<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 09 Aug 2026 20:28:21 +0000</lastBuildDate><item><title>12 ஆண்டுகளாக வளர்த்த மரங்கள்... கண் முன்னே வெட்டப்படுவதை பார்த்து கதறி அழுத பெண் - வைரல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-wails-as-she-watches-trees-she-nurtured-for-12-years-being-cut-down-right-before-her-eyes-video-goes-viral</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-wails-as-she-watches-trees-she-nurtured-for-12-years-being-cut-down-right-before-her-eyes-video-goes-viral#comments</comments><guid isPermaLink="false">06026e32-de06-4808-995f-e93f795c977b</guid><pubDate>Sun, 09 Aug 2026 20:00:55 +0000</pubDate><atom:updated>2026-08-09T20:00:55.955Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கள்ளக்குறிச்சி,Video,மரங்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/56psg4t2/ma.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே, மின்கோபுரம் அமைப்பதற்காக விவசாய நிலத்தில் வளர்த்து வந்த 89 மரங்கள் வெட்டப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மரங்களை குழந்தைகளைப் போல வளர்த்து வந்த பெண், அவை வெட்டப்படுவதை பார்த்து கதறி அழுத காட்சி அப்பகுதி மக்களை கண்கலங்க வைத்தது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/56psg4t2/ma.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சி,</p><p>கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே, மின்கோபுரம் அமைப்பதற்காக விவசாய நிலத்தில் வளர்த்து வந்த 89 மரங்கள் வெட்டப்பட்டநிலையில்,  மரங்களை வளர்த்து வந்த பெண், அவை வெட்டப்படுவதை பார்த்து கதறி அழுத காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. </p><h2>12 ஆண்டுகளாக வளர்த்த மரங்கள்</h2><p>வடதொரசலூர் கிராமத்தைச் சேர்ந்த லோகநாதனின் மனைவி செல்வி (58), தனது விவசாய நிலத்தில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு மகோகனி, தேக்கு, தென்னை உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வந்தார்.</p><p>இதற்கிடையில், அவரது விவசாய நிலத்தின் வழியாக உயர் அழுத்த மின்பாதை அமைக்க மின்வாரிய அதிகாரிகள் திட்டமிட்டனர். இதற்கு செல்வியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. தங்கள் நிலத்தில் பல ஆண்டுகளாக மரங்களை வளர்த்து வருவதால், வேறு வழியாக மின்பாதையை அமைக்குமாறு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.</p><h2>உயர் அழுத்த மின்கோபுரம் அமைப்பு</h2><p>இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்வியின் நிலத்தில் உயர் அழுத்த மின்கம்பத்திற்கான கோபுரம் அமைக்கப்பட்டு, மின் கம்பிகளும் பொருத்தப்பட்டன. அப்போது மரங்களுக்கு இழப்பீடாக ரூ.97 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p>இந்நிலையில், விவசாய நிலத்தில் இருந்த 89 மரங்களை மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் வெட்டி அகற்றினர்.</p><h2>மரங்களை கட்டிப்பிடித்து கதறி அழுத செல்வி</h2><p>தான் பல ஆண்டுகளாக வளர்த்து வந்த மரங்கள் வெட்டப்படுவதை பார்த்த செல்வி அதிர்ச்சியடைந்தார். மரங்களை வெட்ட வேண்டாம் என கதறிய அவர், வெட்டப்பட இருந்த மரங்களை கட்டிப்பிடித்துக் கொண்டு கண்ணீர் விட்டு அழுதார்.</p><h2>அரசு பள்ளிக்கு நிலம் தானம்</h2><p>செல்வி, அதே பகுதியில் அரசு பள்ளி கட்டுவதற்காக 40 சென்ட் நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="und" dir="ltr">“10 ஆண்டுகளாக வளர்த்த மரங்கள்!” | Kallakurichi | trees <a href="https://t.co/pPn9ovQOIo">https://t.co/pPn9ovQOIo</a> <a href="https://x.com/hashtag/Kallakurichi?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Kallakurichi</a> <a href="https://x.com/hashtag/TamilNadu?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TamilNadu</a> <a href="https://x.com/hashtag/TreeCutting?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TreeCutting</a> <a href="https://x.com/hashtag/Farmers?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Farmers</a></p>&mdash; Thanthi TV (@ThanthiTV) <a href="https://x.com/ThanthiTV/status/2086485993839030641?ref_src=twsrc%5Etfw">August 9, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>என்ஜினீயரிங் படிப்புக்கான துணை கலந்தாய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/supplementary-counselling-for-engineering-studies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/supplementary-counselling-for-engineering-studies#comments</comments><guid isPermaLink="false">1a0bf400-c4fa-4c6c-b318-6075e4021ce3</guid><pubDate>Sun, 09 Aug 2026 19:40:41 +0000</pubDate><atom:updated>2026-08-09T19:40:41.056Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Directorate of Technical Education,தொழில்நுட்ப கல்வி இயக்ககம்,என்ஜினீயரிங் கலந்தாய்வு,பொறியியல் சேர்க்கை,Engineering Admission,engineering counseling</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/rvopgjx2/6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/rvopgjx2/6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பிளஸ்-2 துணைத் தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவ- மாணவிகள் மற்றும் பொதுக்கலந்தாய்வில் விண்ணப்பிக்காதவர்கள் வருகிற 17-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். </p><p>என்ஜினீயரிங் படிப்புக்கான இதுவரை நடந்து முடிந்த சிறப்பு கலந்தாய்வு மற்றும் முதல் சுற்று கலந்தாய்வில், 28 ஆயிரத்து 979 மாணவ-மாணவிகளுக்கு ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப் பட்டு சேர்க்கை பெற்று வருகின்றனர். பி.ஆர்க். கலந்தாய்வில் பொது பிரிவில் 622 பேரும் மற்றும் அரசு பள்ளியில் படித்து 7.5 சதவீத ஒதுக்கீட்டில் 40 பேரும் ஒதுக்கீட்டு ஆணைகள் பெற்றுள்ளனர். அவ்வாறு இறுதியாக ஒதுக்கப்பட்ட இடங்கள் www.tneaonline.org என்ற இணையத ளத்தில் வெளிப்படைத்தன்மையுடன் கொடுக்கப்பட்டுள்ளது. </p><p>தற்போது 2-வது சுற்று கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 60 ஆயிரத்து 508 ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட் டுள்ளன. 2-வது சுற்று கலந்தாய்வு செயல்பாடுகள் 17-ந்தேதி வரை நடைபெற இருக்கின்றன. அதனைத் தொடர்ந்து 3-வது சுற்று கலந்தாய்வு தொடங்கி நடைபெறும்.</p><p>அதன் தொடர்ச்சியாக துணைக்கலந்தாய்வு நடைபெற உள்ளது. அதற்காக பிளஸ்-2 துணைத் தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவ- மாணவிகள் மற்றும் பொதுக்கலந்தாய்வில் விண்ணப்பிக்காதவர்கள் வருகிற 17-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கான துணைக்கலந்தாய்வு அடுத்த மாதம் (செப்டம்பர்) 3-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை நடைபெறும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.</p><p>கலந்தாய்வு மற்றும் ஒதுக்கீடு பற்றிய விளக்கங்கள் தேவைப்படின் தமிழ்நாடு முழுவதும் உள்ள 110 தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையங்களை தொடர்பு கொண்டோ அல்லது நேரில் சென்றோ தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளலாம். அதன் முகவரி மற்றும் தொடர்பு எண்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மாணாக்கர்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைபேசி மூலம் தங்கள் கலந்தாய்வு தொடர்பான சந்தேகங்களையும் மற்றும் ஒதுக்கீட்டாணை பற்றிய விளக்கங்கள் பெற வேண்டி பத்து இணைப்புகளுடன் கூடிய அழைப்பு மையம் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அழைப்பு எண்: 1800-425-0110. இது தொடர்பாக, மாணாக்கர்கள் tneacare@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மாநில சட்ட ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி நியமனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/retired-chief-justice-appointed-as-chairman-of-state-law-commission</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/retired-chief-justice-appointed-as-chairman-of-state-law-commission#comments</comments><guid isPermaLink="false">89185d8b-3267-4b90-b433-614b46643c73</guid><pubDate>Sun, 09 Aug 2026 19:18:18 +0000</pubDate><atom:updated>2026-08-09T19:18:18.347Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>TN State Law Commission,Tamil Nadu Legal Department,தமிழ்நாடு மாநில சட்ட ஆணையம்,தமிழ்நாடு சட்டத்துறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/uz1e1ovi/5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/uz1e1ovi/5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்தின் தலைவராக மணிப் பூர் ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், உறுப்பினராக சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி ஆர்எம்டி. டீக்காராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>சட்ட ஆணையம்</h2><p>இதுகுறித்து தமிழ்நாடு சட்டத்துறை செயலாளர் பி.சுமதி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு சட்ட ஆணையம் ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒருமுறை அமைக்கப்படும். ஏற்கனவே அமைக்கப்பட்ட ஆணையம் கடந்த ஜூன் 18-ந்தேதியுடன் முடிவுக்கு வந்து விட்டது. அதனால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு புதிய சட்ட ஆணையம் அமைக்கப்படுகிறது. இந்த மாநில சட்ட ஆணையத்தின் தலைவராக, மணிப்பூர் ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் நியமிக்கப்படுகி றார். அதேபோல இந்த ஆணையத்தின் முழு நேர உறுப்பினராக சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி ஆர்எம்டி. டீக்காராமன், முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர் டி.கே.ராமச்சந்திரன், முன்னாள் செயலாளர் ஏ.அருணகிரி. பகுதி நேர உறுப்பினர்களாக முன்னாள் மாவட்ட நீதிபதிகள் பி.மோகன்தாஸ், ஆர்.கோவிந்தராஜன் ஆகியோர் நியமிக்கப் படுகின்றனர். இந்த ஆணையத்தின் உறுப்பினர் செயலராக சட்டத்துறை செயலாளர் செயல்படுவார்.</p><h2>தலைவர்-உறுப்பினர்கள்</h2><p>இந்த சட்ட ஆணையம், ஏற்கனவே உள்ள சட்டங்களை மாற்றி அமைக்கவும், அதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யவும் பரிந்துரைகளை வழங்கும். அதுபோல சமூக, பொருளாதார ரீதியான சட்டங்களை கொண்டு வரவும், நீதி நிர்வாகம் செயல்பாடுகளை விரைவுபடுத்தவும். சீர்த்திருத்தங்களை கொண்டு வரவும், மத்திய, மாநில அரசுகளுடன் உறவுகளை மேம்படுத்துவது, மாநில அரசின் சட்டம் மட்டுமல்லாமல், மத்திய அரசின் சட்டத்திலும் திருத்தம் கொண்டு வருவது போன்ற நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளை செய்யும். தலைவர். உறுப்பினர்களின் பதவிக்காலம் என்பது அவர்கள் பதவியேற்ற நாளில் இருந்து 3 ஆண்டுகள் ஆகும்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்... சட்டமன்றத்தில் இன்று தனித்தீர்மானம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/priority-for-tamil-thai-vazhthu-at-government-events-special-resolution-in-the-assembly-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/priority-for-tamil-thai-vazhthu-at-government-events-special-resolution-in-the-assembly-today#comments</comments><guid isPermaLink="false">be9e2495-ccdc-41f9-bd14-e5bb06cc29fd</guid><pubDate>Sun, 09 Aug 2026 18:31:20 +0000</pubDate><atom:updated>2026-08-09T18:31:20.090Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Assembly,தனித்தீர்மானம்,தமிழ்த்தாய் வாழ்த்து,தமிழக சட்டமன்றம்,Tamil Thai Vazhthu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/1hgort3q/vj.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் கட்டாயம் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் விஜய் இன்று தனித்தீர்மானம் கொண்டு வருகிறார். ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/1hgort3q/vj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் கட்டாயம் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">விஜய் </a>இன்று தனித்தீர்மானம் கொண்டு வருகிறார். </p><h2>பரபரப்பு</h2><p>ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் முதலில் வந்தே மாதரம் பாடப்படுவது தொடர்பாக தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தத் தீர்மானம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.</p><h2>தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம்</h2><p>கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.</p><h2>ஒருமனதாக நிறைவேறுமா?</h2><p>சட்டமன்றத்தில் கொண்டுவரப்படும் இந்தத் தீர்மானத்தின் மீது அனைத்து கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களும் பேச உள்ளனர். தீர்மானத்தின் மீதான விவாதம் நிறைவடைந்த பின்னர், சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>‘பட்ஜெட் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை’ - மு.வீரபாண்டியன் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/budget-did-not-meet-expectations-m-veerapandian</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/budget-did-not-meet-expectations-m-veerapandian#comments</comments><guid isPermaLink="false">5a64a211-7aed-4769-9acc-9ec9f05f8315</guid><pubDate>Sun, 09 Aug 2026 15:40:26 +0000</pubDate><atom:updated>2026-08-09T15:40:26.793Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பட்ஜெட்,Budget,மு.