<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 08 Sep 2026 10:28:03 +0000</lastBuildDate><item><title>இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் - மு.வீரபாண்டியன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-permanent-solution-must-be-found-for-the-attacks-on-tamil-nadu-fishermen-by-the-sri-lankan-navy-m-veerapandian</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-permanent-solution-must-be-found-for-the-attacks-on-tamil-nadu-fishermen-by-the-sri-lankan-navy-m-veerapandian#comments</comments><guid isPermaLink="false">8df5dba5-6889-49ee-8544-8a212bb2a2fd</guid><pubDate>Tue, 08 Sep 2026 10:25:08 +0000</pubDate><atom:updated>2026-09-08T10:25:08.093Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,தமிழக மீனவர்கள்,Sri Lankan Navy,fishermen,இலங்கை,மு.வீரபாண்டியன்,M. Veerapandian</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/fx71bw9d/37.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.வீரபாண்டியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/fx71bw9d/37.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். </p><p>இதுகுறித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:-</p><h2>மந்திரி ராஜ்நாத்சிங்</h2><p>இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் செப்டம்பர் 8 முதல் 10 வரை 3 நாள் அதிகாரப்பூர்வ பயணமாக இலங்கை சென்றுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு, கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துதல் என்ற நோக்கத்தோடு இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார் என அரசுத்தரப்பு செய்திகள் கூறுகின்றன.</p><h2>தமிழ்நாடு மீனவர்கள்</h2><p>இலங்கை தலைவர்களைச் சந்தித்து முக்கியப் பிரச்சினைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் எனத் தெரிகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழ்நாடு மீனவர்கள், இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படுவதற்கும், கைது செய்யப்படுவதற்கும், சிறையில் அடைக்கப்படுவதற்கும் அவர்களது படகுகள் உட்பட தனிப்பட்ட உடைமைகள் பறிக்கப்படுவதற்கும், கைப்பற்றப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களின் படகுகளைத் திரும்ப ஒப்படைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும், இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்</a> தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் அவர்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வடகிழக்கு பருவமழை: முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-chief-minister-vijay-consultation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-chief-minister-vijay-consultation#comments</comments><guid isPermaLink="false">65d4f827-84b0-49c3-96a5-1a6cc1541843</guid><pubDate>Tue, 08 Sep 2026 10:12:33 +0000</pubDate><atom:updated>2026-09-08T10:12:33.332Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,முதல்-அமைச்சர்,வடகிழக்கு பருவமழை,Northeast Monsoon,Chief Minister</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/et4goa08/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/et4goa08/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>வடகிழக்கு பருவமழை நெருங்கி வரும் நிலையில் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார்.</p>  <h2>வடகிழக்கு பருவமழை</h2><p>தமிழகத்திற்கு அதிக மழை தரும் காலமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88">வடகிழக்கு பருவமழை</a> காலம் உள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை நிலவுகிறது. இந்த பருவமழை காலத்தின் புயலால் பாதிப்புகளும் ஏற்படுகின்றன. பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க ஆண்டுதோறும் அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்துவருகிறது.</p> <h2>முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை</h2><p>இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் விஜய் இன்று ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் - எடப்பாடி பழனிசாமி பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bypollil-2-thoguthigalilum-adimuka-vetri-perum-edappadi-palanisami-petti</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bypollil-2-thoguthigalilum-adimuka-vetri-perum-edappadi-palanisami-petti#comments</comments><guid isPermaLink="false">f9e97176-bd9a-4333-bd47-367e357a0552</guid><pubDate>Tue, 08 Sep 2026 09:53:21 +0000</pubDate><atom:updated>2026-09-08T09:53:21.046Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,எடப்பாடி பழனிசாமி,அதிமுக,Edappadi Palaniswami,தமிழக சட்டசபை,TN Assembly,இடைத்தேர்தல்,By election</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/0xakf1j7/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/0xakf1j7/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறுவோம் என்று அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-</p><p>மதுராந்தகம், தாராபுரத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு தவெக தான் காரணம். அதிமுக எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து ஆட்சியை தக்க வைக்க தவெக நாடகம் நடத்துகிறது. அரசு அமைக்க போதிய பலமில்லாததால் அதிமுகவை சேர்ந்தவர்களை தவெக தாஜா செய்கிறது. தவெக அரசை ஆதரித்த கட்சிகள் எதிரப்பு மனநிலைக்கு வந்துவிட்டதால் அதிமுகவினரிடம் பேசுகின்றனர். 2 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறுவோம்.</p><p>தவெக ஆட்சியில் நடந்துள்ள குறைகளை சுட்டிக்காட்டினால் அவர்கள் பதிலளிப்பது இல்லை. பட்ஜெட் தாக்கலானது முதல் மானியக் கோரிக்கை வரை, ஆளுங்கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் மாறி மாறி பேசி அவையின் பொன்னான நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது. மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் சொல்வது இல்லை. எந்த கேள்வி கேட்டாலும் 3 அமைச்சர்கள்தான் பதில் சொல்கிறார்கள்.</p><p>45 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் நடந்த சம்பவத்தை தற்போது பேசி அவையின் நேரம் வீணடிக்கப்படுகிறது. எங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளை பேசுகின்றனர். நான் கேட்ட எந்த கேள்விக்கும் முதல்-அமைச்சர் பதில் சொல்லவில்லை. ஆன்லைன் வர்த்தக முதலீட்டு மோசடி தொடர்பாக நான் எழுப்பிய கேள்விக்கு முதல்வரிடம் பதில் இல்லை. காவலர்களின் கோரிக்கைகள் குறித்த என் கேள்விகளுக்கும் எந்த பதிலும் இல்லை.</p><p>தவெகவின் ஆட்சி செயலிழந்த ஆட்சியாகத்தான் உள்ளது. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என தவெக ஆதரவு கட்சியான இடதுசாரி கட்சியே கூறுகிறது. தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தந்த இடதுசாரிகள் குறைகூறும் அளவுக்குத்தான் அரசு உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் பட்டப்பகலில் ஒருவரை வெட்டிக் கொல்லும் காட்சிகள் செய்திகளில் வருகிறது.</p><p>ஊழலை ஒழிப்பதாக கூறுகின்றனர். இந்த ஆட்சி வந்த பிறகு தான் ஊழல் அதிகமாகிவிட்டது. அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை பணத்தை பறிமுதல் செய்யும் அளவுக்கு ஊழல் அதிகரித்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை எல்லா ஆட்சியிலும் செயல்பட்டுத்தான் வந்தது. ஆனால் தவெக ஆட்சியில் மட்டும்தான் லஞ்ச ஒழிப்பு சோதனை நடப்பது போல ரீல்ஸ் போடுகின்றனர்.</p><p>முதல்வர் வசம் உள்ள துறை மீது மற்றொரு அமைச்சர் பதிலுரை தருகிறார். இனியாவது முதல்-அமைச்சர் தனது துறையை கண்காணித்து பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். தவெக ஆட்சி அமைத்தபின் அரிசி உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்துள்ளது. காவிரி படுகை மாவட்டங்களில் முறையாக நெல் கொள்முதல் செய்யப்படாமல் தேக்கம் அடைந்துள்ளது. நெல் கொள்முதல் செய்யாததால் மழையில் நெல்மணிகள் நனைந்து சேதம் அடையும் அளவுக்கு சூழல் உள்ளது. விவசாயிகள் வியர்வை சிந்தி விளைவித்த நெல் மூட்டைகளை அரசு கொள்முதல் செய்யவில்லை.</p><p>இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடித்தால் தற்போதுள்ள ரூ.10 லட்சம் கோடி கடன், ரூ.20 லட்சம் கோடியாக உயரும். இவ்வளவு கடன் இருக்கும்போது இவ்வளவு திட்டங்களை அறிவிக்கிறார்கள். ஏற்கனெவே கடன் இருக்கும்போது புதிய திட்டங்களுக்கு எங்கிருந்து வருவாய் வரும்? மீண்டும் யார் கடனை அடைப்பது? மக்களின் வரிப்பணம் தானே கடனாக செல்லும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மத்திய இணை மந்திரி ஸ்ரீபாத் நாயக்குடன் தமிழக அமைச்சர் சந்திப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-minister-meets-union-minister-of-state-shripad-naik</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-minister-meets-union-minister-of-state-shripad-naik#comments</comments><guid isPermaLink="false">d9167f18-6b9d-4f5c-b915-812c9000abea</guid><pubDate>Tue, 08 Sep 2026 09:51:18 +0000</pubDate><atom:updated>2026-09-08T09:51:18.181Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,மத்திய இணை மந்திரி,சந்திப்பு,தமிழக அமைச்சர்,Meet,The Union Minister</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/vp8nfyra/196.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மத்திய இணை மந்திரி ஸ்ரீபாத் நாயக்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/vp8nfyra/196.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மத்திய எரிசக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் இன்று சென்னையில், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றத்துறை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D">அமைச்சர் </a>வி.கே. ராஜீவ் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். </p><h2>சந்திப்பு</h2><p>இந்த சந்திப்பின்போது சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.</p><p>இந்நிகழ்வில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய தலைவர் அனுராக்மிஸ்ரா, சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இயக்குநர் ஆஷா அஜித், தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலர் அலர்மேல்மங்கை ஆகியோர் உடனிருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-light-to-moderate-rain-in-four-districts-of-tamil-nadu-today</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-light-to-moderate-rain-in-four-districts-of-tamil-nadu-today#comments</comments><guid isPermaLink="false">f8d2b900-a623-466d-b410-c1483ea8f095</guid><pubDate>Tue, 08 Sep 2026 09:45:08 +0000</pubDate><atom:updated>2026-09-08T09:45:08.801Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு,வானிலை முன்னறிவிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/5rizh7as/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/5rizh7as/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் தெற்கு தெலுங்கானா முதல் மன்னார் வளைகுடா வரை ராயலசீமா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><p>சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.</p><p><strong>08-09-2026:</strong> சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>09-09-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><h3>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</h3><p><strong>08-09-2026 முதல் 12-09-2026 வரை:</strong> உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.</p><h3>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</h3><p><strong>08-09-2026 முதல் 12-09-2026 வரை:</strong> உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று</strong> மற்றும் <strong>நாளை</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சத்தியமங்கலம் அருகே பழுதாகி நின்ற லாரியை முற்றுகையிட்டு கரும்புகளை ருசித்த யானைகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephants-enjoy-sugarcane-from-stranded-truck-near-sathyamangalam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephants-enjoy-sugarcane-from-stranded-truck-near-sathyamangalam#comments</comments><guid isPermaLink="false">8ea39d86-e9b2-4ccf-b836-7a436e82d76c</guid><pubDate>Tue, 08 Sep 2026 09:43:42 +0000</pubDate><atom:updated>2026-09-08T09:43:42.448Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Truck,லாரி,Elephants,யானைகள்,sugarcane,சத்தியமங்கலம்,Sathyamangalam,முற்றுகையிட்டு,கரும்புகள்</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/o1i5r8ak/repair-lorry.jpg" width="768"><media:title type="html"><![CDATA[ யானைகள்]]></media:title><media:description type="html"><![CDATA[ சத்தியமங்கலம் அருகே பழுதாகி நின்ற லாரியை முற்றுகையிட்டு கரும்புகளை ருசித்த யானைகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/o1i5r8ak/repair-lorry.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சத்தியமங்கலம், </p><p>காட்டு யானைகள்சத்தியமங்கலம் அருகே ஆசனூர் சாலையில் பழுதாகி நின்ற லாரியை காட்டு யானைகள் முற்றுகையிட்டு கரும்புகளை ருசித்த நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p> <h2>சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்</h2><p>ஈரோடு மாவட்டம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D">சத்தியமங்கலம் </a>புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழக - கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. </p>  <h2>சர்க்கரை ஆலைகள்</h2><p>தற்போது தாளவாடி மலைப்பகுதி மற்றும் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கரும்பு அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்கிருந்து லாரிகள் மூலம் கரும்புகள் ஏற்றப்பட்டு, இந்த வனப்பாதை வழியாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம். </p><h2>காட்டு யானைகள்</h2><p>லாரிகளில் செல்லும் கரும்பின் வாசனை பிடித்து, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">காட்டு யானைகள்</a> அடிக்கடி சாலைக்கு வந்து லாரிகளை வழிமறித்து கரும்புகளை பறித்து சுவைப்பது தொடர்கதையாகி வருகிறது.</p><h2>பழுதாகி நின்ற கரும்பு லாரி</h2><p>இந்த நிலையில், நேற்று அதிகாலை ஆசனூர் அருகே தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியில் கரும்பு பாரம் ஏற்றிய லாரி ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த லாரி திடீரென பழுதாகி சாலையோரம் நின்றது.</p> <h2>யானைகள் முற்றுகை </h2><p>அப்போது வனப்பகுதியில் இருந்து பிளிறியபடி வந்த காட்டு யானைகள் கூட்டம், பழுதாகி நின்ற லாரியை முற்றுகையிட்டன. பின்னர் லாரியின் அருகே சென்ற யானைகள், தங்களது தும்பிக்கையை நீட்டி, லாரியில் இருந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">கரும்பு</a> கட்டுகளை ஒவ்வொன்றாக பறித்து ஆவலோடு ருசிக்க தொடங்கின. </p> <h2>போக்குவரத்து பாதிப்பு</h2><p>நெடுஞ்சாலையின் ஓரம் லாரியை யானைகள் சூழ்ந்து கொண்டு கரும்புகளை காலி செய்ததால், அந்த வழியே வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் அச்சமடைந்து வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.