்மாவாக இருந்து செயல்படலாம் என நினைத்து இதனை நடத்தி வருகிறேன்" என்றார்.</p><h2>மாணவர்கள் நெகிழ்ச்சி</h2><p>சீமா அகர்வால் நடத்தும் பாடமுறை எளிதில் புரியும் வகையில் இருப்பதாக மாணவர்கள் நெகிழ்ச்சி அடைகின்றனர். மாணவர்களுக்கு தேவையான எழுதுபொருட்கள், உதவிகளை வழங்குவதால் அவர்களும் உற்சாகமாக கற்கின்றனர். அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தவர், ஆசிரியையாக மாறி, மாணவர்களுக்காக நேரத்தை ஒதுக்கி சீமா அகர்வால் ஆற்றி வரும் கல்வி சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர்.</p>]]></content:encoded></item></channel></rss>