வீரபாண்டியன்,M.Veerapandian</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/vglxm6iu/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/vglxm6iu/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல்,</p><p>இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் நாமக்கலில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“தமிழ்நாடு அரசின் பட்ஜெட் நிச்சயமாக எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. இது நிறைவான பட்ஜெட் அல்ல. இருப்பினும் இந்த அரசு புதிய அரசு. அமைச்சர்கள் எல்லோரும் புதியவர்கள், கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கலாம். </p><p>விவசாயிகளின் பயிர்க்கடன் முழுவதுமாக ரத்து செய்யப்பட வேண்டும் என்பதுதான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கை. நிதிநிலை இடம்தராவிட்டாலும், படிப்படியாக முழுவதுமாக விவசாயிகளின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும். தமிழகத்திற்கு மத்திய அரசு உரிய நிதியை வழங்க வேண்டும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p> ]]></content:encoded></item><item><title>நெல்லையில் இந்த ஆண்டு இதுவரை 88 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/88-people-have-been-arrested-under-the-detention-act-in-nellai-so-far-this-year</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/88-people-have-been-arrested-under-the-detention-act-in-nellai-so-far-this-year#comments</comments><guid isPermaLink="false">75a34352-4fac-4717-b19d-8ea0ba5c0b11</guid><pubDate>Sun, 09 Aug 2026 15:35:04 +0000</pubDate><atom:updated>2026-08-09T15:35:04.179Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Tirunelveli,திருநெல்வேலி,arrests,இந்த ஆண்டு,This year,இதுவரை,so far,தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டம்,Tamil Nadu Detention Act</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/wi8j16uc/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/wi8j16uc/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டம், களக்காடு பகுதியில் கஞ்சா விற்பனை, கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 2 பேர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ்</a> கைது செய்யப்பட்டனர். </p><h2>கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல்</h2><p>திருநெல்வேலி மாவட்டம், களக்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த திருநெல்வேலி மாவட்டம், களக்காடு பகுதியைச் சேர்ந்த நயினார் மகன் ஆறுமுகம்(எ) அருண் (வயது 19) மற்றும் முத்துக்குட்டி மகன் முத்து பாலன்(25) ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். </p><h2>2 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் கைது</h2><p>இந்த நிலையில் மேற்சொன்ன 2 பேரும் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் போன்ற சட்டவிரோத குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், களக்காடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கண்ணா காந்தி மேற்சொன்ன நபர்கள் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.யிடம் பரிந்துரை செய்தார். </p><p>அதன்பேரில், திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி பரிந்துரையின் பேரில், திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஆனந்த் மோகன் பிறப்பித்த தடுப்புக் காவல் உத்தரவின் பேரில், மேற்சொன்ன 2 பேரும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். </p><h2>இந்த ஆண்டு இதுவரை 88 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது</h2><p>திருநெல்வேலி மாவட்டத்தில், இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 88 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>காஞ்சிபுரம்: விவசாய நிலத்தில் திரிந்த நட்சத்திர ஆமை மீட்பு - வனத்துறையினர் விசாரணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/star-tortoise-rescued-in-kanchipuram-farmland-forest-officials-investigate</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/star-tortoise-rescued-in-kanchipuram-farmland-forest-officials-investigate#comments</comments><guid isPermaLink="false">c43d4445-8526-4ad8-9762-203efb1b0114</guid><pubDate>Sun, 09 Aug 2026 15:34:06 +0000</pubDate><atom:updated>2026-08-09T15:34:06.287Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காஞ்சிபுரம்,Kancheepuram,agricultural land,விவசாய நிலம்,மீட்பு Recovery,நட்சத்திர ஆமை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/xuz5u8wa/turtule.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ நட்சத்திர ஆமை]]></media:title><media:description type="html"><![CDATA[ விவசாய நிலத்தில் திரிந்த நட்சத்திர ஆமை மீட்பு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/xuz5u8wa/turtule.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>காஞ்சிபுரம், </p><p>காஞ்சிபுரம் அடுத்த அருங்குன்றம் பகுதியில் விவசாய நிலத்திற்குள் புகுந்த அரிய வகை நட்சத்திர ஆமையை பொதுமக்கள் பத்திரமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>விவசாய நிலத்தில் ஆமை</h2><p>காஞ்சிபுரம் மாவட்டம் அருங்குன்றம் கிராமப் பகுதியில் விவசாய நிலங்கள் உள்ளன. இங்குள்ள ஒரு விவசாய நிலத்தில் நேற்று விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் வழக்கம்போல் விவசாயப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள புதர் மறைவில் விசித்திரமான ஆமை ஒன்று நகர்ந்து செல்வதை கண்டு அவர்கள் அருகில் சென்று பார்த்தனர். அதன் ஓட்டின் மீது நட்சத்திர வடிவிலான புள்ளிகள் இருப்பதைக் கண்டு வியப்படைந்தனர்.</p><h2>பொதுமக்கள் மீட்பு</h2><p>அது அரிய வகை <a href="https://www.dailythanthi.com/topic/tortoise">‘நட்சத்திர ஆமை</a>’ என்பதை உணர்ந்த கிராம மக்கள், அதனை பத்திரமாக மீட்டனர். பின்னர், இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினரிடம், பொதுமக்கள் அந்த நட்சத்திர ஆமையை ஒப்படைத்தனர்.</p><h2>வனத்துறை விசாரணை</h2><p>மீட்கப்பட்ட நட்சத்திர ஆமையை வனத்துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>கோவை: 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - 3 பேர் உயிரிழப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-car-plunges-into-300-foot-gorge-3-dead</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-car-plunges-into-300-foot-gorge-3-dead#comments</comments><guid isPermaLink="false">97c0ed31-f4be-4608-8e6f-3a1d840e2c0d</guid><pubDate>Sun, 09 Aug 2026 15:19:07 +0000</pubDate><atom:updated>2026-08-09T15:19:07.245Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,Coimbatore,கோவை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/l8qq8a8p/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/l8qq8a8p/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். </p><p>இந்த விபத்தில் கார் முழுவதுமாக சேதமடைந்த நிலையில், காரில் பயணம் செய்த ஊட்டியை சேர்ந்த போஜன், ராஜ்கண்ணன், ராதிகா ஆகிய 3 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். </p> ]]></content:encoded></item><item><title>நெல் கொள்முதலில் அலட்சியம் காட்டும் அரசு - டி.டி.வி. தினகரன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-negligence-in-paddy-procurement-tdv-dhinakaran-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-negligence-in-paddy-procurement-tdv-dhinakaran-condemns#comments</comments><guid isPermaLink="false">47f928c0-c5a1-4a67-9d5e-12eeeeaabb71</guid><pubDate>Sun, 09 Aug 2026 15:16:32 +0000</pubDate><atom:updated>2026-08-09T15:16:32.530Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல் கொள்முதல்,Paddy procurement,கண்டனம்,அரசு,condemns,டி.டி.வி. தினகரன்,அலட்சியம்,negligence,Goverment,ttv.Dinakaran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/4ulz78n6/103.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ டி.டி.வி. தினகரன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/4ulz78n6/103.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நெல் கொள்முதல் செய்வதில் காட்டும் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது என்று  அ.ம.மு.க. பொதுச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/ttv-dhinakaran">டி.டி.வி. தினகரன்</a> தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p> <h2>கண்டனம்</h2><p>தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் - விவசாயிகளின் உழைப்பில் உற்பத்தியான நெல்லை உரிய நேரத்தில் கொள்முதல் செய்ய மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது.</p><h2>வேதனையை அளிக்கின்றன</h2><p>தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">நெல் கொள்முதல்</a> நிலையங்களில் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் கிடப்பில் போட்டு வைத்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையை அளிக்கின்றன.</p> <h2>விவசாயிகள்</h2><p>இயற்கையின் சவால்களையும், இடர்பாடுகளையும் எதிர்கொண்டு, மக்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் மகத்தான பணியில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், அரும்பாடுபட்டு விளைவித்த நெல்லை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்தி கொண்டிருப்பதே, அவ்வப்போது பெய்யும் மழையில் நெல் மூட்டைகள் நனைந்து வீணாவதற்கு அடிப்படை காரணமாக அமைந்துள்ளது.</p><h2>அலட்சியம்</h2><p>விவசாயப் பெருமக்களின் உழைப்பை மதித்து அவர்களின் நெல்லை உரிய நேரத்தில் கொள்முதல் செய்ய வேண்டிய அரசு நிர்வாகம், நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு ஏற்றி செல்ல வாகனங்கள் இல்லை எனக்கூறி விவசாயிகளை அலைக்கழித்து, நெல் கொள்முதல் செய்வதில் காட்டும் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது.</p> <h2>பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்றம்</h2><p>காவிரி நீர் பற்றாக்குறை, கடுமையான வறட்சி, பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்றம், பொய்த்து போன குறுவை சாகுபடி ஆகியவற்றால் உணவு உற்பத்தி குறைந்து அரிசி விலையும் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், விவசாயிகள் விளைவித்த நெல்லை கூட உடனடியாக கொள்முதல் செய்ய முடியாதது தவெக அரசின் நிர்வாக திறமையின்மையை வெளிப்படுத்துகிறது.</p> <h2> கொள்முதல் </h2><p>எனவே, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் மூட்டைகள் அனைத்தையும் உடனடியாக கொள்முதல் செய்திடுவதோடு, அவற்றை முறைப்படி கிடங்குகளுக்கும், அரவை ஆலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். </p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>12-ந்தேதி உப்பள தொழிலாளர்களுக்கான சிறப்பு சேவை முகாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-service-camp-for-salt-workers-on-the-12th-thoothukudi-collector-information</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-service-camp-for-salt-workers-on-the-12th-thoothukudi-collector-information#comments</comments><guid isPermaLink="false">6634d6c9-a71a-48c5-884b-323e698e787b</guid><pubDate>Sun, 09 Aug 2026 14:39:15 +0000</pubDate><atom:updated>2026-08-09T14:39:15.954Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Collector information,கலெக்டர் தகவல்,Special camp,சிறப்பு முகாம்,service,Salt Workers,உப்பள தொழிலாளர்கள்,சேவை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/xedfyfyv/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உப்பளத் தொழிலாளர்கள் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/xedfyfyv/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி, ஏரல், விளாத்திகுளம் வட்டங்களில் வருகிய ஆகஸ்ட் 12-ந்தேதி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">உப்பள தொழிலாளர்களுக்கான</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88">சிறப்பு சேவை</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D">முகாம்</a> நடைபெற உள்ளது. </p><p>இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><h2>சிறப்பு சேவை முகாம்கள்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டத்தின் பிரதான தொழிலான உப்பு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலனை பேணி காக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு சேவை முகாம்கள் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. </p><h2>வசிப்பிடங்களுக்கு நேரடியாகச் சென்று சேவை</h2><p>அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் அனைத்துத் தரப்பினருக்கும் நேரடியாகச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், உப்பள தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளுக்கே நேரடியாகச் சென்று பல்வேறு அரசுத் துறைகளின் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. </p><p>வருவாய்த்துறை, பொதுவிநியோகத் திட்டம், அடையாள அட்டைச் சேவைகள், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (CMCHIS), மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, சமூக நீதித்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, முன்னோடி வங்கி மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆகிய துறைகள் சார்பில் இச்சேவைகள் வழங்கப்படுகின்றன. </p><h2>தூத்துக்குடி, ஏரல், விளாத்திகுளம் வட்டங்களில் 12-ந்தேதி முகாம்</h2><p>இதன் தொடர்ச்சியாக, கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி உப்பளத் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் முதற்கட்ட முகாம்கள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து, 12.8.2026 அன்று ஏரல் வட்டத்தில் அன்னை பரிபூரண மக்கள் மன்றம் பழையகாயல், தூத்துக்குடி வட்டத்தில் பஞ்சாயத்து மற்றும் கிராம நிர்வாக அலுவலக வளாகம், முள்ளகாடு-02, விளாத்திகுளம் வட்டத்தில் முனியசாமி கோவில் மண்டபம் மேல்மந்தை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. </p><p>மேற்சொன்ன முகாமினை உப்பள தொழிலாளர்கள் பயன்படுத்தி தங்களுக்கு தேவையான அரசு திட்டங்களில் பயனுற்று மற்றும் சான்றிதழ்களை பெற்று பயனடையலாம். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தென்மலை அருகே எஸ்டேட்டில் குட்டி ஈன்ற காட்டு யானை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/baby-elephant-born-in-ambanadu-estate-near-thenmalai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/baby-elephant-born-in-ambanadu-estate-near-thenmalai#comments</comments><guid isPermaLink="false">cf1dc332-5ba4-4083-9dd8-538f81e73caa</guid><pubDate>Sun, 09 Aug 2026 14:35:01 +0000</pubDate><atom:updated>2026-08-09T14:35:01.626Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,calf,குட்டி,The wild elephant காட்டுயானை,Tea Estate,எஸ்டேட்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/dg93zndx/elepphnt.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ காட்டு யானை]]></media:title><media:description type="html"><![CDATA[ தென்மலை அருகே எஸ்டேட்டில் குட்டி ஈன்ற காட்டு யானை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/dg93zndx/elepphnt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p> திருநெல்வேலி,</p><p>தமிழக - கேரள மாநில எல்லைப்பகுதியில், தென்மலை அருகே உள்ள அம்பநாடு எஸ்டேட் பகுதியில்,  பிரசவ வலியால் துடித்த பெண் யானை ஒன்றுக்கு அழகிய குட்டி பிறந்தது. குட்டி பிறந்த அடுத்த கணமே, அதை வேட்டையாடும் விலங்குகளிடமிருந்தும், மனித நடமாட்டத்திலிருந்தும் பாதுகாக்க, கூட்டத்தில் இருந்த மற்ற யானைகள் அனைத்தும் ஒன்று திரண்டன. </p><h2>நடுவழியில் பிரசவ வலி</h2><p> தென்மலை அருகே உள்ள அம்பநாடு தேயிலை தோட்டம் வழியாக ஒரு காட்டு<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D"> யானைக்கூட்டம்</a> வனப்பகுதிக்குள் நகர்ந்து கொண்டிருந்தது. அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு கர்ப்பிணி யானைக்கு திடீரென கடுமையான பிரசவ வலி ஏற்பட்டது.