</p><h2>கரும்புகளை ருசித்து யானைகள் </h2><p>வயிற்று பசி தீர கரும்புகளை ருசித்து தின்ற காட்டு யானைகள், நீண்ட நேரத்திற்கு பிறகு மெதுவாக வனப்பகுதிக்குள் நடந்து சென்றன. அதன் பின்னரே வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p> ]]></content:encoded></item><item><title>திருப்பதி கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.4.75 கோடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirupati-temples-single-day-hundi-offering-stands-at-475-crore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirupati-temples-single-day-hundi-offering-stands-at-475-crore#comments</comments><guid isPermaLink="false">2b0749aa-5397-4175-a0c8-9caee8dd45a5</guid><pubDate>Tue, 08 Sep 2026 09:31:06 +0000</pubDate><atom:updated>2026-09-08T09:31:06.562Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirupati Temple,திருமலை,உண்டியல்,சாமி தரிசனம்,devotee,திருப்பதி ஏழுமலையான் கோயில்,Hundi offerings</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/iocc9asy/102.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருப்பதி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/iocc9asy/102.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருமலை,</p><p>திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.</p><h2>சாமி தரிசனம்</h2><p>திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 69 ஆயிரத்து 440 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 36 ஆயிரத்து 255 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று தேவஸ்தானம் அறிவித்த ஒரு உண்டியல் காணிக்கை ரூ.4 கோடியே 75 லட்சம் ஆகும். அன்று 4 லட்சத்து 3 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 2 லட்சத்து 69 ஆயிரம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் பெற்றனர். அஸ்வினி மருத்துவமனையில் 4 ஆயிரத்து 171 பேர் மருத்துவச் சிகிச்சை பெற்றனர்.</p><p>தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட டைம் ஸ்லாட் டோக்கன்கள் இல்லாமல் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்கள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">சாமி தரிசனம்</a> செய்ய சுமார் 24 மணி நேரம் வரை காத்திருந்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>மதுவுக்கு அடிமை: மனைவி பிரிந்து சென்ற வேதனையில்.. காவலாளி எடுத்த விபரீத முடிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/addicted-to-alcohol-watchman-takes-drastic-step-in-anguish-over-wife-leaving-him</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/addicted-to-alcohol-watchman-takes-drastic-step-in-anguish-over-wife-leaving-him#comments</comments><guid isPermaLink="false">48e363fb-668b-49a8-b2ec-88d9083fb757</guid><pubDate>Tue, 08 Sep 2026 09:04:39 +0000</pubDate><atom:updated>2026-09-08T09:04:39.844Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,நெல்லை,Nellai,தமிழகம்,Valliyur,வள்ளியூர்,காவலாளி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/zpd9z4pd/ibc.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/zpd9z4pd/ibc.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாகர்கோவில்,</p><p>வள்ளியூர் அருகே மனைவி பிரிந்து சென்ற வேதனையில் ரெயில் முன்பாய்ந்து காவலாளி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><h2>தீவிர சிகிச்சை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/nellai">நெல்லை</a> மாவட்டம் வள்ளியூர் ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் நேற்றுமுன்தினம் காலையில் ஒரு வாலிபர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.</p><p>இதுபற்றி தகவல் அறிந்த நாகர்கோவில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு உயிருக்கு போராடிய வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.</p><h2>மது குடிக்கும் பழக்கம்</h2><p>இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில், காயங்களுடன் மீட்கப்பட்டவர் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியை சேர்ந்த ரெனால்டு (வயது 38) என்பதும், அவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.</p><p>ரெனால்டுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், ரெனால்டுவிடம் இருந்து அவரது மனைவி பிரிந்து சென்று விட்டதாக தெரிகிறது. இதனால் மன வேதனையில் இருந்த ரெனால்டு, சம்பவத்தன்று ரெயில் முன்பாய்ந்துள்ளார்.</p> <h2>சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு</h2><p>இதில் படுகாயமடைந்த அவர் உயிருக்கு போராடிய நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டது தெரியவந்தது. இந்தநிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ரெனால்டு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் உயிரிழந்தார்.</p><p>மேலும் இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயில் முன்பாய்ந்து காவலாளி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானம்; திமுக பங்கேற்காதது மிகுந்த ஏமாற்றம் - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/caste-survey-resolution-dmk-boycott-deep-disappointment-manickam-thakur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/caste-survey-resolution-dmk-boycott-deep-disappointment-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">ca9f35e7-637d-4f81-9496-0b8665d00f6d</guid><pubDate>Tue, 08 Sep 2026 09:02:10 +0000</pubDate><atom:updated>2026-09-08T09:02:10.391Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,சாதிவாரி கணக்கெடுப்பு,மாணிக்கம் தாகூர்,தீர்மானம்,ஏமாற்றம்</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/lmv0e17h/tagore.jpg" width="768"><media:title type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/lmv0e17h/tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சாதிவாரி கணக்கெடுப்பு போன்ற முக்கிய உரிமைகள் சார்ந்த பிரச்சினையில் திமுக பங்கேற்காமல் போனது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்தார். இது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">மாணிக்கம் தாகூர்</a> எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p> <h2>தனித்தீர்மானம்</h2><p>2027 <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">மக்கள்தொகை கணக்கெடுப்பின்</a> இரண்டாம் கட்ட பணியில், மாநில-மத்திய அரசுகளால் அறிவிக்கை செய்யப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் பட்டியல்களைக் கணக்கெடுப்பு செயலியில் முன்னரே பதிவேற்றம் செய்து துல்லியமான விவரங்களை சேகரிக்க வேண்டும் என்றும், குழப்பத்தை ஏற்படுத்தும் 'திறந்தவெளிப் பதிவு முறையை' கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் கொண்டுவரப்பட்ட அரசினர் தனித்தீர்மானத்தை முழுமனதுடன் வரவேற்கிறேன்! </p><h2>மகிழ்ச்சியளிக்கிறது</h2><p>சமூகநீதியை உறுதிசெய்யும் இத்தீர்மானத்தை காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஏகமனதாக ஆதரித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.</p><h2>திமுகவினர் வெளிநடப்பு</h2><p>ஆனால், சில நாட்களுக்கு முன்பு சாதிவாரி கணக்கெடுப்பு குறித்துப் பேசி, சட்டப்பேரவையில் உடனடியாக தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். ஆனால் இன்று சட்டமன்ற நிகழ்ச்சி நிரலில் இத்தீர்மானம் முன்கூட்டியே தெளிவாக இடம்பெற்றிருந்தும், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவைக்கு வராததோடு, நேற்றைய நிகழ்வுகளை காரணம் காட்டி திமுகவினர் வெளிநடப்பு செய்து, இன்று இந்த தீர்மானம் எடுத்துக்கொள்ளப்பட்டபோது அவையில் பங்கேற்காமல் புறக்கணித்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது!</p> <h2>ஏமாற்றம் அளிக்கிறது</h2><p>​இன்றைய சட்டமன்ற நிகழ்ச்சி நிரலில் இத்தீர்மானம் முன்னரே இடம்பெற்றிருந்தும், அதை நன்கு அறிந்திருந்தும் நேற்றைய விவகாரத்தை சாக்காக வைத்து வெளிநடப்பு செய்ததன் மூலம், ஓபிசி இடஒதுக்கீடு மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு போன்ற முக்கிய உரிமைகள் சார்ந்த பிரச்சினையில் திமுக பங்கேற்காமல் போனது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது! </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பி.எஸ்.என்.எல் 5ஜி சேவையை உடனே தொடங்க காலக்கெடு அறிவிக்க வேண்டும் - வேல்முருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-deadline-must-be-announced-for-the-immediate-launch-of-bsnls-5g-service-velmurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-deadline-must-be-announced-for-the-immediate-launch-of-bsnls-5g-service-velmurugan#comments</comments><guid isPermaLink="false">713215c7-9a6f-4e6c-8c50-70067d589dc9</guid><pubDate>Tue, 08 Sep 2026 08:57:32 +0000</pubDate><atom:updated>2026-09-08T08:57:32.647Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,சென்னை,Velmurugan,வேல்முருகன்,BSNL,பி.எஸ்.என்.எல்,தமிழக வாழ்வுரிமைக் கட்சி,5G,மோடி அரசு,5ஜி அலைக்கற்றை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/1sey5wu4/195.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/1sey5wu4/195.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பி.எஸ்.என்.எல் 5ஜி சேவையை உடனே தொடங்க காலக்கெடு அறிவிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தல். </p><p>இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>பி.எஸ்.என்.எல்</h2><p>இந்தியாவின் முதன்மையான பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்(BSNL)-ஐத் திட்டமிட்டுப் பின்தள்ளி, தனியார் பெருநிறுவனங்களுக்குச் சாதகமாகச் செயல்படும் மத்திய பாஜக அரசின் வஞ்சகப் போக்கைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.</p><p>5ஜி அலைக்கற்றை என்பது இன்றைய காலகட்டத்தில் அடித்தட்டு மக்களின் வாழ்வாதார உரிமை. மாணவர்களின் உயர்கல்வி, இளைஞர்களின் வேலைவாய்ப்பு, கிராமப்புறச் சிறுவணிகம் மற்றும் உழவர் பெருமக்களின் அன்றாட அரசு சேவைகளுக்கு அதிவேக இணையம் இன்றியமையாதது. </p><p>தனியார் நிறுவனங்கள் அதிகக் கட்டணம் வசூலித்துக் கொள்ளையடிக்கும் வேளையில், கிராமப்புற மற்றும் ஏழை எளிய மக்களின் ஒரே புகலிடமாக விளங்கும் பி.எஸ்.என்.எல்-ன் 5ஜி சேவையைத் திட்டமிட்டே முடக்கி வைப்பது எந்த வகையில் நியாயம்?</p><h2>தொழில்நுட்ப உரிமங்கள்</h2><p>கார்ப்பரேட் நிறுவனங்கள் நாடு முழுவதும் 5ஜி சேவையைத் தடையின்றி விரிவுபடுத்த அனுமதிக்கும் மத்திய அரசு, மக்களின் வரிப்பணத்தில் உருவான பொதுத்துறை நிறுவனத்திற்குத் தேவையான நவீனக் கருவிகள், நிதி ஒதுக்கீடு மற்றும் தொழில்நுட்ப உரிமங்களை உரிய நேரத்தில் வழங்காமல் முட்டுக்கட்டை போடுகிறது. </p><p><a href="https://www.dailythanthi.com/topic/bsnl">பி.எஸ்.என்.எல்</a> நிறுவனத்தை வலுப்படுத்துவதாக வாய்ச்சவலாகக் கூறிக்கொண்டே, சந்தைப் போட்டியில் இருந்து அதை அப்புறப்படுத்த முயல்வது பிரதமர் நரேந்திர மோடி அரசின் பச்சைத் துரோகம்.</p><p>தனியார் பெருமுதலாளிகளின் இலாபத்திற்காக பி.எஸ்.என்.எல் நிறுவனத்தைப் பலவீனப்படுத்தும் சதித்திட்டத்தை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். கிராமப்புற மாணவர்களுக்கும் அடித்தட்டு மக்களுக்கும் இழைக்கப்படும் டிஜிட்டல் அநீதிக்கு ஒன்றிய அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.</p><h2>காலக்கெடு</h2><p>பி.எஸ்.என்.எல் 5ஜி சேவை தாமதத்திற்கான காரணங்களை ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்தி, நாடு தழுவிய அளவிலும் குறிப்பாகத் தமிழகக் கிராமப்புறங்களிலும் தரமான அதிவேகச் சேவையைத் தொடங்க உறுதியான காலக்கெடுவை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-thoothukudi-tomorrow-7</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-thoothukudi-tomorrow-7#comments</comments><guid isPermaLink="false">e0bbcb9d-f817-49d0-a3d8-6f894fe92fd5</guid><pubDate>Tue, 08 Sep 2026 08:49:07 +0000</pubDate><atom:updated>2026-09-08T08:49:07.960Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,monthly maintenance work,மாதாந்திர பராமரிப்பு பணி,Power outage tomorrow,நாளை மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/3hdhndyf/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/3hdhndyf/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி. </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> சிப்காட் துணைமின் நிலையத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் நடைபெற உள்ளதால் நாளை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாளை (9.9.2026, புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என தூத்துக்குடி நகர்ப்புற மின் விநியோகச் செயற்பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது. </p><h2>காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை</h2><p>மடத்தூர், மடத்தூர் மெயின் ரோடு, முருகேசநகர், கதிர்வேல்நகர், தேவகிநகர், சிப்காட் வளாகம், திரவிய ரத்தினநகர், அசோக்நகர், ஆசிரியர்காலனி, ராஜீவ்நகர், சின்னமணிநகர், 3-வது மைல், புதுக்குடி, டைமண்ட்காலனி, ஈ.பி. காலனி, ஏழுமலையான்நகர், மில்லர்புரம், ஹவுசிங் போர்டு பகுதிகள், அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்புக் குடியிருப்புகள், ராஜகோபால்நகர், </p><p>பத்திநாதபுரம், சங்கர் காலனி, எஃப்.சி.ஐ. குடோன் பகுதிகள், நிகிலேசன்நகர், சோரிஸ்புரம், மதுரை பைபாஸ் ரோடு, ஆசீர்வாதநகர், சில்வர்புரம், சுப்பிரமணியபுரம், கங்காபரமேஸ்வரி காலனி, லாசர்நகர், ராஜரத்தினநகர், பாலையாபுரம், வி.எம்.எஸ்.நகர், முத்தம்மாள் காலனி, நேதாஜிநகர், லூசியா காலனி, மகிழ்ச்சிபுரம், ஜோதிநகர், பால்பாண்டிநகர், முத்துநகர், கந்தன் காலனி, காமராஜ்நகர், என்.ஜி.ஓ. காலனி, அன்னைதெரசாநகர், பர்மா காலனி, டி.எம்.பி. காலனி, </p><p>அண்ணாநகர் 2-வது மற்றும் 3-வது தெரு, கோக்கூர், சின்னக்கண்ணுபுரம், பாரதிநகர், புதூர்பாண்டியாபுரம் மெயின் ரோடு, கிருபைநகர், அகில இந்திய வானொலி நிலையம், ஹரிராம்நகர், கணேஷ்நகர், புஷ்பாநகர், கல்லூரிநகர், ஸ்டெர்லைட் குடியிருப்புகள், எட்டையபுரம் ரோடு வடபகுதி, டிமார்ட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தலில் போட்டியிடும் நா.த.க.: யார் வேட்பாளர்கள்? - 13ம் தேதி அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ntk-to-contest-by-election-who-are-the-candidates-buzz-worthy-details</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ntk-to-contest-by-election-who-are-the-candidates-buzz-worthy-details#comments</comments><guid isPermaLink="false">aad24cb0-4075-4548-8396-597f10cc9231</guid><pubDate>Tue, 08 Sep 2026 08:48:28 +0000</pubDate><atom:updated>2026-09-08T08:48:28.640Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,நாதக,சீமான்,NTK,Seeman,தமிழகம்,இடைத்தேர்தல்,By election,மதுராந்தகம்,தாராபுரம்,candidates,வேட்பாளர்கள்,Madurantakam,tharapuram</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/ocgoei0e/ele.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/ocgoei0e/ele.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான மனுதாக்கல் நாளை தொடங்குகிறது.</p><h2>த.வெ.