வலி தாங்க முடியாமல் தவித்த அந்த யானை, ஒரு அழகான குட்டியை ஈன்றெடுத்தது.</p><h2>உடனடி பாதுகாப்பு</h2><p> குட்டி பிறந்து கீழே விழுந்த அடுத்த நொடியே, கூட்டத்தில் இருந்த பெரிய யானைகள் அலறியபடி தாய் யானையை நோக்கி ஓடி வந்தன. குட்டியையும், பலவீனமாக இருந்த தாய் யானையையும் நடுவில் நிறுத்திக்கொண்டு, மற்ற யானைகள் அனைத்தும் வெளிப்பக்கமாக நின்றுகொண்டன.</p><h2>ஆக்ரோஷ எச்சரிக்கை</h2><p> எஸ்டேட் தொழிலாளர்களோ அல்லது வனத்துறையினரோ தவறிக்கூட அருகில் நெருங்கி விடக் கூடாது என்பதால், தும்பிக்கையை உயர்த்திப் பிளிறியபடி ஆக்ரோஷமாக எச்சரிக்கை விடுத்தன.  பிறந்த குட்டி யானை உடனடியாக எழுந்து நிற்க முடியாமல் தள்ளாடியது. அது தட்டுத்தடுமாறி எழுந்து, தாயிடம் பால் குடித்து, சொந்தக் காலில் நடக்க தொடங்கும் வரை சுமார் பல மணி நேரம் சக யானைகள் அந்த இடத்தை விட்டு ஒரு அடியும் நகரவில்லை.</p><h2>பாதுகாப்பான பயணம்</h2><p> குட்டி ஓரளவுக்கு நடை பழகியதை உறுதி செய்த பின்னரே, அரணாக நின்ற யானைகள் மெதுவாக அதை தங்களின் நடுவே கூட்டி கொண்டு அடர்ந்த காட்டு பகுதிக்குள் நிதானமாக நடந்து சென்றன.ரப்பர் எஸ்டேட் மற்றும் தேயிலை தோட்டங்களிலும் யானைகள் முகாமிடுவதால், அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அச்சு றுத்தல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், குட்டி யானையுடன் கூட்டம் வனப்பகுதிக்குள் சென்றது எஸ்டேட் மீண்டும் நிர்வாகத்தினருக்கும், தொழிலாளர்களுக்கும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>ஆடி மாதத்தில் மனைவி ஊருக்கு சென்றதும் பக்கத்து வீட்டு பெண்ணுக்கு தூதுவிட்ட இளைஞர்... அடங்காத ஆசையால் தொலைந்த நிம்மதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-young-man-sent-a-message-to-the-woman-next-door-after-his-wife-left-town-during-the-month-of-aadi-uncontrollable-desire-cost-him-his-peace-of-mind</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-young-man-sent-a-message-to-the-woman-next-door-after-his-wife-left-town-during-the-month-of-aadi-uncontrollable-desire-cost-him-his-peace-of-mind#comments</comments><guid isPermaLink="false">e1eb7bc2-690c-4125-8eb7-6195f96e249f</guid><pubDate>Sun, 09 Aug 2026 14:30:37 +0000</pubDate><atom:updated>2026-08-09T14:30:37.683Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மனைவி,ஆடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/1gmt7r52/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/1gmt7r52/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் சுதர்சன். இவரது மனைவி ஆடி மாதத்தை முன்னிட்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்நிலையில் சுதர்சனின் பார்வை தனது பக்கத்து வீட்டில் இருந்த நமீதா என்ற இளம்பெண் மீது விழுந்துள்ளது. அந்த பெண்ணுடன் சுதர்சன் பேச ஆரம்பித்துள்ளார். </p><p>இளம்பெண் நமீதாவை சுதர்சனுக்கு மிகவும் பிடித்துப்போன நிலையில், அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் நேரடியாக நமீதாவிடம், ‘உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. என்னை கல்யாணம் செய்துகொள். நான் உன்னை நன்றாக வைத்து பார்த்துக் கொள்வேன்’ என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். இது குறித்து நமீதா உடனடியாக பதில் எதுவும் தெரிவிக்கவில்லை. </p> <p>ஆனால் சுதர்சன் பேசியதை தனது செல்போனில் நமீதா ரகசியமாக ரெக்கார்டு செய்து வைத்துள்ளார். பின்னர் தனது ஆண் நண்பர் ஒருவரை அழைத்துக் கொண்டு சுதர்சனை சந்தித்த நமீதா, அந்த ஆடியோ பதிவை போட்டுக்காட்டி, ‘என்னிடம் எப்படி இந்த மாதிரியெல்லாம் நீ பேசலாம்? என் காலில் விழுந்து மன்னிப்பு கேள்’ என்று அடித்து மிரட்டியுள்ளார். இதையடுத்து சுதர்சனும் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். </p><p>இருப்பினும் நமீதாவும், அவரது ஆண் நண்பரும் இந்த விஷயத்தை இத்துடன் விடாமல், சுதர்சனிடம் இருந்து பணம் பறிக்க திட்டமிட்டுள்ளனர். இந்த திட்டத்தில் அவரது தோழிகளான வழக்கறிஞர் மோனிஷா, கேரளாவை சேர்ந்த சிவரஞ்சனி மற்றும் ஒரு ஆண் நண்பர் ஆகிய 3 பேரை அவர்கள் சேர்த்துக் கொண்டனர். </p><p>இவர்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டு சுதர்சனை மிரட்டி அவரை ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு வரவழைத்துள்ளனர். சுதர்சன் அந்த இடத்திற்கு சென்றபோது, அவரிடம் ஆடியோ பதிவை போட்டுக்காட்டி, ‘எங்களுக்கு 5 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ஆடியோவை உனது மனைவிக்கு அனுப்பி விடுவோம்’ என்றும் மிரட்டியுள்ளனர். இதற்கு சுதர்சன் சம்மதிக்காத நிலையில், அவரை கட்டி வைத்து, பிளாஸ்டிக் பைப் உள்ளிட்ட பொருட்களை வைத்து அடித்து துன்புறுத்த தொடங்கினர். மேலும் சிகரெட்டால் அவரது உடலில் சூடு வைத்துள்ளனர்.</p><p>அவர்களின் சித்ரவதை தாங்காமல், பணம் தருகிறேன் என்று சுதர்சன் ஒப்புக்கொண்டதையடுத்து அவரை அவர்கள் விடுவித்துள்ளனர். பின்னர் வீட்டிற்கு வந்த சுதர்சன், வேறு வழியின்றி நடந்த அத்தனை விஷயங்களையும் தனது மனைவியிடம் கூறிவிட்டார். அவரது மனைவி முதலில் கோபமடைந்தாலும், தன் கணவரின் நிலையை புரிந்து கொண்டு உடனடியாக இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்று கூறியுள்ளார். </p><p>இதன்படி இருவரும் காவல்நிலையத்திற்கு சென்று இளம்பெண் நமீதா மற்றும் அவரது கூட்டாளிகள் மீது புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி நமீதா, மோனிஷா, சிவரஞ்சனி, கணேஷ் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 5 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஆடி மாதத்தில் மனைவி ஊருக்கு சென்ற நேரத்தில், வேறொரு பெண் மீது ஏற்பட்ட ஆசை காரணமாக இளைஞர் நிம்மதியை தொலைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்: வீடு புகுந்து தாய், மகளை தாக்கிய வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/angry-over-rejection-of-love-youth-arrested-for-breaking-into-home-and-attacking-mother-and-daughter</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/angry-over-rejection-of-love-youth-arrested-for-breaking-into-home-and-attacking-mother-and-daughter#comments</comments><guid isPermaLink="false">ac77b8a1-2519-4fdb-b31b-768ebb010b01</guid><pubDate>Sun, 09 Aug 2026 14:23:30 +0000</pubDate><atom:updated>2026-08-09T14:23:30.094Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தாக்குதல்,Thoothukudi,தூத்துக்குடி,Youth arrested,வாலிபர் கைது,attack,Love,கொலை மிரட்டல்,Rejection,Death threats,காதலிக்க மறுப்பு,Anger,வீடு புகுந்து,ஆத்திரம்,house breaking</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/dtv3g4y1/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/dtv3g4y1/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">காதலிக்க மறுத்ததால்</a> இளம்பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து அவரையும், அவரது தாயாரையும் தாக்கி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D">கொலை மிரட்டல்</a> விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>வாலிபரை காதலிக்க மறுத்த இளம்பெண்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், ஆறுமுகநேரி, செல்வராஜபுரம் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் இசக்கி ராஜேஷ் (வயது 25). கூலித் தொழிலாளியான இவர், அதே பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண்ணைக் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த இளம்பெண் அந்த வாலிபரிடம் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார்.</p><h2>வீடு புகுந்து தாய், மகளை தாக்கி, கொலை மிரட்டல்</h2><p>இதனால் ஆத்திரமடைந்த வாலிபர், இளம்பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த இளம்பெண்ணைத் தாக்கி, "என்னை ஏன் காதலிக்க மறுக்கிறாய்?" எனக் கூறி கீழே தள்ளியுள்ளார். இதைத் தடுக்க முயன்ற அந்த இளம்பெண்ணின் தாயாரையும் அந்த வாலிபர் தாக்கியுள்ளார். மேலும், தன்னைத் திருமணம் செய்யாவிட்டால் தாய், மகள் 2 பேரையும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.</p><h2>வாலிபர் கைது</h2><p>இதுகுறித்த புகாரின் பேரில், ஆறுமுகநேரி காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோயில்பிள்ளை வழக்குப்பதிவு செய்து தாய், மகளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் தேசியக்கொடி யாத்திரை - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tricolour-rally-in-chennai-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tricolour-rally-in-chennai-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">abf6c10b-81a8-4011-9973-48d26a51bb0b</guid><pubDate>Sun, 09 Aug 2026 13:54:17 +0000</pubDate><atom:updated>2026-08-09T13:54:17.469Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,national flag,தேசியக்கொடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/o7q9iwzj/112.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/o7q9iwzj/112.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> சென்னையில் தேசியக்கொடி யாத்திரை நடைபெற்றது.  இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன் </a>வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2> மூவர்ணம் இயக்கம்</h2><p>மாபெரும் நமது<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF"> தேசியக்கொடியின்</a> யாத்திரை சென்னையில் நம் பிரதமர் மோடி விடுத்துள்ள அழைப்பினை ஏற்று, தேசத்தின் மீது கொண்டுள்ள பேரன்பையும், அளவற்ற நாட்டுப்பற்றையும் பறைசாற்றும் வகையில், “ஹர் கர் திரங்கா” – வீடு தோறும் மூவர்ணம் இயக்கத்தின் ஒரு பகுதியாக மாபெரும் திரங்கா யாத்திரை இன்று சென்னையில் எழுச்சியுடன் நடைபெற்றது.</p><h2>கமலாலயம்</h2><p>தி.நகர் ம.பொ.சி. சிலையிலிருந்து, தமிழக பாஜக மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயம் வரை நடைபெற்ற இந்த மாபெரும் மூவர்ணக் கொடி யாத்திரை, தேசபக்தியின் பேரெழுச்சியாகவும், தேசிய உணர்வின் சங்கமமாகவும் திகழ்ந்தது.</p> <h2>திருவிழா</h2><p>எங்கு பார்த்தாலும் பறந்த மூவர்ணக்கொடிகள்… எதிரொலித்த தேசபக்தி முழக்கங்கள்… பெருக்கெடுத்த மக்களின் பேராதரவு…இவை அனைத்தும் இணைந்து சென்னையின் வீதிகளை தேசப்பற்றின் திருவிழாவாக மாற்றின! </p><p>இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திரங்கா யாத்திரையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் மற்றும் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மற்றும் தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் பொங்குலேட்டி சுதாகர் ரெட்டி மற்றும் மாநில மற்றும் மாவட்ட, மண்டல் நிர்வாகிகள், காரியகர்த்தாக்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.</p><p>ஒவ்வொரு இல்லத்திலும் மூவர்ணம் பறக்கட்டும்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் &quot;மியூல் வங்கி கணக்கு&quot; வைத்திருந்த 837 சைபர் குற்றவாளிகள் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/837-cybercriminals-with-mule-bank-accounts-arrested-in-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/837-cybercriminals-with-mule-bank-accounts-arrested-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">466197cf-4e27-49f6-a039-765d9b5051d8</guid><pubDate>Sun, 09 Aug 2026 13:05:36 +0000</pubDate><atom:updated>2026-08-09T13:05:36.630Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சைபர் கிரைம்,தமிழ்நாடு காவல்துறை,குற்றவாளிகள் கைது,Criminal Arrested,Tamil Nadu Police Department,நடவடிக்கை action,ciber crime</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/n9xu4yuo/cyber.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மகேஷ் குமார் அகர்வால்]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழகத்தில் "மியூல் வங்கி கணக்கு" வைத்திருந்த 837 சைபர் குற்றவாளிகள் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/n9xu4yuo/cyber.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் "மியூல் வங்கி கணக்கு" வைத்திருந்த 837 சைபர் குற்றவாளிகள் கைது. இது தொடர்பாக, காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>மியூல் வங்கி கணக்கு</h2><p>மாநிலம் முழுவதும் "மியூல் வங்கி கணக்கு" வைத்திருப்பவர்களுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் சைபர் குற்ற வலையமைப்பை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">தமிழ்நாடு காவல்துறையின்</a> இணையவழி குற்ற பிரிவு சார்பில் 06.08.2026 மற்றும் 07.08.2026 ஆகிய இரண்டு நாட்களில் 48 மணி நேர "மாநிலம் முழுவதும் மியூல் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை" மேற்கொள்ளப்பட்டது. இந்நடவடிக்கையின் மூலம் மாநிலம் முழுவதும் 837 சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.</p><h2>சிறப்பு நடவடிக்கை</h2><p>சைபர் மோசடிகள் மூலம் பெறப்படும் பணத்தை பெறுதல். பரிமாற்றம் செய்தல், பல்வேறு கணக்குகளுக்கு மாற்றுதல் மற்றும் பணமாக எடுத்தல் போன்ற செயல்களுக்கு வங்கி கணக்குகளை திறந்து கொடுப்பது. பயன்படுத்த அனுமதிப்பது. இயக்குவது மற்றும் இதற்கு உடந்தையாக இருப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பதே இச்சிறப்பு நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.</p><h2>மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு</h2><p>குறிப்பாக, பணம் அல்லது கமிஷன் பெற்றுக்கொண்டு வங்கி கணக்குகளை திறந்து கொடுத்தல் அல்லது பயன்படுத்த அனுமதித்தல் போன்ற செயல்களும் இந்நடவடிக்கையின் கீழ் கண்காணிக்கப்பட்டன. இச்சிறப்பு நடவடிக்கை, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் /படைத்தலைவர் மகேஷ் குமார் அகர்வால்,ஐ.பி.எஸ் உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. </p> <h2>நிகழ்நேர கண்காணிப்பு</h2><p>சைபர் கிரைம் பிரிவினரால் முறையாக திட்டமிடப்பட்ட இந்நடவடிக்கை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகரங்களிலும் ஒருங்கிணைந்த முறையில் மேற்கொள்ளப்பட்டது. இணையவழி குற்ற பிரிவு டி.ஜி.பி  பாலா நாகதேவி, ஐ.பி.எஸ் இணையவழி குற்ற பிரிவு தலைமையகத்திலிருந்து இம்முழு நடவடிக்கையையும் மேற்பார்வையிட்டு, அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகரங்களுடன் சீரான ஒருங்கிணைப்பு மற்றும் நிகழ்நேர கண்காணிப்பை உறுதி செய்தார்.</p> <h2>பண பரிவர்த்தனை</h2><p>இந்த பெரிய அளவிலான நடவடிக்கையானது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் தேசிய சைபர் குற்றப்புகார் இணையதளத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட குற்றவாளிகளின் சுயவிவர பகுப்பாய்வை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்டது. மேலும், சைபர் குற்ற வலையமைப்புகளின் நிதி பரிவர்த்தனைகள் தொடர்பான தரவுகளை பகுப்பாய்வு செய்து கண்டறியப்பட்ட பண பரிவர்த்தனை தடங்கள் மூலம் இச்சுயவிவரப்பகுப்பாய்வு மேலும் வலுப்படுத்தப்பட்டது.</p> <h2>சைபர் குற்றவாளிகள் மோசடி</h2><p>சைபர் குற்றவாளிகள் மோசடி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் பெறப்படும் பணத்தை பெறுவதற்கும். பரிமாற்றம் செய்வதற்கும், பல்வேறு கணக்குகளுக்கு மாற்றி அதன் மூலத்தை மறைப்பதற்கும், பணமாக எடுத்துக்கொள்வதற்கும் பயன்படுத்தும் வங்கி கணக்குகள் "மியூல் வங்கி கணக்குகள்" எனப்படுகின்றன. தங்களது வங்கி கணக்குகளை இதுபோன்ற பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்த அனுமதிக்கும் நபர்கள், சட்டவிரோத பண பரிவர்த்தனைக்கு வழிவகுக்கும் வகையில் சைபர் குற்றவாளிகளுக்கு உதவுகின்றனர்.</p> <h2> 837 சைபர் குற்றவாளிகளை கைது</h2><p>இச்சிறப்பு நடவடிக்கையில், மொத்தம் 9,804 தேசிய இணையக் குற்றப் புகாரளிப்பு இணையதளம் புகார்களுடன் தொடர்புடைய, .545,27,27,809/-அளவிலான மோசடி பண பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய நபர்கள் குறிவைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டனர். இந்நடவடிக்கையின் போது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களும், அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்களின் மேற்பார்வையில் செயல்பட்டு. சைபர் குற்ற வழக்குகளில் பதிவு செய்யப்பட்ட 601 முதல் தகவல் அறிக்கைகளில்  தொடர்புடைய 837 சைபர் குற்றவாளிகளை கைது செய்தனர். மேலும், சைபர் மோசடிகளுக்கு மியூல் வங்கி கணக்குகளை பயன்படுத்துதல் மற்றும் இயக்குதல் ஆகியவற்றை தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் 157 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.</p><h2>58 வங்கி கணக்கு</h2><p>மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இச்சிறப்பு நடவடிக்கையின் போது, 204 செல்போன்கள். 185 சிம் கார்டுகள், 4 லேப்டாப்/டெஸ்க்டாப் கணினிகள். 1 பென் டிரைவ்/சேமிப்பு சாதனம், ரூ.1,02,000/- ரொக்கம், 114 வங்கி பாஸ்புக்குகள், 29 காசோலைப் புத்தகங்கள். 73 ஏ.டி.எம்/டெபிட் கார்டுகள், 1 கிரெடிட் கார்டு மற்றும் 2 இதர மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், தொடர் விசாரணை மற்றும் பகுப்பாய்விற்காக 155 செல்போன் எண்கள் மற்றும் 58 வங்கி கணக்கு விவரங்கள் கண்டறியப்பட்டன.</p><h2>முக்கிய சாதனை</h2><p>இந்த கைது நடவடிக்கைகள். நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ஒருங்கிணைக்கப்பட்ட சைபர் குற்ற வலையமைப்பை சீர்குலைத்து, அதன் செயல்பாடுகளை முறியடிப்பதில் ஒரு முக்கிய சாதனையாகும். சைபர் குற்றச் சூழலின் முக்கிய அங்கமான மியூல் வங்கி கணக்குகள் மூலம் சட்டவிரோத பணத்தைப் பெறுதல், பல்வேறு கணக்குகளுக்கு மாற்றுதல் மற்றும் பரிமாற்றம் செய்தல் ஆகியவற்றைத் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கை, இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய ஒருங்கிணைந்த நடவடிக்கைகளில் ஒன்றாகும்.</p><h2>டிஜிட்டல் ஆதாரங்கள்</h2><p>கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட டிஜிட்டல் ஆதாரங்கள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு. குற்ற வலையமைப்பின் அடுத்தடுத்த அடுக்குகளில் செயல்படும் நபர்கள் மற்றும் நாடு முழுவதும் அவர்களுடன் தொடர்புடைய கூட்டாளிகளை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனுடன், இவ்வலையமைப்பில் தொடர்புடைய மேலும் பலரை கண்டறிந்து கைது செய்தல், மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்டெடுத்தல் மற்றும் நாடு முழுவதும் செயல்படும் சைபர் குற்ற உள்ள தொடர்புகளை கண்டறிதல் உள்ளிட்ட வலையமைப்புகளுடன் நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><h2>சட்ட நடவடிக்கை</h2><p>கைது செய்யப்பட்ட நபர்கள் மீது சட்ட விதிகளின்படி கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், வங்கி கணக்குகளை பிறருக்கு வழங்குதல் அல்லது தவறாகப் பயன்படுத்த அனுமதித்தல் மூலம் சைபர் மோசடிகளுக்கு உதவும் நபர்களுக்கு இக்கைது நடவடிக்கைகள் ஒரு வலுவான எச்சரிக்கையாகவும் தடுப்பு நடவடிக்கையாகவும் அமையும்.</p> <h2>பாதுகாப்பை உறுதி செய்தல் </h2><p>மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இந்த "மியூல் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை". சைபர் குற்றங்களுக்கு ஆதரவாக செயல்படும் நிதி உள்கட்டமைப்பை சீர்குலைத்தல். மாநிலத்தின் சைபர் குற்ற அமலாக்க நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துதல் மற்றும் இணையவழியில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றில் ஒரு முக்கியமான முன்னெடுப்பாகும்.</p> <h2>பொதுமக்களுக்கான அறிவுரை</h2><p><strong>கமிஷனுக்காக உங்கள் வங்கி கணக்கை ஒருபோதும் வழங்க வேண்டாம்:</strong></p><p>கமிஷன் அல்லது பணப் பலனுக்காக உங்கள் வங்கி கணக்கு விவரங்களை மற்றவர்களுடன் பகிரவோ அல்லது உங்கள் கணக்கை பயன்படுத்த அனுமதிக்கவோ வேண்டாம்.</p> <p><strong>பண ஆதாயத்திற்காக வங்கி கணக்கு விவரங்களை வழங்க வேண்டாம்:</strong></p><p>பணப் பலனுக்காக வங்கி கணக்கு விவரங்களைப் பகிர்வது அல்லது உங்கள் வங்கி கணக்கை பிறர் பயன்படுத்த அனுமதிப்பது, அது தெரிந்தோ தெரியாமலோ செய்யப்பட்டிருந்தாலும், சைபர் குற்றங்களுக்கு வழிவகுக்கக்கூடும் மற்றும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படலாம்.</p> <p><strong>ஆன்லைன் சூதாட்டம் மற்றும் பண பரிவர்த்தனை கொண்ட கேமிங் செயலிகளை பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்கவும்:</strong> </p><p>பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படும் ஆன்லைன் சூதாட்டம் அல்லது கேமிங் செயலிகளை பயன்படுத்தும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதுபோன்ற தளங்கள் மூலம் பணத்தை பெறுதல் அல்லது பரிமாற்றம் செய்தல் சைபர் குற்ற வலையமைப்புகளுடன் தொடர்புடையதாக இருக்கக்கூடும். இதனால் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு ஆளாகும் வாய்ப்பும் உள்ளது. எனவே. பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து, இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><h2>கடவுச்சொல் பகிர வேண்டாம்: </h2><p>ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP) அல்லது இதர முக்கியமான ரகசிய குறியீடுகளை யாரிடமும் பகிர வேண்டாம். தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கவும்: கடவுச்சொற்கள், (OTP), வங்கி கணக்கு விவரங்கள் உள்ளிட்ட முக்கியமான தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிர வேண்டாம்.</p><p><strong>ஆன்லைன் கடன் வழங்குவதாக கூறும் அறிமுகமில்லாத நபர்களின் அழைப்புகளில் எச்சரிக்கையாக இருக்கவும்:</strong></p><p>அறிமுகமில்லாத நபர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு கடன் வழங்குவதாகக் கூறி புதிய வங்கி கணக்கு/நடப்புக் கணக்கு (Current Account) தொடங்குமாறோ அல்லது இணைய வங்கி சேவை தொடர்பான ரகசிய விவரங்களைப் பகிருமாறோ கேட்டால், அதற்கு பதிலளிக்க வேண்டாம். இத்தகைய கோரிக்கைகள் உங்கள் வங்கி கணக்கு தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு வழிவகுக்கக்கூடும். </p><p><strong>பயன்பாட்டில் இல்லாத வங்கி கணக்குகளை மூடவும்:</strong> </p><p>பயன்பாட்டில் இல்லாத அல்லது நீண்ட காலமாக பரிவர்த்தனை மேற்கொள்ளப்படாத வங்கி கணக்குகளை உரிய வங்கி நடைமுறைகளின்படி மூடுமாறு கணக்கு வைத்திருப்பவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இத்தகைய செயலற்ற கணக்குகள் சைபர் குற்றவாளிகளால் குற்றச் செயல்களின் மூலம் பெறப்பட்ட பணத்தைப் பெறுவதற்கும் பரிமாற்றம் செய்வதற்கும் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.</p><h2>புகார் அளித்தல்</h2><p>நீங்கள் சைபர் குற்றத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், சைபர் கிரைம் பிரிவின் கட்டணமில்லா உதவி எண்ணான 1930-ஐ தொடர்பு கொள்ளவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உங்கள் புகாரைப் பதிவு செய்யவும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் தீக்குளித்த முதியவர் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/elderly-man-dies-after-setting-himself-on-fire-at-thiruvottriyur-police-station</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/elderly-man-dies-after-setting-himself-on-fire-at-thiruvottriyur-police-station#comments</comments><guid isPermaLink="false">71b46d2d-1cc4-45fe-8338-cbd9ce8f5d93</guid><pubDate>Sun, 09 Aug 2026 12:36:08 +0000</pubDate><atom:updated>2026-08-09T12:36:08.657Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Fire,police station,போலீஸ் நிலையம்,திருவொற்றியூர்,Elderly man dies,முதியவர் உயிரிழப்பு,தீக்குளித்து,Thiruvottriyur</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/ke2t57px/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதியவர் தீக்குளித்து உயிரிழப்பு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/ke2t57px/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவொற்றியூர், </p><p>சென்னை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">திருவொற்றியூர்</a> போலீஸ் நிலையத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4">தீக்குளித்த </a><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D">முதியவர்</a> மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். </p><h2>போலீஸ் நிலையத்தில் புகார்</h2><p>சென்னை திருவொற்றியூர், காலடிப்பேட்டையை சேர்ந்தவர் குமார் (வயது 67). இவருக்கு உஷா, பாரதி, மாரி ஆகிய 3 மனைவிகளும், 5 பிள்ளைகளும் உள்ளனர். ஆனாலும் இவர்கள் யாரும் தனக்கு உணவு, தண்ணீர் கொடுத்து கவனிக்காமல் வீட்டை விட்டு விரட்டி விட்டதாக நேற்று முன்தினம் மதியம் திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். </p><h2>தீக்குளித்த முதியவர் உயிரிழப்பு</h2><p>பின்னர் திடீரென போலீஸ் நிலைய வளாகத்தில் அவர் தயாராக வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளித்தார். அதிர்ச்சி அடைந்த போலீசார், அவரது உடலில் எரிந்த தீயை அணைத்து, அவரை சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் குமார் பரிதாபமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">உயிரிழந்தார்</a>. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்; சட்டமன்றத்தில் நாளை தனித்தீர்மானம் கொண்டு வரும் முதல் அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/priority-for-tamil-thai-vazhthu-chief-minister-vijay-to-move-a-special-resolution-in-the-assembly-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/priority-for-tamil-thai-vazhthu-chief-minister-vijay-to-move-a-special-resolution-in-the-assembly-tomorrow#comments</comments><guid isPermaLink="false">e5543c4c-7165-4c4a-bdbc-c7fc8936f5da</guid><pubDate>Sun, 09 Aug 2026 12:11:14 +0000</pubDate><atom:updated>2026-08-09T12:11:14.681Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தனித்தீர்மானம்,சட்டமன்றம்,தமிழ்த்தாய் வாழ்த்து,CM Vijay,முதல் அமைச்சர் விஜய்,tamil thai valthu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/a6m4nkpw/vijay.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல் அமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/a6m4nkpw/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் முதலில் கட்டாயம் பாடப்பட வேண்டும் என வலியுறுத்தி சட்டமன்றத்தில் முதல் அமைச்சர் விஜய் நாளை தனித்தீர்மானம் கொண்டு வருகிறார். ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் முதலில் வந்தே மாதரம் பாடப்படுவது தமிழக அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பிய சூழலில், நாளை சட்டமன்றத்தில் முதல் அமைச்சர்  விஜய் தனித்தீர்மானம் கொண்டு வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.</p><p>கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் , பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யும் விதமாக  இந்த தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.  தீர்மானத்தின் மீது அனைத்து கட்சி எம்.எல்.ஏக்களும் பேசுவார்கள். இதையடுத்து சட்டமன்றத்தில் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்படும் எனத்தெரிகிறது.</p>]]></content:encoded></item><item><title>முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 123 அடியை நெருங்கியது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mullaipperiyaaru-dam-water-level-nears-123-feet</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mullaipperiyaaru-dam-water-level-nears-123-feet#comments</comments><guid isPermaLink="false">bf0e2da2-db73-49f3-ac7f-ef4129f313c7</guid><pubDate>Sun, 09 Aug 2026 11:43:58 +0000</pubDate><atom:updated>2026-08-09T11:43:58.552Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Water level increased,நீர்மட்டம் உயர்வு,முல்லைப்பெரியாறு அணை,Mullaperiyar Dam,விவசாயிகள் மகிழ்ச்சி,farmers are happy</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/xx24u7vg/mullaiperiyar.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ முல்லைப்பெரியாறு அணை]]></media:title><media:description type="html"><![CDATA[ முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 123 அடியை நெருங்கியது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/xx24u7vg/mullaiperiyar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கூடலூர்,</p><p>கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">முல்லைப்பெரியாறு அணையின்</a> நீர்மட்டம் தற்போது வேகமாக உயர்ந்து 123 அடியை நெருங்கியுள்ளது. இதனால் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.