க. ஆட்சி</h2><p>தமிழ்நாட்டின் 17-வது சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இந்த தேர்தல் களத்தை <a href="https://www.dailythanthi.com/topic/vijay">விஜய் </a>தலைமையிலான த.வெ.க. முதல் முறையாக சந்தித்தது. 234 தொகுதிகளில் 108 தொகுதிகளில் அக்கட்சி வெற்றி பெற்றது. ஆனால், ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஆதரவைப் பெற்று த.வெ.க. ஆட்சியை அமைத்தது. <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சராக விஜய்</a> பதவியேற்றார்.</p><h2>தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் களம் கண்டிருந்தார். இதில் 2 தொகுதிகளிலும் முத்திரை பதித்து வெற்றி மகுடம் சூடினார். இதைத்தொடர்ந்து அவர், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். </p><p>சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழலில், தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க திரைமறைவில் முயற்சிகள் நடைபெற்றதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. இது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.</p><h2>7 தொகுதிகள் காலி</h2><p>இந்த முடிவுக்கு உடன்படாமல் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம்), ஜெயக்குமார் (ஈரோடு மாவட்டம் பெருந்துறை), சத்யபாமா (திருப்பூர் மாவட்டம் தாராபுரம்), இசக்கி சுப்பையா (நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம்), சி. விஜயபாஸ்கர் (புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை), எம்.ஆர். விஜயபாஸ்கர் (கரூர்) ஆகிய 6 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தங்களை த.வெ.க.வில் இணைத்துக்கொண்டனர். இதைத்தொடர்ந்து திருச்சி கிழக்கு உள்பட 7 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது.</p><h2>இடைத்தேர்தல் தேர்தல் நடத்த தடை</h2><p>இதற்கிடையில்,  திருச்சி கிழக்கு, புதுக்கோட்டை, கரூர், பெருந்துறை, விராலிமலை ஆகிய 5 தொகுதிகளின் தேர்தல் முடிவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இந்த 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை உத்தரவு பிறப்பித்தது.</p><p>ஒரு சட்டமன்ற தொகுதி காலியானால் 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறை ஆகும். தற்போது ஐகோர்ட்டு உத்தரவைத் தொடர்ந்து 5 தொகுதிகளைத் தவிர்த்து, மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத்தாக்கல் 9-ந்தேதி (நாளை) தொடங்குகிறது. வாக்குப்பதிவு அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 9-ந்தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.</p><h2>தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்</h2><p>தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால், இந்த 2 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. எனவே, இந்த 2 தொகுதிகளுக்கும் அரசின் திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கக்கூடாது. அரசு சார்பில் புதிய அறிவிப்புகளை வெளியிடக்கூடாது.</p><p>பொதுவாக தேர்தல் காலத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் சென்றால், அதற்குரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். அந்த நடைமுறை 2 தொகுதிகளிலும் அமல்படுத்தப்படும். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் விநியோகத்தைத் தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் பறக்கும் படைகள் அமைக்கப்படும். இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக துணை ராணுவ வீரர்கள் வருகை தர உள்ளனர். டெல்லியில் இருந்து தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகளும் வருகை தருவார்கள். </p><h2>விருப்ப மனுக்கள்</h2><p>இந்த 2 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தேர்வில் அரசியல் கட்சிகள் முனைப்பு காட்டத் தொடங்கியுள்ளன. தேர்தலில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளிடம் அந்தந்த கட்சிகள் சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.</p><h2>நா.த.க. வேட்பாளர்கள்</h2><p>இந்நிலையில் 2 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி வரும் 13-ஆம் தேதி அறிவிக்க உள்ளது. தற்போது வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் நா.த.க. தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன்படி இரு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சீமான் சென்னையில் வரும் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/mM4P4YrA9-g"></iframe></figure>]]></content:encoded></item><item><title>சென்னையில் 34 மின் மோட்டார்கள் பறிமுதல் - அதிகாரிகள் நடவடிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/34-electric-motors-seized-in-chennai-officials-take-action</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/34-electric-motors-seized-in-chennai-officials-take-action#comments</comments><guid isPermaLink="false">1f891778-72cd-44e1-a18a-bd20a04ca3dd</guid><pubDate>Tue, 08 Sep 2026 08:39:09 +0000</pubDate><atom:updated>2026-09-08T08:39:09.979Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Action,நடவடிக்கை,seized,அதிகாரிகள்,corporation officials,electric motors,மின் மோட்டார்கள் பறிமுதல்</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/ylbqpn9n/chennai-water.jpg" width="768"><media:title type="html"><![CDATA[ சென்னை குடிநீர் வாரியம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னையில் 34 மின் மோட்டார்கள் பறிமுதல் - அதிகாரிகள் நடவடிக்கை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/ylbqpn9n/chennai-water.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தண்டையார்பேட்டை , அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு மற்றும் பெருங்குடி மண்டலடங்களில் உள்ள விடுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சட்ட விரோதமாக பொருத்தப்பட்டிருந்த 34 குடிநீர் உறிஞ்சும் மின் மோட்டார்கள் பறிமுதல். இதுதொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">சென்னை குடிநீர் வாரியம் </a>வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p> மின் மோட்டார்கள் பறிமுதல்</p><p>நேற்று தண்டையார்பேட்டை , அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு மற்றும் பெருங்குடி மண்டலடங்களில் உள்ள விடுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சட்ட விரோதமாக பொருத்தப்பட்டிருந்த 34 குடிநீர் உறிஞ்சும்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"> மின் மோட்டார்கள்</a> பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><p>சிறப்பு கண்காணிப்பு குழு</p><p>குடிநீர் விநியோகத்தில் ஏற்படும் அழுத்த குறைபாடு தவிர்க்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள அனைத்து நுகர்வோருக்கும் சீரான மற்றும் சமமான குடிநீர் விநியோகம் உறுதி செய்யும் வகையில் மண்டலம் 1 முதல் 15 வரையிலான அனைத்து பகுதிகளிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.</p> <p> நடவடிக்கைகள்</p><p> இக்குழுவினர் ஆய்வு மேற்கொள்ளும்போது, குடிநீர் இணைப்புகள் மற்றும் பொது குழாய்களில் சட்டவிரோதமாக குடிநீர் உறிஞ்சும் மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டால் மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு உரிய சட்டவிதிகளின் கீழ் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஏற்கனவே பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <p>ஆய்வு </p><p>இந்நிலையில் நேற்று சிறப்பு கண்காணிப்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டபோது தண்டையார் பேட்டை மண்டலம் வார்டு எண் -37 எம்.கே.பி நகர், அம்பத்தூர் மண்டலம் வார்டு எண்-81, ஒ.டி பஸ் நிலையம், வார்டு-91 முகப்பேர், அண்ணா நகர் மண்டலம் வார்டு எண்-106 சூளை மேடு, தேனாம்பேட்டை மண்டலம் வார்டு எண் -110 வள்ளுவர் கோட்டம், வார்டு -111-கிரீம்ஸ் ரோடு, வார்டு-112 டிரஸ்ட் புரம், கோடம்பாக்கம் மண்டலம் வார்டுஎண் -138 எம்.ஜி.ஆர் நகர், அடையாறு மண்டலம் வார்டு எண்-178 தரமணி, பெருங்குடி மண்டலம் வார்டு-181 கொட்டிவாக்கம், மற்றும் வார்டு எண் -182 கந்தன்சாவடி ஆகிய இடங்களில் குடிநீர் குழாய்களில் சட்ட விரோதமாக குடிநீர் உறிஞ்சும் மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டிருந்தது கண்டுறியப்பட்டு 34 மின்மோட்டார்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, ஏற்கனவே அடையாறு மண்டலத்தில் மட்டும் சட்ட விரோதமாக பொருத்தப்பட்டிருந்த 55 குடிநீர் உறிஞ்சும் மின்மோட்டார்கள் பறிமுதல்.</p><h2> 89 மின்மோட்டார்கள் பறிமுதல் </h2><p>செய்யப்பட்டதுடன், இதுவரை 89 மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, மேற்கூறிய இடங்களில் உள்ள குடியிருப்புகளின் உரிமையாளர்களுக்கு இனிவரும் காலங்களில் சட்ட விரோதமாக குடிநீர் உறிஞ்சும் மின்மோட்டார்களை பயன்படுத்த கூடாது எனவும், மீறுவோரின் மீது உரிய சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கை (நோட்டீஸ்) வழங்கப்பட்டுள்ளது. இச்சிறப்பு குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வார்கள்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பழங்கால நாணயங்கள், சிலைகளை வழங்கி வெகுமதி பெறலாம்: அரசு அருங்காட்சியகம் அழைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-museum-invites-applications-for-rewards-by-donating-ancient-coins-and-statues</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-museum-invites-applications-for-rewards-by-donating-ancient-coins-and-statues#comments</comments><guid isPermaLink="false">1b401cd6-b1de-481c-946b-2818bbad3fb3</guid><pubDate>Tue, 08 Sep 2026 08:37:01 +0000</pubDate><atom:updated>2026-09-08T08:37:01.169Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>statues,Tirunelveli,திருநெல்வேலி,அருங்காட்சியகம்,Collector information,கலெக்டர்,தகவல்,ancient,Reward,சிலைகள்,வெகுமதி,பழங்கால பொருட்கள்,Coins,நாணயங்கள்,Government Museum</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/ucz0apw8/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பழங்கால நாணயங்கள், சிலைகளை வழங்கி வெகுமதி பெறலாம்: அரசு அருங்காட்சியகம் அழைப்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/ucz0apw8/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9">பழமையான</a> அரும்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பொருட்களை</a> அரசு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">அருங்காட்சியகத்திற்கு</a> வழங்கினால் தகுந்த வெகுமதி வழங்கப்படும் என <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> அரசு அருங்காட்சியகம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">அறிவிப்பு</a> வெளியிட்டுள்ளது. </p><h2>திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம்</h2><p>திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தை மேலும் மேம்படுத்தவும், பழமையான பண்பாட்டுச் சான்றுகளைப் பாதுகாக்கவும் பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் வசமுள்ள பழங்கால அரும்பொருட்களை வழங்க முன்வருமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நெல்லை மாவட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D">கலெக்டர்</a> ஆனந்த் மோகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: </p><h2>பழங்கால நாணயங்கள், சிலைகளை வழங்கி வெகுமதி பெறலாம்</h2><p>திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் வரலாற்றுச் சான்றுகளையும் முன்னோர்களின் பண்பாட்டு அடையாளங்களையும் பாதுகாக்கும் முக்கிய அங்கமாகத் திகழ்ந்து வருகிறது. வரும் தலைமுறையினர் வரலாற்றுச் சிறப்புகளை அறிந்துகொள்ளும் வகையில், தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடம் உள்ள அரிய வகை பழங்கால நாணயங்கள், சிலைகள், ஓலைச்சுவடிகள், ஆயுதங்கள், இசைக்கருவிகள் மற்றும் பழங்கால வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றை அருங்காட்சியகத்திற்கு வழங்கலாம். </p><h2>தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி</h2><p>இவ்வாறு அரும்பொருட்களை வழங்க விரும்புவோருக்கு தகுந்த வெகுமதி (மதிப்பூதியம்) வழங்க அரசு அருங்காட்சியகம் முன்வந்துள்ளது. இதற்கு பின்வரும் முகவரியை தொடர்பு கொள்ளலாம். </p><p>பழமையான அரும்பொருட்களை வைத்துள்ள பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள், தாமாக முன்வந்து அவற்றை அன்பளிப்பாகவோ அல்லது உரிய வெகுமதி பெற்றுக் கொண்டோ "காப்பாட்சியர், அரசு அருங்காட்சியகம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி" என்ற முகவரியில் ஒப்படைக்கலாம். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் 13 லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்: அன்புமணி கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/13-million-bales-of-paddy-damaged-in-rain-in-chengalpattu-and-cuddalore-districts-anbumani-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/13-million-bales-of-paddy-damaged-in-rain-in-chengalpattu-and-cuddalore-districts-anbumani-condemns#comments</comments><guid isPermaLink="false">955a5faa-4db4-4754-bf4b-a69b24d19cd4</guid><pubDate>Tue, 08 Sep 2026 08:23:54 +0000</pubDate><atom:updated>2026-09-08T08:23:54.279Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani Ramadoss,PMK,Chennai,சென்னை,நெல் மூட்டைகள்,Paddy,insistence,வலியுறுத்தல்,Damage,சேதம்,permanent,bundles,பாமக அன்புமணி ராமதாஸ்,கிடங்குகள்,Warehouses</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/qie6riwp/%E0%AE%AA%E0%AE%BE.%E0%AE%AE.%E0%AE%95.-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/qie6riwp/%E0%AE%AA%E0%AE%BE.%E0%AE%AE.%E0%AE%95.-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">செங்கல்பட்டு</a>, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">கடலூ</a>ர் மாவட்டங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு திறந்தவெளி கிடங்குகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 13 லட்சம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">நெல் மூட்டைகள்</a> கடந்த சில நாள்களில் பெய்த மழையில் நனைந்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">சேதமடைந்திருக்கின்றன</a> என்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">கண்டனம்</a> தெரிவித்துள்ளார்.</p><h2>அன்புமணி கண்டனம்</h2><p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு திறந்தவெளி கிடங்குகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 13 லட்சம் நெல் மூட்டைகள் கடந்த சில நாள்களில் பெய்த மழையில் நனைந்து சேதமடைந்திருக்கின்றன. அவற்றில் பல்லாயிரம் நெல் மூட்டைகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு அழுகி விட்டன. பலமுறை தொடர்ந்து வலியுறுத்தியும் விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைவித்த நெல் மூட்டைகளை அரசு நிர்வாகம் பொறுப்பின்றி மழையில் நனைய விட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. </p><h2>நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்</h2><p>செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு சமத்துவபுரத்திற்கு எதிரில் அமைக்கப்பட்டுள்ள  திறந்தவெளிக் கிடங்கில் 50 ஆயிரம் டன், (ஒரு டன் என்பது ஆயிரம் கிலோ) அதாவது 12.50 லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்து விட்டன. அதே செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை அடுத்த புள்ளேரி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளிக் கிடங்கிலும் பல்லாயிரம் நெல் மூட்டைகள் சேதமடைந்து விட்டன. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த ராஜேந்திரன்பட்டினம் பகுதியில் உள்ள திறந்தவெளிக் கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்து விட்டன. </p><h2>அரசு தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்</h2><p>மழையில் நனைந்து சேதமடைந்த நெல் மூட்டைகள் அனைத்தும் நேற்றோ அதற்கு முதல் நாளோ கொள்முதல் செய்யப்பட்டவை அல்ல. பல வாரங்களுக்கு முன் கொள்முதல் செய்யப்பட்டு சேமித்து வைக்கப்பட்டவை தான். அவை உரிய காலத்தில் கிடங்குகளுக்கோ, அரவை ஆலைகளுக்கோ கொண்டு செல்லப்பட்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.  கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உரிய காலத்தில் அங்கிருந்து  அகற்றாத அரசு தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். </p><p>வழக்கமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை அங்கிருந்து கிடங்குகளுக்கும், கிடங்குகளில் இருந்து அரவை ஆலைகளுக்கும் அனுப்பும் பணி சங்கிலித் தொடர் போல நடைபெற வேண்டும். ஆனால், இந்த சங்கிலித் தொடர் அறுபட்டு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைகின்றன. </p><h2>தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்ளளவு</h2><p>இந்த சிக்கலுக்கு ஒரே தீர்வு கிடங்குகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது தான். தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 80 லட்சம் டன் நெல் உள்பட மொத்தம் 120 லட்சம் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றில் அதிகபட்சமாக 2025-26-ம் ஆண்டில் வரலாறு காணாத வகையில் 65 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால்,  நெல் கொள்முதலை மேற்கொள்ளும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திடம் வெறும் 18 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகள் தான் உள்ளன. இது தமிழ்நாட்டில் விளையும் உணவு தானியங்களில் வெறும் 15 சதவீதம் மட்டும் தான். இது போதுமானதல்ல. </p><h2>நிரந்தர கிடங்குகள் வேண்டும்</h2><p>மழையில் நனைந்து சேதமடைந்த நெல் மூட்டைகளை பயன்படுத்த முடியாது. அவற்றை அரவை செய்து நியாயவிலைக் கடைகளில் வழங்கினால் துர்நாற்றம் எடுத்து பயன்படுத்த முடியாத நிலையில் தான் இருக்கும். இதனால் மக்கள் வரிப்பணம் தான் வீணாகும். நெல் மூட்டைகள் வீணாவதைத் தடுக்க கிடங்குகளை அதிகப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதுவரை அந்த கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசாவது கிடங்குகளை கட்டி நெல் மூட்டைகள் வீணாகாமல் தடுக்க வேண்டும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>சேலம் வழியாக செல்லும் ரெயில் சேவையில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-train-services-passing-through-salem</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-train-services-passing-through-salem#comments</comments><guid isPermaLink="false">ada1d7fe-9ef2-4a5c-b497-f62b0c96ad06</guid><pubDate>Tue, 08 Sep 2026 08:20:42 +0000</pubDate><atom:updated>2026-09-08T08:20:42.461Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,ரெயில் சேவை,சேலம்,Train Services</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/nxgt4qms/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/nxgt4qms/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சேலம்,</p><p>ஈரோடு- திருப்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ஊத்துக்குளி ரெயில் நிலைய யார்டு பகுதியில் ரெயில்வே பாலம் தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை மேற்கொள்வதற்கு வசதியாக நாளை (புதன்கிழமை) 3 ரெயில்கள் வழித்தடத்தில் ஏதாவது ஒரு இடத்தில் தாமதப்படுத்தி இயக்கப்பட உள்ளன. </p><p>அதன்படி எர்ணாகுளம்- டாடாநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் (18190) வழித்தடத்தில் ஏதாவது ஒரு இடத்தில் 1 மணி 10 நிமிடங்கள் தாமதப்படுத்தி இயக்கப்படும். ஆலப்புழா- தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் (13352) வழித்தடத்தில் ஏதாவது ஒரு இடத்தில் 50 நிமிடங்கள் தாமதப்படுத்தி இயக்கப்படும். இதேபோல் எர்ணாகுளம்- பெங்களூரு இன் டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (16378) வழித்தடத்தில் ஏதாவது ஒரு இடத்தில் 15 நிமிடங்கள் தாமதப்படுத்தி இயக்கப்படும் என்று சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>கிருஷ்ண ஜெயந்தி விழா: உறியடி பானை பொருட்கள் ரூ.8 லட்சத்துக்கு ஏலம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/krishna-jayanthi-festival-uriyadi-pot-items-auctioned-for-8-lakh</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/krishna-jayanthi-festival-uriyadi-pot-items-auctioned-for-8-lakh#comments</comments><guid isPermaLink="false">7341675d-27d0-44a9-af24-2ddfac0884d8</guid><pubDate>Tue, 08 Sep 2026 08:13:47 +0000</pubDate><atom:updated>2026-09-08T08:13:47.205Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ராமநாதபுரம்,Ramanathapuram,Uriyadi Festival,கிருஷ்ண ஜெயந்தி,krishna jayanthi,உறியடி பானை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/7o05usxy/CHENNAI-15.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/7o05usxy/CHENNAI-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>ராமநாதபுரம்,</p><p>ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள புளியங்குடி கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா இதில் நடைபெற்றது. உறியடி நடந்தது. உறியடி பானையில் தேங்காய், 5 எலுமிச்சம் பழங்கள் உள்பட பல்வேறு பொருட்கள் வைக்கப்பட்டன. உறியடி பானையில் இருந்த பொருட்கள் ஏலம் விடப்பட்டன.</p><p>புளியங்குடி கிராமத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் ஒரு தேங்காயை ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தார். அதேபோல 5 எலுமிச்சம் பழங்கள் ரூ.3.70 லட்சத்துக்கும், மஞ்சள் கயிறு ரூ.70 ஆயிரத்துக்கும், வடக்கயிறு ரூ.65 ஆயிரத்துக்கும் உள்பட மொத்தமாக ரூ.8 லட்சத்து 10 ஆயிரத்துக்கு ஏலம் நடைபெற்றது. ஏலம் விடும் நிகழ்ச்சியில் கிராம மக்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>

“யார் உழைக்கிறார்கள், யார் இடையூறு செய்கிறார்கள்?” - சிபி சத்யராஜ் அதிரடி பதிவு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/who-is-working-hard-and-who-is-causing-hindrances-sibirajs-hard-hitting-post</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/who-is-working-hard-and-who-is-causing-hindrances-sibirajs-hard-hitting-post#comments</comments><guid isPermaLink="false">d9f58cb7-acd3-4ee2-8fc1-6d67203d7f08</guid><pubDate>Tue, 08 Sep 2026 08:07:20 +0000</pubDate><atom:updated>2026-09-08T08:07:20.568Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Assembly,சிபி சத்யராஜ்,Sibi Sathyaraj,சட்டமன்ற நிகழ்வு,ஜேசிடி பிரபாகர்,JCD Prabhakar,சட்டமன்ற நேரலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/yuiib3hx/11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/yuiib3hx/11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டமன்ற நடவடிக்கைகள் நேரலையாக ஒளிபரப்பப்படுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது, யார் மாநிலத்திற்காக உழைக்கிறார்கள், யார் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கிறார்கள் என்பதை மக்கள் தாங்களே நேரில் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும். என சிபி சத்யராஜ் பதிவிட்டுள்ளார். </p><h2>தமிழக சட்டமன்ற நேரலை</h2><p>தமிழக சட்டமன்றத்தில் தற்போது நேரலை ஒளிபரப்பின் மூலம் அவையில் நடைபெறும் விவாதங்கள், ஆளும் கட்சி–எதிர்க்கட்சி மோதல்கள், கேள்வி–பதில்கள் மற்றும் அமளி போன்றவை மக்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்து வருகின்றன. சமீபத்திய அமர்வுகளிலும் காவல்துறை மானியக் கோரிக்கை உள்ளிட்ட விவாதங்களின்போது ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் வெளிநடப்பு போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.</p><p>இந்த நிலையில், நேற்று நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை முதல்-அமைச்சர் பேசிய உரையை அவைக் குறிப்பில் இருந்து நீக்க கோரி சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் இன்று அமளியில் ஈடுபட்டனர். இதற்கு சபாநாயகர் முதல்-அமைச்சர் பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் எழுந்து நின்று கோஷம் எழுப்பினர். </p><p>தனது இருக்கை முன்பு சூழ்ந்து கொண்டு தொடர்ந்து முழக்கமிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்களை அவை காவலர்களை கொண்டு வெளியேற்ற சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் உத்தரவிட்டார். உடனடியாக உள்ளே வந்த அவை காவலர்கள் திமுகவினர் சிலரை குண்டுக்கட்டாக வெளியே தூக்கிச் சென்றனர். </p> <h2>சிபி சத்யராஜின் பதிவு</h2><p>இந்த நிலையில், நடிகர் சிபி சத்யராஜ், சட்டமன்றத்தில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்தும், நேரலை ஒளிபரப்பு குறித்தும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p><p>அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது, "சட்டமன்ற நடவடிக்கைகள் நேரலையாக ஒளிபரப்பப்படுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. நாகரிகமான மற்றும் ஆக்கபூர்வமான முறையில் பிரச்சினைகளை எழுப்புவதற்குப் பதிலாக, யார் மாநிலத்திற்காக உழைக்கிறார்கள், யார் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கிறார்கள் என்பதை மக்கள் தாங்களே நேரில் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும். அவையை ஒழுங்குடன் வழிநடத்தியதோடு, உறுதியுடனும் நியாயத்துடனும் சூழ்நிலையைக் கையாண்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்  அவர்களுக்குப் பாராட்டுகள்." என பதிவிட்டுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>‘முடிந்த வழக்கை பேசுவது முட்டாள்தனம்’ - துரைமுருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-foolish-to-talk-about-a-closed-case-duraimurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-foolish-to-talk-about-a-closed-case-duraimurugan#comments</comments><guid isPermaLink="false">be6b43dd-3ccc-461d-95e0-b14cb382a1b3</guid><pubDate>Tue, 08 Sep 2026 07:51:00 +0000</pubDate><atom:updated>2026-09-08T07:51:00.049Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,Duraimurugan,துரைமுருகன்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/7qby7k8w/thu.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/7qby7k8w/thu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முடிந்துபோன வழக்கை எடுத்துப் பேசுவது முட்டாள்தனம் என்று <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a>யை தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.</p><h2>சட்டசபையில் பரபரப்பு</h2><p>தமிழக சட்டசபையில் நேற்று காவல்துறை மற்றும் தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் பதில் அளித்துப் பேசினார்.</p><p>அப்போது, கட்சி நிதி பெற்ற விவகாரம் தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மீது முதல்-அமைச்சர் விஜய் பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பேசினார்.</p><h2>திமுக உறுப்பினர்கள் அமளி</h2><p>இதற்கிடையில், முதல்-அமைச்சர் விஜய்யின் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்கக் கோரி தி.மு.க. உறுப்பினர்கள் இன்று சட்டசபையில் அமளியில் ஈடுபட்டனர்.</p><p>இதற்கு சபாநாயகர் ஜெ.சி.டி. பிரபாகர், மறுப்பு தெரிவித்த்நிலையில், தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து நின்று கோஷங்களை எழுப்பினர்.</p><p>தொடர்ந்து சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து, தி.மு.க. உறுப்பினர்களை அவைக் காவலர்கள் மூலம் வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். உடனடியாக அவைக் காவலர்கள் வந்து சில தி.மு.க. உறுப்பினர்களை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். இதனால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.</p><h2>துரைமுருகன் கருத்து</h2><p>இந்த நிலையில், தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, முதல்-அமைச்சர் விஜய்யின் நேற்றைய சட்டசபை பேச்சு குறித்து அவர் விமர்சனம் செய்தார்.</p><p>அவர் கூறுகையில், “கம்யூனிஸ்ட் கட்சிகளே முதல்-அமைச்சரின் பேச்சை வெளுத்து வாங்கிவிட்டன. சர்க்காரியா ஆணைய வழக்கில் நீதிமன்றமே எங்களை நிரபராதிகள் என கூறிவிட்டது. முடிந்துபோன வழக்கை எடுத்துப் பேசுவது முட்டாள்தனம். முதல்-அமைச்சரின் பேச்சு அநாகரிகமானது” என்று தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையை நடத்திய அதிமுக எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-mla-thalavai-sundaram-presided-over-the-assembly-session</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-mla-thalavai-sundaram-presided-over-the-assembly-session#comments</comments><guid isPermaLink="false">ebdc45df-329e-484d-9336-e815b4fbe5e3</guid><pubDate>Tue, 08 Sep 2026 07:32:01 +0000</pubDate><atom:updated>2026-09-08T07:32:01.569Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,சட்டசபை,TN Assembly,Thalavai Sundaram,தளவாய் சுந்தரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/c37gmcsi/CHENNAI-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/c37gmcsi/CHENNAI-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் (செவ்வாய்கிழமை) நிறைவடைகிறது. பொதுவாக, சட்டசபையை சபாநாயகர் நடத்துவார். அவர் இல்லாத நேரத்தில் துணை சபாநாயகர் அவையை நடத்துவார். இருவரும் அவையில் இல்லாத நேரத்தில் மாற்றுத் தலைவர்களில் ஒருவர் அவையை நடத்துவார்கள்.</p><p>அந்த வகையில், புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசில், சட்டசபை மாற்றுத் தலைவர்கள் பட்டியலில் எதிர்க்கட்சியினருக்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த கால தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகளில், கூட்டணி கட்சிகளுக்கு மாற்றுத் தலைவர்கள் பொறுப்பு வழங்கப்பட்டதே தவிர, எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்படுவதில்லை.</p><p>த.வெ.க. அரசு இந்த நடைமுறையை மாற்றியமைத்த நிலையில், சட்டசபை நிறைவு நாளான இன்று சபாநாயகர், துணை சபாநாயகர் இல்லாத நேரத்தில் மாற்றுத் தலைவரான அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம் அவையை நடத்தினார். உறுப்பினர் இருக்கையில் இருக்கும் காரசார விவாதங்களில் தளவாய் சுந்தரம் பங்கேற்றாலும், சபாநாயகர் இருக்கைக்கு வந்ததும் நடுநிலையோடு நடத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>சட்டப்பேரவை மாண்பு கேள்விக்குள்ளாகும் வகையில் மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-dignity-of-the-legislative-assembly-has-been-compromised-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-dignity-of-the-legislative-assembly-has-been-compromised-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">350993a5-26cb-4cf9-829d-20e4e494d961</guid><pubDate>Tue, 08 Sep 2026 07:20:13 +0000</pubDate><atom:updated>2026-09-08T07:20:13.212Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,M.K.Stalin,சட்டசபை,TN Assembly</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/xi8e0lx0/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/xi8e0lx0/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையில் நேற்று காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்புத்துறை மானியக்கோரிக்கையில் உறுப்பினர்களின் கேள்விக்கு முதல்-அமைச்சர் விஜய் பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கட்சி நிதி வாங்கிய விவகாரத்தில் மு.