</p><h2>பலத்த மழை</h2><p>முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, பெரியாறு மற்றும் தேக்கடி ஆகிய அணை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையினால் அணைக்கு வரும் நீரின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது. </p><h2>நீர்மட்டம் உயர்வு</h2><p>தொடர் நீர்வரத்து காரணமாக, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் தற்போது வேகமாக உயர்ந்து 123 அடியை எட்டும் நிலையை நெருங்கியுள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 142 அடிகளாக உள்ள நிலையில், தற்போதைய நீர்மட்ட உயர்வு பாசனப்பகுதி விவசாயிகளிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>விவசாயிகள் மகிழ்ச்சி</h2><p>அணையிலிருந்து தமிழக பகுதிக்கு குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. விவசாயிகள் மகிழ்ச்சிஅணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி மற்றும் தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தங்களது விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அணைக்கு வரும் நீரின் அளவை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.</p><h2>வைகை அணை</h2><p>71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 34.06 அடியாக உள்ளது. 40 கன அடி நீர் வருகிறது. குடிநீர் திட்டங்களுக்காக 126 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 555 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 28.10 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 55.76 அடியாக உள்ளது. 4 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 26.25 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. மஞ்சளாறு 4. உத்தமபாளையம் 5.8.  கூடலூர் 5.6, பெரியாறு அணை 17, தேக்கடி 12.6, சண்முகாநதி 7.4 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>தாளவாடி அருகே யானை தாக்கி விவசாயி பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmer-killed-by-elephant-near-thalawadi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmer-killed-by-elephant-near-thalawadi#comments</comments><guid isPermaLink="false">56a2be92-3409-42ce-95f5-7de8c1e2d943</guid><pubDate>Sun, 09 Aug 2026 11:40:27 +0000</pubDate><atom:updated>2026-08-09T11:40:27.904Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>farmer,விவசாயி,dies,Erode,ஈரோடு,தாளவாடி,Garden,தோட்டம்,elephant attack,யானை தாக்கி பலி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/e152slhm/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ யானை தாக்கி விவசாயி பலி ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/e152slhm/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,  </p><p>ஈரோடு மாவட்டம், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF">தாளவாடி</a>, ஜீரகள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட காமையன்புரம் அருகே ஒற்றை காட்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF">யானை தாக்கி</a>யதில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF">விவசாயி பலி</a>யானார். </p><h2>மஞ்சள், உருளைக்கிழங்கு மக்காச்சோளம் சாகுபடி</h2><p>ஈரோடு மாவட்டம், தாளவாடி, ஜீரகள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட காமையன்புரம் கிராமத்தை சேர்ந்தவர் பசவசெட்டி (வயது 62). இவர் 5 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வருகிறார். தற்போது தன்னுடைய தோட்டத்தில் மஞ்சள், உருளைக்கிழங்கு மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளார். </p><h2>யானை மிதித்து விவசாயி பலி</h2><p>இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் ஒற்றை காட்டு யானை தோட்டத்துக்குள் புகுந்துள்ளது. இதனை கண்ட விவசாயி டார்ச் லைட் அடித்து யானையை விரட்ட முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென யானை விவசாயியை துரத்தி காலால் மிதித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். </p>]]></content:encoded></item><item><title>சென்னையில் செவிலியரிடம் தவறாக நடக்க முயன்றதாக புகார் - 60 வயது மருத்துவர் கைது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/complaint-of-attempted-misconduct-with-a-nurse-in-chennai-60-year-old-doctor-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/complaint-of-attempted-misconduct-with-a-nurse-in-chennai-60-year-old-doctor-arrested#comments</comments><guid isPermaLink="false">a96ac5a4-24d0-4637-86a0-63ea8f5f6f63</guid><pubDate>Sun, 09 Aug 2026 11:40:18 +0000</pubDate><atom:updated>2026-08-09T11:40:18.583Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/euptiwbq/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/euptiwbq/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை கொடுங்கையூரில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில், கடந்த 7-ந்தேதி மாலை பணியில் இருந்த 20 வயது செவிலியரிடம், 60 வயதான மருத்துவர் செய்யது முஷ்டாக் அகமது என்பவர் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த செவிலியர் கூச்சலிட்ட நிலையில், சத்தம் கேட்டு சக ஊழியர்கள் உடனடியாக சென்று செவிலியரை மீட்டனர். </p><p>பின்னர் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட செவிலியர் அளித்த புகாரின் அடிப்படையில் எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>மழை வேண்டி கழுதைகளுக்கு கல்யாணம் - வேலூரில் வினோத நிகழ்வு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/donkey-wedding-to-invoke-rain-a-unique-event-in-vellore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/donkey-wedding-to-invoke-rain-a-unique-event-in-vellore#comments</comments><guid isPermaLink="false">f79c4134-5d6d-4cf4-a092-319d6afe5c52</guid><pubDate>Sun, 09 Aug 2026 11:22:31 +0000</pubDate><atom:updated>2026-08-09T11:22:31.755Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vellore,வேலூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/c3oidmzu/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/c3oidmzu/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வேலூர்,</p><p>வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருவதால், அப்பகுதி மக்களின் பாரம்பரிய நம்பிக்கையின்படி, மழை வேண்டி ஆண் மற்றும் பெண் கழுதைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதற்காக இரு கழுதைகளுக்கும் மணமகன், மணமகள் அலங்காரம் செய்யப்பட்டு, மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டன. </p><p>தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, யாகம் வளர்த்து, மந்திரங்கள் முழங்க பொதுமக்கள் முன்னிலையில் கழுதைகளுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும் என்ற நம்பிக்கை உள்ளதால் ஏராளமான இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title> கொடைக்கானலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rare-neelakurinji-flowers-carpet-kodaikanal-hills</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rare-neelakurinji-flowers-carpet-kodaikanal-hills#comments</comments><guid isPermaLink="false">2a5dff6a-0b4c-4bba-9cd9-d803359dab74</guid><pubDate>Sun, 09 Aug 2026 11:21:25 +0000</pubDate><atom:updated>2026-08-09T11:21:25.705Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tourists,கொடைக்கானல்,Kodaikanal,சுற்றுலாப் பயணிகள்,flowers,குறிஞ்சி மலர்கள்,Kurinji</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/jyloindp/kurungi.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ நீலக்குறிஞ்சி மலர்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ கொடைக்கானலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்கின]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/jyloindp/kurungi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கொடைக்கானல், </p><p>மலைகளின் இளவரசியான கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கக்கூடிய உலகப் புகழ்பெற்ற அரிய வகை தாவரமான நீலக்குறிஞ்சி மலர்கள் தற்போது ஆங்காங்கே பூக்கத் தொடங்கியுள்ளன.</p><h2>நீலக்குறிஞ்சி மலர்கள்</h2><p>திண்டுக்கல் மாவட்டம், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D">கொடைக்கானல்</a> மலைப்பகுதிகளில் பசுமையான புல்வெளிகளும், எழில் கொஞ்சும் பள்ளத்தாக்குகளும் நிறைந்து காணப்படுகின்றன. இங்குள்ள பல்வேறு வனப்பகுதிகளிலும், மலைச் சரிவுகளிலும் இயற்கை எழிலோடு வளர்ந்துள்ள குறிஞ்சி செடிகளில் தற்போது நீலக்குறிஞ்சி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">மலர்கள்</a> கொத்து கொத்தாக பூத்துக் குலுங்குகின்றன.</p><h2>12 ஆண்டுகளுக்கு ஒருமுறை</h2><p>சுமார் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் இந்த அரிய வகை மலர்கள், தற்போது மலை பிரதேசங்களை நீல நிற பாயாக மாற்றி, காண்போரை கண் கவர செய்யும் வகையில் இயற்கை அன்னைக்கு அழகூட்டி வருகின்றன. </p> <h2>பயணிகள் மகிழ்ச்சி</h2><p>கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குவதை காண, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்து வருகின்றனர். </p><p>மலையெங்கும் நீலப்போர்வை போர்த்தியது போலக் காட்சியளிக்கும் இந்த அற்புத இயற்கை நிகழ்வை, சுற்றுலாப் பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் கண்டு ரசித்து, செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். இதனால் கொடைக்கானலின் முக்கியப் சுற்றுலா தலங்கள் அனைத்தும் தற்போது பயணிகளின் கூட்டத்தால் களைகட்டதொடங்கியுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் விஜய் துணை நிற்க வேண்டும் - நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cm-vijay-should-support-centre-on-tamil-nadu-infrastructure-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cm-vijay-should-support-centre-on-tamil-nadu-infrastructure-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">60977859-c7e8-493b-8f24-833761fab113</guid><pubDate>Sun, 09 Aug 2026 11:09:42 +0000</pubDate><atom:updated>2026-08-09T11:09:42.172Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழகம்,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,மத்திய அரசு,வலியுறுத்தல்,மேம்படுத்தும் பணி,insists,All over Tamil Nadu,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/sssyip12/112.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக பாஜக தலைவர் நயினார்  நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/sssyip12/112.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் மத்திய அரசுக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a> துணை நிற்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்.  இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>மத்திய ரெயில்வே துறை மந்திரி பதில்</h2><p>தமிழகத்தின் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87">ரெயில்வே</a> திட்டங்கள் மற்றும் தமிழக ரெயில்வே துறைக்கு மத்திய அரசு இதுவரை ஒதுக்கிய நிதி உள்ளிட்டவைகள் தொடர்பாக திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா எழுப்பிய கேள்விகளுக்கு, எழுத்துப்பூர்வமாக  பதிலளித்துள்ளார் மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்.</p> <h2>500 கிமீ வரை புதிய ரெயில் பாதை</h2><p>அதாவது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி காலத்தில் தமிழகத்தின் ரெயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை காட்டிலும் 8 மடங்கு அதிக நிதி, மொத்தம் 19 புதியரெயில் திட்டங்கள், கிட்டத்தட்ட 500 கிமீ வரையிலான புதிய ரெயில் பாதைகள் உள்ளிட்ட பல வளர்ச்சித் திட்டங்கள் தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் தமிழகத்திற்கு வாரி வழங்கப்பட்டுள்ளன என்பதை அழுத்தம் திருத்தமாக மீண்டும் ஒருமுறை எடுத்துக் கூறியுள்ளது மத்திய அரசு. </p><h2>திமுக அரசு</h2><p>அதுமட்டுமன்றி, மத்திய அரசின் மேலும் புதிய திட்டங்களுக்கு மொத்தம் 4,612 ஹெக்டேர் நிலங்கள் தேவைப்படும் நிலையில், முந்தைய திமுக அரசு அதில் வெறும் 26 சதவிதம் அதாவது 1,178 ஹெக்டேர் நிலங்களை மட்டுமே கையகப்படுத்திக் கொடுத்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது மத்திய அரசு.</p> <h2>மோதல் போக்கு</h2><p>எனவே, முந்தைய அரசை போல கண்மூடித்தனமான மோதல் போக்கை கடைபிடிக்காமல், ரெயில்வே திட்டங்களுக்கு தேவைப்படும் நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்தி, தமிழகத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் மத்திய அரசுக்கு துணை நிற்குமாறு முதல்-அமைச்சர் விஜயை கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் வட மாநில தொழிலாளர்கள் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/petrol-bomb-hurled-at-house-of-northern-state-workers-in-thoothukudi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/petrol-bomb-hurled-at-house-of-northern-state-workers-in-thoothukudi#comments</comments><guid isPermaLink="false">1ec8a456-c531-470b-9708-417c4f594afa</guid><pubDate>Sun, 09 Aug 2026 11:05:49 +0000</pubDate><atom:updated>2026-08-09T11:05:49.472Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,House,police investigation,போலீஸ் விசாரணை,வீடு,Northern State workers,petrol bomb attack,பெட்ரோல் குண்டு வீச்சு,வட மாநில தொழிலாளர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/eyvs8w1i/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81.12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல் குண்டு வீச்சு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/eyvs8w1i/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81.12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடியில் உள்ள ஒரு கார் தொழிற்சாலையில் பணியாற்றும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">வட மாநில தொழிலாளர்கள்</a> வீடு மீது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81">பெட்ரோல் குண்டு வீசிய</a> மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். </p><h2>கார் தொழிற்சாலையில் பணியாற்றும் வட மாநிலத்தவர்கள்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> 3-ம் மைல் அருகே திரு.வி.க. நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வட மாநிலத்தைச் சேர்ந்த 15 தொழிலாளர்கள் தங்கி உள்ளனர். அவர்கள் தூத்துக்குடியில் உள்ள வெளிநாட்டை சேர்ந்த ஒரு கார் தொழிற்சாலையில் ஊழியர்களாக பணி செய்து வருகின்றனர். </p><h2>பெட்ரோல் குண்டு வீசிய மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு</h2><p>இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 4 பைக்குகளில் வந்த கும்பலை சேர்ந்தவர்கள் பெட்ரோல் குண்டு மற்றும் கற்களை அந்த வட மாநிலத்தவர்கள் தங்கியுள்ள வீட்டின் மீது எரிந்துவிட்டு சென்றுள்ளனர். இதில் வீட்டின் கண்ணாடிகள் உடைந்தும், வெளியில் இருந்த துணிகள் தீயில் கருகியும் சேதம் அடைந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் மற்றும் பாதிப்புகள் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பலை சேர்ந்தவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>சென்னையில் கனமழை; மத்திய மந்திரி அமித்ஷா புறப்படுவதில் சிக்கல்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/heavy-rain-in-chennai-delays-amit-shahs-departure</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/heavy-rain-in-chennai-delays-amit-shahs-departure#comments</comments><guid isPermaLink="false">878c7248-26f5-48ac-9a79-07f307b8f7fa</guid><pubDate>Sun, 09 Aug 2026 10:59:16 +0000</pubDate><atom:updated>2026-08-09T10:59:16.974Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அமித்ஷா,கனமழை,Amit Shah,Heavy rains,helicopter</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/giawtyc6/uhaca.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/giawtyc6/uhaca.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>சென்னையில் கனமழையால், மத்திய மந்திரி அமித்ஷா புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.</p><p>வட கடலோர தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p> <h2>கனமழை</h2><p>இந்நிலையில், சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள புறநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் இன்று மாலை கனமழை பெய்து வருகிறது.</p><p>இதன்படி, வடபழனி, எழும்பூர், நுங்கம்பாக்கம், மாம்பலம், கிண்டி, வேப்பேரி, அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், பெரியமேடு, கோயம்பேடு, பூந்தமல்லி உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.</p>  <h2>மத்திய மந்திரி அமித்ஷா</h2><p>இதனால், தமிழகத்திற்கு வருகை தந்துள்ள மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, சுற்றுப்பயணம் முடிந்து டெல்லி புறப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டு உள்ளது.  மழையால் அவருடைய ஹெலிகாப்டர் தொடர்ந்து பறப்பதில் சிக்கல் ஏற்பட்டது.</p><p>தெளிவற்ற வானிலை, தொடர் மழையால் அது, வானத்தில் பறந்தபடி இருந்தது.  இதனை தொடர்ந்து, தாம்பரம் விமானப்படை தளத்தில் ஹெலிகாப்டர் தரையிறக்கம் செய்யப்பட்டது.  இதன்பின்னர், அவர் கார் மூலம் விமான நிலையத்திற்கு செல்கிறார்.</p> ]]></content:encoded></item><item><title>‘நாட்டாமை குடும்பம்’ என்னை சந்திக்க வருவோருக்கு இது கிரீன் கார்டு - சரத்குமார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/this-is-a-green-card-for-those-who-come-to-visit-me-as-a-natamai-family-sarathkumar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/this-is-a-green-card-for-those-who-come-to-visit-me-as-a-natamai-family-sarathkumar#comments</comments><guid isPermaLink="false">ee51450d-8e4a-4526-b03f-82e0a81450a7</guid><pubDate>Sun, 09 Aug 2026 10:52:33 +0000</pubDate><atom:updated>2026-08-09T10:52:33.349Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,சரத்குமார்,Sarathkumar insisted,GreenCard,Naattaamai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/afqi49zh/sarathkumar33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சரத்குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/afqi49zh/sarathkumar33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தன்னை சந்திக்க வருவோருக்கு இது கிரீன் கார்டு போல.. கையில் ‘நாட்டாமை குடும்பம்’ என பச்சை குத்தி இருந்தால் தன்னை எளிதில் சந்திக்கலாம் என நடிகர்  சரத்குமார் கூறியுள்ளார்.</p><h2>"நாட்டாமை குடும்பம்"</h2><p> நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார், தனது தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கைகளில் "நாட்டாமை குடும்பம்" என்று பச்சை குத்திக் கொள்ளுமாறு கூறியுள்ள கருத்து சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் பேசு பொருளாக மாறியுள்ளது.</p><p>நடிகர் சரத்குமார் தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் தனது ஆதரவாளர்களுக்கு விருந்து வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்.</p><h2>திடீரென தோன்றிய சிந்தனை</h2><p>நிகழ்ச்சியில் பேசிய <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">சரத்குமார்</a>, தனது ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கவும் அவர்களுக்குள் ஒரு பிணைப்பை உருவாக்கவும் இந்த யோசனையை முன்வைத்தார்.</p><p>பேச்சுவார்த்தையின் போது பேசிய அவர், “எனது சிந்தனையில் திடீரென தோன்றியதுதான் பச்சை குத்தும் எண்ணம். 'நாட்டாமை குடும்பம்' என பச்சை குத்தினால் நன்றாக இருக்கும் என தோன்றியது; இது நமது குடும்ப அடையாளமாக இருக்கும். என்னை சந்திக்க வருவோருக்கு கிரீன் கார்டு போல, கையில் பச்சைக் குத்து இருந்தால் எளிதில் நேரடியாகவே சந்திக்கலாம் என்று தெரிவித்தார்.</p><h2>நாட்டாமை பிம்பம்</h2><p>சரத்குமாரின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்த 'நாட்டாமை' திரைப்படத்தின் பெயரை, தனது ஆதரவாளர்களுக்கான குடும்ப அடையாளப் பெயராக அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.</p><p>நடிகர் சரத்குமாரின் இந்த பேச்சு வெளியானதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் இதுகுறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. ரசிகர்கள் மற்றும் தொண்டர்களைக் கவர அவர் கையாண்டுள்ள இந்த பச்சை குத்தும் பிரசார உத்தி கவனிப்பைப் பெற்றுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கபினி அணையில் நீர்மட்டம் உயர்வு; காவிரி நீர்திறப்பு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-level-rises-in-kabini-dam-cauvery-water-release-increased-to-12000-cusecs</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-level-rises-in-kabini-dam-cauvery-water-release-increased-to-12000-cusecs#comments</comments><guid isPermaLink="false">d407219e-190e-4f9e-8bab-86c0b09d37f3</guid><pubDate>Sun, 09 Aug 2026 10:43:09 +0000</pubDate><atom:updated>2026-08-09T10:43:09.714Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Cauvery,காவிரி,கபினி அணை,Kabini Dam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/mg6pz3ul/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/mg6pz3ul/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பெங்களூரு,</p><p>காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், கர்நாடகாவில் உள்ள முக்கிய அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்) அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>மைசூர் அருகே உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து கடந்த 31-ந்தேதி வரை சீராக இருந்த நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் நீர்வரத்து அதிரடியாக உயர்ந்தது. அணை மிக வேகமாக நிரம்பி வருவதால், அதன் பாதுகாப்பை வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.</p><p>இந்நிலையில், கபினி அணைக்கான நீர்வரத்து 14,599 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 83.05 அடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து கபினி அணையில் இருந்து காவரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே போல், 124 அடி கொள்ளளவு கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 107 அடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. </p> ]]></content:encoded></item><item><title>நெல்லையில் ஒரு ஆண் சந்தேக மரணம்; போலீசார் தீவிர விசாரணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-man-dies-suspiciously-in-nellai-police-are-actively-investigating</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-man-dies-suspiciously-in-nellai-police-are-actively-investigating#comments</comments><guid isPermaLink="false">e5ef9f90-edcb-4e90-8dd4-d8e2c1f5e68d</guid><pubDate>Sun, 09 Aug 2026 10:20:13 +0000</pubDate><atom:updated>2026-08-09T10:20:13.667Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,மரணம்,suspicious death,சந்தேகம்,Male,ஆண்,Police investigating,போலீசார் விசாரணை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/o4xzk0f6/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஒரு ஆண் சந்தேக மரணம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/o4xzk0f6/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டம், களக்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D">ஆண்</a> ஒருவர் உயிரிழந்தது குறித்து சந்தேக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D">மரணம்</a> என வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>போலீசாருக்கு தகவல்</h2><p>திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி உட்கோட்டம், களக்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருவேலங்குளம் பகுதியில், களக்காடு-சேரன்மகாதேவி சாலையோரத்தில் இன்று அதிகாலை 5.20 மணியளவில் ராமகிருஷ்ணன் (வயது 48) என்பவர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. </p><h2>ஒருவர் சந்தேக மரணம்</h2><p>களக்காடு போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், நேற்று இரவு பன்றி பண்ணைக்கு செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து சென்ற ராமகிருஷ்ணன், இன்று அதிகாலை சாலையோரத்தில் காயத்துடன் இறந்து கிடந்தது தெரியவந்தது. சம்பவ இடத்தில் உடலை இழுத்துச் சென்ற தடயங்கள் காணப்பட்டதுடன், அவரது சட்டை, செல்போன் மற்றும் சைக்கிள் ஆகியவை சம்பவ இடத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டு போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. எனவே இந்த நபர் உயிரிழந்தது குறித்து சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. </p><h2>போலீசார் விசாரணை</h2><p>இந்த சம்பவம் தொடர்பாக அருகில் வசிக்கும் சத்தியா என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் அறிவியல் உதவி அதிகாரி மற்றும் கைரேகை நிபுணர் ஆகியோர் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஸ்வேஸ் பா.சாஸ்திரி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை மற்றும் தடய சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக, நாங்குநேரி உட்கோட்ட டி.எஸ்.பி. மற்றும் களக்காடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உள்பட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">போலீசார் தீவிர விசாரணை</a> நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: பள்ளி ஆசிரியைக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-man-arrested-for-repeatedly-sexually-harassing-school-teacher</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-man-arrested-for-repeatedly-sexually-harassing-school-teacher#comments</comments><guid isPermaLink="false">943a35b0-84dc-4c68-9960-c6b38ca96e56</guid><pubDate>Sun, 09 Aug 2026 10:09:02 +0000</pubDate><atom:updated>2026-08-09T10:09:02.962Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Thoothukudi,தூத்துக்குடி,arrest,Sexual harassment,பாலியல் தொல்லை,தொடர்,Serial,school teacher,பள்ளி ஆசிரியை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/s1licnqn/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பள்ளி ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/s1licnqn/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், எட்டையாபுரம் அருகே <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88">பள்ளி ஆசிரியை</a>க்கு தொடர்ந்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88">பாலியல் தொல்லை</a> கொடுத்து அச்சுறுத்தி வந்த நபரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். </p><h2>பள்ளி ஆசிரியை</h2><p>தூத்துக்குடி மாவட்டம், எட்டையாபுரம் அருகே உள்ள சிங்கிலிபட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வரும் 47 வயது பெண் ஆசிரியர், தினமும் கோவில்பட்டியில் இருந்து பேருந்தில் வந்து இறங்கி பள்ளிக்கு நடந்து செல்வது வழக்கம். </p><h2>தொடர் பாலியல் தொல்லை</h2><p>இந்த நிலையில் சிவஞானபுரத்தைச் சேர்ந்தவரும் தற்போது முதலிபட்டியில் வசித்து வருபவருமான கூடலிங்கம் என்பவரின் மகன் முத்துக்கிருஷ்ணன் (வயது 44), அந்த பெண் ஆசிரியரை தினமும் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்றுள்ளார். மேலும் வழியில் அவரை மறித்து ஆபாசமாக பேசுவதும், அதிவேகமாக வாகனத்தை ஓட்டி வந்து அச்சுறுத்துவதுமாக தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.</p><h2>போலீசாரிடம் ஒப்படைப்பு</h2><p>வழக்கம் போல் இன்று பேருந்து நிலையத்திலிருந்து பள்ளிக்கு நடந்து சென்ற பெண் ஆசிரியரைப் பின்தொடர்ந்து வந்து முத்துக்கிருஷ்ணன் மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள், முத்துக்கிருஷ்ணனை சூழ்ந்து மடக்கிப் பிடித்து, பின்னர் எட்டையாபுரம் காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். </p><h2>கைது செய்து சிறையில் அடைப்பு</h2><p>பொதுமக்களிடம் இருந்து அந்த நபரை மீட்ட எட்டையாபுரம் போலீசார், காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் முத்துக்கிருஷ்ணன் பள்ளிக்கு வரும் சிறுமிகளின் பெற்றோர்களை வழிமறித்து, அவர்களின் செல்போன் எண்களை கேட்டு வாங்கி, பல பெண்களுக்குத் தொல்லை கொடுத்து வந்ததாகவும் அப்பகுதி கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வார விடுமுறையையொட்டி ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-flock-to-hogenakkal-for-the-weekend-holiday</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-flock-to-hogenakkal-for-the-weekend-holiday#comments</comments><guid isPermaLink="false">5c383f1a-6d54-48f9-b986-c6bfecc09a17</guid><pubDate>Sun, 09 Aug 2026 10:03:58 +0000</pubDate><atom:updated>2026-08-09T10:03:58.274Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Hogenakkal,Tourists,ஒகேனக்கல்,சுற்றுலா பயணிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/sgc2h3rk/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/sgc2h3rk/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தர்மபுரி,</p><p>தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள தமிழக காவிரி எல்லையான ஒகேனக்கல் பிலிகுண்டுலு பகுதிக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 6,500 கன அடியில் இருந்து, இன்று 6,000 கன அடியாக சரிந்துள்ளது. கடந்த சில நாட்களாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீடித்த வெள்ளப்பெருக்கு படிப்படியாக குறைந்த நிலையில், நேற்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.</p><p>அதனைத் தொடர்ந்து, இன்று வார விடுமுறை தினம் என்பதால் ஒகேனக்கலில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். அங்கு சுற்றுலா பயணிகள் ஆயில் மசாஜ் செய்து கொண்டும், குடும்பத்தினருடன் பரிசல் பயணம் மேற்கொண்டும், நீர்வீழ்ச்சிகளில் குளித்தும் ஆனந்தமாக விடுமுறையை கொண்டாடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>செங்கல்பட்டு: வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றபோது மின்சாரம் தாக்கி விவசாயி பலி