க.ஸ்டாலின், உதயநிதி மீது முதல்-அமைச்சர் விஜய் பகிரங்கமாக குற்றம் சாட்டி ஆவேசமாக பேசினார்.</p><p>இந்த நிலையில், முதல்-அமைச்சர் பேசிய உரையை அவைக் குறிப்பில் இருந்து நீக்க கோரி சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் இன்று அமளியில் ஈடுபட்டனர். இதற்கு சபாநாயகர் முதல்-அமைச்சர் பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் எழுந்து நின்று கோஷம் எழுப்பினர். உடனே தி.மு.க.வினர் சபாநாயகர் இருக்கை முன்பு கீழே அமர்ந்து தர்ணா, கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>தனது இருக்கை முன்பு சூழ்ந்து கொண்டு தொடர்ந்து முழக்கமிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்களை அவை காவலர்களை கொண்டு வெளியேற்ற சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் உத்தரவிட்டார். உடனடியாக உள்ள வந்த அவை காவலர்கள் திமுகவினர் சிலரை குண்டுக்கட்டாக வெளியே தூக்கிச் சென்றனர். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.</p><p>இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், “சட்டப்பேரவை மாண்பு கேள்விக்குள்ளாகும் வகையில் மாறிவிட்டது” என்று கூறினார். தொடர்ந்து 2 தொகுதிகள் இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா? என்ற கேள்விக்கு மு.க.ஸ்டாலின் பதில் அளிக்காமல் காரில் புறப்பட்டு சென்றார்.</p>]]></content:encoded></item><item><title>ஒரே நாளில் 2.17 லட்சம் டன் சரக்குகள் கையாண்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-voc-port-sets-new-record-by-handling-217-lakh-tonnes-of-cargo-in-a-single-day</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-voc-port-sets-new-record-by-handling-217-lakh-tonnes-of-cargo-in-a-single-day#comments</comments><guid isPermaLink="false">ca14afbe-839c-442b-aa5b-bfda3dd40277</guid><pubDate>Tue, 08 Sep 2026 07:15:50 +0000</pubDate><atom:updated>2026-09-08T07:15:50.534Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>புதிய சாதனை,handling,new record,ஒரே நாளில்,சரக்கு,in a single day,தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம்,Cargo,Thoothukudi V.O.C. Port</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/z9d3c7cg/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2.17-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5.%E0%AE%89.%E0%AE%9A%E0%AE%BF.-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஒரே நாளில் 2.17 லட்சம் டன் சரக்குகள் கையாண்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/z9d3c7cg/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2.17-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5.%E0%AE%89.%E0%AE%9A%E0%AE%BF.-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%89%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">வ.உ.சி. துறைமுகம் </a>ஒரே நாளில் 2 லட்சத்து 17 ஆயிரத்து 332 மெட்ரிக் டன் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">சரக்கு</a>களைக் கையாண்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88">புதிய சாதனை</a> படைத்துள்ளதாக துறைமுக ஆணையப் பொறுப்பில் உள்ள சுசாந்தகுமார் புரோஹித் தெரிவித்துள்ளார். </p><h2>ஒரே நாளில் 2.17 லட்சம் டன் சரக்குகள் கையாண்டு புதிய சாதனை</h2><p>கடந்த செப்டம்பர் 5-ம் தேதி ஒரே நாளில் 2 லட்சத்து 17 ஆயிரத்து 332 மெட்ரிக் டன் (ஒரு டன் என்பது  ஆயிரம் கிலோ) சரக்குகளைக் கையாண்டு வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது. இதற்கு முன்பு ஒரே நாளில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 631 மெட்ரிக் டன் கையாண்டதே சாதனையாக இருந்தது. இதில் நிலக்கரி 62 ஆயிரத்து 466 டன், அனல்மின் நிலக்கரி 49 ஆயிரத்து 67 டன், சுண்ணாம்புக்கல் 20 ஆயிரத்து 671 டன், கந்தக அமிலம் 10 ஆயிரத்து 188 டன், பாமாயில் 5 ஆயிரத்து 400 டன், சர்க்கரை 1,771 டன், பொது சரக்குகள் 774 டன், காற்றாலை இறக்கைகள் 68 டன் மற்றும் 66 ஆயிரத்து 927 டன் சரக்குப் பெட்டக சரக்குகள் கையாளப்பட்டு உள்ளன. </p><h2>2.10 சதவீதம் வளர்ச்சி</h2><p>வ.உ.சி. துறைமுகம் கடந்த ஆகஸ்ட் 2026 மாதத்தில் 35.35 லட்சம் டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது. இது ஆகஸ்ட் 2025 மாதத்துடன் (32.33 லட்சம் டன்) ஒப்பிடுகையில் 9.36 சதவீத வளர்ச்சியாகும். மேலும், ஏப்ரல் 2026 முதல் ஆகஸ்ட் 2026 வரையிலான காலத்தில் மொத்தமாக 18.27 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டு, கடந்த ஆண்டின் இதே கால கட்டத்தை விட 2.10 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது. </p><h2>கடல்சார் நுழைவாயிலாக வலுப்பெறும்</h2><p>வடக்கு சரக்கு தளம் 3-ல் தலா 124 டன் கையாளும்திறன் கொண்ட இரண்டு நகரும் பளுதூக்கிகளும், 1 முதல் 7 வரையிலான சரக்கு தளங்களில் 7 நகரும் பளுதூக்கிகளும் பயன்பாட்டில் உள்ளன. மேலும் எதிர்கால வளர்ச்சிக்காக சரக்கு தளம் 7 நவீன சரக்குப் பெட்டக முனையமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் சரக்கு தளம் 10 உருவாக்குதல், வடக்கு சரக்கு தளம் 3-ஐ எந்திரமயமாக்குதல் மற்றும் சுங்க கட்டுப்பாட்டுப் பகுதியை 40 ஏக்கர் பரப்பில் விரிவாக்கம் செய்தல் போன்ற உள்கட்டமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் நிறைவடையும் போது வ.உ.சி. துறைமுகம் கிழக்குக் கடற்கரையின் முக்கிய கடல்சார் நுழைவாயிலாக மேலும் வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/extension-of-the-stay-on-announcing-by-elections-for-5-constituencies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/extension-of-the-stay-on-announcing-by-elections-for-5-constituencies#comments</comments><guid isPermaLink="false">6576fbb1-cc4f-4c00-b10d-3f68e7c97e0c</guid><pubDate>Tue, 08 Sep 2026 07:12:31 +0000</pubDate><atom:updated>2026-09-08T07:12:31.561Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இடைத்தேர்தல்,சென்னை ஐகோர்ட்,By-election,திருச்சி கிழக்கு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/a4ly8kq8/thi.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இடைத்தேர்தல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/a4ly8kq8/thi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">இடைத்தேர்தல் </a>அறிவிக்க விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை சென்னை ஐகோர்ட்டு நீட்டித்துள்ளது.</p><h2>ராஜினாமா </h2><p>நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முதல்-அமைச்சர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து, திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார்.</p><p>மேலும், கரூர் எம்.எல்.ஏ. எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை எம்.எல்.ஏ. சி.விஜயபாஸ்கர், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ஆகியோரும் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்தனர்.</p><h2>தேர்தல் வழக்குகள்</h2><p>இவர்களின் தேர்தல் வெற்றிக்கு எதிராக தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால், இந்த 5 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.</p><p>இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட இடைக்கால தடை விதித்திருந்தது.</p><p>இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி முதல்-அமைச்சர் விஜய் தரப்பிலும், தேர்தல் வழக்குகள் முடியும் வரை இடைத்தேர்தல் நடத்தும் திட்டம் இல்லை என தேர்தல் ஆணையம் தரப்பிலும் பதில்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.</p><h2>இறுதி விசாரணை </h2><p>இந்நிலையில், இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 5 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும், இவ்வழக்கின் இறுதி விசாரணை வரும் 28-ம் தேதி தொடங்கும் எனவும்  அறிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பெருந்துறை தொகுதி தேர்தல் வழக்கை நிராகரித்தது சென்னை ஐகோர்ட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madras-high-court-dismisses-election-petition-regarding-perundurai-constituency</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madras-high-court-dismisses-election-petition-regarding-perundurai-constituency#comments</comments><guid isPermaLink="false">78f16917-83a7-4794-ae4e-43a0469d13c3</guid><pubDate>Tue, 08 Sep 2026 07:06:49 +0000</pubDate><atom:updated>2026-09-08T07:06:49.549Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை ஐகோர்ட்டு,Chennai High Court,தேர்தல் வழக்கு,election case,பெருந்துறை,Perundurai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/fppqbaoe/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/fppqbaoe/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கடந்த சட்டசபை தேர்தலில் பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெயக்குமார் 9 ஆயிரத்து 693 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன்பின்னர், தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த ஜெயக்குமார் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார்.</p><p>இதனையடுத்து அதேதொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலம், ஜெயக்குமாரின் வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ஜெயக்குமார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p>இந்த நிலையில், இந்த மனு இன்று நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தோப்பு வெங்கடாசலம் தாக்கல் செய்த தேர்தல் வழக்கில் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட எந்த காரணங்களும் இல்லை எனக்கூறி, ஜெயக்குமாரின் மனுவை ஏற்று தோப்பு வெங்கடாசலத்தின் தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார். அண்மையில் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இருந்து சமீபத்தில் விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>வீடு புகுந்து தாய், மகனை அரிவாளால் வெட்ட முயற்சி: 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-nab-4-people-for-trying-to-break-into-a-house-and-slash-a-mother-and-son-with-a-machete</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-nab-4-people-for-trying-to-break-into-a-house-and-slash-a-mother-and-son-with-a-machete#comments</comments><guid isPermaLink="false">613bf9b7-b2f8-4074-a312-dee85962b309</guid><pubDate>Tue, 08 Sep 2026 06:59:29 +0000</pubDate><atom:updated>2026-09-08T06:59:29.726Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Sickle cut,அரிவாள் வெட்டு,போலீஸ் வலைவீச்சு,son,மகன்,முயற்சி,Mother,தாய்,Attempted,4 பேர்,4 people,police netting</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/zy0neypo/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ போலீஸ் வலைவீசசு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/zy0neypo/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், குரும்பூர் அருகே <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">முன்விரோதத்தில்</a> வீடு புகுந்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D">தாய்</a>, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D">மகனை</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">அரிவாளால் வெட்ட</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">முயன்ற</a> 4 பேரை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81">போலீசார் வலைவீசி</a> தேடி வருகின்றனர். </p><h2>முன்விரோதம்</h2><p>தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே கீழக்கல்லாம்பாறையைச் சேர்ந்த தொழிலாளியான முருகப்பெருமாள் (வயது 29) என்பவரது குடும்பத்தினருக்கும், அதே ஊரைச் சேர்ந்த பேச்சி என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. </p><h2>பாட்டிலால் தாக்குதல்</h2><p>இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குரும்பூரிலிருந்து தனது தாய் பேச்சியுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த முருகப்பெருமாளை, புரையூர் அருகே பேச்சி மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேர் வழிமறித்துள்ளனர். திடீரென பாட்டிலால் அவர்கள் 2 பேரையும் தாக்கியுள்ளனர். அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதைப் பார்த்து 4 பேரும் தப்பிச் சென்றனர். </p><h2>அரிவாளால் வெட்ட முயற்சி</h2><p>இந்த தாக்குதலில் காயமடைந்த தாயும் மகனும் வீட்டிற்குச் சென்று கதவைப் பூட்டிக் கொண்டனர். பின் தொடர்ந்து வந்த பேச்சி உள்ளிட்ட 4 பேரும் முருகப்பெருமாள் வீட்டின் கதவை அரிவாளால் வெட்டி உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். வீட்டிற்குள் இருந்த தாயையும், மகனையும் அரிவாளால் வெட்ட முயன்றபோது, அவர்களின் கூச்சல் சத்தம் கேட்டு மீண்டும் அக்கம், பக்கத்தினர் திரண்டு வந்ததால், 4 பேரும் கொலை மிரட்டல் விடுத்துத் தப்பிச் சென்றனர். </p><h2>4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு</h2><p>இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், குரும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய பேச்சி உள்பட 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>நெல்லை: பிளஸ் 2 மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவருக்கு மரண தண்டனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-one-person-sentenced-to-death-in-the-gang-rape-case-of-a-class-12-student</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-one-person-sentenced-to-death-in-the-gang-rape-case-of-a-class-12-student#comments</comments><guid isPermaLink="false">27d27c26-f111-451c-b56f-d08d01b0532a</guid><pubDate>Tue, 08 Sep 2026 06:59:04 +0000</pubDate><atom:updated>2026-09-08T06:59:04.082Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,தீர்ப்பு,Pocso Court,பிளஸ் 2 மாணவி,போக்சோ நீதிமன்றம்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/kebx8n96/15.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/kebx8n96/15.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவியை, அதே பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டில் அந்த மாணவியை ஆசை வார்த்தை கூறி காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்றுள்ளார். அப்போது தனது நண்பர்களான முனீஸ்வரன் மற்றும் சின்னக்குட்டி ஆகியோரையும் அழைத்துள்ளார். மூவரும் சேர்ந்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.</p><p>தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கின் விசாரணை நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், கைதுசெய்யப்பட்ட 3 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது. மேலும் தண்டனை விபரம் விரைவில் வெளியிடப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.</p><p>இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டது. அதில், சின்னக்குட்டி என்பவருக்கு மரண தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. மேலும், முருகேசனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், முனீஸ்வரனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மூவரும் பலத்த பாதுகாப்புடன் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். </p> ]]></content:encoded></item><item><title>தவெகவுக்கு 5 ஆண்டுகள் ஆதரவு தொடருமா? - பெ.சண்முகம் பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-support-for-tvk-continue-for-five-years-p-shanmugam-responds</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-support-for-tvk-continue-for-five-years-p-shanmugam-responds#comments</comments><guid isPermaLink="false">600aae13-a492-4578-a718-e4477fe03d68</guid><pubDate>Tue, 08 Sep 2026 06:45:07 +0000</pubDate><atom:updated>2026-09-08T06:45:07.810Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,பெ.சண்முகம்,Marxist Communist Party,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,p shanmugam</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/9u20xt22/14.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/9u20xt22/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் பெ.சண்முகம் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது. </p><h2>சிபிஎம் பங்கேற்காது</h2><p>”இடைத்தேர்தல், உள்ளாட்சித்தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் குறித்து பேச தவெகவினர் எங்களை அழைத்தனர். புதிய கூட்டணியை உருவாக்க வேண்டுமென தவெக தரப்பில் கூறப்பட்டது. தவெக ஆதரவு கட்சிகள் கூட்டத்தில் சிபிஎம் பங்கேற்காது. மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகள் வழங்குவோம். </p><h2>முதல்-அமைச்சர் பேச்சு</h2><p>காவல்துறை மாணியக்கோரிக்கை பதிலுரையில் முதல்-அமைச்சர் சம்பந்தமில்லாமல் பேசியுள்ளார். எதிர்க்கட்சிகள் கேட்ட கேள்விகளில் ஒரு கேள்விக்கு கூட முதல்-அமைச்சர் பதில் கூறவில்லை. பேசுவதற்கு நிறைய இடங்கள் உள்ளன. நினைத்ததை எல்லாம் சட்டசபையில் பேசுவோம் என்ற முறையில் பேசுவதை நாங்கள் ஏற்கவில்லை. </p><p>சட்டமன்றம் சண்டை மன்றமாக மாறியுள்ளது. சட்டமன்ற நேரலையை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். வீண் விவாதங்கள் கூடாது. மரபுகளுக்கு உட்பட்டு சட்டமன்றம் நடக்க வேண்டும். சட்டமன்ற நேரத்தை வீணடிக்காமல் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். </p><h2>மிசா கைது</h2><p>மிசா கைது பற்றி அமைச்சர் நிர்மல்குமார் பேசியது சிறுபிள்ளைத்தனமானது. கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஆயிரக்கணக்கானோர் மிசா காலங்களில் சிறையில் இருந்தனர். மிசா கால கொடுமைகள் குறித்த ஆவணங்கள் நிறைய உள்ளன. மிசா சிறை கொடுமைகள் குறித்த வரலாற்றை தவெக அமைச்சர்கள் படிக்க வேண்டும். </p><h2>தவெக ஆதரவு</h2><p>தவெகவுக்கு வெளியில் இருந்து தங்களது ஆதரவு தொடரும். தவெக அரசுக்கு 5 ஆண்டுகள் ஆதரவு கொடுப்போம் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. தவெகவின் நிலைப்பாட்டை பொறுத்து அவர்களுக்கு ஆதரவளிப்பது&nbsp;குறித்து முடிவெடுக்கப்படும்.”</p><p>இவ்வாறு அவர் பேசினார். </p> ]]></content:encoded></item><item><title>தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம்: கூட்டணி கட்சிக்கும் இலாகா மாறுகிறது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-cabinet-reshuffle-soon-portfolio-to-change-for-alliance-party-as-well</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-cabinet-reshuffle-soon-portfolio-to-change-for-alliance-party-as-well#comments</comments><guid isPermaLink="false">b3ab4f40-7ac4-424a-aee1-a31e93b79338</guid><pubDate>Tue, 08 Sep 2026 06:27:44 +0000</pubDate><atom:updated>2026-09-08T06:27:44.554Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,தமிழக அமைச்சரவை,TN Cabinet,CM Vijay,tvk cabinet,தவெக அமைச்சரவை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/sby6k93e/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/sby6k93e/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளது. கூட்டணி கட்சிக்கும் இலாகா மாற்றம் செய்யப்பட உள்ளது. </p><h2>த.வெ.க. அமைத்த கூட்டணி ஆட்சி</h2><p>தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 23-ந் தேதி, 17-வது சட்டசபை தேர்தல் நடைபெற்றது. வாக்குகள் மே 4-ந் தேதி எண்ணப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், தேர்தலை முதல் முறையாக சந்தித்த த.வெ.க. வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்தது.</p><p>முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் 35 பேர் இடம் பெற்றிருந்தனர். இதில், கூட்டணி கட்சிகளான காங்கிரசுக்கு 2 இடமும், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு தலா ஒரு இடமும் வழங்கப்பட்டது.</p><h2>முதல்-அமைச்சரிடம் அறிக்கை அளிப்பு</h2><p>தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி பொறுப்பேற்று 4 மாதங்கள் ஆகும் நிலையில், ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் துறையில் செயல்பட்ட விதம், துறை சார்ந்த அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனை கூட்டங்கள், சொந்த தொகுதியில் மேற்கொண்ட பணிகள், சட்டசபை செயல்பாடு, த.வெ.க.வினரிடம் நடந்து கொண்ட விதம் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து முதல்-அமைச்சர் விஜய்யின் ஆலோசகர்களான ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகியோர் அறிக்கை அளித்துள்ளனர்.</p><p>அந்த அறிக்கையில், சில அமைச்சர்களின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை துறை செயலாளர்களை அழைத்து முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யும் உறுதி செய்துகொண்டுள்ளார்.</p><h2>அமைச்சரவை மாற்றம்</h2><p>இந்த நிலையில், சுமார் 1 மாதம் நடைபெற்ற தமிழக சட்டசபை கூட்டம் இன்று (செவ்வாய்கிழமை) முடிவடையும் நிலையில், அமைச்சரவை மாற்றியமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில், த.வெ.க.வில் ஒரு பெண் அமைச்சர் உள்பட 3 பேர் மாற்றப்பட இருப்பதாக தெரிகிறது.</p><p>இதேபோல், கூட்டணி கட்சியை சேர்ந்த 4 அமைச்சர்களில் ஒருவருக்கு இலாகா மாற்றப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், த.வெ.க. அமைச்சர்களில் ஒருவர், தனக்கு பெரிய துறை வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதால், அவருக்கும் இலாகா மாற்றப்படும் என்று தெரிகிறது. அமைச்சரவை மாற்றப்பட உள்ளதால், பல அமைச்சர்கள் கலக்கத்தில் இருக்கிறார்களாம்.</p>]]></content:encoded></item><item><title>டெங்கு பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் கள ஆய்வு: அமைச்சர் அருண்ராஜ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/field-inspections-in-districts-with-high-dengue-prevalence-minister-arunraj</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/field-inspections-in-districts-with-high-dengue-prevalence-minister-arunraj#comments</comments><guid isPermaLink="false">1e6d2925-1b91-414b-83b8-032b52779e37</guid><pubDate>Tue, 08 Sep 2026 06:24:22 +0000</pubDate><atom:updated>2026-09-08T06:24:22.882Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Dengue,டெங்கு பாதிப்பு,Minister Arunraj,அமைச்சர் அருண்ராஜ்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/togyxt7w/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/togyxt7w/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டசபையில் அமைச்சர் அருண்ராஜ் பேசியதாவது;</p><p>"தமிழகத்தில் டெங்கு பரவல் முக்கிய சுகாதார பிரச்சினையாக இருந்து வருகிறது. நடப்பாண்டில் தற்போது வரை 14,581 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். 9 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. டெங்கு பரவமல் தடுக்க முதற்முறையாக அறிவியல் ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. அதாவது, டெங்கு பாதிப்பு அதிகளவில் உள்ள மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். 3 ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். </p><p>ரூ. 43 லட்சம் செலவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள ஆய்வில் டெங்கு கொசு பரவலை கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள், அதனை செயல்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்யப்படும். பொதுமக்களும் டெங்கு கொசு பரவலை தடுக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வீடுகளை சுத்தமாக வைத்திருத்தல், தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதிசெய்தல் போன்ற நடவடிக்கைகளை மக்களும் மேற்கொள்ள வேண்டும்.” என்றார். </p> ]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-tomorrow-17</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-tomorrow-17#comments</comments><guid isPermaLink="false">0e01a45d-153d-4994-863e-6f802b6e7390</guid><pubDate>Tue, 08 Sep 2026 06:15:56 +0000</pubDate><atom:updated>2026-09-08T06:15:56.640Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,monthly maintenance work,மாதாந்திர பராமரிப்பு பணி,Power outage tomorrow,நாளை மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/v6z923yr/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/v6z923yr/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மின்பகிர்மான வட்டம், திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி நகர்ப்புறம், திருநெல்வேலி கிராமப்புறம், வள்ளியூர், கல்லிடைக்குறிச்சி ஆகிய கோட்டங்களுக்கு உட்பட்ட துணைமின் நிலையங்களில் நாளை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் காரணமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> செய்யப்படும். </p><h2>திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம்</h2><p>திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம் செயற்பொறியாளர் ரவிராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>கொக்கிரகுளம் துணை மின் நிலையத்தில் நாளை (9.9.2026, புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும்.</p><p>அதன்படி திருநெல்வேலி சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், வடக்கு மற்றும் தெற்கு புறவழிச்சாலை, வண்ணாரப்பேட்டை முழுவதும், இளங்கோநகர், பரணிநகர், திருநெல்வேலி சந்திப்பு முதல் மேரிசார்ஜன்ட் பள்ளி வரையிலான திருவனந்தபுரம் சாலை,  பாளை புதுப்பேட்டை தெரு, சுப்பிரமணியபுரம் மற்றும் மாருதிநகர் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p><h2>திருநெல்வேலி கிராமப்புற கோட்டம்</h2><p>திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>தாழையூத்து துணைமின் நிலையத்தில் நாளை (9.9.2026, புதன்கிழமை) மாதாந்திர அத்தியாவசிய பராமரிப்பு  பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆதலால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாதுகாப்பு கருதி பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும். </p><p>அதன்படி மானூர் வட்டாரம், தாழையூத்து, சேதுராயன்புதூர், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூர், தென்கலம்புதூர், நாஞ்சான்குளம், தென்கலம், மதவகுறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p><h2>வள்ளியூர் கோட்டம்</h2><p>வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>களக்காடு, பணகுடி, கோட்டைகருங்குளம் மற்றும் திசையன்விளை துணைமின் நிலையங்களில் நாளை (9.9.2026, புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் கீழே குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது. </p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>களக்காடு நகரம், பெருமாள்குளம், சாலைபுதூர், SN பள்ளிவாசல், மாவடி, டோனாவூர், புலியூர்குறிச்சி, கோதைசேரி, வடமலைசமுத்திரம், கருவேலன்குளம், கோவிலம்மாள்புரம், வடுகச்சிமதில். </p><p>பணகுடி, லெப்பைகுடியிருப்பு, புஷ்பவனம், குமந்தான், காவல்கிணறு, சிவகாமிபுரம், தளவாய்புரம், பாம்பன்குளம், கலந்தபனை, கடம்பன்குளம். </p><p>கோட்டைகருங்குளம், குமாரபுரம், வாழைதோட்டம், சீலாத்திகுளம், முடவன்குளம், தெற்குகள்ளிகுளம், சமூகரெங்கபுரம், திருவெம்பலாபுரம். </p><p>திசையன்விளை, மகாதேவன்குளம், அப்புவிளை, ஆயன்குளம், நந்தன்குளம், செல்வமருதூர், எருமைக்குளம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>கல்லிடைக்குறிச்சி கோட்டம்</h2><p>கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும்பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>கல்லிடைக்குறிச்சி கோட்டம், ஓ.துலுக்கப்பட்டி, வீரவநல்லூர், அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, கடையம் ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை (9.9.2026, புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையங்களில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ள நேரத்தில் பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம் பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும். </p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>ஆழ்வான்துலூக்கப்பட்டி, ஒ.துலூக்கப்பட்டி, செங்குளம், பாப்பாகுடி, கபாலிபாறை, இடைகால், அணைந்தநாடார்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்தப்பாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை. </p><p>அம்பாசமுத்திரம், ஊர்க்காடு, வாகைகுளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி. </p><p>மணிமுத்தாறு, ஜமீன்சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம், பொன்மாநகர், தெற்குபாப்பன்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம். </p><p>கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், வெள்ளாங்குளி ரெங்கசமுத்திரம், கூனியூர், காருகுறிச்சி. </p><h2>காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை</h2><p>கடையம், கட்டேரிபட்டி, முதலியார்பட்டி, பண்டாரகுளம், பொட்டல்புதூர், திருமலையப்புரம், ரவணசமுத்திரம், வள்ளியம்மாள்புரம், சிவநாடனூர், மாதாபுரம், மைலப்பபுரம், வெய்காலிப்பட்டி, மேட்டூர், கோவிந்தபேரி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தீபாவளி பண்டிகை: சிறுமுகையில் கைத்தறி பட்டுச்சேலை தயாரிக்கும் பணி மும்முரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/diwali-festival-handloom-silk-saree-production-in-full-swing-at-sirumugai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/diwali-festival-handloom-silk-saree-production-in-full-swing-at-sirumugai#comments</comments><guid isPermaLink="false">f7da44ec-0de6-4cf5-997f-fc477768d31e</guid><pubDate>Tue, 08 Sep 2026 06:04:51 +0000</pubDate><atom:updated>2026-09-08T06:04:51.711Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,Diwali,தீபாவளி,Diwali festival,silk saree,பட்டுசேலை,சிறுமுகை,Sirumugai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/269tt1t6/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/269tt1t6/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><h2>கைத்தறி நெசவுத்தொழில்</h2><p>கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை வட்டார பகுதி கைத்தறி நெசவுத்தொழிலில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. சிறுமுகை மற்றும் அதனைச்சுற்றியுள்ள ஆலாங்கொம்பு, திம்மராயம்பாளையம், மூலத்துறை, வெள்ளிக்குப்பம்பாளையம், கிச்சகத்துர் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்தவர்கள் நெசவுத்தொழிலை செய்து வருகின்றனர்.