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chengalpattu-farmer-dies-of-electrocution-in-field</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chengalpattu-farmer-dies-of-electrocution-in-field#comments</comments><guid isPermaLink="false">e54bae99-8645-460d-aafd-527e77b353db</guid><pubDate>Sun, 09 Aug 2026 09:57:12 +0000</pubDate><atom:updated>2026-08-09T09:57:12.691Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>farmer,விவசாயி,Chengalpattu,செங்கல்பட்டு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/spc947zp/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/spc947zp/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>செங்கல்பட்டு,</p><p><a href="https://www.dailythanthi.com/">செங்கல்பட்டு </a>மாவட்டம் கல்பாக்கம் அருகே கடலூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி நாகராஜ் (வயது 52). இவர் இன்று அதிகாலை கிராமத்தில் உள்ள தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். </p><h2>விவசாயி பலி</h2><p>வயல் வரப்பில் நடந்து சென்றபோது கீழே அறுந்து கிடந்த உயர் மின் அழுத்த கம்பியை நாகராஜ் மிதித்துள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்து விவசாயி நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். </p><p>இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், விரைந்து சென்று விவசாயி நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். </p> ]]></content:encoded></item><item><title>திமுக கூட்டணிக்குள் எம்.பி. ஆகி வசதிக்கு எஸ்கேப் ஆனவர் மாணிக்கம் தாகூர்: கனிமொழி சோமு தாக்கு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-alliance-manikam-thakur-escape-comfort-kanimozhi-somu-attack</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-alliance-manikam-thakur-escape-comfort-kanimozhi-somu-attack#comments</comments><guid isPermaLink="false">efed3f36-c964-459b-8528-826ffd5b9b54</guid><pubDate>Sun, 09 Aug 2026 09:12:25 +0000</pubDate><atom:updated>2026-08-09T09:12:25.495Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,கனிமொழி,மாணிக்கம் தாகூர்,Kanimozhi,Attacks,தாக்கு,Manickam Thakur MP</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/bp1zsnvi/kanimozhi-somu.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கனிமொழி சோமு]]></media:title><media:description type="html"><![CDATA[ திமுக கூட்டணிக்குள் எம்.பி. ஆகி வசதிக்கு எஸ்கேப் ஆனவர் மாணிக்கம் தாகூர்: கனிமொழி சோமு தாக்கு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/bp1zsnvi/kanimozhi-somu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திமுக கூட்டணிக்குள் எம்.பி. ஆகி வசதிக்கு எஸ்கேப் ஆனவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">மாணிக்கம் தாகூர்</a> என்று கனிமொழி சோமு தெரிவித்தார். "அரசியலில் யாரும் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை; தமிழ்நாட்டுக்கு எது நல்லதோ அது எங்கிருந்து வந்தாலும் அதை ஆமோதிப்போம் என்று, பாஜகவுடன் நட்பு பாராட்டுகிறதா திமுக என்ற கேள்விக்கு திமுக முன்னாள் எம்.பி. கனிமொழி சோமு பதில் அளித்தார். </p><p> இது குறித்து, மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தள பதிவில், </p><h2>உண்மை வெளியே வருது</h2><p>அப்படியா …இப்பொழுது உண்மை வெளியே வருகிறது ஏன் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு வரவில்லை என்பது என்று மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தள பதிவில் கூறினார். </p><p>அதற்கு பதிலாடியாக கனிமொழி சோமு இது தொடர்பாக, தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்ததாவது:- ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பார்கள்..</p><h2>சோபா மாடல் முதலாளி</h2><p>உங்கள் சோபா மாடல் முதலாளி பேப்பரைக்கூட படிக்காமல் சட்டமன்றத்தில் எங்கள் இளந்தலைவரிடம் கொட்டு வாங்கியதைப்போல, யார் மக்களவை, மாநிலங்களவையில் உறுப்பினராக உள்ளார்கள், யார் யார் பங்கேற்பார்கள் என்ற அடிப்படை அறிவு துளியும் இல்லாமல் திமுகழகத்தின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்த ஊருக்கு முன்பு கதறிக்கொண்டிருக்கிறீர்கள் தி.மு.கழக கூட்டணிக்குள் எம். பி. ஆகி வசதிக்கு எஸ்கேப் ஆன மாணிக்கம் தாகூர் சார். முதலில் நீங்களும் பேப்பரை படிக்க ஸ்டாட் பண்ணுங்க!</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பார்கள்..<br><br>உங்கள் <a href="https://x.com/hashtag/sofamodel?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#sofamodel</a> முதலாளி பேப்பரைக்கூட படிக்காமல் சட்டமன்றத்தில் எங்கள் இளந்தலைவரிடம் கொட்டு வாங்கியதைப்போல, யார் மக்களவை, மாநிலங்களவையில் உறுப்பினராக உள்ளார்கள், யார் யார் பங்கேற்பார்கள் என்ற அடிப்படை அறிவு துளியும் இல்லாமல்… <a href="https://t.co/oVrLnommk3">https://t.co/oVrLnommk3</a></p>&mdash; Dr Kanimozhi NVN Somu (@DrKanimozhiSomu) <a href="https://x.com/DrKanimozhiSomu/status/2086354139022504299?ref_src=twsrc%5Etfw">August 9, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-tomorrow-14</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-tomorrow-14#comments</comments><guid isPermaLink="false">6ecfddf8-0156-4c5b-bfe2-e86165245a1c</guid><pubDate>Sun, 09 Aug 2026 09:10:36 +0000</pubDate><atom:updated>2026-08-09T09:10:36.245Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,monthly maintenance work,மாதாந்திர பராமரிப்பு பணி,Power outage tomorrow,நாளை மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/ssy6h0l7/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/ssy6h0l7/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மின்பகிர்மான வட்டம், திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம் மற்றும் திருநெல்வேலி கிராமப்புற கோட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் காரணமாக நாளை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> செய்யப்படும். </p><h2>திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம்</h2><p>திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் ரவிராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>தச்சநல்லூர் துணை மின் நிலையத்த்தில் நாளை (10.8.2026, திங்கள்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பின்வரும் பகுதிகளுக்கு பாதுகாப்பு கருதி மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. </p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>தச்சநல்லூர், நல்மேய்ப்பர் நகர் ,செல்வவிக்னேஷ் நகர், பாலாஜி அவென்யூ,  வடக்கு பாலபாக்கிய நகர், தெற்கு பாலபாக்கிய நகர், மதுரை ரோடு, திலக் நகர், பாபுஜி நகர், சிவந்தி நகர், கோமதி நகர், சிந்துபூந்துறை, மணிமூர்த்தீஸ்வரம் மற்றும் இருதய நகர், செல்லபாண்டியன் சிலை முதல் ஆற்றுப்பாலம் வரை வடக்கு புறவழிச் சாலை, இளங்கோ நகர், காவேரி ஹாஸ்பிடல் பகுதி, இந்திரா காலனி, கரிமேடு பகுதி, எட்டுத்தொகை தெரு, கம்பராமாயணம் தெரு, கட்டுப்பாட்டு தெரு ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p><h2>திருநெல்வேலி கிராமப்புற கோட்டம்</h2><p>திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>தாழையூத்து மின் நிலையத்தில் நாளை (10.8.2026, திங்கள்கிழமை) மாதாந்திர அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாதுகாப்பு கருதி பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும். </p><p>மானூர் வட்டாரம், தாழையூத்து, சேதுராயன்புதூர், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூர், தென்கலம்புதூர், நாஞ்சான்குளம், தென்கலம், மதவகுறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>நெல்லையில் &quot;போதை இல்லா கிராமம்&quot; மாரத்தான் போட்டி: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/drug-free-village-marathon-in-nellai-thousands-participate</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/drug-free-village-marathon-in-nellai-thousands-participate#comments</comments><guid isPermaLink="false">77ee76de-cf55-4d10-8e80-08340b52f71e</guid><pubDate>Sun, 09 Aug 2026 09:02:32 +0000</pubDate><atom:updated>2026-08-09T09:02:32.139Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,மாரத்தான் போட்டி,கலெக்டர்,collector,எஸ்.பி.,village,inaugurated,கிராமம்,போதை,Marathon Competition,தொடங்கி வைத்தனர்,இல்லாத,S.P.,Drug Free</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/jy3mmw49/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ "போதை இல்லா கிராமம்" மாரத்தான் போட்டி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/jy3mmw49/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்ட கலெக்டர் ஆனந்த் மோகன் மற்றும் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி ஆகியோர் இணைந்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88">போதை</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4">இல்லா</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D">கிராமம்</a>  மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தனர்.</p><h2>“போதை இல்லா கிராமம்” மாரத்தான் போட்டி</h2><p>திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி உட்கோட்டம், முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர், சிறுமியர் மற்றும் ஆண், பெண், பொதுமக்கள் பங்கேற்ற “போதை இல்லா கிராமம்” <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF">மாரத்தான் போட்டி</a> இன்று காலை நடைபெற்றது.</p><h2>6 கிலோமீட்டர்</h2><p>இந்த மாரத்தான் போட்டியானது தருவை இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் முதல் சுத்தமல்லி விலக்கு வரை 6 கிலோமீட்டர் தொலைவிற்கு நடைபெற்றது.</p><h2>கலெக்டர், எஸ்.பி. தொடங்கி வைத்தனர்</h2><p>இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஆனந்த் மோகன் மற்றும் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி ஆகியோர் இணைந்து மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மேலும் சேரன்மகாதேவி உட்கோட்ட டி.எஸ்.பி.யும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். </p><h2>அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்</h2><p>இந்த நிகழ்ச்சியில் பேசிய திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. தருவை கிராமத்தை “போதை இல்லா கிராமம்” என அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். மேலும் போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிப்பதற்கு பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் போலீசார் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். </p><h2>ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு</h2><p>போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் 1,060 பேர் கலந்து கொண்டனர். இதில் 600 ஆண்கள், 400 பெண்கள் மற்றும் 60 போலீசார் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் மூலம் “போதைப்பொருளை தவிர்ப்போம் - ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம்” என்ற விழிப்புணர்வு பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே ஏற்படுத்தப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் ஆடிப்பூர விழா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thirukovilur-ulagalantha-perumal-temple-aadi-pooram-festival</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thirukovilur-ulagalantha-perumal-temple-aadi-pooram-festival#comments</comments><guid isPermaLink="false">757f54a9-49b9-4c54-befb-63d397e9e28b</guid><pubDate>Sun, 09 Aug 2026 08:59:40 +0000</pubDate><atom:updated>2026-08-09T08:59:40.846Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருக்கோவிலூர்,உலகளந்த பெருமாள் கோவில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/eszi9g6m/thirukovilur.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ உலகளந்த பெருமாள் கோவில்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/eszi9g6m/thirukovilur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருக்கோவிலுார்,  </p><p>திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா நடைபெற்று வருகிறது. </p><p>கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுாரில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலமான உலகளந்த பெருமாள் கோவிலில் ஆடிப்பூர பெருவிழா 7 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாளான நேற்று காலை 6.00 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், 7.30 மணி வரை நித்திய பூஜைகள் நடைபெற்றன. 10.00 மணிக்கு ஆண்டாள் கண்ணாடி அறையில் எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம், நான்காயிர திவ்ய பிரபந்த சேவை, தீபாராதனை, சற்றுமறை, பிரசாத விநியோகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுவாமி ஆஸ்தானம் எழுந்தருளினார்.