</p><p>சிறுமுகை வட்டார பகுதியில் உள்ள நெசவுத்தொழிலாளர்கள் காட்டன், கோரா காட்டன், மென்பட்டு, முகூர்த்த புடவைகள், வரவேற்பு புடவைகள், கிப்ட் புடவைகள், சீருடைகள் ஆகிய கைத்தறி பட்டுச்சேலை ரகங்கள் காண்போர் மனதை கவரும் வண்ணம் பல வண்ணங்களில் தயாரித்து வருகின்றனர்.</p><h2>தயாரிக்கும் பணி மும்முரம்</h2><p>இதில் மென் பட்டுச்சேலைகள் பெண்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சிறுமுகை வட்டார பகுதியில் இருந்து நெசவுத்தொழிலாளர்கள் தயாரிக்கும் கைத்தறி பட்டுச்சேலைகள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்கள், அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.</p><p>ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை நெருங்கும்போது சிறுமுகை வட்டாரப் பகுதியில் கைத்தறி பட்டுச்சேலைகள் தயாரிக்கும் பணியில் நெசவுத் தொழிலாளர்கள் முழுமூச்சில் ஈடுபடுவார்கள். அதேபோல் இந்த ஆண்டு சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கைத்தறி பட்டுச் சேலை தயாரிக்கும் பணி தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.</p><h2>தனி சிறப்பு</h2><p>இந்த ஆண்டு 150-ல் இருந்து 200 வரை புத்தம் புது டிசைன்கள் மற்றும் பேட்டர்ன்களில் பல வண்ணங்களில் கைத்தறி பட்டுச்சேலைகள் தயாரிக்கப்படுகின்றன. பண்டிகை காலங்களை முன்னிட்டு தயாரிக்கப்படும் கைத்தறி பட்டுச்சேலைகளை வாங்குவதன் மூலம் நெசவுத்தொழிலையே நம்பி இருக்கின்ற நெசவுத்தொழிலாளர்களின் வாழ்க்கையும் உயரும். மேலும் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் உள்ள சிறுமுகை வட்டாரப் பகுதி கைத்தறி பட்டுச்சேலை தயாரிப்பதில் தனி சிறப்பு பெற்று விளங்கி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு விருப்பமனு அளிக்கலாம்: அதிமுக அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/applications-for-the-maduranthakam-and-dharapuram-constituency-by-elections-can-now-be-submitted-aiadmk</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/applications-for-the-maduranthakam-and-dharapuram-constituency-by-elections-can-now-be-submitted-aiadmk#comments</comments><guid isPermaLink="false">4fdbebb5-5586-4782-99ae-8b49b39d2a4b</guid><pubDate>Tue, 08 Sep 2026 05:29:38 +0000</pubDate><atom:updated>2026-09-08T05:29:38.474Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>அதிமுக,AIADMK,இடைத்தேர்தல்,By-election</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/kgw7l059/11.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/kgw7l059/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில், மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு விருப்பமனு அளிக்கலாம் என அதிமுக அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு;</p><p>”(35) மதுராந்தகம் (தனி) (101) தாராபுரம் (தனி) ஆகிய சட்டமன்றத்&nbsp;தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் 6.10.2026 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் இன்று (8.9.2026) முதல் 18.9.2026 வியாழக்கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி<strong> </strong>வரையிலும்&nbsp;அதற்கான&nbsp;படிவங்களைப்&nbsp;பெற்று அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து 10.9.2026 மாலை 6 மணிக்குள் தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>திமுக உறுப்பினர்கள் செய்த செயல்தான் வருத்தம் அளிக்கிறது: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-the-actions-of-the-dmk-members-that-are-regrettable-speaker-jcd-prabhakar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-the-actions-of-the-dmk-members-that-are-regrettable-speaker-jcd-prabhakar#comments</comments><guid isPermaLink="false">41cd4dba-47be-43db-b5c6-b8732f4707f6</guid><pubDate>Tue, 08 Sep 2026 05:27:56 +0000</pubDate><atom:updated>2026-09-08T05:27:56.551Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,சட்டசபை,TN Assembly,JCD Prabhakar,ஜே.சி.டி. பிரபாகர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/9lg7tx2u/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/9lg7tx2u/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முதல்-அமைச்சர் பேசிய உரையை அவைக் குறிப்பில் இருந்து நீக்க கோரி சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதற்கு சபாநாயகர் முதல்-அமைச்சர் பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் எழுந்து நின்று கோஷம் எழுப்பினர். உடனே தி.மு.க.வினர் சபாநாயகர் இருக்கை முன்பு கீழே அமர்ந்து தர்ணா, கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>தனது இருக்கை முன்பு சூழ்ந்து கொண்டு தொடர்ந்து முழக்கமிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்களை அவை காவலர்களை கொண்டு வெளியேற்ற சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் உத்தரவிட்டார். உடனடியாக உள்ளே&nbsp;வந்த அவை காவலர்கள் திமுகவினர் சிலரை குண்டுக்கட்டாக வெளியே தூக்கிச் சென்றனர். உறுப்பினர் ஒருவருக்கு உடல் நிலை சரியில்லை. அவரை அமைதியாக கூட்டி செல்லுங்கள்' என சபாநாயகர் அறிவுறுத்தினார். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. </p><p><strong>அதன்பின்னர் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் பேசியதாவது:-</strong></p><p>"கடந்த சனிக்கிழமை அன்று குறைந்த ரத்த அழுத்தம் (Low Pressure) காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு அனுமதியாக வலியுறுத்தப்பட்டேன். ஆனால், நம்மை எல்லாம் ஆளாக்கிய முதல்-அமைச்சரின் பதிலுரையை கேட்க வேண்டும் என்பதற்காக வருகை தந்தேன். சபையில் நடந்த நிகழ்வுகளால் எனக்கு ரத்த அழுத்தம் உயர்ந்து, மருத்துவரே இல்லாமல் ரத்த அழுத்தம் (Pressure) சரியாகியிருக்கிறது.</p><p>முதல்-அமைச்சர் விஜய், சட்டமன்றத்தில் விதிகளுக்கு புறம்பாக எதுவும் பேசவில்லை. சட்டமன்றத்தில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்ற மாண்பு திமுகவுக்கு தெரியும்; திமுக உறுப்பினர்கள் அவையை நடத்த முடியாமல் தடுத்தால் நான் என்ன செய்ய முடியும்?; திமுக உறுப்பினர்கள் செய்த செயல்தான் எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதா: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் மேலும் தள்ளிப்போகிறது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bill-to-extend-tenure-of-individual-officers-local-body-elections-in-tamil-nadu-further-postponed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bill-to-extend-tenure-of-individual-officers-local-body-elections-in-tamil-nadu-further-postponed#comments</comments><guid isPermaLink="false">0b71ca02-8099-4fd8-b0fa-5d62d70bea64</guid><pubDate>Tue, 08 Sep 2026 05:13:09 +0000</pubDate><atom:updated>2026-09-08T05:13:09.800Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Tamil Nadu Assembly,தமிழக சட்டசபை,bill,Extension,மசோதா தாக்கல்,நீட்டிப்பு,Local Government Elections,பதவிக்காலம்,உள்ளாட்சி தேர்தல்,Postponed,அலுவலர்கள்,தள்ளிவைப்பு,Filing,Special Officers,தனி,Term</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/o1777gju/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதா: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் மேலும் தள்ளிப்போகிறது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/o1777gju/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>உள்ளாட்சி அமைப்புகளில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF">தனி</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">அலுவலர்களின்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D">பதவிக்காலத்தை</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">நீட்டிக்கும்</a> சட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE">மசோதா</a>, சட்டசபையில் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">உள்ளாட்சி தேர்தல்</a> மேலும் தள்ளிப்போகிறது.</p><h2>27 மாவட்ட பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிவு</h2><p>தமிழ்நாட்டில் உள்ள காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் இல்லாத <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a>யை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களிலும் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த நிலையில், இந்த 27 மாவட்டங்களிலும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பதவிக்காலம் கடந்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் முடிவடைந்தது. இதையடுத்து, இந்த உள்ளாட்சிகளின் நிர்வாகங்களை கவனிக்க தமிழக அரசு தனி அலுவலர்களை நியமித்தது. </p><h2>சட்ட மசோதா தாக்கல்</h2><p>இந்த தனி அலுவலர்களின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 3-ந்தேதி முடிவடைந்தது. இந்த நிலையில், மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்டது. அதன் பிறகும், இதேபோல் நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று தமிழக சட்டசபையில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் என்.ஆனந்த் சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: </p><h2>அக்டோபர் 19-ந்தேதி வரை..</h2><p>காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி தவிர 28 மாவட்டங்களில் உள்ள, கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம், கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரி 5-ந்தேதி முடிவடைந்தது. வார்டு எல்லை மறுவரையறை, இடஒதுக்கீடு பணிகள் நிறைவு பெறாததால், தேர்தல் நடத்தப்படவில்லை. </p><p>எனவே, தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது வரை, மறுவரையறை பணிகள் முடியவில்லை. எனவே, தனி அலுவலர்களின் பதவி காலத்தை வரும் அக்டோபர் 19-ந்தேதி வரையிலோ, தேர்தலுக்கு பின், உள்ளாட்சி அமைப்புகளின் முதல் கூட்டம் வரையிலோ நீட்டிக்க, ஊராட்சிகள் சட்டத்தில் திருத்தம் செய்ய, அரசு முடிவு செய்துள்ளது. </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மு.க.ஸ்டாலினின் தியாகத்தை முதல்-அமைச்சர் கொச்சைப்படுத்தி பேசினார்: எ.வ.வேலு குற்றச்சாட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-trivialized-mk-stalins-sacrifices-ev-velu-alleges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-trivialized-mk-stalins-sacrifices-ev-velu-alleges#comments</comments><guid isPermaLink="false">666f7750-7340-43f2-8d33-b0b7cbc8104b</guid><pubDate>Tue, 08 Sep 2026 05:10:31 +0000</pubDate><atom:updated>2026-09-08T05:10:31.675Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,எ.வ.வேலு,M.K. Stalin,E.V. Velu</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/68pqp8sw/10.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/68pqp8sw/10.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சட்டசபையில் திமுக குறித்த அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகள் குறித்தும், மிசா குறித்தும் முதல்-அமைச்சர் விஜய் பேசினார். ஆனால், விதிகளுக்கு முரணாக முதல்-அமைச்சர் பேசியதாகவும், அதனை அவைக்குறிப்பில் இருந்துநீக்குமாறும் திமுகவினர் சபாநாயகரிடம் வலியுறுத்தினர். ஆனால் திமுகவின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்க&nbsp;மறுத்துவிட்டார். இதனால் சட்டசபையில் திமுகவினர் அமளியில் ஈடுபட்டதால் அவர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து சட்டசபை வளாகத்தில் திமுகவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது எ.வ.வேலு பேசியதாவது;</p><p>”எதிர்க்கட்சித்தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் பதிலளிப்பார் என எதிர்பார்த்தோம். வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும்போது அதைப்பற்றி சட்டசபையில் பேசக்கூடாது. ஆனால் முதல்-அமைச்சர் விஜய், சட்டசபை விதிக்கு முரணாக, அமலாக்கத்துறை வழக்கு பற்றியும், மிசாவை பற்றியும் பேசினார். சர்க்காரியா கமிஷன் குறித்து பேசினார். அமலாக்கத்துறை அறிக்கையை படித்த முதல்-அமைச்சர், மிசாவை பற்றி பேசும்போது பாடி லாங்குவேஜ் செய்தார். மு.க.ஸ்டாலினின் தியாகத்தை கொச்சைப்படுத்தி முதல்-அமைச்சர் பேசினார்.  </p><p>இதனால் முதல்-அமைச்சர் பேசியதை சட்டசபை குறிப்பில் இருந்து நீக்க வேண்டுமென சபாநாயகரிடம் கோரினோம். ஆனால் அதனை சபாநாயகர் மறுத்துவிட்டார். அத்துடன், அவைக்காவலர்களை வரவழைத்து எங்களை வெளியே தள்ளியுள்ளனர். சபாநாயகர் இதுவரை நடுநிலையோடு இருந்தார். ஆனால் அவர் இன்று ஒருதலைப்பட்சமாக செயல்பட்டுள்ளார். சட்டசபையில் ஜனநாயகம் கெட்டுப்போய் உள்ளது. திமுக நடத்தியது ரியல் ஆட்சி. இப்போது நடப்பது ரீல்ஸ் ஆட்சி.”</p><p>இவ்வாறு அவர் பேசினார். </p> ]]></content:encoded></item><item><title>