</p><p>விழாவின் நிறைவு நாளான 14ம் தேதி காலை ஆண்டாள் நாச்சியார் சமேத தேகளீச பெருமாள் தங்க பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மதியம் 12.00 மணிக்கு கண்ணாடி அறையில் சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம், சிறப்பு அலங்காரத்தில், நூறு தடா அக்காரவடிசல் நைவேத்யமும், மாலை ஆண்டாள் நாச்சியார் சமேத தேகளீச பெருமாள் திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>சசிகலா, தினகரனை கட்சியில் சேர்க்க வேண்டும்:  வேலுமணி, விஸ்வநாதன் மீண்டும் போர்க்கொடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sasikala-and-dinakaran-should-be-included-in-the-party-velumani-viswanathan-raise-the-war-flag-again</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sasikala-and-dinakaran-should-be-included-in-the-party-velumani-viswanathan-raise-the-war-flag-again#comments</comments><guid isPermaLink="false">bc573cda-9d70-48c6-bd06-895d86db7e9b</guid><pubDate>Sun, 09 Aug 2026 08:47:23 +0000</pubDate><atom:updated>2026-08-09T08:47:23.529Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,எடப்பாடி பழனிசாமி,அதிமுக,சசிகலா,EPS,SPVelumani,தினகரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/a2q23q9o/spmani33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[   வேலுமணி, விஸ்வநாதன் மீண்டும் போர்க்கொடி ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/a2q23q9o/spmani33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சசிகலா, தினகரனை கட்சியில் சேர்க்க வேண்டும், அவர்களுடன்&nbsp; பேசி கட்சியை பலப்படுத்த வேண்டும் என பழனிசாமிக்கு வேலுமணி, விஸ்வநாதன் ஆகியோர் இணைந்து கடிதம் எழுதி உள்ளனர்.</p><h2>42 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தோம்</h2><p>இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,</p><p>நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, அதிமுக பொதுச்செயலாளராகிய நீங்கள், கட்சியை வழிநடத்திச் செல்வதில் எடுத்த தவறான முடிவுகளால், 47 சட்டமன்ற உறுப்பினர்களில், 25 சட்டமன்ற உறுப்பினர்கள், திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைப்பது தவறு என்பதை, சுட்டிக்காட்டினர்.</p><p>மேலும், 2021 சட்டமன்ற தேர்தலில் டிடிவி தினகரனுடன் கூட்டணி வைக்க மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அவர்கள் சென்னையில் நேரில் சந்தித்து வலியுறுத்தியும், ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் ஒத்துக்கொண்ட நிலையில் நீங்கள் அதை உதாசீனப்படுத்தியதால் 42 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தோம்.  அன்று டிடிவி தினகரன் அவர்களுக்கு சீட் கொடுக்க வேண்டாம், என்று நிராகரித்தீர்கள்.</p><p>2019ல் அஇஅதிமு.க தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்த போது, நம்மோடு கூட்டணியாக இணைந்து பயணித்த தேசிய முற்போக்கு திராவிட கழகம், புதிய தமிழகம் கட்சி மற்றும் தனி கட்சியாக இருந்த சரத்குமார் ஆகியோரை அரவணைக்காமல் 2021 சட்டமன்ற தேர்தலில் வெளியேற்றினீர்கள்.</p><h2>நிர்வாகிகளுக்கு பல கோடி ரூபாய் இழப்பு</h2><p>2024  நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க டெல்லி தலைமை பலமுறை கூட்டணி வைக்க முயன்றும் கூட்டணியாக நம்முடைய அனைத்து கோரிக்கைகளையும் செய்வதாக கூறிய போதும் தன்னிச்சையாக முன்யோசனை இல்லாமல் செயல்பட்டதால் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெற வலிய வாய்ப்பை வழங்கினீர்கள். அது மட்டுமில்லாது உங்களுடைய இந்த தவறான முடிவால் பல கழக வேட்பாளர்கள் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டு கோடிக்கனக்கான ரூபாய் இழந்து நிற்கிறார்கள்.</p><p>அதுபோன்று பா.ம.க கூட்டணிக்கு வர சம்மதம் தெரிவித்த போதும், ஒரு மாத காலம் அதை உறுதி செய்யாமல் காலதாமதம் செய்த காரணத்தால் கூட்டணி வாய்ப்பை இழந்தோம், இப்படி தேடிவந்த பா.ஜ.க., பா.ம.க போன்ற கட்சிகளின் கூட்டணி வாய்ப்புகளை தன்னிச்சையாக நிராகரித்தீர்கள்.</p><p>அதேபோல் நடந்து முடிந்த 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் பலமுறை பிரம்மாண்ட கூட்டணி அமைப்பதாக தெரிவித்ததோடு, கூட்டணிக்கு நம்மை நாடி வந்த தே.மு.தி.க மற்றும் புதிய தமிழகம் கட்சிகளை நம்மோடு இணைத்துக் கொள்ளாமல் தன்னிச்சையாக வெளியேற்றிவிட்டீர்கள். குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளவில்லை.</p><h2>சசிகலா, தினகரனை கட்சியில் சேர்க்க வேண்டும்</h2><p>அதனால், 2021, 2026 சட்டமன்ற பொது தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் ஆகிய 3 தேர்தல்களிலும் கழகம் வெற்றி பெற பிரகாசமான வாய்ப்புகள் இருந்தும், தாங்கள் எடுத்த தவறான தன்னிச்சையான முடிவுகளால், தொடர் தோல்விகளை சந்தித்து கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் மிகுந்த சோர்வை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டவர்களை அதே பொறுப்புகளில் நியமிக்க வேண்டும்.</p><p>சசிகலா, டிடிவி தினகரனிடம் பேசி கட்சியில் சேர்த்து கட்சியை பலப்படுத்த வேண்டும். 6 மாதத்தில் வர உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு முன் அதிமுகவை பலப்படுத்தியே ஆக வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை கொரட்டூரில் விமரிசையாக நடந்த அம்மன் கோவில் பால்குட ஊர்வலம் - 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/grand-paalkuda-procession-at-the-amman-temple-in-korattur-chennai-over-2000-women-participated</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/grand-paalkuda-procession-at-the-amman-temple-in-korattur-chennai-over-2000-women-participated#comments</comments><guid isPermaLink="false">a3bfd2fa-def2-41ab-b280-2ac3e327e548</guid><pubDate>Sun, 09 Aug 2026 08:40:08 +0000</pubDate><atom:updated>2026-08-09T08:40:08.959Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,பால்குட ஊர்வலம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/wncx6tfz/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/wncx6tfz/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை அடுத்த கொரட்டூரில் உள்ள பாடலாத்திரி சீயாத்தம்மன் கோவிலில் ஆடி மாதத் திருவிழா விமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், அம்மனின் தாய் வீடான கொரட்டூர் கருமாரியம்மன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. </p><p>இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று பால்குடம் ஏந்தி, மேளதாளங்கள் முழங்க பக்தி பரவசத்துடன் ஊர்வலமாக சென்றனர். "ஓம் சக்தி பராசக்தி" முழக்கத்துடன் கொரட்டூர் ரெயில்வே சுரங்கப்பாதை முழுவதும் பெண்கள் பால்குடம் ஏந்தி அணிவகுத்துச் சென்றனர். சுமார் 4 கிலோமீட்டர் சுற்றி வந்த பால்குட ஊர்வலம், பாடலாத்திரி சீயாத்தம்மன் கோவிலில் நிறைவடைந்தது.</p>]]></content:encoded></item><item><title>ஆன்லைன் மோசடிகளுக்கு வங்கி கணக்கை வாடகைக்கு விட்டு கமிஷன்: தமிழகம் முழுவதும் 800 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/800-arrested-across-tamil-nadu-for-renting-out-bank-accounts-for-online-scams-in-exchange-for-a-commission</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/800-arrested-across-tamil-nadu-for-renting-out-bank-accounts-for-online-scams-in-exchange-for-a-commission#comments</comments><guid isPermaLink="false">77234071-888e-45ba-8f36-4c55800036fc</guid><pubDate>Sun, 09 Aug 2026 08:24:08 +0000</pubDate><atom:updated>2026-08-09T08:24:08.169Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,போலீஸ்,தமிழகம்,கைது,arrest,வங்கி கணக்கு,Bank account,TN Police,ஆன்லைன் மோசடி,Online fraud,கமிஷன்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/dmyw3isf/fra.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/dmyw3isf/fra.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஆன்லைன் மோசடிகளுக்கு வங்கிக் கணக்கை வாடகைக்கு விட்டதாக தமிழ்நாடு முழுவதும் 800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><h2>மணி மியூல் அக்கவுண்ட்</h2><p>குறைந்த முதலீட்டில் அதிக லாபம் மற்றும் டிஜிட்டல் கைது மிரட்டல் மூலம் ஆன்லைன் வழியில் கோடிக்கணக்கில் பணம் பறிக்கப்படும் மோசடிகள் தொடர் கதையாகியுள்ளன. 'சைபர்' மோசடி செயல்களில் அபகரிக்கப்படும் பணம் பல்வேறு வங்கிக் கணக்குகளில் அனுப்பப்பட்டு எடுக்கப்படுகிறது. </p><p>இத்தகைய வங்கி கணக்குகள் மணி மியூல் அக்கவுண்ட் (Money Mule) என போலீசார் அழைக்கின்றனர். வங்கியில் இருந்த அந்த பணத்தை எடுத்து கொடுப்பதற்காக கமிஷன் தொகை வழங்கப்படுகிறது. </p><h2>சிறப்பு அதிரடி நடவடிக்கை</h2><p>இந்த கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு இளைஞர்கள் பலர் மோசடி செயலுக்கு உடந்தையாக இருந்து வருவதை சென்னை ‘சைபர் கிரைம்' போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சிறப்பு அதிரடி நடவடிக்கையில் சென்னையில் கடந்த 2 நாட்களில் 205 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் மோசடி பணத்தை பதுக்கும் மணி மியூல் வங்கி கணக்குகள் தொடர்புடைய 800 பேரை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. </p><h2>800 பேர் கைது</h2><p>இதன்படி, இந்த மோசடி தொடர்பாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்டவர்கள் அந்தந்த மாவட்ட போலீசார் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறாக தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ள 800 பேரிடம் போலீசாரின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பத்திரப்பதிவு முறைகேடுகளை தடுக்க கடும் நடவடிக்கை தேவை: தமிழக அரசுக்கு வானதி சீனிவாசன் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/strict-action-is-needed-to-prevent-irregularities-in-deed-registration-vanathi-srinivasan-urges-tamil-nadu-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/strict-action-is-needed-to-prevent-irregularities-in-deed-registration-vanathi-srinivasan-urges-tamil-nadu-government#comments</comments><guid isPermaLink="false">8840621d-5822-43f0-bcb0-a8e2905a34c9</guid><pubDate>Sun, 09 Aug 2026 08:18:43 +0000</pubDate><atom:updated>2026-08-09T08:18:43.829Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Government,சென்னை,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,வலியுறுத்தல்,பத்திரப்பதிவு,முறைகேடு,irregularities</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/n138bgpa/5.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/n138bgpa/5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>பத்திரப்பதிவு</h2><p>திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற பத்திரப் பதிவு முறைகேட்டில் அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தற்போது மீண்டும் பழனி ஆயக்குடி பகுதியில் கன்னிகா பரமேஸ்வரியம்மன் மடத்திற்குச் சொந்தமான ரூ. 2 கோடி நிலத்தினை ரூ.9 லட்சத்திற்கு பத்தரப்பதிவு செய்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.</p><p>மேலும் பழனி கோவில் கட்டுப்பாட்டில் உள்ள தண்டபாணி மடத்திற்குச் சொந்தமான நிலம் முறைகேடான பதிவு புகாரில் சிக்கிய சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் என்பவர்தான் இந்நிலத்தினையும் பதிவு செய்ததாகக் கூறப்படுவது பேரதிர்ச்சி. </p><p>இதுகுறித்து திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர், பழனி பத்திரப் பதிவாளருக்கு குறிப்பிட்ட சர்வே எண்ணில் உள்ள நிலத்தினை பத்திரப்பதிவு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியும் கடந்த மாதம் தனிநபருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டிருப்பது பத்திரப் பதிவுத்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை சிதைத்துள்ளது.</p><h2>நிலமோசடி</h2><p>தற்போது அனைத்து ஆவணங்களும் டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில், போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு ஒரு நிலம் பதிவு செய்யப்படுகிறது என்றால் அது நிச்சயம் பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை. இதுபோல் தொடர்ந்து கோவில் நிலங்கள் தனிநபர்களின் பெயரில் நிலமோசடி செய்யப்பட்டு அபகரிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியது. பத்திரப்பதிவு துறையில் வெளிப்படைத் தன்மை இல்லாததும்,  சாமானிய மக்கள் எளிதில் அறிந்து கொள்ளாத வகையில் சில நடைமுறைகள் பின்பற்றப்படுவதும் இதுபோன்ற முறைகேடான செயல்களுக்கு வழிவகுக்கிறது.  </p><h2>வலியுறுத்தல்</h2><p>எனவே தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை கோவில் நிலங்கள் அனைத்தையும் சிறப்புக் குழு அமைத்து ஆய்வு செய்து இதுபோன்ற முறைகேடுகள் நடந்திருக்கும் பட்சத்தில் உடனடியாக மீட்க வேண்டும். மேலும் மடத்திற்குச் சொந்தமான நிலங்களும் தனிநபர்கள் பெயரில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81">பத்திரப்பதிவு</a> செய்வதைத் தடுக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து கோவில் மற்றும் மடங்களின் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த பெயிண்டர் நாயை போல தாவி தாவி ஓடியதால் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-painter-who-came-to-the-government-hospital-jumped-and-ran-like-a-dog-causing-a-stir</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-painter-who-came-to-the-government-hospital-jumped-and-ran-like-a-dog-causing-a-stir#comments</comments><guid isPermaLink="false">57cb9f64-c7a5-4907-af4a-9684a83df3f4</guid><pubDate>Sun, 09 Aug 2026 08:09:48 +0000</pubDate><atom:updated>2026-08-09T08:09:48.537Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்சி,Trichy,Dog bite,நாய்,அரசு ஆஸ்பத்திரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/fvp9q10n/dog33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாயை போல தாவி தாவி ஓடியதால் பரபரப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/fvp9q10n/dog33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த பெயிண்டர் நாயை போல தாவி தாவி ஓடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.</p><p>திருச்சியைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் காரைக்காலில் தங்கியிருந்து பெயிண்டர் வேலை செய்து வந்தார். அவர் கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென வலிப்பு ஏற்பட்டு கீழே மயங்கி விழுந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்பு லன்ஸ் மூலம் <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF">காரைக்கால் அரசு ஆஸ்பத்திரி</a>க்கு அனுப்பி வைத்தனர். </p><p>ஆஸ்பத்திரி வளாகத்தில் ஆம்புலன்சில் இருந்து கீழே இறங்கியபோது. திடீரென அவர் நாய் போல் அங்கும். இங்குமாக தாவி தாவி ஓடினார். அப்போது அங்கிருந்த நாய் ஒன்று அவரை நோக்கி வந்து, அவருடன் விளையாடியது. இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரவ விட்டுள்ளனர். </p><p>தற்போது அது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.காரைக்காலில் நாய் கடித்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுபோன்று அவருக்கு நாய் கடித்ததால் இதுபோன்ற விபரீதம் ஏற்பட்டுள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item></channel></rss>