நீட் தேர்வால் இனி ஒரு உயிர் கூட போகக்கூடாது : தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/not-a-single-life-should-be-lost-to-the-neet-exam-anymore-tamil-nadu-congress-leader-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/not-a-single-life-should-be-lost-to-the-neet-exam-anymore-tamil-nadu-congress-leader-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">7d229464-b23f-4096-b517-ecb43b429c24</guid><pubDate>Tue, 08 Sep 2026 05:02:46 +0000</pubDate><atom:updated>2026-09-08T05:02:46.618Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தற்கொலை,நீட் தேர்வு,NEET Exam,மாணிக்கம் தாகூர்,பல்லாவரம்,NEET,Manikam Tagore,sucide தற்கொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/eexrgvl8/7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/eexrgvl8/7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பல்லாவரத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/neet">நீட் தேர்வு</a> அழுத்தத்தால் தம்பி சாய் அபினவ் தற்கொலை செய்து கொண்ட செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது என <a href="https://www.dailythanthi.com/topic/manickam-thakur-mp">மாணிக்கம் தாகூர்</a> தெரிவித்துள்ளார். </p>  <p>இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- </p><p>"பல்லாவரத்தில் நீட் தேர்வு அழுத்தத்தால் தம்பி சாய் அபினவ் தற்கொலை செய்து கொண்ட செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.</p><p>‘இனி ஒரு உயிர்கூட நீட் தேர்வால் போகக்கூடாது" என்று மக்கள் மன்றத்தில் நாங்கள் தொடர்ந்து குரல் எழுப்பி போராடி வருகிறோம். ஆனால், கல்நெஞ்சம் கொண்ட நரேந்திர மோடி அரசு அதை ஒரு துளியும் காதுகொடுத்துக் கேட்கத் தயாராக இல்லை.</p><p>இன்னும் எத்தனை மாணவர்களின் ரத்தம் இந்த பா.ஜ.க. அரசுக்குத் தேவைப்படுகிறது ? மாணவர்களின் தொடர் மரணங்களை ஒரு தீவிரமான பிரச்சினையாகவே கருதாமல், தமிழகத்தின் நியாயமான குரலைத் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வரும் மக்கள் விரோத பா.ஜ.க. அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.</p><p>அன்பு மாணவச் செல்வங்களே, தற்கொலை எதற்கும் தீர்வல்ல ; ஒருபோதும் இதுபோன்ற விபரீத முடிவுகளை எடுக்காதீர்கள். இந்த அநீதியான நீட் தேர்வுக்கு எதிராக நாம் அனைவரும் ஓரணியில் திரண்டு போராடி நிச்சயம் தீர்வு காண்போம். நாங்கள் உங்கள் பக்கம் என்றும் துணை நிற்போம்.</p><p>மாணவர்களின் உயிரோடு விளையாடும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்!"</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>2-வது நாளாக அமளி: சட்டசபையில் இருந்து திமுகவினர் குண்டுக்கட்டாக வெளியேற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/assembly-marshals-forcibly-removed-dmk-members-commotion-in-the-legislative-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/assembly-marshals-forcibly-removed-dmk-members-commotion-in-the-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">5c22e889-dc06-4833-bb26-d8546c3f7f04</guid><pubDate>Tue, 08 Sep 2026 04:51:27 +0000</pubDate><atom:updated>2026-09-08T04:51:27.044Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,திமுக,DMK,சட்டசபை,TN Assembly,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/u0nmbii1/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/u0nmbii1/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியதும், திமுக கொறடா எ.வ.வேலு பேசுகையில், என்னுடைய சட்டமன்ற அனுபத்தில் எத்தனையோ முதல்-அமைச்சர்களை பார்த்துள்ளேன்..! அவர்கள் எல்லாரும் கண்ணியமாக தான் பேசினார்கள்.  நேற்று 26 நிமிடங்கள் அமைதியாக காத்திருந்தோம். </p><p>ஆனால், நீதிமன்ற விசாரணையில் இருக்கும் வழக்குகள் குறித்து முதல்-அமைச்சர் பேசியிருக்கிறார். பலமுறை இதே மன்றத்தில் பேசப்பட்ட சர்க்காரிய அறிக்கை குறித்தும் அவதூறாக பேசியிருக்கார். முதல்-அமைச்சர் ஆதாரமில்லாமல் பேசி இருக்கிறார். காவல்துறை மானியம் தொடர்பான தகவல் தவிர்த்து, மிசா, மாறன் குறித்து அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றார்.</p><p>இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், "சர்க்காரியா கமிஷன் வழக்கு குறித்துத்தானே அவையில் பேசினார். கலைஞர் நிதி வாங்கிய விவரங்கள் உள்ளிட்ட அனைத்தும் அந்த அறிக்கையில் உள்ளன. சர்க்காரியா கமிஷன் சுட்டிக்காட்டிய 6 குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் உள்ளது எனக் கூறி சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.</p><p>மிசாவில் வழிப்பறி வழக்கும் இருக்கும், கொலை வழக்கும் இருக்கும், திருட்டு வழக்கும் இருக்கும், பெண்கள் தொடர்பான வழக்கும் இருக்கும். எல்லாருமே மிசாவில் தான் கைதானார்கள் என்று சொல்ல முடியாது. பிரதமராக இருந்த இந்திரா காந்தியை அவதூறாக பேசியதால் தான் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். இந்திரா காந்தியிடம் 21வது அம்ச திட்டம் ஒன்று உள்ளது என ஸ்டாலின் அவதூறாக பேசினார். அவர் மிசாவில் தான் கைது செய்யப்பட்டார் என்பதற்கு, எந்த ஆதாரமும் இல்லை, எந்த குறிப்பும் இல்லை. என்றார்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/dun5dcep/WhatsApp-Image-2026-09-08-at-10.54.15-AM.jpeg" /></figure><p>இதனையடுத்து முதல்-அமைச்சர் பேசிய உரையை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதற்கு சபாநாயகர் முதல்-அமைச்சர் பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் எழுந்து நின்று கோஷம் எழுப்பினர். உடனே தி.மு.க.வினர் சபாநாயகர் இருக்கை முன்பு கீழே அமர்ந்து தர்ணா, கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/sd5blepa/WhatsApp-Image-2026-09-08-at-10.57.22-AM.jpeg" /></figure><p>தனது இருக்கை முன்பு சூழ்ந்து கொண்டு தொடர்ந்து முழக்கமிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்களை அவை காவலர்களை கொண்டு வெளியேற்ற சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் உத்தரவிட்டார். உடனடியாக உள்ளே வந்த அவை காவலர்கள் திமுகவினர் சிலரை குண்டுக்கட்டாக வெளியே தூக்கிச் சென்றனர். உறுப்பினர் ஒருவருக்கு உடல் நிலை சரியில்லை. அவரை அமைதியாக கூட்டி செல்லுங்கள்' என சபாநாயகர் அறிவுறுத்தினார். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.</p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/ork487j7/WhatsApp-Image-2026-09-08-at-10.59.20-AM.jpeg" /></figure><p>நேற்றைய சட்டசபை நிகழ்விலும் தி.மு.க.வினர் சபாநாயகர் இருக்கை முன்பு கீழே அமர்ந்து தர்ணா, கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>காரைக்கால், பாலக்காடு, மயிலாடுதுறை ரெயில் சேவையில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-karaikal-palakkad-mayiladuthurai-train-services</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-karaikal-palakkad-mayiladuthurai-train-services#comments</comments><guid isPermaLink="false">181eb9b6-3d04-4110-8eb8-ac90f43e0e2d</guid><pubDate>Tue, 08 Sep 2026 04:13:47 +0000</pubDate><atom:updated>2026-09-08T04:13:47.551Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>காரைக்கால்,Karaikal,Mayiladuthurai,ரெயில் சேவை,train service,மயிலாடுதுறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/cqncmx7d/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/cqncmx7d/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,  </p><p>பராமரிப்பு பணிகள் காரணமாக காரைக்கால். பாலக்காடு, மயிலாடுதுறை ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.</p><h2>காரைக்கால் டெமு ரெயில்</h2><p>திருச்சி, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு ரெயில்வே கோட்டத்தில் பல்வேறு பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதன் காரணமாக சில ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரெயில்கள் புறப்படும் இடம் மாற்றம் செய்யப் பட்டுள்ளன. அதன்விவரம் வருமாறு:-</p><p>நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் வருகிற 14-ந்தேதி வரை திருச் சியில் காலை 8.40 மணிக்கு புறப்படும் திருச்சி -காரைக்கால் டெமு ரெயில் (எண்:76820) திருவாரூர் வரை மட்டுமே இயங்கும். மேற்கண்ட நாட்களில் இந்த ரெயில் காரைக்கால் செல்லாது. அதுபோல் மறுமார்க் கத்தில் காரைக்காலில் இருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்படவேண்டிய காரைக்கால் திருச்சி டெமு ரெயில் (எண்:76819) திருவாரூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு திருச்சி வந்தடையும். அந்த நாட்களில் காரைக்காலில் இருந்து புறப்படாது.</p><h2>பாலக்காடு ரெயில்</h2><p>அதுபோல் சேலம் ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட கரூர்-மூர்த்திபாளையம் இடையே தண்டவாளத்தில் பொறியியல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக பாலக்காடு டவுன்-திருச்சி எக்ஸ்பிரஸ் (எண்:16844) வருகிற 10-ந்தேதி, 12-ந்தேதி, 15-ந்தேதி ஆகிய நாட்களில் புகழூர் வரை மட்டுமே இயக்கப்படும். மேற்கண்ட நாட்களில் இந்த ரெயில் திருச்சிக்கு வராது. அன்று தண்டவாள பராமரிப்பு பணிகள் முடிந்தபிறகு திருச்சிக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயிலாக புகழூரில் இருந்து இயக்கப்படும்.</p><p>மேலும் வருகிற 10-ந்தேதி, 15-ந்தேதி. 17-ந்தேதி ஆகிய நாட்களில் இந்த ரெயில் போத்தனூரில் இருந்து தான் காலை 7.55 மணிக்கு புறப்படும். பாலக்காட்டில் இருந்து புறப்படாது. அதுபோல் திருச்சி-பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் (எண்:16843) நாளை (புதன்கிழமை), 14-ந்தேதி, 16-ந்தேதி ஆகிய நாட்களில் திருச்சியில் இருந்து போத்தனூர் வரை மட்டுமே இயக் கப்படும். மேற்கண்ட நாட்களில் இந்த ரெயில் பாலக்காடு டவுன் செல்லாது.</p><h2>தாமதம்</h2><p>அதுபோல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் வருகிற 14-ந்தேதி வரை காரைக்கால்-தஞ்சை பயணிகள் ரெயில் (எண்:56817) 15 நிமிடமும், 12-ந்தேதி, 15-ந்தேதிகளில் திருச்சி-மயிலாடுதுறை மெழு எக்ஸ்பிரஸ் (எண்:16834) 30 நிமிடமும், நாளை (புதன்கிழமை) முதல் 11-ந்தேதி வரை காரைக்குடி-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் (எண்:56836) 30 நிமி டமும், 15-ந்தேதி ஈரோடு-திருச்சி பயணிகள் ரெயில் (எண்:56106) 50 நிமி டமும், காரைக்குடி-திருச்சி பயணிகள் ரெயில் (எண்:56832) 40 நிமிடமும் தாமதமாக செல்லும்.</p><p>இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>மேட்டூர் நீர்மின் நிலையத்தில் மின் உற்பத்தி அதிகரிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-power-generation-at-mettur-hydroelectric-power-station</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-power-generation-at-mettur-hydroelectric-power-station#comments</comments><guid isPermaLink="false">4e480f42-dc2b-48fd-a754-06d340ff5458</guid><pubDate>Tue, 08 Sep 2026 04:05:51 +0000</pubDate><atom:updated>2026-09-08T04:05:51.902Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur dam,மேட்டூர்,Mettur,Power generation,நீர்மின் நிலையம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/eqckus2i/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/eqckus2i/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக திறக்கப்படும் தண்ணீர் அணையை ஒட்டி அமைந்துள்ள அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையம் வழியாக திறந்து விடப்படுவது வழக்கம். இந்த நீர்மின் நிலையங்கள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்படும் போது அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவைப் பொறுத்து இந்த மின் நிலையங்களில் மின் உற்பத்தி நடைபெறும். </p><p>கடந்த மாதம் 1-ந்தேதி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இவ்வாறு திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் நீர்மின் நிலையங்களில் 70 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வந்தது. நேற்று 7-ந் தேதி இந்த நீர்மின் நிலையங்கள் வழியாக திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடி 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.</p><p>அதன் காரணமாக நீர்மின் நிலையங்களில் மின்உற்பத்தி 110 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்குமானால் இந்த மின் நிலையங்களில் நடைபெற்று வரும் மின் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-tomorrow-13</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-tomorrow-13#comments</comments><guid isPermaLink="false">700e8c01-e944-481e-bb55-2e0fecda03b7</guid><pubDate>Tue, 08 Sep 2026 03:53:32 +0000</pubDate><atom:updated>2026-09-08T03:53:32.962Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,monthly maintenance work,தென்காசி,மாதாந்திர பராமரிப்பு பணி,Power outage tomorrow,நாளை மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/m7ipdmdp/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/m7ipdmdp/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p>திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF">தென்காசி</a> மாவட்டத்தில் சங்கரன்கோவில், திருநெல்வேலி கிராமப்புறம், கடையநல்லூர் ஆகிய கோட்டங்களுக்கு உட்பட்ட துணைமின் நிலையங்களில் நாளை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் காரணமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> செய்யப்படும். </p><h2>சங்கரன்கோவில் கோட்டம்</h2><p>சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>சங்கரன்கோவில், பெருமாள்பட்டி துணைமின் நிலையங்களில் நாளை (9.9.2026, புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. </p><p>இதன் காரணமாக அன்றைய தினம் சங்கரன்கோவில் நகர்பகுதி, என்.ஜி.ஓ.காலனி, களப்பாகுளம், புளியம்பட்டி, வாடிக்கோட்டை, பெரியூர். மணலூர், பெரும்பத்தூர், ராமலிங்கபுரம், வடக்குபுதூர், நகரம் முள்ளிகுளம், சீவலராயனேந்தல், பெருங்கோட்டுர், அழகாபுரி ஆகிய ஊர்களுக்கும், பெருமாள்பட்டி, மாங்குடி, இனாம்கோவில்பட்டி, அருகன்குளம்புதூர், செந்தட்டியாபுரம். </p><p>எட்டிச்சேரி, தென்மலை, அ.சுப்பிரமணியாபுரம், இடையான்குளம், முறம்பு, ஆசிலாபுரம், கூனங்குளம், பருவக்குடி, பந்தபுளி, பி.ரெட்டியாபட்டி, தெற்கு வெங்காநல்லுார், சோலைச்சேரி, வேலாயுதபுரம் ஆகிய ஊர்களுக்கும் மின்விநியோகம் தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p><h2>திருநெல்வேலி கிராமப்புற கோட்டம்</h2><p>திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>ஊத்துமலை, ஆலங்குளம் மற்றும் கீழப்பாவூர் துணைமின் நிலையங்களில் நாளை (9.9.2026, புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. </p><p>அதன்படி ஊத்துமலை, கீழக்கலங்கல், குறிஞ்சான்குளம், மேலமருதப்பப்புரம், சோலைசேரி, கருவந்தா, அமுதாபுரம், மாவிலியூத்து, கல்லத்திக்குளம், கங்கணாங்கிணறு, ருக்குமணியம்மாள்புரம். </p><p>ஆலங்குளம், ஆண்டிபட்டி, நல்லூர், சிவலார்குளம், ஆண்டிபட்டி, ஐந்தான்கட்டளை, துத்திக்குளம், கல்லூத்து, குருவன்கோட்டை. </p><p>குறிப்பின்குளம், அத்தியூத்து, குத்தபாஞ்சான், மாயமான்குறிச்சி, கழநீர்குளம், அடைக்கலப்பட்டிணம், பூலான்குளம், முத்துகிருஷ்னபேரி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p><h2>கடையநல்லூர் கோட்டம்</h2><p>கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பகவிநாயகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>நாரணாபுரம் துணைமின் நிலையத்தில் நாளை (9.9.2026, புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பின்வருமாறு குறிப்பிட்டுள்ள நேரத்தில் மின்விநியோகம் பின்வரும் இடங்களில் இருக்காது. </p><h2>காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை</h2><p>தரணிநகர், வாசுதேவநல்லூர், சங்கனாப்பேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம், கீழப்புதூர், நெல்கட்டும்சேவல், சுப்ரமணியபுரம், உள்ளார், வெள்ளானைகோட்டை, மலையடிக்குறிச்சி மற்றும் தாருகாபுரம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இதேபோல் புளியங்குடி மற்றும் வீரசிகாமணி துணைமின் நிலையங்களில் நாளை (9.9.2026, புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பின்வருமாறு குறிப்பிட்டுள்ள நேரத்தில் மின்விநியோகம் பின்வரும் இடங்களில் இருக்காது. </p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>புளியங்குடி, சிந்தாமணி, அய்யாபுரம், ராஜகோபாலபேரி, ரத்தினபுரி, இந்திராநகர், புன்னையாபுரம், காடுவெட்டி, சிங்கிலிபட்டி, சங்கனாப்பேரி, சிதம்பரபேரி, சுந்தரேசபுரம், திருவேட்டநல்லூர், சொக்கம்பட்டி, திரிகூடபுரம், மேலபுளியங்குடி, முள்ளிகுளம், தலைவன்கோட்டை, துரைசாமியாபுரம், நகரம், மலையடிகுறிச்சி மற்றும் வெள்ளகவுண்டன்பட்டி. </p><p>வீரசிகாமணி, பட்டாடைகட்டி, அருணாச்சலபுரம், அரியநாயகிபுரம், பாம்புகோயில், வென்றிலிங்கபுரம், திருவேட்டநல்லூர், திருமலாபுரம், வடநத்தம்பட்டி, சேர்ந்தமரம் மற்றும் நடுவக்குறிச்சி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இதேபோல் கடையநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட கடையநல்லூர் துணைமின் நிலைய பகுதிகளில் நாளை (9.9.2026, புதன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது. அதன்படி கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், பேட்டை, மாவடிக்கால், குமந்தாபுரம், முத்துச்சாமிபுரம், வலசை, கருப்பாநதி, தார்க்காடு, போகநல்லூர், கண்மணியாபுரம், பாலஅருணாச்சலபுரம், கம்பனேரி, மங்களபுரம், அச்சம்பட்டி,  பொய்கை, ஊர்மேல்அழகியான், வேலாயுதபுரம், இடைகால், சிவராம்பேட்டை கொடிக்குறிச்சி மற்றும் நயினாரகரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>